கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது கண் 2002.10

Page 1
மனிதர் இயற்கையுடன் இணைந்து வாழ முடியுமா? கேள்விக்கே இடமில்லை ஏனெனில் மனிதர்களே இயற்கையினி கூறுதான் தன்னைத்தானாக உருவாக்கியவன் அல்ல மனிதன் இயற்கையின் உற்பத்திதான் மனிதர்கள் இயற்கையின் கூறுதான் மனிதர்கள் உலகின் உயிர்த்தொகுதியில் ஒருசிறு கூறுதான் மனித இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல கோடானுகோடி உயிரினங்களுக்கும் உரியது வறியோரைச் செல்வந்தர் கட்டுப்படுத்துவது எ8 தவறானதோ! தாழ்சாதியினர் என்று உயர் சாதியினர் ஆள்வது எ! தவறானதோ! சிறுபாண்மையினரைப் பெரும்பான்மையினர் அட எவ்வளவு தவறானதோ! - ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்காக அமெரிக்க, ஐே நாடுகள் தீர்மானங்கள் எடுப்பது எவ்வளவு தவறா பெண்களை ஆணர்கள் தமக்கேற்ற வகையில் மா எவ்வளவு தவறானதோ'
அவ்வாறே இயற்கையைக் கட்டுப்படுத்துவதும் அடக்குவதும் ஆ இயற்கைக்காக நாமே தீர்மானங்களை எடுப்பதும் இயற் மாற்றுவதும் தவறானதே! இமது எதிர்காலச் சந்ததியினருக்கு கட்டடங்களை அன்றி
பிளாஸ்ப்ரிக்குளை அன்றி இரசாயனங்களை அன்றி வியாதிகளை அன்றி இயற்கையைப் பேணிச் சொத்தாகக் கொடுப்போ நஞ்சூட்டப்பட்ட ஆகாயம்
பிளாளப்ரிக் தேங்கிய நீர் நிலைகள் இரசாயனம் செறிந்த விதை நிலங்கள் இயல்பு மாற்றப்பட்ட தாவரங்கள், உயிரினங்கள், முக் தெரியா, கருத்தரிக்கா விதைகள் இனியும் வேண்டாம்.
போத்தலில் குடிநீர் வாங்கிக் குடிக்கும் காலம் வந்துவிட்டது. சிலிண்டரில் காற்றை வாங்கிச் சுவாசிக்கும் கால வரவேண்டாம்
oகமரை உச்சி
 
 
 

எங்களின் அறிவில் எங்களின் திறனில்
தங்கி நிற்போம் நாங்கள் எங்களின் நிலத்தில் எங்களின் விதைப்பில்
விளைவித்தே வாழ்வோம் கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறைகளை நீக்கி எழுந்திடுவோம் சூழலிணைந்து வாழும் வழிகளை மீளவும் ஆக்கிடுவோம்
சி. ஜெயசங்கர்
ஆசிரியர்கள்
ற்றுவது (சி. ஜெய்சங்கர்
ட்கமலாவாசுகி
ழ்வதும் உதவி ஆசிரியர்கள்
கையை
த. மலர்ச்செல்வன்
ஆசிரியர் குழு
F) கா. நிஷாந்தன்
ஜோ. கருனேந்திரா
30 பழைய வாழவீட்டுவிதி: மட்டக்களப்பு. NOU 战、W* 基薔*
ÖNGÖTLUGLĮ – 10/=

Page 2
பழையன கழிதலும் புதியன புகுதலும் எமது வாழ் ல் அன்றாடம் நடைபெறுகின்றது.எமது வாழ்க்கைக்கு உதவி யாகவிருந்த சில விருட்சங்கள் இன்று நமது வளாகங்களில் காணப்படாமை நம் சமூகத்திற்குப் பெரும் இழப்பாகும்.
நாம் நமது பிரதேசங்களிலிருந்து 1978ம் ஆண்டு புயலுக்குப் பின்னர் பல முக்கியமான விருட்சங்களை இழந்து விட்டோம்.இவ்வாறு அதிகம் இழந்துவிட்ட மரங்களுள் ஒன் றாக “தேற்றாமரமும் இடம்பெறுகின்றது. இன்று தேற்றாமரங் கள் ஆங்காங்கே ஒருசில இடங்களில் மாத்திரம் மிகக் குறைந்த
தேத்தாமரமு
8ö6ös Uu6oi Undb
அளவிலேயே காணப்படுகின்றன. இத்தேற்றாமரமானது பல் வேறு நன்மைகளை மனிதனுக்கு வழங்கக் கூடியவையாக இருந்தும், இம்மரங்கள் புயலுக்குப் பின்னர் பெருளவு நடப்பட்டு வளர்க்கப்படாமை மிகுந்த வேதனைக்குரிய விடயமாகவே இருக் கின்றது.
தேற்றாமரம் பல சிறப்புக்களைத் தன்னகத்தே கொண் டுள்ளது. இதனுடைய விஞ்ஞானப்பெயர் ஸ்ட்ரைச்நொளப் பொட் LIT (BLIT y Lê” (Strychnos Potatorum) என்பதாகும். இம்மரம் 'லோகெனியேசியே (Loganiaceae) எனும் குடும்பத்தைச் சார்ந்த தாகவும் இருக்கின்றது. இம்மரமானது சிறிய அல்லது நடுத்தர உயரமுடையதாக காணப்படுவதுடன், கறுப்பு அல்லது சாம்பல் நிறத்திலான பட்டையைக் கொண்டதாகவும், தடித்த கணுவிடை கனைக் கொண்ட இளந்தண்டுகளை உடையதாகவும் அமைந் திருக்கும்,
மேலும் தேற்றாமரத்தின் இலைகள் எளியவை இவை 7.3cm-12.km நீளமுடையனவாக இருப்பதுடன் இம்மரங்கள் கார்த்திகை மாதங்களிலேயே அதிகளவில் பூக்கின்றன. இதன் பூக்கள் வெள்ளை நிறமானவையாகும்.
தேற்றாமரம் பிரதானமாகத் தன்னகத்தே சில மருத் துவக்குணங்களையும் உள்ளடக்கியிருக்கின்றது. இன்றைக் குப்பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே பேணப்பட்டு வரும் குறிப்பாக நமது கிராமங்களில் பிரபல்யமாக நிலவி வரும் நாட்டுவைத்தியத்தில் (சித்த ஆயுர்வேத வைத்தியம்) தேற்றா மரத்தின் பயன்பாடு பெறப்பட்டு வருவதை நாம் காணக் கூடியதாகவுள்ளது. தேற்றாமரத்தின் விதைகள் நாட்டுவைத்தி யத்தில் சூரணம், லேகியம் முதலியவற்றை தயாரிப்பதற்குப் பயன்பட்டு வருகின்றன.
இவை மட்டுமல்லாது எமது வீடுகளில் நீரேந்து பானை களில் தேற்றாக்கொட்டைகனை இட்டு நீரை ஊற்றி வைப் பார்கள், ஏனென்றால் தேத்தாக் கொட்டைகள் நீரைச் சுத்திகரிப் பதுடன் குளிர்மையாகவும் வைத்திருக்கும். என்பதனாலாகும். இன்றைக்கும்கூட பல பழங்கால வீடுகளில் நீரைச் சுத்தப்படுத்து வதற்காக கிணற்றுக்குள் தேற்றாமரங்களின் வேர்களை இட்டு வைத்திருக்கின்றார்கள். இத்தகைய கிணற்று நீர் சுத்தமாகவும், குளிர்மையானதாகவும் இருப்பதை உணரமுடிகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி, தேற்றாத் தீவு போன்ற இடங்களில் சில வீடுகளின் பழைய கிணறுகளின் அடிக்கொட்டானது தேற்றாமரத்தின் அடியைக் குடைந்து செய் யப்பட்டவையாக இருப்பதைக் காண முடிகின்றது. இத் தேத்தாக் கொட்டையுடைய கிணற்றை மையமாக வைத்து வழிவழியாக வரும் கதைகளும் சொல்லப்படுவதைக் கேட்க முடிகிறது.
அதாவது, நான்கு மனிதர்கள் வெளியூரிலிருந்து குறித்த பிரதேசத்திற்கு வந்தார்களாம். அவர்கள் வந்த களைப் புத்திர ஒரு வீட்டிலே நீர் கேட்டு வாங்கி அருந்தினார்களாம்.
மூன்றாவது கனர்
エ

அந்த நீர் தேற்றாக்கொட்டுக் கிணற்று நீர் ஆனபடியால் சற்று ருசியாகவும், குளிர்மையாகவும் இருந்துள்ளது. இந்த நீரின் தன்மையில் ஆசைகொண்ட அவர்கள் நால்வரும் ஒரு இரகசி யத்திட்டம் தீட்டினார்களாம். அதுவென்னவெனில் இன்று இரவு இவ் வீட்டில் தங்கியிருந்து கிணற்றின் அடியிலுள்ள தேற்றாக் கொட்டினைக் களவாடிச் செல்லல் என்பதாகும். இக்கதையினை "கிணறுகாவிகள் கதை" எனக்கூறுகின்றனர்.
இதிலிருந்து பார்க்கும்போது தேற்றாமரமானது நீருடன் தொடர்புடையதாக குடிநீருக்கு மிகவும் வேண்டப்பட்டதாக இரு ந்துள்ளதை அறிய முடிகி றது. இத்தோடு இவற்றை உறுதிப்படுத்தும் சாட்சியாக தேற்றாமரங்கள் உயர்ந்து வளர்ந்துநிற்கும் இடங்களில் நிலநீர் மட்டம் குறையாதிருப் பதும் கண்டறியப் பட்டுள் ளமை முக்கிய அம்சமாகும். மேலும் தேற்றா மரத்தினுடைய முக்கியமான தன்மைகளை, அதன் பயன் பாடுகளை எல்லாம் நமது நாட்டிலுள்ள பிரபல சித்த வைத்தியர்களுள் ஒருவர் பின்வருமாறு கூறுகின்றார்
ஜோ, கருனேந்திரா
“தேற்றாங்கொட்யிைட்டுத் தேற்று மைந்தரை" என்பது பழமொழி குடிநீர்ப்பாணடத்தினுள் இரண்டொரு தேற்றாக் கொட்டைகளைப் போட்டு வைப்பதால் குடிக்கும் நீரானது சுத்த மான தெளிந்த நீராகவும், கிருமித்தன்மையற்றதாயும், குளிர்ச் சியுள்ளதாயும், நச்சுத்தன்மைகளைப் போக்கியும் பாதுகாப்பளிப் பதுடன் அன்றாட மனித வாழ்விற்கு உற்ற நண்பனாகின்றது
* இவ்வித்தினைப் பொடித்து பாலில் கலந்து குடிக்க நீர்க் கடுப்பு, நீர்ச்சுழுக்கு, போன்ற சிறுநீர் அழற்சி நோய்கள் தீரும்
* தேற்றாவித்தின் பொடியை தேனிற்குழப்பி உடற் கட்டிகளிற்
பூச சீக்கிரம் கட்டு பழுத்து உடைந்து விடும்.
* பொடியை தேனிற் கலந்து குழந்தைகளுக்கு ஊட்டினால்
மார்புச்சளி, வறண்டசளி இளகி வெளியாகும்.
+ நீர்விட்டுச் சுத்தமான கல்லில் இவ்வித்தை உரைத்து இரவில் கண்களைச்சுற்றிப் பிறை வளையமாய் சில தினங்களுக்குப் பூசிவர கண் எரிச்சல், சிவப்பு, பீழை வெளியாதல் நீங்கி கண்கள் குளிர்ச்சியும் அழகும் பெறும்.
+ தேற்றாக்கொட்டை லேகியம், தேத்தாவிதை மாத்திரை என மருந்துகளாகவும், ஆளவம், அதிஷ்டங்களைத் தெளிய வைத்துச் சேகரிக்கவும் தேத்தாவிதை மருத்துவத்தில் மிகப் பயன்படுத்தப்படுகிறது.
+ தேத்தாவிதை, கடுக்காய்த்தோல், ஆவரசுவித்து விளாம் பிசின் என்பனவற்றை சமமாய்ப்பொடித்து தினம் மோருடன் இருவேளை அருந்திவர நீரிழிவு நோய் கட்டுப்பட்டுவிடும்
+ தேற்றாமரத்தின் வேர், பட்டை வித்து, இலை, கனி, காய் இவை களையும், நெல்லிமரத்தின் வேர், வித்து, பட்டை, இலை, காய், கனி, வற்றல் இவைகளையும் சமன் கலந்து முறைப் படி ஊறுகாப், துவையல், குடிநீர் வகைகளாகப் பயன் படுத்தி வருவதால் பல்லைப்பற்றிய நோய்கள் குடல் ஜீரண சம்பந்தமான நோய்கள், சிறுநீரகம் சம்பந்தமான மேக நோய்கள், பாண்டு, பெருவயிறு, மூலநோப், பெரும்பாடு போன்ற கர்ப்பப்பை சார்ந்த நோய்கள், வாய்வு ரோகங்கள் போன்ற பல பிணிகளுக்கு மருந்தாகவும் அமையும் ار
ஐப்பசி - 2002

Page 3
/ இத்துடன் மேற்படி நோய்களால் உடல் தாகமுற்று
விடாமலும், மேற்படி நோய்களால் தளர்வுற்ற உடலுக்கு வன் மையூட்டிப் போஷிக்கும் தன்மையுள்ளதாகவும் விளங்கி பல நிலைகளிலும் மானிடரின் இடரை நீக்குகின்றது.
இலங்கை, தென்னிந்தியா, பர்மா, வங்காளம் போன்ற நாடுகளில் வளர்வதாகக் கூறப்படும் இத்தேற்றாமரம் இல்லம், கதகம், சில்லம், தேறு என்ற வேறு பெயர்களாலும் தமிழில் குறிப்பிடப்படுகின்றது.
“கூற்றென்றுரைக்குவிழிக் கோமளமே! எப்போதும். ஊற்றாம் பிரமியமும் உட்புண்ணும்-ஆற்றவிலல் வெட்டை அகக்கடுப்பும் வீறிவரிற் றேற்றாங் கொட்டைதனை நீயெடுத்துக்கொள்”
“தேற்றாம் விதையதுதான் தீபணத்தைப் போக்குமனல் ஆற்றுமிரு கண்ணுக்கருமருந்தாம்கூற்றாயிருந்துங் கிரிச்சரத்தை எங்குமிலா தோட்டுங் குருத்துவமுண்டாங்குறி”
(அகஸ்தியர் குணபாடம்)
20ரலாறு நெடுகிலும் தமிழ்மக்களின் மரபுவழி தாய் நிலப்பிரதேசமாக விளங்கும் திருகோணமலை இலங்கையின் கிழக்குக் கரையோரமாக அமைந்துள்ளது. அகன்ற பொருளாதார வள மையங்களையும், தெளிவான கலாச்சாரப் பாவனைகளையும் பின்னணியாகக் கொண்டுள்ள அதேவேளை, நில, கடல் சார்ந்த தனித்து வமான புவியியற் கட்டமைப்புகளையும் தன்னகத்தே கொண்டு உலகின் தலைசிறந்த இயற்கைத்துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கு கின்றது. அத்தோடன்றி, சிறப்பான தரையிறக்க வசதிகளைக் கொண்டுள்ள துறைமுகமும், போரியல் நுணுக்கம் மிக்க கடற்படைத் தளமும், தென் ஆசியாவில் அமைந்துள்ள அதன் நிலையமும், இராஜ தந்திரரீதியாக திருகோணமலையின் முக்கியத்துவத்தை மேலும் வலுவடையச் செய்து நிற்கின்றது. இது அமெரிக்கா, இந்தியா உட்பட்ட உலகின் பல பிரதான நாடுகளின் திருகோண மலை மீதான உன்னிப்பான பார்வைக்கு அர்த்தமிடுகின்றது.
s ... “ A C
héfistatuena flle 談歸員》 o of a °鼠剔 "肆
J SSVUVUUllgUUU uy!!!
| i gcTOTIOaifili.oroIir உத்தேசிக்கப்பட்டு
நிலக்கமின்நிலையம்தொடர்பானருகுழலியல்பா
திருகோணமலையின் இயற்கையில் நீர், மண், பாறைகள் உள்ளிட்ட பெளதீகச் சூழலின் பல்வகைத்தன்மையும், சீரான தட்ப வெப்ப வேறுபாடுகளும், சுழற்சி முறை காலநிலை மாற்றங்களும், கடல் மற்றும் கடற்கரை அமைவுகளும் காணப்படுகின்றமை யானது. தாவர விலங்கு உயிர்பல்வகைத்தன்மை பரம்பியும் செறி வாகவும் வியாபிக்க வழிசமைக்கின்றன. மேலும் இங்கு வாழும் மக்களின் பிரதான ஜீவனோபாயமாக விவாசயமும் மீன்பிடியும் இருந்து வருகின்றன. எனவே, வாகன நெரிசல்மிக்க கொழும்பு, காலி, கண்டி போன்ற கைத்தொழில் நகரங்களைப் போலல்லாது இங்கு சூழல் மாசடைதல் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. இருந்த போதிலும் அண்மைக்காலமாக திருகோணமலையின் இயற்கைச் சூழல் மீதான அச்சுறுத்தல் அதிகமாகிச் செல்கின்றமை கவலை தரக் கூடிய விடயமாகும். இதன்காரணமாக இயற்கைச் சமநிலை குழப்பப்படுவதுடன் மனித, இதர உயிரின வாழ்தகவு குன்றிச் செல் வதையும் யாராலும் மறுதலிக்க முடியாது.
இன்று துறைமுகத்தின் வாயிலில் Prima மாஆலையும்
அதனோடு இணைந்த உணவு, தீவன, உற்பத்தியகங்களும், டோக் கியோ நிறுவனத்தின் சிமெந்து, அஸ்வெஸ்ட்டஸ் கூரைத் தகடுகடு தொழிற்சாலைகளும் நூற்றிற்கு மேற்பட்ட எரிபொரு ளெண்ணெய் நிரப்பு தாங்கிகளும் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து வெளியாளும் USO, போன்ற நச்சு வாயுக்களும், தூசுதுகள்களும், எண்ணெய்
மூன்றாவது கணி -
 
 
 
 
 
 

களில் கன்றுகளாக நட்டு சில மாதங்கள் பேணினாலே போது
என்கிறார். மேற்படி தேற்றாமரம் பற்றிய குறிப்புகி
களையெல்லாம் வைத்து நோக்கும்போது தேற்றாமரமானது மனித வாழ்க்கைக்கும், சுகாதாரத்திற்கும் பெரிதும் பயன்பட்டு ள்ளமை தெரிய வருகின்றது. இவ்வாறு தன்மைபல தரும் தேற்றாமரங்கள் நமது பிரதேசங்களில் அருகியே காணப்படு கின்றது. தேற்றாமரத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்ட “தேற்றாத்தீவு’ என்ற ஊரிலேயே இம்மரங்கள் அரிதாக உள்ளன. இவ்வாறுஅங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப் படும் தேற்றாமரங்களை ஏன் எம்மால் பேணமுடியாது? தேற்றா மரங்களை நாம் நமது பிரதேசமெங்கும் நட்டுப்பேணுவதால் எமது சுற்றாடல் தூய்மையடைவதுடன் சுகாதாரம் வாய்க்கப் பெறும் என்பதும் உண்மை.
தேற்றா மரங்கள்ை தேர்ந்தெடுக்கப்படும் சில இடங்
மானது. பின்னர் அவை தன் பாட்டிலேயே வளர்ந்து விருட்சங் களாகிவிடும். இவை வளர்க்கப்படுவதால் எமக்குச் செலவீன மில்லை ஆனால் பயன்களோ அதிகம்
எனவே நாம் அனைவரும் “தேற்றாவை நடுவோம்
தேறிய பலண்பல பெறுவோம்” 9
se sa 9. O இந்த வகையில்
: 9. x ox (2 K :
|jlféléllllll[[|]]áéíI0 ဈေးန္ဟစ္ထိန္းမ္ယန္
9.
முடி மறைப்பதற்காக, அரசாங்கம் இத்திட்டத்தினால் 2000 பேருக்கு
நியாயமானதாகும். ஏனெனில் அமெரிக்கா தனது இயற்கை மனித சூழலைப் பேணிப்பாதுகாக்க நிலக்கரி மின் உற்பத்தி
கசிவுகளும் இங்கு சூழல் மாசடைதலுக்கு குறிப்பிடத்தக்க காரணி களாகின்றன.
அரசாங்கம் விடுதலைப் புலிகளுடனான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு (Mou) பின்னர் எமது தாயகப் பிரதேசங்களில் சில தான்தோன்றித்தனமான திட்டங்களை நிறைவேற்றி வரு கின்றது. இவற்றினால் ஏற்படப்போகும் இயற்கைச் சூழல் அனர்த் தங்களையோ, மக்களின் நன்மை தீமைகளையோ, அல்லது அவர் களின் கருத்துக்களையோ அறியவிரும்பாது அவற்றைச் செயற் படுத்தியும் பின்னர் அவை மக்களுக்குச் சாதகமானவை என உரக்கக் கூவியும் வருகின்றது. “சூழற்தாக்க மதிப்பீடு” (Environmental Impect Assesment) செய்யப்படாமலும், எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எமது வளங் களையும் வளப்பிரதேசங்களையும் விற்று தனது பொருளாதார இலக்கை சாதித்துக் கொள்ளவே விளைகின்றது.
யில் அமைக்கத் திட்ட
மிடப்பட்டுள்ள நிலக்கரி, | மின்னுற்பத்தி நிலையம் १| |} இங்கு அரசாங்கத்தின்
| 41 நிலைப்பாட்டை ஜயந்திரி × × பற வெளிக்காட்டி நிற் கின்றது. எரிபொருள் மின்சக்தி அமைச்சு 09 ஜூலை 2002 இல் வெளியிட்ட அறிக்கையில் 600 மில்லியன் அமெரிக் கடொலர் (57 bin.RS) செலவில் 300mW நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம், திருகோணமலை, கிளப்பன் பேக் (Clappenberg) இல் நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் இது 2006ம் ஆண்டு முதல் இயங்கத்தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. இதனால் ஏற்படப்போகும் சூழலியல் பின்னடைவுகளை
வேலைவாய்ப்பு கிடைக்கவிருப்பதாகவும் இதன் மூலம் திருக்கோண மலையின் பொருளாதாரக் கட்டமைப்பு உயரும் என்றும் தம்பட்டம் அடிக்கின்றது.
முதற்கட்டமாக அமையவிருக்கும் 110mW நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்திற்கு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் அமெரிக்கா, இந்தியா, ஜெர்மன், நெதர்லாந்து ஆகிய நாடுகள். பின்புலங்காளகச் செயற்பட்டு வருவதனால் இத்திட்டத்தின் மீதான ஓர் ஐயப்பாடு. திருகோணமலைச் சமூகத்திற்கு தோன்றியிருப்பது
நிலையங்களைத் தடுத்துவருகின்றது. இதற்காக 1970இல் தனது
ஐப்பசி - 2002

Page 4
போராளுமன்றத்தில் “தூயவளி’ சட்டம் (Cleanairact), சூழல் பாது a5TÙqë Fib (Environemntal Protection Act) (8 JT68ip gFÜLÉ களை இயற்றியிருப்பதும் மற்றும் சூழல் பாதுகாப்புசபை (EPA) GreenPeace போன்ற அமைப்புக்களை நிறுவியிருப்பதும் இங்கு கோடிட்டுக் காட்ட்ப்பட வேண்டிய விடயங்களாகும்.
கடந்த காலங்களில் நிலக்கரி உபயோகத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளின் சில ஆவணப்பதிவுகளை இங்கு சுட்டிக்காட்டுவது பொருந்தும். 1930 இல் பெல்ஜியம் நாட்டில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட S02, H2SO4, நசிவினால் நூற்றுக்காணக்கானோர் கொல் லப்பட்டனர். வீடுகளை வெப்பமேற்ற நிலக்கரி பயன்படுத்தப் பட்டதால் ஏற்பட்ட புகை (Smog) இனால் 1948ல் லண்டன் நகர வாசிகள் 600பேர் இறந்தனர். அத்தோடு அங்கு நான்கு வருடங் களின் பின் நிலக்கரி புகை சேர்வினால் பனிமூட்டம் போன்று உருவாகியது. இது “Killerfog” எனப்பட்டது. இதன்மூலம் தெளி வுப்பார்வைத்தூரம் (Visibility) 2m ஆக குறைந்த அதேவேளை 4000 மனித உயிர்களும் காவுகொள்ளப்பட்டன. மீண்டும் நான்கு வருடங்களின் பின்னர் 1000 பேர் வரையானோர் நிலக்கரி மாசினால் மாண்டனர். இதனைத் தொடர்ந்து அதேஆண்டில் நிலக்கரி பாவ னைக்கு எதிராக இறுக்கமான சட்டம் ஒன்று இங்கிலாந்துப் பாரா ளுமன்றத்தில் இயற்றப்பட்டது. துருக்கி, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பாவின் மத்திய பகுதியில் “Blackfriangle’ எனப்படும் நிலக் கரிப் புகையினால் சூழல் மாசடடைந்த பகுதி உருவாகிவரு கின்றது. இது நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு இடை யேயான பகுதியாகும். இங்கும் தற்போது நிலக்கரி சக்தி பிறப் பாக்கத்திற்கு எதிரான அலைகள் கிளம்பி வருகின்றது.
இதேவேளை திருகோணமலையைப் போன்றே, துருக்கி அரசினால் டாடநெல்லிஸில் (Dardanelles) தற்போது அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 300mw நிலக்கரி மின் உற்பத்தி நிலைய த்திட்டத்திற்கு எதிராக “கனக்கேல்’ சுற்றுச் சூழல் பீடம் (Canak kale Environmental Platform) o si 6tili L. 22 960ишца, а 6i எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதற்கு Green Peace அமைப்பும் ஆதரவு தெரிவித்து இணைந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நிலக்கரி என்பது உண்மையில் பல்லாயிரம் ஆண்டு களுக்கு மேலாக மண்ணுள் புதையுண்டுபோன உயிரங்கிகள், சேதனப் பொருட்கள் போன்றன நுண்ணுயிர்களினால் பிரிந்தழிக்கப் பட்டு உயரமுக்கம், உயர் வெப்பத்தின் கீழ் செறிவாக்கப்பட்ட சேதனப் பொருளாகும். இது காபன் மூலகத்தையே அடிப்படையில் கொண்டதாகும். நிலக்கரி எரியூட்டப்படும் போது அதன் சக்தி வெப்பமாக வெளிவிடப்படுகின்றது. இவ்வெப்ப சக்தியிலிருந்தே நீராவி இயந்திரங்கள், சுழலிகள் (Driveturbine), வெப்பமாக்கிகள் போன்றன இயக்கப்படுகின்றன. நிலக்கரி உபயோகத்தின் ஆரம்ப கால கட்டங்களில் இது புகையிரதங்களுக்கே பயன்படுத்தப்பட்டது. தற்போது சக்தி பிறப்பிக்கும் நிலையங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
நிலக்கரியில் சேதனப் பொருட்களுடன் சேர்ந்து சூழலுக் கும் உயிரினங்களுக்கும் ஊறு விளைவிக்கக் கூடிய அசேதன, நச்சு விளைபொருட்களும் காணப்படுகின்றன. பிரதானமாக நிலக் கரி நான்கு வகைப்படும்.
1. Anthracite/வன்நிலக்கரி - சூழல் மாசுபடுத்திகள் மிகக்
குறைவாகக் காணப்படும். எரியூட்டுவது கடினம்.
2. Bituminous / மென் நிலக்கரி / முற்றா நிலக்கரி - சூழல் மாசுபடுத்திகள் அதிகம். எரியூட்டுவது இலகுவானது.
3. Cannel Coal கால் வாய் நிலக்கரி - எரியூட்டுவது இல
குவானது. ஆனால் சூழலை மாசுபடுத்தும். வாயு வெளி யேற்றங்கள் அதிகமாகும்.
4. Peal - ஒரளவு முற்றா நிலக்கரியின் தன்மையுடையது.

இங்கு குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான விடயம்) திருகோணமலையில் திட்டமிடப்பட்டுள்ள நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்திற்கு இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட இருக்கும் நிலக்கரி Bituminous என்ற முற்றா நிலக்கரி வகைக்குரியதாகும். எனவே, இதன் மூலம் திருகோணமலையின் சூழல் மிக ஆழமா கவும் அகலமாகவும் மாசுபடும் என்பதில் எந்த ஐயப்பாடுகளும் இல்லை.
நிலக்கரி ஒரு அசாதாரண சிக்கல்தன்மை வாய்ந்த பொருளாகும். இதில் 40% இற்கு மேல் நீர் காணப்படுகின்றது. இதை விட சூழலை மாசுபடுத்தும் நச்சு மூலக்கூறுகளும் காணப்படு கின்றன. நிலக்கரியின் உற்பத்தி, சுத்திகரிப்பு, பாவனை என சகல கட்டங்களிலிருந்தும் சூழல் மாசாக்கிகள் (Polutant) சூழ லுக்குச் சேர்க்கப்படுகிறது. சில கனியங்கள் நிலக்கரியுடன் காணப் படும் போது அவற்றிலிருந்து வெளிப்படும் சில உலோகங்கள் சூழலுக்கு மிகுந்த நஞ்சாக அமைகின்றது.
2) gijIIJizHLuTé5 :- 1. 63)Lu60)Jgib (Purite) - 9Ag gFLb (Hg) 92,ğF6öñéib (AS)
2. S6ð60Ó (Ilite) - GGJ Tuólub (Cr) 3. ஸ்பலறைற் (Sphalevite) - கட்மியம்
(Cd), நாகம் (Zn), நாகசல்பைற் கனியம்)
இவற்றுடன் நிலக்கரி சுத்திகரிப்பின் போதும், பாவனை யின் போதும், பக்க விளைவாகவும், செலனியம் (Se), ஈயம் Pb), வெள்ளி (Ag), செம்பு (Cu), நிக்கல் (Ni), பெரிலியம் (Be) அத்து டன் ஏனைய சிறிய அளவிலான கதிர்வீச்சு மூலகங்களும் சூழலுக்கு இழக்கப்படுகின்ற உலோகங்களாகும். வாயு மற்றும் ஆவி வடிவில் ஐதரோக்குளோரிக் ஆவி (HCl) கந்தகவிரொட்சைட் (SO2) நைதரசன் ஒக்சைட்டுகள் (NOx) ஐதரசன் புளோரைட் (HF) உலோகத்து கள்கள், சாம்பர் துகள்கள் (Fyash), தூசுதுணிக்கைகள் (Paticulate Mater), தார் (Tar) போன்றனவும் வெளிவிடப்படுகின்றன.
நிலக்கரி எரியூட்டப்படும் போது
இவற்றைவிட பெருமளவான காபனீரொட்சைட் (CO2), காபன் மொனொக்சைட் (Co) என்பனவும் வருகின்றன.
(தொடரும்.)
S-S- 編*龕離 வாசுகி ஜெயசங்கரின் பிள்ளையர் பறை ஓவியம் 4- ஐப்பசி - 2002

Page 5
估
1992 fühlLUss “D)ö’ öhl)öst als இச்சிறுகதை அதன் முக்கியத்துவம் கருதி நன்றியுடன் மீள்
சொந்த வீட்டில் தங்கி எவ்வளவு நாளாயிற்று
பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததிலிருந்து, எண்பத்தியேழாம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வாடகை அறைக்கு குடிவந்ததிலிருந்து, இன்று வரை சொந்த வீட்டில் ஒரு வாரமோ இரு வாரமோ ஆறுதலாகத் தங்கியது கிடையாது.
வீட்டுச் சூழல் அவனுக்கு அவ் வளவு ஒத்து வராததினால் இப்படி அந்நியம்.
ஞாயிற்றுக் கிழமைகளில் தான் ஓய்வு, ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்குச் சென்றாலும், அவன் ஒரு விருந்தாளி வந்து போவதைப் போல வந்து போய்விடுவான். விடுமுறைக் காலங்களில் கொழும்புக்குச் சென்று அவனுடைய வெளிநாட்டு நண்பர் களுடன் தங்குவது. இப்படியே வாழ்க் கைச்சக்கரம் சுழன்று மூன்று வருடங் கள் ஆகிவிட்டதா? நினைக்கவே அவ னுக்கு வியப்பாக இருந்தது.
அன்று ஒருநாள் வீட்டில் தங்குவோமென்று முடிவெடுத்து, காலை ஒன்பது மணிக்கே வீடு போய்ச் சேர்ந்துவிட்டான்.
காற்சட்டையக் கழற்றி சாரத்தை உடுத்திக் கொண்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான். அப்போது அக்கம் பக்கத்து வீட்டுச் சின்னஞ் சிறி சுகள், மூன்று படலையைத் திறந்து கொண்டு வந்து கொண்டிருந்தன. அவர் களில் ஒரு குழந்தையை அவனுக்கு யாரென்று அடையாளம் தெரியவில்லை. விபுலானந்தனின் குழந்தையாக இருக் குமோ என்று நினைத்தான்.
விபுலானந்தன் அவனுடன் ஐந்தாம் வகுப்புவரை ஆரம்பப் பள்ளி யில் ஒன்றாகப் படித்தவன். அத்துடன் அவன் படிப்பை நிறுத்திக்கொண்டான். பின்பு பத்தொன்பதாம் வயதில் காதல் கல்யாணம் கட்டிக்கொண்ட அவனு டைய பிள்ளையாகத்தான் இருக்க
வேண்டும். ஏனெனில் அதனுடைய ܢܠ
மூன்றாவது கண்
முகச்சாயல் விபுலா
இருக்கிறது. ‘அட
அயலவர்களின்
அளவிற்கு நான் வீ மாகி விட்டேனா? ஒரு புற மி வெட்கமாக இருந்தது.
அவர்க
முற்றத்தால் அவை தாண்டிப் போகும்
警
தான் பேச்சைக் ெ “எங்கை போறியள்
66 99
சொன்னால் விடுவ இல்லாட்டி விட அவர்களைத் தடு “நாப்பழ மூன்றும் ஒத்து இ களின் மழலை ( லேயே அவனுடை! மையாகவே இரு
“நாப்பழ 99 جسمبر t yÔLfb
“எங் ை பாப்பம்?”
"நா.ப். “இல்லை “நாவல்ப் “சரி, போ
அவனு வளவுக்குள் ஒரு நாவல் மரம் நிற்ப அவனுக்கு ஞாப நாவல் மரத்தை ஆ ருந்தான். அந்த ந
வளவு காலமும்
 

GGUJTg21Talliji “é926Jørveqů (6îuguDgub” BT DJÖ JGJÖ GEFÜLLÜUGötöO.
னந்தனைப் போன்று எனக்கு என்னுடைய விபரமே தெரியாத ட்டிலிருந்து அந்நிய
&লণ্ড
கொடுத்தான். స్థ9
போறியளெண்டு |ன், மாட்டன்’ எழுந்து த்து நின்றான். ம் பொறுக்க. சைத்தன. குழந்தை மொழி உண்மையி பகாதுகளுக்கு இனி ந்தது.
மில்லை, நாவல்ப்
95.
OOPPd(0.9)
; நாவல்ப் பழம்”
பழம்”
ங்க” டைய வீட்டு அடி பென்னம் பெரிய து அப்பொழுதுதான்
வல் மரத்தை இவ்
5
த. தவராஜா
தேனே என்பதை உணர்ந்த போது
அவனுக்கு நெஞ்சுக்குள் உள்ளுர ஏதோ
மாதியாக இருந்தது. அப்பொழுது
அவனுக்கு அடிவளவுப் பக்கம் போய்
சுற்றிப்பார்க்க வேண்டுமென்ற ஆசை
தோன்றியது. ஏனெனில் அவன் அந்த அடிவளவுப்பக்கம் கால்வைத்து மூன்று வருடங்களுக்குமேல்.
யாழ்ப்பாண ‘ரவுண் பக்க மென்றால் ஒரு பரப்புக்காணிக்குள் ஒன்பது வீடும் ஒரு கடையும் கட்டி யிருப்பார்கள். ஆனால் அவனுடைய
கிராமத்தில் அவர்களுடைய வளவு மொத்தம் பன்னிரண்டு பரப்பு! அதற்குள் தனித்து ஒரு வீடு. அந்த அடி வளவை ஒரு புதர்க்காடு என்று கூடக்கூறிவிடலாம். அங்குதான் அந்த நாவல் நிற்கிறது. அடிவளவுப் பக்கம் யாரும் விறகு பொறுக்கப் போனால் உணி டு. அல்லது இல்லை. முன்னரெல்லாம் நாங்கள் அடிவளவுப் பக்கம்தான் கக்கூசுக்குப் போவதென்று அம்மாவின் அப்பு கூறுவார். இந்தக் காலத்தில் அனேக மான வீடுகளில் நீரடிப்புக் குழி மல சலசுடம் உள்ளது. அவன் அடிவளவுப் பக்கம் போய்ப் பார்த்ததில் அங்கு புதிதாக மேலும் பல மரங்கள் வளர்ந்திருந்தன. அவற்றை அவன் எண்ணலானான். வேம்புகள் மூன்று, இலுப்பை இரண்டு, கொய்யா நான்கு புளியமரம் ஒன்று, அத்துடன் பெயரெதுவும் தெரியாத இன்னொரு மரமும் நின்றது.
அந்தப் புளியமரம்தான் அவ னைக் கவர்ந்தது. என்ன நேர்த்தியாக வளர்ந்திருக்கிறது. அதன் உயரம் பத்து அடி இருக்குமோ என்னவோ தெரிய வில்லை. அதன் கனம் ஒரு உலக்கை யினுடையதைப் போன்று இருக்கும். பென்னம் பெரிய புளியமரங் ளைத்தான் அவன் கண்டிருக்கிறான்
ツ ஐப்பசி - 2002

Page 6
இந்தப் பருமனில் இதுதான் முதல் முறையாகக் கண்ட புளியமரம். அதனால் தானோ என்னவோ அது அவனைக் கவர்ந்து விட்டது. அடுத்த வருடம் அது பூத்துக் காய்ப்பதைப் போல் எண்ணி மகிழ்ந்தான்.
அந்தப் புளியமரத்தில் அவனுக் கொரு பாசஉணர்வு. இயற்கை மீது அவனுக்கு ஏற்பட்டுவரும் இரசனை யும் லயிப்பும் அவனை இப்படியாக ஆக்கி வருகிறது.
போசாக்கின்மையால் வாடும் ஒரு மூன்றாம் உலகக் குழந்தையைப் போலல்லாமல் ஒரு திடகாத்திரமான முத லாளித்துவ உலகக் குழந்தையைப் போன்று இருந்தது அந்தப் புளியமரம். பச்சைப் பசேரென்ற அதன் இலைகள் அவன் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. அதன் கிளைகளின் கொப் புகளின் நுனியில் இலைகளைப் போன்று கடும்பச்சை நிறமல்லாத மெல்லிய பச்சைத்துளிர்கள். ஆ. எவ்வளவு அழகு!
அந்தப் புளியமரம் நிற்குமிடம் சில வருடங்களுக்கு முன்னர் குப்பைக் கிடங்காக இருந்தது. அதுதான் இந் தளவு மதாளிப்பு, அதற்குப் போதியளவு இயற்கை உரம் கிடைக்கிறது. அரு கில் வாழும் பெரிய மரங்களின் நிழலில் அது குளிர்மையாக இருக்கிறது போலும், எனினும் அதற்கும் வெய்யில் வேண்டுமல்லவா? அதனால்தான் அது மேல் வானத்தை நோக்கி நீண்டு நிமிர் ந்து வளர்கிறது.
நேற்று தாவரவியல் பரிசோ தனைக்கு வெவ்வேறு தாவரக் குடும் பங்களைச் சேர்ந்த பூக்கள் பல தேவை
வளவு முழுவதும் அலையவேண்டி
உள் வீதிப்பக்கமும் போனான். அவனு டைய குழுவுடனேயே அவன் சென்றி ருந்தான். மாணவர் குழுவில் அவன் உட்பட மொத்தம் நால்வர் இருந்தனர். துளசி, கேசவன், வில்லியம், மீதிமூ வரும் அவனுடைய வகுப்பு மாண வர்கள். பரிசோதனைகளின் நிமிர்த்தம் குழுக்களாகப் பிரிக்கப்பட்ட போது துளசி அவன் குழுவில் சேர்க்கப்ப ட்டது அவனுடைய அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில்
ப்பட்டன. இதற்காக பல்கலைக்கழக
துளசி ஒரு நல்ல என்பதற்கு மேலாக பெண்.
பேசிப் பேசிச் காள் பகிடி விட்டு பூப்பறித்தது. அன் அவனைப் பற்றி நீ அவன் தன் குடும் யாகப் பாசம் குை துளசி நம்பச் சிரட “உமக்கு யொன்றும் இல்ை சிக்கலான கேள்விை தாள்.
அந்தக் சே பதில் கூறுவது சி என்றாலும் கூறவே “அப்பா வைச்சது ஏதோ எ எண்டு நினைச்சன். விளங்குது. என்6ை சந்தையில் ஒரு படி விற்கவே படிக்க6ை கினாப் பிறகு வீட்டி இருக்கு. அப்பா 6 சுனாக்க வேண்டுெ சிருப்பாரெண்டால் ளாக் கண்டிருப்பே “ஆனா உ பாவந்தானே?” “அக்காமாரா..? அ கதை. அப்பாவுக்கு போனதிலிருந்து என ரமாய்ப் போச்சு. அ என்னைப் படிக்க ை லாத எனக்கு எனது அந்தப் பாசத்தினா வாழ்ந்தேன். அதால வயசாகியும் ஒரு ச சொந்தக் காலில் யில்லாத வெறும் ே கிறேன். இந்த நிை அக்காவின் பாசத்ை தான் முடியுது”
துளசி மே பேசாது மெளனமா என்றாலும் அவன் மனதில் ஒரு ஏற்படுத்தவே, இவ முறைக்கும் வீட்டு அன்று ஒ கழக நூலக சஞ்சி டனிலிருந்து ெ

பண்புள்ள மாணவி
ஒரு இனிமை யான
கொண்டும் ஆளுக் கொண்டும் தான் று மட்டும் துளசி றைய விசாரித்தாள். பத்துடன் படிப்படி றந்து வருவதை
y -6. தப் பாசம் அப்படி oயா?” என்ற ஒரு >யக் கேட்டு வைத்
ள்விக்கு அவனால் ரமமாய் இருந்தது. ண்டிய கட்டாயம்.
என்னைப் படிக்க ன்னில பாசத்தினால் ஆனால் இப்பத்தான் ன அவர் கல்யாணச் ச்ச மாப்பிள்ளையாக வச்சார். இது விளங் ல் இருக்க கஷ்ரமா ான்னை ஒரு மனி மன்டு படிக்க வைச் அவரை நான் கடவு ன்’ உம்மட அக்காமார்
துவும் ஒரு பெரிய வேலையில்லாமல் ாக்குப் படிக்கக் கஷ் க்காதான் உழைச்சு )வச்சா. அம்மா இல் து அக்கா காட்டிய ல்தான் சொகுசாய் இண்டு இத்தனை தமேனும் உழைச்சு நிற்கிற ஆளுமை சாத்துமாடா இருக் னவு வரும் போது தையும் வெறுக்கத்
ற்கொண்டு எதுவும் னாள்.
துளசி சொன்னது சின்ன மாற்றத்தை வார இறுதி விடு க்கு வந்தாயிற்று. ருநாள் பல்கலைக் கைப் பிரிவில் லண் வளிவரும் ஒரு
விஞ்ஞான சஞ்சிகையைப் படிக்கி நேர்ந்தது. அதில் அவன் வாசித்த ஒரு யப்பானியப் பேராசிரியர் பற்றிய கட்டுரை அவனை பெரிதும் பாதித்து விட்டது.
ஆதலால் அன்றே அவருக்கு ஒரு கடிதம் எழுதி தபாலில் சேர்த்தி ருந்தான்.
ouJT,
சூழலியல் பற்றி ஒரு உயர்ந்த பிரக்ஞையுடையவராக நீங்கள் இருக் கின்றீர்கள். எனக்கு உங்களுக்கு உள்ள அளவு பிரக்ஞை இல்லாவிட்டாலும் உணர்வுகளில் உங்களைப் போல் வளர் ந்து வருகிறேன். நான் இலங்கைத்
தீவின் வடக்குப் பகுதியில் வாழ்ந்து
வருகிறேன். எனது நாட்டில் போர் நடந்து கொண்டிருப்பதால் இப்டி யான விடயங்கள் இங்கு இலகுவில் எடுபடாது. இவ்விடயம் பற்றி நமது கல்விமான்கள் கண்டும் காணாமலும் இருப்பது விசனத்துக்குரியது. இங்கு கல்வியின் நோக்கம் பிழை. அதனால் தான் இந்த நிலைமை என்று நம்புகி றேன். உங்களுடன் தொடர்பு கொள்ள
விருப்பமாக உள்ளேன். நன்றி.
இப்படிக்கு தங்கள் அன்புள்ள
சேகர். காடுகளில் நோய்வாய்ப்பட்டு இறக்கும் மரங்களைக் காப்பாற்றுவதி
லேயே அந்த யப்பானியப் பேரசிரியர் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும்
அர்ப்பணித்திருந்தார்! அப்பேராசிரியரை என்னவென்பது? நம்மவர்கள் மரங்கள் விடயத்தில் நடந்து கொள்ளும் விதத் தைப் பார்த்தால் இவர்களுக்கு சூழ லியல் அறிவு இல்லையென்பது தெரி கிறது. படிப்பு, கலியாணம், உத்தி யோகம், செக்ஸ், வெளிநாடு, குடும்பம், சாதி, சமயம் இப்படி ஏதாவதைப் பற்றி வாய்கிழியப் பேசுவார்கள். கிணற் றுத்தவளைகள். முட்டாள் சனங்கள். கண்டகண்ட தேவைகளுக்கெல்லாம் மரங்கைள கண்ட படி வெட்டுகிறார் கள்? என்று சனங்களை மனதுக்குள் திட்டித்தீர்த்தான்.
படிப்பை முடிததுக்கொண்ட
பின்னர் சூழலியல் முக்கியத்துவம்)
ஐப்பசி - 2002

Page 7
பெற்றி எல்லாப் பிரஜைகளுக்கும் விளங்கு மாறு தமிழில் ஒரு புத்தகம் எழுத வேண்டும், எழுதினால் அச்சேற்றவும் வேண்டுமல்லவா? யார் இதைச் செய் வார்கள்? சொந்தப் பணத்தில் அச்சடிக்க வீட்டிலென்ன பணமா குவிந்துகிடக்கு. அறை வாடகைப் பாக்கி இந்த மாதத்துடன் ஆயிரத்து இருநூறு ரூபாவைத் தாண்டுகிறது. உலகத்திலிருந்து உடனடியாக வறுமையை ஒழித்துக் கட்டவேண்டும். நினைவுகள் தாறுமாறாய் ஓடியது.
வீட்டை அடைவதற்கு முன்னர் அவனுடைய கிராமத்து வயற்காட்டுப் பக்கம் போனான்.
இந்த வருடமும் ஏராளமான சைபீரியத் தாராக்கள் வந்திருந்தன. சோவியத் யூனியனின் சைபீரியச் சமவெளியில்
இப்போ பனி உறைந்து கடும் குளிர் காலமாக இருக்கும் போலும்
வயற்காட்டின் கடலோரப் புற கன்னா மரப்பற்றை களில் சைபீரியத் தாராக்கள் கூடுகட்டியிருந்தன. கூடுகளி லிருந்து வரும் குஞ்சுகளின் "கீச் கீச்” என்ற சத்தம் அவனு டைய காதுகளுக்கு இனிமையாக இருந்தது. அக்குஞ் சுகள் அவனுக்கு எதையாவது எடுத்துச்சொல்ல முயல் கின்றனவா என்ற எண்ணமே அவனுக்குத் தோன்றியது. கன்னாப் பற்றைகளுக்கு அண்மையிலுள்ள கைவி டப்பட்ட நீர் இறைக்கும் காற்றாடிக் கம்பத்தின் உச்சியில் தலைப் பிரதேசத்தில் கபில நிறம் கொண்ட இளம் நீலநிற பனங்காகம் ஒன்று கூடு கட்டியிருந்தது. அக்கம்பத்தின் அடி யிலுள்ள இராவணன் மீசைக்கொடிப்புதருக் குள்ளிருந்து பெயர் தெரியாத மண்ணிறமாய், முயல்மாதிரியான விலங்கு ஒன்றும் அதனுடைய குட்டி ஒன்றும் புறப்பட்டு ஓடியது. பின்பு வயல்காட்டுப்புறமிருந்து குடியிருப்புகள் ஆரம்பிக்கும் கிராமத்தின் கிழக்குப்புற எல்லையிலுள்ள எருக்கலம்பிட்டி சுடலையடி உன்மந்த வைரவர் கோவில் ஆலய முன்றலில் நிற்கும் மருதமரத்தில் இரண்டு மருதங் கிளிகள் பொந்து வைத்திருந்தன.
அவற்றையும் பார்த்துக்கொண்டு அன்று அவன் வீட்டுக்குத் திரும்ப மாலை ஐந்தரை மணியாகிவிட்டது. இந்த வாரமும், அவன் வீட்டுக்கு வந்திருந்தான். இந்தக் கிழமையும் வீட்டில் தங்கப் போறியா? என்று அவனுடைய அக்கா வியப்போடு கேட்டாள். 'ஓம்' என்று ஒரு வார்த்தையில் பதிலளித்து விட்டு உடையை மாற் றினான்.
துளசிதான் வீட்டில் தங்கவேண்டுமென்ற சிந்த |னையைத் தூண்டியவளென்று எப்படி அக்காவிடம் கூறு வது? என்ன இருந்தாலும் பெண்களிடம் ஒரு மிருது வான சக்தி இருக்கவே செய்கிறது.
அக்கா தேநீர் தயாரித்துக் கொடுத்தாள். அதைக் குடித்து விட்டு அடிவளவுப் பக்கம் போனான்.
அன்று அநியாயமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு மனிதனைப் போல, வெட்டி வீழ்த்தப்பட்டு வீழ்ந்து கிடந்தது அந்தப் புளியமரம். ݂ அவனுடைய கபாலத்துள் மெழுகுதிரி உருகிக்
மூன்றாவது கண் ·

கசிவது போன்ற ஒரு உணர்வு தோன்றி பின்னர் அது அடங்காத சினமாக பரிணமித்தது. மறுகணம் ‘அக்கா! என்று குரல் வைத்துக் கொண்டு வீட்டுப்பக்கம் ஓடி
வநதான.
“சாரை ஒண்டு அடைக்கிடக்குது, அடிவளவுப்
பக்கம் போகாதையெண்டு அப்பவே சொன்னனான்’ என்றார் சாய்வு நாற்காலியில் கண்அயர்ந்து கொண்டிருந்து, திடீரென் கண்விழித்துக்கொண்ட அவனுடைய அப்பா.
“யாரப்பா அந்தப் புளிய மரத்தை வெட்டினது?” கோபமாகக் கேட்டான்.
“உவள் கொக்காள்தான் வெட்டினது. பின் வீட்டுப் பரிமளம் சொன்னவளாம் புளியமரத்தில பேய்நிற்கிற தெண்டு, அதுதான் வெட்டினவளாம்”
“பரிம்ளம் இனிமேல் வீட்டை வரக்கூடாது. பின்வேலிப் பொட்டை அடைக்க வேணும்” ஆவேசமாகக் கத்தினான்.
“அக்கா”
"61ssor?’ “ஏன் அந்தப் புளியமரத்தை வெட்டினன்?”
“உனக்கு எத்தினமுறை சொன்னது வீட்டை வந்தா வந்த அலுவலைப் பாத்திட்டுபோ. வீட்டு வில்லங்க மெல்லாம் கதைக்க வேண்டாமென்று”
“நான் புளியமரத்தை ஏன் வெட்டினனி எண்டு கேட்கிறன், நீ தேவையில்லாத கதையெல்லாம் கதைக் 6}DIIủ?”
“தம்பி கொஞ்சம் அளவாப் பேசு” - அப்பா அந்தப் புளியமரத்தின் இறப்பை எண்ண, அவனுடைய நாடி நரம் பெல்லாம் ஒய்ந்து அப்படியே ஸ்தம்பித்துப் போனான். இரு தயம் மட்டும் மெதுவாய் லப்.டப்.லப்.டப் என்று துடித் துக்கொண்டிருந்தது.
அவனை யாரும் நம்பமாட்டார்கள்தான். ஏனெனில்
மனிதர்களுக்காக மனிதர்களே இரக்கப்படாத இந்தக்காசு உலகத்தில் மரங்களுக்காக இரக்கப்படும் ஒருவனா?
அவனுள்ளம் என்னவென்று அவனுக்குத்தான் புரியுமோ அல்லது வேறு யாருக்காவது புரியுமோ என்பது அவனுக்குத் தெரியாது.
அப்பொழுது அவர்களுடைய குடும்ப நண்பனான பஞ்சு மாமா வந்து கொண்டிருந்தார்.
“ஏன் தம்பி ஒரு மாதிரியாய் இருக்கிறாய்?” “அது ஒண்டுமில்ல மாமா”
“என்னடா ஒண்டுமில்ல என்கிறாய்.? சோதனை ஏதும் பெயிலோ?”
“சோதனையும் பெயில்தான் மாமா, ஆனா அதுக் காக நான் கவலைப்படேல்லை. அடிவளவுக்கை புளிய மரமொண்டு நிணடது. அதை அக்கா தறிச்சுப் போட்டா” “அட மரத்தைத்தானே தறிச்சது, அதுக்கேன்ரா நீ அழுவாரைப்போல இருக்கிறாய்?’ என்று சட்டெனக் கேட்டார் பஞ்சு மாமா.
“உங்களுக்கு மரங்களைப் பற்றி என்ன மாமா தெரியும்? '- ஐப்பசி - 2002

Page 8
(அவன் குரலில் திடீரென் ஒரு நிதானம் வந்திருந்தது”
“இயற்கையை நேசிக்கத்தெரியாத மனிதன், மனிதன் மனிதனை நேசிக்க வேண்டும் என்று கூறுவது வெறும் கேலிக் கூத்து இல்லையா மாமா?”
'நீ படிச்ச பிள்ளை, புதுப் புது தத்துவமெல்லம் பேசு வாய். அது எங்களுக்கு விளங்காது தம்பி”
“நீ படிச்ச பிள்ளை’ என்பதில் தொனிக்கும் அவனை அவர் படித்தவனாகவே மதிக்கும் பண்பு அவனை இன்னும் வேதனைப் படுத்தியது. எனவே “என்னைப்படிச்சவங்க ளெண்டெல்லாம் சொல்லாதேயுங்க மாமா' என்று இரங்
கலாகக் கேட்ட அவன் மறுகணம் கிணற்றடிப் பக்கம் கால் முகம் கழுவப் போனானன். மனம் கொஞ்சம் இலகியி ருந்தது. ஏனெனில் பட்டமரம் தளைக்காது என்பது அப்பொழுது அவனுடைய நினைவுக்கு வந்தது.
“சாதகக் குறிப்பில் சொல்லிக் கிடக்கு, இவன்
(Մ). տպ. Մ6ծi, 157, Dockyard Road, திருகோணமலை. 09.08.2002. வணக்கம்,
தங்கள் மூன்றாவது கண்‘செய்திமடலை திருசு, வில்வரெத்தினம் மூலம் பெற்றுக்கொண்டேன் மகிழ்ந்தேன், வியந்தேன் நல்லமுயற்ரிதொடர்ந்து செய்யும்படி வேண்டுகிறேன்.
Sustainable devalopment, Gusorgs, 6 unusa, (USig5 பண்ணை வளர்ப்பு என்ற சொற்றொடர்கள் இன்றைய “அமைதி சூழ்நிலை யில் ஆங்காங்கே ஒரே நேரத்தில் எழுகிறது. இத்தகைய கருத்தாக்கங்களின் பின்னணி பற்றிய ஒரு பெரும் சந்தேகம் எனக்குநீண்டநாட்களாகவே இருக் கின்றது.
இன்று மேற்கில் ‘உலகமயமாக்கலுக்கு எதிராக முன்வைக்கப்படும் கோஷங்கள் கூட, உலகமயமங்கலுக்கு சாதகமான சக்திகளினாலேயே செய்யப்படும் சூழ்சியாகஇனம்காணப்பட்டுள்ளது.அமெரிக்கவும், முதலாளியமும்எந்தவடிவத்திலும் 6Toârg506OTGOU பீடித்து விடக்கூடிய ஆபத்து உண்டு
நான் இந்தவருடம் AL எடுத்துவிட்டு ‘சும்மா’ சமூகம் சார்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கும்ஒருவன்எனக்குஇப்படியான விடயங்களில் ஆழமான அறிவுகிடையாது.
இருந்தாலும் ஓர் இயல்பான பயம் எழுத்து வருவது தவிர்க்க முடியாததாயுள்ளது. ‘சூழலியல் செயற்பாடுகள்’ என்ற பெயரில் வரும் ஏதேனும், ஏகாதிபத்தியத்தின் ஏதாவது புதிய வடிவமோ என்ற சந்தேகமும் எனக்கு உண்டு
எனது மாவட்டத்தில் சத்தமில்லாமல் ஓர் அனல்மின்நிலையம்வரப் போகிறது. எத்தனைபேர்வாய்கிழியக்கத்தினாலும் அது வராமல் நின்றுவிடுமா? எனது இயற்கை துறைமுக நகரின் ஒருபகுதி “சுதந்திர வர்த்தக வலயமாக' ஐரோப்பிய யூனியனுக்கு விற்கப்படவுள்ளது அதனைஎந்தசூழலியல் செயற்பாட்டாளர்களாலும் தடுத்து விடமுடியுமா? எனது மண்ணை, எனது தேசத்தை இரசாயன கழிவுக்கானாக மாற்றமுயலும் எந்த ஏகாதிபத்திய முதலா ளிய சக்திகளையும் தடுத்து நிறுத்தும் வல்லமை யாருக்காவது உண்டா?
ஆக, ‘சூழலியல்காரர்களால் செய்ய முடிவதெல்லாம், எமது விவ சாயிகளை இயற்கை விவசாயம் செய்யச் சொல்வதும், எமது புதிய கைத்தொழில் முயற்சியாளர்கனை சங்கத்திற்குள்ளாக்குவதும் தான்.
இது, அடைநிலப்பிரபுத்துவ மூன்றாமுலகநாடுகளாகிய நாம் தொழில் மயமாவதையும், எமது சுதேச தேசிய முதலாளிகளின் வளர்ச்சியையும்
மூண்றாவது கண் a7
 

ཡོད།
வித்தியாசமான ஆளாகத்தான் வருவானெண்டு” - அப்பா. “எனக்கே ஒரு மாதிரியா இருக்கு இவன் தம்பி கம்பஸில என்ன படிப்புப் படிக்கிறான்? இப்படி மாறிப்போனே’ என்றவர் சிந்தனையில் ஆழ்ந்து போனார்.
கிணற்றடியில் இருந்து வந்த அவன் காற்சட்டை சேட்டைப் போட்டு புறப்படத் தயாரானான்.
அவன் கண்ணாடிக்கு முன்னால் நின்று தலை சீவிக்கொண்டிருந்த போது பஞ்சு மாமா கூறினார்.
“ஏன் தம்பி அவசரம்? வந்தனி நிண்டு சாப்பிட்டுப் போகலாம். இண்டைக்கு இறைச்சிக் கறியல்லே”
அடிவளவுப் புளியமரத்தை வெட்டிச் சரித்தாயிற்று. ஆனால் என்னுள்ளே எனது உண்மையான சுயம் வளர்ந்து வருகிறது. இங்கிருந்தால் அதையும் வெட்டிச்சரித்து விடுவார்கள் அந்தப் புளியமரத்தைப் போல’ என்று சொல்ல அவனுக்கு மனம் வந்தது. ஆனால் நாக்கு எழவில்லை.
சயிக்கிளை வேகமாக மிதித்தான். 9
தடுத்து, பல்தேசிய ஏகாதிபத்திய முயற்சிகளுக்கு (பிரச்சினை யில்லாமல்) பார்த்துக்கொள்ளும் செயற்பாடுதானோ என பயப் படுகிறேன். இந்த பயங்களுக்கு மத்தியில் இருந்த எனக்கு உங்கள் ‘உள்ளுர் அறிவுச் செயற்பாடு மற்றும் பேண்தகு அபிவிருத்தி செயற்பாடு என்பவை ஓரளவு நம்பிக்கை தருகிறது. எனினும் சில சந்தே கங்களும் எழாமலில்லை.
எமது பழைய அறிவுகள், அவற்றுக்குரிய காலங்களின் வாழ்க்கை முறைகளுடன், பாரம்பரியத்துடன் இணைந்து கலந்து இருக்கின்றன. உதார ணமாக, சோதிடம், மந்திரம், மருத்துவம், கலைவடிவங்கள் என்பவற்றை கூறலாம். இவற்றை‘அப்படியே காத்தல்’ அல்லது “மீண்டும் மலர்த்துதல்” என்பது பயங்கரமான பின்விளைவுகளை உண்டாக்கிவிடும்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய விஞ்ஞான அறிவு இன்றைக்கும் பொருந்திவருமா என்பது ஒருபுறமாகவே இருக்க, விரையும் இன்றைய உலகின் போக்குகளோடு ஒட்டி ஒட எமது உள்ளுர் அறிவு போதுமானதுதானாஎன்பதும்கேள்விதான். “பேண்தகுவிஷயங்கள்’ என்பதன் அடக்கமாக சாதீயம், ஆணாதிக்கம், சுரண்டல், சமயம் என்பனவும் அமைந்து
விடுமா?
எவ்வாறாயினும் ஏகாதிபத்தியத்திற்கும், கோளமயமாக்கலுக்கும் எதிராக நாம் நடாத்தியாக வேண்டிய போராட்டத்தின் அடிப்படையாக அவை அமையக்கூடும் என்ற தேடலில், இந்த 'உள்ளுர் அறிவுச் செயற்பாடு’ என்ற கதையாடல் சில'ஐடியாக்களை தருகிறது. அந்தளவில் நன்றி.
ஒன்றை மறுதலித்து இன்னொன்றாகவே சமூகம் வளர்கிறது. ‘அப் U, Gu காத்தல் என்பது அரும்பொருட் காட்சி சாலைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம் அறிவின் அடிப்படைக்காய் அவனை இவனை நம்பாமல் எமது அறிவின் மூலங்களை எடுத்து, அவற்றின் போதாமைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றின் பழசு’ தன்மையை நீக்கி நவீன வடிவத்தில் அவற்றை மாற்றி எம்மால் உருவாக்கப்பட்ட விஞ்ஞானமாக கொண்டுவந்து அதன் மூலம் ஒரு முதலாளியப் புரட்சியை எமது மண்ணில் ஏற்படுத்துவதே வளர்ச்சியின் அடுத்தகட்டமாக அமைய வேண்டும். முன்னோக்கியே செல்வோம்.
இன்னுமொரு விடயம், இயற்கையோடு ஒன்றி வாழ்தல் வளர்ச் சியாகாது மனிதனுக்கு அது சாத்தியப்படாது என்று என் சிற்றறிவிற்குப் படுகிறது.
இத்தோடு எம்மால் நடாத்தப்படும் சஞ்சிகையினையும் அனுப் பிவைத்துள்ளேன். வாழ்த்துக்கள்.
தோழமையுடன் மு. மயூரன்.
المصر 3- ஐப்பசி - 2002

Page 9
/ e O
67.னக்கும் தெரியும் ஊறப் போட்டதான
t *& స్కీ . 滚 6TՍՍւԶԺ “.நடந்து வந்த
ಇಲ್ಲೆ...
பசுமைக்கருப்பைகள்! "శ
நம் எதிர்காலம்
முட்களைச் சப்பிக்கொண்டு
(Ա935K5
பரம்பரைகளின்
மயூரனுக்குப் பதில் மடல்,
உனக்கும் தெரியும். ஏதோ எமது விதைகளும் புரிவது போலவும், நெருப்புப் பிரளயத்தில் புரியாதது போலவும், உலத்துகின்ற Uயங்கரங்கள் ஜீவராசிகளும்.! அடுத்த சுற்றுக்கு தயாராக்கப்பட்டுக் ஆயத்தமாவது! கொண்டிருக்கின்றன,
Uொலித்தின் உலகத்தை நாம் கையளிக்கப்போகும். ஆட்சி செய்வதற்கு மலட்டு உலகத்திலிருந்து பச்சயம் இழந்த எம் தலைமுறை பிளாஸ்ரிக் மரங்களும் எமது முகங்களில் * சருகில் உருப்பெற்ற காறித்துப்Uப் போகிறது ! மனிதக்குப்பைகளும்
----- 滚。袭
ܚܼܲ" சீரழிக்கப்படுகின்றன ". சுவடுகளைப் பாருங்கள்
(5Ա05) * சிகப்Uாக அழுகிறது.
நிமிர்த்த முழயாமல் வயிறுகளை நிரம்புமா!
கறுப்பாக. 7 ܐ܂ எத்தனை :
。事 பேரிற்குச் சம்மதம் உனக்கு மட்டும் . .ஃன்ஃ:. தீவனங்களை தரப்பட்டதாக -நீ காப்பதற்கான நினைக்கும் உலகத்தில் நடைமுறைகளில் தணலிலே கை கோர்க்க.!
நண்பர் மயூரனுக்கு வணக்கம்,
நீங்கள் எமக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்தக்கும் நன்றி.
சுய சிந்தனைக்கே இடந்தராத வெறும் ஏட்டுச்சுரக்காய் போன்ற இன்றைய கல்வி முறைமைக்குள்ளால் சமூக அக்கறையுடன் சிந்திக்கின்ற ஓர் மாணவனாக நீங்கள் உருவாகியுள்ளதைக் கண்டு ஆச்சரியமும் அதேநேரம் மிகுந்த மகிழ்ச்சியும் அடைந்தோம். உங்க ளைப் போன்ற சமுதாய அக்கறையுடன் சிந்திக்கின்ற செயற்படுகின்ற மனிதர்களாக ஒவ்வொரு பிரஜைகளையும் குறிப்பாக இளம் சமூகத் தினரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் செயற்பட்டு கொண்டிருக்கின்றோம். சமூக அக்கறையுள்ள செயல்வீரராக நீங்கள் வளர எம் வாழ்த்துக்கள். நிற்க,
உங்களது கடிதத்தில் இன்று நாம் புரிய முனையும் விடய ங்கள் யாவற்றையும் ஓர் முதலாளியப் புரட்சி மூலமாகவே செய்ய முனைய வேண்டும் எனக் கூறியிருந்தீர்கள். இதுதான் வளர்ச்சிக்கான அடுத்த கட்டம் என்றும் சுட்டியிருந்தீர்கள். இச் சிந்தனையில் எமக்கு உடன்பாடில்லை. முதலாளியம் என்பது அடிப்படையில் ஒரே குணப்ப ண்புகளைக் கொண்டதடன் எதனையும் தனது நலன்களுக்குரியதாக மாற்றக் கூடிய ஆபத்த நிறைந்தது.
நாங்கள் உலகந்தழுவிய ரீதியில் அதிகாரமற்ற, அடக்கு முறைகளற்ற, சுயசார்பும், மானுட விடுதலையும், மக்கள் மயப் பட்ட சமத்தவமான பொருளாதார சூழ்நிலையையும் உருவாக்க முனைபவர்கள். இந்த ஒவ்வொரு எண்ணக்கருவையும் நடை முறைப்படுத்த இடம்தராத முறைமையாக முதலாளியம் இருப்பதை
உங்களுக்குத் தெரியப்படுத்த தேவையில்லை. நாங்கள் எமத
மூன்றாவது கண்
 
 
 
 
 
 
 
 

நமது
கையளிப்புகள் كي F அடுத்த தலைமுறைகளில் さず
A உயிர்ச்சத்தினை"
செயற்பாடுகளை வென்றெடுக்க முதலாளியப் புரட்சியை செய்வத என்பது இருக்கின்ற கிடங்கினை முடிவிட மற்றொரு புதிய கிடங்கைத் தோண்டிய கதையாகத்தான் போய்முடியும். இப்படியான ஆபத்தில் முடிந்த செயற்பாடுகளை உலக வரலாற்றின் மூலமாக நாம் கற்றுவந் தள்ளோம்.
ஆகவே நாம் செய்யமுனைவத உலகமயமாக்கலுக்கு மாற்றாக பிற்போக்குத்தன்மைகளற்ற விதமாக எமது உள்ளுர் அறிவு திறன்களை வளர்த்தெடுத்து இதனூடாக சுயசார்பும், சமத்துவமும் கொண்ட பொருளாதாரச் சூழலை உருவாக்கி மானுட விடுதலையினை அர்த்தமுள்ளதாக்குவதாகும். எப்படி உலக மயமாக்கல் செயற்பாடு கள் உலகப் பொதுவானதாக வலியுறுத்தப்படுகின்றதோ! அதேபோல், மேற்குறித்த செயற்பாடுகளும் உலகம் தழுவிய ரீதியில் பன்மைத் தன்மைகளுடன் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் செயற்பாடுகளில் எம்மையும் இணைத்துக்கொள்வதே இன்றைய காலத்தின் அவசியமாகும்.
அடுத்து நீங்கள் எழுதியிருந்தீர்கள் ‘இயற்கையுடன் ஒன்றி வாழ்தல் வளர்ச்சியாகாது அத மனிதனுக்குச் சாத்தியப்படாது’ என்று, இக்கருத்தையும் எம்மால் ஏற்கமுடியாது. ‘இயற்கை வேறு மனிதர் வேறு இயற்கையை வென்று மாற்றி வாழ்தலே மனித வளர்ச் சியாகும்’ என்ற சிந்தனையின்படி மனிதர் வாழ்ந்ததன் விளைவுதான் இன்று உலகில் மனிதர் வாழமுடியாதளவிற்கு சூழலியல் ஆபத்துக்கள் உருவா குவதற்கு காரணமாக இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. இயற்கையின் ஒரம்சமாகவே மனிதர்களாகிய நாம் இருக்கின்றோம். இயற்கையை மாற்றும் திறன் எம்மிடம் இருந்தாலும் நாம் இயற்கையின் ஒரம்சம் என்பதை மனதில் கொண்டு இயற்கைச் சூழலின் சமநிலையை குழப்பாமல் இயற்கையுடன் இணைந்து வாழ முற்படுவதே எமது சந்த தியின் தொடர்ச்சிக்கு வழி வகுக்கும் செயற்பாடாக அமையும். இதனை த்தான் இன்றைய சூழலியல் சிந்தனைகள் வலியுறுத்தி நிற்கின்றன. நன்றி.
அன்புடன்,
உள்ளுர் அறிவுச் செயற்பாட்டுக்குழு சார்பாக,
து. கெளரீஸ்வரன்
పజిళ్ల
9. w ஐப்பசி - 2002

Page 10
இன்று விவசாய ஆராய்ச்சிக்கல்லூரிகளிலும், பெரும் பண்ணைகளிலும் புதிதாகச் செய்யப்படும் கண்டு பிடிக்கப்படும் புரட்சிகர செயல்களாக பெரும் விளம்பரப் படுத்தப்படும் பாராட்டுதல்களைப் பெறும் "புதிய விளை திறன் கூடிய விதையினங்களை கண்டுபிடித்தல்” எனும் விடயம் நமது பாரம்பரிய விவசாயிகளிடம் தொன்று தொட்டு பேணப்படும் ஒரு வழிமுறை தான் என்பதுதற் காலத்தில் பாரம்பரிய விவசாயிகளுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றது.
அதாவது நமது பாரம்பரிய விவசாயிகள் ஒவ் வொரு தடவையும் நல்ல விளைகிறன் மிகுந்த விதை களைச் சேர்த்துச் சேர்த்து அவற்றில் இருந்து அடுத்து விளைதிறன் விதைகளைச் சேர்த்தல் என்பதினூடாக அதிக விளைதிறனுடைய விதைகளைப் பேணிவந்துள்ளார்கள் என்பதும் தற்கால நவீன விவசாய விஞ்ஞான ஆய்வுகளில் உயிருள்ள விளைதிறன் மிக்க விதைகளிலிருந்து அடு த்த மூன்றாவது விளைதிறனைக் கொண்ட விதைகளை உருவாக்கல் என்பதும் அடிப்படையில் ஒரே இயல்புடை யவைதான் என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது.
இந்த விடயத்தை ஊர்ஜிதப்படுத்தும் விதமா கவே பின்வரும் கட்டுரையில் இடம்பெறும் விவசாயக் குடும்பத்தினுடைய உரையாடல் தரும் செய்தியும் அமை ந்திருக்கின்றது என்பது முக்கிய விடயமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதே சத்தில் உள்ள இயற்கை எழில் மிகுந்த கிராமங்களுள் ஒன்றாக “அம்பிளாந்துறை” எனும் இடம் அமைந்துள்ளது. இக்கிராமம் முழுக்க முழுக்க விவசாயக் கிராமமாக விளங்கி வருவதுடன் க்கிராம மக்கள் காலங்காலமாக விவசாயத்திலேயே தமது வாழ்க்கையை நடாத்தி வருகின்றார்கள்.
இங்கு நடைபெறும் விவாசய முறைமைகளாக பெரும் போகம், சிறுபோகம், சேனைப்பயிர்ச்செய்கை என்பன அமைந் துள்ளன. பெரும்போகம் சிறுபோகம் ஆகிய இரு முறைகளிலும் நெல் உற்பத்தி மட்டுமே இடம்பெறுவதுடன் சேனைப்பயிர்ச் செய்கைகளில் சிறு தானியங்கள் எனப்படும் சோளன், குரக்கன், பயறு, கெளமி, உழுந்து, எள்ளு, கச்சான் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
சேனைப்பயிர்ச் செய்கை மூலமாக பெறும் சிறுதானி யங்களில் குறிப்பிட்ட ஒரு தொகையினைத் தேர்ந்தெடுத்து அவற்றை அடுத்த முறைக்கான விதைகளாகப் பானைகளிலும், போத்தல்களிலும் போட்டு மிகப் பாதுகாத்து வைப்பதுடன், மிகுதி யில் ஒரு தொகையை விற்பனை செய்வதுடன் ஒரு தொகு தியை தமது உணவிற்காகப் பயன்படுத்தியும் வருகின்றனர். விசேடமாக இந்த சிறுதானியங்கள் மூலம் பல விதம்விதமான உணவுகளைத் தயாரித்து உண்டு வருகின்றார்கள். இவ்வாறு சிறுதானியங்களை உட்கொள்வதனால்தான் இவ்வூர் விவசாயி களால் கடுமையாக உழைக்க முடிகின்றது. இதுமட்டுமா இவ்வூர் விவசாயிகள் தாமே உழுதுண்டு வாழ்வதால் எவரிலும் தங்கி நிற்காது சுயமாக மனிதர்களாகவும் வாழ்கின்றார்கள் என்பது முக்கியமான விடயமாகும்.
இவ்வாறு காலங்காலமாக இவ்வூர் மக்களால் செய்கை பண்ணப்படும் தானிய உற்பத்தியில் குறிப்பாக சிறுதானிய உற்பத்தி முறையில் இன்றுவரை பாரம்பரிய முறை மைகளே முழுக்க முழுக்க பயன்படுத்தப்பட்டு வருவதனைக் காண முடிகின்றது. நவீன விவாசாய முறைமைகள் எம்மை ஆக்கிரமித்து வரும் இன்றைய சூழலில் அவற்றை அறிந் திருந்தும் அம்முறைகளைப் பின்பற்றாது பாரம்பரிய முறை களையே பெருமளவு பேணி வருவதற்கான காரணத்தை அறியும் பொருட்டு இவ்வூரைச் சேர்ந்த நல்ல அனுபவம் மிக்க விவசாயிகளான திரு.திருமதி. பாக்கியராசா பவளம்
மூன்றாவது தண்
 
 

கேள்வி :
பதில் :
கேள்வி :
பதில் :
கேள்வி :
தம்பதியினருடன் கலந்துரையாடியபோது அவர்கள் மூலமாக பெற்ற தகவல்களை நான் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட முறைமை மூலமாக அப்படியே தருகின்றேன்.
நீங்கள் என்ன காரணத்திற்காக இந்த தானியங்களை மிகப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்துள்ளிர்கள்?
இந்த விதைகளைச் சேமித்தால் தான் மழை விழுந் ததும் உடனே நிலத்தை உழுது நாட்ட முடியும். ஒவ் வொரு வருடமும் ஒழுங்காகச் சேமித்து வைத்தால் தான் அடுத்த வருடம் முழுமையான விளைச்சலைப் பெறமுடியும். சரியாக சேர்த்தால்தான் எல்லாம் முளை க்கும். முதலில் காய்க்கின்றன. காய்க்கும் போது காய்களை ஆய்ந்து சமைக்கின்றோம். விற்கின்றோம். பின்னர் அடுத்த வருடத்திற்குத் தேவையான நாற் றுக்களை ஆய்ந்து வெயிலில் காய் வைத்து விதை களாக்கி அவற்றைச் சேர்த்து வைப்போம். இவற்றைச் சேமிக்கும் போது சட்டி, பானை, போத்தல்களில் மலத் தினையும் சேர்த்து போட்டு வைக்கின்றோம். இப்படி நாம் சேர்த்து வைப்பதனால் மற்றவர்களை நம்பியி ருக்கத் தேவையில்லைத்தானே!
சோளன் வகைகளைச் சேர்க்கும் போது எப்படிப் பாதுகாக்கின்றீர்கள்?
முற்றிய சோளன் குலைகளை முறித்து அவற்றின் செட்டைகளை கொண்டு இரண்டிரண்டாக முடிந்து நல்ல வெயிலில காயவைச்சி பின்பு அதனைச் சேர் த்து ஒரு கம்பியில கட்டித்தொங்க விடுவோம். செட் டை உடைந்த சோளன் குலைகளை சாக்கினுள் கட் டிப்போடுவோம். எங்களுக்குச் சோளன்புட்டு, சோளன் பொரி வேணும் என்றால் அதனை எடுத்து உதிர்த்து தயாரிப்போம். -
இவ்வாறு விதைகளைச் சேமிக்கிறதால உங்களுக்கு கடும் கஷ்டமாக இருக்கும் அல்லவா? எனவே விவ சாய கந்தோர் தரும் விதைகளை வாங்கலாம் தானே?
என்ன தம்பி நீங்க கேட்கிற கேள்வி, அவர்களிடம் வாங்க முடியாது தம்பி, அவர்கள நம்பவும் முடியாது. நம்பினால் தெருவில்தான் நிற்க வேணும். நாங்கள் சேமிக்கும் விதையைப் பற்றி எங்களுக்கு நல்லாத் தெரியும். நல்ல விதை எது என்று நாங்க தெரிஞ் செடுத்து சேமிப்பம். இப்படி நாங்க சேர்த்துவந்தாத் தான் முழுவதும் முளைத்துக் காய்க்கும். 9
சு. சந்திரகுமார்.
الم. ஐப்பசி - 2002

Page 11
Y- O O
தலவாக்கலை தண்ணி
ஏற்படக்கூடிய சூழ்
உலகத்தில் இதுவரை காலமும் அபிவிருத்தி என்ற பெரும்பாலான செயற்பாடுகள் யாவும் ஒருபக்க நலன் சார்ந்தவை குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளிடையே மேற்கொள்ளப்படு அனைத்தும் மக்கள் நலன்களைக் கருத்தில் கொள்ளாது ஒருசில சக்திகளதும் நலன்களைக் கருத்தில் கொண்டு மேற்கொள் செயற்பாடுகளாகவே இருந்து வருகின்றன.
இந்த வகையில் மேற்கொள்ளப்படவுள்ள மக்க: மலையகத்தின் தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டமும் அன எனவே! அபிவிருத்தி என்றால் அது மக்களுக்குச் ச விளைவிக்காததாக அமைந்திருத்தல் வேண்டும் என்பதை வலி உள்ளுர் அறிவுச் செயற்பாட்டுக்குழுவினராகிய நாம் மேற்ப மக்கள் விரோத செயற்பாடான தலவாக்கலைத் தண்ணீர் மறிப் எதிர்ப்பதுடன், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்களு எமது ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
(இக்கட்டுரை தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டத்திற்கு எதி மனிதன், சரிநிகர் ஆகியவை இணைந்து வெளியிட்ட பிரசுரத்திலி செய்யப்படுகின்றது)
கொத்மலை ஆற்றை தலவாக்கலை நகருக்கருகில் மறித்து இந்நீர்த்தேக்கம் ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்காக இந்நாட்டின் மிகவும் அழகிய, பசுமைத்தன்மைக்கு புத்துணர் ச்சியூட்டும் ஆறு, நீர் வீழ்ச்சிகளை அவற்றின் தொடக்கத்தி லேயே மறித்து, மலைகளைக் குடைந்து சுரங்கக் கால்வாய்கள் அமைத்து அதனூடே அந்நீரை மின்நிலையத்திற்குக் கொண்டு செல்வதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
டெவொன், சென் கிளயார்ஸ், சென், அன்ரூஸ், ரம் பொடை, பூண்டுலோயா, புனா ஆகியனவே இந்நீர் மின்திட்டத் திற்காக திசை திருப்பப்படவுள்ள நீர்வீழ்ச்சிகளாகும். இவற்றில் நான்கு நீர்வீழ்ச்சிகள் இலங்கையின் அதிபிரசித்த நீர்வீழ்ச்சி களாகும்.
இவ்வாறு இந்நீர்வீழ்ச்சிகளைத் திசை திருப்பி நீரை மின்நலையத்திற்குக் கொண்டு செல்வதற்காக மலைகளைக் குடைந்து 12.7 கிலோ மீற்றர் நீளமான சுரங்கக் கால்வாய்த் தொகுதி ஏற்படுத்தப்படவுள்ளது. கால்வாய் அமைக்க உத்தேசித் துள்ள மலைகளை உள்ளடக்கிய பிரதேசத்தின் 50 வீதமான பிரதேசம் மண்சரிவுக்கு உள்ளாகிடும் அபாயத்தைக் கொண் டுள்ளது. இது மலைகளின் இருப்புக்கே ஆபத்தானதாகிறது. மின்நிலையத்தை அமைப்பதற்கு நிச்சயிக்கப்பட்டி ருக்கும் பகுதியானது மண்சரிவுக்கு உள்ளாகும் ஆபத்தைக் கொண்ட பகுதியாகும் என இத்திட்டத்தின் ஆரம்ப முயற்சிகளின் Guit (65 Central Engineering Bureau 67g)/lb 9 J& 5g)76,607b Jilgai காட்டி அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இதன் காரணத்தினாலேயே இப்பகுதியானது மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பான பிரதே சமல்ல என மகாவலி அதிகாரசபை அறிவித்து சில பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றவும் செய்தது. இன்றும் மின் நிலையத்தை ஏற்படுத்தத் தீர்மானித்துள்ள பகுதிக்குச் செல்லும் பாதை மண்சரிவுக்குள்ளாவதாக அறிவிப்புப் பலகையும் வைக் கப்பட்டுள்ளது.
இவ்வாறு அடிப்படையிலேயே ஆபத்தான இப்பகு தியில் நீர்த்தேக்கத்தை அமைப்பதனால் பெருமழை காலத்தில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டு அணையே உடைந்து செல்லும் ஆபத்தைக் கொண்டுள்ளது.
மேலும் நீர்த்திட்டத்திற்கு அண்மித்த மலைப்பிர தேசமானது மேற்பரப்பில் நீரை உறிஞ்சி வைத்திருக்கும் மலைத்
மூன்றாவது கண்
 

மறிப்புத்திட்டத்தினால்
பெயரில் இடம்பெற்று வரும் யாகவே இருந்து வருகின்றன. ம் அபிவிருத்தித் திட்டங்கள் முதலாளிகளதும், ஏகாதிபத்திய ளப்படும் மக்கள் விரோதச்
ர் விரோதச் செயலாகவே மந்துள்ளது.
ாதகமாக, சூழலுக்குத் தீங்கு லியுறுத்திச் செயற்பட்டு வரும் டி சூழலுக்குத் தீங்குதரும், புத்திட்டத்தினை வன்மையாக
தொகுதிகளைக் கொண்டதாகும். மலைகளின் மேற்பரப்பில் மண் செறிவாகவும் உட்பகுதிக்குச் செல் லச் செல்ல மண்ணின் செறிவுத் தன்மை குறைவாகவும் காணப் படுகிறது. அதனால் கிடைக்கப் பெறும் நீரில் பாரியளவு நீரை மலைகளின் மேற்பரப்புத் தொகு தியே சேமித்து வைத்திருக்கிறது. இதனால் இப்பகுதியில் வளரும் தாவரங்கள் அதிகளவு நீரை கொண் டுள்ள மண்ணிலேயே வளரும்
இசைவாக்கத்தைக் கொண்டுள் ளன. நீர் வீழ்ச்சிகளை சுரங்கக் கால்வாய் மூலமாக நீர்த்தேக்கத் திற்கு திருப்புவதால் நீர்வீழ்ச்சி களினால் மேற்பரப்பில் கிடைக்கப் பெறும் நீர் கிடைக்காது போய் மலைகளின் மேற்பரப்புமணி நீரின்றி காய்ந்து போகும். அது மாத்திரமின்றி மலைகளின் வழிந்தோடும் நீர்ப்பாதைகள் காய்ந்துபோய் நிலக்கீழ் நீரோ ட்டமும் வரண்டு போகும். இதனால் இப்பகுதிகளில் தளைத் திருக்கும் மரஞ்செடி கொடிகள் படிப்படியாக காய்ந்து போய் பசுமை அழிந்திடும். இதுயாவும் தம் பங்கிற்கு மழையின்மை யையும் வரட்சியையும் எற்படுத்தும்.
கொத்மலை ஆற்றை தொடக்கத்திலேயே மறிப்பதால் அதிலிருந்து கிளைத்திடும் சிற்றாறுகள், பீலிகள், ஓடைகள் அழிந் துபோக, அவற்றால் பயன்பெற்ற மக்களும் உயிரினங்களும் பெருந்தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும்.
எனவே தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டத்தினால் மின்சாரத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பது கற்பனையானதாக அமைவதுடன் ஆக்கிரமிப்பு அபிவிருத்தியா ளர்களின் வெறித்தனமான மின்சாரத் தேவைக்கு வளமான ஆறுகளை மேலும் மேலும் பலியிடுவதாகத்தான் அமையும். ஈற்றில் அந்நிய முதலீட்டாளர்களிடம் மின்சாரத்தை மாத்திரமல்ல குடிப்பதற்கான தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும். இதையும் ஆக்கிரமிப்பாளர்கள் கருத்திற்கொண்டு தான் தண்ணீரை தனியார் மயமாக்கிடும் திட்டத்ததையும் ஆரம்பித்து இருக்கிறார்கள்.
நீர்வீழ்சிகளிலிருந்து தண்ணீர் கீழே வீழ்ச்சியுறுகையில் அதிலிருந்து சிதறும் நீர், பனிப்படலம் போல் அதைச் சுற்றி யுள்ள பகுதியில் பரவுகிறது. தொடர்ச்சியாக நீர் பனிப்படலம் போல் காற்றில் கலப்பதால் நீர்வீழ்ச்சிகளை சுற்றியுள்ள பகுதி குளிர்ச்சியாகவும் ஈரப்பதனுடையதாகவும் இருக்கிறது. சூழலியல் விஞ்ஞான்தில் இத்தகைய பிரதேசம் நீர்வீழ்ச்சியின் பனிப்படலப் பிரதேசம் (Spray Zone) என அழைக்கப்படுகிறது. இந்த பினிப் படலப் பிரதேசம் மிகவும் சிறிய பரப்பளவில் இருந்தாலும் கூட இந்தப் பகுதியின் சிறப்புத்தன்மை காரணமாக இப்பிர தேசத்திலுள்ள தாவரங்களும் உயிரினங்களும் ஏனைய பகுதி களில் காணக்கிடைக்காத விசேச இலட்சணங்களைக் கொண் டிருப்பதுடன் விசேச மரபணுக்களையும் கொண்டுள்ளன. நீர் வீழ்ச்சிகளை சுரங்கக் கால்வாய் மூலமாக நீர்த்தேக்கத்திற்கு திசை திருப்பும் நடவடிக்கையால் நீர்வீழ்சிகளினால் உருவாகும் பனிமூட்டம் இல்லாது போய் இப்பனிப்படலப் பிரதேசமும் அதன் விசேச தன்மைகளும் அழிந்து போகும். ار
1- ஐப்பசி - 2002
ருக்கும், அமைப்புக்களுக்கும்
ராக நாடோடிகள், மூன்றாவது ருந்து நன்றியுடன் மீள்பிரசுரம்

Page 12
தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டத்தினால் ஏற்
படவுள்ள பாரிய சூழலியல் பாதிப்பு குறித்து மத்திய சூழலியல் அதிகார சபையினால் சுட்டிக்காட்டப்பட்டு 1995இலேயே இத் திட்டம் கைவிடப்பட்ட திட்டமாகியது. எனினும் இலங்கை மின் சாரசபையானது இத்திட்டம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சூழலியல் அமைச்சுக்கு முறையீடு செய்ததையடுத்து இத்திட்டம் குறித்த விரிவான மதிப்பீட்டைச் செய்வதற்கான நிபுணத்துவக் குழுவொன்று சூழலியல் அமைச்சின் செயலாளர் சிசில் அமர சிங்கவினால் நியமிக்கப்பட்டது. விசேட நிபுணர்கள் அடங்கிய இக்குழுவானது பல்வேறு நிபுணத்துவ பிரிவினரதும் மக்களதும் கருத்துக்களைப் பெற்று விரிவான தேடலை நடாத்தி தனது தீர்ப்பை வழங்கியது.
இக்குழுவின் தீர்ப்பானது மேல்கொத்மலை நீர்த் திட்டத்தை ஆரம்பிக்க அனுமதிக்கக் கூடாது என்பதாயிருந்தது. மீளவும் இத்தீர்ப்பை எதிர்த்து இலங்கை மின்சார சபை சூழலியல் அமைச்சகத்தை அணுகியது. இம்முறை அமைச்சின் செயலாளராக இருந்தவர் எவ்வித பரிசீலனையும் செய்யாது திட்டத்தை ஆரம்பிக்க அதிகாரம் வழங்கினார். இந் நாட்டின் பலதுறைகளை சார்ந்த நிபுணர்களதும் சூழலியலாளர் களதும் மக்களதும் ஆலோசனையுடன் மத்திய சூழலியல் அதிகார சபையினால் இருமுறை நிராகரிக்கப்பட்ட திட்டமே இன்று அவசர அவசரமாக முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டிற்கு நாளொன்றுக்கு தேவைப்படும் மொத்த மின்சாரத்தின் அளவு 1350 மெகா வோட்ஸ் ஆகும். தற்போது 1250 மெகா வோட்ஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. மிகுதி 100 மெகா வோட்ஸ் மின்சாரத்தை மேல் கொத்மலை திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கை மின்சார சபை கருதுகிறது.
தலவாக்கலையில் நிர்மாணிக்கப்படவுள்ள நீரேந்தியின் கொள்ளவு 0.8 மில்லியன் கன மீட்டராகும். அதனால் நாளொன் றுக்கு உற்பத்தி செய்யக்கூடிய உயர்ந்த பட்ச மின்சாரத்தின் அளவு 150 மெகா வோட்ஸ் எனக் கூறப்படுகிறது. எனினும் நாளொன்றுக்கு 126 மெகா வோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்கின்ற ரந்தெனிகல நீரேந்தியின் கொள்ளளவு 861 மில் லியன் கன மீற்றராகும். 20 மெகா வோட்ஸ் உற்பத்தி செய்யும்
*மூலிகைவேந்தருடனா
கலந்துரைய
இன்று உலகமயமாக்கம் எனும் பயங்கரத்திலிருந்து விடு படும் பொருட்டு உலகம் தழுவிய ரீதியில் உலகின் பன்மைத்துவங் களுக்கேற்ப சுதேசிய அறிவு முறை மைகள் பல மீளவும் முக்கியத்துவத்துடன் உருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில் உலகின் ஏகாதிபத்தியமும், முதலா ளித்துவமும் தமது வியாபார நலன்களுக்கேற்ப உலகத்தில் ஒரே யொரு வைத்திய முறைதான் இருக்க வேண்டும் என்பதைச் செயற் படுத்த தொடங்கியுள்ள காலத்தில் இந்த தங்கிநிற்க வேண்டிய, வியாபாரத்தையே பிரதானமாகக் கொண்டதால் ஆரோக்கியத்தில் அவ்வளவு அக்கறை காட்டாத வைத்திய முறைமைகளுக்கு மாற்றாக சுதேசிய வைத்திய முறைகள் பல இன்று பேணப்படு வதன் அவசியம் உலகந்தழுவிய ரீதியில் ஏற்பட்டு வரும் சூழ் நிலையில்,
இயற்கை மூலிகைகளைப் பிரதானமாகக் கொண்டதாக விளங்கிவரும் நமது சித்த ஆயுர்வேத வைத்தியம் பற்றியும் அதன் இன்றைய அவசியம் குறித்தும் கலந்துரையாடும்
-1]
 
 

கீழ் கொத்மலை நீரேந்தியின் கொள்ளளவு 172 மில்லியன் 56) மீட்டராகும். 120 மெகா வோட்ஸ் உற்பத்தி செய்யும் சமனல வெவ நீரேந்தியின் கொள்ளளவு 278 மில்லியன் கன மீட்டராகும். இப்பிரமாண்டமான நீரேந்திகளுடன் ஒப்பிடுகையில் தலவாக்க லையில் உருவாக்கப்படவுள்ள நீரேந்தி மிகச் சிறியதாகும். எனவே இதனால் எதிர்பார்க்கப்படும் 150 மெகா வோட்ஸ் மின் சாரத்தை நாளொன்றுக்கு உற்பத்தி செய்ய முடியுமா என்பது கேள்வியே.
தலவாக்கலை திட்டத்திற்கு மாற்றுத்திட்டமாக யோக் ஸ்பர்ட் திட்டம் பொருத்தமானது என சூழலியல் அமைச்சின் செயலாளர் சிசில் அமரசிங்கவினால் நியமிக்கப்பட் நிபுணத் துவக் குழு பரிந்துரைத்திருந்தது. இதற்குக் காரணம் யோக்ஸ் பர்ட் திட்டத்தினால் எந்தவொரு நீர்வீழ்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படாததுடன் இப்பிரதேசத்திலிருந்து ஒரு குடும்பம் கூட வெளியேற வேண்டிய தேவை இல்லாததாலாகும். அவ்வாறே மிகக் குறைந்த சூழலியல் பாதிப்புடன் நாளொன்றுக்கு 100 மெகா வோட்ஸ் மின்சாரத்தை இத்திட்டத்தினால் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அக்குழு சுட்டிக் காட்டியிருந்தது. எனினும் இதை கவனத்திற்கெடுக்காது ஆட்சியாளர்கள் தலவாக் கலை திட்டத்திலேயே ஆர்வமாயுள்ளனர்.
2002ம் ஆண்டானது ஐக்கிய நாடுகள் சூழலியல் பாதுகாப்பு ஆணையத்தினால் உலக மலைகளைப் பாதுகாக்கும் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகையதொரு காலகட்டத்திலேயே பூரீலங்கா அரசு மலைகளை குடைந்து சிதைத்திடும் காரியத்தை மேற்கொள்கிறது என்பதையும் இத ற்கு ஜப்பான் நவகாலனிய ஆக்கிரமிப்பாளர்கள் பின்னணியில் செயற்படுவதையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமான தாகும்.
அவ்வகையில், தலவாக்கலை தண்ணீர் மறிப்புத் திட்டமானது வெறுமனே மின்னுற்பத்தியை மாத்திரம் நோக்கமாகக் கொண்டதல்ல. மின்சார உற்பத்தி எனும் முகமூடியின் பின்னால் உள்நாட்டு அதிகார தரப்பினதும் அந்நிய சக்திகளினதும் பல்வேறு ஆக்கிரமிப்புத்திட்டங்கள் விரவிக் கிடக்கின்றன என்பதே உண்மையாகும். 9
பொருட்டு எனது ஊரிலே உள்ள பிரபல
O
சித்த ஆயுர்வேத வைத்தியர் ஒருவரிடம் சென்றேன்.
அந்த வைத்தியரது பெயர் இரா. கலை
5 வாணன் இவரைக் “கண்ணன் வைத்தியர்” T ) என்றே பெரும்பாலும் அழைக்கின்றனர். பதிவு செய்யப்பட்டசித்தாயுர்வேத வைத்தியரான - ഉ மட்டக்களப்பு நகரிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சீலாமுனை எனும் இடத்தில் வசிக்கின்றார். இங்கேயே தனது சித்தாயுர்வேத வைத்தியத் தொழிலையும் திறம்படச் செய்து வருகின்றார்.
இன்று நம்மத்தியில் பல சித்தாயுர்வேத வைத்தியர் கள் இருந்து வந்தாலும் அவர்களிடம் காணமுடியாத ஓர் முக்கிய செயற்பாட்டை இவரிடம் பார்க்கக் கிடைத்தது. அதாவது இவர் தனது வைத்தியத்திற்குத் தேவையான மிகவும் அடிப்படையான இயற்கை மூலிகைகள் யாவற்றையும் தானே தனது காணியிலேயே நட்டு வளர்த்து வருவதாகும். இவரிடம் தற்சமயம் முந்நூறிற்கும் மேற்பட்ட மூலிகைகள் உள்ளதாகக் கூறுகின்றார். இவற்றில் அரு கிய சிறந்த மருத்துவக்குணம் கொண்ட பறங்கிக்கிழங்கு, அமுக் குறா, வீளி, கடலாஞ்சி, மலர்தாங்கி, வெள்ளறுகு, கொடிவேலி, அருநெல்லி என அரிய மூலிகைகள் பலவும் இருப்பதாகக் கூறினார். இவரது காணி மூலிகைத் தோப்பாகவே காட்சியளிக்கின்றது. இவ்விதம் இவ்வைத்தியர் தனது வைத்தியத்தொழிலுக்கான மூலிகைகளைத் தனது பிள்ளைகளைப் போல் பேணிக்காத்து வருவதனால்தான் இவருக்கு வடக்கு கிழக்கு மாகாண சபை மிகப்பொருத்தமாக "மூலிகை வேந்தன்” என்ற பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது. w مــ 2- . ஐப்பசி - 2002

Page 13
r தனது தொழிலுக்குத் தேவையான அடிப்படை வளங்களைத்தானே விளைவித்து வைத்திருப்பதன் காரணத் தினால் இவர் “நான் எனது தொழிலுக்காக கடைச்சரக்கு களையோ! வெளிநாட்டு மருத்துவதாதுப் பொருட்களையோ! நம்பித் தொழிற் செய்யவில்லை. உண்மையாக எப்படிச்சித்த வைத்தியம் செய்யப்படவேண்டுமோ அப்படியே இயற்கை முறையில் மூலிகைகளைக் கொண்டு செய்து வருகின்றேன். எனது வைத்தியத் தொழில் எவரிடமும் தங்கி நிற்காதது, எவராலும் தீர்மானிக்கப்படாதது, இயற்கை உள்ளளவும் எனது வைத்தியத்தை திறம்பட புரிய முடியும்”
என்று மிகவும் மகிழ்ச்சியுடனும் துணிவாகவும் ஆணித் தரமாகக் கூறினார். உண்மைதான் சுயமாக தமது பலத்தில் வாழும் எவரும் கூறும் தன் மான வார்த்தைகள் அவை. இன் றைய உலகமயமாக்கச் சூழலில் ஏகாதிபத்தியநாடுகளது கம் பணிகளின் மருந்துப்பொருட்களை நம்பி வாழ முற்படும் ஒவ் வொருவரும் மிகவும் கவனமாக கேட்கவேண்டிய வாசகங்கள் ᎦᎥ 6Ꮘ06Ꭳl .
இடையே மூலிகைகள் பற்றிக் கேட்கவாய் உன்னி னேன் அதற்கு முன் வைத்தியர் முந்திவிட்டார். சொன்னார் ஒரு வார்த்தை அது மிக முக்கியமான இன்னொரு வார்த்தை அதாவது “நமது முன்னோர்கள் இயற்கையுடன் சேர்ந்து வாழ்ந் தார்கள். தட்பவெப்பநிலைகளுக்கேற்ப இயற்கை தந்த உணவு களை உண்டார்கள் இதனால் அவர்களுக்கு கொடிய நோய்கள் | எதுவும் வரவில்லை நீண்டகாலம் உயிருடன் வாழ்ந்தார்கள்! ஏன் இன்றும் கூட இப்படி வாழ்கிற முதியோர் பலர் இருக்கிறார் கள் எனது குருநாதர் படுவான்கரையிலிருந்து காலில் பாட்டா கூடபோடாமல் எண்பது வயதுகளைத் தாண்டிய பின்பும் நடந்து வந்து எங்களைப்பார்த்துப் போகின்றார் இதை நீங்கள் நம்பு வீர்களா?” என்று என்னைப் பார்த்து கேட்கின்றார்.
கேட்டவர் தொடர்ந்து “அவர் இன்றும் இயற்கையுடன் சேர்ந்தே வாழ்கின்றார் அதனால் அப்படி தேக ஆரோக்கியமாக உள்ளார். ஆனால் இன்றைய மனிதர்களோ இயற்கையை மீறியல்லவா வாழ முற்படுகின்றார்கள் எனவே கொடிய நோய் கள் என்ன! இதை விடப் பயங்கரம் எல்லாம் வருவதை தவிர் க்கவே ஏலாது தம்பி! என்று தனது வார்த்தைகளை மூச்சுவிடாது கூறி முடிக்கின்றார்.
இப்போது நான் வைத்தியரிடம் கேள்வி கேட்க நேரம் கிடைக்கிறது கேட்கிறேன் நீங்கள் உங்களிடம் உள்ள மூலிகை களை எவ்விதம் சேர்க்கின்றீர்கள், எவ்வாறு பராமரிக்கின்றீர்கள்? அதற்கு வைத்தியர். நான் ஒவ்வொருநாளும் வெளியே செல் லும்போது வீதிகள் எங்கிலும், நான் செல்லும் இடங்கள் எங் கிலும் புதிய மூலிகைகள் எதுவும் அகப்படுமா என்று அவதா னித்த படியே செல்கின்றேன். எப்படியாவது ஓரிரு புதிய மூலிகைகளைப் பெற்று வருவேன். இப்படி தேடிச்சேர்த்தவை தான் இங்கே என் வளவில் உள்ள அனைத்து மூலிகைகளும் என்றார்.
தொடர்ந்து இந்த மூலிகைகளை முக்கியமாக இயற்கை முறைப்படியே பராமரித்தல் அவசியமானது. ஏனென்றால் எமது சித்தவைத்தியத்தின்படி இயற்கையான மூலிகைகளே மிகவும் அவசியமானவை ஆகவே செயற்கைப் பசளைகள் போடப் படாது இயற்கையில் விளைவிக்கக் கூடியதாக மூலிகைகளை வளர்த்து வருகின்றேன் என்று கூறிமுடித்தார்.
அடுத்த வினா நான் கேட்கிறேன். அப்படியென்றால் உங்களது மூலிகைகளுக்கு பூச்சிகளின் தாக்கம் நோய்கள் என்பன ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? அதற்கு வைத்தியர். தம்பி பல்வேறு இயற்கை மூலிகைகள் (தாவரங்கள்) ஒரு சூழலில் வளரும் போது அங்கு நோய்கள், பூச்சிகளின் தாக்கம் என்பன ஏற்பட இடமிருக்காது. இது இயற்கையின் விதி ஒன்றின் இயல்பு மற்றய தாவரத்திற்குதாக்கம் ஏற்பட இடம்கொடாது, இயற்கைச் சூழலை மாற்ற முனையும் போது தான் அங்கே பூச்சிகளின் தாக்கம், நோய்கள் என்பன இடம் பெறுகின்றன இயற்கையின் சமநிலை குழம்பாமல் இருக்குமாக இருந்தால் தாவரங்களை ஒழுங்காக எவ்வித நோய்கள் ஏற்படா
மூன்றாவது கண் -

வண்ணமும் வளர்க்க முடியும். இதை நான் அனுபவ பூர்வமாகி சொல்கிறேன். 1992களிலிருந்து கடந்த 10 வருடங்களாக இக் காணியிலே பல மூலிகைகளையும் நட்டு வளர்த்து வருகின் றேன். இங்கு பல மூலிகைகளும் இருப்பதால் அதாவது நான் முன்னர் கூறிய இயற்கையின் சமநிலைப்படி பலதும் இருப்பதனால் நோய்களோபூச்சிகளின் தாக்கமோ எதுவுமே ஏற்படவில்லை. பல மூலிகைகள் இருக்கும் ஓரிடத்தில் பூச்சிகள் அதாவது கொடிய பூச்சிகள் உருவாக மாட்டாது உதாரணமாக “சிறியாள் நங்கை” எனும் செடிக்கு அருகில் விசப்பாம்புகள் வரமாட்டாது, இவ்வாறு பல மூலிகைகள் ஒன்றிலொன்று தங்கி ஒன்றுக்கொன்று உதவி வருவதால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாதுள்ளது.
இப்படியிருந்தும் தட்டுத்தவறி ஒருசில பூச்சித்தாக்கம் ஏற்பட்டால் தாக்கம் ஏற்பட்ட செடியை இடம்மாற்றி ஏனைய மூலிகைக்குள் வைத்து விட்டால் அது நீங்கிவிடும் இவ்வளவு காலத்தில் இரண்டு தடவை வெவ்வேறு மூலிகைகளில் பூச்சி பிடித்தபோது நான் இவ்விதம் செய்தேன் அது அழிந்துவிட்டது. எனவே இயற்கையின் நியதிப்படி பலதையும் ஓரிடத்தில் வளர்க்கும் போது நோய்கள் எதுவும் ஏற்படவாய்ப்பில்லை. என்று கூறினார்.
மேலும் இந்த இயற்கை மூலிகைகளைக் கொண்டு ஏனைய வைத்திய முறைகளால் கைவிடப்பட்ட பாரிய 15 வகை யான நோய்களை சுமார் 150 நோயாளர்களிடையே இனங் கண்டு தீர்க்க முடிந்துள்ளது. இத்துடன் சாதாரணமாக இதுவரை 2000 இற்கும் மேற்பட்டோர் இவ்வியற்கை மூலிகை வைத்தியம் மூலம் சுகமாக்கப்பட்டள்ளார்கள் என்பதைக் கூறினார்.
இறுதியாக இன்று எல்லாவற்றுக்கும் மேலைத்தேய வைத்திய முறையையே நாடிச் செல்லப்படும் சூழலில் இயற் கைவைத்தியம் பற்றி நமது மக்களுக்கு நீங்கள் எதனைக் கூறப்போகின்றீர்கள் எனக் கேட்டேன்.
நாங்கள் சிறு சிறு நோய்களுக்கும் மேலைத்தேய வைத்திய முறைகளை நாடுவது நமது உடலில் ஒரு நோயைத் தீர்த்து இன்னொரு நோயை சேர்க்கும் நடைமுறைக்கே வழி வகுக்கின்றது. ஆனால் நமது இயற்கை மூலிகைகளைப் பயன் படுத்தும் சித்தவைத்தியம் பக்கவிளைவுகள் எதையும் உண்டு பண்ணாது உருவாகும் நோயை வேரோடேயே அழிக்கும் ஆற்றல் படைத்தது. நமது முன்னோர் பாட்டிவைத்தியம் மூலம் சிறுசிறு நோய்களைத் திறம்படச் சுகப்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.
எனவே முதலாளிய கம்பனிகளின் வியாபார நோக் கில் திட்டமிடப்பட்டு பல புத்திசாலித்தனமான வழிமுறைகளுடாக அழிக்கப்பட்டு வரும் எமது சுதேசிய வைத்திய முறைகளை மீளவும் உருவாக்கிட நாம் முற்படவேண்டும் குறிப்பாக பழை யமாதிரி பாட்டி வைத்தியத்தை நமது ஒவ்வொரு வீட்டிலும் | உருவாக்க வேண்டும் இவ்வாறு எமது வைத்தியங்களை மீளவும் உருவாக்குவது நமது உழைப்பை வெளியில் யாரு க்கோ கொடுக்காமல் சிறந்த உடல் ஆரோக்கியத்தையும் பெற (փlգպմ).
உங்களைப்போன்ற இளஞ்சந்ததியினர் இந்த செயற் பாடுகளில் ஈடுபடுவது மகிழ்ச்சியைத் தருகின்றது. உங்களைப் போன்றவர்களுக்கு நான் சித்தாயுர்வேத வைத்திய முறைகள் பற்றியும் சிறப்பாக மூலிகைகளின் முக்கியத்துவங்கள். நன்மை கள் பற்றியும் எந்தநேரமும் ஆலோசனைகள் ஆதரவுகள் புரிய தயாராக உள்ளேன்.
முக்கியமாக நான் வற்புறுத்திக் கூற முனைவது நாங்கள் எவரிலும் தங்கிவாழாது சுயமாக வாழவேண்டுமாயின் ஒவ்வொரு மனிதனும் இயன்றளவு இயற்கை மூலிகைகளைத் தமது வீடுகளில் வளர்க்க முயல வேண்டும். இப்படி இயற்கை மூலிகைகளைப் பேணினால்தான் இயற்கை வைத்தியத்தினைக் காக்க முடியும். என்று கூறி முடித்தார். 9
து. கெளரீஸ்வரன்.
المـ .3ー ஐப்பசி - 2002

Page 14
r கலாநிதி வந்தனாவுடனான வசவ்வியின் வதாடர்ச்சி.
In Motion g(s) does : RAF I (சர்வதேச கிராமிய முன்னேற்ற
960LDuf) Rural Achencement Foundation International ரேர்மினேட்டர் தொழில்நுட்பம் பற்றிக் கூறுகின்றனர். (Terminator Technology) 35 up glas angp(ypiguLDT?
வந்தனா : ஒரு விதையை நடும்போது, இந்தியா வில் உள்ள ஒவ்வொரு குடியானவனும் ஒரு எளிய பிரார்த்தனையைக் கூறுவது வழக்கம். “இவ்விதை களைப்படையாதிருக்கட்டும், தொடர்ச்சியாக அடுத்த வருடமும் இது மீண்டும் விதையை கொண்டுவரட் டும்” என்பதே இப்பிரார்த்தனை சுலோகத்தின் சாரம் எனவே விவசாயிகள் இது தாம் பயிரிடும் பத்தாவது சந்ததி விதை, இது எமது ஐந்தாம் சந்ததி விதை எனக் கூறுவதில் மகிழ்ச்சி கொள்வார்கள். நேற்று முன்தினம் நான் எனது கிராமத்தில் இடம்பெற்ற பயிர் விதைகள் பரிமாற்றுச் சந்தை பற்றி கூற விளைகிறேன். இச்சந்தைக்கு வந்த விவசாயி ஒருவர் மணம்மிக்க பாஸ்மதி அரிசி வகையினை கொண்டு வந்திருந்தார். அவரது கூற்றுப்படி அது அவரது குடும்பத்தினரால் பயிரிடப்படும் ஐந்தாம் தலைமுறை விதையாகும். எனவே இன்றுவரை மனிதர்கள் விதையினை பாதுகாக்கவும் அதன் தொடர்ச் சியை உறுதிப்படுத்துவதும் தமது கடமை என நினைத்து வந்துள்ளனர். ஆனால் இன்று அந்தப் பிரார்த்தனை மாறுவதுபோன்று தென்படுகிறது. “இந்த விதையின் திறன் இத்துடன் முடிவடையட்டும். அப்போதுதான் இதிலிருந்து இலாபம்சம்பாதிக்கலாம்” என்றே இப்பிரார்த்தனை உள்ளது. இதுவே இன்றைய ரேமினேட்டர் (Terminator) தொழில்நுட்பம் இதன்நோக்கமே விதைமுளைத்தலை தடுத்தலும் இது தொடர்பான கண்காணித்தல் செலவை குறைத்தலுமே: பாதுகாப்பினைப் பொறுத்தவரை ஹைபிலட் இன விதைகள் கூட நல்லதல்ல. எனினும் இதுவே விவசாயிகளை வரவைக்க அவர்கள் கையாண்ட முதல் கருவியாகும். ஹைபிரைட் விதைகள் நல்லின விதைகளைத் தருவைதில்லை. இதன் கருத்து அவை முளைப்பதில்லை என்பதல்ல. மாறாக அவை அவற்றின் பெற்றோரை ஒத்தே மரபுப் பிரிப்பினைக் கொண்டுள்ளன. அவை ஏதோ ஒருவகை பயிரினைத்தரக்கூடும். விதையினைச் சேமித்தலைத்தடுக்கும் இன் னொரு முறை காப்புரிமையாகும். காப்புரிமை இருந்தாலும் மேற்பார்வை செய்வது அவசியமாகும். அதாவது விதை சேகரிக்கப்படாமையை உறுதி செய்வது அவசியமாகும். Monsanto போன்ற கூட்டுத்தாபனங்களுக்கு இவ் ரேமினேட்டர் (Terminator) தொழில்நுட்பம் மிகவும் உகந்ததாகும். ஏனெ னில் அவர்கள் பொலிஸ்காரன் வேலை செய்யவேண்டி இராது ஒரு விவசாயி என்பவன் குறைந்த வேதனம் பெறும் டிரக்டர் வண்டியோட்டி என்பதே நவீன விவசாயி பற்றிய வரைவிலக்கணமாக உள்ளது. எனினும் விவசாயி என்பவ னது கடமை மண்ணைப் பாதுகாத்தல், அதன் வளத்தினைப் பேணல் மற்றும் விதையின் வளத்தினைப் பேணல் போன்றனவாகும். உண்மை வரைவிலக் கணத்தில் நிலத்துடனும், விதையுடனும் உறவுகொண்டு எதிர்காலச் சந்ததி களுக்காக அதனைப் பேணுபவனும் அதன் வளத்தினை மீள உயிர்ப்பிப்ப வனுமே விவசாயி என்ப்படுபவன்.
- நல்ல விவசாயி என்பவன் தன்னிடம் உள்ளதைப் பேணுபவன். இவ் அடிப்படை ஒழுக்கத்திற்கு எதிரானதாகவே இத்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அது மிக வும் ஆழமாக நோக்கப்பட வேண்டியது. ஏனெனில் தற்போது அது இயற்கைக்கு எதிரானதாகவும் உள்ளது. Monsanto கூறுவது போல் நோக்கினால் நாம் கூர்ப்பினையே திறுத்தவேண்டும். ஏனெனில் கூர்ப்பு சுதந்திரத்திற்கு வழிவகுக்கின்றது. In Motion சஞ்சிகை மரபணுப் பொறிநுட்பத்திலிருந்து Eugenics வரையான சரித்திர ரீதியான தொடர்புயாது?
 

வந்தனா : முன்னர் விஞ்ஞானத்தின் சாயலாக முக்கியமாக மரபணுப் பொறிநுட்பம் தொடர்ச்சியான ஒன்றாக விளங்கிவந்தது. இது மனிதனது அறி வாற்றலின் வெளிப்படையாகவும் அதன் விளைவான புதிய துறைகளாகவும் விளங்கின.
எனினும் தொழிற்புரட்சிக் காலத்தின் பின்னர் வேக்கன் கூறியது போல அறிவியலுக்கும் அதிகாரத்திற்கும் இடையேயான திருமணத்தின் பின்னர் சிந்தனைகளின் தொடர்ச்சியான வெளிப்பாடு விஞ்ஞான வளர்ச்சியின் வெளிப்படையாக அமையவில்லை. வலுக்கட்டாயமாக ஒரு வகைநிதியூட்டத்தின் வழிகாட்டலிலேயே விஞ்ஞானம் வளர்ந் தது. மரபணுப் பொறிநுட்பத்தின் வேர்கள் ஊன்றத் தொட ங்கியது 1930களிலேயே ஆகும். அது அத்திவாரம் ஏதுமற்ற மூலக்கூற்று உயிரியலின் ஆரம்பகாலம் இது என்ன? என்ற கருத்து எவருக்கும் இருக்கவில்லை. அவர்கள் அறிந்ததெல் லாம் இரண்டே விடயங்கள் தான்.
ஒன்று Gegenics எனும் அறிவியல்துறை ஐரோப் பாவில் அதன் முக்கியத்துவத்தின்ை இழந்திருந்தது. எனவே இதுபற்றிய திட்டம் பொதுமக்கள் மத்தியில் ஒரு மறை - முகமான வழியில் அறிமுகப்படுத்தபடவேண்டும். வெளிப் படையில் இது சமூக நோக்கானது. இது இவ்வாறானதொரு விஞ்ஞான அடிப் படையில் வேரூன்றப்படவேண்டும். அதுவும் அனேகமாக உயிரியல் வேரூன் றப்பட வேண்டியது முக்கியம். இம்முழு நிறுவனத்திற்கும் றொக்வெல்லர் L060T pഗേ (Ruckefeller Foundation) நிதியுதவி வழங்கியது. இதுவொரு சமூக உளவியல் நிகழ்ச்சித்திட்டம்.
முன்னர் அவர்கள் உயிர் அணுக்களை கோட்பாட்டுரீதியில் பெயரிட் டனர். அவையே மரபுக் கூறுகளை நிர்ணயிக்கின்றன. இவற்றினை அவர்கள் வகைப்படுத்தி ஒருங்கமைக்க 50 ஆண்டுகளும் 10 நோபல் பரிசுகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இவ்வகையில் தோற்றம் பெற்ற ஒன்றே வெட்சன் கிறீக் DNA அமைப்பும் ஆகும். இவ்வகையில் அவர்கள் செல்லக்காரணம் சமூக பார பட்சம் தொடர்பான நிலையில் குற்றஞ்சாட்டப்படாமல் தப்பிக்கவும் அதனை உயிரிலும் அணுக்களிலும் சுமத்திவிடலுமே ஆகும்.
இரண்டாவது உயிர்த்தொழில்நுட்பத்தினையும் மரபணுப் பொறி முறையும் கைத்தொழில்மயப்படுத்தப்பட்டன. உயிர்த்தொகுதிகைளை அல்லது அமைப்புக்களை நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஊடுருவுகின்றீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் உணவினையும் மருந்துகளையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற சிந்தனைப் போக்கும் இதன் வானதே ஆகும்.
மரபணு வரையான ஊடுருவல் எப்போதும் சிரந்த வெளியீ டுகளை வளங்கும் என்பது உண்மையல்ல. அது பாரிய விளைவுகளையும் கொண்டுவரக் கூடியது. எனவே உயிர்க்கட்டமைப்புக்களின் மீதான ஆழமான ஊடுருவலுக்கும் மனிதகுல உயர்வுக்கும் இடையே சார்ந்த தொடர்பு கிடையாது. மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளவுமில்லை. இதுவே உண்மை நிலை. தொடரும் .
In Motion சஞ்சிகையிலிருந்து மொழிபெயர்ப்பு : திரு.ச. சசிதரன்
பிகு : ஒரு குறித்த இனத்தின் பெளதீக, மனோ ரீதியான குணாம் (Eugenes) சங்களை பெற்றோர் தெரிவு முறைமூலம் தீர்மானித்தல் மற்றும் முன்னேற்றுதல் தொடர்பான முறைகள் பற்றிய கற்கை
للصر ஐப்பசி - 2002

Page 15
“ஓடி விளையாடு பாப்பரி - நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா . . " என்ன இது தெரிந்த பாடல்தானே! என்கின்றீர்களா? ஆம் அனைவருக்கும் பரிட்சயமான பாரதியின் பாடல்தான். அனை வருக்கும் தெரிந்த, அறிந்த ஒன்றுதான். ஆனால் நாம் தெரிந்த அறிந்த எழக்குச் சொந்தமான அனைத்தையுமே இன்று கைநழுவ விட்டுவரு கின்றோமே எது என்கிறீர்களா உண்ணும் உணவிலிருந்து உறங் தும் நித்திரை வரைதான். அது சரி நான் அது பற்றிப் பிதற்ற வில்லை, கூறவந்ததைக் கூற விரும்புகிறேன்.
இன்று இயந்திரச் சாதனத்திற்குள்ளும், ஏகாதிபத்தியச் சக்திக்குள்ளும், எமது அன்றாடம் அடங்கி முடங்கிக் கொண்டிருக் கின்றது. ஆனால் அதுபற்றி எமக்குத் தெரிவதில்லை. நாம் நினைப்
இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்ற நிலையில்தானுள்ளது. நமது தற்போதைய வாழ்க்கை நிலைமைகளைச் சற்றுச் சிந்திக்கவேண்டும். இன்று நாம் சிந்தித்தால்தான் நாளை நமது சமூகம் நன்னிலையுறும். இந்த வகையில் இன்றைய கல்வித்திட்டங்கள் எமது குழந்தைகளைச் சிந்திக்கவும், சுயமாகச் செயற்படவும் விடாமல் தனது ஏகாதிபத்தியத்திற்குள் கட்டி வைத்திருக்கின்றது. அதற்கேற்ப நமது சமூகமும் ஒத்துளைப்பது போல்தான் உள்ளது. ஏனெனில் 'ஓடி விளையாடு பாப்பா' என்பது மறைந்து இன்று விளையாடுவது என்பது புறந்தள்ளப்பட்டு மறைந்துவிடும் நிலைமைக்கு வந்துள்ளது.
இங்கு கூறப்பட்ட விளையாட்டு இன்றைய கிரிக்கட் அல்ல எமது மத்தியிலே இருந்துவந்த 'தூத்தி'கள்ளன் போலிஸ்’, ‘நாயும் இறைச்சும்", "கிளித்தட்டு', 'சுரக்கா விளையாட்டு", "அமுக்கு வட் டக்கா", "கிட்டிப்புள்' என இன்னும் பலவற்றைக் கூறலாம். இவை யெல்லாம் மீளுருவாக்கம் செய்யப்படவேண்டியவை.
இன்றைய விளையாட்டுலகம் கிரிக்கட் உலகமே என்பது இன்றைய சிறுவர் தொடக்கம் முதியவர் வரைக்கும் பிடித்துவிட்ட ஒரு பிரமை, இந்நிலமை தொடரப்படின் எமது சுயமான விளை யாட்டுக்கள் மறைந்து இது பற்றிய தகவல்கள், சுவாரசியங்கள் அனைத்தும் எமது எதிர்காலச் சமுதாயம் அறிய முடியாது போப் விடும். ஆகவே விளையாடவேண்டாம் என்று படிப்பிற்கு முக்கியத் துவம் கோடுக்கும் எமது சமூகம் எம்மத்தியிலுள்ள விளையாட் டுக்களின் சிறப்புக்களை உணர வேண்டும்.
அந்த வகையில் எம்மிடமுள்ள விளையாட்டுக்கள் மிகளியும் சுவாரசியமானவை, சிந்திப்பதற்குரிய வடிகால்கள், ஒருவன் முழு மனிதனாகவும், சுய சிந்தனையுள்ளவனாகவும் தங்கிவாழும் தன்மை யற்றவனாகவும் இருப்பதற்கு இவ்விளையாட்டுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன,
இவ்விளையாட்டுக்கள் அனைத்திலும் வேற்றிபெற வேண்டு மாயின் அவதானம், சிந்தனை, கற்பனை, புத்திசாதுரியம், பொறுமை, ஞாபகசக்தி என்பன அடிப்படைகளாக அமைகின்றன. எடுத்துக் காட்டாக "எவடம், எவடம், புளியடி, புளியடி’ என்ற விளையாட்டில் ஒருவரின் கண்களை மறைத்துக் கட்டிவிட்டு அவரின் இரு கைகளிலும் மண்னை ஏந்தவைத்து அதற்குமேல் ஒரு குச்சிக் கம்பை நட்டுக் கொண்டு ஒருவர் எவடம் எவடம் என்று அவரிடம் கேட்க அவர் புளியடி, புளியடி என்று கூறுவர். அப்போது அச்சூழலில் எங்கேயா வது ஓரிடத்தில் அவரை புத்திசாலித்தனமாக மீளவும் அவர் இல குவில் அடையாளம் காணாதபடி சுற்றிச் சுற்றித்திரிந்து அம் மண் குவியலை வைக்கப்பண்ணிவிட்டு வேறு இடத்திற்கு கோண்டு அவரது கண்களை அளிட்ட பின்னர் மண்ணை வைத்த இடத்தைக் கண்டு பிடித்து தருமாறு அவர் பணிக்கப்படுவார். குறித்த இடத் தினைக் காட்டினால் அவர் வெற்றியடைந்ததாக புகழப்படுவார். இல்லையேல் அனைவரும் அவரைப் பார்த்துச்சிரிப்பர். இவ்வாறு அவதானத்தைப் பயிற்றுவிக்கும் விளையாட்டாக இது அமைந்தி ருக்கிறது. ". '\
ழன்றாவது தணி -
 
 

இதேபோன்று "தூத்தி' என்ற விளையாட்டும் சிறுபிள்ளைகள் மத்தியில் பிரபல்யமானது. இதில் ஒருவர் தேடுவதும், மற்றவர்கள் மறைந்திருப்பதுமான நிகழ்வுகள் இடம்பெறும், தேடுபவர் மறைந் திருப்பவர்களைக் கண்டால் அவர்களது பெயர்களைச் சொல்லி தூத்தி என்பார். உதாரணத்திற்கு கமலா தூத்தி சுரேஷ் தூத்தி என்பதாக அமையும். அதேநேரத்தில் மறைந்திருக்கும் ஒருவர் தேடுபவர் தன்னைக் காணாதபடி அவதானமாக ஒளிந்து ஒளிந்து வந்து தேடுபவரைத் தொட்டால் தேடியவரே மீண்டும் அனைவரையும் தேடுபவராக இருப்பார்,
இந்த விளையாட்டின்போது அனைவரும் மிகவும் அவ தானமாகவும், புத்திசாதுரியமாகவும், கற்பனையுடனும் செயற் படவேண்டும். இவ்வாறு இன்னும்பல விளையாட்டுக்கள் நம்
மிடையே உண்டு.
ஆகவே மேற்படி நமக்கேயுரிய
)LEJfluRD விளையாட்டுக்கள் இன்றைய கிரிக் கட்டை விடவும், ஏட்டுப்படிப்பை விடவும் சிறப்பான பயனுள்ளதாக கற்பனைக்கும், அறிவு விருத்திக்கும், அவதானத்திற்கும் சிறுவர்களை உட்படுத்தி சிறந்த ஆழுமை மிக்கவர்களாக அவர்கள் உருவாக வழிபுரிகின்றன. எனவே மெல்ல மெல்ல மறைந்துவரும் எமது பாரம்பரிய சிறுவர் விளையாட்டு க்களை மீளக்கொண்டு வருவது மிகவும் முக்கியமான பணியாக
சீர் Եր ஜனறுாேனது மு. ராஜினிதேவி
உள்ளும் உணவுச்
செய்முறைகளை அறிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள் 1. தரக்கண் மா - 12 கொத்து 2. தேய்காய் ஒருபாதி தருவிய பூ 3. தேவையான அளவு நீர், உப்பு
குரக்கன் மா தயாரிக்கும் முறை
குரக்கனைத் தீட்டிப் புடைத்து தப்பரவு செய்து அளித்து கல், மண் எல்லாம் நீங்கக் கழுவி எடுக்கவும். பின்னர் ஓர் பரந்த ஓலைத்தட்டில் அல்லது சுளகில் கடதாசியை விரித்து அதன்மேஸ் கழுவிய குரக்கனைப் பரப்பி வெயிலில் நன்றாகக் காயவிடல் வேண்டும். முறகக்கயந்த பின்னர் அரைத்து எடுக்கும்போது ஆரக் கண்மா தயாராகிவிடும்.
குரக்கன் ரொட்டி செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதற்குள் கொஞ்சம் உப்புத் தண்ணீரை அளவிற்கு விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பின் குரக்கண்மாவையும், தேய்காய்பூவையும், உப்புக்கலந்த தண்ணீரையும் சேர்ந்து நன்கு பிசைந்து எடுத்துக்கொண்டு உருண் டைகளாகப் பிடித்து அவற்றைத் தட்டையாக்கி எண்ணை தடவிய இலை ஒன்றால் இருபுக்கமும் தடவி பின்னர் அடுப்பிலே சூடாக உள்ள ரொட்டிக் கல்லில் வைத்து இருபக்கமும் வேகுமாறு புரட்டிப் புரட்டி எடுத்தல் வேண்டும். இவ்வாறு செய்யப்படும் குரக்கண் ரொட்டியினை சூட்டிறைச்சி அல்லது சம்பலுடன் சேர்த்து சுவைக்கும் போது மிகுந்த ருசியாக இருப்பதுடன் உடலுக்குத் தேவையான
சத்தக்களும் கிடைக்கும்.
கு. ஜோதிராஜா
தறிப்பு ஆடி 2002 மடலில் இடம்பெற்ற 'உள்ளூர் உணவுச் செய்முறைகளை அறிந்து கொள்வோம்' பகுதியில் வந்த "கிழக்குக் கூழ் தயாரிக்கும் முறை பற்றிய விளக்கத்தை எழுதிய குஜோதிராஜா வினுடைய பெயர் தவறுதலாக இடம்பெறாமைக்கு வருந்துகிறோம்.) 5- ஐப்பசி - 2002

Page 16
(
"ஆத்மா சி ஜெய்சங்கர். மனிதம் கலந்தாய்வுக்குழு பிரதம ஆசிரியர் மடம் வீதியாழ்ப்பாணம்." மூன்றாவது கண், 1,30
FITE
மூன்றாவது கண் முயற்சி பாராட்டுக்குரியது. வடபகுதியில் மூடப்பட்ட காலத்தில் 1990 - 1895 களில் உள்ளுர், வளம், பயன்பாடு பற்றியே மூச்சாக இருந்தது இன்று இல்லை சிறிய பேட்டிக்கடைகளிலும் பெப்சியைக் காணமுடியும். யாழ்ப்பாணம் தனது முகத்தை இழந்து கொண்டிருக்கிறது வேகமாகப் பரவும் கோரோ பற்றிய அக்கறை ஏனைய விடயங்களில் இல்லை. எமது சிறு குழுக்கள் மூலம் அடிநிவை மக்களுடன் தொடர்புகளைப் பேண் விரும்புகிறோம். நம்பிக்கை ஒன்றைத் தவிர ஏதும் எம்மிடம் இல்லை மூன்றாவதுகன்-பிரச்சாரத்தனம் இருப்பதைக் காண முடிகிறது. அதனை மாற்றி வேறு வடிவத்தில் வழங்குங்கள் பாரம்பரியக் கலைகளைப் பற்றி ஏதும் இல்லையே
"ஆத்மா" ଖୁffili୮s[i]; Frs L'Ei
ஜ் கெனத்
ஆசிரியர், 18. நல்லையா வீதி, மூன்றாவது கனர் மட்டக்களப்பு
அன்புடையீர்,
முதல் முயற்சி
"எங்களின் அறிவில் எங்களின் நிறனில் தங்கிநிற்போம்” என்ற அர்த்த புஷ்டியான தொனிப்பொருளில் மூன்றாவது கள்' சஞ்சினக ஒரு முதல் முயற்சி இது இன்றைய நிலையில் காலத்தின் தேலையுமாகும்
அந்நிய சிந்தனைEளால் இலகுவில் ஆக்கிரமிக்கப்படக்கூடிய ஒரு நிறுவனத்தில் (University) இருந்து இப்படியான ஒரு சஞ்சிகை வெளிவருவது பாராட்டத்தக்கது. இவ்விதழில் இடம்பெற்ற தத்தனை விடயங்களும் எமது சொந்த அறிவாற்றவில் வலியுறுத்தும் இகையில் அமைந்திருப்பதும் சிறப்பு
ஆனால் மொழிபெயர்ப்புக் கட்டுரை நவீன விவசாயத்தின் அபத்தம் கொஞ்சம் கருகவாக உள்ளது. நம்மவர்களுக்கு விளங்கும் வகையில் மொழி பெயர்புக் கட்டுரைகள் மொழிபெ பர்ப்பாக இல்லாமல் தமிழாக்கம் அமைவது நல்லது பிகு முனக்கானாவின் கைவைத்தியம் கட்டுரை மிகப் பொருத் மாக அமைந்துள்ளது
}
இரா. நாகங்கள்
|L
கடிதங்களுக்கான பதில்
ஐன்ரின் வாசக நண்பர்களே!
எமது முதலாவது செய்திமடலுக்கு நீங்கள் அளித் துள்ள வரவேற்புக்களுக்கு மிக்க நன்றி! உங்களது கருத் துக்கள், தொடரும் எம்முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக் கும் இத்தோடு முக்கியமாக 'மூன்றாவது கணி’ எனும் செய்தி மடல் எந்தவொரு பல்கலைக்கழகத்தினாலோ அல்லது பல்க லைக்கழகத்தைச் சார்ந்த அமைப்புக்களாலோ வெளியிடப்படு வதில்லை. மாறாக இம்மடல் சுயாதீனமாக இயங்கும் உள்ளுர் அறிவுச் செயற்பாட்டுக் குழுவினராலேயே வெளியிடப்படுகின் றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இப்படிக்கு W
".
மூன்றாவது துணி -
Pritifig fily - Sir. Jಫseph's I thrili: Prix, EŘ; i titulka
 
 
 

g) fillibi IljME
உங்கள் நாடு மன்ை வளம் மிக்கது அதனைப் பாழாக்காதீர்கள் அதிக உண ைபயிரிடாதீர்கள். ஏனெனில் ஏழைகள் தின்று வீணாக்கி விடுவார்கள்
உங்கள் ஆடல்கள் பளரை நீக்கன இறாலும் நண்டும் சுவையான மீன்களும் அந்நியச் செலவாணி தருவன -ஆகவே அனைத்தையும் ஏற்றுமதி செய்யுங்கள்
உங்கள் கடற்கரைகள் அழகானவை அவற்றை காசாக்கப் பாருங்கள் எல்லாரும் அங்கே உலாவ அவசியமில்லை நல்லவற்றை தெரிந்து உல்லாசப் பிரயாணிகட்காய் மறித்து ஒதுக்குங்கள்
உங்கள் கிராமத்து மண்வீடுகள் அழகானவை அவற்றுக்கு மண்வீதிகளே உகந்தவை கல்லையும் சீமேந்தையும் வீணாக்காதீர்கள் நெடுஞ்சாலைகளை அகலமாக்குங்கள் உல்லா கருதிகளையும் களிபாட்ட மனைகளையும் கன்னோக்களையும் கட்டி எழுப்புங்கள்
உங்கள் நாட்டின் பெண்கள் அழகானவர்கள். அவர்களது இளமையும் பாலிமும் வீணாக விடாதீர்கள் உல்லாசப்பயணிகள் முன் அவர்களை ஐடலாக இடுங்கள்
உங்கள் மலிவான உழைப்பு மகத்தானது உங்கள் நாட்டின் நாணயத்தை
திறக்கச் செய்யுங்கள் அந்திய மூலதனம் உள்ளே உருவதற்கு உங்கள் கதவுகளை அகலத்திரங்கள்
உங்கள் நாட்டின் பாதுகாப்பு எல்லாவற்றிலும் மூக்கியமானது ஆயுதங்களை 2ாங்கி அரச படைகளை பலப்படுத்துங்கள். ஏனெனில் ஏழைகள் அபாயகரமாணவர்கள்
சி. சிவசேகரம்
آير ஐப்பசி - 2002
LSLLLT Te TekekA S 0kS eGleTkkLLSLe elllmLLS TTLLlLLLLLLLLS