கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும்

Page 1
இலங்கையின் பலவந்தமாக
வடமாகான
முல்லை
* "
கலாநிதி

இனப்பிரச்சினையும் வெளியேற்றப்பட்ட எ முஸ்லிம்களும்
தொகுதி 3 த்தீவு முஸ்லிம்கள்
எஸ்.எச்.ஹஸ்புல்லா

Page 2


Page 3


Page 4


Page 5
இலங்கையின் இ பலவந்தமாக எ
வடமாகாண
தொகு முல்லைத்தீவு
கலாநிதி எஸ்.
வடக்கு முஸ்லிம்களின்

னப்பிரச்சினையும் வளியேற்றப்பட்ட முஸ்லிம்களும்
--
ததி 3
முஸ்லிம்கள்
எச்.ஹஸ்புல்லா
உரிமைக்கான அமைப்பு

Page 6
ETHNIC CONFLICT IN SRI LANKA MUSLIMS OF THE NORTHERN P
TEGIN
Vol. 3: Mullaitivu Muslims
By S.H. Hasbullah, M.A. Ph.D Department of Geography, University of Peradeniya, Sri Lanka.
Copyright © Author.
First Edition, 1997
Published by The Northern Muslims' Rights Orgar 15A, Rohini Road, Colombo -6, Sri La
Printed by Unie Arts 48B, Bloemendhal Road. Colombo-13
Price: Rs. JIS
ISBN 955-9445-03-0

I AND THE FORCIBLY EVICTED ROVINCE
Aitke
nization. anka.

Page 7
பொருள்
அட்டவணைகள் படங்கள் என்னுரை அணிந்துரை நன்றி உரை 1. அறிமுகம் 2. முல்லைத் தீவு: புவியியலும் 3. வரலாறும், கலை, கலாசா
3.1 வரலாறு 3.2 கலையும் கலாசாரமும்
3.3 அரசியல் | 4. பொருளாதார அடிப்படைக்
4.1 விவசாய அடிப்படைக் 4.2 மீன்பிடி
4.3 வர்த்தகம் 5 முஸ்லிம் குடியிருப்புக்கள்
5.1 முல்லைத்தீவு முஸ்லி
"மூன்று கிராமங்கள்' 5.2 முல்லைத்தீவு நகர (
5.3 விவசாயக் குடியேற்ற 6 இனப்பிரச்சினையும் முல்லை
6.1 முஸ்லிம் - தமிழ் உற 6.2 இனப்பிரச்சினையும் ( 63 இரண்டாவது ஈழ யு:
முல்லைத்தீவு முஸ்லி

டக்கம்
பக்கம்
vi
vii
xiv
21
5 குடிசனமும் சரமும்
27 27
40 55 58
கள்
பா ப
நள்
58
66
ம்களின்
முஸ்லிம்களின் குடியிருப்பு 84
த் திட்டங்கள்
88 லத்தீவு முஸ்லிம்களும்
91
91 முஸ்லிம்களும்
93 த்தமும்
ம்களும்
96

Page 8
7 முஸ்லிம்களின் பலவந்,
7.1 பலவந்த வெளியே 7.2 பலவந்த வெளியே
பொருளாதார இழ 8. முல்லைத்தீவைவிட்டு
வெளியேற்றம்
8.1 ஜுலை அகதிகள்
8.2 ஒக்டோபர் அகதி 9. அகதி வாழ்க்கை
9.1 பரம்பல்
9.2 ஆலங்குடா முல்ல 9.3 ஏனைய பிரதேசங் 9.4 அகதிகளின் அனு 9. 5 நிவாரண அமைப்
9.6 நிவாரண உதவிக 10. கால மாற்றத்தில் அகத்
10.1 முகாம் வாழ்க்கை 10. 2 அண்மைக்கால ப
10.3 எதிர்காலம் விபரம் தந்தவர்கள் உசாத்துணை நுால்கள் பின்னிணைப்பு 1. இனப்பிரச்சினையால் உயி
முஸ்லிம்கள், 1987-90.

98
98
த வெளியேற்றம் பற்றம் பற்றமும்,
மப்பும்
முஸ்லிம்கள்
103
114
114
கள்
121
125
125
127
134
க 2 : 222222222 EE 2
135
லைத்தீவு அகதி முகாம்
கள்
பவங்கள் சில
புக்கள் ளின் தாக்கம் திகள் -க்கு மாற்று வழி மாற்றங்கள்
136
138
142
142
148
166
175
178
ரிழந்த முல்லைத்தீவு
183
iv

Page 9
அட்டவன
அட்டவணை 1: 1921 ஆம் ஆ
ஆண் டிலும்
முஸ்லிம்கள்.
அட்டவணை 2: 1990 ஆம் ஆ.
முஸ்லிம் கல் சேவையாளர்க
அட்டவணை 3: 1990ஆம் ஆன
முஸ்லிம்களுக்கு விவசாயக் கா
அட்டவணை 4 : 1990ஆம் ஆன
பிரதேசத்தில் * சொந் தமாக கைத்தொழில்,
11 11
அட்டவணை 5: 1990 ஆம் ஆ
நகரில் முஸ்லிம் இருந்த வர்த சேவை நிலை
அட்டவணை 6 : குடும் ப
முல்லைத்தீவு விபரம் பற்றிய
அட்டவணை 7: 1996 ஆம் ஆ
முஸ்லிம்கள் இடங்கள் .

Dணகள்
பூண்டிலும், 1971ம்
முல்லைத் தீவில்
29
ண்டில் முல்லைத் தீவு வியாளர்களும், சமூகத்
ள்.
48
நன்டில் முல்லைத்தீவில் 5 சொந்தமாக இருந்த
ணிகள்.
|
64
ன்டு “மூன்று கிராமப்
முஸ்லிம் களுக் குச் இருந்த வர்த்தக, சேவை நிலையங்கள்.
70
ண்டு முல்லைத் தீவு ம்களுக்குச் சொந்தமாக தேக, கைத் தொழில், மயங்கள்.
72
அடிப்படையில் முஸ்லிம்களின் இழப்பு சுருக்க அட்டவணை .
108
ண்டு முல்லைத் தீவு அகதிகளாக வாழ்ந்த
159

Page 10
படங
படம் 1 :
வட மாகாண மு மாவட்டங்களும்
படம் 2:
முல்லைத் தீவில் வாழ்ந்த குடியி
படம் 3:
லெப்பை குடும்
படம் 4:
முல்லைத் தீவில் படுத்தப் படுத்த நிலையங்கள்,
படம் 5:
முல்லைத்தீவு அமைப்பு, 199
படம் 6:
முல் லைத்தீவு பயன் படுத்தப்பட 1990.
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
11
படம் 7:
முல்லைத்தீவு கிராமங்கள் ".
படம் 8:
''மூன்று கிரா பொருளாதார -
படம் 9:
''மூன்று கிரா பொதுக் கட்டி
படம் 10:
முல்லைத்தீவுப்
படம் 11:
மூன்று கிராம் கைத் தொழில்
படம் 12:
* * * * *
முல்லைத் தீவு வெளியேற்றப்
படம் 13:
'முல்லைத்தீவு வாழும் முகாம்
ஆலங்குடா அ
படம் 14:

வகள்
ம் அதன் நிர்வாக
22
முஸ்லீம்கள் செறிவாக ருப்புகள், 1990.
25
பப் பாரம்பரியம்.
38
5 முஸ்லிம்களால் பயன் கப் பட்ட சமய, கல் வி 1990.
51
முஸ்லிம்களின் தொழில் 10.
59
முஸ்லிம்களால் ட்ட விவசாய நிலங்கள்,
65
முஸ்லிம்களின் “மூன்று
8 * 8
80
மங் களின் "விவசாயப் அடிப்படைகள். மங் களின் " வீதிகளும் டங்களும்.
83
பட்டினத்தில் முஸ்லிம்கள்.
86
முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், 1990.
111
முஸ்லிம்களின் பாதை, 1990.
120
முஸ் லிம்" அகதிகள் களின் பரம்பல், 1995.
126
கதி முகாம்.
131

Page 11
என்ன
முல்லைத்தீவு முஸ்லிம்கள் பற்ற வரலாற்றினைச் சித்தரிக்கின்றது. காலத்து அதனால் பாதிக்கப்பட்ட இம்மக்களின் காலம் தாழ்த்தாது எழுதப்படவேண்டிய
அதாவது பரம்பரை பரம்பரை நகரம், தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி, ஒ போன்ற குடியிருப்புகளில் வாழ்ந்து குடும்பங்கள் துரதிஷ்டவசமாக, அப்பிர
சந்தர்ப்ப சூழ்நிலையால், தவற பாரம்பரியப் பிரசேங்களிலிருந்து . வெளியேற்றப்பட்டார்கள். கடந்த ஆறு புத்தளம், அநுராதபுரம் ஆகிய மாவட்ட
வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வகதி வ என்ற அச்சம் இம்மக்களுக்கு இன்று
இச்சூழ்நிலையில் இம்மக்க பாரம்பரியங்கள் பூர்வீக இடங்களில் இம். தற்போதைய அகதி வாழ்க்கையின் இன கொண்டு வரும் பணியை இந்நுால் .
யாரையும் குறைகூறும் நோ பெற்றுக் கொடுக் கும் நோக்கிலே பிரபல்யத்துக்காகவோ இந்நுால் எழுதப் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினையில் வடக்கு நேரத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம் போராட்டத்தின் முக்கியத்துவத்தை இழ எழுதப்படவில்லை. மாறாக தவிர்க்கப் !
Vi]

அரை
றிய இந்நூல், இம்மக்களின் வாழ்க்கை, நின் சோதனையால் வாழ்விடம் இழந்து
நடைமுறை வரலாறு பற்றி இன்னும் ப அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
ரயாக முல்லைத்தீவில் முல்லைத்தீவு ஹிஜ்ராபுரம், முறிப்பு, முத்தையன்கட்டு வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் தேசங்களில் இப்போது இல்லை.
மான மதிப்பீட்டால் இம்மக்கள் தமது வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டு வருடங்களாக அவர்கள் அகதிகளாக ங்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் பாழ்க்கை தமக்கு நிரந்தரமாகி விடுமோ
ஏற்பட்டுள்ளது.
களின் வரலாறு, கலை, கலாசார, மக்களின் பொருளாதார அடிப்படைகள், எனல்கள் என்பவற்றை எழுத்துருவில்
மூலம் மேற்கொண்டிருக்கின்றேன்.
க்கிலோ, வேறு யாருக்கும் நன்மை யா, அல்லது குறுகிய அரசியல் படவில்லை. நிச்சயமாக, இந்நாட்டில் த - கிழக்கு தமிழ் மக்களினதும், அதே மக்களினதும், நியாயமான உரிமைப் மக்கச் செய்யும் நோக்கத்துடனும் இது பட்டிருக்க வேண்டிய ஒரு வரலாற்று

Page 12
நிகழ்வால் வாழ்விடம் இழந்து, சொத்தி இழந்து இரண்டாம் தரப் பிரஜைகளைப் முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளின் உ மீட்சிக்காகவும் இந்நுால் எழுதப்பட்டி
ஒரு கண்ணோட்டத்தில் இ தாங்கி நிற்கின்றது. அதாவது, இ முஸ்லிம்களுக்கிடையில் சமாதானத்ை ஐக்கியத்தோடு வாழ்வதற்கு வழிவகுக் மறு கண்ணோட்டத்தில் இனப்பிரச்சிலை முல்லைத்தீவு முஸ்லிம் மக்களின் உ அதே நேரத்தில் இம்மக்கள் தமது கொள்வதற்கு அவசியமான ஆதாரங்கன் எழுதப்பட்டிருக்கின்றது. ஏனென்றால் கெளரவம் மதிக்கப்பட்ட அடிப்படையிலா
கூடியது.
முல்லைத்தீவு முஸ்லிம்களின் மிகக் கவனமாக பரிசீலித்து இம்மக் விளக்குகின்றது. குறிப்பாக முல்லைத் சொந்த இடங்களுக்கு அவர்கள் மீள நீண்ட காலத்தில் நன்மை தரக்கூடிய ே சாத்தியமில்லை என்பதை இந்நுால் மிக .
இம்மக்கள் தமது வாழ்வுரிபை சுய கௌரவத்துடனும் தமது சொந்த இட வாழ வேண்டும் என்ற மனப்பூர் எழுதப்பட்டிருக்கின்றது.
உண்மையில், முல்லைத்தீவு அவர்கள் தமது சொந்தப் பூமியில் இன சாத்தியங்கள் உண்டு. கடந்தகால த.

மந்து, பொருள் இழந்து, சுய கௌரவம் போல் அல்லலுற்று வாழ்ந்து வருகின்ற உரிமைக்காகவும், அவர்களின் எதிர்கால நக்கின்றது.
ந்நுால் ஒரு சமாதானச் செய்தியைத் னங்களுக்கிடையில் குறிப்பாக தமிழ்த ஏற்படுத்தி இவ்விரு இனங்களும் தம் நோக்கில் எழுதப்பட்டிருக்கின்றது. எயால் பாதிக்கப்பட்டு வாழ்விடம் இழந்த உரிமைக் குரலைப் பிரதிபலிப்பதாகவும்,
வாழ்வுரிமையை மீண்டும் பெற்றுக் -ள கொடுக்கும் நோக்கத்திலும் இந்நுால் , தனித்துவமான மக்கள் குழுக்களின் ன சமாதானமே நீடித்து நிலைத்திருக்கக்
கடந்தகால, நிகழ்கால அநுபவங்களை களின் எதிர்காலம் பற்றி இந்நுால் தீவு முஸ்லிம்களைப் பொறுத்தவரை "ச் செல்வதைத் தவிர அவர்களுக்கு வறு பொருத்தமான தீர்வு நடைமுறை ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகின்றது.
மயை மீளப் பெற்று தன்மானத்துடனும், உங்களுக்குச் சென்று இன ஐக்கியத்தோடு வமான விருப்பத்துடன் இந் நுால்
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஐக்கியத்தோடு மீண்டும் வாழ்வதற்குரிய பிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை

Page 13
அடிப்படையாகக் கொண்டு இவ்வம்ச, அப்பாவிகளான முல்லைத்தீவு முஸ்லிம் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் விடுதலைப் புலிகள் உட்பட ஏனைய மதித்து இத்துர்ப்பாக்கியமான மக்களின் மீ நம்பிக்கையின் அடிப்டையில் இந்நுால்
வனய
இந்நூலில் சொந்த இடத்திலிரு இடம் அல்லாத இடத்திலான மீள்குடி முல்லைத்தீவு முஸ்லிம்களின் வாழ்க் போது அவை நேரடியாக விமர்சிக்க முல்லைத்தீவு முஸ்லிம்களின் வாழ்க் ஏற்படுத்திய மேற்குறித்த நிகழ்வுகள் அறியப்பட வேண்டும் என்பதற்காகவும் பாதிப்புகளின் தாக்கத்தை சரியாக எல்லே இம்மக்களின் விமோசனத்திற்காக ம வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்து
முல்லைத்தீவு முஸ்லிம்களின் 8 தீர்வு ஒன்று கிடைக்க வேண்டும் புரிந்துணர்வோடும், பொறுப்புணர்ச்சி தீர்வுகாண முற்பட வேண்டும். அவ் வரலாற்று, பொருளாதார மற்றும் இ இந் நுாலில் தரப்பட்டிருக்கின்றன. நடவடிக்கைகள் இப்போதே ஆரம்பிக்கப் காலத்தால் மறக்கப்பட்ட ஒன்றாக மாறிவி பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் 6 சாந்தியும், சமாதானமும் நிலைக்கப் பி

த்தை இந்நுால் வலியுறுத்துகின்றது. அகதிகளின் நியாயமான உரிமைகளை நக்காக போராடி வருகின்ற தமிழ் ஈழ இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ட்சிக்கு உதவுவார்கள் என்ற அசையாத எழுதப்பட்டிருக்கின்றது.
ள்ை
கந்தான பலவந்த வெளியேற்றம், சொந்த யேற்றம் போன்ற வரலாற்று நிகழ்வுகள் கையோடு பாதகமாகச் சம்பந்தப்படும் ப்பட்டிருக்கின்றன. அப்பாவிகளான கையில் தாக்கமுள்ள விளைவுகளை தெட்டத் தெளிவாக எல்லோராலும் ம், அதனால் இம்மக்களுக்கு ஏற்பட்ட Tரும் அறிந்து கொண்ட அடிப்டையில் மாற்றுத் திட்டங்களை முன்வைக்க துால் எழுதப்பட்டிருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் 5. தேசிய சர்வதேச சமூகங்கள் யோடும் இம்மக்களின் பிரச்சினைக்கு வாறான ஒரு முயற்சிக்கு தேவையான ம்மக்கள் பற்றிய ஏனைய விபரங்கள்
அச் சமாதானத் தீர்வுக்கான முன் ப்படாவிட்டால் இம்மக்களின் பிரச்சினை விடும். இந்நாட்டில் இனப்பிரச்சினையால் விமோசனம் கிடைத்த அடிப்படையில்
ரார்த்திப்போம்.
எஸ்.எச்.ஹஸ்புல்லா.

Page 14
அணி,
முல்லைத்தீவு மாவட்ட ஜும்
தர்மகர்த்தாக்களாக
வடபுலத் தாயகத்திலிருந்து மு நிகழ்வு வடுப்பட்ட வரலாறாகி வி முஸ்லிம்களின் வாழ்வு , வளம், வரலா வரலாற்று முக்கியத்துவமிக்க நுா வாய்ப்பளித்த வல்ல அல்லாஹ்வுக்கு பு.
"எந்தச் சமூகம் - தனது க நிகழ்வுகளையும் அறியாதிருக்கின்றதோ பற்றி திட்டமிட முடியாது'' என்னும் கூ பூர்வீக முஸ்லிம் குடிகளாகிய எமது கொள்ள வைப்பதில் இந்நுால் காலத்தி
வட மாகாணத்தில் இன்பத்த கொண்டு தமிழ் மக்களுடன் ஒன்ற புரிந்துணர்வுடனும் காலா காலமாக, ! முஸ்லிம்களை, வேர்விட்டு விருட்சித் அந்த நாள், ஆமாம் 1990ன் பிற்பகுதி, தமிழீழப் போராளிகளான புலிகள் த
முஸ்லிம்களை முற்றாக வெளியேற்றிய ஏற்பட்ட ஒரு மாபெரும் அடியாகும்
இவ்வாறாக, இடம் பெயர்ந்த வ வெளியே பல்வேறு இடர்களுக்கு மத் அகதி முகாமில் வாழ்ந்து வருகின்றார் இழந்து வெறும் சோகங்களைச் சும் மண்ணில் மீண்டும் காலூன்றி நிலை

ந்துரை
ஆப் பள்ளிவாயில்களின் பிரதம ல் வழங்கப்பட்டது.
மஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட துர்ப்பாக்கிய பிட்ட இன்றைய நிலையில் முல்லை ற்றை எழுத்துருவில் செதுக்கும் இந்த லிற்கு அணிந்துரை வழங்குவதற்கு கழ் அனைத்தும். அல்ஹம்து லில்லாஹ்!
டந்த கால வரலாற்றையும், நிகழ்கால அச்சமூகத்தினால் தனது எதிர்காலத்தைப் ற்றை கூர்ந்து நோக்கின் முல்லைத்தீவின் வரலாற்றை நாமே தெளிவாய் அறிந்து பின் தேவையை உணர்ந்த படைப்பாகும்
மிழ் மொழியை இனிய தாய் மொழியாகக் றாகக் கலந்து இன ஐக்கியத்துடனும், பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த -த மண்ணில் இருந்து பிடுங்கி எறிந்த பாழ்க்கையில் மறக்க முடியாத தினமாகும். கயக பூமியில் இருந்து முல்லைத்தீவு செயல் தமிழர் - முஸ்லிம் ஒற்றுமைக்கு
பட புல முல்லை முஸ்லிம்கள் வடக்குக்கு தியில் ஆறு ஆண்டுகளையும் கடந்து கள். சொத்துக்களையும், சுகங்களையும் ந்து கொண்டு வாழும் இவர்கள் தாய் 2 பெறவே அவாவுறுகின்றனர்.

Page 15
இவர்களின் அர்த்தமுள்ள அபி ரீதியான அனைத்து முயற்சிகளும் முன்
வடக்கு முஸ்லிம்களின் உரிபை ஆய்வுத் தொடரில் முல்லை முஸ்லிம் இந்நுால் முல்லைத்தீவு முஸ்லிம்களின் விரிக்கின்றது.
இந்நுால் காட்டும் வரலாற்று அ உண்மையான இருப்பை உறுதிப்படு வாழ்வு , வளம், வரலாறு, பொருளாதா வருடங்களாக தொடர்பு அறுந்து தொங்கு கிளறி விடுகின்றன.
முக்கியமாக இந்நுால் முல்ன வரலாற்றுப் பாதையை விரித்துப் போ அறிய துடித்துத் தவிக்கும் இளம் பி எனக் கருதுகின்றோம்.
மேலும் முல்லை முஸ்லிம் வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் இனஉறவு போன்ற இன்னோரன்ன அட ஆய்வுக்குரிய சில அடிப்படைகளைத் ஆரம்ப ஊக்கியாகக் கொண்டு முல் குழுவினர் முல்லைத்தீவு முஸ்லிம்களை மேற்கொள்ள வேண்டும் என நாம் அ
அகதி முகாம்களில் கைதிகள் நமது சொந்த மண்ணில் கால் வைக் காரையடி வயல்களில் ஏர் பூட்டி உழு நந்திக்கடலில் இறால் வீசப் போகும் ந மீண்டும் பாங்கொலி கேட்கும் காலம்

மாசைகளின் ஈடேற்றத்திற்காக அறிவியல் ர்னெடுக்கப்படல் வேண்டும்.
பக்கான அமைப்பின் வட புல வரலாற்று ளின் வாழ்வு , வளம், வரலாறு பற்றிய மனத்திரைகளில் அகலக் காட்சிகளை
அம்சங்கள் முல்லைத்தீவு முஸ்லிம்களின் த்துகின்றன. எமது முஸ்லிம்களின் ரம், கலை, கலாசாரம் என்பன ஆறு நம் தாயக நிகழ்வுகளின் நினைவுகளைக்
பல இளம் சமூகத்தினரின் முன் ஒரு டுகின்றது. தம் கடந்த காலம் பற்றி ள்ளைகளுக்கு இது ஒரு பாட நூல்
மகளின் உண்மைத் தன்மைகளை இந்நுால் பொருளாதாரம், கலாசாரம், ம்சங்களைத் தொட்டுக் காட்டுகின்றது தருகின்றது. எனவே இந்நுாலை லைத்தீவு முஸ்லிம்களின் கல்வி சார் ப் பற்றி மேலும் தெளிவான ஆய்வுகளை வாவுறுகின்றோம்.
அல
எய் காலத்தை நொந்துகொண்டு "நாம் தம் காலம் வராதோ? தண்ணிமுறிப்பு, ஐது வளம் சேர்க்கும் நாள் வராதோ? எள் வராதோ? எமது பள்ளிவாசல்களில் எப்போது? முஸ்லிம்களின் நோன்புப்

Page 16
பெருநாளையும், ஹஜ்ஜுப் பெருநாளை சித்திரை வருடத்தையும் இரு சாரா மகிழ்ச்சிகரமான அந்த நாள் மீண்டும் எம்மவரின் எண்ணங்கள் ஈடேறும் காத்திருக்கின்றோம்.
"இஸ்லாமியத் தமிழர்" எ . அழைத்து சகோதர பாசத்துடன் வாழ மீண்டும் இதே போல் வாழ விரும்பு
அண்மைக்காலங்களில் "முஸ்லிம்களை வெளியேற்றியது வருந்துகின்றோம்" என்றும் கூறியுள் தாயகத்தில் வாழலாம் என்பதற்கான கு முஸ்லிம்களும் அதே போல ஏனைய மண்ணில் மீண்டும் குடியேறி நின வழிகளையும் சகல தரப்பினரும் மு விரும்புகின்றோம். அதில் குறிப் முஸ்லிம்களைத் திரும்பவும் தமது ! அழைக்க வேண்டும் என்று நாம் வி
அத்துடன் இந்நுால் உருவா ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உதவி அமைப்புக்களுக்கும் எமது நன்றிகள் கொள்கின்றோம்.
வஸ்
முல்லை

யும், தமிழ் மக்களின் தைப் பொங்கலையும், சரும் நட்புடன் பகிர்ந்து கொண்டாடிய வராதோ?” என ஏங்கிக் கொண்டிருக்கும் புதியதொரு பொழுதின் விடிவுக்காக
ன்று அடை மொழியுடன் அன்புடன் மந்த தமிழ் மக்களும் தமிழ் குழுக்களும் 1வர் என நம்புகின்றோம்.
முஸ்லிம்களை வெளியேற்றியோர், தவறு என்றும் அதற்காக மனம் இளமை இன ஐக்கியத்துடன் மீண்டும் றிகாட்டி எனக் கருதுகின்றோம். முல்லை
வட புல முஸ்லிம்களும் தமது தாயக மலத்து வாழ வேண்டியதற்கான சகல னைப்புடன் முயற்சிக்க வேண்டும் என ப்பாக தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் பூர்வீக இடங்களுக்கு திரும்பி வரும்படி விரும்புகின்றோம்.
-வதற்கு அறிவு ரீதியாகவும், பொருளாதார களை வழங்கிய தனிப்பட்டவர்களுக்கும், மளயும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்
ஸலாம்.
இவ்வண்ணம் லத்தீவு பள்ளிவாயில் தர்மகர்த்தாக்கள்

Page 17
அணிந்துரை வழங்கிய தர்மகர்த்
ADH ndod
1.
மௌலவி. யூ.வதுாத், தலைவர், பெரிய பள்ளி
அ (டிதu)
ஏ.எல்.முஸ்தபா, தலை ஜும்ஆப் பள்ளி, நீராவி
--
), கரு உ தெட
எல். டி. சாகுல் ஹமீது ஜூம் ஆப் பள்ளி ஹிஜ்ர
பி.S. A - 432
முகம்மது சரிபு அப்து உபதலைவர், ஜூம் ஆப்
* - * *
=. ஒ ப புய
5
ஹமீது பைக் கீர் தலை ஜும்ஆப் பள்ளி முறிப்பு
கே.எம். கெளது, தலைவர், எள்ளுச்சேனை
M + N L'
முஹம்மது ஹனிபா மு. தலைவர் தைக்கியா நீர
4. Mடடu ஆதம்பிள்ளை ஹாமீது பொருளாளர் ஜூம் ஆப் முத்தையன்கட்டு
>*

தாக்களின் ஒப்பமும் பெயர் விபரமும்
ஜூம்ஆ பள்ளிவாசல், தண்ணீரூற்று.
வர், மஸ்ஜிதுன் நுாரானியா ப்பிட்டி.
, தலைவர், முகைதீன் புரம்.
ம் அஸீஸ்
பள்ளி, முல்லைதீவு நகரம்
வர் கொத்தியா கும்பம்
தக்கியாப் பள்ளிவாசல், முறிப்பு
கம்மது இப்றாகிம். ராவிப்பிட்டி -
(மெளலவி) பள்ளிவாசல்
iij

Page 18
நன்றி
1991ஆம் ஆண்டு வட மாகாண ஆய்வை மேற்கொள்வதற்கும் இன்று இந்நுாலை வெளியிடுவதற்கும் இலங் ை தலைவரும், அதன் அங்கத்தவர்களும்
மேலும், இந்நூலுக்கான விபரம் வகையில் முஸ்லிம் அகதிகள் பற்றிய ெ உதவிகளை வழங்கிய பேராதனை மாணவர்களுக்கும், ஜமாஅத்தே இஸ்லாமி
இவ்வாய்வின் பல கட்டங்களிலு இருந்தவர்கள் பலர். அவர்களில் கலாநி நவ்பல், ஜனாப் பி அஜ்மல், திரு ஹேர, ஆர். றிகான், ஜனாப் எஸ்.எம்.ஏ. நியா சாஜிதா, எம்.ஐ. முர்சிதா ஆகியோருக்கும்
முல்லைத்தீவு முஸ்லிம்கள் பற் எனக்கு உறுதுணையாக இருந்தவ பேராதனைப் பல்கலைக்கழக மாணவ ஆகும். இந்நூலில் இடம்பெற்றுள்ள ப .தௌபீக்கால் வரையப்பட்டன.
இந் நுால் 1996 ஆம் ஆண் நுரைச்சோலையில் முல்லைத்தீவு மக் சமர்ப்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் முன்ன மேலும் அபிவிருத்தி செய்ய உதவின. அணிந்துரை வழங்கிய முலலைத்தீவு மு
கூரத்தக்கவர்கள்.
இந்நுால் எனது மனைவி யோகநாதனினதும் உதவியுடன் கள் அச்சகத்தினரால் நல்ல முறையில் அச்சி
இந்நுாலை முழுமை பெறுவதற் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.
ணயாக
Xi!

புரை
முஸ்லிம் அகதிகள் பற்றிய வெளிக்கள 'முல்லைத்தீவு முஸ்லிம்கள்' பற்றிய க ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் உதவி செய்தனர்.
சேகரித்தலில் பலர் உதவினர். அந்த வளிக்கள் ஆய்வில் மிக ஆர்வத்தோடு எப் பல் கலைக் கழகப் பட்டதாரி
உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள். ம் தொடர்ச்சியாக எனக்கு உதவியாக தி எம்.ஏ.லத்தீப், கலாநிதி எம்.எஸ்.எம். த், ஜனாப் எம்.எச்.எம்.நவ்பர், ஜனாப் ஸ், செல்விகள், எம்.ஐ.வாபிகா, பி. நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். ஊறிய இந்நுாலை எழுதி முடிப்பதற்கு 1 முல்லைத்தீவைச் சேர்ந்தவரும், நமாகிய ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி உங்கள் எனது மாணவர் ஜனாப் எம்
மாண
டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி கள் மத்தியில் ஒரு விரிவுரையாக வைக்கப்பட்ட கருத்துக்கள் இந்நுாலை
அதே போல இந்நூலை வாசித்து சஸ்லிம் பிரமுகர்களும் இங்கு நினைவு
சுஆதாவினதும், திருமதி கௌரி னனிப்படுத்தப்பட்டு, Unie Arts டப்பட்டது. கு உதவியளித்த ஏனயை சகலருக்கும்
எஸ்.எச்.ஹஸ்புல்லா.

Page 19
1. 9
முல்லைத்தீவு மாவட்ட முஸ் முஸ்லிம்களின் வாழ்க்கை வரலாற் ை 1990ஆம் ஆண்டை இம்மக்களின் வா கொண்டு அதற்கு முந்திய வரலாறு இந்நுாலில் எழுதப்படுகின்றன. அந்த இங்கு முக்கியமானது என்று அறிய
(60க
1.1. முஸ்லிம் அகதிகள்:
1990ஆம் ஆண்டு ஒக்டோ வாழ்ந்த முஸ்லிம் மக்கள் இம்மாவட் வெறியேறும்படி ஆயுத முனையில் உத்தரவு இட்டவர்கள் தமிழ் ஈழ 6 பிறகு விடுதலைப்புலிகள் என்று குறி ஆயுதக் குழுவினராவர். இவர்களி முஸ்லிம்கள் தமது பிரதேசங்களை அச்சுறுத்தலால் வெளியேறிய முல்ல தமது சொந்த இடங்களுக்கு மீளவி
யார் இந்த விடுதலைப்புலிக வட - கிழக்கு மாகாணங்களில் வாழ் ஒரு நாட்டை உருவாக்குவதற்காக பலம் வாய்ந்த இயக்கமாகும். 8 வென்றெடுப்பதற்காக கடந்த 10 ஆக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மிகப்பெரும்பான்மையான நிலப் பகுதி வைத்துக் கொண்டிருக்கின்றது. மு வற்புறுத்தப்பட்ட 1990 ஆம் ஆண்டு (

றிமுகம்
லிம்கள் பற்றிய இந்நுால் முல்லைத்தீவு றக் கூறுகின்றது. அதிலும் குறிப்பாக, ழ்வில் ஒரு முக்கியமான காலக்கட்டமாகக் பம், அதற்குப் பிந்திய அனுபவங்களும்
அடிப்படையில் ஏன் 1990ஆம் ஆண்டு வேண்டியது அவசியமாகும்.
பர் மாதம் இம்மாவட்டத்தில் (படம்-1) டத்தை விட்டு குறுங்கால அவகாசத்தில் வற்புறுத்தப்பட்டார்கள். இவ்வாறான விடுதலைப் புலிகள்' (இந்நூலில் இதன் ப்பிடப்படும்) என அழைக்கப்படும் தமிழ் பின் ஆயுத அச்சுறுத்தலுக்கு அஞ்சி ள விட்டு வெளியேறினார்கள். இவ் லெத்தீவு முஸ்லிம் மக்கள் இதுவரை
ல்லை. ள்?. விடுதலைப்புலிகள் இலங்கையின் கின்ற தமிழ் மக்களுக்கென தனியான
ஆயுத ரீதியாக போராடி வரும் ஒரு இவ்வியக்கம் தமது இலட்சியத்தை ண்டுகளாக இலங்கை இராணுவத்துடன் கின்றது. இவ்வியக்கம் வடமாகாணத்தின் தியை தமது ஆயுதக்கட்டுப்பாட்டிற்குள் ஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேறும்படி முல்லைத்தீவில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்த
1

Page 20
பிரதேசங்களை இவ்வியக்கம் தனது பு வைத்திருந்தது. இச்சக்தி வாய்ந்த இ வெளியேற்றத்திற்கும் காரணமாக இரு
முல்லைத்தீவு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட அதே காலத்தில் வ கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவு விடுதலைப்புலிகளால் வற்புறுத்தப்பட்டு வடமாகாணத்தில் அக்காலத்தில் வாழ் வெளியேற்றத்திற்கு உட்பட்டவர்களா வட மாகாண முஸ்லிம்களில் மிகப் சொந்த இடங்களுக்கு மீள முடியாத ந அகதிகளாக கடந்த ஆறு வருடங்க வாழ்ந்து வருகின்றனர்.
ஏன் வடக்கில் இருந்து | என்பதற்கு விடுதலைப்புலிகள் இன்றுவ அளிக்கவில்லை. இதுவரை வட வெளியேற்றத்தின் பின்னணியைப் பற்றி விளக்கவும் இல்லை. ஆனால் மு வடக்கை விட்டு வெளியேற்றப்பட்ட இலங்கையின் இனப்பிரச்சினையின் உ கொள்வதற்கு மிகவும் அவசியமானதா வெளியேற்றத்தை அக்காலக்கட்ட வெளியேற்றத்திற்கான அடிப்படைக்
முயற்சிக்கின்றது.
1.2. பின்னணி:
இலங்கையின் இனப்பிரச்சினை முக்கியமான காலக் கட்டமாகும். நீ 1989ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அரச இடையில் குறுங்கால யுத்த நிறு, துரதிஷ்டவசமாக இவ்யுத்த நிறுத்தம் மீற
2

முழுமையான ஆயுதக் கட்டுப்பாட்டுக்குள் யக்கமே முல்லைத்தீவு முஸ்லிம்களின் ந்தது.
தமது பிரதேசங்களில் இருந்து மாகாணத்தின் மன்னார், யாழ்ப்பாணம், கட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டார்கள். இதன் மூலம் ந்த எல்லா முஸ்லிம்களும் இப்பலவந்த சினர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட பெரும்பான்மையினர் இன்னும் தமது ைெலயில் இருக்கின்றார்கள். இம்மக்கள் களாக வட மாகாணத்திற்கு வெளியே
முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டார்கள் ரை ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கத்தை
மாகாண முஸ்லிம்களின் பலவந்த தி ஆய்வு ரீதியாக யாரும் ஆராய்ந்து
ஸ்லிம்கள் ஏன், எந்த சூழ்நிலையில் டார்கள் என்று அறிய வேண்டியது ர்ளார்ந்த அம்சங்களை சரியாக அறிந்து நம். அதனால் முஸ்லிம்களின் பலவந்த நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி காரணங்களை விளக்க இந்நுால்
வரலாற்றில் 1990ஆம் ஆண்டு ஒரு ன்ட உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்பு Tாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் தம் ஒன்று அமுலில் இருந்தது. பட்டு' மீண்டும் யுத்த நடவடிக்கைகள்

Page 21
இவ்விரு சாராருக்கும் இடையில் ஜூ. திடீரென வெடித்த இவ் உள்நாட்டு யுத்த பரவலாக நடைபெற்றது. பல்லாயிரக்கண உயிரை இழந்தனர். மேலும் பல இ வகையான பாதிப்புக்குள்ளாயினர். உதா ஜூன் மாதத்திலிருந்து டிசம்பர் வரைய கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏற மக்கள் இவ்யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உருவான இவ்வகதி வெள்ளத்தை அ குழு இலங்கையை "அகதிகளின் தீவு" 6 குறிப்பிட்டு இலங்கையின் அக்கால . சுட்டிக் காட்டியது (US Committee பொருட்களுக்கும் உடமைகளுக்கும் முடியாதவை. சுருக்கமாக இவ்யுத்தம் தமிழ் மக்களையும் அதே நேரத்தி நிலைகுலையச் செய்து நிர்க்கதியாக்கிய
இவ்யுத்தம் மேலே குறிப்பிட்ட உறவில் மேலும் பிளவினை ஏற்படுத்திய இக்கால கட்டத்தில் வெகுவாகப் பாதிக்க உள்நாட்டு யுத்தத்திற்கு கிழக்கு மாகாண இனப்பிரச்சினை உக்கிரமடைய ஆ 1990ஆம் ஆண்டுவரை முஸ்லிம்-த வந்தனர். ஆனால், 1990 ஆம் ஆண் இவ்விரு இன மக்கள் மத்தியிலும் ஆரம்பித்தது. அதுவரையில் இனப் பரஸ்பரம் பங்கிட்டு நன்மையிலும், தீமை இன மக்களும் அரசியல் ஆயுத சக்திக சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிக
இக்காலத்தில் தமிழ் - முஸ்லி மாகாணத்திலேயே அதிகமாகக் காணப்ப கட்டத்தில் நிகழ்ந்த தொடர்புடைய பல வேண்டியது அவசியமாகும். ஜூன்

ர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகின. ம் வட-கிழக்குப் பிரதேசம் முழுவதும் க்கான பொதுமக்கள் இவ் யுத்தத்தினால் லட்சக் கணக்கானவர்கள் பல்வேறு ணமாக இவ் யுத்தம் ஆரம்பித்த 1990 என 7 மாதங்களுக்கிடையில் வடக்கு - க்குறைய பத்து இலட்சம் அப்பாவி அகதிகளாயினர். இனப்பிரச்சினையால் கதிகளுக்கான ஐக்கிய அமெரிக்காவின் என்று தனது விசேட அறிக்கையொன்றில் அகதிப் பிரச்சினையின் தாற்பரியத்தை or Refugees, 1991). இப்பிரதேசத்தின் ஏற்பட்ட அழிவுகள் மதிப்பிடப்பட வடக்கு-கிழக்கில் வாழ்ந்த குறிப்பாக ல் முஸ்லிம், சிங்கள மக்களையும்
து. - அழிவுகளோடு இலங்கையின் இன து. குறிப்பாக தமிழ் - முஸ்லிம் உறவுகள் கப்பட்டன. அதாவது 1990 ஒக்டோபரில் எ தமிழ்- முஸ்லிம் மக்களும் பலியாகினர். ரம்பித்த 1983ஆம் ஆண்டிலிருந்து மிழ் மக்கள் நல்லுறவோடு வாழ்ந்து டு ஜூன் மாத உள்நாட்டு யுத்தத்தோடு சந்தேகமும், நம்பிக்கையீனமும் எழ பிரச்சினையால் ஏற்பட்ட பாதிப்புகளை கயிலும் சகபாடிகளாக வாழ்ந்த இவ்விரு ளின் ஊடுருவலால் ஒருவரை ஒருவர் லைக்குத் தள்ளப்பட்டனர். ம் முரண்பாடு குறிப்பாக கிழக்கு ட்டது." கிழக்கு மாகணத்தில் இக்காலக் நிகழ்வுகள் பற்றி இங்கு குறிப்பிடப்பட மாத யுத்த நிறுத்த மீறலோடு, கிழக்கு

Page 22
மாகாணத்தில் இலங்கை இராணுவம் 6 படையெடுப்பின் போது முஸ்லிம்களின் என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத் இக்காலக்கட்டத்தில் கிழக்கு மாகாணத் மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கெதிரான படுகொலைகளுக்கும் விடுதலைப்புலிகள் சாட்டப்பட்டது. இந்நிகழ்வுகள் இப்பிரே ஒருவரை ஒருவர் மேலும் சந்தேகக் க உள்ளாக்கியது. முஸ்லிம்களை கிழ தமிழ் ஆயுத சக்திகள் முனைகின்றன முன் வைக்கப்பட்டது. அதே நே மக்களுக் கெதிரான இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு கிழக்கு மாகா உடந்தையாக இருந்தார்கள் என்று தமி
இந்நிகழ்ச்சிகளின் முடிவாக, குழுக்களினதும் ஆயுதப் பலப் பரீட்சை . உறவு பலியாகியது. கிழக்கில் பு முரண்பாடுகளால் எந்த அளவு துாரம் தெரியவில்லை. ஆனால் பல நுாற்றான அந்நியோன்யமாக வாழ்ந்த தமிழ் - முரண்பாட்டை வலுப்படுத்த இக்காலக். என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
கிழக்கு மாகாண இன முர காணப்பட்ட போதும், முஸ்லிம் - தமிழ் இ அப்போது பிரதிபலிக்கவில்லை. ச இனப்பிரச்சினைச் சூழல் இக்காலத்தில் 6 அக்கால பத்திரிகைச் செய்திகள், வா தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. பொறுத்தவரை கிழக்கில் ஏற்பட்ட தமிழ் உடனடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தாபை முதலில் வடக்கு -கிழக்கில் முஸ்லிம்

மற்கொண்ட தமிழ் மக்களுக்கெதிரான உதவி இராணுவத்தால் பெறப்பட்டது தியில் பரப்பப்பட்டது. அதே நேரத்தில் தில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு 1 ஆயுத ரீதியான நடவடிக்கைகளுக்கும் இயக்கம்தான் காரணம் என்று குற்றம் தச அப்பாவி தமிழ் - முஸ்லிம் மக்களை
ண்கொண்டு பார்க்கும் சூழ்நிலைக்கு பக்கிலிருந்து வேரறுக்க மேற்குறித்த என்ற குற்றச்சாட்டும் முஸ்லிம்களால் ரத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்
அடாவடித்தனமான அத்துமீறிய ண முஸ்லிம் ஊர்காவற்படையினர் ழ் மக்களால் குற்றம் சாட்டப்பட்டது.'
ஆயுதப் படையினதும், ஆயுதக் க்கு கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லிம் திதாக உருவான தமிழ் - முஸ்லிம் பிற சக்திகள் பயன் அடைந்தார்களோ ன்டு காலம் ஒன்றாக ஒரு பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்கிடையில் இன நட்ட நிகழ்வுகள் வெகுவாக உதவின
பண்பாடுகள் மேற்குறித்த நிலையில் ன விரிசல்களின் எதிரொலிகள் வடக்கில் வ்வாறான ஒரு தமிழ் - முஸ்லிம் படக்கில் காணப்படவில்லை என்பதை ப்மூல ஆதாரங்கள் மிகத் தெட்டத்
வட மாகாண முஸ்லிம்களைப் 'முஸ்லிம் உறவு மாற்றங்கள் வடக்கில் பக்கு பல காரணங்களை குறிப்பிடலாம். மக்களின் பரம்பல் வேறுபாடுகளைக்

Page 23
குறிப்பிடலாம். இவ்விரு பிரதேச முஸ்லி தொடர்ச்சியற்ற தன்மை காணப்பட்டது முஸ்லிம் இன முரண்பாடுகள் வடக் ஏற்படுத்தக் கூடியவாறான புவியியல் ெ முஸ்லிம் மக்களின் பரம்பல் முறையி பிரதேச முஸ்லிம்களும் தனித்துவமான பு இப்பரம்பல் வேறுபாடு தமிழ் - முஸ். அவதானிக்கக் கூடியதாக இருக்கின்ற
வட மாகாணத்தை மட்டும் கு பரவலாகவும், மிக அதிகமான பிரதேசங். சிறுபான்மையினராகவும் காணப்பட்டார் கூட்டு வாழ்க்கை இரு சாராருக்கும் ச முஸ்லிம் சிறுபான்மையினருக்கு தமிழ் சமூக ஒத்துழைப்பும், ஒத்தாசையும் எ மாகாணத்தில் காணப்பட்டது. தமிழ் பெ வட மாகாண முஸ்லிம் சிறுபான்மை ரீதியாக, பொருளாதார ரீதியாக, 4 காணப்படவில்லை. அதனால் நீண்ட ஒரு பாரம்பரியமாக வடக்கில் வளர்ச்சி
இச்சந்தர்ப்பத்தில் 1989 ஆம் இக்கட்டான காலக்கட்டத்தில் நடைபெ உறவில் ஏதும் பாதிப்புக்களை ஏற்ப மிகக் கவனமாகப் பரீட்சிக்கப்பட வேல இலங்கையில் உள்நாட்டு யுத்தம் பொதுத்தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது பகிஸ்கரித்தது. ஆனால் அது தமிழ் படி கேட்கவில்லை. முன்னாள் ஆ கட்சிகள் வட மாகாணத் தேர்தல் தொகு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மாக போட்டியிட்டது. வன்னித் தேர்தல் ( வவுனியா, முல்லைத்தீவு ஆகிய
5

ம்களின் பரம்பல்களில் புவியியல் ரீதியில் . அதாவது, கிழக்கு மாகாண தமிழ் - கில் உடனடியாக பிரதிபலிப்புக்களை தாடர்ச்சித் தன்மை இவ்விரு பிரதேச ல் காணப்படவில்லை. இவ்விரு புவியியல் பரம்பலைக் கொண்டிருந்தனர். லிம் இன உறவு வேறுபாட்டிலும் து. நிப்பாக நோக்கினால் இங்கு முஸ்லிம்கள் களில் இவர்கள் எண்ணிக்கை ரீதியாக கள். தமிழ் - முஸ்லிம் இன ஐக்கிய பாதகமாகக் காணப்பட்டது. குறிப்பாக பெரும்பான்மையினரின் பொருளாதார, என்றும் தேவைப்படும் சூழ்நிலை வட ரும்பான்மையினரின் கண்ணோட்டத்தில் பினர் எண்ணிக்கை ரீதியாக, பிரதேச அரசியல் ரீதியாக ஒரு சவாலாகக் கால தமிழ் - முஸ்லிம் இன ஐக்கியம் பெற்றிருந்தது. ஆண்டு இனப்பிரச்சினையின் மிக மற்ற பொதுத் தேர்தல் தமிழ்- முஸ்லிம் நித்தி இருக்கலாமா என்ற அம்சமும் ன்டிய ஒன்றாகும். 1989ஆம் ஆண்டு முற்றாக முடிவுறாத சூழ்நிலையில் வ. விடுதலைப்புலிகள் இத்தேர்தலை மக்களை தேர்தலைப் பகிஸ்கரிக்கும் யுதக் குழுக்கள் உட்பட பல தமிழ் திகளில் போட்டியிட்டன. இத்தேர்தலில் பணத்தின் வன்னித் தேர்தல் தொகுதியில் தொகுதி வட மாகாணத்தின் மன்னார், மூன்று நிர்வாக மாவட்டங்களை

Page 24
உள்ளடங்கியதாக இருந்தது. இம்மூன் மக்கள் குறிப்பிட்ட அளவு எண்ணிக் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி புதிதாகும். வடக்குக் கிழக்கு முஸ் பாராளுமன்றத்தில் தனித்துவமாகப் பிரதி போட்டியிடுவதாகக் கூறியது. வன்னித் பரவலான ஆதரவையும் இக்கட்சி பெற் அங்கத்தவரையும் பெற்றுக் கொண்டது
வன்னித் தேர்தல் தொகுதியில் வெற்றி ஒரு தற்செயலான நிகழ்வு - முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க விகிதாசார தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்டத்தி காணப்பட்டது. அதாவது அம்மாவா முஸ்லிம்கள் ஏறக்குறைய 30 சதவீ உதவி அரசாங்க அதிபர் பிரிவின் மொத்த மன்னார் தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு
மன்னார் மாவட்டத்தின் மேற்கு பிரிவுகளிலும் முஸ்லிம்களின் விகிதாசா இலங்கையின் இன அரசியலிலும் பிரதிப வேண்டும். அதாவது வடக்குக் கிழ அரசியல் தனித்துவத்தை உறுதிப்படுத்த சீர்திருத்தங்கள் முன் வைக்கப்பட வே அரசியல் கட்சிகள் பல அக்காலத்தில் மு மேற்குறித்த இன சுயாட்சி கோரிக்கை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக சுயாட்சி முறையிலான ஒரு மாகா நடைமுறையில் இருந்து வந்தது.
முஸ்லிம் அரசியல் கட்சிகள் கோரிக்கையானது, வடக்குக் கிழக்கு ம வாழும் பிரதேசங்களை இணைத்த அடி ஒன்று அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்தில் வேண்டும் என்பதாகும். இவ்வாறு (

று நிர்வாக மாவட்டங்களும் முஸ்லிம் கையில் வாழ்ந்த மாவட்டங்களாகும். இலங்கையின் கட்சி அரசியலுக்குப் லிம்களின் அரசியல் அபிலாசைகளை பலிப்பதற்காக இக்கட்சி இத் தேர்தலில் தேர்தல் தொகுதியின் முஸ்லிம்களின் று இத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற
- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அல்ல. இத் தேர்தல் தொகுதியில் ரத்தினராகக் காணப்பட்டார்கள். இத் கில் முஸ்லிம்களின் செறிவு அதிகமாகக் ட்டத்தின் மொத்த சனத் தொகையில் தமாகவும், இம்மாவட்டத்தின் முசலி - சனத் தொகையின் 66 சதவீதமாகவும் வின 40 சதவீதமாகவும் காணப்பட்டனர். றித்த இரு உதவி அரசாங்க அதிபர் ார ரீதியான செறிவு இக்காலக்கட்ட லித்திருப்பதை இங்கு சுட்டிக் காட்ட க்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் இன சுயாட்சி முறையிலான அரசியல் ன்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம் ன் வைத்திருந்தன." முஸ்லிம்களின் முன் வைக்கப்பட்ட காலத்தில்தான் | வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு ன சபை அறிமுகப்படுத்தப்பட்டு
பால் முன்வைக்கப்பட்ட சுயாட்சிக் ாகாணங்களில் முஸ்லிம்கள் செறிந்து ப்டையில் ஒரு பிரதேச சுயாட்சிமுறை முஸ்லிம்களுக்கு ஒழுங்கு செய்யப்பட முஸ்லிம்களின் பிரதேச சுயாட்சிக்காக

Page 25
கிழக்கு மாகாணத்தில் தெற்கே திருகோணமலை வரை 6 நிலத் ெ அத்துடன் வட மாகாணத்தின் மன்னா என்ற முஸ்லிம்கள் செறிந்
அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. கருத்துக்களை முன் வைத்த அர முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்த அம்ப அடிப்படையாகக் கொண்டவைகள்" உண்மையில் பிரதேச சுயாட்சிக்க முஸ்லிம்களால் அக்காலத்தில் முன்லை
கிழக்கில் முஸ்லிம்-தமிழ் முஸ்லிம்களுக்கான பிரதேச சுயாட்சி செறிவுகள் உள்ளடக்கப்பட்ட அம்சமும் வெளியேற்றத்தோடு தொடர்புபட்டன கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டியல்
1989 ஆம் ஆண்டு பொதுத் முஸ்லிம் - தமிழ் உறவு வழமைபோ குழுக்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் ப கூடிய குறிப்பான நிகழ்ச்சிகள் எதுவும் மாறாக 1990ஆம் ஆண்டு ஜூன் யுத்த நிகழ்வுகள் பல தமிழ்- முஸ்லிம் உற உதாரணமாக அக் கால கட்டத்தி தாக்குதல்களாலும், படையெடுப்பாலும் கிராமமாக இடம்பெயர்ந்து தமது தஞ்சமடைந்தனர். அப்போது முஸ்லிம் உணவளித்து, உறையுள் அளித்து தமிழ் மக்களின் கேடயமாக முஸ்லிம் தமிழ் இன ஐக்கியத்தை உறுதிப் நிகழ்ச்சிகளும் மன்னார் வவுனியா, மு ஆகிய ஏனைய வட மாகாண மா நிகழ்ந்தன. இம் முஸ்லிம் கிராமா பெற்ற தற்காலிகப் பாதுகாப்பை வடக்கி

பொத்துவில்லில் இருந்து வடக்கே தாடர்ச்சியற்ற முஸ்லிம் பிரதேசங்களும் ர் மாவட்டத்தில் முசலி, எருக்கலம்பிட்டி து வாழ் ந் த பிரதே சங் களும் மேற்குறித்த முஸ்லிம்களின் சுயாட்சிக் சியல் கட்சிகள் கிழக்கு மாகாணத்தில் பாறை மாவட்டத்தின் அரசியல் பலத்தை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். ான கோரிக்கை மன்னார் மாவட்ட பக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. முரண்பாடுகளோடு முன்வைக்கப்கட்ட யும், அதில் வட மாகாண முஸ்லிம் ம், வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வயா? என்ற அம்சங்களும் மிகவும் வையாகும். ந் தேர்தலுக்குப் பின்னரும் வடக்கில் லவே காணப்பட்டது. தமிழ் ஆயுதக் ற்றிய மனோபாவத்தில் மாற்றம் ஏற்படுத்தக் இக் காலத்தில் வடக்கில் ஏற்படவில்லை. த காலத்தில் வடமாகாணத்தில் நிகழ்ந்த றவை மேலும் வலுப்படுத்த உதவியது. பில் அரசாங்கப் படைகளின் செல் - பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கிராமம் சூழலிலுள்ள முஸ்லிம் கிராமங்களில் - மக்களால் தமிழ் மக்கள் ஆதரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர். அக்காலத்தில் 5 மக்கள் இருந்தார்கள். முஸ்லிம் - படுத்தும் இது போன்ற வேறு பல மல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி வட்டங்களிலும் இக்காலக் கட்டத்தில் ங்களில் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் பின் சில பிரதேசங்களில் விடுதலைப்புலிகள்
7 .

Page 26
உறுப்பினர்களும் அனுபவித்தனர் என்ப முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் பல தமிழ் மக்களினது சரணாலயங்கள்
1.3. பலவந்த வெளியேற்றம்
இது இவ்வாறிருக்க 1990 இயக்கம் திடீரென வடக்கு முஸ்லிம்க நடவடிக்கையை எடுத்தது. 1990ஆ வாரத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, | மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் அவகாசத்தில் அதாவது ஒக்டோபர் சொந்த இடங்களை விட்டு வெள வற்புறுத்தப்பட்டார்கள். விடுதலைப்புலிக மாற்று வழி இல்லாத நிலையில் வடக்கு வெறுங்கையோடு வடக்கை விட்டு வெ
வடக்கு முஸ்லிம்களை இம்ம வெளியேற்றிய இந்த நடவடிக்கையை . அடிப்படையிலேயே மேற்கொண்டார்கள் காணப்படுகின்றன. உதாரணமாக விடுத யாழ்ப்பாணம் நகர் தவிர்ந்த வடமாக அறிவிக்கப்பட்டது. வெளியேற்ற அ பயன்படுத்திய வார்த்தைகளும், வெளியேற் எல்லா இடங்களிலும் ஏறக்குறைய ஒே உத்தரவு ஒக்டோபர் 22ம் திகதி மு வரை வெளியேற்றச் செய்தி விடு வைக்கப்பட்டிருந்தது. வெளியேற்ற இவ்வியக்கம் தமக்கும் (விடுதலைப்புலிக ஏதும் முரண்பாடுகள் இருப்பதாகக் காட் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் விடு சேர்ந்திருந்த முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களை மீளப் பெற்ற நிலையில் வீ

தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். நிகழும் வரை முஸ்லிம் கிராமங்கள் ரகக் காணப்பட்டன.
ஒக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் -ளுக்கு எதிரான ஒருதலைப்பட்சமான ம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதி மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு கள் எல்லோரும் 48 மணித்தியால 24ஆம் திகதிக்கு முன்னர் தமது ரியேறும்படி விடுதலைப்புலிகளால் ளின் இவ் வெளியேற்றக் கட்டளைக்கு க்கு முஸ்லிம்கள் கிராமம், கிராமமாக வளியேறி அகதியானார்கள். க்களின் சொந்த இடங்களில் இருந்து விடுதலைப்புலிகள் மிகவும் திட்டமிட்ட
என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் கலைப்புலிகளின் வெளியேற்ற உத்தரவு Tணம் முழுவதும் சம காலத்தில றிவிப்பின்போது விடுதலைப்புலிகள் றத்திற்காகக் கூறப்பட்ட காரணங்களும் ர மாதிரியாக இருந்தன. வெளியேற்ற ஸ்லிம்கள் மத்தியில் அறிவிக்கப்படும் நலைப்புலிகளால் மிக இரகசியமாக
உத்தரவு அறிவிக்கப்படும் வரை ளுக்கும்) முஸ்லிம்களுக்கும் இடையில் டக் கொள்ளவும் இல்லை. முஸ்லிம்கள் தலைப்புலிகளின் ஆயுதக் குழுவில்
எவ்வித காரணங்களும் இன்றி ட்டுக்கு திருப்பி அனுப்பப் பட்டார்கள்.

Page 27
100
வெளியேற்றத்திற்கு சில தினங்களுக்கு கிராமங்களில் முஸ்லிம்களின் பணத்தையும் கொள்ளும் முயற்சியிலும் இவ்வமைப்பு ஈடு Vol-1-35). ஆகவே வடக்கு முஸ்லிம்க இருந்து வெளியேற்றுவது பற்றி விடு தீர்மானித்திருந்தது. விடுதலைப்புலியின வெளியேற்றுவது என்ற தமது திட்டம் மிகவும் கவனமாகவும் இருந்தனர் 6 காட்டுகின்றன.
முஸ்லிம்கள் இவ்வாயுதக் குழுக் வற்புறுத்தப்பட்ட போது இவ் வெளியே முயற்சிகள் அக்காலத்தில் எடுக்கப்படவில் மக்களால் தமது வெளியேற்றத்தை தடுத்து இருக்கவில்லை. காரணம் இப்பிரதேசத் சமூகமாக முஸ்லிம்கள் அப்போது கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வெளி வர இம்மக்கள் எடுத்த முயற்சிகள் பயன் சிறுபான்மையினரை விடுதலைப்புலிகளின் வார்த்தையில் ஈடுபடுத்த தமிழ் மக்களும் பெரும் முயற்சி எடுத்தனர். அவை வேளை வட மாகாணத்தின் மன்னார் மா போன்ற சில கேந்திர இராணுவ முகாம்கள் இராணுவமும் முஸ்லிம்கள் பலவந்தமாக பாராமுகமாக இருந்தது. அதே நேரம் வடக்கில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அறியாததாலோ என்னவோ, இவ் வெல முயற்சிகளும் எடுக்காமல் இருந்தன முஸ்லிம்களுக்கு தமது பூர்வீக இடங். வேறு எந்த வழிகளும் அக்காலத்தில் இ
ஏன் விடுதலைப் புலிகள் முன் இன்று வரை ஒரு வினாவாகவே இ வெளியேற்றியதன் மூலம் விடுதலை

முன்னர் வடக்கின் சில முஸ்லிம் நகைகளையும் பலவந்தமாகப் பெற்றுக் பட்டது (Refugee Family Information, களை அவர்களின் சொந்த இடங்களில் தெலைப்புலிகள் இயக்கம் ஏற்கனவே ர முஸ்லிம்களை வடக்கை விட்டு ம் நுாறு வீதம் வெற்றி பெறுவதில் என்பதை மேற்குறித்த ஆதாரங்கள்
களால் வடக்கைவிட்டு வெளியேறும்படி பற்றத்தை தடுத்து நிறுத்தக் கூடிய லை. பலவந்தத்திற்குட்பட்ட முஸ்லிம் து நிறுத்தி இருக்கக்கூடிய வாய்ப்புகள் இதில் அநாதரவான ஒரு சிறுபான்மை எப்பட்டார்கள். விடுதலைப்புலிகளுடன் யேற்ற உத்தரவில் மாற்றம் கொண்டு - தரவில்லை. உண்மையில் முஸ்லிம் ன் தலைமைப் பீடத்துடன் பேச்சு - தமிழ் சமய, சமூகத் தலைவர்களும் யாவும் தோல்வியடைந்தன. அதே ாவட்டத்தில் தள்ளாடி , சிலாவத்துறை ளில் நிலை கொண்டிருந்த இலங்கை க வெளியேற்றப்படுவதை அறிந்தும் தேசிய, சர்வதேச சமாதான சக்திகள் த நடப்பது என்ன என்பதை சரியாக ரியேற்றத்தை தடுத்து நிறுத்த எந்த 1. அப்பாவிகளான சிறுபான்மை களை விட்டு வெளியேறுவதை விட இருக்கவில்லை.
ஸ்லிம்களை வெளியேற்றினர் என்பது நந்து வருகின்றது. இம்மக்களை ப் புலியினர் பொருளாதார, அரசியல்

Page 28
ரீதியாக நன்மைகளை அடைந்ததாகவும் அவ்வாறான நன்மையை அடைய இரு காரணம், வட மாகாணத்தின் மொத்த க காணப்பட்ட முஸ்லிம்கள் தமிழ் மக்க சுயாட்சியை அடைவதில் எந்த விதத்தி அத்துடன், வடக்கு முஸ்லிம்கள் விடுத முட்டுக்கட்டையாக எந்தக்காலத்திலும் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு எ இலங்கை இராணுவமும் முயற்சித்ததற்க இவ்வாறு எந்தக் கண்ணோட்டத்தில் பலவந்த வெளியேற்றத்தால் தமிழ் மச் அடைந்திருக்கக் கூடிய வாய்ப்புக்கள்
அவ்வாறிருந்தும் வடக்கு வெளியேற்றப்பட்டார்கள். 1990 ஆம் ஆ வட மாகாணம் முஸ்லிம் மக்கள் இல் இன உறவு வரலாற்றில் இது மிகவு சகோதரர்களான வடக்கு முஸ்லிம்களி முஸ்லிம் உறவு கறை படிந்ததாயிற்று இதனுடன் சம்மந்தப்பட்டவர்களின் கட
இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அணுகு முறைகள் பற்றியும் இங்கு குறி உத்தரவு அமுல் செய்யப்பட்ட வேளை தவிர இம்சிக்கப்படவில்லை. படுகொலை பல இடங்களில் உள்ளூர் விடுதலைப் பு பலவந்த வெளியேற்றத்தையிட்டு தமது தெரிவித்திருந்தார்கள், முல்லைத்தீவில் நீங்கள் இங்கிருந்து வெளியேற்றப்படுகி நீங்கள் வரவேற்கப்படுவீர்கள்" என்று குறிப்பிட்டதற்கான சாட்சியங்கள் எமக்
இன்று முஸ்லிம்களை பலவந்த

பும் தெரியவில்லை. எதிர் காலத்தில் நக்கின்றார்கள் என்றும் கூற முடியாது. சனத் தொகையில் ஆக 5 சதவீதமாகக் நளின் அரசியல் அபிலாசையான பிரதேச லும் தடையாக இருந்திருக்க முடியாது. லைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு ம் இருந்ததில்லை. முஸ்லிம்களைப் திராக இராணுவ வெற்றிகளை அடைய நான் உதாரணங்களும் வடக்கில் இல்லை. நோக்கினாலும் வடக்கு முஸ்லிம்களின் 5களோ, ஆயுதக் குழுக்களோ நன்மை
இருக்கவில்லை.
முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் பூண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி லாத மாகாணமாகியது. இலங்கையின் பும் துரதிஷ்டவசமான நிகழ்ச்சியாகும். ன் பலவந்த வெளியேற்றத்தால் தமிழ்ய. இதற்குப் பிராயச்சித்தம் தேடுவது உமையல்லவா? ரின் பலவந்த வெளியேற்றத்தின் போது ரில் காணப்பட்ட வேறுவகையான சில ப்பிட வேண்டும். வடக்கில் வெளியேற்ற - முஸ்லிம்கள் அச்சுறுத்தப்பட்டார்களே ம முயற்சிகள் மேற்கொள்ளப்படவுமில்லை. புலி உறுப்பினர்கள் பலர் முஸ்லிம்களின் து மனவருத்தத்தை மறைமுகமாகத் ல் 'முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவே ன்றீர்கள்" என்றும் "ஈழம் கிடைத்ததும் வம் விடுதலைப் புலி உறுப்பினர்கள்
குக் கிடைத்துள்ளன. நமாக வெளியேற்றியதற்காக விடுதலைப்

Page 29
புலியினர் மனம் வருந்துவதாக நம்பத் ; வடமாகாணம் முஸ்லிம்களதும் வாழ ஆயுதக்குழு வெளிப்படையாக ஒத்துக் செ இந்த மனமாற்றத்தை நோக்குகின்ற 6 வெளியேற்றம் இனப்பிரச்சினையில் வட மா புலிகளின் தப்பான ஒரு கணிப்பீட்டில் அல்ல வேண்டும் என்று யூகிக்க முடிகின்றது. சூழ்நிலையில் எடுக்கப்பட்ட தவறான தீர் விளக்கப்பட இருப்பதனால் இந்நூலில்
எது எவ்வாறிருந்தாலும் மு. வருடங்களுக்கு முன்னர் தாயகக் கோ ஆயுதக் குழுவால் நிறைவேற்றப்பட்டது. மக்கள் தங்களைச் சொந்த இடங்களும் வரும்படி கொள்கை ரீதியாக அழைக் கொண்டிருக்கின்றார்கள். இன்றுவரை புலிகளால் இந் நேசக்கரம் நீட்டப்படவில் புலிகள் தனது மௌனத்தை கலைத் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதற்கு உண்மையானால் தமது நிலைப்பாட்டை
அவ்வாறான ஒரு தெளிவான நிலை பிரச்சினையுடன் மட்டுமல்ல, வடக்கு- கிழ கூட்டு வாழ்க்கைக்கு விடுதலைப் புலிகள் ஒரு அடையாளமாகவும் இருக்கும் என
மறு புறத்தில், பலவந்த வெளி பாரதுாரமான பொருளாதார, கல்வி, கலாசார இருக்கிறது என்பது கருத்தில் கொள்ளப் இவ் வெளியேற்றம் இம் மக்களுக்கு சொல் ஏற்படுத்தி உள்ளது. தமது வீடுகளில் உடையோடு இம்மக்கள் அனுப்பப்பட்டார் அகதிகளாக, பிறரை நம்பிய வாழ்க்கையை தாம் பாரம்பரியமாகக் கட்டிக் காத்து, வள

தகுந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. ழ்விடமே என்பதை இன்று இவ் காண்டுள்ளது. விடுதலைப் புலிகளின் போது முஸ்லிம்களின் பலவந்தமான காண முஸ்லிம்கள் பற்றிய விடுதலைப் லது எதிர்பார்ப்பில் செய்யப்பட்டிருக்க பலவந்த வெளியேற்றம் எவ்வாறான மானம் என்பதை வேறு ஆய்வுகளில் அவ்வம்சம் விபரிக்கப்பட வில்லை. ஸ்லிம்களின் வெளியேற்றம் ஆறு ட்பாட்டை உறுதியாக நம்பும் ஒரு
அப்பாவிகளான வெளியேற்றப்பட்ட க்கு விடுதலைப் புலிகள் மீண்டும் தம் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து உத்தியோக பூர்வமாக விடுதலைப் லை. இந்த விடயத்தில் விடுதலைப் தே தீர வேண்டும். முஸ்லிம்கள்
இவர்கள் மனவருத்தப்படுவது - தெளிவு படுத்தியே ஆகவேண்டும். லப்பாடு வடக்கு முஸ்லிம்களின் க்கில் தமிழ்- முஸ்லிம்களின் எதிர்கால தனது நல்லெண்ணத்தை வெளியிடும்
பதில் ஐயம் இல்லை. பயற்றம் முஸ்லிம் மக்களுக்கு பல ஏ, உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி ப்பட வேண்டும். உளவியல் ரீதியாக ல்லொணாத் துயரங்களை ஏற்கனவே ல் இருந்து வெறுமனே உடுத்திய ரகள். கடந்த ஆறு வருடங்களாக இம்மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். கர்த்து வந்த தமது கல்வி, ஒழுக்கம்,

Page 30
கலாசாரம் போன்றன முகாம் வாழ்க்
முடியாதவர்களாக இம்மக்கள் காலி வழங்கப்பட்ட பற்றாக்குறையான அகதி ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியா எல்லாவற்றிற்கும் பிறரை நம்பிய வாழ்க் பற்றிய தீர்மானத்திலும் பிறரில் தங். இம்மக்களை தள்ளிக் கொண்டிருக் துன்பங்களும், துயரங்களும் இம்மக் இம்மக்களுக்கு ஏற்பட்டது என்ப ை முடியாது.
1.4. நுாலின் நோக்கம் :
இக்காரணங்களால், வடக்கு | பாரம்பரியத்தால் வடக்கிற்கே உரியவர் நிரூபிக்க வேண்டிய அவசியம் இன்று
வாழ்ந்த பிரதேசம் இம்மக்களின் மூதா இம்மக்களுக்கு உரிமையாக இருந்த உழைக்கப்பட்டவை என்பதையும் உ காணப்படுகின்றது. அது மட்டுமன் இணக்க வாழ்க்கை வாழக் கூடிய முஸ்லிம்கள் கடந்த காலத்தில் கொல காட்டி, எதிர்காலத்திலும் வடக்கில் சாத்தியம் என்று நிரூபிக்க வேண்டிய மக்களின் இலட்சியத்துக்கு முரண அபிலாசைகளை தமிழ் மக்களுக்கும், த எடுத்துக்காட்ட வேண்டிய தேவைய நோக்கங்களை அடிப்படையாகக் கொண
இந்நுாலில் பலவந்த வெளி பொருளாதார இழப்புப் பற்றியும் ஆராய வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் தமக்கு

கெயால் வீழ்ச்சி அடைவதைத் தடுக்க ணப்படுகின்றார்கள். இம்மக்களுக்கு நிவாரணம் இம்மக்களை ஆரோக்கிய கவும் பலவீனமானவர்களாக்கி விட்டது. கையின் பிரதி பலன் தமது எதிர்காலத்தைப் கியிருக்க வேண்டிய சூழ் நிலைக்கு -கின்றது. இத்தனை கஷ்டங்களும், 5களின் பலவந்தமான வெளியேற்றத்தால் த யாரும் மறுக்கவோ மறைக்கவோ
ரமாக
முஸ்லிம்கள் தமது பிறப்பால், வரலாற்றால் மகள் என்பதையும் தெட்டத் தெளிவாக
ஏற்பட்டுள்ளது. வடக்கில் முஸ்லிம்கள் எதையர் வாழ்ந்த பிரதேசம் என்பதையும் உடமைகள் இம்மக்களால் நியாயமாக றுதிப்படுத்த வேண்டிய கட்டாய நிலை P வடக்கில் தமிழ் மக்களோடு ஒரு அடிப்படைக் குணாதிசயங்களை இம் ன்டிருந்தார்கள் என்பதையும் எடுத்துக் தமிழ்-முஸ்லிம் இன ஐக்கிய உறவு அவசியமும் காணப்படுகின்றது. தமிழ் பாடில்லாத வடக்கு முஸ்லிம்களின் மிழ் இயக்கங்களுக்கும், மற்றவர்களுக்கும் ம் இன்று காணப்படுகின்றது. இந்த டதாக இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது. யற்றத்தால் இம் மக்களுக்கு ஏற்பட்ட பப்படுகின்றது. வடக்கில் பாரம்பரியமாக பல வகையான அசையும் அசையா
1ல வகையான அ

Page 31
சொத்துக்களை உடமையாகக் கெண் ஆண்டு வெளியேற்றப்பட்ட போது ( பெறுமதியான அசையும் சொத்துக்கள் வட மாகாணத்தின் பல இடங்களில் ப இம்மக்களின் வீடு, காணி, வர்த்தக, சை வெயியேற்றியவர்களால் அப்போது மற காலம் இம்மக்கள் தமது பொருள் அற்றவர்களாக உள்ளனர். இம்மக்கள் உடமைகள் பறிபோன நிலையில் அல்ல நிலையில் காணப்படுகின்றன. அதனால் உடமைகளையும் , பொதுச் சொத் வேண்டியதும், அவற்றைப் பெறுமதிப்
துரதிஷ்டவசமாக இம்மக்களின் எதுவும் இதுவரையில் செய்யப்படவில் மிக அவசியமானதாகும். இனப்பி இம்மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார 8 இம்மதிப்பீடு உதவும் . அக்கடமையையுப் காலம் தாழ்த்தப்பட்டால் வடக்கில் சிறுபான்மையினராக வாழ்ந்த முஸ்லிம் காலத்தால் மறக்கப்பட்டதொன்றாக மாற
இனப்பிரச்சினையின் வெளிப்பா பாரம்பரியப் பிரதேசங்களில் இருந்து வெ இம்மக்களின் பலவந்தமான வெளியே பொருளாதார இழப்புக்களும் அத்துடன் . தாக்கங்களும் தனித்துவமான இனப்பிர கூட இலங்கையின் இன்றைய இனப்பிரச் இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய சிபாரி கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை மனித உரிமை மீறல்கள் காலத்தால் மறக் இம்மக்களுக்கு உரிமையாக இருந்த செ வேண்டியது எல்லோருடையதும் க
இந்த நோக்கங்களை அடி முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின்

டிருந்தார்கள். இம் மக்கள் 1990 ஆம் இம்மக்களுக்கு உடமையாக இருந்த
இம்மக்களை வெளியேற்றியவர்களால் நிமுதல் செய்யப்பட்டன. அதேநேரத்தில் கத்தொழில் நிலையங்களின் உரிமைகள் றுக்கப்பட்டன. கடந்த ஆறு வருட எதார அடிப்படைகளுடன் தொடர்பு 5க்குப் பரம்பரை - உரிமையாக இருந்த மது இம்மக்களுக்கு தற்போது பயனற்ற - இம்மக்களுக்கு உரிமையாக இருந்த துக்களையும் அடையாளப்படுத்த படுத்த வேண்டியதும் அவசியமாகும். பொருளாதார இழப்பு பற்றிய மதிப்பீடுகள் மலை. அவ்வாறான ஒரு மதிப்பீடு பிரச்சினைக்கான நியாயமான தீர்வில் இழப்பும் கவனத்தில் எடுக்கப்படுவதற்கு ம் இந்நுால் செய்கின்றது. இவ்விடயத்தில் ம் பரவலாக, அதேவேளை மிகச் மக்களின் பொருளாதார அடிப்படைகள் மக்கூடிய ஆபத்து காணப்படுகின்றது. டாகவே வடக்கு முஸ்லிம்கள் தமது வளியேற்றப்பட்டார்கள். அது போலவே ற்றத்தினால் அவர்களுக்கு ஏற்பட்ட அகதி வாழ்க்கையில் ஏற்பட்ட பாதகமான ச்சினையின் பிரதிபலிப்பாக இருந்தும் சினை பற்றிய கலந்துரையாடல்களிலும், சுகளிலும் இம்மக்களின் இப்பிரச்சினைகள் ல. இம்மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட க்கப்பட்ட ஒன்றாக மாறிவிடக் கூடாது. சாத்துக்களை மீளப் பெற்றுக் கொடுக்க கடமையாகும். ப்படையாகக் கொண்டு இந்நுால் ன் பொருளாதார அடிப்டைகளையும்,

Page 32
வரலாற்றுப் பாரம் பரியத்தையும் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இது போல வ மன்னார், வவுனியா, கிளிநொச்சி பிரதே தொகுதிகளாக அதாவது நுால்களாக எழு இந்நுாலின் கடைசிப்பக்கத்தைப் பார்க்க
1.5. ஆய்வு ஆதாரங்கள்:
இவ்வாறான ஒரு நுாலை எழு ஆசிரியர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஆதார பூர்வமான விபரங்கள் சேகரிப்ப இருந்தது. காரணம் இம்மக்களைப் எதுவும் அப்போது இருக்கவில்லை. விடயம் பற்றிய ஒரு ஆய்வு பெருமளவு சென்று மக்களைக் சந்தித்து விபரம் தங்கியிருக்க வேண்டியுள்ளது. முல்ல பொருளாதாரம், இன உறவு போன் வேண்டுமானால் உண்மையில் முல்ன வேண்டும். துரதிஷ்டவசமாக, இந்நுக சென்று விபரம் சேகரிக்கக் கூடிய அரசியல் அத்துடன் யுத்த சூழ்நிலைகள் பொருத்தம் பிரச்சினையாகும்.
முல்லைத்தீவுக்குச் சென்று வி முல்லைத்தீவின் பல்வேறு கிராமங்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு இந்நுாலாசிர் இம்மக்களில் மிகப் பெரும்பான்மையினர் அநுராதபுர மாவட்டங்களில் வாழ்ந்து முஸ்லிம்களை நேரடியாகக் கண்டு இப் பொருளாதாரம், கலை, கலாசாரம் பற்றியும் கூடியதாக இருந்தது.
அந்த அடிப்படையில், முல்லை ஆரம்ப காலங்களிலேயே இம்மக்களைப்
14

வெளிக் கொணரும் நோக் கில் டமாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம், ச முஸ்லிம்கள் பற்றியும் தனித்தனி ழுதப்பட்டிருக்கின்றன. (விபரங்களுக்கு
துவதில் பல சவால்களை இந்நுால் - குறிப்பாக இந்நூலை எழுதுவதற்கு து ஆரம்பத்தில் மிகவும் கடினமாக பற்றிய எழுத்துருவிலான விபரங்கள் பொதுவாக எழுத்துருவில் இல்லாத வெளிக்கள் (ஆய்வுப்பிரதேசங்களுக்குச்
சேகரிப்பது) விபரம் சேகரித்தலில் லைத்தீவு முஸ்லிம்களின் வாழ்விடம், ற அம்சங்களை சரியாக அறிய மலத்தீவு சென்று விபரம் சேகரிக்க லாசிரியரால் அவ்வாறு முல்லைத்தீவு - சூழ்நிலைகள் தற்போது அங்கில்லை. தமாகக் காணப்படாதது மற்றும் ஒரு
யரம் எடுக்க முடியவில்லையே தவிர சேர்ந்த முஸ்லிம் மக்களை நேரடியாகச் சியருக்குக் கிடைத்தது. காரணம், அகதிகளாகப் புத்தளம், குருநாகல்,
வருகின்றார்கள். முல்லைத்தீவு 5 மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு, ம் மிகத் தெளிவான விபரங்கள் பெறக்
த்தீவு முஸ்லிம்கள் அகதியாக்கப்பட்ட ப் பற்றிய விபரம் சேகரிக்கக் கூடிய

Page 33
வாய்ப்பு இந்நூலாசிரியருக்கு கிடைத் ஜனவரி மாதம் (வெளியேற்றப்பட்டதில் தலைமையில் வட மாகாண முன அடையாளப்படுத்துவதற்கான ஒரு கெ இவ்வாய்வில் பேராதனைப் பல்கலைக் க பங்கு பற்றினர். இவ்வாய்விற்கான பொ இஸ்லாமி” அமைப்பால் வழங்கப்பட்ட
இவ்வாய்வில் அன்று முஸ்லிம் குருநாகல், அநுராதபுரம் ஆகிய மூன்று அகதி முஸ்லிம்களிடம் இருந்து 6 இவ்வாய்வு அகதிகளின் உடனடிப் பிர பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தது. விபரங்கள் என்ற அடிப்படையில் வடக் குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக் அசையும், அசையாச் சொத்துக்கள், . போன்ற விபரங்கள் இவ்வெளிக்கள ஏறக்குறைய 9000 அகதிக் குடும்பத் வினாக் கொத்துக்களை முழுமையா குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்ன விபரங்களைத் தந்திருந்தார்கள். கிராமங்களைச் சேர்ந்தவர்களாகவும், பல தொழில்களையும் கொண்டிருந் வெளிக்கள ஆய்வில் கிடைக்கப் பெற் விபரங்கள் இந்நுாலை எழுதுவதற்கு என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்
அத்துடன் நுாலாசிரியர் கடந்த அகதிகள் பற்றிய பல்வேறு பட்ட வந்தமையும் முல்லைத்தீவு முன் கண்ணோட்டத்தைப் பெற உதவியாக அகதிகள் பற்றிய விபரங்கள் கடந்த ஆ 1992ஆம் ஆண்டிலும், 1994 ஆம் ஆ

தது. அதாவது 1991 ஆம் ஆண்டு இருந்து 2 மாதங்களில்) நுாலாசிரியரின் லிம்களின் அகதிப் பிரச்சினையை பளிக்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக விரிவுரையாளர்களும், மாணவர்களும் நளாதார உதவி "இலங்கை ஜமாஅத்தே
து.
> அகதிகள் செறிந்து வாழ்ந்த புத்தளம், ர மாவட்டங்களில் முகாம்களில் வாழ்ந்த பிபரங்கள் பெறப்பட்டன. அப்போது சினைகளை அடையாளப்படுத்துவதை
அதே நேரத்தில் அகதிகளின் பின்னணி கின் எந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கை, இவர்களுக்கு உரிமையாக இருந்த அச்சொத்துக்களின் இட அமைவுகள்
ஆய்வில் சேகரிக்கப்பட்டிருந்தன. தினர் இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்ட க நிரப்பித் தந்திருந்தார்கள். அதில் மதச் சேர்ந்த 821 குடும்பத்தினர் தமது இவர்கள் முல்லைத்தீவின் பல்வேறு மட்ட வருமானத்தையும், பல வகையான தவர்களாகவும் காணப்பட்டார்கள். ற முல்லைத்தீவு முஸ்லிம்களைப்பற்றிய மிகவும் உறுதுணையாக இருந்தன
- ஆறு வருடங்களில் வடக்கு முஸ்லிம் ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு கலிம்கள் பற்றிய ஒரு தெளிவான இருந்தது. இதில் குறிப்பாக முஸ்லிம் று வருடங்களில் இரு முறை அதாவது ண்டிலும் புதுப்பிக்கப்பட்டன. வடக்கு

Page 34
முஸ்லிம் அகதிகளின் கல்விப் பிரச்சின 1994ம் ஆண்டில் செய்யப்பட்டது. மத்தியில் ஏற்பட்டு வருகின்ற இட < மாற்றங்களை சரியாக மதிப்பிட உ ஜனவரி மாதம் 13ஆம், 14ஆம் ; முஸ்லிம்களின் உரிமைக்கான அபை ''வடக்கு முஸ்லிம்களுக்கான மீள்கு நாள் செயல் அமர்வு முஸ்லிம் அக தற்போதைய நிலையையும் சரியாக - இருந்தது.
அதே நேரத்தில் முல்லைத்தீ பாரம்பரியம் பற்றிய விபரங்கள் சில நுாக பெறப்பட்டன. அவற்றில் மிக ஆண்டறிக்கைகளும், குடிசனக் கணி முல்லைத்தீவு முஸ்லிம்கள் பற்றிய | பெறப் பட்டன. இலங்கை ஓர குடியிருப்புக்களையும், பொருளாதார . பயிர் நிலங்கள், நீர்ச் சுணைகள், நீர்ப்பாச பெற உதவின.
வரலாற்று ஏடுகளில் உள்ளடக் அவசியமான ஏனைய விபரங்கள் மு பெறப்பட்டன. இம்மக்களின் வரலாறு முதியவர்களிடம் இருந்து பெறப்பட்ட நிலச் சொந்தக்காரர்களிடம் இருந்தும் இருந்தும் கேட்டறிந்து திரட்டப்பட்டன கலைஞர்களிடம் இருந்து அறிந்து முல்லைத்தீவைச் சேர்ந்த கற்றல் போன்றவர்களிடம் இருந்தும் அவர கேட்டறிந்து பெறப்பட்டன. இறுதி இந்நுால் முறைப்படி தொகுக்கப்பட்டு திகதி புத்தள மாவட்ட நுரைச்சோம் முஸ்லிம் அகதிகளின் முகாம் ஒன்றில்
ச

மன பற்றிய ஆய்வு ஒன்று ஆசிரியரினால் இவ்வாய்வுகள் வடக்கு முஸ்லிம்கள் அமைவு ரீதியான, மனோபாவ ரீதியான கவின. இறுதியாக 1996ஆம் ஆண்டு கெதிகளில் புத்தளம் நகரில் வடக்கு ப்பால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்ட டியேற்றம்;'' என்ற தலைப்பிலான இரு திகளின் எதிர்கால நிலைப்பாட்டையும், அறிந்து கொள்ள மிகவும் உதவியாக
வு முஸ்லிம்களின் வரலாறு, பண்பாடு, ல்களிலிருந்தும், அறிக்கைகளிலிருந்தும்
முக்கியமானவை பிரித்தானியர்கால ப்பீடுகளுமாகும். இவைகளில் இருந்து குடிசன மற்றும் வரலாற்று விபரங்கள் ங் குலப் படங்கள் இம் மக்களின் அடிப்படைகளான வயல் நிலங்கள், ஏனைய னக் கால்வாய்கள் பற்றிய விபரங்களையும்
கப்பட்டிராத ஆனால் ஆய்வுக்கு மிகவும் ல்லைத்தீவு முஸ்லிம்களிடம் இருந்து று பற்றிய விபரங்கள் விபரம் தெரிந்த ன. நில, புலன்கள் பற்றிய விபரங்கள் , இது பற்றி அறிந்த மற்றவர்களிடம் T. கலை, நாட்டியம் பற்றிய விபரங்கள்
கொள்ளப்பட்டன. இது போல பர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள் பர்களுக்குப் பொருத்தமான விபரங்கள் ல் முல்லைத்தீவு முஸ்லிம்கள் பற்றிய 1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ந் லையில் அமைந்துள்ள முல்லைத்தீவு முல்லைத்தீவு முஸ்லிம்கள் மத்தியில்

Page 35
சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது மு பயனுள்ள மேலதிக ஆலோசனைகள் 3 உதவின.
இந்நுாலில் இடம்பெற்றுள்ள 6 விடயங்கள் தொடர்பான விபரங்களைத் பெயர்விபரப் பட்டியல் இந்நூலின் இ
குறிப்பிடப்படாத வேறு பலரும் முல்லை தந்து உதவினர். துரதிஷ்டவசமாக, முஸ்லிம்கள் பற்றியும் தமிழ் மக்களின் பெற்று இந்நுாலில் சேர்த்துக் கொள்ள , இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்
1.6. நுாலின் அமைப்பு:
மொத்தமாக பத்து அத்தியாயா 5 வரையான அத்தியாயங்கள் முன் வரலாற்றை, பொருளாதார அடிப்படை முல்லைத்தீவில் இனப்பிரச்சினைக் மக்களுக்கெதிரான அரசாங்கப் படையெடு சமமாக பாதிக்கப்பட்டார்கள் என்ப ை இன மக்களும் ஒருவருக்கொருவர் ஒ எடுத்துக்காட்டுகின்றது. 7ம், 8ம் அத்த பலவந்த வெளியேற்றம் பற்றிக் கூறு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளைய அத்தியாயம் 9 முல்லைத்தீவு முஸ் வாழ்க்கையை விபரிக்கின்றது. இறு அப்பாவிகளான இவ்வகதிகளினதும், இருள் சூழ்ந்ததாக காணப்படுகின கொண்டவர்கள் அரசியல், பொருளாதார விடிவிற்கு உதவ வேண்டும் என்று எவ்வாறு இதற்கு உதவலாம் என்ப

லைத்தீவு முஸ்லிம்களால் கூறப்பட்ட ந்நுாலை மேலும் வலுப்படுத்துவதற்கு
ரலாறு, பொருளாதாரம், மற்றும் ஏனைய ந்துதவிய முல்லைத்தீவு முஸ்லிம்களின் பதியில் தரப்பட்டுள்ளது. இதில் பெயர் ந்தீவு பற்றிய பயனுள்ள பல விபரங்களைத் முல்லைத்தீவு பற்றியும், முல்லைத்தீவு கருத்தையும், கண்ணோட்டத்தையும் இந்நூலாசிரியரால் முடியவில்லை என்பது
ங்களைக் கொண்ட இந்நுாலின் 1 முதல் ப்லைத்தீவு முஸ்லிம்களின் வாழ்க்கை களை விளக்குகின்றன. அத்தியாயம் 6
காலக்கட்டத்தில் முஸ்லிம் - தமிழ் இப்பில் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் தயும் இக்கஷ்ட காலத்தில் இவ்விரு கத்தாசையாக வாழ்ந்தார்கள் என்பதையும் யொயங்கள் முல்லைத்தீவு முஸ்லிம்களின் வதோடு, பலவந்த வெளியேற்றத்தினால் ம் அடையாளப்படுத்திக் காட்டுகின்றன. விம்களின் கடந்த 6 வருடகால அகதி தி அத்தியாயம் இன்றைய சூழ்நிலையில் அவர்களின் சிறார்களினதும் எதிர்காலம் றது என்பதைக் கூறி நல்நோக்குக் ர, சமூக அடிப்படையில் இவ்வகதிகளின் வேண்டுகோள் விடுப்பதோடு, அவர்கள் தையும் குறித்துக்காட்டுகின்றது.

Page 36
குறி
1
முஸ்லிம்கள் இலங்கையில் ஒரு தனித இந்நாட்டில் வடக்குக் கிழக்குப் பிரதேச சிங்கள மக்களோடும் கலந்து வாழ்கின தமிழ் மக்கள் "சோனகர்” என்றும் சிங்க முஸ்லிம் மக்கள் இந்நாட்டின் மொத்த ச காணப்படுகின்றனர்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் ஒ இவ்வியக்கத்தின் தலைவரும் தளப, வருகின்றார். இக் கெரில்லா இயக். அரசுக்கு எதிராக கெரில்லா யுத்த நட.
3. வடக்கு முஸ்லிம்களை எவ்வித எதிர்ப்பும்
ஆற்றலை விடுதலை புலிகள் அக்கால
இலங்கையில் அக்காலத்தில் ஜனாதிப தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடை இவ் யுத்த நிறுத்தம் 14 மாதங்கள் ! இவ்யுத்த நிறுத்தம் மீறப்பட்டது.
இக்காலக்கட்டத்தில் வட -கிழக்குப் பிரதே முஸ்லிம் தமிழ் இன உறவு எப்போது Richartson (1990) இன் ஆய்வு தொடங்கிய 1983ம் ஆண்டில் இருந்து 19 பலாத்கார நிகழ்வுகள் இனப்பிரச்சினை மாகாணங்களில் நடைபெற்றிருந்தன. 8 ஆயுத குழுக்களால் வடமாகாண நடவடிக்கைகளாகக் காணப்படுகின்றன மன்னாரில் மூன்று முஸ்லிம்கள் தமிழ் வருடம் செப்டம்பர் 6ஆம் திகதி | பிரமுகர் ஒருவர் கடத்தப்பட்டார். 1986 ம் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டனர். 19. இருந்த ஒரு முஸ்லிம் ஆயுதக்குழுக்க

புகள்
துவமான மக்கள் குழுவாகும். இம்முஸ்லிம்கள் களில் தமிழ் மக்களோடும், ஏனைய பிரதேசங்களில் ற ஒரு சிறுபான்மை இனமாவர். இவர்களை ர மக்கள் "மரக்கலயா" என்றும், அழைப்பதுண்டு. அத் தொகையில் ஏறக்குறைய 8 சதவீதத்தினராகக்
ந பலம் வாய்ந்த கெரில்லா இயக்கமாகும். தியுமாக வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்து கம் 1983ஆம் ஆண்டில் இருந்து இலங்கை வடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இன்றி இலகுவில் வெளியேற்றக்கூடிய ஆயுதரீதியான த்தில் கொண்டிருந்தனர்.
தியாக இருந்த ரணசிங்க பிரேமதாசாவுக்கும் டயில் ஒரு யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது. நீடித்தது. 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம்
ஈம் யுத்த மயப்படுத்தப்பட்டு வந்த சூழ்நிலையிலும் ம் போல் சிறப்பாக இருந்தது. உதாரணமாக ளின் படி இனப்பிரச்சினை தீவிரம் அடையத் 8 ஆம் ஆண்டு வரைக்கும் நுாற்றுக்கணக்கான டன் தொடர்புபட்ட வகையில் வட - கிழக்கு தில் ஆக நான்கு நிகழ்வுகள் மாத்திரமே தமிழ் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட
அவையாவன 1985 ஏப்ரல் 9ஆம் திகதி ஆயுதக்குழுக்களால் கொல்லப்பட்டனர். இதே ாழ்ப்பாண மூர் வீதியைச் சேர்ந்த முஸ்லிம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டு முஸ்லிம்கள் ஆம் ஆண்டு மன்னார் அரசாங்க அதிபராக ளால் கொல்லப்பட்டார்.

Page 37
6. ம்
இதற்குச் சில உதாரணங்களைக் குறிப்பு கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் படையில் கொல்லப்பட்டனர். அதே வருடம் ஜூன ஓகஸ்ட் 3இல் காத்தான் குடியில் 167 மு முஸ்லிம்களும் தமிழ் ஆயுதக்குழுக்களால
இக்காலத்தில் முஸ்லிம் அரசியல் வாதிக அறிக்கைகள் இவ்வம்சத்தைத் தெளிவாக
8. "முஸ்லிம்கள் இலங்கை இராணுவத்துட
தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டது"
இப் பொதுத் தேர்தல் 1989 ஆம் ஆண்டு ! தெற்குப் பிரதேசத்தில் ஜே.வி. பி. பிரச் பிரச்சினைகளும் காணப்பட்டன. இத் தோ 60சத வீதமானவர்கள் மாத்திரமே வாக்க பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்
10. இத் தேர்தலில் வடக்கு, கிழக்குப் பிரதேசத
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் க
11.
"முஸ்லிம் மாகாண சபை” என்ற கருத்து முன்னணி (M.U.L.F) என்ற கட்சியால் முஸ்லிம் காங்கிரஸால் இக்கருத்து | கோரிக்கையாக தேசிய இனப்பிரச்சினையி.
M.U.LF இன் தலைவர் எம்.ஐ.எம்.மு அக்கறைப்பற்றுக் கிராமத்தைச் சேர்ந்தவர். எம்.எச்.எம்.அஷ்ரப் ஆவார். இவர் 8 சேர்ந்தவர். மேற்குறிப்பிட் இரு கட்சிகள் 40 சதவீதமான முஸ்லிம் வாக்காளர்களை ( அடிப்படையாகக் கொண்டு தமது கருத
13
மன்னார் தீவிலும் இக்காலத்தில் யுத்தம் தனது நிலைகளில் இருந்து மன்னார் நகர் ஈடுபட்டது. 1990 ஆம் ஆண்டு ஜூலை இச்செல் தாக்குதலில் இருந்து தம்மைப்

டலாம். 1990 ஆண்டு ஜூன் 11ஆம் திகதி 5 இருந்த நுாற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ல 14 ஒன்தாச்சிமடத்தில் 60 முஸ்லிம்கள், ஸ்லிம்கள், ஓகஸ்ட் 12 இல் ஏறாவூரில் 173 : கொல்லப்பட்டனர்.
ளின் பாராளுமன்ற பேச்சுக்கள், பத்திரிகை 5கக் காட்டுகின்றன.
ன் ஒத்துழைக்கின்றார்கள் என்ற கருத்து
The Island (1990)
நடைபெற்றது. இக்காலத்தில் இலங்கையில் சினையும் வடக்கில் விடுதலைப் புலிகளின் தலில் இலங்கையின் மொத்த வாக்காளர்களில் களித்தனர். இதில் ஐக்கிய தேசியக் கட்சி
கொண்டது.
த்தில் டியு.எல்.எப், ஈயி.ஆர்.எல்.எப், ஈரோஸ், அங்கிரஸ் போன்ற கட்சிகள் போட்டியிட்டன.
து ஆரம்பத்தில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை
முன்வைக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ லங்கா மேலும் வலுப்படுத்தப்பட்டு ஒரு அரசியல்
ல் முன்வைக்கப்பட்டது.
கைதீன் ஆவார். இவர் அம்பாறை மாவட்ட
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இதே மாவட்டத்தின் கல்முனை நகரத்தைச் கம் வட -கிழக்குப் பிரதேசத்தில் ஏறக்குறைய செறிவாகக் கொண்ட அம்பாறை மாவட்டத்தை
துக்களை முன்வைத்தன.
உக்கிரமாக நடை பெற்றது. இராணுவம் னை நோக்கி தொடர்ச்சியான செல் தாக்குதலில்
மாதம் ஏறக்குறைய 20,000 தமிழ் மக்கள் பாதுகாக்க இடம் பெயர்ந்து நகரில் இருந்து

Page 38
5 மைல் மேற்காகக் காணப்பட்ட எருக் அடைந்தனர். முஸ்லிம்கள் இக்கிராமத் வரை இத்தமிழ் அகதிகள் இக்கிராமத வந்தனர். இனப்பிரச்சினையால் பாதிக்க இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு உதாரண. காணப்பட்டது.
வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை தனி வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் , பாராளுமன்ற பேச்சுக்களில், சர்வதேச சஞ் இந்நிகழ்ச்சி நடந்து ஏறக்குறைய இ புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தலைவா செய்யப்பட்டது என்பது உறுதிப்படுத்த
முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றச் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதியும், ம. 23ஆந் திகதியும், முல்லைத்தீவில் 24 திகதியும் விடுதலை புலிகளால் அறிவ
1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலண்டன் பி 'யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் சொந்த | அகதிகளாக வேண்டிய நிலை எழுந்த கூறினார். அகதி 1994 (6) : 19. வ பாலசிங்கம் Counterpoint கொடுத்த முடியாத காரணத்தினால் வெளியேற்றப்ட

நகலம்பிட்டி என்ற முஸ்லிம் கிராமத்தில் தஞ்சம் ந்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படும் திலேயே முஸ்லிம்களின் பராமரிப்பில் இருந்து ப்பட்ட தமிழ் மக்களுக்கு முஸ்லிம்கள் உதவிய ங்கள் வட மாகாணத்தில் பரவலாக அக்காலத்தில்
மைப்படுத்தி இப்பிரதேசத்தை விட்டு வெளியேற நடவடிக்கை அக்காலக் கட்டப் பத்திரிகைகளில் சசிகைகளில் மிகத் தெளிவாகப் பதியப்பட்டுள்ளன. ரண்டு வருடங்களுக்குப் பின்னர் விடுதலைப் சுகளாலும் இந்நிகழ்ச்சி விடுதலை புலிகளினால் தப்பட்டது.
செய்தி மன்னார்த் தீவில் 1990ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட முசலி, மாந்தை பகுதிகளில் - ஆம் திகதியும், யாழ்ப்பாணத்தில் 30ஆம் விக்கப்பட்டது.
9ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிசி யின் தமிழோசைக்குக் கொடுத்த பேட்டியில் மண். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இந்த மக்கள் து. இதையிட்டு வருந்துகின்றோம்” என்று விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்த அன்ரன் த்த பேட்டியில் "முஸ்லிம்கள் தவிர்க்கப்பட பட்டார்கள்" என்று குறிப்பிட்டார்.

Page 39
2. முல்லைத்தீவு: புவி
முல்லைத்தீவு என்பது இலங் ை அமைந்துள்ள ஒரு நகரக் குடியிருப்ன முல்லைத்தீவு நகரக் குடியிருப்பை தன நிர்வாக ரீதியாக முல்லைத்தீவு மாவட (படம்-1). முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து வந்தார்கள். இம்மக்கள் பொருளாதாரத்தை, கலாசாரத்தை | கலந்தவர்களாகக் காணப்பட்டனர். உ. தமது தாயகமாகக் கருதி வாழ்ந்து வ
முல்லைத்தீவு மாவட்டம் 1966 4 ஒரு லட்சம் மக்களையும் கொண்ட இலங்கையின் பெரிய மாவட்டங்களில் ரீதியாக சதுர கிமீ.க்கு 33 பேர் என்ற காணப்பட்டது. முல்லைத்தீவு நகரமும் இம்மாவட்டத்தின் எஞ்சிய உள் நாட்டு
அடர்த்தியை கொண்டதாகும்.
முல்லைத்தீவு மக்களில் ஏற். புறங்களில் வாழ்கின்றார்கள். விவசா பிரதான பொருளாதார நடவடிக்கைகள் இடங்களில் பருவகால மழையை நம் நேரத்தில் வவுனிக் குளம், தண்ணி குளம், முறிப்புக் குளம், மதவாளசிங் ஆகிய பாரிய நீர்ப்பாசனத் திட்டங்க நடவடிக்கைகளும் இங்கு காணப்பட களப்பு, நன்னீர் மீன்பிடி நடவடிக்கைக
முல்லைத்தீவு இயற்கை வா நில வளமும், நீர் வளமும், கடல் 6
N

பியலும், குடிசனமும்
கயின் வட கிழக்குக் கரையோரத்தில் பக் குறிக்கின்றது. அதே நேரத்தில் பல நகராகக் கொண்ட சூழற்பிரதேசம் டம் என்று அழைக்கப்படுகின்றது முஸ்லிம் மக்கள் மிக நீண்ட காலமாக ர் தம்மை, தமது வரலாற்றை, இப்பிரதேசத்துடன் இரண்டறக் ணர்வால் தாம் வாழ்ந்த பிரதேசத்தைத் ந்தார்கள். சதுர கி.மீ., பரப்பினையும், ஏறக்குறைய
மாவட்டமாகும். பரப்பு ரீதியாக ஒன்றான முல்லைத்தீவு சனச்செறிவு அளவில் அடர்த்தி குறைந்ததாகவே - அதன் சூழல் பிரதேசமும் தவிர்ந்த ப் பிரதேசம் இதிலும் குறைவான சன
க்குறைய 90 சதவீதத்தினர் கிராமப் யமும், மீன்பிடியும் கிராம மக்களின் ரகும். விவசாயம் மிக அதிகமான -பியதாகக் காணப்படுகின்றது. அதே மறிப்புக் குளம், முத்தையன் கட்டுக் கக் குளம், உடையார்கட்டுக் குளம் ளுக்குட்பட்ட விவசாயச் செய்கை டது. கரையோரப் பிரதேசங்களில் ள் நடைபெறுகின்றன. ம் நிறைந்த பிரதேசமாகும். இங்கு பளமும் நிறையக் காணப்படுகின்றன.

Page 40
படம் 1 : வடமாகாணமும் .,
யாழ்ப்பாண மாவட்டம்
0
கிளிநொச்
இந்து சமுத்திரம்
மன்னார் மவட்டம்
மூலம்: இலங்கையில்

அதன் மாவட்டங்களும்
- 2
சி மாவட்டம்,
முல்லைத்தீவு மாவட்டம்
வவுனியா மாவட்டம்லை
ல்
ண்
கா
16.கிமீ
ர் நிருவாக அறிக்கை

Page 41
| ரமா.
முல்லைத்தீவின் இயற்கை வளம் பற் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் முல்ை திரு ஜே.ஆர்.ஸ்மைத் என்பவரின் கரு இவர் முல்லைத்தீவின் அரசாங்க அதிப வளம் பற்றி எழுதிய ஒரு அறிக்ை “முல்லைத்தீவில் இலைமறை காய்களா கால்வாய்களும் முறைப்படி அபிவிரு பெருகும் சனத்தொகைக்கு இன்னும் விவசாய நிலம் இங்கு காணப்படுகின் முல்லைத்தீவின் வளம் பற்றிய இக்க பொருந்தக் கூடியதொன்றாகும்'
துரதிஷ்டவசமாக சமூக 6 இம்மாவட்டம் இலங்கையில் மிகப் காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில அரசியல் புறக்கணிப் புக் கார பயன்படுத்தப்படாமையும் இப்பிரதேசத்தில் காரணங்களாகக் கூறக்கூடியன.
இம்மாவட்டத்தின் பெரும்பான மாவட்டத்தின் மொத்த சனத் தொகை தமிழ் மக்கள் மாவட்டம் எங்கிலும் பர கரையோரப் பிரதேசங்களிலும், புதுக்குடி செறிவாகவும் வாழ்கின்றனர். தமிழர்களி பிரதேசம் முல்லைத்தீவாகும் (Sitral முல்லைத்தீவில் தற் செயலாகக் கல இருந்து இப்பிரதேசத்தின் வரலாற்றுத் கூடியதாக இருந்தது. உண்மையி பழைய திராவிடக் குடியிருப்புப் பிரதேச காட்டுகின்றது (Navaratnam, 1960). இ காலம் வாழ்ந்திருக்கின்றார்கள். அ இருக்கின்றார்கள் என்று வரலாறு கூ
முல்லைத்தீவில் சிறுபான்மை! வாழ்ந்து வந்தனர். இங்கு வாழ்ந்த 4

கறிக் குறிப்பிடும் போது ஏறக்குறைய லத்தீவின் அரசாங்க அதிபராக இருந்த ஒத்துக்களே ஞாபகத்துக்கு வருகின்றன. ராக இருந்த காலத்தில் இப்பிரதேசத்தின் கயில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். கக் காணப்படும் குளங்களும் நீர்ப்பாசனக் த்தி செய்யப்பட்டால், இப்பிரதேசத்தில் ஐம்பது வருடங்களுக்குத் தேவையான றது'' (Brohier, 1990). உண்மையில் கூற்று இன்றைய காலக்கட்டத்திற்கும்
பாருளாதாரக் குறிகாட்டிகள் ' ரீதியாக பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றாகக் ர் ஒதுக்குப் புறமான இட அமைவும், ணிகளும், வளங்கள் சரியாகப் ன் சமூக, பொருளாதார பின்னடைவுக்குக்
எமையினர் தமிழ் மக்களாவர். இவர்கள் பில் 90 சதவீதமாகக் காணப்படுகின்றனர். வலாகவும் முல்லைத்தீவு நகரம் சார்ந்த உயிருப்பு பிரதேசம் சார்ந்த உள்நாட்டிலும் ன் வரலாறும், பண்பாடும் செழித்தோங்கிய mbalam, 1992). 1885ஆம் ஆண்டு ன்டு பிடிக்கப்பட்ட செப்பேடு ஒன்றில் தொன்மையை மிகத்தெளிவாக அறியக் அல் இச்செப்பேடு முல்லைத்தீவு ஒரு ம் என்பதை மிகத் தெட்டத் தெளிவாகக் இப்பிரதேசத்தில் தமிழ் மக்கள் மிக நீண்ட பத்துடன் இப்பிரதேசத்தை ஆண்டும் றுகின்றது (Sitrambalam, 1993). பினராக முஸ்லிம்களும், சிங்களவர்களும் சிங்கள மக்களில் மிக அதிகமானவர்கள்

Page 42
பருவகால மீனவர்களாவர். சிங்கள மீ பிரதேசத்தில் இருந்து கொக்கிளாய், ! சில பருவங்களில் இடம் பெயர்ந்து நீண்ட காலமாகக் காணப்பட்டது (L மீனவர்களாக இருந்த சிங்கள மக் முல்லைத்தீவின் கரையோரப் பகுதிகள் 1983 ஆம் ஆண்டின் சிங்கள - தமிழ் மக்களில் அதிகமானவர்கள் இப் எஞ்சியவர்களில் சிலர் இலங்கை முல்லைத்தீவுப் பிரதேசங்களில் தொட
முஸ்லிம்களும் முல்லைத்தீவி மொத்த சனத்தொகையில் ஐந்து சத இவர்களும் தமிழ் மொழியையே தாய் கலந்து வாழ்ந்தனர். முல்லைத்தீவி நிர்வாகப் பிரிவுகளாக மரிட்டைம் பற் அதிபர் பிரிவில் குறிப்பாக முல்லைத் சபையும் காணப்பட்டன. முஸ்லிம் . விகிதாசாரத்தை விட இந்நிருவாகப் பி காணப்பட்டார்கள். உதாரணமாக மு சதவீதமாகவும், தண்ணீரூற்று கிராம் 40 சதவீதமாகவும் முஸ்லிம் மக்கள் பார்க்க).
மேற்குறித்த நிர்வாகப்பிரிவுக மக்களை செறிவாகக் கொண்டவைய குடியிருப்புக்கள்" என்று இங்கு அ ை மாவட்டம் முழுவதும் முஸ்லிம். அடையாளப்படுத்தக் கூடியதாகக் முக்கியமானவை முல்லைத்தீவு நகர பு தண்ணீரூற்று, ஹிஜ்ராபுரம், முத் ை முல்லைத்தீவில் முஸ்லிம்கள் செறிந்து தெளிவாகக் காட்டுகின்றது.

னவர்கள் இலங்கையின் மேற்குக் கரைப் தாயாறு ஆகிய மீன்பிடித் துறைகளுக்கு
வந்து மீன் பிடிக்கும் வழமை மிக =wis, 1993). இவ்வாறு ஒரு பருவகால களில் ஒரு பகுதியினர் பிற்காலத்தில் Hல் நிரந்தரமாகக் குடியேறினர். ஆயினும் பிரச்சினையால் இங்கு வாழ்ந்த சிங்கள பிரதேசத்தை விட்டு வெளியேறினர்.
இராணுவ கட்டுப்பாட்டுக் குட்பட்ட டர்ந்தும் வாழ்ந்து வந்தனர்.
ன் சிறுபான்மையினர். மாவட்ட மட்டத்தில் தவீதமாக முஸ்லிம்கள் காணப்பட்டனர். மொழியாகக் கொண்டு தமிழ் மக்களோடு ல் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்த bறு (Maritimepattu) உதவி அரசாங்க தீவு நகரசபையும் தண்ணீரூற்று கிராம கள் தமது மாவட்ட சனத் தொகை 'ரிவு மட்டங்களில் அதிக விகிதாசாரத்தில் மல்லைத்தீவு நகரத்தில் ஏறக்குறைய 10 சேவையாளர் மட்டத்தில் ஏறக்குறைய காணப்பட்டனர் (அட்டவணை - 1 ஐப்
ளுக்குள் சில குடியிருப்புகள் முஸ்லிம் ாக காணப்பட்டன. அவை “முஸ்லிம் மக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் கள் வாழும் 13 குடியிருப்புக்களை இருக்கின்றது. அவைகளில் மிக பஸ்லிம் குடியிருப்புப் பகுதி, நீராவிப்பிட்டி, தயன்கட்டு, முறிப்பு ஆகியவையாகும். வ வாழ்ந்த குடியிருப்புக்களை படம் -2
24 -

Page 43
இ
படம் 2 : முல்லைத்தீ செறிவாக வாழ்ந்த
பாந்தனுக்கு
விஷ்வமடு
1 "
நீராவிப்பிட்டி தண்ணியூற்று 7.
கணு.
முத்தையன்கட்டு
மாங்குளத்திற
தன
வவுனியா வீதிக்கு
வவுனியா
5.கிமீ
மூலம் வெளிக்கள ஆய்வு, 1996, இலங்கை இ.

வில் முஸ்லிம்கள் குடியிருப்புக்கள்
- - - - - - - - - - - -
- - - - - - - -
6<- 1 |
- செல்வபுரம் - - - -
முல்லைத்தீவு நகரம்
- கல்விப்பாடு - -
'வளிஃபா:- - - -
ஹிஜ்ராபுரம்
4ம் கட்டை - குமாரபுரம் உடுப்புக்குளம் க்கேணி
முறிப்பு
| |
கொக்கிளாய்
ன்ணிமுறிப்பு
உவிளக்கப்படம், 1972.

Page 44
முல்லைத்தீவில் முஸ்லிம், மிக நெருக்கமாக அமைந்து காண நகரம், முத்தையன் கட்டு போன்ற கு கலந்து வாழ்ந்தார்கள். அங்கெல்ல ஒற்றுமையாக, வாழ்ந்திருந்தார்கள். மிகவும் தொன்மையானது. முள் இனங்களினதும் இணக்க உற வேண்டியதாகும். முல்லைத்தீவில் அம்சம் இந்நுாலின் அத்தியாயம் - 6
முல்லைத்தீவில் முஸ்லிமக இம் மக்களற்று வெறிச்சோடிக் குடியிருப்புக்களில் இருந்து வெளிே வரலாற்று நிகழ்ச்சியாகும். இக்குடி வாழவைத்து புதுச்சரித்திரம் பா விரும்பிகள் எல்லோருடையதும் . உடன் பிறவா சகோதரர்களாக இரு! முல்லைத்தீவு முஸ்லிம்கள் கூடுதல
குறி
முல்லைத்தீவில் மொத்தமாக 1056 . பிரதான நீர்ப்பாசனக் குளங்கள் கான ஹெக்டர் பரப்பு நிலத்துக்கு நீர்ப்பாச Council, 1996: 133)
2
வட மாகாணத்தின் ஏனைய மாவட்ட பொருளாதார வளர்ச்சிக்குத் தே ை பிரதேசமாக முல்லைத்தீவு மாவட்ட
கல்விக் குறிகாட்டி அடிப்படையில மாவட்டங்களில் ஆசிரிய - மாணவ இருந்து 84 மாணவர் வரை வேறுபடு ஒரு ஆசிரியருக்கு 50 மாணவராக

தமிழ் குடியிருப்புக்கள் ஒன்றுக்கொன்று ப்பட்டன. தண்ணீரூற்று, முல்லைத்தீவு டியிருப்புக்களில் தமிழ்- முஸ்லிம் மக்கள் ம் அவ்விரு இன மக்களும் ஒன்றாக முல்லைத்தீவு முஸ்லிம் - தமிழ் உறவு லைத்தீவின் வரலாற்றில் இவ்விரு வு பொன் ஏடுகளில் பொறிக்கப்பட
முஸ்லிம் - தமிழ் இன ஐக்கியம் என்ற 5 விளக்கப்பட்டுள்ளது. ள் செறிந்து வாழ்ந்த பிரதேசங்கள் இன்று காணப்படுகின்றன. முஸ்லிம்கள் இக் யற்றப்பட்டது மிகவும் துரதிஷ்டவசமான யிருப்புக்களில் முஸ்லிம்களை மீண்டும் டெக்க உதவ வேண்டியது சமாதான கடமையாகும். இதில் முஸ்லிம்களின் ந்து வந்த தமிழ் மக்களினது உதவியை Tக எதிர்பார்ப்பது நியாயமானதேயாகும்.
பப்புகள்
சதுர கிமீ. நீரேந்து பிரதுேசத்தைக் கொண்ட 19 எனப்படுகின்றன. இவை இம்மாவட்டத்தில் 7325 -னம் வழங்குகின்றன. (North-East Provincial
உங்களுடன் ஒப்பிடுகின்ற போது புள்ளிவிபர ரீதியாக
வயான நில, நீர், கடல் வளங்ளைக் கொண்ட ம் காணப்படுகின்றது.
5 வடக்குக்-கிழக்கு மாகாணங்களில் உள்ள 9
விகிதம் ஒரு ஆசிரியருக்கு 20 மாணவரில் திகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்விகிதம் 5 காணப்படுகின்றது.
26

Page 45
3. வரலாறும், கன
3.1 வரலாறு:
முல்லைத்தீவு முஸ்லிம்கள் வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொ தனித்துவம் கொண்ட மக்கள் கு அடையாளப்படுத்தப்பட்டு மதிக்கப்பட் குறைவாகக் காணப்பட்ட இம்ம (முல்லைத்தீவு), தேசிய (இலங்கை கொடுக்கப்படவில்லை. இம்மக்களைப் ப நம்பத்தகுந்த வரலாற்று ஆதாரங்கள் வரலாற்றுத் தொன்மையையும், த போதுமானதாக இருக்கின்றன. முல் பின்வரும் ஆதாரங்களைக் கொண்டு 8
ஒரு சமுதாயத் தின் வரவு கட்டியெழுப்பலாம். இதுவரை முறை முஸ்லிம்களின் வரலாற்றை கா கட்டியெழுப்புவது இம்மக்களின் வரல உதவும். அந்த அடிப்டையில் ( அண்மைக்கால வரலாறு பற்றிய கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன.
கா 6
3.1.1. முதல் ஒரு நுாற்றாண்டு
கிடைக்கின்ற அண்மைக்கா6 குறைந்தது கடந்த ஒரு நுாற்றாண்டு வாழ்ந்திருக்கின்றார்கள். இதனை மிகத் ஆதாரங்களில் ஒன்று இலங்கையின் கட
* 2
2

பல, கலாசாரமும்
தமக்குள் பெருமைப்படக் கூடிய ண்டிருந்தார்கள். முல்லைத்தீவில் ழுவாக இவர்கள் மற்றவர்களால் டார்கள். எண்ணிக்கை ரீதியாக க்களின் வரலாற்றுக்கு பிரதேச ) வரலாறுகளில் முக்கியத்துவம் ற்றிய கிடைக்கக் கூடியதாக இருந்த ( முல்லைத்தீவில் இம் மக்களின் னித்துவத்தையும் அறிவதற்குப் லைத்தீவு முஸ்லிம்களின் வரலாறு இந்நுாலில் கட்டி எழுப்பப்படுகின்றது. லாற்றை பல் வேறு வகைகளில் ப்படி தொகுக்கப்படாத முல்லைத்தீவு லக்கட்டங்களாக பின்னோக்கிக் பாற்றை இலகுவில் அறிந்து கொள்ள முல்லைத்தீவு முஸ்லிம்கள் பற்றிய ஆதாரங்கள் மிகத் தெளிவாகக்
: கால வரலாறு:
ம் ஆதாரங்களில் இருந்து ஆகக் காலம் முல்லைத்தீவில் முஸ்லிம்கள் தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டும் டந்த ஒரு நுாற்றாண்டு கால குடிசனக்

Page 46
கணிப்பீடுகளாகும். இலங்கையில் குடிசனக் கணிப்பீடுகள் 18712 வந்திருக்கின்றன. 1871ஆம் ஆண்டு இன்று போல் அன்றும் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்திருக்கின்றனர். தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி, மு முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரபு மட்டுமன்றி இம்முஸ்லிம் மக்கள் இன்றுவரை தங்குதடையற்ற கொண்டிருந்தார்கள். அதாவது மு விகிதாசாரமளவு 1871ஆம் ஆண்டி 1881, 1891, 1901, 1911, 1921, 1931, கணிப்புக் காலக்கட்டங்களிலும் வா
அட்டவணை-1 முல்லைத் எண்ணிக்கையையும் விகிதாசாரத். காட்டுகின்றது. இவ்வட்டவணையில் வாழ்ந்த பிரதேசங்களாக மரிட்டைம்ப ஆகியவை அடையாளம் காணப்பட
முல்லைத்தீவு முஸ்லிம்கள் கால தெளிவான வரலாற்றுத் ெ இக்காலத்தில் முஸ்லிம்கள் முல்ல தாயகமாகக் கருதி வாழ்ந்திருக இப்பிரதேசங்களில் வாழ்ந்து 6 பட்டிருக்கின்றார்கள். இப்பிரதேசத் என்பதை பொறுப்புணர்ச்சியோடு க6
கா6
ன.
3.1.2. 17ஆம் நுாற்றாண்டு
முல்லைத்தீவில் முஸ்லிப காலத்தோடு முடிந்து விடவில்லை முன்னரும் முல்லைத்தீவில் முஸ்லிம்

நாடு முழுவதற்குமான நம்பத்தகுந்த ம் ஆண்டிலிருந்து செய்யப்பட்டு குடிசனக் கணிப்பின் படி முல்லைத்தீவில் தாம் தற்போது வாழும் பிரதேசங்களில் இன்று முஸ்லிம்கள் செறிந்து வாழும் ல்லைத்தீவு நகரம் அக்காலத்திலும் தேசங்களாக காட்டப்பட்டுள்ளன. அது
முல்லைத்தீவில் 1871இல் இருந்து வரலாற்றுத் தொடர்ச்சியினையும் பல்லைத்தீவில் முஸ்லிம்கள் இன்றைய ற்குப் பிந்திய குடிசனக் கணிபீடுகளான 1946, 1953, 1963, 1971, 1981 களின் ழ்ந்து வந்திருக்கின்றனர். தீவு மாவட்டத்தின் முஸ்லிம் மக்களின் தையும் வரலாற்று ரீதியாக ஒப்பிட்டுக்
முல்லைத்தீவில் முஸ்லிம்கள் செறிந்து ற்று, முல்லைத்தீவு நகரம், தண்ணீரூற்று ட்டுள்ளன. பின் வரலாறு கடந்த ஒரு நூற்றாண்டு தாடர்ச்சியைக் கொண்டிருக்கின்றது. மலத்தீவில் தம் பிரதேசங்களை தமது க்கின்றார்கள். தமது மூதாதையர் வளம் கண்டதையிட்டு பெருமைப் த்தில் தாமும் ஒரு சமமான பங்காளி
டைப்பிடித்திருக்கின்றார்கள்.
வரையான வரலாறு:
நகளின் வரலாறு ஒரு நுாற்றாண்டு 0. 19 ஆம் நுாற்றாண்டிலும் அதற்கு கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்களும்

Page 47
அட்டவ
1921ம் ஆண்டிலும்,
முல்லைத்தீவில்
1921 மொத்தம் முஸ்லிம்
நிர்வாகப் பிரிவு
மரிட்டைம் பற்று உதவி அரசாங்க பிரிவு
7396
483
முல்லைத் தீவு நகரம் 1563
தண்ணீரூற்று கிராம சேவகர் பிரிவு
667 35 667
35
மூலம்:
குடிசனக்கணிப்பீடுகள்,

ணை -1
1971ம் ஆண்டிலும் ல் முஸ்லிம்கள்
1971 விகிதம் மொத்தம் முஸ்லிம் விகிதம்
- 65 28634 283799
3 75 7192 710 99
0 52.0 4562 1702 37.4
- 1921 ம் 1971ம்

Page 48
காணப்படுகின்றன. உதாரணமாக காலனித்துவ ஆட்சியாளர்களின் குறிப் முல்லைத்தீவில் முஸ்லிம்களின் நி உறுதிப்படுத்தும் வரலாற்று ஆ. இக்காலக்கட்ட வரலாற்று ஆதாரங்களை அவை முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரத்தானிய ஆட்சியின் ஆரம்ப காலத் ஆண்டிலிருந்து வாழ்ந்து வந்திருப்ப
இதில் குறிப்பாக The Manual உதாரணத்திற்கு எடுத்துக் கொள்.ே எழுதப்பட்டது. இந் நுால் 1800. ஆண்டுவரையான பிரித்தானிய அரசாங்க என்பவற்றை அடிப்படையாகக் கெ முல்லைத்தீவில் முஸ்லிம்களின் 19 ஆ தெட்டத்தெளிவாக எடுத்துக் கூறுகி நகரத்திலும் தண்ணீரூற்றுப் பகுதிகளிலு குறிப்பிடுகின்றது. முல்லைத்தீவு நகரத்தி ஈடுபட்டிருந்ததைக் காட்டுகின்றது. மு தொகுதி முறையிலான வர்த்தக முஸ்லிம்களினால்தான் நடாத்தப்பட்டது மேற்குறித்த ஆதாரங்கள் 19ஆம் நுாற்ற இருப்பையும் இப்பிரதேசத்தில் அவர்களில் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன.
பிரித்தானிய ஆட்சிக் காலத்தி பற்றிய எழுத்துருவிலான ஆதாரங்கள் | முஸ்லிம்களின் வரலாறு பற்றி மட்டும் மக்களின் வரலாற்று ஆதாரங்களை நிலைமையாகும். இவ்வாறான ஆய்வு கூறப்பட்டு வருகின்ற கதைகள், இலக்கி முக்கியத்துவம், தொல் பொருள் அ பயன்படுத்தப்படுவதுண்டு. தமிழ் மக்கள் வரலாறு மேற்குறித்த ஆதாரங்களைக் கெ

19 ஆம் நுாற்றாண்டின் பிரித்தானிய பேடுகளும், நிர்வாக அறிக்கைகளும் ண்ேட கால வரலாற்றை மேலும் தாரங் களாகக் காணப்படுகின்றன. ர மிகக் கவனமாகப் பரிசீலிக்கும்போது - முஸ்லிம்கள் ஆகக் குறைந்தது ந்தில் இருந்து அதாவது 1800ஆம் பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. of Vanni என்ற வரலாற்று நுாலை வாம். இந் நுால் Lewis என்பரால் ஆம் ஆண்டிலிருந்து 1895ஆம் 5 குறிப்பேடுகள், நிர்வாக அறிக்கைகள் காண்டு எழுதப்பட்டது. இந் நுால் ம் நுாற்றுாண்டு வரலாற்றை மிகத் ன்றது. இந்நுால் முல்லைத் தீவு பம் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்ததை "ல் முஸ்லிம்கள் சிறப்பாக வர்த்தகத்தில் மல்லைத்தீவுடனான மாட்டு வண்டித் நடவடிக்கைகள் (Tawalam)
என்பதையும் இந்நூல் கூறுகின்றது. Tண்டில் முல்லைத்தீவு முஸ்லிம்களின் ர் சமூக, பொருளாதாரப் பங்களிப்பையும்
1ான மா.
ற்கு முந்திய காலக் கட்ட வரலாறு மிகக் குறைவாகக் காணப்படுகின்றன. ல்ல இப்பிரதேச தமிழ், சிங்கள இன ப் பொறுத்தவரையிலும் இதுவே க்களுக்கு பரம்பரை பரம்பரையாக யங்கள், சமய ஸ்தலங்களின் வரலாற்று ஒய்வு போன்றவை பொதுவாகப் பினதும், சிங்கள மக்களினதும் பழைய ாண்டு கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன.

Page 49
எண்ணிக்கையில் சிறு தொகையினரான ( முறைப்படி அறிய முயற்சிகள் இது
முஸ்லிம்களின் பழைய வரலா வரலாற்று ஆதாரங்களின் மூலமாகக் காணப்படுகின்றது. இந்த அடிப்படை கிடைக்கக்கூடியதாக உள்ளன. . பயன்படுத்தி முல்லைத்தீவு முஸ்லிம்கள் வரலாறு பின்வரும் பகுதிகளில் விள
3.1.3 ஆரம்ப வரலாறு:
முல்லைத்தீவில் முஸ்லிம்கள் பல வாய் மொழி ஆதாரங்களில்
முக்கியமானவையாகும். அதில் ஒன பகுதியினர் 16ஆம் நுாற்றாண்டில் ய வந்து முல்லைத்தீவு நகரச் சூழல் இரண்டாவது விளக்கப்படி முல்லை பகுதியினர் முல்லைத்தீவு நகரத்திற்கு தெற்காக காணப்பட்ட கதிர்மீராக்குள் மிக நீண்ட காலத்திற்கு முன்னர் இ கிராமங்களுக்கு வந்து குடியேறினார்.
5 க/
3.1.3.1 கதிர்மீராக்குளம் கிராம
முதலில் கதிர்மீராக்குளத்தில் பெயர்ந்து தண்ணீரூற்றுப் பகுதிக்கு வ பார்ப்போம். உள்ளூர் முஸ்லிம்கள் வரலாற்று விளக்கத்தின்படி முல்லைத்தீ முல்லைத்தீவு நகரத்தில் இருந்து 6 அமைந்திருந்தது. இம் முஸ்லிம் கு அழைக்கப்பட்டது. இன்று காடுகளா

முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியத்தை
ரை மேற்கொள்ளப்படவில்லை. று எழுத்துச் சான்றுகள் அன்றி ஏனைய கட்டி எழுப்பப்பட வேண்டிய நிலை பில் வாய்மொழி வரலாற்று ஆதாரங்கள் அதனால், வாய்மொழி ஆதாரங்களைப் ளின் 18ஆம் நுாற்றாண்டுக்கு முந்திய க்கப்படுகின்றது.
ரின் ஆரம்பக் குடியிருப்புக்கள் பற்றிய இரண்டு வரலாற்று விளக்கங்கள் று முல்லைத்தீவு முஸ்லிம்களில் ஒரு யாழ்ப்பாணக் குடா நாட்டில் இருந்து பில் குடியேறினார்கள் என்பதாகும். லத்தீவு முஸ்லிம்களில் மற்றும் ஒரு 5 ஏறக்குறைய 20 மைல் தொலைவில் ம் என்ற முஸ்லிம் கிராமத்தில் இருந்து இன்றைய தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி கள் என்பதாகும்.
த்தில் இருந்து தண்ணீரூற்றுக்கு :
இருந்து எவ்வாறு முஸ்லிம்கள் இடம் ந்து குடியேறினார்கள் என்ற வரலாற்றைப் ரால் பரம்பரையாக நம்பப்பட்டு வந்த வு முஸ்லிம்களின் ஆரம்பக் குடியிருப்பு தற்காக இருபது மைல் தொலைவில் ரொமம் கதிர்மீராக் குடியிருப்பு என்று ல் மூடப்பட்டுக் காணப்படும் இப்பழைய
3]

Page 50
குடியிருப்புப் பகுதியில் துார்ந்துபோன இக்குளம் கதிர் மீராக்குளம் என்று உள் இக்குளத்துடன் தொடர்புடைய மற்றும் அணைக்கட்டில் காணப்படுகின்ற கல் லெப்பை மீரான் என்று பொறிக்க ஆதாரங்களையும், முல்லைத்தீவு முஸ்லி பரம்பரைக் கதைகளையும் தொகுத்து காலத்தில் கதிர் மீராக்குளத்தை - இருந்திருக்கின்றன என்றும் இக்கிராமத் முஸ்லிம்கள் இடம் பெயர்ந்திருக்க .ே அவ்வாறு இடம் பெயர்ந்தவர்களில் ஒரு தெற்கே மூன்றரை மைல் தொலைவில் அழைக்கப்படுகின்ற பிரதேசத்தில் ஆர பின்னர் அங்கிருந்து வெளியேறி தற்போ பகுதியில் அதிலும் குறிப்பாக, இன்றைய பிரதேசத்தில் குடியேறினார்கள் என்றும்
முல்லைத்தீவு முஸ்லிம்களின் 17ஆம் நுாற்றாண்டுக்குப் முன்னர் நிகழ தண்ணீரூற்று குடியிருப்புப் பிரதேசங்களி மண்வளம், சந்தை வியாபாரம் போன் நீடித்து நிலைத்திருக்கக் காரணமாயிற்று நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம் முஸ்லிம்களி இருந்து உருவாகி இருக்கலாம் என்ப எடுத்துக்காட்டுகின்றன.
கதிர் மீராக் குளக்குடியிருப்பு காலம் அக் குடியிருப்பு நீடித்திரு! கிடைக்கவில்லை. ஆனால், இப்பழைய மற்றொரு பகுதியினர் திருகோணம சென்றார்கள் என்பதுவும் வாய்வழிமூலக் . புல்மோட்டை முஸ்லிம்களின் இரத்த கூடியதாக இருக்கின்றது. இவ்வரல ஆராயப்பட வேண்டியவைகளாகும்.

ர குளம் ஒன்று காணப்படுகின்றது. ளூர் மக்களால் அழைக்கப்படுகின்றது. ஒரு வரலாற்று அம்சம் இக்குளத்தின் வெட்டாகும். இக்கல்வெட்டில் கதிர் கப்பட்டிருக்கின்றது. மேற்குறித்த விம்கள் மத்தியில் நம்பப்பட்டு வருகின்ற து நோக்குகின்ற போது மிகப்பழைய அண்டி முஸ்லிம் குடியிருப்புகள் தில் இருந்து ஏதோ ஒரு காரணத்தால் வண்டும் என்றும் நம்பப்படுகின்றது. பகுதியினர் முல்லைத்தீவு நகரத்திற்கு ல் காணப்பட்ட இறம்பாகம் என்று சம்பத்தில் குடியேறினார்கள் என்றும், ாதைய தண்ணீரூற்று - கணுக்கேணிப் - நெடுங்கேணிச் சந்தியைச் சுற்றியுள்ள
நம்பப்படுகின்றது.
இவ்வாறான ஒரு இடப்பெயர்வு மந்திருக்க வேண்டும். தற்போதைய ல் காணப்பட்ட இயற்கைச் சுனைகள், றவை இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் 1. ஆகவே இன்றைய தண்ணீரூற்று, ன் ஆரம்பம் கதிர் மீரா குடியிருப்பில் தை மேற்குறித்த ஆதாரங்கள் எமக்கு
எப்போது ஆரம்பித்தது? எவ்வளவு ந்தது? என்பதற்கு ஆதாரங்கள் | குடியிருப்பில் இருந்து வெளியேறிய லை மாவட்ட புல்மோட்டைக்குச் கதைகளில் இருந்தும், முல்லைத்தீவு - உறவு தொடர்பிலிருந்தும் அறியக் ாற்று ஆதாரங்கள் மேலும் ஆழமாக

Page 51
3.1.3.2 யாழ்ப்பபாணத்தில்
முல்லைத்தீவு முஸ்லிம்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டிலிருந்து 8 மற்றுமொரு விளக்கமாகும். இது பரம்பரை பரம்பரையாகக் கூறப்பட உண்மையில் யாழ்ப்பாண முன (1505-1658) யாழ்ப்பாணத்தைவிட்டு இருக்கின்றார்கள். போர்த்துக்கேய ஆட்சிக்காலத்தில் கரையோரப் பிரதேசம் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தா துன்புறுத்தல்களிலிருந்து தம்மைப் முஸ்லிம்கள் உள்நாடு நோக்கியும் ப இடம் பெயர்ந்து சென்றார்கள் என் உண்மைகளாகும். (Shukri, 1986, D
இதைப்போல யாழ்ப்பாண போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் பகுதியினரும் முல்லைத்தீவு நோக்கி வாய்மூல ஆதாரங்களில் இருந்து யா நோக்கிய இடப்பெயர்ச்சி பின்வருமா
யாழ்ப்பாணத்தை விட்டு பூநகரி வழியாக இலங்கையின் கிழக்கு முதலில் இன்றைய முல்லைத்தீவு தொலைவில் அமைந்திருந்த சுண்டி குடியிருப்புக்களில் சொற்ப காலம் வ இடத்தில் குடியேறிய முஸ்லிம்களி சமகாலத்தில் கரியல் வயலில் குடியே ஈடுபட்டு வந்தார்கள். முஸ்லிம்கள் வந்தார்கள் என்பதை இன்று இ காணப்படும் சொத்துரிமையும், மீன்' எவ்வளவு காலம் மேற்குறிப்பிட்ட
வாழ்ந்தார்கள் என்ற விபரங்கள் கில

இருந்து முல்லைத்தீவுக்கு :
ன் மூதாதையர்களில் ஒரு பகுதியினர் இங்கு வந்து குடியேறினாார்கள் என்பது முல்லைத்தீவு முஸ்லிம்கள் மத்தியில் டு, நம்பப்பட்டு வந்த வரலாறாகும். ப்லிம்கள் போத்துக்கேயர் காலத்தில்
வெளியேறி இங்கு வந்து குடியேறி காலனித்துவ ஆட்சியாளர்கள் தமது கேளில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான ர்கள் என்பதும் இவ்வாட்சியாளர்களின் பாதுகாக்க கரையோரத்தில் வாழ்ந்த துகாப்பான ஏனைய பிரதேசங்களுக்கும் (பதுவும் மிகத் தெளிவான வரலாற்று ewaraja, 1972,)
வர்த்தகக் குடியிருப்புகளிலிருந்து ம் வெளியேறிய முஸ்லிம்களில் ஒரு 5 இடம் பெயர்ந்தனர் (Raheem, 1979). எழ்ப்பாண முஸ்லிம்களின் முல்லைத்தீவு று நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது?
இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் கேரதீவு, குக் கரையை அடைந்தார்கள். இவர்கள் | நகரத்திற்கு வடக்காக 25 மைல் பக்குளம், கரியல் வயல் என்ற இரண்டு எழ்ந்தார்கள். இதில் சுண்டிக்குளம் என்ற பில் ஒரு பகுதியினர் மீன்பிடியிலும், வறியவர்கள் விவசாய நடவடிக்கையிலும் இவ்விரு குடியிருப்புகளிலும் வாழ்ந்து க்குடியிருப்புக்களில் முஸ்லிம்களுக்கு பிடி உரிமையும் எடுத்துக்காட்டுகின்றன. இரு குடியிருப்புகளிலும் முஸ்லிம்கள் டெக்கக் கூடியதாக இல்லை.
33

Page 52
மேற்குறித்த இவ்விரண்டு வாழ்க்கைக்கு பொருத்தமாக இல்லாத கா தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து இன குடியேறினார்கள். இப்புதிய பிரதேசத்தில் களப்பு மீன்பிடி வசதிகளும், நகர வர்த்த உள்ளுர் மக்களின் அனுசரணையும் ! இன்றுவரை இப்பிரதேசத்தில் வாழ்ந்து
இவ்வாறு முல்லைத்தீவு- நெடு முஸ்லிம் குடியிருப்பு மையத்தில் இ ஹிஜ்ராபுரம், முத்தையன்கட்டு, முறிப்பு உருவாகின. அது போல முல்லைத்தீவு உருவான மற்றுமொரு குடியிருப்பிலி குடியிருப்புகளும் பிற்காலத்தில் உருவ பெற்ற காலத்தில் இருந்து 19 முல்லைத்தீவிலிருந்து வெளியேற்றப் காணப்பட்ட முஸ்லிம் குடியிருப்புக் தங்குதடையின்றி வாழ்ந்து வந்திருக்க
முல்லைத் தீவில் இருந்து வெளியேறியபோது அங்கு வாழ்ந்த மெ ஏறக்குறைய 1200 ஆகும். முன்னர் பிரதேச ரீதியாக மேற்குறித்த 1200 முஸ் பிரிந்து வாழ்ந்திருந்தாலும் இம்மக்களுக் உறவுகள் காணப்பட்டன. தண்ணீரூற் ஒரு பிரதேச சூழலில் வாழ்ந்தது மட் போன்ற உறவுகளையும் கொண்டிருந் கிராம மக்களுக்கிடையில் மிகவும் சாதா பணக்காரன் ஏழை என்ற வேறுப கொள்ளப்பட்டது. இதே முறையில் நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரப் பிரதேச மு. முஸ்லிம்களுக்கும் இடையிலும் நிறை காலப்போக்கில் முல்லைத்தீவு முஸ்லிம்க முறைகளைக் கொண்டவர்களாக மாறி
ண
34

Tவெ
குடியிருப்புக்களும் தமது நிரந்தர கரணத்தினால் முஸ்லிம்கள் இங்கிருந்து ன்றைய முல்லைத்தீவு நகரச் சூழலில் நில வளமும் நீர் வளமும், கரையோர, தக நடவடிக்கைகளுக்கான வாய்ப்பும் பொருத்தமாகக் காணப்பட்டமையால் ப வருகின்றார்கள். ங்கேணி சந்திப்பிரதேசத்தில் உருவாகிய நந்து தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி, பு போன்ற முஸ்லிம் குடியிருப்புகள் வு நகரை அடிப்படையாகக் கொண்டு ருந்து கல்விப்பாடும், எனைய பல மாகின. இக்குடியிருப்புகள் தோற்றம் 90 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் படும் வரை மேலே அடையாளம் களில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக கின்றார்கள். (படம்-2).
முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு மாத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை
குறிப்பிட்டது போல கிராம ரீதியாக, மலிம் குடும்பங்களும் முல்லைத்தீவில் க்கிடையில் மிக நெருக்கமான குடும்ப மறு, நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம் மக்கள் நிம் அல்லாது ஒரு தாய் மக்களைப் தார்கள். திருமணங்கள் இம்மூன்று பரணமாக, தாராளமாக நடை பெற்றன. எடு கூட குறைவாகவே கருத்தில் ல் மேற்குறிப்பிட்ட தண்ணீரூற்று, ஸ்லிம்களுக்கும் முல்லைத்தீவு நகர ய குடும்ப உறவுகள் காணப்பட்டன. ள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறவு "னர்.

Page 53
குடும்ப வரலாற்றுப் பு
ஆரம்பத்தில் குறிப்பிட்டது ஆரம்பகால குடியேற்றம் பல பிரதேச உருவாகியதாகும். இந்த அடிப்ப வரலாற்றுப் பாரம்பரியம் பற்றி மேலு இவ்வாய்வில் முயற்சிக்கப்பட்டது. " பாரம்பரியத்தைக் கட்டியெழுப்புவதன் பற்றி அறிந்து கொள்ள முடியும்” முஸ்லிம் குடும்பங்களின் வரலாற்றுப் இங்கு மேற்கொள்ளப்பட்டது.
குடும்ப வரலாற்றுப் பாரம்ப சில தேர்ந்தெடுக்கப்பட்ட முல்லைத்தீ தொடர்ச்சியை அறிந்து கொள்ள
அடிப்படையில் குடும்ப வரலாற்றை சொல்லக்கூடிய பிரபல்யமான குடும்பங் அதில் குறிப்பாக லெப்பை குடும்பம் மரைக்கார் குடும்பம், முகம்மதலி கு
முல்லைத்தீவில் பல தலைமுறைக ை தம்பிக்கண்டு மரைக்கார் குடும்பம், குடும்பங்களின் வரலாற்றுப் பார விளக்கப்படுகின்றது. இவ்விரு தேர்ந் இந்நூலில் குறிப்பிடுவதன் மூலம் முக்கியத்துவம் அற்றவை என்று குடும்பங்களின் குடும்ப பாரம்பரியம் தொடர்ச்சியாக செய்யப்பட வேண் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
3.1.4.1 தம்பிக்கண்டு மரை
முதலில் "தம்பிக்கண்டு ம எடுத்துக் கொள்வோம். முல்லைத்தீவு

பாரம்பரியம் :
போல் முல்லைத்தீவில் முஸ்லிம்களின் களில் இருந்து வந்த முஸ்லிம்களினால் டையில் முல்லைத்தீவு முஸ்லிம்களின் ம் தெளிவு பெற வாய்ப்புள்ளதா என்று ஒரு சமூகத்தின் அறியப்பட்ட குடும்பப் மூலமாகவும் அச்சமூகத்தின் வரலாறு என்ற அடிப்படையில் முல்லைத்தீவு பின்னணி பற்றிய விபரம் தேடும் முயற்சி
ரியத்தை முறைப்படி தெரிந்து கொள்ள வு முஸ்லிம் குடும்பங்களின் வரலாற்றுத் வேண்டியது அவசியமாகும். அந்த ) பல பரம்பரைகளுக்கு பின்னோக்கிச் கள் பல முல்லைத்தீவில் காணப்பட்டன. , உமர்கண்டு குடும்பம், தம்பிக்கண்டு நிம்பம், சேகுகண்டு குடும்பம் போன்றன மளக் கண்ட குடும்பங்களாகும். அதில் - லெப்பை குடும்பம் ஆகிய இரண்டு ம்பரியம் இந் நுாலில் உதாரணமாக தெடுக்கப்பட்ட குடும்பங்களின் வரலாற்றை ஏனைய குடும்பங்களின் பாரம்பரியம் பொருளாகாது என்பதையும் ஏனைய பற்றிய விபரங்களை அறியும் முயற்சி டும் என்பதையும் முன்னரே இங்கு
.III
அள்
க்கார் குடும்பப் பாரம்பரியம்:
-ரைக்கார் குடும்பத்தின் '' பரம்பரையை வில் தம்பிக்கண்டு மரைக்காரின் குடும்பம்
35

Page 54
மிகவும் பிரபல்யமானதாகும். - இக் முல்லைத்தீவில் வாழ்ந்திருக்கின்றார்கள் தம்பிக்கண்டு மரைக்கார் சென்ற நுா பெரிய பணக்காரராகவும், நிலச்சுவாந்த முல்லைத்லைத்தீவு நகரிலும், அதன் ஏராளமான நிலபுலன்கள் உரிபை ஆட்சிக்காலத்தில் பிறவிச் செல்வந்தராகக் பிரித்தானிய ஆட்சியாளர்களுடன் கொண்டிருந்தார் என்றும் குறிப்பிடப்ப பெற்றிருந்த இவர் முல்லைத்தீவு | அன்பளிப்பாகக் கொடுத்ததோடு அக்காணி மதுரசா ஒன்றையும் கட்டிக் கொடு குடியிருப்பில் கோயிலுக்குக் காணி ஒன்று பெருமை பெற்றவராக தம்பிக்கண் கூறப்படுகின்றது. தம்பிகண்டு மரைக்க முல்லைத்தீவில் வாழ்ந்தனர். இவர்க சரீபு அப்துல் அசீஸ் என் பவர் கடையாமோட்டையில் வாழ்கின்றார். போல் வேறு பல பிரபல்யமான, த முல்லைத்தீவை தமது தாயகமாகக் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்திருக்கின் காணப்படுகின்றன.
3.1.4.2 லெப்பை குடும்பப் பு
முல்லைத்தீவில் பரம்பரை கா "லெப்பை குடும்பம்" ஆகும். முல்ை தலைமுறையினர் பற்றிய விபரம் படம் குடும்பப் பரம்பரையைச் சேர்ந்தவ கற்பிட்டியில் வாழ்பவருமான பைக்கீர் அ லெப்பை குடும்பம் பற்றிய வரலாறு
36

மயாக
- குடும்பத்தின் பல பரம்பரையினர் ள். முஹம்மது மீராலெப்பை மகனான ற்றாண்டில் முல்லைத்தீவில் மிகவும் ராகவும் காணப்பட்டார். இவருக்கு
அயலில் உள்ள பிரதேசங்களிலும் மயாக இருந்தன. பிரித்தானியர் 5 காணப்பட்ட தம்பிக்கண்டு மரைக்கார் சமமாகப் பழகும் அந்தஸ்தைக் டுகின்றது. தானதர்மங்களில் பெயர் நகரத்தின் பள்ளிவாசல் காணியை ரியில் ஜூம்மா பள்ளிவாசல் ஒன்றையும், த்தார். முல்லைத்தீவின் கரச்சிக் று வழங்கி பிற சமயத்தவர் மத்தியிலும் 5 மரைக்கார் இருந்தார் என்றும் எருக்குப் பிறகு ஐந்து பரம்பரையினர் ளின் பரம்பரையில் வந்த முகம்மது
தற் போது புத்தளம் மாவட்ட தம்பிக்கண்டு குடும்பத்தவர்களைப் னவந்த முஸ்லிம் குடும்பத்தவர்கள்
கொண்டு மிக நீண்ட காலம் றனர் என்பதற்குப் பல உதாரணங்கள்
பாரம்பரியம்:
ன்ட மற்றுமொரு குடும்பத்தவர்கள் லத்தீவில் இக்குடும்பத்தினரின் ஏழு - 3ல் தரப்பட்டுள்ளது. 'லெப்பை' ரும் தற்போது புத்தளம் மாவட்ட பதுல் ஹமீது என்பரின் தகவலின்படி றுத் தொடர்ச்சி கட்டியெழுப்பப்

Page 55
பட்டிருக்கின்றது. இக்குடும்பப் பார வரலாறு பற்றிய ஆய்வுக்கு பொருத்.
காரணம் இக்குடும்பம் வைத்து முல்லைத் தீவில் முக்கியமான காணப்படுகின்றமையாகும். முல்லைத் அப்துல்லா லெப்பை என்பவரிலிருந்து இந்தியாவில் முத்துப்பேட்டையைச் தலைமுறைகளுக்கு முன்னர் இந்தியா சம்மளகுளம் என்ற ஊருக்கு வந்து இவரின் இலங்கை வருகைக்கு ஒரு எடுத்துக் கூறப்படுகின்றது. அதாவ. அப்துல்லா லெப்பையை அக்கால வன்னியன் இவரின் வைத்திய சேன அழைத்ததாக வாய்மூல ஆதாரங்கள்
அப்துல்லா லெப்பை வைத்த தண்ணீரூற்றுக்கு வந்து குடியேறின ஆண் பிள்ளைகள் இருந்தார்கள். இல் இரண்டு முக்கிய குடும்பப் பாரம்பரியங்கள் விளங்கினார்கள். அப்துல்லா லெப். முகம்மது ஆகும். இவர் தந்தையின் வைத்திய சேவைகளில் ஈடுபட்டார் பரம்பரையில் வந்த ஏனையவர்களும்
வைத்திய பாரம்பரியத்தை பின்பற்றி ன வரைபடம்-3 நெய்னாமுகம்மது ரை வைத்திய சேவையில் ஈடுபட்டிருக்கு வரையிலான ஆறு பரம்பரைகளில
வந்தவர்களின் பெயர் விபரங்களைத் ஹமீத் வைத்தியரின் தந்தையார் ப. பிள்ளைகள் இருந்தனர். அவரி வைத்தியருக்கு நான்கு பிள்ளைகள் முகைதீன் தம்பிக்கு இரண்டு பிள் ை

ம்பரியம் முல்லைத்தீவு முஸ்லிம்களின் தமானதாகக் காணப்படுகின்றது. ந்தியத் துறையிலும் சமய ஈடுபாட்டிலும் ன கு டும் பங் க ளில் ஒன்றாக க தீவில் லெப்பைக் குடும்பத்தின் ஆரம்பம் | ஏற்படுகின்றது. அப்துல்லா லெப்பை சேர்ந்தவர். இவர் ஏறக்குறைய ஏழு விலிருந்து வவுனியா மாவட்ட பூனாவை து குடியேறியதாக அறியமுடிகின்றது. ந முக்கியமான வரலாற்றுப் பின்னணி து வைத்தியத்தில் தேர்ச்சி பெற்றிருந்த வன்னிப்பிரதேச மன்னனான பண்டார வயைப் பெறுவதற்காக வன்னிக்கு
குறிப்பிடுகின்றன. யெர் பூனாவையிலிருந்து முல்லைத்தீவு ார். அப்துல்லா லெப்பைக்கு இரண்டு பவிரண்டு பிள்ளைகளும் முல்லைத்தீவில் கள் ஏற்படுவதற்கு ஆரம்ப கர்த்தாக்களாக
பையின் ஒரு மகனின் பெயர் நெய்னா ன் வைத்தியப் பாரம்பரியத்தை பின்பற்றி . நெய்னாமுகம்மது வைத்தியரின் தொடர்ச்சியாக அப்துல்லா லெப்பையின் வைத்திய சேவையில் ஈடுபட்டு வந்தார்கள். வத்தியரிலிருந்து இன்று கற்பிட்டியில் ம் பைக்கீர் அப்துல் ஹமீத் வைத்தியர் க வைத்தியத் துறையில் ஈடுபட்டு தருகின்றது. உதாரணமாக அப்துல் க்கீர் வைத்தியராவார். இவருக்கு 12 ன் தந்தையார் அசனா மரைக்கார் இருந்தார்கள். அவரின் தந்தையார் ளகள் இருந்தார்கள். இதற்கு முந்திய

Page 56
படப்
லெப்பை குடும்ப
அப்துல்லா
நெய்னாமுகம்மது (வைத்தியர் )
கச்சுமுகம்மது (வைத்தியர்)
மொகிதீன் தம்பி (வைத்தியர் )
அசனாமரைக்கார் (வைத்தியர்)
பக்கீர் (வைத்தியர்)
அப்துல் ஹமீது (வைத்தியர்) - றஸீட் லெ (தற்போது கற்பிட்டியில் வைத்திய (முஅத்தி சேவையில் ஈடுபட்டிருக்கின்றர்) ஜும்ஆப்
மூலம் வெளிக்கள ஆய்வு, 1996.

|-3
ப் பாரம்பரியம்
லெப்பை
அப்துல்காதர் லெப்பை
மானா லெப்பை
அப்துல்லா லெப்பை
அப்துல் காதர் லெப்பை
அப்துல்லா லெப்பை
ப்பை
உவைஸ் மெளலவி ன்,மிஃறாஜ்புரம் (மௌலவி, மிஃறாஜ்புரம் பள்ளி, கனமூலை) ஜும்ஆப் பள்ளி, கனமூலை)

Page 57
கான
தலை முறைகளில் வைத்திய சேவை விபரங்கள் கிடைக்கக் கூடியதாக இரு விபரங்கள் பெறக்கூடியதாக இல்லை.
இந்த லெப்பை குடும்பத்தின் மற்றொரு மகன் அப்துல் காதர் லெ 'லெப்பை' என்ற அடை மொழி கொன லெப்பையின் பரம்பரையில் வந்த ஏனை அடை மொழி கொண்டு அழைக்கப் காணப்பட்டு வந்தது.
லெப்பை என்ற அடை ெ தனித்துவமான குடும்ப பாரம்பரியத்ல Miller, 1979) அதிலும் குறிப்பாக இர பெயர் இஸ்லாமிய சமயக் கிரியைக வருவோர்களைக் குறிக்கும் சொற்பிரயே உண்மையை அப்துல்காதர் லெப்பை ச அவதானிக்கக் கூடியதாக இருக்கின பரம்பரையில் வந்தவர்கள் முல்லைத்தீவி மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுப் கொடுக்கும் ஆசான்களாகவும் இருந். இன்றைய தலைமுறையினர் சமயச் தொழில்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர். வந்த மெளலவி உவைஸ் புத்தளம் ஆலிம் (மார்க்க அறிஞர்) ஆகவும் வாயில் பராமரிப்பாளர்) ஆகவும் இன்
முல்லைத்தீவு முஸ்லிம்களி கொள் வதற்கு 16ஆம் நுாற்றாண் முல்லைத்தீவுக்கு இடம் பெயர்ந்து பாரம்பரியமும் ஆராயப்பட வேண்டி ஆய்வு முல்லைத்தீவு முஸ்லிம்களின் ஏற்படுத்தக் கூடியது. யாழ்ப்பான முஸ்லிம்களுக்கும் இடையில் இரத்த 2 இருந்து வருகின்றது.

வயில் ஈடுபட்டிருந்தவர்களின் பெயர் க்கின்றதே தவிர அவர்களின் குடும்ப
மூலவரான அப்துல்லா லெப்பையின் மப்பை ஆவார். இவர் தந்தையின் ன்டு அழைக்கப்பட்டார். அப்துல்காதர் னயவர்களும் இந்த 'லெப்பை' என்ற படுகின்ற முறை இக் குடும்பத்தில்
"மாழிப் பெயர் இந்தியாவில் ஒரு தைக் குறிப்பதாகும். (Mines, 1979 ந்த லெப்பை என்ற அடை மொழிப் ளிலும் போதனைகளிலும் ஈடுபட்டு பாகமாகவும் காணப்படுகின்றது. இவ் அவர்களின் பரம்பரையில் வந்தவர்களில் ன்றது. அதாவது இந்த லெப்பை "ல் பரம்பரை பரம்பரையாக இஸ்லாமிய ம் ஆலிம்களாகவும், குர்ஆன் ஓதிக் துள்ளனர். இப்பரம்பரை வழிவந்த 5 கடமைகளோடு தொடர்புடைய
உதாரணமாக லெப்பை பரம்பரையில் மாவட்ட கனமூலை பள்ளிவாயிலில் றஹீத் லெப்பை முஅத்தின் (பள்ளி
று காணப்படுகின்றார்கள். ன் வரலாற்றை மேலும் அறிந்து டில் யாழ்ப்பாணத்தில் இருந்து
வந்த முஸ்லிம்களின் குடும்பப் டய ஒன்றாகும். அவ்வாறான ஓர் வரலாறு பற்றி மேலும் தெளிவினை முஸ்லிம்களுக்கும், முல்லைத்தீவு உறவு முறை பல தலைமுறைகளாக

Page 58
இது போலவே முல்லைத்தீவு அடிப்படையில் இதுவரை தெளிவா . முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கும், புல் காணப்படுகின்ற இரத்த உறவாகும் கதிர்மீரா குடியிருப்பில் இருந்து வெளி புல்மோட்டைக்கும் சென்றிருக்க வேண பிரதேச முஸ்லிம்களுக்குமிடையில் மிக வந்திருக்கின்றன. அதில் மிக முக் மக்களுக்குமிடையிலான திருமண உ மூலம் தெளிவு படுத்தப்படுமானால் மு தொன்மையை ஆதாரங்களோடு மேலு
அதுபோல, முல்லைத் தீவு மு ஆழமாகவும் ஆராயப்பட வேண்டி வரலாற்றுக்கால் வர்த்தக, இராணுவ, மேலும் ஆழமாக ஆராய்வதன் மூ உண்மைகளை அறியக்கூடியதாக இரு முஸ்லிம்களின் கடந்த கால வரலாற்றை மன்னார் பிரதேச முஸ்லிம்களின் வரலாறு போது முல்லைத்தீவு முஸ்லிம்களி மெருகூட்டப்பட்டதாக அமையும். செயற்படுத்தப்பட வேண்டியது அவசி
முல்லைத்தீவில் ஒன்றாக, ஒரு கொண்டிருந்த முஸ்லிம்கள் இன்று
வாழ்கின்றார்கள். குடும்ப அங்கத்தில முகாம்களுக்கிடையில் பிரிந்து வாழ். மண்ணில் இருந்து இம்மக்கள் ! சூழ்நிலைகள் ஏற்படுகின்ற போது தம் இம்மக்கள் விரும்புகின்றார்கள்.
3.2 கலையும் கலாசாரமும்
மக்கள் மத்தியில் வழக்கில் 8 அமசங்கள் அம்மக்களின் வரலாற் ை பிரதிபலிப்பதாக இருக்கும் போது : மேலும் சிறப்படைகின்றது.
4

எற்கனம்
முஸ்லிம் குடும்பப் பாரம்பரியம் என்ற 5 விளக்கப்படாத மற்றொரு அம்சம் மாட்டை முஸ்லிம்களுக்கும் இடையில்
ஏற்கனவே குறிப்பிட்டது போல யேறிய முஸ்லிம்கள் முல்லைத்தீவுக்கும் டும் என்பதை அறிந்தோம். இவ்விரு நீண்ட காலமாக தொடர்புகள் இருந்து கியமான தொடர்பு இவ்விரு பிரதேச றவுகளாகும். இது மேலும் ஆய்வுகள் ப்லைத்தீவு முஸ்லிம்களின் வரலாற்றுத் ம் நிரூபிக்கக் கூடியதாக இருக்கும். ஸ்லிம்களின் வரலாறு முழுமையாகவும் டய ஒன்றாகும். இம் முஸ்லிம்களின்
இராஜ வைத்திய பங்களிப்புக்களை லம் இன்னும் பல அரிய வரலாற்று நக்கும். அதே நேரத்தில் முல்லைத்தீவு புல்மோட்டை, யாழ்ப்பாணம், வவுனியா, ற்றோடு இணைந்த முறையில் ஆராயும் ன் வரலாற்றுப் பாரம்பரியம் மேலும் அவ்வாறான முயற்சி எதிர்காலத்தில் சியமாகும். 5 குடும்பமாக, ஒரு சமூக அமைப்பைக் அகதிகளாக பல இடங்களிலும் சிதறி நர்கள், உற்றார் உறவினர்கள் அகதி கின்றார்கள். காலத்தின் சதியால் தமது பிரிக்கப்பட்டிருந்தாலும் பொருத்தமான து பூர்வீக இடங்களுக்கு மீள்வதையே
ருெக்கும் கலை, கலாசார பழக்கவழக்க றயும் அவர்களின் தனித்துவத்தையும் அச் சமுதாயத்தின் இனத் தனித்துவம்

Page 59
முல்லைத்தீவு முஸ்லிம்கள் கலாசார அம்சங்கள் மிக நீண்ட காலம் என்பது குறிப்பிடத்தக்கது. கவிதைக விளையாட்டுக்கள் என்பன இக் கலை முல்லைத்தீவு முஸ்லிம்கள் இதில் மிக . பல பிரபல்யமான கவிஞர்கள் வாழ்ந்த இசையுடன் இணைந்து பாடல்கள் | வல்லவர்கள். அது மட்டுமன்றி முல்லைத்தீவு முஸ்லிம்கள் மத்தியில் விபரமாக நோக்குவோம்.
3.2.1 கோலாட்டம்
கோலாட்டம் முல்லைத்தீவு இருந்து வரும் கலை அம்சங்களில் கலையாகும். இக்கலை அம்சம் எப் மக்கள் மத்தியில் அறிமுகப்படு கிடைக்கக்கூடியதாக இல்லை. ஆனா முஸ்லிம்கள் மத்தியில் மட்டும்தான் வ குறிப்பிடத்தக்கது.
கோலாட்டம் முல்லைத்தீவு மு மங்களகரமான நிகழ்வுகளின் போதும் வந்த ஒரு நாட்டியக் கலையாகும். இக் ஆண்கள் பங்குபற்றுவார்கள். பா கலைநிகழ்ச்சி. இஸ்லாமியப் பாரம்பரிய இது இருந்தது.
கோலாட்ட நிகழ்ச்சியில் 6 பங்கு பற்றுவர். இரண்டு சிறு கம்ப தட்டி சத்தம் எழுப்பி இவர்கள் நடனத் பல கட்டங்களாக நிகழ்த்திக் காட்டு வெவ்வேறு முறைகளில் இக்கலை நி பொருத்தமான பாடலும் பாடப்படும். மற்றவர்களும் இசைப்பார்கள். இப்பா ஆரம்பிக்கப்பட்டு பாடப்படும். மற்றவர்க

மத்தியில் பல தனித்துவமான கலை, Tக வழக்கத்திலிருந்து வந்திருக்கின்றன ள், பாடல்கள், நாட்டியங்கள், பாரம்பரிய அம்சங்களில் முக்கியமானவைகளாகும். ஆர்வமாக ஈடுபட்டனர். முல்லைத்தீவில் ார்கள். முஸ்லிம் கலைஞர்கள் றபான் பாடி மக்களை களிப்பூட்டச் செய்வதில் பிரபல்யமான நாடக கலைஞர்களும் காணப்பட்டனர். அவற்றினை சற்று
முஸ்லிம்கள் மத்தியில் வழக்கத்தில் ம் ஒன்றாகும். இது ஒரு நாட்டியக் -பொழுது, எங்கிருந்து முல்லைத்தீவு த்ெ தப்பட்டது என்ற விபரங்கள் ல் இக்கலை அம்சம் முல்லைத்தீவில் ழக்கில் காணப்பட்டது என்பது இங்கு
மஸ்லிம்கள் மத்தியில் திருமணம் போன்ற பெருநாள் காலங்களிலும் ஆடப்பட்டு கோலாட்ட நிகழ்ச்சியில் சம வயதுடைய கடலும் ஆடலும் கொண்டது இக் வழிமுறையில் வந்த பழக்கமாகவும்
சோடி ஆண்கள் அதாவது 12 பேர் களைக் கொண்டு ஒன்றோடு ஒன்று தினை ஆடுவார்கள். இந்த நடனமுறை டப்படும். ஒவ்வொரு கட்டத்திலும் கழ்த்தப்படும். கோலாட்ட நடனத்திற்குப் இப்பாடலை நடனக் குழுவினரும், கடல் நடனக் குழுவின் தலைவரால் ள் அதனைத் தொடர்ந்து பாடுவார்கள்.

Page 60
முல்லைத்திவில் கோலாட்டத்தில் அப்துல் சமது என்பவரும் யூசுப் இருந்திருக்கின்றார்கள் என்பதை இங்
கோலாட்டப் பாடல்கள் இர இருக்கும். இதில் முதலாம் பகுதி சபையோருக்கு சலாம் கூறும் பகுதிய பகுதி அண்ணாவியார் என்றழைக்கப்படு இசைக்கப்படும். அவரைத்தொடர்ந்து இந்தப் பாடல் பகுதி உதாரணமாக பி
சபையோர்களே ஸலாம் தந்தை மகிழ்விலே தங்கை த இங்கு நற்குணப் பெரியோரே
நபிமார் அவ்லியாக்களோடு அன்னை பிதாவுக்கும் - நற்குணம் குடியிருந்த சற்குருவுக்கும் புவியிலுள்ள நாதருக்கும் புர்கான் எனும் வேதத்திற்கும் கவிகளோதும் புலவரான கல்விமான்கள் யாவருக்கும்
சபையோர்களே...
(மூல கற்றறிந்திலேன் நான் கல்வி தெரிந்திலேன் சித்தறிந்த மெய்த்தவங்கள் புரிந்திலேன் திரு நாளிமா நகர்
ஷாபியின் இஸ்லாம் அன்புடனே எந்தனை இரட்சித் தாளுவீர் (ஒரு ( சபையோர்களே... (மூன்று
இரண்டாவது கட்டத்தில் ப இந்தப்பாடல் பின்வருமாறு பாடப்படும்
42

ல் பிரபல்யமான அண்ணாவியார்களாக , நாகூர்பிச்சை போன்றவர்களும்
கு சுட்டிக்காட்ட வேண்டும்.
ண்டு பகுதிகளைக் கொண்டதாக கோலாட்டம் ஆரம்பிக்கும் போது பாகும். இந்த சலாம் கூறும் பாடல் டும் கோலாட்டக் குழுவின் தலைவரால் மற்றவர்கள் அதனை இசைப்பார்கள். ன்வருமாறு ஆரம்பிக்கப்படும்.
எங்கும்
(மூன்று முறை - பிரதான பாடகர்)
(ஒரு முறை - பிரதான பாடகர்)
ன்று முறை - எல்லோரும்)
முறை - பிரதான பாடகர்) று முறை - எல்லோரும்)
பாடலுடன் கோலாட்டம் ஆடப்படும்.

Page 61
தன்னன்ன னன்னன்ன தன்ன தான னன்னன தன்னானே (e
அன்னத்தைப் போல் நடைய மின்னல் கொடிபோல் இடை மின்னும் இலங்கைப் புகைய மல்லாந்த செய்திகள் பெண்
தன்னன்ன ... (மூன்று மு
ஆடு கோழி சமைத்தாராம் ! ஆரதக்கறி தான் சமைத்தார் சோடி சோடியாக சாப்பிட்டு !
சொந்தமாய் பட்டனம் கட்டி
தன்னன்ன... (மூன்று மு ரயில் அடிக்குதே போகவேன இத்தர வீச்சிலே ஆண்களும் காய்கறி சாதம் கரியல் பொரிய கடுகச் சமைச்சு உண்டாராப்
தன்னன்ன... (மூன்று மு காங்கேசன் துறையில் நின்று கண்டி கொழும்புக்கு போற . பாங்காய் விரித்தமை கூவிச் வல்லோர் அறியப் புறப்பட்டத்
தன்னன்ன... (மூன்று முன்
மேலே குறிப்பிடப்பட்ட கோல பிரபல்யமான கவிஞராக இருந்த அழைக்கப்படும் மிஸ்கீன் என்பவரால் இயற்றப்பட்டதாகும். இது போன்று ! அப்பா இயற்றியுள்ளார். கோலாட் வேறுபடுவதுண்டு.

எனே - தன மூன்று முறை - பிரதான பாடகர்)
பாளருளி யாளருளி ரெதம் ஒன்று உணரசே ( பிரதான பாடகர்)
ன பா.
றை - எல்லோரும்) பெண்கள்
மிச்சத்தை
அாராம் (பிரதான பாடகர்)
மறை - எல்லோரும்)
ன்டும் என்று 5 பெண்களும் பல்
மறை - எல்லோரும்)
புகைவண்டி வண்டி சத்தம் பண்ணி
காம்
ஊற - எல்லோரும்)
எட்டப் பாடல்கள் இம்மக்கள் மத்தியில் மிஸ்கீன் அப்பா என்று செல்லமாக
இந்நுாற்றாண்டின் ஆரம்பகாலத்தில் பல கோலாட்டப் பாடல்களை மிஸ்கீன் படத்திற்கு கோலாட்டம் பாடல்கள்

Page 62
மிஸ்கீன் புலவர் ஒரு பிறவிக் தண்ணீரூற்றுக் கிராமத்தில் பிறந்தா கவிதைகளை இவர் பாடி இருக்கி குளப் படி, சூறாவளிக் கொத்து
அரிவி வெட்டுப்பாடல்கள் ஆகிய பாடல் மிஸ்கீன் புலவருடைய பாடல்கள் ( வரலாறு, பிரதேச தனித்துவத்தை கரு பாடலின் சிறப்புத் தன்மைக்கு மற்று புலவர் 1983ஆம் ஆண்டு காலமானார் பல இன்று எழுத்துருவற்ற நிலையி
3.2.2 சீனடி - சிலம் படி :
முல்லைத்தீவு முஸ்லிம்கள் கலை விளையாட்டு சிலம்படியாகும்.
முல்லைத்தீவில் முஸ்லிம்களால் மாத் விளையாட்டு.
சிலம்படி என்ற கலை வி அழைக்கப்படும். இது ஏறக்குறைய கொண்டு நிகழ்த்தப்படும் விளையாட்ட என்றும், கட்டைக்கம்பு விளையாட்டு அழைக்கப்படும்) இரண்டு பிரிவு இவ்விளையாட்டு நிகழ்த்தப்படும். இ கூட்டாகச் சேர்ந்தும் விளையாடப்ப அடிப்படையிலான விளையாட்டாகும்
சிலம்படியைப் போலவே வ கொண்டு ஆடும் மளு விளையாட்டு, தீப்பந்தம் வீசுதல், புலிவிளையாட விளையாட்டுக்களும் முல்லைத்தீவு நடைமுறையில் இருந்த, இருந்து
இக் கலை விளையாட்டுக் நிகழ்த்திக் காட்டப்படும். மாப்பிள்ளை செல்லல், முக்கியஸ்தர்களின் வர

கவிஞராவார். இவர் 1886ஆம் ஆண்டு . தமது வாழ்நாளில் பல பிரபல்யமான றார். இவருடைய கலியுகம், காலக்
நீராவிப்பிட்டியின் நீரூற்று, தொகுதிகள் முக்கியமானவைகளாகும். முல்லைத்தீவு முஸ்லிம்களின் வாழ்வு, பொருளாகக் கொண்டிருப்பது இவரின் மொரு எடுத்துக்காட்டாகும். மிஸ்கீன் 1. மிஸ்கீன் புலவருடைய பாடல்கள் ல் காணப்படுகின்றன.
மத்தியில் பிரபல்யமான மற்றுமொரு கோலாட்டத்தைப் போலவே சிலம்படியும் திரம் நிகழ்த்தப்பட்டு வந்த ஒரு கலை
விளையாட்டு சீனடி - சிலம்படி என்றும்
ஆறு அடி நீளமான தடியொன்றைக் டாகும். இதில் நீளக் கம்பு விளையாட்டு  ெஎன்றும் (இது கொடிவரிசை என்று கள் உண்டு. கம்புகளைச் சுழற்றி வ்விளையாட்டு தனி ஒருவராலும், பலர் திவதுண்டு. இது ஒரு பலப்பரீட்சை
ள் விளையாட்டு, மான் கொம்புகளைக் கத்திக் குத்து விளையாட்டு, மல்யுத்தம், டு ஆகிய ஏனைய பலப் பரீட்சை ல் முஸ்லிம்கள் மத்தியில் மாத்திரம் வரும் கலை விளையாட்டுக்களாகும். ள் மங்களகரமான நிகழ்வுகளின் போது வரவேற்பு, மீலாத் விழா, கொடி கொண்டு வற்பு ஆகிய முஸ்லிம்களின் சமூக

Page 63
நிகழ்வுகளின் போதும், ஊர்வலா நிகழ்த்தப்படும். முஸ்லிம் அல்லாதவர் மேற்குறித்த முஸ்லிம் கலை விளை இந்நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுவது
சிலம்படியுடன் தொடர்புடை மக்கள் மத்தியில் நீண்ட காலமாகக் க நெளதா அப்பா என்பவரால் பிற்கால அளிக்கப்பட்டது. நெளதா அப்பா, கதிர் லெப்பை போன்றவர்கள் ( வல்லவர்களாக இருந்திருக்கின்றார்கள் இல்லை. இன்று உயிர் வாழும் சீ. காசிம் தம்பி சாகுல் ஹமீது, அலித்தம் ஆகியோர் காணப்படுகின்றார்கள். இவ்விளையாட்டிற்கு இன்றும் உயிரூ முஸ்லிம்களின் விளையாட்டுக் கலை வேண்டியதொன்றாகும்.
3. 2. 3. பாரம் பரியங்களும் ப
முல்லைத்தீவு முஸ்லிம்க பாரம்பரியங்களையும் பழக்கவழக்கங்க இருக்கின்றன. இதில் முஸ்லிம்களி முஸ்லிம்கள் தமிழ் மொழியை கொண்டிருந்தாலும், முஸ்லிம்களின் தனித்துவமான பதங்களும், செ இத்தனித்துவ மொழிப் பிரயோகத்த பரீட்சயமும், அரபுத்தமிழ் பாண்டித் முறையிலான பழக்கங்களும் முக்கிய
முல்லைத்தீவு முஸ்லிம்கள் . தெரிந்தவர்களாக இருந்தார்கள் அத்தியவசிமானதாகக் காணப்பட்டது இம் மொழிப் பாண்டித்தியத்தை (

ங்களின் போதும் இவ்விளையாட்டு ர்களின் மங்களகரமான நிகழ்வுகளுக்கும் யாட்டு விற்பன்னர்கள் அழைக்கப்பட்டு முண்டு. ய கலை விளையாட்டுக்கள் இப்பிரதேச பாணப்பட்டன. இந்திய வம்சாவழியினரான த்தில் இக்கலைக்கு மேலும் புத்துயிர் பையன்னா அப்பா, கட்டையர் அப்பா, முல்லைத் தீவில் சீனடி சிலம்படியில் கள். இவர்கள் தற்போது உயிரோடு னடி சிலம்படி விளையாட்டு வீரர்களாக பி, அகமது லெவ்வை - லெவ்வைத்தம்பி
இவர்களிடம் கற்ற வேறு பலர் தட்டி வருகின்றார்கள். இம்முல்லைதீவு ல அம்சம் அழியாமல் பாதுகாக்கப்பட
ழக்கவழக்கங்களும் :
கள் மத்தியில் தனித்துவமான பல ளையும் அடையாளம் காணக்கூடியதாக ன் மொழித் தனித்துவமும் ஒன்றாகும். தமது வீட்டு, கல்வி மொழியாகக் தமிழ் மொழிப் பிரயோகங்களில் பல ற் றொடர்களும் காணப்படுகின்றன. பிற்கு முஸ்லிம்களின் அரபு மொழிப் தியமும் இஸ்லாமிய சமயக் கிரியை காரணங்களாகக் காணப்படுகின்றன. அரபு மொழியை வாசிக்கவும், எழுதவும்
சமயக் கிரியைகளுக்கு இது 1. அரபு கற்பிக்கும் கலாசாலைகள் முஸ்லிம்களுக்கு சிறு பராயத்திலேயே
15

Page 64
ஊட்டுவதற்கு உதவின. பலர் அர பெற இலங்கையின் ஏனைய பிரதே கல்விச்சாலைகளுக்கு சென்று கற்று 6 சென்றும் கற்றனர். முல்லைத்தீவை இந்தியா சென்று அரபுத் தேர்ச்சியும் இ மார்க்க அறிஞரானார். இவரது பெற்றவர்களினதும் தொண்டினால் இ பாரம்பரியமும், பழக்க வழக்கங்களும் ( மேலும் வளர்ச்சியும், உறுதியும் பெற்
இது போல முஸ்லிம்களின் திருமணம், பிறப்பு, இறப்பு சடங்குகளில் ஏனைய தமிழ் மக்களின் நடைமுறையும் அதுமட்டுமன்றி முஸ்லிம் ஆண், டெ வகைகள், உண்ணும் முறைகள் விருந் முஸ்லிம்களுக்கே உரிய தனித்துவத்தை இது இப் பிரதேச முஸ்லிம்களுக்கு தனித்துவத்தை தருபவையாக இருக் தமிழ் மொழியைப் பேசும் முஸ்லிம். கு ழு வாக ஏனைய மக் க ளா கெளரவப்படுத்தப்பட்டார்கள்.
முஸ்லிம்கள் மத்தியில் சமய வேறு நாடுகளில் பரவலாக அவதானிக்க (1978) என்ற ஆய்வாளர் சமய - இன மத்தியிலும், Israeli (1978) என்ற . Miller (1976) என்ற ஆய்வாளர் இன முஸ்லிம்கள் மத்தியிலும், Prd பிலிப்பைன்ஸ் முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிம்களும் மேற்குறிப்பிட்ட சமய - சமமாக கொள்ளப்படவேண்டியவர்களா
3.2.4 சமூக அடிப்படைகள் :
முல்லைத்தீவு மாவட்டத்தின் போக்கினை இப்பிரதேச முஸ்லிம்கள்

4 மொழியில் மேலும் பாண்டித்தியம் சங்களில் காணப்பட்ட அரபு உயர் பந்தார்கள். வேறு பலர் வெளிநாடுகள்
சேர்ந்த முகம்மது உசன் ஆலிம் இஸ்லாமிய சட்டக் கலைகளும் கற்று ம் ஏனைய சமய பாண்டித்தியம் ல்லாமும், இஸ்லாமிய சமய வழி வந்த முல்லைத்தீவு முஸ்லிம்களின் மத்தியில் றன.
மத்தியில் நடைமுறையில் இருக்கும் ல் பின்பற்றப்பட்ட கலாசார நிகழ்வுகள் பிலிருந்து வேறுபட்டுக் காணப்பட்டன. பண், சிறார்களின் உடைகள், உணவு தோம்பல் முறைகள் போன்றனவற்றிலும் 5 இம்மக்கள் மத்தியில் காணமுடிந்தது.
ஒரு இன-கலாசார குழுவிற்கான கின்றன. மேற்குறித்த காரணங்களால் கள் முல்லைத்தீவில் தனித்துவமான ல் அடையாளப் படுத் தப் பட் டு,
வழிமுறை வந்த இனத் தனித்துவம் கப்பட்டுள்ளது. உதாரணமாக Weekes தனித்துவத்தை நைஜீரிய முஸ்லிம்கள் அறிஞர் சீன முஸ்லிம்கள் மத்தியிலும், தென்னிந்திய மாப்பிள்ளை, லெப்பை evencter (1978) என்ற ஆய்வாளர் 5 அவதானித்துள்ளனர். முல்லைத்தீவு இன தனித்தவம் கொண்ட மக்களுக்கு
வர்.
பொதுவான சமூக அபிவிருத்திப் மத்தியிலும் அவதானிக்கக் கூடியதாக

Page 65
இருக்கின்றது. இந்த அடிப்ப வளர்ச்சிப்போக்கை முதலில் நோக் பிரதான முஸ்லிம் பாடசாலைகள் ! முஸ்லிம்களின் கிராம மட்டத்திலான இருந்தன. இதில் தண்ணீரூற்று கு மகா வித்தியாலயம், இப்பிரதேச குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திரு ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. வளர்ச்சிக்கும் ஆரம்பக்காலக்கட்டங்க லெவ்வாமா அப்பா ஹபீப் முகம்! அழைக்கப்படும் அகமது லெப்பை கூரத்தக்கவையாகும். இது போல் தன சேர்ந்த வேறு பல பிரமுகர்கள், தமிழ், ( வளர்ச்சிக்கு தொண்டாற்றி இருக்கி வெளியேற்றத்தின் போது தண்ணீரூ பெரிய கட்டடங்களையும், 40 ஆ மாணவர்களையும் கொண்டிருந்தது. ! ஓங்கக் கூடிய எல்லாச் சூழ்நிலைகள்
இது போல முல்லைத்தீக். குடியிருப்பிலும் முஸ்லிம் பாடசால் முஸ்லிம் மாணவர்கள் உயர் கல் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் சென்று காணப்பட்டது. இந்த அடிப்பன பாடசாலையிலும், முல்லைத்தீவு நகர ! உயர் வகுப்புக்களில் முஸ்லிம் மா ை
இலங்கையில் கல்வி ரீதியாக கருதப்படுகின்றது. அதற்கு முக்கி. பல பிரதேசங்களுடன் ஒப்பிடும் பே ஆசிரியர்கள் ஆகியவற்றைப் பொறுத் வசதிகள் பின்தங்கிய நிலையில் கான வாய்ப்புக்களைப் பயன்படுத்தி முல்லை

IெII
மாக
டெகளில் முஸ்லிம்களின், கல்வி குவோம். முல்லைத்தீவில் மூன்று ாணப்பட்டன. இவை இப்பிரதேச
கல்வி வளர்ச்சிக்குக் காரணமாக டியிருப்பில் அமைந்திருந்த முஸ்லிம் முஸ்லிம்களின் கல்வி விருத்தியில் க்கின்றது. இப்பாடசாலை 1934ஆம் இப்பாடசாலையின் தோற்றத்திற்கும், ளில் உழைத்தவர்கள் பலர். அதில் து என்பவரதும், மனேஜர் என்று ன்பவரதும் பணிகள் இன்று நினைவு எணீரூற்று, நீராவிப்பிட்டி பிரதேசத்தைச் முஸ்லிம் ஆசிரியர்கள் இப்பாடசாலையின் ன்றார்கள். முஸ்லிம்களின் பலவந்த ற்று முஸ்லிம் மகா வித்தியாலயம் 8 ஆசிரியர்களையும், ஏறக்குறைய 900 இப்பிரதேசத்தில் கல்வி மேலும் வளர்ந்து நம் அன்று அங்கு காணப்பட்டன. வு நகரத்திலும், முத்தையன்கட்டுக் லைகள் இருந்தன. அதே நேரத்தில் விக்காக தமது சுற்றாடலில் இருந்த கற்கின்ற வழமையும் முல்லைத்தீவில் டயில் முள்ளியவளை வித்தியானந்த 5மிழ் மகா வித்தியாலயத்திலும் குறிப்பாக எவர்கள் கல்வி கற்று வந்தனர்.
பின்தங்கிய மாவட்டமாக முல்லைத்தீவு மான காரணம் இலங்கையின் ஏனைய மது பாடசாலை வசதிகள் தகுதியான தவரை முல்லைத்தீவு மாவட்ட கல்வி -ப்படுகின்றமையாகும். கிடைத்த கல்வி தீவு தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும்

Page 66
அட்டன்
1990ம் ஆண்டில் முல்லைத்தீவு முஸ்லிம்
கல்வி நிலை
அதிபர்
ஆசிரியர்
கிராம சேவையாளர்
எழுதுவினைஞர்
சிற்றுாழியர்கள்
கூட்டுத்தாபன ஊழியர்கள்
ஏனைய அரச உத்தியோகத்தர்
உலமாக்கள்
பட்டதாரிகள்
பல்கலைக்கழக மாணவர்கள்
சமூக சேவையாளர்கள்
மூலம் : வெளிக்கள ஆய்வு, 1!
. ਲ ਦਾ ਕ

1ணை -2
கல்வியாளர்களும், சமூக சேவையாளர்களும்
எண் ணிக்கை
56
0 2
02
07
13
கள்
06
15
04
அ
அ.
40
96

Page 67
தமது கல்வி ஆற்றலைப் பெருக்கி | முஸ்லிம்கள் தமக்குக் கிடைத்த மட்டு முறைப்படி பயன் படுத்தி கல்வி ரீதியாக
முல்லைத்தீவு முஸ்லிம்களின் பல கல்விக் குறிகாட்டிகள் சுட்டிக்கா ஆண்டின் குடிசனக் கணிப்பீட்டு வி! எழுத்தறிவு தேசிய எழுத்தறிவை விடவும் விடவும் உயர்வாகக் காணப்பட்டது.
அது போல முல்லைத்தீவில் பூரணப்படுத்தியவர்களின் எண்ணிக்ை மத்தியில் உயர்வாகக் காணப்பட்டது. உலமாக்கள், அரசாங்க ஊழியர்கள், கல்வியாளர்கள் சமூக சேவை மன. காணப்பட்டனர். இதனை அட்டவன் இவ்வட்டவணையில் 1990இல் முல்லை நிலை காட்டப்பட்டுள்ளது. இவ் அ முல்லைத்தீவு முஸ்லிம்கள் மத்தியில் உலமாக்கள், 30 அரசாங்க உத்தியோ. 40 சமூக சேவையில் தன்னை ஈடு காணப்பட்டார்கள். இதைவிட இங்கு சார்ந்த கற்றவர்கள், சமூகப் பெரிய முல்லைத்தீவு முஸ்லிம்கள் மத்தியில்
ம601
கா
3.2.5. சமய, கலாசார அடிப்பு
இஸ்லாம் முல்லைத்தீவு முஸ்லி என்றும் மிக உறுதியாக இருந்து முன்னர் முல்லைத்தீவில் தவளம் (மாட செய்து வந்த ஆரம்பகால முஸ்லிம் கோரப்பிடியில் அகப்பட்டு அல்லல் | இம்மக்களின் இதயத்தைத் தொட்ட கு நம்பிக்கையும், அதன் வழிமுறைகளு

பந்தார்கள். குறிப்பாக முல்லைத்தீவு ப்படுத்தப்பட்ட கல்வி வாய்ப்புக்களை, உயர் தேர்ச்சியினைப் பெற்றிருந்தார்கள். ஒப்பீட்டு ரீதியான கல்வித் தேர்ச்சியை ட்டுகின்றன. உதாரணமாக 1981 ஆம் பரப்படி முல்லைத்தீவு முஸ்லிம்களின் > முல்லைத்தீவு மாவட்ட எழுத்தறிவை
இடைநிலை, உயர் நிலைக் கல்வியைப் கயும் ஒப்பீட்டு ரீதியாக முஸ்லிம்கள் முல்லைத்தீவு முஸ்லிம்கள் மத்தியில் பல்கலைக்கழக மாணவர்கள், ஏனைய பாங்கு கொண்டவர்கள் பரவலாகக் மண-2 தெளிவாகக் காட்டுகின்றது. லத்தீவு முஸ்லிம்களின் கல்வித் தேர்ச்சி ட்டவணைப்படி 1990ஆம் ஆண்டில்
56 ஆசிரியர்கள், 4 அதிபர்கள், 15 கத்தர்கள், 4 பட்டதாரிகள் அத்துடன் படுத்திக் கொண்டவர்களும் அன்று குறிப்பிடப்படாத வேறு பல துறைகள் பார்கள், சேவையாளர்களும் அன்று
வாழ்ந்து வந்தார்கள்.
படைகள் :
ம்களின் நம்பிக்கையில் அதாவது ஈமானில் வந்தது. பல நுாற்றாண்டுகளுக்கு டுவண்டி மூலம்) முறையில் வர்த்தகம் களில் இருந்து இனப்பிரச்சினையின் பட்ட இன்றைய முஸ்லிம்கன் வரை அம்சமாகக் காணப்பட்டது இஸ்லாமிய மாகும் “முல்லைத்தீவு முஸ்லிம்கள்"

Page 68
என்ற தனித்துவம் இம்மக்கள் வா காணப்பட்டமைக்கு இம்மக்களின் சி முறையே காரணமாக அமைந்தது. பாரம்பரியத்தை கட்டிக் காப்பதற்கு பிரதேசங்களில் இருந்து மார்க்கப் பிரச் தொண்டர்களும் காரணமாக இருந்
முல்லைத்தீவின் மிக அண் போது முல்லைத்தீவு முஸ்லிம்களின் - உலமாக்களும், கற்றவர்களும் அதே தார்மீக அமைப்புக்களும் தொண் அடிப்படையில் முல்லைத்தீவு முஸ். சற்று விபரமாக நோக்குவோம்.
முஸ்லிம்களின் சமய, சமூக, முல்லைத்தீவில் முஸ்லிம்கள் செறி பள்ளிவாயில்கள் காணப்பட்டன. இப் நேரக் கூட்டுத் தொழுகைக்குரிய இட கிராம அல்லது நகரச் சூழலில் வாழ் ஒவ்வொரு நாளும் ஐந்து முறை ெ பிரிந்தார்கள். இச்சந்திப்பு தமது க இவர்களுக்கு வாய்ப்பாகவும் அமைந்த சமய, சமூக, கலாசார ரீதியாக இ பள்ளிவாயில் காணப்பட்டது. பள்ளி. வளர்த்தது. ''முஸ்லிம் ;'' என்ற இனத் செய்யக் காரணமாயிற்று. படம் - பயன்படுத்தப்பட்ட சமய, கல்வி நி அமைவினையும் தருகின்றது.
முல்லைத்தீவில் தண்ணீரூ. பள்ளிவாயில்கள் காணப்பட்டன. கணு பள்ளிவயில் ஒன்றின் சிதைவுகள் | ஈடுபாடுகளையும், அக்கால சமய பின் பலவந்த வெளியேற்றத்தின் போது தம் நின்று தொழக்கூடிய வசதிகள் கான

மந்த பிரதேசங்களில் மிகத்தெளிவாகக் மய வழி முறையில் வந்த வாழ்க்கை காலா காலமாக இம்மக்களின் சமய உள்ளூர் மார்க்க அறிஞர்களும், பிற -சாரத்திற்கு வந்த மார்க்க மேதைகளும், திருக்கின்றார்கள். மெக்கால வராற்றை எடுத்துப் பார்க்கும் அண்மைக்கால சமய விளிப்புணர்ச்சிக்கு
நேரத்தில் தப்லீக் ஜமாஅத் போன்ற டாற்றி வந்திருக்கின்றனர். இந்த லிம்களின் இஸ்லாமிய சூழலைப் பற்றி
கலாசார மையம் பள்ளிவாயில் ஆகும். பிந்து வாழ்ந்த பிரதேசம் எங்கிலும் பள்ளிவாயில்கள் முஸ்லிம்களின் ஐந்து மாகக் காணப்பட்டன. ஒரு குறிப்பிட்ட ந்த முஸ்லிம்கள் குறிப்பாக ஆண்கள் தாழுகைக்காகப் பள்ளிவாயிலில் கூடிப் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்ள தது. அது மட்டுமன்றி முஸ்லிம்களை ணைத்து வைக்கும் ஸ்தலமாகவும் வாயில் முஸ்லிம் இன ஐக்கியத்தை தனித்துவத்தையும் இது வலுவடையச் 4 முஸ்லிம்களால் முல்லைத்தீவில் லையங்களின் பெயர்களையும், இட
ற்று முஸ்லிம் கிராமச் சூழலில் பல க்கேணி சந்தியில் காணப்பட்ட பழைய முஸ்லிம்களின் ஆரம்பகால வணக்க னணியையும் எடுத்துக்காட்டுகின்றன. ன்ணீரூற்றுப் பள்ளிவாயிலில் 400 பேர் ப்பட்டன. இப்பள்ளிவாயில் 80 அடி

Page 69
படம் 4: முல்லைத்தீவு பயன்படுத்தப்பட்ட சமய
- - - -
கடல் நீரேரி (நந்திக்கடல் )- - -
- - - -
- -
T. )
மஸ்ஜிதுன் நூரானியா
ஜூம்மாப்பள்ளி, மதுரசாமுகைதீன் 8
மதுரசா பெரியபள்ளி புதிய பள்ளிவாசல் மாங்குளத்திற்கு
"தண்ணியூற்று - பழைய பள்ளிவாசல்
- முஸ்லிம் வி
பக்கீரப்பா
(வவுனியாவிற்கு
2 முற
முறிப்பு த. மூலம்: வெளிக்கள ஆய்வு. 1996. இ

1 முஸ்லிம்களால் , கல்வி நிலையங்கள்
வ
- - - - - - - சுபஹானி மஹ்பூப் ஜும்மாப்பள்ளி துரசாக முல்லைத்தீவு முஸ்லிம்
கல்விப்பாடு வித்தியாலயம்
- - - - -
கடல்
-
- -
ஜூம்மாப்பள்ளி
பித்தியாலயம்
கபுரடி
மைல்
இப்புப் பள்ளிவாயில் க்கிய்யா
கொக்கிளாய் ஸ்து
லங்கை இடவிளக்கப்படம். 197.

Page 70
நீளமும், 30 அடி அகலமும் ெ நீராவிப்பிட்டியில் காணப்பட்ட ம
ஹிஜ்ராபுரத்தில் அமைந்துள்ள மு ை முஸ்லிம்களின் நாளாந்த பயன்பாட்டில் (படம் -4). மஸ்ஜிதுன் நூரானியா ? ஜூம்மாப்பள்ளியில் 350 பேரும் ஒரெ
அப்போது காணப்பட்டது.
முல்லைத்தீவு நகரத்தில் வா சுப்ஹானி மஃபூப் ஜும்ஆப் பள்ளி வாழ்ந்தார்கள். முஸ்லிம்கள் எண்ணி முறிப்பு, முத்தையன்கட்டு போன்ற அழைக்கப்படும் சிறிய பள்ளிவாயில் குடியிருப்பு தோறும் முஸ்லிம்களின் என்று அழைக்கப்படும் சிறார்களுக் காணப்பட்டன. முல்லைத் தீவு பள்ளிவாயில்கள், பாடசாலைகள், அர படம்-4 இல் தெளிவாகக் காட்டப்பு
மிக ஆரம்ப காலத்தில் இரு சமூக ரீதியாக இலங்கையின் ஏனை. மத்திய கிழக்கு முஸ்லிம் நாடு இருந்திருக்கின்றார்கள். முல்லைத் முல்லைத்தீவு முஸ்லிம்களின் சம்! வந்து உதவினார்கள் என்பதை மு
முல்லைத்தீவு முஸ்லிம்கள் அமைப்பின் பங்கினையும் இங்கு எடு தப்லீக் ஒரு சமயப்பிரச்சார அமைப் பிரச்சார இயக்கம் முல்லைத்தீவு மு வைக்கப்பட்டது. இது அரசியல் றே ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகும். 1960இல் இருந்து சமயப் பிரசார கே ஜமாஅத்தினர் முஸ்லிம்களை சமய நெறிப்படுத்த பாடுபட்டு வந்தனர்.

காண்ட கட்டடமாகும். இது போல ஸ்ஜிதுன் நூரானியா ஜூம்மாப்பள்ளி, கதீன் ஜூம்மாப்பள்ளி என்பன இப்பிரதேச இருந்துவந்த வணக்க ஸ்தலங்களாகும் ஜூம்மாப்பள்ளியில் 500 பேரும், முகைதீன் - நேரத்தில் நின்று தொழக்கூடிய வசதி
Tபன
முந்த முஸ்லிம்கள், நகரில் அமைந்திருந்த யை மையமாகக் கொண்ட சமூகமாக க்கையில் குறைவாக வாழ்ந்த கல்விப்பாடு,
பிரதேசங்களிலும் "தக்கியா" என்று ல்களும் அமைந்திருந்தன. முஸ்லிம் - அரபு மொழித் தேர்ச்சிக்காக, மதுரசா கான அரபு கற்பிக்கும் பாடசாலைகளும்
முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்ட பு கற்பிக்கும் கல்விக் கூடங்கள் என்பன பட்டிருக்கின்றன. நந்து முல்லைத்தீவு முஸ்லிம்கள் சமய, ய பிரதேசங்களுடனும், இந்தியாவுடனும், நிகளுடனும் தொடர்புடையவர்களாக தீவில் லெப்பை குடுப்பத்தினர் எவ்வாறு ய வளர்ச்சிக்கு இந்தியாவில் இருந்து ன்னர் அறிந்தோம். ரின் சமய எழுச்சியில் தப்லீக் பிரச்சார மத்துக் கூற வேண்டியது அவசியமாகும். பாகும். 1960 ஆம் ஆண்டுகளில் தப்லீக் -ஸ்லிம்கள் மத்தியில் அறிமுகம் செய்து நாக்குக் கொண்டதல்ல என்பது பலரால் - இப்பகுதியில் தப்லீக் ஜமாஅத்தினர் வலைகளில் ஈடுபட்டு வந்தனர். தப்லீக் , சமூக, கலாசார ரீதியாக இஸ்லாமிய தப்லீக் ஜமாஅத்தினரின் செயற்பாட்டால்

Page 71
""அ.
முல்லைத்தீவு முஸ்லிம்களினது நடவடிக்கைகளும் அதிகரித்தன. த ஒரு சாதகமான சமய, சமூக மாற்ற இல்லை. தப்லீக் ஜமாஅத்தினரின் மையமாக நீராவிப்பிட்டியின் மஸ்ஜிதுன்
3. 2. 6. சமூக சேவையாளர்கள்
முல்லைத்தீவு முஸ்லிம்களின் பொருளாதார விளிப்புணர்ச்சிக்கும், வ பாடுபட்டனர். இவர்களில் சிலரை அவசியமாகும். இவர்களில் கல்வி வரிசையில் நீராவிப்பிட்டியைச் சேர்ந்த ஹப்பு முகம்மது அவர்களும், அது பே லெப்பை அவர்களும் குறிப்பிடத்த அடிப்படையில் தொண்டாற்றியவர்க முதலாவது ஆலிம் பட்டம் பெற்ற மெளலவி முகம்மது உசன் ஆலிம் பரம்பரையில் வந்த காதர் மொஹிதீ. புதல்வர் அப்துல்லா லெப்பை அவர்களு முல்லைத்தீவு நகரைச் சேர்ந்த கெ கொடையால் முஸ்லிம்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்த ஒரு பெரியாராவர் மருத்துவ ஆற்றலும் கொண்டிருந் முஸ்லிம்களின் மனதில் என்றும் வாழ
முல்லைத்தீவில் முஸ்லிம்கள் அப்பால் செய்யப்பட்ட சமூக சேவை ம சேவையின் மூலமாக முஸ்லிம் வைத் பாலமாகக் காணப்பட்டனர். இந்த முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கும் தொண்டாற்றிய சில முஸ்லிம் பெரி வேண்டியது அவசியமாகும்.
n

மய அறிவும், இஸ்லாமிய கலாசார ப்லீக் ஜமாஅத் இம்மக்கள் மத்தியில் த்திற்கு உதவியது என்பதில் ஐயம் முல்லைத்தீவுப் பிரதேச செயற்பாட்டு நூரானியா பள்ளிவாசல் காணப்பட்டது.
சமய, சமூக, கல்வி, கலாசாரத்துடன் ளர்ச்சிக்கும் முஸ்லிம் பெரியார்கள் பலர் இங்கு நினைவுபடுத்த வேண்டியது வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்களின் சமூகப் பிரமுகர் ஜனாப் மீரான்கண்டு - பால தண்ணீரூற்றைச் சேர்ந்த அஹமத் க்கவர்களாவர். அதே போல சமய ளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வரும் பல் மொழி விற்பன்னருமான என்பவரும் அது போல லெப்பைப் ன் லெப்பை அவர்களும் அவர்களின் ம் நினைவில் நிற்க வேண்டியவர்களாவர். காடைவள்ளல் தம்பிக்கண்டு தனது - - முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியிலும் - இந்த வரிசையில் புலமைத்துவமும் த மிஸ்கீன் புலவரும் முல்லைத்தீவு
பவராவர். சால் இன, சமய, வரை முறைகளுக்கு ருத்துவ சேவையாகும். இம்மருத்துவ திேயர்கள் முஸ்லிம் - தமிழ் உறவிற்குப்
அடிப்படையில் வைத்திய ரீதியாக , முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் யார்களை இங்கு நாம் நினைவு கூர

Page 72
முல்லைத்தீவில் முஸ்லிம்கள் வைத்திய சேவையை செய்து வருகின் மன்னனுக்கும், மக்களுக்கும் தொன நாம் இந்நுாலின் வரலாற்றுப் பகுதியி
இந்த வைத்திய வழி முன் நெய்னா முகைதீன் சாகிபு எனப்படும் பி முகைதீன் சாகிபு வைத்தியர் 19144 திகதி நீராவிப்பிட்டிக் கிராமத்தில் பிறந் இருந்து வைத்தியத்தில் தேர்ச்சி பெற் ஏனைய விஷ ஜந்துக்களால் பாதிக்கப் அவர்களின் நோயைக் குணப்படுத்து விஷக்கடி வைத்திய தேர்ச் சிறை உத்தியோகத்தர்கள் இவரின் வைத்திய வழி செய்தனர். 1975ஆம் ஆண் சேவையை கௌரவித்து அனுமதி பெ அனுமதிப்பத்திரம் முல்லைத்தீவு அர.
முகைதீன் சாஹிபு வைத்தியர் வைத்தியத்தையும் செய்து வந்தார். மு இவரிடம் வைத்தியம் பார்ப்பதற்கு மக்க நீராவிப்பிட்டியில் அமைந்திருந்த இ வாட்டுக்களில் நோயாளிகள் தங்கி சி ஆண்களுக்கும், மற்றயது பெண். முகைதீன் சாகிபு வைத்தியர் தனது ல எதிர் பார்ப்பதில்லை.
நீராவிப்பிட்டி முகைதீன் சா பெற்ற மற்றும் ஒரு முஸ்லிம் வைத் ஆவார். சுலைமான் லெப்பையின் த சுலைமான் லெப்பை முல்லைத்தீவில் பி வைத்தியத்திலும் இவர் தேர்ச்சி பெற்
முகைதீன் சாஹிபு வைத்திய தமது வைத்தியப்பணிகளைச் செய்து

வரலாற்றுக்காலத்தில் இருந்து தமது றனர். முஸ்லிம்கள் ராஜ வைத்தியர்களாக ஸ்டாற்றி இருக்கின்றார்கள். இதனை பல் நோக்கினோம்.
றகளில் வரும் ஒருவர்தான் லெப்பை "ரபல்யம் பெற்ற விசக்கடி வைத்தியராவர். ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தார். இவர் தமது இளமைக் காலத்தில் மறவராகக் காணப்பட்டார். நச்சுப்பாம்பு , ப்பட்ட மக்களுக்கு வைத்தியம் செய்து
வதில் இவர் வல்லவராவார். இவரின் ய உணர்ந்த உள்ளூர் அரசாங்க சேவை மற்றவர்களுக்கும் கிடைப்பதற்கு ந பெப்ரவரி 25ஆம் திகதி இவரது பற்ற வைத்தியராக சேவை செய்வதற்கு சாங்க அதிபரால் வழங்கப்பட்டது.
விசக்கடி வைத்தியத்தோடு, ஆயுர்வேத மல்லைத்தீவின் பல பகுதிகளிலிருந்தும் ள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருப்பர். வரது வைத்தியசாலையில் இரண்டு கிச்சை பெற்றார்கள். அதில் ஒன்று களுக்குமாக ஒதுக்கப்பட்டிருந்தது. வைத்திய சேவைக்கு பணப்பிரதிபலனை
ஹிபு வைத்தியரைப் போல பிரபல்யம் தியர் சுலைமான் லெப்பை வைத்தியர் ந்தையார் பெயர் மீரா லெப்பையாகும். றந்தார். ஆயுர் வேதத்திலும், விஷக்கடி ரவராகக் காணப்பட்டார்.
ர் அவர்கள் அகதி மக்கள் மத்தியில் வருகின்றார். பக்கீர் அப்துல் கமீது

Page 73
என்பவர் வைத்தியப்பரம்பரையில் வந்த மீஸ்கீன் புலவரின் பேரரான இவர் பரப்ப பணியாற்றுகின்றார். இவர் தற்போது ந
வசிக்கின்றார்.
3.3 அரசியல்:
முஸ்லிம்களின் அரசியல் ஈடு தனித்துவ அம்சங்களை முல்லைத் இருக்கின்றன. அதில் முக்கியமானது பிரதேசத்தின் அரசியல் பாரம்பரியத்துட இணைத்துக் கொண்டிருந்தமையா இப்பகுதியில் பிரபல்யம் பெற்றிருந்த சீ கட்சியை முல்லைத்தீவு முஸ்லிம்கள் பொதுத் தேர்தலில் தண்ணீரூற்றைச் .ே போட்டியிட்ட போது அவர் முல்லை, பற்றுடன் அவரை முஸ்லிம்கள் - பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைச் செல்லத்தம்பு அவர்களின் தலைமை சந்தர்ப்பத்திலும், சுயேட்சையாகப் போட்டி ஆசிரியரையும், பொன் சந்திரசேகரி அவ
இவ்வாறான முல்லைத்தீவின் தமது அரசியல் பாரம்பரியத்தையும் முன் தன்மையை மாவட்ட அபிவிருத்தித் தே பட்டின சபை, முள்ளியவளை கிராம ச கூடியதாக இருக்கின்றது.
பட்டின் சபை, கிராம சபை வாழ்ந்த வட்டாரங்களுக்கு முஸ்லிம் - முல்லைத்தீவில் கபணப்பட்டது. இ சபைக்கு டி.எம். இபுராகிம் என்பவர் இதே போல 1958 - 1970 ஆம் ஆண் கிராமசபை வட்டாரத் தேர்தல்களில் கே

வர். அப்துல் காதர் வகாப் வைத்தியர், பேரையான வைத்தியராக வைத்தியம் பரைச்சோலையில் கல்முனைக்குடியில்
பொட்டிலும், நடவடிக்கையிலும் பல தீவில் அவதானிக்கக் கூடியதாக முஸ்லிம்கள் தாம் வாழ்ந்து வந்த ன் தமது அரசியல் அபிலாசைகளை கும். சுதந்திர காலக்கட்டத்தில் - சுந்தரலிங்கத்தின் அடங்காத் தமிழர்
ஆதரித்தார்கள். 1960 ஆம் ஆண்டு சர்ந்த டீ.சிவசிதம்பரம் சுயேட்சையாகப் த்தீவைச் சேர்ந்தவர் என்ற பிரதேசப் ஆதரித்தனர். 1977ஆம் ஆண்டு 5 கூட்டணி, முல்லைத்தீவில் திரு மயில் முனைப்பாகப் போட்டியிட்ட டயிட்ட உள்ளூரைச் சேர்ந்த விக்னராஜா ர்களையும் முஸ்லிம்கள் ஆதரித்தனர். - உள்ளூர் அரசியல் போக்கிற்கேற்ப ஸ்லிம்கள் அமைத்துக் கொண்டிருந்த ர்தல்களிலும், அதேபோல முல்லைத்தீவு சபைத் தேர்தல்களிலும் அவதானிக்கக்
ப மட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து அங்கத்தவர்கள் போட்டியிடும் வழமை ந்த வகையில் முல்லைத்தீவு பட்டின
பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். டுக் கலகட்டத்தில் முள்ளியாவளை க. அகமது லெப்பை, எம். எம். சரீப்,

Page 74
எம். ஆப்தீன், கே.எம்.சரீப், எம். முகிதீன் சாகிபு ஆகியவர்கள் தேர்ந் முல்லைத்தீவு கூட்டுறவுச் சங்கச் சன எம்.எம்.சரீப், எம்.எஸ். பரீத், கே செய்யப்பட்டிருந்தனர்.
பட்டின, கிராம சபைத் தேர்தல் பிரஜைகள் குழு போன்றவைகளிலும் 1 போது தமிழ் மக்கள் பெரும் தன்மை வழமை முல்லைத்தீவில் இருந்து மட்டத்திலுமான தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் நலன்களை கருத்தி நிறைவேற்றி வந்திருக்கின்ற வழ.ை இருந்து வந்திருக்கின்றது. இதற்குச் தண்ணிமுறிப்பு குடியேற்றத் திட்டத் அடிப்படையில் வழங்கப்பட்ட விவ அவர்களால் 1962 ஆம் ஆண்டில் 8 வி.சி.புரம் என்ற பெயரில் ஆரம்பித்து 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி வெளியேற்றப்பட்டு மீண்டும் குடியேற்ற பிரஜைகள் குழவினரால் 4 முஸ்லிம்கள் இவற்றுக்கு சில உதாரணங்களாகு பொதுத் தேர்தலில் முஸ் லிம் களி காணப்படுகின்றது. இத்தேர்தல் ! முஸ்லிம்களில் அரைவாசிப்பகுதியின. வாழ்ந்து வந்தனர். இத்தேர்தலில் ஸ்ரு போட்டியிட்டது. முஸ்லிம் காங்கிர கே, டி. அப்துல் றகீம், எஸ்.எச். வன்னித் தேர்தல் தொகுதிக்குப் போட முல்லைத்தீவு முஸ்லிம்களும் போட்டி இத்தேர்தலில் முல்லைத்தீவு முஸ்லிம்க காங்கிரசில் போட்டியிட்ட தமது 2 வேட்பாட்பாளர்களையும் ஆதரித்தனர்.

எம். அபூபக்கர், எஸ்.ஏ.காதர், சி.எம். தெடுக்கப்பட்டிருந்தார்கள். இது போல Dபக்கு 1970-89 ஆண்டுகளுக்கிடையில் 5. எம். கெளது ஆகியோர்கள் தெரிவு
மகளிலும் கூட்டுறவுச் சங்கம், மாவட்டப் முஸ்லிம் அங்கத்தவர்கள் போட்டியிடுகின்ற மயோடு முஸ்லிம்களை தெரிந்தெடுக்கும் ப வந்தது. அதுமட்டுமன்றி எல்லா தமது பதவிக்காலங்களில் முல்லைத்தீவு ல் கொண்டு சிரத்தையோடு அவற்றை மயும் முல்லைத்தீவில் நெடுங்காலமாக = சான்றாக சி. சுந்தரலிங்கம் அவர்களால் இதில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை சாயக் காணிகளும், டி.சிவசிதம்பரம் இன்றைய ஹிஜ்ராபுரம் என்ற இடத்தில்
வைக்கப்பட்ட குடியேற்றத்திட்டமும், காக்கும் படையினரால் முஸ்லிம்களை ப்பட்ட போது முல்லைத்தீவு மாவட்டப் ளுக்கு செய்யப்பட்ட பாரிய உதவிகளும் தம். இந்நிலை 1989 ஆம் ஆண்டு ன் ஈடுபாட்டில் சிறிய வேறுபாடு நடைபெற்ற காலத்தில் முல்லைத்தீவு ர் அகதிகளாக புத்தளம் மாவட்டத்தில் ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஸ் சார்பாக முல்லைத்தீவைச் சேர்ந்த முகம்மது ராஜா ஆகிய இருவரும் ட்டியிட்டனர். பொதுத்தேர்தல் ஒன்றில் பிட்டது இதுவே முதல் தடவையாகும். ளில் மிகப் பெரும்பான்மையினர் முஸ்லிம் வரவரும், உறவினருமான இவ்விரு 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும்

Page 75
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியி முஸ்லிம்கள் ஆதரித்தனர்.
குறிப்
இக்கருத்து முல்லைத்தீவின் நீராவிப்பு பூலாச்சேனையில் வசிப்பவருமான லெ தரப்பட்ட வாய்மூல ஆதாரங்களை அ
இக்கருத்து முல்லைத்தீவைச் சேர்ந்த காதர், எம். கச்சு முகம்மது என்பவர் கொண்டது.
3.
கோலாட்டம், களிகம்பு என்றும் அழை. பரவலாக இக்கலை நிகழ்ச்சி வழக்கில
இப்பிரஜைகள் குழுவில் சில பெயர் ( முல்லைத்தீவு முஸ்லிம்களின் நலனில் ப அதில் சந்திரா மாஸ்டரைத் தலைவராக ஆசிரியர், ஆர். விக்னராஜா ஆசிரிய சுப்பிரமணியம், சங்கரப்பிள்ளை ஆசிரிய முள்ளியவளைப் பிரஜைகள் குழு குறி

ட்ட கே.டி. அப்துல் றகீம் அவர்களை
புகள்
பிட்டியைச் சேர்ந்தவரும், தற்போது புத்தளம் பப்பை நெய்னா முகைதீன் சாஹிப் என்பவரால்
டிப்படையாகக் கொண்டது.
த மீராக்கண்டு சம்சுதீன், சுல்தான் அப்துல் ஈகளால் தரப்பட்ட வாய்மூல ஆதாரங்களைக்
க்கப்படும். இலங்கை முஸ்லிம் கிராமங்களில் B இருந்து வருகின்றது.
தறிப்பிடப்பட வேண்டிய தமிழ்ப் பிரமுகர்கள் மிக அக்கறையோடு உதவி செய்து வந்தார்கள். கவும், கே.கதிரவேலு ஆவசிரியர், முத்தையா பர், கே.தியாகராஜா ஜே. எஸ். முத்து * ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்ட ப்பிடத்தக்கவர்களாகும்.

Page 76
4. பொருளாதா
டையை
வாழும் சூழல் அதாவது நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் செல் பொருளாதார அடிப்படையை நே இம் மாவட்டத்திற்குள் தொடர்ச்சிய அவதானித்தோம். இறுதியில் ஒரு ெ பிரதேசத்தில் இவர்கள் தம்மை ஸ்திரப்ப கெளரவமான பொருளாதார நடவடிக்க பொருளாதார நடவடிக்கைகளின் மூ உடமையாக்கிக் கொண்டார்கள்.
முஸ்லிம்களுக்கு உரித்தாக இருந்த அமைவுகளும், பரிணாமங் களு முக்கியத்துவங்களும் நோக்கப்படுகின்ற
முல்லைத்தீவில் முஸ்லிம்கள் பொருளாதாரத் துறைகளில் ஏறக்குன ஈடுபட்டு வந்தனர் என்று சேகரிக்கப்பட்ட கிராம மற்றும் விவசாய குடியேற்ற தென்னை, மேட்டுநில விவசாய ந முல்லைத்தீவு நகரத்தில் வாழ்ந்த ( கைத்தொழில், சேவைத் தொடர்புடைய வந்தனர். கடற்கரையோரத்திலும், கள் மீன்பிடியில் அதிகமாக ஈடுபட்டனர். முஸ்லைத்தீவு முஸ்லிம்களின் பொருள் முக்கியத்துவத்தையும் மேலும் சற்று வி முஸ்லிம்களின் தொழில் நடவடிக் காட்டப்பட்டுள்ளது.
4.1 விவசாயம் :
முல்லைத்தீவின் விவசாய நடவ நீரூற்றுக்கள் ஆகியவைகளில் இருந்து நீ

ர அடிப்படைகள்
பாக
இட அமைவு மக்களின் பொருளாதார மவாக்குச் செலுத்துகின்றது. உறுதியான ாக்கி முல்லைத் தீவு முஸ்லிம்கள் பாக இடம் பெயர்ந்ததை முன்னர் பொருத்தமான பொருளாதார பின்னணிப் படுத்திக் கொண்டார்கள். இப்பிரதேசத்தில் கைகளில் ஈடுபட்டு வந்தார்கள். தமது மூலம் பலவகையான சொத்துக்களை இவ்வத்தியாயத்தில் முல்லைத்தீவு பொருளாதார அடிப்படைகளின் இட ம், அவைகளின் பொருளாதார Dன.
விவசாயம், மீன்பிடி, வர்த்தகம் ஆகிய கறய சமனான எண்ணிக்கை அளவில் - தரவுகளிலிருந்து அறிய முடிகின்றது. சூழலில் வாழ்ந்த முஸ்லிம்கள் நெல், டவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். முஸ்லிம்கள் பல தரப்பட்ட வர்த்தக,
தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ப்புச் சூழலிலும் வாழ்ந்த முஸ்லிம்கள்
பிரதான தொழில் அடிப்படையில் ாதார நடவடிக்கைகளையும், அவற்றின் ரிவாக நோக்குவது பொருத்தமானதாகும். கைகளின் பரம்பல், படம் -5 இல்
டிக்கைகள் மழைவீழ்ச்சி, குளநீர்ப்பாசனம், நீர் கிடைக்கும் தன்மைகளில் வெகுவாகத்

Page 77
படம் 5: முல்லைத்தீவு முஸ்லிம்களின் தொழில் அமைப்பு, 1990.
விவசாயம் 29 %
மீன்பிடி 12%
இடம்
(வர்த்தக, கைத்தொழில் 20 %)
பகைகள்

அரசாங்க உத்தியோகம் 4 %
தொழில் வ
ஏனையவுை 23 %
விபரம் தராதவர்கள் 12 %)
10
20
25
30
35
தொழிலாளர் விகிதாசாரம்
மூலம்: அகதி வெளிக்கள் ஆய்வு, 1991.

Page 78
தங்கியுள்ளன. நீர் கிடைக்கும் அளவிற்கு பருவ காலச் செய்கை முறைகளும், வேறுபட்டுக் காணப்பட்டன.
முல்லைத்தீவு முஸ்லீம்கள் விவசாயப் பாரம்பரியத்தைக் கெண்டவ பருவ காலங்களைப் பற்றி சிறந்த அறிவு நிலக்கடலை, ஏனைய உப உணவு பெற்றவர்களாகவும் காணப்பட்டார்கள், நிலங்களும், வற்றாத நீர்ச்சுனைகளும், பற்ற காணப்பட்டன. இப்பிரதேசத்தின் வளமா பாரம்பரியத்தை முஸ்லிம் மக்கள் இப்பிர இருந்தது.
4.1.1. நெற் செய்கை:
முல்லைத்தீவு முஸ்லிம்களில் ரூ முழு நேரத் தொழிலாகச் செய்து வந்தனர். நெல் விவசாயிகள் ஆவர். இவர்களின் நெ பரவலாகக் காணப்பட்டன. படம்-6 மு பிரதேச ரீதியான பரம்பலையும், படம்காட்டுகின்றன.
முதலில் முஸ்லிம்களுக்கு சொ ரீதியான பரம்பலை நோக்குவோம். சொந்தமான நெல் வயல் நிலங்களின் பிரதான வீதிக்கு வடக்காகவும், மறுபகு காணப்பட்டது.
முல்லைத்தீவு - மாங்குளம் வீ சொந்தமான இரண்டு முக்கிய நெற்காணி காணிப்பரப்பையும் வற்றாப்பளை வீதி பி இதில் வற்றாப்பளை வீதிக்குக் கிழக்கா வெளி வயல்;" என்றும் மேற்காகக் .

கற்ப பயிர்களின் வகைகளும், அவற்றின் அறுவடைகளும் இடத்திதுக்கிடம்
கடுமையான உழைப்பாளிகளாகவும், ர்களாகவும் காணப்பட்டனர். இவர்கள் வுடையவர்களாகவும், நெல், தென்னை, விவசாய நடவடிக்கைகளில் தேர்ச்சி முஸ்லிம் கிராமச் சூழலில் வளமான மாக்குறைக்கு குளநீர்ப்பாசன வசதிகளும் ன விவசாயப்பின்னணி சிறந்த விவசாயப் தேசத்தில் கொண்டிருக்க காரணமாக
முன்றில் ஒரு பகுதியினர் விவசாயத்தை - இவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ல் விவசாய நிலங்கள் இம்மாவட்டத்தில் ஸ்லிம்களின் நெல் வயல் நிலங்களின் 8 அவற்றின் உள்ளுர் பெயர்களையும்
ந்தமான நெல்வயல் நிலங்களின் பிரதேச
முல்லைத்தீவில் முஸ்லிம்களுக்குச் ஒரு பகுதி முல்லைத்தீவு - மாங்குளம் தி இப்பிரதான வீதிக்கு தெற்காகவும்
திக்கு வடக்காக முஸ்லிம்களுக்கு ப்பிரதேசங்கள் காணப்பட்டன. இவ்விரு ரித்து நிற்கின்றது (பார்க்க படம்-6). கக் காணப்பட்ட நெல்வயல் "வடக்கு காணப்பட்ட நெல் வயல் “காரையடி

Page 79
வயல்;” என்றும் பெயரிட்டு அழைக்கப் பரப்புகளை படம்-6 தெளிவாகக் காட் வயல் பிரதேசத்தில் மொத்தமாக 57 ஏக் இவ்வடக்கு வெளி வயல் பிரதே மெயிந்திமோட்டை என்ற பெயர்கள் காணித்துண்டுகளும் காணப்பட்டன (
முதலில், வடக்குவெளி வயல் பற்றியும், நீர்ப்பாசன வசதிகள் பற்றியும் உள்ள கள்ளஉரல், புதுத்தரை பகுதி வ. பெரும்போகத்தில் மழை நீரும் அத் பயன்படுத்தப்பட்டன (படம்-6). மழை . நீர்த்தேக்கத்திலிருந்து சுழற்சி முறையில் நீர் வழங்கப்பட்டது. இவ்வாறு இப்பி நீர்த்தேக்கத்தின் அளவைப் பொறுத்து ! இருந்து சிறு போகச் செய்கைக்கு மெயிந்திமோட்டைப் பகுதி நிலங்கள் நீ கொண்டு இப்பிரதேசத்தில் சிறு போகம்
அடுத்து, வற்றாப்பளை வீதிக் வயல் பிரதேசத்தை நாம் நோக்குவோம் அணைக்கட்டிலிருந்து ஆரம்பித்து கிழ. 6, படம்-8 ஐப் பார்க்க) காரையடி வ கெண்டது. காரையடி வயல் பிரதேசத்தி அழகன் என்ற காணித்துண்டுகள் காண பிரதேசங்களில் காணப்பட்ட வயல் நிலங்க நீரைப் பெற்று வந்தன. இதை
வெற்றிலைக்கேணி, குஞ்சுக்குளம் போல காணப்பட்டன. இந்நீர்ச் சுனைகளும், இ பெறும் வயல் நிலங்களும் படம்-6 ! காட்டப்பட்டுள்ளன.
காரையடி வயல் பிரதேசத்தில் பெரும்போகம், சிறுபோகம், இடைப்பே நெற்செய்கை தொடர்ச்சியாக மேற்கெ

பட்டன. மேற்குறிப்பிட்ட நெல் வயல் டுகின்றது. அதில் வடக்கு வெளி கர் நெல் வயல் நிலம் காணப்பட்டது. சத்தில் கள்ள உரல் , புதுத்தரை, மளக் கொண்டு அழைக்கப்படும் அட்டவணை 3உம் படம் - 8உம்). ) பிரதேசத்தின் விவசாய முறைகள் ம் நோக்குவோம். இப்பிரதேசத்தில் பல்களுக்கு கால போகத்தில் அதாவது துடன் முறிப்புக்குள நீர்ப்பாசனமும் ழ்ேச்சி கூடிய காலங்களில் முறிப்புக்குள் இப்பிரதேச சிறு போகச் செய்கைக்கு ரதேச சிறுபோகத்திற்கு முறிப்புக்குள் நீர் வழங்கப்படும். முறிப்புக்குளத்தில்
நீர்ப்பாசன நீர் கிடைக்காதபோது ர்ச்சுனையில் இருந்து வரும் நீரைக்
செய்கை பண்ணப்பட்டது. கு மேற்காகக் காணப்படும் காரையடி ம். இவ்வயல் பிரதேசம் நீராவியூற்று க்காக பதிந்து காணப்பட்டது (படம்யல் பிரதேசம் 51 ஏக்கர் பரப்பினைக் ல் காரையடி, போண்டா, பள்ளவெளி, ப்பட்டன. இயற்கையின் கொடையால் கள் நிராவி நீரூற்றிலிருந்து நீர்ப்பாசன விட இப்பிரதேசத்தின் புதறியுடா, ஏற ஏனைய வற்றாத நீர்ச் சுனைகளும் நநீர்ச் சுனைகளில் இருந்து நீர்ப்பாசனம் இலும், படம் -8 இலும் தெளிவாகக்
உள்ள சற்று உயர்ந்த பகுதிகளில் ஏகம் ஆகிய மூன்று பருவங்களிலும் பள்ளப்பட்டது. அதே வேளையில்

Page 80
நீர்ச்சுனைக்கு அண்மையில் அமை போகம் மாத்திரம் செய்கை பண்ண இத்தாழ் நிலப் பகுதியில் நீர் தேங்கி போதிய நீர் பெறும் காரையடி வய வரட்சியின் போதும் பாதிக்கப்படுவதில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக் கூடிய வ கிடைத்தது. இக்காரணங்களால் இ ஏனைய இடங்களை விட அதிகமாக சிறு போகத்தில் மூன்று தொடக்கம் செய்யப்படுவதுண்டு. அட்டவணைகாட்டுகின்றது. படம் 6உம், 8உம் அருவிகளையும், நீர்ப்பாசனக் கால்வ
முல்லைத்தீவு - மாங்குள பிர. வயல் நிலங்களை அடுத்து பார்ப்பே வீதிக்குத் தெற்காக வீராங்கயராய தண்ணிமுறிப்பு ஆகிய வயல் பிர பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்த 835 ஏக்கராகும். அட்டவணை - 3ல் இ வயல்களும், அவ்வயல் நிலங்களுக்கு 2 தரப்பட்டிருக்கின்றன. இதில் வீராங்கராய மடத்து வயல், கறுத்தாமடு, நாவலடி, தனிப்பட்ட வயல் நிலங்கள் காணப் பிரதேசத்தையும், பாலைக்கட்டுவான், வி இவ்வயல் நிலங்கள் குறிப்பாக முறிப்புக் மூலமும், பாலைக்கட்டுவான் குளத்தில் குள் மற்றும் நீரூற்று நீர்ப்பாசன மு காணப்பட்டன. கால போகத்தில் இ
பெறக் கூடிய வாய்ப்புக்கள் காணப்ப கிடைப்புத் தன்மையை பொறுத்து நீர்
மேலே குறிப்பிட்ட வயல் நிலங் குடியிருப்பிலும் முஸ்லிம்களுக்குச் செ இங்கு ஏறக்குறைய 396 ஏக்கர் நெற்
- 6

ந்திருந்த தாழ் நில பரப்புக்களில் சிறு ப்பட்டது. காரணம் மழை காலத்தில் நிற்பதாகும். இவ்வாறு நீர்ச்சுனையால் ல் பிரதேச நெற்செய்கை கடுமையான ல்லை. நீர்ச் சுனைகளால் இடையூறின்றி எய்ப்பு இப்பிரதேச விவசாய நிலங்களுக்குக் இப்பிரதேசத்தின் சராசரி நெல் விளைச்சல் -க் காணப்பட்டது. இங்கு வழமையாக - மூன்றரை மாத நெல்லினங்கள் பயிர் B இவ்வயல் பிரதேசங்களின் நெற்பரப்பைக்
இவ்வயல்கள் நீர் பெறும் இயற்கை எய்களையும் காட்டுகின்றன. தான வீதிக்குத் தெற்காக காணப்படும் எம். முல்லைத்தீவு - மாங்குள் பிரதான பன்வெளி, விராலிவெளி, நல்லிமுறிப்பு, தேசங்கள் காணப்பட்டன. இவ்வயல் தமான விவசாய நிலங்களின் மொத்தப்பரப்பு ப்பிரதேசத்தில் காணப்படுகின்ற தனிப்பட்ட உட்பட்ட காணிப்பரப்பின் அளவுகளையும் பன் வெளி வயல் பிரதேசத்தில் இரம்பாகம்,
புலியரசன் குளம், கழியிறக்கம் ஆகிய பட்டன. படம் -6 வீராங்கராயன் வெளி ராலி வயல் நிலங்களையும் காட்டுகின்றது. குளத்தில் இருந்து வரும் வாய்க்கால்கள் ம் இருந்தும் நீர்ப்பாசன நீரைப் பெற்றன. கறைகளும் இப்பிரதேசத்தில் பரவலாகக் ங்கு எல்லா வயல் நிலங்களும் நீரைப் ட்டன. ஆனால் சிறு போகத்தில் நீர் ப்பாசன நீர் அவசியமாக இருக்கின்றது. களை விட முத்தையன் கட்டு விவசாயக் சாந்தமான நெற்காணிகள் காணப்பட்டன. ற்காணி முஸ்லிம்களுக்குச் சொந்தமாக
2

Page 81
இருந்தது (அட்டவணை-3). குன செய்கைக்கு அடிப்படையாகக் விவசாயக்குடியிருப்பு பற்றி பின்னர்
4.1.2 தென் னை:
முல்லைத்தீவில் முஸ்லிம்கள் தொழிலாகக் காணப்பட்டது. இங் நேரத்தில் வீட்டுத் தோட்டம் பண்ணப்பட்டது. முஸ்லிம்களுக்கு ( நிலக்காணி ஏறக்குறைய 190 ஏக். குறிப்பிட்ட பிரதேசங்களிலேயே செ குமாரபுரத்தில் 35 ஏக்கரும், பாலை பிரதான வீதியில் 25 ஏக்கரும், சில ஏக்கரும் முஸ்லிம்களுக்கு சொந்தம் கொக்கிளாய் பிரதான வீதிக்கு இரு ப சொந்தமான பிரதான தென்னந் தோ
4.1.3. மேட்டுநிலச் செய்கை
முல்லைத்தீவின் வரண்ட தன்மை மேட்டுநிலச் செய்கைக்கு ம் கிராமச் சூழலிலும், குடியேற்றத்திட்ட செய்கை பண்ணப்பட்டன. முல்லைத் பயிர்ச்செய்கைக்கு உட்பட்ட நிலம் மு மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இதில் நிலச் செய்கை நிலம் அதாவது தெற்காக உள்ள பிரதேசங்களில் மேட்டுநிலப்பயிர் மாரியில் மழையையு பயன்படுத்தி செய்கை பண்ணப்பா! கடலை, வெங்காயம், வாழை, மர நிலப் பயிர்கள் முஸ்லிம்களால் செ

நீர்ப்பாசனம் மேற்குறித்த நெல் விவசாய காணப்பட்டது. முத்தையன்கட்டு தெளிவாக விளக்கப்படும்.
களுக்கு தென்னைச் செய்கை பகுதிநேரத் கு சிறு தோட்டச் செய்கையாவும், அதே செய்கையாகவும் தென்னை செய்கை சொந்தமான செய்கைக்குட்பட்ட தென்னை நராகும். தென்னை முல்லைத்தீவில் சில பகை பண்ணப்பட்டது. பரப்பு ரீதியாக க்கட்டுவானில் 30 ஏக்கரும், கொக்கிளாய் ரவத்தையில் 50 ஏக்கரும், முறிப்பில் 50 மாக இருந்தன. படம் -6 முல்லைத்தீவு - மருங்கிலும் காணப்படும் முஸ்லிம்களுக்குச்
ட்டங்களைக் காட்டுகின்றது.
க:
வலயத்துக்குரிய மழைவீழ்ச்சிப் பரப்புற் கெவும் பொருத்தமாகக் காணப்படுகின்றது. டங்களிலும், மேட்டுநிலப் பயிர்கள் பரவலாக தீவில் ஏறக்குறைய 1000 ஏக்கர் மேட்டுநிலப் ஸ்லிம்களுக்குச் சொந்தமாக இருந்ததென்று ல் நான்கில் மூன்று பகுதியளவான மேட்டு 750 ஏக்கர் நிலம் முறிப்பு குளத்திற்கு
காணப்படுகின்றது (படம்-6). இம் ம், கோடையில் கிணற்று நீர்ப்பாசனத்தையும் ட்டது. இங்கு நிலக்கடலை, சோளம், வள்ளி, உழுந்து, பயறு ஆகிய மேட்டு ய்கை பண்ணப்பட்டன. முல்லைத்தீவில்
63

Page 82
அட்டவ 1990ம் ஆண்டில் முல்லைத்தீவில் முள் விவசாயக் காணிகள். பயிரும் இடமும்
நெற் செய்கை
காரையடி
போண்டா பள் ளவெளி ஏனையன வடக்கு வெளி கள் ள உரல்
புதுத்தரை மெயின் திமோட்டை ஏனையன் வீரங்கராயன் வெளி
இரம்பகம் மடத்துவயல் மருதமடு நாவலடி புளியரசன் குளம் காளியிறக்கம்
ஏனையன் விராலி நெல்லிமுறிப்பு (வவுனியா வீதியில் தண்ணீர் முறிப்பு முத் தையன் கட்டு மொத் தம் (நெல்வயல்)
தென்னைச் செய்கை குமாரபுரம் பாலைக் கட்டுவான் 4ம் 5ம் கட்டை (கொக்கிளாய் வ சிலாவத்தை முறிப்பு (மேட்டு நிலப்பயிரோடு க
மொத்தம் 1 தென் னை)
மேட்டுநிலப்பயிர்ச் செய்கை
முறிப்பு
ஏனையன் இது மொத் தம் (மேட்டுநிலச் செம்ை
- மொத்தம் (எல்லாப் பயிர்சி
மூலம் : வெளிக்கள் ஆய்வு, 199
64

ணை -3 லிம்களுக்குச் சொந்தமாக இருந்த
மொத்த நிலப்பரப்பு
(ஏக்கரில் )
15
30
10
20
20
13
15
10
20
65
66
600 396
35
30 25
தி)
50
லப்பாக)
50
750 250
மகள் in

Page 83
படம் 6: முல்லைத்தீவு மு படுத்தப்பட்ட விவசாய
- -
கடல் நீரேரி (நந்திக்கடல்)
| |
- -
7. '.8 .
அவwன:
மெமின்திமோட்டை ஊற்று. வெற்றிலைக்கேணி... ஊற்று... .நெற்பகுதி ..
புதாரிவுட் ஊற்று..)
+++
நீராவியூற்று
7:+++++T
பாலைக்
.11111111tr•11•***•டி••!" கட்டிப்பிலி கால்வாய் ,
44-',
11-11-1-11-4-1.j,."*
2 நெல்
தென்னை = குளம் க நீரூற்று * கால்வாய்
'7'tt+-+-+1:11)
***டி:""...
முறிப்பு -1.. . குளம்_7 முறிப்பு
மூலம்: வெளிக்கள ஆய்வு. 1996, .

ஸ்லிம்களால் பயன் நிலங்கள், 1990
- - -
முல்லைத்தீவு நகரம்
-
- கடல்
| | ! !
பள்ளிவாயில் தோட்டம் -
X
1*
1Y
முஸ்லிம் தனியார் தோட்டம்
ரொங்கராயனி லெமளி
•..--
கட்டுவான் தளம் - |
----
முஸ்லிம் தனியார் தோட்டம்
*+*+*+*1:18
- •
: பாலைக்கட்டுவான் ''... நெற்பிரதேசம்
முஸ்லிம் தனியார் தோட்டம்
புநெற்பிதேசம் 0
12 மைல்
இலங்கை இடவிளக்கப்படம். 1972.

Page 84
பை
மேட்டு நிலப்பயிர்ச் செய்கை வெற்றிகரமாக முஸ்லிம் விவசாயிகள் இதனால் மிகவும் குறிப்பிட வேண்டும். அதே நேரத்தில் த தரிசுநிலங்களில் மாடு, ஆடு வளர்ப்பிலு
4.2 மீன்பிடி :
ஏறக்குறைய 12 சதவீதமான (I தொழிலில் முழுநேரம் ஈடுபட்டு வந்தார். அது கரையோர, உவர்நீர் (களப்பு), குறிக்கின்றது. முல்லைத்தீவு நகரத்திற்கு கரையோரமாகக் காணப்பட்ட கல்விப்பாடு கரையோர மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு
முல்லைத்தீவு நகரத்தில் இருந்து இக்கிர என்பதை முன்னர் நாம் கண்டோம்.
முஸ்லிம்களின் மீன்பிடி நடவடிக் நந்திக் கடல் என்று அழைக்கப்படும் ச 25 சதுர மைல் பரப்பினையுடைய ஆழ (படம் 6). இக்களப்பில் இறால், நண்டு, மீ நந்திக் கடலின் கடல் வளத்தை மு வாய்ப்பு ஹிஜ்ராபுர முஸ்லிம் கிராமத்தவ ஹிஜ்ராபுரக் கிராமம் நந்திக் கட அமைவுற்றிருந்தமையாகும். நந்திக் கட மாத்திரமல்லாமல் நீராவிப்பிட்டி, தண்ணீ. வந்திருந்தார்கள். இம் மூன்று முஸ்லிம் 200 குடும்பங்களினது முழு நேரத் காணப்பட்டது. அதே நேரத்தில் இக்கிர பகுதி நேரத் தொழில் வாய்ப்பினையும் !
முல்லைத்தீவில் நாயாறு, ( சுண்டிக்குளம் ஆகிய உவர் நீர் பகு முறிப்புக்குளம், பாலைக்கட்டுவான் மதவளசிங்கன் குளம் ஆகிய நன்னீர் நி
66

1 விவசாய முறையாகக் காணப்பட்டது. பயன் பெற்றனர் என்பதையும் இங்கு மது வாழ்க்கைச் சூழலில் காணப்பட்ட ம் முஸ்லிம்கள் ஈடுபட்டு வந்தனர்.
முஸ்லிம்கள் முல்லைத்தீவில் மீன்படித் கள். மீன்பிடித் தொழில் என்னும்போது நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளைக் தெற்காக இரண்டு மைல் தொலைவில் என்ற கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் வந்தார்கள். இம்மீனவக் குடும்பங்கள் ராமத்திற்கு இடம் பெயர்ந்து வந்தார்கள்
கையின் மற்றுமொரு முக்கிய பிரதேசம் களப்புப் பிரதேசமாகும். நந்திக் கடல் மற்ற உள்நாட்டு கடற் பிரதேசமாகும் ன் ஆகியன அதிகமாகக் காணப்பட்டன. ழுநேரத் தொழிலாகப் பயன்படுத்தும் ர்களுக்கு கிடைத்திருந்தது. காரணம் லுக்கு தென் - மேற்குப் புறமாக ல் மீன்பிடியில் ஹிஜ்ராபுர முஸ்லிம்கள் ரூற்று கிராம் முஸ்லிம்களும் ஈடுபட்டு கிராமத்தையும் சேர்ந்த ஏறக் குறைய தொழிலாக நந்திக் கடல் மீன்பிடி ாமங்களில் வேறு பல குடும்பங்களின் கந்திக் கடல் மீன் வளம் அளித்தது. கொக்கிளாய், குமுளமுனைக்கடல், திகளிலும், தண்ணிமுறிப்புக் குளம், தளம், முத்தையன் கட்டுக்குளம், லைகளிலும் முஸ்லிம்கள் பருவகால

Page 85
மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொ மீனவர்களுக்கு படகுகள், வலைகள் இருந்தன.
4.3 வர்த்தகம்:
வர்த்தக நடவடிக்கைகளிலு காணப்பட்டது. முஸ்லிம்களின் வரலாற் ஒரு காரணமாகும். நீண்ட க பிரதேசங்களுக்குமிடையிலான வர்த்தகத் வர்த்தகத்திலும் முஸ்லிம்கள் ஈடுபட்டு
1990ஆம் ஆண்டு முஸ்லிம். ஏறக் குறைய 20 சதவீதமான முல்ல பொருளாதாரத் துறைகளில் ஈடுபட்டு விகிதாசார மக்களின் முழு நேரத் தொ சார்ந்த தொழில்கள் காணப்பட்டன.
1991ஆம் ஆண்டு பெப்ரவ மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் . வெளியேற்றத்திற்கு முன்னர் இம்மக்க பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள உ நடவடிக்கைகளில் இம்மக்களுக்கு உ விபரங்களும் அப்போது பெறப்பட்டன. முல்லைத்தீவில் மொத்தமாக 132 6 நிலையங்கள் முஸ்லிம்களுக்கு உரி விற்பனையில் ஈடுபடும் கடைகள், நிலையங்கள், பலவகையான சேவை நில் 1991 ஆம் ஆண்டு ஆய்வில் கிடைக்க விபரங்கள் பற்றி 1996ஆம் ஆண்டு அவ்வாறு புதிதாக கிடைத்த ெ விபரங்களையுதம் சேர்த்து நோக்குகி வர்த்தக, கைத்தொழில் அத்துடன் பற்றி மேலும் விபரமாக அறியக்கூடியதா விவசாயம் சாராத பொருளாதார நட6

ன்டிருந்தனர். முல்லைத்தீவு முஸ்லிம் மீன்பிடி உபகரணங்கள் உரிமையாக
ம் முஸ்லிம்களின் ஈடுபாடு கூடுதலாக று ரீதியான வர்த்தக பாரம்பரியம் இதற்கு ாலமாக முல்லைத் தீவுக்கும் பிற திலும், முல்லைத்தீவின் உள்ளுர் சில்லறை 1 வந்தனர். களின் பலவந்த வெளியேற்றத்தின் போது லத்தீவு முஸ்லிம்கள் விவசாயம் சாராத வந்தனர். அதாவது மேற்குறிப்பிட்ட ழிலாக வர்த்தகம், கைத்தொழில், சேவை
ரி மாதம் முல்லைத்தீவு முஸ்லிம்கள் கிடைக்கப்பெற்ற விபரங்கள் பலவந்த -ளின் பொருளாதார நடவடிக்கைகளைப் உதவியாக இருந்தது. விவசாயம் சாராத ரிமையாக இருந்த ஸ்தாபனங்கள் பற்றிய
அவ்வாறு கிடைக்கப்பெற்ற விபரப்படி பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்ட மையாக இருந்தன. இதில் பொருள் சிறிய, இடைநிலை கைத் தொழில் லையங்கள் என்பன அடங்கும். இவ்வாறு கப் பெறாத பொருளாதார நிலையங்களின்
மேலும் விபரங்கள் திரட்டப்பட்டன. பாருளாதார நடவடிக்கைகள் பற்றிய ன்ற போது முல்லைத்தீவு முஸ்லிம்கள் சேவைத்துறைகளிலான ஈடுபாடுகள் க இருந்தது. அவ்வாறு கிடைக்கப்பெற்ற மடிக்கைகள் கீழே விளக்கப்படுகின்றன.

Page 86
அவற்றுள் குறிப்பாக, முல்லை ஹிஜ்ராபுரம் ஆகிய குடியிருப்புகளில் | வர்த்தக, கைத்தொழில், சேவை நிலையம் இவ் விளக்கத்திற்கு உதவியாக அட்ட படம்-11உம் பயன்படுத்தப்படுகின்றன. நீராவிப்பிட்டி ஆகிய மூன்று கிராமங்கள் இருந்த வர்த்தக, கைத் தொழில், காட்டுகின்றது. அட்டவணை 4உம், 5 என்ன வகையானது? யாருக்குச் சொந்த தெளிவாகத் தருகின்றன.
முதலில் ஹிஜ்ராபுரத்தை எடுத்து கிராமங்களுடன் ஒப்பிடும் போது ஒரு . பெரியதுமான பத்து நிலையங்களே கான் நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரக் கிராம எல் ை மக்களின் உடனடி நுகர்வுத் தேவையைப் மேற்குறித்த பத்து நிலையங்களில் மு ஹிஜ்ராபுர முஸ்லிம்கள் பன்பாய்க் கைத் குறிப்பிடத்தக்கது.
அடுத்து நீராவிப்பிட்டிக் கிராம நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலையங்கள் அதிகமானவை நீராவிப்பிட்டியின் ஹி. காணப்பட்டன. மேற்குறிப்பிட்ட வீதி , பயன்படுத்தப்படும் வீதியாகக் காணப் கிராமத்தின் சனச்செறிவு இப்பிரதேசத்தி! இக்காரணங்களால் ஹிஜ்ராபுர வீதியின் இ நிலையங்களின் செறிவும் அதிகமாகக் இக்கிராமத்தை ஊடறுத்துச் செல்லும் இரு மருங்கிலும் புதிய வர்த்தக கைத்தெ முஸ்லிம்கள் அக்கறை கொண்டு வந்த அவர்கள் பலவந்தமாக வெளியேற வே என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
பானவை

தீவு நகர், தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி, முஸ்லிம்களுக்கு உரிமையாக இருந்த கள் பற்றி சற்று விபரமாக நோக்குவோம். வணைகள் 4உம், 5உம் அத்துடன் படம்-11 ஹிஜ்ராபுரம், தண்ணீரூற்று, ரிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக சேவை நிலையங்களின் பரம்பலை உம் மேற்குறித்த தொழில் நிலையங்கள் மாக இருந்தன? என்ற விடயங்களைத்
பக்கொண்டால் இது ஏனைய முஸ்லிம் புதிய கிராமமாகும். இங்கு சிறியதும் அப்பட்டன. இவற்றில் அதிகமானவை மலயில் அமைந்திருந்தன. இக்கிராம ப் பூர்த்தி செய்யும் பலசரக்குக் கடைகள் மக்கியமானவையாகும். இது தவிர தொழிலிலும் ஈடுபட்டு வந்தமையையும்
த்தில் 32 பலவகையான பொருளாதார ள் அமைவுற்றிருந்தன. இவற்றுள் ராபுர வீதியின் இரு புறங்களிலும் இப்பிரதேச முஸ்லிம்களால் அடிக்கடி பட்டது. அத்துடன் நீராவிப்பிட்டிக் லயே கூடுதலாகவும் காணப்பட்டது. ரு புறத்திலும் வர்த்தக கைத்தொழில் காணப்பட்டது. அதே நேரத்தில் மாங்குளம்-முல்லைத்தீவு வீதியின் ழில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் காலத்திலேயே முல்லைத்தீவை விட்டு ர்டிய சூழ் நிலைக்கு உள்ளானார்கள்

Page 87
சமமாக
தண்ணீரூற்றுக் கிராமத்தில் | கைத்தொழில் சார்ந்த நிலையங்கள் | மாங்குள பிரதான வீதியின் இரு மா ஒரு சனச் செறிவு மிக்க பிரதேசமாகு போல் மாங்குள வீதியில் அமைந்து பொருளாதார நடவடிக்கைகளை விட இதற்குக்காரணம் இப்பிரதேச மக்கள் காணப்பட்டமையாகும். இதனால் இப் நிவர்த்தி செய்யும் பொருட்டு பல்வே நடவடிக்கைகள் இப்பிரதேசத்தில் வளர் சமமாக அதில் பங்கெடுத்தார்கள்.
முஸ்லிம்களுக்குச் சொந்தம் நிலையங்களில் பல முல்லைத்தீவு மொத்தமாக 24 நிலையங்கள் முஸ்லிம் பற்றிய விபரத்தை அட்டவணை-5
முல்லைத்தீவு பசாரின் வர்த், நகரின் பிரதான வீதி - கஸ்டம்ஸ் ரோ இடையிலான வீதியின் இரு புறத்திலு வீதியின் இரு புறத்திலும் அத்துடன் முல்லைத்தீவு சந்தையிலும் முஸ்லிம்க. முல்லைத்தீவு பசாரில் தேநீர்க் கன கடைகள், வாகனங்கள் திருத்தும் முஸ்லிம்களுக்கு உரிமையாக இரு நிர்வகிக்கப்பட்டும் வந்தன.
முல்லைத்தீவில் பிரபல்யம் தையல் தொழில், முஸ்லிம்களின் செய்யப்பட்டு வந்தது. பலவந்த ெ முஸ்லிம்கள் தையல் தொழிலை : வந்திருக்கின்றார்கள். தையல் தொழில் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியு பொருட்களையும் கொண்டதாக இரு

முஸ்லிம்களுக்குச் சொந்தமான 30 வர்த்தக, காணப்பட்டன. இவை முல்லைத்தீவு - தங்கிலும் காணப்பட்டன. இப்பிரதேசம் தம். அட்டவணையில் நாம் காண்பது ள்ள நிலையங்கள் ஏலவே காட்டப்பட்ட வேறுபட்டவையாகக் காணப்படுகின்றன. ளின் தேவைகள் பல்துறைப்பட்டதாகக் பிரதேச மக்களின் பல்வேறு தேவைகளை வறு வர்த்தக, சேவை, கைத்தொழில் ச்சியடைய ஆரம்பித்தன. முஸ்லிம்களும்
மான வர்த்தக, கைத்தொழில், சேவை
நகரிலும் அமைந்திருந்தன. இங்கு மகளுக்குச் சொந்தமாக இருந்தன. இது
காட்டுகின்றது. தக சேவை நிலையங்கள் முல்லைத்தீவு - சந்திக்கும், சிலாவத்தை சந்திக்கும் ம் காணப்பட்டன. இதே போல மார்க்கட்
இவ்வீதியின் அருகே அமைந்திருந்த ளின் வர்த்தக நிலையங்கள் காணப்பட்டன. -டகள், புடவைக்கடைகள், சில்லறைக்
இடங்கள், படமாளிகைகள் என்பன நந்ததோடு, அவை முஸ்லிம்களால்
என தையல்காரர்கள் முஸ்லிம்களாவர். யாரம்பரிய தொழிலாக முல்லைத்தீவில் வளியேற்றத்தின் போது 5 சதவீதமான தமது முழு நேரத் தொழிலாக செய்து ஒரு கைத்தொழிலாகக் காணப்பட்டதோடு டைய உபகரணங்களையும், மூலப் நந்தது.
19

Page 88
அட்டவ
1990ம் ஆண்டு "மூன்று கிராமப்பிரதே இருந்த வர்த்தக, கைத்தொழில், சேனை
ஹிஜ்ராபுரம்
5.
1. முஸ்தபா முகம்மது காசிம் 2. இராசமுகம்மது 3.
அசனாலெப்பை 4. நாகூர்பிச்சை
கச்சமுகம்மது அப்துல் ரஹீம் - 6. வரக்காத் 7. யாஸீன்-யூனுாஸ் 8. இப்ராகிம் - அப்துல் கரீம் 9. அப்துல் ஹமீது அலி 10. சேகுத்தம்பி அகமது லெப்பை நீராவிப்பிட்டி
11. அப்துல் காதர் 12. இப்ராகிம் வெள்ளையா 13. இப்ராகிம் யுனைட்
இப்ராகிம் ரஜப் 15. கச்சுமுகம்மது மஜீத் 16. முகம்மது சுல்தான் -பரீத் 17. லெபபைத்தம்பி-சீனிமுகம்மது 18. சம்சுதீன் 19. சம்சுதீன் இராசமுத்து 20. அயினியாப்பிள்ளை - அபூபக்கர் 21. கச்சுமுகம்மது சமூன்
அப்துல்லா லெப்பை-அன்வர்
முகம்மது சர்பு 24. லெப்பை
அல்லாபிச்சை - கச்சுமுகம்மது 26. நாகூர்பிச்சை - அப்துல் றகீம் 27. அபூபக்கர் - முகம்மது ராஜா
சுல்தான் அப்துல் றஹ்மான் 29. நாகூர்பிச்சை - மஜீத் 30. அப்துல் அஸீஸ் - கிளி 31. காசின் தம்பி - சாகுல் ஹமீது 32. கச்சுமுகம்மது - பக்கீர்த்தம்பி 33. கச்சுமுகம்மது சமது
70

1ணை -4
சத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமாக
வ நிலையங்கள்.
பலசரக்கு பலசரக்கு பலசரக்கு பலசரக்கு பலசரக்கு பலசரக்கு பேக்கரி பண்கைத்தொழில் பண்கைத்தொழில் பண்கைத்தொழில்
111ini ininiinfit
மரக்கறி சைக்கில் றிப்யாரிங் ஹோட்டல் பலசரக்கு
சைக்கில் றிப்யாரிங் பற்பொடிக்கம்பெனி பலசரக்கு பலசரக்கு பலசரக்கு பலசரக்கு ஹோட்டல் பலசரக்கு பலசரக்கு ஹோட்டல் பலசரக்கு பலசரக்கு பலசரக்கு
பலசரக்கு
பலசரக்கு பலசரக்கு பலசரக்கு தையல் - பலசரக்கு

Page 89
37.
38.
34. சுல்தான் அப்துல் ஹமீது 36. அபூபக்கர் - முத்து முகம்மது
முகம்மது சரீபு கலாம்
முகம்மது ராஜா- முகைதீன் 39. கட்டையன் 40. அடிமையப்பா 41. செய்யது முகம்மது அப்துல் சமது 42. அப்துல் மஜீது
தண்ணீரூற்று
47.
43. நெய்னா முகம்மது முகம்மது சரிபு 44. முகைதீன் - சலீம்
சாகுல் ஹமீது - இப்ராகிம் சாகிபு
அப்துல் காதர் - நஜ்முதீன் முகம்மது சுல்தான் - றசீனா
செய்யது முகம்மது - சித்தீக் 49. முகைதின் - அப்துல் றசீம்
நாகூர்பிச்சை- அப்துல் றகிம் 51. திருமதி. மீராசாகிபு | 52. அப்துல் அஸீஸ் - பாயிஸ் 53. மிராமுகைதீன் - சித்தீக் 54. புகாரி அப்துல் காதர் 55. ஹமீது - பக்கீர் 56. கச்சுமுகம்மது-ஜமால்தீன்
செய்யது முகம்மது ஹம்சா 58.
செய்யது முகம்மத கரிம் 59.
அகமது லெப்பை -முஸ்தபா 60. பாவா-சம்சுலெப்பை 61. இலாமுத்தின - ஜவாஹிர்
பொன்னுத்தம்பி முகைதீன் அப்துல் ரசாக்
மஹ்பூர் 65. அகமது லெப்பை - முஸ்தபா 66. முகம்மது முஹ்தார் - றஜப்தீன்
முகம்மது ஹனிபா 68. அப்துல் அஸீஸ்
இப்ராகிம் சகீத் 70. அபூபக்கர் - றாசிக் 71. முகைதீன் தம்பி 72. இப்ராகிம் ரஜப்
மூலம்: வெளிக்கள ஆய்வு 1996

பலசரக்கு பலசரக்கு நெல்குற்றும் ஆலை பலசரக்கு ஹோட்டல் பலசரக்கு ஹோட்டல் பலசரக்கு ஹோட்டல், ரெயிலரிங்
la sinh44
பலசரக்கு, கூ.ச.கடை ஹோட்டல் சைக்கிள் றிப்யாரிங் டீசல் வெற்றிலைக் கடை ஹோட்டல் டீசல் பலசரக்கு ஹோட்டல்
தையல் வீடியோ, ஓடியோ சென்ரர் பலசரக்கு ஹோட்டல் ஹோட்டல் ஒட்டுவேலைக்கடை ஹோட்டல்
தையல்
டீசல்
பலசரக்கு
ஆயுர்வேத மருந்துக்கடை தையல் பலசரக்கு விளக்குமாறு கட்டும் தொழில் தும்புக் கைத்தொழில் பிரம்புக் கைத்தொழில்
தையல் ஆட்டிறைச்சிக்கடை மாட்டிறைச்சிக்கடை தையல் இறைச்சிக்கடை

Page 90
அட்டவ
1990 ம் ஆண்டு முல்லைத்தீவு வர்த்ததக, கைத்தொழில், சேவை நிலை
இல் உரிமையாளர் பெயர்
கடையி
ஜெமீரா
2.
ஜெசி 4 சியானா
1. சதுக்கீன்+மஃபூப்+றிபாயிஸ்
பதுறுதீன் 3.
ஹனீபா இல்யாஸ் வகாப் ஜமால்தீன் அல்லாபிச்சை சுலைடான்
8.
| ! ! ! ! |
ஹகீம்
கூல் ள
றோசா
| | I II |
20.
10. செய்னுதீன் றமீஸ் 11. மஜீத் 12.
இப்ராஹிம் (சின்னத்தம்பி) 13.
அன்ஸ் 14. பதுருதீன் 15. நஜீப்
அஸ்மி நஸார்
ஹ.ஊ.டு. அப்துல் றகீம் ரு.வு. அஸீஸ் மீராசாகிபு
கபீர் 22.
ஹனிபா 23.
முஸம்மில்
அனஸ், ராஸிக் 25. யூசுப்
மாலிக்கீன்
மக்பூல் 28. காமித் 29. காதர் 30. முத்து 31. ஜமால்
21.
கபீர் ஸ்
24.
26.
27.
| I II II II |
மூலம் : வெளிக்கள ஆய்வு 19
72

ணை - 5
பு நகரில் முஸ்லிம்களுக்கு சொந்தமான -லயங்கள்.
என் பெயர் கைத்தொழில் விளக்கம்
ஸ்
சினிமா
ஸ்
பொட்
மா மினி
பன்ஸி கூட்ஸ் மணிக்கடை படமாளிகை
தையல் பைசிக்கிள் திருத்துதல் பைசிக்கிள் திருத்துதல் பைசிக்கிள் திருத்துதல் தையல் பைசிக்கிள் திருத்துதல் தையல் பைசிக்கிள் திருத்துதல் குளிர்பானக் கடை
பைசிக்கிள் திருத்துதல் வீடியோ பட மாளிகை ஹோட்டல்
பைசிக்கிள் திருத்துதல் பலசரக்குக் கடை பேக்கரி, ஹோட்டல் றேடியோ திருத்துதல் மணிக்கூடு திருத்துதல் பலசரக்குக் கடை சட்டி பானைக்கடை மோட்டார் சைக்கிள் சைக்கிள் உபகரணம் தையல் தையல் மணிக்கூடு திருத்துதல் ஹோட்டல் ஹோட்டல்
அவுட் மோட்டர் இயந்திரம் குளிர்பானம்
மடோர்ஸ்
96.

Page 91
உள் நாட்டு யுத்தத்தின் 6 முஸ்லிம்கள் தமக்கு உரிமையாக இ நிலையங்களின் பொருட்களையும், உ முதலீட்டையும் இழந்தார்கள். 1989ஆ தமது இராணுவ ஸ்தலமாகப் பயன் முஸ்லிம்கள் முற்றாக இப்பிரதேசத்தை நிலைக்கு உள்ளானார்கள். அதனால் கைத்தொழில், சேவை நிலையங்கள் 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் அ கைப்பற்றிய போது நகரில் வாழ்ந்த வேண்டிய நிலை உருவானது. இதனை இருந்த வர்த்தக, கைத்தொழில் நின 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மு முல்லைத்தீவில் எஞ்சியிருந்த வர்த்த
மேற்குறித்த பலவந்த வெளி கைத்தொழில், பொருளாதார அடிப்பா நீண்ட பின் விளைவுகளை ஏற்ப கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான இழப்பிற்கு இது உடனடிக் காரணம் ஆறு வருடங்களில் தமது வர்த்தக பெறவோ, புதுப்பிக்கவோ, அதன் மூல் அதன் உரிமையாளர்களுக்கு முடியாது ஏற்பட்ட பாதிப்பிற்குச் சமமான முக்க அவர்களின் விவசாயக் காணிகளுக்கு இருக்கிறோம்.

பாது பல கட்டங்களில் முல்லைத்தீவு ருந்த வர்த்தக, கைத்தொழில், சேவை பகரணங்களையும், அதில் ஈடுபடுத்திய ம் ஆண்டு இந்தியப்படை ஹிஜ்ராபுரத்தை ன்படுத்திய காலக்கட்டத்தில் ஹிஜ்ராபுர விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான > இக்கிராமத்தில் காணப்பட்ட வர்த்தக,
முற்றாகக் கைவிடப்பட்டன. பின்னர் ரசாங்கப் படைகள் முல்லைத்தீவு நகரை
முஸ்லிம் பாதுகாப்பிற்காக வெளியேற பால் நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக
லயங்கள் கைவிடப்பட்டன. இறுதியில் மஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தோடு க நிலையங்களும் பறிபோயின. யேற்றத்தினால் முஸ்லிம்களின் வர்த்தக, டைகளுக்கு ஏற்பட்ட தாக்கமானது மிக படுத்தி இருக்கின்றது. முதலாவதாக, எ வர்த்தக, பொருளாதார உபகரணங்களின் ாக இருந்தது. இரண்டாவதாக கடந்த க, கைத்தொழில் நிலையங்களை மீளப் மமாக புதுவாழ்க்கையை ஆரம்பிக்கவோ து போயிற்று. வர்த்தக நிலையங்களுக்கு கியத்துவம் முஸ்லிம் விவசாயிகளுக்கும் ம் ஏற்பட்டது என்பதை பின்னர் விளக்க
73

Page 92
5. முஸ்லிம்
முல்லைத்தீவில் முஸ்லிம்கள் செ குடியிருப்புகள்' என்று இந்நுாலில் அ மாவட்டத்தில் பெரிதும், சிறிதுமாக 13 மு அவற்றில் முல்லைத்தீவு நகரம், தண்ல ஆகியவை முக்கியமானவைகளாகும். குடியிருப்புகளின் பிரதேச ரீதியான இக்குடியிருப்புக்களின் பொருளாதா, சமூக பகுதியில் நோக்குவோம்.
5.1 முல்லைத்தீவு முஸ்லிம்
கிராமங்கள்'.
பெற்றதாயும், பிறந்த பொன்நாடு என்பர். பலவந்த வெளியேற்றத்தால் த முல்லைத்தீவு முஸ்லிம்கள்மத்தியில் இவ்வு ஆச்சரியத்துக்குரிய தொன்றல்ல. மாற்றாந்தா அகதிகளாக இம்மக்கள் படுகின்ற 1 முல்லைத்தீவில் எல்லா வகையிலும் வ வசதிகளோடு வாழ்ந்த தமது வாழ்க்கை நினைவாகக் காணப்படுகின்றது. பு மாவட்டத்தை "முல்லையூர்" என்றும், நகர்'' என்றும் செல்லமாக அழைத்தனர். அவர்களுக்கிருந்த வாஞ்சையை இது
முல்லைத்தீவில் முஸ்லிம்கள் பதில் செறிந்து வாழ்ந்தார்கள். இவற்றில் சில கு முஸ்லிம் மக்களின் வரலாற்று, கலாச முக்கியமானவையாகக் காணப்படுகின்ற
74

குடியிருப்புகள்
றிந்து வாழ்ந்த பிரதேசங்கள் 'முஸ்லிம் அழைக்கப்படுகின்றன. முல்லைத்தீவு ஸ்லிம் குடியிருப்புகள் காணப்பட்டன. னீரூற்று, நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம்
படம் -2 முல்லைத்தீவு முஸ்லிம் ர பரம்பலைக் காட்டுகின்றது. - கலாசார சிறப்பம்சங்களை பின்வரும்
மகளின் 'மூன்று
ம் நற்றவ வானிலும் நனி சிறந்தது மது சொந்த இடங்களைப் பிரிந்த ணர்வு பன்மடங்கு அதிகரித்திருப்பது ய் பிள்ளைகளைப்போல் முகாம்களில் கஷ்டங்களோடு ஒப்பிடும் போது ாம் மிக்க தமது சொந்த இடத்தில் இம்மக்களின் மனதைவிட்டு நீங்காத மல்லைத்தீவு முஸ்லிம்கள் தமது
முல்லைத்தீவு நகரத்தை "முல்லை பிறந்து, வாழ்ந்த பிரதேசத்தின்மீது வெளிப்படுத்துகின்றது. ன் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் டியிருப்புக்கள் அல்லது பிரதேசங்கள் ார, பொருளாதார அடிப்படையில்
அவ்வாறான பிரதேசங்களில்
ன.
ன.

Page 93
ஒன்றுதான் முல்லைத்தீவு நகரத்திற்கு தொலைவில் முல்லைத்தீவு - மாங்குளம் குடியிருப்புத் தொடராகும். இக்குடி முஸ்லிம் கிராமங்கள் காணப்பட்டன. பொருளாதார ரீதியாகப் பல பொதுத்த. நேரத்தில் ஒவ்வொரு கிராமத்தினரும் இதனைக் கருத்தில் கொண்டு “மூன்று இப்பிரதேச முஸ்லிம்களின் வரலாறு !
இம்மூன்று கிராமங்களின் நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம் என்பனவாகும் சூழல் படம்-7 இலும், விவசாயப் 8இலும், பொதுக்கட்டடங்கள் படம் -9 நிலையங்களின் பரம்பல் படம்-11 இலு அட்டவணைகள் 2, 3, 4, 5 என்பன இ ரீதியான தகவல்களைத் தருகின் அட்டவணைகளிலும் தரப்பட்டுள்ள விட விபரங்களையும் அடிப்படையாகக் கொம் பின்வரும் பகுதியில் விளக்கப்படுகின்ற
இம்முஸ்லிம் செறிவுத்தொடரில் வாழ்ந்தார்கள். இது முல்லைத்தீவு ஏறக்குறைய 60 சதவீதமாகும். மு செறிவுப் பிரதேசமாகக் காணப்படும் இப்பு முஸ்லிம்களின் ஆரம்பக் குடியிருப்புப்
முன்னர் குறிப்பிட்டுள்ளதைப் 300 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்க காணப்படுகின்றன. முல்லைத் தீ
குடியிருப்புக்களான முறிப்பு, முத் குடியிருப்புக்களும் இம்முஸ்லிம் கிர இம்மூன்று கிராமங்களை அடிப்படைய கலாசார அபிவிருத்திகள் முல்லைத்தீன் தனித்துவத்திற்கும், கலாசார பாரம்

- மேற்காக ஏறக்குறைய ஐந்து மைல்
வீதியின் இரு மருங்கிலும் காணப்படும் யிருப்புத் தொடரில் மூன்று முக்கிய
இக்கிராமங்கள் வரலாற்று, கலாசார, ன்மைகளைக் கொண்டிருந்தன. அதே தனித்துவத்தையும் கொண்டிருந்தனர். ய கிராமங்கள்” என்ற பொதுத்தலைப்பில் இந்நுாலில் விளக்கப்படுன்றது. தனிப்பட்ட பெயர்கள் தண்ணீரூற்று, - இம்மூன்று கிராமங்களின் வாழ்க்கைச் பொருளாதார அடிப்படைகள் படம் - இலும், வர்த்தக, கைத்தொழில், சேவை ம் காட்டப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ப்பிரதேச முஸ்லிம்கள் பற்றிய புள்ளிவிபர றன. மேற்குறித்த படங்களிலும் பரங்களையும், இங்கு தரப்படாத ஏனைய -ண்டு இப்பிரதேசத்தின் சிறப்புப் பண்புகள் மன.
ஏறக்குறைய 850 முஸ்லிம் குடும்பங்கள் முஸ்லிம்களின் மொத்தத் தொகையில் ல்லைத்தீவில் மிக முக்கியமான சனச் பிரதேசம், வரலாற்று ரீதியாக இம்மாவட்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றது. போல் இப்பிரதேசத்தில் ஏறக்குறைய ள் வாழ்ந்து வந்திருப்பதற்கு ஆதாரங்கள் பில் பின்னர் உருவான முஸ்லிம் தையன்கட்டு போன்ற விவசாயக் மச் செறிவில் இருந்தே உருவாகின. Tகக் கொண்டு உருவான சமய, கல்வி, | மாவட்ட முஸ்லிம்களின் இஸ்லாமிய ரியத்திற்கும் ஒரு அறிவு ரீதியான

Page 94
அடித்தளத்தை ஏற்படுத்தியது. அத்துப் முஸ்லிம்களின் மையப் பிரதேசமாகவும்
முல்லைத்தீவு முஸ்லிம்களை மிக்க இப்பிரதேசம் பொருளாதார வளத் கொண்டிருந்தது. " பொருளாதார ரீத் நிறைந்த இப்பிரதேசம் வளமான விவ முல்லைத்தீவு நகருக்கு மேற்கில் ( சூழலில் காணப்படும் இப்பிரதேசம் மு கைத்தொழில் ரீதியாகவும் முக்கியமான
இப்பிரதேச முஸ்லிம்களின் மற் வாழ்ந்த தமிழ் மக்களோடு இவர்கள் ! இப்பிரதேச முஸ்லிம் குடியிருப்புத் தொ தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் கான முஸ்லிம் - தமிழ் மக்களுக்கிடையில் பல முஸ்லிம் - தமிழ் மக்களுக்கிடையில் ெ ஏனைய கலாசார தொடர்புகளும் மிகவும் படம்-7 காட்டுவது போல் முஸ்லிம் ப தேவாலயம் ஆகிய வணக்கஸ்தலங்கள் மற்றது அமைவுற்றிருக்கின்ற தன் ஐக்கியத்திற்கு மற்றுமொரு சான்றாகு
இத்தகைய பெருமை கொண் அத்துடன் இப்பிரதேசத்தின் புவியிய வளத்தினைப்பற்றியும் சற்று விரிவாக அடிப்படையில் இதனை நோக்குகை மேலும் தெளிவாகும்.
முதலில் இப் பிரதேசத்தின் புகழ் மிக்க தண்ணீரூற்று கிராமத் அமைவுற்றிருந்த, இந்நுாற்றாண்டின் கிராமத்தையும், மேற்குறிப்பிட்ட இ கிராமங்களுக்கு இடையில் அமைந்தி கிராமமான நீராவிப்பிட்டி கிராமத்ததையும்

ன் இப்பிரதேசம் முல்லைத்தீவு மாவட்ட
கருதப்பட்டது. ப் பொறுத்தவரை வரலாற்றுப் புகழ் தினையும், பண்பாட்டுச் சிறப்புகளையும் யாக வற்றாத இயற்கைச் சுனைகள் சாய நிலங்களையும் கொண்டிருந்தது. முக்கியமான சனச் செறிவுப் பிரதேசச் ஸ்லிம்களைப் பொறுத்தவரை வர்த்தக, பதாக அமைந்தது. றுமொரு சிறப்புப் பண்பு இப்பிரதேசத்தில் இன ஐக்கியத்தோடு வாழ்ந்தமையாகும். டர்ச்சிக்குத் தெற்காகவும், மேற்காகவும் எப்பட்டன. ஒரே பிரதேசத்தில் வாழ்ந்த வகையான தொடர்புகள் காணப்பட்டன. பாருளாதார கொடுக்கல் வாங்கல்களும் பும் கெளரவமாக இடம் பெற்றிருந்தன. ள்ளிவாயில், இந்துக்கோயில், கிறிஸ்தவ இப்பிரதேசத்தில் ஒன்றின் அண்மையாக மை இப்பிரதேசத்தின் நீண்ட இன
ட பிரதேசம் ஒன்றின் தோற்றம் பற்றியும் ல் பின்னணி, பொருளாதார, கலாசார - நோக்குவோம். தனிப்பட்ட கிராம யில் இப்பிரதேசம் பற்றிய அம்சங்கள்
மேற்காக அமைவுற்றிருந்த வரலாற்று கதையும், அதற்கு வட - கிழக்காக நடுப்பகுதியில் உருவான, ஹிஜ்ராபுரக் இவ்விரண்டு பழைய புதிய முஸ்லிம் நந்த, சனத்தொகை ரீதியாக மிகப்பெரிய பற்றி இங்கு தனித்தனியாக நோக்கலாம்.

Page 95
5.1.1 தண்ணீரூற்று கிராமம் :
இப்பிரதேச முஸ்லிம்களின் மிகப் இங்கு 1990இல் ஏறக்குறைய 160 தண்ணீரூற்றுக் கிராமத்தின் கிழக்குப் பு! முல்லைத்தீவின் மிகச் செழிப்பான பிர ே இப்பிரதேசத்தின் செழிப்பைப் பற்றி நுாற்றாண்டிலே முல்லைத்தீவில் நிலா கொண்ட பிரதேசமாக இப்பிரதேசம் காண Lewis (1993) இன்படி, பழைய ச சந்தை ஒன்று அமைவுற்றிருந்தது
முல்லைத்தீவின் பல்வேறு பிரதேச மக் தண்ணீரூற்று அக்காலத்தில் காணப்பட் வர்த்தகத்தில் முஸ்லிம்களும் ஈடு குறிப்பிடத்தக்கது.
தண்ணீரூற்றுப் பிரதேசத்தில் மு நீர்ச்சுனை ஒன்று காணப்படுகின்றது அழைக்கப்படுகின்றது. ''நீராவி" என் என்னும் பொருளைக் குறிக்கின்றது. சதுர மைல் பரப்பு பிரதேசத்தை உ நீர்ச்சுனையில் இருந்து உற்பத்தியாகு வட கிழக்குப் புறமாக ஏறக்குறைய பயிர்களுக்கும் நன்மை தருகின்றது. ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீரை குடித்தல், குளித்தல், உடை கழுவுதல் நிவர்த்தி செய்தது. -
விவசாய வளத்தினையும், இப்பிரதேசத்தில் பொருளாதார வளர்ச். காலத்தில் இயற்கையாக ஏற்பட்டு வந், காணப்பட்ட இப்பிரதேசத்தில் முஸ்லிம் ஆக வளர்ச்சி பெற்றது. (அட்டவலை வளர்ச்சி காரணமாக காலப் போக்கில் நீராவிப்பிட்டியும், ஹிஜ்ராபுரமும் 2 கிராமத்தவர்களும் மிக நெருங்கிய உற

ப் பழைய குடியிருப்பு தண்ணீரூற்றாகும்.
முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தன. றமாக முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்தனர். தசத்தில் இக்கிராமம் அமைந்திருந்தது.
Chitty (1834) என்பவர் "18ஆம் வளமும் சனத்தொகையும் செறிவுமிக்க எப்பட்டது" என்று குறிப்பிட்டிருக்கின்றார். காலத்தில் இக்கிராமத்தில் பிரபல்யமான
என்றும் அதனால் வர்த்தக ரீதியாக ககளுடன் தொடர்புடைய குடியிருப்பாக டது என்று குறிப்பிடுகின்றார். இச்சந்தை பெட்டிருந்தார்கள் என்பது இங்கு
மஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதியில் இயற்கை . இந்நீர்ச்சுனை ''நீராவி" என்று பற பதம் பொங்கிப் பெருக்கெடுப்பது "'நீராவி " நீர்ச்சுனை ஏறக்குறைய ஒரு ள்ளடக்கிக் காணப்படுகின்றது. இந் ம் இயற்கை அருவி இப்பிரதேசத்தில் 3 மைல்கள் பாய்ந்து மக்களுக்கும், இந் நீர்ச்சுனை பல நுாற்றுக்கணக்கான வழங்குவதோடு இப்பிரதேச மக்களின் போன்ற ஏனைய நீர்த் தேவைகளையும்
வர்த்தகச் செழிப்பையும் கொண்ட சியும், குடிசனப் பெருக்கமும் கடந்த தது. 1921 ஆம் ஆண்டு 350 பேராகக் சனத்தொகை 1971ஆம் ஆண்டு 1701 ண 1) இப்பிரதேசத்தின் சனத்தொகை உருவான கிராமங்களே அயலிலுள்ள ஆகும். அதனால்தான் இம்மூன்று மவினர்களாகக் காணப்படுகின்றனர்.

Page 96
படம் 7 : முல்லைத்தீவு முஸ்லிம்களின் “மூன்று கிராமங்கள்”
1:)).
»N:14+>>>14:13
வ
நெல்
நெல்
தென்னை
பிட்டிப்பிலி 1++••••••••+++பு..
முல்லைத்தீவு-/wங்குளம் வீதி
ர்ப்பாசனக் கால்வாய்
முகைதீன் ஜும்மாப் பள்ளி
"'+4++Fol1ெ144:19
1:):)://•••••)
மதுரசா
புதிய "ேபுரம்
மதுரா -ஹிஜ்ராபுரம்"
நெல்
* தக்கியாப்பள்ளி
புதிய ஜூம்மாப்பள்ளி
sr
ட மசாலம்

"8
நீராவிப்பிட்டி
நீராவியூற்று
1000ாமா
யோகம்
மேஸ்ஜிதுன்னுாரானிய்யா
ஜும்மாப் பள்ளி
கோவில் 4 *4
குமாரபுரம்
மதுரசா**
*•4 •••j.•|.1•/444)
தண்ணீ பெரிய "ம்மாப்பள்ளி 3
கிறிஸ்தவ ஆலயம்
மாங்குளத்திற்கு
பக்கீரப்பா கபுறடி
பழைய
பள்ளீவாசல்
குமாரபுரம் கோவில்
"+.//.11•/%)
கணுக்கேணி
118 மைல்
1ெ://•••••
மூலம்: வெளிக்கள ஆய்வு, 1996, இலங்கை இடவிளக்கப்படம், 1972.

Page 97
தண்ணீரூற்று கிராமம் முஸ்லிம்கள் தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக ஊத்தங்கரை வீதியில் அமைந்துள்ள இக்கிராமத்தின் ஜூம்மாப்பள்ளிவாயில் (பட வருடங்கள் பழமையானது என்று நம்பப்பா தன்மையை இப்பள்ளியின் அகலமான துாக மூலமாகவும், இதனைக் கட்டுவதற்குப் பய மூலப் பொருட்கள் மூலமாகவும் அறியக் க இரண்டு நுாற்றாண்டுகளுக்கு முன்னர் கட் நிரூபிக்கும் வாய்மொழி ஆதாரங்கள் இருக்க பலவந்தமாக இப்பிரதேசத்தை விட்டு வெ பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதைவிட பெரிய பள்ளிக்கு ( பள்ளிவாயிலின் சிதைவுகள் தண்ணீரூற்று மாங்குள பிரதான வீதியில் இன்றும் காண இப்பழைய பள்ளிவாயிலின் சிதைவை அ. ஆரம்பக் குடியிருப்பு ஏற்பட்டிருக்க வே இயற்கையான ''நீராவி " நீர்ச்சுனையை நோக் வேண்டும் என்று கருதக் கூடியதாக இருக் கிழக்காக பக்கீர் அப்பா என்ற முஸ்லிம் ெ அடக்கஸ்தலம் காணப்படுகின்றது (படம்
தண்ணீரூற்றுக் கிராமத்தில் த அவர்கள் இக்கிராமத்தின் மேற்குப் புறம் தமிழ் மக்களின் வரலாற்றுச் சிறப்பை எடுத்து கோவில்;'' இப்பிரதேசத்திலேயே அமைவு உறவு நெடுங்காலம் முஸ்லிம் - தமிழ் ப நீடித்திருந்தது.
5.1.2 நீராவிப்பிட்டி:
தண்ணீரூற்றுச் சூழலில் தம் வளர்ச்சியுற்ற முஸ்லிம்கள் இப்பிரதேசத்தின் அமைத்துக் கொண்டார்கள். இவ்வாறு வட முஸ்லிம்கள் அமைத்துக் கொள்ள இப்பிரே
79

ரின் பழைய வரலாற்றுச் சின்னங்களை இக்கிராமத்தின் மேற்குப்புறமாக பெரியபள்ளி என்றழைக்கப்படும் ம் -7ஐப் பார்க்க) ஏறக்குறைய 200 டுகின்றது. இப்பள்ளியின் பழைமைத் ன்களைக் கொண்ட கட்டடக்கலை ன்படுத்தியுள்ள சுண்ணக்கல் போன்ற கூடியதாக இருக்கின்றது. இப்பள்ளி டப்பட்டிருக்க வேண்டும் என்பதை நின்றன. இப்பள்ளிவாயில் முஸ்லிம்கள் பளியேறும் வரை தொழுகைக்காகப்
முன்னர் கட்டப்பட்ட மற்றுமொரு சந்தைக்கு அருகாமையில் அதாவது ப்படுகின்றது. (படம் -7ஐப் பார்க்க). ண்டியே இப்பிரதேச முஸ்லிம்களின் பண்டும். பின்னர் வடகிழக்காக க்கி முஸ்லிம்கள் இடம் பெயர்ந்திருக்க கின்றது. இப்பள்ளிவாயில் சிதைவுக்கு பரியார் ஒருவரின் சியாரம் அதாவது -7ஐப் பார்க்க ). மிழ் மக்களும் வாழ்ந்து வந்தார்கள். ாக வசித்தார்கள். இக்கிராமத்தில் பக்காட்டும் "ஊத்தங்கரைப் பிள்ளையார் ற்றிருந்தது. இணக்கமான இன மக்களுக்கிடையில் இப்பிரதேசத்தில்
மை ஸ்திரப்படுத்தி தொடர்ச்சியாக வட கிழக்காக தமது வாழ்விடத்தை - கிழக்காக தமது குடியிருப்புக்களை தசத்தினுாடாக ஊற்றெடுத்துச் சென்ற

Page 98
படம்-8:"மூன்று கிராமங்களின் "விவசாயப் பொருளாதார அடிப்படை
, வடக்குவெளிவயல் . . .
...!:ட்ட,
******
//i...):-://l
போண்டா வயல்)
4.4.
• சிங்கவை
பல்
Y.
x |
காரையடி
வயல்.
+ |
நீர்ப்பாசனக் கால்வாய் ...141••••••••••••...
பிட்டிப்பிலி
(.tl...:1•1)
\முல்லைத்தது-1ாககுளம் வீதி
+ பிராமணன்கனை 8 கண்ணாடி சரீபு+ர்.
தோட்டம்
வயல்
+ +
•?1:44.11.1•41:4•*1.
ஹிஜ்ராபுரம்
1940
தென்னை

"மேடத்துவயல் தளம்: Eli
பிட்டிப்பிலி வீதி
பயறுபாயிங்.
-14++++
-+-+F4.,
*144.14:++••
.:FI•i.+••t.j>F:/••••••++++.
11.••••••••1.,
4
- * *
மேட்டுநிலப்பயிர்ச் செய்கை
குமாரபுரம் i !
நீராவிப்பிட்டி
118 மைல் மூலம்: வெளிக்கள ஆய்வு, 1996, இலங்கை இடவிளக்கப்படம், 1972. கணுக்கேணி
*•••••
நீராவியூற்று.
(& 4;
ஃபம்,
4ெ ச 2
தக
தண்ணீரூற்று
மாங்குளத்திற்கு
80

Page 99
இயற்கை நீரூற்று காரணமாக இருந்தது. காணப்பட்ட உயர்நிலம் பெருகிய சனத்தெ வடக்காகக் காணப்பட்ட தாழ்நிலப் நடவடிக்கைகளுக்கும் பொருத்தமாக இ
"'நீராவி" என்ற நீரூற்றை அடி புதிய முஸ்லிம் கிராமம் "நீராவிப்பிட் நீராவிப்பிட்டியின், இடது புறத்தில் த. பகுதியும், வலப்புறத்தில் ஹிஜ்ராபுரம் காணப்பட்டன. உண்மையில் இம்மூன்று வரலாற்று, கலாசார பொதுத்தன்மையை கொண்ட குடியிருப்புத் தொடர்ச்சியாகும்
முஸ்லிம்களின் பலவந்த வெளி 400 குடும்பங்கள் வாழ்ந்தன. தண்ணீ பழைமைக்குச் சான்றாகக் காணப்படுவது சமூக, கலாசார மையமாகக் காண மாற்றத்திற்கேற்ப புதிய சமூக, கலாசார முக்கியமானது, நீராவிப்பிட்டி கிராமத்தில் முஸ்லிம் பாடசாலை, 1948 ஆம் ஆண்டில் பள்ளிவாயில், சம காலத்தில் ஸ்தாபிக் (படம் -7) ஆகியவைகளாகும். இன முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார வளர்
இப்பிரதேச முஸ்லிம்களோடு | நீர்ச்சுனையான ''நீராவி" காணப்படுகின்றது தண்ணீரூற்று -நீராவிப்பிட்டி கிராமங்க என்ற நீரூற்று இப்பிரதேச முஸ்லிம்கள் எக்காலத்திலும் வற்றுவதில்லை. முஸ்லி இந்நீரூற்று காரணமாக இருந்தது. ! விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கும் தட மக்களின் காரையடி, போண்டா போன் சுனையில் இருந்து நீரைப் பெறுகின் முஸ்லிம்களின் நாளாந்த தேவைகளுக்கு இப்பிரதேசத்தின் நாளாந்த வாழ்க்கையே
81

இவ்வியற்கை நீரூற்றிற்குத் தெற்காகக் தாகையின் குடியிருப்பு வசதிகளுக்கும், 5 இம்மக்களின் நெல் விவசாய பிருந்தது.
உடப்படையாகக் கொண்டு உருவாகிய டி" என்று அழைக்கப்பட்டது. ண்ணீரூற்று முஸ்லிம் குடியிருப்புப் 5 முஸ்லிம் கிராமமும் அமைந்து
று கிராமங்களும் சமூக, பொருளாதார, யும், புவியியல் தொடர்ச்சியினையும்
"யேற்றத்தின் போது நிராவிப்பிட்டியில் ரூற்று முல்லத்தீவு முஸ்லிம்களின் போல் நீராவிப்பிட்டி இந்நுற்றாண்டின் ப்பட்டது. இக்கிராமத்தில் கால சின்னங்கள் உருவாயின. அதில் மிக 1934 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ல் புதுப்பித்துக் கட்டப்பட்ட ஜும்ஆ - கப்பட்ட அரபு கற்பிக்கும் மதுரசா வ இந்நுாற்றாண்டில் இப்பிரதேச ச்சிப் போக்கை எடுத்துக்காட்டுகின்றன. பின்னிப்பிணைந்த ஒன்றாக வற்றாத 1. முன்னர் குறிப்பிட்டது போல் நக்கிடையில் ஊற்றெடுக்கும் ''நீராவி" ளின் இதய ஊற்றாகும். இந்நீரூற்று ம்களின் ஆரம்ப கால குடியிருப்புக்கு பின்னர் இது இப்பிரதேச மக்களின் ாகமாகவும் பயன்பட்டது. இப்பிரதேச ற நெல் வயல் நிலங்கள் இந்நீர் றன. அது மட்டுமன்றி இப்பிரதேச 5ம் இந்நீர் பயன் படுத்தப்படுகின்றது. பாடு பின்னிப் பிணைந்த நீராவியூற்று

Page 100
பற்றி மிஸ்கீன் அப்பா அவர்களின் கூரத்தக்கதாகும். அவருடைய காலத்தி சற்று வழமைக்கு மாறாக குறைய 2 பாதிக்கப்பட்டன. நீர் பற்றாக்குறைய
இந்நிலையில் அவர் பாடிய பின்வருமாறு:
"இயற்கையின் வர இமயத்தின் ஊற்க நீவற்றிப் பொருக் நேர்ந்த பயிர் முக
இத்தனை சிறப்பு மிக்க "'நீராக கற்பனைச் சுனையாகக் காணப்படுகி . இம்மக்கள் காணும் கனவு நனவாகு தமது வாழ்க்கையை தமது பிரதே வெறும் கற்பனைக் கனவு மாத்திரம் நனவாக்க வேண்டியது நல் நோக்கம்
5.1.3 ஹிஜ்ராபுரம் :
வரலாறும் வளமும் மிக்க ( சனத்தொகைக்கு ஏற்ற வசதிகள் இல்லாததன் விளைவு ஹிஜ்ராபுரம் காரணமாக இருந்தது. ஹிஜ்ராபுரம் நீர இப்புதிய கிராமம் தோன்றுவதற்கு முன் நந்திக்கடல் மீன்வளமும், கள்ளஉரல் பிர நீராவிப்பிட்டி கிராம மக்களை நீண்ட கா கிராங்களிலிருந்து பலர் பருவ காலத் ஹிஜ்ராபுரச் சூழலில் குடியேறி வாழ்ந்
என்றாலும், ஹிஜ்ராபுரம் 195 உருவாகியது. அக்காலத்தில் இக்கிரா அரசாங்கத்தால் காணியற்றவர்களுக்

பாடலில் ஒரு பகுதி இங்கு நினைவு ல் ஏற்பட்ட நீண்ட வரட்சியில் நீராவியூற்று ஊறியதால், இப்பிரதேசத்திலுள்ள பயிர்கள்
ால் மக்கள் கஷ்டப்பட்டார்கள்.
உருக்கமான பாடலின் சில அடிகள்
சனே
ற - நீராவி கெழ
ம் சாகுதம்மா"
வி” இன்று முல்லைத்தீவு முஸ்லிம்களின் ன்றது. நீராவியூற்றின் நீரினைப் பருக வது எப்போது? மீண்டும் இம்மக்கள் 5சத்தில் ஆரம்பிப்பது எப்போது? இது மதானா? இம்மக்களின் அபிலாசைகளை ம் கொண்டவர்களின் கடமையல்லவா?
முஸ்லிம்களின் இதய பூமியில் பெருகும் தண்ணீரூற்று - நீராவிப்பிட்டி சூழலில் என்ற புதிய கிராமத்தின் தோற்றத்திற்கு பாவிப்பிட்டிக் கிராமத்தின் தொடர்ச்சியாகும். னர் இருந்தே இப்பிரதேசத்தில் காணப்பட்ட ரதேச விவசாய நிலங்களும் தண்ணீரூற்று, எலமாக கவர்ந்து வந்திருந்தன. இப்பழைய கதிலும், சிலர் நிரந்தரமாகவும் இன்றைய எது வந்தார்கள். 55 ஆம் ஆண்டிலேயே ஒரு கிராமமாக ஈமச் சூழலில் காணப்பட்ட தரிசு நிலங்கள் கு குடியிருப்பிற்காக வழங்கப்பட்டன.
82

Page 101
படம்-9: “மூன்று கிராமங்களில்" வீதிகளும் பொதுக்கட்டிடங்களும்
வ
64
வற்றாப்பாளை வீதி
அரசடி வீதி
ஆசனப்பா ரோ.'
ஒதுற்கு wrm7294
மாங்குளம் - முல்லைத்தீவு வீதி
சாலு*: ரெமீது விதி
பீலியடி வீதி
சதக்கயா,
சிங்கை
கூட்டுறவுச்சங்கம் காபைட்..ஹிஜ்ராபுரம்,
ஹிஜ்ராபுர வீதி
றிஜராபுரம் -நீராவிப்ட்டுட்டி. எல்.
லிப்ட்ட்ெடி. எல்ல்ை வீதி
83
R.D.S ரேல
4மதப்பா .ே
அப்துல் காதர் ரொட்

Peo
பேய்பையப்பா
1மதுரசா வீதி 80'
கிராம அபிவிருத்திச் சங்கக்கட்டிடம் கூட்டுறவுச்சங்கம்
நீராவிப்பிட்டி விவசாய விற்பனை நிலையம் சிசு மாதா பராமரிப்பு நிலையம்
விசக்கடி சாயிபு |
தண்ணீரூற்று முஸ்லிம் -
மகாவித்தியாலயம் >
பிட்டிப்பிலி வீதி
முகம்மது காசிம் ஒழுங்கை பை ஒழுங்கை
தண்ணீரூற்று
கோசிர் ஆயா
ஒழுங்கை
M, Inாகாணம்
(முஸ்லிம் N
மாங்குளக்கிற்கு
பாடசா6ை.
ஒழுங்கை)
பக்கீரப்பா காறடி
சகாய வேலைத்தெரு
கபுறடி ரோட்
வீதி
நெடுங்கேணி
இவர்களை
குமாரபுரம் கோவில் ரோட்
கூட்டுறவுச்சங்கம்
விதி சைவப்பாடசாலை
குமுழமுனை வீதி
18 மைல்
மூலம்: வெளிக்கள ஆய்வு. 1996. இலங்கை இடவிளக்கப்படம். 1972.

Page 102
இக்காணிகளை தண்ணீரூற்று, நீராக முஸ்லிம் மக்கள் குத்தகை அடிப்பா இம்மக்களின் வருகையோடு ஏலகே சூழலில் வாழ்ந்த முஸ்லிம்களும் இப் இக்காணிகள் தண்ணீரூற்றுக் கிராம வழங்கப்பட்டமையினால் அக்காலத்தி என்று பெயரிட்டு அழைக்கப்பட்டது
இதன் பிறகு, 1970ஆம் ஆன் விரிவாக்கப்பட்டது. இப்பாடசாலைச் கிராமம்" என்ற கிராமத்தின் ஒரு கொடுக்கப்பட்டன. இப்புதிய வீட அன்று ஒரு தனித்துவமான குடிய ஆண்டில் "ஹிஜ்ராபுரம்" என்று பெ முஸ்லிம் ஹிஜ்ரி 1400ஆம் ஆண்டு ெ இக் குடியேற்றத் திட்டத்திற்கும் ஹி
ஹிஜ்ராபுர சூழலில் காணப்ப செய்கை, ஏனைய நெல் போன்ற வி பொருளாதார அடிப்படையாகியது. . சமூக நிறுவனங்களும் இக்கிராமத்தில் ( தனிக் கிராமமாக மாற்றின. படம்-9 பொதுக் கட்டடங்களையும் காட்டுகின் ஹிஜ்ராபுரத்தில் ஏறக்குறைய 300 மு.
வளமும், வனப்பும் மிக்க தமது அகதி முகாம்களில் வாழ்கின்ற முல்லை சிறப்பம்சங்களை இன்றும் மறக்க மு பின் ஆறு வருடங்களாகியும் மக்கள் ப பசுமையாகக் காணப்படுகின்றன. மு. மிகவும் உறுதியாக வேரூன்றிய ஒன் காட்டி நிற்கின்றது.
5.2 முல்லைத்தீவு நகர பு
முல்லைத்தீவில் முஸ்லிம்கள் ஒரு முக்கியமான பிரதேசம் முல்லை

விப்பிட்டிக் கிராமத்தைச் சேர்ந்த நிலமற்ற டையில் பெறுவதற்கு முன் வந்தார்கள். வ பருவ கால குடிகளாக இப்பிரதேச பிரதேசத்தில் நிரந்தரக்குடிகளாக மாறினர். சபையின் (Village Council) சிபாரிசில் இல் இக்குடியிருப்பு ''வி.சி. கிராமம்"
சுடு தண்ணீரூற்று முஸ்லிம் பாடசாலை சூழலில் வாழ்ந்த மக்களுக்கு "வி. சி. பகுதியில் வீடுகள் அமைக்க காணிகள் மைப்புத் திட்டத்தோடு வி.சி. கிராமம் பிருப்பாகியது. இக்கிராமம் 1972 ஆம் யர் சூட்டப்பட்டது. இது இலங்கையில் கொண்டாடப்பட்ட காலமாகும். அதனால் ஜ்ராபுரம் என்ற பெயர் வழங்கப்பட்டது. ட்ட நந்திக்கடல் மீன்வளம், தென்னைச் வசாய நடவடிக்கைகள் இக்கிராமத்தின் காலப் போக்கில் புதிய சமய, கலாசார, தோன்றின. இவை யாவும் இக்கிராமத்தை
ஹிஜ்ராபுர கிராமத்தின் வீதிகளையும், றது. பலவந்த வெளியேற்றத்தின் போது ஸ்லிம் குடும்பத்தினர் வாழ்ந்தார்கள். நு தாயகத்தில் இருந்து தொலைதுாரத்தில் த்தீவு முஸ்லிம்களால் தமது கிராமங்களின் டியவில்லை. பலவந்த வெளியேற்றத்தின் மனதில் முல்லைத்தீவு பற்றிய நினைவுகள் ல்லைத்தீவில் இம்மக்களின் வாழ்க்கை று என்பதை இது மிகத் தெளிவாகக்
முஸ்லிம் குடியிருப்பு:
செறிந்து வாழும் பிரதேசங்களில் மற்றும் த்தீவு நகரமாகும். 1990ஆம் ஆண்டு
84

Page 103
நகர சபையின் மொத்த சனத்தொகை காணப்பட்டனர். தண்ணீரூற்று முஸ்லிப
முஸ்லிம் நகரச் செறிவும் வரலாற்றுப் ப ை இந் நகரம் ஒரு துறைமுக மற்றும் நி முன்பிருந்து முஸ்லிம்கள் இந்த நகரச் கு என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள் முஸ்லிம் வர்த்தகர்களும், முஸ்லிம் மலாய பிற்காலத்தில் மலாய முஸ்லிம் மக்களின் தெ ஆதாரங்கள் இல்லை. ஆனால், அதே நே முஸ்லிம்கள் இந்நகரை தமது தாயகமா வாழ்ந்து வந்திருகின்றனர்.
Lewis (1895) என்ற வரலாற் காலத்தில் முல்லைத்தீவு நகர முன் எடுத்துக்காட்டுகின்றார். "அக்காலத்தில் முக்கியமான ஒரு பகுதியாகக் காணப்பட்ட சொந்தமான பல பெரிய வர்த்தக நிலையங் ஒப்பீட்டு ரீதியாக சிறந்த கட்டட அ ை மட்டுமன்றி நகர முஸ்லிம்கள் வர்த்தக பண்புகளைக் கொண்டிருந்தார்கள்" என் சிறபப்பு அம்சங்களை Lewis என்ற பி
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ! நகரில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்திரு காணப்படுகின்றன. முஸ்லிம்கள் பலவந்தமா ஏறக்குறைய 220 முஸ்லிம் குடும்பங்கள் நகரின் மத்தியிலும் தெற்குப் புறமாகவும் செறிவாக வாழ்ந்தார்கள் (பார்க்க படம் - நடவடிக்கைகளும், குடியிருப்புக்குரிய இ இங்கு முஸ்லிம்களின் வீடுகள் விசா அமைக்கப்பட்ட அகலமான சுவர்களைக்க சில வீடுகள் மாடி வீடுகளாகவும், இம் கட்டடக்கலை அம்சங்களைப் பிரதிபலி நகரில் முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மை சான்றாகும்.
85

யில் 10 சதவீதமாக முஸ்லிம்கள் 5 கிராமத்தைப் போல் முல்லைத்தீவு ழமைமிக்கது. பிரித்தானியர் காலத்தில் மர்வாக நகரமாக மாறிய காலத்திற்கு கழலில் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் ளன. ஆரம்ப காலங்களில் இந்நகரில் படை வீரர்களும் வாழ்ந்திருந்தார்கள். தாடர்ச்சி இந்நகரத்தில் இருந்ததற்கான கரத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ரகக் கொண்டு மிக நீண்ட காலமாக
ன.
மறு ஆசிரியர் பிரித்தானிய ஆட்சிக் ஸ்லிம்களின் வர்த்தகச் சிறப்பை முல்லைத்தீவு பசார், நகரின் மிக து. அந்த பசாரில் முஸ்லிம்களுக்குச் கள் காணப்பட்டன. இந்நிலையங்கள் மப்பைக் கொண்டிருந்தன. அது கத்தில் பலரும் போற்றும் சிறப்புப் பது போன்ற இம்மக்கள் பற்றிய பல சித்தானியர் விதந்து கூறுகின்றார். இருந்து இன்றுவரை முல்லைத்தீவு ப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் க வெளியேற்றப்பட்ட போது இந்நகரில் வாழ்ந்திருந்தனர். இம் முஸ்லிம்கள் பிரதான வீதியின் இருமருங்கிலும் 10). நகரில் முஸ்லிம்களின் வர்த்தக டங்களும் கலந்து காணப்பட்டன. லமானதாகவும் சுண்ணக்கற்களால் க கொண்டதாகவும் காணப்பட்டன. மமாடி வீடுகள் பிரித்தானியர் காலக் ப்பதாகவும் காணப்பட்டன. இவை மயை எடுத்துக் காட்டும் மற்றுமொரு

Page 104
படம் - 10 : முல்லைத்தீவுப்
பாந்தலுக்கு
- சின்னாறு
இந்துக் கோவில்
கராச்சிக்குடியிருப்பு தெ
எங்குளம் முல்லைத்தீவு வீதி
ப சின்னாறு !
வைத்தியசாலை
|மாங்குளத்திற்கு
சிலாபத்தை வதி
மூலம் : வெளி

பட்டினத்தில் முஸ்லிம்கள்
வ
செல்வபுர வீதி
கடல்
பாடசாலை வீதி
கொன்வென்ட்
பாடசாலை தமிழ். ம.வி.
கடற்கரை வதி
கஸ்டமஸ் வக்
பிரதான வீதி
சுபஹானி மஹ்பூப்
ஜூம்மாப்பள்ளி
அரபு மதுரசா
மார்க்கட் வீதி ;
கிறிஸ்தவ
ஆலயம் |
முஸ்லிPIT து.
ஹாஜியார்
- PRVD வது
முஸ்லிம் குடியிருப்பு பகுதி
முஸ்லிம் குடியிருப்பு பகுதி
|கல்விப்பாட்டு வதுட
77
முஸ்லிம் பாடசலை வீதி
முஸ்லிம்
பாட் சாலை)
வைத்தியசாலை வதி
115.கி.மீ
க்கள் ஆய்வு, 1995

Page 105
பிரதான வீதியும் மார்கட் 6 மஃபூப் ஜூம்மாப் பள்ளிவாயில் அமைந் வீதியின் மறுபுறத்தில் அரபிக் கல தெற்குப் புறமாக முஸ்லிம் பாடசாலை இவை யாவும், இது போன்ற ஏனை இந்நகரில் முஸ்லிம்களின் தனித்துவத் சுப்ஹானி மஃபூப் ஜூம்ஆப்பள்ளிவாயில் அகலச் சுவரையும் பெரிய உரு ை கட்டடமாகும். இப்பள்ளிவாயிலும், த அமைப்பு ரீதியாக ஒத்த தன்மை ெ இப்பள்ளிவாயில் நகரின் மையத்தில் அ தரக் கூடிய கட்டடங்களையும், தோட்டங்களையும், வயல் காணிகள்
ஒப்பீட்டு அடிப்படையில் ெ சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்க பல வர்த்தக, கைத்தொழில், சேவை முஸ்லிம்கள் நகரம் சார்ந்த ஹோட்ட வர்த்தக நடவடிக்கைகளிலும், வவுன வர்த்தகப் பொருட்களை கொன தொடர்புடைய போக்குவரத்து நடவம் அத்துடன் முஸ்லிம்களுக்குச் சொந் திருத்தும் நிலையங்கள் நகரில் பரவ
முல்லைத்தீவு நகர முஸ்லிம். சேவை தொடர்பான பொருளாதார நடவு மீன்பிடி நடவடிக்கைகளிலும் ஈடுபட் சூழக் காணப்பட்ட நெல் வயல் நிலங் கொக்கிளாய் வீதியில் காணப்பட்ட பயிர்ச் செய்கை நிலங்கள் நகர முஸ் இப் பொருளாதார நடவடிக்கைகளிலு
முல்லைத் தீவு நகரின் ( பிரதேசங்களை நோக்கிய குடிப் பெயர் நகர முஸ்லிம்களின் இடப் பெயர்வா

பீதியும் சந்திக்கும் இடத்தில் சுப்ஹானி திருந்தது. இதற்கு எதிர்ப்புறமாக பிரதான ாசாலை கட்டப்பட்டிருந்தது. நகரின் லல ஒன்று காணப்பட்டது (படம்-10). ப சமய, சமூக, கலாச்சார சின்னங்களும் தை வெளிப்படையாகக் காட்டி நின்றன. சுண்ணாம்புக் கற்களால் அமைக்கப்பட்ட ள வடிவ துாண்களையும் கொண்ட ண்ணீரூற்றுப் பெரிய பள்ளியும் கட்டட காண்டிருந்தன எனக் கூறப்படுகின்றது. மைவுற்றிருப்பதோடு, நகரில் வருமானம் நகரத்திற்கு வெளியே தென்னந் மளயும் சொந்தமாகக் கொண்டிருந்தது. பாருளாதார ரீதியாக நகர முஸ்லிம்கள் கள். நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வ நிலையங்கள் காணப்பட்டன. நகர டல், சில்லறைச் சாமான் கடை ஆகிய சியா - முல்லைத்தீவு நகருக்கிடையிலான ன்டுவருதல், கொண்டு செல்லலுடன் டிக்கைகளிலும் முன்னணி வகித்தார்கள். தமான தையல் நிலையங்கள், வாகனம் கலாகக் காணப்பட்டன. கள் நகரம் சார்ந்த வர்த்தக, கைத்தொழில், படிக்கைகளில் மாத்திரம் அன்றி விவசாயம், -டு வந்தனர். முல்லைத்தீவு நகரைச் மகள் (படம் - 6), நகரத்திற்குத் தெற்காக தென்னந் தோட்டங்கள், உப உணவுப் "லிம்களுக்கு உரிமையாக இருந்ததோடு பம் இவர்கள் ஈடுபட்டும் வந்தார்கள். தடிசன வளர்ச்சி இம்மக்களை புதிய பிற்கு துாண்டியது. இந்த அடிப்படையில் எல் உருவான ஒரு மீனவ குடியிருப்பு

Page 106
கல்விப்பாடு கிராமத்தில் அமைந்திருர் குடியிருப்புகள் முல்லைத்தீவு- கொக்கிளா ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதில் உடுப்பு ஆகிய சிறிய முஸ்லிம் குடியிருப்புகள்
5.3 விவசாய குடியேற்றத்
இலங்கை அரசாங்கம் 1950 ஆ விவசாயக் குடியேற்றங்களை அபிவிருத் திட்டங்கள் துார்ந்து போன குளங்க ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் உருவ குடியிருப்பதற்கும் பயிர் செய்வதற்கு வழங்கப்பட்டன.
இந்த அடிப்படையில் முல்ன குடியேற்றத்திட்டங்கள் கடந்த காலங்களி கட்டு, முறிப்பு, தண்ணிமுறிப்பு ஆகி முஸ்லிம்களுக்கும் காணிகள் வழங்கப்பட முஸ்லிம் கிராமங்களில் வாழ்ந்த நிலமற்ற காணி பெற்று நன்மையடைந்தார்கள்
இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். இது ஒரு பெரிய விவக குடியேற்றத்திட்டத்தில் மூன்று பகு வழங்கப்பட்டன. அவற்றில் ஒன்று "சேனைக்குடியிருப்பு" என்றும், மூன் அழைக்கப்பட்டன.
முறிப்பின் கொத்தியாகும்பப் குடும்பங்கள் வாழ்ந்தன. ஒரு குடு நிலப்பயிர்ச்செய்கைக்கு வழங்கப்பட்டது. மரக்கறி ஆகிய விவசாய நடவடிக் இக் கிராமத்தில் ஜும்மாப் பள்ளி ஒன்று (எள் ளுச் சேனை) முறிப்பு குக அமைந்திருந்தது. இங்கு மொத்தமாக இங்கு ஒரு தைக்காப்பள்ளிவாயிலும்

கதது. இதேபோல பல சிறிய முஸ்லிம் ாய் பிரதான வீதியிலும் நகர் முஸ்லிம்களால் பக்குளம், உப்புமாவெளி, 5ஆம் கட்டை - குறிப்பிடத்தக்கவைகளாகும்.
திட்டங்கள்!
ம் ஆண்டிலிருந்து வரண்ட வலயத்தில் தி செய்து வந்துள்ளது. இக்குடியேற்றத் -ளை திருத்தி நீர்ப்பாசன வசதிகளை பாக்கப்பட்டன. நிலமற்ற விவசாயிகளுக்கு ம் குடியேற்றத் திட்டத்தில் காணிகள்
மலத்தீவு மாவட்டத்திலும் பல் விவசாய "ல் ஏற்படுத்தப்பட்டன்: இதில் முத்தையன் யே விவசாயக் குடியேற்றத்திட்டங்களில் டன. சனச்செறிவு மிக்க முல்லைத்தீவின் விவசாயிகள் இக்குடியேற்றத் திட்டத்தில்
குடியேற்றத் திட்டங்களில் முறிப்பும் ரய குடியேற்றத்திட்டமாகும். முறிப்புக் திகளில் முஸ்லிம்களுக்கு காணிகள் ''கொத்தியாகும்பம்" என்றும், மற்றயது
றாவது ''நாலாம் கட்டை'' என்றும்
பகுதியில் மொத்தமாக 56 முஸ்லிம் ம்பத்திற்கு 3 ஏக்கர் காணி மேட்டு இங்கு தென்னை, நிலக்கடலை, கடலை, கைகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டார்கள். ) காணப்பட்டது. சேனைக் குடியிருப்பு
அணைக்கட்டின் தென்புறமாக 20 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தன. காணப்பட்டது.

Page 107
4ஆம் கட்டை விவசாயக் நான்காவது மைலில் அமைவுற்றிரு ஏற்படுத்தப்பட்டது. இங்கு மொத்தமாக வழங்கப்பட்டன. ஒரு குடும்பத்திற்கு மேட்டுநிலப் பயிர்ச் செய்கைக்காகவும் குடியிருப்புக்குத் தேவையான பள்ளி அப்போது காணிகள் ஒதுக்கப்பட்டிருந் யுத்த நடவடிக்கைகளால் இங்கு வாழ் தமது பழைய கிராமத்திற்குத் திரும்
முல்லைத் தீவில் மற்று தண்ணிமுறிப்பாகும் (படம்-4). இக்குடி தெற்கே 16 மைல் தொலைவில் காணப்ப முல்லைத்தீவு பாராளுமன்ற அங்கத்தவ சிபாரரிசின் பேரில் தண்ணிமுறிப்பில் முன் இங்கு ஏறக்குறைய 150 முஸ்லிம் குடும் வழங்கப்பட்டிருந்தன. ஒரு குடும்பத் விவசாயக் காணி இம்மக்களுக் 6 வெளியேற்றப்பட்ட போது மொத்தமாக சொந்தமாக இருந்தது. இப்பிரதேசம் ( பிரபல்யமானதொன்றாகும். பருவகால மா வசதியும், இரண்டு பருவ நெல் வி பாரிய நீர்ப்பாசனத் திட்டக் குளமான தண். காணி வழங்கப்பட்ட சகலருக்கும், பே காணிகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. காணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆ நடைமுறைப் படுத்தப்படவில்லை.
இறுதியாக முத்தையன்கட்டு' இது முல்லைத்தீவு நகரத்தில் இரு அமைந்துள்ளது. முத்தையன் கட்டு குடியேற்றத் திட்டம் ஒன்று 1957இல் அ. அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் கொல் ஏற்படுத்தப்பட்டதாகும். ஆரம்பத்தில்

குடியிருப்பு குமுளமுனை வீதியின் நந்தது. இது 1985 ஆம் ஆண்டு 72 முஸ்லிம் குடும்பங்களுக்கு காணிகள் அரை ஏக்கர் காணி குடியிருப்பிற்கும்,
வழங்கப்பட்டது. இங்கு முஸ்லிம் வாயில், மையவாடி போன்றவற்றிற்கும் தன. துரதிஷ்டவசமாக இப்பிரதேசத்தின் த்த மக்கள் தொடர்ந்தும் வாழ முடியாது பி விட்டனர். மொரு விவசாயக் குடியிருப்பு யேற்றத்திட்டம்' முல்லைத்தீவு நகருக்குத் ட்டது. 1955 ஆம் ஆண்டு அப்போதைய ர் கெளரவ சி. சுந்தரலிங்கம் அவர்களின் ப்லிம்களுக்கு காணிகள் வழங்கப்பட்டன. பங்களுக்கு நெற்செய்கைக்கான காணிகள் திற்கு 3 ஏக்கர் என்ற அடிப்படையில் த வழங்கப்பட்டது. பலவந்தமாக 5 600 ஏக்கர் நிலம் முஸ்லிம்களுக்குச் முல்லைத்தீவில் நெல் விவசாயத்திற்குப் ழையும், தண்ணிமுறிப்புக்குள் நீர்ப்பாசன விவசாயத்திற்கு இங்கு வாய்ப்பளித்தன. ணிமுறிப்புக் குளத்தின் கீழ் நெற்செய்கைக் மட்டுநிலப் பகுதியில் குடியேற்றத்திற்காக இதில் முஸ்லிம்களுக்கும் குடியேற்றக் மனால் யுத்த சூழ்நிலையில் இத்திட்டம்
விவசாயக் குடியிருப்பைக் குறிப்பிடலாம். இது மேற்காக 16 மைல் தொலைவில் * குளத்தை அடிப்படையாகக் கொண்ட மைக்கப்பட்டது. இக்குடியேற்றத்திட்டம் பரவ டி.சிதம்பரம் அவர்களின் முயற்சியால் இங்கு 110 முஸ்லிம் குடும்பங்களுக்கு
39 |

Page 108
330 ஏக்கர் காணி வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட விவசாயக் காணிகள் இந் கால்வாயின் இடது புறமாகக் கால நிலப்பயிர்களும் செய்கை பண்ணப் பட்
முஸ்லிம் பாடசாலை ஒன்றும் கால் வெளியேற்றம் வரை இவை முஸ்லிம்
மேற்குறித்த பெரிய முஸ்லிம் 6 முஸ்லிம் குடும்பங்களும், கணுக்கே 10 குடும்பங்களும், வற்றாப்பளையில் குடும்பங்களும் வாழ்ந்தார்கள். இக்கு 2 காட்டுகின்றது.
குறி
தண்ணிமுறிப்புக்குளம் 13 சதுர கிய 935 ஹெக்டர் நிலத்துக்கு நீர்ப்பாசனம்
முத்தையன் கட்டுக் குளம் 170 . ஏறக்குறைய 166 ஹெக்டர் நிலத்துக்

முத்தையன் கட்டில் முஸ்லிம்களுக்கு நீர்ப்பாசனத் திட்டத்தில் பிரதான நீர்ப்பாசனக் னப்பட்டன. இங்கு நெல்லும், மேட்டு -ன. இங்கு ஒரு ஜூம்மாப் பள்ளிவாயிலும், ணப்பட்டது. முஸ்லிம்களின் பவவந்த களின் பயன்பாட்டிற்கு உட்பட்டிருந்தன.
குடியிருப்புகளை விட விஷ்வமடுவில் ணியில் 10 குடும்பங்களும், குமாரபுரத்தில் 2 குடும்பங்களும் உடுப்புக்குளத்தில் 5 டியிருப்புகளின் இட அமைவை படம்
ப்புகள்
மீ பரப்பினைக் கொண்டது. இது ஏறக்குறைய ம் அளிக்கின்றது.
சதுர கிமீ பரப்பினைக் கொண்டது. இது
த நீர்ப்பாசனம் அளிக்கின்றது.

Page 109
6. இனப்பிரச்சினை
முஸ்லிம்
6.1 முஸ்லிம் - தமிழ் உறவு
இன ஐக்கியத்திற்கு முல்லைத் உதாரணமாகக் கொள்ளக்கூடிய - இம்மாவட்டத்தில் முஸ்லிம்களும், தமிழர் மற்றவர்கள் மதித்து வாழ்ந்து வந்தார். பெரும் மான்மையினரால் புறக்கணிப்பிற்கு வரை முல்லைத்தீவின் தமிழ் அரசி காணப்பட்டனர். பொருளாதார ரீதியாக வாழும் சமூகங்களாக இவ்விரு சமூக
இவ்விரு மக்களையும் இம் அமைந்தது. தமிழ் மொழிப் பாடசாலை இணைந்து கற்றனர். இவ்வாறு இவ் கற்ற பாடசாலைகளில் முக்கியமான . தண்ணீரூற்று சீ.சீ பாடசாலை, முல்ல ஆகியன காணப்பட்டன. சிறுபான்மை பெற்றவர்களாகக் காணப்பட்டனர். கவித்திறனாலும் தமிழ் மொழி வளர்ச்சி முஸ்லிம்களின் சமய, கலை, கலாசாரங். முஸ்லிம்களின் கலை அம்சங்களான க மங்களகரமான நிகழ்ச்சிகளில் அரங்.ே கெளரவித்தார்கள். இனங்களுக்கிடையிலா பரஸ்பர இனப் புரிந்துணர்வும், மரியான இருந்தன.
முல்லைத்தீவில் முஸ்லிம்- தப் உதாரணங்களைக் கொண்டு விளக். பொருளாதார ரீதியாக விவசாய, வர்த்,

யும் முல்லைத்தீவு மகளும்
நதீவின் முஸ்லிம் - தமிழ் உறவு' ஒரு அளவு சிறப்பாகக் காணப்பட்டது. களும் ஒருவரது இனத் தனித்துவத்தை கள். முஸ்லிம் சிறுபான்மையினர் தமிழ் ட்படவில்லை. மிக அண்மைக் காலம் பலில் ஒரு அங்கமாக முஸ்லிம்கள்
ஒருவருக் கொருவர் போட்டியிட்டு கமும் முல்லைத்தீவில் வாழவில்லை.
ணைக்கும் பாலமாக தமிழ் மொழி லகளில்' முஸ்லிம் - தமிழ் மாணவர்கள் விரு இன மாணவர்களும் இணைந்து
வைகளாக வித்தியானந்தா கல்லுாரி, மலைத்தீவு நகர தமிழ் மகாவித்தியாலயம் முஸ்லிம்கள் தமிழ் மொழித் தேர்ச்சி தமது தமிழ் எழுத்தாற்றலாலும், - சிக்கு முஸ்லிம்கள் பங்காற்றினார்கள். கள், தமிழ் மக்களால் மதிக்கப்பட்டன. ளிகம்பு, சிலம்படி ஆகியவற்றை தமது கற்றி, முஸ்லிம்களை தமிழ் மக்கள் என இவ்வாறான கலாசாரப் பரிமாற்றங்கள் ஒதயும் மேலும் வளரக் காரணங்களாக
மிழ் உறவின் ஆழத்தை பல உள்ளூர் கலாம். முஸ்லிம்களும் தமிழர்களும் தக நடவடிக்கைகளில் பங்காளிகளாக

Page 110
இருந்ததற்கு இப்பிரதேசத்தில் பல உத பல இடங்களில் தமிழ் மக்களினதும், அருகருகே காணப்பட்டன. விவசாயம் முஸ்லிம் மக்களும் ஒன்றாகச் சேர்ந் வேலைகளில் மற்றவர் உதவுவதும் நாள் காணப்பட்டன. அது மட்டுமன்றி முல் தமிழ் குடியிருப்புக்களை அண்மிய சூ தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபு
தமிழ் மக்களுடன் இணைந்து முஸ்லிம் இன மக்களும் ஒருவரை ஒருவர் அடிநல்லது கெட்டதுகளில் பங்குபற்றவு முல்லைத்தீவில் தமிழ் - முஸ்லிம் உ வாழ்க்கையில்தான் மறைந்திருந்தது.
கலாசார ரீதியாக முஸ்லிம்களில தமிழ் நண்பர்கள் விஷேடமாக அழைக் வழமை இங்கு காணப்பட்டது. அ. நிகழ்ச்சிகளிலும், மரணம் போன்ற கு பரஸ்பரம் கலந்து கொள்வர். அதே பே
தைப்பொங்கல் பண்டிகைகளில் மு கொள்வார்கள். குறிப்பாக சித்திரை நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் மிக ஆர்வம் இவ்விழாவை சிறப்பிப்பதுண்டு. இவ். ஓட்டம், வண்டில் சவாரி போன்ற போட்டி சூடுவது இப்பிரதேசத்தில் வழமையாக
முல்லைத்தீவில் வைகாசி ம அம்மன் கோவில் திருவிழாப் பொங் பார்வையாளர்களாக கலந்து கொள்வா (ஸல்) அவர்களின் பிறந்ததின விழா, கொ சீனடி, சிலம்படி போன்ற கலை நிகழ்ச்சி மக்கள் பெரும் எண்ணிக்கையில் வ
92

பரணங்கள் உள்ளன. முல்லைத்தீவில் முஸ்லிம்களினதும் விவசாய நிலங்கள் நடவடிக்கைகளுக்காக தமிழ் மக்களும், து செல்வதும் ஒருவரின் விவசாய எந்த நடவடிக்கைகளாக இப்பிரதேசத்தில் லைத்தீவில் முஸ்லிம் குடியிருப்புக்கள் ழலில் காணப்பட்டன. உதாரணமாக ரப் பிரதேசத்தில், முல்லைத்தீவு நகரில் கள் வாழ்ந்தார்கள். அதனால் இவ்விரு க்கடி சந்திக்கவும், சுகம் விசாரிக்கவும், ம் அதிக வாய்ப்புக்கள் இருந்தன. உறவின் இரகசியம் இந்தக் கூட்டு
ன் நோன்பு, ஹஜ் பெருநாள் தினங்களில் க்கப்பட்டு விருந்துபசாரம் செய்யப்படும் து போன்று திருமணம் போன்ற சுப் வக்க நிகழ்ச்சிகளிலும் இரு சாராரும் கால் தமிழ் மக்களின் சித்திரை வருடம், -ஸ்லிம்கள் பாரபட்சமின்றி கலந்து வருட கொண்டாட்ட விளையாட்டு மாக கலந்து கொண்டு தமிழ் மக்களின் விழாக்களில் முஸ்லிம்கள் சைக்கிள் களில் கலந்து கொண்டு வெற்றிவாகை க் காணப்பட்டது. ஈதத்தில் நடைபெறும் வற்றாப்பாளை கலில் முஸ்லிம்கள் வர்த்தகர்களாக, சர்கள். அது போல முஹம்மது நபி டியெடுத்தல் நிகழ்ச்சிகளில் நடைபெறும் சிகளைக் கண்டு களிப்பதற்காக தமிழ் பருவதுண்டு. அது போல காட்டு

Page 111
விநாயகர் கோவில், ஊற்றங்கரைப் ! கண்ணகியம்மன் கோயில் திருவிழாக்களி கச்சேரி, நாடகம் போன்றவற்றை ரசிப் இவ்விரு இனங்களுக்கிடையில் மேற்கு பரஸ்பர ஈடுபாட்டிற்கு இவ்விரு மக்களி காரணமாக இருந்தன, இவ்வினப் பு ஒரே பிரதேசத்தில் இரண்டறக் கலந்து
தமிழ் மக்கள் இனப் பிரச்சினை தமிழ் மக்களுக்கு உதவுவதன் மூலம் 8 மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளில் மு வழிகளில் உதவினார்கள். உதாரணம் மக்கள் பாதிக்கப்பட்ட போது அவர்களுக் கொடுக்கப்பட்டது. இதற்குப் பிரதியும் நேரங்களிலும் முஸ்லிம்கள் பாதிக்கப்ப உதவி செய்தார்கள்.
6.2 இனப்பிரச்சினையும்,
இனப்பிரச்சினையின் பிரதிபலி பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முல்லை முல்லைத்தீவில் முல்லைத்தீவு நகரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. காரண பிரதேசம் இராணுவத்தினரின் கேந்திர அதாவது இலங்கை இராணுவத்திற்கு மார்க்கமாக முல்லைத்தீவை தமது முல்லைத்தீவு நகரம் சார்ந்த துறை அதனால் இவர்கள் நகரத்தையும், அ வலயமாக பிரகடனப்படுத்தி தமது பாது
அதே நேரத்தில் ஆயுதக் குழு தமது கெரில்லாப் பதுங்கு தளங்கள் இருந்தனர். கெரில்லா இயக்கத்தினர் (
வலயமா
9

பிள்ளையார் கோவில், வற்றாப்பாளை ல் நடைபெறும் நாட்டுக்கூத்து, இசைக் பதற்கு முஸ்லிம்கள் செல்வதுண்டு. தறித்தவாறான கலாசார அம்சங்களிலான னதும் இனப் புரிந்துணர்வுப் பண்புகள் ரிந்துணர்வு இவ்விரு இன மக்களும்
வாழ்ந்தமையால் ஏற்பட்டதாகும். பால் துன்பமடைந்த போது முஸ்லிம்கள் அத்துன்பத்தை பகிர்ந்து கொண்டார்கள். பஸ்லிம்கள் தமிழ் மக்களுக்கு பல்வேறு பாக இராணுவ நடவடிக்கையால் தமிழ் கு முஸ்லிம் கிராமங்களில் அடைக்கலம் பகாரமாக யுத்த காலத்திலும் மற்ற பட்டபோது தமிழ் மக்கள் முன்வந்து
முஸ்லிம்களும்:
காலமா.
ப்பான உள்நாட்டு யுத்தத்தால்' மிகவும் கத்தீவும் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக ம், நகரம் சார்ந்த பிரதேசமும் யுத்தத்தால் எம் மிக நீண்ட காலமாக மேற்குறித்த ஸ்தானமாக இருந்து வந்தமையாகும். -(இந்திய இராணுவமும்' கூட) கடல்
கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முக பிரதேசம் வசதியாக இருந்தது. தன் சூழற் பிரதேசத்தையும் இராணுவ துகாப்பை மேலும் பலப்படுத்தி வந்தனர். க்கள் முல்லைத்தீவின் காட்டுப்பகுதியில் மள அமைத்து தம்மைப் பலப்படுத்தி முல்லைத்தீவு நகர இராணுவ தளத்தை

Page 112
கெரில்லாப் போர் முறையால் அடிக்கடி வந்தனர்.
- முல்லைத்தீவின் கரையோரத்தி இராணுவ செல்வாக்கை உள்நாடு சந்தர்ப்பங்களில் தமிழ் ஆயுதக் குழுக்க கெரில்லா யுத்த முறை மூலமாகவும் இரா பதிலடியாக இராணுவத்தினர் தமது இர மோட்டார் செல், பீரங்கித் தாக்குதல்கள் 6 நிலைகளைத் தாக்கி வந்தனர். சில சந்தா எண்ணிக்கையில் உள் நாடு நோக்
மூலமாகவும் சென்று தமிழ் ஆயுத! முற்பட்டு வந்தனர்.
இந்த இராணுவ-தமிழ் ஆயுதக் அதிகமாகப் பாதிக்கப்பட்டது முல்லைத்தீ மக்களாவர். இராணுவத்தின் செல் இக்கிராமங்களைக் குறியிட்டே நிகழ்ந் அழிக்கும் இராணுவத்தின் முயற்சியும் இலக்காகக் கொண்டு நடாத்தப்பட்டன. 8 கிராமங்களில் ஓழித்திருந்தே தமிழ் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தடை இராணுவத்தின் செல் தாக்குதல் நடவடிக்கைகளினாலும் வெகுவாகப் ப முஸ்லிம் மக்களாவர். அதிலும் குறிப்பா கிராமங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புக்கள் ெ முல்லைத்தீவு நகரில் இருந்து உள்நாடு காணப்படுகின்ற முதலாவது கிராமம் ஹி அதற்கு அடுத்தது நீராவிப்பிட்டி என்ற காணப்பட்டது தண்ணீரூற்றின் முஸ்லி
அதிலும் குறிப்பாக ஹிஜ்ராபு கொண்டால் இக்கிராமத்திற்கும் முல் ை முகாமிற்கும் இடையில் ஒரு பெரு

தாக்கி இராணுவத்திற்கு சவால் விட்டு
ல் இருந்து இராணுவத்தினர் தமது நோக்கி விஸ்தரிக்க முற்படுகின்ற களால் கண்ணிவெடிகள் மூலமாகவும், சணுவத்தினர் தாக்கப்பட்டனர். இதற்குப் ராணுவ நிலைகளில் இருந்து கொண்டு முலமாக உள்நாட்டுப் பிரதேச கெரில்லா ஈப்பங்களில் இராணுவத்தினர் பெருமளவு கி கால்நடையாகவும், வாகனங்கள் க் குழுக்களைத் தாக்கி அழிக்கவும்
க் குழுக்களின் ஆயுதப் போராட்டத்தில் வுே நகர எல்லைகளில் வசித்த அப்பாவி - மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் தேன. ஆயுதக் குழுக்களை தேடி ம் இவ்வெல்லைக் கிராமங்களையே இதற்குக் காரணம், இவ்வெல்லையோரக் க் குழுக்கள் இராணுவத்திற்கு எதிரான மயாகும். ஆனால் உண்மையில், 0 களாலும், மற்றும் இராணுவ ாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி தமிழ்க முஸ்லிம் மக்களுக்கும் அவர்களின் சால்லில் அடங்காதவையாகும். காரணம் நோக்கி வருகின்ற பிரதான பாதையில் ஜ்ராபுரம் என்ற முஸ்லிம் கிராமமாகும்.
முஸ்லிம் கிராமம். மூன்றாவதாகக் ம்ெகள் வாழ்கின்ற பகுதியாகும். ர முஸ்லிம் கிராமத்தை எடுத்துக் லத்தீவு நகரத்தில் இருந்த இராணுவ ம் திறந்த வெளி காணப்பட்டது.

Page 113
இராணுவத்தினர் இவ்வெளியினுாடாக உ அதனை ஹிஜ்ராபுரத்தில் இருந்து மிகத் வருகின்ற இராணுவ வாகனங்களை படை வீரர்களை தமிழ் ஆயுதக் தாக்குவார்கள். இத்தாக்குதலுக்கு பதில் நிலைகளில் இருந்து மோட்டார் செல்
இராணுவ- தமிழ் ஆயுதக் போராட்டத்தில் இம் முஸ்லிம் கிராமத்த உயிர் இழப்பும், பொருள் சேதமும் இக் பல அப்பாவி முஸ்லிம்கள் உயிர் காயப்பட்டார்கள். யுத்த நடவடிக்கைக் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. முஸ்லிம்களின் பெயர் விபரங்கள் பி இப்பின்னிணைப்பு அட்டவணையிலிரு மொத்தமாக 23 பேர் உயிரிழந்ததை அ சேர்க்கப்படாத இறந்த வேறுபலரும் இ மிக அதிமானவர்கள் இலங்கை, இந் தாக்குதல்களினால் உயிரிழந்தவர்கள்
இவ்யுத்த நடவடிக்கையி ஹிஜ்ராபுரமாகும். ஹிஜ்ராபுரம் இரான இராணுவ முகாமை எதிர்நோக்கிய தின முக்கிய காரணமாகும். இக் கிராம் இழப்புக்களோடு இக்கிராம மக்களின் ந இதனால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக வடக்குவெளிவயல் வேலைகள் 8 ஹிஜ்ராபுரத்தைப் போல அதன் அய தண்ணீரூற்றுக் கிராமங்களும் இவ் | பாதிக்கப்பட்டன. 1987ஆம் ஆன இராணுவத்தின் கடுமையான செல் த நீராவிப்பிட்டி, தண்ணீரூற்றைச் சேர்ந்த விட்டு வெளியேறி நெடுங்கேணி, அகதியானார்கள்.

ள் நாடு நோக்கி படையெடுத்து வந்தால் தெளிவாக அவதானிக்கலாம். அவ்வாறு
அல்லது கால் நடையாக வருகின்ற குழுக்கள் ஹிஜ்ராபுரத்தில் இருந்து டியாக இராணுவத்தினர் தமது இராணுவ
தாக்குதல்களை நடத்துவார்கள்.
குழுக்களுக்கிடையிலான ஆயுத வர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். கிராம மக்களுக்கு அடிக்கடி ஏற்பட்டன. களை இழந்தார்கள். வேறு பலர் களினால் பல லட்சக்கணக்கான ரூபாய்
காரணமாக இறந்த முல்லைத்தீவு ன்னிணைப்பு 1 இல் தரப்பட்டுள்ளன. தந்து 1984இல் இருந்து 1990 வரையில் பறியக் கூடியதாக இருக்கின்றது. இதில் ருக்கலாம். இவ்வாறு உயிரிழந்தவர்களில் திய இராணுவங்களினது பாராமுகமான என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது னுவ முகாம்களுக்கு அண்மையிலும், செயிலும் அமைந்திருந்தமையே இதற்கு
மக்களுக்கு ஏற்பட்ட உயிர், பொருள் பாளாந்த பொருளாதார நடவடிக்கைகளும்
இக்கிராமத்தின் நந்திக்கடல் மீன்பிடி, இதனால் முற்றாகத் தடைப்பட்டன. ல் முஸ்லிம் கிராமமான நீராவிப்பிட்டி, யுத்த நடவடிக்கைகளினால் வெகுவாகப் ன்டு நவம்பர் மாத காலத்தில் இந்திய பாக்குதலால் பாதிக்கப்பட்ட ஹிஜ்ராபுரம், கணிசமான முஸ்லிம்கள் இப்பிரதேசத்தை வவுனியா ஊடாக புத்தளம் வந்து

Page 114
முஸ்லிம்களின் வெளியேற்றத். இந்திய இராணுவத்தினர் ஹிஜ்ராபுரம், நீரா முள்ளியாவளை, மாமூலை, கணுக்கேன கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த பிரகடனப்படுத்தி இப்பகுதியில் எஞ்சி பலவந்தமாக இவர்களின் வீடுகளைக் இப்பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைய . இப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் புத் சென்று அகதிகளாக சில காலம் வாழ்ந்
ஹிஜ்ராபுரத்தை விட்டு முஸ்6 இராணுவம் இக்கிராமத்திற்குள் நுழை கொண்டது. இக்காலத்தில் ஹிஜ்ராபுர ஜூ தலைமை முகாமாகவும், இக்கிராம மதுர பயன்படுத்தப்பட்டன. இந்தியப்படையினர் வரை முஸ்லிம்களின் மேற்குறிப்பிட் முகாம்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த
ID6
6.3 இரண்டாவது ஈழ யுத்
முஸ்லிம்களும் :
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலை அளவிலான” யுத்தம் ஆரம்பமாகியது. அதன் சூழல் பிரதேசங்களிலும் மிக 2 யுத்தால் இப்பிரதேசத்தில் உணவு, 8 பொருட்களுக்கு பற்றாக்குறையும், தட்டு வாழ்ந்த தமிழ் - முஸ்லிம் மக்கள் உண. பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இப் தற்காலிகமாக வேறு இடங்களுக நிலைக்குள்ளானார்கள். தமிழ் மக்கள் யுத் உள்நாடு நோக்கி தமிழ் கிராமங்களுக்கு
96

தைத் தொடர்ந்து இரு வாரங்களில் விப்பிட்டி, தண்ணீரூற்று, வற்றாப்பளை 7, குமாரபுரம் போன்ற தமிழ் - முஸ்லிம் - பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாக விருந்த முஸ்லிம், தமிழ் மக்களை
ட்டு வெளியேற்றினார்கள். யாரும் அனுமதிக்கப்படவில்லை. அக்காலத்தில் -தளம், அநுராதபுர மாவட்டங்களுக்குச்
தார்கள். கிம்கள் வெளியேறிய உடன் இந்திய ந்து முகாம் ஒன்றை அமைத்துக் ம்மாப் பள்ளிவாசல் இந்தியப்படையினரின் ரசா படையினரின் சமையலறையாகவும் - இலங்கையை விட்டு வெளியேறும் ட வணக்கஸ்தலங்கள் இராணுவ
ன.
தமும் முல்லைத்தீவு
ம் 11ஆம் திகதி வடக்குக்-கிழக்கில் லப் புலிகளுக்குமிடையிலான "முழு இவ் யுத்தம் முல்லைத்தீவு நகரிலும், உக்கிரமமாக நடைபெற்றது. இவ் அத்துடன் ஏனைய அத்தியாவசியப் ப்பாடும் ஏற்பட்டது. இப்பிரதேசத்தில் புப் பற்றாக்குறைப் பிரச்சினையாலும், பிரதேசத்தை விட்டு இடம் பெயர்ந்து குச் செல்ல வேண்டிய சூழ் தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறி
அபயம் தேடிச் சென்றார்கள்.'

Page 115
யுத்த பிரதேச சூழலில் வ காரணங்களால் இடம் பெயரத் தீர்மான முல்லைத்தீவு முஸ்லிம்களில் ஒரு கால்நடையாக பல நாட்கள் பிரயாண அடைந்தார்கள். முல்லைத்தீவு மு இந்நுாலின் 8.1 பகுதியில் விரிவாக வி
குறிப்
1. இலங்கையில் முஸ்லிம் தமிழ் உறவு பற்
Sivathamby (1987); McGilt கட்டுரைகள் முஸ்லிம்-தமிழ் உறவு பின காணப்பட்டன என்பதை தெளிவுபடுத்
இலங்கையிலுள்ள அரசாங்கப் பாடசா ை என இன அடிப்படையில் பிரிக்கப்ப பெரும்பான்மையானவை தமிழ் மொழி
இலங்கையின் வட -கிழக்குப் பிரதேசத்தில் யுத்தம் நடைபெற்று வருகின்றது கெரில்லாக்களுக்கும் இடையில் இவ்யு
4
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் ஆம் திகதி இந்திய இராணுவம் இலங்ல ஒரு முடிவைக் கொண்டுவரும் நே இந்திய சமாதானப் படை (I.P.K.F) 6 அரசாங்கத்தின் வேண்டுகோளின் படி 19: இருந்து வெளியேறியது. இதற்கு முன்னர் இலங்கை இராணுவத மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே யுத்த 1ந் திகதியில் இருந்து இவ்விர சாரா அதே காலத்தில் பரவலாக நடை பெற 1990 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மு. இருந்து இடம் பெயர்ந்த தமிழ் மக். புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
6. '2

ாழ்ந்த முஸ்லிம்களும் மேற்குறித்த சித்தார்கள். 1990 ஜூலை 6ஆம் திகதி
குறிப்பிடத்தக்க விகிதாசாரத்தினர் ம் செய்து பாதுகாப்பான இடங்களை ஸ்லிம்களின் ஜூலை இடப் பெயர்ச்சி எக்கப்பட்டுள்ளது.
புகள்
ஒ பல நூல்கள் வெளிவந்துள்ளன. உதாரணமாக ery (1974 ); Saleem (1990) ஆகிய எக்கற்றதொன்றாகவும், ஒற்றுமை கொண்டதாகவும் துகின்றன. லெகள் சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் ட்டுள்ளன. முஸ்லிம் பாடசாலைகளில் மிகப் 1 பாடசாலைகளாகும். ல் 1986ஆம் ஆண்டில் இருந்து ஒரு உள்நாட்டு து. இலங்கை இராணுவத்திற்கும், தமிழ் த்தம் நடைபெறுகின்றது. * பேரில் 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 கை வந்தது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எக்கில் இப்படை இலங்கைக்கு வந்தமையால் என்று அழைக்கப்பட்டது. இப்படை இலங்கை 29 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையில்
"திற்கும், விடுதலைபுலிகள் களுக்கும் இடையில் ம் நடந்தது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ருக்குமிடையிலான யுத்தம் வடக்குக் கிழக்கில் றெது. இதன்
ல்லைத்தீவின் கரையோரம் சார்ந்த பிரதேசங்களில் களின் எண்ணிக்கை 10,000 என அரசாங்கப்

Page 116
7. முஸ்லிம்களின் பல
பொருளாத
7.1 பலவந்த வெளியேற்ற
முல்லைத்தீவு முஸ்லிம்களி சின்னாபின்னமாக்கிய தினம் 1990 ஆம் திகதியாகும். அன்றுதான் முல்லை அனைவரும் இம்மாவட்டத்தை விட் விடுதலைப் புலிகள் உத்தரவிட்டன. ஆயுதப் போராட்டமாக உருவெடு இப்பிரதேசத்தின் யுத்த நடவடிக்கைகள் அனுபவித்தனர். அவ்வாறான சூழ்நிலை போகவில்லை. ஆனால் விடுதலைப் உத்தரவு முஸ்லிம்களை நிலைகுலையச் தாக்கம் இம்மக்களின் வாழ்க்கையைச் இம்மக்களுக்கு உரிய பரிகாரமற்ற நி ஆகவே இவ்வெளியேற்ற உத்தரவுடன் ெ அறிய வேண்டியது அவசியமாகும்.
முல்லைத்தீவில் முஸ்லிம்களின் கிராமத்திலேயே முதலில் அறிவிக்கப்பட் மாலை 4.00 மணியளவில் நீராவிப் புலிகளான ஆயுதக் குழுவினர் வந்தனர் "அஸர்” அதாவது மாலை நேரத் மஸ்ஜிதுன் நுாறானியா ஜும்மாப் | கொண்டிந்தார்கள். விடுதலைப் புலிகளின் நன்கு பரீட்சயமான மனோ, பிரசாத் ஆக் அங்கே தொழுகைக்குத் தயாராகிக் கொ ஆண்களை விடுதலைப் புலிளின் உ

வந்த வெளியேற்றமும் பர இழப்பும்
றம்:
என் வாழக்கையை திசை திருப்பி
ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் லத்தீவில் எஞ்சியிருந்த முஸ்லிம்கள் டு வெளியேறிவிட வேண்டும் என்று 1. முல்லைத்தீவில் இனப்பிரச்சினை த்த ஆரம்ப காலத்தில் இருந்தே பினால் முஸ்லிம்கள் பல துன்பங்களை லெயிலும் முஸ்லிம்கள் மனந்தளர்ந்து புலிகளின் இப்பலவந்த வெளியேற்ற செய்தது. இவ்வெளியேற்ற உத்தரவின் சின்னாபின்னமாக்கி இன்று வரையில் லையை ஏற்படுத்தி இருக்கின்றது. தாடர்புடைய நிகழ்வுகள் பற்றி தெளிவாக
வெளியேற்ற உத்தரவு நீராவிப்பிட்டிக் டது. ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி பிட்டிக் கிராமத்துக்கு விடுதலைப் இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் தமது தொழுகையை நீராவிப்பிட்டிக் கிராம பள்ளியில் நிறைவேற்றத் தயாராகிக் ன் ஆயுதக் குழுவில் முஸ்லிம்களுக்கு யெ இரு உறுப்பினர்களும் இருந்தனர். ாண்டிருந்த ஏறக்குறைய 30 முஸ்லிம் -றுப்பினர்கள் அழைத்து பின்வரும்

Page 117
உத்தரவைப் பிறப்பித்தார்கள்." முல்லைத்தீவை விட்டு வெளியேறி பணம், நகை, அது போன்ற பெறுமதி எடுத்துச் செல்லக் கூடாது. அ. சொந்தமானவை''. அத்துடன் அவர்க உத்தரவு விடுதலைப் புலிகளின் பட்டிருக்கின்றது. இவ்வுத்தரவை வேண்டியிருக்கும்". இவ்வாறு குறிப் புலிகளின் அறிவித்தலை இங்கு கூடியி சொல்லி அவர்களையும் வெளியேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள்.
விடுதலைப் புலிகளின் இந்த . நம்ப முடியவில்லை. கடந்த கா. அக்கறையாக இருந்த இவ்வியக்கத் நிலையில் தம்மை எவ்வாறு சொந்த கேட்க முடியும் என்று முஸ்லிம்கள்
வெளியேற்ற உத்தரவை அ சிலர் முஸ்லிம்களுக்கு பரிச்சயமானவர்க உத்தரவோடு தமக்கிருந்த வினாக்களை விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் | நியாயங்களை அவ்வுறுப்பினர்கள் 0 விடுதலைப் புலி உறுப்பினர்கள் முஸ் என்பதில் பிடிவாதமாக இருந்தனர். போகின்றது என்று அஞ்சிய முஸ்லி மீள் ஆய்வு செய்யும்படி விடுதலைப் | புலி யினர் அதனை ஏற்றுக்கொள்ளவி இருந்து வந்துள்ளது அதனை ந ை தமக்கில்லை” என்று கூறி விட்டு செ
விடுதலைப் புலிகளால் பு வெளியேறுவதற்குப் பலவந்தப் படு வெளியேற்ற உத்தரவு அறிவிக்கப்பட் பலரும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்க

முஸ்லிம்கள் 48 மணித்தியாலத்திற்குள்
விட வேண்டும். வெளியேறும்போது தியான பொருட்கள் எதையும் தம்மோடு சொத்துக்கள் தமிழ் ஈழத்துக்குச் ர் மேலும் கூறியதாவது "இவ்வெளியேற்ற உயர் பீடத்திலிருந்து அறிவிக்கப் மீறுபவர்கள் உயிராபத்தை எதிர்நோக்க பிட்டதோடு மேற்குறித்த விடுதலைப் 'ருப்பவர்கள் ஏனைய முஸ்லிம்களுக்குச் ந்துக்குத் தயார் பண்ணும்படி சொல்ல
வளியேற்ற அறிவித்தலை முஸ்லிம்களால் லங்களில் முஸ்லிம்களின் நன்மையில் நினர் இவ்வாறு திடீரென நிர்க்கதியான இடங்களில் இருந்து வெளியேறும்படி நினைத்தார்கள். நிவித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் ளாக இருந்தமையால், தமது வெளியேற்ற T, சந்தேகங்களை தைரியமாக அங்கிருந்த கேட்டார்கள். இதற்கு பல திருப்தியற்ற முஸ்லிம்களுக்குக் கூறினர். அத்துடன் "லிம்கள் வெளியேறியே ஆக வேண்டும்
தமது அச்சம் நிதரிசனமாக்கப்படப் ம்கள் தமது வெளியேற்ற உத்தரவை புலிகளிடம் மன்றாடினார்கள். விடுதலைப் ல்லை. மாறாக ''உத்தரவு மேலிடத்தில் -முறைப் படுத்துவதைவிட வேறுவழி ன்றுவிட்டார்கள். மஸ்லிம்கள் முல்லைத்தீவை விட்டு த்தப்பட்டார்கள் என்ற உண்மையை - பள்ளிவாயில் கூட்டத்தில் பங்குபற்றிய ள். நீராவிப்பிட்டியில் நடைபெற்றதைப்

Page 118
போன்று முத்தையன்கட்டு முஸ்லிம் கு பற்றிய உத்தரவு விடுதலைப் புலி உ .
பலவந்த வெளியேற்றம் பற் மாகாண முஸ்லிம் அகதிகள் (1991) பா வினாக் கொத்தில் சம்மந்தப் பட்ட தரப்பட்டுள்ளன. இவ்வாய்வில் பூரன யாவும் கிராம அடிப்படையிலும், பெயர் Refugee Family Information Vo.1.,1-35 விபரம், தொகுதி 1-35) என்ற தலை தயாரிக்கப்பட்டுள்ளன.
இவ்விபரத் தொகுப்பிலிருந்து உதாரணங்களையும் இங்கு குறிப்பு தொடர்புடைய நிகழ்ச்சிகளை மேலும் பின்வரும் வாக்கு மூலங்கள் தரப்படும்
நீராவிப்பிட்டியைச் சேர்ந்த முஸ் Refugee Family Information என்ற பக்கத்தில் பின்வருமாறு பதியப்பட்டுள்
"1990ஆம் ஆண்டு . காலை 6 மணிக்கு இயக்கத C.C. பாடசாலையில் கூட்டம் அறிவித்தார். நாங்கள் சுமார் கா அங்கு சில இயக்கப் பிரமுகர் நோக்கம் பற்றிக் கூறினார்கள். மாகாணத்தில் உள்ள முஸ்லிம். 12 மணிக்கு முன் இம் மாவம் வேண்டும் என்றார்கள். இதை கேள்விகள் கேட்டோம். இது கூறினார்கள்.
நாங்கள் திகைப்புற்றத அவரவர்கள் வீட்டுக்குப் போலே போது எனது மனைவியும் 2 விசாரித்தார்கள்.
விடை செ

டியிருப்பிலும் அதே தினம் வெளியேற்றம் றுப்பினர்களால் அறிவிக்கப்பட்டது. நிய எழுத்து மூல ஆதாரங்கள் வட ற்றிய வெளிக்கள் ஆய்வில் பயன்படுத்திய வர்களால் தமது கைப்பட எழுதித் னப்படுத்தப்பட்ட வினாக் கொத்துக்கள் அகர வரிசைப்படியிலும் தொகுக்கப்பட்டு 5(வெளியேற்றப்பட்ட அகதிகளின் குடும்ப யங்கத்தைக் கொண்ட அறிக்கையாகத்
பலவந்த வெளியேற்றம் பற்றிய வேறுபல டுவது இவ் வெளியேற்றத்துடன் தெளிவுபடுத்த உதவும் அவ்வகையில் கின்றன. மலிம் ஒருவரின் வெளியேற்ற வாக்குமூலம் தொகுப்பின் 34ம் தொகுதியில் 66 ம் ளது.
கார்த்திகை மாதம் 24 ஆம் திகதி 'தைச் சேர்ந்த ஒருவர் வந்து ம் உடன் வாருங்கள் என்று கலை 8 மணியளவில் கூடினோம். கள் வந்தார்கள். கூட்டத்தின்
கூட்டத்தில் கூறியதாவது வட கள் அனைவரும் 25ஆம் திகதி ட்டத்தை விட்டு வெளியேறிவிட : கேட்ட நாங்கள் சில குறுக்குக் [ மேலிடத்து உத்தரவு என்று
பிலிருந்து ஒருவாறு தெளிந்து ளாம். நான் வீட்டுக்குப் போன ) பிள்ளைகளும் கூட்டத்தைப்பற்றி ல்லத் தெரியாமல் நின்ற நான்

Page 119
அக்கம் பக்கம் திரும்பிய 6 அரிசிக் குவியலும் நெல் மூடை மறு பக்கத்தில் மாடுகள் நின்று பார்த்ததும் அழுகை வந்து 4 பின் மனைவி ஒருவாறு தேற்றி கூட்டத்தில் இயக்கம் கூறிய இவை எல்லாவற்றறையும் வி முடிவு கட்டி இரவு 9.30 க்கு அயல் குடும்பங்களுடன் நட வவுனியாவுக்கு வந்து அடைந்து இருந்து நல்லாந்தழுவை மு இன்னும் அங்கேயே இருக்கின் சில தனியார் உதவிகளும் கின இல்லை. அரசின் நிவாரணம் போல் சாப்பிடக் காணாது. காலம் கடக்கின்றது. எனது சாப்பிட நினைக்கின்றார்கள். என்னால் முடியவில்லை. இப்பே தொழிலில்லை. வேலை வாய்ப்
ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த 45 வய பின்வருமாறு காணப்பபடுகின்றது.
"25 - 10 -1990 (ஹிஜ்ராபுர) ம கூட்டப்பட்டு நீங்கள் அனை வவுனியாவுக்கு அப்பால் சென்று . கட்டளையிட்டனர். அன்றே அவு ஏற்றி வந்து விட்டார்கள். அங்கி. வாகனம் ஒன்றில் இக்கிரிக் கொ அரசாங்க வாகனம் ஒன்றில் கொ நிவாரம் ஒன்றால் அமைக்கப்ப வருகின்றோம்” (Refugee Farmil

பாது எனது மில்லில் உள்ள களும் கண்ணுக்கு முன் வந்தன. கொண்டிருந்தன. இவற்றைப் விட்டது. அழுதே விட்டேன். என்ன நடந்தது என்று கேட்டார். தை மனைவியிடம் கூறினேன். ட்டு விட்டுப் போவது என்று தொழுது விட்டு கால்நடையாக ந்து மூன்று நாட்களின் பின் தோம். அதன் பின் வவுனியாவில் கொமுக்கு வந்து சேர்ந்தோம். றோம். அரசின் நிவாரணங்களும் டைத்தன. இப்போது எதுவும் நாங்கள் வீட்டில் சாப்பிட்டது ஆகையால் அரை குறையாக பிள்ளைகள் முன்பைப் போல அதை நிறைவேற்ற இப்போது பாதைய அதி முக்கிமான கஷ்டம் யும் இல்லை.”
பதுடைய முஸ்லிம் ஒருவரின் அனுபவம்
துரசா ஒன்றில் கூட்டம் ஒன்று "வரும் இரண்டு நாளைக்குள் பிட வேண்டும் என பயங்கரவாதிகள் சர்கள் வாகனம் ஒன்றில் எங்களை தந்து வவுனியா முகாமில் இருந்து எல்லாவை வந்து அடைந்தோம். டிப்பள்ளி அகதி முகாம் முஸ்லிம் ட்ட குடிசை ஒன்றில் வாழ்ந்து yInformation, 3ெ4:6).

Page 120
முல்லைத்தீவு முஸ்லிம்கை வெளியேறும் படி விடுதலைப் புலிகள் அதற்குச் சமமான நிகழ்வுகள் வட ஏனைய பல பிரதேசங்களிலும் நிகழ்ந் திகதி மன்னார் தீவு முஸ்லிம்கள் இ விடுதலைப் புலியால் கேட்கப்பட்டார்க இதே தினம் மாலை இரு நாள் அவக உத்தரவு இடப்பட்டார்கள். மன்னார் பு 23ஆம் திகதி இவ்வெளியேற்ற அ மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண உத்தரவு எட்டு நாளின் பின்பு : அறிவிக்கப்பட்டது. ஆனால் வட . அல்லாமல் யாழ்ப்பாண நகர முஸ்லிப் மணித்தியாலங்களே அவகாசம் கொடு
இவ்வெளியேற்ற அறிவித்தலி வட மாகாணத்தில் முஸ்லிம்கள் வாழ்ந் செய்தியின் சாரம்சமும், வெளியேற்றுவத ஒரே மாதிரியாக இருந்தமையாகும். மேற் தொடர்ச்சியான நிகழ்வுகளை ஒன்று சே இருந்து முஸ்லிம்களை பலவந்தமாக நடவடிக்கையானது மிகவும் திட்டமிட்ட புலனாகின்றது.
1990 ஆம் ஆண்டு வடக்கு விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக வட காணப்பட்டது. விடுதலைப் புலியின் ! மக்களால் மீறி இருக்க முடியாது. அ தண்டனைகள் பற்றியும் முஸ்லிம் மக்க விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு . விட்டு வெளியேறுவதைவிட முல்லை அப்போது இருந்திருக்கவில்லை.
முல்லைத்தீவு முஸ்லிம்கள் மி சுகங்களை இழந்த நிலையில் ஒக்க

ளத் தமது சொந்த இடங்களை விட்டு ள் அறிவித்த அதே தினம் ஏறக்குறைய - மாகாணத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த தன. உதாரணமாக ஒக்டோபர் 22ஆம் ரு நாள் அவகாசத்தில் வெளியேறும்படி -ள். மன்னார், முசலி முஸ்லிம் மக்கள் ரசத்தில் வெளியேறும் படியும் இவர்களால் மாந்தை முஸ்லிம்கள் மத்தியில் ஒக்டோபர் அறிவித்தல் அறிவிக்கப்பட்டது. வட
நகரில்' மட்டும்தான் இவ்வெளியேற்ற அதாவது ஒக்டோபர் 30 ஆம் திகதி க்கில் ஏனைய பிரதேசங்களைப் போல் மகள் வெளியேறுவதற்கு ஆக இரண்டு மக்கப்பட்டிருந்தன.
ல் உள்ள மற்றுமொரு முக்கிய அம்சம் த எல்லாப் பிரதேசங்களிலும், வெளியேற்றச் ற்குப் பின்பற்றிய முறையும் ஏறக்குறைய 5 குறித்த வெளியேற்றத்துடன் தொடர்பான ர்த்துப் பார்க்கும்போது வடமாகாணத்தில் வெளியேற்றும் விடுதலைப் புலிகளினது - அடிப்படையில் செய்யப்பட்டது என்பது
முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட காலத்தில் மாகாணத்தில் “சக்திவாய்ந்த இயக்கமாக” உத்தரவுகளை நிராயுதபாணியான பொது வ்வாறு மீறியவர்களுக்கு அளிக்கப்பட்ட ள் நன்கு அறிவார்கள். இக்காரணங்களால் அடிபணிந்து தமது குடியிருப்புக்களை த்தீவு முஸ்லிம்களுக்கு வேறு மார்க்கம்
குந்த மனத்துயரத்துடன் தமது சொத்து டாபர் 25ஆம் திகதி முல்லைத்தீவை
02

Page 121
விட்டு வெளியேறினார்கள். விடுத முஸ்லிம்களை ஏற்றி முல்லைத்தீவி வவுனியா நகருக்கு அருகாமையில் உ இறக்கிவிட்டுச் சென்றார்கள்.
முல்லைத்தீவுடன் இரண்ட வாழ்ந்தார்கள். அவ்வாறிருந்தும் சமய இவர்களின் சொந்த இடங்களில் இரு இவ்வெளியேற்றம் பலம் வாய்ந்த ஒ நடவடிக்கை என்ற ஒன்றாக மட்டு கவலைப் படத் தேவையில்லை. மா என்ற கோட்பாட்டை உறுதியாக நம்
இவ்வியக்கம் முஸ்லிம்கள் மு முஸ்லிம் மக்கள் தாம் வாழ்ந்த பிர கொள்வதற்கு நியாயம் இருக்கின்றது தான், முஸ்லிம்கள் பன்னெடுங்கால் சகோதரர்களாக வாழ்ந்ததன் பெறு இது முல்லைத்தீவு முஸ்லிம்களி வேண்டுகோளாகவும் காணப்படுகின இந் நுாலுக்கு தரப்பட்ட அணிந்து காட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள் சாதகமான சூழ்நிலைகள் இன்று 6 காணப்படுவதை முல்லைத்தீவு முஸ்லி
இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
7.2 பலவந்த வெளியேற்
''வெளியேற்ற உத்தரவு' ( தாம் வாழ்ந்து பழகிய பிரதேசத்தை மு. வற்புறுத்தப்பட்டார்கள். வெளியேற் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்
இப்பலவந்த வெளியேற்றம் பாதித்தது. இப்பாதிப்புக்களை சமூ

லைப் புலிகள் தமது வாகனங்களில் ல் இருந்து 60 மைல்களுக்கு அப்பால் உள்ள தாண்டிக் குளம் என்னும் இடத்தில்
றக் கலந்த சமூகமாக முஸ்லிம்கள் ரீதியாக இம்மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். ரு ஆயுதக் குழுவின் தன்னிச்சையான ம்ெ இருக்குமானால் இதுபற்றி அதிக றாக இது வடக்கு, தமிழர்களின் தாயகம் பும் ஒரு இயக்கத்தின் செயற்பாடாகும். ல்லைத்தீவில் சம பங்காளிகள் என்பதையும், தேசத்தை தமது பூர்வீக பிரதேசமாகக் | என்பதையும் ஏற்றுக்கொள்ளும் போது மமாக தமிழ் மக்களோடு உடன் பிறவா பேற்றைப் பெற்றவர்களாக ஆவார்கள். ன் அன்பான அத்துடன் உறுதியான ன்றது. முல்லைத்தீவு முஸ்லிம்களால் துரையில் இது தெளிவாகச் சுட்டிக் லிம்களின் இவ்வேண்டுகோளுக்கு மிகவும் விடுதலைப் புலிகளின் உயர் மட்டத்தில் ம்களால் உணர முடிகின்றது என்பதையும்
றமும், பொருளாதார இழப்பும்:
முஸ்லிம்களை நிலைகுலையச் செய்தது. Dறாக மறந்து வெளியேறும்படி முஸ்லிம்கள் மத்தின் போது தமது உடமைகளை
லை. பல்வேறு வகைகளில் முஸ்லிம்களைப் கை, கலாசார, பொருளாதார உளவியல்
103

Page 122
கண்ணோட்டங்களில் வகைப்படுத்தி நே வெளியேற்றத்தினால் ஏற்பட்ட பொருள் கொடுக்கப்படுகின்றது.
சொத்து இழப்பு பொருளாதார குடும்பத்திற்கு சொந்தமான உடமைகன என இருவகைப்படுத்தலாம். புவியியல் 1 ஆபரணங்கள், பொருட்கள், வாகனங்கள் சொத்துக்கள'' (Movable Assets) என செய்ய முடியாத வீடு, காணி, வர்த்தக "அசையாச் சொத்துக்கள்” (Immovabl
முல்லைத்தீவு முஸ்லிம்களின் பெ இதற்கு முன்னர் வெவ்வேறு இடம் காட்டப்பட்டுள்ளன. அவற்றினைத் திரு இம்மக்களின் விவசாயப் பொருளாதார அ விபரங்கள் படம் - 6 இலும், படம் - 8 விளக்கப்பட்டுள்ளன (அத்தியாயம்-4). விவசாயக் காணிகளின் பரிமாணமும் கு அமைவும் அட்டவணை -3 ல் த இம்மக்களுக்குச் சொந்தமான வர்த்தக, அடிப்படைகள் பற்றி அத்தியாயம் 4 இ படம் - 6உம், படம் - 8உம், அட்டவனை அடிப்படைகள் பற்றிய ஆதாரங்களைத்
மேற்குறித்த முஸ்லிம்களின் ( விபரங்கள் கவனமாக விசாரித்து சேகரிக்கப்பட்டதாகும். இவை நம்பத்தகு இது போல இந்நுாலில் முல்லைத்தீவு சமய, கல்வி நிலையங்கள் பற்றிய விபரங்க அடிப்படைகளான நீரூற்று, நீர்ப்பாசனக் ச அடிப்படையான நந்திக்கடல் மீன்பிடிப் பொருளாதார முக்கியத்துவங்களும் தெ இவற்றினைத் தொகுத்து நோக்கும்
104

எக்க முடியும். இவ்வாய்வில் பலவந்த ாதார தாக்கத்திற்கு முக்கியத்துவம்
தாக்கத்தில் முக்கியமானதாகும். ஒரு ள அசையும், அசையா சொத்துக்கள் சதியாக இடம் மாற்றக் கூடிய பணம், ள, மிருகங்கள் ஆகியன "அசையும் எப்படும். புவியியல் ரீதியாக மாற்றம்
கைத்தொழில் சேவை நிலையங்கள் e Assets) எனப்படும். பாருளாதார அடிப்படைகள் இந் நுாலில் பகளில் அடையாளப்படுத்தப்பட்டுக் நம்பவும் சற்று நினைவு படுத்தலாம். அடிப்படைகள் பற்றிய மிகத் தெளிவான இலும் அடையாளம் இடப்பட்டு
இப்பொருளாதார அடிப்படையில் இக்காணிகள் அமைவுற்றிருந்த இட ரப்பட்டுள்ளன. இது போலவே கைத்தொழில், சேவை, பொருளாதார ன் 43 பிரிவில் விளக்கப்பட்டுள்ளது. ா 4ம், 5ம் மேற்குறித்த பொருளாதார
தருகின்றன. பொருளாதார அடிப்படைகள் பற்றிய வ உண்மை நிலை அறிந்து
ந்த ஆதார பூர்வமான விபரங்களாகும். பு முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்ட ளும் (படம்-4) விவசாயப் பொருளதார கால்வாய்களும், மீன்பிடிப் பொருளாதார
பிரதேசமும் (படம்-6) அவற்றின் ட்டத்தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. போது முல்லைத்தீவு முஸ்லிம்கள்

Page 123
உறுதியான பொருளாதார அடிப்படை பூர்வீக இடங்களில் வாழ்ந்து வந்தார்கள்
துரதிஷ்டவசமாக இம்மக்கல் பயன்படுத்தப்பட்டு வந்த மேற்குறித்த இம்மக்களுக்கு நேரடியாகவோ, மறை காணப்படுகின்றன. அசையும் செ
முடியாதவைகளாகி விட்டன. அகை முல்லைத்தீவுக்கு இம்மக்கள் மீள அடிப்படையில் எந்த நிலையில் இச் பெரிய வினாவாகும். ஒன்றில் இச் உட்பட்டதாக அல்லது முற்றாக அ சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. இப் பொருளாதார இழப்புகளுக்கு நியா இம்மக்களின் வாழ்க்கையை புதிதாக 4 ஆகும்.
இதுவரை பலவந்த ெ முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பொருளாத முறையில் விளக்கப்பட்டன. 8 கண்ணோட்டத்திலும் முல்லைத்தீவு இழப்புக்களை நோக்க வேண்டியது வெளியேற்றத்தின் போது ஏறக்குறைய பொருளாதார தரத்துக்கு ஏற்ப பல உடமையாக வைத்திருந்தார்கள் எல் அடிப்படையில் பலவந்த வெளியேற். ஏற்பட்ட இழப்புகளும் முறைப்படி தெ பாதிக்கப்பட்ட இம்மக்களின் எதிர்கால
அவசியமானதாகும்.
அதிஷ்டவசமாக குடும்ப மட் உரிமையாக இருந்த அசையும், அன் தொகுத்து நூலாக்குவதற்கான வாய்ப்பு என்பதை இந்நூலின் அறிமுகத்தில் க குடும்ப இழப்பு பற்றிய விபரம்

களைக் கொண்ட மக்களாக தமது
என்ற உண்மை நன்கு புலனாகின்றது. க்கு உரித்தான அத்துடன் மக்களால் பொருளாதார அடிப்படைகள் யாவும் முகமாகவோ பயனற்ற நிலையில் இன்று ாத்துக்கள் இம்மக்களால் மீளப் பெற யாத சொத்துக்ளைப் பொறுத்தவரை செல்லும் போது உடனடிப் பயன்பாடு சொத்துக்கள் இருக்கும் என்பது ஒரு சொத்துக்கள் கடுமையான பாதிப்புக்கு இந்த நிலையில் இருப்பதற்கு நிறைய
முஸ்லிம்கள் மீளச் செல்லும்போது பமான நிவாரணம் கிடைக்கச் செய்வது ஆரம்பிக்கும் நேரத்தில் மிகவும் அவசியம்
வளியேற்றத்தினால் முல்லைத்தீவு பர இழப்புகள் பொதுமைப்படுத்தப்பட்ட இச் சந்தர்ப்பத் தில் மற்றும் ஒரு முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பொருளாதர
அவசியமாகும். அதாவது பலவந்த 1200 முஸ்லிம் குடும்பங்களும் தத்தமது அசையும், அசையாச் சொத்துக்களை ன்பதை நாம் மறக்கலாகாது. அந்த றத்தால் தனிப்பட்ட குடும்பங்களுக்கு பகுக்கப் பட்டு காட்டப்பட வேண்டியது பொருளாதார நன்மை கருதி மிகவும்
டத்தில் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு -சயா சொத்துக்களை ஆய்வு பூர்வமாக 1 இந்நுாலாசிரியருக்கு கிடைத்திருந்தது ருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். இக் 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
105

Page 124
இந்நூலாசிரியரின் தலைமையில் செ அகதிகளின் பிரச்சினை என்ற தலையங்கம் பெறப்பட்டன.
இவ்வாய்வில் இருந்து பல முஸ்லிம்களின் அசையும், அசையா ஏற்பட்டுள்ளது என்று அறியக் கூடி மூலமாகவே வெளியேற்றத்தின் போது முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்திருந்தார்கள் 821 குடும்பங்களின் சொத்து ஓ திரட்டப்பட்டிருக்கின்றன. பொருள் கொண்டவர்களாக இம் மக்கள் காணப்ப அசையும், அசையாச் சொத்துக்கள் தளபாடங்கள், காணிகள், மிருகங்கள், வாகனங்கள், விவசாய மீன்பிடி மின்சா இவ்வாய்வில் திரட்டப்பட்டன.
மொத்தமாக 821 முல்லைத்தீ விபரங்கள் இம்மக்கள் வாழ்ந்த குடியிரு குடும்பத் தலைவர்களின் பெயர்கள் அ. பட்டு தனிப்பட்ட பொருளாதார இழப்பு இவ்வறிக்கைகள் A Report on the Lo of People Ousted from the Norther இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் இழப்புப் பற்றிய அறிக்கை பாகம் 1-5) மேலே குறிப்பிட்ட அறிக்கையில் பொரு மட்டத்தில் தெளிவாகத் தரப்பட்டிருக்க முல்லைத்தீவு முஸ்லிம்களின் குடும்ப ! அதன் பொருளாதார முக்கியத்துவத்தை
குடும்ப இழப்பு அறிக்கையில் ! குடும்பத்தினரின் விபரங்கள் தொகுக்கப்ப சனத் தொகை 3869 பேராகும். கி வெளியேற்றத்தின் போது சராசரி ஒரு ( 3.8 ஏக்கர் நிலமும் உரிமையாக
106

ய்யப்பட்ட வட மாகாண முஸ்லிம் கத்திலான வெளிக்கள ஆய்வில் இருந்து
வந்த வெளியேற்றத்தால் முல்லைத்தீவு
சொத்துக்களுக்கு பெரும் பாதிப்பு உடயதாக இருக்கின்றது. இவ்வாய்வின் வ முல்லைத்தீவில் மொத்தமாக 1200 ள் என்று மதிப்பிடப்பட்டது. இவர்களில் இழப்பு விபரங்கள் இவ்வாய்வில் ளாதார ரீதியாக பல தரத்தினைக் பட்டார்கள். இவர்களுக்குப் பலவகையான உடமையாக இருந்தன. வீடுகள், வர்த்தக கைத்தொழில் நிலையங்கள், பர உபகரணங்கள் பற்றிய விவரங்கள்
வுே முஸ்லிம் குடும்பங்களின் இழப்பு ப்பு அடிப்படையிலும், குடியிருப்புக்குள் கர வரிசை அடிப்படையில் தொகுக்கப் பு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. SS of Movable and Immovable Assets n Provinvce (வட மாகாணத்தில் அசையும் அசையாச் சொத்துக்களின் என்ற தலைப்பினைக் கொண்டுள்ளது. ளாதார இழப்புக்கள் தனிப்பட்ட குடும்ப கின்றமையினால், எமது இந்த நுாலில் இழப்புக்களின் மொத்த மதிப்பீட்டையும் யும் மட்டும் சுருக்கமாக விளக்குவோம். மொத்தமாக 821 முல்லைத்தீவு முஸ்லிம் ட்டுள்ளன. இக்குடும்பங்களின் மொத்த ைெடக்கப் பெற்ற விபரப்படி பலவந்த குடும்பத்திற்கு 3 சவரன் ஆபரணமும், இருந்தன. ஆய்விற்குட்பட்ட 821

Page 125
குடும்பத்தினருக்கு மொத்தமாக 3109 கோழிகளும், 422 வாகனங்களும், 138 இருந்தன. இது போல இம்மக்கள் அறிக்கையில் தொகுத்துத் தரப்பட்டுள்ள தருகின்ற இவ்வாய்வில் ஏறக் குறைய 4 உள்ளடக்கப்படவில்லை என்பதையும் காட்டப்படவில்லை என்பதையும் கவர்
பலவந்த வெளியேற்றம் முல்ல கலாசார நிறுவனங்களினதும் அவற்றி கட்டடங்கள் ஆகியவைகளின் இழப்பி அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் 6 சரியாக மதிப்பிடப்பட வேண்டியது அவ. 7 பள்ளிவாயில்கள் காணப்பட்டன. இ பல கட்டடங்கள், தென்னங்காணிகள் உ பாடசாலைகளும், சமய ரீதியான ஏனைய அத்துடன் முல்லைத்தீவில் மூன்று மு ஆகவே ஒரு சமூகத்தின் சொத்து இழ கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டியன்
இழப்புக்களின் எண்ணிக் 6 முக்கியத்துவம் ஆகியவற்றை அறி ரீதியான பெறுமதியின் முக்கியத்துவத்தை சொத்துக்களின் வகை, அளவு அதன் சொத்துக்களைப் பணப் பெறுமதிப் வேண்டியவையாகும்.
பொருளாதார இழப்புக்கள் பா அவசியமாகும். இந்த அடிப்படையில் முதலாம் பாகத்தில் (முதலாம் பாகம்: - உரிமையாக இருந்த சொத்துக்கள் த இதில் வீடு, தளபாடம், நிலம், நிகர் வி ஆபரணங்கள், மிருகங்கள், வாகனங்கள் விவசாய உபகரணங்கள், தானியங்க

யாக
மாடுகளும், 2081 ஆடுகளும், 8242 அன்சார உபகரனங்களும் உரிமையாக ன் ஏனைய இழப்புக்களும் இழப்பு - குடும்ப இழப்புக்களின் சாராம்சத்தைத் ) முல்லைத்தீவு முஸ்லிம் குடும்பங்கள்
அவர்களின் இழப்புக்கள் இங்கு த்திற் கொள்ள வேண்டும். லத்தீவு முஸ்லிம்களின் சமய, சமூக, க்கு உரிமையாக இருந்த காணிகள் ற்கும் காரணமாக இருந்தது. இந்த பாதுச் சொத்துக்களின் இழப்புக்களும் சியமாகும். முல்லைத் தீவில் மொத்தமாக இப்பள்ளிவாயில்களின் நிர்வாகத்திற்காக உரிமையாக இருந்தன. அரபு கற்பிக்கும் பொதுச் சொத்துக்களும் காணப்பட்டன. மஸ்லிம் பாடசாலைகள் காணப்பட்டன. ப்பு என்ற அடிப்படையில் இவைகளும் வைகளாகும்.
கை, இட அமைவு, பொருளாதார கின்ற அதே நேரத்தில் அதன் பண தயும் அறிய வேண்டியது அவசியமாகும்.
சந்தைப் பணப் பெறுமதி ஆகியவை படுத்துவதில் கருத்தில் எடுக்கப்பட
னப் பெறுமதிப்படுத்தப்பட வேண்டியது குடும்ப இழப்பு அறிக்கைத் தொகுப்பின் அறிமுகம்) தனிப்பட்ட குடும்பங்களுக்கு ப்படுத்தப்பட்டு பெறுமதி இடப்பட்டது. வசாய வருமானம், மீன்பிடி உபகரணம், வர்த்தக நிலையங்களின் வருமானங்கள், 1, மின்சார உபகரணங்கள், மாடுகள்

Page 126
அட்ட
குடும்ப அடிப்படையில் முல் இழப்பு விபரம் பற்றிய சுருக்க அட்டவ
குடும்பம் அங்கத்தவர்கள்
மொத்தக் குடிசனம்
ஆபரணம் (குடும்பத்திற்கு சராச
நிலம் (குடும்பத்திற்கு சராசரி)
மொத்த மாடுகள்
மொத்த ஆடுகள்
கோழிகள்
மொத்த தளபாடங்கள்
எல்லா வகையான மொத்த வாகனங்கள்
மொத்த மின்சார உபகரணங்கள்
மீன் பிடி உபகரணங்கள்
மூலம் : அகதி வெளிக்கள ஆ

வணை - 6
மலைத்தீவு முஸ்லிம்களின் பொருளாதார கணை, 1990.
எண்ணிக்கை
821
3869
3.0 சவரின்
3.8 ஏக்கர்
3109
2081
8247
133124 ரூபாய்
422
138
252
ய்வு 1991.

Page 127
ஆகியவை பணப் பெறுமதிப்படுத்தப்ப சராசரி ஒரு குடும்பத்திற்கு பலவந்த இழப்பு மதிப்பிடப்பட்டது. இது போல நிலங்களுக்கும், சமய, சமூக ஸ்தாபனம் பணப்பெறுமதிகள் கொடுக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் மொத்த இழப்புகளை
இந்த அடிப்படையில் பலவந் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட மெ இதில் குடும்ப மட்டத்தில் 1200 மு. மொத்த இழப்பின் மதிப்பு 60 கோடி ரூப வர்த்தக, கைத்தொழில், சேவை நிலைய சொத்துக்கள், உபகரணங்களுக்கும் ஏ ரூபாயாகும். அதே நேரத்தில் முல்ல ஸ்தாபனங்களுக்கும் அவற்றிற்கு உரி ஏற்பட்ட இழப்பு 20 கோடி ரூபாவாக
ஆனால் நிச்சயமாக பலவ முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய சமூக, ரீதியாக பெறுமதிப் படுத்த முடியாது எ வேண்டும்.
முல்லைத்தீவு முஸ்லிம்ளுக்க பலவந்த வெளியேற்றத்தினால் இம்மக்கள் பற்றியும் அத்துடன் இம்மக்களுக்கு ஏ பாதிப்புகள் பற்றியும் கவனத்திற்கு எடுக்க வேண்டும்.
இக்கட்டத்தில் பலவந்த வெ ஏற்பட்ட பொருளாதார இழப்பின் தாக்க தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏனைய
வித்தியாசமானது என்பதை இங்கு சுட் ரீதியாக பலவந்த வெளியெற்றத்தினால் மு இழப்பை பின்வருமாறு விளக்கலாம்.
இலங்கையின் இனப் பிரச்சினை இடம் பெயர்ந்திருக்கின்றார்கள்.

ட்டுள்ளன. இப்பெறுமதியில் இருந்து
வெளியேற்றத்தால் ஏற்பட்ட மொத்த வர்த்தக ஸ்தானங்களுக்கும், விவசாய ங்களுக்கும் ஏற்பட்ட இழப்புகளுக்கான ன. அதனால் இந்நுால் முல்லைத்தீவு மட்டும் சுருக்கமாக விளக்குகின்றது. த வெளியேற்றத்தினால் முல்லைத்தீவு ரத்த இழப்பு 100 கோடி ரூபாயாகும். ஸ்லிம் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள ரயாகும். அது போல இம்முஸ்லிம்களின் ங்களுக்கும் அந்நிலையங்களில் இருந்த ற்பட்ட இழப்பு ஏறக்குறைய 20 கோடி லைத்தீவு முஸ்லிம்களின் சமய, சமூக மையாக இருந்த சொத்துக்களுக்கும் வும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ந்த வெளியேற்றம் முல்லைத் தீவு கலாசார உளவியல் தாக்கத்தை, பண என்பதை நாம் நினைவில் வைத்திருக்க
ான நியாயமான ஒரு அரசியல் தீர்வில், தக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கள் ற்பட்ட ஏனைய சமூக, கலாசார, கல்வி ப்பட்டு பொருத்தமான பரிகாரம் தேடப்பட
ளியேற்றத்தினால் முஸ்லிம் மக்களுக்கு -ம் இதே போன்ற இனப் பிரச்சினையின் மக்களின் இழப்போடு ஒப்பிடும் போது டிக்காட்ட வேண்டியுள்ளது. ஒப்பீட்டு ஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார
னயால் பல இலட்சக்கணக்கான மக்கள்
தற் போதும் இடம் பெயர்ந்து

Page 128
கொண்டிருக்கின்றார்கள். முல்லைத்தீ. குடியிருப்புக்களை விட்டு பாதுகாப் சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களில் ஏற்பட் தற்காலிகமாக தமது இருப்பிடங்களை வி இம்மக்களின் வீட்டு உடமைகள் இழக்க கைவிடப்பட்டன. வர்த்தக ஸ்தாபனங்க நிச்சயமாக இவைகள் இம்மக்களுக்கு இழப்புக்களாகும். இவற்றிற்குப் பொருத் செய்யப்பட வேண்டியது அவசியமாகும்
அதே நேரத்தில், மேற்குறித்த . வெளியேற்றத்திற்கு உட்பட்ட முல்லை இழப்பிற்கும் இடையில் அடிப்படையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. பல முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பார்ப்போம்.
1990ஆம் ஆண்டு ஒக்டோப உடையோடு, வெறுங்கையோடு இம்முள் வெளியேற வேண்டும் என வற்புறுத்த அதனை வெற்றிகரமாக நிறைவேற் வெளியேற்றத்தின் போது இம்மக்களி அசையாச் சொத்துக்களும் முற்று ( முஸ்லிம்கள் வெளியேறினார்கள். வீ கொடுத்துப் பாதுகாக்கக் கூடிய வாய்ட் அறுவடைக்குத் தயாராக இருந்த வயல் கொள்ளும்படி சொல்வதற்கோ, குத்தன வருமான ஒழுங்குகளை மேற்கொ6 இருக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு இருக்கவில்லை. அச்சந்தர்ப்பத்தில் தமிழ் ஏற்றுக் கொண்டும் இருக்கமாட்டார்கள் வர்த்தக ஸ்தாபனங்களினதும், கைத்தொ சொத்துக்களினதும் நிலைமையும் மேற்
வாயL
11

வைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது பிற்காக வெளியேற வேண்டிய பல டிருக்கின்றன. நிச்சயமாக இம்மக்கள் பிட்டு வெளியேற வேண்டியேற்பட்டதால் ப்பட்டன. வயல்கள் விதைக்கப்படாது களின் வருமானங்கள் இழக்கப்பட்டன. ஏற்பட்ட பாரதுாரமான பொருளாதார தமான நஷ்டஈடும், புனர் நிர்மாணமும்
பொருளாதார இழப்பிற்கும், பலவந்த லத்தீவு முஸ்லிம்களின் பொருளாதார
பல ஒற்றுமைகள் காணப்பட்டாலும், வந்த வெளியேற்றத்தால் முல்லைத்தீவு ர இழப்பை நாம் சற்று சீர்துாக்கிப்
ர் மாதம் 25ஆம் திகதி உடுத்திய மலிம்கள் தமது இல்லிடங்களை விட்டு ப் பட்டார்கள். வெளியேற்றியவர்கள் கறியும் காட்டினார்கள் பலவந்த என் எல்லா வகையான அசையும், முழுதாக கைவிடப்பட்ட நிலையில் ட்டு உடமைகளை மற்றவர்களிடம் பு முஸ்லிம்களுக்கு இருக்கவில்லை. நிலங்களை நண்பர்களிடம் கவனித்துக் கெ முறையில் ஒரு தொடர்ச்சியான ள்ளவோ இவர்களுக்கு அவகாசம் கு வெளியேற்றியவர்களின் அனுமதியும் மக்கள் அவ்வாறான வேண்டுகோளை 5. முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான எழில் நிலையங்களினதும், அங்கிருந்த நகூறியவாறே காணப்பட்டன. படம் 11

Page 129
படம் 11 : முஸ்லிம்களின் (மூன்று கிராமங்கள்)
வர்த்தக கைத்தொழில் நிலையங்கள்
அரசடி வீதி
வ
அசனப்பா ரோட்
கடப்பாசிvங்கை
சாவூரல் ரைமீது வீதி
பீலியடி வீதி
சதக்கப்பா
சிங்கை
ஹிஜ்ராபுரம்,
ஹிஜாபர் வதி
தெளம்- முல்லைத்தீவு வீதி
ஹிஜ்ராபுரம் - நீரழிப்பிட்டி எல்லை வீதி
8 R.D.S ரோட்
அப்துல் காதர் ரோட்
சமதப்பா ரோட்
யப்பா
மதுரசா ?

Iமாம்
லேப்ட,
நீராவிப்பிட்டி
விசக்கடி சாயிபு |
முகாம்மது காசீம் ஒழுங்கை
ஒழுங்கை
தண்ணீரூற்று
குறிப்பு: இலக்கங்களுக்கான விளக்கம் அட்டவணை ல் தரப்பட்டுள்ளது.
இ காசிம் அப்பா
\ ஒழுங்கை
முஸ்லிம் -
பாடசாலை
நெடுங்கேண..
பக்கீரப்பா கபுறடி
'ஒஸ்கி)
கபுறடி. ரோட்
25 வதி!
சகாய் வேலைத்தெரு
குமாரபுரம் கோவில் ரோட்
விதி
சைவப்பாடசாலை
முழமுனை வீதி
118 மைல்
மூலம்: வெளிக்கள ஆய்வு, 1996. இலங்கை இடவிளக்கப்படம். 1972.

Page 130
முல்லைதீவின் மூன்று கிராம் பிரம் நிலையில் காணப்படும் வர்த்தக, கை காட்டுகின்றது. அதே போல பள்ளி போன்ற முஸ்லிம்களால் பயன்படுத்த வெளியேற்றத்தின் போது முற்றுமுழு
கடந்த ஆறு வருடங்கள் பிரதேசத்துடன் தொடர்பற்ற நிலை வீடுகளுக்கு, அதில் இருந்த சொத் அதில் கதிர்விட்டுக் குலுங்கிக் ஸ்தாபனங்களுக்கு, அதிலிருந்த இ வர்த்தக பொருட்கள், கைத்தொழில் நாளைக்கு ஐந்து நேரம் பாங்கொக ஆறு வருடங்களில் என்ன நடந்தது காரணம் இம்முஸ்லிம்கள் மீளத் தம் பொருளாதார நலன்களை, சமய அனுமதிக்கப்படவில்லை. இந்நா இடங்களுக்கு சுயமாகத் திரும்பிச் செ பலவந்த வெளியேற்றத்திற்குட்பட்ட . அதில் முல்லைத்தீவு முஸ்லிம்களும்
இக்கண்ணோட்டத்தில் மு வெளியேற்றத்தினால் ஏற்பட்ட பெ சூழ்நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை சொந்தமான அசையும், அசையாச் செ எனக் கொள்ள வேண்டியிருக்கின்ற இம்மக்களுக்கு ஏற்பட்ட பொருள் பரிசீலிக்கப்பட்டு பொருத்மான பரிகாரம் அடிப்படையிலும், அடிப்படை மனித
அந்த அடிப்படையில் முதலில் இருந்த தனியார் மற்றும் பொதுச் செ கொடுக்க நடவடிக்கை எடுக்க வே

தசத்தில் முஸ்லிம்களால் கைவிடப்பட்ட த்தொழில் நிலையங்களில் இட அமைவை வாசல்கள், மதுரசாக்கள், பாடசாலைகள் பட்ட பொதுச் சொத்துக்களும் பலவந்த ஓதாகக் கைவிடப்பட்டன. ாக முல்லைத்தீவு முஸ்லிம்கள் தமது பில் காணப்படுகின்றார்கள். இவர்களின் துக்களுக்கு, இவர்களின் வயல்களுக்கு, கொண்டிருந்த நெல்லுக்கு, வர்த்தக லட்சக் கணக்கான ரூபாய் பெறுமதியான
உபகரணங்களுக்கு, அதே போல் ஒரு 3 கேட்கும் பள்ளிவாயில்களுக்கு கடந்த என்பது இம்முஸ்லிம்களுக்குத் தெரியாது. து சொந்த இடங்களுக்கு திரும்பி தமது , புனித ஸ்தலங்களைக் கவனிக்க ட்டில் ஒரு சமூகமாக தமது சொந்த சல்வதற்கு வாய்ப்பில்லாத அப்பாவி மக்கள் வட மாகாண முஸ்லிம்கள் மட்டுமேயாவர். ம் உள்ளடங்குகின்றனர். மல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு பலவந்த பாருளாதார இழப்பு என்பது முன்னய கயில் வேறுபட்ட ஒன்றாக இருக்கின்றது. இந்த அடிப்படையில் இவர்களுக்குச் ாத்துக்கள் முழுமையாக இழக்கப்பட்டவை து. நியாயமான ஒரு அரசியல் தீர்வில் ராதார இழப்புக்கள் மிகக் கவனமாகப் ங்கள் காணப்பட வேண்டியது மனிதாபிமான உரிமை ரீதியாகவும் அவசியமானதாகும். - முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு உரிமையாக சத்துக்களை இம்மக்களுக்கு மீளப் பெற்றுக் சண்டியது அவசியமானதாகும். அடுத்து
112

Page 131
இம்மக்களின் சொத்துக்களுக்கு ஏற்பட் நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டும். அ முல்லைத்தீவில் மீள் குடியேற்றம் ஒ குடியிருப்புக்கள், பாதைகள், பாடசாலைகள் போன்ற பொதுச் சொத்துக்களும் விஷேட புனரமைப்புச் செய்யப்பட வேண்டியதும்
குறிப்பு
1.
1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முஸ்லிம்கள் வெளியேறுவதற்கு 4 கொடுக்கப்பட்டிருந்தது. (பார்க்க R
அக்காலத்தில் விடுதலைப் புலிகள் - வைத்திருந்தார்கள். இவர்கள் தமது த் ஆற்றலைக் கொண்டிருந்தார்கள். தா. சாதிக்கும் ஆற்றலையும் இப்பிரதேச மக்கள் குழுவின் தலைமைத்துவத்தின் கட்டளை நிறைவேற்றும் மனப் போக்கைக் கொண்ட கொண்டிருந்தது. இதனால் இப்பிர ே உளவியல் ரீதியாகவும் இவ்வியக்கத்தின
1

ன
ட பாதிப்புக்களுக்கும் பொருத்தமான தே நேரத்தில் சமாதான சூழ்நிலையில் வறு ஏற்படும் போது இம்மக்களின் பள்ளிவாயில்கள், நீர்ப்பாசக் கால்வாய்கள் கவனம் செலுத்தப்பட்ட அடிப்படையில் அவசியமானதாகும்.
புகள்
30ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் இருந்து நக இரண்டு மணித்தியால அவகாசமே efugee Family Information, 1996)
வட மாகாணத்தை தமது கட்டுப்பாட்டில் ர்மானங்களை ஆயுத பலம் மூலம் சாதிக்கும் வியு களின் ஆயத பலத்தையும் நினைத்ததை நன்கறிந்தவர்களாக இருந்தார்கள். இவ்வாயுதக் ளையை எவ்வித ஆட்சேபனையும் இல்லாமல்
ஆயுதம் தாங்கிய உறுப்பினர்களை இவ்வியக்கம் தச மக்கள் ஆயுத ரீதியாக மட்டுமல்லாமல் 5 கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டார்கள்.

Page 132
8. முல்லைத்தீவை
வெளி
முஸ் லிம்கள் முல்லைத் வருடங்களாகின்றன. தமது சொந்த வர முடியாத நிலையில் இன்று இடம் தமது சொந்த இடங்களில் ஸ்திரம் பலவந்தமாக பிரிக்கப்பட்டார்கள். பா இருந்து இன்றுவரை இம்மக்கள் நிம் அலைந்து திரிகின்றனர். இவ்வா பின்வரும் பகுதி விபரிக்கின்றது.
8.1 ஜூலை அகதிகள்:
1990 ஆம் ஆண்டு ஜூலை 6. வாழ்வில் ஒரு துக்க கரமான நாளா பகுதியினர் தாம் வாழ்ந்து வந்த பிரதே காரணமாக பாதுகாப்பான வேறு இட
முன்னர் குறிப்பிட்டது போல் இலங்கை இராணுவத்திற்கும் விடுத. மிகக் கடுமையாக நடைபெற்றுக் கெ யுத்தத்தால் மிகவும் கடுமையாகப் பாதி ஒரு புறமும், உணவுப் பற்றாக்கு இப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் - குள்ளானார்கள். முல்லைத்தீவு முஸ்லி முல்லைத்தீவு நகர் சூழலில் யுத்தமும் காணப்பட்டமையால் முஸ்லிம்களில் | தற்காலிகமாக வெளியேறுவது என்ற
முஸ்லிம்கள் வெளியேற ( முஸ்லிம்களை வெளியேற வேண்டா

விட்டு முஸ்லிம்கள் யேற்றம்
5 தீவை விட்டுப் பிரிந்து ஆறு இடங்களுக்கு விரும்பிய நேரம் திரும்பி மமக்கள் உள்ளனர். இம்மக்கள் அன்று மான வாழ்க்கை முறையில் இருந்து மவந்தமாக அகதியாக்கப்பட்ட காலத்தில் லையற்ற நாடோடிகளாக இடத்துக்கிடம் றான மக்களின் ''அகதி '' வரலாற்றை
ஆம் திகதி முல்லைத்தீவு முஸ்லிம்களின் தம். முல்லைத்தீவு முஸ்லிம்களில் ஒரு 5சங்களில் ஏற்பட்ட யுத்த உக்கிரமத்தின் உங்களுக்கு இடம் பெயர்ந்த நாளாகும். , இக்காலப் பகுதியில் முல்லைத்தீவில் லைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ாண்டிருந்தது. அப்பாவி மக்கள் இவ் க்கப் பட்டார்கள். பாதுகாப்புப் பிரச்சினை தறைப் பிரச்சினை மறு புறமுமாக >ஸ்லிம் மக்கள் மிகவும் கஷ்டத்திற் ம்கள் வாழ்ந்த ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, ம் பிரச்சினைகளும் மிகக் கடுமையாகக் ஒரு பகுதியினர் இப்பிரதேசத்தை விட்டு
முடிவுக்கு வந்தார்கள். மற்பட்டபோது விடுதலைப் புலியினர் மென்று கேட்டார்கள். முஸ்லிம்களில்
14

Page 133
பலர் இவ்வேண்டுகோளை மீறியும் வெளி வாகனங்களில் செல்ல விடுதலைப் புலிக இம் மக்கள் கால்நடையாகவே தமது வேண்டியிருந்தது.
இவ்வெளியேற்றம் பற்றி முல் ை ஒரு பாடசாலை ஆசிரியரின் தினகுறிப்பில் |
"அன்று பாடசாலைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது இருபது பேரே அன்று பாடசாலை ஜும்மாவுடைய தினமாக இருந்த மக்களும் பள்ளியில் சேர்ந்தனர். இன்சா அல்லாஹ் பயணம் செய் சிலர் பிரச்சினை நடந்தால் மட்டும் இருந்தனர். ஒரு சிலர் வெ மற்றையோர் பிரச்சினை நடந்தால் இடத்திற்குச் சென்று பின் திரு
எமது குடும்பத்தில் ஏற்பட ஒரு லொறியை வாடகை மூலம் செல்லுவோம் என்ற முடிவு தீவிரவாதிகள் வாகனத்தில் செல்க பொருட்களை கட்டிவைத்து வி விபரம் சொல்லி கடன்வாங்கி முடிம் விட்டது. பிறந்ததிலிருந்து : ஊர், சொத்துக்கள், சொந்தங்க தாராளமாகிய இடம் எத்தனை ஏற்படக் காரணமாகிய சந்திக. ஒவ்வொரு கதை கூறும் வீதி காரணமாகிய பாடசாலை, ம. வரவைத்த பள்ளிவாசல், படிப்பின சிறு சிறு செய்திகள் சொன்ன க
115

யேறத் தீர்மானித்தபோது முஸ்லிம்கள் -ள் தடை விதித்தார்கள். இதனால் து பிரயாணத்தை மேற் கொள்ள
லைத்தீவு நீராவிப்பிட்டியைச் சேர்ந்த பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
நான் சென்றபோது எனக்கு .. எமது மாணவர்களில் வக்கு சமூகம் தந்திருந்தனர். கபடியால் மூன்று கிராமத்து
பெரும்பாலானோர் நாளை வோம் என்றனர். மற்றும் வெளியேறும் எண்ணத்தில் சியேறுவதில்லை என்றனர்.
எங்காவது அருகில் உள்ள - ம்புவதாகக் கூறினர். பட்ட இணக்கம் காரணமாக க்கு அமர்த்தி அதன் வுக்கு வந்தோம். ஆனால் வதை அனுமதிக்கவில்லை.
டு நண்பர்களைக் கண்டு ப்பதற்கு அன்று நள்ளிரவாகி வளர்ந்து பெரியவனாக்கிய ள், உரிமைகள், எல்லாம் யா? பந்தங்கள், பாசங்கள் ள், ஒவ்வொரு இடமும் கள், படித்து பதவிபெறக் சிதன் என்ற நிலைக்கு னப் பெற்றுத்தற்த மதுரசா. மட வீதி, நிதமும் குளித்து

Page 134
வளர்ந்த பீலி, உணவுக்கு மேட்டு நிலம், நிதமும் ந சிறுகச் சிறுகச் சேர்த்த பொ எம்மில் பலரை வைத்திய விளையாட்டு மைதானம் அனைத்தையும் இழந்து மனவருத்தம் துாக்கத்தை
துாங்கியது பாதி அந்தப் பொல்லாத நாளாம், கையில் சிறுசிறு பொட்டல வயோதிபர்கள் நடக்க பொருட்களைத் துாக்கிக் . வாழ்வுக்காய் பயணமானோ சுப.: நேரந் தொடக்கம் 6 அழுதது. அதுகூட எம்ந மக்கள் எண்ணினர். வீத மக்கள் கண்களிலிருந்துத, மற்றவர்களுக்குப் புரியப் 6
95 வயது தாத்தா நெடுங்கேணி வீதி எங்கு காணமுடியாத நீளம்.
வேடிக்கை பார்க்க பலரு! தலைகள், இளைஞர்க இடையிடையே புன்னகை
இவ்வாறு இடம் பெயர்ந்த (! எவ்வாறு செல்வது என்ற நிச்சயம் தமது பாதுகாப்பை அக்கால சூழ்நில இடம் ஒரு முஸ்லிம் கிராமமாக அன்று விரும்பினார்கள். அவ். முல்லைத்தீவில் இருந்து மிக நீண்ட

உதவி புரிந்த வயல், காணிகள், ர்பாய்ச்சி வளர்ந்த பயிரினங்கள், நட்கள், புத்தகங்கள், கொப்பிகள், தக்கும் கபுரடி, உற்சாகமளித்த ரம், வாசிகசாலை ஆகிய
செல்வதென்பதால் ஏற்பட்ட க் கலைத்தது.
விழித்தது பாதியாக இருக்க 07.07.90 சனிக்கிழமை விடிந்தது. ங்களுடன் எம் சின்னஞ் சிறார்கள்,
வயதுக்கு ஏற்ற வகையில் கொண்டு விடிபொழுதில் விடியாத ம். இனி நாங்களும் அகதிகள். நெடுங்கேணி ரோட் மெளனமாய்
லை கண்டு இரங்கியது என்றே 7யெங்கும் நீர்த்துளிகள். அது என் ஏற்பட்டது என்பது எங்கே பாகிறது.
முதல் 3 நாள் குழந்தை வரை ம் எம்மவர் கூட்டம் எல்லை எம்மை வழியனுப்ப சிலரும் மாக வீதியோரங்களிலும் மனிதத் ளின் முகங்களில் மட்டும்
அரும்பியது”
முல்லைத்தீவு முஸ்லிம்கள் எங்கு செல்வது, ற்ற நிலையில் அன்று காணப்பட்டார்கள். லையில் உறுதிப்படுத்தக்கூடிய மற்றுமொரு இருக்க வேண்டும் என்று அம்மக்கள் வாறான ஒரு பொருத்தமான இடமோ - தொலைவில் காணப்பட்டது. அதாவது
116

Page 135
முல்லைத்தீவில் இருந்து மற்றுமொ மாவட்டத்திற்கு இம்மக்கள் வரவேண் அவ்வாறான தேவை கருதி இந் நீண்ட மேற்கொண்டார்கள்.
அக்காலத்தில் வவுனியா மாவட்ட யுத்தப் பிரதேசமாகக் காணப்பட்டது. பாதையை அண்டிக் காணப்பட்ட நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டி முஸ்லிம்கள் வவுனியா மாவட்டத்தில் ! காணப்பட்ட காக்கையன் குளம் எ அடைக்கலம் பெறத் தீர்மானித்தார்க் மாவட்டத்தை விட்டு வெளியேறினார்கள் 70 மைல் தொலைவில் அமைந்திருந் நாட்கள் கால்நடையாக நடந்து ஜூ கிராமத்தை வந்தடைந்தனர்.
இரு நாட்கள் இக்கிராமத்தில் காக்கையன் குளம் கிராமமும் தமக்கு முஸ்லிம் அகதிகள் கருதியதால் இக்கி வெளியேறி காக்கையன் குளத்திற்கு, காணப்பட்ட பாவற்குளம் என்ற மு நடந்து வந்தார்கள். வவுனியா பாவற் ( சூழ்நிலை காணப்படவில்லை. அத மாவட்டத்தை விட்டே வெளியேற இவ்வகதிகள் உட்பட்டார்கள்.
இங்கிருந்து எங்கு செல்வ தடுமாற்றமாக இருந்தது. யுத்த சூழ் பாதுகாப்பை உறுதிப் படுத்தக் கூடி இம்முஸ்லிம் அகதிகள் கருதியதால் 6 வெளியேறி பிற பிரதேசங்களில் அபயம் இம்மக்களின் மனதில் உதித்த முஸ்லி இக்கிரிகொல்லாவை, வட மத்திய மா
iii111111111111111

ந முஸ்லிம் கிராமத்திற்கு வவுனியா டும். என்றாலும் தமது அப்போதைய பயணத்தை முல்லைத்தீவு முஸ்லிம்கள்
டத்தில் நகரம் சார்ந்த தெற்குப் பிரதேசம்
அதே போல, வவுனியாவில் பிரதான - முஸ்லிம் கிராமங்களும் யுத்த ருந்தன. அதனால் முல்லைத்தீவு ரதான பாதைகளில் இருந்து ஒதுங்கிக் ன்ற முஸ்லிம் கிராமத்தில் தற்காலிக 1. சிலர் நேராக வவுனியா வழியாக . இக்கிராமம் முல்லைத்தீவில் இருந்து தது. முல்லைத்தீவு முஸ்லிம்கள் இரு லை 8 ஆம் திகதி காக்கையன் குளக்
தங்கினார்கள். அன்றைய யுத்த சூழலில் கு பாதுகாப்பைத் தராது என்று இம் ரொமத்தை விட்டு ஜூலை 10 ஆம் திகதி த் தெற்காக 10 மைல் தொலைவில் ஸ்லிம் கிராமத்திற்கு காட்டு வழியாக தளத்திலும் அக்காலத்தில் அமைதியான னால் ஜூலை 12ஆம் திகதி வவுனியா வேண்டிய இக்கட்டான நிலைக்கு
து என்பது இம்மக்களுக்கு பெரும் நிலையில் வட மாகாணத்திற்குள் தமது ப மற்றுமொரு இடம் இல்லை என்று பட மாகாணத்தை விட்டு தற்காலிகமாக தேட எண்ணினார்கள். இச்சந்தர்ப்பத்தில் ம் கிராமம் இக்கிரிக் கொல்லாவையாகும். காணத்தில் மதவாச்சிக்கு அண்மையில்

Page 136
உள்ளது. இக்கிராமத்திற்கும் முல்லை நட்பு ரீதியான உறவுகள் மிக நீண்ட தைரியத்தில் ஏறக் குறைய 2000 பேன. அகதிக்குழு ஒன்று ஜூலை 17ந் தி இக்கிரிக்கொல்லாவை என்ற முஸ்லிம் மக்களால் இவ்வகதிகள் வரவேற்கப்பட
இவ்வாறு இக்கிரிக்கொல்லான தமது நண்பர்களின், வீடுகளிலும், ஏ. அபயம் பெற்றார்கள். இவ்வாறு வ புத்தளம் மாவட்டம் சென்று அங்கு ச மாவட்டத்தில் நுரைச்சோலை என்ற முடிவெடுத்து அங்கு சென்றார்கள். அக் அரசாங்கத் தென்னந்தோட்டம் ஒன்று கா என்று அழைப்பர். நுரைச்சோலை வந் ''லங்காராணி" தென்னந்தோட்டத்தில் தம எண்ணம் கொண்டு அவ்வாறும் இத்தென்னந்தோட்ட மர நிழல்களில் முஸ் வாழ்ந்த அகதிகளுக்கு அக்காலத்தில் வழங்கப்பட வில்லை. என்றாலும் ச சோலை உள்ளூர் முஸ்லிம்களால் மிகவு வசதிகளும் அளித்துப் பராமரிக்கப்பட்ட
முல்லைத்தீவு முஸ்லிம் அகதி தொடர்ந்து வாழ்வதை அரசாங்கம் தென்னந் தோட்டத்தை முஸ்லிம் அக அமைத்து விடுவார்களோ என்ற அச்சம் ஜூலை பிற்பகுதியில் உதவி அரசாங்க முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளை பலவந்தமாக வெளியேற்றினார்கள். இல் முல்லைத்தீவு முஸ்லிம் ஒருவர் பின்னல
"அல்லல் பட்டு இட நாட்கள் பட்டினி கிடந்து வர

னை
லத்தீவு முஸ்லிம்களுக்கும் இடையில்
காலமாக இருந்து வந்தன. அந்தத் மரக் கொண்ட முல்லைத்தீவு முஸ்லிம் கெதி பூனாவை வழியாக (படம் - 12)
கிராமத்தை அடைந்தது. அவ்வூர் டார்கள். மவ வந்தவர்களில் சிலர் இக்கிராமத்தில் னையவர்கள் அகதி முகாம்களிலும் வந்தவர்களில் ஏனையவர்கள் நேராக அபயம் தேட விரும்பினார்கள். புத்தளம்
முஸ்லிம் கிராமத்திற்கு செல்வதென க்காலத்தில் நுரைச்சோலைக் கிராமத்தில் ணப்பட்டது. அதனை ''லங்காராணி'' த முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகள் மது தற்காலிக வாழ்க்கையை அமைக்க - செய்தனர். ஆரம்ப நாட்களில் லிம் அகதிகள் வாழ்ந்தார்கள். அவ்வாறு எவ்வித அரச நிவாரண உதவிகளும் அப்போது முஸ்லிம் அகதிகள் நுரைச் பும் நல்ல முறையில் உணவும் ஏனைய டார்கள்.
கள் அரசாங்கத் தென்னந் தோட்டத்தில் விரும்பவில்லை. அதற்கு அரசாங்க கதிகள் தமது நிரந்தரக் குடியிருப்பாக ம் காரணமாக இருந்திருக்கலாம். 1990 க அதிபரின் சிபாரிசின் பேரில் பொலீசார்
லங்காராணி தோட்டத்தை விட்டு பவனுபவத்தை ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த பருமாறு கூறுகின்றார்.
ம் பெயர்ந்து வந்த நாம் பல நது நுரைச்சோலையில் சற்று

Page 137
ஆறுதல் அடைந்த போது பொலீசாரால் பலாத்காரமாக லெ உணவைக் கையில் துாக்கிய வந்தோம்” (Refugee Family Inf
லங்காராணி தென்னந் தோட்டத் எங்கு தங்க வைப்பது என்பது . அமைப்பினதும் கவலையாக காணப்ப அருகாமையில் காணப்பட்ட ஆலங்கு பாங்கான பிரதேசமொன்றில் இவ்வக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ் ஏற்பாட்டில் அதிருப்தி அகதிகளில் ஒரு பகுதியினர் புத்தள சமீரகம், பெருக்குவட்டான், கடையாமே கனமூலை போன்ற முஸ்லிம் பகுதிகள் முந்தல் பிரதேச முஸ்லிம் கிராமங்கள் மு பரிச்சயமான பகுதிகளாகும். 1987ஆ இராணுவத்தின் கெடுபிடியால் தமது முஸ்லிம்களில் சிலர் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த அனுபவம் இம்மக்கல் பிரதேசத்திற்கு அகதிகளாக மீண்டும் !
அங்கு சென்றார்கள்.
அதே நேரத்தில் இக்கிரிக்கொ நெருக்கடியால் முல்லைத்தீவு முஸ்லிம் - வெளியேறி அனுராதபுர மாவட்டத்திலும் அகதிகளாகச் செல்ல, மற்றவர்கள் ஏற்க நுரைச்சோலை, ஆலங்குடா, கடைய விருதோடை, பெருக்குவட்டான் ஆ முல்லைத்தீவு அகதிகளுடன் இணை
வடக்கின் இன யுத்ததத்தில் சாத்தியங்கள் அக்காலத்தில் இருக்கம் விட்டு வெளியேறிய ஜூலை அகதிகளில்

லங்காராணி தோட்டத்தில் வளியேற்றப்பட்டமை சமைத்த வண்ணம் ஆலங்குடா முகாம் ormation, vol.35: 05)
தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை அரசினதும், அரசசார்பற்ற நிறுவன ட்டது. இறுதியில் இத்தோட்டத்துக்கு டா என்ற முஸ்லிம் கிராமத்தில் மணற் திகள் தற்காலிகமாக குடியேற்றப்பட
கொண்ட முல்லைத்தீவு முஸ்லிம் மாவட்ட முந்தல் பிரதேசத்தில் உள்ள பாட்டை, விருதோடை, நல்லாந்தழுவை, தக்கு அபயம் தேடிச் சென்றார்கள். இம் ல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு ஏற்கனவே ம் ஆண்டு முல்லைத்தீவில் இந்திய பிரதேசத்தை விட்டு வெளியேறிய தற்காலிகமாக அகதிகளாக சில காலம் ளுக்கு இருந்தது. அதனால் முந்தல் செல்வதென இம்மக்கள் முடிவெடுத்து
ல்லாவ அகதி முகாமில் ஏற்பட்ட இட அகதிகளில் ஒரு பகுதியினர் அங்கிருந்து Tள நாச்சியாதீவு முஸ்லிம் கிராமத்திற்கு னவே குறிப்பிட்ட புத்தள் மாவட்டத்தின் ரமோட்டை, சமீரகம், நல்லாந்தழுவை, கிய முஸ்லிம் கிராமங்களில் வாழ்ந்த
தோர்கள்.
உடனடித் தீர்வுகள் ஏற்படக் கூடிய வில்லை. இதனால் முல்லைத்தீவை பலர் தொடர்ந்தும் வெளி மாவட்டங்களில்

Page 138
படம் 12 : முல்லைத்த
வெளியேற்றப்
முத்தையா முல்லைத்தீவு மாவட்ட
புளிய வவனியா மாவட
காக்கயன் குளம்
வவுனியா.
பாவற்குளம்
நே.
அநுர
இக்கி
அநுராதபுரம்
நாச்சியாதீவிற்கு
புத்தளத்திற்கு
மூலம் வெளிக்கள ஆய்வு, 19

'வு முஸ்லிம்களின்
பாதை, 1990.
முல்லைத்தீவு நகரம்
நீராவிப்பிட்டி
ன்கட்டு|
ம்
ஹிஜ்ராபுரம் தண்ணீருற்று
எல்லை
பங்குளம் ட்டம்
மாகா?
$ரண
ாதபுரம் மாவட்டம்
ரிக்கொல்லாவை
0 ' 5. கிம்
96, இலங்கை விதிப்படம் 1994.
20

Page 139
வாழ்ந்தார்கள். என்றாலும் இவர்களில் தமது சொந்த இடங்களுக்குச் சென்று நலன்களை கவனித்து வரக் கூடிய அவ்வாறு சென்று வருவதில் எவ்வித பி
8.2 ஒக்டோபர் அகதிகள்:
1990ஆம் ஆண்டு ஒக்டோபர் ஏறக்குறைய 60 சதவீதமான முஸ்லிம்க வெளியேற்றப்பட்டர்கள். விடுதலைப் வெளியேற்றத்தை விரும்பினர். இவ் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட பட்டிருந்தது. முல்லைத்தீவை விட்டு விடுதலைப் புலிகள் அவர்களின் வாகனம் வடமாகாணத்தின் எல்லையில் அதாவது விடப்பட்டனர். இவ்வாறு முஸ்லிம் சென்றதன் மூலம் போக்குவரத்துக்கு அதே நேரத்தில் வடக்கை விட்டு உறுதிப்படுத்திக் கொள்ள விடுதலைப் தோன்றுகின்றது.
முஸ்லிம்களின் 1990 ஆம் ஆம் வெளியேற்றத்திற்கும், முஸ்லிம்களின் அே
முரணான பலவந்த வெளியேற்றத்திற்கு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஜூன் தமது சொந்த இடங்களுக்கு வருகே வெளியேறினார்கள். ஒக்டோபரின் பே சொந்த இடம் மீள முடியுமோ என்ற 1
1990 ஆம் ஆண்டு ஒக்டோ இடங்களைவிட்டு அகதியாக வெளியேறி ஏற்கனவே அகதியாக்கப்பட்டிருந்த முல்க வாழ்ந்து கொண்டிருந்த அநுராதபுரத்த புத்தளத்தின் ஆலங்குடா, முந்தல் பகுதிக அகதிகளுக்கு உடனடியாக புகலிடம்
12

பலர் இடையிடையே முல்லைத்தீவில் தமது பொருளாதார மற்றும் ஏனைய சூழ்நிலை அன்று காணப்பட்டது. ரச்சினைகளும் அன்று இருக்கவில்லை.
மாதம் முல்லைத்தீவில் எஞ்சி இருந்த ளும் விடுதலைப் புலியால் பலவந்தமாக புலிகள் முஸ்லிம்களின் 100 சதவீத வெளியேற்றம் குறுகிய காலத்தில் வும் விடுதலைப் புலிகளால் திட்டமிடப் முஸ்லிம்கள் ஒப்டோபர் 25ஆம் திகதி ங்களில் அவசர அவசரமாக ஏற்றப்பட்டு | வவுனியா நகருக்கு அருகில் இறக்கி களை தமது வாகனங்களில் ஏற்றிச் முஸ்லிம்களுக்கு உதவி செய்கின்ற முஸ்லிம்களின் வெளியேற்றத்தை புலிகள் விரும்பினர் என்று கருதத்
ண்டு ஜூலை மாதம் விருப்பத்துடனான த வருட ஓக்டோபர் மாத விருப்பத்திற்கு நம் இடையில் அடிப்டையில் அதிக லையில் வெளியேறிய போது திரும்பவும் வாம் என்ற உணர்வோடு முஸ்லிம்கள் ரது முஸ்லிம்கள் திரும்பவும் தமது சந்தேகத்தில் வெளியேறினார்கள்.
பரில் முஸ்லிம்கள் தமது சொந்த வந்த போது அதே வருடம் ஜூலையில் லைத்தீவு முஸ்லிம்கள் தாம் அகதிகளாக ன்ெ நாச்சடுவ முஸ்லிம் கிராமத்திற்கும் களுக்கும் அழைத்துச் சென்று இப்புதிய கிடைக்க ஒழுங்குகள் செய்தார்கள்.

Page 140
உண்மையில் முல்லைத்தீவு நீளமானது. இம்மக்களின் அகதி வரல நாம் இங்கு சற்றுக் கலந்துரையாட 6 வாழ்ந்த முஸ்லிம்கள் முதலில் 1 அகதியானார்கள். நீராவிப்பிட்டி, தண் 1987ஆம் ஆண்டிலும், வேறு பலர் 199 நகரத்தைச் சேர்ந்த மிகப்பெரும்பான்மை
1987இல் இருந்து 1990க்கு முல்லைத்தீவு முஸ்லிம்களில் அநேகர் - பலர் இனப் பிரச்சினையால் பல ( இவ்வாறு, பலமுறை அகதியாக்கப் ப நோக்குவோம். அதில் ஹிஜ்ராபுரம் மு அனுபவம் பின்வருமாறு காணப்படுகி
" எமது வாழ்க்கையில் ஏற்பட இங்கு தருகின்றோம். கடந்த சி இராணுவத்தினரின் கண்மூடித் , விமானத்தாக்குதலினாலும் ச குடும்பத்தாருடன் கால்நடையாக விமானத்தாக்குதலில் அகப்பட்டு ஐந்து பேர் இரத்த வெள்ளத்த காடுகளில் சிதறுண்டு ஒருவர் வந்தடைந்தோம். முஸ்லிம் பெ மாவட்டத்தில் மதுரங்குளி அக காலங்கள் தங்கியிருந்தோம். | கிராமத்திற்குப் போய் சேர்ந்தோம் இராணுவத்தினர் முகாம் அ.ை இல்லாமல் எமது கிராமம் மைதா அமைத்து சுமார் 6 மாதங்கள் 6 பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அரக்கத்தனமான கொடுமைகள் வசதிகள் இல்லாமையால் பசி பட

முஸ்லிம்களின் அகதி வாழ்க்கை மிக ற்றுடன் சம்மந்தப்பட்ட அம்சம் பற்றியும் வண்டும். அதாவது ஹிஜ்ராபுர சூழலில் 187இலும் பின்பு 1990 ஜூலையிலும் ணீரூற்றுக் கிராமங்களில் வாழ்ந்த பலர் 0இலும் அகதியானார்கள். முல்லைத்தீவு மயினர் 1990 ஜூலையில் அகதியானார்கள்.
இடையில் பல காலக் கட்டங்களில் அகதியாக்கப்பட்டிருந்தாலும், இவர்களில் முறை அகதியாக்கப் பட்டுள்ளார்கள். ட்டவர்களின் அனுபவங்கள் சிலவற்றை ஸ்லிம் குடியிருப்பைச் சேர்ந்தவர்களின் பன்றது.
பட கசப்பான சில அனுபவங்களை -7-11-4ஆம் திகதி அன்று இந்திய தனமான செல் தாக்குதலினாலும், புல்லோலகல்லோலப்பட்டு எமது வந்து கொண்டிருந்த வேளையிலும் 7 எமது கிராமத்தவர்கள் நான்கு பல் மூழ்கி இறந்தார்கள். பின்பு
ஒருவராக வவுனியாப்பள்ளியை ரியார்களின் உதவியுடன் புத்தளம் கதிமுகாமில் இரண்டரை வருட பின்பு 90-1-11ஆம் திகதி எமது
ஹிஜ்ராபுரக் கிராமத்தில் இந்திய மத்திருந்ததால் வீடுகள் ஒன்றும் னமாகக் காட்சியளித்தது. குடிசை வாழ்ந்தோம். பின்பு விடுதலைப்புலி ' மீது கட்டவிழ்த்து விட்ட நாங்க முடியாமல் மீண்டும் வாகன ட்டினியுடன் பல மைல்கள் நடந்து
2

Page 141
புத்தள மாவட்டத்தை வந்தடை காலத்தைக் கழித்து கொண்டிரு சம்பவங்கள் எமது முஸ்லிம் என்று இறைவனைப் பிரார்த்த Information, vol -34:51)
நீராவிப்பிட்டியைச் சேர்ந்த மற் காணப்படுகின்றது.
"1987-11-1இல் இந்திய இ . வீடு உடமைகளை இழந்து 1987-11-1ஐத் தொடர்ந்து 193 வாழ்ந்தோம்.. மீண்டும் 1990குடிசைகள் அமைத்து வாழ் 1990-7-7இல் மீண்டும் அகதி. அவல நிலையில் உள்ளோம்”. vol -34:44)
இவ்வாறு முல்லைத் தீவி முஸ்லிம்களும் நகர குடியிருப்பைச் .ே விட்டு வெளியேற ஏற்பட்ட சூழ்நிலை காணப்பட்டன. அவ்வாறு வெவ்வேறு வெவ்வேறு பிரதேசங்களில் அகதிகளாக உருவானது. எவ்வாறு எச்சூழ்நி ை குடியிருப்பு முஸ்லிம்கள் அகதியாக்கப் அறிந்தோம். அதே போல, இவ்வா வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வாழ் விபரமாக நோக்குவோம். முல்லைத்தீ என்றும், கிராம் முஸ்லிம்கள் என்றும் பிரி இவ்வகதி வெளியேற்றம் பற்றி மேலும்
அகதிகளான முல்லைத்தீவு சதவீதமானவர்கள் புத்தளம் நகரத்திலும்

த்தோம். பின்னர் அகதி முகாமில் க்கின்றோம். இப்படியான கசப்பான சமுதாயத்துக்கு ஏற்படக்கூடாது பிக்கின்றோம்” (Refugee Family
றுமொருவரின் அனுபவம் பின்வருமாறு
ராணுவ நடவடிக்கையால் நாம்
அகதிகளாக வெளியேறினோம். 20-1-10 வரை அகதிகளாகவே 1-11இல் அங்கு குடியேறி சிறு ந்தோம். யுத்த நிலைமையால் களானோம். இன்னமும் பெரும் (Refugee Family Information,
ன் கிராம குடியிருப்பைச் சேர்ந்த சர்ந்த முஸ்லிம்களும் முல்லைத்தீவை , காலக்கட்டம் என்பன வேறுபட்டுக் காலக்கட்டங்களில் வெளியேறியமையால் அபயம் தேட வேண்டிய சூழ்நிலையும் லயில் முல்லைத்தீவின் வெவ்வேறு பட்டார்கள் என்பதை சற்று விபரமாக று வெவ்வேறு காலக்கட்டங்களில் கின்ற பிரதேசப் பரம்பலையும் சற்று வு முஸ்லிம்களை நகர, முஸ்லிம்கள் த்து இப்பரம்பல் தன்மையை விபரிப்பது
தெளிவை ஏற்படுத்த உதவும். நகர முஸ்லிம்களில் ஏறக்குறைய 35 , 40 சதவீதமானவர்கள் கற்பிட்டியிலும்,

Page 142
15 சதவீதமானவர்கள் நாச்சியா தீவிலும் நீர்கொழும்பு போன்ற நகரங்களிலும் இ
அதே நேரத்தில் அகதிகளான ஏறக்குறைய 20 சதவீத மன இக்கிரிக் கொல்லாவையிலும் நாம் சதவீதமானவர்கள் ஏற்கனவே மு. வாழ்ந்த ஆலங்குடா, நுரைச்சோலை விருதோடை, கனமூலை , சமீரகம், தஞ்சமடைந்துள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் முல் தன்மை படம் - 13இல் தெளிவாகக் காம் காணப்படும் அகதி முகாம்களில் . முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளின் மாற்றங்கள் அண்மைக் காலங்களில் வாழ்க்கையின் அண்மைக்கால மாற்ற விளக்கப்பட்டுள்ளது.
0 |
குறி
1.
இயற்கை, செயற்கை அனர்த்தங்கள் தமிழில் அகதிகள் என்று அல பிரச்சினைகளுக்காகவும், அரசியல் கார இதே பதம் கொண்டு அழைக்கப்படும் வரைவிலக்கணப்படி அரசியல் காரன். வாழும் மக்களை உள்நாட்டில் இடம் என்றும் வெளிநாடு சென்ற அழைக்கப்படுகின்றது. இவ்வரைவில இலங்கை மக்களுக்கான நிவாரணங்க

ஏனைய 10 சதவீதமானவர்கள் கொழும்பு, என்று அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். முல்லைத்தீவின் கிராமப்புற முஸ்லிம்களில் ரவர்கள் அநுராதபுர மாவட்ட சசியாதீவிலும் ஏனையவர்களில் 80 ல்லைத்தீவு கிராம் முஸ்லிம் அகதிகள் ல, நல்லாந்தழுவை, கடையாமோட்டை, பெருக்குவட்டான் ஆகிய பகுதிகளிலும்
லைத்தீவு முஸ்லிம் அகதிகளின் பரம்பல் டப்பட்டுள்ளது. மேற்குறித்த இடங்களில் கடந்த ஆறு வருடங்களைக் கழித்த வாழ்விட அமைவில் பல முக்கியமான
இடம் பெற்று வருகின்றன. அகதி ங்கள் அத்தியாயம் 10இன் 1015 பகுதியில்
ப்புகள்
எளல் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களை ஊழப்பதுண்டு. இதே போல உள்நாட்டு சணங்களுக்காகவும் இடம் பெயர்ந்த மக்களுக்கும் திகின்றர். ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் ணங்களுக்காக இடம் பெயர்ந்து உள் நாட்டில் -ம் பெயர்ந்தவர்கள் (Internally Displaced) வர்களை (Refugees) அகதிகள் என்றும் சக்கண வேறுபாடுகளுக்கு இணங்க பாதிக்கப்பட்ட ளும் பாதுகாப்பும் வேறுபட்டுக் காணப்படுகின்றது.
24

Page 143
9. முல்லைத்தீவு
அகதி வ
வடக்கு முஸ்லிம்களில் முல்லைத்தீவு முஸ்லிம்களாவர். முதல் முல்லைத்தீவை தமது கட்டுப்பாட்டின் அகதியானார்கள். பின்னர் 1990 ஆம் இராணுவத்தின் கெடுபிடியினால் இவர்கள் 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியேற்றத்தோடு முற்றுமுழுதாக
முல்லைத்தீவு முஸ்லிம்கள் அகற்றப்பட ஆண்டு ஒக்டோபர் மாத முஸ்லிம்களி சொந்த இடங்களுடன் எவ்விதத் தொ இம்மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்
9.1 அகதிகளின் பரம்பல்
முல்லைத்தீவில் சில பிரதேச வாழ்க்கை வாழ்ந்து வந்த முஸ்லிம் குருநாகல், கொழும்பு போன்ற மாவட்ட 25க்கும் மேற்பட்ட அகதி முகாம்களி
முல்லைத்தீவு முஸ்லிம் அக ஒன்று புத்தளம் மாவட்டம் ஆகும். சதவீதமானவர்கள் வாழ்கின்றார்கள். இன்றைய பரம்பலைக் காட்டுகின்றது. மாவட்டத்தில் இவ்வகதிகளின் ப காணப்படுகின்றது. இம் மாவட்டத்தின் முஸ்லிம் அகதிகளின் பரம்பல் செய் குறிப்பாக கற்பிட்டி, புத்தளம், முந்தல் அகதிகளில் பெரும்பான்மையினர் வ மூன்று செயலாளர் பிரிவுகளும்

4 முஸ்லிம்களின் ாழ்க்கை:
முதலில் அகதியாக்கப்பட்டவர்கள் பில் 1987ஆம் ஆண்டு இந்தியப்படைகள் * கீழ் கொண்டுவந்த போது இம்மக்கள்
ஆண்டு ஜூலை மாதம் இலங்கை ர் மீண்டும் அகதியானார்கள். இறுதியாக, > விடுதலைப் புலிகளின் பலவந்த தமது பூர்வீக பிரதேசத்தில் இருந்து ட்டு அகதியானார்கள். ஆனால் 1990 ஆம் ன் பலவந்த வெளியேற்றத்தோடு தமது டர்பும் அற்ற நிலையில் இதுவரையில்
ங்களில் செறிந்து அங்கே ஒரு கூட்டு ம்கள் இன்று புத்தளம், அநுராதபுரம், ட்டங்களில் அமைந்துள்ள ஏறக்குறைய ல் சிதறி வாழ்ந்து வருகிள்றார்கள். -திகள் செறிந்து வாழும் பிரதேசங்களில்
இம்மாவட்டத்தில் ஏறக்குறைய 75 படம்-13 முல்லைத்தீவு முஸ்லிம்களில்
இம்மக்கள் செறிந்து வாழும் புத்தளம் ரம்பல் இடத்திற்கிடம் வேறுபட்டுக் - வட மேற்குப் பகுதிகளில் முல்லைத்தீவு திவாகக் காணப்டுகின்றது. அதிலும்
ஆகிய மூன்று செயலாளர் பிரிவுகளில் வாழ்கின்றனர். மேலே குறிப்பிடப்பட்ட நில ரீதியாக ஒன் றோடு ஒன்று

Page 144
படம் 13: முல்லைத்
வாழும் முகாம்கள்
மன்னாருக்கு
கடல்
கற்பிட்டி
//ஆலங்குடா
வு/புத்தளழ் மாவட்டம்
புத்தளம் நகரம்
தில்லையடி
நல்லாந்தழுவை விருதோடை
கனமூலை கடையாமோட்டை
சமீரகம்
பெருக்குவட்டான்
இlNewto
மூலம்: வெளிக்கன ஆய்வு.

வுே முஸ்லிம் அகதிகள் ளின் பரம்பல், 1995.
வெனிதாவுக்கு
64 -
அநுராதபுரம் மாவட்டம்
நொச்சியாதீவு
**•...
குருனாகலைக்கு.
பிரதான வீதி மாவட்ட எல்லை
அகதிமுகாம்
5.கிமீ
1996. இலங்கை வதிப்படம் 1994.

Page 145
தொடர்புடையவைகளாகும். அத்துட பெரும்பான்மையாகக் கொண்ட பிரதே மாகாண முஸ்லிம் அகதிகளும் வாழ்கி முஸ்லிம் அகதிகள் காணப்படும் குடியேற்றங்களிலும், வாடகை வீடுகளில் வாழும் இடங்களின் பெயர்களும், அட்டவணை - 7இல் தெளிவாகக் காட
உண்மையில் முல் ை காலத்தில் இருந்து மிக அண்மைக் வாழ்ந்து வந்தார்கள். இவ்வாழ்க்கை ( ஏற்பட்டு வருகின்றன. எனினும் காலக்கட்டத்தில் ஏறக்குறைய 50 சதி அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வ
9.2 ஆலங்குடா முல்லைத்
அகதி வாழ்க்கை முல்லைத்த ஆயினும் ஆறு வருடங்களுக்கு மேலாக வாழ்க்கையில் பல பாதகமான 8 இவ்விளைவுகளை இம் மக்கள் மத்தியி கூடியதாக இருக்கின்றது. ஆறு வ முஸ்லிம்கள் அனுபவித்து வரும் அ. கொள்வதற்கு முல்லைத்தீவு முஸ்லி முகாம்களில் ஒன்றான ஆலங்குடா மு கால அகதி வாழ்க்கை வரலாற்றை
ஆலங்குடா அகதி முகாம் புத் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் தற்போது அதன் சூழலிலும் வாழ்ந்து வருகின்ற
1990ஆம் ஆண்டு ஜூலை ! அகதிகளாக முல்லைத்தீவை விட்டு 6

ன் இது பரம்பரையாக முஸ்லிம்களைப் சமாகும். இங்குதான் ஏனைய வட ன்றார்கள்' இப்பிரதேசத்தில் முல்லைத்தீவு
முகாம்களிலும், சொந்தக் காணி வம் பரவலாக வாழ்கின்றனர். இம்மக்கள் இது பற்றிய ஏனைய விபரங்களும் ட்டப்பட்டுள்ளன.
லத்தீவு முஸ்லிம்கள் அகதியாக்கப்பட்ட காலம் வரை அகதி முகாம்களிலேயே முறையில் அண்மையில் பல மாற்றங்கள் இந்நுால் எழுதிக் கொண்டிருக்கின்ற வீதமான முல்லைத்தீவு முஸ்லிம்கள் நகின்றனர்.
தீவு அகதி முகாம்:
வுே முஸ்லிம்களுக்கு புதியதொன்றல்ல. 5 நீடித்த அகதி வாழ்க்கை இம்மக்களின் விளைவுகளை ஏற்படுத் தியுள் ளது. "ல் மிக வெளிப்படையாகக் அவதானிக்க வருடங்களுக்கு மேலாக முல்லைத்தீவு கதி வாழ்க்கை வரலாற்றை விளங்கிக் ம்கள் செறிந்து வாழ்கின்ற அகதி முகாமில் இவர்களின் கடந்த 6 வருட சற்று விளக்கமாக நோக்குவோம். தேளம் மாவட்டத்தில் கற்பிட்டிப் பிரதேச
முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளில் து அகதிகளாக ஆலங்குடா முகாமிலும் றார்கள். மாதம் முஸ்லிம் மக்கள் பெருமளவில் "வளியேறி வந்த போது இம்மக்களுக்கு

Page 146
அபயமளித்த இடங்களில் ஒன்று . பெருந்தன்மையும், பரோபகாரமும் கொ கிராமச் சூழலில் முஸ்லிம் அகதிகளு வழங்கியதோடு அகதிகளின் நிவாரண உதவி செய்தார்கள்.
1990 ஆம் ஆண்டு ஜூலை பகுதிவரை முல்லைத்தீவைச் சேர்ந்த ( அகதிகளாக வாழ்ந்து வந்தனர். அதே புத்தளம் மாவட்டத்தில் அகதிகளின் தொடங்கியது. இக்காலத்தில் ஆயிரக். அகதிகளாகப் புத்தளம் மாவட்டத்திற்கு பலர் வட மாகாணத்தின் மன்னார் ம கற்பிட்டிக்கும், மற்றவர்கள் தரை வழிய புத்தள்ள நகரம், புத்தளத்தின் தெற்குப்
புத்தளம் நோக்கி வந்த அக குலைந்தது. ஆயிரக்கணக்கில் வந்த பாடசாலைகள் மூடப்பட்டன. பள்ளிவாயில் அகதிகளுக்கு தற்காலிக அபயம் ( உருவாகியது.மேற்குறித்த கட்டடங். போதாமல் போனபோது தனியார் வீடு இந்நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட இவ்வாறு புத்தளம் மாவட்டத்தில் மு கற்பிட்டி, முந்தல், வணாத்திவில்லு உதா வணக்கஸ்தலங்கள், பொதுக்கட்டடங் முஸ்லிம் அகதிகளைப் பரிபாலிப்பனவு
இவ்வாறு புத்தளம் வந்த அ. அமைந்துள்ள ஆலங்குடா முஸ்லிம் கி இவ்வாறு வந்தவர்களில் வட மாகாண முஸ்லிம்கள் உள்ளடங்குவர். இதில் ( மாவட்டத்தின் முசலிப்பிரதேச முஸ்லிம்க காணப்பட்டார்கள். 1990ஆம் ஆண்டு : அகதிகள் அபயம் தேடி ஆலங்குடா மு
2

ஆலங்குடா முஸ்லிம் கிராமமாகும். ண்ட ஆலங்குடா முஸ்லிம்கள் தமது க்கு முகாம் அமைப்பதற்கு அனுமதி வேலைகளிலும் நேரடியாக ஈடுபட்டு
யில் இருந்து ஒக்டோபர் கடைசிப் முஸ்லிம்கள் மாத்திரமே இப்பிரதேசத்தில் வருடம் ஒக்டோபர் இறுதிப் பகுதியில் எண்ணிக்கை பெரிதும் அதிகரிக்கத் கணக்கான வட மாகாண முஸ்லிம்கள்
அபயம் தேடி வந்தார்கள். இவர்களில் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக பாக புத்தளம் மாவட்டத்தின் கரைத்தீவு, பிரதேசங்களுக்கும் வரத் தொடங்கினர். 5 வெள்ளத்தினால் இப்பிரதேசம் நிலை அகதிகளுக்கு அபயம் கொடுப்பதற்காக ல் வளவுகளில், மதுரசாக் கட்டடங்களில் கொடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை கள் அகதிகளின் உறைவிட வசதிக்குப் களும் ஏனைய பொதுக்கட்டடங்களும் வேண்டிய சூழ்நிலை உருவாகியது. ஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த புத்தளம், வி அரசாங்கப் பிரிவுகளின் பாடசாலைகள், கள், தனியார் வீடுகள் முழுமையாக Tக மாற்றியமைக்கப்பட்டன. கதிகளில் பலர் கற்பிட்டிப் பிரதேசத்தில் ராமத்திற்கும் அபயம் தேடி வந்தார்கள். த்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த முல்லைத்தீவு முஸ்லிம்களும் மன்னார் ளும் எண்ணிக்கை ரீதியாக அதிகமாகக் ஜனவரியில் ஏறக்குறைய 5000 முஸ்லிம் மஸ்லிம் கிராமத்திற்கு வந்திருந்தார்கள்.

Page 147
இவ்வதிகரித்த அகதிகளின் அகதிகளுக்கான வாழ்விடத் தேவைக முகாம்கள் அமைக்கப்பட வேண்டி ஏற்பட்டது.
ஆனால் துரதிஷ்டவசமாக, அ பொருத்தமான பிரதேசங்கள் அப்போ குடியிருப்புக்கு பொருத்தமான இடம் வந்தார்கள். இக்கிராமத்தின் எஞ்சிய மணற்திடர்களாகவும் காணப்பட்டன
இக்கிராமத்தின் மணற்றிட அரசாங்கத்திற்குச் சொந்தமான காணி அகதிகளுக்கென முகாம்கள் அமைப்பு முடிவு எடுக்கப்பட்டது.
ஆலங்குடாவில் அரசாங்கத்திற மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக் அமைக்கப்பட்டன. அதில் ஒன்று ஏற் முல்லைத்தீவு அகதிகளுக்கும் ஏன் ஏனைய பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் முல்லைத்தீவு மக்களுக்காக அமைக்கப் முகாம்" என்று அழைக்கப்பட, ஏலை ''மன்னார் முகாம் " என்று அகதிகளின் அழைக்கப்பட்டன. மேற்குறித்த மு உள்ளடக்கப்பட விரும்பாத வட மா சேர்ந்த அகதிகள் ஆலங்குடாச் சூ காணிகளிலும், தோட்டங்களிலும் குடிய முகாம்கள் ஆலங்குடா ஏ, பி, சீ என்
படம்-14, 1995 ஆம் ஆ காணப்பட்ட அகதி முகாம்களின் பரம்
ஆலங்குடா சூழலில் மொத்தமாக ! காணப்பட்டன. இம்முகாம்களில், பெ
குடும்பங்களைச் சேர்ந்த 4500 வட மாக

எண்ணிக்கையினால், ஆலங்குடாவில் கள் அதிகரித்தன. பெரிய பல அகதி ய தேவையும் இங்கு அக்காலத்தில்
லங்குடாச் சூழலில் வாழ்விட வசதிக்குப் து இருக்கவில்லை. இக்கிராமத்தில் உங்களில் உள்ளூர் மக்கள் வாழ்ந்து
பிரதேசம் தென்னந் தோட்டமாகவும், (படம் - 14). ர்களை உள்ளடக்கிய பிரதேசத்தில் கள் காணப்பட்டதால், இப்பிரதேசத்தில் பதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களால்
ற்குச் சொந்தமான மணற்பாங்கான பகுதி க்கப்பட்டு மூன்று பெரிய முகாம்கள் நகனவே ஆலங்குடாவிற்கு வந்திருந்த னைய இரண்டும் வட மாகாணத்தின் - அகதிகளுக்குமாக ஒதுக்கப்பட்டன. பட்ட முகாம் “ஆலங்குடா முல்லைத்தீவு எய இரண்டும் "வேப்பங்குள முகாம்" சொந்த கிராமப் பெயர்களைக் கொண்டு மகாம்களில் உள்ளடக்கப்பட முடியாத, காணத்தின் ஏனைய கிராமங்களைச் முலில் காணப்பட்ட சிறு சிறு தனியார்
மர்த்தப்பட்டார்கள் (படம் - 14). இச்சிறிய று அழைக்கப்படலாயிற்று. ன்டில் ஆலங்குடா கிராமச் சூழலில் - -பலைக் காட்டுகின்றது. அக்காலத்தில் பத்து பெரிய, சிறிய அகதி முகாம்கள் மாத்தமாக ஏறக்குறைய 800 அகதிக் காண முஸ்லிம் அகதிகள் வாழ்ந்தார்கள்.

Page 148
இதில் இப்படத்தின் (படம்-14) மே முகாமாகும். இம்முகாமும் அதன் முகாம்களும் மணற்பரப்பில் அமைந்த கிழக்காக முல்லைத்தீவு முகாம் அமை இடையில் உயரமான மணற்திடற் இவ்விரண்டு முகாமிற் கும் தெ தென்னங்கன்றுகளைக் கொண்ட ஒரு கிழக்காக ஆலங்குடா கிராமம் காணப்பட சூழலில் ஏறக்குறைய 200 உள்ளூர் (
ஆலங்குடாவில் முகாமிற்காக 3 அமைக்கப்பட்டு அகதிக் குடும்பங்களு பொது நீர், மலசலகூட வசதிகள் அ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. உ பசியைப் போக்கினார்கள். இந்த ச பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தாலும், தீர்வு காண முயற்சிக்கப்பட்டது.
இம்முகாம்களில் இட வச நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கின்ற 10 அடி அகலத்தையும் கொண்டதா ஓலையால் பக்கச்சுவர்களும் கூரையும் - முகாமில் மாத்திரம் மொத்தமாக 232 அ. இவர்களின் குடிசைகள் அமைவுற்றி பரப்பினைக் கொண்டிருந்தது. சல காணப்பட்டது. இப்பரப்பிற்குள் தான் கிணறும், மலசலங் கழிப்பதற்கு இர அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன. இ ஆலங்குடாவின் ஏனைய முகாம்களிலு வசதிகள் அகதிகளுக்கு அக்காலத்தில்
ஆரோக்கியமான, கௌரவமான குடும்பத்தின் ஒழுக்கத்தைப் பேணுவத ஏற்படுத்துவதற்கு அகதிகளுக்கு (
சப்
130

மற்காகக் காணப்படுவது வேப்பங்குள ர் சூழலில் அமைந்திருந்த ஏனைய திருந்தன. வேப்பங்குள முகாமிற்குக் ந்திருந்தது. இவ்விரு முகாம்களுக்கும்
தொடர்ச்சி ஒன்று காணப்பட்டது. கற் குப் பகுதி வயது முதிர்ந் த த தோட்டமாகும். இப்பிரதேசத்திற்கு ட்டது. 1995ஆம் ஆண்டில் ஆலங்குடா முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தார்கள். ஒதுக்கப்பட்ட இடத்தில் சிறு குடிசைகள்
க்கு உறைவிடம் வழங்கப்பட்டதுடன் அமைக்கப்பட்டு அகதிகள் பயன்படுத்த உணவு நிவாரணம் வழங்கி அகதிகளின் அடிப்படையில் அகதிகளின் உடனடிப் அரசசார்பற்ற நிறுவனங்களாலும் ஓரளவு
தியின்மையினால் குடிசைகள் மிக 5. ஒரு குடிசை 12 அடி நீளத்தையும், பகக் கட்டப்பட்டிருந்தது. தென்னை அமைக்கப்பட்டிருந்தன. முல்லைத்தீவு கதிக் குடும்பங்கள் இருந்தன. ஆனால் ருந்த இடம் ஏறக்குறைய 5 ஏக்கர் எச் செறிவு மிக்கதாக இம் முகாம் இவர்களுக்கு நீர் பெறுவதற்கு ஒரு ண்டு மலசல கூடங்களும் அப்போது தே ஒழுங்கில் படத்தில் காட்டப்பட்டுள்ள ம் மட்டுப் படுத்தப்பட்ட வாழ்க்கை
வழங்கப்பட்டிருந்தன. T வாழ்க்கையொன்றை வாழ்வதற்கு, ற்கு, கல்வி கலாசார அபிவிருத்தியை முகாம் வாழ்க்கை ஒரு சவாலாக
பி.

Page 149
படம் - 14 : ஆலங்குடா அகதி முகாம்கள், 1994
வ
, மணற்றரை ' . . . . . மணற்றரை
வண்டில் பாதை
.: 0O08 0
0 0 0
DOO . . மலசல கூடம் மலசல கூடம் 0 0 ... .
0 0 0 0 0 0 வேப்பங்குள் முகாம்
02 - 02
விடு
பரோ
50 0 0 0
6 பு 6
009 0"" 6
14 € 8 9 10 0 0 0 0 006
மணற்றிடல்
005 06 006
, 0 0 0 0 020 40 0 0 0 2 € 8008
.. ம ம 6,
பி பி பி பி பி பி 2 0
= ர 5 ர 3 . . . . : ம்
ரகுடிசை
பள்ளிவாயில்
0 . : சான
0 0
''ஏ' முகாம்
00
மரக்கறிச் செய்கை பர
நிலம் * 0 0 0
- 5
ஆலங்குடா கிராமம்
மர.
(கு) ..
மணற்றரை

131
00
ப
ப ய எ ப ப 0 முகரம் பள்ளிவாயில்
0 000 :
வண்டில் பாதை
பாடசாலை
த ஓ
விடு
* 1 1 1 1 1 2
த தி தி தி ( மரக்கறிச் செய்கை நிலம்
மரக்கறிச் செய்கை நிலம்
- 4 0
தென்னந்தோட்டம் !
“டி” முகாம்"
ஒ ஒ சி சி :
: 5 குடிசை
0 0
0 0 0 5
0 0 0
~
சி 5 சி சி :
7 0 20 மீ ! ! ! !

Page 150
காணப்பட்டது. ஆலங்குடா முகாம்களில் சொல்லில் அடங்காதவை. முகாமில் மலசலகூட வசதிகள், நெருக்கமான ( உறுஞ்சி அனல் கக்கும் மணற்பாட்
இம்மக்களுக்கு பல்வேறு வாழ்விட வாந்திபேதி ஏற்பட்டு இம்மக்கள் வருத்
உதாரணமாக 1991 ஆம் ஆண் ஒன்றில் ஆரம்பித்த தொற்று நோய் ( உடல்நலப் பிரச்சினையை ஏற்படுத்தியது வாழந்த அகதிகள் பலர் இறந்தனர். கே பாதிக்கப்பட்டார்கள். கிடைக்கப்பெற்ற விட இத் தொற்று நோயினால் இறந்தார்கள். சுகயீனமுற்றார்கள். ஆலங் குடா மருத்துவமனைக்குச் செல்ல வேண் வடக்கே கற்பிட்டிக்கு அல்லது 15 மை வேண்டும். முகாமிலிருந்து பிரதான இரண்டு மைல்கள் நடந்து வந்தே மரு; அன்றில் இருந்து இன்று வரை 8 இந்நிலையிலேயே உள்ளனர்.
1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகாம் முற்றாக நெருப்பில் எரிந்து அதிகமான அகதிகள் தமது குடிசைகளை ஏற்பட்டதாகக் காணப்பட்டாலும் நெருப்பு ஓலைகளைப் பயன் படுத்தி குடிசை குடிசைகள் மிக நெருக்கமாக அ பெருந் தொகையாக குடிசைகள் இருந்தனவெனலாம். இந்நுால் ஆசிரிய நிகழ்ந்த இடத்தைப் பார்த்தபோது, நெ
குடிசைகளையும், அதைவிட மே. உடமைகளையும் இழந்து பரிதவித் குடும்பங்களையும் கண்டார். இவ்வாற எரிந்தது இதுவே முதற்தடவையல்ல.
132

அகதி மக்கள் அனுபவித்த கஷ்டங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நீர், அத்துடன் குடிசை அமைப்புக்கள், வெப்பத்தை ப்கான அமைவிடம் ஆகியவற்றால் பிரச்சினைகளை, சரும நோய்களை, தினர். தி மார்ச் மாதத்தில் ஆலங்குடா முகாம் சூழற் பிரதேசங்களிலும் பரவி பாரிய . இதனால் ஆலங்குடா முகாம்களில் வறுபலர் கடுமையாகச் சுகயீனமுற்றுப் பரங்களின்படி மொத்தமாக 20 அகதிகள்
வேறு பலர் மிகவும் கடுமையாக முகாமில் இருந்து அகதிகள் திமானால் ஏறக்குறை 17 மைல்கள் ல்கள் தெற்கே புத்தளத்திற்குச் செல்ல ன பாதைக்குச் செல்ல ஏறக்குறைய த்துவ மனைக்குச் செல்ல வேண்டும். இப்பிரதேசத்தில் வாழும் அகதிகள்
15ஆம் திகதி ஆலங்குடா, வேப்பங்குள சாம்பலாகியது. இதனால் 100க்கும் T இழந்து நிர்க்கதியாகினர். தற்செயலாக பு இலகுவில் பரவக் கூடிய தென்னை கள் அமைக்கப் பட்டிருந்தமையும், மைவுற்றிருந்தமையுமே இவ்வளவு எரிந்து சாம்பலாக் காரணமாக பர் நேரடியாக சென்று அச்சம்பவம் நப்பினால் எரிந்து தரைமட்டமாகிய எசமாக தம்மிடம் எஞ்சி இருந்த த 100க்கும் அதிகமான அகதிக் மாக நெருப்பினால் அகதி முகாம்கள் அநுராதபுர நாச்சடுவ அகதி முகாமில்
(சமாக

Page 151
வாழ்ந்த முல்லைத்தீவு மக்களினது இது போல கற்பிட்டியில், மன்னார் வீ விபத்தினால் அகதிகள் மிகவும் பாதிக்
ஆலங்குடாப் பிரதேச முஸ்லிம் பிரச்சினை கல்விப் பிரச்சினையாகும் ஆலங்குடாவில் அமைவுற்றிருந்த உன் ஒரு கட்டத்தையும், 5 ஆசிரியர்களையும் வருகையோடு மாணவர்களின் எண்ன மாணவர்களுக்காக மாலை நேர வகு அகதிகளின் கல்விப்பிரச்சினையைத் நிறுவனங்களான றெட்பானாவும், இத்த உண்மையில் மேற்குறிப்பிட்ட நிவாரண கல்விக்குச் செய்த சேவைகள் | மட்டுப்படுத்தப்பட்ட நன்மைகளையே பின்வரும் உதாரணம் மூலமாக அறி அகதிகள் இப்பிரதேசத்துக்கு வந்து மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர் ஆலங்குடா பாடசாலையில் இட நெரு ஆலங்குடா பாடசாலையில் 6ஆம் கல்வி வசதிகளே அப்போது காணப்ப இடைநிலை, உயர்தர வகுப்பு கல் ஆலங்குடா அகதிகள் எதிர் நோக்கி விளக்கமாக "அகதிகளின் கல்விப் பிர. (பார்க்க உசாதுணை நூல்) எழுதப்
ஆலங்குடாவில் அகதிகள் உள்ளூர் மக்களுக்கும், அகதி ம. ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாகும். முஸ்லிம் கிராமத்தின் சனத்தொகை வி உள்ளூர் மக்களின் விகிதாசாரம் மொத் குறைவான நிலைக்குத் தள்ளப்பட்டது நடவடிக்கைகளில் உள்ளூர் - அ பிணக்குகளும் ஏற்படத் தொடங்கின.

முகாமானது 1995ஆம் ஆண்டிலும், நியிலும் இவ்வாறு பல இடங்களில் தீ கப்பட்டார்கள்.' ) அகதிகள் எதிர் நோக்கிய மற்றுமொரு .. அகதிகள் வருவதற்கு முன்னர் ளூர் பாடசாலை 175 மாணவர்களுக்காக ) கொண்டு காணப்பட்டது. அகதிகளின் ரிக்கை 800 ஆக அதிகரித்தது. அகதி ப்புகள் இப் பாடசாலையில் ஏற்படுத்தி தீர்க்க அரசாங்கமும், அரச சார்பற்ற தாலியியன் கோப்பரேசனும் முயற்சித்தன.
ஸ்தாபனங்கள் ஆலங்குடா அகதிகளின் போற்றத்தக்கவை. ஆனால் அவை
அகதிகளுக்கு அளித்தது என்பதை யக் கூடியதாக இருந்தது. அதாவது இரண்டு வருடங்களாகியும் 200 அகதி த்துக் கொள்ளப்பட முடியாத நிலையில் க்கடி காணப்பட்டது. அதுமட்டுமன்றி ஆண்டு வரையான வகுப்புக்களுக்கான ட்டன. இதனால் அகதி மாணவர்களின் வியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ய ஏனைய கல்விப் பிரச்சினைகள் மிக ச்சினை” என்ற ஆய்வில் நுாலாசிரியரால பட்டுள்ளது.
எதிர் நோக்கிய மற்றொரு பிரச்சினை க்களுக்கும் இடையில் பிற்காலத்தில்
அகதிகளின் வருகையோடு ஆலங்குடா கிதாசாரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. த சனத்தொகையில் மூன்றில் ஒன்றிற்கும் . தொழில்வாய்ப்பு மற்றும், பொருளாதார நதி மக்களுக்கிடையில் போட்டியும் ஆனால் இவ்வாறிருந்தும் கூட இவ்
33

Page 152
உள்ளூர் - அகதிப் பிணக்குகள் எந்தக்கட செல்லவில்லை என்பது மிகவும் ஆச்சரிய காரணம் ஆரம்பத்தில் இருந்து அகதிக மக்களின் பெருந்தன்மையும், ஊரடிப்படை கட்டுப்பாடும், இவ்விரு மக்கள் குழுக் காணப்பட்ட இஸ்லாமிய சமயத்ன பொதுத்தன்மையும் ஆகும். இவை , ஒன்றாக ஒற்றுமையாக வாழ வைத்திரு ஒற்றுமை தொடரும் என்பதில் எவ்வித
9.3. ஏனைய பிரதேசங்களி
முஸ்லிம் அகதிகள்
ஆலங்குடா அகதிப் பிரச்சினை புத்தளம் மாவட்டத்தில் கடையாமோட்டை மற்றும் ஏனைய அகதி முகாம்களில் வாழ்ந் அனுபவித்தனர் என்பதை இங்கு குறிப்பு
முல்லைத்தீவு முஸ்லிம்கள் தம். படுத்திப் பார்க்கும் போது இம்மக்கள் ம ஆதரித்து உபசரித்த உள்ளூர் மக்களின் முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளை 19 வரை ஆதரித்து உதவி வருகின்ற ( தனவந்தர்களினதும் மக்களினதும் ஆத அதாவது 1987இல் முல்லைத்தீவு முன் வந்த போது சில வாரங்கள் அரசாங்க வரை அகதிகளுக்கு உணவும், உறைவி. முஸ்லிம் தனவந்தர்களும், பொது மக். உதவிகள் முல்லைத்தீவு முஸ்லிம் இக்கிரிக்கொல்லவையிலும் உள்ளூர் மக்க
இது போல, 1987ஆம் ஆண் கண்டிப் பிரதேசத்திற்கு அகதிகளாக வந்த
134

ட்டத்திலும் ஒரு வரம்பைத் தாண்டிச் பமானதொரு விடயமாகும். இதற்குக் களை ஆதரித்து உபசரித்த உள்ளூர் டயில் அகதி மக்கள் மத்தியில் ஏற்பட்ட க்களையும் இணைக்கும் பாலமாகக் மத அடிப்படையாகக் கொண்ட இம்மக்களை இது வரை காலமும் க்கின்றது. எதிர் காலத்திலும் இவ் - ஐயமும் இல்லை.
ல் முல்லைத்தீவு
னகளுக்கு ஒப்பான அனுபவங்களை - , சமீரகம், நல்லாந்தழுவ, நாச்சியாதீவு, த முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளும் பிட வேண்டும்.
மை அகதி வாழ்க்கையோடு தொடர்பு எதில் முதலில் வருவது அகதிகளை எ பரோபகாரம்தான். உதாரணமாக 87ஆம் ஆண்டில் இருந்து இன்று முந்தல் பிரதேச உள்ளூர் முஸ்லிம் ரவு இங்கு நினைவு கூரத்க்கதாகும். ப்லிம் அகதிகள் முந்தல் பகுதிக்கு
நிவாரண உதவிகள் கிடைக்கும் டமும் அளித்தவர்கள் முந்தல் பிரதேச களுமேயாவர். இதே முறையிலான
அகதிகளுக்கு நாச் சடுவையிலும், களால் அளிக்கப்பட்டன. டு முல்லைத்தீவு முஸ்லிம்கள் பலர் போது கண்டிப் பிரதேச முஸ்லிம்களால்

Page 153
ஆதரிக்கப்பட்டார்கள். குறிப்பா. முஸ்லிம்களுக்கென ஒரு முகாம் அமை அக்குறணை முஸ்லிம்கள் மிக அ. இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.
9.4 அகதிகளின் அனுபவா
அகதிகளான முல்லைத்தீ பரிதாபத்திற்குரியது. இம்மக்கள் தாங் தாம் பட்ட துன்பம் பற்றி 1991ஆம் 4 ஆய்வில் குறிப்பிட்டிருந்தார்கள் ஞாபகப்படுத்துவது பொருத்தமாகும்
ஆலங்குடா முகாமிற்கு ஆரம் அகதி ஒருவர் பின்வருமாறு தனது
"இவ்விடத்தில் அனைவரையும் காய்ச்சல் 6 வசதி இல்லமையால் திரும்ப மனம் சோர்வுற்று கை கால் நடக்க வேண்டிய நிலை. பி வேண்டிய பருவத்தில் பாய்க இத்தனைக்கும் மத்தியில் ரே மைல்கள் துாரத்தில் இருந்து நிலை". (Refugee Family In
நீராவிப்பிட்டியைச் சேர்ந்த | பற்றி பின்வருமாறு கவலைப்படுகின்ற
''நாங்கள் சென்ற 11-6-90 தினமும் சுமக்க வேண்டிய நின கலாசாரம் முதற்கொண்டு அ கஷ்டமான காரியத்தில் சிக்கி

க அக்குறணைச் சந்தையில் இம் பத்து இம்முஸ்லிம் அகதிகளின் நலன்களை க்கறையோடு கவனித்தார்கள் என்பதும்
ங்கள் சில :
வு முஸ்லிம்களின் நிலை மிகவும் கள் அகதியாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஆண்டு பெப்ரவரி மாத அகதிகள் பற்றிய . அவற்றில் சிலவற்றை இங்கு
ப காலத்தில் வந்த முல்லைத்தீவு முஸ்லிம் ப அனுபவத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
(ஆலங் குடா) வீட்டில் வாட்டியது. சரியான மருத்துவ பத்திரும்ப வருத்தம் வருவதால் கள் சோர்வுற்று குடிகாரன் போல் "ள்ளைகளோ துள்ளி விளையாட களில் படுக்க வேண்டிய நிலை. சன் சாமான்களைப் பெற்று பல தலையில் சுமந்து வர வேண்டிய formation, vol -35:36)
மற்றுமொருவர் தனது எதிர்காலத்தைப் மார்.
தொடக்கம் பெரும் இன்னல்களை மலக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எமது ன்றாட வாழ்க்கையில் கூட மிகவும் த் தவிக்கின்றோம். பிள்ளைகளின்
135

Page 154
எதிர்காலம் எப்படி அமையுடே கவலையாக உள்ளது. காரண. மோசம் அடைந்துள்ளது. நாம் உள்ள இடத்திற்கு வந்து சே கொஞ்ச நஞ்சமல்ல. இடைல் என்று கத்தும் போது அவர்களி. என்னிடம் பணம் இன்றி மன 6 வெறுக்கும் அளவுக்குச் செ Information, vol -34:10)
ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த பெ அமைந்துள்ளது.
((
''பயங்கரவாத நெருக்கடி கா, மனநிலை பாதிக்கப்பட்டு 6 ம. விளங்கவில்லை. கணவன் ! பொறுப்பைப் பார்க்க வேண்டிய : நிலை என்ன? மருந்துகள் வாங். வசதிகள் இன்மை, இடத்து காரணத்தினால் உடல் ந பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டு காலமாகி 3 வருடமாகிவிட்டது இல்லை". (Refugee Family Inf.
9.5 நிவாரண அமைப்புக்க
இச்சந்தர்ப்பத்தில் கடந்த ஆறு அகதிகளோடு சம்மந்தப்பட்ட அக அவைகளின் சேவைகளையும் குறிப்பிட முஸ்லிம்களுக்கான "உணவு நிவார உணவு ஸ்தாபனத்தாலும், (World Foo
இலங்கை அரசாங்கத்தாலும் வழங்கப்ப
136

கா என்பதை நினைக்க மிகவும் ம் பிள்ளைகளின் உடல் நலம் மிக சொந்த ஊரில் இருந்து தற்போது நம் வரையில் பட்ட கஷ்டங்கள் பழியில் குழந்தைகள் பசி, தாகம் உன் ஆவலைப் பூர்த்தி செய்வதற்கு வதனை கொண்டு வாழ்க்கையை ன்றிருந்தேன்” (Refugee Family
ண் ஒருவரின் அனுபவம் இவ்வாறு
ரணமாக வயோதிபமான எனக்கு சதங்களாக ஒரு கையும் காலும் இறந்த 3 வருடங்கள் குடும்பப் நான் இன்று படுக்கையில், குடும்ப நவதற்கு பண வசதிகள், இருப்பிட க்கிடம் மாறுவதனால் சூழல் சிலை பாதிப்பு, கணவரும் டு அநுராதபுர சாகிராக் கல்லுாரியில் 1. எங்களுக்கு எந்த ஆதரவும் ormation, vol -34:33)
கள்:
வருடங்களாக முல்லைத்தீவு முஸ்லிம் தி நிவாரண அமைப்புக்களையும், ட்டே ஆக வேண்டும். முல்லைத்தீவு எம்” புத்தளம் மாவட்டத்தில் உலக 1Program) அநுராதபுர மாவட்டத்தில் ட்டன. முல்லைத்தீவு முஸ்லிம்கள்

Page 155
செறிவாக வாழ்ந்த புத்தளம் மாவட அரச சார்பற்ற நிறுவனங்களான பே ஒக்ஸ்பாம் ஆகிய நிறுவனங்கள்' பல் ஈடுபட்டு வந்தன. இதில் குறிப்பாக ( சுகாதார வசதிகளை அபிவிருத்தி நிர்வகிப்பதிலும், முகாம்களில் குடி செய்தது. ஒக்ஸ்பாம் (Oxfam) பொருட்களை வழங்குவதில் உத. cross) மருத்துவ சேவைகளை
மேற்குறித்த சர்வதேச அரச சேவைகள் உள்ளூரில் தோன்றிய செய்யப்படுகின்ற ஒழுங்குகள் அப்பே வகையில் முந்தல் பிரதேசத்தை குறி மன்னார் முஸ்லிம் அகதிகளால் கு சேவை செய்வதற்காக தோற்றுவிக்க ODMNP* என்று அழைக்கப்படும் வட அமைப்பு என்ற நிறுவனமும் ஒன் மட்டத்தில் அகதிகளோடு அகதிகளாக வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இ அகதிகளின் ஈடுபாட்டை விருத்தி நிறுவனங்கள் ஆக்கமும் ஊக்கமும் இதே நேரத்தில் அகதி மக்களை அபிவிருத்தி சங்கமும் (Rural Devel சுய தொழில் வாய்ப்பு ரீதியாகவும் பல 2 செய்துள்ளது.
ஆலங்குடாப் பிரதேசத்தை உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங். ஈடுபட்டிருந்தாலும் இத்தாலி நாட்டை கோப்பரேசன" என்னும் அரச சார்பற முகாம் சீர்திருத்தம் சார்ந்த நிவார கூரத்தக்கதாகும். அதே நேரத்தில் பா உதாரணமாக இலங்கை ஜமாஅ

உத்தின் முந்தல் பிரதேசத்தில் சர்வதேச ரூட், (Forut) செஞ்சிலுவைச் சங்கம், 'வறுபட்ட நிவாரண நடவடிக்கைகளில் பாரூட் அமைப்பு இப்பிரதேச அகதிகளின் செய்வதிலும், பாலர் பாடசாலைகளை சைகளை புனரமைப்பதிலும் உதவிகள்
அமைப்பானது வீட்டுப் பாவனைப் ரியது. செஞ்சிலுவைச் சங்கம் (Red முகாம் மட்டத்தில் நடத்தி வந்தது. சார்பற்ற நிறுவனங்களின் அகதிகளுக்கான அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் ாது நடைமுறையில் இருந்தன. அந்த ப்பாக நோக்குகின்ற போது முல்லைத்தீவு, றிப்பாகத் தமது பிரதேச அகதிகளுக்கு ப்பட்ட உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனம் - மாகாண இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் றாகும். இந்நிறுவனம் அகதி முகாம் - அகதி மக்களுக்கான சேவையை செய்து இவ்வாறான அகதி நிவாரண வேலைகளில் செய்வதற்கு போரூட் போன்ற சர்வதேச அளித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அங்கத்தவர்களாகக் கொண்ட கிராம் opment Foundation) கல்வி ரீதியாகவும், பதவிகளை முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு
ப் பொறுத்தவரை பல தேசிய, சர்வதேச , கள் தமது நிவாரண நடவடிக்கைகளில் டப் பிரதிநிதித்துவப்படுத்தும் “இத்தாலியன் ற நிறுவனத்தின் கல்வித்துறை சார்ந்த, ன நடவடிக்கைகளும் இங்கு நினைவு இஸ்லாமிய அரசசார்பற்ற நிறுவனங்களும் 5தே இஸ்லாமி, அன்சாரி சுன்னத்துல்
137

Page 156
முகம்மதியா ஜமாஅத்தினரும், அல்தனவந்தர்களும் கொழும்பு பள்ளிவாசல் பல பங்களிப்புக்களைச் செய்தன.
9.6 நிவாரண உதவிகளில்
முல்லைத்தீவு முஸ்லிம் அகதிக நடவடிக்கைகள் கடந்த காலங்களில் மேற் இம்மக்களின் அகதி வாழ்க்கையில் ஏற்படுத்தவில்லை என்பதை இங்கு குறி மக்களின் உடல் ஆரோக்கியமும், வீழ்ச்சியடைந்து சென்றுள்ளன. இதற்கு கிடைக்கக் கூடியதாக உள்ள விபரப்படி எண்ணிக்கை விகிதாசார ரீதியாக அதி குறிப்பாக சிசு மரணமும் இம்மக்கள் மத்தி உயர்வாகக் காணப்பட்டதை பதிவாளர் ந (Vital statistics) காட்டுகின்றன. அ ஆய்விலிருந்து பாடசாலை விட்டு ( சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் ெ இது போல குற்றச் செயல்கள் இம்மக்கள் பொலிஸ் அலுவலக புள்ளிவிபரங்கள் குழு அகதிகளின் கல்வி, ஒழுக்கம், கலா வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்றன முயற்சிகள் ஊக்குவிக்கப் படவில்லை.
அதே நேரத்தில் துரதிஷ்டவசமாக பட்டு ஆறு வருடங்களுக்குப் பின்பு தேவைகளுக்கும் பிறரை நம்பி வாழ ே
அகதிகளுக்கு நிவாரண உத வழங்கப்பட்டு வந்தன. அவ்வாறான ந இம்மக்களுக்கு ஏற்பட்டது என்பது மிகக் ஒன்றாகும். அந்த வகையில், அ நடைமுறைப்படுத்தலிலும் பல அடிப்ப ை
13

ஆஜில் போன்ற மற்றும் முஸ்லிம் பெடரேசன் நம்பிக்கையாளர் சபையும்
1 தாக்கம்:
ளின் நலனுக்காகப் பல்வேறு நிவாரண கொள்ளப்பட்டிருந்தாலும் கூட, அவை
ஒரு திருப்தியான மாற்றத்தை ப்ெபிட வேண்டும். அதாவது, அகதி உள உறுதியும் தொடர்ச்சியாக ப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. - அகதி மக்களில் நோயுறுபவர்களின் கரித்து வந்தது. இறப்பு வீதமும் யில் வழமைக்கு முரணான விகிதத்தில் டாயகத்தின் வாழ்நிலைப் புள்ளிவிபரங்கள் தே போல நுாலாசிரியரின் வெளிக்கள் வெளியேறும் சிறார்களில் குறிப்பாக சல்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. ர் மத்தியில் அதிகரித்துச் செல்வதாயும் றிப்பிடுகின்றன. கூட்டு மொத்தத்தில், Fாரம் என்பன முகாம் மட்டத்தில் T. அதே நேரத்தில் அகதிகளின் சுய
5 இதனால் இம்மக்கள் அகதிகளாக்கப் ம் வாழ்க்கையின் அத்தியவசிய வண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிகள் இடையூறின்றி தொடர்ச்சியாக லையிலும் ஏன் இவ்வாறான நிலை கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய கதி நிவாரண திட்டமிடுதலிலும் டக் குறைபாடுகள் காணப்பட்டதை

Page 157
அறியக் கூடியதாக இருக்கின்றது. மூலம் அறியலாம். குறிப்பாக அகதி எடுத்துக் கொண்டு இவ்வாறான உ,
உணவு நிவாரண உத அத்தியவசியமாக தேவைப்படும் எல்ல உதாரணமாக குழந்தைகட்கான ப முதியவர்களுக்கான போசாக்கு உண முகாம் மட்டத்தில் நோயாளிகளைப் அரசாங்க வைத்தியசாலைகளும் முகா காணப்பட்டன. அவ்வாறு கிடைக்கக் இடநெருக்கடியும், மருத்துவ வச் உதாரணமாக கற்பிட்டிப் பிரதேச முகாம் கூடிய ஒருவருக்கு உடனடிச் சிகிச்ல அப்பாலுள்ள சிலாபம் வைத்தியசாலை காணப்பட்டது. அகதிகள் தமது
இன்மையால், முழுமையாக அகதி நிக காணப்பட்டனர். மருத்துவத்திற்கு, தேவைகளுக்கு அவர்களிடம் பண தேவைகள் ஏற்படும் காலக்கட்டங்களில் உணவு நிவாரணங்களை விற்று காசா தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த
அது மட்டுமன்றி, வழங்கப் சராசரி குடும்பத்திற்குப் போதாத அள் நிவாரணம் பல இடங்களில் பல ச வழங்கப்படவும் இல்லை. நிர்வாக ரீதிய அடிப்படை உணவு நிவாரணங்ளை வைத்தன. உணவு நிவாரண உதவி இடங்களில் தரம் குறைவானதாகக் .
அகதியாக்கப்பட்ட போது இம் நிலைக்கு கடந்த ஆறு வருட அ கொண்டு சென்றுள்ளது என்பதை ய

இதனைப் பல்வேறு உதாரணங்கள் களுக்கான உணவு நிவாரண உதவியை தவியின் தாத்பரியத்தைப் பார்ப்போம்.
விகளில் அகதிகளின் வாழ்க்கைக்கு மா பொருட்களும் அடக்கப்படவில்லை." பால்மா உணவுகள், கற்பிணிகளுக்கான, வுகள் வழங்கப்படவில்லை. அகதிகளின் பராமரிக்க ஒழுங்குகள் இருக்கவில்லை. ம் சூழலில் இருந்து தொலை துாரத்தில் கூடியதாக உள்ள மருத்துவசாலைகளில் திப் பற்றாக்குறையும் காணப்பட்டது. எம் ஒன்றின் கடுமையாக நோய்வாய்ப்படக் சைக்காக ஏறக்குறைய 50 மைல்களுக்கு -க்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை முகாம் சூழலில் தொழில் வாய்ப்புக்கள் வாரண உதவிகளையே நம்பியவர்களாகக் உடைகளுக்கு ஏனைய அடிப்படைத் வசதி இருக்கவில்லை. அவ்வாறான தமக்கு வழங்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட ராக்கி தமது ஏனைய மருத்துவ, உடைத்
னர். பட்ட உணவு நிவாரணங்களும், ஒரு வில் காணப்பட்டன. அத்துடன் உணவு அகதிப் பிரதேசங்களில் உரிய காலத்தில் பான தேவையற்ற தாமதங்கள் அகதிகளை ப் பெறவும் பல மாதங்கள் காத்திருக்க விகளில் கொடுக்கப்பட்ட பொருட்கள் பல காணப்பட்டன.
மக்கள் இருந்த நிலையைவிட மோசமான கதி வாழ்க்கை இவர்களை இறுதியில் பாரும் மறுக்க முடியாது.
139

Page 158
குறிப்பு
1.
புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறி முந்தல் செயலாளர் பிரிவுகள் காணப்படுகி படி இம்மூன்று பிரதேசத்திலும் வாழ்ந்த தொகையில் 35 சத வீதமாகக் காணப்பட முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேச
1996ஆம் ஆண்டு புத்தளம் மாவட்டத்தில் அகதிகள் வாழ்ந்தார்கள். இவ்வகதிகளில பிரிவிலும், 30சத வீதமானவர்கள் புத்தளம் முந்தல் செயலாளர் பிரிவிலும் காணப்பட்ட
1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வட ! புத்தளம் மாவட்ட சனத் தொகை 12 புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் செறிந்து
முந்தல் செயலாளர் பிரிவுகளின் மொத்த ச
1994 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ந் திகதி 24 2 என அழைக்கப்படுகின்ற அகதி முக. மீளத் திருத்தப்பட்ட நிலையில் 1995ம் ஆ தீப்பற்றி 185 குடிசைகள் எரிந்து சாம்ப 30ஆம் தகதி கண்டக்குடாவில் 90 ஏக்கர் சாம்பலாகியது. இங்கு 249 குடிசைகள் அநுராதபுர மாவட்ட நாச்சியாதீவுக் கிராமத், அகதி முகாம் எரிந்து சாம்பலாகியது. 1 கற்பிட்டி யானை வாசல் அகதி முகாம் சாம்பலாகியது.
இலங்கையில் வழமையாக காலை 7:30இல் மாணவர்களுக்கான கற்பித்தல் நடை பெறு பாடசாலைகளில் மாணவர்களின் இட நெ கல்வி கற்கும் நேரத்தில் சேர்த்துக் கொள்க பதிலாக அகதி மாணவர்களுக்கு 2 மகன் வகுப்புக்களில் கல்வி கற்பிக்கப்பட்டு வந்
140

கள்
ஐந்து வாழும் பகுதிகளாக கற்பிட்டி, புத்தளம், ன்றன. 1981ம் ஆண்டு குடிசனக் கணிப்பின் த முஸ்லிம்கள் இப்பிரதேச மொத்த சனத் ட்டனர். பல நுாற்றாண்டுகளாக இப்பிரதேசம்
ம் ஆகும்.
5 மொத்தமாக 60,000 வட மாகாண முஸ்லிம் 45 சத வீதமானவர்கள் கற்பிட்டி செயலாளர்
செயலாளர் பிரிவிலும், 25 சதவீதமானவர்கள் டார்கள்.
மாகாண முஸ்லிம் அகதிகளின் வருகையோடு விதத்தால் அதிகரித்தது. அதில் குறிப்பாக வாழும் பிரதேசங்களான கற்பிட்டி, புத்தளம், சனத் தொகை 65 சதவீதத்தால் அதிகரித்தது.
பத்தள நகருக்கண்மையில் உள்ள சோல்டான் எம் எரிந்து சாம்பலாகியது. இதே முாமில் தண்டு ஜூலை மாத நடுப்பகுதியில் மீண்டும் -லாகின. 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம் என அழைக்கப்படும் அகதி முகாம் எரிந்து எரிந்தன. 1995 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தில் தோட்டம் சியாரத்து வளவில் காணப்பட்ட 994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தகதி மில் 95 குடிசைகள், 9 கடைகள் எரிந்து
இருந்து மாலை 130 வரை பாடசாலைகளில் -வதுண்டு. புத்தளம் மாவட்டத்தில் உள்ளூர் ருக்கடியால் அகதி மாணவர்கள் வழமையாக எ முடியாத நிலை காணப்பட்டது. இதற்குப் னியிலிருந்து 5 மணி வரை மாலை நேர
தன.

Page 159
6.
ஐந்து அங்கத்தவர்களுக்கும் அதற்குக்
ரூபாய் 1260 பெறுமதியான உலர் உண. குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை ! உதவியும் குறையும். உதாரணமாக ஒரு மாதாந்தம் 334 ரூபாய் பெறுமதியான Ministry of Shipping, Ports, 1996:34).
7.
புத்தளம் மாவட்டத்தில் UNHCR, WF Coorparation, Oxfam, Service நிவாரண அமைப்புக்களும் SLRCS, RDF ODMNP, RRRA, NRRO அகதி நிவாரண நடவடிக்கைகளில் ஈ
8.
இவ்வமைப்பு ஆங்கிலத்தில் Organ Northern Province (ODNMP) ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டது. கு. உதவியது. 1992 - 1994 ஆம் ஆன பிரதேசத்தில் இவ்வமைப்பு பரவலாக அ இஸ்லாமிய மத சார்புள்ள பல நிறுவன ஈடுபட்டு வந்தன. அவற்றுள் இலங்கை ஜமாஅத், IIRO, YMMA, FAMYS பொருட்கள் அடிப்படையிலும் உதவி மேற்குறித்த நிறுவனங்களின் நடவடிக் கொண்டிருந்தன.
10.
உலக உணவு திட்டத்தின் கீழ் உலர் உ அளவுகளையும் கொண்டிருந்தன. ஒ 1600 கிராம் அரிசியும், 200கிராம் பருப் எண்ணெய்யும் வழங்கப்படும்.

கூடிய ஒரு அகதிக் குடும்பத்திற்கு மாதாந்தம் வு உதவி அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. குறையக் குறைய உலர் உணவு நிவாரண 5 அங்கத்தவரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 7 நிவாரணம் வழங்கப்படுகின்றது (The Rehabilitation and Reconstruction,
FP, SCF, IVSO, Forul, Redburna, Italian - Civil International ஆகிய சர்வதேச SLF ஆகிய தேசிய நிவாரண அமைப்புக்களும்
ஆகிய உள்ளூர் நிவாரண அமைப்புக்களும் திபட்டு வருகின்றன.
ண அ
ization for Displaced Muslims of the
என்று அழைக்கப்படும். இது 1992 ஆம் முசரவ நிறுவனம் இவ்வமைப்பின் வளர்ச்சிக்கு ன்டு காலங்களில் புத்தளம் மாவட்ட முந்தல் அகதி நிவாரண வேலைகளில் ஈடுபட்டு வந்தது. னங்களும் அகதி நிவாரண நடவடிக்கைகளில் க ஜமாஅத்தே இஸ்லாமி, அன்சாரி சுன்னத்துல்
ஆகியவைகள் குறிப்பிடத்தக்கன. நிவாரண கள் கொடுக்கப்பட்ட பிரதேச அடிப்படையிலும் க்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட தன்மைகளைக்
உணவு நிவாரணம் பின்வரும் பொருட்களையும் ரு அகதி அங்கத்தவருக்கு ஒரு மாதத்திற்கு யும், 80 கிராம் சீனியும், 700 மி.மீ. தேங்காய்
31

Page 160
10. கால மாற்றத்
10.1 முகாம் வாழ்க்கைக்கு
முல்லைத்தீவு முஸ்லிம்களின் நாளாகி, இரு நாள் மாதங்களாகி, மாத வருடத்தையும் தாண்டி விட்டது. ! இவ்வகதிப் பிரச்சினை ஒரு தற்காலிகம் அந்த அடிப்படையில் குறுங்காலத்திற்கு தற்காலிக நிவாரண உதவிகள் அரசாலு வழங்கப்பட்டன. கடந்த ஆறு வருட உதவிகள் வருடா வருடம் புதுப்பிக்கப் அகதிகள் பற்றிய நீண்ட கால கண்ணோ செய்யப்படவில்லை.
10.11. தற்காலிக அகதி நிவ
அகதிகளுக்கான "தற்காலிக நிம் பின் வரும் கருத்தை பிரதிபலிக்கின்றது
குறுகிய ஒரு காலத்திற்கு மட்டுமே மீண்டும் தமது சொந்த இடங்களில் வ இவர்கள் திரும்பவும் அங்கு சென்று காலங்களில் பல்லாயிரக்கணக்கான நடந்திருக்கின்றது. அவ்வகையில் பு அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு நீர், மலசலகூட, மற்றும் ஏனைய அடி உணவு நிவாரணத்தையும் குறுங்கால ே எனக் கருதப்பட்டு கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஏனைய அகதி
142

ந்தில் அகதிகள்
- மாற்று வழி:
அகதி வாழ்க்கை ஒரு நாள் இரு தங்கள் வருடங்களாகி இன்று ஆறு இம்மக்கள் அகதியாக்கப்பட்ட போது, -ான பிரச்சினை என்று கருதப்பட்டது. ப் பொருத்தமானது என்று கருதப்பட்ட பம், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் - காலமும் இத் தற்காலிக நிவாரண பட்டு தொடர்ந்து கொண்டிருக்கின்றன. -க்கில் இந்நிவாரண நடவடிக்கைகள்
ாரணம் :
வாரண உதவி" எனும் போது அது து. அதாவது வடக்கு முஸ்லிம்கள் அகதிகளாக முகாமில் வாழ்வார்கள். எழக்கூடிய சூழ்நிலை உருவாகியதும் விடுவார்கள். இலங்கையில் கடந்த ஏனைய அகதிகளுக்கு இவ்வாறு மல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளுக்கு ச் செல்லும் வரையும் தேவைப்படும் டிப்படை வாழ்க்கை வசதிகளையும், நாக்கில் வழங்குவது பொருத்தமானது அகதி நிவாரண நடவடிக்கைகள் மக்களைப் பொறுத்தவரையில் சில

Page 161
வாரங்களில் அல்லது மாதங்களில் வாழ்க்கையைத் தொடரக் கூடியதாக 8 நிவாரண உதவி ஒரு பொருத்தமான காணப்பட்டது. ஆனால், பலவந்த வெ பொறுத்தவரையில் இவ்வாறு குறுங்கா உதவிகள் ஆறு வருடங்களுக்கு நீடி
அதாவது, மாதங்கள் வருட வடக்கு முஸ்லிம்களின் அகதி நிலை என்ன காரணமாக இருக்கலாம் என நிவாரண ஸ்தாபனங்களும் முன்னு மட்டுப்படுத்தப்பட்ட பற்றாக்குறையான வருடங்கள் வாழ்ந்ததன் பிரதிபலன்கள் கருதப்பட்டது. இதற்கு என்ன நோக்குவோம்.
10.1.2. அகதிப் பிரச்சினைய
பிரச்சினையா?
முதலில் வடக்கு முஸ்லிம்க என்பதுடன் தொடர்புடைய அம்சங்கள் இந்நுால் ஆசிரியரால் பல கட்டுரைக அதனால் இவ்வம்சம் இந்நுாலுக்குப் ( சுருக்கமாக விளக்கப்படுகின்றது.
இந்த நாட்டின் இனப் பிரச்சி கொள்ளப்படுகின்றது. இந்நாட்டில் 8 ஒரு அரசியல் விடுதலைக்கான போராட அரசியல் ரீதியாக இலங்கையின் இனப்பிர தீர்வுகாண வேண்டும் என்று பரவலாக போல முல்லைத்தீவு முஸ்லிம்களின் பு தமிழ் இன வாதத்தின் பிரதிபலிப்பாகு

சொந்த இடம் மீண்டு வழமையான இருந்த சந்தர்ப்பங்களில், இத் தற்காலிக
அகதி நிவாரணக் கொள்கையாகக் ரியேற்றத்திற்குட்பட்ட இவ்வகதிகளைப்
நோக்கில் செய்யப்பட்டு வந்த நிவாரண க்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ங்கள் ஆகி, வருடங்கள் பலவாகியும் பில் மாற்றம் ஏற்படவில்லை. இதற்கு ற சிந்தனைக்கு இலங்கை அரசும், ரிமை கொடுக்கவில்லை. இதனால் அகதி நிவாரணத்தில் கடந்த ஆறு அப்பாவி அகதிகளின் தலைவிதியாகக் காரணம் என்பதை சற்று விபரமாக
ா? அல்லது அரசியல்
ளின் அடிப்படைப் பிரச்சினை என்ன மள நோக்குவோம். இவ்வம்சம் பற்றி கள் முன்னர் எழுதப்பட்டிருக்கின்றன'. பொருத்தமான முறையில் பின்வருமாறு
னை ஒரு அரசியல் பிரச்சினையாகக் இனரீதியான ஒரு ஆயுதப் போராட்டம் ட்டமாக அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றது. ச்சினைக்கும், உள் நாட்டு யுத்தத்திற்கும்
வற்புறுத்தப்பட்டு வருகின்றது. அது பலவந்த வெளியேற்றம், அடிப்படையில் ம். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு
43

Page 162
ஒரு அரசியல் தீர்வு இல்லாத சூழ்நிலை இவ்வடக்கு முஸ்லிம்கள் தமது பூ முடியாது என்பது நிதர்சனமானதெ இம்மக்களின் பலவந்த வெளியேற்ற அடிப்படையில் அரசியல் பிரச்சினை
பலவந்த வெளியேற்றமும் உ பிரச்சினையாக இருக் கின்ற போ இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசிய எடுக்கப்படவில்லை. இனப் பிரச். மேற்கொள்ளப்பட்ட அரசியல் பேச்சு வெளியேற்றப் பிரச்சினை கலந்துரையா
இங்குதான் வடக்கு முஸ்லி தொடர்புடைய பிரச்சினையின் உள்ளார்ந்த சரியாக உணரப்படாமலே ஆறு வரு என்ற உண்மையை உணரக் கூட உணரப்படாமையினால்தான் இம்மக் தொடர்புடைய பிரச்சினைக்கு அரசிய முயற்சிக்கப் படவில்லை. முல்லைத்தீ தாயகம் செல்ல முடியுமா? முடியாத அணுகப்படவில்லை. இம்மக்கள் மீ. செல்ல முடியுமாக இருந்தால் அதற்குப் என்பது கருத்துக்கெடுக்கப்படவில்லை மீளவும் செல்ல முடியாதவர்கள் எ பட்டிருந்தால், இம்மக்களுக்கான மாற்று ரீதியாக முன்வைப்பதற்கும் பொறு. சமாதானத்திற்கான அமைப்புக்களும்) கடந்த காலத்தில் வடக்கு முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததை பேராசி இனப்பிரச்சினையில் வடக்கு முஸ்ல
144

லயில் பலவந்த வெளியேற்றத்திற்குட்பட்ட ர்வீக இடங்களுக்கு சுயமாகத் திரும்ப சான்றாகும். இக்கண்ணோட்டத்தில் றத்துடன் தொடர்புடைய பிரச்சினை
யாகும்.
அதன் பின்விளைவுகளும் ஒரு அரசியல்
து, கடந்த ஆறு வருடங்களில் பல் ரீதியாக எவ்வித நடவடிக்கைகளும் சினையைத் தீர்ப்பதற்கு இதுவரை வார்த்தைகளில் இம்மக்களின் பலவந்த உடலுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. லிம்களின் பலவந்த வெளியேற்றத்தோடு த அம்சங்கள் தேசிய, சர்வதேச மட்டத்தில் டங்கள் கடத்தப்பட்டு வந்திருக்கின்றன டியதாக இருக்கின்றது. அவ்வாறு களின் பலவந்த வெளியேற்றத்துடன் ல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வு முஸ்லிம் அகதிகள் மீண்டும் தமது கா? என்ற அம்சம் அரசியல் ரீதியாக ண்டும் தமது சொந்த இடங்களுக்குச் பொருத்தமான நடவடிக்கைகள் என்ன . இம்மக்கள் தமது சொந்த இடத்திற்கு ன்பது அரசியல் ரீதியாக நிச்சயிக்கப் | வாழ்க்கைத் திட்டம் ஒன்றை அரசியல் ப்பானவர்கள் (அரசும், அரசசார்பற்ற முயற்சிக்கவும் இல்லை. இவ்வாறு, பின் யதார்த்தபூர்வமான பிரச்சினைகள் யர் சிவசேகரம் (1996) இலங்கையின் லிம்கள் "ஏறக்குறைய முழுமையாக

Page 163
மறக்கப்பட்ட மக்கள்" என்ற த விளக்கியிருக்கின்றார்.
அதே நேரத்தில் இலங்க ரீதியான தீர்வு காணும் முயற்சிகளுக்கு இருக்கவில்லை. உள் நாட்டு ம அரசாங்க - ஆயுதக் குழுக்களுக்கிடை இனப்பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத் பேச்சுவார்த்தைகள் கடந்த காலத்தில்
வடக்கு முஸ்லிம்களும் அதாவது உள்நாட்டில் இடம் 6 கொள்ளப்பட்டது. அந்த வரை இம்மக்களுக்கு தற்காலிக நிவாரண 2 நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த தற்க முழுமையாகத் தோல்வியடைந்து, கொண்டதையும் நாம் சற்று முன்ன
10.1.3 முல்லைத்தீவு முள்
கடந்த ஆறு வருடங்களாக இடம் மீள்வதில் நம்பிக்கை வைத்தி பின்பும் இம்மக்கள் தாயகம் மீள் இருந்தமைக்கு என்ன காரணம் நோக்க வேண்டும்.
முல்லைத்தீவு முஸ்லிம்கள் அகதி வாழ்க்கைச் சூழல் எதிர்க என்ற கண்ணோட்டம் பரவலாக சூழலில் அடிப்படை பொருளாதார, இல்லாதிருந்தமை ஒரு காரணமா பொருள் வளமும், சமூக சூழலும்

து கட்டுரையின் மூலம் தெளிவாக
கயின் இனப் பிரச்சினைக்கு அரசியல் கடந்த காலங்களில் இந்நாட்டில் பஞ்சம் டத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையில், சில், சமய, சமூகத் தலைவர்களுக்கிடையில் ப என்பது பற்றியும், இனப்பிரச்சினையால் மான நிவாரணம் பற்றியும் ஏராளமான நடைபெற்றிருக்கின்றன.' டய பிரச்சினை அகதிப் பிரச்சினையாக, பயர்ந்தவர்கள் பிரச்சினையாக மட்டுமே பிலக்கணத்திற்குட்பட்ட அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. இவ்வாறு காலிக நிவாரணத் தீர்வுத்திட்டம் இறுதியில்
இவ்வகதிகளின் வாழ்க்கையைப் பலி ர் அவதானித்தோம்.
சயாக,
எயாக
ஒலிம்களின் அபிலாசைகள்:
முல்லைத்தீவு முஸ்லிம்கள் தமது சொந்த ருந்தனர்' நீண்ட அகதி வாழ்க்கைக்குப் வதில் இருந்த நம்பிக்கை உறுதியாக என்பதை நாம் இங்கு சற்று விபரமாக
ளைப் பொறுத்தவரை தமது தற்போதைய ல முன்னேற்றத்திற்குப் பொருத்தமற்றது 5 காணப்படுகின்றது. இதற்கு முகாம் சமூக, கல்வி விருத்திக்கான வாய்ப்புக்கள் தம். அதே நேரத்தில் முல்லைத்தீவின் முகாம் வாழ்க்கைக்குப் பொருத்தமான
145

Page 164
கவனம்
மாற்றீடாக இம்மக்கள் மனதில் நீடி காரணமாகும்.
இம்மக்கள் தமது பூர்வீக இடந் சிந்தனைகளைவிட உயர்வாகக் கொண் கவனமாக பரிசீலிக்க வேண்டும். ஏனென் இவர்களின் சொந்த இடங்களில் இருந்து அதே விடுதலைப் புலிகள் தொடர்ந்து ஆயுதக்கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக் எவ்வாறு சொந்த இடத்திற்கு மீள்வது முல்லைத்தீவில் பலமாக இருக்கும்வரை பற்றி இம்மக்கள் கருத்தில் கொள்வது வினா எழுகின்றது.
இவ்வினாக்கள் தொடர்பான கண்ணோட்டம் என்ன என்பதை இப்டே பொறுத்தவரை முல்லைத்தீவு மிகவும் ஒ அதாவது முஸ்லிம்களின் வாழ்வுக்கா அடிப்படைகள் இப்பிரதேசத்தில் காணப்பட ரீதியாக, தமிழ் மக்களோடு மிக இணக்க முல்லைத்தீவு காணப்படுகின்றது. மு ஆண்டு ஒக்டோபர் மாதம் முஸ்லிம்க சூழ்நிலையை தவிர அதற்கு முந்திய எல் தமிழ் மக்களும் தமது கஷ்ட நஷ்ட வாழ்ந்திருந்தார்கள். முஸ்லிம்களை பல சேர்ந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் வெளியேற்ற விரும்பவில்லை என்று முல்ல ''வெளியேற்ற உத்தரவு தமது தலை ை மாத்திரமே முஸ்லிம்களை பலவந்தமாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் என்பதை கூருகின்றார்கள். வடக்கு முஸ்லிம் தலைமைப் பீடத்தின் அண்மைக்கால
146

து நிலைத்திருந்தமை மற்றொரு
களுக்குச் செல்வதை ஏனைய மாற்றுச் பருந்தமைக்கான காரணங்களை நாம் மால், இம்மக்கள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். 5 இம்மக்கள் வாழ்ந்த பிரதேசத்தை கின்றனர். இந் நிலையில் முஸ்லிம்கள் து சாத்தியம்? விடுதலைப் புலிகள் - தாயகம் மீளச் செல்வதன் சாத்தியம் யதார்த்தத்திற்கு முரணானது என்ற
முல்லைத் தீவு முஸ்லிம்களின் காது நோக்குவோம். இம்மக்களைப் ஒரு அந்நியோன்யமான பிரதேசமாகும். ன பொருளாதார, சமூக, கலாசார படுகின்றன, அத்துடன், இன உறவு மாக வாழ்ந்து வந்த பிரதேசமாகவும் ல்லைத்தீவில் இருந்து 1990ஆம் ள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மா சந்ார்ப்பத்திலும் முஸ்லிம் மக்களும் ங்களை பகிர்ந்து இப்பிரதேசத்தில் பந்தமாக வெளியேற்றிய உள்ளூரைச் கூட, மனப்பூர்வமாக முஸ்லிம்களை லத்தீவு முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். மப்பீடத்தின் கட்டளை என்பதினால் வெளியேற்றுவதாக” அப்பொழுது முல்லைத்தீவு முஸ்லிம்கள் நினைவு கள் பற்றிய விடுதலைப் புலிகளின் மன மாற்றம் முஸ்லிம்கள் பற்றிய

Page 165
இவ் ஆயுதக் குழுவின் எதிர்கால நிலை மத்தியில் இல்லாமல் செய்து விட்டது தாம் மீண்டும் தமது சொந்த இடங். என்று நம்புகின்றார்கள்.
இந்த அடிப்படையில் முல்லை தான் திரும்பவும் முல்லைத்தீவில் , தடைகளும் இல்லை என்று நம்புகி தேவைப்படுவதெல்லாம் விடுதலைப் இருந்து மாறிவிட்டார்கள் என்பதை லென அதாவது முல்லைத்தீவு முஸ்லிம்கள் திரும்பச் சென்று வழமை போல் வாழல அறிவித்து தமது நல்லெண்ணத்தை !
அதே நேரத்தில் முல்லைத் இவ்விடயம் பற்றி சற்று வித்தியாசமாக பார்க்க). இச்சமூகத் தலைவர்களின் , கருத்தில் பொறுப்புணர்ச்சியும் நீண்ட அவதானிக்கக் கூடியதாக இருக்கின் முஸ்லிம்களின் தாயகம் மீளல், பேச்சுவா வேண்டும். இப்பேச்சு வார்த்தைகள் வேண்டும். இம்முயற்சி மூலமாக, முல் சுய கௌரவமும் எல்லா சாராரா இம்மக்களுக்கான தீர்வு காணப்பட கே நாளாந்த வாழ்க்கையை முல்லைத்தீவு தேவையான பொருத்தமான நடவடிக்ன ஆண்டு ஒக்டோபர் மாதம், அநாதரவா பலவந்த வெளியேற்றத்திற்கு உட்பட்ட போது, இம்மக்கள் தமது வாழ்வுரில தமது தாயகம் மீள்வது என்ற நிலைப் கருத வேண்டியிருக்கின்றது.
துரதிஷ்டவசமாக, முல்லைத் பொருத்தமான தீர்வைக் கண்டறிந்து

லப்பாடு பற்றிய அச்சத்தையும் இம்மக்கள் து. இக்காரணங்களால் முஸ்லிம்கள் களுக்கு செல்லக் கூடிய வாய்ப்புள்ளது
லத்தீவைச் சேர்ந்த ஒரு சராசரி முஸ்லிம் தமிழ் மக்களோடு வாழ்வதில் எவ்வித ன்றான். அந்த முஸ்லிம் அகதிக்கு புலிகள் தமது பழைய நிலைப்பாட்டில் பளிப்படையாக அறியத்தருவதொன்றுதான். மீண்டும் தமது பூர்வீக இடங்களுக்குத் ராம் என்று விடுதலைப்புலிகள் பகிரங்கமாக நிதரிசனப்படுத்த வேண்டும் என்பதாகும். தீவு முஸ்லிம் சமூகத் தலைவர்கள் 5 சிந்திக்கின்றார்கள் (அணிந்துரையைப் தாயக மீளல் என்பதுடன் தொடர்புடைய காலக் கண்ணோக்கும் காணப்படுவதை மது. இக்கருத்துப்படி முல்லைத்தீவு ஏத்தை மூலமாக நடைமுறைப்படுத்தப்பட ரில் விடுதலைப் புலிகளும் பங்குபற்ற மலைத்தீவு முஸ்லிம்களின் தனித்துவமும், லும் மதிக்கப்பட்ட அடிப்படையில் வண்டும். இம்மக்கள் சுதந்திரமாக தமது வின் சொந்த இடங்களில் வாழ்வதற்குத் கெகள் எடுக்கப்பட வேண்டும். 1990 ஆம் ன நிலையில் முல்லைத்தீவு முஸ்லிம்கள் நிகழ்வை கருத்திற்கொண்டு நோக்கும் மை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் ப்பாடு மிகவும் நியாயமான ஒன்று என்று
கதீவு முஸ்லிம்கள் மத்தியில் தமக்குரிய து அதனை முன்னெடுத்துச் செல்லும்

Page 166
தைரியமான தலைமைத்துவம் இ. முஸ்லிம்களை ஒன்றாகச் சேர்த்துப் கூட்டுத் தலைமைத்துவம் கடந்த நேரத்தில் தேசிய, சர்வதேச சமூகங்களே இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி வருகின்றன. அதனால், கடந்த ஆ வந்த வடக்கு முஸ்லிம்களின் பலவர் இனப் பிரச்சினை தொடர்ந்தும் புறக் கொண்டிருக்கின்றது.
10.2 அண்மைக்கால ம
இச்சூழ்நிலையில், முல்லைத் புதிய பல மாற்றங்கள் அண்மைக்காலத் கூடியதாக இருக்கின்றது. இவற்று எதிர் கால வாழ்விடத்தைப் பற்றி இம் அபிப்பிராயத்தில் ஏற்பட்டு வரும் அண்மைக்காலம் வரை முல்லைத்தீவில் என இம்மக்கள் கருதி இருந்தார்கள்.
ஆனால், இந்த அபிப்பிராயத் 19 ஆம் திகதி இலங்கை அரசுக்கும் வ பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வி பிரச்சினையை முடிவுக்குக் கொண் உள்நாட்டு அரசியல் சூழ்நிலை, இம் பலவீனப்படுத்தியது. உள்நாட்டு யுத் இடம் மீளல் சாத்தியம் இல்லை என் தொடங்கியது. அதனால், தற்போதைய பொருத்தமான உடனடி மாற்று வ இம்மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்
அகதி முகாம் வாழ்க்கைக்கு முஸ்லிம்கள் மத்தியில் பலதரப்பட்ட சி
Tயை

துவரை ஏற்படவில்லை. வடக்கு பார்க்கும் போது கூட அவ்வாறான காலங்களில் சாத்திமாகவில்லை. அதே கா ஏற்கனவே அடையாளப் படுத்தப்பட்ட ய அம்சங்களிலேயே கவனம் செலுத்தி று வருடங்களாக புறக்கணிக்கப்பட்டு ந்த வெளியேற்றத்துடன் தொடர்புடைய - கணிக்கப்பட்ட நிலையிலேயே சென்று
மாற்றங்கள்:
தீவு முஸ்லிம்களின் அகதி வாழ்க்கையில் -தில் ஏற்பட்டு வருவதை அவதானிக்கக் ள் மிக முக்கியமானது தமது உடனடி மக்கள் இது வரையில் கொண்டிருந்த மாற்றம் ஆகும். அதாவது மிக ல் தாம் மீண்டும் குடியேறுவது சாத்தியம்
ந்தை 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான  ெசிதறடித்தது. இலங்கையின் இனப் நிவரக் கூடிய உடனடிச் சாத்தியமற்ற மமக்களின் தாயகம் மீளும் தாகத்தைப் தேம் முடிவு பெறாமல் தமது சொந்த ற மனோபாவம் மேலும் உறுதி பெறத்
தமது அகதி முகாம் வாழ்க்கைக்கு ழியைத் தேட அண்மைக் காலத்தில் கினர். த மாற்றுத்திட்டம் பற்றி முல்லைத்தீவு சிந்தனைகள் காணப்பட்டன. அரசாங்கத்
48

Page 167
தொழில் செய்யும், படித்த மத்தியதர தமது குடும்பத்தவர்களுக்குமாக " வசதிக்கேற்ற வாழ்விடத்தை அமைத்து கருதினார்கள். சமூகக் கண்ணோக்குக் எங்கேயாவது ஒன்றாகக் குடியேற் வாய்ப்பிருக்கின்றதா என்ற முயற்சியில் எல்லாம் முகாம் வாழ்க்கைக்கு மா கொண்டிருந்தது. இம் மாற்று வழிக வாழ்க்கையை அமைத்துக் கொள்வ. அத்துடன் பிறரின் தொந்தரவில்லா! வாழ்க்கையாக அமையும் என்றும், நா உறவினர்களுடன் கெளரவமாக வ முல்லைத்தீவு முஸ்லிம்களில் ஒரு பகு எஞ்சிய மிகப் பெரும்பான்மையானவர். பொருத்தமான மாற்று வழியினை சிந்தி வசதியும் அற்றவர்களாக முகாம்களில்
10.2.1. அரசின் மீள்குடியேற்
இந் நிலையில் தான் அதா வருடங்களுக்குப் பின்னர் முஸ்லிம் அ. திட்டம் ஒன்றை இன்றைய அரசாங் இத்திட்டத்தின் மூலம் வட மா வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர் நிரந்தரமாகக் குடியேற்ற நடவடிக்கை 6 நிரந்தரமாகக் குடியேற்றுவதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வருவது அரசு
பூர்வீகமற்ற பிரதேசங்களில் அல்லது மீளக் குடியேற்ற வற்புறுத் வழமையில் இருந்து வராததால் இலந்

வகுப்பைச் சேர்ந்தவர்கள், தமக்கும், சாந்தக் காணிகளை வாங்கி தமது ரக் கொள்வது பொருத்தமானது என்று கொண்ட வேறு பலர் தமது சமூகத்தை P ஒரு சமூகமாக வாழச் செய்ய ஈடுபட்டார்கள். மேற்குறித்த முயற்சிகள் கறு ஒழுங்கு செய்வதை நோக்காகக் ளில் சொந்தக்காணிகளில் தற்காலிகமாக து பிறரைத் தொல்லைப் படுத்தாமல் மல் சுயகௌரவத்தோடு வாழக்கூடிய பினார்கள். சொந்தக் காணியில் உற்றார் பாழமுடியும் என்றும், நம்பினார்கள். பதியினரின் சிந்தனைகள் இவ்வாறிருக்க, கள் தமது முகாம் வாழ்க்கைக்கு ஒரு க்கக் கூடிய மனத் தைரியமும், பொருள்
முடங்கி வாழ்ந்து வந்தார்கள்.
ற்றக் கொள்கை:
வது அகதிகயாக் கப்பட்டு ஆறு கதிகளின் அகதி வாழ்க்கைக்கு மாற்றுத் கம் நடைமுறைப்படுத்த முற்பட்டது. காணத்தில் இருந்து பலவந்தமாக கள் அகதிகளாக வாழ்கின்ற பிரதேசங்களில் எடுக்கப்பட்டது. இவ்வாறு இம்மக்களை ம் இம்மக்களின் அகதிப்பிரச்சினையை பாங்கத்தின் நோக்கமாகக் காணப்பட்டது. அகதிகளை மீளக் குடியேற்றுவதோ, துவதோ இலங்கையில் இதுவரையில் கை அரசு “யுத்த நிலைமை காரணமாக
லணை
மாக
49

Page 168
தமது சொந்த இடங்களுக்குத் திரு வேறு இடங்களில் குடியமர்த்தல்” Rehabilitation and Reconstruct விளக்கத்தோடு பலவந்த வெளியேற் அகதிகளாக வாழ்கின்ற இடங்களில் எடுத்தது. பூர்வீகமற்ற இப்பிரதே குடியேற்றுவதற்கான மீள்குடியேற்றக் Allowance) நிரந்தரக்குடியிருப்பிற்கான Development) அத்துடன் நிரந்தர நலன்களை செய்து கொடுப்பதற்கா முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலு மூலம் அகதிகளை அகதியாக எ குடியேற்றுவதுதான் என்ற தனது நோ வெளிப்படையாகக் கூற முற்படவில்லை வாழும் பிரதேசங்களில் நிரந்தரமாகக் கு அபிப்பிராயத்தை வெளிப்படையாக அக முற்படவில்லை. மாறாக, அகதிகளின் தேடும் ஆர்வத்தைப் பயன்படுத்தி மீ . மூலமாக தனது இந் நிரந்தரக் கும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவட
பலவந்த வெளியேற்றத்திற்குட்பட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் - நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகராலய அது போல சர்வதேச நிவாரண அடை இந்நிரந்தரக் குடியேற்றத் திட்டத்திற் நிறுவனங்களிடமிருந்து பெற முயற் இதுவரையில் பூர்வீக வாழ்விடங்களிலே.ே வந்த அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளி அமைப்புக்கள் வடக்கு முஸ்லிம்கள் அ நிரந்தரமாகக் குடியேற்ற உதவிகளைச்
150

பெ முடியாத இடம் பெயர்ந்தவர்களை
(Ministry of Shipping, Ports, On, 1996, 23) என்ற புதிய கொள்கை மத்திற்குட்பட்ட அகதி முஸ்லிம்களை நிரந்தரமாகக் குடியேற்ற நடவடிக்கை சங்களில் அகதிகளை நிரந்தரமாகக்
கொடுப்பனவுகள் (Resettlement அடிப்படை வசதிகள் (Infrastructure -க் குடியிருப்பாளர்களுக்கான ஏனைய ன ஒழுங்குகள் இலங்கை அரசால்
யை
பம் இலங்கை அரசு இப்புதிய திட்டம் பாழும் பிரதேசத்தில் நிரந்தரமாகக் எக்கத்தை அரசியற் காரணங்களுக்காக D. அது மட்டுமல்லாமல், அகதிகளாக குடியேற விருப்பமா என்ற அகதிகளின் திகளிடமிருந்து அறியவும் அரசாங்கம் 1 முகாம் வாழ்க்கைக்கு மாற்று வழி ள்குடியேற்றத்திட்டக் கொடுப்பனவுகள் டியேற்றத் திட்டத்தை வெற்றிகரமாக டிக்கை எடுக்க முற்பட்டது.
ட மக்களுக்கு இந்நிரந்தரக் குடியேற்றத் அவசியத்தை அகதிகளுக்கான ஐக்கிய த்திற்கும், ஜேர்மன் அரசாங்கத்திற்கும், மப்புக்களுக்கும் அரசு எடுத்துக் கூறி, கான நிதி உதவிகள் மேற்குறித்த சிக்கப்பட்டன. இதன் விளைவாக, ய மீள்குடியேற்ற உதவிகளைச் செய்து ன் ஸ்தானிகராலயம் போன்ற சர்வதேச கதிகளாக வாழும் பிரதேசங்களிலேயே செய்து கொடுக்க முன்வந்தன.

Page 169
இப்புதிய நிரந்தர மீள்குடியேற தமக்கெனச் சொந்தக் காணிகளை த கூடியதாக இருந்தால், அச் சொந்தக் . கட்டிக் கொள்ள பண ரீதியான கொடுப்பா கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் 6 39,000 ரூபாய் வழங்கப்படுகின்றது. இது முயற்சி விருத்திக்கேற்ப வழங்கப்படுகி தற்காலிகக் குடிசை அமைப்பதற்கு குடிசையை அமைப்பதற்குத் தேவை தேவைகளுக்குமாக 3,000 ரூபாயும், தற்கா மாற்றுவதற்கு 25,000 ரூபாயும் வழங்கப் தொழில் முயற்சிக்காக 4,000 ரூபாயும் (
குடியேற்றத்திற்கான இப்பா முடிக்கப்பட்டதிலிருந்து 6 மாதத்தில் இ உலர் உணவு நிவாரணம் நிறுத்தப் இடப்பெயர்வால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று
10.2.2. அகதிகளுக்கான மீள்
மீள் குடியேற்றம் என்றால் என் எவ்வெவ் வசதிகளுடன் செய்யப்பட தத்துவத்தையும், வடமாகாண முஸ்லிம் குடியேற்றம் எவ்வாறு இருக்க வேல சற்று நோக்க வேண்டும்.'
இவ்வம்சத்தை மேலும் தெளி நலனுக்காக அரசாலும், அரசசார்பற்ற நிறு வாழ்விட ஒழுங்குகளுடன் தொடர்புடை அறிந்து கொள்ள வேண்டியது அவசி
இடம் பெயர்ந்த மக்கள் அ அவ்அகதிகள் வாழும் இடத்தினை க

றத் திட்டம்' அகதிக் குடும்பங்கள் னியாக அல்லது கூட்டாக வாங்கக் காணியில் இவ்வகதிகளுக்கு வீடுகள் எவுகளைக் கொடுப்பதை நோக்கமாகக் தடியேற்றக் கொடுப்பனவாக மொத்தமாக தொகை பகுதி பகுதியாக குடியேற்ற ன்றது. அதாவது முதலில் ஒரு 7,000 ரூபாயும், அந்த தற்காலிகக் யான உபகரணங்களுக்கும் ஏனைய லிகக் குடிசையை நிரந்தர வசிப்பிடமாக பட்டு இறுதியில் இவ்வகதிகளின் சுய கொடுக்கப்படும். னக் கொடுப்பனவுகள் கொடுத்து வெர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் படும். அதாவது இம்மக்களுக்கு
இந்நிரந்தரக் குடியேற்றத்தின் மூலம் கருதப்பட்டது.
தடியேற்றம் என்றால் என்ன?
ன? அது யாருக்கு, எச்சூழ்நிலையில்,
வேண்டும்? என்ற அடிப்படைத் ம் அகதிகளுக்குப் பொருத்தமான மீள் ன்டும் போன்ற அம்சங்கள் பற்றியும்
வாக
வாக விளங்கிக்கொள்ள அகதிகளின் மவனங்களாலும் செய்யப்பட்டு வருகின்ற ய சொற் பிரயோகங்களின் கருத்தினை யமாகும். கதிகளாகப் பராமரிக்கப்படும் போது அகதி முகாம் (Refugee Camp)

Page 170
அல்லது நலன்புரி நிலையம் (Welfare அகதி முகாம் ஒன்று மற்றொரு இ போது ஏற்படுகின்ற அமைவிட மாற் என்றும் அழைக்கப்படுகின்றது (Ministr and Reconstruction, 1996).
அகதிகள் மீண்டும் தமது ( ஏற்படும் போது அவர்களின் சொந்த ! பண ரீதியான, பொருள் ரீதியான, சுய நீர்ப்பாசன வசதிகளைத் திருத்தி, அபி உதவிகளை மீள்குடியேற்றம் (Rese (Muthar, 1995 and United Natio
மேற்குறித்த பதங்களில் அகதி மீளக்குடியேற்றல் என்ற அம்சத்தை எ முயற்சிக்கு உதவி செய்ய வே ஸ்தாபனங்களினதும் கடமைப்பாடு ஒப்பந்தங்கள் குறிப்பிடுகின்றன (Deng, அகதிகளின் சொந்த இடத்திலான மீள் ஏனைய தொழில் நுட்ப உதவிகளை ஸ்தாபனங்களும் வழங்கி வருகின்றன
பலவந்த வெளியேற்றத்திற்கு அரசாங்கம் இம்மக்கள் அகதிகளாக எடுத்து வருகின்ற தற்போதைய வரைவிலக்கணத் திற் குள் ளோ , வரைவிலக்கணத்திற்குள்ளோ அ வரைவிலக்கணத்திற்குள்ளோ உ இம்மக்களுக்கான அரசாங்கத்தின் தற் மிகக் கவனமாகப் பரிசீலிக்கும் போது இ வாழுகின்ற பிரதேசங்களில் குடியேற தோன்றுகின்றது. உண்மையில் - முயற்சிகள் பலவந்த வெளியேற்றத்திற்கு
15

Centre) என்று அழைக்கப்படுகின்றது'. இடத்திற்கு இட மாற்றம் செய்யப்படும் அறத்தை இடமாற்றம் (Re-location) yof Shipping, Ports, Rehabilitation
சொந்த இடத்திற்கு திரும்பும் சூழ்நிலை இடத்தில் மீளக் குடியேற உதவுகின்ற தொழில் பயிற்சி ரீதியான, கிராம், கல்வி, விருத்தி செய்து கொடுப்பதன் மூலமான ttlement) என்ற பதம் குறிக்கின்றது -ns, 1994). -களை இம்மக்களின் பூர்வீக இடங்களில் டுத்துக் கொண்டால் இம்மீள்குடியேற்ற மண்டியது அரசினதும், சர்வதேச
என்று அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச 1993 and 1995). இந்த அடிப்படையில்
குடியேற்றத்திற்கான பணம், பொருள் வளர்ச்சி பெற்ற நாடுகளும், சர்வதேச
ட்பட்ட வட மாகாண முஸ்லிம்களை வாழ்கின்ற பிரதேசங்களில் குடியேற்ற
முயற்சி அகதி முகாம் என்ற அல்லது மீளமைவிடம் என்ற ல்லது மீள் குடியேற்றம் என்ற உள்ளடக்கப்பட முடியாததொன்று. போதைய குடியேற்ற நடவடிக்கைகளை இது இம்மக்களை நிரந்தரமாக அகதியாக நற எடுக்கப்படுகின்ற முயற்சி போல் அரசாங்கத்தின் தற்போதைய குடியேற்ற ட்பட்ட மக்களுக்கான ஒரு இடைக்கால

Page 171
வாழ்விட ஒழுங்காக இருக்குமானால், அ ஒழுங்குத் திட்டம் கொள்கை ரீதியாக அர. வெளியேற்றத்திற்குட்பட்ட இம்மக்களின் பிர அமையலாம்.
மேலே குறிப்பிட்டவாறு பலவந்த நிரந்தரக் குடியேற்றமா? (Permenant 5 வாழ்விட வசதி ஒழுங்கா? ( Interim I முன்மொழிவுகளும் மிகக் கவனமாகப் ப பின்வரும் பகுதியில் இவ்விரு முன்
நோக்குவோம்.
10.2.3 பலவந்த வெளியேற்ற,
மீள்குடியேற்றம்:
இந்த அடிப்படையில் ''மீள்குடி முஸ்லிம்களுடன் தொடர்புற்ற வகையில் எ சற்று நோக்குவோம். அரசாங்கத்தின்
குறிப்பிடப்பட்ட "சொந்த இடத்திற்குத் திரு என்ற அம்சமும் "இடம் பெயர்ந்தவர்களை என்ற அம்சமும், தமது வாழ்விடங்களிலிரு அகதி மக்களைப் பொறுத்தமட்டில் எந்த விடயம் மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்படும்
முஸ்லிம் அகதிகளை ஏன் அ குடியேற்ற முடியாது என்பதற்கு இம் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்ற யுத்த ! விளக்கம் காரணமாகக் குறிப்பிடுகின்ற லட்சக்கணக்கான ஏனைய அகதிகளும் சொந்த இடங்களுக்கு மீள முடியாது இ இதற்கு விதிவிலக்கல்ல. அது அவ் மாத்திரம் அகதியாக வாழ்கின்ற பிரதேசம்
153

அத்துடன் இவ்விடைக்கால வாழ்விட சால் அங்கீகரிக்கப்படுமானால், பலவந்த ச்சினைக்கு ஒரு பொருத்தமானதீர்வாக
ல
வெளியேற்றத்திற்குட்பட்ட மக்களுக்கு Settlement) அல்லது இடைக்கால Living Arrangment) என்ற இரு ரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும். மொழிவுகளுக்குமான நியாயங்களை
த்திற்குட்பட்டவர்களுக்கான
யேற்றம் என்ற பதம் வட மாகாண வ்வாறு விளக்கப்படுகின்றது என்பதை
மீள் குடியேற்றக் கொள்கையில் நம்ப முடியாத இடம் பெயர்ந்தவர்கள்'' எ வேறு இடங்களில் குடியேற்றுவது" நந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 5 வகையில் பொருத்தமானது என்ற - வேண்டியதொன்றாகும்.
வர்களின் சொந்த இடங்களில் மீளக் மக்களின் பாரம்பரியப் பிரதேசத்தில் நிலைமைகளை அரசாங்கக் கொள்கை து. ஆனால் இலங்கையில் பல யுத்த நிலைமை காரணமாக தமது நக்கின்றார்கள். முஸ்லிம் அகதிகள் வாறிருக்க, முஸ்லிம் அகதிகளுக்கு பகளில் நிரந்தரக் குடியேற்றத் திட்டம்

Page 172
அமைக்கப்படுவது பற்றி அரசாங்கக் தரவில்லை. ஒரு கண்ணோட்டத்தில் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டி தொடர்ந்து இருந்து வருகின்றமை இ முடியாமைக்கு ஒரு மறைமுகமான . பல்வந்த வெளியேற்றத்திற்குட்பட்ட அ. பொருத்தமான வாழ்விட ஒழுங்கு ம பிரச்சினையாகும் என்பது பொருளா
இனப்பிரச்சினை காரணமா. வாழ்விடங்களில் தமது பொருளாத முடியாத தன்மை உயர் மட்ட அரசியல் வேண்டியதாகும். அவ்வாறான பேச்சு சொந்த இடங்களில் மீள் குடியேற்ற ( அது சாத்தியப்படாதவிடத்து இம்மக். நிரந்தரமான குடியிருப்பிற்கான 6 அடிப்படை உரிமைகளும் வழங்கப்ப முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். பலவந்த வெளியேற்றத்தால் ஏற்பட்ட இழப்புக்களுக்குப் பொருத்தமான ம திட்டமாவது முன்வைத்திருக்க வே
ஆனால், துரதிஷ்டவசமாக | நிரந்தரமாக திரும்பவும் தமது பூர் என்பது நிரூபிக்கப்படவில்லை. - இடத்தில் குடியேற்றுவதுடன் ( நடவடிக்கைகளும் அரசாலும் மற்றவர் யுத்த வெற்றியின் பின்னர் பலவந்தமா இடத்தில் மீள்குடியேற்ற எடுக்கப்பட் முடிந்ததற்குப் பல உதாரணங்கள் இடத்திற்குத் திரும்ப முடியாத இட அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட

கொள்கை மேலதிக விளக்கம் எதையும் இம்மக்களைப் பலவந்தமாக வெளியேற்றிய ல் இம்மக்களின் பாரம்பரியப் பிரதேசம் இம்மக்களை அப்பிரதேசங்களில் குடியேற்ற காரணமாக அரசு கருதுமாக இருந்தால், கதிகளின் பிரச்சினையானது அவர்களுக்குப் ட்டுமல்ல அதைவிட ஆழமான அரசியல் கும். க ஒரு மக்கள் குழு தமது சொந்த பார, சமூக, கலாசாரச் சூழலோடு வாழ ல் பேச்சு வார்த்தைகளுக்கு உட்படுத்தப்பட சுவார்தைகளில் இம்மக்களை திரும்பவும் முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். களை பாதுகாப்பான ஏனைய இடங்களில் வாழ்க்கை வசதி ஒழுங்கோடு ஏனைய கடும் முறையிலான தீர்வுத்திட்டம் ஒன்று
ஆகக் குறைந்தது இம்மக்களுக்கு - பொருளாதார, சமூக, கலாச்சார ாற்று ஒழுங்குகள் செய்யப்படுவதற்கான
ண்டும். பலவந்த வெளியேற்றத்திற்குட்பட்ட மக்கள் வீக இடங்களுக்கு மீள முடியாதவர்கள் அதுமட்டுமன்றி இம்மக்களைப் பூர்வீக தொடர்புடைய பொருத்தமான எந்த "களாலும் இதுவரை எடுக்கப்படவில்லை. க வெளியேற்றப்பட்ட மக்களை சொந்த ட முயற்சிகள் இறுதியில் தோல்வியில் உள்ளன" இந்த நிலையில் “சொந்த ம் பெயர்ந்தவர்கள்” என்ற எடுகோளோடு நிரந்தரக் குடியேற்ற முயற்சி பலவந்த
154

Page 173
வெளியேற்றத்திற்குட்பட்ட மக்களுக்குப் காணப்படவில்லை.
அடுத்து " இடம் பெயர்ந்தவர்கள் என்ற அரசாங்க அகதிக் கொள்கை நோக்குவோம். சொந்த இடத்தில் அகதிக வேறு இடங்களில் நிரந்தரமாகக் குடியேற் அவ்வாறான முயற்சியொன்று அகதிகள் கொண்டு முறைப்படி திட்டமிடப்ப இம்மக்களுக்கு சொந்த இடத்திற்கு ஒ நிரந்தரக் குடியேற்றப் பிரதேசத்தில் ஏற்படுத் வேண்டும்.
இங்கு ஒரு குடியேற்றத்தி இலங்கையில் நிலமற்ற விவசாயிக குடியேற்றப்பட்டார்கள். இக்குடியேற். மக்களுக்கு அடிப்படைப் பொருளாத கோடி ரூபாய் முதலீட்டில் அரசாங்கம் ( அபிவிருத்தித் திட்டத்தில் ஒன்றான மக் 200 சதுர கிலோ மீற்றர் பரப்புப் பிரதேசத் கால் வாய்களும், போக் குவரத்து
வைத்தியசாலைகளும், சந்தை வசதிக வசதிகளும் அரசாங்கத்தால் அமைத்து விவசாயிகள் குடியேற்றப் பட்டிருக்கின் பொருளாதார ஸ்திரத் தன்மைக்கும் 6 திட்டத்தை கோடிக்கணக்கான ரூபாய் செய்து கொடுத்தது. இப்பெரிய குடியே குடும்பம் இலட்சக் கணக்கான ரூபா முதலீடுகளால் நன்மை அடைந்தது.
இம் மகாவலிக் குடியேற்ற மாவட்டத்தில் பலவந்தமாக வெளி மீள்குடியேற்றத்துடன் ஒப்பிடுகின்ற 6

பொருத்தமான ஒரு தீர்வு முயற்சியாகக்
ளை வேறு இடங்களில் குடியேற்றுவது” விளக்கத்தின் மறுபகுதியை சற்று ளைக் குடியேற்ற முடியாத சூழ்நிலையில் ற அரசாங்கம் முயற்சிப்பதாக இருந்தால் ரின் எதிர்கால நன்மையைக் கருத்திற் ட்டதொன்றாக இருக்க வேண்டும். ப்பான வாழ்க்கை வசதிகளை இப்புதிய திக் கொடுப்பதை நோக்காகக் கொள்ளவும்
ட்ட உதாரணத்தைப் பார்ப்போம். ள், மகாவலிகங்கைப் பிரதேசத்தில் றத் திட்டத்தில் குடியேற முன்வந்த எர, சமூக, கலாசார வசதிகளை பல செய்து கொடுத்தது. மகாவலி கங்கை கியங்கனைப் பிரதேசத்தில் ஏறக்குறைய -தில் நெல்வயல் நிலங்களும், நீர்ப்பாசனக்
வசதிகளும், பாடசாலைகளும், களும், அதுபோல ஏனைய வாழ்விட வக் கொடுக்கப்பட்டு நிலமற்ற ஈரவலய சறார்கள். இக் குடியேற்றத்திட்டத்தின் வளர்ச்சிக்குமாக மாபெரும் நீர்ப்பாசனத்
வெளிநாட்டு உதவியுடன் அரசாங்கம் பற்றத்திட்டத்தின் மூலம் ஒரு விவசாயக் ய்களை தனிப்பட்ட அத்துடன் பொது
மத்திட்ட உதாரணத்தைப் புத்தளம் "யேற்றத்திற்குட்பட்ட மக்களுக்கான "பாது, ஒரு அகதிக் குடும்பத்திற்குத்

Page 174
தலா 39,000 ரூபாய் மாத்திரமே குடியேற சில குறிப்பிட்ட 'மீள்குடியேற்றக் கிர விட ஏனைய நிரந்தரக் குடியேற்றத்தில் பொது வசதிகளையே அரசாங்கம் இதற்கெல்லாம் அப்பால், புத்தளம் ம அகதிகளுக்கான நிரந்தரக் குடியேற். பற்றி அப்பிரதேசத்தின் தொழில் வாய்ப்பு தன்மைகள் என்ற கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்யப்படவும் இல்லை. ப சனச் செறிவு மிக்க (வட-மேற்குப் ) உட்பட்ட ஏறக்குறைய 60,000 வடக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வ நிரந்தரக் குடியேற்றத் திட்டத்தின் சில
10.2.4. மீள்குடியேற்றம் பற்றி
இச்சந்தர்ப்பத்தில் பலவந்த எவ்வகையான மீள்குடியேற்றத்திட்ட அம்சமும் நோக்கப்படுவது அவசியம் ஆண்டு ஜனவரி 13, 14 ஆம் திகதிக குடியேற்றம்” என்ற தலைப்பில் இ. முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்கு முல்லைத்தீவு முஸ்லிம் பிரமுகர் பொருத்மானதாக இருக்கின்றது.
"முல்லைத்தீவு வளங்களுடனும் பாரம்பரியம் மீள்குடியேற்றம் எமது சொந் மாவட்டத்திலேயே நடைபெ

ற்றக் கொடுப்பனவாக ஒதுக்கப்பட்டுள்ளது. Tமங்களை” (Resettlement Villages) ட்டப் பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்ட
செய்து கொடுக்க முன்வந்துள்ளது. மாவட்டத்தில் பெருந் தொகையாகவுள்ள மத்திட்டம் ஒன்றின் சாத்தியத் தன்மை பு, சூழல் நிலைகள், சமூக - இன உறவுத்
நிரந்தர குடியேற்றச் சாத்தியபாடு பற்றிய மாறாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்கனவே பிரதேசத்தில் பலவந்த வெளியேற்றத்திற்கு 5 முஸ்லிம்களை நிரந்தரமாகக் குடியேற்ற து வருகின்றது. இவை தற்போது கட மாகாண முஸ்லிம் அகதிகளுக்கான
ல அடிப்படைப் பிரச்சினைகளாகும்.
யெ அகதிகளின் கண்ணோக்கு :
வெளியேற்றத்திற்குட்பட்ட அகதிகள் ம் ஒன்றை விரும்புகின்றார்கள் என்ற மாகும். அந்த அடிப்படையில் 1996ஆம் ளில் “வடக்கு முஸ்லிம்களுக்கான மீள் டம்பெற்ற இருநாள் செயல் அமர்வில் கடியேற்றம் பற்றி அதில் பங்கு பற்றிய ஒருவர் குறிப்பிட்ட கருத்து இங்கு அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.
எமது தாயகம். சகல மாக வாழ்ந்த மண். எமது தப் பிரதேசமாகிய முல்லைத்தீவு பற வேண்டும். அதற்கான
56

Page 175
அனைத்து முயற்சிகளும் அ ரீதியாகவும் எடுக்கப்படல் .ே வெற்றியின் மூலம் முல்லை வற்புறுத்தக் கூடாது. இன 4 சூழ்நிலையிலேயே முல்லைத்த சொந்த இடத்துக்குச் செல்லு கூடிய, வசதிகள் குறைந்த மு எமது எதிர்காலத்தை வீணடி மேற்பட்ட அகதி முகாம்களிலு வாழ்கின்றார்கள். குறிப்பாக சனச் செறிவுக்கேற்ப
அளிக்கப்படவில்லை. கல் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வியின இருளடைந்த தொன்றாகவே போன்று இன்னும் பல காணப்படுகின்றது. படித்த இ
வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை இடத்தில் மீளக் குடியேறும் வசதிகள் அதிகரித்துத் தரப்ப வாழ உதவிகள் செய்யப்பட
மீண்டும் முல்லைத்தீவில் தம் வரை தாம் அகதிகளாக வாழும் பிரபு மாற்று வாழ்க்கைத் திட்டத்தையே நிற்கின்றார்கள். அவ்வாறான ஒரு திட்டம் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிலை மாற்று வாழ்விட ஒழுங்காகும். ஆ தமது சொந்த இடங்களிலிருந்து ! தொடர்பான இம்மக்களின் அடிப்படைப் குறுங்காலத்தில் இம்மக்களின் வாழ்ச்

ரசியல் ரீதியாகவும் சமாதான வண்டும். ஆயுத ரீதியான லத்தீவுக்குச் சென்று வாழ ஐக்கியத்துடன் கூடிய சமாதன வுே செல்ல விரும்புகின்றோம். ம் வரைக்கும் சனச் செறிவு காமில் தொடர்ந்தும் வாழ்ந்து க்க முடியாது. சுமார் 25க்கு ம், வீடுகளிலும் மக்கள் சிதறி ஆலங்குடா அகதி முகாமில் அடிப்படை வசதிகள் வியில் அம்மக்கள் மிகவும் மையால் சிறார்களின் எதிர்காலம் காணப்படுகின்றது. இது இடங்களில் இந்நிலை ளைஞர் யுவதிகளுக்கு வேலை ல. எனவே எமது சொந்த வரை எமக்குத் தேவையான ட்டு கௌரவமான வாழ்க்கை
வேண்டும்."
து சொந்தப் பிரதேசங்களில் குடியேறும் தேசத்தில் முகாம் வாழ்க்கைக்கு ஒரு முல்லைத்தீவு முஸ்லிம்கள் வேண்டி
முல்லைத்தீவு முஸ்லிம்கள் தொடர்ந்து மில் செயல்படுத்தப்பட வேண்டிய ஒரு னால், இம்மாற்று வாழ்விட ஒழுங்கு பலவந்தமாக வெளியேற்றப்பட்டதுடன் - பிரச்சினைகளைத் தீர்க்காது. மாறாக ககை மேலும் சீரழியாமல் பாதுகாக்க

Page 176
உதவலாம். மேற்குறித்த அடிப்படையி உளப்பாங்கே முல்லைத்தீவு முஸ்லிம்
அவதானிக்க முடிகின்றது.
10.2.5. அண்மைக்கால வாழ
இச்சந்தர்ப்பத்தில், முல்லைத்தீவு காலத்தில் ஏற்பட்டு வரும் குடியிருப் சற்று அவதானிப்போம். இந்நூல் எழு ஆண்டு) முல்லைத்தீவு முஸ்லிம் அக சொந்தக் காணிகளை வாங்கி முகாம் காண முற்படுவது அவதானிக்கக் முஸ்லிம்கள் மத்தியில் சொந்தக் க வரும் வாழ்க்கை அமைவிட மாற்றம் இவ்வட்டவணையில் காட்டப்பட்ட எண்ணிக்கையைக் கொண்ட சதவீதமானவர்கள் சொந்தக் கால் தொகையினர் வாடகை வீடுகளிலும், வாழ்ந்து வருகின்ற தன்மையை அ
முகாம்களில் வாழ்பவர்களில் முயற்சி எடுத்து வருகின்றனர். இதி வீதியில் 4ஆம் கட்டைப்பிரதேசத்தில் சொந்தக் குடியேற்றத்தை ஏற்படுத் முயன்று வருவது இங்கு குறிப்பிட வாழ்விடக்காணிகளை புத்தளம் மால்
சொந்தக் காணிகளில் மீள்கு தமக்கென ஒரு சொந்த வாழ்விடத் தற்போதைய நிலைப்பாட்டை சற்று முல்லைத்தீவு முஸ்லிம்களில் அநேகர் பிரிவு பிரதேசத்திலும், புத்தளம் நகரை

லான வாழ்க்கைத் திட்டத்தை ஏற்பதற்கான கள் மத்தியில் பரவலாகக் காணப்படுவதை
ஐவிட இடஅமைவு மாற்றங்கள்:
» முஸ்லிம் அகதிகள் மத்தியில் அண்மைக் » இட அமைவு ரீதியான மாற்றங்களை இதப்படும் வேளையில் (நவம்பர் 1996ஆம் திகளில் ஒரு குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் வாழ்க்கைக்கு ஒரு மாற்று வழியினைக் = கூடிதாக இருந்தது. முல்லைத்தீவு காணி வாங்கும் முயற்சியோடு ஏற்பட்டு ங்களை அட்டவணை - 7 காட்டுகின்றது.
விபரங்களின் படி ஏறக்குறைய 6500 முல்லைத்தீவு முஸ்லிம்களில், 40 ணியிலும், ஏனையவர்களில் ஒரு சிறிய ஏனையவர்கள் அகதி முகாம்களிலும் வதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. - பலர் சொந்தக்காணி வாங்கி குடியேற ல் குறிப்பாக புத்தளம் மாவட்ட மன்னார் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கென ஒரு த சில முல்லைத்தீவு முக்கியஸ்தர்கள் உத்தக்கது. வேறு பலர் பொருத்தமான பட்டத்தில் தேடி வருகின்றனர். கடியேற்றக் கொடுப்பனவுகளைப் பெற்று தினை அமைத்துக் கொண்டவர்களின்
அறிய வேண்டியது அவசியமாகும். புத்தளம் மாவட்ட கற்பிட்டி செயலாளர் அண்டிய பிரதேசத்திலும் தமது சொந்தக்

Page 177
அட்டவ
1996 ம் ஆண்டு முல்லைத்தீவு முஸ்லிம்
புத்தளம் மாவட்டம்
கற்பிட்டி செயலாளர் பிரிவு
1. ஆலங்குடா முகாம் (முகாம்) 2. கரிசல் 3. முசல்பிட்டி 4. குறிஞ்சிப்பிட்டி
66
1. அலி ஜின்னாபுரம் (சொந்தக் காணி) 2. அல் ஹிஜ்ரா 3. ஜின்னாபுரம் 4. ஆலங்குடா 5. முல்லையூர்(கற்பாளி தோட்டம் ) 6. பூலாச்சேனைச்சந்தி " 7. குறவன் குடில் 8. நுரைச்சோலை 9. கல்முனைக்குடி 10. கற்பிட்டி 11. உளுக்காப்பள்ளம்
: : : : :
புத்தளம் செயலாளர் பிரிவு 1. புத்தளம் நகர் (வாடகை வீடு) 2. நிந்தனி (சொந்தக்கானி) 3. சேனைக்குடியிருப்பு (சொந்தக்காணி) 4. ரத்மல்யாய (சொந்தக்காணி) 5. தில்லையடி (சொந்தக்காணி) 6. தம்பபண்ணி(முகாம் )
முந்தல் செயலாளர் பிரிவு 1. பெருக்குவட்டான் முகாம் ஏ(முகாம் ) 2. பெருக்குவட்டான் முகாம் பி " 3. சமீரகம் ஜின்னா முகாம் பி " 4. சமீரகம் ஏl முகாம்
66

60 60-7
மகள் அகதிகளாக வாழ்ந்த இடங்கள்.
குடும்பங்கள்
மொத்தம்
1251 28
1255 140
Bo
|8
四刀%BBBB%89
145 355 390 58 340 63 36
さざss83
112
109
108
59

Page 178
: : :
5. சமீரகம் ஏ2 முகாம் 6. கணமூலை தெற்கு 7. கணமூலை வடக்கு முகாம் ஏ" 8. கடையாமோட்டை முகாம் ஏ" 9. கடையாட்ேடை முகாம் பி " 10. கடையாமோட்டை முகாம் சீ" 11. கடையாமோட்டை முகாம் டீ" 12. கடையாமோட்டை முகாம் ஈ' 13. கடையாமோட்டை முகாம் எப்" 14. நல்லாந்தழுவை ஜூம்ஆப்பள்ளி (முகாம் 15. நல்லாந்தழுவை முகாம் எப் " 16. நல்லாந்தழுவை முட்டிப்பாலக்குடாமுகா 17. விருதோடை 18. புளுதிவயல் (உறவினர் வீடு)
(மொத்தம்
19. ரஹ்மத்புரம் (சொந்தக்காணி) 20. புளுதிவயல் (சொந்தக்காணி) 21. பெருக்குவட்டாான் (சொந்தக்காணி) 22 புளிச்சாக்குளம் (வாடகை வீடு ) 23 பத்துளுஓயா (வாடகை வீடு) 24 சிலாபம் (வாடகை வீடு)
மொத்தம்
இ புத்தளம் மாவட்டம் மொத்த
அநுராதபுரம்
1. நாச்சியாதீவு (முகாம்) 2. இக்கிரிக்கொல்லாவ (முகாம்+வாடகைவீடு 3. கலாவெவ (முகாம் )
வவுனியா
1. பாவற்குளம் (உறவினர்வீடு) 2. பூந்தோட்டம் (வாடகைவீடு) 3. பட்டக்காடு (உறவினர்)

S = SS SSS9
110
64
58
149
999999
228
99
和 weawnwww死w w w仍
SSgg
ss的
SSS
6 (9

Page 179
4. செட்டிகுளம் (உறவினர்) 5. புளிதறித்த புளியங்குளம் (உறவினர்)
3
குருநாகல் மாவட்டம்
1. கெகுனுகொல்ல (முகாம்) 2. கெகுனுகொல்ல (வாடகைவீடு
- மொத்தம்
கொழும்பு- நீர்கொழும்பு மாவட்டங்கள்
1. கொழும்பு (வாடகைவீடு)
நீர்கொழும்பு (வாடகைவீடு) பசியால(முகாம் )
- மொத்தப்
கண்டி மாவட்டம்
1. அக்குரண (வாடகைவீடு) 2. இனிகல(உறவினர்) 3. மடவள் (வாடகைவீடு)
அடையாளப்படுத்தப்படாத ஏனையோர்
- சுட்டு மொத்தம் :
மூலம் : வெளிக்கள ஆய்வு, 1996

១ ពី
ន ក ព
08
1000
03
L0
ទ ន ន
៩ ៩
175

Page 180
குடியேற்றத்திற்காகக் காணிகளை வ கொண்ட சிலர் வாழ்விடச் சூழல் அப் வாங்கியிருக்க ஏனைய பலர் பண வ ஏற்ப கிடைக்கக் கூடியதாக இருர் வாழ்வதற்கு இவ்வாறான விலை | காணிகளாகவும் கல்வி, மருத்துவ 6 வசதியற்ற ஒதுக்குப் புறம்பான காண
10.2.6. மீள்குடியிருப்புக் கெ
பூர்வீக இடத்தில் மீள்குடி முஸ்லிம்கள் அரசாங்கத்தின் ''மீள் ஆர்வம் செலுத்தி வருகின்றார்கள் எ
முதலில், சொந்தக் காணிக் கு மாற்று வழியினை மிகத் தீவிரமாகத் தேம் மீள் குடியேற்றக் கொடுப்பனவுகளைத் இல்லை என்பதைச் சுட்டிக் காட்ட கொடுப்பனவுகளைப் பெற்று சொந்தக் கெளரவத்தோடு வாழக் கூடிய ஒ ஆர்வப்படுவது நியாயமானதே. அதே நிரந்தரமாக இப்பிரதேசத்திலேயே இ மீள்குடியேற்றக் கொடுப்பனவுகள் மு மட்டுமல்ல, அகதிகளுக்கான உண நிறுத்தப்பட்டு விடும் என்பதையோ, மீம் தமது பூர்வீக இடத்திற்கான அரசி வாய்ப்புக்களும் இல்லாமல் போய்விடு பூர்வீக இடத்திலான பொருளாதார, மறக்கப்பட்டதொன்றாக மாறிவிடும் என இருக்கின்றார்கள். அகதிகள் மத்தியி இவ்வுண்மை அறியக் கூடியதாக இ

பாங்கியுள்ளார்கள். அதில், பண வசதி டிப்படையில் பொருத்தமான காணிகளை வசதி குறைவால் தமது பண வசதிக்கு கத காணிகளை வாங்கியிருக்கின்றனர். குறைந்த காணிகள் மணற்பாங்கான வசதிகள் வாழும் சூழலில் கிடைக்கும் சிகளாகவும் காணப்படுகின்றன.
காடுப்பனவில் ஆர்வம்:
யேற்றத்தை விரும்பும் முல்லைத்தீவு குடியேற்றக்" கொடுப்பனவுகளில் ஏன் ன்பதையும் நோக்க வேண்டும். டியிருப்பு மூலமாக முகாம் வாழ்க்கைக்கு டி வருகின்ற அகதிகளுக்கு அரசாங்கத்தின் 5 தவிர வேறு பண ரீதியான வசதிகள்
வேண்டும். அதனால், அரசாங்கக் காணியை விலைக்கு வாங்கி அங்கு ரு வாய்ப்பை ஏற்படுத்த அகதிகள் நேரத்தில் இக்கொடுப்பனவுகள் தம்மை ருக்கச் செய்து விடும் என்பதையோ, டிவுற்றதும் தமது அகதி அந்தஸ்து வு மற்றும் ஏனைய நிவாரணங்களும் ர்குடியேற்றத் திட்டம் முற்றுப்பெற்றதும் யல் உரிமைகளும், தொழில், கல்வி ம் என்பது பற்றியோ, அத்துடன் தமது சமூக, சமய நலன்கள் காலப்போக்கில் பதையோ அறியாதவர்களாக இம்மக்கள் ல் செய்யப்பட்ட ஆய்வுகளின் மூலமாக நந்தது.
62

Page 181
அதனால், முகாம் வாழ்க்கைக்கு ஒன்றை ஏற்படுத்துவதில் இம்மக்களுக்கு தாம் அகதிகளாக வாழும் பிரதேச விரும்புகின்றார்கள் என்று கருத முடிய அகதி மக்களால் கண்டு பிடிக்கக் கூடிய பிரதேசத்தில் தமக்கென ஒரு தற்காலிக வேறொன்றும் இல்லை என்பது கடந்த இம்மக்கள் கண்ட அனுபவமாகும். அ சூழலில் சொந்தக் காணிகளை வாங்கி ( பண ரீதியான உதவிகளை இம் மீள் குடி என்று இவர்கள் கருதுகின்றார்கள். கொடுப்பனவுகளைப் பெறுவதைத்தவிர | நன்கு அறிவார்கள். உண்மையில் . பெரும்பான்மையினர் இன்றும் கூட தற்ே வசதி ஒழுங்கிற்காக முல்லைத்தீவில் த உரிமைகளை இழக்கத் தயாராக இல்லை எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.
10.2.7. மீள்குடியேற்றத்தின்
பலவந்தமாக வெளியேற்றப்பட் பின்விளைவுகள் மிகக் கவனமாகப் ! இந்நுாலில் இக்குடியேற்றத்துடன் தெ எடுக்கப்பட வேண்டிய சில அம்சங்கள்
மீள்குடியேற்றம் என்ற அடிப்பு மாற்றங்கள் இம்மக்களின் அகதி நிலைப் ஏற்படுத்தாது. ஆறு வருடங்களுக்கு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது வசதியற்ற நிலையில் காணப்பட்டார்க விட மோசமான பொருளதார நி
16.

ராக
மாற்று ஒழுங்காக, சொந்த வாழ்விடம் தள்ள ஆர்வத்தை வைத்து இம்மக்கள் த்திலேயே நிரந்தரமாகக் குடியேற ாது. காரணம் முகாம் வாழ்க்கைக்கு ப மாற்றுவழி அகதியாக வாழும் சூழற் வாழ்விடத்தை ஏற்படுத்துவதை விட 6 வருட கால அகதி வாழ்க்கையில் தனால், தாங்கள் அகதிகளாக வாழும் களரவமாக வாழ்வதற்குத் தேவையான யேற்றக் கொடுப்பனவுகள் வழங்குகின்றன
இந்த அடிப்டையில் இப்பணக் மாற்றுவழி இல்லை என்பதை இவர்கள் முல்லைத்தீவு முஸ்லிம்களில் மிகப் பாதைய தமது இடைக்கால வாழ்க்கை மது பொருளாதார, அரசியல், கலாசார ல என்பதை மிகத் தெட்டத் தெளிவாக
பின்விளைவுகள்:
360
ட மக்களுக்கான மீள்குடியேற்றத்தின் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பாடர்பான மிக உடனடியாக கருத்தில் ர் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. படையில் ஏற்பட்டு வருகின்ற வாழ்விட பில் குறிப்பித்தக்க எந்த மாற்றத்தையும் - முன்னர் முல்லைத்தீவு முஸ்லிம்கள் ப எவ்வாறு அடிப்படை வாழ்க்கை ளோ அதே நிலையில் அல்லது அதை லையில் இம் மக்கள் இன்றும்

Page 182
காணப்படுகின்றார்கள். கடந்த 6 வருட போது இம்மக்களுக்கு உணவும், ஏ தேவைப்பட்டதோ அதே அடிப்படை தேவைப்படும் பொருளாதார நிலையில் மற்றும் ஏனைய அத்தியவசியப் பொருட அரச சார்பற்ற நிறுவனங்களிலும் தங்கி இன்னும் சில காலம் இம்மக்கள் மத்திய காணப்படுகின்றன.
அதே நேரத்தில், சொந்த உருவாக்கப்பட்டு வருகின்ற வாழ்க்
மாற்றங்கள் உடனடியாக ஏற்படுத்த . அதனால், சொந்தக் காணியில் குடி அந்தஸ்தும்" அந்த அந்தஸ்துக்குப் ெ உதவிகளும் தொடர்ந்தும் தேவைப் அவ்வாறாயின், மீள்குடியேற்றம் என்ற 1 இருந்து இம்மக்களை அகற்ற அசரசா முயற்சி நிதரிசனத்துக்குப் புறம்பான அவ்வாறான ஒரு முயற்சி இம்மக்கலை கூடியது.
அதுமட்டுமன்றி, முல்லைத்தி அல்லாத ஏனைய பிரச்சினைகள் இந்நி மேலும் புறக்கணிப்பிற்கு உட்படக்கூடிய ஏற்கனவே அடையாளம் கண்டதைப் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு ஏற் பின்னணியைக் கொண்டதாகும். அ பிரச்சினைக்கு முழுமையான தீர்வு க இம்மக்களுக்கு நீண்ட காலத்தில் பயன் மூலமாகத்தான் இம்மக்களை மீண்டும் அது மட்டுமன்றி சொந்த இடங்களுக் இம்மக்களுக்குச் சொந்தமான அசைய

உங்களுக்கு முன்னர் அகதியாக்கப்பட்ட னைய நிவாரணங்களும் எந்த அளவு - வாழ்க்கைத் தேவைகள் இன்றும்
இம்மக்கள் இருக்கின்றார்கள். உணவு ட்களுக்காக இம்மக்கள் அரசாங்கத்திலும், மிருக்க வேண்டிய இக்கட்டான நிலை பில் நீடித்திருக்கக் கூடிய சூழ்நிலைகளே
க் காணிக் குடியிருப்பின் மூலமாக ஒகச் சூழலிலும் புதுத்தொழில் வாய்ப்பு க் கூடிய சாத்தியக் கூறுகள் இல்லை. யேறியிருக்கின்ற மக்களுக்கு "அகதி பொருத்தமான நிவாரண மற்றும் ஏனைய படும் சூழ்நிலை காணப்படுகின்றது. பதத்தைக் கொடுத்து அகதி அந்தஸ்தில் ங்கம் எடுக்கும் இந் நிரந்தரக் குடியேற்ற து எனக் கருதத் தோன்றுகின்றது. எ எதிர்காலத்தில் கடுமையாகப் பாதிக்கக்
வுே முஸ்லிம் அகதிகளின் நிவாரணம் மரந்தரக் குடியேற்றத் திட்ட முயற்சியால்
வாய்ப்புகள் காணப்படுகின்றன. காரணம், = போல் பலவந்த வெளியேற்றத்தினால் பட்ட அகதிப் பிரச்சினை அரசியல் அரசியல் ரீதியாகத்தான் இவ்வகதிகளின் காண முடியும். அவ்வாறான தீர்வே தரக் கூடியது. அரசியல் பேச்சுவார்த்தை சொந்த இடங்களில் குடியேற்ற முடியும். கு மீளத் திரும்புவதன் மூலமாகத்தான் பும், அசையாச் சொத்துக்களை மீளப்
64

Page 183
பெற முடியும். சொத்துக்களுக்கு ஏற்பட் முடியும். இம்மக்களின் தனியார் சொத்துக் புனரமைக்க முடியும். அரசியல் பிரச்சின இவ் அகதிகளின் சொந்த இடத்திலான மாறுவதோடு பலவந்த வெளியேற்ற பாதிப்புக்களுக்கு நிவாரணம் ஒருபோதுமே அதனால் அகதி முஸ்லிம்களின் அடிப்ப கொடுத்து இம்மக்களின் பிரச்சினைக வேண்டியது அவசியமானதாகும்.
10.2.8 மீள்குடியேற்றத்திட்டங்க
பிரச் சினைகள்:
இன்று புத்தளத்தில், சொந்தக்கா குடிசையொன்றைக் கட்டுவதற்காக அரசா எதிர் பார்த்த வண்ணம் இருக்கின்றா கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் குடி ை கொடுக்கப்பட்ட 10,000 ரூபாயை காண அதனால் தற்போது குடிசைகள் நிலையிலுள்ளார்கள்.
அரசாங்கத்தின் மீள்குடியேற்றக் காணிகளை வாங்கி குடியேறிய முல்லை கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாமையா நீர், மலசலகூட அடிப்படை வசதிகள் கொடுக்கப் படாத நிலையில் வாழ்ந்து 6 வசதி ரீதியான பிரச்சினைகளையும், ஏனை ஏற்படுத்தி வருகின்றது. உதாரணமாக அதாவது அல்மினா குடியிருப்பில் முல் வாங்கி தற்காலிக குடிசைகள் அமைக்க காணப்படுகின்றது. இது வரை கிணறு
16

- பாதிப்புக்களுக்கு நஷ்டயீடு பெறவும் களையும், பொதுச் சொத்துக்களையும் மனயாக இது கொள்ளப்படாதவிடத்து, மீள்குடியேற்றம் சாத்தியம் அற்றதாக த்தால் இம்மக்களுக்கு ஏற்பட்ட - பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்படும். டைப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் ளைத் தீர்க்க ஆவன செய்யப்பட
ள் எதிர்நோக்கும் உடனடிப்
ணிகளை வாங்கிய அநேகர் தற்காலிக ங்கத்தின் 10,000 ரூபாய் கொடுப்பனவை சர்கள். வேறு பலர் மீள்குடியேற்றக் ச அமைப்பதற்காக அரசாங்கத்தால் விகள் வாங்குவதற்காகப் பயன்படுத்தி அமைப்பதற்கு பண வசதியற்ற
கொடுப்பனவுகளை நம்பி சொந்தக் லத்தீவு முஸ்லிம்கள் பலர் மேலதிகக் எலும், சொந்தக் குடியிருப்புச் சூழலில் இது வரை அரசால் அமைத்துக் வருகின்றார்கள். இது பல வாழ்விட எய கஷ்டங்களையும் இம் மக்களுக்கு ந நுரைச்சோலை கொய்யாவாடியில் மலைத்தீவு முஸ்லிம்களால் காணிகள் கப்பட்ட நிலையில் பல மாதங்களாகக் 1, மலசலகூட, பாதை, கல்வி வசதிகள்

Page 184
இம்மக்களுக்கு அரசாங்கத்தால் செய் வசதிகள் அல்மினா சொந்தக் குடிே சொந்தக் குடியேற்றங்களுக்கும் கால வேண்டியது அவசியமாகும்.
இச்சந்தர்ப்பத்தில் புத்தளத்தில் அநுராதபுரத்தின் நாச்சடுவையிலும் தெ வருகின்ற முல்லைத்தீவு முஸ்லிம் வேண்டியது அவசியமாகும். இம்ம.
குடியேற்றம் அமைப்பதற்கு பண குடியேற்ற முயற்சிகளை முன்னின்று இன்மையினாலும் தொடர்ந்தும் அகதி தள்ளப்பட்டுள்ளார்கள். அரசாங்கமும், அ எதிர்கால நலனைக் கருத்திற் கொம் இடைக்கால மாற்று வாழ்க்கைத் திட்ட இம்மக்களுக்கு ஒன்றில் பொருத்தமா பண உதவிகள் செய்வதன் மூலமாக கெளரவமான வாழ்க்கை வசதிகளை இம்மக்கள் கௌரவமான ஒரு வாழ்க் நேரத்தில், அம்மக்களின் உணவு அத்து தொடர்ந்தும் கொடுக்கப்பட்டு வரவேள்
10.3 எதிர்காலம் :
முல்லைத்தீவு முஸ்லிம் அகதி என்ற எதிர்வு கூறல் இப்பகுதியில் கெ கூறலில் இம்மக்களின் இன்றைய , மற்று தொடர்புடைய அம்சங்கள் கவனமாகப்
முதலில், இம்மக்கள் அகதியாக் சற்று பரிசீலிப்போம். முல்லைத்தீவு இருந்து பலவந்தமாக வெளியேற்றப்
16

து கொடுக்கப்படவில்லை. மேற்குறித்த யற்றத்திற்கும், அது போன்ற ஏனைய தாமதமின்றி செய்து கொடுக்கப்பட
ன் முந்தல் பிரதேச சபைப் பிரிவிலும், டாடர்ந்தும் அகதி முகாம்களில் வாழ்ந்து
அகதிகளின் நிலை பற்றியும் அறிய க்கள் சொந்தக் காணி வாங்கி சொந்தக் வசதியில்லாமையினாலும், இவ்வாறான வ செய்யக் கூடிய தலைமைத்துவம் 7 முகாம்களில் வாழும் சூழ்நிலைக்குத் ரச சார்பற்ற நிறுவனங்களும் இம்மக்களின் ண்டு, இம்மக்களுக்குப் பொருத்தமான டத்தை செயற்படுத்த முற்பட வேண்டும். ன சொந்தக் காணிகள் வாங்குவதற்கு வோ, அல்லது அரசாங்கக் காணிகளில் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாகவோ நகை வாழ உதவ வேண்டும். அதே துடன் ஏனைய அடிப்படை வசதிகளும்
ண்டியது அவசியமாகும்.
கெளின் எதிர் காலம் எவ்வாறு இருக்கும் சய்யப்படுகின்றது. அவ்வாறான எதிர்வு வம் கடந்த கால அகதி வாழ்க்கையுடன்
பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கின்றது. -கப்பட்ட போது இருந்த சூழ்நிலைகளை
முஸ்லிம்கள் தமது சொந்த இடத்தில் ப்பட்டதை தடுத்திருக்கக் கூடிய சக்தி

Page 185
அப்போது அவர்களுக்கு இருக்கவில்ல மிகச் சிறு தொகையினராக முஸ்லிம் 4 வெளியேற்ற உத்தரவை தடுத்து நிறு தலைமைத்துவமோ இவர்களுக்கு அ இம்மக்கள் வாழ்ந்த காலத்திலும், வெ ஆயுதக்குழுக்களின் கட்டளைக்கு - இம்மக்களுக்கு இருக்கவில்லை.
முல்லைத்தீவில் வாழ்ந்த போ த மிழ் பெரும் பான் மை மக் க கொண்டிருந்தமையேயாகும். கஷ்ட பாதுகாப்பார்கள் என்று முல்லைத்தீவு இன்றும் நினைக்கின்றார்கள். அன்று பு தமிழ் மக்களால் தடுத்து நிறுத்த முடி முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டவித கவலைப்பட்டார்கள். இன்றும் கவலை முஸ்லிம் மக்கள் மிக உறுதியாக நாம் முல்லைத் தீவில் மீண் டும் ஒரு உருவாக்கப்படுமானால் அது நிச்சயம் அல்ல. இணக்கப்பாட்டால்தான் சாத்தி
அடுத்து, இம்மக்களின் அகதி நோக்கினால், கடந்த ஆறு வருட . படிப்பினைகளைத் தருவதாக இருக்கின் சொந்தச் சூழலில் வாழ்ந்த வாழ்க்கை இங்கு வாழவேண்டி ஏற்பட்டது. அ வாழ்க்கைக்கு நிதமும் பிறரை நம்பி வாழ்க்கை நிலையை மதிப்பீடு செய்ய திட்டமிடவோ, தீர்மானிக்கவோ இம்மா
முல்லைத்தீவில் ஒன்றாக ; அகதிகளாக முகாம்கள் எங்கிலும் சில சிதறி வாழும் இம்மக்கள் மத்தியில் த!

லை. முல்லைத்தீவில் எண்ணிக்கையில் சிறுபான்மையினர் வாழ்ந்தார்கள். தமது
த்தக் கூடிய அரசியல் ரீதியான பலமோ, ன்று இருக்கவில்லை. முல்லைத்தீவில் ளியேற்றப்பட்ட போதும் பலம் வாய்ந்த அடிபணிவதை விட வேறு மார்க்கம்
து இம்மக்களுக்கிருந்த பலம் எல்லாம் ளோடு கூட் டுறவாக வாழ்ந்து காலத்தில் தமிழ் சகோதரர்கள் தம்மை முஸ்லிம்கள் அன்றும் நினைத்தார்கள். முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தை யாமல் போயிற்று. ஆனால், நிச்சயமாக ம் குறித்து தமிழ் மக்கள் அன்று லப்படுகின்றார்கள் என்று முல்லைத்தீவு ம்புகின்றார்கள். அந்த அடிப்படையில் த எதிர்காலம் முஸ்லிம்களுக்கு மாக தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டால்
யம் என்பதில் ஐயம் இல்லை. யாக வாழ்ந்த காலக்கட்ட வாழ்க்கையை அகதி வாழ்க்கை இம்மக்களுக்கு பல றது. இவ்வகதிகள் தாம் முல்லைத்தீவில் கயை விட வித்தியாசமான நிலையில் அகதிகளான இம்மக்கள் தமது நாளாந்த 2 வாழ்கின்றார்கள். சுயமாகத் தமது பவோ, தமது எதிர் காலத்தைப் பற்றித் க்களுக்கு முடியாதிருந்தது. ஒரு சமூகமாக வாழ்ந்த இம்மக்கள் கறி வாழும் நிலைக்கு உள்ளானார்கள். மது எதிர் காலத்தை ஒன்றாக இருந்து

Page 186
தீர்மானிக்கும் வாய்ப்பு இல்லாது டே மூலமான கல்வி, சலாசார வீழ்ச்சிகள் இ போய் விட்டது..
முகாம் வாழ்க்கையோடு ஒப்பி சொந்தக் குடியேற்றம் நிச்சயமா கொண்டவைகள்தான். ஆனால் முல்ன சொந்தக்காணிக் குடியேற்றத்துடன் முல் இல்லாது போய்விடும் ஆபத்து ஒன்று வரையில் இருபதுக்கும் மேற்பட்ட 8 தமது சொந்தக் குடியேற்றத்தை அன் தமது புதிய அத்தியாயத்தை | ஆரம்பித்திருக்கின்றார்கள். முல்லைத்தீவு தீர்வு என்ற அடிப்படையில் ஒத்த கு காலத்தில் எடுத்துச் சொல்லக் கூடிய வ போகலாம். புத்தளத்தில் தமது இடைக் இருந்தால், இம்மக்களின் எதிர்காலக் க சாதகமான மாற்றங்கள் ஏற்படக் கூடிய வாழும் சொந்தக் குடியிருப்புச் சூழலில்
மேலே குறிப்பிட்ட விளக்கங்கள் இம்மக்களின் வாழ்க்கை நிரந்தரமாக்கப் விளைவுகளைக் குறிப்பிடுகின்றது குறைப்பதற்கு என்ன செய்யலாம் எ வேண்டியது எமது கடமையாகும்.
அந்த அடிப்படையில் முல்க குடியேற்றத்தை அடிப்படையாகக் கொ செய்யப்படுமானால் இம்மக்களின் வாழ்க் செய்யாமல் பாதுகாக்கலாம்.
இந்த அடிப்படையில் சொந்த அடிப்படை வசதிகளை உடனடியாகப் ! கால தாமதம் இன்றி செய்யப்படுவது க

எய்விட்டது. முகாம் வாழ்க்கையின் ம்மக்களால் தவிர்க்கப்பட முடியாததாகப்
ம்ெபோது தற்போது செய்யப்பட்டு வரும் க பல சாதகமான அம்சங்களை லத்தீவு முஸ்லிம்களைப் பொறுத்தவரை லைத்தீவு முஸ்லிம்கள் என்ற தனித்துவம்
காணப்படுகின்றது. காரணம் இது இடங்களில் சொந்தக் காணிகள் வாங்கி கமத்து சிதறிய நிலையில் புத்தளத்தில் இம் முல்லைத் தீவு முஸ் லிம் கள் பு முஸ்லிம் அகதிகளின் பிரச்சினைக்கான தரலில் தமது அபிலாசைகளை எதிர் பாய்ப்பு இச்சிதறிய பரம்பலால் இல்லாது கால வாழ்க்கை நிரந்தரமாக்கப்படுமாக -ல்வி, தொழில் என்ற அடிப்படையிலும் சாத்தியக்கூறுகள் தற்போது இம்மக்கள் 0 குறைவாகக் காணப்படுகின்றன. ர் அகதியாக வாழ்கின்ற பிரதேசங்களில் படுமானால் ஏற்படக் கூடிய பாதகமான
இப்பாதகமான விளைவுகளைக் ன்றும் சிந்தித்து ஆலோசனை கூற
மான
லைத்தீவு முஸ்லிம்களின் சொந்தக்
ண்ட பொருத்தமான அபிவிருத்திகள் கையை குறுங்காலத்தில் வீழ்ச்சியடையச்
பெ
இடைக்காலக் குடியேற்றங்களில் தமது பெறுவதற்கான வழிமுறைகள் அரசால் வசியமாகும். வாழ்விட வசதிகள், நீர்,

Page 187
கல்வி, போன்ற ஏனைய வசதிகளும் விருத்தி செய்யப்பட்டால் இம்மக்கள் கவனித்துக் கொள்ளக் கூடிய வாய்ப் மிக முக்கியமாக, குறுங்காலத்தில் இம்பு தொடர்ந்தும் வழங்கப்படும் என்பதை மிகவும் அவசியமாகும். காரணம், இழந்த இம்மக்கள் பொருத்தமான வ காணும்வரை உணவு மற்றும் ஏல தேவையாகும். அதனைப் பெறு தகுதியானவர்களேயாவர். உணவும் ஏ. உரிமையாகும். அதே நேரத்தில் படிப்பு முயற்சிகளை நோக்கி வழிப்படுத்துவத வேண்டும். அதில் சுய தொழில்
விருத்தி, பின்னணிப்பிரதேச பொருளா அரசால் அவசியமாக எடுக்கப்பட வே
அதே நேரத்தில், அகதிகள் முரண்பாடுகளைக் குறைத்து இன முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். அகதிகள் வாழும் பிரதேசங்களில் அ இன, மற்றும் ஏனைய சமூகக் குழுக் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் மேலும் விரிவடையாமல் தடுத்து நிறு, வாழும் எல்லா மக்கள் குழுக்களிடைப் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டு
அதில் மிக முக்கியமாக, இப்பிரதேசத்தில் குடியேற்ற முயற்சி அரசாங்கம் உள்ளூர் மக்களுக்கு ( மக்களுக்கும் தெட்டத் தெளிவாக 6 வகையில் அகதி முஸ்லிம்களின் வாக்குப்பதிவு ), தொழில் வாய்ப்பு, பல்

சொந்தக்குடியேற்ற பிரதேச மட்டத்தில்
தமது நலன்களை தாமே சுயமாகக் பு எதிர்காலத்தில் உருவாகும். இதில் மக்களின் உணவு நிவாரணத் தேவைகள் க அரசு உத்தரவாதப் படுத்தப்படுவது தமது பொருளாதார அடிப்படைகளை வருமான வழிமுறைகளை அடையாளம் னைய நிவாரணங்கள் அத்தியவசியத் வதற்கு சட்ட ரீதியாக இம்மக்கள் னைய நிவாரணங்களும் இவ்வகதிகளின் ப்படியாக இம்மக்களை சுய பொருளதார -ற்கான எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட ஊக்குவிப்பு, தொழில் வாய்ப்பு, கல்வி தார அபிவிருத்தி முயற்சிகள் போன்றன பண்டிய நடவடிக்கைகளாகும்.
ள் வாழுகின்ற பிரதேசங்களில் இன ஐக்கியத்தைக் கூட்டுவதற்கான எல்லா இதில் குறிப்பாக, புத்தள மாவட்டத்தில் நதி - உள்ளூர் மக்கள், முஸ்லிம்-சிங்கள -களுக்கிடையில் முரண்பாடுகள் மேலும் காணப்படுகின்றன. இம்முரண்பாடுகள் த்தவும், இன ஐக்கியம் இப் பிரதேசத்தில் பில் ஏற்படவும் பயனுள்ள பொருத்தமான
நிம்.
அகதி முஸ்லிம்களை நிரந்தரமாக எடுக்கப்படவில்ல என்பதை இலங்கை குறிப்பாக புத்தளம் மாவட்ட சிங்கள எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த அரசியல் உரிமைகள் (உதாரணமாக கலைக்கழக அனுமதிகள், அகதிகளின்

Page 188
சொந்த மாவட்ட அடிப்படையில் வழ மட்டத்தில் எடுக்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில் அகதிகள் செறி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான பெ எடுக்கப்படுவதும் அவசியமாகும். மேற் பிரதேசங்களில் இனப் புரிந்துணர்வை ச ஐயமில்லை.
தற்போது அகதியாக வாழும் நிலைமைகளில் அகதிகள் மத்தியில் எதிர்க கூட, இம்மக்களின் பலவந்த வெளி பிரச்சினையானது அக்கட்டத்திலும் தீ மறுவார்த்தையில் சொல்வதானால் முல் சொந்த இடத்தில் அங்கீகரிக்கப்பட்டு தமது தாயகம் மீளூம் வரை பலவர் ஏற்பட்ட பிரச்சினை முடிவு கால இப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு மு பரம்பரையினருக்குத்தான் ஏற்படுவது அதுவரையும் அம்மக்களின் பலவந்த அரசியல் பிரச்சினையும், மனிதாபிமான தொடர்ந்து கொண்டே இருக்கும்.( வெளியேற்றத்திற்கு ஒப்பான இன, அர. பொஸ்னியாவில், பர்மாவில் இன்னும் உலசி காணலாம் (Cigar, 1995). அங்கெல் மக்களுக்கு நியாயமான தீர்வை பெற். தொடர்ச்சியாக முயன்று வருகின்றது. அவ்வாறான உதவி அவசியமாகும்.
உண்மையில் முல்லைத்தீவு ( மீளச் செல்வதுடன் தொடர்பாக எடு மேலே குறிப்பிட்ட சர்வதேச உதாரண முல்லைத்தீவு முஸ்லிம்கள் தமது வாழ்
1:

மங்குவற்குரிய நடவடிக்கைகள் அரசு
வொக வாழ்கின்ற பிரதேசங்களில் தொழில் பாருளாதார அபிவிருத்தி முயற்சிகள் தறித்த முயற்சிகள் அகதிகள் வாழுகின்ற அதிகரிக்கச் செய்யக் கூடியவை என்பதில்
- சூழலில், வருமான, வாழ்க்கைத்தர காலத்தில் சாதகமான மாற்றம் ஏற்பட்டாலும் "யற்றத்துடன் தொடர்புடைய அரசியல் சர்க்கப்படாத தொன்றாகவே இருக்கும். லைத்தீவு முஸ்லிம்களின் வாழ்வுரிமை சமாதான சூழ்நிலையில் இம்மக்கள் தே வேளியேற்றத்தால் இம்மக்களுக்கு னப்படாத ஒன்றாகவே இருக்கும். ல்லைத்தீவு முஸ்லிம்களின் அடுத்த சாத்தியம் என்று கருதினாலும் கூட, 5 வெளியேற்றத்துடன் தொடர்புடைய ப் பிரச்சினையும், இனப்பிரச்சினையும் முல்லைத்தீவு முஸ்லிம்களின் பலவந்த சியல் பிரச்சினைகளை பாலஸ்தீனத்தில், கில் பல்வேறு பிரதேசங்களில் அடையாளம் மலாம் பாதிக்கப்பட்ட அப்பாவி அகதி றுக் கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் முல்லைத்தீவு முஸ்லிம் அகதிகளுக்கும்
முஸ்லிம்கள் தமது சொந்த இடத்திற்கு க்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ங்களைப் போன்ற சிக்கலான ஒன்றல்ல. மவுரிமையை மீண்டும் முல்லைத்தீவில்

Page 189
நிலை நாட்டிக் கொள்ள முடியான காணப்படுகின்றன. அதில், இம் முன் தொடர்புடைய பிரச்சினைகள் சரி காரணமாகும். அரசாங்கத்தாலும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொருத் மற்றுமொரு முக்கிய காரணமாகும்.
இவ்வுண்மை உணரப்பட்டு முறைப்படி தீர்ப்பதற்கான பேச்சுவார்த் இருந்தால், முல்லைத்தீவு முஸ்லிம்களி புனர்வாழ்வும் வெற்றியடையக் கூடி
அவ்வாறான ஒரு சாதகமான கண்லே நடவடிக்கைகள் என்ற வகையில் செய்யப்படுகின்றன.
10.3.1. விதந்துரைகள்:
முல்லைத் தீவு முஸ்லிம். படுத்தப்பட்டுவரும் அரசின் மீள்குடி மாற்றங்கள் இன்னும் காலம் தாழ்த்தாமல் அவசியமாகும். தற்போது நடைமு திட்டம் ஒரு இடைக்கால மாற்று அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும். திட்டம் அகதி மக்களின் தற்போதை ஏற்படுத்துவதோடு, தமது சொந்த இம்மக்களின் எண்ணத்திலும் மேலும்
அதே நேரத்தில், முல்லைத்தீன் குடியேறுவதற்கான எல்லா நடவடி அவசியமாகும். அதில் குறிப்பாக, இல முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் கதைக்கப்படுவது பொருத்தமான

மக்கு பல அடிப்படைக் காரணங்கள் ஃலிம்களின் பலவந்த வெளியேற்றத்துடன் பாக மதிப்பிடப்படாமைமுதன்மையான சமாதான சக்திகளாலும் இம்மக்களின் தமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமை
எதிர்காலத்தில் இம்மக்களின் பிரச்சினையை தை மூலமான முயற்சிகள் எடுக்கப்படுமாக ன் பூர்வீக இடத்திலான மீள் குடியேற்றமும், ய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. னாட்டத்தில் எதிர்காலத்தில் எடுக்கப்படும் ) பின்வரும் விதந்துரைகள் இங்கு
களுக்காக தற்போது நடைமுறைப் யேற்றத் திட்டத்தில் கொள்கைர்த்தியான 5 உடனடியாகக் கொண்டு வரவேண்டியது முறைப் படுத்தப்பட்டுவரும் குடியேற்றத் வாழ்க்கைத் திட்டம் மாத்திரமே என்று இவ் விடைக்கால மாற்று வாழ்க்கைத் ய வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை இடத்திலான மீள்குடியேற்றம் பற்றிய ம் உறுதியை ஏற்படுத்த உதவும். வு முஸ்லிம்களை தமது சொந்த இடத்தில் க்கைகளும் எடுக்கப்பட வேண்டியது எப்பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தைகளில் குடியேற்றம் என்ற அம்சமும் சேர்த்துக் பதாகும். இப்பேச்சுவார்த்தைகளில்
171

Page 190
விடுதலைப்புலிகளும் பங்குபற்றுவது முடிவுகளைத் தரக்கூடியதாக இருப்பதோ சம்பந்தமாக முல்லைத்தீவு முஸ்லிம்களின் இருக்கும்.
முல்லைத்தீவு முஸ்லிம்கள் முல்லைத்தீவில் தமது சொந்த இடங்கள் இனப்பிரச்சினையால் பலவந்தமாக வெளி சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கக்கப்பட் முறைப்படி பராமரிக்கப்படுவதற்கு நடவ
முல்லைத்தீவு முஸ்லிம்கள் குடியேறும் போது அல்லது குடியேறு குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள், நீர்பா பாடசாலைகள் போன்றன புனரமைக்க வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்ப வேலைகளில் யுத்தத்தால் முழுமையாகப் நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று, முல்லை குடியிருப்புக்களின் புனர் நிர்மாண செலுத்தப்படுவது பொருத்தமானதாகும். புனர் நிர்மாண திட்டமிடுதலில் முல்லைத்தீ இம்மக்களின் பங்களிப்பும் சேர்க்கப் ப அத்தியவசியமானதாகும்.
பலவந்த வெளியேற்றத்தால் முல் அசையாச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழ முறைப்படியான மதிப்பீடுகள் செய்யப்பட்டு . கூடிய பொருத்தமான நஷ்ட ஈடுகள் இம்
புதிதாக நடைமுறைப் படுத்த பிரதேசங்களுக்கான அதிகாரப் பகிர்வு பற்றிய முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் பொரு; பாதுகாப்பும் அளிக்கப்பட நடவடிக்கை அம்சமாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை !
172

எல்லா சாராருக்கும் பயனுள்ள ,ெ முல்லைத்தீவில் மீளக்குடியேறுவது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக
ஒரு பொருத்தமான சூழ்நிலையில் -ளில் மீளக் குடியேற்றப்படும் வரை இயேற்றப்பட்ட "அகதிகளாக" தேசிய, -டு அம்மக்களின் எதிர்கால நலன்கள் டிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தமது சொந்தக் கிராமங்களில் றுவதற்கு முன்னர் இம்மக்களின் சனக் கால்வாய்கள், சமய ஸ்தலங்கள், ப்பட்டு அப்பிரதேசங்களில் மக்கள் ட வேண்டும். இந்த புனரமைப்பு பாதிப்பிற்கு உட்பட்ட ஹிஜ்ராபுரம். லத்தீவு நகரம் ஆகிய முஸ்லிம் வேலைகளில் விஷேட கவனம்
இம்மக்களுக்கான புனர் வாழ்வு, வு முஸ்லிம்களின் ஆலோசனைகளும், டுவது இத்திட்டத்தின் வெற்றிக்கு
லைத்தீவு முஸ்லிம்களின் அசையும், மப்புக்கள் பற்றியும், சேதங்கள் பற்றியும் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். த முயற் சிக் கப் பட்டு வரும் அரசியல் சீர்திருத்தத்தில், முல்லைத்தீவு ந்தமான அரசியல் பிரதிநிதித்துவமும்,
எடுக்க வேண்டும். இதில் ஒரு உள்ளுராட்சி அமைப்பு மட்டத்திலும்,

Page 191
மாவட்ட, மாகாண, தேசிய மட் அதிகரிக்கக்கூடியதாக தேர்தல் சீர்திருத் செய்யப்படுவது பொருத்தமானதாகும்.
அதே நேரத்தில் தண்ணீரூற்று குமாரபுரம் ஆகிய முஸ்லிம்கள் இம்மக்களுக்குச் சொந்தமான அல்லது தொடர்ச்சி கொண்ட விவசாய, மேய் உள்ளடக்கக் கூடியதான நிர்வாக அல்ல பிரிவுக்குச் சமமான) உருவாக்கப்பட. இதன் மூலம் முஸ்லிம்கள் தமது கு பங்குகொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற் அம்சத்தின் உண்மையான பயனை அ
முல்லைத்தீவில் முஸ்லிம்-தமி ஏற்ற கல்வி மூலமான நடவடிக்கைக
மேற்குறித்த நடவடிக்கை பிரச்சினைக்கான நீடித்து நிலைத்திருக்க என்பதில் எவ்வித சந்தேகமும் இல்ை
யான பய6
குறிப்
அகதி முகாமில் ஒவ்வொரு கும்ப பொதுவான வகையில் நீர், மரசலகூட
நூலாசிரியரால் எழுதப்பட்ட பின்வரும் 1993, 1996a &19965).
1990-1996 இடையில் இலங்கையில் வருவதற்காக பல சர்வதேச மக இப்பிரச்சினைக்கு நடுநிலை வகித்து முயற்சித்தன. உள்நாட்டில் அரசியல் | முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

டத்திலான அரசியல் சபைகளிலும் த முறைகளும், மீள் எல்லை நிர்ணயமும்
, நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம், கணுக்கேணி, செறிந்து வாழும் பகுதிகளையும், பொது பயன்பாட்டிற்குட்பட்ட புவியியல் ச்சல் நிலங்கள், கடல் வளங்களையும் பகு ஒன்று (அதாவது உதவி அரசாங்க
க்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. அபிவிருத்தி நடவடிக்கைகளில் தாமும் பெடுத்தினால் "அதிகாரப் பகிர்வு'' என்ற
டையக்கூடியதாக இருக்கும். ழ் உறவை மேலும் விருத்தி செய்வதற்கு ள் எடுப்பது அவசியம். கள் முல்லைத்தீவு முஸ்லிம்களின் க்கக் கூடிய நிரந்தரத் தீர்வாக அமையும்
ல.
பபுகள் -
த்திற்கும் ஒவ்வொரு குடிசையும் அத்துடன் - வசதிகளும் வழங்கப்பட்டன.
ம் நூல்களை பார்க்க (Hasbullah, 1991,
ல் இனப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு பாநாடுகள் கூட்டப்பட்டுள்ளன. பல நாடுகள் இனங்களை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வர ரீதியாகவும் அரசியல் சார்பற்ற முறையிலும் பல
173

Page 192
வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான மாதம் 4 ஆம் திகதி வடக்கு முஸ்லிம் அ இதில் முஸ்லிம்கள் இரண்டு விடயங். கேட்கப்பட்டார்கள். 1. வடக்கில் வாழும் ! பாதுகாப்பிற்கு ஆவன செய்தல். வா. அகதிகளில் ஏறக்குறைய 60 சத வீத தமது சம்மதத்தை கையெழுத்து மூல
..
இம்மீள்குடியேற்றத் திட்டப்படி யுத்த நில மீளக் குடியேற முடியாதவர்கள் அரசா. காணியில் குடியேற்றப்படுவார்கள் என்று குறிப்பிடுகின்றது. ஆனால் நடைமுக காணிகள் வாங்கினால் மாத்திரமே மீள்கு நடைமுறைகள் காணப்படுகின்றன.
6.
அரசாங்கத்தின் வடக்கு முஸ்லிம்களுக் தொடர்புடைய அம்சங்கள் ஏற்கனவே 2 விளக்கப்பட்டிருக்கின்றன வட மாகான இந்நூலாசிரியரால் நுால்களும் கட்டுரை மேலதிக விபரங்களுக்கு Refugees A (10): 26-32.
இலங்கையில் அகதிகளுக்காக தற்காக இடங்கள் நடைமுறையில் அகதி முக அரசாங்க ஆவணங்களில் நலன்புரி நின
பலவந்த வெளியேற்றத்திற்குட்பட்ட மால குடியேற்றுவதற்கான அரசின் முயற்சி | மாவட்டத்தில் மீளக்குடியேறிய பலவந்த சொந்த இடத்தில் தொடர்ந்து எ எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
புத்தளம் நகர சேனைக் குடியிருப்பு வா உதாரணமாகும். அதே நேரத்தில் மீள்குடியேற்றங்கள் மணற்பாங்கான பூ குடியிருப்பு பிரதான வீதியிலிருந்து ஒது
174

அமைப்பு (NMRO) 1995ஆம் ஆண்டு மே கதிகளின் அபிலாசைகளை அறிய முயற்சித்தது. கள் பற்றி தங்களின் சம்மதத்தைக் கூறும்படி உரிமை 2. அரசியல் யாப்பில் சிறுபான்மையினரின் க்குரிமையையுடைய வட மாகாண முஸ்லிம் மானவர்கள் மேற்குறித்த கருத்துக்களுக்குத் ம் குறிப்பிட்டிருந்தனர் ( அகதி, 1995 (8): 13)
ஒலமை காரணமாக தமது சொந்த இடங்களை ங்க அல்லது நன்கொடையாக வழங்கப்பட்ட - அரசின் மீள்குடியேற்றக் கொள்கை விளக்கம் றையில் அகதிகள் குடியிருப்புக்குச் சொந்தக் டியேற்றக் கொடுப்பனவுகள் கொடுக்கப்படுகின்ற
க்கான மீள் குடியேற்றத் திட்டம் என்பதுடன் பல கட்டுரைகளிலும், நுால்களிலும் தெளிவாக 5 முஸ்லிம்களுக்கான மீள்குடியேற்றம் பற்றி களும் எழுதப்பட்டிருக்கின்றன. இது பற்றி re People (1996), அகதி, ஒக்டோபர் 1996
பிக வாழ்விட ஒழுங்குகள் செய்யப்படுகின்ற நாம் என்று அழைக்கப்படுகின்றது. இவை ஊலயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ர்னார்த்தீவு முஸ்லிம்களை சொந்த இடத்தில் வெற்றியளிக்கவில்லை. அதேபோல வவுனியா வெளியேற்றத்திற்குட்பட்ட முஸ்லிம்கள் தமது பாழ்வதில் பல பாரிய பிரச்சினைகளை
ம்க்கைச் சூழற் பொருத்தத் தன்மைக்கு ஒரு ஆலங்குடா, நுரைச்சோலை, கொய்யாவாடி பியில் அமைந்துள்ளன. ஆலங்குடா ஜின்னா க்குப் புறமான இடத்தில் அமைந்துள்ளது.

Page 193
விபரம் த
1. காதர் சாகிபு ஆதம் பிள்ளை
பூர்வீக இடம் : நீராவிப்பிட்டி ,
தற்போது வாழும் இடம்: .ெ 2. மீராக்கண்டு சம்சுதீன் (வயது
பூர்வீக இடம் : நீராவிப்பிட்ட
தற்போது வாழும் இடம்: கடையாமோட்டை. 3. சுல்தான் அப்துல் காதர் (வய
பூர்வீக இடம் : நீராவிப்பிட்ட தற்போது வாழும் இடம்:
ஆலங்குடா, புத்தளம். 4. காதர் சாகிபு ஆதம் பிள்ளை
பூர்வீக இடம் : நீராவிப்பிட்டி , தற்போது வாழும் இடம்:
கடையாமோட்டை. 5. பக்கீர் அப்துல் கமீது (வயது
பூர்வீக இடம் : நீராவிப்பிட்டி,
தற்போது வாழும் இடம்: 7. அப்துல் காதர் லெப்பை அப்
பூர்வீக இடம்: முல்லைத்தீவு
தற்போது வாழும் இடம்: 8. ஏ. எல். எம். ஏ. அஸீஸ் (5
பூர்வீக இடம் : நீராவிப்பிட்டி
தற்போது வாழும் இடம் : ெ 9. காசிம் தம்பி சாகுல் கமீது (
பூர்வீக இடம் : நீராவிப்பிட்டி,
தற்போது வாழும் இடம்: 0 10. கே. எம். கெளது (வயது .
பூர்வீக இடம் : நீராவிப்பிட்டி, தற்போது வாழும் இடம்: 0

ந்தவர்கள்
(வயது 95)
முள்ளியவளை. காத்தான்தீவு. ப 82) டி, முள்ளியவளை. நல்லாந்தழுவை,
பது 78)
, முள்ளியவளை. ஆலங்குடா அகதி முகாம்,
(வயது 95)
முள்ளியவளை. நல்லாந்தழுவை,
து 67)
முள்ளியவளை கற்பிட்டி. துல் றகீம் (வயது 69)
5ம் குறுக்குத் தெரு , புத்தளம். -2 வயது)
முள்ளியவளை. யருக்குவட்டான், முந்தல்.
வயது 55)
முள்ளியவளை . மல்லையூர், நுரைச் சோலை.
முள்ளியவளை மல்லையூர், நுரைச்சோலை

Page 194
யப்பா
11. அல்லாபிச்சை கச்சு முகம்மது
பூர்வீக இடம் : நீராவிப்பிட்டி, தற்போது வாழும் இடம்: கன்
புத்தளம். 12. அப்துல் காதர் வகாப் வைத்
பூர்வீக இடம்: நீராவிப்பிட்டி, தற்போது வாழும் இடம்: கா
புத்தளம். 13. லெப்பை நெய்னா முகைதீன்
பூர்வீக இடம்: நீராவிப்பிட்டி,
தற்போது வாழும் இடம்: அ. 14. அகமது லெப்பை லெவ்வைத்
பூர்வீக இடம் : நீராவிப்பிட்டி,
தற்போது வாழும் இடம்: பூ 15. ஏ. அகுமது. (வயது 70)
பூர்வீக இடம்: தண்ணீரூற்று
தற்போது வாழும் இடம்: கல 16. ஏ. அப்துல் சமது சலீம். (வ
பூர்வீக இடம்: நீராவிப்பிட்டி,
தற்போது வாழும் இடம்: நல் 17. எம். எஸ். மஃரூப். (வயது
பூர்வீக இடம்: நீராவிப்பிட்டி,
பெருக்குவட்டான், கொத்தான் 18. கே. டீ. அப்துல் றஹீம் (வ
பூர்வீக இடம்: ஹிஜ்ராபுரம், (
தற்போது வாழும் இடம்: நு 19. எம். எஸ். பரீத் (வயது 45)
பூர்வீக இடம்: நீராவிப்பிட்டி.
தற்போது வாழும் இடம்: 20. ஏ.எம். வஸீர். (வயது 35)
பூர்வீக இடம்: முறிப்பு, குமு தற்போது வாழும் இடம்: க

(வயது 72) முள்ளியவளை. ல்முனைக்குடி, ஆலங்குடா,
தியர் (வயது 40)
முள்ளியவளை. ல்முனைக்குடி, ஆலங்குடா,
சாகிப் (வயது 82) முள்ளியவளை. கதி முகாம் நுரைச் சோலை. தேம்பி (வயது 65)
முள்ளியவளை. லாச்சேனை, நுரைச் சோலை.
"', முள்ளியாவளை. சமூலை, மதுரங்குளி பயது 48)
முள்ளியாவளை. மலாந்தழுவ, மதுரங்குளி.
33)
முள்ளியாவளை. தீவு. பது 48)
முள்ளியாவளை.
ரைச்சோலை.
ளமுனை.
முனைக்குடி, நுரைச்சோலை.

Page 195
21. மெளலவி. யூ.எம்.சலீம்.
பூர்வீக இடம் : நீராவிப்பிட்டி
தற்போது வாழும் இடம்: . 22. மெளலவி. எம்.எச்.எம்.
பூர்வீக இடம்: நீராவிப்பிட்
தற்போது வாழும் இடம்: 23. ஏ.சீ.சீ.ஏ.றகீம் (வயது 7
பூர்வீக இடம்: முல்லைத்தீவு
தற்போது வாழும் இடம்: 24. எம். அலித்தம்பி (வயது 8
பூர்வீக இடம்: முல்லைத்தீ.
தற்போது வாழும் இடம்: 25. எம். உசன் தம்பி. (வயது
பூர்வீக இடம்: முல்லைத்தீன் தற்போது வாழும் இடம்: . தஸ்தீன். எம்.ஏ
தற்போது பாரும் இம். சமி

-, முள்ளியாவளை. சமீரகம். இபுராகிம்.
டி, முள்ளியவளை. நீர்கொழும்பு. 2) ஜே.பி. குவாஸி.
புத்தளம்.
5)
வு. குறிஞ்சிப்பிட்டி .
90)
கற்பிட்டி.
றகம். கொத்தாள்தீவு
177

Page 196
உசாத்துரை
Brohier, R.L., 1934. Ancient Irrigation Works in Ceylon, I
Chitty, C.S., 1834. The Ceylon Gazetteer Colombo: Ci
Cigar, Norman, 1995. Genocide in Bosnia: The Policy of Texas A&M University Press.
Counterpoint, 1993. "Government Gives People N Vol.1(8):15-19.
The Daily News, Variuos Years.
Deng, Francis, 1993. "Protecting the Internally Displaced: A Paper Presented at the Conferenc on 18th and 19th August 1993 in Co
-, 1995. Internally Displaced Persons Rep Secretary-General, Mr, Francis Deng on Human Rights Resolutions, 1993
Department of Census and Statistic Censuses of Sri Lanka, 1953, 1963.
ment of Census and Statistics.
Department of Census and Statistic Sri Lanka Census of Population an XIII Mullaitivu District Report Col Statistics.

ண நூல்கள்
Part II. Colombo: Government Press.
otta Church Mission Press.
Ethnic Cleansing College Station:
-0 Choice But to Join Tigers”
A Challenge for the United Nations" e on Displacement and Democracy lombo.
sort of the Representative of the
Submitted Pursuant to Commission 195.
:s, Various Years. 1971 and 1981 Colombo: Depart
s, 1984. d Housing. 1981. Volume - 1, Part lombo: Department of Census and

Page 197
Dewaraja, Lorna S., 1972. A Study of the Political Adminis Kandyan Kingdom of Ceylon Investment Ltd.
Government of Ceylon, Various Y Censuses of Ceylon, 1871, 1881, 18 Colombo: Government Printers.
Hasbullah, S.H., 1991. “The Political Future of the North A Paper Presented at Colombo Is December 1991.
--, 1992. A Report on the Loss of Movable Ousted from the Northern Provinc Parliament of Sri Lanka in May 1
—, 1993. “A Preliminary Report on the Cor Paper Presented at the Conferenc Organized by the University of C August 1993 in Colombo.
—, 1994. “Refugee Migration” A Paper P Conference held at the Departr Peradeniya, 7-9 August 1992.
-, 1996a.
We Want to Go Home (President Meeting) Colombo: The Northern

trative and Social Structure of the 707-1760 Colombo:Lake House
ars, 91, 1901, 1911, 1921, 1931 and 1946
ern Province Muslims of Sri Lanka" lamic Centre of Sri Lanka on 10th
and Immovable Assets of Muslims e in 1990 A Report Submitted to the 992. Hansard Vol 79, No. 14.
nditions of the Muslim Refugees” A e on Displacement and Democracy olombo and —— on 18th and 19th
resented at National Geographical nent of Geography, University of
ial Address Delivered at the Public
Muslims' Rights Organization.

Page 198
—, 1996b. Refugees are People: Proceedings Program for the Forcibly Evicter Colombo: The Northern Muslims
-, 1996c. “Recent Refugee Migration in S Seminar on Migration, Organized the University of Kelaniya (23-24
—, 1996d. “Ethnic Conflict and Displacemer the International Workshop on Caus held in Kandy (15-17 July 1996).
The Island, Variuos Years.
Israel, R.,1978.
Muslims in China: A study in cu Institute of Asian studies monograf Press Ltd.
Kalin, Walter, 1991. "Refugees and Civil Wars: Only A International Journal of Refugee la
Lewis, J.P., 1993. A Manual of the Vanni District, C Lake House Book Shop.
McGilvery, D., 1974. Tamils and Moors: Caste and Mati Unpublished Ph.D. Thesis. Univer
Mines, M., 1978. "Lebbai” in Ric! Muslim people: A world Ethnogr press

of the Workshop on the Resettlement
Muslims of the Northern Province Rights Organization.
i Lanka” A paper presented at the under UGC/UNFPA Project held at August 1996).
at in Sri Lanka” A paper presented at es of Conflict and Conflict Resolution
Lltural confrontation ( Scandinavian oh series No.29) Bangkok: Craftsman
I matter of Interpretation?”
w 3(3) July:435-451,
eylon Colombo:
ician Structure in Eastern Sri Lanka sity of Chicago,
iard v, wees(ed.) iphic survey west part: Greenwood
80

Page 199
Miller, R.E., 1976. Mapila Muslim Madras: Orient Longman Ltd.
Ministry of Shipping, Ports, Rehal Performance, Policy, Strategies ar
Muthar, Hari Mohan, 1995. “Introduction” in Development, I by Hari Mohan Muthar with the Delhi: Vikas Publishing House.
Navaratnam, C.S., 1960. Vanni & Vanniyas Jaffna: Eelana
North-East Provincial Council, 19 Statistical Information of the Nor
Provencher, R., 1998. “Malayo-polynesian-speaking peo Richard V. Weeks(ed). Muslim pe
Raheem, M.S., 1979. History and Culture of Jaffna Musl
Refugee Family Information, 1994 "The Family Information of the Northern Province in October, 19 the Refugee Family Information and Others) Colombo: Jama'ath-e
Richardson, J., 1990. Sri Lanka Violent Data 1948International Service, The Americ

s of Kerala: A study in Islamic Trends
vilitation and Reconstruction, 1996. id Programme Colombo: Ministry.
isplacement and Resettlement edited Collaboration of Michael M. Corea
du Limited.
96.
th-East Province Tricomalee: NEPC.
plein
eople.
ims (Tamil) Jaffna: Mamakal Printers.
Muslim Refugees Ousted from the 90” Volume 1 - 23 (A Compilation of of 9000 Families by S.H. Hasbullah --Islami (Colombo).
1988 Washington, D.C.:School of can University.
181

Page 200
Saleem, A.R.M., 1990. The History of Akkaraipattu (Tam
Shukri, M.A.M., 1986.
Muslims of Sri Lanka: Avenue to,
Sivasegaram, S., 1996. Tamil Times 15th December 1996
Sitrambalam, S.K., 1992. Kingdom of Jaffna (Tamil) Thirunel
--, 1993. Jaffna Ancient History (Tamil): Publication.
Sivathamby, K, 1987 "The Sri Lankan Ethnic Crisis and M Political Review" . in Facets of C.Abeysekera and N.Gunasing Association.
Survey Department, 1936.
Mullaitivu One-Inch Map Colombo
United Nations, 1994. Internally Displaced Persons (E/CI
, (No Date Given). Human Rights and Refugees Fact
US Committee for Refugees, 1991 Issue Paper: Sri Lanka, Island of R American Council for Nationalities
Weeks, R.V.,"Introduction” in Rich
I&

1) Colombo: Hira Publication.
Antiquity Beruwala: Naleemiah Ins.
vely: University of Jaffna Publication.
Thirunelvely: University of Jaffna
Muslim-Tamil Relationships: A SocioEthnicity in Sri Lanka edited by :he. Colombo: Social Scientists
:Survey Department
N.4/1994144) Geneva: UN.
Sheet-20 Geneva: UN.
:fugees October, Washington, D.C.:
Service.
ard V. Weeks(ed). Muslim people
2

Page 201
பின்னில
இனப்பிரச்சினையால் உயிர் இழ
1987
பெயர்
வயது இடம்
68
25 3
* ஒ 2
35
28
சேகுமீராலெப்பை எஸ்.எச். அப்துல் கபூர் கே. எம். அப்துல் கபூர் எஸ்.அப்துல் காதர் ஏ.எம். அலாவுதீன் சுல்தான் குபைன் யாசீன் மித்தீன் | அபூசாலி நவாஸ் மீரான்கண்டு சம்சுதீன் ஏ.எஸ். அப்துல் அயாஸ் திருமதி இஸ்மாயில் எம். அசனா லெப்பை ஏ.எல் சாலிஹீன் எம்.எஸ். அப்துல் றஹீம் ஏ.சீ.நியாஸ் அப்துல் ஏ. கச்சு முகம்மது ஜப்பான் மகன் றபீக் எம்.அலாவுதீன் செய்னுதீன் கலீல் முகைதீன் றசாக அப்துல்சமது தௌபீக் அலாவுதீன்
தண்ணீர் நீராவிப்ட் தண்ணீ ஹிஜ்ராபு ஹிஜ்ராபு நீராவிப்பி ஹிஜ்ராபு நீராவிப்பு நீராவிப்பி நீராவிப்பி பிஜ்ராபுரம் ஹிஜ்ராபு நீராவிப்ட் நீராவிப்பு நீராவிப்பி ஹிஜ்ராபு நீராவிப்ட் தண்ணீ நீராவிப் முல்லை நீராவிப் ஹஜ்ரா முஸ் ை
34
* * * * * * * * * *
குறிப்பு: பாதிக்கப்பட்ட எனையவர்.
மூலம் வெளிக்கள ஆய்வு, 1996

Dணப்பு-1
தே முல்லைத்தீவு முஸ்லிம்கள் -1990
காரணம் ஆண்டு யாரால்
பூற்று
Jழ்
பூற்று வாகனம் மோதி 1984 இலங்கை இராணுவம் பட்டி துப்பாக்கிச் சூடு 1985 இலங்கை இராணுவம்
துப்பாக்கிச் சூடு 1986 இடை மோதலில் ரம்
செல் தாக்குதல்
1986 இலங்கை இராணுவம் ரம் -
துப்பாக்கிச்சூடு
1986 இலங்கை இராணுவம் ட்ெடி
கொலை
1986 E.P.R.L.F ரம்
கொலை
1986 E.P.R.L.F ஒட்டி
கொலை
1986 விபரம் இல்லை ஹெலித்தாக்குதல்
1987 இலங்கை இராணுவம் ட்ெடி ஹெலித்தாக்குதல்
1987 இலங்கை இராணுவம் துப்பாக்கிச் சூடு |
1987 இடை மோதலில் ரம் |
செல்தாக்குதல்
1987 I.P.K.F ட்ெடி ஹெலிதாக்குதல்
1987 1.P.K.F ட்ெடி ஹெலிதாக்குதல்
1987 I.P.K.F சிட்டி ஹெலிதாக்குதல்
1987 L.P.K.F ரம் துப்பாக்கிச் சூடு
1998 1.P.K.F விட்டி துப்பாக்கிச் சூடு 1988 1.P.K.F முறிப்பு துப்பாக்கிச்சூடு 1988 1.P.K.F பிட்டி துப்பாக்கிச்சூடு 1987 இடை மோதலில் லத்தீவு ஹெலித்தாக்குதல் 1987 இலங்கை இராணுவம் பிட்டி ஹெலித்தாக்குதல் 1988 I.P.K.F புரம் ஹெலித்தாக்குதல் 1990 இலங்கை இராணுவம்
லத்தீவு கொலை
1990 விபரம் இல்லை.
களின் விபரங்கள் கிடைக்கவில்லை.
83

Page 202
இலங் கையின் இனப் பி வெளியேற்றப் பட்ட
வடப
இப்பொதுத்தலைப்பில் வெ
தொகுதி 1: அறிமுகம். தொகுதி 2:
யாழ்ப்பாண முஸ்லிம் தொகுதி 3: முல்லைத்தீவு முன் தொகுதி 4:
மன்னார் தீவு முள தொகுதி 5:
முசலி முஸ்லிம்கள் தொகுதி எ:
மாந்தை - நானாட்டா தொகுதி 7:
வவுனியா முஸ்லிம்

ரச் சினையும் பலவந்தமாக மாகாண முஸ்லிம் களும்
ளிவரவுள்ள நுால் தொகுதிகள்
ம்களும் கிளிநொச்சி முஸ்லிம்களும்.
ஸ்லிம்கள் மலிம்கள்
ன் முஸ்லிம்கள் கள்

Page 203


Page 204
'அக
கால்
தண்ணிமு ஏர் பூட்டி உழுது வம் நந்திக்கடலில் இறால் 6
மீண்டும் பாங்கொல
முஸ்லிம்களில்
தமிழ் மக்
இரு சாராரும் நம் மகிழ்ச்சிகரமான அ
எம்ம
விடிவு
'மும்
PRINTED BY UNIE AF

தி முகாம்களில் கைதிகளாய் காலத்தை நொந்துகொண்டு
நாம் நமது சொந்த மண்ணில் 5 வைக்கும் காலம் வராதோ -
றிப்பு, காரையடி வயல்களில் ளம் சேர்க்கும் நாள் வராதோ வீசப் போகும் நாள் வராதோ
எமது பள்ளிவாசல்களில் பி கேட்கும் காலம் எப்போது
ன் நோன்புப் பெருநாளையும்
ஹஜ்ஜுப் பெருநாளையும் களின் தைப் பொங்கலையும்
சித்திரை வருடத்தையும் புடன் பகிர்ந்து கொண்டாடிய ந்த நாள் மீண்டும் வராதோ
என ஏங்கிக் கொண்டிருக்கும் வரின் எண்ணங்கள் ஈடேறும்
புதியதொரு பொழுதின் க்காக காத்திருக்கின்றோம் ”
ல்லைத்தீவு முஸ்லிம்கள்
(அணிந்துரையில் இருந்து)
BN 955-9445-03-0
RTS (PVT) LTD.