கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளந்தென்றல் 1969-1970

Page 1


Page 2
விபரங்களுக்கு:
于山 சந்தர்
பணக்காரர்கள் மேலு பணத்தில் மிதக்கிருர்
Sairard பெற்றுத் தவிக்கிருர்க படித்தோரும்,
பணம்படைத்தோரும்,
ஏழைகளோ
குடும்பங்களை அமைக்கும்போது, ஏழைத் தாய்மார்கள் மட்டும் அடுத்தடுத்து பிள்ளை களைப் பெற்று அழிவதேன் !
எவ்வெப்போது
Sirls SI DI 5 Í IDI ) is 6) ID சகலருக்கும்
இலங்கை குடும்பத்
தலைமை அலுவலகமும், கிளினிக்கும்:
23/5, ஹோர்டன் பிளேஸ்,
G is I (g in L-7.
தொ8லபேசி: 92354

பெறுவது if ds(5 st
6), 6ỦI 0!
LLj FÉIG
தகவல் பிரிவு:
457, 51st Sf , கொள்ளுப்பிட் டி.
தொஃலபேசி: 85189

Page 3
ତ୍ରିଗ
19DGSS
ஆசிரிய
JELI I J j
THE T A
UNIVERSITY O.
 

Đ Ezra 7)
/ff;
தினம் அருள்குமாரன்
AIL SOCIETY
: CEYLON, CoLoMB.o.

Page 4
There is mor than meet
In infant feeding, only Pelargon
事
家
Optimum development Pelargon produces physiological phenomena closely resembling those of breast milk.
Resistance to infections
Thanks to acidification, the high fat and protein ration given by Pelargon is perfectly tolerated and digested, thus conferring a high degree of immunity on the infant.
Prevention of rickets & anaemia Acidification allows good utilisation of minerals, particularly calcium and iron - which is ionised and better resorbed in the acid medium.
Prevention of gastroenteritis Clinical experience has demonstrated the actual prophylactic properties of acidified milk in the presence of coliform infections.
Complete bacteriological safety
Not only is Pelargon manufactured according to NESTLE processes, which give every guarantee of bacteriological safety, but the development of patho
Avoid feeding proble
prescribe P
Marketed by Ceylon Nutrition
 

e to Pelagon s the eye
can offer all these advantages
genic bacteria is impeded in the reconstituted formula which is at a lower pH than other milks. Pelargon therefore does not need terminal sterilisation.
k Wide range of use
Its perfect tolerance and digestibility allow the use of Pelargon in many cases where the ordinary formulae
are poorly tolerated, such as during enteral infections,
vorning, etc.
:k Simplicity
Pelargon contains all the necessary additions of carbohydrates, vitamins and minerals. This, plus complete
bacteriological safety, minimises risk of mistakes by the mother.
il Foods Limited

Page 5

காணிக்கை
எமது சங்கம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை எமது காப்பாளராக விருந்து இளைப்பாறிச் செல்லும் பே
ஆ. வி. மயில்வாகனம் அவர்களுக்கு இம்மலர் - காணிக்கை

Page 6
ŽØ? ഗ്ഗീ

ീർ
& SONS
HOUSE,
FN A

Page 7
பேராசிரியர் ஆ. ெ
O. D. E., M.A., Ph. D. (
F. R. A. S. F. N
 
 

பி. மயில்வாகனம்
Cantab.), B.Sc. (Lond.)
. A. Sc. (India),

Page 8
BaVferrOn 3: y Well bá Strength is restored By its Tiredness is OverCOme Vitami Recovery is sped up compC Metabolism is stimulated absorb
Appetite is improved
 

Overworked? Feeling wea Easily tired? Poor appetit
W18aye Tonic pleasant tasting alanced and remedies the Situat
finely adjusted resentag
BOttles Of l, n B-Complex otties of 200 m, and 5
onents and easily Bayela Leverkusen Germ.
Sole Agents for Ceylon: )ed iron SaltS. Messrs. Hayleys Limited
400, Deans Road - Colon

Page 9
பேராசிரியர்
B. Sc. (Lond.
உயிரியல் இ
மருத்து இலங்கைப் பல்க
 

LI I 5 GTI TSI Í
ஆ. அ. ஹ"வர் ), Ph. D. (Lond.) }ரசாயனப் பகுதி துவப் பீடம்
லேக்கழகம் - கொழும்பு,

Page 10
woRLD HEALTH THAT GUM DISEASE WORLD'S CHL
it is now known that most teeth, are lost to gum diseases and not to decay. And today, gum diseases are widely prevalent and cause the slow, but progressive and permanent destruction of the gums, affecting half the world's child population and almost the entire adult population.
The earlier you caref the longer they w START THEM 0 the toothpaste prepar of a famous Docto
 
 
 
 
 

AUTHORTEssay S AFFECT HALF THE 0 POPULAT.
The surest way to combat gum diseases is by starting proper dental care soon enough. Daily massaging of the gums with Forhans Toothpaste helps young teeth grow strong and strong teeth stay young, and daily brushing of the teeth with Forhans helps teeth stay clean and white,
or your children's gums ill keep their teeth.
FORHANS TODAY.
d to the special formula r of Dental Surgery.
ം. R, H-IIA AAN SS ***
80 CC. Yr ei gy) A S Tr

Page 11
தலைவர் உரைக்கின்ருர்,
Tெங்கள் உழைப்பா நுகர்கின்றீர்கள். தொ கற்றனைத்து அறிவு மன கள் கரங்களிலே தவழு மலருகின்றனவே, இ. இதழ்களிலே களிப்பு ந பெற்றதாய் உற்றத கேட்டுப் பெரிதுவப்பது மகிழ்வெய்துகின்ருேம்.
கலைமகளுக்கு நாப ளுக்கும் ஆற்றவேண்டி எழுச்சியே இந்த "இள விற்கு, ஊக்கமளித்து, அறிஞர்கள், பேரா8 கைலாசபதி அவர்களு றேன்.
'தேமதுரத் தமிே தல் வேண்டும்', என் தமிழ்மணம், உலகெல உழைத்து. இந்த 'இ6
ரைப் போற்றும் வகை
சென்ற ஆண்டு சரி வாண்டு " " தோன்ருத் தோள் நின்றுழைத்த ! நன்றிகள்.
இறுதியாக நீர்க்கு தழ் பூவிற்குமுண்டு என் களை நீக்கி நிறை காணு கின்றேன்.

ால் விளைந்த இந்த வண்ண மலரை நீங்கள் rட்டனைத்து ஊறும் மணற்கேணி போல, ணம் பரப்பவல்ல 'இளந்தென்றல்', உங் ம் பொழுது, உங்கள் கண்கள் மகிழ்வால் தயங்கள் இன்பப்பண் இசைக்கின்றனவே கை அரும்புகின்றதே, அவை கண்டு நாம், ன் அருங்குழவியைச் சான்றேன் எனக் து போன்று, பெருமையுறுகின்ருேம். பெரு
ாற்றும் கடனுடன் கன்னித் தமிழ் மக ய கடமையொன்றுண்டு என்ற உணர்வின் ந்தென்றல்' , இளம் இதயங்களின் உணர்
ஆக்கபூர்வமான உதவிகள் புரிந்துவரும் ரிேயர் ஹ"வர் அவர்களுக்கும், கலாநிதி }க்கும், சிரந்தாழ்த்திக் கரங்குவிக்கின்
ழோசை உலகெலாம் பரவும் வகை செய் ற பாரதி பாடலுக்கொப்ப, நஞ்சங்கத் ாம் வீசும் வகையில், ஊண் உறக்கமின்றி ாந்தென்றல்' தனை உருவாக்கிய ஆசிரிய
தெரியாது தவிக்கின்றேன்.
ங்கத் தலைவராகச் சீரிய பணிபுரிந்து, இவ் தலைவராக, எம்முடன் தோளொடு நண்பர் ஜெயவிக்கிரமராஜாவிற்கு எனது
நுரையுண்டு, நெல்லுக்குமியுண்டு, புல்லி ாறெண்ணி இதில் காணும் குற்றங்குறை ம்படி உங்கள் அனைவரையும் இரந்து நிற்
-ருெபேட் வேதநாயகம்

Page 12
GI ID
as rlyl v/76r/f பேரா
பெரும்பொருளாளர் பேரா
த&லவர் திரு.
உபதஃலவர் திரு.
Gafu/6)/ror/f திரு.
(36rth.6L//rcssor/forf திரு.
ஆசிரியர் திரு.
பிரதிநிதிகள்:
சி. அருள் இராமலி செல்வி ரதி சங்கர செல்வி க. சித்திரே ஆ. முகம்மது hகிய செல்வி காச்சியார்
செல்வி சியாமளா
கே. கனகசபை (வி
பூ. ஞானகரன் (சட் செல்வி சாங்தினி ே
ஆசிரியர் குழு
ச. அருள்கு சி. கனகரத் சு. மோகன பொன். சத்
சு. இரத்திே

J ÉI d. Í
சிரியர் ஆ. வி. மயில்வாகனம்
சிரியர் ஆ. அ. ஹாவர்
றேபேட் வேதநாயகம்
த. உமைபாலன்
க. கிருபானந்தன்
வே. நேமிநாதன்
ச. அருள்குமாரன்
ங்கம் (மருத்துவம்)
ப்பிள்ளை (மருத்துவம்)
$லகா (கலை)
T (கலை) மாரிமுத்து (கலை)
ாகவரத்தினம் (விஞ்ஞானம்)
ஞ்ஞானம்)
டம்)
லோகிதராசா (சட்டம்)
மாரன் ததினம் தாஸ் தியநாதன் னேஸ்வரன்

Page 13
விரை மன்ற
மாநா விட்ட
மாநா
ДD5l G
இரண்
நாலா படுத்த
மாநா
கொன
@5) 9595@
நாட்டி மலைய பரந்து ஏகோ
வரை
என்ன
தின் l.
ó丁岔ö了
இந்நி3 டிலும்
நானி ஏற்ற
 

lap if
ட்டும்
அறிவியல் அடைப்படையிலான தமிழாராய்ச்சி வுற்று வருகின்றது. உலகத் தமிழாராய்ச்சி மும், நடந்து முடிந்த மூன்று தமிழாராய்ச்சி டுகளும் இந்த உண்மையைக் கோடி காட்டி
ᎧᏈᎢ .
டைபெறவிருப்பது நாலாவது தமிழாராய்ச்சி டு. அது நமது ஈழத்தில் நடைபெறப் போகின் ான்ற செய்தி காதிற் தேனுக இனிக்கின்றது.
iமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் கூடிய டாவது ஆராய்ச்சி மாநாட்டின் போதே வது மாநாடு ஈழத்தில்தான் என்பது உறுதிப் தப்பட்டுவிட்டது. இப்பொழுது மூன் ரு வது டும் நிறைவுற்று விட்டது. 1லாவது மாநாட்டிற்கான காலம் விரைந்து iண்டு வருகின்றது. நாம் எடுத்திருக்கும் நடவடிக் irதான் என்ன?
மிழினம் இந்நாட்டில், யாழ்ப்பாணக் குடா டனுள் மட்டும் வாழவில்லை. வட - கிழக்கு, கம் மற்றும் மேற் கரையோரங்கள் என்று வாழ்கின்றது. இவர்கள் அனைவரதும் பித்த ஒத்துழைப்பினைப் பெறுவதற்கு இற்றை
எடுக்கப்பட்டுள்ள ந ட வடிக்  ைக க ள் தா ன்
டந்து முடிந்த மூன்ருவது மாநாட்டில் ஈழத் ங்கு என்ன, காணிக்கை என்ன என்ற வினவிற் விடை அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. லதான நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்
என்று கற்றேரும் மற்ருேரும் கேட்கிறர்கள்.
த்தகைய நிலை ஏற்படாது நாலாவது மாநாடு லமும் போற்றும் மாநாடாக அமைவதற்கு ஒழுங்குகளை இன்றே தொடங்குவோம் வாரீர்!
- ஆசிரியர்

Page 14
புகு மு ன்
உயர் கல்வியின் என்ற வகையில் வெவ்ே ளினதும் செந்தமிழ்ப் ப கத் தமிழ் ஏடான ' வருகின்றது.
பல்கலைக் கழக மா வெளியே உள்ளோரும் தேவைக்கேற்ப பொதுவ பெற்றுள்ளன. இளந்ெ தும்தான்.
இளந்தென்றல் தா "ஆட்சியியல் போன்ற உணர்வினை உளம் நோ களுக்கு இடமளித்துள்ே
இளந்தென்றலின் அவை கசப்பானவையா சுமையின் சிரமத்தைச் ச
"ஈழம் முழுவதும் ஒ வேளையில்-நாட்டின் நிர யும், சிங்கள இனம் தமி கல்வி அமைச்சரின் பா பது வரவேற்கப்பட :ே தோன்றட்டும், ஒலிக்கட்
அதே பொழுதில்; ரத்தை நிலை நிறுத்த தெரிவு செய்யப்படல் வாத ரீதியில் எழுப்பப்ப ழினம் தயாராகவில்லை வைக்கக் கடமைப்பட்டு
பயனற்ற வெளிநா டுத்தி ஈழத்து எழுத்தாலி
கூறி வருவதைச் செயல!
என் கடமை நிை

பல்வேறு கோணங்களிலிருந்து சுவைக்கொன்று வறு துறை மாணவர்களினதும், விரிவுரையாளர்க டைப்புகளைத் தாங்கி ஈழத்தில் ஒரே பல்கலைக்கழ இளந்தென்றல் உங்களை நோக்கித் தவழ்ந்து
"ணவருக்கு மட்டுமல்ல, பல்கலைக் கழகத்திற்கு இலகுவில் பயன் பெறுவான் வேண்டி, நாட்டின் 1ான சிக்கலற்ற எழுத்தோவியங்களே இங்கு இடம் தன்றலின் இம்மரபு பழமையானதும் வழமையான
ங்கி வருவன எம்மவரின் ஆக்கங்களாக இருப்பினும் துறைகளில் மட்டும் பொதுமக்களின் இரசனை க்கி நடுநிலை நின்று தலைவர்கள் மூவரின் கருத்துக்
ளோம்.
சுகானுபவத்தைப் பெற முன் சில உண்மைகளை‘க இருப்பினும்-உங்களுடன் பகிர்ந்து என் மனச் *ற்று குறைக்க விரும்புகின்றேன்.
ரினம்" என ஆளவந்தார் ‘தேசியம் பேசி வரும் ாந்தர ஒற்றுமைக்குத் தமிழினம் சிங்கள மொழியை ழ் மொழியையும் விரும்பிக் கற்க வேண்டுமென ராளுமன்றச் செயலாளர் யாழ் நகரில் கூறியிருப் வண்டிய ஒன்று. இந்த உணர்வு நாடு பூராவும் -டும்.
சர்வகலாசாலைகளில் உயர் கல்வியின் தராத இன மொழி சார்பற்ற முறையில் மாணவர்கள் வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், வகுப்பு டும் எந்தப் பிரச்சினைகளுக்கும் செவிசாய்க்கத் தமி என்பதையும் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கூறி ள்ளேன். V−
ட்டுப் பத்திரிகைகளின் தாக்கத்தைக் கட்டுப்ப ார்களை ஊக்குவிப்பதாக அரசினர் சொல்லளவில்
ாக்க வேண்டும்.
றவுற்ற திருப்தி. உங்கள் பணி தொடரட்டும்
- ஆசிரியர்

Page 15
罗ft护
Best
Compl
SAMUEL So
 
 

liments

Page 16
ΥΟ CAREFREE
S
OUR B
WAL
TOURS & TRAVEL
P. O. B(
- MAN STREET, .
Cables: WALKERS Telephones: 2
COLOMBO −

- ve- nnnnnnnnnnnna
UR
TRAVEL
s
USINESS
滨、
KERS
. (CEYLON) LTD.
OX 66
- COLOMBO .
4855, 26039 Telex: 8
COLOMBO

Page 17
உள்ளே .
மொழியியல்
நன்னூலிலக்கணமும் மொழியியற் கோ
இலக்கியம்
பாரதியும் திரு. வி. க. வும் க. சித்திர ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ـ - பாரதியுகத்தில் ஈழத்துக் கவிஞர்கள்
அறநீதி நூல்கள் மூவேந்தர் கால இல
இன்றைய தமிழ் இலக்கியம் மு. கித்த
திருக்குறள் உத்திகள் GF » Gur sy FFT;
கனகி புராணம் கலாநிதி பொ. பூலோக
தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாமிய
பொருளியல்
உள்நாட்டு வளங்களும் கைத்தொழிலும் மகாவலி கங்கைத் திட்டம் பற்றிய பெ பொருளாதார சுதந்திரத்தை நோக்கி இ
இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச்
கொள்
நிலவியல்
கணிப்பொருள்களின் கருவூலமே கடல்
மருத்துவம்
மூட நம்பிக்கைகள் K சந்திரசேகரம் * குடும்பத் திட்டம் பி. ரி. ஜெயவிக்கிர ( புனர் ஜென்மம் க. இந்திரகுமார்
அறிவியல் இயக்கத்தின் தந்தை சு. இ
சட்டவியல்
காதலியைக் கைவிட்டால் ஜனகன் பரீ
உயிரியல்
உயிரினங்களின் தோற்றம் கலாநிதி க

ட்பாடுகளும் பேராசிரியர் ஆ. சதாசிவம் صسمسم H
Gösustr --س * I 7
பார்வதி - 26
}க்கியத்தின் எதிரொலி
ஜெயலட்சுமி சரவணமுத்து - 83
தியானக்தன் 一 42
一 49
சிங்கம் - 81
ரின் இலக்கியங்கள் ஆ. முகம்மது யெஹியா - 129
பேராசிரியர் கா. குலரத்தினம் w- 6
ாது நோக்கு ஆ. சிவராசா - 38 இலங்கை விரையும் அறிகுறி
ஆ. தில்லைாகாதன் B. A. (சிறப்பு) - 34
செய்கையும் நிலம் சம்பந்தப்பட்ட கையும் வி. கித்தியானந்தம் B.A. (சிறப்பு) - 66
சுப்பிரமணியம் மோகன தாஸ் 78 سیسہ
M. B. B. S. سسه I 3
"Day Argir 91 -سم
98 سس
இரத்தினேஸ்வரன் .7 15 سم
காந்தா -سس It 09
. அருட்பிரகாசம் - 149

Page 18
GLbuutub
அடியும் முடியும் கலாநிதி க. கைலா
an Sofudo
பிறப்பிலிருந்து பிரளயம் வரை பகலவ பொ
ஆட்சியியல்
புதிய அரசியலமைப்பு விதிகளும் அரசி
ඡාවිතා
கலைகள் அழிவதில்லை ஈஸ்வரன் செல்வ
கவிதைகள்
நாவுக்கரசரே வாருமையா வறுமை வென்ற தருமம் ஒன்று
சொல்லி விளங்காத x
சிறுகதைகள்
பழிக்குப் பழி பொன். குலேந்திரன் B. S பெண்மை அழுதது க. சண்முகராசா எத்தனை இதயம் எத்தனை பார்வை புரியாத புதிர் சிறிமாலினி பரராச விதி சிரித்தது வெற்றிமேரி சூசை
சங்கச் செய்திகள்

y Luft - 137
னின் புதிர்தான் எத்தனை
7. சிவநேசன் M. B. B. S. பொ. இராசகேசன் - 145
யல் நிர்ணய சபையும் - 174 எஸ். ஜே. வி. செல்வநாயகம் о. с. — 177 வ. பொன்னம்பலம் M. A. - - 1 78
ஜீ. ஜீ. பொன்னம்பலம் Q. C. . 0 8 11 مبينس
ராஜா - T 18
கருணையோகன் - 25
முருகையன் 1225 میس
அம்பி - 155
c. (சிறப்பு - 185
r. - 188 ح
வரன் 192 سے
சிங்கம் سے-- Il 97
ாப்பிள்ளை 1 0 2 مسس۔
64 H سنس

Page 19
jjjTa೧ತೆಹವಾ
o மொழிக்கு வகுக்கப்படும் இலக் கணம் அம்மொழியின் விளக்க இலக்கண LD nr 5 (Descriptive Grammar) y Gv Gwgl Gaugut Gnorr sib gp g) av k 65 GODT LDT 35 (Historical Grammar) அமையும். விளக்க இலக்கணம் என் பது மொழியின் ஒரு காலப் பகுதியின் இயல்பை விள க் கு ம் இலக்கணமாகும். உதாரணமாகத் தமிழுக்கு வகுக்கப்படும் விளக்க இலக்கணம் சங்ககாலத் தமிழிலக் கணம், பல்லவர் காலத் தமிழிலக்கணம், சோழர்காலத் தமிழிலக்கணம், நாயக்கர் கா லத் தமிழிலக்கணம், ஐரோப்பியர் காலத் தமிழிலக்கணம் தற்காலத் தமிழி லக்கணம் எ ன ப் பல வகைப்படும்; ஒவ் வொரு காலப் பகுதிக்கும் வகுக் கப்படுவது அவ்வக் கால விளக்க இலக்கணமாகும். இங்ங்ணம் ஒரு மொழிக்கு வகுக் கப்பட்ட பல காலப் பகுதிகளின் சிறப்பியல்புகளைத் தனித்தனியே விளக்கும் பல விளக்க இலக் கணங்களை அடிப்படையாக வைத்து வகுக் கப்படுவதே அம்மொழியின் வரலாற்று இலக்கணமாகும். இ வ் வி ல க் க ண நூல் மொழி காலத்துக்குக் காலம் பெற்ற மாற் றங்களையும் மொழி வளர்ச்சியையுங் காட் டும். அத்துடன் அம்மொழியின் அடிப் படைப் பண்புகளும் விளக்கப்படும்.
மொழியியலார் கூறும் இவ்விரு வேறு இலக்கண நூல்கள் தமிழ்மொழியில் இன் னும் எழவில்லையெனலாம். தமிழ்மொழி யின் சிறந்த இலக்கண நூல்களாகிய தொல் காப்பியம், நன்னுரல் முதலியன தமிழ்மொழியின் விளக்க இலக்கண நூல் களாகவும் வரலாற்று இலக்கண நூல்களா கவும் கொள்ளப்படும். உதாரணமாகப் பதின்மூன்ரும் நூற்ருண்டில் எழுந்ததாகிய
 

Guian6 furi 용- சதாசிவம்
நன்னூல் அக்காலத்து மொழியின் இயல் பைக் கூறுகின்றமையின் சோழர்காலத் தமிழ்மொழி வி ள க் க இலக்கணமாகக் கொள்ளப்படும். அத்துடன் சோழர் காலம் வரை வளர்ந்து வந்த தமிழ்மொழியின் இயல்பைச் செய்யுள் வழக்கின் அடிப்படை யில் எழுதப்பட்ட வரலாற்று இலக்கணமா கவும் கொள்ளப்படும்.
றவ்வொ டுகர வும்மைநிகழ் பல்லவுந் தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு தழிவுங் கவ்வோ டெதிர்வுமின் னேவல் வியங்கோ எரிம்மா ரெதிர்வும் பாந்தஞ் செலவொடு வரவுஞ் செய்யுநிகழ்
பெதிர்வும் எதிர்மறை மும்மையு மேற்கு மீங்கே
(நன்னூல். சூ. 145)
என்னுஞ் சூத்திரத்திற் கூறப்பட்ட உப யோகங்களுட் சில சோழர்காலத் தமிழ் மொ ழி யி ற் காணப்படாதவையாகும். அவை சங்ககால வழக்கின. அங்ங்ணமாக வும் பவணந்தியார் அவற்றைக் கூறுவதன் நோக்கம் தன் காலம் வரையும் வளர்ந்து வந்த தமிழ்மொழியின் பண்புகளைக் கூறுவ தால் மக்கள் பழந் தமிழிலக்கியங்களுள் நுழைதல் முடியும் என்னுங் கோட்பாட்டி ணுலாகும்.
விளக்க இலக்கணம், வரலாற்று இலக் கணம் ஆகிய இருவகை இலக்கணப் பண்பு களையும் ஒன்றுசேர ஒரே நூலிற் கூறப்பட் டமையின் அவற்றின் தனிச் சிறப்புக்கள் பல விளக்கப்படவில்லை. இலக்கணங்களை விரித்து எழுதுவது பனையோலையில் எழுத் தாணி கொண்டு எழுதும் அக்காலத்திய

Page 20
2 நன்னூலிலக்கணமும்.
பண்பிற்குப் பொருநதாததாகும். நூற்பா வடிவில் எழுதப்பட்ட பண்டைக்கால இலக் கண நூல்கள் தெளிவு, சுருக்கம் ஆகிய பண்புகளை அடிப்படையாக வைத்து யாக் கப்பட்டன.
தற்கால மொழியியலார் கோட்பாட் டின்படி ஒரு மொழிக்கு வகுக்கப்படும் இலக்கணம் ஒலியனியல் (phonemics) உரு பனியல் (Morphemics) என இரு இயல்க ளில் அமையவேண்டும். இங்ங்ணம் அமை யின் அம்மொழியின் அமைப்பைப் பற்றிய விளக்கங்கள் சிறப்பாக வெளிக்கொணர முடியும் எ ன் பது மொழியியலார் நம் பிக்கை. ஒரு மொழியின் இலக்கணத்தின் இருகண்களாகிய அமைப்பு (Structure) உப யோகம் (Usage) என்பனவற்றுள் பின்னை யது அமைப்பின் அடிப்படையில் மட்டும் விளக்கப்பட வேண்டுமென்பர் மொழியிய லார் . மொழியின் சொல்லு யோகம் சிறப் புற விளக்கப்படும் இடம் நிகண்டு அல்லது அகராதியாகும். எனவே பொருளியல் (Semantics) பற்றிய விளக்கங்கள் இலக் கணநூலின் பாற்படுவன வல்ல என்பர் அமெரிக்க நாட்டு மொழியியலார் . இக் கோட்பாடுகளின் அடிப்படையில் இலக்க ணம் எழுதப்பட்டால் அது ஒரு அறிவியல் (Science) நூலாகத் திகழும். இன்றைய இலக்கண நூல்களில் உளநூல் (Psychology), 5 i 46 b (Logic) 676i g9 b 3)CO) துறைகளைச் சேர்த்த பண்புகள் ஆதிக்கம் செலுத்து கி ன் ற ன. இவை ஆதிக்கம் செலுத்தும்போது ஒரு மொழியின் பொகு ளியற்றுறை சிறப்புறுமே தவிர இலக்கணம் சிறப்புரு து; இலக்கணத்தின் அடிப்படை யான மொழியமைப்புப் பற்றிய விளக்கங் கள் மொழியின் உயிர் நாடியாகும்.
இனி இலக்கண நூலின் பகுதிகளாகிய ஒலியனியல் உருபனியல் என்பனவற்றைப் பற்றிய விளக்கங்களை ஆராய்வோம். முத லாவதாகிய "ஒலியனியல்' என்பது ஒரு மொழியின் ஒலியன் (எழுத்து)களின் எண் ணிக்கை, பண்பு, பரப்பீடு (Distrib பtion) ஆகியற்றை விளக்கும். தமிழிலக்கணவாசி ரியர் கூறும் ‘எழுத்து" என்பது "ஒலி" வடி வத்தைக் காட்டிலும் 'வரி" வடிவத்தைச் சிறப்புற உணர்த்துகின்றமையின் அக்க

ஆ. சதாசிவம்"
குத்து மெழியியலாருக்கு உடன்பாடன்று. ஆதலால் "ஒலி" வடிவத்தைச் சிறப்புற விளக்கும் "ஒலியன்" என்னும் உபயோகம் இங்கு எடுத்தாளப்படுகின்றது. ஒரு மொழி யின் பேச்சொலியை அம்மொழிக்கு வகுக் கப்பட்ட வரிவடிவம் முற்றிலும் காட் டாது பல குறைபாடுகளைக்கொண்டு விளக் கும் என்பது மொழியியலார் கோட்பாடு. எனவே "எழுத்தியல்" என்பதனைவிட ஒலி பனியல்" என்பது பொருத்தமான சொற்
பிரயோகமாகும்,
தமிழ்மொழியின் ஒலியன்களை விளக் கும் நன்னூலாசிரியர் எழுத்திலக்கணம் பன்னிரண்டு வகைத்து. எனப் பின்வருஞ் சூத்திரத்திற் கூறுவர்.
எண் பெயர் முறைபிறப்பு உருவம்
மாத்திரை முதலீ றிடைநிலை போலி யென்ற பதம்புனர் பெனப்பன் னிருபாற்
றதுவே. (நன். எழு. 2)
உரையாசிரியர் கூறும் பின்வரும் விளக்கம் நன்னுரல் எழுத்ததிகாரத்தின் அமைப்பை யும் நூலாசிரியரின் இலக்கணக் கோட்பாடு களையும் அறிய உதவுவதாகும்.
இப்பன்னிரு பகுதியுள்ளும், எண் முத லிய பத்தும் எழுத்தின் அகத்திலக்க ணம்; பதம், புணர் பென்னும் இரண் டும் புற த் தி லக் க ண மென் ப து தோன்ற, என்ருவென்னும் எண்ணி டைச்சொற் கொடுத்துப் பிரித்தோதி ஞா.
எழுத்தின் அகத்திலக்கணம் பத் தையும் எழுத்தியலென ஒரியலாகவும், புறத்திலக்கணம் இரண்டினுள் அவ் வெழுத்தாலாகும் பதத்தைப் பதனிய லென ஓரியலாகவும், அப்பதம் புண ரும் புணர்ப்பை உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல் உகுபு புணரிய லென மூன்றியலாகவும், ஒத்து முறை வைப்பென்னும் உத்தியால் வைத் дот т.

Page 21
நன்னூலிலக்கண மும்.
எழுத்தின் அகத்திலக்கணம் பத்து என நன்னூலார் கூறுவனவே "ஒலியனியல்' என்னும் அதிகாரத்திற்குப் பொரு த் த மான பகுதிகளாகும். இப்பத்தினுள் "எண்' என்பது தமிழ்மொழியிலுள்ள ஒலியன்க ளின் எண்ணிக்கையையும், பையர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை ஆகிய ஐந்தும் அவ்வெண்களின் பண்பினையும், முதல், ஈறு, இடைநிலை, போலி ஆகிய நான்கும் அவ்வொலியன்கள் சொல்லில் எவ்வாறு பொருந்தி நிற்கும் என்னும் பரப்பீட்டினை யும் சுட்டும். மொழியியலார் ஒலியன்க ளின் எண், பண்பு என்பனவற்றை ஒளியலா கவும், பரப்பீட்டை மற்ருெரு இயலாகவும் "ஒலியனியல்' என்னும் அதிகாரத்திற் கூறு
6υrf. .
எழுத்தின் புறத்திலக்கணமாகிய பதம் புணர்வு என்பனவற்றுள் "புணர்வு’ என் பது எழுத்துக்களின் தோன்றல், திரிதல், கெடுதல் இயல்பாய் நிற்றல் ஆகியவற்றை விதந்து கூறுதலின் எழுத்தின் புறத்திலக் கணமாகவே மொழியியலாராலும் கருதப் படும். அவர் புணர்வை "உருபனெலியணி u6' (Mi orpho - phonemics) 6T6Tu) Guu ரிட்டு ஒலியனியலின் பின்னதான அதிகா ரத்திற் கூறுவர். ஆயின் பதத்தை விதந்து கூறும் "பதவியல் எழுத்ததிகாரத்திற் கூறப்படுவது மொழியியலார் கோட்பாடுக ளோடு முரணுவதாகும்?:பதவியலில் சொல் லின் அமைப்பே ஆராயப்படுகின்றது. சொல்லின் கூறுகள் யாவை என்றும் அவை எவ்வாறு சொல்லாக ஆகின்றன என்றும் பதவியல் விளக்குகின்றது.
பகுதி விகுதி யிடைநிலை சாரியை சந்தி விகார மாறினு மேற்பவை முன்னிப் புணர்ப்ப முடியுமெப்
பதங்களும்
(நன். பத. 6)
1. Phoneme: Inventory and Distribution.
2. 'The second chapter called pata-v-iyal deals
constituent elements and the arrangement consideration' (in phonology)
p. 1. "A modern evaluation of Nannul by G.

ஆ. சதாசிவம் 3
சொல்லின் கூறுகளென விதந்து கூறும் பகுதி விகுதி முதலியனவே மொழியியலா ரால் உருபன் (morpheme)கள் என அழைக் கப்படுகின்றன. பொருளைச் சுட்டும் மிகச் சிறிய வடிவம் "உருபன்' ஆகும். பகுபத வுறுப்புக்களாக மேலும் பிரிக்கப்பட முடி யாத பகுதி விகுதி முதலியன தனிச் சொல் லாக மொழியில் வழங்காவிட்டாலும் அவை பொருள் சுட்டுவனவே. உதாரண மாக "இடைநிலை" யாகிய "த் "இ" "ப்" ‘வ்‘ "கின்று முதலியன குறிப்பிட்ட காலங் களை உணர்த்துகின்றபடி யால் அவை உரு பன்கள் ஆகும். பகுபதவுறுப்புக்களுள் சாரியை நீங்கலாக ஏனையன உருபன்' வகுப்பைச் சாரும். சாரியைகளாகிய அன்' "அத்து’ ‘வற்று முதலியன தமக கெனப் பொருள் இன்மையின் அவை சூனிய உரு u 6ö7 (empty morpheme) 6 7 GOT 6u prives b (ur உருபன், சொல்லின் உறுப்பாகத் தான் இருக்க வேண்டுமென்னும் நியதியில்லை. ஒரெழுத்தும் உருபன்களாப் , எனவே நன் னுாலில் எழுத்ததிகாரத்திற் கூறப்படும் பதவியல்" என்பது மொழியியலாா கருத் துப்படி உருபனியலிற் கூறப்பட வேண்டிய தாகும்.
நன்னுரலின் சொல்லதிகாரம் பொரு ளின் அடிப்படையில் சொற்களின் பண்பை விளக்குகின்றது. இயற்சொல், திரிசொல், திசைச்சொல். வடசொல் என்ற நால் வகைப் பாகுபாடு பற்றிய விளக்கங்கள் பொருளியலைக் கூறுகின்றமையின் அவை *நிகண்டு" அல்லது " அகராதி"யிற் சேர்க்கப் பட வேண்டியவை என்பது மொழியியலார் கோட்பாடு. ஒருசொல்லுக்கு ஒருபொருள் உண்டா, பலபொருள் உண்டா என்னும் இயற்சொல் - திரிசொல் ஆய்வும், சொல் எத்திசையிலிருந்து செந்தமிழிற் புகுந்தது என்னும் திசைச்சொல் ஆய்வும் பிற, மொழிச் சொற்களை விளக்கும் "வடசொல்"
really with the analysis of words into its of morphemes in a word. Since this really
Vijayavenugopa. Anna malai, 1968.

Page 22
4 நன்னூலிலக்கணமும்.
பற்றிய ஆய்வும் இலக்கண நூலிற் பொருந் தாது அகராதியில் விரித்து விளக்கப்படும் துறைகளாகும். மொழிநூற் கொள்கை களின்படி வகுக்கப்படும் ஒரு இலக்கண நூலில் "சொல்லியல்" அல்லது சொல்ல திகாரத்துக்குப் பதிலாக "உருபனியல்' என வகுக்கப்படின் மேற்கூறப்பட்ட பொருளி யலதிகரிப்பு என்னும் குறை ஏற்பட்டிருக்க முடியாது. உருபனியலில் ஒவ்வொரு உருப னின் வடிவமும் பொருளும் விளக்கப்படுவ தோடு உருபன்கள் ஒன்று சேர்ந்து பெய ராகவோ வினையாகவோ அமையும்போது எவ்வாறு மாற்றங்கள் பெற்று அமைப்பி லும் பொருளிலும் பொருத்துகின்றன என் பது மட்டும் விளக்கப்படும். எனவே தேவைக்கு மேற்பட்ட சொற்பொருளாய் வுக்கு மொழியியலார் வகுக்கும் உருபனிய வில் இடம் இல்லை என்பது தானேபோ தரும்.
இனி நன்னூல் சொல்லதிகாரத்தில் வரும் பெயர், வினை, இடை, உரி, பொது ஆகிய ஐந்து இயல்களிற் கூறப்படும் பொருள் பற்றி ஆராய்வோம். இவற்றுள் *உரியியல் செய்யுள் வழக்கில் அரிதிற் பயின்றுவரும் பண்புச் சொற் களின் பொருள் விளக்கமாகையின் அவ்வியல் கூறும் பொருளும் நிகண்டு அல்லது அகரா தியிற் சேர்க்கப்பட வேண்டியதாகும்; உரி யியல் இலக்கணக்கின் பகுதியாகிய உருப னியலின் பாற்பட்டது. அடுத்ததாகிய * பொதுவியல் தொகைச்சொல் பற்றிய விளக்கத்தையும் சொற்ருெடர் அமைப்புப் பற்றிய விளக்கத்தையும் விரித்து விளக்கு கின்றமையின் இவ்வியல் இலக்கணத்தின் முக்கியதுறையாகிய சொற்ருெடரமைப்பு' (Syntax) என்பதன் பாற்படும். மொழியிய லாருட் சிலர் இதனை உருபனியலில் அடக் கிக் கூறுவர். ஏனையோர் உருபனியலுடன் இணைந்த ஒரு உபதுறையாக (Morphology and syntax) விளக்கம் காட்டுவர். உலகத்து மொழிக்குடும்பங்கள் தனிநிலை மொழிகள், ஒட்டுநிலை மொழிகள், உட்பிணைப்புமொழி கள் என மூன் ருக வகுத்து ஆராயப்படுவது அம்மொழிகள் கொண்டுள்ள சொற்ருெட ரமைப்புப் பற்றியேயாம். எனவே ஒரு மொழியின் சொற்ருெடரமைப்புப் பற்றிய விளக்கத்தை உருபனியலில் அடக்கிக் கூறு

ஆ. சதாசிவம்
வதா அன்றி வேருகக் கூறுவதா என்பது வேறுபட்ட மொழிக்குடும்பத்து மொழி யின் இயல்புக்குத்தக்க நிர்ணயிக்கப்படும். எனவே சொல்லதிகாரத்தின் தனி இய லான "பொதுவியல் தமிழ் இலக்கணத் தின் இன்றியமையாப் பண்புகளை விளக்கும் இயலாக அமையும்.
பெயர், வினை, இடை ஆகிய மூன்று இயல்களும் இலக்கண நூலின் பகுதியாகிய உருபனியலில் சிறப்பாக விளக்கப்படும் துறைகளாகும். நன்னூலார் இவ்வியல் களிற் சொற்களின் அமைப்பையும் உப யோகத்தையும் கூறுவர். உதாரணமாகப் பெயர்ச் சொல்லின் பகுதியாகிய வேற்று மையை விளக்குஞ்சூத்திரங்களை நோக்குக.
மூன்ரு வதனுரு பாலா னேடொடு கருவி கருத்தா வுடனிகழ் வதன்
பொருள்.
(நன். பெய. 40)
என்னுஞ் சூத்திரத்தில் ஆல், ஆன், ஒடு, ஒடு ஆகிய நான்கு உருபன்கள் சுட்டும்பொருள் விளக்கப்பட்டுள்ளது. இங்ங்னமே
குடுதுறு வென்னுங் குன்றியலுகரமோ
டல்லன் னென்னே ஞகு மற்ற
இருதினை முக்கூற் ருெருமைத்
தன்மை
(நன். வினை. 12)
என்னும் வினையியற் சூத்திரத்தில் கு, டு, து, று, அல், அன், என் , ஏன் ஆகிய எட்டு உருபன்களின் வடிவமும் பொருளும் விளக் கப்பட்டுள்ளது.
வினைபெயர் குறிப்பிசை யெண்பண்பு
ஆறினும் எனவெனு மொழிவரு மென்று மற்றே
(நன். இடை. 5)
என்னும் இடையியற் சூத்திரத்தில் என, என்று, ஆகிய இரு உருபன்களின் பொருள் விளக்கப்பட்டுள்ளது. இங்ங்ணம் பெயர் (noun), 698-0T (verb) g ml (particle) ஆகிய மூன்று இயல்களிற் கூறப்படுவன

Page 23
நன்னுரலிலக்கணமும்.
மொழியியலார் கோட்பாட்டின் படி உரு பனியல் என்னும் பகுதியில் அடங்குவன onun ıb.
மொழியியலார் கோட்பாட்டின் படி உருபன்களின் அடிப்படையில் பொருள் ஆராயப்பட வேண்டும். ஆனல் இலக்கண வாசிரியராகிய பவணந்தி பொருளின் அடிப்படையில் சொல்லின் கூறுகளாகிய உருபன்களே ஆராய்கிருர். இக்குறை தமிழ் இலக்கணவாசிரியர்களில் மட்டும் காணப் படுவதொன்றன்று. ஆங்கிலம், சேர்மன்,
* உலகில் முத பிறந்த காடு தமிழ்ாக முதலில் வாய்திறத் தமிழ் மொழி. அது
இவ்வுலகில் ே மொழிகள் பல. இ குறைய இரண்டாயி வேறு எங்த மொழிக் புகள் பலவற்றைத் மட்டுமே பெற்றிருச்
அவை தொன் மைச் சிறப்பு, இனின சிறப்பு, எளிமைச் உருபுச் சிறப்பு, சுழ சிறப்பு, எழுத்துச் சி பொருட் சிறப்பு, க மைச் சிறப்பு, இலக் கணச் சிறப்பு எனட்
d

ஆ. சதாசிவம் 5
இலத்தின் முதலிய மொழிகளுக்கு இலக் கணம் வகுத்தோரும் ப்ொருளின் அடிப் படையிலேயே சொல்லை ஆராய்ந்தனர். இக் குறைக்கு விளக்கங்காண முற்பட்ட மொழியியலார் மொழியியலை ஒர் அறிவி யற் துறையாக வளர்த்து வருகின்றனர். வருங்காலத்தில் எழும் இலக்கண நூல்கள் மொழிகளின் அடிப்படையமைப்பை விளக் குவனவாய் அறிவியல் நெறிப்பட்டு நடப் பன வாய் அமையும் என மொழியியலார் எதிர்பார்க்கின்றனர்.
தன் முதல் மக்கள் ாடு. அவர்கள் முதன் த்து பேசிய மொழி கமது மொழி.
தான்றி மறைந்த இன்றிருப்பன ஏறக் பிரமாகும். இவற்றுள் கும் இல்லாத சிறப்
தமிழ் மொழி ஒன்று 5கிறது.
மைச் சிறப்பு, தனி மச் சிறப்பு, இளமைச் சிறப்பு, ஒலிச்சிறப்பு, மிச் சிறப்பு, பண்புச் றப்பு, சொற் சிறப்பு, விதைச் சிறப்பு, உவ கியச் சிறப்பு, இலக் ப் பதினு று.”
.ெ ஆ. பெ. விசுவநாதம்
முத்தமிழ்க் காவலர் கத் தமிழ் மாகாடு விழா மலர்

Page 24
அமைப்பை இரு பிரதான பிரச்
சினைகள் எதிர்நோக்குகின்றன; விரைவாக அதிகரிக்கும் சனத் தொகை யும், அந்நிய செலாவணிப் பற்ருக்குறை யுமே இவ்விரு பிரச்சினைகளாகும்.
ਨ) வரும் பொருளாதார
ஒரு நாட்டின் பொருளாதார அபிவி ருத்திக்குத் தடைக்கற்களாக இருக்கும் இவ்விரு பிரச்சினைகளையும் இறக்குமதிப் பிரதியீட்டால் பெருமளவிற்கு வெற்றிகர மாகத் தீர்த்துக்கொள்ள முடியும். உள் நாட்டு வளங்களைப் பயன்படுத்தும் முறை யுடன் இப்பிரதியீட்டு முறை நெருங்கிய தொடர்புடையது. உள்நாட்டு வளம் கிடைக்காதபொழுது அந்நிய செலாவணி யைச் சேமிக்க வேண்டிய நிலைமை ஏற்படு கின்றது. இவ்வாறன நிலைமையில் உள்ளூர் உற்பத்திகளையே பிரதியீடுகளாக உபயோ கிப்பதாலும் அல்லது அவற்றை உபயோ கிக்காது விடுவதாலும் இவ்வந்நியச் செலா வணியைச் சேமிக்கலாம். எனினும் இது அரசியற் தலையீட்டிற்கு வழி வகுக்கும்.
பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு உள்ளூர் உ நீ பத் தி ப் பொருட்களே உற்பத்தி செய்வதற்கு முயற் சிகள் எடுக்க வேண்டும். உற்பத்திக்குத்
 

துணைக் காரணிகளான மூலப் பொருட்கள், மூலதனம், உழைப்பு, தொழில் நுட்பங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இம்முயற் சியில் ஈடுபடவேண்டும். உ ஸ் நா ட் டு க் கிராக்கியை ஏற்படுத்த உலகச் சந்தையி லும் பார்க்கக் குறைந்த விலையில் உள்நாட் டுப் பொருட்கள் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்குப் பெருமளவி லான உற்பத்தி வழிவகுக்கும். மேலும் இது வெளிநாட்டு ஏற்றுமதிக்கான வாய்ப் புக் களையும் உருவாக்கும். மற்றைய நாடுக ளுடன் போட்டியிடுவதற்கும், வெளி நாட்டு ஏற்றுமதி வளர்ச்சிக்கும், சந்தை JUTT uiùjë GF (Market Research) y Gu8Fu u Lor னது,
வளங்களை இரு வகைகளாகப் பிரிக்க லாம்.
1. LD5, 5 Gir Gh GT (Human Resources)
2. பொருள் வளம் (Material
Resources)
இவ்விரு வளங்களும் வேறுபட்டாலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. மக்க ளின் வாழ்க்கைத் தராதரம் குடி சனத் தொகையுடன் மூலவளங்களை இணைப்பதி லேயே தங்கியுள்ளது. இது ஒர் எளிய
சமன்பாடல்ல. உதாரணமாக மக்களின்

Page 25
உள்நாட்டு வளங்களும்.
தரம் அல்லது கலாசார நிலை என்பனவே கிடைக்கக் கூடிய வளங்களைப் பயன் உள்ள வையாக மாற்றும் திறனைத் தீர்மானிக்கின் றன. விஞ்ஞான அறிவையும், தொழில் நுட்ப வளங்களையும் பயன்படுத்துவதால் சில கணிப்பொருட்கள் பயனுள்ளதாக மாற்றப்படுகின்றன.
Dis35 sit 6) 6TD (Human Resources)
குடிசனத் தொகையை ஒரு வளமாகக் கருதும்போது மக்களின் போக்கு, குடிச னப் பெருக்க வீதம், கலாசார வளர்ச்சி, கிடைக்கின்ற பொருட்களை மூலவளமாக மாற்றுவதற்கான தொழில்நுட்ப அறிவு, இயற்கைத் திறன், தொழில் (முதலீட்டு) முயற்சி என்பன கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மனித சக்தி (Man Power) 5 p6) DugbID o 68gpit 60) lu மாத்திரமல்ல திறமையையும், முயற்சியை யும் உள்ளடக்குகின்றது. இவையிரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைத்து சேர்கின்றன.
GL (55ir 65m id (Material
Resources)
சாகுபடி செய்யக் கூடிய நிலப்பரப்பு, சுவாத்திய நிலை, இயற்கைத் தாவரம், நீர், நிலம், கற்பாறை, கணிப்பொருட்கள் ஆகி யன பொருள் வளங்களாகின்றன,
நிலவளம்
இயற்கையின் வெவ்வேறு பகுதிகளின் சிறப்பியல்கள் பற்றி ய ஒரு பொது அளவைக் குறிப்பிடத்தக் களவு செய்யப்பட் டுள்ளது. இன்று பலவித நிலங்களைப் பயன் படுத்தும் குழுக்கள் செயலில் ஈடுபட்டுள் ளன. ஆணுல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகா ணும் முறையில் குழுக்கள் ஈடுபடவில்லை. இது கால வரையில் தேசப்பட உபயோகத் தில் மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட் டுள்ளன. ஆனலும் அதுவொரு நில இயல் கருத்தைக் கொடுக்கின்றது. முன்னேற்ற வழிகளில் இவ்வளவை கருத்துள்ளதாக அமைய வேண்டுமானல் ஒரு தத்துவ ரீதி யாக அணுக வேண்டும். தீவின் சில பாகங் களில் ஆண்டாண்டு காலமாக நெற்சாகு

கா. குலரத்தினம் 7
படி மரபுமுறையாகச் செய்யப்பட்டு வரு கின்றது. ஆணுல் இது சில பாகங்களில் பயன் குன்றியதாக இருக்கின்றது. மரபு முறைப் பயிர்ச்செய்கைக்குப்பதிலாக வேறு பயிர் சாகுபடி செய்யலாம். அப்படியான கட்டத்தில் உள்ளூர் உயிர்ச் சூழலுக்கும் (Ecology) up6ö7 gög) ég Lb (Edaphic) gyÁb AD வாறு அது அமைய வேண்டும். இவற்ருேடு செயற்கை உரங்களையும் பயன்படுத்த வேண்டும். இப்பயிர்ச்செய்கை மரபுமுறைப் பயிர்ச் செய்கையிலும் கூடிய பயன்தரக் கூடியதா என்பதையும் கவனத்திற் கொள் ளல் வேண்டும்.
நீர்
சமுத்திரம், சூழவுள்ள நீர், உள்நாட்டு நீர், மேற்றள, நீர், தரைகீழ் நீர் என்பன பற்றிப் போதிய ஆராய்ச்சி செய்யப்பட வில்லை. வெளிநாட்டு நிபுணர்களே இதைத் திறம்படச் செய்ய முடியும் என்ற அபிப்பி ராயம் பொதுவாக நிலவுவதால், நீர் பற் றிய ஆராய்ச்சி வேலைகளும், வளர்ச்சியும் தடைப்பட்டுள்ளன. தரை கீழ் நீருள்ள இடங்கள் கண்டுபிடிக்கப்படுவது வரண்ட நிலப்பிரதேச விவசாயத்திற்கு உதவியாக விருக்கும். சிக்கனமானதும், நடைமுறைக் குச் சாத்தியமானதுமான முறை பின்வரு மாறு. இலங்கையின் நிலப்பரப்பு ஒரு சதுர மைல் பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும். பாடசாலை ஆசிரியர்களையும், கிராமசேவை யாளர்களையும், தொண்டர்களையும், ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள கிணற்றின் நீர் மட்டத்தைச் சில வருடங்களுக்குக் குறிக் கும் படி கேட்க வேண்டும். நீர் மட்டத்தின் மாற்றத்தையும் (அலைவுகளையும்), வீழ் படிவு, ஆவியாதல், ஆவியாகி - ஆவியுயிர்த் தல், எவ்வளவு நீர் உபயோகிக்கப்படுகின் றது என்பவற்றுடன் தொடர்புபடுத்தி நீரை உபயோகிக்கும் அளவைக் கட்டுப் படுத்த வேண்டும். இதனல் பல வருட கால மாக தேக்கப்பட்ட நீர் அழிந்து போகாமல் பாதுகாக்கலாம்.
மண்
யோக்கி மும் (Joachim), பஞபோக்கி யும் (Panabokke) மண்ணைப்பற்றி மிகவும் பெறுமதியான அறிக்கையை அளித்துள்

Page 26
8 உள்நாட்டு வளங்களும்.
ளார்கள். ஆனல் அவ்வறிக்கை மிக அம் சிக் கலான தொழில் நுட்பங்கள் நிறைந்ததா கும். சாதாரண விவசாயிக்கும், கமக்கார னுக்கும் மண்ணை எவ்வாறு பாதுகாக்கலாம் அதை எப்படி உபயோகிக்கலாம் என்று இலகுவான வழிகளைக் காட்டினல் உப யோகமாக இருக்கும். சுவாத்தியத் துட னும், பயிர்களுடனும் மண்ணைத் தொடர்பு படுத்தல் வேண்டும். மண் அரிப்பு இலங்கை யின் முக்கிய பிரச்சினையாகும். மனிதனுல் மண்ணேப் பண்படுத்த முடியும்; தனது தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடி யும்; ஆனல் அதனே ஆக்க முடியாது. மண்ணை வளப்படுத்தக் கையாளும் பழைய முறைகள் தற்கால அறிவிற்கும், தற்கால இரசாயன உரங்களுக்கும் ஏற்றவாறு இசை வாக்கப்பட வேண்டும். விரைவாக அதிகரிக் கும் சனத்தொகையின் உணவுத் தேவை யைப் பூர்த்தி செய்யக் கூடியதாக எமது உற்பத்தியைப் பெருக்க வேண்டும். saus rruSuSeir அ றி  ைவ ப் பெருக்க வேண்டிய ஒவ்வொரு முயற் சி யும் எடுக்கப்படல் வேண்டும். மண்ணின் பண்பைப் பற்றியும், சிறந்த விளைவைப் பெற அதை எப்படி உபயோகிக்கலாம் என் பது பற்றியும், இன்று கிடைக்கும் வெவ் வேறு விதமான இரசாயன உரங்களைப் பற் நியும், இதில் எந்த உரம், எந்தப் பயிருக்கு நல்லது, எதற்கு உகந்ததல்ல என்பன பற்றி விவசாயிக்கு அறிவு புகட்டப்படல் வேண்டும். பொதுச் சாதனங்கள் மூலம், மண்ணின் பெளதீக இயல்பு, மண்ணை எவ் வாறு கண்டுபிடித்தல், மண்ணரிப்பீனல் ஏற்படும் பிரச்சினைகள் மண்ணைப் பேணுதல் போன்றவற்றைப் பற்றிய அறிவை மக்க ளுக்குக் கொடுக்க வேண்டும். மண்ணின் தன்மை, பயிர் நிலம், நில அமைப்பு மற் றும் மண் சம்பந்தமான அறிவும் கமக்கார னுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசிய
மாகும்.
இயற்கைத் தாவரம்
விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு கனேடிய அள வீட்டுக் கூட்டுத் தாபனம் இலங்கையின் காடுகளை அளவீடு செய்தது. சாகுபடி

கா. குலரத்தினம்
செய்யக் கூடிய புற்றரைக்கு ஏற்ற முக்கி யத்துவம் கொடுக்கப்படவில்லை. விஞ் ஞான ரீதியாக இலங்கையின் புற்றரைகள் சீர்திருத்தப்பட்டால், பா ற் பண் னை , இறைச்சி, நிலப்பிராணிகள் போன்ற எமது பொருளாதாரத்தின் அங்கங்களுக்குப் (பகு திகளுக்குப்) பெரும் உதவியாக இருக்கும்
இலங்கையின் புற்றரைகள் சுவாத்தி யம், நிலப்பண்பு ஆகியவற்றின் நேரடித் தாக்கத்தால் உண்டானவையல்ல. முக்கிய மாக மனிதனின் நடமாட்டத்தால் உண் டாகின. இதனுல் உயிரினங்களின் நடமாட் டத்தால் எழுந்தவையென அழைக்கப்பட் டன. மனிதனின் தொழிற் பாடுகளான காடுகளையும், வனங்களையும் எரித்தல், மேய்த்தல் போன்ற காரணங்கள் புற்றரை கள் உருவாவதற்கு ஏதுவாகின்றன. கவன மான திட்டங்களாலும், பண்படுத்தலா லும், இன்று உபயோ கமற்றுக் கிடக்கும் புதர் நிலங்களைப் பயன்தரும் புற்றரைக ளாக மாற்றமுடியும்.
ஊவா , ஹட்டன், நக்கிள்ஸ் ஆகிய பிர தேசங்களில் மத்திய பகுதிக்குரிய ஈரலிப் பான புற்றரைகள் 50,000 ஏக்கர் வரை பரந்திருக்கின்றன. இங்கு அடர்ந்த கற் றைப் புற்கள் காணப்படுகின்றன. இங்கு மண் ஆழமில்லாமல் இருப்பதால் இவை மரங்கள் வளர்வதற்கு உகந்ததல்ல; இத னல் திரும்பவும் வளமாக்க முடியாது. மேலும் பயனுள்ள புற்களால் இவற்றின் இடத்தை நிரப்பலாம்.
உயர்ந்த நில மழைக் காட்டிலிருந்தே ஈரலிப்பான பத்தரைப் புல்வெளி உண்டா னது. ஹோட்டன், எல்க், மூன், போபத்த லாவை ஆகிய சமவெளிகளில் 12,000 ஏக் கர் இருக்கிறது. கால்நடைகள் வளர்த்து இறைச்சி எடுக்கவும், பாற்பண்ணை உரு வாக்கவும் இந்தக் கFடுகளைப் பண்படுத்த வேண்டும்.
பள்ள நில ஈரலிப்பான புற்றரைகள் 5,000 ஏக்கர் வரை காணப்படுகின்றது. இவை காடுகளுக்கிடையில் சிறு சில படை களாகக் காணப்படுகின்றன. திட்டமிடப் பட்ட காடுகள் உண்டாக்கும் முறைகளால்

Page 27
உள்நாட்டு வளங்களும்.
உபயோகமுள்ள மரங்கள் நாட்டப்படல் வேண்டும்.
கிட்டத்தட்ட 200,000 ஏக்கர் பள்ள நில ஈரலிப்பான சாலன்ன பலாங்கொடை தொடக்கம் நக்கிள்ஸ் வரை தொடர்பாக விருக்கின்றது. காலஓயா வரையும் இது நீண்டுள்ளது. மரங்கள் பரவலாகக் காணப் படுவதால் பூங்கானத் தோற்றத்தைக் கொடுக்கின்றன. உபயோகமுள்ள புற்ற ரைகளாக மாற்ற மக்கள் முற்படாவிட் டால் இலைச் செடிகள் வளர்வதற்கு வழி வகுக்கும்.
பொலநறுவை, காலஓயா, மட்டக் களப்பு ஆகிய மாவட்டங்களில் பள்ளநில வரண்ட புற்றரைகள் அல்லது மொன்சூன் புற்றரைகள் காணப்படுகின்றன. வனவிலங் குகள் மேய்வதற்கு இவை உபயோகிக்கப் பட்டாலும், இவற்றைக் கட்டுப்படுத்தப் பட்ட மேய்ச்சல் நிலங்களாக மாற்ற முடி եւ լք , மீன்பண்ணை
குறிப்பிடத் தக் களவு ஆராய்ச்சி இத் துறையில் செய்யப்பட்டுள்ளது. சமுத்திர ஒட்டம், நீர் மூழ்கிக் கப்பல் இடவிளக்க வியல், விஞ்ஞான முறையில் மீன் வளர்த் தல் ஆகி ய வ ற் று க் கு முக்கிய கவனம் செலுத்தப்படல் வேண்டும். சமுத்திரத் தின் ஆழமற்ற பகுதியில் மீன் வளர்க்க (up 19-th b.
சிறு மீன்கள், முட்டைகள் என்பவற் றின் அழிவாலும், கலப்பு மீன் பிடித்தலா லும் வளங்கள் குறைக்கப்படுகின்றன. இலங்கையிலும், சுற்ருடலிலும் ஏராள மான வளங்கள் இருக்கின்றன. நவீன விஞ் ஞான முறைகளை உபயோகித்து மீனை மட்டு மல்ல இரு ல், நண்டு, சிங்க இரு ல், ஆமை முதலியவற்றையும் வளர்க்கலாம் இலங் கையின் கண்டமேடைகள் , சங்குகளின் வாழ்க்கை முறை என்பன பற்றிய அள வீடு நீண்ட காலமாக நடைபெறவில்லை.
ஜல சக்தி
இலங்கைத்தீவில் தொடர்ச்சியான நீர் வீழ்ச்சி உள்ள 51 இடங்கள் உள்ளன. பருவ

கா. குலரத்தினம் 9
காலத்திற்கேற்ப காலத்திற்குக் காலமும், இடைக்கிடையும் நீரின் கனவளவு மாறிஞ லும் நீர்த் தேக்கங்களில் நீரைத் தேக்கி வைத்து வேண்டிய நேரம் உபயோகிக்க а) птић.
கணிப்பொருள் ஆய்வு (Mineral
Mapping)
கலாநிதி ஆனந்தக்குமாரசுவாமி அவர் களின் தலைமையில் 1902ம் ஆண்டு புவிச் சரிதவியற்றுறை ஆரம்பிக்கப்பட்ட போது கணிப்பொருள் ஆய்வும் தொடங்கிற்று. இலங்கை முழுவதற்குரிய இடவிளக்கப் படங்கள் வரையப்பட்டுள்ள போதிலும், புவி ச் ச ரி த வி ய ந் படங்கள் இது வரையில் மூன்று மாத்திரமே வரையப்பட் டுள்ளன. அவை பொலநறுவை, இறங் காலை, அவிசாவளை என்பன பற்றியன வாகும். ஒரு விரிவான புவிவரலாற்றியல் அளவை செய்வதாயின் பல ஆளணியும், நீண்டகாலமும் செல்லும். எனவே கணிப் பொருட்களைக் கண்டு பிடிப்பதற்கு உடன டியாகக் கவனஞ் செலுத்தப்படல் அவசிய மாகும்.
9(5DL15 g5 T35 (Iron ore)
எல்லா இடங்களிலும் பரந்து காணப் படாவிட்டாலும் உயர்ந்த ரக இரும்புத் தாது கணிசமான அளவு கிடைக்கக் கூடிய தாகவுள்ளது. கனடியக் காந்தமானியின் அளவீட்டினல் சண்டலங்காவ (Sandalsnkawa) என்னுமிடத்தில் 55 - 65% இரும்பு இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவை பல நூற்ருண்டுகள் நிலைக்கக் கூடி யன. ஆனல் பிளாஸ்டிக் சின் தெட்டிப் பொருட்கள் இரும்புப் பொருட்களின் இடத்தைப் பிடிக்குமுன் இந்த இரும்புத் தாது பாவிக்கப்படல் வேண்டும். மேற்பரப் பிற் காணப்படும் லெமோ னைற்றும், 400 அடிக்குக் கீழே காணப்படும் மக்னரைற் றும் ஏழு இலட்சம் தொன் அளவிற் காணப் படுகிறது. திட்டமிடப்பட்டுள்ள உலை (Furnace) ஆண்டுதோறும் ஒரிலட்சம் தொன் தாதுவிலிருந்து உருக்கை உற்பத்தி செய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இலங்கை உருக்குக் கூட்டுத்தாபனம் வெளி

Page 28
10 உள்நாட்டு வளங்களும்.
நாடுகளிலிருந்து வார்ப்பிரும்பை இறக்கு மதி செய்து பின் அதைப் பல்வேறு மாதிரி களாக மாற்றுகின்றது. சில இடங்களில் மேற்பரப்பிற் காணப்படும் இரும்பு கமத் தொழிலுக்குத் தடையாகவிருக்கிறது. இவைகள் அகற்றப்படுவதை கமக்காரர் கள் வரவேற்பார்கள். சிதறிக்கிடக்கும் இந்த இரும்புத் தாதுக்களைச் சேகரிக்கும் வேலை தொடங்கப்பட்டால், பருவமற்ற காலத்தில் விவசாயிகளுக்கும், விடுதலைக் காலங்களில் மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பை அளிக்கும். உள்நாட்டின் மேற் பரப்பில் காணப்படும் இரும்புத் தாதைச் சேகரிப்பதன் முதற்படியாக இதனைக் கருத வேண்டும். இதைத் தொடர்ந்து சுரங்க வேலையை ஆரம்பிக்கலாம். ஆக்குபவருக் கும், கொள்வனவு செய்வோருக்குமிடை யில் ஒரு தொடர்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு திட்டம் வகுக் கப்படல் வேண்டும்.
இல்மனைட்டும், மொனசைட்டும்
சுத்திகரிக்கப்படாத இல்மனைற்று புல் மோட்டையில் எடுக்கப்பட்டு யப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதிலிருந்து "றைற்றேணிய"த்தைப் பிரிக்க முயற்சிக் காலம். இதனுல் அதே வளத்திற்குக் கூடிய பெறுமதியையும், பலருக்கு வேலை வாய்ப் பையும் ஏற்படுத்தலாம். மேலும் இலங்கை யின் விஞ்ஞானக் கழகங்களும், பல்கலைக் கழகங்களும், இதில் ஆராய்ச்சி செய்ய ου πιο.
இந்துறவை, ஹெக்காவளை ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள கடற்கரைகளிலி ருந்து மொனசைட்டு ஒரே விதமான முதலி ருந்தே எடுக்கப்படுகிறது. ஒரு காலத்தில் கடற்கரையில் தேக்கப்படுகிறது; மறு பரு வத்தில் நீரினுற் கரைக்கப்பட்டுக் கடலுக் குள் கொண்டு செல்லப்படுகின்றது. கடல் நீராற் கரைக்கப்பட்டுத் திருவாங்கூர்க் கடற்கரைக்குக் கொண்டு செல்லப்படுமுன் அறுவடை செய்யப்படல் வேண்டும். அம் பாந்தோட்டையிலும், கிரி ன் டி யிலும் காணப்படும் மண் படிவுகளும், வெள்ளா வையிற் காணப்படும் மொனசைட்டுப் படி வுகளும் தகுந்த முறையில் ஆராய்ச்சி செய் யப்படல் வேண்டும்.

கா. குலரத்தினம்
5 Tful to (Graphite)
உலகின் முதற்தரமான காரீயம் இலங் கையிலே காணப்படுகிறது. ஏற்றுமதி வரி இலங்கையில் உயர்வாகவிருப்பதாலும், மற்றும் உள்நாட்டுக் காரணிகளாலும் கொள்வனவு செய்வோர் மடகஸ்காரில் இருந்து ஏற்றுமதியாகும் குறைந்த ரகக் காரீயத்தையே வாங்குகிறர்கள். வவுனி யாவிற் கருகாமையில் ஏகப்பட்ட அளவில் உயர்ந்த ரக க் காரீயம் பாறைகளாகக் காணப்படுகின்றது. பென்சில் உற்பத்திக் குத் தேவையான காரீயத்தைத் தவிர்ந்த ஏனைய காரீயம் பண்படுத்தப்படாமலே ஏற்றுமதியாகின்றது. த னி த் த ன்  ைம வாய்ந்த எங்களின் காரீயப்பளிங்குகளின் பெறுமதியை உலோகங்களின் பூச்சிற்கு உபயோகிப்பதாலும், புடக்குகைகள், மின் வாய்கள் உராய்வு கருவிகள் என்பன உற் பத்தி செய்ய உபயோகிப்பதாலும் கணிச மான அளவில் அதிகரிக்கலாம்.
மைக்கா
மைக்கா, பாளங்களாகக் காணப்படும் கணிப்பொருள். இலங்கையிற் காணப்பட் டாலும், பளிங்குகளின் ஒரு பகுதியே உப யோகத்திற்குரிய மைக்கா வைக் கொண் டுள்ளது. இதனுல் பெருந் தொகையாகக் காணப்படவில்லை. தலத்து ஒயா பகுதியில் மைக்கா காணப்படுகிறது. இங்கு எடுக்கப் படும் மைக்கா உள்ளூர் த் தேவைகளுக் கான அரிதிற் கடத்திகள், வானெலி உறுப் புக்கள், மின்னழுத்தப் பெட்டிகள், அடுப்பு கள், தொலைபேசிப் போக்குவரத்திற்கான தேவைகள் ஆகியவற்றிற்கும் போதுமான தாகும். இறக்குமதி செய்யப்படும் மைக் காப் பொருட்களின் வரியிலும் பார்க்க இந்நாட்டில் உ ற் பத் தி செய்யப்படும் பொருட்களின் விலை குறைவாகவிருக்க வேண்டும். உள்ளூருற்பத்திக்கு ஊ க் கம் அளிப்பதாலேயே இதனைச் செய்ய முடியும். கைத்தொழிலுக்கு ஏற்ற அளவுத்தன்மையு முடைய மைக் காவிற்கு , ஆழமாக க் காணப்படும் பளிங்குகளைத் தேடும் முயற்சி அவசியமாகும்.
வணைவதற்குரிய கணிப்பொருட்கள்
1941-ம் ஆண்டில் பொறலஸ்கமுவைப் பகுதியில் இரண்டு சதுரமைல் பரப்பில் 10 இலட்சம் தொன் உயர்ந்தரக சீனக் களி (கயலின்) காணப்படுகிறது. ஆறு அடி தடிப்புள்ள படலத்தை 18 அங்குலத்திற்கு மண்ணும் மூடப்பட்டிருப்பது கண்டுபிடிக்

Page 29
உள்நாட்டு வளங்களும்.
கப்பட்டது. 1941-ம் ஆண்டு இது கண்டுபி டிக்கப்பட்டாலும், இதிலிருந்து மண்கலப் பொருட்களும்பத்தி அண்மை யிலேயே ஆரம்பிக்கப்பட்டது. கடதாசிக் கைத் தொழிலுக்கும், நூல் பதனிடவும், இரப் பர் நிரப்பலுக்கும் கயலினைப் பாவிக்க லாம். போதிய மூலதனம் இல்லாமலே யப்பான் மட்கலப் பொருட்களை வெளிநா டுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியுமானல், இந்தியாவிலும், தென் கிழக்காசியாவிலும், தென்னுபிரிக்காவிலும் இலங்கை தனது சந்தையை உருவாக்க முடியும்.
வளமாக்கிகள் :
சுண்ணும்பு ஏராளமாகக் காணப்படு கி ன் ற பொசுபேற்றும், பொட்டா சும் குறைவாகக் காணப்படும் வளமாக்கிகளா கும். பொசுபேற்று தேவையான அளவிற்கு இல்லை. தாவரங்களால் ஜீரணிக்கப்படக் கூடிய நிலையில் பொட்டாசு காணப்பட வில்லை. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக் கருகாமையில் வளமாக்கிகள் தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பித்தால், பெற்ருேலிய இரசாயனப் பொருட்களிலிருந்து வளமாக் கிகள் தயாரிக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக் கிறது.
வலுவளிக்கும் கணிப்பொருட்கள்!
வர்த்தகத்திற்குத் தேவையான அளவு வலுவளிக்கும் கணிப்பொருட்கள் இருக்கின்
றதா என்பது இதுவரையும் சரியாகத் தெரியவில்லை.
எண்ணெய்க்கு நல்ல எதிர்காலமிருந் தாலும் வர்த்தகப் பாவிப்பிற்குச் சில நிபந் தனைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும். எண்ணெய்க்குஇடம்பெயருந்தன்மை இருப் பதால் அது உற்பத்தியான இடத்திற் காணப்படுவதில்லை. உதாரணமாக அமெ ரிக்காவிலும், பேர்சியன் கு டா வி லும் கிடைக்கும் எண்ணெய் அங்கு உற்பத்தியா னதல்ல. குழிப்பாறைப் படைகள் உள்ள இடங்களில் எண்ணெய் பாதுகாக்கப்படு கின்றது. முத்துராஜவலைப் பகுதியில் 5 கோடி தொன் முற்ருத நிலக்கரி காணப் படுகிறது. முற்ருத நிலக்கரியைப் பண்ப டுத்திய பின் எரிபொருட்களாகவும், வள மாக்கிகளாகவும் பாவிக்கலாம்.

கா. குலரத்தினம் 11
அரிதான பொருட்கள் :
தோனியனைட்டும், தோ ைற ட் டு ம் இலங்கையிற் காணப்பட்டாலும் இவற் றிற்குப் போதிய கவனஞ் செலுத்தப்பட வில்லை. மெல்சி புரி போன்ற காரியப்பரப்பில் யுரேனியம் கண் டுபிடிக்க ப் பட் டது. மிக அண் மைக் காலத்தில் புவிச்சரிதவியல் அ ள வி ய ந் தி னை க் க ள த் தைச் சேர்ந்த -{t -יי נL • לו) (5 ஆ ர |ா ய் ச் சி பு தி ய கணிப் பொ ளொ ன்  ைற க் கண் டு பிடித்தார். இதற்குக் காலஞ் சென்ற கலா நிதி ஆனந்தகுமாரசாமியின் ஞாபகார்த்த மாக'ஆனந்தைற்" என்று பெயரிடப்பட் டது. சீனன்குடாவில் அமைக்கத் திட்டமி டப்பட்டுள்ளதொழிற்சாலை 12,000தொன் சேர்க்கோனையும், றுாற்றைலையும் உற்பத்தி செய்யும். மொனசைட்டு, சேர்க்கோன், பட்டலைற் ஆகியவற்றைத் தொன் காணக் கில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய
6) TLD .
கண்ணுடி மணல் :
பல இடங்களில் உயர்தரக் கண்ணுடி மணல் கிடைக்கின்றது. மணல் ஒரே சீரா னதாகவிருந்தால் கண்ணுடி உற்பத்தியின் போது உ  ைற த ல் நடைபெறுவதைத் தடை செய்யலாம். கண்ணுடி மணலும், குவாட்சும் ஆய்வும், மதிப்பீடும் செய்யப்ப டல் வேண்டும்.
இரத்தினக் கற்கள் !
இலங்கையில் இரத்தினக் கற்கள் ஏரா ளம்முண்டு. 'சுமித்திஸ்ற்' இலிருந்து சேர்க்கோன் வரையும் வேறுபடுகின்றன. ஆபரணப் பெறுமதிவாய்ந்த  ைவரம், வைடூரியம் என்பன இங்கு காணப்பட

Page 30
12 உள்நாட்டு விளங்களும்.
வில்லை. கார் பைற் பளிங்குகள் இலங்கை யிற் கிடைக்கின்றது. பொசுபேற்றசின் ஒட் சைட்டு, அனலைற், புளோர் ஸ்பார் போன்ற வற்றின் பளிங்குகளின் படி கங்ச்ள் இலங் கையிற் காணப்படுகின்றன.
அபிவிருத்திக்கான யோசனைகள் :
(i) நடுத்தர தொழில் நுட்பம், கைத் தொழிற் தேர்ச்சி போன்றவற்றில் மக்களைப் பயிற்றுவிப்பதற்கான குறு கிய காலத் திட்டங்கள் பொறுப் பேற்கப்படல் வேண்டும்.
(i) இலங்கையிற் கி டை க்க க் கூ டி ய வளங்களின் பதிவேடு ஒன்று தயா ரிக்கப்படல் வேண்டும்.
(iii) சீனுவைப் பின்பற்றி விஞ்ஞான அறி வுடைய பல்கலைப்புகுமுக மாணவர் கள் போன்றேர்களுக்கு, குறுகிய காலப் பயிற்சியின் பின், கணிப் பொருட்கள் கிடைக்குமிடங்கள்,
தொகையின் மதிப்பீடு, இருக்கும்
எளிய கடையில் தமிழ்நூல் இலக்கண நூல் புதிதாக இ வெளியுலகில், சிந்தனையில்
விளைந்துள்ள எவற்றினுக்கு தெளிவுறுத்தும் படங்களெ1 செங்தமிழைச் செழுங்தமிழாய எளிமையினுல் ஒரு தமிழன்
இங்குள்ள எல்லோரும் நாள்

கா. குலரத்தினம்
(iv)
(v)
(vi)
0ணிடவும்
ஆழம் ஆகியவற்றை அடிப்படையா கக் கொண்ட ஆய்வை நடாத்தும் பொறுப்பைக் கொடுக்கலாம்.
அரங்க வேலை, வெட்டுதல், சந் தைப்படுத்தல் ஆகியவற்றை நவீ னப்படுத்துவதற்கு இரத்தினக் கற் கூட்டுத்தாபனம் அமைக்கப்படல் வேண்டும். வருடாந்தம் 10 இலட் சம் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்கள் களவாகக் கடத்தப்படுவது கண்காணிக்கப்படல் வேண்டும்.
சமுத்திரவியல் , கடலுயிரியல் ஆகிய பாடங்களை ஒரு பல்கலைக் கழகத்தி லாவது முழுமையாகப் போதிக்கப் பட வேண்டும்.
பொருளாதார, சமூக அபிவிருத்திக ளுக்கான இணைந்தும், தொடர்புடை யதும், மக்கள் பங்குகொள்ளக்கூடி யதுமான திட்டம் பல நாட்களுக்கு மு ன் பே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
எழுதிட வும் வேண்டும். இயற்றுதலும் வேண்டும்.
புதிது புதிதாக கும் பெயர்களெலாங் கண்டு ாடு சுவடியெல்லாம் செய்து ப்ச் செய்வதுவும் வேண்டும்.
படிப்பில்லை யென்ருல்
வேண்டும்.
- பாரதிதாசன்

Page 31
மூடநம்பிக்கைகள்
Slar pl முதன்முதலாக மனித இனம் சந்திரளில் வெற்றிகரமாகக் கால் வைத்த அபூர்வ செயலின் நேர்முக வர்ணனையை எங்கள் கிராமத்து மக்களும் மற்றைய நாட்டவருடன் சேர்ந்து வாஞெலி மூல மாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். அன்று எங்கள் கிராமத்தில் காற்று சற்று அதிக மாகவே வீசியது. இதுவரை கடவுளாகப் பாவித்த சந்திரனின் மேல் மனித இனம் கால் வைத்ததின் விளைவே இக் காற்று என அவர்கள் கருதினர். இப்படிச் சொல்வ தைத் தவிர வேறு காரணம் உண்டா? இல் லையா? என்பதை அவர்கள் சிந்திப்பதும் இல்லை. சிந்திக்க முயற்சிப்பதும் இல்லை.
மற்றைய நாட்டு மக்கள் இதனையும் இதனைப் போன்ற நம்மூளைக்கு அப்பாற் பட்ட பல செயல்களையும் செய்து உயர உயரப் போய்க் கொண்டிருக்கின்றர்கள். ஆனல் நாம் இன்றும் கூட எமது மூட நம் பிக்கைகளைப் பேணி வளர்த்தபடி எதிர்த் திசையை நோக்கிப் போய்க்கொண்டிருக் கின்ருேம்.
எனக்குக் கிடைத்த இந்த அரிய சந் தர்ப்பத்தை சில மருத்துவ சம்பந்தப்பட்ட தவரு ன அபிப்பிராயங்களை எடுத்துக் காட்டப் பயன்படுத்துகின்றேன். மருத்து வத்தைப் பற்றிய முன்னேற்றங்களே அறிவ லும் பார்க்க நமது பிற்போக்குக் கொள் கைகளே அகற்றுவதே மேல்.
காய்ச்சலும் உணவும்
நாம் காய்ச்சலால் பாதிக் சப்பட்டிருக் கும் காலங்களில் சோறு உண்பதை நிறுத்

மருத்துவம்
ir
திக் கொள்கின்ருேம். ஒரு மருத்துவர் சோறுண்ணலாம் என்று கூறினலும் கூட நாம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. சோறுண்பது காய்ச்சலுக்குக் கூடாது என் பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை. மருத்துவ நிலையங்களில் உள்ள சில தாதி யர், மருத்துவர்களும் கூட இந்நம்பிக்கை யு.னேயே கடமையாற்றுகின்ருர்கள். "பிள்ளைக்குக் காய்ச்சல் வந்து நேற்றுத் தான் சோறு கொடுத்தது" என்று கூறப் படுவதை நாம் எல்லோரும் கேட்டிருக்கின் ருேம் ஆனல் உண்மை யாதெனில் குடல் நோய் சம்பந்தப்பட்ட காய்ச்சலில் மாத்தி ரமே உணவு தவிர்க்கப்படல் வேண்டும். உதாரணமாக நெருப்புக்காய்ச்சல், மற் றைய காரணங்களினல் காய்ச்சல் ஏற்படும் பொழுது உணவைத் தவிர்த்தல் தவறு.
சீனியும் பூச்சியும்
**கண்டபடி சீனி சாப்பிடாதே உனக் குப் பூச்சிபிடிக்கும்" இது அம்மா அடிக்கடி சொல்லும் வார் த்  ைத க ள் . இதனுல் குழந்தை தான் விரும்பும் சீனியுணவை உண்ணவழியின்றி அழுகிறது. இது தேவை யற்ற அழுகை இதை நாம் அனுபவித்தி ருக்கின்ருேம். இப்பொழுது குழந்தைகள் அனுபவிக்கின்றனர். எமது வருங்காலக்
K. சந்திரசேகரம் M. B. B. S.
(விரிவுரையாளர்: மருந்தியற் பகுதி)

Page 32
14 மூடநம்பிக்கைகள்
குழந்தைகள் அனுபவிக்கக் காத்திருக்கின் றனர். குடலில் உள்ளழச்சிகள் சீனி உணவி னல் உண்டாகின்றன என்ற தவருன அபிப் பிராயத்தை எம்முன்னேர் மத்தியில் ஏற் படுத்தியவர் யார்? எமது குழந்தைகளுக் கும் நாம் ஏன் இத்தவருன அபிப்பிராயத் தைக் கூறவேண்டும்.
சில பூச்சிகளின் முட்டைகள் மலத்து டன் வெளிவந்து மண்ணிலே குடிக்கும் நீரு டனே அல்லது உணவுடனே சேர்ந்து திரும் பவும் வாயினுாடாக எமது உடலினுள் செல் வதால் முட்டைகள் வளர்ச்சியுற்று உடலில் பூச்சிகளாக மாறுகின்றன. சில பூச்சிகளின் முட்டைகள் மண்ணிலே வளர்ந்து பருவம் அடைந்து எமது வெறும் காலினுாடாக உட லினுள் செல்லலாம். ஆகவே பூச்சி உண்டா வது எமது சுகாதாரமற்ற பழக்கவழக்கங் களாலேயே ஒழிய சீனி சாப்பிடுவதினுல் அல்ல.
மாதமொருமுறை பேதி
மாதமொருமுறை பேதி குடிப்பதால் குடல் கழுவப்படுகின்றது, இதனுல் உணவு நன்ற க ஜீரணிக்கப்படுகின்றது என்பதில் எம்மவருக்கு அளவில்லாத நம்பிக்கை. ஏதோ ஒரு விதமாக இப்பழக்கம் குறைந்து வருகின்றது. எனினும் சில இடங்களில் இப் பழக்கம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகின்றது. சிலர் இப்படிச் செய்யாமல் இருப்பது வசதியீனக் குறைவாக இருக்க லாம். பேதி கொடுக்காததால்தான் குழந் தைக்கு வருத்தங்கள் ஏற்படுகின்றதென்று எமது வீடுகளில் கதைக்கப்படுகின்றது. பேதி கொடுப்பது மாத்திரம் அல்லாது அதனை மாதந்தோறும் தவருது கொடுக்க வேண்டும் என்பது எமது தவருனஅொள்கை. தகுந்த மருத்துவ காரணங்கள் இல்லாத வேளைகளில் பேதி குடிப்பது நல்லதல்ல.
உணவு - சூடும் குளிரும்
ஒரு சிறு பிள்ளையைக் கேட்டால் கூட 'ஐஸ்கிறீம்" குளிர் என்று கூறும். ஆனல் அதன் பெற்ருே ர் ' 'ஐஸ் கிறீம்” சூடு என்று கூறுகின்ருர்கள். இதில் யார் சரி? குழந்தை குளிர் என்று கூறும் பொழுது வெப்பநிலை யையே குறிக்கின்றது. பெற்றேர் சூடு

K சந்திரசேகரம்
என்று கூறும்பொழுது எதனை அடிப்படை யாகக் கொள்கின்றனர்? இதன் அடிப் படைக் காரணத்தை எவராவது சரியாகக் கூற முடியுமானல் அவர்கட்கு நான் கட மைப்பட்டவணுவேன். நாம் எவ்வித விளக் கமும் இன்றி உணவை சூடான வகை குளி ரான வகை எனப் பிரித்திருக்கின்ருேம்,
உதாரணமாக,
சூடானவகை:- ஐஸ் கிறீம், தினை, எருமை இறைச்சி, நெத்தலிக்கருவாடு, ஈரப்பலாக் காய் முதலியன.
குளிரானவகை:- தயிர், இளநீர், கோழி இறைச்சி, வாழைப்பழம் முதலியன
நாம் தலையை - நனைத்து நீராடினுல் தயிர், வாழைப்பழம் போன்ற குளிர்ந்த உணவுகளாகக் கருதப்படுபவற்றை உண்ப தில்லை. உண்டால் நமக்கு ஏதாவது நடந்து விடும் என்று பெற்றேர்க்குப் பயம். நீங் கள் நன்ருகத் தலையில் குளித்து விட்டு குளிர் உணவுகள் எனக் கூறப்படும் தயிர், அல்லது வாழைப்பழம் போன்றவற்றை யுண்டு பாருங்கள். எந்த விளைவும் ஏற் L-f .
நீரிழிவும் உணவும்
நீரிழிவு மிகச் சாதாரணமான ஒரு வருத்தம். எமக்குத் தெரிந்தவர்களில் ஒரு வராவது இந்த நோயுள்ளவராக இருக்கின் ருர் . நீரிழிவுக்கு சிகிச்சை முறையில் தகுந்த உணவும் முக்கியமானது. ஆனல் இது எந்த ரீதியில் முக்கியம் என்பதை எவரும் கவ னிப்பதில்லை. இந்த வருத்தத்தில் மாவுப் பதார்த்தம் (கார்போகைதரேட்டு) குறைக் கப்பட்டு புரத உணவு தேவையான அள வில் கொடுக்கப்படல் வேண்டும்.
சோறுண்ணலாமா? சீனி நல்லதா? இடி யப்பம் நல்லதா? முதலிய கேள்விகள் சாதாரணமாக கேட்கப்படும். மேற்கூறிய வற்றில் மாவுச்சத்து அதிகமாக இருப்ப தால் இவற்றை மிகக் குறைவாகவே சேர்த் துக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயினர்க்கு குரக்கன், தவிட் டுப்பாண், பனங்கட்டி போன்றவை அரிசி சாதாரணபாண், சீனி போன்றவற்றைப்

Page 33
மூடநம்பிக்கைகள்
பார்க்கிலும் சிறந்தன என எம்மவர்கள் நினைக்கின்றனர். இதனுல் இவர்கள் குரக் கன் த விட்டுப்பாண் போன்றவற்றைத் தேடிப் பெறவேண்டியுள்ளது. ஆனல் மேற் கூறியவற்றிற்கும் சாதாரண உணவுகளுக்கு மிடையில் மெச்சத்தக்க வித்தியாசமில்லை.
i. கொழு! மாவுப் கலோ
புரதம் ப்பு பொருள் ரிகள்
தீட்டப்
ul L 7.0 1.0 78 349
அரிசி
க்
*| 8.0 | 1.3 72 332
இங்கே காட்டப்படும் அட்டவணையிலி ருந்து குரக்கன் நாம் நினைப்பது போல அரி சியிலிருந்து மிக வேறுபட்ட உணவல்ல என்பது தெரிகிறது. நமது முன்னேர் குரக் கனை உண்டு சுகதேகிகளாக பல்லாண்டு நீரி ழிவு இன்றி வாழ்ந்தனர் என்று இன்றும் சிலர் கூறுவதை நாம் ஆராய்வதால் பயன் இல்லை. அம்மாள்நோய்
கொப்பிளிப்பான், சின் ன முத் துப் போன்ற வருத்தங்களின் காரணம் சில வகை வைரஸ் கிருமிகளாகும். இக் கிருமி களைக் கண்டு பிடித்தது மாத்திரமில்லை , அவை நோயை உண்டாக்க எத்தனை நாள் செல்கின்றது என்பதையும் அவற்றின் அமைப்பு வளருடம் முறைகள் யாவற்றையும் மேல் நாட்டவர் எம ககுக் காட்டியிருக்கி ருர் கள். அவற்றை நாb இவ்வியாதியினல் உண்டாகும்கொப்பளங்களிலிருந்து எடுத்து இலத்திரன் நுணுக்குக் காட்டி மூலம் பார்க்க முடியும். இத்தனையும் உண்மை. ஆனல் நாமே 7 இன்னமும் இவ்வருத்தங் கள் அம்மன் கடவுளின் சோதனையே என்று நம்பிக் கொண்டிருக்கிருேம். ஏன் அம்மா ளுக்கு வேறு ஏதாவது தொழிலில்லையா? இவ்வருத்தங்களை எங்களுக்கு தருவது தானே அவரது பொழுதுபே7 க்கு? இதனை யார் அறிவர்? ஆனல் பரப் பரரை பரம் பரையாக நாம் இதனை ஒரு விதமான ஐய முமின்றி நம்பிவருகிருேம் கொப்பிளிப் பான் இருக்கும் பொழுது மீன் மாமிசம், முட்டை முதலியன உண்ணப்படாது. அம் மன் கோபித்து விடுவா ள் என்று எமக்குப் பெருத்த பயம். இது எவ்வளவு மூடத்தனம்!
இருமலின் காரணம்
இருமலுக்குக் காரணம் பலவுள. எங் களிற் சிலர் இருமல் 'சூட்டால்' ஏற்படு

K சந்திரசேகரம் 15
கிறது என்று கூறுவார்கள். இந்தச் சூடு எப் படி வந்தது என்று அவர்களுக்கும் தெரி யாது. எனினும் அவர்கள் நல்லாகக் குளிக் கச் சொல்லுவார்கள். நல்ல குளிரான உணவு உண் பார்கள். இதற்குப் பின்பும் இருமல் இருந்தால் வீட்டு வைத்தியம் செய் வார்கள். அதாவது நல்ல காரமான குடி நீர் போன்றவையை பாவிப்பார்கள். ஏன் சிலர் சாராயம் கூடப் பாவிப்பார்கள். இதன் பின் சிலர் மருத்துவசாலைக்குப்போய் இரும்லின் காரணம் காசநோய் என்றறிந்து ஏற்ற மருந்தெடுத்து குணமடைகிருர்கள். மற்றவர் வேறு ஏதாவது வருத்தமென்று நினைத்து கையிற்கு நூல்கட்டி, நேர்த்திக் கடன் செய்து, அருமையான காலத்தை யும், பணத்தையும் செலவழித்து வேறு ஏதாவது மருந்தெடுத்து இறுதியில் தான் காசநோய் என்று அறிவர். இந்த நிலையில் இரு சுவாசப்பைகளும் காசநோயால் பீடிக் கப்படுவதால் சிறந்த மருந்துகள் கூட பிர யோசனமற்றவையாக மாறி விடுகின்றன. நோயாளி இருமி,இருமி விரைவில் அழிந்து விடுகிறன். அது மட்டுமன்றி அவன் காச நோய்க் கிருமிகளை தான் மனமார விரும் பிய மனைவி, பிள்ளைகள் எல்லோருக்கும் தனது ஞாபமாகக் கொடுத்து விட்டு மறை கிருன்.
இப்படித்தான் நாம் வாழ்ந்து வந்துள் ளோம். இதன் அடிப்படைக் காரணம் விதி யுமில்லை, வறுமையுமல்ல எமது மூட நம்
பிக்கைகளே!
இவற்றைப் போல இன்னும் எத்த னையோ மூடநம்பிக்கைகள் நம்முள் ஊறிக் கிடக்கின்றன. நான் சிலவற்றைக் கூறி முடித்தேன் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பேணிவளர்த்த நம்பிக்கை களல்லவா! எப் படி சுலபமாகக் கைவிட முடியும்? நாம் இவற்றை ஒரேயடியாகக் கைவிட்டு புத்தி யுள்ளவர்களாக வாழவேண்டும். எமது குழந்தைச் செல்வங்களுக்கு இனிமேலும் பிழையான அபிப்பிராயங்களைப் போதிக் காது வாழவேண்டும். படிப்படியாக இன் னும் பல்லாண்டுகளுக்குப் பின் ஞவது நமது நாட்டவர் இம்மூட நம்பிக்கைகளைக் கை விடுவார்கள் என்று நம்புவோம்.

Page 34
மு. பொன்னுச்ச
ருத்தி
எங்களிடம் கீழ்க்காணும் டெ
பெற்றுக்ெ
* மோட்டார் உதிரிப்பாக * மின்சார உறுப்புக்கள்.
& லூக்காஸ் (LUCAS) பற (* Liga IT (YUASA) Lisps * கிறிஸி பிறேக் ஒயில், * C. B. E. மின்சார பல்ட * S-LON தண்ணிர் பைட் * P. V. C. பைப்புக்கள்
ருேட்மாஸ்ரர் பைசிக்கி லோட்டஸ் பைசிக்கிள் * வெடில்கோட் டின்கள் * குட்றிச், களனி, குட்இ
& எலக்றிக் கேபிள்ஸ்.
5gul:- (QUICK CHARGER)
றிகள் சார்ச்செய்தும் ெ
ஒலிபரப்புக் பற்றறிகள் வாட
பிறதர், ஸ்ற்றியூவாட் தையல் மாதாந்தக் கட்டுப்பணத்தி
BUS STAND, Phone: 518
 

|If ୭ରି]] ଅଯୌTଗାଁ) த்துறை.
ாருட்கள் மலிவான விலையில் காள்ளலாம்.
ங்கள்.
ற்றறிகள், றறிகள்.
க்கள்.
ப்புக்கள்
ளும், உதிரிப்பாகங்களும்
ரயர், ரியூப்புக்கள்
யர் ரயர்கள், ரியூப்புகள்
குவிக் சார்சரினுல் 30 நிமிஷத்தில் பற்ற காடுக்கப்படும்.
க்காரர்களுக்கு கைக்கு விடப்படும்.
மெசின்கள் ரொக்கப்பணத்துக்கும் ற்கும் பெற்றுக்கொள்ளலாம்.
AMY & <(م ‘تجسسرGتنعة کئے۔ رستہ
PONT PEDRO.

Page 35
பாரதியும் திரு. ெ
இருபதாம் நூற்ருண்டில் இலக்கிய முயற்சிகளுடன் மட்டும் நின்றுவிடாது சமூ கச் சீர்திருத்தம் அரசியல் என்பவற்றிலும் ஈடுபட்டுத் தமது எழுத்திலும் பேச்சிலும் அவற்றுக்கு அதிக இடம்கொடுத்து வந்த வர்கள் சிலர். அவர்களுள் தேசியக்கவி, இருபதாம் நூற்ருண்டின் மறுமலர்ச்சிக் கவி, 'தமிழ்க்கவிதையுலகின் பிராமத்தி யூஸ்" என்றெல்லாம் புகழப்படும் சுப்பிர மணிய பாரதி யாரும் (1882 - 1921) தமிழ்த் தென்றல், தமிழ்முனிவர் , தமிழ் நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தின் தந்தை எனப் பேசப்படும் திரு. வி. கலி பாணசுந்தரமுதலியாரும் (1883 - 1953) குறிப்பிடத்தக் கவர்கள். சம காலத்தவர்க ளான இருவரும் ஒருவரையொருவர் அறிந் திருந்தனர். பாரதி திரு. வி. கவின் தொழிற்சங்க் இயக்கத்துக்கு மதிப்புக் கொடுத்தார். பாரதி பிறந்த அடுத்த வரு டம் பிறந்து அவர் இறந்த பின்பு முப்பத்தி ரண்டு ஆண்டுகள் தொடர்ந்து உயிர் வாழ்ந்த திரு. வி. க., பாரதியின் தேச பக்தியாலும் புதிய தமிழ்ப்பாட்டாலும் கவரப்பட்டார் என்பதை அவர் எழுத்துக் களினின்று அறியலாம். இருவரும் தமிழ் இலக்கிய உலகிற் பிரபல்யமானவர்கள். ஒருவர் சிருஷ்டி இலக்கிய கர்த்தா மற்ற வர் தமிழ்ப் பத்திரிகைத் துறையில் சேவை செய்தவராகவும், வசனநடை ஆசிரியராக வும் அறியப்பட்டவர்.
இதற்கெல்லாம் மேலாக இவர்கள் 19-ம் நூற்ருண்டின் பிற்பகுதியில் ஆரம்ப மாகி இந்திய சுதந்திரம் வரை நாட்டில் அல்லபுரண்ட இந்திய தேசிய இயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களாயிருந்தனர். இந் திய தேசிய இயக்கத்தின் தலைமையாகப் புதிய கல்விகற்ற வகுப்பு வந்தபோது, அதனை வழிநடத்திய கலைஞர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் என்பவர்களில் இவர் கள் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளாக முன்

பி. க. வும்
ћ. jj. I (3) I
நின்றனர். இவர்களிருவரையும் ஒப்பிட்டு நோக்குவதன் மூலம் அவர்களை உருவாக் கிய தேசிய இயக்கத்தின் பன்முகப்பாட் டின் நன்மைகளையும், இவர்களிற் காணப் படும் ஒற்றுமைக்கு அது வழிகோலியமை யையுங் காணலாம். அதே நேரம் அவர்க ளின் கல்வி, நண்பர்கள், சூழ்நிலை, சொந்த ஆருமை என்பவற்றின் காரணமாக அவர் களிடம் காணப்படும் வேறுபாடுகளையும், தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை திரு. வி. கவின் இடத்தையும் உணர்ந்து கொள்ள உதவியாகவிருக்கும்.
சிறு வயது தொட்டே சாதுவாகவும், புத்திக்கூர்மையுடையவராகவும் இரு ந் த திரு. வி. கவின் பாடசாலை நாட்களில் கிருஷ்ணராவ் என்ற கிறிஸ்தவர். புகழ் பெற்ற சைவசமயப் பேச்சாளரும், Liathylgதருமான நா. கதிரைவேற்பிள்ளை என் போர் ஆசிரி ய ர |ா ப் இரு ந் த ன ர். நா. கதிரைவேற்பிள்ளையில் இவர் தனிப் பற்றுடையவராய் இருந்தார். திரு. வி. கவின் முதல் நூலாக பெரியபுராண ஆராய்ச்சிக் குறிப்புரை வெளிவந்தமைக்கு இது முக்கிய காரணமெனலாம்.
1905-ம் ஆண்டில் வங்கப்பிரிவினைப் பிரகடனத்தின் பயனுக இந்திய தேசிய இயக்கம் தீவிரமடைந்த ஆண்டில் திரு.வி.க, ஸ்பென்சர் கம்பனி எனப்படும் வெள்ளைக் காரக் கம்பனியொன்றில் வேலையேற்றர். எனினும் 1908-ல் வங்கத்துச் சிங்கம் விபின சந்திரபாலரின் அனல்கக்கும் சென் னைப் பிரசங்கங்களால் தேசிய இயக்கத்துள் இழுத்தெடுக்கப்பட்டவர்களுள் ஒருவரா ஞர். 'பிரசங்கங்களுக்குச் சென்ற உற்சாக மிக்க இளைஞர்களுள் ஒருவராகவிருந்த சுந் தரருடைய தேசியப்பற்றின் ஆன்மா எழுச் சியுற்றது’*1.
1. Makers of Mordern Tamil-T. S. Ragavan.

Page 36
18 பாரதியும் திரு. வி. க. வும்
1908-ல் திரு. வி. கவின் வாழ்க்கை யில் தேசப்பற்றுக்கான அம்சங்கள் காணப் படத் தொடங்கியபோது, பாரதி தீவிர மான தேசபக்தராகவும், அரசியல் ஈடு பாடுள்ளவராகவும் ஆகிவிட்டதைக் காண லாம். 1906-ல் காங்கிரஸில் பிரிவு ஏற்பட் டுச் சுயராஜ்ய கோஷம் வலுத்தபோது அந்தியா’ பத்திரிகையைப் பாரதி ஆரம் பித்திருந்தார். 'அந்தக்காலத்தில் பாரதி யார் தீவிரமான தேசபக்தரா யிருந்தார். எதிலும் நிதானத்தையே அனு ச ரி த் து நின்ற பூரீமான், ஜீ. சுப்பிரமணிய ஐயரின் கொள்கையிலிருந்து பாரதியார் வேறுபட் டுப் பிரிந்து 'இந்தியா' என்ற தமிழ் வாரப் பத்திரிகையைத் தொடக்கி ஆசிரிய ராஞர்' என இது பற்றித் திரு. ராமானு ஜீலு நாயுடு குறிப்பிடுவர். "இந்தியாவில்" பாரதி பொழிந்த உக்கிர வாசகங்கள் அவ ரைக் கைது செய்யும்படி அரசாங்கத்தைக் கட்டளை பிறப்பிக்கச்செய்தது. பாரதி அரசி யல் அகதியாகப் புதுவை சென் ருர் . இக் காலத்தில்தான் திரு. வி. க. தேசிய இயக் கத்தால் பாதிக்கப்பட்டு நாட்டு நிகழ்ச்சிக 2ளக் கவனிக்கத் தொடங்கியிருத்தார் எனப் பார்த்தோம். பாரதிக்கும் திரு. வி. கவும் குணம்சத்தில் உள்ள வேற்றுமையை யும் பின்னவரின் அமைதித்தன்மையையும் அவரது ஆறுதலான அரசியற் பிரவேசம் காட்டுகிறது. எனினும் அவர் 1917-ம் ஆண்டிலேலே நேரடியாக தேசபக்தனுக மாறிஞர். அவ்வாண்டில் அவர் ‘தேசபக் தன்’ எனும் தேசியவாதப் பத்திரிகையின் ஆசிரியராஞர். அதன் மூலம் தம்மைக் கவர்ந்த காந்தி, திலகர், அன்னிபெசண்ட் ஆகியோரின் கொள்கைகளைப் பரப்பிஞர். அத்துடன் புதுவையில் வாசம் செய்த பார தியார், வ. வே. சு. ஐயர் என்போர் மீது ஆங்கில அரசாங்கம் விதி த் தி ரு ந் த த  ைட  ைய நீக்குமாறு தேசபக்தன்' கிளர்ச்சி செய்தது. தடையுத்தரவும் நீக் கப்பட்டது.
இக்காலத்தில் பாரதியின் பத்திரிகை முயற்சிகள் யாவும் நின்றுவிடுகின்றன. அர சியியலில் இருந்து அவர் முற்ருக விலகிவிட வில்லையாயினும் இக்காலத்தில் அவரது கன ல் க க்கும் சொற்பொழிவுகளையோ, பாட்டுக்களையோ காணமுடியாதுள்ளது.

க. சித்திரலேகா
1921-ல் சுதேசமித்திரன் இதழொன்றில் S G ராமானுஜீலுநாயுடு தமது கட்டுரை யில்? குறிப்பிட்டுள்ள செய்திகளைப் படித் தால் பாரதியிடம் ஏற்பட்டிருந்த மாறு தலை ஒரளவு உணரலாம்.
பாரதியிடமிருந்த உத்வேகம் இவ் வாறு குறைந்த காலத்தில் திரு வி. க. பத் திரிகை வெளியீடு, சமூகசேவை என்பவற் றில் பெரிதும் ஆர்வத்துடன் ஈடுபடத் தொடங்கியிருந்தார். 1918ல் சென்னைத் தொழிலாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட போது அதன் உதவித் தலைவரில் இவர் ஒருவரானர். திரு வி க. இவ்வியக்கத்தில் ஈடுபாடு கொள்வதற்கும், அதைத்தோற்று விப்பதற்கும் காரணமாக இருந்தவை பல. 1908ம் ஆண்டு இங்கிலாந்து தொழிற் கட் சிக் தலைவராகிய ஹார்டியைக் காணும் வாய்ப்புப் பெற்றமையும் இதில் ஒன்று. "எனத நெஞ்சில் முதல் முதல் தொழிலா ளர் இயக்க வி  ைத  ைய விதைத்த வர் கீர்ஹார்டியின் கட்சியும் வரலாறு மாகும்" 3 என அவர் கூறுவர். தொழிலா ளருடன் சேர்ந்து பழகிய சமூக சீர்திருத்த வாதியான திரு. வி. கவை இதனுடன் 1917ல் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியும் அங்கு தொழிலாளர் பெற்ற வெற்றியும் சேர்ந்து 18ம் ஆண்டில் சென்னைத் தொழி லாளர் சங்கம் தோன்ற உதவியிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்விடத்தில் பாரதி யாரும் ருஷ்யப் புரட்சியை வாழ்த் தி வர வேற்றது நினைவுகூரத் தக்கது. சென்னைத் தொழிலாளர் சங்கம் தோன்றி இரு ஆண்டு களின் பின்னரே அகில இந்திய தொழிலா ளர் காங்கிரஸ் நிறுவப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்விருவரும் தேசிய எழுச்சிக்காலத் தில் வாழ்ந்தும் அதனுற் பாதிக்கப்பட்டு மிருந்ததால் நாட்டு விடுதலை, கல்வி, சம யம் பற்றிய அவர்களது கொள்கைகளிலும் ஒற்றுமையைக் காணலாம். இந்தியாவில் காணப்பட்ட சாதி வேறுபாடுகள் பெண் ணடிமைத்தனம், மூடப்பழக்கங்கள், மதச் சண்டைகள் என்பன இடைக் காலத்தில்
2. பார்க்கவும் - பாரதிதமிழ். 3. இந்தியாவும் விடுதலையும் - திரு. வி. க.

Page 37
பாரதியும் திரு. வி. க. வும்
வந்தவை எனத் தேசியவாதிகள் கூறினர். இவை காரணமாகவே இந்தியா அன்னிய ராட்சிக்குள்ளானதென்றும், அதன் புரா தனப் பெருமையை முன்னிறுத்தி, இந்து மதத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுதுவதன் மூலம் இந்தியா உயர்நிலையை அடைய முடி யும் என்றும் அவர்கள் எண்ணினர். அக் காலத்து வரலாற்ருசிரியர்கள் பலரும் இதே உணர்விற்கு உட்பட்டனர். 'உன்ன தமான தத்துவக் கோட்பாடுகளையுடைய இந்து சமயத்தின் உண்மையான மகிமை மிகவும் குறுகலான சமுதாய, சாதித் தடைகள், மூடத்தனமான கொள்கைகள் என்பவற்ருல் ஒளியிழந்தது' 4 எ ன க் கரான்சிங் கூறுவர். இந்திய தேசிய இயக் கத்தின் பலவீனங்களில் இது ஒன்று. பார தியிடத்தும் திரு. வி. க விடத்தும் இதனை ஒருங்கு சேரக் காணலாம்.
*"பூரணஞானம் பொலிந்த நன்னுடு பாரதநாடு பழம் பெருநாடு”
என்றும்
*எல்லோரும் அமரநிலை எய்தும்
நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் - ஆம் இந்தியா உலகிற்களிக்கும்-ஆம், ஆம் இந்தியா உலகிற்களிக்கும்?
என்றும் உறுதியாகப் பாடினன் பாரதி மேலும் "புனர் ஜன்மம்' என்ற தமது கட்டு ரையொன்றில் இந்தியாவின் நாகரிகச் சொத்துக்களை 'ஆர்யஸம்பத்து" எனக் குறிக்கும் பாரதி அதைப் போற்றுவதன் மூலம் இந்தியா புதுமையைப் பெறமுடியும் என்ற கருத்தை வெளியிடுகிருன் . இதே போலவே திரு. வி. கவும் 'இந்தியா பழம் பெரும் நாடு; பல திறக் கலைகளை ஈன்ற நாடு நாகரிகத்தின் எல்லை கண்ட நாடு' என உறுதியாகச் சொல்வர். பின் இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம் சொல்லப் புகுந்த அவர்
'இந்தியாவை வீழ்த்தியது எது? பிரிட் டிஷ்வாளா? அன்று; பின்னை எது? இந் திய வாளே. சாதிமதவெறி, சம்பிர தாயச் சிறுமை, கண்மூடி வழக்கு ஒழுக் கம், தீண்டாமை, பெண்ணடிமை,

க. சித்திரலேகா 19
ஹிந்து முஸ்லீம் வேற்றுமை முதலிய இரும்புத் துண்டங்கள் எஃகாக வெடித் தன. அவ்வாள் - அவ்விந்திய வாள் - இந்தியாவை வீழ்த்தியது' என்பர்.
இவற்றை நீக்கிவிட்டால் மீண்டும் பாரத நாடு விடுதலையும், பெருமையும் பெறும் என்ற கருத்தே திரு. வி. கவின் சொற் பொழிவுகளிலும் எ முத் துக் களி லும் நிறைந்து கிடக்கிறது.
சாதிபேதம், பெண்ணடிமை என்பன தீர்ந்தால் நாட்டுக்கு உய்வுண்டு என இரு வரும் திரும்பத்திரும்பக் கூறினர். ஜாதி நூறு சொல்லும் 'நிகழ்கின்ற ஹிந்துஸ்தா னத்தை வெறுத்த பாரதியார்
'ஈனப்பறையர்களேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திங் இருப்பவரன்ருே' என்பதனுல் சாதிப்பிரிவுகள், அவற்றுக் கிடை உயர்வு தாழ்வு கூடாது என்கிருர் தேசிய ஒற்றுமை என்ற நோக்கிலேயே சாதிப்பிரிவுகள் பற்றிஇவ்வாறன கருத்தை அவர் வெளியிட்டார். திரு.வி.கவும் தமது "பொதுமை வேட்டலிலும் சொற் பொழி வுகளிலும் இதை மிகவும் கடிந்துரைக் கிருர், இந்தியா மீண்டும் நன்னிலையடையச் சில வழிகளைக் கூறவந்த திரு. வி க* பிறப் பால் உயர்வுதாழ்வு பாராட்டல் தொலை தல் வேண்டும். சிறப்பால் உயர்வு தாழ்வு தோன்றல் இயல்பு. தொழின் முறைபற்றி எழுந்த பிரிவு பிறப்பைப் பற்றி எழலா யிற்று அதைக் குலைத்தல் வேண்டும்' என்
f.
இதேபோல பெண் விடுதலை, மத சமர சம், நாட்டின் பொருளாதார விடுதலை, தேசியக் கல்வி, சமுதாய சமத்துவம் என்ப வற்றில் இருவரும் ஒத்த கருத்துடையராய் இருந்தனர். இருவரும் பெண்ணைத் தெய் வத்தின் நிலையில் வைத்துப் போற்றியவர் கள், பெண் கல்வியை ஆதரித்தவர்கள். எனி னும் இங்கு ஒன்று குறிப்பிடத்தக்கது. இந் தியாவில் விதவைகளின் நிலை இரங்கத்தக்க
4. Prophet of Indian Nationalism-KaranSingh
5. இந்தியாவும் விடுதலையும் . முன்னுரை
திரு. வி. க்
.ெ தமிழ்த்தென்றல் ம் சமரசசன்மார்க்க மகாநாடு.

Page 38
20 பாரதியும் திரு வி க. வும்
தாயிருந்தது. விதவா விவாகத்தை வற் புறுத்திப் பல சீர்திருத்தவாதிகள் இயக் கங்கள் ஆரம்பித்தனர். பாரதி விதவா விவாகம் பற்றிய தமது கருத்தை மிகத் தெளிவாகக் கூறுகிருர் . ஒரு தேசியத் தலை வராக அந்நாளிற் கொள்ளப்பட்ட காந்தி பால்யவிதவைகள் மட்டும் விரும்பின் மணம் செய்யலாம் என்று அரைமனதுடன் கூறியதை அவர் கண்டிக்கிருர், "எல்லா விதவைகளும் மறுமணம் செய்துகொள்ள இடம் கொடுப்பதே இந்தியாவில் மாதருக் குச் செய்யப்படும் அநியாயங்கள் எல்லா வற்றிலும் பெரிதான இந்த அநியாயத்திற் குத் தகுந்த மாற்று. மற்றப் பேச்செல்லாம் வீண் கதை" இவ்வாறு மக்கள் கவி அழுத் தமாகக் கூறுகிருர் . திரு. வி. க பெண்ணை ஆணின் மறுபாதியாகவும் தெய்வமாகவும் கொண்டார். ஆணுல் அவரது விதவா விவா கம் பற்றிய கருத்து பாரதியினது போலத் தெளிவாக இருந்தது என்று சொல்வ தற்கு ஆதாரங்கள் இல்லை.
திரு வி. கவும் பாரதியும் எல்லாத் துறையிலும் சுயாட்சி வேண்டுமென்ற கொள்கையைச் சார்ந்தவர்கள். கோகலே போன்ருேரின் மிதவாதத்தை இருவருமே கண்டித்துள்ளனர். ஆரம்பத்தில் ஒரு பலாத்காரவாதி என்று சொல்லப்படுமள விற்குக் காட்சியளித்த பாரதியார் மித வாதத்தைத் தமது எழுத்துக்களில் வேண் டிய மட்டும் கிண்டல் செய்தார்.
'பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ?’
எனக்கேட்டு வீரசுதந்திரம் வேண்டிய பாரதி பைப் போலவே திரு. வி. கவும், காங்கிரஸ் மிதவாத வழி நின்று பதவிகளைச் சம்பாதித்ததேயொழிய சுயராஷ்யம் பெற முடியவில்லையென்றும் அதனுற்பயனில்லை யென்றும் கூறுகிருர் . இவற்றைவிடமேலும் இவர்களிடை காணப்படுவதாக மேற் குறிப்பிட்ட ஒற்றுமையான அம்சங்கள் ஆராயத்தக்கன. அவற்றுள் இவர்கள் இரு வரும் தொழிலாளர் இயக்கத்தை அரசி யல் இயக்கமாகக் கருதவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. 1926ம் ஆண்டு கட்சி

க. சித்திரலேகா
அரசியலில் இருந்து விலகிய திரு. வி. கவும் தமது வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் முன்னிருந்த தீவிரவாதத்தை இழந்து நின்ற பாரதியாரும் இவ்விதம் கருதியதில் வியப் பில்லை.
இவ்வாறு பாரதியாருக்கும் திரு. வி. கவுக்கும் அவர்கள் சார்ந்து நின்ற கொள் கைப் பாதிப்பால் பல ஒற்றுமைகள் காணப் பட்டன. எனினும் அவர்களது சொந்தக் குனதிசயங்கள் காரணமாகவும் ஒருவர் வசனம் மற்றவர் கவிதை என்பவற்றைத் தமது கருவியாகக்கொண்டதனலும் அவர் களது கொள்கைகளுக்கிடையே வேற்று மையும் அவை வெளிப்பட்டவிதத்தில் வெவ்வேறு அழுத்தங்களும் காணப்படுகின் றன. பொதுவாக இரு வரையும் மேவிநிற் கும் தேசியவாதம் என்னும் ஒற்றுமைக்குள் காணப்படும் சிறுசிறு வேறுபாடுகள் இவை. ஆனல் இவையே ஒவ்வொருவரினது தனிப் பட்ட ஆருமைக்குக் காரணமாயுள்ளன.
பாரதி உணர்ச்சிக் கவிஞன். இதன் காரணமாகவும் கவிதை பொது வா க உணர்ச்சி வேகத்தைப் புலப்படுத்த ஏற்ற கருவியாகப் பயன்பட்டுவந்த காரணத்தா லும் நாட்டுப்பற்று, தெய்வம், பெண் விடு தலை என்பவற்றை அவர் பாடியபோது அங்கு தீவிரமும், ஆவேசமும், அழுத்தமும் காணப்படுகின்றன. அவரது வாழ்க்கை யின் பிற்பகுதியில் பாரதி கிட்டத்தட்ட ஒரு அகிம்சை வாதியாகக் காட்சியளித்தா லும் ஆரம்பத்தில் தீவிரவாதியாக இருந் ததை அவர் எழுத்துகள் புலப்படுத்தும். 1907ல் வெளியான 'சிவாஜி தன் சைனி யத்திற்குக் கூறுவது' என்ற நெடும்பாடல் இதற்கு நல்ல சான்ற கும். பாரத தேவியை யும், காளிதேவியையும் ஒன்ரு கவே கண்டு வழிபட்ட பாரதி அத்தே விக்குச் சுதந்திர யாகத்தில் தம் நெஞ்சக் குருதியை நிலத் திடை வடித்து ஆகுதியாக்க விரும்பிய தன் எதிரொலியை அங்கு கேட்கலாம். ஆனல் திரு. வி. கவின் எழுத்துக்களில் ஆரம்பத்தி லிருந்தே ஒரு அமைதியைக் காணமுடிகி றது. காந்தியடிகளின் அகிம் சா வாதத் தால் மிகக் கவரப்பட்ட இவர் எதிரிகளின்
7. பாரதியார் கட்டுரைகள் - இந்தியாவில் விதவை
களின் பரிதாபகரமான நிலைமை.

Page 39
பாரதியும் திரு வி. க. வும்
மீதாவது கடுஞ்சொல் பாவித்தாரில்லை. இந்த இடத்தில் இவ்விருவரது தெய்வ வழி பாட்டில் இருந்த வேறுபாட்டைக் காட்டு வதும் இருவரினதும் பண்புகளை விளங்க உதவி புரியும்.
பாரதியின் இஷ்டதெய்வம் காளி. வீர மும் வெற்றியும் பிரதான பண்புகளாகப் பொருந்திய காளியை ஆவேசத்துடன் ஆராதனை புரித்தார் பாரதியார்.
'நெஞ்சுக்கு நீதியும் தோருக்குவாரும் நிறைந்த சுடர் மணிப்பூண் பஞ்சுக்கு நேர் பலபாவங்களாம்-இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ’
எனப் பராசக்தியைப் புகழ்ந்த பார தியை இந்த வீரைசக்தி கவர்ந்ததற்கு இன் ஞேர் காரணமும் இருந்தது. தேசியவாதத் தலைவர்களின் தெய்வமாகவும் இருந்தவள் பராசக்தி வெற்றியையும், வீரத்தையும் துணிவையும் வேண்டிநின்ற அவ்வேளையில் சக்தி வழிபாட்டை அவர்கள் பின்பற்றிய தில் வியப்பில்லை. திலகர் , அ ர விந் த ர் போன்ருேரெல்லாம் நாட்டில் பவானி பூஜை கொண்டாடப்பட வேண்டுமென்ற னர். தெய்வ வழிபாடும் தேசிய இயக்கத் தின் ஒரு துறையாகவிருந்தது. இத்தொடர் பில் வரலாற்ருசிரியர் தேசாய் கூறுவது மனங்கொள்ளத்தக்கது. 'இந்திய தேசிய இயக்க வரலாற்றைப் பார்க்குக்கும் போது அதில் முனைப்பான ஒரு பொருள் முதல் வாதியையோ கடவுளுண்மை மறுப்புவாதி யையோ ஐயுறவு வாதியையோ காண முடி யாதுள்ளது. ’’ எனவே சமயத்தையும் தேசிய எழுச்சியுடன்இணைத்தபோது அத் தலைவர்களின் இஷ்டதெய்வம் சக்தியாய் இருந்தது. ‘ப வா னி, ப வா தி ரி னி, துர்க்கை எனப்படும் காளி இந்தியாவை அடிமைத்தனத்திலிருந்து தேவையானல் பலாத்காரத்தையும் பாவித்து விடுவிக்க முன்னின்ற இந்துத் தலைவர்களின் இஷ்ட தெய்வமாய் இருந்தாள்'.
ஆனல் திரு. வி. க பாரதி போலச் சக்தி வழிபாட்டில் ஈடுபாடு கொள்ள வில்லை. சமரசசன் மார்க்கத்தையும் அகிம் சையையும் போற்றிய இவர் முருகனின் அழகுத் தன்மையையே அதிகம் வழிபட்

க. சித்திரலேகா 21
டார். அமைதியும் அறமும் இவரது தெய் வங்கள். வள்ளலார், தாயுமானவர் என் போரின் சமரசத் தெ ய் வ வழி பா டு போலவே இவரது வழிபாடும் அமைந்தது. கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளையும் தாகூ ரும் இதே தன்மையைக் கொண்டிருந்ததும் கவனிக்கத்தக்கது. எல்லாத் தன்மைகளும் ஒன்றுசேர்ந்த பரம்பொருளை சமூகச் சீர் திருத்தவாதியான திரு. வி. க தனது தெய் வமாகக் கொண்டார். பாரதியோ மத சம ரசத்தைக் தத்துவமாகக் கொண்டிருப்பி னும் நடைமுறையில் சாக்தராகவேயிருந் தார். இராமரைத் தெய்வமாகக் கொண்டு அகிம்சை வழியைப் பின்பற்றிய காந்தியின் செல்வாக்கு திரு. வி கவிலும், திலகரின் செல்வாக்கு பாரதியிலும் அதிகமாய் இருந் தமையும் இவ்வேறுபாட்டுக்கு ஒரு காரண மாகலாம்.
*" கவிதை மூலமாக ப் பாரதியார் தமிழ் நாட்டுக்கும் செய்த அரும்பணி யைத் திரு. வி. க தமிழ் வசனநடை மூல மாகச் செய்தார்" எனக் கல்கி கூறுவர். இவ்வாறு பொதுவாக மதிப்பிடப்படும் இவரது தமிழ்த்தொண்டு ஆராயத்தக்கது. பாரதி கவிதையுலகில் ஏற்படுத்திய புது மை பற்றிக் கேள்விக்கு இடமில்லை. ஆனல் திரு. வி. கவின் வசனநடை அந்த அளவு தமிழில் இடம் பிடிக்கவில்லையெனலாம். கூடியவரை அவர் பிறமொழிச் சொற்க ளைத் தவிர்த்தார், பாரதி இதிலிருந்து பார தூரமாக வேறுபட்டிருக்கிறார். பாரதியின் கட்டுரைகள் பெரும்பாலானவற்றில் வட மொழிச் சொற்கள் தாராளமாகக் கலந் திருக்கும். வசனம் நீளமாய் இருக்கும். திரு.விகவின் வசனம் சிறியது. ஆனல் இள மைப்பராயத்தில் நா. கதிரைவேற்பிள்ளை யிடம் படித்த பாதிப்பினல் அவரது நடை பண்டிதத்தன்மை பெற்றிருந்தது. திரு. வி. கவின் தமிழ் நடை அவருடைய தனித்துவ முத்திரை பெற்றது. ஓரளவுக்குப் பண்டித நடை என்றுதான் நான் சொல்லுவேன். ஆஞல் அதிலே தெளிவிருக்கும், ஒரு தனி யான வேகமிருக்கும். வார்த்தை இருக்கிற எண்ணிக்கைக்கு விஷயம் குறைவாகவே இருக்கும். ஆனல் டாக்டர் சாமிநாதய்ய
8. Prophet of Indian Nationalism-Karan Singh

Page 40
22 பாரதியும் திரு வி. க. வும்
சின் அருவி ஓட்டத்தையும், சுப்பிரமணிய பாரதியாரின் வேகத்தையும் கலந்த நடை எனச் சொல்லலாம். அவர் எழுத்து அதிக நாள் நிலை க் கா து என்றே எனக்குத் தோன்றுகிறது?'. இக் கூற்று திரு.வி. கவின் எழுத்துக்களையும், நடையை யும் பொறுத்த வரை ஒரு நேரிய கூற்று எனலாம்.
எனினும் தமிழ்ப் பத்திரிகையுலகைப் பொறுத்தவரை தமிழைப் பிழையின்றிப் பாவிக்கும் நிலைக்கா காத் தீவிரமாக திரு. வி. க - உழைத்ததை மறுக்க முடியாது. தாய்மொழிப்பற்றுக் கொண்டிருந்த அவர் 1918ல் சென்னை மகாணச் சங்கத்தின் சார் பில் நடந்த மகாநாட்டில் தாய்மொழி யிலேயே பேச வேண்டும் என்ற கொள்கை யை முன்வைத்தார். அதுமுதல் தமிழ் நாட் டுக் காங்கிரஸ் நடவடிக்கை தமிழிலேயே நடைபெற்றது. தேசபக்தன், நவசக்தி இதழ்களுக்கு ஆசிரியராய் இருந்தபோது தமிழ்ப் பத்திரிகையுலகிற் சேவை செய்ய
கனியிடை ஏறிய சுளேயும் கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும் பாகிடை ஏறிய ருசியும் நனிபசு பொழியும் பாலும் நல்கிய குளிரின நீரும் இனியன என்பேன் எனினு என்னுயிர் என்பேன் கண்

க. சித்திரலேகா
முடிந்தது. அரசியல், சமூக விஷயங்கள் என்பவற்றில் தமிழ் சரளமாகப் பாவிக்கும் கிளையை ஆக்கியவர்களில் இவர் முன்னிற் கிறர். அவரைத் தொடர்ந்தே கல்கி போன் றேரின் பத்திரிகை மு ய ம் சி க ள்
அமைந்தன எனலாம்.
70 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த திரு. வி. கவின் ஆக்கங்கள் பல துறைகளிலும் வெளி வந்தன. தொகையில் அதிகமாய் இருந் தன. நாற்பத்தொரு வயதில் அற்பாயு ளில் மறைந்துபோன பாரதி க்கு அதிக அள வில் எழுதும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனினும் த மிழ் இலக்கியத்திற்கு மறு மலர்ச்சி அளித்த அவரது கவிதைகளா லும், தேசியக்கவி என்ற நிலையாலும் அவர் உயர்ந்து நிற்கிருர் . இத் தொடர்பின் இன்னும் ஆராய்வது இருவர் பற்றிய புதிய
உண்மைகளை வெளிக்கொணரும்.
9. பாரதிக்குப்பின் க. கா.சு. - எழுத்து ஏப்ரல்
1959.
unwau முற்றல்
hubunuh as/ruyğ*Əfz 7
- தென்சீன
/l தமிழை
و و ۶/
- பாரதிதாசன்

Page 41
u III è25oIII
“மஸ்கே
அஸ்பெஸ்டாஸ் சிமிக்தி தகடு "Atmospheric" முறைப்படி கெளிவ னைட்’ அஸ்பெஸ்டாஸ் சிமிங் ஆகச் சிறந்த தற்கால நவீன தயாரிக்கட்
கீழ்க் கொடுக்கப்பட்ட
6, 7, 8, 9, ()
இவைகளும் கிடைக்கும்:
அரை கெளிவுத் தட்டைத் தகடுக மழைத் தண்ணி
முதலி
அஸ்பெஸ்டாஸ் jf
gif
கொழும்பு

மார்க்
TI 260IT.”
கள் “காற்று மண்டல வீச்சு” பு செய்யப்படுகிறது. “மஸ்கோ தி கூரைத் தகடுகள் உலகில்
முறையிலான இயந்திரத்தில் ப்படுகிறது.
நீளங்களில் கிடைக்கும்
ஆகிய அடிகளில்
தகடுகள்
கள்
ர் சாமான்கள்
| 55 ) GÖI L, ai) L. f6)
GL,
ரத்மலானை.

Page 42
SPACE D
b
Ceylon

ONATED
у
Printers

Page 43
ஐயா! காவுக் கரச(
மெய்யா கவேவேட் மீண்டும் Dmt Gof ஐய! ஈழம் வந்திங் ஆண்டவன் ே உய்ய வழிகாட் டி உரிமை யோடு பூட்டிய கதவங் தி புதுமை செய்த
நாவுக்கரசரே!ஏட்டினிலேகான்
மீட்டு மொருமுறை மேன்மே லும்ட பாட்டாற் திறந்த நாட்டிட லாே கோயிற் குருக்கள்
வாயிற் கதவு பூட் வழியில் நிற்ப தாயின் வயிற்றுப் தடுத்தல் வைத் காயி னிழிந்தோ ர கடத்தி வைக்க ஆவு ரித்துத் தின் அவர்பு 2லய ர பாவு ரைததிர் கட( படித்தோ மின் காவு ரைப்ப தொன் ாகம் மோர் செய ாகாவுக் கரசாம் நீவ நன்றே கதவர்
பாவாற் கதவு திற படியில் நிற்கு ஆவு ரிப்பார் கடலி அடடா! அந்த போபோ வென்றே பூட்டிவிட்டால் ஆவ தென்ன என ஐயா! வராமல்

ரே! கு விண்ணப்பம்; - கின்றேன்
ட வடிவுகொண்டு கே கோயிற் தாழ்திறங்து டவேண்டும்
கேட்கின்றேன். றங்தேநீ தனே பாட்டாலே; படித்ததுண்டு னற்புதமே!; வங்தாலோ பல கபாடங்கள்
பாரிற்புகழ் ம? வந்திடுக!
உள்ளோகாம் ல விடுவாரோ? டிங்டு ர் கடவுளென; ஒர்
GňTèGMT 35 Gir M5Tb. தல் இது முறையோ?
566) 5 இவர் யாரோ?
ருலென்ன ாாணுலென்ன வுளென; ாறும் படிக்கின்ருேம். 97 (ოფ35 ல்வே ருென் ருகும்; 6)IT(6)IDLIIT ந்தால் -—
திறக்காதோ? ]ங்தாலும் ம் உயர்(குருக்கள் புளென்றிர்
ஆத்திரத்தில் உ2னத்தள்ளிப் பின்னிங்கே வெண்ணி
நிற்காதீர்.
- கருணை யோகன் -

Page 44
IITILI
ஈழத்துக்
கவிஞர்கள்
வாக்குப் பரவாத கவிஞர்களே இல்லை என்று கூறிவிடுமளவிற்குப் பாரதி தமிழ்க் கவிதையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்று விளங்குகி முன். அவன் புரட்சிக்கவி, புதுமைக் கவி, தேசிய கவி, மகாகவி, மக்கள் கவி, விடுத லைக்கவி என்றெல்லாம் போற்றப்படுகி முன். அவனது படைப்புக்கள் கவிதைக ளின் திருப்புமுனையாக அமைந்தன என லாம். இக்காலக் கவிதை பற்றிப் பேசு வோர் பாரதியுடன் தொடங்குவது தவிர்க் கவியலாததாகிவிட்டது. அவன் தனது கவி தைகளால் நவயுகத்தை வரவேற்றுக் கூவி யழைத்தவன். முதலாவதாக அவனது கவி தைகள் சமூக மக்களிடம் ஊறியுள்ளன. இரண்டாவதாக அவை கவிஞர்கள், எழுத் தாளர்களிடத்துப் பிரதிபலித்துள. இருப தாம் நூற்ருண்டுக் கவிதையுலகிற்குப் பார தியின் படைப்புக்கள் ஆதர்ஷமாக இருந் தனவென்ருல் மிகையாகாது. எனவே, இருபதாம் நூற்ருண்டைப் ‘பாரதியுகம்" எனப் பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
இ நூற்ருண்டில் பாரதியின் செல்
பாரதி கவிதாவானிலே உயரப் பறந்த வன். அவனைப் ‘புதுநெறிகாட்டிய புலவன்’ எனப் பாரதிதாசன் கூறுகிருர். அவன் காட்டிய புது நெறியைக் கவிதை நோக்கு, எளிமை, பழமைக்குப் புது மெருகூட்டிய விதம் போன்ற அம்சங்களில் காணலாம். பாரதி மற்றையோரிலும் சிறப்புப்பெற முக்கிய காரணம் அவனது கவிதா நோக் கேயாகும். பழங்கதைகள் சொல்வதி லோர் மகிமையில்லையென்று பழமைக்குச் சவுக்கடி கொடுத்தான்.

*சொல் வழக்கில் மட்டுமன்றிச் சொற்பொருளி லும் ஆழம் பார்த்தவன் அவன் என்பதை நினைத் துப் பார்த்தல் வேண்டும். கவமான தத்து வத்தையெல்லாம் சொல்லில் வடித்தவன் அவன். எனவே, இசைப் பண்பினை அளவுடன் நிறுத் திக் கொண்டு பொருள் வளமும் சேர்த்தான்.
அந்த வகையில் முன்னுேரை மிஞ்சினன். முதலும் முடிவுமானுன், தான் கையாண்ட யாப்பிலும் உருவ அமைதியிலும் இவ்வாறு காலத்துக்கேற் பப் புதுமை செய்யத் தூண்டுகோலாய் இருக் தது பாரதியின் கவிதாநோக்கு என்றே கூற வேண்டும்??
என்று ஒப்பியல் இலக்கியம் எனும் நூலில் அதனுசிரியர் கூறுகின்றர். பாரதியின் சமூ கப்பற்று, தேசிய உணர்ச்சி, தமிழுணர்ச்சி போன்றன அவனது உயர்வுக்கு ஊக்கம் தந்தன, பாரதியின் கவிதா நோக்கை அவ னது சமகாலப் புலவர் சிலருடன் ஒப்பிட் டால் விளங்கும். பாரதியின் தமிழுணர்வு, யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போலினிதாவதெங்குங் காணுேம் என்று நின்றதே தவிரக் 'கல் தோன்றி,மண் தோன் ருக் காலத்து முன்னின்ற மூத்த தமிழ்" என்று முனைப்பாகப் பாடவில்லை. சிந்து நதி முதல் சிங்களத் தீவு வரை அவன் பார்வை பரந்திருந்தது. புலவர் சுந்தரம்பிள்ளை ‘ஹார்விபுரம்" எனத் தன் வீட்டுத் தோட் டத்திற்குப் பேயரிட்டதுடன், மனேன்ம னியத்தையும் ஹார்வி துரைக்குச் சமர்ப் பித்து ஆங்கில மோகம் கொண்டிருந்த போது, பாரதி 'அந்நியர் வந்து புகல் என்ன நீதி?" என்று கேட்டான். மறை மலையடிகள் தனித் தமிழியக்கத் தலைவ ராக இரு ந் த ரா லும், ஆங் கி ல மே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என் றும், ஆங்கிலேயருக் கெதிராகக் கிளர்ச்சி செய்தல் தகாது என்றும், வடநாட்டாரும் தமிழ்நாட்டாரும் சேர்ந்து தமது நாட்டை அரசு புரிதல் கனவிலும் கைகூடாது என் றும் தம்பட்டமடித்தமைக்கு எதிரொலியா கப் பாரதி ‘நமது தேசம், நமது விடுதலை" என்றும் இயன்றவரை தமிழிலேயே பேசு வேன்; தமிழிலேயே எழுதுவேன்" என்றும் உரக்கக் கூவினுள். துரைத்தனத்திற்கும் சாதியமைப்புக்கும் சாவுமனியாக அவனது கவிதைகள் விளங்கின. பூணுரலைக் கழற்றி
பார்வதி

Page 45
பாரதியுகத்தில்.
எறிந்துவிட்டு "பார்ப்பான ஐயனென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கி யைத் துரை என்ற காலமும் போச்சே' என்று முழங்கினன். பாரதியுடன் கவிதை களில் தற்புதுமைத்தன்மை காணப்படு கின்றது. புதியதோர் உலகம் காணத் துடித்த பாரதியின் வேணவாவே, சமுதா யத்தை ஆழ நோக்கும்படி செய்தது என் பதை எம்மனேர் க்குக் காட்டுகின்றது.
‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்"
என்று மாபெரும் சமுதாய நோக்கு உடையவளுகக் காணப்பட்டான். அதனற் ருன் அவன் பின் வந்த கவிஞர்களுக்கு ஆதர்ஷமான வஞயும், பொதுமக்கள் நெஞ் சில் அழியாத இடத்தைப் பெற்றவஞயும் காணப்படுகிறன்.
பாரதி எளிமையான நடையினைக் கையாள்வதில் வல்லவன். கவிதா நோக்குச் சிறந்ததாக இருந்தால்மட்டும் போதாது. கவிதையில் எளிமையும் காணப்படல் வேண்டும். அப்போதுதான் கவிதை தன்னி றைவுறும். பழந்தமிழ்க் காலந் தொட்டு இன்று வரையுள்ள சிறந்த இலக்கியங்களை எடுத்துப் பார்ப்போமாயின் அவையெல் லாம் காலத்துக்கேற்ற நடையாகவுள்ளன வெனலாம். எனினும், இதற்கு விதிவிலக் காகக் காலத்துக்கேற்ற கோலங்கொள் ளாத கவிகளும் இல்லாமலில்லை. பாரதி யின் நடை காலத்தோடொட்டியதே.
**எளிய பதங்கள், எளிய கடை, எளிதில் அறிக்கு கொள்ளக்கூடிய சக்தம், பொது ஜனங் கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவிய மொன்று தற்காலத்திலே செய்து தரு வோன் கமது தாய் மொழிக்கும் புதிய உயிர் தரு வோணுகிருன். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்க முள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் கன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத் துக்குள்ள கயங்கள் குறைவுபடாமலும் எழுதல் வேண்டும்’
என்று பாரதி பாஞ்சாலி சபதம் முகவுரை யிற் கூறியுள்ளான்.

/ார்வதி 27
பாரதி பழமைக்கும் புதுமைக்கும் உள்ள தொடர்பை நன்கு உணர்ந்திருந் தான். மக்கள் இலக்கியமே நீடித்து வாழக் கூடியதுடன் பயனுய்விக்கக் கூடியது எனப் பாரதி எண்ணினன் . "பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு" என்று அவன் கூறியதற் கமையப் 18ம் நூற்ருண்டு தொட்டு மக்கள் மத்தியில் பிரசித்தமாயிருந்த பள்ளு, சிந்து, கீர்த்தனை, கும்மி முதலிய இசைப்பாடல் களையே கூடுதலாகக் கையாண்டான் மக்க ளுறவே அவனது கவிதைகளின் பரிணமிப்
புக்குக் காரணமாயிருந்தது.
*ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ
மென்று என்ற அடி அவனது எளிமையைத் துலங்க வைக்கின்றது.
பாரதி பழமைக்கும் புதுமைக்கும் பால மாக அமைந்தவன் எனச்சிலர் கூறுவர். பழமைக்கும் புதுமெருகு ஊட்டியவன் அவன். சிந்துக்குத் தந்தையாக விளங்கிய வன். பொருளுக்கேற்ற வகையில் வெவ் வேறு சிந்துகளை அமைத்துக் கவி பாடிய வன். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா, கந்தரலங்காரம், திவ்வியப் பிரபந்தம் முதலியனவற்றை முன்மாதிரி யாகக் கொண்டு, அவற்றின் பொருளைக் காலத்துக்கேற்ற விதத்தில் மாற்றி, உரு வத்தில் ஒருமைப்பாடு கண்டான். மாணிக் கவாசகர் திருப்பெருந்துறையில் வைகறை யில் இறைவனைப் பள்ளியெழுப்புவதாகப் பாடிய "திருப்பள்ளியெழுச்சி'யைப் பாரதி தேசியத்தைத் தெய்வமாக்கி அன்னை சக்தி யின் மேல் "பாரதி மாதா திருப்பள்ளி யெழுச்சியாகப் பாடினன். நாடோடிப் பாடல்களிலும் பக்திப் பாடல்களிலும் 'நெஞ்சைப் பறி கொடுத்த" பாரதி தேசியத்தைப் பாட நாடோ டிப் பாடல்க ளையும் பக்திப் பாடல்களையும் கருவியாகக் கொண்டான். தனது சுதந்திர தாகத்துக் குப் பொது மக்கள் விரும்பும் மெட்டே ஏற்றதாகக் கொண்டு பிச்சைக்காரியின் பாடலையும் தனதாக்கியவன் பாரதி.
சுதந்திரவேட்கையில் பாரதி தென்ன கத்தே கவிதைக் குண்டுவீசிய காலத்தில் அது

Page 46
28 பாரதியுகத்தில்..
ஈழத்திலே கருத்தற்ற ஒன்ருக விருத்தது. அப்போது ஈழத் தமிழர் தென்னிந்தியாவு டன் மானசீக உறவு கொண்டிருந்தனர். தென்னகமே தமது தாயகம் என ஈழத்தமி ழர்கள் நம்பியதால் அவர்கள் ஈழத் தமிழர் களாக வாழமுடியவில்லை. தாம் ஈழத்தில் சிறுபான்மையினர் தமக்கும் ஈழத்தில் உரி மையுண்டு என்ற தேசீய உணர்ச்சி உருவா கிய பின்னரே ஈழத்தில் பாரதியின் கவிதை களுக்கு வேகம் பிறந்தது. தமிழ்க் கவிதை களுக்குப் பாரதியிலிருந்து தொடங்குவது மரபுபோல, ஈழத்தமிழ்க் கவிதைகளுக்குச் சோமசுந்தரப் புலவரிலிருந்து தொடங்கு வதை மரபாகக் கொண்டுள்ளனர் சிலர் . ஈழத்தில் அண்மைக்காலக் கவிஞர் பலரி டம் உள்ளது போன்ற தற்புதுமைப் பண்பு சோமசுந்தரப் புலவர் கவிதைகளில் இல்லை யென்றே கூறலாம், அவர் பழந்தமிழ் மர புக் கமையப் பாடல் யாத்தாலும், அவரது * கத்தரித் தோட்டத்து வெருளி’ போன்ற பாடல்கள் அவர் பழைய மரபுக்கு முற்ரு கக் கட்டுப்படவில்லை என்பதைக் காட்டு கின்றன. அவரது சுய உணர்வு காரணமாக அவரது கவிதைகளில் ஈழமணம் கமழ்கின் AD.
பாரதி சகாப்தத்தில் வாழும் ஈழக் கவி ஞர்கள் எல்லோரும் பாரதியைப் பின்பற் றுபவர்களல்லர். பாரதியின் சமுதாய நோக்கு மிகவும் ஆழமானது. அவரது ஆழ்ந்த சமுதாய நோக்கு ஈழத்துக் கவிஞர் களிடம் பிரதிபலிக்காமலில்லை. 1956க்குப் பின்னர் தேசீய இலக்கியங்கள் முளைவிட்டு 1966 உடன் உண்மையான தேசிய இலக்கி யங்களாகப் பாரதியின் பாதையிற் சென் றன . உழைக்கும் மக்களைப் பொருளாகக் கொண்டு பாரதி பாட்டுச் செய்தான். அது ஈழத்திலும் பசுபதி சுபத்திரன் போன்ற கவிஞர்களின் கவிதைகளுக்குப் பொருளா யிற்று. பாரதியைவிட, பசுபதி சுபத்திரன் போன்ருேரின் கவிதைகளில் தேசீயம் கூடு தலாக ஊடுருவி நிற்கின்ற தெனலாம். பாரதியின் நோக்குப் பிற பொருட்களிலும் நாடாமலில்லை.சமயத்துறையினின்று அவன் நீங்கியவனல்ல. எனினும் அவனிடம் ஆக்க நோக்கமே கூட. பாரதி சமயத்துறையில் கட்டறுக்கப்பட்டவணுக இருந்திருந்தால் அவனுல் மனித ஜாதிக்குக் கூடிய நன்மை

பார்வதி
விளைந்திருக்கக் கூடும். எனினும் அவன் தீர்க்கதரிசிதான் பசுபதியை யதார்த்த வாதி என்றே கூறலாம். பசுபதியின் எந்த ஒரு கவிதையிலும் சமூக நோக்கற்ற பொருள் புதைந்தில்ல. பழகு தமிழிலே தத்துவங்களைக் காட்டிய கவிஞன் பசுபதி. இலக்கியத்தின் உள்ளடக்கமே உருவத்தை நிச்சயிக்கும் என்ற கருத்துக்குப் பாரதி யைப் போலக் கவிஞர் பசுபதியும் சான்ரு 6) (T T .
*காட்டில் ஒரு புதிய ஆதர்சம் - ஓர் கிளர்ச்சி - ஓர் தர்மம் - ஒர் மார்க்கம் - தோன்றுமேயாளுல் மேன்மக்களின் கெஞ்சமனைத்தும், இரவியை கோக்கித் திரும்பும் சூரியகாந்த மலர்போல, அவ் வாதர்சத்தை கோக்கித் திரும்புகின்றன.' என்று "ஜன்மபூமியின் முகவுரையிற் பாரதி கூறுவதற்கொப்ப பசுபதியின் நெஞ்சமும் தேசத்துச் சிறந்த மார்க்கத்து டன் ஒன்றிவிட்டது. தீண்டாமையொழிப்பு விவசாய, தொழிலாளர் இயக்கங்கள் உரு வாகி அவை கவிஞர்களின் ஆழ்ந்த நோக் கைப் பிரதிபலிக்கச் செய்தன. இவ்விடத் தில் நெடும் பகல் என்ற கவிதைத் தொகுப் பின் முகவுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு கருத்து நாம் மனங் கொள்ளத் தக்கது.
* காகிதத்தில் எழுதியோ அச்சடித்தோ மன திற்குள் ஒருவர் முணுமுணுப்பதல்ல கவிதை. டாடப்பட வேண்டும்; அதுதான் பாட்டு, பாட் டென்ருல் இசை தழுவியுமிருக்கலாம், தழுவா மலுமிருக்கலாம்; ஆனுல் ஓசை கயமிருக்கும். சாதாரண மனிதர் உரைகடையைக் கருவியாகக் கொண்டு தமது கருத்துக்களையும் உணர்வுகளை யும் புலப்படுத்துவது போலக் கவிஞன் செய்யு 2ளத் துணைக் கொண்டு பிறருடன் உரையாடுகி ரூன். உயர்கவிகளுக்கு ஓர் இலக்கணம் அது. பாரதியார் செய்த அதி முக்கியமான புதுமை களிலொன்று கவிதைமூலம் தனது சமூக மக்க ளுடன் உறவாடியதே.'
இக்கூற்று கவிஞர் பசுபதிக்கும் பொருந் தக் கூடிய தொன்றே.
'காணுகின்ற புதுவுலகம் கற்ப னைக்கேயெட்டாக்
கதையல்ல, கடலல்ல, கன்னியுந் தானல்ல! பேணுகின்ற பொருளெல்லாம் தனி யுடமையாகா; பொதுவுடமை; பொது மக்கள் பொதுச்சொத்தாகும்!”

Page 47
பாரதியுகத்தில்.
இதுபோன்ற கவிதைகளேப் பசுபதியின் புது வுலகப் படைப்பிற் காணமுடியும். பாரதி காண விளைந்த புது உலகத்தை விடப் பசு பதியின் புதுவுலகம் மேலானது. எளிமை யைப் பாவித்துக் கவிதையை மிடுக்காக்கும் கவிஞர்களை விட இவ்வெளிமையாற்றலை யும் கவிதையின் ஓர் அம்சமாக்கி முழுமை யான கவிதைகளைப் படைக்கும் கவிஞர்கள் உலகில் இன்று பெருகி வருகின்றர்கள். இத் தகையவர்களில் பசுபதியும் சுபத்திரனும் இன்று முன்னிற்பவர்கள்.
'நாறும் பிணத்திலும் சாதியோ? - இந்த
நானிலத்தில் இது நீதியோ?
நாறும் பிணமுனக்கேனடா? - பிண
நாற்ற முன் கொள்கையில் மேலடா."
என்ற சுபத்திரனது கவிதை பாரதியின் முரசுக் கவிதைகளுடன் ஒத்திருப்பதைக் காண்போம். மக்களின் மன எழுச்சிகள் இவ்விரு கவிஞர்களுக்கு ஊற்றுக்களாக விருக்கின்றன.
'கவயுகத்தை காவலிக்கக் கூவிய பாரதி சகாப்தத்திலும் நிலாவையும், வானத்து மீனை யும், காற்றையும், கேரிழையார் காதலேயும், 'குலாவும் அமுதக் குழம்பையும்' (காணுத விடத்தும்) மீண்டும் மீண்டும் பாடிக் காலங் கழித்துக் கொண்டிருக்கும் கவிஞர்கள் மத்தி யிலே இதற்கு விதிவிலக்காகக் காதலிலும் கையறு நி%லயிலுக்தான் கவிதை தோன்றும் என்ற எண்ணத்தை இலக்கியக் கோட்பாடாக வரிக்காது - முற்காலக் கவிஞர் பாடாத அறிவி யற் சாதனங்களைத் தனது கவிப் பொருளாகக் கொண்டாடுகிருர் கவிஞர் சிவானந்தன்'
என்று கண் டய நி யா த து கவிதைத் தொகுப்பின் முகவுரையிற் கூறப்பட்டிருப் பது போலவே விஞ்ஞானம் புரியாத புதிர் என்று பலரால் கற்பிக்கப்பட்டு வந்த சமூ கத்தில், ஒரிரண்டாண்டு கற்றவர்க்கும் விஞ்ஞானத்தை விளங்க வைக்கும் வகை யில் கவிதையில் வடிக்கிருர் சிவானந்தன். பழங்காலத்தில் மருத்துவ வாகடங்கள், நிகண்டு முதலியனவற்றில் செய்யுட்களில் அமைக்கப்பட்டிருந்தன. அதை அடியொற்றி ஆளுல் நவீனமுறையில் மிக எளிமையாகப் பாரதி கூறிய "சாத்திரம் கற்போம்" என் பதற்கமைய எமக்களித்த கவிஞர் சமுதா யத்தையும் தவிர்க்கவியலாதவாறு ஆங் காங்கே அவ்வப்போது உற்று நோக்குகி

பார்வதி 29
ருர், மெஞ்ஞானமான விஞ்ஞானத்தைக் கவிதையாக்கும் முதல் முயற்சி சிவானந் தனதாகும். சமுதாய நோக்கும், எளிமை யும், விஞ்ஞானமும், பின்னிப்பிணைந்து கட் டறுக்கவியலாத தற்புதுமையுடன் சிவா னந்தனின் கவிதைகளில் காணப்படுகின் றன.
* கொடியபல்லின்னலூடே மின்னலின் இந்த நன்மை தொழிலாளரைப் பிழிந்தெடுக்கும் ஒரு பெருந்தனத்திலேயே ஒரு துளி தானம் செய்யும் ஒரு முத லாளி போலும்' எனவும் 'காணி சொந்தமாக் காட்டால் மீட்சி uნმGüაზalა களைப்புடனே உழைப்போரின் ஆட்சி யில்லை’ எனவும்
வரும் கவிதைகளில் கவிஞரின் சமுதாய விஞ்ஞானப் பிணைப்பைக் காணலாம்.
ஈழத்துக் கவிஞர்களின் கணிசமான ளவு கவிதைகள் எளிமையானவையே. எளி
மையான கவிதைகள் பலவற்றில் பொரு ளாளமில்லே.
*புலவர் அந்தக் காலத்து ஜனங்களுக்குத் தெளி வாகத் தெரியக் கூடிய பதங்களையே வழங்க வேண்டும். அருமையான உள்ளக் காட்சிகளே எளிமை கொண்ட கடையில் எழுதுவது கல்ல கவிதை'
எனப் பாரதி கூறியது போலக் கவிதை களில் எளிமையுடன் கருத்தாழம் அமை தல் இன்றியமையாதது. இந்த வகையில் குழந்தை இலக்கியங்களையும் பிற இலக்கி யங்களையும் படைத்த கவிஞர்களில் யாழ்ப் பாணன், வேந்தனர், அம்பி, யோகநாதன், மெளனகுரு என்போர் குறிப்பிடத்தக்க வர்கள். இவர்களில் யாழ்ப்பாணனும் வேந் தஞரும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய வர்கள். யாழ்ப்பாணனின் கவிதைக்கன்னி எளிமை, இனிமை, கருத்து ஆழம் என்ற மூன்றும் சேர்ந்திருப்பதால் சிறப்புறுகின் றது. ஏனைய கவிஞர்கள் இவற்றில் ஒன் றையோ, அல்லது இரண்டையோ கையாள் கிருர்கள். யாழ்ப்பாணனது முக்கூட்டுச் சிறப்புத் தன்மையைக் காட்ட வயோதிபன் ஒன்றே போதுமானது, வயோதிபனை அப் படியே படம் பிடித்து விடுகிருர் கவிஞர்.

Page 48
30 பாரதியுகத்தில்.
“நடையினில் தளர்வு காணும்
நடுங்கிய உடலங் கானும் இடையினில் கந்தை கானும் இவனிலை எடுத்துக் கூறும் படியினில் வறுமை கானும்
பதர்கள் போலிரத்த லின்றித் திடமுள தொழிலைப் பேணிச்
சீரிய வாழ்வுங் கொள்ளும்??
'ஓடிவிளையாடு பாப்பா" என்று பாரதி பாடியது போல வேந்தனரும் குழந்தைக ளுக்கென அழகான கவிதைப் பூம்பொழில் ஒன்று புனைந்து தந்துள்ளார். மிக எளிய
தடை ,
கரும்பு தின்போம் கரும்பு தின்போம்
கரும்பு தின்போம் நாங்கள்
கடித்துக் கடித்து இனிக்க இனிக்கக்
கரும்பு தின்போம் நாங்கள்'
என்ற பாடல் நமக்கு இனிக்கிறது.
பழமைக்கும் புது மெரு கூட்டும் வகையில் ஈழத்தில் பாரதியை அடியொற்றி வாழும் கவிஞர்களில் முருகையன் முன்ன னியில் நிற்பவராவர். பாரதி தேவார, திருவாசக, கந்த லரங்கா ரப் பனுவல்களுக் குப் புதுமெருகூட்டிப், புதுப்பொருள் கொடுத்து உ ரு வ ஒருமைப் பாட்டில் அமைதி கண்டது போலவே முருகையனும் கண்டார். அவரது நெடும்பகல் என்ற கவி தைத் தொகுதியே இதற்குத் தக்க எடுத் துக் காட்டாகும். தேவர் புராணம் கூறும் வகையில் முருகையன் மனித புராணம் கூறு வதை அதிற் காணலாம். "பொசுங்கிச் சாம்பி "நீதிநெறிசாசு", "சகலரும் நடுங்க" என முடிக்கும் கவிதைகள் கற்தபுராண தேவாசுர யுத்தக் காட்சிகளை நினைவூட்டு கின்றன.
இன்னவாகிய பொழுது சென்றகன்ற தும், இருளே மன்னலாயிற்று மண்ணினை முடிற் றுப் பணியே மென்னி போயிற்றுப் போயிற்றென் றவர்களும் விதிர்கத் தன்னதாட்சியைத் தொடங்கிற்றுச்
சகலரும் நடுங்க."

பார்வதி
என்ற கவிதையில் உலகின் இருண்மையை விளக்குகிருர் கவிஞர். கவிஞர் நுஃமானும் முருகையனைப் போன்று புராணங்களுக்குப் புதுப் பொருள் கொடுத்துப் புதுநிறைவு காண்பவர். அண்மையில் வெளி வந்த நான் காவது கவிஞன் தொகுப்பில் நுஃமான் எழுதிய ‘அதிமனிதனின்’ புராணத்தைக் காணலாம்.
*உலகைக் கையின் ஒரு பிடிக்குள்ளே அடக்கிக் கொண்டு அதற்கப்பாலே விண்வெளி கடந்து வெளியிலே
G6 கோளங்களிலே வாழ முனையும் பாதிமனிதனின் மற்றையப் பாதி வீதி தோறும் அலைந்து திரிந்தான் ஆலையக்கதவுகள் அவன் நுழையாது மூடிக்கிடந்தனஇளைத்த பாதியின் இதயத்துள்ளே உயிர் வாழ்வதற்கோர் வேட்கை
உதித்ததால் பூமியில் அவன் ஒரு போரிலே
குதித்தான்'
என வரும் அதிமனித புராண மூலம் கவி ஞர் சமுதாயத்தை ஆழ நோக்கி அதற் கான விடி வைக் காணும் வகையை, மிக
இலகுவாகக் காட்டுகிருர் .
அண்மையில் வெளிவந்த மலையகக் கவி தைத் தொகுப்பான போராட்டத்தீயும் இவ் வகையைச் சார்ந்ததே.
'சிக்துகள் தெருவில் ஊசிகளும், பாசிமணிக களும் விற்பதோடு, பிச்சை எடுக்கவும் செய் கின்ற பெண்கள் மாயக்காரனம்மா - கிருஷ ணன்-மகுடிக்காரனம்மா’ என்று பாடும் நடை."
எனக் கூறிப் பாரதி புதுப் புது வடிவங்க ளைக் கையாண்டதுபோலவே ம லை ய கத் தொழிலாளரும் புதுப் புது வடிவங்களில் தம் கருத்தாழம் எனும் முத்திரையைப் பொறித்து நிற்கின்றனர்.
*தேயிலேத் துரில் தேங்காய் மாசி
இருக்கு தென்று தேன் சொட்டும் எத்தர்களின் திருப்
பேச்சில் புளுவாய்த் துடிதுடித்த அந்நாளில்

Page 49
பாரதியுகத்தில்.
புறப்பட்டாய் வெள்ளையனின்
பலியாடாய் .. . இருக்குதிங்கே நாட்டிற் சில
வெள்ளைப் புலி அதன் பாதம் தாங்கும் பல கறுத்தப்
புலி எடுத்துவிட்டாற் கைகளிலே
துவக்குகளை-அது காகிதப் புலியாகி விடும் கடைசியிலே ??
போன்ற பாடல்களில் இசைத் தமிழ் வடி வங்களான சினிமா மெட்டுக்களுக்குப் புது மைப் பொருள் எனும் புதுமெருகூட்டித் தாமே தம் மன எழுச்சிகளை ஈடிணையற்ற பாடல்களாகப் பாடியுள்ளனர் மலையக மக் கள். பழகு தமிழ் இவர்களது நாவிலே புது மைத் தமிழாக மலர்ந்துள்ளமை கவனிக் கத்தக்கது.
உழைக்கும் மக்களைப் பிரதிபலிக்கும் கவிதைகளே நீடித்து வாழக் கூடியவை. ஆனல், நல்ல இலங்கியங்கள் எழும் அதே ச்மயம் காணுத கற்பனையை மக்களுக்குக் காட்டிப் பிற்போக்குப் பாதையிலே மக் களை வீழ்த்தும் கவிஞர்களும் ஈழத்தில் g)(5 á Ssir (yff SGir.
நமது தாய் உயர்தனிச் ெ எந்த இனத் இருந்திருந்த அது உலகப் கும்.
 

Lv drafové? 31
"மரபேதானும் நாற் சொல்லியலான் யாப்பு வழிப்
பட்டன்று'
என்ற தொல்காப்பியச் சூத்திரத்திற்குப் பேராசிரியர் எழுதிய உரையையும் விளங் காது கடின நடையிலே நவகிதங்களைப் படைக்கும், பழம் பொருளைக் கைவிடாத கவிஞர்கள் நவயுகத்திலும் இல்லாமலில்லை. *புதிய வண்டுவிடு தூது" எழுதித் தங்கப் பதக்கமும், மரதன் ஒட்டப் போட்டியில் முதற் பரிசும், கோவைப் பிரபந்தங்கள் பாடிப் பரிசில் பெற்ற கவிஞர்களும் ஈழத் தில் இல்லாமலில்லை. கார்மகள், வேனில் மகள் என்ற தலைப்புக்களிலும், 'மங்கை வலக்கையேந்தப் பாங்கிக் கூட்டம் தக தகெனு வலம்புரிச் சங்கமேந்தி’ எனவும் 'கொங்கை இரு செம்பளவு' எனவும் பழ மையைப் பாடிக் காலத்தள்ளும் கவிஞர்கள் இன்னமும் இங்கு வாழ்கிருர்கள்தான். இத் தகைய கவிதைகள் நீடித்து நிலைக்கும் உள் ளாற்றல் அற்றவை. பாரதி வகுத்த பாதை யில் எமது கவிதை வளர்வதோடன்றி, அப் பாதையில் மேலும் முன்னேறிச் செல்ல வேண்டியதே இன்றைய தேவையாகும்.
மொழியாம் தமிழ் உலகின்
சம்மொழி இது உலகில் வேறு துக்காவது தாய் மொழியாக, 7ல் இத்தனே காலத்துக்குள் பொது மொழியாக ஆகியிருக்
அண்ணு

Page 50
14 JSsst
COLOMBO C
4, Old M
Color
Sphoие:
Յ2455

62ompliments
on2
ORPORATION
loor Street,
nbo-2.

Page 51
ཚོ་ནི་རི་
கால இலக்கியத்
སྣང་ gཙོང་བློང་བློང་
வேந்தர் காலச் சூழ்நிலை காலப்
e போக்கில் மாறி களப்பிரர் ஆட்சி ஏற்பட்டபோது இலக்கியப் போக்கில் மாறு தல் ஏற்பட்டது, இக்காலத்தில் அறநிதி நூல்கள் அதிகமாக எழுந்தன. களப்பிரர் ஆட்சியின் கொடுங்கோன்மையால் சமுதா யம் சீர் கேடடைய அதஞல் அறநீதி நூல் களில் நீதி ஒழுக்க நெறிகள் அதிகமாக எடுத்துக் கூறப்பட்டன; என ஒரு சாராரும் மூவேந்தர் காலத்தில் ஏற்பட்ட சில கொள்கைளின் எதிரொலிப்பே களப்பிரர் கால அறநூல்கள் என மற்ருெரு சாராரும் கூறுவர். ஆகவே அரசாள்பவரில் ஏற்பட்ட மாற்றம் மட்டும் இத்தகைய இலக்கியம் ஏற்படக் காரணமாக இருக்காது மூவேந்தர் கால வாழ்க்கை முறை காலஞ் செல்லச் செல்ல சலிப்புடையதாயமைந்ததும் அத் துடன் அதிலேற்பட்ட் குறையும் மக்கள் மனத்தைத் திருப்பியிருக்கலாம். போரால் ஏற்பட்ட துன்பங்களையும். மது, மாமிசம், பரத்தமையால் ஏற்பட்ட சீரழிவையும் கண்ட புலவர் மனதில் இக்கருத்துக்கள் தோன்றி அதற்கேற்ப நூல்களும் எழுந்தி ருக்கலாம். மக்களும் அதனை ஏற்கும் நில யில் இருந்ததால் மூவேந்தர் காலக் கொள் கையின் எதிரொலியாக அறநீதிக் கருத்துக் களை ஏற்றனர். சமண பெளத்தர்களே இத் தகைய நூல்கள் பலவற்றை எழுதினர் களப்பிரரின் பேராதரவும் இவர்களுக்கு இருந்தது. நா லடி யா ர், பழமொழி நாணுரறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய நூல்கள் சமணரால் இயற்றப்பட்டன. நான்மணிக்கடிகை, திரிகடுகம் என்பன வைணவராலும், ஆசாரக்கோவை சைவ ராலும் இயற்றப்பட்டது. சிலர் திருக்குறள் சமண நூல் என்பர். ஏனைய நூல்களைப் போல தி க்ருகுறளும் ஒரே சமயத்தைச் சார்ந்து கூரு மை சமணத்தையோ, பெளத் தத்தையோ சேர்த்த நூலல்ல என எண்ண வைக்கிறது. இச் சமண பெளத்தத்தைச்
 

སྐོ་ཊི་ O སྐགླིད་ཞིའི་རིགས་ སྒོདི་་་་་་་་་་་་་་་་་ ་ཞིག་ கஜ்இமூவேந்தர்டி
தின் எதிரொலி §§osoo olšcoolsco
சேர்ந்த நூலாசிரியர், தம் சமயக் கொள் கையைக் கூறுதல் என்ற முறையில் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை ஆகிய மூவேந் தர் கால நூல்களில் உள்ள குறைகளை எடுத்துக் காட்ட முயன்றனர் எனலாம்.
களப்பிரர்கால நூல்களின்படி மூவேந் தர்கால அரசியல்நிலை சிறப்பாக அமைய வில்லே எனக் கூறவும் இடமுண்டு. மூவேந் தர்கால நூல்கள் அரசர்களின் வள்ளற் தன்மையையே அதிகம் பாடுவனவாக உள் ளன. இச் செய்யுட்கள் மூலம் அக்கால வாழ்க்கை ஆற்றெழுக்கமுடையது என எண்ணத் தோற்றுமளவிற்கு அ ழ கா க அமைக்கப்பட்டுள்ள போதும், கூர்ந்து கவ னிக்கும்போது இக்கால இலக்கியத்திற்கும் உண்மை வரலாற்றிற்கும் சிறிது வித்தியா சம் இருந்ததென்பதனை அறிய முடிகின் றது. போர், வீரம், கொடை என்பன சிறப்பாகக் கூறப்பட்டன. இவை கூறப் படும் வகையில் நோக்கின் போரால் அக் காலத்தில் எத்தகைய அழிவு ஏற்பட்டிருக் கும் என எண்ண முடிகின்றது. பாரி மகளி ரது நிலை போரால் ஏற்பட்ட வினை என லாம். தமிழ் வேந்தரிடை காலப்போக்கில் ஏற்பட்ட ஒற்றுமையின்மை நாட்டில் பிரிவை ஏற்படுத்தியது. இத்தகைய பகை வேற்றுநாட்டவர் தமிழ்நாட்டிற் புகுந்து தாம் ஆட்சி செய்யுமளவிற்குக் கொடுமை நிறைந்ததாயிற்று. கபிலர் பாடிய பாரி மகளிரைப் பற்றிய பாடல்கள் ஓர் இரக்க உணர்ச்சியை ஏற்படுத்த வல்லன. இதனைக்
ஜெயலட்சுமி சரவணமுத்து

Page 52
34 அற நீதி நூல்கள்.
கூர்ந்து அவதானிக்குமிடத்து அக்காலத் தில் தமிழ் பேரரசர் ஒன்று சேர்ந்து ஓர் சிற்றரசன் மேற்றெடுத்த போரின் கொடு மையையும், சூழ்ச்சியால் அவனை வென்ற நீதியற்ற செயலையும் வரலாற்று ரீதியில் அறிய முடிகின்றது.
கடந்தரு தானை மூவிருங்கூடி உடன்றனிராயினும் பறம்பு கொளற் கரிதே முந்நூறுார்திே தண்பறம்பு நன்னடு முந்நூலும் பரிசிலர் பெற்றனர் u | T(g d L T fu (y II BILD குன்றுமுண்டு நீர் பாடினிர் செலினே
(புறநானூறு 110)
நீர் மூவிருங் கூடி நாட்டை வேண்டிப் பொருவதிற் பயனில்லை. அந்நாடு பரிசி லர்க்குரியதாகும். எஞ்சி நிற்பது குன்று ஒன்றே. குன்றினை உம்நாடு கொண்டு செல்ல வியலாது. பாரியும், எம்போற் புல வருமே நும்பாற் கொண்டு செல்லக் கூடி யவர். எம்மால் உமக்கு யாதொரு பயனு மில்லை என ஏளனமாகக் கூறுவது போல அமைகிறது.
அற்றைத் திங்கள் களவ் வெண்
னிலவின் எந்தையு முடையே மெங் குன்றும்
பிறர் கொவார் இற்றைத் திங்களில் வெண்ணிலவின் வெனறெறி முரசின் வேந்த ரெம் குன்றுங் கெரண்டரர் யாமெந்தையு
மிலலே-(புறநானூறு: 112)
இப்பாடலால் தந்தையையும் நாட் டையும் இழந்ததும் நாட்டைவிட்டேகும் பாரிமகளிர் தம் நாட்டின் மேற் கொண்ட அன்பினையும் அதனல் ஏற்பட்ட துன்பத்தி னையும் அறியலாம். பாரிமகளிரைக் கபிலர் மணமுடித்து வைப்பதற்கு முயன்றமை யால் அவருக்கேற்பட்ட துன்பத்தினையும் புறநானூறுப் பாடல்கள் சிலவற்ருல் அறி ሀ !6ህ fr th . ( 200, 202)
இத்தகைய கொடுமைகள் களப்பிார் காலத்தில் எதிரொலித்தன. அக்காலப் புலவர்கள் போரின் கொடுமையைப் பல்

ஜெய/லட்சுமி சரவணமுத்து/
லாற்ருலும் கண்டு வெறுத்தனர். இதனல் நிலேயாமை அவர்கள் மனத்தில் வேரூன்றி யது. போரால் ஏற்பட்ட உயிர்க் கொலை யும் அதனல் விளைந்த துன்பங்களும் களப் பிரர் காலப் புலவர்கள் மனத்தைத் தாக்கி யது. இதனல் இவ்விளைவுகளை நீக்க வேண் டும் என்ற எண்ணமும் தோன்றியது. தோன்றியது மட்டுமன்றி பாடல்களாக வும் அறிவுரைகளாகவும் அறக் கருத்துக் களைக் கொண்ட பல நூல்கள் எழுந்தன.
திருக்குறள், நாலடியார் என்பன முக் கியம் வாய்ந்த நூல்களாகக் கணிக்கப்படு வன . இவை மூவேந்தர் காலக் கொள்கை கள் சிலவற்றைச் கண்டிக்கின்றன. நாலடி யார் நிலையாமையை நன்கு வற்புறுத்துகின் றது. மூவேந்தர் காலத்தில் ஏற்பட்ட சில கொடுமைகள் தொடர்ந்து நடைபெறக் கூடாது என எண்ணினர். ஆகவே கொல் லாமை, செங்கோன்மை, கள்ளாமை முத லியவற்றைக் கூறியுள்ளனர். ஈரடிப்பாடல் களாயமைந்த திருக்குறளில் திருவள்ளுவர் மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத யாவற்றையும் எச்சமயம், எக்குலத்தினைச் சேர்ந்த வருக்குரியன எனக் கூருது பொது வாக அமைத்தார். மூவேந்தர் கால மக் கள் எதிரிகளைத் தீய இயல்புகள் யாவும் பொருந்தப் பெற்றவர் என்ற எண்ணத்து டன் அவரை அழிக்கத் தம் உயிரையும் பணயம் வைத்தனர். நட்பு என்ற சொல் லையே அந்நேரத்தில் மறந்து விடுவர். தமிழ் வேந்தர் ஒவ்வொருவருடனும் போர் செய் யும் போதும் தாம் தமிழர் என்ற எண் ணத்தை மறந்து எதிரிகளாக மாறி இரக்க மின்றி எதிரிகளின் தலைகளைக் கொய்வத னேயே கருத்தாகக் கொண்டனர். இத்த கைய பாடல்கள் நேரடியாகவும் புறநா ணுாற்றில் அமைந்து காணப்படுகின்றன. ""பகைவர் நாட்டைச் சுடும் நெருப்பால் நின் தலைமாலை வாடுவதாக" என மன்னன் வாழ்த்தப்படுகின்றன். (புறநானூறு-2) பகையால் நாட்டில் ஏற்படும் கொடுமை கள் பற்பல புறநானூற்றில் உண்டு (புறநா ணுாற்று-7, 19, 23, 44). போரால் நாட் டில் ஏற்படும் நன்மையிலும் தீமையே அதி கம் என்பதனை அக்கால மக்கள் உணர்ந்தி ருக்கவில்லை. வீரர்கள். வீரத்தாய்மார் க ளின் கூற்றுக்களில் இருந்து இதன் அறிய

Page 53
அற நீதி நூல்கள்.
லாம். கரிகாலன் நடுவு நிலைமையிலும் அர சியல் முறையிலும் சிறந்தவன் எனினும் போரில் கொடியவனுக இருந்தான். இவன் மேற் கொண்ட போரின் கொடுமையினல் நாடு அழிவுறுதலை எடுத்தோதுகின் முர் கருங்குழலாதனுர் என்ற புலவர் (புறநா ணுாறு-7). ஆகவே அக்காலப் புலவரும் போரின் கொடுமையை உணர்ந்திருந்தனர் என்பது தெளிவாயினும், மன்னனின் வீரத் தைப் புகழ்தலையே முதற் கருத்தாகக் கொண்டிருந்தனர். இதில் காணப்பட்ட கொடுமைகளையே ஆழமாகக் கண்டனர் களப்பிரர் காலப் புலவர்கள். திருக்குற ଗfiଗist கொல்லாமை, புலாலுண்ணுமை போன்ற அதிகாரங்களில் திருவள்ளுவர் உயிர்க்கொலையை வெறுத்தமை ஆழமா கப் புலப்படுகின்றது.
மூவேந்தர் காலத்தில் யாகங்கள் சிறப் பிடம் பெற்றன. களப்பிரர் காலத்தில் இவை இம்சையாகக் க ரு த ப் பட் ட ன. அகிம்சை பற்றிய சமணரது பிரசாரம் நாட்டில் செல்வாக்குப் பெற்றமையால் யாகங்கள் செய்வது அருகியே காணப்பட்
- is
ஊன் உண்டு உயிர்கட்கு
அருளுடையெ என்பானும் தான உடன்பாடு இன்றி வினை
ஆக்கும் என்பானும் காமுறு வேள்வியிற் கொல்வானும்
இம் மூவர் தாம் அறிவர் தாம் கண்டவாறு
(திரிகடுகம் 36)
என ஊனுண் பானும் வேள்வி செய்வா னும் கொலையையே செய்கின்றனர் என்ற முறையில் கண்டிக்கப்பட்டுள்ளனர்.
களப்பிரர் காலத்துக் களவழி நாற் பது போர்க் களக் காட்சியை வர்ணிக்கின் றது. போரில் பொய்கையாருக்கு இருந்த ரசனை பாடல்களில் எதிரொலிக்கின்றன. ரசித்துப் பாடுவதன் மூலம் ע&-L חוL போரின் கொடுமையையும் போர்க்களத் தில் ஏற்படும் இரக்கமற்ற செயலையும் வர் ணிக்கின்ருர் . களவழியைப் படிப்போர் மனத்தில் போரின் கொடுமை பதியுமாறு வர்ணனை அமைந்துள்ளது

ஜெயலட்சுமி சரவணமுத்து 35
தெரிகணை எஃகம் திறந்த வா எல்லாம் குருதி படிந்து உண்ட காகம்-உரு இழந்து குக்கில் புறத்த சிரல்வாய்
செங்கண்மால் தப்பியார் அட்ட களத்து
(களவழி - 5)
இப் பாடல்களில் குறிப்பிட்ட அள விற்கே மன்னன் போற்றப்படுகின்றன். மிகுதி போர்க்கள வர்ணனையே கூறப்படு கின்றது, போர்க்க ள நிகழ்ச்சிகள் ஒவ் வொன்றையும் விரிவாக நுட்பமாகக் கூறி யுள்ளார். காரணம் களவழி நாற்பது முன்னைய வழியின் தொடர்பாகவும் பின் னேய மரபின் வழியாகவும் ஏற்பட்டது என் பதனலாகும். புலவர் இதில் தம்மையும் தொடர்புபடுத்திக் கூறியுள்ளார். ஆகவே புலவன் போர் வெறியன் எனக் கூறுவதற் கில்லை. போரிஞல் ஏற்பட்ட கொடுமையை எடுத்துக் காட்டி அதனைக் கண் டி த் து, மேலும் போர்க் கொடுமைகள் ஏற்படாது தடுக்கவும் நிலையாமையை வற்புறுத்துகின் ருர் எனக் கொள்ளலாம். போர்க் களத்தி லிருந்து நிலையாமை உணர்வு ஏற்படுவது அதிகம். மூவேந்தர் காலப் பாடல்களைப் போல மன்னனின் வீரத்தினையே முக்கிய மாகக் கொண்டு பாடப்படும் பாடல்களி லும் போர்க்களத்தினை அப்படியே வர்ணிக் கும் களவழிப் பாடல்கள் மக்கள் மனத்தில் நிலையாமையை வற்புறுத்த வ ல் ல ன. போரால் ஏற்படும் கொடுமையைத் தடுக்கு முகமாக மூவேந்தர் காலத்திலும் களப் பிரர் போர் தொடுத்த காலத்திலும் ஏற் பட்ட கொடுமைகள் தொடர்ந்தும் நாட் டில் ஏற்படாது தடுக்க முயன்ருர் பொய் கையார். ஆகவே இது மூவேந்தர் கால இலக்கியத்தின் எதிரொலியாக அமைகின்
றது எனலாம்.
செஞ்சேற்றுள் செல்யானை சீறி
மிதித்தலால் ஒண்செய் குருதி தொகுபு ஈண்டி நின்றவை பூ நீர் வியல் மிடாப் போன்ற - புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து
(களவழி 27)

Page 54
36 அற நீதி நூல்கள்.
என்ற இப்பாடலும் போர்க்களக் காட்சியை வர்ணித்துள்ளது. இவ்வாறே ஒவ்வொரு களவழிப் பாடலிலும் போரின் கொடுமை ஆழ்ந்து கூறப்பட்டுள்ளமை காணலாம். ஆகவே வீரத்திற்கு அறிகுறி யாகக் கருதப்பட்ட போர் களப்பிரர் காலத்தில் அறநூல்கள் எழுவதற்கு எதி ரொலியானது. மூவேந்தர் கால மன்னர் இப் போர்களில் ஈடுபட்டமை மக்களைத் துன்புறுத்தியது. இளைஞர் போரில் பங்கு பெற வேண்டிய நிலை இருந்தது. ஆகவே மன்னனிடை சமாதானம் வேண்டும் என வும் அதற்கான வழிகளையும் திருவள்ளுவர் குறளில் அரசு என்ற பகுதியில் கூறியுள் ளார். சிறந்த அரசிற் கேற்ற இலக்க ணத்தை வர்ணித்துள்ளதுடன், போர் ஏற் படின் அதனை வெற்றிகரமாகவும், பகை வருக்குத் துன்பம் ஏற்படாது கொண்டு நடத்தும் வழிகளையும் வள்ளுவர் கூற உண் மைப் போரை வர்ணித்து அதன் அழிவைக் கூறி மேலும் போர் ஏற்படாது தடுக்கும் முறையைப் பொய்கையாரும் நிலையா மையை நேராக வர்ணித துக் கொலை, கொள்ளையைத் தடுக்கும் முறையை நாலடி யார் புலவர் சளும் கடைப்பிடித்துள்ளன 7
போரின் கொடுமையை மட்டும் கூறுவ துடன் நின்றுவிடாது காதல், காமம், பரத் தமை, புலாலுண்ணல், கள்ளுண்ணல் என் பவற்றையும் அறநீதி நூல்கள் இழித்துக் கூறுகின்றன. அகநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் ஆண் பெண் உறவு சித்திரிக்கப் பட்டுள்ளது. ஆண்களுக்குப் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் இருக்க வில்லை. பகற்குறி இரவுக்குறி என இரு நேரங்களிலும் தலைவனும் தலைவியும் சந் தித்தும், நீராடியும் களவில் ஈடுபடுவர். (அகநானூறு 312). ஆனல் பெண்ணைப் பொறுத்தவரை அறநீதி நூல்களில் ஒர் முறண்பட்ட கருத்தே காணப்படுகின்றது. களவொழுக்கத்தில் சீர்கேடு ஏற்பட்டமை யால் திருமணங்கள் டெரியோரால் நிச்ச யிக்கப்படலாயின. பெண்ணின் வாழ்வில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கற்பு மூவேந்தர் காலத்திலும் களப்பிரர் காலத்திலும் போற்றப்பட்டது. இக் காலத் திலேயே ஐந்திணை ஐம்பது திணமாலை நூற் றைம்பது,கார் நாற்பது, ஐந்திணை எழுபது.

ஜெயலட்சுமி சரவணமுத்து/
திணைமொழி ஐம்பது முதலிய அக நூல் களும் எழுந்தன. இவை மூவேந்தர் கால அகத்திணைப் பாக்களின் தொடர்ச்சி என இலக்கிய ஆசிரியர் கூறுவர். ஆகவே காத லொழுக்கம் முற்ருகக் கண்டிக்கப்பட வில்லை எனக் கூற இடமுண்டு. களப்பிரர் காலச் சமணப் புலவர்களே இதனை முற் ருக வெறுத்துக் கூறுகின்றமையால் இக் கால அறநீதி நூல்கள் மூவேந்தர் கால மர பின் எதிரொலி எனப்படுகின்றன.
அறநீதிக் கருத்துக்களைக் கூறும் நாலடி யார் களவொழுக்கம் காமம் என்பவற்றை ஒதுக்கியே வைத்துள்ளது. இவற்றைப் பொறுத்தவரை திருக்குறளில் பொதுமக ளிர் மட்டுமே இழித்துக் கூறப்பட்டுள்ள னர். இப் பொது மகளிர் உறவு மூவேந்தர் கால மருத நிலப் பாடல்களில் ஒர் மரபாக இடம்பெறுகிறது. இவர்கள் மருத நிலப் பாடலின் உரிப் பொருளான ஊடலுக்குக் காரணமாக இருந்தனர். ஆகவே பரத் தமை இழிவாகக் கருதப்படவில்லை. ஆனல் இது திருக்குறளில் வரைவின் மகளிர் என்ற அதிகாரத்திலும், நாலடியாரின் பொதுமக ளிர் என்ற அதிகாரத்திலும் இழித்துக்
கூறப்பட்டுள்ளமை காணலாம்.
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்
கம் - இருட்டறையில் ஏதில் பிணந் தழீஇ அற்று
(திருக்குறள் வரைவின் மகளிர் 3)
எனவும்
ஊறு செய் நெஞ்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார் தேறமொழிந்த மொழி கேட்டுத்-தேறி எமரென்று கொள்வாருங் கொள்பவே யார்க்குந்
தமரல்லர் தம் உடம்பினுர்
(காலடியார் 379)
எனவும் கண்டிக்கப்பட்டுள்ளமை களப் பிரர் காலத்தில் பொதுமகளிர் உறவிற்கு இருந்த எதிர்ப்பைக் காட்டுகின்றது. இவற் றுடன் செல்வம், நிலையாமை, யாக்கை நிலை யாமை, அறன் வலியுறுத்தல் தூய தன்மை என்பனவும் கூறப்பட்டுள்ளன.

Page 55
அற நீதி நூல்கள்.
மூவேந்தர் காலத்தில் பெண்களை அழ காக வர்ணித்த பண்புபோய் நாலடியாரில் குறைவாகவே வர்ணிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் பெண்ணினத்தை வெறுத்து ஆடவர் துறவை நாடவேண்டும் என்ற எண்ணம் இச் சமணப் புலவர் மனத்தில் வேரூன்றியமை காணலாம். ஆகவே உலக வாழ்க்கையில் வெறுப்பை உண்டாக்கும் வகையில் அமைந்த பாடல்கள் களப்பிரர் காலத்தில் வலியுறுத்தப்பட்ட வாழ்க்கை யைக் காட்டுகின்றன. மூவேந்தர் காலப் பாடல்களுக்குச் கருத்தாக அமைந்த இல் லறம் இழிந்தோராற் பின்பற்றப்படுவது, உயர்ந்தோர் துறவறத்திலீடுபடுவர் எனத் துறவறம் போற்றப்பட்டது. சிறுபஞ்ச மூலம் (17, 40ம் பாடல்கள்) ஏலாதி 20, 43ம் பாடல்கள்) ஆகியவற்றிலும் பெண் களை விரும்பாமையே சிறப்பித்துக் கூறப் பட்டுள்ளமை காணலாம்.
உடல் அழியும், இளமை நீங்கும் அழகு கெடும், இன்பம் நிலைக்காது அறம் ஒன்றே அழியாதது. ஆகவே நல்லறங்களைச் செய் வது இறந்த பின் நல்வாழ்வு தேட வழி செய்யும் எனத் துறவறத்தையே இங்கு நல் லறம் எனக் கூறுகின் ருர் மணிமேகலை ஆசிரி யர், மூவேந்தர் காலத்தில் இல்லறமே நல் லறமாகக் கருதப்பட்டது. ஆனல் களப் பிரர் காலத்திலெழுந்த அறநூலான மணி மேகலை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமையைக் கூறுவதன் மூலம் துற வைப் போற்றுகின்றது.
வினையின் வந்தது வினைக்கு விளைவு
ஆயது புனைவன நீங்கின் புலால் புறந்து இடுவது மூப்பு விளிவு உடையது தீப்பிணி இருக்கை
பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம் புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை அவலம் கவலை கையறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது மக்கள் யாக்கை இது.
(மணிமேகலை 4ம் காதை 113-120) என உடம்பின் தன்மை எடுத்துக் காட் டப் பட்டுள்ளமை உடம்பை எவ்வளவிற்

ஜெயலட்சுமி சரவணமுத்து 37
குப் பாதுகாப்பினும் இயற்கையைத் தடுத் தலியலாதாகையால் உலகஇன்பத்தில் அறி விழக்காது வாழ வேண்டும் என்பதனை வலி யுறுத்துகிறது. இத்தகைய பாடல்கள் மூவேந்தர்காலக் கருத்திற்கு முற்ற க மாறு பட்ட கருத்துக் கொண்டனவாக மூவேந் தர்கால எதிரொலிப்பாக அமைந்துள்ளன. அடுத்து மூவேந்தர் காலத்தில் உண்டு களித்த கள்ளு, மாமிசம் என்பனவும் களப் பிரர் கால அறநீதி நூல்களில் கண்டிக்கப் பட்டுள்ளன. இதனைத் திருக்குறள், நாலடி யாரிலும் மேலும் திரிகடுகம் (74ம் பாடல்) சிறுபஞ்சமூலம் (11ம் பாடல்) ஏலாதி (46) இன்ன நாற்பது (22,33ம் பாடல்கள்) ஆகி யவற்றிலும் காணலாம்.
ஏற்றுக வுலைலையே யாக்குக சோறே கள்ளுங் குறைபட லோம்புக
(புறகானூறு 172) என்பதும் s கழனியுழவர் சூட்டொடு தொகுக்கும் கொழுமீன் விளைந்த கள்ளின் விழு நீர் வேலி நாடு கிழவோனே
(புறாகாணுறு 13ம் பாடல்) என்பதும் புறநானுரற்றுப் பாடல் களாகும். இங்கு மாமிசமும் கள்ளும் மூவேந்தர் காலத்தில் சாதாரணமாக உட் கொள்ளப்பட்டமையைக் கா ண லாம். இவையே களப்பிரர் காலத்தில் கள்ளுண் ணல், புலாலுண்ணல் என்பன தூாற்றப்படு வதற்கு எதிரொலியாக அ  ைம ந் த ன . * 'கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி எல்லா உயிர்களுந் தொழும்" எனத் திருவள்ளுவர் புலாலுண்ணுதவனின் பெரு மையைக் கூறுவதுடன், 'உண்ணுமை வேண்டும் புலா அல் பிறிதொன்றன் புண் அது உணர்வார் பெறின் ,' எனக் கூறுவ தன் மூலம் மாமிசம் உண்பதைத் தடுக்க முயன்றுள்ளார். இப் புலாலுண்ணுமை, கள்ளுண்ணுமை ஆகியவற்றை வற்புறுத்தல் களப்பிரர் கால அறநீதி நூல்கள் ஒவ் வொன்றிலும் பொதுக் கருத்தாக அமைத் துள்ளன.
ஆகவே மூவேந்தர் காலத்தில் பொரு ளாக அமைந்த போர், வீரம், பொதுமக ளிர் தொடர்பு, கள்ளுண்ணல், மாமிசமுண் ணல் என்பன களபிரர் காலத்தில் குற்ற மாகப் பட்டன. இவற்ருல் ஏ ந் பட் ட கொடுமையின் எதிரொலிப்பு அறநீதி நூல்
களமைய முக்கிய காரணமாயிற்று.

Page 56
மகாவலி கங்கை பற்றிய பொது
6. நீருமே இலங்கையின்
பெரும்பான்மையான வள மெ ன லாம் . மகாவலிகங்கை ஒரு தனி நதியன்று. அது பல நதிகளின் தொகுதியாகும். ஏறத் தாள 125-200 அங்குலங்கள் கொண்ட வருடாந்த மழை வீழ்ச்சி பெறும் இலங்கை யின் தென் மத்திய பகுதியை அடுத்து இது ஊற்றெடுக்கின்றது. பல கிளை நதிகளைத் தன்னகத்தே கொண்டு 206 மைல் நீள தூரம் வரை ஓடி வங்கா ளக் கடலில் வீழ் கின்றது. பல புவியியல் ஆதாரங்களைச் சான்று காட்டி இந்நதி முன்னர் வடக்கு நோக்கிப் பாய்ந்து பின்னர் ஏற்பட்ட புவிய சைவினல் திசை திருப்பப்பட்டு இன்றைய வடிகாலமைப்புப் போக்கினைப் பெற்ற தென்கின்ருர் பேராசிரியர் குலரத்தினம்.
கல்லோயா, உடவளவை ஆகிய திட் டங்களை அடுத்து இத்திட்டம் வகுக்கப்பட் டது. கண்டிக்கு வடக்கே அமைந்திருக்கும் சுமார் 30 அடி உயரமான "பிறிம் ரோஸ்" என்னும் பெயர் கொண்ட குன்றைக் குடைத்து அதற்கு ஊடாக வாய்க்கால் ஒன்றினை வெட்டி நீரைத்திருப்ப வேண்டி யுள்ளது. 1970ம் ஆண்டு மாசி 28ம் திகதி பிரதம மந்திரியினுல் இத்திட்டம் பொல் கொல்லையில் ஆரம்பிக்கப்பட்டது.
அபிவிருத்தியில் முதற் கட்டமாக அமையும் பொல்கொல்லைத் திட்டம் 1969 -1973 காலப் பகுதியில் மொத்தமாக I 72 6 GB , nr g ரூபா செ ல வில் கட்டி முடிக்கப்படும். அடுத்து 19731977ல் விக்டோரியா மினிப் பேத்திட்ட மும், 1977-1980ல் மொர காகா கண்டாத் திட்டமும் பூரணப்படுத்தப்படும். உலக வங்கி, அமெரிக்கா ஆகியவற்றின் உதவி யுடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்

த் திட்டம் நோக்கு
| 2b. f. GDI T I J I
ளது. 700 கோடி ரூபாய் வரை செலவா கும் என மதிபிடப்பட்ட போதிலும் பேராசிரியர் குலரத்தினம் அவர்கள் 1500 கோடி ரூபாய் வரை செலவாகும் என அபிப்பிராயம் கொள்கின் ருர், அஸ்வான் அணைக் கட்டுத் திட்டத்தை அமெரிக்கா கட்டித் தருவதாக ஒப்புக்கொண்ட பின் னர், அரசியல் காரணிகளினல் அத்திட் டம் இடையில் நிறுத்தப்பட்டது. பின் சோவியத்து அரசாங்கம் அதைக் கட்டி முடித்தது. இதே போல இலங்கையினதும் அமெரிக்க அரசியல் சூழ்நிலைகள் இத்திட் டத்தைப் பாதிக்கலாம். வெற்றிகரமாக இத்திட்டம் இயங்கின் 10 இலட்சம் மக்க ளுக்கு வேலை வசதிகள் அளிக்கப்படும். பல் கலைக்கழகங்கள், தொழில் நுட்பக் கல்லூரி க ளி னி ன் று ம் வெளியேறுபவர்களுக்கு அநேக தொழில் வாய்ப்புக்கள் கிடைக் as G. Th.
தற்போது 1.2 கோடியாக இருக்கும் குடித்தொகை இன்னும் 30 ஆண்டுகளில் 2.5 கோடியாகப் பெருகிவிடும். இதனல் 1990ல் உணவுக்காகச் செலவிடும் தொகை 500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள் ளது. 4304 ச. மைல்களை உள்ளடக்கி இருக்கும் இந்நதி வடிநிலத்தினை அபி விருத்தி செய்யின் சுமார் 1.4 கோடியே 32 இலட்சம் ரூபா வருட வருமானம் கிடைக் கலாம். நீர்ப்பாய்ச்சுதல், வடிகால் அமைத் தல், வெள்ளத்தடுப்பு, அணைகள் கட்டு தல், நிலங்களை அபிவிருத்தி செய்தல், குடி யேற்றத்திட்டங்களை அமைத்தல், மின் சக்தி உற்பத்தி மேற் கொள்ளல் போன்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற் கொள் ளப்படும். மு த லீ டு செ ய் ய ப் படும் தொகையை 5 வருடத்திற்குள் பெற்றுக்

Page 57
மகாவலி கங்கைத் திட்டம்.
கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகின் றது. கடந்த 12 வருடங்களாக பரிசீலனை செய்யப்பட்ட இத்திட்டம் வெளிநாட்டுப் பொறியியலாளர்களின் உதவியுடன் 1962ல் ஆரம்ப மதிப்பீடுகள் செய்யப்பட்டன. இத்திட்டம் பூர்த்தியாகி 30 வருடங்களுக் குப் பின்னரேயே பயனை அளிக்கும். வரண்ட பிரதேசங்களிலுள்ள பரந்த நிலங் களில் தற்போதுள்ள விவசாய முறையைப் புதுக்கியும், கைவிடப்பட்ட சேனை நிலங் களுக்கு நீர்ப்பாசன வசதி செய்தும் கொடுக்கப்படும். கைத் தொழிற்சாலைகள், புதிய வீதிகள், கிராமங்களுக்கு மின் சக்தி, நிர்வாகச் சாலைகள் ஆகியன நிறுவப்படும். புதுக்கிராமக் காடுகளும் புற்றரைகளும் ஒதுக்கப்படும். சுமார் 10 இலட்சம் குடும்ப அங்கத்தவர்களுக்கு குடியேறும் வசதி அளிக்கப்படும். மகா வலி, மதுரு ஒயா வடி நிலங்களிலுள்ள 473,000 ஏக்கர்களுக்கும் வடமத்திய பிரதேசங்களிலுள்ள 427,000 ஏக்கர்களுக்கும் 5.8 மில்லியன் ஏக்கர் அடி நீர் பாய்ச்சுதல் செய்யப்படும். மின்சக்தி உற்பத்தி 400 வீதமும் நீர்ப்பாய்ச்சக்கூடிய நிலத்தின் பரப்பு இரு மடங்காகவும் விஸ் தரிக்கப்படும்.
மகாவலி கங்கை திசை திருப்பத் திட்டத்தில் விவசாயப் பெறுபேறுகள்
1968ம் ஆண்டு உற்பத்தியுடன் சீர் தூக்கி ஆராயும் போது மேலதிக விளைவு 1980ம் ஆண்டு வரையிலும் இத்திட்டம்
பூர்த்தியாக்கப்பட்ட பின் அதாவது 2000
ஆண்டின் உற்பத்தி வலுவையும் காட்டல்.
மெட்ரிக் தொன் நிறையில்
1968 1980 2000
அரிசி 900,000 200,000 780,000 இனி 7,670 54,000 70,000
சோளம் 12,825 23,000 130,000 பருத்தி 625 14,000 70,000 ósamt samt uiu 3, 1 0 0 800 30,000
காய்கறி w பருப்புவகை 570, 300 138,000 1,290,000

ஆ. சிவராசா 39
பயிர்வகைக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களின் விகிதாசாரம்
நெல் 229 --سے கலப்புப் பயிர்கள் 16 سے பண வருவாய்க்கான பயிர்கள் 50 مسيسي நீர்ப்பாசன வசதியுள்ள புல் வளர்ப்பு - 3 கரும்பு - 2
மொத்தம் - 100
மகாவலித்திட்ட மின்சாரம்
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம் உணவு விவசாய ஸ்தாபனம் (UNDP/FAC)) ஆகியனவற்றைச் சேர்ந்த நிபுணர்குழு ஒன் றிஞல் 1968ம் ஆண்டு நடாத்தப் பெற்ற நுண் ஆய்வுக் கணித்தலின்படி இவ்வாற்று நீர் வளத்தினைக் கொண்டு அமைக்கப்படக் கூடிய 43 நிலையங்களினின்றும் விருத்தி செய்யக் கூடிய மின் வலு அளவு வருடாத் தம் 470 கோடி கில்லோ உவாட்ஸ் பிறப் பிப்பு அளவை உள்ளடக்கிய சுமார் 950 மெகா வாட்ஸ் சுகளாகும். குறிப்பிட்ட 43 நிலையங்களில் 15 நிலையங்கட்கான திட்டங் கள் பற்றி அவர்கள் ஓர் விரிவான அறிக் கையையும் சமர்ப்பித்திருக்கின்றனர். இந்த நிபுணத்துவ அறிக்கையின் படி 15 நிலையங் களும் 30 படிகளாக 20 வருட காலத்திற் குள் அமைந்து வருடந்தோறும், 200கோடி கி. வா மி. பிறப்பித்தல் ஆற்றலைக் கொண்ட 520. மெ. வா. மின் வலுத்தொகு தியையும் உண்டாக்க வழி வகுக்கும்.
1970 தொட்டு 1979ம் ஆண்டு வரை இ. மி. ச. வின் பிரதான கோட்டிணைப்பு மின் தேவை விபரம் கீழே
ஆண்டு. தேவைப்படும் மின் அலகுகள்
(கோடி) 1970 77.3 1971 91.7 1972 104.4 1973 21.3 1974 13 1.0 1975 41 .. 2 1976 52.8
1977 164.7
1978 77.2
1979 89.2

Page 58
40 மகாவலி கங்கைத் திட்டம்.
எதிர்நோக்கும் உச்சக்கொள் அளவு
ஆண்டு மெ. வா. வில்
1970 areer 167
1971 se 197
1972 224
1973 *Hr. 260
1974 280
1975 ama 30
1976 Kama 325
1977 anemar 350
1978 a--- 376
1979 aa 40
இலங்கை மின்சக்தி உற்பத்திச் சபை யும், மகாவலிச் சபையும் ஒன்று சேர்ந்து இத்திட்டங்களை நிறை வேற்ற விருப்பதா லும், ஒரு கி. வா. சக்தியை பிறப்பிப்ப தற்கு -/05 சதத்திற்கு மேற்படாமலே செலவாகும் என எதிர்பார்க்கப்படுகின் றது. இத் திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் மிக முக்கிய மின் நிலையங்களும், வரு டாந்த பிறப்புச் சராசரியும் அருவிகளின் உயரமும் கீழே.
அமைக்க வருடாந்த நிலையங்கள் இருக்கும் பிறப்புச்
கொள்ளளவு சராசரி
பொல்கொல்ல 40 மெ. வா. 22.8 கோடி
(S. 2 . . கொத்மலை 100 , , , , 41.7 , 6ák G mtu u mr 120 , , , , 57.9 y றந்தெனிகல 75 , , , , 37.0 , , மொரகா கா
456Àur LfT 40 , , , , 20.6
s
“ வரம்புயர நீரு நீருயர நெல்லு நெல்லுயர குடி குடியுயரக் கே,

ஆ. சிவ ராசா
மகாவலித் திட்டமும் அதனல் ஏற் படும் இலாப நட்டங்கள் பற்றிய பேராசிரி யர் குலரத்தினம் அவர்களின் சிந்தனைக்கரு வூலங்களை நோக்கின்; இத்திட்டம் வரலாற் றிலே ஒரு புரட்சி என்கின்ருர், விஞ்ஞான தொழில் நுட்ப இயந்திர வல்லுனர்களின் அபிப்பிராயங்கள் அதிகம் பெறப்படவில்லை எனவும் அப்படிப் பெற்றிருப்பின் செலவை இன்னும் குறைக்க முடியும் என் ருர், வெள் ளப் பெருக்கும், மண்ணரிப்பும் ஏற்படக் கூடுமெனவும், தகுந்த பாதுகாப்பு நட வடிக்கைகள் ஏற்படுத்த வேண்டியதவசியம் என எச்சரிக்கின் ருர். இத் திட்டத்தைச் செயற்படுத்தி முடிக்க 30 வருடத்தை விட இன்னும் அதிக காலம் வேண்டுமெனவும், காலம் அதிகரிக்க வெளிநாட்டு அதிகாரிக் குக் கொடுக்க வேண்டிய வேதனம் இன் னும் அதிகமாகும் என்கின் ருர். இப் பேரா சிரியர் இத் திட்டத்தினல் எதிர்பார்க்கப் படும் அளவிற்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புவதற்கில்லை என்று கூறுகின்றர்.
இறுதியாக, இத்திட்டம் வெற்றியளிப் பின் வடக்கின் வளம் அபிவிருத்தி அடைய வாய்ப்புக்கள் ஏற்படும். மின்சார சக்தி சுண் ஞகம் வரையும் வரக்
அருவிகளின் கூடிய சாத்தியக் கூறுகள்
2 - li JJLD இருப்ப து ட ன் அ ய ல்
நாடான இந்தியாவும் இத்
திட்டத்தினுல் மின்சக்தி
268 அடி வசதியினைப் பெறக்கூடும்.
LfD. ) அபிவிருத்தி குன்றிய புத்
825 , , தள சிலாபக் கடல் நீர் ஏரி
கள், யாழ்ப்பாண, ஆனையி
650 , , றவு, தொண்டமானற்றுக்
250 ,, கடலேரிகள் நன்னீராக்கப்
பட்டு சுபீட்சம் அடைய
167 , , வழிபிறக்கலாம்.
3யரும் /யரும்
Զ.u/u/ժ5ւծ 76ir g) u//fg//76ir'

Page 59
OldMill the (8est
P.K. PARAMI
"KANDIAH
GENERAL MERCHANTS
DEALERS IN CEYLO
109, 92 ES9R S.
°ipиоие: 338 63
Tete { Gram: “SRIDHARAN'''
Brau
The Zuiners Corporatic
Importers, Exporters & General Mercha
109, Old Moor Street, COLOMBO-12.
°tРИоие: 33863 Ext, No.


Page 60
இன்றைய தமிழ்
இன்றைய தமிழ் இலக்கியத் தி ன் பொதுவான சில போக்குகளைப் புரிந்து கொள்ள நாம் பின்வரும் மூன்று கேள்வி களே எழுப்பிப் பார்க்கலாம்.
1. அமர இலக்கியம் படைப்போர் யார்?
2. சமுதாயத்தின் "எரிகிற பிரச்சினைகள்"
எவை?
3. பாட்டாளி வர்க்கக் கலை இலக்கியம்
என்பது என்ன?
அமர இலக்கியம் பற்றி-காலம் கடந்து பேசப்படும் எழுத்து பற்றிக் கலை ஞர்கள் குரல் கொடுப்பது ஒன்றும் நமக் குப் புதிதல்ல. அரசியல், பொருளாதார, சமூக இடிபாடுகளுக்கப்பால் நின்று படைக் கப் ப டு ம் எழுத்துத்தான் அமரத்துவம் பெறுகிறது என்று இந்தக் கோட்பாட்டின் வக்கீல்கள் வாதாடுகிறர்கள். இவர்கள் அரசியல்யும் இலக்கியத்தையும் இருவேறு துருவங்களாக்கி-இன்னும் கொஞ்சம் பச் சையாகச் சொல்வதானல் அரசியலைக் காமுகஞகவும் இலக்கியத்தைப் பத்தினியா கவும் பாவித்து, இரண்டையும் கலந்து விடு வதஞல் இலக்கியத்தின் பத்திணித் தன்மை சிதைந்து போய் விடுவதாகக் கூக்குரலிடு கின்றர்கள். இலக்கியம் பத்தினியுமல்ல. விபச்சாரியுமல்ல. அரசியல் சாக்கடையு மல்ல; தீர்த்தமும் அல்ல. அரசியலும் இலக் கியமும் ஊடும் பாவுமாகப் பிணைந்து வளர்ந்து வந்திருப்பதைத்தான் வரலாறு எடுத்துக் காட்டுகிறது. "புறநானூற்றில் இருந்து "போர்க்கோலம் வரை எந்த இலக்கிய சிருஷ்டி தம் கால அரசி ய ல் நிலைக்கு அப்பாலிருந்து படைக்கப்பட்டிருக் கிறது? இளங்கோவடிகளில் இருந்து இளங்

1p. 6 ji ji III SI ji 5 si
இலக்கியம்
- it is? Sir
கீரன் வரை எந்த இலக்கிய ஆசிரியன் சம கால அரசியல் தத்துவார்த்தக் கருத்துக்க ளால் பாதிக்கப்படாமல் இருக்கிருன்?
சமூக, அரசியற் பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இலக்கியம் படைப்ப தாகக் கூறும் மகரிஷி தமது அண்மைக்கா லப் படைப்பான 'தரையில் பிடித்த மீன்' என்ற குறுநாவல் மூலமாகப் பைத்தியக் காரர்கள்தான் இந்த இடிபாடுகளுக்கு அப் பாற்பட்டவர்கள் என்பதை நிரூபணம் செய்திருக்கிருர், என்றும் நித்யத்வத்தைத் தேடும் லா. ச ரா. போன்றேர் மனிதன் சந்திர மண்டலத்தில் கால் வைத்ததுவோ - வியட்நாமில் பெருகும் ரத்த வெள் ள மோ-சமுதாயத்தின் வறுமையோ தம் மில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை என்று கூறுவதைக் கொண்டு சமு தாய எண்ணங்களே ஊடுருவப்படாத வெறும் மொழியியற் புதிர்களாக அவர்க ளது இலக்கியங்கள் ஏன் காணப்படுகின் றன என்பதை புரிந்து கொள்ள முடியும். உணர்ச்சிப்பிண்டமான ஒரு கலைஞனுல் ஒரு மனித தத்துவத்தின் மகோன்னதமான சாதனைக்காக மகிழ்ச்சியுற முடியவில்லை என்ருல் - ஒரு சமூக அநீதியைக் கண்டு குமுற முடியவில்லை என்ருல் அது எவ்வளவு வேடிக்கையானது? மக்கள் வாழ்க்கையில் காலூன்ருது தங்களது சொந்த கொப்பணு வஸ்தையில் இவர்கள் உருவாக்கும் இலக்கி யங்கள் வாழுமா வர் ழாதா என்பதைக் காலம் தீர்க்கும்.
இவர்களில் ஒரு சாரார் நடைமுறைப் பிரச்சினைகளைப் பாராது கண்களை இறுக மூடிக் கொண்டு கபாடபுரத்திலும் மணிபல் லவத்திலும் போய்க் குடியேறி விடுகிறர் கள். ' ரோமபுரியின் பெருஞ்சிறப்பையும்
1. லா. ச. ராவுடனுன கலந்துரையாடல் -
கண்ணதாசன்.

Page 61
இன்றைய தமிழ் இலக்கியம்.
பழந்தமிழகத்தின் அருஞ் சிறப்பையும் இணைக்கும் விரிவான காவியமாக ரோமா புரிப் பாண்டியன் உங்களைக் களிப்பில் ஆழ்த்துவான்'? என்று எழுதும் கலைஞர் மு. கருஞநிதியின் இந்த வார்த்தைகள் இவர்களது போக்கை சிறப்பாகப் பிரதிப லிக்கிறது.
இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் துன் பியல் ஒரு யதார்த்த நிலையே. ஆஞல், அவை இலக்கியத்தில் பிரதிபலிக்கப்பட வில்லை. 44 விவசாயிகள் கீழ் வெண்மணி யில் உயிருடன் எரிக்கப்பட்டது இன்றைய தமிழ்ச் சமுதாயத்தின் துன்பியல் இல் லையா? பெரும்பான்மையான தமிழ் எழுத் தாளர்களுக்கு தாம் என்ன செய்ய வேண் டும் என்பது பற்றிய சமுதாயப் பொறுப்பு g|మడి). * * 3
கலைஞரின் கூற்றில் இருந்து மூன்று அம் சங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கி s).
1. இவர்கள் காவியம் படைக்கிருர்கள்.
2. பழஞ்சிறப்பை நினைவு கூர்கிருர்கள்.
3. மக்களைக் களிப்பில் ஆழ்த்துகிருர்
கள்.
யதார்த்தமான துன்பியல் நிலையில் இருந்து மக்களை மானசீகமான சொரிக்க பூமிக்கு இவர்கள் அழைத்துச் செல்கிருர் கள் . வெறும் துப்பறியும் நாவலுக்கு வர லாற்றுச்சாயம் பூசிவிட்டு அதைக் காவியம் என்று கூறவும் அவர்கள் தயங்குகிருர்கள் இல்லை. இது தமிழ்ச் சமுதாயத்தை பிடித்த சr) பக்கேடு.
சமுதாயத்தின் சாதாரண பிரச்சினை கள் அல்ல- எரிகிற பிரச்சினைகள்" எவை என்பதை ஒரு எழுத்தாளன் எப்படித் தீர் மாணிப்பது என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கி றது.41 என் கதை பிரச்சினைகளின் பிரச்சினை? என்று கூறிய ஜெயகாந்தனுக்கு - 'பிரள யம்' எழுதியவருக்கு இந்த நிலை ஏற்பட்டி ரு ப் பது தா ன் துரதிர்ஷ்டவசமானது. தெளிவான சமுதாயக் கண்ணுேட்டத்தில் நின்று பார்த்தபோது தெரிந்த பிரச்சினை களை கொள்கைப்பிடிப்பு தளர்ந்து போன

மு. நித்தியானந்தன் 43
தால் மைக்ரஸ்கோப் வைத்துத் தேட வேண்டியதாகி விட்டது. சமுதாயத்தின் நாடித்துடிப்பு, காலத்தின் கண்ணுடி, சமூ கத்தின் ஊதுகுழல், தீர்க்கதரிசி என் றெல்லாம் கூறப்படுகிற ஒரு எழுத்தாள னுக்கு தான் வாழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டத்தின் எரிகிற பிரச்சினைகள் தெரிய வில்லை என்ருல் இது எவ்வளவு வேடிக்கை unt 607 gi?
சர்வதேச ரீதியில் ஏகாதிபத்தியத் தியத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்கத் தினரின் எழுச்சி இன்று புதிய உத்வேகத்து டன் செயற்பட்டு வருகின்றது. இந்தியாவி லும் ஏகாதிபத்திய, நிலப்பிரபுத்துவ, தரகு முதலாளித்துவத்திற்கு எதிராக விவசாய வர்க்கம் கலகக் கொடி தூக்கிவிட்டது என்பதைத்தான் நக்ஸல் பாரியல் இருந்து சீகாகுளம் வரை சிதறி விழும் தீப்பொறி கள் நிரூபணம் செய்கின்றன. இலங்கையி லும் சாதிக் கொடுமைக்கு எதிராக 66 அக் டோபர் இயக்கமும், மலைநாட்டில் லட் சோப லட்சம் தொழிலாளர்கள் ஆங் காங்கே பெரும் போராட்டங்களில் ஈடுபட் டிருப்பதும் தொழிலாளர் வர்க்கம் வீர உணர்வு கொண்டு செயற்படத் தொடங்கி விட்டதைக் காட்டுகிறது. வரலாற்றைப் படைக்கும் உழைக்கும் மக்களுடன் தன்னை யும் பிணைத்துக் கொள்ளும் கலைஞனுக்குத் தான் அந்த மக்களின் பிரச்னைகள் தெளி வாகும். அந்த நிலையில் இருந்து புரள்கிற போது வேறு என்னவென்னவோ வெல் லாம் பிரச்னைகளாகத் தெரியும்.
அடுத்த சாரார் சமூகப் பிரச்சினைகளை இலக்கியம் உள்ளடக்க வேண்டிய நிர்ப்பந் தத்தை உணர்ந்தும் தெளிவானதும் விஞ் ஞான ரீதியிலுமான சமுதாயப் பார்வை இன்றி இலக்கியம் படைத்துக் கொண்டு வருகிருர்கள். தாங்களும் தொழிலாளர், உழைப்பாளிகளின் பிரச்சினைகளைப் பற்றி எழுதித்தான் வருகிருேம் என்று இவர்கள் கூறுகிருர்கள். "என்னுடைய பல சிறு
2. மு. கருணுநிதி. முன்னுரை ரோமாபுரிப் பாண்
டியன்’ 3. ஆர். சேஷ ஐயர் - தாமரை செப். 1969. 4. தகழி சிவசங்கரம் பிள்ளை - ஜெயகாந்தன்
பேட்டி, ஆனந்த விகடன்.

Page 62
44 இன்றைய தமிழ் இலக்கியம்.
கதைகள், நாவல்கள் சமுதாயத்தின் அடி மட்டத்தில் உள்ளவர்களின் பிரச்சினைகளைப் Luntrřá6) sirpsor" "ostair sagrř 5rt. utřAbsgrr ரதி. ஆம், இப்படிப்பட்ட படைப்புகள் சமு தாயப் பிரச்சினைகளை வெறுமனே பார்ப்ப தோடு திருப்தியுறுகின்றன. கண்ணிர் வடிப் போருடன் சேர்ந்து தாமும் ஒப்பாரி வைக் கிருர்கள். இது யதார்த்த எழுத்து அல்ல, புதுமைப்பித்தனும் 'பொன்னகரம்' எழு திஞர்; விந்தனும் 'முல்லைக்கொடியாள்’ எழுதிஞர்; கே. ராமசாமியும் "பசிகள்' எழுதினர் . வாழ்வின் அடித்தளத்தில் வாழாமல் வெந்து கொண்டிருக்கிறவர்களை இவர்கள் அப்படியே படம் பிடித்துக் காட் டிஞர்கள். உள்ளதை உள்ளவாறே சொல் வதல்ல-வெறும் துயரங்களை வார்த்தைக ளில் வடிப்பதல்ல, அதற்கும் மேலே அத்து யரங்களின் ஆழமைவு, அதற்கான கார ணங்கள், அவற்றின் வ ர ல |ா ற் று த் தொடர்பு, பொருளாதாரப் பகைப்புலன், இது ஒரு சமூக அநீதி என்று உணரப்பட் டால் சமுதாய நீதி எது என்று எடுத்துச் சொல்லும் தீஷண்யம் இவை போன்ற அம் சங்களே யதார்த்த நோக்கு உள்ளடக்குகி றது. பெரும்பாலான தென்னித்திய எழுத் தாளர்கள் மக்களின் வாழ்க்கைப்பிரச்சினை களை வெறும் இலக்கியத்திற்கான "சப் ஜெக்ட்" என்ற அளவில் மட்டுமே நோக்கு கிருர்கள். 'தமிழகத்தில் எதார்த்த நெறி யில் எழுதும் நாவலாசிரியர்களைப் பார்ப் பது மிகவும் அ ரி த T யி ரு க் கி ன் றது. எதார்த்த நெறி என்ன என்று இங்குள்ள * முற்போக்கு நாவலாசிரியர்கள் பலர் புரிந்து கொள்ளவில்லை என்பதற்கு அவர் களின் படைப்புக்களே சாட்சிகளாகின் றன. 6
நம் முதலிரு கேள்விகளுக்கான பதி லைத் தென்னிந்திய எழுத்துக்களில் காண முடிகிறது என்ருல் மூன்ருவது கேள்விக்கு ரிய பதிலை இலங்கை எழுத்தில்தான் தேட முடிகிறது.
இலக்கியம் மக்கள் வாழ்க்கையிலி ருந்து உருவாகிறது.
இலக்கியம் மக்களுக்காக உருவாக்கப் படுகிறது.

மு. நித்தியானந்தன்
இவை எளிய உண்மைகள் எனினும் இவற்றின் உள்ளடக்கத்தைத் தெளிவு படுத்திக் கொள்வது அவசியமாகிறது.
மக்கள் யார்? சமுதாயத்தின் உந்து சக்தி எது?
" "தொழிலாளி, முதலாளி, ஏழை, பணக்காரன், காந்தீயவாதி, தீவிரவாதி, வணிகன், உழைப்பாளி எல்லாம் அடங்கி யதுதான் சமுதாயம்' 7 என் கி ரு ர் நா. பார்த்தசாரதி.
இந்த வரைவிலக்கணம் பிழையானது,
சமுதாயத்தில் இந்தனை பிரிவுகள் )િની 8).
தொழி லா O உழைப்பாளியாயும் ஏழையாயும் தீவிரவாதியாயும் காணப்படு கிருஜன், முதலாளி பணக்காரஞயும் காந்தீய வாதியாயும் வணிகஞயும் காணப்படுகி ருன் ,
ஒரு பொருள் பல கண்ணுடிகளில் பிரதி பலிக்கப்படுவதால் அது பல பொருள்க ளாகி விடாது.
சமுதாயத்தில் இரண்டு வர்க்கங்கள் தான் காணப்படுகின்றன.
ஒன்று தொளிலாளி வர்க்கம் - இவர் கள் மிகப் பெருந் தொகையாஞேர். மற். றது முதலாளி வர்க்கம் - இவர்கள் மிகச் சிறுபான்மையினர். தேசத்தை உழைப் பைச் சிந்தி உருவாக்குகின்ற லட்சோபலட் சக் கணக்கான மக்கள் வறுமையில் வாட, தேசிய வளர்ச்சிக்கு எந்தவிதப் பங்கும் செலுத்தாத மிகச் சிறுபான்மையோர் வளமாக வாழ வர்க்க முரண்பாடுகள் கூர் மையுறுகின்றன. இந்த இரு சமுதாயச் சக் திகளின் பரஸ்பர பாதிப்பை உணர்ந்து, சுரண்டுகின்ற சமூகப் புன்மையை எதிர்த்து ஒரு மனிதாபிமானம் மிக்க கலைஞன் கல கக் கொடி துரக்கும்போது தவிர்க்க முடி யாமல் உழைக்கின்ற வர்க்கத்தின் அணி யில் தன்னை இனங் கண்டு கொள்கிருன்.
5. கானும் என் எழுத்தும்' - தீபம் மார்ச் 70. 6. அசுரன் - போர்க்கோலம், 1969 (முன்னுரை) 7. தீபம், மார்ச் 1970. பக்கம் 44.

Page 63
இன்றைய தமிழ் இலக்கியம்
அந்தப் படைப்பாளியின் போராட்ட உணர்வும் மனிதாபிமான உணர்வும் விகி தாசாரமானவை. உழைப்பாளர் வர்க்கம் சுரண்டப்பட்டு நாதியற்றுக் காணபடுவ தைக் கண்டு எவ்வளவிற்கு மனிதாபிமான உணர்வு கொண்டு அவர்களை அணைத்துக் கொள்கின்றனே அவ்வளவிற்கு போராட்ட உணர்வு கொண்டு சுரண்டுவோரைக் கருவ றுக்கத் திடசங்கற்பம் பூணுகிருன். அடிப் படையான சமுதாயப் புரட்சியால் மட் டுமே இது சாத்தியமாகிறது என்று காண்கி முன். இப் புரட்சிகர உணர்வு, செயலூக், கம் போர்க் களத்திலிருந்துதான் பிறக்கி றது. தொழிலாள, விவசாயிகள், புரட்சிக ரப் புத்திஜீவிகள் ஆகியோருக்காகப் புரட் சிகரக் கலை இலக்கியத்தைச் செய்த விரித்தல் வரலாற்றில் அவனது கடமையாகிறது. இலக்கியம் அதன் புரட்சிகர அரசியல் உள் ளடக்கத்தைப் பெற்றுக் கொள்கிறது.
* புரட்சி வெடித்தெழாத நிலையில் புரட்சிகரக் கலாசாரம் என்பது புரட்சிக் கான தளத்தைத் தயார் செய்கின்றது" என்கிருர் நம் காலக் கலை இலக்கிய மேதை ஒருவர். புரட்சிகரமான அரசியல் உள்ள டக்கத்தைப் பெற்றுக் கொள்ளவதோடு ஒரு கலைப் படைப்பு முழுமையாக மாட் டாது. " " கலையோ அல்லது இலக்கியமோ தாமாகவே சமூகத்தை ஆகர்ஷிக்க முடி யாது. அவை மக்களை இயக்கி செயலுக் குத் தூண்ட வேண்டும். மக்களின் இதயத் தைக் கவ்வும் போதுதான், தத்துவத்திற்கு உயிர்ச்சக்தி தோன்றுகிறது" என்கிழுர் கார்ல்மார்க்ஸ். ஒரு புரட்சிக்கான தளத் தைத் தயார் செய்யும் பொறுப்புணர்வினை அவன் புரிவதால்தான் சீர்திருந்திய சிறந்த கலை உருவத்தை அவன் கையாளுகிருன். மக்கள் செயலூக்கம் பெறத்தக்கதாக அவர்களை உந்தித் தள்ள ஒர் ஆயுதமாகத் தன் படைப்பு பயன்பட வேண்டும் என்ற ஆவலில் பொதுஜனங்களின் மிக எளிய பாஷையில் அவன் பேசுகிருன், புரட்சிகர கலேஇலக்கியத்திற்கான உருவத்தை இங்கே தேடிக் கொள்கிருன். பாட்டாளி வர்க்கக் கலை இலக்கியத்தின் இயல்பும் இலக்கண மும் இது தான்.
இந்த முன்னறிவுடன் ஈழத்தின் இலக்
கியப் போக்கை நோக்கலாம்.

மு. நித்தியானந்தன் 45
1956ல் இலங்கையில் ஏற்பட்ட தேசிய விழிப்புணர்வு தமிழ் இலக்கியக் கலாசா ரத்தைப் பெருமளவில் பாதித்திருந்தது. இலங்கை மக்களின் மரபுகள், பழக்க வழக் கங்கள், அவர் க ளின் அபிலாஷைகள், எழுச்சி வீழ்ச்சிகள் என்பனவற்றை அவ்வப் பிராந்தியப் பகைப்புலனில் வைத்து நம் நாட்டு இலக்கியம் படைக்கப்பட வேண் டும் என்ற கோட்பாடு முன்வைக்கப் பட் டது. அக்கால கட்டத்தில் வரலாறு முன் நிறுத்திய கேள்விகளுக்கு கைலாசபதி, இளங்கீரன் போன்ருேர் இயக்கரீதியாகப் பதில் தந்தனர்.
1956க்கும் 66க்கும் இடைப்பட்ட பத் தாண்டுக் காலத்தில் தேசிய இலக்கியம் வளர்ச்சியுற்று இன்று அதன் சரியான களத் தில் வேரூன்றுவதாயிற்று. இதனையே ‘கடந்த பத்தாண்டுக் காலத்தில் ஈழத்தி லக்கியம் தன் நிலை உணர்ந்ததாயிற்று"8 என்று குறிப்பிடுகிருர் க. கைலாசபதி, வெகுஜனத் த ன்  ைம வாய்ந்ததாயும், குணம்சத்தில் புரட்சிகரத் தன்மை வாய்ந் ததாயும், பாட்டாளி வர்க்கத்தினருக்குச் சேவை செய்வதாயும் இன்று ஈழத்தில் தமிழ் இலக்கியம் அதன் முன்னைய போக்கி னின்றும் அடிப்படையில் மாறுபட்டுக் காணப்படுகிறது. இந்த அடிப்படை மாற் றத்தை யோ. பெனடிக்ற் பாலனின் ""குட்டி"யில் இருந்து “சொந்தக்காரன்' வரை ஏற்பட்டுள்ள மாற்றம் என்று சுருக் கமாகக் குறிப்பிடலாம். 1956ன் தேசிய இலக்கிய வித்து இன்று பாட்டாளி வர்க் கக் கலை இலக்கியமாக அறுவடை செய்யப்
பட்டு வருகிறது என்றே கூற வேண்டும்.
** தேசியத்தின் தேவைகளை by tg யொட்டி இன்று நமது தாயகத்திலே தேசிய இலக்கியம், சனநாயகப் பண்பு பொருந் திய இலக்கியம், யதார்த்த இலக்கியம் முத லியன அவசியம் என்னும் குரல்கள் ஒலிக் கின்றன. காலத்தின் குரல்கள் அவை. அவ் வோசைகளுக்கு குரல் வடிவம் கொடுத்த வருள் ஒருவர் இளங்கீரன். '9 அவரது "நீதியே நீ கேள்' என்னும் நாவல் ஈழத்
8. க. கைலாசபதி, 'தமிழ் காவல் இலக்கியம்",
பக், 233, 9. க. கைலாசபதி, முன்னுரை 'நீதியே நீ கேள்"

Page 64
46 இன்றைய தமிழ் இலக்கியம்
தின் பாட்டாளி வர்க்கக் கலை இலக்கியத் தின் விடிவெள்ளி என்று கூறலாம். செ.
கணேசலிங்கனின் 'நீண்ட பயணம்", *செவ்வானம்', 'சடங்கு', 'தரையும் தாரகையும்". "" போர்க்கோலம்' போன்ற
நாவல்கள் நமது எழுத்தாளர்களின் சிந்த னையில் மனிதாபிமானமும் வர்க்க உணர் வும் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதை எடுத்துக் காட்டுகின்றன. யாழ்ப் பாணத்தின் சாதிப்பிரச்சினையைக் கூற வந் தவருக்கு கேரள அரசியலைப் பற்றிய விசா ரணை எதற்கு என்று குறைபடுகிரு ர் ஒரு வர். 10 அதுவே நமது நிறை என்று நாம் கூறலாம். உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் வீரவுணர்வு கொண்டு தம் சமுதாய அமைப்பை மாற்றி அமைக்கப் போராடு கிருர்களோ அங்கெல்லாம் நமது படைப்பாளிகளின் பார்வை வெகு அச்
கறையோடு விழுகிறது.
மலைநாட்டுத் தோட்டத் தொழிலா ளர்களை மையமாகக் கொண்டு எழுதப் பட்ட பெனடிக்ற் பாலனின் சொந்தக் காரன் குறிப்பிடப்பட வேண்டிய நாவலா கும். கே. டானியல், செ. யோகநாதன், நீர்வை பொன்னையன் போன்றேர் சிறு கதைத்துறையில் தம் காலத் தேவையை முழுமையாக நிறைவேற்றி வருகிருர்கள். பாட்டாளி வர்க்கக் கலை இலக்கியத்தை பசுபதி, சுபத்திரன் போன்ருேர் கவிதை யிலே ஒலித்திருக்கிருர்கள்.
சங்காரம், குடிநிலம் போன்ற நாடகங் களும் தீண்டாமை ஒழிப்புச் சித்திரக் கண் காட்சி, போராட்டத் தீ போன்றனவும் இந்த ஆரோக்கியமான இலக்கியச் சூழ் நிலையின் பிரதிபலிப்புகள் எனலாம். புதிய
10. போர்க் கோலம்" கு
ரம், (ஈழாகாடு).
11. குமரி மலர், நவம்பர்

மு, நித்தியானந்தன்
தலை முறையினர் இவற்ருல் பெரிதும் ஆகர் ஷிக்கப்பட்டிருக்கிருர்கள்
பழைய கலாசாரம், பழைய கருத் துக்கள், பழைய பழக்கங்கள், பழைய வழக் கங்கள் என்பனவற்றிற்குப் பதிலாக புதிய கலாசாரம், புதிய கருத்துக்கள், புதிய பழக்கங்கள், புதிய வழக்கங்களை ஸ்தாபிக் கும் புரட்சிகரமான வேலையில் நமது படைப்பாளிகள் தீவிரமாகப் பங்கெடுக்க ஆரம்பித்திருக்கிறர்கள். “கொதித்தெழு வோம் கொத்தடிமை தீர்வதற்கே என்று தலையங்கம் எழுதிய "புதிய தலைமுறைகள்" போன்ற சஞ்சிகைகள் பிரதிபலிச்கும் தென் னிந்தியாவின் முற்போக்குச் சிந்தனைகளை அவர்கள் கெளரவிக்கிருர்கள். நம்மைச் சூழ்ந்துள்ள வாழ்விற்கு புதிய தாள இசை களை சிருஷ்டிக்க ஆரம்பித்திருக்கிருர்கள்.
இவை இலங்கையில் கூர்மையுற்றுக் கொண்டிருக்கும் வர்ச்சஉணர்வுகளின் பிரதி
பலிப்பு மட்டும் தாஞ? அல்ல.
1952 di Lorrair GFool-ri as Trigueir *காந்தியும் மா-ஸே-துங்கும்' என்ற தலை யங்கத்தில் பின்வருமாறு எழுதியது.
'தென் ஆசியாவின் அடுத்த அல்ரை நூற்ருண்டுச் சரித்திரம் காந்தீயத்திற்கும் மாவோயிஸத்திற்கும் இடையே நடை பெறும் போட்டா போட்டியாக இருக்கப் போகிறதா?"11
"ஆத்மாவின் ராகங்கள்” ஒரு புறமும் "சொந்தக்காரன்", "போர்க்கோலம்" என்பன மறுபுறமும் இந்தப் போட்டா போட்டியைப் பிரதிபலிக்கத்தான் செப் கின்றன.
றித்து சோ. சிவபாதசுக்த
1952.

Page 65
Always visit Paramount Agenc Film Records, Sound Equipm
Now Available Sinhala Record
M. S. Fido, Walter Fdo. Anton Rodrigo,
Hilton
and also latest P's and EP's of J Shaw Nat King cole, Shikar Ra Landon and many other
PARAMOUN
26 l/l, N. H. M. A
(Reclamatio
PET TI T. Phone: 2 640 4
lUits seøt C
βια
V. M. RAŠAI
23, 5th Cro
COLOME T' Phone : 24 158

y for all Radio Compononts, hents and Electrical Goods.
's by your favourits Singers.
Pushparani Angeline Gumatilake, Gron leonards.
Silva,
im Reeves, Al Martino, Shandy m aur Shyam, Farz, Night in Tamil and Hindi Records.
IT AGENCY
bdul Cader Road, in Road)
A. H.
l'ampliments
1.
NGAM & CO.
iss Street,
3O - .

Page 66
அன்பு/சால் வாடிக்கையா இதோ இளந்தென் உங்களுக்கு ஒர் தி
மங்கல விழாக்களுக்கு அழகுடன் திகழ ம நித்தம் நித்தம் புத்த மகிழ நைலோன், நைலக் ஆடவரின் கம்பீர வகையில் எல்லாவித வேட்டி சால்வைகளுடன் மழலைச் செல்வங்க அவரவர் எண்ணத்தி தெரிவு செய்ய அன்ட
ஒருமுறை வருகை தாரு நிச்சயம் திருப்தியன
என்றும் தங்
AA
“ர ட் ை
146, 2-ம் குறுக்குத்
R A T 146, 2nd Cross St.
Grams: Fixed Prize

"7ைர்கைே7/ ாறல் மூலம் த்திப்பான செய்தி /
த மங்கையர் அணிந்து ணி ப் புரி சா ரிகளும் 5ம் புதிதாக அணிந்து ஸ் கொட்டன் சாரிகளும், தோற்றத்திற்கு ஏற்ற சேட்டிங்ஸ், சூட்டிங்ஸ் ன் சேட்ஸ் வகைகளும், ள் அழகோடு மிளிர ற் கேற்ப ஆடைகளைத புடன் அழைக்கின்றேம்!
ங்கள் !
Lவிர்கள்!!
கள் சேவையில்
0 ம் ஸ்”
தெரு, கொழும்பு-11.
N A M S
eet, COLOMBO-11.
Phone: 203 61

Page 67
திருக்குறள்
உத்திச
திருக்குறள், பயன்தருங் கருத்துக் களைக் கூறுவதிலும் டார்க்க, அவற்றைப் பல்வேறு வகைகளில் கூறுவதாலேயே சிறப்புப் பெறுகின்றது. இவ்வழி, பதி னெண் கீழ்க்கணக்கிலமைந்த ஏனைய, அற நீதி, நூல்களிலிருந்தும் குறள் வேறு படு கின்றதெனலாம். நீதியை உள்ளது உள்ள படியே சூத்திரத்தில் அமைப்பதுபோல அமைத்துச் சொல்லியிருந்தால் இந்த நூலில் கவிச் சுவையைக் காண இயலாது; ஆனல் திருவள்ளுவர் தாம் சொல்லும் கருத்தைப் பல்வேறு பாங்கில் சொல்லுகி ருt . அதனுல் இந்த நூல் வெறும் நீதி நூலாக மட்டுமிராமல் கவிதை நூலாகவும் விளங்குகிறது என்பர்.
வள்ளுவர், குறட் பாக்களை அமைத் துள்ள முறையே, புதியதொரு முறையா கும். விஞ எழுப்பி விடையளிக்கும் அமைப் புடையன சில குறள்கள்?. தனியே விஞவை மட்டும் கொண்டு விளங்கும் குறள்களுமுள
கற்றதினுல் ஆய பயன்என்கொல்
வாலறிவன் நற்ருள் தொழாஅர் எனின்
எனவரும் குறள் இத்தகையதே. கருத்துக் களை, உடன்பாடு, எதிர்மறை முறைகளி லும் அமைத்துள்ளமையைக் காணமுடிகின் றது. வாழ்க்கைத் துணையைப் பற்றி உடன் பாடு முகத்தால் கூறுவார்:
'மனத்தக்க மாண்புடையள் ஆகித்
தற் கொண்டாள் வளத்தக்காள் வாழ்க்கைத்துணை. பின், எதிர்முகத்தால் கூறுவதையும் காண லாம்.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்’

mv. O
6 | GF. GLIIISTIJFT
இவ்வாறு உடன்பாட்டு முறையிலும் எதிர்மறை முறையிலும் கருத்துக்களை அமைத்துச் செல்லும் பண்பு வள்ளுவரது குறட்பாக்களின் தலையாய பண்பு என்பர். * ஒன்றின் இலக்கணத்தை மட்டும்கூறி, அத ஞேடு கருத்துக்களைத் தொடர்புபடுத்தி நோக்குமாறு அமைந்துள்ள குறள்களு முள*. உடன்பாடு, எதிர்மறை ஆகிய இரு முறைகளும், ஒரே குறளில் இடம்பெறுமா
றும் அமைக்கப்பட்டுள்ளன.*
கூற்றுக்களை அமைத்த முறையும் இரு வகையின. குறட்பாக்கள், கவிக்கூற்ருக மட்டுமல்ல, பிற கூற்றுக்களாகவும் இடம் பெற்றுள்ளன .
‘என்ஐ முன் நில்லன்மின் தெவ்விர்
பலர்என்ஐ
முன்நின்று கல்நின் றவர்’
எனுங் குறள் போர்க்களத்தின் கண் வீரன் கூற்ருகும். அடுத்து வரும்,
*கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல்இனிது"
என்ற குறளும் மேற்கூறிய வீரனது கூற்றே யாம். இது மாற்றரசன் படையொடு பொருதானேர் வீரன் அது புறங்கொடுத்த தாக நாணிப் பின் அவன் தன்மேற் செல்ல லுற்ருனது கூற்று" என்பர். "நல்குரவு" அதிகாரத்தின் கண்ணும், வறியோன் கூற் றுக்களாக இரு குறட்பாக்களுள்ளன7.
1. திருக்குறள் ஆராய்ச்சியுரை - கி. வா. ஜ. பதிப்பு
2. குறள் 178
3. திருக்குறள் - வானுெலி மஞ்சரிக் கட்டுரை - க.
கைலாசபதி
4. குறள் 261
5. குறள் 51, 52, 53,
6. திருக்குறள் - பரி உரை.
7. குறள் 1048, 1049.

Page 68
50 திருக்குறள் உத்திகள்
இவை பொருட்பாலில் வருவன. காமத் துப்பால் முழுவதுமே காதலர்தம் கூற்றுக் களாகும். காமத்துப்பா லில், நாடகக் களத்தில், தலைவன், தலைவி, தோழி ஆகிய மூவரையும் பேசவிட்டு விலகும் வள்ளுவர், தன் கூற்றுக்களைப் பல வகைகளில் உரைக் குமாற்றைக் காணலாம்; பற்றுள்ள முறை யில் கூறுவதும், சில இடங்களில் பற் றில்லா வழிநின்றுரைப்பதும் உண்டு ?: நடு நெறி நின்றுரைப்பன சில குறள்கள் 19,
பன்னிலை மக்கள் தம் இயல்பறிந்து, அதற்குத்தக, கருத்துக்களை எடுத்துரைக் கும் முறை வள்ளுவர் கையாண்டுள்ள உத் திகளுள் சிறந்தவொன் ருகும். கேட்போன் தன்னைச் சான் ரு கக்கொண்டு தற்சுட்டும் முறையில் கருத்துக்களைக் கூறுவது வள்ளு வர் கையாண்ட உத்திகளுள் தலையாயது:
தன் உயிர்க்கு இன்மைதான்
அறிவான் என்கோலோ மன் உயிர்க்கு இன்னு செயல்’ ‘இன்ன எனத்தான் உணர்ந்தவை
துனணுமை வேண்டும் பிறர் கண் செயல்’
முதலிய குறட்பாக்கள் இத்தகையன. பிறர்க்குத் தீங்கு இழைக்காதே என வெறு மனே கூருது, இழைத்தால், எறிந்த பந்து திரும்புமாப்போல் நீ தீதுறுவாய்' எனத் தற்காப்புச் செய்யும் முறையில் ஒழுச் கஞ் சாற்றுங் குறள்களுமுள 11. கேட்போன்" தானே தன்நிலை உணரும் உணர்வூட்ட வல்ல முறையில் சில குறள்கள் அமைந்துள்
●Yf@薄f。
“கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுடை யார்? எனவருங் குறள் இவ்வழி நோக்கத் தகு வது; "உன் கருத்து உண்மையில் நன்று; எனின் நீ கல்லாதவன் ; ஆகவே ஏற்க மாட்டோம்' என்பதல்ல, "நான் கல்லா தோன் என்பதாலன்ருே என்னுரையைப் பிறர் மதித்திலர் இனிக் கற்பேன்" என்ற உணர்ச்சி பிறப்பதற்குத் தூண்டுகோலாய மைகிறது இக்குறள்.
அறிவுடையார் இப்படிச் செய்யமாட் டார் என நாகரீகமாக உரைக்குமாற்றல்

@ሪም. @ ሀ / /ጠrá፩/r ጠróም/ጠ ̇
நற்கருத்துக்களை நயம்பட உரைப்பது வள் ளுவர் பண்பு
*பொருட்பொருளார் புண்ணலம்
தோயார் அருட்பொருள் ஆயும் அறிவினவர்?
எனுங் குறள் இதற்கோர் எடுத்துக்காட் டாகும். ஒரொரு கால் அறிவுடையார் வழுக்கி விழினும் சில சொல் கூறியமாத்தி ரத்தே திருந்திவிடுவர். இவர் க் கு - நானுடை மாந்தர்க்கு - அறிவு நடையிற் கூறுவர் வள்ளுவர். 12
கரு த் து க் களை எடுத்துரைப்பதில், குறள் கையாளாத உத்திகளே இல்லை யெனலாம்; , அனுபவங்களை எடுத்துர ைக் கும் வழி அறக்கருத்துக்களைக் கூறுவது இவற்றுளொன் ருகும். 19 மிகைபட, அல் லது குறைப்படக் கூறு மாற்ருல் கருத்துக்க ளைப் பலப்படுத்தும் முறையையும் சில குறட்பாக்கள் கொண்டுள்ளன. 14 இன்னது செய்யற்க, செய்யின் இன்னது நேருமெ னச் சில இடங்களில் வள்ளுவம் கூறும். 19 எடுத்ததற்கெல்லாம் காரணம் வினவும் மாந்தருளரெனவே. அவர் க் கெல் லாம், இன்ன காரணத்தால் இது செய்யத்தக் கது, இது தகாதது எனக் குறள் கூறமுற்ப டும். 19 நம் சருத்தை உணர்ந்தார் போல், நம் கருத்துரைக்கும் முறையும் குறிப்பி டத்தக்கது. ஈண்டு,
*களித்தறியேன் என்பது கைவிடுக
நெஞ்சத்து ஒளித்த தூஉம் ஆங்கே மிகும்?
என்ற குறளை எடுத்துக் காட்டலாம்.
எத்துனைப் பிழை ஒருவனிடங் காணப்
படினும் இனித் திருந்தான் என ஒதுக்காது. நம்பிக்கையுடன், விட்டுவிடாது கூறும்
8. குறள் 1ே, 300,
9. குறள் 73. 10. குறள் 72. 11. குறள் 305. 12. குறள் 115, 136, 198. 13. குறள் 99, 318 14. குறள் 580. 15 குறள் 204. 16. குறள் 11, 31, 71

Page 69
திருக்குறள் உத்திகள்
பண்பு வள்ளுவரிடம் காணப்படுவதனைப் பல குறள் கொண்டு நிறுவலாம். இவ் வனைய குறள்களுன்,
'அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையான் பெண்மை நயவாமை நன்று' 'அறம் கூறன் அல்ல செயினும்
ஒருவரை புறங்கூருன் என்றல் இனிது
என வரும் குறள்கள் சில. பன்முறை கூறினும் செவிசாய்க்காத, கூறும் அறிவு ரைகளையும் இகழ்கின்ற, மாந்தர்களேயும் வள்ளுவர் அறிவார்; ஆதலின் , தம் சொல் பேணுதார் பால், தாமும் பேணு தார் போல் நடித்து அவரைத் தம்வழி அலைய விட்டுப் பிடிக்கின்ருர்;
'உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றேரான் எண்ணப்பட வேண்டாதார்’
முதலாய குறட்பாக்கள் இத்தகையன 17.
ஒன்றின் சிறப்பை வற்புறுத்த வள்ளு வர் கடைப்பிடிக்கும் வழிகள் பல. இரந்து பெறு', 18 ‘விற்றுப்பெறு', 19 கொடுத்துப் பெறு" 20 எனச் சில இடங்களில் வற்புறுத் தப்படல் காணலாம்; இதனைக் கொடுத்தா யினும் இதனை விலக்குக எனக் கூறும் குறள் மொழிகளுமுள 21
எண் முறைகளைக் கையாண்டு கருத்து ரைக்கும் புதியதோர் முறையையும் வள்ளு வர் கையாண்டுள்ளார் :-
“பல்லார் பகைகொளஸின் பத்தடுத்த
தீமைத்தே நல்லார் தோடர்கை விடல்? *ஒன்றெயதி நூறிழக்கும் ததர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு' 'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணுமை நன்று'
பேதை பெருங்கெழீஇ நட்பின்
அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்’ "நகைவகைய ராகிய நட்பின் e
பகைவரான

Ger. Guy ræfrarø ar 51
பத்து அடுத்த கோடி உறும் *பழுது எண்ணும் மந்திரியின்
பக்கத்துள் தெவ்ஓர் எழுபது கோடி யுறும் *அடுக்கிய கோடி பெறினிம்
குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்'
வள்ளுவர், தன் உணர்ச்சிகளை வெளிப் படுத்தல் மூலம் கருத்துக்களை எடுத்துரைத் தல் குறிப்பிடத்தக்கவொன் ருகும். இடித்து ரைத்தல், 22 கருணையொ டு கூறல், 23 இரக்க உணர்வெழுப்பல், 24 இழிவுச்சுவை பொருந்தக் கூறல், 23 வெகுண்டுரைத்தல் 29 முதலிய யாவும் வள்ளுவர் கொள்ளும் வழி களே. தன்னைத் தான் காக்கின் சினங் காக்க எனக் கூறும் வள்ளுவரே பல இடங் களில் சினந்துரைப்பார் ; 27 இனிய உள வாக இன்னத சொற் கொண்டு ஏசுவதும்
as mt 6ö5T as. 28
மக்கள் தம் இயல்பறிந்து பல ப ட க் கூறும் முறை தவிர, அணிகள் கொண்டு கருத்துக்களைத் தெளிவாகவும், அழகாக வும். எளிதாகவும் உரைப்பதும் வள்ளுவர் கையாண்டுள்ள உத்திகளுள் ஒன்ரு கும். உவமை அணி, குறட்பாக்களில் பல் வகைக ளில் அமைந்துள்ளது. அறிந்த பொருள் கொண்டு அறியாத பொருளை விளக்கலே பொதுவாகக் கொள்ளும் முறையாகும்?. இல்பொருட்களை உவமையாகக் கூறலு முண்டு. 30 ஒரு நீதிக்கருத்துக்குப் பிறி தொரு நீதிக் கருத்து உவமையாக அமைத லுமுண்டு. 31 அன்ருடம் நாம் கண்டும் காணுத பொருள்களினிடத்துள்ள அரிய
17. குறள் 893 18. குறள் 780. 19. குறள் 220, 703 20. குறள் 794, 864. 21. குறள் 250, 534, 22. குறள் 236. 23. குறள் 72 24. குறள் 314 25. குறள் 89, 140. 26. குறள் 90, 998. 27. குறள் 1062 28. குறள் 189, 196. 29. குறள் 396 30. குறள் 273. 31. குறள் 135, 153.

Page 70
7ؤ کی بجکر 3۔ دو: جلا, (A یعنی ہی تھ52
இயல்புகளைக் கண்டு, சமயம் வரும்போது, வள்ளுவர், அவற்றைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இவ்வழி,
‘தலையின் இழிந்த மயிர்அஆனயர்
மாந்தர் நிலையின் இழிந்தக் கடை"
என வருங் குறள் நுணித்து நோக்கு தற்குரி யது. நுட்பமான உவமைகளை மட்டும் கொண்டே, ஒரே பொருளுரைக்கும் குறள் களின் பொருள் வேறுபடுத்தப்படுவது முண்டு. 32
உருவக அணியையும் வள்ளுவர் பயன் படுத்தத் தவறவில்லை.
*அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுஉண்டோ மாதர் முகத்து' *இரவு என்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும் பார்தாக்கப் பக்குவிடும்’
முதலிய குறட்பாக்கள் இதன் பாற் சார்வ னவே. வேற்றுப் பொருள் வைப்பணியும் பல இடங்களில் அமைகின்றன. 39 புகழ் வதுபோற் பழித்தல் வள்ளுவருக்கேயுரிய முறையாகும். ** நுவலா நுவற்சி அணியும் பெருமளவு பயின்றுவரக் காணலாம்; 35 பின்வரு நிலையணியை இருவழிகளில்-ஒரே சொல் வேறு வேறு பொருளில் அடுத்த டுத்து வரும் படி வைப்பது, “ ஒரே சொல் ஒரே பொ ரு எளி ல் வற்புறுத்துமுகமாக இடம்பெறுவது 97 - வள்ளுவர் கையாள் வர். சொல்லும் பொருட்பெருமையை அழுத்தமாகப் புலப்படுத்த உயர்வு நவிற்சி அணியும் இடம்பெறும் 38
சொல்லாட்சியும் வள்ளுவர் கையாண் டுள்ள உத்திகளுளொன்றே. மிகச் சிறந்த சொற்களை மிகச் சிறந்த முறையில் கையா ளுவதே கவிதையென்பர்; சிறந்த சொற் கள், பொருளாளத்தைக் கொண்டமை
On Got .
"பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்?

 ̈ @ሪም. @ u/ ጠrásff ̇ /weዎ ጠ ̆
என்ற குறட்பா, இவ்வழி கூர்ந்து கவனித் தற்குரியது. 39 எச்சப் பொருள் தரும் சொற்கள் பல இருப்பவும், "கடை" என்ற சொற்களை வள்ளுவர் பல இடங்களில் குறிப்பதும் கருத்திற்குரியதே; 40 இவை யெல்லாம் க  ைட ப் பட்ட ன என்னும் பொருட் குறிப்புத் தோன்றக் "கடைச் சொற் பெய்தார் என்பர். 1 இவ்வணைய எடுத்துக்காட்டுக்கள் பலவுள.
இறுதியாக, பல்வேறு வகைச் சந்தங் களையும் உத்தியாகக் கொண்டு எளிதாகக் கருத்தைப் புலப்படுத்தும் வள்ளுவர்தம் திறத்தை உரைக்காவிடின் இக்கட்டுரை நிறைவற்றதொன்ற கவே அமையும்.
*பற்றுக பற்றற்ருன் பற்றினை
அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு"
என வருங் குறளில் வல்லோசைகளும், "ற்" ஒலிகளும் வலுவாகப் ப ற்  ைற உணர்த்தி, நெஞ்சைப் பற்றுதலைக் காண லாம். கொக்கைப் பாராதோரும்,
*கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து
மற்றதன் குத்து ஒக்க சீர்ந்த விடத்து'
என்ற குறள் மூலம் கொக்குக்குத்தும் வேகத்தை அறிதற்சாலும். முட்டாளுக்கு உபதேசம் செய்யப் போனவன், முட்டா ளாகிவிடுவான். உபதேசத்தின் பின்பும் முட்டாள் அப்படியே இருப்பான். பயன், இருவருக்கும் குழப்பமே எஞ்சியிருக்கும் இக்குழப்பத்தைக் கவிதையின் திரண்ட ஓசை காட்டுகிறது:
*காணுதாற் காட்டுவான் தான்காணுன் காணுதான்
கண்டானும் தான்கண்ட வாறு'
32. குறள் 215, 216, 217. 33. குறள் 129. 34. குறள் 336, 1073 35. குறள் 475. 36. குறள் 310, 965 37. குறள் 12, 297 38. குறள் 64, 85 39. திருக்குறள் ஆராய்ச்சியுரை; திருக்குறள் கடை
அ. ச. ஞானசம்பக்தன்.
40. குறள் 230, 315, 984, 41. வள்ளுவம் - வ. சுப. மாணிக்கம்.

Page 71
திருக்குறள் உத்திகள்
புறத்தாற்றுப் போக்கு, ஒகார அளபெடை ஒசையாலும் இழித்துரைக்கப்படுகின்றது:
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை
ஆற்றின்புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்"
வேறும் பல குறள்கள் இவ்வாறமைதல் காணலாம்.
வள்ளுவர் கையாண்டுள்ள உத்திகள், இதுவரை கூறிய, அமைப்பு முறை, கூற்று, இயல்புக்குத்தகக் கூறும் முறை, அணி , வகை, சொல்லாட்சி, சந்தம் முதலியன மட்டுமன்று. ஒவ்வொரு குறளுமே ஒவ் வொரு உத்திகளைக் கொண்டுள்ளன எனக் கூறுதுவ மிகைக்கூற்றெனினும், பொருந் துங் கூற்றேயாம். வ. வே. சு. அய்யர் இது பற்றிக் கூறுவார் : மனிதனல் என்றும் வெளியிடப்படாத மிக ஆழமான கருத்துக் களைச் சுருக்கி இந்த ஆசிரியர் ஏழே சீர்க ளில் அமைத்திருக்கிருர். இந்தச் சிறிய இன் னிசைக் கருவியை அவர் சிறந்த இசை வல் லுநனைப் போல் எவ்வளவு அழகாக வாசித் திருக்கிருர் . ஒளிவிடும் சா துரி யம்,
ஒதற் கெளிதா யுணர்த வேதப் பொருளாய் மிக உள்ளுதெ7 றுள்ளுதெ/7 வள்ளுவர் வாய்மொழி

@óም. @ ሀ/ /ጠrá54r/w¢”/ጠ” 53
நகைச்சுவை, அழுத்தமாகச் சொல்லு தல், கற்பனை, முரண்பாட்டு நயம், வினவு தல் ஒவியம் போன்ற உவமைகள் - இப்ப டிக் கருவிலே திருவுடைய கலைஞன் ஆயிரம் ஆயிரம் உத்திகளில் ஒன்றையும் அவர் இந்த முழுமையான சிறந்த கலைப்படைப் பில் ஆளாமல் விட்டுவிடவில்லை. 42
இன்னெரு கருத்தும் இங்கு வலியுறுத் தப்பட வேண்டியதாகும். குறள்வெண்பாக் கள் - அவற்றின் தன்மை காரணமாக - ஏனைய கவிதைகள் போல் அழகு மிகுவதற் குரிய வாய்ப்புக்கள் நிறைந்ததல்ல. இந்தப் பெரிய இடுக்கண்ணையும் மீறிக் குறள் சிறந்த கவிதைகளைத் தன்னகத்தே கொண் டுள்ளது. 48 வள்ளுவர் கையாண்ட பல் வேறு வகை உத்திகளும் குறட்பாக்களின் கவிதைத் தன்மைக்கு துணை செய்வனவே யாகும்.
42. திருக்குறள் - ஆராய்ச்சியுரை கி. வா. ஜ. மேற்
கோள். m
43. திருக்குறள் - ஆராய்ச்சியுரை - திருக்குறள் கடை
அ. ச. ஞானசம்பந்தன்.
ற் கரிதாகி விளங்கித் - தீதற்ருேரர்
றுள் 7ெ முக்ருகுமே

Page 72
பொருளாதார விரையும் அற
3alias நான்கு நூற்முண்டுகளுக்கு மேலாக அந்நியர் ஆட்சியின் கீழ் அல்லற் பட்டுக் கிடந்தது. அக்காலத்தில் ஆட்சி பீடத்திலிருந்த அந்நியர்கள் எடுத்துக் கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் இந்நாடு தொடர்ச்சியாக அவர்களிடம் parig-u9u-Gő கிடக்கவேண்டிய ஒரு நிலையை ஏற்படுத்திவிட்டன. இலங்கை 1948ம் ஆண்டில் அரசியற் சுதந்திரத்தைப் பெற்ற போதும், கூடவே பொருளாதார சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்ள அத ஞல் முடியவில்லை. அரசியற் பிரகடன மொன்றி லம் அரசியற் சுதந்திரத் தைப் பெற்ற போதும் கூடவே பொருளா தார சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்ள அதனுல் முடியவில்லை. அரசியற் பிரகடன மொன்றின் மூலம் அரசியற் சுதந்திரத்தை வழங்கிவிட மு டி வ  ைத ப் போ ல பொருளியற் சு த ந் தி ரத்  ைத யு ம் பிரகடனம் ஒன்றின் மூ ல ம் வழங்கி விட முடியாது. பொருளாதார அமைப்பு முழுவதிலும் ஒரு அடிப்படை மாறுதலை ஏற்படுத்துவதன் மூலமே பொருளாதார
சுதந்திரத்தை ஈட்ட முடியும். இதற்கு ஆண்டுகள் பல தேவை.
இலங்கையை ஆள வந்த அந்நியரின் முக்கிய நோக்கம் இந்நாட்டில் கிடைக்கக் கூடிய மூலவளங்களை மலிவாகப் பெற்றுத் தன் நாட்டில் விருத்தியை ஏற்படுத்துவ தா கும். ஏ ற் க ன வே இரு ந் த மூ ல வ ள ங் களை சு ர ண் டு வ தோ டு மாத்திரமல்லாது, மேலும் மூலப் பொருள் களின் உற்பத்தியிலேயே இந்நாட்டைப் பூரணமாக ஈடுபடுத்தி விடுவதன் மூலம் ஆட்சி பீடத்தில் இருந்தோர் தம் தாய் நாட்டிற்குத் தொடர்ச்சியான நன்மை யைத் தேடிவைக்க முடிந்தது. அதாவது ஆட்சிபீடத்தில் இருந்தோரின் நாடு கைத் தொழில் விருத்தியை அடைய, வேண்டிய

சுதந்திரத்தை
மூலப் பொருள்களை இந்நாடு வழங்குவ தோடு மாத்திரமல்லாது அங்கு செய்யப் பட்ட கைத்தொழிற் பொருள்களுக்குத் தேவையான சந்தையை இந்நாடு வழங்கு வதாகவும் இருந்தது. ஆகவே அந்நியராட் சியின் கீழிருந்த இலங்கை மேலை நாடுகளின் பொருளாதார விருத்திக்கு அத்தியாவசிய மான மூலப் பொருள்கள், சந்தை வசதி, இலாபகர முதலீட்டிற்கான வாய்ப்பு மூன் றினையும் வழங்கிக் கொண்டிருந்தது. சுருங் கக் கூறின் இலங்கை தனது வருவாய்க்கு ஏற்றுமதியையும் நுகர்விற்கு இறக்குமதி யையும் நம்பியிருக்க வேண்டியதாயிற்று. ஏற்றுமதி, இறக்குமதி ஆகிய இரண்டிற் கும் விருத்திபெற்ற மேலை நாடுகளின் தய விலேயே எம் நாடு தங்கியுள்ளது. இந் நிலையை நாம் பொருளாதார அடிமைநிலை என வர்ணிக்கலாம். இலங்கை அரசியற் சுதந்திரத்தைப் பெற்றபோதும் இப்பொரு ளாதார அடிமைநிலை தொடர்ந்து நிலவிக் கொண்டேயிருக்கிறது.
இலங்கை ஒரு ஏற்றுமதி - இறக்குமதிப் டொருளாதாரமாக ஆக்கப்பட்டதன் கார ணத்தால் எழுந்துள்ள விளைவுகள் பாரதூர மானவை. எமது ஏற்றுமதிப் பொருள்கள் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சி யான விலை வீழ்ச்சியால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலேயர் இலங் கையில் மாத்திரமல்லாது தாம் ஆட்சி செய்த ஏனைய குடியேற்ற நாடுகளிலும் தமக்கு வேண்டிய மூலப் பொருள்களின் உற்பத்திக்கே ஊக்கமளித்திருந்ததன் கார ணமாகத் தற்போது இக்குடியேற்றநாடு கள் நமது உற்பத்தியை விற்பனை செய்வ தில் ஒன்றையொன்று போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போட்டி விலை வீழ்ச்சிக்கு வழிவகுக்துக் கொண்டிருக்கி றது. மேலும் அமெரிக்கா போன்ற நாடு கள் தற்போது தமக்கு வேண்டிய மூலப் பொருள்களைச் செயற்கை முறையில் செய்ய ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவின் செயற்கை றப்பர் உற்பத்தி இயற்கை றப்

Page 73
நோக்கி இல
பருக்கான விலை யை வீழ்ச்சியடையச் செய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல் லாமல் எமது ஏற்றுமதிப் பொருள்களை வாங்கும் நாடுகள் தம்மிடையே ஒன்று சேர்ந்து சுங்கக் கூட்டுக்களை (Customs Union) அமைத்துக் கொள்வோர் தனியு rfna63)LD (Monopoly) யையுடையனவாக இருத்தலாலும் எம் பொருள்களுக்குநியாய மான விலையைப் பெற முடியாமலிருக்கி றது. இத்தகைய சாரணங்களால் வீழ்ச்சி யடைந்து கொண்டிருக்கும் விலையைத் தடுத்து நிறுத்தித் திரும்பவும் உயர்த்தக் கூடிய சக்தி எம்மிடமில்லை. எமது ஏற்று மதிப் பொருள்களாகிய தேயிலை, றப்பர், தெங்குப் பொருள்கள் உலக உற்பத்தி யோடு ஒப்பிடுமிடத்து சிறிய அளவினதா கவேயுள்ளது. ஆகவே உலகச் சந்தையில் எமது பொருள்களின் நிரம்பலைக் கட்டுப் படுத்துவதன் மூலம் விலையினில் ஆதிக்கத் தைச் செலுத்தக் கூடிய சக்தி எமக்கில்லை. உலக சந்தை நிரம்பலிற் தனியுரிமைச் சக்தியைக்கொண்டோரே தம் விருப்பப்படி விலையினை ஏற்றி இறக்க முடியும். உலக சந் தையில் எம் ஏற்றுமதிப் பொருட்களுக் குரிய விலையை நாமே நிர்ணயிக்கச் சக்தி யற்றவர்களாகையால் அச் சந்தையில் நில வும் விலையையே நாம் தரப்பட்ட விலையா கக் கொள்ளுதல் வேண்டும். அவ் விலை வீழ்ச்சியடைந்தாலுஞ் சரி உயர்ச்சியடைந் தாலுஞ் சரி அதை நாம் மெளனமாக ஏற் றுக் கொண்டேயாக வேண்டும். எமது ஏற் றுமதிப் பொருட்களுக்கான விலை வீழ்ச்சி யடைகிறதேயென்பதற்காக அப் பொருள் களை உற்பத்தி செய்வதற்கான உற்பத்திச் செலவு குறைந்து விடமாட்டாது. உற்பத் திப் பொருளுக்கான செலவு குறையாமல் இருக்க அதனுடைய விலை வீழுமானுல் உற் பத்தியாளர் நட்டமடைய வேண்டியேற் படும், நட்டமேற்பட்ட உற்பத்தியாளர், அத் நட்டம் தொடச்சியாகத் தம்மைப்
பீடித்துக் கொள்ளுமானுல் உற்பத்தியைக் கைவிடுவர் அல்லது குறைப்பர். உற்பத்தி கைவிடப்பட்டால் அல்லது குறைக்கப் பட்டால் அவ்வுற்பத்தியின் கண் ஈடுபட்டி
 

ங்கை
ருந்த தொழிலாளர் வேலையிழப்பர். நாட் டில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரு கும். வேலையிலிருந்தோர் வேலையை இழக் கும்போது வருமானத்தையும் இழக்கின் றனரா கையால் நாட்டின் வருமானம்தேசிய வருமானம் குறைவடையும். வேலையிழந்தோர் வருமானத்தையும் இழக் கையில் அவ் வருமானத்தைக் கொண்டு வாங்கப்பட்டுக் கொண்டிருந்த உள் நாட் டுப் பொருட்களுக்கும் கேள்வி குறையும். கேள்வி குறைந்து, விலை குறைய அப் பொருட்க ளின் உற்பத்தியாளருக்கும் நட்டமேற்படுவதால் அங்கும் உற்பத்தி குறைக்கப்பட்டு, அங்கும் வேலையின்மை தலை தூக்கும். ஆகவே ஏற்றுமதிப் பொருள் களின் விலை வீழ்ச்சி ஏற்றுமதித் துறையினை மட்டுமன்றி உள் நாட்டு உற்பத்தித் துறை யினையும் எவ்வாறு பாதிக்கின்றது என் பதை உணர முடிகிறது. இத்தகைய விளை வைப் பொருளியலில் பெருக்குமெண் siasm 6 (Multiplier Effect) 6T at 960A Lu துண்டு.
மேலும் எம்மை ஆட்சி செய்த அந்நியர் எமது சொந்த நுகர்விற்கான உணவுப் பொருளுற்பத்தியிலோ மற்றுங் கைத் தொழிற் பொருளுற்பத்தியிலோ எதுவித ஊக்கமுங்காட்டவில்லை. பதிலாக இவ்வுற் பத்திக்கான முயற்ச்சிக்கு முடிந்தவரை இடையூருகவுமிருந்தனர். எம் நாடு கைத் தொழிற்பொருள்களை உண்டுபண்ண ஆரம் பித்தால் தம் நாடு தனது கைத்தொழிற் பொருளுக்கான சந்தையை இழக்க நேரிடு மென அவர்கள் தெரிந்திருந்தார்கள். இத் தகைய அவர்களது நடவடிக்கை, தற் போது நாம் நமது அத்தியாவசிய நுகர் பொருள்களுக்கே பிறநாட்டை நம்பியி ருக்ச வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட் டது. இறக்குமதி இல்லாமல் எம்நாட்டு மக்கள் தமது அன்ருட சீவியத்தையே நடாத்த முடியாமல் இருக்கிருர்கள். அதே நேரத்தில் இறக்குமதிப் பொருள்களின் விலையோ, எமது ஏற்றுமதிப் பொருள்க ளின் விலைப்போக்கிற்கு நேரெதிர் மாரு ன தாக, தொடர்ந்து உயர்ந்துகொண்டே சென்று கொண்டிருக்கிறது. 1962-ம் ஆண் டிலிருந்து இன்று வரை எமது இறக்குமதிப் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து
*... தில்லைநாதன் B. A. (Hons)

Page 74
56 பொருளாதார சுதந்திரத்தை.
கொண்டே வந்துளது. இறக்குமதி அத்தி யாவசியப் பொருள்களே உள்ளடக்கியிருப் பதால், விலை உயருகிறதே என்பதற்காக இறக்குமதியை நிறுத்திவிட முடியாதவர்க ளாகவுள்ளோம். நாம் எமது ஏற்றுமதிப் பொருள்களின் விலைகளை நிர்ணயிப்பதில் சு க் தி யற் ற வர் க ளா க இருப்பதைப் போலவே, இறக்குமதிப் பொருள்களின் வில்களைக் கட்டுப்படுத்தவும் சக்தியற்ற வர்களாக உள்ளோம். உலக நாடுகளோடு ஒப்பிடும்போது இலங்கை ஒரு மிகச் சிறிய தீவாகும். இத்தீவிலுள்ளோர் செய்யும் இறக்குமதி உலக சந்தை விலையைப் பாதிக் கக்கூடிய அளவில் இருக்கமுடியாது. ஆகவே உலக சந்தையில் நிர்ணயிக்கப் பட்ட விலையிலேயே நாம் அப்பொருள்களை வாங்கவேண்டும்.
எமது ஏற்றுமதிப் பொருள்களின் விலை கள் தொடர்ச்சியான வீழ்ச்சியையும் இறக் குமதிப் பொருள்களின் விலைகள் தொடர்ச் சியான உயர்ச்சியையும் அனுபவித்துக் கொண்டிருப்பதால் எமது நாட்டின் வர்த் 55 dróg Gaslib (Terms of Trade)
ஆண்டு ஏற்றுமதி
விலைச் சுட்டெண்
9IgG
1960 I 04
61 95
62 93
63 93
64 93
65 95
66 90
67 85
68 10 I
pG
தொடர்ந்து எமக்குப் பாதகமான நிலையி லேயே சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாட்டின் ஏற்றுமதி அலகு ஒன்று எத்தனை அலகு இறக்குமதியைச் செய்யும் தகுதியை யுடையது என்பதை அந்நாட்டின் வர்த்தக மாற்று விகிதம் எடுத்து விளக்கும். நாட் டின் ஏற்றுமதி விலை அதிகமாகவும் இறக்கு மதி விலை குறைவாகவுமிருந்தால் அந்நாட்

ஆ. தில் ஃநாதன்
டின் ஏற்றுமதி அலகொன்று செய்யக்கூடிய இறக்குமதி கூடுதலாக இருக்கும். இந்நிலை யில் வர்த்தக மாற்று விகிதம் நாட்டிற்குச் சாதகமாகவுளது எனப்படும். ஏற்றுமதி விலை வீழ்ந்து இறக்குமதி விலை ஏறிக் காணப்படும்போது நாட்டின் ஏற்றுமதி அலகு ஒன்று செய்யக்கூடிய இறக்குமதி யின் அளவு குறைவாக இருப்பதால் அத் நிலையைப் பாதகமான வர்த்தக மாற்று விகித நிலை என வர்ணிக்கலாம். பொது வாக ஏற்றுமதி விலைச்சுட்டெண் (Export price index), இறக்குமதி விலைச் சுட்டெண் ( Import price index) at 6i, Lauff) fair D g5 6. கொண்டே நாடொன்றினது வர்த்தக மாற்று விகிதம் கணிக்கப்படுகிறது.
ஏற்றுமதி விலைச் சுட்டெண் இறக்குமதி விலைச் சுட்டெண்
= வர்த்தக மாற்று விகிதம்
X 100
1960ம் ஆண்டிலிருந்து '68ம் ஆண்டு வரையுள்ள எம் நாட்டின் வர்த்தக மாற்று விகித்தைக் கீழ்வரும் அட்டவணை காட்டு கின்றது.
இறக்குமதி வர்த்தக மாற்று விலைச் சுட்டெண் விகிதம்
ருடம் 1958 = 100
103 O.
O 94
95 98
1 05 89
O. 86
09 88
19 76
123 69
60 64
லம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்ன்க
1982ம், 1965ம் ஆண்டுகளின் வர்த் தக மாற்று விகிதம் முறையே அவ்வவற் றின் முந்திய ஆண் டுகளோடு ஒப்பிடு மிடத்துச் சிறிது உயர்த்து காணப்பட்டா லும், 1960ம் ஆண்டுக்குப் பின்பு வர்த்தக மாற்று விகிதம் பொதுவாக இலங்கைக்குப் பாதகமான ரீதியில் தொடர்ந்து விரைந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இந்

Page 75
பொருளாதார சுதந்திரத்தை.
நிலை இறக்குமதிகளைச் செய்வதற்கு எமது ஏற்றுமதி அலகு ஒன்று கொண்டிருக்கும் தகுதி ஆண்டு தோறும் குறைந்து கொண்டு செல்வதனை விளக்குகிறது. அதாவது எமது ஏற்றுமதி வருமானத்தைக் கொண்டு செய் யக் கூடிய இறக்குமதியின் அளவு வர வரக் குறைந்து கொண்டே வருகின்றது. எமது ஏற்றுமதி வருமானத்தைக் கொண்டு செய் யக் கூடிய இறக்குமதி குறைகிறது என்ருல் அதன் கருத்து எமது ஏற்றுமதி வருமானத் தின் வாங்கும் சக்தி குறைகிறது என்பதே. ஏற்றுமதி வருமானத்தின் வாங்கும் சக்தி குறைகிறது எ ன் ரு ல், ஏற்றுமதியினது மெய் வருமானம் குறைகிறது என்பதே விளக்கம்.
வர்த்தக மாற்று விகிதம் 1960ம் ஆண்டிற்குப் பின்னர் தான் எமக்குப் பாத கமாகத் திரும்பியுள்ளது என நாம் எண்ணி விடுதலாகாது. அதற்கு முந்திய காலத்தி லும் ஆண்டுகளுக்காண்டு வர்த்தக மாற்று விகிதம் சாதகமாகவும் பாதகமாகவும் மாறி மாறிக் கொண்டே இருந்து வந்துள் ளது. 1950ம், 51 ம் ஆண்டுகளில் நடை பெற்ற கொரிய யுத்தம் காரணமாக எமது றப்பர் வர்த்தகத்தில் ஏற்பட்ட செழிப் பின் போதும், 1954ம் "55ம் ஆண்டுகளில் தேயிலை வர்த்தகத்தில் ஏற்பட்ட செழிப் பின் போதும் குறிப்பாக எம் நாடு சாதக மான வர்த்தக மாற்று விகிதத்தை அனு பவித்தது. ஏனைய காலங்களில் பெரும்பா லும் வர்த்தக மாற்று விகிதம் பாதகமா கவே இருந்துளது. வர்த்தக மாற்று விகி தம் என்பதன் கோரப் பிடியினுள் அகப் பட்டு எமது பொருளாதாரம் பட்டுக் கொண்டிருக்கும் இன்னலை அகற்றுவதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகளே நம் நாடு பொருளாதார சுதந்திரத்தை நோக்கி முன்னேறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளாகும்.
இலங்கை வெளிநாட்டு வர்த்தகத்தில் தங்கியிருக்கு மட்டும் அது வர்த்தக மாற்று விகிதத்தின் பாதிப்பிற்கும் உள்ளாகிக் கொண்டே இருக்கும். ஆனல் இன்றைய உலகில் வெளி நாட்டு வர்த்தகம் சிறிது மின்றிப் பூரணமாக உள்நாட்டு வர்த்தகத் திலேயே தங்கியுள்ள நாடு எதுவுமில்லை. வெளிநாட்டு வர்த்தகம் எந்த ஒரு நாட்

ஆ. தில் சீலநாதன் 57
டிற்கும் அத்தியாவசியமேயாயினும் அதன் பருமனையே நாம் இங்கு அவதானத்திற் கெடுத்துக்கொள்ள வேண்டும். இலங்கை யின் தேசிய வருமானம், தேசியச் செலவு என்பவற்றில் சிறு அளவு பங்கினை மாத்தி ரமே வெளிநாட்டு வர்த்தகம் பெற்றுக் கொள்ளுமாயின் அது இலங்கை யின் பொருளாதார சுதந்திரத்திற்கு இடையூ ருக இருக்காது. தேசிய வருமானம் தேசி யச் செலவு என்பவற்றுள் பெரும் பங்கினை வெளிநாட்டு வர்த்தகம் பெற்றமைதான் இலங்கை பொருளாதார அடிமை நிலைக் குள்ளானதற்குக் காரணமாகும்.
மேலே ஆராயப்பட்ட பொருளாதார அடிமை நிலையை நீக்குவதற்கு, 1948ல் அரசியற் சுதந் தி ர த்,  ைத ப் பெற்றுக் கொண்ட இலங்கை எடுத்துக் கொண்ட முக்கிய நடவடிக்கைகளையும் அவற் றின் விளைவுகளையும் ஆராய்வோம், ஆங்கி லேயர் அரசியற் சுதந்திரத்தை அளித்து விட்டு வெளியேறிய காலை இலங்கையின் பொருளாதரம் தொடர்ந்தும் அவர்களது தயவிலேயே தங்கி இயங்கவேண்டியிருந் தது. ஆட்சிசெய்த ஆங்கிலேயரன்றி இலங் கையில் முதலீடு செய்த ஆங்கிலேயர் உட னடியாக வெளியேறிவிடவில்லை. பெருந் தோட்டப் பயிர்ச்செய்கை வளர்ச்சியுற்றி ருந்ததேயன்றி நாட்டின் ஏனைய பொருளா தாரத் துறைகள் கவனமிழந்து கிடந்தன. கைத்தொழில் முயற்சிகள் அறவே காணப் படவில்லையென்றே கூறலாம். உணவுப் பொருள் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க ஊக்கமெதுவும் காட்டப்படவில்லை. இந் நிலையினின்றும் பொருளாதாரத்தை மீட்ப தற்கு அரசாங்கங்கள் ஆங்காங்கே முயற்சி கள் எடுத்துக் கொண்டு தானிருந்தன; ஆஞல் அவையடைந்த வெற்றிபற்றித் தான் ஐயப்பாடுகள் உள. இலங்கையின் பொருளாதார அமைப்பைத் திசை திருப் புவதற்குத் தனியார் துறையினரை நம்பி விடக்கூடிய நிலையில் இலங்கை காணப்பட வில்லை. ஆகவே இத்தகைய முயற்சியில் முக்கிய கவனமெடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையதாகவே இருந்தது. அதனல் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்குமிடையே

Page 76
58 பொருளாதார சுதந்திரத்தை.
நெருங்கிய பிணைப்பு ஏற்பட்டது. அரசாங் கம் நாட்டில் முதலீடுகளைப் பெருக்குவதற் காகக் கு  ைற நிலை வரவுசெலவுத் திட் Li sahit as (Deficit Budgets St L. gutth பித்தது. குறிப்பாக 1957-ம் ஆண்டின் பின் னர் தொடர்ச்சியாக அரசாங்கம் குறை நிலை வரவுசெலவுத் தி ட் ட ங் களை த் தீ ட் டி க் கொ ண் டே யி ரு க் கி ன் றது. வரவுசெலவுத் திட்டமொன்றில், அரசாங் கம் எதிர்பார்க்கும் வருமானத்திலும் பார்க்கத் திட்டமிடப்பட்ட செலவுத் தொகை அதிகமாக இருக்குமாயின் அத னைக் குறைநிலுை வரவுசெலவுத் திட்டமென அழைக்கலாம். குறைநிலை வரவுசெலவுத் திட்டம் பொருளாதாரவிருத்திக்கு உதவக் கூடிய கருவியெனப் பொருளியல் நிபுணர் கருதுவர். ஆனல் அக் குறை நிலையை நிரப் புவதற்கு எங்கிருந்து நிதியீட்டம் செய்யப் படுகிறது என்பதையும், அவ்விதம் நிதியீட் டம் செய்யப்பட்ட தொகை எவ்வழிகளில் செலவிடப்படுகிறது எ ன் ப  ைத யு ம் பொறுத்தே அதன் நன்மை தீமைகளுள.
அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத் தில் ஏற்பட்ட குறையை நிரவுவதற்குப் பல வழிகளிலிருந்து நிதியீட்டம் செய்ய லாம். (1) அரசாங்கம் அறவிடும் வரிக ளைக் கூட்டலாம். (2) அரசாங்கம் பொது மக்களிடமிருந்து கடன் பெறலாம். அர சாங்கப் பத்திரங்களைப் பொதுமக்களுக்கு விற்பதன் மூலம் இக் கடனைத் திரட்ட லாம். (3) வெளிநாடு களிடமிருந்து கடஞே, உதவியோ பெறலாம். (4) வங்கி களிடமிருந்து கடன் பெறலாம். இவ்வழிக ளுள் வரியுயர்வு மூலமோ பொதுமக்களிட மிருந்து கடன்பெறுவதன் மூலமோ அர சாங்கம் நிதியீட்டம் செய்தால் அது நாட் டில் ஏற்கனவே சுழற்சியிலிருந்த பணத் தையே பெற்றுச் செலவிடுகிறது. ஆகை யால் நாட்டில் மேலதிகமாகப் பணம் நிரம் பல் செய்யப்படமாட்டாது. ஆனல் நான் காவது வழியாகிய வங்கிகளிடமிருந்து கடன் பெறும் வழியே பணவீக்கத்தினை நாட்டில் ஏற்படுத்தக்கூடிய வழியாகும். இவ்வழி மூலம் அரசாங்கம் திரட்டும் நிதி நாட்டில் பணநிரம்பலை அதிகரித்துத் தொடர்ந்து பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தும். அடுத்து அரசாங்கம் குறை

ஆ. தில் சிலநாதன்
நிலை வரவுசெலவுத் திட்டங்கள் மூலம் ஈட் டிய நிதியை உடனடியாக உற்பத்தியைக் கொண்டுவரக்கூடிய துறைகளில் முதலீடு செய்யுமாயின் அதன் மூலம் நாட்டின் விலை நிலை உயராது நன்மையான விளைவுகளே ஏற்படும். ஆணுல் இந்நிதி உடனடியாக உற் பத்தியைப் பெருக்காத துறைகளில் செல விடப்படுமேயாயின் நாட்டில் பாரதூர மான விளைவுகள் தோன்றலாம்.
1957ம் ஆண்டிலிருந்து அரசாங்கம் தனது வரவு செலவத்திட்டக் குறை நிலையை நிரவுவதற்கு மேலே காட்டிய முதல் மூன்று வழிகள் மூலமும் திரட்டிய நிதி போதாமையால் நான்காவது வழியா கிய வங்கிகளிடமிருந்து கடன் பெறும் வழி யைக் கடைப்பிடித்தது. முக்கியமாக மத்திய வங்கியிடம் திறைசேரி உண்டியல்களைப் (Treasury Bills) GLIT giunts, 606155) பெருந் தொயைான கடனைத் திரட்டியது. மத்திய வங்கி அரசாங்கத்திற்குப் பெருந் தொகையான காசைக் கடன் கொடுத் தமை வர்த்தக வங்கி களது திரவத்தன்மை (Liquidity) யையும் அதிகரித்தது. இதன் காரணமாக ஆண்டு தோறும் நாட்டில் பண நிரம்பல் கூடிக் கொண்டே வந்தது. நாட்டில் பண நிரம்பல் கூடிக்கொண்டு வந் ததே யொழிய அதே ரீதியில் நாட்டின் மெய்யுற்பத்திபெருகிக்கொண்டு.வரவில்லை. அதற்குக் காரணம் அரசாங்கம் உடனடி யாக மெய்யுற்பத்திப் பெருக்கத்தைக் கொண்டு வராத துறைகளில் பெருமளவி னைச் செலவிட்டடதாகும். அரசாங்கம் தனது வருவாயுட் பெரும் பகுதியை நாட் டின் இலவச கல்வித் திட்டத்திற்கும், இல வச மருத்துவ வசதிக்கும், இலவச பங் கீட்டு(கூப்பன்) அரிசிக்கும் , மற்றும் பல் வகைப்பட்ட சமூக சேவைகளுக்கும் செல விட்டது. இச் செலவுகள் உடனடியாக நா ட் டி ன் மெய் யு ற் பத் தி  ைய க் கூட்டவில்லை. ஆனல் இத் துறைகளிற் செலவிடப்பட்ட பணம் நாட்டு மக்களின் வருவாயை உயர்த்தியதால் நாட்டில் பொருட்கள் சேவைகளுக்கான கேள்வி கூடியது. இக் கேள்வியில் ஒரு பகுதி இறக் குமதிப் பொருள்களைச் சார மறுபகுதி உள் நாட்டுப் பொருள்களைச் சார்ந்தது. நாட் டின் வருமான அதிகரிப்பு இறக்குமதிக்கேள்

Page 77
பொருளாதார சுதந்திரத்தை.
வியைக் கூட்ட இறக்குமதித் தொகை கூடிற்று. ஆனல் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கவில்லை. ஏற்றுமதியிலும் பார்க்க இறக்குமதிப் பெறுமதி கூடியதால் அது பாதகமான வர்த்தக நிலுவையை (Unfav ourable Balance of Trade) GrsöLJ(Pégs G.s. 687 LDS figy 6061 (Balance of Payments) யில் கு  ைற நிலை யை(Deficit) ஏற்படுத் திற்று. 1957ம் ஆண்டிலிருந்து சென்மதி நிலுவையிற் தொடர்ச்சியாகக் குறைநிலை ஏற்பட்டுக் கொண்டு வந்தது. ஒரு நாடு பிற நாடுகளோடு கொண்டுள்ள பணப் பெறுமதியுள்ள கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தையும் முறைப்படி பதிந்து வைத் திருக்கும் ஒரு பதிவே சென்மதி நிலுவை யாகும். இச் சென்மதி நிலுவையினுட் நடை முறை கணக்கின் கட்புலணுகும் (Visible) பகுதியில் இடம் பெறும் நிலுவையே வர்த்தக நிலுவையாகும். சென்மதி நிலு வையிற் குறை நிலை ஏற்பட்டால் அக் குறை நிலையை ஏற்கனவே ஒதுக்கி வைத் துள்ள வெளிநாட்டு செலாவணி யொதுக் (Foreign Exchange Reserve) 669ays5(35st அல்லது தங்கத்தினை வெளிநாட்டிற்கேற்று மதி செய்வதன் மூலமோ தான் தீர்க்க முடியும். சில வேளைகளில் வெளிநாட்டுக் குறுங்காலக் கடனை அதிகரிப்பதன் மூல மும் இதனைத் தற்காலிகமாகத் தீர்த்துக் கொள்ளலாம். எம் நாடு கொரிய யுத்த காலத்தில் ஏற்பட்ட வர்த்தகச் செழிப் பின் போதும், "54ம் "55ம் ஆண்டின் தேயிலே வர்த்தகச் செழிப்பின் போதும் ஒரளவு வெளி நாட்டுச் செலாவணியை ஒதுக்கி வைத்திருந்தது. அந்த ஒதுக்கினைக் கொண்டே "57ம் ஆண்டின் பின் தொடர்ச் சியாக ஏற்பட்டுக் கொண்டு வந்த சென் மதி நிலுவைக் குறை நிலையைத் தீர்த்துக் கொண்டு வந்தது. இவ் வெளி நாட்டுச் செலாவணியொதுக்கு வருடா வருடம் குறைந்து 1960ம் ஆண்டு மிகக் குறைந்த வோர் மட்டத்தை அடைந்தது. 1960ம் ஆண்டில் இனிமேலும் சென்மதி நிலுவைக் குறை நிலையைத் தாங்கிக் கொள்ள முடி யாத நிலை நாட்டிற்கு ஏற்பட்டது. இத ஞல் இறக்குமதிகள் மீது பல் வகையான கட்டுப் பாடுகள் விதிக்க வேண்டியேற்பட் டது. 1960ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் தொடர்ந்து "61ம் ஆண்டிலும் இலங்கை

ஆ. தில்&லநாதன் 59
மத்திய வங்கியும் அரசாங்கமும் இறக்கு மதிகள் மீது பலமான கட்டுப்பாடுகளை விதித்தன. இறக்குமதி லைசென்ஸ் முறை, கோட்டா முறை, பூரண இறக்குமதித் தடை என்பன ஏற்படுத்தப்பட்டன. அத் தோடு மத்திய வங்கி செலாவணிக் கட்டுப் Lurr"(9(Exchange Control) Gyposp6M uLu -syp லுக்கு கொண்டு வந்தது. இத்தகைய கடூர மான கட்டுப் பாடுகள் மூலம் இறக்குமதி ஓரளவு குறைக்கப்பட்டது. ஆயினும் எமது நாட்டிற்கு வேண்டிய அத்தியாவசிய உண வுப் பண்டங்களைத் தொடர்ந்து இறக்கு மதி செய்ய வேண்டிய கட்டாயமிருந்ததா லும், அதே நேரத்தில் ஏற்றுமதி வருவா யும் வர வரக் குறைந்து போனமையாலும் சென்மதி நிலுவைக் குறை நிலையை முற் ருக நீக்குவது முடியாத காரியமாகவிருந் தது. ஆயினும் இறக்குமதியின் மீதுள்ள கட்டுப் பாடுகள் வருடா வருடம் வலுத் துக் கொண்டே வந்தன.
மறு புறத்தில், வரவு செலவுத் திட்டக் குறை நிலை  ையப் ப ன வீக்கத்தைக் கொண்டு வரும் சா த ன ங் களி லி ருந்து நிதியீட்டம் செய்தலாகாது எனத் தொடர்ச்சியாக மத்திய வங்கி அரசாங் கத்திற்கு அறிவுறுத்தி வந்த போதும் அர சாங்கம் அதற்கு செவி சாய்க்காத கார ணத்தால் நாட்டில் பண நிர ம் பல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந் தது. பண நிரம்பல் தொடர்ந்தே அதி கரித்து வந்த வேளையில் இறக்குமதிகளும் கட்டுப் படுத்தப் பட்டதால் நாட்டின் கேள்வியைச் சமாளிக்க முடியாத நிலை ஏற். பட்டது, இதனுல் விலைகள் மலை போல் ஏறின. 1962ம் ஆண்டிலிருந்து நாட்டின் விலை மட்ட ம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்துளது. நாட்டின் பணக் கேள்வியைச் சமாளிக்கும் வகையில் மெய் உற்பத்தியின் நிரம்பல் அதிகரிக்கா மையே இவ் விலையுயர் விற்கு அடிப்படைக் காரண மாகும். விலையுயர்வு வாழ்க்கைச் செலவை (Cost of Living) LD2h) Gurs) L1 rid 5uy 675. இதன் காரணமாக உத்தியோகத்தர்களும் மற்றும் நிரந்தர சம்பளம் பெறுவோரும் கூலி உயர்வு கோரிப் போரட ஆரம்பித் தனர். கூலி யு ய ர் ஷ கொடுக்கப்படாத விடத்து இவர்களது வாழ்க்கைத் தரம்

Page 78
60 பொருளாதார சுதந்திரத்தை.
குறைந்து போவதைக் காணலாம். மறு புறத்தில் அரசாங்கம் தொழிற் சங்கங் களது கூலியுயர்வுக் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்குமானுல், அதன் வரவு செல வுத் திட்டத்தில் ஏற்படக்கூடிய குறை நிலை மேலும் அதிகரித்து, அக் குறைநிலை பணவீக்கத்தைக் கொண்டுவரும் மூலங் களின் வாயிலாக நிரவப்படுகையில் நாட் டில் மேலும் விலைவாசி உயர்ந்து கூலி உயர் விஞரல் பெறக் கூடிய நன்மையைத் தடுத்து விடுகிறது. அதாவது:மக்களின் மெய்டவரு மானத்தை மேலுங்குறைத்து விடுகிறது. Li Soar Gu (5 uDrt GUrá560 5 (Money Income) ad&u மட்டத்தால் பிரிக்கும் போது மெய் வரு Loirotub (Real Income) Guput uGib"
அரசாங்கம் தனது வரவுசெலவுத் திட் டக் குறைநிலையைப் பணவீக்கத்தைக் கொண்டுவரும் மூலங்களின் வாயிலாக (வங்கிக் கடன் வாயிலாக) நிரவுதலே நாட் டின் விலைவாசியுயர்வுக்குத் தனித்த ஒரு காரணமல்ல. அரசாங்கத்தின் செலவுகளில் பெரும்பகுதி நாட்டின் மெய் உற்பத்தியை உடனடியாக உயர்த்தாத துறைகளில் செலவிடப்படு த ல் விலைவாசியுயர்வுக்கு முக்கிய ஒரு காரணமாகும். எமது நாட் டில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இலவசக் கல்வித் திட்டம், இலவச மருத்துவ சேவை, அரிசி, மற்றும் உபஉணவு விநியோகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் உதவித்திட் Luib (Subsidy Scheme), u divenj GD) es uurir GMT சமூகசேவைகள் என்பவற்றில் அரசாங்கம் செய்யும் செலவு உடனடியாக நாட்டின் மெய்யுற்பத்தியை உயர்த்தி விடுகின்றதெ னக் கூறுவதற்கில்லை. இந்நிலையில் நாட் டின் மெய்நிரம்பலிலும் பார்கப் பணக் கேள்வி பெரிதும் கூடுவதால் விலைவாசி உயர்கிறது.
மேலே ஆராய்த்த பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒருங்கே தீர்வுகாண்பதா யின் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரே வழி எம் நாட்டின் சகல துறைகளிலும் மெய்யுற்பத்தியை அதிகரிக்கச் செய்து, எம் நாட்டை ஒரு சுயதேவைப் பூர்த்தி நாடாக மாற்றுவதேயாகும். இந் நோ க் கத்தை அடிப்படையாக வைத்துத் தற் போது பதவியிலிருக்கும் அரசாங்கத்தால்

ஆ. தில் கீலநாதன்
சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எமது நாட்டின் பொருளாதாரம் உலக நாடுகளின் நடவடிக்கைகளால் பாதிக் கப்பட்டு அல்லலுரு மற் பாதுகாப்பதற்கு இவ்வரசாங்கமும் அதன் முகவர்களும் மேற்கோண்ட நடவடிக்கைகளை இங்கு ஆராய்வோம். இவ்வாராய்வின் மூலமே இலங்கை பொருளாதார சுதந்திரத்தை நோக்கி விரைகிறதா இல்லையா என்ற உண் மையை நாம் விளக்கிக்கொள்ள முடியும்,
சென்மதி நிலுவைப் பிரச்சனைகளினின் றும், வர்த்தக மாற்று விகிதத்தின் இடைஞ் சல்களினின்றும் தப்புவதற்காக இவ்வர சாங்கம் இறக்குமதிப் பிரதியீட்டுப் பொரு ளின் உற்பத்தியில் ஊக்கம் காட்டியது எமது மொத்த இறக்குமதியில் அரைவா சிக்கு மேலான பகுதி உணவுப் பொருள் இறக்குமதியாகவே இருந்துள்ளது. இவ் வுணவுப் பொருட்களை உள்நாட்டில் உற் பத்தி செய்தால் இறக்குமதியளவினை எம் மால் பெருமளவு குறைக்க முடியும். நெல், வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் உப உணவுப் பொருள்களின் உற் பத்திகளைத் தூண்டுவதில் அரசாங்கம் ஊக் கம் காட்டியுள்ளது. இவ்வுற்பத்திக்கு வேண்டிய கடனுதவி, உரம், விதை போன்ற சகலவற்றையும் விவசாயிகளுக்க ளித்து ஊக்கமளித்தது. அரசாங்கத்தினது இத்தகைய ஊக்கங்கள் மட்டும் உற்பத்தி யை பெருக்கி விடமாட்டாது. உற்பத்தி யாளனை ஊக்குவதற்கான முக்கிய வழி அவனது உற்பத்திக்குத் தகுந்த விலையைச் சந்தையில் ஏற்படுத்துவதாகும். 1966ம் 67ம் ஆண்டுகளில் உலக சந்தையில் நிலவிய அரிசித்தட்டுப்பாடும், அதைத் தொடர்ந்து அரசாங்கம் கூப்பன் அரிசியை இரண்டு கொத்திலிருந்து ஒரு கொத்தாகக் குறைத் தமையும் உள்நாட்டில் அரிசியின் விலையை உ ய ர் த் தி நெல்லுற்பத்தியாளருக்குச் சிறந்தவொரு ஊக்கத்தை ஏற்படுத்தியது. அத்தோடு அரசாங்கம் நெல்லுக்கு வழங் கிக் கொண்டிருந்த உத்தரவாத விலையை ரூபா 12 லிருந்து ரூபா 14 ஆக உயர்த்திய மையும் இவ்வூக்கத்தை மேலும் பலப்படுத் தியது. நெல்லுற்பந்தி தற்போது ஒரு இலாபகரமான உற்பத்தியாகக் காணப் பட்டமையால் கடந்த இரு ஆண்டுகளாக நாட்டில் நெல்லுற்பத்தி பெருகி வந்துள்

Page 79
பொருளாதார சுதந்திரத்தை.
ளது. மற்றும் மிளகாய், உருளைக்கிழங்கு போன்ற உற்பத்திகளும் இறக்குமதித் தடை காரணமாக சந்தையில் உயர்ந்த விலை பெற்றமையால் அதிகம் விளைவிக்கப் பட்டன. 1966ம் ஆண்டில் 457 இலட்சம் புசலாக இருந்த இலங்கையின் மொத்த நெல்லுற்பத்தி 1967ல் 551 இலட்சம் புச லாகவும் 1968ல் 646 இலட்சமாகவும் அதி கரித்துள்ளமை நெல்லுற்பத்தியில் ஏற்பட் டுள்ள அபிவிருத்தியை எடுத்துக் காட்டுகி றது. அத்தோடு ஏனைய உப உணவுப் பொருள்களது மொத்தப் பெறுமதியும் 1968ம் ஆண்டில் முந்திய ஆண்டிலும் பார்க்க 25.7% த்தால் அதிகரித்துள்ளது. பாலுணவு உற்பத்தி 7% த்தால் அதிகரித் துளது. விவசாயத் துறையில் இத்தகைய உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டுக் கொண் டிருக்கும் அதே நேரத்தில் மீன்பிடித் தொழிலும் குறிப்பிடத்தக்களவு விருத்தி காணப்பட்டுளது. 1968ம் ஆண் டி ல் அதற்கு முந்திய ஆண்டிலும் பார்க்க 29.5% மீன்பிடி உற்பத்தி பெருகியுளது.
கூப்பன் அரிசியை அரசாங்கம் அரைவா சியாகக் குறைத்தமை உள்நாட்டுச் சந்தை யில் அரிசிக்கான கேள்வியை உயர்த்தி, விலையையுயர்த்தி அதன் வழியாக நிரம்ப லையும் உயர்த்துவதற்கான வசதியைச் செய்து கொடுத்துளது. அரசாங்கம் எடுத்த இந் நடவடிக்கை இவ்வுற்பத்தி யைப் பொறுத்த மட்டில் சந்தைச் சக்தி களை ஒரளவு சுதந்திரமாக இயங்க வைத் தது. தற்போது விவசாயத்துறை பெருமள விற்குச் சுதந்திர சந்தைச் சக்திகளின் செல் வாக்கிற்கு - அதாவது கட்டுப்பாடற்ற கேள்வி நிரம்பற் சக்திகளின் செல்வாக் கிற்கு-உட்பட்டுவிருத்தியைக் கொண்டுவரு கிறது. இதே போன்று இலங்கையின் கைத் தொழிற் பொருட்களின் உற்பத்தியிலும் சந்தைச் சக்திகளை ஒரளவு சுதந்திரமாக இயங்க விடுதல் வேண்டுமென அபிப்பி ராயம் அரசாங்கத்திற்கும் அதன் முகவர் களுக்கும் (மத்திய வங்கி) ஏற்பட்டது.
1960ம் ஆண்டில் எமது நாட்டின் அந் நியச் செலாவணியொது க்கு மிக வும் குறைந்தவொரு மட்டத்தை அடைந்த போது, எடுக்கப்பட்ட அந்நியச் செலா வணிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும்

ஆ. தில் சீலநாதன் 61
இறக்குமதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கை களும் இலங்கையின் கைத்தொழில் விருத் திக்கு வேண்டிய மூலப் பொருட்களின் இறக்குமதியையும் மற்றும் முதற் பொருள் இறக்குமதியையும், பெருமளவு குறைத் தது. இதனுல் நாட்டின் கைத்தொழில் உற்பத்திப் பெருக்கத்திற்கும் தடையேற் பட்டது. 1966ம் 67ம் ஆண்டுகளில் எமது ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்ட பார தூரமான பாதிப்பு இக் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்தியது. சுருங்கக் கூறின் இத்தகைய கட்டுப்பாடுகள் 1967ம் ஆண் டளவில் ஓர் உச்ச நிலையை அடைந்ததென லர்ம். அதாவது இனி மேலும் கட்டுப்பாடு களைக் கூட்டிக் கொண்டிருக்க வசதியில் லாமல் போயிற்று. ஒரு நாட்டின் சென்மதி நிலுவைக் குறைநிலையை அகற்றுவதற்குத் தற்காலிகமாக கடைப் பிடிக்கக் கூடிய நான்கு வழிகளில் இரண்டு வழிகளாகிய 1. அந்நியச் செலாவணிக் கட்டுப் பாடு 2. இறக்குமதிக் கட்டுப்பாடு என்பவை இ ல ங்  ைக யி ன ல் மேலும் தொடர்ந்து கடைப் பிடிக்க முடியாதவையாக மாறி விட்டன. இந் நிலையில் மற்றைய இரண்டு வழிகளாகிய (3) நாணயப் பெறுமதி இறக் 5üb (Devaluation) (4) Lu6ö7 (typ as p5/T 6007 (Lu to Tibpy sứì6ì45th (Multiple Exchange Rate) என்பவற்றின் தயவினையே நாடவேண்டிய சூழ்நிலை இலங்கை க்கு ஏற்பட்டது. இத் தகைய ஓர் சூழ்நிலையில் இங்கிலாந்து 1967ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் த ன து நாணயத்தை பெறுமதியிறக்கம் செய்ததால், தவிர்க்க முடியாதவோர் நிலையில் இலங்கையும் 1967ம் ஆண்டு நவம் பர் 22ல் நாணயப் பெறுமதி இறக்கத் தைக் கையாண்டது. சர்வதேச நாணய நிதியின் (1. M. F) அனு ம தி யோ டு இலங்கை 20% நாணயப் பெறுமதியிறக் கத்தையே செய்து கொண்டது. உண்மை யில் நாட்டின் கேள்வி-நிரம்பல்களாகிய சந்தைச் சக்திகளைப் பூரண சுதந்திரமாக இயங்க விடுவதற்கு இவ் 20% பெறுமதி யிறக்கம் போதியதாகக் காணப்படவில்லை, இ த ஞ ல் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் செயலில் இருந்தன. இத்த கைய கட்டுப்பாடுகள் நம் நாட்டின் கைத் தொழில் விருத்திக்குத் தடையாகவே இருந்து வந்தன. இந் நிலையில் எம் நாட்

Page 80
62 பொருளாதார சுதந்திரத்தை.
டின்  ைக த் தொழி ல் விருத்திக்குள்ள தடையை நீக்கும் பொருட்டும் , எம் நாட் டின் ஏற்றுமதியைப் பன்முகப்படுத்தும் (Diversification) நோக்குடனும், இது வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த கடூர மான கட்டுப்பாடுகள் காரணமாக இருந்த நிர்வாகச் சு  ைம  ைய க் கு  ைற க் கும் பொருட்டும், சந்தைச் சக்திகளுக்கு இயன்ற வரை சுதந்திரமளிக்கும் பொருட்டும் புதிய திட்டமொன்று 1968ம் ஆண் டு மே மாதத்தில் கொண்டு வரப்பட்டது. இதனை "அந்நியச் செலாவணி உரிமைச் "FAT GöTASabbağ, 36), "Le Lib" (Foreign Exchange Entitlement Certificate Scheme) at at அழைக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வேண் டிய மிக அத்தியாவசியப் பொருள்கள் தவிர்ந்த ஏனைய பொருள்களின் இறக்கு மதியை லைசன்ஸ் கட்டுப்பாடுகளின்றி (Open General Licence) egygy) LD5)35), அவ்விறக்குமதிகளுக்குச் செலுத்த வேண் டிய செலாவணியை உத்தியோகபூர்வ மான நாணயமாற்று வி கி த த் தி லும் பார்க்க உயர்ந்தவொரு வீதத்தில் கொடுக் கும்படி வற்புறுத்தப்பட்டுள்ளது. அதாவது அந்நியச் செலாவணியொன்றைப் பெறுவ தற்கு உத்தியோகபூர்வமாகச் செலுத்த வேண்டிய ரூபாவிலும்பார்க்க 44 % கூடுத லான ரூபாவை இத் திட்டத்தின் கீழ்க் கொடுக்கவேண்டியிருந்தது. த ந் போ து இந்த 44 %ம் 55 % மாக உயர்த்தப்பட்டுள் ளது (ஜூன் 1969 ல்). இத்திட்டம் அந்நி யச் செலாவணியின் விலையை உயர்த்தியது உண்மையாயினும், இதே திட்டம் நாட்டி னுள் கட்டுப்பாடின்றிக் கைத்தொழில் மூலப் பொருள்களும் மற்றும் முதற் பொருள்களும் இறங்குவதற்கு வசதியேற் படுத்தியுள்ளது என்பதையும் உணர்த்து கொள்ள வேண்டும். இதனுல் நாட்டிலுள்ள கைத்தொழில்கள் தமது உச்ச இயலளவில் (Maximum Capacity) guii.5, syssir மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்க முடி வதோடு நாட்டினுற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்கவும் முடிகிறது. தற்போது கைத் தொழிற்றுறையினைப் பொறுத்த மட்டி லும் சந்தைச் சக்திகள் ஒரளவு சுதந்திர மாக இயங்க வசதியேற்பட்டுள்ளது.

ஆ. தில் சீலநாதன்
இந்த அந்நியச் செலாவணி உரிமைச் öFT Gö7 Aö7 a5.jpä 35), "L— Lao (F E E C S) [5fr. "Lqனது மரபுமுறை ஏற்றுமதிகள் தவிர்ந்த ஏனைய ஏற்றுமதிகளை அதிகரிக்கவும் வச தியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கறுவா, ஏலம், கொக்கோ முதலிய ஏற்று மதிகளின் வருமானம் அதிகரித்துள்ளது. சுற்றுப்பிரயாணிகள் மூலம் 1968-ல் பெற்ற வருமானம் முந்திய ஆண்டைவிட 57% அதிகமானதாகும். அந்நியச் செலாவணி யின் விலை இத்திட்டத்தின் கீழ் 55% த்தால் உயர்ந்ததால் அந்நியச் செலாவணியை இலங்கைக்கு வழங்கும் சுற்றுப்பிரயாணி கள் தாம் முன்புபெற்ற ரூபாவிலும் பார்க்க 55% மான ரூபாவை இப்போது அதிகமாகப் பெறுகிருர்கள். இதனல் இலங்கை பெருமளவு சுற்றுப்பிரயாணிகளை இப்போது கவருகின்றது.
இவ்விதம் அரசாங்கம் கடைப்பிடித்த புதிய கொள்கைகள் காரணமாக நாட்டின் விவசாய உற்பத்தியும் கைத்தொழில் உற் பத்தியும் பெருகிக்கொண்டு வருவதைக் காணலாம். நாட்டின் மெய்யுற்பத்தி 1968-ம் ஆண்டில் அதற்கு முக்கிய ஆண்டி லும்பார்க்க 8.3% த்தால் கூட்டியுளது. இவ்வதிகரிப்பில் பெரும்பாலானவை உள் நாட்டு உபயோகத்திற்கான பொருள் களேயாகையால் இவ்வாண்டின் தேசிய வருமானத்தில் ஏற்றுமதி வருமானம் பெற் றுக் கொள்ளும் பங்கு குறைவாகும். இது எமது நாடு வருவாய்க்கும் பிறநாடுகளிற் றங்கியிருக்கும் நிலையைக் குறைக்கிறது. அத்தோடு உள்நாட்டு உணவு உற்பத்திப் பெருக்கம், எமது நாடு தனது சீவியத்திற் குப் பிறநாட்டிறக்குமதிகளிற்றங்கியிருக் கும் அளவையும் குறைக்கிறது. இவ்விரு வழிகளினலும் எம் நாடு பிறநாடுகளிற்றங் கியிருக்கும் அளவு குறைகிறது என்ருல் எம் நாடு தன்னைத்தானே நம்பியிருக்கும் நாடாக மாறுகிறது என்பதே விளக்கம். இத்தகைய நடத்தையை பொருளாதார சுதந்திரத்தை நோக்கி விரையும் நடத்தை யென நாம் கூறலாம்.
இலங்கையின் இன்றைய பொருளா தார நடவடிக்கைகள் பொருளாதார சுதந் திரத்தை நோக்கி விரைய எடுக்கும் நடவ

Page 81
பொருளாதார சுதந்திரத்தை.
டிக்கைகளே எனப் பூரணமாகச் சொல்ல முடியாதவாறு ஒரு சில தடைகள் காணப் படுகின்றன.
அதாவது, இலங்கையில் உள்நாட்டு உணவு உற்பத்தி பெருகியுள்ளபோதும், 1968-ம் ஆண்டிற்கான புள்ளி விபரங்களை நோக்கும்போது இலங்கை வெளிநாட்டிலி ருந்து செய்த உணவு இறக்குமதியின் பெறு மதி குறைவடையாது கூடியுள்ளதைக் காணலாம். இதற்குக் காரணம் இறக்கும தித் தொகை அல்ல. இறக்குமதிப் பொருள்களின் விலையேயாகும். தொகை குறைந்தபோதும் விலை அதிகரித்ததனல் பெறுமதி கூடியுளது. இச் சிக்கல் இலங்கை உணவு உற்பத்தியில் சுயதேவைப் பூர்த் தியை அடையும்போது நீக்கிவிடலாம்.
ஆனல் அடுத்த முக்கிய சிக்கலாகக் காணப்படுவது நாம் பிறநாட்டிலிருந்து இதுவரை பெற்ற கடன்களாகும். தற் போது பதவியிலிருக்கும் அரசாங்கம் வருடாவருடம் பிறநாடுகளிடமிருந்தும் சர்வதேச நாணய நிதியிடமிருந்தும் பெகு மளவு கடன்களைப் பெற்று வந்துளது. இக்
எல்லார்க்கும்
எல்லார்க்கும் ( எட்டும் விளே! கொட்டுமுரசே கட்டுத் தொலே கொட்டு முரே

ஆ. தில்ஃவநாதன் 63
கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய சிக்கல் இவ்வருடத்திலிருந்து ஏற்பட்டுளது. 1968-ம் ஆண்டில் வெளிநாடுகளுக்குத் திருப்பிச் செலுத்தவேண்டிய கடன் 910* இலட்சம் ரூபாவாக இருக்க. '69-ம் ஆண் டில் இத்தொகை 1910 இலட்சம் ரூபா வாகவும், 70-ம் ஆண்டில் 2390 இலட்சம் ரூபாவாகவும், 1971-ல் 2740 இலட்சம் ரூபாவாகவும் இருக்கிறது. இவை எம் நாடு எதிர்காலத்தில் சுமக்க வேண்டியவொரு பெரிய சுமையாகும் இச்சுமை எமது இறக் குமதிச் சக்தியைப் பெருமளவு குறைத்து விடும். இறக்குமதிச் சக்தி குறைந்தால் கைத்தொழில் விருத்திக்கு வேண்டிய மூலப் பொருள் இறக்குமதியும், நவீன தொழில் நுட்ப சாதனங்கள கிய முதற் பொருள்க ளின் இறக்குமதியும் தடைப்படலாம். இவைகளில் ஏற்படும் தடை பொருளா தார விருத்தியில் ஏற்படும் தடையேயா கும். ஆகவே இங்கு இலங்கை நோக்கிச் செல்வது பொருளாதார சுதந்திரத்தைத் தானு என்பது கேள்விக்குரிய விடயமாக வுளது.
pouli):- The Economic Journal-Ceylon.
நல்லின்பம்
செல்வங்கள்
ந்ததென்று
- வாழ்வில்
ந்ததென்று
பாரதிதாசன்

Page 82
‘Uits tse
Yar It On
82, First C
Colom
“č“Phone: 27421
AS FON
(Prop: J.
We Spe Amplifiers, illuminations, House
Fittings and Electrical ri
83, Trir
BATTI(
AZEEZ HARDOV
COMMISSION AGEN”
SEWING MACHINES U.
Agents for: Lister & Blackstone Oiesel Engines and Rice Hull
Railway Station: BATTICALOA.
6, POLICE RO,

Comptiments
Stores
ross Street,
b0-11.
T’Gran YARLIN AGA
LECTRCALS
A- Nagarajah)
cialise in: Wiring, Lighting Sets, Water Pipe apairs of any description
ico Road,
CALOA.
VARE STORES
S & DISTRIBUTORS.
SHA ELECTRIC FANS
Dealers in: rs. Asbestos Cement Corrugated Sheets and Galoya Tilles
Bankers: PEOPLES BANK.
AD, KALMUNA.

Page 83
O9th the les
4lr,
S. P. SAN
68 A, Fourth
соц о 1
3Dhene 2 2 6 4 0
UNITED MER
71, Old M
(DO (DM
Dhones 32 822

l 0ompliments
ᏫᏤᏤᎲ
MY Ng CO,
Cross Street,
M B O - .
CHANTS LTD.
OOr Street,
BO-12.

Page 84
இலங்கையின்
II i ii j GJ iiI 6 JÎLIJIIIL
இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் வருகை காரணமாக, நாட் டின் பலவேறு துறைகளிலும் மாற்றம் ஏற் பட்டது போன்றே நிலம் சம்பந்தப்பட்ட கொள்கையிலும் பல குறிப்பிடத் தக்க மாற்றங்கள்ஏற்பட்டன. பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கு அடிப்படையாயிருந் தது நிலமேயாதலால், அரசாங்கம் பின் பற்றிய நிலக் கொள்கையையும், அதன் மூலம் ஏற்பட்ட வேறுபட்ட விளைவுகளை யும் அறிய வேண்டியது அவசியமாகின்றது. மானியகால சமூகத்தில் நிலம் முழுவதும் மன்னனுக்குச் சொந்தமானதாகவே இருந் தது. தனக்குச் சொந்தமான நிலத்தை மன் ன ன் ஏனையோருக்கு வழங்கினன். இதற்கீடாக அவர்கள் சில சேவைகளை மன் னனுக்கு ஆற்ற வேண்டியிருந்தது. இது யுத் தங்களிலீடுபடுவதாகவோ, வணிக நடவடிக் கைகளிலீடுபடுவதாகவோ அல்லது வேறு வகைப்பட்ட ஊழியத்தை வழங்குவதா கவோ அல்லது குடியான்களாக விவசாயம் செய்வதாகவோ இருக்கலாமென ருெ பேட் நொக்ஸ் குறிப்பிடுகின்றர். ஆகவே இங்கு நிலம் வர்த்தகத்துக்குரிய ஒரு பொருளாக் கப்பட்டு அதனை விற்பனை செய்வதோ, அல்லது அதற்கென வாடகை வசூலிப் பதோ இடம் பெறவில்லை. அதற்குப் பதி லாகக் குறிப்பிட்ட சேவைகளுக்கீடாக, அது மானியமாக வழங்கப்பட்டது. ஆகவே "நில விற்பனைகள் அன்றி "நில மானியங் களே இடம் பெற்றன,2 சுருக்கமாகக் கூறின் சமுதாய அமைப்பு விவசாயக்

பெருந்தோட்டப் D ᏧᏂlIIIh E6Ꭰ Ih கொள்கையும்
வி. நித்தியானந்தம் B. A. சிறப்பு
கொள்கைகள் என்பன, நிலக் கொள்கையி லிருந்து வேருக்கப்படாமல், அதனுடன் பின்னிப் பிணைந்திருந்தன.3
பிரித்தானியராட்சிக் காலத்துடன், பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையினூ டாக முதலாளித்துவம் விரைவாக வளர்ச் சியடையவே, நிலம் சம்பந்தப்பட்ட கருத் திலும் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசி யமாயிருந்தது. முன் போன்று வெறுமனே அது சமூக-பொருளியற் கடமைப் பாடுக ளின் அடித்தளமாக மட்டும் இருக்க முடிய வில்லை. அதற்கும் மேலாக முதலீட்டு வர்க் தினரின் ஓர் உற்பத்திக் காரணியாக அது செயற் பட வேண்டியிருந்தது.* பெருந் தோட்டங்களின் பயணுக ஏற்பட்ட முக்கிய மாற்றமென்னவெனில், உள் நாட்டுத் துறையுடன் எந்த வகையிலும் தொடர் பற்ற அந்நிய வர்த்தகத் துறையொன்று
J. R. Knox. ''An Historical Relation of the lsland Ceylon' - Part II Chapter III p. 43
2. l. H. Wanden Driesin - Plantation Agriculture & Land-Sales Policy in Ceylon - The first phase, 1836 - 1886; part I (University of Ceylon Review - Vol XIV, Nos 1 & 2
3. S. Rajaratnam - History of Plantation Agriculture of Ceylon, 1886- 1931 - chapter V p. 209 (Unpublished Thesis submitted to the University of London)
4. I. H. Vanden Driesen - Plantation Agriculture and Land Sales Policy in Ceylon - The first phase 1836 - 1886 part I

Page 85
இலங்கையின் பெருந்தோட்டப்.
உருவாக்கப்பட்டிருந்தமையேயாகும். இந்த வர்த்தகத் துறை உள்நாட்டுத் துறையு டன் எதுவித தொடர்பையும் கொண்டி ராத போதும், அதனுடன் அருகருகே இருக்க வேண்டியதாக இருந்தது. அது மட்டுமன்றி, இப்புதிய துறையின் வளர்ச் சிக்கும் நிலம் ஓர் அத்தியாவசிய தேவையா யிருந்தது. இந்நிலையில் இலங்கை அரசாங் கம் இது வரையில்லாததொரு புதிய பிரச் சினையை எதிர்நோக்கலாயிற்று. பெருந் தோட்டச் செய்கையிலீடுபட்ட த னி ப் பட்ட முதலாளிகளுக்குப் போதிய நிலத் தைக் கொடுக்க வேண்டியிருந்த அதே நேரத்தில், உள்நாட்டு மக்களின் நலன் களைத் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அதனைச் சார்ந்தது. இந்த இரு முரண்பட்ட நோக்கங்களின் மத் தி யில் இலங்கை அரசாங்கம் எவ்வாறு இயங்கிய தென்பதே, 19ம் நூ ற் ரு ண் டி ன் நிலக் கொள்கையின் வரலாறெனலாம். பெருந் தோட்டப் பயிர்ச் செய்கைக்கு வேண்டிய ளவு நிலம் கிடைக்கச் செய்ய வேண் டு மென்ற நோக்கத்தில், உள்நாட்டு மக்க ளின் நலன்களைப் புறக்கணிச்கும் வகையில் குடியேற்ற நாட்டரசாங்கம் இ யங் கி ய தென்ற குற்றச்சாட்டு பலராற் கூறப்படு கின்றது. பெருந்தோட்டச் செய்கையின் மையமாக விளங்கிய மத்திய மலைப் பிரதே சங்களைப் பொறுத்தவரை இக் குற் ற ச் சாட்டு முக்கியமானதாகக் காணப்படுகின் றது. இப் பிரதேசங்களில் நிலத்துக்கான கேள்வி அதிகமாயிருந்ததென்பது மட்டு மன்றி, நில உடமை முறையும் நாட்டின் ஏனைய பிரதேசங்களை விட வேறுபட்டதா யிருந்தது. இன்று வரை நிலவி வரும் கண் டியர் நிலப் பிரச்சினை", இந்தக் குற்றச்சாட் டின் பிரதிபலிப்பேயெனலாம்.
இவ்வாரு கப் பெருந்தோட்டத் துறை யின் நிலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், பிரித்தானிய அரசாங்கம் நிலக் கொள்கையைப் பின்பற்ற மு ற் பட் ட விடத்து, அதன் இரு அம்சங்கள் முக்கியமா கத் தீர்க்கப்பட வேண்டியனவாயிருந்தன. முதலாவதாக பெருந்தோட்டத் துறைக் குப் போதியளவு நிலம் கிடைக்கும் வகை யில் நிலவிற்பனையை வழிநடத்த வேண்டியி ருத்தது. அடுத்து நில உடமை முறையில்

வி. நித்தியானந்தம் 67
தகுந்த மாற்றங்களைக் கொண்டுவர வேண் டியதாக இருந்தது. இவற்றில் முதலாவது பரிபாலன முயற்சிகளுடன் தொடர்புடைய தென்றும், இரண்டாவது அரசாங்கத்தின் கொள்கை, மற்றும் உள்நாட்டு மக்களிடம் ஏற்படுத்திய பா தி ப் பு என்பவற்றுடன் தொடர்புடையதென்றும் கூறலாம். இவற் றில் இரண்டாவது அம்சத்தினை ஆராய் வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
நில உடமை விடயத்தில் இலங்கை அர சாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை அறிவதற்கு முன், இது சம்பந்தமாக அவர் கள் எதிர்நோக்கிய சில பிரச் சினைகளை ஆராய வேண்டியது அவசியமாகின்றது. இவற்றில் முக்கியமாயிருந்தது, சிங்க ள மன்னர் நிலத்தின் மீது கொண்டிருந்த முன் னுரிமையின் தெளிவற்ற நிலையாகும். உண் மையில் முழு நிலமும் மன்னனுக்குச் சொந் தமானதாயிருந்ததா அல்லது குடிகளின் சொத்து மீது அவன் சில விசேட உரிமை களை மட்டும் பெற்றிருந்தானவென்பது தெளிவில்லாமலிருந்தது. இந் நிலை யில் பிரித்தானியர் காட்டு நிலங்கள், கழிவு நிலங்கள், மற்றும் பயிரிடப்படாதிருந்த நிலங்கள் யாவும் முடிக்குரிய நிலங்கள் எனக் கூறியபோது, அதற்குப் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. மன்னனுடைய உரி மையை ஆட்சியாளர் பிழையாக விளங்கிக் கொண்டனரென்றும், நிலங்கள் வெறும் நம்பிக்கைச் சொத்தாக இருந்தனவே தவிர, அவற்றை உரிமை மாற்றம் செய்யும் அதிகாரம் கிடையாதென்றும் கூறினர். இது தவிர நில மானியங்கள் பற்றி மன்னர் தகுந்த பதிவுகளை வைத்திருக்கவில்லை. இப் பதிவுகளைச் செப்புத் தகடுகளாகவோ அல் லது ஒலை வடிவில் வைத்திருப்பதோ தான் பொதுவான வழக்கமாயிருந்தது. இவை * சன்னுஸ் (Samnas) என அழைக்கப்பட் டன. ஆனல் இவற்றில் வெகு சிலவே பாது காத்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு பா து கா க் க ப் ப ட் ட வ ற் றி லு ம் பல யுத்தங்களின் போது அழிந்து போயின. இதனல் 19ம் நூற்றண்டில்
5. S. Rajaratnam - History of Plantation Agriculture of Ceylon, 1886 - 1931, chap V, p. 209
6. bid.

Page 86
68 இலங்கையின் பெருந்தோட்டப்.
நிலங்களின் உரிமை பற்றித் தகுந்த சான் றுகள் பெறுவது மிகவும் கடினமாயிருந் தது. உள்நாட்டு அதிகாரிகள் பலர் இந் நிலையில் பரந்த காட்டு நிலங்கள், கழிவு நிலங்கள் என்பவற்றிற் பலவற்றைத் தமது பரம்பரைச் சொத்தெனக் கூறி உரிமை பாராட்டினர். ' அத்துடன் நில உடமை கள் அளவுத் திட்ட ரீதியில் வரையறுக்கப் பட்டிருக்கவில்லை, அதற் குப் பதிலாக அவை விதைக்கப்பட்ட பரப்பு அடிப்படை யிலோ அல்லது அறுவடைப் பயிரின் அடிப் படையிலோ தான் வரையறுக்கப்பட்டன. இத்தகைய அளவீடு நிலத்தின் தன்மை, சுவாத்தியநிலை, செழிப்பு நிலை என்பவற் றுக்கேற்ப வேறுபட்டது. குறிப்பாக இன்ன பயிர் எனக் குறிப்பிடப்படாத விடத்து, இவ்வளவீடு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது மட்டுமன்றித் தனி யார் சொத்தாகவிருந்த நிலங்களுக்கு எல் லைகளும் காணப்படவில்லை. வழக்கத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருந்த எல்லைகள், சட்ட ரீதியில் எல்லைகள் வகுப் பதைக் கஷ்டத்துக்குள்ளாக்கின. முக்கிய மாகக் கண்டி இராச்சிய மாகாணங்களி லேயே இப்பிரச்சினை மோசமாயிருந்தது. இதற்குக் காரணம் மரபுகளும், வழக்கங்க ளும் ஏனைய பகுதிகளைவிட இங்கு அதிக காலம் அமுலில் இருந்தமையே எனலாம். கரையோர மாகாணங்கள் மூன்று நூற் ருண்டுகள் வரை அந்நியராதிக்கத்தின் கீழிருந்ததால், நில சம்பந்தப்பட்ட விட யங்களில் ஓரளவுக்காவது ஒழுங்கு ஏற்பட் டிருந்தது. முக்கியமாக டச்சுக்காரர் நில உடமை முறையை ஒழுங்கு படுத்துவதிற் கூடிய கவனம் செலுத்தினர். தென் மாகா ணங்களில் ஆரம்பித்து, மாத்தறை தோம் 456flou (Matara Tombas), 6ècy au 60 56 கட்டாயப் பதிவு ஒழுங்கு முறையின் கீழ் நிலங்களைத் தனியாருக்கு ஒதுக்கீடு செய் தனர். டச்சுக்காரரின் முக்கிய நோக்கம் நில வாடகையைப் பெறுவதாக இருந் ததேயன்றி, நேரடியாக நிலத்தைப் பெறு வதாக இருக்கவில்லையாதலால் பெரும் பகுதி நிலங்களைச் சுதேச மக்களுக்கு உரி மையாக வழங்கினர். இதே ஒழுங்கு முறை யுடன் இல்லாவிட்டாலும், ஏனைய மாகா ணங்களிலும் இதே வழக்கம் பின்பற்றப் பட்டது. * அத்துடன் கம்பெனியின் வரு

வி. நித்தியானந்தம்
மானத்தை அதிகரிக்கும் பொருட்டுக் கம் பெனியின் அதிகாரமின்றி யாரும் சேனைப் பயிர் செய்கையில் ஈடுபட முடியாதென அது தடை விதித்தது. அதாவது சேனைப் பயிர்ச்செய்கை எந்த வகையிலும் தனிப் பட்ட உரிமைகளுடன் தொடர்புடையதா யிருக்கவில்லை, தனியாருக்குச் சொந்தமா யிராத எல்லா நிலங்களும் முடிக்குரிய நிலங் களாகவே கருதப்பட்டன. அவற்றைப் பயன்படுத்துவதாஞல் அரசாங்கத்தின் அதிகாரம் பெற வேண்டியது அவசியமாயி ருந்தது. ஆனல் கண்டிப் பிரதேசங்களில் நிலைமை இவ்வாறிருக்கவில்லை. இங்கு சேனைப் பயிர்ச் செய்கையும் பழைய வழக் கத்தின் அடிப்படையிலெழும் தனியார் உரிமையாகவே இருந்தது. குடியானுெரு வன் பயிர்ச்செய்கையிலீடுபடுவதற்கு வயல் நிலம் (தாழ்நிலம்), உயர்நிலம், காட்டு நிலம் என மூவகை நிலங்கள் அவசியமாயி ருத்தன. இதில் காட்டு நிலமே கண்டிப்பகு தியில் சேனை நிலங்கள் எனப்பட்டன. முன் கூறிய படி கரையோர மாகாணங்களைப் போன்றன்றி இங்கு இந்நிலங்களும் தனி யார் உரிமையாகவே கணிக்கப்பட்டன. எனினும் தாழ்நிலம், உயர்நிலம் என்பன வற்றிலான உரிமையை நிர்ணயித்தது போன்று, இதன் மீதான உரிமையை இல குவில் நிர்ணயிக்க முடியவில்லை. ஏனெ னில் இதற்கு எதுவிதமான எல்லையும் குறிப் பிடப் படவில்லை. அத்துடன் உரிமைகள் வெறும் வழக்கத்தின் அடிப்படையில் எழுந்தனவாயிருந்தன. பெருந் தோட்டப் பயிர்ச் செய்கைக்குப் பெருமளவு நிலங்கள் வேண்டியிருந்த கண்டிப் பிரதேசங்களில் இத்தகைய சூழ்நிலை நிலவியமை பிரித்தா னியரின் நில உடமைக் கொள்கையை மேலும் சிக்கலாக்குவதாயிருந்தது.
குடியேற்ற நாட்டரசாங்கம் இத் தகைய பிரச்சினைகளையும், சிக்கல்களையும் எதிர்நோக்கியவிடத்தும் நிலங்களை உரிமை மாற்றம் செய்து பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கு வேண்டிய நிலங்களைப் பெறுவ தற்கு ஏதோ ஒரு வகையில் அதிகாரம் பெற வேண்டியது அவசியமாயிருந்தது. ஏனெனில் கோப்பிப் பயிர்ச்செய்கை அத்
7. I bid. p. 210. 8. bid. p. 211

Page 87
இலங்கையின் பெருந்தோட்டப்.
துணை விரைவாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. கோப்பிச் செய்கைக் கெதிராயிருந்த பல தடைகளும் இப்போது நீங்கியிருந்தன. R.B.ரைற்லர் (R.B Tyler) என்பார் தகுந்த பயிரிருடு முறை களை ப் புகுத்தியமை; மேற்கிந்திய தீவுகளில் அடி மைகளுக்கு விடுதலை வழங்கப்பட்டமை; மேற்கிந்திய தீவுக் கோப்பிக்கு விதிக்கப் பட்ட அதே தீர்வையே இலங்கைக் கோப் பிக்கும் விதிக்கப்பட்டு இறக்குமதித் தீர்வை விடயத்திலிருந்து வந்த பாரபட்சம் நீக்கப் பட்டமை ஆகிய காரணங்களினல் இலங் கைக் கோப்பிச் செய்கை விரைவாக வளர்ச் சியடைய ஆரம்பித்தது.? கோப்பிப் பித்து பிடித்திருக்கிறதெனக் கூறு ம ள விற்கு க் கோப்பித் தோட்டங்களுக்கான தேவை பெருகிச் சென்றது. 1834-1842க்கு மிடை யில் இலங்கையின் கோப்பி விளைவைக் காட் டும் பின்வரும் அட்டவணை இச் செழிப்பு நிலையை ஒரளவு பிரதிபலிக்கும். -
இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட கோப்பியின் அளவு10
ஆண்டு புசல்
834 138,800 I S35 16 1 ,975 11 28ן
836 190, 161 ; 1837 223,697. 1838 220,735 1839 365,062 1840 858, 000 1841 956, 850
842 1,254,263
ஆகவே இத்தகைய செழிப்பு நிலையின் மத் தியில், தோட்டங்களைத் திறப்பதற்கு வேண்டிய நிலங்களைத் தடையின்றிக் கொடுக்க வேண்டுமென்பதில் இலங்கை அரசாங்கம் அக்கறை காட்டியது.
இக்காலத்தில் தேசாதிபதியாயிருந்த 6ielboul. LD dosei 6i (Stewart Mackenzie), நிலவிற்பனை அதிகரிக்க வேண்டுமென்ற ஒன்றினையே கருத்திற் கொண்டு, சட்டப் படி உரிமை வரையறுக்க முடியா திருக்கும் எல்லா நிலங்களும் முடிக்குரிய நிலங்களா கப் பதிவு செய்யப்பட வேண்டுமெனக் குடி யேற்ற நாட்டுச் செயலதிகாரிக்குச் சிபாரிசு

வி. நித்தியானந்தம் 69
செய்தார். 'ஆனல் குடியேற்ற நாட்டுச் செயலதிகாரியாக இருந்த நோமன் பி பிரபு (Lord Normanby) இதற்கு ஆதரவாயிருக்க வில்லை. இத்தகைய ஒரு சட்டம் மக்கள் மத் தியிற் பாரதூரமான விளைவுகளை ஏற் படுத்துமென இவர் எதிர்பார்த்தார். கல்வி யறிவற்ற வறிய மக்கள் உண்மையில் நிலத் துக்கு உரிமையுடையவர்களாக இருந்தா லும், சட்டப்படி இவ்வுரிமையை நிரூபிக் கும் ஆற்றல் பெற்றிருக்கமாட்டார்களென இவர் கருதினர். மேலும் சட்டப்படியான உரிமையை நிரூபிக்க முடியாதிருக்கும் இதே குறை'ாட்டினலேயே அரசாங்கமும் கஷ் டப்படுவதாக இவர் சுட்டிக் காட்டினர். இதற்குப் பதிலாக கலெக்டர்மார், கிராம விதானமார் ஆகியோரின் உதவியுடன் நடைமுறை ரீதியிலான ஆய்வின் மூலம் முடிக்குரிய நிலங்களும், தனியாருடைய நிலங்களும் வரையறுச் கப்பட வேண்டு மெனக் குடியேற்ற நாட்டுச் செயலதிகாரி சிபாரிசு செய்தார். 12
எனினும் குடியேற்ற நாட்டுச் செயலதி காரியின் இந்த ஆட்சேபனைகள் மக்கென்ஸி தேசாதிபதி கொண்ட கருத்திலோ, அவ ரது நடவடிக்கைகளிலோ எதுவித மாற் றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரிய வில்லை. தாம் முன் கொண்ட கருத்தின் அடிப்படையிலேயே அவர் செயற்பட முற் பட்டாரெனலாம். 1840ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 1840ம் ஆண்டின் 12வது சட் டத்தை, இவர் குடியேற்ற நாட்டுச் செய லதிகாரியின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப் பித்தார். இச் சட்டத்தின் முக்கிய அம்சங் களாக இருந்தவை வருமாறு:13 (i) எல்லாக் காட்டு நிலங்கள், கழிவுநிலங் கள், குடியேற மல் அல்லது பயிரிடப்படா
9. Lennox. A. Mills - Ceylon Under British
Rule 1795 - 1932 Chapter XII, p. 227
10. I. H. Vanden Driesen - Coffee Cultivation in Ceylon (The Ceylon Historical Journel Vol. III)
11. I. H. Vanden Driesen - Land Sales Policy and some Aspects of the Problem of Tenure - 1836 - 1886. (University of Ceylon Review -- Vol XV Nos 1 & 2)
12. bid.
13. Ordinance No 12 of 1840 (Encroachment of
Crown Lands Ordinance) V

Page 88
70 இலங்கையின் பெருந்தோட்டப்.
ம்லிருக்கும் நிலங்கள் யாவும், முரணுக நிரூ பிக்கபட்டாலன்றி முடிக்குச் சொந்தமான வையாகக் கருதப்பட்டன.
(i) இதே போன்று எல்லாச் சேனை நிலங் களும், மற்றும் காலத்துக்குக் காலம் பயிர் செய்யப்படும் நிலங்களும், முன்பு கண்டிய மாகாணங்கள் எனக் கருதப்பட்ட பிர தேசங்களில் அமைந்திருந்தால் முடிக்குச் சொந்தமானவையெனப்பட்டன.தனியார் இவற்றின் மீது உரிமை கொண்டாட வேண் டுமாயின் தகுந்த எல்லைகள் வரையறைகள் என்பவற்றுடன் மானியமாக வழங்கப் பட்டதென நிரூபிக்கப்பட வேண்டும். அல் லது கடந்த இருபது வருடங்களில் அந் நிலம், அப் பகுதியிலிருந்த ஏனைய தனி யாருக்குச் சொந்தமான நில ங் களை ப் போன்று கணிக்கப்பட்டு, வழமையான வரிகள், தீர்வைகள் அல்லது சேவைகள் வழங்கப்பட்டதாக நிரூபிக்கப்பட வேண்
டும்.
(ii) குடியேற்ற நாட்டின் ஏனைய பகுதி களிளெல்லாம் சேனை நிலங்களும், மற்றும் காலத்துக்குக் காலம் பயிர் செய்யப்பட்ட நிலங்களும் காட்டு நிலங்கள் அல்லது கழிவு நிலங்களாகக் கணிக்கப்பட்டு முடிக்குச் சொந்தமானவையெனப்பட்டன.
(iv} முடிக்குரிய நிலங்களில் அனுமதியின் றிக் குடியேறியிருந்தால், அவற்றிலுள்ள பயிர்கள், கட்டிடங்கள் என்பவற்றுடன், அவை திரும்பவும் அரசாங்கத்திடம் கை யளிக்கப்பட வேண்டும்.
(w) எதுவித மானியமோ அல்லது உரிமை யோயின்றிப் பயிர்செய் நிலங்களை வைத்தி ருப்போரெல்லாரும், எந்தவித இடையீடு மின்றித் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு அந்நிலத்தை வைத்திருந்ததாக நிரூபிக்கப் பட்டால், நிலவும் விலையில் அரைவாசி யைக் கொடுத்து, அதற்குரிய மானியத்தை அரசாங்கத்திடமிருந்து பெற முடிந்தது. எனினும் இதே அரைவாசித் தொகையைக் குடியேறியவர்களுக்குக் கொடுத்து, அவர் களை வெளியேற்றக்கூடிய உரிமையையும்
அரசாங்கம் தானே வைத்துக் கொண்டது.

வி. நித்தியானந்தம்
இந்தச் சட்டம் எதுவித தடையுமின்றி அங்கீகரிக்கப்பட்டிருந்தால், முடி க்குரிய நிலங்களின் உரிமை பற்றியிருந்த தகராறு முடிவுற்றிருக்குமென்பதிற் சந்தேகமில்லை. ஆஞல் அதே நேரத்தில் சுதேச மக்களுக் குப் பெரும் தீங்கு விளைவிப்பதொன் ருக வும் இது இருந்திருக்கும். ஏனெனில் இச் சட்டம், தொடர்ந்து குறிப்பிட்ட காலப் பகுதிக்கு ஒரு நிலப்பரப்பில் ஒருவர் குடியி ருந்திருந்தால், அதை அவருக்கு உரிமை யாக்கும் வகையில் சாதகமான ஒரு காலப் பகுதியைக் குறிப்பிடத் தவறியிருந்தது. இதை ஒரு தகுந்த காரணமாகக் கருதிய கு டி யேற்ற நா ட் டு ச் செயலதிகாரி இச் சட்டத்தை அங்கீகரிக்க மறுத்தார். ஆஞல் வி  ைர வாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த கோப்பிச் செய்கையின் மத் தியில், மக்கென்ஸி தேசாதிபதி எவ்வாரு யினும் இச்சட்டத்தை நிறைவேற்றுவதிற் பெரும் ஆர்வம் காட்டினர். இந்நிலையில் உரிமையை அங்கீகரிக்கும் காலப்பகுதி முப் பது வருடங்களாக இருக்கலாமென ஒரு விரைந்த திருத்தப் பிரேரணையை இவர் கொண்டு வந்தார். ஆனல் குடியேற்ற நாட் டுக் காரியாலயம் இத்திருத்தத்தையும் முழு மனதுடன் ஆதரிக்கவில்லை. தாம் நிர்ணயிக் கும் காலப்பகுதியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சட்டத்துக்கு அங்கீகாரம் வழங்க முடி யு  ெம ன இது எடுத்துக்கூறியது. இதற்கு இலங்கை அரசாங்கமும் சம்மதிக் கவே, இந்தக் காலப்பகுதி ஐந்து வருடங் களாக நிர்ணயிக்கப்பட்டு 1841ம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் இச் சட்டம் அங்கீக ரிக்கப்டது. 14 மக்கென்ஸி தேசாதிபதி, குடி யேற்ற நாட்டுக் காரியாலயத்தின் திருத் தத்தை எதுவித மறுப்புமின்றி ஏ ற் று க் கொண்டமை ஆச்சரியத்துக்குரியதொன்ரு கத் தோன்றலாம். ஏனெனில், நிலத்துக்கு உரிமை வழங்குவதற்குரிய காலப்பகுதியை ஐந்து வருடங்களாக நிர்ணயித்தமை, அர சாங்கத்துக்குக் கிடைக்கும் நிலத்தின் அள வைப் பெரிதும் குறைக்க வல்லதாயிருந் தது. பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்
14. II, H. Vanden Driesen — Land Sales Policy and Some Aspects of the Problem of Ten. ure — 1836 — 188í (University of Ceylor. Review, Vol. XV, Nos. 1 & 2)

Page 89
இலங்கையின் பெருந்தோட்டப்.
குரிய நிலத்தைப் பெறுவதே தேசாதிபதி யின் முயற்சிகளின் நோக்கமாயிருந்தமை யால் ஐந்து வருடங்கள் தொடர்ந்து குடியி ருந்தோர் நிலத்தை உரிமையாகப் பெறலா மெனக் கூறியது இதற்கு முரண்படுவதாயி ருந்தது. ஆஞல் 1841ம் ஆண்டின் 9வது சட் டம் (Ordinance 9 of 1841) இச் சந்தேகங்க ளையெல்லாம் போக்கடித்தது. இதன் படி முந்திய சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட ஐந்து வருடகால அதி கா ர உரிமையா னது, பழைய கண்டிய மாகாணப் பகுதியிலி ருந்த நிலங்களைப் பொறுத்த வரை செல்லு படியா காதெனக் கூறப்பட்டது. கோப்பிச் செய்கைக்கு கந்த நிலங்கள் இப்பிரதேசங் களிலேயே இருந்ததால், இந்த இரண்டா வது சட்டத்தின் மூலம், முடிக்கு வேண்டிய ளவு நிலங்களை இங்கிருத்து பெறக்கூடியதா யிருந்தது. அதே நேரத்தில் பல தலைமுறை களாகக் கண்டிப்பிரதேச மக்கள் பயன் படுத்தி வந்த நிலங்கள் இப்போது அவர்க ளுக்கு உரிமையற்றுப் போகக் கூடிய நிலை யும் உருவாகியிருந்தது. இதைக் கொண்டு நோக்குமிடத்துக் குடியேற்ற நாட்டுக் காரி யாலயம் சுதேச மக்களுடைய நலன்கள் பாதிக்கப்படுமென்ற காரண த் தி ன ல், முன்பு இச் சட்டத்துக்கு அங்கீகாரமளிக்கத் தயங்கியமை அர்த்தமற்றதாகத் தெரிகின் றது. உள்நாட்டு அரசாங்கமும் குடியேற்ற நாட்டுக் காரியாலயமும் சேர்ந்து ஆடிய கபட நாடகமோ என ஐயப்படும் வகையி லும் இது அமைந்திருக்கின்றது. 15 ஏனைய பிரதேசங்களைப் போன்று, ஐந்து வருட காலப்பகுதிக்குக் குடியிருந்திருந்தால், நிலம் அதனைப் பயன்படுத்தியவர்களுக்கு உரிமையாகுமெனக் கூறியிருந்தால், கண்டி மக்கள் பலரும் சேனை நிலங்களுக்கு உரிமை கோரியிருப்பார்கள். ஆனல் மக்கென்ஸி தேசாதிபதி கொண்டுவந்த இரண்டாவது சட்டத்தின் மூலம் இந்த நிலைமை முறியடிக் கப்பட்டது. கோப்பி யுகம் முழுவதிலும் நில உடமையின் அடிப்படைச் சட்டங்க ளாக இவையே தொடர்ந்திருந்தன. ஆகவே இவற்றின் அடிப்படையிலேயே இலங்கையின் பெருந்தோட்டப் பயிர் செய் கையும் வளர்ச்சியடைந்து சென்றதென
f
ஆகவே பொதுவாக நாட்டு மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இயற்றப்பட்ட

வி. நித்தியானந்தம் 71
சட்டம் போன்று முதலாவது சட்டம் தோன்றிய போதும் இரண்டாவது சட்ட மாகிய, 1841ம் ஆண்டின் 9வது சட்டம் தான் உண்மையில் பிரித்தானியருடைய நோக்கத்தைப் புலப்படுத்துகின்ற சட்டமா யிருந்தது. மேல் வாரியாக நோக்கு மிடத்தே இச்சட்டம் கண்டிப் பிரதேச மக் களிடம் குறிப்பிடத்தக் களவு பாதிப்புக் களை ஏற்படுத்தியிருக்குமென்பது தெரிய வரும். இத்தகைய பாதிப்புகளையும், அவற் றின் தன்மையையும் ஆராய்வதே கட்டுரை யின் எஞ்சிய பகுதியின் நோக்கமாகும்.
கண்டி மாகாண மக்களைப் பொறுத்த வரை காலப்பகுதி பற்றிய உரிமை செல்லு படியா காதெனக் கூறியதஞல், 1840ம் ஆண்டு, 12வது சட்டத்தின் ஏனைய ஷரத் துகளைக் கொண்டே, அவர்கள் தமது நிலங் களுக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டி யேற்பட்டது. அதாவது ஒன்றில் அவர்கள் குறிப்பிட்ட நிலப்பரப்பு மன்னஞல் மானி யமாக வழங்கப்பட்டதென நிரூபிக்க வேண்டியிருந்தது; அல்லது கடந்த இருபது வருடங்களில் வழமையான வரிகள், தீர் வைகள் சேவைகள் என்பன வழங்கப்பட்ட தாக நிரூபிக்கப்பட வேண்டும். ஆணுல் இந்த இரண்டுமே கண்டிய மக்கள் விட யத்தில் கஷ்டமானவையாகத்தான் இருந் தன. ஏற்கெனவே கூறியபடி நிலங்கள் மன் னனல் மானியமாக வழங்கப்பட்டதென்ப தற்கான உறுதிகள் " சன்னுஸ்’ என அழைக் கப்பட்டுச் செப்புத் தகட்டு வடிவிலோ அல்லது ஒலை வடிவிலோ இருந்தன. நன்கு பாதுகாக்கப்படாமையினலும், யுத் தங் கள், படையெடுப்புகளின் காரணமாகவும் இவற்றிற் பலவும் அழிந்துபோயிருந்தன. மேலும், இத்தனை வருடங்களுக்குப் பின் தங்களுடைய நிலங்களின் உரிமையை நிலை நாட்டுவதற்கு இவை தேவைப்படுமென் பதையும் மக்கள் அறிந்திருக்கவில்லை. இத ஞல் இவற்றைக் கொண்டு மக்கள் தமது நில உரிமையைப் பேண முடியவில்லை. இரண்டாவது முறையில் நில உரிமையை நிரூபிப்பதும் மிகவும் கஷ்டமானதாகவே இருந்தது. மலைநாட்டுச் சேனை நிலங்களில் முக்கியமாக இருவகைப் பயிர்கள் பயிர்
15. bid.

Page 90
72 இலங்கையின் பெருந்தோட்டப்.
செய்யப்பட்டன. அவையாவன மலைநெல் (Hill Paddy), 5ty fair (Nachereen) 6T 607 பட்ட ஒருவகைத் தானியம். இவற்றில் நெற் செய்கைக்கு மட்டுமே அரசாங்கம் வரி வசூலித்தது. ஆனல் இரண்டாவது வகைத் தானியம் மட்டுமே பயிர் செய்யப் பட்ட பெரும் சேனை நிலப்பரப்புக்களும் காணப்பட்டன. ஆகவே இவ்வாறு எதுவித வரியுமே செலுத்த வேண்டியிராத நிலையில் வழமையான வரிகளையும். தீர்வைகளையும் செலுத்தியதாக மக்கள் நிரூபிப்பது எங்ங் னம்? அவ்வாறு நெற் செய்கைக்கு வரி செலுத்திய நிலையிற் கூட, இவற்றுக்கான பற்றுச்சீட்டுக்கள், சிறிய ஓலைத் துண்டுக ளில் விதானை மாரால் வழங்கப்பட்டன. இவற்றைக் கொண்டு எந்த நிலத்துக்கு வரி வழங்கப்பட்டதென்பதையோ, அ த ன் எல்லையையோ எவ்வகையிலும் நிர்ணயிக்க முடியவில்லை. அத்துடன் இத்தகைய ஒலைத் துண்டுகளை மக்கள் பாதுகாத்தும் வைத்தி ருக்கவில்லை. தங்கள் நில உரிமையின் ஒரு வகைப் பறிமுதலை இப் பற்றுச்சீட்டுக்கள் தடுக்கும் வல்லமையுடையவையென்பதை அவர்கள் ஒரு சிறிதும் கருதியிருக்க வில்லை. 16
இச் சட்டத்தின் பாதிப்புக்களைக் கண் டிப் பிரதேச மக்கள் உடனடியாக உண ராத போதும் கோப்பிச் செய்கையின் வளர்ச்சியுடன், இவற்றைப் படிப்படியாக உணரத் தலைப்பட்டனர். பல் தலைமுறை களாகத் தாம் சேனை நிலங்களாகவும் மேய்ச்சல் நிலங்களாகவும் பயன்படுத்திய நிலங்கள் இப்போது பெருத்தோட்டங்க ளாக மாறுவதை அவர்கள் கண்கூடாகக் கண்டனர். இந்தநிலைமைவளர்ச்சியடைந்து சென்றவிடத்து, அவர்களிடம் ஏற்பட்ட அதிருப்திகள் குழப்பங்களாகவும், கலவ ரங்களாகவும் உருப்பெறுவதையும் காண முடிகின்றது. நில எல்லைகளை இவர்கள் பிடுங்கி எறிந்ததுடன், கோப்பிச் செடிக ளுக்கும் சேதம் விளைவித்தனர். இவற்றுக் கெதிராக அரசாங்கம் சட்ட நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டியிருந்த தென்பதிலிருந்து, இத்தகைய பலாத்காரச் செயல்கள் கணிசமான அளவில் இடம் பெற்றன எனலாம். 1846 ம் ஆண்டின் 6ave & Lyug (Ordinance 6 of 1846)

வி. நித்தியானந்தம்
இத்தகைய பலாத்காரச் செயல்களுக்குரிய தண்டனைகளும் எடுத்துக் கூறப்பட்டன. ஆனல் பிரச்சனைக்குரிய அடிப்படைக் கார ணங்களை நீக்க முற்படாமல், அவற்றைச் சட்ட மூலம் அடக்க முற்பட்ட போது அது இன்னும் கூடிய பலாத்காரத்துக்கு வழி வகுப்பதாயே இருந்தது. கண்டிப் பிர தேசங்களில் 1848ம் ஆண்டு ஏற்பட்ட தொடர்ச்சியான கலவரங்கள் இதன் பிரதி பலிப்பாயே இருந்தன. இக் கலவரங்களுக் கான காரணங்களை ஆராயும் பொருட்டு 1849ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவின் முன் சாட்சியமளித்த பலர், 1841ம் ஆண்டின் 9வது சட்டம் கண்டி மக் களின் சேனை நிலம், பயிரிடு நிலம் என்பவற் றைப் பெரிதும் பாதித் திருப்பதாயும், 1848ம் ஆண்டுக் கலவரங்களுக்கும் நிலப் பிரச்சினைக்கு மிடையே நெருங்கிய தொடர் பிருப்பதாயும் எடுத்துக் கூறினர்.17 இவ் வாறு சாட்சியமளித்த பலர் ஐரோப்பிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய சாட்சியங்களிலிருந்து தெரியவந்த இன் ணுெரு விடயமென்னவெனில், மக்களுக் கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராகப் பிரித்தானிய அதிகாரிகளிடமிருந்து எவ்வ கையிலும் நியாயத்தை எதிர்பார்க்க முடி யா திருந்தமையேயாகும். சட்டம் முற்ருக நீக்கப்படுமெனக் குடியான்கள் எ தி ர் பார்க்க முடியாதிருந்த போதும், கால் நடைகளின் அத்துமீறிய பிரவேசம், எல் லைத் தகராறு போன்ற விடயங்களில், நீதி மன்றங்கள் ஒரளவு நியாயமாக நடககு மெனக் குடியான்கள் எதிர்பார்ப்பது இயல் பானதே. ஆனல் பிரித்தானிய அதிகாரி கள் முழுப்பேருமே ஏறக்குறையப் பெருந் தோட்டச் செய்கையில் அக்கறை கொண் டிருந்த காரணத்தினுல், இதற்கு முரணு யிருந்த குடியான்களின் நன்மையை அவர் கள் கருத்திலெடுக்கவில்லை. 1841ம் ஆண் டின் சட்டம், 1848 ம் ஆண்டுக் கலவரங்க ளுக்கு ஒரு முக்கிய காரணமென்பது சந்தே கத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருந்த போதும் இது விடயத்தில் கண்டிய மக்க
16. bid.
17. B. P. P of 850. Vol. XII - Report of the
Select Committee on Ceylon.

Page 91
இலங்கையின் பெருந்தோட்டப்.
ளுக்கு எதுவித சலுகையையும் அரசாங்கம் வழங்க முன்வரவில்லை. ஏனெனில் இவ் வாறு சலுகை வழங்கப்பட்டால், அது நிச் சயம் கோப்பிச் செய்கையைப் பாதிப்பதா கவே இருந்திருக்கும். ஆகவே மீண்டும் அடக்கு முறையைக் கையாள்வதனையே அரசாங்கம் தனது நோக்கமாகக் கொண்
L — El
1850ம் ஆண்டுக் காலப் பகுதியில் கோப்பிக் கைத் தொழில் உச்சநிலையை அடைந்தபோது, சுதேச மக்கள், பெருந் தோட்டச் செய்கையிலிடுபட்டவர்களில் ஒரு சாராரிடமிருந்தே, தமக்கு ஆதரவு தேடிக் கொள்ளக் கூடிய நிலையும் உருவாகி யது. இதற்குக் காரணமென்னவெனில், கோப்பிச் செழிப்பின் கா ர ண மா க இலங்கை நோக்கி வந்த பலரும் கோப்பிச் செய்கையிலீடுபட முற்பட்ட போது, அதற்கான முடிக்குரிய நிலங்களை வாங்கு வது கஷ்டமாயிருந்தது. இந்நிலையில் தனிப்பட்ட சுதேசிகளிடமிருந்தே அவர் கள் தம் நிலங்களை வாங்கினர். ஆனல் இந் நிலங்களை வாங்கிய சில காலத்தில், இவற் றுக்களிக்கப்பட்ட அதிகார உரிமை சட் டத்துக்கு முரணுன தென்பதை இவர்கள் உணர்ந்து கொண்டனர். 1841ம் ஆண்டின் 8வது சட்டமே இதற்குக் காரணமாயிருப் பதையறிந்த இவர்கள் உடனடியாக அச் சட்டத்தை நீக்கும்படி வேண்டி நின்ற னர். 18 இவ்வாரு கப் பெருந்தோட்டத் துறையைச் சார்ந்த ஒரு சாராரே, சுதேச மக்களின் நலனுக்கெதிராயிருந்த ஒரு சட் டத்தை நீக்கும்படி வேண்டி நின்றமை, இலங்கையின் நில உடமை வரலாற்றின் ஒரு திருப்டம் எனக் கூறலாம். இதன் பின்பே முதன் முதலாக இலங்கை அரசாங் கம், தான் இயற்றிய நில உடமைச் சட் டத்துக்குத் தத்துவ ரீதியில் விளக்கம் கொடுக்க முன் வந்தது. இதன் படி கண்டி இராச்சியத்தின் சேனை நிலங்கள் ஆரம்பத் திலிருந்தே முடிக்குச் சொந்தமான காட்டு நிலங்களென்றும், கண்டி மக்களின் சிறு தானியத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு "இந்நிலங்களில் வரையறுக்கப் படாத பயிரிடு உரிமை வழங்கப்பட்ட போதும், இவற்றின் அதிகார உரிமை மன் னனிடமே இருந்ததென்றும் கூறப்பட்டது.

வி. நித்தியானந்தம் 73
பிரித்தானிய அரசாங்கம், நிலத்துக்கே உடமை, அதிற் பயிரிடும் உரிமை என்பவற் றுக்கிடையிலான சிக் க லா ன வேறு பாட்டை அறியாமல் சேனை நிலங்களுக்கு உரிமையுண்டென்பதை அங்கீகரித்தது. எனினும் அரசாங்கத்தின் இந்த இலகு வான போக்கினல், ஏறக்குறைய இருபது வருடங்களின் பின் கோப்பிச் செய்கையில் முதலீடு செய்யும் பொருட்டு நிலத்தைத் தனிப்பட்டவருக்கு வழங்க முன்வந்த போது, அதற்குரிய தகுந்த அதிகார உரிமை வழங்கும் சக்தியில்லாதிருப்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டது. ஏனெ னில் சுதேசிகள் பிரித்தானிய தோட்டச் சொந்தக்காரர் பெறமுற்பட்ட ஒவ்வொரு அங்குல நிலமும் தமக்கு உரிமையுடைய தெனக் கோரலாயினர். இந்நிலையிலிருந்து விடுபடும் பொருட்டே 1840, 1841ம் ஆண் டின் சட்டங்கள் இயற்றப்பட்டதாக அர சாங்கம் வெளியிட்ட அறிக்கை எடுத்துக் கூறியது. நிலங்களை வாங்குவோருக்குத் தகுந்த அதிகார உரிமையை வழங்குவது டன், தனியார் தமது உரிமைகளை நிலை நாட்டுதற்குரிய எளிய ஆதாரமாக இது விளங்குவதாகவும் எடுத்துக் கூறப்பட்டது.
எனினும், சட்டங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்கள். இவ்வறிக்கையை அப் படியே ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை. உண்மையில் இதன் மூலம் ஏற்பட்டதென்ன வெனில், அரசாங்கமும், சட்டத்துக்கு எதி ராயிருந்தோரும் இதனை  ைவ த் து க் கொண்டு பெரும் வாதத்தில் ஈடுபட்டமை யேயாகும். இந்த வாதத்தின் கருவாயிருந் தது, மன்னன் நிலத்துக்கு முழு உரிமை யுடையவளு இல்லையா என்பதேயாகும். அரசாங்கம் நிலத்தின் உரிமை முற்ருக மன் னனைச் சார்ந்ததே எனக்கூறியது. ஆனல் "மன்னனின் உரிமை' என்பதை அரசாங் கம் பிழையாக அல்லது கவரு ன கருத்தில் விளங்கி கொண்டதாக அதனை எதிர்த் தோர் வாதாடினர். இத்தகைய வாக்கு வாதம் பிரச்சினையைத் தீர்ப்பதில் எந்த வகையிலும் உதவி புரியவில்லை. அதற்குப்
18. I. H Vanden Driesen Land Sales Policy and some Aspects of the Problem of Tenure 1836 - 1886 (University of Ceylon Riview, Vol. XV, Nos 1 & 2)

Page 92
74 இலங்கையின் பெருந்தோட்டப்.
பதிலாகப் பிரச்சினையை மேலும் நடை முறைக் கொவ்வாத தொன்ருக்குவதா கவே இருந்தது. எவ்வாருயினும் இலங்கை யின் குடியேற்ற நாட்டு அரசாங்கமோ, பிரித்தானிய குடியேற்ற நாட்டுக் காரியா லயமோ , 1841ம் ஆண்டின் 9வது சட்டம், கண்டி மக்களின் வழமையான பொருளா தார வாழ்வைச் சீர்குலைத்தமையை உண ரத் தவறியதெனக் கூறமுடியாது. ஆனல் இவற்றை நீக்கினுல் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டு நாட்டு வருமானம் குறைவடையும்; ஆகவே இவை நீக்கப்பட முடியாதவை, என அவை கரு தின என்பதே உண்மையாகும். சேர் எமர் Gmv 6ăT QUT GOT Gär fib (Sir Emersan Tennent) என்பாரின் கூ ற் று இதை ந ன் கு தெளிவு படுத்துவதாயிருககும். இப்பிரச் சினைகளுக்கு எதுவித நிவாரணமும் இல்லை; ஏனெனில் இவை நியாயமான காரணங்க ளிலிருந்தெடுப்பவையாகும். எனவே இக் காரணங்களை கட்டுப்படுத்துவது, அதா வது கோப்பி பயிரிடுதலைக் கட்டுப்படுத்து வது முறையாகாது. ''19
எனினும் 9 வது சட்டத்தை நீக்க வேண்டுமென்ற கோரிக்கை நாளுக்கு நாள் பலமடைந்து கொண்டே வந்து, இறுதியில் குடியேற்ற நாட்டரசாங்கம் இதனை ஒத்திப் போட முடியாத ஒரு நிலையும் உருவாகி யது. ஆனல் குடியேற்ற நாட்டரசாங்கம் சற்றும் எதிர் பார்க்காத ஒரு 'நிலையாகவே இது காணப்பட்டது ஏனெனில் யாரு டைய நன்மைக்காக அரசாங்கம் முன் நின்று இச் சட்டத்தைக் கொண்டு வந் ததோ, அவர்களில் ஒரு சாரா ரே அதனை நீக்கும்படி கோரி நின்றனர். ஆனல் இச்சட் டத்தை முற்ருக நீக்குவது எந்த வகையி லும் முடியாத காரிய மென்றே பிரித்தானிய அரசாங்கம் கருதியது. ஏனெனில் வாட் தேசாதிபதி எடுத்துக் காட்டிய படி , இந் நிலையில் (முன்பு விற்ற) பெருமளவு முடிக் குரிய நிலங்களை அரசாங்கம் இழக்க வேண் டியிருக்கும்.விற்கப்பட்ட நிலங்கள் பற்றிய உரிமையைப் பரிசோதித்துப் பின் 1841ம் ஆண்டுச் சட்டத்தைப் பிரயோகிப்பதன் மூலம் முடிந்தளவுக்கு அவை முடிக்குரிய நிலங்கள் எனக் கூறுவதே செய்ய வேண்டிய தாயிருந்தது. ஆனல் இதற்கேற்ற வகை

வி. நித்தியானந்தம்
யில் அரசாங்க நிலஅளவைப் பகுதி திறமை வாய்ந்ததாக இராததால், வாட் தேசாதி பதி சட்டத்தை நீக்கும்படியான கோரிக் கையை நிராகரிக்கும் படி சிபாரிசு செய் தார் . எனினும், ராஜாங்கச் செயலதிகாரி ஒன்றில் இச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வருவதை விரும்பினர், அல்லது இதை விசாரிப்பதற்கென ஒரு விசாரணைக் குழுவினை ஏற்படுத்த விரும்பினர். இதை யடுத்து வாட் தேசாதிபதி விசாரணைக் குழு வொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட போதும், இதற்கிடையில் இவருடைய பதவிக்காலம் முடிவுற்றதால் up i 5 n ri S (353frt SuSGu(Sir Charles Macarthy) இதில் தொடர்ந்து ஈடுபட வேண் டியதாயிருந்தது. இவருடைய காலத்தில் 1863ம் ஆண்டின் 8வது சட்டம் கொண்டு வரப்பட்டது. இச் சட்டம் இரு நோக்கங் களை உடையதாயிருந்தது. ஒன்று நிலத்தை உடையவர்களின் உரிமையை உறுதிசெய்ய விரும்பியது. மற்றது நிலங்களுக்குத் தற் போது நிலவும் சட்ட உரிமைகள், எதிர் காலத்தில் ஏற்படக் கூடிய உரிமை மாற்றங் கள் என்ற யாவற்றையும் பதிவு செய்ய விரும்பியது. ஆகவே ஒவ்வொரு பகுதியிலு முள்ள நிலங்களை அளந்து29, ஒவ்வொரு துண்டும் ஒரு குறிப்பிட்ட சொந்தக்காரரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு, அதற்குரிய பதிவுப் பத்திரம் வழங்குவதற்கும் நட
வடிக்கை எடுக்கப்பட்டது.21
1863ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டம், குடியான்களுடைய நிலையில் எது வித சீர்திருத்தத்தையும் கொண்டு வந்த தாகக் கூற முடியாது. பெருந் தோட்டத் துறையினருக்கு உதவி செய்வதொன் ரு கவே இது இருந்தது. சட்டத்தின் முக்கிய குறைபாடு என்னவெனில் முந்திய சட்டம் போன்றே, இதுவும் நிலத்தின் உடமை பற்
19. B P. P. of 1850. Volume XII - Report of
the Select Committee on Ceylon.
20. வாட் தேசாதிபதியின் காலத்தைப் போன் றன்றி, இப்போது கில அளவைப் பகுதி (Sur. vey Department), Sö 35 L. 63d LD God u_j if gosp வேற்றுமளவிற்குத் திறமையடைக் திருப்ப தாகக் கருதப்பட்டது.
21. 35T GUofilů Lugínquiù us56) (L a n d Registration
Department) 1864ம் ஆண்டு நிறுவப்பட்டது.

Page 93
இலங்கையின் பெருந்தோட்டப்.
நிக் கவனம் செலுத்தியதேயன்றி, அதனு டன் ஒத்த முக்கியத்துவம் வாய்ந்த பயிரிடு உரிமை பற்றிக் கவனம் செலுத்தவில்லை. பாதிக்கப்பட்ட சேனை நிலங்களின் உடமை பற்றிய பத்திரங்கள் இருந்திருக்குமானல், கண்டிமக்கள் விற்ற நிலங்கள் பற்றி எதிர்ப் பேற்படுவதற்கு இடமேயில்லை. இவையில் லாதிருந்ததன் காரணமாகவே, நில விற் பனைகள் சட்ட ரீதியானவையா என்ற சந் தேகம் ஏற்படுவதற்குக் காலாயிருந்தது. அதே சமயம் இந்நிலங்கள் முந்திய உடமை யாளரால் பயிரிடப்பட்டன என்பதும் ஒரு போ தும் மறுக்கப்படவில்லை. இந்நிலையில் நிலங்களில் பயிரிடு உரிமையை அங்கீகரிப் பதே நியாயமானதும், சுலபமானதுமான தீர்வாகும். ஆனல் 1863ம் ஆண்டுச் சட் டம் இதைச் செய்யவில்லை. 1841ம் ஆண் டுச் சட்டத்தின் அம்சங்களைச் சிறந்த முறையில் பிரயோகிப்பதற்கு உதவி புரி யும் ஒரு சட்டமாகவே அது இருந்தது. ஆகவே விசாரணைக்குழுவானது சேனை நிலங்களின் முந்தியவிற்பனை, சட்டத்துக்கு முரணுனதெனக் கூறுவதொன்றினையே செய்ய வேண்டியிருந்தது. இதனுல் இச் சொத்துக்களை முடி திரும்பவும் கோரக் கூடியதாயிருந்தது. நிலங்களை வாங்கி யோர் உடமை அதிகாரத்தை வைத்திருக் கவும், அவர்கள் செலுத்திய விற்பனைப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கும் அநு மதியளித்தது. இந்தச் சட்டத்தின் பின்பு பெருந்தோட்டத் துறையைச் சார்ந்தவர் களிடமிருந்து எதுவிதமான எதிர்ப்பும் கிளம்பவில்லை.
1863ம் ஆண்டுச் சட்டமே, கோப்பிச் செய்கைக் காலப்பகுதியில் நிலம் சம்பந்தப் பட்ட வரை இயற்றப்பட்ட இறுதிச் சட்ட மெனலாம். ஆகவே பெருந்தோட்ட வர லாற்றின் ஒரு முக்கிய கட்டம் முடிவடை யும் நிலையிற் கூட, நிலப் பிரச்சனை தீர்க்கப் படாததொன்ற கவே இருப்பதைக் காண முடிகின்றது. கோப்பியின் அபிவிருத்தி யைத் தொடர்ந்து அதற்கு வேண்டிய நிலத் தைப் பெற முற்பட்டபோது, சுதேச மக் கள் பாதிக்கப்பட்டனரெனன் பதிற் சந் தேகமில்லை. எனினும் எந்தெந்த வகையில் எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டனரெனக் கூறுவது கடினம். சிலர் தமது நிலங்களை

வி. நித்தியானந்தம் 75
முற்ருக இழந்தனர்; வேறு சிலர் நிலத்தை இழக்காத போதும், அதனை மேய்ச்சல் நில மாகவோ பயிரிடு நிலமாகவோ பயன்படுத் தும் உரிமையை இழந்தனர். இதன் மூலம் அவர்கள் இதுவரை பெற்று வந்த மேலதிக வருமானம் தடைப்பட்டது. வழமையாக எடுத்துக் கூறப்படுமளவிற்குச் சேனை நிலங் கள் பறிக்கப்படவில்லையென்றும், இதனுல் குடியான்களின் வி வ ச ரா ய ம், மந்  ைத வளர்ப்பு என்பன பாரதூரமாகப் பாதிக் கப்படவில்லையெனக் கூறப்படும் கருத்து களும் நிலவுகின்றன.22 எனினும் பெருந் தோட்டப் பயிர்ச் செய்கையால் கண்டி மக் கள் எந்த வகையிலும் பாதிக் கப்படவில்லை யெனக் கூற முடியாது. உண்மையில் இப் பாதிப்புகள் முதலாளித்துவத்தின் வருகை யால் ஏற்பட்ட விளைவுகள் என்று கூறும் வகையில் அமைந்திருந்தன. பெருந் தோட் டங்களை லாப நோக்குடனமைந்த நீண்ட கால முதலீடுகளாகத் தோட்டச் சொந்தக் காரர் கருதியமையால், அவை அமைந்தி ருந்த நிலங்களுக்குத் தெளிவான உரி மையை அவர்கள் வேண்டி நின்றனர். இதன் பிரதிபலிப்பே மேலே நோக்கிய நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை எனலாம்.
கண்டி மக்களைப் பொறுத்தவரை நிலங் கள் பற்றிய உடமையை, அவர்கள் நவீன கருத்தில் உறுதியான முறையில் அமைந்தி ருக்க வேண்டுமெனக் கருதவில்லை. நிலத் தில் பயிரிடு உரிமையிருந்தால் போதுமான தாயிருந்தது. அதன் தனிப்பட்ட உடமை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஆனல் பிரித்தானியர் தனி உடமைக் கருத்துகள் வளர்ந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களா யிருந்தார்கள். எனவே முதலாளித்துவ விவசாயத்தை இலங்கையில் மேற்கொண்ட போது இதே கருத்துக்களை அவர்கள் இங் கும் புகுத்த முயன்றதில் ஆச்சரியமில்லை. இங்கிலாந்து வழக்கத்தைப் பின்பற்றி நிலங்
22. p. 45 T16oorb - Ceylon Studies Seminar 68/69 Series No. 1 The Alleged Restogression in the Techniques of Paddy Cultivation in the Central H i g h 1 a n d s Resulting from the Waste Lands Legislation and the Growth of Plantations in British Ceylon. A Critique of the De Silva - He wavithrana Hypothesis - Michael Roberts. (University of Ceylon)

Page 94
76 இலங்கையின் பெருந்தோட்டப்.
களின் உடமையை நிரூபிக்கும் உறுதிப் பத் திரங்களை அவர்கள் வேண்டி நின்றனர். ஆனல் மேற் கூறிய காரணங்களினல், இலங்கை மக்கள் அவற்றினைச் சமர்ப்பிக்க முடியாதவர்களாயிருந்தனர். இந் நிலையில் தாம் பல காலமாகப் பயிரிடு உரிமையை அநுபவித்து வந்த நிலங்கள், அவற்றின் உடமை பற்றிய உறுதிப்பத்திரம் தம்மிடம் இல்லையென்ற ஒரே காரணத்திற்காகத் தம்மிடமிருந்து பறிக்கப்படுவதை உணர்ந் தனர். நிலங்கள் பறிக்கப்பட்டதனுல் உள் நாட்டு விவசாயம் பாதிக்கப்பட்டது மட்டு மன்றி, விவசாயத்தைப் பாதுகாப்பதைத் தமது நோக்காகக் கொண்டிருந்த கிராமிய நிறுவனங்களும் அழிய முற்பட்டன. இந் நிலையில் முழுக் கிராமியப் பொருளாதா ரமே படிப்படியாக வீழ்ச்சியடைந்துiஅழிய முற்பட்டதெனலாம். அத்துடன் கிராமிய சனத்தொகை பெருகிச் சென்றவிடத்து, நிலப்பற்ருக் குறை ஏற்படுவது தவிர்க்க முடியாததாயிருந்தது. ஏனெனில் முன் போன்று விரும்பிய வகையில் நிலங்களைப் பெற முடியவில்லை. இதஞல் இருக்கின்ற நிலங்களையே பங்கிட வேண்டியிருந்ததால், கூட்டு உடமை முறை போன்ற புதிய பிரச் சனைகளும் கிராமியப் பொருளாதாரத்தை
காலங்கள்
c分;/7
காலடிச் ச ძრა

வி. நித்தியானந்தம்
எதிர் நோக்குகின்றன.23 துண்டாகப் பிரிக் கப்பட்ட நிலங்களிலிருந்து எதிர் பார்த் தளவு விளைச்சல் கிடையாததால் மக்கள் கடனில் மூழ்க வேண்டிய நிலை ஏற்பட்டது டன் நிலங்களை விற்று முழு நேர விவசாயத் தொழிலாளராக மாற வேண்டிய நிலையும் ஏற்பட்டது.24 சுருக்கமாகக் கூறின் கிராமி யப் பொருளாதார அமைப்பு முற்ருகச் சீ” குலைக்கப்பட்டதெனலாம்.
ஆஞல் மேற்கூறிய பிரச்சனைகள் இலங் கைக்கு மட்டும் தனித்துவமுடையவை யல்ல. இந்தியா, ஆபிரிக்க நாடுகள் போன்ற ஏனைய குடியேற்ற நாடுகளின் வர லாற்றிலும் இதே பிரச்சினைகள் தோன்றி யமை குறிப்பிடத்தக்கது.25
23. H. A. De S. Gunasekara - The Structure of the Ceylon Economy. (Young Socialist. Vol. I No I)
24. I bid.
25. I. H. Vanden Driesen - Land Sales Policy and Some Aspects of the Problem of Tenure - 1836 - 1886 (University of Ceylon Review, Vol. XV, Nos 1 & 2)
உனக்காக த்திருக்காது வடுகள் டவராது.

Page 95
TALK ABOU
and We mean PRIN'
that is the nearest to
– that is Our SPECIA
In the
C
Brochures, Progr
Invitation Cards,
and also Die-Stamp
M:S OF YON --

T PRINTING.
TING
PERFECTION
ALITY.
printing
f
ammes, Magazines,
Letterheads & etc.
bing of Letterheads.
OMMEREIAl FRINTIME

Page 96
கணிப்பொருள் J5 ch Q, 6) GID J5 ||
அதிவேகமாக முன்னேறிக் ظاہی رہ 2 கொண்டே போகிறது. எங்கு பார்த்தா லும் தொழிற்சாலைகளும் இயந்திரங்களும் பரந்து கிடக்கின்றன. ஆகாயத்தில் கிளம் பிய மனிதன் சந்திரனையும் அடைந்து விட் டான். செவ்வாய்க் கிரகத்தையும் அடை வதற்கு போட்டி போட்டுக் கொண்டு வெளிக்கிட்டு விட்டார்கள். செவ்வாய்க் கிரகத்திற்கு குறுகிய நேரத்தில் செல்வ தற்கு ஒளி வேகத்தில் இயந்திரம் இயங்க வேண்டுமென்று அதற்கான ஆராய்ச்சி நடத்துகிறர்கள். கோடானுகோடி பணத் தைச் செலவழித்து என்னத்தைக் கொண்டு வந்தார்கள்! நிலத்தில் ம னி த ரு க் கு போதிய உணவு, இடவசதி இல்லாதபோது இவை க்ளை நிவர்த்திசெய்ய ஒரு திட்டம் வகுத்தா லென்னவென்று தோன்றவில் லையா? அப்படியாயின் குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பூமியிலேயே பெற
லாமே.
உயிர்கள் முதன் முதலில் கடலிலேயே தோன்றின. இனப்பெருக்கமும் இனவிருத் தியும் கடலில் ஆரம்பித்தன. இதனுல் நாள டைவில் கடலில் ஏகப்பட்ட உயிரினங்கள் ஜீவித்தன. கடலில் உள்ள" உணவுகள் குறைந்தன. பின்பு உணவுக்குத் திண்டாட் டம் நிச்சயம் வந்தேயிருக்கிறது. இதனுல் உயிரினங்கள் நிலத்தை நாடின. இனப் பெருக்கமும் இனவிருத்தியும் பின்பு கடலி லும் நிலத்திலும் நடைபெற்றன. நிலத்தில் வாழ்ந்த உயிரினங்களிலிருந்து தோன்றிய வனே மனிதன். ஆகவே கடலில் தோன் றிய உயிரினங்களிலிருந்து பிறந்தவனே மனிதன். கடலில் இருந்த உயிர்கள் உண வுக்காகவும் இடவசதிக்காகவும் தரையை நாடின. ஆனல் அதே தேவைக்காக மணி

5 Gif6)
L(G)
சுப்பிரமணியம் மோகனதாஸ்
தன் கடலில் இறங்கியேயாக வேண்டும். அன்று தரையை நாடிய உயிரினங்கள் இன்று கடலை நாடுகின்றன. அன்றும் இன் றும் கடலில் ஏறத்தாழ ஒரே பொருள்கள் தான் இருந்த போதிலும் அன்றைய உயிர் களுக்கு அப் பொருள்களைப் பாவிக்கத் தெரியவில்லை. ஆனல் இன்றைய உயிரினங் கள் அவற்றைப் பாவிக்க முற்படுகின்றன. மனிதனு ச்கு நிலத்தில் உள்ள பொருள்கள் போதவில்லை, ஆகையால் கடலில் இறங்கத் தீர்மானித்துள்ளான்.
பூமியின் வெளிப் பரப்பில் சுமார் 71% கடலால் சூழப்பட்டுள்ளது. பூமியில் வாழும் விலங்குகளில் ஏறத்தாள 80% கட லிலேயே சீவிக்கின்றன. தாவரவினங்களும் நிலத்தைவிடக் கடலிலேயே கூடக் காணப் படுகின்றன. கடலில் உள்ள மலைத்தொடர் கள் நிலத்தில் உள்ளவற்றிலும் பார்க்க மிகப்பெரியன. இவைகள் இப்படியாக இருக்கும்பொழுது க ட லில் நிச்சயமாக பெரும் புதையல்கள் இருக்கவேயிருக்கிறது.
சனப்பெருக்கம் கூடக் கூட கைத் தொழில்களும் தொழிற்சாலைகளும் பெருகு கின்றன. தொழிற்சாலைக்கு வேண்டிய கணிப் பொருள்களைப் பெரும்பாலும் நிலத் திலிருந்து எடுத்து வருவதால் நிலத்தில் இருக்கும் கணிப் பொருள்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இதனுல் நாங்கள் சமுத்திரத்தில் உள்ள கணிப் பொருள்களை எடுத்தேயாக வேண்டிய நிலைக்கு வந்திருக் SAGold.
*செல்வமுடையதும் விந்தையானதுமான பொருளாகன் கடல் மாற்றம்’
-ஷேக்ஸ்பியர்

Page 97
கணிப்பொருள்களின்.
பெருங்கடலானது புவியின் கணிப் பொருள் களின் பெரும் கருவூலம். ஒரு கன மைல் கடல் நீரில் சராசரி 166 மிலியன் டன் உப் புக்கள் கரைந்து இருக்கின்றன. புவியின் எல்லாப் பெருங் கடல்களிலும் உள்ள நீரில் ஐம்பது குவாட்ரிலியன் டன் உப்புக்கள் உள்ளன. இந்த அளவு ஆயிரம் ஆயிரம் ஆண்டுக் காலத்தில் பெருகி வந்திருக்கிறது. மூலகங்களைப் புவி இடத்துக்கு இடம் மாற் றிக் கொண்டு இருந்த போதிலும் கடலே நோக்கியே பொருள்கள் பெருமளவில் கொண்டு செல்லப்படுகின்றன.
இன்று நிலத்தில் உள்ள அலுமினியம் உலகத்தேவைக்கு ஆக 100 வருடங்களுக்கு மட்டுமே போதுமானது. அலுமினியத்தின் அருமையை அறியாதவர் இல்லையேயெனக் கூறலாம். கையில் எடுக்கும் உலோகப் பொருள்களுள் 80% அலுமினியத்தினு லேயே செய்யப்பட்டனவாக இருக்கிறதை நாம் அறிவோம். அலுமினியத்தின் கலப்பு லோகங்களிலொன்றன டுரு?லுமின் (Dura1umin) பாரமற்றதாகவும் பலமானதாக வும் உள்ளதால் ஆகாயக் கப்பல் கட்டுவ தற்கு உபயோகப்படுகிறது. இக் கலப்பு லோகத்தில் 4% செம்பும் 0.5% மக்னீசிய மும் 0.5% மங்கனசும் உள்ளன. செம்பு அலுமினியம் அரிக்கப்படும் தன்மையைக் குறைக்கவும் மக்னீசியம் பாரத்தைக் குறைக்கவும் மங்கனசு பலத்தைக் கூட்ட வும் உபயோகப்படுகின்றது. Y கலப்பு லோகம், R R கலப்புலோகம் ஆகியவை அலுமினியக் கலப்புலோகங்களுள் முக்கி யம் வாய்ந்த இன்னும் இரண்டாகும். இவை களுள் டுருலு மினேவிட நிக்கலும் சேர்க்கப் பட்டுள்ளது. நிக்கலானது அதி வெப்பத் தைத் தாங்கக் கூடியதாதலால் இக்கலப்பு லோகங்கள் இயந்திரங்களின் உதிரிப்பாகங் கள் செய்ய உபயோகப்படுகின்றன. இவ் வாறு உபயோகப்படும் அலுமினியத்தை நிலத்தில் இழந்த பின்பு அலுமினியத்துக்கு எங்கே செல்வது?
பசுபிக் சமுத்திரத்தின் தளத்தின் 20 வீதத்தை ஆராய்ந்த பொழுது அங்கு 43 O. கோடி தொன் அலுமினியம் இருப்பதாக அறிந்தனர். இத்தொகைஉலகத்தேவைக்கு 20,000 வருடங்களுக்குப் போதுமானது.

மோகன தாஸ் 79
பசுபிக் சமுத்திரத்தின் 20% தளத்தில் இவ் வளவு அலுமினியம் கிடைக்குமானுல், எல் லாச் சமுத்திரங்களிலிருந்தும் எவ்வளவு பெறலாம்! நிலத்திலுள்ள மங்கனசு (இரும் பையும், செம்பையும் அலுமினியத்தையும் பலப்படுத்த உபயோகப்படுவது) உலகத் தேவைக்கு 100 வருடங்களுக்கே போது மானது. பசுபிக் சமுத்திரத்தின் தளத்திலி ருக்கும் 3850 கோடி தொன் இன்னும் 400,000 ஆண்டுகளுக்குப் போதுமானது. இப்படியே மனிதனுக்கு அத்தியாவசிய மா கத்தேவைப்படும் செப்பு, சேர்க்கோணி யம், கொபால்ற்று, மக்னிசியம், வனடியம், மொலிப்டியம் போன்றவை கடலில் ஏராள மாகக் கிடக்கின்றன.
மின்சாரக் கம்பிகள், கோவில் மணி கள், பித்தளை ஆபரணங்கள் போன்ற பொருட்களைச் செய்ய உதவும் செம்பு 70 கோடி தொன்னும், இரும்பு அலுமினியம் போன்ற உலோகங்களுக்கு அதி உஷ்ணத் தைத் தாங்கும் தன்மையைக் கொடுக்கும் நிக்கலானது 140 கோடி தொன்னும், 250 கோடி தொன் மக்னீசியமும், அலுமினி யத்தைப் போல் பாவிக்கக் கூடியதும் பாரமற்றதும் உஷ்ணம் தாங்கங்கூடியதும் ஆகாயக்கப்பல் ருொக்கட்டு யுத்த ஆயு தங்கள் போன்ற பொருள்களைத் தயாரிக்க உதவும் ரைற்ரேனியம் 100 கோடி தொன் னும், 2070 கோடி தொன் இரும்பும் கட வில் கிடக்கின்றன.
பரந்த கடலும் பாடும் மீன்களும்
மீன்கள் பாடுகின்றனவோ அல்லவே, ஆஞல் மீனைப்பிடிக்கப் போகும் மனிதன் பாடிக்கொண்டே போகிறன் . ஏனெனில் அவனுக்குக் கைநிறையக் காசு கிடைக்கி றது. இன்றைய உலகில் 50 வீதத்துக்கு மேலானேர் போதிய உணவும் புரதமும் இல்லாமலே இருக்கிரு ர்கள். மீன்பிடியை இப்போதுள்ள நிலையிலிருந்து இன்னும் 10 மடங்காகக் கூட்டினுல் பசிப்பிணியை யும், புரதக் குறைவையும் ஒழித்துக்கட்ட லாம். மீன்களிலிருந்து உணவு மாத்திர மன்றி எத்தனையோ வருத்தங்களுக்குத் தேவையான மருந்து வகைகளும் கிடைக் கப்பெறுகின்றன. உதாரணமாக கல் மீனி

Page 98
80 கணிப்பொருள்களின்
லிருந்து (stone fish) எடுக்கப்படும் ஒருவித இரசாயனமானது அதிஇரத்த அமுக்கத் தைக் குறைக்க உதவுகிறது. புவ்வர் (puter) மீனிலிருந்து கிடைக்கும் இரசாய னம் புற்றுநோய்ச் சிகிச்சைக்கு உதவியளிக் கிறது. சத்திரசிகிச்சையில் இருதயத்தின் துடிப்பு வேகத்தைக் குறைக்க உதவும் இர சாயனத்தை வீவர் (Weever) மீனிலிருந்தும், இருதயத்தின் துடிப்பு வேகத்தைக் கூட்ட உதவும் இரசாயனத்தை கக் மீனிலிருந்தும் (hag fish) கிடைக்கப் பெறலாம். சிறுவர் தொடக்கம் முதியோர் வரை உபயோகிக் கும் மீன் (ஈரல்) எண்ணெய்யின் உபயோ கம் எவரும் அறிந்ததே. இலங்கையில் சுரு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. கடற்பஞ் சில் (sponge) இருந்து எடுக்கும் இரசாய னம் சயரோகம், மூத்திரப்பை வியாதி, பெனிசிலினல் தடுக்கமுடியாத சில நோய் களையும் தடுக்க உபயோகப்படுகிறது.
மீன்கள் கடலில் ஏராளமாகக் கிடக் கின்றன. மீன்களின் இனப்பெருக்க முறை யும், வசிப்பிடம் மாற்று முறையும் அவை களின் எண்ணிக்கையைக் குறைக்க விட மாட்டா. மீன் பி டி யி ல் முன்னேற்ற மடைந்த நாடுகளில் சில தாகிய ஐப்பான், ஜெர்மனி, இந்தியா. போன்றவை மீன் பிடியில் ஆராய்ச்சி நடத்தி வருகிருர்கள். ஆராய்ச்சியாளர்கள் மீன்களைக் கடலில் வளர்க்க முற்பட்டுள்ளார்கள். மீன்கள் விரும்பியுண்ணும் பிளாங்ரன் (plankton) என்னும் துண் தாவரத்தை முதலில் கட லில் வளர்த்து பின்பு மீனின் இனத்தையும் தொகையையும் பெருக்குகிருர்கள். இத் தாவர வினம் கடலின் மேற்பரப்பில் வாழ் பனவாகும். இம்முறையினுல் கூடிய மீன் களைப் பிடிக்கமுடியும்.
மனிதன் தனக்கு வேண்டியவற்றை வேண்டிய உருவில் பெற விரும்புகிருன்.

மோகனதாஸ்,
சுவைத்து உண்ணவிரும்பி விதம்விதமான உண்டிகளை உண்டாக்கிய மனிதன் சில சம யத்தில் குளிசையளவில் தனக்குத் தேவை யான உணவை எடுக்க முயல்கிருன் , இத்தி யாவில் பிடிக்கப்படும் சில மீன்கள் உருசி யற்றவை. ஆகவே அம்மீன்களை அவர்கள் துரளாக்கி, செறிதாக்கி 80% புரத உண வாகத் தயாரித்துள்ளார்கள். இது இலகு வில் பழுதாக மாட்டாது. மணமற்ற இப்
புரத உணவு ஒரு பிள்ளைக்கு நாளொன்றுக் குத் தேவையான புரதத்தை 1 சதத்துக் குள் கிடைக்கக் கூடியதாகச் செய்யுமாம். இந்திய அரசாங்கம் இப் புரத உணவைக் கூடிய அளவில் தயாரிக்க உத்தேசித்துள்
ளது.
உலகில் முன்னேற்றமடைந்த நாடு களிற் சிலவான அமெரிக்கா, சோவியத் ருஷ்சியா, பிரென்சு வருடமொன்றிற்கு ஏறத்தாள 500கோடி டொலர்களைச் செல வழித்துக் கடலிலிருந்து உபயோகங்களைப் பெறுகின்றன. இவைகளைவிடச் சில தனி யார் எண்ணெய்க் கூட்டுத்தாபனங்களும் போட்டிபோட்டுவெளிக்கிட்டுள்ளன. இன் னும் 10 வருடங்களில் உலகத் தேவைக் கான 50% எண்ணெயை கடலின் கீழ் இருந்து பெறலாம் என நம்புகிருர்கள். வட துருவக் கடலில் போதிய எண்ணெய்யும், இயற்கை வாயுக்களும் இருக்கின்றன.
கடலில் இருந்து கிளம்பிய மனிதன் நிலத்தை அடைந்தான். நிலத்திலிருந்து வானைக்கிழித்துக் கொண்டு சந்திரனையோ செவ்வாயையோ அடைந்தாலும் கடலிலே குதிப்பு இலகுவாகத் தோன்றுகிறது. நாம் எவ்வளவு தூரம் போனுலும் கிட்ட இருக் கும் கடல்தான் நமக்கு கூடிய உதவி செய் யும். ஆகவே முதலில் கடலை அடிமை
கொள்வோம்.

Page 99
கன கி பு
கலாநிதி பொ. )
தகழிணகைலாச புராணம் முதல் திருக்கேதீச்சரப் புராணம் ஈருகச் செய்யு ளில் ஏறக்குறைய நாற்பது புராணங்கள் வரை ஈழத்திலே தோன்றியுள்ளனவென அறிய முடிகின்றது. இவற்றிலே பெரும் பான்மையானவை தலமான்மியம் கூறு வன. ஈழத்துப் புலவர் தமது நாட்டிலுள்ள தலங்களுக்கு மட்டுமன்றித் தமிழகத்தி அலுள்ள தலங்களுக்கும் புராணங்கள் இயற்றியுள்ளனர். தகழிண கைலாசபுரா ணம் (1887) 1, திருக்கரைசைப்புராணம் (1890) , திரிகோணுசல புராணம் (1909), கதிர்காம புராணம் (1932), திருக்கேதீச் சரப் புராணம் (1966) நகுலா சல புரா ணம்?, நகுலகிரிப் புராணம்3,தென்கோயிற் புராணம், முதலியவை ஈழத்துத் தலங்க ளின் மாண்பையுணர்த்த எழுந்தன; சிதம் பரசபாநாத புராணம் (1885), இளைசைப் புராணம் (1895), திருநெல்வாயிற் புரா ணம் (1934), புலியூர்ப் புராணம் (1936), திருவைகற் புராணம் (1942), திருக்கழிப் பாலைப் புராணம் (1954), திருத்திலதைப் பதிப் புராணம், தேவகோட்டைத்த ல புராணம்", கோட்டாற்றுப் புராணம் முதலியவை தமிழ் நாட்டுக் கோயில்களின் மான்மியம் கூறத்தோன்றின. தலபுராணங் களை யடுத்து விரத மகிகை கூறும் புராணங் களும் ஈழத்திலே புனையப்பட்டன. சிவராத் திரி புராணம் (1878)?, சீமந்தனி புராணம் (1894), கந்த சட்டி புராணம் (1895), ஏகா தசி புராணம் (1898) 10, விநாயக சட்டி புராணம்11 என்பன இவ்வகையைச் சேர்ந் தவை. வியாக்கிர பாத புராணம்?, யோசேப்பு புராணம்13, முகியித்தீன் புரா ணம்', சிறுத் தொண்ட நாயனர் புரா ணம்13 என்பன சமயப் பெரியோர் மீது ஈழத்துப் புலவர்களாற் பாடப்பட்ட புரா ணங்களுக்கு எடுத்துக் காட்டாகும். திரு வாக்குப் புராணமும் (1866), ஞானுனந்த

т т бог ћ
பூலோகசிங்கம்
புராணமும் (1874) கிறித்தவ வேதாக மத்தை விளக்க ஈழத்திலெடுக்கப்பட்ட முயற்சிகளாம். வட்டுக்கோட்டை நா.சிவ சுப்பிரமணிய சிவாசாரியர் (-1928) சைவ மகா புராணத்தை மொழிபெயர்த்துப் பாடத்தொடங்கி முற்றுவிக்காது இறை யடி நீழலடைந்தார் 18. முற்கிளந்த ஈழத் துப் புராணங்கள் சமய நெறியிலே மக்களை இட்டுச் செல்வதை நோக்கமாகவுடையன எனலாம்.
வல்லிபட்டித்துறை நா. ஏகாம்பரம் (-1873) பாடியதாகக் கூறப்படும் புரூர வச் சக்கரவர்த்தி புராணம் பாரதக் கதை யிலிருந்து எடுக்கப்பட்டது போலும். "புராணம் பாடினராம் என்ற மட்டிலே, அதைப் பாட நினைத் தாரோ , தொடங்கி ஞரோ, முடித்தாரோ அறியோம்' என் பது பாவலர் சரித்திர தீபக ஆசிரியர் கூற்று. நல்லூர் சி. அப்புக்குட்டி ஐயரின் (1787-1863) சூது புராணமும் பாரதக் கதையிலிருந்து தோன்றியதோ அறியேம் . வட்டுக்கோட்டை க.முத்துக்குமாரர் பாடி யதாகக் கூறப்படும் வலைவீசு புர! னம், திருவிளையாடற் புராணத்திலிருந்து பெறப் பட்ட கதையினை யுடைத் துப் போலும், புரூரவச் சக்கரவர்த்தி புராணம், சூது புரா ணம், வலைவீசு புராணம் பற்றிய செய்தி கள் கிடைக்குமாறில்லை; எனவே, அவற் றின் தன்மை பற்றி யாதும் கூறுவதற் કો ફોટોp.
வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச வயித்திய லிங்கபிள்ளே (1843-1900) சாதி நிர்ணய புராணம் என வொரு நூலை இயற்றியுள்ளார். உலக நீதி ஆசிரியர் உலக நாதன் இயற்றிய சாதிபேத விளக்கம் போன்று இந்நூலும் சாதி நிர்ணயத்திலீடு படும் 'சாதிபேத’ நூலாகும். எண்பத்

Page 100
82 ασ07 αξ ένα γ6007 αυ
தெட் டுச் செய்யுள்களையுடைய சாதி நிர் ணய புராணம் என்னும் நூல் புராண இலக் கணங்களில்லாத நூலாகும். மா புராணம், பூத புராணம் எவ்வாறு புராணங்களா காவோ அவ்வாறே சாதி நிர்ணய புரா ணமுமாகும்.
தமிழ் மொழியிற்புராணமென வழங்கும் பெயரும் அதனுற் சுட்டப்படும் இலக்கிய வடிவமும் சங்கத மொழியிலிருந்து பெறப் பட்டவை. புராண இலக்கணம் தமிழி லெழுந்த ‘பாட்டியல்" நூல்களில் விரித்து ரைக்கப்படவில்லை. வெண்பாப் பாட்டியல்,
"குலவரவு காரிகை, யாப்பிற் புரா
GOO (3D uu Tŭo”
-செய்யுளியல், 43
என்று கூறுகின்றது; குல வரவு முதலாயின வற்றைக் காட்டுவது புராண கதையாம்" என்பது அதன் பழையவுரை ‘குலவரவு முதலாயினவற்றை என்ற தஞல் உலகத் தோற்ற ஒடுக்கங்களும், மனுவந்தரமும், முனிவர் வரலாறும், அரசர் மரபும், அவர் சரிதமும் கொள்க’ என்பது அதன் விளக்க வுரை. இவ்வுரை சங்கத நூலார் கூற்றைப் பின்பற்றியதாகும். 'புராணம் பஞ்சல கூடி ணம்" என்பது அமரம். பஞ்ச லக்ஷணம் சர்க்கம், பிரதி சர்க்கம், வம்சம், மந்வந்த ரம், வம்சா நுசரிதம் என்பனவாம். சர்க்கம் உலகத்தின் தோற்றத்தை உணர்த்துவது; பிரதி சர்க்கம் உயிர்த் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் குறிப்பது; வம்சம் மன்னர் பரம்பரையைக் கூறுவது மந்வந்தரம் கால வரையறையினையும் மநுக்களது ஆட்சிக் காலங்களையும் உரைப்பது; வம்சாநுசரி தம் மன்னர் பரம்பரையோடு தொடர் புடைய கிளைக் கதைகளைச் சுட்டுவது. இப் பஞ்சலகூடிணம் ,
*மச்சமே கூர்மஞ் சைவம் வைணவம் வராகம் லிங்கம் பத்மம் வாமனமே காந்தம் பவிடிய மாக்கினேயம் கற்புள பிரமங்கை வர்த்தம்மே நாரத மார்க்கண்டம் உற்ற பாகவதமே கருடம் பிரமாண்டந் தொன்னுரல்"
(சூடாமணி நிகண்டு, 12.120)

பொ. பூலோகசிங்கம்
என்னும் விருத்தத்திற் சுட்டப்படும் பதி னெண் புராணங்களிலே காணப்படுவதாகக் கூறுவர். முதலிற் பதினெண் புராணங் களைக் குறித்த புராணம் என்பது பிற்பட்ட காலங்களிற் பொருள் விரிந்து பக்தர்கள் சரித்திரம், தல மகிமை முதலியவற்றின் சரித்திரமெல்லாம் அடங்கிய வரலாற்று நூலினைக் குறிப்பதாக முடிந்தது. தமிழிற் புராணம் இலக்கிய வடிவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டபோது மேற்கூறிய விரிந்த நிலையிலேயே இருந்தது. ஈழத்திற் புலவர் கள் புராணத்தைப் பயன்படுத்த முற்பட்ட போது அந்நிலைமை உதவியாக அமைந்தது. தலமான் மியம், தெய்வ அடியார் வரலாறு, விரத மகிமை முதலியனவற்றைக் கூறுவ தற்கு ஏற்ற வகையில் அது விரிவடைந்தி ருந்தது. பஞ்சலசஷ்ணமுடைமையைச் சிறப் பாகக் கொண்ட புராணம் வரலாறு கூறுவ தைப் பொதுப்பண்பாகக் கொண்ட நிலை யில் ஈழத்தவர் தமிழகத்துச் சகோதரர் போலப் புராணம் பாடினர்.
கம்பனுக்குப் பின்வந்த இலக்கிய கதியை மதிப்பிட்ட தமிழறிஞர் ஒருவர் மேல் வருமாறு கூறுவர்: 'இனி, புராணங் களை நாம் எடுத்துக்கொண்டால் அவற்ற லும் தமிழும் தமிழ்நாட்டு மக்களும் சீர் கேடுற்ற நிலைமை தான் நமக்குத் தெரிகின் றது. வடமொழியிலுள்ள பதினெண் புரா ணங்களின் மொழி பெயர்ப்புக்கள் சில தமி ழில் உள்ளன. இவை போதா என்று தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஸ்தலத்திற்கும் புராணம் எழுதத் தொடங்கி விட்டனர். இப் புராணங்களைக் காவிய லக்ஷணமுள் ளன போல இயற்றி இவற்றில் பல வகை யான பொய் வரலாறுகளையும் புனைந் துரைத்து எழுதி வந்தனர். சூரியன், சந்தி ரன், இந்திரன், மஹரிஷிகள், பிரமவிஷ்ணு ருத்ரர்கள், உமாதேவியார், அரசர்கள் முதலானவர்க்கெல்லாம் ஒரே கடமை ஏற் பட்டு விட்டது! அவர்கள் தினந்தோறும் பல தலங்களுக்கும் சென்று, இறைவனைப் பூசித்து, தங்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ள சாபத்தினின்றும் விமோசனம் பெறுதலே அவர்கள் வேலை இவ்வகையான கதைகளை எழுதி வைத்துச் சமயத்தின் பேரிலேயே அருவருப்பு உண்டாகும் படியாகச் செய்து விட்டனர் இப் புராண ஆசிரியர்கள். இவர்

Page 101
கனகி / ர 7ணம்
கள் சில இடங்களிலுள்ள கட்டுக்கிடை நீரைத் தீர்த்தமெனக் கொண்டு, மோகூடி தாயினி, பாபநாசினி என்பன முதலாகப் பேரிட்டு மகிழ்ந்து, தங்களுடைய பக்தியை வெளியிட்டிருக்கிருர்கள். இக்கட்டுக்கிடை நீர் நாற்றம் எடுப்பது போலுள்ளது இவர் களது தமிழும். உண்மையான தெய்வப் பற்றும், உண்மையான தமிழ்ப் பற்றும், உண்மையான நாட்டுப் பற்றும் நமக்கு உண்டாகாதபடி செய்து விட்டது இவ் வகைப் புராணம் என்றே சொல்லலாம். நேர்மாறக, இவர்கள் செய்துள்ள கட்டுக் கதைகளின் மீது அருவருப்பும், இவர்கள் எழுதியுள்ள தமிழின் மீது அருவருப்பும் உண்டாகும் படி செய்து விட்டனர்.' தல புராணங்களின் நூற்பொருளைப் பற் றிய இக்கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை.
ஈழத்துப் புலவரில் மூவர் புராண மென் னும் இலக்கிய வடிவத்தின் பொருளை மாற் றியமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ள னர். 18 புராணநெறியினைப் புது வழியில் இட்டுச் செல்ல அவர்கள் எ டு த் து க் கொண்ட முயற்சி காத்திரமானதாக அமை யவில்லை என்று கருதியவிடத்தும் தமிழ் இலக்கிய சரிதத்தில் அவர்களுக்குக் குறிப் பிடத்தக்க இடமுண்டு என்பதனை மறுப்ப தற்கில்லை. அவர்கள் அச்சுவேலி நீ. காசிநா தப் புலவர் (1796-1854), கோப்பாய் வே இராமலிங்கம், 19 வண்ணுர்பண்ணை சுப்பையர் என்பவராவர்.
நீலகண்டர் என்பவரின் புதல்வராகிய காசிநாதப் புலவர் சோதிடராகப் பேர் பெற்றதோ டமையாது இலக்கிய ஆற்றலு டையவராகவும் தி க ழ் ந் தா ர். இவர் பாடிய நூல் தால புராணமாகும்? இந் நூ ல் , "ப ன ங் கா ய் ப் பா ர த பம்" எனவும் அழைக்கப்பட்டது. பாவலர் சரித் திர தீபக ஆசிரியர் தால புராணத்தைப் பற்றி மேல்வருமாறு கூறுவர்: “ ‘யாம் அத னைக் கண்ணுற்றிராமையால் அதனது நய நட்டங்கள் கூறுதல் கூடாதேனும், கற்பக விருட்சம் எனப்பெயரிய தெய்வ விருட்சத் திற்கு இலக்காய் எம்மூரிலிருக்கும் பனைம ரப் பெருமையும் அவற்றின் பிரயோயன நயங்களுமே அப்பாடற் பொருளாம் எனத் துணிகின்ருேம். பனைப் பெருமை

பொ. பூலோகசிங்கம் 83
கூறினும், ஒர்போது ஒரு வகைக் கேலிப் பாடலாகவும் இருக்கலாம்." 21 அ. சதாசி வம்பிள்ளை தால புராணத்திற்குரிய விருத் தங்கள் சில கிடைக்கப்பெற்றும் அவற்றிற் காணப்பெற்ற தவறுகளினலே மேற்கோ ளாக ஒரு பாடலேனும் தரா தொழிந்தார். எனவே, தால புராணத்தைப் பற்றி யாதும் கூறமுடியாத நிலையிலுள்ளோம்.
கோப்பாயில் வசித்த வேலுப்பிள்ளை யின் புதல்வராகிய இராமலிங்கம் கோட் டுப்புராணமென ஒரு நூலை இயற்றியுள் ளார். அப்புராணத்தைப் பற்றிப் பாவலர் சரித்திர தீபக ஆசிரியர் மேல்வருமாறு கூறு வர்: "இவர், நீதித்தலஞ் சென்று வியாச்சி யம் நடத்தும் வாதி பிரதிவாதிகளுக்கு நேரிடும் பணநஷ்டம், கஷ்டம், அல்லல், தொல்லைகளையும், அந் நீதி ஸ்தலங்களில், "உதர நிமித்தம் வெகு கிருது வேடம் எனப் பிழைப்பின் பொருட்டுத் தந் தி ர வேடம் போட்டுத் தமனகனைப்போல் இரு திறத்தவரையும் முட்டிவிட்டுப் பணம் பறிக்குங் கோட்டுப் புருக்களையும், வாதி பிரதிவாதிகளுக்காகத் தனித்தனி ஏற்பட் டும் இருபுறமுங் கை நீட்டும் நியாயதுரந் தரர்களையும், இழித்தும் பழித்தும், கோட் டுப் புராணம் எனும் பெயர்சூட்டி , ஒரு பாடல் இயற்றினர். காண்டம், சருக்கம் எனும் பகுப்பு வைத்துப் பாடினரோ, யாம் அதனைக் கண்டிலம். ஆதலிற் தீர்ப்பாய் ஒன்றுஞ் சொல்ல மாட்டோம். 22 மேல் வ ரும் விருத்தம் பாவலர் சரித்திர தீபத்திலி டம் பெறுவதாகும்:
கோடொருகளரி யதிலுறுந்துரையோ
கூத்துப் பார்த்திருந்திடு மூப்பு ஆடுறுங் குரங்கோ வழக்கர்களா
வாரவையிடை யவைகளைக்கொண்டு நாடொறு மாட்டுங் கயிறுதான் வழக்கு நட்டுவப் பணிக்கணுே தரணி
வாடிடு வயிறு வளர்ப்பதற் கெடுத்த
வஞ்சனை வேட மென்றுணரே.
தால புராணமும் கோட்டுப் புராண மும் அழிந்துவிட்ட போதும் கனகி புரா ணத்திற்குரியதாகச் சில செ ய் யு ள் க ள் வழங்கி வருகின்றன. 23 பாவலர் சரித்திர தீபகத்திலே மேல்வரும் செய்யுள் மேற்கோ ளாகத் தரப்பட்டுள்ளது: W

Page 102
8 4 ά 5ογάβ εν γ 7 3σ27 ιλ
காட்டுக் குயிலைக் கடிதோட்டிக்
கனத்த நாவினெய் தடவி மாட்டுமினிய சொல்லாளே மானே
தேனே கனக மின்னே ஒட்டைக் காதினுடனிருந்தீங்கு
வந்தே புடவை விற்கின்ற நாட்டுக் கோட்டைச் செட் டிகளினல்
லாண்டப்பணிவன் காணே. 24
நவாலி சி. கந்தையாபிள்ளை, நீர்வேலி வாசராகிய சி. சிற்சபேசன் தமது ஞாபகத் திலிருந்து எழுதியளித்த செய்யுள்களைத் தொகுத்துக் கனகி புராணம் (தெரிகவி கள்)" என 1937-ம் ஆண்டு சென்னையில் அச்சிட்டார். கந்தையாபிள்ளை காப்புச் செய்யுளையடுத்து நாட்டுப் படலம், சுயம் வர படலம், வெட்டைகாண் படலம் என உட்பிரிவுகளையமைத்துத் தருகின் ருர் . இவ் வமைப்பு நூலாசிரியருடையதா அல்லது பதிப்பாசிரியருடையதா என்பது தெளி வாகவில்லே. பாவலர் சரித்திரதீபகம் கனகி புராணத்தின் உட்பிரிவுகள் பற்றி எதுவும் கூறவில்லை. வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் பதிப்பித்த கனகி புரா ணத்திற்கு முன்னுரை வழங்கிய க. ச. அருள்நந்தி, கந்தையாபிள்ளையின் பதிப் பில் நாட்டுப்படலத்திலுள்ள பதினறு செய்யுள்களும் சுப்பையர் பாடியவையல்ல வென்றும், அவற்றின் ஆசிரியர் நீர் வேலி சி சிற்சபேசன் என்றும் கூறுவர். எனவே, கந்தையாபிள்ளையின் பதிப்பீலிடம் பெறும் 29 பாடல்களில் பதின் மூன்று பாடல்களே சுப்பையருடையனவென்பது போதரும். சந்தையா பிள்ளையின் பதிப்பீலே சுயம்வர படலத்திலே பதிஞெரு பாடல்கள் இடம் பெறுகின்றன. அவற்றிற் பதினேராம் பாடல் பாதிச் செய்யுளாகவே காணப்படு கின்றது. கனக. செந்திநாதன் எழுதிய கனகி புராணத்தில் சில பாடல்கள்" என் னும் கட்டுரையில் இப்பாடல் முழு உருவத் துடன் காணப்படுகின்றது: 29
தாமரை குமுதம் மலையுடன் அகிலும் தண்முகம் வாய் தனங் கூந்த லாமென வுவமை படைத்திடு கனகே அனநடை வாய்மொழிக்குயிலே பாமரு மாலை பாடிட வல்லோன்
பகர்ந்திடு மதன நூல் படித்தோன்28

பொ. பூலோகசிங்கம்
காமரு கோப்பா யுறையு மூத்தப்பு
கன்னிநீ கானுதி யென்ருள்.
வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் "கனகி புராணத்தைச் சிவங். கருஞலய பாண்டியனருரையுடன் 1961-ம் ஆண்டிலே கொழும்பிலச்சிட்டார். இப் பதிப்பிலும் பிள்ளையார் காப்பினையடுத்து முன்னைய பதிப்பிலுள்ள உட்பிரிவுகளே காணப்படு கின்றன. மேலும் நாட்டுப்படலத்திற்குரிய தாக இரு பாடல்கள் தரப்பட்டுள்ளன. இவை கந்தையாபிள்ளையின் பதிப்பில் முக வுரையில் இடம்பெற்றவை என்பது குறிப் பிடத்தக்கது. இவற்றில் முதற் பாடல் நாட்டுப்படலத்திற்குரியதெனக் கூறுதல் க டி ன மா கும்; கனகி பற்றியதாயின் வேருெரு படலத்திற்குரியதாகலாம்; மற் றைய பாடல் "தனிப்பாடற்றிரட்டு' என் னும் தொகுப்புநூலிற் காணப்படுவதா கும். அப்பாடல் இந்நூ லுக்குரியதெனத் திடமாகக் கூறமுடியாது. எனவே, கனகி புராணத்திற்குரிய செய்யுளைத் தாங்கி வந்த இரு பதிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு நாம் நாட்டுப்படலமெனவொரு உட்பிரிவு ஆங்கிருந்ததெனச் சித்தாந்த மாகக் கூறமூடியாது. இராமலிங்கம் பதிப் பிலே சுயம்வர படலத்தில் முன்னைய பதிப் பிற் காணப்பட்டனவற்றுட் பத் துப் பாடல்களும், புதிதாக மேலும் ஒன்பது பாடல்களும் இடம்பெறுகின்றன;27 வெட் டைகாண் படலத்திற் கந்தையாபிள்ளை பதிப்பிற் கண்ட பாடலுடன் புதிதாக மேலும் இருபnடல்கள் இடம்பெறுகின் றன. இவ்விரு பாடல்களிற் பின்னையது வெண்பாவா யமைவதோடு 'தனிப்பாடற் றிரட்டு" என்னும் தொகைநூலில் வேதநா யகம்பிள்ளை பாடலாகத் தரப்பட்டுள்ளது. எனவே, இராமலிங்கம் பதிப்பு மூலம் சுயம் வர படலத்திலும், வெட்டைகாண் படலத் திலும் பத்துப் பாடல்கள் புதிதாக வெளி யிடப்பட்டுள்ளன எனலாம். கந்தையா பிள்ளை, இராமலிங்கம் ஆகியோர் பதிப்பு கள் மூலம் தெரியவரும் கனகி புராணத் தி ற் குரிய தா க க் கொள்ளத்தக்க 23 பாடல்களுடன் வேறு சில செய்யுள்களும் அந்நூலுக்குரியதாக வழங்கிவருகின்றன. கனக. செந்திநாதனின் முற்கிளந்த கட்டு ரையில் இவ்விரு பதிப்புகளிலுமில்லாத

Page 103
கனகி புராணம்
ஐந்து செ ய் யு ள் கள் தரப்பட்டுள்ளன; இவை ஆய்வுக்குரியன. பாவலர் சரித்திர தீபக ஆசிரியர் இந்நூலின் பாடலெண் னிக்கை பற்றிக் கூறுமிடத்து, ‘அப்பாட லில் முன்பின் நானுாறு விருத்தங்கள் உண் டென்று கேள்விப்பட்டோம்” என்பர். ஏறக்குறைய 400 பாடல்களைக் கொண்ட நூலில் எஞ்சியுள்ள பாடல்கள் மூலமே அதன் சிறப்பை நோக்கவேண்டியுள்ளது.
கனகி புராணத்தின் பாட்டுடைத்தலை வியாகிய கனகி என்பவள் கற்பனைப் பிறவி யல்ல; புராண இதிகாச, கர்ணபரம்பரை, நாடோடிக் கதை மூலம் பெறப்பட்ட பாத் திரமல்ல; 'வண்ணுர்பண்ணைச் சிவன்கோ யிற் தாசிகளுள் ஒருத்தியும், இற்றைக்குச் சில நாட்களின் முன் இறந்தவளுமாகிய கனகி" என்பது பாவலர் சரித்திர தீபகத் தின் கூற்று. நூலாசிரியர் தம் காலத்திலே வாழ்ந்த பெண்ணையே கதாநாயகியாகக் கொண்டு நூலை இயற்றியுள்ளார். இத ஞலே கனகி புராணம் ஏனைய புராணங்களி லிருந்து வேறுபட்டுச் சிறப்படைகின்றது.
கனகி புராணத்திற்குப் பிறிதொரு சிறப்புமுண்டு. பிரமனுரர் வில்லியப்பபிள்ளை தமது பஞ்சலட்சணத் திருமுக விலாசத்தை விகாரி வருடம் தை மாதம் 26-ம் திகதி (1900) அரங்கேற்றிஞர். சி. தேசிகலிநாய கம்பிள்ளையின் நாஞ்சினுட் டு மருமக்கள் வழி மான்மியம் திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்த "தமிழன்’ என்ற பத்திரிகை யில் 1917-ம் ஆண்டு "மார்ச் மாதம் முதல் 1918-ம் ஆண்டு "பெப்ருவரி மாதம்வரை வெளிவந்தது. கனகி புராண ஆசிரியர் 1886-ம் ஆண்டிற்கு முன்பே தேகவியோக மடைந்துவிட்டார். எனவே, கனகி புரா ணtத பஞ்ச லட்சணத்திற்கும்,மருமக்கள் வழி மான்மியததிற்கும் முன்பு இயற்றப்பட்டது என்பது கூரு; மலே போதரும். பஞ்சலட்ச ணமும், மருமக்கள் வழி மான்மியமும் தமி ழிலக்கியத்தின் நையாண்டி (அங்கத) இலக் கியத் துறையில் ஈடிணையற்றனவாகக் கரு தப்படுகின்றன. கனகி புராணத்தையும் நையாண்டி (அங்க த} இலக்கியமாகவே கொள்ளவேண்டியுள்ளது.
* கனகி புராணம்’ என்ற பெயர் நூலா சிரியர் அளித்த பெயராயின் 28 அப்பெயரி

பொ. பூலோக சிங்கம் 85
லேயே ஆசிரியர் தமது நையாண்டி செய் யும் நோக்கத்தைக் காட்டி விடுகிறர் என லாம். கனகி ஒரு தாசி, அவளைப்பற்றி ஒரு புராணமா? மும்மூர்த்திகளையும், ஏனைய தெய்வங்களையும், சான்ருே ரையும் பாடப் பயன்படுத்தப்பட்டு வந்த இலக்கிய வடி வத்தினுலா ஒரு தாசியைப் பாடுவது? கன கிக்கும் புராணத்திற்குமுள்ள உடன்பா டின்மையே இகழ்ச்சியை நன்கு புலப்படுத் துகின்றது. இழிவு படுத்திக் கூறப்படுவதை அதற்குரிய சாதாரண முறையிற் சொன் ணுற் சுவையிருக்காது; அதைப் பெருமை வாய்ந்த வகையிற் கூறினுற்ருன் இகழ்ச்சி சிறந்து விளங்கும் என்பதைக் சுப்பையர் நன்குணர்ந்திருந்தார். புரா ண மென் ற இலச்கிய வடிவத்தையே சுப்பையர் கேலி செய்கிருர் என்றும் கூறலாம். புதுமைப் பித்தன் காளான் குடை நிழலிற் கரப் பானை அரசிருத்திக் காவியம் என்னும் இலக்கிய வடிவத்தைக் கேலி செய் து * மாகாவியம் படைத்தார். "ராம ராஜ் ய"த்தை இப்பாடலிலே கேலி செய்த 'புது மைப்பித்தன்",
வேதம் படித்திடுவோம் வெறுங்கை முழம் போட்டியிடுவோம்! சாதத்துக்காகச் சங்கரனை விற்றிடு
{36յուr ! அத்தனைக்கும் மேலல்லோ அஹிம் சைக் கதைபேசி வித்தகனும் காந்தியினை விற்றுப்
பிழைக்கின்ருேம்! இத்தியா தேசம் - அது இ2ணயற்ற தேசம்!
என்று கேலி செய்து 'ராமராஜ்யத்தைத் தமது "நாரத ராமாயணம் மூலம் மேலும் நையாண்டி செய்துள்ளார். "நாரத ராமாய ண"மும், "கீமாயணமும் வெவ் வேறு நோக்கங்களையுடையனவேனும் ராமாய ணத்தை நையாண்டி செய்வதைப் பொதுப் பண்பாகவுடையன. 29 மேலைத் தேயங்களி லும் இலக்கிய வடிவங்களை நையாண்டி செய்வதை நோக்கமாகக் கொ எண் ட படைப்புக்கள் தோன்றியுள்ளன. "வீரகா விய'த்தை நையாண்டி முறையிற் பாடிய புலவர்களும் அங்குளர் . சாமுவேல் பட்லர் (Samuel Butler 1612 - 1680) guiu fibrîulu

Page 104
86 és sorá) // (r r 6oor th
முற்றுப் பெருத"ஹியூடிபிருஸ்" (Hudibras), sey (26) á Gn) rajor L ri (3urt Lü (Alexander Pope 1688-1744) இயற்றிய "குழல் அழிற்பு’ (The Rape of the Lock) i 6 TGST U GOT - GT (Säg i காட்டு,
கனகி புராணத்தின் உட்பிரிவுகளைப் பற்றி அறிய இன்று நமக்குக் கிடைக்கும் பாடல்கள் உதவவில்லை. ஆயினும், கிடைக் கும் உதிரிப் பாடல்களிற் பெரும்பாலனவை * சுயம்வரத்தோடு தொடர்பானவை . தமயந்திக்குத் தோழியும், திரெளபதிக்குச் செவிலித் தாயரும் சுயம்வர மண்டபத்திற் கூடியிருந்தவர்களை அறிமுகஞ் செய்வது போல சுப்பையரும் கனகிக்குத் தோழி மூலம் கூடியிருந்தவர்களை அ றி மு க ஞ் செய்து வைக்கிருர் . குலமகளாகப் பிறந்து கன்னிமாடத்தில் வளர்ந்து மணமகளாக மாறும் போது புகழேந்திப் புலவரும் வில்லி புத்தூராழ்வாரும், த ம ய ந் தி யையும், திரெளபதியையும் சுயம்வர மண்டபத் திற்கு இட்டுச் செல்ல வைத்தனர். சுப்பை யர், விலைமகள் ஆடவனைத் தெரிவதை சுயம்வரமென ஏளனம் செய்கிருர், விலை மகளுக்குச் சுயம்வரம் என நையாண்டி செய்யும் புலவர் அங்கு எழுந்துள்ளோரை அறிமுகஞ் செ ய் யும் போது வசைக் கவி யாக மாறி விடுகிருர் .
தாலக் கனி யொன்றினுக்காகத்
தரைமேல் மாந்தர் பலர் திரண்டு வேல் கத்திகள் கொண்டெறிந்து மிக
விசயம் பொருதும் வளநாடன் மால் பற்றிய நெஞ்சி னணுகி
வந்தான் கனகே மன்றலுக்கு நீலக் கருங் கார்மேக நிற
நியூற்றணிவன் காண் நேரிழையே.
"பழிகரந்த அமைப்பினை மேற்கொண்ட கனகி புராண ஆசிரியர் "செம்மொழியாக அறிமுகஞ் செய்தல் நோக்கற்பாலது.
அங்கத இலக்கியம் சமூகத்திலுள்ள ஊழல்களை எடுத்து காட்டி அவற்றைத் திருத்துவதை நோக்கமாகக் கொண்ட தென்பர். இந்நோக்கத்திற்கு மருமக்கள் வழி மான்மியம் சிறந்த எடுத்துக் காட்டு, நாஞ்சினுட்டு மக்களிடையே வழங்கிய மரு மக்கள் தாயமுறை, பலதார மணம் முதலி

பொ. பூலோகசிங்கம்
யனவற்ருல் ஏற்பட்ட சீர்கேடுகளை நூற் பொருளாகக் கொண்டு தேசிக விநாயகம் பிள்ளையின் "பிரகசனம் தோன்றியது; பல னும் தந்தது. கனகி புரா ணமும் யாழ்ப்பா ணத்துச் சமூகத்திலிருந்த சீர்கேட்டை நகையாடித் திருத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்று கருதலாம்.
ஆறுமுகநாவலர் 1822-ம் ஆண்டிலே பிறந்து 1879ம் ஆண்டிலே தேக வியோக மடைந்தாார். கனகி புராண ஆசிரியர் சிறு வயதிலே தெல்லிப்பழை "அமெரிக்கன் மிசன் பாதிரிமா ரையடைந்து கிறித்தவ ரானுர் என்றும் பின்பு அம்மதத்தை விட்டு நீங்கினர் என்றும் பாவலர் சரித்திர தீபகம் கூறுகின்றது. தெல்லிப்பழையிலே ‘அமெ ரிக்கன் மிசன் 1816ம் ஆண்டிலேயே நிறு வப்பட்டது. 1820ம் ஆண்டிலே பிறந்த பாவலர் சரித்திர தீபகத்தின் ஆசிரியர் அ. சதாசிவம் பிள்ளை கனகி புராண ஆசிரிய ரைக் கண்டிருக்கிருர். எனவே, கனகி புராண ஆசிரியர் ஆறுமுக நாவலர் காலத் திலே வாழ்ந்தவர் எனலாம். மேல் வரும் பகுதிகள் நாவலர் பெருமானின் கூற்றுக்
ᏧᎦᏚ ᎧᏳᎢ :
(1) 'உருத்திரகணிகையர் 6) u u L 9 F T UT b மதுமாமிச பகஷணம் முதலிய பாதகங் களின்றி, சிவவேடம் பூண்டு, சிவபத் தியிற் சிறந்தவர்களென்று சைவாகமங் கள் சொல்லுகின்றன. இதற்கு மாருக இக்காலத்தார் கோயில்களெங்கும் மதுமாமிச பகஷ்ணமுடைவர்களாய் வ  ைர வின் றி யாவரையும் புணரும் ஸ்திரீகளை உருத்திரகணிகையரென்று நியோகிக்கின் ருர் கள்'
(சுப்பிர :ேதம்)
(2) ' யாழ்ப்பாணத்துச்  ைச வ ச ம யி களே!. கோயிலிலே பூசை திருவிழா முதலியவைகளில் வேதமும் தேவாரம் முதலிய அருட்பாவுந் தவருமல் ஒதப் படல் வேண்டும் என்பது சாத்திர சம் மதமேயாகவும், இக்கோயிலாரும் இங் குள்ள மற்றை எக்கோயிலாருந் தங்கள் தங்கள் கோயிலிலே அப்படிச் செய் வித்துப் பத்தியை ஒரு சிறிதும் வளர்க் காது, ஆகமத்திலே பேசப்படுந் தேவ

Page 105
π3or ή ένα γυδ07ιό
தாசியிலக்கணம் ஒரு சிறிதும் இல்லாத வர்களாய், மது மாமிச பகஷனம் விய பிசாரம் முதலிய தீயொழுக்கங்களே உடையவர்களாய், நித்தியா செளசி களாய் உள்ள பொதுப் பெண்களைத் தேவ தாசிகள் என நியோகித்துக் கோயிற்றிரவியங்களை அவர்களுக்கு உபயோகித்துக் கா ம ம், கோபம், பொருமை, மதுபானம், க ல கம், சண்டை, வழக்கு, மேக வியாதி, சந் ததி நாசம், வறுமை முதலிய தீமைக
ளையே வளர்க்கின் ருர்கள்' (நல்லூர்க் கந்தசாமி கோயில் முதலாம் பத்திகை)
(3) ‘நல்லூர் கந்தசுவாமி கோயிலார் களே!. வசந்த மண்டபத்தினெதிரே மதுமாமிச பட்சணம் வியபிசாரம் முத லிய தீமைகளெல்லாம் நிறைந்த பரத் தையர்களுடைய நட ன சங்கீதங்க ளுக்கு ஐந்தாறு நாழிகை நேரம் மிக்க உவப்போ டு கொடுக்கும் நீங்கள், திரு விழாச் செலவிறு க்குங் கொடையாள ருடைய வேண்டுகோளின் படியே அவ் வசந்த மண்டபத்தினெதிரே ஒதுவார் கள் சாரங்கி வாசிக் கவுந் தேவாரம் ஒதவுந் தொடங்கிய உடனேதானே, தங்கள் நேரத்தைத் தே வார ங் கொள்ளை கொள்ளத் தொடங்குகின் றது என்று பொருமை கொண்ட பரத் தையர்கள் இட்ட கட்டளையை உங் கள் சிரமேற் கொண்டு நைவேத்திய மெடுக்கும்படி வாத்தியத்தை முழக்கு வித்துத் தேவாரத்துக்கு இடையூறு ஒரு சிறிதேனும் அஞ்சாது விளைத்த உங்கள் துர்ப்புத்தி எ ப் படி வந்து முடிந்தது?’’
(நல்லூர்க் சுந்த சுவாமி கோயில் இரண்டாம் பத்திரிகை) சமய வாழ்க்கையிற் கால்கொண்டு சமுதாயத்திலே புரையோடி விட்டி
1. நூல்களைத் தொடரும் அடைப்புக் குறிகளுக் கிடையேயுள்ள ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ஆண்டி னைக் குறிக்கும்.
2. மாதகல் சு. ஏரம்பையர் இயற்றியது (ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், முதலாம் பதிப்பு 1966, பக் 266)

பொ. பூலோகசிங்கம் 87
ருந்த சீர்கேட்டை ஆறுமுகநாவலர் கூறிய வார்த்தைகள் எடுத்துக் காட்டு கின்றன. மக்களின் உயிர்நாடி போல விளங்கிய கோயில் களைப் பீடித்த மாசி னைத் துடைக்கப் புறப்பட்ட நாவலர், கண்டனங்கள் மூ ல ம் அப்பணியைச் செய்ய முயன்ருர். ஆரிய சமாசத் தின் தாபகரான தயானந்த சரஸ்வதி யும் (1824 - 1883) நாவலர் காலத் திலே இத்தகைய பணியை வட இந்தி யாவிலே ஆற்றிவந்தார் என்பதும் ஈண்டு நினைவு கூரப்பாலது. நாவலர் கண்டனத்துக்குப் பெ ா ரு ள |ா க க் கொண்ட சமுதாயச் சீர் கேட்டைச் சுப்பையாப் புலவர் இலக்கியப் பொரு ளாகக் கொண்டார்.
நடந்தா ளொருகன்னி மாராசகேசரி நாட்டிற்கொங்கைக் குடந்தானசைய வொயிலா யதுகண்டு கொற்றவரும் தொடர்ந்தார் சந்நியாசிகள் யோகம்
விட்டார் சுத்த சைவரெல்லாம் மடந்தானடைத்துச் சிவபூசையுங்
கட்டி வைத்தனரே.
என்றவாறு கேலி செய்யப்பட்ட சூழ லிலே ‘ஐந்தாம் குரவரர்' ஆத்திரங் கொண்டார்; சுப்பையாப் பு ல வ ர்
நையாண்டி செய்தார்.
கனகி புராணம் முழு வடிவத்திலே கிடையாமை தமிழிலக்கியத்திற்குப் பேரிழப்பாகும்; கிடைத் தி ரு ப் பின் 'தமிழ் இலக்கியத்திலேயே இ ன் று வரையிலும் பஞ்சலட்சணத்துக்கு ஈடு ஜோடான எந்தவொரு நையாண்டி (அங்கத) இலக்கியமும் தோன்றிய தில்லை என்றே சொல்லலாம்' என்ற கூற்று' எழுந்திருக்காது.
3. கா. அப்பாசாமி ஐயர் பாடியது (ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், பக். 505-507)
4. வட்டுக்கோட்டை கா. சிவசுப்பிரமணிய சிவா சாரியர் இயற்றிய தென்கோயிற் புராணம் ஈழத்துத் தலம் பற்றியது போலும் (ஈழகேசரி, 12-7-1936).

Page 106
88 கனகி புராணம்
5. வட்டுக்கோட்டை நா. சிவசுப்பிரமணிய 'சிவா சாரியர் கல்லூர் கைலாசநாதர் பேரிற் புராண மொன்று புனைந்துள்ளார் என்பர் (ஈழகேசரி, 12-7-1936); மன்னம் பாடியார் இயற்றிய தோன்றித் தலபுராணம் (மு. கணபதிப்பிள்ளை: ஈழநாட்டின் தமிழ்ச்சுடர்மணிகள், முதலாம் பதிப்பு, 1967, பக். 184) பற்றி யாதும் அறியுமாறில்லை.
6. வதிரி சி. காகலிங்கபிள் 2ள இயற்றிய திருத்தி லதைப் பதிப் புராணம் அச்சிடப் பெற்றதாக அறிகி ருேம்.
7. ஆறுமுககாவலர் "காட்டுக்கோட்டைச் செட்டி கள் சிலருடைய வேண்டுகோளின் படி தேவகோட் டைத் தல புராணத்தை ஐக்நூறு செய்யுள் வரையிற் பாடினரென்றுங் கேள்வி' என்பர் அ. சதாசிவம் பிள்ளை (பாவலர் சரித்திர தீபகம், முதலாம் பதிப்பு, 1886, Luä. 34).
8. "அருள்வாக்கி ஆ. பி. அப்துல்காதிறுப் புலவர் இயற்றிய கோட்டாற்றுப் புராணம் அச்சிடப் பெற் ற்மை அறியுமாறில்லை.
9. ஈண்டு குறிக்கப்பட்ட சிவராத்திரி புராணம் சுன்னுகம் அ. வரதபண்டிதர் பாடியதாகும். வே.சதா சிவம் பிள்ளை யாழ்ப்பாணம் காவலர் அச்சுக் கூடத் தில் 1910-ம் ஆண்டில் இரண்டாம் பதிப்பாகச் சிவ ராத்திரி புராணமொன்றிஜனப் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பிலே வட்டுக்கோட்டை கா. சிவசுப்பிர மணிய சிவாசாரியார் நூலாசிரியராகக் குறிப்பிடப் ப்ட்டுள்ளார். வே. சதாசிவம் பிள்ளையின் பதிப்பிற் குரிய முதற்பதிப்புக்கிடைக்கவில்லை. ஆயினும் பாவ லர் சரித்திர தீபக ஆசிரியர் கெல்2லாகாதர் பாடிய சிவ ராத்திரி புராணத்தைச் சிவசுப்பிரமணிய சிவாசாரி யர் "பல ஏட்டுப் பிரதிகளே ஆதாரமாய்க் கொண்டு திருத்திச் சென்னபட்டணத்தில் அச்சிடுவித்தனர்' (பக். 201) என்று கூறுவதிலிருந்து வே. சதாசிவம் பிள்ளையின் பதிப்பிற்குரிய நூலாசிரியர் யார் என்ற கேள்வியெழுகின்றது. மேலும் ஆக்கியோன் பெயர் கூறும் செய்யுளாகப் பாவலர் சரித்திர தீபகத்திலி டம் பெறும் செய்யுளும் நூலிருந்து மேற்கோளாகத் தரப்பட்ட செய்யுளும் சதாசிவம்பிள்ளை பதிப்பிற் காணப் பெருமையும் ஐயத்திற்கிடமளிக்கின்றது. வட்டுக்கோட்டை க. குருமூர்த்திஐயர் தமது ‘சிவராத் திரி புராணம் (1939) என்னும் வசன நூலிலே சிவ ராத்திரி விரத மகிமை கூறும் நூல்களுடன் "கெல்லை காதகாவலர் இயற்றிய சிவராத்திரி புராணத்தைக் குறிப்பிடுகின்ருரேயொழிய தமது ஊரினர் சிவசுப் பிரமணிய சிவாசாரியர் இயற்றியதாக வே.சதாசிவம் பிள்ளை கூறும் சிவராத்திரி புராணத்தைக் குறிப்பிட வில்லை என்பது நினைவுகூரத் தக்கது. இந் நிலையிலே சதாசிவம்பிள்ளை பதிப்பிற்குச் சுன்ஞகம் அ. குமார சுவாமிப்புலவர் அளித்தசாற்றுகவி சிவசுப்பிரமணிய சிவாசாரியரை நூலாசிரியராகக் கூறுவது பொருத் தமா என்பது சிக்திக்கத்தக்கது. 'முருகரம்மான்' ஈழ கேசரியில் (12-7-1936) சிவசுப்பிரமணிய சிவாசாரியர் "கெல்லோகாதர் சிவராத்திரி புராணத்தை (இவர்) அதி

பொ. பூலோகசிங்கம்
கரித்து அச்சிடுவித்தார்' என்று கூறியுள்ளார். அ. சதாசிவம்பிள்ளை பாயிர அத்தியாயம் உட்பட வுள்ள ஐந்து அத்தியாயங்களில் 303 விருத்தங்களுள என் ருர், வே. சதாசிவம்பிள்ளை பதிப்பிலே பாயிரம் நீங்கலாக ஆறு சருக்கங்களுள; பாயிரத்திலே ஏழு செய்யுள்களும் ஆறு சருங்கங்களிலே 294 செய்யுள் களுமுள. எனவே 'முருகரம்மான்' கூற்று பாட லெண்ணிக்கையைப் பொறுத்தவளவிற் பொருக் தாது.
10. ஈண்டு குறிப்பிடப்பட்டது சுன்னுகம் அ. வரத பண்டிதர் பாடிய புராணமாகும். வட்டுக்கோட்டை நா. சிவசுப்பிரமணிய சிவாசாரியரும் ஏகாதசி புராண மொன்று பாடியுள்ளார் எனவும் அஃது அச்சிடப் பெற்றுள்ளதாகவும் 'முருகரம் மான் கூறுகிருர் (ஈழ கேசரி, 12.7.1936)
11. வட்டுக்கோட்டை நா. சிவசுப்பிரமணிய சிவாசா ரியர் பாடியதாகக் கூறப்படும் விநாயக சட்டி புரா ணம் அச்சு வாகனம் ஏறவில்லை என்பர் (ஈழகேசரி, 12-7-1936)
12. வைத்தியாகாத முனிவர் இயற்றிய வியாக்கிர பாத புராணத்திற்குரியதாக இரு செய்யுள்களை அ. குமாரசுவாமிபுலவர் தங்துள்ளார் (தமிழ்ப் புலவர் சரித்திரம், முதலாம் பதிப்பு, 1916, பக். 189).
13. கூழங்கைத் தம் பிரான் பாடிய யோசேப்பு புரா ணத்திற்குரிய ஐந்து செய்யுள்களைச் சைமன் காசிச் செட்டி தந்துள்ளார் ( தமிழ் புளூராக், இரண்டாம் பதிப்பு, 1946, பக். 56).
14. தமிழகத்திற் பிறந்து, யாழ்ப்பாணம் சென்று வாழ்ந்து மறைந்தவராகக் கருதப்படும் பதுறுத்தீன் புலவர் பாடிய முகியித்தின் புராணம் 1881-ம் ஆண் டிற் பதிப்பிக்கப் பெற்றதா சக் கூறுவர்.
15. வட்டுக்கோட்டை மு. ஆறுமுகம்பிள்ளை இயற் றிய இப்புராணம் முதன்முதலாக எப்பொழுது அச்சி டப் பெற்றதென்பது தெரியவில்லை. இதன் மூன்ரும் பதிப்பு சங்கா இன சச்சிதானந்தயங் திரசா8லயிலிருந்து 1927-ம் ஆண்டு வெளிவந்தது. செய்யுளாலும் வசனத் தாலுமியன்ற இந்நூல் அளவில் மிகச் சுருங்கிய தாகும்.
16. ஈழகேசரி, 12-7-1936
17. எஸ். வையாப்புரிப்பிள்ளை; தமிழின் மறுமலர்ச்சி (இரண்டாம் பதிப்பு, 1953 பக். 46-47)
18. இணுவில் சி. சின்னத்தம்பிப் புலவர் 'இளந் தாரி புராணம் என ஒரு நூல் செய்ததாகவும் அறிய வருகின்றது' என்பர். நவாலி சி. கங்தையாபிள்ளை (தமிழ்ப்புலவர் அகராதி, இரண்டாம் பதிப்பு, 1960, பக், 180). இக் நூலைப் பற்றி யாதும் அறியமுடிய வில்லை.

Page 107
கனகி புராணம்
19. 'இப்புலவர் இற்றைக்கு ஏழெட்டு வருஷங்களின் முன் தேகவியோகமாயினர்?? (பாவலர் சரித்திரதீபகம் 1886, பக், 41).
20. தமிழ்ப்புலவர் அகராதி ஆசிரியர் கும்பகோணத் தைப் பிறப்பிடமாகக் கொண்டகாசிநாதப்புலவர்தால புராணம் செய்தனர் என்பர் (பக். 113). ஆயினும் அவர் கூறும் புராணம் கலிவெண்பா யாப்பிலமைக் தது; பாவலர் சரித்திர தீபக ஆசிரியர் கூறும் தால புராணம் விருத்தப்பாவாலியன்றது. கவாலி சோம சுந்தரப்புலவர் பாடிய தால விலாசமுமுண்டு.
21. பக்கம் 96
22. பக்கம் 41
23. யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள காரைதீவிலே *சின்னுச்சி புராணம்’ எனப் பெரிய நூலொன்றிற்குரி யனவாகச் சில பாடல்கள் வழங்கி வருகின்றன.
24. இப்பாடலைப் பிரதிபேதங்களுடன் க. சி. கக்தை யாபிள்ளையும் மு. இராமலிங்கமும் “சுயம்வரபடலத் திற்குரியதாகக் கொண்டனர்.
புத்தம் புதிய கலேகள் - ட பூதச் செயல்களின் து மெத்த வளருது மேற்கே - மேன்மைக் கலேகள் த சொல்லவுங் கூடுவதில்லே
சொல்லுந்திறமை தமி என் றந்தப் பேதையுரைத்

பொ. பூலோகசிங்கம் 89
25 கலைச்செல்வி, ஆணி, 1960.
26. பி. பே. கற்ருேன்’
27. இவ்வொன்பது செய்யுள்களுள் இரண்டொழிக் தவை (16,21) கனக. செந்திநாதன் எழுதிய கனகி புராணத்தில் சில பாடல்கள்’ என்ற கட்டுரையிற் பிரதி பேதங்களுடையனவாகக் காணப்படுகின்றன. 28. பாவலர் சரித்திர தீபகம் இக்நூலினைக் கனகி சயமரம்‘ என்றே குறிப்பிடுகின்றது.
29. குழந்தையின் 'இராவண காவியம்’ (1946) 'முன் ஞள் கவி, தம் கோக்கத்துக்காக, இராவணன் மீது ஏற்றிய இழிகுணங்களையும், கொடுஞ்செயல்களையும் களைக்தெறியவும், இராவணனுடைய தூய்மைக்கு ஆதாரமாக பல புகலவும், அஃதே போல இராமனு டைய குணம், செயல் ஆகியவற்றிலே காணக் கிடைக்கும் தவறுகளைத் தெளிவுபடுத்தவும் தோன் றிய நூலாகும்’ (இராவண காவியம், முன்னுரை
சி. என். அண்ணுதுரை, 1946).
30. தொ. மு. சிதம்பரரகுகாதன்: சமுதாய இலக்கி யம் (1964) பக், 210.
/ஞ்ச "ட்ட//ங்கள் கூறும் - அந்த மிழினில் இல்லே - அதைச் ழ் மொழிக்கில்லே தான்

Page 108
LYN DIOL. 2.5
fn more than 100 countries doctors prefer Lyndiol 2.5-22 tablets, the oral contracep proven effectiveness.
The 22 tablet method virtually eliminates Lyndiol 2.5 provides outstanding patient ac
 

5 / 22 tablets
tive of
batient failure.
ceptance.

Page 109
FAMILY PLANNING
 

*பெருகி வரும் மனித சமு தாயம், நாளைய மக்களின் நாளாந்த நல்வாழ்வைப் பா தி க் கா து - சீருற்ற, நோயற்ற நிலையில் வீடும், நா டும் பொ லிவுற்று விளங்க - அளவுட ன் பெற்று வளமுடன் வாழ"
ழ்ெவதற்கான போராட்டம் (Struggle for existence) நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது தகுதிவாய்ந்த அல்லது பொருத்தமான உயிரினங்களே 6). Tp(plpuh (Survival of the fittest) 6Tair பது இயற்கையின் நியதி. இத னை யே ''Quiñon 5 u9ait Gssi ay’ (Natural selection) 6T 607 sin, i Lüq s 5 išg Aus Gair (Theory of Evolution) 5 fi Goss um sur &F nrri Girov L-T rif வின் கூறுகிருர்,
ஆனல் இவற்றிற்கெல்லாம் விதிவிலக் காக மனித சமுதாயம் தனது அறிவின் உன்னத வளர்ச்சியினுல், சகல நோய்களுக் கும், விஷக்கிருமிகளுக்கும் எதிராகச் சமர் புரிந்து வெற்றியீட்டி வந்திருப்பதால் மக் கள் பெருக்கத்தை இயற்கைத் தேர்வினுல் மட்டுப்படுத்திவிட முடியவில்லை. சமுதா யங்களுக்கிடையில் ஏற்படக்கூடிய அணு வாயுதப் போராட்டங்கள் கூட சமாதா னத்தை விரும்பும் ஆத்ம ஞானிகளாலும் பாரதம் போன்ற அக வளர்ச்சி மிக்க நடு நிலை வகிக்கும் நாடுகளின் சீரிய கொள்கை களாலும். கட்டுப்படுத்தப்பட்டு வந்திருக் கின்றன. மேலும் சில வருடங்கள் இன்
பி. ரி. ஜெயவிக்கிரமராஜா
தமிழ்ச் சங்க முன்னுள் தலைவர்

Page 110
92 குடும்பத் திட்டம்
றைய ஜன வளர்ச்சி நீடித்தால், உணவுப் பற்ருக்குறையாலும், இடமின்மையாலும் எமது இன்றைய மறுமலர்ச்சிச் சமுதாயம் அல்லலுற்று அழிவுற நேரிடலாம். இவை யாவையும் முன்னுேக்காகக் கொண்டு உலக அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டு பல்வேறு முன்னேற்றமடைந்த நாடு களிலும் செயற்படுத்தப்பட்டு இயங்கிவரு கின்ற இந்த நடைமுறையையே "குடும்பத் திட்டம்' என்கிருேம்.
மேற் கூறப்பட்ட பொதுப்படையான நோக்கங்களுடன், எங்கள் சிறிய நாடான இலங்கையை எடுப்பின்
1921-ம் ஆண்டில் சராசரி 32 வயதில் இறந்த மனிதன் இன்று சராசரி 62 வயதில் இறக்கின்றன். ஆகவே சராசரி மனிதனின் வாழ்வுக்காலம் இன்று இரண்டு மடங்காக ஏறிவிட்டது. 1963-ம் ஆண்டிலே 10.9 கோடியாகவிருந்த ஜனத்தொகை-கட்டுப் பாடின்றிப் பெருகினுல் இன்னும் 25 வரு டங்களில் இரண்டு மடங்காகும் என அறிவி யல் அவதானிகள் கூறுகின்றனர். இதற் குக் காரணம் இலங்கை மக்களின் இன் றைய இறக்கும் விகிதம் குறைவாகவிருப்ப தாகும் , இறப்பு விகிதம் வீழ்ச்சிக்குக் கார ணம் முன்னேற்றமடைந்த ம ரு த் து வ சேவைகளும் வேறு சில சமூக மாற்றங்களு மாகும். அன்று விவசாயத்தை மாத்திரம் நம்பிவந்த எமது நாடு பயிர்ச் செய்கைக்கு அகீக கைகளை நம்பியிருக்க வேண்டியிருந் தது. ஆனல் இன்று தொழிற்றுறை விருத் தியின் காரணமாய் அதிக மக்களுக்கான தேவை குறைவதுடன், வேலையில்லாப் பிரச்சினை, வறுமை. வீழ்ச்சியுறும் வாழ்க் கைத் தராதரம் போன்ற பல்வேறு பிரச்சி னைகளும் பெருகிக் கொண்டே வருகின்றன.
மேலே எமது நாட்டினை நாம் பொது வாக ஆராய்ந்தோம். ஆகவே எங்கள் நாட் டின் தனி மனிதனுெருவனின் நிலையினை சற்று ஆராய்வோம். ஒரு குழந்தை பிறக் கும் போது அக்குழந்தை தந்தை தாயாரா லும், சமூகத்தினராலும் வேண்டப்படும் குழந்தையாகவிருக்க வேண்டும் . கணவன் மனைவியாக இணைந்து வாழும் அன்புக் குடும்பத்தில் இயற்கை நியதிக்கேற்ப ஆண் பெண் சேர்வுற்று மகிழ்வுற்று வாழ்வதில்

பி. ரி. ஜெய விக்கிரம ராஜா
தவறில்லை. ஆனல் பெருகிக்கொண்டே செல்லும் குழந்தைகள் தாய்தந்தையருக்கு மனக் குறைவையோ பணக்கஷ்டத்தையோ ஏ ற் ப டு த் தா து தாய்தந்தையரினதும் தமக்கு முன் பிறந்தோரினதும் சீருற்ற, நோயற்ற வாழ்விற்கு முட்டுக்கட்டையாக மாரு திருக்க ஒரே வழி - கட்டுப்படுத்தப் பட்ட திட்டமிடப்பட்ட குடும்பமாகும். ஆகவே வேண்டப்படாத ஒரு குழந்தை யைப் பெற்றெடுப்பது தாய்தந்தையர் தமக்கும் தம் சமுதாயத்தினருக்கும் செய் யும் ஒரு துரோகமாகும்.
குடும்பத்திட்ட முறைகளை நாம் ஐந்து முக்கிய பகுதிகளாகக் கொள்ளலாம்.
முதலாவதாக 'விவாக வழிகாட்டல்' (Marriage guidance) 6T6i, Lugo) is 6TGAs துக்கொள்வோம். இங்கே ஆண் பெண் உற வில் ஏற்படும் சிக்கல்களுக்கு விடை காண் பதோடு வேறு தனிப்பட்ட பிரச்சனைகளுக் கும் தீர்வு காண வழி வகுக்கப்படுகின்றது.
இரண்டாவதாக **வி வாக க் கல ந் gblus)'' (Marriage counciling) 67 air பதை எடுத்துக் கொள்வோம். முக்கிய மாக, விவாகம் செய்து கொள்வதற்கு முன்னரே விஞ்ஞான-மருத்துவ ரீதியாக கலந்தாய்ந்து கொள்ளுதல் ஒரு தி ட் ட மிட்ட குடும்பத்திற் கவசியம். ஜாதகம் போ ன் ற முட்டாள்தனமானவற்றை வைத்துப் பொருத்தம் பார் ப் ப  ைத விடுத்து மருத்துவ ரீதியில் ஆண் பெண் பொருத்தம் பார்த்தல் மிகவும் சிறந்ததா கும். இதனுல் முக்கியமாக சில பரம்பரை நோய்களை நாம் தடுத்துக்கொள்ளமுடியும். 9 g TJ607 drras përfyf2a} (Diabetes Mellitus) நோயை எடுத்துக் கொள்வோம். நீரிழி வுள்ள குடும்பத்திலுள்ள ஒர் ஆண், நீரிழி வுள்ள குடும்ப வரலாறுள்ள ஒரு பெண்ணை விவாகம் செய்தால் இவர்களுடைய பிள்ளை களும் அநேகமாக நீரிழிவு உள்ளவர்களா கக் காணப்படலாம். மற்றும் பெற்ருேளின் - Rh - குருதிப் பிரிவு வேறுபாட்டினல் ஏற்படக்கூடிய சிக்கல்களிலிருந்து பிள்ளைக ளைக் கா ப் பா ற் றிக் கொள்ளமுடியும். இவையும் வேறு பல காரணங்களாலும் மிகவும் நெருங்கிய உறவினர்கள் தம்முள் விவாகம் செய்து கொள்வது மருத்துவரீதி

Page 111
குடும்பத் திட்டம்
யாக உகந்ததல்ல என்று நிரூபிக்கப்பட் டுள்ளது.
மூன்ருவதாக, “குழந்தைப்பேறு இல் லாதவர்கள் கருவுறுவதற்கு வழி வகுத் ĝ5 io” (Reillef Jof sub-fertility). 6?aJ mtes LDT 6) இரண்டு வருடங்களாகியும் குழந்தையில்லை எனக் கூறும் தம்பதிகளை மருத்துவ ரீதியில் பரிசோதனை செய்வதன் மூலம் இவர்களது குறை தீர்த்து நிறைவுகாண வேண்டியன செய்தலும் இந்தக் குடும்பத் திட்டத்திற் குள் அடங்கும்.
நான்காவதாக குழந்தைகளுக்கிடை யில் தேவையான இடைவேளையை தீர்மா Gof jiġbid (Spacing of children). GML வேளை குறுகியதாயிருப்பது தாயினதும் சே யி ன தும் உடல்களுக்கு நல்லதல்ல வென்பது ம ரு த் துவ அறிஞர்களின் கருத்து. இது பற்றி அறிவுறுத்தி அதற் கான வழிவகைகளை காட்டுதல் குடும்பத் திட்டத்தை கற்பிப்போர து கடமையா
GELO .
ஐந்தாவதாக " " குடும் பக் கட் டு ப் UTG' (Limiting the size of the family) at Gir பதினை எடுத்துக் கொள்வோம். இன்று எமது நாட்டில் முக்கியமாகப் ப யி ல ப் படுவது குடும்பக் கட்டுபாடேயாகும்.
பெண்ணின் கருப்பையினுள் கருவுண் டாவதை தடுக்கும் வழிவகைகளையே அரசி னரும் சட்டமும் ஏற்றுக் கொள்கின்றனர். எந்த முறை யிலும் சிசுவையழிப்பதின் மூலம் (Abortion) குடும்பத்தைக் கட்டுப் படுத்துவதை குடும்பக் கட்டுப்பாட்டிற்கு ஒரு வழியாகக் கொள்ள முடியாது. சட்டப் படி இது ஒரு குற்றமாகும். எனவேதான் கருவுருவாகுமுன் கட்டுப் பாட்டை மேற் கொள்வது சாலச்சிறந்தது. இதனை அனே கமாக சகல சாகியத்தினரும் சமயத்தின ரும் ஏற்றுக் கொள்கின்றனர். சில மதத் தினை சார்ந்தோர் சில வழிகளுக்கு எதிர்ப் புத் தெரிவிக்கின்ற போதிலும் வேறு சில வழிகளை ஆதரிக்கின்றனர் ஆகவே நாம் இந்த பல்வேறு முறைகளையும் சற்று விரி
வாக ஆராய்வோம்.

பி. ரி. ஜெயவிக்கிரமராஜா 93
குடும்பக் கட்டுப்பாட்டிற்காக கையா ளப்படும் முறைகளை அறிவதற்கு முன்னர் பெண்ணினுடைய கருப்பையில் கருவுண் டாதல் எப்படியென்பதனை அறிந்திருத்தல் வேண்டும்.
மாதவிடாய் தோன்றுவதற்கு ஏறக் குறைய 14 நாட்களுக்கு முன்னர் பெண் ணின் சூலகத்திலிருந்து சூல் (ovum) உண் டாகி பலோப்பியோக் குழாயினுடாகச் (Fallo pian Tube) Go)éFair 5cb 6pLu 6o 1 அடைகிறது. மேலும், இரண்டு மூன்று நாட்களுள், ஆண்களினல் சுரக்கப்படும் சுக்கிலத்திலுள்ள விந்தை இச்சூல் சந்திக்க நேரும்போது இரண்டும் ஒருங்கு சேர்கின் றன. இது கருக்கட்டல் எனப்படும். இக் கருக்கட்டிய சூலானது கருப்பையின் சுவரு டன் ஒன்றி, அதிலிருந்து தன் வளர்ச்சிக்கு வேண்டியவற்றைப் பெற்று சிசுவாக மாறு கின்றது.
மருத்துவரின் உ த வி யி ன் றி நாம் கடைப்பிடிக்கக் கூடிய சில குடும்பக் கட் டுப்பாட்டு முறைகள்,
1. 9ILIIullos) bIN(ls 50)
(Safe Period)
இந்த மு  ைற  ைய மாத்திரம்தான் ரோமன் கத்தோலிக்க மதம் ஏ ற் று க் கொள்கின்றது. சூலானது ஏறக்குறைய 24 முதல் 48 மணித்தியாலங்கள் வரையில் தான் உயிரோடிருக்க முடியும் . எனவே சூல் உண்டாகி 1-3 நாட்கள் வரையிற் முன் கருக்கட்டல் நடைபெற முடியும். ஆகவே இந்த காலகட்டத்தை தவிர்த்து உடலுற வினை வைத்துக் கொண்டால் கருக்கட்டல் நடைபெருது .
மாதவிடாய் ஏற்படுவதற்கு 8 - 10 நாட்கள் முன்னரும் 5 - 6 நாட்கள் பின்ன ரும் அபாயமற்ற நாட்களாகக் கொள்ள லாம். ஆனல் இந்த முறையின் வெற்றிக்கு பெண்ணின் வழமையான நாட்கள் மிகவும் ஒழுங்காக இருக்க வேண்டும். மாதவிடாய் சீராகத் தோன்ரு விடில் இம் முறையில் வெற்றிகாண முடியாது.

Page 112
94 குடும்பத் திட்டம்
காலை உடல் வெப்பநிலையை அள விடல் மூலம் சூல் உண்டாகி வெளிவரும் நேரத்தை நாம் கணக்கிட முடியும். சூல் வெளிவரும் நாளில் உடல்வெப்பநிலை சற் றுக் குறைந்து, அடுத்த நாள் சிறிது கூடி, அடுத்த மாதவிடாய் வரும்வரை அதே வெப்பநிலையிலேயே இருக்கும். உடலுறவு சூலுண்டாகும் நாளில் மாத்திரமல்லாது இரண்டு நாட்கள் முன்னரும் இரண் நாட் கள் பின்னரும் தவிர்க்கப்பட வேண்டும்.
பொதுவாக இந்த முறை மிகவும் நம்ப கரமானதொரு முறையல்ல. கணவனும் மனைவியும் நாட்காட்டியை நம்பியிருப்ப தால் சந்தோஷமான வாழ்வு பாதிக்கப்படு கிறது.
2. ) Tilsit (60) (Coitus interruptus)
சேர்வின் போது ஆண் மிகக் கவன மாயிருந்து சுக்கிலபாயம் வெளிவரும் பொழுது யோனிமடலுள் பாயாது தவிர்த் தலே இந்த முறையாகும். இது நம்பகர மான முறையல்லாததோடு உடலுறவின் இயற்கையையே பாதித்துவிடுகிறது.
3. 5l_ñ LI 55ÎÏ) L 16) FL | ip
(Sponge and Jelly)
இறப்பரிஞல் செய்யப்பட்ட க ட ற் பஞ்சு 2" விட்டமும் " தடிப்பும் உள்ளது. பாவிப்பதற்கு மு ன் ன ர் இதன்ை நீரில் அமிழ்த்தி பின்னர் நீரை அமுக்கி அகற்றி விட்டு இரு பக்கங்களிலும் ஒரு வ  ைக ப் பசை பூசப்படுகின்றது. இதனைப் பின்னர் பெண்ணுறுப்பினுள் செலுத்தி விடலாம். பின்னர் 10 மணி நேரம் வரையில் இது பெண்ணுறுப்புள்ளயே இருக்க வேண்டும்.
4. 16l). Îî?hi (Foam tablets)
இ வ ற்  ைற ப் பெண்ணுறுப்பினுள் செலுத்தினல் உடல் வெப்ப நிலையில் இவை கரைந்து ஆணினுடைய சுக்கிலபா யம் உட்செல்லாதவாறு தடைசெய்து விடு கின்றது.
5. "கொண்டோம்' உறைகள்
இ  ைவ இறப்பரால் செய்யப்பட்ட உறைகளாகும். இ வ ற்  ைற ஆண் தான்

பி. ரி. ஜெய விக்கிரமராஜா
அணிந்து கொள்வதால் சுக்கிலபாயம் உட் செல்வதைத் தடைசெய்யலாம்.
மருத்துவரின் உதவியுடன் கையாளும் முறைகள்
1. LOGo_пö56b (Sterilisation)
ஆணினது அல்லது பெண்ணினது இன வுறுப்புகளில் சிறு சத்திர சிகிச்சை செய்வ தன் மூலம் கருவுண்டா தலை நிரந்தரமாகத் தடை செய்யலாம். ஆணில் இது மிகவும் இலகுவானது. ஆணின் விதையிலிருந்து விந்து வெளியேறும் குழாயைத் துண்டித்து விடுவதன் மூலம் ஆணை மலடாக்கி விட லாம். இந்த முறை இந்தியாவில் மிகப் பிர பல்யமடைந்து காணப்படுகின்றது. சத்திர சிகிச்சை நடந்து மூன்று நாட்களில் ஆண் தனது சாதாரண வேலைகளை மேற்கொள்ள முடியும்.
பெண்னை மலடாக்கும் பொழுது சூல கத்திலிருந்து கருப் ைபயிற்கு செல்கின்ற குழாயை மூடி விடுகிருர்கள். இந்த அறு வைச் சிகிச்சையை பிள்ளை பிறந்தவுடன் செய்து கொள்ளலாம். இதனுல் பெண் பத்து நாட்கள் மாத்திரமே மருத்துவ நிலை யத்தில் தங்க நேரிடும்.
ஆஞல் மேற் கூறப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் எந்த விதத்திலும் உடலுற விற்குப்பங்கம் விளைவிக்காது. ஆனல் இதன் பின்னர் பிள்ளை வேண்டும் என்று விரும்பி ஞல் அது முடியாத காரியமாகும். எனவே போதிய குழந்தைகள் இருப்பவர்கள் தமக் கேற்றபடி இதனை மேற் கொள்ளலாம்
பெண்ணுறுப்பினுள் மூடியொன்று கை விரல்களினுல் சரியாக வைக்கப்படுவதைக் கவனிக்கவும்.

Page 113
es (76 tiñ 1 / 3 ófot.-tih
2. epig J. Git (Caps and Diaphragms)
இதைப் பெண் குறியினுள் முறையாக வைப்பதன் மூலம் சுக்கிலாபாயம் கருப் டையை அடைவதை தடுத்துவிட முடிகி றது. அநேகமான தம்பதிகள் இதை விரும் புவதேனெனில் இதை எந்நேரத்திலும் போட்டுக் கொள்ளலாம். உடலுறவின் போது இது இருப்பது இவர்களுக்குத் தெரி வதில்லை. உறவு முடிந்து பத்து மணி நேரம் வரையில் இம் மூடிகளை அகற்றல் ஆகாது. ஒவ்வொரு பிரசவத்தின் பின்னரும் இம் மூடிகளின் அளவு மருத்துவரின் உதவி யுடன் சரிபார்க்கப்படல் வேண்டும்.
3. கருப்பையினுள் பாவிக்கப்படும் தடை
ty Go) p3, Gil (Intra uterine devices)
பயிற்றப்பட்ட மருத்துவர்கள் மூலம் * "பிளாஸ்டிக் கிஞல் செய்யப்பட்ட வளை யங்கள், லூப்புக்கள் கருப்பையினுள் வைக்கப்படுகின்றன. இந்த முறை மிகவும் பிரபல்யமானது. சில வேளைகளில் இவை பெண்ணுறுப்பினின்று வெளித்தள்ளப்ப்டு வதுமுண்டு (5 விகிதம் பெண்களில்)
உபகரணங்களின் உதவியுடன் மருத் துவரினல் "லூப்” கருப்பையினுள் வைக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும்
 

பி. ரி. ஜெய விக்கிரம ராஜா 95
குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரை (Pill)
இந்த முறையை நன்ற கப் புரிந்து கொள்வதற்கு ஒரு பெண்ணின் சாதாரண மாதவிடாய்ச் சக்கரத்தில் நடைபெறும் மாற்றங்களை அறிந்துகொள்ளுதல் அவசி யம். இம்மாற்றங்கள் யாவும் ஓமோன்க ளின் (Hormones) தாக்கங்களினல் ஏற்படு பவையாகும்.
su uji Sir Truủ 3 (Pituitary gland) 6 T GOT L' Lu டும் கானில் சுரப்பியிலிருந்து (DucteSS gland) சுரக்கப்படும் ஒரு விதமான ஓமோன் சூலகத்தை ஊக்குவிப்பதால் சூல் உண்டாகி வளர்ச்சியுறுகின்றது. சூல் வளர் கின்ற கிராபின் புடைப் பால் (Grafan follicle) 9. T&6ül 16'lb “Gih Jg6öı (Oestrogen) என்னும் ஓமோன் உடலில் சில மாற் றங்களை ஏற்படுத்துகின்றது. அவை:
1. மூளையில் சில பகுதிகளை ஊக்குவிப்ப தன் மூலம் மேலதிகமான சூல்கள் சூல கத்தில் உண்டாவது தடைசெய்யப்படு கிறது.
2. கருப்பையின் சுவர்கள் வளர்ச்சியுற்று
தடிப்படைகின்றன.
3. பெண்ணின் மார்பகம் வளர்ச்சியுறுவ, தோடு பால் சுரப்பதற்கு எதுவான சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
மாதவிலக்கு ஏற்பட்டு 14 நாட்களின் பின்னர் சூல் வளர்ச்சியுற்று மிகவும் அதிக மான அளவில் ஈஸ்ரஜன் சுரக்கப்படுகின் றது. கருப்பையின் வாயிற்பகுதியில் சுரக் கப்படும் சீதத்தில் மாற்றம் ஏற்படுகின்
நிறது .
சூலகத்திலிருந்து பின்னர் பரோஜெஸ் ரிரேண் என்னும் ஓமோன் உண்டாக்கப்படு கின்றது. இந்த ஓமோ ன் ஈஸ்ரஜன் செய் யும் தொழிலை மேற்கொள்வதோடு கருப் பையின் சுவர்கள் கருவுண்டாவதற்கு ஏற்ப வளர்ச்சியடையச் செய்கின்றது. வித்துவும் சூலும் இணைந்து கருவுறுதல் நடைபெற் முல் ஈஸ்ரஜன் புரோஜஸ்ரோன் முதலிய ஒமோன்கள் சுரக்கப்பட்டுக்கொண்டேயி

Page 114
96 குடும்பத் திட்டம்
கொழும்பு மருத் துவப் பீட த் தைச் சேர்ந்த மா ன வ ர் கள்
* பி ற் ற க் கோட்டை' மக் களுக்கு குடும்
பத் தி ட் ட த்  ைத ப் ப ற் றி வி ள க் கி வரு கின்றனர்.
ருக்கும். கருக்கட்டல் நடைபெரு விடில் முதிர்ந்த கிராபியின் புடைப்பு வளர்ச்சி குன்றி அழிவுறுகிறது. இதனுல் ஈஸ்ரஜன் புரோஜெஸ்ரிருேண் முதலிய ஒமோன்க ளின் சுரக்கப்படும் அளவு குறைகிறது. இதன் விளைவாச, முன்பு வளர்ந்து வந்த கருப்பையின் உட்சுவர் பாகம் சிதை வுற்று இ ர த் த மா க வெளிவருகின்றது. இந்த நிகழ்ச்சியையே நாம் மாதவிலக்கா கக் கொள்வோம்.
இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் ஈஸ்ரஜன் புர ஜெஸ்ரிருேன் முதலிய ஓமோன்கள் அதிக அளவில் சுரக்கப்படும் போது தலகத்தில் சூல் உண்டாகுதல் தடைசெய்யப்படுகின்
gl |
ஆகவே நாம் செயற்கை முறையில் இந்த ஓமோன்களைப் பெண்ணினது இரத் தத்துள் செலுத்துவதன் மூலம் சூலுண் டாவதைத் தடை செய்யலாம். இந்த விதிக் கமையத்தான் இன்று கருத்தடை வில்லை கள் உண்டாக்கப்படுகின்றன.
 

பி. ரி. ஜெயவிக்கிரமராஜா
கருத் தடை வில்லைகள் முக்கியமாச ஈ ஸ் ரஜன் புரஜெஸ்ரோன் முதலிய ஒமோன் களைக் கொண்டுள்ளன.
இந்த வில்லைகள் மாதவிலக்கு ஆரம் பித்து ஐந்தாவது நாள் முதல் இருபத்தே ழாவது நாள் வரை பெண்ணினுல் உட் கொள்ளப்படுகின்றன. இதன் பின்னர் மீண்டும் ஏழு நாட்களின் பின் வில்லைகளை உட்கொள்ளலாம். வில்லைகளை இந்த முறை யில் தவழுது உட்கொண்டோர் நூற்றுக்கு நூறு விகிதம் வெற்றி கண்டுள்ளனர். எனவே குழந்தை பிறப்பதை அடியோடு கட்டுப்படுத்துவதற்கு மா த் தி ர மின் றி குழந்தைகளுக்கிடையில் வேண்டிய இடை வேளையைத் தீர்மானிப்பதற்கும் இந்த வில்லைகள் உதவுகின்றன.
சமயங்களும் அபிப்பிராயங்களும்
முஸ்லீம் சமுதாயத்தினர் அனேகமாக
எல்லாவிதக் கட்டுப்பாட்டு முறைகளையும்
ஏற்றுக்கொள்கின்றனர். பெளத்த மதத்தி

Page 115
குடும்பத் திட்டம்
னர் உயிர் உண்டாவதற்கு முன்னர் கைக் கொள்ளப்படும் எ ந் த க் கட்டுப்பாட்டு முறையையும் எதிர்க்கவில்லை. இந்து மத மக்களும் இதற்கு மாறில்லை. ஆனல் கத் தோலிக்க மதத்தினர் " " அ ப ா ய ம ற் ற கால' (Safe periods) முறையை தவிர்ந்த ஏனைய முறைகள் அனைத்தையும் எதிர்க் கின்றனர்.
அரசியல் நோக்கு
குடும்பக் கட்டுப்பாட்டின் மூலம் எந்த வொரு சமூகத்தினரோ ச |ா தி யி ன ரோ அழிக்கப்படுவார்கள் எனக் கூறித்திரிவது அரசியல் இலாபத்தைச் சம்பாதிப்பதற் காக வேண்டி காட்டப்படும் பூச்சாண்டியா கும். இந்த முட்டாள்தனமான ஆதார மற்ற கொள்கையை மக்கள் நாட்டினதும் வீட்டினதும் நன்மை கருதி நிராகரிக்க வேண்டியது அவசியமாகும்.
இன்று அ மெ ரி க் கா வி ல் குடும்பக் கட்டுப்பாட்டு வில்லைகள் உட்கொள் ளுதல் பெண்களின் அன்ருட வாழ்க்கை யில் ஓர் அ ம் சமா க அமைந்துவிட்டது. 1956-ம் ஆண்டில் ஏறக்குறைய 100 பெண் களில் பரீட்விக்கப்பட்ட இந்த வில்லைகள் 1961ம் ஆண்டு 8.5 கோடி மக்களால் பாவிக்கப்பட்டது. இன்று உலகில் மிகவும் சுலபமானதும் நம்பகரமானதுமான குடும் பக் கட்டுப்பாட்டு முறையாக " "வில்லை முறையே " கைக் கொள்ளப்படுகிறது. ஆனல் இந்த வில்லைகளிலும் சில தீமை கள் ஏற்படக்கூடுமாதலில் மருத்துவரின் ஆலோசனைப்படியே இவை உபயோகிக்கப் பட வேண்டும். நெஞ்சில் புற்றுநோய், செங்கமாரி, இரத்தம் கட்டியாகும் நோய் முதலியன உள்ளவர்கள் இந்த வில்லைகளை பாவித்தல் ஆகாது.
மருத்துவரின் ஆலோசனைப்படி வில்லை கள் பாவிப்போர் தமக்குக் குழந்தைகள் உசாத் துணை நூல்கள்:-
1. Birth Control - Life Supplement Internatio
nal Report.
2. Medical Hand Book - International Planned
Parenthood Federation.
3. 16th Annual report of the Family Planning
Association of Ceylon.

பி. ரி. ஜெயவிக்கிரமராஜா 97
வேண்டும் என விரும்பினுல் எந்நேரமும் இந்த வில்லைகளை நிறுத்துவதன் மூலம் சில நாட்களின் பின் கருவுற்று நிறைவு காண
6 ft).
(pl.) GDI
எங்கள் நாட்டில் பொருட் செல்வம குறைந்த மக்களும் மக்கட் செல்வத்தைப் பெருக்கத் தயங்குவதில்லை. இன்று நாடு காணும் பிரச்சினைகளுள் தலையாயது மக் கட் பெருக்கம் என்பதை இவர்கள் உணர வில்லை. நகரில் ஒதுக்குப்புறமாக வாழும் எண்ணிறந்த மக்களின் அறியாமையைப் போக்கி குடும்பக் கட்டுப்பாடு பற்றிய அறிவைப் போதிக்க அரசினர் ஆவ ன செய்ய முன் வரவேண்டும். இம்மக்கட்கு, மக்கட் தொகைப் பிரச்சினை குடும்பக்கட் டுப்பாட்டு முறைகள் போன்றவை சரிவரப் போதிக்கப்பட வேண்டும். குடும்பக் கட் டுப்பாடு பற்றிய நாடகங்கள், சிறு நிகழ்ச் சிகள் போன்றவைகளை நடத்தி அறிவுறுத் தலாம்.
சமூக சேவியர்கள் இவ் விடங்களுக்கு அடிக்கடி சென்று, இங்குள்ள பெண்களைச் சந்தித்துக் குடும்பக் கட்டுப்பாடு வழிமுறை கற்பித்தல் பெரும் பயனளிக்கும். மக்க ளின் கல்வியறிவைப் பெருக்குவதன் மூலம் அளவோடு பெற்று வளமோடு வாழ்தலின் அவசியத்தை நன்கு உணரச் செய்யலாம்.
மேலே கண்ட முறைகளால் மக்களுக்கு திட்டமிட்டு வாழ்தலே தெவிட்டாத இன் பம் என்பதையும், இதுவே இன்றைய நமது திட்டங்களை வெற்றி பெறச் செய்யும் அடிப்படை என்பதையும் அறிவுறுத்தினுல் விரைவிலேயே எமது நாடு முன்னேற்றப் பாதையில் வெற்றி நடைபோடும் என் பதில் ஐயமில்லை.
4. C. N. A. P.T bulletin - Article by Prof.
D. A. Ranasinghe.
5. Fertility Trends in Ceylon By Prof. Abeya
Tatre.
6. Islamic Attitudes Towards Family Planning
- Pakistan Family Planning Council.

Page 116
புனர் ஜென்
1967-ம் ஆண்டு, டிசம்பர் மாதம், மூன்ரும் திக பேர்னுட் தமது கத்தியை 53 வயதான கேப்டவுன் வர் சியபோது மனித இயந்திரத்தில் மாற்றிப் பொருத்தக்கூ ! சேர்ந்து கொண்டது. இதையடுத்து, உலகின் பல்வேறு போட்டியாகச் செய்யப்பட்டன. இன்று இரவல் இருதய ரோடு இருப்பவர் அமெரிக்கரான லூயி றஸல் ஆவர். காலம் வாழ்ந்துவிட்டார்.
 

m 5. 3) ji JI (5 TDI i
தி - தென்னுயிரிக்கப் பேராசிரியர் கிறிஸ்டியன் த்தகர் லூயி வோஷாங்ஸ்கியின் உடலில் பாய்ச் டிய 35 வது உதிரிப்பாகமாக மனித இருதயமும் பாகங்களிலும் இருதய மாற்றீடுகள் ஏட்டிக்குப் த்தோடு உலகிலேயே ஆகக் கூடிய காலம் உயி இவர் ‘புனர் ஜென்மம்' பெற்றபின் 22 மாத

Page 117
4/னர் ஜென்மம்
மாற்றீடு செய்ய 35 உறுப்புகள்
மோட்டார் கார்களுக்குத் தே  ைவ யானபோது உதிரிப்பாகங்களை எப்படி மாற்றுகிருேமோ, அதேபோல எமது மனித இயந்திரந்திலும் மாற்றக்கூடிய 35 உதிரிப்பாகங்கள் இருக்கின்றன என்றல் அது இன்றைய வைத்திய உலகத்தின் மகத் தான முன்னேற்றமென்றே சொல்ல வேண் டும். இவற்றைப்பற்றி நாம் அறியவேண்
4.-ITLDIT?
மனிதனிலிருந்து மனிதனுக்கு மாற்றிப் பொருத்தும் உறுப்புகள் :
 

க. இந்திரகுமார் 99
( 1) (2) (3) (4) (5) (6) (7) (8)
விழி வெண்படலம் இருதயம்
நுரையீரல் இருதய வால்வுகள் இருதயப் பிரிசுவர்த் துண்டுகள் ஈரல் சிறுநீரகம் என்புத் துண்டுகள்
மனிதனுக்கு மாற்றிப் பொருத்தும் செயற்கை உறுப்புக்களும் புற உபகரணங்களும் :
(9)
(10) (11)
(12)
(13)
(14) (15)
(16) (17)
(18)
(19)
(20)
(21) (22) (23) (24)
(25)
(26)
மண்டை ஒட்டுத் தகடு (உலோ கம்)
காது (பிளாஸ்டிக்) நடுச் செவி யிலுள்ள மூன்று சிறிய எலும்புகள். மலியஸ்,இன் கஸ், ஸ்ரேப்பீஸ் (பிளாஸ்டிக்) கண்வில்லை அல்லது “லென்ஸ்? (பிளாஸ்டிக்) மூக்குக் கசியிழையம் (பிளாஸ் டிக்)
தாடை என்பு (உலோகம்) பற்கள் (செறமிக், பிளாஸ்டிக் உலோகம்). செவிட்டு உதவிக் கருவி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்ப டுத்தும் இலத்திரனியற் கருவி மூச்சுக் குழற்ருெடுவை (பிளாஸ் டிக்) தோள் மூட்டு (உலோக ம், பிளாஸ்டிக்) முழங்கை மூட்டு (உலோகம், பிளாஸ்டிக்). மணிக்கட்டு மூட்டு (உலோகம்) மொழிகள் (பிளாஸ்டிக்) மார்பகம் (பிளாஸ்டிக்) இருதய வால்வு (உலோக ம், பிளாஸ்டிக்) இருதயத் துடிப்பை விரைவு படுத்தும் இலத்திரனியற் கருவி சக்தியூட்டப்பட்ட கை (உலோ கம், பிளாஸ்டிக்),

Page 118
100 L/6ørář @p 6ör Lo uż
(27) நாடிகள் (பின்னப்பட்ட நார்)
(28) சிறுநீர்ப் பையைத் துர ண் டும்
இலத்திரனியற் கருவி
(29) இடுப்பு மூட்டு (உ லே ரா கம்,
பிளாஸ்டிக்)
(30) கழிவு அடையக் கூடிய என்புத் தகடு (என்பு குணமடைந்ததும் பிளாஸ்டிக் அற்றுப் போய்விடும்)
(31) கழிவு அடையக் கூடிய இரத்தக் குழாய்கள் (இரத்தக் குழாய் குணமடைந்ததும் பிளாஸ் டி க் அற்றுப் போய்விடும்)
(32) முழங்கால் மூட்டு (உலோகம்,
(33) சிர்ை அல்லது  ெர ன் டன்’
(பிளாஸ்டிக்)
(34) கால் (பிளாஸ்டிக், உலோகம்)
(35) பாதத்தால் துண்டப்படும் புறங் காற் தசைகளை இயக்கும் இலத் திரனியற் கருவி,
பிற பொருளெதிரிகள்
ஒரு மனிதனிலிருந்து இன்னெரு மனித னுக்கு, அல்லது ஒரு மிருகத்திலிருந்து ஒரு மனிதனுக்கு, செய்யப்படும் உறுப்பு, மாற் நீட்டு அறுவைச் சிகிச்சையைக் கவனிப் போம். இத்தகைய மாற்றீட்டிற்கு பிர தான தடையாக இருப்பது மனித உடலில் வியாபித்துள்ள வலை அகவணித் தொகுதி யாகும். ஆங்கிலத்திலே இதனை றெட்டிகி யூலோ என்டோதீலியல் சிஸ்ற்றம் என்று சொல் வார்கள்.
எலும்பில் மருே (மச்சை) எ ன் று சொல்லப்படும் பகுதி, மண்ணிரல் (Speen) ஈரல், நிணநீர் முடிச்சுக்கள் (Lymph Glands) , இரத்தம் ஆகிய இடங்களில் வலை அகவணித் தொகுதி உண்டு. இதனை மனித உடலின் பாதுகாவற் படை என்று வர்ணிப் பது பொருத்தமாகும். 1ற்றீரியா, வைரஸ் அல்லது வேற்றுப் புரதப் பொருள்கள் உட லில் இருப்பதைக் கண்டுபிடித்து, இவற்றை எதிர்ப்பதற்கு பிறபொருளெதிரிகளை (anti bodies), 5 uurff Gg uit Gugil Guča Jyasau ணித் தொகுதியின் கடமைகளில் ஒன்று.

க. இந்திரகுமார்
இவ்வாறு த யா ரிக் கப் பட்ட பிற பொருள் எதிரி உடலை முற்றுக்கை இட்ட வேற்றுப் பொருள்களை அழித்து விட அல் லது பலமற்றதாக்கிவிட முயற்சிக்கும். பிறபொருள் எதிரிகளின் தடையே இல்லா மல் மாற்றீடு செய்யக்கூடிய நான்கு உறுப் புகள் உள்ளன. விழி வெண் ப ட ல ம் (Cornea), இரத்தக் குழாய்கள், எலும்பு கள், சிரைகள் என்பனவையே இந்த உறுப் புக்களாகும்.
விழி வெண்படல மாற்றிடு
ஒரு மனிதனிலிருந்து இன்னுெரு மனித னுக்கு விழி வெண்படலத்தை மாற்றிப் பொருத்தும் அறுவைச் சிகிச்சை 1930-ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. *கண் தானம்’ என்று சாதாரணமாக எல் லோராலும் வழங்கப்படுவது இச்சிகிச் சையே.
குருட்டுத்தன்மை ஏற்படுவதற்கு விழி வெண்படலம் பழுதடைவதும் ஒரு கார ணம். மாற்று விழி வெண்படலம் பொருத் துவதால் இத்தகைய குருட்டுத்தன்மையை நீக்கலாம்.
இலங்கையிலே சில அரசாங்க மந்திரி கள் உட்பட 5 லட்சம் பேர்கள், தாம் இறந்த பிற்பாடு தமது கண்களைத் தானம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளனர். இச் சிகிச்சையை முதன்முதலில் வெற்றிகரமா கச் செய்தவர் செக்கோஸ்லோவாக்கியா வைச் சேர்ந்த கண் சிகிச்சை நிபுணர் அன் ரன் எல்ஸ்ச்னிக் ஆவார்.
இந்த மாற்றுச் சிகிச்சை நுண்ணுயிர்
ரெதிரிகளின் தொல்லையில்லாமல் இருப்ப தோடு சிக்கல்களும் அற்றது. ஏனெனில்
(1) வீழிவெண் படலத்தின் தொழில் மிகச் சுலபமானது, சிக் கலந்றது.
(2) விழிவெண் படலத்திற்கு வாயு மண்டலத்திலிருந்து ஒட்சிசன் நேரடியாகக் கிடைக்கிறது.
(3) விழிவெண் படலம் ஒட்சிசனைப்
பெறுவதற்கு நேரடி இரத்த விநியோகத் தில் தங்கியிருப்பதில்லை.

Page 119
tysorno Gg priptih
பெரிய உறுப்புக்களேப் பொறுத்தமட் டில் அவற்றிற்கு இரத்த விநியே 1ா க ம் நிறைய உண்டு. எனவே இத்தகைய உறுப்பு மர்ற் றீடுகளின் போது துண்டிக்கப் படும் இரத்தக் குழாய்களை மறுபடியும் பொருத்தியாக வேண்டும்.
இரத்தக்குழாய் - என்பு - சிரை
IDI sjHHil
இரத்தக் குழாய்களை மாற்றிப் பொருத்
துதல் எளிது. தமக்குத் தேவையான இரத்
தத்தை இரத்தக் குழாய்கள் தாமே கொண்டு செல்வதால் இங்கே பிரச்சினை
இரவல் இருதயத்தின் மூ ல ம் புனர் ஜென்மம் பெற்று இன்று 22 மாதங்களாகி யும் உயிர் வாழும் லூயி றஸல் இவர்தான். கழுத்துக்கு அடியிலே இருந்து ஆரம் பித்து இவரது மார்பை செங்குத்தாகப் பிளந்தார்கள். இதன் தழும்புகூட அவ்வ ளவாகத் தெரியவில்லை,
 

á. Sá F/resuð r s töf
எழுவது இல்லை. என்புகளை மாற்றிப் பொருத்துவதும் பிரச்சினை அற்றது. மற்ற உறுப்புகளுக்குத் தேவையான அளவைவிட மிகக் குறைந்த அளவிலேயே ஒட்சிசனும் இரத்தமும் இவற்றிற்குத் தேவைப்படுகின் றன. இந்த வகையைச் சேர்ந்தவையே சிர்ைகளும். எனவே இவற்றைச் சிக்கலின்றி மாற்றிப் பொருத்தலாம்.
சிறுநீரக மாற்றிடு
மனிதனது உடலில் நோய் வாய்ப்படக் கூடிய உறுப்புகளுள் சிறு நீரகங்களும் உள் ளன. மனிதனுடைய உடல் தொழிற்படும் போது, தொடர்ச்சியாகக் கழிவுப்பொருள் கள் உடலில் உண்டாகின்றன. இவற்றை சிறு நீரகங்கள் இரத்திலிருந்து இரவும் பக லும் இடை விடாது வடிகட்டி, சிறுநீரோடு சேர்த்து வெளியேற்றுகின்றன. சிறுநீரகம் பழுதடைந்ததும், கழிவுப் பொருள்கள் வெளியேற்றப்படாது இரத்தத்தில் நிறை கின்றன.
இவற்றின் அளவு கூடியதும், இவை மூளைக்கு நச்சுத்தன்மையை ஏற்றுகின்றன. ஈற்றில் மரணம் சம்பவிக்கும். எனவே வடி கட்டும் இயந்திரம் (ஆங்கிலம் - டயலைஸர்) ஒன்றைக் கண்டு பிடிக்க டாக்டர்கள் முனைந்தனர். இம் முயற்சியில் வெற்றி அடைந்தவர் வில்லெம் கோல்ஃப் என்ற டச்சு வைத்திய நிபுணராவர். இரண்டா வது உலக மகா யுத்தத்தின் போது நாஸிகள் ஒல்லாந்தை ஆக்கிரமித்திருந்த காலத்தில் இச்சிறு நீரக இயந்திரம் உருவெடுத்தது.
"உப்புநீரில் அமிழ்த்தப்பட்ட ஒரு செலோ பேன் குழாயினுளடாக, நாள மொன்றிலிருந்து இரத்தம் பாய்ச்சப்படும். இரத்தத்திலுள்ள கழிவுப் பொருள்கள் செலோபேனிலுள்ள அதி நுண்ணிய துவா ரங்களினுாடாக வெளி யே ஹி , 'உப்பு நீரைச் சென்றடைகின்றன. இரத்தம் மறு படியும் உடலினுள் செலுத்தப்படுகிறது. சிறு நீரக இயந்திரத்தின் அடிப்படைத் தத் துவம் இதுவே.
வாரத்திற்கு 2 - 3 தடவைகள் இத் தகைய வடிகட்டலை, சிகிச்சை நிலையத்தில் அல்லது தனது வீட்டில் நோயாளி செய்து கொள்ளலாம். இவ்வாறு சிகிச்சை செய்யப் பட்ட நோயாளிகள் 6 வருடங்களுக்குமேல் வாழ்ந்தனர்.

Page 120
102 புனர் ஜென்மம்
இருதய மாற்றீடு வெற்றியா? தோல்வியா? இதோ லூயி றஸலைப் பாருங்கள். இருதய மாற்றீடு செய்யப்பட்ட பின்" அவர் எ ன் ன செய்கிருர் என்று கவனியுங்கள். வெற் றியா தோல்வியா-நீங்களே கூறுங்கள்.
ஆளுல் செலவு அதி ரத்துக்கள் 6 இருக்க வே எனவே இன் சிகிச்சை .ெ
யாகவே பய
நாய்களுக்கு
இரண்ட கள் மீது பல சோதனைகள் ஒன்றை அக நீரகத்துடன் தன, இதைத் மாற்றீட்டு அ பெற்றன. அ டைந்தன. 1 தேடி ஆராய்
நாம் முன் வியை உண்டு இரத்தத்திலு லிம்ஃ போன
பொருத்தப் அழிக்கின்றன நீரியா, வை) மிப்பாளர்கை
பொருத்திய கொல்ல மு
எனவே
ஒற்றுமையிே யிற்று. இத் வுள்ளன. ெ வெவ்வேறு தப் பிரிவுகளை ளவில் இருக் என்று நம்பட்
இவற்ை யங்களில் தீவி திலே நடைெ சிறுநீரகமாயி லும் சரி -
 

க. இந்திரகுமார்
இம் முறையிலே சிரமங்கள் இருந்தன. கமாயிருந்ததோடு நோயாளியின் போக்குவ 7ல்லாம் சிகிச்சை நிலையங்களுக்கு அருகிலேயே ண்டும் என்ற நிர்ப்பந்தமும் இருந்தது. "று இம்முறை மாற்று சிறு நீரக அறுவைச் சய்யப்படும்வரை, ஒரு தற்காலிக முறை ன்படுத்தப்படுகிறது.
த சிறுநீரக மாற்றிடு ாவது உலக மகா யுத்தத்தின் பின்னர், நாய் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இப் பரி , ஒரு உயிர் தனது இரு சிறு நீரகங்களில் ற்றிய பின்னர் மிகுதியுள்ள ஒரேயொரு சிறு
சு கத்தோடு வாழமுடியுமென்பதை நிரூபித் ந் தொடர்ந்து மிருகங்களின் மீது சிறுநீரக 1றுவைச் சிகிச்சைகள் நிறைந்த அளவில் நடை ஆனல் இம் முயற்சிகள் யாவும் தோல்விய டாக்டர்கள் தோல்விக்கான காரணங்களைத் ச்சி செய்தனர்.
ர்பு கண்ட பிற பொருளெதிரிகளே தோல் தி பண்ணின என்பது தெரிய வந்தது. இவை 1ள்ள நிணநீர் க் குழியங்களின் (ஆங்கிலம்: சைட் மேல் ஒட்டிக் கொண்டு மாற்றிப் பட்ட சிறுநீரகத்தை ஆக்கிரமித்து அதை ா. உடம் பின் பாதுகாவல் படையினர் பற் ரஸ் போன்ற ஆபத்து மிக்க அந்நிய ஆக்கிர ளக் கொன்று குவிப்பது போல் மாற்றிப் உறுப்பையும் அவ்வாறே நினைத்து அதனைக் பல்கின்றனர்.
இம் முயற்சியில் பெறும் வெற்றி பிறப்புரிமை லயே பெரிதும் தங்கியுள்ளதென்பது வெளியா நகைய ஒற்றுமை அடையாளங்கள்’ நிறைய வவ்வேறு இரத்தப் பிரிவுகள் இருப்பதுபோல, இழையப் பிரிவுகளும் உள்ளன. ஆனல் இரத் "ப் போலல்லாது இழையப் பிரிவுகள் பெரும கலாம், (22பிரதம பிரிவுகளுக்கு மேற்பட்டன) படுகிறது.
ற விடுவிக்க, இன்று உலகின் வைத்திய நிலை ர ஆராய்ச்சி நடைபெறுகிறது. வருங்காலத் பறும் உறுப்பு மாற்றீடுகளின் வெற்றி - அது ருந்தாலும் சரி, அல்லது இருதயமாயிருந்தா இவ்வாரய்ச்சிகளில் பெரிதும் தங்கியுள்ளது.

Page 121
புனர் ஜென்மம்
வெற்றி கிட்டிற்று
முதன் முதலில் நடைபெற்ற சிறுநீரக பிறபொருளெதிரிகளைக் கட்டுப்படுத்தும் முை ளப்படவில்லை. இதனுல் தோல்வியே ஏற்பட முதலில் பூரண வெற்றியை அளித்தது இர கிடையே நடைபெற்ற சிறுநீரக மாற்றீடாகு யர்கள் பிறப்புரிமை ஒற்றுமையுடையவரி தால் ஒருவன் உறுப்புக்கு மற்றவரின் உடல் எதிரிகளைத் தயாரிப்பதில்லை. 1950 முதல் 1 பொருளெதிரிகளைக் கட்டு ப் படுத் துவது ஆராய்ச்சி நடைபெற்றது. உடம்பு முழுவன வீச்சுக்குள்ளாக்கி, நுண்ணுயிரெதிரிகளைச் ச நிணநீர்க் குழியங்களை அழிக்கமுற்பட்டனர்.
ஆளுல் இது ஆபத்தானதென்று பின்னர் டது. 1959-ம் ஆண்டில் அமெரிக்க டாக் நோய்க்கெதிராகப் பயன்படுத்தும்6 - மேர் ரின் என்ற சக்தி வாய்ந்த மருந்தின் மூலம் எ ணுயிர் எதிரிகளைக் கட்டுப்படுத்தி வெற்றிகன்
இதைத் தொடர்ந்து நுண்ணுயிரெதிரிக டுத்தும் அஸாதயோ பிறீன் மருந்துகளின் ச தது. 1963 ம் ஆண்டின் பின்னர் சிறுநீரக கூடிய வெற்றியை அளித்தன. இன்று இத்தை கள் செய்யப்பட்டவர்களில் 65-70% ஒரு வ வாழ்கின்றனர். 60-65% இரு வருடங்கள் கின்றனர்.
நுரையீரல் மாற்றீடு
மனிதனின் நுரையீரல்களை மாற்றீடு செ இது நீண்ட காலம் ஒரு புதிராகவே விளங்கி அறுவைச் சிகிச்சைகளின்போது இருதயம் ஆகிய இரு உறுப்புக்களினதும் தொழிலை இரு ரல் இயந்திரம் ஏற்று நடாத்துவது இன்று ச நிகழ்ச்சி. இந்த இயந்திரத்தின் கடமைகள் இ தத்திற்கு ஒட்சிசன் ஏற்றுவது ஒன்று. இரத் ளினுாடாக விசையுடன் பாய்ச்சுவது மற்ெ இயந்திரத்தினுடைய த த் து வ த்  ைத அ வைத்து மனித உடலில் நிரந்தரமாகப் பொ ஒரு சிறிய இருதய நுரையீரல் இயந்திரத் டிக்க அமெரிக்க டாக்டரான வால்டன் லி சித்து வருகிருர் . இம்முயற்சி வெற்றி பெறு மனிதனின் பழுதடைந்த இருதயத்தையும் பூ சேர்த்து அகற்றி விட்டு அவற்றிற்குப் பதில இருதய-நுரையீரல் இயந்திரத்தை இணைத்து

மாற்றீடுகளில் றைகள் கையா ட்டது. முதன் ட்டையர்களுக் தம். இரட்டை ர்களாகயிருப்ப
பிறபொருள் 961 வரை பிற
பற்றி தீவிர தயும் X கதிர் சுமக்கும் சிறிய
கைவிடப்பட்
டர்கள் புற்று *க்கப்டோபியூ லிகளின் நுண்
டனர்.
ளைக் கட்டுப்ப காப்தம் பிறத்
மாற்றீடுகள் கைய மாற்றீடு L - Ub 3F 5 L D for as சுகமாக வாழ்
ய்ய முடியுமா? யது. இருதய , நுரையீரல் தய-நுரையீ ர்வசாதாரண இரண்டு; இரத் தத்தை நாடிக ருன்று. இந்த டிப்படையாக "ருத்தக் கூடிய தைக் கண்டுபி ல்லஹி முயற் ம்போது ஒரு நுரையீரலையும் ாக ஒரு சிறிய விடலாம்.
க. இந்திரகுமார் 103
(Susi fifusi கிறிஸ்டியன் பேர்ணுட்

Page 122
104 lysor if Gap air in th
உலகின் முதலாவது நுரையீரல் மாற் நீட்டு அறுவைச் சிகிச்சை 1963-ம் ஆண்டு ஜ"ன் மாதம் அமெரிக்காவில் நடைபெற் றது. மிசிசிப்பி பல்கலைக் கழக வைத்திய நிலைய டாக்டர்கள் 53 வயதான ஒரு மனி தனின் புற்று நோயாற் பீடிக்கப்பட்ட நுரையீரல்களை அகற்றி விட்டு அவனுக்கு ஒரு பிரேதத்தினுடைய நுரையீரல்களைப் பொருத்தினர். இரவல் நுரையீரல்களுடன் 18 நாட்கள் வாழ்ந்த பிறகு அம் மனிதன் சிறு நீரக நோய் ஏற்பட்டு உயிர் நீத்தான். இம்முயற்சியைத் தொடர்ந்து இன்னும் சில நுரையீரல் மாற்றீடுகள் நடைபெற்றுள் ளன. இவை பரிபூரண வெற்றியை அளிக் காவிட்டாலும் வெற்றி கிட்டும் காலம் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை அளிப்பனவாக உள்ளன.
FF Jù LDT ) j
மனித ஈரல்களை மாற்றீடு செய்வதி லும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன. 1963-ம் ஆண்டு வரை நடைபெற்ற நான்கு முயற்சிகள் தோல்வியையே த ந் த ன . 1967-ம் ஆண்டு மனித ஈரல் மாற்றீடு செய் வதற்கு அமெரிக்க டாக்டரான தோமஸ் ஸ்டார்ஸ் பன்முறை முயன் ருர் . மாற்றீடு செய்த ஈரலின் மீது நுண்ணுயிரெதிரிகளின் படையெடுப்பை நிறுத்துவதற்கு இவர் புதிய சிகிச்சை முறையொன்றை பயன் படுத்தினர். இதன் மூலம் உடனடியாக இறக்கும் தறுவாயிலிருந்த பல குழந்தை களுக்கு மாற்று ஈரல்கள் பொருத்தி ஆறு மாதங்களுக்கு மேல் வாழ்வளித்தார். இப்
r
புதிய சிகிச்சை தான் என்ன?
மனித இரத்தத்தின் வெண் குழியங் களைப் பிரித்தெடுத்து அவற்றை மிருகங்களு டைய உடலினுள்ளே ஸ்டார்ஸ் ஊசி மூலம் ஏற்றினர். வெண் குழியங்களின் ஒரு பகுதி யான நிணநீர்க் குழியங்களை அழிக்கவென இம் மிருகங்கள் பிற பொருளெதிரிகளை உற் பத்தி செய்தன. இவை நிணநீர்க் குழிய எதிரிகளெனப் பெயர் பெறும். இவற்றை மிருகங்களின் உடலிலிருந்து பிரித்தெடுத்து இவற்றை மனித உடலினுள் ஊசி மூலம் செலுத்தினர் ஸ்டார்ஸ், அவை மனித நிணநீர்க் குழியங்களை அழித்ததைக் கண்

க. இந்திரகுமார்
டார். மனித உடலிலே மாற்று உறுப்புகளை அழிக்க உற்பத்தியாகும் பிற பொருள் எதி ரிகள் சிறிய நிணநீர்க் குழி யங் களி லே 'சவாரி செய்தே' மாற்றீட்டு உறுப்புகளை முற்றுகை இடுகின்றன என்று முன்னர் கண் டோம். டாக்டர் தோமஸ் ஸ்டார்ஸின் புதிய சிகிச்சை முறை நிணநீர்க் குழிய எதி ரி-ளை ஊசி மூலம் செலுத்தி நுண்ணுயி ரெதிரிகள் 'சவாரி செய்யும்' வாகனத்தை அழித்து அதன் மூலம் நுண்ணுயிரெதிரி களைச் சக்தியற்றனவாகச் செய்யும் நோக் கோடு அமைந்தது. இப் புதிய சிகிச்சை முறையினை சிறுநீரக மாற்றீடுகளும் கடைப் பிடித்தபோது நல்ல விளைவுகள் கிடைத் துள்ளன. ஆனல் நீண்ட காலத்திற்கு இது நன்மை தருமா என்பதைப் பொறுத்தி ருந்தே பார்க்க வேண்டும்.
ஈரல் மாற்றிட்டின் சிக்கல்கள்
ஈரல் மாற்றீடுகள் சிறு நீரக மாற்றீடு களை விட சிக்கல் வாய்ந்தவை ஏனெனில்:-
1. ஈரல், தேகத்தின் அனுசேபத்தோடு மிகவும் நெருக்கமாக ஈடுபட்டுள்ளதால் ஈரல் நோய் உண்டாகும் நோயாளி சிறு நீரக நோய் ஏற்பட்டுள்ள நோயாளியை விட மிகக் கடுமையாக நோய்வாய்ப்பட்டி ருப்பார் .
2. சிறு நீரக மாற்றீடுகள் செய்வதற்கு முன்னல், முன்பு விபரித்த வடிகட்டும் இயந் திரத்தின் மூலம் நோயாளியின் இரத்தத் தில் உள்ள நச்சூட்டும் கழிவுப் பொருள் களைத் தற்காலிகமாக அகற்றி விடலாம். இதனுல் நோயாளி இ க் க டு  ைம ய ர ன அறுவை சிகிச்சையைத் தாங்கிக் கொள் ளக் கூடிய பக்குவ நிலேயில் இருப்பார். இதே தத்துவத்தைப் பின்பற்றி ஈரல் நோயாளியின் இரத்தத்தை பன்றியினு டைய ஈரலினூடாகச் செலுத்துவதற்கு, டாக்டர்கள் எடுத்த முயற்சிகள் நன்மை. தரவில்லை.
3. சிறு நீரகத்தைப் போலல்லாது ஈரல் மாற்றீடு செய்த உடனேயே அது தொழிற் பட ஆரம்பிக்க வேண்டும்.

Page 123
புனர் ஜென்மம்
இருதய மாற்றிடு
இந்தச் சூழ் நிலையிலேதான் தென்ன பிரிக்க நிபுணரான பேராசிரியர் கிறிஸ்டி யன் பேர்னட் முதலாவது மனித இருதய மாற்றீட்டைச் செய்தார். நீண்ட கால மாக மிருகங்களில் நடைபெற்ற இருதய மாற்றீடுகளின் விளைவே இந்த சரித்திரப் பிரசித்தி வாய்ந்த அறுவை சிகிச்சையா கும். பேராசிரியர் பேர்னட் ரஷ்ய அமெரிக்க மருத்துவ நிலையங்களிலும் பின்னர் கேப் டவுண் மருத்துவ நிலையங்களிலும் நடை பெற்ற ஆராய்ச்சிகளின் போது நாய்க ளுக்கு மாற்று இருதயங்களைப் பொருத்தி அவைகளை ஒரு வருடம் வரை இரவல் இரு தயங்களோடு வாழச் செய்திருக்கிருர்,
உலகின் முதலாவது மனித இருதய மாற்றீடு 1967ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி பேராசிரியர் கிறிஸ்டியன் பார்ன டிஞல் செய்யப்பட்டது. இந்த இருதய மாற்றீடிற்கு உள்ளானவர் 53 வயதான லூயி வாஷான் ஸ்கி என்பவர் ஆகும். விபத்து ஒன்றில் சிக்கி மூளை சிதறி மரண முற்ற ஒருவரின் இருதயம் வாஷான் ஸ்கி யுக்குப் பொருத்தப்பட்டது.
உறுப்பு மாற்றீடுகளின் வெற்றி பிறப் புரிமை ஒற்றுமையிலேயே பெரிதும் தங்கி யுள்ளது என்று முன்னர் கண்டோம். வெவ் வேறு இரத்தப் பிரிவுகள் இருப்பது போல வெவ்வேறு இழையப் பிரிவுகள் உள்ளன என் றும் கண்டோம். எனவே வாஷான் ஸ்கியின் உடல் இன்னுெரு வருடைய இருதயத்தை ஒரளவேனும் ஏற்பதென்ருல் இருவருடைய உடல்களின் இழையங்களும் கூடுமான வரை ஒரே இழையப் பிரிவுகளைச் சேர்ந்த னவாய் இருத்தல் வேண்டும். எவ்வளவுக் கெவ்வளவு இழையப் பிரிவு ஒற்றுமை உண்டோ அவ்வளவுக் கவ்வளவு மாற்று இருதயத்தைத் தாக்கும் பிறபொருளெதிரி களின் அளவும் உக்கிரமும் குறைவாய் இருக்கும். எனவே பேராசிரியர் பார்னட் குழுவினர் வாஷான்ஸ்சியின் இழையங்களை இருதய தானம் செய்பவரின் இழையங்க ளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர். இழையப் பிரிவு ஒற்றுமை இருப்பது தெரிந்ததும் இரு தய மாற்றீட்டு அறுவை சிகிச்சை மேற்
கொள்ளப்பட்டது.

க. இந்திரகுமார் 105
அறுவைச் சிகிச்சை அறைகளிலே.
இரு அடுத்தடுத்த அறைகளில் ஒரே நேரத்தில் அறுவைச் சிகிச்சை ஆரம்பமா யிற்று. முதலாவது அறையிலே வாஷான்ஸ் கியின் மீது பேராசிரியர் பார்னட் அறுவைச் சிகிச்சையை ஆரம்பித்தார். அதேநேரத்தில் அடுத்த அறையில் இன்னெரு குழுவினர் மரித்தவரின் இருதயத்தை வெட்டி எடுக் கும் முயற்சியை ஆரம்பித்தனர்.
பேராசிரியர் பார் ஞ ட் வாஷான்ஸ் யின் மார் பிலே தோல், தசை, விலா எலும் புகளினூடாக வெட்டி வாஷான்ஸ்கியின் மார்பைப் பிளந்தார். இருதயம் வெளிப்பட் டது. இருதயத்திலேயிருந்து பிராணவாயு நி  ைற ந் த இரத்தத்தை உடம் பெங்கும் கொண்டு செல்லும் இரத்தக்குழாய்கள் நாடிகள் (Arteries) என்று பெயர் பெறும். பிராணவாயு நீங்கி கரியமிலவாயு நிறைந்த இரத்தத்தை உடலிலேயிருந்து இருதயத் திற்கு கொண்டு வரும் இரத்தக் குழாய்கள் நாளங்கள் (Weins) என்று சொல்லப்படும். இருதயத்திலேயிருந்து புறப்பட்ட சகல நாடிகளை யும் நாளங்களையும் இறுக நெரித் தார் பார்னட். இதன் மூலம் பழுதுற்றி ருந்த இருதயத்திற்கும் உடலுக்கும் இருந்த தொடர்பு நிறுத்தப்பட்டது. இந்த இருத யத்திற்குப் பதிலாக இருதய நுரையீரல் இயந்திரமொன்றை வாஷான் ஸ்கியின் உட லுக்குப் பொருத்தினர். இந்த இயந்திரம் வாஷான்ஸ்கியின் உடலுக்குப் பிராணவாயு கலந்த இரத்தத்தைப் பாய்ச்சும் பொறுப் பைத் தற்காலிகமாக ஏற்றுக் கொண்டது. நோயுற்ற இருதயத்தை வெட்டி அகற்ற ஆரம்பித்தார் பேராசிரியர் பார்னட். இரு தயம் 4 அறைகளால் ஆனது. வலது பக்க மேலறையின் (Rt. Atrium) சுவரினுாடாக உடலின் பிரதான நாளங்கள் திறக்கின் றன. இந்த அறையின் சுவரிலேதான் இரு தயத்தின் துடிப்புச்சக்தி உதயமாகும் S-A- Node உள்ளது. அத்தோடு இருதயத்தின் முக்கிய நரம்புகள் (Nerves) கூட இந்த அறைச் சு வ ரிலே தா ன் சேருகின்றன. நோயுற்ற இருதயத்தின் வலது பக்க மேல றைச் சுவரை மாத்திரம் வெட்டாமல் மிச் சம் வைத்து விட்டு ஏனைய இருதயம் முழு வதையும் பேராசிரியர் பார்னுட் வெட்டி அகற்றிர்ை.

Page 124
106 Lysør iř @ gọ6ăruoth
அடுத்த அறையிலே எ ன் ன நடக்கி றது என்று கவனிப்போம். இங்கே யும் மரித்தவரின் மார்பைப் பிளந்து, அவரு டைய உடலு க் கும் இருதயத்திற்கும் இருந்த தொடர்பு நாடிகள்-நாளங்களை இறுக நெரிப்பதன் மூலம் நிறுத்தப்படுகி றது. ஆனல் இங்கேயோ டாக்டர் குழுவி னர் இருதய நுரையீரல் இயந்திரமொ ன்றை வெட்டி எடுக்கப் போகும் இருயத் தோடு இணைத்தனர். இந்த இயந் தி ர ம் பிராணவாயு கலந்த இரத்தத்தை மாற் நீட்டு இருதயத்திற்குப் பாய் ச் சு வ த ன் மூலம், அ த னை உயிருடன் வைத்திருக்கி றது. மாற்றீட்டு இருதயத்தைக் கவனத் துடன் வெட் டி எடுத்தனர். அப்போது வலது பக்க மேலறைச் சுவரை மட்டும்
வெட்டி எடுக்கவில்லை.
வெட்டி எடுக்கப்பட்ட இரு த ய ம் பேராசிரியர் பார்னுட்டின் அறைக்கு எடுத் துச் செல்லப்பட்டது. வாஷாங்ஸ்கியின் பழுதுற்ற இருதயத்தை பார்னட் மார் பிற்கு வெளியே எடுத்து வைத்துவிட்டு, அந்த இடத்திலே மாற்று இருதயத்தை வைத்தார். மாற்று இருதயம் பழைய இரு தயத்திலே  ெவட் டி அகற்றப்படாமல் இருந்த வலது மேலறைச் சுவருடன் இறு கத் தைக்கப்பட்டது. அடுத்ததாக வெட் டப்பட்ட நாடிகள் சேர்த்துத் தைக்கப்பட் டன. உடலின் பிரதான நாளங்கள் வெட் டப்படுவதில்லை. ஆ த லா ல் அவற்றைத் தைக்க வேண்டிய அவசியம் எழுவதில்லை.
இருதயத்தைத்  ைத த் து முடிந்தது. இறுக நெருக்கிய நாடிகள்-நாளங்களும் விடுவிக்கப்பட்டு மாற்று இருதயத்திற்கும் உடலுக்கும் தொடர்பு உண்டாகிறது. அடுத்ததாக, மாற்று இருதயம் துடிக்க ஆரம்பித்துத் தானுக இயங்க வேண்டும். இதற்கு என்ன செய்வது? மாற்று இருதயத் திற்கு மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்ட தும் அது துடிக்க ஆரம்பித்தது. உலகின் முதலாவது மாற்று இருதயம் செயல்பட ஆரம்பித்தது.
இருதய நுரையீரல் இயந்திரத்தை அகற்றினர் பேராசிரியர் பார்னுட் பிளந்த மார்பை மறுபடி மூடித் தைத்தார். அறு வைச் சிகிச்சை முடிவடைந்தது.

க: இந்திரகுமார்
துண்ணுயிர் எதிரிகளுடன் போர்
அடுத்த கட்டம், மாற்று இருதயத்தை அழிக்கமுயலும் நுண்ணுயிரெதிரிகளைக் கட் டுப்படுத்துவதாகும். இதற்குக் கோர்டிக் கோஸ் ரீருெய்ட்ஸ் மருந்துகளை உபயோகித் தார் பார்னுட். (முகப்புப்படம்: அறுவைச் சிகிச்சையின் பின்னர் வாஷான்ஸ்கியை பரிசோதிக்கிருர் பேராசிரியர் பார்னட்.)
முதலாவது மாற்று இருதய மனிதர் 18 நாட்கள் வரை இரவல் இருதயத்தோடு வாழ்ந்துவிட்டு, பின் தனது இரு நுரையீரல் களும் அழற்சியுற்று, அதாவது டபிள் நியூ மோனியா ஏற்பட்டு இறந்தார். நியூமோ கொக்கஸ் எனப்படும் கொடிய நோய்க் கிருமி நுரையீரல்களைப் பாதித்ததாலேயே மரணம் சம்பவித்தது. சாதாரணமான வேளைகளில் ஒரு மனிதனின் உடலில் இந் நோய்க் கிருமிகள் புகுந்தால் நுண்ணுயிரெ திரிகள் படையெடுத்து வந்து இவற்றை அழித்துவிடுகின்றன. ஆனல், நுண்ணுயிரெ திரிகளின் படையெடுப்பிலிருந்து இரவல் இருதயத்தைப் பாதுகாப்பதற்காக, நுண் ணியிரெதிரிகளைக் கட்டுப்படுத்தி வலுவிழக் கச் செய்தார் பேராசிரியர் பார்னட். இச் சமயத்தில் நோய்க் கிருமிகள் திடீர்த் தாக் குதல் செய்து வெற்றி பெற்றதனுலேயே இந்த இருதய மாற்றீட்டு மனிதர் இறந் தார். அவர் இறந்த பிறகு, 18 நாட்களாக அவரை இயக்கிய இரவல் இருதயத்தை பிரித்தெடுத்து, பேராசிரியர் பார்னட்டும் அவரது குழுவினரும் இலத்திரன் நுணுக் குக் காட்டி போன்ற நுண்ணிய கருவிகளைக் கொண்டு ஆராய்ந்தனர். இரவல் இருதயம் பூரண சுகத்துடன் விளங்கியதை அவர்கள் e35 6ð0 1-6ð fT • கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
இது ஒரு புதிய பி ர ச் சினை  ைய க் கொண்டு வந்தது. மாற்று இருதயத்தைப் பாதுகாப்பதற்காக, அதனை அழிக்க முற் படும் நுண்ணுயிரெதிரிகளை அழிக்கும் மருந் துகளைப் பாவிக்கவும் வேண்டும். ஆனல் அதே நேரத்தில் இம் மருந்துகள் நோய்க் கிருமிகளை அழிப்பதற்குத் தேவையான சிறிய அளவுக்கு நுண்ணுயிரெதிரிகளைவிட்டு வைக்கவும் வேண்டும். அதாவது, 'கூழ் குடிக்கவும் வேண்டும், மீசை நனையாமலும்

Page 125
புனர் ஜென்மம்
பார்த்துக் கொள்ள வேண்டும்' , தேவை யான அளவு மருந்தைக் கொஞ்சங் கூட கூடிக் குறையாமல் கணக்காகச் செலுத்த வேண்டும்.
இது ஆகக்கூடிய காரியந்தான என்று மலைத்தவர்களுக்கு விடையளிப்பது போல, முதலாவது இருதய மாற்றீடு செய்து சரி யாக ஒரு மாதம் கழித்து, பேராசிரியர் பார்னட் தமது இரண்டாவது இருதய மாற்றீட்டை வெற்றிகரமாக நிறைவேற்றி ஞர். 1968-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் திகதி கேப்டவுனைச் சேர்ந்த "வெள்ளை மணி தரான டாக்டர் ஃபிலிப் பிளேய் பேர்க் கின் உடலில் 'கறுப்பு மனிதரொருவரின்" இருதயம் துடிக்கத் தொடங்கியது. இவர் இரவல் இருதயத்தோடு 594 நாட்கள் உயிர் வாழ்ந்த பின், நுரையீரல் அழற்சி யும் சிறு நீரகத்தவறலும் ஏற்பட்டு உயிர் துறந்தார்.
இருதய மாற்றிடு யாருக்கு?
இருதய நோய்களுள்ள எல்லோருக் கும் இருதய மாற்றீடு செய்ய முடியாது. அசாதாரண அமைப்புக் கொண்ட இருத யங்களோடு உடன் பிறந்த குழந்தைகள், உயிர் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட் டால், இவர்கள் இருதய மாற்றீடு செய்வ தற்கு மிகவும்தகுதியுடையவர்களாகஇருப் பர். இதயத் தவறல் காரணமாகப் பல வீனமுற்ற இதயங்களை உடையவர்களுக் கும் இருதய மாற்றீடு செய்யலாம்.
இதயத் த  ைச க ளு க் கு இரத்தம் கொண்டு செல்லும் நாடிகள் நோயுற்றி ருந்தால் அவர்களுக்கு இருதய மாற்றீடு செய்து பலனில்லை. இவர்கள் போலவே, உடலிலுள்ள நாடிகளில் கொழுப்புப் படிவ தால் அவற்றின் துவாரம் குறுகிவிடுகின்ற நோய் உள்ளவர்களும் இருதய மாற்றீடு பெறுவதற்கு ஏற்றவர் ஆகார். எச் சூழ்
இருதய மாற்றீடுகள் தோல்வியில் மு லையா? இவைதான் இன்று உலகிலே கேட்கப் உங்கள் மனதிலும் எழலாம். இருதய மார் இதற்கு விடை தருகிருர், அவர் செய்த ஐந் ளான மனிதர்கள் மொத்தம் 1,191 நாட்கள் சராசரியாக 220 நாட்கள் வாழ்ந்துள்ளனர். வேண்டும் என்று டாக்டர் பேர்னட் தெரிந்ெ ருேர் கிடையாததால் பல நோயாளிகள் இற ரியாக 30 நாட்களே உயிர் வாழ முடிந்நது. நோயாளியை சுகதேகியாக 220 நாட்களுக் (600 %) முன்னேற்றமாகும். காலம் செல்லச் தய மாற்றீடு என்பது சாதாரண ஒரு அறு அற்ற ஒரு சிகிச்சை முறை ஆகும் நாள் தொன்

க. இந்திரகுமார் 107
நிலையிலும் நோயாளி இருதய மாற்றீடு செய்யாவிட்டால் இறப்பது நிச்சயம் என் பது உறுதியான பின்னர்தான் டாக்டர் கள் கடுமையான இந்த அறுவைச் சிகிச் சையை மேற்கொள்வர்,
இருதய தானம் செய்பவர்கள் பற்ருக் குறை எப்போதும் உண்டு. இறக்கும்போது நல்ல ஆரோக்கியமான இருதயங்களோடு இறப்பவர்கள் மிகச் சிலரே. இவர்களும் ஆஸ்பத்திரியில் உயிர் துறந்தாலொழிய இவர்களுடைய இருதயத்தைப் ப யன் ப டுத்த முடியாது.
இருதய தானம் செய்பவர் இறப்ப தற்கு முன்னரேயே டாக்டர்கள் அவரது இருதயத்தை அகற்றிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வீண் பயமே. ஒருவ ரது இருதயம் ஐந்து நிமிடங்களுக்கு அடிக் காமல் நின்ருல் மூளை திருத்த முடியாதபடி இறந்துவிடும். முளை இறந்து சிறிது நேரஞ் சென்ற பின்னரே (30 நிமிடங்கள்) இருத யம் இறக்கும்; எனவே ஒரு ம னி த ன் இறந்த பிறகு, அதாவது ஒரு மனிதனு டைய மூளை இறந்த பிறகு, இருதயத்தை அகற்றினல் போதுமானது.  ைவ த் தி ய ஆராய்ச்சியின்படி 5 நிமிடங்களுக்கு மூளை இரத்தம் பெரு விட்டால் அம் மனிதன் இறந்த வனகக் கருதப்படுகிருன். மூளை இறப்பதற்கு முன்னல் ஒரு டாச்டர் அவச ரப்பட்டு இருதயத்தை அகற்ற வேண்டிய தேவையில்லை.
உறுப்பு வங்கிகள்
இன்று இரத்த வங்கிகளில் இரத்தத் தைச் சேமித்து வைப்பது போல மனித உறுப்புகளைச் சேமிக்கும் வழிகளைக் கண்டு பிடித்து, உறுப்பு வங்கிகளை நிறுவுதல் இதற்கு வழியாகும்.
டிந்துள்ளனவா? இவை வெற்றி அடையவில் படும் கேள்விகள். இதே கேள்விகள் இப்போ நீட்டின் தந்தையான டாக்டர் பேர்னட் து இருதய மாற்றீடுகளின் பயனுக, இதற்கா சீவித்துள்ளனர். அதாவது ஒவ்வொருவரும் இது இப்படியிருக்க, இருதய மாற்றீடு செய்ய தடுத்தும், இருதயதானம் செய்வதற்கு ஏற் ந்தனர். இவர்கள் இறப்பதற்கு முன்பு சராச எனவே 30 நாட்கள் மட்டும் வாழமுடிந்த கு வாழவைத்தது ஒரு அறுநூறு சதவிகித செல்ல, மருத்துவ முறைகள் முன்னேறி இரு வைச் சிகிச்சையைப் போல் எவ்வித பயமும்
லவில் இல்லை.

Page 126
st і6
cave d (
You
. . . your assurance
PET"TAH PHAR
Consider your Smalle
Their care and att
courteous, executed of the expert ph
are assured of best is good e
PBA PHA
WHOLESALE - RETAL 8.
23, DAM, ST
PHONE: THREE ONE

CULL CLUUAM
canceun ’’’
that when you consult
RMACY LTD., they
st need their very own.
ention is prompt and with the precision armacists they are.
the best; only the -nough for you.
RMACY D.
DISPENSING CHEMISTS
COLOMBO-2.
TWO ONE THREE,

Page 127
ஒப்பந்தவியல்
LAW OF CONTRACTS
காதலியை 6)56i LTG
து காதல் யுகம் . ஆனல் 9. திருமணத்தில் முடிய ( இங்கு கூறுவது பெண் எல்லோருமே திருமணத்தை உள்ே கின்றனர்). ஆனல் காதலுக்காக தொகை வலுத்து வருகின்றது. எ6 சட்டத்தின் வலுவான கரத்திலிரு இவர்களுக்கு இது சம்பந்தப்பட் கட்டுரையின் நோக்கமாகும் (ச மிக வலுவான கரத்திலிருந்து தப் ஒரு விதமான சம்பந்தமும் இல்லை றேன்). "கழுத்தைக் கொடுத்த யாரோ ஒரு பெரும் அறிவாளி கூற எவ்வளவு உண்மையானது என்ட அறித்து கொள்வீர்கள்!
திருமணம் செய்வதாக ஒருவி ஞல், அதனுல் ஏற்படும் சட்ட ரீ கட்டுரையின் நோக்கமாகும். இத சட்ட நடவடிக்கை' எனலாம். நீ உயர் நோக்குடன் இயற்றப்பட்ட பணம் பறிக்கவும், பயமுறுத்தவும் பலர் இதனை ஆதரிப்பதில்லை. பே வாழ்க்கையில் மகிழ்வினையும் முத சமுதாயத்தில் இச் சட்டப் பிரிவி கொடுப்பதை விட , திருமணம் வேண்டா வெறுப்பு திருமணங்களு பிரிவு ரோம சட்டமுறையிலும், ே கையாளப்பட்டது என்பது மிகவு
அது எவ்விதத்திலும் உதவாது என்
நவீன சட்ட முறையில், த மானேரின் மணவாழ்க்கையின் ம
இயற்றப்பட்டிருக்கின்றது. இதஞ

ஜனகன் நீகாந்தா
காதலிலும் பலவகையுண்டு. காதல் வேண்டும் என எண்ணுவோர் சிலர் (நான் களைப் பற்றி அல்ல. ஏனெனில் பெண்கள் நோக்கமாகக் கொண்டே காதல் வலை வீசு 5 மட்டுமே காதல் என எண்ணுவோர் னவே இவ்வர்க்கத்தினைச் சார்ந்தவர்கள் நந்து தப்பிக் கொள்வது மிக அவசியம். ட சட்ட அறிவுரைகளைத் தருவதே இக் ம்பந்தப்பட்ட பெண்ணின் தகப்பனரின் புவது உங்கள் பாடு, அதற்கும் எனக்கும் ஸ் என இத்தால் அறிவித்துக் கொள்கின் ாலும் எழுத்தைக் கொடுக்காதே’ என ரிச்சென்ருர் . இக் கூற்று சட்ட பூர்வமாக 1தை இக் கட்டுரை மூலமாக நீங்களே
பர் வாக்குக் கொடுத்த பின் அதனை மீறி தியான பலாபலன்களை ஆராய்வதே இக் னைத் 'திருமண வாக்கு முறிவிற்கு எதிர் தி நிலை நாட்டப்பட வேண்டும் என்னும் - இச் சட்டம், இன்று பழிவாங்கவும், பாவிக்கப்படுவதனுல் சட்ட அறிஞர்கள் Dலும் தனி மனிதர் விருப்பமும், மண ல் நோக்கமாகக் கொள்ளும் இன்றைய ல் கோரப்படும் நட்டத் தொகையினைக் செய்வதே ஒரே வழி என்று ஏற்படும் க்கு இவை வித்திடுகின்றன.? இச்சட்டப் ராம - டச்சு சட்ட முறையிலும் எவ்வாறு ம் உருசிகரமானது; எனினும் உங்களுக்கு
பதால் அதனைத் தவிர்ப்பதே மேல்.
னி நபரின் விருப்பத்தையும், திருமண கிழ்ச்சியையும் உத்தேசித்தே சட்டம் ேைலயே ஒரு குறிப்பிட்ட நபரை மட்

Page 128
110 காதலியைக் கைவிட்டால்.
டுமே திருமணம் செய்யவேண்டும்? என நீதி மன்றங்கள் கட்டளையிடுவதை நவீன சட்ட முறை தவிர்த்துள்ளது". எனவே இன்றைய சட்ட முறையில் ஒரு திருமணவாக்கு சட்ட நிவாரணம் நட்டஈடு ஒன்றேயாம். இதைக் கூட சட்ட முறையினின்றும் அகற்ற வேண் டும் என்பதே பல சட்டமேதைகளின் கருத் தாகும்; சில நாடுகள் இம் முறையினச் சட் டத்தினின்றும் நீக்கியுள்ளன . உதாரண ம க அமெரிக்காவிலுள்ள பல மாகாணங் கள்; பென்சில்வேனியா, மிச்சிகன், கலி போர்னியா , நியுயோர்க் போன்றவை.
எனவே காதல் மன்னர்களைச் சிலர் ஆத ரித்தாலும் கைவிடப்பட்ட காதலியை ஆத ரிப்போர் தொகை பலவாகவும் இருப்ப தால் பெரும்பான்ம்ையான நாடுகள் இம் முறையினை இன்றும் சட்டமாகக் கொண் டுள்ளன. முக்கியமாக இலங்கையிலும் நட்ட ஈடு வழங்கப்படுகின்றது. காதலில் பணத்தையும், மனத்தையும் பறிகொடுத்த பெண்ணுக்கு, குறைந்தது நட்ட ஈடாவது கொடுக்க வேண்டும் என்பதே இவர்களின் வாதம் (காதல் என்பது ஒரு சூதாட்டம் என எதிர்க்கட்சியினர் முணுமுணுப்பது இவர்கள் காதில் விழுவதில்லைப் போலும். இவ்விதமான நட்ட ஈடு கோரப்படும் போது மூன்று பண்புக் கூற்றுக்கள் கவனிக் கப்பட வேண்டும். அவை (1) நட்ட மதிப்பீடு (2) நட்ட ஈட்டு நடவடிக்கைக்கு
எதிர்ப் பாதுகாப்புக்கள் (3) நிரூபித்தல் (1) நட்ட மதிப்பீடு:
ஒரு திருமண வாக்கினை முறிப்பதானல் ஏமாற்றப்பட்டவருக்கு பணக் கஷ்டமும், மனக் கஷ்டமும் ஏற்படக் கூடும். எனவே இதற்கான சட்ட நடவடிக்கையினை இரு கூருகப் பிரிக்கலாம். நீதி மன்றங்களும் நட்ட மதிப்பீட்டின் போது இப்பிரிவினையை அடிப்படையாகக் கொண்டே செயற்படு கின்றன; அவை
(அ) ஒப்பந்த முறிவினல் எழும் நட்
டங்கள் 5
1. The Action for Breach of Promise of Marriage.
2. W. Friedman, “Law in a changing Society''
3. Specific performance of the contract to
marry. Section. 20 G. M. ordinance.

ஜனகன்
(ஆ) தீங்கியல் ரீதியாக ஏற்படும் நட்
டங்கள் 6
(அ) ஒப்பந்த முறிவு நட்டங்கள்:
இது திருமண வாக்கு முறிவினல் ஏற் படும் பண நஷ்டத்தினை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய சட்ட முறையில் திருமண ஒப்பந்தம் ஒரு சாதாரண வியா பார ஒப்பந்தத்தைத் தழுவிய ஒரு பிரிவா கவே கருதப்படுகின்றது. இதனை ரசல் பிரபு திருமணம் என்பது, கருத்தொருமித்த இருவரது ஒருமித்த வாழ்வின் கோட்பாடு என்ற காலத்திலிருந்து நழுவி, தற்காலிக மாக, தாம் விரும்பிய நாட்கள் மட்டுமே குடியிருக்கும் ஒரு வாடகை வீட்டினைப் டோலாகி விட்டது' எனக் குறிப்பிட்டுள் ளார்.7 இலங்கையின் பொதுச் சட்டமாகிய ரோம - டச்சு சட்டத்தில் இவ் ஒப்பந்த முறிவு சட்டம் குறித்த சட்டப் பிரிவு அவ் வளவாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை . திருமணம் செய்வதாக வாக்குக் கொடுத்த வர்களைக் கட்டாயமாக அப் பெண்ணுக்கே திருமணம் செய்விக்கும் அதிகாரத்தினே ரோம - டச்சு சட்டம், நீதி மன்றங்களுக்குக் கொடுத்திருந்தது. நீங்கள் பயப்படத் தேவையில்லை. ஏனெனில் இம் முறை அநா கரீகமானதுடன் மகிழ்வான மணவாழ் விற்கு நிச்சயமாக இடம் கொடுக்காது என் பதாலும், “ ‘திருமணம் சொர்க்கத்தில் நிச் சயமாகின்றன, நீதிமன்றத்தில் அல்ல’’ என்பதாலோ என்னவோ இன்றைய சட்ட முறை இவ்வதிகாரத்தினை நீக்கியுள்ளது. எனவே, எமது சட்டம் ஆங்கிலச் சட்ட முறையினைத் தழுவியே அமைக்கப்பட்டுள் ளது. நட்ட ஈட்டினை மதிப்பிடும் போது நீதிமன்றம் ஏமாற்றப்பட்டவருக்கு ஏற் பட்ட பாரம்பரிய சொத்திழப்பினையும், பண இழப்பினையும் ஈடு செய்ய விழைகின் fisl.
ஒப்பந்த முறிவு நட்டங்களை மதிப்பி டும் போது, பணநட்டமும், இதல்ை எதிர் காலத்தில் ஏற்படக் கூடிய நட்டங்களும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. ஏற்க னவே ஏற்பட்ட நட்டங்களை மதிப்பிடும் போது, ஏமாற்றப்பட்டவர் திருமண ஏற் பாடுகளுக்காகச் செய்த செலவுகளே அவர் மீட்பதற்கான முறையில் தீர்ப்பு அமைந்தி ருக்கும். உதாரணமா சக் கூறைச் சேலைக்கு
4. Ceylon - General Marriage Ordinance -
Section. 20. (3).
5 ex contractu.
6. ex delecto.
7. Lord Russel in Fender V St. John Mildmay
1938 A. C.

Page 129
காதலியைக் கைவிட்டால்.
செலவிட்ட பணம். எனினும் தென் - ஆபி ரிக்காவில் (ரோம - டச்சு சட்டம் உலகத்தி லேயே இலங்கையிலும் தென்-ஆபிரிக்காவி லும் மட்டுமே நிலவுகின்றது, எனவே அந் நாட்டு நீதிமன்ற தீர்ப்புக்கள் நமது நீதி முறையுடன் சம்பந்தப்பட்டவை. நீதியர சர் ஹட்டன் 'கூறைச் சேலை பெண்ணிடமே இருக்கின்றது, எனவே ஒரு விதமான நட் டமும் ஏற்படாத வகையில் அவருக்கு அதற்கான நட்ட ஈடு பெற உரிமையில்லை' எனத் தீர்ப்பளித்திருக்கின் ருர் .9 சட்ட மேதை வன்டன் ஹீவரும் இத்தீர்ப்பினை ஆதரித்துள்ளார். இத்தீர்ப்பு கடும் கண்ட னத்துக்குள்ளாக்கியுள்ளது. எனினும், திரு மண ஒப்பந்தம் சாதாரண வியாபார ஒப் பந்தத்துடன் ஒப்பிடப்படுவதினல் பணநட் டங்களை மதிப்பிடும் போது, அவை சாதா ரண ஒப்பந்த முறிவுகளிஞல் ஏற்படும் நட் டங்களை மதிப்பிடுவது போன்றே மதிப் பிடப்பட வேண்டும். கூறைச் சேலை வாங்கிய வருக்கு முழு நட்டஈடு கொடுக்கப்படும் பட்சத்தில், நட்டஈடு கொடுப்பவரிடம் கூறைச் சேலை ஒப்படைக்கப்பட வேண்டும். அல்லது ஏற்கனவே வாங்கப்பட்டதனுல் ஏற்பட்ட விலை மதிப்புக் குறைவினை வாங் கிய விலையினின்றும் கழித்து வித்தியாசத் தினை மட்டுமே அவர் நட்டஈடாகக் கொடுக்க வேண்டும் என்பது எனது தாழ் மையான கருத்தாகும். திருமணத்தை எதிர் நோக்கிய பெண், தான் ஏற்கனவே செய் யும் உத்தியோகத்தினை ராஜினமா செய்தி ருந்தால், அதஞல் அவள் அடைந்த நட் டத்தினை, ஏமாற்றியவர் கொடுக்க வேண் டும்.10 அத்துடன் திருமணத்திற்காக ஏற் பட்ட பிரயாணச் செலவு, களியாட்டச் செலவு, விருந்துச் செலவு ஆகியனவற்றினை யும் ஏமாற்றியவர் கொடுக்க வேண்டி வரும்.11 அத்துடன் விவாகப் பொருத்தத் தின் போது தான் கொடுத்த அன்பளிப் பினையும், அல்லது அதன் பெறுமதியினையும் பெண் மீட்கலாம். திருமண முறிவினல் ஏற் படக் கூடிய எதிர் கால பண நட்டத்தினை மதிப்பிடும் போது அவரது சமுதாய நிலை
8. Kuruppu V i Iranganie Gunasekara - 7. 4
N. L. R. 505.
9. Radloff V Ralph — 1917. E. D. L. 168.

ஜனகன் 111
யினையும், திருமணம் செய்திருந்தால் அதன் மூலம் அவர் அடைந்திருக்கக் கூடிய உயர் அந்தஸ்தினையும், திருமண முறிவி ஞல் அவரது எதிர்காலம் எவ்வளவு பாதிக் கப்பட்டுள்ளது என்பதையும், அவர் திரு மணம் செய்து கொள்ளும் சந்தர்ப்பம் எவ் வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்ப தையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளும். ஒரு திருமணம் குழம்பினல், அதனுல் அப் பாவிப் பெண்ணின் எதிர்காலத்தினையே குலேக்கும் நமது சமுதாயத்தில், நட்ட ஈட் டின் தொகை அதிகமாகக் கொடுக்கப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.
(ஆ) தீங்கியல் நட்டங்கள்:
சாதாரணமாக ஒரு திருமண வாக்கு முறிவினுல் ஏமாற்றப் பட்டவரின் மனம் கடும் வேதனைக்குள்ளாகும். அவள் படும் வேதனையினை நீங்கள் அநேகமாக எல்லாத் தமிழ் படங்களிலும் பார்த் திருப்பீர்கள். அல்லது வானெலியில் காலை முதல் மாலை வரை ஒலிபரப்பாகும் சோக கீதங்களில் கேட்டிருப்பீர்கள் (இது ஒரு சட்டம் சார்ந்த கட்டுரையாகையால் அதனைப்பற்றி வர் னிக்காமலோ, விமர்சிக்காமலோ, விடுவது தான் நல்லது. இதனல் அப்பெண்ணின் சுய கெளரவமே பாதிக்கப்படுகின்றது என் பதை நீங்கள் ஒத் து க் கொள்வீர்கள். ரோம-டச்சு சட்டம் நிலவும் இலங்கையி லும் தென்-ஆபிரிக்காவிலும் இந்நிலையினல் பெண்ணுக்குக் கெளரவ பங்கம் ஏற்பட ஏதுவாகின்றது என ஏற்றுக் கொள்ளப்பட் டிருக்கின்றன. மேலும் திருமண நாள் அன்று மணமகன் வராமல் விட்டால், விருந்தினர் மத்தியில் ஏற்பட்ட அவமானத் திற்காக ஏமாற்றப்பட்டவருக்கு மேலதிக பணம் நட்ட ஈடாகச் செலுத்த வேண்டிய
நிலை ஏற்படும்.
ஒரு திருமண வாக்கு முறிவு மேலோட் டமாக நோக்கும் போதே தீங்கியல் குற்ற
மாக அமையும் என்ற அபிப்பிராயம் நிலவி வருகின்றது. இக் கருத்து த வருனது என தென் - ஆபிரிக்காவில் வாழ்ந்த சட்ட
10. Kuruppu V Tranganie Gunase kera--- 47, New
Law Reports. 505.
11. See Eversley - “Domestic Relations' 6th
Edition.

Page 130
112 காதலியைக் கைவிட்டால். −
மேதையும் நீதியரசருமான வன் டன் ஹீவர் கூறினர், 12 இந்த அபிப்பிராயம் ஆங் கிலச் சட்டத்தின் விளைவு என்பதையும், ரோம-டச்சு சட்டத்தில் இதற்கு இட மில்லை என்பதையும் இவர் சுட்டிக் காட்டி ஞர். சாதாரணமாக ஒருவர் தனது திரு மண வாக்கினை மீறியது சட்ட பூர்வமாக தவறு எனக் கண்டால் மட்டுமே நட்டஈடு வழங்கப்பட வேண்டும், அல்லாத ஒரு நிலை யில் பெண்ணின் மனம் வேதனைப்பட்டது என்பது வழக்கிற்கு சம்பந்தம் அற்றது என்பது இவரது வாதம். மேலும் திருமண வாக்கு முறிவினல் உண்மையிலேயே பெண் னின் கெளரவம் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அது தீங்கியற் குற்றமாகும் எனக் கூறினர், இக் கருத்து பல நீதி மன்றங்களி னல் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இவை சரியானவை என்பது எனது தாழ்
மையான அபிப்பிராயமாகும். ஆனல் இவர் தனது வாதத்துக்குக் காட்டிய கார ணங்களில் ஒன்ரு ன 'திருமண வாக்கு
முறிந்து விட்டது என்பதால் மட்டும் ஒரு பெண்ணின் கெளரவமே குலைந்துவிடும் என்று எண்ணிய காலம் பழமையுடன் மறைந்து விட்டது, இன்றைய நவநாகரீக யுகத்தில் இவ்வித எண்ணங்களுக்கு இட மில்லை' என்ற கூற்று நமது சமுதாயத்தில் நிலவிவரும் குறுகிய மனப்பான்மையுடன் ஒப்பிடும் போது தவருகின்றது என்பது புலனுகின்றது.
21 நட்ட ஈட்டு நடவடிக்கைக்கு எதிர்ப் பாதுகாப்புக்கள்:13
பல சந்தர்ப்பங்களில், ஏற்கனவே குறிப்பிட்டது போன்று 'நட்ட ஈடு கொடுப்பதா? அல்லது அவளைக் கல்யாணம் பண்ணித் தொலைப்பதா?’ என்ற பிரச்சினை எழுந்து பணத்தை இழப்பதிலும் பார்க்கத் திருமணம் செய்வதே மேல் என்ற பரிதாப நிலைக்கு வந்தவர்கள் பலர். எனினும் இன்
12. Mr. Justice Van den Heever - “Breach of
Promise and Seduction'.
13. The defence to the action for damages.
13a. Lack of capacity to enter in to the contract
to marry.
13b. Where the promise was conditional - the
non-satisfation of that condition.

ஜனகன்
றைய நாட்களில் 'காதல் பன்னர்கள்'" மலிந்து 'பேதைப் பெண்கள்' பலரை தி ரு ம ண ம் செய்வதாக வா க் கு க் கொடுத்து, பின் நடுத் தெருவில் விட்டுப் போவதைப் பத்திரிகைகளில்; முக்கியமாக இச்செய்திகளை வெளியிடவே பிரசுரமாகும் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். இச்சம் பவங்களைப்பற்றிப் படிப்பதற்கு உங்களுக்கு ஆவலாக இருந்தாலும், நீதி மன்றங்கள் இதனை ஆதரிப்பதில்லை. எனவே ஒருவர் தான் எதற்காக ஏற்கனவே கொடுத்த திரு மண வாக்கினை மீறினர் என்பதற்காகக் காட்டும் காரணங்கள், மிகக் கவனமாக ஆராயப்பட்ட பின்னரே ஏற்றுக் கொள் ளப்படுகின்றன. மூன்று தலைப்புகளில் இத் திருமண வாக்கு முறிவின் பாதுகாப்பு கார ணங்களை ஆராயலாம்.
(அ) திருமண வாக்கு ஒப்பந்தத்தில் பங்கு கொள்ளும் தகுதியின் மை 13A
(ஆ) திருமண வாக்கு சில விதிகளுக்குக் கட்டுப்பட்டதாகக் கொடுக்கப்பட் டிருப்பின் அவ்விதிகளை அவதானி ust 6) p. 3 (இ) நேர்மையான காரணங்கள் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சியினல் வாக்கி னைக் கா ப் பா ற் ற முடியாத நிலைமை , 13 (அ) தகுதி இன்மை:
(1) இள வயதினர் - 21 வயதுக்குட் பட்டவர்கள்.
பொதுவாக இவ்வயதினரால் பெற் ருேரின் அனுமதியின்றி செய்யப்படும் ஒப் பந்தங்களை அவர்களுக்கு எதிராக அமு லாக்க முடியாது. 1* பதினறு வயதுக்குட் பட்ட ஆண் பிள்ளைகளும், பன்னிரெண்டு வயதிற்குட்டட்ட பெண் பிள்ளைகளும் பெற் ருே?ரது அனுமதியுடன் கூட திருமணம் செய்ய இயலாதாகையினல், அ வர் க ளி ன் வா க் கு பெ ற் ருே ர து அனுமதியுடன் செய்யப்பட்டிருப்பினும்
13c. The presence of a “Justa cansa” for the breach or the presence of supervening circumstances as would frustrate the contract to
marry.
14. Professor T. Nadarajah - “The contract of minors in the modern Roman-Dutch Law' U. C. R. - vol - XI - p. 65.

Page 131
காதலியைக் கைவிட்டால்.
அவை செல்லுபடியாகாது. 19 எனினும் இங்கு குறிப்பிட்ட வயதிற்கும் இருபத் தொரு வயதிற்கும் உட்பட்ட இளவயதி னர் பெற்றேரின் அனுமதியுடன் திருமண வாக்குக் கொடுக்கலாம். 19 ஆஞல் ஓர் இள வயதினர் கள்ளத்தனமாக, ஏமாற்றும் நோக்குடன் தனது வயதினை அதிகரித்து ஒரு திருமண வாக்கு உறுதியினைக் கொடுத் தால், சட்டம் இளவயதினருக்கு ஒப்பந்த சட்டத்தில் கொடுக்கும் பாதுகாப்பினை இச் சந்தர்ப்பத்திலும் கொடுக்குமா? என்ற கடினமான பிரச்சினை எழுகின்றது. இவ்விதமான ஒரு கற்பனை நிலையான "கள் ளத்தனம் குறிப்பிட்ட வயதினைக் கொடுக் கும் 17 என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டு சாதாரண வியாபார ஒப்பந்தங் களின் நிலையினைப் போன்று அவரை அவ ரது திருமண வாக்கு உறுதிக்குக் கட்டுப் பட்டவர் என நீதி மன்றங்கள் கொள்கின் றன. 18 இது எவ்வாரு க இருப்பினும், தீங்கியல் சட்டத்தில் த வருண வயதினைக் கூறித் திருமண வாக்குக் கொடுத்தவர் தனது இளவயதினை பாதுகாப்பாக உப யோகித்துத் தப்பிக் கொள்ள முடியாது. ஏமாற்றப்பட்டவள் அடைந்த மனவேத னைக்கு அவர் நட்ட ஈடு கொடுத்தேயாக வேண்டும். 19
தவருன வயதினைக் கூருவிட்டாலும், திருமணவாக்கு உறுதியினைக் கொடுக்கும் போது இளவயதினருக்கு அதனை நிறை வேற்றும் எண்ணம் இருக்கவில்லை எனவும் இவ்வாக்கினை நம்பிய பெண் துன்பப்பட நேர்ந்தது என்பதனையும் நி ரூ பி த் தா ல், வாக்குக் கொடுத்த இளவயதினர் 'வஞ்ச கமாக ஏமாற்றிய குற்றத்துக்கு ஆளாகக் கூடும் என சட்ட வல்லுனர் சொர்ண ராஜா குறிப்பிட்டுள்ளார்.20
15. See Section - 15 of the General marriage ordi
aCe
16. Chandrasena V Karunawathie—57. N. L. R. 298; Vol 23. 1. 3.; Hendrick Singho V Harrmanis Appu – 2. S. C. C. - 136.
17. The fiction of law that 'fraud supplies the
age'.
18. Wijasuri ya & Ibrahumsa - 13 N. L. R. - 195
19. Mc Kerron, "Delict” 6th Edition p. 79–80;
Wicrennanayake "Delict' - p. 110.

ஜனகன் 113
(2) ஏற்கனவே திருமணமானவர்:
ஆங்கிலச் சட்டத்தில், ஏ ற் கனவே திருமணமானர் ஒரு பெண்ணிற்கு திருமண வாக்கு உறுதி கொடுப்பது சட்டத்துக்குப் புற ம் ப f ன ஓர் ஒப்பந்தமாவதுடன், 'ஒழுக்க நடத்தைக்கு மாரு ன ஒப்பந்தமா கவும்' கருதப்படுகின்றது. இதன் கார ணம், ஏற்கனவே திருமணமானவர் இவ்வி தமானதோர் ஒப்பந்தத்தினைச் செய்தால் அது ஓர் அபலைப் பெண்ணினை ஏமாற்றும் ஒரு காதற் கருவியாக பாவிக்கப்படுமே யன்றி வேறு எவ்வித தூய நோக்கினைக் கொண்டதாகவும் இருக்காது என்பதேயா கும். ஏற்கனவே திருமணமானவர் (முஸ் லீம்கள் தவிர்த்த) தனது திருமண வாக் கினைச் சட்ட பூர்வமாக நிறைவேற்ற முடி யாது என் ப ைத அவதானிக்கவும். இக் கருத்து சார்ந்த தீர்ப்புக்கள்; இலங்கையி லும்? தென்-ஆபிரிக்காவிலும்22 தெரிவிக் கப்டட்டிருக்கின்றன. ஒர் ஆக்கில வழக் கில் 23 அதனை ஆராய்ந்த நீதி மன்றம் மேலும் ஒருபடி அதிகமாகப் போய், இவ் விதமான ஒப்பந்தம் கணவன் தன் மனை வியைக் கொலை செய்யத் துண்டும் என்ற அர்த்த மற்ற காரணம் காட்டியுள்ளது.
எனினும் சில ஆங்கி ல வழக்குகள், ஏமாற்றியவர் ஏற்கனவே திருமணமான வர் என்பதைப் பெண் தான் அறிந்திருக்க வில்லை என நிரூபித்தால், சகல ஒப்பந்தங் களிலும் இருக்க வேண்டிய அடிப்படைத் தன்மையான ‘ஒப்பந்தம் செய்யும் தகுதி” இன்றித் திருமணம் செய்வதாக வாக்குக் கொடுத்தார் என்பதால் நட்ட ஈடு பெற அவளுக்கு உரிமையுண்டு என தீர்ப்பளித்
20. M. Sornarajah - “The action for breach of promise of marriage' C. J. H. S. S vol 9p 177.
21. Chandrasena V Karunawathie-57 N. L. R.
- 298.
22. Staples V Marquard - 1919 — C. P. D. 181;
Friedman V Harris - 1928 C. P. D.
23. Atkin L. J. in Fender V St. John Mildmay
1938 A. C.

Page 132
114 காதலிuை/க் கைவிட்டால்.
துள்ளன.24 பேராசிரியர் ஹலோ 25 தென்ஆபிரிக்க சட்டத்திலும் இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு நட்ட ஈடு கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள் ளார். எனினும் இக் கருத்தும் இதனைச் சார்ந்த ஆங்கில நீதிமன்ற தீர்ப்புகளும் தவருனவை எ ன் ட து எ ன து தாழ் மையான கருத்தாகும். ஏனெனில் ஏற்க னவே திருமணமானவர் செய்யும் திருமண வாக்கு உறுதி, சட்ட வலுவற்றதுடன், சட்டத்திற்கும் புறம்பானவை என்பதை ஆங்கில நீதி மன்றங்களே ஏற்றுக் கொண் டுள்ளன. அப்படியிருக்க " "ஒப்பந்தம் செய் யும் தகுதி' இன்றி ஒப்பந்தம் செய்தார் என்ற கதைக்கே இடமில்லை. ஏனெனில் சட் டத்தின் கண் களி ல் அவை ஒப்பந்தம் ஆகாது. எ னவே ஒப்பந்தமாகாத ஒரு வாக்கின் மீது ஒப் பந் த ச் சட்டத்தினை அடிப்படையாகக் கொ ண் டு வழக்குத் தொடர முடியாது என்பதே என் வாதம். ஆனல் ஏமாற்றப்பட்ட வாதிக்கு தீங்கியல் சட்டத்தில் நிவாரணமுண்டு. இந்நிலையில் வாக்குக் கொடுத்தவர் 'வ ஞ் ச க மாக ஏமாற்றிய குற்றத்துக்கு ஆளாவார். எனி னும் வாக்குக் கொடுத்தவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை ஏமாற்றப்பட் டதாகக் கூறும் பெண் உணர்ந்திருந்தால், இவ்விதக் குற்றச் சாட்டை அவர் மீது சுமத்த முடியாது என்பதும் என் தாழ்மை யான கருத்தாகும். மேலும் அங்கவீனம் காரணமாக திருமண வாழ்வில் ஈடுபட முடியாதவர் அதனை அறிந்திருந்தும் திரு மண வாக்குக் கொடுப்பது, அப் பெண் ணுக்கு அது தெரியாமல் இருந்திருந்தால், தவருனது என்னும் கருத்து வரவேற்கப் பட வேண்டியது.
(ஆ) விதிகளுக்குக் கட்டுப்பட்ட
வாக்குறுதி:
எந்த ஒரு ஒப்பந்தத்திலும் இருக்கக் கூடியது போன்று, திருமண வாக்குறுதி சில விதிகளுக்கு உட்படக் கொடுக்கப்பட் டிருப்பின், இவ்விதிகளை அவதானியாமை; அல்லது அவதானிக்க முடியாத ஒரு நிலை
24. Denning L.J. in Shaw V Shaw - 1954.2a. B;
Viljoen V Viljoen - 1944 C. P. D.

ஜனகன்
ஏற்படின் சட்ட பூர் வமா க வாக்குக் கொடுத்தவர் இவ் ஒப்பந்தத்தினை மீற லாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட சீத னம் தந்தால் மட்டுமே திருமணம் என்ற விதிக்கு உட்பட்டு வாக்கு கொடுக்கப்பட் டிருப்பின், சீதனம் தர முடியாது எனக் கூறப்படும் பட்சத்தில் அவ்வொப்பந்தம் செல்லுபடியா காது. த ன க்கு வேலை கிடைத்த பின்னரே திருமணம் என்பது இன்னுமோர் உதாரணம், ஆனல் இவ்வித விதிக்குட்பட்ட வாக்கினைக் கொ டு த் து விட்டு இன்று பலர் செய்வது போல் வேலை தேடாது காலத்தினைக் களித்தால், பெண், தான் ஏமாற்றப்பட்டதாகக் கூறி நட்ட ஈடு கோர முடியும். மேலும் சாதிக்க முடி யாத விதிகளைக் குறிப்பிட்டால், அவற்றை வாக்குக் கொடுத்தவர் மனப்பூர்வமான நம்பிக்கையுடன் விதிக்கவில்லை என நீதி மன்றங்கள் கொள்ளும். உதாரணமாக பெண், உலக அழகுராணிப் போட்டியில் முதற் பரிசு பெற்றல் மட்டுமே திருமணம் என்பது போன்றவை. அத்துடன் வாக்கு கொடுத்துவிட்டு நா ட் களை வேண்டு மென்ருே தட்டிக் கழித்து நேர்மையற்ற முறையில் திருமணத்தைப் பின் போட் டால், வா க் கு க் கொடுத்தவர் ஒப்பந் தத்தை மீறினர் என நீதி மன்றம் கருதும். (இ) நேர்மையான காரணங்கள்:
இவை இரு தரப்பின. (1) எந்த ஓர் ஒப்பந்தத்தினையும் செல்லு படியற்றதாக்கும் நேர்மையான காரணங் கள்: உதாரணமாக திருமண வாக்கு உறுதி பய முறுத் த லி ன் பெயரில், அல்லது ஏமாற்று அல்லது தவருன அபிப்பிராயங் களிஞல் கொடுக்கப்பட்டிருப்பின் வாக்குக் கொடுத்தவருக்கெதிராக நட்ட ஈடு கோர முடியாது. ஆணுல் நம்மவர் குறிப்பிடும் *மருந்து போட்டு' மண ம க னை வசியப் படுத்தி வாக்குக் கொடுக்கச் செய்தார்கள் என்பதை நீதி மன்றங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டா. எனினும் பெண் , தனது சாதி, சமயம் போன்றவற்றை வேண்டுமென்றே மறைத்துத் தவருன அபிப்பிராயத்தினை ஏற்படுத்தியிருப்பின் இப் பாதுகாப்பு,
25. Professor Hahlo - ''Law of Husband and
Wife' 2nd Ed. 50

Page 133
காதலியைக் கைவிட்டால்.
வாக்கு கொடுத்தவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும். ஏனெனில் நம் சமுதாயத் தில் இவ் வம்சங்கள் திருமண வாழ்வில் மிக முக்கியத்தினை பெற்றுள்ளன. ஆனல் பெண்ணின் குல, கோத்திரத்தினை அறிய சந்தர்ப்பம் இருந்தும் அதனை பயன் படுத் தாவிடின் பிரதிவாதிக்கு இப்பாதுகாப்பு அளிக்கப்பட மாட்டாது.
(2) எதிர்பாராத நிகழ்ச்சிகள்: வா க்கு க் கொடுத்தவர் ம ன த ரா ர எதிர்நோக்கி யிருக்க முடியாத நிலையேற்படின் அவருக்கு எதிராக நட்ட ஈடு கோர முடியாது. உதா ரணமாக, திருமண வாழ்வில் ஈடுபட முடி யாத அங்கவீனம் கொலைக் குற்றத்திற் கான ஆயுள் சிறைத் த ன் ட னை போன் றவை. எனினும் ஒரு விபத்திற்குள்ளாகி பெண்ணிற்கு அங்கவீனம் ஏற்பட்டிருப்பின் வாக்குக் கொடுத்தவர் இப்பாதுகாப்பினை நாட முடியாது என்பது எனது தாழ்மை யான கருத்தாகும். இது பொது சனக் கொள்கைக்கு புறம்பானது என்பதுவே அதன் முக்கிய காரணம். அழகாக பெண் இருக்கும் போது வாக்கு கொடுத்தப் பின் அவ்வாக்கினை அவள் அலங்கோல நிலையினை அடைந்து விட்டாள் என நிராகரித்தால் குறைந்தது மனிதாபிமானம் அற்ற அச் செயலுக்கு நட்ட ஈ டா வது கொடுக்க வேண்டும் என்பதே என் வாதம் ?
மேலும் பெண்ணின் தவரு  ைநடத்தை, வேறு ஆடவனுடம் தொடர்பு; அல்லது பெண் ஏற்கனவே விவாகமானவள் போன் றவை, வாக்குக் கொடுத்த ஆடவனுக்கு இப்பாதுகாப்பினைக் கொடுக்கும். ஆனல் வாக்குச் கொடுத்த ஆடவன் குடிகாரன், அல்லது கெட்ட நடத்தை உள்ளவன் என் பதைப் பெண் அறிந்திருப்பின்; அவன் திரு மணம் செய்வதாகக் கூறினலும் அதனை நிராகரித்து, தான் ஏமாற்றப்பட்டதாக நட்ட ஈடு கோர முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது. இவ் விதமான ஒரு நிலையில் பெண் தான் அவ்வாடவணை திருமணம் செய்ய முடியாது எனக் கூறலாமேயன்றி அத்துடன் நட்ட ஈடும் கோர முடியாது என்பது என் தாழ்மையான கருத்தாகும்.
ஏனெனில் ஒர் ஆடவன் ஒரு பெண்ணிற்குத்

ஜனகன் 115
தான் அவளைத் திருமணம் செய்வதாக வாக்கு கொடுப்பினும் அவளும் அதற்கு இணங்கினலேயே அது 'ஒப்பந்தமாகும்'. அதாவது இருதரப்பினரும் அதில் பங்கு கொள்ள வேண்டும் . ஒருவர் பிரேரிக்கவும் மற்றவர் அதனை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். இவ்விதமான நிலையில் எழுந்த ஒர் ஒப்பந்தத்தினை நிராகரிக்க வேண்டு மெனில் அதற்குத் தகுத்த காரணங்கள் கா ட் ட ப் பட வேண்டும். வ ர க் கு க் கொடுத்த ஆடவன் வேறு மதத்தவர், அல் லது வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதும் அவரிடம சூதாட்டம், குடி போன்ற பழக் கங்கள் இருப்பது தனக்குத் தெரியாது என் பதையும் பெண் நிரூபிப்பதன் மூலம் அவ் ஒப் பந்தத்தினை நிராகரிக்கலாம் என்பதில் ஐய மில்லை. ஆனல் அத்துடன் நட்ட ஈடும் பெற முடியுமா என்பது மிகவும் கடினமான ஒரு பிரச்சினையாகும். '"தூய நடத்தை’, ஒப்பந்தம் செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகளில் ஒன்ரு என்ற விஞவிற்கு விடை காண்பதன் மூலமே இப்பிரச்சினை தீர்க்கப் படலாம். தூய்மையான, காந்தீக நடத்தை உள்ளவவர்கள் மட்டுமே திருமணஒப்பந்தம் செய்யலாம் எனும் நிலை ஏற்படின், பெரும் பான்மையான பெண்கள் தமது வாழ் நாட் களைக் கன்னிகளாகவே கழிக்க வேண்டி வரும்!
(3) நிரூபித்தல்
சம்பந்தப்பட்டவர்கள் இப்பகுதியி னைத் தெளிவ1 கப் புரிந்து கொள்வதால் பின்னர் நீதி மன்றத்தில் நின்று முழிப்ப தைத் தவிர்க்கலாம்.
ஏற்கனவே குறிப் பி ட ப் பட் ட து போன்று இத்திருமண வாக்கு முறிவு சட்ட நடவடிக்கைகளை நவீன சட்ட முறை அவ் வளவாக ஆதரிப்பதில்லை. எனவே இவ்வித திருமண வாக்குகளை நிரூபிக்கும் பொறுப்பு வாதியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதுடன் அவை கவனமாக ஆராயப்படுகின்றன. அமெரிக்காவில் வாழ விரும்புவோருக்கு இன்னுமோர் உற்சாகமான செய்தி! அங்கு இச் சட்ட நடவடிக்கை தவிர்க்கப்பட்டி ருப்பதுடன் இவ்வித நடவடிக்கையினை நீதி மன்றத்தில் தொடர்வதோ அல்லாது

Page 134
116 காதலியைக் கைவிட்டால்.
தொடரப் போவதாக பயமுறுத்துவதோ ஒரு குற்றமாகும்!
இலங்கையில் பொதுத் திருமணச் சட் டத்தின் 20வது பிரிவின் படி26ஒரு திருமண வாக்கு எழுத்தில் இருக்க வேண்டும். இல் லாவிடின் அது செல்லுபடியாகாது. (உங் கள் தலை எழுத்து முக்கியமானது எனினும் நீதிமன்றங்கள் அதனை ஆராய முற்படுவ தில்லை.) ஏற்கனவே பேச்சு வாக்கில் கொடுக்கப்பட்ட திருமண வாக்குகளைப் பின்னர் கடிதங்களில் குறிப்பிட்டால் அவை சட்ட பூர்வமான திருமண வாக் கிற்கு சமமானவையா? என்ற சிக்கலான கேள்வி எழுந்தது. பேச்சு மூலம் செய்யப் பட்ட திருமண வாக்குறுதியினைக் கடிதத் தில் குறிப்பிடுவது மட்டுமன்றி அவ்வாக் கினை தொடர்ந்தும் காப்பாற்றும் நோக் கம் கடிதத்தில் தெளிவாகத் தெரிவிக்கப் பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள் ளது. 30 இதுவரை இலங்கை உயர் நீதிமன் றங்களினல் விசாரித்துத் தீர்ப்பளிக்கப் பட்ட சில முக்கிய வழக்குகளைப்பற்றி நீங் கள் அறிந்து கொள்வது அவசியமாகை யால் அவற்றைப் பற்றிய சுருக்கமான குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன. சம்பந்தப் பட்ட காதல் கடிதங்களின் முக்கிய பகுதி கள் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. பிற ருக்கு வரும் காதல் க டி த ங் களை ப் படிப்பதையே பொழுத போக்காகக் கொண்டவர்கள் மனத்திருப்திக்காக அல்ல, ஆனல் சட்ட நிலைமையை ஆராய மட் டுமே என்பதைத் குறிப்பிட விரும்புகின் றேன். பத்திரிகைக்குக் கதை எழுதி அவை திரும்பவும் அனுப்பட்டதனுல் மனம் உடைந்துபோய் இருப்போர் இவ்விதமான காதல் கடிதங்களை எழுதினல் அவை நிச்ச யமாக நூற்றுக் கணக்கான சட்ட புத்தகங் களிலும் சஞ்சிகைகளிலும் வெளிவரும் என் பதை அவதானிக்க !
பில்ப் எதிர் வெத்தசிங்க 27 என்ற வழக்கில், பிரதிவாதி 'கண்ணே. நான் என்ருவது எவரையாவது திருமணம் செய்
26. Section - 20 of the general marriage Ordi
ace.
27. Philip V Wethasinghe - 38. N. L. R.

ஜனகன்
தேனென் ருல், அது நிச்சயமாக நீயாகத் தான் இருக்கும் என்பதை உறுதிப்படுத்து கின்றேன். சந்தர்ப்ப வசத்தால் இது கைகூடாவிடின் நான் தனி மனிதனுகவே எனது வாழ் நாட்களைக் கழிப்பேன். p is என வாதிக்குக் கடிதம் எழுதினர். நீதி மன் றம் இச் சொற்கள் ‘நான் திருமணம் செய்தால் அது நீயாகத்தான் இருக்கும்' என்பதை மட்டுமே குறிக்கும் எனவும் இவை ஒரு திருமண வாக்குறுதிக்குச் சமன காது எனவும் தீர்ப்பளித்தது.
போர்வில் எதிர் வேதக்கன் 28 என்ற வழக்கில் பிரதிவாதி ‘'. நான் திருமண மாகும் வரை உனக்குக் குறும்பு செய்து தொல்லை தர மாட்டேன். அவ்வின்ப நாளை ஏப்ரல் 8ம் திகதியாக வைத்துக் கொள்வோமா?..." எனக் கேட்டுக் கடி தம் எழுதினர். வாதியும் அதற்கு தனது சம்மதத்தினைத் தெரிவித்திருந்தார். நீதி மன்றம் இது ஒரு வலுவான ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும் எனத் தீர்ப்பு கூறிற்று.
குரே எதிர் குரே 29 என்ற வழக்கில் திருமணம் ஒழுங்கு செய்யப்பட்டது பற். றிய விளம்பரத்தில் வாதியும், பிரதிவாதி யும் கையெழுத்திட்டிருந்தனர். இது ஒரு சட்ட பூர்வமான திருமண வாக்கிற்குச் சம. மானது என தீர்ப்பளிக்கப்பட்டது.
ஜயசிங்க எதிர் பெரேரா90. வாதிக்கும் பிரதிவாதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட் டிருந்தது. பிரதிவாதியில் ச ந் தே க ம் கொண்ட வாதியின் தகப்பனுர் திருமணம் செய்வதாகக் கூறும் வாக்குறுதியினை பிரதி வாதியிடம் இருந்து எழுத்தில் பெற்றுக் கொள்ளும்படி வாதியை தூண்டியதன் பெயரில், அவளும் அங்ங்னமே கோரி ஓர் கடிதம் எழுதியிருந்தாள். பிரதிவாதி தனது பதிலில் '' . . . . . . உன் அப்பாவின் கோரிக்கையினை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். ஏனெனில் என் அருமை கண் மணியே! உன்மீது எனக்குப் பூரண நம்பிக் கையிருப்பது போல என்மீதும் என் கண்
29. Cooray V Cooray — 30 N. L. R. 310
30. Jayasinghe V Perera - 9 N. L. R. 69.

Page 135
காதலியைக் கைவிட்டால்.
மணிக்கு நம்பிக்கை இருக்க வேண்டாமா? எனது வாக்கில் அவர்களுக்கு நம்பிக்கை யில்லையெனில் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. *’ என குறிப்பிட்டி ருந்தார். இச் சொற்கள் ஒரு திருமண வாக் குறுதியாகாது எனத் தீர்ப்பளிக்கப்பட்
டது.
உடலகம எதிர் ஐராங்கனி புவாங்கே31 என்னும் வழக்கில் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட திருமணத்தினைப் பற்றி பல கடிதங்களில் ஏமாற்றியவர் குறிப்பிட்டி ருந்தார். எனினும் வாய்மொழியாக கூறப் பட்ட உறுதிக்கு, எழுத்து வடிவில் அங்கீகா ரம் தெரிவிப்பதுடன் அதனைத் தொடர்த் தும் காப்பாற்றும் நோக்கம் கடிதங்களில் குறிப்பிடப்படாத பட்சத்தில் சட்டம் கோரும் 'ஒப்பந்தம்' இல்லை எனத் தீர்ப் பளிக்கப்பட்டது.
31. Udalagame V Irangar
"மண வாழ்வின் இன் ச கி/கற்ப உறுதியின்னu/ம் ட களே, ஆம்மணவாழ்வென்னு அதில் அகப்பட்டுக கொண்ட யவருடன வாழும் சுதந்திர தாயமென்னும கட்டிணேப்பு என்பதை ஒப்புக் கொண்கின் னுக்குப் பின் முரணு7ை இரு யாது. கை தி மகிழவுடன் உ யி ல்ை பயனில்ஃ). கைதி ம rதற்காக அவ/ன் மகிழ் 6 ப/ச/ வகு செய்ய வேண்டு
‘மனிதனும் மேதையும்

ஜனகன் 117
இதுவரை ஆண்கள் பெண்களுக்கு எதி ராகத் திருமண வாக்கு முறிவிற்காக வழக் குகள் தொடர்ந்ததாக தெரியவில்லை. ஆனல் காலம் மாறி வருவதை நீங்கள் உணர்வீர்கள். எனவே பெண்களும், இவ் வேலையில்லாத் திண்டாட்ட காலத்தில் கவ னமாக இருப்பது நல்லது, ஏனெனில் பெண்கள் பலர் வேலையிலும் அவர்களின் காதலர்கள் பலர் பாதையிலும் இருப்ப தால் நட்ட ஈடு கோருவோர் வர்க்கம் திசை திரும் பக்கூடும். மேலும் காதலில் தோல்வியடைந்து, தற்கொலை செய்து வரும் டெண் குலம் இதனைப் படித்த பின் புத்துணர்ச்சி பெற்று தங்களது உயிரை மாய்க்காது நட்ட ஈடு கொண்டா! என்று
ஏமாற்றியவரின் உயிரையும் வாங்கலாம்!
nie Bonge - 61: N. L.R. 25.
பத்தினேயும் இல்வாழ்வின் //யறி அலட்டிக் கொண்ட்/வர்
/ம் சங் கிலியினே அறுத்து,
- கை த களுக்கு தாம் விரும்பி
த்தினேக் கொடுத்தால், சமு
/த த விடுபொடிய/கிவிடும் றனர். ஒரு வாதத்திக்ன முன்
முக நோக்கில் கொள்ள /டி
or7ை/னெனின் சிறைச்சாஅல
கிழ்வறழ/ இருக்கிருனெனில் / டன் வாழ்கன் முனெனப்
99.
- பெர்ணுட்ஷோ

Page 136
ஆண்டவனின் சிருஷ்டி மனித அவனின் கால எல்லை ஒரு நூற்றண் மனிதனின் சிருஷ்டி கலை. ஆஞ
ண்ணற் கரிய வகைகளில் வீடுக ளையோ, கோவில்களையோ, கல்லறைகளையோ ம றை த் த வர் க ள் கட்டியெழுப்பியிருக்கிறர்கள். உ யிரு டன் இரு ப் ப வர் க ளே ர க ட் டி யெழு ப் பி க் கொண்டேயிருக்கிழுர்கள் பைபிளில் வரும் பேபல் கோபுரம் மாதிரி கைலாசத்தைத் தொடுவது போல மாடி மேல் மாடியாகக் கட்டியிருக்கிறர்கள். கல் லின் மேல் கல்லை மட்டுமல்ல, இரும்பு, கண் ணுடி என்று இன்னும் எத்தனையோ இத்தி யாதிகளை அடுக்கி அடுக்கி கோபுரங்களாக, சிலின்கோ மாளிகைகளாக நிற்க வைத்தி ருக்கிருர்கள். காலங்களினூடே விஞ்ஞா னம் வளர்ந்து பக்க பலமாக நிற்க, மணி தர்கள் அளப்பரிய நிர்மாணங்களுக்கு கார ணமாயிருந்திருக்கிருர் கள். இரும்பை உருக் குச் சட்டங்களாக்கி தொளாயிரத்து எண் பத்து நான்கு அடிவரை ஜஃபல் என்பவன் பாரீஸின் நடுவில் உயர்த்திவிட்டிருக்கிருன். ஏன் கட்டி ஞன் என்று கேட்காதீர்கள். ஆனல் அப்போது ஜோடி ஜோடியாய் உச் சிவரை போய், சுற்றிலும் முற்றிலும் பாரீ ஸைப் பார்த்துவிட்டு ஏதோ ஒருவித மகிழ்ச்சியில் இறங்கி வருகிருர்கள்.
*" கட்டிடங்களை உணர்ச்சிகளின் உரு வகங்களாக்குவது கட்டிடக் கலை' என்று லெதாபி என்ற கலைஞன் கூறியிருக்கிருன். ஜஃபல் கோபுரத்தில் உணர்ச்சிகள் ஏரா ளமோ, என்று கேட்கிறீர்கள். எது எப்படி யிருப்பினும், மனித சக்தியை விரயம் செய் யும் மடமையையோ, வெற்றிக் களிப்பில் விளை யு ம் பெருமிதத்தையோ அவன் காட்ட நினைத்திருக்கலாம். இவைகளெது

ாடு 52a5GT அழிவதில்லை
ஈஸ்வரன் செல்வராஜா

Page 137
கல்கள் அழிவதில்ஃல
வுமேயில்லாமல், வெறுமையாகவே அதை நிறுவியிருக்கலாம். இருந்தாலும் ஜஃபல் ஒரு பொறியியல் நிபுணன், கலைகளைப் பற் றியோ காலங்களைப் பற்றியோ அவனுக் குக் கவலையில்லை. பிரெஞ் சு மக்களின் வாழ்க்கை முறையென்ன, அவர் களது தேவைகளென்ன, அந்தத் தேவைகளை நிறைவுசெய்யும் நிர்மாணங்கள் என்ன, என்று சமூக நோக்கு சற்றேனுமில்லாத வகையில், உருக்குச் சட்டங்களோடு சட் டங்களைச் சேர்த்து ஆகாயத்தை அளப்ப தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சியைக் காட் டியிருக்கிருன் . நாளை வரப்போகிறவர்கள் இந்தக் கோபுரத்தைப் பார்த்து நகைக்கக் கூடும் இது வேறெதையுமே கூறவில்லை என்றதால். அல்லது தேவைகளை நிறைவு செய்யாமல் கடலில் புளியைக் கரைக்கும் எமது அறியாமையை அவர்கள், உணரக் கூடும். விஞ்ஞானத்தின் ஆற்றல்கள் மூலம் வாழ்க்கைக்கு உயிர் ஊட்ட முடியாத இந்த ஆ க் க ங் க ள் கால வெள்ளத்தில் கரைந்து விடுகின்றன, விஞ்ஞானத்தின் வெறுமையை, இயந்திரத்தின் ஆதிக்கத்தை இ ைவக ள் வரவிருப்பவர்களுக்குக் கூறி விடும். இந்த வெறுமையை, உப்புச்சப்பற்ற சூனியத்தை, உயிரற்ற இயந்திரத்திற்கு அடங்கி ஒடுங்கும் அடிமைத்தனத்தை, கலைஞர்களில் ஒரு வர்க்கம் ஒழி த் து க் கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தைக் கலை வண்ணங்களோடு சேர்த்து, வாழ்க்கைத் தேவைகளுக்கு உருவம் கொடுப்பவர்கள் அவர்கள். உங்கள் கண்களுக்கு அழகாகத் தெரியும் அந்த ஹோல்டன் காரின் தகரக் கவசங்களைப் பிய்தெறிந்துவிட்டுப் பாருங் கள், பார்க்க, உணர, ரசிக்க முடியாத அவலட்சணமான இயந்திரம் தெரிகிறது. இந்த இயந்திரத்தை, ஓர் அலங்கோலத்தை கவசமிட்டு மூடியவன் ஒரு கலைஞன். இப்ப டியாக இன்னும் பலவிதமான கைங்கரியங் களில் தனிரகமான, இந்த சமுதாய அங் கத் தி ன ர் க ள் ஈடுபட்டிருக்கிருர்கள், உணர்ச்சிகளோடு பிணைந்து நிற்கும் கலைக ளுக்கும் உ யி ர ற் ற விஞ்ஞானத்திற்கும் பாலம் அமைப்பதில் இந்த கலைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கிருர்கள்.
உணர்ச்சிகளுக்கு உருக்கொடுத்து, கற் பண்களையும் அனுபவங்களையும், உண்மைக

ஈஸ்வரன் செல்வராஜா 19
ளாக்கும் போது கலைஞன் தோன்றுகின் ருண். கண்ணுல், காதால், தன் நரம்புக ளால் மூலை முடுக்கெல்லாம் துருவிவிட்டு, தான் கண்டதை, கேட்டதை, அனுபவித் ததைச்சொல்லவேண்டும் என்ற உறங்காத வேகத்தோடு சஞ்சரிப்பவன் அவன். அந்த வேட்கையைத் தணித்த தோரணங்கள் கல்களாக வடிவெடுத்தன. மூ ங் கி லை த் துளைத்து ராதையின் கிருஷ்ணனைப்போல பாடியிருக்கிருன் . அந்த மோகன ராகங்க ளில் தன் நினைவுகளேத் தவழவிட்டுச் சாந் தியடைந்திருக்கிருன். நர ம்  ைப மீட்டி அதன் நாதங்களில் மூழ்கியிருக்கியிருக்கி ருன், எழுத்தில் வடித்து மற்றவன் படிக்க வும் வைத்திருக்கிருன் இன்னுெருவன். உணர்ச்சிகளைச் சுரக்கவிட்டு உணரக் கூடி யவனேடு பரிமாறி பரமானந்தம் அடைந் தவன் கலைஞணுகிருன், கலைகள் எப்போ தோ பிறந்திருக்கின்றன. ஆனல் சந்து பொந்துகளில் வாழ்ந்தவனிடமோ வயிற் றைக் கழுவி வயிற்றை நிரப்பியவனிடமோ இந்த ஆக்க உணர்வுகள் தோன்றவில்லை. விலங்கைக் கண்டு மரத்தில் வாழ்த்தவன் ஒவியம் வரையவில்லை. மழையைக் கண்டு குகைக்குள் பதுங்கியவன் கவி பாடவில்லை. அலைந்து கொண்டிருந்தவன் ஆற்றுப் படுக் கைக்கு வந்ததும் கலைஞளுகி விட்டிருக்கி முன், சிந்தனைக் கதவுகளைத் திறந்த காட்டு மிராண்டி கைகளைப் பாவித்தான். அவனது சிந்தனைகளில், நிலை த் த வாழ்க்கையில், ஆற்றின் சகதியும், மூங்கிலும் சேர்ந்து வீடாகியபோது, கலைஞானத்தோடு நாக ரீகமடைந்த மனிதன் தோன்றினன், இயற் கையின் துணையோடு, மிருகத்தைத் தூர நிறுத்தி வேலியடைத்தபோது நிர்மாணிக் கும் திறமை கொண்டவன், பிறந்தான். இந்நிர்மாணக் கலைக்கு நிலையான வாழ்க் கையில் வித்திட்டுவிட்டுத்தான் நைல்நதிக் கரை மக்கள் மறைந்திருக்கிறர்கள். ஆன்ம உணர்ச்சிகளோடு தேவைகள் பெருக, சமூ கங்களின் பின்னணியில் ஏராளமான நிர் மாணங்களுக்கு ஆதி மனிதர்கள் காரண மாயிருந்திருக்கிருர்கள். நாகரீக வாழ்க்கை யின் படிக்கட்டுகளை அவர்கள் கட்டத் தொடங்கிளுர்கள். அப் படிக்கட்டுகளை, கலைகளை, கட்டிடக் கலையோடு ஆரம்பித் &o digitsair.

Page 138
120 கலேகள் அழிவதில்&ல
ஆசைகளும், தேவைகளும் பல்கிப் பெருகிய வாழ்க்கை நான்கு சுவர்களுக்கு நடுவே தோன்றியது. இந்த தேவைகள் மலிந்த வாழ்க்கையை சம்பூரணமாக்கு கின்ற தருணத்தில், வித்தைகள் என்று சொல்லக்கூடியதான சாமர்த்தியத்தைக் காட்டியிருக்கிருர்கள். நேரத்தின் காரணம் போலும், பானையிலும் சட்டியிலும், மன தில் பட்டதை சொல்ல வேண்டும் போலி ருந்த தைத் தீட்டியிருக்கிருர்கள். எழுத்து வடிவங்களும் சித்திரங்களும் இவ்வழியாக வாழ் க் கை யோ டு சேர்ந்துகொண்டன. இடியையும் மின்னலையும் கண்டு பீதிய டைந்தவன் சிந்தனையில் கடவுள் வந்தார். கடவுளைச் சமாதானப்படுத்தக் கோவிலைக் கட்டிவிட்டான், இன விருத்தியும் அதன் விளைவாக சமூக வளர்ச்சியும் நானுவித கட் டிடங்களைத் தோற்றுவித்திருக்கின்றன. அரங்குகளும் மண்டபங்களும் சமூக வளர்ச் சியின் துணைகளாகின. இச் சமூகத் தேவை களிலும், சுய ஆசைகளிலும், வழிபாட்டு நெறிகளிலும் அன்றிலிருந்து இன்று வரை மனித சமுதாயத்தில் அளவுகோல்களை மீறிய சாதனைகள் நடைபெற்றிருக்கின் றன. தன் எண்ணங்களை, தேவைகளை, வாழ்க்கை நியதிகளே, சுற்ருடலை, இயற் கையின் படைப்புகளைக் கொண்டு, கற்க ளிலோ கைப்பட்ட பொருளிலோ எழுதி விட்டு ஆதிமனிதன் மண்ணுகிவிட்டான். ஆணுல் அவனது ஆக்கங்கள் காலங்களைப் பிரதிபலிக்கும் கருவூலங்களாகி விட்டன. பொக்கிஷங்களாக இருக்கும் ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள். சாதனைகளும் வேத னை களுமென்று மனதில் பட்டதை எழுதியி ருக்கிருர்கள். தனி மனிதர்களின் சிருஷ்டிப் புக்கள் அவை. பாகுபாடுகளும் பேதமைக ளும் அங்கே அனந்தம், அதனுல்தான் தேவையானவற்றை கிரகிக்கவோ உண ரவோ முடியாத அளவுக்கு ஏடுகள் நிறைந் திருக்கின்றன. வெளவால்கள் வாழும், இடிந்த பாழடைந்த சரித்திர எச்சங்களைக் கூடப் பாருங்கள். புதைந்து மண்ணுேடு சேர்ந்தும் மக்கிவிடாது உயிர் பெற்று, ஒலை களே ஊமைகளாக்கிவிட்டுக் க  ைத க ள் சொல்லுகின்றன.
மும்தாஜை நினைத்துச் சாகும்வரை அழுதிருக்கிருன் ஷாஜஹான். சொல்லித்

ஈஸ்வரன் செல்வராஜா
தெரியாத அளவு அவன் நினைந்து நினைந்து உருகியிருக்கிருன். எப்படிச் சொன்னலும் சில வேளைகளில் புரியப்போவதில்லை. காத லின் தெய்வீகம், மகத்துவம் என்று பிதற் றும் போதெல்லாம் எதையுமே உணர முடி வதில்லை. ஆனல், அக்ராவின் பளிங்கு மாளி கையை பெளர்ணமி நிலவில் சுற்றிப் பாருங்கள். அவளுக்கு அவன் அஞ்சலி செய்கிருன். இப்போது மெய் சிலிர்க்கின் றது. அதனல்தான் கட்டிடங்கள் பேசுகின் றன என்று சொல்கிறர்கள், பிணத்தைத் துர்க்கி எறிந்துவிடவில்லை. ம ன் ன  ைக வாழ்ந்தவனின் பிரேதத்தை அடக்க கல்ல றைகளை எழுப்பினர்கள் எகிப்தியர். கற்க ளைக் குவித்து நானூற்றி எண்பது அடிக்கு கோபுரங்களாக அதுவும் பதின்மூன்று ஏக் கர் பாலைவனத்து மண்ணில், இன்று நேற் றல்ல, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிமிர்த்திப் பிரமிக்க வைத்திருக்கிரு ர்கள். கல்லின் மேல் கல்லை சளைக்காமல் அடுக்கி வானத்தையளந்த மாதிரி கட்டியிருக்கிருர் கள். இருப்பவர்களைக் கேளுங்கள் விழலுக் கிறைத்த நீரென்று கூசாமல் சொல்லிவிடு வார்கள், அவர்கள் கட்டிய அதிசயத்தை இன்னும் புரிந்து கொள்ளாமல், இடிந்து கிடக்கும், கட்டிப் பிடிக்கவே முடியாத துரண்களும், கேட்பாரற்றுச் சிதைந்து கிடக்கும் மண்டபங்களும், வாழ்ந்த ஒர் இராச்சியத்தையும் தகர்த்தெறியப்பட்ட அதன் பெருமிதங்களையும் சொல்லிவிடு கின்றன. அரசியல் அழிவின் நிதர்சனமான சின்னங்கள் ரோமபுரியின் உருக்குலைந்த நக ரங்கள், இன்னும் எத்தனையோ ஆக்கங்க ளும் அழிவுகளும் யுகங்கள் யுகங்களாக இந்த மண்ணில் நடைபெற்றிருக்கின்றன. சாம்ராச்சியங்கள் அழிந்தும், சமூகங்கள் வளர்ந்தும் நாகரீகங்கள் தோன்றியுமிருக் கின்றன. இந்த உண்மைகளை, அழிவுகளின் மீதிகள் இருக்கும் வரை. சரித்திரம் மறைக்க முடியாது. முற்ருக அழிந்துவிடக் கூடிய அளவில் பல சமூகங்கள் நிர்மாணிக் கவில்லை. இ ய ந் கை யி ன் துரோகங்களை எதிர்த்து, நிர்மாணக் கலை நாகரீகத்தின் படிமங்களாகியது.
ஏராளமான நாடுகள் கட்டிடங்களைக் கட்டியிருக்கின்றன. இயற்கை மலையாக வும், கடலாகவும், ஆருகவும் சுவர் எழுப்பி

Page 139
கலேகள் அழிவதில்&ல
விடநடுவேயிருந்து எப்படியெல்லாமோ கட் டியிருக்கிருர்கள். வேற்றுமைகளும்போட்டி மனப்பான்மைகளும் மனித வேகங்களை மறைமுகமாகத் தூண்ட எண்ணற்ற வகைக ளில் சாதனைகள் புரிந்திருக்கிருர்கள்.கிரேக்க நாட்டின் நிர்மானங்களைப் பாருங்கள். கலை முழுமையடைந்த நாட்களுக்குச் சான் றுகள் அவை. ரோமர்கள் இருக்கிருர்களே, கலையையும் விஞ்ஞானத்தையும் செப்பமா கச்சேர்த்தசாதனை அவர்களுடையதுதான். பாழடைந்தும் தேடுவாரற்றும் கிடக்கும் அரங்குகளிலும் மண்டபங்களிலும் இதைக் காட் டி வி ட் டு ம்றைந்துவிட்டார்கள். பிரான்ஸ்ஸில் காதலின் வேகத்தைக் காவி யங்களாக மாற்றியிருக்கிருர்கள். பிரெஞ்சு நாவல்களைப் படித்தால் இது புரிந்துவிடும். அவர்கள் கட்டியெழுப்பிய ஆலயங்களைப் பாருங்கள் நிச்சயமாக நீங்கள் உணர்ந்து விடுவீர்கள். சலவைக் கல்லில் மைக்கலாஞ் சலோ சாகசங்கள் செய்திருக்கிருன் , அவனின் உளிபட்டுச் சலவைக் கல் எப்படி யெல்லாம் ஆகியிருக்கிறதென்று, மடிந்த மகனை மடியில் வைத்திருக்கும் மாதாவை (Pieta)ப் பார்த்தால் விளங்கிவிடும். வத் திக்கன் சென் பீட்டர்ஸ் ஆலயச் சுவர்க ளில் வர்ணக் கலவைகளைச் சித்திரங்களாக மாற்றியிருக்கிருர்கள். 'சிரு ஷ் டி ப் பு", " " இறுதித்தீர்வை '’ போன்ற ஒப்புயர் வற்ற சுவர்ச் சித்திரங்களை ஆலயங்களில் வரைந்து சென்றிருக்கிருன் , ம னி த னை மீறிய ஆற்றலோடு இன்னும் எத்தனையோ இத்தாலியர்கள், கலையுலகில் கட்டிடங்க ளாகவும், சிற்பங்களாகவும் மலைக்கத்தக்க எல்லைகளைக் கண்டிருக்கிருர்கள். அறிவின் ஆற்றல்கள் இத்தாலியில் வடிவெடுத்திருக் கின்றன. இதுவரை கேட்டோ பார்த்தோ, அறியாத அளவுக்குத் தெய்வத்தைச் சிறை யிட்டுப் புகழ் பெற்றவர்கள் இந்தியர்கள். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் கரைகளிலும் மலைகளிலும் கோவில் எழுப்பிவிட்டிருக்கி முர்கள். கா க்  ைக இல்லாவிட்டாலும் கோவிலிருக்குமென்றபடி ஆயிர மா யிர மாய் நிர்மாணித்திருக்கிருர் எள். கோவி லில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என் கிற அளவுக்கு ஊரெல்லாம் ஆலயங்கள் வளர்ந்துவிட்டன. தெய்வ சந்நிதானம் என்று குன்றிலும் குளக்கரையிலும் சிவகும ரன குடியேற்றினர்கள். எந்த மூலையிலும்

ஈஸ்வரன் செல்வராஜா 12
முடுக்கிலும் கடவுளை வழிபட்டிருக்கிருர் கள் என்பதாற்போலும் குகைகளைக்கூட கலைக் கோவில்களாக, எல்லோரா (Ellora) வாக மாற்றியிருக்கிருர்கள். பேரி ன் ப நிலையை, பொங்கும் அழகோடு தீட்டி விட்டு பெளத்த சமயத் துறவிகள் சென்று விட்டார்கள். ஒவியக் களஞ்சியமாக, இப் போது அஜந்தா, மறைந்தவர்களின் கைத் திறனுக்கு உரை தருகிறது. கல்லெமக்குக் களிமண் என்பதுபோல், நெளித்தும் முறித் தும் கல்லை ஸ்தூபங்களாக்கி காஞ்சியில் நிறுவியிருக்கிருர்கள். பழமையின் எழிலை யும் மங்கலத்தையும் தேடித்திரிய வேண் டாத அளவுக்கு நாட்டை நிரப்பியிருக்கி ருர்கள். காலங்கள் மாறியவிடத்தும்மடிந்து விடாது உயிர்பெற்று நிற்கின்றன அவர்க ளின் சின்னங்கள். காமத்தைக் கல்லிலும் க ற் பித் தி ரு க் கி ரு ன் இந்தியச் சிற்பி கோஞர்கிலும், கஜ"ராகோவிலும், புவ னேஸ்வரிலும் காதல் ரசங்களை அப்பட்ட மாகச் சொல்லியிருக்கிருன், கலைகள் சரித் திர ஏடுகளென்றும், உண்மைகளும் வாழ்க் கைத் தத்துவங்களும் அங்கே சங்கமிக்கின் றன என்றும் சொல்கிருேம். ஆன்மீகத்திற் கும் பேரின் பநிலைக்கும், மங்கள வாழ்க் கைக்கும் இயற்கை தகர்க்காத இந்திய கலேக்கோலங்கள் துணை நிற்கின்றன.
தில்லைத் தாண்டவத்தை, கல்லிலும் வெண்கலத்திலும், வெள் ஸ்ரீ யி லு ம் , சொல்லி மாளாத அழகோடு, காந்த சக்தி யோடு, தத்துவத்தையும், கலைவண்ணத் தையும் சேர்த்துச் செதுக்கிவிட்டு ஊர் பெயர் தெரியாத ஒரு தமிழ்ச்சிற்பி எப் போதோ போய்விட்டான். குனித்த புருவ மும் கொவ்வைச் செவ்வாயுமாக அகண்ட இந்த பிரபஞ்சத்தின் தத்துவத்தை, எழி லுடன் ஆடும் நடராஜனுடன் இரண்டறக் கலந்துவிட்டு வரலாறுகளின் வெளிச்சத் திற்கப்பால் போய்விட்டான். மொனலி ஸ்ாவையும், மடோனுவையும் மிஞ்சுகின்ற சாதனைக்கு காரணமாகிவிட்டு அநாமதேய ஞக மறைந்து விட்டான். சைவத்தைக் கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுப்பது நடராஜன் உருவம். ஆன்ம ஞானத்திற்கு அவதாரம் தந்துவிடுங்கள் அவதாரம் தந்தவன் கால் தூக்கி நின்ருடு கின்றன். எது அழிந்தாலும் பைபிள் அழி

Page 140
122 கல்கள் அழிவதில்அல
யாத வரையில் ஆங்கிலம் அழியாது என் கிருர்களே அதற்கும் மேலாக, சமயமும், மொழியும் வாழ்க்கை நெறிகளும் இறவாத வகையில் நர்த்தனம் செய்கிருன் நடரா ஜன். இந்தச் சுத்தரச் சிலையின் மங்காத வனப்பின் பின்னணியில், கலை மணம் பரப் பியிருக்கிருர்கள் திராவிட வர்க்கத்தினர். ஏறிவந்த படிக்கட்டுகளைப் பாருங்கள்.
தெய்வத்தின் திருவிளையாடல்களென புராணங்களைப் பாட அதை உளி கொண்டு கருங்கல்லில் எழுதியிருக்கிருர்கள். கடல் தீண்டிக் கொண்டிருந்த மாமல்லபுரத்தை கல் ரதங்களால் நிறைத்து விட்டிருக்கிருன், நரசிம்மபல்லவன். சர்ப்பத்தோடு விஷ்ணு மலைப்பிஞ்சுகளில் துயில்கொள்ள நடரா ஜன் கல்லில் தாண்டவமாடுகின்றன். கடற் பாறைகளும் மணலுமாகக் கிடந்த நிலம் பல்லவர் சிற்பத்திறமையில் கலைக்கூடமாக மாறியிருக்கிறது. க ல் லை க் கு  ைட ந் து குடைந்து குடைவரைக் கோவில்களாக அமைத்திருக்கிருர்கள்.குன்றிற்குள் கிடந்த ரகத்தை செதுக்கியும் குடைந்தும் கல்ரதங் களாக வெளியெடுத்திருக்கிறர்கள். அக் கல் ரதங்களின் மூலாதாரத்தில் சைவலா யக் கோபுரங்களும் விமானங்களும் ஆயிர மாயிரமாய் பிறந்திருக்கின்றன. துர்க்கை யும் இந்திரனும் சிவனேடு பவனி வருகிருர் கள் பல்லவன் மண்ணில், தூணிலும் துரும் பிலும் கடவுளைக் கண்டவர்கள் கற்களின் பின்னே ஒளிந்திருக்கிருர்கள். பல்லவனின் புகழில் சோழன் கூட தஞ்சமடையவில்லை. தங்கள் சாதுரியத்தையும் காட்டியிருக்கி ரு ர்கள், தஞ்சைக் கோவிலைப் பாருங்கள். சைவத்தின் வசந்த காலத்தைப் பாடும் விமானமது. எத்துணை செழிப்பான வாழ்க் கையென்பதை விமானத்தின் நெளிவுகளி லேயே மங்களகரமாக சொல்லிவிட்டார் கள். தூரத் தெரியும் விமானம் அன்றைய பெண்களின் இடையைப்போல இருப்ப தாக பெண்களைப் பாடுபவர்கள் கூறுகிருர் கள். களிப்பின் மிகுதியில் சோழ மன்னன் ராஜராஜன் கோவில் விமானத்தில் பெண் மையைக் கண்டிருக்கிருனென்று ஆதாரமும் த ரு கி ரு ர் க ள் . வீரம் மிளிரும் கங்கை கொண்ட சோழபுரக் கோவிலையும் இந்தச் சோழக் கட்டிடக் கலைஞர்கள் தான் எழுப் பியிருக்கிருர்கள். இன்பம் பொங்கும்

ஈஸ்வரன் செல்வராஜா
செழிப்பான காலங்களில் சுந்தரக் கலைகளை மங்காத சிறப்போடு தமிழ் நிலங்களில் பரவவிட்டு போயிருக்கிறர்கள். மூக்கும் முழியுமாக இருந்த சோழனின் சித்திரப் பாவைகளை அந்தபுரத்தில் வைத்து விட்டு பாண்டியன் வாளா விருக்கவில்லை. துரணுக வும் மண்டபமாகவும் வெளிவந்திருக்கிறது பாண்டியக் கலைஞர்களின் நுட்பமான அலங்காரங்கள். சுண்டினுல் நாதம் பிறக் கும் இசைத் தூண்கள் எழுந்தது அவர்கள் காலத்தில் தான். மணிமண்டபம், அர்த்த மண்டபம், வசந்த மண்டபம் என்று மண்ட பக்கலைகளில் தனித்துவத்தைக் காட்டி, கோவிற் பிரகார வளர்ச்சியில் அநாயாச மான எல்லைகளைத் தொட்டிருக்கிருர்கள் அந்நாட்டுக் கலைஞர்கள். சோழனின்:எழுச் சியிலேயோ பாண்டியன் வளர்ச்சியிலேயோ நாயக்கன் ஒதுங்கிப் புகழ் பாடவில்லை. ஆகாயத்தில் தொங்குவதான பிரமை யோடு கோபுரத்தை மதுரையில் உயர்த்தி விட்டான். மீனுட்சியம்மனை குடிவைக்க வசந்த மண்டபங்களையும் தூண் மண்டபங் களையும் அலங்கார எல்லைகளைத் தாண்டும் ஆர்வத்தோடு உருவாக்கியிருக்கிருர்கள் மதுரைக் சிற்பிகள், கோவில் பொற்ரும ரைக் குளத்தில் தமிழ்மங்கை நீராடுகிருள். திருநீறும் சந்தணமும் மணக்க இதிகாசங் களையும் புராணங்களையும் திருமால் நாயக் கன் கோவிற் கலைகளில் ஐக்கியமாக்கிஞன். நகர நிர்மாணங்களில் மதுரை நகர் இணை யில்லாத ஒரு சாதனை,
கூரைகளுக்கு மேலே தெரியும் கோபு ரங்கள் கவராத உள்ளங்களில்லை, கோபுர கலசங்களும், சிவலோகக் காட்சிகளும், மங்களகரமான கோவிற் கலைகளுக்கு சிக ரங்களாகி விட்டன. அலங்காரத்தில் தனித்துவம் மிக்கதாய் திகழ்கிறது சைவா லயம். இந்த சாதனைகளூடே மறைக்கமுடி யாத குறைகள், கோவிற் கட்டடக் கலை களே ஆக்கிரமித்து நிற்கின்றன. தேவைகள் என்ற அடிப்படையில் ஒன்ருே டொன்று சார்ந்து நிற்கும் ஐக்கியத்தை வானளாவ நிற்கும் கோபுரங்களால் உணர்த்த முடிவ தில்லை. தெய்வ சந்நிதானத்திற்கு தமிழன் தந்த இடத்திற்கு இக் கோவில்கள் சான்று கள்தான். வாசல் அங்கே, அதற்கணி செய் யும் கோபுரம் மேலே, என்று நிர்மாணித்து

Page 141
கலேகள் அழிவதில்ஃ)
விட்ட சாமர்த்தியத்தில், மண்டபத்திற்கு மண்டபம் தொடர்பறுந்த நிலை உருவாகி விட்டது. அந்தக் கதம்பமான கோபுரச் சித்திரங்கள் நரம்பறுந்து தொடர்பிழந்து உயிர்குறையும் நிலைதான் கோவில் கலைக ளின் மூலக்குறை. எம்மைச் சுற்றிலும் நடப்பதை , உருவாகுவதை சற்று கவனி யுங்கள். கோவிற் சிகரத்தில் துலக்கமாகும் குறை நடப்பவைகளிலும் பரவி நிற்கின் றது. "தனி உலகங்களில் கலைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
படிக்கட்டுகளே மறந்துவிட்டு, இப் போது என்னதான் செய்கிருர்கள் என்று உற்றுப்பாருங்கள். பாட்டன் வேய்ந்த கிடுகுக் கூரையைப் பிய்த்தெறிந்துவிட்டுப் பேரன் அஸ்பெஸ்டாஸ் கூரை போடுகின் முன், காலங்கள் மாறுவதும் தேவைகள் உண்டாவதும் அப்படி ஆனல் திண்ணைக ளும் தலைவாசல்களும் எமது வாழ்க்கை முறைகளை, ம ண் ணி ன் மணத்தைச் சொன்ன அளவுக்கு வளர்ந்து கொண்டிருக் கும் இயந்திரம் சமைத்த வீடுகள் சொல் லப் போவதில்லை. முன் வீடும் இதே நிலை
*படித்த இளைஞர்களே! வி சாயத்தில் ஈடுபடப்போகும் என் விரும்பினுல், உங்களைச் சேர்த் விருக்கிறேன். விவசாயத் துை பற்ற நான் எண்ணியுள்ளேன். காற்சட்டை உத்தியோக மயக் துக் கொள்ள வேண்டும். தட மதப்பற்று, மொழிப்பற்று, வி இருத்தல் வேண்டும். இவை அவன் தமிழனுகவிருக்க முடிய கணித்து, அரசாங்க உத்தி காம் இத்தனை தொல்லைகளுக்கு
தினகரன் 3-7-70

ஈஸ்வரன் செல்வராஜா 123
யில்தான் . ஏன் பக்கத்து விடுகள் கூட அப்படித்தான். யப்பானில் வாழ்பவனே யும் பாருங்கள், அவன் வீடுகூட இதே நிலை யில் தான். மனிதனின் தனித்துவம் செத்து விட்டது. ஒன்றின் மேல் ஒன்ரு கப் பெட்டி களை அடுக்கி, தேன் கூடுகளைப் போன்ற நிலேயில் வாழும் வாழ்க்கைதான் இன்று எப்படி வாழ்கிருேம் என்பதைக்கிடுகுகளும் படலைகளும் பறை சாற்றிய அளவுக்கு மாடிமேல் மாடியாக எழுந்திருக்கும் 'வீடு கள் எதுவும் சொல்ல முடியாது, மரஞ் செடி கொடிகளென்று இயற்கையோடு ஒன்றித்த வாழ்க்கையை தொழிற்சாலேக ளிலிருந்து சுடச் சுட வந்துகொண்டிருக்கும் 'வீடுகள்' கொன்று விடும். இந்த உயி ரற்ற வீடுகளில் யாரோ சொன்னதுபோல், வாலைச் சுருட்டிவிட்டு, மனிதன் காந்த நாடாவின், இயந்திரத்தின் குரலுக்கேற்ப ஒடி ஆடிக் கொண்டிருக்கிறன் . அவனது இங்கிதமற்ற வாழ்க்கையில், வாசல் வழியே இன்னெரு இயந்திரம் நுழைந்து கொண்டிருக்கிறது. ஆனல் அவனே இயற் கையைத் தூரத் தள்ளி இயந்திர அணைப் பில் கிடக்கின்றன்.
வசாயத்தில் ஈடுபடுங்கள். விவ ானுடன் சேர்ந்துழைக்க நீங்கள் துக் கொள்ள நான் தயாராக றயில் கவீன முறைகளைப் பின் குறிப்பாக தமிழ் இளைஞர்கள் கத்திலிருந்து தம்மை விடுவித் மிழர்களென் ருல் அவர்களுக்கு விவசாயப்பற்று இம் மூன்றும் ஒரு சீராக அமைந்தால்தான் பும். விவசாயத்தை காம் புறக் யோகங்களை காடியதாலேயே ம் உள்ளாகியிருக்கிருேம்.
பேராசிரியர் ஆ. வி. மயில்வாகனம்

Page 142

ரியவில்லையே

Page 143
|sசைத் தமிழ்
ରା]]ର)II) ରାର୍ଲt
தருமம்
ஒன்று
புதி// எ/ங்கள்
புகழ் மினுங் புதிய எங்கள்
வறுமை வென் அறிவு கொண் டெ/7றுமை அ பொதுமை ந புதிய எ/ங்கள்
பிறர் வருந்த பெருமை வெ6 திறமை தந்த தெளிவு கொ6 புதிய எங்கள்.
இன மதங்கள் இவை கடந்த வறுமை வென்
அறிவு கொண் புதிய எங்கள்

முருகையன்
குடியரசான ஈழநாடு கும் பொது வரசான ஈழநாடு
7ற தருமம் ஒன்றை 7டு நிறுவ முந்தும் 'ன்பு நியமம் என்ற ம்பி அதை விரும்பும்
நயம் கவர்ந்து 7வும் நிலேமை கொல்லும்
பொருள் பகிர்ந்து ண்டு நலிவை வெல்லும்
* பல இருந்தும் ஒருமை நம்பும்
7ற தருமம் ஒன்றை
எடு நிறுவ முந்தும்

Page 144
- 9
உணவு
ஏனைய ரில்லர்களுடன் உங்கள் 'யன்மார்"
ஒப்பிட்டுப் பாருங்கள்
★
ரொட்டரி இணைப்பைப் பாவித்து ஒ
நீரிறைக்க வசதி உண்டு
சூடு அடித்து பதர் அகற்றச் சாதை
ஒரு தொன் நிறைக்கும் அதிகமா இணைக்கலாம்.
3 கி.வா மின் சக்தி உற்பத்திக்குரிய
சிறந்த வரம்பமைக்கவும் ஏனைய ட
இத்தகைய வசதிகளுடன் விற்கப்படும் ஒலி ரொட்டரி இணைப்பும் இலவசமாக வழங்க
கீழ்க் காணப்படும் எமது
செல்வ லசஷ்மி ஸ்டான்லி வீதி, யா சிறிசேன டிரேட புத்தளம் வீதி, குரு
ரிலேயபிள் மோட் பிரதான வீதி, மாத்
அக்ரோ இன்டஸ்டிரியல் மெ6
கொஹ"வேலை-நுகேகொன

திக Luff ...
LIIGöIIDTİ (o, Fi) İbQDİ பேருதவிபுரிகிறது
டீசல் ரில்லரின் பிரத்தியேக அம்சங்கண்
ரே முறையில் பயன்படுத்தி விதைக்கலாம்
ாமுண்டு
ான பொதியை இழுக்க வல்ல டிரெயிலரும்
டைனமோ இணைக்க வகையுண்டு
பல வசதிகளும் கொண்டது.
வ்வொரு யன்மார் டீசல் ரில்லருடனும் ஒரு ப்படுகிறது:
வியாபாரிகளிடம் இப்பொழுது கிடைக்கும்:
ாழ்ப்பாணம்.
ர்ஸ் @డ్లీషు,
டோர் எஞ்சினியர்ஸ் ቓቓ6õ›ይ0.
iனரி மனுபக்ஷேர்ஸ் லிமிட்டட் St.-- தொலைபேசி: 73|2258

Page 145
მ7ბ老藏 --제都,voll, IIŲVVZIT │ │ │ │ į1ī19ío Isosio
-‘IỆCỦogo-Itssog
JqıīĜųı9%quriņ-ımynoIỆđùırıloņổ , `, ` ) 白ég ----儿!=~===儿 gotosqț¢ £ €hqiiæ Œie
 

sg08z : Brig)^squostobı-ışıņ@uploaes) ‘sēņs (gouse os 9z ,· (ųoyaļ9-ıış9$ I 199Unrıs) 199m jus (9 Ä# , , } ----|I.
-트n宮島트m高昌.長Timmu定皇m용 활 sąğıyım's lų9-ilmmus(İĝ
·ļogs @(postos ~- ssssssf.002s 勵*
noir'nıınno físť
■
à o
əpįsimo ? opisuỊ JOẠI fouleu?! 9AųæJoɔɔq
-ĤusÁIGI Xognò - ssolÐ 18dns

Page 146
BB AU
RUE
HIGH PRESSUF LANKA LI
Stockists of:-
TYRES & TUBES OF
A Retreaded
Motor Sp - Auto Elec
Specialists in:-
Tyre R
|BROADWAY
625, PRINCE OF
HT"phone: 3314o
Branch: 13, Jetha -ر COLC

ROADWAY томотivEs.
Manufacturers of
BEBER GOODS
E WASHING & UBRCATION
A MAKES AND SIZES
and Regrooved
ares and Accessories
trical Goods
ebuilding
AUTOMOTIVES
WALES AVENUE,
Tgrams: TYREWAY
wana Road,
|MBO-14, T'phone: 21671

Page 147
தமிழ் இலக்கிய 96 GTifficit
f நோக்கி மொழிப் பாகுபாடு செய்த தனிநாயகம் அடிகள்: 'ஆங்கிலம் வர்த்தகத்துக்கும், பிரெஞ்சு மொழி அரச உறவுக்கும், இத்தாலிய மொழி காதலுக் கும், ஜெர்மனிய மொழி தத்துவார்த்தத் துக்கும் சிறந்தவையாக விளங்குமானல், தமிழ் மொழி பக்தி விசுவாசத்துக்குரிய மொழியாய் மிளிர்கின்றது’ என்ருர், உண் மையில் தலைசிறந்த சமயங்கள் பல தமிழ் இலக்கிய த்தை வளம்படுத்தித்தா னிருக் கின்றன. தொலகாப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற ஒல்காப் புகழ் படைத்த நூல்களைச் சம ணர் தமிழிற் பாடினர். மணிமேகலை, குண் டலகேசி, வீரசோழியம் முதலிய தலை சிறந்த நூல்களைப் பெளத்தர் தமிழில் இயற்றித் தத்தனர். தேவார திருவாச கம், பெரியபுராணம் போன்றன சைவர் தந்த தமிழிலக்கிய நூல்கள். நாலாயிரத் திவ்விய பிரபந்தம், கம்பராமாயணம், பாரதம் போன்றவை வைணவர் தந்த செல்வங்கள். தேம்பாவணி, திருக்காவ லூர்க் கலம்பகம் போன்றவை கிறித்தவ ரின் படைப்புக்கள். இவ்வாறே அந்தப் பக்திப் பரவசம் செறிந்து விளங்கும் பரந்த இலக்கியத்துக்கு இஸ்லாமும் தனது நன் கொடையை வழங்கி உதவியிருக்கின்றது.
இஸ் லா மிய அடிப்படையிலெழுந்த தமிழ் நூல்களைப் பிரபந்தங்கள், வசன நூல்கள், ஞானியரினதும் சித்தரினதும் பக்தி ததும்பும் பாசுரங்கள் வேத மதாசா ரங்களைக் கூறும் நூல்கள் என நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். பிரபஞ் சங்களைப் பல இனங்களாகப் பாகுபடுத்த

I QUGT) G) இலக்கியங்கள்
லாம். அவற்றைக் காப்பியங்களாகவும், பண்டை இலக்கியப் பிரபந்தங்களாகவும், முஸ்லிம் மக்கட்கே உரிய பிரபந்தங்களாக வும் வெவ்வேருகப் பிரிக்கலாம். தமிழ் மொழியில் காணப்படும் பிரபந்தங்களுட் பல இஸ்லாமிய இலக்கியத்திலும் காணப் படுகின்றன. அந்தாதி, க ல ம் ப க ம், கோவை, பிள்ளைத் தமிழ், அம்மானை முறைகளில் பாடப்பட்ட பல நூல்கள் முஸ்லிம் மக்களிடையே வழங்குகின்றன. இசையோடு சம்பந்தப்பட்ட, பொது வழக்
கில் பெரிதும் உலாவும் பிரபந்தங்களான மாலை, ஏசல், திருப்புகழ், கீர்த்தனை, சிந்து, கும்மி, தாலாட்டு, ஆனந்தக் களிப்பு முத லியனவும் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தில் பரக்கக் காணப்படுகின்றன. இவை தவிர முஸ்லிம் மக்களுக்கே உரிய பிரபந்தங்களும் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தில் காணப்ப டுகின்றன. இவற்றில் 'படைப் போர்' என்ற ஒன்றைத் தவிர ஏனையன அரபுப் பெயர்களாகவும், பாரசீகப் பெயர்களாக வும் அமைந்துள்ளன. 'படைப் போர்" என்ற பிரபந்தத்தை இஸ்லாத்தோடு தொடர்பற்ற தமிழ் இலக்கியப் பரப்பில் காணமுடியாது. முனஜாத்து. கிஸ்ஸா, மஸ் அலா என்பன அரபு மொழியிலிருந்து வந்தன. நாமா என்பது பாரசீக மொழி யைச் சார்ந்தது.
இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல்கள் சில தமிழிலக்கிய நூல்கள் சிலவற்றுடன் ஒப்பிட்டாயக் கூடிய சிறப்புடையனவா கக் காணப்படுகின்றன. பொதுவாக, இஸ்
ஆ. முகம்மது யெஹியா

Page 148
130 தமிழ் இலக்கிய வரலாற்றில்.
லாமியத் தமிழிலக்கிய நூல்களில் பெருங் காப்பியங்களைக் காண்பதfது. காணப்ப டும் சிறுகாப்பியங்களில் வாலவாரிதி என்ற செந்தமிழ்ப் புலவனின் செருக்கடக்கிய சீருப்புராணம் முதன்மையானது. இப் புரா ணத்தின் விலாதத்துக் காண்டம் கம்பரா மாயணத்தின் பால காண்டத்தைப் பெரி தும் ஒத்திருக்கின்றது. அயோத்தியை வர் ணிக்க எண்ணிச் சோழ நாட்டை வர் னித்த கம்பரைப் போல் அரேபிய நாடெ னக் கொண்டு பாண்டி நாட்டை வர்ணித் துள்ளார் உமறுப் புலவர். மேலும் ஓர் ஆற்றின் ஒட்டத்தை வருணித்து உமறுப் புலவர் பின் வருமாறு பாடுகிறர்:
மலையெனு மரசன் புயங்களைத் தழுவி மகிழ்ச்சி செய்தவனுழைச் சிறந்த நிலைதெழு பொன்னு முகர செம்
மணியும் நித்தலராசியுங் கவர்ந்து தொலைவிலாப் பண்டமனைத்தையும்
வாரிச் சுருட்டியே யெல்லை விட்டகலும் விலைமகள் போலும் பலபல முகமாய்
வெள்ளருவித் திரள் சாயும்
இதே உவமையுடன் இதே வருணனையைக் கம்பன் பாடிய விதம் இது:
தலையு மாகமுந் தாமுந் தழிஇயதன்
நிலைநி லாதிறை நின்றது போலவே
மலையிலுள்ள வெலாங் கொண்டு
மண்டலால்
விலையின் மாதரை யொத்த தவ்
வெள்ளமே.
வேருெரு பாட்டில், ஆறு பொருட்களை யெல்லாம் கொண்டு செல்வதை உமறுப் புலவர் வணிக மக்களுக்கு ஒப்பிடுகின்ருர்:
கிடந்த சந்தனங் காரகில் கிளைமணி
கரிக்கூ
டுடைந்த முத்தம் வெண்டந்தமுச்
சுடரொளியோடுங் கடந்த செம்மணிப் பையுடன் கொடு கடலேற
நடந்த வாணிகனெத்தது
செழுங்கிளை நதியே கவிச் சக்கரவர்த்தி கம்பரும் தமது இரா மாயணத்தில் இதே முறையில் நதியை வர் ணித்திருக்கிருர் :

ஆ. முகம்மது யெஹியா
மணியும் பொன்னு மயிற்றலைப் பீலியு மணியு மனை வெங் கோடு மகிழும் தன் னினையுலாரமு மின்ன கொண்
டேகலான் வணிக மாக்களை யொத்த தவ்
வாரியே
தவிர, சீவக சிந்தாமணியில் இராசமா புரம், ‘பூமிமானகர் பொன்னுலகொத் ததே" என்று கூறப்படுகிறது. இராமாய ணத்தில் அயோத்தியை அங்கன் மாஞா லத் தன்னக ரொக்கும் பொன்னகர மரர் நாட்டியதே' என்கிருர் கம்பர். ஆனல், உம றுப் புலவரோ ஒரு படி மேலாக முகமது நபி (ஸல்) பிறந்த மக்க மாநகர், ‘பொன் னுலக மெட்டு மொன்றெனத் திரண்டு வத் திருந்த தொத்திருக்கும்" என்கிருர் தனது சீருப்புராணத்தில்.
இதே போல் திருக்குறளுடனும் சீருப் புராணம் பல ஒற்றுமைகளை உடையதாகக் கானம்படுகின்றதெனலாம்.
அடுத்தது காட்டும் பளிங்குபோ
னெஞ்சங் கடுத்தது காட்டு முகம். என்று வள்ளுவர் பாட, சீரு தந்த உமறுப் புலவரோ ,
அடுத்தவை காட்டுகின்ற பளிங்கு
போலகத்தினுடு தொடுத்திடு நலிதலியாவு முகத்தினுற் ருேன்றக் கண்டு நடுத்திற நிலைமை பூண்ட நாயகக்
குரிசிலன்னுேர் விடுத்திடும் வீரம்பூண வொரு மொழி விரைவிற் சொல்வார் என்று பாடுகின்ருர் .
தவிர, பலகாலமாக இறைவனின் ஏற் றத்தையும் பாடிவந்தோர் பலர். திருமூ லர், பட்டினத்தார், தாயுமானவர், வட லூர் இராமலிங்க அடிகள் போன்ருேரை இந்த வரிசையில் சேர்க்கலாம். இதே வரி சையிலமைந்த பெருமகனே ம ஸ் த ர ன் சாகிபு அவர்கள். தமது பராபரக் கண்ணி யில் தாயுமான சுவாமிகள்:
எண்ணுத வெண்ண மெல்லா
மெண்ணி யெண்ணி யேழைநெஞ்சம்
புண்ணுகச் செய்ததிணிப் போதும்
L J (Lu J(öLB

Page 149
தமிழ் இலக்கிய வரலாற்றில்.
என்று பாடியிருக்க மஸ்சாகிபு அவர்களு தமது நிரா மயக் கண்ணியில்:
எண்ணுத வெண்ணமெல்லா
மெண்ணிடைந்து மனம் புண்ணுவதற்கோ புகுந்தே
நிராமயமே
இவ்வாறு இஸ்லாமியர் சிறப்பிலக்கி யம் செய்தாலும் பொதுவாக இவ்விலக்கி யங்கள் தமிழ் கூறும் நல்லுலகில் செல்வாக் குப் பெறவில்லையென்றே கூறவேண்டியுள் *ளது. வேறு விதமாகக் கூறப் போஞல், இதுவரை புறக்கணிக்கப் பட்டே வந்திருக் கிறதென்றுகூடக் கூறிவிடலாம். இதற்குப் பல காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. இஸ்லாமியர் இலக்கியங்களின் குறைபாடு கள் சம்பந்தமாகக் கூறப்படுவன ஒருவகை; அவை தவிர்ந்த புறக் காரணிகள் சம்பந்த மாகக் கூறப்படுவன மற்றய வகை.
இஸ்லாமியர் இலக்கியங்கள் மத சார்பு டையன என்பது பொதுவாகக் கூறப்படும் குறைபாடுகளில் முக்கியமானது, மதபக்தி, மதம் பரப்பவேண்டுமென்ற அவா, மதப் போட்டிகளுக்கு விடை கூறவேண்டிய நிர்ப் பந்தம் போன்றவையே மத அடிப்படை யில் இலக்கியங்கள் தோற் ற ம் பெறக் காரணங்களாயமைபவை. இந் நிலை  ைம களே ஆரம்பகால இஸ்லாமிய இலக்கியங் களையும் பாதித்தன எ ன ல் பிழையான கூற்ரு காது. 7ம் நூற்ருண்டின் பின் மதப் பீர சாரத் தூதுவர்களாகவும் போதகர்க ளாகவும் வரத்தலைப்பட்ட முஸ்லிம்கள் 14ம் நூற்றண்டிலேற்பட்ட மாலிக்கபூரின் மதுரைப் படையெடுப்பின் போது பாண்டி நாட்டு மக்களாக வாழ்ந்தனர். ஆயினும் இவர்களின் வரவு பல சமயங்கள் தமிழ் நாட்டில் ஊறித் திழைத்த பின்பே ஏற்பட் டமையினுல் தமது தாய் மொழியிலமைந்த கருத்துக்களையும் அம்மொழியறிவற்ருே ருக்குக் கூற வேண்டிய இன்றியமையாத நிலையில் இவர்களும் தமிழ் கற்று இலக்கி யம் செய்ய வேண்டியேற்பட்டது. சமணர், வைணவர், சைவர், பெளத்தர் ஏன் கிறித் தவர்களினது இலக்கியப் படைப்புகள் கூட ஆரம்பகாலத்தில் சம ய ச் சார்பானதா கவே காணப்படுகின்றமை வெளிப்படை யான உண்மை. ஆங்கில இலக்கியத்திலும்

ஆ. முகம்மது யெஹியா 131
இதே நிலைமையைத் தான் நாம் ஆரம்ப காலத்தில் காண முடிகிறது. ஆங்கில இலக் கியத்திலுள்ள சில சமய அமிசங்கள்’ என்ற தமது நூலில் ருேச் மக்கோலே என்பவர், 'ஏழாம் எ ட் டா ம் நூற்ருண்டுகளில் வாழ்ந்த ஆங்கி லக் கவிஞர் ஆங்கில முறைப்படி ஆங்கில மரபுக்கியைய தமது நூல்களை யாத்தாலும், அவர்களின் இலக் கியப் படைப்புக்களுக்கு அடிப்படையாய் அமைந்தவை இலத்தீன் மொழியிலிருந்த கிறித்த மதஞ் சம்பந்தமான கருத்துக்களே யாம்' என்று கூறியுள்ளார். இக்கூற்றி லுள்ள ஆங்கிலத்துக்குப் பதிலாகத் தமி ழையும், இலத்தீனுக்குப் பதிலாக அரபை யும், கிறித்தவம் என்பதற்குப் பதிலாக இசு லாம் என்பதையும் மாற்றியமைத்தால் இங்கு கூறப்பட்டுள்ள கூற்று இசுலாமியர் களின் தமிழ் இலக்கியத்துக்கு மி கவு ம் பொருத்தமானதொன் ருகும். எ னி னும் 'பெரும் பாலான இஸ்லாமியர் இலக்கிய நூல்கள் முற்றிலும் மதத்தை அடிப்படை யாகக் கொண்டெழுந்தமையால் முஸ்லி மல்லாதாருக்கு அதில் சிரத்தை ஏற்பட வில்லை. எனவே இந்தச் சூழ்நிலையில் இஸ்லா மியரல்லாதோர் இஸ்லாமியர் இலக்கியத் தில் கவனம் செலுத்தியிருக்க வேண்டு மென்ருே அல்லது விரிந்த தமிழ் இலக்கி யப் பரப்பில் இஸ்லாமியரினது இலக்கியத் துக்குத் தக்கதோர் அந்தஸ்து அளித்தி ருக்க வேண்டுமென்ருே இஸ்லாமியர் எதிர் பார்ப்பது பொருத்தமுடையதாகாது. இஸ்லாமியர் தம் இலக்கியத்தை இஸ்லாமி யர் போற்றி இஸ்லாமியரல்லாதோரும் அறியச் செய்யும் பொறுப்பு இஸ்லாமியரு டையதேயாகும். இவ்வகையில் இஸ்லாமி யர்களாகிய நாம் பெரியதோர் தவறை இழைத்து விட்டோம்." எ ன் ற வாறு தென் இந்திய முஸ்லிம் கல்விக் கழகத்தின் பொன்விழாவில் சென்னையில் 2ம் நாள் நிகழ்ச்சிக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி யாற்றிய தலைமையுரையில் ஜனப் ஏ. எம். ஏ. அஸிஸ் அவர்கள் குறிப்பிட்டமை நோக் கற்பாலது.
ஆஞல் சமயச் சார்பு, இஸ்லாமியர் தமிழிலக்கியப்புறக்கணிப்புக்கு ஒரு காரண மென்ருல் சமண, வைணவ, பெளத்த ஏன் சைவ இலக்கியங்கள் கூடப் புறக்கணிக்கப்

Page 150
132 தமிழ் இலக்கிய வரலாற்றில்.
பட வேண்டுமே? ஏன் அவ்வாறு புறக்க ணிக்கப்படவில்லையென்றல் அதற்கான காரணம் உறவு முறையில் காணப்படுகி றது. சைவம்தான் தமிழ்; தமிழ்த்தான் சைவமென்ற அளவுக்குத் தமிழும் சைவ மும் நீண்ட காலத் தொடர்புடையன. இதேபோற்ருன் சற்றுக் கால வேறுபாடி ருப்பினும் சமணம், வைணவம், பெளத்தம் எ ன் பன வு ம் தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. அடிப்படையில் ஒற் றுமையுடையனவான, ஒரே நா ட் டி ல் தோன்றி வளர்ந்த இச்சமயங்கள் அதே சூழ்நிலையில் தோன்றி வளர்ந்த தமிழுடன் நெருங்கிப் பழகிய காலமும் தொடர்பும் கூடுதலானதாகையால் இச்சமயங்கள் தமி ழிலக்கியத்துக்குச் செய்த படைப்புகளைத் தமிழ்கூறும் நல்லுலகு விரும்பி ஏற்று நுக ரும் தன்மையினவாயின. ஆனல் இஸ் லாமோ அன்றில் கிறிஸ்தவமோ ஆசியா விற்ருன் தோன்றினலும் இந்தியாவிற் முேன்முமையால் தமிழுடன் நெருங்கிப் பழகும் நீண்டகால வாய்ப்புக் கிடைக்கப் பெரு தொழிந்தன. எனவே பல வளர்ச் சிப் படிகளைத் தாண்டிவிட்ட தமிழுக்கு ஏறக்குறைய 14ம் நூற்ருண்டளவிற்ருள் கிடைத்த இஸ்லாமியரின் நட்புப் புதி தானதொன்றே. இதுவரை ஏ ற் பட் டு விட்ட தமிழிலக்கிய வளர்ச்சியில் இஸ்லா மியரின் பங்கு மிகவும் அரிதான நிலையில் அது காலங்கடத்ததொன்ரு கவும் காணப் பட்டதெனலாம். தவிர, விசய நகரத்தை ஆண்ட இந்து மன்னர், இஸ்லாமிய சமயம் தென்னடுகளில் பரவவொட்டாது தடுத்து இந்து சமயத்தை வளர்க்க முற்பட்டு நின்ற காலை இவர்களின் தமிழ்ப் பணிக்கு வர வேற்பு எங்கிருந்து கிடைக்கும்? இந்நிலை யில் தமிழ்நாட்டு மதங்களுடன் இரண்ட றக் கலந்து உறவு கொண்டாடவும், இவர் கள் பற்றியும், இவர்களின் இலக்கியத் தன்மை பற்றியும் இஸ்லாமியரல்லாதோர் நன்கறியவும் மிக நீண்ட காலத் தவணை தேவையான நிலை யி ல் இஸ்லாமியரின் இ ல க் கி யங் க ள் புறக்கணிக்கப்பட்ட தன்மை வரலாற்று ரீதியிலும் காரண முடைத்து.
முஸ்லிம் புலவர்களும் எழுத்தாளர்க ளும் கடந்த காலங்களில், தமிழிலக்கியத்

ஆ. முகம்மது யெஹறியா
திற்கு மகத்தான தொண்டாற்றியுள்ளன ரெனினும் ஆரம்ப காலத்தில் அதாவது தமிழ் பேசப் பழகி இலக்கணப் பயிற்சி பெற்று எழுதத் தொடங்க முதல் எனக் கூறலாம்-இ க்காலத்தில் அவர்கள் செய்த இலக்கியங்கள் தமிழை அரபி மொழியில் எழுதியனவாகவே காணப்பட்டன. முஸ் லிம் இலக்கிய நூல்கள் தமிழில் ஆக்கப் பட்ட காலத்திலும் கூட அவற்றுள் பெரு வாரியான அரபுப் பதங்களும் பார்ஸிப் பதங்களும் இடம் பெற்றிருந்தமை முஸ்லி மல்லாதார் மத்தியில் அலை செல்வாக்குப் பெ ரு  ைம க் கா ன காரணங்களாயின. பொதுவாக, பல்வேறு சமயங்களை அடிப் படையாக வைத்து எழுந்த இலக்கியங்க ளில் ஏன் தமிழிலக்கிய படைப்புகளிற்கூட அவ்வச் சமயங்களோடு மிக நெருங்கிய தொடர்புடைய சொற்கள் இடம் பெற் றுள்ளதைக் காணலாம். பெளத்த மத அடிப்படையில் தோன்றிய மணிமேகலையில் பாளிமொழிச் சொற்களைக் கா ண் ப து போன்றே இஸ்லாமிய அடிப்படையிற்றேன் நிய நூல்களில் அரபுச்சொற்கள் காணப் படுவதில் என்ன தவறிருக்கின்றது என்று கேட்பாருமுளர். ஆளுல் ஒரு இலக்கியப் படைப்பைப் பார்த்து எத்தனை செந்தமிழ்ச் சொற்கள், எத்தனை பேச்சுத்தமிழ்ச் சொற் கள், எத்தனைகிராமியச்சொற்கள் என்றெல் லாம் கணக்குப் போடும் தமிழ் நிலைக்கு, முத்தமிழ் போற்றும் தமிழ் நிலைக்கு, வட மொழியைத்தானும் ம தி யா த தமிழ் நிலைக்கு அரபுச் சொற்களின் கலப்பு எம் மட்டுப் பொருந்துமென்பது கூ ற ப் பட வேண்டியதொன்றன்று.
ஆனல் குமரகுருபர சுவாமிகள்
*குறவர் மகட்டுச் சலாமிடற்கு ஏக்கறு கு மர னை முத் துக் கு மர னை ப் போற்றுதும்’
எனச் "சலாம் என்ற அரபிச் சொல்லைப் பிரயோகிப்பதும் அருணகிரிநாதர் இரு இடங்களில் இச் சொல்லையும், சபாசு என்ற சொல்லையும் அமைத்துக் கவி செய்தமை யும்,சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகத் தில் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசி கர்" சபாசு" என்ற சொற் பிரயோகம் செய் ததுடன் மைஹாத் தேக்கர் - பொல் நா?

Page 151
தமிழ் இலக்கிய வரலாற்றில்.
போன்ற உருது மொழிச் சொற்பிரயோகம் செய்தமையும் இஸ்லாமியரின் தொடர்பி ஞல் தமிழிலக்கியத்திலேற்பட்ட பாதிப் பாகக் கொள்ளப்பட வேண்டியவை. ஆனல் இப் பன்மொழிப் பாவிப்பை இஸ் லாமியர் தமது இலக்கியங்களில் கையாளு வதன் காரணமும் இவர்களின் இலக்கியம் தமிழிலக்கிய வரலாற்றில் முக்கியம் பெரு மைக்கான காரணங்களிலொன்றென்பது குறிப்பிடற்பாலது.
இலக்கியம் தனது சூழலின் அடிப்படை யில் தோற்றம் பெறவேண்டும். அப்போது தான் அதற்குச் சமுதாயத்தில் செல்வா க் குக் கிடைக்க முடியும். பொதுவாக இஸ் லாமியர் ஒரு கால கட்டத்தில் எழுதிய இலக்கியங்களெதுவும் தத்தம் சூழலினடிப் படையில் அமையவில்லை என்றே கூறவேண் டும். ஆனல் சூழல் முரண்பாடு சீருப்புரா ணத்தில் காணப்படுகின்றது எனக் கூற லாம். இப் புராணத்தின் பாட்டுடைத் தலை வர் அரேபியாவைச் சேர்ந்த முகம்மது நபி (ஸல்) அவர்கள். ஆனல் அரேபியா எனக் கொண்டு நாட்டு-நகர வர்ணனைகள் அனைத் தும் தமிழ்நாட்டு வருணனைகளைப் படைத் துள்ளார் இப் புராணத்தின் ஆசிரியரான உமறுப்புலவர். இந்த நிலை கம்பன் போன் ருேரிடம் காணப்படினும் இலக்கியச் சுவைக்காக மட்டுமன்றி அறிவியற் கண் கொண்டும் நோக்க முனைவோருக்கு இவ் வாறமைவது முரண்பாட்டையும், மனக் குளப்பத்தையும் விளைத்து இலக்கியச் சுவை யையே கெடுத்துவிடும் தன்மையினவாகி விடும். இந்த நிலை, இஸ்லாமியரின் இலக்கி யங்கள் பலவற்றில் காணப்படுகின்றமை இவற்றின் நுகர்வுக்கு ஒரு தடையாக இருக்குமென்பதில் ஐயமில்லை.
பொதுவாகஇஸ்லாமியரல்லாதோரும் விரும்புகின்ற நூல்களான சீருப்புராணத் தையும் மஸ்தான் சாகிபு பாடலையும் நோக் கும்போது இவற்றின் முக்கியத்துவத்துக்கு நூலமைவில் சூழலின் பாதிப்பையும் ஒரு முக்கிய காரணமாகக் கொள்ளலாம். சீருப் புராணம் கம்பராமாயணத்தோடு பெரி தும் ஒற்றுமையுடையதாயிருப்பது மட்டு மன்றி தமிழ்நாட்டுப் பின்னணி சார்ந்து அந்நாட்டு வர்ணனைகளுடன் கூடியதாக

ஆ. முகம்மது யெஹியா 133
வும் அமைந்துள்ளது. இந்நூலின் நாட்டுப் படலத்தில் ஒரு பாட்டு சூரியனைத் தொழு வதையோ அன்றிக் குல தெய்வ வணக்கம் செய்வதையோ அனுமதியாத இஸ்லாத் துக்கு முரணன கரு த் து  ைட ய த ரீ க க் காணப்படும் அதே வேளையில் தமிழ்நாட் டுப் பழக்க வழக்கமான அந்தச் சூழ் நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றமை யைக் காண்க .
கலன் பல வணிந்து தொண்டியுண் டெழுந்து கதிரவன் தனைக்கையாற் ருெழுது குலருதரு தெய்வ வணக்கமுஞ்
h− செய்து குழுவுடன் உழுநர்கள் கூண்டு நிலந்தனை வாழ்த்தி வலக்கரங்
குலுக்கி நென்முளை சிதறிய தோற்றம் பொலன்பல சிறப்பு விடனற
நெருங்கிப் பொன் மழை பொலிவது போன்றும்
சூழலின் வயப்பட்ட உமறுப்புலவர் தன்னை யறியாமலே தனது மத நம்பிக்கைகளைக் கை நழுவ விடும் தன்மையே இங்கு காணப் படுகின்றது.
தவிர,மஸ்தான் சாகிபு பாடலில் இந்து சமயக் கோட்பாடுகள் இடம் பெற்றுள் ளன. இதற்கு சாகிபு அவர்கள் வாழ்ந்த சுற்ருடலே காரணமாக இருக்கலாம். இவ ரது பாடலிலுள்ள மனுேன் மணியக் கண்ணி நந்தீஸ்வரக் கண்ணி முதலிய பகுதிகளிலே இவ்வாறு இந்து சமயக் கருத்துக்கள் புகுத் தப்பட்டிருப்பதைக் காணலாம். சிவஞான சித்தியாரில் இந்துமதக் கிரியை என்று குறிப் பிடப்படும் ஆத்மசுத்தி, ஸ்தான சுத்தி, மந் திர சுத்தி, திரவியசுத்தி, தேவசுத்தி ஆகிய பஞ்சசுத்திகளைப் பற்றி மஸ்தான் சாகிபு தனது நிராமயக் கண்ணியில்.
பஞ்ச சுத்தி செய்து பழவடியாரென்ன வுன்னை
யஞ்சலி செய்தே யடைந்தே
நிராமயமே
என்று குறிப்பிட்டுள்ளார். தாயுமான சுவாமிகளும் இதே கருத்தில் பாடியிருப்ப

Page 152
134 தமிழ் இலக்கிய வரலாற்றில்.
தும் குறிப்பிடற்பாலது. இவ்வாறு சூழ வின் பாதிப்பில் சிக்குண்ட இஸ்லாமியரின் இலக்கியங்கள் மட்டும் பிற மதத்தவர்க ளாலும் நுகரப்பட ஏற்புடைத்தாகும் போது சூழலைப் புறக் கணித்தெழுந்த இஸ் லாமியர் இலக்கியங்கள் ஏன் தமிழிலக்கிய வரலாற்றில் புறக் கணிக்கப்பட்டதென்ப தற்கான விடையை நாமே கூறிக் கொள்ள லாம்.
வாழ்வைப் பிரதிபலிப்பதே உயர்ந்த இலக்கியம் எனச் கொண்டு போலும் மூவேந்தர் காலத் தமிழன் காதல், போர் பற்றிப் பாடினன். பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் எழுந்த காலத்துத் தமிழன் அறம் போதித்தான், பல்லவர் காலத்தில் பக்தி பாடிஞன், நாயக்கர் காலத்தில் தல புரா ணம்பாடினன். இவை சமயச்சார்பு கடந்த நிலை; சமுதாயப் பிரச்சினைகளின் அடிப் படையில் இலக்கியம் எழுந்த நிலை. ஆனல் இந்நிலையிற் கூட இஸ்லாமியர், இஸ்லாம் பற்றியே டாடிக் கொண்டிருந்த நிலை ஒரு முரண்பாடான தன்மையாகக் காணப்பட் டது. சமுதாயப் பின்னணியில் இஸ்லாமி யர் இலக்கியம் படைத்திருந்தால் வேறு பட்ட சமுதாயப் பின்னணியில் தோன்றிய இலக்கியங்களுடன் முரண்பட, அந்நிலையி லாவது சிறந்த இலக்கியப் படைப்புகளை இஸ்லாமியர் தோற்றுவித்திருக்கலாம். மனிதன் யதார்த்தம் பற்றிக் கனவு கண்ட காலை, கற்பனைக் கடவுள் பற்றியும், அரே பியாவைப் பற்றியும், சமய குரவர்கள் பற் றியும் இஸ்லாமியர் பாடிய போது அது முரண்பாட்டையும், குழப்பத்தையும் ஏற் படுத்தி அவர் தம் இலக்கியத்தை நுகரா தொதுக்க வழி தேடிக் கொடுத்தது. இந் நிலை தமிழிலக்கிய வரலாற்றிலும் அவர் களுக்குப் புறக்கணிப்பையே தேடிக் கொடுத்ததெனப் வேண்டும்.
மதம், பொருளியல், அரசியல் லாபம் கருதிப் பல மொழிகளையும் இஸ்லாமியர் கற்றமையால் பரவலான மொழி அறிவு டையோராயிருந்தன ரேயன் றி எம் மொழி யிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தோர் குறைவாகவே காணப்பட்டனர் எனலாம். கல்வி விடயமாக அவர்களுக்குக் கவனம் செலுத்த நேரமிருக்கவில்லை. ஆனல் சம

ஆ. முகம்மது யெஹறியா
யக் கல்வி நிறைய வாய்க்கப் பெற்றிருந்த னர். இதனுல் அன்றைய உலக இலக்கிய நிலை; அவற்றின் மாறிவரும் தன்மை, என்பன பற்றி அவர்கள் பொதுவாக அறிந் திருந்தாலும் ஆழமாக அறிய வாய்ப்பேற் படவில்லை. தவிர செல்வந்தனுன சீதக் காதி வள்ளல் பொருளுதவி செய்து முகம்மது நபியைப் புகழ்ந்து பாடும் படி உமறுப் புல வரைக் கேட்க, அவர் 'முதுமொழி'யைப் பாடியமையை நோக்கும்போது அக்கால பொருளியல் சார்ந்த ஆதரவும் ஆத்மீக ரீதியிற்ருன் அமைந்திருந்ததென்பதும் புல ணுகின்றது.
அதுமட்டுமன்றி, விமர்சனம் ஒப்பீடு என்பனவே ஒரு இலக்கியத்தின் தன்மை யைச் சிறப்பாக்கித் தரமானதாகவும் செய் கிறது. விமர்சனம் செய்யப்பட்டாலன்றி இலக்கியம்பற்றி மக்கள் சிறப்பாக அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. ஒப்பிட்டா யாத போதும் இலக்கியம் பற்றிச் சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியாது. மக்களிடையே இஸ்லாமியர் இலக்கியம் பற்றிய கருத்துக் குழப்பத்தை நீக்கவிமரிசனம்பணியாற்றியி ருக்கலாம். ஏனைய தமிழ் இலக்கியங்களுக்கு நிகர் என்ற வகையை உணர்த்த ஒப்பீடு செய்திருக்கலாம். இந்நிலையை இழந்த நிலை யில் இஸ்லாமியர் தம் இலக்கியங்கள் வாச கர் கூட்டத்தைக் குறைக்க வழிதேடிக் கொண்டன வெனலாம்.
என்ருலும் இன்றையத் தமிழிலக்கிய உலகில் இஸ்லாமியர் இலக்கியங்கள் ஒர ளவு சிறப்படையும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன எனல் வேண்டும். முகம் மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு 'இரத்தின முகம்மது காரணச் சரித்திரமாய்த் தோன்றி தாவுத்ஷா அவர் களின் ‘நாயக மான்மியமாய் மாறி இன்று கபூர் அவர்களின் ‘நாயகமே வெளியீட் டில் தாலாட்டு ரூபத்தில் வெளிவந்திருப்ப தொன்றை மாத்திரம் நோக்குமிடத்து, காலப் போக்கின் காரணமாய் ஏற்பட்டு வந்திருக்கும் மாறுதல்களையும் மறுமலர்ச்சி யையும் இஸ்லாமியர் முற்ருகப் புறக் கணித்து விடவில்லே என்பது புலணுகின் றது. தவிர சென்னை தாருல் இஸ்லாம் பத் திரிகை ஆசிரியரான பா. தாவுத் ஷா அவர்

Page 153
தமிழ் இலக்கிய வரலாற்றில்.
களின் பொதுவாக இலக்கிய உலகிலும், குறிப்பாகப் பத்திரிகை உலகிலும் ஏற்ப டுத்தி விட்டிருக்கும் மறுமலர்ச்சியைக் குறிப்பிடாதிருக்க முடியாது.
மேலும், சுப் பிரமணிய பாரதி, நாமக் கல் கவிஞர், தேசிய விநாயகம்பிள்ளை, கல்கி, ரா. பி. சேதுப்பிள்ளை, பாரதிதா சன் போன்றேர் உண்டு பண்ணிவிட்டிருக் கும் மறுமலர்ச்சியும் புதுமையும் முஸ்லிம் களையும் ஓரளவிற்குக் கவர்த்துவிட்ட தென்றே கூறலாம். அதன் பயணுக இன்று இஸ்லாமியரின் மத்தியிலே ஆர். பி. எம். கனி, அப்துல் றஹீம், அப்துஸ்ஸமத், அப் துல் வஹாப் போன்ற இளம் எழுத்தாளர் கள், எண்ணற்ற இளம் கவிஞர்கள் பலரை யும் காண்கிருேம். சமயக்கட்டுப்பாட்டின் பிடியினின்றும் அப்பாற்பட்ட நிலையில், சமுதாயப் பிரச்சினைகளின் பின்னணியி னின்று எழுதுகின்ற இளங்கீரன் போன் ருேரும் எம்மத்தியிற்றன் இன்று இலக்கி யம் படைக்கின்றனர். பொதுவாகக் கூறு மிடத்து இக்காலை, பெயர் குறிப்பிடாத நிலையில் இது யாருடைய படைப் பெனக் கூறமுடியாத தன்மையினவாக எத்த னையோ நாவல்கள், சிறு கதைகள், கவி தைகள் எழுந்திருக்கின்றன எனப் பெரு
மைப் படலாம்.
ஆயினும் தமிழ் இலக்கிய வரலாறுகள் இன்னும் இஸ்லாமியர் இலக்கியங்களை ஏன் இருட்டிப்புச் செய்ய வேண்டும்? தமிழ் இலக்கிய வரலாற்றை மொழி அடைப்ப டையில் ஆராயாது சமய அடிப்படையில் பாகுபடுத்துவது முறையாகாது என்ப தைத் தமிழிலக்கிய வரலாற்ருசிரியர் ஏனே இன்னுமுணரவில்லை. இதுபற்றிப் பார்க் கும் போது சி. கணேசையர் எழுதிய ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் என்ற நூலொன்றில் 101 ஈழத்துப் புலவர் களையிட்டுக் கூறுகின்ரு ராயினும் ஒரே யொரு இஸ்லாமியப் புலவரைக் கூட க் குறிக்கக் காணுேம். சைமன் காசிச் செட்டி அவர்கள் எழுதிய 'தமிழ்ப் புளூராக்" என் னும் ஆங்கில நூலிற்கூட ஒரு இஸ்லாமியப் புலவரையிட்டாவது இவர் குறிப்பிடாமை இவரது ஆய்வின் பக்கச் சார் பையே காட்டி நிற்கிறது. முத்து இராசாக் கண்ண

ஆ. முகம்மது யெஹியா 135
ஞர் எழுதிய தமிழ் எங்கள் உயிர் என்ற நூலிலும் மஸ்தான் சாகிபு பாடல் என்ற ஒரு அத்தியாயத்தை மட்டும் வகுத்து 260 பக்கங்களைக் கொண்ட தமது நூலில் 84 பக்கங்களில் மட்டுமே கூறுகின்றர். பேரா சிரியர் செல்வநாயகம் அவர்கள் தனது 260 பக்கங்களைக் கொண்ட தமிழ் இலக் கிய வரலாறு (3ம் பதிப்பு) என்ற நூலில் 14 பக்கத்தில் மட்டுமே இஸ்லாமியர் இலக் கியம் பற்றிக் குறிக்கின் ருர், பூரண லிங்கம் அவர்கள் எழுதிய 426 பக்க நூலிற் கூட 24 பக்கம் மட்டுமே இது பற்றிக் காணப் படுகின்றது. அதே போன்றே கா. சுப் பிர மணியபிள்ளை அவர்கள் எழுதிய 516 பக் கங்களைக் கொண்ட நூல் ஒரு பக்கம் அளவே இஸ்லாமியப் புலவர் பற்றிக் குறிக் கிறது. ஆனல் 'பாவலர் சரித்திர தீபம்’ என்ற அ. சதாசிவம்பிள்ளை (J. R. Arnold என்றும் அழைக்கப்படுகின்றர்) அவர்க ளின் நூலில் இஸ்லாமியப் புலவர் முப்பது பேர் பற்றிக் கூறப்படுகிறமையும், 'மட் டக் களப்புத் தமிழகம்' என்ற வீ. சி. கந் தையா அவர்களின் நூலில் ஒரளவு இஸ்லா மியப் புலவர்கள் பற்றிக் குறிப்பிடப்பட் டுள்ளமையும், அடிகளார் படிவ மலரில் அவர்தம் காலத்தில் வாழ்ந்ததாகக் குறிக் கப்படும் இஸ்லாமியப் புலவர்கள் பற்றிக் கூறப்படுகின்றமையும் ஓரளவு ஆரம்ப முயற்சிகள் போன்று காணப்படுகின்றன எனலாம். ஆயினும் ஆ. வி. மயில் வாகனம் எழுதிய ‘புலவர் ஆற்றுப்படையும் சு. வித் தியானந்தன் எழுதிய "இலக்கியத் தென் றல்’ என்ற நூலும் இஸ்லாமியர் இலக்கி யம் பற்றி ஓரளவாவது குறிப்பிடுவது வர வேற்கப்பால தொன்று.
ஏதோ கூறவேண்டுமென்பதற்காகக் கூற முனைந்த சில தமிழ் இலக்கிய வரலாற் ருசிரியர்கள் இஸ்லாமியரிலக்கியம் பற்றித் தெளிவின்மை காரணமாகப் பல தவறுதல் களையும் இழைத்துள்ளமையை நாம் காண முடிகிறது. சி பாலசுப்பிரமணியனரி எம். ஏ. அவர்கள் தமிழ் இலக்கிய வரலாறு எனும் தமது நூலில் நாயக்கர் கால ஆய் வின் போது 'முகம்மதியப் புலவர்கள்" என்ற மகுடமிட்டுச் சில புலவர்களையும் அவர்தம் நூல்களையும் குறிக்கின்ரு ர். இவர் மட்டுமன்றி முத்து இராசாக் கண்ண

Page 154
136 தமிழ் இலக்கிய வரலாற்றில்.
ஞர், கா. சுப்பிரமணிய பிள்ளை போன்ற பல தமிழிலக்கிய வரலாற்ருசிரியர்களும் கூட "முகம்மதியப் புலவர்கள்" எ ன் று குறிப்பது ஏனே தெரியவில்லை. கா: சுப்பிர மணியபிள்ளை அவர்கள் இந்திராயன் படைப் போர், இபுனி ஆண் டான் படைப் போர் என்னும் நூல்களினுசிரிய ரான 'அலியார் ’ப் புலவரை 'அவியார்’ப் புலவர் என்கின்றமையும் ஏனே என்பது விளங்கவில்லை. மேலும், பாலசுப்பிரமணி யனர் வண்ணக் களஞ்சிப் புலவர் பற்றிக் கூறிவிட்டு "முகையித்தீன் புராணம்’ என் ருெருநூலை இயற்றினர் என்கிழுர், இந்நூல் முகையித்தீன் என்பவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்பதைக்கூட யூகிக்க முடியாத ளவுக்கு மயங்கி விட்டார். ஆனல் இஸ்லா மியரான அப்துல் றகீம் பி. ஏ. அவர்கள் பதுறுத்தீன் புலவரியற்றிய முகையித்தீன் புராணத்தை வண்ணக் களஞ்சிப் புலவர் இயற்றினரென்று மயங்குவது ஆராய்ச்சிப் பிசகாகும். தவிர, பால சுப்பிரமணியனுர் உமறுப்புலவர் பற்றிக் கூறுகையில் 'கீழைக் கரையில் சோனகர் வகுப்பில் பிறந்த இவர் இஸ்லாம் மதத்தைத் தழுவினர்' என்கி ருர், சோனகராய்ப் பிறந்து இஸ்லாம் மதத் தைத் தழுவ வேண்டிய அவசியமென்ன? இது பற்றிய அவரது அறிவில் தெளிவில்லை  ெய ன் ப  ைத யே இது காட்டுகின் றது. மேலும் இவர் கவிக் களஞ்சியப் புலவரையிட்டுக் கூறுகையில் சீருப் புரா ணத்தை இயற்றினுரென்ற தப்புக் கணக் கையும் போடுகிருர், தந்தைக்கும் மகனுக் கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மயங்கித் திக்குமுக்காடிய வாறே இவர் தனது முகம்மதியப் புலவர் பற்றிய ஒரி ரண்டு வரிகளிலாய்ந்தவற்றை முடித்துக் கொள்கின்ருர்,
இவ்வாறு இஸ்லாமியரிலக்கியம் தமி ழிலக்கிய வரலாற்றில் ஒர் அணுதைக் குழந் தையாய் அழுது கொண்டு கிடக்கும் நிலை மாற வேண்டுமாயின் 'யாதும் ஊரே யாவ ரும்’கேளிர்”என்பதற்கிணங்கத்தமிழ்கூறும் நல்லுலகு இலக்கிய நுகர்ச்சி செய்தல் வேண்டும். இஸ்லாமியர் கூட இஸ்லாமிய ரின் இலக்கியங்கள் பற்றி அறிந்து கொள் ளப் பல வகைகளிலும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும். பல்கலைக்கழகங்

ஆ. முகம்மது யெஹியா
கள், கல்லூரிகள் போன்றன இது விடய மாக ஓரளவாவது கவனம் செலுத்தின் இத்தன்மை சிறப்பாகும் என எதிர்பார்க் கலாம். அதுமட்டுமன்றி அரசாங்க உதவி யும் இஸ்லாமியரிலக்கியங்களுக்கிருத்தல் அவசியம். இதே வேளை தமிழ் வளர்க்கும் மன்றங்கள், ஆராய்ச்சி மாநாடுகள் போன்றன மாற்ருந்தாய்க் கொள்கையின தாக இல்லாதிருக்க வேண்டியதுடன் புத்த கப் பதிப்பாளரின் ஆதரவும் இவர்களுக் குக் கிடைத்துவிட்டால் இஸ்லாமியரின் இலக்கியங்களும் பல்கிப் பெருகிப் புகழ் பரப்ப வாய்ப்புண்டாகும் எனலாம். என் ரு லும் பொதுவாக, இஸ்லாமியரது இலக் கி யங் கள் குறைபாடுகளுடையனவென இஸ்லாமியரல்லாதோர் கருதுவது சரியோ, பிழையோ அதை நீக்கக்கூடிய முயற்சியை இஸ்லாமியர் செய்யவேண்டிய அதே வேளை யில், எமது இலக்கியங்கள் புறக் கணிக் கப்படுகின்றன என்ற இஸ்லாமிய இலக்கிய கர்த்தாக்களின் கோஷங்களுக்கும் இஸ்லா மியரல்லாதோர் சற்றுச் செவிமடுத்தல் இஸ்லாமியரினது இலக்கியங்களும் தமிழி லக்கிய வரலாற்றில் சிறப்புற வழிவகுக்கு மென எதிர்பார் கலாம்.
ஆ யி னு ம், 'இஸ்லாமியனல்லனன என்னைப்போன்ற வேருெரு சமயத்தவனும் ஈடுபட்டுச் சுவைக்கும் வண்ணம் அவை அமைந்துள்ளன. இப்பண்பையே நான் பெரிதும் பாராட்டுகிறேன்' என்று கலா நிதி க. கைலாசபதி அவர்கள் கவிஞர் புரட் சிக்கமால் கவிதைகளுக்கெழுதிய மதிப்பு ரையில் கூறுவதையும், பாரசீகம், உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ள இக் காவியம் அங்கு பெரு ததோர் அழகினை இங்கு பெறுவதைக் காண்பீர்கள். படித் துப் பாருங்கள்' என யூசுப் - சுலை கா என்ற நூலுக்களித்த அணிந்துரையில் டாக்டர் அ. சிதம்பரநாதஞ் செட்டியார் கூறுவதையும் பார்க்கும்போதும், 'இஸ் லாமியரிலக்கியம் பற்றி ஆய்வோரைக் காணுேம்; அவர்தம் இலக்கியம் பற்றி ஆய்வோருக்குத்தான் அதுவும் தமிழிலக்கி யத்தில் ஒரு பலமான சத்தி என்ற தத்து வம் புரியும்' என்ற கலாநிதி பொ. பூலோக சிங்கம் அவர்களின் கருத்தை நோக்கும் போதும், எதிர்காலத் தமிழிலக்கிய வர லாற்றில் இஸ்லாமியரின் இலக்கியங்களுக் கும் ஒரு சிறப்பான இடம் உண்டெனக் கூறிப் பெருமைப்படலாம்.

Page 155
Ꮷ5 $il I Ꭼ Ꮷ$ ᏧᏂ . 60 Ꮷ5 $ I Ꭽ II Ᏸ
அ
கிந்த புராணத்திலே சுவையான ஒர் உபகதை உண்டு. அதன் சிறப்பைக் கருதி ஒரு படலமாகவே அமைந்துவிட்டார் கச் சியப்ப சிவாசாரியர். பிரமனும் திருமா லும் ஒரு சந்தர்ப்பத்தில் மயக்கமுற்று, முழுமுதற் பொருளின் அடிமுடி தேடிய கதை பலரும் அறிந்ததொன்றுதான். பிர மனும் விஷ்ணுவும் தம்மிருவரில் யார் தலை மைக் கடவுள் என்று வாதம் புரிந்து இறுதி யிலே ஒருவருக்கொருவர் கோபமுண்டா கிப் பெரும் போர் புரியும்போது, சிவபெரு மான் அவ்விருவருக்கும் நடுவில் சொல்லு தற்கரிய ஒர் அக்கினி மலையாய்த் தோன்றி ஞர். தோன்றி, போரிட்டு நிற்கும் இருவ ரும் கேட்கும்படி, "" சோதி மற்றிதன் அடி யும் ஈறும் வரன் முறை தேரும்" என்று அசரீரியாக உரைத்தார். இதைக் கேட்ட அவ்விரு வரும் இம்மலையின் அ டி  ைய யாகிலும் மு டி  ைய யா கி லு ம் கண் டறிபவரே பெரியவர் என்று ஒருவருக்கொ ருவர் சபதம் செய்துகொண்டு, விஷ்ணு மலையின் அடியையும் பிரமன் அதன் முடி யையும் தேடிக் கொண்டு சென்றனர்.

வெகு காலந்தேடியும் காணுமற் களைத்து ஈற்றில் பரமன் அடி பணிந்து அவன் அருள் பெற்றனர் என்பது கதைச் சுருக்கம். தக்ஷ காண்டத்திலே தனது பழைய அனுபவத் தைப் பிரமன், மகன் தக்கனுக்கு உரைப்ப தாக இக்கதை அமைந்துள்ளது.
கதை இருக்கட்டும். இங்கு எமக்கு முக்கியமானது அதிலிருந்து பெறப்படுவ தே. பரம்பொருளை அறிவின் துணையினுல்ஆணவத்தினுல் அறிய இயலாது என்பது கதையின் படிப்பினை. ஆதியும் அந்த மு மில்லா அரும் பெருஞ் சோதி' என்கிறது திருவாசகம் , 'அந்தம் ஆதி என்மஞர் புல வர்' என்பது மெய்கண்ட சாத்திரம்.
புராண வரலாறும், சாத்திர நூலும் எடுத்துக் கூறும் கருத்து அல்லது நம்பிக்கை எமது அறிவின் தன்மை பற்றியதாகும். அதாவது சில பொருட்களின் தோற்றம் முடிவு ஆகியவற்றை எம்மனுேரால் அறிய வியலாது என்பது சித்தாந்த சாத்திரத்தில் மாத்திரமன்றி, இக்காலத்தமிழ் அறிஞர்

Page 156
138 அடியும் முடியும்
எழுத்துக்களிலும் பரக்கக் காணப்படுவ தொன்ரு கும். அடிமுடி தேடி அலுத்தவர்க ளது வரலாறு பிறருக்கு ஒர் எச்சரிக்கை யாய்க் கூறப்பட்டது என்பதில் ஐயமில்லை. அடிமுடி தேடுவதும் ஒரு பொருளின் காரண காரியத்தை அறிவதும் தொடர்பு டையனவே. ஆகவே அடிமுடி தேடுவது ஆகாது என்பது காரண காரியத்தை அறி வதும் கூடாது என்பதாகும். மேலெழுந்த வாரியாகப் புராணங்களைக் கட்டுக் கதை கள் என்று பகுத்தறிவின் பெயரால் எள்ளி நகையாடும் பலர் புராணங்களிற் காணும் இந்நம்பிக்கைக்குப் பலியாகியிருப்பதைப் பார்க்கலாம். புராணங்கள் குழந்தைகளுக் குச் சொல்லும் கதைகள் போன்ற ன என்று ஆதரவுப் பசப்புக் காட்டிப் பேசுப வர்கள் பலர், குழந்தைப் பிள்ளைத்தனமா கப் புராண பாஷையில் பல பொருட்க ளுக்கு விளக்கம் கூறுவதை நாள் தோறும் நாம் காணலாம்.
இது தனிப்பட்ட சிலரது குறைபாடு என்று கூறுவதில் அர்த்தமில்லை. அத்தகை யோரைக் குறை கூறியும் பயனில்லை. எமது சமுதாயத்தில் ஆழப்பதிந்துள்ள ஒரு தத் துவத்தின் - உலக நோக்கின் - வெளிப் பாடு இது எனக் கொள்ளுவதே சாலப் பொருத்தமாகும். அவ்வாறு வி ள க் க ம் கண்டாலேயே, அத்தத்துவத்தின் அடியை யும் முடியையும் ஆராய்வதற்கு வழி பிறக் கும். தனிப்பட்ட ஒருவரின் திரிபுணர்ச்சி அல்லது மருள் (delusion) இரங்கத் தக்க தாயினும் அதிகம் அஞ்ச வேண்டியதொன் றன்று; ஆனல் ஒரு கூட்டத்த வரது அல்லது சமூகத்தினரது பொய்ம்மை (illusion), அச் சமூகத்தவருக்கு மாத்திரமல்லாது பிறருக் கும் பேராபத்து விளைவிக்கக் கூடியதாகும். ஜெர்மானியர் ஆரிய இனத்தவர் என்றும் உலகை ஆளப்பிறந்தவர் என்றும் இரண் டொரு எழுத்தாளர் பிதற்றிய மயக்கமொ ழிகள், நாஜிகளின் (Nazis) உத்தியோக பூர்வமான தத்துவமாகிய பொழுது, சாதாரண ஜெர்மானிய மக்கள் பல்லாயி ரக் கணக்கானேர் அதை நம்பினர்கள். 'விஞ்ஞானிகள்’ சில ரு ம் அதனை *"உண்மை’ என ஏற்றுக் கொண்டனர். அதன் விளைவு உலக ம் நன்கறிந்ததே. அதைப் போலவே இரண்டாவது உலகப்

க. கைலாசபதி
போருக்குப் பல ஆண்டுகள் முன்னிருந்து யப்பானிலிருந்த ஆளும் வர்க்கத்தினர், அந்நாட்டு அரசர் கடவுளின் குமரர் என்ற ஐதீகத்தைத் தேசத் தத்துவமாகக் காத் துப் பேணி வந்தனர். இது ஒரு மாபெரும் பொய்மையேயாகும். ஆயினும் அதை நம் பிய பல்லாயிரக்கணக்கான சாதாரண போர் வீரர்கள் தாம் கடவுளுக்காக இறப் பதாக எண்ணிக் கொண்டே இறுதிவரை போரிட்டு மடிந்தனர். இவை போன்ற உதாரணங்கள் ஏராளம் உண்டு.
இத்தகைய அமைப்பிலுள்ள பேரா பத்து யாதெனில், ஒத்துப் போதல் என்ற கொள்கையினடிப்படையில் எதிரான அல் லது மாறுபட்ட சித்தனைகள் அடச்கி ஒடுக் கப்படுவதாகும் அமெரிக்காவில் பொது வுடைமைக் கட்சி. சட்ட விரோதமாக்கப் பட்டது இவ்வடிப்படையிலேயே ஆகும். சில நம்பிக்கைகள் இடைவிடாத பிரசா ரத்தின் விளைவாய்த் "தேசிய" உண்மைக ளாய் அமைக்கப்பட்டுவிடுகின்றன. பகுத் தறிவின் அடிப்படையில் சமயச் சடங்குக ளும், புராணச் செய்திகளும் மறுத்துரைக் கப்படும் அதே வேளையில், புதிய ஐதீகங் கள் நிலை நாட்டப்படுகின்றன. இதற்குக் காரணம் இல்லாமலில்லை. கருத்துக்களும் நம்பிக்கைகளும் ஒவ்வொரு காலச்சமுதா யத்தினடியாய்ப் பிறந்து நிலவுவன. அவ் வச் சமுதாயத்துக்குப் பக்க பலமாயமை வன. அவற்றை மாற்றுவது இலகுவான காரியமல்ல. அடிப்படையான சமுதாய மாற்றம் ஏற்படும்பொழுதுதான் அவற்றை மாற்றியமைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி றது. அங்கும் கூட அரசியற் பொருளாதார நிறுவனங்கள் மாற்றப்படும் வேகத்தைவி டக் குறைந்த வேகத்திலேயே சிற்சில எண் ணங்கள் மறைகின்றன, எனவே தாம் பிறந்த சமுதாயத்தின் பெளதிக நிலைமை மாறிய பின்னரும் நீடித்து நிலைக்கும் ஆற்றல் கருத்துக்களுக்கும் நம்பிக்கை களுக்கும் உண்டு. அதனுல் தவருன கருத் துக்களைச் சாடவேண்டுவது இன்றியமை யாதது. ஆணுல் கருத்துக்களைக் கருத்துக் களினல் மாத்திரம் வெல்ல முடியாது என் பதும் மனங்கொள்ள வேண்டியதே.

Page 157
-Պ ք եւ մ) (10ւԶ. եւ մ
இந்நோக்கிற் பார்க்கும்போது அடி முடி தேடிய கதையானது, எமது சமுதா யத்திலே பலரால் நம்பியோ, நம்பாமலோ ஏற்றுக் கொள்ளப்படும் எண்ணமொன்றின் குறியீடாக உள்ளது என்று கூறலாம். எமது கலை, இலக்கிய உலகிற்காணும் பல குறைபாடுகளும், தயக்க மயக்கங்களும் இவ்வெண்ணத்தினின்றும் தோ ன் று வ னவே. இவ்வெண்ணத்தின் அடிப்படையை யும், அதன் வெளிப்பாடுகளையும் சுருக்க மாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக் கமாகும். மெய்யியலாளரின் பரிபாஷையில் கூறுவதானல், அறிவுக் கொள்கையின் (Epistemology) g2G Spy syth & LDIT as goil வாய்வு அமையும்.
அறிவுக் கொள்கை சம்பந்தமான இவ் வாராய்ச்சியை ஒரளவு வரலாற்றடிப்படை யில் நடத்துவது விரும்பத்தக்கது. அது மட்டுமல்ல; இருபதாம் நூற்றண்டிலும் பெரும்பாலான இந்தியக் கல்வியாளரும், அரசியற் தலைவர்களும் முக்கியமான பிரச் சினைகளுக்குப் பண்டைய நூல்களிலிருந்தே பிர மாணங்கள் காட் டு கின் ற ன ர். மகாத்மா காந்தி, திலகர், வினுேபாவே, அரவிந்தர் முதலியோர் அடிக்கடி பகவத் கீதையையும், ராஜாஜி, கே. எம். முன்ஷி முதலியோர் கீதையோடு இதிகாசங்களை யும் துனேக்கிழுப்பதைக் காணலாம். இவர் களைப் போலவே பெரும்பான்மைத் தமிழ்த் தலைவர்கள் திருக்குறளேத் தமிழ் வேத மாய்க் கொண்டு வேண்டியவாறு மேற் கோள் காட்டுவதும் கண்ணுரக் காண்ப தொன்று. ஆக, பல நூற்ருண்டுகள் கழிந்த பின்னரும் சிற்சில நூல்கள் காலங்கடந் தவையாய்க் கருதப்படுவது வெளிப்படை.
மிகப்பழைய நூல்களிலிருந்து மேற் கோள்காட்டித் தமது கூற்றுக்கு அரண் செ ய் வது சம்பந்தப்பட்டவர்களுக்குப் பெரிதும் பயனளிப்பதால் மட்டும், அவர் கள் நடைமுறை வாதிகளாகவோ, பயன் பாட்டு வாதிகளாகவோ அவ்வாறு செய்கி ருர்கள் என்பதற்கில்லை. அவ்வாறு செய் யும் ஒரு மரபும், அம்மரபுக்கு ஆதாரமான ஒரு நம்பிக்கையும் இந்திய மெய்யியல் வர லாற்றில் முதன்மை பெற்று வந்திருக்கின் றன.

க. கைலாசபதி 139
இந்திய மெய்யியல் வரலாற்றைப் படிப்பவர்க்கு முனைப்பாகத் தோன்றும் ஒரு பண்பு உண்டு. "இந்தியாவில் எழுந்த மெய்யியல் உட்பிரிவுகள் யாவும் வேத உப நிடதங்களையே ஆதாரமாய்க் கொண் டவை. இந்திய மெய்யியல் முழுதுக்கும் உபநிடதங்களே மூலாதாரம்" . வேதசம uUúD (Religion of the Veda) steát po 15IT6ú9G6u Lleol Bibô% Lŷ ái'L''' (Bloomfield) 67 6ärp e.g., 5°ifl யர் கூறுகிருர்: ""புறச்சமயமாகிய பெளத் தம் உட்பட முக்கியமான இந்தியச் சிந் தனை வடிவங்களில் வேதத்தில் வேர் விட்டு வளராதது ஒன்றேனும் இல்லை". உண்மை யில் உலகாயதம் ஒன்றினைத்தவிர இந்திய மெய்யியற் பிரிவுகள் வேத உபநிடதங்களை மூலத் தோற்றுவாயாய்க் கொண்டவையே. பண்டைய இந்திய, அல்லது வேதங்கள் வழி வந்த, சிந்தனைகள் உபநிடதங்களிலே நிறைவு பெறுகின்றன என்பர். இவ்வுப நிடதங்களின் பிழிசாருகவே வியாச முனி வர், பல்வேறு சூத்திரங்களினல் ஒரு நூல் இயற்றினர்; அதன் பெயர் பிரமதத்திரம் அத்துவைதத்தை நிறுவிய சங்கரர், துவை தத்தை நிறுவிய மத்துவர், விசிஷ்டாத் துவைதத்தை நிறுவிய இராமானுசர் என் போரெல்லாம் பிரம சூத்திரத்துக்குப் பாடி யங்கள் எழுதியோராவர். பிரம சூத்திரங் களையும் உபநிடத வாக்கியங்களையும் முரண்பட்ட வகையில் விளக்கியே இவர் கள் தத்தம் மதங்களைச் சாதித்தனர். இது பற்றி இராதா கிருஷ்ணன் கூறுகிருர் பிற் காலத்திலே எழுந்த மெய்யியற் பிரிவுகளைச் சார்ந்தோர், தமது கோட்பாடுகளுக்கும் உபநிடதங்களுக்கும் உடன்பாடு காண்பிப் பதில் காட்டும் ஆவல் இரங்கத் தக்கதா யுள்ளது. தமது கூற்றுக்களை, உபநிடதக்க ளின்மேற் சுமத்த முடியாத விடத்தும் அவ் வாறு செய்யவே படாத பாடுபடுவர்."
இதிலிருந்து பெறப்படுவது ஒன்று தான் இந்திய மெய்யியலைப் பொறுத்தள
வில், "ஆராய்ச்சி என்றைக்கோ முடிந்து, முடிவுகளும் அறுதியாக வெளியிடப்பட்டு விட்டன; பின்வந்த ஞானிகளின் ஆராய்ச்சி கள் யாவும் அம்முடிவுகளைச் சரியாக விளங் கிக் கொள்வதன் பொருட்டே மேற் கொள்ளப்பட்டன.'

Page 158
Î40 sgyệp ưy tỏ G2ụ uy tô
வேதங்கள் இறைவனுல் அருளப்பட்ட ன வாய்க் கொள்ளப்படுவதால் வேத உப நிடத வழி வரும் " "உண்மைகள்’’ மக்க ளால் அவரவர் சக்திக்கும் பக்குவத்திற்கும் ஏற்ப அறியப்படல் வேண்டுமேயன்றி, புதி தாகக் கூறத்தக்க உண்மைகள் இனி உண்டு என்பதில்லை. இவ்வடிப்படை நம்பிக்கை யின் விளைவுகள் பாரதூரமானவை. அவற் றுள் ஒன்று இந்நம்பிக்கை வரலாற்று நோக் குக்கு அறவே இடமளிக்காததாகும். எக் காலத்தவர்க்கும் பொருந்தும் உண்மைகள் ஏலவே கூறப்பட்டு விட்டபடியால் அவை காலங்கடந்தவையாகின்றன. ஆக வும் அவற்றைக் கால அடைவில் ஆராயும் அவ சியம் இல்லாது போகின்றது. போகவே, அவற்றைக் காரண் காரிய நியதிக்குட்படுத் தும் நோக்கமும் அற்றுப் போகிறது. இது சுய சிந்தனைக்கும் விமர்சனத்துக்கும் ஏற்ற நம்பிக்கை என்று கூற முடியுமோ?
மெய்யியலாளர் மட்டுமன்றி, பிற துறையினரும் இம்மனப்பாங்குடனேயே இயங்கி வந்துள்ளனர். தமிழிலக்கியத்திற் பரிச்சய முடையோர்க்கு உரையாசிரியர்க ளின் நினைவு வரலாம். உதாரணமாக, தொல்காப்பியத்துக்கு உரைகண்டோர் பல் வேறு காலத்தைச் சேர்ந்தவர்க்ள். உண் மையில் தத்தம் காலமாற்றங்களுக்கியை யப் புது விதிகளும் விளக்கங்களும் கூறும் போழுதும் அவற்றைத் தமது கருத்தாகக் கூருது அவையே தொல் காப்பியர் கருத்து என்று கூறிக்கொள்வர் இந்திய உரை கா ரர் பலருக்கும் பொதுவான இப்பண்பு சட் டப்படி ஒன்றும், நடைமுறையில் பிறி தொன்றுமாய் இருப்பதைப் போன்றதே என் கிருர் பேராசிரியர் தெ. பொ. மீனுட்சி சுந்தரஞர்.
இவ்வாறு பழைய நூல்கள், அதாவது பிரமாணமாக அமையும் நூல்கள், எக் காலத்துக்கும் உரியன எனக் கொள்வதால் அவற்றை இயற்றியோர் அதிமனிதராக இருக்க வேண்டியது தவிர்க்க இயலாததா கிறது. இது காரணம் பற்றியே தொல்காப் பியரும்,
விஜனயி னிங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனு லாகும்

க. கைலாசபதி
என்று சூத்திரித்தார். 'செய்வினையின் பயன் துவ்வாது மெய்யுணர்வுடையஞகிய முன்னேணுற் செய்யப்பட்டதே ஒரு தலை யாக முதனுாலாவது' என்று இதற்குப் பொருள் கூறினர் பேராசிரியர். வினையென் பன இருவினை. திருக்குறளில் 'இருள் சேர் இரு வினை’ என்று தொடங்கும் குறட்பாவுக் குப் பரிமேலழகர், " "மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினையும் உளவா கா’’ என்று பொருள் சொன்னர். எனவே எதுவித மயக்கமுமற்ற முழுதும் உணரும் உணர்ச்சி உடைய ஒரு வன் எழுதுவதே முதனூல் என்பது கருத்து. அக்கருத்துக் கிணங்க, " "தலைவர் (சிவபெரு மான்) வழி நின்று தலைவனுகிய அகத்திய ஞற் செய்யப்பட்ட. அகத்தியமே முற் காலத்து முதனுரலென்பதுஉம் அதன் வழித் தாகிய தொல்காப்பியம் அதன் வழி நூலென்பதுரம் பெற்ரும்' என்ருர் பேரா giuri.
இந்தியாவுக்குப் பொதுவான இப் பழமை போற்றும் மனப்பான்மை இவ்வா ரு க, இக்காலத் தமிழறிஞர்க்குச் சிறப் பான மெய்யியற்றுணையாக இருக்கும் பிறி தொன்றை இங்குக் குறிப்பிட வேண்டும். அதுவே சைவ சித்தாந்தமாகும். கூர்ந்து நோக்கிஞல் எம்மவர்க்குப் பாரம்பரியச் சொத்தாக வந்த சித்தாந்தமும் அறிவிய லுக்குச் சாதகமானதாயில்லை. அ ரீ  ைவ (ஞானத்தை) அது மூன்ரு க வகுத்து விடுகி றது; சிவஞான சித்தியார் ஒன்பதாம் சூத் திரத்தின் முதற் செய்யுள், பாச ஞானம், பக ஞானம், பதி ஞானம் என்ற மூன்றை யும் வகுத்து, பாசஞானத்தாலும், பசுஞா னத்ததலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே கண்டு அவன் திருவடி நிழலை அடையவேண்டும் என்று உரைக்கிறது. இது நுனித்து நோக்க வேண்டியது.
ஏணியில் மிகத் தாழ்ந்த படியாயிருப் பது பாசஞானம். அது இரு வகைப்படும். ஒன்று சொற்பகுதி ஞானம்; மற்றது பொருட் பகுதி ஞானம். முன்னது நால் வேதமும், ஆ ற ங் க மு ம், பதினென் (ஸ்)மிருதிகளும், பதினெண் புராணமும், அறுபத்துநான்கு கலைகளுமாய சொற் பிர பஞ்சம் ஆகும். பின்னது நில முதல் நாத மீ

Page 159
-9, էջ ս/ւհ d/ էքս, մ)
முக உள்ள முப்பத்தாறு தத்துவங்களைப் பற்றிய பொருட் பிரபஞ்சம் ஆகும். இவை பற்றி நிகழும் ஏகதேச ஞானம் அனைத்தும் பாச ஞானமாம். இதனை எளிமைப்படுத் திக் கூறுவதாயின், பாச ஞானம் என்பது புலன்களினுற் பெறப்படும் உலகியலறிவு ஆகும். இது கவனிக்கத்தக்கது. இதன் முடிவான விளைவுகளைப் பின்னர் கவனிப் போம்.
இரண்டாவது படியாயிருப்பது பசு ஞானம். இது பாச ஞானத்தையுடைய ஆன்மா இவை அனைத்தும் தன் கீழ் வியாப் பியம் என்றறிதலால்தான் அவற்றிலும் மேற்பட்டவன் என்ற அறிவாகும். இதை எளிமையாய்க் கூறுவதாஞல், உயிர் பற் றிய அறிவு எனலாம் '
மூன்ரு வது படியா யும் முடிவானதாயு மிருப்பது பதிஞானம். இது, குருவின் அரு ளால் பெறப்படும் திருவருள் அறிவு. இவ் வறிவு தன்னையறிவதோடன்றிப் பிறவற் றிற்கும் அறிவு விளங்கச் செய்வதாகிய திறம் பெற்றது. எளிமையாய்க் கூறுவதா ஞல், சிவன் பற்றிய உணர்வு எனலாம். இம்மூன்று அறிவுப் படிகளையும் நோக்கும் பொழுது சில பண்புகள் தோன்றுகின்றன.
1. புறவுலகத்தைப் பற்றிய ஆராய்ச்சியும் அறிவும் தரங் குறைந்த தாய்க் கொள் ளப்படுகிறது. அறிவின் வாயில்களில் ஒன்று புலக்காட்சி. அதுவே பெரும் பா ன்  ைம விஞ்ஞானத்தின் அடிப் படை. அதனைக் " " கட்டுணர்வாகிய பாச ஞானம்' என்று கடைசிப் படி யில் வைத்து நோக்குகிறது சைவ சித் தாந்தம்.
2. புலக் காட்சியில் அல்லது இந்திரியக் காட்சியில் ஒரளவு தெளிந்தவற்றை மனத்திலே தெளியும்போதும், தோன் றுகின்ற பொருள் கானல் நீர் போல மயக்கத்தாலுண்டாகலாம் என்றும் , அது “பழுதையா பாம்பா எ ன த் துணியாத நிலையில் திரிபுக் காட்சியாக அமைதல் கூடும்' என்றும் கூறப்படுவ தால், மனித முயற்சியாற் பெறும் அறிவு, ‘‘பல தலைப்பட்டு ஐயுற்று நிற்

க. கைலாசபதி 141
கும்' அறிவு என்று புறக் கணிக்கப்படு கிறது. தன் முனைப்பான அறிவுச்செருக் கின் விளைவு என்று இகழப்படுகிறது. அதாவது மனித செயலால் ஆவது ஒன்றில்லை என்று வற்புறுத்தப்படுகி AIDSil .
3. அறிவு பற்றிய ஆராய்ச்சியில் ஆன் மாவே முதன்மை பெறுகிறது. பொரு ளுலகம் கிஞ்சித்தும் பொருட்படுத்தப் படுவதில்லை. ஆன்மா பற்றிய ஆராய்ச் சிக்கு அனுசரணையாகவே புறவுலக ஆராய்ச்சி அமைந்துள்ளது.
4. அறிவு ஆராய்ச்சி இயல் போன்ற ஒரு மெய்யியற் பிரச்சினை, சிந்தனையுலகில் மட்டும் அமைந்ததாகவன்றி, நம்பிக் கையை ஆதாரமாய்க் கொண்ட சமய உலகிற் சென்று முடிகிறது.
இந்நான்கு பண்புகளும் நன்ரு க நினைவில் இருக்க வேண்டியவை. பல நூற்ருண்டுக ளுக்குப் பின்னரும்-அதாவது இன்றுகூடஇவற்றின் நிலையான செல்வாக்கை எமது ஆய்வறிவாளர் பலரது சிந்தனையிற் காண லாம். இறுதியாய்க் கூறப்பட்ட-நான் காம் பண்பு பற்றி ஒன்று கூற வேண்டும். மெய்யியலின் இயல்பு மேனுட்டுத் தத்துவ வாதிகளால் விளங்கிக் கொள்ளப்பட்ட முறையும் பெரும்பாலான இந்திய தத்துவ ஞானிகளால் விளங்கிக் கொள்ளப்பட்ட முறையும் வேறுபட்டவை. மெய்யியல் என்ற பதத்திற்குச் சமமான Philosophy” என்ற சொல்லுக்குக் 'கற்றலிற் காதல்’’ அல்லது 'அறிவுத் தேடல்'' என்பது பொருள். இந்தியாவிலே, மெய்யியல், அல் லது தத்துவ ஞானம் இறுதியில் வீடு பேற்றை அடைவதற்கு வழி காட்டுவதா கவே கொள்ளப்பட்டது. "மெய்யியல், இந்தியாவிலே முனைப்பாகச் சமயத்துறை சார்ந்ததாயுள்ளது" என்கிருர் சந்திரதர் if ridir.
மேனுட்டிலே சமய தத்துவத்துறை யில் ஈடுபட்டிருப்போரை இரு பிரிவினரா கக் கூறுவர். மரபு வழி அறிவுக்குப் பேர் போனவராய், ஆழ்த்த அறிவுடையரா யுள்ள மெய்யறிவாரை ஆங்கிலத்திலே Sages என்பர். சமய அமைப்பிற் புனிதர்

Page 160
142 அடியும் முடியும்
கணத்தைச் சேர்ந்தவராய், தெய்விகத் தன்மையுடையவராயுள்ள மெய்யடியாரை Saints என்பர். முன்னவர் மிகுதியாக அறிவு வயப்பட்டவராயும் பின்னவர் மிகு தியாக உணர்ச்சிவயப்பட்டவராயும் இருக் கின்றனர் என்பர். இந்தியாவிலே இத் தகைய பாகுபாடு பொருந்துவதன்று’’ என்று கூறுகிருர் பேராசிரியர் டி. எம் பி. மஹாதேவன்.
இவை யாவற்றையும் நோக்கும் பொழுது பேரறிஞர் பேட்ரண்ட் ரஸ்ஸல் கூறியதொன்று நினைவுக்கு வருகிறது.
" "வாழ்க்கையைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் ‘மெய்யியற் சார்பானவை" என நாம் வழங் கும் கருத்துப் படிவங்கள், இரு ஆக்கக் கூறுகளின் விளை பொரு ளாகும்: ஒரு கூறு, மரபு வழிவந்த சமய ஒழுக்கவியற் கருத்துக்களை உள்ளடக்கியது; மற்ருெரு கூறு, மிகப் பரந்த பொருளில் ‘விஞ் ஞானவியல் சார்ந்தது என நாம் வழங்கும் ஆராய்ச்சி முறையைத் தழுவியது. இவ்விரு ஆக்கக் கூறு களும் பொருந்தியிருந்த தகவுப்
O "என்னைப் பொறுத்த வரையில் தீண்டா வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் வி பத் திரும்பக் கூறியிருப்பது தீண்டாமை அழியும்; ஏன் இந்தியாவுமே அழியும். மக்களின் இதயங்களிலிருந்து தீண்டா!ை மாயின், பின்பு இந்துமதம் நிச்சியமா வைக்கும் தகைமையுடையதாகும்.'
O ‘தீண்டாமை பகுத்தறிவுக்கும், பரிவு,
என்ற உணர்வுகளுக்கும் பொருக்தாத ஒ நிலை நிறுத்தும் ஒரு மதம், கொடுமையான முறையில் மனிதர்களைப் புறக்கணிப்பதை இயலாததாகும்.'

க. கைலாசபதி
பொருத்த அளவைப் பொறுத்தே வெவ்வேறு மெய்யியற் காட்சிகள் தமக்குள் வேறுபட்டன. ஆயினும் இவ்விரண்டும் இணைந்தே மெய்யி யல் உருவாகிறது.'
அறிஞர் ரஸ்ஸல் குறிப்பிடும் அறவி யல், ஆராய்ச்சியியல் ஆகிய இரண்டில் மேஞட்டு மெய்யியலிலே பின்னது மிகுதி யாய்க் காணப்படுகிறது. அதன் தர்க்க ரீதியான முடிவாகவே 'பஞ்ச பூதத்தின் நுட்பங்கள் கூறும் புத்தம் புதிய கலைகள்'" அங்கு வளர்ந்தன. எமது தத்துவ ஞானத் திலே முன்னது முனைப்பாயமைந்ததால் 'உணவையும் உடையையும் தேடும் விசா ரம்' மதிப்பிழந்து மாயாவாதம் பெரு வழக்குப் பெற்றது.
பொதுவாக அனைத்திந்தியாவிற்கும் குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கும் பொருந் தும் இந்தத்துவ நோக்கு, கேவலம் கோட் பாட்டளவேயான தொன்றல்ல. பல வழி களில் வாழ்க்கையின் அன்ரு டச் செயல் களையும் பாதிக்கவல்லதாயிருக்கிறது. இது வரை கூறப் பெற்றன அனைத்தும் முத லிலே பார்த்த அடிமுடிதேடிய கதையிலே அடங்கியுள்ளன என்பதும் தெளிவாகும்.
δ) Η Ο இந்து சமையத்தின் டயமாகும். யான் திரும் வாழ்க்தால் இந்துமதம் அங்ங்னமல்லாது இக்து 0 வேரோடு ஒழிக்கப்படு க உலகத்தையே வாழ
இரக்கம் அல்லது அன்பு ன்று. பசு வழிபாட்டினை ா மனிதத் தன்மையற்ற ஏற்றுக்கொள்வதென்பது

Page 161
HEAT
QUALITY TI
INSTRUMEN
El'E RADI0 & ENC
26, KEYZER STREE
Phone. 29744
hacɛ "Donatɛd Bபுܠܵ-
|STAR WAT
23, CLOCK TC
JAFF

(INEERING CO., LTD.
T, COLOMBO-I.
CH WORKS
DWER ROAD,
NA.

Page 162
V. S. Muth
GROCERIES, TOE
WHOLESALE 8. RE
MAN S
AKUR

'മ
ലർ
の/Z
iah & Sons
3ACCO & CIGARs
ETAL MERCHANTS
STREET,
*ESSA.

Page 163
ASTRONOMY
வானியல்
பிறப்பிலிருந்து îJ LI LII ÎI DI G) I
6
பல்வழியிலே காணப்படும் பல் கோடி நட்சத்திரங்களுள் எமது (Milikyway) சூரியனும் ஒன்ருகும். சூரியனை ஒரு நட்சத் திரம் என்று சொன்னல் அதனைச் சிலரால் நம்ப முடியாமல் இருக்கும். ஆனல் உண் மையில் சூரியனும் ஒரு நட்சத்திரமே, சூரி யன் எமக்குக்கிட்டியதாக இருப்பதால் அது பெரிதாகத் தோன்றுவதுடன் அதிக ஒளி யையும் வெப்பத்தையும் தருகிறது. ஆனல் நீங்கள் நினைக்குமளவு சூரியன் எமக்கு கிட்டியிருக்கவில்லை. அதன் தூரம் பூமியிலி ருந்து சுமார் 93,000,000 மைல்களாகும். வேமுெரு வழியில் கூறப் போனுல் மணிக்கு 2000 மைல் செல்லும் சுப்பர் சோனிக் விமானம் சூரியனை அடைய 54 வருடமா கும்; அல்லது ஒரு கடுகதிப் புகைவண்டிக்கு அப்பிரயாணத்தை முடிக்க 260 வருடமா
 

பொ. இராசகேசன்
வனின் புதிர்தான்
கும். சூரியனுக்கு அடுத்ததாக பூமிக்கு மிகக் கிட்டிய நட்சத்திரம் 26X1012 மைல் கள் தொலைவில் உள்ளது வினடிக்கு 186,000 மைல்கள் வேகத்தில் செல்லும் ஒளி இதையடைய 43 வருடமாகும். பூமி சூரியனை ஒரு முட்டை வடிவப் பாதையில் சுற்றி வருவதால் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது. தைமாதத்தில் இடைத்தூரம் 91,447,000 மைல்களாக வும், சித்திரையில் 93,003,000 மைல்களா கவும், ஆடியில் 94,559,000 மைல்களாக வும், ஐப்பசியில் 93,000,000 மைல்களாக வும் உள்ளது. சூரியனின் சுழற்சி அச்சு, பூமி, சூரியனை சுற்றிவரும் பாதையின் தளத்திற்கு (ecliptic) 82.5° சரிந்துள்ளது. சூரியனின் சுழற்சி வேகத்தில் ஓர் ஆபூர்

Page 164
146 பகலவனின் பு/திர்தான்.
வம் காணப்படுகிறது. அதாவது மத்திய ரேகைப் பகுதியில் ஒரு சுற்றை முடிக்க 25 நாட்களும் துருவ பகுதியில் 34 நாட்களும் செல்கிறது. இதன் காரணம் அறியப்பட வில்லை.
மீள முடியாது! முரட்டுப் பிடி!
பருமனைப் பொறுத்த அளவில் எமது சூரியன் மிகப்பெரிய நட்சத்திரங்களுக்கும் மிகச் சிறிய நட்சத்திரங்களுக்கும் இடைப் பட்டதாக உள்ளது. எம் கதிரவனின் விட் டம் கிட்டத்தட்ட 865,600 மைல்களா கும்; அதாவது பூமியின் விட்டத்திலும் 109 மடங்கு பெரியது. சூரியனின் திணிவு எமது பூமியின் தி னிவி லும் 333, 420 மடங்கு பெரியதாகும். இப்பருமனின் கார ணத்தால் சூரியனின் மையப்பகுதியில் அமுக்கம் ஒரு சதுர அங்கு ல த் தி ற் கு 60 இலட்சம் தொன்களாகும். இதன் 5 6A ti &#F 660) SF (Gravitiational force) y Ló யின் கவர்ச்சி விசையிலும் 28 மடங்கு கூடி யதாகும். பூமியிலே 100 முத்தலாக உள்ள ஒரு மனிதன் அங்கு 2800 ருத்தலாக இருப் பான். பூமியும் ஏனைய கிரகங்களும் சூரிய க்னச் சுற்றி வருவதற்கு இக் கவர்ச்சி விசையே காரணமாகும்.
அகத்தில் ஒரே கொதிப்பு! புறத்திலே வாயுப்பிழம்பு!!
சூரியனின் மேற்பரப்பில் வெப்பநிலை ஏறத்தாழ 6000 °F ஆகும். மையத்தை நோக்கிச் செல்லுகையில் வெப்பநிலை படிப் படியாகக் கூடிச் செல்கிறது. மையத்தில் வெப்பநிலை சுமார் 27,000,000 °F உள்ளது. இவ்வெப்ப நிலையில் உள்ள ஒரு குண்டூசி யின் தலை 100 மைல் தூரத்திலுள்ள ஒரு மனிதனைக் கொல்லக் கூ டி ய ளவு வெப் பத்தை வெளியேற்றும் என்று ஒரு விஞ் ஞானி கூறுகிருர் .
தொலைகாட்டி மூலமும் வேறு பல விசேட கருவிகள் மூலமும் சூரியனைப் பற் றிய தகவல்களை விஞ்ஞானிகள் பெற்றுள் ளனர், மிகவுயர்ந்த வெப்ப நிலையின் கார ணமாக இங்கு எல்லாப் பொருட்களும் வாயு நிலையிலேயே காணப்படும். ஐதரசன்

சிவநேசன் - .
(Hydrogen) அதிகமாகக் காணப்படுகின் றது. இதைவிட ஈலியம், காபன், நைதர சன், ஒட்சிசன் ஆகிய மூலகங்களும் காணப் படுகின்றன.
(tifħu u Gofesör Ddug 6 an uu (ln ner core) சூழ்ந்து போட்டோ ஸ்வியர் (Photosphere) எனப்படும் ஒளிபுகுவிடும் தன்மையுள்ள மிகவும் பிரகாசமான ஒரு வாயுப்படை காணப்படுகிறது. இப்படை சுமார் 200 மைல் தடிப்புள்ளது. இப்படைக்கு மேலாக சூரியனின் வளிமண்டலம் காணப்படுகிறது. பூரண சூரிய கிரகணத்தின் போது இவ்வழி மண்டலத்தைத் தெளிவாகக் கொள்ள லாம். இவ்வழிமண்டலம் பல படைகளால் ஆனது. போட்டோவ்வியரிற்கு அடுத்துக் காணப்படும் வளிமண்டலத்தின் ஒரு Lueõ6) Reversing Layer எனப்படும். இப் ப  ைட போ ட் டோ ஸ் வி ய ரி லிருந்து வெளிவரும் சில நிறங்களை உறிஞ்சிவிடுகிறது. இதன் காரணத்தி ஞல்தான் சூரியனின் நிறமாலையில் இடை யிடையே பல கறுப்புக் கோடுகள் காணப் படுகின்றன "இப்படை பல நூறு மைல்கள் தடிப்புடையது. இப்படைக்கு மே லா க குரோமோஸ்வியர் (Chromospheri) எனப் படும் படை காணப்படுகிறது. இப்படை யிலே பல ஆயிரம் மைல்கள் நீளமான வாயுப் பிழம்புகளைக் காணலாம். சில கொதிக்கும் வாயுப் பிழம்புகள் சூரியனின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1 லட்சம் மைல் கள் வரை உயரப் பாய்வதைக் காணலாம். இவை Prominence எனப்படும். இவை யெல்லாவற்றிற்கும் அப்பால் சூரியனை முற் ருகச் சூழ்ந்து ஒரு வெளிறிய பச்சை நிறப் படலம் காணப்படுகிறது. இது கொரோணு (Corona) எனப்படும். இரும்பு, நிக்கல். கல்சியம் ஆகிய உலோகங்கள் வாயு நிலையீ லும் அயனுக்கம் அடைந்த நிலையிலும் இதில் காணப்படுவதனலேயே Corona இந் நிறத்தைக் காட்டுகிறது.
காய்கதிர்ச் செல்வனே! கரும்புள்ளிகளேன் கன்னத்தில்?
சூரியனின் மேற்பரப்பிலே சிலபகுதி கள் கறுப்பாக இருப்பது அவதானிக்கப் பட்டுள்ளது. இவை சூரியப் புள்ளிகள் (Sun

Page 165
பகலவனின் பு/திர்தான்.
Spots) எனப்படும். இவை முதன் முதலில் 1611ம் ஆண்டு கலீலியோவால் அவதா னிக்கப் பட்டன. இவை முன்பு பெரிய கிடங்குகள் என்று கருதப்பட்டன. ஆனல் அவை உண்மையில் சூரியனின் மேற் பரப் பிலே உள்ள சற்று வெப்பம் குறைந்த பகு திகள் என்று அறியப் பட்டுள்ளது. சூரியப் புள்ளிகள் குறைந்தும் கூடியும் காலத்திற்கு காலம் தோன்றும். 113 வருடங்களுக் கொரு முறை இவை அதிகமாக தோன் றும். சூரியப் புள்ளிகள் அதிகமாகும் காலத் தில் அதன் மேற்பரப்பிலிருந்து பாய்ந்தெ ழும் தீப்பிழம்புகளும் கூடுகின்றன, அத்து டன் Corona வின் நிறமும் உருவமும் மாறு படும்.
காந்தப்புயல் அங்கே இருட்டடிப்பு இங்கே!
சூரியப் புள்ளிகள் அதிகமாகத் தோன் றும் காலங்களில் அதன் மேற்பரப்பிலே பெரும் வெடிப்புகள் (Explosions) ஏற்படு கின்றன. இப்படியான குழப்பங்கள் எமது பூ மி  ைய நேரடியாகப் பாதிக்கின்றன. அதாவது இவ்வெடிப்புகள் ஏற்படுகையில் உயர் வேகமுள்ள மின்னேற்றம் பெற்ற gj GJIsfidë. GOD 55 55 Gir (high - speed electrically charged particles) 66ior G6, afungi) a Fly படும். இவை பூமியை நெருங்கியதும் புவி யின் காந்த மண்டலத்தின் பாதிப்பிற்குட் படுகின்றன. புவிக் காந்தத்தின் காந்த விசைக் கோடுகள் வழியே இத் துணிக்கை கள் சுழன் ருேடி அதிகமாக வட, தென் துருவங்களில் புவியின் வளி மண்டலத்தின் மேற்படைகளைத் தாக்குகின்றன. இவ் வாறு தாக்கும்போது ஆரோரு (aurora) எனப்படும் பிரமிப்பூட்டும் நிற ஜாலங்களை தோற்றுவிக்கின்றன. வட துரு வத்தில் தோன்றுவது ஆரோ ரு போரியாலிஸ் (aurona borealis) GT6örgy Lib Goat56ör (u Gnuü பகுதியில் தோன்றுவது ஆரோரு அவுஸ்தி praioi) (aurora australis) Taira is disply படும் சூரியனில் இருந்து உக்கிரமாக இத் துணிக்கைகள் வீசப்படுகையில் அவை வளி மண்டலத்தின் அயன் படையை (Iono Sphere) பாதிப்பதால் ரேடியோ, தொலை காட்சி ஒலிபரப்புக்களில் இருட்டடிப்பு (black out) 2-6ðIT — fráépg. Gup sy lib! Ods

சிவநேசன் - 147
asnj55’ Lugi) 5 dr (magnetic Storms) 5.js&& சேவைகளையும், மின்சாரக் கம்பிகளில் மின்சாரத்தின் ஓட்டத்தையும் துண் டிக்கும்.
கருக்கள் பிணைந்தன! சக்தி பிறந்தது'
எமது சூரியன் பிருமாண்டமான அளவு சக்தியை விண் வெளியெங்கும் வீ சிக் சுொண்டிருக்கிறது. சூரியனின் மேற்பரப் பில் ஒவ்வொரு சதுர சதம மீற்றரும் நிமி டத்திற்கு 89,500 கலோரியை வெளி யேற்றுகிறது.
இவ்வளவு தொகையான சக்தியை சூரியனுல் எவ்வாறு தொடர்ச்சியாகவெளி யேற்றக் கூடியதாக உள்ளது என்பது பல காலமாக பெரும் பிரச்சினையாக இருந்து வந்தது. 1905-ம் ஆண்டிலே டாக்டர் ஜன்ஸ்டீன் (Dr. Einstein) தனது சார்புத் தத்துவத்தை வெளியிட்டார். இதை E=mc2 என்னும் சமன்பாட்டினல் விளக்கி ஞர். (E-சக்தி; M - திணிவு C-ஒளியின் வேகம். இச்சமன்பாட்டின் உண்மையை அணுக்குண்டிலும், ஐதரசன் குண்டிலும் காணலாம். இவையிரண்டிலும் திணிவு சக் தியாக மாற்றப்படுகிறது. ஐதரசன் குண் டில் 4 ஐதரசன் கருக்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஈலியம் கருவை உண்டாக்கும் போது அதிக சக்தியை அதோடு வெளியேற்றுகின் றன. சூரியனிலே அதிகளவு ஐ த ர ச ன் காணப்படுகின்றது. அங்கும் இதேபோன்று தாக்கம் நடக்கிறதென்றும் அத்தாக்கத் தின் காரணமாகவே பிரமாண்டமான சக் தியை வெளியேற்றுகிறதென்றும் இன்று அறியப்பட்டுள்ளது.
9?) Šī அழிக்கத்தான் முடியவில்லையே!
சூரியனின் மையத்தில் நடக்கும் கருப் பிணைவுத் தாக்கங்களே சக்தியை உற்பத்தி செய்கின்றன. இத்தாக்கங்களின் போது வலுவான X- கதிர்கள் வெளியிடப்படும். வெளியிடப்பட்ட X- கதிர்கள் (வேகம்186,000 மைல் / மணி) சூரியனின் மேற் பரப்பையடையும் 5 லட்சம் மைல் பிரயா

Page 166
148 பகலவனின் புதிர்தான்.
ணத்தின் போது பல ஆயிரம் முறை அங்கு மிங்குமாக தெறிப்படைகின்றன. இவ்வா ருக ஒரு கதிர் மே ற் ப ர ப்  ைப அடைய 20,000 வருடம் செல்லும் X- கதிர்கள் மீண்டும் மீண்டும் தெறிப்படைகையில் அலை நீளம் கூடுவதால் ஊதா கடந்த கதிர்களா கவும் ஒளிக் கதிர்களாகவும் (Ultra-Violet and light rays) (gifu u Guffle(bögj GFÜ LUGuib. ஊதா கடந்த கதிர்கள் பூமியில் உள்ள பச் சைக் காடுகளையெல்லாம் தீப்பிழம்பாய் மாற்றக் கூடிய வலுவுள்ளன. ஆளுல் நல்லவேளையாக பூமியின் வளிமண்டலத் தில் மேற்பரப்பிலே காணப்படும் ஒசோன் படை (Ozone Layer) அவற்றை உறிஞ்சி விடுகிறது.
எங்கும் நிறைந்த சக்தி இது வந்தது எங்கிருந்து?
சூரிய ன் வெளி வி டு ம் ச க் தி யி ல் 0.0000000005 பகுதியை மட்டுமே பூமி பெறுகிறது. இதில் 30% வளிமண்டலத் தால் உறிஞ்சப்பட்ட பின்பும் பூமியின் ஒவ் வொரு சதுர மைல் பரப்பிலும் 4,690,000 பரிவலு சூரிய சக்தி தாக்குகிறது. இச்சக்தி யைக் கொண்டே தாவரங்கள் குளுக் கோசைத் தயாரிக்கின்றன. இச் சக்தியே நீரை ஆவியாக்கி மழையை பெய்கிறது. அப்படிப் பொழிந்த மழை நீர் மலையில் இருந்து ஒடுகையில் அணைகளைப் போட்டு மின்சாரம் உற்பத்தி செய்கிருேம். நிலக் கரியை ஏரிக்கும் போது முற்காலத்தில் வாழ்ந்த தாவரங்களால் அதில் அடக்கப் பட்ட சூரிய சக்தியையே வெளியேற்றுகி ருேம். பெற்ருேலியமும் அது போன்றதே. உணவை உண்டதும் அவற்றை எமது உடல் உடைத்து அதனுள் சேகரிக்கப்பட்டுள்ள சூரிய சக்தியையே வெளியேற்றுகிறது. அந்த சக்தியை உபயோகித்தே நாம் ஆடு கிருேம், பாடுகிருேம், பல்வேறு வேலைகளை

ം. -
பும் செய்கிருேம். எனவே பூமியில் காணப் படும் அத்தனை சக்தி தரும் பொருட்களும் கொண்டிருப்பது சூரிய சக்தியே. உதாரண மாக 180 கிராம் குளுக்கோசில் 674,000 கலோரி சூரிய சக்தி அடக்கப்பட்டுள்ளது.
ஊழித் தாண்டவமென்பது உண்டாவதிப்படித் தானு?
எமது சூரியன் தோன்றி சுமார் 5,000,000,000 வருடங்களாகின்றன. E=mc2 எனும் சமன்பாட்டை உபயோ கித்து கணக்கிடுவோமாயின் எமது சூரியன் ஒவ்வொரு செக்கனும் 45 லட்சம் தொன் திணிவை சக்தியாக மாற்றுகிறது என் பதை அறியலாம். அதாவது எமது சூரிய னின் திணிவு ஒவ்வொரு செக்கனுக்கும் 45 லட்சம் தொன் வீதம் குறைகிறது. இப் பொழுது சக்தி தை வெளியேற்றும் வீதத் தில் கணக்கிட்டால் எமது கதிரவன் இன் னும் 30,000,000,000 வருடங்களுக்கு உயி ராக இருப்பான். ஆஞல் வயது போகப் போக எமது நட்சத்திரம் ஆகிய சூரியன் ஐதரசனை உபயோகிக்கும் வீதம் அதிகரிக் கும். அதன் காரணத்தால் வெப்ப நிலை மேலும் மேலும் அதிகரிக்க அதன் வாழ்க்கை காலம் 10,000,000,000 வரு டங்களாக குறையும். சூரியனின் வெப்பம் கூடக் கூட அது பயங்கரமாக விரிவடைந்து கிட்ட உள்ள நாலு கிரகங்களையும் (புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்) விழுங்கிவிடும். எனவே சூரியன் அழிவதற்கு வெகு காலத் திற்கு முன்னரே பூமியில் உள்ள உயிரினங் கள் எல்லாம் கொடிய வெப்பம் தாங்கமுடி யாமல் முற்ருக அழிந்து போய்விடும். அதன் பின்னர் சூரியன் குளிரடைந்து இறுகி ஏறக்குறைய பூமியின் அளவைப் பெறும். ஆனல் இது நடக்க இன்னும் 5,000,000,000 வருடங்கள் செல்லும்,

Page 167
ஏராளமான உயிரினங் بينهج بتهوي وهIl கள் வாழ்ந்துவருவதை நாம் காண்கிருேம். பல் வேறு வகைகளைச் சேர்ந்த நுண்ணுயிர் கள்,தாவரங்கள்,விலங்கினங்கள் காணப்ப டுகின்றன. இவ்வுயிர்இனங்கள் எப்பொழுது தோன்றின; எவ்வாறு தோன்றின; எனும் விடயங்களைப் பற்றி மனிதன் நீண்ட கால மாக ஆராய்ந்து வந்துள்ளான். இதனல் உயிரின் தோற்றத்தைப் பற்றிய கொள் கைகள் நிலவி வந்துள்ளன. இக் கொள்கை கள் யாவற்றையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்துவிடலாம். பல்வேறு மதங்களைச் சார்ந்த கொள்கைகள் சில. பழைய விஞ்ஞா னத்திற்குரிய கொள்கைகள் சில. தற்கால விஞ்ஞானிகளிடையே நிலவிவரும் கொள் கைகள் வேறெருவகை. மத ங் களை ச் சேர்ந்த கொள்கையின் படி உயிரினங்கள் யாவும் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவை. இப்படியான கொள்கைகளை விஞ்ஞான முறைப்படி நிரூபிக்க முடியாது. பழைய விஞ்ஞானக் கொள்கைகளுள் உயிர்விசைக் கொள்கை ஒன்ரு கும். இக் கொள்கையின் படி இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட இயற்கை விசை ஒன்று அண்டகோளத்தில் பரவி இருக்கின்றது. இதுவே உயிரினங்க ளைத் தோற்றுவிக்கும் விசையாகும். சர்வப் பிறப்புக் கொள்கை என்பது மற்றுமோர் ப  ைழ ய விஞ்ஞானக் கொள்கையாகும். இதன்படி அண்டகோளத்தில் என்றென் றுமே இயற்கையாக உயிரினங்கள் இருந் துள்ளன. பெரும்பாலான பழைய விஞ்ஞா னிகள் தன்னிச்சைப் பிறப்பாக்கம் எனும் கொள்கையைய்ே ஏற்றுக்கொண்டார்கள், இவர்கள் உயிரற்ற பொருட்களிலிருந்து உயிரினங்கள் தோன்றலாம் என நம்பினுர் கள். அழுக்குகளிலிருந்து பூச்சிகளும் புழுக்க ளும் ஈக்களும் தோன்றலாம் எனவும், வாற் பேய்கள் மீன்கள் என்பன ம  ைழ யின் பொழுது விழலாம் எனவும் இவர்கள் நம்பி னர்கள். 19ம் 20ம் நூற்றண்டுகளில் விஞ் ஞானத்தில் ஏற்பட்ட துரித வளர்ச்சியினல் இப் பழைய கொள்கைகள் யாவும் மறைந் தன. உயிரினங்கள் இயற்கை விதிகளின் இயக்கத்தாலேயே தோன்றியிருக்க வேண் டும் என்ற கருத்து இடம்பெறலாயிற்று.

2 (ff) filjafi
தோற்றம்
கலாநிதி க. அருட்பிரகாசம் (சிரேஷ்ட விரிவுரையாளர், விலங்கியற் பகுதி)
டி ஒட்சிறைபோஸ் நியூக்கிளிக் கமிலத்தின் மூலக் கூற்றமைப்பு
r Thy - Gog, Bairن 606 yLلیئے --- Ad Cyt - சைத்தொசீன் Gu - (56 huafatör Z - டிஒட்சிறிபோஸ் வெல்லம் O - பொசுபோரிக் கமிலம்

Page 168
150 உயிரினங்களின் தோற்றம்
தற்பொழுது வாழ்ந்துவரும் எல்லா உயிரினங்களின் உடல்களும் சேதனவுறுப் புப் பொருட்களினல் அமைக்கப்பட்டவை யாகும். ஆன ல் அச்சேதனவுறுப்புப் பொருட்கள் உயிரினங்களின் உடல்களுக்கு வெளியே தனியாகக் காணப்படுவதில்லை. எனவே உயிரினங்கள் எவ்வாறு தோன்றின எனும் பிரச்சினையை தீர்க்க முயலுமுன் நாம் சேதனவுறுப்புப் பொருட்கள் முத வில் எவ்வாறு தோன்றின என்ற பிரச்சினை யைத் தீர்க்க வேண்டும். சேதனவுறுப்புப் பொருட்கள் என்ருல் என்ன? கார்பன் அணுவை அடிப்படையாகக் கொண் ட சேர்வைகளே சேதனவுறுப்புப் பொருட்க ளாகும் . கார்பன் அணு என்பது நாலு வலுவளவு உள்ளது. எனவே ஒவ்வொரு கார்பன் அணுவும் நாலு அணுக்களுடனே கூட்டங்களுடனே இணைந்து விடும் ஆற்றல் உடையது. அனேகமாக கார்பன் அணுக் கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மிகவும் நீண்ட சங்கிலிகளை அமைத்து விடுகின்றன. கார்பன் அணுக்கள் ஏனைய கார்பன் அணுக் களுடன் இணைவதோடு ஐதரசன், ஒட்சி சன், நைதரசன், சல்பர், பொஸ்பேற்று ஆகியவையுடனும், இப் பொருட் க ள் சேர்ந்த வேறு கூட்டங்களுடனும் இணை கின்றன. இவ்வாறு ஏராளமான பெரும் மூலக்கூறுகள் தோன்றுகின்றன. இயற்கை யாக இப்பெரும் மூலக்கூறுகள் உயிரினங்க ளாலேயே தயாரிக்கப்படுகின்றன. கார் பன் சேர்வை அல்லாத அதாவது அசேதன வுறுப்புப் பொருட்களிலிருந்து இயற்கை யாக இச்சேதனவுறுப்புப் பொட்ருகள் தோன்றமாட்டா. உயிரினங்களாலேயே சேதனவுறுப்புப் பொருட்கள் தோன்றுவ தாயின் உயிரினங்கள் தோன்றுமுன், எவ் லாறு சேதனவுறுப்புப் பொரு ட் க ள் தோன்றின என்ற பிரச்சினை எழுகிறது. தற்காலக் கொள்கைகளின்படி புவிச்சரி தையின் பூர்வ காலங்களில் அசேதனவுறுப் புப் பொருட்களில் இருந்து எ ஸ்ரீ த ர ன சேதனவுறுப்புப் பொருட்கள் தோன்றி, பின் அவ்வெளிதான பொருட்களிலிருந்து உயிரினங்களுக்கு அவசியமான சிக்லான சேதனவுறுப்புப் பொருட்கள் தோன்றியி ருக்கவேண்டும் என நம்பப்படுகிறது. தற் காலக் கொள்கைகளை விளங்கிக் கொள்வ தற்குமுதலில் உயிரினங்களிற் காணப்படும்

க. அருட்டபிரகாசம்
சேதனவுறுப்புப் பொருட்களின் வகை களைப்பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும்.
உயிரினங்களிற் காணப்படும் சேதன வுறுப்புப் பொருட்கள் நான்கு வகையைச் சேர்ந்தவையாகும். இவையாவன கார் போஐதரேற்றுக்கள், கொழுப்பமிலங்க ளும் லிப்பிட்டுக்களும், அமினே அமிலங்க ளும் புரதங்களும், நியூக்கிளியோதைட்டுக் களும் நியூக்கிளிக் அமிலங்களுமாகும். கார் போஐதரேற்றுக்கள் கார்பன் - C ஐதர சன் - H ஒட்சிசன் - O, ஆகியவற்றைக் கொண்டலை . கோர்வையில் பல காபன் அணுக்கள் இருக்கலாம். ஐதரசனும், ஒட் சிசனும் அநேகமாக நீரில் - H, O காணப் படும் அதே வீதத்தின் படி காணப்படுகின் றன. எளிதான காபோஐதிரேற்றுக்கள் ஒரு சக்கரைட்டுக்கள் என அழைக்கப் படும். ஒரு சக்கரைட்கக் கள் பல சேர்ந்து பல் சக்கரைட்டுக்களை உருவாக்குகின்றன. உயிரினங்களின் உடல்களில் ஏற்படும் உயி ரியக்கங்களுக்கு அவசியமான சக்தியை ஒரு சக்கரைட்டுக்கள் தேவைக்கேற்ப அளிக் கின்றன. சிக்கலான பல்சக்கரைட்டுக்கள் உயிரினங்களின் உடல்களில் சேமிப்புப் பொருள்களாக விளங்குகின்றன. தாவரங் களின் உடல்களைத் தாங்கிநிற்கும் செலு லோஸ் என்பதும் ஒரு பல்சக்கரைட்டா கும். கொழுப்பமிலங்கள் என்பவையும் C, H, O, ஆகியவற்றை கொண்ட சேர்வை களாகும். ஆணுல் இவற்றில் காணப்படும் ஒட்சிசனின் அளவு மிகக் குறைவு கொழுப்பமிலங்களிலிருந்து எளிதான லிப் பிட்டுகளும் சிக்கலான லிப்பிட்டுகளும் உண்டாகின்றன. லி ப் பி ட் டு களு ம் கொழுப்பமிலங்களும் உயிர் இயக்கங்க ளுக்கு வேண்டிய சக்தியை அளிக்கும் பொருட்களாகும். விலங்குகளின் உடல்க ளில் இவை கொழுப்பாகப்படிந்து சேமிப் புப் பொருட்களாக விளங்குகின்றன. அமினே அமிலங்கள் என்பவை C, H, O ஆகியவற்றுடன் நைதரசனும் - Nகொண்ட சேர்வைகளாகும். உயிரினங்களிற் காணப் படும் அமிலோ அமிலங்கள் ஏறக்குறைய இருபத்திநான்கு வகைகளே ச் சேர்ந்தவை யாகும் இவ்வமிலங்களே எல்லா உயிரினங் களின் உடலமைப்புக்கும் அவசியமான புரதங்களை உருவாக்க உதவும் அலகுகளா

Page 169
உயிரினங்களின் தோற்றம்
கும். புரதங்கள் என்பவை மிகப் பெரிய பெரும் மூலக் கூறுகளாகும். இவை மிக வும் முக்கியமானவை. உயிருள்ள எல்லா இழையங்களினதும் அடிப்படையான அமைப்புப் பொருட்கள் இவையே. மேலும் எல்லா உயிரினங்களுக்கும் அத்தியாவசிய மான நொதியங்களும் புரத வகைக்குரிய வையே. புரதங்களின் பல்வேறுபட்ட இனங்களுக்கேற்பவே உயிரினங்களின் சிக் கல் நிலைகளும் பல்வேறு தோற்றங்களும் காணப்படுகின்றன. இரு பத் தி நான் கு அமினுே அமிலங்களுள் ஒருசில அல்லது பல வெவ்வேறு முறைகளில் ஒன்று சேர்ந்து மாபெரும் மூலக் கூறுகளை அமைத்து விடுவதினலேயே ஏராளமான புரத இனங்கள் தோன்றுகின்றன. நியூக்கி ளிக் அமிலங்கள் உயிரினங்களிற் காணப் படும் மூலக்கூறுகளில் மிகப் பெரியவை. இவற்றின் அலகுகள் நியூக்கிளியோ தைட் டுக்களாகும். நியூகிளியோ தைட்டுகளில் மூன்று கூட்டங்கள் சேர்ந்திருக்கும். அவை யாவன ஒருமூலம், ஒரு வெல்லம் ஒரு பொஸ் பேற்றுக் கூட்டு மூலங்கள் நான்கு வகைக ளில் ஒன்ரு கும். இவையாவன அடனின், குவ னின், தை மீன், சைத்தொசீன் சில வகை களில் யூறCல் என்னும் மூலம் காணப்பட லாம். ஒவ்வொரு நியூக்கிளியோதைட்டி லும், இம் மூலங்கள் சோடிகளாக அமைந்திருக்கும். ஆனல் அடனின் எ ப் பொழுதுமே தை மீனுடனும் குவனின் எப்பொழுதுமே சைத்தொசீனுடனும் இணைவது வழக்கம். இவ்வாறு உருவா கும் நியூக்கிளியோதைட்டுக்கள் L G) சேர்ந்து மாபெரும் நியூக்கிளிக்கமில மூலக் கூறுகளை அமைத்து விடுகின்றன. அமிலத் தில் சேர்ந்திருக்கும் வெல்லவகைகள் இரண்டாகும். DNA எனக் குறிக்கப்படும் மூல வகைகளில் டி ஒட்சிறைபோஸ் வெல்ல மும் RNA எனக் குறிக்கப்படும் அமிலங்க ளில் றைபோஸ் எனப்படும் வெல்லமும் சேர்ந்திருக்கும். DNA என்பது உயிரினங்க ளின் உடல்களில் ஏற்படும் எல்லா இயக் கங்களையும் கட்டுப்படுத்துகின்றது. RNA யும் இத்தொழிலில் பங்குபற்றும். மேலும் DNA பரம்பரை அலகாக எல்லா உயிரினங் களிலும் கடமையாற்றும் பொருளாகும்.

க. அருட்பிரகாசம் 151
இயற்கை விதிகளின் படி உயிரினங்கள் தோன்றிய முறைைைய விளக்க முன்வரும் எக் கொள்கையும் மேற்கூறிய எளிய சேத னவுறுப்புப் பொருட்களாகிய அமினேஅமி லங்கள், நியூக் கிளியோ  ைத டட் டு க்கள், கொழுப்பமிலங்கள், ஒரு சக்கரைட்டுக்கள் முதலியன தோன்றிய முறையை முதலில் விளக்க வேண்டும். பின் இவற்றிலிருந்து புரதங்கள், நியூக்கிளிக்கமிலங்கள், பல வேறு லிப்பிட்டு வகைகள், பல்சக்கரைட் டுக்கள் ஆகியவை தோன்றி, முதல் உயிரி னங்கள் இப் பொருட்களில் இருந்து எவ் வாறு தோன்றின என்பதையும் விளக்க வேண்டும். இவற்றைப் பற்றி முதல் முதல் ஒரு விளக்கத்தை அளித்தவர் ஒப்பாரி னின் எனும் ரூஷிய நிபுணராவர். இவர் 1939ல் 'உயிரினங்களின் தோற்றம்' எனும் ஒரு நூலை வெளியிட்டார். அந் நூலில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் முதலில் மிகவும் தர்க்கத்துக்குள்ளாயின. பின் அவர் தாமே இடையிடையே தாம் வெளியிட்ட கருத்துக்களைச் சிறிது மாற்றி யமைத்துள்ளார். அண்மைக்காலங்களில் இது பற்றி வேறு பல அறிஞர்களும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். எனி னும் நாம் பல்வேறு கருத்துக்களையும் ஆரா யத் தேவையில்லை. இக் கொள்கைகள் யாவற்றுக்கும் அடிப்படையான தத்துவங் களை மட்டும் நான் இங்கே எடுத்துக் கூற விரும்புகிறேன்.
உயிரின் தோற்றத்தை வி ள க் கும் சரிதை புவியின் உற்பத்தியுடனே ஆரம்ப மாகிறது. சூரியன், பூமி, சந்திரன், கோள் கள் இவை யாவும் ஏறக்குறைய ஒரே காலத்தில் அதாவது நாலரை பில்லியன் (Billion) வருடங்களுக்கு முன் தோன்றின. புவியின் முதற் பருவத்தில் நிலவிய நிலைமை களுக்கும் தற்பொழுது புவியிற் காணப் படும் நிலைமைகளுக்குமிடையே அதிக வேற் றுமைகள் உண்டு. இன்று புவியின் மேற் பரப்பில் தரையும், கடலும் காணப்படு கின்றன : புவியைச் சூழ்ந்திருக்கும் வளிமண் டலத்தில் நைதரசன் , ஒட்சிசன், ஆகன், காபன் ஈர்ஒட்சைட்டு, நீராவி, முதலியன காணப்படுகின்றன. புவி யி ன் மேற் பரப்பின் வெப்பநிலை0°-30° C ஆக இருக் கல. ம். புவியின் மேற்பரப்பில் இருந்து

Page 170
152 உயிரினங்களின் தோற்றம்
மேலே செல்லும் பொழுது வெப்பநிலை விரைவாகக் குறைந்து -60°C அளவை அடைகிறது. வளிமண்டலமும் மேலே செல் லும் பொழுது விரைவாக ஐதாகி விடுகி றது. ஏறக்குறைய தரையிலிருந்து 20 மைல் உயரத்தில் ஒசோன் ( 03)படை ஒன்றுண்டு. சூரியனில் இருந்து வெளிவீசப்படும் UV வீசல்களை வளிமண்டலத்திற்குள் புக விடாது இப்படை தடுத்து விடுகிறது. பூர் வகாலத்திலோ புவியின் மேற்பரப்பில் கடல் இருக்கவில்லை. தரையும் இருக்க வில்லை. வெப்பநிலை 15009C அளவில் இருந் நிருக்கலாம் என எண்ணப்படுகின்றது. உலோகங்கள் பல திரவநிலையிலேயே காணப்பட்டன. அக்கால வளிமண்டலத் தில் ஒட்சிசன் எதுவும் இருக்கவில்லை. நைத ரசனும் தனியாகக் காணப்படவில்லை. tổGg, sắt [CH4 ] -s/Guprr Gofìu T (NH3) 925 ரோசைனிக்கமிலம் (HCN) முதலியனவற் றுடன் நீராவியும் இருந்திருக்கலாம்.காபன் ஈர்ஒக்சையிட் மிகக் குறைவு. காபன் மொனற்சயிற் ஓரளவுக்கு இருந்திருக்க லாம். எனவே தற்கால உயிரினங்களுக்கு பூர்வ கால வளி மண்டலம் மிக நச்சுத் தன் மையுடையதாக இருந்திருக்கும். மேலும் அக்காலத்து வளி மண்டலத்தில் ஒசோன் படை இருக்கவில்லை. எனவே சூரியனிலி ருத்து வீசப்பட்ட UV வீசல்கள் தடையின் றிப் புவியின் வளி மண்டலத்தை அடைந் தன. மின்புயல்கள் அக்காலத்தில் அநேக மாக ஏற்பட்டிருக்க வேண்டும். உயிரினங் கள் தோன்றுவதற்கான முதற் கட்டம் இப்படியான நிலமைகளில் ஏற்பட்டது. மீதேன் அமோனியா ஐத்தரோசையனிக் கமிலம் ஆகியவை தொடர்ந்தேர்ச்சியாக UV வீசல்கள் மின்னிறக்கங்கள், உயர்ந்த வெப்பநிலை, ஆகியவற்றினல் தாக்கப்பட்டு தம்மிடையே தாக்கமுற்று எளிதான சேத னவுறுப்புப் பொருட்களைப் பிறப்பித்தன எனக் கருதப்படுகிறது.
ஒபாரினின் முதலில் வெளியிட்ட இக் கருத்து 1953ல் பரிசோதனைச்சாலையில் நிரூ பிக்கப்பட்டது. அவ்வருடத்தில் மில்லர் என்பவர் மீதேன், அமோனியா, ஐதரசன் ஆகிய வாயுக்களை நீராவியுடன் சேர்த்து ஓர் ஆய்வுக்கருவியினுள் அடைத்து, தொடர்ந்தேர்ச்சியாக அக்கலவையை மின்

க. அருட்பிரகாசம்
னிறக்கங்களினுற் தாக்க வைத்தார். இப் பரிசோதனை ஒரு கிழமையாகத் தொடர்ந்து நடத்தப்பட்டது. ஆய்வுகருவியினுள் பரி சோதனையின் பொழுது சேர்ந்த திரவப் பொருள் பாகுபாடு செய்யப்பட்டது. அத் திரவப் பொருளில் பல்வேறு சேதனவுறுப் புப் பொருட்கள் உண்டா கியதை அவர் கவனித்தார். தோன்றிய அப் பொருட் களில் அமினே அமிலங்களும் அல்டிக்கைற் றுக்களும் காணப்பட்டன. இப் பரிசோத னையின் விளைவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். ஏனெனில் பழைமை யான வளி மண்டலத்தில் இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் அதே வாயுக்களை அக் காலத்தில் ஏராளமாக இருந்த சக்திவகை யினுல் தாக்கியபொழுது அசேதனவுறுப்புப் பொருட்களில் இருந்து சேதனவுறுப்புப் பொருட்கள் தோன்றின. மேலும் தோன் றிய சேதனவுறுப்புப் பொருட்களில் பல உயிரினங்களுக்கு இ ன் றி ய  ைம ய ர த பொருட்களாகும். மில்லரின் பரிசோதனை யைத் தொடர்ந்து வேறு பல பரிசோதனை கள் பல்வேறு நிபுணர்களினல் நடத்தப்பட் டன. அப்பரிசோதனைகளில் பூர்வ கால நிலைமைகளை உபயோகித்து உயிரினங்களின் உடல்களிற் காணப்படும் எளிதான மூலக் கூறுகளில் பெரும்பாலானவை சோதனைச் சாலேகளில் தாயரிக்கப்பட்டுள்ளன. அமினே அமிலங்கள், நியூக்கிளியோதைட்டு மூலங் கள், எளியநியூக்கிளிக்கமிலங்கள், காபோ ஐதிரேற்றுக்கள் இவை யாவும் தயாரிக்கப் பட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த பொன்னம்பெருமா என்பவர் இவ்வா ராய்ச்சித்துறையில் முன்னிலையில் நிற்பதை நாம் இங்கே பெருமையுடன் குறிப்பிட லாம்.
எனவே auf 6Trias 6fair உடல் அமைப்பிற்கும் உடல் இயக்கத்திற்கும் அவசியமான பெரும் மூலக் கூறுகளை ஆக் கும் அலகுகள் யாவும் பூர்வ கால வளிமண் டலத்தில் அசேதனவுறுப்புப் பொருட்களி லிருந்து தோன்றியதைப் பற்றி ஐயம் எது வும் இல்ஃல. அக்காலத்து வளி மண்டலமும் புவி மேற்பரப்பும் பலகோடி வருடங்களுக் குப் பின்னர் படிப்படியாக வெப்பத்திற் குறைந்தன. இதற்கிடையே வளி மண்ட லத்தில் ஏராளமான சேதனவுறுப்புப்

Page 171
உயிரினங்களின் தோற்றம் .
பொருட்கள் தோன்றியிருக்க வேண்டும். நீரின் கொதிநிலை ஆகிய 100° C லும் புவி மேற்பரப்பின் வெப்பநிலை கு ைற ந் த பொழுது வளிமண்டலத்தில் நிறைந்திருந்த நீராவி நீராக மாறலாயிற்று. எனவே தரையின் மேல் பெருமாரி பொழிய ஆரம் பித்து விட்டது. இம்மாரி இடைவிடாது பல கோடி வருடங்களாக நிலைத்திருந்தது ஏனெனில் தற்பொழுது எமது கடலிலும், ஏரிகளிலும் ஆறுகளிலும் புவியினுள்ளும் இருக்கும் நீர் முழுதும் பெரும்பாலும் அக் காலத்திலேயே வளி மண்டலத்தில் இருந்து தரைமீது விழுந்திருக்கவேண்டும். தரையை அடைந்த நீர் சுத்தமானதாக இருக்கவில்லை படிப்படியாக வளி மண்டலத்தில் சேர்ந்தி ருந்த சேதனவுறுப்புப் பொருட்கள் அத் தனையையும் அப் பெரும் 18ாரி கரைத்துப் புவியின் மேற்பரப்பில் சேர்த்து விட்டது. விட7 மழையிஞல் படிப்படியாகப் புவியின் தரையில் கடல் தோன்றியது. இவ்வாறு தோன்றிய கடல் தற்காலக் கடலில் இருந்து மிகவும் வேற்றுமையானதாகும். ஏனெ னில் அதன் நீரில் சேதனவுறுப்புப் பொருட் கள் ஏராளமாகக் கரைந்திருந்தன. மேலும் அதன் வெப்பநிலை சிறிது உயர்ந்ததாக இருந்தது. எனவே கல்டேன் என்பவர் அப் பூர்வக் கடலை "ஐதான வெப் ப ம ன விருத்து" என வர்ணித்துள்ளார்.
உயிரினங்களின் தோற்றத்தின் அடுத்த கட்டம் இவ் ஐதான வெப்பமான விருத் தில் நடைபெற்றது. பல்வேறு சேதன வுறுப்பு வகைகள் ஒன்றுடன் ஒன்று தாக்க முற்றுப் பல்பகுதிச் சேர்வையாக்கம், ஒடுக் கம் போன்ற முறைகளினல் படிப்படியாக பெரும் மூலக்கூறுகளை உருவாக்கின. இவ் வண்ணம் அவ்விருத்தில் வெல்லங்கள், லிப் பிட்டுக்கள், புரதங்கள், நொதியங்கள், நியூக்கிளிச் கமிலங்கள் ஆகியவை தோன்றி யிருக்கலாம். அதாவது உயிரினங்களின் இயக்கத்திற்கும் உடலமைப்புக்கும் அவசி யமான பெரும் மூலக் கூறுகள் அத்தனையும் படிப்படியாகத் தோன்றியிருக்கலாம்.
பெரும் மூலக் கூறுகள் முதல் உயிரினங் களாக ம்ாறியதெப்படி? இப்பிரச்சினை இன் னும் சரியாகத் தீர்த்து வைக்கப்படவில்லை. ஆஞல் ஒபாரின் னின் கருத்துப்படி இணை

க. அருட்பிரகாசம் 153
யல் குவியல் ஆக்கம் (coacervation) இம் மாறுதலின் முதற்பருவமாகலாம். சேதன வுறுப்புப் பெருமூலக் கூறுகள் கரைசலில் இருக்கும் பொழுது அநேகமாகக் கூழ் நிலை யில் இருப்பது வழக்கம் இக் கூழ் களில் நீர் விருப்புள்ள துணிக்கைகள் ஒவ்வொன் றைச் சுற்றியும் நீர் மூலக் கூறுகள் ஒழுங் காக அமைந்து நீரோடுகளை உருவாக்கி விடுகின்றன. பல பெரும் மூலக் கூறுத் துணிக்கைகள் தமது நீரோடுகளின் வெளிப் பருப்புக்கள் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைந்து விடலாம். இவ்வாறு இணையும் துணிக்கைகள் படைகளாகவோ துளிகளா கவோ கரைசலில் இருந்து பிரியலாம். துளி களாகப் பிரியும் இவ் வினோயல் குவியல்களுக் கும் உயிரினங்களின் கலங்களுக்குமிடையே சில ஒப்புமைகள் உண்டு. பிரதானமாக இணையக்குவியல்களின் மேற்பரப்புக்கள் குறையூடு புகவிடும் சவ்வுகள் போல் தொழிலாற்றும் சக்தியுடையவை. எனவே இணையக் குவியல்கள் தமது சூழலில் இருந்து சில பொருள்களை அகத்திற்கு உறிஞ்சிவிடு கின்றன. வேறு சில பொருட்களைப் புகவிடு வதில்லை. மேலும் இணையக்குவியல் குமி முற் பல வினப்புரதங்கள் சேர்ந்திருக்க லாம் . அப்புரதங்கள் ஒழுங்கான முறை களில் அமைந்தும் இருக்கலாம். மேலும் வெவ்வேறு இடங்களில் வெவ் வேறு அமைப்புடைய இ ஃண ய ல் கு வி ய ல் கள் தோன்றியிருக்கலாம். இணையல்குவியல் கள் வளர்ந்து மாறுநிலைக்குரிய பருமனை அடைந்ததும் இரண்டாகப் பிரித்திருக்க லாம். மேலும் வெவ்வேறு இணையல்குவியல் களிடையே உயிரினங்களைத் தோற்றுவிக் கும ஆற்றலைப் பொறுத்தளவில் ஒருவித இரசாயனத் தேர்வும் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனல் இத்தகைய இணையல் குவியல் களுக்கும் உண்மையான உயிரினங்களுக்கு மிடையே அநேக வேற்றுமைகளுண்டு இக் குவியல்கள் நிலையான அமைப்புடையவை. ஒரு சூழலில் த னி யாக வைக்கப்படின் சிறிது நேரத்திற்குப் பின்பு சக்தியோ பதார்த்தங்களோ எதுவும் மாற்றப்படாது இணையக் குவியல் தன் சூழலுடன் சமநிலை அடைந்து விடும். உயிரினங்களோ உறுதி நிலையை உடையனவாக இருந்தாலும் அந் நிலை உறுதியற்ற அமைப்பைக் கொண்ட

Page 172
154 உயிரினங்களின் தோற்றம்
தாக இருக்க வேண்டும். உறுதியற்ற அவ் வமைப்பு தொடர்ச்சியாக சக்தியையும் பதார்த்தங்களையும் உட்கொள்ளுவதன் மூலம் நிலைநாட்டப்படல் வேண்டும். இப் படியான முன்னேற்றம் எவ்வாறு நடை பெற்றது என்பது விளங்கவில்லை.
ஆஞல் ஐதான வெப்பமான விருத்தி னுள் இயற்கை விதிகளுக்கிசைய முதல் உயிரினங்கள் தோன்றின என்பதையிட்டு ஐயமில்லை. முதற்தோன்றிய உயிரினங்கள் மிக எளிதானவை பிறபோசனிகளாகவே இவை இருந்திருக்க வேண்டும் எனக் கருதப் படுகிறது. ஏனெனில் தற்போசனை முறைக ளிலும் பிறபோசன முறைகளே எளிதா னவை. மேலும் அக்காலக் கடல்களில் ஏராளமான சேதன அறுப்புப் பொருட்கள் கரைந்திருந்தன. எனவே உயிரினங்கள் தமக்கவசியமான பொருட்களைச் சூழலி லிருந்தே உறிஞ்சி எடுத்துக் கொண்டன. மற்றும் உயிரினங்களையும் உண்டிருக்கலாம், ஆளுல் சூழலில் படிப்படியாக சேதனவுறுப் புப் பொருட்களின் செறிவு குறைந்திருக் கும். ஏனெனில் பழைய வளிமண்டலத்தில் இருந்த மீதேன், அமோனியா என்பன சேதனவுறுப்புப் பொருட்களாக மாற்றப் பட்ட துட ன் வளிமண்டலத்தில் அப் பொருட்கள் படிப்படியாகக் குறைந்தன. புதிதாகச்சேதனவுறுப்புப் பொருட்கள் உரு வாகும் முறை இறுதியில் அற்றுப்போ யிற்று. அக்காலத்து உயிரினங்கள் புதிய போசனை முறைகளை ஸ்தாபித்திருக்கா

க. அருட்பிரகாசம்
விடின் கடலில் கரைந்திருந்த சேதனவுறுப் புப் பொருட்கள் அற்றுப் போக உயிரினங் களும் மறைந்திருக்கும். ஆனல் ஒரு சில உயிரினங்கள் சூழலில் இருக்கும் பொருட் களே நம்பியிராது வளி மண்டலத்தில் படிப் படியாகத் தோன்றிய புது வாயுவாகிய காபன் ஈர் ஒக் சயிற்  ைர யும் நீரையுங் கொண்டு சூரிய ஒளிதரும் சக்தியின் மூலம் அதாவது ஒளித்தொகுப்பு முறை சேதன வுறுப்புப் பொருட்களைத் தயாரிக்கலாயின. காபன்ஈர்ஒக்சயிற் எவ்வாறு தோன்றியது எனும் கேள்வி எழலாம். பிறபோசன உயி ரினங்கள் சூழலுடன் கொண்ட தாக்கங் களின் விளைவுகளாக சேர்வைகளுள் கட் டுப்பட்டிருந்த ஒட்சிசன், காபன்ஈர்ஒக்ச யிற் படிப்படியாக விடுவிக்கப்பெற்று வளி மண்டலத்தை அடைந்தன. இவ்வாறு தற் காலத்து வளி மண்டல நிலைமை உயிரினங் களின் முயற்சிகளாலேயே ஸ்தாபிக்கப்பட் டது என நாம் கூறி விடலாம்.
புவியின் கண் உயிரினங்கள் முதற் தோன்றிய விபரங்கள் யாவற்றையும் நாம் இன்றுவரை நன்கு விளங்க முடியவில்லை. ஆனல் அண்மைக் காலங்களில் நடத்தப் பட்ட பல பரிசோதனைகள் மூலம் இது பற்றி எமது அறிவு மிகவும் விரிவடைந்துள் ளது. 20ம் நூற்ருண்டு முடியுமுன் இப்பிரச் சினை அநேகமாகத் தீர்க்கப்பட்டுவிடும் என
pm Lb GT Srtun tä sovrrub.

Page 173
சொல்லி விளங்காது
மாவிட்ட புரத் மனிதரே இல்ல போய்விட்டார்
போர்க்களம் அ
வீரர்கள் வீதியின் ஓரிரு
உலவிட
துணிவிலை நெ தொங்கிய கவ தனிமையை கா தயங்கியவ் வ
செல்கி செங்தப மெல்லி மெய்ெ
சாலமோ என்று சற்றுயான் து வேலியில் தாவ வேதனை வடிய
ஏன் 6 GT Gör n
யான்
யாதுே
பூட்டிய கத3ை பூசகர் முதலா! கூட்டமும் வெ கூடுமே புனித
வீட்டு வீதியி ஓட்டுக உயிர்த்

- - 9 İD?) -
து முன்றில் ா நேரம்
அங்கு நின்று அமைத்த வீரர்.
ர் செல்ல, அந்த ல் அமைதி. மக்கள் பேர்கள் கூட
-த் துணிய வில்லை.
ஞ்சில், ஆயின் லை போக்கத் டி கானே
ழியே சென்றேன்.
m) @ນ@ດr யாரோ Sழ்க் கவிதை பாடும் ய குரலாள் மின்னே
பலாம் பாய்ச்சி விட்டாள்.
று சுற்றம் ருவ, அங்கே
வள்ளி நின்ருள்.
ானக் கேட்டேன் அன்னுள்
கிலை அறியீர் என்றல்
எதைச் சொல்வேன் சொல்லி ம விளங்கா தென்ருள்.
வப் பார்த்தேன் ப் எல்லாக் ளியே கின்ருல் ம் என்ருள்.
ற வெல்லாம் உள்ளே ல் வைக்கின் ருர்கள் அவரை அன்றே திடும் புனிதம் என்ருள்.

Page 174
நங்கையர் விரும்பும்
ன்னும் 6ை சிறந்த (
 

நவநாகரீக நகைகளுக்கும் வரங்களுக்கும் ஸ்தாபனம்
O O O. 6)
O з- п от) "
r“
நகை மாளிகை
யாழ்ப்பாணம்.
5.5 S 5

Page 175
அறிவியல் இயக்
ளங்கோவடிகள் வழிநின்று தமிழ் வளர்த்தார் பெஸ்கி அடிகள் தமிழ் வாணர்கள் நிறைந்திருந்த மது ரைத் தமிழ்ச் சங்கத்தில் தேம்பாவணி யத்தை அரங்கேற்றிய நேரம் வீரமாமுனி வர் என்ற பட்டத்தைச் சூட்டிஞர்கள் தமிழ்ப் புலவர்கள். திராவிட மொழிகளின் தொன்மையையும், திறமையையும் ஒப்பீடு செய்து இதை ஒப்பிலக்கணத்தின் மூலம் நிரூபித்துக் காட்டினர் கால்டுவெல், திரு வாசகத்தை மேல் நாட்டவர்க்கு அறிமுகம் செய்தார் கிறிஸ்தவ மதபோதகரான போப் ஐயர். இவர்களை யெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் மறந்து விடவில்லை. மெரீனுக் கடற்கரையில் எழுந்து நிற்கும் இவர்களது சிலைகள் இவர்களின் தொண் டிற்குச் சான்றுகளாகும்.5இவர்கள் வரிசை யிலே அறிவியல் இலக்கியத்தை வளர்க்க முற்பட்டார் டாக்டர் கிறீன், அறிவியல் இலக்கியத்தைத் தமிழர்கள் சிந்திக்காத காலம். மேலை நாட்டவர் மீது மதவெறி யர்கள்" என்று இந்நாட்டவர் வெறுப்பு ணர்ச்சியை வளர்த்துக் கொண்ட நேரம். இந்தச் சூழ்நிலையில் மேல் நாட்டு மருத்து வத்தையும், மருத்துவ இலக்கியத்தையும் வளர்க்க முற்பட்டார் டாக்டர் கிறீன். மேலை நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று பாரதியார் கூறுவதற்கு முன்பே அவர் கனவை நனவாக்கினர். காதலையும், வீரத்தையும் காவியமாக்கிய தமிழர் அறி வியல் இலக்கியத்தை வளர்த்த டாக்டர் கிறீனின் தொண்டுகளை விளம்பர மற்ற சரக்குகளாக்கி விட்டனர்.
'தமிழர்களின் மருத்துவ போதகன்" (Medical Evangelist to the Tamils) 6 Feir gy எனது கல்லறையில் பொறியுங்கள் என

கத்தின் தந்தை
சு. ரட்னேஸ்வரன்
ஆசைப்பட்டார் டாக்டர் கிறீன். "கிறின் ஹில்' இல் அமைதியாகத் தூங்கிக் கொண் டிருக்கும் அவரது கல்லறை அவர் விரும் பிய பாக்கியத்தைத் தாங்கிக் கொண்டு தானிருக்கிறது. அடுத் த டீ ரு த்து வ பீடத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவவேண்டு மென்று கோரிக்கை விடும் நம்மவர் இற் றைக்கு நூற்றி இருபத்திரண்டு ஆண்டு களுக்கு முன் முதலாவது மருத்துவக் கல் லூரி யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட தென்ருல் ஆச்சரியமல்ல; நம்பவே தயங்கு வார்கள். சரித்திரம் ஊமையாகி விட்டா லும் டாக்டர் கிறீன் கைபட்டு வெளி யேறிய நூல்கள் பேசா மடந்தைகளாகி விடவில்லை. அவை இந்த உண்மையைப் பட்ட வர்த்தனமாக எடுத்துக்கூறுகின்றன.
1848ம் ஆண்டு மருத்துவக் கல் லூரியை ஆரம்பித்த டாக்டர் கிறீன், மருத் துவக் கல்லூரியின் நோக்கத்தை இவ்வாறு அறிமுகஞ் செய்கிருர்,
...to see the time when European medical practice shall become indegeneous here and mostly and if not quit displace the native system with the decline of which much supersition will be removed from the burdened necks of the people.
ஆங்கிலத்தைப் பாட மொழியாகக் கொண்ட கல்லூரியில் உடற்றெழிலியலும், உடற் கூற்றியலும், இரண வைத்தியமும், வைத்தியமும்போதிக்கப்பட்டன. வைத்தி லிங்கமும், டன் வதரும், டெனிசலும் இலங் கையிலேயே மேல் நாட்டு மருத்துவத்தைக் கற்ற வைத்தியக் கலாநிதிகளாகும். இங்கி லாந்து சென்று M.D. பட்டத்தைப் பெற்ற

Page 176
158 அறிவியல் இலக்கியத்தின்.
முதலாவது இலங்கையன் என்ற பெருமை டன் வதருக்கே உரியது.
பாடமொழி ஆயிரத்துத் தொளாயி ரத்து அறுபத்தி நான்காம் ஆண்டிலி ருந்து தமிழிற்கு மாற்றப்பட்டது. தமிழில் மருத்துவம் தமிழர்க்குப் புதிய அறிமுகம் அல்ல. கி. பி. மூன்ரும் நூ ற் ரு ண் டி ல் எழுந்த பக்தி இலக்கியமான திருவாசகத் திலே தெறித்துக் கிடக்கும் மருத்துவக் கருத்துக்கள் ஏராளம். கி. பி. இரண்டாம் நூற்றண்டைச் சேர்ந்ததென ஏற்றுக் கொள்ளப்பட்ட வள்ளுவனின் உலக மறை யிலே மருத்துவனுக்கு இலக்கணம் கூறப் பட்டிருக்கிறது.
நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.
இது வள்ளுவனின் பொய்யா மறை. மருத் துவக் கலைக்காக மூலிகை வனம் அமைத்த பரராசசேகரனைப் பற்றி சங்கிலித்தோப் பிலே சாய்ந்து கிடக்கும் தூண்களேபேசும். காலத்தாற் சிதைந்தாலும் கதை சொல் லும் கற்கள் அவை! இவையெல்லாம் கீழ் நாட்டு வைத்தியம் வளர்ந்திருந்தமைக்குச் சான்றுகள். அறிவியல் அடிப்படையில் அமைந்த மேலை நாட்டு முறையே எமக்குப் புதிய முயற்சி. அந்த வழியில் புதிய சகாப் தத்தை ஆரம்பித்து வைத்தார் டாக்டர் கிறீன். அறிவியற் கலைகளைத் தமிழில் பயிற் றுவித்தல் இயலாது என்று எண்ணி வந்த படித்தவர்களின் எண்ணிக்கை அளவிடற் சரியது. சென்ற காலப் புகழ்பேசி, நிகழ்காலத்தை இகழ்ந்து, எதிர்காலத் தைப் பற்றி எண்ணுது வாழ்வோரின் எண் ணிக்கை அதைவிட மிகுதி. ஆனல் எதிர் கால நாட்டை உள்ளத்திருத்தி அதற்கான நலம் பயக்கும் குறிக்கோளினைக் கொண்டு வாழ்வோரின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
“ “S5 LÁgs)do (ypaq-quort?” arallir o Gas Gir விக் குறியோடு தயங்கியபடியே அடி எடுத்து வைக்கும் இன்றைய தமிழர்களைப் போலல்லாது, தனி ஒருவனுக செயலில் இறங்கினன் வேற்று நாட்டவனுண் டாக் டர் கிறீன், மருத்துவத்தைத் தமிழில்

døř. arz "Go Gorsaivanvrar
வளர்க்க வேண்டுமானல், மேலை நாட்டு மருத்துவ நூல்களை மொழி பெயர்க்க வேண்டிய அவசியத்தையும், புதிய கலைச் சொற்கள் உருவாக்க வேண்டும் என்ற நிர்ப்பத்தந்தையும் உணர்ந்தார் டாக்டர் கிறீன். எட்டு வருடத்திற்கு முன் மொழி பெயர்க்கத் தொடங்கிய உடற்ருெழிலியல் மருத்துவ நூலொள்றை இன்றுவரை செய்து முடிக்காத இலங்கை டாக்டர் களைப் போலல்லாது தானே மேலை நாட்டு மருத்துவ நூல்களை மொழிபெயர்த்தும், மொழிபெயர்ப்பித்தும் வெளியிட்டார். ஆங்கில நூல்களிலே சிறந்ததெனக் கருதப் பட்டவைகளைத் தமிழில் மொழி பெயர்த் தார். டாக்டர் கிறீஞல் மொழி பெயர்க் கப்பட்ட நூல்கள்.
1. உடற்ருெழிலியல் (மனுஷசுகரணம்)
Human Physiology by Professor John C. Dattan.
Translated by Daniel W. Chapman
(Medical Practioner)
Revised and edited by Samuel F. Green M. D.
Printed in the Press of Strong and Asbury Year: 1883
2.மனுஷஅங்காதிபாதம்(உடற்கூற்றியல்)
Human Anatomy Compiled from Grey, Harner, Smith & Wilson Translated by Daniel W. Chapman Supervised by Samuel F. Green M. D. Press: Manipay Year: 1872
3. வைத்தியாகரம்
The Principles and Practice of physiology. Modified Tamil version of Physicians Vade Mecum by Hooper Translated by William Paul (M. P.) Supervised and amended by S. F. Green Press: Nagar - Coil London Misson Press Year: 1872

Page 177
அறிவியல் இலக்கியத்தின்.
4. அருஞ் சொற்களை அடக்கிய அகராதி
Vocabularies of Materia Medica
and Pharmacy of Midwifery
and Diseases of women and children
and
of Medical Jurisprudence
By Samuel F. Green M. D. Printed for American Ceylon Misson by Nagar - Coil London Misson Press This book is based on the index to the Pharmacopoeia of India. It also includes Terms from the supplement to the Pharmacopoeia of India.
5. இரண வைத்தியம்
The science and art of Surgery Compiled from Erichen and Druitt Translated by Joshua Danforth (Head Dispenser to the Jaffna Friend in Need Society) Edited by samuel F. Green M. D. Press: Manipay. Year: 1867.
இந் நூல்களை மொழிபெயர்த்து வெளி பிடுவதுடன் டாக்டர் கிறீன் நின்று விட வில்லை. இவர் காலத்தில் வாந்தி, பேதி போன்ற நோய்கள் பரவி நூற்றுக் கணக் கான மக்களைப் பலி கொண்டது. நோய் களைப் பற்றி மக்களின் அறியாமையே நோய்கள் பரவுவதற்குக் காரணம். பாமர மக்களின் மருத்துவ அறிவைப் பெருக்கு வதற்குப் பல துண்டுப் பிரசுரங்களை வெளி யிட்டார். அன்றிலிருந்து இலங்கைப் பத்தி ரிகைகள் டாக்டர் கிறீனின் முன் மாதிரி யைப் பாராட்டின. இவற்றுடன் நின்று விடாது தனது சொந்த ஆராய்ச்சிக் கட்டு ரைகளையும் எழுதிஞர் டாக்டர் கிறீன். The eye The ear The hand The foot The skin The mouth The body

de. Mr CG 6orav av grair 159
Be clear, Hints for chlorea times, The way of health என்ற கட்டுரைகளும் இவ ரால் எழுதப்பட்டன. தமிழ்ப் பிரசவம் (Tamil obstetrics), as Lisp gutobot on as uth (Tamil Surgery) -6)u L-má-ti 6ð னின் இரு கட்டுரைகளேயும் அமெரிக்காவி 6Soiss avgth New York Medical Journal என்ற பத்திரிகை பிரசுரித்துள்ளது.
மொழிபெயர்ப்புடன் நின்று விடாது, பரந்து கிடக்கும் தமிழ் மக் களு க்கு ப் பொதுவான கலைச்சொற்களை ஆக்குவதில் இந்தியத் தமிழர்களுடனும் தொடர்பு கொண்டார். "எல்லோர்க்கும் பொது வான கலைச் சொற்களை உருவாக்குவதில் நீங்கள் ஒத்துழைத்தால் எனக்கு மகிழ்ச்சி யையும், ஊக்கத்தையும் கொடுக்கும்" என்று தமிழ் நாட்டிலிருந்த டாக்டர் லோ (Dr. LOWe) என்னும் மருத்துவ அறிஞ ருக்கு எழுதினர். ஈழத்தவர்க்கும், தமிழ் நாட்டவர்க்கும், மலேஷியத் தமிழர்களுக் கும் பொதுவான கலைச்சொற்கள் இருக்க வேண்டுமென்ற கருத்து வலியுறுத்தப்படு கிறது. அறிவியற் கருத்தைத் தமிழில் கற் பிப்பதில் அனைத்துலக ஒருமைப்பாடு இருக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. சென்னை மாநகரிலே, இரண்டாவது உல கத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டிலே மொழி பெயர்ப்பு இலக்கியம், கலைச்சொல் லாக்கம் ஆகியன ஆராயப்பட்டன. ஈழத் தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட ஆர். அம்பிகைபாகன் ஒருமைப்பாட்டின் அவசி யத்தை வலியுறுத்தினர்.
- இன்றைய சமுதாயத்தை எதிர் நோக் கியுள்ள பணியொன்றுள்ளது. அது தான் அறிவியற் துறைகளில் கலைச் சொல்லாக்கமும், மொழிபெயர்ப்பு விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சியும், ஒரு மைப்பாடும் காண்பதாகும். ஈழத் தமி ழர் தமிழக நூல்களையும், வெளியீடு களையும் பயன்படுத்தல் வேண்டும். அதேபோல தமிழகத்தினர் ஈழத்து நூல்களையும், வெளியீடுகளையும் பயன் படுத்தல் வேண்டும். இந்த இரு வழிப் பாதை வலுப் பெற்ருல் தான் தமிழ் வளர்ச்சியும், தமிழுணர்வு வளர்ச்சி யும் நிலைநாட்டப்படும். அதற்கு இன்று

Page 178
160 அறிவியல் இலக்கியத்தின்.
ஈழத்தில் என்ன நடை பெற்றுள்ளது என்பதைத் தமிழகத்தினர் நன்கு அறிந்து உணர்ந்து கொள்ள வேண் டும். அதேபோல ஈழத் தமிழர் தமிழக முயற்சிகளையும் அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு ஓர் இணைப்புக்குழு அல்லது நிறுவகம் அவ சியமாகும்.
மகாநாட்டுப் பிரதிநிதிகள் இக்கருத் தைப் பலமாக வரவேற்ருர்கள். தமிழா ராய்ச்சி மகாநாட்டுக் குழுவும் வேண்டிய முயற்சிகளைச் செய்வதாகக்கூறியது. தமிழ் நாடு கல்வியமைச்சர் திரு. இரா. நெடுஞ் செழியனும், முன்னைநாள் உள்ளூராட்சி அமைச்சர் திரு. மு. திருச்செல்வம் கியூ.சி. அவர்களும் இதை அரசாங்க மட்டத்தில் ஆராய்ந்த இணைப்புக் குழு அமைப்பதாக அறிவித்தார்கள். இவ்வாண்டு ஆடி மாதம் பிரான்சின் தலைநகரான பாரிஸ் மாநகரில் மூன்ருவது தமிழராய்ச்சி மகாநாடும் நடந் தேறிவிட்டது.இணைப்புக்குழுவிடயம்என்ன வாயிற்று என்று தெரியவில்லை. "வாய்ச் சொல்லில் வீரரடி" என்ற பாரதியின் பாட்டுத்தான் ஞாபகம் வருகிறது. 1865ம் ஆண்டு டாக்டர் கிறீன் காண முற்பட்ட ஒருமைப்பாடு இன்னும் முற்றுப் பெருது வெறும் தீர்மானங்களுடன் நின்றுவிட்டது.
தமிழில் போதிப்பதுடன் மருந்துகளின் பெயர், நோய்களின் பெயர். இடாப்புகள், கணக்கு விபரங்கள், மருந்துக் குறிப்புகள் யாவும் தமிழிலே எழுதப்பட்டன. நடை முறையில் எல்லாம் தமிழ் இயக்கத்தை நடாத்திக் காட்டினர் டாக்டர் கிறீன். இன்று அறிவியற் கலைகளை நன்குணர்ந் தோர் மிகுதியாகவுள்ளனர். அவற்றை தமிழில் முழுமையாக செய்து பரப்புவோர் அரிதினும் அரிது. டாக்டர் கிறீன் அவர்கள் தமிழ் அறிவியற் கலையுலகில் திசைகாட் டும் விண்மீன். அவர் காட்டிய வழியை இன்றைய தமிழ் அறிவியல் அறிஞர்கள் பின்பற்றினுல் " "மெல்ல த் தமிழினிச் சாகும்’ என்ற அச்சம் பையப் பறந்து 696 Ouo!
1869ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொழும்பில் மருத்துவக் கல்லூரி அமைப்

ir܂ ܐ ، ¬ -ܪܺܕܱ zܡ܂ ? ·AZA *
பது பற்றி தேசாதிபதி ருெபின்ஸனல் (Sir Hercules Robinson, Governor of the Island) கூட்டப்பட்ட உபகுழுவில் விவாதிக் கப்பட்டது. வடமாகாண அரசாங்க அதி பராயிருந்த திரு. ரஸல் (Mr. H. S. O. Russel) இந்த விவாதத்தில் கலந்து கொண்டு டாக்டர் கிறீனின் மருத்துவக் கல்லூரியையும் அதன் உபயோகத்தையும் கல்லூரியின் சிறப்பியல்புகளையும் எடுத்து விளக்கிஞர். திரு. ரஸ்ஸல் மருத்துவக் கல் லூரி பற்றிக் குறிப்பிடும் போது அது உப குழுவின் கவனத்தை ஈர்த்தது. இதை அர சாங்க அதிபரே கிறீனுக்கு எழுதினர்.
Kandy, Oct. 12 - 1869. Dear Sir,
You have probably learned from the local press that the estabilishment of a Medical School at Colombo is contemplated by government at the discussion of the subject in Sub-Commit.ee. I mentioned the utility and high character of your Medical School, and from the reception with which my rcmarks met I am inclined to think if the case of your Institution were properly before the Legislative Council it might be possible to obtain a grant of goverment funds in aid of your school.
Yours Very truly, H. S. O. Russel.
"மருத்துவக் கல்வியையும், மருத்துவ இலக்கியத்தையும் வளர்க்க அரசாங்கம் உதவி செய்யுமானல் நான் மகிழ்ச்சியடை வேன்' என்று பதில் அனுப்பினர் டாக்டர் கிறீன். அரசாங்க அதிபரின் கடிதத்தில் இருந்து கொழும்பு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு இருபத்தொரு வருடங் களுக்கு முன்பே டாக்டர் கிறீன் யாழ்ப் பாணத்தில் மருத்துவக் கல்லூரியை ஆரம் பித்து எல்லோருடைய கவனத்தையும், பாராட்டுதலையும் பெற்றிருந்தார் எனத் தெரிகிறது. இந்த ஆண்டு கொழும்பு மருத் துவக் கல்லூரி தனது நூற்றண்டு விழா வைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 1870ம் ஆண்டு யூன் முதலாந்தேதி தேசாதி

Page 179
அறிவியல் இலக்கியத்தின்.
பதி ருெ பின்சனல் ஆரம்பிக்கப்பட்ட இக் கல்லூரியின் கலன்டரில் கல்லூரி அமைக் கப்பட்ட நோக்கம் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
It was designed to import to the native Youths of the Island practical Sound and safe, knowledge of medicine and surgery so as to enable them to engage in private practice or fill Subordinate posts in the public service
தனது மருத்துவக் கல்லூரியின் நோக்கம் பற்றி 1848ம் ஆண்டு டாக்டர் கிறீன் எழு திய கருத்தைத் தான் கொழும்பு மருத்து வக் கல்லூரியின் கலன்டரும் பிரதிபலிக்கி றது. கொழும்பு மருத்துவக் கல்லூரி பிறந்த அதே ஆண்டில் ஆறுபேர் கொண்ட கல்லூரியாக டாக்டர் கிறீனின் மருத்து வக் கல்லூரி திகழ்ந்தது.
ஆண்டு போதனமொழி வெ. டா.
848-1850 ஆங்கிலம் 3 1851 - 1853 * * 愛 全 854-1856 4.
1856-1859 8
86 - 864 M 6 864 - 1867 தமிழ் 867-1870
1871-1873 p 1873-1875 18
(வெ. டா வெளியேறிய டாக்டர்கள்)
மூன்று வருட பயிற்சித் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயிற்று விக்கப்பட்டனர். மருத்துவக் கல்லூரியிலிருந்து வெளியேறிய டாக்டர்கள் அரசாங்கத்திலும், சொந்த மாகவும் தொழில் புரிந்தார்கள். கொழும் பில் பிரதம மருத்துவ சிவில் அதிகாரி (The Principai Civil Medical Officer) யாக இருந்த டாக்டர் சாஸ்லி (Dr. Charses) டாக்டர் கிறீனின் மருத்துவக் கல்லூரியிலிருந்து வெளியேறிய டாக்டர் களைத் தன் கீழ் வேலைக்கமர்த்திக் கொண் டார். மருத்துவத்தில் அவர்களுக்கிருக்கும் ஆற்றலையும், அறிவையும் வியந்து கிறீனைப் பாராட்டினர். டாக்டர் சார்ஸ்லி அவர் களே கொழும்பு மருத்துவக் கல்லூரியின்

dir. /ru"G56or5íiy 6av /rsör 16I
திட்டங்களை அரசாங்கத்திற்கு வகுத்துக் கொடுத்தவர் ஆவர். கிறீனின் மருத்துவக் கல்லூரியைப் பின்பற்றி மூன்று வருடப் பயிற்சித் திட்டம் கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கும் வகுக்கப்பட்டது.
கொழும்பு மருத்துவ கல்லூரியின் அதிபராகவிருந்த டாக்டர், ஜேம்ஸ் லூஸ். (Dr. James Loos, Colonial Surgeon, Colombo) * 'இலங்கையின் மருத்துவக் கல்வி டாக்டர் கிறீனுக்கு மிக்க கடமைப் பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.
Colombo March - 27 - 1873 My dear Dr. Green,
Medical Education in Ceylon is deeply indebted to you and your predecessors. Your Tamil work on Medicine will remain a memorial of you after you are gone and you will not soon be forgotten.
Yours truly Dr. Loos
இவற்றிலிருந்து கொழும்பு மருத்துவக் கல்லூரி தொடக்கப்படுவதற்கு டாக் டர் கிறின் முன்னேடியாக இருந்திருக்கிருர் என்பது புலனுகின்றது. வேலூர் மருத்து வக் கல்லூரி உலகில் சிறந்த மருத்துவக் கல் லூரிகளில் ஒன்ருகத் திகழ்கிறது. இக் கல் லூரி கூட கிறீனின் மருத்துவக் கல்லூரி யைப் பின்பற்றி நிறுவப்பட்டதே! 1872ம் ஆண்டு டாக்டர் கிறீன் இலங்கையை விட் டுச் செல்ல வேண்டி ஏற்பட்டதால் மருத்து வக் கல்லூரியும் மூடப்பட வேண்டிய நிர்ப் பத்தத்திற்கு உள்ளாகியது.
அரசியலாரால் தாய் மொழிக் கல்வி பல்கலைக் கழகங்களிலும் புகுத்தப்பட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படும் இந்த நேரத்தில்தான் டாக்டர் கிறீனின் தொண் டு கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப் பட்டுள்ளன. அவரின் அரும்பணிகளை ஒன் றரை நூற்றண்டுகளுக்குப் பின்தான் தமி ழர்கள் உணரத் தலைப்பட்டிருக்கிருர்கள். இன்றுவரை இலங்கையில் எத்தனையோ மருத்துவ நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

Page 180
162 அறிவியல் இலக்கியத்தின்.
பேராசிரியர் சின்னத்தம்பியின் மகளிர் வைத்தியம்" என்ற நூலையும் டாக்டர் K. சிவஞான சுந்தரத்தின் (நந்தி) நூல்களையும் தவிர வேறு யார் தமிழில் மருத்துவத்தைப் பற்றி எழுதுகிருர்கள்? தமிழில் மருத்துவம் என்பது டாக்டர் கிரீனின் காலத்துட னேயே முடிந்த கதையாகி விட்டது. மேற் கத்திய நூல்கள் விஞ்ஞானத்தில் 'ரொக் கட்" வேகத்தில் விரைந்து செல்லும் போது நாம் பாரம்பரிய நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் என்று பெருமையாகச் சொல்லிச் கொண்டிருக்கிருேம்.
ஆதாரநூல்கள்:
(1) Life and Letters of Samuel Fisk Green M.D.
by Cutler Eqenezer.
அமிழ்தினும் இ ன் போற்றும் எம் அரிய பொருந்திய அழகுகளு அதன் பன்சொற்றுத் ளிற் பெரும் பாங்கா கொண்ட கூட்டங் கூ இச்சிறப்பினைப் பண்ை யர் சிறுபான்மையும், அ ளர் இல்லோர் பெரும் காட்டலுற்றர். தமிழ்ச் யும் ஒப்புநோக்கி அை மொழிகளோடும் ஊட கொண்டு ஆராயுமிடத் சொற் கூட்டங்களான6 போன்றதோர் ஒற்றுை அக்கூட்டங்கள், தம்மி வேறு கூட்டங்களின் ! தெளிவுறும்.

c17*. /rz ʼ.G3ʼ6aor 6nñy 6nv /7aör
உயர்ந்த நோக்கங்கள் அழிந்து விடுவ தில்லை. காலங் கடந்தாவது அவை மக்க ளால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சென்ற தலைமுறையினரை விட இன்றைய தமிழர் சமுதாயம் டாக்டர் கிறீனின் தொண்டுகளை அறிய முற்பட்டுள்ளது. இறு தியாக அடுத்த மருத்துவ பீடம் யாழ்ப் பாணத்தில் அமைக்கப்பட்டால் அதற்கு
"கிறீன் மருத்துவக் கல்லூரி” என்று
என்று பெயரிட தமிழ் கூறும் நல்லுலகம் ஆவன செய்யுமா?
(2) að sögoflsér Sj95ðra-G (Trail of Dr. Green) ஆசிரியர் இ. அம்பிகைபாகன் (அம்பி)
ரி யது என அறிஞர் ப தமிழ் மொழியின்கட் ருள் ஒன்று யாதெனில், தொகைப்பட்ட சொற்க ானவை தம்முள் இனங் டட்டமாய் இயலுதலாம். ட இலக்கண நூலாசிரி அக்காலத்து அகலறிவா
பான்மையும் எடுத்துக்
சொற்பரப்பு முழுதினை டவுபடநிறீஇ, பிறபெரும் டாடிய நுண் ண றி வு து, முற்கூறிய பலப்பல வற்றுள் குடும்பச் சாயல் ம நயம் வெளிப்பட்டு, Sலும் தொகை சுருங்கிய உறுப்புக்களாய் நிற்றல்
- ஞானப்பிரகாச சுவாமிகள்

Page 181
99ítb Cor
fro
M. RADHAKRISI
34, CENTRA
COLOME
| Tophone. 22126

mplimentš
1.
HNAN & BROS
AL ROAD,
3O-2.

Page 182
*தென்னிந்திய சஞ்சிகைகள் வளர்ச்சியை
இடம்: எட்வின் மண்டபம் கலைத்துறை மு. நித்தியானந்தன் செல்வி ராஜேஸ்வரி தர்மகுலசிங்கம்
நன்றியுரை: 21-2-7Ο M *சமுதாயத்தைப் பாதிக்கும் பிரச்சினை
தலைவர்: வே. திருநாவுக்கரச இடம்: இராமகிருஷ்ண இலங்கைப் பல்கலைக் கழகம்
மா. சின்னத்தம்பி
க. செல்வப்பிரகாசம்
செல்வி. நாச்சியார் மாரிமுத்து
நன்றியுரை: இ. முத்.
1-7-7Ο
*இலக்கியத்தில் அ
இடம்: எட்வின் மண்டபம்
பூ. ஞானகரன்
(இலங்கைப் பல்கலைக் கழகம்)
ஜனப். அஷ்ரப்
(சட்டக் கல்லூரி) புனிதவேல் (கட்டுபெத்தை தொ. நூ. கல்லூரி)
நன்றியுரை: 17-5-7Ο s
கலகதுரையாடg தமிழ்த்தாய் வணக்கம்: பிரதம விருந்தினர் துணைவேந்த (露
கதாகாலாட்சேபம்: ' செல்விகள் கெளரி சண்முகம், குளொட்டில் கல்யாணி ஜெகதீசன், சிவஞானமலர் அமைப்பு: சிய இன்னிசை செல்வன் க. செல்வப்பிர
விளையாட்டுகள் ஒழுங்கு: சு. தினகர நாதர்
 

செய்திகள்
ாதங்கள்
ளின் வருகை ஈழத்தின் இலக்கிய பப் பாதிக்கிறது’
தலைவர்: ருெ. சே. வேதநாயகம் சட்டத்துறை
பூ. ஞானகரன் செல்வி சாந்தினி லோகிதராஜ செல்வி ஷிராணி கனகரட்"ை க. கிருபானந்தம்
களைத் தீர்க்க வன்முறை வழிகளை நாடலாம்’
ர் (கட்டுபெத்தை தொழில் நுட்பக்கல்லூரி)
மண்டபம், வெள்ளவத்தை.
கட்டுபெத்தை தொழில் நுட்பக்கல்லூ*
புனிதவே சபா லிங்க சிவனடியா
துரத்தினனந்தம் (கட்டுபெத்தை)
ரசியல் கலப்பது நல்லது”
35 ĉap6uri: N.T. go 6oo Dur Gues*
பெரி. சுந்தரலிங் ச
(சட்டக் கல்லு - மாவை தி. நித்தியானந்த
(கட்டுபெத்தை தொ, நு. கல்லுர்
மு. நித்தியானந்தன்
(இலங்கைப் பல்கலைக் கழகம்)
க. கிருபானந்தம்
லும் விருந்துபசாரமும்
செல்வி நாச்சியார் மாரிமுத்து ர் திரு. பி. ஏ. அபயவிக்கிரம அவர்கள்
இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு.) ‘நவீன வள்ளி திருமணம்' டா ஜோன்பிள்ளை, செந்தமிழ்ச்செல்வி கதிரவேலு h சிவசங்கரநாதன், கோசலா நவரத்தினம் ாமளா நவரத்தினம்
காசம், செல்வன் ஜெய்லுல் ஆப்தீன்
நன்றியுரை: க. கிருபானந்த

Page 183
(01. - 6961) đò@@rnew) orție șđigno ofioșasgoạon sous spas@
 

(TroooOn) ıngıp sıņtorou o oft sqs cos,(!rnų spoo) 1ęsmın Çıp@igo · c) (oo) 1@$đìụılan Quinp syuqú goqo os
\,(pronoo $100%?!?) icsaburignoco-as · §
(q-Tzie) içe saec icsiae) ofi骨 (quos uos@so) rico polosoɛ wog,(procvao) giornuqĪ Ō reg) - ngoNog) (ooge) urnoqf logi giođì “Rae(4; usuriolo) quico oursąognơi · uys “sào ụrnŲgpu (ng)
(oT7:o) uo usos spuasg) ựcsosq uo ¿sopce) (opisu@@so) qyıcssos treqi ulegaurngp gsq; ce) (oo) uoco og 19ĒĢsp ose įsqo pe)
- qigere og Øst-TŐ ‘seo greną’gi- qinerte są gògi-TŐ3 · 1,9 o grierīņs)Ġ
(ų uolnormee) qisq? Icsun@so • • (puolie@lre, quo©) içs@logiqŤg, ogs

Page 184
கலந்துரையாடலும்
7 - 3 - 7Ο
 

ந்துபசாரமும்
புகைப்படம்: P. நித்தியானந்த

Page 185
எமது 15-வது நாடகம்
அந்த
(சமூக
1ம் நாள்: 6-3- இடம்: புதிய பிரதம விருந்தினர்: ஏ. ரட்
2ம் நாள்: 7-3- இடம்: புதிய பிரதம விருந்தினர்: N. சர்
நாடகத்ை
பத்திரிகை ஆய்
** .பல்கலைக்கழக என்னும் சமூக காடகம் 7 யேறியது. காதல் உண வரும் பாத்திரங்கள் யாவு தனித்தன்மை பொருக்தி குரிய தனிப்பாணிகளில் கிருர்கள். அநேக நாடகா இந்த நாடகம் திருப்தின்
நாங்கள் பாராட்டலாம்.'
வானுெலி விமர்சனம்
'நாடகத்தின் ஆரம்பத்தில் சினிமாப்பாணியி காட்டினர்கள். ஆயினும் நாடகம் சிறப்பாக அமைக் தட எழுந்திருக்க முடிந்தது. கதையில் புதுமை எதுவும் இ6 வரை போகும் நாடகத்தில் வாழ்க்கையின் ஏற்றத்தாழ் சிரியர். ஒரு வீட்டின் இரண்டு அறைகளில் கடக்கும் சம்ட வதற்கு, மேடையின் கடுவே ஒரு சுவர் இருப்பதாகக் கற்ப ரிப்பாளர்கள் நாடக ஆரம்பத்தில் கேட்டிருக்தார்கள். புது கள், கடிகர்கள் எல்லோரும் திருப்திகரமாக கடித்திருக்தா கடகத்தைப் பார்ப்பதற்குச் சந்தர்ப்பம் அளித்த கொழு கொழும்பு நாடக ரசிகர்கள் கன்றி சொல்லக் கடமைப்பட்டு
"கலைக்கோலம் இ

) ଗାଁ J)
நாடகம்)
O f?til) IIúil.ILIIú) ணநாதர்
70 J58b ITS)ľLLIĎ தியேந்திரா
தப் பற்றி
h
மாணவர்கள் தாங்களே கடித்து, தயாரித்த 'அந்தஸ்து" -3-70ல் பல்கலைக்கழகப் புதிய கலை மண்டபத்தில் மேடை ர்ச்சியை மாத்திரம் கருவாகக் கொண்ட இந்த நாடகத்தில் ம் உலகத்தில் கடமாடும் உண்மைப் பாத்திரங்களாகவும், யனவாயும் இருக்தன. கடிகர்கள் அனைவரும் தங்களுக் சிறப்பாக கடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெறு ங்களைப் பார்த்து ஏமாற்றத்திற்கு உள்ளாகும் ரசிகர்களுக்கு யைக் கொடுக்கிறது. இதற்காக நாடகத் தயாரிப்பாளரை
- வீரகேசரி
ல் நடிகர்களின் பெயர்களை நிழற்படத்தில் படியால் நாடகத்தின் முடிவில் திருப்தியுடன் ப்லாவிட்டாலும் இரண்டு மணித்தியாலங்கள் வுகளை எல்லாம் எடுத்துக்காட்டியிருந்தார் கதா வங்களை ஒரே சமயத்தில் மேடையில் காட்டு 2ன செய்து கொள்ளும்படி ரசிகர்களைத் தயா மையை கல்ல சந்தர்ப்பத்தில் புகுத்தி இருக்கிருர் rர்கள். கீண்ட காலத்திற்குப் பின் கல்லதொரு ம்புப் பல்கலைக் கழகத் தமிழ் சங்கத்தினருக்குக் டுள்ளார்கள்.??
லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

Page 186
நடிக நடிகையர்
பங்குபற்றியோர்
M. நவரட்ணராஜா S. ஞானேஸ்வரி
T. உமைபாலன்
கன்னிகா
S.
சிவசொரூபி
கமலாகரன்
சித்திரலேகா
செல்வப்பிரகாசம்
. ரட்ணராஜன்
M. M. gjë
கதை, வசனம், நெறிப்படுத்தல், தயாரிப்பு
N. T. p. 60 LD L I Go Gir
ஒலி, ஒளி மேடை M. விக்னேஸ்வரன் S, கன S. முத்துக்கிருஷ்ணன் T. હfહn
 

ாகளின் அறிமுகம்
பாத்திரங்கள்
வேல்
கெளரி
AW பொன்னையா
Klimaxima மீனுட்சி
பேபி ــــ۔۔۔۔۔۔۔۔
மனேகரன் ra- தங்கம்மா
ьшы---- தரகர் தம்பு
assa சிறி
aara குஞ்சுத்தம்பி
உதவி நெறியாளா V. நோமிநாதன்
அமைப்பு ஒப்பனை கரட்ணம் S, செல்வராஜா
ஞானம் m S. செல்வி

Page 187
நாடகத்திலன்று.
7-3.70
முத்தமிழ் வளர்த்த களேயும் தனது முத்தி: தமிழ்ச் சங்கம் அம்முக்க நாடகக் கலேக்குத் த கொடுத்து அதைத் தன களில் பிரதானமான ஒ அதன் பிரகாரம் நாங்க ஒவ்வோர் நாடகங்களே7
கின் ருேம். அந்தத் தொ.
தாக வந்திருப்பதுதான் கண்டு களிக்க இருக்கும்
நான் கதாசிரியனு/ பாளனுமல்ல, கலே ஆர்வு அவ்வளவுதான். முற்றி வர்களின் முயற்சியால் , டும் என்ற தீர்மானத் எனக்கு அளித்த சந்தர் எனக்குள்ளும் என் சக ம குள்ளும் மறைந்திருக்கு துக்காட்ட இந்த நாடக முன்வந்தேன். நாடகம் நகைச்சுவையுடன் இரு நோக்குடன் எழுதப்பட் கத்தை உணர்ந்த நீங்க சொற் பிழைகளைப் பெ/ 7ைாகக் கொள்ள மாட்டீ/ டன் இதை உங்கள் மு

மூவேந்தரது முக்கொடி ரையில் தாங்கிய எமது ஃலகளில் ஒரு கலேயாகிய னி முக்கியத் துவம் து வருடாந்த நிகழ்ச்சி ன் ருசுக் கெ/7ண்டுள்ளது sள் ஆண்டுக்கொழு முை Αυ மேடையேற்றி வந்திருக் டர்ச்சியில் பதினேந்தாவ 7 நீ ங் கள் இ ன் று ம் 'அந்தஸ்து'.
மல்ல, நாடகத் தயாரிப் வமுள்ள ஒரு மாணவன், லும் Lysiaédéa, ழக மாண நாடகம் உருவாக வேண் துடன் தமிழ்ச் சங்கம் ப்ட/த்தைப் பயன்படுத்தி ாணவ மாணவியர்களுக் ம் திறைமைகளே எடுத் த்தை எழுதித் தயாரிக்க யதார்த்த நடையில் iக்க வேண்டும் என்ற டுள்ளது. எங்கள் நோக் 5ள் இந்நாடகத்தில் வரும் "ருட் பிழைகளே பிழைக ர்கள் என்ற நம்பிக்கையு ]ன் சமர்ப்பிக்கிறேன்.
N. T. உமைபாலன்
நெறியாளர், தயாரிப்பாளர்

Page 188
7 a 3 - 7O
 

P. நித்தியானந்த
புகைப்படம்

Page 189
செயலாளர் எழுதுகிரு
1970-st உலகம் ஒரு
கடந்த ஒரு தசாப்த காலத்தி துறைகளில் அடிப்படை மாறு: சியை நாம் இனங் காண்கிறே!
இந்த நிலையில் எங்கள் மாணவர் மத்தியில் ஏற்படு என்று கேட்டுப்பார்ப்பது நல்ல யில் எங்களின் சாதனைகள் இ
என்ற உண்மை எங்களுக்குக் ச
விவாதங்கள், பேச்சுகள் எல்லையை நாம் மீறிப் போய் கூடிய பொறுப்புணர்வோடு எழுச்சித்தீக்குப் பிடி எண்ணெ நடத்திய சமூகப் பிரச்சினைக அல்ல, அதன் பின்னர்தான் ம பட்டன என்பது அதன் நல்ல ஸ்தாபனங்களும் தோள் சேர்
கல்வித்துறையில், கலை, சுய பாஷையில் போதிக்கும் மு சினைகளை இன்று உருவாக்கியுள் அரசியல் கோஷம் தானென்ரு அதில் நமக்கு உடன்பாடில்3 அனைத்தையும் ஒவ்வொரு திே உலகின் சகலவிதமான அறி பலத்தில் புதிய சிந்தனைகளை மாக்ஸ்-ம்ே நமக்குச் சொந்தம தமிழ் மொழி பிற மொழிகளை வாய்ப்புகளைப் பெற்றிருக்கி நிற்கிறது.
இன்றைய நிலையில் தமி மாட்டாத எத்தனை எத்தனை களில் வேகமான வளர்ச்சிை சித்தாந்தத்தைக் குறித்தும் கின்றன.
இத்த நோக்கங்கள் ப சில பல்கலைக்கழகங்களின் குள்ளோ இல்லை. இலங்கையி பினங்கிலும் பீஜித்தீவிலும் பரந்துபட்ட சிந்தனையால்தா

புதிய சகாப்தத்தில் பிரவேசித்திருக்கிறது. ல் இலங்கையின் அரசியல், சமூக, கலாசாரத் ல்களை வேண்டி நிற்கும் வெகுஜனங்களின் எழுச்
!.
தமிழ்ச்சங்க இயக்கங்கள் மக்களின் மத்தியில் - த்தியுள்ள பாதிப்புகள் திருப்திகரமானவையா து. ஒர் உயர்வான கல்வி ஸ்தாபனம் என்ற நிலை தனிலும் அதிகமாகவே இருந்திருக்க வேண்டும் சக்கவில்லை.
", நாடகங்கள் என்ற வழமையான அம்சங்களின் விடவில்லைத் தானென்ருலும் இந்த அம்சங்களில் செயற்பட்டிருக்கிருேம். எங்கள் தமிழினத்தின் ய் வார்த்த திருப்தி போதும் எமக்கு. நம் சங்கம் ளை உள்ளடக்கிய விவாதங்கள், விவாத அரங்கில் ாணவர்களால் விமர்சிக்கப்பட்டன-விவாதிக்கப் அறிகுறி. இப்பணியில் எம்மோடு பிற உயர் கல்வி ந்து உதவியிருக்கின்றன.
விஞ்ஞானம், சட்டம், மருத்துவம் யாவற்றையும் மயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பல பிரச் ாளது. இதன் அடிப்படை பித்தலாட்டத்தனமான ?ல்-மூடத்தனமான மொழிவாதம் தானென்ருல் ல. உலகின் நவீன கலை, விஞ்ஞான அம்சங்கள் சிய இனமும் தத்தமது மொழிகளில் ஜீரணித்து, வியல் மரபுகளுக்கும் பாத்தியதை கொண்டாடும் உருவாக்க முன்வர வேண்டும். கம்பனும் கார்ல் ாக வேண்டும். அந்த அம்சத்தில் செழுமை மிக்க க் காட்டிலும் கொஞ்சம் அதிகமாகவே நல்ல பல றது என்பதைப் பாரிஸ் மாநாடு உணர்த்தி
ழ் மொழி மூலம் தமிழ் மகனுக்குத் தெரியவே வர யோ புதுப்புது அறிவியற்றுறைகள் வேற்று மொழி யப் பெற்றிருக்கின்றன. இந்து மத அத்துவைத ஆங்கிலத்திலே ஆழ்ந்த ஆய்வுகள் நடந்து வரு
ந்துபட்டன. இதனை வெற்றிகரமாகச் சாதித்தல் எல்லைக்குள்ளோ, சில நாடுகளின் வரம்புகளு; லும், இந்தியாவிலும் வாழும் தமிழ் மக்களை அல்ல வாழும் தமிழ் பேசும் மக்களையும் உள்ளடக்கி ன் இந்த வெற்றி சாத்தியமாகும்.
- க. கிருபானந்தம்

Page 190
MAQ(DCD
T A
TWO GREAT
MOTORING
Sole Distributors:
Diesel & Motor E
“DIMO
65, JETAW
COLON

S BNI
T A
NAMES IN THE
G WORLD
gineering Co. Ltd,
OÜSE”
ANA ROAD,
|BO - | 4.

Page 191
β ace "/Yonated Bபுܠܵܐ
Northern
TYRE RET
S/1, STANI
Α


Page 192
KING LOB
23rd Lane,
Colom

mflliments,
)}ገ2
STER INN
Stuarts Place
bo-3.

Page 193
இலங்கையின் அரசியல் நிர்ணய சை தமிழ்ப் பத்திரிகையும் ஒவ்வொரு விதமாக
நவரங்க கலா மண்டபம் என்று ஒ( றங்க கால, நவரங்கஹகல, நவரங்கஹாலா, தப்படுகின்றன.
தமிழ் மக்கள் இந்த மண்டபத்துக்கு விடுவது நல்லது என்று தோன்றுகிறது.
நவ என்பது புதுமை என்று பொரு ாைம். ரங்க என்ற பகுதி அரங்கு என்று ெ ழில் உள்ள சாலை என்ற சொல்லின் திரிபுத
 
 

ந வர ங் க ச (ாலை எ ன் றே
ப கூடிய மண்டபத்தின் பெயரை ஒவ்வொரு எழுதுகிறது.
ரு பத்திரிகை கூறுகிறது. நவரங்ஹகால், நவ நவரலங்கா, நவரலங்கால என்றெல்லாம் ‘எழு
ஒரு நிலையான பெயர் உருவத்தைக் கொடுத்து
ர் படும். தமிழிலும் நவ என்றே சொல்லி விட பாருள்படும். ஹல அல்லது ஹால என்பது தமி ான்.

Page 194
9 Jöflu Gl
நற்ற மி பூழி ல் சொல் லி டுவே
சாலை என்பது தமிழில் அகன்ற த்ெ யும் குறிக்கும். பாடசாலை பண்டசாலை, வா டபத்தையே குறிக்கின்றன.
‘நவரங்க ஹல’’வில் ஒரு அரங்கு : னிக்குகளின்' படி அமைக்கப்பட்ட அரங்கா கிறது. அந்த அரங்கோடு ஒரு மண்டபமும்
ஆகவே 'நவரங்க ஹல' என்பை காக அழைக்கலாம். நவ-அரங்க என்பதைட ஹால என்று நாம் தமிழில் சொல்ல வேன் விடலாம்.
 

நிர்ணய சபையும்
நவரங்கசாலையில் LIII அரசியலமைப்புச் பை கூடிய காட்சி
(Courtesy: “Aththa”)
T foi
நரு அல்லது வீதியையும், பரத்த மண்டபத்தை கனசாலை என்ற பதங்களில் உள்ள சாலை மண்
உண்டு. புதிய முறையில், "மொடேர்ண் டெக் கையால் நவ அரங்கு என்று அது பெயர் பெறு உண்டு. அது ஹால ஆகிறது.
தத் தமிழில் 'நவ அரங்க சாலை' என்று அழ ப்புணர்த்தும் போது நவரங்க என்றே ஒலி பெறும் ாடியதில்லை. சாலை என்றே தமிழில் சொல்லி
- ஆசிரியர்: *தினபதி”

Page 195
ஆட்சி இயல் POLITICAL SCIENCE
deas, இல
அரசியலை தவர்கள் சோல்பரி
ஆட்டுத்தோல் வந்தானுக மாறிய. யரும் அவர்களது சி யும் தென்கிழக்கு ஆ விய கதை.
இவர்கள் எம4 மைப்பு விதிகளைத் விட்டு இன்று புதி பிரதிநிதிகளால் ட அரசியலமைப்பு வி துள்ளது.
இது எல்லா ம ளுக்குமென்றே அை களினதும் அரசியல் (a constitution of people for all the டும் என்பதே இந்த னரின் மனதில் மே(
இதனைப் பற்றி மூவரை இளந்தென்
ஜி. ஜீ. பொன்
வ. பொன்னம்
எஸ். ஜே. வி.
" "சிறுபான்மை
தில் புதிய அரசியல்
சியல் நிர்ணய சை மானதா இல்லை கருத்து’ இவற்ை ஒரு கட்டுரை எழு மூவரையும் கேட்ே கள்:

}ங்கைக்கு முதலாவது மப்பு விதிகளைத் தந் ப் பிரபு குழுவினர்
விற்க வந்தவன் ஆள து தான் - பிரித்தானி நிழக்கிந்தியக் கம்பெனி ஆசிய நாடுகளில் ஊடுரு
க்குத் தந்த சியல தூக்கித் தூர எறிந்து ய அரசாங்கம் மக்கள் மக்களுக்கெனப் புதிய திகளை ஆக்க முன்வந்
க்களாலும் எல்லா மக்க மைக்கப்படும் எல்லா மக் அமைப்பு விதிகளாக all the people by all the people) இருக்க வேண் ராட்டுச் சிறுபான்மையி லோங்கி நிற்கும் கவலை.
க் கருத்துத் தெரிவிக்க ாறல் தழுவி, வருகிறது.
னம்பலம், C. C.
பலம், M. A.
செல்வநாயகம், C. C.
பினரின் கண்ணுேட்டத் Uமைப்பு விதிகளும் அர பயும்; இது சட்டபூர்வ பா என்பது பற்றிய ற எல்லாம் உள்ளடக்கி தித் தருமாறு இவர்கள் டாம். இதோ கட்டுரை

Page 196
அரசியல் நிர்ணய சை
 

I JFI'LI Li GUIJIDT GDIJI
சில் ஏற்காது
. GN. f. G FÎDI 5 TILLISÍ Q. C.
அரசியல் fË) i 605 ul, சபையை சட்ட ரீதியாக கோக்கி னல் அது சட்டத்துக்கு முரன னது - எங்கள் பாராளுமன்றத தின் அரசியல் யாப்பை திருத்து வதற்கு என்று அதிலேயே வழி வகைகள் இருக்கின்றன. ஆனல் இந்த அரசியல் நிர்ணய சபை அதை விடுத்து வேறுவழியில் தம்மை ஒரு அரசியல் நிர்ணய சபையாகக் கூட்டியிருக்கின் றது. இவர்கள் இயற்றிய அரசி யல் யாப்பை உயர்நீதி மன்ற மும், பிரிவிகவுன்சிலும் ஏற்றுக் கொள்ளுமானுல் அது சட்டப் படி ஏற்றுக் கொள்ளக் கூடி யதே. இவர்கள் யாப்பை பிரிவி கவுன்சில் ஏற்றுக்கொள்ள மாட் டாது.
சிறுபான்மையினருக்கு உரி மைகள் கொடுக்க இந்த அங்கத் தினர் ஒருவர்க்கும் அபிப்பிரா யம் இல்லை. அடிப்படை உரிமை என்று கூறுகிறர்கள். அவை என்ன என்று ஒருவர்க்கும் தெரி யாது.
தமிழ் பேசும் தேசிய இனத் திற்கு அவர்கள் மொழி உரிமை இல்லாவிட்டால் வேறு எது அடிப்படை உரிமையாகும்? எவ் வாருகினும் இப்பொழுது இருக் கின்ற உரிமையை விட கூடுத லாக ஒன்றும் தரப்படப் போவ
தில்லை.

Page 197
ᎦᎢ5 நாட்டின் தலைவிதியை மிக உயர்ந்த மட்டத்தில் அணுகி நிர்ணயிக்கத் தகுதி பெற்றவர்கள் அந்த நாட்டு மக் களே. இத்தகைய நிலையையே ஆதிபத்திய உரிமை அல்லது இறைமையின் முழுமை என்று கூறுகின் ருேம். இந்திய நாட்டில் சுதந்திரத்தின் பின் செயற்பட்ட இந்தியப் பாராளுமன்றமே ஒரே வேளையில் அதன் அரசியல் நிர்ணய சபையாகவும் செயற் பட்டு வந்தது. எமது நாட்டில் இன்று நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினல் எமது நாடுவிடுதலை அடைவதற்கு முன்னமே அதற்கு கடிவாளம் இடும் வகையில் உரு வாக்கப்பட்டது.
கடந்த பொதுத்தேர்தலின்போது ஐக் கிய முன்னணியை அமைத்துக் கொண்ட சிறீலங்கா - சமசமாஜி - கொம்மியூனிஸ்ட் கட்சியினர் மக்களின் அங்கீகாரத்திற்காக முன்வைத்த திட்டத்தில் அரசியல் நிர்ணய
 

சிங்களவர்-தமிழர் a, i di II G ID
3 ly. ĎI II 6) L
உரிமைபெற வழி.
G LI I I I IL L D
III UII GI J6 JI I jI
வ. பொன்னம்பலம் M.A.
சபையாக, தெரிவு செய்யப்படும் பாராளு மன்றமே இயங்கி, இலங்கைக்கு உரிய யாப்பை உருவாக்கும், உரிமையையும் மக்களிடம் கோரி நின்றது. இத் தேர்தல் திட்டத்தை ஏற்று வாக்களித்த பொது மக் கள் பாராளுமன்றமே அரசியல் நிர்ணய சபையையும் நடாத்தும் உரிமையையும் அங்கீகரித்துள்ளனர். நாட்டின் இறைமை முழுமை பெற இப்புதிய அரசியற் சட்டம் வழிவகுக்கும் என்பது திண்ணம்.
இந்த நாட்டில் வாழும் சகல இன மத, மொழி பிரிவுகளே யும் சார்ந்த பிரதிநிதிகள் சபையில் மாத்திரமன்றி பாராளுமன்றத் தில் உள்ள ஆளும் கட்சியிலும் அதனுல் உருவாக்கப்பட்ட அரசாங்கத்திலும் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ் பேசும் மக்களின் நல உரிமை களைப் பிரித்தானிய பேரரசின் உதவியுட னும் அந்த நாட்டில் இயங்கி வருகின்ற

Page 198
சிங்களவர் - தமிழர்.
அடிமை நாடுகளின் நீதிபரிபாலனத்துக் கென நியமிக்கப்பட்ட பிறிவிக்கவுன்சில் என்ற நீதி ஸ்தாபனமோ எம்மை காப்பாற் றும் என்பதற்கில்லை. தனித்து நின்று போராடி தமிழர்கள் தமது உரிமையை பெறலாம் என்பது உண்மையானுல் நாம் எமது உரிமைகளை என்ருே பெற்றிருக்க லாம். ஆனல் இன்றும் பெருதமுறையில் நாம் தனித்துநின்று சாதிக்கக் கூடியது ஒன்றும் இல்லை என்ற காரணத்தால் தமி ழினம் பின்பற்றிய அரசியலால் தமிழ் மக் களுக்கு பெரும் ஏமாற்றமும் அதிருப்தியும் விளைந்துள்ளன. ஏகாதிபத்தியம் என்ற கானல் நீரைநம்பி எம்மவர்களை வழி நடத்த முயலும் சில தமிழ்த் தலைவர்களே விரக்தி மனப்பான்மைக்கு உட்படுத்தப் பட்டிருப்பதை அவர்களுடைய சொல்லும் செயலும் எடுத்துக்காட்டுகின்றன. இத்த கைய அதிருப்தியடைந்த தலைவர்களாலும் அவர்கள் பின்பற்றும் வகுப்புவாத அரசிய
‘ஒரு நாட்டின் அபிவி வும், டாட்டாளி மக்களுை வும் அந்த நாட்டில் ஒரு பிரி யைப் போல் வேருெரு கரு பொழுதும் சிறுபான்மையி தன்மை காட்டாது தாராள தல் அவசியமாகிறது. சிறு நமது நாட்டுக் குடியரசுகள் மையான சட்டங்கள் இயற் னவா என்று மிகவும்
வேண்டும்.'

வ. பொன்ம்ைபலம் 179
லாலும் நாட்டிற்கு பெரும் தீங்குதான் விளையும்.
இதற்குப் பதில் இந்த நாட்டின் முன் னேற்றத்திற்காக, வறுமையை ஒழிப்பதற் காக, ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற் காக எமது நாட்டில் வாழ்ந்துவரும் சாதா ரண பொதுமக்கள் - சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் இவர்கள் மத்தியில் உள்ள விவ சாயிகளும் தொழிலாளர்களும் நடத்தும் போராட்டத்தில் தமிழ் பேசும் மக்களும் ஒன்றிநின்று உரிமை பெறுவதுதான் எமது அடிப்படை உரிமைகளை உறுதிநிலைப்படுத்து வதற்குரியவழி. இவற்றை சாதிக்க அனைத் தும் நாமே என்னும் எந்தத் தலைவர்களோ, மக்களோ எதையும் சாதித்து விடமுடி யாது. சிங்களவர், தமிழர் மத்தியில் வளர்ந்தெடுக்கப்படக் கூடிய ஐக்கியத்தின் அடிப்படையில் தான் இந்நாட்டில் வாழும் சகல மக்களினதும் அடிப்படை உரிமை களையும் வென்றெடுக்க முடியும்:
ருத்தியைத் தடுத்து நிறுத்த டய ஒற்றுமையைக் குலைக்க வினருக்குச் செய்யும் அநீதி வி கிடையாது. ஆகவே எப் னரின் விஷயத்தில் கஞ்சத்
மனப்பான்மையுடன் நடத் பான்மையினரின் மொழிகள் ரில் பாவிப்பதைப் பற்றி கடு றி அவை செயல்படுகின்ற கவனமாகக் கண்காணிக்க
- லெனின்

Page 199
இலங்கையின் நீதிம
கவுன்சிலும் 39 I F
JFILLðîGJI5IDIGIDIJI GI
அரசியல் அமைப்பு விதிகளை ஆக்குவது பற்றியும், இதற்குக் கையாளப்படும் வழி வகைகள் பற்றியும் நிலவும் பலதரப்பட்ட வெவ்வேறு கருத்துக்களை 'இளந்தென்ற' லில்‘ஒரு கட்டுரைக்கு' வரையறுக்கப்பட்ட இடத்தினுள் அடக்கி அலசி ஆராய்வது மிக க் கடினமானதொன்று. கடந்த பொதுத் தேர்தலின் பின் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் நிர்ணய சபையையே இங்கு நாம் குறிப்பாகக் கவ னத்தில் கொண்டிருப்பதால், கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளில் பொது வாக அரசியல் அமைப்பு விதிகள் எவ்வாறு உருவெடுத்தன என்பதைச் சுருக்கமாகச் சிந்தித்துப் பார்த்தல் சாலப்பொருந்தும்.
புதிய அரசியலமைப்பு விதிகள் ஏற்படு கையில், வழக்கிலிருந்துவந்த நிலையில் ஒரு மாற்றம் ஏற்படுவதோடு, புதியதோர் சகாப்தமும் பிறக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஒரு ஏகாதிபத்திய வல்லரசின் மேலாட்சி நிலைக்கு (Suzerainty) உட்பட்டிருந்த நாடுகளில், உதாரணமாக ஆன்னைய பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தின் கீழ், குடியேற்ற நாடுகளாக வும் அரசுரிமை நாடுகளாகவும் இருந்த நாடுகளில், இவை ஒவ்வொன்றிற்கும் சுதந் திரம் வழங்கப்பட்ட போது, இந் நாடு களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் ஏகாதிபத் திய அரசாங்கத்தின் செய்சட்டத்தின் மூல மானதோர் அரசியலமைப்பு முக்கியமாக

ன்றங்களும் பிரிவி
î. f. I IJI IIJ 6) II
l) (JF Tiù5)ID II'LLI
ஜி. பொன்னம்பலம் o c.

Page 200
வழங்கப்பட்டது. இது பல நாடுகளாலும், அந்தந்த நாடுகளை ஆட்சிசெய்யும் தாப னங்களேக் கட்டுப் படுத்துவதற்கும், அவற் றிற்குரிய அதிகாரங்களைப் பெறுவதற்கு மான நாட்டின் மிக உயர்ந்த சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வேறு விதத்தில் சொல்லப்புகின், இவ்வரசியற் சட்டங்கள் யாவும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட போ திலும், அவையே மிக உயர்ந்த அதிகாரம் படைத்தனவாக ஏற்றுக்கொள்ளப்பட் டன. கனடா, அவுஸ்திரேலியா, நியுசி லாந்து போன்ற நாடுகளின் அரசியல மைப்பு விதிகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்தியாவைப் பொறுத்த மட்டில், அதன் புதிய அரசியலமைப்பு விதிகளை வரைவதற்கான அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்துவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்தின் செய்சட்டம் ஒன்றின் மூலம் அளிக்கப்பட்டது. வேறிரண்டு நாடு களில் இது ஒரளவு வித்தியாசமான முறை யில் அமைந்துள்ளது. தென் ஆபிரிக்கா தனது அரசியலமைப்பு விதிகளை வரைவ தற்கான ஒர் அரசியல் நிர்ணய சபையை, இதற்குச் சட்டத்தில் இடம் அளிக்கப்ப டாத போதிலும், ஏற்படுத்துவதெனப் பொதுசன வாக்கெடுப்பின் மூலம் தாணு கவே தீர்மானித்தது. எனது அறிவுக்கு எட்டிய அளவில், தென் ஆபிரிக்க அரசாங் கத்தின் இச்செயலின் சட்ட முறையான நேர்மையையோ (Legality) pyggu giv அமைப்பு முறையான நேர்மையையோ (Constitutionality) 6rl Gurs Tag GTacyth குற்றம் கண்டுள்ளதாகத் தெரியவில்லை. அயர்லாந்தின் விடயத்தில், 1937 ஆம் ஆண்டில் நாடாளுமன்றம் தன்னைத்தானே ஓர் அரசியல் நிர்ணயசபையாக மாற்றிய மைத்துக் கொண்டு, தனது அரசியல மைப்பு விதிகளே வரைந்து கொண்டது. ஆயினும், அரசியலமைப்பு வரைந்து முடி வுற்றதும், அதனை அங்கீகரிக்கும் வகையி Ꭷu) ↑Ꭲ ᎧᏡᎢ பொதுசன வா க் கெ டு ப் பு (Referendum) ஒன்று நடைபெற்றது.
அமெரிக்கா, சோவியத் ரஷ்யா , பிரான்சு நாடுகளின் அரசியல் அமைப்பு விதிகள் முற்றிலும் மாறுபட்ட ஒரு வகை யினுள் அடங்கும். இம் மூன்று நாடுகளின

ஜீ. ஜீ. பொன்னம்பலம் 181
தும் அரசியலமைப்பு விதிகள், பொதுமக் களின் சுதந்திரமான, மேலான விருப்பத் தைப் பிரதிபலிப்பதாகச் சொல் லி க் கொண்ட அரசியல் நிர்ணய சபைகளால் வரையப்பட்டனவாகும்.
இதனை எமது பின்னணியாக வைத்துக் கொண்டு, இலங்கையில் அமைக்கப்பட் டுள்ள அரசியல் நிர்ணய சபையை ஒத்த அமைப்பு எவ்விடத்திலாவது உண்டா என் பதைச் சற்றுக் கவனிப்போம். இதற்குச் சமமானதோர் சபை எவ்விடத்தும் இல்லை யென எவரும் எடுத்த எடுப்பிலேயே ஒப் புக்கொண்ட போதிலும், பிரித்தானியச் சாம்ராஜ்ய நாடுகளிடையேயான உறவை யும், ஏனைய நாடுகளின் அரசியலமைப்பு விதிகளின் பிறப்பையும் மனதிற்கொண்டு, இப்படியானதோர் அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்துவதன் சட்டமுறை யான நேர்மையையும் அரசியலமைப்பு முறையான நேர்மையையும் விவாதிப்பது பயன் தரவல்லதுதானு என்றே எண்ண வேண்டியுள்ளது.
இலங்கையில் உள்ள எந்த விதமான நீதி மன்றமும் அரசியல் நிர்ணயசபை ஒன்று ஏற்படுத்தப்பட்ட சட்டமுறை நியா யமற்றதெனத் தீர்ப்புக்கூற ஆயத்தமா யிருக்கமாட்டாதென நான் துணிந்து கூறு வேன். வெஸ்ட்மினிஸ்டர் சாசனத்தை (Statute of Westminster) (pair goal 557 நோக்குகையில், இலங்கை அரசியல் நிர் ணய சபையை சட்டமுறை நேர்மையற்ற தென்ருே அரசியலமைப்பு நேர்மையற்ற தென்ருே பிரிவிக்கவுன்சில் பிரகடனம் செய்யக் கூடும் என்றும் நான் கருதவில்லை. ஆஞல் புதிய அரசியல் அமைப்பு விதிகளை வரைவதற்கான தோர் அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்துவதற்கு சுதந்திரமான பொது சனங்களின் மனப்பூர்வமான ஆத ரவு உண்மையாகவே இருந்துள்ளதா என் பதே பிரயோசனமான வழியில் நாம் சித் திக்கவேண்டிய முக்கிய விஷயமாகும். பொதுசன வாக்கெடுப்பின் மூலமாக மக்க ளின் அங்கீகாரத்தைப் பெறுதலே மிகச் சரியான நடைமுறை என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனல் இலங்கையில் இன்று கூட்டு அரசாங்கத்தை அமைந்துள்ள ஐக் கிய முண்ணணியின் அங்கத்துவக் கட்சிகள்,

Page 201
182 இலங்கையின் நீதிமன்றங்களும்.
முற்றிலும் புதிய அரசியலமைப்பொன்று அரசியல் நிர்ணய சபை மூலமே வரையப் பட வேண்டுமென நாடாளுமன்றத்தின் உள்ளும் புறமும் எப்போதும் கூறிவந்துள் ளன. சென்ற நாடாளுமன்றத்தின் ஆட்சிக் காலத்தில், இன்றுள்ள அரசியலமைப்பில் திருத்தங்கள் மட்டும் செய்வதற்கு ஏற்ப டுத்தப்பட்ட தெரிவுக் குழுக்களுக்கு தமது ஒத்துழைப்பை வழங்கவோ, Jaydñèy @log5I அவற்றில் அங்கம் வகிக்கவோ அவை மறுப்புத் தெரிவித்து வந்ததிலிருந்து இவை தமது கருத்தில் எவ்வளவு உறுதியாக நின் றன என்பது புலஞகின்றது. தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஐக்கிய முன்னணியினர் புதிய அரசியலமைப்பொன்றை வரைவ தற்கு நாடாளுமன்றத்தை அரசியல் நிர் -ணய சபையாக மாற்றுவதற்கான அதிகா ரத்தை மக்களிடம் கோரியுள்ளதாகத் தோன்றலாம். எனவே இதற்கான அதிகா ரம் வழங்கப்பட்டுள்ளதாக உரிமை கொண் டாடினுலும், தனிவா க்காளர் ஒருவர் ஐக் கிய முன்னணிக்கு வாக்களித்தபோது குறிப்பாக இப்பிரச்சினையையே மனதில் நிலைநிறுத்திக் கொண்டு வாக்களித்தாரா என்பது தர்க்கத்துக்கு உரியவிடயமாகின் AID35.
இவ்விடயம் அத்துடன் முற்றுப் பெற வில்லை. இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் ஆற்றப்பட்ட முதலாவது சிம்மா சனப் பிரசங்கத்தின் போது நாடாளுமன் றத்தை ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்ற இருப்பதை சந்தேகமற்றவிதத்தில் பிரகடனம் செய்திருந்தனர். சிம்மாசனப் பிரசங்கத்தின் மேலான நன்றி தெரிவித் த ல் பிரேரணையின் வாக்கெடுப்பின் போது இது சபை முன்விடப்பட்டு வாக்குப் பிரிவு ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது என் பதை நாம் மறக்கமுடியாது. எனது தாழ் மையான கருத்தின்படி, இந்த இரண்டு உண்மைகளும் எம்மை எதிர்நோக்கி இருக் கும் போது அரசியல் நிர்ணய சபையில் சட்டமுறையான நேர்மையையோ அல் லது அரசியல் முறையானநேர்மையையோ கவனத்தில் கொள்ளுவது வீணுனதாயும் விளைவற்றதாயும் அமைகின்றது. அரசியல் அமைப்பொன்றை வரைவது எவ்வகையி லும் இலகுவான காரியமாகாது. ஒரே தன்

ஜீ. ஜீ. பொன்னம்பலம்
மையான குடி மக்கள் ஒரே மொழியைப் பேசுபவர்களாகவும், பிரதானமாக ஒரே சம யத்தைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்த விடத்து இது இலகுவானதொன்ரு கும். ஆனல் பல இனக் குடிகளைக் கொண்ட விடத்து, பெரும்பான்மைச் சமூகத்தினரின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையி லான தோர் அரசியலமைப்பை வரைந்து, அதே வேளையில் சிறுபான்மையினருக்கும் அவர்களின் அடிப்படையுரிமைகளை உறு திப்படுத்தி, அவர்கள் சட்டத்தின் கண் களின் முன் எல்லாவிதத்திலும் சமவுரிமை கொண்ட பிரஜைகளாகக் கணிக்கப்பட, சட்டத்தினுல் சமவுரிமையோடு பாதுகாக் கப்பட, நிர்வாகத்தினுல் சமத்துவத்தோடு நடத்தப்பட வழிவகுப்பது கஷ்டமானது; மிகச் சிக்கலானது.
ஒரு அரசியலமைப்பு எந்த ஓர் நாட்டி னதும் அதியுயர்ந்த சட்டமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்ற ஒன்ருகும். அரசியல மைப்பின் நியதிகளிலிருந்துதான் எத்த வொரு நாட்டின் எந்தவொரு தாபனமும் தனது அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளு கின்றது. ஆகவே ஓர் நாட்டின் இறைமை (Sovereignty).sy 567 Joy gr&auu av GOLD SGGW Guu தங்கியுள்ளதெனச் சொல்லலாம்.
நாடாளுமன்றமே மிக உயர்ந்ததாக வும் இறைமை நிரம்பப் பெற்றதாகவும் முழு உலகிலும் கருதப்படுவது ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் மட் டுமே. ஏனெனில் ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமே அரசியலமைப்பு வரையப்படா துள்ளது. ஆயினும் மரபுவழிவந்துள்ளவிதித் தொகுதிகள், பலவிதமான வழக்கங்கள், சம்பிரதாயங்கள் என்பனவற்றை எல்லாம் ஒன்று திரட்டி "எழுதப்படாத அரசியல 6) LDL 65 assir '' (Unwritten constitution) என அழைக்கப்படுகின்றன.
உலகின் எந்தவொரு நாட்டினதும் அதி உயர்ந்த சட்டமாக அரசியலமைப்பு இருக் கும் காரணத்தால் தான், அதில் ஒரு சிறிய விடயத்தில் தானும் மாற்றம் வேண்டப் பட்டவிடத்து, ஒரு விசேட பெரும் பான்மை அல்லது பொதுசன வாக்கெடுப் புடன் கூடிய பொதுத் தேர்தல் போன்ற

Page 202
இலங்கையின் நீதிமன்றங்களும்.
விசேட தடை முறைக்கான தேவை ஏற்படு கின்றது. எனக்குத் தெரிந்த அளவில், உல கின் பல நாடுகளுள்ளும் சாதாரண அதி கப்படியான வாக்குகளின் மூலம் அரசியல் அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய அதிகாரம் நியுசீலாந்தின் நாடாளுமன்றத் துக்கு மட்டுமேயுள்ளது.
மிக அடிப்படையானதென நான் கரு தும் ஒரிரு விடயங்களை இவ்விடயத்தின் குறுகிய எல்லைக்குள் குறிப்பிட விரும்புகி றேன்.
அரசியலமைப்பினுள் அதன் ஓர் விசேட பகுதியாயமைந்து, அரசியலமைப்பினல் அரண்செய்யப்பட்டதான (entrenched) அடிப்படையுரிமைகள் சாசனம் (chapter of fundamental rights) LÉ5 & 5 L fru Lorras இடம்பெறுதல் அவசியமாகின்றது. இதில், மற்றெல்லாவற்றுள்ளும், தனிமனிதன் ஒவ் வொருவனும் சட்டத்தின் முன் சமமாக மதிக்கப்படுவான் என்ற உறுதிப்பாடு; சாதி, சமயம், இனம் அல்லது மொழி சார்ந்த காரணத்தால் ஏற்படக் கூடிய பேதங்களைத் தடுக்கும் உறுதிப்பாடு: அர சாங்கம் அதன் கீழுள்ள எந்தவொரு அலு வலகத்திலும் நியமனம் அல்லது தொழில் வழங்குவதில் எந்தவொரு குடிமகனுக்கும் பாகுபாடின்றிச் சமசந்தர்ப்பம் அளிக்கும் என்ற உறுதிப்பாடு; பேச்சுச் சுதந்திரம், அமைதியாகக் கூடுவதற்கான சுதந்திரம் போன்றவற்றிற்கும் பாதுகாப்பளிக்கும் உறுதிப்பாடு; ஒவ்வொரு பிரஜையினதும் உயிருக்கும் சுதந்திரத்துக்கும் பாதுகாப்பு அளித்து, பொறுப்பற்ற முறையில் கைது செய்வதற்கும் தடுப்புக்காவலில் வைப்ப தற்கும் இயலாதபடி பாதுகாப்பு அளிக்கும் உறுதிப்பாடு, எந்தவொரு மதத்தைப் பின் பற்றவும் உரிமை; தனது தாய் மொழி மூலமே கல்விகற்பிக்கப்படும் உரிமை; குற் றம் சாட்டப்பட்டு நீதி வேண்டி நிற்கும் ஒருவர்தாம் விரும்பும் மொழிமூலமே விசா

ரணை செய்யப்படுவதற்குப் பாதுகாப்பு; தனது சொத்துக்களை வைத்திருக்கவும் தான் விரும்பிய தொழிலைச் செய்யவும் உரிமை, ஆதியன வழங்கப்படல் வேண் டும். இவை மட்டுமே எவ்வகையிலும் முழு நிறைவானவை அல்ல. ஆனல் இவை யாவும் அடிப்படையுரிமைகளின் பிரிவினுள் வருவதென நான் கருதுவதால் இவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன். அடிப்படையுரி மைகளை மீறுவதை , அல்லது மீறுவதாகப் பயமுறுத்துதலை விசாரணை செய்து தண் டனை அளிப்பதற்கான அதிகாரம் அளிக் கப்பட்ட பீடமொன்று இல்லாது போனல் இவ்வடிப்படையுரிமைகள் அர்த்தமற்றவை யாயும் உபயோகமற்றவையாயும் போய்
விடும்.
இங்கு மேலும் ஓர் அடிப்படையுரிமை கவனத்திற்கு வருகின்றது. அதுதான் நீதி பரிபாலனச் சுதந்திரம். அடிப்படையுரிமை கள் பற்றி விசாரணை செய்து தண்டனை வழங்கவல்ல அதிகாரபீடமொன்று இருந்து இவ்வுரிமைகளை மீறுதலுக்கு எதிராக வழக் குத் தொடருவதானல், அதற்கு நீதிபரிபா லனம் சுதந்திரம் உடையதாய் இருந்தாற் முன்முடியும். ஆகவே ஒரு நாட்டின் நீதிபரி பாலனம் முழுமையான சுதந்திரம் கொண் டுள்ளதாயிருத்தல் அவசியம்-அதற்கான நியமனங்களைப் பொறுத்த மட்டிலோ அல் லது அதனது ஊதியங்களைப் பொறுத்த மட்டிலோ, பிரதம மந்திரியாயினும் சரி, அல்லது தனி ஒரு மந்திரியாயினும் சரி, அல் லது மந்திரி சபையாயினும் சரி, எவரின் அதிகாரத்துக்குள்ளும் இது இருக்கக் கூடாது. இதனை உறுதிப்படுத்துவதற்கா கவே சட்டமன்றம் (Legislature), நிறை வேற்றல் துறை (Executive), நீதிபரிபால னம் (Judiciary) என்பவற்றிற்கு முற்ரு கத் தனிப்படுத்தப்பட்ட தனித்தனி அதிகா ரங்கள் வழங்குவது அவசியமாகின்றது.

Page 203
உலகக் கண்ணுேட்டத்
“மக்களிடையே சமத்து வதும் கடைப்பிடிப்பதும் களைத் தூண்டிவிடுதலும் ஆகவே அவை தண்டனை
- யூகோஸ்
4
‘இன வேறுபாட்டைக் சாதித் துவேஷத்தைப் பா மறைமுகமாகவோ குடிம தடுக்கப்படுதல் அல்லது 6 கப்படுதல் சட்டரீதியாக
- சோவியத் ரஷ்
123ம்
'சாதி இன வேறுபாடின
கும் சமத்துவத்துக்கு உதி கின்றது.”
- செக்கோஸ்லல்
20,
‘யூகோஸ்லாவிய மக்கள் கள் அல்லாத வேறு பிரதே தும் தத்தம் மொழிகளில் ச யவர்கள் ஆகிருர்கள்.”
- யூகோஸ் 24
‘நீதி மன்றங்களில் தா யைப் பாவிக்க சகல பி
யுண்டு.”

தில் சர்வ ஜன நீதி
வமின்மையைப் பரப்பு சாதிமதத் துவேஷங்
சட்டவிரோதமானவை,
க்குரியவை.’
லாவிய அரசியலமைப்பு, ம் விதி.
கொண்டு அல்லது ராட்டி நேர்முகமாகவோ க்களுடைய உரிமைகள் விசேஷ சலுகை கொடுக் தண்டனைக்கு உரியது.”
பாவின் அரசியலமைப்பு,
விதி.
*ாறி சகல பிரஜைகளுக் ந்தரவாதம் அளிக்கப்படு
ாக்கிய அரசியலமைப்பு, ଧାଁ $'
----
ர் தங்கள் பிரதேசங் நசங்களில் வசித்தபொழு கல்விபெற உரிமை உடை
லாவிய அரசியலமைப்பு, ம் விதி.
ம் பேசி எழுதும் மொழி ரஜைகளுக்கும் உரிமை
- சீன அரசியலமைப்பு,
77ம் விதி.

Page 204
பழிக்குப் பழி
1.
66
Iமீ.மாமீ." &f ailw(y) கத்தின் குரல் வாசற்படியில் அரைகுறையாகக் கேட்டது.
வெந்தயக் கு ள ம் புக் கு த ஈ வித் துக் கொண்டிருந்த சிவகாமியின் சிந்தனே தாளி னேயிலிருந்தது,
**மா மி. நான் சண்முகம் வந்திருக்கின்றேன். ஒரு அவ சரகாரியம். கொஞ்சம் கெதி யாய் கதவைத் திறவுங்கோ’. குரலில் பதட்டம் காணப்பட் l-gil.
தாளினைச் சட்டியை இறக்கி வைத்துவிட்டு, முகத் தி ல் முத்து முத்தாய் அரும்பிய வியர்வையை, சேலை முந்தா னேயால் துடைத்த வாறே வெளிக்கதவைப் போய் திறந் தாள்.
வெளியில் -
இளைக்க இளைக்க பேசமுடி Kut Lodi pseiv pr G 5 T6juriq. gj5 தான் சண்முகம். உ ட ம் பு வியர்வையில் தோய்த் து போயிருந்தது. கட்டியிருந்த வேட்டியின் கரையை சுன்னு கத்து செம்மண் கவ்விப் பிடித் துக் கொண்டிருந்தது!
சிவகாமிக்கு சண்முகத்தி டம் முகம் கொடுத்துப்பேச விருப்பமில்லை. என்ன விஷ பம் என்று கண்களால் கேட் டாள் ,
"மா மீ. என்ரை அவ'பிர சவ வேதனையால் துடியாய்
துடிக்கிரு, செல்லாச்சி மருத்
துவச்சி பட்ட டாவாம் . அது டம் உதவிக்கு 6T i u air G. செய்து வீ யளே? . சிவ எதிர்பார்த்து நின்றன்.
8ᎦhᏍu ᏯᏏrᎢ tᎥᏜ Ꮳ1 முகத்தின் மே pruh Sy anu&sm u தடுத்தது. அ மகள் பாக்கிய தான் வந்து நி கம் பாக்கிய ததை நினைக்க ஆத்திரத்தால் தன் மகளே ஏ uLi dk 95 mt ifñuurt 4k6 தன்ரை மனு பார்க்க உதவி நிற்கிருன். எ6 த ன் ம ன  ை கோண்டாள்
“ odersar . . . யளே! அழா திரும்பவும் ே (p65 D.
சிவகாமி. பழிக்குப். ட வாழவிடாமல் சந்தோஷமாக இது நல்ல ச முகத்தை பழி
ஒரு வாறு மா
"நீ போ நேரத்திலை. ருள் 'நல்லது

சிறுகதைகள்
பொன். குலேந்திரன் B. Sc. (Hons)
-ணம் போயிட் துதான் உங்களி
ஓடிவந்தனுன். காஞ்சம் தயவு ட்  ைட வாறி காமியின் பநிலை
பரிதாபமாக
பசவில்லை. சண் ல் உள்ள ஆத்தி பேசவிடாமல் வள் கண்முன் த்தின் உருவம் ன்றது! த்திற்கு செய்
i. e. 62 617 06ört a lu L -- Lul-5 g/l மாற்றி பைத்தி விட்டு இப்ப சிக்கு பிரசவம் கேட்டு வத்து ன்ன துணிச்சல்! த கல்லாக்கிக் சிவகாமி.
சண்மு
மா மீ வாறி க் குறையாகக் கட்டான் சண்
யோசித்தாள் ! ழி என் மகளை செய்தவன்ப் வாழவோ? ந்தர்ப்பம் சண் வாங்க! மனதை
ற்றிக்கொண்டு
நான் கொஞ்ச வாரன்" என் மாமீ. நான்
போய் காரை அனு ப் பு கிறேன் நீங்க ள் வெளிக் கிட்டு நில்லுங்கோ. "தி காமியின் பதிலே எதிர்பார்க் காமல் அவன் வந்த வழியே சிட்டாய்ப் பறந்தான்
2
சிவகாமி இறக்தி வைத்த எண்னைச் சட்டியை தி ( b r ம்ெ அடுப்பில் தூக்வி வைத் தாள். ச ட் டி யி ல் எண்னை கொதித்தது போல் அவள் மனம் கொதித்தது. உப்புச் சிரட்டையில் ஊறப் போட்ட மிளகாயை எண்ணையில்போட் -ாள் ‘உ.ஸ்’ என்ற சத்தத் துடன் சேர்ந்த புகையில் அவ ளின் சிந்தனை கலந்தது.
பாக்கியம், சிவகாமியின் ஒரே மகள். சிறுவயதிலேயே தகப்பனை இழ ந் த பாக்கி யத்தை ஒரு குறைவில்லாமல் வளர்த்த பெருமை சிவகாமி யைச் சர்ர்ந்தது. "சொத்துக் காரி என்ற பெயர் ஊரில் அ வ ளு க் கு இல்லாவிட்டா லும். நாலு பேரிடம் போய் வாய்விட்டு கடன் கேட்கா மல் வாழக்கூடிய நிலையில் இருந்தாள் சிவகாமி. பரம்ப ரைச் சொத் தா ன வீடும் அதில் கிடைத்த வரும்படியும் த வர் க ஸ் இ ரு வ ரு ம் வாழ்க்கை நடத்த போதுமா யிருந்தது. சிவகாமிக்கு ஊரில் நல்ல பெயர், காரணம் மருத் துவச்சி வேலையில் அவள் கைராசிக்காரி. அ வ ள் பார்த்த பிரசவங்கள் எல் லாம் சு க ப் பிரசவங்கள்.

Page 205
186 பழிக்குப் பழி
ஊரில் உள்ள பெண்களுக்கு எல்லாம் பிரசவம் பார்த்த அவளுக்கு தன் செல்ல மக ளுக்கு பி ர ச வம் பார்க்க
கொடுத்து வைக்கவில்லை.
ச ண் முகம், சிவகாமியின் தூரத்துச் சொந்தக்காரன். சிறுவயதிலேயே தாய் தகப் பனை இழந்தவன்,பள்ளிக்கூடம் சென்று நாலு படிப்பு படிக்கா விட்டாலும்,மற்றவர்களுடன் பண்புடன் பழக தெரிந்தவன். தாயின் சொத்தான ஐந்து பரப்பு புகையிலைக் காணியை நம்பி வாழ்ந்து சொந்தக்காரன் என்ற முறை யில் சண்முகம் அடிக்கடி, சிவ காமியின் வீட்டுக்குப் போப் வத்தான்.
வந்தான்.
ச ண் முக த்  ைத பெயர் கொண்டு அழைக்க கூச் ச ப் வீட் டுக்கு வந்து போன புதிசில் அவன் முன் நின்று பேசக்கூட வெட்கப்பட்டாள். ஆஞ ல் வெட்கத்தை மறந்து அவனுடன் பே ச ப் பழகத் தொடங்கினுள். சண் முகத்திற்கு வ ய து வந்த பெண்களுடன் பேசிப் பழக்க மில்லை, ஆனல் பாக்கியத்தின் பேச்சில், அவன் மனதில் ஒரு அமைதியைக் அவனை யறியாத ஒரு பாசம் மனதைக் க ஷ் விக் கொண் டது! சண்முகம் அவளை தன் சகோதரியாகவே பாவிக்கத் தொடங்கினன். ஆனல் அப் பாவிப் பெண்ணின் இதயத் தில் அவ ன் நிரந்தரமான இடத்தை பிடித்துக் கொண் டான். பாக்கியம் சண்முகத் தை தன் வருங்காலத் துணைவ ஞகவே கருதினுள். சண்முகத் தின் எண்ணம் அ வ ளு க் கு தெரிய சந்தர்ப்பம் கிடைக்க
பட்டாள் பாக்கியம்,
நாளடைவில்
s Giør L l na air.
வில்லை. மகளி தாயின் ஆை ருந்தது. யத்தை ச ண்
கொடுத்துவிட என்ற ஆசை
மனதில் பலக தது. ஒரு நாள் முகத்தை வா
all Lnt sir.
எப்1
**தம்பி சண் ஒன்று உன்ஞே வேண்டும் என் யோசிச்சு வா பீடிகையுடன்,
சண்முகத்தி, என்ன கேட்ச
“ “ øT Güv GOT Dnt . . .
என்று
uub... ''
டன்.
வருங்காலத்ை தான். ,'' ஆ உன் டை நல்ல as GAu Gofidik as ... !””
என்ரு " "எ ல் 6
"" அதுக்கென் இப்ப. அவச g2 -/iÄi é#5 60) L. LD 85 6 டும் அதுக்கு பம்” என்ருன்
சிவ கா மி சொன்ன மறு கெண்டது . . மனதை தேற்.
. . . . . . [تھے ““ இரண்டு GBu நேரத்திலை ெ நல்லது என் றேன்.""
"'என்ன. லிறியள்? எ வில்லை." எ
யத்துடன் அவ

ன் எண்ணமும் சயும் ஒன்ருயி படியும் பாக்கி முக த் தி ற்கு
வே ண் டு ம்
9au sir Lou?sir ாலமாக இருந் துணிந்து சண் ய்விட்டு கேட்டு
ாமுகம். நான் றடை கதைக்க ாறு பல நாள்
* * -ܒܶ
றன்’ என்ருள்
ற்கு சிவகாமி ப் போ கிருள்
க் க வி ல் லை. மீ அப்படி விஷ டின் புன்சிரிப்பு லாம் உன்டை தப் பற் றி த் பூர் இருக்கினம் 0 காரியத்தை
ான மாமி. ரம். முதலில் ரிடை நடக்கட்
பிறகு
அமைதியாக.
į J FT ni u
க் கு அ வ ன் மொழி சுருக்
என் ரு லும் றிக் கொண்டு.
ான் சண்முகம்
ருக்கும் ஒரே சய்திட்டால் .
Gungaig
மாமி. சொல்
னக்கு விளங்க ன்ருன் ஆச்சரி
sir.
பொன். குலேந்திரன்
'இதையும் வி வ ர மா ய் சொல்லத் தே  ைவ யே ? 22. ar san : சாதகத்தையும், அவள் பெடிச்சி பாக்கியத் தின் டை சா த க த் தை யும் ஊ ரெழு ச் சாத்திரியாரிடம் காட்டினணுன், அவர் நல்ல பொருத்தம் என்று சொன்
ஞர்; பெடிச்சியும் ஏதோ மனதை உன் னி லை பறி கொடுத்திட்டிது !. ان کے
தான் இந்த ஆவணிக்கு கலி யா ண த்  ைத செய்யலாம் என்று யோசினை. எதுக்கும் உன்டை சம்மதம் வேண்டு மில்லே!..' என்ருள் பதிலை எதிர்பார்த்து சிவகாமி.
சண்முகம் பேசவில்லை . கண்களில் கண்ணீர் வந்து முட் டிக் கொண்டது.
"ஏண்டா தம்பி இதுக்கு.
அழுகிறே!. என்ன. என்ன விஷயம் !" என்ருள் பதட்
மாமீ... என்னை மன்னிச்சி
டுங்கோ ... ! நான். பாக்கி யத்தை என் சகோதரியாய் பாவித்து நடத்திஞனே தவிர வேறு எந்தவித கெட்ட அபிப் பிராயத்துடனும் அவவுடன் பழகவில்லை. நான் அவ ளுக்கு அண்ணன் மாதிரி.
என்ன...? நீ என்ன கதைக் கிருய்..? ‘*. அப்ப நீ பாக்கி யத்தை விரும்பவில்லையே?’’
ஒரு அண்ணன் தன் தங்கச் சியை எப்படி விரும்புவானுே அதைப் போல அவளை நான் விரும்பினேன்.
சிவகாமிக்கு அதிர்ச்சியால் பேசமுடியவில்லை. த டா ர் என்று அறைக்குள் கேட்ட சத்தத்தில் அவள் அதிர்ச்சி யில் இருந்து விடுபட்டாள். சண்முகமும் சிவ கா மி யு ம்

Page 206
பழிக்குப் பழி
அறைக்குள் ஒடிச் சென்ருர் கள்.
அங்கேபாக் கி ய ம் சுயநிலையற்று கீழே கிடந்தாள். அன்று மயங்கி விழுந்த பாக்கியம், திரும்பவும் பழைய நிலைக்கு வரவில்லை. சிவகாமி அவ ளுக்கு செய்யாத வைத்தியம் கிடையாது. கடைசியில் அங் கோடையில் உள்ள மனேவி யாதி சிகிச்சை நிலையத்திற்கு கொண்டுபோய் காட்டினுள். வைத்தியர்களின் யோசனைப் படி அவளை மூன்று மாதச் சிகிச்சைக்கு அங்கே விட்டு விட்டு வந்தாள். கலியானக் கொலத்தில் பூவும் பொட்டு நிற்க வேண்டிய தன் - "பைத்தியக் காரி" என்ற பட்டம் பெற்று சமு தாயத்தில் வாழ முடியாமல் இருப்பதை நினைக்க அவள் இதயம் வெடி த் து வி டு ம் போல் இருந்தது. இந்த நிலைக்கு யார். காரணம்.? -சிந்தனையில் இருந்து விடு
பட்டாள் சிவகாமி.
of
40 ծն ճir
'இந்தச் சண்முகம் எங்கை சந்தோஷமாய் இருக்கப்போ கிறதை நானும் பாக்கிறன்' எ ன் று தன்னையுமறியாமல் வாய்க்குள் முனு முணுத்துக் கொண்டாள்.
எ ண் ணை ச் ச ட் டி யி ல் போட்ட மிளகாய் கருகிப் போய் கிடந்தது.
5
சண்முகத்தின் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க சிவகா மிக்கு மனம் கூசிற்று. ஏதோ பெரும் குற்றத்தை செய்யப் போகிறவள் போல் பதட்டத் துடன் உள்ளே சென்ருள்.
சண்முகம் பின் தொடர்ந் தான். அறைக்குள் சண்முகத்
தின் மனைவி
முணங்கல் சே
அறைக்குள் காமி. பிரச துடிதுடித்துக் L0lál és GT LD " ' 6lu மாமீ...”* எ டன் சிவகாப ருள். வியர்வையால் போயிருந்தது  ைக க ளு ம் குளிர்த்து டே தொ ட் டு ப் நிலைமை மோ காமிக்குப் புரி
மங்கள
""LDrr. LÉ. பேணு?. தாய் லாத எனக்கு நீ வ.ந்த ைத் மேலே மங்கள்
முடியவில்லை.
சிவகாமி. 6 என்று தெரிய னையோ பிரசவி அவளுக்கு, ஏ( சவம் மாத்தி கொடுத்தது.
- - - - - - ** மங். யோசிக்காதை திட்டன் தாே
காது. '' ை
ள்ை சிவகாமி.
எதையோ டும். விடக் கூடாது வைராக்கியத்
சண்மு

பொன், குலேந்திரன் 187
மங்களத்தின் ட்டது.
சென்ருள் சிவ வ வேதனையில் கொண்டிருந்த ா. ங். கோ. ன்று புன்சிரிப்பு ைெய வரவேற் த்தின் உடம்பு தே (ா ய் த் து ... மங்களத்தின் கா ல் களு ம்  ா யி ரு ந் தது. Lu nrri b5 Gnļi — dir சம் என்பது சிவ
ந்துவிட்டது.
நான். பிழைப் தகப். பனில் உதவிக்கு. ...நினைக்க.." ாத்தால் பேச
என்ன செய்வது வில்லை. எத்த பங்கள் பார்த்த னே இந்தப் பிர நிரம் தி கிலைக்
. களம்..... fË 1. நான். வந்
Of... '"
லை மாமி. அம் மா.வு ம் த்தில்தான். தை. நினைச்.
பெட்டை. ம் உனக்கு நடக் நரியம் சொன்
செய்ய வேண் கத்தை வாழ
என்ற மன துடன் வந்த
சிவகாமிக்கு மனம் மாறிவிட்
L-தி. . .
மேலும் மங்களத்தை அங்கு
வைத்திருந்தால் உயிருக்கே
ஆ ப த் து என்று அவளுக்கு தெரியும்!
சண்முகம்..” என்று. கூப் பிட்டுக் கொண்டே அறைக்கு வெளியே வந்தாள்.
A
ւDո լճ... ՞ ՞
என் முன் ஏக்கத்துடன் அவன்
என்.  ை.
* "நான் வந்த .கார் வெளி யே நிக்குதே?*
'ஓம்.""
"இ னி யு ம் சுணக்காமல் இணுவில் ஆசுப்பத்திரிக்குமங் சு ள, த்  ைத கொண்டுபோக வேணும். கெதியிலை ஆயித் தப் படுத்து. என்ன?”*
பதிலை எதிர் பார்க்காமல் அறைக்குள் சென் ருள்.
அங்கே... மங்களம் பேச்சு மூச்சற்று கிடந்தாள், ஒடிப் போய் நாடியைப் பார் த் தாள். நாடி நின்று இருந் தது. சிவகாமிக்கு விஷயம் விளங்க அதிக நேரம் பிடிக்க வில்லை. "ஐயோ ளம்’ என்று வாய் விட்டு கத
றினுள்..!
திரும்பி வா ச ற் படி க்கு போன சண்முகம் திடுக்கிட்டு திரும்பி அறைக்குள் ஒடிஞன்.
அங்கே மங்களத்தின் சில் லிட்ட உடலைத்தான் அவனுல் காணமுடிந்தது!
மங்க.
மங்களத்தின் ஈமச்சடங்கு கள் முடியுமட்டும் சிவகாமி சண்முகத்திற்கு உதவியாக நின் ரு ள். தான் நினைத்த மாதிரி சண்முகம் பழிவாங்கப் பட்டுவிட்டான் எ ன் ப  ைத

Page 207
188 பழிக்குப் பழி
நினைக்க அவள் மனம் படாத பாடு பட்டது. மங்களத்தை கண்டபின் அவள் மாறிஞ லும், விதி இரு வ  ைர யு ம் மோசம் செய்து விட்டது.
.. بناء عنه
வீடுதிரும்பிய சிவகாமிக்கு எல்லாம் சூனியமாக இருந் தது, நல்ல காலம் பாக்கி
யத்தை, ச ன் மு க த் து க் கு கொடுத்திருந்தால் அவளுக் கும் இந்தக்க திதான் வந்தி ருக்கும். ஊரெழுச் சாஸ்திரி சொன்னது சரிதான். சண் முகத்தின் சாதக த்தில் உள்ள செவ்வாய் தோஷம் தான் மங் களத்தைப் பிடித்திருக்குது . இப்படி பல யோசனைகள்சிவகாமியின் மனதில் மோதிச் சென்றன.
GLI65öT60)LD
வாசலில் ை கேட்டது.
**6o 6h 5 m lé தானு?. ஒரு அதைத் தொ
ட-தி-
6 anys, rró) சென்று தாள்.,
கத ை
உங்களுக்கு குக்குது. என்ரு நின்ற தந்திக்க
தந்தியென்ற அடிவயிற்றை க்
த.ந்.தியா,
எப்பன் படிச்சு
அழுத
66ar . . . . p
೧T.ಸಂಹ'ಹಿ॥ a FR p டைய ஆள்! வீட் டிவில்லையா? " இந்தக் கேள் விக்கு அவள் எந்தப் பதிலைச் சொல் வாள்; எப்படித்தான் சொல்லமுடியும்! இன்று நேற் றுக் கேட்கப்படும் கேள்வியா இது? மணமாகி அவள் இந்த வீட்டிற்கு வந்த காலந்தொட் டல்லவா மனிதர்கள் அவளே இந்தக் கேள்வியினல் துளைத் துக் கொண்டிருக்கிறர்கள். ஒவ்வொரு மயிர்க்காலுமே ஊசியாக மாறிக் குத்தியது போன்ற வேதனையைத் தான் முதல்முறை அவள் அணுப as noir. இதயமில்லாது
L 6v† Gan (pld தில் அவள் தை தான் செய்தா னும் அந்தக் ே பிய சிறுமையி அவள் எப்படி கிப் போய்விட்ட
எவ்வளவு தான அவள யும் மூடிவை கணவனுக்கு அ கூடாகென்று அ
செய்யாது விட்
ஆனலும், அது கக் கிளம்பி பெ
விரவி அவளை பொழுது?

பொன். குலேந்திரன்
சக்கில் மணி
வீடு இது ஆண் கு ர ல் டர்ந்து கேட்
ư rT ởr 6y đo gồ வத் தி ற ந்
தத்தி வந்தி ஒன் வெளியே
t prcöT–
தும் அவளுக்கு கலக்கிற்று.
..? தம். பி சொல்லு.
து
இந்த உலகத் Pத்து நிற்கத் ள். இருப்பி கள்வி எழுப் ன் முன்னுல் க் கூனிக்குறு
rreirl காலத்திற்குத் எல்லாவற்றை க முடியும்? பவாதம் வரக் வள் முயற்சி டுவிடவில்லை. சிறுகதையா ருங்கதையாக யே எட்டிய
மனக்குமுறலை
தந்திக்காரன் தந்தியைப் பிரித்து படித்தான். அவன்
முகம் திடீர் என்று சுருங் கிற்று பதில் வரவில்லை.
என்ன தம்பி. எ ன் ன?
என்ருள் பதட்டத்துடன் சிவ காமி.
உங்கள் மகள். அங்கொ டை. ஆஸ்பத்திரியில் கால uport a 6 *mt grrr b... ” ” Gresir முன் நடுக்கத்துடன்
சிவகாமிக்கு தலைசுற்றிற்று. பழிக்குப்பழி!. தெய்வ ம் அவளைச்சோதித்துவிட்டது. -அவளிடம் இருந்து பதில் வரவில்லை. அவன் கொடுத்த தந்தி காற்றில் பட, பட வென்று பறந்து சென்றது.
5. #6ÎIIj+ IIf I
மட்டுந்தான் அடக்க முடிந். தது, அவளால் .
மணமாகிக் கொ மும் பு வந்த பொழுது அவள் எத் தனை இன்ப நினைவுகளைச் சுமந்து கொண்டு வந்தாள். எவ்வளவு கள் சுட்டியிருந்தாள்! ஆனல் அவையெல்லாம். நினைக் கையில் அழுகை பொத்துக் கொண்டு வந்தது அவளுக்கு மணமான மூன்ரும் நாளே கணவன் வேலைக்குப் புறப்பட் டதையும், "லீவில்லை என்று காரணம் சகஜமாகத்தான் அவளால் எடுத்துக் கொள்ள முடிந்தது.
மனக்கோட்டை
சொன்னதையும்

Page 208
பெண்மை அழுதது
"செக்கியூரிட்டி ஆபீஸர்" ! என்ருல் சும்மாவா, நித்திரை செய்யும் சிறி து நேரந் தவிர்த்து மிகுதி நேரமெல் லாம் வேலை செய்ய வேண் டுமே! அவளுடைய கிராமத் தில் அதிகப்பற்ருணவர்களி டையே இருந்த எண்ணம் அது. ஆனல் ஒரு வாரத்தில் வந்து அழைத்துப் போவதா கச் சொன்னவன் மாதமொன் ருகியும் வராமல் போகவே அவள் சஞ்சலப்பட ஆரம்பித் தாள். போதாததற்கு நகைக ளிலும் சிலவற்றை வீட்டி னர்க்குத் தெரியாமல் கணவ னிடம் கொடுத்திருந்தாள் அவள் . பணக் கஷ்டம் என்று கட்டி ய வ ன் பதகளிக்கும் போது, தன்னையே கொடுத் தவளுக்குப் பொருள் பெரி தாகத் தோன்றவில்லை. ஒரு
வாரத்தில் அ  ைழ த் து க் கொண்டு போக வ ரு ம் பொழுது ந  ைக க ளை க் கொண்டு வ ரு வ த ரா க ச்
சொன்ன கணவனின் உறுதி மொழியை நம்பி அவனுக்கா கக் காத்திகுந்தாள். ஒ! எவ் வளவு நம்பிக்கை அவளுக்கு.
* மாதக் கணக் கா கி யு ம் கணவனிடமிருந்து கடிதம் இல்லையே” என்ற திகில் ஒரு பக்கம் "நகைப்பிரச்சினை எப் பொழுது கிளம்புமோ ! என்ற பயம் ஒரு பக்கம், உள்ளத் திலே தவிப்பு வெளியிலே சிரிப்புமாக அவள் வாழ்க்கை ஊர்ந்தது. அவனுடைய சுகத் தை ஊரில் தெரிந்தவர்களும் வயது போன தாயும் விசா ரிக்கும் பொழுதெல்லாம் 'சுக மாயிருப்பதாக நேற்ருெரு கடிதம் வந்ததம்மா" என்று மழுப்புவது அவளுக்கு வழக்க மாகி விட்டது. இந்த நிலை யில் அவள் எதிர்பார்த்த இக்
கட்டு அவளை நெருங்கியது. டைய உறவின் யாணத்திற்க தான் அது. ப பூவும் பொட் 6uair Strtid போகாமல் இ ஆனல் முக நகைகள் இ லுக்குப் போ 岛 列 அம்! கணவனுக்கு தம் அவளுக் போன்றதல்ல வும் பெரு!ை முறை தலைமு ருக்குக் கொடு குடும்பத்திற் தலேயிறக்கமா வித்தாள். தற்கு அவளு வழிதான் தெ
வருவதை வது என்ற து வினரொருவ புக்கு அவள் வி கணவன் இரு டிக் கிடந்தது புகையிரத நி3 பார்த்து ஏமா அது வாள் கிெ தைப் போ 'கணவனுக்கு கிடைக்கவில் ஸ்டேசனில் ரைத் தவற டோமோ? - றக் கண்ணுட யாத பெண்ை
55.
எதைப் பே பேசக் கூடாது வின்மை இப்ட ஞல் மற்றவ(
தைப் புண்

மெல்ல மெல்ல ஆம்; அவளு ார் வீட்டுக் கல் ான அழைப்புத் ணம் முடித்துப் டுமாக இருப்ப த்தில் எப்படிப் ருக்க முடியும்? கியமான சில லையே. இரவ னுல் அவள் செய் பலமாகிவிடுமே! வரும் அபவா கு வருவதைப் வா? வசதியாக மயுடனும் தலை 1றையாகப் பிற க்கவே தெரிந்த த இப்படியொரு r? அவள் பரித அதனை நீக்குவ க்கு ஒரே ஒரு ரிந்தது.
ஏற்றுக் கொள் னிவுடன், உற குடன் கொழும் பந்த பொழுது, ந்த அறை பூட் து. கணவனப் லயத்தில் எதிர் “த்த இதயத்தை 5ாண்டு அறுத்த ல் அறுத்தது. அடித்த தந்தி லயோ அல்லது நாம்தான் அவ வி ட் டு வி ட் கணவனை குற் rir LifTrias (pg ம அங்கலாய்த்
Fvmb; 6Teg
என்ற தெளி டிக் கதைப்பத குடைய மனத் படுத்துகிருேமே
க. சண்முகராசா 189
என்ற மன உறுத்தல் இல் லாமை மற்றவர்கள் அதைச் சுட்டிக்காட்டினல் நாம் உண் மையைத் தானே பேசினேம்" என்ற தார்மீகக் கோபம் - இத்தனை குணங்களிலிருந்தும் நல்லவர்களாகவே வாழும் சில மனிதர்களும் வையகத் தில் உண்டு என்பதை அந்த வீட்டுக்கார ம னு சி யை க் கண்ட பொழுது புரிந்து கொண்டாள் அவள்.
*" என்னம்மா! நீங்கதான் தம்பியின்ரை. ஆன அவர் எங்களுக்கு இதைப்பற்றி ஒன் றுஞ் சொல்லேல்லையே. ஆளே இந்தப் பக்கம் இரண்டு மூன்று நாளாய்க் காணேல்லை. எங்க போனுரென்றும் தெரியேல்லை. தந்தி ஒண் டு நேற்று வந் தது. . . . . . ஓ! அது உங்கடை யாக்கும், என்ன, அப்படித் தானே? ஆம். லீவெடுத்துக் கொண்டு கண்டியிலை யாரோ சிநேகிதரிட்டை போ கணு மெண்டு சொல்லிக் கொண்டி ருந்தவர். அங்கை தான் போனரோ தெரியவில்லை. என்ன இருந்தாலும் பாருங் கோ தம்பியின் ரை போக்கு எனக்குப் பிடிக்கல்லை. ஆன நான் சொன் ஞ ப் போ லை கேக்கப் போருரே? உப்புடித் தான் சில நாளிலை ஆருஞ் சிநேகிதரோடை நிண்டிட்டு அடுத்த நாளைக்கு வருவார். மற்றப்படி தங்கமான பிள்ளை எங்கள்ளே வலு நம்பிக்கை. அறையைப் பூட்டிட்டுச் சாவி யை இங்கைதான் வைக்கிற வர். இனியென்ன நீங்கதான்
வத்திட்டீங்களே! ஆளை க் கொஞ்சம் கண்டிச்சு வையுங் கோ. இந்தக் காலத்திலை
ஒருத்தரையும் நம்பமுடியற தில்லை. பக்கத் தி லி ரு த் து கழுத்தையறுப்பானுகள் .

Page 209
190 பெண்மை அழுதது
கொஞ்சம் நிண்டு கொள் ளுங்கோ! சாவியை எடுத் திட்டு வாறன் .'
யாரோ நண்பர்களுக்காக லீவு எடுக்க முடிந்தவனுக்கு மனைவிக்காகவா இர ண் டு நாட்கள் எடுக்க முடியாது? கட்டியவளிடம் உள்ள அக் கறை இவ்வளவு தானு?-எண் ணங்கள் மனத்தை வாட்ட, மெளனமாகச் சாவியை வாங் கிக் கதவைத் திறந்து அறை யினுற் நுழைந்தாள் அவள். அவளுடைய நல்ல காலமோ என்னவோ சிறிது நேரத்தில் கணவனும் வந்து விட்டான். வந்த முதல் நாளே தனிமை யில் தனக்கும் அவனுக்கும் ஏற்பட்ட மனக் கசப்பை இன்னும் நினைவு கூர்ந்தாள் அவள். அதன் விளைவாக சகு
னம் போல் பூட்டிக் கிடந்த
அறையைத் திறக்கப்படாத கணவனின் இதயமாக ஒப் பிட்டுக் கற்பனை செய்தாள் அவள். அந்த நினைவு அன்று நெருஞ்சி முள்ளாக உறுத்தி யது போலவே இன்றும் அவளை உறுத்திற்று. அறை யில் நுழைந்தது போலவா, தானுக அவன் வாழ்க்கையி லும் நுழைந்தாள்? அதற்காக இன்றும் அவள் கொடுக்கும் பரிசு - செய்த தியாகங்கள்? கடந்த கால நினைவுகளை மீட் டும் பொழுது கண்களிலே மடை திறக்கும் போல் தோன் றிற்று அவளுக்கு.
இன்று இருக்கும் வீடுக ட அவளாக யார் யாரையோ பிடித்து முயற்சி செய்ததால் கிடைத்ததுதான், எல்லாவற் றையும் அவளே தன் தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டு செய்தாள். உற்ருர் வந்தார் கள். உ ற வி ன ர் கள் வந்து
போஞர்கள். த யுடன் குடும்ப தாக மற்றவர்க டிஞள், நம்பி( வர்கள். நம்ப அவர்களைப் பற் லேப்படவில்லை.
ஊரிலிருந்து தானுண்டு, த 6 எ ன் றி ரு ந் த வேளா வேளைக் வீட்டை நிர்வ
கணவன் க வ ே தான். தன்னு யில், சுதந்திர கைவைக் காதி( அவனுக்கு மே தாலும் சரியா தது, அவளோ
துவான். வாழ் லா விட்டாலும் நாள் வளப்படு பிக்கையுடன் ந வது குடும்பத் ஞள். - தவறு GLIt Gá Gst
வந்த புதிதி நேரத்துடன் விட்டு, சினிமா பர்கள் வீட்ப பட்டு நின்ற டைந்த நாட் இரண்டா! வழ க ன வ னே : களைத் துப் பே யர்ந்துவிடுவா தன்னிடமிருக் மூலம் கதவை தடியில்லாது 8 டுப் படுத்துவி கண்விழிக்கும்
Nu 650.-ti í CS5 தான் கேட்கும் அவளுடைய தணிப்பதற்கா ஒரு சமாதான

க. சண்முகராசா
நான் மகிழ்ச்சி ம் நடத்துவ எளுக்குக் காட் னுர்கள் மற்ற ாதவர்களோ ? நி அவள் கவ
பணம் வந்தது. ன் வேலேயுண்டு
ா ன் அவள் . குச் சாப்பாடு, கிக்க ஒருத்தி. ல ய ம் றி ரு த் டைய வருவா த்தில் அவள் ருக்கும் வரை னவி எது செய் "கவே தெரிந் ! அவன் திருந் க்கை இன்றில் } என்ருே ஒரு ம்' என்ற நம் கையை விற்ரு தை நடத்தி , சமைத்துப் rண்டிருந்தாள்.
ல், கணவனை வரச் சொல்லி வுக்கோ, நண் +ற்கோ புறப் ஏமாற்றம கள் ஒன் ரு க்கம் போலக் ாதிர்பார்த்துக் ாய்க் கண்ண 市。 அவனுே தம் சாவியின் த் திறந்து சத் ml’ü 19L' (5) 6îl" வொன் அவள் போது கணவ றட்டையொலி அடுத்தநாள் ரி ன த்  ைத த் ஏதாவது ம் வைத்திருப்
டிக்காடாயிருக்கலாம்;
பான். பொறுக்க முடியாமல் அவனை ஒரு நாள் கேட்டே 6ill Ln airl
* "ஏன் என்னை இப்படி ஏமாத்திறீங்க! உங்களுக்கு என்னுடன் வெளியே போக விருப்பமில்லாட்டி நேர டி யாச் சொல்லுங்கோவன்!"
குற்றச்சாட்டு நேரடியாக விழுந்தபொழுது, உ எண்  ைம யின் முன் அவனுடைய சாக் குப் போக்குகள் எதிர்நிற்க முடியாத பொழுது, அவனல் கொதிக்கத்தான் முடிந்தது.
முன் பெல்லாம் மறைமுக மாக எதையாவது செய்தி ருந்தானென்ருல், இந்தச் சம் பவத்திற்குப் பிறகு வெளிப் படையாகவே அவன் நடந்து கொண்டான். ஆ ன லு ம் அவர்கள் குடும்பம் நடக்கத் தான் செய்தது. எத்தகைய அதிருப்திகளையும் தமக்குள் ளேயே புதைக்கப் பழகிக் கொண்டாள் அவள். கண வன் "இரவு வேலை" என்று சொல்லிச் செல்லும் நாட்களி லெல்லாம் தனிமையின் பயங் கரப் பிடியில் அகப்பட்டுத் தான் கண்விழித்த இரவுகளை யும் விழிகளுதிர்த்த நீர்த்துளி களையும் இப் பொழு தும் நினைவுகூர்த்தாள் அ வ ள். அவன் கூறியபடி அவள் பட் Д5 тая ரிகம் தெரியாத வளாயிருக்க லாம்; பேதையாயிருக்கலாம்; ஆனல் விபரம் புரியாத சிறுமி யல்லவே! அவன் உள்ளம் அவளுக்குப் புரிந்தது. அதற் காக அவளால் அவனை நோக முடியவில்லை. தன்னை நொந்து கொண்டான்; விதியை நொத் தாள். எந்த நாளும் நினைக் கும் தெய்வத்தை இன்னும் நினைத்துக்கொண்டாள்!

Page 210
பெண்மை அழுதது
'ஆண்டவா! என் கணவர் விரும்புவது போல கண்ணுக் கும் உதடுக்கும் மை பூசி உடல் தெரிய ஆடை அணியும் துணிச்சலோ, அவர் விரும் பும் நாலு பேருடன் "சோஷ' லாகப் பழகுவதற்கு ஆங்கி லமோ தெரியாதது என் தப்பா? பதினறு முழ ப் புடவை சரசரக்க நெற்றியும் குங்குமமுமாக வாழ்வது ஒரு கேலியா அப்பா? பருவம் வந்த பின் பள்ளி கூடாது என்று சொல்லும் கிராமத் தில் விளைந்த அறியாமையில் ஒன்ரு கவா, 'க ன வ னே தெய்வமென்று அடக்கமாக வாழ்வதே தமிழ் மகளின் பண்பாடு' என்று அம்மா அறிவுரை சொன் னு ள் ! எனக்கு வசதிகள்
"பெண் இ ன் பம்" வேண்டாம். ஆணுல் ஒன்றை மட்டும் நிறைவேற்றிவிடு. அவரோடு வாழும் பாக்கி யத்தைப் பறித்துப் பரம்பரை யிலில்லாத அவப்பெயரை உண்டாக்கி விடாதே. s
வேண் டாம்;
வெளியிலே காகமொன்று தன் அவலக் குரலிலே கரைந் தது. "காகம் கரைந்தால் சாவுச் செய்தி வருமா மே?- மூடநம்பிக்கைகளிலே அலே பாய்ந்த சிந்தனை கணவனை நோக்கித் திரும்பியது! நேற்று அ வளு டன் கோபித்துக் கொண்டு சென்றவனை எதிர் பார்த்து ஏங்கினுள் அவள் தான் ஓரளவுக்கு 6L Gd கொடுத்து நடந்திருக்கலாம் போல இப்பொழுது நினைத் தாள் அவன். ஆஞலும், அவ னுடைய செயலே அவளால்
முழுதாக மன் வில்லை. எந்தட் னத்தை அவள் னுக்கு மேலாக இனியதாகக் தாளோ அந்த பல்லவா அவ டான்! அவளா சயம் மன்னி வில்லை. அத் அவனது நன் எ அந்தராக்மா நி சென்ருனே! ஒ கடைச் சாப்ப வளவு சிரமப்பு அவள் சிந்தனை மூடும் சப்தத்த அதோ! காலடி அவன் வந் து இனம்புரியாத அவள் உள்ளத் ழுந்தது. அவ ஓர் ஒளி வீச்சு! நின்றவனை ஏ
தாள்.
‘எங்கை இ fofruaj? ’ ”
*" கழுதை வ கும் கேள்வியை
'நான் இவ் Fmr u' LSL - Tpo ż i
* உன்னே சொன்னவை" ஈட்டியாய் பா தைகள்.
* 'உங்களைத் இவ்வளவு நே போட்டு வாறி
"நா ன் போவன்; வரு

ானிக்க முடிய புனிதச் சின் ா, தன் கணவ தன் உயிரினும் கரு தி யி ரு ந் தத் தாலியை ன் கேட்டுவிட் ல் அவனை நிச் க்கவே முடிய த நிலையிலும் மையே அவள் 5ாடியது. எங்கு த் து வ ரா த ாட்டுடன் எவ் டுகிறஞே. க் கதவு திறந்து iால் அறுத்தது. ச் சத்தங்கள். I it sirl ம கி ழ் ச் சி தில் கிளர்ந்தெ ள் கண்களிலே எதிரே வந்து “றிட்டுப்பார்த்
}வ்வளவு நேர
ந்தவுடன் கேட் y Li - y frri!”.”
வளவு நேரமுஞ் கிடக்கிறன்.'
Lu irti assir dissit
ஈட்டிமேல் ய்ந்தன வார்த்
தான்! எங்கை ரமுஞ் சுத்திப்
u us ? ” ”
எ ங்  ைக யு ம் | வன், அதெல்
ds. F 6očir (póstrarár ar 191
லாம் உனக்குத் தேவையில் லாத விஷயங்கள். '
* அதுதான் உலகஞ் சிரிக் குதே உங்களைப் பார்த்து!"
* பொத்தடி வாயை!'"
அவள் குமுறிஞள் இத் தனை பாடுபடும் எனக்காஎன்னையா பொத்தச் சொல் லுகிருள். அவளுக்கு நிதா னத் தவறிவிட்டது.
**ஆமாம், பொத் தி க் கொண்டிருந்ததாலே தானே இவ்வளவு தூரத்திற்கு வற் திட்டீர்! எல்லாம் அவள் குடுத்த மயக்கம். நல்லா மூட் டிவிட்டிருப்பாள். அவளை ப் போல நானும் ஆயிரம் பேரைப் பிடிக்கிறவளெண்டு நினைச்சுக் கொண் டா ள் போலயிருக்கு. எளிய. 8
* Lf ''
கண்களின் எதிரே ஆயிரம் பூச்சிகள் பறந்தன. அடி பட்ட கன்னத்தை விரல்கள் தடவின. அந்த இடம் "விண் விண்னென்று வலித்ததைக் கூட மறந்துபோய் விக்கித்து நின்ற ஸ் அவள். சிறுவயதில் செல்லமாக வாழ்ந்த நாட் களே இப்பொழுது ஒப்பீட்டுப் பார்த்தாள் அவள். மனவே தன அவளை வாட்டிப் பிழிந் தது. பெருகிய கண்ணிர்த் திரையினுாடே க ண வ னி ன் முதுகுப்புறம் மங்கி மறைந்
岛岛·
அவள் அழுது கொண்டிருத் தாள். அந்த அழுகைக்கு முடி வுதான் எப்போது ?

Page 211
எத்தனை இதயம் ெ
1.
ہے ۔ وہ یہ عما9گ
ஊது குழலை ஊதி, பச்சைக்
கொடியைக் காட் டி ஞ ர் ரெயில்வே கார்ட். மெயில் வண்டி 'கூக். கூ.’’ என்று
சட. சட என யாழ்ப்பாண ஸ்டேசனிலிருந்து ஆரம்பித் தது. ஆனந்தனும் கோணர் சீற் பிடித்த நிம்மதியில், தான் வாங்கிவந்த பத்திரிகையை சீட்டில் போட்டு விட்டு ஒவ் வொரு பெட்டியாக தனக்குத் தெரிந்தவர்களும் கொழும் பிற்கு வருகிருர்களா என்று கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தான். ரெயிலும்
அனுராதபுரத்தைத் தாண் டவே, கோணர் சீற்றில் போய்த் தூங்கலாம் என்று
தனது சீற்றில் போய் அமர்ந் தான். சீற்றின் முன் ஒர் இள நங்கை இருப்பதைக் காண வே ஆனந்தனுக்கு வந்த நித் திரையில் அ  ைர ப் பங்கு மறைந்து விட்டது. இருபத் தாறு வயதை எட்டிப் பிடித் துக் கொண்டிருக்கும், இள மை உணர்ச்சிகள் மோது கின்ற காளையல்லவா அவன்!
அவளோ,
காதுகளில் வைரத்தோடும், களுத்தில் வைரச்சங்கிலியோ
டும் பூவும், பொட்டுமாக அமைதியாக சாய்ந் திரு ந் தாள்.
ஆனந்தனின் தை திருப்பி, க நன்ற கப் பார் பார்க்கும் அவள் தன்னை ரசிக்கிருள் என் கொண்டான் ஆ பெண்ணினல் ர ரொம்பச் சுக வும் ஒரு ஆண், பது போலவே தன்னை ரசிப்பது சுகமாகத் தான்
ஆனந்தனும் பாழ டி க் க | அவனும் பார்த்
க ண் க ள் மோதிக் கொ கிய சிரிப்பெ விட்டாள். அ பொழுதே அர் முகமும் டூத்!ே ரக் காரிகையை டியது ஆனந்த டன் கதைக்கே என்னவோ 6 தது, அவன் ! லும். ஆனந்த பனை உலகம் சென்ருலும், த களே அடக்கி ச மனிதனுகவே ருன் ஆனந்த அவனுல் கட்டு வில்லை. நீங் கொழும் புக் போகிறீர்கள்" விழாவை நடத ஆனந்தன்.

5526)T IITfG)6)
பக்கம் முகத் ண்களே விரித்து த்தாள். அவள் தினுசிலிருந்தே ப் பார்கிருள், ாறு தெரித்து ஆனந்தன். ஒரு சிக்கப்படுவது ந்தான். அது பெண்ணை ரசிப் ஒரு பெண் து அவனுக்குச் இருந்தது.
தருணத்தைப் விரும்பவில்லை, த்தான்.
எதிரெதிரே ண்டன . இள ான்றை தவழ வள் சிரிக்கும் 3தப் பற்களும் பஸ்ட் விளம்ப ப ஞாபகமூட் னுக்கு அவளு வண்டும்போல் ால்லாம் செய் மனமும், உட னுடைய கற் நீண்டு விரிந்து னது உணர்ச்சி ாதாரணமான காட்ட முயன் ன். ஆயினும் ப்படுத்த முடிய கள். வந்து. குத் தானே என்று திறப்பு நீதி வைத்தான்
வ ர ன்
"'யேஸ்" என்று ஆங்கிலத் தில் பதில் வரவே.
‘மே ஐ நோ யுவர் நேம் ப்ளீஸ்" என்று தொடர்த் தான்.
'ஐ எம் ஆனந்தன், வேர்க் கிக் இன் த பாங்க்'
"'நான் கொழும்பில் டீச் பண்ணுகிறேன். நாளைக்கு ஸ் கூ ல் தொடங்குகிறது' " என்ருள் நளினி.
“ “ g) atrapy JB6v 6w 6 sp6ny L-nr 63 இருக்கிறது.'
'யூனிவேர்சிட்டி மாணவர் கள், ஆசிரியர்கள் எல்லோ ரும் இன்றுதான் ட்ரவல் பண் ணுகிருர்கள்.'
'ம் ஆ அது தான் ரெயி லும் ஒரே கலகலப்பாக விருக் கிறது. ’’
கதை தொடர்ந்தது.
நளினியின் அ ட் றெஸ் வாங்க வேண்டும் போல் ஆனத்தனின் மனம் துடித்
திது.
*கொழும்பில் உங்கள் அட் றெஸ்.'
நளினி சொல்லவே தனது டயரியில் குறித்துக் கொள்கி ருன் ஆனந்தன்,
* ! உங்களை. வத்து சந்திக்
கலாம் தானே.”*
இளகிய புனமுறுவல்

Page 212
எத்தனே இதயம்.
ஆனந்தனுக்கு பொழுது இன்பமயமாக போய் க் கொண்டிருந்தது. பொழுது விடிந்து, மஞ்சள் கிரணங்க
ளில் வெண்மை கலக்கின்ற வேளை. ரெயிலும் சட சட வென்று கோட்டை ஸ்டே சனை அடைந்தது. நளினியின் பெட்டிகளை இறக்கி, தெஹி வளை பஸ்ஸில் அவளை ஏற்றி விட்டு கொட்டாஞ்சேனையி லுள்ள தனது அறைக்குப் போனன், ஆனந்தன்.
யாழ்ப் பா ண த் தி லிருந்து வந்து மூன்று நாட்கள் பறந்து விட்டன. வேலைக்கு அன்ரு டம் போய் வருவதோடு யந் திரம் போல் இயங்கிக் கொண் டிருந்தான். அவனது இதயத் தில் எண்ண அலைகள் மோதி, மோதி ஒய்ந்தன. அவனது மனமோ ஊமையாகிவிட்டது போன்ற நிலை. கொந்தளிக் கும் கடல் போல் மனம் தறி கெட்டுப் புரண்டது. நளினி யின் எண்ணங்களினல் அலைக் களிக்கப்பட்டுக் கொண்டி ருந்த ஆனந்தனுக்கு எப்படித் தூக்கம் வரும் ஒவ்வொரு நாளும் விழிப்பு அவனுக்கு வேதனையூட்டியது. புரண்டு புரண்டு படுத்தான். உறக்கம் தேங்கி, இமைகள் கனத்து, விழிகளைப் பாரம் அழுத்தி யது. மெல்லிய திரை போல் நளினியின் நினைவு அவன் கண் முன் படர்ந்தது.
திங்கட்கிழமை
அன்று மாலை கட்டாயம் அவளை சந்திக்க வேண்டு
மென்ற முடிவோடு நளினி இருக்கும் கல்லூரி விடுதிக்கு விரைந்தான் ஆனந்தன். அவ ளு  ைட u வரவேற்பிலும், பேச்சிலும் அவனுடைய அக மெல்லாம் மலர்ந்திருந்தது
என்பதை அவ காட்டியது.
இந்த தென்பை அ னது உணர்ச்சி
f) e.
ரெயிலுள்ளி குச் சென்ற நr நளினியின் இ தன் படிப்படி கொண்டிருந்த இதயத்திலும் சிகளை வடித் குக் கடிதம் வ போல் துடி த் நளினி. அவள உச்சத்தை அ ஆனந்தனே ஆ கச் சென்றிருச் அவளுக்கு மகிழ் மல் வேறு என முடியும்? ரெயி கண்டபோதே நெஞ்சு ஏற். விட்டது என வேண்டும் பேn
நளினி.
இப்பொழுது வேலைமுடிந்துதி நளினியை சர் அறைக்குச் ஆனந்தன். கா கரையிலும், ே பீச்சிலும், தெ அலும், தியேட்ட துகள் கழிகின்,
காலம் ஒடு வேகமாக நாட றன. மாதங் றன. ஏப்ரல் தொடங்கி இ னியை sy கோட்டைப் பு யத்தில் நளினி நிற்கிருன் ஆள லும் இரைந்து

6/ réir 193
ளுடைய முகம் ஆனந்தனுக்கும் 斤 G G புதிய ழித்தது; அவ களே கிளறியது.
ருந்து விடுதிக் ள் தொடக்கம் தயத்தில் ஆனந் யாக வளர்ந்து ான். த ன து எழும் உணர்ச் து ஆனந்தனுக் ரைய வேண்டும் திருக் கி ரு ள் து இதய கீதம் டிையும் போது அவளைச் சந்திக் கின்றன். இது ம்ச்சியை அல்லா தைக் கொடுக்க லுள் உங்களைக் உங்களை என் றுக் கொண்டு ண்று சொல்ல ல் துடித்தாள்
எ ல் ல |ா ம் திரும்பும்போது 5 தி க் கா ம ல்
செல்வதில்லை லிமுகக் கடற் வெள்ளவத்தை ஹிவளை சூவி டரிலும் பொழு
fᎠ ᎧᏈᎢ .
கிறது. வெகு ட்கள் நடக்கின் ாள் விரைகின்
மா த லீ வு ருந்தது. நளி றுப்புவதற்காக கையிரத நிலை ரியுடன் வந்து னந்தன். ரெயி கொண்டுவந்து
நிற்கிறது. ஏறி உட்கார்ந்து
கொண்டார்கள்.
புல்லரிப்பு தாளவே முடிய வில்லை. பாதாதிகேசம், உஷ் ணக் கதிர்கள் குப்பென்று எழு கின்றன. நெக்குருகி மெழு காய்க் கரைந்து என்றோ, எப் படியோ ஏதோ ஒரு வினுடி யில் உடலில் ஒட்டிய ஸ்பரிச சு கத்தின் அனலில் மூழ்கித் தன் முழுத் தன்மைகள் எல் லாம் பங்கப்பட்டு நிற்கிருள் நளினி.
அதுதான் சாத்தான் கை நீட்டி, ஒரு பெண்ணைத் தீண்டு கிற வேளை. ஊது குழல் ஊது கிறது. **போய் கடிதம் போடு நளினி' எனக் கூறிக் கொண்டு ரெயில் பெட்டியிலி ருந்து இறங்கினுன் ஆனந்தன். ஒரு மாதத்திற்கு காண முடி யாதே என்ற கவலையோடு அறைக்குச் சென்று படுத்துக் கொண்டான். போய் அடுத்த கடிதம் எழுதியிருந் தாள் நளினி ஒரு தடவை யல்ல, பல தடவை வாசித் தான். உடனே பதிலும் எழு தினன்.
"'என் அன்புக்குரியவளே .
நாளே
) p r p y un மனதை அவிழ்த்து உத றிஞல் விழுபவை உன்னைக் குறித்த நினைவுகளின் அரும்பு மலர்களாகவே இருக்கின்றன. என்னுடைய கற்பனை உலக னைத்துமே குள் அடங்கி விட்டதே' என்று தனது மனதில் எழுந்த உணர்ச்சிகளே எழுதிக் கொட் டித் தீர்த்திருந்தான் ஆனந்
2
யாழ்மருத்துவமனையொன் றைச் சேர்ந்த டாக்டர் முர
உன் கைப்பிடிக்

Page 213
194 எத்தனே இதயம்.
ளியின் மனைவிதான் நளினி. இவர்களின் திருமணம் நடந்து ஒரு வருடம் மறைந்து விட் டது. மாட்டையும், மண் வெட்டியையும் ஆதாரமாகக் கொண்டு முரளியை டாக்ட ராக்கினர் அவனின் அப்பா வேலாயுதம். முரளி டாக்ட ரான உடன், வேலாயுதம் கஷ்டப்படும் போது கண்மூடி டியவர்களெல்லாம் சொந்தம் கொண் டா டி ஞ ர் க ள் கொழுத்த சீதனம் தருவதா கப் போட்டி போட்டனர் பலர். இவற்றையெல்லாம் அடியோடு வெறு த் தா ன் முரளி, சாதரணக் கிராமியப் பெண்ணைக் ஏற்றுக் கொண்டு ஆடம்பரமற்ற சேவை செய் யவே அவன் மனம் துடித் தது. வே லா யு த மே 1ா கோட்டை மேல் கோட்டை கட்டினர். முரளியைமுதலாக வைத்துப் பேரம் பேசினர். தான் வாங்கும் ஒவ்வொரு இலட்சத்தாலும் தான் சமு தாயத்தில் ஒவ்வொரு படி உயர்ந்து விடுவதாக அவரின் ந ப் பா  ைச . 'வேலாயுத மல்லோ மனுஷன். பாரேன் மகனுக்கு இலட்சக்கணக் காக சீதனம் வாங்கியிருக்கி ரூன். அத்தோடு வீடு வளவு
காணிகள். அவனல்லவோ கொடுத்து வைத்தவன்.' என்று ஊரில், எல்லோரும்
கதைக்க வேண்டும் என்பது வே லா யுத த் தி ன் நெடு நாளைய ஆசை. முரளியோ எவ்வளவுதான் இ லட் சி ய வாழ்க்கையைப் பற்றிச் சிந் தித்தாலும் தன் தந்தையின் திட்டத்தை எதிரிக்க துணி வற்ற கோழை அவன்.
'மூன்று இலட்சம் தருகி ருர்களாம். அத்தோடு வீடு வளவும் காணிகளும் நூறு
பரப்பாம். இப் கிடைக்கும் பே முருகானந்தத்தி குச் செய்யாமல் குச் செய்வது.' கினர் வேலாயு,
** அவர்கள் கேட்க, கொடு வர்களல்லவா பொடிச்சியும் விட்டு கொழுப் கிருள். குணமா யென்று புருேக் ரூன் ! என்று ே தள்ளிஞர் முர6 வேலாயுதம் இ. லும் போது ப கழிப்பதாவது! தனது திட்ட வேற்றிக் கொ மணம் முடிந்து கின்றன. ெ வளர்ந்த கிறு டோப வாழ்க்ை டும் என்ற எண் கிலமோகமும் நாகரீகத்தின் ( கொண்டவள் ( டனும் வேலா எட்ட நின்ே காலை எழுத்து பெருக்கி மாமி யில் உதவி செ வள் லிப்டிக்சு மாக கண்ணுடி முரளிக்கு அடிே தவை வறுபை முன்னுக்கு வந் களெல்லாம் பெண்களைப் ே மற்ற வாழ்க் வேண்டுமென்ற ஆதரிக்கும் கட் வன். வேலாய யும் அவள் டெ பெண்னென்று கொப்பில்

படியெல்லாம் ாது முதலாளி 6óT Lo GG5 iš வேறு யாருக்
என்று முழங் 5th.
எங்களை வந்து த்து வைத்த ந T ல் க ள் . B. A. படித்து பில் படிப்பிக் ான பொடிச்சி கரும் சொல்கி வேறு அளந்து ரியின் அப்பா. ப்படிச் சொல் னைவி தட்டிக் வேலாயுதம் த்தை நிறை ண்டார். திரு நாட்கள் கழி ச ல் வத் து ஸ்
க்கும் கைவாழ வேண் ாணமும் , ஆங் மேல் நாட்டு மேல் தாகமும் முரளியின் தாயு "யுதத்துடனும் ற பழகினுள். மு ற் ற ம் க்கு அடுப்படி ய்ய வேண்டிய
LI L - fi
ம், ஐடெக்ஸ்சு முன் நிற்பதும் யோடு பிடிக்கா யில் வாழ்ந்து தமுரளி பெண் கிராமப்புறப் பால் ஆடம்பர s நடாத்த பழமையை சியை சேர்ந்த தமும் மனைவி ரிய இடத்துப் a. ë 6 m g di தூக்கிவைத்து
பார்த்தார்கள். இவையெல் லாம் முரளிதரனுக்குப் பெரிய புயலை ஏற்படுத்தியிருந்தன. பெண்கள் உ த் தி யோ கம் பார்ப்பதை விரும்பாத முரளி அவன் வெளியூர் சென்று படிப்பிப்பது என்பதை எவ் வாறு ஏற்றுக் கொள்வான். இதை நளினிக்குச் சொன்ன போது அவள் சிரித்தாள். **இந்த நூற்றண்டில் என்ன பட்டிக்காட்டுக் கதை சொல் கிறீர்கள். டாக்டராகியும் இந்த உலகத்துடன் வாழத் தெரியவில்லையா' என ஏள னமாகக் கேட்டாள் நளினி. தான் எதைச் சொன்னுலும் இவள் கேட்க என்று அவனுக்கு நன்ருக தெரிந்தது.
மாட்டாள்
கல்யாணத்துக்கு எடுத்த இரண்டு கிழ  ைம லீவும் முடிந்து விட்டதால், அன்று மாலையே தனது மனத்தில் வேற்றுமையுணர்ச்சி இருந் தாலும் உலகத்தின் ஒப்புவு மைக்காக ஸ் டே ச னு க் கு கூட்டி வந்து அனுப்பியிருந் தான் முரளி.
5
கல்யாணமாகியும் அவள் கொழும்பிலும் தான் யாழ்ப் பாணத்திலும் நடாத்திக் கொண்டிருப்பதி லும் பார்க்க சும்மா இருந்தி ருக்கலாம் போலிருந்தது முர ளிக்கு.
வாழ்க்கை
இரு துருவங்களில் பிரிந்து நிற்கும் இவர்களை விடுமுறை கள் ஒன்று சேர்த்தன. முரளி யும் கொழும்பிற்கு த ன து மாற்றம் பற்றி ஒரு வ ரு ட காலமாக முயற்சி செய்து கொண்டிருந்தாலும் அ து

Page 214
எத்தனே இதயம்.
நடை பெறவில்லை. விடுமுறை களை முரளியுடன் கழிப்பதே நளினிக்கு பெரும் வேதனையா கவே இருக்கும். நாளுக்கு நாள் வே ற் று மை உணர்ச்சிதான் பெருகி வந்தது. நளினியை அவனுல் புரிந்து கொள்ள முடி யவில்லை. அவளும் அவனை புரிந்து கொள்ளவில்லை.
டிசம்பர் மாதம் கல்யாண மாகி தனது தலைப் பிறந்த நாளை கொண்டாட ஆயத்தங் கள் செய்தா ள் ந O னி. இதைப்பற்றி மு ர விரி யிட ம் சொல்வி அவனிடம் கே க் கிற்கு ஒடர் கொ டு க் க ச் சொன்னுள். இதைக் கேட்ட வுடன் சீறி விழுந் தா ன்.
" "கேக்கும் * தேவையில்லை ய  ைர யு ம் அழைக்கவும் வேண் டாம் அமைதியாகக் கொண்டாடினுல் போதும்'
'முடியாது நீங்கள் ஒடர் கொடுக்கத்தான் வேண்டும் "
'கொடுக்காவிட்டால் '-
'நீங்கள் பிற ந் த நாள் கொண் டா டி யிருந் தால் தானே? பட்டிகாடுகளுக்கு என்ன விளங்கும்'- முரளி தன் கரங்களால் பதில் கூறி விட்டுப் போய்விட்டான்.
நளினியின் கண்கள் குழம் பாயின. தனது‘பாக்குகளைக் கிளறி பழைய அல்பங்களை தேடி எடுத்தாள். அவற்றைப் புரட்டிப் புரட்டிப் பார் த் தாள். தனக்கு அறிவு தெரி யாத நாளிலேயே, த ன து பெற்ருேர்கள் எவ்வாறு எல் லாம் கொண்டாடி மகிழ்ந் எண்ணி எண்ணி மனம் புளுங்கினுள். அவள் மனத்தில் குழப்பமும் மனஸ்தாபமும் வளர்த்து விட்
தார்கள் என்பதை
L-6uT. egy 60 Gal
பொறுக்க நிலைக்கு வந்: வாழ்க்கைத போலி! ஒரு திருமணம் ட போது எத்
கோட்டைக
ag6 Gaste லீவை முடி ரெயிலினுள்
செய்து கெ னிக்கு இந் தலை தூக்கி யும், அவனே தியாசத்தை
கொண்டிந்த
செய்வது இப கவே அவளு sÓégy. Q6öf வாழ்வதில் என்று தன்னை டுக் கொண்ட இதற்குப் ப. G3 Lum di 6. ஆனந்தனின்
பாடசாலே திரை லீவிற் அரு வ ரு த் ஸ்டேசனுக்கு அழைத்துப்ே தியிருந்தாள் ட்றெயினில்
கொண்டு ே சொன்னுள் கும்ஒக்கஸ்ட் பிற்கு மாற் போலிருக்கி டியாக கெ போய்விடல
இது நளி: வே இருந்தா
மாற்றம் கிை

6/ /r6ör 195
வளர்ந்து இனிப் முடியாது என்ற து விட்டன. இந்த rன் எ த் த னை ஆண்டிற்கு முன் புரிந்து கொண்ட தனை இ ன் பக் ள், அந்த நாளில் ண்டன. டிசம்பர் த்துக் கொண்டு מr 600T Lח u I ת 5ו ாண்டிருந்த நளி த எண்ணங்கள் நின்றன. தன்னை பும் பிரிக்கும் வித் சிந் தி த் து க் ாள். அதை சரி பலாத காரியமா க்குத் தே (ா ன் நாம் ஒன்ருய் என்ன அர்த்தம் ாத்தானே கேட் டாள் த வரி னி. தில் கூறுவதைப் ற்ப்பட்டதுதான்
நட்பு.
44ے
களெல்லாம் சித் த மூடப்பட்டன. த மனத்துடன் வந்து தன்னை பாகும்படி எழு நளினி. மெயில் வந்திறங்கிய நளி if die ஏ ற் றி க் பாகும் போ து முரளி. முடிவில் கொழும் றம் கிடைக்கும் 2து, நாம் ஒரேய 7 மும் பி ற்கு ப் r.ubʼ '—
*எனக்
រឿឆ្នាំ கசப்பாக
ළ
லும் உங்களுக்கு டத்து விட்டால்
எல்லாம் சுகமாகப் போய் விடும், நீங்க ளு ம் நானும் அங்குமிங்கும் வாழ் க்  ைக நடாத்த வேண்டியதில்லை" என்ருள்,-
"அப்படித்தான் நானும் னைக்கிறேன்".-- நி AD
வீட்டைபோய் அடைகிருர் கள். நாட்கள் கழிகின்றன, அன்று வெள்ளிக் கிழமைநளினி கோவிலுக்குப் போய் விட்டாள். அவள் போ ய் சிறிது நேரத்தின் பின் தபால் காரன் வந்து பெல்லே அடிக் கவே முரளி போய் லெட்டர் களை வாங்கிக் கொள்கிருண். அவனை மே மாதத்திலிருந்து கொழும்பிற்கு மாற்றிய கடி தத்துடன், நளினிக்கும் ஒரு கடிதம் இருக்கிறது. அதை உடைத்த முரளிக்குப் பெரும் ஏமாற்றம் காத்துக் கி ட ந் தது. அது ஆனந்தனின் கடி தம் தனது உ ண ச் rர் சி  ைய ஆருக பாயவிட்டிருந்த கடி தம், தன்னை விட்டு விலகிச் செல்கிருள் என்று நினைத்த முரளிக்கு இக்கடிதம் உண்மை யைப் புட்டுக் காட் டி டி து. உண்மையென் ருல் அப்பட்ட மான உண்மை ஆடை களை யப்பட்ட உண்மை. வெறுக் கத்தக்க பே டி த் த ன ம் நிறைந்த மிருகப் பிராயத்தன உண்மை. அந்தக் கடிதத்தை வாசித்த நொடிப் பொழுதில் அவளுக்கும் தனக்கும் இடை வெளி கடல் வெளி போல் நீண்டு எண்ணத்தின் பிடி ப் புக்கு அகப்படாத தொலை வில் த ரா னு ம் அவளுமாகப் பிரிந்து வேறுபட்டு நிற்கும் அவலம் தன் ஆண்மையைச் சுட்டுக் கொண்டிருப்பதை நினைத் து வெதும்பினுன் முரளி.

Page 215
196 எத்தனே இதயம்.
நம்பிக்கையின் ஒளி மூல மாக கருதப்பட வேண்டி ய பெண்மையை மேலொட்டா உணர்ச்சிப் பாறை காரண மாக எவ்வளவு தூரத்திற்கு பங்கப்படுத்திப் பார்க்க முடி யுமோ அவ்வளவு தூரத்திற் குச் சென்று பார்க்கத் துடிக் கும் கேவலமான ஒரு புருஷன் நிலைக்குத் தள்ளப்பட்டு விட் டதை எண்ணி மனம் வருந்தி ஞன். இறுதியாக இறந்த காலம்தான் போ கட் டு ம் வரும் காலமாவது நிம்மதி யாக இருக்கட்டும் என்ற முடி வோடு எழுதினன்.
ஆனந்தன் அவர்கட்கு
நீங்கள் நளினிக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. நான் அவளை மணம் செய்து ஒரு வருடம் கழிந்து விட்டது என் ரு லும் நாங்கள் ஒரு வ  ைர யொருவர் புரிந்து கொள்ள முடியவில்லை. வாழ்க்கை கசப் பான அனுபவமாகவே இருக் கின்றது. இதனுற் கூறுகிறேன் உங்களுக்கும் த ஸ்ரி னி க்கு ம் ஏதாவது தொடர்பிருத்தால். எழுதுங்கள். நான் சட்டப் படி விவாகரத்து செய்து நளி னியை படைக்க தயாராக இருக்கின் றேன். உங்களுடைய கடி தத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பதில் எனது வாழ்க்கையில் புதிய தி ரு ப் பத் தை ஏற்ப டுத்து மென்றே கருதுகிறேன்.
உ ங் க ளி ட ம் ஒப்
உங்கள்
இப்படிக்கு வே. முரளி
இந்தக் கடிதத்தை ஆனந்த னுக்குப் போஸ்ட் பண் ணி விட்டு, வத்து முன் விருந்தை யிலிருந்த சிறிது நேரத்திற் கெல்லாம் தட்டமும் கையு
மாக வந்து விட் தட்டத்தை மு நீட்டவே அவ6 எடுத்துப் பூசிக் தன்னுடைய ப வந்த கடிதத்ை கொடுத்துவிட் டுப் பையில் ஆ தம் சுகமாக என தட்டிப்
கொள்கிருன் 1.
"'எனக்கும் இரண்டாம் தி தொடங்குகிற வேலைக்கு மு (ό L, η θ, எனவே நாங்க போயாவிற்கு போய்விடலாப நளினி - சொ வெறுட் புக்களை காட்டி யாருை பும் புண்ணுக்க முரளி, த ன க்
அ வ ம | ன அவன் மென்று டாலும் அதனை உள்ளத்தோடு தது. மு ர வி ஆனந்தனின் ை சேர்ந்தது. உடைத்த ஆன யும் ந ட க்கு நினைத்துப் பா வஞனுன் . இ ளின் இதயங் தனை விதமான டியில் ந |ா ற் போட்டு அமர் வெட்ட வெளி முக த் து டன்
மனதை வாள அந்தத் து ன் 1 விட்டுப் போக உ த டு க ள் தீயாய் மின்னு
ளில் ஒளி ஒரு கு

6/ /r 6öir
டாள் நளினி. ரளியின் முன் ன் திருநீற்றை கொள்கிருன். ாற்றம் பற்றி த அவளிடம் டு தனது சேட் னந்தனின் கடி இருக்கிறதா பார் த் து க்
மே மாதம் கதி ஸ் கூ ல் து. நீங்களும் தலாம் திகதி வே ண் டு ம். ள் அ டு த் த கொழும்பிற்கு b' στ είτ (τη είτ ந்த விருப்பு,  ெவ ஸ்ரி க் டய மனத்தை விரும்பவில்லை கு ஏற்பட்ட உணர்ச்சியை விழுங்கிவிட் ஜி ர னி க் க உடல் வெறுத் யி ன் கடிதம் கக்கு போய்ச் க டி. த த்  ைத ந்தன் இப்படி மா வென்று ர்க்க முடியாத ந்தப் பெண்க கள்தான் எத் வை, 1 ஜன்னல கா லி  ைய ப் ந்து கொண்டு ைைய துயர பார்க்கிருன். ாக அறுக்கும் ப ம் நெஞ்சை வில்லை. அவன் துடிக்கின்றன. பகிறது கண்க தடும்ப வாழ்க்
கையில் ஒரு வில்லஞகப் போய் சேர்ந்து விட்டேனே என்ற அருவருப்போடு மனம் புழுங் கினன் ஆனநதன். கட்டிய கணவணை மறந்து தன்னேடு எவ்வளவு துணிவாக இவள் 2- (D6/ ருள், என்றது அவன் மனம் . தளினியோடு தனது உறவைத் துண்டிக்காவிட்டால், நிச் ச யம் ஒரு கு டு ம் பத்  ைத ச் சிதைத்த பழி க் கு ஆளாக வேண்டும் என்ற அமைதிய டைந்த ம ன ந் தி லி ரு ந் து எ முந் த உறுதியான முடி வோடு மு ர னி க் கு தனது ப தி லை அனுப்பியிருந்தான். “ரெயிலில் சத்தித்து கதைத்த பின் தான் ந ஸ்ரீ னி மீது கொண்ட விருப்பத்தால் அவ ளுக்கு எப்போதும் கடிதம் எழுதித் தொல்லை கொடுக் கத் து1ண்டியது. நளினி ஒரு கு டு ம் பப் பெண் என்று தெரிந்து இருந்தால் நளினி மீது இந்த எண்ணமே எழுந் திருக்காது. நானே கடிதம் எழுதி தொல்லை கொ டு த் தேனே தவிர நளினி என்னு டன் எந்தவித தொடர்பும் கெ (ா ஸ் ள வி ல் லே வாழ்க்கையில்
கொண்டாடியிருக்கி
உங்கள் குறுக்கிட்ட திற்கு எனது மனச் சாட்சி யின் பெயரால் "மன் னி ப் பு கோருகிறேன்". என்று அழுத் தந் தி ரு த் த மா க தனது முடிவை முரளிக்கு அறிவித் திருந்தான். சமுதாய சம்பிர தாயத்தின் படி அவள் களுத் திலே தாலியை ஏற்றிச் சபை யோர் மத்தியில் சத்தியத்தின் பெயரால் ஏற்றுக் கொண்ட நளினியை சமுதாயக் கட்டுக் கோப்புக்களை உ  ைட த் து விவாகரத்து என்ற முடிவுக்கு வர முரளியின் உள்மனம் ஒரு போதும் இடம் கொடாது

Page 216
எத்தனே இதயம்.
என்றபடியால் ஆனந்தனின் பதிலை ஏற்றுக் கொள் ள வேண்டிய நிலை யி ல் இருந் தான், முரளி
5
க ஸ் ட் க  ைட சி யி ல் கொழும்பிற்கு வந்து வெள்ள வத்தையில் வீடெடுத்து புதிய குடித்தனத்தை ஆரம் பி த் திருந்தார்கள்.
நாட்கள் நகர்ந்தன:-
நளினிக்கோ ஆனந்தனின் நினைவு அ வளி ன் மனதை
வாட்டியது. எழுதினுள். தால்தானே! ஞே டு அவள் வி ரு ந் த கோட்டை லேயே உடை யது. வே ல  ெம ன் று ஆ
ளவு பணத்ை வது தங்கள் ட டரை செய்து L.J. nr rf 5 6ir .
கன வு கள் விட்டன.
புரியாத புதிர்
LOT&ல மணி நாலரையி ருக்கும். தினமும் அந்த நேரத் தில் சன நடமாட்டம் மிகுந்து காணப்படும். கண் வைத்திய சாலேயை அடுத்திருந்த அந்த நாற்சத்தியில் வழக்கத்தை விட அதிகமாக எங்கு நோக் கினும் சனத்திரள் காணப் பட்டது. பாடசாலை விட்டு வீடு திரும்பும் மாணவ மாண வியரும் அலு வ ல கத் தி ல் வேலை முடிந்து வரும் ஆண் களும் பெண்களும் வைத்திய சாலை ஊழியர்களும், தாதி மார்களும், நோயாளிகளும் இன்னும் இப்படிப் பல வகை யைச் சேர்ந்தவர்களும் சாரி g T if unru, பஸ்நிலையங்களை நோக்கிப் போய்க்கொண்டி
ருத்தார்கள்.
சில்லறைக் கை ருந்தவர்களும் மாய் விற்பனை மூட்டை கட்டி தார்கள். எ6 லும் செய்கை, டமும் அவச பலித்தது. இ ரத்திற்கெல்ல. லாமலில்லே. தில் திரள் திர மாலை ஒளில செய்து கொன மேகங்களே இ டத்திற்குக் கா மழை பெய்வ குறிகள் எங்கு டன. சில்லெ

கடிதங்கள் பல பதில் கிடைத் பாவம் ஆனந்த
கட்டியெழுப்ப வ T ழ் க்  ைக க் அ வ ள் மனதி ந்து நொருங்கி ா யு த ம் சீதன சைப்பட்டார். பற்ருே ர் எவ்வ தக் கொடுத்தா விள்ளைக்கு டாக் வைக்க ஆசைப் இவர்களுடைய
நனவாகித்தான்
வரன் 197
ஆணுல் . முரளியும் நளினி யும் ந டா த் த முற்பட்ட வாழ்க்கையோ-கல்லு ருேட் டில் மாட்டுவண்டில் போனது போல கரடு மு ர ட |ா க ப் போய்க் கொண்டிருக்கிறது.
வாழ்க்கையை எத்தனே இத யங்கள், எத்தனை கோணங்க ளி லிருந்து பார்க்கின்றன. பார்வைகள் வித்தியாசப் பட் டாலும் காலந்தான் எல்லோ ரையும் சேர்த்து அணைத்து கொண்டு போகிறது.
சிறிமாலினி பரராசசிங்கம்
வழி வழியே டகள் வைத்தி
அவசர அவசர ப் பொருட்களை க் கொண்டிருந் பரது முகத்தி களிலும் பதட் ாமுமே பிரதி வர்கள் அவச ாம் காரணமில் மேலே வானத் ளாய்ச் சூழ்ந்து Ꭰ ElᏗ மழுங்கச் னடிருந்த கார் வர்கள் பதட் ரணம். அடை தற்கான அறி
07
ன்ற குளிர்ந்த
காற்று வேகமாய் வீசி இலை களேயும் - குழை களையும் வீதி யெங்கும் இறைத்துக் கொண் டிருந்தது. இடை இடையே வானம் குமுறுவதுபோல் இடி முழக்கம் கேட்டவண்ணமிருந்
35 ghl.
இந்த வேளையில் விபத்துச் சேவை வா யி லி னுா டா க வீதியை அடைந்தான் ஆனத் தன். ஒரு கையில் குறிப்புப் புத் த க ங் களு ம் , மற்றக் கையில் 'ஸ்டெதஸ்கோப்பு மாய் வைத்தியக் கல்லூரி முடிந்து வீடுதிரும்பிக் கொண் டிருத்த அவ ன் ம ன தி ல் மழைக்குமுன் வீடடைந்து விட வேண்டுமென்ற எண்

Page 217
198 புரியாத புதிர்
ணமே மேலோங்கி நின்றது. அவன் மனநிலையைப் புரிந்து கொண்டவையாய் அவன் கால்கள் அலெக்சான்ரு வீதி யிலிருந்த பஸ் நிலையத்தை நோக்கி விரைந்து கொண்டி ருந்தன.
பஸ் நிலையத்தை அடைத்த துமே அங்கே நீண்டு, வளைத்து நெளிந்து நின்ற கியூ' வரிசை சியக் கண்டதும் ஆனந்தன் மனம் சோர்ந்து போயிற்று. தன் தலைவிதியை நொந்தபடி வரி  ைச யி ல் கடைசியாகப் போய் நின்ருன் அவன். ஒரு நிமிடமாயிற்று, இரண்டு நிமி டமாயிற்று. கொ ஞ் சங் கொஞ்சமாய் இருள் கவிந்து கொண்டிருந்தது. சுழன்று வீசிய குளிர்காற்று புயலுரு வெடுத்துக் கொண்டிருந்தது. ஆனந்தன் பின்ஞல் கியூ வரி சையும் நீண்டு கொண்டேயி ருந்தது. ஆனல் பஸ் வண்டி வரும் அறிகுறியை மட்டுங் காணுேம். வந்த ஒரு சிலவும் வேறு திசை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. எப்போது தான் வீடுபோய்ச் சேரு வேனே தெரியாது என உள் ளூர அங்கலாய்த்துக் கொண் டான் ஆனந்தன். அப்போது
அவன் காதில் 'ஐயா சாமி, இந்தப் பார்வை குறைந்த ஏழை யைக் கண்கொண்டு
பாருங்கையா?* என்ற குரல் திரும்பிப் பார்க்க ைேவத்தது. அவன் எண்ட காட்சி அவன் மனதை உருக்கிற்று. அங்கே எளிமையின் உருவாய் நின்றி ருந்தார்கள் ஒரு பெண்ணும், அவள் பத்து வயது மதிக்கத் தக்க மகளும். அந்த மகளுக்கு இரு கண்களும் குருடாயிருந் தது. பெண்ணுக்கோ ஒரு கண் குருடு, மற்றக் கண் ஒளி மங் கிக் காணப்பட்டது. ஒரு
வேளை அந்தக் சிறிது -- கொண்டிருந்த னவோ! கிழி வாராமல் கை ஒட்டி உலர்ந்
uro nro aŭ Liŭ Lu rrrio 4
f
மாய்க் இருவரும். கு: யையும் பொரு பசிப்பிணியை காகக் கையே வுருவங்களைக் ஆனந்தன் ை யில் அவன் ே பையைத் s இதைக் கண்ட யோ டு நின்றி
பெண். ஆன
is a
காசை எடுத் உள்ளென்ற வந்து நின்றது செ ல் லு ம் யொன்று.
மழையின் க னவோ, கியூ கலைத்துக் கொ ருந்த மேற்பா சொல்லையும் தாது முண் கொண்டு ஏ னர் அங்கு நின் படியாவது பல வேண்டுமென் பிச்சையிடுவத லிருந்த கான பார்த்த ஆனந் கென்றிருந்தது ருந்ததெல்லா சதங்களே. அே நிற டைவதற்கு போதுமாயிரு இதில் ஐத்து சையிட்டால் மைல் தொ. வேண்டியிருக்கு சதத்தையிட்டு

fa? Lo ir 667 Gorf?
கண்ணில் ஒரு 6OSi ஒட்டிக் தோ ay sür ந்த உடையும், லந்த தலையும், த கன்னங்களு க்கவே பரிதாப னப்பட்டார்கள் ரிரையும் மழை நட்படுத்தாமல் ப்போ க்குவதற் த்தி நின்ற அவ் க ண் ட து ம் க இயந்திர கதி மல் சட்டைப் து ள |ா வி யது. தும் நம்பிக்கை ருந்தாள் அப் த்தன் கையில் த அதேவேளை, பெருமூச்சுடன் தெஹிவளை L 6ήυ ου δήπιφ
ாரணமோ என் வரிசையைக் rண்டு அங்கி ார்வையாளரின் பொருட்படுத் ாடி அடித்துக் நித்தலைப்பட்ட f' sD au tř 36 sffr. GT u ஸ்ளில் ஏறிவிட ற அவசரத்தில் ந்காகக் கையி சை எண்ணிப் த்தனுக்குத் திக் . அவனிடமி பதினைத்து வன் வீடு சென்
ம ட் டு மே ந்தது இப்பணம் சதத்தைப் பிச் அவன் கால்
லைவு நடக்க 5ம் ஐ ந் து விட்டு கால்
மைல் தூரம் பொழியப் போகும் மழையில் நனைந்து வீடு செல்வதா, அல்லது இந்த ஏழையின் நம்பிக்கை யைப் பாழடித்துவிட்டு நிம் மதியாக வீடு செல்வதா என அவன் மனப்போராட்டம் நடத்தி முடிப்பதற்கிடையில் பஸ் புறப்படுவதற்கான மணி அடிக்கும் சப்தம் கேட்டது. அதே நேரம் மழையும் பெய்ய ஆரம்பித்தது.
ஒடிச்சென்று நகர ஆரம் பித்துவிட்ட பஸ் வண்டியில் ஏறிவிடுவோமென நினைத்து அவன் அதைச் செயல்படுத்தி முடிக்கையில் 'சாமி, கஷ்டப் படும் இந்த ஏழைங்களுக்குக் காசு தராமல் போறியே’’ என்னும் அப்பெண் ணின் குரல் அவன் மனச்சாட்சியைச் சுண் டியிழுத்தது. அவனையறியா மலே அவன் கால்கள் நகரா மல் நிற்க அவன் வலது கை ஐந்து சதத்தை அப் பிச்சைக் காரியின் நீட்டிய கையிலிட் டது. இரண்டு சதத்தையே தானமிடுபவர்கள் அரிதாகி விட்ட இந் த க் கா ல த் தி ல் ஐந்து சதத்தைக் கண்ட ஏழை யின் மனம் குளிர்ந்துவிட்டது போலும். ஆண் ட வன் உன்னை என்றைக்கும் காப் பாற்றுவான் சாமி" என்று மனமார வாழ்த்திவிட்டு சிறு மியையும் கூட்டிக்கொண்டு அப்பால் நடந்தாள் அத்தப் பெண் . அதற் கி  ைட யி ல் எங்கோ போய்விட்டது பஸ் வண்டி ,
ஆமாம் கடவுள் தான் இ தோ காப்பாற்றுகிருர் என்று மனதிற்குள் வைது கொண்டு பெலக்க ஆரம் பித்துவிட்ட மழையினின்றும் தப்புவதற்காகக் சுற்று முற்

Page 218
t/5?/iř 5يfi u//T//
றும் தங்குவதற்கு இடம்தேடி னன் அவன். பஸ்நிலையத்தில் இடமேயில்லே. அருகிலிருந்த பெட்டிக்கடையடியில் ஒதுங் கினன் அவன். தூறலாகத் தொடங்கிய மழை 'சோ' வென்று பெரிதாகப் பொழிய ஆரம்பித்தது. தன் குறிப்புப் புத்தகங்கள் நனைந்து விடாத படிக்கு அவற்றைத் தன்மேல் சட்டையோடு அணைத்தபடி, மேலே பலகையிலிருந்த துவா ரத்தின் வழியாய்த் தலையில் விழுந்த தண்ணிரைத் தட்டி விட்டபடி நின்ருன் அவன். ஏற்கனவே அ சுத் த மா ன த  ைர  ைய ச் சேருக்கியபடி வெள்ளமாய் உருண்டோடிச் சென்றது மழைநீர் . சேற்று நீர் தெறித்து அவன் கால்சட் டையையும் அழுக்காக்கிற்று. இன்னும் இரண்டே மாதத் தில் ஆரம்பமாகப்போகும் மூன்ருவது வைத்தியப் பரீட் சைக்குப் படிக்கவேண்டியது எவ்வளவோ இருக்க இப்படி நேரத்தை வீணுக்கிக் கொண்
என்ற ணம் வேறு அவன் மனதை அரித்துக் கொண்டிருந்தது. பஸ் வண்டி வர வே ண் டி ய திசையைத் திரும்பிப்பார்த்த அவன் கண்களுக்கு தூரத்தே அந்த இரு ஏழைகளும் தங்கு வதற்கு இடமின்றிச் சொட் டச் சொட்ட ம  ைழ யி ல் நனைந்தபடி செல்வது தெரிந் தது. "எனக்காவது மழையில் நனைந்தாலும் தங்குவதற் கென்று ஒரு வீடு இருக்கி றதே. இவர்கள் என்ன செய் வார்கள்? எங்கேதான் தங்கு வார்கள்? கடவுள் ஏன் தான் இவர்களே இப்படிப் படைத் தார்? இவ்வாறெல்லாம் தனித்திருந்த அவன் மனதில் பல்வேழு ன எ ன் ண ங் க ள் தோன்றின. ஆனந்தன் நாஸ்
Gr GT
டிருக்கிறேனே
தி கனல்லன். துவக் கல்லு பயில ஆரம்பி மாணவர்கள் போக்குவத தர்க்கங்களை கேட்டு, அலி தேகப்பட தது. கடவுள் உண்மையிலே ருரா? அப்பப செய்யப்போ வண்டியையும் நான் மழை தைப் பார் ருக்கிருரா? தெல்லாம் சு வேலேயற்றவ GB L u mr alis as கொண்ட கற் யெல்லாம் அ சிந்தனைகள் கி தன. ஏற்க உடற் கட்டுை தேகம் குளிர் மழையோ ( இல்லை. இை னல் வேறு ப வொரு நிமிவ யுகமாய்த் ே படி எவ்வள6 ருந்தானே ( ரென்று எங் பம்பலப்பிட்! வண்டியொன் நின்றது. ம6 தும் அந்த ப6 தக்க வகையி மிருந்தது. ஒ1 Li Gurr a gu AD ளுடன் தாஜ் இடிபட்டு நெ யாய் உள்ளே யன்னலோர ஆசனத்திலே Q) *fTଶist L-ft ଜst
ஏற்றக்கூடி களே ஏற்றிய

சிறி மாலினி 199
ஆணுலும் மருத் ரியில் சேர்ந்து த்த பிறகு, மற்ற நேரத்தைப் ) காக இடும் வீண் G 5 t () ă ான் மனமும் சந் ஆரம்பித்திருந் என்று ஒருவர் யே இருக்கி டயானல் தருமஞ் ய் இப்படி பஸ் ) தப்பவிட்டு pயிலும் நனைவ த்துக் கொண்டி கடவுளென்ப த்தப் பிதற்றல், ன் காலத்தைப் ஏ ற் ப டு த் தி க் >பனை! இப்படி /வன் மனத்தில் சிறகடித்துப் பறந் னவே மெலித்த -- til அ வ ன் 1ல் சிலிர்த்தது. த  ைற வ த ரா க டயிடையே மின் ளிச்சிட்டது, ஒவ் மும் ஒவ்வொரு தரிந்தது. இப் பு நேரம் நின்றி தெரியாது. திடீ கிருந்தோ ஒரு டி செல்லும் பஸ் று அங்கு வந்து ழைநேரமாயிருந் ஸ்ஸில் வியக்கத் ல் நிறைய இட டிச்சென்று, கும் ாத்தனித்தவர்க றும் ஒரு வணுய் ரிபட்டு ஒருபடி ரறிஞன் அவன். ாய்க் கிடைத்த போய் அமர்ந்து
அளவு ஆட் பின் "கிறீச்'
என்ற சப்தத்துடன் புறப்பட் L-gil 66 krig. . அப்பாடா என்று பெருமூச்செறிந்தான் ஆனந்தன், அவன் நிலையை அறிந்ததுபோல் ஒர ளவு வேகமாய்ச் சென்று கொண்டிருந்தது வ ண் டி. ஆணுல்என்ன துரதிர்ஷ்டமோ, நூதன சாலையடியில் திரும் பிச் சிறிது தூரம் சென்றதும் அதன் வேகம் திடீரென்று குறைந்தது. காரணம் வீதி நெடுகிலும் அதே கவாகனங் கள் ஊர்ந்து சென்றவாறிருந் தன. "இதென்ன ரிச்சல்' என்று மனதிற்குள் சபித்துக் கொண்டான் ஆனந் தன். அந்த முந்திய வண்டியில் சென்றிருந்தால் இப்போ தைக்கெல்லாம் வீடு போய்ச் சேர்ந்து சுடச்சுடக் காப்பி யருத்தி விட்டுப் படிக்கவும் ஆரம்பித்திருக்கலாம். அந்தப் பிச்சைக்காரிக்கு இரக்கப் பட்டு நானே பரிதாபத்திற் குரிய நிலையிலிருக்கிறேனே" என்று மனதிற்குள் அங்க லாய்த்துக் கொண்டான். ஆமைவேகத்தில் சென் று கொண்டிருந்த வண்டி ஒரு வழியாகப் பல்கலைக் கழகத் தைக் கடந்து ஊர்ந்து சென் றது. அப்போது வண்டியிலி ருந்த இருவர் ஆங்கிலத்தில் உரையாடுவது அவன் காதில் விழுந்தது. ‘என்ன இவ்வளவு
வயிற்றெ
தாமதம்? அதுவும் இந்த மழை வே&ளயில்?" இது கேள்வி. 'ஏதும் விபத்தோ என்னவோ தெரியவில்ஃவ" இது பதில் .
ப ஸ் ஸி ன் வேகத்தைப் போலவே மழையும் இப்
போது வெகுவாகக் குறைந்து விட்டிருந்தது. தேஸ்டன் வீதி யைக் கடந்து "ரீட்" வழியில் திரும்பியதும் ஏ ற் கன வே

Page 219
200 l/áfuvará5 l/áPi
ஊர்ந்துகொண்டிருந்த வண்டி ஒரேயடியாக நின்றுவிட்டது. கண்ணுடிச் சட்டங்களெல் லாம் மூடியிருந்தபடியால் உள்ளே ஒரே புழுக்கமாயிருந் 5. புழுக்கம் தாங்க முடி யாமலும, பாதை தடை பட்ட காரணத்தை அறிவ தற்கும் பலர் வண்டியை விட் டிறங்கிச் சிறு துறலையும் பொருட்படுத்தாது நடந்து சென்றனர். அவர்களில் ஒரு வன ய் ஆனந்தனும் வெளி யேறினன். நிறுத்தி நின்ற ஏனைய வாகனங்களைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் தூரத்தே சனங்கள் கூட்ட மாய்க் கூடி நிற்பதும். அவர் கள் தலைக்கு மேல் சிவப்பாய் ஒரு இரட்டைத்தட்டு வண்டி யின் மேல்ப்பாகமும், அதன் பின்னல் ஒரு லொறியும் அவன் கண்களுக்குப் புல பட் டன. இதைக் கண் ட தும் ஆனந் தன் மனதில் விவரிக்க முடியாத ஒரு உணர்வு ஊடு ருவிப் பாய்ந்தது. குழுமி நின்ற சனங்களுக்கிடையில் ஒரு வாறு இடம் செய்து கொண்டு முன் வரிசையை அடைந்தான் ஆனந்தன். அங்கே அவன் கண்ட காட்சி அவன் இரத்தத்தையே உறை யச் செய்து விட்டது. எந்த வண்டியில் ஏறியிருந்தால் இந் நேரமெல்லாம் வீடுபோய்ச் சேர்ந்திருக்கலாம் என அவன் நினைத்தானே, எந்த வண்டி யில் ஏறமுடியவில்லை என்று கடவுளே இல்லை என்ற முடி விற்கு வந்தானே, அதே வண்டி பின்பக்கம் சிதைபட் டுச் சரிந்து கிடந்தது சத்தேக மில்லை. அதே வண்டிதான்! தெஹிவளை என்ற பெயர்ப் பலகையைத் தாங்கி, ஒரு பக் கம் காரை பெயர்ந்திருந்த அதே வண்டி அதன் பின்னல் நின்றிருந்த லொறியின் முன் பக்கம் நொறுங்கி நெளிந்து
கிடந்தது. சிதறி ணுடித் தூள்களு கிடந்த இரத்த மனதைக் கசக்கி லொறியிலிருந்த வெளியே விழுந்: அவற்றில் சில ட ளையாய் ஏதோ ( திக் கிடந்தது. வர்களின் 'ச ந் த காணுேம் . வைத் ஏற்கனவே எடுத் பட்டுவிட்டனர்
அக்கம் பக்கத் களை விசாரித்த லொறி உணவுப் யைச் சேர்ந்த அதிக கனத் துட வந்து கொண்டி வீதி நடுவில் பச் திடீரென்று சிவ யதும், சடுதியா முடியாமல் முன் தைக் குறைத் தி கொண்டிருந்த யுடன் மோதிவி அறிந்து கொண் வண்டியின் அ நின்று கொண் பலத்த காயத்தி, ரெனவும், தெய பஸ் சாரதியும் கி ரும் தப்பிவிட் ஆனல் பாவம் ே தியும். முன்ன வரும் பலத்த க வைத்தியசாலைச் செல்லப்பட்ட 6 மேலும் அறிந்து கேட்கக் கேட்க உடலெல்லாம் அவன் இந்த வள் றிருந்தால் நிச் போல் பின் தள படியே பிரயா6 ருப்பான். விபத் கையிழந்து, கா துச் சேவைக்கு வரப்படும் மனித
ணுல் பலமுறை அவன். அவர்கள்

சிறிமாலினி
க்கிடந்த கண் நம், சிந்திக் மும் அவன் ப் பிழிந்தன. மூட்டைகள் து கிடந்தன. பிரிந்து வெள் வெளியில் சிந் élő fT ll || LJ LJ - Lடி  ைய யே தியசாலைக்கு ந்துச் செல்லப்
போலும். *திலிருந்தவர் தில், அத்த பண்டகசாலை து என்றும் , ன் வேகமாய் ருந்த வண்டி சை விளக்குத் |ப்பாக மாறி க நிற்பாட்ட “னல் வேகத் 5 படி சென்று பஸ் வண்டி பிட்டதாகவும் டான் . பஸ் டித்தளத்தில் டிருந்தவர்கள் ற்குட்பட்டன ப்வாதீனமாக பேட்டு விற்பவ டனரென்றும் லாறிச் சார லிருந்த இரு ாயங்களுடன குக் கொண்டு ன ரென்றும் strøhr L–støkr. அவனுக்கு புல்லரித்தது. ாடியில் சென் யம் வழமை த்தில் நின்ற னஞ் செய்தி துக்குள்ளாகி பிழந்து, விபத் கொண்டு risaTé; si sfor கண்டவன் படும் அவஸ்
தையையும், அவர்களின் அல றல்களையும் கண்டும் கேட்டும் பரிதாபப்பட்டிருக்கிருன்.அவ னுக்கு அதே கதி நேர்ந்திருத் தால்...... அவனுக்கு மேற் கொண்டு சிந்திக்கவே முடிய வில்லை. ' "ஆண்டவன் உன்னை என் னை க் கும் காப்பாற்று வான் சாமி' என்ற ஏழை யின் குரல் மட்டும் அவன் காதில் திரும்பவும் திரும்ப வும் எதிரொலித்துக் கொண் டிருந்தது.
பதினைத்து நிமிடங்களுக்குப் பின் பம்பலப்பிட்டியில் காலி வீதி ஒரமாக நடைபோட்டுக் கொண்டிருந்தான் ஆனந்தன். விட்டுவிட்டுத் தூறிய மழை யும் , ஆங்காரமாய் வீசிய குளிர் காற்றும் அவனை எது வுமே செய்யவில்லை. முகத்தில் மாத்திரம் ஆழ்ந்த சிந்தனை ரேகைகள் படர்ந்திருந்தன. அரைமணிக்கு மு ன் வீ டு சென் ற  ைட ய த் SJ 4. துடித்த அவன் இப்போது கதிரேசன் கோயில் வாசலை நோக்கி நடந்து கொண்டிருந் தான். அவன் வாசலைச் சென் றடையவும் ஆலயமணியின் கம்பீரமான நாதம் டிங்டங், என ஒலிக்கவும் சரியாயிருந் தது. அந்த மணியோசை யானது எங்கும் பரந்து கலந்து சுற்ருடலையே புனிதமாக்கிக் கொண்டிருந்தது. ஆலயவாயி லில் யாரோ ஒரு அன்பர் பக் திப் பரவசத்தால் உள்ள முருக ' ெத ன் ஞ டு  ைட ய சிவனே போற்றி' என்று போற்றினர். தன்னையறியா மலே ஆனந்தன் உணர்ச்சி வசப்பட்டவணுய் என் நாட்ட வர்க்கும் இறைவா போற்றி என்று மெய்மறந்து கூறிஞன் அவன் முகத்தில் புரியாத தைப் புரிந்து கொண்ட தெளிவு காணப்பட்டது. உண் மையாகவே ஒருவேளை அவன் மனதை அரித்த கேள்விக்கு அவன் விடைகண்டு விட் டாணுே என்னவோ! அது அவனுக்கே தெரியும்!

Page 220
விதி சிரித்தது
இருளும் நிசப்தமும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருந்தன. நிசப் தத்திற்குத் தோல்வியளித்துவிடத் துடியா கத் துடித்தது, மலையடிவாரத்தில் சிறிதாக சலசலத்துக் கொண்டிருந்த அரு வியின் ஒசை. அடித்துப்போட்டுவிட்ட அரவத் தைப்போல் வளைந்து, அரவமின்றி வெறிச் சோடிக்கிடந்த, அந்த மலைப்பாதையின் தென்புறத்தே இருளுக்கும், நிசப்தத்திற் கும் நேர் எதிரான ஒளியும்.ஒலியும் கூடார மடித்துக் கூத்தடித்துக் கொண்டிருந்தன. அது ஒரு நாடகக் கொட்டகை, அதை நோக்கித்தான் இருளின் நடுவே நடை போட்டுக் கொண்டிருந்தான் காளியப்பன்.
இராமாயணத்தின் ஒரு பகுதியான * சீதையின் சிறைவாசம் அங்கு மேடையே றிக் கொண்டிருந்தது. அதைப் பார்க்கத் தான் காளியப்பன் சென்று கொண்டிருந் தான். கொட்டகையிற் கேட்ட தாளவோ சையும், மேளவோசையும் அவன் காது வழியாகப் புகுந்து கால்களுக்கு உற்சாகத் தையூட்டினலும், மனத்தின் ஒரு மூலையில் அழுத்திக்கொண்டிருந்த வேதனைச் சூல்கள் அதனை மட்டம் தட்டி விட்டன, எப் படியோ. நாடகம் தொடங்கி அதிக நேரத்தின் பின்பே அவ்விடத்தை அடைந் தான் அவன் .
மேடையில். அரக்கியர் மத் தி யில் அன்னமென வீற்றிருக்கின்றள் சீதை. இரா வணன் வருகிருன் . ஆசைகளையெல்லாம் வார்த்தையில் கொட்டுகிருன். அவற்றைக் கேட்டு துடிக்கின்ருள், அந்தத் தூயவள். துள்ளியெழுகின்ற ஸ் - க ற்  ைப மதிக்க மறந்த காமுகனை தூசென் கின்றள், ஒரு துரும்பென்கிருள். கற்பின் கனல் நிறைந்த அப்பெண்ணைத் தீண்டமுடியாமல் திரும்பி விடுகிருன் இராவணன்,

வெற்றிமேரி கரை ?
சீதைக்கு வேடமிட்ட கந்தன் மேடை யில் சோகத்தையும், கோபத்தையும் கொட்டிக் கொண்டிருந்தான்.
காளியப்பனை அந்தச் காட்சி தாக்கி யது. இருக்க முடியவில்லை. மனச்சாட்சி அவனைக் குடைந்து கொண்டிருந்தது. இத யத்தை அழுத்தும் சுமையோடு எழுந்து விடுகின் ருன், அந்த இடத்தை விட்டு, காட் சியும் முடிவடைகிறது. அடுத்த காட்சிக்கு அனுமன் வந்து விடுகின்றன்.
காளியப்பன் மனதில் நின்று பார்ப் போம் , என்ற ஓர் உந்தல். மனதைச் சமா தானப்படுத்திக் கொண்டு, முன்பு இருந்த இடத்திற்கு வருகின்றன்.
மேடையில் சீதையின் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன் அனுமன். அவள் செய்யும் கற்புத் தவத்தை விதந்து பாடுகி ருன் , **தருமம்தான் காத்ததோ. அவள் தந்தையின் கருமம்தான் காத்ததோ. p
மீண்டும் சாட்டையால் அடிபட்டது போன்ற உணர்வு அந்த இடத்தில் இருக் கத் தகுதியற்றவனக காளியப்பன் எழுந்து விடுகின்றன். அவன் மனம் கல்லாகக் கனக்க, கால்கள் இயந்திரமாக நடக்கின்
றன.
"தந்தையின் கருமம்தான் காத் ததோ’. *"தந்தையின் கருமம்தான் காத்ததோ.. *’ மீண்டும் மீண்டும் அந்தப் பாடலின் அடி அவனை அடித்துக்கொண்டி டிருக்கின்றது. அவனது மனம் எனும் குளத்தில் வேதனையெனும் கல் விழுந்து நினை வெனும் அலைகளைக் கிளப்பி, மனத் திரையெனும் கரையில் முட்டி மோதி வேடிக்கை செய்தன.
காளியப்பன் ஒரு தோட்டத் தொழி
லாளி. காற்றுப்புக வழியற்ற இருண்ட லயன்தான் அவன் இருப்பிடம், அவனது

Page 221
விதி சிரித்தது
குடும்பம் என்ற கூட்டில் ஆறு குஞ்சுகளைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, கூட்டை விட் டுப் பறந்துவிட்டாள் மனைவி மங்கம்மாள். அவள் இறந்து வருடங்கள் நான்காகின் றன. மூத்தவளான பொன்னிக்கு இப் போது வயதுபதினைந்து, இயற்கை அவளுக்கு ஏழை என்று வஞ்சகம் செய்துவிடவில்லை. பருவ அழகைக் கொட்டிக் கொடுத்திருந் தது. அந்த 'மார்கரேற்’ தோட்டத்தில் வேலைசெய்யும் பெண்களுக்குள் அவள்தான் அழகு ராணி என்று கூறலாம்.
காலையில்எல்லாப் பெண்களையும் போல தேயிலைக் கூடையை எடுத்துக் கொண்டு கொழுந்து பறிக்கச் சென்று விடுவாள், பொன்னி. தந்தையின் வருமானத்துடன் அவள் ஊதியமும் ஓரளவு வயிற்றைக் கழு வக் கூடியதாக இருந்தது அந்தக் குடும்பத் திற்கு அன்றும் வழக்கம் போல் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தாள் பொன்னி.
"ஏம்புள்ள பொன்னி ஓங்க அப்பாரு எங்க? ரண்டு மூணு நாளாக் காணமே இது பக்கத்தில் நி ன் ற கருப்பாயியின் கேள்வி.
"அவருக்கு சொகமில்லே ஆத்து ல படுத்துக்கிட்டிருக்காரு' பதிலிறுத்தாள் அவள்.
இவர்களது பேச்சைத் தடுத்து நிறுத் தியது, கறுப்புக்கோட் அணிந்த கங்காணி யின் மிரட்டல், 'இண்ணைக்கு இருப்பத் தைஞ்சு ருத்தலுக்கு குறைய கணக்குக் குடுத்தீங்க நாளைக்குத் துண்டை வெட்டிப் புடுவேன் ஆமா." தன் உத்தியோக மிடுக் கைக் காட்டினுன் அவன்.
இவர்களின் பேச்சைக் கேட்க விரும் பாமலோ என்னவோ. கதிரவன் உச்சி வானை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.
'அடி கருப்பாயி சின்னத்துரை வா ராரு' இது செல்லாயியின் கூப்பாடு, இது மந்திர வார்த்தையா என்ன! வேகமாக இயங்கின அந்தப் பெண்களின் கரங்கள்.
கொழுந்து பறிப்போரையும் கொழுந் துகளையும் நோட்டமிட்டபடி கங்காணி

வெற்றி மேரி தசைப்பிள் &n
அருகே வர, ராஜநடை போட்டுக் கொண் டிருந்தான் சின்னத்துரைப் பதவி வகிக்கும் செல்வராஜ், ஒவ்வொருவராக நோட்ட மிட்ட செல்வராஜின் பார்வை மலையின் ஒரு பக்கத்தில் நிலைத்து விட்டது.
அங்கே. உழைப்பால் உயர்ந்து விடத் துடிக்கும் கரங்களால், உயர்வதற்கு அனுமதியின்றி, கத்தரிக்கப்பட்ட தேயி லைச் செடிகளின் தளிர்களுடன் உறவாடிக் கொண்டிருந்தாள் பொன்னி.
இரண்டு கண்கள் தன்னைத் துளைத்துக் கொண்டிருப்பதை அறியாமல் தன் கடமை யில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள் அந்தப் பேதை,
'கங்காணி! யார் இந்தப் பெண்?" பொன்னியை விட்டுப் பார்வையை அகற் ருமலே கேட்டான் செல்வராஜ்.
*" பொன்னியைத் தானே கேக்கறிங்க சார் அதுதான் காளியப்பன் மவ'
கங்காணியின் பதிலைக் கே ட் டு க் கொண்டே மற்றவர்களை மேற்பார்வையி டச் சென்றன் செல்வராஜ். ஆணுல் அவன் பார்வை அடிக்கடி பொன்னியின் பக்கமே தாவிக்கொண்டிருந்தது.
கதிரவன் தன் காலச் சக்கரத்தை உருட்டிக்கொண்டு மேற்குத் திசையின் பின்னே ஒளித்து விட்டான். அதுவரை அவனுக்குப் பயந்து மறைந்திருந்த சந்தி ரன் தன் வட்ட முகத்தைக் காட்டி தண் ணுெளி பரப்பியதைக் கண்ட, சின்னத் துரை பங்களாவின் சுவர்க்கடிகாரம் ஒன் பது தரம் அடித்து ஒய்ந்தது.
படுக்கையில் புர ண் டு கொண்டிருந் தான் செல்வராஜ். தூக்கம் அவன் கண்க ளைத் தழுவ மறுத்தது. ஆணுல் அவன் கற் பனைக் கண்ணைத் தழுவிக் கொண்டிருந்தாள் பொன்னி. அந் த ப் பூங்கொடியாளின் ஏழ்மை அவன் கண்களுக்குத் தெரியவில்லை : எழில்தான் தெரிந்தது. அந்த எழிலுடன் பத்மாவை எடைபோட்டான் (பத்மா அவனது வருங்கால மனைவி) பத்மா பட்ட ணத்துப் பெண்ணல்லவா? அ வ ஸ்ரீ ட ம்

Page 222
விதி சிரித்தது
இயற்கையழகுடன் செயற்கையழகும் உற வாடும். ஆனல் பொன்னியிடம் வெறும் இயற்கை அழகுமட்டுமே இருந்தது.
பத்மாவை நினைத்ததும் அவனது கல் லூரி வாழ்வின் பசுமையான நினைவுகள் விரும்பியோ. விரும்பாமலோ. பாய் விரித்தன. அங்குதான் பத்மாவை அவன் சந்தித்தான்.
கல்லூரி வாழ்வில் துடிப்புமிக்க இளைஞ ஞக, மேடைகளில் முழங்கமிட்டுக் கொண் டிருப்பான் அவன். 'இன்றைய சமுதாயத் தின் குறைகள் தீர்க்கப்பட வேண்டுமானல் இளைஞராகிய நாம்தான் செயல்பட வேண் டும். முதலாளி தொழிலாளி முறை அகற் றப்படவேண்டும். தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அ நீதி கள் அழிக்கப்பட வேண்டும். தொழிலாளர் சங்கங்கள் இல் லாத இடங்களில் அவற்றை நிறுவவேண் டும். முதலாளிகளின் கொட்டம் அடக் கப்பட வேண்டும். இத்தகைய கருத்துக்க ளில் இருந்து வெடித்துச் சிதறும் சொல்மா ரிகள் அவனுக்கு "சீர்திருத்தவாதி" என்ற சிறப்புப் பெயரை வாங்கித்தந்தன. இந்த சொல்மாரிகளில் மயங்கித்தான் பத்மா அவனைக் காதலித்தாள்.
இன்று. அந்தக் கருத்துக்களைச் செயலாக்கக்கூடிய நிலையில் இருந்தான் செல்வராஜ். ஆனல் செயலாக்கவில்லை. இளமைத்தோட்டத்தில் மலரும் பூக்கள் அனைத்தும் காய்த்துக் கனிந்துவிடுவதில்லை. உதிர்ந்துவிடுவதும் உண்டு. அப்படித் தான் அன்று; சாதிக்கும் தகுதியற்ற நிலை யில் நீட்டி முழக்கப்பட்ட கோஷங்கள் அனைத்தும் இன்று தரைமட்டமாக்கப் பட்டுவிட்டன. அப்போது அவன் சாதா ரணமாணவன். இப்போது ஒரு தேயிலைத் தோட்டத்தின் சின்னத்துரை, வேலையை ஏற்ற ஆரம்ப காலங்களில் தன் பழைய கருத்துக்களைச் செயலாக்க எண்ணியவன் தான் அவன். ஆனல் நாட்கள் செல்லச் செல்ல மற்றைய துரைமாரின் வாழ்க்கை அவன் கண்ணைப்படிப்படியாக மறைத்து விட்டது.
தோட்டத்தைச் சேர்ந்த எந்த ஒரு தொழிலாளியும் துரையின் அனுமதியின்றி

வெற்றி மேரி தசைப்பிள் &
தன் சொந்த விடயங்கள் பலவற்றைக்கூட செய்ய முடியாமல் இருந்தது. ஒரு திரு மணத்தை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டுமானுல் துரையின் அனுமதிபெற வேண்டும். அவர் அனுமதியின்றி தோட் டத்தைவிட்டு வெளியே சென்றுவிட முடி யாது. ஏன் வீட்டில் விருந்தினர் தங்குவ தற்குக்கூட அவர் அனுமதி வேண்டும். துரை ஒரு பெண்ணை விரும்பினுல், அவள் பெற்றேர் அவளைப் பங்களாவுக்கு அனுப்பி விட வேண்டும். அவர் மறுத்தால் அவர்கள் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனல் அவர் கட்டளையை தொழிலாளர்கள் மறுத்தால்,. வேலையில் இருந்து சீட்டுக் கிழிக்கப்பட்டுவிடும். தோ ட் ட த் தை விட்டே கலைக்கப்பட்டுவிடுவார்கள். துரை தான் அந்தத் தோட்டத்திற்கு ராஜா. தட்டிக்கேட்கத் தொழிற்சங்கங்கள் இல் லாத தோட்டங்களிற் தான் இந்தக் கதி.
இத்தகைய அடக்குமுறை ஆட்சி துரைமாரின் உல்லாச வாழ்விற்கு வசதிய ளித்தன. இந்த உல்லாச வாழ்வு செல்வரா ஜின் கண்களையும் மறைத்தது. பெரும்பா லான அரசியல்வாதிகளைப் போல், அவன் தன் பழைய கொள்கைகளை, அவை பெல் லாம் வார் த் தை யி ல், வாழ்க்கையில் எதற்கு. என்று உதறி எறிந்துவிட்டு உல்லாச வாழ்வில் உறங்கிக்கிடக்கின்றன். இப்படித்தான் எத்தனையோ பேர் சீர்தி குத்த வாதிகளாக கொள்கைகளை வார்த் தையில் அளந்துவிட்டு, வாழ்வில் வசதி வரும்போது வாழ்ந்துகாட்டத் தயங்கு கின்றர்கள். r
செல்வராஜ் கல்லூரி நினைவுகளை உதறி எறிந்துவிட எண்ணிஞன். ஆனல் அது அவனை மீண்டும் மீண்டும் கல்லூரிக்கே இழுத்துச் சென்றது. மீண்டும் பொன்னி யின் நினைவு இடம்பெறவே, நாளைக்குக் காளியப்பனைக் கூப்பிடவேண்டும் என எண்ணியவஞய் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டான் அவன் .
செல்வராஜின் கட்டளைக்குப் பணிந்து விட்டான் காளியப்பன், வயிற்றுப்பசி அவ னைச் செல்வராஜாவின் உடற்பசிக்கு விருந் திடப் பணித்துவிட்டது. மறுக்க நினைத்

Page 223
விதி சிரித்தது
தான் காளியப்பன், மறு கணம் அவன் கண் முன் தாயற்ற ஆறு குழந்தைகளின் வற்றி வாடிய முகம் காட்சியளித்தது. மறுத் தால். சின்னத்துரை வேலையைவிட்டு விலக்கிவிடுவார். வேலை போய்விட்டால். இருக்கும் இருளடைந்த இடமும் போய் விடும். தோட்டத்தை விட்டே கலைக்கப் பட்டுவிடுவான். காசநோய் வாட்டும் உட லையும் பாசத்தால் வாட்டும் குழந்தைகளை யும் கொண்டு எங்கே போவது?. மறுத் துவிடத் துணிவோ அறிவோ அவனிடம் இருக்கவில்லை.
மாலை ஏழு மணியானதும் ஏதோ சாக் குப் போக்குச் சொல்லி, பொன்னியை அழைத்துக்கொண்டுபோய் சின்னத்துரை பங்களாவில் விட்டுவிட்டுத்தான் இந்த நாடகத்தைப் பார்க்க வந்திருந்தான் காளியப்பன். மன ஆறுதலுக்காக பார்க்க வந்த அந்த நாடகம் அவனது மனவேத னைக்குத் தூபம் போட்டுவிட்டது.
"தந்தையின் கருமம்தான் காத் ததோ. "" "தந்தையின் கருமம்தான் காத்ததோ. "" மீண்டும் மீண்டும் அனும ஞக நடித்த பாண்டியனின் குரல், வேல் கொண்டு அவன் இதயத்தைக் குத்திக் குடைந்தது.
வாழ்க்கையில் வயிற்றுப் பிரச்சினைக்கு வழிகாண்பதிற் தான் மனிதனின் முதல் முயற்சி உருவாகின்றது. அதற்குரிய வழிவ கைகளை வகுக்க முயலும் போது தான் தொழில், அறிவு என்று பல கிளைகள் உரு வாகின்றன, தொடர்ந்து பல முயற்சிக ளும் பிரச்சினைகளும் முளைவிடுகின்றன. இவற்றில் சிக்கலேற்படும் பொழுதுதான் *உலகில் எது பெரியது! உயிரா? மானமா? கல்வியா? செல்வமா? இப்படிப் பல கேள்வி கள் கிளம்புகின்றன. இந்தக் கேள்விகள் பிறக்க அறிவு வேண்டும். ஆனல் அந்த அறிவே எத்தனையோ ஏழைத் தோட்டத் தொளிலாளர்களிடம் இருப்பதில்லை. வச தியில்லா வாழ்க்கை முறையும், அதிகார முடையோரின் அடக்கு முறையும் அவர்க ளது அறிவுச் செடியை வளர விடாத முட்க ளாகின்றன. அங்கு வாழும் எத்தனையோ மக்களுக்கு மானம், அவமானம் என்ற

வெற்றி மேரி தசைப்பிள்&r
பதங்களுக்கு சரியான கருத்தே தெரிவ தில்லை. ஏதோ அண்மைக் காலத்தில் தோட்டப் பாடசாலைகள் நிறுவப்பட்டா லும் அங்கு பயிலச் செல்லும் மாணவர்க ளின் கல்வி 'அ' தொடங்கி "ஃ" உடன் முடிந்துவிடும். ஆசிரியரின் வீட்டு வேலை தான் அவர்கள் தொடர்ந்து படிக்கும் படிப்பு.
இத்தகைய நிலையில் தோட்டப் பாட சாலைக்கு ஆசிரியனுக வந்த கந்தசாமி தோட்ட மக்களுடன் உறவாடி அறிவொ ளியை ஏற்றப்பாடுபட்டான். அவ ன் முயற்சி சிறிதளவு பயனைக் கொடுக்கத் தொடங்கியது. அவனது முயற்சிதான் 'சீதையின் சிறைவாசம்’ எனும் நாடக மும் . -
கந்தசாமியின் தொடர்பால் ஏற்பட்ட சிறு முன்னேற்றம்தான் இன்று காளியப் பனை அமைதியற்றவனுக்கிவிட்டது. முன் பெல்லாம். அவன் மானம் அவமானம் என்பவற்றுக்கு விளக்கம் தெரியாத அப் பாவி. ஆனல் இன்று. ஏதோ அவன் மனதைக் குத்தியது. "ஐயோ என் மகளுக் குத் துரோகம் செய்துவிட்டேனே. ... o to O 0 «o V0 • o 4b 9 அவள் வாழ்வைப் பாழாக்கிவிட் டேனே. என்றெல்லாம் அவன் இதயம் துடித்தது. அந்தத் துடிப்பின் அதிர்வால் இமைச்சிப்பிகள் திறந்து இரண்டு கண்ணிர் முத்துக்களைச் சிந்தின.
வீதி நீண்டு கிடக்கவில்லை. மலைப்பகுதி யானதால் வளைந்துகிடந்தது. எனவே தொலைவில் வந்த 'ஜீப்" பின் ஒளி தள்ளாடி நடக்கும் காளியப்பன் கண்களிற்படவில்லை. அருவியின் சலசலப்பில் அதன் இரைச்ச லும் அவனுக்குக் கேட்கவில்லை. உணர் வுக்கு அப்பாற்பட்ட நிலையில் கால்கள் இழுத்துச் செல்லும் திசையில் அவன் சென்றுகொண்டிருந்தான்.
செல்வராஜ்தான் ஜீப்பை ஒட் டி க் கொண்டிருந்தான். அவன் மனவேகத்தைக் கால்கள் புரிந்து கொண்டு செயலாற்ற ஜீப் மலைப்பாதையில் வே க ம 1ா க பங்க ளாவை நோக்கிப் பாய்ந்து சென்று கொண் டிருந்தது. அதைவிட வேகமாக அவன் மனம் பங்களாவை நோக்கித் தாவியது

Page 224
விதி சிரித்தது
'காளியப்பன் பொன்னியைக் கொண்டு வந்து விட்டிருப்பான், அதைத் தொடர்ந்து ஏதோ கற்பனைகள்.
கற்பனையில் மிதந்த அவன் மலைப்பா தையின் வளைவைக் கவனிக்கத் தவறிவிட் டான், கரங்களும் "ஸ்டியரிங்கை வளைக் கத் தவறி விட்டன.
மறுகணம். , எதிரே வந்த காளியப் பனையும் சேர்த்துத் தட்டிக் கொண்டு செங் குத்தான மலைச் சரிவில் உருண்டது ஜீப்.
அம்மா...!
பொன்னி... !
இரண்டு உயிர்களின் கடைசி வார்த் தைகள், சில்லென்று வீசிய குளிர் காற்று டன் கலந்து விட்டன.
இரண்டு உயிர்களைப் பணயம் வைத்து விட்டு, ஜீப் மலையடிவாரத்தில், ஒடிக் கொண்டிருந்த ஆற்று வெள்ளத்தில், தன் கறையைக் கழுவிக் கொண்டிருந்தது.
அதிகாரியாயும் அடிமையாயும் அத் தஸ்தால் வேறுபட்டு வாழ்ந்த செல்வரா ஜின் உடலும் காளியப்பனின் உடலும் அருகருகே கிடந்தன. அவை வாழ்வில் காணுத சமரசத்தை இறப்பில் கண்டன.
இரண் டு உடல் களி லும் இருந்து பெருக்கெடுத்தோடிய குருதி வெள்ளம்

வெற்றி மேரி தசைப்பிள்&r
ஒன்றுடன் ஒன்று இணைந்து, ஒடியதைப் பார்த்து விதி சிரித்தது.
விதி ஏன் சிரித்தது? உயர்வு தாழ்வு களை பறித்து இறப்பில் இருவரை இணைத்து விட்ட தன் ஆற்றலைப் பார்த்தா? . இல்லைப்பெண்மைக்கு நேரவிருந்த ஆபத்தை அந்த விபத்தால் அகற்றி விட்ட பெரு மையை எண்ணியா? . இல்லை. ஆபத் தை அகற்றியதற்குப் பதிலாக ஏழைத் தந்தையின் உயிரைப் பரிசாகப் பெற்று விட்ட இறுமாப்பிலா? ஏன் சிரித்த து என்று அந்த விதிக்குத்தான் தெரியும்.
(அடுத்த வாரம்)
கலையில் கதிரவனைக் கண்டு தேயிலைத் தளிர்களில் மின்னிய பணித்துளிகளுடன், பொன்னியின் கன்னங்களில் ஒடிய கண் ணிர்த் துளிகளும் மின்னின
'இண்ணைக்கு புதுத் தொரை வாரா ராம்' யாரோ ஒருவரின் சொற்கள் அவள் செவியில் விழுகின்றன.
ஒரு துரை போனல் தோட்டத்தைப் பொறுப்பேற்க வேறு ஒரு துரை வருவார். ஆனல் அவள் தந்தைக்குப் பதிலாக யார் வரப் போகிருர்கள். அவள் மனம் ஏங்கி tl 15 .

Page 225
Fashion News!
Be in The Fashion Pict
VISAKA MAN ATTRACTIVE
LATEST DESI VVHITE 8 SILV
Manufactured by:
VSAKA NI Lady Catherine F RATMALANA.
QEGAL TQA 100, Bankshall St COLOMBO - 11.
Distributors:
8Ꮀor (Ready ()
<լ)
Pattakannu Subbi
House of "Sovereig
02, New C COLON
Tele: 22 3O4

ure This Season in A
|PURI
COLOURS
GNS "ER EBRDAL BROCADES
DUSRS
Road,
ADRS
reet,
Phone: 21981
lade Seteeleru
ιδίί
h Achary & Sons
Jewellery In House'
hetty Street, |BO - 3.

Page 226
suits for
延p 现omon @
ROOM
BR IS TO
COLO
NANA YAKKI
స్ట్ర క్లి 339. (D |A| T |,
CGDI (DA
 

Smp (EÐrtasion
Rualifiet (Lailors
t
ARA 8: SONS
No. 34
HOTEL
MBO.
AAN 大
爵 溪 Si
'(3
AMA STREET
YAB DIT

Page 227
9íth th
(Compl
ot
GREENLANDS
COLOM
T'phone : 85592 8: 81986
Z പ്രർീക്ഷ്
ഗ്ര,
V. T. V. Deival
37, 5th Crc
Colomb

e est
nets
HOTEL LTD.
BO-4.
T'grams : GREENLANDS
ിഗല
hayagampilai
SS Street,
II-כ

Page 228
நம் நாடு
நம் நாட்டுக் கைத்தொழி
Iல்க்வைற் சோ
LIIIIIL
தொஃலபேசி: 7233
Murugan Turning
Prop: M. Thir
Specialists for all kin
Moulding of Water
எமது ஸ்தாபனத்தில்
கார், லொறி, ரைக்டர், தண்ணீர் இ உதிரிப் பாகங்கள் தயாரித்து நிரப்பிக் கடைந்துப் விசேஷமாக; சிலிண்டர் போர், றீ போறிா
முதலியனவும்
43, Stanley Road,

முன்னேற
ـــ (يخ"
ஆதரியுங்கள்
ப் தொழிற்சாலை
II GODIÍ.
Industries Works
"unavukarasu
ds of Turning Works Pumps & Launch Parts
றைக்கும் இயந்திரம் ஆகியவற்றின் ம், உடைந்து போனவற்றை D கொடுக்கப்படும் வ், சிலிண்டர்கெட் வால்சீற் அடித்தல்
செய்யப்படும்
JAFFNA.
NorGermarrrrrr

Page 229
pace الح
ly
... Well
СИИtth the 62ombltm2ent:
MS
27, Grand B.
அழகிய செருப்பு, சப்பாத்து வன
* பிர கா ஸ்
31, 33, கஸ்தூரியார் வீதி,
ாகயம்மிக்க பலதரப்பட்ட ரகங்கள் இல்
இணைய ற் ற பிரபல்ய பா த
* ரஷ்யன் சேப்பிங் மெஷின் *
★ 巴州迪喻GT$L
ஆகியவைகளுடன் சிறந்த தெ யாழ்ப்பாணத்தில் உள்ள "ஸ்ரார் எலெக்றிக் வெல்டே
ஸரான்லி றேட், (வெலிங்டன் சந்தி)
உரிமையான

gDonated
Wisher
from
KNS
azzar, JAFFNA.
ககளுக்கு -
யாழ்ப்பாணம்.
னங்கள் நிறங்களுக்கு ஈழத்திருகாட்டின்
ரட்  ைச விற்பனை யாளர் கள்.
9 j55T LIST TÜI ŠI (Tapping) GILDför ன் வெல்டிங் மெசின்
ாழில் நிபுணர்கள் பணியாற்றும்
ஒரே ஒரு தொழிற்சாக்ல -
ர்ஸ் அன் ரேணிங் வேக்ஸ்”
யாழ்ப்பாணம.
ார்: கே. டா னி ய ல்

Page 230
СИ/ith the 73.
V/ (GS
DEALERS
132, KEYZER STR
СИИttћ 78єat
CYTION CARBON PAP
Manufacturers of “A Typewriter Ribbor
123, NEW BULLERS Telephone: 82.753
Make a Note . . .
OU ARE INVITED
SHOPPING CENTR
AN EXOUISTE RANG READYMADE GARMEN COURTEOUS SERVICE
P
Dial: 25 738
Fashionable
SILK 8 COTT
に公 مہمبسم ?c> !Q
SP. Periam
80, Second Cross
 
 
 
 
 

;4t Compliments of
S (ONS
IN TEXTILES
EET, COLOMBO-11.
Compliments from
R MANY M.
\SOKA' Carbon Papers, and Stencil Paper.
ROAD, COLOMBO-4.
TO MAKE PESONS YOUR E ...
E OF SAREES, TEXTILES, ITS AND A FRIENDLY.
Peson’s Main Street
ΟΝ II, E E S a Pillai & CO.,
Street, COLOMBO-l.

Page 231
WEAR LONGER -
EMEBROIDERED
* SARE
&
TEXTILES FOR
Kamala Garag
WINDOW GRILLS, GATES, FC
HOUSEHOLD FURNTURE,
WILL BE CONSTRUCTED IN
KAMAALA GARAG
AN ESTABLISHMENT WITH MANY
55 STANLEY7 R

LOOK SMARTER & OCCASIONAL EEs
AL NEEDS
CIENI IRL
S ROAD,
COLOMBO-10,
e & Industries
)LDING GATES, AND OTHER
MOTOR SPARE PARTS ETC.
DUE TIME AT LOW COST.
k INDUSTQIES
YEARS OF FAME 8: EXPERIENCE
(2) A D- eAFLFNA

Page 232
Oith the be
MOTIRAM
175, MAN COLON
OMill the les
(9
S. T. R. SALAY |
245, MAIN COLOM
Phone : 20 53 6

t Coирliиеиto
M & SONS
STREET, MEBO - 11.
Cen pliments
MOHAMED & CO
STREET, BO - 1 1. ʼ
Gram : PERDESHI

Page 233
KAMBURUGAMUWA
Our valuable Foreign E great extent by chro Car Accessories such as
This
So, don't you feel that it is y, that contributes a lot tow:
KamburugamuWa
6DAM B I7| I, BATUT Ro,
(o Ly /ray : 7 2 2 1
AA
(85T ai Gi
(GALLE நவீன காலணிகள் வேண்டு! எமது ஸ்தாபனத்திற்கு வி தெரிவுெ
le. 22. * றியோடைட் * ப
முதலியவைகளே நயமாக
கோல் 6
45, கஸ்தூ
யாழ்ப்
தலைமைக் காரியாலயம்: -
103, பிரதான வீதி, காலி,

METAL INDUSTRIES
xchange is Saved to a mium plating of Motor ocks, Handles Hinges Etc.
We do
our duty to help our venture ards our National Wealth?
Metal Industries
UILDING AD, — MATARA.
Phone: 7221
GJIT Î 6)
STORES)
の/r2 ஐயம் செய்து காலணிகளே சய்யுங்கள்.
k to... I'it). 3. I TILLI TA' SIGDI sijbGIT
பெற்றுக் கொள்ளலாம். i) GI it ரியார் வீதி,
பாணம்.
52T : 10, பிரதான வீதி, காலி.

Page 234
குரு - ப இல, 51, கலி נp L חu
முதற்தரமான டி. ஐ.
ஜெர்மன் தோல்
மற்றும் பலவித உள்ளுர் உ
இன்றே விஜய
‘llits 6 est
fu
S. SINNATHU
MANUFACTURER
KALK & S
KA LÈ KI
COLO

| ல வி0
Uதுாரியார் வீதி,
L I ഞr tb .
FIILII bJjl
) JFII III jigI
உற்பத்திச் சப்பாத்துகளுக்கும்
/ம் செய்யுங்கள்
Comptiments
(1,
RAI & BRos,
S & DISTRIBUTORS OF
S. S. BEED
OUSE
vM EB O - 12.
ambahawawan

Page 235
For Excellent Craftsman
ΚΑ ΑΜΜΑΤ
23
P
PHONE:
Prop. Mrs. P. Rat
(With Best
fito,
RANIJÄNÄ
52, Banksh:
COLOM
Phon: 2585
 

Ship
Hy JWHOUS
), Main Street, OINT PEDRO.
5 67
lasingham & Sons
62omb[tments
2.
\ S.P.ORBS
all Street,
BO - | | .

Page 236
RA
ANT
f
TECHNICAL
St. Anthony's Har
COLOM
pace gDonated lyܠܐc
V
S. S. Ferna
23, Fifth C
Colom
Tphone: 221 39

DOS
Dy
TON
O
EXCELLENCE
dware Stores Ltd.,
[BO - 10.
Indo & Co.
Cross Street, oo - li l ..

Page 237
(Wilf feat Co
E. N. Ariya
65, Gas W
Colomb
‘Uits tse seøt
d
Bandarawela ||
Celephone:
Bandar,
203

mbliments. ftom
ratna & Co.
orks Street,
bo - 1 1.
T’Gram: MALAR MAHAL l
κρα κ.
Comptiments
Forage Stores
aWela.

Page 238
lUits tse
N. VATINGA
COLOMBO Telephone: 33143, 33 44 & 27488
Entrust You.
III
C HEN
259, GALLE ROAD, BAM
Phone: 84 OS 8
у
b h hanrif

Comptiments
l
M & CO., LTD.
& BRANCHES.
r Prescription
to
IAIMIS) MSTS
IBALAPITIYA, COLOMBO-4.

Page 239
நீர்வேலி காமாட்சி அம்பா சிறந்த முறையிே பூட்டு, பினை முதலிய உருக்கு
மற்றும் ச
இரும்புச் ச/
புகழ் பெற்.
O O விஸ் ரீ ல்
287, 289, ஸ்ரான்லி
தொகிலபேசி: 7O35
றலி றலி சயிக்கிள்
மணிக்கூடுகள் - ഖിമജ്
எல்லாவிதமான
திருத்துவதிலும் பி
ரதி வேக்ஸ் அ 44, 46, கஸ்தூரியார்
Gsrêa Gue: 71O3

ள் ஐக்கிய தொழிற்சாகீலயில் Ö gu//rsf?ácsu74/4 IV -
ணச்சல், கத்தி ப் பொருட்களுக்கும்
கலவிதமான
7மான்களுக்கும்
ற ஸ்தாபனம்
ச ன் வி0
வீதி, யாழ்ப்பாணம்.
சயிக்கிள்
உப உறுப்புகள்
சுவர்மணிக்கூடுகள்
u//ror/falsar
மணிக்கூடுகள்
ரசித்தி பெற்றவர்கள்
96ÖT 6 GJIT Î6)
வீதி, யாழ்ப்பாணம்.

Page 240
தரன் எலக்ரிக்கல் ெ உங்கள் வீடுகளுக்கு நவீன டிை கேற்கிறில், சுருக்குக்கேற், றிவோளிங் ஸ்ராண்ட், புக்ஸ்ரான் சுழல் சக்கரங்கள், பூ எலெக்ரிக் யந்திரம் கொண்டு உறுதியாக
70, ஸ்ாான்லி ருேட்,
6 T. S.
அழகிற் சிறந்த
தகுந்த T. S. N. SP. geg
உரிடை
O பூந் முருகன் 2/2, பிரதான வீதி, area ஒடர் நகைகள் குறித்த காலத்தில் உத்
யாழ்நகர் வாசிகளே! * எவர்சில்வர் பொருட்கள்
* கைக் கடிகாரங்கள் அன்பளிப்புப் பொருட்களுக்கும் பெயர் பெற்
K. செல் வரா சா
37, கஸ்தூரியார் வீதி,
துரை அன் கோ
 

. 6ÎIņ ŠI G5IJFT2D சன்களில் பெற்றுக் கொள்ளக்கூடிய
பிளேட்றக்ஸ், பேப்பர்றக்ஸ், ண்ட், ஆடுகதிரைகள், கட்டில்கள் ச்சாடி ஸ்ரான்ட் யாவும்
வும், அழகாகவும் செய்து கொடுக்கப்படும்
❤ யாழ்ப்பாணம்.
N. SP ” தங்க நகைகளுக்கு ; இடம் நணுசலம் செட்டியார் dnu m østri:
அன் கொ. கல்முனே. தொலைபேசி: 301
ந்தரவாதத்துடன் செய்து கொடுக்கப்படும்
தங்களுக்குத் தேவையான றேடியோக்கள் * மணிக்கூடுகள் * பைசிக்கிள்கள் மற்றும்
நவநாகரீகப் பொருட்களுக்கும்
ற ஸ்தாபனம்
அன் பிரதர்ஸ்
யாழ்ப்பாணம்,
66 9
யு ஆசா” க்தவை
சிக்கனமானவை
* நீடித்துழைப்பவை ாகாண ஏக விநியோகஸ்தர்கள்
23/3, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.

Page 241
“LAXIMI PAPPADA
Tastes Wonderful
Why Dont You 1
Manufacturers & Distributors
SI VAM IU RUGA,
PUNNALAKADDUVAN
99edding & SF
V
“ R (O) — (
5, Clock Towe
-Space Donatɛd f3,
D. SCDMAASUN 289 - A, Stanley
K. T. M. UE
JEWEILS, DI A M0 M
67, Kannathi
Phone: 286

LAXİM DADDADAM
9 ManufactuPERse ost RiButops. N*S
PUNNALAKAEUAN
чnctions TDhotograph S
isit:
CÙ”
:r Road, JAFFNA.
DARAMA & CCD. Road, JAFFNA.
EWELLERS
ers in
D, & S0VEREIGNS ddy, JAFFINA.

Page 242
|sland s (
ls ) اِسoo)
51Dhene: 2 7 8 3 1
lsLAND Coff
288, Galle Road,
When your are in JA, Shop
The Jaffna Co-Ope
(Opposite Govt. Genera
-4լլ your requiremento οι:
Groceries, Provisions, Su lce Cream, Vegetable
Motor Spares Electrical Goods, Bicy
Batteries, Radio Petrol & Petroleu

offee
Coffee
3Dhene: 27 83 1
EE COMPANY
KOLLUPITIYA.
FFNA
at
rative Stores td.
Hospital - Jaffna.)
ndrygoods, Frozen Meat s, Fruits, Textiles
& Accessories cle Tyres & Tubes & Radio Spares m Products etc.

Page 243
N. Sambas
34, 36, Ka
JA
്ര
SARA
96, Main Street, Pettah.
T'Grams: KASTHUR

ല محرک m
ivam & Co.
sturiar Road,
FFNA.
کریبریری دراڑ تک
ހަޔިކު
96 & 98, York Street, Fort.
T'Phone: 2 740

Page 244
}9ith gest
. frO
LALTHA JEW
Selvellere – P.
(ORDERS UNDERTAKEN AND
99, O, O3,05, SEA ST
Phone: 2369 (Ext. 4)
99ith the (
o
AUGUST INE
57 & 59, Jayantha W Colom
T'Phone: 3002

Compliments
ELLERY MART|
auvin S-Brokerø
EXECUTED PUNCTUALLY)
REET, COLOMBO-II.
Bompliments
f
MOTORS,
eerasekera Mawatha,
bo-l0.
T'Grams: REBORES'

Page 245
ஆயுட் காப்புறுதி போல்
உங்கள்
* உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் ஆ ஏற்பாடு செய்கிறது. ஆயுட் காப்புறுதி நித செய்யப்படுகின்றன. இலங்கையின் கைத்தொ புரிகின்றன.
* ஆயுட் காப்புறுதிச் சேமிப்புகள் தற்கு மட்டுமல்லாமல், பாடச திட்டங்கள் போன்ற பல்வேறு காண்பீர்கள்.
* ஆயுட் காப்புறுதிச் சேமிப்புகள் உங்கள் குடு காட்டின் பொருளாதார முயற்சிகளே ஊக்குவிக்க வைத்திருங்கள்.
விபரங்களுக்கு:
இலங்கைக் காப்புற
288, biulair 1
தொஃலபேசி: 253 - 4
CGT GOf
விலை ரூ 11
ஒரு ஸோனியின் 2R-29 வாங் சின்னஞ்சிறு ஸோனியின் இனிய நாதத்தைக் கேட்டு மகிழுங்கள்
Iņ 9, 10, செ
கிகளேன்:
கண்டி, யாழ்ப்பாணம், அம்பலாந்

ஆதரவு தருவது வேறில்ல சேமிப்பு?
புட் காப்புறுதி உறுதியான சேமிப்பை கள் தேசிய அபிவிருத்தியில் முதலீடு ழில் விருத்திக்கு அவை உறுதுணை
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளை சமாளிப்ப 2லகள் புதிய கைத்தொழில்கள், விவச்ாய வீடமைப்புத் திட்டங்களுக்கு ஒரு மூலதனமாகவும் அமைவதை நீங்கள்
பத்தைப் பாதுகாப்பதற்கு மட்டுமல்ல, வும் உதவுகின்றன என்பதை நினைவில்
திக் கூட்டுத்தாபனம்
Galli), GSI ID fDL-2.
2R - 29
0/- மாத்திரம்
f
6) ja G. GOI GJI Iņ G UII I
ான்சிஸ்டரி கட்டிடம், கொழும்பு-11. 7: 27311
தோட்டை, பம்பலப்பிட்டி, கம்பஹா,

Page 246
39ith the 36est compliments
from
ME
Phone: 575
WORK SHOP
"REF DRESS MANU
No, 3, JUMMA
JAF F
KANESAN Str
78, K. K. S. ROAD,
JAFFNA.
அன்பளிப்பு/
* பெஷ ன்
65, காங்கேச6 tlingtiL

DICAfa Affa
224, HOSPITAL ROAD, JAFFNA.
INE”
JFACTURERS MOSQE LANE, 'N A.
}9ith the aliest Compliments
from
ORES
ஹ வுஸ்” ாதுறை வீதி, T GOOTLh.

Page 247
REMEMBER US FOI
Buildir
Agricu
Domes
Tools
Electri
Rice
Diesel
Motor
Paints
K. N. Abdul Cader:
312, Sri Sanga coLol
Telephone: 32956, 32O28, 3

R
g Materials. ltural Pumps. tic Water Pumps.
8 implements.
c Motors & Starters
Hulling Machines
Engines.
Spares
awther & Co. Ltd.
raja Mawatha,
MBO-0
2OO7.

Page 248
9íth the Ges
ol
ORIENTAL GEN
79, CHATHA FOF
COLO
Telephone: 295O2
FO
T EXT
VIS
"DAYA
54, MAN STREET, JAFFNA.
Telephone: 316

(Eompliments
M EXCHANGE,
NM STREET T, MBO.
RAMS'
338, GALLE ROAD,
COOMBO-6.
Telephone: 83328

Page 249
வாததகக் (1924 so is பெண்கள் பாடசாலை நீதிஸ்தல வீதி-பருத்தித்துறை. வகுப்புக்கள் இயங்கும் நேரம்:- -
சாதாரண வகுப்புக்கள் க்ர்லை 8
விசேட வகுப்புக்கள் காலை 4 ! லண்டன் (ஒனர்ஸ்) இலங்கை இந்திய அனு கற்பிக்கட்
ஜி. ஏ. கியூ. (பொது க. பொ. த . சாதாரணம் ,
வர்த்தகப்பாடங்கள் உலகில் தற்போதுள்ள ஆங்கில / தமிழ் சு கால வர்த்தக ஆசிரியச்சேவைபுரிந்து, இலக (தட்டச்சை) ஆரம்பித்து, 47 வருடங்க
ஆசிரியரால் க க. பொ. த. வர்த்தகப்பிரிவு (சாதாரணம்) பரீட் க. பொ. த. வர்த்தகப்பிரிவு (உயர்தரம்) பரீட்ை அரசாங்க வர்த்தகவியல் தராதரப் பரீட்சை (மா ஆசிரியர் "கலாசா8ல பிரவேசப் பரீட்சை - (தமிழ் அரசாங்கத்தால் நடாத்தப்படும் எழுதுவிஜனஞர் பரீட்சை, மாணவ ஆசிரியர் பரீட்சை, சிருப்பர்
சைக்குரிய வகுப்புக்கள்.
தையல் - ஆரம்பத்தில் இருக்து இயக்திரப் பூ வுே முறையில் வெட்டுதல் வரை தனித்தனியே கற்பி தபால் மூலம் கல்வி-கணக்கியல், வர்த்தகமும், கித
இருபாலாருக்கும்
அன்
ஞானமலர்
102/2 A, ரத்தினஜோதி
கொழு
Gio Lvarstör: 32221

கல்லூரி பிக்கப்ப்ட்ட்து)
ஆண்கள் பாடசாலை நீதவான் வீதி-பருத்தித் துறை.
மண்ணி - மால்ை 4 மணி வரை
)ணி - 8 மணி, மாலை 4 மணி-8மணி வரை
பவமுள் விஞ்ஞான, கலை பட்டதாரிகளால் படுகின்றன.
க்கலைத் தகுதித்தேர்வு) உயர்தரம், கலே, விஞ்ஞானம்
தக்கெழுத்து ஆசிரியர்களிலும் பார்க்க, கூடிய
கையில்முதன்முதலாக தமிழ் சுருக்கெழுத்தை
ள் வர்த்தகப் பாடங்களைக் கற்பித்துவரும்
பிக்கப்படுகிறது.
சை (மார்கழி மாதம்)
F (சித்திரை மாதம்)
கழி மாதம்}
/ ஆங்கிலம்)
பரீட்சை, தபால் தந்தியாளர், பரீட்சை:, தாதிமார்
பரீட்சை, எழுதுவினைஞர் பரீட்சை தரம்2 போன்ற பரீட்
2ல செய்தல், சிப்பியினுல் உருவம் செய்தல் விஞ்ஞான ங்க்ப்படும். தியும், வர்த்தக கணிதம், பொருளாதாரம், சுருக்கெழுத்து. விடுதி வசதியுண்டு. . ܫ
முகாமையாளா, வர்த்தகக் கல்லூரி, பருத்தித்துறை.
பளிப்பு/
விலரோர்விu)
சரவணமுத்து மாவத்தை,
ம்பு-13.

Page 250
“Goi ITT GÓIBLIN மற்றும் விவசாய இர
O பொலித்தியோன் O ig. 4
O ஹெடோனல் 'எம்' O ஹெே
O L-dia,6i Ο குப்ருவிற்
கிடைக்கு
AA 4a FI6LI M)
யாழ்ப்பா
Gs rau Gue: 439 6
WINSL. O
AUTOMOBILE
Specialised in:
Cylinder Boring and Resleeving
Brake Drum Skimming
Turni Re-wiring of Motor Vehicles
291, Stanley Road
nusuave
எங்கள் விளம்பரதார
Pleaøe Patruoniøe

6) E605’
Fாயனப் பொருட்கள்
ரறெக்ஸ் O Gau GuéGu
டஈஞல் 'டி' O சேர்கோப்பூர்
O அன்றக்கோல் O கசுமீன்
diff Gls
r60য়Tub,
W & CO
ENGINEERS
Valve and Valve Seat Reconditioning
Brake Relining & Grinding
ng
Over Hauling Engines.
l, Jaffna.
ர்களை ஆதரியுங்கள்
Ĉuvu Cladue?utisexuas

Page 251
தமிழ் மொழியின் இனிமையையும்
நாடோடிப்
நாகேஷின் வில்லுப்பாட்டு A. V. M. ராஜனின் பாத்தி
N1. R. R. Gum
ந
6
இப்ெ ( J.
மற்றும் சிலோன் தியேட்டர்ஸ்
9íth est Compliments
from
an Ra Prínti Kath
VVe Thank The AD\ Whose Willing Co-op Enabled us to put out

/7டல்களின் கருத்தையும் உணர்த்தும்
ரவிச்சந்திரனின் உன்னத நடிப்பு! ரத்துடன் ஒன்றிய கதையமைப்பு ற்றும்
சு * லக்சுமி டித்த
) '] ||
) / / / 4026/
) If I I î.
b திரைகளில் காட்சியளிக்கிறது.
ng Ind USIríos ankudy
ERTISERS
eration has
this Worthy Magazine

Page 252
நன்றி கூறுகிருேம்
女
இந்த மலரின் அட்டை (
பிரிவு மாணவன் ஈஸ்வரன்
எங்கள் சஞ்சிகையை சிறட் யர்களுக்கும், விரிவுரையா
வேண்டிய நேரங்களில் ஆலோசனை கூறி, ஊக்குள் கடந்த வருட தமிழ்ச்சங் களுக்கும்,
எமது பல்கலைக்கழகத்திற் சிறப்பில் கூடிய அக்கறை கும், திருவாளர் இ. சங்க
இந்த மலரை முழு மனதே தாருக்கும்,
அரசியல் நிர்ணயசபைக் டர் எம். சிவானந்தன், ை ஏ. குணரத்தினம், திரு. ஈ சுதந்திரன் பத்திரிகை நிறு கொழும்பு, ஆகியவற்றிற்கு டி. சிவநாயகம், திரு. ரி. ( of Ceylon) அவர்களுக்கும்
எமது மனமார்ந்த
ஆசிரியர் குழுவுடன் ஒத்துை
நாம் க!
ருேபேட் குரூஸ் இந்திரகுமார் ராஜகுலேந்திரன் ஈஸ்வரன், செல்வராசா டாவூத் வை. ஏ. ஹமீது சதா செல்லத்துரை ஸ்டீபன் வேதநாயகம் சுந்தரலிங்கம் பாலேந்திரா யோகராசா மகேந்திரராசா சத்தியராசா சகாதேவன்

ழகப்பை அழகுற வரைந்த கட்டிடக்கலைப் ா செல்வராஜா அவர்களுக்கும்,
பிக்கக் கட்டுரைகளைத் தந்துதவிய பேராசிரி ளர்களுக்கும், பெரியோர்களுக்கும்,
தமது சிரமத்தையும் பொருட்படுத்தாது, பித்த கலாநிதி கைலாசபதி அவர்களுக்கும். கத் தலைவர் பி. ரி. ஜெயவிக்கிரம ராஜா அவர்
கு வெளியே இருந்தும் கூட, இவ்விதழின் காட்டிய திருவாளர் ஆ. நடராசா அவர்களுக்
அவர்களுக்கும்,
நாடு அச்சேற்றித் தந்த இரஞ்சனு அச்சகத்
கட்டுரைகளுக்கான உதவிகள் புரிந்த பாரிஸ் வத்திய கலாநிதிகள் எஸ். றவுஸ்டீன், எஸ். ஆர். குணசேகரா (அத்த), அவர்களுக்கும்; வகம், தமிழ் காங்கிரஸ் வாலிப முன்னணி ம், கட்டுரைகளில் உதவி புரிந்த திரு. எஸ். ஜெகநாதன் (தவஸ்), திரு. தகநாயக்க (Times
நன்றியைத் தரிவிக்கின் ரும்.
ழத்த எங்களது சங்க மாணவர்களுக்கும் டமைப்பட்டுள்ளோம்
நித்தியானந்தன் சாந்தகுமாரன் ரட்னராஜன் விக்னேஸ்வர மூர்த்தி விஜயரெட்னம்
சிவகுமாரன்
மையூரநாதன் மாயா சேனதிரா ரா இந்திரமலர் தெய்வேந்திரம் சண்முக ராசா பாலசுப்பிரமணியம் தில்லைநாதன் கமலா கரன் கமலநாதன்
ஆசிரியர்

Page 253
జీణి MOtten For Anoth
Browns Engineering D foundry are capable of d two tons in cast iron. L.
are also made.
õryournu
Rownes Geheus, Col 3. BROWN &
481, DARLEY ROAD
 
 

ivision pattern shops and ealing with castings up to arge, non-ferrous castings
264976
nsult
COMPANY LIMITED
NG DIVISION.
- COLOMBO 10.
GRAN

Page 254
-
F.
SYA'YA
THE We Fish
Battery for a bold, more powerful beam (that lastil)
The Red Transis Battery for cle powerful, cli
Fadio recept
EVEREADY"
TRIAD E-HAPIH
POWER WHEN
இரஞ்சனு அச்சகம், 98, விவேகா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gr
YOU NEED IT
Each EVEREADY BATTERY is
יר
EWE READY BATTERIES last so much longer, because they are made to an exclusive chemical formulation and because they have a built-in polythene barrier that keeps in EVEREADY power while protecting your flashlight and radio.
GUARANTEED because every battery, is factory tested for more power and life to give your flashlight a ဖြုံနှီး powerful beam, and your radio, clear, powerful fade-free reception.
آبی.
னந்தர் மேடு, கொழும்பு-13.