கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறநெறிக் காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்: ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010.09.22 - 25

Page 1
ஆய்வரங்கச் சிறப்புமலர் 2010
அறநெறிக் காலமும் தமி
இந்துசமய கலாசார .

கோள் : பா பா .'
பூகப் பண்பாட்டு மரபுகளும்
அலுவல்கள் திணைக்களம்

Page 2


Page 3
ஆய்வரங்கச்
20
ஃஃஃஃ
அறநெறிக் காடு பண்பாட்டு
கி.பி 301
ទិននននននននននននន
பதிப்பாச திரு. க. இ
உதவிப் பதில் திருமதி. தேவ
22.09.2010 - சங்கரப்பிள்ளை மண்டபம்,
இந்துசமய கலாசார அல

சிறப்பு மலர் 10
5% லமும் தமிழகப் மரபுகளும் 5 - 600
និននននននននននននននន
Sரியர் : இரகுபரன்
ப்பாசிரியர் : குமாரி ஹரன்
25. 09. 2010 கொழும்புத் தமிழ்ச்சங்கம்
லுவல்கள் திணைக்களம்

Page 4


Page 5
Mess
Hon. M. K. A. D. S. Gunaw
For Budha Sasana &
I have the pleasure of sending this message of Department of Hindu Religious and Cultural Affair Seminar, 2010.
This Department conducts Research Sessions Tamil Literature. The Scholars From India and Sr these Seminars. These papers are edited and pub!
Such research seminars and publications are Universities and others who are keen to gather kr
As Deputy Minister in charge of Religious A
San
M. K. A. D. S. Gunawardana Deputy Minister of Budha Sasana & Religious Affa

sage
ardana, Deputy Minister 3 Religious Affairs
Ffelicitaton for the Souvenir to be released by the rs at the inaugural session of the Annual Research
s themes related to Hinduism, Hindu Culture and si Lankan Universities submit research papers at lished by the Department regularly.
very much beneficial to the teachers, students of nowledge on the fields.
ffairs I wish all the Success for the Seminar
vrs

Page 6
Mes Secretary, Ministry of Bud
It is with great pleasure and privilege to sen the occasion of the Annual Research Seminar Religious and Cultural Affairs on the theme o Traditions of Tamil Society
I am aware, that the Research Seminars are of Hinduism, Hindu Culture and Tamil Literatu literary traditions pertaining to Dharma in Tam belongs to the period AD 300 - 600. The did a Jaina, Buddhist, Saiva and Vaishnava authors.
The Research Seminars of this nature are ve universities and the general public who are int Endeavour will be crowned with success.
ituum)
H. P. Cashian Herath Secretary,
Ministry of Budha Sasana & Religious Affairs

-sage
na Sasana & Religious Affairs
d this message for the souvenir to be published on which is organized by the Department of Hindu f “The period of Ethical Literature and Cultural
organized annually by the Department on the topic ire. In the Seminar attention will be focused on the il literature. The bulk of this category of literature ctive literature of this period were composed by
ery much beneficial to the teachers, students of the erested in the field. It is my fervent wish that this

Page 7
வெளியீ
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்க ஆய்வரங்குகளை நிகழ்த்தி வருகின்றது. அப்பண அபிமானம் உள்ளவர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி தரு உட்பட பலருக்கும் பயன்மிக்க பணியுமாகும். இப் இறையருளால் இடையூறு எதுவுமின்றி மிகச் ஆய்வரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் வே இந்த ஆய்வுப் பணியின் தலையாய அம்சமாகும்.
மலபாய
திணைக்களம் நடாத்தி வருகின்ற வருடாந்த ஆய் இலக்கிய வரலாற்றுக் காலப் பிரிவுகளைக் கருத்திற் சோழர்காலம், விஜய நகர நாயக்கர் காலம் என்று அரசியல் நிலைமைகளையும், அக்காலப் பகுதியில் கலைகளின் நிலை என்று இன்னோரன்னவற்றை
அவ்வகையில் சங்ககாலம், பல்லவர் காலம் எ காலம் என்று சுட்டப் பெறுவதுமான காலப்பகுதி . அக்குறையை நிவர்த்தி செய்யுமுகமாக இந்த ஆன் காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்' என்பதாக
வழக்கம் போலவே தமிழகத்திலும் நம்நாட்டிலும் தம் ஆய்வு முடிவுகளை வெளியிட இருக்கிறார்கள்.
ஆய்வரங்கை நெறிப்படுத்தும் தலையாய பணி தலைவராகக் கொண்ட ஆலோசனைக்குழு சிறப் படுத்தியுள்ளது. இவ்வாய்வரங்கு தொடர்பாக சிறப்பு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இச் சிறப்புமலரானது திரிகடுகம், சிறுபஞ்சமூல மணிமேகலை காவியங்கள், சிலப்பதிகார ஆய்வு இலக்கியம், பழமொழி நானூறு, நான் மணிக்கடிகை,

ட்டுரை
களம் தனது பல்வேறு பணிகளுள் ஒன்றாக ரி திணைக்களத்திற்கும் அறிவாராய்ச்சிகளில் ம் பணியாகும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் பணி 1992ஆம் ஆண்டு முதல் இற்றைவரை சிறப்பான முறையில் நடந்து வருகின்றது. ண்டிய திருத்தங்களோடு நூல் வடிவம் எய்துதல்
வரங்குகளின் தலைப்பு சில ஆண்டுகளாக தமிழ் கொண்டனவாக சங்ககாலம், பல்லவர்காலம், சுட்டப் பெறுகின்ற காலப்பகுதிகளின் சமுதாய, ன் மொழிநிலை, இலக்கியங்கள், சமயநிலை, வெளிப்படுத்துவனவாக அமையப் பெற்றன.
ன்பவற்றுக்கு இடைப்பட்டதும் சங்கம் மருவிய கருத்திற் கொள்ளப்படாது விடுபட்டு விட்டது. ன்டுக்கான ஆய்வரங்கத் தலைப்பு 'அறநெறிக்
அமைகின்றது.
» உள்ள அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு
யில் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களைத் பான முறையில் இவ் ஆய்வரங்கை ஒழுங்கு மலர் ஒன்றினை வெளியிட்டு வைப்பதில் நான்
ம் ஒரு வாழ்வியல் களஞ்சியம், சிலப்பதிகாரம் பரை, இன்னா நாற்பது, தமிழ்மொழியில் நீதி இயற்கை வருணனை இலக்கியமாய் இலங்கும்

Page 8
கார்நாற்பது, நீதியும் அறமும் தமிழ் மொழி உள்ளடக்கியதாக அமைகின்றது. இதில்
வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இக்கட்டு நான் மனதார பாராட்ட விரும்புகின்றேன்.
இந்நூலானது பல்கலைக்கழக மாணவர். கடந்தகாலங்களில் பயன்படுத்தப்பட்டடையை வெளியிடப்படும் இச்சிறப்புமலர் மலருக்கும் டெ
இப்பணியில் ஈடுபட்ட ஆலோசனைக்குழுவின் இரகுபரன் ஆகியோர் உட்பட அனைவருக்கு கடமைப்பட்டுள்ளேன். வருடம் தோறும் ஆய் ஆய்வுப்பிரிவின் உதவிப்பணிப்பளார் மற்றும் அ மனமாரப் பாராட்டுகின்றேன்.
(ஸ்
சாந்தி நாவுக்கரசன்
பணிப்பாளர்

பலக
ளை
பில் நீதி இலக்கியம் போன்ற பலகட்டுரைகளை பல கட்டுரைகள் இந்நூலுக்காகவே எழுதி திரைகளை வழங்கிய பல்கலைக்கழக அறிஞர்களை
கள், ஆய்வு தேடலில் ஈடுபடுவோர் ஆகியேரால் 1 நாம் அறிவோம். அவ்வகையில் இவ்வருடமும் பரிதும் பயன்படும் என்பது எனது எதிர்பார்ப்பாகும். எ தலைவர் பேராசிரியர். சி. பத்மநாதன், திரு. க. மம் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க வரங்கினை திட்டமிட்டு சிறப்பாக நடாத்தி வரும் நராய்ச்சி உத்தியோகத்தர்கள் அனைவரையும் நான்
vi

Page 9
பொருள்
1. .
திரிகடுகம் பேராசிரியர் அ.சண்முகதாஸ்
2. சிறுபஞ்சமூலம் ஒரு வாழ்வியல் களஞ்சியம்
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
3. இன்னா நாற்பது
கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்
4. இயற்கை வருணனை இலக்கியமாய் இலங்குக
க.இரகுபரன்
5.
பழமொழி நானூறு கலாநிதி செ.யோகராசா
6. நான்மணிக்கடிகை
ஈஸ்வரநாதபிள்ளை குமரன்
7. சிலப்பதிகாரம், மணிமேகலை காவியங்கள்
பேராசிரியர் மு.வரதராசன்
8. சிலப்பதிகார ஆய்வுரை . மயிலை சீனி வேங்கடசாமி
9. களப்பிரர்கள்
10. நீதியும் அறமும்
கலாநிதி எஸ்.திருநாவுக்கரசு
11. நீதி இலக்கியத்தின் இயல்புகள்
கலாநிதி எஸ்.திருநாவுக்கரசு
12. நீதி நூல்களும் இலக்கிய இயல்புகளும்
கலாநிதி எஸ்.திருநாவுக்கரசு
13. தமிழ்மொழியில் நீதி இலக்கியம்
கலாநிதி எஸ்.திருநாவுக்கரசு
14. இனியவை நாற்பது
ம. நதிரா

டக்கம்
01
09
24
தம் கார்நாற்பது
27
34
37
(கி. பி 100 - 500)
42
தி : * * * * * * * 3 2
53
59
63
84
96
118
141

Page 10


Page 11
திரிகடுகம்
1. முன்னுரை
பதினெண் மேற்கணக்கு நூல்களாகிய சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றிய நூல்கள் ஒரு தொகையினை பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் என்று தொகுத்து வழங்கினர். அவற்றுள் அகத்திணை புறத்திணை கூறும் நூல்கள் அமைந்துள்ளன. அவற்றுள் புறத்திணை கூறும் நூல்களுள் போர், அற - நீதி, மரபு பேணல், வாழ்வியல்
அகத்திணை
1திணைமாலை 150
யேர்
அறநீதி
2. ஐந்திணை 07
களவழி 40
1. இன்னா 40
3. ஐந்திணை 50
2இனியவை
4. திணைமொழி50
3. திரிகடுகம்
5. கார் நாற்பது
4. சிறுபஞ்ச மூலம்
5. ஏலாதி
6. முதுமொழிக்
காஞ்சி
7. நான்மணிக்
கடிகை
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

பேராசிரியர் அ.சண்முகதாஸ் தகைசார் வாழ்நாட் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
பற்றிக் கூறுவன அடங்கும். திருக்குறள், நாலடியார் போன்ற நூல்கள் அறநீதியுடன் அகத்திணை விடயங்களும் கூறுகின்றன. பின்வரும் அட்டவணை அதனை விளக்குவதாக அமையும் :
அறநீதி கூறும் நூல்களுள் சில மருந்துப் பெயர்கள் கொண்டனவாக அமைகின்றன. அவை திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்பனவாகும்.
புறத்திணை
மரபுபேணல்
வாழ்வியல்
அறநீதியும்
அகத்திணை
பழமொழி
ஆசாரக்கோவை
1 திருக்குறள்
400
2 நாலடியார்
3. இன்னிலை

Page 12
பிணிக்கு மருந்து கொடுப்பவர் மருத்துவர் எனப்பட்டனர். பிணி பல்வகைப்படும். பசிப்பிணி மருத்துவன் பற்றி சங்க இலக்கியம் கூறுகின்றது. புறநானூறு 173ஆம் பாடல் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடிய பாடல் வருமாறு :
யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய! பாணர் ! காண்க இவன் கடும்பினது இடும்பை யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந்த தன்ன ஊணொலி அரவந் தானும் கேட்கும் பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச், சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும், மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப் பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே,
பழம் நன்றாக நிறையப் பழுத்த மரங்களிலே பறவைகள் அக்கனிகளை உண்ணும் போது ஒலிகளை ஏற்படுத்துவது போல சிறுகுடி கிழான் பண்ணனுடைய வீடும் பலரும் வந்து சோறு உண்பதாலே பேரொலியுடன் விளங்குகின்றது. உணவு உண்ட பிள்ளைகள் கையிலும் சோற்றினை வாங்கிக் கொண்டு முட்டையினைக் கவ்விக் கொண்டு ஒழுங்காகச் செல்லும் எறும்புபோல போகின்ற காட்சியினைக் கண்ட பசியுடன் வந்தவர்கள் பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே” என்று கேட்கின்றதாகப் பாடும் மன்னன் இத்தகைய பெரியதானத்தினைச் செய்கின்ற பண்ணனுக்குத் தன்னுடைய வாழ்நாளைக் கொடுக்க விரும்புகிறான். பசிப்பிணி தீர்க்கும் மருந்துபோல உடற்பிணி உள்ளப்பிணி தீர்க்கும் மருந்துகள் உள் , திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி நூலாசிரியர்கள் உடற்பிணி மருந்துப் பெயர்களைக் கொண்ட பாடல்களூடாக உளநோய்களைத் தீர்க்க
2

எண்ணுகின்றனர். புறநானூற்றுப் பசிப்பிணி மருத்துவன் பாடல் இவர்களுக்கு வழிகாட்டியாக
அமைந்துள்ளது எனலாம்.
2. திரிகடுகம் என்னும் பெயர்
நோய் நீக்கி உடல்நலம் பேணும் மருந்துகளுள் திரிகடுகமும் ஒன்று. சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துகளின் கூட்டே திரிகடுகமாகும். நம்முடைய உடலின் சூடு, குளிர், வாதம், பித்தம், சிலேட்டுமம் என்பவற்றைச் சமநிலைப்படுத்தும் சக்திவாய்ந்தன சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியன. அதன் மூலமாக உடல்நோயைப் போக்கவல்லன. திரிகடுகம் பாடல் ஒவ்வொன்றிலும் சொல்லப்படும் மூன்று அறநெறிகளும் மனிதர் களுடைய அறியாமை முதலான நோய்களைப் போக்க வல்லன. திரிகடுகம் நூலின் முதல் பாடல்,
அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் - சொல்லின் அரில் அகற்றும் கேள்வியர் நட்பும் இம்மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து
என அமைகின்றது. இம்முதற் பாட்டில் கூறப்பட்ட 'திரிகடுகம்' என்ற சொல்லே சிறப்பு நோக்கி இந்நூலுக்குப் பெயராகக் கொள்ளப்பட்டது. இந்நூலின் பயன், அதனுடைய ஆசிரியர் என்னும் விவரங்களைப் பின்வரும் பாயிர்ச் செய்யுள் கூறுகின்றது.
உலகின் கடுகம் உடலின் நோய் மாற்றும் அலகில் அகநோய் அகற்றும் - நிலைகொள் திரிகடுகம் என்னும் திகழ்தமிழ்ச் சங்கம் மருவுதல் லாதன் மருந்து
உலகிலே உடலின் நோயை கடுகம் அகற்றுமாம். ஆனால் தமிழ்ச் சங்கத்தின் நல்லாதனுடைய மருந்தாகிய திரிகடுகம் என்னும் நூற்பாக்களோ மிக
=
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 13
அகற்சியுடைய உள் நோயை அகற்றும் எனக் கூறப்படுகின்றது.
3. நூலாசிரியரும் காலமும்
நல்லாதன் திரிகடுகம் நூலின் ஆசிரியராவார். ஆதன் என்னும் பெயர் சங்கப் பாடல்களிலே பல தடவை இடம்பெற்றதொன்றாகும். ஆதன், அழிசி, செல்வக்கடுங்கோ வாழியாதன், கருங்கழல் ஆதனார், குண்டுகட் பாலியாதனார், வாட்டாற்று எழினியாதன் என்னும் பெயர்கள் புறநானூற்றிலே இடை பெற்றுள்ளன. இந்நூலாசியர் நல்லாதன் என அழைக்கப்பட்டார். சங்கப் பாடல்களிலே நல்' என்னும் முன்னொட்டு ஆட்பெயர் உட்பட்ட பெயர்ச் சொற்களுடன் சேர்ந்து வருவதைக் காணலாம். தலைவி தலைவனுடைய இல்லினைக் குறிப்பிடும்போது நல் இல்' எனக் கூறுகின்றாள். "நல்' என்னும் முன்னொட்டின் பயன்பாடு பற்றி "புறநானூறு காட்டும் தமிழர் சால்பு - ஒரு மீள்பார்வை” (தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள், குமரன் புத்தக இல்லம், கொழும்பு - சென்னை, 2010: பக். 39-43) என்னும் கட்டுரையில் விரிவாகக் கூறியுள்ளேன். வாசகர் வசதி கருதி ஒரு சிறிய பகுதியினை இங்கு மேற்கோளாகத் தருகிறேன்:
டெய
''நாடு, ஊர், வீடு, ஏர், போர், யானை, தேர், குதிரை, தமிழ், புகழ், கலம் ஆகியனவற்றைக் குறிப்பிடும்போதெல்லாம் அவற்றுக்கு மதிப்பும் உயர்வும் கொடுத்துக் கூறுவதற்குப் பண்டையத் தமிழர் நல்' என்னும் சொல்லினை முன்னொட்டாக அமைத்துக் கூறும் வழக்கத்தினைப் புறநானூறு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கத்தினை ஏனைய சங்கப் பாடல்களிலும் காணலாம். நல்' என்னும் மதிப்புயர்ச் சொல்லின் பயன்பாட்டினைப் பின்வரும் எடுத்துக்காட்டுகளினாலே உணர்த்தலாம்:
புறம்: 20: வளமிகு நன்னாடு' புறம் 86: சிற்றில் நற்றூண் பற்றி' புறம்: 389: நல்லேர் முதியன்'
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

திரிடுகடும் ஆசிரியர் அதன் சங்ககால மரபினையொட்டி 'நல்' அடையும் 'நல்லாதன்' எனப்பட்டார். பாயிரத்திற் கூறப்பட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இவர் திருநெல் வேலியைச் சேர்ந்த 'திருத்து' என்னும் ஊரைச் சார்ந்தவர் எனக் கொள்ளப்படுகிறார். 'செரு அடுதோள் நல்லாதன்' என இவர் குறிப்பிடப் படுவதால் போர்வீரனாகவும் புலவனாகவும் இவர் விளங்கியிருக்கிறார் என அறிய முடிகின்றது. மேற்குறிப்பிட்ட செய்திகளை மனதிற் கொண்டே திரிகடுகம் நூலைப் பதிப்பித்தவர்கள் இவருடைய காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கூறியுள்ளனர். நூலாசிரியர் நல்லாதன் வைணவ சமயத்தைச் சார்ந்தவர் என்று கொள்வதற்கு அவர் பாடியுள்ள காப்புச் செய்யுள் சான்றாகின்றது.
அச்செய்யு வருமாறு:
கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் - நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி.
இந்நூலில் பாடல் தோறும் மூன்று விடயங்கள் கூறப்படுவதுபோல் இக்காப்புப் பாடலிலும் ''இடமகன்ற பூமியை அளந்தும், யாவராலும் விரும்பப் படுகின்ற சிறப்புடைய குளிர்ச்சியும் நறுமணமும் பொருந்திய மலர்களையுடை குருந்த மரத்தை முறித்ததும், காயாம் பூவைப் போலும் நிறமுடைய திருமாலின் திருவடிகளாம்” என மூன்று விடயங்கள்
கூறப்பட்டுள்ளன.
4. நூற் கட்டமைப்பும் நூற்பொருளும்
நூறு வெண்பாக்களைக் கொண்டதாக திரிகடுகம் நூல் அமைகின்றது. காப்புச் செய்யள் மேலதிகமாக உள்ளது. திரிகடுகம் நூலிலுள்ள நூறு பாடல்களிலுள் ஒவ்வொன்றிலும் “இம்மூன்றும்” அல்லது “இம்மூவர்” என்னும் தொடர் இடம்

Page 14
பெறுவதைக் காணலாம். நூலின் நோக்கத்துக் கமைய ஒவ்வொரு பாடலிலும் இத் தொடரைப் புலவர் அமைத்துள்ளார்.
திரிகடுகம் நூறு பாடல்களும் நீதிப் பொருள்களை வகுக்கத்த தந்துள்ளன. ஒவ்வொரு பாட்டிலும் சொல்லப்படும் மூன்று அறநெறிகளும் மனிதர்களுடைய அறியாமையைப் போக்க வல்லன. கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் கூறல், ஈகை, அன்புடைமை போன்ற இவ்வுலகுக்குரிய நல்வழிகளையும், அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழி களையும் இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது எனப் பொதுவாகக் கூறினும், அவற்றை நுணுக்கமாக நோக்கி அப்பாடல்களைப் பாகுபாடு செய்து கொள்ளலாம். அவை வருமாறு:
(1) ஒருவருக்கு இருக்கவேண்டியவை
முதலாவது பாடலே இவ்விடயத்தினைக் கூறுவதாக அமைகின்றது. இன்னும் 12, 33, 47, 58 என்பன ஒருவர் செய்யவேண்டியவை ஒருவரிடம் இருக்க வேண்டியவை பற்றிக் கூறுகின்றன. எடுத்துக் காட்டாக.
தாளான் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது (12)
"கடன்படாமல் வாழ்கின்வன் முயற்சி யுடையவன் ஆவான். விருந்தினர் பசித்திருக்கத் தான் மட்டும் தனியாக உண்ணாதவன் பிறர்க்கு உதவி செய்பவன் ஆவான். ஆசிரியர் கூறிய நூற்பொருளை அமையக் கொள்ளும் மாணாக்கன் மறத்தலில்லாதவன் ஆவன். இம்மூவரும் தனக்கு நட்பினராய் இருக்க ஒருவன் வாழ்வது அவனுக்கு நன்மை தருவதாகும்.
4

(2) மேன்மையுடையவர்கள் இயல்பு:
திரிகடுகத்தின் பல பாடல்கள் இவ்விடயம் பற்றிக் கூறுகின்றன. அவை 2, 6, 13, 16, 21, 26, 27, 29, 30, 32, 34, 35, 36, 37, 40, 48, 68, 75, 77, 78, 96 ஆகிய இலக்கங்களைக் கொண்டன. எடுத்துக்காட்டாக,
வருவாயுள் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை - எய்தப் பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும் நன்மாட்சி நல்லவர் கோள். (21)
"வருவாயுள் நான்கிலொரு பங்கு அறவழியில் செலவு செய்து வாழ்தலும், போர்க்களத்தில் பெறும் வெற்றியை ஆராய்ந்து பார்த்துத் தான் அறிய வேண்டுவதில்லாது யாவர்க்கும் எளிதில் விளங்கித் தோன்றும் சிறப்புடையவனாக வாழ்தலும், பலவற்றையும் ஆராய்ந்து அவற்றுள் நல்லவற்றைப் படித்தலும் ஆகிய இம்மூன்றும் நற்பண்பு மிக்க சான்றோரின் கொள்ளைகள் ஆகும்.”
(3) செய்யக்கூடாதன:
நம்முடைய வாழ்க்கையிலே செய்யக்கூடாதன பல உள், அவற்றைச் செய்வதனால் பல இன்னல்கள் ஏற்படலாம். பின்வரும் பாடல்கள் இவ்விடயம் பற்றிக் கூறுகின்றன: 3, 4, 5, 8, 9, 11, 14, 20, 39, 54, 76, 91. எடுத்துக்காட்டாக.
வழங்காத் துறையிழந்து நீர்ப்போக்கும் ஒப்ப விழைவிலாப் பெண்டிதோள் சேர்வும் - உழந்து விருந்தனனாய் வேற்றூர் புகலுமிம் மூன்றும் அருந்துயரம் காட்டும் நெறி. (5)
பழகாத ஆறு, குளங்களின் நீர்த்துறைகளில் இறங்கி நீரில் செல்லுதலும், தன் மேல் பற்றில்லாதவளைச் சேர்தலும், வயிற்றுப் பசித் துன்பத்தின் காரணமாகப் பிறர்க்கு விருந்தினனாக அயலூர் செல்லுதலும் ஆகிய இம்மூன்றும்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 15
ஒருவனுக்குப் பெருந்துன்பத்தைக் காட்டும்
வழிகளாம்.''
(4) பயனற்றவை:
பயனற்றவராக, பயனற்றவையாக இந்த உலகிலே பலர் இருக்கின்றனர். பல பொருட்களும் இருக்கின்றன. 7, 28, 46, 49, 53, 66 ஆகிய பாடல்கள் இது பற்றிக் கூறுகின்றன. எடுத்துக்காட்டாக
ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் - பொய்தெள்ளி அம்மனை தேய்க்கும் மனையாம் இம்மூவர் இம்மைக் குறுதியில் லார்.
"பெற்றோரால் ஏவப்பட்ட எந்தச் செயலையும் முடியாதென மறுக்கும் புதல்வனும், மனைவியைப் பாதுகாக்கும் திறனின்றி இகழ்ந்து பேசுகின்ற கணவனும், பொய் பேசித் தான் வாழ்கின்ற வீட்டின் செல்வத்தை அழிக்கும் மனைவியும் ஆகிய மூவரும் இப்பிறப்பில் எவர்க்கும் பயனற்றவர் ஆவர்."
(5) பிறரால் வெறுக்கப்படுவர்- வெறுக்கப் படுபவை:
பிறராலே வெறுக்கப்படும் செயற்பாடுகளைச் செய்பவர்கள் திரிகடுகம் ஆசிரியராலே இனங் காணப்பட்டுக் கூறப்பட் டுள்ளனர். பாடல்கள் 15, 25, 71, 89, 92 ஆகியன இவர்கள் பற்றிக் கூறுகின்றன. எடுத்துக் காட்டாக.
பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து தாழ்விடத்து நேர்கருதும் தட்டையும் - ஊழினால் ஒட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவர் நட்கப் கடாஅ தவர். (15)
''பொய்யான சொற்களைப் பேசி அதனால் உயிர் வாழ்கின்ற அறிவற்றவனும், முறைமை மாறி ஒருவன்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

தாழ்தவிடத்து தன்னை உயர்ந்தவனாகக் கருதும் மூங்கில் போன்ற புரைபட்ட மனத்தையுடையவனும், பிறரிடம் சேர்ந்து வினை ஆற்றும்போது தனக்குரிய பயனையே எதிர்பார்த்துச் செயல் செய்கின்றவனும் ஆகிய இம்மூவரும் யாராலும் நட்புக்கொள்ளத் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.”
(6) வாய்ப்பை இழந்தவர்கள்:
பின்வரும் பாடல்கள் இவ்விடயத்தைக் கூறுகின்றன: 17, 62, 74, 99, எடுத்துக்காட்டாக, :
"மூப்புப் பருவத்திலும் நன்மை செய்ய விரும்பாதவனும், கற்புடை மனைவி பூத்து நீராடிய பின் அவளைச் சேராதிருக்கும் கணவனும், வாய்மொழிப் பகை நான்கனுள் பயனற்ற சொற்களைப் பேசும் துறவியும் ஆகிய
இம்மூவரும் கல்வியறிவாகிய தோணியை முற்றிலும் கைவிட்டவர் ஆவர்.” (17)
(7) கெட்டுப்போகின்றவர்கள்- கெடுபவை:
19, 45, 59, 73, 76, 79, 81, 87, 94 ஆகிய பாடல்கள் இப்பொருள் பற்றிக் கூறுகின்றன. எடுத்துக் காட்டாக,
"போர் யானைக்கு அஞ்சிப் பின்வாங்கும் நன்றிக் குணமில்லாத வீரனும், இரவில் அயலான் மனைவியை விரும்பி நிற்பவனும், படமெடுத்து ஆடுகின்ற பாம்பை ஆட்டுகின்ற அறிவில்லாதவனும் ஆகிய இம்மூவரும் விரைவில் கெடுபவராவர்” (19)
(8) உயர் நன்மைக்கு வாய்ப்பளிப்பவை:
22, 23, 31, 41, 42, 43, 56, 82, 90, 98 ஆகிய பாடல்கள் இப்பொருள் பற்றிக் கூறுகின்றன. எடுத்துக் காட்டாக,
"பிறருக்கு உதவி செய்யும் பொருட்டுப் பொருளைத் திரட்ட வேண்டும், அறத்தின்

Page 16
வழியில் செல்வதற்கு ஞான நூல்களைக் கற்கவேண்டும், எத்தகைய சொல்லையும் அருளோடு சொல்லுதல் வேண்டும், ஆக இம் மூன்றும் நரகத்தைச் சேராமைக்குக் காரணமாகிய வழிகளாம்.” (90)
(9) கேடு விளைவிப்பவை:
10, 18, 24, 38, 44, 50, 57, 60, 63, 65, 67, 86, 88, 93, 95, 97 ஆகியன இது பற்றிக் கூறுகின்றன. எடுத்துக்காட்டாக,
"கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் வாழ்வதும், வழக்கைத் தீர்த்து வைக்கின்ற அறிஞர்கள் இல்லாத சபையில் இருப்பதும், பகுத்து உண்ணும் பண்பில்லாதவர் பக்கத்தில் இருந்து வாழ்வதும் ஆகிய இம்மூன்று செயல்களும் ஒருவனுக்கு நன்மை பயக்கா. மாறாகத் தீமைகளையே உண்டாக்கும்." (10)
(10) கவனிக்கவேண்டியது.
51ஆம் பாடல் அறிவுடையோராலே கவனிக்க வேண்டிய ஒரு விடயத்தினைக் கூறுகின்றது:
"பொருள் வருவாய் அடைபட்டபோதும் துணையாக விளங்குபவர் உறவினரேயாவார், எவ்வளவு சார்ந்து பழகினும் பகைவர் பகைரேயாவர், கற்பிளவைப்போல என்றும் ஒன்றுகூடாதவர் அற்பர் ஆவர். இம் மூவரும் அறிவுடையோரால் ஆராயப்பட வேண்டியவர் ஆவர்.” (51)
(11) சிறப்புடையன:
52, 64, 69, 72, 83, 100 என்பன சிறப்புடைய சில விடயங்களைக் கூறுகின்றன. எடுத்துக்காட்டாக. "உழுதல், பெருஞ்சுமை தாங்குதல் போன்ற கடினமான தொழிலைச் செய்யும் எருதும், குற்றமற்ற அங்க இலக்கணம் பெற்ற கன்னியும், வழிதப்பி நொந்துபசித்து வந்த விருந்தினரும் ஆகிய இம்மூன்றும் கிடைத்தற்கரிய பொருள்களாம்.” (69)
6

(12) அமைச்சர் செயல்:
61 ஆம் பாடல் அமைச்சர் செயல்களைப் பின்வருமாறு கூறுகின்றது:
“ஐம் பொறிகளின் அறிவையும் தீயவழியில் செல்ல விடாது அடங்குதல், அரசனுக்குத் தீங்கு நேராதபடி தடுத்தல், நாள்தேறும் பகைவர்களுடைய நிலையை ஒற்றர்கள் மூலம் அறிந்து மேலும் தம் மன்னரின் நிலையை அறிந்து அதற்கேற்றபடி செய்தல் ஆகிய இம்மூன்றும் புகழ்பெற்ற பெருமைமிக்க அமைச்சர்களின் துணிவுடைய செயல்களாம்.'' (61)
(13) ஒற்றருக்கு இருக்கவேண்டியவை:
85ஆம் பாடல் ஒற்றருக்கு இருக்கவேண்டிய பண்புகளைக் கூறுகின்றது:
''தன் செய்கை பகைவரால் கவனிக்கப்படாத தன்மையுடையதாக இருத்தலும், பகைவரின் கருத்தை அறிந்தபின் அதை மறவாத கூர்மையான அறிவை பெற்றிருத்தலும், அப்பொருளைத் தன் அரசனுக்குத் தடையின்றிச் சொல்லும் தெளிவுடைமையும் ஆக இம்மூன்றும் ஒற்றருக்கு இருக்கவேண்டிய பண்புகளாம்." (85)
5வம் / வறுமை உடையவர்கள்: 70 ஆம் பாடல் செல்வம் உடையவர்களையும் 84 ஆம் பாடல் வறுமையுடையவர்களையும் பின்வருமாறு கூறுகின்றன:
"சோலையுடன் அறச்செயலாகிய குளத்தை அமைத்தலும், வேதம் ஓதி உணர்ந்தவனும், தீய வழியை நீக்கித் தனக்கு இசையும் பொருளைப் பலரோடு பகிர்ந்துண்ணுகின்ற ஒப்பற்ற இல்லறத் தானும் ஆகிய இம் மூவரும் செல்வத்தையுடையவர்கள் என்று கருதப் படுவார்கள்.” (70)
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 17
''நீர் வரும் வழி நன்கு அமைந்திராத குளமும், வயிறாரத் தாயின் முலைப் பாலைப் பருகாத குழந்தையும், உயர்ந்த முறையில் கல்வி கற்காத மாந்தரும் ஆகிய மூவரும் வறுமையால் பீடிக்கப்பட்டவராவர்.” (84)
5. எடுத்துரைப்புச் சிறப்புகள்
மருந்துப் பெயர்களைக் கொண்ட மூன்று நூல்களுள் ஏலாதியிலும் சிறுபஞ்ச மூலத்திலும் கவர்ச்சி ஆற்றலுக்காகப் பல பாடல்களில் பெண்ணொருத்தியை விளித்துக் கூறி, அவளுக்கு உபதேசிப்பது போல பாடற் பொருளைக் கூறும் முறையினைக் காணலாம். எடுத்துக்காட்டாக. ஏலாதி 14ஆம் பாடலை நோக்குக.
பொய்யான் புலாலொடு கட்போக்கித் தீயன செய்யான் சிறியார் இனம்சேரான் - வையான் கயலிலுண் கண்ணாய் கருதுங்கா லென்றும் அயல அயலவாம் நூல்.
இப்பாடலில் காயமீன் போன்ற மையுண்ட கண்களையுடைய பெண்னே என விளித்தே பாடற் பொருள் கூறப்படுகின்றது. இது பெரும்பாலான அறநீதி நூல்களில் காணக்கூடியதாயுள்ளது. ஆனால் இப்பண்பு திரிகடுகம் நூலிலே எப்பாட்டிலும் காணப்படவில்லை.
ஒவ்வொரு பாடலிலும் மூன்று முக்கியமான விடயங்களைக் கூறி அவற்றினுடைய பொதுமைப் பண்பினை இறுதியிலே கூறிச் செல்லும் முறைமையே பல பாடல்களிலே காணப்படுகின்றது. சில சந்தர்பங்களில், சொல்லப்படுகின்ற மூன்று விடயங்களுள் ஒன்று ஏனைய இரண்டையும் விளக்கத்தக்கதாக அமைவதுண்டு. எடுத்துக் காட்டாக 24ஆம் பாடல் "பொதுமகளிரின் வாயிலிருந்து பிறக்கின்ற இனிய சொற்களும், தூண்டிலில் வைக்கப்பட்ட தவளையும், வயிரம்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

போன்ற தீங்கினைச் செய்ய உறுதியான எண்ணங்கொண்ட பகைவர்களின் பணிவுடைமையும் ஆகிய மூன்றும் உயிர்களைத் தன்னுள்ளே அழுந்தப் பண்ணுகின்ற நரகம் போல்வன" என்று கூறுகின்றது. இங்கு தூண்டிலில் வைத்த தவளை என்னும் விடயம் ஏனைய இரண்டினையும் விளங்கிக் கொள்ள உதவுகின்றது. தூண்டிலில் வைத்த தவளையைப் பிடித்து உண்பதற்குச் செல்லும் மீனின் கதியினை ஆசிரியர் கூறுதவனூடாக பொது மகளிரின் இனிய சொற்கள், பகைவர்களின் பணிவுடைமை என்ன செய்யும் என்பதை விளங்கிக்
கொள்ள வைக்கின்றார்.
பாட்டிலே சொல்லப்படுகின்ற
மூன்று விடயங்களையும் உருவகப்படுத்தி ஆசிரியர் சில பாடல்களிலே குறிப்பிடுவதைக் காணலாம். ஒருவன் தன்னைத் தானே வியந்து அகங்காரம் கொள்ளுதல், பெருஞ் சினமடைதல், பல்வகைப் பொருள்களை விரும்பும் சிறுமைத் தன்மை ஆகிய மூன்றினையும் செல்வத்தை அழிக்கும் கருவிகளாக உருவகப் படுதியுள்ளார் (பாடல் 38) பழமொழியினை உவமையாகக் கையாண்டு கூறப்படும் மூன்று பொருளையும் விளக்கும் பாங்கினை 28 ஆம் பாடலிலே காணலாம். "உமி குத்திக் கைவருந்துவார்” என்னும் பழமொழியினை வெகுளிச் சொற்களாலே உண்மைப் பொருளை உரைப்போரை வெல்ல விரும்பும் தவம் இல்லாதவனும், கிடைத்தற் கரிய பொருளைப் பெற விரும்புபவனும், ஒருவனுடைய கல்வியின் தன்மையை உணராது குற்றம் கூறுபவனும் ஆகிய மூவருக்கும் உவமையாகக் கூறுகிறார். உமியைக் குத்துவதனால் கைவருத்தம் ஏற்படுமேயொழிய எவ்வித பயனும் ஏற்படாது. இதுபோலவே மேற்குறிப்பிட்ட மூவருடைய முயற்சிகளும் அமையும் என்பது உணர்த்தப்படுகிறது.
எளிமையான முறையிலே பல விடயங்களையும் பாடல்களுடாகக் கூறும் சிறப்பினைத்

Page 18
திரிகடுகத்திலே நாம் காணக் கூடியதாயுள்ளது பெரும்பாலான விடயங்களை ஆசிரியர் உவமைகளையோ உருவகங்களையோ பயன்படுத்தாமல் நேரடியாகத் தெளிவான முறையிலே கூறிச்செல்கிறார். இது இந்நூலைக் கற்பவர்க்கு துணை செய்வதாயிருக்கும்.
6. நிறைவுரை
தமிழ்ச் செம்மொழி இலக்கியங்களுள் திரிகடுகமும் ஒன்றாகும். நடைமுறை வாழ்வியலைச் சித்தரிக்கும் சங்க இலக்கியங்களுக்குப் பின்னர் நடைமுறை வாழ்வியல் எவ்வாறு அமைய வேண்டுமெனக் கூறும் இலக்கியங்கள் கி. பி. 2ஆம் நூற்றாண்டு தொடக்கம் தோன்றத் தொடங்கின. இலக்கியப் பொருளிலே மாற்றமேற்பட்டதுபோல
8

யாப்பிலும் மாற்றமேற்பட்டது. ஆசிரியம், வஞ்சி, கலி, பரிபாட்டு பா வடிவங்களிலே தோன்றியவை சங்கப் பாடல்கள். கலி, பரிபாட்டிலே இடையிடையே பயின்று வந்த வெண்பா யாப்பு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் யாவற்றுக்கும் பா வடிவமாக அமைந்தது. திரிகடுகம் வெண்பா யாப்பிலே அமைந்தது. நேரிசை வெண்பாலிவும் இன்னிசை வெண்பாவிலும் அந்நூற் பாக்கள் அமைந்துள்ளன. அற நீதிக் கருத்துக்களை மாணவர்களுக்குப் பயிற்றுதற்கு திரிகடுகம் போன்ற நூல்கள் பயனுடையன. சமண சந்நியாசிகள் இத்தகைய நூல்களை இயற்றுவதிலே ஆர்வம் காட்டியுள்ளதை தமிழிலக்கிய வரலாற்றிலே நாம் அறிவோம். ஏனைய சமயத்தினரும் இம் முயற்சியிலே ஆர்வம் காட்டியுள்ளனர். வைணவ சமயத்தினரான நல்லாதனாரின் திரிகடுகம் ஓர் எடுத்துக்காட்டாகும்.
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 19
சிறுபஞ்சமூல் வாழ்வியல் க
1. நூலின் தோற்றமும் பின்னணியும்
தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியங்களில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தனித்து வமானவை. இந்நூல்களைக் கீழ்வரும் வெண்பா தொகுத்துக் கூறியுள்ளது.
நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் மெய்நிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே கைநிலைய வாம்கீழ்க் கணக்கு.
இந்நூல்கள் தோற்றம் பெற்ற காலத்தை இலக்கியவரலாற்றாசிரியர்கள் அறநெறிக்காலம் என்றே குறிப்பிடுவர். குறிப்பாக ஆ. வேலுப்பிள்ளை தனது தமிழிலக்கியத்தில் காலமும் கருத்தும்' என்னும் நூலில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் தோற்றக்காலத்தை அறநெறிக்காலம்' என்றே குறிப்பிட்டுள்ளார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் நீதிநூல்களே அதிகமாக இருந்தமையால் இவ்வாறு பெயர் கொண்டழைப்பதும் வாய்ப்பாயிற்று.
இவ்வற நூல்களின் தோற்றப்பின்னணியை வருமாறு தனது பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்' என்னும் நூலில் சாமி சிதம்பரனார் எழுதியுள்ளார்.
முதன் முதலில் ஒழுக்கத்தைப் பற்றித் தனித்தனியாக எழுதப்பட்ட நூல்கள் பதினெண்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

மம் ஒரு களஞ்சியம்
11
கலாநிதி மனோன்மனி சண்முகதாஸ்
கீழ்க்கணக்கு நூல்களின் தொகுதியிலே தான் காணப்படுகின்றன. பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பதினெட்டு நூல்களிலே நீதி நூல்கள் பதினொன்று. இது குறிப்பிடத்தக்கது. இச்சமயத்தில் ஓர் உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. சைன, பௌத்த மதங்கள் தமிழ் நாட்டில் மிகுதியாகப் பரவிய பிறகுதான் ஒழுக்கத்தைப் பற்றித் தனியாகத் தமிழ் நூல்கள் எழுதப்பட்டன. சமணமும் பௌத்தமும் ஒழுக்க நெறியையே அடிப்படையாகக் கொண்டவை. அவை கடவுள் நெறியைப் பற்றியோ பக்தி நெறியைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. ஆதலால் அக்காலத்தில் அறநூல்கள் பல பிறந்தன."
வெ
இந்நூல்கள் தோற்றம் பெறுவதற்கான சூழலை இக்கருத்துத் தெளிவாக விளக்கியுள்ளது. ஆனால் எல்லா நூல்களும் சமகாலத்தில் தோன்றின என்ற கூறுவதற்கில்லை. பதினொரு நீதிநூல்களில் திருக்குறளே முதலிற் தோன்றியது என்ற கருத்து நிலவுகிறது. ஏனெனில் திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் ஏனைய நூல்களிலும் எடுத்தாளப் பட்டுள்ளன . நூல்களின் தோற்றக்காலம் பற்றி இலக்கிய ஆய்வாளர்களிடையே வேறுப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இக்கட்டுரையில் சிறுபஞ்ச மூலம் பற்றிய செய்திகளை மட்டுமே கூறவிருப்பதால் அக்கருத்துகள் இங்கு இணைக்கப் படவில்லை.
9

Page 20
சிறுபஞ்ச மூலம் என்னும் நூலின் பெயர் இங்கு நோக்கத்தக்கது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்னும் மூன்று நூல்களும் நோய் நீக்கி உடல் நலம் பேணும் மருந்துகளின் பெயரைக் கொண்டுள்ளன. இந்நூல்களின் பாடல்களில் முறையே மூன்று, ஐந்து, ஆறு அரிய கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. ஏலாதி என்பது ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்பனவற்றை ஒரு குறிப்பிட்ட அளவோடு சேர்க்கப்பட்ட ஒருவகைச் சூர்ணமாகும். திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்றும் சேர்ந்த மருந்தாகும். சிறுபஞ்சமூலம் என்பது கண்டங்கத்தரிவேர், சிறுவழுதுணைவேர், சிறுமல்லிவேர், பெருமல்லிவேர், நெருஞ்சிவேர் என்னும் ஐந்தும் சேர்ந்த மருந்தாகும். இதனைப் பின்வரும் பாடல்களும் விளக்குகின்றன.
சிறிய வழுதுணைவேர் சின்னெருஞ்சி மூலம் சிறுமலி கண்டங்கத்தரிவேர் நறிய பெருமலி ஓர் ஐந்தும் பேசுபல் நோய் தீர்க்கும்
அரிய சிறு பஞ்ச மூலம் (பதார்த்தகுண சிந்தாமணி : 495)
சிறுபஞ்ச மூலம் கண்டங்கத்தரி சிறுவழுதுணை சிறுமல்லி பெருமல்லி நெருஞ்சி இவற்றின் வேராகும்மே
(பொருட்டொகை நிகண்டு: 867)
மனிதருடைய உடல்நலம் பேணுவதற்குச் சில மூலிகைகளும் அவற்றின் வேர்களும் பயன்படுவது போல உளநலம் பேணி மனித வாழ்வியலை வளம் படுத்தவேண்டிய ஒரு தேவை இருந்துள்ளது. எனவே மக்கள் அறிந்திருந்த மருத்துவப் பெயரில் நூல்களை வெளியிட்டால் நல்லதென நூலாசிரியர் எண்ணினர். மக்கள் மருத்துவநிலையில் அறிந்திருந்த 3,5,6 மருந்துப் பொருட்களைப் போல மக்களுக்குத் தேவையான நல்லுரைகளை உள் அடக்கி நூல்கள் யாத்தனர்.
10

இம்மருந்துப் பெயர்களையுடைய நூல்கள் பற்றி துரை. இராசாராம் வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
"திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்னும் மூன்று கீழ்க்கணக்கு நூல்களும் பெயர் அமைந்துள்ள வகையிலும் நீதிப் பொருள்களை பாக்களில் வகுத்துத் தந்த வகையிலும் பெரிதும் ஒப்புமை உடையனவாம். இம்மூன்றும் நோய் நீக்கி உடல்நலம் பேணும் மருந்துகளின் பெயர்களாம். இந்நூல்கள் பாடல்கள் தோறும் மூன்று, ஐந்து, ஆறு என்ற அரிய கருத்துக்களை அருமையான முறையில் அமைத்துக் கொடுத்துள்ளன."
இவ்வாறுஎண்ணிக்கை நிலையில் கருத்துக்களைத் தொகுத்துக் கூறுவதில் வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் அமைப்பு இந் நூல்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்தது எனலாம்.
மேலும் சிறுபஞ்சமூலத்தை இயற்றியவர் பற்றிப் பாயிரச் செய்யுளால் அறியக்கிடக்கின்றது.
மல்லிவர்தோள் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப் பல்லவர் நோய் நீக்கும் பாங்கினால் - கல்லா மறுபஞ்சம் தீர்மழைக்கை மாக்காரியாசான் சிறுபஞ்ச மூலம் செய்தான்.
'மற்போரை விரும்பிச் செய்யும் வலிமை உடைய மாக்காயன் என்பவரின் மாணவன் (காரியாசான்) நாட்டில் உள்ள பலகோடி மக்களின் அறியாமையாகிய நோயைத் தீர்க்கும் எண்ணத்தோடு கல்வி அறிவு பெறாததாகிய குற்றம் என்னும் இந்தப் பஞ்சம் தீர மழைபோலும் ஈகைக்குணம் கொண்ட மேலோனான காரியாசான் சிறுபஞ்சமூலம் என்னும் நூலைச் செய்தருளினான்.' எனச் சில செய்திகளை இப்பாடல் தந்துள்ளது.
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 21
மாக்காயன் மாணாக்கர் என்பது சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளது. ஏலாதி ஆசிரியர் கணி மேதையாரும் இவரிடம் பாடம் கற்றவரே. எனவே ஏலாதி, சிறுபஞ்ச மூலம் என்னும் இரு நூல் ஆசிரியர்களும் சமகாலத்தவர் எனக் கொள்ளலாம். ஒரு பேராசானிடம் பயின்றவர்கள் என்றும் கருதப்படுகின்றது.
நூல் தோன்றிய காலத்தில் சிறுபஞ்சமூலம் என்ற மருத்துவப்பெயர் மக்களிடையே அறியப்பட்ட பெயராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பெரும்பஞ்ச மூலம் என வில்வம், பெருங்குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை என்பவற்றின் வேர் அழைக்கப்பட்டுள்ளது. காரியாசான் மக்கள் நன்கறிந்த மருத்துவப் பெயரையே தமது நூலுக்கு வழங்கியுள்ளார். இந்நூலில் நான்கு வரிகளில் ஐந்து பொருள்களை அமைத்துப் பாடும் இவரது புலமைத்திறம் பெரிதும் போற்றத்தக்கது. இந்நூல் சமணசமயக் கருத்துக்கள் சிலவாகவும் பொதுச்சமயக் கருத்துக்கள் மிகுதியாகவும் காணக்கிடக்கின்றன. ஞா. மாணிக்கவாசகன் நூலாசிரியர் திறன் பற்றி வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
''நீதி போதனைகள் அற உரைகளின் தொகுப்பு மட்டுமல்ல. சிறுபஞ்ச மூலம் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கத்தக்க, மேற்கொள்ள வேண்டிய சில சமூக கடமைகளையும் வலியுறுத்துவதில் காரியாசான் சிறுபஞ்சமூலம் நூலாசிரியருக்குள்ள தனித்திறம், அக்கறை
நம்மை வியக்க வைக்கிறது."
சங்கமருவிய காலம் என இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்ற காலத்தில் மக்கள் வாழ்வியலில் ஏற்பட்ட தளம்பல் நிலையும் சிறுபஞ்ச மூலம் தோன்றக் காரணமாயிருந்தது. ஒழுக்கமாக வாழ மக்களை நெறிப்படுத்த காரியாசான் செய்த முயற்சியின் வெளிப்பாடே
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

சிறுபஞ்ச மூலப் பாடல்களாகும். அறச்சிந்தனைகளின் தொகுப்பாகச் சிறந்த ஒரு வாழ்வியற் களஞ்சியமாக இந்நூல் இன்றுவரை விளங்குகிறது.
கொல்லாமை, கள்ளுண்ணாமை, திருடாமை, விருந்தோம்பல், இல்லற ஒழுக்கம், துறவறத்தின் சிறப்பு என வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் கைக்கொள்ள வேண்டிய நடைமுறைப்படுத்த வேண்டிய நல்லொழுக்க நெறிகளையே சிறுபஞ்ச மூலப் பாடல்கள் எடுத்துரைத்துள்ளன. ஆடவர், பெண்டிர், அரசர், அமைச்சர், சேவகர், ஆசான், மாணவன், இல்லறத்தார், துறவறத்தார் எனச் சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களுக்குமுரிய கடமைகளை எடுத்துக்கூறி நடைமுறைப்படுத்த வேண்டிய நல்லொழுக்க நெறிகளைச் சிறுபஞ்ச
மூலம் களஞ்சியப்படுத்தியுள்ளது
2. நூலின் தொகுப்பும் வகுப்பும்
மாமூலம் எனக் குறிக்கப்படும் சிறுபஞ்ச மூலம் ஒரு தொகுப்பு நூலாகும். 75 ஆண்டுகளுக்கு முன்வந்த பதிப்பிலே கடவுள் வாழ்த்து, பாயிரமும் உள் அடக்கிய 98 பாடல்களின் தொகுப்புக் காணப்படுகிறது. அண்மையில் வந்த பதிப்பில் கடவுள் வாழ்த்து, தற்சிறப்புப் பாயிரமும், என 101 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன . நூலின் தொடக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ள கடவுள் வாழ்த்து எனப் பெயரிடப்பட்ட பாடல் வருமாறு அமைந்துள்ளது.
முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம் பழுதின்றி ஆற்றப் பணிந்து - முழுதேத்தி மண்பாய் ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா வெண்பா உரைப்பன் சில
இதன் பொருள் வருமாறு அமையும்:

Page 22
எல்லாவற்றையும் முற்றாக உணர்ந்தறிந்து காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்றையும் விட்டொழித்து முடிவும் மூப்பும் பிறப்பும் இல்லாத இறைவனுடைய திருவடிகளைக் குறைகூற இயலாதபடி தவறாமல் பணிந்து வணங்கி முற்றாக அவன் புகழைப் போற்றித் துதித்து மண்பரந்த இவ்வுலகில் உள்ள மனிதர்களுக்கு உயிர்க்கு உறுதியான நன்மை தரும் சில வெண்பாப் பாடல்களை உரைப்பேன்.
நூலாசிரியன் நூலை இயற்றத் தொடங்கும் போது முதலிலே கடவுள் வாழ்த்தாக ஒரு பாடலை இயற்றுவது அக்கால மரபாக இருந்துள்ளது. அதற்கமையவே நூலாசிரியர் இப்பாடலைப் பாடியுள்ளார். இறைவன் குணங்களையே பாடலில் சுட்டிக் காட்டுகிறார். மனிதன் விட்டொழிக்க வேண்டிய மூன்று விடயங்களை இங்கு குறிப்பிட் டுள்ளார். காமம் எனப்படும் பெண்ணாசையும் வெகுளி எனப்படும் திடீர்க் கோபமும் மயக்கம் எனப்படும் மனத் தடுமாற்றமும் நீக்கப்பட வேண்டியவை. தான் நூலை இயற்றிய சிறப்பு நோக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பரந்த மண்ணுலகத்திலே வாழும் மனிதர்களின் வாழ்க்கைக்கு உறுதியான விடயங்களை எடுத்து உரைக்கவே எண்ணியுள்ளார்.
இந்நோக்கத்தை அடுத்துத் தொடுக்கப் பட்டுள்ள நூல் என்னும் தலைப்பிலமைந்த பாடலும் விளக்கி நிற்கிறது.
ஒத்த ஒழுக்கம் கொலை பொய் புலால் ஒத்த இவையல வோர் நாலிட்(டு) - ஒத்த உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர் சிறுபஞ்ச மூலம் சிறந்து
இதன் பொருள் வருமாறு அமையும்:
12

ஒத்த ஒழுக்கமாவது ஒருவர் மேற்கொண் டொழுகத்தக்க நன்னடத்தையாம் கொல்லுதல், பொய் பேசுதல் ஊன் தின்னல் திருடுதல் என்னும் இவற்றிற்கு நேர் எதிரான அதாவது இவை அல்லாத்தான உயிர்க் கொலை புரியாதிருத்தல், பொய் பேசாதிருத்தல், உண்மையே பேசுதல், ஊன்தின்னாதிருத்தல், திருடாதிருத்தல் என்னும் நான்குமாம். இந்த நான்கோடு உலகை வருத்தும் பஞ்சம் பசித்துயரைப் போக்குகின்ற மழையைப் போல கற்றறிந்த பெருமக்களே இந்தச் சிறுபஞ்ச மூலம் என்னும் நூல் (கொல்லுதல், பொய்பேசுதல், ஊன் உண்ணல், களவாடுதல் என்னும்) தீய குணங்களான உயிர்ப்பிணியைப் போக்கி நன்மை செய்யும் என்று கூறுவீராக.
நூலின் பெயர் இப்பாடலில் குறிப்பிடப் பட்டுள்ளது. பாடல்களின் உள் அடக்கமும் விளக்கப்பட்டுள்ளது. உடல் பிணிக்கு சிறு பஞ்சமூலம் என்னும் வேர்களாலான மருந்து உதவுவது போல மனித உளப்பிணியைத் தீர்க்க ஐந்து ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.
இப்பாடலுக்குத் தெளிவுரை வகுத்த துரை ராசாராம் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
Tா லாய
'கூறீர் சிறுபஞ்ச மூலம் சிறந்து' என்று இப்பாடலில் கூறியிருந்தலாலும் கண்டங்கத் திரிவேர், சிறுவழுதுணைவேர், சிறு மல்லிவேர், பெருமல்லி வேர், நெருஞ்சிவேர் என்ற ஐந்து வேர்களாலாய மருந்து உடல் நோயைப் போக்குவது போல இந்நூலில் வரும் ஒவ்வொரு வெண்பாவில் வரும் ஐந்துகருத்துக்களும் உயிர்க்குறுதி பயக்கக்கூடியன. ஆகையாலும் இந்நூலிற்குச் சிறுபஞ்ச மூலம் என்ற பெயர் வந்தது.''
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 23
தொகுப்பு நூல் என்ற நிலையில் வெண்பாப்பாடல்களின் தொகுப்பாக நூல் அமைந்துள்ளது. ஆனால் பாடல்களில் ஐந்து விடயங்கள் தொகுத்துக் கூறப்பட்டிருப்பது சிறு பஞ்ச மூலம்' என்ற பெயரின் பண்பை விளக்கி நிற்கிறது. இதனை மேலும் விளக்க எடுத்துக்காட்டாக ஒரு பாடலை நோக்கலாம்.
படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின் இடைதனக்கு நுண்மை வனப்பாம் - நடைதனக்குக் கோடா மொழி வனப்புக் கோற்கதுவே சேவகர்க்கு வாடாத வன்கண் வனப்பு (பாடல் 6)
பாடலுள் தொகுக்கப்பட்டுள்ள ஐந்து விடயங்கள்
வருமாறு.
1. படைக்கு யானை வனப்பு 2. பெண்ணுக்கு நுண்ணிய இடை வனப்பு
3. ஒருவர் ஒழுக்கத்திற்கு வனப்பு நடுநிலை தவறாத சொல்
4. அரசர்க்கு வனப்பு நடுநிலை தவறாத செங்கோன்மை
5. படைவீரர்க்கு வனப்பு அஞ்சாமை
மக்கள் அறிய வேண்டியவற்றை இவ்வாறு ஒவ்வொரு பாடலிலும் தொகுத்துக் கூறியுள்ளமை நூலாசிரியரின் புலமைத் திறனாகும்.
பாடல்களின் வகுப்புநிலையும் சிறுபஞ்ச மூலம் நூலின் தனிச்சிறப்பைப் புலப்படுத்தி நிற்கிறது. மனிதனின் அன்றாட தேவைகளும் விழுமியப் பண்புகளும் மேன்மைக்குணங்களும் சிறப்பாக வகுத்துக் காட்டப்பட்டுள்ளன . பாடல்கள் யாவற்றையும் முற்கூறப்பட்ட (கடவுள் வாழ்த்திற் கூறப்பட்ட) நான்கு விடயங்களாக வகுத்துக் காட்டினாலும் அவை மேலும் நுணுக்கமாகப் பகுக்கப்பட்டுள்ளன . நூலின் பெயர் விளக்கத்திற்கு
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

ஏற்ப ஐந்து எண்ணிக்கை பற்றிய குறிப்பு 15 பாடல்களில் அமைந்துள்ளது. அக்குறிப்பை இவ்விடத்துத் தருவது பயனுடைத்து. -
1. வடிவு இளமை வாய்த்த வனப்பு வணங்காக்
குடிகுலம் என்று ஐந்தும் குறித்து.... (24)
2. உடையிட்டார் புல் மேய்வார் ஓடு நீர் புக்கார்
படையிட்டார் பற்றேதும் இன்றி - நடையிட்டார் இவ்வகை ஐவரையும்... (41) -
3. நாள் கூட்டம் மூர்த்தம் அவற்றொடு நன்றாம் அக்
கோள் கூட்டம் போகம் குணனுணர்ந்து - தோள்கூட்டல் உற்றானும் அல்லானும் ஐந்தும் உணர்வானால்... (44)
4. பேண அடக்கம் பேணாப் பெருந்தகைமை பீடுடமை
நாண் ஒடுக்கம் என்றைந்தும்... (45)
5. நீண்ட நீர் காடு களர்நிவந்து விண்தோயும்
மாண்ட மலைமக்கள் உள்ளிட்டு - மாண்டவர்
ஆய்ந்தன ஐந்தும்.... (49)
6. மக்கட் பெறுதல் மடனுடைமை மாதுடமை
ஒக்க உடனுறைதல் ஊணமைவு - தொக்க அவலலை அல்லாமை பெண்மகளிர்க்கு ஐந்து தலைமகனைத் தாழ்க்கும் மருந்து (53)
7. அரம் போல் கிளையடங்காப் பெண்வியக்கத்
தொண்டு மரம் போல் மகள் மாறாய் நின்று - கரம்போல்க் கள்ளநோய் காணும் அயல் ஐந்தும்..... (62)
B. வெந்தீக் காண் வெண்ணெய் மெழுகு நீர் சேர்
மண்ணுப்பு அந்த மகற் சார்ந்த தந்தையென்று - ஐந்தினுள்...
(65)
13

Page 24
9. குளந்தொட்டுக் கோடு பதித்து வழி சீத்து
உளந்தொட்டு உழுவயல் ஆக்கி - வளந்தொட்டு பாகுபடும் கிணற்றோடு என்றிவ்வைம் பா. படுத்தான்... (66)
10.நெடுக்கல் குறுக்கல் துறைநீர் நீடு ஆடல்
வடுத்தீர் பகல்வாய் உறையே - வடுத்தீரா ஆகும் அந் நான் கொழித்து ஐந்தடக்கு வானாகின்
(69
லையை உI
11. கொன்றான் கொலையை உடன்பட்டான் கோடாது கொன்றதனைக் கொண்டான் கொழிக் குங்கா
கொன்றதலை அட்டன் இடவுண்டான்ஐவரினும் ஆகுமெனக்.. (70
12.வலியழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால் நலிபு ஆழிந்தார் நாட்டறைபோய்நைந்தா மெலிவொழி இவ்வைவராம் என்னரராய் (73)
13. நகையொரு மந்திரம் நட்டார்க்கு வாரம்
பகையொரு பாட்டுரை யென்று ஐந்தும்.... (85)
14.சத்தமெய்ஞ் ஞானம் தருக்கம் சமயமே
வித்தகர் கண்டவீடு உள்ளிட்டாங்கு - எண்ணுதல் இட்ட இவ் வைந்தும்.... (86)
15. கண்ணுங்கால் கண்ணும் கணிதமே யாழினோடு எண்ணுங்கால் சார்ந்தே இவை நறுக்கிட்டு - எண்ணுதல்
இட்ட இவ்வைந்தும் அறிவான். (87)
Tய
ஏனைய பாடல்களில் ஐந்து விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளமையால் விடயங்கள் எளிமையாக ே குறிப்பிடப்பட்டுள்ளன.
பிற்காலத்திப் பதிப்புக்களில் கடவுள் வாழ்த்து பாயிரம், தற் சிறப்புப் பாயிரம் என்று 101 பாடல்களில்
14

e.
எண்ணிக்கை காணப்படுகிறது. இவற்றில் காணப்படும் மிகைப்பாடல்கள் மூன்றில் இரு பாடல்களில் ஐந்து என்ற எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாடல்கள் விளக்கத்திற்கு இங்கே தரப்பட்டுள்ளன.
அச்சம் ஆயுங்கால் நம்மை அறத்தொடு கச்சல் இல் கைம்மாறு அருள் ஐந்தாய் - மெச்சிய தோகை மயில் அன்ன சாயலால் தூற்றுங்கால் ஈகை வகையின் இயல்பு
எ
கைம்மாறும் அச்சமும் காணின் பயம் இன்மை பொய்ம்மாறு நன்மை சிறுபயம் மெய்ம்மாறு அருள் கூடி ஆர் அறத்தோடு ஐந்து இயைந்து ஈயின் பொருள் கோடி எய்தல் புகன்று
இம்மை நலன் அழிக்கும் எச்சம் குறை படுக்கும் அம்மை அருநரகத்து ஆழ்விக்கும் - மெய்ம்மை அறம்தேயும் பின்னும் அவர் மகளை நீக்கும் மறந்தேயும் பொய் உரைக்கும் வாய்
யொ
மனித வாழ்வியலில் பல விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படவேண்டும் என்பதைச் சிறுபஞ்ச மூலம் பகுப்பு நிலையாக எடுத்துக்கூறுகிறது. பாடல்களின் தொகுப்பில் தொடர்பான விடயங்களை ஒருங்கியைபு செய்யவேண்டும் என்ற எண்ணம் நூலாசிரியருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. இதனால் பாடல்கள் தனிப்பாடல்களாகப் பாடப்பட்டுப் பின்னர் தொகுப்பாகச்
செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றே கருதக் » கிடக்கிறது. சமூக நிலையில் மக்களிடையே இருந்த
குறைபாடுகளைக் களைய வேண்டும் என்ற நோக்குடனேயே பாடப்பட்டுள்ளன. மனித வாழ்வியலோடு தொடர்பு கொண்டுள்ள ஏனைய
விடயங்கள் பற்றியும் பாடல்கள் உள்ளன. பின்வரும் எ பாடல் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது.
வ
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 25
நாண் இலான் நாய் நன்கு நள்ளாதான் நாய்ப் பெரியார்ப் ஒ பேணிவன் நாய் பிறர்சேவகன் நாய் - ஏண்இல் பொருந்திய பூண்முலையார் சேரிகைத்து இல்லான் ! பருத்தி பகர்வுழி நாய் (86)
- ல :
9 =
இப்பாடலில் நாய் பல நிலைகளில் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.
க 2 g 9
3. வாழ்வியல் முறைமைகள்
சிறுபஞ்ச மூலம் நூலில் மனித வாழ்வியல் முறைமைகள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இல்லறம், துறவறம் என்ற இருவகை வாழ்வியல் ப முறைமைகளின் நன்மையும் தீமையும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ஒரே பாடலில் இருவகைப்பட்ட வாழ்வியலையும் எடுத்துக் காட்டும் தன்மையும் உண்டு.
°0
S
9 வ
பக்கம் படாமை ஒருவர்க்குப் பாடேற்றல் தக்கம் ப்படாமை தவம் அல்லாத் - தக்கார் இழி இனர்க்கே யானும் பசித்தார்கண் ஈதல் கழிசினம் காத்தல் கடன்.
இப்பாடலில் சார்பின்மை, பிறர் துன்பம் போக்குதல், பற்றற்று இருத்தல் என்னும் மூன்று குணங்களும் துறவிக்கான குணங்களென எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பசித்தவர்க்குக் கொடுத்தல், கோபம் கொள்ளாதிருத்தல் என்னும் ே
இரண்டு செயற்பாடுகளும் இல்லறத்தார் கடன்களென விளக்கப்பட்டுள்ளன. வள்ளுவருடையதிருக்குறளிலே அறத்துப் பாலில் இல்லறவியல் துறவறவியல் என இரண்டு அதிகாரங்கள் அமைக்கப்பட்டு இல்லறமும் துறவறமும் விளக்கப்பட்டுள்ளன. அதேபோல இருவகையான வாழ்வியல் முறைமைகளையும் சிறு பஞ்சமூல ஆசிரியர் எடுத்துரைக்க எண்ணியுள்ளார். ஆனால் இல்லறத்தையே இனிய வாழ்வு என்று குறிப்பிடுகிறார். இனிதான இல்லறம் துறவறத்திற்கு
எ எ E உ அ உ E
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும் -

ஓப்பானது என்று சிறுபஞ்ச மூலம் கூறுகிறது. இல்லற வாழ்வு நன்றாக நடக்குமானால் அது பலராலும் பாராட்டப்பெறும். துறவற வாழ்வு நடத்துபவருக்கு உணவு படைத்துப் பகிர்ந்துண்டு வாழும் வாழ்வு மிக மகிழ்வான வாழ்வாகும். வள்ளுவருடைய அறத்தாற்றின் இல்வாழ்க்கை..... என்ற குறளில் கூறப்பட்ட கருத்தோடு இக்கருத்தும் ஓப்புடையதாயுள்ளது கவனிக்கத்தக்கது. சிறுபஞ்ச முலம் இல்லறத்தாருடைய வாழ்வியல் முறைமையைப் பின்வரும் பாடலில் சிறப்பாக எடுத்துரைக்கின்றது.
பஞ்சப் பொழுதகத்தே பாத்துண்பான் காவாதான் அஞ்சாது உடை படையுள் போந்தெறிவாள் - எஞ்சாதே உண்பது முன் ஈவான் குழவி பலிகொடுப்பான் எண்பதில் மேலும் வாழ்வான். (78)
இப்பாடலில் கூறப்பட்டுள்ள ஐந்து விடயங்களும் பருமாறு.
பஞ்சத்தில் படுத்துண்பவன். தனக்கெனச் சேமியாது பிறர்க்கு உதவுபவன். உடையும் படையைக்காத்து எதிரிகளை அழிப்பவன். உண்ணுமுன் பிறர்க்கு உண்ணக் கொடுப்பவன். பச்சிளம் குழந்தைக்குச் சோறூட்டியவன்.
ஒரு மனிதன் நீண்ட காலம் வாழ வண்டுமாயின் தன்னலமற்றவனாகப் பிறர்நலம் பணுபவனாக இருக்க வேண்டும். குழந்தை முதல் முதியோர் வரை அனைவரையும் எண்ணிச் செயற்படுபவனே எண்பது வயதிற்கு மேல் வாழும் குதியைப் பெறுவான். புரட்சிக்கவிஞன் பாரதியும் பயிற்றுக்குச் சோறிட வேண்டும் இது வாழும் முறைமையடி பாப்பா எனப் பாடியுள்ளான். இதே பான்று நோயுற்றவர்களைப் பராமரிப்பவரும் நாய்வாய்ப்படாமல் நீண்ட காலம் வாழ்வர். பாழ்வார் சிறுபஞ்ச மூலம் 75 ஆம் பாடல் சிறப்பான சில நோயாளரைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது.
15

Page 26
சிக்கர் சிதடர் சிதலைப் போல் வாய் உடையார் துக்கர் துருநாமர் தூக்குங்கால் - தொக்க அருநோய்கள் முன்னாளில் தீர்த்தாரே இந்நாள் ஒரு நோயும் இன்றி வாழ்வார்
சிக்கர் - தலைநோயுடையவர் சிதடர்- மனநலம் குன்றியவர் சிதலை போல் வாயுடையவர் - வாய்ப்புற்று நோயுடையவர் துக்கர்-காசநோயாளிகள் துருநாமர்-மூலநோயுள்ளவர்
இவர்களுக்கு முன்னாளில் உணவும் மருந்தும் தந்து உதவியவர் இந்நாளில் ஒரு நோய்க்கும் ஆளாகாமல் வாழ்வர் என்று சிறுபஞ்ச மூலம் கூறுகின்றது. மருத்துவப்பணியின் இன்றியமை யாமையை அக்கால மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற எண்ணம் காரியாசானுக்கு இருந்துள்ளது. ஏனெனில் பாடல் 77 மேலும் உதவிசெய்ய வேண்டிய சிலரைக் குறிப்பாகக் காட்டியுள்ளது. புண்பட்டார், ஆதரவற்றார், மரணப்படுக்கையில் இருப்பவர் கண்ணிழந்தார், காலிழந்தார் என்னும் இவர்களுக்கு பரிவு காட்டி உதவுபவர் வாழ்வில் பலவளமும் சிறக்க மகிழ்ச்சியோடு வாழ்வார் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. மனித வாழ்வியலில் ஏற்பட்ட இழப்புகளையும், சோகங்களையும், நோய்களையும், இடர்களையும் தீர்க்கின்ற பரநலப் பண்புடைய சமூக உருவாக்கத்திற்கான பல்வேறு விடயங்கள் சிறுபஞ்ச மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதேபோன்று பிறருக்குச் சோறிட்டவர் சுகம் பெறுவர் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறைச் சாலையில் இருப்பவர்களுக்கும் இறந்து மறைந்த மூதாதையர் நற்கதிபெற விரதம் இருப்பவர்களுக்கும் பல நாட்களாக நோயுற்று மருந்துண்ணும் பத்தியம் காரணமாக உண்ணாது இருந்தவர்களுக்கும் முதல் பிறை நாளிலிருந்து முழுநிலவு நாள்வரை உண்ணா
16

நோன்பிருந்தவர்க்கும் உணவு சமைத்து உதவியவர் கற்றறிந்தவரோடு கலந்து மன்னவராய் புகழுடன் வாழ்வார் எனக் கூறப்பட்டுள்ளது. பண்டைய . இலக்கியங்களில் கூறப்பட்ட உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரோ' என்னும் அறவாழ்வு இந்நூலிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்வரும் பாடல் உணவளித்துக் காக்க வேண்டிய பிறிதொரு மக்கள் தொகுதியினரைச் சுட்டிக் காட்டுகிறது.
லிஇழந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால் நலிழிந்தார் நாட்டறை போய்நைந்தார் - மெலிவொழிய இன்னவராம் என்னார் ஆயாந்தஒரு துற்று மன்னவராய்ச் செய்யும் மதித்து. (72)
வலிமை அற்றவர், முதியவர், உயிரை விடுவதற்காக வடக்கிருந்தவர், நோயுற்றோர் நாடுவிட்டு நாடு போய்த் தளர்ந்தவர் இவர்கள் உண்பதற்காக ஓர் உருண்டை சோறளித்து உதவியவர் மறுபிறப்பிலே மன்னராகப் பிறப்பார் என இப்பாடல் கூறுகிறது. மனித வாழ்வியலில் தனது சமூகத்தை நலப்படுத்தும் அறப்பணியை எல்லோரும் மேற்கொள்ளவேண்டும். சிறபஞ்சமூலப் பாடல்கள் தோன்றிய காலத்தில் மக்கள் வாழ்வியல் பெரும் அல்லலுக்குள்ளாகியிருந்ததையும் ஊகித்து உணரமுடிகிறது.
அடுத்து மனித வாழ்வியலில் குழந்தை பற்றிய கருத்தை இந்நூல் எடுத்துக்கூறும் போது இருபாடல்களைத் தனித்துவமாக அமைத்துள்ளது. நாம் செய்யும் அறங்களில் பெருமையான அறம் குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்தலேயாகும்.
கலங்காமை காத்தல் கருப்பம் சிதைந்தால் இலங்காமை பேரறத்தால் ஈற்றம் - விலங்காமைக் கோடல் குழவி மருந்து வெருட்டாமை நாடின் அறம் பெருமை நாட்டு . (73)
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 27
வயிற்றில் வளரும் கரு அழியாமல் காத்தல், கருசிதைந்தால், மறைவாகப் பெயர்த்தல், பிறக்கப்போகும் குழந்தை குறுக்காகி விடாமல் பார்த்துக் கொள்ளுதல், குழந்தை நோயுற்றால் மருந்து கொடுத்தல், குழந்தையை அச்சுறுத்தா திருத்தல் இவை எல்லாம் மிக உயர்ந்த நற்செயல்கள் ஆகும். சமூகத்தில் குழந்தை ஒரு இன்றியமையாத ஒரு கொடையாகக் கருதப்பட்டது. குழந்தைப்பேறு மருத்துவ நிலையில் பெரிதும் கவனிக்கப்படவேண்டிய விடயமாகக் கருதப்பட்டது. அறங்களில் பெரிய அறமாகப் பின்வரும் செயற்பாடுகளைச் சிறுபஞ்ச மூலம் குறிப்பிட்டுள்ளது. ஈன்றெடுத்து வளர்த்தல், மகப்பேறு மருத்துவம் பார்த்தல், அநாதைக் குழந்தைகளை வளர்த்தல், கருவுற்ற பெண்களைக் காத்தல், கைம்பெண்ணைக் காத்தல் என்பன மனித வாழ்வியலின் முறைமைகளாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. குழந்தையைப் பெற்றெடுத்து வளர்க்கும் போது எதிர்கொள்ளும் துன்பங்களையும், ஒரு பாடல் குறிப்பிட்டுள்ளது.
சூலாமை சூலில் படுந்துன்பம் ஈன்றபின் ஏலாமை ஏற்றால் வளர்ப்பு அருமை - சால்பவை வல்லாமை வாய்ப்ப அறிபவர் உண்ணாமை கொல்லாமை நன்றால் கொழித்து (74)
முதலில் குழந்தைப் பேறின்மையால் பெற்றோர் அநுபவிக்கும் துன்பம். குழந்தையைப் பெறுகின்ற காலத்தில் அநுபவிக்கும் துன்பம், பெற்ற குழந்தையை ஏற்கமுடியாமையால் ஏற்படும் துன்பம், பெற்ற குழந்தையை வளர்க்கும் காலத்தில் எதிர்கொள்ளும் துன்பம், பின்னர் வளர்த்த குழந்தை நல்ல குணவியல்புகளைக் கொள்ளாமையால் ஏற்படும் துன்பம் என ஐவகைத் துன்பங்களை இப்பாடல் எடுத்துக் காட்டியுள்ளது. இந்தத் துன்பங்களைத் தீர்க்க உயிர்கொல்லாமலும் புலால் உண்ணாமலும் இருத்தல் நன்று.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

வாழ்வியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமானது. சிறுபஞ்ச மூலம் அதனைப் பல்வேறு முறைமைகளில் சுட்டிக் காட்டியுள்ளது. அவற்றைக் கருத்து நிலையிலே தொடுக்கின் வருமாறு அமையும்.
கற்புடைய பெண் கணவனுக்கு அமிழ்தமானவள் (3)
இருகாதும் இல்லாதவள் பேரழகி என நினைப்பது இறுமாப்பு (4)
பாவைக்கு இடை ஒசிதல் அழகு (6)
கொண்டான் வழி ஒழுகல் பெண்ணின் நல்ல குணமாகும். (14)
மாதரைக் கூடி மகிழ்தல் மனிதப்பிறவியின் பயனாகும். (17)
கள்ளுண்ணல் பெண்களின் தீய குணமாகும். (24)
பெண்களின் உகிர்வனப்பு உண்மையான வனப்பல்ல
(36)
கற்பால் பெண்மைக்குப் புகழ் (32)
அடங்காத மனைவிவாழும் உயிரை வருத்தும் நோய் (61)
பெண்ணுக்கு ஞானம் எளியதும் அரியதும் ஆகும். (88)
பெண்களின் கடமைகளைச் சிறப்பாக ஒரு பாடல் எடுத்துரைக்கின்றது.
வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம் வெகுவாமை வீழ்ந்து விருத்தோம்பித் - திருவாக்கும் தெய்வத்தையும் எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு செய்வதே பெண்டிர் சிறப்பு (42)

Page 28
இல்லற வாழ்வியலில் பெண்ணின் கடமைகள் இன்றியமையாதது என்பதைச் சிறுபஞ்ச மூலம் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளது. குடும்ப வாழ்வியலில் வீட்டு நிர்வாகத்தில் பெண்ணுக்கே பெரும் பங்கு உண்டு. தனது கணவனுடைய வருவாய்க்குத்தக்க வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு பெண்ணுக்குரியது. பொருள் வரவுக்கு ஏற்ற வகையில் செலவைத் திட்டமிடும் திறமை அவளுக்கு வேண்டும். தனது சுற்றத்தவர்களோடு அன்பாகப் பழகி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பும் பெண்ணுடைய கடமையாகும். வருகின்ற விருந்தினரைப் பேணி இன்முகத்தோடு அவர்களை அனுப்ப வேண்டிய பொறுப்பும் பெண்ணிடமே தரப்பட்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டில் உள்ள அனைவரையும் தெய்வவழிபாட்டில் ஈடுபடுத்தும் பண்பாட்டுப் பயிற்சியாளராகவும் பெண் கடமையாற்றினாள்.
க க00)
இத்தகைய மேன்மையான கடமைகளை மேற்கொண்டிருக்கும் பெண்ணைக்காத்து நிற்பவராகக் கணவன், கணவனுடன் பிறந்தவன், தாய்மாமன், மகன், தந்தை என்னும் ஐவகை உறவுநிலையான ஆண்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் பெண் தன் கடமைகளைச் செய்வதற்கு உதவுபவராகவே இருந்தனர். ஆனால் சில வேளைகளில் ஆண்கள் பொறுப்பற்றவராகத் தமது மனைவியரை அலட்சியம் செய்யும் நிலையுமிருந்துள்ளது. அதனால் சிறுபஞ்ச மூலம் கணவரைக் கவர்வதற்குரிய வழிகளைப் பெண்ணுக்கு எடுத்துரைத்துள்ளது.
மக்கள் பெறுதல் மடன் உடைமை மாதுமை ஒக்க உடன் உறைதல் ஊண் அமைவு - தொக்க அலவலை அல்லாமை பெண்மகளிர்க்கு ஐந்து தலைமகனைத் தாழ்க்கும் மருந்து (52)
மக்களைப் பெறுதல், அடக்கமுடனிருத்தல், கணவன் விரும்பும் அழகுடன் இருத்தல், கொண்ட
18

கணவனுடன் கூடி வாழ்தல், அவன் விரும்பும் அறுசுவை உணவளித்து உறைதல் போன்ற ஐந்து செயற்பாடுகளாலும் பெண்கள் தமது கணவரைத் தமக்கு அடங்கியவராகக் செய்யலாம். இவற்றை ஒரு வசிய மருந்தாகச் சிறுபஞ்ச மூலம் குறிப்பிட்டுள்ளது.
வாழ்வியல் முறைமைகளில் சமூக நிலையில் ஓர் கூர்மையான பார்வையைச் சிறுபஞ்சமூல ஆசிரியர் செய்துள்ளார். அவருடைய பார்வை வாழ்வியலின் சகல பகுதிகளையும் ஊடுருவிச் சென்றுள்ளது. பொதுநிலையில் ஆண்களை வகுத்துக்காட்டும் திறமை குறிப்பிடத்தக்கது. மேன்மை பெறும் வழியைக் காட்டி ஐவகையினரை அறிமுகம் செய்துள்ளார். அவர்களை வருமாறு காட்டலாம்.
பற்றைத்துறந்தவன் துறவி கற்றறிந்து அடங்கியவன் தலைவன் பகுத்து உண்பவன் பார்ப்பான் பழிக்கு அஞ்சுபவன் பெரியோன் உடல் காக்க உண்பவன் பிணியற்றவன்
பொதுநிலையில் பல பார்வைகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. அவற்றை வருமாறு தலைப்பிட்டுக் காட்டலாம்.
நகைப்புக்கிடமானவை (4) வள்ளல் யார் (33) செல்வவளம் தருபவை (5) உண்மையான வனப்பு (36) அழகு தருபவை (6) பெரியோர் குணம் (37) வனப்பு எனப்படுவது (8) மன்னர்க்குக் காவல் (48) நாக்குநலியும் இடங்கள் (9) உழவர்க்குக் கேடு (49) சிரிப்புக்கிடமானவை (11) தலைவனாம் தகுதி (50) நஞ்சின் வகைப்பாடு (12) ஆண்கள் நிறைகாக்கவழி (54) நல்லகுணங்கள் (13) கற்றவர் சிறப்பு (55) மானம் உடைமை (15) நன்மை தரும் (56) நன்றும் தீதும் (16) பேரின்பு வாழ்வு பெற (62) பூவாத மரம் (21) கொடைச் சிறப்பு (63) பூத்தும் காயாதமரம் (22) சமுதாயத்தொண்டு (65) நல்லவை (25) பெரியோர் முன் செய்யத் தகாதவை (84)
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 29
மாணவர் ஒழுக்கம் (29) நல்ல சீடன் (85) கல்வியால் ஏற்படும் புகழ் (32) இடைப்பட்ட சீடன் (86) உயர்கதிக்கு உதவுபவை (93) உய்யவழி (96)
வாழ்வியலில் எல்லோரும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. இப்பண்பினை இயற்கைநிலையில் வைத்து சிறுபஞ்ச மூலம் தெளிவுப்படுத்தியுள்ளது.
வான்குருவிக்கூடு அரக்குவால் உலண்டுகோல்தருதல் தேனிபுரிந்து யார்க்கும் செயல் ஆகா - தாம்புரீஇ வல்லவர் வாய்ப்பன என்னார் ஒரோ ஒருவர்க்கு ஒல்காது ஓரொன்று படும். (26)
தூக்கணாங் குருவிக்கூடு, செம்மெழுகு, பட்டுப்புழு, கோல்புழு, தேனீ என்பவற்றின் கூட்டைத் கற்றறிந்தவர்கள் கூடத் தம்மால் செய்ய முடியும் என்றெண்ணி முயற்சி செய்யமாட்டார்கள். இயற்கையின் கொடையான தனித்துவமான திறனை எல்லோரும் கண்டு அதனை அடைய முயற்சிப்பது வீணானது. சமூகத்தின் தளர்வு நிலையைச் சுட்டிக்காட்டி அதை மேனிலைப்படுத்தும் செயற்பாடுகளை நூலாசிரியர் கூறிப்போந்துள்ளார். இது நூலின் தோற்றத்துக்கான காரணத்தையும் விளக்கி நிற்கிறது. மனிதப் பிறவியெடுத்துத் துன்பம் அநுபவிப்போர் இனிப்பிறவாதிருக்கவும் வழி கூறப்பட்டுள்ளது. திருடாமல், சூதாடாமல், தீ நட்புக் கொள்ளாமல், கேட்பவர் வருந்தச் சுடு சொல் பேசாமல் ஊன் உண்ணாமல் இருந்தால் பிறவித் துயர் இல்லையெனச் சிறுபஞ்ச மூலம் கூறுகிறது
4. எடுத்துரைப்புச் சிறப்புகள்
சிறுபஞ்ச மூல நூலாசிரியரின் எடுத்துரைப்பு முறைகளில் மொழிநடை அணிநலம், பெண்விளி, அடுக்கிக்கூறும் முறை, முரண் தொடைப் பயன்பாடு, சிறப்புச் சொற்பயன்பாடு என்னும் உத்திகள்
குறிப்பிடத்தக்கவை.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

மொழி நடையில் காலத்துக் கேற்ற எளிமையான தமிழ்நடை பயன்படுத்தப்பட்டுள்ளது. வெண்பா யாப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பரவலாக வெண்பா யாப்பே பயன்படுத்தப்பட்டுள்ளது. கூற வந்த விடயத்தை நான்கடிகளில் கூறுவது ஆசிரியரது புலமைத் திறத்திற்குச் சான்றாக உள்ளது. வினா விடை நிலையிலே கருத்தைத் தெளிவாகக் கூறுவதற்கு வெண்பா யாப்பு வாய்ப்பளித்தது.
மயிர் வனப்பும் கண்கவர் மார்பின் வனப்பும் உகிர்வனப்பும் காதின் வனப்பும் - செயிர்தீர்ந்த பல்லின் வனப்பும் வனப்பல்ல நாற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு (36)
இப்பாடல் மயிரின் வனப்பு, மார்பின் வனப்பு, விரல் நகவனப்பு, காதின் வனப்பு பல்லின் வனப்பு என உடலின் ஐந்து வனப்புகளையும் வனப்பல்ல என்று எடுத்துரைத்துக் கல்வியால் பெற்ற சொல்லின் வனப்பே உண்மையான வனப்பு என விளக்கியுள்ளது.
பாடல்களில் அணி நலம் வெகு குறைவாகவே உள்ளது. சொற்பொருட் பின்வரு நிலையணி 6, 8, 9, 12, 36, 87 ஆகிய பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உவமையணி 16, 64, 90, 94 பாடல்களில் வந்துள்ளது.
தக்கது இளையான் தவம் செல்வன் ஊண்மறுத்தல் தக்கது கற்புடை யான்வனப்பு - தக்கது
அழல் தண் எண்தோளான் அறிவிலன் ஆயின் நிழல் கண் முயிறாய் விடும். (90)
இப்பாடலில் அறிவில்லாத மனைவி சுடுகின்ற நெருப்புக்கும் கடிக்கின்ற செவ்வெறும்பிற்கும் உவமையாகக் கூறப்பட்டுள்ளாள்.

Page 30
அறநீதி நூல்களில் பாடல்களில் பெண்விளி அமைவது அக்காலத்து மரபாக உள்ளது. சிறுபஞ்ச மூலத்திலும் இம்மரபு பேணப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக சிலவற்றைத் தரலாம்.
கண்டல் அவிர் பூங்கதுப்பினாய்..... (13) மடவாய் ... (37) பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய்.. (47) வண்தாராய் ..... (53)
மைத்தக நீண்ட மலர்க் கண்ணாய்... (91) கொம்பு மறைக்கும் இடையாய்.... (88)
UH
இவ்வாறு பெண்விளித் தொடர்களைப் பயன்படுத்தும் மரபுக்கான காரணம் புலவர் பாடலில் பெண் மொழியைப் பயன்படுத்த விரும்பியமையே சமூக அறிவூட்டலில் அறக் கருத்துகளைக் குழந்தைகளுக்குப் புகட்டும் பனி தாய்மாரிடமே இருந்தமையால் இம்மொழிப் பயன்பாடு ஏற்பட்ட தெனக் கருத முடிகிறது. இக்கருத்து மேலும் விரிவாக ஆராயப்பட வேண்டியது.
ம்
Tக
|}III
சொற்களை அடுக்கிக் கூறுவதும் பன்முறை ஒரே சொல்லைப் பயன்படுத்துவதும் சிறுபஞ்சமூலப் பாடல்களில் காணக்கூடிய ஒரு பண்பாக உள்ளது. வனப்பு (6, 8) நஞ்சு (12) கூட்டம் (43) உயர (45) என்பவற்றை எடுத்துக் காட்டாகக் கூறலாம். முரண்தொடைகளும் பாடல்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன.
நெடுக்கல் குறுக்கல் (69) பிழைத்தல் பொறுத்தல் (16)
இவற்றை விடச் சிறப்பான சொற்கள் பல பாடல்களில் பயின்று வந்துள்ளன. சிலவற்றை எடுத்துக்காட்டாகத் தருவது பயனுடைத்து
20

சொற்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. எண் பாடல் எண்ணைக் குறிக்கும்.
உதாரதை - கொடைத்தன்மை (11) கதம் - கோபம், கோய் - கன்முகக்கும் கலம், துற்று - ஒருபிடியுணவு (16) ஆதர் - அறிவிலார் (19) மூவார் - அறிவினால் முதிராதவர் (22) நாறாத - முளைக்காத (22) இளங்கால் - இளமைப்பருவம் ஆணாக்கம் வேண்டாதான் - பிரமச்சரியன் (28) செயிர் - கடுங்கோபம், வெகுளி - கோபம் (31) தொழிஇ - தொழுந்தை, அடிமைப்பெண், புலத்தல் - பகைத்தல் (37) மாண்டார் - துறவிகள் பண்டாரம் - கருவூலம், கண்காணி - மேற்பார்வையாளர் (39) இலிங்கி - தவமுடையவன் (41) பொச்சாப்பு - மறதி (50) பிறர்கைத்து - பிறர்கைப்பொருள் (51) மாது - விருப்பம், அலவலை - அற்பகாரியம் (52) தொங்கல் மகன், பூங்கோதை அணியிழை மாலை வேறுபாடு (53) புன்புலம் - புன்செய், இன்புலம் - உரமேற்றிய நன்செய்நிலம் (59) கரம் - நஞ்சு (61) தனி - கோயில் (62) சிதவல் - குறைவுபட்டது (63) சீத்து - செதுக்கி (64) நாட்டறை போதல் - நாட்டை விட்டு நீங்கிப் போதல் (72) சிக்கர் - தலைநோயுடையவர், சிதடர் - பித்தர், துக்கம் - சயரோகம், துருநாமம் - மூலநோய் (76) தொட்டும் - சுழன்று திரிகின்ற (79) பல்லவர் - சான்றோர் (82) மந்திரம் - இரகசியம், வாரம் - அன்பு (84) சத்தம் - இலக்கண நூல், சிட்டன் - மேலானவன் (85)
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 31
கண்ணுங்கால் - நினைக்குமிடத்து (86) ஏண் - வலி, அனி - அருளுடைமை (88) வீதல் - அழிதல் (89) முயிறு - செவ்வெறும்பு (90) நிரயம் - நரகம் (91) ஒன்னார் - பகைவர், பூசை - பூனை (94) பொத்தில் - குற்றமற்ற (95) வழிப்படரல் - வழியில் சென்று துன்பம் செய்தல்.
சிறுபஞ்சமூலப் பாடல்கள் தோன்றிய காலத்தில் இப்பாடலில் பயின்று வந்த சொற்கள் பெருமளவு மக்களால் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். பண்டைய இலக்கியங்களிலே பயின்று வந்துள்ள உரிச்சொற்களும் பாடலில் பயின்று வந்துள்ளன.
உறுபஞ்சமூலம்
- உறு உரிச்சொல் (1) கழி இனம்
- கழி உரிச்சொல் (76) தவ நனி செய்தல்
- நனி உரிச்சொல் (60) சாலப் பெரிது
- சால உரிச்சொல் (63) தவநிற்கும்
- தவ உரிச்சொல் (93)
".
சொல்லளபெடைகளும் பாடலில் வந்துள்ளன. பின்வரும் பாடலில் மூன்றிடங்களில் அளபெடை
வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
D
தொழீகி அட வுண்ணார் தோழரில் துஞ்சார் வழீகிய பிறர் பொருளை வெளவார் - கெழீஇக் கலந்தபின் கீழ் காணார் கானாய் மடவாய் புலந்தபின் போற்றார் புலை (38)
கா60
டவாய
வெண்பாப் பாடலில் ஓசை நயத்திற்காகச் சொற்கள் அளபெடுப்பதுண்டு. மக்களுக்குக் கூற வேண்டிய நல்லுரைகளைத் தெளிவாகவும் இனிமையாகவும் கூற வேண்டுமென்பதில் நூலாசிரியர் கருத்தாக இருந்துள்ளார். புலவரின் சொல்லாற்றல் பாடல்களை இன்றுவரை நின்று நிலைக்கச் செய்துள்ளது எனில் மிகையாகாது.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும் -

5. காலங் கடந்த பயன்
இன்று சிறுபஞ்ச மூலப் பாடல்களின் பயன் என்ன என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. மனித வாழ்வியல் முறைமைகள் இன்று சீர்செய்யப்பட வேண்டியுள்ளன. நாளாந்தக் கடமைகள் பற்றிய சிந்தனை மக்களிடையே திசை மாறியுள்ளது. விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியும் கருவிக் கையாட்சியின் பெருக்கமும் மனிதரை யந்திர கதியான வாழ்வியலுக்குத் தள்ளியுள்ளன. அதனால் மனித விழுமியங்கள் மறையத் தொடங்கியுள்ளன. ஒழுக்கச்சீர்கேடும் கருத்து முரண்பாடுகளும் மக்களிடையே மலிந்துள்ளன. இதனால் சமூகக் கட்டமைப்புச் சீர்குலையத் தொடங்கியுள்ளது. எனவே சமூகத்தை நெறிப்படுத்த வேண்டிய பலர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்பட்ட பலரை இனங்காண முடிகிறது. இக்குறைபாடுகளைக் கண்டு அவற்றை நீக்குவதற்கு ஏற்ற வழிவகைகளை ஆராயும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.
Tண
இவ்வேளையில் சிறுபஞ்ச மூலம் போன்ற அறநூற் கருத்துக்களை மீள்பார்வை செய்வது பயன்தரும். ஏனெனில் இந்நூல்கள் தோற்றம் பெற்ற காலத்துச் சமூகநிலையே தற்போதும் காணப்படுகிறது. நோயுற்ற உடலுக்கு ஏற்ற நல்ல ஒழுக்க நெறிகளைக் கூறும் சிறுபஞ்ச மூலம் மீள் கற்கைக்கு உரிய நூலாக இன்று விளங்குகிறது. இணையத் தளத்திலிருந்து தகவல்களைப் பெறும் இளைய தலைமுறை இக்கருத்துக்களையும் மனித வாழ்வின் செல்நெறிக்கு ஏற்ற கருத்துகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்தகைய சில கருத்துகளை இங்கு தருவது சமூகப்பயன்பாட்டிற்கு உதவும் மக்களை வகைப்படுத்திக் காட்டுவதில் சிறுபஞ்ச மூலம் இக்காலத்திற்கும் பொருத்தமான கருத்தைக் கூறியுள்ளது.
2

Page 32
வைப்பானே வள்ளல் வழங்குவான் வணிகன் உய்ப்பானே ஆசான் உயர்கதிக்கு - உய்ப்பான் உடம்பின் ஆர்வேலி ஒருப்படுத்து ஊன் ஆரத் தொடங்கானேல் சேறல் துணிவு (33)
செல்வத்தைச் சேர்த்து பிறருக்கு உதவ வைப்பவன் வள்ளல் ஆகும். பிறருக்குப் பொருளைக் கொடுத்து உதவுபவன் வணிகன் ஆகும். கல்வி புகட்டி உயர்நிலையடைய உதவுபவன் ஆசிரியன் ஆவான். உயிரைக் கொல்லாமலும் ஊன் தின்னாமலும் இருப்பவன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான் என இப்பாடல் கருத்துரைத் துள்ளது. சமூகத்து மக்களை இணங்கண்டு அவர் தன் கடமையோடு இயைபுபட்டு வாழும் முறைமையொன்று இப்பாடலில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. உயிர்க் கொலை தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பிறரை வைதால் வசை வரும் வணங்கினால் வளம் சேரும். பணிவு வாழ்க்கையில் நன்மை தரும் என்பதைச் சிறுபஞ்ச மூலம் வற்புறுத்தியுள்ளது.
ஏமாக
சமூகம் நோய் உறுவதற்குரிய மனிதர்களையும் சிறுபஞ்ச மூலம் இனம் காட்டியுள்ளது. வளமாக வாழும் உயிரை வருத்து நோய் பற்றிப் பின்வரும் பாடல் விளக்குகிறது.
அரம்போல் கிளை அங்காப் பெண் வியக்கத்தொண்டு மரம் போல் மகன்மாறாய் நின்று - சுரம்போலக் கள்ளநோய் காணும் அயல் ஐந்தும் ஆகும்ஏல் உள்ளநோய் வேண்டா உயிர்க்கு (61)
இரும்பைத் தேய்க்க உதவும் அரம்போல வருத்தம் தருகின்ற சுற்றத்தார்களும் அடங்கி நடக்காத மனைவியும் கீழ்ப்பணிந்து நடக்காத பணியாளும், மரம் போலிருக்கும் அறிவில்லாத மகனும் மாறு கொண்டு விஷம் போல வஞ்சகம் புரியும்
2 2

அடுத்து இருப்பவர்களும் இருந்தால் ஒருவனுக்கு வேறு துன்பம் வேண்டாம். இவை மனநோயை ஒருவனுக்கு உண்டாக்கித் தீராத துன்பத்தைத்தரும். ஒரு மனிதனுக்கு சுற்றம், மனைவி, வேலையாள், மகன், அயலார் என்பன துன்பந்தராமல் இருக்க வேண்டும். இன்றும் இத்தகைய துன்பத்தை மனிதன் எதிர்கொள்ளும் சாத்தியக் கூறுகள் உண்டு.
எனவே சமூகத்தை நோயற்ற சமூகமாக ஆக்குவதற்கு மனிதன் என்ன செய்யவேண்டும் என்பதையும் சிறுபஞ்சமூலம் குறிப்பிட்டுள்ளது. நல்ல பணிகளைச் செய்தால் நலபெறலாமென
வழிகாட்டுகிறது.
நீர் அறம் நன்று நிழல் நன்று தன் இல் உள் பார் அறம் நன்று பாத்து உண்பானேல் - பேரறம் நன்று தனி சாலை நாட்டல் பெரும் போகம் ஒன்றுமாம் சால உடன் (62)
தவித்த வாய்க்குத் தண்ணீர் அருந்தக் கொடுத்தல் நல்ல செயற்பாடாகும். கொடிய வெப்பத்தால் தவிப்பவர்களுக்குத் தங்க நிழல் அமைத்துக் கொடுத்தல் நல்லறமாகும். தன் வீட்டில் மழை வெள்ளம் போன்ற துயர், இடர் மிகுந்த நாட்களில் மற்றவர்கள் வந்து தங்கி நிற்பதற்கு இடம் கொடுத்தல் அறச் செயற்பாடாகும். மற்றவர்களோடு உணவைப் பகிர்ந்து உண்ணும் வாழ்க்கை நல்வாழ்க்கையாகும். இது மிகப் பெரிய வாழ்வியலறம் எனக் கருதப்பட்டது. இவற்றோடு மக்கள் வழிபாடு செய்வதற்காகக் கோயில்களை அமைத்துக் கொடுத்தலும் மக்கள் போக்குவரத்து செய்வதற்கு வசதியாகப் பெரும் சாலைகளை அமைத்துக் கொடுத்தலும் மிக நல்ல பணிகளாகக் கொள்ளப்பட்டன. இத்தகைய நல்ல சமூகப் பணிகளை மனமுவந்து செய்வோர் இன்பமான
வாழ்க்கை வாழுவர்.
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 33
தற்காலத்தில் இத்தகைய நற்பணிகளை மக்கள் தாம் செய்ய விரும்பாத நிலையொன்று உருவாகி வருகின்றது. எல்லாவற்றையும் யாரோ வந்து செய்ய வேண்டும் என்ற மனோபாவம் தோன்றியுள்ளன. இம்மனோநிலையை மாற்றச் சிறுபஞ்ச மூலம் கூறும் நல்லுரையை மக்கள் மனங்கொள்ள வேண்டும். சமூகத்திற்குச் செய்ய வேண்டிய தொண்டுகளைத் தனிமனித நிலையிலும் இந்நூல் எடுத்துரைத்துள்ளது.
குளம் தொட்டுக் கோடு பதித்து வழி சீத்து உளம் தொட்டு உழவயல் ஆக்கி - வளம் தொட்டுப் பாடுபடும் கிணற்றோடு என்று இவ்வைம்பாற்படுத்தான் ஏகும் சுவர்க்கத்து இனிது (65)
மக்கள் தண்ணீர்த்தேவையை நிறைவேற்ற குளம் தோண்டி மக்கள் செயற்பாடுகளுக்கு இடையூறாக இருக்கும் மரக்கிளை வெட்டி நட்டு, அவர்கள் நடந்து செல்லும் வழியைச் செப்பனிட்டுத் தரிசாகக் கிடக்கும் உள்ளிடத்தை உழுகின்ற வயலாகக் சீர்செய்து வளம் பெறச்செய்து, சுற்றுச் சுவருடன் கூடிய கிணறு அமைத்தல் என்னும் இவ்வைந்து செயற்பாடுகளையும் செய்பவன் இனிய சுவர்க்கத்தைச் சென்றடைவான். இப்பாடலில்
உசாத்துணை நூல்கள் 1. பதினெண் கீழ்க்கணக்கு : நியு செஞ்சுரி புக்கவுஸ் பிரைவேட் லி 2. பதினெண் கீழ்க்கணக்கு: தெளிவுரை, வித்துவான் துரை. இர 3. சிதம்பரனார் சாமி : பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

பபட
கூறப்பட்டுள்ள செயற்பாடுகள் இயற்கையின் சீற்றத்தாலோ அன்றேல் போரினாலோ பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகளாகும். இன்று உலகெங்கும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளப் பலர் கூடித் திட்டமிடுகின்றனர். ஆனால் சிறுபஞ்ச மூல ஆசிரியர் தனது சமூக வயப்பட்ட சிந்தனைத் திறத்தாலும் செயற்றிட்டத்தாலும் பாடலிலே இவற்றை அன்றே பதிவு செய்து வைத்துள்ளார். அவருடைய இலக்கியப் புலமையும் தமிழ்மொழி ஆற்றலும் சோதிட , மருத்துவநூலறிவும், இத்தகையதொரு சமூகத்தை நெறிப்படுத்தி வளம்படுத்தும் இலக்கியத்தை உருவாக்கச் செய்தன. செம்மொழியாம் தகுதி பெற்று உலகறிந்த மொழியாக இன்று தமிழ்மொழி தலை நிமிர்ந்து நிற்கும் வேளையில் இத்தகைய இலக்கியங்களைப் பற்றிய மீள்கற்கையும் மீள் ஆய்வும் பெரிதும் வேண்டப்படுகின்றன. அத்தகையதொரு பார்வையே இக்கட்டுரையாக்கமாகும். இளைய தலைமுறை இலக்கியப் பயிற்சியைப் புறந்தள்ளாமல் இருப்பதற்கும் பழந்தமிழ் இலக்கியங்களின் பயன்பாட்டை முழுமையாக அறிவதற்கும் இது வழி சமைக்குமென்பதில் ஐயமில்லை.
மிடெட், சென்னை, 1957 ாசாராம், முல்லை நிலையம், சென்னை, 1996. , சென்னை, 1957
23

Page 34
இன்னா நாற
சங்கமருவிய காலப் பகுதியில் போதனைகளை, அறிவுறுத்தல்களை மையமாகக் கொண்டு அற இலக்கியங்களை சான்றோர்கள் படைத்தனர். அந்த வகையில் தோன்றிய இலக்கியமே இன்னா நாற்பது ஆகும். இந்நூலின் ஆசிரியர் கபிலர். சங்க கால கபிலர் வேறு இவர் வேறு.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை அறம்கூறும் நூல்கள், அகத்திணை கூறும் நூல்கள், புறத்திணை கூறும் நூல்கள் எனப் பாகுபடுத்துவர். அறம்கூறும் நூல்களுள் ஒன்றாக இன்னா நாற்பது இடம் பெறுகின்றது. நாற்பது எனும் எண் பெயர் கொண்ட நூல்கள் நான்கு உள்ளன. இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது என்பவை. இன்னா நாற்பது என்பது செயத்தகாத விடயங்கள் இது இது எனக் கூறும் நாற்பது வெண்பாக்களைக் கொண்டது. இவை இன்னாமை தருவன என்று ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாதவை கூறப்படுகின்றன. இதனால் இவ்விலக்கியம் இன்னா நாற்பது எனப் பெயர் பெற்றது.
உரனுடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா மறனுடை ஆளுடையான் மார்பு ஆர்த்தல் இன்னா சுரம் அரிய கானம் செலவின்னா இன்னா மனம் வறியாளர் தொடர்பு (இன்னா 18)
மேற்கூறிய பாடலில் திண்ணிய அறிவுடையவன் மனம் சோம்பியிருத்தல் தகுதியன்று (இன்னா) வீரரை உடையவன் தான் தனித்துப் போருக்குச்
24

ற்பது
- கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்
சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
செல்லுதல் கூடாது. அதனால் துன்பம் வரும். ஆள்நடமாட்டமில்லாத காட்டில் செல்லுதல் கூடாது துன்பம் விளையும். வறிய மனம் உடையவரது சேர்க்கை தகாது. இந்நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்தோடு சேர்த்து 41 பாடல்கள் உள்ளன. இந்நூலில் 164 இன்னாத விடயங்கள் எடுத்துக் கூறப்படுகின்றன.
கடவுள் வாழ்த்துப் பாடலில் நான்கு இன்னாதவை சொல்லப்படுகின்றன. சிவ பெருமானின் திருவடிகளை வணங்காதிருத்தல் பலராமனை நினையாது நடத்தல், திருமாலை மறத்தல், முருகனது திருவடியை வணங்காது இருத்தல் என்பன துன்பமானவை எனக் கூறப்படுகின்றது. நான்கு தெய்வங்களும் வணக்கத்திற்கு உரியவை என பல தெய்வ வணக்கம் சமரச நோக்குடன் கூறப்படுகின்றது.
நீதி நூல்கள் பொதுவாக இது செய்தல் வேண்டும் எனவும் இது செய்யக்கூடாது எனவும் கூறும் முறையில் அமைவது வழக்கம். ஆனால் இன்னா நாற்பது இது இது செய்தால் துன்பம் நேரிடும் என்ற கருத்தில் இது இது இன்னாதது என்று கூறுகின்றது. விலக்கவேண்டியவற்றை இன்னாதவை என்று குறிப்பிடுகின்றார். மேலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விடுவதும் இன்னாதவை என்ற பொருள்படவும் (எதிர்மறையாக)
குறிப்பிடுகின்றார்.
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 35
அறமனத்தார் கூறும் கடுமொழியும் இன்னா (இன்னா 6) இடும்பை உடையார் கொடையின்னா (இன்னா 6)
தேற்றம் இலாதான் துணிவின்னா (இன்னா7)
முறையின்றி யாளும் அரசின்னா பெருமையுடையாரைப் பீடழித்தல் இன்னா (இன்னா 27) பெரியாரோடு யாத்த தொடர்விடுதல் இன்னா
(இன்னா 26)
கள்ளுண்பான் கூறும் கருமப் பொருளின்னா
(இன்னா 33)
மேற்படி அடிகளில் சான்றோர்கள் (கற்றவர்கள், பண்புள்ளவர்கள்) கடுமையான சொற்களால் பிறரைத் தாக்கினால் அதனால் ஏற்படும் விளைவு துன்பத்தைத் தரும். அதனால் சான்றோர்கள் கடும் மொழியினைப் பயன்படுத்தல் கூடாது. அதனையே துன்பம் தரும் கடும் சொல் இன்னா என்கிறது.
வறியவர்களிடத்துப் பிறருக்கு ஈகை செய்யும் அளவுக்கு பொருள் இருக்காது. அவர்களது தேவையை நிறைவு செய்யவே பொருள் போதாமை இருக்கும். அந்தருணத்தில் வறியவர்கள் பிறருக்கு கொடுக்க முற்படும் பொழுது அவர்களுக்கே அது மேலும் துன்பத்தைக் கொடுக்கும். ஈகை செய்வதால் ஏற்படும் விளைவு துன்பம் என்பதை இன்னா நாற்பது ஆசிரியர் குறிப்பிடுவார்.
எந்தக் காரியத்தைச் செய்ய முற்படும் பொழுதும் அதில் பூரண தெளிவு இருக்க வேண்டும். குறிப்பிட்ட செயலில் தெளிவில்லாதவன் அந்தச் செயலில் ஈடுபடும் பொழுது அது மாறுபட்ட விளைவையே ஏற்படுத்தும். அதனால் தான் தெளிவில்லாதவன் வினை செய்யத் துணிதல் துன்பம் என்கிறது.
அரசாட்சியில் தான் மக்கள் ஆட்சி தங்கியுள்ளது. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பர். அரசன்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

நீதியுடையவனாக இருக்க வேண்டும். அரசன் நீதி தவறினால் அதனால் ஏற்படும் விளைவு துன்பத்தைத் தரும். அதனால் முறையின்றி ஆளும் அரசு இன்னா துன்பம் தரும் எனக் கூறப்படுகின்றது.
(பெரியவர்கள்) கற்றவர்கள், முதியவர்கள், பண்புள்ளவர்கள், ஆசிரியர்கள், மதகுருமார் போன்ற பெரியவர்களை அவமதித்தால் அதனால் ஏற்படும் விளைவு துன்பம் தரும். அதனால் பெருமையுடையவரைப் பீடழித்தல் இன்னா என்றார்.
மது அருந்துபவர்கள் அறிவு அற்றவர்கள். மது அறிவை மயக்கி விடும் அவர்கள் கூறும் காரியங்களின் பயன் தீய விளைவைத் தரும் அதனால் துன்பம் வரும். அதனால் கள்ளுண்பான் கூறும் கருமப் பொருளின்னா எனக் கூறப்படுகின்றது.
இன்னா என்னும் சொல்லுக்கு துன்பம் என்பதே பொருள். சில இடங்களில் இனிமையன்று தகுதியன்று என்ற பொருள் படவும் வருகின்றதைக் காணலாம்.
ஆன்றவிந்த சான்றோருள் பேதை புகலின்னா
னார்
(இன்னா 17)
தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா (இன்னா 22)
கல்வியால் நிறைந்த அடங்கிய பெரியவர்கள் நடுவே அறிவில்லாதவன் செல்லுதல் தகுதி அன்று. புகலின்னா என்பது தகுதியன்று என்ற பொருளிலே தான் பயன்படுகின்றது. தேனும் புளித்து விட்டால் அவற்றின் சுவை இனிமையன்று. 'இன்னா' என்பதற்கு பதிலாக இனிமையன்று தகுதியன்று எனச் சில இடங்களில் பயன்படுத்துவதைக் காணலாம்.
செய்ய வேண்டியவற்றை செய்யாது இருத்தலும் இன்னாதவை என எதிர்மறை வடிவிலும் சொல்லுகின்றது.
25

Page 36
குலத்துப் பிறந்தவன் கல்லாமையின்னா (இன்னா 19) நிலத்திட்ட நல்வித்து நாறாமை இன்னா (இன்னா 19) நறிய மலர் பெரிது நாறாமை இன்னா (இன்னா 37)
நல்ல குடியில் பிறந்தவன் கல்லாமல் இருத்தல் துன்பமானது. பூமியில் விதைத்த நல்ல விதைகள் முளையாமல் போதல் துன்பம் தரும். நல்ல மலர் மிகவும் மணம் வீசாது இருத்தல் நன்று அன்று.
திருவள்ளுவரது கருத்துக்களையும் தொடர் களையும் இன்னா நாற்பது ஆசிரியர் சில
இடங்களில் எடுத்தாள்வதைக் காணலாம்.
அறைபறை அன்னர் கயவன் தாம்கேட்ட மறை பிறர்க்கு உய்த்துரைக்கலான் (குறள் 1070)
என வரும் பாடல் தொடரும் கருத்தும்
அறைகறை அன்னவர் சொல் இன்னா (இன்னா 24) என இன்னா நாற்பதில் வருகின்றன.
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் (குறள் 799)
இதனைப்பின்பற்றி
கெடுமிடங் கைவிடுவார் நட்பு இன்னா (இன்னா 37)
இவ்வாறு திருக்குறளைப் பின்பற்றி இன்னா நாற்பது ஆசிரியர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. திருக்குறள் கருத்தைப் பின்பற்றுவதால் திருக்குறளுக்குப் பிந்தியது இன்னா நாற்பது எனக் கொள்ளலாம்.
26

இன்னா நாற்பதில் சில கருத்துக்கள் திரும்பத் திரும்ப கூறுவதைக் காணலாம். கூறியது கூறல் அமைவதைக் காணலாம். உதாரணமாக
இடும்பையுடையார் கொடை இன்னா (இன்னா - 6)
இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு
(இன்னா - 11)
என்பனவும்,
வண்மை இலாளர் வனப்பு இன்னா (இன்னா - 10)
வளமை இலாளர் வனப்பு இன்னா (இன்னா - 28) பண்ணில் புரவிப் பரிப்பு இன்னா (இன்னா - 10)
வெறுப்புள் வெம்புரவி ஏற்று இன்னா (இன்னா - 39)
என்பனவும் ஒரு கருத்தை ஒட்டி அமைகின்றன. இக் கருத்துக்களை சமூகத்திற்கு வலியுறுத்த வேண்டியதால் திரும்பத் திரும்பக் கூறியிருக்கலாம்.
பாக
அறநூல்களின் நோக்கம் சமூகத்துக்கு தேவையான அறிவுரைகளைப் போதிப்பனவாக அமைகின்றன. இன்னா நாற்பது ஆசிரியரும் அறிவுரை கூறுவதே நோக்கமாக இருந்திருக் கின்றார். சொல்ல வந்த கருத்தை கவிதை அழகின் ஊடாக வெளிப்படுத்துகின்றார்.
கருத்து எனினும் அழகே முக்கியமானதாக காணப்பட்டது. சொல்லும் முறையில் கலையழகு காணப்படுகின்றது. கருத்து சொல்லும் போதெல்லாம் இன்னா, இன்னா என்று அடுக்கிச் செல்வது அழகைக் கொடுக்கின்றது. ஒவ்வொரு பாடலும் வெண்பா யாப்பால் அமைந்தமை
குறிப்பிடத்தக்கது.
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 37
இயற்கை வரு இலக்கியமாய் கார் நாற்பது
கார் நாற்பது சங்கம்மருவிய காலம் எனச் சுட்டப்பெறும் காலப் பகுதியில் தோன்றியனவென்று கருதப்பெறும் பதினெட்டு நூல்களின் தொகுப்பாகிய பதினெண்கீழ்க்கணக்குள்
அடங்கும் ஒரு நூல்.
பதினெண்கீழ்க்கணக்குள் நான்கு நூல்கள் தலா நாற்பது செய்யுள்களால் ஆனவை. அது காரணமாக அந்நான்கையும் சேர்த்து நானாற்பது என்று சுட்டும் வழக்கு ஒன்று உண்டு. பதினெண் கீழ்க்கணக்குள் அடங்குபவை இவை இவை எனத்தெரிவிக்கும் பழஞ்செய்யுளொன்றும் அந் நான்கையும் ஒரு சேர நானாற்பது என்றே சுட்டுகின்றது.
நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியோடு ஏலாதி என்பவே கைநிலையவாம் கீழ்க்கணக்கு
அந்நான்குள் அடங்கும் ஏனைய மூன்றும் : களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்பன.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

நணனை
ப இலங்கும்
க.இரகுபரன் சிரேஷ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
'இலக்கண விளக்கப் பாட்டியல் ' நானாற்பது என்பது ஒரு பிரபந்த வகை என்பது போலக் கருதி
அதற்கு இலக்கணமுங் கூறுகின்றது.
காலம், இடம், பொருள் கருதி நாற்பான் சால உரைத்தல் நானாற்பதுவே
கார் நாற்பது காலம் கருதி அமைந்ததென்பதும் களவழி நாற்பது இடங்கருதியும் ஏனைய இரண்டும் பொருள்கருதியும் அமைந்தவை என்பதும் இலக்கண விளக்கப் பாட்டியலார் கருத்து.
ஆசிரியர்
மதுரைக் கண்ணங் கூத்தனார் என்பவர் கார் நாற்பதின் ஆசிரியராக அறியப்படுகிறார்.
''கூத்தனார் என்னும் பெயருடைய இவர் கண்ணன் என் பார்க்கு மகனாதலிற் கண்ணங்கூத்தனார் என்றும் மதுரையிற் பிறந்தமையாலோ இருந்தமை யாலோ மதுரைக் கண்ணங் கூத்தனார் என்றும் வழங்கப்பட்டனரெனக் கொள்ளல் வேண்டும்" (ந. மு.வேங்கடசாமி நாட்டார், ப. 4)
27

Page 38
கார் நாற்பத்தின் பிரதிகளில், அதன் சிறப்புப்பாயிரம் எனத் தரப்பட்டுள்ள செய்யுள்களும் ஆசிரியரை வெறுமனே கூத்தனார் என்றே சுட்டுதல் காணத்தக்கது.
முல்லைக் கொடி மகிழ மொய்குழலார் உளமகிழ மெல்லப் புனல் பொழியும் மின் எழிற்கார் -
தொல்லை நூல் வல்லார் உளம் மகிழத் தீந்தமிழை வார்க்குமே சொல்லாய்ந்த கூத்தர்கார் சூழ்ந்து.
வானத்தே மின்னலொடு தோன்றும் காரானது முல்லைக் கொடிகள் (தமக்குரிய காலம் வந்து விட்டது என்று அரும்பவிழ்ந்து மலர்ந்து) மகிழும் படியாகவும் கரிய கூந்தலையுடைய பெண்கள் (தம்மைவிட்டுத் தொழில் நிமிர்த்தம் பிரிந்து சென்ற தலைவர் திரும்பி வருவதாகக் குறித்துச் சென்ற கார்காலம் வந்துவிட்டது; எனவே அவர் வந்துவிடுவார்) என்று உள்ளம் மகிழும் படியாகவும் மெல்லப் புனல் பொழியும், சொற்களின் தன்மைகளை யெல்லாம் நன்கு ஆராய்ந்த அறிவினரான கூத்தரின் கார் (நாற்பது), பழைய நூல்களிலே பாண்டித்தியம் மிக்க புலவர்களின் உள்ளம் மகிழும் படியாகச் சூழ்ந்து இனிய தமிழைப் பொழியும் என்பது இதன் பொருள்.
சங்க இலக்கிய மரபு
சிறப்புப்பாயிரம் தொல்லை நூல் வல்லார் என்று சுட்டுவது சங்க இலக்கியங்களிலே அந்த இலக்கிய மரபிலே வல்லவர்களை என்று கொள்ள வேண்டும். அத்தகையவர்கள் மகிழும்படியாக சங்க இலக்கிய மரபை உட்கொண்டதாக கூத்தர் கார் நாற்பதை இயற்றியுள்ளார். சங்க இலக்கிய மரபின் பிரதான கூறுகளான அகம், புறம் என்னும் இரண்டுள் அகம் சார்ந்தனவான அன்பினைந் திணையுள் ஒன்றான முல்லை நிலத்தின் இருத்தல் ஒழுக்கத்துக் குரிய இலக்கிய மரபின் அடிப்படையிலே கார் நாற்பது பாடப்பட்டுள்ளது.
28

''காடும் காடுசார்ந்த நிலமுமாகிய முல்லை நிலத்தில் வாழ்ந்தோர் ஆயர் எனப்படுவர். அவர் பண்டைக்காலத்திற் பெரும்பாலும் மந்தை மேய்த்தற் றொழிலையே செய்துவந்தனர். தம் நிலத்தினையும் மந்தைகளையும் பகைவரிடத் திலிருந்து காத்தற் பொருட்டு தம் நிலத்தின் எல்லைப் புறங்களுக்கு அவர்கள் சென்று பாடிவீடு அமைத்துச் சில நாட்கள் தங்கியிருந்து பகையினை அடக்கி மீளுதல் வழக்காறாயிருந்தது அங்ஙனம் அரசனும் படைத்தலைவன் முதலானோரும் பாசறைக்குச் செல்லும் போது தம் மனைவியரை வீட்டில் விட்டுத் தாம் மீண்டுவருங்காலம் இன்னது எனக் கூறிச் செல்வர். அவ்வாறு பிரிந்த ஆடவர் தாம் மீண்டு வருவதாகக் குறித்த காலம் வருந்துணையும் அவர் மனைவியர் தம்முடைய துன்பத்தை ஆற்றிக்கொண்டு வீட்டில் இருந்தலும் அப்பருவம் வந்தவிடத்தும் அவர் வாராராயின் ஆற்றாமை மீ துரப்பெற்றுத் துன்புறதலும் பிறவும் முல்லை நில ஒழுக்கங்களாகக் கொள்ளப்பட்டன'' (வி. செல்வநாயகம்)
இவ்வாறான சங்க அகத்தினை மரபின் தொடச் சியையே கார் நாற்பதிற் காண்கிறோம். மனைவியரைப் பிரிந்து செல்லும், முல்லை நிலத் தலைவர்கள் தாம் மீண்டு வருங் காலம் எனக் குறிக்கும் காலம் கார்காலம்.
00.
காரும் மாலையும் முல்லை (தொல்)
lொ
மாலை
காலத்தின் கோலம் - குறி
கார் நாற்பதிலுள்ள சில செய்யுள்கள் இந்தக் குறி' குறித்தனவாயும் உள்ளன. தலைவனது பிரிவினால் வருந்தி நிற்கும் முல்லை நிலத் தலைவிக்கு கார் காலத்தின் தோற்றம் நோய் தீர்க்கும் மருந்து போன்றது. கருமேகங்கள் எழுவது முதலானவை, கார் காலத்துக்கான அடையாளங்கள் - குறிகள். மேகங்கள் ஈச்சம்பழம் போன்று கருநிறம் கொண்டுவிட்டன. ஆகவே
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 39
நம்தலைவியின் வாடிய நெற்றி இனி ஒளி பெறும் என்ற பாங்கில் பேசுகிறாள் தோழி:
வந்தன செய்குறி வாரார் அவர் என்று நொந்த ஒருத்திக்கு நோய்தீர் மருந்தாகி இந்தின் கருவண்ணம் கொண்டன்று எழில்வானம் நந்தும் என்பேதை நுதல்” (கார் - 40)
கார்காலத்தின் அறிகுறிகள் பிரிந்த தலைவன் இதோ நான் வருகிறேன்' என்று தலைவிக்கு விடுத்த தூது போன்றன. தோன்றிப் பூக்கள் பூத்துவிட்டன. சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்தின் தலை நாளாகிய பூரணை தினத்திலே நாட்டிலுள்ளவர்கள் ஏற்றிய விளக்கீடு போலத் தோற்றமளித்து அவை பூப்பது கார்காலத்தின் வருகையை உணர்துவற்கு அல்லவோ? ஆகவே சிலவாகிய மொழிகளையே பேசும் தலைவியே வருந்தாதே என்னும் பாங்கில் பேசுகின்றாள் தோழி :
நலமிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கில் தகை உடையவாகி புலமெல்லாம் பூத்தன தோன்றி சில மொழி தூதொரு வந்த மழை. (கார் 26)
கார்காலத்தை உணர்த்தும் இத்தகைய அறிகுறிகள் தலைவனுக்கும் செய்தி சொல்லுகின்றன. பாசறைக்கண் தங்கிப் போர் தொழிலில் ஈடுபட்டிருந்த தலைவன் கார்காலத் தோற்றத்தைக் கண்டதும் தலைவிக்குத் தான் மீண்டுவருவதாகக் குறித்த காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்கிறான்.
கடல் நீரை முகந்து குடித்து, நிறைந்த சூலொடு விளங்கும் மேகங்கள் தாம் முகந்து கொண்ட நீரை மேற்குமலைச் சாரலிலே பொழிகின்ற இக்கார்காலமே நாம் மீண்டும் வரும் காலம் என அவளுடைய துன்பத்தை ஆற்றுவதற் காகச் சொல்லிவிட்டு வந்த காலம். அது வந்துவிட்டது
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும் -

ஆகவே விரைந்து செல்வோம் என்று தன் பாகனிடம் பேசுகிறான் தலைவன்.
கடல் நீர் முகந்த கமஞ்சூல் ஏழிலி குடமலை ஆகத்துக் கொள்அப்பு இறைக்கும் இடம் என ஆங்கே குறிசெய்தேம் பேதை மடமொழி எவ்வம் கெட (கார் - 33)
போருக்கான பிரிவு
வேந்தனது போர்த் தொழிலிலே ஈடுபடுதற் காகவே தலைவியைப் பிரிந்து வந்தான் தலைவன். இப்போது அந்த வேலையும் முடிந்துவிட்டது. தன் பாகனை நோக்கிச் சொல்லுகிறான் தலைவன்:
வீறுசால் வேந்தன் வினையும் முடிந்தன; ஆறும்பதம் இனியவாயின; - ஏறோடு அருமணி நாகம் அனுங்க, செருமன்னர் சேனைபோற் செல்லும் மழை. (கார் - 20)
வேந்தனது போர்த்தொழிலும் முடிந்துவிட்டது. அதனால் பாதையும் போக்குவரத்துச் செய்வதற்கு ஏற்றதாய் ஆகிவிட்டது; அதுமட்டுமல்ல, பாம்புகள் நடுங்கும்படியாக இடியோடு கூடியனவாய் மழை மேகங்களும் போருக்குச் செல்லும் மன்னர்களின் படைபோல - வானத்தே செல்லத் தொடங்கிவிட்டன என்றவாறாய் அமையும் தலைவனது கூற்றின் தொனிப்பொருள், நாம் திரும்பி வருவதாகத் தலைவியிடம் குறித்துச் சொன்ன கார்காலம் வந்துவிட்டது, இனித் தாமதிக்கலாகாது என்பதாகும். போர்த்தொழிலில் ஈடுபட்டிருந்த தலைவி இன்னும் அதிலிருந்து முற்றாக விடுபடவில்லை என்பதை அவன் மழைமேகத்துக்குக் கையாண்ட உவமை (செருமன்னர் சேனை போற் செல்லும் மழை) உணர்த்தி நிற்கின்றது.
இவ்வாறே பிறிதொரு செய்யுளும் தலைவன் தலைவியைப் பிரிய நேர்ந்தது அவன் அரசனுக்காகப் போரில் ஈடுபடச் சென்றமையாலேயே என்பதை உணர்த்தி நிற்கின்றது. அரசனது அரிய
29

Page 40
போர்த்தொழிலிலே ஈடுபட வாய்ப்புப் பெற்ற நம் தலைவர், கரிய கடல் நீரை உறிஞ்சி உண்ட மழைமேகமானது பெரிய மலைகளின் மேலே ஏறிப் பொழியத்தொடங்கும் இந்தப் பருவ காலத்திலும் வாராதிருப்பாரோ என்ற பாங்கில் தலைவியைத் தேற்றும் தோழி கூற்றாக அமைகிறது அச் செய்யுள்.
கருங்கடல் மேய்ந்த கமஞ்சூல் எழிலி இருங்கல் இறுவரை ஏறி உயிர்க்கும் பெரும்பதக் காலையும் வாரார்கொல் வேந்தன் அருந்தொழில் வாய்த்த நமர் (கார் - 37)
பொருளுக்கான பிரிவு
முல்லை நிலத் தலைவர்கள் தம் தலைவி யரைப் போரின் நிமித்தமாகவே பிரிந்து செல்வதாகப் பொதுவாகக் கூறப்படுவதுண்டு. ஆனால் கார் நாற்பதின் செய்யுள்கள் சில அவர்கள் செல்வம் தேடும் பொருட்டும் பிரிந்துசென்றார்கள் என்று காட்டுகின்றன. அந்த மாற்றம் சமுதாய வளர்ச்சியின் ஒரு விளைவாகலாம்.
புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார் வணரொலி ஜம்பாலாய் வல்வருதல் கூறும் அணர்ந்தெழு பாம்பின் தலைபோல் புணர்கோடல் பூங்குலை ஈன்ற புறவு. (கார் - 11)
தோழி பருவங்காட்டி வற்புறுத்துவதாக அமைந்த செய்யுள் இது. மேல்நோக்கி எழுகின்ற பாம்பின் தலைபோல வெண்காந்தள்கள் பூங்கொத்துக்களை அரும்பத் தொடங்கிவிட்ட காடு, செல்வத்தைத் தேடி வருவதற்காக நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் விரைவில் வந்துவிடுவார் என்பதைக் கூறி நிற்கின்றது என்கிறாள் தோழி. அவ்வாறான
மற்றொரு செய்யுள் வருமாறு:
செல்வந் தரவேண்டிச் சென்றநங் காதலர் வல்லே வருதல் தெளிந்தாம் வயங்கிழாய் முல்லை இலங்கெயிறு ஈன நறுந்தண்கார் மெல்ல இனிய நகும். (கார் - 14)
30

தலைவியே கார்காலமானது முல்லை அரும்பு களாகிய பற்களைக் காட்டி மெல்லச் சிரிக்கின்றது. அதனால் செல்வம் தேடித்தருவதற் காகச் சென்ற நம் தலைவர் விரைந்து வந்துவிடுவார் என்பது எமக்குத் தெளிவாகிவிட்டது என்கிறாள் தோழி.
'இல்லாரை எல்லாரும் இகழ்வர்'. அந்தப் பழிச் சொல்லுக்கு அஞ்சியே தலைவன் பொருள் தேடச் சென்றதாக ஒரு செய்யுளிற் குறிப்பிடப் படுகிறது. தோழி தலைவியைப் பருவங்காட்டித் தேற்றுவதாக அமைகிறது அச்செய்யுள் ''அம்புபோன்ற கண்ணையுடைய பெண்ணே , இகழ் பவர்களுடைய பழிச்சொல்லுக்குப் பயந்து பொருள் தேடச் சென்ற நம் தலைவன் இதோ வந்துவிடுவான். இது பொய்யில்லை. ஏனெனில் அவன் குறித்துச் சென்ற கார்காலம் வந்துவிட்டது. அதற்கு அடையாளமாக பவளம் சிதறிக்கிடப்பது போல இந்திரகோபப் பூச்சிகள் (தம்பலப் பூச்சி - தாம்பூலப்பூச்சி) பரந்து கிடப்பதைப் பார்” என்று தோழி உரைப்பதுபோல அமைந்த அச்செய்யுள் வருமாறு:
பாக
இகழுநர் சொல் அஞ்சிச் சென்றார் வருதல் பகழிபோல் உண்கண்ணாய் பொய்யன்மை ஈண்டைப் பவழம் திதறியவைபோலக் கோபந் தவழும் தகைய புறவு. (கார் - 5)
புறத்திணைமரபின் தாக்கம்
கார் நாற்பது, அடிப்படையில் சங்ககால அகத்திணை மரபின் அடிப்படையிலேயே பாடப்பட்ட தாயினும் அந்நூலில் புறத்திணை மரபின் தாக்கமும் ஓரளவில் வெளிப்படுவதை அவதானிக்கலாம். உதாரணம் :
ஏந்தெழில் அல்குலாய் ஏமாந்த காதலர் கூந்தல் வனப்பிற் பெயல்தாழ - வேந்தர் களிறு ஏறி வாள் அரவம்போலக் கண்வெள்வி ஒளிறு மின்னும் மழை. (கார் - 13)
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 41
தலைவர் திரும்பி வருவதற்குரிய கார்காலம் வந்துவிட்டதா என எப்போதும் வானத்தை அண்ணாந்து பார்த்தபடியிருக்கும் காதலியின் கூந்தல் வீழ்வதுபோல மழைத்தாரைகள் வீழ, மேகமானது போரில் ஈடுபடும் வேந்தர் களிறுகளை வெட்டி வீழ்த்துகின்ற வாள்போல பார்ப்போர் கண்ணைப் பறிக்கும்படியாக மின்னுகிறது என்று பொருள்படும் இச்செய்யுளில், கவிஞர் போர்க் களக்காட்சியை உவமையாகக் கையாண்டுள்ளார். பிறிதொரு செய்யுளில் (கார் - 20) மழை மேகத்திக்கு செருமன்னர் சேனை'யை உவமித்தமை மீளவும் குறிப்பிடத்தக்கது.
6ெ)
[மியாச
சங்க இலக்கியப் புறத்திணை மரபின் அடிப்படையான மற்றொரு அம்சம் புகழ்; புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்' அக்காலப் புரவலர்கள் - செல்வார்கள். புகழ் வேட்கையுடைய அத்தகு செல்வர்களை ஒரு உவமைக்குக் கையாளுகிறார் கவிஞர்.
பிடவம் என்பது ஒருவகைச் செடி; கார் காலத்தில் மலர்வது. "செல்வர்களது மனதைப் புகழ்ந்து பாடி மகிழ்விக்கும் பாணர்களைப்போல, வண்டுகள் அந்தப் பிடவம் என்னும் பெருந்தகை மலரும்படியாக நன்கு இசை முரல்கின்றன. வானத்தில் கருமேகங்களும் ஓடுகின்றன; கார் காலம் வந்துவிட்டது; பாகனே, தேரை விரைவாகச் செலுத்து " என்று தலைவன் தன் பாகனுக்குக்
கூறுமாறு அமைந்த,
கடாஅவுக பாக தேர், கார் ஓடக் கண்டே கெடாஅப் புகழ் வேட்கைச் செல்வர் மனம்போல் படாஅ மகிழ்வண்டு பாண்முரலும் கானம் பிடாஅப் பெருந்தகை நற்கு. (கார் - 32)
என்னும் செய்யுள் புறத்திணை சார்ந்த புகழ் பற்றிய உண்மையை உட்கொண்டது. மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்' தங்கள் புகழை நிலைநாட்டிக் கொள்ளவேண்டும் என்பதும்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

புகழுக்கு அடிப்படையாக அமைந்தவற்றுள் ஒன்று. கொடை என்பதும், அக்கொடை செல்வம் உடையார்க்கே சாத்தியமாவது என்பதும் அக்கால சமுதாயத்தின் மனநிலை. சங்கப் புறத்திணைப் பாடல்களில் அம்மன நிலையை நன்கு கண்டு கொள்ளலாம். அதனை வெளிப்படுத்துவதாக அமைகிறது கார் நாற்பதின் செய்யுள் ஒன்று; பருவங்காட்டி வற்புறுத்தும் தோழி கூற்றாய்
அமைவது:
"பெண்ணியல்பு பொருந்தப் பெற்ற நல்லவளே, மண்ணால் இயன்ற இந்த (நிலை யில்லாத) உலகத்திலே நிலையான புகழை விரும்பி (அப்புகழுக்கு அடிப்படையான பொருள் தேடுவ தற்காகப்) பிரிந்த நம் தலைவர் இதோ வந்துவிடுவார் என்று, கண்ணிலே மைதடவியது போன்ற தோற்றத்தோடு காயாம்பூக்கள் பூத்திருக்கும் காடுகள் சொல்வதைப் பார்”
மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ் வேண்டிப் பெண்ணியல் நல்லாய் பிரிந்தார் வரல் கூறும் கண்ணியல் அஞ்சனம் தோய்ந்தபோற் காயாவும் நுண் அரும்பு ஊழ்த்த புறவு. (கார் 8)
நிலையில்லா உலகத்தில் ஒருவனை நிலைபெற வைப்பது புகழே என்றும் அந்தப் புகழுக்கு அடிப்படையாய் அமைவது கொடையும் வீரமும் என்றும் அவை யாவற்றுக்கும் அடிப்படை செல்வமே என்றும் அமைந்த மனப்பான்மையை வெளிப் படுத்தும் மற்றொரு செய்யுள் வருமாறு:
நச்சியார்க்கு ஈதலும் நண்ணார்த் தெறுதலும் தற்செய்வான் சென்றார்..... (கார் -7)
"தம்மை விரும்பி வந்தடைந்தவர்களுக்குக் கொடுத்தலும் பகைவரை அழித்தலுமே தம்மை நிலைநிறுத்துவன் என்று அறிந்து (எம்மைப் பிரிந்து) சென்றார் நம் தலைவர்” என்ற பாங்கில் அமையும்
கூற்று இது.
31

Page 42
அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும் பெரிதாய் பகை வென்று பேணாரைத் தெறுதலும்
....... தரும் எனப் பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்
என்ற கலித்தொகை அடிகளும் ஒப்பு நோக்கத் தக்கன.
'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை (குறள்) என்ற அடிப்படை உண்மையை உட்கொண்டனவாய் அமைவன இச்செய்யுள்கள். ஆசிரியர் நூலின் பல இடங்களில் செல்வத்தையும் அதன் எதிர்நிலையிலே வறுமையையும் பற்றிப் பேசுகிறார். கார்கால வருணனைகளைக்கூட அவ்வாறு அமைத்துக்கொள்கிறார். மழை பொழிவதால் கார்காலம் செல்வம் எய்துகின்றது. வெப்பத்தைத் தரும் சூரியன் வறுமை எய்துகிறான்,
கடுங்கதிர் நல்கூர், கார் செல்வம் எய்த (கார் - 2)
செல்வர் மனம்போற் கவின் ஈன்ற, நல்கூர்ந்தார் மேனிபோல் புல்லென்ற காடு (கார் - 18)
வளம் உடையார் ஆக்கம்போற் பூத்தன காடு
(கார் - 22)
வைதிகச் சார்பு
கார் நாற்பதில், அகத்திணைக்கு அப்பாற் பட்ட விடயங்களும் சார்புநிலையில் வருவதை நோக்கும்வேளையில் அந்நூலின்கண் ஆங்காங்கே பயின்றுள்ள சமயச்சார்பான செய்திகளையும் நோக்குதல் பொருத்தமாகும். அவ்வகையில் தொன்மையானதும் இன்று வரை கொண்டாடப் படுவதுமான கார்த்திகை விளக்கீடு பற்றிய செய்தி ஒரு செய்யுளில் (கார் - 26) உவமை வகையால் அமைந்தமை பற்றி முன்பே கூறப்பட்டது. அதுபோல மின்னலுக்கு உவமையாக வேள்வித்தீ கையாளப் பட்டுள்ளமையும் கருதத்தக்கதே.
32

பொச்சாப்பு இல்லாத புகழ் வேள்வித் தீப்போல எச்சாரும் மின்னும் மழை. (கார் - 7)
வெண்கடப்பம் பூக்களுக்குப் பலராம உவமையாகக் கையாளப்பட்டுள்ளான். கலப்பைப் படையாலான வெற்றியை உடைய பலராமனைப் போல செவ்விய தளிர்களையுடைய வெண்கடம்புகள் வெண்ணிறமான பூக்களைப் பூத்தன என்கிறார் கவிஞர்.
நாஞ்சில் வலவன் நிறம் போல பூஞ்சினைச் செக்கால் மராஅந் தகைத்தன. (கார் - 19)
இக்காலத்தனவான வேறும் பல நூல்களில் பலராமன் பற்றிய செய்தி பரவலாகக்
கூறப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கார் நாற்பதிலுள்ள சமயச் சார்பான செய்திகள் என்று நோக்கும் போது அதன் முதலாவது செய்யுள் பிரதானம் அவதானிக்க வேண்டியது. அது வருமாறு:
பொருகடல் வண்ணன் புனைமார்பில் தார்போல திருவில் விலங்கூன்றித் தீம் பெயல் தாழ வருதும் என மொழிந்தார் வாரார்கொல் வானம் கரு இருந்து ஆலிக்கும் போது. (கார் - 1)
கரையை மோதும் கடலின் நிறத்தை உடையவனான திருமாலின் மார்பிலே புனையப்பட்டுள்ள (பல நிற மலர்களால் ஆன) மாலைபோல, வானவில்லைக் குறுக்காக நிறுத்தி மழை பொழிகிறது என்னும் போது திருமால் உவமை வகையால் குறிப்பிடப்படுகிறான். நூலின் தொடக்கத்தில் திருமாலின் பெயர் அமைந்தமையால் அச்செய்யுள் நூலுக்கான கடவுள் வாழ்த்தும் ஆகின்றது. அதே வேளை நூலின் பொருளான இருத்தலொழுக்கம் பற்றிப் பேசுவதால் நூலின் அங்கமும் ஆகின்றது. பதினெண் கீழ்க்கணக்கிலுள்ள சில நூல்கள் தனியான கடவுள் வாழ்த்தைக் கொண்டமையை, சில நூல்கள் இவ்வாறு நூலின் முதற் செய்யுளில் உவமை .
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 43
வகையாலோ பிறவாறோ கடவுளரைப் பாடுவனவாக - வாழ்த்துவனவாக அமைகின்றன என்பது இங்கு கருதத்தக்கது.
சங்கச் செய்யுள்கள் பெரும்பாலும் தொகை நிலைச் செய்யுள்களாய் அமைந்தவை. வேறுவேறு புலவர்கள் வேறுவேறு காலத்தில் வேறுவேறு சந்தர்ப்பங்களிற் பாடிய தனிச் செய்யுள்களே பின் காலத்தவரால் நூல் வடிவிலே தொகுக் கப்பட்டன. அகநானூறு, நற்றிணை குறுந்தொகை, பரிபாடல், புறநானூறு என்பவை அத்தகையவை. அதன் ஒரு படிநிலை வளர்ச்சியாக ஒரு புலவர் ஒரு பொருள் மரபு குறித்த பல செய்யுள்களைப் பாடும் மரபினைக் காணலாம். கலித்தொகை, ஐங்குறு நூறு என்பவை அத்தகையவை; ஒரு பொருள் மரபு குறித்த பல செய்யுக்கள் வேறு வேறு புலவர்களாற் பாடப்பெற்றுத் தொகுக்கப்பட்ட நூல்கள் அவை. அதன் அடுத்த கட்டத்தில் ஒரு புலவரே தனிநூலாக்க முயற்சியில் ஈடுபடக் காணலாம் அவ்வாறமைந்தவையே ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, திணை மொழி ஐம்பது முதலாக பதினெண் கீழ்க் கணக்குள் அடங்கும் சங்க அகத்திணை மரபு சார்ந்த நூல்கள். அவ்வாறு நூலாக்க முயற்சியில் ஈடுபடும் நிலையில் நூலாசிரியர்களே அந்நூல்களுக்குக் கடவுள் வாழ்த்தையும் பாடும் வழக்கமும் உருவாகின்றதை அந்நூல்களுள் சிலவற்றிற் காணலாம். அக்கடவுள் வாழ்த்துக்கள் பெரும்பாலும் நூலின் அங்கமாகவே அமைதலும் அவதானிக்கத்தக்கது. அவ்வகை யிலேயே கார் நாற்பதின் கடவுள் வாழ்த்து அமைகின்றது. முற்றுமுழுக்க அகத்திணை ஐந்தையே உரிப் பொருளாகக் கொள்ளும் போக்கிலிருந்து முற்றிலுமாக விடுபட முடியாமை இதற்குக் காரணமாகலாம்.
Tல்
கார் நாற்பதும் சங்க அகத்திணை மரபை இயன்ற அளவிற் பின்பற்ற முனைகின்றது. சங்க அகத்திணை இலக்கிய மரபு முதல், கரு, உரி
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

என்பவற்றை இலக்கியத்தின் அடிப்படையாகக் கொள்வது. அம்மூன்றினுள்ளும் உரிப்பொருளே முக்கியத்துவம் உடையது. அதுவே செய்யுகளுக்கு உரியது. அதற்குப் பகைப் புலமாகவே கருவும் முதலும் அமைகின்றன. கார் நாற்பது அவ்வாறன்றி முதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட ஒரு நூலாகும்; உரிப்பொருளை விட்டுவிடாது அதேவேளை முதலுக்கே (பொழுது - கார்) அதிக அழுத்தம் கொடுத்துப் பாடப்பெற்ற நூல். அவ்வகையில் இயற்கையையே பொருளாகக் கொண்டு அதை அழகிய முறையில் வருணிக்கும் நூலாக கார் நாற்பது அமைகிறது. கார்காலம், அக்காலத்தே எழுகின்ற கருமேகங்கள், அம் மேகத்தில் தோன்றும் இடி, மின்னல், பொழியும் மழை, அம்மழையாற் செழிக்கும் காடு, அக்காட்டில் மலரும் மலர்கள் என்று முல்லை நிலத்திற்குரிய கார்காலத்தைக் கற்பனை நயமிக்க உவமைகளோடு கவினுற வருணிக்கின்றது நூல். அவ்வகையால் வடமொழி மரபில் தோன்றிய இருது சங்காரம் என்னும் நூலை ஒருபுடையாக ஒத்தது இந்நூல்.
சமயச் சார்போடு தோன்றி சைவமரபின் பன்னிரு திருமுறையில் பதினோராந் திருமுறையுள் அடங்கும் காரெட்டு என்னும் சிறு நூல் இக் கார் நாற்பத்தின் அருட்டுணர்வால் தோன்றியது என்பதும் ஈண்டு கருதத்தக்கது.
அது அவ்வாறாக கார் நாற்பது தோன்றிய காலப் பகுதியில் காரே - மழையே கடவுள் நிலையில் வைத்துப் போற்றப்பட்டமையும் அவதானிக்கத் தக்கது. திருக்குறளின் பாயிரவியலில் கடவுள் வாழ்த்தை அடுத்து வான் சிறப்பு வைக்கப் பட்டமையும் சிலப்பதிகாரத்தின் தொடக்கமான மங்கல வாழ்த்துப் பாடலில் திங்களையும் ஞாயிறையும் போற்றிய கையோடு மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்... என்று மழையைப் போற்றுவதும் அறுமுறை வாழ்த்துள் மழையும் ஒன்றாய் அடங்குவதுமெல்லாம் கருதத்தக்கனவே.
33

Page 44
பழமொழி ந
1. பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பில் அடங்கியுள்ள பதினொரு அற நூல்களுள் ஒன்றாகவுள்ளது பழமொழி நானூறு. இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார்; இது இவரது சிறப்புப் பெயராகக் கருதப்படுகின்றது. இவர் சமணசமயத்தவர். தற்சிறப்புப் பாயிரத்தினூடாக, இவர் குறுநில மன்னராக அறியப்படுகின்றார்; இவர் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு. இந்நூல், கடவுள் வாழ்த்து உட்பட 400 வெண்பாக்களைக் கொண்டுள்ளது
2. இந்நூலின் உருவாக்கமுறை ஏனைய பத்து அறநூல்களிலிருந்தும் வித்தியாசமானது, தனித்துவ மானது. நூலாசிரியர் தமது அறப்போதனைகளை தெளிவாக எடுத்துரைப்பதற்காக, அவ்வப்போதனை களுக்கு ஏற்புடைய பழமொழிகளைப் பயன்படுத்தி யிருக்கின்றார். அத்தகைய பழமொழிகள் அன்றைய மக்களது வழக்கில் பயின்றுவந்துள்ளமை கவனத்திற்குரியது. அந்நிலையில் நூலாசிரியர் அவற்றைத் தேடித் தொகுத்திருப்பதும் அத்தேடல் அவ்வப்போது நிகழ்ந்துவந்திருப்பதும் அது காரணமாகவே நூலில் இடம்பெற்றுள்ள விடயங்கள் ஒழுங்கற்று (அதாவது இயல்களாகப் பகுக்க முடியாத விதத்தில்) காணப்படுவதும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர் சிலர் கருதுகின்றனர்.
3. பழமொழி நானூறு எடுத்துரைக்கும் விடயங்கள் பற்றிக் கவனிப்பதற்கு முன்னர், அறநூல்களியற்றிய
34

Iானூறு
- கலாநிதி செ.யோகராசா
சிரேஷ்ட விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம்
அக்கால ஆசிரியர்கள் நூலுருவாக்கத்தின் போது செயற்பட்ட முறைமை பற்றி ஓரளவு கவனிக்க வேண்டியுள்ளது.
3.1. நூல்களை இயற்றியபோது கணிசமான நூலாசிரியர்கள் பொதுமக்களை மனங்கொண்டு செயற்பட்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. பின்வரும் அட்டவணையைக் கவனிப்போமாயின் இது புலனாகும்.
திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் : மருந்து மூலிகைகளின் பெயர்கள்
நான்மணிக்கடிகை : அலங்காரப்பொருளின் பெயர்.
இனியவை நாற்பது, இன்னா நாற்பது : அசாதாரண எளிமையும் இனிமையும் ஆர்வத்தூண்டலும் கொண்ட பெயர்கள்.
பழமொழி நானூறு : மக்கள் பயின்று வந்த பழமொழிகள்.
மேற்கூறியவை உட்பட அனைத்து நூல்களுமே தெளிவாகவும் செறிவாகவும் கருத்துரைப்பதற்கு ஏற்ற பா வடிவமான வெண்பாவை - முற்பட்ட அகவல் பாவை கைவிட்டுவிட்டு வெண்பாவை பயன்படுத்த முற்பட்டமையும் சிந்தனைக்குரியதொரு விடயமே.
மேற்குறிப்பிட்ட நூல்களினாசிரியர்கள் அனை வரையும்விட, 'பழமொழி நானூறு நூலாசிரியர்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 45
10
பழமொழிகளைப் பயன்படுத்தியமை காரணமாக, பொதுமக்கள் மேல் கூடிய சிரத்தை கொண்டவ ரென்று துணிதற்கு வாய்ப்புள்ளது.
4. பழமொழி நானூறு உள்ளடக்கியுள்ள விடயங்கள் அதாவது எடுத்துரைக்கும் போதனைகள் அறம் செய்தல், செல்வம் சேர்த்தல், செல்வர் இயல்பு, நட்பு, கல்வி, ஊழ், கொடுமை செய்வோர் இயல்பு, கோழை இயல்பு முதலியனவும் தற்புகழ்ச்சி, பகை, அச்சம் போன்றன களைதலும் முதலானவை சார்ந்த தாகவுள்ளன. இத்தியாதி விடயங்கள் திரும்பத்திரும்ப இடம்பெறுகின்றமை குறிப்பிடத் தக்கது.
.
5. 1. பழமொழி நானூறு கூறும் விடயங்களுள் சில சுவை பயப்பன.
உ+ம்: கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாததில்லை ஒருவற்கு - நல்லாய்! இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு
5. 2. வேறுசில விடயங்கள் இன்றைய காலத்திலும் ஏற்புடையனவாகவுள்ளன. உ+ம்: உற்றான் உறாஅன் எனல் வேண்டா ஒண்பொருளைக் கற்றானை நோக்கியே கைவிடுக்க - கற்றான் கிழவனுறை கேட்கும் கேளான் எனினும் கிழவன்று எருதுண்ட உப்பு.
5. 3. சில, அன்றைய சமூகம் பற்றிய நூலாசிரியரது கூர்மையான அவதானிப்பை வெளிப்படுத்துவன் உ+ம்: நல்லவை கண்டக்கால் நாச்சுநட்டி நன்றுணராப் புல்லவையும் தம்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார் படைத்தறுகண் அஞ்சுவான் இல்லுள்வில்லேற்றி இடைக்கலத்து எய்து விடல்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

6. மேற்கூறிய வெண்பாக்களை நுணுகி நோக்கும் போது அவற்றின் பொது அமைப்பு முறைபற்றியும் அறிய முடிகின்றது. அதாவது, ஈற்றடி பழமொழியையும் முதலிரண்டு அடிகள் பழமொழியின் விளக்கத்தையும் மூன்றாமடி ஆடூஉ, மகடூஉ முன்னிலைகளையும் கொண்டமைகின்றது. (விதிவிலக்குமுளது).
7. பதினொரு அறநூல்களுள்ளும் பழமொழி நானூறு பலவிதங்களில் தனித்துவமும் முக்கியத்துவமும் பெற்று விளங்குவது மனங்கொள்ளற்பாலது. இவ்விதத்தில் பின்வரும் விடயங்கள் முதன்மை பெறத்தக்கன
வாகின்றன:
(i) மக்களது வழக்கில் பயின்றுவந்துள்ள பழமொழிகள் இடம்பெறுவது காரணமாக அன்றைய காலச் சமூக நிலைபற்றி - சமூகத்தின் சிந்தனை ஓட்டம் பற்றி - அறிய முடிகின்றமை ; ஏனைய அறநூல்களைவிட, இவைதரும் செய்தி நம்பகமும் உறுதியும் மிக்கனவாக அமைய வாய்ப்புள்ளமை.
(i) வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளமை உ+ம்: தூங்கெயிலெறிந்த சோழன், கரிகாலன், பாரி, பேகன் முதலானோர் பற்றிய முற்கால நிகழ்ச்சிகள்; மனுநீதி சோழன், பொற்கைப் பாண்டியன் முதலியோர் பற்றிய கதைகள்
(i) இடம்பெற்றுள்ள பழமொழிகளுள் பல, மக்களை நெறிப்படுத்துவதில் ஆற்றல் மிக்கனவாதலால், பழமொழிகளோடு இயைந்துவரும் அறக்கருத்துக் கள் மக்கள் உள்ளத்தைக் கவ்விப்பிடிக்கத்தக்க ஆற்றல் பெற்றிருத்தல்.
(iv) நூலிலுள்ள பாடற்பொருள்கள் ஒன்றற்கொன்று தொடர்பற்றனவாயிருப்பதால், நூலாசியர், தாம் அவ்வப்போது ஆய்ந்துணர்ந்த பொருள்களை பழமொழியோடு பொருத்திப் பாடுகின்ற வாய்ப்புப்
35

Page 46
பெற்றிருப்பதும் அது நூற்பொருள்களை சிறப்பும் உறுதியும்பெறுமாறு செய்திருப்பதும்
(v) பழமொழிகள் இன்றுள்ள நாட்டாரியல் ஆய்வாளர்க்கு பெருமளவு பயன்படுகின்றமை
8- மேற்கூறியவாறான சிறப்புகள் பெற்றுள்ள இந்நூலினைப் பதிப்பித்த பெருமக்களுள் முக்கிய மானவர்கள் பின்வருவோராவர்:
ச. ஆறுமுகநயினார் (1904) ; பிரதிகளில் உள்ளபடி அச்சேற்றியவர்.
நாராயண அய்யங்கார் (1918 ; 1922) ; முதலில் 200பாடல்களைப் பழைய உரையுடனும்
36

தமது விளக்கக் குறிப்புகளுடனும் வெளியிட்டவர் ; பிரதிகளிலுள்ள வரிசை முறையைப் பின்பற்றியவர்.
சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் (1874), இவர் நாலடியார் போன்று பப்பத்துப்பாடல்கள் கொண்ட 39 அதிகாரங்களாகப் பகுத்திருப்பவர். பாடல்வரிசைமுறை மாற்றி, பால், இயல்பாகுபாடு செய்திருப்பவர். இவர் பதிப்பில் பத்து வெண்பாக்கள் விடுபட்டுள்ளன)
செல்வகேசவராய முதலியார் (1916) ; வேறொரு வகையாகப் பாகுபாடு செய்திருப்பவர் ; பழைய உரையுடன் வெளியிட்டவர்.
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 47
நான்மணிக்க
அறநூற்காலம்' என விதந்து கூறப்படும் சங்கமருவிய காலப்பகுதியியல் தோற்றம் பெற்ற பதினெண் கீழ்க் கணக் கு நுால் களுள் நான்மணிக்கடிகையும் ஒன்று. நான்மணிக்கடிகை என்பதற்கு நான்கு இரத்தினத் துண்டங்கள் என்று பொருள். (மணி - இரத்தினம்; கடிகை - துண்டம்) ஒவ்வொரு பாடலிலும் ஒத்த நான்கு இரத்தினம் போன்ற கருத்துக்கள் இதில் கூறப்பட்டுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நாலடியார் அடியளவால் பெயர் பெற்றது போலவே, ஒவ்வொரு பாடல் களிலும் கூறப் பெறும் நன்னாங்கு கருத்துக்களினால் இந்நூல் பெயர் பெற்றுள்ள தைக் காணலாம். நான்மணிக்கடிகையின் ஒவ்வொரு வெண்பாவும் நன்னாங்கு நீதிகளைத் தெளிவாகவும் படிப்பவர் நன்கு புரிந்து கொள்ளும் விதத்திலும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.
இந்நூலினாசிரியர் விளம்பிநாகனார். 'நாகனார்' என்ற பெயர் சங்கத் தொகை நூல்களிலும் அதிகம் பயின்று வந்திருப்பதைக் காணலாம். இளநாகனார், இனிசந்த நாகனார், வெள்ளைக்குடி நாகனார் முதலான பெயர்கள் வகைமாதிரியாக எடுத்துக்காட்டத்தக்கவை. ஆதலால் விளம்பி நாகனார் என்ற பெயரிலுள்ள 'விளம்பி' என்ற அடை அவரது ஊரைக் குறிப்பதாக அமையலாம் என ஆய்வாளர்கள் அபிப்பிராயப் படுவார்கள் (மாதவன், இரா: 09). இந்நூலின் கடவுள் வாழ்த்துச்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

டிகை
- ஈஸ்வரநாதபிள்ளை குமரன் முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
செய்யுள் கள் இரண்டிலும் திரு மால் போற்றப்படுவதால் இந்நூலாசிரியர் வைணவராக இருக்கலாம் எனக் கருதமுடிகின்றது. கடவுள் வாழ்த்தில் வைணவ புராணங்களிலுள்ள படியே திருமாலின் திருமேனி வர்ணனையும் அற்புதங்கள் பற்றிய விபரிப்பும் அமைவது நுணித் து நோக்கப்பட வேண்டியதொன்றாகும். இதனால் வட மொழியும் வடமொழிப் புராணக் கருத்துக்களும் தமிழ்நாட்டில் செல்வாக்குச் செலுத்திய ஒரு காலப் பகுதியிலேயே இந்நூல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிகின்றது.
நான்மணிக்கடிகை நூறு வெண்பாக்களா லானது. நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்பன இதில் கலந்து வருகின்றன. காலந்தோறும் நான்மணிக்கடி கைக் குச் செய் யப் பட்ட பதிப்புக்களை வரிசைப்படுத்திப் பார்க்கும் போது இந்நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை கூடிக்குறைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஆரம் பகாலப் பதிப்பாசிரியர்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பிறவற்றிற்குரிய பாடல்கள் சிலவற்றையும் இந்நூலுக்குரியதாக எண்ணி இதனுடன் சேர்த்துப் பதிப்பித்துள்ளனர். எடுத்துக்காட்டாக நான்மணிக் கடிகையை ஆரம்பத்தில் பதிப்பித்தோருள் ஒருவரான புட் பரதச் செட்டியார் (1879) சிறுபஞ்சமூலத்திற்குரிய மூன்று பாடல்களை இந் நுாலுக் குரியவையாக மயங் கிப்
37

Page 48
பதிப்பித்துள்ளதைக் கூறலாம். மேலும் பிற்காலப் பதிப்புக்களில் அடங்கியுள்ள பஃறொடை வெண்பாக்களாலான நான்மணிக்கைப் பாடல்கள் கூட பிற்காலச் சேர்க்கைகளோ என ஐயுற வேண்டியுள்ளது. ஏனெனில் அப்பாடல்களின் மொழிநடை, கருத்துக்களை விரித்துரைக்கும் பாங்கு, அணிகளைக் கையாளும் போக்கு என்பன ஏனைய நான்மணிக்கடிகைப் பாடல்களுடன் ஒப் பிட்டு நோக்கும் போது சற்று வேறுபட்டனவாகவுள்ளமை நோக்கத் தக்கதாகும்.
நான்மணிக்கடிகையை ஆரம்பத்தில் பதிப்பித்தோர் வரிசையில் நமது நாட்டைச் சேர்ந்த சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவரும் ஒருவர் என்பது பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய ஒரு செய்தியாகும். இவரது பதிப்பு 1900 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வித்தியாநுபாலன யந்திரசாலை யினூடாக வெளிவந்தது. நான்மணிக்கடிகையைத் தமிழ் உலகிற்குப் பிரசித்தப்படுத்தியோரில் கிறிஸ்தவ மிசனரிமாருக்கும் பங்குண்டு. அவர்கள் தமது பாடசாலைகளில் கற்பித்த பாடநூல்களில் நான்மணிக்கடிகைப் பாடல்களையும் சேர்த்து வந்துள்ளனர்.
நான்மணிக்கடிகைக்குப் பழைய உரை யொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் அவ்வுரையை எழுதிய ஆசிரியரின் பெயர் அறியப்படவில்லை. சுருக்கமும் தெளிவும் கொண் டு பழைய மரபுகளுக்கமைவாகச் செம்மையாக இவ்வுரை எழுதப்பட்டுள்ளதைக் காணலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த பல நான்மணிக்கடிகைப் பதிப்புக்கள் இப் பழைய உரையுடனேயே பதிப்பிக்கப் பட்டுள்ளதைக் காணமுடியம். நான்மணிக்கடிகை விரித்துரைக்கும் பண்டைய மரபுகள், சொற்கள், சொற்றொடர்கள் என்பவற்றுக்கான விளக்கங்களை இவ்வுரை மூலமாகவே விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இருபதாம் நூற்றாண்டில் நான்மணிக்கடிகைக்குப் புத்துரை கண்டவர்
38

களுக்கு இப் பழைய உரை பெரிதும் வழிகாட்டி
யாக அமைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.
நான்மணிக்கடிகை சங்கம் மருவிய காலத்திற் குரியது எனப் பொதுவாகக் கூறிக் கொண்டாலும் அதன் காலத்தைச் சரியாக வரையறுத்துக் கூறமுடியாதுள்ளது. சங்கநூற்கருத்துக்களும் திருக்குறள், நாலடியார் முதலான அறநூற் கருத்துக்களும் தொடர்களும் நான்மணிக் கடிகையில் எடுத்தாளப்பட்டுள்ளதால் இந்நூல் அவற்றிற்குப் பின்னர் எழுந்திருக்கவேண்டும் என்பது புலப்படுகின்றது. எடுத்துக்காட்டாக -
'தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை' (குறள்: 55)
எனும் திருக்குறள் கருத்து நான்மணிக்கடிகையில் பின்வருமாறு எடுத்தாளப்பட்டுள்ளது.
'மறை அறிப அந்தண் புலவர்; முறையொடு வென்றி அறிய அரசர்கள்; என்றும் வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு ; அஃதன்றி அணங்கல் வணங்கின்று பெண்'
(நான்மணி: 90)
என வந்துள்ளமை காண்க. "அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்" (நான்மணி: 84) எனும் இந்நூலின் கருத்து சிலப்பதிகாரத்தில் "அல்லவை வெய் வார்க்கு அறம்
கூற்றமாமென்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றே” (வழக்குரை காதை, இறுதி வெண்பா) என் அப்படியே எடுத்தாளப்படுவதால் இந்நூல் சிலப்பதிகாரத்துக்கு முந்தியதாகக் குறிப்பிடுவர்.
திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் முதலான நீதிநூல்களோடு ஒப்பிட்டு நோக்கும் போது நான்மணிக்கடிகையின் வெண்பாக்கள் மிக
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 49
எளிமையானவையாகவும் தெளிவானவையாகவும் விளக்கம் கூடியவைாயகவும் இருப்பதைக் காணலாம். படிப்பவர்களுக்கு நன்றாக விளங்கும் விதத்தில் நறுக்கு நறுக்கென்று நீதியை இவை கூறுகின்றன. இதனாலேதான் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் இந்நூலை மாணவச் சிறார்கள் இளமையிலே ஓதிவருகின்ற நூலாகச் சேர்த்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் மரபுவழிக்கல்வியிலும் பின்னர் நிறுவன ரீதியான கல்வியிலும் நான்மணிக்கடிகை வெண்பாக்கள் முழுமையாகவோ தெரிவு செய் யப் பட்டோ சேர்த்துக்கொள்ளப்பட்டமைக்குச் சான்றுகள் உள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இற்றைவரை பதினெட்டுக்கு மேற்பட்ட பதிப்புக் களை இந்நூல் பெற்றுள்ளதையும் புத்துரைகள் சிலவற்றைக் காலத்துக்குக் காலம் பெற்று வந்துள்ளமையையும் நோக்கும் போது இந்நூலின் தேவை சமூகத்தில் எந்தளவு இருந்து வந்துள்ளது என்பது புலனாகும். சிறுவர்கள் மட்டுமல்லாது எல்லாவயதினராலும் விரும்பிப் படிக்கக் கூடியவகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளமை நோக்குதற்குரியது. வகைமாதிரியாகப் பின்வரும் வெண்பாக்களை நோக்குக.
'நிலத்துக் கணியென்பர் நெல்லும் கரும்பும்; குளத்துக் கணியென்பர் தாமரைப் பன்மை; நலத்துக் கணியென்பர் நாணம்; தனக்கணி தான் செல் லுலகத் தறம்' (நான்மணி : 11)
'கோல் நோக்கி வாழும் குடியெல்லாம் ; தாய்முலையின்
பால் நோக்கி வாழும் குழவிகள்; வானத் துளிநோக்கி வாழும் உலகம்; உலகின்
விளிநோக்கி இன்புறூஉம் கூற்று'
(நான்மணி: 28)
ல
மேலே காட்டப்பட்டுள்ள வெண்பாக்களில் இழையோடும் எளிமை, தெளிவு, விளக்கம்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

என்பன கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. தெளிந்த தமிழ்ச் சொற்களில், அழகிய தொடர் களில், சிறந்த உவமைகள், எடுத்துக்காட்டுக் களுடன் தரப்படும் அறக்கருத்துக்கள் எத்தரத் தினரையும் இலகுவில் கவரக் கூடியனவாக உள்ளன. இப்பண்புகளே சங்கம் மருவியகால அறநூல்கள் வரிசையில் நான்மணிக்கடிகைக்குத் தனிக் கவனிப்பைப் பெற்றுத் தந்துள்ளன எனலாம். இந்நூலில் வடசொற்கள் மிகவும் அருந்தலாகவே கையாளப்பட்டுள்ளன. பயன் படுத்தப்படும் வட சொற்களும் அசனம் (79), ஆசாரம் (93), சேனாபதி (52) முதலான தற்சமச் சொற்களாகவே பெரிதும் அமைந்து வந்துள்ளமை நோக்குதற்குரியதோர் விடயமாகும்.
நான்மணிக்கடிகை அறநூலாக அமைந்த போதிலும் அதில் அதிகமாக கையாளப்பட்டுள்ள உவமைகளும், பொருள் பொருந்திய சொற்றொடர் களும், எடுத்துக்காட்டுகளும் அதற்கு இலக்கிய அந்தஸ்த்தினைத் தேடித் தந்துள்ளன. எடுத்துக் காட்டாகப் பின்வரும் பாடலை நோக்குக.
கள்ளி வயிற்றில் அகில்பிறக்கும்; மான்வயிற்றில் ஒள்அரி தாரம் பிறக்கும்; பெருங்கடலுள் | பல்விலைய முத்தம் பிறக்கும், அறிவார்யார் நல்லாள் பிறக்கும் குடி' (நான்மணி: 6)
ஆடூஉ முன்னிலை, மகடூஉ முன்னிலையாக அறக்கருத்துக்களைக் கூறிச் செல்லாமையும் நான்மணிக்கடிகையின் மற்றுமொரு முக்கிய பண்பெனலாம்.
சிறார்கள், முதியோர், ஆண்கள், பெண்கள் எனப் பலதரப்பட்டோரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய அறநீதிகளை நான்மணிக்கடிகை இலக்கிய நயத்துடன் எடுத்துக்காட்டியுள்ளது. ஒரு மனிதன் தன்னளவிலும் குடும்பம், சமூகம், நாடு என்னும் நிலைகளிலும் பேணவேண்டியதும் விலக்கவேண்டியதுமான விடயங்கள் இதில்
39

Page 50
கூறப்பட்டுள்ளன. பேணவேண்டிய விடயங்கள் பற்றிக் குறிப்பிடும் போது அது சார்ந்து ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகளை ஏற்ற எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிடுவது ஆசிரியரின் தனித்துவமாக உள்ளது. அதேபோல விலக்க வேண் டிய விடயங்களைச் சுட்டிக்காட்டுகையில் அதனால் ஏற்படும் தீமை களையும் குடும்பம், சமூகம் என்ற மட்டங்களில் அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புக்களையும் நூலாசிரியர் எடுத்துவிளக்குகின்றார். எடுத்துக்
காட்டாகப் பின்வரும் பாடலை நோக்குக.
திரியழற் காணின் தொழுப; விறகின் எரியழற் காணின் இகழ்ப; ஒருகுடியில் கல்லாத மூத்தானைக் கைவிடுப கற்றானின் இளமைபா ராட்டும் உலகு' (நான்மணி: 65)
குறிப்பாகத் தனிமனித ஒழுக்கம் (ஆண், பெண் இருபாலாருக்குமுரியது) அரசாள்வோருக் கான அறவுரைகள் அதிகம் இந்நூலில் பயின்றுவந்துள்ளன. இவற்றைவிட தமிழர் தம் ஒழுக்கக் கோட்பாடுகள், பண்பாடுகள், கொள் கைகள், நம்பிக்கைகள் என இன்னோரன்ன பல விடயங்களையும் பொதிந்துவைத்துள்ள பொக்கிசமாக நான்மணிக்கடிகை விளங்குவதைக்
காணலாம்.
சில அரிதான சொல் வழக்குகளையும் நான்மணிக்கடிகையினூடாக அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. பூவைப் புதுமலர் (1), படி - பூமி (2), அசுணமா - கேகயப் பறவை (4), நெல் - முற்றிய மூங்கில் வெடித்து வெளிவரும் உள்ளீடு (4), கன்றல் - மனம் புழுங்குதல் (13), பசைத்தார் - உள்ளன்புடையோர் (15), கலவர் - மரக்கலமுடையோர் (18), மம்மர் - கல்லாமையால் அல்லது செல்வம் முதலியவற்றால் வரும் மயக்கம் (24) முதலானவை வகைமாதிரியாக எடுத்துக் காட்டத்தக்கவை. இவை கற்போர்க்குச்
40

சொல் வளத்தினைப் பெருக்குவதுடன் பிற செந்நெறி இலக்கியங்களை இலகுவாகப் படித்துப் புரிந்துகொள்வதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி யுள்ளன. அதேபோல அரிதான அல்லது புதுமையான செய்திகளையும் இந்நூலினூடாக அறிந்து கொள்ள முடிகின்றது. கேகயப் பறவை பறையொலி கேட்டால் உயிர் வாழாது (4), கள்ளியின் வயிற்றில் அகிலை ஒத்த வாசனைத் திரவியம் உருவாகும் (6), மேகமுழக்கத்தால் குருக்கத்தி மரம் தளிர்க்கும் (37) முதலான செய்திகள் முற்றிலும் புதுமையானவையாகும்.
திருக்குறளின் காமத்துப்பாலுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கதான ஆண் - பெண் உறவு நிலையுடன் தொடர்புபட்ட விடயங்களும் நான்மணிக்கடிகையில் பயின்று வந்திருப்பதைக் கண்டுகொள்ள முடியும். 'காதலி சொல்லில் பிறக்கும் உயிர் மதம்' (7), 'காதலி மாட்டு உள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை' (9), 'ஊடி முகத்தான் நோய் செய்வார் மகளிர்' (14), 'மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்' (20), மனைக்குப் பாழ் வாள்நுதல் இன்மை' (22), ஆற்ற மறைக்க முடியாதாம் காமம்' (41), 'ஊடல்சாம் ஊடல் உணராகத்து' (46) முதலான தொடர்கள் வகைமாதிரியாக எடுத்துக்காட்டத்தக்கவை.
அறநூல்கள் பெரும்பாலும் நிலையாமை என்ற தளத்தில் நின்றே அறக்கருத்துக்களை வலியுறுத்தி வந்ததைக் காணமுடியும். நான்மணிக் கடிகை நிலையாமையைப் பெரிதும் வலியுறுத்த வில்லை யென்றாலும் அதிலும் நிலையாமையுடன் தொடர்புபட்ட கருத்துக்கள் ஆங்காங்கே பரவலாக வருவதனை அவதானிக்கலாம்.
'பொய்த்தல் இறுவாய நட்புகள் ; மெய்த்தாக மூத்தல் இறுவாய்த்து இளநலம் - தூக்கு இல் மிகுதி இறுவாய செல்வங்கள்; தத்தம் தகுதி இறுவாய்த்து உயிர்' (நான்மணி: 19)
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 51
எனவரும் பாடலும், 'இறக்குங்கால் நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும்' (42), 'பெருவலிக் கூற்றமும் கூறும் செய்து உண்ணாது' (81) எனும் வெண்பா வரிகளும் இத்தொடர்பில் சிந்திக்கத் தக்கவை.
ஆக, நான்மணிக்கடிகை சமகாலத்தில் எழுந்த பிற அறநீதி நூல்கள் விரித்துரைத்த கருத்துக்களில் பலவற்றையே மீளவும் வலியுறுத்தி வந்தமை புலனாகின்றது. எனினும் அவற்றை மக்கள் மனங் கொள் ளும் வகையில் வெளிப்படுத்துவதில் அந்நூலாசிரியர் கையாண்டி ருக்கும் உத்திகள் தனித்துவம் பொருந்தியவை. இந்நூலிலுள்ள எளிமையும், தெளிவும், விளக்க மும், நறுக்காக அறக்கருத்துகளை எடுத்து
உசாத்துணை நூல்கள்: 1. சிதம்பரனார், சாமி., பதினெண் கீழிக்கணக்கும் தமி 2. நான்மணிக்கடிகை மூலமும் பழையவுரையும், (பதி.)
2001. 3. பதினெண் கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள், தென்னிந்த
1956. 4. பதினெண் கீழ்க்கணக்குத் தெளிவுரை, (பதி.) சண்முகம்
பொன்னுச்சாமி, மு., தமிழ் நீதி இலக்கிய வரலாறு, 6.
வேலுப்பிள்ளை, ஆ., தமிழ் இலக்கியத்தில் காலமும்
5.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும் =

விளக்கும் இலாவகமும் பல ஆண்டுகளாக இந்நூல் புகழ்பெறக் காரணமாக அமைந்துள்ளன. தமிழ்க் கல்விப் பாரம்பரியத்தில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இந்நூல் சேர்க்கப்பட்டு வந்துள்ளதை நோக்கும் போது அதன் முக்கியத் துவம் பன்மடங்கு புலனாகிறது. சிறுவர் தொட்டு சமூகத்தின் எல்லாத் தரத்தினராலும் படிக்கக் கூடிய பாங்கில் இந்நூல் செய்யப்பட்டுள்ளமை அதன் சிறப்புக்கு மேலும் ஒரு காரணம் எனலாம். அறக்கருத்துக்களுடன் கூடவே இலக்கியப் பயிற்சி, சொல்வளம், சிறந்த மொழிநடை, அழகு தமிழ் முதலானவற்றை அறியவோ கற்கவோ வேண்டுவார்க்கு இந்நூல் சிறந்த வரப்பிரசாத மெனலாம்.
ழர் வாழ்வும், அறிவுப் பதிப்பகம், சென்னை, 2003.
மாதவன், இரா ., தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,
திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி,
கம்பிள்ளை, மு., முல்லை நிலையம், சென்னை, 2003.
இந்து பதிப்பகம், கோயம்புத்தூர், 2003. 0 கருத்தும், பாரிபுத்தகப் பண்ணை, சென்னை, 1985.
41

Page 52
சிலப்பதிகார காவியங்கள்
தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியம் முதலில் இயற்றப்பட்டதாக இல்லை. தமிழின் பழைய இலக்கியம் தனித்தனிப்பாட்டுகளாகவே உள்ளது. மூன்று அடி உள்ள சிறுபாட்டு முதல் 782 அடி உள்ள நீண்ட பாட்டுவரையில் உள்ள தனிப்பாட்டுகளே சங்க இலக்கியமாக உள்ளன. தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களின் ஓசை அமைப்புக்களையும் பொருள் வகைகளையும் ஒட்டி வளர்க்கப்பட்ட தனிப் பாட்டுகளே தமிழ் இலக்கியத்தின் தோற்றம் ஆகும். அக்காலத்தில் பல கதைகள் இருந்திருக்க வேண்டும். நாடகங்கள், பல மேடைகளில் நடிக்கப்பட்டு வந்தன என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. தொல் காப்பியத்தில் மெய்ப்பாடுகள் பற்றிக் கூறும் பகுதியில் நாட்டியக் கலை குறிக்கப்படுகிறது. சங்கப் பாட்டுகளில் நாட்டியக் கலையில் தேர்ந்த விறலியர், கூத்தர், பொருநர் என்பவர்கள் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. கதை தழுவிய நாடகங்கள் பல இருந்திருக்கவேண்டும். கதைகளும் பல இருந்திருக்கக் கூடும். ஆனால், அந்தக் கதைகள் திரண்டு வளர்ந்து காப்பியங்களாக உருவம் கொள்ள வில்லை. கற்றறிந்த புலவர்கள் அந்தக் கதைகளை எழுதிப் போற்ற மனம் கொள்ளாதது காரணமாக இருக்கலாம்.
மாக
ஆனால், அந்த நிலையைக் கடந்து காப்பியம் படைக்க முன்வந்தவர் ஒருவர். அவரே சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள். அவர் சேரநாட்டு அரச குடும்பத்தைச் சார்ந்தவர். அண்ணன் ஆட்சி
42

ரம், மணிமேகலை
கி.பி 100 - 500)
- பேராசிரியர் மு.வரதராசன்
பெறவேண்டும் என்ற நோக்கம் கொண்டு, குடும்பத்தில் இருந்தால் அண்ணனுடைய அரசுரிமைக்கு இடையூறு ஆகுமோ என்று அஞ்சி அவர் துறவியானார். சேர நாட்டு அரசைச் சார்ந்தவராக இருந்தபோதிலும், பாண்டியரையும் சோழரையும் தக்க மதிப்புடன் குறிப்பிட்டுள்ளார். சேர நாட்டுப் பகுதிகளைப் புகழ்ந்து பாராட்டியுள்ளது போலவே பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் உள்ள ஊர்களையும் ஆறுகளையும் ஆர்வத்தோடு போற்றியுள்ளார். தமிழ்நாடு மூன்று பிரிவுகளாக மூன்று அரச குடும்பத்தாரின் ஆட்சிக்கு உட்பட்ட மூன்று வேறு நாடுகளாக இருந்த காரணத்தால், ஒன்றைப் புகழ்வோர் பெரும்பாலும் மற்றொன்றைப் பாராட்டுவதில்லை. சங்கப் பாட்டுகளில் காணப்படுவது பெரும் பாலும் இந்நிலைமையே. அதனால் மூன்று தனி நாடுகளையும் சேர்த்துத் தமிழ்நாடு என்று நோக்கும் நோக்கத்திற்கு அந்தக் காலத்துப் புலவர்களின் பாட்டுகளில் இடம் இல்லை. தமிழ்கூறும் நல்லுலகம் என்று தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் பாயிரத்தில் குறிப்பிடப்படுகிறது. புறநானூற்றுப் பாட்டுகளிலும், பதிற்றுப்பத்துப் பாட்டுகளிலும் அப்படிப்பட்ட சிறந்த குறிப்பு இல்லை. மாறாக, மூன்று அரசர்களுக் குள்ளும் இருந்த பகையும் போர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் கூடிப் பழகும் காட்சியும் அரிய காட்சியாகவே உள்ளது. சிலப்பதிகார ஆசிரியரே முதல் முதலாகத் தமிழ்மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 53
நெறியில் நின்று, தமிழ்நாட்டின் பல பகுதிகளையும் ஒரு நூலில் பாராட்டியுள்ளார். அவர் இயற்றிய காப்பியமும் அதற்கு ஏற்றதாக அமைந்தது. காப்பியத் தலைவி கண்ணகியின் பிறப்பிடம் சோழ நாடு; அவள் புகுந்து துன்புற்றது பாண்டிய நாடு; அவள் முடிவில் சேர்ந்ததும் அவள் புகழ் பரவக் காரணமாக இருந்ததும் சேர நாடு. ஆகவே காப்பியப் புலவர் மூன்று நாடுகளையும் பாராட்டவும் மூன்று அரசர்களைப் புகழவும் இடந் தந்தது காப்பியத்தின் கதை நிகழ்ச்சி.
சோழ நாட்டின் தலைநகரான காவிரிப் பூம்பட்டினத்தில் ஒரு பெரிய வணிகர் குடும்பத்தில் பிறந்தவன் கோவலன். மற்றொரு வணிகர் குடும்பத்தைச் சார்ந்தவள் கண்ணகி. இரண்டும் செல்வக்குடும்பங்கள் இருவர்க்கும் திருமணம் நடந்தது. சில ஆண்டுகள் அவர்களின் இல்வாழ்க்கை நன்றாக நடந்தது. அந்த நகரத்தில் ஒரு பரத்தையர் குடும்பத்தில் இசை நாட்டியக் கலைகளைக் கற்றுத் தேர்ந்த மாதவியின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இளமையழகும் கலைகளின் கவர்ச்சியும் நிரம்பிய அவள் மீது கோவலன் காதல் கொண்டான். கண்ணகியை மறந்து, தன் தொழிலையும் மறந்து கோவலன் அவளுடன் வாழத் தொடங்கினான். அவளும் அன்பான வாழ்க்கை நடத்தினாள். மெல்ல மெல்ல அவனுடைய செல்வம் தொலைந்தது. உள்ளத் தினுள்ளே நாணம் கொண்டு வருந்தினான். ஒரு நாள் ஒரு திருவிழாவின் போது கடற்கரையில் இருவரும் யாழ் எடுத்து மாறி மாறிப் பாட, அந்தப் பாடல்களில் மாதவி புலப்படுத்திய காதல் குறிப்பைத் தவறாக உணர்ந்த கோவலன் உடனே அவளை விட்டு நீங்கினான். திரும்பி வந்த கணவனைக் கண்ணகி வழக்கம்போல் அன்பு குன்றாமல் வரவேற்றாள். அவனுடைய கவலையை உணர்ந்தாள். தன் காலின் பொன்சிலம்பைத் தந்தாள். இருவரும் பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரைக்குச் சென்றார்கள். அங்கே பொன் சிலம்பை விற்கச்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும் -

சென்ற கோவலன் அதை ஒரு பொற்கொல்லனிடம் காட்டினான். அவன் உடனே அரசனிடம் சென்று, அரண்மனைச் சிலம்பைத் திருடியவன் இவனே' என்று சொல்லி அரசனுடைய ஆட்களைக் கொண்டு அவனைக் கொல்லுமாறு செய்தான். தீர ஆய்ந்து கூறாமல் அவசரப்பட்டு ஆணை பிறப்பித்த பாண்டிய அரசனிடம் கண்ணகி சினத்தோடு சென்று தன் கணவன் கள்வன் அல்ல என்று வழக்காடினாள். தன் தவறு உணர்ந்த பாண்டியன் உடனே சிம்மாசனத்திலிருந்து விழுந்து உயிர் நீத்தான். அவனுடைய தேவியும் உடனே மாண்டாள். கொதித்த மனத்தோடு அரண்மனையை விட்டு வெளிவந்த கண்ணகி அந்த நகரம் தீப்பற்றி எரியுமாறு சபித்தாள். மதுரை நகரம் பற்றி எரிந்தது. கண்ணகி சினம் தணிந்து துயரமே வடிவாய் மேற்கு நோக்கி நடந்து சேர நாட்டில் உள்ள ஒரு குன்றின்மேல் ஏறி ஒரு வேங்கை மரத்தின் அடியில் பதினான்கு நாள் இருந்தாள். பதினான்காம் நாள் தேவருலகம் சென்றாள்.
இதுவே சிலப்பதிகாரம் என்னும் காப்பியமாக இயற்றப்பட்டது. சிலம்புபற்றிய நூல் என்பதே சிலப்பதிகாரம். இந்தக் காப்பியம் முழுவதும் இலக்கியச் சுவை உள்ளது. ஆசிரியர் பல கலைகளையும் அறிந்தவர்; துறவியாக இருந்த போதிலும் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுவையான சொல்லோவியங்களாகத் தீட்டியுள்ளார். அவலச் சுவையும் வீரச்சுவையும் மேலோங்கியுள்ளன. பல இடங்களில் பாத்திரங்களின் உரையாடல் நாடகப் போக்கில் அமைந்துள்ளது. அங்கங்கே வேடர், ஆயர், குன்றவர் முதலான மக்கள் பாடும் பாடல்களும் நாடகப்போக்கில் உள்ளன. அதனால் இந்நூல் நாடகக் காப்பியம் என்று கூறப்படுவது உண்டு.
நாட்டுப்பாடல் வடிவங்கள்
அதற்கு முன் எந்தப் புலவரும் செய்யாத அருஞ்செயலை இவர் செய்து முடித்தார். அவர்கள் மக்களின் ஆடல்பாடல்களில் இருந்த கலைச்
43

Page 54
[ கன்
செல்வங்களுக்கு எழுத்துவடிவம் தரவில்லை. என்ன காரணத்தாலோ, அவற்றைப் புறக்கணித்தார்கள். பழங்கால மக்கள் என்னென்ன வடிவம் உள்ள பாடல்களைப் பாடினார்கள், என்னென்ன கூத்துக்கள் ஆடினார்கள் என்பவற்றைச் சங்க நூல்களால் அறிய முடியவில்லை. இளங்கோவடிகள் மக்களின் கலைகளை மதித்தார். அவற்றில் உயிர் உள்ள கலைவடிவங்கள் விளங்குவதை உணர்ந்தார். அவற்றை எழுத்து வடிவில் தம் காப்பியத்தில் இடம்பெறச் செய்தார். கதையில் எங்கெங்கு இடம் கிடைக்குமோ அங்கெல்லாம் அந்தப் பாட்டு வடிவங்களை வாழவைத்தார். கடற்கரையில் செம்படவர் முதலானவர்கள் பாடும் காதல் பாடல்கள், காவிரியாற்றைப் பற்றி மக்கள் பாடிவந்த பாடல்கள், வேடர்கள் காளியை வழிபட்டுப்பாடிய பாடல்கள், ஆயர் மகளிர் கைகோத்துக் குரவைக் கூத்து ஆடும்போது பாடிய பாடல்கள், அவர்கள் திருமாலை வழிபட்டுப் பாடியவை, மலையில் வாழ்ந்த மக்கள் முருகனை வழிபட்டுப் பாடியவை, சேர நாட்டில் பெண்கள் கூடி அம்மானை ஆடிப் பாடிய பாடல், நெல் குற்றும்போது பாடியது, ஊசலாடும் போது பாடியது. அரச வாழ்த்தாகப் பாடியது முதலான பழங்காலப் பாடல்கள் மக்களால் என்ன என்ன வடிவில் பாடப்பட்டனவோ அவற்றைக் கேட்டு உணர்ந்து, அந்தந்த வடிவங்களில் செய்யுள் இயற்றி அந்தந்த நாட்டு மக்களின் வாயால் பாடப்படுவதாகக் காப்பியத்தில் அமைத்துள்ளார். அதனால் பழங்கால நாட்டுப் பாடல்களின் வடிவங்களை இன்று நாம் உணர்வதற்குச் சிலப்பதிகாரம் ஒன்றே உதவுகிறது.
காப்பியம் பிறந்த கதை
சேரன் செங்குட்டுவன் தன் நாட்டின் மலைவளம் காண்பதற்காகத் தன் தேவியுடன் பேரியாறு என்னும் ஆற்றங்கரையில் செங்குன்று என்னும் மலைப்பகுதிக்குச் சென்றான். அப்போது சேரனுடைய தம்பி இளங்கோவும் அவருடைய நண்பரான புலவர் சாத்தனாரும் உடன் சென்றார்கள். எல்லோரும் இயற்கையின் அழகான
44

பெ
காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்கள். மலையில் வாழும் மக்களின் ஆடல் பாடல்களையும் கண்டும் கேட்டும் களித்தார்கள். மக்கள் பல வகையான மலைப்பொருள்களைக் கொண்டு வந்து அரசனுக்கும், தேவிக்கும் கொடுத்து வணங்கினார்கள். அப்போது ஒரு செய்தியும் தெரிவித்தார்கள்; ''அந்த வேங்கை மரத்தின் அடியில் சில வாரங்களுக்கு முன் துயரமே வடிவாக ஒருத்தி ஒரு முலை இழந்தவளாய் வந்து நின்றாள். அவள் யார் என்று தெரியவில்லை. நாங்கள் அணுகிக் கேட்டபோது, கணவனை இழந்த பாவி நான் என்று மட்டும் சொன்னாள், பதினான்கு நாள் உணவும் உறக்கமும் இல்லாமல் அங்கே இருந்தாள். பிறகு தேவருலகம் அடைந்தாள் " என்றார்கள். கேட்ட அரசனும் அரசியும் அமைச்சர் முதலானவர்களும் வியப்படைந்தார்கள். அப்போது புலவர் சாத்தனார் அரசனைப் பார்த்து, ''அந்த நங்கைக்கு நேர்ந்தது எனக்குத் தெரியும். அவள் மதுரையில் தன் கணவனை இழந்தாள். அரண்மனைப் பொற் சிலம்பைத் திருடினான் என்று குற்றம் சாட்டி அவன் கொல்லப்பட்டான். செய்தி அறிந்த அவனுடைய மனைவி - கண்ணகி என்பவள் - உடனே பாண்டிய அரசனிடம் சென்று தன் கணவன் குற்றவாளி அல்ல என்று காட்டி அந்தக் கொடுமையை எடுத்துரைத்தாள். பாண்டியன் தன் தவறு உணர்ந்து உடனே மயங்கி மாண்டான். அவனுடைய தேவியும் உடன் இறந்தாள். கண்ணகி, நான் பத்தினி என்பது உண்மையானால் இந்த அரசையும் மதுரை நகரத்தையும் அழிப்பேன்' என்று வஞ்சினம் கூறினாள். தன் ஒரு முலையைத் திருகி எறிந்தாள். நகரம் பற்றி எரிந்தது. கண்ணகியின் சினம் தணிந்தது. அவள் தன் நாடாகிய சோழ நாட்டுக்குத் திரும்பிச் செல்லாமல், உன் ஆட்சியில் உள்ள இந்தச் சேரநாட்டு மலைக்கு வந்தாள். பாண்டியனுடைய கொடுமையை உனக்கு அறிவிப்பதுபோல இங்கே வந்தாள்" என்று நடந்ததைச் சொன்னார். அதை கேட்ட சேர மன்னன் மிக வருந்தி, "அந்தக் கொடிய செய்தி என்னைப் போன்ற அரசர்களின் செவிக்கு எட்டுவதற்கு
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 55
முன்னமே, பாண்டியன் உயிர்விட்டான். அது அவனுடைய பெருமையை உணர்த்துகிறது. வளைந்த செங்கோலை அவனுடைய உயிர் நிமிர்த்த நேராக்கிவிட்டது. நாட்டில் மழைவளம் குறைந்தால் அரசன் அஞ்சவேண்டியுள்ளது. குடிமக்களுக்குத் தீமை நேர்ந்தால், அஞ்ச வேண்டியிருக்கிறது. அரசர் குடும்பத்தில் பிறப்பது துன்பமே அல்லாமல், மகிழக்கூடியது அல்ல" என்று சொல்லிப் பாண்டியனுடைய முடிவை நினைந்து வருந்தினான்.
அவ்வாறு சொல்லி முடித்தபின், தன் தேவியை நோக்கி, "பாண்டியன் இறந்தவுடன் உயிர் நீத்தாள் ஒருத்தி, கணவன் இறந்தவுடன் இவ்வாறு இங்கு வந்து தேவருலகம் அடைந்தாள் ஒருத்தி. இந்த இருவருள் உயர்ந்தவர் யார்?” என்றான். அரசியின் உள்ளம் இருவருடைய கற்பையும் போற்றியது. ''பாண்டியன் தேவியும் போற்றத் தக்கவள். உன் நாட்டைத் தேடிவந்த பத்தினியையும் வணங்கிப் போற்றவேண்டும்." என்றாள் உடனே அரசன் அமைச்சரின் முகங்களை நோக்கினான். தமிழ்நாட்டுப் பொதிய மலையிலிருந்து அல்லது வடக்கே இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்து அதனால் கண்ணகிக்குச் சிலை அமைத்துக் காவிரியிலாவது கங்கையிலாவது நீராட்டி வழிபடலாம் என்று அமைச்சர்கள் கூறினார்கள். பொதியமலை மிக அருகே இருப்பதால், தொலைவில் உள்ள இமயமலையிலிருந்து கல் கொண்டு வருவதே பெருமைக்கு உரியது என்று சேரன் முடிவு செய்தான்.
இவ்வளவும் கேட்டுக்கொண்டிருந்த இளங்கோ தம் நண்பர் சாத்தனாரை நோக்கி அந்தப் பத்தினியைப் பற்றி ஒரு காப்பியமே எழுதவேண்டும் என்று தெரிவித்தார். கண்ணகி சோழ நாட்டில் பிறந்து வளர்ந்து பாண்டிய நாட்டிற்குச் சென்று கணவனை இழந்து சேர நாட்டிற்கு வந்து முடிந்தமையால் மூன்று நாடுகளுக்கும் தொடர்பு உள்ள அந்தக் காப்பியத்தை அரச குடும்பத் துறவியாகிய இளங்கோவே எழுதுவற்குத்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

தகுதியுள்ளவர் என்று சாத்தனார் கூறினார். அந்தக் கடமையை இளங்கோவடிகள் நிறைவேற்றினார்; சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை எழுதி முடித்தார். அவருடைய அண்ணன் கண்ணகிக்குக் கல்லால் கோயில் எழுப்ப, தம்பியாகிய இளங்கோ சொல்லால் கோயில் அமைத்தார். செங்குட்டுவன் கட்டிய கோயிலுக்குப் பிறகு பல கோயில்கள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் கண்ணகிக்கு அமைந்தன. அவை சிதைந்தும் மாறியும் போயின். ஆனால் இளங்கோவடிகளின் காப்பியமாகிய கோயில் மட்டும் அழியாமல் விளங்கிவருகிறது.
கண்ணகியின் கதை, பல நாட்டுப் பாடல்களாக மக்களிடையே வழங்கியிருக்க வேண்டும். இன்றும் இலங்கையில் மட்டக்களப்பு என்னும் பகுதியில் கண்ணகியைப்பற்றிய நாட்டுப்பாடல்கள் பல உள்ளன. தமிழ்நாட்டில் பிற்காலத்தில் அந்தக் கதை பலவகையாகத் திரிந்து வைசிய புராணத்தில் ஒரு பகுதியாக அமைந்தது. கோவலன் நாடகம் என்ற பழைய நாடகத்திலும் அந்தக் கதை பல திரிபுகள்
அடைந்துள்ளது.
பத்தினி வழிபாடு
கண்ணகியின் வாழ்க்கை தமிழ்ப் பெண்களின் வாழ்விலும் அம்மன் கோயில்களிலும் பல மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கண்ணகி கொதித்து எழுந்து பாண்டியனிடம் தன் கணவன் கள்வன் அல்ல என்பதை நிறுவி ஊரைத் தீக்கு இரையாக்கிய நாள் வெள்ளிக்கிழமையாகும். இன்றுவரையில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வெள்ளிக்கிழமை மிகப் புனிதமான நாளாக இருந்து வருகிறது. கண்ணகி தன் காலில் பொன்னாலான சிலம்பு அணிந்து இருந்தாள். கண்ணகி பொன் சிலம்பின் தெய்வமாகப் போற்றப்பட்ட பிறகு, தமிழ்ப்பெண்கள் காலில் பொன்னாலாகிய எந்த நகையும் அணிவதை விட்டுவிட்டார்கள். வெள்ளி நகைகளை மட்டுமே காலில் அணிவது வழக்கம் ஆயிற்று. கண்ணகியின் வாழ்வில் பெரிய மாறுதல்
45

Page 56
நேர்ந்தது ஆடி மாதத்து வெள்ளிக்கிழமையில் ஆகும். இன்றும் தமிழ்நாட்டு மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதமும் வெள்ளிக்கிழமையும் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. மாரியம்மனுக்கு நடைபெறும் ஆடல் பாடல்களில் சிலம்பு முக்கிய இடம் பெறுகிறது. காளியே கண்ணகியாகப் பிறந்தாகப் பிற்காலத்தில் கதை கட்டப்பட்டது. திரெளபதி கோயிலில் திருவிழா நடக்கும்போது, தீ மிதித்துச் செல்லுதல் ஒரு சடங்கு ஆகிவிட்டது. கண்ணகி மதுரையை நெருப்புக்கு இரையாக்கிய போது அந்தணர் அறவோர் முதலியவர்கள் தப்பித்துச் சென்றதாக உள்ள கதையை அது அடிப்படையாகக் கொண்டது எனலாம்.
இளங்கோவடிகள் பத்தினியைத் தெய்வ மாக்கி வழிபடும் உணர்ச்சிக்குத் தம் நூலில் வித்திட்டார். இரண்டாம் காண்டத்திலேயே கண்ணகியின் வாழ்வு முடிகிறது. அவ்வாறு அவளுடைய வாழ்வு முடிந்த பிறகும், கோயில் எழுப்பிப் பத்தினி வழிபாடு நடைபெறுவதை அவருடைய காப்பியத்தில் மூன்றாம் பகுதியில் விரிவாகக் கூறியுள்ளார். சிலப்பதிகாரம் என்று அவர் தம் காப்பியத்திற்குப் பெயர் அமைத்தார். கண்ணகியின் கால் சிலம்பே நூலுக்குப் பெயர் தந்தது. அந்தச் சிலம்பை இளங்கோவடிகள் தம் நூலில் காட்டும் இடங்கள் மிகச் சிலவே. முதல் காண்டத்தில் முதல் காதையில் கண்ணகியின் திருமணத்தின்போது அவளுடைய காலில் சிலம்பைக் காண்கிறோம். பிறந்த ஊரைவிட்டு மதுரைக்குச் செல்லவேண்டும் என்று கோவலன் புறப்படும்போது, ''சிலம்புகள் உள்ளன” என்று கண்ணகி குறிப்பிடுவதைக் கேட்கிறோம். இரண்டாம் காண்டத்தில் மதுரையில் கோவலனுடைய வாழ்வின் கடைசி நாளில் அவன் அந்தச் சிலம்பில் ஒன்றை எடுத்துச் செல்வதையும் பொற்கொல்லன் அதைப் பார்ப்பதையும் காண்கிறோம். கோவலன் கொல்லப்பட்ட செய்தி அறிந்தபின், கண்ணகி மற்றொரு சிலம்பைக் கையில் ஏந்திப் பாண்டியனிடம் செல்வதையும் முறையிடுவதையும் காண்கிறோம்.
[ 0
46

இறுதியில், மூன்றாம் காண்டத்தில் கண்ணகி தெய்வமானபின், சேர அரசனுடைய கண்ணுக்குத் தோன்றும் காட்சியில் அந்தப் பொன் சிலம்பைக் காண்கிறோம். இந்த அளவில் சிலம்பைக் காட்டிக் காப்பியத்தை அழகுபடுத்திப் பெயர் சூட்டியுள்ளார் ஆசிரியர்.
கலையுள்ளம்
இளங்கோவடிகள் அரச குடும்ப வாழ்வை அறிந்தவர்; துறவறத்தில் நின்றவர். அறநெறியை வற்புறுத்துவதில் ஆர்வம் மிக்கவர்; தாம் சைனராயினும் சமயப் பொதுநோக்கு வாய்ந்தவர். தாம் சேரநாட்டார் ஆயினும் சேர சோழ பாண்டிய நாடுகள் மூன்றையும் இணைத்து தமிழ்நாடு என நோக்கும் ஒருமை நோக்கம் உடையவர். இவைபோலவே, அவருக்கு உள்ள மற்றொரு சிறப்பு, அவருடைய கலையுள்ளம் ஆகும். அவருடைய காப்பியத்தில் நாட்டியம், இசை ஆகிய இரு கலைகளையும் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்த காரணத்தால் மட்டும் அவருடைய கலையுள்ளம் விளங்கவில்லை; காப்பியத்தில் வருணனைகளையும் உணர்ச்சிகளையும் இணை இணையாகவும் முரணாகவும் நயமுற அமைத்துள்ள அமைப்பும் அவருடைய கலையுள்ளத்தைக் தெளிவாக விளக்குகின்றது.
கண்ணகியும் கோவலனும் தொடக்கத்தில் நடத்தும் இன்ப வாழ்க்கையின் போது தென்றலும் வண்டும் வருணிக்கப்படுகின்றன. கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்தபின், மறுபடியும் தென்றலும் வண்டும் வருணிக்கப்படுகின்றன. அங்கு வருணனை வேறுபடுகின்றது. அதன் பயனும் வேறாக உள்ளது. அந்தப் பிரிவின் போது, மகளிர் இரு சாராரின் கண்களில் இருவகைக் கண்ணீரைக் காட்டுகிறார். கோவலனோடு மகிழும் மாதவியின் கண்களிலும் கணவரைப் பிரியாத மற்ற மகளிரின் கண்களிலும் இன்பக் கண்ணீரையும், கண்ணகியின் கண்களிலும் கணவரைப் பிரிந்த மற்ற மகளிரின்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 57
கண்களிலும் துன்பக் கண்ணீரையும் முரண்படக் காட்டுகிறார். கோவலனுக்குத் திருமணமான பிறகு நிலாமுற்றத்தில் கண்ணகியோடு இன்பமாக வாழும் போது குளிர்ந்த நிலவைக் காண்கிறோம். பிறகு இருவரும் மதுரைக்குச் செல்லும்போது கடுங் கோடையில் அவர்களின் துன்பத்தைத் தணிக்க முயலும் நிலவைக் காண்கிறோம். கோவலன் கண்ணகியை புகழும் பாராட்டு மொழிகளை இரண்டு இடங்களில் கேட்கிறோம். திருமணத்திற்குப் பிறகு புதிய காதல்வெறியில் எழும் பாராட்டு மொழிகள் முதலில் கேட்பவை; எல்லாம் அவளுடைய உடலின் இளமையும் அழகும் பற்றியவை; இரண்டாவதாகக் கேட்கும் பாராட்டும் மொழிகள் அவனுடைய வாழ்வின் கடைசி நாளில் கொலை செய்யப்படு வதற்குமுன் அவன் கூறியவை; அவை எல்லாம் கண்ணகியின் உயர்ந்த பண்புகளை நினைந்து உருகிக் கூறியவை.
மாதவி கோலவனுக்கு இரண்டு கடிதங்கள் எழுதினாள். முதலில் கோவலன் தனக்கு உரியவனாகத் தன்னோடு மகிழ்ந்திருந்தது பிரிந்த அன்று எழுதியது; இன்னும் அவன் தனக்கு உரியவனே என்ற நம்பிக்கையால், விரைவில் திரும்பி வருமாறு காதல் குறிப்போடு தாழை மடலில் செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்த பித்திகை அரும்பால் எழுதிய மலர்ச்செண்டுக் கடிதம். அடுத்தது, இனி அவன் தன்னிடம் திரும்பி வரமாட்டான் என்று நம்பிக்கை இழந்து வணக்கத்தோடு எழுதியது. முன்னத்தில் உள்ளவை இன்பமான காதல் மொழிகள்: பின்னத்தில் உள்ளவை பணிவான தூய சொற்கள்.
அரண்மனை முதலான இடங்களில் விளங்கும் நுண்கலைகள் மட்டும் அல்லாமல், காட்டிலும் மேட்டிலும் உள்ள மக்கள் கலைகளும் (நாட்டுக் கலைகள்) இளங்கோவடிகளின் உள்ளத்தைக் கவர்ந்தன. அந்த மக்களின் கலைகளில் உயிர்த் துடிப்பு விளங்குவதை இளங்கோவடிகள் உணர்ந்து
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

போற்றினார். அவற்றிற்குத் தம் நூலில் தக்க இடம் தந்திருப்பதும் அவருடைய உண்மையான கலையுள்ளத்தைக் காட்டுகிறது. முப்பது படலங்கள் உடைய சிலப்பதிகாரத்தில், நான்கு படலங்கள் இப்படிப்பட்ட மக்களின் ஆடல்பாடல்களைப்பற்றியே அமைந் துள்ளன. அவை கானல் வரி, வேட்டு வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை என்னும் பகுதிகள், அவற்றுள், கானல் வரியில் கடற்கரைச் சோலையில் உள்ள மீனவர்களின் பாடல்களும் காவிரியாறுபற்றிய பாடல்களும் அமைந்துள்ளன. இளங்கோவடிகள் அந்த மக்கள் பாடல்களுக்குப் புலமை மெருகு ஏற்றி இலக்கியமாக்கிக் கூறியிருந்தாலும், அவற்றின் உயிர்த் தன்மையை மாற்றாமல் தந்திருக்கிறார். அவ்வாறே, வேட்டுவ வரியில் காளியை வழிபடும் வேடர்களின் பாடல்களை அமைத்துள்ளார். ஆய்ச்சியர் குரவையில் கண்ணனை வழிபடும் இடையர் மகளிரின் ஆடலும் பாடலும் உள்ளன. குன்றக் குரவையில் மலைப்பகுதியில் வாழும் மக்களின் ஆடல்பாடல்கள் உள்ளன. இவை நான்கும் தவிர, இருபத்தொன்பதாவது காதையில் (படலத்தில்) பலவகை நாட்டுப்பாடல்களைச் சுருக்கமாகத் தந்துள்ளார். பெண்கள் கூடியிருந்து விளையாடும் அம்மானைப் பாடல், பந்தடித்துப் பாடும் கந்துக வரி, ஊசலாடிப் பாடும் ஊசல் வரி, நெல் குற்றும்போது பாடும் வள்ளைப்பாட்டு என்பவற்றை அங்கே அமைத்துள்ளார். இவை, நேரே மக்களின் ஆடல் பாடல்களை வடித்து மெருகேற்றித் தந்த இடங்கள், இவை தவிர, மக்களின் பாடல்களை (நாட்டுப் பாடல்களை) நமக்குத் தராமல் அவற்றைப்பற்றிச் சுட்டிக் கூறும் இடங்களும் சிலப்பதிகாரத்தில் உள்ளன. உழவர்களின் தொழிலோடு இயைந்த பாடல்களாகிய விதைவிதைக்கும் பாட்டு, களைகட்டல் பாட்டு, அறுவடைப் பாட்டு ஆகியவற்றைப் பற்றி இளங்கோ குறிப்பிட்டி ருக்கிறார். சேர மன்னன் வடநாட்டு வெற்றிக்கு பின் திரும்பி வரும்போது சேர நாட்டு மக்கள் அவன் வருகையைக் கொண்டாடுவதாகக் கூறும்போது,
47

Page 58
நான்கு வகை நிலங்களில் வாழும் தொழிலாளிகளின் பாட்டுகளையும்பற்றி நான்கு வகைக்குறிப்புக்கள் தந்துள்ளார். மலையில் வாழும் குறத்தியர் தினைப் புனத்தைக் காவல் செய்து கொண்டே யாழ் இசைத்துப் பாடினார்களாம். அந்தப் பாட்டில் வடநாட்டில் சேரன் செய்த போரில் வீரச் செயல் புரிந்த யானைகளைப் புகழ்ந்தார்களாம். காட்டு நிலத்தில் உழவர்கள் பாடிய பாட்டில், தம் எருதுகளைப் பார்த்து, “பகையரசர்களின் கோட்டைகளை நம் அரசன் அழித்தான். அந்த வெற்றி வேந்தனின் பிறந்த நாள் நாளை வருகிறது. எருதுகளே! நாளை உங்களுக்கு விடுமுறை; நுகத்தடி உங்கள் கழுத்தில் இல்லாமல் நாளை நீங்கள் மகிழலாம்” என்று பாடினார்களாம். ஆன்பொருநை என்ற ஆற்றங்கரையில் பசுக்களை மேய்த்த ஆயர்கள் குழல் இசைத்துப் பாடிய பாட்டில், பசுக்களே! இமய மலையிலிருந்து வெற்றியோடு திரும்புகிறான் நம் அரசன். அவன் அங்கிருந்து பல புதிய மாடுகளைக் கொண்டு வருகிறான். அவற்றின் உறவு உங்களுக்குக் கிடைக்கப் போகிறது. நாளை மேயப்போகும்போது நீங்கள் அவற்றின் துணையோடு போகலாம்” என்று பாடினார்களாம். கடற்கரையில் மீனவப் பெண்கள் பாடிய பாட்டில், "தோழியரே! நம் அரசனுடைய படையெடுப்புக்கு அறிகுறியான வஞ்சிப் பூவைப் பாடுவோம்! அவனுக்கு வெற்றி தந்த போர்க்கு அறிகுறியான தும்பைப் பூவையும் பாடுவோம், அவனுடைய சேரர்குலத்துக்கு உரிய பனம் பூவையும் பாடுவோம்; வாருங்கள்” என்றார்களாம்.
இவை எல்லாம் இளங்கோவின் கலை உள்ளம் மக்களின் ஆடல் பாடல்களைப் போற்றி மதித்த மதிப்பை விளக்குவன ஆகும்.
இவ்வாறு அக்காலத்து வழங்கிய நாட்டுப்பாடல்களைத் தழுவி அவர் சிலப்பதி காரத்தில் தந்துள்ள பாடல்கள் சுவை நிரம்பின் வாக உள்ளன. எடுத்துக்காட்டாக,
48

மதுரையில் குரவைக் கூத்துள் ஆய்ச்சியரின் ஒரு பாடலைக் காண்போம்.
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ
பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ
கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன் எல்லை நம் ஆனுள் வருமேல் அவன்வாயில் முல்லையற் தீங்குழல் கேளாமோ தோழி
பசுவின் கன்றையே சிறு தடியாகக் கொண்டு விளாமரத்திலிருந்து கனிகள் உதிரச் செய்த மாயவன் இன்று நம் பசுக்களின் இடையே வருவானானால், அவனுடைய வாயில் இனிய குழலின் இசையைக் கேளாதிருப்போமா? கேட்போம் அல்லவா? தோழி!
பாம்பையே கயிறாகக் கொண்டு திருபாற் கடலை கடையச் செய்த மாயவன் இங்கு பசுக்களின் நடுவே வந்தால், அவனுடைய வாயில் இனிய குழலின் இசையைக் கேளாதிருப்போமா? கேட்போம் அல்லவா, தோழி!
காட்டை அடுத்த சாரலில் மகளிரை மறைப்பதற்காகக் குருந்த மரத்தை வளைத்த மாயவன் இப்பகலில் நம் பசுக்களின் நடுவே வந்தால், அவனுடைய வாயில் இனிய குழலின் இசையைக் கேளாதிருப்போமா? கேட்போம் அல்லவா? தோழி!
இவ்வாறு ஆயர்குலப் பெண்கள் கூடிக் கண்ணனுடைய குழலிசையைப் புகழ்ந்து பாடும் பாடல் இனிய சுவை நிரம்பியது ஆகும். திருமாலின் புழைக் கேட்காத செவி பயனற்றது. காணாத கண்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 59
பயனற்றது. ஏத்தாத நாவும் பயனற்றது என்று பாடும் பாடல்களும் இசையினிமையும் நயமும் வாய்ந்தவை,
சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்னகண்ணே (தூது) நடந்தானை ஏத்தா நாஎன்ன நாவே நாராயணா என்னா நா என்ன நாவே
இவ்வாறே காட்டுவழியில் காளியை வழிபடும் வேடர்களின் பாடல்கள் உள்ளன; அவற்றில் கொலைக்கு அஞ்சாத முரட்டுத்தன்மையும் இரக்கமற்ற வன்மையும் வீரம் கலந்த பக்தியும் விளங்குகின்றன. மலைநிலத்தில் குன்றவர்கள் முருகனை ஏத்திப் பாடும் பாடல்களில் முருகனிடத்துக் கொண்ட பக்தியும் காதல் சுவையும் விளங்குகின்றன.
வஞ்சிமாநகரில் மகளிர் பந்து அடித்து ஆடும்போது பாடுவதாக உள்ள பாடல், பந்தடிக்கும் போது பெண்கள் அசையும் அசைவைப் புலப்படுத்தும் ஓசை நயம் உடையது.
பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய்கோதை வில்லிட மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்ப எங்கணும் தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்தடித்துமே தேவர்ஆர மார்பன் வாழ்க என்றுபந் தடித்துமே.
ஊசல்வரி, வள்ளைப்பாட்டு என்பன பெண்கள் ஊசலாடும் போதும் நெல் குற்றும்போதும் அரசனை
வாழ்த்தியவாறே பாடிய பாடல்கள். அவற்றிலும் அந்தந்த அசைவுகளுக்கு ஏற்றவாறு பாடல்களின் ஒசை அமைந்திருக்கிறது.
கண்ணகி தன் கணவன் கொலைப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டவுடன், பதைபதைத்துப்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

பல
ரமா
த
பலவாறு புலம்பி அழுகிறாள்; 'துன்பமாலை' என்னும் காதையில் அவளுடைய துயரம் பல அடிகளில் அவருடைய வாய்ச்சொல்லாகவே தரப்பட்டுள்ளது. அந்தப் பாடல்கள் சோக உணர்ச்சியைப் புலப்படுத்துவனவாக உள்ளன. அடுத்த காதையாகிய "ஊர்சூழ் வரி” என்பதில் கொலைப்பட்ட கணவனுடைய உடம்பைக் கண்டு அவள் கதறுவதும் அழுது புலம்புவதும் பற்றிய பாடல்களும் அந்த உணர்ச்சிக்கு ஏற்ற வடிவம் தரும் ஓசையுடன் அமைந்துள்ளன.
புதுமைகள்
இளங்கோவடிகளுக்கு முற்பட்ட புலவர்கள் கையாளாத புதிய செய்யுள் வகைகளை அவர் கையாண்டு, பல்வேறு உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் கருவிகளாக்கியுள்ளார். அகவலும் வெண்பாவுமே மிகுந்திருந்தன பழைய இலக்கியத்தில், கலிப்பாவும், பரிபாட்டும் சிறுபான்மை ஒசைநயம் உள்ளனவாக இருந்தன. பிற்காலத்தில் தாழிசை துறை விருத்தம் என்ற பெயர்கள் உடைய செய்யுள் இனங்கள் வளர்ந்தன. இடைக்காலத்தில் வளர்ந்த அந்தச் செய்யுள் இனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுப்பவைபோல் சிலப்பதிகாரத்தில் புதிய பலவகைச் செய்யுள் வடிவங்களைக் காண்கிறோம். கடற்கரையில் பாடும் இசைப் பாடல்களைக் கொண்ட கானல் வரியிலும் ஆய்ச்சியர் குரவை முதலிய வற்றிலும் இளங்கோ அந்தந்தப் பகுதியில் வழங்கிய நாட்டுப் பாடல்களாக அவற்றை அமைத்துள்ளார். அக்காலத்து நாட்டுப் பாடலிலிருந்தே அவர் அந்தப் புதிய செய்யுள் வடிவங்களை வடித்துத் தந்தார் என்பதில் ஐயம் இல்லை. இவ்வகையில் தமிழிலக்கியத்திற்கு அவர் செய்துள்ள தொண்டு ஒப்பற்றதாகும்.
உலகப் பழைய காப்பியங்கள் அரச குடும்பத்தாரையே தலைவர்களாகக் கொண்டவை. இளங்கோ தம் காப்பியத்தின் தலைமக்களாக ஓர் அரசனையும், அரசியையும் அமைக்காமல், வணிகர்
= 49

Page 60
குடும்பத்தினரைத் தேர்தெடுத்தது ஒரு புதுமையே. வணிகக் குடும்பத்துப் பெண்ணே காப்பியத்தின் தலைவி; அவள் காலில் அணிந்த சிலம்பே காப்பியத்திற்குப் பெயர். முதல் தமிழ்க் காப்பியத்தை இவ்வாறு அமைத்த காரணத்தால், குடிமக்களுள் யாராயினும் ஒரு காப்பியத்திற்குத் தலைவனாக, தலைவியாக அமையமுடியும் என்ற துணிவு ஏற்பட்டது. (ஒரு கணிகையின் மகளாகிய மணி மேகலையைத் தலைவியாகக் கொண்டு மணிமேகலை என்ற காப்பியம் அடுத்து இயற்றப்பட முடிந்தது). இளங்கோவடிகள் செய்த மற்றொரு புதுமை என்ன என்றால், சமுதாயத்திலும் பல நூல்களிலும் வழக்கமாகப் பழித்துக் கூறப்படும் கணிகையாகிய மாதவி அவளுடைய நூலில் கண்ணகிக்கு அடுத்த நல்ல இடத்தைப் பெற்று விளங்குவதாகும். கோவலன் அவளை ஓர் இடத்தில் பழித்தபோதிலும், அடுத்த நிலையிலேயே ''தன் தீது இலள்" என்று அவளைக் குற்றமற்றவளாகக் கூறுகிறான். மாதவியும் அவனிடம் உண்மையான அன்பு கொண்டு வாழ்ந்திருந்த காரணத்தால்தான், அவனுக்கு நேர்ந்த இன்னலைக் கேள்விப்பட்டவுடன் துறவறம் பூணுகிறாள்; தன் ஒரு மகளையும் இளமையிலேயே துறவி ஆக்குகிறாள். தன் மகள் என்று சொல்லாமல், கண்ணகியின் மகள் என்று கூறுகிறாள்; விலைமகளிர் குடும்பத்தில் பிறந்த ஒருத்தி தன் குலத் தொழிலைப் பழித்து ஒதுக்கிய துணிவைப் பதினெட்டு நூற்றாண்டுக்கு முன் முதல்முதலில் இந்தக் காப்பியத்தில்தான் காண்கிறோம்.
பொதுவாகச் சைன சமயத் துறவிகள் இல்லறத்தைப்புகழ்ந்து பேசுவதும் இல்லை; பெண்களை உயர்த்திக் கூறுவதும் இல்லை. இளங்கோவடிகள் இவ்வகையிலும் புதுமைநிகழ்த்தியுள்ளார்.இல்லறத்தைப் புகழ்ந்து, கண்ணகியின் கற்பு வாழ்வை உயர்த்திக் கூறியுள்ளார். தம் கதையில் வரும் ஒரு சைனப் பெண் துறவியாகிய கவுந்தியடிகள் வாயாலேயே புகழுமாறு அமைத்துள்ளார்.
50

காப்பியம் அல்லது நாடகம் சுவையாக அமையவேண்டுமானால், நல்ல தலைவர்க்கு நேர்மாறான பொல்லாதவரையும் படைத்து முரண்படக் காட்டவேண்டும்; நல்லவர் படும் துன்பங்களுக் கெல்லாம் காரணமாக இருந்து கொடுமை செய்யும் பொல்லாதவரைப் படைத்துக் காட்டவேண்டும். சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் கோவலனும் பட்ட துன்பங்களுக்குக் காரணமாகக் கொடியவன் (Villain) ஒருவனைக் காட்ட இளங்கோவுக்கு மனம் இல்லை. பொற்கொல்லன் ஒருவனை மதுரையில் காட்டி, அவனை இரண்டொரு தொடர்களில் பழிக்கிறார். சிலப்பதிகாரத்தில் உள்ள முப்பது காதைகளில் (படலங்களில்) ஒரே ஒரு காதையில் பொற்கொல்லனை அமைக்கிறார். அந்தப் பகுதியிலும் இறுதியில் கோவலனின் கொலைக்குக் காரணம் பொற்கொல்லன் அல்ல, ஊழ்வினையே என முடித்துவிடுகிறார்.
கொலைத் தண்டனை தந்து கோவலனுடைய வாழ்வை முடித்த பாண்டிய அரசன்மேல் கொடுமை கூறலாம் என்றால், அவனுடைய குற்றத்தையும் காப்பிய ஆசிரியர் போக்கிவிடுகிறார். கொடுமைக்கு ஆளான கண்ணகியின் வாயாலேயே அவன் தீமை இல்லாதவன் என்று கூறுமாறு செய்துவிடுகிறார். ஆகவே காப்பியம் கொடியவன் இல்லாததாக நிற்கிறது. இவ்வாறு கொடியவன் இல்லாமலே சுவையான காப்பியம் எழுதியதும் ஒரு புதுமையே
ஆகும்.
மணிமேகலை
மணிமேகலை என்பது தமிழிலக்கியத்தில் உள்ள இரண்டாம் காப்பியம் எனலாம். கதையின் தொடர்பாலும், அது சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி போல் உள்ளது. அதனால் இவற்றை இரட்டைக் காப்பியம் எனக் கூறுதல் உண்டு. கோவலனுக்கும் நாட்டியக் கலையரசியான மாதவிக்கும் மகளாக பிறந்த மணிமேகலையின் வாழ்வை விளக்கும் காப்பியம் அது. மணிமேகலைக்கு உற்ற வயது
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 61
iiiiiiiiiiii:
வந்ததுபோது, குலத்தின் வழக்கப்படி அவள் நாட்டியம் கற்றுப் பரத்தையாக வாழவேண்டும் என்று பாட்டியும் மற்றவர்களும் விரும்பினார்கள். ஆனால் அவளுடைய தாய் மாதவியோ, கோவலன் பிரிந்து சென்று மதுரையில் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்ததுமுதல் துயரமே வடிவாய், கலை வாழ்வைத் துறந்தாள். பௌத்த சமயத்தைச் சார்ந்த துறவியான அறவணர் என்பவரை அணுகித் துறவறம் பூண்டாள். தன் மகள் குலத் தொழிலைச் செய்யக்கூடாது என்று உறுதி பூண்டு, அவளுடைய கூந்தலைக் களைந்து சமயத் தொண்டுக்கு உரியவள் ஆக்கினாள். அவளைத் தன் மகள் என்று கூறுவதும் பழியான தொழிலில் கொண்டு போய்ச் சேர்க்கக் கூடும் என்று கருதி, கண்ணகியின் மகள் என்றே சொல்லத் தொடங்கினாள். இவ்வாறு குடும்பத்தைத் துறந்த மணிமேகலை வாழ்விலும் இடையூறு புகுந்தது. நாட்டின் இளவரசன் அவளுடைய இளமையழகைக் கண்டு காதல் கொண்டான். அடிக்கடி பின் தொடர்ந்தான். அந்நிலையில் அவளைக் காப்பாற்றக் குலதெய்வம் வந்து உதவியது. அந்தத் தெய்வத்தின் உதவியால் மணிமேகலை மணிபல்லவத் தீவுக்குச் சென்று, புத்தரின் திருவடிகளைக் கண்டு, முற்பிறப்பை உணர்ந்து, நாட்டுக்குத் திரும்பினாள். அமுதசுரபி என்னும் தெய்விகப் பாத்திரம் பெற்றுப் பலருடைய பசியைத் தீர்க்கும் ஆற்றல் பெற்றாள். நாடெங்கும் திரிந்து பசியும் பணியும் தீர்த்து மக்களுக்கு அறமொழிகளை எடுத்துரைத்தாள். பல நல்லறங்களைச் செய்து பௌத்த நெறியின் படி முத்தி பெற்றாள். இந்த வாழ்க்கையைக் காப்பிய மாக்கியுள்ளவர் மதுரை கூலவாணிகன் சாத்தனார் என்னும் புலவர். அவர் இளங்கோவடிகள் போல் சமயப் பொதுமை நாடவில்லை. பௌத்த சமயச் சார்பாகவே எல்லாவற்றையும் கூறியுள்ளார். இலக்கியச் சுவையை விடப் பௌத்த சமய விளக்கமே காப்பியத்தில் மேலோங்கியுள்ளது. பலவகை உணர்ச்சிகளை வெவ்வேறு செய்யுள் ஓசைகளால் புலப்படுத்தும் சிறப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது. மணிமேகலையில் அதுவும் இல்லை. நூல் முழுவதும்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

பகையான
ஒரே வகையான ஓசையுள்ள அகவல் என்னும் செய்யுளால் அமைந்துள்ளது.
எளிய நடையில் கதை சொல்லும் தன்மையும் பௌத்த சமய உண்மைகளையும் நீதிகளையும் தெளிவாக எடுத்துரைக்கும் இயல்புமே இந்தக் காப்பியத்தின் சிறப்பியல்புகள் எனலாம். காப்பியத்தின் தலைவியாக உள்ள மணிமேகலை ஒப்புயர்வற்ற ஒரு பெண்மணி என்பதில் ஐயம் இல்லை.
மணிமேகலை என்னும் காப்பியத்தைவிட, அந்த நூலில் வரும் மணிமேகலை என்னும் அந்தப் பெண் துறவியே பலருடைய போற்றுதலுக்கு உரியவளாய் விளங்குகிறாள். அவள் காப்பியத்தின் கற்பனைத் தலைவியாக மட்டும் அல்லாமல் நாட்டு வரலாற்றின் பெருமைக்கு உரிய ஒரு பெண் பிறவியாகவும் பலருடைய உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டாள். அழகும் இளமையும் அறிவும் பண்பும் நிரம்பிய அவள், அரசிளங் குமரனுடைய காதலைக் கைவிட்டுப் பௌத்தத் துறவியான சிறப்பு ஒருபுறம்; அதைவிடப் பெரியது, அவள் அருள் நிரம்பிய வாழ்வு நடத்திய சிறப்பு ஆகும். மணிபல்லவத் தீவில் அவள் பெற்ற அமுதசுரபி என்னும் பாத்திரத்தைக் கையில் ஏந்தி, "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (பசிக்கு உணவு கொடுத்துக் காப்பவர், உயிரையே காப்பாற்றும் அறமுடையோர்) என்று உணர்ந்து, பல இடங்களிலும் திரிந்து வறியவர்களுக்கும் பசித்தவர்களுக்கும் சோறு அளித்தாள்.
அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்லை
என்று மணிமேகலை ஓரிடத்துக் கூறியிருக்கிறாள். அத்தகைய அறநெறியைப் போற்றி, உணவு வற்றாத பாத்திரமாகிய அமுத சுரபியிலிருந்து உணவை
51

Page 62
எடுத்து எல்லோர்க்கும் உதவினாள். கூன் குருடு ஊமை செவிடு நோயாளிகள் திக்கற்றவர்கள் எல்லோரிடத்திலும் அன்பு கொண்டு உதவி புரிந்தாள். அவள் இளவரசனுடைய கொலைக்கு காரணமாக இருக்கவேண்டும் என்று சிறையில் வைக்கப்பட்டாள். பிறகு அவளுடைய பண்பையும் உண்மையையும் உணர்ந்த சோழ அரசன் சிறையிலிருந்து விடுவித்தான். அந்நிலையில் அரசனிடம் மணிமேகலை கேட்ட வரம் ஒன்று. அவளுடைய உயர்வை எடுத்துக்காட்டுகிறது. அப்போது அவள் சிறைச்சாலை எல்லாம் அறச்சாலை ஆக்குமாறு அரசனைக் கேட்டுக்கொண்டாள். மகனாகிய இளவரசனை இழந்த சோழ அரசி, முதலில் மணிமேகலையிடம் சினம் கொண்டு அவளுக்குப் பல துன்பங்கள் செய்தாள். பிறகு உண்மை உணர்ந்ததும் சினம் நீங்கிய அரசி, மணிமேகலையை வணங்கலானாள். அப்போது மணிமேகலை, "நீ நாட்டு மன்னனின் தேவி; என்மேல் காதல் கொண்ட இளவரசனைப் பெற்ற தாய். ஆதலால் என்னை வணங்குவது
52

0) 01
பொருந்தாது” என்று அடக்கத்தோடு கூறினாள். மணிமேகலையின் வாயிலாகப் பல அறவுரைகளை இந்த நூலில் பெறுகிறோம். இளவரசன் கொல்லப் பட்டபோது, அரசி தன் மகனை நினைந்து அழுது புலம்பினாள். அப்போது அவளுக்கு ஆறுதல் கூற எண்ணிய மணிமேகலை, அவளுக்கு வாழ்வின் உண்மையை எடுத்துரைத்தாள். "அரசியே! நீ உடலுக்காக அழுகிறாயோ? உயிருக்காக அழுகிறாயோ? உடலுக்காக அழுகிறாய் என்றால். உன் மகனை எடுத்துச் சென்று இடுகாட்டில் இட்டவர் யார்? உயிருக்காக அழுகிறாய் என்றால், உயிர் போய்ப் புகும் இடம் அவரவர் செய்த வினைக்கு ஏற்றவாறு அமைவது; தெரிந்து கொள்ள இயலாதது அது. உன் மகனுடைய உயிர்க்காக அன்பு செலுத்துகிறாய் என்றால். நீ எந்த உயிர்க்காகவும் பொதுவாக இரக்கம் கொள்வதே கடமை ஆகும்" என்றாள். இவ்வாறு பல இடங்களிலும் புத்தர் பெருமானின் அறவுரைகள் மணிமேகலையின் வாய்மொழியாலும் வாழ்க்கை நெறியாலும் தெளிவாகப் புலப்படுகின்றன.
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 63
சிலப்பதிகார
காவிரி - காவேரி
'சோழநாடு சோறுடைத்து' என்பது பழமொழி. சொல்லிலிருந்து உண்டாவது சோறு. சொல் என்றால் நெல் என்பது பொருள். சோழநாடு, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். சோழ நாட்டை நெற்களஞ்சியமாக்குவதற்கு
அடிப்படைக் காரணமாக இருப்பது அந்நாட்டில் பாய்கிற காவிரி ஆறு. காவிரி ஆறு தமிழ்நாட்டின் புண்ணியந்தி என்பதைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டு காவியங்களும் காவிரி ஆற்றின் சிறப்பைக் கூறுகின்றன. முற்காலத்து நூல்களும் பிற்காலத்து நூல்களும் காவிரி ஆற்றைக் காவேரி ஆறு என்றே கூறுகின்றன. காவேரி என்பது கொச்சை வழக்குச் சொல். இது பேச்சு வழக்கில் மட்டும் வழங்கப்படுகிறது. காவிரி என்பதுதான் நூல் வழக்குச் சொல். பழைய நூல்களிலும் புதிய நூல்களிலும் காவிரி என்னும் சொல்லே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சிலப்பதிகாரக் காவியத்தில் மட்டும் காவிரி என்றும் காவேரி என்றும் இரண்டு வகையாக இந்தப் பெயர் கூறுப்படுகிறது. இளங்கோவடிகள் தம்முடைய சிலப்பதிகாரக் காவியத்திலே கானல்வரியில் மட்டும் காவேரி என்னுஞ் சொல்லை வழங்குகிறார். தமிழ் மொழியின் ஆதி காவியத்திலே இளங்கோவடிகள் ஏன் இவ்விரண்டு சொற்களை வழங்கியுள்ளார்? இதன் காரணம் என்ன? இதற்குக் காரணங் கண்டுபிடிப்பதற்கு முன்னம், இந்தச் சொற்கள் சிலப்பதிகாரத்தில் எந்தெந்த இடங்களில் வந்துள்ளன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

ஆய்வுரை
- மயிலை சீனி வேங்கடசாமி
முதலில் காவிரி என்னும் சொல் வந்துள்ள இடங்களைப் பார்ப்போம்.
தண்ணறுங் காவிரித் தாதுமலி பெருந்துறை
(இந்திர விழா 165)
கடற்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாறு (கடலாடு 163)
காவிரி வாயில் கடைமுகங் கழிந்து (நாடுகாண் 33)
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை (நாடுகாண் 108) காரணி பூம்பொழில் காவிரிப் பேர்யாறு (நாடுகாண் 214) விரிதிரைக் காவிரிவியன் பெருந் துருத்தி (காடுகாண் 39) காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள் (அடைக்கலம் 151) முதுநீர்க் காவிரி முன்றுறைப் படுத்தல் (காட்சி 123)
சிலப்பதிகாரத்தில் இயற்றமிழ்ப் பகுதி முழுவதும் இந்த ஆறு காவிரி' என்றே கூறப்படுவது காண்க. இயற்றமிழ்ப் பகுதியில் ஓரிடத்திலேனும் 'காவேரி' என்று கூறப்படவே இல்லை.
சிலப்பதிகாரக் காவியத்தில் கானல்வரியில் மட்டும் இளங்கோவடிகள் காவேரி என்னுஞ் சொல்லைப் பயன்படுத்துகிறார். காவிரி ஆறு கடலுடன் கலக்கிற புகர்முகத்தண்டைக் கடற்கரை மணலிலே அமர்ந்து கோவலனும் மாதவியும் கானல்வரி பாடினார்கள். அந்த இசைப் பாடல்களிலே முதலில், தங்களுக்கு அருகில் பாய்ந்தோடுகிற காவிரி ஆற்றைப்பற்றிப் பாடின பிறகு மற்ற இசைப்பாடல்களைப் பாடினார்கள். கோவலன்
53

Page 64
காவிரி ஆற்றை மூன்று பாடல்களில் பாடினான். அம்மூன்று செய்யுள்களிலும் காவிரி ஆறு காவேரி என்று கூறப்படுகிறது.
திங்கள் மாலை வெண்குடையான் சென்னி
செங்கோ லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி
காவேரி! கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா
தொழிதல் கயற்கண்ணாய்! மங்கை மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி
காவேரி!
மற்ற இரண்டு பாடல்களிலும் காவேரி என்னுஞ் சொல்லே பயின்றுள்ளது.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புல்வாய் வாழி
காவேரி!
மன்னு மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி
காவேரி! விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி
காவேரி!
மழவ ரோதை வளவன்றன் வளனே வாழி
காவேரி!
மாதவியும் காவிரி ஆற்றின் மேல் மூன்று இசைப் பாடல்கள் பாடினாள். அவ்விசைப்பாடல்களிலும் காவிரி என்னும் பெயர் காவேரி என்று காணப்படுகிறது.
மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை
யதுபோர்த்துக் கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி
காவேரி! கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம்
நின்கணவன்
54

ளையாை
திருந்து செங்கோல் வளையாமை யறிந்தேன் வாழி
காவேரி!
காமர் மாலை யருகசைய நடந்தாய் வாழி
காவேரி!
நாம வேலின் திறங்கண்டே யறிந்தேன் வாழி
காவேரி! ஊழி உய்க்கும் பேருதவி யொழியாய் வாழி
காவேரி
ஆழி யாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி
காவேரி!
இயற்றமிழ்ப் பகுதிகளில் காவிரி என்னுஞ் சொல்லை வழங்கிய இளங்கோவடிகள் இசைத் தமிழ்ப் பகுதியாகிய கானல்வரியில் மட்டும் ஏன் காவேரி என்னுஞ் சொல்லை வழங்கினார்.
சிலப்பதிகாரத்தில் வருகிற கானல்வரி என்பது இசைத்தமிழ். அஃதாவது இசைப்பாட்டு. கடற்கரையில் பாடப்பட்டதாகையால் அது கானல்வரி என்று பெயர் பெற்றது. கானல் - கடற்கரை. வரி - இசைப்பாட்டு. மேலே காட்டப்பட்ட வரிப்பாட்டுகளின் கடைசிச் சொற்கள் மூவசைச் சீராக முடிக்கின்றன. அதனால், காவிரி என்னும் ஈரசைச் சொல்லைக் காவேரி என்று மூவசைச் சீராக அமைத்துள்ளார். அவ்விடத்தில் காவிரி என்னுஞ் சொல்லை யமைத்தால் ஈரசைச் சீராகித் தளை தட்டுப்பட்டுச் செய்யுளோசை குறையுமாகையால் இவ்வாறு மாற்றியமைத்தார். இவ்வாறு அமைப்பது இசைத் தமிழ் இலக்கணத்துக்குப் பொருந்தும். இசைத்தமிழ் இலக்கணத்தில் குற்றெழுத்து நெட்டெழுத்தாகவும், நெட்டெழுத்து குற்றெழுத்தாகவும் வருவது மரபு. அந்த முறைபடி, இசைப்பாட்டுப் பகுதியாகையால், இங்கு மட்டும் காவிரி காவேரி என்று வழங்கப் பட்டிருக்கிறது. இசைத் தமிழிலக் கணத்துக்கு ஏற்பவும் தளைதட்டாமலிருக்கவும் இளங்கோ வடிகள்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 65
வரிப்பாட்டில் (இசைப்பாட்டில் ) மட்டும் காவிரி என்னுஞ் சொல்லைக் காவேரி என்று வழங்கியுள்ளார். ஏனைய இயற்றமிழ்ப் பகுதிகளில் காவிரியைக் காவேரி என்று கூறவே இல்லை.
இந்த நுட்பத்தை அறியாதவர், சிலப்பதிகாரத்தில். காவிரி என்னுஞ் சொல் காவேரி என்று வழங்கப்பட்டிருக்கிறபடியால், அந்நூல் பிற்காலத்தில். இயற்றப்பட்ட நூல் என்று கூறுவர். அவ்வாறு ஒருவர் எழுதியும் உள்ளார். திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள், காவேரி என்பது பிற்காலத்து வழக்குச் சொல் என்றும், இச்சொல்லையாளுகிற சிலப்பதிகாரம் பிற்காலத்து நூல் (சங்ககாலத்து நூல் அன்று) என்றும் தாம் ஆங்கிலத்தில் எழுதியுள்ள தமிழ்மொழி - தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் 148ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார். (History of Tamil Language and literature, S. Vaiyapuri Pillai, 1956). இவ்வாறு கூறுவது, ஆழ்ந்து கூர்ந்து ஆராயாமல் மேற்போக்காக மட்டும் ஆராய்கிறவர்களின் கூற்றாகும். மேலும், பிள்ளையவர்கள் கூறுவது போலக் காவேரி என்னும் சொல் பிற்கால இலக்கியங்களிலும் வழங்கப் படவில்லை. காவேரி என்பது பேச்சு வழக்கில், கொச்சைத் தமிழில் தவிர, இச்சொல் பிற்கால இலக்கியங்களிலும் வழங்கப்படவில்லை. காவிரி என்னும் சொல்தான் முற்காலப் பிற்காலப் இலக்கியங்களில் வழங்கி வந்துள்ளது. காவேரி என்னுஞ் சொல் பேச்சு வழக்கில் மட்டும் இருந்து வருகிறது. காவேரி என்னும் சொல் ஒரே ஓர் இலக்கியத்தில் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த இலக்கிய நூல் மேலே காட்டிய படி சிலப்பதிகாரம். சிலப்பதிகாரத்திலும் இசைப் பகுதியாகிய கானல் வரியில் மட்டும் இச்சொல் ஆளப்பட்டிருக்கிறது. இதனை இக்கட்டுரையின் முற்பகுதியில் விளக்கமாகக் காட்டியுள்ளோம். எனவே, வையாபுரியார் கருதுவது போல, சிலப்பதிகாரம் பிற்காலத்து நூல் அன்று. அது கடைச்சங்க காலத்தின் இறுதியில் எழுதப்பட்ட நூலாகும்.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

இதற்கு வேறு சில சான்றுகளும் உண்டு. அச்சான்றுகளைச் சமயம் வாய்க்கும் போது எழுதுவோம்.
க
கண்ணகியின் கைவளை
மதுரை மாநகரத்திலே கோவலன் இறந்த பிறகு கைம் பெண்ணான கண்ணகியார் தமது கையிலணிந்திருந்த சங்கு வளையை (வளைசங்கு)க் கொற்றவை கோயிலின் வாயிலில் சென்று தகர்த்து ஒடித்துக் கைம்மைக் கோலங் கொண்டார் என்று சிலப்பதிகாரங் கூறுகிறது. "கொற்றவை வாயில் பொற்றொடி தகர்த்து” என்பது அவ்வாசகம் (சிலம்பு 23:18). பொற்றொடி என் ப து பொன் வளை என்று பொருள் படுமானாலும் இங்கு வளை (சங்கு )யினால் செய்யப்பட்ட தொடி என்பதே பொருளாகும். சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியரும் இவ்வாறே பொருள் கூறுகிறார்: "பொற்றொடி - பொலிவினையுடைய சங்கவளை” என்று அவர் உரை எழுதியிருப்பது காண்க.
சங்க காலத்தில் வறியவர் முதலாக அரசியர் வரையில் எல்லா மகளிரும் கைகளில் வளை (சங்கு வளை) அணிந்திருந்தார்கள். இக்காலத்து மகளிர் கழுத்தில் தாலி அணிவது இன்றியமையாதது போல அக்காலத்து மகளிர் கைகளில் சங்குவளை அணிய வேண்டுவது இன்றியமையாததாக இருந்தது. செல்வர் வீட்டு மகளிர் பொன் தொடிகளை அணிந்திருந்தாலும் அதனுடன், இன்றியமையாத சங்குவளைகளையும் அணிந்திருந்தனர்.
ளைகள்
இக்காலத்துக் கைம்பெண்கள் தாலிகளைக் களைந்து விடுவது போல, அக்காலத்துக் கைம்பெண்கள் தம்முடைய கைவளைகளை உடைத்தெறிந்து வெறுங்கையினராக இருந்தனர். இந்த வழக்கப்படிதான் கண்ணகியார் தம்முடைய கைவளைகளைக் கொற்றவை கோயிலின் வாயிலில் சென்று தகர்த்து உடைத்தார். கைம்பெண்கள்
55

Page 66
தங்களுடைய தொடிகளை (வளைகளை)க் கழித்துவிட்டபடியால் அவர்கள் 'தொடிகழி மகளிர்' என்று கூறப்பட்டனர். "தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடி” என்று சங்கச் செய்யுள் (புறம் 238:7) கூறுகிறது. 'கழிகல மகடூஉ' என்பது புறம் 261:18.
தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள கடல்களில் வளை (சங்கு) கிடைத்தது. பாண்டி நாட்டுக் கொற்கைக் குடாக்கடலில் முத்துச் சிப்பிகளும் இடம்புரிச் சங்கு வலம்புரிச் சங்குகளும் அதிகமாகக் கிடைத்தன. (பிற்காலத்தில் கொற்கைக் குடாக் கடல் மண் தூர்ந்து ஐந்து மைல் அளவுக்குத் தரையாக மாறிவிட்டது). சங்குகளைத் தொடியாக அறுத்து அரத்தினால் அராவிப் பலவகையான அளவில் தொடிகளைச் செய்தார்கள். அந்தத் தொடிகளிலே பூ உருவங்களும் கொடி உருவங்களும் செதுக்கப் பட்டிருந்தன. சில வளைகளுக்குப் பல வித நிறங்கள் ஊட்டப்பட்டு வண்ண வளைகளாக அமைக்கப்பட்டன. காவிரிப் பூம்பட்டினம், உறையூர் முதலான நகரங்களில் நிலத்தை அகழ்ந்து ஆராய்ந்தபோது அங்கு கிடைத்த பல பொருள்களில் ஒடிந்துபோன வளைத் துண்டுகளும் கிடைத் துள்ளன. தமிழகத்து மகளிர் சங்கு வளைகளை அணிந்திருந்ததைச் சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். 'கோணேறி லங்கு வளை' (ஐங்குறு. நெய்தல், பாணற்குரைத்த பத்து 6), 'இறைகேழ் எல்வளை' (மேற்படி, சிறுவெண் காக்கை 5), 'கடற்கோடு செறிந்த மயிர்வார் முன்கை' (ஐங்குறு. நெய்தல், வளைப்பத்து 1), 'நிரைவளை முன்கை நேரிழை மகளிர்' (குறுந். 336:1), அணிவளை முன்கை ஆயிதழ் மடந்தை' (அகம் 361:4), 'சின்னிரை வால்வளைக் குறுமகள்' (குறுந். 189:6), 'சுடரிலங்கு எல்வளை' (அகம் 68:12) முதலியவை காண்க.
பழங்காலக் தமிழகத்தில் ஒவ்வொரு நகரத்திலும் கடைத் தெருக்களில் வளைகளை அறுத்துத் தொடி செய்யும் தொழிற் சாலைகளும்
56

வளை விற்கும் கடைகளும் இருந்தன. பகன்றைக் கொடியின் மலர், சங்கை அறுத்து எறியப்பட்ட கொழுந்து போன்று (சங்கின் உச்சியைப் போல) இருந்தது என்று ஒரு புலவர் கூறுகிறார்.
வேளாப் பார்ப்பான் வாளரத் துமிழ்த்த வளைகழிந் தொழிந்த கொழுந்தின் அன்ன தளைபிணியவிழாச் சுரிமுகப் பகன்றை (அகம் 24:1-3)
வளை செய்யும் தொழிலாளிகள் சிறு வாளினால் சங்கை அறுத்து அரத்தினால் அராவி வளைகளைச் செய்தார்கள் என்று சங்க நூல்களிலிருந்து தெரிகின்றன. கடற்கோடு அறுத்த அரம்போழ் அவ்வளை' (ஐங்குறு. நெய்தல், வளைப்பத்து), அரம்போழ் அவ்வளை பொலிந்த முன்கை' (அகம் 6: 2), அரம் போழ் அவ்வளை குறுமகள்' (ஐங்குறு. நெய்தல், நெய்தற்பத்து 5) என்பன காண்க. தமிழ்நாடு மட்டும் அன்று, பாரதநாடு முழுவதிலும் அந்தக் காலத்தில் மகளிர் சங்குவளைகளை அணியும் வழக்கம் இருந்தது. சங்குவளை அணியும் வழக்கம் இருந்தபடியால் சங்குவளை செய்யுந் தொழிலும் வளைவாணிகமும் நாடெங்கும் இருந்தன. அண்மைக்காலம் வரையில் சங்கு வளையணியும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. சங்குவளை வாணிகர் சங்குவளைகளை எடுத்துக் கொண்டு நகர வீதிகளில் சென்று விற்றனர். அவர்கள் வயது சென்ற ஆடவர். சொக்கப்பெருமான் வளை வாணிகனாக வந்து மதுரைத் தெருக்களில் வளைகளை விற்றார் என்று திருவிளையாடற் புராணங்கள் கூறுகின்றது. (வளையல் விற்ற படலம், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணம், வளையல் விற்ற திருவிளையாடல், நம்பி திருவிளையாடற் புராணம்).
சங்குவளைகளை மகளிர் அணிந்த வழக்கம் அண்மைக் காலத்தில் மறைந்து போய், கண்ணாடி வளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இதனால், தமிழ்நாட்டு வாணிகருக்குக்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 67
கிடைத்துவந்த ஊதியம் இப்போது அயல்நாட்டு வாணிகருக்குப் போய்க் கொண்டிருக்கிறது. மேலும், வளை செய்யும் தொழிலும் தமிழ்நாட்டில் மறைந்துபோய் அத்தொழிலாளிகளுக்கு வேலை இல்லாமலும் போய்விட்டது.
(
V -
இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி ஏற்பட்ட காலத்தில், சங்குவளை மறைந்துபோய்க் கண்ணாடி வளைகள் வழக்கத்தில் வந்துவிட்டன. ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்திலிருந்து சங்குவளைகளை அணியும் வழக்கம் இருந்து வந்தது.
6
க -
ܘܪ ܘ ܘ
பழங்காலத்தில் தமிழ் மகளிர் எல்லோரும் - ஏழைகள், நடுத்தரக் குடிமக்கள், செல்வர், அரசியல் முதலிய எல்லோரும் - கட்டாயமாகக் கை வளைகளை அணிந்திருத்தனர் என்று கூறினோம். ஏழைகளுக்கும் நடுத்தர மகளிரும் இடம்புரிச் சங்கு வளைகளை அணிந்திருந்தனர். இடம்புரிச் சங்குவளைகளின் விலை அதிகம் இல்லை. ஆனால், செல்வந்தரின் மகளிரும் அரசர்களின் மகளிரும் வலம்புரிச் சங்கு வளைகளை அணிந்திருந்தார்கள். வலம்புரிச் சங்குவளைகள் அதிக விலையுள்ளவை. செல்வர் வீட்டு மகளிர், பொன்னாற் செய்த தொடிகளை அணிந் திருந்ததுடன் அவற்றோடு வலம்புரிச் சங்கு வளைகளையும் அணிந்திருந்தார்கள். தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுடைய அரசியான பாண்டிமாதேவியார் கையில் பொன் தொடிகளை அணிந்திருந்ததோடு வலம்புரிச் சங்குவளைகளையும் அணிந்திருந்தார்.
பொலந்தொடி நின்ற மயிர்வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து
10 - 5 - 6 )
என்று இச்செய்தியை நெடுநல்வாடை (அடி 141-142)
கூறுகிறது.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

பெருஞ்செல்வக்குடியில் பிறந்தவரான கண்ணகியார் அணிந்திருந்ததும் வலம்புரிச் சங்குவளைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது சொல்லாமமே அமையும். என்னை? அவர் காலிலே அணிந்திருந்த பொற்சிலம்பினுள்ளே இட்டிருந்த பரல்கள் மாணிக்கக்கற்களாக இருந்தபோது அவர் கையில் அணிந்திருந்த வளைகள் வலம்புரிச் சங்குவளைகளாகத்தானே இருக்கவேண்டும்? அவர் மாநாய்கனுடைய மகள் அல்லவா? மாநாய்கன் என்பது மா + நாவிகன் = பெரிய கப்பல் வாணிகன் என்னும் பொருள் உள்ள சொல்.) மாசாத்துவனின் மருமகள் அல்லவா? (மாசாத்துவன் என்பது மா+சாத்துவன் = பெரிய வணிகச்சாத்தின் தலைவன் என்பது பொருள்.) ஆகவே, கண்ணகியார் கையில் அணிந்திருந்த வளை விலையுயர்ந்த வலம்புரிச் சங்குவளை என்பதில் ஐயமில்லை.
கண்ணகியின் காற்சிலம்பு
பழங்காலத் தமிழக மகளிர் கால்களில் சிலம்பு என்னும் அணியை அணிந்திருந்தார்கள். திருமணம் ஆவதற்கு முன்பு சிலம்பைக் கழிப்பது அக்காலத்து வழக்கமாக இருந்தது. அது, 'சிலம்பு கழி நோன்பு' என்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாகத் தெரிகிறது. சிலம்பு, மகளிரின் சொந்தச் சொத்தாகக் கருதப்பட்டது. அதனை மகளிர் அருமையாகப் போற்றி வைத்தனர். செல்வந்தர் வீட்டுப் பெண்களும் அரச குடும்பத்து மகளிரும் பொன்னாற் செய்த சிலம்புகளை அணிந்திருந்தனர். சிலம்பினுள் பரல்கற்களை இடுவது வழக்கம். அரசர்களும் செல்வர்களும் சிலம்பினுள்ளே முத்துக்களையும் மாணிக்கக் கற்களையும் பரல்களாக இட்டு வைத்தார்கள். அரசு கட்டிலில் துஞ்சிய ஆரியப்படை நடந்த பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசி பாண்டிமாதேவியாரின் பொற்சிலம்பினுள்ளே கொற்கைக் குடாக்கடலில் கிடைத்த முத்துக்களைப் பரல்களாக இட்டிருந்தனர் என்று சிலப்பதிகாரத் நிலிருந்து அறிகிறோம் (வழக்குரை காதை).
57

Page 68
வா
னான்
பெருங்கப்பல் வாணிகனான மாநாய்கன் (மாநாவிகன்; நாவாய் - கப்பல்) மகளான கண்ணகியாரின் பொற்சிலம்பில் மாணிக்கக் கற்கள் பரற் கற்களாக இடப்பட்டிருந்தன. இதை வழக்குரை காதையிலிருந்து அறிகிறோம்.
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே! என்காற் பொற்சிலம்பு மணியுடையரியே எனத் தேமொழியுரைத்தது செவ்வை நன்மொழி யாமுடைச் சிலம்பு முத்துடையரியே (சிலப். 20:66-69)
கைவளையும் காற்சிலம்பும் அக்காலத்து மகளிர்க்கு இன்றியமையாத அணிகலன்களாகக் கருதப்பட்டன. இவ்விரு அணிகலன்களையும் அக்காலத்து மகளிர் அருமையாகப் போற்றி வைத்தனர். இந்தக் காரணத்தினால்தான். கண்ணகியார் தாம் அணிந்திருந்த விலையுயர்ந்த மற்ற நகைகளையெல்லாம் மாதவியின் செலவுக் காகக் கோவலனிடம் கொடுத்துவிட்ட பிறகு இவற்றை மட்டும் கொடுக்காமல் தம்மிடமே வைத்துக் கொண்டார். கடைசியாகக் கண்ணகியாரிடம் எஞ்சி இருந்தவை கைவளைகளும் காற்சிலம்புகளுமே என்பதையறிகிறோம். கடைசியாகக் காற்சிலம்பையும் விற்கவேண்டிய நிலை கோவலனுக்கு ஏற்பட்டது.
சிலம்புக்குக் குடைச்சூல் என்னும் பெயரும் உண்டு. சங்க காலத்தில் வழங்கி வந்த இச்சொல் பிற்காலத்தில் வழக்கிழந்து விட்டது.
58

வளங்கெழு குடைச்சூழ் அடங்கிய கொள்கை ஆன்ற அறிவில் தோன்றிய நல்லிசை ஒண்ணுதல் மகளிர் (பதிற்று. 6ஆம் பத்து 7)
ச
நோக்குக் (குடைச்சூல் - சிலம்பு, பழைய உரை)
அவ்வரிக் குடைச்சூல் அணங்கெழில் அரிவையர் (பதிற்று. 7ஆம் பத்து 8)
கண்ணகி, பெருஞ் செல்வனான மாநாய் கனின் மகளாதலின், அவருடைய காற்சிலம்பு (குடைச்சூல்) பொன்னாற் செய்யப்பட்டு அதன் உள்ளில் மாணிக்கக்கற்கள் பரலாக இடப்பட்டிருந்ததுமன்றி, அதன் மேற்புறத்தில் இடையிடையே மாணிக்கக் கற்களும் வயிரக்கற்களும் பதிக்கப்பட்டிருந்தன என்று சிலப்பதிகாரங் கூறுகிறது.
மத்தக மணியொடு வயிரங் கட்டிய பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூல் சித்திரச் சிலம்பு (கொலைக்கள். 117-119)
(மத்தகமணி - தலையான மாணிக்கம். வயிரம் - வயிரக்கல் பத்திக்கேவணம் - பத்தியாக வகுத்த கேவணம். கேவணம் - கல்லழுத்துங்குழி).
செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 46, பரல் 2, 1971)
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 69
களப்பிரர்கள்
கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கி. பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை 'தமிழகத்தின் இருண்ட காலம்' என்று வரலாற்றாசிரியர் கூறுவர். தமிழகத்தையாண்ட சேர, சோழ, பாண்டியர்கள் வலிமை குன்றி, சிறப்பிழந்து போக வடபுலத்திலிருந்து வந்த மன்னர்களாலும், பல்லவர்களாலும் தமிழர்கள் ஆளப்பட்ட காலம் இது. களப்பிரர் இடையீட்டுக் காலம்' என்றே வரலாற்றில் இக்காலம் குறிப்பிடப்படுகிறது.
இக்களப்பிரர் யாவர்? அவர்கள் எப்படித் தமிழகத்துக்கு வந்தார்கள்? அவர்கள் தமிழகத்தை எம்முறையில் ஆண்டனர் போன்றவை இன்னும் 'தெளிவாகாத புதிராகவே உள்ளன. இவ் வினாக்களுக்கான விடையைக் காண்பதே இப்பாடத்தின் நோக்கம்.
களப்பிரர் பற்றியறிய உதவுவன் இலக்கியச் சான்றுகள்
இடைக்கால இலக்கியங்கள் சிலவற்றில் களப்பிரர் பற்றிய குறிப்புக்களைக் காணலாம். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாடியதாக நான்கு செய்யுட்கள் தமிழ் நாவலர் சரிதையில் உள்ளன. இப்பாடல்கள் மூவேந்தர்களைப் போரில் வென்று சிறைப்படுத்திய களப்பிரர்களைப் புகழ்ந்து
மூவேந்தர்களும் பாடிய முறையில் அமைந்துள்ளன. இதைப் பற்றிய சுவையான செய்தியொன்றும் வழங்கப்படுகின்றது. சேர சோழர்கள் களப்பிரர்களைப் புகழ்ந்து பாட, பாண்டியன் மறுத்து களப்பிரரை இகழ்ந்து பாடியதாகவும், களப்பிர
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

அரசன் சினந்து பாண்டியன் காலில் மற்றொரு தளையிட, பாண்டியன் அவனைப் புகழ்ந்து பாடியதாகவும் கூறப்படுகிறது.
யாப்பருங்கலம் என்ற நூல் அச்சுதக் களப்பாளன் என்ற களப்பிர அரசனைப் பற்றிக் கூறும். இவன் நந்தி மலையை ஆண்டவன். கல்வியிற் சிறந்த அந்தணர்களைக் கருத்துடன் பாதுகாத்தான் என்று இந்நூல் கூறும்.
பெரியபுராணத்தில் சேக்கிழார் கூற்றுவ தாயனார் என்ற களப்பிர மன்னனைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். இவன் சிறந்த சிவ பக்தன். இவன் சோழ நாட்டை வென்றான். தில்லைவாழ் அந்தணர்கள் தனக்கு முடிசூட்டவேண்டுமென்று விரும்பினான். ஆனால் அவர்கள் மறுக்கவே சிவபெருமானே தில்லைவாழ் அந்தணர்களை இவனுக்கு முடிசூட்டுவதற்குச் சம்மதிக்க வைத்ததாகப் பெரியபுராணம் கூறும்.
கல்வெட்டுச் சான்றுகள்
களப்பிரர்களைப் பற்றிக் கூறும் சான்றுகளுள் பாண்டியர்களால் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் முக்கியமானதாகும். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் காலத்திற்குப் பின்னர் பாண்டிய நாட்டைக் களப்பிரர் கைப்பற்றியதை இச்செப்பேட்டால் அறியலாம். பாண்டியன் நெடுஞ்சடையனால் வெளியிடப்பட்ட இவ் வேள்விக் தடிச் செப்பேடுகள் கி. பி. 600 ஆம் ஆண்டில்
59

Page 70
பாண்டிய நாட்டையாண்ட கடுங்கோன் களப்பிரரை வென்ற செய்தியைக் கூறுகின்றன. தளவாய்புரம் செப்பேடுகள் இச்செய்தியை உறுதிப்படுத்துகின்றன கொற்றமங்கலம் செப்பேடுகள் பல்லவ மன்னன் தந்திவர்மன் களப்பிரர்களைப் பகைவர்களாகச் கருதினான் என்கிறது. முதலாம் நரசிம்மவர்மனின் கூரம் செப்பேடு அவன் சோழர், கேரளர், களப்பிரர் பாண்டியர் அனைவரையும் வென்றதைக் குறிக்கின்றது. இரண்டாம் சாளுக்கிய விக்கிரமாதித்தனின் நேரூர் நன்கொடைப் பட்டயம் இச்செய்தியை உறுதிப்படுத்தும். விநயாதித்தனின் ஹரிஹர் நன்கொடைப் பட்டயம் அவன் பல்லவர், சேரர், களப்பிரரைத் தோற்கடித்தான் என்று கூறுகிறது.
திருப்புகலூர்க் கல்வெட்டு நெற்குன்றம் சிழார் என்ற களப்பிர அரசனைக் குறிப்பிடுகின்றது. வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டு இரண்டாம் நந்திவர்மப் பல்லவ மல்லனை அவனது முடிசூட்டு விழாவின் போது முத்தரையர் எதிர்கொண்டு அழைத்தனர் என்று கூறுகின்றது. இம்முத்தரையரே களப்பிரர் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். செந்தலைத் தூண் கல்வெட்டு கள்வர் கள்வன்' என்று தன்னைக் கூறிக் கொண்ட பெரும்பிடுகு முத்தரையனைப் பற்றிக்
குறிப்பிடுகின்றது.
களப்பிரர் காலம்
மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து ஆறாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழக வரலாற்றைப் பற்றி தெளிவாக அறிய இயலவில்லை. இம்மூன்று நூற்றாண்டு காலமும் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. வேள்விக்குடிப் பட்டயம் சில செய்திகளைத் தருகின்றது. முதுகுடுமிப் பெருவழுதி என்ற சங்க காலப் பாண்டிய மன்னன் ஒரு சிற்றூரைச் சில அந்தணர்களுக்குத் தானமாக வழங்கினான். ஆனால் களப்பிரர்கள் மதுரையைக் கைப்பற்றிதோடு பாண்டியர்களால் தானமாக
ை
60

வழங்கப்பட்ட கிராமத்தை மீண்டும் கைக்கொண்டார். கி. பி. 767இல் பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டியன் ஆட்சிக்கு வந்தபோது இக்கிராமத்தை மீண்டும் அவ்வந்தணர்களின் பரம்பரையினருக்கு உரிமையாக்கினான். இச்செய்திகளை விளக்க எழுந்ததுதான் வேள்விக்குடி பட்டயமாகும். இப்பராந்தக நெடுஞ்சடையன், களப்பிரர்களை வென்று பாண்டியர் ஆட்சியை நிறுவிய பாண்டியன் கடுங்கோனைப் புகழ்ந்துள்ளான். இப்பாண்டியர்களின் காலத்தை வைத்துக் கணக்கிட்டால் களப்பிரர் தமிழகத்தை ஆண்ட காலம் கி. பி. 250க்கும் கி. பி. 600க்கும் இடைப்பட்ட காலம் எனலாம்.
களப்பிரர் பற்றிய கருத்துக்கள்
(1) து. அ. கோபிநாத்ராவ் களப்பிரர்களே முத்தரையர் என்று கருதுவர். காஞ்சிபுரத்தில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டுச் செய்தியை இதற்கு அடிப்படையாகக் கொள்கிறார். இக் கல்வெட்டு சுவரன் மாறன் அல்லது இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் என்னும் முத்தரையச் சிற்றரசன், நந்திவர்மப் பல்லவ மல்லனை வரவேற்ற செய்தியைக் கூறும். சுவரன் மாறன் கள்வர் கள்வன் என்று வழங்கப்படுகின்றான். தமிழில் கள்வர் என்று வழங்கும் சொல்லே வட மொழியில் களப்பிரர் என்றாயிற்று என்பர், ந. சுப்பிரமணியன். இம் முத்தரையர்களை வென்றுதான் பாண்டியன் கடுங்கோன் ஏறத்தாழ கி.பி. 600 இல் பாண்டியர் ஆட்சியை நிறுவினான் என்பர். களப்பிரர்களே முத்தரையர் என்ற கோபிநாதராவின் கூற்றுக்கு இதுவும் சான்றாக அமையும்.
(2) களப்பிரரும் முத்தரையரும் ஒருவரே , என்பது மு. இராகவ அய்யங்காருக்கு உடன்பாடான கருத்தல்ல. "வேளாள களப்பாளர் என்பவர்களே பின்னர் களப்பிரர் என்றழைக்கப்பட்டனர்; அவர்கள் முத்தரையர் அல்லர்” என்கிறார் இராகவ அய்யங்கார் சைவ சித்தாந்தத்தில் வல்லவரான மெய்கண்டாரின் தந்தையாரான அச்சுதக்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 71
களப்பாளரும் வேளாளரே என்கிறார் இவர். களப்பிரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே புறத்தார் அல்ல என்றும் இவர் கருதுவார். இதற்குச் சான்றாக யாப்பருங்கலத்தைக் காட்டுகின்றார். இந்நூல் அச்சுதவிக்கந்தன் என்ற களப்பிரமன்னன் அந்தணர்களை ஆதரித்தமையைக் கூறும்.
யாப்பருங்காலம் களப்பிரர் நந்தி மலையைச் சார்ந்தவர்கள் என்று கூறுவதாலும், இந்த நந்திமலை தமிழகத்திற்கு வடபால் உள்ள கருநாடகத்தில் உள்ள மலையென்பதாலும் களப்பிரர் தமிழர் அல்லர் என்பார் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார்.
(3) களப்பிரரை வேங்கடமலையருகில் வாழ்ந்த கள்வரோடு இணைத்துக் கூறு கிறார் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார். வேங்கடத்தின் தலைவனான புல்லி என்ற கள்வன் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுவதைச் சான்றாகக் காட்டுகிறார். ஆயின் இவர்கள் 'கள்வன்' என்று குறிப்பிடப்படாமல் 'களவர்' என்று குறிப்பிட்டுள்ளனர். தக்காணத்தின் கீழைப் பகுதியையாண்ட பல்லவர்கள் தெற்கு நோக்கி காஞ்சிபுரம் வரை வந்துவிடவே, காஞ்சியில் இருந்த கள்வர் அங்கிருந்து தெற்கு நோக்கிச் சென்று மூவேந்தர்களுடன் போரிட்டு வென்று தமிழகத்தில் தம் ஆட்சியை நிறுவினர். முத்தரையர் என்பார் அப்பிரிவுகளுள் ஒரு சாரார் எனவும், அச்சுத விக்கந்தன் அவர்களுள் ஒருவன் எனவும் எஸ்.கே. அய்யங்கார் கருதுகிறார். ந. சுப்பிரமணியனும் அய்யங்காருடன் உடன்படுகின்றார்.
(4) தமிழ் நாவலர் சரிதை அச்சுதக் களப்பாளன் மூவேந்தர்களையும் வென்று சிறையிட்டதைக் கூறும். இந்த அச்சுதக் களப்பாளன் ஒரு களப்பிர மன்னனே என்பர் மா.இராசமாணிக்கனார். அச்சுதக் களப்பாளன் சிறந்த சைவன் எனவும், நந்தினியின் பெயரைப் புனிதப் பெயராகப் கொண்டான் எனவும் வேள்விகள் செய்த அந்தணர்களை ஆதரித்தான்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

எனவும் தமிழ் நாவலர் சரிதை கூறும். ஆனால் களப்பிரர்கள் பொதுவாக சமணர்களாகவோ, பௌத்தர்களாகவோ இருப்பதுதான் வழக்கம். எனவே 'களப்பாளர்களைக் களப்பிரர்களாக எண்ணுதல் பொருந்தாது' என்பர் கிருஷ்ணசாமி
அய்யங்கார்.
(5) கே.ஆர். வெங்கடராம ஐயர் கருத்துப்படி களப்பிரர் தமிழகத்தின் மீது படையெடுத்தது ஏறத்தாழ கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கம் என்பார். இவர் கருத்துப்படி களப்பிரர் பெங்களூர், சித்தூர் பகுதிகளில் கடம்பர்களால் துரத்தப்பட்டு கிழக்கே தமிழகத்தை நோக்கிப் படையெடுத்து வந்தனர். கலியரசர் பற்றிச் சாசனங்கள் கூறுவதால் கலியுகம், கலிகுளம் என்பன களப்பிரரோடு தொடர்புடையன என்கிறார். ஐயர் அவர்கள் களப்பிரர் ஆட்சிக்காலத்தைக் கி. பி. 5 ஆம் நூற்றாண்டென்கிறார். ந. சுப்பிரமணியன் களப்பிரர் கி. பி. 5 மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பார்.
(6) சதாசிவ பண்டாரத்தார் கருத்துப்படி களப்பிரர் கருநாடக மாநிலத்தைச் சார்ந்த நாடோடிக் கூட்டத்தவர். களப்பாளர்களே களப்பிரர் என்ற கருத்தை இவர் மறுக்கிறார். பண்டாரத்தார் கருத்துப்படி களப்பாளர்கள் தமிழர்.கும்பகோணம் அருகிலுள்ள தஞ்சையைச் சார்ந்த களப்பாழ் என்ற இடத்திலிருந்து வந்தவர்களே களப்பாளர் என்கிறார். தமிழகத்தைச் சார்ந்த வேளிர் அல்லது வேளாளர்களின் ஒரு பிரிவினரே இக்களப்பாளர் என்கிறார். பெரியபுராணத்தில் குறிக்கப்படும் கூற்றுவநாயனார் களப்பானே தவிர களப்பிரரல்ல என்பது இவர் கருத்து. தில்லை வாழந்தணர்கள் தம் பொறுப்பிலிருந்த சோழ நாட்டு மணிமுடியை கூற்றுவ நாயனாருக்குச் சூட்ட மறுத்தனர். சிற்றரசர்களான வேளிர் குடியைச் சார்ந்தவராகக் கூற்றுவ நாயனார் இருந்ததே இதற்குக் காரணம் என்கிறார் பண்டாரத்தார்.
61

Page 72
(7) தொண்டை மண்டலத்தைச் சார்ந்த ஒழியரைக் களப்பிரர் என்கிறார் டி.வி. மகாலிங்கம் இக்கருத்தை ந. சுப்பிரமணியன் மறுக்கிறார். தமிழகத்தின் தென்கிழக்குப் பகுதியைச் சார்ந்த ஒலிநாடே ஒழியர்க்குரியது என்று தொல்காப்பியம் கூறுகிறது. வேங்கடப் பகுதியிலிருந்து வந்த களப்பிரர்க்கும் ஒழியர்க்கும் எத்தொடர்பும் கிடையாது என்கிறார் ந. சுப்பிரமணியன்.
(8) தி. ந. சுப்பிரமணியன் தமிழகத்தை வென்று பாண்டி நாட்டிலும் சோழ நாட்டிலும் தங்கிய களப்பிரரைச் சமணர் என்கிறார். தமிழில் அறநூல்கள் பலவற்றை இயற்றிய சமணர்கள் களப்பிரர் குலத்தவரே என்றும் கருதுகிறார்.
அவர் ஏறத்தாழ கி. பி. 70ல் மதுரையில் திராவிடச் சங்கம் நிறுவிய வஜ்ர நந்திக்கும் களப்பிரர்க்கும் இடையில் தொடர்பேற்படுத்திக்
கூறுவர்.
(9) எம். எஸ். கோவிந்தசாமி, மயிலை சினி வேங்கடசாமி போன்றோர் முத்தரையர் களப்பிரர்களின் ஒரு பிரிவினரே என்பர். காலப் போக்கில் அவர்கள் தமிழராக மாறிவிட்டதாகவும் பல தமிழறிஞர்களை ஆதரித்தாகவும் கருதுகின்றனர். இவர்கள் சமணர்களை ஆதரித்ததை இவர்கள்
62

கட்டியுள்ள சமணப் பள்ளிகள் உணர்த்துகின்றன. பாண்டியர்களுக்கடங்கிய சிற்றரசர்களாக இருந்த காரணத்தால் மாறன் என்ற பட்டப்பெயரைத் தங்கள் இயற்பெயருடன் இணைத்திருந்தனர். பிற்காலச் சோழப் பேரரசை விசயாலயன் நிறுவுவதற்கு முன், பாண்டியர்களாட்சிக்குட்பட்ட சோணாட்டுப் பகுதியில் இவர்கள் வாழ்ந்தனர் என்று கோவிந்தசாமியும் வெங்கிடசாமியும் கருதுவர்.
தமிழகத்தில் களப்பிரராட்சியின் விளைவு
முன்னூறு ஆண்டுகாலம் தமிழகத்தையாண்ட களப்பிரர்கள் தமிழரின் வாழ்விலும் பண்பாட்டிலும் மிகப் பெரும் மாறுதல் ஏற்பட வழிசெய்து விட்டனர். இவர்கள் வரவால் தமிழர் வாழ்வின் அடிப்படை நோக்கங்கள் கூட ஆட்டம் கொண்டன. சங்ககாலப் பண்பாட்டிற்கும் களப்பிரர்காலப் பண்பாட்டிற்கும் இடையில் மிகுந்த வேறுபாடுள்ளது. "உலகியல் கண்படைத்த, சமயப் பொறை மிகுந்த, வாணிபத் திறமை சான்ற சங்க காலத்தவர்க்கும் வறுமையைப் பற்றிய கவலை மிகுந்த சமயப் பூசல் மிகுந்த கோயில்கள் நிர்மாணிப்பதிலும் அங்குக் கடவுளரை நிறுவி அவரை வழிப்படுவதிலும் ஈடுபாடு மிகுந்த பிற்காலத்தவர்களுகும் இடையே நின்ற வேறுபாடு சாதாரணமானதன்று" என்று கூறுகின்றார் ந. சுப்பிரமணியன்.
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 73
நீதியும் அறமு
1 படம்
5 6 எலி 5 5
( 9 )
நீதி : சொல்லும் பொருளும்
' என்பது தமிழ்ச் சொல் அன்று. அது வடமொழிக்குரிய சொல்லாகும். கி. பி. ஆறாம் நூற்றாண்டு அளவிலேயே இச் சொல் தமிழ் மொழியில் இடம் பெற்றிருக்கிறது. இச் சொல் நீ என்னும் வினைச் சொல்லடியாகத் தோன்றியது. நீ" என்னும் அவ்வேர்ச் சொல்லிற்கு, அழைத்துச் செல் (Lead), கொண்டு செல் (Convey), நடத்து (Conduct), வழிகாட்டு (Guide), ஆட்சி செய்' (Govern), இயக்கு (Direct) என்னும் பல்வேறு பொருள்கள் வடமொழியில் வழங்கி வருகின்றன. இவ்வேர்ச் சொல்லடியாக அமையும் நீதி' எனும் பெயர்ச் சொல் இயக்குதல், வழிகாட்டுதல், செயலாட்சி, நடத்தை, தகுதி, மரபொழுங்கு என்ற பல பொருள்களை உணர்த்துகிறது. மேலும், செயலின் நிகழ்நிலை, கொள்கை முறை, முன்னுணர்மதி, அரசியல் அறிவுத்திறன், அரசியல் சூழ்ச்சித்திறன் என்னும் வேறு பல பொருள்களையும் அச்சொல் குறிக்கிறது.'
') -'
த
அ - ஈ
வெ
((
இதனால் 'நீதி' எனும் சொல் வடமொழியில் முதன் முதலில் நடத்துதல், செலுத்துதல், இயக்குதல் என்ற பொருள்களில் கையாளப்பட்டிருக்க வேண்டும் | என்றும், பின்னர் உண்டான கருத்து வளர்ச்சிக்கேற்ப அச்சொல்லின் பொருள் காலப்போக்கில் விரிந்தும், பரந்தும் வளர்ந்திருக்க வேண்டுமென்றும் தோன்றுகிறது. அவ்வாறு வளர்ச்சியுற்ற காலத்தில் 'நீதி' என்பது சிறப்பாக இராச நீதியைக் குறிக்கும் சொல்லாகக் கருதப்படலாயிற்று. தண்ட நீதியை உணர்த்தும் அருத்த சாத்திரத்தின் சிறப்புப் பெயராக அது வடமொழியில் பெருவாழ்வு பெற்றதெனலாம். இக்காரணத்தால் நீதி சாத்திரம்' என்னும் சொல் அருத்த சாத்திரத்தைக் குறிக்கும் மரபு மொழியில் நிலைத்து விட்டது.'
கு'' எ
9 ஏ 9 )
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

கலாநிதி எஸ்.திருநாவுக்கரசு
நீதி என்னும் சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் யன்படுத்தப்படவில்லை. திருக்குறளிலும் நீதி என்ற சொல் இடம் பெறவில்லை. ஆனால், அப்பொருளை உணர்த்துவதற்கு 'நயன்' என்ற சொல்லைத் திருவள்ளுவர் வழங்கியுள்ளதாகப் பரிமேலழகர் கருதுகிறார். பழைய தமிழ் இலக்கியத்தில் நன்று, நன்றி, நன்மை, நல்லது என்ற சொற்கள் 'அறம்' என்ற பொருளில் பல இடங்களில் பயன்படுத்தப் ட்டுள்ளன. அவற்றைப் போன்று நயம்' என்னும் சொல், 'நீதி' என்ற பொருளில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது பரிமேலழகரின் கருத்தாகும். அதற்கு 'நீதி' என்று அவர் பொருள் கூறினாலும், அறம்' என்ற பொருளையே அதனால் சுட்டுகிறார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். (குறள் 97)
இக்குறட்பாவினை, "ஒருவனுக்கு இம்மைக்கு தியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் யக்கும், பொருளால் பிறர்க்கு நன்மையைக் காடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல்” ன்று விளக்கிய பரிமேலழகர், நீதியாவது உலகத்தோடு பொருந்துதல்" என்று அச் சால்லிற்குச் சிறப்புரையையும் வரைந்துள்ளார். உலகத்தோடு பொருந்துதல்' என்பதற்கு வழக்காற்று ஒழுக்க நெறியில் ஒழுகுதல்' எனப் பாருள் கூறலாம் அறநெறிக் கொள்கை பளர்ச்சியின் பல்வேறு படிநிலைகளுள் வழக்காற்று ஒழுக்க நெறி' முதற்படியாகக் கருதப்படுகிறது. னவே, நயன்' என்னும் சொல் நீதி' என்ற பாருளில் அறத்தையுணர்த்துவதாகவே அமைகிறது னலாம்.
63

Page 74
இதைப் போன்றே கீழ்க்காணும் குறட்பாக்களில் நயன்' என்னும் சொல் ஒழுகலாற்றைக் குறிப்பதாக கருதும் பதிமேலழகர், அவ்விடங்களிலும் நயன் என்னும் சொல்லிற்கு நீதி' என்ற பொருளை . கொண்டுள்ளார்.
நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. (குறள் 193) நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. (குறள் 194)
நயனில சொல்லினுஞ் சொல்லுக் சான்றோர் பயனில சொல்லாமை நன்று. (குறள் 197) இகலானா மின்னாத வெல்லா நகலானாம் நன்னய மென்னுஞ் செருக்கு. (குறள் 860) நயனெடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபாராட்டும் உலகு. (குறள் 994)
ஆயினும், பரிமேலழகர், 'நீதி' என்னும் சொல் இராச நீதியைக் குறிப்பதாகத் தம்முடைய உரையில் சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார். பொருட்பாவில் அரசியலுக்கு விளக்கம் தருமிடத்தில் “அர நீதியாவது காவலை நடாத்தும் முறைமை" என்ற இவ்வுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளமை இங்கு கருதத்தக்கது. 'முறை செய்து காப்பாற்று மன்னவன்' (குறள் 338) என்னும் தொடருக்கு . சிறப்புரை கூறுமிடத்து, அவர், "முறையாவது அறநூலும் நீதி நூலும் சொல்லும் நெறி” என்று விளக்கம் தந்துள்ளார். இங்கு நீதி' என்பது அர. நீதியையே சுட்டுகிறது." மேலும், நீதிநூல்' என் சொல்லினை அருத்த சாத்திரம்' என்ற பொருளில் அவர் எட்டு இடங்களில் கையாண்டுள்ளதை நாம் முன்னர் கண்டோம். பொருட் பாலில் நூல்' என் சொல் வழங்கப்பட்டுள்ள பதினான்கு இடங்களும் ஐந்து இடங்களில் வள்ளுவர் பொருள் நூலை. குறிப்பிடுவதாகப் பரிமேலழகர் கருதுகிறார்.
இப்பொருள் நூலைத் திருவள்ளுவர்,
பிறன்பொருளால் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
அறம் பொருள் கண்டார்கண் இல் (குறள் 141)
64

சி . . சி . 2.
என்னும் குறளில் குறிப்பிட்டுள்ளார். இங்கு அறம் பொருள்' என்பன ஆகுபெயராக அமைந்து, அறநூலையும் பொருள் நூலையும்' சுட்டுகின்றன. எனவே, திருவள்ளுவர் அரசநீதியைப் பற்றி
விரித்துரைக்கும் பொருள் நூலைக்' குறிப்பிட்ட போதிலும், அப்பொருளைக் குறிக்கும் நீதி என்ற சொல்லைக் பயன்படுத்தவில்லை என்பது புலனாகின்றது. எனினும், அவர் முறை' என்னும் சொல்லால் அரச நீதியைப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளமை இங்கு கருதத்தக்கது. "யாரிடத்திலும் குற்றம் இன்னதென்று ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல், நடுவு நிலைமையில் நின்று, செய்யத் தக்கதை ஆராய்ந்து செய்வதே நீதி முறையாகும்” என்பதனை ;
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய் வஃதே முறை (குறள் 541)
என்னும் குறட்பா எடுத்துரைக்கிறது. இப்பொருளி லேயே முறை' என்னும் சொல் பின்வரும் குறட் பாக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் காணலாம்;
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்றுவைக்கப்படும். (குறள் 388) இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். (குறள் 547)
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தால் தானே கெடும். (குறள் 548)
4 |
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் (குறள் 553)
8 •ெ 2:
மன்ன!
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். (குறள் 558) |
முறைகோடி மன்னவன் செய்யின் உரைகோடி க் ஒல்லாது வானம் பெயல் (குறள் 559)
இவற்றால் 'நீதி' எனும் சொல்லின் பொருளினைப் பண்டைத் தமிழ்ச் சான்றோர் அறம்', 'நயன்', முறை' என்னும் சொற்களால் சிறப்பு வகையான் குறித்து வந்தனர் என்பது தெளிவாகிறது.
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 75
தமிழிலக்கியத்தில் 'நீதி'
அறநூல் அறுத்தவாற்றால் "செய்வதும் தவிர்வதும் பெறுவதும் உறுவதும் உய்வதும்”'10 அறிந்து ஒழுகுதல் நீதி என்பது சான்றோர்கள் கருத்தாகும். இதனை நாம் பொதுவகையாகக் கூறும் பொருளென்றே கொள்ளுதல் வேண்டும். சிறப்பு வகையான 'நீதி' என்னும் சொல்லிற்குத் தமிழ் இலக்கியத்தில் பதினொரு வகையான பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
1ெ5
ம.
நீதியும் ஒழுக்கமும்
மனித இனத்திற்கேயுரிய தனிப்பண்புகள் பல. அவற்றுள் ஒழுக்கம் முதன் முறையானதாகப் போற்றப்படுகிறது. ஒழுக்கம்' என்னும் சொல் ஒழுகு' என்னும் வேர்ச்சொல்லடியாகப் பிறந்ததாகும். 'ஒழுகு' என்னும் சொல்லிற்கு 'இடையறாது கடைப்பிடித்தல்' என்பது பொருள். இடையறாது நீர் ஒழுகுவதை ஒழுக்கு' என்று கூறுவதைப் போல, வாழ்க்கையின் உயர்ந்தவையெனக் கருதப்படும் நெறிமுறைகளை எக்காலத்தும், எவ்விடத்தும் இடையறாது மேற்கொண்டொழுகுவதையே ஒழுக்கம்' என்பர்.
ஒழுகு என்னும் அடிச்சொல்லிற்கு நட என்னும் பொருளும் உண்டு. இதனால், ஒழுக்கம்' என்பது 'நடக்கை' எனவும் பொருள்படும். நமது மொழி மரபுப்படி நடக்கை' என்பது என்பது நன்னடக்கையையே குறிப்பதாகும். நன்னடக்கை யாகிய ஒழுக்கம் என்ற பொருளை 'நீதி' எனும் சொல் உணர்த்தும். இடைக்கால இலக்கியங்களில் அச்சொல் பெரிதும் இப்பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதெனலாம். நீதிப் பெருமை நூலோதியுமோராய்' (பெருங். 2 :1: 26) என்றும், 'நிலைமைக் கொத்த நீதியாய்' (பெருங்.1: 39 : 327) என்றும் கொங்கு வேளிர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 'நீதி பேணுவீர்' (தேவர். I. 96. 3) என்றும், நீதி நின்னையல்லால் நெறியாது நினைந்தறியேன்' (தேவா. III : 55 : 6) என்றும் திருஞான சம்பந்தர் மொழிந்துள்ளார். 'நீதியிலேன்' (திருவா. 602) என்று மாணிக்கவாசகரும், 'நீதியான கேள்வியார்' எனத் திவ்வியப் பிரபந்தமும் (760) தெரிவிப்பதிலிருந்தும் நீதி' எனும் சொல் ஒழுக்கம்'
1.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளதை நாம் அறிகிறோம்".
நீதியும் நியாயமும்
நீதி என்ற சொல்லிற்கு நியாயம்' என்ற பொருள் தமிழில் வழங்கப்பட்டு வருகிறது. நேர்மை, வாய்மை, நன்னெறி, கட்டுப்பாடு என்பன இதற்குரிய பொருள்களாகும். கொங்கு வேளிர் 'நீதியென்று நெறியுணர் வோர்க்கென' (பெருங்.1: 44:68) என்று குறிப்பிடுகிறார். இப்பொருளில் 'நீதியறியா தாரமண் கையர்' (தேவா.1:16 : 10) என்று திருஞான சம்பந்தரும், நீதியால் வாழ மாட்டேன்' என்று திருநாவுக்கரசரும் (தேவா. iv : 36 : 3) நீதியாவன்யாவையும் நினைக்கிலேன்' (திருவா. 26:2) என்று மாணிக்கவாசகரும் வழங்கியுள்ளனர். வேறு பல புலவர்களும் இப்பொருளில் 'நீதி' என்ற சொல்லைக் கையாண்டுள்ளனர்.2
நீதியும் முறைமையும்
'நீதி' என்ற சொல்லிற்கு முறைமை' என்ற பொருளும் உரியதாகும். ஏதமின்மையும் நீதியும் வினாய்' (பெருங். 3: 18 : 60) என்றும், நீதியிற் காட்ட நெடுந்தகை' (பெருங். 3: 10 : 41) என்றும், நீதியால் தொழுவார்கள் தலைவனை' (தேவா. ஏ : 57-58) என்றும், நீதியான பண்டமாம்' (திவ். பிர. 2042-8) என்றும் கட்டமை நீதி தன்மேற் காப்பமைந்து' (சீவக. 145) என்றும் இயம்பப்பட்டுள்ள தொடர்களில் 'நீதி' என்னும் சொல் முறைமை' என்ற பொருளில் நெறிமுறை) வழங்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்."
நீதியும் அறநூலும்
மேலும், 'அறநூல்' என்னும் பொருளில் இச்சொல் தமிழில் வழங்கப்படுவது இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
நீதியீறாக நிறுத்தினென் (திருமந். 190) நீதியும் பிறவு மோதிய வெல்லாம் பெருங் 136306) உணர்ந்தாய் மறைநான்கு மோதினாய் நீதி
(திவ். பிர. 2048 - 1)
நயத்துறை நூலினீதி நாம்துறந் தமைத்தல்
(கம்ப. யுத்த. அங்க. 8)
65

Page 76
இவை அல்லாமல் இச்சொல்லிற்கு இயல்பு," உபாயம், 15 அரசியல் நீதி சாத்திரம்," மெய்" உலகத்தோடு ஒட்டவொழுகல், நடத்துவது போன்ற வேறுபல பொருள்களும் அருகிய வழக்காக வழங்கி வந்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். மேற்கண்ட ஆய்விலிருந்து நீதி' என்னும் சொல் தமிழில் ஒழுக்கம், நியாயம், முறைமை, அறநூல் என்ற நால்வகைப் பொருளிலேயே பெருவழக்காக வழங்கப்பட்டு வருவது அறியப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டே பிங்கல முனிவரும்,
நெறியும் நியாயமும் தருமமும் நீதி (பிங்கல நிக. 1816)
என்று நீதிக்கு விளக்கம் தந்துள்ளார். பிற்காலத்தில் சூடாமணி நிகண்டின் ஆசிரியரான மண்டல புருடர்,
மயலறு நெறி நியாய மரியாதை நீதி (சூடா. நிக. 8-44)
என்று வரையறுத்துள்ளார். இவற்றைக் கூர்த்து நோக்குவார்க்கு ஓர் உண்மை புலனாகும்.
வடமொழியாளர் 'நீதி' என்ற சொல்லிற்குச் சிறப்பாக வழங்கிய அரசநீதி' எனும் பொருள் தமிழில் முதன்மையிடம் பெறவில்லை என்பதே அவ்வுண்மையாகும். அதற்கு மாறாக, ஒழுக்கநெறி' என்ற பரந்துபட்ட பொருளில், பண்டைத் தமிழ்ச்சான்றோர்கள் நீதி' என்ற சொல்லைப் பெரிதும் போற்றி வழங்கியுள்ளனர் என்பது தெரிகிறது. இளைஞர் முதற்கொண்டு முதியோர்கள் வரையில் வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய நெறிமுறைகளை எடுத்துரைக்கும் நீதிநூல்கள் நம் தமிழ் மொழியில் மிகப்பலவாக உள்ளன. 'நீதி' என்ற பெயரினைக் கொண்ட நூல்கள் தமிழில் இயற்றப்பட்டுள்ளமை மேற்கண்ட கருத்தினை அரண் செய்கிறது எனலாம். உலக நீதி, நீதிசாரம், நீதி வெண்பா, நீதிநெறி விளக்கம், நீதி நூல் என்பன இங்குக் குறிப்பிடத்தக்கன. வடமொழியில் ஒழுக்க நெறியைப் போதிக்கும் நீதி நூல்கள், 'நீதி சதகங்கள்' என்ற பெயரால் கி. பி. ஏழாம் நூற்றாண்டு அளவிலேயே தோன்றலாயின.
66

இவற்றால் நீதி என்னும் சொல்லிற்குரிய பொருள் தமிழ் மொழி வழக்கில் தனிப்பட்டதொரு கருத்தாழம் மிக்கதாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்னர் நம் தமிழ் மொழியில் வழங்கத் தலைப்பட்ட நீதி' என்ற சொல்லிற்கும், பழைய தமிழ்ச் சொல்லான 'அறம்' என்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாம் கண்டறிதல் வேண்டும். இந்நுட்பமான வேற்றுமையை அறிய வேண்டுமானால், நாம் முதலில் ""அறம்' என்றால் என்ன?" "அதனுடைய பொருள் யாது?'' ''அறத்திற்கும் நீதிக்கும் உள்ள இயைபு யாது?” என்பனவற்றைப் போன்ற பல வினாக்களுக்கு விடை கண்டாக வேண்டும்.
அறம் - விளக்கம்
அறத்தைப் பற்றிப் பேசும் தமிழ் நூல்கள் மிகப் பலவாக உள்ளன. எனினும், அறம் என்றால் என்ன?' என்ற வினாவினை எழுப்பினால், அதற்கு விடை காண்பது மிகவும் கடினமான செயலாகிறது. அறம்' என்னும் சொல் பொருளின் மிகவும் நெகிழ்ச்சியுடையது. அதைப் பகுத்துப் பொருள் காணுதல் எளிதன்று. அச்சொல்லின் பொருளை வரையறுத்து விளக்குகின்றபொழுது பல சிக்கல்கள் தோன்றுகின்றன. அறம் என்னும் சொல் காலப் போக்கில் பல்வேறு பொருள்களை உணர்த்தும் பொருள் செறிவு வாய்ந்த சொல்லாகச் சிறப்புற்று விளங்குகிறது.
அறு' என்னும் வினைச் சொல் அடியாகப் பிறந்ததே 'அறம்' என்னும் சொல்லாகும். அறு' என்னும் அடிச் சொல்லிற்கு அறுத்துச் செல்', 'வலியை உண்டாக்கு', உருவாக்கு', 'துண்டி', 'வேறுபடுத்து ' என்ற பல வகைப்பொருள்கள் வழங்கிவருகின்றன. 'அம்' எனும் தொழிற்பெயர் விகுதி அறுத்தலாகிய தொழிலை உணர்த்துகிறது. இத்தகைய சொல்லமைப்பியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின் வரும் விளக்கம் தரப்படுகின்றது. மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிறைவடிவமே - அறம் என்று கூறுவர். பிறவிதோறும் மனிதனைப்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 77
பற்றிக்கொண்டு வரும் தீவினையின் பயனாகிய அறியாமையை அறுத்தெறிவதே அறம்' என்று ஆன்மிக வண்ணம் குழைத்த மற்றொரு விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு.20
பண்டைத் தமிழ் மக்கள் தனிமனிதனையும் சமுதாயத்தையும் போற்றி வளர்க்கும் ஒழுக்க நெறியாக அறத்தைக் கருதினர். மறுமைப் பேற்றை அளித்தாலும், அளிக்காவிட்டாலும், இவ்வுலக . வாழ்க்கையில் தனி மனிதனும் சமுதாயமும் நலமாக வாழ்வதற்கும், முன்னேற்றத்தை அடைவதற்கும் அறவாழ்வு இன்றியமையாதது என்னும் நம்பிக்கை நம் முன்னோர்களிடம் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. பொதுவாக மனித இனம் பலதிறப்பட்ட விழைவுகளையும், முரண்பட்ட தேவைகளையும் உடையதாக இருந்து வருகிறது. மக்களினம் உருவாக்கும் சிக்கலான நிலையங்களும், அமைப்புக்களும் வளர்ச்சியுறுகின்ற பொழுது அவற்றிடையே முரணான இயல்புகளும் பண்புகளும் தோன்றுகின்றன. வளர்ச்சியும் மாற்றமும் அடைகின்றன. இத்தகைய பல திறப்பட்ட விருப்புகளையும் வெறுப்புகளையும், தேவைகளையும், முரண்பட்ட எண்ணங்களையும், கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டு, அவற்றிற்குச் செம்மையான முழுவடிவம் கொடுக்கும் பணியைச் செய்வதே தமிழன் கண்ட அறத்தின் உள்ளார்ந்த பண்பாக இருந்து வருகிறது.
01.
'அறம்' என்னும் சொல்லிற்குத் தமிழில் எட்டு வகையான பொருள்கள் வழங்கி வருகின்றன. பொதுவாக அது நற்பண்பு அல்லது ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களில் வழங்கப் பெற்றிருப்பதை நாம் காணுகின்றோம். அறம் உணர்த்தும் இப்பொருள் அறிவியல் சொற்பொருள் வகையைச் சேர்ந்ததாகும். இப்பொருளில் மட்டு மல்லாமல் வழக்கம், நீதி, கடமை, புண்ணியம், ஈகை, அறக்கடவுள், சமயம் என்ற பல்வேறு பொருள்களிலும் அறம் என்னும் சொல் வழங்கப்பட்டு வருகிறது.
உ
அறமும் ஒழுக்கமும்
நம்முடைய முன்னோர்கள் 'அறம்' என்னும் சொல்லிற்குத் தந்துள்ள விளக்கத்தோடு, எதிக்ஸ்'
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

(Ethics) என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தரப்படும் பொருள் விளக்கம் மிகவும் பொருந்துவதாக இருக்கிறது. நல்ல அல்லது தீய செயல்களின் மூலம், தானே வெளிப்படும் மக்களுடைய நடத்தையைப் பற்றிய ஆய்வியல் கலையே எதிக்ஸ்' என்பதாகும். இதைத் தமிழில் அறவியல்' எனலாம். அறவியல்' என்பது சமுதாயத்தில் வாழும் மனிதர்களின் நடத்தையைப் பற்றி ஆராயும் கலை' என்று நாம் வரையறுத்துக் கூறலாம்.
எதிக்ஸ்' என்னும் சொல் கிரேக்க மொழிச் சொல்லாகும். 'எதோசு' (Ethos) என்னும் வேர்ச் சொல்லடியாகத் தோன்றியது அது. முதன் முதலில் இவ்வடிச் சொல், பழகிப்போன நடத்தை, வழக்கம், மரபு என்னும் பொருள்களையே உணர்த்தி வந்தது. பின்னர், அவற்றுள் நடத்தை' என்னும் பொருளே, எதோசு' என்னும் சொல்லிற்குரிய சிறப்புமிக்க பொருளாகப் போற்றப்படலாயிற்று. நாளடைவில், அவ்வேர்ச் சொல்லடியாகத் தோன்றிய எதிக்ஸ்' என்பது ஒழுக்கத்தைப் பற்றிய அறிவியல் கலை' என்று போற்றப்படும் நிலையை அடைந்துள்ளது.
ஒழுக்கத்தைக் குறிப்பிடும் மாரல்' (Moral) என்னும் ஆங்கிலச் சொல் இலத்தீன் மொழியில் காணப்படும் 'மோர்சு' (Mores) என்ற சொல்லின் திரிபாகும். இதற்கும் பழக்க வழக்கம்' என்பதே பொருளாகும். இதனால், மனித நடத்தையைப்பற்றி, குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள், வழக்கமாகக் கொள்ளும் முடிவையே ஒழுக்கமாகக் (Morality) கொண்டனர் என்பது புலனாகின்றது. தனி மனிதர்களாகிய சான்றோர்கள் தத்தம் வாழ்க்கையில் கடைபிடித்து ஒழுகிய பழக்கங்களை, அவர்களோடு நெருங்கிப் பழகியவர்கள் முதன் முதல் பின் பற்றி நடக்கலாயினர். நாளடைவில் அச் சான்றோர்களின் பழக்கங்கள், அவர்கள் வாழ்ந்த சமூகத்தினரால் சிறப்புடையனவாகப் போற்றப்பட்டன. அச்சமூகத்தைச் சார்ந்த பெரும்பான்மையான மக்களுடைய உள்ளத்தை அவை கவர்ந்தன. அத்தனி மனிதர்களின் பழக்கங்களே அவர்கள் வாழ்ந்த மக்கள் சமுதாயத்தின் வழக்கங்களாகப் போற்றப்படும் தகுதியையும் சிறப்பையும் அடைந்தன. இவ்வாறு
67

Page 78
படிப்படியாகத் தனிமனிதனின் பழக்கமாக அரும்பிய நடத்தை, பெரும்பாலோரால் பின்பற்றப்பட்ட பொழுது தனிச்சிறப்பு வாய்ந்த ஒழுக்க மெனும் பண்பாக மலர்ந்து, பொன்றாப் புகழ்வாய்ந்த வாழ்க்கை நெறியாக மாண்புற்றது எனலாம்.
மனிதன் நன்னெறியில் இடையறாது ஒழுகுவதே ஒழுக்கம் என்று போற்றப்படுகிறது. திருக்குறளிற்கு உரை வகுத்த பரிமேலழகர், "அறமாவது மனு முதலிய நூல்களில் விதத்தின் செய்தலும், விலக்கியன் ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும். அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களில் வழுவாது ஒழுகுதல் "21 என்று விளக்கியுள்ளார். இதில் கூறப்பட்டுள்ள சாதி பற்றிய செய்திகளை நாம் புறத்தே ஒதுக்கி விட்டுப் பார்ப்போமானால், மனிதன் நலமாக வாழ்வதற்கும். அந்நல்வாழ்வின் பயனாகிய இன்பத்தை அடைவதற்கும் அவன் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய நல்ல பழக்கவழக்கங்களையும், தீயவை என்று கடிந்து ஒதுக்க வேண்டிய செயன்முறைகளையும் அறிந்து, நல்லனவற்றை மட்டும் பின்பற்றி ஒழுகுவதே அறமெனப் போற்றப்படுவது புலனாகும்.
மபா!
இதனால், அறம் என்பது யாது? அது செயலா? சொல்லா? எண்ணமா? என்ற ஐயம் எழலாம். ஒழுகலாறாகிய செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும். எண்ணம் தூய்மையாக இருந்தால் தான் சொல்லும் செயலும் தூய்மையாக அமைய முடியும். எனவே எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டுமானால், எண்ணத்தின் எழுச்சிக்கு நிலைக்களனாக உள்ள மனம் மாசு இல்லாததாக இருக்க வேண்டும். மனம் மாசற்றுத் தூய்மையாக இருக்கம் நிலையே அறம் எனப்படும்; மனத்தில் மாசு நிறைந்து கிடக்கும் நிலையில் செய்யும் செயலும், உரைக்கும் உரையும் வீண் ஆரவாரமானவை; அவை அறம் ஆகா. மனத்தின் மாசைப் போக்குவதற்கு முயலுவதே அறமாகும். அதற்கு மனத்தில் பொறாமையுணர்வு, அவா, வெகுளி ஆகிய தீய உணர்ச்சிகள்' தோன்றாமல் பார்த்துக்
68

கொள்வதோடு, அவ்வுணர்ச்சிகளின் உந்துதலால் கடுமையான சொற்கள் தோன்றாமல் காத்து ஒருவன் நடப்பதே அறமாகும் என்பது வள்ளுவரின் உள்ளக்கருத்தாகும்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. (குறள் 34)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். (குறள் 35)
இவ்வடிப்படையில் நோக்குவோமானால். அறம் என்பது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் சேர்ந்த ஒன்றாகவே காட்சி தருகிறது. அறம் என்பதை ஒரு முப்பட்டைக் கண்ணாடியாகக் கூறினால், அதன் மூன்று பக்கங்களாக எண்ணம், சொல், செயல் விளங்குகின்றன எனலாம். எண்ணம் அறத்தின் நிலையமதி (Static) ஆற்றலாகும்; சொல் இயக்க நிலை (Kinetic) ஆற்றலாகும். செயல் இயங்கும் நிலை (Dynamic) ஆற்றலாகும். இம்மூவகை ஆற்றலும் உள்ளார்ந்த பண்பாக உறங்கிக் கொண்டிருக்கின்ற பொழுது அறம் என்பது கருத்துப் பொருளாகவே கருதப்படுகிறது. அது காட்சிப் பொருளாக வெளிப்படுவதற்குக் கருவியாக இருப்பது செயல். இச் செயல் நிலையையே ஒழுக்கமென' உலகம் போற்றிவருகிறது. அவ்வொழுக்கம் மக்கள் உயிர்க்கு உறுதி பயக்கும் சிறப்புடையது என்றும், அத்தகைய சிறப்புடைய ஒழுக்கமே அறம் எனப் போற்றப்படுகிறது என்றும் நம்முடைய முன்னோர்கள் கருதினர்.22
திருக்குறளில்
முதற் பகுதியாகிய அறத்துப்பாலில், திருவள்ளுவர் தனி மனிதனுக்குரிய ஒழுக்கநெறியின் பல திறப்பட்ட பகுதிகளையும் இயல்புகளையும் மிக நுட்பமாக எடுத்துரைத்துள்ளார். இதனைப் பரிமேலழகர் "அது (ஒழுக்கம்) தான் நால்வகை நிலைத்தாய், வருணந்தோறும் வேறுபாடு உடைமையின், சிறுபான்மை ஆகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லோர்க்கும் ஒத்தலின் பெரும்பான்மை ஆகிய பொது இயல்பு பற்றி 'இல்லறம்', 'துறவறம்' என இருவகை நிலையால் கூறப்பட்டது.''23 என்று சுட்டிக்காட்டுவதினால் நாம் நன்குணரலாம். "இல்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 79
வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் நின்று, அதற்குத் துணையாகிய கற்புடை மனைவியோடும் செய்யப்படுவது இல்லறம்.' அவ்வில்லற நெறிக்கண் நின்றார் போற்றி ஒழுகத் தக்க நெறிமுறைகளுள் ஒன்றாக ஒழுக்கமுடைமையை' வள்ளுவர் வற்புறுத்தியுள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது.
ஒழுக்கத்தின் சிறப்பை
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் - உயிரினும் ஓம்பப் படும். (குறள் 131)
''
என்று வள்ளுவர் பாராட்டுவதோடு அமையாமல், துறவற இயலில், 'யான்' என்ற அகப்பற்றையும், 'எனது' என்ற புறப்பற்றையும் துறந்து வாழ விரும்பும் துறவிகளுக்கு அறிவுரை கூறும் வகையில் கூடாவொழுக்கம்' என்றோர் அதிகாரத்தையும் அமைத்துள்ளார். இவ்வதிகாரத்தில் கூறப் பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் நல்லொழுக்கமே சிறந்த அறம்' என்னும் கொள்கையை நிலைநாட்டுகின்றன.
தி
பொருட்பாலின் தனிமனிதன் பிறரோடு கூடி வாழுகின்ற பொழுது கடைப்பிடிக்க வேண்டிய சமுதாய ஒழுகலாற்றினை வள்ளுவர் விரிவாக வி ளக்கியுள்ளார். அதனுடைய இறுதிப்பகுதியாகிய ஒழிபியல்' எனப்படும் குடியியல்' பகுதியில், தனி மனிதர்கள் பலர் ஒன்றாகக் கூடிச் சமுதாயமாக வாழ்வதற்கு, அவர்களிடத்து இயல்பாக அமைய வேண்டிய நற்பண்புகளை எடுத்துரைத்து, அவற்றை அவர்கள் எவ்வாறு போற்றி வளர்க்கவேண்டும் என்பதையும் திருவள்ளுவர் தெளிவுறுத்தியுள்ளார். நல்ல சமுதாயத்தில் இருக்கக் கூடாத தீமைகளாக அவர் வரைவின் மகளிரையும், கள்ளுண்ணுதலையும், சூதாடுதலையும் கடிந்தொதுக்கிறார். நாட்டினை நலிவுறச் செய்யும் கொடிய கேடுகளாக இருமனப் பெண்டி'ரையும், கள்ளை'யும், 'கவற்றையும் அவர் குறிப்பிடுவதிலிருந்து நாட்டின் செழிப்பிற்கும், சிறப்பிற்கும், அந்நாட்டின் வாழும் மக்களுடைய . நல்வாழ்விற்கும் ஒழுக்கம் இன்றியமையாதது என்பது தெளிவாகிறது.
கு
ܗ ܘ ܗ ܗ
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

இல்லறத்தை இனிது நடத்துவதற்குரிய ஒருவனும் ஒருத்தியும், திருமணத்திற்கு முன்பு கண்டு காதலித்துக் கூடி மகிழ்வதையும், திருமணத்திற்குப் பின்னர் காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதால் பெறும் இன்பத்தையும் காமத்துப்பாலில் வள்ளுவர் சொல்லோவியங்களாகத் தீட்டிக்காட்டுகிறார். இவ்வாறு முப்பால் முழுவதிலும் 'சிறப்புடைய ஒழுக்கமே' அறமெனப் போற்றப்படுவதை நாம் காணுகின்றோம்.
தம்
பழைய தமிழ் இலக்கியங்களுள் அறம்' என்னும் சொல், ஒழுக்கம்' என்ற பொருளில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தக்கது.
அறஞ்சாரான் மூப்பே போல் (கலி. 38) அறனிலாளன் (அகம். 207, 219) அஞ்சுவதஞ்சான் அறனிலி (கலி. 42) அறனு மதுகண்டற் றாயின் (கலி. 62) அறனுமார் அது (ஐங்குறு . 44) உன்றனக்கு ஒல்லும் நெறி அறம் (மணி. கா.16: 13)
அறமும் வழக்கமும்
நமது நாடில் அறலியல் கடமைகளையும் பழக்க வழக்கங்களையும் நியதிகளையும் சமயத்துறை Fார்பான கடமைகளிலிருந்தும், பழக்க பழக்கங்களிலிருந்தும் வேறுபடுத்தி யுரைக்கும் பழக்கம் இல்லை. சமுதாயத்தில் நன்கு நிலைநாட்டப் பட்டுள்ள, சிக்கலான பலவகை ஒழுகலாற்றுச் செயல்முறைகள் அனைத்தையும் குறிப்பிடுவதற்கு அறம்' என்ற சொல்லே தமிழில் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய சமுதாய வழக்காற்று மரபினை, மேலை நாட்டு அறவியல், அறிஞர்கள் எதோசு' (Ethos) என்று அழைப்பர். நன்கு பரையறுக்கப்பட்ட விதி முறைகளினால் -ருவாக்கப்படும் அறச்சூழ்நிலையும், ஓரளவிற்கு பழக்கிலுள்ள அறநெறிக்கருத்துக்களையும், பழக்க பழக்கங்களையும், பற்றுக்களையும் விளக்கி ரைப்பதற்கு 'ஏதோசு' என்ற சொல்லே
69

Page 80
பயன்படுத்தப்படுகிறது. இவ்வுலகம் முழுவதிலும் செயற்படும் அறவியல் கொள்கையின் வெளிப்பாடே வழக்காற்று நெறிமுறை (Ethos) என்று ஹெகல் (Hegal) 25 விளக்கம் தந்துள்ளார்.
பண்டைத் தமிழ் சான்றோர்கள் வழக்காற்று நெறிமுறைகளை, அன்றைய சமுதாயத்தின் இயல்பிற்கும் மரபிற்கும் ஏற்பப் பாகுபாடு செய்துள்ளனர். வழக்கம்' என்பது உலகத்தில் வாழுகின்ற பெரியோர்களின் பழக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று அவர்கள் கருதினர்.
வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாகலான (தொல். பொருள். 647) என்ற பண்டை இலக்கண நூலாரின் கூற்றால் இதை நாம் நன்குணரலாம்.
வழக்கென்று சொல்லப்படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கமே; என்னை? உலகத்து நிகழ்ச்சியெல்லாம் அவரையே நோக்கின்மையின் . அவரையே நோக்குதலென்பது அவராணையான் உலக நிகழ்ச்சி செல்கின்றதென்றவாறு"25 என்னும் பேராசிரியரின் விளக்கவுரை இக்கருத்தினைத் தெளிவுறுத்துகிறது. தொல்காப்பியர் வழக்கியலாணை' (தொல். பொருள். 506) என்று இதனை வேறோரிடத்தில்
குறிப்பிட்டுள்ளமை இங்குக் கருதத்தக்கது.
அறம் என்னும் சொல், இப்பொருளில் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றுள் முக்கியமான மூன்றைக் காண்போம்.-
அறநெறி இதுவெனத் தெளிந்த (ஐங்குறு. 371)
... அறத்தாறு அன்று எனமொழிந்த தொன்றுபடு கிளவி (அகம். 5) அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு. (குறள் 384)
இவ்வழக்காற்று ஒழுக்க நெறியைச் சான்றோர் சென்ற செந்நெறி 27 என்று சிறப்பித்து கூறுவது தமிழிலக்கிய மரபாகும்.
70

0)
அறமும் நீதியும்
விருப்பு வெறுப்பின்றி, நடுநிலைமையோடு நின்று, வழக்குகளைச் சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் ஆராய்ந்து பார்த்துத் தீர்ப்புக்கூறும் நீதி (Justice) நிர்வாக முறையையும், அறம் என்ற சொல் தொன்றுதொட்டு உணர்த்தி வருகிறது. இக்கருத்தமைய இயற்கை நீதி' (Natural Justice) அல்லது இயற்கைச் சட்டம்' (Natural Law) என மேலைநாட்டு நல்லறிஞர்கள் அறத்தினைச் சுட்டுகின்றனர். அறம் என்பது இயற்கைச் சட்டம்; தெய்வீக ஆணை என்று கருதும் மனப்பான்மை நம்முடைய திருவள்ளுவரிடத்தும் கிரேக்க, சீனநாட்டு அறிஞர்களிடத்தும் இருந்து வந்துள்ளமை இங்கு கருதத்தக்கதாகும். ஆயிரத் தெழுநூறு ஆண்டுகட்கு முன்பு ரோமாபுரியில் இயற்றப்பட்ட ஜஸ்டீனியன் சட்டத்தொகுப்பில் (Institutes of Justinian) "இயற்கை நெறியாகிய அறம் இறையாற்றலால் தோன்றுவது; எல்லா நாட்டினராலும் பொதுவாகப் போற்றிக் காக்கப்படுவது; என்றும் மாறாது நிலைத்திருப்பது”28 என்று கூறப்பட்டுள்ளமை இக்கருத்தை அரண் செய்கிறது.
அறநெறிச் சட்டத்தை தெய்வீக ஆணையாகவும், இயற்கை நீதியாகவும் கருதும் நிலை, மனித இனத்தின் நாகரிக வளர்ச்சியின் தொடக்க காலத்திலிருந்ததாக அறவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். எனினும், மனச்சான்றையே அறநெறிச் சட்டமாகக் கருதுவோரும், உள்ளுணர்வினால் நல்லன தீயனவற்றை ஆராய்ந்தறியும் மனத்தின் திறனை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதே அறநெறிச்சட்டம் என்று கொள்ளுவோரும், பகுத்தறிவுவாதிகளும் கூட, அறநெறிச்சட்டம் இயற்கை நீதியாகக் கருதப்படுவதை மறுத்துரைப்பதில்லை.
இயற்கை நீதியைத் தமிழில் அறம் என்னும் சொல் தொன்று தொட்டு உணர்த்தி வருகிறது.
அறக்கவழி வுடையன பொருட்பயன் படவரின்
(தொல். பொருள்.218) அறத்தினூஉங்(கு) ஆக்கமும் இல்லை (குறள் 32) அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (புறம் 55)
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 81
Tள்
அறம் நனி சிறக்க (ஐங்குறு 7) அறன் கடைப்படாஅ வாழ்க்கையும் (அகம்.155) அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம் (நற்றி.68) அறத்தினுள் அன்பு நீ! (பரி. 3)
என்பன போதிய சான்றுகளாகும். பொது நிலையில், அறம் மக்கள் ஒழுகலாற்றினைக் குறிக்கின்றது. அறநெறி மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டுகிறது. மனிதன் நன்னெறியிலிருந்து இடறிவிழுகின்ற பொழுது அவனை அவ்வழியில் நெறிப்படுத்துவது நியதி. ஒரு நாட்டின் அரசு செயல்படுத்துவது நியதி. ஒரு நாட்டின் அரசு செயல்படுத்தும் கொள்கைகளையும் நெறி முறைகளையும் அடிப்படையாகக் கொண்டு இலங்குவதே நீதி, இதனை முறை' என்ற சொல்லால் வள்ளுவர் குறிப்பிடுவர்.
நீதி முறைசெய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களால் இறைவன் என்று மதிக்கப் படுவான் என்னும் கருத்தமைய,
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்றுவைக்கப்படும். (குறள் 308)
என்று அவர் கூறுமிடத்து முறை' என்ற சொல் 'நீதி' என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளமை தெளிவாகிறது.
நீதிமுறை என்பது என்ன? யாரிடத்திலும் குற்றம் இன்னதென்று ஆராய்ந்து, தாட்சண்யம் காட்டாமல், நடுவுநிலைமையில் பிறழாமல் செய்யத்தக்கதை ஆராய்ந்து செய்வதே நீதி முறையாகும்' என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார்.
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை (குறள் 541)
இவ்வாறு 'நீதிமுறை' என்ற பொருளிலேயே, வள்ளுவர்' முறை என்ற சொல்லை ஏழு இடங்களில் கையாண்டுள்ளார் என்பது
இங்கு குறிப்பிடத்தக்கது.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும் =

பண்டைத் தமிழ்ப் புலவர்கள் 'அறம்' என்ற சொல்லினாலேயே நீதிமுறை' என்னும் பொருளை உணர்த்தியுள்ளனர் என்பதைப் பின்வரும்
குறிப்புக்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
அறந்துஞ்சு செங்கோலையே (புறம் : 20) அறம்புரி செங்கோல் மன்னனின் (ஐங்குறு.290) அறம் கடைப்பிடித்த செங்கோலுடன் (அகம்.338) அறனொடு புணர்ந்த திறன்றி செங்கோல்
(பத்து. பொரு. 230)
அறனறி செங்கோல் (பத்து, பொரு. 230)
அரசியல் பிழையாது அறநெறி காட்டி
(பத்து, மதுரை. 192)
அறனறி செங்கோல் (சிலப். கா. 23- 58)
அறக்கோல் வேந்தன் (மணி. கா. 15 : 47)
அரசனுடைய செங்கோலைக் குறிப்பிடுகின்ற பொழுது நீதி முறை பிறழாத செங்கோல்' என்று பாராட்டுவதில் பண்டைத் தமிழ்ப் புலவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர் என்பது இவற்றால் விளக்கமாகும்.
மேலும், அக்காலத்தில் அறங்கூறும் மன்றங்கள் பல இருந்தன. அவை அறமறக் கண்ட நெறிமாண் அவையம்' என்று (புறம். 224) போற்றப்பட்டன. அவற்றுள் உறையூரிலிருந்த அறங்கூறும் அவை தனிச்சிறப்புப் பெற்றிருந்ததை,
எம்.
அறந்துஞ்சு உறந்தை (புறம். 58) அறங்கெழு நல்லவை உறந்தை (அகம்.93) மறம்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம்கெட அறியாதாங்கு (நற்றி.400)
என்ற அடிகளால் நாம் அறிகிறோம்.
மதுரை மாநகரிலும் இத்தகைய அவையம் இருந்ததை சிறந்த கொள்கை அறங்கூறு அவையமும்' என்று மதுரைக் காஞ்சி (அ.492)
71

Page 82
சுட்டுகிறது. இதை இளங்கோ வடிகளும் அரைசு கோல் கோடி னும் அறம் கூறு அவையத்து ' (கா.5:1 35-6) என்று குறிப்பிட்டுள்ளார்.
இவையாவும் பண்டைத் தமிழ் மக்கள் நீதிமுறை வழுவா ஆட்சி நடத்திய அரசர்களைப் பற்றியும், வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறிய நீதிமன்றங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தனர் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றன. அவற்றை அவர்கள் 'அறம்' என்ற சொல்லினாலேயே குறிப்பிட்டு வந்தனர் என்பது இவ்விலக்கியச் சான்றுகளால் நாம் அறியும் உண்மையாகும்.
அறமும் கடமையும்
மக்களாகப் பிறந்தவர்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்வதற்குப் பல உரிமைகளை இயல்பாகப் பெற்றிருக்கின்றனர். அதைப் போன்றே, அவர்கள் சில கடமைகளையும் ஆற்ற வேண்டியவர்களாக இருக்கின்றனர். கடமை என்பது என்ன?' என்ற வினா , மனிதன் எண்ணத் தெரிந்து, அறிவை வளர்த்து, கருத்து வகையால் முன்னேறத் தொடங்கிய காலம் முதல் எழுதப்பட்டு வரும் முக்கியமான வினாக்களுள் ஒன்றாகும். மனிதர்கள் பலர் ஒன்றாகக் கூடி ஒரு சமுதாயமாக வாழத் தலைப்பட்ட காலம் முதல், மக்கள் தங்கள் நலனுக்கும் நல்வாழ்விற்கும் ஏற்றவையெனச் சில கொள்கைகளையும், நெறி முறைகளையும் வகுத்துக் கொண்டுள்ளனர். தனி மனிதனின் பழக்கம் பல மனிதர்களால் பின்பற்றப்படுகின்ற பொழுது, அச் சமுதாயத்தின் வழக்கமாக அது மாறிவிடுகிறது என்பதை நாம் முன்பு கண்டோம்.
அவ்வழக்கங்களுள் ஒன்றே கடமை என்பதாகும். தனிமனிதன் ஒருவன் தன்னுடைய நல்வாழ்விற்காகப் பிறருடைய உதவிகளைப் பெறுகின்றான். அதற்கு மாற்றாக அவனிடமிருந்து சில உதவிகளை , அவன் வாழும் சமுதாயம் எதிர்பார்க்கிறது. அதை அவன் நிறை வேற்ற வேண்டிய பொறுப்புடையனவாகின்றான். இவ்வாறு மனித சமுதாயத்தின் தொடக்கக்கால வாழ்க்கையில் சமுதாயத்தின் நன்மையைப் பெற்றவன் அச் சமுதாயத்திற்குத் திரும்பத் தான் அளிக்கும்
72

உதவிகளாகப் தோன்றியவை 'கடமை' எனலாம். காலப்போக்கில் அறிவு முதிர்ச்சியும் வாழ்க்கை வளமும் அடைந்து, மனித இனம் நாகரிகத்தில் சிறப்புற்று விளங்கத் தலைப்பட்ட காலத்தில், வழக்காற்று ஒழுக்கநெறியின் அடிப்படையில் 'கடமை' என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தன்னைச் சார்ந்துள்ள உற்றார் உறவினருக்கும் தான் வாழும் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், உலகிற்கும் ஆற்ற வேண்டிய அரும்பணிகளாகக் கருதப்படலாயின. அவற்றைச் செய்கின்றபொழுது பயன் கருதாது - குறியெதிர்ப்பை நோக்காது - செய்வது சாலவும் சிறந்ததெனச் சான்றோர்கள் போற்றினர். அதனால், அவை ஒப்புயர்வற்றதொரு நிலையினை அடைந்துவிட்டன.
தனிமனிதன் தன் குடும்பத்திற்காகச் செய்ய வேண்டிய கடமைகள், சமுதாயத்திற்காகச் செய்ய வேண்டிய கடமைகள், என இருவகையாகக் கடமைகளைப் பாகுபடுத்தியுரைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. வட மொழியில் இதனை ஸ்வதருமம்' என்றும் பரதருமம்' என்றும் கூறுவர். நாம் 'அறம்' என்ற சொல்லாலேயே அவ்விரு கடமைகளையும் குறித்து வருகிறோம்.
ஒரு மனிதனுக்குரிய கடமைகள் யாவை?' என்ற ஐயம் எழுவது இயற்கை. கடமைகள் ஒரு மனிதன் வாழுகின்ற நாட்டிற்கும், பேசுகின்ற மொழிக்கும், கடைப் பிடித்தொழுகுகின்ற சமயத்திற்கும், வாழுகின்ற காலத்திற்கு மேற்ப வேறுபடுகின்றன. எனினும், அடிப்படையான சில கடமைகள் எக்காலத்திற்கும், எந்நாட்டவருக்கும், எச்சமயத்தவருக்கும் பொதுவானவையாக உள்ளன. தனி மனிதன் ஒருவன் தன் பெற்றோர்க்கும், மனைவி மக்களுக்கும் ஆற்றவேண்டிய அருங்கடமைகள் நிலைபேறானவை என்று அறநூல் அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால், வான் மறை தந்த வள்ளுவரோ கடமை இவையென்று அறிந்து சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு, நல்லவையெல்லாம் கடமையாகும்' என்னும் பொருளில்,
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 83
கடனென்ப நல்லவை எல்லாம், கடனறிந்து சான்றாண்மை மேற்கோள் பவர்க்கு (குறள்.981)
என்று எடுத்தியம்புகிறார்.
இப்பொருளில் அறம்' என்னும் சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளமைக்கு,
அறம் பூண்டு...... பாரியும் (புறம். 108) அறம் தெரிந்து நாமுறை தேஎம் (அகம். 281) அறந்தலைப் பிரியா ஆறுமாற்றதுவே (கலி 09) பிறர் நோயுந் தந்நோய் போல் போற்றி அறனறிதல்
(கலி. 139)
என்ற பாடற் பகுதிகள் சான்று பகருகின்றன.
அறமும் ஈகையும்
ஒரு பொருளும் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்துதவுவதே ஈகை எனப்படும். 'இல்லை' என்று வருபவர்க்கு 'இல்லை' என்று கூறாது, அவருக்கு வேண்டிய பொருளைக் கொடுத்துதவும் அறச்செயலே ஈகையாகும். மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையுடையது. இதனை நாம்
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து, (குறள். 221) ஆற்றுத் லென்பதொன்றலர்ந்தவர்க் குதவுதல்
(கலி. 113 : வ : 6)
•
V ..
என்னும் ஆன்றோர் வாக்கால் அறியலாம். மணிமேகலையின் ஆசிரியரான சாத்தனார், "செல்வம் உடையவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்துதவுதல் என்பது அறத்தை வாணிக நோக்கோடு விற்பதாகுமேயொழிய, அது உண்மையான அறமாகாது. குருடர், முடவர், செவிடர், ஆதரவற்றோர், நோயாளிகள் போன்ற எளிய மக்களுக்குச் செய்யப்படுகின்ற உதவியே உண்மையான அறமாகும்” என்ற கருத்தை,
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே யுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
(மணி. கா. 11: 92-94) என்றும்,
காணார் கேளார் கால் முடப்பட்டோர் பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர் யாவரும் வருக (மணி. கா. 13: 111-13)
என்றும் எடுத்துரைத்துள்ளார். மேலும், 'அறம்' என்றால் அது பிறருக்குச் செய்யும் உதவியாகிய ஈகையே என்ற கருத்தைத் திட்டவட்டமாக அவர்,
அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள்; மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில் (மணி. கா. 25:228-31)
என்றும் அறிவித்துள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஈகை' அறச்செயல்களுள் முதன்மையானதாகச் சான்றோர்களால் போற்றப்படும் பெருமை உடையதாகும். அருள் புரிதல் என்ற பொருளின் அடியாக ஈதல்' என்னும் பரந்த பொருளில் 'அறம்' என்னும் சொல் வழங்கி வருவது இங்குக்
குறிப்பிடத்தக்கது. இதனை,
அறம் செய்தீமோ அருள் வெய்யோய் (புறம். 145) அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின் (புறம். 362)
அறம் தலைப்பிரியா தொழுகலும் (அகம். 173)
திறவோர் செய்வினை அறவதுவாகும் (குறுந். 247)
ஆறுமுட்டுறா அது அறம்புரிந் தொழுகும் (பதிற். 6.9) அறம் நிலையிய அகனட்டில் (பத்து. 9:42)
இன்சொ லினிதே அறம் (குறள். 93)
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
(சிலப். கா. 30 : 138) என்பவற்றால் அறியலாம்.
73

Page 84
அறமும் புண்ணியமும்
மனிதன் செய்கின்ற செயல்கள் பல திறந்தன. அவற்றை நல்ல செயல்கள் தீய செயல்களென்று அச்செயல்களினால் உண்டாகும் பயனைக் கருத்தில் கொண்டு இருவகையாகப் பாகுபாடு செய்யலாம். ஒரு மனிதன் செய்கின்ற செயலின் விளைவாக அவனுக்கும், பிறருக்கும் நன்மை உண்டாகுமானால் அதை நல்ல செயல் என்று கூறுவர். ஆனால், ஒரு மனிதன் செய்கின்ற குறிப்பிட்ட ஒரு செயலால் அவனுக்கு நன்மையும், பிறருக்கு எவ்வழியிலேனும் தீமையும் உண்டாகுமானால், அதை அறச்செயல் என்று உலகம் கொள்ளுவதில்லை. எனவே, எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும் நன்மை பயக்கத்தக்க செயல்களிலேயே அறமென்று சான்றோர்கள் கருதுகின்றனர். அத்தகைய நற்செயலைச் செய்வதனால் ஒருவனுக்குப் புகழ் உண்டாகிறது, மறுமைக்கு ஒரு பயனும் விளைகின்றது.
அப்பயனைப் புண்ணியம்' என்று கூறுவர்.
சமயத் துறையின் அறத்தின் பயன் புண்ணியம் என்று கூறுவது மரபாகும். நற்செயல்களின் விளைவாகக் கிடைக்கும் புண்ணியத்தை' அறம் என்று கூறும் வழக்குத் தொன்மையானது என்பதை,
அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம் (நற்றி. 68) அருளுறச் செய்யின் நுமக்கு அறனு மாரதுவே
(கலி. 140) அறம் பெரிதாற்றி அதன் பயன் கொண்மார் (பரி. 19) அல்லவை தேய அறம் பெருகும் (குறள் 96) அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான் (குறள் 163) அறப்பயன் விளைதலும் (சிலப். கா. 30 : 138) நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்
(மணி. கா. 16. 87)
என்னும் பாடற்பகுதிகளால் நாம் அறிகிறோம்.
அறமும் அறக்கடவுளும்
அறத்தினைத் தெய்வமாக உருவகப்படுத்திக் கூறுவது உலகின் பல்வேறு நாடுகளிலும்
74

இருந்துவரும் வழக்கமாகும். பண்டைத் தமிழரும் இம்மரபினைப் போற்றியுள்ளனர். இதனை அறக்கடவுள் என்னும் பொருளில், அறமென்னும் சொல்லை, அவர்கள் பண்டைத்தமிழ் இலக்கியங் களில் பயன்படுத்தியுள்ளமையால் நாம் அறிகிறோம். அத்தெய்வம் நல்வினை செய்தோர்க்கு நன்மை களையும், தீவினை செய்தோர்க்குத் துன்பங் களையும் தருவதாக நம்பப்படுகிறது. இவ்வகையில்
அது ஊழ்வினைத் தெய்வமாகக் கருதப்படுகிறது.
தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ் மக்கள் இத்தெய்வத்தை நன்கு அறிந்திருந்தனர். அறக்கடவுளைத் தொல்காப்பியர் ஓரிடத்தில் வினை' என்றும், மற்றோரிடத்தில் 'பால்' என்றும் குறிப்பிடுகிறார். எனினும், பொதுவாக அறம்' என்ற சொல்லினாலேயே அறக்கடவுளைக் குறிக்கும் வழக்கமும் தொல்காப்பியரிடத்தில் இருந்தமை,
அறன் அழித்துரைத்தல் ஆங்குநெஞ் சழிதல்
(தொல். பொருள்.270)
என்பதனால் தெரிகிறது. இவை அனைத்தும் அறக்கடவுளை பற்றிய பண்டைத் தமிழ்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையைத் தெரிவிக்கின்றன.
தொல்காப்பியர் காலத்தை யொட்டி இம்மரபு நன்கு வளர்ச்சியுற்று முழுவடிவினைப் பெறலாயிற்று. திரு வள்ளுவர் அறக்கடவுளையும், அதனுடைய பணியையும் சிறப்பித்துப் பேசுகிறார். அவ்விடங்களில் அவர் அறம்' என்னும் சொல்லால் அக்கடவுளைச் சுட்டுகின்றார்.
2)
"எலும்பு இல்லாத உடலோடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதைப் போல, அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்” என்று வள்ளுவர் கூறுகின்றார்.
என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பி லதனை அறம். (குறள் 77)
மற்றோர் இடத்தில், "சினம் தோன்றாமல் காத்துக் கல்விகற்று, அடக்கமுடையவனாக இருக்க
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 85
வல்லவனுடைய செவ்வியை அவனுடைய வழியில் சென்று அறக்கடவுள் பார்த்திருக்கும்” என்னும் கருத்தமைய,
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (குறள் 130)
என்று அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், பிறனுக்குக் கேட்டைத் தருகின்ற தீய - செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக் கூடாது. எண்ணினால் அவ்வாறு நினைத்தவனுக்குக் கேடு விளையுமாறு அறக்கடவுள் எண்ணும்” என கூற வந்த வள்ளுவர்,
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ் சூழும் சூழ்ந்தவன் கேடு (குறள் 204) என்று அறிவுறுத்துகிறார்.
புறநானூறு என்னும் பழைய தமிழ் இலக்கி யத்தில் அறக்கடவுளைப் பற்றிய குறிப்புகள் இரண்டு காணப்படுகின்றன. ஆலத்தூர் கிழார் என்ற புலவர், கிள்ளிவளவனை அறக்கடவுளைப் போன்று நடு நிலையில் நின்று நீதி வழங்குமாறு வேண்டுகின்றார்.
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து (புறம். 35)
இத்தொகை நூலில் பெருஞ்சித்திரனார் என்ற புலவர் தம், மனைவியின் அரிய பண்பு நலனைக் குறிப்பிடும் இடத்து, "அவள் வறுமையால் வாடினாலும், தன் துன்பத்திற்குக் காரணம் அறக்கடவுள் என்று கருதி அவனைப் பழிப்பாள்," என்று மொழிந்துள்ளமை இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.
மதசொடு குறைந்த உடுக்கையன் அறம் பழியாத் துவ்வாளாகிய என் வெய் யோளும் (புறம். 159)
மற்றும் பிற சங்கநூல்களிலும் அறக்கடவுள் அறம்' என்ற சொல்லினால் குறிக்கப் படுவதைப் பின்வரும் தொடர்களால் நாம் அறியலாம்.
அறம் புலந்து பழிக்கும் (ஐங்குறு. 339) அன்பில் அறனும் அருளிற்று மன்ற (ஐங்குறு. 394)
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

அறனோடி விலங்கின் றவராள் வினைத் திறத்தே
(கலி. 16) அறப்புணை யாகலு முண்டு (கலி. 144) மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப அறனெனு மடவோயா னவலங்கொண் டழிவலோ
(சிலப். கா. 18 : 40-41)
புறம் புதைத்து அறம் பழிப்ப (சிலப் கா. 29:424)
இக் குறிப்புகளினால், அறக்கடவுளை நடு நிலைமை பிறழாத சிறந்ததொரு தொய்வமாகப் பண்டைத் தமிழ் மக்கள் போற்றிவந்தனர் என்பது புலனாகிறது. இவ்விடத்தில் பண்டைத் தமிழர் போற்றிய அறக்கடவுள், வைதிக சமயத் தெய்வங்களுள் ஒன்றாகக் கருதப்படும் தரும் தேவதை'யியிலிருந்து வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தருமதேவதையை இறப்புக்குக் காரணமாகக் கருதப்படும் இமயன்' என்ற தெய்வமாகவே பெரிதும் கருதுவது வைதிக சமயத்தவர்களின் வழக்கமாகும். ஆனால், தமிழ்நாட்டவரோ இத்தெய்வங்கள் இரண்டையும் வெவ்வேறு தெய்வங்களாகவே கொண்டுள்ளனர். வள்ளுவர் அறக்கடவுள் வேறு, கூற்றுவன் வேறு என்பதை மிகத் தெளிவாகப் பாகுபாடு செய்துள்ளார்.
கூற்றம் குதித்தலும் கைகூடும் (குறள் 269)
செல்லாது உயிருண்ணுங் கூற்று (குறள் 326)
கூற்றுடன்று மேல்வரினும் கூடியெதிர் நிற்கும்
(குறள் 765)
உப்பிற்கும் காடிக்கும் கூற்று (குறள் 1050)
பண்டறியேன் கூற்றென்பதனை (குறள் 1083)
கூற்றமோ கண்ணா பிணையோ (குறள் 1085)
எனவரும் குறட்பாப்பகுதிகளில் இயமனைக் கூற்றுவன்' என்ற பெயரால் குறிப்பிடும் திருவள்ளுவர், அறக்கடவுளைச் சுட்டுகின்ற இடங்களில் 'அறம்' என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளதை நாம் முன்னர்க் கண்டோம். எனவே அறக்கடவுளைப் பற்றிய இக் கொள்கை,
75

Page 86
தமிழகத்தில் தனிப்பட்டவகையில் தோன்றி வளர்ந்த ஒன்றாக இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது பிற்காலத்தில் சமஸ்கிருதப் பண்பாடு செல்வாக்குற்ற பொழுது தமிழ் மக்கள் தங்கள் அறக்கடவுளை 'இயமன்' எனப்படும் இறப்புக்கடவுளோடு ஒன்றாகவைத்துக் கருதும் வழக்கப் தோன்றியிருக்கலாம். சங்க இலக்கியங்களுள் காலத்தால் பிற்பட்டதெனக் கருதப்படும்? பரிபாடலில் 'அறம்' என்னும் சொல் இயமன்' என்னும் பொருளில் வழங்கத் தலைப்பட்டதை,
ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் (பரி. 3)
என்ற குறிப்பினால் அறிகிறோம். சிலப்பதிகாரத்திலும் அறக் கடவுள் கூற்றுவனாக மாறக் கூடிய நிலை சித்திரிக்கப்பட்டுள்ளது. "நூல் ஒழுக்கிற்றாய அரசியலுட் சிறிது ஒழுக்கம் பிழைப்பினும் அவ்வரசரரை அறக்கடவுள் தானே கூற்றுவனாய்ச் கொல்லும்” என்னும் கருத்தினை இளங்கோவடிகள்
அரைசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதூம்
(சிலப். பதி. 55
அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றமாம்
(சிலப். 20 :1
என்று எடுத்தியம்புகிறார். இதனால், அறக்கடவுள் வேறு கூற்றுவன் வேறு என்பதும், அறநெறி பிறழும் அரசர்க்கு அறக்கடவுளே கூற்றுவனாக, அமைந்து விடும் என்ற கருத்தும் அறிவுறுத்தப்படுகின்றன. அறக்கடவுளைப் பற்றிய இருவேறு கருத்துக்கள் ஒன்றாகக் கலந்து மயங்கும் நிலையைக் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது எனலாம்.
அறமும் சமயமும்
'அறம்' என்பது என்னவென்று வரையறுத்துக் கூறுவது எத்துணைச் சிக்கலான செயலாக இருக்கின்றதோ, அதைவிடச் சமயத்தை விளக்கியுரைப்பது மிகுந்த இடர்பாடுடையதாக இருக்கிறது. 'சமயம்' என்பதைச் சுட்டுவதற்குரிய சொற்கள் பழைய தமிழில் இல்லையென்றே நாம் கூறலாம். சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்டதென்று கருதப்படுகின்ற 'மணி
76

மேகலை' என்னும் காப்பியத்தில் தான், முதன் முதலாகச் சமயம்' என்ற சொல் ரெலிஜன்' (Religion) என்ற ஆங்கியச் சொல்லிற்குரிய பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகச்
தெரிகிறது. அந்நூலாசிரியர்,
~ெ
பல்வேறு சமயப் படித்துரை யெல்லாம் (மணி. 10:79)
என்று பலவகைப்பட்ட சமயங்களைப்பற்றிச் சொல்லுகின்றார். இதனால், சாத்தனார் காலத்திற்கு முன்பு வாழ்ந்த பண்டைத் தமிழ்மக்களுக்குச் சமய உணர்வு இருந்ததில்லை என்பது பொருளன்று. சமயத்தின் பல்வேறு கூறுகளும் இயல்புகளும் அக்கால இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்றன. கடவுள் வழிபாட்டோடு நெருங்கிய தொடர்புடைய வழிபாட்டு மரபுகளும், சமய வழக்குகளும், சடங்கு முறைகளும், ஒழுக்க நெறிகளும் வழக்கில் இருந்தமைக்குச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. ஆனால், ஒரு சொல்லால் சமய வழிபாட்டு முறைகளைக் குறிக்கும் வழக்கம் அக்காலத்தில்
இருந்ததாகத் தெரியவில்லை.
ஒழுக்க நெறி மக்களுக்கு இவ்வுலகில் சிறந்த இன்பத்தை அளிப்பதோடு, சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய பேரின்பவாழ்விற்கும் வழிகாட்டியாக அமைகிறது என்பது ஆன்றோர்கள் கண்ட முடிவாகும். "சின்னாள் பல பிணிச் சிற்றறிவினோராகிய” மக்களுடைய வாழ்க்கையில் அடையத்தக்க உறுதிப்பேறு பேரின்பம்' என்பதை உலகிலுள்ள பல்வேறு சமயங்களும் தெரிவிக்கின்றன. அவ்வொழுக்க நெறியும் 'பொய்தீர்' ஒழுக்க நெறியாக இருக்கவேண்டும் என்பதே தெய்வப்புலவரின் உள்ளக் கிடக்கையாகும்.
திருவள்ளுவர் 'பொய்தீர்' என்னும் அடைமொழியினைக் கொடுத்து, ஒழுக்க நெறியைச் சிறப்பித்தமைக்குக் காரணம் என்ன வென்பதை ஆராய்ந்தறிதல் நம்முடைய கடமையாகும். பொய்' என்னும் சொல் குற்றம், தவறு, தீமை, வஞ்சனை, நிலையற்ற தன்மை, உள்ளீடு அற்றது என்னும் பல்வகைப் பொருள்களை உணர்த்துவதாகும். இவை
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 87
யெல்லாவற்றையும்விட, 'பொய்' என்னும் சொல் உண்மைக்கும், மெய்மைக்கும் மறுதலையானது என்னும் பொருளையே சிறப்பாக உணர்த்துவதைக் காணலாம். இதனால் தான், பொய்தீர் ஒழுக்க நெறி' என்பதற்கு மெய்யான ஒழுக்க நெறி' என்று பரிமேலழகர் உரை வகுத்துள்ளார்.
தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும்' என்னும் தொல்காப்பிய நூற்பாவினால் (தொல். சொல். 318), 'தீர்' என்பது நீக்கற் பொருளை உணர்த்தும் வேர்ச்சொல் என்பது அறியப்படுகிறது. எனவே, பொய் தீர்' என்பது பொய்யற்ற', பொய்யில்லாத', பொய்ம்மை நீங்கிய ' என்னும் பொருளைத் தருவதால் பரிமேலழகர், பொய்ம்மைக்கு மறுதலையான 'மெய்ம்மையை' இச்சொல் உணர்த்துவதாகக் கொண்டு மெய்யான ஒழுக்கநெறி' என்றார்.
160
யை
அம்மெய்யான ஒழுக்க நெறி எதுவென்பதைத் திரு வள்ளுவரே குறிப்பாகக் கூறியுள்ளார்.
பொறிவாயில் ஐந்து வித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் (குறள் 6)
என்னும் குறட்பாவின் மூலம், "ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர் நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வார்" என்று அவர் தெளிவுறுத்துகிறார். இதனால், ஒழுக்க நெறிகள் பல உள்ளன என்பதும், அவற்றுள் மெய்யான ஒழுக்க நெறி' எதுவென்பதை நன்கு ஆராய்ந்து தெளிந்து, அந்நெறியில் நின்று ஒழுகுதலே சிறப்புடையது என்பதும் பெறப்படுகின்றன.
மெய்யான ஒழுக்க நெறி' என்பது ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறி'யெனப் போற்றப்படுகிறது. அதனால் இறைவனோடு தொடர்புடைய அல்லது இறைவனால் வகுக்கப் பெற்ற ஒழுக்க நெறியே, மெய்யான ஒழுக்கநெறி' என்பது தெரியவருகிறது. இவ்வாறு இறைவனோடு தொடர்புடைய ஒழுக்க நெறியைச் சமயம்' என்றும், மதம்' என்றும், கடவுள் நெறி' என்றும் பெரியோர்கள்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

அழைக்கின்றனர்.
'சமயம்' என்பதற்கு ''மனிதனுடைய ஆன்மாவைப் பக்குவப்படுத்தும் நெறி” என்றும், 'மதம்' என்பதற்குக் "கடவுளின் இருப்பில் கொள்ளப்படும் அசைக்க முடியாத நம்பிக்கையாகிய கோட்பாடு” என்றும் சான்றோர்கள் விளக்கம் தந்துள்ளனர். கடவுளின் இருப்பில் நம்பிக்கை கொண்டு, உலகப் படைப்பின் உட்பொருளை உணர்ந்து ஒழுகும் வாழ்க்கை நெறியைக் கடவுள் நெறி' என்று பொதுவாகக் கூறுவது மரபு.
சமயத்தைப் பற்றி வள்ளுவர் உரைத்த கருத்துக்களை நாம் இன்றைய அறிஞர்களுடைய கருத்துக்கள் சிலவற்றோடு ஒப்பிட்டுப்பார்ப்பின், வள்ளுவருடைய சிந்தனையின் சிறப்பை நன்குணர் முடியும். 'பொய்தீர் ஒழுக்க நெறியே' சமயம் என்பதைக் கூறாமல் கூறிய வள்ளுவர், அவ் வொழுக்க நெறிக்கு 'நல்லவை எல்லாம் கடனென்ப' என்று அறிவுறுத்துகிறார். இக்கருத்தினைச் சிறிது மாற்றியமைத்ததைத் போன்று, காண்ட் (Kant) என்ற ஜெர்மனிய மெய்யுணர்வாளரின் கருத்து அமைந்திருக்கிறது. அவர், "கடமைகள் அனைத்தையும் தெய்வீகக் கட்டளைகளாகக் கருதிப் போற்றுவதே சமயம்” என்று தெளிவுறுத்தியுள்ளார். உயர்ந்த அறநெறிக் கொள்கை காண்ட்டின் கருத்தில் இழையோடிச் செல்வதை நாம் காணலாம்.
தனிமனிதன் ஒருவன் தன்னுடைய கடமைகளைத் தவறாமல் செய்வதே அறமெனக் கருதப்படுகிறது. அறத்தின் முதற்படி தத்தம் கடமைகளை ஒழுங்காகச் செய்வது என்பதே எல்லாச் சமயங்களும் ஒருமுகமாகச் ஒப்புக் கொள்ளுகின்ற உண்மையாகும். அக்கடமைகளை ஆர்வத்தோடும், மன ஊற்றத்தோடும் பய பக்தியோடும் செயற்படுத்தும் பொழுது அவை இறைவனின் ஆணைகளாகத் தோன்றுவது மனித மனத்தின் இயல்பாகும். இவ்வான்மிக ஒழுகலாற்று உணர்ச்சியையே சமயம்' என்று காண்ட் கூறுவது பொருத்தமாகும். எனினும், இது மனப்பக்குவம் அடைந்த அல்லது மனச்சான்றினை மதித்துப் போற்றுகின்ற பண்பட்ட உள்ளத்தைப் பெற்ற மக்களாலேயே உணர்ந்து போற்றக்கூடிய ஒன்றாகும்.
77

Page 88
பிறரால் எளிதில் உணர்ந்து கொள்ளத்தக்க வகையில் சமயம் என்பது என்ன? ' என்பதற்குரிய விடையைக் காண முயலுவோம். கீழ்த்திசை நாடுகளின் சமயங்களைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்களுள் ஒருவரான மாக்டெனல் (Macdonell) என்பார், "தெய்விக அல்லது இயற்கை இகந்த ஆற்றல்களிடத்து மனிதன் கொண்டுள்ள நம்பிக்கைகளை ஒரு வகையாகச் சமயம் குறிப்பிடுகின்றது. மற்றொரு வகையாக அவ்வாற்றல்களைச் சார்ந்தே மனிதன் இருக்கின்றான் என்பதைத் தொழுகையின் பொழுது ஓதப்படும் மந்திரங்களாலும், செய்யப்படும் சடங்குகளாலும் சமயம் புலப்படுத்துகின்றது” என்று கூறுவர். இக்கருத்து நம் நாட்டுச் சமயங்களின் நிலையை உணர்த்துவதாகும். இதே வகையான ஒரு கருத்தினை நம்முடைய அருணந்தி சிவாசாரியார்,
ஒதுசமயங்கள் பொருளுணரு நூல்கள்
ஒன்றோடொன்று ஒவ்வாமல் உள்பலலும் இவற்றுள் யாது சமயம் பொருள் நூல் யாதிங் கென்னில்
இதுவாகும் அதுவல்ல தெனும்பிணக்க தின்றி நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண
நின்றதியா தொருசமயம் அதுசமயம் பொருள் நூல் ஆதலினால் இவையெல்லாம் அருமறை ஆகமத்தே
அடங்கியிடும் அவையிரண்டும் அரனடிக்கீழ் அடங்கும்
(சிவஞான சித்தியார், சுபக். 256)
என்று குறிப்பிட்டுள்ளமை இங்கு நினைவு
கூர்தற்குரியதாகும்.
இவையனைத்தையும் ஒருங்கு திரட்டி உரைப்பதைப் போன்று ஜூலியன் ஹக்ஸ்லி என்பார், ''சமயம் ஒரு வாழ்க்கை நெறி; மனிதனுடைய உணர்ச்சிகளின் பயனாக அவன் சில பொருள்களைப் பெரிதும் உயர்வாகக் கருதிப் போற்றி வருகிறான். அவற்றைப் புனிதமானவை என்று அவன் கருதுகிறான். அவ்வுணர்ச்சிகளிலிருந்து தானே தோன்றுகின்ற ஒருவகை வாழ்க்கை நெறியே சமயம் எனப்படும். எப்பொருள்கள் சமய உணர்வினால் புனிதமானவையாகக் கருதப்படுகின்றனவோ, அவை ஊழ்வினையோடும் முதன்மையான தொடர்பு கொள்ளுகின்றன'' என்று தந்துள்ள விளக்கம் இங்குக் கருதத்தக்கதாகும்.
26
78

வாழ்க்கை நெறிக்குத் தேவைப்படுவது நல்ல பழக்க வழக்கங்களும், நல்ல சிந்தனையுமாகும். இப்பழக்க வழக்கங்களும் நற்சிந்தனையும் சேர்ந்தே ஒரு மனிதனுடைய நடத்தையை - ஒழுக்கத்தை உருவாக்குகின்றன. அவ்வொழுக்கம் வாழ்க்கையின் அடிப்படையாக அமைகின்ற பொழுது, நாம் அதனை ஒழுக்க நெறி என்கிறோம். ஒழுக்க நெறி அறநெறியின் ஒரு பகுதியாகும். அறநெறியின் இலட்சியங்கள் எல்லாம் ஆழ்ந்த பொருள் உடையனவாக இருக்குமானால், அவை ஆன்மிக உணர்வு கலந்தனவாக அமையும். அந்நிலையில் அறநெறிக் கொள்கைகளே சமய தத்துவமாக அமைந்துவிடும். இதனை, "அறநெறி என்னும் ஒளிவிளக்கை நமக்குத் தந்துதவுவது சமயத்தின் தலை சிறந்த பண்பாகும். செம்மையான வழியிலே துறவிகள் செல்லுவதற்குத் தேவையான மன வெழுச்சியையும் ஆர்வத்தையும் அது ஊட்டுகிறது"36 என்று மாத்தியூ ஆர்னால்டு மொழிந்துள்ளமை இக் கருத்தைத் தெளிவுறுத்துகிறது.
பார்)
மன
உலகில் தோன்றிய மெய்யுணர்வாளர்கள் 'சமயத்திற்குத் தந்துள்ள விளக்கங்கள் யாவும், மக்களுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஒரு பேராற்றல் உண்டு என்பதையும், மக்கள் அப் பேராற்றலின் ஆட்சிக்குட்பட்டு வாழ வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்பதையும் உணர்த்துகின்றன. மேலும், அச்சான்றோர்கள் அப்பேராற்றலோடு மக்கள் தொடர்பு கொள்ள முயலும் வாழ்க்கை நெறியே சமயமாகும் என்றும் தெளிவுறுத்தியுள்ளனர்.
மேற்கண்ட கருத்துக்களிலிருந்து ஒழுக்க நெறியோடு ஆன்மிக உணர்வு கலந்த வாழ்க்கை நெறியே சமயம் என்பது பெறப்படுகிறது. இப்பொருளில் நம்முடைய முன்னோர்கள் 'அறம்' என்ற சொல்லைச் சிலவிடங்களில் பயன்படுத்தி யுள்ளனர்.
அறுதொழில் அந்தணர் அறம் புரிந்து (புறம். 397) அறம்புரி அருமறை நவின்ற நாவின் (ஐங்குறு 387) அறம்புரி அந்தணர் வழிமொழிந் தொழுகி
(பதிற்று. 3: 48)
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 89
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
(சிலப். 14:11) அன்றியு மறனு மொன்றேயரசன் யான் வணிகனீயே
(சீவக. 544)
மக்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிவகுத்துத் தந்த திருவள்ளுவர், மக்கள் தம்மைவிட உயர்ந்ததும், சிறந்ததும், வலிமை பெற்றதும், தம்மால் முற்றிலும் அறியப்படாததுமான . ஓர் உண்மையுடன் ஆற்றலுடன் தமக்குள்ள தொடர்பினை அறிவதற்கு உதவும் வாழ்க்கை நெறியாகிய ஒழுக்கநெறியைப் பொய்தீர் ஒழுக்கநெறி' என்னும் தொடரால் குறிப்பிட்டுள்ளதை நாம் முன்னர்க் கண்டோம். அறம்' என்னும் சொல்லால் பொய்தீர் ஒழுக்க நெறி'யாகிய சமயத்தையும், நம் முன்னோர்கள் குறித்தனர் என்பதை மேற்கண்ட இலக்கியச் சான்றுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
அறம் என்னும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை, ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம் என்ற எட்டு வகையான பொருள்கள் பெரு வழக்காக வழங்கப் பட்டு வருவதோடு, வேறு சில பொருள்களும் அருகிய வழக்காக வழங்கி வருகின்றன. தகுதியானது ", ஞானம், அறச்சாலை , உண்ணா நோன்பு', தீப்பயன் உண்டாக்கும் நச்செழுத்துக்களை வைத்துப் பாடுவதை 'அறம் விழப் பாடினான்' என்று கூறல்'', கற்பு"2, இல்லறம், துறவறம் என்பன போன்ற வேறு சில பொருள்களும் அறத்திற்குரியனவாகத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. அறம் என்ற சொல்லிற்குரிய பொருள் பல்வேறு வகையாகப் பிற்கால மக்களுடைய மன நிலைக்கும், பழக்க வழக்கங்கட்கும், தேவைகட்கும் ஏற்ற வண்ணம் மாற்றமும் வளர்ச்சியும் அடைந்திருப்பதை இவை அறிவிக்கின்றன.
அறத்தின் இலக்கணம்
மேற்கண்ட ஆய்விலிருந்து 'அறம்' என்ற வழங்கப்படும் சொல், மிகவும் நெகிழ்ச்சிமிக்க பொருளையுடையது என்பது புலனாகிறது. ஒரு மனிதன் ஒரு சமூகத்தைச் சேர்ந்து வாழ்வதற்கும்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

அல்லது தனியே நின்று தனி மனிதனாக இயங்குவதற்கும், அத்தகைய மனிதனுடைய பண்பு நலனை உருவாக்கி வைக்கும் குறிக்கோள்களுக்கும், நோக்கங்களுக்கும், செல்வாக்குகளுக்கும், நிலையங்களுக்கும் 'அறம்' என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்குரிய சட்டமாக அறம் விளங்குகிறது. அதை வாழ்க்கையில் கடைப் பிடிப்பதன் பயனாக இம்மையில் இன்பமும் மறுமையில் வீடுபேறும் அடைய முடியும் என்று நம் முன்னோர்கள் நம்பினர். அது ஒழுக்க இயல், சமயம் ஆகிய இரண்டும் இணைந்த ஒன்றாகக் காணப்படுகிறது. தனி மனிதனுடைய உரிமைகளும், கடமைகளும், சமூகப் பிணைப்பும், குடும்ப இணைப்பும், பழக்க வழக்கங்களும், விருப்பு வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்தும் அறத்தின் கோட்பாட்டினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அறம் என்பதைப் பண்டைத் தமிழ்ச் சான்றோர் ஒரு கொள்கையாகவோ, கோட்பாடாகவோ, சமயமாகவோ கருதவில்லை. இதனை அவர்கள் வாழ்க்கை நெறியாகவே கருதிப் போற்றினர். ஒழுக்க நெறிக்குரிய விதி முறைகளின் தொகுப்பாகவே அறம் கொள்ளப்பட்டது. அறம் தனிமனிதன் ஒருவனுடைய கடமைகளையும், செயல் முறைகளையும், சமுதாயத்தின் ஓர் உறுப்பினன் என்ற முறையில் நெறிப்படுத்துகிறது என்பதும், மனிதனைப் படிப்படியாகப் பண்பட்டு விளங்கச் செய்கிறது என்பதும், மனித வாழ்க்கையின் இலட்சியமாகிய 'போரா இயற்கைப் பெரு நிலை'யாகிய வீடு பேற்றை அடைய முயலுமாறு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறது என்பதும் நம்முடைய முன்னேர்களின் நம்பிக்கையாகும். காலத்தையும் இடத்தையும் கடந்த நிலையில் இயன்றவரையில் எல்லாம், பிறருக்கு உள்ளத்தாலும், உரையாலும், செயலாலும் நன்மை செய்வதையே அறத்தின் பொது நிலையெனக் கொண்டு நம் முன்னோர்கள் ஒழுகினர்.
பண்டைத் தமிழ்ச் சான்றோர் கண்ட வாழ்க்கை நெறியாகிய அறத்தின் வித்து, பழக்க வழக்கங்களேயாகும். அதிலிருந்து நீதியெனும்
79

Page 90
முளைதோன்றி, கடமையுணர்வெனும் தளிர்விட்டு, ஒழுக்கமெனும் மரமாக வளர்ந்து, ஈகை, கொடையெனும் கிளைகளுடன் தழைத்து, அறமெனும் வண்ணமலர் மலர்ந்துள்ளதை நாம் காணுகின்றோம்.
நீதியும் அறமும்
அறத்தின் பொருள் மிக விரிந்ததாகவும், ஆழமானதாகவும், வாழ்க்கையின் பல்வேறு நிலைகளையும் இயல்புகளையும் அணைத்துச் செல்வதாகவும் அமைந்துள்ளமை இங்குக் கருதத்தக்கது. அறத்தினை நாம் ஒரு முப்பட்டைக்கண்ணாடிக்கு ஒப்பிடலாம். அதன் ஒரு புறம் ஒழுக்கமாகவும், மற்றொருபுறம் வழக்கமாகவும், பிறிதொருபுறம் இராச நீதியாகவும் காட்சி தருகிறது. அம்முப்பக்கங்களும் இணைந்த முழுநிறை வடிவே அறமெனும் முப்பட்டைக் கண்ணாடி எனலாம்.
நாம் மேலே கண்ட அறத்திற்குரிய பல்வேறு பொருள்களுள் வழக்கம், ஒழுக்கம், கடமை, ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம் ஆகிய அனைத்தையும் சிறப்புமிக்க அறம் எனப்படும் ஒழுகலாற்று அறநெறியாகிய வழக்கம், ஒழுக்கம் என்ற இரண்டு பட்டைகளுக்குள் அடக்கிவிடலாம். எஞ்சியுள்ள 'நீதி' என்னும் பொருளை 'இராச நீதி' என்னும் பட்டையாகக் கொள்ளலாம். எனினும், இம் முப்பட்டைக் கண்ணாடியின் மூன்று பக்கங்களுக்கும் அடிப்படையாக இருப்பது அறமாகும். முப்பட்டைக் கண்ணாடியில் எப்பக்கத்தின் மூலம் நோக்கினாலும் எவ்வாறு எழு வகை வண்ணங்களைக் காண முடிகின்றதோ அதைப் போன்று வழக்கம், ஒழுக்கம், இராச நீதியாகிய மூன்றனுள் எதன் மூலம் நோக்கினாலும் நாம் அறத்தைக் காணலாம். இவ்வாறு அறம் அம்மூவகை நெறிகளோடும் ஒன்றாகக் கலந்து காணப்படுகிறது. இதை வேறு வகையாகச் சொல்லுவதென்றால், ஒழுக்கம் தனிமனிதனுடைய அறத்தைச் சுட்டுவதாகவும், வழக்கமும் இராசநீதியும் சேர்ந்து சமுதாய அறத்தைச் சுட்டுவதாகவும் நாம் கூறலாம்.
வழக்காற்று ஒழுக்க நெறியும், ஒழுக்கமும், இராசநீதியும் இணைந்த ஒன்றையே
80

பண்டைத்தமிழர் 'புறப்பொருள்' என்று கூறினர். இவற்றுள் இராசநீதி' ஒன்றையே வட மொழிவாணர் தண்டநீதி' என்றும், அருத்த சாத்திரம்' என்றும் போற்றலாயினர். இவற்றின் முடிந்த பயன் இன்பம்' என்றும் அவர்கள் கருதினர். இவற்றைப் பண்டைத் தமிழர் அறம், பொருள், இன்பம் என்ற மூவகைப் பேறுகளாகக் கொண்டனர். இம் மூன்றனுள்ளும் இழையோடிச் செல்வது அறமென்பதில் யாருக்கும் ஐயம் இல்லை.
அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால்' எனப்படும் மூன்றும் மனித வாழ்க்கையின் மூவேறு நிலைகளாகும். அவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து நிற்பன. அவை தனிப்பட்ட - ஒட்டுறவற்ற - பிரிவுகள் அல்ல. வாழ்க்கை நெறியின் உடலாகப் பொருளையும், உயிராக அறத்தையும், உணர்வாக இன்பத்தையும் வள்ளுவர் கொண்டுள்ளார். அவற்றைத் தனித்தனியாகப் பிரித்து விட்டால் வாழ்க்கைநெறி சிதைந்துவிடும். அவை மூன்றும் இணைந்தும், இழைந்தும் இருக்கவேண்டும். அவற்றிற்கு அறமே அடிப்படையாக அமைய வேண்டும். அப்பொழுது தான் மனித வாழ்க்கை மாண்புற முடியும் என்பதைத் திருவள்ளுவர் தம் நூலில் தெளிவுறுத்தியுள்ளார். இதனைப் புறநானூறு என்ற பழைய தமிழிலக்கியம்,
'சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் |
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல" (புறம். 31) என்று சிறப்பித்துக் கூறுகிறது..
எனவே, தமிழர் தொன்று தொட்டுப் போற்றிவரும் அறத்திற்கும், வடமொழியாளர் கூறும் நீதிக்கும் பெருத்த வேறுபாடு உள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது. வட மொழியில் நீதிநூல்கள் என்று சொல்லப்படுவன் பரந்து பட்ட ஒழுக்கவியல் ஒப்புரவுகளை வலியுறுத்தும் அற நூல்கள் அல்ல. அவ்வறத்தின் உட்பிரிவாகிய அரசியற் பகுதி பற்றிய நீதி நூல்களாகப் போற்றப்படுகின்றன. 45 இக்கருத்தினை, "மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் . வண்ணம் நம் பெரியார் நமக்கு உதவிய நூல்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 91
பொருள்கள் நான்கினையும் பற்றியனவேயாம். இவையெல்லாம் நீதியின் மேல் அமைவன வெனினும், இவற்றுட் பொருட்பகுதி பற்றியெழுந்த நூல்களையே 'நீதிநூல்' எனப் பெரியோர் வழங்குவர்”46 என்று பண்டிதமணி அவர்கள் கூறியுள்ளமை இங்குக்
குறிப்பிடத்தக்கது.
சுக்கிர நீதி' என்ற வடமொழிப் பொருள் நூலில், 'நீதி நூல் மாட்சி' என்னும் முதலாம் இயலில்,
"இந் நீதி நூல் (இராசநீதி) மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாததும், உலக நிலையை வரம்புட்படுத்துவதும், அறம் பொருள் இன்பங்களை யுணர்த்துவதுமாக இருத்தலின் , இதனை அரசர்கள் எப்பொழுதும் முயற்சி மேற்கொண்டு பயிலல் வேண்டும் ....... மக்களுக்கு உணவின்றி உடல் நிலையாவாறு போல, நீதி நூலானன்றி எல்லா வுலகங்களில் ஒழுக்கங்களும் நிலைபெறா”47
என்று கூறப்பட்டுள்ளமை வடமொழியாளர் நீதியைப் பற்றிக் கொண்டுள்ள கருத்தினைத் தெளிவுறுத்துகிறது.
குறிப்புகள் 1. Zimmer, Heinrich : Philosohphies of India, p. 37, F. N., Rot 2. Kane, P. V. : History of Dharmasastras, Vol., III pp. 4-8; B
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழி சான்றோர் செய்த நன்றுண்டாயின் (புறம். 34) ஊனைக் குறித்த உயிரெல்லா நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு. (குறள் 1013) நல்லது செய்த லாற்றீ ராயினும் (புறம். 195) நல்லது வெஃகி வினைசெய்வார் (பரி.10:88)
மேலும் பார்க்க : திருக்குறள் 97, 108, 110, 111, 117, 138, 652, 908 4.
திருக்குறள், பரிமேலழகர் உரை, பக். 39. கழகப்பதிப்பு, சென்னை
திருக்குறள், பரிமேலழகர் உரை, பக். 145. 6. திருக்குறள், பரிமேலழகர் உரை, பக். 149.
அறநீதி' என்ற தொடரைப் பரிமேலழகர் 389, 1025 ஆம் குறட்பா. 8. பார்க்க: குறள், 523, 581, 662, 683, 686, 825, 829, 857. 9. பார்க்க: குறள், 533, 581, 634, 683, 741. 10. நன்னூல், சங்கர நமச்சிவாயர் உரை, பக். 2; உ. வே. சாமி நாதய் 11. மற்றும் இப் பொருளில் மிகப் பல சான்றுகள் காட்டலாம். அவற்று
அ) நீதியால் வாழ்கிலை நாள் செலா நின்ற (தேவா. II :79:4) ஆ) நீதிவானவர் நித்தல் நியமஞ் செய் (தேவா. V:13:7)
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

இதனால், அறத்தைப் பற்றித் தமிழர்கள் கொண்டிருந்த கொள்கை மிகவும் பரந்துபட்டது என்பது புலனாகின்றது. இதனோடு வடமொழியாளர் தருமத்திற்கு தரும் விளக்கம் பேரளவிற்குப் பொருந்தி வருகிறது. எனவே, வடமொழியாளர் போற்றும் நீதி' யை நாம் அறத்தின் ஒரு பகுதியாக கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்நிலையில் தமிழ்ச் சான்றோர்கள், 'நீதி' என்ற வடசொல்லைத் தமிழில் பயன்படுத்தத் தொடங்கிய பொழுது, அதனுடைய முதற் பொருளிலிருந்து சிறிது மாற்றியும் விரிவுபடுத்தியும், பொதுவாக ஒழுக்க இயல்புகளைக் குறிக்கும் சொல்லாகவே அதைக் கையாண்டுமுள்ளனர் என்று நாம் கூறினால் அது தவறாகாது. ஆங்கிலத்தில் மொராலிட்டி' (Morality) எனப்படும் சொல்லிற்குரிய பொருளையே, 'நீதி' என்னும் சொல் தமிழில் உணர்த்துகிறது. இப்பொருளிலேயே 'நீதி நூல்' அல்லது 'நீதி இலக்கியம்' என்னும் வழக்குத் தமிழ்மொழியில் கி. பி. ஆறாம் நூற்றாண்டை ஒட்டித் தோன்றி வளர்ந்ததாகத் தெரிகிறது.
itledge & Kegan Paul Ltd., London, 1951. handarkar Oriental Research Institute, Poona, 1941.
யடைக்கும் கல். (குறள் 38)
3, 932, 994. T, 1951.
க்களின் உரையில் கையாண்டுள்ளர்.
பர் பதிப்பு, சென்னை, 1935. பள் சில :
81

Page 92
இ) நீதியுணர்ந்து நியமத்த னாமே (திருமந் 555) ஈ) நீதியாரொடும் கூடுவதில்லையான் (திவ். பிர. 672:2) உ) நீதிமுறைச் சடங்கு நெறி (பெரிய ஞான. 56)
ஊ) தள்ளரிய பெருநீதி (கம்ப. பால குலமுத. 21) 12. அ நீதிக் கண்ணாடி நினைவார் மனத்துளன் (திருமந். 29:
ஆ) நீதியே செய்தாய் நினை (திருமுறை XI : சிவ திருவ. 79 இ) நீதியால் வணங்குவார் தம் (திவ். பிர.760) ஈ) நீதியாலறுத் தந் நீதியீட்டுதல் (சீவக. 1920) உ) நீதிவழுவா நெறியினராய் (பெரிய பெரிமிழலை. 1) ஊ) நீதியாய் முனிந்திடேல் (கம்பட பால். 1935) (அ) நீதியிலொன்று வழுவேன் (தேவா. VII :73:5) (ஆ) நீதி அறிகிலள் (திருமுறை IX:சேந் திரு. 2) (இ) நீதிய தாய் நிற்கும் (திருமந். 2453) (ஈ) நீதி என்றாள் (திருமுறை IX : பொன்வண். 22) (உ) நீதிவானம் (திவ். பிர. 1131:3) (ஊ) வெம்மை செய்துலக மெல்லாம்
ஆண்டிட விளைக்கும் நீதி (சீவ. 775) (எ) நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்து பெரிய தடுத். 19
(ஏ) நீதியும் தருமமும் நிறுத்த (கம்ப. அயோ 948) 14. ஊர்தியில் சேறலும் நீதியாகும் (நம்பியகப். 83) 15. உலகமெல்லாம் ஆண்டிட விளைக்கும் நீதி (சீவக. 755) 16. இந்நீதி நூலுடையார் (குறள். 533: பரிமேலழகர் உரை) 17. நீதி நிலைமை நியாய நிச்சயம்...
வேளாண்மை, பட்டாங்கு மெய்யென உரைப்பர் (பிங்கல நிக. 18. நீதி - உலகத்தோடு பொருந்துதல் (குறள் 97. பரிமேலழகர் ? 19. சிவஞான போதம் - மாபாடியம், பக். 20. 20. திருக்குறள் - அறத்துப்பால், நாகை.
தண்டபாணி விருத்தியுரை, பக். 42-43.
திருக்குறள், பரிமேலழகர் உரை, பக்.1 22. "இவற்றுள் வழக்கமும், தண்டமும் உலகநெறி நிறுத்துதற்ப
பயத்தல் சிறப்பில ஆகலானும், அவைதாம் நூலானே அன்ற அவற்றை ஒழித்து, ஈண்டுத் தெய்வப் புலமைத் திருவள்ளுவ
(திருக்குறள் : அறத்துப்பால் உரைப்பாயிரம், பரி, உரை, பக். 23. க்ஷே திருக்குறள், பக். 2 24. திருக்குறள் உரைவளம் - ச.தண்டபாணி தேசிகர் பதிப்பு:
அறத்துப்பால் : பக். 206. 25. Findlay, J.N.: Hegel, A. Re-examination, p.318. 26. தொல். பொருள் : 647, பேரா. உரை. பக்.477. 27. (அ) சான்றோர் சென்ற நெறி (புறம். 134
(ஆ) பெரியோர் சென்ற அடிவழி (பத்து பட்டி.151) (இ) ஆன்றோர் செல் நெறி வழாச்
சான்றோன் ஆதல் நற்கு அறிந்தனை தெளியே
21.
82

B6)
1809)
உரை)
யத்தவாவது அல்லது, ஒழுக்கம் போல மக்கள் உயிர்க்கு உறுதி றி உணர்வுமிகுதியானும் தேய இயற்கையானும் அறியப்படுதலானும், ரால் சிறப்புடை ஒழுக்கமே அறம் என எடுத்துக் கொள்ளப்பட்டது"
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 93
28. Maine, H. S: Ancient Law, p. 49-50.
John Murray, London 1927. 29. பார்க்க : குறள் 388, 541, 547,548, 553, 558, 559. 30. "வறுமையுற்றவர்களுக்கு ஒன்றைக் கொடுத்துதவுதலே பிறர்க்கு 31. பால்வரை தெய்வம் வினையே பூதம் (தொல். சொல். 57)
ஒன்றே வேறே யென்றிரு பால்வயின்
ஒன்றியுயர்ந்த பாலதாணையின் (தொல். பொருள். 92) 32. இராசமாணிக்கனார், மா: தமிழ்மொழி இலக்கிய வரலாறு,
பக்.218. பாரி நிலையம் ; சென்னை, 1965. 33. Kant, Immanuel : Religion within the Limits of Pure ) 34. Macdonell, A.A. : Vedic Religion, Ency of Religioil 35. Huxley, Julian: Religion without Revelation, p.9, May 36. Arnold, Mathew: EssayS on Criticism, Marcus Aurel 37. அறம் செய் தீமோ (புறம். 145)
''அறம் என்பது தக்கது; தக்கதனைச் சொல்லி நிற்றல் தோழிக்கு 38. அறத்தின் விருப்புச் சிறப்போடு நுந்த . (ஞானாமிர்தம், பாயி. 5) 39. அறத்துக்குப் புறத்தல்
(திருவாங்கூர் தொல்பொருள் ஆய்வுத்துறை : (தொகுதி 1. பக். 9)
தொகைக்கணம் போதரும் அறச்சோற்றட்டில் (பெருங் . I :10:132) 40. நலம்புரி நங்கை வையத்து நல்லறங் காக்க (சீவக. 386) 41. நச்செழுத்துக்களை வைத்துப் பாடுதலை எழுத்தானந்தம்' என்ப
(யாப்பருங்கலம், ஒழிபு. பக். 426) 42.
அறந்தலைப் பிரியா ஆறுமற் றதுவே அணிவளச் செவ்வாய் அறம் காவற் பெண்டிர் (பரி திரட்டு :2) அறத்தாறன்றியு மாகுவதாயின் (பெருங் :1:36:301) "பெண்டிர்க்கு அறமென்பது கற்பு ; கற்பின் தலை நிற்றல் அறத் ெ (இறையனார் களவியல், பக். 141;
கழகப்பதிப்பு சென்னை, 1964) 43. அறுமீன் பயந்த அறம்செய் திங்கள் (நற்றி.202)
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை (குறள் 49)
அறத்தொடு புணர்ந்த துறைப்புனலாட்டம் (பெருங்.II.147) 44. இருமை வகை தெரிந்து ஈண்டறம் பூண்டார் (குறள் 23)
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் (சிலப். 14. 11) அறம் செய்மாக்கள் (மணி. 20:13) உறுப்பொருள் காட்சி யோங்கிய படிவத்து
அறம்புரி தந்தை பள்ளி (பெருங். 2:11 63-64) 45. வடமொழியில் வாசஸ்பதி மிஸ்ரா இயற்றிய நீதி சிந்தா மணியும்
பகுதியாகிய தண்ட நீதியையும், அரசிளங்குமாரர்களையும் பற்ற
ol.I. pp. 110 and400 46. மு.கதிரேசக் செட்டியார்: உரைநடைக் கோவை, பக். 65. 47. சுக்கிர நீதி, பக். 1-2 பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் மொழி
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

க் கொடுத்து உதவும் ஈகையாகும்” என்பது இதன் பொருளாகும்.
Reason Alone, p. 142. and Ethics, Vol. 12; p. 601. ( Parish, London, 1957. ius' p. 346. Macmilan, London. 1935
உரியதென்றவாறு" (இறையனார் களவியல், சூ. 29. உரை, பக்.141)
ர்; "இயனெறி திரிந்த எழுத்தானந்தமும்'
தாடு நிற்றலாகும்.”
ஜனமேஜயனின் நீதிப் பிரகாசிகையும் இராச நீதியின் இக் குறிப்பிடுகின்றன. பார்க்க : History of Dharmasastra,
ஜிபெயர்ப்பு 1926.
83

Page 94
நீதி இலக்கிய
இயல்புகள்
இலக்கியம் என்பது மனித இனத்தின் அனைத்துலக மொழியாகும். அது குறிப்பிட்ட பண்பாட்டு வரையறைகளையும், கட்டுப்பாடுகளையும் கடந்து, அனைத்துலக நோக்கோடு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளையும், எண்ணங்களையும் எழுச்சிகளையும், வேட்கைகளையும் குறிக் கோள்களையும் பிரதிபலிக்கிறது. வரையறுத்துக்கூற இயலாத வகையில் உள்ளமும் வாழ்க்கையும் சந்திக்கும் இடமாக இலக்கியம் விளங்குகிறது. மொழியைக் கருவியாகக் கொண்டு இலக்கியம் தன்னுடைய வடிவத்தைப் பெறுகிறது. அதன் உட்பொருளை வாழ்க்கை தந்துதவுகிறது. கவிஞன், வாழ்க்கையெனும் மூலப்பொருளோடு கலையழகு என்ற வண்ணத்தைக் கலந்து, கற்பனையெனும் மெருகிட்டு இலக்கியத்தைப் படைக்கின்றான்.
மனிதனுடைய அன்றாட வாழ்க்கைத் தேவைகள் நிறைவடைந்தவுடன், அவன் வாழ்க்கையின் மறை பொருள்களைப் பேரார்வத்தோடு துருவித்துருவி ஆராய்ந்து காண முயலுகிறான். அறிவைத் தேடும் ஆர்வமும், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற வேட்கையும், மனித இயற்கையின் வற்றாத ஊற்றினை உணர்ந்து உலகில் நல்ல வண்ணம் இனிது வாழ்வதற்குத் துடிக்கும் துடிப்பும் அவனை வாழ்க்கையின் உட்பொருளைக் காணுமாறு தூண்டுகின்றன பொருள்களை ஈட்டும் ஆர்வம் மனிதனிடத்து ஓர் இயல்பூக்கமாக இருக்கிறது. அதனுடன் அறிவார்வமாகிய இயல்பூக்கமும்
84

பத்தின்
கலாநிதி எஸ்.திருநாவுக்கரசு
சேர்ந்து காணப்படுகிறது. அவற்றின் பயனாகவே உலகில் அறிவியல் கண்டு பிடிப்புகளும், இலக்கியப் படைப்புகளும், மெய்ப்பொருள் ஆராய்ச்சியும் தோன்றியுள்ளன. மனித இனம் எண்ணத் தெரிந்து, அறிவை வளர்த்துக் கருத்து வகையில் முன்னேறத் தொடங்கிய காலத்தில் தான், இலக்கியம் தனிப்பட்டதொரு கலையாகத் தழைத்தோங்கியது. அக்காலத்திலேயே இலக்கியத்திலிருந்து பிற கலைகள் பிரிந்து, தனித்து வளரத்தொடங்கின. இலக்கியம் வடிவத்தாலும், உணர்த்தும் பொருளாலும் பல்வேறு வகைப்பட்ட துறைகளையுடைய கலையாகச் செழித்து வளர்ந்திருக்கிறது. அத்துறைகளுள் ஒன்று நீதி இலக்கியம்' என்பதாகும். பண்டைக் காலத்தில் இலக்கியங்கள் எல்லாம் பாக்களாக இருந்தமையால், அவற்றை நீதிப்பாக்கள் (Didactic Poetry) அல்லது நீதி இலக்கியம் (Didactic Literature) என்று குறிப்பிடும் வழக்கம் உண்டாயிற்று.
Tாக
கற்பவரை உணர்ச்சிப் பெருக்கால் கிளர்ச்சி அடையச் செய்யாது சிறந்த கருத்துக்களை அறிவுறுத்தி, அவர்களுடைய வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை நீதி நூல்கள்; இவை உணர்ச்சியைத் தூண்டாமல் அறிவைத் தூண்டுவன ; இன்புறுத்துவதைக் காட்டிலும் அறிவுறுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டனவாகும். கலையழகிற்கு முதன்மையிடம் தராமல் கருத்திற்கே இவை முதன்மையிடம் தருகின்றன. சுருங்கச் சொல்லுவதானால்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 95
மனிதனின் உணர்ச்சி (Feeling), விருப்பு (Willing), அறிவு (Knowing) ஆகிய மூவகை மனப்பண்புகளுள் அறிவாற்றலைத் தூண்டுவதாக அமைவதே நீதி இலக்கியம் என்று நாம் கூறலாம்.
உணர்ச்சியைத்
தூண்டாமல் அறிவுறுத்துவன்
இவற்றுள் முதன்மையானது உணர்ச்சியைத் . தூண்டாமல் அறிவுறுத்தும் இயல்பாகும். மனிதன் உணர்ச்சியின் பிண்டமாக இருந்துவருகிறான். அவ்வுணர்ச்சியின் ஊற்றாக இருப்பது மனிதனுடைய உள்ளம். அதில் மூவகைக் கூறுகள் உள்ளன. அவை உணர்ச்சிக் கூறு, அறிவுக் கூறு, விருப்புக் கூறு என்பன. அதில் உணர்ச்சிக் கூறு அவனை எளிதில் உணர்ச்சிவயப்படச் செய்கிறது. அவனுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அவனை நெறிப்படுத்துவது அவனுடைய அறிவாகும். அவ்வறிவு நூலறிவு, பட்டறிவு என இருவகைப்படும். கல்வியால் நூலறிவும், கேள்வியாலும் வாழ்க்கை அனுபவத்தாலும் மனிதனுடைய பட்டறிவும் வளர்கின்றன. இவ்வறிவின் பயனாகவே ஒருவன் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திச் செம்மையான நெறியில் உள்ளத்தைச் செலுத்த முடிகிறது. "மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமை இடத்துச் செல்லாது தடுத்துக் காத்து, நன்மை இடத்துச் செல்லவிடுவதே அறிவாகும்" என்பதை,
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு (குறள் 422)
என்று வள்ளுவர் அறிவிக்கின்றார்.
அறிவு வளர்ச்சியில் முன்னேற்றம் காண்பவன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி வாழப் பழகி விடுவதால், அவனிடத்து உணர்ச்சித் துடிப்பு குறைந்துவிடுகிறது. நாகரிகம் அடையாத பழங்குடி மக்கள் உணர்ச்சி வடிவாக இருப்பதையும், அறிவு வளர்ச்சியும் நாகரிகமும் அடைந்த மக்கள் எளிதில்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

ளாக
உணர்ச்சி வயப்படாதவர்களாக இருப்பதையும் இதற்குச் சான்றாகக் கூறலாம். நாகரிகம் என்னும் அரக்கன் அழித்தொழிக்காத அருளுணர்ச்சியோடு வாழும் கிராமமக்கள், தெருவில் நாய் ஒன்று உந்து வண்டியில் சிக்கி இறந்துவிட்டால், அதைச் சுற்றிக் கூட்டம் கூடி விடுவர். ஆனால், நாகரிகத்தில் முன்னேறி விட்டதாகச் சொல்லும் நகரத்து மக்கள், தங்கள் கண்ணெதிரே தங்களைப் போன்ற மனிதன் ஒருவன் வண்டியில் மாட்டிக்கொண்டு செத்துவிடுவானானால், பெரும்பாலும் அதைப் பொருட்படுத்தாது தங்கள் அலுவல்களைக் கவனிக்க விரைந்து செல்லுவர். இந்நிலைக்கு அறிவு வளர்ச்சியே முதன்மையான காரணமாகும். வாயளவில் தம் இரக்கத்தைக் காட்டிவிட்டுத் தங்கள் கடமையைச் செய்வதற்கு விரைந்து செல்லுமாறு அறிவுக்கூறு அவர்களைத் தூண்டுகிறது எனலாம்.
[ா6
இதைப் போன்றே, இலக்கிய உலகிலும் இருவகைக் கூறுகள் உள்ளன. அவற்றை அறிவு இலக்கியம் (Literature of Knowledge), ஆற்றல் இலக்கியம் (Literature of Power) என்று பாகு படுத்துவர். "அறிவு இலக்கியம் அறிவுறுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ஆற்றல் இலக்கியம் மனிதனின் உள்ளத்தை நெகிழச் செய்வது."1 இவற்றுள் அறிவு இலக்கிய வகையைச் சேர்ந்தது 'நீதி இலக்கியம்' என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
<
கலைகளிலே சிறந்தது இலக்கியக்கலை. "கலைக்கு இன்றியமையாத பண்புகள் என்று சொல்லப்படுவன உணர்ச்சி, கற்பனை, கருத்து, வடிவம் என்பனவாகும்.இசைக் கலையைக் தவிர மற்றக் கலைகளுக்குக் கருத்து என்பது அடிப்படையாகத் தேவைப்படுகிறது. நீதி நூல்களுக்கும், மக்களை இணங்குமாறு தூண்டும் வகையைச் சேர்ந்த இலக்கியங்களுக்கும் கருத்து மிகமிக முக்கியமானதாகும். ஏனெனில், இவ்வகை இலக்கியங்கள் எல்லாம் எழுதப்பட்ட தன் நோக்கத்தை வெளிப்படுத்துவன
85

Page 96
கருத்துக்களேயாகும்." 12 இந் நூல்வகைப் பண்புகளும் ஒருங்கே அமைந்த இலக்கியம் சிறப்புடையதாகப் போற்றப்படும்.
இவற்றுள் உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்கும் இலக்கியம், மனிதனுடைய இன்ப துன்பங்களையும், விருப்பு வெறுப்புக்களையும் புனைந்துரைக்கிறது. இலக்கியத்தைப் படைக்கும் புலவனின் உணர்ச்சி, அதில்வரும் கற்பனை மாந்தரின் உணர்ச்சி, அதைக் கற்பவர் பெறும் உணர்ச்சி ஆகிய மூவகை உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் அதில் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு உணர்ச்சிகளுக்குச் சிறப்பிடம் கொடுக்கும் இலக்கியத்தில் கற்பனையும் கலையுணர்வும் கலந்து காணப்படும். கற்பனை உடையவர் தம்முடைய அனுபவத்தோடு மனித உணர்ச்சிகளைப் பெருக்கியும், அவற்றிற்கு நயமிகு கலையழகு என்ற வண்ணத்தைப் பூசியும் கவர்ச்சியுடையதாக எடுத்துரைக்க இயலும். அத்தகைய கலைஞர்கள் படைக்கும் இலக்கியத்தில் அறி கருத்துக்கும் முதலிடம் தரப்படுவது இல்லை. கவர்ச்சிக்கே முதலிடம் தரப்படுகிறது. இத்தகைய இலக்கியங்கள் மக்கள் உள்ளத்தை நெகிழ்விக்கும் ஆற்றலும், கவரும் திறனும் உடையனவாகும். அவற்றை 'ஆற்றல் இலக்கியங்கள்' என்பர். அவை கற்பவர் மனத்தை மகிழ்விப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். ஒரு சில இலக்கியங்கள் இதற்கு விதி விலக்காக மகிழ்விப்பதோடு, அறிவுறுத்துவனவாகவும் அமையும். அவ்வாறு அமைக்கின்ற இலக்கியங்களே, உலகில் பொன்றாப் புகழ்பெற்று விளங்குகின்றன.
நீதி நூல்களும் இலக்கியத்தின் ஒரு வகையேயாகும். ஆனால், அவை குறிப்பிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுகின்றன. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டுவதே அவற்றின் குறிக்கோளாகும். நீதிநூல்களை இயற்றும் புலவன் முதிர்ந்த அறிவும், கனிந்த அனுபவமும்
86

உடையவனாக இருக்கின்றான். தான் எடுத்துரைக்க விரும்பும் கருத்திற்கே அவன் முதலிடம் தருகின்றான். எதைச் சொன்னாலும், அதைத் தெளிவாக, மக்கள் பலரும் புரிந்து கொண்டு வாழ்க்கையில் கடைப் பிடிக்குமாறு அவன் சொல்ல நினைக்கின்றான். இவ்வாறு எண்ணுகின்ற பொழுது, அவன் உணர்ச்சி வயப்படாது, காரணகாரியத் தொடர்புபடுத்திக் கருத்துக்களைத் கோவைப்படுத்துகின்றான். பின்னர், படிப்பவர் மனத்தில் பதியுமாறு செய்வதற்காக, அவற்றிற்கு அவன் சிறிது கலை மெருகு கொடுக்கின்றான். அத்துடன், அவன் படைப்பு பாதி முடிந்துவிடுகிறது. இப்படைப்புப் பணியில் ஈடுபடும்பொழுது, அவன் கலைகளுக்குரிய உணர்ச்சி, கற்பனை, கருத்து, வடிவம் என்ற நான்கு பண்புகளுள் இறுதியில் உள்ள இரண்டிலேயே கருத்தைச் செலுத்துகிறான். சான்றாக ஒளவையாரின் ஆத்தி சூடியை' எடுத்துக் கொள்வோம். இதன் முதல்பாட்டு, அறஞ் செய விரும்பு' என்பதாகும். இச்செய்யுளில் மூன்று சொற்களே உள்ளன. இதில் உயர்ந்த கருத்தொன்று, மூன்று சொற்களைச் சேர்த்து அமைப்பதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இதில் உணர்ச்சிக்கோ, கற்பனைக்கோ இடமில்லை. ஆனால், அறிவுறுத்தும் கருத்திற்கே முதன்மையிடம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இனி, நாம் குமரகுருபரர் இயற்றிய 'நீதிநெறி விளக்கத்தில் உள்ள ஒரு செய்யுளைப் பார்ப்போம்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எல்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயினார் (நீதி. விள. 53)
இப்பாட்டில், எடுத்துக்கொண்ட செயலை இனிது முடிக்க முயலுவோர், தமக்குண்டாகும் எத்தகைய இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் பணிபுரிவர் என்னும் கருத்து எடுத்துரைக்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 97
கப்படுகிறது. ஆசிரியர் இக் கருத்தினைச் சிறிது கலையுணர்வோடு கூறியிருப்பது கருதத்தக்கது. ஒரு மனிதனுக்கு உண்டாகும் துன்பங்கள், இடையூறுகள் எவையென்பதை ஆராய்ந்து, அவற்றை முறைப்படுத்திக் கூறுவதில் மனித மனத்தின் இயல்புகளைப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். உடலுக்குண்டாகும் துன்பத்தைப் பொதுவாக எந்த மனிதனும் வரவேற்கமாட்டான். அதற்கு அடுத்து, பசியால் வாடுவதை எவனும் விரும்பமாட்டான். உடல் வருந்தினாலும் பசி வாட்டினாலும் கூட மனிதன் உறங்காமலிருக்க விரும்பமாட்டான். இவற்றை விட யாராகிலும் தனக்குத் தீமை செய்தால், அதைப் பொறுத்துக் கொண்டு தன் வேலையில் ஈடுபடுவது என்பது மனிதனால் பொதுவாகச் செய்ய முடியாத செயல். காலத்தை வீணாக்குவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், தான் எடுத்துக்கொண்ட செயலை இனிது முடிக்க வேண்டும் என்பதற்காக எந்நேரமும் அச்செயலிலேயே ஈடுபடுவது அறிவுள்ள மனிதனின் செயலாகும். இவை யாவற்றையும்விட, பிறர் தனக்குச் செய்யும் அவமதிப்பைக் கண்டு சீற்றம் அடைவது மனித இயற்கை. ஆனால், தன்னுடைய பணியை நல்லமுறையில் முடித்தால் போதும் என்று நினைக்கின்றவர்கள், அவமதிப்பைக்கூட ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள் என்று குமரகுருபரர் கூறுவதில் வெறும் கருத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை. ஓரளவிற்குக் கலையுணர்வும் அவற்றுடன் கலந்து காணப்படுகிறது.
இந்த நீதிப்பாடலில் கருத்தும் வடிவமும் அமைந்திருப்பதோடு, ஓரளவிற்கு எடுத்துரைக்கும் முறையில் கலையுணர்வோடு கூடிய கற்பனையும் கலந்து கற்பவர் உள்ளத்தை கவருகிறது. இது சிறந்த கவிஞர்களுடைய கவிதைகளில் (அறங் கூறும் நூலாக இருந்தாலும்) காணப்படும் சிறப்பாகும்.
கவிஞனுக்குரிய கடமைகள் பல. அவற்றுள் படிப்பவரை இன்புறுத்துவதைவிட, அறிவுரை கூறி
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

அவர்களை நெறிப்படுத்துவது தலையாயது; சிறந்தது. கீழ் நாடுகளிலும், மேனாடுகளிலும் தொன்றுதொட்டு இந்நம்பிக்கை இருந்து வருகிறது.
எனவே, நீதிநூல்கள் உணர்ச்சியைத் தூண்டாமல் அறிவுறுத்துவன' என்று கூறுகின்ற பொழுது, நாம் இரண்டு உண்மைகளைக் கருத்தில் இருத்த வேண்டும். மூதுரைகளாகவும், பழமொழிகளாகவும் அமைந்து அறவுரைகளைக் கூறும் நீதி நூல்களில் கருத்துக்கே முதலிடம் தரப்படுகிறது. அவற்றில் கலையுணர்வு - அழகு - இரண்டாமிடத்தைப் பெறுகிறது. இரண்டாவதாக, உணர்ச்சி' என்பது இலக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்பது வகையான சுவையுணர்வுகளைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். காவியப் புலவன் தன்னுடைய காப்பியத்தில் இன்பச்சுவை, அவலச்சுவை போன்றவற்றைப் பயன்படுத்துவதற்குக் கதையின் போக்கில் வாய்ப்புகள் பல கிடைக்கின்றன. அவன் அவ்வாய்ப்புகளை நழுவ விடாமல் நன்கு பயன்படுத்திக் கொள்ளுகிறான். அதனால் அவனுடைய இலக்கியப் படைப்பு கலையழகு பெற்று மிளிர்கிறது. அறநூல் இயற்றும் புலவனுக்கு அத்தகைய வாய்ப்பே கிடையாது. எனினும், தான் கூறவந்த கருத்துக்களைக் கற்பவருக்குக் கவர்ச்சியாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன், தன்னுடைய கருத்துக்களோடு உள்ளத்து உணர்ச்சிகளையும் இயன்றவரையில் அவன் குழைத்துத் தருகிறான். இவ்வாறு அவன் செய்யவில்லையானால், அவனுடைய இலக்கியப் படைப்பு விரைவில் மக்களால் மறக்கப்பட்டுவிடும்.
ஆகவே, 'வாழும் இலக்கியமாக' உள்ள திருக்குறள் போன்ற சிறந்த நீதி நூல்களில் உணர்ச்சிக்கு இடமில்லை என்று சொல்லுவது பொருந்தாது. ஏனெனில், உள்ளத்து உணர்ச்சியின் பொங்கலாக வெளிப்படுவதே கவிதை என்பது திறனாய்வாளரின் கருத்தாகும். ஆனால், ஒன்பான் சுவையுணர்ச்சிகளுக்கு நீதி நூல்களில் இடமில்லை
87

Page 98
என்பதை விட, அவற்றிற்குச் சிறப்பிடம் தரப்படுவதில்லை என்று நாம் கூறலாம். திருக்குறள் இதற்குக்கூட விதிவிலக்காக இருக்கிறது என்பதை ஒரு முறை அந்நூல் முழுவதையும் படித்தால் நாம் எளிதில் உணரலாம். வள்ளுவர் வீரச் சுவையையும் அவலச்சுவையையும், இன்பச் சுவையையும் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். படைச் செருக்கு என்ற அதிகாரத்தில்,
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்னை முன்நின்று கல்நின்றவர். (குறள் 771)
கைவேல் களிற்றோடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். (குறள் 774)
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும் தன் நாளை எடுத்து (குறள் 776)
என்பன போன்ற குறட்பாக்களில் வள்ளுவர் வீரச்சுவை மலிந்த சொல்லோவியங்களைத் தீட்டிக்காட்டியுள்ளார்.
இனி 'நல்குரவு' என்ற அதிகாரத்தில் அவலச்சுவை சிறப்பிடம் பெற்றுள்ளதை நாம் காணலாம்.
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு (குறள் 1048)
என்பன குறட்பாவில் வறுமையால் வாடி அல்லற்பட்டு, ஆற்றாது, அழுது, கண்ணீர் வடிக்கும் மனித இனத்தின் இதயக்குமுறல் அல்லவா எதிரொலிக்கிறது? இதைவிடச் சிறப்பாக வேறு யாரால் அவலச்சுவையைச் சித்திரிக்க முடியும்?
திருக்குறளின் மூன்றாவது பகுதியாகிய 'காமத்துப்பால்' இன்பச் சுவையை இனிது படம்பிடித்துக் காட்டும் எழிலோவியம் என்று
88

சொன்னால் அது தவறாகாது. எனவே, நீதிநூல்கள் உணர்ச்சியைத் தூண்டாமல் அறிவுறுத்துவன' எனப் பொதுவாகக் கூறப்படும் கருத்து எல்லா நீதிநூல்களுக்கும் ஓரளவிற்குத் தான் பொருந்தி வரக்கூடியதாகும். திருக்குறள் போன்ற தனிச்சிறப்பு மிக்க நீதி இலக்கியம் இதற்கு விதிவிலக்கு. அதில் கருத்துக்களுக்கு முதலிடம் தரப்படுவதோடு, உள்ளத்து உணர்ச்சிகளுக்கும் தேவையான அளவிற்குச் சிறப்பிடம் தரப்பட்டுள்ளதை நாம் உணர்ந்து போற்றாமல் இருக்க இயலாது. இக்காரணங்களால் திருக்குறள் கருத்துக் குவியலாக அமையாது, கலையழகு வாய்ந்த நீதிப்பெட்டகமாக விளங்குகிறது என்று நாம் பெருமிதத்தோடு கூறலாம்.
மகிழ்விப்பதைக் காட்டிலும்
அறிவிப்பதே மிகுதி
இலக்கியம் இன்பம் தருவது என்று கருத்து தொன்றுதொட்டே இருந்துவருவதாகும். இன்பம் தருவதற்காக - மகிழ்விப்பதற்காக - இலக்கியம் படைக்கப்படுகிறது என்ற கொள்கை பழமையானது. இலக்கிய வளர்ச்சியின் முதன் நிலையாகிய பாணர் பாடினியர் காலத்தில் ' மக்கள் பாணர்களுடைய பாடல்களைக் கேட்டு இன்புறுவதையே பேறாகக் கருதினர். அதனால், அவர்கள் பாணர்களை எங்கு கண்டாலும் மகிழ்ச்சியுடனும் வரவேற்றுப் போற்றினர். நாகரிகம் வளர்ச்சியுற்ற காலத்தில் மனிதனுக்கு இன்பம் தருகின்ற பொருள்களுள் ஒன்றாக இலக்கியம் கருதப்பட்டது. மங்கை, மது, கவிதை' என்ற மூன்றும் மனத்தை மகிழ்வித்து, மதியை மயக்குவன் என்று இந்திய நாட்டில் தோன்றிய சமணர்களும் கருதினர். இவ்வையகத்தைச் சொர்க்கமாக மாற்றுவன கவிதையும், மதுவும், மங்கையுமென்று' பாரசீக நாட்டுக் கவிஞன் உமர்கயாம் பாடியுள்ளதை அறியாதவர் யார்? வாழ்க்கை முறைகளும் சூழல்களும் பேரளவிற்கு மாறிக் கொண்டுவரும் இவ்விருபதாம் நூற்றாண்டில் வாழும் மனிதனும், இலக்கியத்தை மகிழ்ச்சியுடன்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 99
பொழுது போக்குவதற்குரிய ஒரு கருவியாகவே கருதுகிறான். வாழ்க்கையில் உண்டாகும் நெருக்கடிகள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள், மோதல்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டுத், தன்னை மறந்து இன்பத்தில் திளைக்க விரும்புகின்ற இன்றைய மனிதனுக்கு இலக்கியம் இன்புறுத்தும் கருவியாகவும், வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து சிறிது நேரம் தப்பித்துக் கொள்ளுவதற்குரிய . கருவியாகவும் தோன்றுவதில் வியப்பு ஒன்றும் க இல்லை.
* 2 அ ஞ்
கவிதை இன்புறுத்துவதாக இருக்க வேண்டும் நி என்று சொல்லுகின்ற பொழுது, அது மனிதனுடைய அனுபவத்தின் அடிப்படையில் எழுவதாகும் என்பதை நாம் மறத்தலாகாது. இலக்கிய இன்பத்தை நாம் மூன்று வகையாகப் பாகுபாடு செய்யலாம். எழுத்தாளனை எழுதுமாறு தூண்டும் இன்பம் ஒரு வகை. அது அவனுடைய வாழ்க்கையில் உண்டாவதாகும். இலக்கியத்தைப் படைக்கின்ற பொழுது அவன் அடைகின்ற இன்பம் மற்றொரு வகை; இலக்கியத்தைப் படிக்கின்றபொழுதும் பின்னர் நினைக்கின்ற பொழுதும் படிக்கின்றவரிடம் எழும் இனிக்கும் நினைவுகள் மூன்றாம் வகை இன்பமாகும். இவற்றுள் மூன்றாவது வகையாகக் குறிப்பிடப்பட்ட இன்பமே இலக்கியத்தைப் படிப்பதினால் மக்கள் பெறும் இன்பமாகும்.
க வ இ -
ஓ (9 ஓ 5
ஒ 5 5
6 ஒ ஒ
இவ்வின்பம், பெரிதும் மனிதனுடைய புலன்களுக்கு உணர்ச்சியின் நிறைவை ஊட்டுவதால் உண்டாவதாகும். ஓர் அழகிய இயற்கைக் காட்சியைக் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துவதன் மூலம், கவிஞன் நம் அகக் கண்ணிற்கு இன்பம் தரமுடியும். அதைப் போன்றே இனிய ஓசை நயத்தையுடைய எ கவிதையைப் படைப்பதன் மூலம் நம் அகக் காதிற்கு அவன் இசை விருந்தளிக்கலாம். சிறந்த கவிஞர்கள் இவ்விரு இயல்புகளையும் ஒருங்கேயுடைய சிறந்த கவிதைகளையும், இலக்கியங்களையும் படைத்து உலகின்புறுமாறு வழங்கியுள்ளனர்.
எ:
UL
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

சிறந்த பாட்டைப் படிப்பதினால் நமக்கு உண்டாகும் இன்பத்தின் பெரும்பகுதி அழகிய சொல் ஒமங்கள் (Images), இழுமெனும் இனிய ஒலி நயம், இவற்றைத் தம் அகத்தே கொண்டு திகழும் நயமிக்க தாடர்மொழிகள் முதலியவற்றால் அமைகிறது. ற்றமிகு எண்ணங்களால் எழும் இனிய சையோடு, கருத்து வளமிக்க கவிதைகளும் மன்புறுத்துவனவாக அமைவது இங்குக்
ருதத்தக்கதாகும்.
படிப்பவரை மகிழ்விப்பதற்குப் புலன் நுகர் இன்ப னைவுகளைத் தூண்டுவதையே, ஆற்றல் மிக்க ருவிகளுள் ஒன்றாக இலக்கியம் பயன் நித்திவருகிறது. இதனால் தான் கவிதையைப் பசும் பொற்சித்திரம்' என்றும், அதைப் படைக்கும் விஞனைக் கூர்ந்த மதியும் நுட்பமான புலனுணர்வும் உடையவர் என்றும் போற்றுவது மரபாக இருந்துவருகிறது. இதை நன்குணர்ந்த பிளேட்டோ, மனிதனை நல்லமுறையில் வாழவொட்டாமல், புலன் நகர் இன்பங்களை நாடி அலையுமாறு மயங்கச் சய்கிறது கவிதை” என்று குறை கூறியதோடு, தற்குத் தம் இலட்சியக் குடியரசில் இடம் காடுக்கவும் விரும்பவில்லை.
இத்தகைய மகிழ்ச்சியையும், இன்பத்தையும் நீதி Tல்கள் அளிப்பதில்லை. அவை, இதற்கு மாறாக னிதனைச் சிந்திக்கத்தூண்டும் ஒழுக்கநெறிக் ருத்துக்களை எடுத்துரைப்பதையே தம்முடைய லட்சியமாகக் கொண்டிருக்கின்றன என்பது லக்கியத் திறனாய்வாளர் சிலருடைய கருத்தாகும்.
வெறும் கருத்துக்களையும், உண்மைகளையும் டுத்துரைப்பது இலக்கியமாகாது என்பதில் ருக்கும் கருத்து வேற்றுமை கிடையாது. ஆனால் கிழ்விப்பதையே இலக்கியத்தின் குறிக்கோள்" ன்று கூறினால், அறிவு உலகம், அவற்றைப் க்கணித்துவிடும். பொழுது போக்கிற்குப் பன்படும் கேலிக் கூத்துக்களும், திடுக்கிடச்
89

Page 100
செய்யும் நிகழ்ச்சிகளும், வியப்புறச் செய்யு! புதிர்களும் நிறைந்த 'துப்பறியும் நாவல்கள் போன்றவை அத்தகைய இலக்கியங்கள் என்ற கருதி, அவற்றை அது ஒதுக்கிவிடும். மனிதனுடை ஆற்றல்களுன் இரண்டு ஒரே வழியில் ஓடிக்கொண்டு இருக்கின்றன. அவற்றுள் பயன் என்பது ஒன்று; மற்றொன்று தற்பண்பில் வெளிப்பாடாகும் (Self-expression). இவையிரண்டு ஒன்றையொன்று சந்திப்பதோடு, கலந்து விளங்கினால்தான் இலக்கியம் ஏற்றமுறும் இதனால், இலக்கியம் பொழுது போக்கிற்காக பயன்படுவதோடு, நற்பண்பினை வெளிப்படுத்தி பிறருடைய பண்புகளைப் பண்படுத்தும் ஆற்றல் உடையதாகவும் இருக்கவேண்டும் என்பது பெறப்படுகிறது. எனினும், கவிதையில் இலக்கிய நயங்கள் இடம் பெறாமல் இருப்பதில்லை கவிஞனுடைய அறிவாற்றல் திறனுக்கேற்ப அலை அமைகின்றன. பொதுவாகச் சிறந்த கவிஞன் ஒருவன் படைக்கும் இலக்கியத்தில் நாம் வெறும் இன்பத்தைமட்டும் பெறுவதில்லை. அதைவிட. சிறந்த ஒரு பயனையும் நாம் பெறுகின்றோம் வெறும் இன்பத்தைத் தான் அவ் விலக்கியம் அளிக்கிறதென்றால், அவ்வின்பம் உயர்ந்ததாக இருக்கமுடியாது. எனவே, இலக்கியம் அளிக்கு! இன்பம் நிலைபேறுடையதாக இருக்க வேண்டுமானால், மனித வாழ்க்கையை மேம்பாடுடையதாக்கும் அறநெறிக்கருத்துக்களும் அனுபவ உண்மைகளும் அதில் இடம் பெற்றுத்தானாக வேண்டும். அப்பொழுதுதான் அது வாழும் இலக்கியமாக' விளங்க முடியும் என்பது T. 5 எலியட்டின் கருத்தாகும். இதனால் மகிழ்வூட்டுவதுப் பண்படுத்துவதும் ஆகிய இருவகைப் பயன்களையு விளைவிக்கும் இலக்கியமே சிறப்புடையதாக போற்றப்படுவது புலனாகின்றது.
இலக்கியம் மக்கள் வாழ்க்கையைச் செம்மை படுத்துகிறது. அதனால், அது விழுமிய கருத்துக்கனை அறிவுறுத்தும் பணியை மேற்கொள்ள நேரிடுகிறது
90

0
ப
H C ட
0'
அறிவுறுத்துவதில் இரண்டு வகை உண்டு. நீ அதைச் செய்; இதைச் செய்யாதே!' என்று எடுத்த எடுப்பிலேயே உருட்டல் மிரட்டல்களோடு
உண்மைகளை எடுத்துரைப்பது ஒரு முறை. பெரிதும் 5 மூதுரைகள்' எனப்படும் நீதி நூல்களும், 'தரும் I சாத்திரங்கள்' எனப்படும் ஒழுக்க நெறிச்
சட்டநூல்களும் மேற்கொள்ளும் முறை இதுவாகும். மற்றொன்று நயமாகக் காரிய காரணத் தொடர்புகளை எடுத்துக்காட்டி, எதைச் செய்தால் நன்மை உண்டாகும்' எதைச் செய்தால் தீமை
உண்டாகும்' என்பதை விளக்கியுரைப்பதன் மூலம், ப் படிக்கின்றவர் உள்ளத்தில் நல்ல கருத்துக்களைப்
பதியவைப்பது. இவ்விரண்டாம் முறையே சிறந்த ம் இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பதை நாம்
காணுகின்றோம்.
-4
1.
6' = E
ச்
இவற்றுள் முதல் வகையைப் பெரும்பாலான நீதி ர நூல்கள் பின்பற்றியுள்ளன. அவை, மக்களை
பார்த்துக் கட்டளையிடுகின்ற பாணியில் தம் கருத்துக்களை எடுத்துரைக்கின்றன. தமிழில் உள்ள ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலகநீதி,
வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி போன்ற க
நீதிநூல்களும், பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நான்மணிக்
கடிகை, திரிகடுகம், ஆசாரக்கோவை, முதலிய ய நீதி நூல்களும் இவ்வகையைச் சேர்ந்தவை. 2, திருக்குறள், பழமொழி போன்றவை இரண்டாம்
வகையைச் சேர்ந்தனவாகத் தோன்றுகின்றன.
5.
து
5• ப 91
நன்கு வரையறுக்கப்பட்ட நோக்கங்களோடு ம், நீதி நூல்கள் இயற்றப்படுகின்றன. குறிப்பிட்ட சில
உண்மைகளையோ, கருத்துக்களையோ அறிந்து ப் மனித இனம் நல்வாழ்வு வாழவேண்டும் என்று
கருதுகின்ற சான்றோர்கள், அவற்றை முறைப்படுத்தித் தெளிவுறுத்துகின்றனர். அவ்வாறு அவற்றை எடுத்துரைக்கும்பொழுது, கற்போர் உள்ளத்தில் அவ்விழுமிய கருத்துக்கள் நன்கு பதிய வேண்டும் என்பதற்காகச் சில இலக்கியத்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 101
திறன்களை அவர்கள் கையாளுகின்றனர். அந்நிலையில் நூலிற்குரிய பத்துவகை அழகுகள், க அவர்கள் 'சுருங்கச் சொல்லுதலை' முதன்மை : யானதாகக் கொள்ளுகின்றனர். அவற்றை விளங்கவைக்க முயலுகின்றனர். ஆனால், நவின்றோர்க்கு இனிமை' பயக்கும் வகையில் அவற்றில் நன்மொழியினைப் புணர்த்தியும், ஓசையுடையதாக அமைப்பதையும் பற்றி அவர்கள் பொதுவாக கவலைப்படுவது இல்லை.
- 17
9
1. வ த த
எனவே, நீதிநூல்கள் உணர்ச்சித் துடிப்பும், அனுபவக் கனிவும் கலந்த படைப்பு இலக்கியங்களாகக் கொள்ளப்படுவது இல்லை. இக்காரணத்தினால், நீதிநூல்கள் மகிழ்விப்பதைக் காட்டிலும் அறிவுறுத்தும் இயல்பு மிகுதியு முடையனவாகத் தோன்றுகின்றன. இதனால் நீதி நூல்களைச் சிலர் இலக்கியமாகக் கொள்வதற்குத் தயங்குகின்றனர். நீதிநூல்கள் நீதிகளைப் போதிக்கின்றன என்பதனால் அவர்கள் அவற்றை வெறுக்கவில்லை. அவற்றில் இலக்கியத்தின் இயல்புகள் போதிய அளவிற்கு இடம்பெறாமல் போவதையே அவர்கள் குறையாகச் சுட்டிக் காட்டுகின்றனர். இலக்கிய இன்பம் நிறைந்த நீதிநூல்கள் பண்டைக் காலத்திலும் சிறப்புடை யனவாகப் போற்றப்பட்டன; இன்றும் போற்றப் படுகின்றன.
--
கலையழகு
கலை என்பது அதனிடத்தில் பழகு கின்றவர்களை உணர்வு வலையில் சிக்கச்செய்வது. கலைகளிலே சிறந்தது இலக்கியக் கலை என்பது அனைவரும் அறிந்த உண்மை. இலக்கியத்திற்கு இன்றியமையாதது தேவைப்படுவது கலையழகு. கலை கருத்தின் உறைவிடம்; அழகின் பிறப்பிடம்; இன்பத்தின் நிறைவிடம். "நிறைந்த அழகை அனுபவிக்கும் பொழுது உண்டாகும் உணர்வு மீண்டும் வெளிவர முயல்கிறது; அங்ஙனம் வெளிப்படுகையில் அது கலை வடிவம்
பு
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

கொண்டுவருகிறது; வெளியிடுபவன் தன்மைக்கும் சக்திக்கும் ஏற்ற கலையாக அது முகிழ்க்கிறது.” அதனால், அதில் அழகு இயற்கையாக அமைந்து பிடுகிறது. கலையழகிற்குரிய பண்புகள் ஒற்றுமை தயம், உயிர்த்துடிப்பு, வரம்பின்மை, ஒய்வு - உறக்கம் Repose) என்பன. இவை அனைத்தும் பொருந்தியுள்ள பொருளையே கலையழகு வாய்ந்தது என்று நாம் கூறுகிறோம். கலைகளில் இருவேறு பகையான இன்பவூற்றுக்கள் உள்ளன. ஒன்று வெறுமனே எடுத்துரைக்கும் முறையாலும், வடிவ அமைப்பாலும் உண்டாகும் இன்பம். மற்றொன்று அறிகுறிகளாலும் அறநெறிக் கருத்து வடிவங்களாலும் உண்டாகும் இன்பம். இவை பிரண்டும் ஒருசேர இணைந்தும் இழைந்தும் உள்ள கலைகளே அழகுணர்ச்சியோடு, வற்றாத இன்பத்தையும் அளிப்பனவாகும்.
கலைகளிலே சிறந்தது இலக்கியக்கலை என்பது ஏன்? அறிவின் கலப்பு இல்லாத காரணத்தாலும், கேட்போரைக் கவரும் தன்மையாலும் இசையே சிறந்தது என்பர் சிலர். ஆனால், மக்கள் வாழ்க்கையின் சிறப்பியல்பாக உள்ள மொழியால் அமையும் காரணத்தாலும், இவ்வுலகில் தொன்றுதொட்டு ஆன்மிக நிலை பேற்றிற்குரிய கருவியாக அமைந்து பயன் தருவதாலும் அதைவிட இலக்கியமே சிறந்தது என்பர் பலர்.7
இவ்விலக்கியக் கலையின் எழிலுக்கும், ஏற்றத்திற்கும் காரணமாக விளங்குவது அதனிடத்துப் பொதிந்து கிடக்கும் கலையழகாகும். இக்கலையழகு இலக்கியத்தில் எவ்வாறு அமைகிறது என்பதைப்பற்றி இங்கு நாம் காண்போம். கவிதை அல்லது இலக்கியம் எதைத் தெரிவிக்கிறது (Communicate) என்பதைப் பற்றி ஆராய்வதனால் அதன் உட்பொருளைப்பற்றியும் அதன் சிறப்புக்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுகின்றோம். இதற்கடுத்த நிலையில் அந்தக் கருத்துக்களை எப்படி அது
91

Page 102
எடுத்துரைக்கிறது (Expression) என்ப ை ஆராய்கின்றபொழுது, நாம் அதனுடைய வடிவத் ை - புறத் தோற்றத்தைப்பற்றிச் சிந்திக்கின்றோ! அப்புறத் தோற்றமே இலக்கியத்தின் கலையழகிற் நிலைக்களனாக அமைகிறது.
கவிஞன் தான் உணர்ந்த உணர்ச்சிகளுக்கு ஒரு வடிவம் கொடுக்க முயலுகிறான். வே! வகையாகச் சொல்லுவதானால், தான் பெற், அனுபவத்தைப் பிறருக்கு எடுத்துரைக்க அவள் முயலுகிறான். அம்முயற்சியின் பயனாகமே அவனுடைய அனுபவம் கலைவடிவம் பெறுகிறது மனிதன் தான் பெற்ற அனுபவத்தை, உணர்ச்சியை பிறருக்கு எடுத்துரைப்பதற்குப் பயன்படுத்து கருவிகளுள் கலைகளைப் போன்ற சிறப்புமிக்க வடிவம் உலகில் வேறொன்றும் இல்லை தன்னையறியாமலேயே அல்லது தன்னுணர்வு இல்லாமலேயே, அவன் தன் பணியை. செய்கின்றபொழுது அதன் அருமை பெருமைகளை அழகுற வெளிப்படுத்தி விடுகிறான். தான் படைக்க விரும்பும் கவிதையோ, நாடகமோ நல்ல முறையில் தன் அனுபவத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தன் கடமையில் கவிஞன் ஈடுபடுகிறான். அதனால் தன்னையறியாமலே அவன் நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிறருக்கு அதை எடுத்துரைத்து விடுகிறான் தன்னுடைய கவிதையைப் பொதுமக்களோ அறிஞர்களோ எப்படி வரவேற்பார்கள் அல்லது அதனால் இயக்கப்படுவார்கள் என்பதைப்பற்ற யெல்லாம் அவன் கவலைப்படுவதில்லை. எந்தக் கவிஞன் தன் கவிதையைப் படைக்கின்ற பொழுது அதன் மூலம் தன் உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்தலாம் - பிறருக்கு உரைக்கலாம் . என்பதைப் பற்றிக் கவலைப்படுகின்றானே அவனுடைய படைப்புத் தரம் குறைந்ததாக அமைந்துவிடும். கலைஞர் பெற்ற அனுபவத்தை எத்துணை அளவிற்குச் சிறப்பாக ஒரு கலைப்பொருள் எடுத்துரைக்கிறதோ, அத்
92

த
துணையளவிற்குத் தான் அத்தகைய அனுபவ உணர்ச்சியைப் பிறரிடத்து அது கிளர்ந்தெழுமாறு செய்ய முடியும்.
ஆகவே, கவிஞன் தன்னுடைய படைப்பில் தற்சார்பற்ற பண்புகள் இடம்பெற வேண்டும் என்று நினைத்து, தனி மனித அனுபவத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட கட்டமைப்பை உடைய கவிதையைப் படைப்பானானால், அதில் வாழ்க்கையோடு தொடர்பற்றதும், உணர்ச்சியும், கலையழகும் குன்றியதுமான பண்புகளே அமைந்து விடும். இத்தகைய கவிதைகள், அறிவாராய்ச்சித் துறைக்குரியனவாகக் கொள்ளப்படுமேயொழிய, இலக்கியமாகக் கருதப்படா.
ச்
சு.
)
இதைப் போன்றே, யாராகிலும் தான் பெற்ற அனுபவத்தையும், உணர்ந்த உணர்ச்சிகளையும் கவிதையின் வாயிலாக எடுத்துரைப்பதையே நோக்கமாகக் கொண்டு அதற்காக அரும்பாடுபட்டு, அவற்றை வெளிப்படையாகத் தோன்றுமாறு படைப்பார்களானால், அது அவர்களுடைய உணர்ச்சித் தூண்டுதல்களைச் சித்திரிப்பதாக அமையுமே ஒழிய, பிறரிடத்து அத்தூண்டுதல்களை எழுச்சியுறச் செய்யாது. மேலும், அது முழுநிறைவுடைய கலைப்படைப்பாகவும் அமையாது. அத்துடன் அக்கலைஞனுக்கு அம்முயற்சியில் தோல்வி உண்டானாலும் உண்டாகிவிடும். எனவே, கலைப்பொருள்களைப் படைக்கும் கலைஞனுடைய அனுபவத்தையும் உணர்ச்சித் தூண்டுதல்களையும் மறைமுகமாக எடுத்துரைப்பதாக அப்பொருள் அமைய வேண்டும். அப்பொழுதுதான் அவற்றைப் படைத்த கலைஞர்கள் தம் முயற்சியில் வெற்றி பெறமுடியும்.
|
சிறந்தவை என்று போற்றப்படும் பயன் மதிப்புக்களின் களஞ்சியமாகக் கலைகள் விளங்குகின்றன. அவை தனிச்சிறப்பு வாய்ந்த மனிதர்களிடையே ஊற்றெடுக்கின்றன; அவர் களுடைய வாழ்க்கையில் நெடுநேரம் நிலைபெற்று
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 103
நின்ற அனுபவத்தின் வெளிப்பாடாக அவை தோன்றுகின்றன. அவர்கள் தம் வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தை அடக்கியாளும் ஆற்றல் உச்சநிலையில் இருக்கின்றபொழுது அவை முகிழ்க்கத் தொடங்குகின்றன. அத்தகைய நேரத்தைத்தான் நாம் படைக்கும் உணர்ச்சி மிக்க நேரம்' என்று சொல்லுகிறோம். அச்சமயத்திலேயே கலைப்பொருள்கள் பிறக்கின்றன. படைக்கப்படும் நேரத்தாலும், அனுபவத்தை எடுத்துரைக்கும் கருவியாக அமையும் காரணத்தாலும் அவை சிறந்த பயன் மதிப்புடையனவாக நிலைபெற்று விளங்கு கின்றன.
பிறரால் அன்றாட வாழ்வில் எடுத்துரைக்க இயலாத அல்லது சமுதாயத்தின் தூற்றலுக்கு அஞ்சி எடுத்துரைக்க நடுங்குகின்ற அனுபவங்களை யெல்லாம், கவிஞன் ஒருவனால்தான் கவலையின்றி முழுமையாகப் பிறரும் உணர்ந்து, மெய்மறக்கும் வகையில் எடுத்துரைக்க முடியும். கவிஞன் பிறரால் கண்டுணர முடியாதவற்றைக் கண்டுணர்கிறான். மற்றவர்களால் எடுத்துரைக்க முடியாதவற்றைக் கவிஞன் ஒருவன் தான் உரிமையுடனும், திறமையுடனும், துணிச்சலுடனும் எடுத்துரைக் கின்றான். இதனால் கவிஞன் முக்காலமும் உணர்ந்த ஞானியாகவும், கலைஞனாகவும், மதகுருவாகவும் காட்சி தருகிறான். அவன் படைக்கும் கலைகளை நல்ல முறையில் அணுகினால், அவை எத்தகைய அனுபவங்களின் வெளிப்பாடு என்பதையும், மற்றவற்றைக் காட்டிலும் அவை எத்தகைய பயன்மதிப்புடையவை என்பதையும் நாம் நன்குணர முடியும்."
இதை நாம்புரிந்து கொண்டால், தன்னுணர்ச்சிப் பாடலாக இருந்தாலும், காப்பியமாக இருந்தாலும், நாடகமாக இருந்தாலும், நீதிநூலாக இருந்தாலும், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு அவன் கையாளும் முறைகளையும், அனுபவத்தைப் பிறர் உணருமாறு எடுத்தியம்புவதற்குப் பின்பற்றும்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

வழிவகைகளையும் அடிப்படையாகக் கொண்டே, அவற்றின் கலைத்திறன் மதிப்பிடப் பெறுகிறது என்ற உண்மையை எளிதில் உணரலாம்.
எனவே, நீதி நூல்களிலும் கலையழகு உண்டு என்பதும், அது தம் அனுபவத்தைக் கவிஞன் எடுத்தியம்பும் முறையின் சிறப்பையொட்டி அமைகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.
நீதி இலக்கியத்தின் முதன்மைப் பண்பு
நீதி இலக்கியத்தின் இயல்புகளை அறிவதற்கு முன்னர், இலக்கியத்தின் பொதுப்பண்புகளையும், சிறப்பியல்புகளையும் நாம் அறிதல் நலம் பயக்கும். எழுத்தாளர்கள் எழுதிக்குவிப்பதை யெல்லாம் இலக்கியம் என்று நாம் ஏற்றுக்கொள்வதில்லை. மக்கள் படித்து இன்புறத் தக்கனவாகவும், சிறந்த கருத்துக்களைத் தெரிவிப்பனவாகவும் அமையும் படைப்புகளையே இலக்கியம் என்று அறிஞர்கள் போற்றுகின்றனர். எந்த எழுத்தாளன், தான் எடுத்துக் கொண்ட பொருளிலும் அதை எடுத்தியம்பும் முறையிலும் பொதுமைப் பண்பு திகழுமாறு படைக்கின்றானோ, அந்த எழுத்தாளனுடைய படைப்பே இலக்கியமாகக் கருதப்படுகிறது. மனித இனம் அறிந்தவற்றுள்ளே சிறந்தவற்றையும், சிந்தித்தவற்றுள்ளே சிறந்தவற்றையும் தன்னகத்தே கொண்டு திகழ்வது இலக்கியம் என்று அறிஞர்கள் கூறுவர். இவ்விளக்கம் நீதி இலக்கியத்திற்குச் சிறப்பாகப் பொருந்துவதாகும்.
பொதுவாக இலக்கியத்தைப் படைக்கும் கலைஞன், தான் உணர்ந்தவற்றை விளக்கி யுரைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறான். இவ்வகையில் அவன் தன்னைத் தானே புதிதாகக் கண்டுகொள்ளுவதற்கு அல்லது தன் வேட்கைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்குரிய ஒரு கருவியாகவே இலக்கியத்தைக் கருதுகிறான். சிலர் படிப்பவரைப் பற்றிக் கவலையுறாது
93

Page 104
மன நிறைவிற்காகவே
இலக்கியத்தைப் படைப்பதுமுண்டு. ஆனால், உலக இலக்கியத்துள் பெரும் பகுதி, மக்களுக்கு மகிழ்வூட்டும் நோக்கத்தோடும், அறிவுறுத்தும் அல்லது தங்கள் கருத்தினை ஏற்குமாறு படிப்பவரை இணங்கச் செய்யும் நோக்கத்தோடும் படைக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
புதிதாக எடுத்துரைக்கும் கருத்துக்களை மட்டும் கருத்தில் கொண்டு ஒரு படைப்பினை நாம் மதிப்பிடுவதில்லை. மனித வாழ்க்கையின் முதன்மையான உண்மைகள் சிலவற்றை அழகாகவும், கவர்ச்சியாகவும், உணர்ச்சித் துடிப்போடும் எடுத்துரைக்கின்றனவா என்பதை அளவு கோலாகக் கொண்டே இலக்கியங்கள் மதிப்பிடப் படுகின்றன. அவ்வுண்மைகளும் அனைவரும் நன்கறிந்தனவாக இருத்தல் வேண்டும். அவற்றை அறிவுறுத்துவது இலக்கியப் படைப்பாளனுடைய நோக்கமன்று. மனித உணர்ச்சிகளைப் போற்றி, அவற்றின் மறைபொருள் களாகத் தோன்றுகின்ற உண்மைகளை விளக்கி யுரைக்கும் வகையில் அவன் அவற்றை எடுத்துரைக் கின்றான். இதனால், சிறந்த இலக்கியத்துள் அறிவு நலம் கனிந்த கருத்துக்கள் மனித வாழ்க்கையின் உண்மைகளுக்கும் விதிகளுக்கும் பொருந்தி வருவனவாக அமைகின்றன. எனவே, ஆசிரியர் உணர்ந்த வாழ்க்கை உண்மைகளைக், கற்பனை வண்ணத்தோடு எடுத்தியம்புவதே இலக்கியம் என்று கருதப்படுகிறது. கருத்துக்களின் உண்மை இயல்புகளை அடிப்படையாகக் கொண்டே எடுத்துரைக்கும் முறை சிறப்புற்று விளங்குகிறது. புறத்தோற்றத்தில் தோன்றுவதைப் போன்று, வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் இலக்கியத்திற்குக் கிடையாது. அது மனித வாழ்க்கையின் உள்ளார்ந்த பண்பு களைப் பெரிதாக்கிக்காட்டும் நுண்நோக்காடி (MiCTOSCOpe) யாகும்.
94

எனவே, இலக்கியம் என்பது மனிதப் பண்பை அடிப்படையாகக் கொண்டது. மனித உணர்ச்சிகளை மதித்துப் போற்றுவது. மனித வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவது; மனிதனை மனிதனாக வாழுமாறு நெறிப்படுத்துவது என்று நாம் கூறலாம்.
நீதி இலக்கியம் என்பது மனிதனை மனிதனாக வாழச் செய்வதாகும், மாண்பு மிகு மனிதனாகச் சிறப்புற்று விளங்கச் செய்வதற்கும் வழிகாட்டும் அறநெறிக் கருத்துக்களை எடுத்துரைப்பதேயாகும். நீதி இலக்கியத்தைப் படைப்போர் தங்கள் உள்ளத்திற்குக் கூறுகின்ற முறையிலோ உலகை நோக்கி உரைக்கின்ற முறையிலோ அறநெறிக் கருத்துக்களை அறிவுறுத்துகின்றனர். அவர் களுடைய எண்ணமெல்லாம்
அறிவுரை கூறுவதிலேயே தோய்ந்து கிடக்கிறது. அதனால் அவர்கள் நாம் அறிவுரை போதிக்கும் சமயா சாரியராகக் கருதிவிடக்கூடாது. அவர்கள் அறிவுறுத்துவதையும், வழிகாட்டுவதையும் தங்கள் கடமையாகக் கொண்டவர்களாவர். கவிஞர்களோ அறிவுறுத்துவதோடு, நம்முடைய உணர்ச்சிகளைக் கிளர்ச்சியுறச் செய்கின்றனர். நாம் உணர்ந் தவற்றையே வாழ்க்கைச் சூழல்களுக்கேற்ப, அறிந்து போற்றுமாறு கலையுணர்வோடு கலந்து அவர்கள் தருகின்றனர்.
சிறந்த கவிஞர்கள் நீதிநூல் ஆசிரியர்களாகவும் பண்டை உலகில் சிறப்புற்று விளங்கினர் என்பதை உலக இலக்கிய வரலாறு நமக்கு அறிவிக்கிறது. அவர்கள் மிகச் சிறந்த அறநெறிக் கருத்துக்களை எடுத்துரைக்கின்ற பொழுது, இலக்கியத்தின் சிறப்பியல்புகளும், கலையழகும் குன்றாத வகையில் திறம்பட எடுத்துரைத்துள்ளனர். எனவே, கவித்திறனும், நீதிக் கருத்துக்களும் ஒருங்கே பொருந்தி வாராது என்று சொல்லுவது பொருத்தமில்லை. நீதி இலக்கியத்தை இயற்றும் கவிஞன் சிறந்த கலைஞனாக இருப்பானானால்,
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 105
அதில் அறிவுரைகளுக்கு அவன் முதன்மையிடம் | கொடுத்திருந்த போதிலும், இன்புறுத்தும் கவிதைப் பண்புகளும், கலையழகும் கற்பவர் உள்ளத்தைக் கவரும் வகையில் அவனால் இடம்பெறச் செய்ய முடியும்.
8
4
--
நீதி இலக்கியத்திற்கும், பிற இலக்கியங் களுக்கும் இடையே உள்ள வேற்றுமை, கருத்துக்களை அறிவுறுத்துவதை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அன்று. அவற்றை எடுத்துரைக்கும் முறையில் அமையும் வேறுபாடே அவற்றை இருவேறு வகைப்பட்ட இலக்கியங்களாகக் கருதுமாறு செய்கின்றன. பொதுவாக நீதி இலக்கியத்தை இயற்றிய கவிகள் பலர், தங்கள் கடமை அறிவுறுத்துவது மட்டும்தான் என்று தவறாகக் கருதியதன் விளைவாக, அவர்களுடைய படைப்புகள் கலைநயமில்லாக் கவிதைகளாக - வெறும் சொல்லடுக்குகளாக அமைந்துவிட்டன. ஆனால், சிறந்த கலையுள்ளத்தோடு, சிந்தனைத் திறனும், மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் நாட்டமும் கொண்ட நல்லறிஞர்கள் தங்கள் கொள்கை களையும், கோட்பாடுகளையும் உணர்ச்சி என்ற வண்ணத்தில் குழைத்து, கற்பனை என்ற
குறிப்புகள் 1. Winstatt, K. William andBrooks, Cleanth: Literary criti
Calcutta, 1964. 2. Winchester, C. T: Some Principles of Literary Criticis! 3. தேசிக விநாயகம்பிள்ளை : மொ.பெ. உமர்கயாம் பாடல்கள், பா.
Plato: Republic, Book X, p. 407; Tr: by Rouse. W. H. 5. Eliot : T. S : On Poetry and Poets, p. 18. Faber and Fa 6. Croce, B: Aesthetic - As Science of Expression, p. 20
1909. 7. Abercrombie, L: The Idea of Great poetry, p.25. Lond 8. Richards, I, A: Principles of Literary Criticism, P.33,
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

மெருகிட்டுப் பொலிவுடன் விளங்குமாறு உலகிற்கு அளித்துள்ளனர். அதனால், அவை கலைநயமிக்க கலைப் பொருள்களாகவே தோன்றுகின்றன. இத்தகைய இயல்புகளையுடைய நீதிநூல்களில் வாழ்க்கையின் உண்மைகளும், ஒழுகலாறுகளும் புதியதோர் பொலிவும், உள்ளத்தைக் கவரும் வலியும், பயன்மதிப்பும் பெற்று விளங்குகின்றன.
இதுவரை நாம் மேற்கொண்ட ஆய்விலிருந்து வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தோன்றுவது இலக்கியம் என்பதையும், வாழ்க்கையைத் திருத்துவதாகவும், திருத்தமுற்று அமைவதற்கு அறிவுரை கூறுவதாகவும் அமைவது நீதி இலக்கியம் என்பதையும் அறிகின்றோம். அந்நீதி இலக்கியம் பெரும்பாலும் உணர்ச்சியைத் தூண்டாமல் அறிவுறுத்துவதாகவும், இன்புறுத்து வதைக் காட்டிலும், அறிவிப்பதை முதன்மையான நோக்கமாகக் கொண்டதாகவும், கலையழகைவிடக் கருத்திற்கே முக்கியத்துவம் தருவதாகவும் சொல்லப்படுவது ஓரளவிற்கு உண்மையென நாம் ஒப்புக் கொள்ளலாமே யொழிய, முற்றிலும் உண்மையெனக் கொள்வதற்கு இயலாது என்பதும் பெறப்படுகிறது.
cism, AShort History, p. 426. Oxford BookCompany,
m, p. 1ெ. Macmillan & Co; London, 1960. எண் : 106 : பாரி நிலையம், சென்னை, 1951. DMentor Book; N. Y. : 1956. Der, London, 1957. 5. Tr. by Douglas, Ainslie, Macmillan & Co, London,
don. 1926. Routledge&Kegan Paul, London. 1961.
95

Page 106
நீதி நூல்கள் இலக்கிய இ
இலக்கியம் கடந்த காலத்தின் கன்னி; நிகழ்காலத்தின் மனைவி; எதிர் காலத்தின் தாய். அவளுடைய கன்னிப் பருவத்தின் இன்பக் கனவுகளையும் எழில்மிகு கற்பனைகளையும் எடுத்தியம்புவதே கவிதை. அது கடந்த காலத்தைப் படம்பிடித்துக் காட்டுவதாலும், நிகழ் காலத்தைக் காண்பதாலும், எதிர் காலத்தை ஓர்ந்து உணர்வதாலும், சமகால மக்களிடத்தில் தனது அனுவங்களைப் பகிர்ந்து கொள்வதாலும், கடந்த காலத்தின் கன்னியாகவும், நிகழ்காலத்தின் மனைவியாகவும், எதிர் காலத்தின் தாயாகவும் விளங்குகிறது.
இலக்கியமும் கவிதையும்
மனித இனத்தின் அனுபவங்களைக் கலைநயத்துடன் எடுத்துரைப்பதே இலக்கியம். இலக்கியம், கவிதை என்ற சொற்களைப் பெரும்பாலும் ஒரேவகையான பொருளில் வழங்குவது மரபாகும். சொற்களைப் படைப்பாற்றலுடனும் இனிய ஒலி நயத்துடனும், மறவாமல் மனத்தில் நிலைத்து நிற்கத்தக்க பொருள் ஆழத்துடனும் பெற்றுள்ளது இலக்கிய மென்றால், அது கவிதையின் சாரமாகத் தானிருக்க முடியும். நாடகமும், நாவலும், கட்டுரையும் கவிதை நடையில் எழுதப் பெறுகின்ற பொழுதான் அவை சிறப்புற்று விளங்குகின்றன. கவிதையோ இலக்கியத்தின் ஒரு பகுதிதான். ஆயினும், இலக்கியத்தைச் சிறப்புறச் செய்வதும், அதன் முழுநிறைப் பிரதிநிதியுமாக இருப்பதும் அக்
96

நம் யல்புகளும்
கலாநிதி எஸ்.திருநாவுக்கரசு
கவிதைதான். இலக்கியத்தின் இயல்புகளைச் செறிவு மிக்கவகையில் போற்றி வளர்த்ததன் பயனே கவிதையாகும். விரிந்து, பரந்துபட்டதும் சிக்கலானதுமான அனுபவங்களைக் கவிஞன் வெளிப்படுத்துவதற்கு முயலுகின்றான். இதற்கு, அவன் யாப்பு முறை சார்ந்த செய்யுள் நடையின் மூலம் பல திறப்பட்ட சொல்படிமங்களைக் (Imageries) கவிதையிலே பயன்படுத்துகிறான். அனுபவங்களை இத்தகைய முறையில் வகைப்படுத்தியுரைப்பதும் எல்லா வகையான இலக்கியங்களிலும் காணப்படும் முதன்மைப் பண்பாகும். கவிதையைக் காட்டிலும் இலக்கியம் என்பது விரிந்த பொருளுடையது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால், அண்மைக்காலம் வரையில் கவிதை ஒன்றுதான் இலக்கியமாகக் கருதப்பட்டுவந்ததை உலகம் நன்கறியும். கற்பனை வளமும் கலையழகும் வாய்ந்த இலக்கியங்கள் இன்று பல வகையாக வளர்ந்துள்ளன. இந்தியாவைப் போன்ற கீழ்த்திசை நாடுகளில் ஐரோப்பியருடைய வருகை வரையில், கவிதையொன்றே இலக்கியத்தின் பிரதிநிதியாகச் சிறப்புற்று விளங்கியதைக் காணுகின்றோம். இலக்கியம் இன்று பல கிளைகளாகப் பிரிந்து வளர்ச்சியுற்ற போதிலும், அவற்றிற்கெல்லாம் வழிகாட்டியாகக் கவிதைக்கலை சிறப்புற்று விளங்குகிறது. இதனால்தான் இலக்கியம் என்பது பெரும்பாலும் கவிதையின் நெகிழ்ச்சிமிக்க வடிவாகவும், கவிதை என்பது இலக்கியத்தின் செறிவுமிக்க வடிவாகவும் கருதப்படுகின்றன.
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 107
இதனைப் பேராசிரியர் டாக்டர்.. மு.வரதராசனார் அவர்கள்.
''இலக்கியம் என்னும் கலைக்குடும்பத்தில் மூத்தமகளாய்ப் பிறந்து விளங்கிய பாட்டு என்னும் செல்வி. தொடக்கத்தில் ஒரே செல்வ மகளாக விளங்கிய காலம் பழங்காலம். காவியம், நாடகம், அகம்புறம் முதலாய எல்லாக் குடும்பப் பொறுப்புக்களையும் அந்த முத்த மகனே மேற்கொண்டு செம்மையாக நடத்தி வந்தாள். அவளை அடுத்துத் தங்கையர் பிறந்து வளர வளர, இப்பொறுப்புக்கள் ஒவ்வொன்றாய் அவள் கையை விட்டு நழுவலாயின் . இன்று அவளுடைய தங்கையர் தொடர்கதை, சிறுகதை, நாடகம், கட்டுரை முதலியன, மேற்கொண்டு தமக்கையை விட்டுப்பிரிந்து செல்வாக்குடன் வாழ்கின்றனர். மூத்த மகளாகிய பாட்டு, பிறந்த வீட்டிலேயே நின்று, பழைய செல்வங்களைத் தங்கையர்க்கு வாரி வழங்கிய பின், தன்னுணர்ச்சி, சமுதாய உணர்ச்சி ஆகிய இருவகைப் பொறுப்புக்கள் மட்டும் உடையவளாய் வாழ்கின்றாள், தன் முன்னைய சீரும் சிறப்புமான பெருவாழ்வை நினைந்து இன்புறும்
பேறு அவளுக்கு இன்று உள்ளது" 1 என்று தெளிவுறுத்தியுள்ளார்.
'கற்பனை வளமும் கலையழகும்' நிறைந்தது கவிதை என்ற கருத்துத்தான், இலக்கியத்தில் சிறந்தது கவிதை என்பதை அறிவிப்பதாக அமைகிறது. இன்றைய நிலையில், எழுதப்படுவன அல்லது சொற்களின் மூலம் எடுத்துரைக்கப் படுவன யாவும் விரிந்த பொருளில் இலக்கியம் என்று கொள்ளப்படுகின்றன. அறவியல் அல்லது அறிவு நலமிகுந்த ஆராய்ச்சிகளை இலக்கிய மென்று கொள்ளுவதில்லை. பயன் கருதித் தனிவாழ்விலோ, வாணிகத்திலோ பொருளீட்டு வதற்குப் பயன் படுத்தப்படும் எழுத்துரை களையெல்லாம் நாம் இலக்கியம் அல்லவென்று ஒதுக்கி விடுகிறோம்.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

மனிதனின் உணர்வுநிலைகளை உருவாக்கும் பல்வேறு வகையான எண்ணங்களையும், உணர்ச்சி களையும் கொண்ட மனத்திறனிலிருந்து தோன்றுவதோடு, அவற்றிடையே நல்லதொரு இயைபையும் இலக்கியம் போற்றி வளர்க்கிறது. அதனால், அதைக் 'கற்பனை வளமிக்க எழுத்துரைகள்' என்று நாம் கூறுகிறோம். மனிதனின் உணர்வுநிலைகளின் பல்வேறு கூறுகளும் ஒருங்கு இயைந்து செயற்படுதலைக் கருத்தில் கொண்டே, ஆங்கிலேய திறனாய்வாளர்களான டிரைடனும் (Dryden), கோல்ரிட் ஜூம் (Coleridag), கற்பனை என்பது தனிச் சிறப்புமிக்க கவிதைத் திறனாகும்' என்று குறிப்பிட்டுள்ளனர். இக் கருத்து பொதுப்படையானதேயொழிய, உளவியல் சார்புடையது அன்று.
இலக்கியத்தின் நோக்கம்
இனி, இலக்கியத்தைக் கலையழகு' வாய்ந்தது என்று கூறுகின்றபொழுது இசை, ஓவியம், முதலிய அழகுக் கலைகளைப் போன்று, இலக்கியமும் இன்புறுத்துவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதை நான் உணருகிறோம். மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிப்பனவற்றுள் உயர்ந்ததும் சிறந்ததுமாகப் போற்றப்படுவது இலக்கியக் கலையாகும்.
இன்புறுத்துவதை மட்டும் இலக்கியத்தின் நோக்கமாகக் கூறுவர் சிலர். ஆனால், இன்புறுத்துவதோடு வாழ்க்கையைத் திருத்தி, செம்மைப் படுத்துவதாகவும் இலக்கியம் விளங்கவேண்டும் என்பதே பேரறிவாளர்களின் முடிபாகும். ஏனெனில், இலக்கியம் மனித வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தோன்றுவது; மனித வாழ்க்கையைப் பிரதிபலிப்பதன் மூலம் அது தனிச் சிறப்புமிக்க கலையாகத் திகழ்வது. எனவே, அது வாழ்க்கையில் தீவிரப் பங்கு கொள்ளுகிறது; வாழ்க்கையை ஆராய்கிறது; அதன் நிறைகுறைகளை அம்பலப்படுத்துகிறது; அதிலிருந்து
97

Page 108
படிப்பினைகளைப் பெறுகிறது. மேலும், தேவையானால் தீர்ப்பு வழங்குவதும் இலக்கியத்தின் நோக்கமாகிறது. இலக்கியம் வாழ்க்கையிலிருந்து பிறக்கிறது; ஆனால், எதிர்காலத்தைச் சித்திரிப்பதன்
மூலம், அது வாழ்க்கையை வென்று விடுகிறது.
ஆகவே, இலக்கியம் என்பது வாழ்க்கையால் படைக்கப்படுகிறது; வாழ்க்கைக்கும் மனிதனுக்கும் புத்துயிர் அளிக்கிறது எனலாம். அழகை விரும்பிப் போற்றுவதற்கும், நன்மை தீமைகளைப் பகுதுண்ருவதற்கும் அது நமக்குப் பயிற்சி அளிக்கிறது. மனிதனின் தன்னறிவை வெளிப்படுத்துவது இலக்கியம். அதன் மூலம்தான் அவன் தன்னுடைய சிறப்புமிக்க உண்மையான வடிவத்தை அறிந்து கொள்ள முயலுகின்றான்.
இலக்கிய இயல்புகள்
கலைகளுள் சிறந்தது இலக்கியம். அதன் சிறப்புமிக்க பண்புகள் நான்கு. அவை உணர்ச்சி, கற்பனை, கருத்து, வடிவம் என்பன. அவை இலக்கியத்தின் மூத்தமகளாகிய கவிதைக்கே சிறப்பாக அமைந்த பண்புகள் எனலாம். உண்மையில் கவிதை என்பது இத்தகைய இலக்கியத்திறன்களால் மட்டும் பிறப்பதன்று; அது இயற்கை ஆற்றலினால் மலர்வது.
ஒரு கவிஞனுக்குக் கவித்திறகும், உத்தியும், இவற்றை வெளியிடும் ஆற்றலும் வேண்டும். இவற்றோடு, அவனுள்ளே ஏதோவொன்று கனன்று எரிந்து கொண்டிருக்கிறது; அது முட்டி மோதி வெளியே வர முயலுகின்றது. இறுதியில், ஓர் ஒளிச்சுடராக அது வெளிப்படுகிறது. அந்நிலையில் அவனுடைய உணர்ச்சிப் பெருக்கு உயிர்த் துடிப்புடைய கவிதையாக மலர்கிறது.
எனவே, கவிதையின் உயிராக இருப்பது உணர்ச்சி எனலாம். சொல், ஒலிநயம், தாளம் முதலியவை உணர்ச்சியை வெளிப்படுத்த உதவும் கருவிகளேயாகும். அவற்றின் வாயிலாக உள்ளத்தில்
98

கொந்தளிக்கும் உணர்ச்சிகள் கவிதையின் வடிவிலே வெளிப்படுவதோடு, நிலைத்த வாழ்வையும் பெற்றுவிடுகின்றன. இக்கருத்தை இங்கிலாந்தின் 'இயற்கைக் கவிஞர்' வோர்ட்ஸ் வொர்த்து,
''ஆற்றல்மிக்க உணர்ச்சிகள் தானாக பொங்கி வழிதலே பாட்டாகும். மனத்தில் நீண்ட அமைதி நிலவுகின்ற பொழுது, கவிஞன் உணர்ச்சிகளைத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்ளுகின்ற நிலையில் பாட்டு பிறக்கிறது. இன்னும் ஒருவகையான எதிர்ச்செயலால் உணர்ச்சியைத் திரும்பப் பெறச் செய்கிறது; படிப்படியாக மனவமைதி மறைந்து விடுகிறது. ஆழ்ந்து சிந்திப்பதற்கு முன்பு இருந்த மனவுணர்வோடு தொடர்புடைய உணர்ச்சி. பையப்பையத் தலையெடுக்கிறது. அது மனத்தில் நிலைத்து நிற்கத் தொடங்குகிறது. இத்தகைய மனநிலையின் வெற்றிமிக்க படைப்புக்கள்
பொதுவாகப் பாடல் வடிவத்தைப் பெறுகின்றன"? என்று தெளிவுறுத்தியுள்ளார்.
இவ்வுணர்ச்சிதான் கவிஞனுடைய உள்ளத்தில் கற்பனையை எழுப்புகிறது. அக்கற்பனை உள்ளதை உணர்ந்தவாறு வெளியிடுமாறு கவிஞனைத் தூண்டுகிறது. அதனால் அவன் காலத்தையும், இடத்தையும் எளிதில் கடந்து, தான் உணர்த்தவிரும்பும் கருத்துக்களைக் கவர்ச்சி யுடையதாகப் புனைந்து கூறுகின்றான். அப்பொழுது அவற்றை உவமை, உருவகம் முதலியவற்றால் அழகுபடுத்தியும் வெவ்றோக உள்ள பொருள்களை இயைபுபடுத்தியும், வாழ்க்கையின் அனுபவத்தை வெவ்வேறான வண்ணங்களால் தீட்டியும் காட்டுகிறான். அப்பொழுது அது கலை வடிவம் பெறுகிறது. அந்தக் கலைவடிவம் கற்பவர் உள்ளத்திலும் அதே கற்பனையைப் பதியவைத்து உணர்ச்சியைத் தூண்டுகிறது.
இலக்கியம் உணர்த்தும் கருத்து உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும் இருக்க வேண்டும். கருத்து என்பது
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 109
படிப்படியாகத்தான் கனிகிறது. அது கவிஞனின் இதயத்தில் நெடுங்காலம் குடியிருக்கிறது. அங்கு நன்கு வளர்ந்து முதிர்ந்தவுடன், அது கவிதையாக வெளிப்படுகிறது. கவிதையில் இடம்பெறும் கருத்துக்கள் மனித வாழ்க்கையின் மறை பொருளாக உள்ள அனுபவக் கருவூலத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவை என்றைக்கும் நிலைத்து நிற்கக்கூடிய உண்மைகளாகும். இதனை ருஷ்யக் . கலைஞர் மாக்ஸிம் கார்க்கி,
“இலக்கியம் மனிதன் தன்னைத்தான் அறிந்து கொள்ளத் துணை செய்வது; தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது; வலுப்படுத்துவது; உண்மையைக் காண்பதற்கான முயற்சிக்கு ஆதரவு அளிப்பது; மக்களிடத்தில் உள்ள நல்லனவற்றைக் காண வகை செய்வது; இழிந்தவற்றைக் களைந்தெறிய வழி காட்டுவது; மக்களின் இதயங்களில் வெட்கம், கடுஞ்சீற்றம், வீரம் ஆகிய உணர்ச்சிகளைத் தூண்டுவது; வாழ்வின் மேலான இலட்சியத்திற்குத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வலிமையூட்டுவது; மனிதனைத் தூய்மைப்படுத்துவது; வாழ்க்கையைப் பயனுள்ளதாகச் செய்யப் பயன்படுவது"
என்று குறிப்பிட்டுள்ளமை இங்குக் கருதத்தக்கது,
நான்காவதாகக் கவிதைக்குத் தேவைப்படுவது வடிவமாகும். இதைக் கவிஞன் உணர்ச்சியற்ற நிலையில் தேந்தெடுப்பதில்லை அவனுடைய எண்ணம் பக்குவமடைந்ததும், அது வெளிப்படுத்துவதற்கு முயலுகின்றது. அப்பொழுது அது அவனுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ ஓர் ஒழுங்கான வடிவத்தை பெற்று வருகிறது. வடிவம் என்பது ஒரு கிணற்றைப் போன்றது; உள்ளடக்கம் இல்லாத வடிவம், நீரில்லாத கிணற்றிற்கு ஒப்பாகும். வடிவ அழகால் மட்டும் பயனில்லை. வடிவத்தின் மூலம் வெளிப்படும் கருத்தும் சிறப்பாக அமைய வேண்டும்.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

வடிவம் என்பது கவிதைக்கு உடலைப் போன்றதாகும். மேற்கண்ட உணர்ச்சி, கற்பனை, கருத்து ஆகிய அனைத்தும் ஒருங்கு திரண்டு முழுநிறைவை பெறுவதற்கு நிலைக்களனாக இருப்பது வடிவம் எனலாம். உணர்ச்சி, கற்பனை கருத்து ஆகிய மூன்றும் இணைகின்ற பொழுது ஒலிநயம் தோன்றுகிறது. அவ்வொலிநயம் உணர்ச்சிக்கும் கருத்திற்கும் ஏற்ற சொற்களைக் கையாளுவதால் எழுதவதாகும். பாட்டின் வடிவம் எடுத்துக் கொண்ட கருத்திற்கும், முதன்மையாக உணர்த்தப்படும் உணர்ச்சிக்கும் ஏற்ப மாற்றமுறும். சிறப்பாகக் கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் உணர்த்தும் முறைகளுக்கேற்ப அவை அமையும். பாட்டின் வடிவம் கவிஞனுக்கு ஒரு தடையாக அமையாது. அது மூவௗவைக் கூறுகளை (Three Dimensions) அமைத்துத் தருகிறது. அவை உணர்ச்சி, சொல், ஒலிநயம் என்பனவாகும். அவற்றைக் கொண்டு கவிஞன் கவிதையென்னும் கலைக் கோயிலைக் கட்டுகிறான். இவ்வாறு மனித இனத்தின் அனுபவக் கருவூலத்தை அடிப்படையாகக் கொண்டு கலைகளில் சிறந்த கவிதைக்கலை படைக்கப்படுகிறது.
இலக்கியத்தின் பயன்
மனிதன் எச்செயலைச் செய்தாலும் ஏதோ ஒருவகையான பயனைக் கருதியே அச்செயலைச் செய்கிறான். பற்றற்று பயன் கருதாது பணிசெய்வது' என்பது மனித இனத்தின் ஓர் உயர்ந்த இலட்சியம். அந்த இலட்சியத்தை நடைமுறையில் கடைப்பிடிக்கின்றவர்கள் மிகச் சிலரேயாவர். அவர்களை உலகம் 'சான்றோர்கள்' என்று போற்றுகிறது. ஆனால், மனித இயற்றை இதற்கு நேர்மாறாக இருந்துவருகிறது. எச்செயலில் ஈடுபட்டாலும், அச்செயலின் மூலம் யாதாகிலும் ஆதாயம் தனக்குக் கிடைக்குமா என்றுதான் மனிதன் எதிர்பார்க்கிறான். இந்நிலையில் இலக்கியத்தைப் படைக்கும் கலைஞனுக்கும், இலக்கியத்தைக் கற்பவர்களுக்கும் அதனால்
99

Page 110
யாதாகிலும் பயனுண்டா என்ற ஐயம் எழலாம். படைப்புக் கலைஞன் தான் படைத்த பொருளைக் காணுகின்ற பொழுது ஒரு தாயின் நிலையை அடைகிறான். ஏனெனில், அவள் உள்ளத்தில் கருக்கொண்ட உணர்ச்சிகள் நன்கு முதிர்ந்து, கருத்துச் செறிவுடன் கலையாக - கவிதையாக வெளிப்படுகிறது. அதனால் அவன் மகிழ்ச்சியுறுகிறான். அப்பொருளில் அவன் தன்னையே காணுகின்றான். குழந்தைகளிடத்தில் தன்னைக் காணுகின்ற தாயைப்போல், அவனும் தன்னுடைய கலைப் படைப்பைக் கண்டு வியப்பும், விம்மிதமும் அடைகின்றான்.
அதைப் படிக்கின்றவனோ, தன்னுடைய உள்ளத்து முழுவளர்ச்சியடையாத எண்ணங்களும், உணர்ச்சிகளும் அரைகுறையான அனுபவங்களும் நல்லதொரு வடிவம் பெற்றுத் திகழ்வதைக்கண்டு மகிழ்கிறான். மேலும், அவனுடைய நெடுநாளைய கனவு, கலைவடிவில் தன்முன்னே தோன்றுவதைக் காணுகின்ற பொழுது, அதில் தன்னுடைய பண்புகளின் பிரதிபலிப்பையும், எண்ணத்தின் சாயலையும் ஏக்கத்தின் எதிரொலியையுைம் பார்த்தும், கேட்டும் அவன் இன்புறுகிறான். அல்லது தன்னுடைய குறைகளை உணர்ந்து, அவற்றைப் போக்கிக் கொள்ள வழியென்னவென்பதைப்பற்றிச் சில மணித்துளிகளேனும் அவன் சிந்திக்கின்றான். இவ்வாறு இலக்கியம் படைப்பவருக்கும், கற்பவருக்கும் பயன்தருகிறது.
இலக்கியத்தைக் கற்பதால் ஒருவன் பெறக்கூடிய பயன் இன்பமே. அதைத் தவிர வேறு எதையும் அவன் இலக்கியத்திடம் எதிர்பார்க்கக் கூடாது என்பது ஒரு வகைக் கோட்பாடாக இருந்துவருகிறது. 'கலை கலைக்காக' என்ற முழக்கம் எழுப்புவதைப் போன்று கவிதை கவிதைக்காகவே' என்று முழங்குகின்றவர்களும் உண்டு. ஒரு கலைப்பொருளின் பயனை, நன்முறையில் நாம் பெற்று அனுபவிக்க வேண்டுமானால், நாம் வேறொரு
100

பயனை அடைவதற்கு அதைக் கருவியாகக் கொள்ளக் கூடாது; அப்பொருளையே தன்னிகரற்ற முழுநிறைவுடைய பொருளாகக் கொண்டு, அது அளிக்கும் இன்பத்தில் மூழ்கித் திளைக்க முயல வேண்டும்.
வாழ்க்கையைக் கலைக்கண் கொண்டு பார்க்க வேண்டும். அவ்வாறு நோக்கினால் வாழ்க்கை, பெறற்கரிய பேறுகளை அடைவதற்குரிய வழியாக அமையாமல், வழியும் பயனும் ஒன்றி அமைந்ததாகத் தோன்றும். இந்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே நாம் கலையையும் கவிதையையும் பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் அவற்றின் உண்மையான இயல்புகள் நமக்குப் புலனாகும். படிப்பினைகளை அறிவுறுத்துவதற்காகவோ, விதிமுறைகளுக்குக் கீழ்ப்பட்டுச் செயல்படுமாறு செய்வதற்காகவோ, ஒப்புயர்வற்ற குறிக்கோளை அடைவதற்குத் தூண்டுவற்காகவோ சிறந்த கவிஞர்களுடைய படைப்புக்கள் படைக்கப் படவில்லை. ஆனால், அவை இயந்திரம் போன்ற உணர்ச்சியற்ற வாழ்க்கையிலிருந்து எண்ணங்களைச் சிறிது நேரமேனும் வேறுபக்கத்தில் திரும்பிப் பொருத்தமான உணர்ச்சிகளிடத்தில் அவற்றை நிறுத்தி, மனித வாழ்க்கையில் மறைந்து கிடக்கும் மாண்புமிகு உண்மைகளைக் கண்டுணரச் செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ”க
என்பது பேட்டரி (Pater)ன் கருத்தாகும். பயன்மதிப்புக்களுக்குப் பணிபுரியும் வேளைக்காரன் கலை அன்று; கலையே தலைவனாக விளங்குகிறது என்பது பேட்டரின் நம்பிக்கை. கவிஞ்னுடைய உணர்ச்சியைப் புரிந்து கொண்டு வாழுமாறு நம்மைத் தூண்டுவதே உயர்ந்த இலக்கியமாகும். வாழ்க்கையை அணுகுவதற்குக் காட்டப்படும் வழியைப் பற்றியதே இலக்கியத்தைப் பற்றிய பிரச்சனையாகும். இலக்கியமும் கலைகளும் வாழ்க்கையின் கூறுகள் என்று அவர் கருதவில்லை. சிறந்த முறையில் படைப்பதன் மூலமும், அதைச்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 111
தற்சார்பற்ற முறையில் எடுத்துரைப்பதன் மூலமும் அவை வாழ்க்கையின் முழுநிறை வடிவமாகி விடுகின்றன என்பது பேட்டரின் எண்ணமாகும்.
கலையையும், கலையைப் போற்றி நலம் பாராட்டுதலையும் எளிதில் சிலவிதி முறைகளாகச் சுருக்கித் தந்துவிட முடியாது. அவை மனநிலையைப் பொறுத்த ஒன்றாகும். சிறந்ததொரு வாழ்க்கையில் வெளிப்படும் ஆளுமையின் மூலம்தான் நாம் அம்மனநிலையைத் தெளிவாக விளக்க முடியும். வாழ்க்கையில் பெறும் அனுபவத்தின் பயனைப் பற்றிக் கவலையுறாது, அனுபவத்தையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கருதவேண்டும் என்று அவர் கூறுகிறார். எனவே, 'கலையின் உண்மையான கடமை, கழிந்து கொண்டிருக்கும் உன்னுடைய கண நேரத்திற்குச் சிறந்த பயன்மதிப்பைக் கொடுப்பதாகும்; அதைத்தவிர வேவேறான்றும் கடமையாகாது" என்று அவர் அறிவிக்கிறார். கலையாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும் அதனுடைய முழுமைப் பயனை அதனிடத்து அடைவதையே , மனிதன் தன்னுடைய இலட்சியமாகக் கொள்ள வேண்டும் என்பது இதனுடைய உட்பொருளாகும். வாழ்க்கையில் ஆன்மா மகிழ்ச்சியுறுவதையும், வளம் பெறுவதையும் தவிர வேறொன்றையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதே இதன் கருத்ததாகும். இவ்வாறு தன்னுடைய பயனைத் தன்னகத்தே கொண்டிருப்பது கலை. "வாழ்க்கையின் சிறப்புமிக்க காட்சியைப் பார்ப்பதால் நாம் பெறக்கூடிய பயன் 'பார்ப்பதன் மூலம்' பெறும் இன்பமாகும்”
'கடமையை
பேட்டார், 'கலை கலைக்காகவே' என்ற கொள்கையை இவ்வாறு விரித்துரைக்கிறார். இவ்வடிப்படையில் கவிதையை ஆராய்ந்த அறிஞர்கள், "இக்புறுத்துவதே கவிதையின் பயன்; அறிவுறுத்தாவது கவிதையின் குறிக்கோளாகாது” என்ற கருத்தினைத் தெளிவுறுத்தியுள்ளனர். வேறு பயனை அளிக்காது, இன்பம் ஒன்றையே அளிக்கும் கவிதைகளை நேர்வழிக் கவிதைகள்' (Pure Poetry)
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதைத் 'தூய கவிதை' என்றும் கூறுவர். நேர்வழிக் கவிதையால் இன்பத்தைத்தவிர வேறெந்த பயனையும் தரமுடியாது என்பது அவர்களுடைய நம்பிக்கை.
தூய என்ற சொல்லைப் பௌதிக ஆய்வாளன் தூய தண்ணீர்' என்று கூறுகின்ற பொழுது எப்பொருளில் பயன்படுத்துகிறோனோ, அப்பொருளில் நான் இதைப் பயன்படுத்துகிறேன். ஆனால், இந்த இலட்சியத்தைக் கவிதையில் அடைவது என்பது மிக அரிய செயலாகும். ஒரு பாட்டில் மிக அழகிய அடி ஒன்று இடம் பெற்றிருக்குமானால், தூய கவிதையின் நிலைக் களனாக நாம் அதைக் கொள்ளலாம். தூய கவிதையைப் பற்றிய இக்கருத்து கவிஞ்னுடைய விரும்பங்கள், முயற்சிகள், ஆற்றல்கள் ஆகியவற்றின் இலட்சிய எல்லையாகும் "
என்பது பால் வேலரே என்ற திறனாய்வாளரின் கருத்தாகும். இதனால் நேர்வழிக் கவிதை' அல்லது 'தூய கவிதை'யின் இயல்பையும், அது எவ்வாறு கவிஞனுடைய இலட்சியமாக அமைகிறது என்பதையும் நாம் அறிகிறோம்.
எட்கர் அலன் போ (Edgar Allan Poe),
இனிமையான கருத்துடன் இசை சேருகின்ற பொழுது கவிதை பிறக்கிறது. கருத்துடன் இசையாத இசை, வெறும் இசையாகவே இருக்கும். இசையுடன் சேராத கருத்தோ, வெறும் உரைநடையாகிவிடும்.... கவிதைகளின் முடிவான நோக்கம் உண்மையை உணர்த்துவதாகும். ஒவ்வொரு பாட்டும் அறத்தை அறிவுறுத்துவதாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். ஆகவே, அறக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு கவிதையின் சிறப்புனை மதிப்படுகின்றனர்..... கவிதையைக் கவிதைக்காகவே எழுதவேண்டும் என்ற நோக்கத்தோடு நான் கவிதையை அணுகிறேன். அவ்வாறு அணுகுவதன் மூலம்
101

Page 112
கவிதையின் மதிப்பையும் ஆற்றலையும் நல்ல முறையில் கண்டுணர முடியுமென நான் நம்புகிறேன். இவ்வடிப் படையில் பார்த்தால், குறிப்பிட்ட மதிப்புடையதும், சிறந்ததுமான கவிதை உலகில் இருக்கமுடியுமா?- என்று நாம் ஆராய்ந்து அறிய இயலும். கவிதையைக் கவிதையாகக் காணவேண்டுமே யொழிய, அதை வேறறொரு பொருளாகப் பார்க்க கூடாது. கவிதை அதனுடைய சிறப்புக்காகவே இயற்றப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்
என்று கவிதையை அணுகுவதற்குரிய நெறி முறைகளை வகுத்துள்ளார். இக்கருத்திலிருந்தே கவிதை கவிதைக்காக' (Poetry for Poetry's sake) என்ற கொள்கை தோன்றியிருக்கிறது.
கவிதையை ஆராய்கின்ற பொழுது, அல்லது மதிப்பிடுகின்ற பொழுது, "கவிதையின் பண்புகள் அனைத்தும் அதில் இடம் பெற்றிருக் கின்றனவா? அப்பண்புகளின் நிறைவால் கவிதையளிக்கும் இன்பம் சிறப்புடையதாகிறதா?" - என்று நோக்கங்களின் அடிப்படையில்தான் கவிதையை நாம் அணுகவேண்டும். இதற்கு மாறாக, "இக் கவிதையில் எத்தகைய கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன ? அவை சிறந்தவைதாமா? அவை அறத்திற்குப் பொருந்தி வரக்கூடியனவா? அவற்றால் என்ன பயன் கிடைக்கும்?” என்பன போன்ற வினாக்களை எழுப்பி, அவற்றின் அடிப்படையில் கவிதையை ஆராய்வது, அழகிய தாமரை மலரைக் கண்டு, அதன் அழகை நுகராது, அதை ஒவ்வோர் இதழாகப் பிய்த்து எடுத்து, "அதனுள் மகரந்தத்தூள் இருக்கிறதா? பொகுட்டு எனப்படும் கொட்டை முற்றியதாக இருக்கிறதா? அதன் புறஇதழ் தடித்திருப்பது ஏன்?” என்பன போன்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதாகும். தாவர இயல் ஆராய்ச்சியாளன் தாமரை மலரைப் பகுத்துப் பகுத்து ஆராய்வது பொருந்தும். அதைப்போல, தத்துவ ஆராய்ச்சியாளன் ''ஒரு கவிதையில் கூறப்பட்டுள்ளன கருத்துக்கள்
102

சிறப்புடையனவா ? அறநெறிச் சார்புடையனவா?'' என்று ஆராய்ந்தால் தவறில்லை. ஆனால், ஒர் இலக்கியத் திறனாய்வாளன் கவிதையைக் கலைக் கண்கொண்டு அணுகுவதுதான் பொருத்தமான செயலாகும். அவன் கவிதையைப் பகுத்துப் பகுத்துப் பார்த்து, அதில் "இந்தக் கருத்து சொல்லப் படவில்லை" என்று கூறுவது அவனுடைய நோக்கமாகாது. அப்படி ஆராய்பவன் இலக்கியத் திறனாய்வாளனாக இருக்க மாட்டான் என்பதே போவின் கருத்தாகும். கவிதையைப் படைக்கின்றவர்களும் அதைக் கருத்தில் கொண்டே தங்கள் படைப்புக்கலைத் தொடங்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
பிரான்சில் தோன்றிய அறிஞர்கள் சிலர், 'கவிதை கவிதைக்காக' என்ற கொள்கையைச் சிற்சில மாற்றங்களோடு போற்றி ஆதரித்துள்ளனர்.
அபே பிரெமாண்ட் (Abbe Bremond) என்பவர்,
கவிதைகள் எல்லாம் இறைமை இணைவுப் பண்புடைய (Mystical) அவை வழிபாட்டுப் பாடல்களோடு தொடர்புடையன. ஒவ்வொரு கவிதையும், புதிரானதும் ஒன்று படுத்துவதுமான செம்மையான மூலப் பண்புக் கூற்றினைப் பெற்றிருக்கிறது. அதனாலேயே அவை பெரிதும் கவிதைப் பண்புடையனவாக இருக்கின்றன. கவிதையைப் பகுத்தறிவு நலமிக்க உரையாடலாகக் குறைத்துவிட முடியாது. பொதுவாக நாம் பயன் படுத்தும் உரையாடல் முறைகளைக் கடந்த நிலையில் உணர்த்தப்படும் ஒரு மொழியைப்பே கவிதை '
என்று வெளியிட்டுள்ள கருத்துக்கள் இங்கு கருதத்தக்கன.
கவிதை என்பது எடுத்துரைக்க இயலாத அல்லது சொற்களால் விளக்க முடியாத ஒன்றைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பது இவருடைய கருத்தாகும். இதனுடன் அக் கவிதையின் சிறப்பும் நேர்த்தியும் பின்னிப்பிணைந்து இருக்கின்றன.
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 113
பயான்
"எளிதில் புரிந்து கொள்ள முடியாத மெய்ம்மையான மூலப்பண்புக்கூறு ஒன்றினுடைய இருப்பினாலும், அதனுடைய பண்பு பரவி இருப்பதனாலும், அது பொருள்களை மாற்றியும் ஒருமைப்படுத்தியும் இயங்குவதனாலும் கவிதை, அதனுடைய கவிதைப் பண்பைப் பெற்றிருக்கிறது''10 என்பது உளவியல், மெய்ப் பொருளியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தெளிவுறுத்தப்பபெற வேண்டிய கருத்தாகக் காணப்படுகிறது.
இதுவரையில் 'நேர்வழிக் கவிதை' (Pure Poetry)யைப் பற்றி நாம் கண்ட கருத்துக்களை நான்கு வகையாகப் பகுத்துக் கூறலாம்.
1. வேறு இலட்சியத்தை அடைவதற்குக் கவிதையை ஒரு கருவியாகக் கொள்ளாமல், அது நல்கும் இன்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு முழுநிறைவுடைய பொருளாக அதைக் கருதுதல்.
2. ஒலி நயத்தின் நிலைக்களன் கவிதை.
3. ஒலிக்கும், வண்ணத்திற்கும் இடைப்பட்ட ஒருவகை அழகையுடைய சொற்களைக் கொண்டது கவிதை.
4. சொற்களும் ஒலிநயமும் சேர்ந்து உணர்த்தும் கருத்துகளையுடையது கவிதை.
சுருங்கச் சொல்லுவதென்றால், கவிதையில் எக்கருத்தை வேண்டுமானாலும் சொல்லாம். ஆனால், அதைச் சொல்லும் முறைதான் கலைநய முடையதாக இருக்கவேண்டும். இவ்வாறு இயற்றப் படும் கவிதை தானாகவே இன்பம் நல்கும் இயல் புடையதாக அமையும் என்பது நேர்வழிக் கவிதைக் கோட்பாட்டினரின் கருத்தாகும்.
இனிக் கவிதையில் அறநெறிக் கருத்துக்கள் இடம்பெறக்கூடாது என்பார் காட்டும் காரணங் களைக் காண்போம்.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

1. கவிதை ஒருகலை, மற்றக்கலைகளைப் போன்றே அதில் அறநெறின் கருத்துக்களை எதிர்பார்ப்பது வீண் கலை பழக்கத்தின் மோன நிலை ; உரிமையின்றி நுழைவதைத் தடுக்கும் காவலாள்; கலை சுவைமிக்க சிந்தனையின் தேவதை; எவ்வகையிலும் பிறரைத் திருத்தவேண்டும் என்பது அவள் நோக்கம் அன்று. அவள் எல்லா வகையான தன்னல இயல்புகளையும் கொண்டவள். அதனால், அவள் தன்னுடைய முழுநிறைவைப்பற்றியே கவலைப்படுகிறாள். எனவே, அவள் பிறருக்கு உயர்ந்த இலட்சியங்களைக் கற்பிக்கவேண்டும் என்ற விருப்பம் அற்றவள். எக்காலத்திலும் எச்சூழலும் அழகைக் கண்டு அனுபவிப்பதிலேயே அவள் கருத்தைச் செலுத்துகிறாள்" என்று கவலையைப் பற்றிப் பொதுவாகக் கூறப்படும் கருத்துக்கள் இலக்கியக் கலைக்கும் பொருந்துவதாகும்.
2. மனித இனத்தின் செயல் முறைகளுள் அறநெறிக் கருத்துக்களும் கவிதைக் கலையும் வேறுபட்ட இரண்டு முக்கிய செயல்முறைகளாகும். அவை தங்கள் தனியுரிமையைக் காத்துக் கொள்வதன் மூலமே தங்களுடைய முக்கியத்துவத்ப்ை பெற முடியும்.
3. அறநெறி வாழ்விற்கு முற்பட்ட நிலையில் அமைந்த வாழ்க்கையைக் கவிதை விரித்துரைக்கிறது. எனவே, அறநெறிக் கருத்துக்கள் என்பன மேலெழுந்த வாரியான பண்பே ஒழிய, உள்ளார்ந்த இயல்புகளல்ல.
4. இறைமை இணைவுப் பண்பு (Mystical) நிலையில் கவிதை வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது. எனவே, அறநெறியுணர்வைக் கடந்த நிலையிலேயே கவிதை பிறக்கிறது எனலாம் (அபே பிரெமாண்டின் கருத்தைப் போன்றது). 5. கவிதைக்கும் அறநெறிக் கருத்துக்களுக்கும் இடையே ஏதோ ஒருவகையான தொடர்பு
103

Page 114
இருக்கலாம். அது எதிர்பாரா நிகழ்ச்சியாகவோ அருகிய வழக்காகவோ இருக்கும்.2
இக்கருத்துக்கள் அனைத்தும் 'கலை கலைக்காக' என்ற கொள்கையிலிருந்து தோன்றி வளர்ந்த கவிதை கவிதைக்காக' என்ற கருத்தை வற்புறுத்துவனவாகும். நாம் கவிதை கவிதைக்காக' என்பார் காட்டும் காரணங்களைக் காண்போம்:
இவ்வனுபவத்தைப் பற்றிக் கவிதை கவிதைக்காக' என்ற முழக்கம் என்ன சொல்லுகிறது? நான் புரிந்து கொண்ட முறையில் அது, பின்வரும் கருத்துக் களைத் தெரிவிக்கின்றன. முதலாவதாக கவிதையனுபவமே முடிந்த பயனாகும். அது பிறிதொரு பயனுக்குக் கருவியாக அமையாமல், தானே அப்பயனாக இருக்கிறது. அதாவது கவிதை உள்ளார்ந்த பயன் மதிப்பை உடையது. அடுத்து அதன் கவிதை உள்ளார்ந்த பயன் மதிப்பை உடையது. அடுத்து அதன் கவிதைப் பயன்மதிப்பும் இந்த உள்ளார்ந்த பண்பாகவே அமைந்து கிடக்கிறது. கவிதைக்கு மற்றொரு முடிந்த பயன் மதிப்பு இருக்கலாம். அதாவது பண்பாட்டையோ, சமயவுணர்வையோ பெறுவதற்குரிய ஒரு கருவியாக கவிதை அமையலாம். ஏனெனில், அது கற்பிப்பதாகவோ, உணர்ச்சிகளைப் பண் படுத்துவதாகவோ சிறந்ததொரு பண்பை வளர்ப்பதாகவோ சிறந்ததொரு பண்பை வளர்ப்பதாகவோ இருக்கலாம். மேலும், அது கவிஞனுக்குப் புகழையோ, பொருளையோ, மனச்சான்றின் அமைதியையோ அளிப்பதாகவும் அமையலாம். இக்காரணங்களுக்காகவும் நாம் கவிதையை மதித்துப் போற்றலாம். ஆனால், இம்முடிவான மதிப்பு, கற்பனைச் சார்புடைய அனுபவமாகவும், நம்மை மனநிறைவு அடையுமாறு செய்யும் பயன்மதிப்பாகவும் இருக்க இயலாது; நேரிடையாக அதை முடிவு செய்யவும் முடியாது. இதை, நாம் முழுவதும் அதன் உள்ளார்ந்த பண்புகளைக் கொண்டே தீர்மானிக்கவேண்டும்.
II
104

கவிதையைப் படைக்கும் கவிஞன் கவிதையளிக்கக் கூடிய முடிந்தபயனைக் கருதினாலும், படிக்கின்றவர் அதைக் கவிதை அனுபவத்தில் பெற விழைந்தாலும், கவிதையின் பயன் மதிப்பின் தரம் குறைய நேருகிறது. கவிதையை அதனுடைய இயல்பான சூழ்நிலையிலிருந்து பிரித்து, அதனுடைய இயல்பினை நாம் மாற்ற முனைவதால் இத்தரக்கேடு உண்டாகிறது. ஆனால், கவிதை தனிமையும், உரிமையும், முழுமையும் வாய்ந்த தனிப் பட்டதோர் உலமாகத் தானே விளங்குகிறது. அதனால் காட்சிப் பொருளைச் சார்ந்த உலகின் ஒரு பகுதியாகவோ, படியாகவோ விளங்க அதனுடைய இயல்பு அதற்கு இடம் தருவதில்லை."
இங்கு கூறப்பட்ட நான்கு வகையான கருத்துக்களை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். முதலாவதாக 'முடீந்த பயன் மதிப்புக்கள்' என்று குறிப்பிடப்பட்ட பண்பாடு, சமயம் போன்றவையெல்லாம் நன்கு வேறுபட்ட நிலைகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட வேண்டியவையாகும் இவற்றுள் சில கவிதையனுபவத்திற்கு வேறுபட்ட தொடர் புடையனவாக உள்ளன. பண்பாடு, சமயம், அறிவுறுத்தல், உள்ளத்தைப் பண்படுத்தல் போன்றவை கவிதையின் பயன் மதிப்புக்களைக் கொண்டு அனுபவங்களைப் பற்றி நாம் தீர்மானிக்க வேண்டியனவாகும். இவ்வாறு செய்யவில்லை யென்றால், 'கவிதைப் பண்பு' என்பது பொருளற்ற வெற்றொலியாகப் போய்விடும்; கவிஞனுடைய புகழ், பொருள், மனச்சான்றின் நீடமைதி என்பன வெல்லாம் பொருத்த மற்றவை என்பது தெளிவாகப் புலனாகும்.
இரண்டாவதாகக் கற்பனைச் சார்புடைய அனுபவத்தை அதன் உள்ளார்ந்த பண்புகளைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும் என்பது தவறான வழியைக் காட்டுவதாகும். பெரும்பாலான நிகழ்ச்சிகளில் நாம் அவ்வாறு தீர்மனிப்பதில்லை. அதைப் பற்றி முடிவு செய்ய வேண்டுமானால், நாம்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 115
அதை விட்டு வெளியே வரவேண்டிய நெருக்கடி உண்டாகிறது. பெரும்பாலும் நாம் அவற்றின் பயன் மதிப்பைப் பற்றிய குடிறப்புக்களைக் கருத்தில் கொண்டோ, நினைவு படுத்திக்கொண்டோ அதை மதிப்பிடுகிறோம். அவ்வாறு அதைப்பற்றித் தீர்மானிக்கின்ற பொழுது, மனித வாழ்க்கையெனும் பேரமைப்பில் அதற்குரிய இடத்தை நாம் புறக் கணிப்பதில்லை. எனவே, அதனுடைய பயன் மதிப்பு இத்தகைய புறஇயல்புகளைச் சார்ந்திருக்கின்ற பொழுது, நாம் எவ்வாறு உள்ளார்ந்த பண்புகளை மட்டும் கருத்தில் கொண்டு அதை மதிப்பிட முடியும்?
கஎ
மூன்றாவதாக, ''கவிதையைப் படைக்கும் கவிஞன் கவிதையளிக்கக் கூடிய முடிந்த பயனைப் பற்றிக் கருதினாலும்; படிக்கின்றவர் அதைக் கவிதை அனுபவத்தில் பெற விழைந்தாலும் கவிதையினுடைய பயன்மதிப்பின் தரம் குறைந்து விடும்” என்பது ஆராயத்தக்கது. இவையெல்லாம் ''முடிந்த பயன் என்று கருதப் பெறுவன யாவை? கவிதை எவ்வகையைச் சேர்ந்தது?" - என்ற வினாக்களுக்குரிய விடைகளைப் பொறுத்து அமைவதாகும். கவிதையின் வகைகள் சிலவற்றுள் முடிந்தபயன்களாகக் கருதக் கூடியவற்றை இடையே நுழைப்பதால், கவிதையினுடைய பயன் மதிப்பு குறைந்து விடுகிறது என்பதை நாம் மறுப்பதற்கு மதிப்பு குறைந்து விடுகிறது என்பதை நாம் மறுப்பதற்கு இல்லை, ஆனால், வேறு சில வகையான கவிதைகளில் அவற்றின் மதிப்பும் சிறப்பும், அவை உணர்த்தும் முடிந்த பயன் மதிப்புகளைப் பொறுத்தே சிறப்புடையதாகப் போற்றப்படுகின்றன. சிலப்பதி காரத்தின் சிறப்பும், கம்பராமாயணத்தின் ஏற்றமும், திருவாசகத்தின் மதிப்பும் அவை உணர்த்தும் பயன் மதிப்புக்களை அடிப்படையாகக் கொண்டன என்பதில் யாவருக்கும் கருத்து வேற்றுமை இருக்க இயலாது. இவற்றைப்படைப்பதற்கு, முடிந்த பயன்மதிப்புக்கள் என்பன தேவைப்படவில்லை என்று யாராகிலும் கூறமுடியுமா? அல்லது அந் நூல்களைப்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

படிக்கின்றவர்கள் அப்பயன் மதிப்புக்களை உணராமல் போய்விடுகிறார்களா?
எனவே, நாம் கவிதையை இரண்டு வகையாகப் பிரித்துணர வேண்டும். முடிந்த பயன் மதிப்புக்களை எடுத்துரைப்பதால் தரம் குறைந்து போகும் கவிதைகள் ஒருவகை என்று நாம் கூறலாம். மற்றொரு வகை அவற்றை எடுத்துரைப்பதால் சிறப்புறும் கவிதைகளாகும். எனவே, கவிதைகளின் வகைகளுக்கும் இயல்பு களுக்கு மேற்ப, அவற்றை நாம் வேறுபட்ட கொள்கை நெறிகளை அளவு கோலாகக் கொண்டு மதிப்பிடவேண்டுமே யொழிய, எல்லாவற்றையும் ஒரே வகையான அளவுகோலால் அளந்து பார்க்க முயலுவது அறிவுடைமையாகாது.
வகையான
இறுதியாகக் கூறப்பட்ட கருத்து ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாகும். "கவிதை தனிமையும், உரிமையும், முழுமையும் வாய்ந்த தனிப்பட்டதோர் உலகமாகத்தானே விளங்குகிறது. அதனால் காட்சிப் பொருளைச் சார்ந்த உலகின் ஒரு பகுதியாகவோ, படியாகவோ திகழ்வதற்கு அதனுடைய இயல்பு அதற்கு இடம் தருவதில்லை. எனவே, அதை முழுமையான வடிவில் பெறவேண்டு மானால், நீ அவ்வுலகிற்குச் சென்று அதனுடைய சட்டதிட்டங்களுக்கு ஏற்ற வகையில் நடந்துகொள். அச் சமயத்தில், நீ காட்சிப் பொருளைச் சார்ந்த உலகத்தின் நம்பிக்கைகளையும், குறிக்கோள் களையும், உனக்குரிய குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் புறக்கணித்துவிடு” என்னும் கொள்கைக் கவிதையை, வாழ்க்கையிலிருந்து பிரித்து வேறுபடுத்த முயலுகிற்து.
மனிதன் வாழ்க்கையில் பெறக்கூடிய பரந்துபட்ட அனுபவங்களில் புறச்சார்பான பண்புகள் நுழையுமானால் அவை சிதைந்துவிடும். அத்தகைய அனுபவங்களுள் ஒரு சிலவற்றைத் தன்னகத்தே கொண்டது கவிதை எனவே, ஒரு
105

Page 116
வரையறைக்குட்பட்ட அனுபவத்தை வெளிப் படுத்துவதே கவிதை எனலாம். அதிலுள்ள அனுபவம் மிக உயர்ந்த நிலையில் நுட்பமாக அமைக்கப்பட்டதாகும். எனவே, கவிதையில் உறையும் அனுபவம் ஒருவன் கடைத் தெருவிலோ, சந்தைக் கடையிலோ எளிதில் விலைக்கு வாங்கக் கூடியதன்று மேலும், அது பிறருக்கு எடுத்துரைக்கக் கூடியதாகவும் இருக்கிறது. சிற்சில வேறு பாடுகளுடன் வேறுபட்ட பல உள்ளங்கள் அனுபவிக்கக்கூடியதாகவும் அவ்வனுபவம் அமைகிறது. ஆகவே, அது காட்சிப் பொருளைச் சார்ந்த உலகிலிருந்து வேறுபட்டதன்று. அனுபவத்தைக் 'கவிதையாக்குதல்' அல்லது உருவமாற்றுதல்' என்பது ஒரு பொய்க் கதை. இதைப் போன்றே ஆழ்ந்த சிந்தனை இயல்புடையது' அல்லது 'அழகியலுணர்வைச் சார்ந்தது' என்று கூறுவதெல்லாம், கவிதையையும், கவிதைப் பண்பையும் பற்றிப் பேசுவதால் உண்டாகும் குழப்பமாகும். அனுபவங்களின் பருப்பொருளாக உள்ள கவிதைகளைப் பற்றி மட்டும் நினைப் போமானால் இத்தகைய குழப்பமே உண்டாகாது.
மேலும், கவிதையனுபவத்தை வாழ்க்கையில் அதைப்பெறுமிடத்திலிருந்தும், அதனுடைய பயன் மதிப்புக்களிலிருந்தும் பிரித்து வேறுபடுத்திக் காட்டுவது தவறு. கவிதை கவிதைக்காகவே' என்று முழக்கமிடுவோரின் ஒருதலைச் சார்பான போக்கையும், குறுகிய மனப்பான்மையையும், அரைகுறையான சிந்தனையையும் அச்செயல் சுட்டிக் காட்டுகிறது. 14
இக்கருத்துக்கள் அனைத்தும், கவிதை கவிதைக்காக மட்டும் படைக்கப்படவில்லை (அதாவது இன்புறுத்தும் ஒரு நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படவில்லை); மனித வாழ்க்கையை விளக்கியுரைப்பதையும், அதன் மூலம் மக்கள் வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே
106

படைக்கப்பபெறுகின்றது என்ற உண்மையை
வலியுறுத்துகின்றன.
"இலக்கியம் கலையின் ஒருவகை வடிவம் என்ற முறையில் தத்துவத்தோடும், சமயத்தோடும் சேர்ந்து நம்மிடத்து உறங்கிடக்கும் ஆன்மாவை விழிப்புறச் செய்கிறது. அவ்வாறு செய்வது அதன் தலைசிறந்த கடமையாகும். நம்முடைய ஆன்மாவை விழிப்புறத் தூண்டுவதைப் போன்று நம்மை இன்புறுத்துவதோ, நமக்கக் கற்பிப்பதோ அதனுடைய தலையாய நோக்கம் அன்று. சிறந்த இலக்கியம் அறிவைத் தூண்டி இயக்குவதில்லை, ஆனால், அது ஆன்மிகப் புலனுணர்ச்சியை இயக்குகிறது. அது ஒரு வாதமன்று; மாயவித்தை; மந்திரம் ஓதுதல். அது வாழ்க்கையை விரித்துரைப்பது அன்று. அதனுடைய வடிவத்தையே மாற்றியமைப்பதாகும்.”15 என்பதனால் இலக்கியம் இன்
புறுத்துவதோடும் அறிவுறுத்துவதோடும் அமையாமல் மனிதனுடைய ஆன்மாவை விழிப்புறச் செய்கிறது என்றதொரு புதிய கருத்தையும் நாம் அறிகிறோம்.
டாக்டர் இராதாகிருஷ்ணன், "மனிதனுடைய ஆன்மா கழிபேருவகை அடைகின்றபொழுது பொங்கி வழியும் இன்புணர்வே இலக்கியமாக வெளிப்படுகிறது” என்று கூறுகிறார். இலக்கியம் 'வாழ்க்கையின் மதிப்பீடு', என்பதையோ, ஆளுமையின் வெளிப்பாடு' என்பதையோ அவர் மறுக்கவில்லை. இவை இரண்டுமட்டும் சிறந்த இலக்கியத்தைப் படைப்பதற்கு உதவுவது இல்லை. இவற்றோடு ஆன்மிக நுண்ணறிவும் அனுபவமும் சேர்ந்தால் தான், உண்மையான சிறப்புமிக்க இலக்கியமாக அவை விளங்கமுடியும் என்ற கருத்தை அவர் எடுத்தியம்புகிறார். இதனால், கவிதை கவிதைக்காக' என்னும் கோட்பாட்டை நடுவுநிலைமையுடனும், தெளிந்த அறிவுடனும் திறனாய்வு செய்கின்றவர்கள் குறையுடையதாகப் புறக்கணிப்பர் என்பது புலனாகின்றது.
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 117
தன்னுடைய கலையழகிற்காக மட்டும் வாழ முயலும் கவிதை விரைவில் அழிந்து விடும். "அது சுவையற்றதாக இருப்பதால், தானே அழிந்து விடுமேயொழிய அதை அறநெறிக் கருத்துக்கள் அழிப்பதில்லை"16 எனவே, "இலக்கியப் படைப்பு வெற்றியுடன் செயல்படும் போது, மகிழ்வு பயன்பாடு என்ற இரு நிலைகளும் ஒருங்கே நிலவ வேண்டும். அத்துடன் அவையிரண்டும் ஒன்றியிணைந்திருக்க வேண்டும்” 17 என்று நாம் உறுதியாகக் கூறலாம்.
இருவகை இலக்கியக் கொள்கை
இலக்கியம் சில நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பெறுகிறது. அதனுடைய வடிவமும், உணர்த்தும் பொருளும் யாப்பமைதியோடு கருத்தமைதியும் உடையனவாக அமைகின்ற பொழுதுதான் அது சிறப்புறுகிறது. இலக்கியம் என்பது என்ன?' என்பதை ஆராய்ந்தவர்கள், அதைப்பற்றி ஏதோ ஒரு வகையான எண்ணச் சார்புடையவர்களாகத் . தோன்றுகின்றனர். ஆனால், அவர்கள் அந்த எண்ணத்தைப் பகுத்துப் பார்த்து அதன் உண்மையான உட்பொருள் என்ன வென்பதைப் பற்றித் தெளிவு பெற முயலுவதில்லை. இலக்கியம் எப்படி இருக்கிறது?' என்பதைப்பற்றி
ஆராய்ந்தவர்கள் அது எதற்காக இருக்கிறது' என்பதைப் பற்றித் தெளிவற்ற கருத்துடையவர்களாகவே இருந்து வருகின்றனர். முதல் குழுவைச் சேர்ந்தவர்கள், பொதுவாக மக்களுடைய செயல்முறைகளில் ஒரு பகுதியாகவே இலக்கியத்தைக் கருதலாயினர். ஆனால், அவர்கள் அது எவ்வாறு தானாக இயங்குகிறது என்பதை அறிவதில் ஆர்வம் காட்டவில்லை. மற்றவர்களோ இலக்கியத்தைத் தன்னிறைவுடைய செயல்முறையாக கருதினர். அதற்கென நெறிமுறைகளும், தனிப்பட்ட இலட்சியங்களும் உண்டென் அவர்கள் நம்பினர். இவ்விருவகைப் போக்குகளும் இலக்கியத்தின் வளர்ச்சியை ஒட்டி உண்டான எண்ணத்தின் எழுச்சிகளைக் காட்டுகின்றன.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

இவற்றுள் முதலில் குறிப்பிட்டதை ஒழுக்கநெறி அமைதி (Moral)யுடைய இலக்கியக் கொள்கை' என்றும், பின்னால் கூறியதை விதிமுறை வடிவ அமைதி (Formal)யுடைய இலக்கியக் கொள்கை' என்றும் நாம் கூறலாம். ஒழுக்க நெறி அமைதி' என்பது தனிப்பட்ட எந்த ஒழுகலாற்றையும் குறிப்பதாகாது. பொதுவாக அது நல்வாழ்வு நெறிக்குரிய கருத்துக்களைக் குறிப்பதாகும். இதைப்போன்றே, விதிமுறை வடிவ அமைதி என்பது இலக்கியத்தின் குறிப்பிட்ட ஒரு வடிவத்தைப்பற்றிய இலக்கண விதிகளைக் குறிப்பதாகாது. இலக்கியத்தின் பொதுவான வடிவ அமைதியைப் பற்றியதாக அது அமையும். ஒழுக்க நெறி அமைதி' என்பது மனிதனின் செயல் முறைகளுக்கு முழுவடிவம் கொடுக்கும் கூறுகளுள் ஒன்றாகவே இலக்கியத்தை நோக்குகின்றது. இந்த முழு நிறை வடிவத்தைக் கருத்தில்கொண்டே, இலக்கியத்தை மதிப்பிடுவதையும், விளக்கியுரைப்பதையும் செம்மையாகச் செய்ய முயலுகின்றனர் ஒழுக்க நெறி அமைதிக் கோட்பாட்டினர். இதற்கு மாறாக, இலக்கியம் தானே தனித்து இயங்கும் ஓர் உலகம் என்ற கருத்தை விதிமுறை வடிவ அமைதிக் கோட்பாட்டினர் கொண்டுள்ளனர். அதனால், அவ்வுலகிற்கெனத் தனிப்பட்ட நடைமுறை விதிகளும், குறிக்கோள்களும், பயன்களும் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
கலைக்கு ஒரேவொரு சட்டம் அல்லது விதிதான் உண்டு, எந்தக் கலைப்பொருளும் அதன் இயல்புக்கேற்ற வகையில் முழு நிறைவை அடையவேண்டும் என்பதே அவ்விதி. ஆனால், ஒவ்வொரு கலைக்கும் தனித்தனி வழிவகைகள் உண்டு என்பது விதிமுறை வடிவ அமைதிக் கோட்பாட்டினரின் கருத்தாகும். இலக்கியத்தின் ஊடு பொருளாக மொழி விளங்குகிறது. பொருள்கள், மக்கள், உணர்ச்சிகள், முதலியவற்றை வடிவ அமைப்பைச் சார்ந்த தொடர்பின் பிரதிநிதியாகவும் அது இயங்குகிறது. இவ்வாறு
107

Page 118
அமையும் இலக்கியம் முழுநிறைவு அடைவதற்கு ஒழுக்கநெறி அமைதியோ சமூகச் சார்புடைய விதிமுறையோ பயன்படுவதில்லை என்றும், இவற்றிலிருந்து வேறுப்பட்ட விதியொன்று இலக்கியம் முழுநிறைவை அடைவதற்குத் தேவைப்படுகிறது என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
விதிமுறை வடிவ அமைதி
ஒருமைப்பாடு, ஒத்திசைவு (Consonance), சுடரொளி (Radiance) என்ற மூவகைப் பண்புகளே இலக்கியத்தை முழு நிறைவு அடையச் செய்கின்றன என்பது அவ்விதியாகும் . இலக்கியப் படைப்பு யாதாக இருந்தாலும் அது குவியலாகவோ, தொகையாகவோ, கூறாகவோ இருந்தால் அது எழில்மிகு வடிவ அமைதியைப் பெறுவது இல்லை. அது ஒரு முழுநிறை வடிவை உடையதாக இருந்தால் தான் சிறப்புற்றிருக்கும். இதற்குத் தேவைப்படும் பண்பு ஒருமைப்பாடாகும். பல்வேறு பிரிவுகளுக்கும், பகுதிகளுக்கும் இடையே ஒருமைப்பாடு இருந்தால்தான் அது நல்லதோர் இலக்கியமாக விளங்கமுடியும். இவ்வொருமைப் பாட்டை, அரிஸ்டாட்டில் முதற்கொண்டு இன்று வாழும் தீவிரமான நோக்குடைய இலக்கியத் திறனாய்வாளர்கள் வரையிலுள்ள எல்லாரும், யாதாகிலும் ஒரு வகையில் போற்றி வருகின்றனர்.
இலக்கியப் படைப்பின் பல்வேறு உறுப்பிகளுக்கு இடையே தேவைப்படும் இசைவிணக்கமும், தகவுப் பொருத்த அளவும் சேர்ந்து ஒத்திசைவை உருவாக்குகின்றன. ஒரு 'கரு' படிப்படியாக வளர்ச்சியுறுவதிலும், பல்வேறு கிளைகளாகப் பிரிந்து செல்லுவதிலும் இசைவும் இணக்கமும், பொருத்தமும் இருந்தால் தான் அது நயமுடையதாக அமைய முடியும். இப்பணியைச் செய்வது ஒத்திசைவு' என்னும் பண்பாகும். இதனை நாம் வெறும் வடிவ அமைப்புச் சார்புடைய சொல்லாகக் கருதுவதற்கு இல்லை. சொல் படிமங்களின் (Imagery) பொருத்தமான அமைப்புகளும், நிகழ்வியலோடு
108

கொண்ட நிலையான தொடர்பும், உணர்ச்சிப் பெருக்கின் குரலிசைவும் ஒன்றாகச் சேர்ந்து ஒத்திசைவினை உருவாக்குகின்றன. எனவே முரண்பட்ட பல்வேறு கூறுகளுக்கு இடையே செயல் திறன்மிக்க இணக்கத்தையுடையது ஒத்திசைவு எனலாம்.
சுடரொளி என்பது சொற்களின் மூலம் இலக்கியம் மன நிறைவினை உண்டாக்குவதோடு அதில் கருத்துக்கள் ஒளிவிட்டுப் பிரகாசிப்பதுமாகும். இதை இலக்கிய இழையமைப்பு (Texture) என்றும் கூறலாம். நேர்வழிக் கவிதையை ஆராய்கின்றவர் 'மாய வித்தை' என்று குறிப்பிடுவதையும், ஓரிலக்கியத்தை மொழி பெயர்க்கின்றபொழுது, முதல்நூலின் பண்புகள் இழக்கப்படுகின்றன என்று சொல்லுவதனால் நாம் சுட்டும் பண்புகளையும் மொழியியல் அமைப்பிலே காணப்படும் அழகியல் உணர்வின் வெளிப்பாட்டையும், சொற்களைப் பொதுவாகப் பயன்படுத்துவதால் வெளிப்படும் பொருளைக் கடந்து நிற்கும் இயல்புகளையும் கொண்ட முழுநிறை வடிய அழகின் அமைதியையே, நாம் சுடரொளி' என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.
இலக்கியத்தைப்பற்றி விதிமுறை வடிவ அமைதிக் கொள்கையினர் கூறும் கருத்துக்கள் அனைத்தையும் நாம் இந்த மூன்றுவகைத் தலைப்புக்களில் அடக்கிவிடலாம் கவிதை கவிதைக்காக' என்பார் காட்டும் நான்கு வகையான பண்புகளையும் ஒத்திசைவு, சுடரொளி என்ற இவ்விரு இயல்புகளிலேயே நாம் அடக்கிக்கூற இயலும்.
ஒழுக்கநெறி அமைதி
வாழ்க்கை முழநிறைவு உடையதாக விளங்குவதற்குத் தேவைப்படும் விதிமுறைகளே, இலக்கியம் முழு நிறைவு பெற்று விளங்குவதற்கும் தேவைப்படுகின்றன என்பது ஒழுக்க நெறி அமைதிக் கொள்கையினரின் கருத்தாகும். மனிதனின் பிற அனுபவங்களை ஆட்சி புரியும் விதிகளே
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 119
  

Page 120
இலக்கியத்தின் செறிவும் வகையும் கெட்டுப்போகும். அதுமட்டுமன்று, மாதவியும் கோல்வலனும், கும்பகருணனும் இராவணனும் நம்மை நையாண்டி செய்வதற்கு வந்துவிடுவார்கள்.
ஒழுக்க நெறி மதிப்பீட்டிற்கு இலக்கியம் தேவையான மூலப்பொருள்களைத் தந்துதவுகிறது. தனிமனிதனின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறக்கூடிய அம் மூலப் பொருள்களின் அளவினைவிட, மிகுதியான படிப்பினைகளை இலக்கியம் நமக்கு வழங்குகிறது; பரந்து பட்ட ஒழுக்க நெறி அனுபவங்களை இலக்கியம் நமக்குக் கொடுத்துதவுகிறது. எனவே, ஒழுக்கநெறி அமைதிப் பண்புகள் தனிமனித வாழ்க்கையில் இருப்பதைக் காட்டிலும் இலக்கியம் ஒன்றிலேயே திரண்டு காணப்படுவதில் வியப்பில்லை.
அறநெறிப் பயன்மதிப்புத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் போனால், ஒழுக்கநெறி அமைதிக் கொள்கை வரையறுக்கப்பட்ட பொருட்செறிவு அற்றதாகப் போய் விடும். எனவே, அது பரம் பொருள் சார்புடையதாகவும் வெளிப்படையாகக் கருத்துக்களைச் சுட்டுவதாகவும் அமைய வேண்டும். அவ்வாறானால், அது மக்கள் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளையும் செயல்களையும் தழுவிச் செல்வதாக இருக்கவேண்டும். இவ்வாறு இலக்கியம் அமைகின்றபொழுது அது சமூகச் சார்புடையதாகி விடுகிறது.
இலக்கியமும் சமூகவியல்புகளும்
"இலக்கியம் என்பது சமூக இயற் காட்சியாகும். இலக்கியம் படைக்கப்படுவதே ஒரு சமூகத் செயலாகும். எழுதுவதன் மூலம் நாம் காருத்தைத் தெரிவிக்க முயலுகிறோம். நாம் தனிமையில் தியானம் செய்ய விரும்பினால் எதற்காகப் போகிறோம்? நம்முடைய அனுபவத்தையும் கருத்துக்களையும் பிறருக்கு அறிவிக்க வேண்டும் என்பதே நாம் எழுதுவதற்குரிய நோக்கமாகும்.
110

எழுதியதை வெளியிடுவதன் மூலம், நாம் பலருக்கு நம்முடைய கருத்தைத் தெரிவிக்க நினைக்கின்றோம். அந்தப் பலர் ஒரு குழுவாகவோ, ஓரினமாகவோ, ஒரு தேசிய இனமாகவோ இருக்கலாம். ஓர் இலக்கியப்படைப்பு உண்மையென் ஏற்றுக்கொள்ளும் பயன் மதிப்புக்கள் ஒரு குழுவினாலும், ஓரினத்தாலும், ஒரு தேசிய இனத்தாலும் அல்லது எல்லாராலும்
சிறந்ததென்று போற்றத்தக்கனவாகவே இருக்கும். எனவே, இலக்கியம் பற்றி ஒழுக்க நெறி அமைதிக்கொள்கை ., சமூகவியல் கொள்கையாகவும் விளங்குகிறது”18 என்பது இந்நாளைய மேனாட்டுத் திறனாய்வாளர் ஒருவரின் கருத்தாகும். இக்கருத்துப்படி எல்லா ஒழுக்க நெறிகளும் சமூகச் சார்பான ஒழுக்க நெறிகள் என்றோ, அறநெறிகளைப் பற்றியன அல்ல என்று கூறவதும் கூடாது. இலக்கியத்தைப் பற்றியும் அவை ஒழுக்கநெறிச் சார்பாகப் பேசுகின்றன என்று நாம் கூறலாம்.
இலக்கியம் சமூகச் சார்புடையது என்பதற்கு மற்றொரு காரணமும் காட்டலாம். 'இலக்கியத்தின் மூன்று குரல்களும்' பிறர் கேட்பனவாகவே அமைந்துள்ளன. தனி மனிதனோ, ஒரு குழுவோ அவற்றைக் கேட்டுணர முடியும். இவ்வடிப்படையில் நோக்குவோமானால், ஒரு சமூகக் குழுவின் செயல்முறைகளின் பகுதிகளை வழங்குவதே இலக்கியம் என்றும், அச்சமூகக் குழுவோடு தொடர்பு படுத்தப்பட்ட இலக்கியம் மதிப்பிடப் பெறுகிறது என்றும், அத்தொடர்பின் அடிப்படையிலேயே கருத்துக்கள் இலக்கியத்தில் விளக்கப்படுகின்றன என்றும் கூறுவதே ஒழுக்கநெறி இலக்கியக் கொள்கை என்பது புலனாகும். ஆனால், சமூகக் குழுவென்பது சமுதாயத்தின் முழுநிறை வடிவத்தின் ஒரு பகுதி என்பதை நாம் மறந்து விடலாகாது. இச்சமுதாய முழுநிறை வடிவத்தோடு தொடர்புடைய ஒழுக்க நெறி இலக்ககியக் கொள்கையே தன்னுடைய பகுப்பு ஆய்வினைச் செம்மையாக நடத்த முடியும்.
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 121
இக்கருத்து ஓரளவிற்கு மார்க்கசிய இலக்கியக் கோட்பாடாகத் தோன்றலாம். அவர்கள் சமூகப் பொருளாதாரச் சக்திகளின் பிரதிபலிப்பே இலக்கியம் என்பர். இதைச் சிறிது மாற்றி, 'இலக்கியம் என்பது சமூகத்தின் வினைத் திட்பத்தால் தோன்றுவது' என்று நாம் கூறலாம். எந்த இலக்கியப் படைப்பாக இருந்தாலும் அதில் சமூகச் சார்புடைய உட்பொருள் இடம் பெற்றிருப்பதால், நாம் அதை இவ்வாறு கூறலாம். அச்சமூகச் சார்புடைய உட்பொருளை இலக்கிய ஆசிரியன் நன்குணர்ந்து திட்டமிட்டு எடுத்துரைக்கலாம். அல்லது அவன் தன்னுணர்வு இல்லாமலேயே அதைத்தான் படைக்கும் இலக்கியத்தின் மூலம் அறிவுறுத்தலாம்.
இதனால், பிரசார நோக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டது இலக்கியம் என்று கருதிவிடக்கூடாது. எந்தச் சமூகத்திலிருந்து இலக்கியம் அரும்புகிறதோ, அந்தச் சமூகம் சிறந்ததெனப் போற்றும் விழுமிய இலட்சியங்கள் தாமாகவே இலக்கியத்தில் இடம்பெறும். அவை இலக்கியம் கற்பவர்க்கு இன்பத்தை அளிப்பதோடு, வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்குரிய கருத்துக்களைத் தந்துதவும். பண்டைத் தமிழர்கள்,
அறம்பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே
(நன். 10) என்று இலக்கியத்தின் நோக்கத்தை எடுத் துரைத்தனர். தமிழ்ச் சமுதாயம் சிறந்ததென்று போற்றிய விழுமிய கருத்துக்களாகிய இந்நான்கையும், தமிழ்ப் புலவர்கள் தங்கள் இலக்கியத்தின் வாயிலாக அறிவுறுத்துவதைச் சிறந்த முறையில் செய்துள்ளனர். இதைப் பிரசாரம் என்று யாரும் சொல்ல முடியாது. அந்தச் சமூகத்தின் உள்ளார்ந்த இலட்சியங்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்பன அந்தச் சமூகத்தைச் சேர்ந்த புலவர் இயற்றிய இலக்கியங்களில் எதிரொலிக்கப்படுகின்றன என்று தாம் கூற வேண்டும்.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

இருவகைப் பண்புகளும் இணைந்ததே இலக்கியம்
இக்காரணங்களினால், நாம் இலக்கியத்தை விதிமுறை வடிவ அமைதிக் கொள்கையின் அடிப்படையில் மட்டும் அணுகக்கூடாது; அல்லது ஒழுக்கநெறி அமைதிக் கொள்கையின் அடிப்படையில் மட்டும் அதை அணுகுவது பயன் தராது என்ற முடிவிற்கு வர நேர்கிறது. ஆகவே, நாம் மேற்கண்ட இருவகைக் கொள்கைகளின் கூட்டினைப்பான சமூகவியல் கண்ணோட்டத்தோடு இலக்கியத்தை அணுகுவது நல்லது. அவ்வாறாயின் இலக்கியத்தை நாம் ஒரு செயல்முறை ஏற்பாடாகவே கொள்ளவேண்டும். குறிப்பிட்ட சில வடிவ அமைதிக் கட்டுக்கோப்பினை இலக்கியம் நமக்குத் தருகிறது. அந்தக் கட்டுக்கோப்புக்கள் மொழிச் சார்புடையனவாக உள்ளன. ஓவியங்கள் வண்ணங்களைக் கொண்டு வரையப்படுவதைப் போன்று இலக்கியங்கள் மொழியைக் கொண்டு படைக்கப் பெறுகின்றன. ஆனால், பொருள்களையும், தனி மனிதர்களையும், செயல்களையும், நிகழ்ச்சிகளையும், உணர்ச்சிகளையும் அவற்றிடையே உள்ள தொடர்புகளையும் மொழியானது சிறப்பிக்கின்றது என்பதை நாம் மறத்தலாகாது. இவை சமூகச் சார்புடையனவாகவும் ஒழுக்கநெறி இயல்பு சார்ந்தனவாகவும் உள்ளன. எனவே, ஓர் இலக்கியத்தின் கருத்துக்களை ஆராயாமல், நாம் அதனுடைய வடிவ அமைதியைப் பகுத்துணருவது என்பது அரிய செயலாகும். ஒரு கால் அதை நாம் கருத்துப் பொருளாகக் கொண்டு மரபுவழி ஓரளவிற்கு ஆராய முடியும். ஆனால், ஓர் இலக்கியத்தின் முழுமையான வடிவ அமைதிபற்றிய விளக்கத்தைக் கொடுக்க வேண்டுமானால், நாம் அப்பொருள்களைப் பருப்பொருள் மெய்ம்மை நிலையில் காண,வேண்டும். அவை இலக்கியத்தின் வடிவத்தினை மாற்றும் அளவிற்கு ஆற்றல் மிகுந்தனவாக உள்ளமையால் நாம் இத்தகைய நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.19
111

Page 122
மேலும், இலக்கியம் நமக்கு ஒழுக்கநெறிச் சார்புடைய கருத்துக்களையும் சமூகவியல் சார்புடைய கருத்துக்களையும் தந்துதவுகிறது என்பதை இங்கு நாம் நினைவு கூர்தல் வேண்டும். ஆனால், அக்கருத்துக்கள் குறிப்பிட்ட சில வடிவ அமைப்புக்களில் நமக்குத் தப்ைபடுகின்றன. சமூக அறநெறிக் கருத்துக்களால் உணர்த்தப்படும் வடிவத்தைப் பற்றிக் கவலையுறாமல், அச்சமூக - அறநெறிக் கருத்துக்களை மட்டும் ஆராய்வோமானால் நாம் மேற்கொண்ட ஆராய்ச்சி இலக்கிய ஆராய்ச்சியாக அமையாது. அது வரலாறு, சமூகவியல், அறவியல் பற்றிய ஆராய்ச்சியாக அமைந்து விடும். எனவே, ஓர் இலக்கியப் படைப்பினைப் பற்றி முழுமையான விளக்கம் தர வேண்டுமானால், நாம் அதனுடைய வடிவ அமைதியைப்பற்றியும் ஆராய்ந்தறிய வேண்டும். அது ஒழுக்கநெறி அமைதிப் போக்கினை உருவாக்கும் எதிரிடை ஆற்றலைக் கொண்டு இயங்கு கின்றமையால் இவ்வாறு நாம் அணுக வேண்டியவர்களாக இருக்கின்றோம். 20
எனவே, நாம் எப்பக்கத்திலிருந்து நம்முடைய இலக்கிய ஆராய்ச்சியைத் தொடங்கினாலும் ஒழுக்கநெறி அமைதிக்கும், வடிவ அமைதிக்கும் இடையே உள்ள சிக்கலான செயல் விளைவுபற்றிய வழக்கெதிர் வழக்காடும் முறையில் ஈடுபட வேண்டியவர்களாக இருக்கின்றோம். இம்முறையே இலக்கியப் படைப்பின் முழு நிறை வடிவமாக நோக்குவதற்கு உகந்ததாகும்.
இவ்விருவகைப் பண்புகளின் இணைப்பினால் அமைவதே சிறந்த இலக்கியமாகும். இவ்விருவகைப் பண்புகளுள் யாதாகிலும் ஒரு பண்பு முனைப்பாக அமைகின்ற இலக்கியங்கள் உண்டு. விதிமுறை வடிவ அமைதிப் பண்புமிக்குடைய இலக்கியங்கள் இன்புறுத்தும் இயல்புடையனவாக அமைகின்றன. ஒழுக்கநெறி அமைதிப் பண்பு முனைப்பாக உள்ள இலக்கியங்களாகப் போற்றப் பெறுகின்றன.
112

திருக்குறள் ஒரு நீதி இலக்கியம்
அறநெறிக் கருத்துக்களை அறிவுறுத்துவதையே முதன்மையான நோக்கமாகத் திருக்குறள் கொண்டிருக்கிறது. எனினும், அது கருத்துக்களை உணர்த்தும் முறையில் ஓர் ஒருமைப்பாடும், ஒத்திசைவும், சுடரொளியும் இணைந்தும், இழைத்தும் காணப்படுகின்றன. அவற்றுடன் கற்பனை வளமும், கவிதைத்திறனும் பொருத்தமான அளவிற்குத் திருக்குறளின் மூன்றாவது பகுதியாகிய காமத்துப்பால் முழுவதிலும் இலக்கியமணம் கமழ்கிறது. அதில் நாடகப் பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. இப் பண்புகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளமையால் இலக்கிய உலகில் சிறந்ததொரு நீதி இலக்கியமாக அது சிறப்புற்று விளங்குகிறது.
மேற்கண்ட இலக்கிய இயல்புகளைக் கொண்ட நீதி இலக்கியங்கள் கலையழகு குன்றாத வகையில் கருத்துக்களை எடுத்தியம்புகின்றன. அவற்றுள் கருத்துக்கள் இன்புறுத்தும் இயல்புகளோடு ஓரளவிற்கேனும் தொடர்பு கொண்டுள்ளன. மேலும், அவை கற்பனையின் உதவியைச் சிறிதளவேனும் நாடுவதால் சிறப்புறுகின்றன.
எடுத்துரைக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு தோன்றுவது கலையழகு. நீதிநூல்கள் கருத்துக்களை எடுத்துரைக்கும் முறைகளைப்பற்றிப் பொதுவாகக் கவலைப்படுவதில்லை. ஆனால், அவற்றுள் தலைசிறந்த நீதி இலக்கியங்களாக உள்ளவை எடுத்துரைக்கும் முறைகளிலும் புதுமைப் போக்குகளையும் சுவைமிக்க திறன்களையும் பயன்படுத்தியுள்ளன. இங்கு நீதிநூல்கள் கருத்தை எடுத்துரைக்கும்
முறையைப்பற்றி வடமொழிவாணர்கள் கூறியுள்ள கருத்து நினைவு கூர்தற்கு உரியதாகும்.
உயர்ந்த கருத்துக்களை எடுத்துக் கூறிக் கேட்போரைச் செயற்படுத்தும் நெறியில் ஒரு
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 123
பொருளை மறைநூல் கூறுவது தலைவன் தன் பணியாளனுக்கு இடும் கட்டளையைப் போன்றது. அதனையே, ஓர் அறநூல் கூறுதல் ஓர் அன்பன் தன் நண்பனுக்கு அறிவுரை கூறுவதை ஒக்கும். காப்பியம் அறக்கருத்தைக் கூறுவது அன்புறு காதலி, தன் இன்புறு காதலனுக்கு கொஞ்சு மொழியில் அன்பையும் இன்பத்தையும் குழைத்துத் தருவதைப் போன்றது.21 என்பது வடமொழி இலக்கண நூலார் கருத்தாகும்.
இதிலிருந்து நாம் ஓர் உண்மையை உணரலாம். எவ்வளவு உயர்ந்த கருத்தாக இருந்தாலும், அதைப் படிப்பவர் உள்ளத்தைக் கவரும் வகையில் இதமாகப் எடுத்துரைப்பதை அறநூல் ஆசிரியர்கள் பொதுப் பண்பாகவும், இன்றியமையாது வற்புறுத்திக் கூறவேண்டிய இடங்களில், எப்படி நண்பன் ஒருவன் தன் நண்பனுக்கு எவ்வளவு அறிவுரை கூறியும் திருந்தாமல் கெட்டுப் போவதைக் கண்டு உரிமையுடன் கடிந்து உரைக்கின்றானோ அதைப்போன்று சிறிது கடுமையாகவும் கருத்துக்களை எடுத்துரைக்கும் முறையைச் சிறப்புப் பண்பாகவும் பெற்றுள்ளனர் என்பதை நாம் அறிய
முடிகிறது.
திருவள்ளுவர் பெரும்பாலும் ஒவ்வோர் அதிகாரத்திலும் முதல் ஏழெட்டுக் குறட்பாக்களில் நயமாகவும் இதமாகவும் தாம் கூறவந்த கருத்துக்களை எடுத்துரைப்பதையும், ஒன்பதாவது அல்லது பத்தாவது குறளில் அக் கருத்தினைச் சிறிது கடுமை கலந்த குரலில் வற்புறுத்திக் கூறுவதையும் நாம் காணலாம்.
சான்றாகப் புறங்கூறாமை' என்ற அதிகாரத்தை நாம் எடுத்துக்கொள்வோம். முதல் குறட்பாவில் புறங்கூறாது இருத்தலாகிய அறத்தைக் கடைப்பிடிப்பதால் உண்டாகும் நன்மையையும், இரண்டு முதல் நான்காம் குறட்பாமுடிய புறங்கூறுவதின் கொடுமைகளையும், ஐந்து முதல்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

ஒன்பது பாட்டுவரை புறம் கூறுகின்றவர்க்கு உண்டாகும் குற்றத்தையும் துன்பத்தையும் கூறி, இறுதிப்பாடலில் புறம் கூறும் இயல்பை ஒழிப்பதற்கூறிய உபாயத்தையும் ஆசிரியர் நமக்கு அறிவிக்கின்றார். அவற்றுள் முதல் எட்டுப் பாடல்களில் புறங்கூறுவதனால் உண்டாகும் கேட்டையே நயமாக எடுத்துரைத்த வள்ளுவர், ஒன்பதாவது பாட்டில், 'இப்படிப் பிறரைத் தூற்றித் திரிபவனை ஏன் நிலமகன் சுமந்து கொண்டிருக்கிறாள் தெரியுமா? இக் கொடியதைப் பொறுத்துக் கொள்ளுவதே தனக்கு அறமாகும் என்று கருதிப் பொறுத்துக் கொண்டிருக்கின்றாள். இல்லையென்றால் இக்கொடியவர்களை எல்லாம் என்றே அழியும்படி அவள் விட்டுவிட்டிருப்பாள்' என்ற கருத்தமைய;
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் யுன்சோல் உரைப்பான் பொறை. (குறள் 189) என்று அறைகிறார்.
எல்லாவற்றையும் பொறுத்தல் நிலைமகளுக்கு இயல்பாயினும், புறங்கூறுவோரைப் பொறுத்தல் அரிது என்னும் கருத்தால், "அறன்நோக்கி ஆற்றுங்கொல் என்றார்” என்னும் பரிமேலழகரின் உரைநயம் இக்கருத்தைத் தெளிவுறுத்துவதாகும். இவ்வாறு திருக்குறளின் ஒவ்வோர் அதிகாரத்தையும் நாம் ஆராய்ந்து பார்ப்போமானால் இவ்வுண்மை புலனாகும்.
திருவள்ளுவர் தாம் கூறவந்த கருத்துக்களைக் கலையழகு குன்றாத வகையில் பல்வேறு முறைகளால் எடுத்துரைக்க முயன்றுள்ளார். அவற்றுள் சிறப்புமிக்க சிலவற்றை இங்கு நாம் காணலாம். நீதி நூல்கள் இதைச் செய்க; இதைச் செய்தல் வேண்டாம்' என்று அறிவுறுத்தும் இயல்பினையுடையன. இவ்வாறு ஓர் அதிகாரம் முழுவதும் விதியாகவும் விலக்காகவும் அமைந்தவை திருக்குறளில் பல உள்ளன. விருந்தோம்பல்,
113

Page 124
வாய்மை, இனியவை கூறல் செய்ந்நன்றியறிதல் என்பன போன்றவை செய்க' என்று விதிமுறை கூறும் அதிகாரங்களாகும். புறங்கூறாமை, கொல்லாமை, பெரியாரைப் பிழையாமை என்பன போன்றவை 'செய்யற்க' என விலக்கு முறை கூறும்
அதிகாரங்களாகும்.
இனி, 'செய்க' என்று வியங்கோள் வாய்பாட்டான் எடுத்துரைக்கும் குறட்பாக்கள் பல உள்ளன. சான்றாக
அன்றறிவாம் என்னா தறஞ் செய்க (குறள் 36) செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரியது இல் (குறள் 759) என்பனவற்றைக் கூறலாம்.
அடுத்து செய்யற்க' என்று விலங்கும் முறையில்,
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு (குறள் 106)
உள்ளற்க உள்ளம் சிறுகுவ (குறள் 798)
என்பன போன்ற பாடல்கள் பல அமைந்துள்ளன.
இதனைச் செய்யின் இன்ன பயன் விளையும் என்றும், இதனைச் செய்யாது விடினும் செய்யத்தகாத இதனைச் செய்யினும் இன்ன தீமை உண்டாகும் என்றும் வள்ளுவர் கூறந்திறன் நயமுடையதாகும்.
அன்புற்று அமர்ந்த வழக்கெனப் வையத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு (குறள் 75)
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வித் தலைப்படாதார் (குறள் 88)
இவற்றைப் போன்றே, ஒரு கருத்தைத் தனித்தனியே உடன்பாட்டு வாய்ப்பாட்டானும் எதிர்மறை வாய் பாட்டானும் ஆசிரியர்
114

எடுத்துரைப்பார்; ஒரு குறட்பாவில் இரண்டையும் சேர்த்துக் கூறுவர்; வினாவாக அமைத்துத் தம் கருத்தைப் புலப்படுத்துவார், வினாவைக் கூறி விடையையும் தாமே அமைப்பார்; ஒன்றன் இலக்கணம் கூறி அதனோடு தொடர்புள்ளவற்றைச் சொல்லப் புகுவார்; இன்ன காரணத்தால் இது இத்தகையது; இது செய்தற்குரியது; இது செய்யத்தகாதது என்பர். இதனினும் இது தீயது; இதனினும் இது நன்மையானது; இதனினும் இது தலையாயது; இது சிறந்தது; இதைக் காட்டிலும் விரும்பத்தக்கன வேறில்லை என்றெல்லாம் பல வகை வாய்பாட்டான் வள்ளுவர் வகுத்துரைப்பார். உவமை, உருவகம் போன்ற அணிகளின் வாயிலாகவும் அவர் கருத்துக்களைத் தெளிவுறுத்துவார்.
மேலும் நாடகப்பாங்கிலே, காமத்துப்பால் முழுவதையும் தலைவன், தலைவி, தோழி கூற்றாக வைத்துக் கூறுவர். பொருட்பாலிலும் சில இடங்களில் வள்ளுவர் இம்முறையைக் கையாண்டுள்ளார். ஆசிரியர் தம்முடைய கூற்றாக வைத்து, தன்மையிடத்துச் சொற்களை ஆண்டு கருத்துக் களைத் தெரிவிப்பார்; நல்லனவற்றைப் போற்றியும் தீயனவற்றை இழித்து முரைப்பார்??.
கை
க
இவ்வாறு வள்ளுவர் பலவகை முறைகளைக் கையாளுவதன் மூலம் தாம் கூறவந்த கருத்துக் களைத் தெளிவுறுத்துவதோடு, அவற்றில் செஞ்சோல் கவியின்பம் சிறப்புற்று விளங்கவும் செய்துள்ளார். கலையழகு குறையா வகையில் கருத்துக்களை உணர்த்துவதில் வள்ளுவர் தன்னிகரற்ற நீதி நூலாசிரியராக விளங்குகிறார். பிற நீதி நூல்களில் காண முடியாத இப்பண்பு திருக்குறளைச் சிறந்ததோர் இலக்கியமாக மேம்பட்டு விளங்கச் செய்துள்ளது என்றால், அது மிகையாகாது.
அறநெறிக் கருத்துக்களை அறிவுறுத்தும் திருக்குறளில் இலக்கியத்தின் இன்றியமையா
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 125
இயல்புகளான கற்பனை, உணர்ச்சி ஆகியவை குறிப்பிடத்தக்க அளவிற்கு இடம் பெற்றுள்ளன. இவை இரண்டுடன் ஒன்றிய கருத்துக்கள் பல திருக்குறளில் காணப்பெறுகின்றன. பொருளாலும், ஓசை நயத்தாலும் சிறப்புடைய சொற்களைக் கொண்ட வள்ளுவர் தம் கவிதைகளைப் புனைந்திருக்கின்றார். பொருளும் ஒசையும் ஒன்றுகின்ற பொழுது உணர்ச்சி வெளிப்படுகிறது. இவ்வுணர்ச்சிக்குக் கைகொடுத்து உதவுவது கற்பனை. தொடர்பற்றன போல் தோன்றும் இரண்டு பொருள்களை ஆசிரியர் தம் கற்பனையின் துணை கொண்டு தொடர்பு படுத்துகிறார்.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து (குறள் 90)
என்று வள்ளுவர் கூறுவதன் மூலம், அனிச்சப் பூவின் மென்மையைவிட விருந்தினரின் உள்ளம் மிகமிக மென்மையானது என்ற கருத்தை உணர்த்துகிறார். அனிச்சப் பூவைக் காட்டிலும் விருந்தினர் உள்ளம் மென்மையானது என்பது பொருந்துமா? மோந்தாலே வாடிவிடும் மலர் அனிச்சம். மனிதன் ஒருவன் அதைமோந்து பார்க்கிற பொழுது அவனுடைய வெப்பம் பொருந்திய மூச்சு அதில் படுகிறது. அதனால் அது உடனே வாடிவிடுகிறது. ஆனால், இதைவிட வியப்பிற்குரிய பொருளாக விருந்தினர் உள்ளனர். அவர்களை முகம் திரிந்து நோக்கினால் போதும்; அந்த நோக்கே அவர்களை வாடிவிடச் செய்கிறது. இதைப் போன்று எளிதில் குழையக் கூடிய பொருள் உலகில் வேறொன்று இருக்க முடியாது என்று வள்ளுவர் கருதுகிறார். எனவே, அவருடைய உள்ளத்தில் இதற்கு ஒப்பாக அனிச்சப் பூவைக் கூறலாம் என்ற எண்ணம் எழுகிறது. இரண்டையும் இணைத்துப் பார்க்கிறார். அவ்விணைப்பில் கற்பனை உருவாகிறது. அதன் பயனாக இக் கவிதை பிறந்தது.
வெள்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

ஆசிரியருக்கு, விருந்தினர் உள்ளம் அனிச்சப் பூவை விட மென்மையானதாகத் தோன்றுகிறது. அதனால் அவருடைய உள்ளத்தில் விருந்தினர் வருந்தக்கூடாது என்ற இரக்க உணர்ச்சியும் தலையெடுக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தம் கற்பனையோடு வள்ளுவர் கலந்து தருகிறார். குழையும் விருந்து' என்ற தொடரில் உள்ள 'குழையும்' என்னும் சொல்லில் இருக்கும் உம்மை, வெறும் உம்மையன்று. "ஐயோ! என்ன செய்வது? சிறிது முகம் வேறுபட்டு நோக்கினாலும் அவர்கள் மனம் வருந்துமே!” என்ற பரிவு உணர்ச்சியை அது வெளிப்படுத்துகிறது. இங்குக் கற்பனை, உணர்ச்சி ஆகிய இரண்டுடன் ஒன்றிய கருத்து ஆசிரியருடைய உள்ளத்தை நமக்கு நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது. இதைப்போன்ற கற்பனை நயம் பொருந்திய கவிதைகள் பல நீதி இலக்கியமாகிய திருக்குறளில் காணப்பெறுகின்றன.
உணர்ச்சியை வெளிப்படுத்தும் கவிதைக்கு, உணர்ச்சியை எளிதில் வெளிப்படுத்துவதற்குரிய வகையில் அதன் வடிவம் அமைதல் வேண்டும். குறட்பா கவிஞன் விருப்பம்போல் வளைந்து கொடுக்கும் ஆற்றலற்றது; பல கட்டுப்பாடுகளை உடையது. ஒன்றே முக்கால் அடியில் எழுசீர்களைக் கொண்ட குறட்பா யாப்பில் ஆசிரியர் இயன்றவரை உணர்ச்சியையும் புலப்படுத்த முயன்று, வெற்றியும்
பெற்றிருப்பது செயற்கரிய செயலாகும்.
அறநெறிக் கருத்துக்களை இலக்கியங்கள் குறிப்பாகவும் மறைமுகமாகவும் அறிவுறுத்துவதே சாலச் சிறந்தது என்பர். இவ்வுண்மைபிற இலக்கியங்களுக்குப் பொருந்தக் கூடியது. அறநெறிக் கருத்துக்களை அறிவுறுத்துவதையே நோக்கமாகக் கொண்டு இயற்றப்படும் நீதி இலக்கியங்களில் இவ்வியல்பினை எதிர்பார்ப்பது தவறாகும். சிறந்த இலக்கிய இயல்புகளைத் தன்னகத்தே கொண்ட திருக்குறளைப் போன்ற நீதி இலக்கியங்களில் இவ்வியல்பு இடம்பெறுவது இயலாது.
= 115

Page 126
இலக்கியத்தின் பயன் இன்புறுத்துவது என்றும், அறிவுறுத்துவது என்றும் நாம் முன்னர்க் கண்டோம். 'இவற்றில் எது சிறந்தது?' என்ற ஐயம் எழுலாம். பாவிலே உயர்ந்தது அறத்தைப் பற்றி அறிவுறுத்துவதா? அல்லது பாவிலே சிறந்தது இன்புறுத்துவதா? என்பதை ஆராய்ந்து பார்த்த நாம், இவ்விரு இயல்புகளும் ஏற்ற வகையில் இணைந்தும் இழைந்தும் இருக்கின்ற பாவே போற்றத் தக்கது என்ற முடிவிற்கு வரலாம். மேலும், இன்புறுத்துதல் அறிவுறுத்துதல் என்பனவற்றுள், நாம் ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரித்துக் காணமுயலுவதே அறிவுடமையாகாது, அவை இரண்டும் ஒரு ரூபாய் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. அவற்றுள் ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாது; பிரிக்க முயலுவது வீண் முயற்சி. சிறந்த இலக்கியங்களில் அவை இரண்டும் ஒன்றாகப் பின்னிப் பிணைந்துதான் காணப்படும்.
இப்பண்புகளில் ஒன்று சில இலக்கியங்களில் முதன்மையிடம் பெற்றிருக்கலாம்; அல்லது இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கலாம். இதனால், இலக்கியங்களை இன்புறுத்தும் இயல்பு மிகுதி யாகவுடைய இலக்கியம் என்றும், அறிவுறுத்தும் இயல்பு மிகுதியாகவிடைய இலக்கியம் என்றும் நாம் பாகுப்படுத்திக் கூறலாம். இவ்வடிப்படையில்
2.
4.
குறிப்புக்கள் 1.வரதராசனார், மு.: இலக்கியத் திறன், பக்.54.
Wordsworth, W.: Literary Criticism, pp. 156-7.Ed. by 3.
Gorky, Maxim: Essays on Literary Criticism, p,48 fore
Pater, William : The Renaissance : Studies in Arts and 5. ஷ, பக். 52. 6. ஷ, பக். 20. 7. Valey, Paul : The Art of Poetry, p.185, Routledge & K 8. Poe. Edgar Allen. "The poetry principle"', p. 197. Con 9. Read, Horbert : Phases of English Poetry, Quoted in th 1928. 10. Garrod/ H. W. : The Profession of Poetry, pp. 34-35;
116

நோக்கினால் காப்பியம், சிறுகதை போன்றவை இன்புறுத்தும் இயல்பு மிக்குடையனவாகத் தோன்றும். இவ்வாறில்லாமல் ஒரே ஒரு பண்பு மட்டும் பெற்று விளங்கும் இலக்கியங்களை நாம் உலகில் காண்பதரிது. ஆழ்ந்தும், அகன்றும், நிலை பெற்று விளங்கும் இயல்பு பொருந்திய மனிதப் பண்புடன் தொடர்புடையதாகவும், மனித வாழ்க்கையிலிருந்து முகிழ்ப்பதாகவும் இலக்கியம் இருப்பதால், அதில் அறிவுறுத்தும் கருத்துக்கள் இடம்பெறாமல் இருக்க முடியாது. அப்படி அறிவுறுத்தும் கருத்துக்கள் இல்லாத இலக்கியங்கள் எவையேனும் இருக்குமானால், அவை சிறந்த இலக்கியம் என்று போற்றத் தக்கனவாக இருக்க இயலா என்று நாம் உறுதியாகக் கூறலாம். அவை நிலையான வாழ்வைப் பெறாது விரைவிலேயே
அழிந்தொழிந்து விடும்.
இக்காரணங்களினால் பாவிலே உயர்ந்தது அறத்தைப் பற்றி மட்டும் அறிவுறுத்துவது அன்ற; பாவிலே சிறந்தது இன்புறுத்துவது மட்டுமன்று; அவை இரண்டும் ஒன்றாக இணைந்து விளங்கும் பாவே உயர்ந்ததும், சிறந்ததுமாகும். திருக்குறளில் இவ்விரு இயல்புகளும் கலந்து காணப்படுகின்றன. அதனால் தான், அதை இன்றும் நீதி இலக்கியமாக" வையகம் போற்றுகிறது.
Nowell, C. Smith; London; N. D ign Languages Publishing House, Moscow, 1958. Poetry, p.48.
gan Paul, London, 1951 plete works Ed. by J. A. Harison, Vol.XIV, N. V: 1928. 2 Chapter On “Pure Poetry'' p. 112. , Hogarth Press. London,
Glarendon Press., Oxford, 1929.
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 127
11. Whistler, James, "Ten O'Clock Lecture'' The Religion of 12. Backley, Vincent : Poetry and Morality, p. 14. Chatto an 13. Bradley. A. G: Oxford Lectures on Poetry, p. 5: Macmill 14. Richards. I.A: Prinicipals of Literature Critism, pp, 71-8 15. Radhakrishnan, S. : Moral Values in Literature, p.57, For tions, Bangalore, 1950. 16. Garrod. H. W; Poetry and the Criticism, p. 21: 0.U.P Lo 17. ரெளி வெல்லாக்கும் ஆஸ்டின் வாரானும்: இலக்கியக் கொள்கை 18. Hough, Graham : An Essay on Criticism, p. 30 , Gerald E 19. ஷ, பக். 38. 20. இருவகைக் கோட்பாடுகள்' என்ற பகுதி மேற்கண்ட நூலின் கரு 21. Mammata : Kavyaprakasha, pp. 1-2., Tr. By Ganganatha 22. இவற்றின் விரிவை திருக்குறள் அமைப்பும் முறையும்' என்ற நூ
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

E beauty, p.217. Ed by Richard Aldington, London, 1950 HWindus, London, 1959.
an & co; London, 1962. 0. Routledge & Kegan Paul, London, 1951.
mative Ideals, Ed. by Venkata Rao, P. K., Deccan Publica
mdon, 1931. க, பக். 29. மொ. பா குளோறியா சுந்தரமதி; ITAR: சென்னை, 1966. Duckworth & co; London, 1966.
நத்துக்களைத் தழுவி எழுதியதாகும்.
Jha, The Indian Press, Allahabad., 1925. லில் காண்க.
= 117

Page 128
தமிழ்மொழி நீதி இலக்கிய
அறத்தின் மாட்சியைப் பன்னெடுங் காலத்திற்கு முன்பே தமிழ்மக்கள் நன்கு அறிந்து போற்றியுள்ளனர். நம்முடைய முன்னோர்கள் மனிதனின் நடத்தை, ஒழுக்கம், வாழ்க்கையின் நோக்கங்கள் முதலியவற்றை ஆராய்ந்து வகைப்படுத்தியுள்ளனர். அதன் விளைவாகத் தமிழில் பல நீதி நூல்கள் தோன்றியுள்ளன. இந்நீதி நூல்களின் சிறப்பை உணர்ந்தவர்கள், தமிழ் மக்களையே அறவர்' என்றும் போற்றியுள்ளனர். இதைப்பற்றி டாக்டர் கால்டுவெல் கூறும் கருத்தொன்று இங்கு குறிப்பிடத்தக்கது :
டாக்டர் குண்டர்ட் என்பவர் அரவம்' என்ற சொல்லை அறம் எனக்கொண்டனர்; கொண்டு தமிழிலக்கியமே ஏனைய மொழி இலக்கியங் களைக் காட்டினும் அற நூல்களும் அறத்துறை களும் நிறைந்ததாகக் காணப்படுகின்ற தாகலின், அறம் மலிந்த ' கொள்கையினரையே அது குறிக்கும்'
இதனால், தமிழர் அறநெறியில் சிறந்து விளங்குபவர் என்ற நம்பிக்கை உலகில் இருந்துவந்தமை புலனாகின்றது. இத்தகைய சிறப்புக்குரிய தமிழ்மக்கள் அறத்தைப்பற்றிப் பல நூல்களை நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றியுள்ளனர். அவர்களுடைய உள்ளப் பண்பாட்டை அது அறிவிக்கின்றது.
118

யில் பம்
கலாநிதி எஸ்.திருநாவுக்கரசு
நீதி இலக்கியத்தின் கருமுதல்
மனித வாழ்க்கைக்குப் பயன் தரத்தக்க ஒழுகலாறுகளைத் தேர்ந்த அறிவுடனும், தன்னுரிமை யுணர்வுடனும் பண்டைத் தமிழ்ச் சான்றோர் நன்கு சிந்தித்துள்ளனர். மனித வாழ்க்கையின் பல்வேறு இயல்புகளையும் உலகப் பொருள்களையும் நுட்பமாக ஆராய்ந்து, அவற்றை அகம்' என்றும், புறம்' என்றும் அவர்கள் பாகுபாடு செய்துள்ளனர். அகம்' என்பது ஒருவனும் ஒருத்தியும் தம் உள்ளத்தால் உணரக் கூடிய உணர்வும், அதன் பயனாகிய இன்ப அனுபவமுமாகும். 'புறம்' என்பது புறத்தார்க்குப் புலனாகக்கூடிய அறஞ்செய்தலும், மறஞ்செய்தலும், அவற்றின் பயனுமாகும். இப்பாகுபாட்டின் அடிப்படையிலேயே பண்டைத்தமிழ் இலக்கியங்கள் இயற்றப் பெற்றுள்ளன. அவற்றுள் அறத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட அறநூல்கள் பல தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழில் இயற்றப்பட்டு இருந்தன. அவற்றை முதுமொழி, வாயுறை வாழ்த்து செவியறிவுறூஉ என்று அறிஞர்கள் பாகுபாடு செய்திருந்தனர் என்பதைத் தொல்காப்பியம் உணர்த்துகிறது. இவற்றைப்பற்றி விரிவாக, 'நீதி இலக்கியம்' என்ற தலைப்பில் நாம் கண்டோம்.
அவை நன்கு வளர்ச்சியுற்ற நீதி இலக்கியங் களாக இருந்திருக்க இயலாது என்பது அவற்றைப் பற்றித் தொல்காப்பியனார் கூறும் கருத்துக்களால்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 129
தெரியவருகிறது. வழக்காற்று நெறியை அடிப்படையாகக் கொண்டு நாட்டிலே, வழங்கிவந்த பழமொழிகள், அறிவுரைகள், கருத்துரைகள் முதலியவற்றின் தொகுப்புகளாக அவை இருந்திருக்க வேண்டும் என்று நாம் கூறலாம்.
தனி மனிதனின் ஒழுகலாற்று நெறிகளையும், அவன் சமுதாயத்தில் ஒழுகவேண்டிய முறை களையும், தொல்காப்பியத்தின் புறத்திணை இயலில் வாகைத்திணையிலும் காஞ்சித்திணையிலும் விரிவாக ஆசிரியர் தொல்காப்பியனார் விளக்கியுள்ளார். கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை' (தொல். பொருள். 75) என்ற தொடரின் மூலம் அன்றைய தமிழர்கள் போற்றிய ஒழுக்க நெறியின் சிறப்புகளைத் தொல்காப்பியனார் அறிவுறுத்துகிறார்.
அறத்தின் இயல்பையும் அது மக்கள் வாழ்க்கையில் பெற்றுள்ள
சிறப்பையும் தொல்காப்பியனார்,
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் (தொல்.1038)
அன்பே அறனே இன்பம் நாணொடு (தொல்.161)
அந்நிலை மருங்கின் அறமுதலாகிய மும்முதற் பொருட்கும் உரியஎன்ப (தொல். 1361)
அறம்புரி நெஞ்சமொடு (தொல்.1093)
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் (தொல். 1138) என்னும் நூற்பாக்களில் தெளிவுறுத்தியுள்ளார்.
தொகை நூல்களாகிய பத்துப் பாட்டிலும், எட்டுத் தொகையிலும் அறநெறிக் கொள்கைகள் பல நுட்பமாகவும், அழகாகவும் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. பத்துப் பாட்டில் இல்லறத்தார்க்கும், துறவறத்தார்க்கும், அரசர்க்கும் உரிய அறநெறிக்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

கருத்துக்கள் நூலின் இடையிடையே இடம் பெற்றிருக்கின்றன. எட்டுத்தொகையில் புறப் பொருள்பற்றிய புறநானூறு' என்ற நூலில், குறுப்பிடத் தக்க அளவிற்கு அறத்தை உணர்த்தும் பாடல்களே மிகுதியாக உள்ளன. சிறப்பாகப் பாடாண் திணையில் 'செவியறிவுறூஉ' துறையில் அமைந்துள்ள பாடல்களும், காஞ்சித்திணையில் 'பொருண்மொழிக் காஞ்சி, 'பெருங்காஞ்சி', முதுமொழிக் காஞ்சி' என்ற துறைகளில் அமைந்துள்ள பாடல்களும் அறநெறிக் கருத்துக்களை அறிவிக்கும் பாடல்களாகும்.
செவியறிவுறூஉ' என்பதனைத் தொல்காப்பியர் செவியுறை' என்பர்.
செவியுறை தானே, பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் விதல் கடன் எனச் செவியுறுத் தன்றே. (தொல். 1371)
என்பது தொல்காப்பிய நூற்பா, இதற்கு,
செவியுறையாவது பெரியோர் நடுவு வெகுடலின்றித் தாழ்ந் தொழுகுதல் என்று செவியறிவுறுத்தல்?
என்பது பொருளாகும்.
பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் புலவர் பிசிராந்தையார் வரி வாங்குதல் குறித்துக் கூறிய அறிவுரை அமைந்த பாடல் (புறம். 184) செவியறிவுறூஉ' என்ற துறைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.
குடிமக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது அரசின் முதற் கடமையாகும். மேன் மேலும் நாடு வளமுற்று விளங்குவதற்குரிய புதிய வழி வகைகளை எல்லாம் அரசு மேற்கொள்ள வேண்டும். பின்னர், குடிமக்களிடம் வரியாகப் பொருளைப் பெறுவதற்கு
119

Page 130
அரசு முயலவேண்டும். குடிமக்கள் தமது வரிப்பொருளைத் தாமே மனமுவந்து செலுத்தும்படி அரசு நடந்துகொள்ள வேண்டும். அவ்வரிப் பொருளைத் தண்டுவதில் கனிவு இருக்கவேண்டும். அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தைக் காட்டி மக்களை அச்சுறுத்தியோ, கசக்கிப் பிழிந்தோ வரிப்பொருளைத் தண்டுவது கூடாது. அப்படி செய்தால் அரசன் எதிர்பார்க்கும் அளவு வரிப்பொருள் கிடைக்காமல் போகும்; குடிமக்கள் கெட்டுவிடுவதால் மேலும்மேலும் திறைப்பொருள் வருவது நின்றுவிடும். எனவே, அறிவுத்திறனில்லா அரசனுடைய நெறியற்ற செயலால், அவனும் உண்ணாமல் உலகமும் கெடுவதற்கு இடமுண்டாகி விடுகிறது” என்பதை அறிவுறுத்த விரும்பிய புலவர், அதை
யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான், உலகமும் கெடுமே! (புறம். 184) என்ற நயமிக்க உவமையின் வாயிலாக எடுத்துரைக்கின்றார்.
அரசன் குடிமக்கள் தாங்கும் அளவிற்கு மேலாக வரி விதிக்காது, முறையான அளவிலேயே பகுதிப்பொருளை வாங்குதல் வேண்டும் என்பதும், அதை அன்போடும் பண்போடும் தண்டுதல் வேண்டும் என்பதும் பிசிராந்தை யாரின் கருத்து. ஓர் அரசு நிலைத்து நிற்பது அதன் வரி விதிப்பு முறைத் திட்டத்தைப் பொறுத்தே இருக்கிறது என்பதை, அரசன் முன்னால், யானை புகுந்த வயல்' என்ற உவமையைக் குறிப்பிட்டு, அதனால் உண்டாகக் கூடிய கேடுகளை அஞ்சாநெஞ்சத்துடன் புலவர் சுட்டிக்காட்டுகிறார். அவர் அதை எடுத்துரைக்கும் முறை அவருடைய அறிவுத்திறனையும், பண்பாட்டையும் புலப்படுத்துகின்றது. இவ்வாறு புகழும், பொருளும் சேர்ந்துவர நயமாகவும் இதமாகவும் அறிவுரை கூறுவதையே செவியுறை' என்று சங்கச் சான்றோர்கள் போற்றினர். இத்துறையில் அமைந்த பாடல்கள் எட்டு' புறநானூற்றில் காணப்பெறுகின்றன.
120

இனி 'வசைமொழி' எனப்பொருள் பெறும் அங்கத்'த்தின் செய்யுள் வகையைக் குறிப்பிடும் இடத்தில், தொல்காப்பியனார் 'செவியுறைச் செய்யுள்' என்ற ஒன்றைச் குறிப்பிடுகிறார் :
துகளொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயின் செவியுரைச் செய்யுள் அதுவென மொழிப.
(தொல். பொருள். 400)
அங்கதம் இருவகைச் செய்யுள்களால் எடுத்துரைக்கப்பெறும். அது செவியுறைச் செய்யுள், அங்கதச் செய்யுள் என்ற இரண்டு வகையாகப் பயின்று வருகிறது. அவற்றுள் செவியுறைச் செய்யுள்' என்பது "அரசர்க்குப் பொருள் வருவாயாகச் செய்”யப் பெறுவன. இதனைச் செவியுறை அங்கதமெனலாம் என்பது தொல்காப்பியனார் கருத்து. இந்நூற்பாவிலுள்ள துகளொடும்' என்ற தொடருக்குப் பேராசிரியர் நல்லதொரு விளக்கம் தந்துள்ளார் :
துகளாவது : படைகுடி கூழமைச்சு நட்பரணாறும் என்னும் இவற்றைப் பாதுகாவாதிருத்தல். அரசியல்' என்பனவற்றானே தங்கோன் அறியாமல் வகுத்தவை வருமாயின் அவற்றை உள்ளவாறு உரைத்தலு மொன்று மாற்றரசன் நமது ஊரடுகின்ற நாட்டவர் யாதிவை நுதலியன வேதுவாகப் போய்ச் சார்ந்தவர்க்கு நாட்டழிவு கூறுதலுமொன்று. அன்ன பிறவும் அவற்கு உறுவகையாகலான் அவற்றை உள்ளவாறு உணர்த்திப் பொருள்செய் அவர்க்குப் பொருள் செயல்வகை கூறினமையின் அது செவியுறை பாற்படு மென்பது."
இதனால், அரசருக்கு அறிவுரை கூறும் உரிமையும் கடமையும் உடைய சான்றோர்கள் அறிவுறுத்திய செம்மொழிகளைச் செவியுறைச் செய்யுள்' களெனப் போற்றும் வழக்கம் இருந்தமை புலனாகின்றது. பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் பிசிராந்தையார்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 131
கூறிய அறிவுரையும் ஓரளவிற்குப் இதைப் போன்றதாகும். எனவே, செவியுறை, செவியுறைச் செய்யுள் என்பன சங்ககாலத் தமிழரிடை வழங்கிய நீதிப்பாடல்களுள் ஒரு வகையாக இருக்கலாம். அவ்வாறு பாடப்பட்ட பாடல்களை ஒன்றாகத் தொகுத்து நீதி நூலாகத் தனியே கொள்ளுவது அன்றைய இலக்கிய மரபிற்கு ஒவ்வாத செயலாகும். பண்டைத் தமிழ்ச் சான்றோர்கள் அறத்தைப் புறப்பொருளின்' ஒரு பகுதியாகக் கருதிப் போற்றினர். அதனால் அறநெறிக் கருத்துக்களைத் தெரிவிக்கும் பாடல்களைப் புறப்பொருள் நூல்களில் சேர்த்துத் தொகுத்துள்ளதை நாம் காணுகின்றோம். இதைப் போன்றே பொருண்மொழிக் காஞ்சி, பெருங்காஞ்சி, முதுமொழிக் காஞ்சி என்ற துறைகளில் அமைந்த செய்யுள்களும் அறங்கூறும் அறநெறிப் பாடல்களாக உள்ளமை இங்குக் கருதத் தக்கதாகும்.
புறப்பொருள் இலக்கணத்துள் காஞ்சித் திணை' என்பது ஒன்று. அதைத் தொல்காப்பியனார்,
பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே (தொல். பொருள். 78)
என்று எடுத்துரைக்கின்றார். "'தனக்கு ஒப்பில்லாத சிறப்பென்னுஞ் செம்பொருளைப் பெறுதல் காரணமாக யாக்கை, இளமை, செல்வம் என்பனவற்றால் நிலை பேறில்லாத இவ்வுலகியலைப் பற்றிக்கொண்டு அதனால் உண்டாகும் பலவகைத் துன்பங்களையும் பொறுத்து நிற்றலாகிய ஒழுக்கமே" காஞ்சித் திணையாம். நில்லாதவற்றால் நிலையுடையதனை அடையும் முயற்சியே காஞ்சித் திணையென்பது தொல்காப்பியனார் கருத்தாகும்.
இத்திணையினால் உணர்த்தப்படும் கருத்துக் களுள் பல மனிதனுக்கு இருவகையான உண்மை களை அறிவுறுத்துகின்றன. முதலாவதாக அவை நிலைபேறில்லாத உலகியல்பை பலவகையிலும் பற்றியொழுகுவதால் உண்டாகும் துன்பத்தைப்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

புலப்படுத்துகின்றன. அடுத்து, நிலை பேறற்ற இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் பாங்கருஞ் சிறப்பினைப் பெறுவதற்கு முயலவேண்டும் என்று அவை அறிவுறுத்துகின்றன. எனவே, இப்பகுதி நீதிநெறிக் கருத்துக்களை எக்காலத்தவருக்கும் பயன்படும் வகையில் எடுத்தியம்பும் ஏற்றம் பெற்று விளங்குவதை நாம் காணுகின்றோம். இவற்றி லிருந்து நீதி நூல்களின் தோற்றத்திற்குரிய எழுச்சிமிகு எண்ணமும், உள்ளார்ந்த உணர்வும் நிலையாமையை அறிவுறுத்தும் காஞ்சித் திணையினைக் கரு முதலாகக் கொண்டு வளர்ச்சியுற்றுள்ளன என்று நாம் கூறலாம்.
காஞ்சித் திணையில் முதலாவதாகப் பேசப் பெறுவது 'பெருங்காஞ்சி' என்பதாகும். தொல்காப்பியனார்,
மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும்
(தொல். பொருள். 79) என்று அதைக் குறிப்பிடுகிறார். இக்கருத்தைப் புறப் பொருள் வெண்பாமாலை,
மலையோங்கிய மாநிலத்து நிலையாமை நெறியுரைத்தன்று (புறப். வெமா. 270)
என்று விளங்குகிறது.
இத்துறையின் உட்பொருள் வாழ்க்கை நிலை இல்லாதது என்பதாகும். அதைப் "பிறரால் தடுத்திற்கு அரிய கூற்றம் வருமெனச் சான்றோர்கள் அறிவுறுத்துவது " என்று தொல்லாணை நல்லாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இக்கருத்து அமைந்த ஒன்பது பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள்,
பல்சான் றீரே! பல்சான் றீரே! கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள் பயனில் மூப்பின் பல்சான் றீரே!
121

Page 132
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் பிணிக்குங் காலை இரங்குவிர் மாதோ; நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான் எல்லாரும் உவப்பது; அன்றியும் நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே (புறம். 195)
என்பது தலைசிறந்த பாட்டாகும்.
காலத்தை வீணாகக் கழித்துவிட்டவர்களை மெல்ல மெல்ல நற்செயல்களில் ஈடுபடுமாறு தூண்டுவது இப்பாட்டு. அவ்வாறு தூண்டும் முறை நயமிக்கதாகவும், உள்ளத்தில் ஆழப்பதிவதாகவும்
அமைந்துள்ளமை கருதத்தக்கது.
ஓ பலராகிய பெரியோர்கள்! பலராகிய பெரியோர்கள்! கயல்மீனின் முள்ளைப்போன்று நரைமயிர் முதிர்ந்து தோல் திரைந்த தாடையுடைய பயனில்லாத கிழத்தனத்தின் பலராகிய பெரியோர்களே!
இனி விரைவில் கூற்றுவன் வருவான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் கடுமையான வலிமையை யுடையவன்; மழு என்னும் கூர்மையான படைக்கருவியையும் உடையவன், அவன் வந்து உங்களைக் கயிற்றாற் காட்டிக்கொண்டு போகும் போது நீங்கள் மனம் உடைந்து வருந்துவீர்கள்; என்ன செய்யலாம்? நீங்கள் உங்கள் காலத்தை நற்செயல்கள் செய்வதில் கழிக்கவில்லை. இவ்வளவு காலம் அப்படிக் கழிந்து விட்டமையால், இனிமேல் நல்லதைச் செய்வதற்கு நீங்கள் முயலலாம். ஆனால், அதைச் செய்வதற்கு உங்களால் இயலாமல் போனாலும் போகலாம். எனவே, நீங்கள் ஒன்றைச் செய்யலாம்.
இனிமேல் நீங்கள் அப்படி நல்லது செய்தல் ஆற்றீராயினும், தீமையைச் செய்தலையாவது
122

நீக்கிக் கொள்ளுங்கள். அது தான் இனி எல்லாரும் மகிழக்கூடியது. மேலும், நல்லது செய்யும் நெறியில் ஒருகால் உங்களை அது செலுத்தினாலும் செலுத்தும். அதற்குவழி அதுவே!
என்பது இப்பாட்டின் பொருளாகும்.
இதனால் உணர்த்தப்படும் கருத்து "வாழ்க்கை நிலையில்லாதது. எனவே, அவ்வாழ்க்கையை ஒருவன் நல்லனவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; நல்லனவற்றைச் செய்யாது வாழ்நாளை வீண் நாளாகக் கழித்து விட்டவர்கள் இனியாகிலும் நல்லவற்றைச் செய்ய முயல்க! இயலாவிட்டால் தீமைகளேனும் செய்யாமல் வாழ்வதற்கு முயல்க! அது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவ்வாறு நடந்து கொள்ளுவீர்களானால், நாளடைவில் அது அறநெறியில் உங்களைக் கொண்டு செலுத்தும்” என்பதாகும்.
இவ்விழுமிய கருத்துக்கள் அனைத்தும் மனிதனுடைய வாழ்க்கையை நெறிப்படுத்துவதற் காகக் கூறப்பெற்றவையாகும். உலகில் அறம் கூறவந்த அறவோர்கள் பலர். அவர்கள் எல்லாம் அதைச் செய்க; இதைச் செய்யற்க!” என்று பெரியதொரு பட்டியலே கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதைக் கண்டு மனித இனம் திகைப்படைவது உண்டு. ஆனால், இப்பாடலின் ஆசிரியரோ, ஒன்றே செய்க; அதை நன்றே செய்க; அதை இன்றே செய்க' என்று எல்லாருக்கும், எக்காலத்திற்கும் பொருந்தி வரக்கூடிய அறவழியைக் காட்டுகின்றார்.
நல்லது செய்தல் ஆற்றி ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்
என்பது அவர் கூறும் அறிவுரை
>
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 133
நன்மை செய்யத்தான் முடியவில்லை. தீமை யாகிலும் செய்யாமல் இருங்கள்!” என்பது எத்துணைச் சிறந்த கருத்து! நன்மையைச் செய்வதற்கு அறிவு, ஆற்றல், பொருள் வசதி போன்ற பல வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. அவை எல்லாருக்கும் எளிதில் கிட்டக்கூடியன அல்ல. அதனால் காலந் தாழ்த்தலும், வேறு பல இடர்ப்பாடுகளும் உண்டாகலாம். எனவே, உடனடியாக ஒருவன் எளிதில் செய்யக்கூடியது எதுவென்பதைப் புலவர் நன்கு சிந்தித்துப் பார்த்துள்ளார். விரைவில் எத்தகைய இடர்ப்பாடு மின்றிப் பிறருக்குத் தீமை செய்வது மனித இயல்பாகும். அந்த இயல்பையேனும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் வேண்டுகின்றார். இவ்வாறு எதிர்மறை வகையான் அறத்தைச் செய்யுமாறு ஆசிரியர் உணர்த்துகிறார். தீமையைச் செய்யாமல் இருப்பதே சிறந்த அறம்' என்பது இவ்வாசிரியரின் உள்ளக் கிடக்கையாகும். இப்பாட்டில் நல்லது' என்ற சொல் 'அறம்' என்ற பொருளிலும் அல்லது' என்ற சொல் அறம்' அல்லாத பிற' என்ற பொருளிலும் இப்பாட்டில் பயன்படுத்தப்
பெற்றுள்ளன.
அடுத்துள்ள முதுகாஞ்சி' என்ற துறை இளமை நிலையாமையை அறிவுறுத்துகிறது. இதனை,
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்
(தொல். பொருள். 79) என்று தொல்காப்பியனார் விளக்குகிறார்.
இளமைத் தன்மை கழிந்து முதுமையுற்ற மூதறிஞர் பலர் இளமைத் துடிப்புமிக்க அறிவில்லா மக்களுக்கு முதுமையைக் காட்டி. இளமை நிலையில்லாதது என்பதை அறிவுறுத்துவதாகும். இத்துறையில் அமைந்த புறநானூற்றுப் பாடல்களுள், இளமை அளிதோ தானே' (புறம். 243) என்று அறிவிக்கும் செய்யுள் சிறப்புமிக்கதாகும்.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

முதுகாஞ்சியோடு தொடர்புடைய மற்றொரு துறை முதுமொழிக் காஞ்சி' என்பதாகும். மக்கள் தம் வாழ்க்கையில் அடையவேண்டிய அறம், பொருள், இன்பமாகிய மூவகைப் பேறுகளையும் முறையாக எடுத்துரைப்பது முது மொழிக் காஞ்சி' என்பர்.
மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும் உலகியல் பொருண்முடி புணரக் கூறின்று
(புறப்.வெ.மா. 269)
என்பது முதுமொழிக் காஞ்சிக்குத்' தரப்படும் விளக்கமாகும். “எல்லாரும் கொண்டாடும் அறிவுடையோர் குற்றம் நீக்கி ஆராயும் உலகியலுள் முடிந்த பொருளாகிய அறம் பொருளின்பத்தை அறியச்" சொல்லுவது என்பது இதற்குப் பொருள். புறநானூற்றில் ஐந்து பாடல்கள் இத்துறையில் அமைந்துள்ளன. அவற்றுள் சேரமான் கணைக்கால் இரும்பொறை பாடிய,
குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும் ஆள் அன்று' என்று வாளில் தப்பார்; தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேளல்கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி, வயிற்றுத்தீத் தணியத் தாம் இரந்து உண்ணும் அளவை நன்ம ரோவிவ் வுலகத்தானே (புறம். 74)
என்ற பாடல் யாவரும் அறிந்ததாகும்.
இனி நாம் பொருண்மொழிக் காஞ்சி' என்ற துறையைக் காண்போம். "பொருளாவன அறம் பொருளின்பமும் அவற்றது நிலையின்மையும் அவற்றினீங்கிய வீடுபேறுமாம்” என்பது பண்டைத் தமிழ்ச் சான்றோர் கருத்தாகும். காஞ்சி என்பது நிலையாமை என்று பொருள்படும். எனவே, பொருண்மொழிக் காஞ்சி என்பதற்கு, உயிருக்கு இம்மை மறுமைகளில் உறுதி தருகிற பொருளைச்
123

Page 134
சான்றோர்கள் ஒருவனுக்குக் கூறுதல் என்று நாம் பொருள் கூறலாம்.
எரிந்திலங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருண் மொழிந்தன்று
என்பது புறப்பொருள் வெண்பாமாலை (271) தரும் விளக்கமாகும்.
இத்துறையைச் சேர்ந்த பதினேழு பாடல்கள் புற நானூற்றில் காணப்பெறுகின்றன. அவற்றுள் கணியன் பூங்குன்றனார் பாடியுள்ள,
யாதும் ஊரே! யாவரும் கேளிர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றாலும் இலமே; மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆனாது கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம்' என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! (புறம். 192)
என்ற பாட்டு சிறப்புமிக்கதாகும்.
இப்பாடலில் ஒருலகக் கோட்பாடும்', அனைத்துலக மனிதனை'ப் பற்றிய செய்தியும் இடம் பெற்றிருக்கின்றன; அவற்றுடன் உயர்ந்த அறநெறிக் கருத்துக்களும் அறிவுறுத்தப் பெறுகின்றன. அவரவர் ஊழின் வழியே அவரவர் வாழ்க்கை அமைகின்றது. தெளிவு பெறுதல் வாழ்க்கையின் பயன். ஊழின் முறைமை தெரிந்து பற்றற்று ஒழுகும் ஒழுக்கத்தால் மேன்மேலும் தெளிவினைப் பெற இயலும். அத்தகைய பண்பினை உடையோர்க்கு எல்லா ஊரும் தம்முடைய ஊரே! எல்லா மக்களும் தமக்கு
124

உறவினரே!” என்ற அனைத்துலக உணர்வு உண்டாகும் என்பது பண்டைத் தமிழ்ச் சான்றோர் உலகிற்கு வழங்கிய செய்தியாகும்.
இவ்வாறு பல்வேறு துறைகளில் நீதிகளைக் கூறும் புறநானூற்றுப் பாடல்களை ஒருங்கு திரட்டிப் பார்ப்போமானால், அவற்றுள் முப்பத்தொன்பது பாடல்கள் நேரடியாக நீதிநெறிக் கருத்துக்களை மட்டும் எடுத்தியம்புவது புலனாகும்." இவை அல்லாமல், அறத்தின் ஆற்றலையும் சிறப்பையும் அறிவிக்கும் பாடல்கள் முப்பத்து மூன்றும் 2 நிலையாமை இயல்பை உணர்த்தும் கையறுநிலைப் பாடல்கள் நாற்பதும் அதில் இடம் பெற்றுள்ளதை நாம் காணலாம். இவ்வகையில் நோக்குகின்ற பொழுது புறநானூற்றில் அறத்தைப்பற்றி அறிவிக்கும் பாடல்கள் சற்றேறக்குறைய நூற்றிருபது உள்ளமை புலனாகிறது.
மனித இனத்தின் வேதம்
உலகில் இலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாற்றை மூன்று காலகட்டங்களாக நாம் முன்னர்ப் பாகுபாடு செய்துள்ளோம். அவற்றுள், இரண்டாவது நிலையாகிய கவிஞர்களின் காலத்தைச் சேர்ந்தவை சங்க இலக்கியப் பாடல்கள். எனவே, அவற்றுள்ள நீதிப் பாடல்களும் சிறந்த அறநெறிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் இலக்கியப் பாடல்களே யாகும் என்பதை இங்கு நாம் நினைவு கூர்தல் வேண்டும்.
அக்காலத்தின் இறுதியில் திருக்குறள் தோன்றியது எனலாம். அது அறமென்றே'
அழைக்கப்படும் சிறப்புடையது.
அறம்பாடிற்றே ஆயிழை கணவ! (புறம். 34)
என்பதனால் இதனை அறியலாம். திருக்குறள் ஒப்புயர்வற்ற அறநூல் என்பதை அறிஞர் பெருமக்கள் பலர் உணர்ந்து போற்றியுள்ளனர். பண்டைக் காலப்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 135
புலவர் ஒருவர், வையத்தார் மனத்து இருளைப் போக்குவதற்கு வள்ளுவர் ஏற்றிய திருவிளக்கு திருக்குறள் என்று பாராட்டியுள்ளார் :
அறம்தகளி, ஆன்ற பொருள் திரி, இன்பு சிறந்தநெய்; செஞ்சொல்தீ; தண்டு - குறும்பாவா வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள் உள்ளிருள் நீக்கும் விளக்கு. (திரு. மா.47)
இக்காலத்திய அறிஞர் ஒருவர், அது திருமறை களுள் சிறந்த திருமறையாகவும், நீதி நூல்களுள் சிறந்த நீதி நூலாகவும், இலக்கியங்களுள் சிறந்த இலக்கியமாகவும் விளங்குவதை,
மனித இனத்தின் வேதமாக விளங்கும் திருக்குறளில் மில்டனின் கவி நலனும், தாந்தேயின் காப்பிய அழகும், செகப் பிரியரின் உலகப் பொதுமையும், அரிஸ்டாட்டிலின் தெளிந்த அறிவும், பிளேட்டோவின் இலட்சிய நோக்கும், மார்க்கஸ் அரேலியசின் அறவேட்கையும் ஏற்ற அளவில் இணைந்தும், கலந்தும் காணப்பெறுகின்றன."
என்று குறிப்பிட்டுள்ளமை இங்குக் கருதத்தக்கது. தமிழில் தோன்றியுள்ள நீதி நூல்களுக்கு எல்லாம் முடி மணியாகவும் முன்னோடியாகவும் திருக்குறள் திகழ்கிறது.
பழைய நீதி நூல்கள் |
திருக்குறளுக்குப் பின்னர் தோன்றிய நீதி நூல்களைத் திருக்குறளோடு சேர்த்துப் பதினெண் கீழ்க்கணக்கு' என்ற தொகையில் அடக்கியுள்ளனர். அவற்றுள் நான் மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் எட்டு நீதி நூல்களும் மூதுரை' என்று சொல்லப்படும் நீதி இலக்கிய வகையைச் சேர்ந்தவையாக உள்ளன; நாலடியார், பழமொழி
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

என்னும் இரண்டும் நீதி இலக்கியங்களாகக் கருதத்தக்கன.
'மூதுரை' வகையைச் சேர்ந்த நூல்களில் கருத்துக்களை எடுத்துரைக்கும் தொடர் மொழிகள் காணப்பெறுமே யல்லாமல், அவற்றில் கவிதை அழகையோ கற்பனைச் சிறப்பையோ நாம் காண்பதரிது. அதற்குச் சான்றாகப் பின்வரும் பாடல்களைக் காட்டலாம் :
கள்வமென் பார்க்குந் துயிலில்லை; காதலி மாட்டு) உள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள் செய்வமென் பார்க்குந் துயிலில்லை; அப்பொருள் காப்பார்க்கு மில்லை துயில். (நான்.9)
பார்ப்பாரில் கோழியும் நாயும் புகல் இன்னா
ஆர்த்தமனைவி அடங்காமை நன்கின்னா . பாத்தின் புடைவை உடையின்னா ஆங்கின்னா காப்பாற்றா வேந்தன் உலகு. (இன்னா. 3)
ஆர்கலி யுலகத்து மக்கட்கெல்லாம் ஒதலிற் சிறந்தன் றொழுக்கமுடைமை காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல். (முதுமொழி 1)
இவற்றைப் போன்றே பிற நூல்களிலிருந்தும் நாம் மேற்கொள் பல காட்டலாம். அவை ஒன்றில் கூட இலக்கிய நயம் சிறிதும் காணப்படவில்லை. அவை எல்லாம் அறத்தை அறிவுறுத்துவதைத் தவிர வேறொன்றும் அறியாதவை. எனவே, நாம் அவற்றை இலக்கியங்களாகப் போற்றுவதற்கு இயலாத நிலையில் இருக்கிறோம்.
இத்தொகையில் திருக்குறளுக்கு அடுத்து நிலையில் இலக்கியச் சிறப்புடைய நூல்கள் நாலடியாரும், பழமொழியுமாகும். "வேளாண்வேத' மென்று போற்றப்பெறும் நாலடியாரில் சமண சமயக் கருத்துக்கள் வீறுடன் விளங்குகின்றன. திருக் குறளை அடியொற்றி, அதன் கருத்துக்கள் பலவற்றை
Fமப்பின்
125

Page 136
விரித்துரைக்கும் வகையில் பாடப்பட்டுள்ள நூல் நாலடியார். அதில் நானூறு பாடல்கள் உள்ளன. அவற்றுள் நூற்றுப்பத்து பாடல்கள் இலக்கியச் சுவை நலம் வாய்ந்தவை என்பது டாக்டர் ஜீ.யூ. போப்பின் கருத்தாகும்.15 மேன்மக்களின் இயல்பை,
அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்குந் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள் மறுவாற்றுஞ் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து தேய்வர் ஒரு மாசுறின். (நாலடி.151)
என்று நாலடியார் நயந்தோன்ற எடுத்துரைக்கின்றது.
"அழகிய வானிடத்துத் தோன்றி மிக்க ஒளியினைப்பரப்பும் திங்களைச் சான்றோர்கள் ஒப்பர். சான்றோர்களும் அருள் ஒழுக்கம் உடையவராதலால் தண்மதிக்கு ஒப்பாவர். ஆனால், அவர்களுக்கு இடையே வேற்றுமையும் உண்டு. சந்திரனோ தன்னிடத்திலுள்ள களங்கத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கும்; சான்றோர் தங்களுக்கு மாசுண்டானால் உயிர்வாழ மாட்டார்கள்" என்ற கருத்தும் அக்கருத்தை எடுத்துரைக்கும் முறையும் நம் உள்ளத்தைத் தொடுகின்றன.
சமண சமயத்தைச் சேர்ந்த முன்றுறை யரையனார் இயற்றிய நூல் 'பழமொழி நானூறு' என்பதாகும். இந் நூலிலுள்ள ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இந்நூல் கருத்தாழமும் இலக்கிய நயமும் வாய்ந்தது. நாம் 'நீதி இலக்கியம்' என்ற இயலில், பழமொழிகள் மூதுரைகளைப் போன்றவை யாகும் என்பதைக் கண்டோம் ஆனால், பதினெண் கீழ்க் கணக்கிலுள்ள பழமொழி' என்ற இந்நூல் வெறும் பழமொழிகளின் திரட்டு அன்று. சிறந்த பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை விளக்கும் வகையில் ஆசிரியர் ஒவ்வொரு பழமொழிக்கும் ஒவ்வொரு வெண்பா இயற்றி யுள்ளார். இயன்ற வகையெல்லாம் சுவை பயப்பதாக
126

அரையனார்
இந்நூலைப்
அமையுமாறு படைத்துள்ளார்.
அறிவினால் மாட்சியொன் றில்லா ஒருவன் பிறிதினால் மாண்ட தெவனாம்? - பொறியின் மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன அணியெல்லாம் ஆடையின் பின். (பழமொழி 26)
என்னும் பாட்டு அணியெல்லாம் ஆடையின் பின்' என்ற பழமொழியை அறிவிக்கிறது. அப்பழமொழியை அப்படியே எடுத்துரைத்தால் அதில் கருத்தாழமோ, கலையழகோ இருக்காது. எனவே ஆசிரியர்,
அறிவினில் ஒரு மாட்சியும் இல்லாத ஒருவன் செல்வம், குலம் முதலாயினவற்றால் மாட்சிமைப் பட்டவற்றைச் செய்ய வல்லவனா? அழகிய மணியும், பொன்னும், சாந்தும், பூமாலையும் என்று சொல்லப்பட்ட இன்ன அணியெல்லாம் ஒருவருக்குத் தேவையான ஆடையின் பின்னல்லவா விரும்பப் பெறும்?
என்று விளவுகிறார். இப்பாட்டில் சொல்லழகும் பொருள் நயமும் பொருந்தி யிருப்பதால்தான் சிறப்புடையதாகத் தோன்றுகிறது. இதைப்போன்ற பாடல்கள் பல பழ மொழியில் உள்ளன.
பதினெண் கீழ்க்கணக்கில் பதினொரு நீதி நூல்கள் உள்ளன. அவற்றுள் திருக்குறள் இலக்கிய இயல்புகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு திகழுகிறது. அதற்கடுத்த நிலையில் நாலடியாரையும், பழமொழியையும் நாம் குறிப்பிடலாம். எஞ்சியுள்ள எட்டு நூல்களும் இலக்கியப் பண்புகள் இரண்டொன்றைக் கொண்ட நீதி நூல்களாக உள்ளன.
பெருவாழ்வு பெற்ற நீதி நூல்கள்
சமய மலர்ச்சிக் காலத்திற்குப் பிறகு சைவ, வைணவக் கருத்துக்களைக் கொண்ட நீதி நூல்கள்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 137
பல இயற்றப் பெற்றுள்ளன. அவற்றோடு இரண் டொரு சமண சமயச் சார்பான நீதி நூல்களும் தோன்றியுள்ளன.
அவற்றுள், அறத்தைப் பாடிய தமிழகத்தின் சாப்போ (Sappho)' என்று போற்றப்பெறும் ஒளவையாரின் நூல்கள் நன்கு உள்ளன. அவை பெரும்பாலும் மூதுரை' வகையைச் சேர்ந்தனவாகும். இடைக்கால நீதி நூல்களுள் மூதுரை' வகையைச் சேர்ந்த நீதி நூல்கள் ஆறு. அவை: 1. ஆத்திசூடி , 2. கொன்றைவேந்தன், 3. உலகநீதி, 4. நறுந்தொகை, 5. நன்னெறி, 6. அறநெறிச்சாரம். என்பனவாகும்.
இவற்றுள் ஆத்திசூடியும், கொன்றே வேந்தனும் தமிழ் மூதாட்டி ஒளவை இயற்றியனவாகும். இவை தமிழ் நாட்டில் எழுதப் படிக்கத் தொடங்கும் குழந்தைகள் எல்லாம் ஒதிப் பயன்பெறும் ஒப்புயர்வற்ற நூல்களாகும். இவற்றில் நல்வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பல கருத்துக்கள், சிலவாகிய சொற்களால் தெளிவாகப் பொருள் புரியுமாறு விளக்கப் பெற்றுள்ளன. இவ்விரு நூல்களும் குழந்தைகளுக்குத் தமிழ் எழுத்துக்களை அகர வரிசையில் அறிமுகம் செய்துவைக்கின்றன. அவை உயிரெழுத்துக்களையும், உயிர்மெய் எழுத்துக் களையும் முதலெழுத்துக்களாகக் கொண்டு தொடங்கும் பாடல்களாக இயற்றப் பெற்றுள்ளன. இங்கிலாந்து நாட்டில் அகர வரிசைப் பட்டியல் பாடல் நூல்கள்' (Alphabetical Catalogue of Poetry) என்ற பழைய நூல்கள் சில உள்ளன. அவை நம்முடைய ஆத்திசூடியையும், கொன்றைவேந்தனையும் போன்று பாடப்பட்டுள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். பெறுதற்கரிய அறிவுக் களஞ்சியத்தை ஒளவையார் மிக எளிய நடையில், எல்லாரும் புரிந்து கொள்ளத் தக்க வகையில் இயற்றியுள்ளார். அவை அவருடைய அறிவின் முதிர்ச்சியையும் உயர்ந்த உள்ளத்தின் சிறந்த பண்பாட்டையும் அறிவிக்கின்றன.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

உலக நீதி' என்ற நூலை உலகநாதர் என்பவர் இயற்றியுள்ளார். இது சிறுவர்கள் எளிதாகப் படித்துப் பாடம் பண்ணும் வகையில், எளிய நடையில் இன்னோசை நயத்துடனும் இயற்றப்பட்டுள்ளது. இந்நூல் ஒளவையின் நூல்களுக்கு அடுத்துப் பெருவழக்காக இருந்துவருகிறது. இந்நூல் பதின்மூன்று விருத்தப்பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இந்நூலாசிரியர் 'மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே' என்று முருகனைப் போற்றி வழிபடுகிறார். பதினொரு பாடல்களில் 'செய்யவேண்டாம்' என்ற இறுதிச் சீருடைய அடிகளை இந்நூலாசிரியர் அமைத்துள்ளார். 'இன்னவற்றைச் செய்யாதே' என்பதை வலியுறுத்துகின்ற வகையில் இந்நூல் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதிவீரராம பாண்டியன் இயற்றிய வெற்றி வேற்கை'யென்று போற்றப்படும் 'நறுந்தொகை' மூதுரை வகையைச் சேர்ந்த மற்றொரு சிறப்புமிக்க நீதி நூலாகும். ஒளவையாரின் ஆத்திசூடியை அடியொற்றி இந்நூல் இயற்றப்பட்டது எனலாம். இந்நூல் ஆசிரியர் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவர்.
கற்பனைக் கடலாகக் கருதப் பெறுகின்ற சிவப் பிரகாச சுவாமிகள் இயற்றியது நன்னெறி' என்ற நீதி நூலாகும். சான்றோர் வாழ்ந்து காட்டிய நல்ல நெறியிலே நாம் சென்றால், வாழ்க்கையில் அறம், பொருள், இன்பம் வீடாகிய நால்வகைப் பேறு களையும் எளிதில் அடையலாம் என்ற நோக்கத்துடன் ஆசிரியர் இந்நூலைப் பாடியிருக்கிறார். நாற்பது வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன.
சமண
சமண சமயத்தினருக்கே சிறப்பாக உரிய ஒழுகலாறுகள் பலவற்றோடு அறம், ஒழுக்கம் பற்றிய பொதுவான கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டு இலங்குவது முனைப்பாடியார் இயற்றிய
127

Page 138
கைை
அறநெறிச்சாரமாகும். இந்நூல் ' சேர்ந்ததாகும். இவ்வாறு கருதுவதற்குரிய இயல்புகள் பல இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எனினும் சில பாடல்களில் குறிப்பு மொழி வழி ஆசிரியர் கருத்துக்களை உய்த்துணரவைக்கும் முறை நீதி நூல்களுக்குத் தேவையற்ற ஒன்றாகும். வீடு பேற்றை அடைவதற்குரிய வழிகளைச் சுட்டிக் காட்டும் பாடல் ஒன்றை இங்கு நாம் பார்ப்போம்.
நல்வினை நாற்கால் விலங்கு ; நவை செய்யுங் கொல்வினை யஞ்சிக் குயக்கலம் - நல்ல உறுதியும் அல்லவும் நாட்பேர்; மரப்பேர் இறுதியில் இன்ப நெறி. (அறசா. 207)
இப்பாடலில் ஆசிரியர்,
"நல்வினையைச் செய்ய முயல் : துன்பத்தைத் தரும் தீவினைகளை யஞ்சி யகல்! சிறந்த ஆன்மிக ஆதாயத்தைப் புல் (தழுவு)! ஆன்மிக ஆதாயமற்ற வற்றை முனிந்துவிடு! இவை இறுதியில் வீடுபேற்றை அளிக்கும்" என்ற கருத்தை அறிவிக்கிறார். இப்பாடலில் உற்ற குயக்கலம்', நாட்பேர்', 'மரப்பேர்' என்ற தொடர்கள் குறிப்பு மொழிகளாகும். 'குயக்கலம்' என்பது குயவனால் செய்யப்பட்ட மண் பாண்டமாகிய அகற்சட்டி. இங்கு நாம் அகல் என்ற சொல்லுக்குரிய விலகு' என்ற பொருளைக் கொள்ள வேண்டும். 'நாட்பேர்' என்பது புல். அனுஷ நட்சத்திரத்திற்குத் தமிழில் புல்' என்பது பெயர். இங்கு 'புல்' என்றால் தழுவு என்பது பொருள். மரப்பேர்' என்பதற்கு அத்திமரம் என்பது பொருள். அதற்கு 'முனி' என்றொரு பெயரும் உண்டு. அச்சொல்லிற்கு 'வெறு' என்பது பொருள். இப்பொருளை நாம் இங்குக் கொள்ளவேண்டும். இத்தகைய பாடல்களை சில இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
ஒளவையார் இயற்றிய மூதுரை, நல்வழி என்பனவும், இயற்றிய ஆசிரியர் பெயர்
128

அறியப்பெறாத நீதி வெண்பா என்ற நூலும், குமரகுருபரர் இயற்றிய நீதிநெறி விளக்கமும் நீதி இலக்கிய வகையைச் சேர்ந்த நூல்களாகும். நூலின் பெயரைப் பார்க்கின்ற பொழுது, நாம் நீதி நூல்களைப் பாகுபாடு செய்துள்ள 'மூதுரை' எனப்படும் முதல் வகையைச் சேர்ந்ததாக ஒளவையாரின் மூதுரை இருக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றும். ஆனால், நூலின் உள்ளே நுழைந்து பார்த்தால் இவ்வெண்ணம் தவறானது என்பதை நாம் உணருவோம். இந்நூலின் எப்பாடலைப் படித்தாலும் அதில் கருத்துச் செறிவும், கற்பனை வளமும் கலந்து கற்பவரை இன்புறுத்தும் இயல்புடையதாக இருப்பதைக் காணலாம். முப்பது செய்யுட்களைக் கொண்ட இந்நூல் இலக்கியச் சுவை மிக்கதொரு நீதி நூலாகும்.
ஒளவையாரின் மற்றொரு நூல் நல்வழி. அது 'நீதி வழுவா நெறி முறையை' (நல். 2) உலகிற்கு உணர்த்துகிறது. கற்றாரும், கல்லாதாரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் அது இயற்றப் பட்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் மக்கள் காணக்கூடிய பொருள்களையும், நிகழ்ச்சிகளையும் பொருளாகக் கொண்டு ஆசிரியர் நாற்பது பாடல்களில் தம் கருத்துக்களை அறிவுறுத்து கிறார். அவை கலைநயத்தோடு கற்பவர் உள்ளத்தைக் கவரும் ஆற்றல் உடையனவாகவும் உள்ளன.
நீதி வெண்பா என்ற நூல் மூதுணர்ந்தோர் ஒது சில மூதுரையை' எடுத்துரைப்பதாக அதனுடைய காப்புச் செய்யுள் கூறுகிறது. சொற் சுருக்கமும், கருத்தாழமும், கவிதை நயமும் உடைய இந்நூலில் நூறு பாடல்கள் உள்ளன. அடிக்கடி அறிஞர்கள் மேற்கோளாகக் காட்டும் பாடல்கள் பலவற்றை இந்நூலில் நாம் காணுகின்றோம். ஒயாது பேசும் இயல்புடைய பெண்கள் சிலரைக் கருத்தில் கொண்ட ஆசிரியர்,
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 139
பெண்ணொருத்தி பேசிற் பெரும்பூமிதானதிரும் பெண்ணிருவர் பேசில் விழும்வான்மீன் - பெண் மூவர் பேசி லலைசுவறும்; பேதையே பெண்பாலர்தாம் பேசிலுல் கென்னாமோ பின். (நீதி. 31)
என்று மனங்கலங்குகிறார்.
இவை யாவற்றையும்விட சிறப்பு மிக்கது குமர குருபரர் இயற்றிய நீதி நெறி விளக்கமாகும். உலைவிலாது யாரும் தீதெல்லாம் ஒருவி நீதியே புரிய'ப் பயன்படுமாறு ஆசிரியர் இந்நூலைப் பாடியிருப்பதாகப் புலவர்கள் பாராட்டுகின்றனர். இந்நூல் கடவுள் வாழ்த்து உள்பட நூற்றிரண்டு செய்யுட்களைக் கொண்டது.
குமரகுருபரர் கற்பனைத் திறந்திலும் கவிதைச் சுவையிலும் பலவிடங்களில் ஒளவையையும் விஞ்சிவிடுகிறார் என்று நாம் கூறினால், அது தவறாகாது.
கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும் மலரவன் வண்தமிழோர்க் கொவ்வான் - மலரவன் செய் வெற்றுடம்பு மாய்வன்போல் மாயாபுகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு. (நீதி விள. 7)
இப்பாடலில் புலவரையும் பிரமனையும் ஒப்பிட்டு அவர் களுடைய படைப்பில் பொன்றாகப் புகழ்கொண்டு விளங்குவது எது வென்பதை எடுத்துரைக்கும் நயம் அவருடைய கவித்திறமைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.
நீதி இலக்கியத்தின் யாப்பு அமைதி
மேற்கண்ட நூல்கள் அல்லாமல், பல திறப்பட்ட நீதி நூல்கள் பதினைந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டு இன்றுவரை தமிழில் இயற்றப் . பெற்றுள்ளன. அவற்றுள் வடமொழி இலக்கிய மரபைப் பின்பற்றி இயற்றப்பட்ட 'சதகங்கள்'
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

சிறப்புடை யனவாகும். அவையாவும் வழக்காற்று அறநெறியைச் சமயக் கருத்துக்களோடு குழைத்துத் தருகின்றன. பொதுவாக இடைக்காலத்தில் தோன்றிய நீதி நூல்கள் அனைத்தும் சமயச் சார்புடையன. எனினும், மனித வாழ்க்கைக்குப் பயன்படும் நீதிக் கருத்துக்களை எடுத்துரைப் பதையே அவை சிறந்த குறிக்கோளாகக் கொண்டுள்ளன. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த வேதநாயகம் பிள்ளை இயற்றிய நீதி நூலும், இந்நூற்றாண்டில் சுப்பிரமணிய பாரதியார் பாடிய புதிய ஆத்திசூடியும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படைத்துள்ள ஆத்திசூடியும் பழைய மரபை யொட்டி, முற்போக்குக் கொள்கைகள் பலவற்றை எடுத்துரைப்பனவாகும்.
திருக்குறளுக்குப் பின்னர் தோன்றிய நீதி நூல்கள் எல்லாம் திருக்குறளின் அமைப்பு முறையை ஓரளவிற்கும், பேரளவிற்கும் அதன் கருத்துக் களையும் பொன்னேபோல் போற்றிப் பின்பற்றி யுள்ளன. திருக்குறளின் சொற்களையும் கருத்துக்களையும் எடுத்துத் தம் நூல்களில் பயன்படுத்தாத புலவர்களே இல்லை எனலாம்.
இந்நீதி நூல்கள் எல்லாம் வெண்பா யாப்பில் அறக்கருத்துக்களை எடுத்துரைக்கின்றன. கருத்துக்களைத் திட்பநுட்பத்தோடு எடுத்துரைப் பதற்கு வெண்பா ஏற்றதொரு யாப்பாக விளங்குவதே இதற்குக் காரணம். இவ்வுண்மையைத் தமிழகத்தில் கிறித்துவ சமயத் தொண்டாற்றிய டாக்டர் ஜி. யூ. போப் நன்குணர்ந்துள்ளார்.
நீதி நூல் ஆசிரியர்கள் அனைவரும் வெண்பா யாப்பையே பயன்படுத்தியுள்ளனர். இப்பா உண்மையிலேயே தன்னிகரற்று விளங்குகிறது. இந்தியாவின் பிற மொழிகளில் எல்லாம் வடமொழியிலிருந்து யாப்பு முறையைக் கடன் வாங்கிப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், தமிழ்ப்
129

Page 140
புலவர்கள் சமஸ்கிருத மொழியைப் பின்பற்றாது, தங்களுக்கென்று தனிச்சிறப்பு வாய்ந்த யாப்பு முறையைப் போற்றி வந்துள்ளனர்."
என்று அவர் மொழிந்துள்ளமை சிந்திக்கத் தக்கதாகும்.
தமிழ் நீதி இலக்கியத்துள் திருக்குறள்
தமிழ்மொழியில் தோன்றியுள்ள நீதி நூல்கள் பல. அவற்றுள் பெரும்பாலானவை மூதுரை வகையைச் சேர்ந்தவை. அவற்றில் அறிவுறுத்தப் பெறும் கருத்திற்கே முதலிடம் கொடுக்கப் பட்டுள்ளதை நாம் மேலே கண்டோம். அவற்றை இயற்றிய புலவர்கள் கலையழகைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், அவர்கள் அறிவுறுத்துவதற்கு எடுத்துக்கொண்ட கருத்துக்கள் வழக்காற்று ஒழுக்க நெறியை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றில் மனித இனம் முழுமைக்கும் பயன்படத்தக்க அறிவுரைகள் அருகியே காணப்பெறுகின்றன.
இவ்வகையில் திருக்குறள் வேறுபட்டு விளங்குகிறது. மனிதன் மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்கு வழிகாட்டுவதே அதன் நோக்கமாக அமைந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், அவ்வழியைக் காட்டுவதற்கு அது மேற்கொண்டுள்ள முறைகள் சிறந்தவையாக உள்ளன. கருத்துக்களை எடுத்துரைப்பதற்குத் திருவள்ளுவர் பயன் படுத்தியுள்ள இலக்கியத் திறன்கள் பல. திருக்குறள் மனிதவாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு இயற்றப்பட்டுள்ளது. அது வாழ்க்கையைத் திருத்துவதாகவும் திருத்தமுற்று அமைவதற்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது. கற்பனை, உணர்ச்சியைத் தூண்டுதல் ஆகிய இரண்டுடன் ஒன்றிய கருத்துக்கள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. கலையழகு குன்றா வகையில் கருத்துக்களை உணர்த்தும் மாய வித்தையில் வள்ளுவர் வல்லவராக விளங்குகின்றார். இதனை,
130

மனிதனால் என்றும் வெளியிடப்படாத மிகவும் நுட்பமான கருத்துக்களைச் சுருக்கி இந்த ஆசிரியர் ஏழே சீர்களில் அமைந்திருக்கிறார். இச்சிறிய இன்னிசைக் கருவியில் அவர் சிறந்த இசை வல்லுநனைப்போல எத்துணை அழகாக இனிய கீதத்தை எழுப்பி இருக்கிறார்! சுடரொளியோடு நகைச்சுவை, வற்புறுத்திக் கூறுதல், கற்பனை, முரண்பாட்டு நயம், வினாவுதல், ஓவியம் போன்ற உவமைகள் என்ற பல இலக்கியத் திறன்களை அவர் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு கருவிலே திருவுடைய கலைஞன் கையாளும் உத்திகள் பலவற்றுள் ஒன்றையும் அவர் இந்த முழுமையான கலைப்படைப்பில் ஆளாமல் விட்டுவிடவில்லை"
என்று வ.வே.சு.ஐயர் தெளிவுறுத்தி யுள்ளமை இங்குக் கருதத் தக்கதாகும்.
பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள பிற நீதி நூல்களுள் நாலடியாரும் பழமொழியும் ஓரளவிற்கு இலக்கிய நயத்தோடு இனிய முறையில் கருத்துக் களை அறிவுறுத்த முயலுகின்றன. ஆனால், அம்முயற்சியில் அவை முழு வெற்றி பெற்றுள்ளன என்று நாம் சொல்லுவதற்கு இல்லை. இதற்குக் காரணம் நாலடியாரை இயற்றிய புலவர்கள் பலர் என்று நாம் கூறலாம். நாலடியார் ஒரு தொகைநூல். திருக்குறளின் அமைப்பு முறையைப் பின்பற்றி அது தொகுக்கப்பட்டுள்ளது. அந்நூலின் பாடல்களை இயற்றிய ஆசிரியர்கள் அறநெறிக் கருத்துக்களை அறிவுறுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால், அவற்றில் கலையுணர்வுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. கூறியது கூறலும், முன்னுக்குப் பின் முரணான செய்திகளும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஒரே புலவர் அந்நூலை இயற்றியிருப்பாரானால், அது வேறு வகையாக இலக்கிய நலன்கள் மிக்குடையதாக அமைந்திருக்கலாம். இன்றைய நிலையில் அது
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 141
தொகை நூலாக இருந்தாலும், அதில் உள்ள பாடல்களுள் மூன்றிலொரு பங்கு இலக்கியச்சுவை நலம் கனிந்தவையாக உள்ளமை போற்றத் தக்கதாகும்.
பழமொழி நானூற்றை முன்றுறையரையனார் என்ற புலவர் ஒருவர் இயற்றியுள்ளார். ஆனால், திருவள்ளுவரைப் போல இந்நூலாசிரியர் தமது நூலைத் திட்டமிட்டுப் பல பாவியல்களாக
வகுத்துரைக்கவில்லை. இதை,
அவ்வப்போது கண்டும் கேட்டும் ஊகித்தும் தெளிந்த பொருள்களை ஒவ்வொரு பழமொழியோடியைத்து ஒவ்வொரு வெண் பாவாகப் பாடிச் சேர்த்து வந்தாராதல் வேண்டும். இரு கயலுண்கண்' என்னும் வெண்பாவின் உரையில் உரையாசிரியர், முத்தகம் குளகம் தொகை தொடர் நிலையென, எத்திறத் தனவும் ஈரிரண்டாகும்' என்பதனால் உலகத் துண்டான செய்யுட்களெல்லாம் நால்வகையான அடங்கும். இந்த நானூறும் முத்தகச் செய்யுள் ஆதலால் தனியே நின்று ஒரு பொருள் பயந்து முற்றுப்பெற்றன எனவறிக” என உரைத்திருப்பதே இதற்குச் சான்று பல முனிவர் இயற்றிய நாலடியாரிற்போல் இந்நூலில் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் முதலியன இல்லை
என்னும் கருத்துரையால் நாம் அறியலாம்.
இந்நூலின் ஒவ்வொரு வெண்பாவும், முதலிரண்டடியில் ஆசிரியர் கூற விரும்பும் பொருளும், நான்காம் அடியில் ஒரு பழமொழியும், மூன்றாம் அடியில் பெரும்பாலும் ஆடூஉ முன்னிலையும் சிறுபான்மை மகடூஉ முன்னிலையு மாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. ஆடூஉ முன்னிலைகளில் பல அக்காலத்துப் பாண்டியனை நோக்கி விளியாக அமைந்தன என்பர். சில
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும் :

முன்னிலைகளில் உள்ளுறையுமவமும் உள்ளடங்கி யுள்ளதை நாம் காணுகின்றோம். எனவே, இவற்றை 'நின்று பயனின்மை' என்னும் குற்றமுடையனவாகக் கூறுவதற்கு இயலாது. இவற்றை நீக்கிவிட்டால். வீணான வேறு அடைமொழிகள் இந்நூலில் காணப்பெறவில்லை. சுருங்கச் சொல்லுதலும் ஆழமுடைத்தாதலுமான அழகுகள் இந்நூலில் மிகுதியாக உள்ளன. பொருளையும் பழமொழியையும் பல இடங்களில் நயமுறப் பொருத்தி இருப்பது நவில்தோறும் தூல்நயம் பயப்பதாகும்.
இத்தகைய விழுமிய பண்புகள் பல பல மொழியிடத்தும் பொருந்தி இருந்தாலும், திருக்குறளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபொழுது அது பேரொளி வீசும் திருவிளக்கின் முன்தோன்றும் மின்மினியாகக் காட்சியளிக்கிறது.
இடைக்காலத்தில் தோன்றிய ஒளவையாரும், உலக நாதரும், முனைப்பாடியாரும், அதிவீரராம் பாண்டியரும் இயற்றியுள்ள நூல்கள் நீதிக் கருத்துக்களைப் போதிக்கும் சிறந்த நீதி நூல்களாகும். அவர்கள் அனைவரும் கல்வியறிவு இல்லாப் பொதுமக்களுக்கு, வழக்காற்று ஒழுக்க நெறியின்' அடிப்படை இயல்புகளை விளக்கிக் கூறுவதையே சிறந்த குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். எனவே, நல்வாழ்க்கைக்குரிய நல்ல பல கருத்துக்களை எளிய நடையில், இனிய முறையில் சிலவாகிய சொற்களால் அவர்கள் எடுத்தியம்பியுள்ளனர்.
உலக நீதி' என்ற நூலின் ஆசிரியர், உலகத்தில் பண்டைக் காலந்தொடங்கி உயர்ந்தோர்களால் கடைப்பிடிக்கப் பெற்றுவரும் நீதிகளையே தாம் இந்நூலில் உரைப்பதாக மொழிந்துள்ளார். அவர்,
உலகநீதி புராணத்தை உரைக்கவே 19
என்று குறிப்பிட்டுள்ளமை கருதத்தக்கது.
ள்6
131

Page 142
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை'20 என்று அதிவீரராம பாண்டியர் தம் நூலை அறிமுகப் படுத்துகிறார். நல்லனவாகிய நீதிகளின் தொகை' என்பதே இதற்குப் பொருள். நற்றமிழ் தெரிந்த' என்பதனால், பழமையான தமிழ் நூல்கள் போற்றும் நல்ல நீதிகள் பல இந்நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன என்பது பெறப்படுகிறது.
நீதி வெண்பாவை இயற்றிய ஆசிரியர்,
மூதுணர்ந்தோ ரோதுசில மூதுரையைப் பேதையேன் நீதிவெண்பா வாக நிகழ்த்துவேன் 21
என்று குறிப்பிடுகிறார்.
அறவுரை கேட்பார் பிறவியை நீக்கும் பேராற்றல் உடையவராவர். அவ்வாற்றலைப் பெறுவதற்கு மறவுரையும் காமத்துரையுக் கடியப்படவேண்டும் என்பது முனைப் பாடியாரின் கருத்து"
இவற்றால், இடைக்காலத்தில் இயற்றப்பெற்ற நீதி நூல்களுள் பெரும்பாலானவை அறங் கூறுவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருந்தன என்பது புலனாகின்றது.
ஒளவையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்னும் நான்கு நீதி நூல்களை இயற்றியுள்ளார். அவை அனைத்தும் சிறுவர் சிறுமியர்களுக்காக இயற்றப்பட்டவை என்று கூறினால், அது தவறாகாது. சிறுசிறு சொற்றொடர்களில் அரிய பல அறிவுரைகளை, இளம் பிள்ளைகள் எளிதில் மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக் கொள்ளத்தக்க வகையில், ஆசிரியர் அவற்றை இயற்றியுள்ளார். அத்தகைய நூல்களில் நாம் இலக்கிய இயல்புகளை எதிர்பார்ப்பது தவறாகும். மூதுரை, நல்வழி என்ற இரு நூல்களிலும் நல்ல தமிழ்ச் சுவையும், இயல்பான சொற் பொருளொழுக்கமும், உண்மையும் நுண்மையும் நிறைந்துள்ளன.
132

எனினும், அவற்றில் கருத்துக்களை உணர்த்து வதற்குத் தான் முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கருத்தை எடுத்துரைக்கும் முறையில் கலையழகு அருகியே காணப்படுகிறது. பல பாடல்களில் நீதிக் கருத்துக்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன. அதனால், அவை வெறும் கருத்துக்களின் பட்டியலாகவே தோன்றுகின்றன. அவற்றோடு திருக்குறளை ஒப்பிட்டுப் பார்த்தால் இவ்வுண்மை எளிதில் புலனாகும். காலந்தோறும் தோன்றியுள்ள தமிழ் நீதிநூல்களுள் பழமொழிக்கு அடுத்த இடத்தை ஒளவையாரின் மூதுரையும் நல்வழியும் பெறத்தக்க சிறப்புடையனவாகும்.
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றியருளிய 'நன்னெறி' சிறந்ததொரு நீதிக் களஞ்சியமாகும். சற்றேறக்குறை இருபத்தைந்து சிற்றிலக்கியங்களைப் படைத்த பெருமை அவருக்குண்டு. அத்தகைய மூதறிஞர் இளைஞர் களுக்குப் பயன்படத்தக்க வகையில் அனைவரும் அறிந்த உவமைகளைக் கொண்டு பழகுதமிழில் யாவரும் புரிந்துகொள்ளத்தக்க முறையில் நன்னெறி'யைப் பாடியுள்ளார். திருக்குறளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது, இந்நூல் அமைப்பாலும், அறநெறிக் கருத்துக்களை உணர்த்தும் முறையாலும் கலையழகு குறைந்த
இலக்கியப் படைப்பாகவே காட்சி தருகிறது.
குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்' இலக்கிய இயல்புகள் நிறைந்ததோர் இலக்கியமாகும். அதில் கருத்துக்களுக்கு முதன்மை இடம் அளிக்கப் பட்டிருக்கிறது. எனினும், ஆசிரியர் கற்பவர் உள்ளத்தைக் கவரத்தக்க முறையில் கலையழகும், கற்பனை வளமும் குன்றாத வகையில் அதைப் படைத்துள்ளார். தமிழிலுள்ள நீதி நூல்களுள், திருக்குறளுக்கு அடுத்த நிலையில் சிறப்புமிக்க நீதி இலக்கியமாக அது விளங்குகிறது. அதில் சொல் நயமும், பொருள் நயமும், இலக்கிய இன்பமும் இணைந்தும் இழைந்தும் உள்ளன. அதனால், அது
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 143
கருத்திலே வலிவும், கலையழகிலே பொலிவும் பெற்றுத் திகழ்கிறது.
இவ்வாறு எவ்வகையில் நோக்கினும் திருக்குறளே தமிழ் நீதி இலக்கியத்துள் ஒப்புயர்வற்ற தாகத் தோன்றுகிறது. இந்நிலையில் திருக்குறளின் சிறப்பிற்குரிய காரணம் என்ன?'' என்ற எண்ணம் நம்மிடையே எழுகிறது. இக்கேள்விக்கு, இந் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன்பே, மேலைநாட்டு அறிஞர் ஜீ.யூ. போப்பு விடையளிக்க
முயன்றுள்ளார் :
திருக்குறள் இத்துணைச் சிறப்பும் மக்களிடை மதிப்பும் பெற்றிருப்பதற்குரிய காரணம், மிகவும் நேர்த்தியான பாட்டு வடிவில் அமைந்திருப்பது தான் . வடிவத்தினால் உண்டான சொற்சுருக்கம் தமிழ் மொழியின் மாண்புமிக்க வாய்மொழித் தலைவரின் கருத்துரைகளுக்குத் தெய்விகத் தன்மையை அளித்துள்ளதைக் காணுகின்றோம். அதனால், அறநெறிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் நீதி நூல்களுள் தலைசிறந்த வொன்றாக அது விளங்குகிறது 23
என்று அவர் அளித்துள்ள விடை பொருத்தமான தாகத் தோன்றுகிறது.
திருக்குறளின் சிறப்பிற்கு அதை இயற்றிய ஆசிரியரின் ஆளுமையே காரணமாகும். அவர் ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராக மட்டும் விளங்கவில்லை; செம்பொருள் கண்ட செம்மலாக மட்டும் திகழவில்லை. அவர் சிறந்த அறிஞராகவும், கலைஞராகவும் காட்சி தருகிறார். அவருடைய ஆளுமையில் அறிஞர்க்கு உரிய மதிநுட்பமும், கலைஞர்க்குரிய கலையுணர்வும் சான்றோர்க்குரிய சான்றாண்மையும் ஒருங்கே வெளிப்படுகின்றன. அவ்வாளுமையின் வெளிப் பாடாக அவருடைய இலக்கியப் படைப்பு
அமைந்திருக்கிறது.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

தமிழினத்தின் சிந்தனைத்திறன் முதிர்ச்சி யுற்றிருந்த காலத்தில் அவர் தோன்றினார். பழைய மரபுகளை அவருடைய கவிதையுள்ளம் போற்றியது. ஆனால், பழைய கட்டுப்பாடுகளைத் தகர்த்துப் புதிய வழியில் கருத்துக்களை எடுத்துரைக்க அவர் தயங்கவில்லை. அகம், புறம் என்ற பொருள் இலக்கண மரபுகளுக்குக் கட்டுப்பட்டுக் காவலரும் பாவலரும் பாட்டிசைத்த காலத்தில் அம்மரபிற்கு அடிமையாகிவிடாமல், அவர் அறம், பொருள், இன்பம் பற்றிய இலக்கியத்தைப் பல நுட்பமான புதுமைப் பண்புகளுடன் படைத்துள்ளார். நால்வகைப் பாக்களின் நயன்தெரிந்து புலவர்கள் பாக்கள் இயற்றிய காலத்தில், குறுவெண்பாட்டையே தம் நூலுக்குச் சாலச் சிறந்ததாக அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளார். இதனை இதனால் இவன் முடிக்கும்' என்பதை ஆராயுமாறு அறிவுறுத்திய அறிஞர், 'எதை எவ்வாறு எதன் மூலம்' எடுத்துரைக்கலாம் என்பதை நன்குணர்ந்திருந்தார். ஆகவே, தமக்கென ஒரு புதுமுறையை நூல் நுதல் பொருளிலும், நூலின் வடிவிலும் ஒருங்கே அவர் வகுத்துக் கொண்டார். இதனால், இலக்கிய உலகிற்கு மட்டுமல்லாமல், நீதி இலக்கியத் துறைக்கும் அவர் புது வழி காட்டிய புலவரேறாகப் புகழ்பெற்று விளங்குகிறார்.
அறத்தைப் பாடவந்த ஆசான் மூதறிஞராக மட்டும் விளங்கவில்லை. சிறந்த கலைஞராகவும் அவர் காட்சி தருகிறார். வெறும் அறிஞராக மட்டும் அவர் இருந்திருந்தால் முப்பால்' முதன்மையான இலக்கியப் படைப்பாக மலர்ந்திருக்காது. அவருடைய மென்மையான உள்ள உணர்வும், கவின்மிகு கற்பனை உள்ளமும் கருத்துக்களை எடுத்துரைக்கும் முறைகளிலே இயன்ற இடமெல்லாம் முப்பாலில் இலக்கிய மணம் கமழுமாறு செய்துள்ளதை நாம் பார்க்கிறோம். திருக்குறளின் மூன்று பகுதிகளுள் ஒன்றாகப் காமத்துப்பால் அமைந்திருக்கிறது. அப்பகுதியில் உள்ள இரு நூற்றைம்பது குறட்பாக்கள், நூலின் மொத்தப் பாக்களுள்
133

Page 144
சற்றேறக்குறைய ஐந்தில் ஒரு பகுதியாகும். அதை அனைத்தும் இலக்கியச் சுவை நலம் கனிந்த இன் ஊற்றுக்களாக உள்ளன.
வள்ளுவரின் கலையுள்ளம் காமத்துப்பாலை கலைக் கோயிலாகப் படைத்து மகிழ்கிறது திருக்குறளின் முதலிரு பால்கள் கருத்தை எடுத்துரைக்கும் முறை ஒருவகையாகும் அதிலிருந்து வேறுபட்ட நிலையில், காமத்துப்பாலை வள்ளுவர் படைத்துள்ளார். அறத்துப் பாலை போன்றோ, பொருட்பாலைப் போன்றோ காமத்துப்பால் இயற்றப்பட்டிருந்தால் அது காமத்தின் இயல்பையும் வகையையும், மகளிர் ஆடவரை மயக்குவதற்கு கையாளும் முறைகளையும், காம உணர்வால் கருத்தழிந்து கெட்ட ஆடவர் நிலையையும் ஆசிரிய எடுத்துரைத்து இருப்பார். அப்பொழுது, அது சிற்றின்பத்திற்கு வழி காட்டும் கையேடாகவே காட்சி தர நேர்ந்திருக்கும் அல்லது காதல் இன்பத்தை வெறுத்து ஒதுக்கும் நீதி நூலாக அமைந்திருக்கும்
வன்
தUL
ஆனால், பண்டை அகப்பொருள் இலக்கிய மரபைப் போற்றிக்காக்க விரும்பிய வள்ளுவ தூய்மையான உள்ளத்து உணர்ச்சிக்கே காமத்துப் பாலில் இடமளித்துள்ளார். கருத்தொருமித்த காதலரைப் படைத்தும், அவர்கள் வாழ்க்கையில் புதுமையான சிக்கல்களை உண்டாக்கியும் நாடகப்பாணியில் சிந்தைக்கினிய சொல்லோவிய களை அவர் தீட்டியுள்ளார். அவை பேசுப் பொற்சித்திரங்களாக அமைந்துள்ளன. கற்பனை உள்ளம் வாய்ந்த சிறந்ததோர் கலைஞனால்தான் இத்தகைய காதல் நாடகத்தைப் படைக்க முடியும் காமத்துப்பாலை இயற்றியதன் மூலம் ஒப்புயர்வற்ற கலைஞனுக்குரிய முத்திரையை வள்ளுவ திருக்குறளில் பொறித்துச் சென்றுள்ளார்.
பொருட்பாலில் மதிநுட்பம் நூலோடு உடைய மூதறிஞராக விளங்கும் திருவள்ளுவர் காமத்துப்பாலில் நம் கருத்தைக் கவரும்
134

கலைஞராகச் சிறப்புற்றிலங்கும் திருவள்ளுவர், அறத்துப்பாலில் ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராகத் தோன்றுகிறார். அவருடைய சான்றாண்மைப் பண்பு முப்பாலிலும் இழையோடிச் செல்லுகிறது. அதைப்போன்றே, பிற பண்புகளும் குறிப்பிட்ட ஒரு பாலில் முதன்மை இடத்தைப் பெற்று விளங்கினாலும், மற்ற இரு பால்களிலும் அவை பின்னணியாக அமைந்து, அவற்றைச் சிறப்புறச்
செய்துள்ளதை நாம் காணலாம்.
0
வள்ளுவர் அறிஞராகவும், கலைஞராகவும் | திகழ்வதோடு சான்றோராகவும் விளங்குகிறார். அவருக்குரிய தனிப்பெருஞ் சிறப்பு அவர் சான்றோராக விளங்குவது தான். மேலே சுட்டிய மூவகைப் பண்புகளும் தனிமனிதன் ஒருவனிடத்தில் ஒருவனிடத்தில் ஒருங்கே பொருந்துவது அரிது. உலகில் எத்தனையோ அறிஞர்கள் தோன்றி யுள்ளனர். அவர்களுள் சிலர் சிறந்த கலைஞராகவும் சிறப்படைந்துள்ளனர். ஆனால், அவர்களிடையே சான்றோர்களைக் காண்பது கடினமாகும்.
5
'த
ட'
)
|
அறிவின் சுடரொளியாக விளங்குபவன் அறிஞன்; உணர்ச்சியின் ஊற்றாக விளங்குபவன் கலைஞன்; வாழ்க்கையின் ஒளிவிளக்காக விளங்குபவன் சான்றோன். இம்முப்பெரும் பண்புகளுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. இம்முரண்பாடுகளைக் கடந்த நிலையில் அறிஞனாகவும், கலைஞனாகவும், சான்றோனாகவும் ஒருவன் விளங்குவது என்பது எளிதில் இயலாத ஒன்றாகும். உலக வரலாற்றில் அத்தகைய பெரியார்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலராகத்தான் காணப்பெறுகின்றனர். அத்தகைய பெரியார்களுள் நம்முடைய திருவள்ளுவர் ஒருவராகக் காட்சியளிக்கின்றார்.
)
பிற நாட்டு கவிஞர்கள் எல்லாம் மனிதனின் உடற்பசியைப் புனைந்துரைப்பதில் தங்கள் ) அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்திவந்த
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 145
அக்காலத்தில், வள்ளுவர் மனித உள்ளத்தின் நுட்பமான உணர்ச்சிகளைப் போற்றிக் கலையழகு குன்றாதவகையில் காதல் வாழ்வின் கருத்தோவியங்களைப் படைத்துள்ளார். இதற்குச் சான்றாண்மைப் பண்பில் ஊறிய அவருடைய கலையுள்ளமே காரணமாகும்.
ம s 1- 2
டு
A த.
6
1
--
ை
வள்ளுவரின் சான்றாண்மைப் பண்பு காலத்தையும் இடத்தையும் கடந்து, மனிதகுலம் மாண்புற்று விளங்க வழிகாட்டுகிறது. அவர் அனைத்துலக மனிதனைப் பாடியதற்கும் அவருடைய சான்றாண்மைப் பண்பே முதற் காரணமாகும். அவருக்குப் பிறகு தோன்றிய நீதி நூலாசிரியர்கள் எல்லாரும் அவருடைய
வழியையே பின்பற்றியுள்ளனர். இயன்ற வழியெல்லாம் அவர்கள் திருக்குறளின் கருத்துக்களைப் பொன்னே போல் போற்றித் தம் நூல்களில் பயன்படுத்தியுள்ளனர். மேலும், திருக்குறளின் அமைப்பு முறையையும், கருத்துக்களை எடுத்துரைக்கும் முறைகளையும், முன்மாதிரியாகக் கொண்டு தம் நூல்களைப் படைக்க அவர்கள் முயன்றுள்ளனர். அம்முயற்சியில் ஓரளவிற்குத்தான் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை அவர்களுடைய நீதி நூல்கள் நமக்கு அறிவிக்கின்றன.
(
(
!
திருவள்ளுவரைப் போன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அறிவும், ஆற்றலும், பண்பும் பெற்றவர்களாக அவர்கள் விளங்கவில்லை. அவர்களுள் சிலர் அறிஞராகவும் சான்றோராகவும் வாழ்ந்தனர்; மற்றும் சிலர் அறிஞராகவும் கலைஞராகவும் திகழ்ந்தனர். ஆனால், அம்மூவகைப் பண்புகளையும் ஒருங்கே பெற்ற புலவர்களாக அவர்கள் விளங்கவில்லை. இக்காரணத்தினால், அவர்களுடைய நீதி நூல்கள் மேற்கண்ட பண்புகளில் யாதாகிலும் ஒரு - பண்பே முதன்மையிடம் பெறலாயிற்று. அதனால், அவை தலை சிறந்த கலைப்படைப்பாக மாண்புறாமல் போயின் .
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

இக்காரணங்களால் தமிழ் மொழியின் நீதிநூல்களாகிய இலக்கிய வானில் வள்ளுவர் இயற்றிய திருக்குறள் தன்னிகரற்ற தண்மதியமாகத் நிகழ்கிறது.
7. உலகநீதி இலக்கியத்துள் திருக்குறள்
ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு கிரேக்க மொழி சிறப்புற்று விளங்கியது. அம்மொழியில் நீதிநூல்கள் சில இயற்றப்பட்டுள்ளன. நீதி இலக்கிய வளர்ச்சியின் தொடக்க காலத்தில் அம்மொழியில் தோன்றிய நூல்களை நீதி இலக்கியங்களாக நாம் கருதுவதற்கில்லை. அவை அனைத்தும் மூதுரை' வகையைச் சேர்ந்தனவாகும். கி. மு. ஏழாம் நூற்றாண்டு அளவில் இயற்றப்பட்ட 'வேலையும் நாள்களும்' என்ற நீதி நூல் கிரேக்க மொழி நீதி இலக்கியத்துள் சிறப்புமிக்கதாகும்.
அது வழக்காற்று ஒழுக்க நெறியை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்ட நீதிநூல். அந்நூலில் காணப்பெறும் உழவுத் தொழிலைச் செய்யும் முறை, அலைகடலில் அஞ்சாது மரக்கலத்தைச் செலுத்தும் கடலோடிகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், பருவங்களின் வருணனை, நல்ல நாள் தீய நாட்களைப்பற்றிய குறிப்பு ஆகிய பகுதிகளை நீக்கிவிட்டால் அறத்தை உலகிற்கு அறிவிக்கும் பகுதிகள் அதில் மிகக்குறைவாக தோன்றும். அப்பகுதியில் உணர்த்தப்படும் அறமும் முறைப்படுத்தித் தெளிவாக எடுத்துரைக்கப் பெறவில்லை. அன்றாட நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான சில கருத்துக்கள் அதில் நயமாகக் கூறப்பெற்றுள்ளன. இவ்வகையில் அந்நூல் நீதி நூலாகக் காணப்பெறுகின்றது.
ஆயினும், அறநெறிக் கருத்துக்களை உலகிற்கு உணர்த்துவதில் திருக்குறளைப் போன்ற அனைத்துலகப் பண்பும் என்றும் நிலைபெற்று வாழக்கூடிய உண்மைகளும், காலத்தையும், இடத்தையும் கடந்து விளங்கக்கூடிய கருத்துக்களும் மிகச் சிலவாகவே அதில் இடம்பெற்றுள்ளன.
135

Page 146
திருக்குறளுக்கும் வேலையும் நாள்களும்' என்ற நூலிற்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளமையால், அதைத் திருக்குறளுக்கு ஒப்பாக நாம் கூறிவியலாது.
இனி, நீதி இலக்கியம் என்ற முறையில் நோக்குகின்ற பொழுது, அதில் மற்றொன்று விரித்தல்' மிகுதியாக இடம் பெற்றுள்ளதை நாம் காணுகின்றோம். வழக்காற்று ஒழுக்க நெறியை அது விளக்குகின்றது. இக்காரணங்களால், கவிதைச் சுவையும், கற்பனை வளமும் அதில் குறிப்பிடத்தக்க அளவிற்குக் காணப்பெறுகின்றன. திருக்குறளின் இலக்கிய இயல்புகளோடு, வேலையும் நாள்களும்' என்ற நூலின் இலக்கியப் பண்புகளை நாம் ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது ஒரு சில பகுதிகளே அதில் நலில்தோறும் நூல்நயம்' பயப்பதாக உள்ளன. மற்றவையெல்லாம் சிறப்புடையனவல்ல. இவற்றைக் கருத்தில் கொண்டு அதைப் படிக்கின்றபொழுது திருக்குறள் தரும் இலக்கிய இன்பத்துள் கால் பகுதியைத்தான் அதனிடம் பெற முடிகிறது என்று நாம் கூறலாம். ஆகவே, அமைப்பாலும், கருத்துக்களை எடுத்துரைக்கும் முறையாலும் நீதி இலக்கிய உலகில் திருக்குறள் பெறக்கூடிய இடத்தை வேலையும் நாள்களும்' பெற இயலாத நிலையில் உள்ளமை இங்கு கருதத்தக்கது.
'வேலையும் நாள்களும் தோன்றிய பிறகு, சில உதிரிப்பாடல்கள் நீதிப்பாடல்களாக கிரேக்க மொழியில் இயற்றப்பட்டுள்ளன. அவற்றிற்குப் பிறகு தோன்றிய 'நீதி நூல்கள்' அறநெறிக் கருத்துக்களைப் போதிப்பன அல்ல. அரேதஸின் 'இயற்காட்சியும்', நிகாண்டர் இயற்றிய மருத்துவ நூல்களும் நீதி நூல்கள் என்று பெயரளவில் போற்றப் பெறுகின்றன. இயற்காட்சி' என்னும் நூல் வான நூல் ஆராய்ச்சியாகும். நிகாண்டரின் நூல் நஞ்சுடைய விலங்குகளின் கடிகளிலிருந்து மனிதனைத் தப்பிப் பிழைக்குமாறு செய்வதற்கு வழிகாட்டுவன. அவற்றில் இலக்கிய நயம் என்பது
136

மருந்திற்குக் கூடக் காண முடியவில்லை. கருத்திலும், இலக்கியப் பண்பிலும் அவை மிகுந்த
குறைபாடுடையன.
ஆகவே, கிரேக்க மொழியில் திருக்குறளுக்கு ஒப்பாக நீதிநூல்கள் இல்லை என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். ஹெஸியட்டின் 'வேலையும் நாள்களும்', ஆலையில்லா ஊருக்கு இலுப்பப்பூ சருக்கரை' என்பதைப் போன்று சிறந்ததொரு நீதிநூலாக கிரேக்க மொழியில் போற்றப்பெறுகிறது என்று நாம் கூறினால், அது மிகையாகாது.
ஆடம்பர ஆரவாரமிக்க ரோமாபுரியில் நீதி நூல்கள் என்று சொல்லத்தக்க வகையில் மூன்றே நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் காலத்தாலும் கருத்தாலும் முதன்மையானது பொருள்களின் இயற்கையாகும்' அனைத்துலக நோக்கோடு இயற்றப் பெற்றுள்ள நீதி நூல் என்று இதை நாம் கூறலாம். மனித இனம் மனவமைதியுடன் இன்பமாக வாழ்வதற்கு இந்நூல் வழி காட்டுகிறது. ஆனால், இது ஒரு பகுத்தறிவுவாளனின் படைப்பாகத் தோன்றுகிறது. கடவுளே இல்லை'யென்ற தத்துவம் அதில் இழையோடிச் செல்லுகிறது. மக்களுடைய அறியாமைக்குச் சமயமும் தெய்வங்களுமே காரணம் என்று கூறுவதோடு, அவற்றைப் பற்றிய நம்பிக்கையை ஒழித்துவிட்டால் தான் மனிதன் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்று அது அறிவிக்கிறது. இக்கருத்துக்களே நூலின் பாதிக்கு மேற்பட்ட பகுதியில் திரும்பத் திரும்பப் பேசப் பெறுகின்றன. இதையடுத்து உலகப் பொருள்களின் தோற்றத்திற்குக் காரணமான அணுக் கொள்கை' நூலின் மூன்றிலொரு பகுதியை அடைத்து விடுகின்றன. எஞ்சிய பகுதிகளே அறத்தைப் போதிக்கின்றன. அவ்வறநெறிக் கருத்துக்களும் ஒப்புயர்வற்றவை அல்ல. வாழ்க்கையின் இன்பத்தைப் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு மனிதன் வாழ்வதற்கு அவை வழிகாட்டுகின்றன. அதில்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 147
மனித உரிமைகள்', அச்சத்திலிருந்து விடுதலை' என்பனவற்றைப் போன்ற முழக்கங்கள் புதுமையாகவும், போற்றத்தக்கனவாகவும் உள்ளன.
ආ අමු අමු.
3 ) 4 @ 9
'' ந
லுக்கிரிஷஸின் கவித்திறன் சிறப்புமிக்கது. எளிய, இனிய சொற்களில் சிக்கலான பல கருத்துக்களையும், கொள்கைகளையும் சிறந்த காட்டுக்களுடன் விளக்கியுரைப்பது அவருக்குரிய தனிச் சிறப்பு. இயற்கையின் எழிலைச் சிறுசிறு சொற்சித்திரங்களாக அவர் தீட்டிக் காட்டுந் திறன் போற்றத்தக்கது. ஆனால், ஒரு தத்துவ நூலின் வழக்கெதிர் வழக்குகளை அந்நூல் மிகுதியாகக் கொண்டிலங்குகிறது. ஆனால், அதனுடைய இலக்கியச் சிறப்பிற்கு ஊறு உண்டாகிறது. நூலில் பாதிப் பகுதிக்கு மேல் வெறும் அளவையியல் முறையில் அமைந்த விளக்கங்களே இடம் பெற்றுள்ளன. அறத்தின் இயல்புகளையும், ஏற்றத்தையும் எடுத்துரைக்கும் இடங்களிலேயே அவருடைய கவிதை அழகிலும், நயத்திலும் இலக்கிய வளம்மிக்கதாக விளங்குகிறது.
எ
ஓ ( 5 6 7 8 9 15 (= =
எனவே, லுக்கிரிஷஸை சிறந்ததோர் அறிவியலறிஞர் என்றும், மெய்ப்பொருள் ஆராய்ச்சியாளர் என்றும் நாம் துணிந்து கூறலாம். அதே சமயத்தில் அவர் ஒரு கவிஞராகவும் விளங்குகிறார். அவருடைய பொருள்களின் இயற்கையை'த் திருக்குறளோடு ஓரளவிற்கு ஒப்புமையுடைய நூல் என்று நாம் கூறினால், அது தவறாகாது. அதில் திருக்குறளில் காணப்பெறும் கலையழகும், இலக்கிய இன்பமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு இடம் பெற்றிருக்கின்றன.
6 9 ஒ உ சி ( அ உ , ஒ ஒ ஒ
அடுத்து வர்ஜில் படைத்த ஜார்ஜிக்ஸ்' என்னும் உழவுப்பாட்டு இலத்தீன் மொழியில் சிறப்புடைய நீதி நூலாகும். உணர்த்தும் பொருளாலும், இலக்கிய இயல்புகளாலும் அதைத் திருக்குறளுக்கு ஒப்பான நூல் என்று கருதுவதற்கில்லை. மாண்புமிகு காப்பியக் கவிஞன் வர்ஜில் இயற்றியதாக
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

இருந்தாலும், அது சிறப்புடையதன்று. திருக்குறளை மெயமலையாகச் சொன்னால், ஜார்ஜிக்ஸை ஒரு
று குன்றாகத்தான் கூறமுடியும்.
இலத்தீன் மொழியில் சிறப்புற்று விளங்கும் ற்றொரு நீதிநூல் வானவியல்'. அதை நாம் புறநூல் என்று ஒப்புக் கொள்ள இயலாது. ஆகவே, ருக்குறளோடு ஓரளவிற்கு ஒப்புமையுடைய இலத்தீன் மொழி நீதி இலக்கியம் லுக்கிரிஷஸின் பொருள்களின் இயற்கை' என்றே உறுதியாக நாம் ரம் கூறலாம்.
சீன மொழியில் நீதி நூல்கள் பல உள்ளன. னினும், அவற்றுள் கன்பூசியஸின் முதுமொழியும்', டு வழிக் கோட்பாடுமே' சிறப்புடையன. மற்ற ால்கள் எல்லாம் வெறும் தத்துவ ஆராய்ச்சி பால்களாக உள்ளன. லவோட்ஸவின் வாழ்க்கை
நறி'யில் இலக்கிய இன்பம் பயக்கும் இனிய இயல்புகள் பல உள்ளன. ஆயினும், அந்நூலை நாம் தி இலக்கியமாகக் கொள்ளுவதற்கில்லை. அதை இறைமை இணைவுப் பண்புடைய (Mystical) தத்துவ பாலாகவே நாம் கருத நேரிடுகிறது. அறத்தைப் ற்றிய கருத்துக்கள் அதில் இலைமறை காய்கள் பான்றுள்ளன.
கன்பூசியஸின் 'முதுமொழி' நல்லதொரு நீதி பாலாகும். அதில் கருத்துவளம் இருக்கிறது; பற்பனை நலமில்லை; கவிதைத் துடிப்பு இருக்கிறது; -லையழகு இல்லை. இலக்கியத்தின் நறுமணம் அதில் கமழவில்லை. உரைநடையில் இயற்றப் பற்றிருப்பது அதனுடைய முதற்குறை என்று நாம் கூறலாம். அவ்வுரைநடையும் உரையாடல் முறையில் அமைந்துள்ளமை நாம் காணுகின்றோம். சிக்கலான கருத்துக்களைத் தடைவிடைகளின் மூலம் விளக்கியுரைப்பதற்குப் பயன்படுத்தப்பெறும் -ருவியே உரையாடல். வடமொழியிலுள்ள பநிமிடதங்களும், கிரேக்க மொழியிலுள்ள மளேட்டோவின் படைப்புக்களும் இவ்வுரையாடல்
137

Page 148
முறையைப் போற்றிப் பயன்படுத்தியுள்ளன. மெய் பொருள் ஆராய்ச்சிக்கு ஏற்றதொரு நடை உரையாடல் என்பதை இவை மெய்ப்பிக்கின்றன சீன மொழியின் பேச்சு வழக்கினைப் பிரதிபலிக்கு நடையிலே, முதுமொழி” இயற்றப்பெற்றிருக்கிறது எனினும், அந்நடை பொருள் தெளிவுமிக்க எளி நடையாக அமையவில்லை என்பது ஆராய்ச்சியாள கருத்தாகும். இக்காரணங்களினால் முது மொழியை' நாம் சிறந்தொரு நீதி இலக்கியமாக கருத முடியவில்லை. அதை நீதி நூல்களும் மூதுரை' வகையைச் சேர்ந்ததாகவே நா குறிப்பிடலாம்.
கன்பூசியஸின் மற்றொரு நூலான 'நடுவழி. கோட்பாடு' நீதி இலக்கியத்தின் இயல்புகள் சிலவற்றைப் பெற்றுள்ளதாகும். முதலாவதாக அது செய்யுள் நடையில் அமைந்திருக்கிறது. அந்நூலில் உள்ள தொண்ணூற்றிரண்டு பாடல்களுள் பத்துக்கு மேற்பட்டவை, கன்பூசியஸ் காலத்திற்கு முற்பட்ட 'பழம்பாடல் தொகுதியை சேர்ந்தனவாகும் அப்பாடல் தொகுதியை முறைப்படுத்தி தொகுத்தவர் கன்பூசியஸ் என்பதை நாம் முன்ன கண்டோம். தம்முடைய கருத்திற்கு ஊற்ற மளிக்கத்தக்க சான்றுகளாகக் கருதிய பழம் பாடல்களை, ஆசிரியர் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் அப்படியே எடுத்துத் தம் நூலில் சேர்த்துக் கொண்டுள்ளார். அவை சொல் நயமும் பொருள் நயமும், கற்பனை வளமும் கருத்து. செறிவும் உடையன. அவற்றோடு இடையிடையே கலந்து காணப்படும் பாடல்கள் கன்பூசியஸா இயற்றப்பட்டனவாகும். எதையும் கன்பூசியஸ் எழுதி வைக்கவில்லை. அவருடைய சீடர்களே தங்களுடைய ஆசிரியரின் கொள்கைகளையும் கருத்துக்களையும் நூல் வடிவில் எழுதி உலகிற்கு உதவினர் என்பதையும் நாம் மறத்தலாகாது.
எனினும், அப்பாடல்களில் ஒளிரும் கலையழகையும், கற்பனை நயத்தையும் நாம் போற்றச் கடமைப்பட்டுள்ளளோம். அந்நூலில் “நடுவழி
138

எள்
•ெ
24. ட
ப் என்பது என்ன?”என்ற மையைக் கருத்தை விளக்கும்
வகையில் பிற கருத்துக்களெல்லாம் அதைச் சுற்றிச் சுழலுகின்றன. அதனால், பல்வேறு வகையான கருத்துக்களுக்கு அந்நூலில் இடமில்லை. எனவே, கருத்துச் செறிவு இல்லாத அந்நூல் ஓரளவிற்கு இலக்கிய இன்பம் பயப்பதாக அமைந்திருக்கிறது.
கருத்தொருமைப்பாட்டிலும், கற்பவர் உள்ளத்தைக் து கவரும் திறனிலும் அது திருக்குறளைப் க போன்றதொரு நீதி இலக்கியம் என்று நாம் கூறலாம்.
ஆனால், அதைத் திருக்குறளுக்கு ஒப்பானதொரு நீதி இலக்கியம் என்று யாரும் கூற முடியாது. அதை நீதி இலக்கியம் என்று கருதுமாறு நம்மைத் தூண்டுவது அதில் எடுத்தாளப்பட்டுள்ள 'பழம் பாடல் தொகுதியைச்' (ஷி - கிங்) சேர்ந்த
பாடல்களேயாகும். அவற்றோடு இடையிடையே து காணப்படும் செய்யுள்களுள் சில அவற்றை
அடியொற்றி இயற்றப்பட்டுள்ளன. இக் த காரணங்களால் நடுவழிக் கோட்பாடு' நல்லதொரு
நீதி இலக்கியமாக விளங்குகின்றது என்று நாம் கூறலாம். சீன மொழியின் சிறப்புமிக்க நீதி இலக்கியம் ஈதொன்றேயாகும்.
6' ='
க்
1 - .மி
G S.
..
c'
இந்தியாவின் சிறப்புமிக்க இருமொழிகளுள் ஒன்றான சமஸ்கிருதத்தில் தொன்மைச் சிறப்பு வாய்ந்த நீதி இலக்கியங்கள் மிகக் குறைவாக உள்ளன. அவற்றுள் பர்த்ருஹரி இயற்றிய சதங்களே
சிறப்புடையன. அவர் இயற்றிய மூன்று சதகங்களுள் ச் நீதி சதகமும், சிருங்கார சதகமும் நீதி
இலக்கியங்களாகப் போற்றத்தக்கனவாகும். ம் அவற்றில் நீதிநெறிக் கருத்துக்களும் கவிதைச்
சுவையும்
இணைந்தும் இழைந்தும் T
காணப்படுகின்றன. எனினும், திருக்குறளோடு 1, பர்த்ருஹரியின் படைப்புகளை ஒப்பிட்டுப்
5
பார்க்கின்றபொழுது அவை இலக்கியப் பண்புகளில் குறைபாடுடையனவாகவே தோன்றுகின்றன.
)
ம. - ம A
நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்து வெளியிட்ட டாக்டர் ஜி.யூ.போப் என்ற ஆங்கிலேயர், பர்த்ருஹிரியின் பாடல்கள் நாலடியாரின்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 149
பாடல்களைக் காட்டிலும் தரம் குறைந்தவை என்று தம் முன்னுரையில் அறிவித்துள்ளார்.24 பர்த்ருஹரியின் சதங்களைப் படித்தவர்கள் டாக்டர் போப்பின் கருத்தை ஒப்புக்கொள்ளுவர் என்பதில் ஐயமில்லை. நாலடியார் திருக்குறளைவிடக் கருத்தாலும், இலக்கிய நலத்தாலும் தரம் குறைந்தது என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும். எனவே, பர்த்ருஹரியின் நீதி சதகமும், சிருங்கார சதகமும் திருக்குறளோடு ஒப்புமையுடையனவாகக்
கூற இயலாதனவாகும்.
இவற்றைத் தவிர, வடமொழியில் உள்ள பிற நீதி நூல்கள் எல்லாம் திருக்குறளுக்கு அருகில் வர இயலாதவை. அவை மூதுரை' வகையைச் சேர்ந்த நீதி நூல்களாகவே உள்ளன.
நாம் மேற்கண்ட நீதி இலக்கிய ஒப்பியல் ஆராய்ச்சியின் பயனாக உலகத்துச் செம்மொழிகளில் உள்ள நீதி இலக்கியங்களுள், திருக்குறள் ஒன்றே தன்னிகரற்ற நீதி
(
குறிப்புகள் 1. Caldwell, R : AComparative Grammer of Dravidian L 2. தொல்காப்பியம், பொருள். சூ. 419, இளம். உரை. 3. ஷ. சூ. 433, இளம். உரை.
4. பார்க்க : புறநானூறு, 2, 3, 5, 6, 35, 40, 55, 184 5. தொல்காப்பியம், பொருள். சூ, 440, பேரா. உரை.
6. ஷ. சூ. 440, போரா. உரை. 7. பார்க்க : புறநானூறு, 194, 357, 359, 360 , 362, 363, 364, 365, 3
8. பார்க்க: புறநானூறு 18, 27, 28, 29, 74
தொல்காப்பியம், பொருள். சூ , , நச்சி. உரை.
பார்க்க : புறநானூறு 5, 24, 75, 121, 182, 183, 185, 186, 187, 188, 11. பார்க்க: குறிப்பு 89, 92, 93, 95 12. பார்க்க : புறநானூறு 9, 20, 31, 34, 35, 39, 44, 55, 58, 62, 93, 108
362, 366, 377, 381,390,395, 397, 399.
ல் ல் ?
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

இலக்கியமாகத் திகழ்கிறது என்ற உண்மை புலனாகின்றது. கருத்து வளத்தாலும், அவற்றை எடுத்தியம்பும் முறையாலும், நூலின் வடிவ அமைப்பாலும் திருக்குறள் ஒப்புயர்வற்ற நீதி இலக்கியமாகும். அதற்கு அடுத்த நிலையில் இலத்தின் மொழியிலுள்ள லுக்கிரிஷஸின் பொருள்களின் இயற்கையை நாம் குறிப்பிடலாம். உலக நீதி இலக்கியத்துள் மூன்றாவது இடத்தைக் கன்பூசியஸின் நடுவழிக் கோட்பாடு ' பெறுகிறது என்று கூறினால், அது தவறாகாது. பர்த்ருஹரியின் நீதி சதகம்' நான்காம் இடத்தையும், கிரேக்க மொழியிலுள்ள வேலையும் நாள்களும்' என்ற நீதி இலக்கியம் ஐந்தாவது இடத்தையும் பெறுவதற்குரிய தகுதியும் சிறப்பும் வாய்ந்தனவாக உள்ளன. எனவே, நடுவுநிலையோடு உலகச் செம்மொழி இலக்கியங்களை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்குத் திருக்குறளைப் போன்று, மனித இனத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழும் நீதி இலக்கியம் உலகில் வேறெந்த மொழிகளிலும் தோன்றவில்லை என்பது எளிதில் புலனாகும்.
-anguages, p. 15; University of Madras, 1956.
66.
189, 190, 191, 192, 193, 195, 214.
, 134, 145, 159, 166, 175, 210, 21, 224, 230, 237, 255, 263, 336,
139

Page 150
13. பார்க்க : புறநானூறு 112-190; 217-227; 230-243; 260, 14. திருவள்ளுவர் திருநாள் மலர், பக். 62; சென்னை, 1937. 15. Pope, GU. (TR) : Naladiyar, p. xi; Clarendon P 16. Pope, GU. : The Poets of Tamil Land, Tamilian 17. Aiyar,V. V. S. (Tr) : The Kural or The Maxims O 18. முன்னுறையரையனார் : பழமொழி நானூறு, தி.செல்வக் 19. நீதிநூற்கொத்து, முதற்பாகம், கழக வெளியீடு; உலக நீதி 20. ஷ, நறுந்தொகை, நூற்பயன், செய்யுள். 21. ஷ, நீதிவெண்பா, காப்பு.
22. ஷ, அறநெறிச்சாரம், பாயிரம். 23. Pope, GU (Tr) : The SacredKural, p. vi; Henry 24. ஷ : Naladiyar, p, xi: EN;
140

261, 263-265; 270
ress, Oxford, 1893.
Antiquary, Vol. II, p. 40; Madras, 1912. -f Tiruvalluvar, Intr. P. xii; Amudha Nilayam, Madras, 1961.
கேசவராய முதலியார் பதிப்பு, பக். 33-34; சென்னை, 1929.
காப்புச் செய்யுள் ; சென்னை, 1964.
- Frowde, London, 1886.
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 151
(இனியவை ந
இனியவை நா
தமிழ் இலக்கியப் பரப்பில் அறநூல்கள் கணிசமான பகுதியாகக் காணப்படுவதை அவதானிக்கலாம். இவை நீதி முறைகள், ஓழுக்க நெறிகள் முதலியன பற்றி எடுத்துக் கூறுகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவையிவை என்பதனைப் பின்வரும் வெண்பா மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணை முப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இந்நிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாங் கீழ்க் கணக்கு'
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடும் இவ்வெண்பாவில் ''நானாற்பது' என்று குறிப்பிடப்படுபவை இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது என்பனவாகும். இவற்றுள் திருக்குறள், நாலடியார், திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு என்பன அறநூல்களாகும். திரிகடுகம், நான்மணிக்கடிகை என்பவற்றை இயற்றியவர் வைணவ மதத்தினர் என்றும், ஆசாரக் கோவையின் ஆசிரியர் சைவர் என்றும் கொள்ளப்படுவர். ஏனைய அறநூல்கள் யாவும் சமண சமயத்தவரால் ஆக்கப்பட்டுள்ளன என்ற கருத்துக் காணப்படுகின்றது. இவ் அறநூல்கள் சமணச் சார்புடையன எனக் கூறப்படுகின்றது. இதுபற்றிய வேலுப்பிள்ளையின் கருத்தை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

பற்பது
ம. நதிரா
இவ்வாறு வெவ்வேறு சமயத்தவரால் இயற்றப்பட்டனவென்பது இவற்றிலுள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுட்களிலிருந்தும்
பாயிரச் செய்யுட்களிலிருந்தும் தெரிய வருகின்றது............... இந்நூல்கள் காலத்தின் தேவையை ஒட்டி எழுந்தனவாக இருக்க வேண்டும் எனக் கொள்ள இடந்தருகின்றது.
(வேலுப்பிள்ளை ஆ, 1969:36)
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்ககாலத்திற்குரியன் என்று கொள்ளும் மரபு ஒன்றுள்ளது. ஆனால் அவை சங்கமருவிய காலத்தன் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. வையாபுரிப்பிள்ளை தனது இலக்கிய மணிமாலை எனும் நூலில் இவை சங்கமருவிய காலத்தன் என்பதற்கான ஆதாரங்களைத் தந்து நிறுவுகின்றார்.
'இனியவை நாற்பதின்' ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதன் சேந்தனார் ஆவார். பூதன் என்பது இவரது தந்தையார் பெயர். மதுரையில் தமிழாசிரியராக இருந்த பூதன் என்பவருடைய புதல்வராகிய சேந்தனார் என்று கொள்ளப்படுகின்றது. மனித வாழ்க்கைக்குத் தேவையான இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் கூறியிருத்தலால் இந்நூலிற்கு 'இனியவை நாற்பது' (ஒவ்வொரு பாடலிலும் இனிதே என்று வருகிறது) என்ற பெயர் வந்தது என்று கூறுவர்.
இந் நூல் கடவுள் வாழ்த்து ஒன்றும் நீதிகளைச் சொல்லும் நாற்பது பாடல்களுமாக
141

Page 152
மொத்தம் நாற் பத் தொரு பாடல்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் எட்டாவது பாடல் மட்டுமே ஐந்து அடிகளையுடைய பஃறொடை வெண்பா. ஏனையவை நான்கு அடிகளையுடைய இன்னிசை வெண்பாக்கள். பஃறொடை வெண்பா இடைச் செருகலாக இருக்கலாம் என்ற கருத்தும் காணப்படுகின்றது. இந்நூலில் நான்கு பாடல்களில் மட்டும் (1, 3, 4, 5) நான்கு நீதிகளும் ஏனைய பாடல்களில் மூன்று நீதிகளும் கூறப்படுவது கவனிக்கத்தக்கது. இனியவை நாற்பதின் கடவுள் வாழ்த்துப் பின்வருமாறு அமைகிறது :
''கண்மூன் றுடையான் தாள் சேர்தல் கடிதினிதே தொல்மான் துழாய் மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முக நான் குடையானைச் சென்றமர்ந்தேத்தல் இனிது.''
இங்கு இவ்வாசிரியர் முதலில் சிவபெரு மானையும் அடுத்துத் திருமாலையும் பின்னர் பிரமனையும் குறிப்பிடுகின்றார். இம் மூவரையும் குறிப்பிடுவதால் இவர் வைதீக சமயத்தவராக இருக்கலாம் என்ற கருதுக் காணப்படுகின்றது. சைனர் என்பது சிலரது கருத்து. இவரது காலம் தொடர்பாகவும் கருத்துமுரன்பாடுகள் காணப் படுகின்றன. (கி.பி. இரண்டாம், 5ம் நூற்றாண்டு)
இனியவை நாற்பதில் பிரம்மனைப் பற்றிய குறிப்பு வருவது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பிரமன் வழிபாடு இக்காலத்தில் இருந்தமையை அறியலாம். அதே போல 'பொற்பனை வெள்ளை' என்று பலராமன் பற்றிய குறிப்பு இன்னா நாற்பதில் வருகின்றது. இதுவே பலராமன் பற்றிய இறுதி இலக்கியக் குறிப்பாக உள்ளது (பரமசிவன்.தொ) இவை இவ்விரு நூல்களிலும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
இனியவை நாற்பது இனியவைகளைத் தொகுத்துக் கூறுவதாகும். அதாவது எதிர்மறை
142

அறம் கூறுவதாக இந்நூல் அமைகின்றது. எதிர்மறையாகச் சொல்லப்பெறும் நீதியை உடன் பாட்டு முறையில் சொல்வதைக் காணலாம். கொல்லாமை ('கொல்லாமை முன் இனிது'), புலாலுண்ணாமை ('ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே" (4)), அந்தணர் (அந்தணர் வேதத்தினை மறவாது இருத்தல் மிக இனிது (7)), அந்தணர்க்கு பசுவோடு பொன்னையும் கொடுத்தல் மிக இனிது (23)) பற்றிய கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. பிறர் மனைவியரை நாடாத அறம் பல இடங்களிற் கூறப்படுகின்றது. (பிறன்மனை பின்னோக்காப் பீடினிது (15)). இவ்வகையில் செய்வன எவை யெவை விலக்கப்படவேண்டியவை எவையெவை என்பன பற்றிக் கூறுகின்றது.
நட்பைப் பற்றியும் கல்வியைப் பற்றியும் இந் நூலில் மிகுதியாகக் கூறப்படுவதைக் காணலாம். கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பின்வரும் கருத்துக்கள் குறிப்பிடப்பெறுகின்றன. அவை யாவன:
பிச்சை புக்காயினும் கற்றல் மிக இனிதே (1) நாளும் நவைபோகான் கற்றல் மிக இனிதே (3) கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே (16) கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே (12) புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே (32) பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலிற் காழ் இனியதில் (40)
முதலாவது பாடலில் பிச்சை எடுத்தாவது கல்வி கற்க வேண்டும் என்று கூறும் ஆசிரியர் இறுதிப் பாடலில் ஒரு நாளையும் வீணாக்காமல் ஒவ்வொரு நாளும் பற்பல நூல்களைக் கற்பதைப் போல மிக இனியது வேறில்லை என்று கூறுவது கல்விக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவத்தை விளக்குகிறது. நட்பைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்:
1. எங்கே சென்றாலும் அறிவில் மேலாய
சான்றோர்களைத் துணையாகக் கொள்ளுதல் நிலையாக இனிமை தருவதாகும். (1)
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 153
2. ஆராயின் தான் செல்லும் திசையில்
நற்குணம் மிக்கவரை நட்புக்கொள்ளுதல்.
இனிதே (3) 3. மயக்கம் இல்லாத மாண்புடையவராய்
வாழ்பவர்களைச் சேரும் செல்வம் நீங்காது
இருந்தால் இனிது. (12) 4. தம்மைவிட மிக்க பெருமையுடையவரைச்
சேர்தல் மிக்க மாட்சியைத் தரும். (16) 5. நண்பர்களுக்கு நன்மை செய்வது இனிது.
(17) 6. நண்பர்களைப் புறங்கூறாது வாழ்தல் மிகவும்
இனிது. (19) தன்னை விரும்பி வந்து சேர்ந்தவர்களுடைய விருப்பத்தை மறுக்காது அவருக்கு உதவி
செய்கின்ற மாட்சிமை மிக இனிது. (26) 8. நல்ல நண்பர்களை உடையவனது படை
ஆண்மை இனிது. (38) மனத்தின் கண் நற்குண நற்செயல்கள்
இல்லாதவரை அஞ்சி நீங்கல் வேண்டும். (10) 10. வஞ்சமுடையவரைச் சாராது விலகுதல்
இனிது. (20) 11. மறந்தும் நற்செயல்கள் இல்லாத மயக்கம்
உடையவர்களுடன் சேராது வாழ்தல் இனிது.
(21) 12. எவ்வளவு பொருள் பெற்றாலும்
கல்லாதவர்களை விட்டு அகலுதல் இனிது.
(25) 13. நல்ல அறிவும் ஒழுக்கமும் இல்லாத
மனிதரோடு சேருதல் கூடாது. சேர்ந்திருந்தால்
விலகுவது இனிது. (25) 14. இழிகுணமுடையவர்களை விட்டு விலகி
வாழ்வது இனிது. (29) 15. ஒரு பொருளாக உலகத்தவரால் மதிக்கப்
பெறாத தகுதியில்லாதவர்களுடன் நட்பினைக் கொள்ளாது விலகுதல் இனிதாகும். (34)
9.
மேலும் பல சிறந்த அறங்கள் இந்நூலில் வகைப்படுத்திக் கூறப்படுவதை அவதானிக்கலாம். அவையாவன:
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

2.
3.
8.
1. தந்தையே ஆயினும் தான் அடங்கான்
ஆகுமேல் கொண்டு அடையான் ஆகல் இனிது. (7) ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே. (4)
அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே. (11) 4. ஆற்றுந் துணையால் அறம் செய்கை முன்
இனிதே. (6) 5. மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே (13) 6. கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே (10) 7. கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே.
(31) ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிக
இனிதே. (33) 9. மானம் படவரின் வாழாமை முன் இனிதே.
(27) 10. உயிர் சென்று தான் படினும் உண்ணார்
கைத்து உண்ணாப் பெருமை போல் பீடு உடையது இல். (1) 11. மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது. (20) 12. இளமையை மூப்பென்று உணர்தல் இனிதே.
(37) 13. கிளைஞர்மாட்டு அச்சின்மை கேட்டல் இனிதே.
(37) 14. அறம்புரிந்து அல்லதை நீக்கல் இனிதே. (21) 15. பிறன்கைப் பொருள் வெளவான் வாழ்தல்
இனிதே. (21) 16. எளியர் இவரென்(று) இகழ்ந்துரையாராகி,
ஒளிபட வாழ்தல் இனிதே (29) 16. வருவாய் அறிந்து வழங்கல் இனிது. (22) 17. யார் மாட்டும் பொல்லாங்குரையாமை நன்று.
(5) 18. எள் துணையானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.(16) 19. நன்றிப்பயன் தூக்கி வாழ்தல் நனிஇனிதே
(30) 20. பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்
இனிதே. (32)
143

Page 154
இனியவை நாற்பதில் அரசியல் பற்றிய குறிப்புக்கள் இல்லை. ஆனால் அரசருக்குரிய சிறப்பான செயல்கள் எவையெனக் கூறப் படுகின்றன. நாட்டை ஆளும் அரசன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரையையும் இந்நூல் எடுத்துரைக்கின்றது.
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் முன் இனிதே முற்றான் தெரிந்து முறை செய்தல் முன் இனிதே பற்று இலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல் வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது (35)
ஒற்றர்களைக் கொண்டு நாட்டிலே நடைபெறும் நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ளுதல் சிறந்தது ; நீதி வழங்குவதற்கு முன்பே தான் நன்றாக ஆராய்ந்து உண்மையறிந்து நீதி வழங்குவதே சிறப்புடையது; ஒரு பக்கம் சார்ந்து நிற்காது எல்லா உயிர்களிடத்தும் சமமான நிலையில் நின்று அவர்களது நன்மை தீமைகளை அறிந்து கொள்வதே வேந்தர்களுடைய கடமையாகும் என்று கூறப்படுகின்றது. மேலும்;
1. சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு
இனிதே (38) (இளையவர்களைச் சிற்றாளாகக் கொண்டுள்ள அரசன் தேவையான படைக்கருவிகளைக் கொண்டிருத்தல் சிறப்பான இனிமையைத் தருவதாகும்.)
2. வாள்மயங்கு மண்டு அமருள் மாறாத மா
மன்னர் தானை தடுத்தல் இனிது (33) (வாட்கள் ஒன்றோடொன்று கலந்து மோதும் பெரிய போரில் விலக விரும்பாத பகை மன்னர்களைச் சமாதானம் செய் து விலக்குதல் இனிமை தரும்.)
3. 'மறமன்னர் தம் கடையுள் மாமலைபோல்
யானை மதமுழக்கம் கேட்டல் இனிதே (15)
144

(தம்முடைய அரண்மனை வாயிலில் மாமலை போல் நிற்கும் யானை மதத்தால் முழக்கமிடு வதைக் கேட்பது வீரம் மிக்க மன்னருக்கு இனிமை தரும்.)
என்ற கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இல்லறம், குழந்தைகள் பற்றிய குறிப்புக்களும் பெண்கள் பற்றிய சில கருத்துக்களும் காணப்படுகின்றன. அவையாவன்:
1. கணவனும் மனைவியும் மாறுபாடின்றி
உள்ளம் ஒன்றுபடக் கூடி வாழ்கின்ற இல்வாழ்க்கையானது முற்பட இனிது (2).
2. குழவி தளர்நடை காண்டல் இனிதே (14)
அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே (14) குழவி பிணிஇன்றி வாழ்தல் இனிதே (12)
3. முத்தேர் முறுவலார் சொல்லினிது (1)
4. தடமென் பணைத்தோள் தளிரியலாரை
விடமென்றுணர்தல் இனிது (37)
5.
நிறை மாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே மனமாண் (பு) இல்லாதவரை அஞ்சி அகறல் எனைமாண்பும் தான் இனிது (10)
அக்காலத்து இலக்கியங்களில் காணப்பெறும் பெண் வெறுப்புக் கருத்துக்கள் இந்நூலிலும் இடம் பெறுவதை இப் பாடல் களின் மூலம் அறியலாம். பெண்களை இழிவாகக் காட்டும் மரபு இப்பாடல்களில் காணப்படுகின்றது. பொதுமகளிர் ஒழுக்கத்தைக் கண்டிப்பதையும் அவதானிக் கலாம்.
சில பாடல்களில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கருத்துக்களை அடுத்தடுத்துச் சொல்வதைக் காணலாம். எ-டு:
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 155
............ ஒப்ப முடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது மானாதாம் ஆயின் நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் தலையாகத் தான் இனிது நன்கு (2)
இப்பாடலில் மனம் ஒத்திருக்கும்படி வாழ முடிந்தால் இல்லற வாழ்வு இனியது' என்று கூறுபவர் அடுத்து 'அவ்வாறான வாழ்க்கை அமையாது விட்டால் உலக நிலைமையை எண்ணி உயர்ந்தவர்கள் துறவை மேற்கொள்வது இனிது என அதனோடு தொடர்புறுத்திக்
கூறுகின்றார்.
இனியவை நாற்பதில் கூறப்படுகின்ற கருத்துக்கள் பல இன்னா நாற்பதில் வரும் கருத்துக்களுடன் ஒப்பு நோக்கத்தக்கதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அவையாவன:
1. மனமாண்பிலாதவரை அஞ்சி அகறல்
எனை மாண்பும் தான் இனிது நன்கு (இனி :10) இன்னா, மனவறியாளர் தொடர் (இன்னா : 18)
2. ஒப்ப முடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது
(இனி : 2) உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா
(இன்னா : 11)
3. ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன்
இனிதே (இனி :4) ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன்
இன்னா (இன்னர்:22)
4. குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே (இனி : 12) - குழவிகள் உற்ற பிணி இன்னா (இன்னா : 35)
5. பிறன்மனைப் பின்நோக்காப் பீடு இனிது ஆற்ற
(இனி : 15) பிறன் மனையாள் பின்நோக்கும் பேதைமை இன்னா (இன்னா : 38)
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

6. கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே
(இனி : 30) இன்னா, கொடும்பாடுடையார் வாய்ச்சொல்
(இன்னா : 6)
7.
அடைக்கலம் வெளவாத, நன்றியின் நன்கினியதில் (இனி:30) அடைக்கலம் வவ்வுதல் இன்னா (இன்னா:40)
8. கற்றறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே
(இனி : 32) கல்லார் உரைக்கும் கருமப் பொருள் இன்னா
(இன்னா 15)
9. எல்லிப் பொழுது வழங்காமை முன்னினிதே
(இனி : 34) மான்றிருண்ட போழ்தில் வழங்கல் பெரிதின்னா
(இன்னா : 17)
10. மறமன்னர் தம் கடையுள் மாமலைபோல்
யானை மதமுழக்கம் கேட்டல் இனிது
(இனி : 15) யானையில் மன்னரைக் காண்டல் நனி இன்னா
(இன்னா: 22)
11. கண்மூன்றுடையான் தாள்சேர்தல் இனிதே
(இனியவை : கடவுள்) முக்கட்பகவன் அடிதொழா தார்க்கின்னா
(இன்னா : கடவுள்)
இவ்வாறு ஒரே கருத்தை இரு வேறு விதமாக . உடன்பாடாகவும் எதிர்மறை நிலையிலும் இவ்விரு நூல்களும் கூறுவது கவனிக்கத்தக்கது.
தன் மானத்துடன் வாழ்தல் இந்நூலில் வற்புறுத்தப்படுகின்றது. தன்மானமே உயிர் எனக் கொண்டவன் மாத்திரமே மக்களால் மதிக்கப் படுவான். தன்மான உணர்வை எவ்வேளையிலும் இழக்காது காப்பாற்றிக் கொள்வதே மனிதத் தன்மை என்று கூறப்படுகின்றது.
145

Page 156
உயிர் சென்று தான் படினும் உண்ணார் கைத்து
உண்ணாப் பெருமை போல் பீடு உடையது இல் (11) மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே (13) மானம் படவரின் வாழாமை முன்னினிதே (27)
பசியினால் உயிரே போவதானாலும் உண்ணத் தகாதவர் கையிலிருந்து உணவைப் பெற்று உண்ணாத பெருமையே சிறந்தது. அதைப் போன்ற பெருமை வேறு ஒன்றும் இல்லை; மானங் கெட்டபின் வாழ்வதைவிடச் செத்துமடிவதே சிறந்ததாகும். (13); மானம் கெடும்படியான நிலைமை வருமாயின் அந்நிலைமை வருவதற்கு முன்பே இறந்துபடுதல் நன்று (27) என்கின்றது. இப்பாடல்கள் தன்மானத்தின் பெருமையை எடுத்துக் கூறுவதைக் காணலாம்.
மேலும் இனியவை நாற்பதில் திருக்குறளின் கருத்துக்கள் பல ஒத்துக் காணப்படுவதை அவதானிக்கலாம். அவற்றுள் சில வருமாறு:
"ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன்
இனிது" என்பது "தன் ஊன் பெருக்கத்திற்குத் தான் பிறிது
ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்” (அதி:26) என்ற
கருத்துடனும்
"ஆற்றுந் துணையால் அறம் செய்கை முன்
இனிதே" (6) என்பது "ஒல்லும் வகையான் அறிவினை ஓவாதே: செல்லும் வாய் எல்லாம் செயல்” (அதி:4) என்ற
குறளுடனும்
''மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே”
(13) என்பது "மயிர் நீப்பின் கவரிமான் அன்னார் உயிர் நீப்பர்
மானம் வரின்"(அதி:97) என்பதோடும்
146

"நட்டார்க்கு நல்ல செயலின் இனிது எத்துணையும் ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்
இனிதே” (17) என்பது "நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல்” (அதி:68)
என்ற குறளின் பொருளுடனும் ஒத்திருப்பதைக் காணலாம்.
அறநூல்களில் இவையிவை செய்யத்தக்கன ; இன்னின்ன செய்யத்தகாதன என்ற முறையில் கட்டுப்பாடுகளாக விதிமுறைகள் வலியுறுத்தப் படுவதன் மூலம் நல்லொழுக்கத்தை நிலைநிறுத்த முயற்சி செய்துள்ளமையை அறிய முடிகின்றது. ஆதலால் தான் ஒழுக்கமுடைய வாழ்க்கை சிறந்தது; ஒழுக்கமற்ற வாழ்க்கை இழிவானது என்ற கருத்துகள் அறநூல்களின் பொருண்மை யாக இடம் பெறுகின்றன. இக்கருத்துக்களை வெளியிடுவதற்கு குறைந்த அடிகளையுடைய வெண்பாவே ஏற்றதாயுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
இவை பேரரசு அல்லது ஆதரிப்போர் இல்லாத காலத்துத் தோன்றிய இலக்கியங்கள் என்பதால் கருத்தியல் ரீதியாகப் பார்க்கும் பொழுது சங்க இலக்கியங்களுக்கும் பக்தி இலக்கியங்களுக்கும் இடையில் காணப்படும் வெற்றிடத்தை நிரப்பும் இலக்கியங்களாக அமைந்துள்ளதை அவதானிக் கலாம்.
துணைநின்ற நூல்கள் :
1. பதினெண் கீழ்க்கணக்கு, எஸ்.ராஜம் பதிப்பு,
சென்னை, 1957 2. வேலுப்பிள்ளை.ஆ, 1969, தமிழ் இலக்கி
யத்தில் காலமும் கருத்தும், ஸ்ரீலங்கா புத்தகசாலை, யாழ்ப்பாணம்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 157
அழை1
ஆய்வரங்
"அறநெறிக்காலமும் தமிழக
கி.பி.30
கால 22 - 09-2010 -
இடா கொழும்பு தமிழ்ச் உருத்திரா மாவத்தை
புத்த சாசனம் மற்றும் மத . இந்துசமய, கலாசார அல
©ா
IN1 A
RESEARCH S "The Period of Ethical Li Traditions of T:
A.C. 300 22-09-2010 -
Venu Colombo Tamil
Colomt
Ministry of Buddhasasa Department of Hindu Reli
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

கலவி
பிதழ் 5 - 2010 வ் பண்பாட்டு மரபுகளும்” 3-600
25-09-2010
ம்:
..!!1. 41 441)
சங்க மண்டபம் ந, கொழும்பு - 06.
அலுவல்கள் அமைச்சு, அவல்கள் திணைக்களம்
TION EMINAR ON iterature and Cultural amil Society" 9-600 25-09-2010
1e:
Sangam Hall 50 - 6
na & Religious Affairs
gious & Cultural Affairs
147

Page 158
தொடக்க 22.09.2010 - 5
தலைமை
பேராசிரியர் சி.பத் தகைசார்பேராசிரிய, பேராதனைப் பல்கல
பிரதம விருந்தினர்
மாண்புமிகு எம். பிரதி அமைச்சர், புத்தசாசனம் மற்றும்
பாப்பா யார் புரா'
சிறப்பு விருந்தினர்கள்
திரு. எச். பி. கசியன் செயலாளர் - புத்தசா மத அலுவல்கள் அடை பேராசிரியர் என். ச. துணைவேந்தர், யாழ் கலாநிதி. கே. பிரே துணைவேந்தர், கிழகம் பேராசிரியர் ஜி.வி. முன்னைநாள் தலை காமராஜர் பல்கலைக்
INAUGURAI 22.09.2010
Chair Person
Prof. S. Pathmal Professor Emeritu University of Pera
Chief Guest
Hon.M. K. A. D. Deputy Minister,
Ministry of Buddh
148

5 வைபவம் காலை 9.00 மணி
5மநாதன் ர, வரலாற்றுத்துறை, ஊலக்கழகம்
கே. ஏ.டி.எஸ்.குணவர்த்தன
மத அலுவல்கள் அமைச்சு
எ ஹேரத் சனம் மற்றும் மச்சு
ண்முகலிங்கன் ப்பாணப் பல்கலைக்கழகம் ம்குமார் க்குப் பல்கலைக்கழகம்
யவேணுகோபால் வர், நுண்கலைத்துறை, கழகம், மதுரை
! CEREMONY ) - 9.00 a.m
nathan S on History, deniya
5. Gunawardana M.P
asasana & Religious Affairs
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 159
Guests of Honour
Mr. H. B. Cashion Secretary, Ministry Religious Affairs Prof.N. Shanmu Vice Chancellor, Dr. K. Premkuma Vice Chancellor, E. Prof. G. Vijayavel Former Head, Dep Kamarajar Univers
நிகழ்ச்சி
(மு.ப. 9.00 - 9.00 - மங்கள விளக்கேற்றல் 9. 10 - தேவாரம்
திரு. ம. செந்தூரன் இந்துசமய, கலாசார அலுவல்க
சரlin (யார் -
9. 20 - வரவேற்புரை
திரு. ம. சண்முகநா உதவிப் பணிப்பாளர்,
இந்துசமய, கலாசார அலு 9.30 - ஆசியுரை
சுவாமி சர்வரூபான தலைவர்,
இராமகிருஷ்ணமிஷன், கெ 9. 40 - தொடக்கவுரை
திருமதி. சாந்தி நாள் பணிப்பாளர்,
இந்துசமய, கலாசார அலுன்
10.00 - தலைமையுரை
பேராசிரியர் சி.பத்ம
தகைசார் பேராசிரியர் 10. 10 - சிறப்பு விருந்தினர் உரை
திரு. ஏச்.பி. கசியன் செயலாளர், புத்தசாசனம் மற்றும் மத அடு
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

Herath of Buddhasasana &
galingan University of Jaffna
astern University nugopal t. of Fine Arts, sity, Madura, Tamil Nadu.
நிரல் மு.ப. 12. 00)
கள் திணைக்களம்
"தன்
வல்கள் திணைக்களம்
நதாஜி
காழும்பு
புக்கரசன்,
பல்கள் திணைக்களம்
நாதன்
- ஹேரத்
லுவல்கள் அமைச்சு
149

Page 160
10.20- பிரதம விருந்தினர் உ
மாண்புமிகு எம். பிரதி அமைச்சர் | புத்தசாசனம் மற்றும் மதச்
10.30 - நூல் வெளியீடு
“விஜயநகரப் பேர (2009ஆம் ஆண்டு நடை தொகுப்பு)
10. 40 - நூல் வெளியிட்டுரை
கலாநிதி எஸ். இர வரலாற்றுத்துறை, தமிழ்ப்
| hi'! சாதி கா ர |
10.50 - சிறப்பு விருந்தினர் உ.
பேராசிரியர் என். 6 துணைவேந்தர், யாழ் பல்
11.00 - சிறப்பு விருந்தினர் உமா
கலாநிதி . கே. பிரே துணைவேந்தர், கிழக்குப்
11.10 - ஆதர மாருதியுரை
பேராசிரியர் ஜி.வி முன்னைநாள் தலைவர், காமராஜர் பல்கலைக்கழக
12.00 - நன்றியுரை
திருமதி. தேவகும் சிரேஷ்ட ஆராய்ச்சி அது இந்துசமய, கலாசார அது
இவ் வைபவத்திற் கலந்
அன்புடன் க
இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் இல 248 1/1 காலி வீதி, கொழும்பு 4.
150

ரை க. ஏ.டி.எஸ்.குணவர்த்தன
அலுவல்கள் அமைச்சு
ரசும் கலாசார மறுமலர்ச்சியும்” டபெற்ற ஆய்வரங்குக் கட்டுரைகளின்
ராஜவேலு
பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
ரை
சண்முகலிங்கன்
கலைக்கழகம்
ரை ரம்குமார் 5 பல்கலைக்கழகம்
ஐயவேணுகோபால் நுண்கலைத்துறை, கம், மதுரை
ாரி ஹரன் லுவலர், லுவல்கள் திணைக்களம்
-து கொள்ளுமாறு தங்களை பழைக்கின்றோம்.
சாந்தி நாவுக்கரசன்
பணிப்பாளர்
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 161
(Progre (9.00 A.M. 1
9.00 - Lighting the OI I
9.10 - Recital of Theva
Mr. M. Senthura Department of Hi Cultural Affairs
9.20 - Welcome Addres
Mr. M. Sanmuha Asst. Director, Department of Hi Cultural Affairs
*****
9.30 - Benediction
Srimath Swami S
Head, Ramakirishna Mis
9.40 - Inaugural Addres
Mrs. Shanthi Na Director, Department of Hir Cultural Affairs
10.00 - Address by Cha
Prof. S. Pathman Professor Emeritu
10.10 - Address by Gu
Mr. H. B. Cashia Secretary,
Ministry of Buddha
10.20 - Address by Chie
Hon. M. K. A. D. Deputy Minister,
Ministry of Buddha
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

awan
amme
2.00 NOON)
Lamp
ram
ndu Religious &
anathan
ndu Religious &
Sarvarupananda
ssion, Colombo 6
vukarasan
ndu Religious &
urman athan Is on History
est of Honour
n Herath
asasana & Religious Affairs
ef Quest
S. Gunawardana M.P.
asasana & Religious Affairs
151

Page 162
10.30 - Book Launch
(Departmen “The Vijayar
Cultural Re (Compilation
10.40 - Introduction
Dr. S.Rajave Department (
Tamil Univers 10.50 - Address by {
Prof. N. Shai
Vice Chancel 11.00 - Address by (
Dr. K. Prem! Vice Chancel
11.10 - Key Note Add
Prof. G. Vija Former Head Kamarajar Ur
12.00 - Vote of Than
Mrs. Thevak Senior Resea Department o Cultural Affair
You are cordially invited
Department of Hindu Relig Cultural Affairs 248 111 Galle Road, Colombo 4.
Printed By: Anush Printe
152

sing Ceremony ntal Publication) agar Empire and naissance”. of Last year's Seminar Paper)
about the Book luar of History, sity, Thanjavur duest of Honour
mugalingan lor, University of Jaffna Quest of Honour Kumar lor, Eastern University
ress yavenugopal , Dept. of Fine Arts, niversity, Madurai.
KS umary Haran rch Officer, f Hindu Religious &
I to attend the ceremony.
ious &
Shanthi Navukarasan
Director
's, Col-11. Tel: 0777-244893
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 163
ஆய்வரங்குச் சிற
அறநெறிக் கா பண்பாட்டு மரபுகளு
22.09.2010 . சங்கரப்பிள்ளை மண்டபம்,
நிகழ்ச்சி நிரல் 22.09.2010 புதன்கிழமை
அமர்வு O1 வரலாறு, தொல்லியல் தலைமை : பேராசிரியர் சி.பத்மநாதன்
தகைசார் பேராசிரியர் பி.ப. 1.00 களப்பிரர் வரலாறு
கலாநிதி சொ.சாந்தலிங்கம் முன்னைநாள் கல்வெட்டாய்வாளர்,
தொல்பொருள் திணைக்களம், தமிழ்நாடு 1. 30
முற்காலப் பல்லவர் சாசனங்கள் கலாநிதி வெ. வேதாசலம் முன்னைநாள் கல்வெட்டாய்வாளர்,
தொல்பொருள் திணைக்களம், தமிழ்நாடு. 2.00
முற்காலப் பல்லவர் ஆவணங்கள் கலாநிதி சொ. சாந்தலிங்கம் : முன்னைநாள் கல்வெட்டாய்வாளர்,
தொல்பொருள் திணைக்களம், தமிழ்நாடு 2. 30 பொருந்தல் அகழாய்வு
பேராசிரியர் கே. இராஜன்
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி 3.00
பூலான் குறிச்சி கல்வெட்டு உணர்த்தும்
மரபுகள் பேராசிரியர் வி. விஜயவேணுகோபால் முன்னைநாள் தலைவர், நுண்கலைத்துறை,
காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை 3.30 - 3. 45 கலந்துரையாடல்
அமர்வு 02 சமயம், தத்துவம், வழிபாடு தலைமை : பேராசிரியர் சி. தில்லைநாதன்
தகைசார் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம் பி.ப. 3. 45
வைணவம் பேராசிரியர் சு.வெங்கட்ராமன் முன்னைநாள் தலைவர், தமிழ்த்துறை.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 4.15
சமணம் கலாநிதி எஸ். இராஜவேலு
வரலாற்றுத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 4. 45 பெளத்தம் |
பேராசிரியர் சி. பத்மநாதன்
தகைசார் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம் 5.15
பக்தி இலக்கியப் பாரம்பரியத்தில் காரைக்கால் அம்மையார் திருமதி. எம். நதீரா
சிரேஷ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 5.45 - 5.00 கலந்துரையாடல்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

மப்பு மலர் 2010
லமும் தமிழகப் ம் கி.பி 300 - 600)
- 25.09.2010
கொழும்புத் தமிழ்ச்சங்கம்
23.09.2010 வியாழக்கிழமை
அமர்வு 03 சமயம், வழிபாடு தலைமை : பேராசிரியர் கோபாலகிருஷ்ண ஐயர்
தகைசார் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம் மு.ப. 8.25 தேவாரம் 8.30 - 9.30 சிறப்புரை - அறஇலக்கியங்கள்
காட்டும் ஆளுமைத்திறன் பேராசிரியர் பழ . முத்து வீரப்பன் தலைவர், தமிழ்த்துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 9. 30 அற இலக்கியங்கள் காட்டும் மெய்யியற்
சிந்தனைகள் பேராசிரியர் நா. ஞானகுமாரன்
கலைப்பீடாதிபதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 10.00 பலராமர் வழிபாடு
பேராசிரியர் சு.வெங்கட்ராமன் முன்னைநாள் தலைவர், தமிழ்த்துறை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ' 10. 30 சைவம்
திருமதி. விக்னேஸ்வரி பவநேசன் சிரேஷ்ட விரிவுரையாளர், இந்துநாகரிகத்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 11.00 - 11.15 கலந்துரையாடல்
அமர்வு 04 கலைகள், அழகியல் தலைமை : பேராசிரியர் வி.சிவசாமி
தகைசார் பேராசிரியர் 11.15 கோயில்களும் சிற்பங்களும்
கலாநிதி வெ. வேதாசலம் முன்னைநாள் கல்வெட்டாய்வாளர்,
தொல்பொருள் திணைக்களம், தமிழ்நாடு 11. 45 தமிழகத்தில் கட்டடக்கலை - தொல்லியற்
சான்றுகளின் அடிப்படையிலான ஒரு ஆய்வு கலாநிதி எஸ்.இராஜவேலு
வரலாற்றுத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 12. 15 சிலப்பதிகாரத்தில் அழகியற் சிந்தனை
கலாநிதி கிருஷ்ணவேணி நோபேர்ட்
தலைவர், நுண்கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 12.45 - 1.00 கலந்துரையாடல் 01.00 - 2.00 மதியபோசனம்
153

Page 164
அமர்வு 05 அறநூல்கள் தலைமை : பேராசிரியர் ஜி.விஜயவேணுகோபால்
முன்னைநாட்தலைவர், நுண்கலைத்துறை,
காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை பி.ப. 2.00 அறம், ஒழுக்கம், கலைகள்
பேராசிரியர் எஸ். மௌனகுரு | முன்னைநாள் தலைவர், நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம் 2.30
வைதீகசிந்தனை மரபும், அறநூல்களும் பேராசிரியர் கோபாலகிருஷ்ண ஐயர்
தகைசார் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 3.00 ஈழத்தில் அறஇலக்கியப் பதிப்புகளும்
உரைகளும் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா
தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 3. 30-3.45 கலந்துரையாடல்
அமர்வு 06 அறநூல்கள் தலைமை :பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா
தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 3. 45 கவிதையாக்க நோக்கில் அற இலக்கியம்
பேராசிரியர் பழ. முத்து வீரப்பன்
தலைவர், தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 4.15
அற இலக்கியங்களில் அகிம்சைக் கோட்பாடு | கலாநிதி மா. வேதநாதன்
தலைவர், இந்துநாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 4. 45 அறநூல்களில் கல்விச்சிந்தனை
திரு. ரி. சி. இராஜேந்திரம் முன்னைநாள் சிரேஷ்ட விரிவுரையாளர்,
திறந்த பல்கலைக்கழகம். 5.15
அர்த்தசாஸ்திரம் பிரம்மஸ்ரீ. பால கைலாசநாதசர்மா சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப்பல்கலைக்கழகம்
24.09.2010 வெள்ளிக்கிழமை
அமர்வு 07 திருக்குறள் தலைமை : பேராசிரியர் பழ. முத்து வீரப்பன்
தலைவர், தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மு.ப. 8.25 தேவாரம்
154

8. 30-9.30 சிறப்புரை - காலந்தோறும் திருக்குறள்
பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி முன்னைநாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் 9. 30
வள்ளுவரின் அரசியலும் அழகியலும் திரு. க. இரகுபரன்
தலைவர், மொழித்துறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 10.00 திருக்குறள் அதிகார வைப்பு முறை
திரு. ஸ்ரீ பிரசாந்தன்
விரிவுரையாளர், ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் 10. 30 திருக்குறளில் உவமை நயம்
சைவப்புலவர் எஸ். துஷ்யந்த்
அமர்வு 08
அட்சர் |
திருக்குறள் தலைமை : பேராசிரியர் சபா ஜெயராஜா
முன்னைநாள் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 11.00 திருக்குறள் உரைகள் - சிறப்புப்பார்வை
பரிமேலழகர் . பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி
முன்னைநாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 11.30 திருக்குறளில் சமுதாயநெறி
திரு. எம். ரூபவதனன் ம்
விரிவுரையாளர், ஊவா பல்கலைக்கழகம் 12.00 திருக்குறளில் அறிவாராய்ச்சியியல்
திரு.ச. முகுந்தன்
விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம் 12. 30 - 12.45 கலந்துரையாடல் 12.45-01.45 மதியபோசனம்
- அமர்வு 09 அறநூல்கள் தலைமை :பேராசிரியர் கே.இராஜன்
வரலாற்றுத்துறை, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி பி.ப 1.45
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் காட்டும் அரசியல் அறம் பேராசிரியர் பழ. முத்து வீரப்பன்
தலைவர், தமிழ்த்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2.15
அற இலக்கியங்களில் நட்பு திருமதி. ரூபி வலன்ரினா தலைவர், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்
' , .
ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010

Page 165
பா" |
2. 45 அறநெறிக்கால இலக்கியங்கள்
காட்டும் விருந்தோம்பற் பண்பு திரு. ஈஸ்வரநாதபிள்ளை குமரன்
சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 3.15- 3. 30 கலந்துரையாடல்
அமர்வு 10 இலக்கியம் தலைமை : பேராசிரியர் சு.வெங்கட்ராமன்
முன்னைநாள் தலைவர், தமிழ்த்துறை.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 3. 30 அறநூல்களில் சமஸ்கிருத
இலக்கியங்களில் செல்வாக்கு பேராசிரியர் வி. சிவசாமி
தகைசார் பேராசிரியர் 4.00 சிலப்பதிகாரத்தில் அறச்சிந்தனைகள்
கலாநிதி துரை.மனோகரன்
தலைவர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் 4. 30
சிங்கள இலக்கியங்களில் தமிழ் அறநூல்களின் செல்வாக்கு திரு. தம்மிக ஜெயசிங்க விரிவுரையாளர், ஊவா பல்கலைக்கழகம்
5.00
அறநூற்காலத்தில் பண்பாட்டு மரபுகள் பேராசிரியர் ஜி. விஜயவேணுகோபால் முன்னைநாள் தலைவர், நுண்கலைத்துறை,
காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை 5.30 - 5.45 கலந்துரையாடல்
25.09.2010 சனிக்கிழமை
அமர்வு 11 அறநெறிக்காலமும் சமுதாயமும் தலைமை : பேராசிரியர் நா. ஞானகுமாரன்
கலைப்பீடாதிபதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மு.ப. 8. 25 தேவாரம்
8. 30-9.30 சிறப்புரை
பேராசிரியர் சு.வெங்கட்ராமன் . முன்னைநாள் தலைவர், தமிழ்த்துறை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 9.30
அறநூல்களில் பெண்கள் கலாநிதி செ. யோகராஜா சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்
அறநெறிக்காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்

10.00 நடுகற்கள் காட்டும் சமூகக் கூறுகள்
பேராசிரியர் கே.இராஜன்
வரலாற்றுத்துறை, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி 10. 30 அறநெறிக்கால தமிழக அரசியல் நிலை
பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
தலைவர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 10.30 - 10. 45 கலந்துரையாடல்
அமர்வு 12 அறநெறிக்காலமும் சமுதாயமும் தலைமை : பேராசிரியர் எஸ். மௌனகுரு
முன்னைநாட் தலைவர், நுண்கலைத்துறை.
கிழக்குப் பல்கலைக்கழகம் 10.45 சிலப்பதிகாரம் மணிமேகலைக்
காவியங்களில் விழாக்கள்
வித்துவான் கலாபூஷணம் அருள்மொழியரசி
வசந்தா வைத்தியநாதன் 11.15
அற இலக்கியங்களில் வாணிபம் கலாநிதி வ. மகேஸ்வரன்
சிரேஷ்ட விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம் 11. 45 இன்றைய பார்வையில் திருக்குறள்
பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி
முன்னைநாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 12.15-12.30கலந்துரையாடல் 12. 30-1.30 மதியபோசனம்
அமர்வு 13 பதினெண்கீழ்க்கணக்கு தலைமை : பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி
முன்னைநாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 1.30
பழமொழி நானூறும் சமூக நோக்கும் கலாநிதி. எஸ். செல்வரஞ்சிதம்
விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2.00
ஏலாதியும் மனிதநேயமும் திருமதி. சாந்தி கேசவன்
இணைப்பாளர். இந்துநாகரிகத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் 2.30
சிறுபஞ்ச மூலம் சித்திரிக்கும் ஒழுக்கவியல்
திருமதி .சுகந்தினி ஸ்ரீதரன் சிரேஷ்ட விரிவுரையாளர், இந்துநாகரிகத்துறை.
யாழ் பல்கலைக்கழகம் 3.00 நாலடியாரிற் பெண்கள்
செல்வி எஸ். செல்வகுமாரி
விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 3.30 - 3. 45 கலந்துரையாடல்
Printed By: Anush Printers, Coi-11. Tel: 0777-244893
155

Page 166


Page 167


Page 168
DESIGNED & PRINTED BY UNIE ARTS (

te
PVT) LTD., COLOMBO 13. TEL: 2330195