கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளந்தென்றல் 1971-1972

Page 1

BITTEET

Page 2

ம்பக தரு எனப்படும் பனையைப்போல லங்கை வங்கி ஆயிரங்காலத்துப் பிராக வளர்ந்து உரமும் உறுதியும் க்கதாக விளங்குகிறது. இன்று, மற் றல்லா வர்த்தக வங்கிகளினதும் ரண்ட வைப்புத் தொகைக்குச் சம ான அளவு பணத்தை இலங்கை வங்கி ன்னகத்தே வைத்திருக்கின்றது. லங்கை வங்கியில் கொடுக்கல் வாங் ல் செய்யும் போது இந்த வலிமையின் பனை தாங்கள் பகிர்ந்து கொள்கிறீர்கள்.
இலங்கை வங்கி
லங்கையின் மிகப் பெரிய வங்கி.

Page 3
இளந்ெ
1971-72
ஆசிரியர்:
சின்னேயா கந்த
C. K. SHANMUGARAJAH
THE TAMIL
NVERSITY OF
 

56)IDG)
சாமி சண்முகராஜா
SOCIETY
CEYLoN, Colombo.

Page 4
s அது ே கொடுக் usico' T u சதங்கள் Meî sî553 திரும்பவும்
ஆகவே தான் வென்ற
' 6g,6ul
 
 

ఊడి *స్ట్ర
ம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பர். போலத் தான் ஒரு சுவிப் டிக்கெட்டுக்கு நீங்கள் /கும் ஐம்பது சதத்தின் ஆற்றலும்.உங்களில் . ரக் கனக்கானுேர் கொடுக்கும் ஐம்பது ஐம்பது திரண்டு அரும் பெரும் பரிசுகளாகவும் தேசிய நிக்கு வேனடிய மூலதனமாகவும் உங்களுக்கே பயன் தருகின்றன.
நீங்கள் தேசிய லொத்தர் genuó su salóúóAO லும் தோற்றலும் உங்களுக்கே!
லொத்தர் சபை

Page 5
வளரும் பயிரின் செழிப்பு அது வாழும் மண்ணின் வளத் தையே சார்ந்தது போல, இ த்தி இதழை அலங்கரிக்கும் படைப்புக்களில் ஊறும் சிந் தனே பொருள் சொல்வளம் - அyவ ற்றை உருவாக்கியோ ரையே சார்ந்ததாகும்.
காணி
எமது சங்க கும் அதன் வளர் ணமாயிருந்தவர்: மலர் - காணிக்கை
 

d完56びDo分
உதயத்திற் ச்சிக்கும் கார களுக்கு இம்
5.

Page 6
பெண்களுக்கே
மணிப்புரி சாரி, பி கொட்டன் டெக்க
மற்றும் பாவாடை
பலவர்ண கல
மற்றும் கொ சேட்டிங்
மொத்தமாகவும்
பெற்றுக் (
GiGTGOf
48, செ கொழு
தொகலபேசி: 2796

r அரிய சந்தர்ப்பம்!
ரின்ட் நைலக்ஸ் சாரி,
ாசாரி, வாயில் சாரி சோளி துண்டுகள்
ர்களில் கிடைக்கும்
ட்டன் சூட்டிங்ஸ் ஸ், பிஜாமா
சில்லறையாகவும் கொள்ளுமிடம்
அன் கோ
ய்சர் வீதி, քմ)ւկ-ll.

Page 7
நமது க/7
பேராசிரியர் ஆ M. A. (Cey.), D. Phil. (O தமிழ்த்துறை இலங்கைப் பல்கலைக்
 
 
 
 
 

LSSiYJSESSDSqS SqqL LASSSLLSSJSLLLLLAALLLLLAES SALSLS EELALASSASASAAALALA SSS AAALSJSSLSSSSSSAAAAASS
o z V zv/r Gor /ř
ஆ. சதாசிவம்
xon.), Pandit {Madura)
த் தலைவர்,
கழகம், கொழும்பு.
S LALLLLLLL LLL SLSLSLSLAL0SLkLkLeL0LSLLLSLSLSSSLSS

Page 8
t
Hav'nt been feeling too we Been feeling tired, listless, un
in your work? TAKE Delicious, cherry-flavoure enriched with vitamins B comple replaces lost energy, gives your zest for life DUROL is a sci
balanced tonic, specially for enrich the blood, stimulate a flagging revitalise tired nerves and generally up - make you feel really all
SPRING BACK TO LIFE WITF
 

l, lately? interested DUROL di DUROL x and iron you back ientifically nulated to g appetite, wake you ive again
- DURO.
GRAN 53 33 70

Page 9
பேராசிரியர் ஆ
B. Sc. (Lond.),
உயிரியல் இரச மருத்துவ இலங்கைப் பல்கலைக்
 

/7 α6 627 π. 6,7 /ή
அ. ஹ"வர் Ph.D. (Lond.). ாயனப் பகுதி ப் பீடம்
கழகம், கொழும்பு.

Page 10
繼腳 安邸 截然
好 默爾 并然 谢娜 期脚 配似
汾
? Źź
 


Page 11
L - வர் முரல்கிருரர்.
பல்கலைக்
பழைய சங்கமான ரான இளந்தென் அறிவு மணம் பர
இன்றைய லிலிருக்கும் இவ்ே யத்திற்கொரு 6 றில்லை. தமிழ் கூ றைய படைப்6
நம்புகிறேன்.
எமக்குப் பு இசை விழாக்கள் தமிழ்மொழிக்கா தவறு. மேலை நா யல் துறைகள் தவிக்கின்றன. த மன்றங்களும் இவ அவசியம். இவ்வ இலக்கியத் தென் தமிழ் மணம் கம!
சிரமங்கள் மலர் வெளியீட்டு
சண்முகராசா அ உடலாலும் உள்ள கத்தின் நன்றியை
இம் மலர் அவற்றுாடே இள டும். அது கண்டு

கழகத்தின் பழம் பெரும் சங்கங்களில் மிகப் ன எமது தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த மல றல் இவ்வருடமும் உங்கள் கரங்களிற்றவழிந்து ப்பி நிற்கிறது.
ஈழத்தில், தன் மொழிக் கல்வித் திட்டம் அமு வளையில், எமது வெளியீடு மாணவர் சமுதா வரப்பிரசாதமாயமையுமென்பதில் ஐயமொன் று நல்லுலகு, நாளையப் பட்டதாரிகளின் இன் பை ஏற்றுப் பாராட்டுதல் செய்யும் என
பழகிப்போன நா ட கங்கள், நாட்டியங்கள் விவாதங்கள் போன்றவை மட்டுந்தான் நாம் ற்றும் தொண்டெனக் கருதினல் - அது டுகளில் வளர்ந்துவிட்ட எத்தனையோ அறிவி இப்போதுதான் தமிழில் வளர்ச்சி வேண்டித் மிழாராய்ச்சி மகாநாடுகளும் தமிழ் வளர்க்கும் பற்றிற் கூடிய கவனம் செலுத்த வேண்டுவது கையில், எமது இளந்தென்றல் ஒரு வெறும் றலாகமட்டும் வீசாது பல்கலைத் தென்றலாகத் ழ்வது எமக்குப் பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது.
பலவறறை வெற்றிகரமாகச் சமாளித்து, இம் நிக்காக முன்னின்றுழைத்த ஆசிரியர் சி. க. வர்கள் பாராட்டப் பட வேண்டியவர். மற்றும் ாத்தாலும் இம் முயற்சிக்குதவியவர்களும் சங் பப் பெற உரித்தானவர்கள்.
போல மண்ணிற் பன்மலர்கள் பூக்கட்டும். ந்தென்றல் எழுந்தருளி அறிவு மணம் பரப்பட் தமிழ்த் தாயும் ஆனந்தம் கொள்ளட்டும்.
ஆ. முகம்மது நகியா

Page 12
HOME
For Beti
ANKA
DACKED
Wow Available for:- C
O
H
ln handy e.
Inquiries to:* ܩܝܣܚܩ
Marke
YON ER
Co

GARDENING
er Results
Use
POËTORRÀ
ERTZER
HELLES
NONS
OME GARDEN VEGETABLES
tonomical packs
ing Manager
AER CORPORATION
ΒοX 841,
blombo.
Telephone. 35823

Page 13
உள்ளே . . . .
ዚ$
காம் என்ன செய்தோம்? மலரின் கதை மானிடவியல்
பேராசிரியர் கிளாரன்ஸ் மலோனி மானி நியூ
சட்டவியல்
பூ, ஞானுகரன் சட்
க. திருவருள்வள்ளல் சட்
பொருளியல் பேராசிரியர் க. குலரத்தினம் புவி
கிலவியல்
ஆ. சிவராசா புவியிய
மருத்துவம் வைத்திய கலாநிதி எம். எஸ். உடற்றெ
தம்பிராஜா (விரிவுரையாளர்) வைத்திய
Dr. பி. ரி. ஜெயவிக்கிரமராஜா LD05չ
M. B.B.S. (Gostipub)
சோ. கேதீஸ்வரன்பிள்ளே வைத்தி
கல்வியியல்
&â. GaoGiņLDSOOT för M.A., Dip. Ed. தலைமைப்
கல்வி ெ தினை இலக்கியம் கலாநிதி க. கைலாசபதி on Gof(விரிவுரையாளர்) (தமிழ்
கலாநிதி பொ. பூலோகசிங்கம்
(விரிவுரையாளர்)
கலாநிதி கா. சிவத்தம்பி வித்தியோதய
(விரிவுரையாளர்)

டம் பொருள் பக்கம்
டவியல் பண்பாடு பன்மையும் பெர்சி கல்லூரி மாணவர்களும் -
டம் புதிய தேசங்கள் உதயம் - 7
டம் மணம் விளங்க
மனம் விலக்க - 49
பனை பற்றிய சில உண்மை யியல் களும் அதன் பொருளா
தார முக்கியத்துவமும் - 37
ஈழத்திலே இரத்த
absor - 41
புராதன மருத்துவத்தின் பக் கல்லூரி புதிய பயன்பாடுகள் - 46
த்துவம் மறைக்கக்
கூடாதவை - 34 பக் கல்லுரரி சுகாதாரம் இன்மையும்
குடற்புழுக்களும் - 123
பதிப்பாசிரியர் aur விஞ்ஞானம் s வளியீட்டுத் போதிப்பதற்குத் தமிழில் ாக்களம் விஞ்ஞான நூல்கள் - 119
பண்பியல் தமிழிலே தன்னுணர்ச்சிப் }த்துறை) unt L-656ir - 72
குமாரசுவாமி முதலியாரும் கோதாரி
நோயும் - 78
பல்கலைக்கழகம் முத்தமிழ் - மூலக்
கருத்துப் பற்றிய
ஒரு குறிப்பு - 108

Page 14
ஆ. முகம்மது யெகியா
சி. தில்லைநாதன் தய
Gச. யோகராசா t
b. சித்திரலேகா
இ. பாலசுந்தரம்
உதவி விரிவுரையானர்)
ඊර්‍ථිඛu
ஈஸ்வரன் செல்வராசா
வரலாறு
கலாநிதி S. பத்மநாதன்
(விரிவுரையாளர்)
உயிரியல்
கலாநிதி உமா கந்தையா
(விரிவுரையாளர்)
காலநிலையியல்
எஸ். பாலச்சந்திரன்
(விரிவுரையாளர்)
பிரபஞ் சவியல் (Cosmonautics)
Dr. H. Sjög JØLDT i
M.B.B.S. (Qasr (pib) பலதும் பத்தும் றுசீலா வல்லிபுரம்
ஆக்க இலக்கியம் (கவிதை, சிறுகதை) 'முருகையன்’ @H
யோ, யோன்பிள்ளை ம. சந்திரகுமார்
மா. சின்னத்தம்பி G நந்திமஹன்
பாத்திமா ஆரோக்கியசாமி
சங்கச் செய்திகள்
எமது சங்கம் தமிழர் நாகரீகத்தின் ஆரம்பம் பாலியற் கல்வி பாடசாலைகளிலே போதிக்க பயணம் - நாடகக்காட்சிகள் பேராசிரியருடன்.

சமூக விஞ்ஞானம்
Sழ் விரிவுரையாளர்
பேராத?ன
ானிட பண்பியல்
கட்டிடக் கலை
ரலாற்றுத் துறை
விஞ்ஞானம்
புவியியல்
மருத்துவம்
சமூக விஞ்ஞானம்
ல்வி வெளியீட்டுத்
திணைக்களம்
சமூக விஞ்ஞானம் மருத்துவம்
பாருளியற்றுறை
மருத்துவம்
கப்பட வேண்டும்
வெள்ளிப் பாதசரம்
ஒரு விமரிசனக்
கண்ணுேட்டம் - 94 ஈழத் தமிழ்ச் சிறுகதை
வளர்ச்சி - 99
20 ஆம் நூற்ருண்டு ஈழத் தமிழ்க் கவிதை
வளர்ச்சி - 86
பாரதியின் ஸ்வசரிதை
சில குறிப்புகள் - 104 கிழக்கிலங்கை இஸ்லாமிய தமிழ்ப்
புலவர்கள் - 113
சில கோவில்களின்
கதைகள் - 110
தமிழ்ச் சாசனங்களும் ஈழ வரலாற்று
ஆராய்ச்சியும் - 13
நுணுக்குக் காட்டிக்கு
அப்பால் - 138
வானிலை அவதானிப்
பும் எதிர்வு கூறலும் - 141
விண்வெளி சகாப்தம்
இலங்கையில் உதயம் - 148
புவியியல் ஒரு
விஞ்ஞானக் கலையா - 127
இரண்டாயிரம் ஆண்டுப் it 160pu 560
எங்களுக்கு - 52 புறப்படு மகனே . . . - 77 கட்டழகுப் பெட்ட கமே - 85 வேலிகள் சாய்கின்றன - 153 வேதனை 162 جسے சந்தேகம் سسه- I 66
69 H سسسس
சொற்பொழிவு விவாதம்
பேட்டி

Page 15
இந்
லுேம்
{
 

6I I SOI GJF İI GIGID?
னேயே நீ எண்ணிப் பார், அப்பொழுது ய நீஅறிவாய்' என்ருன் கிரேக்கத்து சாக்ரடீஸ், ஒரு கன்னத்தில் அடித்தவ ற்றக் கன்னத்தையும் காட்டு' என்ருர் ாதர். 'உன்னல் நன்மை செய்யமுடியாவி மையாகுதல் செய்யாதிரு'என்றனர் பெரி நான்' என்பதை என்று நீ உதறுகி /ன்று நீ சித் மயமாகிருய் என்கிறது/ ஆனல் இத்தனேயையும் அ நிந்த
தமிழ் என்று சாகிருேம். 'தமிழே எம் ன்று போர்க்குரல் எழுப்பினுேம், 'தமி நியாயமான உரிமையைத் தா' என்று நியாயங் கேட்கிருேம். ஆறல் எண்ரு து வாழ்வில் அந்தத் தமிழுக்கு என்ன ம்" என்று எம்மையே நாம் கேட்டி
பெருமைகள் பேசுகிருேம். மற்றவர்கள் ஈய்துவிட்டார்கள்’ என்று குறை காண் நமது நலனுடன் நேரடியாகச் சம்பந்தப் 60).&#uy@to உதட்ட7ெவில் மறந்து விடு ஆணுல், 'இதுவரை நாம் என்ன செய் “ன்று நமது மனச்சாட்சியைத் தட்டிக் தயங்குகிருேம். இன்று நம்மிடையே கப் பெரும் சாபக்கேடு இது.
(தொடர்ச்சி அடுத்த பக்கங்களில்

Page 16
5)Ir
6 Jnr (up th Fey
மொ
படுத்தி வழி தெய்வத்ை கொடுத்து
என்ன செ
கேட்டுக்கெ
&്,
அவன் அடிய சமயவாயில் சிலர் மறந் போது விக்
வர்கள்!
91)
வேண்டுமா சோறு பை utto Gio un பாளியின் 8 னைப் பற்றி
என்ற தானுல், த லவா? தமி

ப்புயர நீருயரும்’ என்ருளே ஒளவை! நாம் }கம் உயரும்போது நாமும் உயரமாட்டோமா?
ழியை அன்னையாக - தெய்வமாக, உருவகப் படும் மரபு நம்முடையது. அந்த அன்னையைத, உருவாக்கி, அழகுற அலங்கரித்து, உயிர் உலவ விடுபவர்கள் எவரோ அவர்களுக்கு நாம் ய்திருக்கிருேம்?" என்று என்ருவது தம்மையே ாள்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?
0வனுக்குச் செய்யும் தொண்டிலும் பார்க்க பவர்க்குச் செய்யும் தொண்டேஉயர்ந்தது என்று 0ாக அறிகிருேம். இருப்பினும் ஒன்றை நம்மில் து விட்டனர். அடியவன் புழுதியில் புரளும் கிரகத்திற்குப் பொற்கட்டிலில் பாலபிஷேகமா!
ம நம் நாட்டுக் கலைஞர்களை மதிக்க வேண்டிய
சிருஷ்டிகள் நம்மிடையே நிறையத் தோன்ற ஞல், படைப்பாளியின் சிந்தனை "வயிற்றுக்குச் டப்பது எப்படி" என்ற பாதையில் திசை திரும் "துகாக்க வேண்டியவர்கள் நாங்கள். படைப் சிந்தனை, சமூகத்தைப் பற்றியதே ஒழிய, அவ பதல்ல!
岛 您
ம் புதிய கலைகள்-பஞ்ச தச் செயல்களின் நுட்பங்கள் கூறும் ...மேன்மைக் கலைகள். ட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் மிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; த புகழுடைய புது நூல்கள் மிழ்மொழியில் இயற்றல் வேண்டும்”
அன்று கனவு கண்டான் பாரதி. அது நனவா வ தமிழில் புதிய கலைச் சொற்கள் பல வேண்டுமல் ழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கென்று

Page 17
பொது சொற்க இருக்க
கத்திற் அமைப்
கொண்
*"நம்மு கிடக்க
அற்பக்
உண்ை
ar 56 m,
தைக்
ab. Sopji
Lorr f5fG தேனுக இச் ச முயற்சி
θ, ώητρτ 2
GL 1603T G.
உருவெ அரசின
களாலு tip nr 5535
டைய
களைப்
இத்தை டத்தில் கத்தை 8Fialq. (Lu - இவற்ை
ளான்க ஒதுக்கி சிறிய ந

வான சில பண்புகள் இருப்பதுபோல, பிறமொழி 5ளைத் தமிழாக்கஞ் செய்யும் போதும் "பொதுமை’
வேண்டியது அவசியமல்லவா?
மிழ்க் கலைச் சொல் ஆக்கத்தில் ஈழத்திற்கும் தமிழ கும் இடையில் இன்னமும் ஒரு பொது விதி - பு வரவில்லை. இதையிட்டுப் பலர் எடுத்துக் ட முயற்சிகள் பலனடைந்ததாகத் தெரியவில்லை, டைய சிறு சச்சரவுகளும் கட்சி வேறுபாடுகளும் ட்டும்; நம் நாட்டையும் நாட்டுமக்களையும் மறந்து
கருத்துக்களைப் பின்பற்றிச் செல்லுவோமானுல், மயாகவே நாட்டுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த ாவோம்’ என்று ஜவஹர்லால் நேரு சொன்ன கருத்திற் கொண்டு, பெரிய நோக்கோடு நாம் க வேண்டும்.
டுத்து வரவிருக்கும் நாலாவது உலகத் தமிழ் டு யாழ்நகரில் நடக்கவிருக்கின்றது என்ற செய்தி க் காதில் வந்து இனிக்கின்ற வேளையிது. ஆகவே ந்தர்ப்பத்திலாவது, இதற்கான ஆக்க பூர்வமான களைத் தமிழர்கள் தொடர்ந்து மேற் கொள்ளுவார்
மது நாடு, நமது கலை, நமது படைப்பு-இவற்றைப் வண்டும் என்ற அவசியமான தாகம் ஓர் இயக்கமாக படுத்து ஆண்டுகள் பலவாகிவிட்டபோதிலும், அது ர் கடைக் கண் நோக்குப்பெற்று, வலுப்பெற்று மக் ம் ஒரளவாகுதல் மதிக்கப்பட்டு வருவது சமீபகால தான். இது வரவேற்கப்பட வேண்டிய-மகிழ்ச்சிய வேண்டிய ஒன்று என்பதுடன், நம் நாட்டுக் கலைஞர் புதிய பாதையில் திருப்பிவிடக் கூடியதுமாகும். கய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கால கட் , நமது மனத்தை வருத்தக் கூடிய - இந்த இயக்
ஆரம்பித்து வளர்த்தவர்கள் பெருமூச்சு விடக் - சம்பவங்கள் சில இன்று நடைபெறுகின்றன. ற, 'குறுகிய வாழ்வோடு முடிந்துவிடும் மாரிக்கா ள்" என்று நாம் அலட்சிய மனப்பான்மையோடு விடமுடியாது. ஏனெனில், சிறிய காரியங்களும் கழ்ச்சிகளும் தான் வரலாற்றையே மாற்றியமைத்

Page 18
திருக்கின்ற களும், சினி தையே இங் களை யை வி
தான் ஆப ஒதுக்கினே படைப்பில்
உற்பத்தி 6
"5.
به lهٔ
L 593 போட்டியி குடன் பை suprlyGLJ nr 8
"'கலைஞனே! நீ புகழை எதிர்பார்த்து உை அது உனக்குக் கிடைக்காமலே போகலாம். காக உழைக்கா தே உன் ஆத்மாவையே விற்று உன் உள்ளத்தின் நிறைவுக்காக, உன் ஆத்மாவி தத்துக்காக நீ கலைப்பணியில் ஒன்றி விடு; ! உன்னை மறந்து விடு. பிறகு ஒருவேளை நீ எதிர்ட புகழும் பொருளும் உன்னைத் தேடி வந்தாலும் வ.
- கவிஞன் கென்ய

ன. தரங்குறைந்த சஞ்சிகைகளும் கலையம்சங் மாவும் இன்று முளைவிடத் தொடங்கியிருப்ப கு நான் குறிப்பிடுகிறேன். வெளியேயிருக்கும் டப் பயிருக்கிடையிலே மறைந்திருக்கும் களை த்தானது. எவற்றையெல்லாம் கூடாது என்று மோ அவற்றை நம்மிடையே வளர விடலாமா? * தரம்தான் நமது கணிப்பேயொழிய அதன் ாது என்பதல்லவே!
து' என்ற மாயப்போர்வையைச் சற்றே விலக் கூறும் நல்லுலகம் இவற்றைச் சிந்திக்க வேண்
னிக்கை அல்ல, நமது இலட்சியம். அதிலும்பெரி குறிக்கோள். கலைஞர்களும் "ஆ! நமக்கினிப் ல்லைத்தானே" என்பதை மறந்து உயர்ந்த நோக் டக்க வேண்டும். வழிதவறிய ஒரு சிலரும் இனி ன்ற பலரும் இதை இனியாவது செய்வார்களா?
ழக்காதே;
பொருளுக் விடுவாய்.
உழைப்பில் irr print to Gae
. tb "ח עeז
ன் காக்ஸ்

Page 19
ஒரு ஒழுங்கு முறைப்படி லேயே சிந்தித்தேன்.
*"அந்தச் சமூகத்தி கள்-இவை அவன் கண் நாட்டின் அந்தஸ்து, த டைய பழைமை எத்தன் லது வெறும் வாய்ப்டே நாடு பொருள் வளம் நி அறிய ஆசைப்படுகிருன் யஞ் செய்து கொள்கிரு அந்த நாட்டின் சட்டங் யங்கள் மீது பற்று எழுப் (η εύν. . .
நானறிந்த அளவில் நினைக்கிறேன். அறிவும் கக் கூடும். இந்த முயற்சி றது என்பதை வாசகர்ச
'பல்கலைக் கழக கழகத்திற்கு வெளியேயு நாட்டின் தேவைக்கேற் தாங்கிவருவது இளந்தெ உசாவலுக்கும் உதவக் என்று ஒரு புதிய உருவ!
சிறுகதைகளைப் பெ
முதல் மூன்றைத் தொ ருேம்.
இந்த மலரிலே புதி மறைந்த பின்புதான் நீ சகாப்தத்திலே கெளரவ கத் தாபகரில் ஒருவரா களின் பேட்டிக் கட்டுை
 

மலரின் கதை
மனிதனுெருவன் வேற்று மனித சமூகத்தில் வாழ் தற்சாக வருகிருன் என்று வைத்துக்கொள்வோம். ந்த மனிதனைப்பற்றி அறியும் ஆவல் அவனை ஏற்றுக் காள்ளும் சமூகத்திற்கு உண்டாகிறது போல, தன் ாச் சூழ வாழும் சமூகத்தைப் பற்றியும் அந்த நாட் டப் பற்றியும் அறியும் ஆவல் அவனுக்கும் உண்டா றது.நியூட்டனின், "ஒவ்வோர்தாக்கத்திற்கும் எதிர்த் ாக்சம் உண்டு" என்ற பொதுவிதிக்கு அவன் மட்டும் திவிலக்கு அல்லவே! இந்த மலருக்குக் கட்டுரைகளை ட அமைக்க முற்பட்டபோது, நானும் இந்த ரீதியி
ல் வாழும் மனிதர்களின் பண்பாடு பழக்கவழக்கங் ணுக்குத் தெரிகின்றன. உலக அரங்கிலே அந்த கைமை என்ன என்று சிந்திக்கிருன். "அவர்களு கயது அது ஆதாரங்களின் மீது எழுந்ததா அல் பச்சா" என்ற கேள்வி அவனுள் எழுகிறது. அந்த றைந்ததா, எவற்றிற்கு அது பேர்போனது என்று . தனக்கு வருகின்ற நோய்களுக்கு அங்கே வைத்தி ன். அந்த நாட்டுக் குடி மக்களுள் ஒருவனுகும்போது கள் அவனைப் பாதிக்கின்றன. அந்த நாட்டு இலக்கி ம்போது அவற்றை அறிந்து கொள்ள ஆசைப்படுகி
, மலரமைப்பில், இது ஒரு புதுமையான உத்தி என அனுபவமும் குறைந்த ஒருவனிடம் பிழைகள் இருக் சி, எவ்வளவு தூரம் சரிவரச் செய்யப்பட்டிருக்கி களாகிய நீங்கள் தாம் அனுமானிக்க முடியும்.
ம 1 ன வ ரு க் கு ம ட் டு ம ல் ல, பல்கலைக் |ள்ளோரும் இலகுவில் பயன் பெறுவான் வேண்டி, ப பொதுவான, சிக்கலற்ற எழுத்தோவியங்களை 3ன்றல்' என்ற பழைய மரபுக்கு - ஆராய்ச்சிக்கும் frag. (11.351, 9/5fr6hugil Referential as well as Popular ம் கொடுக்க முயன்றிருக்கிறேன்.
ாறுத்தவரையில், எமது பரிசீலனைக்கு வந்தவற்றுள் ரிந்தெடுத்து வரிசைக்கிரமமாகப் பிரசுரித்திருக்கி
ய பகுதி ஒன்றினைச் சேர்த்திருக்கிறேன். "ஒருவன் னைவு கூருதல்’ என்ற நிலைமாறியுள்ள இன்றைய வ பேராசிரியராக, தமிழ்ச் சர்வகலாசாலை இயக் க வாழும் பேராசிரியர் பி. கே. சண்முகம் அவர் ரை வெளியாகிறது. - நந்திமஹன்

Page 20
ஓர் ஈழத்து அல்லது இந்திய, தமிழனுடைய ஆங்கிலம் எப்படி இரு கும் என்று எந்த ஆங்கிலேயனும் இ நாளில் ஆச்சரியப்படுவதில்&ல. ஏெ னில், அது சகஜமான ஒன்று. ஆணு5 அமெரிக்கத் தமிழ் எப்படியிருக்கும் ஆசையையும் ஆவ&லயும் கிளறிவிடு கேள்வி இது. இதனேக் கருத்தி கொண்டு, தமிழ் நாட்டில் சிலகால வாழ்ந்த இக்கட்டுரையாள7ர் எழுதி வற்றை கூடியவரையில் மாற்றமில்லாது அப்படியே கீழே தருகிருேம். மேற் நாடுகளில், இன்று "சூடாக' இரு கின்ற விடயத்தைப் பற்றிய சுை யான கட்டுரை இது.
 

மானிடி வியல்
IGIÖILIT LIGI6OIDULID கல்லூரி மாணவர்களும்
திற்காலிக வாலிபர், உலகத்திலுள்ள வெவ்வேறு பண்பாடுகளில் எவ்வாறு மாறு கிருர்கள் என்று, மானிடவியலாளராகிய நான் சில குறிப்புகள் எழுதவேண்டு மென்று இந்த மலர் பதிப்பாசிரியர் என் னைக் கேட்டார்கள். நான் பல ஆண்டுக ளாகத் தமிழ் தொடர்ந்து பேசாமல் இருந் தாலும், தமிழில் எழுதப் பிரயாசைப்படு வேன்.
உலகத்திலுள்ள நூற்றுக் கணக்கான மனித பண்பாடுகள்- அவைகளின் வடிவம், அவைகளின் மாறுதல், மானிடவியலாளர் (Anthropologists) Luigld;5 DSá) 605 g) that Lott கும். பொதுவாக, ஒரு குறிப்பிட்ட இடத் g66ör U 6ðist LurrG) ( Culture) Lorrigy5.My sig இரண்டு காரணங்கள் உண்டு.
பேராசிரியர் கிளாரன்ஸ் மலோனி
மானிடவியற்பீடம் நியு யெர்சி

Page 21
2 பண்பாடு பன்மையும்.
(1) இயற்கைச் சூழ்நிலை மாறுதல்
(2) பண்பாடு பேறுதல் (Acculturatio அதாவது இரண்டு அல்லது-பல் பண்பா கள் ஒன்றுக்கொன்று செ ல் வா க்கு செலுத்துதல்.
இயற்கைச் சூழ்நிலை மாறும்பொ தெல்லாம், அதன் மடியில் வளர்க்கப்பட் பண்பாடும் மாறும். அதே சமயம், பல பாடு மாறுகிற போதெல்லாம் அதனு டைய சூழ்நிலையும் பாதிக்கப்படும். இ படி பண்பாடு பேறுதலில், வெவ்வே பண்பாடுகள் தொடர்ந்திருக்கும் பொ தெல்லாம், தொடரும் ஒவ்வொரு பண்ட டும் மாறும்.
மனிதன் ஐம்பது இலட்சம் ஆண்டு ளாக இவ்வுலகத்தில் வாழ்ந்து, படைத் பண்பாடுகள் படிப்படியாக எளிதற்றதா வளர்ந்தன: உணவு திரட்டுதல், வேட்ை ஆடுதல், பூர் வீ க ப யி ர் செய்தல் வேளாண்மை செய்தல், நகரில் வாழுத ft 6i6OrgSAT Gir L 6ðist Lurr G (mass culture). 9) தந்தக் குறிப்பிட்ட சூழ்நில மாறுதலிஞ அல்ல, பண்பாடு பேறுதலினலேயே இ தகைய பண்பாடு அபிவிருத்தி ஏற்படல கயிற்று.
இலங்கை நாகரிகத்தின் வள ர் ச் யைப் பார்ப்போம். பூர்வீக மக்களுக்கு தனிப் பண்பாடு இருந்தது. பிறகு, வ மேற்கு இந்தியாவிலிருந்து வணிகர் வந்து சிலர் குடியேறிஞர்கள். இதைப் பார்த் பிராமணர், பெளத்தர், சமணர், கலைஞ மற்ற அறிஞர் இந்தியாவின் பல பகுதிக லிருந்து உங்கள் தீவுக்கு வந்தார்கே அவர்கள் செலுத்தின செல்வாக்கு இனி கையிலிருந்த மு ந் தி ய பண்பாடுகளை பாதித்து, வளப்படுத்தியது. நாளடைவி இலங்கை தன் நாகரிகத்தை இந்திய தென் கிழக்கு ஆசியா- இவைக்குச் செலு தியது. அராபியர், மற்ற இஸ்லாமிய யத்தவர், புதுப் பண்பர்ட்டைப் புகுத் னர். என்ருலும், இலங்கையில் இதிெ லாம் ஒரே திரள் பண்பாடாகக் கல. வில்லை. மாரு க கண்டி சிங்களவர், தாழ்

a Grafsir Gis a G5 roof?
η)
g
:
:
பூமி சிங்களவர், யாழ்ப்பாணத் தமிழர்,
முஸ்லிம் தமிழர், மற்ற பண்பாடுகள் ஆகி யவையாக நிலைநின்றன. மேலும் ஒவ் வொன்றிலும் பல ஜாதிகள் காணப்பட் டன. ஒவ்வொரு குழந்தையும், தான் வ்ளர்க்கப்பட்ட குடும்பத்தில் இருந்து தன் பண்பாட்டின் பழக்கவழக்கங்களை தான்
பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை
அறிந்தது.
ஆணுல், தற்காலத் தலைமுறையில் திரள் பண்பாடு ஆ ன் டு க் கு ஆண் டு
வளர்ந்துகொண்டு போகும். உலகத்தில் எந்த மக்களும் இதிலிருந்து தப்பிக்
கொள்ள முடியாது. முன்னதாக இருந்த நூற்றுக்கணக்கான தனி வாழ் க்  ைக முறைகள் ஒன்றையொன்று ஊ டு ரு வி ச் செல்வாக்குச் செலுத்தும் பொழுது, திரள் பண்பாடு பலப்படும். உலகத்தில் இதுவரை காஞத இந்த நிலைமையில், இலங்கை வாலிபரும், அமெரிக்க வாலிபரும் சிக்கிக் கொண்டுள்ளனர்.
குடும்பத்தின் நடத்தை அல்ல, பண் பாட்டின் நடத்தையும் அல்ல, நவீன பட் டின வாழ்க்கையைப் போன்ற நடத்தை யின்படியே என் வாழ்க்கையைக் கழிப் பேன் என்று அநேகர் சொல்லுகிருர்கள். சரி, சொந்த விருப்பம் என்று விட்டுவிட லாம். ஆஞல் அதற்காகக் கைவிட வேண் டியவை என்ன என்று தெரியுமா? குடும் பம், குலம், ஜாதி, பண்பாடு-இவைகளின் அடிப்படையான ஆதாரம் ஆகியவையே, இத்தகைய தனிப்பட்ட நபர், திரள் பண் பாட்டில், சிறிய கல்லொன்று அரிபடுகின்ற மணலில் இருக்கிறது போல, அலைக்கழி வதை எதிர்பார்க்கலாம்.
உலகத்தில் இன்று பரவுகின்ற திரள் பண்பாட்டின் வளர்ச்சிக்கு பல காரணங் கள் உண்டு. அமெரிக்காவில் இப்பொழுது கல்லூரியில் படிக்கிற மாணவர்கள் சிறுவய திலே தொடங்கி தொலைக்காட்சிப் பெட் q65) u" (Television) 1rri di Sairspari. (pi5 திய எந்தத் தலைமுறைக்கும் இல்லாத வாய்ப்பு இது. இப்பொழுது படிக்கிற தலை முறையை "தொலைக்காட்சித் தலைமுறை எனலாம், கல்வியை அடைவதற்கு இது

Page 22
–tirus 47G. L/6ör sououy où.........
. து. என்ருலும், இப்படிப்பட்ட கல்வி பீ விளைவு என்ன? நியூயார்க்கிலிருந்து (-\e:r Work) seó)GLITrf 6ðflusr (California) வரை 3000 மைல் தூரத்திற்கு ஒரே கலாச் சாரம், ஒரே பண்பாடு, வளர்ந்துவிட்டது. இதனுலேற்பட்ட விளைவுகளில் ஒன்று. உண் மையாக, பல பண்பாடுள்ள தேசம், பல மொழிகளுள்ள தேசம், பல ஜாதியுள்ள தேசம் செழிப்பான தேச மாயிருக்கிறது. அது மாத்திரம் அல்ல, எந்த தேசத்திலும் பல கலாச்சாரங்கள், வேறுபட்ட மனிதர் கள். ஒன்றுக்கொன்று துரண்டாவிட் டால் (Stimulating) அல்லது அயல் நாட்டி லிருந்து பண்பாடு பேறு கிடைக்காவிட் டால், அந்தத் தேசம் சாக ஆரம்பிக்கும். இதுவரையில், அமெரிக்காவில் ஒரே மொழி, ஒரே பண்பாடே இருந்தாலும், உலகத்தின் மற்ற நாடுகளிலிருந்து எங்கள் நாட்டுக்குச் செல்வாக்கு செலுத்தப்படு கின்றது.
எவ்வளவு விருப்பம் இருந்தாலும், வர லாற்றுக் கடிகாரத்தைப் பி ன் ஞ க த் திருப்ப முடியாது. இந்நிலையில் எப்படி வாழ்வது என்று பலர் சிந்திக்கிருர்கள். ஒரு சிலர், இதுவரையில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியை இன்னும் காண விரும்பி, ஓயாமல் வேலைசெய்து சம் பாதிக்கிறர்கள். வேறு சிலர், குறைந்த பொருளாதார வசதிகளே போதும் என்று சொல்லி, சிறு பண்ணை - வாழ்க்கையை விரும்பி, பட்டினத்து வாழ்க்கையைக் கை விட்டு விடுகிருர்கள். வேறு சிலர், என்ன செய்வதென்று தெரியாமல், என்ன தொழிலில் ஈடுபடுவது என்ற முடிவுக்கு வர முடியாமல் நேரத்தை வீணுக்குகிருர்கள்.
அமெரிக்காவில் பல 'ஹிப்பிகள் உண்டு என்று ஆசியா மக்கள் நினைக்கிருர் கள். ஆனல், ஹிப்பி என்னவென்று எனக் குத் தெரியாது. இங்கே, "நான் ஹிப்பி’’ என்று யாரும் சொல்லமாட்டார்கள். அது வேஷமா? மனப்பான்மையா? வீட்டை விட்டு அலைதலா? கூட்டு வாழ்க்கையா? சில வாலிபர் , தாடி, நீண்ட மயிர் வளர்க் கிருர்கள். அதனுல் என்ன? எனக்கும் தாடி உண்டு. அமெரிக்காவில் இது புது முறை. இலங்கையிலோ பழைய முறை! ஒரு சில

கிளாரன்ஸ் மல்ோனி 3
மாணவர்கள் கஞ்சா சாப்பிடுகிருர்கள். அதுவும் என்ன? ஆசியா, மத்திய கிழக்கு தேசங்களில் இதைக் கா ண முடி யா த தேசம் எது? அமெரிக்காவிற்கு இது புதி யது; ஆசியாவிற்கு பழையது. ஹஷிஷ் , பங் போ ன் ற பொருட்களை இந் தி யா வில் 3000 ஆண்டுகளாகச் சாப் பிட்டு வந்தார்கள். சில வாலிபர், கலியா ணத்துக்கு முன் கா த லி க் கி ரு ர்கள். உண்மைதான். இலங்கையில் எந்தக் கிரா மத்தில் இது நடக்காது? வேறு சிலர், பட் டின வாழ்க்கையைக் கைவிட்டு சிறு பண் ணைகளில் எளிமையாக வாழ விரும்புகிருர் கள். இங்கும் அங்கும் கூட்டு வாழ்க்கையில் ஈடுபடுகின்ருர் கள். அதனுல் என்ன? தென் ஆசியாவில் முக்கால்வாசி மக்கள் பண்ணை களிற்ருனே பிழைக்கிருர்கள். அரசாங்கங் கள் அவர்கள் மத்தியில் கூ ட் டு ற வு முறையை ஏற்படுத்தித் துணிவூட்டுகிறதில் லையா? எங்களுடைய 'திரள் பண்பாடு” நிலவும் சமுதாயத்தில் திருப்தியடையா மல், ஏதாவதொரு புது வாழ்க்கை முறை யைத் தேடுகிருர்கள். ஹிப்பி என்கிற சொல்லுக்கு அர்த்தம் கிடையாது:
அமெரிக்க மாணவர்களில் அநேகர் கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக, கல் லூ ரிப் படிப்பை விட்டு பல அயல் தேசங் களில் சுற்றுப்பிரயாணஞ் செய்கிறர்கள். எந்த இலங்கை மாணவன், மாணவி, தரு ணம் கிடைத்தால், இப்படி செய்ய விரும்ப மாட்டார்? இவ்வாருகப் பிரயாணம் செய் யும் மாணவர்கள் பல பண்பாடுகள், பல சமுதாய ஒழுங்குகள் பல மனப்பான்மைகள் பல கொள்கைகள், முதலியவற்றை அனு பவிக்கிருர்கள். பெரும்பாலோர், தாங்கள் பெரியவர்கள் அல்லது தங்களுக்கு எல்லா விதமான பொருள் வசதிகளும் தேவை என்று நினைக்காமல், இங்கும் அங்கும் அலை கிருர்கள். இவர்கள் ஹப்பிகள் அல்லர், இவர்களில் பெரும்பாலோர் ஏழை மாண வர்கள். இந்தத் தலைமுறைக்குமுன் மேற்கு தேசங்களிலிருந்து ஆசியாவுக்கு வந்த பிர யாணிகள் எல்லாரும் பெரியவர்கள் பணக்காரர்கள் என்று சொல்லலாம். எதையோ சொல்லிக்கொடுக்கவோ ஏதோ வாங்கவோ அல்லது விற்கவோ அல்லது

Page 23
* பண்பாடு பன்மை/ம்.
ஆளவோ வந்தார்கள். ஆளுல் இ பொழுது ஆசியாவுக்கு வரும் வாலிபர்க ஆசியாவின் கலாசாரத்தை ருசி பார் வேண்டும் என்று பிரயாணம் பண்ணுகிரு கள். அவர்கள் ரூ. 50/- வாடகை உள் ஹோட்டல் அறையைக் கே ட் கா ம ரூ. 3/- மாத்திரம் உள்ள அறையை விரு வார்கள். அவர்களில் அநேகர், ரயில் நீ யத்தில், சாமான் தூக்கிகள் உதவிய லாது, தாமே முதுகில் கட்டி யாருக்கு துட்டு கொடுக்காமல், மூன்ருவது வகு ரயில் பெட்டியில் ஏறுவார்கள். யாரே இது கேவலமான நடத்தை என்று குை சொன்ஞல், இது ஜனநாயக முறை என் இந்தப் பிரயாணிகள் பதில் சொல்லுவ
கள்.
ஒரு விதத்தில் இது எல்லாம் நல்ல இதன் மூலமாக ஆசிய மக்கள் அமெரிக் வைப் பற்றிய தங்கள் தப்பிதமான அட் பிராயங்களைத் திருத்திக்கொள்ளலா மேலும், இவ்வாரு?க பல நாடுகளில் பு யாணம் பண்ணுகிற மாணவர்களுக்கு ச லூரியில் உட்காருவதை விட மிக பி யோசனமான கல்வி கிடைக்கிறது.
என்ருலும், போக்குவரத்து மேலு மேலும் அதிகப்படும்பொழுது பண்பா கள் கலக்கும். உலக பிரயாணி தன் குடு பம், குலம், ஜாதி, மதம், கொள்!ை இவைகளைக் கொஞ்சம் கொஞ்சமா கைவிட்டு, இவைகளுக்குத் தக்கபடி நட காமல், முழு உலகத்துக்கும் பொதுவா பிரஜையாகமாற விரும்புவான். உலகமெ கும் பொதுக் குறிக்கோள்கள், பொதுவங் அமைப்பு, பொது மேற் கல்வி அமைப்ட ஓர் அளவுக்கு பொது மொழி இருக்கு காலம் வந்து பண்பாடு வேறுபாடுக குறையும். நான் நினைக்கிறபடி, இது ந டமே.
போன நூற்றண்டில், பல நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்கு வந்: குடியேறிஞர்கள். இத்தாலியர், ஜர்ம எ யர், ரஷியர், சீனர் ஆகிய இவர்கள் எ கள் கடற்கரையில் இறங்கி எங்கள் சமுத யத்தில் பங்கெடுத்தார்கள். அவர்கள் பி ளைகள் தாய் மொழியை மறந்து, அமெரி

கிளாரன்ஸ் மலோனி
3ள்
க்க
r Ꭷhr
ல் , Ֆւ!
பில்
காவின் பழக்க வழக்கங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டார்கள். அந்தச் சமயத் தில் அமெரிக்காவின் பொதுக் கொள்கை என்னவென்றல், "யாராணுலும் இங்கே வரலாம், எந்த பண்பாடு ஆஞலும் சீக்கிர மாய் அமெரிக்க வாழ்க்கையில் பங்கெடுக் கலாம்'. இந்த தேசம் கறிப்பாத்திரம் போன்றது. பாத்திரத்தில் வைக்கப்பட்ட ஒவ்வொரு மசாலைச்சாமானும் ,ஒவ்வொரு துண்டு காய்கறியும், த ன் கு ண த் தை இழந்து, பாத்திரத்திலுள்ள முழுக்கறியை யுமே பாதிக்கும்.
ஆஞல் எங்கள் நாடு மிகப் பெரிய நாடானதினல், பல பகுதிகளில் பல கிளைப் பண்பாடுகள் செழித்தன. இந்த நூற்ருண் டில் இந்தக் கிளைப்பண்பாடுகள் தேசத்தின் பொதுவான பண்பாட்டுடன் கலந்தன. வானெலி, மோட்டார்வண்டி, பொதுக் கல்வி இவைகளின் மூலம் எங்கள் திரள் பண்பாடு பலப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிறகு தொலைக்காட்சி வற் தது. இப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றிரண்டு உண்டு. விஸ்தாரமான தெருக்கள் அமைக் கப்பட்டு இருக்கிறதினுல் காரில் 3000 மைல் அகலமுள்ள கண்டத்தைக் கடந்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் மறு கரையைச் சேரலாம். இப்பொழுது ஒவ் வொரு சிறு பட்டினத்திற்கும் விமானப் போக்குவரத்து உண்டு. ஒரு சில பத்திரி கைகள் தேசம் பூராவும் செல்லுகின்றன. இன்றைக்கு 70 லக்ஷம் வாலிபர்கள் கல்லூ ரியில் படித்துக்கொண்டிருக்கிருfகள். இந் நிலையில், வெவ்வேறு கலாசாரங்கள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு பண் பாடுகள் எப்படி நிலைத்திருக்க முடியும்? எங்கள் தேசத்தின் இரண்டு முக்கியமான கொள்கைகள், மாறுதலும், வளர்ச்சியும், எனலாம். 1960 வரைக்கும் அப்படித்தான்
இருந்தது.
இந்த நாட்களில் அநேகர் பு ைராலோ சனை செய்கிருர்கள். இன்றுள்ள பொருளா தார வளர்ச்சி, பண்பாட்டு மாறுதல், பண் பாடு வளர்ச்சி திருப்தி அளிக்காததினுல், ஒரு சிலர் எங்கள் நாட்டின் குறிக்கோள் களைப் பார்த்து பின்வாங்கி, பொதுவான

Page 24
பண்பாடு பன்மையும்.
சமுதாயத்திலிருந்து விலகி, வேறு வாழ்க் கையைக் கடைப்பிடிக்கிருர்கள். நீக்ரோக் கள், ஸ்பானியர்கள், பூர்வீக ஜாதிகள், யூதர்கள், மற்றும் அநேகர், இந்த திரள் பண்பாடு போதாது என்று சொல்லி, பண் பாடு பன்மை தேவை என்பார்கள். பண் பாடு பன்மை, கலாசார வேற்றுமை, வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு கொள்கைகள், மதங்கள், ஜாதிகள், இவைகளுள்ள நாடு தான் செழிப்பான நாடு, என்பார்கள். இந்தியா, இலங்கை போன்ற தேசங்களில் பண்பாடு பன்மை இருக்கிறதினுல், இவைகள் அதிர்ஷ்ட முள்ள தேசங்கள் என்பர். சில வாலிபர், தாங்கள் பங்கெடுக்கக்கூடிய வித்தியாச மான ஜாதி, கலாசாரம், பண்பாடு இல் லாததினுல், எப்படியாவது திரள் பண் பாட்டிலிருந்து விலகவேண்டும் என்று சொல்லி, பட்டிக்காட்டிலோ, அயல் நாட் டிலோ, கூட்டுவாழ்க்கையிலோ புதிதாக வாழ்க்கையை ஆரம்பிக்கிருர்கள்.
என்ருலும், நான் படிப்பித்த நாலைந்து சர்வ கலாசாலைகளில், 100க்கு 90 மாண வ* கன் உனக் கத்தோடு படித்து வந்தார் கள சமுதாயத்தின் மேன்மையான குறிக் கோள்கள், அவர்களின் பெற்றேர் நம்பும் சகலவிதக் கொள்கைகள், தாங்க ள் படித்த மதங்கள், முதலியவற்றை முழு தாக த. பாவிட்டாலும், ஓர் அ : கு நவீன மனப்பான்மையுடன் சமாளிக்கிருர் கள். இப்பொழுதுள்ள கல்லூரி மாணவர் களின், மிகப் பெரிய பிரச்சிகின என்னவென் ரு ல், என்ன தொழிலைத் தேர்த்தெடுக்க வேண்டும் என்பதே. உலகப் பிரயாணம் பண்ணி, அதிகமாய்ப்படித்து உலக அனுப வங்களை அனுபவித்து பின் குறிப்பிட்ட ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பது மிகக் கடின மானது. இங்கே 20,000 வித்தியாசமான தொழில்கள் உண்டு பெரும்பாலோர், பெற்ருேர் பார்க்கும் தொழிலில் ஈடுபட விரும்புகிறதில்லை.

கிளாரன்ஸ் மலோனி 5
அமெரிக்காவில் வந்த திரள் பண்பாடு உலகமெங்கும் இன்று பரவ ஆரம்பித்திருக் கிறது. இலங்கையிலும், போக்குவரத்து அதிகப்பட்டுள்ளது; வானுெவியையும் எங் கும் கேட்கலாம். ஒவ்வொரு பிள்ளைகளை யும் பள்ளிக்கூடத்தில் குறிப்பிட்ட பாடங் களை குறிப்பிட்ட குறிக்கோளுடன் படிக் கக் கட்டாயப்படுத்தப்படுகிருன். இதனல் பண்பாடு வேற்றுமைகள் குறைய இட முண்டு
மேலும் இரண்டாம் உலக யுத்தத்
திற்கு பிறகு இலங்கையில் ஜனத்தொகை இரண்டுமடங்கு பெருகியது! இதுதான் உங் கள் மிகப்பெரிய பிரச்சனை. ஜன நெருக்கடி காரணமாகப் பொருள் பற்ருகுறை,வேலை இல்லாத திண்டாட்டம், திரள் பண்பாடுஇவைகள் நாளுக்கு நாள் வளரும். அநே கர், பட்டினத்தில் வசிக்காமலிருந்தாலும் அவர்கள் நினைக்கிற நவீன பட்டின வாழ்க் கையைப் பின்பற்றித் தமது முந்தின குறிக் கோள்களே, மனப்பான்மையை, குடும்ப அமைப்பை, ஆடைகளை, மொழியைக் கைவிடுகிருர்கள். ஜாதி வேற்றுமை வேண் டாம் என்றும், குடும்பத்துக்குக் கீழ்படிய கூடாது என்றும், மற்ற எல்லா நண்பர் களைப் போல் இருக்க வேண்டும் என்றும் கல்லூரி மாணவர்கள் நினைக்கிருரர்கள். சரி தான். ஆஞல், ஒன்றை மறந்து விட்டோம். திரன் பண்பாட்டில் தனி ஆள் நிற்பது மணலில் சிறு கல் ஒன்று தனியக்கி டப்பது போன்றது.
ஆகவே, பன்மைப் பண்பாடுகளையே தானும் காண விரும்புகிறேன். தமிழர்,சிங் களர், மற்ற பண்பாடுகளைச் சேர்ந்தவர் கள், அந்தந்த பரம்பரை சொத்து அந் தந்த மொழி, சமுதாய அமைப்பு, கலா சாரம், இவற்றைக் கவனமாகப் பேணி வைத்தால் தான், இலங்கை நாகரீகம் செழிப்பாக நிலைநிற்கும்.

Page 25


Page 26
LI E ULI G高呼血西血
9 j5 II
திற்போதுள்ள நிலையில் பு தி ய தேசங்கள் கண்டுபிடிக்கப்படக்கூடிய சாத் தியங்களெதுவுமில்லை. ஆயினும், தற்போ துள்ள இருதேசங்கள் ஒரு தேசமாக இணை வதாலோ அன்றி ஒரு தேசமாக இருந்த ஒரு பிரதேசம் பல கூறுகளாக்கப்பட்டுத் தனித்தேசங்களாக இயங்குவதன் மூலமோ புதியதேசங்கள் உதயமாகலாம். அண் மைச் சரித்திரத்தில் இந்தியா - பாகிஸ் தான் இரு தேசங்களாயினமை ஒர் உதார ணமாக அமையும். தற்போது அரசியல ரங்கில் வங்காள தேசத்தைப் பற்றிய பிரச் சனை சர்ச்சைக்குரிய ஒரு விடயமாகவுள் ளது. எந்நிலையிலும் பாகிஸ்தான் பிரிக்கப் படமுடியாத ஒன்று என்று பூட்டோ அறி வித்துள்ளார். ஆயினும், இந்தியா அதனை ஒரு தனித்தேசமாக அங்கீகரித்துப் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது போன்ற சந்தர்ப்பங்களில் மற்றைய *தேசங்களைப் பொறுத்தவரையில் நாடுக ளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த எழுந்த அனைத்துலகச் சட்டம் எவ்வகை யான கடமைகளை சுமத்தியுள்ளது என்ப தனையும் இந்நிலைகளில் ஒரு நாட்டின் அங்ே காரம் பற்றித் தொடர்பான சட்டங்க ளையும் இக்கட்டுரை ஆராயும்.
அனைத்துலகச் சட்டத்தின் அடிப்படை விதிகள், ஒரு 'நாடு’ என்பது சில தகைமை களைப் பெற்றிருத்தல் வேண்டுமென்று குறிக்கின்றன. அவையாவன:
(அ) ஒரு வரையறுக்கப்பட்ட நிலப் பிர
தேசம் இருத்தல் வேண்டும்.

பூ ஞானகரன்
(ஆ) ஒரு நிலையான குடிசனமிருத்தல்
வேண்டும்.
(இ) அக்குடிசனம் பொதுவாகத் தமது பணிவைக் காட்டுகின்ற ஒரு திட மான அரசாங்கம் இருத்தல் வேண் டும்.
(ஈ) அவ்வரசாள்கம் ஏனையநாடுகளுடன் உறவுகளைக் கொள்ளக்கூடிய தகுதி பெற்றதாக இருத்தல் வேண்டும்.
அடிப்படை விதிகள் இவ்வாரு பின், எழுகின்ற பிரச்சனை யாதெனில் மேற் கூறிய நான்கு அம்சங்களையும் கொண்டு விளங்குகின்ற ஒரு 'தாபனம்" தாளுகவே "நாடு" என்கின்ற நிலையையெய்துகின்றதா? அன்றி ஏனையதாடுகளின் அங்கீகாரம் தான் அதற்கு அந்த அந்தஸ்தை அளிக்கின்றதா என்பதாகும். இது பற்றி சட்டவல்லுநர் கள் கருத்தளவில் பிரிவுகொண்டு விளங்கு கின்றனர். ஒரு சாரார் பிரகடனத் தத்து வம்? என அழைக்கப்படும் விளக்கத்தின் படி, மேற்குறிப்பிட்ட நான்கு தேவைக ளும் பூர்த்தி செய்யப்பட்ட மறு நிமிடமே ஒரு தேசமுதயமாகின்றதென்றும், ஏனைய நாடுகள் அங்கீகாரம் வழங்கினவா இல் லையா என்ற சர்ச்சைப்பாட்டிற்கிடமின்றி அது அந்நிமிடமே, அனைத்துலக அரங்கில் தகைமையுடைய நாடென்ற ஒரு அந்தஸ்
1. Recognition
2. Declaratory theory

Page 27
8 / ھaتح தேசங்கள் உதயம்
தையும் பெறுகின்றதென்றும் வலியுறுத் கின்றனர். இவர்களின் கருத்துப்படி ஏனை நாடுகளின் அங்கீகாரம் வெறும் "அரசியற் செய்கைகளுள் ஒன்றேயொழிய, ஒரு புதி தேசத்தின் சட்ட அந்தஸ்தை எவ்வை யிலும் பாதிக்கக்கூடியதல்ல என்ற முடி பெறப்படலாம். இத்தத்துவம் ந ை! முறையில், ஆதரவைப் பெருமளவில் பெ றிருக்கின்றது. உதாரணமாக, இஸ்ரே 3 அரசியற்காரணங்களிற்காக அராபிய தேசங்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்க தவறிய போதும் இஸ்ரேலின் அந்தஸ்ை மறுத்துரைப்பார் யாருமிலர். இதுபே லவே சீனவை இங்கிலாந்தும் அரசிய காரணங்களிற்காக அங்கீகரிக்கவில்லை மேலும் சலிமோவ் எதிர் நியூயோர்க்கி ஸ்டான்டர் ஒயில் கம்பனி4 போன்ற தீர் புக்களிலும்.இவ்விளக்கம் அங்கீகரிக்கப்பட டுள்ளது. அத்துடன் பிரையலி, பிறிக்ஸ் ஸ்டாக்" போன்ற தலை சிறந்த அனைத்து கச் சட்டவல்லுனரும் தமது ஆதர6ை இத்தத்துவத்திற்கே வழங்கியுள்ளனர் மேலும் ஒரு தேசம், மற்ருெரு தேசத்ை அங்கீகரித்தவுடன், அவ்வங்கீகாரம் அளி கப்படும் நேரத்தினின்று மட்டுமன் அதற்கு முன்னரேயே அதாவது, அங்கீகரி கப்படும் தேசம் முன்னர் குறிப்பிட்ட நான்கு தகைமைகளையும் எப்போ கொண்டு விளங்கிற்ருே, அந்த நேரத் லிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத படும் என்று மற்ருெரு விதி குறிக்கின்றது இவ்விதியும், ஏனைய தேசங்களின் அங்கீக ரம் வெறும் அரசியல் சம்பிரதாயமேயன் வேறெதுவுமில்லை என்ற கூற்றை ஆதரி கின்றது. ஆனல் டினுேகோ கொன்ெ ஷன் வழக்கில் மற்றைய தேசங்களில் அங்கீகாரம் அளிக்கப்படாமை, மே கூறிய அத்தியாவசிய தகைமைகளைப் பெ வில்லை என்பதைப் பெருமளவில் உணர் தும் என்று குறிப்பிடப்பட்டது. இந்த த துவத்திற்கெதிரான கருத்தைத் தெரிவி பவர்கள் முக்கிய இரு காரணங்களைக் காட டுவர். அவையாவன:
3. Legal status. 4. Salimott & Co Vs St:
6. Briggs. 7. Starke.
9. Constitutive theory

A. ஞானகரன்
J
1. மேற்கூறிய தகைமைகளை எப்போது ஒரு "தேசம் பெற்றுவிட்டதென்பதை நிர்ணயிப்பது சாத்தியமானதொன் (ຄ)
2. சில தீர்ப்புக்களில் இது நிராகரிக்கப் பட்டுள்ளது. ஆனல், இத்தீர்ப்புக்களை ஆராய்ந்தால், உண்மையில் தேவை! யான தகைமைகளைக் குறிப்பிட்ட நாடுகள் பெற்றிருக்கவில்லை. எனவே இத்தீர்ப்புக்கள் பிரகடனத் தத்துவத் தை நிராகரிப்பதற்கு வலுவுள்ள கார ணம் என்றுரைத்தல்முடியாது.
இதற்குமாருக அமைப்புத் தத்துவம் என்பதன்படி, ஒரு நாட்டிற்குத் தேசம் என்ற அமைப்பை-தகைமையை அளிப்பது ஏனைய தேசங்களின் அங்கீகாரமே. இதனு டைய பெருங்குறை யாதெனில், ஒரே தேசம் சில நாடுகளைப் பொறுத்தமட்டில் ஒரு "தேசமாகவும் வேறுசில நாடுகளைப் பொறுத்தமட்டில் "நாடு’ என்ற அந்தஸ் தைப் பெருத ஒரு தாபனமாகவும் விளங் கும் திருப்திகரமற்ற நிலை நிலவும். இப் பிரச்சனைக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒரு ஏற்ற வழியை அமைக்கவில்லை. ஏனெனில் அதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு தேச மும் மற்றைய தேசங்களினல் அங்கீகரிக் கப்பட வேண்டுமென்ற ஒரு வழி குறிப் பிடப்படவில்லை. இத்தகைய ஒரு விதி இருப்பின் ஐக்கிய நாடுகள் சபையின் அங் கத்துவத்தின் மூலம் ஒரு தாபனம் நாடாகி விட்டதென்ற முடிவு சாத்தியமாகலாம்,
எனவே புதியதேசங்களைப் பொறுத்த மட்டில் நிலையான திடமான சட்டவரை யறைகளிலெல்லாம் பெருங்குறைபாடாக வு ள் ள  ைத நாம் அவதானிக்கலாம். லவுட்ட பக்ட்10 என்ற அனைத்துலக சட்ட வல்லுநர், குறிப்பிட்ட நான்கு தகைமைக ளும் நிறைவுபெற்று விளங்கின், ஒரு தாப னத்தை தேசமென அங்கீகரிக்கவேண்டிய ஒரு "சட்ட வழிக்கடமை" ஏனைய நாடு களிற்குண்டு என்று வற்புறுத்தியுள்
indard Oil Co of Newyork 5. Brierly
8. Tinoco Concession case
10. Lauterpacht.

Page 28
புதிய தேசங்கள் உதயம்
ளார். இக்கடமை அனைத்துலக நாடுகளின் சமூகத்திற்கு உடையதாகுமென்று விளக் கப்படுகின்றது- பிறவுண்லி12 என்னுமின்னு மொரு அறிஞர், “ஏனைய தேசங்கள் ஒரு "நாட்டை அங்கீகரிப்பது வெறும் அரசி பல் செய்கைதான். ஆளுல் குறிப்பிட்ட நான்கு தகைமைகளையும் ஒரு தேசம் பெற் றிருப்பின், ஏனைய நாடுகள், அந்நாட்டைப் பொறுத்தமட்டில் சில அனைத்துலகச் சட்ட விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்’ என வலியுறுத்தியுள்ளார். உதாரணமாக, அரபிய நாடுகள் இஸ்ரேலை ஒரு தேசம் என்று அங்கீகரிக்கின்றனவோ இல்லையோ அனைத்துலக அரங்கில் இஸ்ரேலை, அவர்கள் ஏனைய தகுதியுள்ள நாடுகளுடன் எவ்வாறு தமது நடவடிக்கைகளைக் கவனிப்பார் களோ, அதே முறையிலேயே நடத்த வேண்டும்.
முன்னர் குறிப்பிட்டவாறு, நான்கு தகைமை களையும் பெற்ற ஒரு "தேசத்தை" அ* கரிக்கும் கடமை இருக்குமாயின், இத்தகைமைகளைப் பெருத ஒரு தேசத்தை அங்கீகரிக்காது மறுக்கும் ஒரு கடமையும் உண்டென்பது தெளிவ்ாகும். இது ஒவ் வொரு நாட்டின் இறைமையையும் பாது காப்பதற்கு அவசியமான ஒரு விதியாகும். ஏனெனில் ஏனைய தேசங்களின் உள்நாட்டு விடயங்களில் தலையிடக்கூடாது என்று ஒவ்வொரு தேசத்தையும் அனைத்துலகச் சட்டவிதிகள் பணிக்கின்றன. வங் காளதேசத்தைப் பொறுத்தவரை இந் தியா, பாகிஸ்தானின் உள்நாட்டு விவகா ரங்களில் தலையிட்டுவிட்டதாகக் கருதமுடி புமா என்பது பற்றிய சர்ச்சை இந்த அடிப் படையில்தான் எழுந்துள்ளது. ஆணுல் ஒரு தேசத்தின் உள்நாட்டு விவகாரம் காலப் போக்கில் உள்நாட்டு விடயம் என்ற வரம்பைமீறி உலகநாடுகளின் தலையீடு ஏற் படக்கூடிய ஒரு அனைத்துலகப் பிரச்சனையா கவோ அல்லது குறிப்பிட்ட ஒரு பிரதேசத் தில் உள் ள தேசங்களின் உரிமைப் போ ரா ட் டங்க ளா க வோ மாறும் போது, ஏனைய தேசங்களது தலையீட் டைத் தடுக்கும் விதிகள் இல்லையென்றே
11. International Community

பூ. ஞானகரன் 9
கூறவேண்டும். வங்காளதேச சம்பவங்க ளைப் போன்ற சந்தர்ப்பங்களில் தாய் நாட்டைவிட்டுப் பிரியத்துடிக்கும் சேய் நாட்டை ஒரு தேசம் அங்கீகரிப்பது தாய் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலை யீடில் லாதிருக்கும் வண்ணம் செய்யப்படல் வேண்டும் என்பது அவசியமாகும். இலங் கையைப் போன்ற பக்கச்சார்பற்ற நாடு களை எதிர்நோக்கியுள்ள பிரச்சனையிது தான்.
மேலும், சட்டவரம்பிற்கு மீறிய அடிப் படையில் சட்டவிரோதமாக பலவந்தத் துடன் ஒரு நாடு அபகரிக்கும் நிலப்பிர தேசத்தை அந்நாட்டினது சொந்தம் என்று அங்கீகரிக்காக் கடமையொன்று முண்டு ஐக்கியநாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளைப்பொறுத்தவரை பலாத் கார முறையில் கைப்பற்றப்படும் பிரதே சங்களின் மீது அதிகாரத்தை, அப்பலாத் காரம் தற்பாதுகாப்புக்காகப் பாவிக்கப் பட்டிருந்தாலொழிய அங்கீகரிக்க மறுக் கும் ஒரு கடமையுமுண்டு. இக்காரணத்தி ஞலேயே 1947 ஜூனில் இஸ்ரேல் கைப் பற்றிய பிரதேசங்கள் சட்டவிரோதமாகப் .ெ , ப்பட்டவை என்று பல நாடுகள் இ7றுவரை திட்டவட்டமாகக் கூறுகின்
o6.
நாடுகளை அங்கீகரிப்பதை விட ஒரு அரசாங்கத்தை அங்கீகரிப்பதும் ஒரு சிக்க லான விடயமாகவேயுள்ளது. உதாரண மாக ஒரு சதியினலோ அல்லது புரட்சியின் மூலமோ ஏற்கெனவேயுள்ள ஒரு அரசாங் கத்தை வீழ்த்திப் பதவிக்கு வரும் நபர்க ளைக் கொண்ட அரசியலமைப்பை அங்கீக ரிப்பதா இல்லையா என்பது ஏனைய நாடுக ளைப் பொறுத்தவரை பெரும்பிரச்சனை யாகவே அமையும். இவ்வாறு தோன்றிய புதிய அரசாங்கங்களே இரஷ்யப் புரட்சி யின் பின்பும் சீனப்புரட்சியின் பின்பும் அத்தேசங்களில் ஆட்சி புரிந்தன. புதிய அரசாங்கத்தை அங்கீக ரி க்கு ம் போ து பொதுவாக ஏனைய நாடுகள் அவ்வரசாங் கம், நிலையாக இயங்கக்கூடிய தன்மையை
. . 12, Brownley.

Page 29
10 புதிய தேசங்கள் உதயம்
பும், மக்கள் கட்டுப்படும் வலுவையு கொண்டு விளங்குகின்றதா என்பதைே கருத்திற்கொள்வர். இவ்வகையான அங் காரம் பற்றிய விளக்கங்கள் டினிக்கே ஆபிற்றேஷன் வழக்கில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அ மெ ரி க் க போன்ற நாடுகள், "அனைத்துலக விதிகளி குக் கட்டுப்பட அப்புதிய அரசாங்க இசைகின்றதா’ என்ற ரீதியில் நோக் கின்றன. இதன் காரணமாகவே இதுவை காலமும் சீனுவை அங்கீகரிக்க மறுத் நாடுகள் சீனு அனைத்துலக விதிமுறைகளி குக் கட்டுப்பட மறுக்கும் காரணத்தி லேயே தாமவ்வாறு செய்வதாக வலியுறு
தின .
போதுவாக சட்டரீதியில் அங் காரம்12A அளிக்கப்படுவதற்கு முன் ஒ தேசம் பல தேசங்களதும்சமரச ரீதியான அங்கீகாரத்தைப் பெறும் . சமரச ரீதியா அங்கீகாரத்தை அளிக்கும் ஒரு நாடு, அங் கரிக்கப்படும் ஒரு தேசத்தின் சட்டரி யான நிலைபற்றிய ஒரு முடிவையும் செய் தில்லை. இந்த சமரச ரீதியான அங்கீகார தின் நோக்கம் தமது உரிமைகளைப் பா காக்கும் நோக்கத்துடனேயே அளிக்கப்ப கின்றது. இவ்வாறு அங்கீகாரம் பெற்ற அ சாங்கம் அல்லது நாடு, நிலைத்து நிற்கு தன்மையை நாளடைவில் பெறின் ஏனை நாடுகள் சட்டரீதியான அங்கீகாரத்ை வழங்கும். ஆனல் அவ்வாறு நிலையான த மையைப் பெறத் தவறின் அல்லது அனை துலகச் சட்டங்களிற்குக் கட்டுப்பட மறு கின், நாடுகள் தாம் வழங்கிய சமரச அங் காரத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளும்.
உள்நாட்டுச் சட்ட ம ன் ற ங் களை பொறுத்தவரை சமரச ரீதியான அங் காரம் பெற்ற அரசாங்கத்தின் நடவடி கைகளும், சட்டரீதியான அரசாங்கத் னது நடவடிக்கைகளும் செல்லுபடியா வையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
'அரன்சாசுமெண்டி' என்ற வழக்கி ஸ்பானிய உள்நாட்டுக் கலவரத்தில் ஸ்
12A. Dejure recognition 13. De

f
பூ. ஞாஞகரன்
னிய நாட்டின் பெரும்பகுதி தீவிரவாதி களால் கைப்பற்றப்பட்டது. ‘அரன்சாசு மென்டி" என்ற கப்பல் பில் பாலோ என்ற து  ைற யி ல் பதிவுசெய்யப்பட்டிருந்தது. 1937ல் ஜெனரல் பிரான்கோவின் தலைமை யில் அத்துறையைத் தீவிரவாதிகள் கைப் பற்றினர். பிரித்தானியா பிரான்கோவின் ஆட்சியை சமரச ரீதியில் ஏற்றுக்கொண் டது. 1938-ல் பிரான்கோ மேற்கூறிய கப் பலை அரசாங்கத் தேவைக்காகக் கைப்பற் றும் ஆணையொன்றைப் பிறப்பித்தார். அதேவேளை பிரதிநிதித்துவ அரசாங்கமும் தமது உரிமையைப் பிரயோகிக்க முயன்ற னர். இந்நிலையில் பிரித்தானிய நீதிமன்றில் சமரசரீதியில் பிரித்தானியாவால் ஏற்கப் பட்ட பிரான்கோவின் உரிமைகளா அன்றி சட்டரீதி அங்கீகாரம் பெற்ற ஜனநாயக அரசின் உரிமைகளா பேணப்பட வேண்டு மென்ற பிரச்சனை கிளம்பியது. இவ்வழக்கு பிரான்கோ கைப்பற்றிய கப்பலை மீண்டும் பெறுவதற்காக ஜனநாயக அரசாங்கத் தால் கொண்டுவரப்பட்டது. பிரான்கோ அரசாங்கத்தினர் ஏனைய இறைமையுள்ள நாடுகளிற்குரிய சலுகைகள்!* தமக்களிப் பட வேண்டுமென்று வாதிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 9Treir கோவின் ஆட்சி சமரசரீதியான அங்கீ காரத்தைப் பெற்றிருந்தமையால் ஒரு நாட்டின் நீதிமன்றத்தில் வேருெரு நாட் டின் அரசியற்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கமுடியாது என்ற சலுகை அதற்கும் செல்லுபடியாகும் என்றும், எனவே ஜன நாயக அரசு வழக்குத் தொடரமுடியா தென்றும் விதித்தது. இதில் அவதானிக்க வேண்டியது யாதெனில் உண்மையான பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் உரிமை கள் பாதுகாக்கப்படாது விடப்பட்டன. எனவே உள்நாட்டு நீதிமன்றங்களைப் பொறுத்தமட்டில் சட்டவழி அங்கீகாரத் திற்கும் சமரசரீதியான அங்கீகாரத்திற்கும் வேறுபாடுகளதிகமில்லை.
தற்போதுள்ள ஒரு அரசாங்கத்திற்
கும் வேறு ஒரு குழுவினருக்குமிடையே ஆட்சிபுரியுமுரிமைக்காகப் பலப்போட்டி
facto recognition. 14. Sovereign Immunity.

Page 30
புதிய தேசங்கள் உதயம்
நிகழும்வேளையில் ஏற்படக்கூடிய போர் நிலையில் கிளர்ச்சிக்காரர்களையோ அல்லது கலகக்காரரையோ அங்கீகரித்தல் பற்றிய பிரச்சனை தோன்றும். இதுபோன்ற சந் தர்ப்பங்களில் இக்கலகக்காரர்களை ஒரு அந்தஸ்துள்ளவர்களாகக் கணித்து அங்கீ கரிப்பதன் நோக்கம் யாதெனில் போர் முறைகள், நடுநிலைத்தன்மை என்பன பற் றிய அனைத்துலக சட்டவிதிகள் பேணப்படு வதை உறுதிப்படுத்திக் கொள்வதேயாகும் உதாரணமாக நைஜீரியாவிலிருந்து பிரிவு கோரிய பயா(f)வ்ரு கலகக்காரர்கள் இவ் வாறு அங்கீகாரம் பெற்றர்கள். இவ்வகை யான அங்கீகாரம் அளிக்கப்படுமுன் பின் வருவன நிரூபிக்கப்படல் வேண்டும்.
(1) பிரச்சனை பொதுத்தன்மையுள்ளதாக வும், ஆயுதப்போராட்டம் நிகழ்வதா யுமிருத்தல் வேண்டும்.
(2) கலகக்காரர்கள் ஒரு குறிப் பி ட் ட தேசீய நிலப்பரப்பைக் கைப்பற்றி அங்கு தம்மாட்சியை நிலைநிறுத்தியி ருத்தல் வேண்டும்.
(3) அவர்கள் போராட்டத்தில் அனைத் துலக சட்டவிதிகளைப் பின்பற்றியிருத் தல் வேண்டும். அவர்கள் ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட குழுவினராக ஒரு தலை மையில் கீழ் இயங் பவர்களாயுட த் தல் அவசியம். ஏனைய நாடுகள் இவர் களை அங்கீகரித்தல் அவர்களது தலன் களைக் காப்பதற்குப் பேரளவு உதவும்.
மேற்கூறியவகையான அங்கீகாரங்கள் நேரிடையானதாகவோ 13 அன்றி மறை முகமானதாகவோ இருக்கலாம். நேரடி யான அங்கீகாரம் வெளிப்படையான-பகி ரங்க அறிவித்தல் மூலமும், இது சம்பந்த மாக அங்கீகரிக்கப்படும் நாட்டிற்கு ஒரு குறிப்பை அனுப்புவதன் மூலமும் அளிக்கப் படும். மறைமுக அங்கீகாரம் புதிய தேசத் தைப் பொறுத்தமட்டில் குறிப்பிட்ட ஒரு நாட்டின் நடவடிக்கைகளிலிருந்து அணு மாணிக்கப்படும். ஆளுல் இவ்வாறு பெறப்
15. Express recognition.

பூ. ஞானகரன் 11
படும் அங்கீகாரம் சிறிதும் சந்தேகத் திற்கு இடமற்ற ஒரு செயலிலிருந்தே அனு மானிக்கப்படல் வேண்டும். உதாரணமாக உத்தியோகபூர்வமான முறையில் இராஜ உ ற வு க ள் ஏற்படுத்தப்படுவதிலிருந்து மறைமுகமான அங்கீகாரம் அனுமானிக் கப்படலாம். ஆனல் உத்தியோ கபூர்வ மற்ற உறவுகளிலிருந்து? இதை அனுமா னிக்க முடியாது. மேலும் கலகக்காரர் களைப் பொறுத்தவரை வேருெரு நாடு நடு நிலைமைக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கு மென்றறிவித்தால் அது மறைமுகமாகக் கலகக்காரர்களிற்கு அனைத்துலக அரங்கில் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தைக் கொடுத்து அதனை அவர்கள் அங்கீகரிக்கிறர்களென்றே பொருள்படும்.
அங்கீகாரம் பெற்ற ஒரு தேசம் ஒரு நாட்டிற்குரிய எந்த ஒரு தகைமையையுமி முப்பின், ஏனைய நாடுகள் தாம் கொடுத்த அங்கீகாரத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள antib.
உள் நா ட் டு நீதி மன்ற ங் களை ப் பொறுத்தமட்டில் அங்கீகாரத்தின் சட்ட as at sassir. ( Legal Consequences) :
* ஒரு தாட்டை ஒரு உள்நாட்டு நீதிமன் றம், அதனுடைய அரசாங்கம் அங்கீ கரிக்கும் வரை அங்கீகரித்தலியலாது. ஆளுல் அரசாங்கம் அங்கீகரித்தால் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை அற் நாடு சட்ட அந்தஸ்தைப் பெற்ற ஒரு தேசமாக விளங்கும்.
* அங்கீகரிக்கப்பட்ட நாடு அங்கீகரித்த நாட்டின் சட்டமன்றுகளில் வழக்குகள் தொடரலாம்,
* அங்கீகரிக்கப்பட்ட நாடு அங்கீகரிக்கப்
படும் நாட்டின் நீதிமன்றத்தின் அதி காரத்தினின்று விடுபாடு 19 பெற்று விளங்கும்.
* அங்கீகரிக்கப்பட்ட நாடு அங்கீகரிக்கும் நாட்டின் எல்லைக்குளுள்ள அதனது
16. Immunity.

Page 31
12 /திய தேசங்கள் உதயம்
ஆதனங்களைக் காக்கும் உரிமையை பெறுகின்றது.
* அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் சட்ட வழி, அல்லது நிர்வாகவழி (execution நடவடிக்கைகளை ; நீதிமன்றம் ஏற்று கொள்ளும்.
மேற் கூறியவற்றிலிருந்து புதிய தேச களினுதயம் என்பன பற்றிய சட்டங்கள் தெளிவின்றியிருப்பதைக் காணலாம்.இதன்
உலகம் மணிக்கு தன்சீனத்தானே சு அந்த வேகம் மணிக்கு ணுல், இரவும் பகலும் பத்து மடங்கு கூடிவி ரண்டு மணித்திய/ால/ /20 மணித்தியாலங்க பூமியிலுள்ள தாவர/7 சமயம், இரவு 120 ம6 தாக மாறினல் ஒவ்ெ விற்ைத்து இறந்துவ சரிந்து இருப்பதனுற். டாகின்றன. இதற்ை வாழமுடிகின்றது. இ லிருந்து ஆவியாகின், பரவி, மனிதர்கள் மீது தான் பனிக்கட்டி

ழ், ஞானுகரன்
முக்கிய காரணம் யாதெனில் அனைத்துல கச் சட்டம் இன்னமும் ஆரம்ப நிலையிலே
யேயிருக்கின்றது. சட்டத்தை அமுல்செய்
யக்கூடிய தகுந்த தாபனங்கள் இல்லாமை யால் அனைத்துலகச் சட்டம் வலுவற்ற சட் டமாகவே விளங்குகின்றது. நாடுகள் தம் மிச்சையாக இவற்றையேற்றுக் கொண்டு, உலக நல்லுறவைப்பேணும் நல்லெண்ணம் கொண்டு இவ்விதிகளைப் போற்றுவதி லேயே, இவ்விதிகளின் குறிக்கோள்கள் அடையப் பெறலாம்.
1000 மைல் வேகத்தில்
ற்றிக் கொண்டிருக்கிறது. த நூ7று ஆகக் கு2ையும7 தற்போதுள்ள அளவிலும் 'டும். பகல் என்பது பன்னி ங்கள் கொண்டதாக இராது 5ள் கொண்டதாக மாறினுல் ப்கள் எரிந்துவிடும். அதே ணரித்திu/ாலங்கள் கொண்ட வாரு தாவரமும் குளிரிலே விடும் பூமி 23 பாகையில் ரன் பருவகாலங்கள் உண் ரன் உயிரினங்கள் இங்கே ல்லாவிடில், சமுத்திரங்களி p நீர், வடக்குத் தெற்காகப் வாழுகின்ற கண்டங்களின் யாக உறையும்.
கிரெசி ஏ. மொரிசன்

Page 32
-jf3 JTJ
i-FF, GITaTb)
கலாநிதி S. ட
*ற்றத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப அறிவு, ஆற்றல், இதய உணர்வு என்பன வற்றை உறுதுணையாகக் கொண்டு மக்கள் சமுதாயம் வளர்ந்தவாற்றை உள்ளவாறு எடுத்துக்கூறி விளக்குவதே வரலாறு. சமு தாய மாற்றங்களுக்கும் அறிவியல் வளர்ச் சிக்கும் ஏற்ப வரலாறு என்னும் கலையும் வளர்ந்து வ ரு கி ன் ற து; வரலாற்றை அறிந்து கொள்வதற்குக் கையாளப்படும் விதங்களும் அவற்றை விளக்கும் முறை களும் மாற்றமடைந்து வருகின்றன.
வரலாற்று நூல்கள், ஆட்சியா வனங் கள், சாசனங்கள், காவியம், நாடகம் போன்ற இலக்கியங்கள், புராதன கட்டி டங்கள், அழிபாடுகள், பண்டைக்கால மக் கள் தம் அன்ருட வாழ்க்கையில் உபயோ கித்துவிட்டுச் சென்ற உபகரணங்கள் முத லிய தொல் பொருள்கள் போன்ற யாவும் ஏதோ வகையில் ஒரு நாட்டின் அல்லதுஒரு சமூகத்தின் நிலைகளைப் புரிந்து கொள்வ தற்கு உதவுகின்றன.
மகாவம்சத்தின் ஈழவரலாறு
ஈழம் அளவிலே சிறிதாகியிருப்பதா லும் ஒரு தீவாக அமைந்துள்ளதாலும் அண்மையிலுள்ள ஏனைய பல ஆசிய நாடு களைப் போலன்றி கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து ஐரோப்பியர் காலம்வரை ஒரு தொடர்பான வரலாற்றை அது கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க அள விலே அமைதியும் தொடர்ச்சியும் இடம்

னங்களும்
9J Tilfull
/த்மநாதன் -
பெற்றதால் சமய நிறுவனங்களும் நிர்வாக நிறுவனங்களும் அழிந்தொழியாது நிலை பெற்றுவந்தன. பெளத்த சங்கம் போன்ற சமய நிறுவனங்கள் நிலைபெற்று வந்ததி ஞலே பெளத்தசமயம் பரவிய காலத்திலே ஈழத்தை அடைந்து இலக்கிய மரபும் வர லாற்று மரபும் தொடர்ச்சியாக நிலைபெற் றதோடு அவை வள ர் ச் சி யும் கண்டன. மகிந்ததேரரின் காலம் முதல் ஈழத்திலே வளர்ந்த வரலாற்று மரபைக் கருவாகக் கொண்டெழுந்த பாளி மொழியிலுள்ள நூலே மகாவம்சம். இந்நூல் பல பிரிவுகளை யுடையது; அவை பல்வேறு காலப்பகுதி களிலே வெவ்வேறு ஆசிரியர்களால் எழு தப்பட்டவை; அவை அனைத்தும்வரலாற்று மூலங்கள் என்ற வகையிலே தரத்திலும் தன்மையிலும் வேறுபடுகின்றன. தேவநம் பியதீசன் காலம் முதல் கண்டியிலாண்ட நாயக்க மன்னஞகிய கீர்த்தி பூரீ ராஜசிங் கன் காலம் வரையிலுள்ள ஈழவரலாற் றைத் தொடர்ச்சியாகக் கூறும் சிறப்பினை யுடைய நூல் மகாவம்சம். இந்நூல், வர லாற்று நிகழ்ச்சிகளைக் காலவரையறைப் படி - புத்தவர்ஷத்தின் அடிப்படையிலே - கூறுகின்றது. மன்னர்களின் ஆட்சியாண்டு களைக் கூறி அவர்களின் ஆட்சிகளில் நடை பெற்ற பிரதான நிகழ்ச்சிகளைப் பற்றியும் கூறுகின்றது. ஆயினும், ஈழவரலாற்றை முழுமையாகவும்முறைப்படியும் இந்நூலின் துணைகொண்டு அறியமுடியாது. அரச குலத்தை மையமாகக் கொண்டே மகாவம் சம் அரசியல் வரலாற்றைக் கூறுகின்றது; பதின்மூன்றும் நூற்றண்டின் பின்னுள்ள

Page 33
14 தமிழ்ச் சாசனங்களும்.
அரசியல் வரலாற்றையும் அறிவத்ற்கு அ அதிகம் பயன்படுவதில்லை. பதின் மூன்( நூற்றண்டில் வட இலங்கையில் எழு பெற்று நிலைத்த தமிழ் அரசினைப் பற் மகாவம்ச ஆசிரியர் ஒன்றுமே கூறவில் கம்பளை, கோட்டை ஆகிய நகரங்களி ருந்து ஆட்சிசெய்த சிங்கள மன்னர் கை பற்றி மிகச் சுருக்கமாக-ஒரு சில வரிக்ள மட்டுமே-கூறியுள்ளார்.
மகாவிகாரை வளர்த்த வரலாற் மரபை ஆதாரமாகக் கொண்டு மகா வி ரையைச் சேர்ந்த மகாநாமர் முதலி தேரர்களினலே எழுதப்பெற்ற இந்நூல சமய வளர்ச்சிகளின் பின்னணியிலேயே சியல் வரலாறும் கூறப்பெற்றுள்ளது. இ உணர்ச்சியையும் மத உணர்ச்சியைய வளர்க்குமுகமாக நூலின் சில பகுதிக எழுதப்பட்டுள்ளன. விவசாய முறைக தொழில் நிலைகள், வாணிபம், சமய நிறு னங்கள், சமுதாய நிலைகள் என்பன பற அறிவதற்குப் போதிய சான்றுகள் ம வம்சத்தில் இடம்பெறவில்லை. இவற்ை பற்றி அறிவதற்குச் சா ச ன ங் க ளே ே நோக்கவேண்டும். எனவே ஈழத்துச் ச. னங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஈழவரல றைத் தக்க முறையிலே அறிந்து கொள் தற்கு மிகவும் பயன்படும்.
ஈழத்துச் சாசனங்கள்
சாசனங்கள் கல்வெட்டுக்கள், ெ பேடுகள் என இருவகைப்படும். சில ச னங்கள் அரசன் அல்லது அவனுடைய ஆ காரிகள் ஏற்படுத்திய பிரகடனங்கள், வாக ஏற்பாடுகள் போன்றவற்றையு அறநிலையங்கள், சமய நிறுவனங்கள் ( லியவற்றுக்கு அவர்கள் கொடுத்த தாக களையும் பொருளாகக் கொண்டுள்ள வேறு சில, பொது மக்களுட் சிலர் தனி கவோ கூட்டாகவோ புரிந்த செயல்கை கூறுகின்றன. ஈழத்திலே பிராகிருதம், களம் , தமிழ், சங்கதம் ஆகிய மெ. களிலே எழுதப்பெற்ற சா ச ன ங் 8 கிடைக்கின்றன. கி. மு. மூன்ரும் நூற்ரு டளவிலே பெளத்த சமயம் ஈழமனைத் பரவியபின் ஈழத்தவர் எழுதும் முறையி அறிந்து கொண்டனர். காலத்தால்

ரவ
கலாநிதி S. பத்மநாதன்
திய ஈழத்துக் கல்வெட்டுக்கள் அனைத்தும் பிராமி எழுத்திலும் பிராகிருத மொழியி லும் வரையப்பட்டுள்ளன. இவை அசோக னது ஆட்சியிலும் அதற்குப் பின்பும் இந்தி யாவிலே, குறிப்பாகத் தென்னிந்தியா விலே, சாசன வழக்கிலுள்ள மொழியை யும் வரிவடிவங்களையும் ஒத்திருக்கின்றன.
பிராமிக் கல்வெட்டுகளுள் மிகப் பெரும் டா லானவை பெளத்த ச ங் க த் து க் கு க் கொடுத்த நன்கொடைகளைப் பற்றியே கூறுகின்றன. பெரும்பாலான ஈழத்துச் சாசனங்கள் சிங்கள மொழியிலுள்ளன.
இவை கி பி. ஐந்தாம் நூற்ருண்டு முதல் கண்டி அரசின் இறுதிக்காலம் வரையுள்ள காலப்பகுதியைச் சேர்ந்தவை. இவற்றிலே பிரதானமான சாசனங்கள் தொல்பொரு ளியல் திணைக் களத்தினலே பிரசுரிக்கப் படும் 'இலங்கைச் சாசனங்கள்’ என்ற தொகுதிகளிலும் சில சஞ்சிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. 1 இன்னும் வெளி பிடப்படாத படியெடுக்கப்பெற்ற பல சாசனங்களுள்ளன. வடமொழிச் சாசனங் கள் சிலவே காணப்படுகின்றன. நூற்றுக்கு மேலான தமிழ்ச் சாசனங்களும் கண்டெ டுக்கப் பெற்றுள்ளன.
வரலாற்று மூலங்கள் என்ற முறை 'யிலே சாசனங்களும் தம் பொருளமைதி ‘களுக்கேற்பப் பல தரத்தனவாயுள்ளன. சில கல்வெட்டுக்களும் பட்டயங்களும் மிக நீண்டனவாகிப் பல நூற்றுக் கணக்கான வரிகளைக் கொண்டுள்ளன. வேறு சில குறிப்பாகப் பிராமிக் கல்வெட்டுக்கள், மிகச் சிறியனவாய் அமைந்துள்ளன. முன் கண்டவாறு அரசர், அரசரின் அதிகாரிகள் அமைச்சர் ஆகியோரின் பிரகடனங்கள், நிர்வாக ஏற்பாடுகள் என்பவற்ருேடு இவர் களும் பொது மக்களும் அறநிலையங்களுக் கும் சமய நிறுவனங்களுக்கும் கொடுத்த தானங்களுமே பெரும்பாலான சாசனங் களின் பொருளாய் வந்துள்ளன. இவை அர சும் மக்களும் ஆற்றுகின்ற செயல்களாகை யால் இவற்றைக் கூறும் ஆவணங்கள் வாயி
1. Epigraphia Zeylanica.
அண்மையில் பேராசிரியர் பரணவிதான பிரா மிக் கல்வெட்டுக்களின் தொகுதியொன்றினை வெளியிட்டுள்ளார்.

Page 34
தமிழ்ச் சாசனங்களும்.
லாகச் சமுதாய நிலைகளையும் சமூகமும் அதன் நிறுவனங்களும் அடைந்த வளர்ச்சி களையும் தளர்ச்சிகளையும் அறிந்து கொள்ள லாம். அரண்மனைகளிலும் பிற நிர்வாக நிலையங்களிலும் இருந்த ஏடுகள் காலப் போக்கிலே அழிந்துவிட்டமையால் இச் சாசனங்களின் மூலமே பதினரும் நூற்ருண் டிற்கு முற்பட்ட FFყp வரலாற்றில் எந்தவொரு குறிப்பிட்ட காலத்து நிலை களையும் ஓரளவிற்கு அறிந்து கொள்ள லாம்.
நிர்வாக முறைகள், அவற்றிலே பணி புரிகின்ற பலதரப்பட்ட அதிகாரிகள், சமூ கப் பிரிவுகள் கைத்தொழில் முறைகள், வாணிபம், சமய நிறுவனங்கள், மொழி, இலக்கிய வளர்ச்சிகள் போன்ற பல துறை களைப்பற்றியும் சாசனங்களிலே சான்று களைப் பெற்றுக்கொள்ளலாம்.
சாசனங்களை வரலாற்ருராய்ச்சிக்குப் பயன்படுத்துமிடத்து அவை கூறும் பொரு ளேயும் அப்பொருள் கூறப்படும் முறையினை யும் அவதானத்துடன் நோக்க வேண்டும். சில சாசனங்களிலே புனைந்துரைகளும் புகழ்மொழிகளும் மலிந்துவருகின்றன. மேலும், இவற்றை உருவாக்கிய சிலர் சிறந்த கவிஞர்களாக இருந்ததனுல் உவ மான உவமேயங்கள் முதலிய அணி அலங் காரங்களைச் சிறந்த முறையிற் கையாண் டுள்ளனர். இவற்றின் கா ர ண மா கப் பொருள் மயக்கம் ஏற்படுவதோடு சில வர லாற்றுண்மைகளும் திரிபடைகின்றன. மன் *னனின் புகழைக் காவிய நயம் பொருந்தக் கூறுமிடத்து மெய்க்கீர்த்திகளிலே பொரு ளற்ற பல புனைந்துரைகள் இடம்பெறுகின் றன.
வரலாற்று மாணவர்கள் சாசனங்களை குறிப்பாகச் செப்பேடுகளை, ஆராய்ச்சிக்கு உபயோகிக்குமிடத்து அவை ஆதார பூர்வ மானவையா என்பதனை ஆராய்ந்து அறி தல் வேண்டும். நிலம் முதலிய சொத்துக் களிலே ஏதோ விதமாகத் தாம் பெற்றி ருந்த உரிமைகளைப் பயன்படுத்தி அச் சொத்துக்களைத் தம் உடைமைகளாக்கிக் கொள்ளும் நோக்குடன் சிலர் போலிப்பட் டயங்களைத் தயாரிப்பதுமுண்டு. தென்ன

கலாநிதி S. பத்மநாதன் 15
கத்திலும் ஈழத்திலும் இவ்வாறன சில ஆவ ணங்கள் இருப்பதாகத் தெரியவருகின்றது.
ஒரு சாசனத்தின் காலத்தினைத் திட மாக அறிந்தால் மட்டுமே அதனை வர லாற்று ஆராய்ச்சிக்கு நன்கு பயன்படுத்த முடியும். சாசனங்களை எழுதுமிடத்து, ஆளும் மன்னனையும் அவனுடைய ஆட்சியாண்டை யும் குறிப்பிடுவது வழக்கம். சில சாசனங் கள் சக வருஷத்தினைக் குறிப்பிடுகின்றன. வேறு சில எந்தவிதமான காலவரையறை பற்றிய குறிப்புகளையும் கொண்டிருக்க வில்லை. மன்னனுடைய பெயரும் ஆட்சி யாண்டும் கூறப்பெற்ற போழுதிலும் சில சாசனங்களில் எழுதப்பெற்ற ஆண்டினை அறிந்து கொள்வது சிரமம். ஏனெனில் ஒரே பெயரைக் கொண்ட மன்னர் பலர் இருந் திருக்கின்றனர். ஈழத்து வேந்தர்களில் காமணி அபய, அக்கிர போதி, மஹிந்து, விஜயபாகு, பராக்கிரமபாகு, புவநேக பாகு முதலிய பெயர்களைக் கொண்டிருந்த மன்னர்கள் பலர். சாசனத்திலே காலம் பற்றிய குறிப்புக்கள் இல்லாதவிடத்தும், அவை இருத்தும் தெளிவில்லாதிருக்குமி டத்தும் வரிவடிவங்களின் துணைகொண்டே சாசனத்தின் காலத்தை அறியலாம். வரி வடிவ .? Tப்ச்சியிலே தக்க அறிவும், பல சாசனங்களை வாசித்ததன் பயணுகப் பெற்ற பயிற்சியும் கொண்ட சாசனவியலாளரே வரிவடிவங்களின் துணைகொண்டு அவ்வித மான சாசனங்களின் காலத்தை நிர்ன யிக்க முடியும். அதுவும் ஒரு குறுகிய எல்லைக் குள் ஒரே பெயரைக் கொண்ட பல அரசர் இரு ந் தி ரு ப் பி ன் ஒரு சாசனத்தின் காலத்தை நிர்ணயிப்பது சிரமம்.
கடதாசியின் உபயோகம் பெருவழக் கில் வந்தபின் சாசனவியலானது ஒரு வர லாற்று மூலம் என்ற வகையிலே தன் சிறப் பினை இழந்துவிடுகின்றது. ஈழத் தி னை ப் பொறுத்த வரையில் பதினேழாம் நூற் ருண்டளவில் இந்நிலை ஏற்பட்டது. போத் துக்கேயரும் அவர்களின் பின் ஒல்லாந்த ரும் ஆண்ட காலத்தில் ஈழத்தின் க்ரை யோரப் பகுதிகளில் நிர்வாக அறிக்கைகள் பெரும்பாலும் கடதாசியிலே எழுதப்பெற் றன. ஐரோப்பியர், நிர்வாக அறிக்கைகளை எழுதும் முறையிலும் சில புதிய வழிகளைப்

Page 35
6 தமிழ்ச் சாசனங்களும்.
புகுத்தினர்கள். அரசிறைநிர்வாகம், வர்த் தகம், அரசியலுறவுகள் என்பனவற்றைப் பற்றிப் புள்ளி விபரங்களோடு விரிவான முறையில் அறிக்கைகளைத் தயாரித்தார்
is 6. −
போத்துக்கேயரும் அவர் களை த் தொடர்ந்து ஒல்லாந்தரும் ஆண்ட காலத் திலே கரையோர மாகாணங்களைப் பற்றி ஆட்சியாளர் தயாரித்த அறிக்கைகள் நூற் றுக்கணக்கிலே காணப்படுகின்றன. மேல் நாட்டவரின் ஆட்சி ஏற்பட்ட பின்பே ஈழ நாட்டு அரசியல், பொருளாதார, சமூக, வாணிப நிலைகள் பற்றி விரிவான முறையிலே அறியமுடிகின்றது. எனவே, ஈழநாட்டு வரலாற்று ஆராய்ச்சியைப் பொறுத்தமட்டில் பதினேழாவது நூற் ருண்டளவிற் சாசனவியலானது அதுவரை பெற்றிருந்த முக்கியத்துவத்தை முற்றி லும் இழக்கின்றது எனலாம்.
ஈழத் தமிழ்ச் சாசனங்கள்
ஈழத்திலே நூற்றி இருபத்தைந்துக் கும் மேலான தமிழ்ச் சாசனங்கள் கண்டெ டுக்கப்பெற்றுள்ளன?. ஈழத்துத் தொல் பொருளியல் திணைக்களம் 1911-12 ஆகிய ஆண்டிற்குரிய கண்டுபிடிப்புக்கள் பற்றி வெளியிட்ட அறிக்கையிலே (H. C. P.) எச். சி. பி. வெல் 48 தமிழ்ச் சாசனங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவற்றிலே 18 கல்வெட்டுக்களின் வாசகம் தென்னிந்தி யச் சாசனங்கள் என்னும் தொகுதியின் நாலாம் பாகத்திலே கிருஷ்ண சாஸ்திரியா ரால் வெளியிடப்பெற்றுள்ளன. 3 அதன் பின் காலப்போக்கிலே மேலும் பல தமிழ்ச் சாசனங்கள் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. இதுவரை ஒன்பதாம் நூற்ருண்டுக்கு முந் திய தமிழ்ச் சாசனம் எதுவும் ஈழத்திலே காணப் பெறவில்லை. ஈழத்துத் தமிழ்ச்சாச னங்களிலே காலத்தால் மிக முந்திய சாச னங்கள் நான்கு நாட்டார், குமார கணம் என்னும் வணிகர் குழாங்களைக் குறிப்பன வாகும். வரிவடிவத்தையும் இவை கூறும் பொருளையும் கொண்டு ஆராயுமிடத்து இச் சாசனங்கள் அனுராதபுர காலத்தின் இறு திக் கட்டமாகிய பத்தாம் நூற்ருண்டினைச் சேர்ந்தனவாகக் காணப்படுகின்றன. இக்

கலாநிதி S. பத்மநாதன்
கல்வெட்டுக்கள் அனுராதபுரத்திலே இந் துக் கோயில் களின் அழிபாடுகளிடையே கண்டெடுக்கப்பெற்றன.*
முதலாம் ராஜராஜனுடைய ஆட்சி யிலே சோழர் ஈழத்தினைக் கைப்பற்றி (993) ஏறக்குறைய எண்பது ஆண்டுகள் வரை (1070) அதனைத் தம் பேரரசுடன் இணைத்து ஆட்சிசெய்தனர். சோழரின் ஆட்சிக்காலத்திலே வரையப்பட்ட முப்ப துக்கு மேலான கல்வெட்டுக்கள் இதுவரை கண்டெடுக்கப்பெற்றுள்ளன. முதலாவது ராஜராஜனுடைய மெய்க்கீர்த்தியினைக் கொண்ட கல்வெட்டு ஒன்று மட்டுமே பத வியாவிலே கண்டெடுக்கப்பெற்றுள்ளது.* ஏனையவற்றுள் பதினைந்து கல்வெட்டுக்கள் முதலாம் ராஜேந்திர சோழனுடைய ஆட் சிக்காலத்தைச் சேர்ந்தன. பொலநறுவை யிலுள்ள அழிபாடுகளிடையே அம் மன்ன னுடைய மூன்று கல்வெட்டுக்கள் காணப் படுகின்றன. யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலத்திலே இரண்டு கல்வெட்டுக்கள் கண் டெடுக்கப்பெற்றுள்ளன; பெரிய குளம் என்னுமிடத்திலுள்ள நாதனுர் கோவில் என வழங்கும் ராஜராஜப் பெரும்பள்ளி என்னும் விகாரத்தின் அழிபாடுகளிடையே ஏழு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் மூன்று ஆவணங்களிலே அவனு டைய மெய்க்கீர்த்தி இடம்பெறுகின்றது." கி. பி. 1069ம் ஆண்டளவிலே ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற அதிராஜேந்திரதேவ ருடைய மெய்க்கீர்த்தியினைக் கொண்டஇரு கல்வெட்டுக்கள் பொலநறுவையிலே கண்
2. ஆ. வேலுப்பிள்ளை, சாசனமுங் தமிழும்
3. South Indian Inscriptions, Vol. IV. No. 1398
- 1415 பின் SI என வரும்.
4. K. Indrapala, Epigraphia Tamulica, Vol. I,
Pt. I June 1971, p. 3.
5. மேலது, பக்கம் 32.
6. S. L. I. Vol. IV, Nos
7. மேலது, பக்கங்கள், 39-40, 43, 46-47
A. Veluppillai, Ceylon Tamil Inscriptions, Part I, Peradeniya, 1971. pp. 16-17.

Page 36
தமிழ்ச் சாசனங்களும்.
டெடுக்கப்பட்டன8. மாதோட்டத்திலிருந் தவற்றைத் தவிர்ந்த சோழர் காலக் கல் வெட்டுக்கள் பெரும்பாலும் சிதைவுற்ற நிலையிலே காணப்படுகின்றன. எனவே அவற்றில் ஒரு சில பகுதிகளை மட்டுமே வாசித்தறிய முடிகின்றது. முதலாம் ராஜா திராஜனின் ஆட்சியில் ஈழம் சோழர் வச மிருந்தும் அம் மன்னர் காலத்தைச் சேர்ந் தனவென்று கொள்ளக்கூடிய சாசனமெது வும் ஈழத்திலே கிடைக்கவில்லை.
முதலாம் விஜயவாகுவின் ஆட்சிக் காலம் முதல் சிங்கள மன்னரின் நிர்வாகத் திலே தமிழும் ஓர் ஆட்சி மொழியாகவிருந் தது. ஆட்சியதிகாரிகள் தமிழ்க் குடிக ளோடு கொண்ட தொடர்புகளைக் குறிக் கும் ஆவணங்கள் பெரும்பாலும் தமிழிலே எழுதப்பெற்றன. விஜயவாகுவினுடைய பளுக்கடுவைச் செப்பேடுகளில் நிர்வாகத் திலுள்ள தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிக் குறிப்புண்டு. பூரீ சங்கபோதி விஜயவாகு என்ற மன்னனைக் குறிப்பிடும் நான்கு தமிழ்ச் சாசனங்கள் உள்ளன. இவற்றுள் இரு சாசனங்கள் - பொலநறுவையிலும் பாலமோட்டையிலும் கண்டெடுக்கப்பெற் றவை- முதலாம் விஜயவாகுவின் ஆட்சிக் காலத்தைச் (1055-1110) சேர்ந்தவை.10 வரிவடிவங்களை நோக்குமிடத்து ஏனைய விரண்டும் பிந்திய காலத்தைச் சேர்ந்தன வாகக் காணப்படுகின்றன. இவ ற் று ஸ்
8. அம் மெய்க்கீர்த்தியின் வாசகம் மேல் வருமாறு
அமைந்துள்ளது.
ஸ்வஸ்தி பூரீ.
திங்களேர் மலர்ந்து வெண்குடை மண்டல மன் னுயிர்தொறும் இன்னருள் சுரந்து நிறை நிழல் பரப்பி நிற்ப முறைமையில் செங்கோல் திசை தொறுஞ் செல்லத் தங்கள் குலமுதற் பருதியின் வலி(சே)ர் புவனிக்கும் ஒற்றையாழி உலாவ கற் றவத் திரு) மலர்ச் செல்வியும் இரு நிலப்பாவை யும்கீர்த்தியம் கிள்ளேயும் போர்த்தனிப்பூவையும் மதுவையிற் புணர்ந்து பொதுமை துரந்து தன் உரிமைத் தேவியராக மரபிரில் சுடர்மணிமகு
டஞ்துடி கெடுங்ல மன்னவர் முறை முறை தன் னடி வணங்க வீரமுங் தியாகமும் ஆரமெனப் புனைந்து மாப்புகழ் மனுவுடன் வளர்த்த கோப் பரகேசரி வர்மரான உடையார் பூநீ அதிராஜேக் திரதேவற்கு யாண்டு (3) ஆவது. S. I. I., Nos. 1388, 1392.,

கலாநிதி S. பத்மநாதன் 17
ஒன்று பூரீ சங்கபோதி விஜயவாகுவின் எட் டாம் ஆண்டைக் குறிப்பிடுகின்றது. 11 மற் றையது அப்பெயரையுடைய அரசன் ஒரு வனின் பத்தாவது ஆண்டில் எழுதப்பெற் றது. 12 கிழக்கிலங்கையிலுள்ள திருக் கோவில் என்னுமிடத்திலுள்ள இக் கல் வெட்டுக்கள் ஒரே அரசனுலோ அல்லது இரு வேறு அரசர்களினலோ எழுதுவிக்கப் பெற்றன என்பதை தக்க பயிற்சிவாய்ந்த சாசனவியலாளரே ஆராய்ந்து திடமாகக் கூறமுடியும். இவை பதின்மூன்றம் நூற் முண்டிற்குப் பிற்பட்டனவாகவே இரு த் தல் வேண்டும். பன்னிரண்டாம் நூற்ருண் டிலே, முதலாம் பராக்கிரமவாகு இறந்த பின் அரசனன அம்மன்னனின் மருமகளு கிய இரண்டாம் விஜயவாகு ஒரு ஆண்டு மட்டுமே ஆட்சிபுரிந்தான் (1186-87) தம் பதெனியாவிலே தலைநகரை அமைத்த மூன்ரும் விஜயவாகு மூன்று வருடங்களுக்கு மட்டுமே அதிகாரஞ் செலுத் தி ஞன். மேலும், அவன் அரசனுகப்பட்டம் புனைந்து முடிசூடியிருக்கவில்லை. பதின்மூன்ரும் நூற் முண்டிலே இரண்டாம் பராக்கிரமவாகு இறந்தபின் அரசபதவியைப் பெற்ற நான் காம் விஜயவாகு ஒராண்டுவரையிலேயே (1271-72) ஆட்சிசெலுத்த முடித்தது. எனவே நிருக்கோவிற் கல்வெட்டுக்கள் குருநாகல் நகரிலிருந்து அரசாண்ட ஐந் தாம் விஜயவாகு, பதிஞரும் நூற்ருண் டிலே ஜயவர்த்தனபுரம் என வழங்கிய
9. University of Ceylon History of Ceylon,
Vol. I, pt II, Colombo, 1960, p. 543.
10. SII. No. 1396.
D. M. de Z. Wickremasinghe, "Polonnaruwa Slab Inscription of the Velaikkaras”, , EZ, III pp. 242-255.
S. Parana vitana, “A Tamil Inscription from
Palamottai”, EZ IV: 20.
11. இக்கல்வெட்டுத் திருக்கோவிலில் உள்ள சித்திர வேலாயுத சுவாமி கோவிலிலே கண்டெடுக்கப் பெற்றது. இது பதினரும் நூற்ருண்டைச் சேர்ந்ததெனக் கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை கொள்ளுகின்ருர், A. Veluppillai, Ceylon Tamil Inscriptions Pt. I, pp. 5-6
12. மேலது, பக்கங்கள் 1.4.

Page 37
18 தமிழ்ச் சாசனங்களும்.
கோட்டை நகரிலிருந்த ஆரும் விஜயவா ஆகியோரின் காலங்களைச் சேர்ந்தனவாய குத்தல் கூடும்.
முதலாம் விஜயவாகு இறந்தபின் அ6 னுடைய தம்பிகளுள் ஒருவஞன ஜெயவா ( அரசஞக முடிசூடினன். ஜெயவாகு மிக குறுகிய காலத்துக்கே அதிகாரஞ்செலுத் முடிந்தது. ஆயினும் ஜெயவாகு என்னும் அரசனைக் குறிப்பிடுகின்ற ஆறு தமிழ்க் க வெட்டுக்கள் உள்ளன. இவை புது முட டாவை, மொறவகஹல, பொலநறுவை மாங்கனை, மகா கிரிந்தாகம என்னும் இட களிலே காணப்படுகின்றன. l-gil (pl. டாவை என்னுமிடத்திலுள்ள சாசன மாயரட்டையிலாண்ட முதலாம் மான ரணஞல் எழுதுவிக்கப்பட்டது. அ த ஃ இலங்கைச் சாசனங்கள் என்னுந் தொகுதி யிலே பரணவிதான வெளியிட்டுள்ளார்.1 மொறவகஹல, மாங்கனை என்னுமிடங் ளிலுள்ள கல்வெட்டுக்கள் பேராசிரியா கணபதிப்பிள்ளையினல் வெளியிடப்பட ட்ன.14 மகாஉகிரிந்தாகம என்னுமிடத்தி லுள்ள சாசனமும் பொலநறுவையிலுள்ள சாசனங்களில் ஒன்றும் கலாநிதி. ஆ வேலுப்பிள்ளையிஞல் அண்மையில் வெள யிடப்பட்டுள்ளன. 19
மாங்கனைக் கல்வெட்டு இரண்டாட கஜவாகுவின் காலத்தைச் (1133-1153 சேர்ந்ததெனப் பேராசிரியர் கணபதி பிள்ளை கருதினுர், 19 அச் சாசனத்தின் வா. கம் மேல்வருமாறு:
19. S. Paranavitana, "Two Tamil Inscriptio
from Budumuttava," EZ Vol. III, No. 33.
14. K. Kanapathipillai: "A Pillar Inscriptic Moraga hawela”. University of Ceylc Review (UCR) XVIII, Nos. 1 & 2 Jan - Ap 1960, pp. 46-49. Mankanai Inscription Gajabahu II, UCR XX, No. Apr. 1962, p. 12 - 14.
15. A. Velupillai, Ceylon Tamil Inscription
pp. 24-31.
பொலநறுவையிலே ஜெயவாகுவின் 38 ஆவ. ஆண்டைக் குறிப்பிடும் ஒரு தமிழ்க் கல்வெட் இனப் பற்றிப் பேராசிரியர் பரணவிதான குறி பிட்டுள்ளார்.

கலாநிதி S. பத்மநாதன்
t
(வரிகள் 1-6) ஸ்வதி பூரீ அபைய சலா
மேகபந்மரான சக் க ர வர்த்திகள் பூரீ ஜயவாகு தே/ைற்கு யாண்டு 43ஆவது (8-23) திருப்பள்ளிச் சிவி கையாரில் கண்காணி மிந் தன் கொற்றநென் கஜ வா குதேவர் எநக்கு ஜிவித மாக இ(ட்)ட இத் தேவெ சாரும் சிரது ந ர ஈ து வெசாரும் இதில் நாற் பால் எல் சில பெருமான் கஜ வாகு தேவர் வெ ய க வே/ரத்தான பரித்த பூமி தானமாக இட்டருளின நிரூபதி குறிப்புக்கு (2328) மானு பரண தேவர்கஜ வாகு தேவர் செய் த து செயலென்று அருளி திரு முகம் வரக்காட்டிச் சிலா லேகம் செய்து குடுத்து இது/க்கு ஒரு வி கீ தி ந ஞ் செu/ (நெற்று)ள மதி பு/த் தராஞ்ஞை வல்லவரையன் குளறவு. 17
இச்சாசனம் ஜெயவாகுதேவர், கஜ
வாகுதேவர், மானுபரணதேவர் என்ற மூன்று மன்னர்களைக் குறிப்பிடுகின்றது. முதல் ஏழுவரிகளும் ஜெயவாகுதேவரின் 43ஆவது ஆண்டினைக் குறிப்பிடுகின்றன. ஜெயவாகுதேவர் 1110/11இல் அரசனுகிய தால் இக் கல்வெட்டு 1154ம் ஆண்டளவில்
S
16.
17.
(EZ. II p. 200)
"The Inscription is issued by Gaja Bahudeva (AD. 1131 - 1153), but it is dated in the 43rd regnal year of his predecessor Jayabahu.
This way of dating records from the date of the coronation of the dead king is known from the other epigraps. Though the record was given by Gajabahu, it is known from the second part of the inscription that it was inscribed on stone by Maraparana alias
Virabahu (itatics mine) who was ruling the southern country.
UCR, XX, No. 1 Apr. 1962, p. 12
மேலது, பக்கங்கள் 12-14

Page 38
தமிழ்ச் சாசனங்களும்.
வரையப்பட்டிருத்தல் வேண்டும். சாசனத் தின் ஒரு பகுதி (வரிகள் 8-23) திருப்பள் விச் சிவிகையாரின் கண்காணி மிந்தன் கொற்றன் என்பவனுக்கு கஜவாகுதேவர் ஜிவிதமாகச் சில நிலங்களிலுள்ள உரிமை களேக் கொடுத்தமை பற்றிக் கூறுகின்றது. சாசனத்தின் இறுதிப் பகுதியில் "நிருபதி குறிப்புக்கு மானுபரணதேவர் கஜவாகு தேவர் செய்தது செயலென்று அருளி திரு முகம் வரக்காட்டி சிலாலே கஞ் செய்து குடுத்து" என்ற வாசகம் வருகின்றது. இதி லிருந்து மானுபரணதேவரே கல்வெட்டை எழுதிக்கொடுத்தார் என்பது தெளிவாகின் றது. கஜவாகுதேவர் மிந்தன் கொற்ற னுக்கு ஜீவிதம் கொடுத்த ஏற்பாடுகளை அடக்கிய குறிப்பினைப் பரிசோதித்து அவ்வ ரசன் அதனைக் கொடுத்தமையால் அக் கொடையினை ஊர்ஜிதமாக்குமுகமாக மாஞபரணதேவர் கல்வெட்டு எழுதிக் கொடுத்தார் எனக்கொள்வதே பொருத்த மானதாகும். ஆகையால்இக் கல்வெட்டினை மானுபரணதேவரின் சா ச ன மா க வே கொள்ளவேண்டும்.
மாஞபரணதேவர் என வழங்கிய அர சர்கள் இருவர் 12ம் நூற்ருண்டில் இருந்த னர். அவர்களுள் மித்தாவினதும் பாண்டிய இளவரசனதும் மகளுகிய முதலாம் மாஞ பரணதேவர் பொலநறுவையிலிருந்து விஜ யவாகுவின் மகளுகிய விக்கிரமபாகுவி ஞலே துரத்தப்பட்ட பின் புங்க காம என் னும் நகரிலிருந்து மாயரட்டை என்னும் பகுதியை ஆண்டான்.18 மானு பரணதேவர் வீரவாகு என்னும் பட்டப்பெயரினையும் பெற்றிருந்தான். இக்கல்வெட்டிலே கூறப் பெற்ற அரசன் வீரவாகு என வழங்கிய முதலாம் மானபரணதேவர் எனப் பேரா சிரியர் கருதினமை தவழுகும். கி.பி. 1135ம் ஆண்டிற்கு முன் இம் மானுபரணதேவர் இறந்துவிட்டமையால் க ஐ வா கு வின் 43ஆவது ஆட்சியாண்டிலே (1154) வரை யப்பட்ட மாங்கனைக் கல்வெட்டுக் குறிப் பிடும் மானபரணதேவர் வேருெருவன் என் பது தெளிவாகும்.
இக்கல்வெட்டினை வரைவித்த அரசன் பூரீ வல்லவனின் மகனும் உறுகுணை அரசனு மாகிய மாஞபரண தேவராகவே இருத்தல்

கலாநிதி S. பத்மநாதன் 19
வேண்டும். இவனை இரண்டாம் மானுபரண தேவர் எனக் குறிப்பிடலாம். இரண்டாம் மாஞபரணதேவரின் கல்வெட்டொன்று தென் மாகாணத்திலே கட்டகமூவ என்னு மிடத்திலே கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிங்களமொழியிலுள்ள அக்கல்வெட்டு ஜெயவாகுதேவரின் 35ம் ஆட்சியாண்டி னைக் குறிப்பிடுகின்றது.19 உறுகுண மன் னன் எவ்வாறு திருகோணமலைக்கண்மையி லுள்ள கஜவாகுவின் ஆட்சியிலடங்கிய பிர தேசத்திலே கல்வெட்டு வரைவித்தான் என்ற விஞ எழுகின்றது. கஜவாகுவின் ஆட் சியிலே பராக்கிரமவாகு அம் மன்னனுக் கெதிராக நெடுங்காலமாகப் போர்புரிந்து வத்தான். உறுகுணையிலிருந்த மானுபரண னும் பொலநறுவையினைக் கைப்பற்றி அங்கு தன்னுடைய அதிகாரத்தை ஏற் படுத்த நாட்டங்கொண்டிருந்தான். பராக் கிரமவாகுவின் படைகள் பொலநறுவை யினைக் கைப்பற்றி அங்குள்ள மக்களைத் துன்புறுத்தியபோது அமைச்சர்கள், அதி காரிகள் போன்ற பிரதானிகள் தமக்கு உதவியளிக்குமாறு மானபரணனை அழைத் தனர்.20 எனவே மாளுபரணன் அதனை அறிந்ததும் உறுகுணையிலிருந்து படை யுடன் வந்து பராக்கிரமவாகுவைத் தோற் கடித்துவிட்டுப் பொலநறுவையிற் சில நாட்களாக அதிகாரஞ் செலுத்தினன். 21 ஆயினும், காலப்போக்கில் பராக்கிரம வாகு, அவனுடைய சேனைக்ளைப் பலமுறை தோற்கடித்தமையால் மானுபரணன் பொலநறுவையை விட்டு தென்னிலங்கைக் குத் திரும்பிஞன். அதன்பின் கஜவாகு, பராக்கிரமவாகு ஆகிய இருவரும் ஓர் உடன்படிக்கை செய்து சமாதான மேற் படுத்திக் கொண்டனர். 22 மேலும், தம் முள் ஒருவன் இறப்பின் இறப்போனுடைய நாட்டின் ஆட்சியுரிமை மற்றைய அரசனைச் சேரவேண்டும் என்ற நிபந்தனையும் அவ் வுடன்படிக்கையிலே இடம் பெற்று ன்
18. துளவம்சம்,
19. C. E. Godakumbure, 'Katagamova slab Inscription of Manabharanao EZ, Vol. V, pt. I, No. 11
20. சூளவம்சம், 70: 254-259 21. மேலது. 70; 260-286 22. Goaov, 71: 4; EZ., Vol. IV, ÎNo. 1

Page 39
20 தமிழ்ச் சாசனங்களும்.
ளது.? எனினும், கந்தளாய் என்னுமிட தில் கஜவாகு இறந்தபோது அவனுடை அமைச்சர்கள் உடன்படிக்கையினைப் பு கணித்துவிட்டு ஆட்சிப்பொறுப்பினை வர் ஏற்றுக்கொள்ளுமாறு மானுபரணனை 6 வழைத்தனர். 24 எனவே, பராக்கிரமவா விற்கும் மாஞபரணனுக்குமிடையில் மீ டும் ராஜரட்டையிற் போர் ஏற்பட்ட கடுமையான போரின் விளைவாகவும் அதி சிரமத்துடனுமே பராக்கிரமவாகு மா பரணனைத் தோற்கடித்து ராஜரட்டை லிருந்து துரத்தினன். மாங்கனைக் வெட்டு ஜெயவாகுதேவரின் 43ஆவ ஆண்டினைக் குறிப்பிடுவதனுல் (1153/5 கஜவாகு இறந்தபின் அமைச்சர்களி அழைப்பிலே மாஞபரணன் ராஜர டைக்கு சென்று அங்கு தங்கியபொழுதுஇ கல்வெட்டினை அவன் வரை வித்தான் என கொள்ளலாம்.
பூஜீ யாண்டு 11வது கஜவாகு வாகுதேவர் அ கம்படிச்சகை யரில் மாந்நா ளாயில் ஜீவித ம் உடைய உம் 8. பிழ அயித்த 9. நேர் என் ஜிவித 10. ம் பிலப்பேத்தி 11. ல் ஓர் மணமவி 12. ச்சுப்பாடு தர 13. ணரி மாசாரில் 14. புத்தஸ்தானத் 15. துக்கு இட்டே 16. ந் மேல் இதுக் 17. கு விக்கநம் செ 18. ய்வார் உண்டா 19. சில் புத்தஸ்தா 20. னத்துக்குப்பி 2 l . GMT j F nt Ur fir 6 unr 22. ர் நரகம் புகுவார்23
23. EZ, Vo”. IV. No. 1
24. சூளவம்சம், 71: 6

கலாநிதி $. பத்மநாதன்
இரண்டாம் கஜவாகுதேவரின் காலக் தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுக்கள் கண் டெடுக்கப்பெற்றுள்ளன. அ வற்று ஸ் இரண்டு கந்தளாயிலிருந்தன. ஏ னை ய து பொலநறுவை மாவட்டத்தைச் சேர்ந்த உறிங்குருக்கொடை என்னுமூரிலுள்ள
* உறிங் குருக்தமன என்னுமிடத்திலே கண்
டெடுக்கப்பெற்றது. பேராதனைப் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் களான கலாநிதிகள் ஆ. வேலுப்பிள்ளை, கா. இந்திரபாலா ஆகிய இருவரும் தாம் அண்மையில் வெளியிட்டுள்ள நூல்களில் இக்கல்வெட்டின் வாசகங்களைத் தந்துள்ள னர். இருவரின் வாசகங்களிலுஞ் சில வேறு பாடுகள் உள்ளன. அவர்கள் இருவரது வாசகங்களும் மேல்வருமாறு அமைந்துள்
676.
பூரீயாண்டு 4 0 தரவது கஜ வாகுதேவர் அ கம்படிச் (சிவி)கை யரில் மா(ந)நா ளாயில் ஜீவித ம் உடைய உ(ட) . கமு அயித்த 9. நேந் என் ஜிவித 10. ம் பிலப்பேத்தி 11. ல் ஒரமணம் வி 12. dj Ju urr G3 gsn' I 3. sassif DJF i rfio 14. ப்ரம்மஸ்தானத் 15. துக்கு இட்டே 16. ந் மேல் இதுக் 17. கு விக்க நம் ଭଗef 18. ய்வாருண்டா 19. சில் பிரம்மஸ்தா 20. னததுக்குப் பி 21. ளைச்சாராவா 22. ர் நரகம்புகுவார் 26
i
25. Ceylon Tamil Inscriptions, p. 34
26. ET. p. 17

Page 40
தமிழ்ச் சாசனங்களும்.
கல்வெட்டின் ஆண்டினைப் பற்றிய இரு வரது வாசிப்புக்களும் பெரிதும் வேறுபடு கின்றன. ஒருவர் ஆண்டினைப் பதினுேராவ தெனக் கொள்ள, மற்றையவர் அதனை நாற்பதாவதென வாசித்துள்ளார் 27. நான் காவது வரியில் வரும் சொற்றெடரை ஒரு வர் அகம்படிச் சகையர் என வாசித்துள் ளார். மற்றவர் அதனை அகம்படிச் சிவிகை யர் எனக் கொண்டுள்ளார். ஆயினும் கல் வெட்டின் புகைப்படத்தை நோக்குமி டத்து ஆ. வேலுப்பிள்ளையின் ‘அகம்படிச் சகையர்” என்ற வாசிப்பே சரியெனத் தோன்றுகின்றது. சிவிகையார் எ ன் ற சொல்லில் வரும் வி கரத்தைக் கல்வெட் டினை எழுதியவர் கவலையீனமாக விட்டுவிட் டார் எனக் கூறமுனையலாம். எனினும் புகைப்படத்திலே சி என்ற எழுத்தன்றிச் ச என்ற எழுத்தே காணப்படுகின்றது. ஜீவிதமுடையவரின் பெயரையும் (வரிகள் 7-8) 'உம்பிழ அயித்தன்" எனவும் உ(ட) கமு அயித்தன்' எனவும் இருவரும் மாறு பாடாக வாசித்துள்ளனர். கல்வெட்டின் புகைப்படத்தைக் கூர்ந்து அவதானிக்குமி டத்து உம் பிழ அயித்தன் என்ற வாசிப்பே பொருத்தமானதாகத் தோன்றுகின்றது. பதினேராவது வரி முதல் பதின்மூன்ருவது வரி வரையுள்ள சொற்களை ஓர் மணவிச் சுப்பாடு தரணி மாசாரில் என்று ஒருவர் வாசித்திருக்கையில் மற்றவர் ஓர் அமணம் விச்சுப்பூரீபாதோணி மா சாரி ல் என வாசித்துள்ளார். புகை ப் பட த்  ைத க் கொண்டு நோக்குமிடத்து இவ்விருவிதமா கவும் வாசிக்கமுடியுமெனினும் இவ்வரிக ளைப் பொறுத்தமட்டில் கலாநிதி இந்திர பாலாவின் வாசிப்பே பொருத்தமானதா கக் காணப்படுகின்றது. பதிஞலாவது வரி யில் வரும் கிரந்த எழுத்துக்களில் உள்ள சொல்லை புத்தஸ்தானம் எனவும் ப்ரம்மஸ தானம் எனவும் மாறுபட வாசித்துள்ள னர். இவற்றுள் எது சரியான வாசகம் என்று நிர்ணயிப்பது சிரமம். வடமொழியி லுள்ள ப்ரஹ்மஸ்தான என்ற சொல்லா னது கிரந்தத்தில் எழுதப்படுமிடத்து அவ் வாறே எழுதப்படும். அச் சொல் லை த் தமிழ்ப் படுத்தித் தமிழ் எழுத்துக்களிலே எழுதுமிடத்தே ஹ் என்ற மெய் மருவி மக ரம் இரட்டிக்கும். ஆணுல் இங்கு கிரந்த எழுத்துக்களிலேயே இச்சொல் எழுதப்பட்

கலாநிதி S. பத்மநாதன் 2
டுள்ளது. ஜெயவாகு தேவரின் மகா கிரித் தாகம கல்வெட்டு, பராக்கிரமவாகுவின் முன்னேஸ்வரம் கல்வெட்டு ஆகியவற்றின் புகைப்படங்களிலுள்ள மகரத்தை குறிக் கும் கிரந்த எழுத்துக்களையும் இச்சொல் லிலே வரும் கலாநிதி இந்திரபாலா மகர மெனக் கொள்ளும் எழுத்துக்களையும் கூர்ந்து ஒப்பிட்டு அவதானிக்குமிடத்து அவை பெரிதும் வேறு பட்டன வாக க் காணப்படுகின்றன. அவ் வெழுத்துக் குள் மகரத்தையன்றி வடமொழி ஒலியமைப் பில் தகர வர்க்கத்தில் வரும் மூன்ருவது தகரமான மெல்லொலியனைக் குறிக்கும் கிரந்த எழுத்துக்களாகவே காணப்படு கின்றன. மேலும் கிரந்த எழுத்துக்களில் இரு மகர மெய்கள் சேருமிடத்து அவை ஒன்றன் பின் ஒன்ரு கவன்றி ஒன்றையெழுதி மற்றதை அதனுடன் சேர்த்து அதற்குக் கீழாக எழுதுவது வழக்கம். மேலும் இச் சொல்லின் முதல் எழுத்து பகர வர்க்கத் தைச் சேர்ந்த நாலாவது மெய்யுடன் உக ரம் சேர்ந்த உயிர்மெய்போலவே தோன் றுகின்றது. அத்துடன் ப் என்ற மெய்யுடன் ர கர உயிர்மெய்யினைச் சேர்த்து எழுதுமி டத்து பகரத்தின் கீழ் அரைவட்டத்தை ஒத்த அகன்ற குறியே பகரத்தின் கீழ் வரையப்படும். ஆனல் பிரச்சனைக்குரிய இச்சொல்லிலே உகர மெய்யினைக் குறிக் கும் குறியே வருகின்றது. எனவே, ‘புத்தஸ் தான என்ற வாசிப்பே சரியானதெனக் காணப்படுகின்றது. இச்சொல்லைப் புத்தஸ் தானமென்று கொள்வோமாயினும் அது வும் பிழையாகவே எழுதப்பட்டுள்ளது.
மு த லா வது பராக்கிரமவாகுவின் காலத்தைச் சேர்ந்ததென்று கொள்ளக் கூடிய தமிழ்க் கல்வெட்டு ஒன்று மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது?"அ. இது நயி
27. 40தாவது என்ற வாசிப்பே சரியானதெனத்
தோன்றுகின்றது.
27அ. கணதராவ எனுமிடத்திலுள்ள கல்வெட் டொன்று பராக்கிரமபாகு என்ற அரசனேக்குறிப் பிடுகின்றது. அதில் ஸ்வஸ்தி பூரீ சங்கபோதி பர்மரான சக்கரவர்த்திகள் பூரீ பராக்கிரமபாகு தேவற்கு யாண்டு.” என்ற மொழித் தொட ரினே மட்டுமே வாசிக்கமுடிகின்றது. கல்வெட் டின் ஏஜனய பகுதி அழிவடைந்துள்ளது. இக்கல் வெட்டு முதலாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் வரையப்பெற்றிருத்தல் கூடும். SII. No. 1407.

Page 41
22 தமிழ்ச் சாசனங்களும்
ஞதீவு நாகபூஷணி அம்மன் கோயிலிற கண்டெடுக்கப்பட்டது. அதிற் சில பாகா கள் அழிவடைந்துள்ளன. இதை முதன் முதலாக இராசநாயக முதலியார் மேல்வி ருமாறு வாசித்துள்ளார்.
*ஊராத்துறையிற் பரதேசிகள் வந்து இருக்கவேணுமென்றும் இவர்கள் ரச் ஷைப்படவேணுமென்றும் புது த் து றைகளில் பரதேசிகள் வந்தால் இத் துறையிலே சந்திக்கவேணுமென்று நாவாய் ஆனே குதிரையொடு பண் டார சேவைக்கு ஆனை குதிரை கொடு வந்த மரக்கலம் கெட்டதுண்டாக நாலத்தொன்று பண்டாரத்திற்குச் கொண்டு மூன்று கூறும் உடையவ ணுக்கு விடக் கடவதாகவும் வாணிய மரக்கலம் கெட்டதுண்டாகிற் செம்ப கம் உடையவனுக்கு விடக் கடவத கும்.
இவ்வ்யவஷ்தை. தித்து . தனையும் கல்லிலும் செ ம் பி லு எழுத்து வெட் டு வித் து இவ்வ்ய வஷ்தை செய்து கொடுத்து தேவ பராக்கிரம பூஜோ. J D 28
மேலும் இராசநாயகம் அவர்கள் இக் கல்வெட்டுப் பதினேராம் பன்னிரண்டாட நூற்ருண்டுகளில் வழக்கில் இருந்த எழுத்து முறையைத் தழுவி எழுதப்பெற்றதென வும் இதை முதலாம் பராக்கிரமபாகுவே எழுதுவித் தானென்றும் கூறினர்.? இக்க வெட்டின், தனது வாசகத்தைப் பின் கா. இந்திரபாலா தன் குறிப்புக்களோடு பதிப்பித்தார். நிசங்கமல்லனுடைய சா னமொன்று பாண்டுவாசு நுவரையிலே கண் டெடுக்கப்பட்டது. இதைப் பேராசிரிய கணபதிப்பிள்ளை முதன்முதலாகப் பதிட பித்தார். 30 இக்கல்வெட்டு விருத்தப்பா வில் அமைந்துள்ளதென இந்திய சாசனவி யல் திணைக்களத்தைச் சேர்ந்த கே. ஜி கிருஷ்ணன் கூறித் தன்னுடைய வாசகத் தைப் பின் பதிப்பித்தார். அவருடைய வாசகம் மேல் வருமாறு அமைந்துள்ளது.
** தென்னிலங்கைக்கோன் பராக்கிரட பாகு நிசங்க மல்லற்கு யாண்டஞ்சிஞ6

கலாநிதி S. பத்மநாதன்
தினகரன் சுறவிலமைந்த வத்தையில் உத்திரட்டாதி ஏழ்பக்கம் பொன்னவன் தினனற்சாத
யோகத்தில் உயர்தரு போதி மாதவற்கு பொற்பமர் கோவில் முனிவராலயம் தேனறந்திகழ்சாலையும் சயித்தம் அன்னவை திகழ ஐவர் கண்டன் வனு பேரி இலங்கை அதிகாரி அலகுதடியன் தென் பராக்கிரமன்மேனைச்
செனவினதன் திருப்பியரன் மன்னிய சிறப்பின் மலிதரும் அழகாற் பராக்ரமன் அதிகாரி பிரிவுனவளர்தர அமைத்தான் சிறிபுர நகருள் மதிமான் பஞ்சரன் -
மகிழ்ந்தேய்.21
இச்சாசனம் தென்னிலங்கை அரசனு கிய பராக்கிரமபாகு நிச ங் க ம ல் லனை க் குறிப்பிடுவதனுலே இது நிசங்க மல்லனது காலத்தில் எழுதப்பெற்றதெனப் பேராசி ரியர் கன பதிப்பிள்ளை எடுத்துக்காட்டி ஞர் கல்வெட்டில் வரும் வானியற் குறிப் புகளைக்கொண்டு இச் சாசனம் மேல் வரும் மூன்று தினங்களுள் ஒன்றிலே எழுதப்பட் டதாகக் கொள்ள இடமுண்டு:
1. கி.பி. 1191 சனவரி மூன்ரும் நாள்
வியாழக்கிழமை 2. கி.பி. 1215 சனவரி எட்டாம் நாள் வியாழக்கிழமை 3. கி. பி. 1218 சனவரி நாலு வியா ழக்கிழமை. 32
பரணவிதான இதிலே கூறப்பேற்ற மன்னன் தென் இலங்கைக்கோன் என்று
28. C. Rasanayakam, Ancient Jaffna, Madras,
1926, p. 208.
29. மேலது.
30. K. Kanapathipillai, 'A Tamil Inscription from panduvasnuvara o UCR, XVIII, Nos. 384, July - Oct. 1960, pp. 157-162.
31. K. G. Krishnan, Note on the Tamil Inscription from Panduvasnuvara UCR, CC, No. I, Apr. 1962 pp. 15-16
32. மேலது ப. 16 - 17

Page 42
தமிழ்ச் சாசனங்களும் .
கூறப்பட்டதனுலே இக்கல்வெட்டு ஈழம் முழுவதையும் ஆண் ட நிசங்கமல்லனை அன்றி ஈழத்தின் ஒரு பகுதியினை ஆண்ட வேருெரு அரசனையே குறிக்கின்றதென்று கருதினர். மேலும் அவ்வரசன் பதின் மூன் ரும் நூற்ருண்டைச் சேர்ந்தவனென்றும் அவன் கி.பி. 1230ல் வரையப்பெற்ற மூன் ரும் ராஜராஜ தேவரின் திரிவேந்திபுரம் கல்வெட்டிற் கூறப்பட்ட ஈழத்தரையன் பராக்கிரமபாகுவாகவே இருத்தல் வேண் டுமெனவும் அவர் வாதித்தார். ஆயினும் இவருடைய முடிவு பொருத்தமானதாகத் தோன்றவில்லை. சோழமன்னனின் சாச னத்திலே குறிப்பிடப்பெற்ற பராக்கிரம பாகு நிசங்கமல்லன் என்ற பெயரையும் பெற்றிருந்தான் என்பதற்கு எவ்விதமான சான்றும் கிடைக்கவில்லை. எனவே இச் சாசனம் பன்னிரண்டாம் நூற்ருண்டின் இறுதியில் பொலநறுவையில் இரு ந் து ஆட்சிபுரிந்த நிசங்கமல்லன் என வழங்கிய அரசனின் ஆட்சியிலேயே எழுதப்பட்டி ருக்கவேண்டும். நிசங்கமல்லன் பராக்கிரம வாகு என்ற பெயரையும் பெற்றிருந்தான் என்பதை அவனுடைய சிங்கள மொழிச் சாசனங்கள் வாயிலாக அறியமுடிகின் றது. 33 வானியற் குறிப்புக்களின் சான்றுக ளும் இவனுடைய ஆட்சியில் இக்கல் வெட்டு வரையப்பட்டதென்பதற்கு ஆதா ரமாய் உள்ளன. தென்னிலங்கை என்ற மொழித்தொடர் ஈழத்தின் தென் பகு தியை மட்டுமன்றி ஈழம் முழுவதையும் குறிக்கும் வகையிலும் தமிழ் இலக்கியத்தி லும் தமிழ்ச் சாசன வழக்கிலும் பயன்படுத் தப்பட்டுள்ளது. இரு இலங்கைகள் இருந் தன என்பது இலக்கிய மரபு. பாரதத்தில் உள்ள இலங்கையினின்று வேறுபடுத்துவ தற்காக ஈழத்தைத் தென்னிலங்கையெ னச் சிறப்பித்துக்கூறுதல் வழக்கம்.
பதின்மூன்ருவது நூ ற் ரு ண்  ைட ச் சேர்ந்தன என்று உறுதியாகக் கொள்ளக் கூடிய தமிழ்ச் சாசனங்கள் இதுவரை கிடைக்கவில்லை. பதினன்காம் நூற்றண் டைச் சேர்ந்த தமிழ்ச் சாசனமொன்று லங்காதிலக விகாரையிலே காணப்பட் டது. நாற்பத்தாறு வரிகளைக்கொண்ட சாசனம் நான்காவது புவனேகவாகுவின்
மந்திரிகளுள் ஒருவரான சேஞலங்காதிகா

கலாநிதி S. பத்மநாதன் 23
ரிகள் லங்காதிலக வி கா ர த் தி ற் கு க் கொடுத்த நிவந்தங்களைப் பற்றியும் பிற திருப்பணிகளைப் பற்றியும் கூறுகின்றது. இதனைப் பேராசிரியர் பரணவிதான சிறந்த முறையில் வாசித்து வெளியிட்டுள்ளார்.34
கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டகம என்னுமிடத்தில் சிங்கையாரி யன் ஒருவனின் தமிழ்ச் சாசனம் கண்டெ டுக்கப்பட்டது. இது ஐந்து வரிகளைக் கொண்டது. வெண்பாவிலுள்ள செய்யுள் வடிவில் மேல் வருமாறு அது அமைந்துள் ளது.
/rgیٹ)‘“ கங்கணம் வேற்கண்ணிணையாற்
காட்டினர் காமர்வளைப் பங்கையக் கைமேற்றிலதம்
பாரித்தார் பொங்கொலிநீற் சிங்கைநகர் ஆரியனைச்சேரா
வனுரேசர் தங்கள் மடமாதர் தாம்.’’**
யாழ்ப்பாணத்தையாண்ட சிங்கையா ரிய மன்னர்களின் கல்வெட்டுக்களில் இது ஒன்றுமே கிடைக்கின்றது. மேலும் பதி ஞன்காவது நூற்ருண்டைச் சேர்ந்த ஈழ வரலாற்றை அறிவதற்கு இச்சாசனம் பெரிதும் துணைபுரிகின்றது. பதினைந்தாம் நூற்ருண்டைப் பொறுத்தவரையில் ஆரும் பராக்கிரமபாகுவின்மூன்று தமிழ்ச்சாசனங் கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன, இவற்றில் ஒன்று மாத்தறையில் உள்ள நைமண என்ற இடத்திற் கண்டு எடுக்கப்பெற்றது. இருபத்தேழு வரிகளிலுள்ள, கிரந்தமும் தமிழும் கலந்தெழுதப்பெற்ற இச் சாச னத்தைப் பரணவிதான வாசித்து அதன் வாசகத்தை வெளியிட்டுள்ளார். 34 இது ஓர் பிராமண சத்திரத்திற்கு அளித் த தானங்களைப் பற்றிக்கூறுகின்றது. அண் மையிலே யாழ்ப்பாண நகரின் பிரதான
33. EZ
34. S. Paranavitana; "Lankatilaka Inscriptions," UCR, XVIII, Nos. 1 & 2, Jan. Apr. 1960, pp.
6 - 23.
35. Ancient Jaffna, p. 364

Page 43
24 தமிழ்ச் சாசனங்களும்.
வீதியிலே ஒரு தேனீர்க்கடையிலே இவனு டைய காலத்தைச் சேர்ந்த ஒரு சாசன கண்டெடுக்கப்பட்டது. துர்அதிஷ்டவ மாக இதில் திரிபுவனச் சக்கரவர்த்திக பராக்கிரமபாகு என்ற மொழித்தொட மட்டுமே வாசிக்கக்கூடிய நிலையில் சா னம் காணப்படுகின்றது.
ஆரும் பராக்கிரமபாகுவின் மூன்( வது தமிழ்ச் சாசனம் முன்னேஸ்வர கோயிலில் இடம்பெற்றுள்ளது. இக்க வெட்டின் வாசகத்தையும் அதன் புகை படங்களையும் கலாநிதி வேலுப்பிள்ை பதிப்பித்துள்ளார். 36 இக் கல்வெட்டிலு டைய வாசகத்தைக் கொண்ட பிர யொன்று பிரித்தானிய பொருட்காட்சி சாலையைச் சேர்ந்த நூல்நிலையத்திே யாழ்ப்பாண வைபவ மாலையின் பிர யோடு இணைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பான வைபவ மாலையின் மூலப் பிரதியை படித்தபொழுது இ த னை ப் படிக்கு வாய்ப்பு இக்கட்டுரை ஆசிரியருக்கு கிடைத்தது. கல்வெட்டிலுள்ள ஒருசி எழுத்துக்களைத் தவிரச் சாசனத்தின் வா கம் பெருமளவிற்கு முழுமையாக அப்பிர யிலே இடம்பெற்றுள்ளது. யாமறிந் வரையில் இப்பிரதியில் இடம்பெற்றுள் வாசகமே அக்கல்வெட்டினை வாசிப்பதற் மேற்கொண்ட முதலாவது முயற்சியில் பயணுகும். அதனை வாசித்தவர் யார் என பது தெரியவில்லை. எழுத்துக்கள் சிதை ருத நிலையிலே இருந்த காலத்தில் க: வெட்டு வாசிக்கப்பெற்றதாகத் தோன்று கின்றது. அவ்வாசகம் மே ல் வ ரு மா அமைந்துள்ளது.
"ஸ்/ைஸ்தி பூர் சமந்த பத்ர சரகு, விந்த வந்திக தினகர வம்ஸா பிஜா ராஜா திராஜ பரராஐஸேகர புஜங். திரிபுவனச் சக்கரவர்த்தி பூர் பரா கிரமபாகு தேவர்க்கு ሀ/ fir 6oör ( 38ஆவது ஐப்பசி முற்பதாம் பக்க மொண்ணி ஸ்வரமுடைய தம்பிராணு. பூஜிக்கிற நம்பிமாரை ஐய வர்த்தன. கோட்டைக்கு அழைத்து விஜஸ்ாம (வ) பண்டிதர் /ரோகித தம்பிராணு
Dif ஷேத்திரங்களிற் செய்து கேட்டு முன்பு நம்பிமார்க்கு நின்

கலாநிதி S. பத்மநாதன்
:
2
மொண்ணிஸ்வரத்தில் சீமைக்கு உட் பட்ட சேஷத்திரத்தம் பிசானுர்க்குத் திருநாமத்துக்காணியாகக் கற்பித்து நம்பிமார்க்குப் பூஜைக்காணியாக இலுப்பைத்தெணியில் வயல் அம ணம் இருபத்திரண்டும் கோட்டைப் பு/ட்டியில் வயல் அ மனம் முப்பதும் முதல் மைக்குக் கற்பித்து/ தித்தக் கடையில் வயல் அமணம் எட்டும் இதுக்குள்ள குடியிருப்பு/ம் காடும் ஆக வும் நியமித்து மொண்fைஸ்வரத்தில் நம்பிமார்க்கு இருக்கக் கற்பித்து மகினu/ள்ளது/ம் முன்னுளி அரிசியில் அமுது கறிய முது இஃலய முது சுகந் தம் முதலானவையும் நம்பிமார்க்கு மாதமொன்றுக்குப் பணம் முப்பதும் முதல் மைக்குடைய பணம்மாசமொன் விற்கு ஒவ்வொரு தற்குப் பதினுென் gpy uò ? 52/ fiřø Sygdšeð Lý Lu ar yr uż u af? luv Loar கச் சந்திராதித்ய வரைக்கும் சர்வ ம7ணியமாக நடக்கும் படி மொண் 7ைஸ்வரமுடைய தம் பிரானுர். அபr மதியவர்களுக்கு நியமித்து அளவுக்கு மேல் ஒருவராலும் விக்தம் அன்
மியே இருக்கக் கற்பித்தருளி ைஇந் தக் காணிக்கு அஹிதம் செய்தவர் கள் பஞ்சமகா பாதகம் செய்தவர்க
36. Ceylon Tamil Inscriptions. pp. 37-43
இக்கல்வெட்டு நான்கு நீளமான வரிகளைக் கொண்டுள்ளது. கலாநிதி வேலுப்பிள்ளையின்
நூலிலுள்ள படத்தில் கான்கு துண்டுகளின்
புகைப்படங்கள் தரப்பட்டுள்ளது. முதலாவது வரியின் இறுதியில் வரும் பகுதியை சரம ஸ்வ
பணம் தாபரோஹி என வாசித்துள்ளார். அதற். குப் பதிலாக விஜஸாமகவ பண்டிதர் புரோகி தரை என வாசிக்கவேண்டும்.அவருடைய வாச
கத்திலே விடுபட்ட பகுதிகளை பிரித்தானிய நூலகத்திலுள்ள (இங்கு தரப்பட்ட) வாசகத்தி திலே கண்டு கொள்ளலாம். முதலாவது வரியில்
அவர் ஆதித்தய வம்ஸ் பிஜாத என வாசிக்க வேண்டும். மூன்ருவது வரியில் ஸ்த்ரா மாக கடக்
கும்படி என அவர் வாசித்த சொற்றெடரைச் சர்
வமான்யமாக கடக்கும்படி என வாசிக்கவேண்
டும். அவரின் வாசகத்தில இறுதி வரியில் வரும்
வடமொழிச் செய்யுள் முற்றிலும் இடம்பெற
வில்8ல. அவரின் நூலிலே தரப்பட்ட புகைப்படத் திலே ததி தம் கனாகாதஸ்ய சைவஞான மஹோ
ததேர் என்ற சொற்ருெடர் தெளிவாகக் காணப்படுகின்றது.

Page 44
தமிழ்ச் சாசனங்களும்.
7ெ fகவும், இதற்கு ஹிதம் செய்தவர் கள் தரிய பதத்தைப் பெறக் கடவார் désor.”
ததி தம் கண நாதஸ்ய சைவஞான மஹோததே மொண்ணிஸ்வரப் பிரஸாதேத சண்ட நாதஸ்ய சாஸநம்.17
பதினைந்தாம் நூற்றண்டின் தொடக் கத்திலே சீனப் பேரரசனல் வரைவிக்கப் பட்ட கல்வெட்டொன்று காலி நகரிலே கண்டெடுக்கப்பெற்றது. இது தேவநக ரென வழங்கிய தேநுவரையில் உள்ள இந் துக் கோயிலுக்குச் சீனப் பேரரசரான யுங் லோவின் சார்பில் அளிக்கப்பட்ட நன் கொடைகளைக் கூறுகின்றது. இருபத்தி நாலு வரிகளைக் கொண்ட மிக முக்கிய மான இச்சாசனம் பரணவிதானவினுலே வாசிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.98
கி. பி. ஒன்பதாம் நூற்றண்டு முதல் தென் இந்தியாவிலே வளர்ச்சி பெற்றி ருந்த நாளுதேசிகள் மணிக்கிராமம் வளஞ் சியர் திசைஆயிரத்துஐஞ்ஞாற்றுவர் முதலிய வணிகர் குழாங்கள் சிலவற்றின் நடமாட் டம் ஈழத்தில் இடம் பெற்றிருந்தது. திசை ஆயிரத்து ஐஞ்ஞாற்றுவர் என்ற வணிகர் குழாத்தின் கல்வெட்டுக்கள் சில ஈழத்தில் இருந்தன. அவற்றிலே பதவியா, வஹால் கட, விகா ரஹின்னை என்னும் இடங்களில் இருந்த கல்வெட்டுக்களை வாசித்துக் கலா நிதி வேலுப்பிள்ளை வெளியிட்டுள்ளார். 39 இவையனைத்தும் கிரந்தம் கலந்த தமிழில் உள்ளன. இவற்றிலுள்ள வரிவடிவங்கள் பதினுெராம் பன்னிரண்டாம் நூற்ருண்டு களுக்குரியனவாகக் காணப்படுகின்றன. இக் கல்வெட்டுக்களை வாசிக்க மேற் கொண்ட முயற்சியானது குறிப்பிடத்தக்க தென்னும் வாசகத்திற் பல திருத்தங்க ளுக்கு இடமுண்டு. இம் மூன்று சாசனங்களி லும் தொடக்கத்திலே இவ் வணிகர் குழாத்திற்குரிய மெய்க்கீர்த்தியின் பகுதி கள் இடம்பெறுகின்றன. இம்மெய்க்கீர்த்தி களின் வாசகத்தில் சில மாற்றங்கள் ஏற் பட வேண்டும். 40 இவற்றைத் தெளிவான முறையிலே வாசிப்பதற்கு உதவக்கூடு மென்ற காரணத்தினுலே தென்னிந்திய

கலாநிதி, S. பத்மநாதன் 25
சாசனங்களென்ற தொகுதியிலே வெளி யிடப்பட்ட இவ்வணிகர் குழா த் தி ன் மெய்க்கீர்த்தி மேலே தரப்படுகின்றது.*
'ஸ்வஸ்தி பூரீ பூமீ தேவி புத்ராணும் கூடிரரசுfரோத் பூர் விணும் ஜயந்தி சித்ராலோகானும் ராஜ்யபரிபால காணும் சர்வலோகாய ஹிதார்த்தாய சித்ரமேள ஸாஸ்னம் திரிபுவநாஸ்ரய வந்துஸ்தவீர ஸாஸனம் லக்ஷண லக்ஷமீவிலா சாலங்கிருத வக் ஷஸ்தல புவன பராக்கிரம பூg வாசுதேவ ஸ்காயகா தேவி மூலபத்ராலோப பூரீ ஐம்பொழிற்பர மேஸ்வரிக்கும் பூமிதேவிக்கும் மக்களாகி நிகழாநின்ற மதி தொடப்பொங்கு மாடவீதி பதினெட்டுப் பட்டினமும் முப்பத்திரண்டு 66m Ig (puh அறுபத்துநான்கு கடிகைத் தாவளமும் தாவளத்திலிருந்து தன்மை வளர்க்கும் செட்டியும் செட்டி புத்திரனும் தவறென்றிலாத தன்மையொழுக்கத்து கவறை தன்னெடு காசியபன் விடுத்த சாமுண்டேஸ்வரியும் உருத்திரன் விடுத்த ஒலைவாரியனும் உன்னியது முடிக்கும் ஒண்திறல் வீரர் பன்னிரு திறத்துப் பணிசெய் மக்களும் முத்தமிழ்ப் பாடலொபாடலோவா விழவும் வேள்வியும் விளங்கிய வீதியிடை தெங்கும் பலாவும் தேமாஞ்சோலையும்
37. British Museum Oriental Manuscripts: 6616,
R. p. 56
38. S. Paranavitana. "The Tamil Inscription of the Galle Trilingual Slab” EZ III, No. 36.
39. Ceylon Tamil Inscriptions, pp. 46-77.
40. வஹால்கட சாசனத்தில் வரும் முதல் மூன்று வரிகளையும் ஸ்மஸ்த (புவ}ஞஸ்ரய வந்துஸ்த வீர ஸாதனலகூடிமீ லங்கிருதவசுஷஸ்தல புவாக பராக் ரம பூரீ வாஸ"தேவி கண்டலி மூலபத்ர. நீ அய்ய மொழிற்புர பரமேஸ்வரிக்கு மக்களாகிய. என வாசிக்கலாம்.
41. இராமாகாதபுரத்துத் திருப்பத்தூர் தாலுகாவைச்
சேர்ந்த பிரான்மலை என்னுமூரிலுள்ள சொக்க
காதர் கோயிலில் இச்சாசனம் வரையப்பெற்றுள் GMT35. SII, VIV, No. 426

Page 45
26 தமிழ்ச் சாசனங்களும்.
சந்தண வெலிச் சண்பகப் பொழிலும் வாழையும் கமுகும் வளர்கொடி முல்லையும் பூவையும் கிள்ளையும் பொலிவொடுசூழ வாட்டமின்றிக் கூட்டம்பெருக அறம் வளரக் கலிமெலிய புகழ்பெருகப் பகை பணிய திசையனைத்துஞ் செவிடுபட செங்கோல் முன்னுகவும் செம்பொற் பசும்பை தெய்வமாகவும் கூடிமையினெடுங்குடி கருணையெய்தக் சமய தன்மை யினிது நடாத்தி நிகழா நின்ற நான்குதிசை ஸ்மஸ்தலோகப் பதினெண் விஷையத் தோமும் எட்டை வட்டையிடை வட்டைகளிற் திசை விளங்கு திசையாயிரத்தைஞ்ஞாற்று வரோமும் அற்றைவட்டை பருவட்டை நாரத்தரை நல்வாத்தரை திசை விளங்கு திசையாயிரத்தைஞ்ஞாற்று onu GTr(ıpub
42. சி. பத்மாநாதன், இரு தமிழ்ச் செப்பேடுகள்", சிந்தனை மலர் 3 இதழ் 1, ஜனவரி 1970 பக்கங் கள் 52.57,
43. சி. பத்மகாதன், "கயிலே வன்னியகுர் மடதர்ம சாதனப் பட்டையம்,தினகரன்,கொவம்பர்,1970 வன்னியஞர், பேராதனை, 1970 பக்கங்கள்
44. செ. குண சிங்கம் எழுதிய கள்ளியங்காட்டுச் செப்பேடுகள் என்ற நூலுக்கு அணிந்துரை அளித்த பொழுது கலாநிதி கா. இந்திரபாலா எழுதியவை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஐந்து சாசனங்கள் மட்டுமே ஆராய்ச்சியாளரால் அறியப்பட்டிருக் தன. அவ ற் று ன் மு ன் று மட் டு மே தமிழ் ச் சாசனங்கள் (கயினுதீவுக் கல் வெட்டு, உரும்பிராய்க் கல்வெட்டு, கள்ளியங் காட்டுப் பரராசசேகரன் பட்டையம்), (செ. குண சிங்கம், கள்ளியங்காட்டுச் செப் பே டு கள், கொவம்பர் 1970 பேராதனை, பக்கம் V) ஆயினும் இதை எழுதுவதற்குப் பத்து மாதங் களுக்கு முன் தான் வெளியிடும் சிந்தனையில் (சிக் தனே, மலர் 3, இதழ் 1, ஜனவரி 1970 பக்கம் 2 (கலாநிதி இந்திரபாலா இக்கட்டுரைஆசிரியரின்) இரு தமிழ்ச்செப்பேடுகள்" என்ற கட்டுரையினைக் குறித்து ஆங்கிலத்தில் மேல்வருமாறு எழுதி (Gof: 5. Two Tamil copper plate Inscriptions I - (Two 17th century grants from Jaffna
brought to light for the first time. One records a grant by king Pararajasekaram of Jaffna to an institution at Cidambarm in South Tndia. The other is a grant of Kayilayan, a Vanni Chieftains)

கலாநிதி S. பத்மநாதன்
நாடு நகரங்களிற் திசை விளங்கு திசையாயிரத்தைஞ்ஞாற்றுவரோமும்
அண்மையிலே யாழ்ப்பாணத்திலுள்ள இரு செப்பேடுகளின் வாசகங்கள் பிரசுரிக் கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று பரராச சேகர மகராசாவின் திருப்பணி கூறும் பட் டயம் 42 மற்றையது, கயிலை வன்னியஞர் மடதர்ம சாதனப்பட்டயம்.*3 முன்னேய தைச் சுவாமி ஞானப்பிரகாசர் பல்லாண் டுகளுக்கு முன் ஈழகேசரியில் வெளியிட்டி ருந்தார். ஆயினும், இக்கட்டுரையாசிரியர் சிந்தனையில் வெளியிடும் வரை அதனைப் பற்றி இக்காலத்து ஈழத்து வரலாற்று ஆசி ரியரும் மாணவரும் அறிந்திருக்கவில்லை .44 இவற்றுள் முதலாவது செப்பேட்டின் வாச கமும் குறிப்புக்களும் இக்கட்டுரை ஆசிரிய ரிஞலே சிந்தனை என்னும் சஞ்சிகைக்கு அளிக்கப்பட்டன. அவை "இரு தமிழ்ச் செப்பேடுகள்" என்னும் தலைப்பில் பிரசுரிக் கப்பட்டன. அக்கட்டுரையில் இச் செப் பேடு ஒரு போலிப்பட்டையமாக இருக்கக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.*
இப்பட்டையங்களைப் பற்றி மேல்வருமாறு கூறி யிருக்தோம். "அவை சிதம்பரத்திலுள்ள பரராச சேகரன் மடத்தின் முகாமையாளரும் கல்லூர் கக் தசுாமி கோயிலில் ஒதுவாராக முன் பணிபுரிந்த சிவஞானம் அவர்களின் மகனுமாகிய திரு. சிவக் கொழுந்து என்பவரிடமுள்ளன. ‘அடிக்குறிப்பு 1ல் அவர் வசிக்கும் இடம் கள்ளியங்காடு" என வும் கூறப்பட்டிருந்தது (சிந்தனே, மலர் 3, இதழ் 1, பக்கங்கள் 52, 56. 45. பரராசசேகரன் மகாராசாவின் திருப்பணி பற் றிக்கூறும் 56 வரிகளைக் கொண்ட செப்பேடு பரராசசேகரனின் ஆணைப்படி எழுதப்பட்ட தாகக் காணப்படவில்லை. சாலிவாகன சகாப்தம் தொளாயிரத்து 44-ம் ஆண்டில் பரராசசேகரன் சிதம்பரஞ் சென்ருனென்று சொல்லப்பட்டிருப்ப தால் இதை ஓர் ஆதாரபூர்வமான பட்டயமாகக் கொள்ளமுடியாது. எனினும் சிதம்பரத்தில் பரராசசேகரனுடைய பெயரைக் கொண்ட மடம் ஒன்று இன்றும் காணப்படுவதால் இந்த ஆவ னத்திற் கூறப்படும் நிகழ்ச்சிகள் உண்மையா கவே நடைபெற்றிருக்கலாம். மேலும், மூல சாச னத்திலிருந்து பெயர்த்தெழுதிய போதும் இவ் வேட்டை எழுதியவர் ஆண்டினேப் பிழையாக எழுதியிருக்கக்கூடும். யாழ்ப்பான மன்னர் குலம் மருவிப் பறங்கிகளின் ஆட்சி நிகழ்ந்த காலத்தில் யாழ்ப்பாண காட்டில் தாம் கொண்டி ருந்த உரிமைகளை நிலைநாட்டும் கோக்கத்துட னும் பரராசசேகரன் திருப்பணிகளே ஆதாரமா கக் கொண்டு மடாதிபதிகள் இப்பட்டயத்தை எழுதியிருக்கவும் கூடும்" சிந்தனை மலர், 3, இதழ் 1, பக்கம் 53.

Page 46
தமிழ்ச் சாசனங்களும்.
கயிலை வன்னியஞர் மடதர்ம சாதனப் பட் டயமும் இவ்வாறன ஒரு ஆ வ ண ம் போலவே தோன்றுகின்றது. 48 இரண்டா வது செப்பேட்டைப் பொறுத்தமட்டில் அது பிற ஆதாரங்களிலே கிடைக்காத எந்தவிதமான சான்றினையும் தரவில்லை. மேலும் பதினெட்டாம் நூற்ருண்டு வட இலங்கை வரலாற்றைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வன்னிநாட்டு வரலாற்றினைப் பொறுத்தவரையில், பல நூற்றுக்கணக் கான ஒல்லாந்தரின் ஆவணங்கள் கிடைக் கின்றன. இவை ஈழத்திலும் ஒல்லாந்திலும் உள்ளன. அவை அனைத்தும் ஒல்லாந்து மொழியில் உள்ளன. அவற்றிலே மிகப் பெரும்பாலானவை ஏட்டுப் பிரதிகளா கவே இருக்கின்றன. ஆயினும், கயிலை வன் னியஞர் மடதர்ம சாசனப் பட்டயத்தின் வரலாற்று முக்கியத்துவமானது சிலரால், (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உட்பட) பெரிதும் மிகைப்படுத்தப்படுகின் றது. அரசியல், சமூகவரலாறு, சமய நிலை கள் என்பவற்றை அறிந்து கொள்வதற்கு ஈழத்தமிழ்ச் சாசனங்கள் எந்தளவுக்குப் பயன்படுகின்றன என்பதைச் சுருக்கமாக ஆராயவேண்டும்.
அரசியல்
ஈழத்தமிழ்ச் சாசனங்கள் ஈழநாட்டு அரசியல் வரலாற்றை ஆராய்வதற்கு சோழர்காலம் முதலே பயன்படுகின்றன. சோழர்களது கல்வெட்டுக்கள் முப்பதிற்கு மேலாக ஈழத்திலே கிடைக்கின்ற பொழு திலும், இவை சோழராதிக்கத்தின் வளர்ச் சியைப் பொறுத்தமட்டில் பிற மூலங்க ளிலே கிடைக்காத சான்றுகளெதனையும்
46. கயிலை வன்னியனுர் மடதர்மசாதனப் பட்டயத் தில் 1. வேங்கடபதி தேவர் ப்ருதுவீ ராஜ்யம் பண்ணியருளா நின்ற ஸகாப்தம் 1644 இதன் மேற்செல்லா நின்ற.. ‘என்ற மொழித் தொடர் வருகின்றது . சகாப்தம் 1644இல் (கி. பி. 1722). வேங்கடபதிதேவர் எனப் பெய ரிய மூன்று மன்னரே விசயாககரப் பேரரசில் ஆட்சிசெய்தனர். (வேங்கடபதிதேவர் 1. கி. பி. 1527; வேங்கடபதிதேவர் 11, கி. பி. 1586-1614: வேங்கடபதி கி. பி. 1630-1641) மூன்றம் வேங் கடபதிதேவர் இறந்தபின் 801 ஆண்டுகளுக்குப் பின் (1721இல்) அவரின் காலத்திற் பட்டயம் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றமை வியப் பிற்குரியதாகவேயுள்ளது. மேலும் கி.பி. 1721

கலாநிதி S. பத்மநாதன் 27
தரவில்லை என்று கூறலாம். மகாவம்சம் என்கின்ற நூல் சோழரின் படையெடுப்புக் கள் பற்றியும் சோழர் ஆட்சிக்காலத்தில் ஈழத்தில் ஏற்பட்ட பல போர்களைப் பற்றி யும் ஒரளவு விரிவான ஆதாரபூர்வமான குறிப்புகளைக்கொண்டுள்ளது.*7 ஈழத்திலே சோழர் ஆதிக்கம் வளர்ந்தவாற்றையும்பின் தளர்வுற்றுமறைந்தவாற்றையும்இந்நூலின் துணைகொண்டு அறியமுடிகின்றது. மேலும் சோழப்பெருமன்னர்களின் மெய்க்கீர்த்தி அளில் ஈழம் மீது ஏற்பட்ட படையெடுப்புக் கள் பற்றியும் ஈழத்தில் ஏற்பட்ட போர் கள் பற்றியும் பல குறிப்புக்கள் வருகின் நன. முதலாம் ராஜராஜனுடைய கல் வெட்டுக்கள், அவனுடைய எட்டாவதுஆட் சியாண்டு முதல் ஈழத்தினை அவன் கைப்பற் றியமை பற்றிக் கூறுகின்றன. 48 ஆணுல் மகாவம்சம் 1017ம் ஆண்டளவிலேயே முதன்முதலாக ஈழம் சோழராற் கைப்பற் றப்பட்டதெனப் பொருள்படுமாறு கூறு கின்றது. எனினும், இராசராசனின் கல் வெட்டுக்கள் குறிப்பாகப் பதவியாவில் கண்டெடுக்கப்பட்ட இம் மன்னனது கல் வெட்டு, அவனது காலத்தில் ஈழத்தின் வட பகுதி சோழரால் கைப்பற்றப்பட்டிருந் தது என்பதை உறுதிப்படுத்துகின்றது.
வார் காவற்றுறையிலே அண்மையிலே கண்டெடுக்கப்பெற்ற முதலாம் ராஜேந் திர சோழனுடைய கல்வெட்டு பிற மூலங் களிலே கிடையாத சில தகவல்களைத் தரு கின்றது. இதிலே ஜெயங்கொண்ட சோழ மூவேந்தவேளார் என்ற தண்டநாயக்கன் ஈழத்து அரசனையும் அவனது மகாராணி யையும் பிடித்துக்கொண்டு போஞன் என்ற குறிப்பினை அது கொண்டுள்ளது.49
இற்கும் பல்லாண்டுகளுக்கு முன்பே விசயங்கரப் பேரரசு அழிக் துவிட்டது. அத்துடன் இரு பட்ட பங்களிலும் அவை எழுதப்பட்ட ஆண்டினைப் பற்றிப் பிரச்சனையுள்ளதால் இவையிரண்டும் போலிப் பட்டயங்கள் என்ற ஐயப்பாடு வலுப் பெறுகின்றது. சில வரலாற்றுண்மைகளே உள் ளடக்கிய போலிப்பட்டயங்களும் பல உள்ளன. 47. சூளவம்சம் 48. 49. ஸ்வஸ்தி ரீ. ஈழம் முழுவதுங் கொண்டு ஈழத் தரசரையும் பெண்டிர் பண்டாரமும் பிடிச்சுக் கொடுபோன அதிகாரத் தண்ட நாயகனுர்? ஜயங் கொண்ட மூவேந்தர் வேளார். ... ET. p. 12

Page 47
23 தமிழ்ச் ச்ாசன்ங்கிளும்.
ஈழத்தில் அமைந்த சோழரின் நிர்வா முறையினைப் பற்றி அறிவதற்கு அங்கு காணப்படும் சோழரின் கல்வெட்டுக்கவே பிரதம மூலங்களாக அமைகின்றன. மு. முடிச் சோழமண்டலமான ஈழம் சோழ களால் வழநாடு, நாழு என்னும் பிரிவு களாக வகுக்கப்பட்டிருந்ததென்பதை இக் கல்வெட்டுக்களின் துணைகொண்டு அறிய முடிகின்றது. முதலாம் ராஜேந்திர சோழ தேவரின் மாதோட்டம் கல்வெட்டு ஒன்று நகளுைக்கொடி நாடான அருமொழிதேவி வளநாட்டைக் குறிப்பிடுகின்றது. 30 அதி ராஜேந்திர தேவரின் பொலநறுவைச் சாக னத்தின் வாயிலாக ஜனநாத மங்கலம் என்ற நகரம் ராஜேந்திர சோழ வளநாட் டில் இருந்ததென்பதை அறியமுடிகின் றது. 31 நாதனுர் கோயில் என வழங்குப் ராஜராஜப் பெரும்பள்ளியென்ற புத்த விகாரத்தின் அழிபாடுகளிடையே கண் டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வெள் காமம், பரகேசரி வளநாடு, ராஜேந்திர சிங்க வளநாடு, அபயாஸ் ரய வளநாடு என் னும் பெயர்களை கொண்டிருந்ததென்பதை அறியத் தருகின்றன. 32 தஞ்சைப்பெருங் கோயிலில் உள்ள ராஜராஜனது இருபத் தேழாம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட் டொன்று ஈழத்திலுள்ள மா ப் பி சு ம் ட கோட்டியாரமான விக்கிரம சோழவள நாடு, கணக்கன் கோட்டியாரமான ராஜ ராஜ வளநாடு என்னும் நிர்வாகப் பிரிவ களைப் பற்றிக் கூறுகின்றது. 33 பொலநறு வையானது ராஜராஜனுடைய விருதுக் ளில் ஒன்றன ஜனநாதன் என்பதை நினைவி கூரும் விதமாக ஜனநாத மங்கலம் எனட் பெயரிடப்பட்டது. ராஜேந்திர சோழ
50. SII, IV, No 1412. I nyfils,Gir 21-24
51. SIL, IV, No. 1388. வரி 12பூரீ 52. ET, pp. 44, 48.
*.....، (ராஜேந்திர) சோழதேவற்கு யாண்டு (1 5ஆவது இராஜேக்திரசிங்க வளங்காட்டு அயயான ரய வளாகாட்டு. வெல்கம் வேரமான ராஜராஜ Gulub Lu Git Grf......” (ET. p. 45)
Ceylon Tamil Inscriptions, pp. 18-19 காதகுர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டிலி ருந்து மானுவதிளாநாடு என்ற ஒரு பிரிவு இரு ததென்பதை அறியமுடிகின்றது. (Ceylo

கலாநிதி S. பத்மநாதன்
தேவரின் மாதோட்டக் கல்வெட்டில் மாதோட்டமான ராஜராஜபுரத்து என்ற மொழித்தொடர் வருகின்றமையாலே மாதோட்டம்,ராஜராஜபுரம் என்ற புதிய பெயரை சோழராட்சியிற் பெற்றிருந்த தென்பது தெளிவாகின்றது. 34 மதிரிகிரியா விலே கண்டெடுக்கப்பட்ட ராஜேந்திர சோழதேவரின் இரண்டாவது ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு மண்டல கிரியான நித் தவினுேத புரத்தைப் பற்றிக் குறிப்பிடுகின் 35.[jيّtD
ஈழத்திலே சோழரின் நிர்வாகத்திற். சேவைபுரிந்த சில அதிகாரிகளின் பெயர் களையும் அவர்களின் பதவிகளையும் பற்றிச் சில சான்றுகள் இக்கல்வெட்டுக்களில் வரு கின்றன. மாதோட்டம் கல் வெட் டி ல் இருந்து ராஜராஜ ஈஸ்வரம் என்கின்ற கற். றழியை எடுப்பித்த தாழி குமரன் சோழ மண்டலத்து கூடித்திரிய சிகாமணி வள நாட்டுச் சிறு கூற்ற நல்லூர்க்கிளவனென்று வருணிக்கப்படுகின்ருன் .38. அவ்விடத்தில் உள்ள பிறிதோர். கல்வெட்டு மாதோட் டத்தில் நிர்வாக சேவை புரிந்தே சிறு குளத்தாரு டையான். தேவன் என்ப வன் ராஜேந்திர சோழ தேவர் பெருந் தனத்தைச் சேர்ந்தவன் என்ற தகவலைத் தருகின்றது. 37 மதிரிகிரியாவில் உள்ள கல் வெட்டில் இளைய மும்முடிச் சோழ அணுக் கர் என்ற படைப்பிரிவு குறிப்பிடப்பட் டுள்ளது. நாதனுர் கோயிலில் உள்ள கல் வெட்டொன்றில் புதுக்குடியான ஆதித்தப் பேரரயன் என்னும் பிரதானி பற்றிய குறிப்பு வருகின்றது.* பொலநறுவை யிலேயுள்ள கல்வெட்டுக்களிலும் சில அதி
)
Tamit - Inscriptions p. 14) gas&or Loirsdag
வளநாடு எனக் கலாநிதி இந்திர பாலா கொண்
டமை தவருனதாகும், (ET, p, 41)
மாளுவத்துளகாமம் என்பது பரகேசரி வளாகாட்
டைச் சேர்ந்ததென்பதை பிறிதோர் கல்வெட்
டின் மூலம் அறியமுடிகின்றது. (ET, p, 44) 53. SI.,
54. SII, IV: 412 Guff,6ir 10-15 55. ET., p. 27 56. SII, IV, 1412. 57. SII, IV, 1414. வரிகள் 10.15
58. Ceylon Tamil Inseriptions, p.

Page 48
தமிழ்ச் சாசனங்களும்.
காரிகளின் பெயர்களுள்ளன. பூரீ மோக னுார் உடையான் திருப்பூவண தேவன், பூரீ தில்லைக்கரசு தியாக சிந் தா மணி மூவேந்தவேளான், பூறி முகரி நாடாள் வான் மகள் கற்பவம், பூரீ நல்நூருடை யான் பஞ்சநிதிவாணன், விறப்பேட்டு நாட்டு மங்கலப்பாடிவேளான், சோழப் பல்லவரையன், முதலியோர்கள் ஜனநாத மங்கலத்தில் இருந்தனர்.39 சங்கிலிக்கந்த ராவ என்னும் இடத்திலேயுள்ள ராஜேந் திர சோழனின் கல்வெட்டிலே சேஞபதி கள் ஐயமுறிநாடாள்வார் என்ற பிரதானி பற்றிக் கூறப்பெற்றுள்ளது. 90
சோழக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் ஈழத்தில் சோழர்கள் பெற்ற வரிகள் சில வற்றைப்பற்றியும் சான்றுகள் உள்ளன. ராஜேந்திர சோழனுடைய மாதோட்டம் கல்வெட்டு ஒன்றில் 'இவ்வூர் நெய்யும்தறி களில் தறியால் திங்கள் அரைக்கால் அக்க மும் இறுப்பனவற்றில் குடுப்பா னிடை திரு வாய் ஒரு வட்டமும் கொள்வதாகவும் " என்ற மொழித்தொடர்கள் வருகின்றன. தஞ்சைப் பெருங்கோயிலில் உள்ள கல் வெட்டொன்றில் கோட்டியாரத்திலுள்ள வளநாடுகளிலே இறை கடனுகப்பெற்ற காணிக் கடன் இலுப்பைப் பால் நெல் முதல் என்னும் வரிகளைப் பற்றிக் கூறப்பட் டுள்ளது.81 -
முதலாம் விஜயபாகுவின் காலத்தைச் சேர்ந்த வேளைக்காரரது சாசனம் அம்மன் னனின் ஐம்பத்தைத்தாவது ஆண்டைக் குறிப்பிடுகின்றது. மகாவம்சமும் இவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்தா னெனச் சொல்கிறது. இந்நூலின் கூற்றிற் குச் சாசனத்தின் குறிப்பு ஆதாரமாய் அமை கின்றது. மேலும் விஜயபாகு தன் ஐம்பத் தைந்தாவது ஆட்சியாண்டில் 73வது வய தினை அடைந்திருந்தான் என்ற தகவலையும் தருகின்றது. ?ே மேலும் இவன் தன் பகை வர்களை வென்றபின் அனுராதபுரத்திற்குச் சென்று அங்கு முடிசூடினன் எனவும் சொல் கின்றது.
முதலாவது ஜெயபாகுவின் ஆண்டி னைக் குறிப்பிடும் தமிழ்ச் சாசனங்கள் வர லாற்று மூலங்கள் என்ற முறையில்.அதிக

கலாநிதி S. பத்மநாதன் 29
முக்கியத்துவம் பெறுகின்றன. இவனது 43வது ஆட்சியாண்டுவரை இவை எழுதப் பட்டுள்ளன. இவ்வரசன் பொலநறுவை யில் முடிசூடி இருந்த பொழுதிலும் சில நாட்களில் ஆட்சி அதிகாரத்தை இழந் தான். விக்கிரமபாகு உறுகுணையில் இருந்து இராசரட்டைக்குச் சென்று இவனையும் இவனது மருமக்களான மானுபரணன் முத லியோரையும் அங்கிருந்து துரத்திவிட்டு 21 ஆண்டுகளாக வட இலங்கையில் ஆட்சி புரிந்தான். அதன்பின் மாஞபரணனின் கைப்பொம்மையாகவிருந்த ஜெயபாகு உறுகுணையிற் கீர்த்தி பூg மேகனேடு தங்கி யிருந்த போதிலும் நிர்வாகத்தில் எந்த விதமான பங்கும் கொண்டதாகத் தெரிய வில்லை. இவன் பொலநறுவையில் அதிகா ரம் இழந்தபின் அவனது செயல்களைப் பற்றி மகாவம்சம் ஒன்றுமே கூறவில்லை. ஆயினும் இவன் இறந்த பின்னரும் முத லாம் பராக்கிரமபாகு அரசஞகும் வரை கல்ட்ெடுக்களெல்லாம் இவனது ஆட்சி யாண்டைக் குறித்தே எழுதப்பட்டன. ஆகையால் விக்கிரமபாகு, இரண்டாம் கஜ பாகு, முதலாம் மானுபரணன்முதலியோர் முடிபுனைந்திருக்கவில்லையெனவும், அதனல் அவர்கள் சட்டபூர்வமாகத் தத்தம் ஆட்சி யாண்டுகளைக் குறித்து ஆவணங்களை எழு துவதற்கு உரிமை பெற்றிருக்கவில்லை என் றும் வரலாற்ருசிரியர் கருதுகின்றனர். 83
புது முட்டாவையில் உள்ள இவனது எட்டாவது ஆட்சியாண்டைச் சேர்ந்த சாசனத்தில் 'பாண்டியஞர் வீரப்பெரு மாள் நம்பிராட்டியார் கொலோத்துங்க சோழதேவர் திருமகளார் சுந்தமல்லி யாழ்வார்' என்ற மொழித்தொடர் வரு
59. SII, IV, 1393. 60. SII, IV, 1408
61. SII, IV, 1414, SII, IV, Pt. 4, No. 92.
62 ... ஐம்பத்தய் யாண்டு இலங்கை முழுதும் ஒரு. குடை நி(ழ)ற்றித் திருவிரஜ்யஞ் செய்தருளி எழு வத்துமூவாண்டு திரு கடிைத்திரஞ் செலுத்தின கோ பூரீ சங்க போதிவத்மரான சக்கரவர்த்திகள் ருநீ விஜயபாகுதேவர். SII, IV, 1393. aufersGir 13-16. தளவம்சம், 60; 91.
63. EZ II, pp. 98-200

Page 49
30 தட் 'ச் சாசனங்களும்.
ap.6 1ம் மீாஞ்பரணன்" 6%עr Lחנ என்ற பெயரினையும் கொண்டிருந்தா என மகாவம்சம் கூறுகின்றது. வீரபா என்ற பெயரே வீரப்பெருமாள் எனத் த ழில் எழுதப்பட்டுள்ளது. மானுபரணனி தந்தை ஒரு பாண்டிய இளவரசன் எ பதை மகாவம்சத்தின் குறிப்பிலிருந்து அ யலாம். 63 பாண்டியனின் மகனகை யா வீரபாகு பாண்டியஞரெனக் குறிப்பிட்டு ளான். இக்கல்வெட்டு குலோத்துங் சோழனின் மகளாகிய சுந்தமல்லி ஆ வாரை மணந்திருந்தான் என்ற தகவலை தருகின்றது. வேறு மூலங்கள் இதனைப் ப றிக் குறிப்பிடவில்லை. எனவே பன்னிர டாம் நூற்ருண்டின் தொடக்கத்தி சோழர் குலத்திற்கும் ஈழத்து அரசர் பர பரைக்குமிடையில் மணத்தொடர்பு ஏ பட்டிருந்தது என்பது தெளிவாகின்றது இரண்டாம் மாஞபரண தேவரின் மாங் னைக் கல்வெட்டு பராக்கிரமபாகு பொ நறுவையில் முடிசூடுவதற்குச் சில நா களுக்கு முன்பாக இராசரட்டையில் ஆட் அதிகாரம் செலுத்தியதற்குச் சான்ரு மைகிறது. இராசரட்டையைத் தனதா கிக் கொள்ள இவன் மேற் கொண்ட முய சிகள் பற்றி மகாவம்சம் கூறுவனவற்றிற் இக்கல்வெட்டில் சான்றுகள் ஆதாரமா அமைகின்றன.
பதினுலாம் நூற்ருண்டைச் சேர்ந் கோட்டகமச் சாசனம் ஆரியச் சக்கரவர் திக்கும் கம்பளை அரசர்களுக்குமிடைே உள்ள தொடர்புகளை அறிந்து கொள் தற்குத் துணையாயுள்ளது. சிங்கையாரி னின் வெற்றிகளைக் கூறும் இச்சாசன மலைநாட்டின் நடுவிலே-கம்பளைக் கண்ன யில்-வரையப்பெற்றதால் யாழ்ப்பாண தரசனின் படைகள் மலை நாட் டி நுழைந்து அங்கு அரச ஞெருவனைத் தோ கடித்தன என்பதற்கு அது சான்ரு க உ ளது. இது வரையப்பட்ட சூழ்நிலைை அறிந்துகொள்வதற்கு நிகாய சங்கிரஹ ராஜாவலிய என்ற நூல்களும், மடவ என்னும் இடத்திலுள்ள விக்கிரமபாகுவி கல்வெட்டும் துணைபுரிகின்றன. ராஜா லிய என்ற நூல் பதினுலாம் நூற்றண்டி தடுப்பகுதியைச் சேர்ந்த ஈழத்து அரசிய நிலைகளைக் குறித்துச் சொல்லுகையில் க

கலாநிதி 8. பத்மநாதன்
த
| tᎢ Ꮭ
s
பளை, றைகம, யாழ்ப்பாணப்பட்டினம் ஆகிய நகரங்களில் இருந்து முறையே பராக்கிரமபாகுவின் மருமகன், அழகக் கோஞர், ஆரியச் சக்கரவர்த்தி ஆகியோர் அதிகாரம் செலுத்தினர் எனவும் , இம்மூவ ருள்ளும் ஆரியச்சக்கர வர்த்தியே படைப்ப லத்திலும், பொருள் வ ள த் தி லும் மேலோங்கி இருந்தான் என்றும் மலைநாடு, கரையோரப் பிராந்தியம் ஆகியவற்றிலி ருந்தும் ஒன்பது துறைமுகங்களில் இருந் தும் திறைபெற்று வந்தான் எனவும் எடுத் துரைக்கின்றது. 65 மடவல சாசனம் மார்த் தாண்டம் பெருமாள், விக்கிரமபாகுவின் உடன்பாட்டுடன் மலைநாட்டுப் பகுதிகளில் இருந்து திறை பெறுவதற்குப் பிராமணர் சிலரை நியமித்திருந்தான் என்றும் கூறு கின்றது. 87 கோட்டகமக் கல்வெட்டிலே கூறப்பெற்ற வெற்றிகளின் விளைவாகவே ஆரியச் சக்கரவர்த்தி தென்னிலங்கையில் ஆதிக்கம் பெற்றிருக்க வேண்டும்.
ஆரும் பராக்கிரமபாகுவின் முன்னேஸ்
வரம் கல்வெட்டில் அவ்வரசன் பரராச
ஸ்ேகர புஜங்க என வருணிக்கப்பட்டுள் ளான். இவனுடைய காலத்தைச் சேர்ந்த சிங்கள நூல்கள் இவன் யாழ்ப்பாணத் தைக் கைப்பற்றியமை பற்றிக் கூறுகின் றன. இவனது ஆட்சியில் செண்பகப்பெரு மாள் என்ற சேஞதிபதி வட இலங்கை மேல் படையெடுத்துச் சென்று கனககுரிய சிங்கை ஆரியன் என்ற பரராசசேகரனத் தோற்கடித்து யாழ்ப்பாண அரசினைக் கைப்பற்றிக் கொண்டான். 68 பரராசசேக ரனின் ஆட்சியை அழித்தமையாலேயே
64. EZ III, 33.
65. தளவம்சம், 59: 41
66. S. Pathmanathan, The Kingdom of Jaffna p. 270. (Ph. D. Thesis Submitted to the University of London, 1969) Rajavaliya edited by B. Gunasekara, Colombo, 1911, p. 46. Alakesvara Yuddhaya edited by A. W. Suravira, Colombo 1965. p. 19 Rajavaliya edited by Pemananda Bhikkhu, Colombe, 1959, pp. 73-74.
67. Ez v, Pt. 3, No. 47, pp. 463-465.
68. The Kingdom of Jaffna, pp. 326-338

Page 50
தமிழ்ச் சாசனங்களும்.
பராக்கிரமபாகு பரராசஸே கர புஜங்க என்ற விருதினைப் பெற்ருன். யாழ்ப்பா ணம் பிரதான வீதியில் உள்ள பராக்கிரம பாகுவின் கல்வெட்டு இவனுடைய காலத் தில் யாழ்ப்பாணமும் இவனுடைய ஆட்சிக் குள் அடங்கியதென்பதற்கு மேலும் ஆதா ரமாய் உள்ளது, 39
வன்னியர்களைக் குறிப்பிடுகின்ற இரு கல்வெட்டுக்கள் திருகோணமலை மாவட் டத்தில் வேருகல், கங்குவேலி என்னும் ஊர்களிலே கண்டெடுக்கப்பட்டன. இவற் றுள் கங்குவேலிக் கல்வெட்டு, மலையில் வன் னியஞரும், ஏழுரில் அடப்பர்களும், தம்பி ரானுர் - கோணைநாதனுக்குக் கங்குவேலி யிலே ஒரு நிலத்தினைத் தா ன மா க க் கொடுத்ததைக் கூறுகின்றது. எழுத்தியல் அடிப்படையில் இக்கல்வெட்டுப் பதிஞலா வது நூற்ருண்டைச் சேர்ந்ததாகக் கூறப்ப டுகிறது.70 திருமலை வன்னிமை இக்கல் வெட்டில் மலையில் வன்னியனர் எனக் குறிப்பிடப்பட்டிருத்தல் கூடும். கோணே சர் கல்வெட்டு முதலிய ஆதாரங்களில் இருந்து திருகோணமலையில் வன் னி  ைம இருந்தமையை அறியலாம். பின் போர்த் துக்கேயர் கால ஆவணங்களும், திருகோ ணமலை வன்னிபத்தைப் பற்றிக் குறிப்பிடு கின்றன. ஈழத்து வன்னிபங்களுள் திருகோ -ணமலை வன்னிபமே பல வழிகளிலும் அதிக சிறப்பிடம் பெற்றிருந்தது. பரதவர் முத லிய மீனவர்களின் தலைவர்களே அடப்பர் என அழைக்கப்பட்டனர். அடப்பர் என்ற தலைவர்கள் இப்பிரதேசத்திலே நிர்வாகத் தில் பங்கு கொண்டிருந்தனர் என்பதற்கு இச்சாசனம் சான்றளிக்கின்றது. மேலும் இதிலே தானம், வரிப்பற்று முதலிமை என் போரைப் பற்றியும் குறிப்புக்கள் வருகின் றன. கோணேசர் கோயிலின் நிர்வாக ஏற் பாடுகளைப் பற்றிக் கூறுமிடத்து இவர்க ளைப் பற்றியும் கோணேசர் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. முதலிமை, தானம், வரிப்பற்று என்போர் திருமலைப் பிரதேசத் தில் இருந்தனர் என்பதற்கு இக்கல்வெட்டு ஆதாரமாய் அமைகின்றது. பதிஞருவது நூற்ருண்டைச் சேர்ந்தது என்று கொள் ளக்கூடிய வெரு கல் கல்வெட்டில் ஒரு கோயிலின் தெற்கு மதிலைக் கைலை வன்னி

கலாநிதி S. பத்மநாதன் 31
யஞர் அமைப்பித்திருந்த சார் என்பதற்குச் சான்றுண்டு. 71
காலியிலே கண்டெடுக்கப்பட்ட சீனப் பேரரசரான யுங்லோவினுடைய கல் வெட்டு ஈழத்திற்கும் சீனுவுக்குமிடையில் பதினைந்தாம் நூற்ருண்டின் தொடக்கத் தில் நிலவிய தொடர்புகளை அறிவதற்குப் பெரிதும் பயன்படுகின்றது,72 யுங்லோ சீனு விலே பேரரசனுகியதும், சீனத்தின் புகழி னையும் ஆற்றலினையும் வெளிநாடுகளுக்கு உணர்த்தும் முகமாக பல்லாயிரக் கணக் கான போர் வீரர்களைக் கொண்ட பல மிக்க கடற்படையொன்றினைச் செங்கோ என்ற தளபதியின் தலைமையில் பலதடவை அனுப்பியிருந்தான். கி. பி. 1409-ம் ஆண் டில் ஈழத்திற்கு வந்தபோது கோட்டை யில் அதிகாரம் செலுத்தியிருந்த வீர அழ கேஸ்வரன் சீனப் படைத் த லை வ ணி ன் வேண்டுகோளுக்கு இடம் அளிக்காததாலே செங்கோவின் பகைமையைத் தே டி க் கொண்டான். செங்கோ ஆபிரிக்காவரை சென்றுவிட்டுச் சீனத்திற்குத் திரும்பிச் சென்ற வழியில் மீண்டும் இலங்கையை அடைந்து கி. பி. 1411-ம் ஆண்டளவில் கோட்டையில் வீர அழகேஸ்வரனைக் கைப் பற்றிக் கொண்டு சீனத்திற்குச் சென்ருன். செங்கோவின் படை ஈழத்திற்கு வந்த நாட்களிலேயே இக்கல்வெட்டு நாட்டப் பட்டிருக்க வேண்டும். இதன் வாசகம் சீன விலே எழுதப்பெற்றுக் கல்லிலே வரையப் பெற்று ஈழத்திலே வைக்கப்பட்டிருக்க வேண்டும். பாரசீக மொழியிலும் சீன மொழியிலும் எழுதப்பெற்ற யுங்லோவி னது கல்வெட்டுக்களும் இதோடு இடம் பெற்றன.
சமூக வரலாறு
ஈழத்திலே தமிழர்கள் வாழ்ந்திருந்த
பகுதிகளிலேயே பெரும்பாலான தமிழ்ச் ச ரா சன ங் க ள் கண்டெடுக்கப்பட்டன.
69. ET., p. 29. 70. சிக்தனை, மலர் 2, இதழ் 2-3, பக்கம் 40 7. Ceylon Tamil Inscriptions, p. 9
72. S. Paranaviana: 'The Tamil Inscription of
The Galle Trilingual Slab' EZ, III, 36.

Page 51
32 திமிழ்ச் சாசனங்களும்.
எனவே இவற்றின் மூவிர்திரளவிற்கு ஈழத் தமிழக வரலாற்றைப் பிற மூலங்களின் துணையுடன் ஆராய்ந்து அறியலாம். தென் னகத்திலிருந்து வந்த வணிகர், படையிலே சேவகம் புரிவதற்கெனச் சிங்கள மன்னர் அழைத்து வந்த போர்வீரர் முத் து க் குளிக்க வந்த பரதவர் முதலான மீனவர், படையெடுப்பாளருடன் வந்த படைப் பிரி வினர் முதலியோரின் பிற் சந்ததிகளே ஈழத்தமிழ்க் குடிகள் .73 கிறிஸ்துவிற்கு முற் பட்ட காலத்திலிருந்தே தென்னகத்தில் இருந்த பல தமிழர் ஈழத்திற்கு வந்திருந்த னர். ஆயினும் பதின்மூன்ரும் நூற்றண்டு வரை ஈழத்திலிருந்த தமிழ்க் குடிகளின் வரலாற்றைப் பற்றி எந்தவிதமான ஆதா ரபூர்வமான குறிப்புக்களும் ஈழத்தமிழ் வர லாற்று நூல்களிலே இடம்பெறவில்லை.?* பத்தாம் நூற்றண்டு வரையுள்ள ஈழத் தமிழ்க் குடிகளைப் பற்றி மகாவம்சத்தி லுள்ள குறிப்புக்களையும் பிராமிக் கல்வெட் டுக்களிலும் சிங்களச் சாசனங்களிலும் கிடைக்கின்ற ஆதாரங்களையும் துணையா கக் கொண்டே ஆராயமுடியும். கி.பி. ஒன் பதாம் நூற்றண்டளவில் ஈழத்தில் வட பிராந்தியங்களிலே இங்குமங்குமாகப் பல தமிழர் இருந்தனர் எனபதற்கு மகா வம்சம் சான்றளிக்கின்றது.78 அனு ரா த புர க் காலத்தின் முடிவில் அனுராதபுர நகரிலே தென்னிந்தியாவில் இருந்து வந்த அன்னி யர் பெருமளவில் இருந்ததாக இந்நூல் கூறுகின்றது." பொலநறுவைக் காலத்தில் ஈழத்திலிருந்த தமிழ்க் குடிகளைப் பற்றி அறிந்து கொள்ள ஈழத்தமிழ்ச் சாசனங் கள் பெரிதும் பயன்படுகின்றன.
பத்தாம் நூற்ருண்டின் இறுதியிலும் பதினேராம் நூற்ருண்டிலும்-ஈழத்தினைச் சோழர் ஆண்ட காலத்தில்-நிர்வாக அதி காரிகள் போர்வீரர்கள், வணிகர் போன்ற பல தரப்புக்களைச் சேர்ந்த தமிழர் தமிழ கத்தில் இருந்து ஈழத்திற்கு வந்தார்கள். இதன் விளைவாக ஈழத்திலே குறிப்பாக வட இலங்கையிலே தம்ழ்க்குடிகள் பெரு கின. பொலநறுவைக் காலத்தில் குறிப்பி டத்தக்க அளவிலே தமிழ்க்குடிகள் இருந் தன. இக்காலத்தில் சிங்கள மன்னரின் ஆட்சியில் முன் கூறியவாறு தமிழிலும் ஆட் சியாவணங்கள் எழுதப்பட்டன. நிர்வா

கலாநிதி S. பத்மநாதன்
கத்திலும் இராணுவத்திலும் சில பிரதான மான பதவிகளையும் தமிழர் பெற்றிருந்த னர். தமிழ்க் கல்வெட்டுக்களின் துணை கொண்டு அக்காலத்தைச் சேர்ந்த ஈழத் தமிழகத்தின் வரலாற்றினை முழுமையாக அறிந்து கொள்ளவியலாது. ஆயினும் சில சமூகப் பிரிவுகளைப் பற்றியும், பண்பாட்டு நிலைகளைப் பற்றியும் நிர்வாக சேவையிலும் இராணுவ சேவையிலும் அவர்கள் கொண் டிருந்த பங்குகளைப் பற்றியும் சில முக்கிய மான தகவல்கள் கிடைக்கின்றன.
வேளைக்காரர், பெரும்படை, அகம்ப டிகள் முதலிய இராணுவப் பிரிவுகளைப் பற் றித் தமிழ்ச் சாசனங்களிற் சில குறிப்புக் கள் வருகின்றன. சோழர் ஆண்ட காலத் தில் வேளைக்காரப் படைப்பிரிவுகள் ஈழத் தில் வந்திருந்தனர். சோழராட்சி அழிந்த பின்னரும் ஏறக்குறைய இரண்டு நூற்ருண் டுகளாக இப்படைப்பிரிவினர் ஈழத்தில் இருந்ததோடு சிங்கள மன்னரின் இரா ணுவ அமைப்பினும் சிறப்பிடம் பெற்றிருந் தனர். மகாவம்சத்திலும் இப்படையினைப் பற்றிக் குறிப்புக்கள் வருகின்றன. முத லாம் விஜயபாகு படைதிரட்டி சோழருக் கெதிராகத் தென்னகத்திற்கு அனுப்ப முயன்றபோது அவனுடைய வேளைக்காரப் படை பொலநறுவையில் பெருங்கிளர்ச் சியை ஏற்படுத்தியிருந்ததென்று இந்நூல் கூறும். இக்கிளர்ச்சியாளர் அ ர ண் மனை யைக் கொளுத்திவிட்டு மன்னனின் சகோ தரியான மித்தாவையும் அவளின் மூன்று புதல் வரையும் சிறைப்படுத்தினர். அரசன் பொலநறுவையை விட்டுத் தக்கிண தேசத் திற்கு ஓடினன். ஆயினும் விஜயபாகு படை யினைத் திரட்டி வேளைக்காரரின் கிளர்ச்சி யினை அடக்கிஞன், 77 வேளைக்காரப்படை இராணுவ சேவை புரிந்ததோடு கோயில்க ளைப் பாதுகாக்கும் பொறுப்பினையும் மேற் கொண்டிருந்ததென்பதைத் தமிழ்க் கல்
73. எஸ். பத்மாகாதன், 'ஈழத்தமிழ் வரலாற்று நூல் கள்' இளங்கதிர், பேராதனை, 1971 பக்கங்கள்
126-127
74. The Kingdom Jaffna, p. 41
75. சூளவம்சம், 50:15
76. மேலது, 55.2
77. மேலது, 60:35-44

Page 52
தமிழ்ச் சாசனங்களும்
வெட்டுக்கள் வாயிலாக அறிய முடிகிறது. விஜயபாகுவின் நாற்பத்திரண்டாம் ஆண் டைச் சேர்ந்த பாலமோட்டைச் சாசனம் தாகைச்சாணி என்ற பிராமணப் பெண் கந்தளாயில் உள்ள கோவில் ஒன்றிற்குக் கொடுத்த தானத்தினை ஒரு வேளைக்கார னிடம் ஒப்படைத்ததாகக் கூறுகின்றது. விஜயபாகுவின் ஐம்பத்தைந்தாம் ஆட்சி யாண்டைச் சேர்ந்த பொலநறுவையில் உள்ள வேளைக்காரரின் கல்வெட்டு அந்நக ரில் உள்ள தலதா மாளிகையினைப் பாது காக்கின்ற பொறுப்பினை வேளைக்காரர் ஏற் றிருந்தனர் என்று கூறுகின்றது. பதின்மூன் ரும் நூற்ருண்டைச் சேர்ந்த, பதவியாவில் உள்ள ஒரு வடமொழிச் சாசனம் லோக நாத தண்ட நாயக்கன் என்ற சேனதிபதி ஓர் அழகு பொருந்திய வி கா ர த் தி னை அமைத்து அதற்கு வேளைக்கார விகாரமெ னப் பெயரிட்டு அதைப் பாதுகாக்கும் பொறுப்பை வேளைக் காரப் படையிடம் விட்டான் எனச் சொல்லுகின்றது.
முதலாம் கஜபாகுவின் ஆட்சியில் அவ னுடைய சேனையிலே வேளைக்காரப்படை கள் இருந்தன. மானுபரணனும் தம்பிமா ரும் தூண்டியதன் விளைவாக வேளைக் காரர் அம் மன்னனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்த னர் என மகாவம்சம் சொல்கின்றது. முத லாம் பராக்கிரமபாகுவின் ஆட்சி யி ல் கொட்டியாரத்தில் வேளைக்காரப் படையி ருந்தது. பொலநறுவையில் உள்ள வேளைக் காரரின் சாசனம் வலங்கை, இடங்கை, சிறுதனம், பிள்ளைகள் தனம், வடுகர், மலை யாளர், பரிவாரக்கொந்தம் முதலிய பல் வேறு பிரிவுகளை வேளைக்காரப்படை உள் ளடக்கி இருந்ததென்று கூறுகிறது. மேலும் வலஞ்சியர், நகரத்தார் என்னும் வணிகர் கு ழாங் களு க் கும் வேளைக்காரருக்கும் நெரு ங் கி ய தொடர்பிருந்ததென்பதனை இச்சாசனத்தின் மேல்வரும் சொற்ருெடர் விளக்குகிறது. மாதந்திரத்தோறுகூடி எங் களுக்கு மூதாதைகளாயுள்ள வளஞ்சிய ரையும் எங்களோடு கூடிவரும் நகரத்தார் உள்ளிட்டாரையும் கூட்டி மூன்று கைத் திரு வேளைக்காரன் தளதாய்ப் பெரும் பள் ளியென்று திருநாமஞ்சாத்தி. 78 பொலந றுவையிலுள்ள றங்கொட் விகாரையிலே வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்று

கலாநிதி S. பத்மநாதன் 33
"ஈழம் ஏழுநூற்றுக்காதமும் யெ நிஞ் சு கொண்டருளிய செய வாகுதேவர் நிழல் வேளைக்காரன் மகமண்டல நாயகனுன சேதியராயன்” என்ற மொழித் தொட ரைக் கொண்டுள்ளது.79 ஜெயபாகு என்ற மன்னன் ஆட்சியில் வேளைக்காரன் ஒருவன் மகமண்டலம் என்னும் பிரதேசத்தில் மண் டலாதிபதியாக இருந்தான் என்பதை இச் சாசனம் உணர்த்துகின்றது. சோழராட் சிக் காலத்தின் பின் அகம்படியார் என்ற படைப்பிரிவினர் பற்றி ஈழத்துச் சாசனங் களிலே குறிப்புக்கள் உள்ளன. நிசங்க மல் லனுடைய கல்வெட்டொன்று அகம்படிக ளைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. 80 உறிங்கு ராத்தமன என்ற ஊரிலுள்ள தமிழ்க் கல் வெட்டொன்று கஜபாகுவின் ஆட்சியில் இரு ந் த அகம்படிச்ச கயர் குழு  ைவ ச் சேர்ந்த மந்நாளை என்ற ஊரிலே நிலத் தினை ஜவிதமாகப் பெற்றிருந்த உம்பில அயித்தன் என்பவனைக் குறிப்பிடுகின்றது.8
குமா ர கணம், நான்குநாட்டார், நானுதேசிகள் நகரத்தார், வளஞ்சியர், திசையாயிரத்தை, எலுாற்றுவர் என்றும் தென்னிந்திய வணிகர் குழாங்கள் ஒன்ப தாம் நூற்ருண்டு முதல் பதின்மூன்ரும் நூற்ருண்டுவரையுள்ள காலப்பகுதியிலே ஈழத்தில் இருந்தன. முதல் இரு பிரிவுகளி னதும் மூன்று சாசனங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. 82 இவை ஒன்பதாம் பத்தாம் நூற்ருண்டுகளில் அனுராதபுரத்தில் இக் குழாங்களைச் சேர்ந்த வணிகர் இருந்தனர் என்பதற்கு ஆதாரமாய் உள்ளன. ராஜேந் திரசோழ தேவ ரு  ைடய கல்வெட் டொன்று மாதோட்டமான ராஜராஜ புரத்திருந்த சங்கரப்பாடியார் வெற்றிலை வாணியர், வாழைக்காய் வாணியர் என் னும் வணிகர் கூட்டங்களைப் பற்றிக் கூறு கின்றது.83 மு த லா ம் ராஜ ராஜ தேவரின் பதவியாக் s do Ga Gau 4 - C9
78. SII, IV, 1396 Gurfir 28-32 79. Ceylon Tamil Inscriptions, p. 26 80, Ceylon Journal of Science (G) II, p. 137 81. Ceylon Tamil Inscriptions, p. 34
82. SII, IV, 140, 1404, 1405. 83. sII, IV, 1414.

Page 53
34 தமிழ்ச் சாசனங்களும்.
நாளு தேசி க ன் கொண் ஞவி 4 வெண்காடன் ஒர் வெண்கல மணியினை இ விகுல மாணிக்க ஈஸ்வரம் என்ற கோய லுக்குக் கொடுத்தான் என்று கூறுகின் றது.8* லீலாவதியின் ஆட்சிக் காலத்தை சேர்ந்த ஒரு சிங்கள மொழிக் கல்வெட்( நாஞதேசிகள் அனுராதபுரத்தில் ஒரு தான் ளத்தினை அமைத்திருந்தனர் என்றும் அதி லிருந்து கிடைத்த வ ரு மா ன த்  ைத கொண்டு ஒர் தானசாலைக்குவாசனைச் சர குகளைக் கொடுத்தார்கள் என்றும் கூறு
றது. * ஆன விழுந்தாவ என்னுமிடத் திலே வீர வளஞ்சியரின் கல்வெட்டொன்று கண்டெடுக்கப்பட்டது. பதவியா, வஹல் கட, விஹாரகின்ன, சிலாபம் முதலிய இடங்களிலே திசை ஆயிரத்து ஐநூற்றுவி ரின் கல்வெட்டுக்கள் இருந்தன. நானுதே கள், வளஞ்சியர், செட்டிகள் முதலிய பல் வேறு வணிகப் பிரிவுகள் திசையாயிரத்து ஐநூற்றுவர் என்னும் கூட்டுறவிலே கூடிய ருந்தனர் என்பதை இக்கல்வெட்டுக்கள் வாயிலாக அறியமுடிகின்றது.88 மேலும் பதவியா, விகாரஹன்னை ஆகிய இடங்க அளில் உள்ள கல்வெட்டுக்கள் வாயிலா அங்கக்காரர், ஆவணக்காரர் என்ற பிரிவு னரும் இவ்வணிகர் குழாத்திலே இருந்த னர் என்று கொள்ள முடிகின்றது. அத்து டன் பெரும்படை வலங்கையார் போன் இராணுவப் பிரிவுகளுடன் இவ்வணிக கூட்டத்திற்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தன.87 வ ஹி ல் க ட என்னுமிடத்தி லுள்ள கல்வெட்டு சித்தன் சாத்தஞன வளஞ்சேயர் சேஞபதி வளஞ்சை ஆண் டான், அக் க ச |ா லை விக்ரமாதித்தஞன இளஞ்சிங்கம் என்போரைப் பற்றிச் சொ? கின்றது. 8 பதவியாவிலுள்ள சாசனத்தி வலங்கைப் பெரும்படை என்ற சொற்ருெ டர் வருகின்றது. விகாரஹின்னையிலுள்ள சாசனத்திலே வலங்கைப் பெரும்படை என்ற சொற்ருெடர் வருவதோடு பிரான சாத்தஞன விரகன் சேஞதிபதி பற்றியு கூறப்பெற்றுள்ளது. வணிகர் குழாங்கள் சேஞதிபதிகளைக் கொண்ட படைப்பிரில் னரையும் வைத்திருத்தனர் என்பதற்கு இக்கல்வெட்டுக்கள் சான்றளிக்கின்றன.

கலாநிதி S. பத்மநாதன்
சமயவரலாறு
சோழராட்சிக் காலத்திலும் பொன நறுவைக் காலத்திலும் ஈழத்திலிருந்த சில சிவாலயங்கள் பற்றிய குறிப்புக்கள் தமிழ்க் கல்வெட்டுக்களிலே இடம்பெற்றுள்ளன. சோழராட்சி ஏற்பட்டிருந்த நாட்களில் ஈழத்தின் பல்வேறு இடங்களிற் சோழ அதி காரிகள் தமது வழிபாட்டுத் தேவைகளுக் காகப் பல தேவாலயங்களை அமைப்பித்தி ருந்தார்கள். அவற்றிலே சி ல வ ற் றி ன் பெயர்கள் சோழமன்னர்களின் பட்டப் பெயர்களை அல்லது விருதுகளைக் கொண்டு அமைக்கப்பட்டன. மா தே (ா ட் ட த் தி லுள்ள கல்வெட்டுக்கள் அங்கு சோழராட் சிக் காலத்தில் ராஜராஜ ஈஸ்வரம் திருவி ராமீஸ்வரம் என்ற இரு ஆலயங்கள் இருந் தன என்பதற்குச் சான்றளிக்கின்றன. இவற்றுள் முன்னையதை ராஜேந்திர சோழ னின் ஆட்சிக் காலத்தில் அவனுடைய அதி காரிகளுள் ஒருவஞன தாழிகுமரன் அமைப் பித்து அதற்குத் தேவதானமாகக் குன்றன் காமன் இருந்த மாளிகையினையும் தோட் டங்களையும் நிலங்களையும் கொடுத்தான். மேலும் ஆலயத்தில் ஆராதனைகள் நடத்து வதற்கெனச் சில இறை கடமைகளையும் விட்டிருந்தான். பதவியாவிலே ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் என்ற ஆலயம் அமைக் கப்பட்டிருந்தது. இதற்குப் பவ வணிகர்க ளும் நிர்வாக அதிகாரிகளும் பொன், காசு முதலியவற்றையும் பிற பொருட்களையும் நன்கொடையாக வழங்கியிருந்தனர். 90
பொலநறுவையான ஜனநாதமங்கலத் திலே வானவன் மாதேவீஸ்வரம் என்ற
84. ET, p.35.
85. University of Ceylon History of Ceylon
Vol. I, Pt. II. p. 550
86. Ceylon Tamil Inscriptions. pp. 53-57
87. "அங்கக்காறனும் ஆவணக்காரனும் வலங்கைட் பெரும் படையிலும் அரிய மதமும். மேலது, பக்கம் 56.
. மேலது, பக்கம் 54.
. SII, IV, 1412.
. f., pp. 32-35.
SI, IV: 1382.
:

Page 54
தமிழ்ச் சாசனங்களும். .
ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது.? அதகட என்னுமிடத்திலுள்ள கல்வெட்டு உத்தம சோழ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தைப் பற் றிக் கூறுகின்றது.92 மண்டலகிரியான நித்த விளுேத புரத்தில் டண்டித சோழ ஈஸ்வரம் எனப் பெயரிய ஓர் சிவாலயம் அமைக்கப் பட்டிருந்தது. முதலாம் விஜயபாகுவினு டய பாலமோட்டைக் கல்வெட்டு அவனு டைய ஆட்சிக் காலத்தில் கந்தளாயிலே தென் ைகலாசமென வழங்கிய விஜயராச ஈஸ்வரம் என்ற கோயிலைப் பற்றிக் குறிப்பி டுகின்றது.?? புதுமுட்டாவையில் உள்ள ஜெயபாகுவின் எட்டாவது ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு மாகலான விக்கிரம சலாமேகபுரத்து விக்கிரம சலாமேக ஈஸ்வ ரம் என்ற தேவாலயத்தைக் குறிப்பிடுகின் றது.94 பாடல் பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோணேஸ்வரம் ஆகிய தலங்களிலே ஆலய ஏற்பாடுகளைப் பற்றிக் கூறுகின்ற வாசித்தறியக்கூடிய கல் வெட் டு க்க ள் கிடைக்கவில்லை. ஆரும் பராக்கிரமபாகுவி னது கல்வெட்டு முன்னேஸ்வரத்தைப் பற் றிக் கிடைக்கின்ற, காலத்தால்மிக முத்திய ஆவணமாகும். ? மேலும் இவனுடைய நைமணக் கல்வெட்டு அவ்வூரிலிருந்த பிரம சத்திரம்பற்றிச் சொல்கின்றது.98 யுங்லோ வின் கல்வெட்டு தேநுவரையிலிருந்த ஆல யத்தைப் பற்றி அரிய சான்றுகளைத் தரு கின்றது.97 இவ்வாலயம் பதிஞன்காம், பதி னைந்தாம் நூற்ருண்டுகளில் மிகச் சிறப்புற் றிருந்தது. இதில் பல நூற்றுக்கணக்கான அந்தணர்களும் தேவர் அடி யார் களும் சேவைபுரிந்ததாக இபின் பட்டூட்டா குறிப்
9 Geirst stri.
சோழர் ஆட்சிக் காலத்திலே தமிழ் நாட்டு ஆலயங்களில் வழக்கிலிருந்த வழி
92, SII., IV, 1 Ceylon Tamil Inscriptions, p. 23.
93. EZ IV; 20 pp. 192-195.
94. EZ III, 33.
95. British Museum Orient Manuscripts, 6616.
R. p. 56 Ceylon Tamil Inscriptions, pp. 37-43
36. S. Paranavitana, The Shrine of Upulvam at Devundara, Archaeological Survey of Ceylon Memoris. p. 73

கலாநிதி S. பத்மநாதன் 35
பாட்டு முறைகளும் ஆலய ஏற்பாடுகளும், ஈழத்திலும் பரவியிருந்தன. அக்காலத்தில் ஆலயங்களுக்கு நிலங்களையும் நில வருமா னங்களையும் பிற இறைகடன்களையும் தான மாக அளிக்கும் வழக்கம் இருந்தது. இவ் வழக்கத்தைப் பின்பற்றி ஈழத்துச் சோழ அதிகாரிகளும் இவ்வாலயங்களுக்குப் பல நிவந்தங்களைக் கொடுத்தார்கள். தேவர் அடியார்களைக் கோயில்களிலே சேவைக்க மர்த்தும் வழக்கம் ஈழத்திலும் வழக்கில் வந்தது. அதற்கு முந்திய காலத்தில் இவ்வ ழக்கம் ஈழத்தில் இருந்ததோ என்பதைப் பற்றி அறியச் சான்றுகள் கிடைக்கவில்லை. ஆளுல் பொலநறுவைச் சிவா ல ய த் தி லுள்ள அதிராஜேந்திரனுடைய கல்வெட் டும் விஜயபாகுவின் பாலமோட்டைக் கல் வெட்டும் தேவர் அடியார் பற்றிக் குறிப் பிட்டிருக்கின்றன.98 மேலும் பொலநறு வையில் உள்ள கல்வெட்டு வானவன் மாதேவீஸ்வரத்தில் பல அந்தணர்களும் பன்மகேஸ்வரரும், பன்மகேஸ்வரக்கண் காணிகளும் பரிசாரகரும் இருந்து சேவை புரிந்ததாகக் கூறுகின்றது. பாலமோட் டைச் சாசனம் தென் கைலாசத்திலே தேவரடியரான ஏழு பெண்டுகளை தலையி லச்சினை இட்டு அவர்களுக்கு நிலை பொலி யூட்டு நிவந்தமாகக் காசு வழங்கப்பட்டத னைப் பற்றிக் கூறுகின்றது.
பெளத்த மத வரலாற்றை அறிந்து கொள்வதற்கும் ஈழத்தமிழ்ச் சாசனங்கள் ஒரளவு பயன்படுகின்றன. பொலநறுவை யில் உள்ள வேளைக் காரச் சாசனம் முத லாம் விஜயபாகு அரசஞகி முடிசூடிய பின் அருமணத்தினின்று சங்கத்தாரை அழைப் பித்து மூன்று நிகாயத்துச் சங்கங்களையும் கத்தி செய்து மூன்று துலாபாரம் செய்து
97. தேநுவரை நாயினுர்க்குக் காணிக்கையாகப் பொன், வெள்ளி, துலுக்கி, பட்டு, சக்தனம், இரண்டு கீலத்துச ஒசுவடு, இரண்டு செப்புப் பாத்திரம் பத்துப் பூக்குத்துகின்ற செப்புக் கெண்ட ஐந்து குத்துவிளக்கு, ஆறு பொன் பூசின தாமரைப் பூச்சுவடு முதலியவற்றை சீனப் பேரரசர் அனுப்பியிருந்ததாகச் சொல்லப் படுகின்றது. EZ II. 36.
98. SHI, IV, 1388; EZ IV, 20.

Page 55
つ - - 究 தமிழ்ச் சர்சனங்களும்.
அவற்றை மூன்று நிகாயங்களுக்கும் nt es. 6Tairap &p&spg).'
இத்தகவல்கள் வேறு மூலங்கள் கிடைக்கவில்லை. அனுராதபுர காலத்ை சேர்ந்த நான்கு நாட்டாரின் கல்விெ அவ்வணிகர்குழாம் மாக்கோதைப் ப யென்ற புத்தவிகாரத்தினை அமைத்த பற்றிக்கூறுகின்றது. 100 மேலும் ஒரு ெ ளிலே புத்தரின் புகழ் பாடப்பெற்றுள் இவ்வணிகர் குழாத்தைச் சேர்ந்த பெளத்தர்களாயிருந்திருக்க வே ண் ( சோழர் ஆட்சிக்காலத்திலே நாத கோயில் ராஜராஜப் பெரும் பள்ளியெ பெயரிடப் பெற்றிருந்தது. இது சே1 ஆட்சிக் காலத்தில் திருத்தி அமைக்கப் டிருந்தது. மேலும் சோழ அதிகாரிக பிற பலரும் இப்பள்ளிக்கு அளித்த தா
99. SIT, IV: 1396 8-12. 100. SII, IV, 1405.
101. ET. pp. 37-51.
Ceylon Tamil Inscriptions. pp. 12-14.
102. Ceylon Tamil inscriptions. pp. 27-31.
உலக முதிர்ந்தத மரம் (t) இடத்தில், அழிக்கப்ட மரமாகும். கள் பழை &ւ/ւ/ւ ւ- { அடிகள் சு

庙岛
லே தச் ட்டு ir Grif?
6)
ாது.
5 emurif
கலாநிதி 8. பத்மநாதன்
களைக்" கூறுகின்ற பல கல்வெட்டுக்கள் இங்கு கண் டெ டுக் கப்பட்டுள்ளன.10 இரண்டாம் கஜபாகுவினுடைய மகா கிருத் தாகம கல்வெட்டு அகம்படிப் பிரிவைச் சேர்ந்த உம்பில அயித்தன் என்பவன் புத்த ஸ்தானத்திற்குக் கொடுத்த நன்கொடை பற்றிச் சொல்கின்றது. இவன் பெளத்த மதத்தைச் சேர்ந்தவனுக இருந்தான் என ஊகிக்கலாம். 102 பதின் மூன்ரும் நூற்ருண் டைச் சேர்ந்த பதவியாவில் உள்ள வட மொழிக் கல்வெட்டொன்று சேனதிபதி யொருவன் விகாரத்தினை அமைத்து அதன் வேளைக்காரவிகார எனப் பெயரிட்டான் என எடுத்துரைக்கின்றது. 199 சில தமிழ்ப்ப டைப் பிரிவுகளான அகம்படியார், வேளைக் காரர் போன்றவற்றைச் சேர்த்த சிலர் பெளத்தர்களாய் இருந்தனர் என ஊகிக் கலாம்.
103. S. Paranavitana: "A Sanskrit Inscription from Padaviya”, TRASCB., Vol. VIII, Pt. 2, (New Series), pp. 261 - 264.
S. Pathmanathan, "The Kingdom of Jaffna p. p. 81-84
த்திலேயே, வயதில்
நாகக்
سL الالا 553ت
டெனரெவி என்ற 1868 ஆம் ஆண்டில் ட்ட, டிரஸினு' என்ற
ஆருயிரம் ஆண்டு ம வாய்ந்ததாகக் கரு இம்மரத்தின் அடி, 45 ற்றளவுள்ளதாகும்.

Page 56
L/ன அயன மண்டலத்து ஆபிரிக்கா வின் இயற்கைத் தாவரமாகும். அது பெரு மளவில் வட இலங்கையில் வளர்கிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 40,000 ஏக்கர் நிலப்பரப்பில் வளர்கிறது. அதற்கு மணற்பாங்கான பிரதேசமே ஏற் றது. இலங்கையின் வரண்ட பகுதியில், மற்ற பொருளாதாரப் பயிர்கள், நீர்ப் பாசனத்தினுலன்றி வளர் க் க முடியா த கடற்கரையோரச் சுற்ருடலில் கிட்டத் தட்ட 1000 சதுரமைல் பரப்பில் வளர்க் கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. விரிந்த அளவில் இப் பயிர்ச்செய்கைக்கு ஏற்றவசதிகள் புத்தளம், மன்ஞர், யாழ்ப் பாணம், வவுனியா (முல்லைத்தீவுக்கரை யோரம்) அம்பாந்தோட்டை மாவட்டங் களில் உண்டு.
இம்மரத்திலிருந்து பெறப்படும் பல வகையான பொருட்களுக்கு ஏராளமான பயன்கள் இருந்தபோதிலும், இம்மர வளர்ப்பிலும் சரி பலன்களின் உபயோகத் திலும் சரி பழமையான முறையே பேணப் படுகிறது. இப்பயிரை விஞ்ஞான முறையி லும் பொருளாதார வழியிலும் வளர்ப்ப தற்கான தேவையை வளர்ந்துவரும் இலங் கையின் சனப் பெருக்கமும், அந்நியச் செலாவணிக் கஷ்டங்களும் ஏற்படுத்துகின் றன .
ஒரு இடத்தின், பிரதான இயற்கைத் தாவரங்கள், இயற்கை அங்கே வளர்ந்த தாவரங்களின் மீது நடத்திய சோதனை களின் விளைவாக ஏற்பட்டவை ஏன்ய
 

தோடு, இயற்கைத் தெரிவு, சிறந்தவையே உயிர்வாழும் என்ற விதிகளையும் பிரதி பலிப்பதாகும். ஒரு இடத்தின், இயற்கை, சுற்ருடலின் உயிர்ச் சூழலியல் (Ecological) குறிப்பாக இடவிளக்கவியல், மண்வளம், காலநிலை ஆகிய்வற்றைக் கருத்திற் கொள் ளும்போது இத்தகைய தாவரங்களே அந்த இடத்தில் வளர்ப் ப த ஹ் கு ஏற்றதும் பொருத்தமானதும் ஆகும். கரையோர வண்டல் பிரதேசத்தின் பொருளாதாரத் திற்கு மிகச் சிறப்பான பயிர் பனையே என்று இயற்கையே உறுதிப்படுத்தியிருக்கிறது. இதற்குரிய சரியான பலனைப் பெறுவது மனிதனிடமே தங்கியுள்ளது. வரலாறு, இலக்கியம், கவிதை-ஆகியவற்ருல், காலப் பெருமை வாய்ந்த பனையைப் பற்றி எவரும் அதிகம் புகழ வேண்டிய அவசியம் இல்லை. அதனுடைய பொருளாதார முக்கியத்து வத்திற்கு இணை இல்லை என்று சொல்வது மிகையாகாது. இருந்தபோதும், கடந்த காலங்களில், மனிதன் தனது அலட்சியத் தாலும், அதன் மதிப்பைப் பிழையாக எடைபோட்டதாலும், கவனமோ மீள நடுகையோ இல்லாது, எத்தகைய பாகு பாடுமின்றிப் பனந்தோப்புக்களை அழித்தே வந்துள்ளான். இதன் விளைவாக, இந்த மூலதனம் குறைந்தது மாத்திரமன்றி, சூழ் நிலையின் சமநிலையும் பாதிக்கப்பட்டு கால நிலைச் சீர்கேட்டுக்குக் காலாயிற்று.
அது வளரும் சூழலின், எதிர்காலப் பொருளாதாரத்தில், பனையின் பங்கைப் பற்றி மிகைபடக் கூறமுடியாது. ஆகவே, இப்பொழுதிருந்தே, பனை அழிக்கப்பட்ட

Page 57
38 uéer uaðst'u/... ...
இடங்களில் மீளவும் நடுவது மாத்திரி மன்றி பயிர் செய்வதற்குரிய புதிய இடங்களை நெல், தென்னை, காய்கறி, மற்றும் பொரு ளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்கள் ஆகியவற்றிற்கு ஏற்றதில்லாத புதிய இடங் களைத் தேடுவதற்காகவும், மும்முரமாக ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் தண்ணிருக்கு அடுத்ததாக, பனையைக் கரை யோர வண்டல் பிரதேசத்தின் உயிர்ட் பொருளெனக் கூறலாம்.
பனை வளர்வதற்கு மனிதமுயற்சி சிறி தளவே தேவை. அது விழுந்த விதையிலி ருந்து தானுகவே வளரக்கூடியது. தேவைட படும் கவனிப்பும், அது சிறுபயிராயிருக்குப் போது மிருகங்களிடமிருந்து பாதுகாக்கட் படுவதற்காகவே தேவைப் படு கிற து பெரும்பான்மையான பனந்தோப்புக்கள் தானகவே உண்டானவை. ஆளுல் சில மனிதர்கள் வயல் வரம்புகளிலும், வளவ எல்லைகளிலும் பயிரிட்டதால் உண்டா னவை. இது, சிறிது மனித கவனிப்பு,திருட் திகரமான சிறந்த பலன்களைத் தரமுடியும் என்பதையே மேலும் உறுதிப்படுத்துகி நிறது.
பன 40இலிருந்து 60 அடிவரை உயர் மாக வளரும், சிலவேளைகளில், 100 அடி வரையும் வளர்ச்சிகாணப்படுகிறது. அதன் சுற்றளவு 3இலிருந்து 7 அடிவரையும் இருக் க்லாம். அதன் உச்சியில், விசிறிவடிவான 3இலிருந்து 5 அடிவரை அகலமுள்ள, ஒலை கள் 30இலிருந்து 40 வரை இருக்கும். பனை ஒலை மட்டைகள் (Statks) மூன்று நான்கு அடிகள் நீளமுள்ளவையாக, நார்கள் நிறைந்ததாக, வலுவானவையாக இருக் கும். கறுப்பாக உள்ள பனைமரத்தண்டின் வெளிப்பாகம் கடினமும், நீளப்பாங்கான தடித்த நார்களை உடையதும் ஆகும். உட் பகுதி மென்மையான சோத்தியாகும்(Pith கறுப்பான வெளிப்பகுதியை மூடிக் கரடு முரடான மரப்பட்டை இருக்கிறது.
ஐந்து வயதான பனேயிலிருந்து ஒலைகள் வெட்ட முடியும். ஆனல், பத்திலிருந்து பதினைந்து வருடங்களின் பின்பே முதிர்ச்சி அடைகிறது. சினைகள் (Spathes) கார் திகை மார்கழி மாதங்களில் தோன்றுகின்

பேராசிரியர் குலரத்தினம்
t
றன. ஆண், பெண் பூக்கள் வெவ்வேறு மரங்களிலேயே, தோன்றும், இந்த இரு வகை மரங்களிலும் பூக்கள் (inforescence) சீவப்படும்பொழுது இனிப்பான சாரம் பெருந்தொகையாக வெளிப்படுகிறது. சீவு தலிலும் சாரம்(Sap) சேர்த்தலிலும்இன்றும் பழமையான முறையே பேணப்படுகிறது. சாரஞ் சேமிக்கப்படும் மண் கலயத்திற்கு உட்புறத்தில் சுண்ணும்புப் பூச்சு, நொதித்
தலைத் (Fermentation) தடுப்பதற்காகப்
பூசப்படுகிறது. இவ்வாறு சேர்க்கப்படு வதே இனிப்புக் கள், அதாவது கருப்பரீர் (Nira) - Glb.
பெண் பனையின் சினை சீவப்படாவிடில், 3 விதைகளைப் பகுதிகளாகக் கொண்ட நார்ப்பிடிப்பான பெரிய பழங்களையுடைய குலைகளைக் கொண்டிருக்கும். ஆரம்ப வளர்ச்சியின் போது, நிலத்தின் கீழுள்ள் தண்டுப்பாகமே பெருக்கிறது. தண்டின் மேற்பாகம் நீண்டு, அதற்கேயுரிய கறுப்பு நிறத்தை அடைவதற்கு சுமார் 15-20 ஆண்டுகள் எடுக்கின்றன.
பனைமரம் நத்தை, அரிவண்டுகள், கறுப்புத் தலையுள்ள மயிர்க்கொட்டிப்புழு முதலியவற்ருல் தாக்கப்படுகிறது. பனை காளான் (Budrot) போன்ற நோயிஞல் தாக்கப்பட்டு அழிவதும் உண்டு. இருப்பி னும், பெரும்பான்மையான பகுதிகளில் இது பிரச்சனைக்குரிய ஒரு விடயமல்ல.
கருப்ப நீரும் கள்ளும்
கருப்பரீரில் 12% சர்க்கரை உண்டு. மரத்திலிருந்து சேமிக்கப்பட்டமறுகணமே நொதித்தல் ஆரம்பமாகிவிடுகிறது. கருப்ப நீர் கண்ணுடி போன்று தெளிவாகவும் இனிப்பாகவும் இருக்கும். ஆனல் கள் நுரை யும், புளிப்பும் காரமும் கொண்டது. விற்ற மின் "பி" கள்ளில் உண்டு. கருப்பநீரில் தானுக நடக்கும் நொதித்தல், 3% அல்க ஹோலையும் 0.1% அமிலத்தையும் 6-8 மணித்தியாலங்களில் உண்டாக்குகிறது. இதன்பின் அல் கஹோல் 5 வீதத்திற்கு கூடு கிறது. அதன் பின்பு அல் கஹோலின் விகி தம் குறைகிறது. அதேசமயம், அமிலத்தின் விகிதம் கூடுகிறது. இதஞல், இது மனித

Page 58
v&of viðAWLv... ...
பாவனைக்கு உதவாததாகி விடுகிறது. அமி லத்தன்மை, தரங்குறைந்த வினிகரை (Vinegar) கொடுக்கிறது. கருப்பநீருக்கு மருத்துவச் சிறப்புக்கள் உண்டு. அதனைப் பாதுகாப்பது சிரமமானது. சர்க்கரையைப் பிரித்தெடுக்கக் கருப்பநீர் பாவிக்கப்படுகி நிறது.
சீவப்படும் காலம், மாசியிலிருந்து வைகாசி வரையுமாகும். இக்காலங்களில் கள்ளிறக்குவோருக்கு, வயல் வேலைகள் குறைவாகவேயிருக்கும். ஆகவே, தொழி லாளர் பிரச்சினையும் இருக்காது என நம்ப லாம். பொதுவாக, 25-30 ஆண்டுகள் முதிர்ந்த மரங்களே சீவப்படுகின்றன. இவை, மேலும் 30 ஆண்டுகளுக்குப் பயன் கொடுக்கின்றன மணற்பாங்கான பிர தேசத்தில், 15 ஆண்டுகள் முதிர்ந்த மரங் களிலும் சீவமுடியும். மூன்று வருடங்க ளுக்கு ஒரு முறை மரங்களுக்கு ஓய்வளிக் கப்படுகின்றது. சராசரி, நாளொன்றிற் குப் பயன் கலஞகும். அதன் சீவும் காலத் திற்கான முழுப்பயன் 40 கலன்களாகும். சில மரங்கள் நாளொன்றிற்கு ஒரு கலனும் கொடுக்கின்றன. இரு பால் மரங்களும் சீவப்படுகின்றன. ஆண் மரத்தின் பூ அரும் புகள் கைவிரல்கள் போன்றிருக்கும். இவை ஒன்ருகக் கட்டப்பட்டு முறுக்கிச் சீவப் படும். பெண்மரத்தில், அதன் மலர்ப்பகுதி சீவப்படும். ஆண்மரத்தின் பயன், பெண் மரத்தில் இருந்து பெறப்படும் பயனில் 60வீதமே. ஒரு நல்ல வேலையாள் காலையில் 4 மணிநேரமும் மாலை 2 மணிநேரமுமாகச் சுமார் 20, 25 மரங்களைக் கவனிக்க முடி யும். கள்ளைக் கெடவிடாமல் சுண்ணும்பு பாதுகாக்கிறது. இது மிக மலிவான முறை யாகும். அதனலேயே பானைகளுக்குச் சுண் ணும்புக் கவசமிடப்படுகிறது.
சேர்க்கப்பட்ட சாரத்தை உடனே கொதிக்க வைப்பதன்மூலம் கருப்பட்டி (Palm Jaggery) Grupp'uuG6pg. F T U i தில் 15 தொடக்கம் 18 வீதம் சர்க் கரைக் கலப்பு (Gur) ஆக மாறுகிறது. வெல்லமும் (Brown sugar candy) GUp(uplgub.
சர்க்கரைக் கலப்பு (Gur): g fá semr 82% (Crystalline sugar 60%)

GouraraMas? uvař es avrš?sorti 359
குளுக்கோஸ் 2% sfrrbLév 3% Furub 9%
படிகமாக்கலின் பின்பு எஞ்சும் வெல் vüLurg (Molasses) Frrprtub தயாரிக்கப் பயன்படும்.
விதைகள்
விதையினுள்ளே நுங்கு (Nongu) உன் ளது. இந்த நுங்கு இறுகிக் கடினமான பருப் பாக மாறும். முளைத்து வரும் விதையி லுள்ள பூரான் (Pooran) சுவையானது. இரண்டு மூன்று மாதங்கள் வளர்ந்தவற் றைப் பிடுங்கிக், கிழங்கை மாவாக அரைப் பதற்கோ அல்லது அப்படியே அவித்து உண்ணவோ பாவிக்கலாம்.
աւՔւD
பழுத்த பழத்தின், கருந்தோலி னுள்ளே மஞ்சள் அல்லது கருமஞ்சள் நிறத் தில் கூழான தும்பு உண்டு. அதில் மிக நறு மணங் கமழும் இனிப்புச் சாறுண்டு. அத னைப் பிழிந்து, பனைஒலைத் தடுக்கில் வார்த்து வெய்யிலில் காய விடு வர். அல் ல து, கொதிக்க வைத்து ஜாம் போன்றவை செய்யப்படும். காயவைத்த பழச்சாறு நீண்ட காலத்திற்கு சுவை கெடாமல் இருக்கும்.
g2s) DisnL (Leaf Stalks)
இதிலுள்ள தும்புகளிலிருந்து பிறவு, தும்புத்தடி முதலியன செய்யலாம். கள்
ளுச் சீவப்பட முன் சுமார் 15-20 மட்டை கள் வெட்டப்படும்.
LDJ to (Timber)
பனையிலிருந்து பெறப்படும் மரத் துண்டுகள் வலுவும் உறுதியும் வாய்ந்தவை யாகும். ஒரு கன அடி 50 இருத்தல் எடை உள்ளதாகும். தூண்கள், கம்பங்கள் துலா முதலியன் செய்யப் பயன்படுகிறது.
ஒலை
பண்டைக்காலங்களில், குருத்தோல் களைக் காயவைத்து எழுதுவதற்கேற்ற சங்

Page 59
f0 vékor Lv AvöAMó?uv ......
டிகளாகப் பயன்படுத்திஞர்கள். இன்ருே, விசிறிகள், குடை, கூடைகள், பாய் செய் யவும் வேலி, வீட்டுக்கூரை முதலியவற்றிற் குமே பெரும்பாலும் பயன்படுகிறது. ஈர்க் குகளைக் கூட்டுமாறு செய்வதற்கும் முற் றிய ஒலைகளைக் கிழித்து கால்நடை உண வாகவும் பாவிக்கிருfகள்.
55úd Lu SNCF (Black Gum)
மரப்பட்டையின் வெட் டு ப் பட் ட காயத்திலிருந்து இது வடிகிறது. இதில் மருந்துப் பொருளிருப்பதாகக் கூறப்படுகி றது. இது ஆராயப்பட வேண்டிய ஒன்ரு கும். ஆராய்ச்சி
சென்னை அரசின் பனைக்கூட்டுறவுச் சமாசமும், இலங்கையின் தொழில் விஞ் ஞான ஆராய்ச்சிக்கான நிறுவனமும். குறிப்பாக சிவராமலிங்கம், இரத்தினசிங் கம், ஜெயராசா போன்ருேரும், கடந்த சில ஆண்டுகளில், பனம் பொருட்கள் பற் றிப் பெருமளவில் ஆராய்ச்சி செய்துள்ள னர். உள்நாட்டு ஆராய்ச்சிகளும் குருத் தோலைகளுக்குச் சாயமிடல், தும்பு அடித் தல், சர்க்கரை செய்தல், பழச்சாறு காய வைத்தல், இவற்றிற்குத் தேவையான புதிய இயந்திரங்களைக் கண்டு பிடித்தல் போன்றவற்றில் வெகுதூரஞ் சென்றுள்
€ffi‛6∂፻
பனையிலிருந்து பெறக்கூடிய சில விற்றமின் C புரதம் கொழுப்பு
... 2
pỂri (Nira) 5,7 0.23 0. சர்க்கரை - 1.7 0.8 விதைக்கூழ் 13 0.6 . 0. முளை 11 -0, 7 0.1 பழச்சாறு 24 O. 7 0.
f - 4。6 0.3
இறக்குமதி செய்யப்படும் உபஊடண வுப் பொருட்கள்
இலங்கை 70 லட்சம் ரூபா பெறுமதி யான 30 லட்சம் அந்தர் சீனியை வரு டாந்தம் இறக்குமதி செய்கிறது. இதில் சர்க்கரை 13 லட்சம் ரூபா பெறுமதியான 47000 அந்தர் ஆகும். இதை யாழ்ப்பா ணத்தில் வளரும் பனையாலேயே பூர்த்தி செய்யமுடியும். ஏக்கருக்கு 300 பனைமரம் உற்பத்தி செய்ய முடியும். யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் . 120லட்சம்

பேராசிரியர் குலரத்தினம்
பனை வளர்ப்பும் தெரிவு செய்தலும் போன்றவற்றிலும், வேலை எளிதுபடுத்தும் முறைகளிலும் தென்னிந்தியாவில் சில ஆராய்ச்சிகள் நடந்திருப்பினும் இன்னும் செய்யப்பட வேண்டியவை எவ்வளவோ உண்டு.
பனையின் மூலம் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புக்கள் கருத்திற் கொள்ளத் தக்க தாகும். சென்னையில் இரண்டு இலட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இது 400 லட்சம் பண்களுக்குரிய ஆட் தோகையாகும். வெல் லம் ரூ. 600 லட்சம், தும்பு ரூ. 100 லட்சம், கருப்பநீர் ரூ. 10 லட்சம் ஆக மொத்தம் ரூ. 717 இலட்சத்திற்கு பனை யி ஞ ல் மொத்த வருமானம் உண்டு.
1958 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சென்னை அரசுப் பனைக் கூட்டுறவுச் சமா ards Sair (Paid up share capital) els. 15 இலட்சமாகும்.
இலங்கையிலும் நாங்கள் கிராம, மாவட்டக் கூட்டுறவு இயக்கங்களை ஆரம் பிக்க வேண்டும். முற்காலத்தில் மனித வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த பனை இப்போது முக்கியத்துவம் குறைந்த ஒன் ருகி விட்டது. இதன் புனர்நிர்மாணம் அவ சியமானது. இதை நாம் முதுமொழிகளான 'பனையுள்ள நாட்டில் பஞ்சமில்லை' பனை இன்றி வாழ்வு இல்லை என்பன மூலம் அறிய
லாம்,
பயன்கள்
கணிப்பொருள் மாசத்து மொத்தசர்க்கரை
0.3 13.5. B 1.8 88.4 84 O 3 6 - 0.8 互7。2 ܡܒܣܡ 0.7 2.I. -
2 8 : a-a-
மரங்களை உண்டாக்கமுடியும். இப்பொழுது 70,000 ஏக்கரில் பனைச் செய்கை நடை பெறுவதாக அறியப்படுகிறது. இது இலகு வில் 500,000 ஏக்கர்களாக அதிகரிக்க முடி யும் தேயிலை 570,000, றப்பர் 567,000, தென்னை 1150,000 நெல் 1135,000 ஏக் கர்களில் செய்கை பண்ணப்படுவதாகக் கூறப்படுகிறது. s . .
அத்துடன் ஒரு ஏக்கர் நிலத்தில் செய்கைபண்ணப்படும் கரும் பி லி ரு ந் து பெறப்படும் சீனிக்கு சமமாக 50 பனையிலி ருந்து பெறமுடியும் என்றும் தெரிகிறது. இ

Page 60
நிலவியல்
“மார்க்கோபோலோவின் Gg unr ணங்கள்" என்ற நூலில் - இலங்கை அரச னுக்குச் சொந்தமான மாணிக்கத்தைப் பற்றிய கூற்றில்," "ஒரு சாண் நீளமானதும், களங்கமற்றதும் வர்ணிக்கமுடியாத பள பளப்பையும் கொண்டு விளங்குகின்றது' எனக் குறிப்பிட்டிருப்பது, புராதன காலந் தொட்டு ஈழத்து இரத்தினக் கற்களின் செல்வாக்கு மேலை நாடுகளில் இடம்பெற் றிருப்பதைக் காட்டுகிறது. பவளத்தீவின்
இரத்தினக் கற்கள் முற்றும் அந்நியரான உரோமர், கிரேக்கர், சீனர், அரேபியர்
களைக் கவர்ந்தமை வியப்புக்குரியதொன் றல்ல. அந்நியர் இந்த நாட்டை இரத்தின தீபம் என்றழைத்தமைக்குக் காரணம் இங்கு எடுக்கப்பட்ட இரத்தினமணிகளே யாகும்.இத்தீவில் மாத்திரமன்றி இந்தியா, பர்மா, கனடா, லெசோத்தா , நைசீரியா, தென்னுபிரிக்கா, கயான, பிறேசில்,சியார் -ராலியோன், இலாப்ரடோர், ஐக்கிய அமெரிக்க இராச்சியங்கள் சிலவற்றில், யூரல், நியூசிலாந்து, கிம்பர்ளி மலைத் தொடர்கள், தஸ்மேனியா, அணுகி, நியூ சவுத்வேல் முதலிய இடங்களில், இக்கற்கள் காலடியின் கீழுள்ள செல்வங்களாகவுள் ளன. இரத்தினபுரியிற் காணப்படுகின்ற 'சிந்துபாத்தின் இரத்தினக்கற்பள்ளத் தாக்கு' பிரசித்தி பெற்றதொன்முகும். எகிலியகொட, குருவித்த, இரத்தினபுரி, கலவான, பெல் மதுளை, இரக்குவானை ஆகிய பகுதிகளின் வண்டற்படிவுகளே இம் முக்கிய இரத்தினக் கற்களஞ்சியங்களா கும.
 

ெே= னக் கற்கள்
ஆ. சிவராசா
வானிலையால் பாறைகள் சிதைவுறும் நிகழ்ச்சி சுமார் 100-200 அடிகள் ஆழம் வரை பாறைகளைப் பாதிக்கின்றன. ஏற் கனவே பாறைகளில் சிதறிக்கிடக்கும் கணி யங்கள், முதலில் பாறைச்சிதைவினுல் விடு படுகின்றன. பின்னர் காற்று அ ல் ல து நீரோட்டங்களின் விளைவினுல், கனியங்கள் புவி ஈர்ப்பின் ஆற்றலால் ஒரேயிடத்தில் சேருகின்றன. பழங்கால கேம்பிரியன்பரல் மண் பிரதேசத்திலும் களிமண் பகுதிகளி லும் இக்கற்கள் அதிகம் கிடைக்கின்றன. சிதைவடைந்த பெக்மடைட் படிவங்களி லிருந்தும் இரத்தினக் கற்கள் அறுத்தெடுக் கப்பட்டன. இலங்கையில் சிவப்பு மாணிக் கக்கல், முத்து, நீலக்கல், சமுத்திரவானக் கல், கனிமக் கல், புட்பராகம், வைடூரியம், அலெக்சாந்திரா, கோமேதகம், பத்மரா கம், குருந்தம், பச்சை நிறமான படிவங் கள், சந்திர காந்தக்கல் போன்றன அகழ்ந் தெடுக்கப்படுகின்றன. வைரம், மரகதம், ஸ்படிகம், மங்கல் பைந்நீலம் முதலியன இங்கு கிடைப்பதில்லை. 'இலங்கையின் வைரம் என கனிமக்கல்லை அழைப்ப துண்டு'. இதைச் செதுக்கிச் சாணை பிடித் தால் வைரத்தைப் போல் பிரகாசிக்கும், இதை வெப்பப்படுத்திப் பல நிறங்களையும் ஏற்கச் செய்யலாம். நீலக்கல், சிவப்புக்கல் எப்பொழுதுமே வியாபாரச் சந்தையில் பேர் பெற்றுள்ளன. இலங்கை, இந்தியா, பர்மா ஆகிய தேசங்களில் நீலக்கல் எப் பொழுதுமே முதலிடத்தைப்பெற்று வரு கின்றது. வைடூரியம் என்ற நூதனமான

Page 61
42 ஈழத்திலே.
கல்லுக்கு இன்று உலகச் சந்தையில் மதிப் பேற்பட்டுள்ளது. ஏனெனின், இது உலகின் ஏனைய பாகங்களில் கிடைப்பதரிது. காபங் கிள் என்ற சிவப்புக்கல்லும் மாணிக்கவகை யைச் சார்ந்ததாகும். கறுவாக்கல்லும் அகப்படுகின்றது. புட்பராகமும் பல நிறங் களில் கிடைக்கின்றது. ஆனல் காலத்திற் குக் காலம் இதன் தேவை மாறுபடுகின்றது. கண்ணுடியினின்றும் போ லிக் கற் களை ஐரோப்பாவில் தற்போது பெரும்படி யாகச் செய்கின்ருர் கள். இன்று போலி இரத்தினக்கல் வியாபாரம் இயற்கைக்கல் வியாபாரத்துடன் கடுமையாகப் போட்டி யிட வேண்டியுள்ளது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் செயற்கைமுத்துக்களைக் கூட உருவாக்குகின்றனர். இது வும் இயற்கை முத்துடன் போட்டியிடுகின்றது.
இலங்கையின் சந்திர காந்தக்கல் பிர சித்தி பெற்றது சில சமயங்களில் ஐரோப் பாவிலும், அமெரிக்காவிலும் இக்கல்லுக் குத் தேவையுண்டட்கின்றது. ஆனல் இக் கல்லிஞல் வரும் வருமானம் மிசவும் குறை வாகும். இன்று இக்கல்லே வெட்டுஞ் சுரங் கங்கள் மிக அருகியுள்ளன. மித்தியா கொடையில் ஒரு சிறிதளவு கிடைக்கின் றது. புராதன காலந்தொட்டு ஈழத்தில் சிவப்புக்கல் புகழடைந்து வருகின்றது. இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள வண்டற் பரலிடையே இக்கற்கள் அதிகம் கிடைக் கின்றன. இலங்கையின் புவிச்சரிதவியலை முற்ருக அறிந்த பின்னர் இரத்தினச் சுரங் கங்களின் இருப்பை அறிந்து அவற்றை வெட்டி வேலை செய்வது இலகுவாகும். சிவப்புக் கல்லும், மரகதமும் மாத்தறை, கண்டி ஆதியாம் பிரதேசங்களிலுண்டென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போதைய அரசு பிரான்ஸ்சினின்றும் நிபுணர்களை வர வழைத்து இரத்தினக்கற்கள் பற்றிய ஆய் வில் ஈடுபடச் செய்துள்ளது. இக்கற்களை கிண்டியெடுப்பதில் உற்பத்திச் செலவு கூட வாக இருக்கும் பெருமையும், மதிப்பும், தரமும் மிக்க இலங்கையின் இரத்தினக் கற் களை பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, கொங்கொங், யப்பான், இந்தியா, மற் றும் ஐக்கிய அமெரிக்காவும் விரும்பிவாங்கு கின்றன. வெளியுலகில், இக்கற்களுக்கு விசாலமான சந்தையும் கிர r க் கி யும்

ஆ. சிவராசா
காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 1959ம் ஆண்டில் இக்கற்களினல் சுமார் 2,000000 ரூபாய்கள் வரை வருமானம் கிடைத்தது. சுரங்கம் வெட்டி இரத்தினக் கல்லெடுக்கும் வேலையை சிங்களவரே பெரும்பான்மையும் செய்கின்றர்கள். இது சிறிய அளவிலே கூட்டு முறையிற் செய்யப்படுகின்றன. இவ் வியாபாரம் பெரும்பான்மையும் முஸ்லீம் களின் கையிலேயே உள்ளது. இவர்கள் இரத்தினங்களுக்குப் பட்டந்தீர்ந்து மெரு கிட்டு வெளிநாடுகளுக்கு அனுப்புவர். சிறந்த கற்கள் ஐரோப்பா அமெரிக்க நாடு களுக்குச் செல்கின்றது. பெருந்தொகை யான கற்கள் இலங்கையிலும் இந்தியாவி லும் விற்பனையாகின்றன. இரத்தினக்கல் வியாபாரம் ஒழுங்கான வருவாயை அளிக்க மாட்டாதெனலாம். விலையுயர்ந்த விலை குறைந்த இரத்தினக் கற்கள் 1963ல் 157, 538 கரட் ஏற்றுமதி செய்யப்பட்டு 36 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறப்பட் டது. இத்தீவின் இரத்தினக் கல்லுற்பத்தி யில் 90 வீதம் ஏற்றுமதியாகின்றது. இங்கி ருந்து கண்ணுக்குப் புலனுகக் கூடிய வகை யில் ஏற்றுமதி செய்யப்படும் இரத்தினக் கற்களின் பெறுமதி 20 கோடி ரூபாய்களா கும். ஆனல் உத்தியோக பூர்வமாக இலங் கைக்குக் கிடைப்பது சுமார் 40 இலட்சம் ரூபாய்களாகும் என வர்த்தக அமைச்சின் அறிக்கையில் இருந்து புலப்படுகிறது.
பேராசிரியர் கா. குலரத்தினம் அவர் கள் 'இலங்கையினின்றும் வருடாவருடம் 20-40 கோடி ரூபாய்கள் வரையிலான இரத்தினக் கற்கள் கள்ளக் கடத்தல் மூலம் வெளியேற்றப்படுகின்ற தென்கின்ருர்" . இவை தேயிலைப் பெட்டிகளுக்குள்ளும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தகரத்தில டைத்த பண்டங்கள் மூலமும், சுற்றுப்பிர யாணிகள், தனிப்பட்ட நபர்களினலும் இவை கடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. எவ்வளவுதான் நிர்வாக ரீதியில் தடுப்பு முறைகளைக் கையாண்டாலும் இக்கற்க ளின் கடத்தலைத் தடுக்கமுடியாதுள்ளது. தற்போதைய அரசாங்கம், பிறநாடுகளில் இலாகாக்களை நிறுவி,இக்கற்களைக் கடத்து வோரைப் பிடிப்பதற்கு ஏற்பாடு செய்ய முன் வந்துள்ளமை பாராட்டக்கூடிய
தொன்ரு கும். இரத்தினக் கற்களைக் கடத்

Page 62
ஈழத்திலே.
துதல் இலங்கையின் பொருளாதார மேம் பாட்டிற்குப் பெரியதொரு தடையாக இருக்கின்றது. பெருகும் குடித்தொகைப் பிரச்சினையை ஒரளவிற்கு இரத்தினக் கற் கள் உற்பத்திமூலம் வேலைவாய்ப்பு வரு மானம் முதலியவற்றைக் கொண்டு தீர்வு காணலாம். இன்று இலங்கையின் இரத்தி னக் கற்களின் உற்பத்தித் தொழிலுக்கு உதவி செய்ய வர்த்தக அமைச்சு திட்டமிட் டிருக்கின்ற போதிலும், கூட்டுறவு இயக்கம் இத்தொழிலிற்கு எவ் வ ள வு தூண்டு கோலாக அமையும் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இரத்தினக் கற்களுக் குப் பெரும் கிராக்கி ஏற்படுத்த இப் பொழுது மக்கள் வங்கி முன்வந்துள்ளது என்பதை அறியும்போது எந்தவித மோச டிகளுக்கும், கடத்தல் முயற்சிகளுக்கும் இடம் இருக்காது என்பது பெருமளவிற்கு உண்மையாக இருக்கும். அதாவது, உள் ளூர் இரத்தினக்கல் உற்பத்தியாளர்களிட மிருந்து இரத்தினக்கற்களை கூட்டுறவுச் சங் கங்கள் மூலம் மக்கள் வங்கி வாங்கி வரு டத்திற்கு இருமுறை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யவும், இதற்கு உலகெங்கும் இருந்து இரத்தினக்கல் வியாபாரிகள் மற் றும் தேவையானுேரை ஏலம் கோர அழைக்கவும் மேற்படி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கக் கூடியதொன் ருகும். இரத்தினக்கற்களைக் கடத்தும் முயற்சியைத் தடுப்பதற்குக் கடுமையான சட்டதிட்டங்களை ஏற்படுத்துவதோடு, அர
னத்திற்கோ ஏற்றுமதியின் ஏகபோக உரி மையை வழங்குவதினுல் உற்பத்தியாளர் களும் பயனடைவார்கள் அரசாங்க வரு மானமும் ஒரளவு அதிகரிக்கலாம். யாழ்ப் பாணக் குடாநாட்டில் சங்கு, கடலட் டைத் தொழில்களுக்கு என்ன முறையில் தனியார் தலையீடு இருந்ததோஇவ்விதமே, தென்மேற்குப் பிரதேசத்தின் இரத்தினக் கற் தொழிலுக்கு பணம் படைத்த முதலா ளிகளின் ஆக்கிரமிப்பு இருந்து வருகிறது. சங்கு, கடல் அட்டை ஏற்றுமதியில், கூட்டு றவு இயக்கம் என்ன வகையில் கை கொடுத்து பலரையும் திருப்தியுறச் செய் ததோ அதே வகையில் இரத்தினக்கல் ஏற் றுமதியிலும் கூட்டுறவு இயக்கம் பூரண பங்கு கொள்ள வேண்டும்.

ஆ. சிவராசா 43
இலங்கை பாரம்பரியமாக இரத்தினக் க ற் களு க் குப் பெயர்போனதெனினும் பழைய முறைகளைக் கையாண்டுதான் இக் கற்களை வெட்டியெடுக்கின்ருர்கள். இப்படி எடுத்த கற்களை பட்டைதீட்டி ஒளிரச் செய் யும் முறை கூடப் பழங்காலத்தைய முறை யாகும். இதை நோக்குங் கால், இரத்தினக் கல் தொழிலாளர்க்கென்று நவீன உபகர ணங்களின்மையால் இத் தொழிலில் புரா தன தன்மை காணப்படுகின்றது. அனுப வத்தை மாத்திரம் பெற்றிருப்பவர்களைக் கொண்டுதான் கற்கள் வெட்டப்படுகின் றன. இவர்களுக்குப் பெளதிக அறிவோ, இரத்தினக் கல்லியல் அறிவோ அற்ப மேனும் கிடையாதெனலாம். இத்தகைய குறையை நிவர்த்தி செய்யும் நோக்க மாகவே 1968ம் ஆண்டுதொட்டு இலங்கை தொழில் நுட்பவியல் கல்லூரியில் இரத் தினவியல் என்ற புதியதொரு போதனை யினம் தொடங்கப்பட்டது. ஆனல் இங்கே யும் செல்வந்தர்களாகிய தனியாட்களின் செல்வா க்கே தாண்டவமாடுகிறது. இரத் தினக் கற்ருெழிலாளர்களுக்கு கல்வெட்டும் பயிற்சி வசதிகளெதுவும் இல்லா திருக்கின் றது. இதை நிவர்த்தி செய்யும் முகமாக நமதரசாங்கம் இஸ்ரவேலில் இருந்து நிபு ணர்களை வரவழைக்க எடுத்த முயற்சி தடைப்பட்டதும் இத்தொழிலுக்கு உள்ள தொரு பிரச்சனையாகும். இவ்வாறே பேரா சிரியர் கா. குலரத்தினம் தனது சொந்தப் பணத்தில் யப்பானுக்குச் சென்று முத்துக் குளித் தலைப்பற்றிப் படித்து வருவதற்கு எடுத்த முயற்சியும் இலங்கை அரசிஞல் தடுக்கப்பட்டது. மேலும் ஆராய்ச்சி நிலை யமோ, விற்பனை நிலையமோ இல்லாத நிலை யில் அதிகாரம் பெருமல் இரத்தினக் கற் களை இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய் வதுதான் இத்தொழிலைஎதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய பிரச்சனையாகும். இவற்றைக் கருத்திற் கொண்டுதான் இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இந்த முயற்சியை யும் முறியடிப்பதற்கு நாட்டில் நிலவுகின்ற ஒரு சில தீய சக்திகள் தான் இத் தொழில் அபிவிருத்தியுரு மல் இருப்பதற்குரிய மிக முக்கிய காரணமாகும்.

Page 63
44 ஈழத்திலே.
1970ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி நிதியமைச்சர் மாண்புமிகு கலா நிதி N. M. பெரேரா பா. உ. நிகழ்த்திய வரவுசெலவுத் திட்டப் பேச்சில் மாணிக்கக் கல் கூட்டுத்தாபனத்தைப் பற்றிப் பின்வரு மாறு குறிப்பிட்டுள்ளார். 'இந்நாடு முழு வதும் மாணிக்கக் கற்களைக் கொண்டு பரந் துள்ள மண்களில் பயன்படுத்தப்படாதுள்ள இயற்கைச் செல்வ வருவாய்கள் நமக்கு அளிக்கக்கூடிய பிறநாட்டு நாணயமாற்றுக் களை இந்நாடு இதுவரை நாம் அனுபவிக்காது தடுக்கப்பட்டுள்ளோம். ஒரு கட்டுமட் டான மதிப்பீடாக ஆண்டுதோறும் 10 கோடி ரூபாவிற்கு மேலான நட்டம் இத ஞல் ஏற்படுகின்றதென மதிப்பிடப்பட்டுள் ளது. இதுவரை இந்நாடு அடைந்திராத இம் மூலவளத்தைப் பயன்படுத்துதற்கு மாணிக்கக்கல் கூட்டுத்தாபன வடிவில் ஒரு தியதிச்சட்ட முறையான சபையை நிறுவு வதற்குச் சட்டவாக்கம் தயாரிக்கப்பட் டுள்ளது. இக்கூட்டுத்தாபனப் பணிகள் மாணிக்கக்கல் கைத்தொழிலின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாகும். ஏழை மனிதன் மாணிக்கக்கற் சுரங்கங்களைப் பெறத்தக்கவாறு இந்த உத்தேசித்துள்ள மாணிக்கக்கல் கூட்டுத்தாபனம் திட்ட மிடப்பட்டுள்ளது. இ த ஞ ல் பெரும் பாலான மக்கள் நன்மை அடைவதுடன் நாட்டின் வளத்தைப் பெருக்குவதற்கும் அவர்கள் உதவுவர். அத் துட ன் இது மாணிக்கக்கற்களை அறுத்து மினுக்கும் தற் கால முறைகளில் பயிற்சி பெறும் வசதிகட் கும் ஏற்பாடு செய்யும். குறித்த கூட்டுத் தாபனத்த7 ல் ஏற்படுத்தப்படும் வசதிகளை இப்பொழுதுள்ள மக்களிலும் பா ர் க் க மிகக் கூடுதலானேர் இத்தேர்ச்சியைப் பெறத்தக்க வராவர். மாணிக்கக் கற்களைச் சேகரித்து பெறுமதி மதிப்பிடவிரும்பும் எவருக்கும் வசதிகள் அளிக் க ப் படும். மாணிக்கக்கல் அகழும் கிராமத்தவனுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாகும். ஏனெ னில் இப்பொழுது அவன் தனது மாணிக் கக் கற்களை விற்பதற்குச் செல்லும் வியா பாரியின் விலைமதிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியவனுகவிருக்கின்ருன். வரைவுச் சட்டவாக்கம் மாணிக்கக் கற்களின் உள் நாட்டு வெளிநாட்டு வியாபாரத்தைக் கட் டுப்படுத்தவும் ஏற்பாடு செய்யும்.இந்த நிய

ஆ. சிவ ராசா
திச்சட்ட முறையான சபை வழியாக மாணிக்கக் கற்களை ஏற்றுமதி செய்யும் பொருட்டு ஊக்கப்பாடுகளும் அளிக்கப் படும். அதே காலத்தில் இக் கூட்டுத்தாபன வேலைகளுக்கு தீங்கிழைக்கும் கள்ளக் கடத் தலையும் பிறமுயற்சிகளையும் நாடுவதன் மூலம் இந்நாட்டு வருமானத்தைப்பறிக்க முயலுவோர் மீது கடும் தடுப்புத்தண்டனை விதிக்க ஏற்பாடு செய்யப்படும்'
'கைத்தொழில் இலங்கை' என்னும் வெளியீட்டில் பேராசிரியர் கா. குலரத்தி னம் 'இலங்கை இரத்தினக்கற் தொழில் உள்ளார்த்தம்' என்னும் விடயம் பற்றி யுள்ள தலைப்பில் இரத்தினக்கல் கூட்டுத் தாபனத்தைப்பற்றி எழுதியுள்ளதை இங்கு குறிப்பிடத்தகும். ' பட்டை தீட்டப் படாத கற்களை வாங்கி ஒருவன் பாவித்தல் கடினமாகையினுல் பட்டை தீட்டப்படாத கற்களை ஏற்றுமதி செய்தல் தடை செய் யப்பட வேண்டியதொன் ருகும். மத்தியதர வகுப்பினரது உழைக்கப்படாதவருமானம் சொந்தக்காரனுக்கு மாற்றப்படும் வகை யில் சிறப்பு விலைகளை ஏற்றுக்கொண்டு பொது ஏல விற்பனை செய்யப்பட வேண்டு மெனச் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. அவ் வாறிருந்தும் சிலர் கூட்டாக இயங்குவதி ஞல் புதியவர்களுக்கு வாய்ப்புக்கிட்டாது போகலாம். இதை உன்னிப்பாகக் கவ னித்தல் வேண்டும். பொதுமக்களுக்கு அறி முகம் செய்து வைப்பதற்காகவும், மதிப் பீட்டுச் சேவையை வழங்குவதற்காகவும் இரத்தினக்கல் பரிசோ த னை க் கூட மொன்றை அமைத்தல் வேண்டும். இரத் தி ைக்கல்லியலில் போதஞமுறையையும் விஞ்ஞான முறைப்பட்டையந் தீட்டலில் பயிற்சியளித் தலையும், மெருகிடுதல் போன் றவற்றிற்கு ஒரு ஸ்தாபனத்தை நிறுவ வேண்டும். கொழும்பு அரும் பொருள கத் திலுள்ள இரத்தினக் கற்களை ஆரம்ப உறுப் பாகக் கொண்டு இரத்தினக்கல் அரும் பொருளகத்தை உருவாக்க வேண்டும். பட்டம் வெட்டப்பட்ட கற்களை உண்ணுட் டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்தல் வேண்டும். விற் பனை ப் பணியகத்தை அமைப்பதுடன் உரிய அறிவித்தலைக் கொடுத்து பொது ஏ ல விற் பனை வசதி செய்யவேண்டும். இரத்தினக்கற் தொழி

Page 64
ஈழத்திலே.
லில் ஈடுபட்டோருக்கு.அதிகாரச் சான்றி தழ்களை வழங்கவேண்டும். வெளிநாட்டுச் சந்தையை விளம்பரங்கள்மூலம் விரிவாக்கி காலா காலம் விற்பனைச் செய்திகளை வெளி யிட்டும் ஏற்றுமதி, மதிப்பூதிய ஆண்ைப்பத் திரங்கள், ஏற்றுமதி அளவீடுகள் பற்றியும் அரசாங்கத்திற்கு ஆல்ோசனைகள் கூற வேண்டும். இரத்தினக் கற்களின் இருப்பு, விற்பனை, வாங்கல் போ ன்றவற்றில் வியா பாரிகளைப் ” பதிவு செய்தல் வேண்டும். இரத்தினக் கற்களை இறக்குமதி செய்யும் பொறுப்பைக் கூட்டுத்தாபனத்தின் தனி யுரிமையாக்க வேண்டும். கங்கம் முதலான விலையுயர்ந்த உலோகங்களை இறக்குமதி செய்து பொற்கொல்லருக்கு வழங்கவேண் டும். இரத்தினக்கல்வியல் சாதனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தலும் அவசியமாகும்.
அகழ்வு முறைகளையும் செயற்பாடுகளை யும் நவீனப்படுத்துவதற்காக கொள்கை கள், அறிவுறுத்தல்கள், உதவிகள் ஆகியன வற்றையும், இலாபத்தை இயன்றளவு சம மான முறையில் பங்கிடத்தெண்டித்தலும், கதிர்வீச்சுச் சார்ந்த*கணிப்பொருட்கள், ! நகை செய்யக் கூடிய கணிப்பொருட்கள் போன்ற இரத்தினக்கல் வியாபாரிகள் அக் கறை காட்டாதவற்றில் உப உற்பத்திப் பொருட்களின் விரயத்தைத் தடுத்தல் வேண்டும். இரத்தினக்கற்களை அகழ்விற்கு முன்னைய படிப்பினைகளைப் பொறுத்தமட் டில், இத்தீவின் புவியமைப்பியல் பற்றிய ஆராய்வு முடிவடையும் வரை காத்திராது அந் நோக்கத்திற்காக, இரத்தினக் கற்கள் பரவியுள்ள பழைய, புதிய இடங்களைப் பற் றிய படங்களை வரைதல் அவசியமாகும். இவை கிடைக்கக்கூடிய இடங்கள் பற்றிய விபரமும், உத்தேச மதிப்பீட்டளவையும் தயாரிக்கும்படி எல்லாக் காரியாதிகாரி களின் பிரிவுக்கும் அரசு உத்தரவிட்டிருக் கின்றது. இக்கற்கள் பற்றிய ஆராய்ச்சி, அகழ்தல் உரிமைகள், வாய்ப்புக்கள். சட்ட விரோதமாக இரத்தினக்கல் விடயத்தில் ஈடுபடுதல், தனியார், முடிசார் நிலங்கள், சட்டவிரோதமான விற்பனைகள், கள்ளக் கடத்தல், சன்மானம் வழங்கல், திருட்டு, கணிப்பொருட் செல்வத்தையும் உரிமை களையும் அரசிற்கு உரித்தாக்கல், அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல், போன்றனபற் றிய புதிய அகழ்வுச்சட்டங்கள் ஆக்கப்பட வேண்டும். புதையல் மூலம் கிடைக்கும் இரத்தினக் கற்கள் பற்றிய பதிவேடுகளைப் பேணுதல் வேண்டும். இக்கற்களின் மூலம் கிடைக்கக்கூடிய வரும்படி பற்றிய தரவு களைக் கோவை செய்தலுடன் ஒரு புகை யலைப் பற்றியோ குறித்த பகுதியைப்பற்

-፴፭. ó፳ጪ/፴rffróም'ff ̇ ፉ5
றியோ வரலாறு எழுதுதல் வேண்டும். நீர் நிலையங்களினின்றும் இரத்தினக்கற்களை வாரியெடுத்தல் பற்றிய தரவுகளைச் சேர்ப் பதற்காக, நீரினைகள், நீர்ப்படுக்கைபற் றிய ஆராய்வுகளை மேற்கொள்ளல் வேண் டும். மேற்கூறிய பல பிரச்சினைகளை இரத் தினக்கல் கூட்டுத்தாபனம் எதிர்நோக்கியி ருக்கின்றமை குறிப்பிடத்தக்கதொன்ற கும். அரசின் நலன்களையும் உண்ணுட்டு வெளிநாட்டு நுகர்வோரின் நலன்களையும் பாதுகாக்கும் அதேவேளையில் இத்தொழி லின் பல்வேறு உறுப்புக்களிலும் ஈடுபட்டி ருக்கும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக வும் மெய்யியலாளஞகவும் நண்பனுகவும் இந்தத்தாபனம் இயங்குமென லாம். இத் தொழிலுக்கு தேவைப்படும் நில வசதியும் சாதனங்களும், ஆட்களும் அவ்வளவு அதி கமல்ல. உண்ணுட்டில் தகைமை பெற்ற இரத்தினக் கல்லியளாளர்கள் போதியளவு இருக்கின்றனர். இவர்களை வேண்டியளவிற் குப் பயன்படுத்திக் கொள்ளலாம். நாட் டுக்குத் தேவையானுேரை அரசு பயிற்று விக்கலாம். வெளிநாட்டிருந்து நாம் எதிர் பார்க்க வேண்டியது:யாதெனின் உயர்ந்த தகைமை பெற்ற, அனுபவம் நிறைந்த இரண்டொரு சாணை பிடிப்பவர்கள்தான். வெளிநாட்டு உதவித்திட்டமூலமோ, ஈராண்டு ஒப்பந்தத்தின் மூலமோ உள்ளூர் வாசிகளை இவர்கள் பயிற்றுவிக்கலாம். எனவே எதிர்காலத்தில் இரத்தினக்கற் களுக்கு ஒரு பொற்காலம் பிறக்குமெனத்
திட்டவட்டமாகக் கூறலாம்.
உசாத்துணை நூல்கள்
1. 'கைத்தொழில் இலங்கை'-அடங் கன் 10, இலக்கம் 3 டிசம்பர் 1970. இலங்கை இரத்தினக் கற்தொழில் உள்ளார்த்தம் பேராசிரியர் கா. குல ரத்தினம்
2. புவி அமைப்பியல்- “பொருளாதா ரப் புவியமைப்பியல்' சி. விசுவநாதன்
3. யாழ்ப்பாணக் கூட்டுறவுக் கல்லூரி வெளியீடு-' இலங்கையின் பொரு ளாதார வளர்ச்சியும் இரத்தினக் கற் ருெ?ழிலும்' -மார்கழி 1969.
4. இலங்கை-எல். சி. கே. குக்- 'கணிப்
பாருட்கள்'"
5
புவியியல் மலர் 2 இதழ் 6 - நவம்பர் 1966 "தென்மேற்கு இலங்கையின் கணிப்பொருள் வளங்கள்' பேராசிரி யர் கா. குலரத்தினம்.
6. 1970ம் ஆண்டின் - மத்திய வங்கி அறிக்கை, -O

Page 65
இந்நாட்டில் ஆயுர்வேதம், யுன ஆகிய புராதன கீழைத்தேசத்திய வை திய முறைகளுக்கு புத்துயிர் அளிக்க வே டும் என்னும் கோஷம் பல தடவைக் எழுப்பப்பட்டுள்ளது. இம் மா தி ரியா கோஷங்களிஞல் பயனடைந்தவர்க பலர். ஆனல், உண்மையில் ஆயுள்6ே வைத்தியம் அல்லது மருத்துவத்துறை இ ஞல் பயனடைந்துள்ளதா என்பது சந் கத்துக்குரியது. பழைய வைத்திய முன் களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் இ விதமான அபிப்பிராயங்கள் தெரிவிக் பட்டுள்ளன. அறிவியல் அடிப்படைய காரணத்தினல் பழைய வைத்திய முை ளில் எவ்வித உண்மையும் இருக்க முடிய என்பது சில அறிவியல் துறை 'நிபுண ளின்" வாதம். இதில் மேனுட்டு மருத்து ரும் அடங்குவர். இவர்களில் சிலர், ! பழைய வைத்திய முறைகளையும் மூலிை ளையும் பரீட்சித்துப் பார்த்துள்ளார் என்பது உண்மையே. புராதன வைத்திய கள் பொய்யானவை என்ற அசைக்கழு யாத நம்பிக்கையுடன் தொடங்கி,
 

cy
ற்ற
bó
ர்க
ஆராய்ச்சியின்பின் அதில் எவ்வித உண்மை
யும் இல்லை என்ற அதே முடிவுக்கு வந்துள் ளனர்.
மற்ருெரு சாரார், பழைய வைத்திய முறைகளை நமது பழம் பெருமைகளில் ஒன் ருகக் கருதிப் பழமையைப் போற்றி வருப வர்கள்; இதனுல் சில அரசியல் லாபம் பெற்றவர்கள். இவ்விருசாராரும் உண்மை யில் மக்களுக்கு எவ்வித சேவையும் செய்ய வேண்டும் என்ற அவாவினல் உந்தப்பட்ட வர்கள் அல்ல. எனவே இவர்களால் மருத் துவமோ மக்களோ முன்னேருததில் ஆச்ச ரியப்படுவதற்கில்லை.
ஆளுல் வேறு சில நாடுகள் தமது புரா தன வைத்திய முறைகளை ஆராய்ந்ததன் காரணமாக, பல பெரும் கண்டுபிடிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றில் சில வற்றை நாம் அறிவது நமது அறிவியல் மருத்துவத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நன்மைபயப்பதாக இருக்கும்.

Page 66
புராதன மருத்துவத்தின்.
ஆதிகாலம் தொட்டு மனிதரிடையே பல நோய்கள் நிலவிவந்தன என்பதற்கு போதுமான ஆதாரம் உண்டு. மனிதனுக் கும் இயற்கைக்குமிடையே நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் ஆரம்பகட்டத் தில் நோயே வெற்றிபெற்றிருக்க வேண் டும். நோய்க்குப் பரிகாரம் தேடும் முகமாக மனிதன் மேற்கொண்ட முயற்சியில் பல வைத்திய முறைகளும் மூலிகைகளும் கண்டு பிடிக்கப்பட்டன. தேவையின் காரணமா கக் கண்டு பிடிக்கப்பட்ட இவை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து இன்று இந்நாட்டு மக்களிடையே ஆயுர்வேதம், நாட்டுவைத் தியம், கைமருந்து என்று பலவாறு நிலவி வருகின்றன. இந்த சுதேசிய முறைகள் விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சியினின்று எழுந்தவையல்ல என்பது உண்மையே. ஆளுல் அனுபவத்தின் அடிப்படையினின்று எழுந்தவையாதலால் பல உண்மைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கக் கூடும் என்ப தையும் நாம் மறந்துவிடலாகாது.
சில சமயங்களில் சில கீழைத்தேச மூலி கைகள், எதிர்பாராதவிதமாக விஞ்ஞான ரீதியில் ஆராயப்பட்டதன் விளைவாக, மேல்நாட்டு வைத்தியம் வளர்ச்சியடைந் துள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் னரே இந்திய வைத்தியர்கள் சருமத்தை உடலின் ஒரு பாகத்திலிருந்து இன்னெரு பாகத்துக்கு ஒட்டுதல் செய்தார்கள் என்று அறியக் கிடக்கிறது. "சருமம் ஒட்டுதல்" (Skin graft) என்று இன்று வழங்கப்படும் இம்முறையை செல்சஸ் (Celsus) என்னும் மேல்நாட்டு மருத்துவர் இந்திய வைத்திய ரிடமிருந்து கற்றதாக கூறப்படுகிறது. இவ் வகையான சருமம் ஒட்டுதல் சிகிச்சைகள் பதினைந்தாம் நூற்றண்டில் இத்தாலியில் செய்யப்பட்டன. ஆனல் அந் நா ட் டு அறுவைசிகிச்சை நிபுணர்களும் மதபீடங் களும் காட்டிய எதிர்ப்பினல் கைவிடப்பட் டது. 1794-ம் ஆண்டு இந்திய ராணுவத் தில் பணிபுரிந்த இரு இங்கிலாந்து மருத்து வர்கள் இந்தியாவில் சருமம் ஒட்டுதல் அறு வைச் சிகிச்சைகள் செய்யப்படுவதை நுணுக்கமாக அவதானித்து அம்முறையை இங்கிலாந்திலும் தொடக்கி வைத்தார்கள்.

sr ti. . Srao. 5 borra? Ar 47
இன்று நடைபெறும் இதயமாற்றீடு (Heart transplantation) முதல் சிறுநீரக மாற்றீடு (Kidney transplantation) ou Gop Tabarr விதமான மாற்றீடு-ஒட்டுதல் அறுவைச் சிகிச்சை முறைகளுக்கும் இந்திய வைத்தி யர்கள்தான் முன்னேடியாக இருந்தார்கள் என்ருல் மிகையாகாது.
கீழைத்தேசங்களில் பாவிக்கப்படும் மூலிகைகள் பல மேஞட்டு மருத்துவர் களுக்கு பெரும் வரப்பிரசாதமாய் அமைந் Gir Gar Gor. Rauwolfia serpentina Gr6örgpyuh செடியிலிருந்து பெறப்படும் reserpine என் னும் மருந்தே இன்றும் அதிபரகுருதியமுக் as diggi (high blood pressure) Luft 6i5 UG கிறது. இந்தியா, இலங்கை ஆகிய நாடு களில் காணப்படும் இச்செடியில் இருந்தே இம்மருந்தைக் கண்டுபிடித்தார்கள். மேல் நாட்டு நிபுணர்கள் ஆஞலும் பல நூற் முண்டுகாலமாக நாட்டு வைத்தியர்களால், இச்செடியிலிருந்து செய்யப்படும் கஷாயர் கள் அதிபரகுருதியமுக்கத்தில் பாவிக்கப் பட்டன.
இதைப்போலவே, செஞ (Senna) என்று சிங்களத்திலும் தமிழிலும் அழைக் கப்படும் Cassia angustifolia என்னும் செடி யின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் Sennakot என்ற வில்லைகள் பேதிமருந்தாக எல்லா மேனுட்டு வைத்தியர்களாலும் பாவிக்கப்படுகின்றன. இச்செடியின் இலை களை பல ஆண்டுகாலமாக நாட்டு வைத்தி யார் பேதிமருந்தாக பயன்படுத்தி வந்திருக் கிருர்கள்.
6í96š7 6:57aňolo.6ôr (Vincristine) ST6á7g91uh மருந்து ஒரு வகையான புற்றுநோய்க்கெதி ராக சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மருந்தாகும். இம் மருந்தைப் பட்டிப்பூ என்னும் Vinca OSea என்ற செடியிலிருந்து தான் பெற்றர்கள் என்ருல் பலருக்கு வியப் பாக இருக்கலாம்.
மேலே கூறிய உதாரணங்களில் நாம் கருத்தில் கொள்ளவேண்டிய உண்மை யொன்றுண்டு. நம் தேச மூலிகைகளை நமது அறிவியல் துறையினரும் மருத்துவரும் ஆராயத்தவறிய அதே சமயத்தில் மேலை

Page 67
48 /ராதன மருத்து/வத்தின்.
நாட்டவர் அவற்றை எதிர்பாராதவித மாக விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்திருக்கி முர்கள். எனவே நமது புராதன வைத்திய முறைகள் பொய்யானவை என்ற வாதப் பிழையானது. இன்னுமொன்று: இம்மூலி கைகள் ஏற்கனவே சுதேச வைத்தியர்க ளால் சரியாக பாவிக்கப்பட்டு வந்தவை நமது பழைய வைத்திய முறைகளில் எந்த வித உண்மையும் இல்லை என்ற கூற்றுக்கு எதிராக மேலே காட்டிய உதாரணங்களை போல் இன்னும் பலவற்றை அடுக்கி GQ9;inrazilar G3L Gu mt a9, aJ fr lib, Ca rben ox olon { என்று அண்மையில் வயிற்றுப்புண்ணுக்காக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தின் முக்கிய 3,(gp6ör Glycyrrhic acid 67 6öTgp/ub gy3.g பொருள் நாம் அடிக்கடி பாவிக்கும் அதி மதுரத்திலும் உண்டு. இந்த உண்மையை அறிந்தோ அறியாமலோ நமது வைத்தியர் கள் அதிமதுரத்தைப் பல வயிற்று வியாதி களுக்குப் பாவித்து வந்துள்ளார்கள்.
இவ்வாறு நாம் நமது வைத்திய முறை களைப் புறக்கணித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், வேறு சில நா டு கள் தமது பழைய வைத்திய முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கின்றன. இதன் பலனக இத் துறைகளில் சில பெரும் கண்டுபிடிப்புகளை உண்டாக்கியிருக்கின்றன.
உதாரணமாக, சீனுவின் பழம்பெருப் வைத்திய முறையான ஊசித் தொளைக் சிகிச்சை என்னும் Acupuncture முறை தீவு ரமாக ஆராயப்பட்டு புதிய வளர்ச்சிய டைந்துள்ளது. சாதாரணமாக, சீஞவைட பற்றிப் பொய்ப்பிரச்சாரம் செய்யுட் அமெரிக்க பத்திரிகையாளர்கள் கூட பெரும் கவனம் செலுத்துமளவுக்கு இக் சிகிச்சைமுறை வளர்ச்சியடைந்துள்ளது.
ஊசித்தொளைச்சிகிச்சை(Acupuncture என்ருல் என்ன? மிகவும் மெல்லிய ஊ களினல் உடலின் குறிப்பிட்ட இடங்களை குத்துவதன்மூலம் வியாதிகளைக்குணப்படுத் தும் முறையே ஊசித்தொளைச்சிகிச்சை யாகும். மேற்கத்திய வைத்திய முறை: ளால் இதுவரை குணப்படுத்த முடியாத வியாதிகள் பலவற்றை - ஊமை, செவிடு

எம். எஸ். தம்பிராஜா
இளம்பிள்ளைவாதத்தினுல் (போலியோ) ஏற்பட்ட ஊனம் - குணப்படுத்த முடியும் என்று நிரூபித்துள்ளார்கள்.
ஊசித் தொளைச் சிகிச்சையின் வர லாற்றை அறிவது முக்கியமானது. இரண் டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலா கஇது சீன வைத்தியர்களால் பலவிதமான நோய் களுக்கு பாவிக்கப்பட்டு வந்துள்ளது. உட லில் மூன்று கற்பனைக்கோடுகளைக் கீறி அவற்றில் ஊசிகளைக் குத்துவதன் மூலம் நோய்களைக் குணமாக்கமுடியும் என்பது அவர்களது நம்பிக்கை. இவ்வைத்திய முறைக்கும் இதுவரையில் விஞ்ஞானரீதியில் எந்த விதமான விளக்கமும் கொடுக்கப்பட வில்லை. ஆனல் விஞ்ஞானத்தினுல் விளக்க முடியாதவை எல்லாம் பொய்யானவை அல்ல. இன்று மேல்நாட்டு மருத்துவமுறை யில் பாவிக்கப்படும் பல மருந்துவகைகளுக்கு எவ்வித அறிவியல் விளக்கமும் கொடுக்கப் படவில்லை என்பது பலருக்கு வியப்பாக இருக்கலாம். காய்ச்சல், தலைவலி, ஆகிய வற்றிக்காகப் பாவிக்கப்படும் எஸ்பிரின் (Asprin) எவ்வாறு காய்ச்சலையும் நோவை
யும் அகற்றுகிறது என்பதற்கு இதுவரையில்
எந்த விதமான விளக்கமும் கொடுக்கப்பட வில்லை. உண்மையில் இம்மாதிரியான கண்டு பிடிப்புகளை விளக்க முற்படுவதஞல் விஞ் ஞானம் முன்னேறலாம்.
1949-ம் ஆண்டு சீனு விடுதலையடைந்த பிறகு சீன அரசாங்கம் வைத்தியத்துறை யில் பலமாற்றங்களை ச் செய்தது. மேனுட்டு மருத்துவமும் சீனுவின் பழைய வைத்திய முறைகளும் எல்லா மருத்துவ மாணவர் களுக்கும் பயிற்றப்பட வேண்டும், என்பது அவர்களது கொள்கையாய் இருந்தது. இதன் பயனுக மருத்துவக்கல்லூரிகளில் இருவகையான வைத்திய முறைகளும் போதிக்கப்பட்டன. எனவே சீன வைத்தி யர்கள் அறிவியல் அறிஞர்களாகவிஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சிகள் நடத்தக்கூடியவர் களாக இருந்த அதே சமயத்தில், தமது புராதன வைத்திய முறைகளை அறிந்தவர் களாகவும், அவற்றை நுணுக்கமாக ஆரா யும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருந்த தில் வியப்பில்லை.

Page 68
சாதன மருத்துவத்தின்.
ஊசித்தொளைச் சிகிச்சை பலதரப் பட்ட வியாதிகளிலும் பாவிக்கப்பட்ட போதிலும், அண்மையில் வெளியுலகுக்கு தெரியவந்த அதன் ஒரு முக்கிய பயன்பாடு தான், சத்திர சிகிச்சையின் முன் உடலை விறைக்கச் செய்வதற்கு ஊசித்தொளை முறை பயன்படுத்தப்பட்டதாகும். இது வரையில் சத்திர சிகிச்சையின் போது ஏற்ப இம்நோவை நே1 யாளிஉணரச் செய்யாமல் பண்ணுவதற்குமயக்கமருந்து(Anaesthesia) பாவிக்கப்பட்டு வந்தது. மயக்க மருந்து கொடுத்தல் என்னும் இத்துறை மருத்து வத்துறையில் ஒரு முக்கிய பகு தி யாக (Anaesthesı ology) 3)(öföğı 6.5ğı 67673, . இதில் நிபுணத்துவம் பெற ற வர் க ள் anaesthetists என்று அழைக்கப்படுகிருர் கள். ஆனல் இம்முறையில் உள்ள குறை பாடுகளை எவரும் ஒப்புக்கொள்ளுவர்.
இதில் பாவிக்கப்படும் மருந்துவகைகள் விலை கூடியவை. இதற்காக பிரத்தியேக. விலையுயர்ந்த கருவிகள் தேவை. எனவே சத்திர சிகிச்சைகளை, பெரிய ஆஸ்பத்திரி களில் தான் செய்ய முடியும் என்ற நிலை. இதுமட்டுமல்லாது ஈரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புக்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது மயக்கமருந்து கொடுப்பது அபா பகரமானது.
இடைவிடாத ஆராய்ச்சியின் பயஞக சில இடங்களில் ஊசிகளினல் தொளைப்பதி ஞல் சத்திர சிகிச்சை செய்யக்கூடிய அளவு உடலில் விறைப்பை உண்டுபண்ணலாம் என்று நிரூபித்திருக்கிமுர்கள். இம்முறை சுலபமானது. எனவே இதில் நிபுணத்து வம் பெற்ற விசேஷ மருத்துவர்கள் தேவை யில்லை. இதை பெரிய நகரங்களும், பின் தங்கிய கிராமங்களிலும் பாவிக்கலாம்: அறுவைச்சிகிச்சையின் போது நோயாளி உணர்வை இழப்பதில்லை. அறுவைச் சிகிச் சையின் பின்னர் தலைசுற்றல், வாந்தி, வயிறுஊதல் முதலியவை ஏற்படுவதில்லை.
1970ம் ஆண்டின் முடிவில் ஊசித் தொளைச் சிகிச்சை முறையை பயன்படுத்தி 400,000 அறுவைச்சிகிச்சைகள் செய்த
5 fr 9 அறியக் கிடக்கிறது.

frté. 6roi. 3 Liu For Argo Ar 19
ஆரம்பத்தில் இவ்வுண்மையை மேல் நாட்டவர் நம்பவில்லை. ஆனல் சமீபத்தில் ஆஸ்திரேலியாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த இருமருத்துவ தூதுகோஷ்டிகள் சீனுவுக்கு விஜயம் செய்திருந்தன. அங்கே அறுவைத்தொளைச்சிகிச்சையின் பிறகு இரு தயம், சுவாசப்பை, மூளை, வயிறு ஆகியவற் றில் அறுவைச் சிகிச்சைகள் நடந்ததை தாம் கண்டதாகவும், இவ்வறுவைச் சிகிச் சைகளின் போது நோயாளிகள் சுய உணர் வுடன் தம்முடன் பேசிக்கொண்டிருந்த தாகவும் கூறியிருக்கிருர்கள். ஜேம்ஸ் ரெஸ் டன் என்னும் நியுயோர்க் டைம்ஸ் நிருப ரும் தாமும் இவ்வாறு பல அறுவைச் சிகிச் சைகளை பார்த்ததாக கறியுள்ளார்.
ஊசித்தொளைச் சிகிச்சை எவ்வாறு விறைப்பை உண்டுபண்ணுகிறதுஎன்பதற்கு இன்னும் விளக்கம் கூறப்படவில்லை. இது வரையில் நாம் அறிந்த உடற்தொழிலி யல் அறிவைக்கொண்டு இதை விளக்க முடி யவில்லை. இத்துறையில் தாம் ஆராய்ச்சி கள் நடத்துவதாகவும் வெகு விரைவில் இது புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சீன வைத்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
இலங்கையிலும் ஆயுர்வேதம் முதலிய புராதன வைத்தியமுறைகளை வளர்க்க வேண்டுமென்று பல ர் அவ்வப்போது மேடையில் ஏறி முழங்கியுள்ளார்கள். பெரும் ஆரவாரத்துடன் ஆயுர்வேத ஆராய்ச்சிகூடங்களையும், கல்லூரிகளையும் திறந்து வைத்தார்கள். ஆணுல் இலங்கை யில் (இந்தியாவிலும் தான்) ஆயுர்வேத வைத்தியம் வளர்ச்சியடைந்ததாகவோ புதிய கண்டுபிடிப்புகள் எதுவும் ஏற்பட்ட தாகவோ கூறமுடியாது. ஆயுர்வேதத்தை பற்றி கூக்குரலிட்டவர்கள், தமது Lun prrey மன்ற அரசியலுக்கு ஏ ற் ற வ  ைக யில் கோஷம் எழுப்பி அதன் பயணுக ஆட்சிக்கு வந்தார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சீனுவிலும் அரசியல் காரணங்களால் தான் ஊசித்தொளை சிகிச்சை முன்னேற் றம் அடைந்துள்ளது. உண்மையில் மருத்து வழிம் சரி, மனிதனின் வேறு நடவடிக்கை

Page 69
y raragar Loegid sy'nwys 42air......
களும் சரி, அரசியலுக்கு அப்பாற்பட்டை பல்ல. பழைய மருத்துவமுறைகளை வளர் பதற்காகசீனுவில் எழுப்பப்பட்ட குரல்க ஆட்சிக்கு வருவதற்காக எழுப்பப்பட்டை யல்ல. மக்களுக்கு சேவை செய்ய வே டும் என்று ஆவலிஞல் பழைய வைத்தி முறைகள் பயிலப்பட்டன; ஆராயப்ப
6.
தனியுடைமை சமுதாயத்திலோ மரு துவமும் ஆராய்ச்சியும், பணமும் பதவிய சம்பாதிக்கும் கருவியாக பயன்படுத்தப்ட கின்றன. ஆராய்ச்சிகளில் ஈடுபடும் "அ ஞர்கள்" கூட பதவி உயர்வுக்காக, பட்ட களுக்காக அல்லது பெயருக்கும் புகழுக் மாகவே ஆராய்ச்சியில் ஈடுபடுகிருர்கே ஒழிய மக்கள் நலனுக்காக அல்ல. ஒ சொல்லில் கூறுவதானல் மக்கள் நல விட சுயநிலமே பேணப்படுகிறது. சொற் லாபங்களைக் கருதி அல்லது வர்த்தக நோ குடன் செய்யப்படும் ஆராய்ச்சிகளி மூலம் அவ்வப்போது ஏற்பட்ட உதிரியா சில கண்டுபிடிப்புகள் தான் நம்மை இ வரையில் வந்தடைந்துள்ளன.
நாட்டு வைத்தியம், கைமருந்து, ஆய வேதம் ஆகியவை மக்களிடையே காண படும் வைத்திய முறைகள். ஆய்வுகூட களிலிருந்துகொண்டோ, அலுவலகங்க லிருந்துகொண்டோ, அவற்றை அறியமு யாது. 'உங்களுக்கு தெரிந்த ரகசியங்க எல்லாம் சொல்லுங்கள்" என்று கொழு பிலிருந்து கொண்டு வேண்டுகோள்விடுவி
மனித உடலில் ஒடு மது கலக்கும்போது Stage) ஏற்படுகிறது. u இரைப்பையினல் (Sto தில் கலப்பதால், இந்த 0.4% ஆகும் போது ஒ( கமும் நிகிலதடுமாறலு . மணிக்கு 0.02 - 0.04% றப்படுவதால், மது/வி நேரங்கள் எடுக்கின்ற

எம். எஸ். தம்பிராஜா
ஞல் ஆயுர்வேத "ரகசியங்கள்" வெளி வராது. மக்களிடையே போய் அவர்களின் நன்மதிப்பைப்பெற்று, அவர்களிடமிருந்து இவற்றை அறிந்து, பின் விஞ்ஞான ரீதியில் ஆராய வேண்டும்.
ஊசித்துளைச்சிகிச்சையை புரா த ன காலத்தில் விறைப்பை உண்டுபண்ணுவ தற்கு பாவித்ததாக எந்தப்புத்தகத்திலும் இல்லை. ஆனல் மக்களிடையேபோய் அவர் களிடமிருந்து கற்றதின் பின் அதைக் கண்டு பிடிக்க முடிந்தது. அதில் மேலும் பல ஆராய்ச்சிகள் நடாத்தி அதை விருத்தி செய்து மீண்டும் மக்களுக்கு அளித்திருக்கி றர்கள்.
எனவே, இலங்கையிலும், சீனவிலும் புராதன வைத்தியமுறைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட போதிலும் இலங்கையில் அது வெறும் பேச்சளவிலும், சொல்லைக் காப்பாற்றுவ தற்காக அரைமனதுடன் எடுக்கப்பட்ட சில பயனற்ற செய்கைகள் அளவிலும் நின்று விட்டது. இதஞல் மக்கள் பயன டைய வேண்டும் என்ற எண்ணம் இருக்க வும் இல்லை, மக்கள் பயன் அடையவுமில்லை. சீஞவிலோ மாபெரும் புதிய சுண்டுபிடிப் புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கு இரு தாடுகளின் சமூக, அரசியல் வேறுபாடு களையே அடிப்படைக்காரணமாக கூறமுடி யும், தன்னலமற்ற நோக்கத்துடன் மக் களுக்காக சேவை செய்யப் பலர் முன்வர வேண்டும்.
கின்ற குருதியில் 0.15 வீதத்திற்கு /த்தித் தெளிவின் மை (Confused துவை மேலும் அருந்தும்போது,
nach)
உறிஞ்சப்பட்டு இரத்தத்
விகிதம் கூடுகிறது. இது 0.3 - வனுக்கு உண்மையான குடிமயக் ஏற்படுகிறது. இரத்தத்திலிருந்து அளவிலேயே மது வெளியேற் " o?&or 62/69r G602/pu/7 l / Duo 6oof
g”。

Page 70
LEAK
THN RDA
ST. PE
ROOFING
///7 Sހަށަ/
M 冬委アzzz
ZLZZZZLZ_2_LZZZZZZZZZ മZ 1ZZZ777A2777,777,777777.2777
Easily the Best P. W. D. APPROVED
Manufactured by:-
SRI LANKA T
Chilaw
w Waiki Colombo Office:
424, Sri Sangaraja Mawatha. Colombo-10.
Phone. 27439
 
 
 
 
 
 
 
 
 
 
 

by any Test
QUALITY TILES
"ILE WORKS,
Road,
Kal.

Page 71
இரண்டாயிர மூட்டை கட் போட்டுக் கு தேட்டம் என ஒட்டை, உன் பீத்தல், பிறு கைந்த கங்த சிங்தி இறை இப்படியான மூட்டை கட்
காட்டு வழிய
இரண்டாயிர
முட்டை , மு ஆட்டி கடர் பாதை கடை மாதிரியில் ஆ ஆபிரிக்கப் மற்றும் சில பற்றி, முய6 விண்வெளிை மண் தரையி வாய்ப்பைச் ஏய்ப்பை ஒழ கெஞ்சம் இல் நிகழ்த்தினுர் பின் முதுகி இத்தனையும்
 

'யிரம் ஆண்டுப்
மை எங்களுக்கு
-முருகையன்
ம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு. டி அங்த முழுப்பாரம் பின்முதுகிற் னிந்து புறப்பட்டோம் நீள் பயணம். ாறு கம்பி, சிதைந்த பழம்பொருளின் டைசல், உளுத்த இறவல்கள், முதல், பிசகி உதிர்ந்தவைகள் ல் - நன்றக காறிப் பழுதுபட்டுச் ந்த சிறிய துணுக்கு வகை -
இவற்றையெல்லாம் சேகரித்து, டி, அந்த முழுப்பாரம் கண் பிதுக்கக் பிற் பயணம் புறப்பட்டோம்.
ம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு.
டிச்சு முதலியன இல்லாதார், தார், இரண்டு வெறுங்கையும். -யின் பயணத் துயர் உணரா அந்த மனிதர் கடந்தார்கள். பாங்கில் அவர்கள் கடந்தார்கள். ரோ வலிமையுள்ள ஆயுதங்கள் ன்று, பகை களைந்து, மேலேறி ய எட்டி வெளிச்செல்லு முன்பாக ல் வான வனப்பைச் சமைப்பதற்கும், சமஞய்ப் பகிர்ந்து சுகிப்பதற்கும், ழித்தே இணைந்து கடப்பதற்கும் சைங்தார்,
நீள் பயணம். ற் பாரப் பெருமை இலாதவர்கள்
செய்தார்,

Page 72
இனியும் பல செய் எத்தனிப்போம் என இவை கண்டும், நாமோ இரண்டாயிரம் ஆ6 சற்றே இறக்கிச் ச புத்தூக்கம் எய்திப்
மேலிருக்கும் முட்ை கொட்டி உதறிக் வேண்டாத குப்ை அப்பாலே-செல்லு சற்றேனும் இல்லே சலிப்பும் வலிப்பும் பின் முதுகைப் பr ஊருகிருேம்; ஊரு
பரந்த உலகோர் சுருங்கும் படியாய் கைப்பைக்குள் விை வெற்றுக்கை கொ புத்தி நுட்பம், ச்ெ
சித்தி பல ஈட்டிச் காங்கள் எனிலோ பின் முதுகைப் ப ஊருகிருேம், ஊரு ஊருகிருேம்.
வேண்டாத குப்ை அப்பாலே செல்லு ஓ !
இரண்டாயிரம் ஆ பண்பாட்டின் டே

σταγή.
ண்டுப் பழைய சுமை அத்தனையும் Fலிப்பகற்றி, ஒய்வுபெற்றுப்
புறப்படவும் எண்ணுகிலோம்.
ட இறக்கி, அதை அவிழ்த்துக் குவிகின்ற கூளத்துள் ப விலக்கி, மணி பொறுக்கி
)ாம்.
6TP, ரம் பெரிதும் இடர்ப்படுத்த கிருேம் - ஓயாமல் ஊருகிருேம்.
பலரும், சுமையைச் பக் குறைத்துச் சிறிதாக்கிக் வத்துக் கருமங்கள் ஆற்றுகையில், ண்டும் வியப்புகளை ஆக்குகையில், Fய்கை நுட்பம், போக்கு நுட்பம்
என்பவற்றல் செகத்தினையே ஆட்டுகையில், கலிங்து மிகவிரங்கி, ாரம் பெரிதும் இடர்ப்படுத்த கிருேம் - ஒயவில்லை.
ப விலக்கி, மணி பொறுக்கி ம் அறிவோ குறைவு.
|ண்டுப் பழைய சுமை எங்களுக்கு; ராற் பல சோலி எங்களுக்கு.

Page 73
நோபிகனக் குணப்படுத்த மருத் வனை நாடுகின்ற நீங்கள், சொந்த நலன் முன்னிட்டு மருத்துவனிடம் மறைக்கவும் மறக்கவும் கூடாத விடயங்கள் பலவுள உங்கள் மருத்துவனிடமும், நீங்கள் அமர், திய வக்கீலிடமும் மாத்திரத்தான் " " அரி சந்திரனுக' மாறி உண்மையைக் கூ வேண்டிய சங்கடமான நிலை உள்ளது மருத்துவனிடம் மறைப்பதஞல் நோ பாரதூரமாக மாறலாம். வக்கீலிட மறைப்பதனுல் நீங்க ள் வழ க்  ைக கோட்டை விடலாம். மருத்துவனிடத்தி நீங்கள் கூற மறந்துவிடக்கூடாத விடய கள் அனேகமுண்டு. எமது நாட்டில் முக்கி மாக மேலதிக வேலையிஞல் சலிப்புற்றிரு கும் அரசினர் மருத்துவர்களிடத்தில் உ கள் நோயைப் பற்றி தேவையான விபர களை நீங்களும் கூற மறந்துவிடின் தகுந் சிகிச்சையை எதிர்பார்ப்பது தவறு. மே கத்திய நாட்டு மக்கள் பரந்த புத்தக அ வின் காரணமாக தமது நோயினை மருத்து வனிடம் விபரிக்கும்பொழுது, இலகுவா நோய் கணிக்கப்படுவதோடு சிறந்த சிகி சையையும் இவர்கள் பெறமுடிகின்றது எமது நாட்டில் தேசிய மொழிகளில் மூலை குமூலை பத்திரிகைகளும் சஞ்சிகைகளு கிளம்புகின்ற போதிலும் பொதுமக்களுக் அத்தியாவசியமான மருத்துவ, விஞ்ஞ னக் கருத்துக்களை இவை போதிய அளவி
 

பி. ரி. ஜெயவிக்கிரமராஜா M.B.B.S.
தமிழ்ச் சங்க முன்னுள் தலைவர்
சாதாரணமக்கள் விளங்கும் முறையில் தரு வதில்லை. இவை நிற்க நீங்கள் அன்ருட வாழ்க்கையில் அறிந்துகொள்ள வேண்டிய சில விபரங்களை அறியத் தருகின்றேன்.
முதலில் நீங்கள் ஒரு மருத்துவரிடம் செல்லும் பொழுது முன்பிருந்த நோய் களுக்கான அல்லது அதே நோய்க்கான சிகிச்சைக்குறிப்பு (Diagnosis Card)கிடைத் திருப்பின் அதனைப் பத்திரமாக வைத்தி ருந்து காட்டுவது அவசியம். நீங்கள் நீரிழிவு அல்லது இரத்த அமுக்கம் (High blood pressure) கூடியவராக இருந்தால் அதனைத் தெரிவிக்க வேண்டும். நீங்கள் முன்னர் பிர யோகித்த மருத்து வகைகளின் வரலாறு மிக முக்கியமானது. உதாரணமாக 'ஸ்ரி ருெயிட்ஸ்' (Steroids) என்ற வகை மருந் துகள் அதாவது 'பிரிட்னிசலோன்' (Prednisolone) G3L u nr 6öTo GODG) u mteġi 35(5 '' பின் அதனை மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும். சாதாரணமாக கடுமையற்ற தொய்வு நோயுள்ளோருக் குக் கூட சிலதராதரமற்ற பேர்வளிகள் இதனைக் கொடுக்கின்றனர். மருந்துக் கடை களில் தாம் நினைத்தவாறு சிலர் மருத்துவ ஆலோசனையின்றியே வேண்டிப் பாவிக்கின்றனர். வேறு தீவிர நோய்களு டன் இந்த நோயாளிகள் எம்மிடம் வரும் பொழுது அபாயநிலையில் தோற்றுவதோடு

Page 74
அறைக்கக் கூடாதவை
இவர்கள் மீது சத்திரசிகிச்சை மேற்கொள் ”ப்பட்டால் சாவை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். ஆகவே 'பிரிட்னிசலோன்’ போன்ற மருந்துகளை அதிகளவில் அடிக்கடி பாவித்திருப்போர் உங்களது நன்மைக்காகவும் உங்க ளி ல் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவரது சிறப்பிற்காகவும் இதனைத் தயவுசெய்து கூறிவிடுங்கள்.
பெனிசிலின் போன்ற மருந்துகள் சில ரது உடலில் ஏற்றுக்கொள்ளப்பட மாட் டாததோடு அபாயத்தையும் ஏற்படுத்த லாம். ஆகவேதான் நாம் இதனை சிறியள வில் செலுத்தி பரிசோதித்த பின்னரே இந்த ஊசியை ஏற்றுகிருேம். பெனிசிலின் தமக்கு ஒவ்வாது என்பதை ஏற்கனவே அறிந்திருந்தால் அதனை மருத்துவரிடம் மறவாது தெரிவிக்க வேண்டும். இன்றும் சில பின்தங்கிய பகுதிகளில் இந்த மருந்தை புண்களுக்குமேல் கொட்டிப் பாவிக்கின்ற னர். நான் மருந்துக்கடையொன்றில் நிற் கும் பொழுது பையன் ஒருவன் கடைக் காரரை நோக்கி ஐம்பது சதத்திற்கு 'ஐந்து இலட்சம் தூள்' தருமாறு கேட் டான். அதை நான் என்னவென்று கேட்ட தற்கு 'பெனிசிலின்' மருந்தையே அப் படி இங்கு கூறுவர் எனச்சொன்னர். இந் தத்தூளை நீங்கள் புண்களின்மேற் கொட் டிப்பாவிக்கும்போது புண் மாறியபோதி லும் இவை எமது உடலை ஒருவகையில் ஊக்குவிப்பதினுல் (Sensitises) வேறு கொடிய நோய்களுடன் நீங்கள் எம்மிடம் வரும்நேரங்களில் நாம் பெனிசிலின் ஊசி யைப் பாவித்தால் அபாயம் ஏற்படுகிறது. இதனை அனுபவமூலம் அறிந்து கொண்ட தன் பின்னர் எமது மருந்துக்கட்டுப்பாட்டு இலாகாவினர் இந்தத் தூளின் இறக்குமதி யைத் தடைசெய்துள்ளனர். ஆனல் ஊசி மருந்தும், குளிகைகளும் மருத்துவரின் ஆலோசனையுடன் பாவிக்கப்படுகிறது.
செங்கண்மாரி (Jaundice) வருத்தத் துடன் நீங்கள் மருத்துவரிடம் வரும் பொழுது நீங்கள் முன்னதாக உட் கொண்ட மருந்துகளையும் ஊசிகளையும் பற்றி அவர் விசாரிக்கக்கூடும். ஏனெனில்

பி. ரி. ஜெயவிக்கிரமராஜா 55
ல மருந்துகளும் செங்கண்மாரியை ஏற் டுத்த ஒரு காரணமாகும்.
நீங்கள் குடிவகை பாவிப்பவராக இருப்பின் அதனை மருத்துவரிடம் மறக் ாது கூறவேண்டும். இதனை மறைப்பதால் டங்களை மருத்துவர் எந்தவிதத்திலும் டயர்ந்தவராக கணித்துக் கொள்ளமாட் - Trif.
மேற்கூறிய காரணங்கள் உங்களது முந்திய சிகிச்சையின் விபரங்களின் முக்கி பத்துவத்தை உணர்த்துகின்றன. ஆகவே இவற்றை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
தாயாகும் பெண்களுக்கு
முதலில் நீங்கள் ஞாபகத்தில் வைத்தி ருக்க வேண்டியது உங்களுக்கு கடைசியாக மாதவிலக்கு ஏற்பட்ட நாளாகும் (Last Men strual Period). g5&a37 ji; GS fir Gior G) தான் நாம் உங்களது க ரு ப்  ைபயி ல் வளர்ந்துவரும் சிசுவின் வயதை சரியாகக் கணிக்கமுடிகிறதுடன் உங்களது பெறு நாளையும் கூறிவிட முடிகிறது.
உங்களது சிசுவின் வயதிற்குஏற்றவாறு தான் நாம் மருந்துக்களைப் பாவிக்க வேண் டும். காலந் தெரியாது மாறிப்பாவித்தால் பிள்ளைக்கு அல்லது தாய்க்கு அது தீமை யாக முடியலாம்.
நோய்வாய்ப்பட்ட சில சமயங்களில் பிள்ளையின் பெறுநாளிற்கு முன்னதாக, அனேகமாக இரண்டு கிழமைகளுக்கு முன் னதாகவே கருப்பையை மருந்துக்களின் மூலமோ, ச த் தி ர சிகி ச் சை முறை கொண்டோ ஊக்குவித்து நாங்கள் பெறு நாளை முற்போட வேண்டியுள்ளது. முக்கிய மாக நீரிழிவு, ரொக்சீமியா (Toxaemia) குரு தி ச் சிக் க ல் , முதலிய நோயுள்ள பொழுது இரண்டு கிழமைகளுக்கு முன்ன தாக பிள்ளைகளை நாம் பிறக்கப்பண்ணுவத ணுல் குழந்தை உயிருடன் பிறக்கவும் தாய் அபாயமின்றி வாழவும் முடியும். ஆகவே தான் உங்கள் மாதவிலக்கு வந்த கடைசித் திகதி எமக்கு மிகமுக்கியமாகிறது. சில வேளைகளில் சாதாரணமாக குழந்தை

Page 75
56 மறைக்கக் கூடாதவை
கருப்பையில் இருக்கும் நாற்பது கிழை களுக்குமேலாக இருந்தால் இது தாய்க்கு சேய்க்கும் நல்லதல்ல. ஆகவே திகதிை நாம் அறிந்திருப்பின் அதற்கு ஆவ6 செய்ய முடியும். உங்களில் சிலர் எம்மிட வரும்பொழுது தமிழ்த் தேதியை ஞாபக தில் வைத்திருப்பதால் எமக்கு தர்மசங்க மாகிறது. ஆகவே இந்தத் தேதி விடய தில் மாத்திரம் தமிழை மறந்து ஆங்கில தேதியைக் கூறினுல் எமது சிரமத்தை குறைப்பதுடன் வேற்றுமொழி மருத்துவ களும் உங்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்
நீங்கள் விவாகமாகி இரண்டு வருட களாகியும் குழந்தை பிறக்கவில்லையெ6 நீங்கள் கவலையுற்றிருப்பின் காலதாம மின்றி, கதிர்காமம், காசியாத்திரை மே கொள்ள முன்னதாக இருவரும் டா டரைக் கண்டு பரிசோதனைகளை மே கொள்ளல் நன்று ஆண்கள் இந்தச் சோ னைகளில் தம்மை மறைத்துக்கொள் விரும்புகின்றனர்.
மேக நோய்கள்
இவற்றில் முக்கியமானவை, கொே gurr (Gonorrhoea) 699667's, (Syphili ஆகிய இரு நோய்களாகும். இந்த நோ கள் இனவுறுப்புக்களைப் பாதிப்பதா சாதாரணமாக மறைக்கப்பட்டு சிலவேை களில் மிகவும் கேவலமான நிலையில் நா சிகிச்சை மேற்கொண்டும் குணமாக்க மு. யாத பிந்திய நிலையில் வருகின்றனர். அஎ மையில் என்னைச் சந்தித்த பொலிஸ் உத் யோகத்தர் தனது இனவுறுப்பில் இருந் காயத்தை கால்பந்து மோதியதால் ஏ பட்டதாகக் கூறினர். இந்த விடகங்கை மறைப்பதால் நாங்கள் இதனைக் கணிக்க தவறுவதில்லை. அதேவேளையில் கால்பந் ணுல் ஏற்பட்ட காயம் என்பதால் நா அவரை உயர்வாக எடைபோடவும் மா GLIt is.
மேகவியாதிகளில் தீவிரமானது சி, லிசு நோயாகும். இந்த நோயின் ஆரம் காலத்தில் இனவுறுப்புக்களில் காய தெரியினும் இது எந்தவித வேதனையையு ஏற்படுத்தாது. தானகவே வெளியில் மா,

பி. ரி. ஜெயவிக்கிரம ராஜா
:
S
)
விடுகிறது. ஆனல் இந்த நோய் தோலிற்கு வெளியிலல்லாது உடலில் இரத்தமூலமாக மற்றைய உறுப்புக்களை, முக்கியமாக இரு தயம், இரத்தக்குழாய்கள், மூளை போன்ற வற்றை மிகவும் பின்னராகவே பாதிக்கின் றது. இவை பாதிக்கப்பட்டால் சிகிச்சை பயனளிக்காது. ஆகவே இந்த நோய்கள் இருப்பவர்கள் தமது நலனுக்காக தாமத மின்றி மருத்துவரை நாடவேண்டும். அதே வேளையில் தமது 'போக்குவரத்துக்களை யும்' அவைபற்றிய இரகசிய தகவல்களை யும் மேக்நோய்த் தடுப்பு இலாகாவிடம் அறிவித்தால் அப்பகுதியினர் இந்த விட யத்தை பரமரகசியமாக வைத்திருப்ப தோடு காரணிகளான பெண் களையும் செல வின்றி அரசாங்க ஜீப் மூலம் அணுகி தமது அலுவலக வாசஸ்தலத்திற்கு வரவழைத்து சிகிச்சையளிக்கின்றனர். இந்த விபரங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும்பொலிஸ் பகுதியினருக்கு தெரியப்படுத்துவதில்லை. ஆகவே இந்த நோயின் தீமைகளை அறிந்து நீங்கள் முற்கூட்டியே சிகிச்  ைச  ையப் பெற்று வேண்டிய தகவல்களை மறையாது அறிவிப்பதன் மூலம் உங்களின் பின் செல் வோரையும் நோய் அணு காது செய்து சமு தாயத்திலிருந்து கொடிய நோயினை நீக்கு வதற்கு உதவுவதால் உங்களை யறியாமலே சமூகத்தொண்டர்களாக மாறுகிறீர்கள்.
புற்றுநோய்
சில உறுப்புக்களில் இந்த நோய் ஆரம் பிக்கும் பொழுது அது மறைக்கப்பட்டு விடு கிறது. மார்பகத்தில் மாற்றம் ஏற்படு கின்ற பொழுது பெண்கள் இதனை மருத்து வரிடம் காட்டிக்கொள்ளத் தயங்குகின்ற னர். முதலில் சிறுகட்டியாகத் தோன்றும் இந்த நோய் பரந்து பெரிதாகி புண்ணுகிய நிலையிற்ருன்வேறு வழியின்றிவேதனையுடன் நமது பெண்கள் மருத்துவரிடம் செல்கின் றனர். இந்தப் பிந்திய நிலையில் இவர்கள் எம்மிடத்தில் வரும்பொழுது எந்தச் சிகிச் சையும் இதனைக் குணமாக்க முடியாது. இதேவேளையில் மருத்துவர்களும் நோயா ளிகளை பரிசோதிக்கும் பொழுது தலையிலி ருந்து கால் வரை (பிரத்தியேக உறுப்புக் கள் உட்பட) சோதனை செய்வது கடமை.
இதனை மருத்துவர்கள் மறந்து விடுவதும்

Page 76
மறைக்கக் கூடாதவை
-ற்றுநோய் காலங்கடந்து கண்டுபிடிக்கப் படுவதற்கு ஒரு காரணமாகும்.
உடலில் மிகவும் குறுகிய காலத்தில் கட்டியொன்று வளர்ந்து வந்தால், நாக் கில் அல்லது வாயின் மற்றைய பகுதிகளில் மாருத புண் ஏற்படின், குறுகிய காலத்தில் உடல்நலம் கேவலமாக மாறினல், காலம் மாறி அடிக்சடி மாதவிலக்கு ஏற்படில் அல் லது வெள்ளை நீர் கழிக்கப்பட்டால், மலத் துடன் அல்லது சிறுநீருடன் இரத்தம் கலந்து காணப்பட்டால், இருமல் அல்லது வாந்தியுடன் இரத்தம் காணப்பட்டால் டாக்டரிடம் காட்டி தகுந்த சோதனைகளே மேற்கொள்ளுவதன்மூலம் உடலின் எந்தப் பகுதியிலாவது புற்றுநோய் உண்டா இல் லேயா என அறியமுடியும். இந்த நோயின் வேதனை மிகவும் பிந்திக் காணப்படுவதால் ஆரம்பத்தில் நாம் இதை சிரத்தையுடன் கவனிப்பதில் கல. ஆகவே மேற் கூறப்பட்ட குணங்கள் ஏற்படின் மறந்துவிடாது குடும்ட டாக்டரிடம் அதனைக் கூறிவிட வேண்டும்.
குழந்தையும் நீங்களும்
உங்கள் குழந்தையின் தொப்புள் புண் ணுக்கு தயவு செய்து விபூதியைத் தடவா தீர்கள். இதஞல் ஈர்ப்புவலி ஏற்பட்டு இறந்த குழந்தைகள் பல. தடுப்பு மருந்து கள் தவருது கொடுக் க ப் பட் டா ல் நோயற்று வாழ வழியுண்டு. பிறந்தவுட னேயே கயரோகத் தடை ஊசிபோடல் நலம். மூன்று மாதங்களின் பின் உங்கள் மருத்துவரிடம் சென்றிருப்பின் " "ரிப்பிள்' (Triple Vaccine) GT6oriu(Rub (p) Frtyi I வலி (Tetanu) (ஆ) தொண்டைக்கரப் Lrrsör (Diphtheria) (9)) Gj; * 6v (Whooping Cough) போன்றவைக்கெதிரான தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் பின்னர் டாக்டரிடம் நீங்கள் தடுப்பு ஊசி பெறுவதற்கான தேதியையும் போலியோ தடைமருந்து பெறுவதற்கான தேதியையும் அறிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு 'ரிப்பிள்' கொடுப்பது சைவசமயத்தவர் குழந்தையின் முடிவெட் டுவதுபோல, அல்லது இஸ்லாமியர்கள் ஆண்குழந்தையின் முன்தோல் வெட்டுவது

பி. ரி. ஜெயவிக்கிரம ராஜா 57
Circumcission) போன்ற வாழ்க்கையின் ரு சாதாரண பழ க் க ம 1ா க மாற வண்டும்.
குழந்தையின் முக்கிய சிறந்த உணவு நாயின் பால் என்பதை நவநாகரீக யுவதி 5ள் கூட மறுக்கமாட்டார்கள். ஆணுல் தாய்ப்பாலுடன் சேர்த்து மூன்று மாதத் தில் உயிர்ச்சத்து "சி" எலுமிச்சம் அல்லது தோடம் சாருக அளிக்கப்படல் வேண்டும். நாலாம் ஐந்தாம் மாதங்களில் மீனெண்ணை Codliver Oil) முட்டை மஞ்சள் கரு முதலி பன கொடுக்கப்படல் வே ண் டு ம் , இதன் பின்னர் பல் வளரும் பருவத்தில் விசுக்கோத்து. துவைக்கப்பட்ட உருளைக் கிழங்கு முதலியன கொடுக்கப்படலாம். இதன் பின்னர் படிப்படியாக சோறு ஊட்ட ஆரம்பிக்கலாம்.
சில ஆண் குழந்தைகளில் இரு விதைக ளூக்குப்பதிலாக ஒரு விதை (Undescendedicstis) மாத்திரம் காணப்பட்டால், அதனை இயற்கையின் நியதியென்று வாளாவிராது உங்கள் டாக்டரை அணுகி ஆலோசனை பெறவும். ஒரு சிறிய சத்திர சிகிச்சை உரிய நேரத்தில் செய்து கொள்வதன் மூலம் உங் களது மகன் வருங்காலத்தில் பிள்ளைப் பேறுடையவராக வாழ வழிவகுப்பதுடன், வயிற்றுள் வெளியிறங்காது இருக்கும் மற் றைய விதையில் புற்றுநோய் ஏற்படாது தடுக்கவும் முடிகின்றது.
இரத்ததானம் செய்வோர்
நீங்கள் இரத்த வங்கிகளில் இரத்த தானம் செய்யும் பொழுது போது மக்க ளின் நலனிற்காக உங்களில் ஏற்பட்ட சில நோய்களைப்பற்றி மறவாது கூறவேண்டும். நோய் உள்ளவர்கள் இரத்ததானம் செய் தால் அந்த இரத்தம் ஏற்றுக் கொள்பவ ரின் உடலில் தீங்குகளை விளைவிக்கலாம். ஆகவே ஈரலழற்சி, (Hepatitis) மலேரியா, சிபிலிஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டிருங் பின் நீங்கள் உங்கள் இரத்தத்தை வேறெ வருக்கும் கொடுக்க முன்வரலாகாது.

Page 77
58 மறைக்கக் கூடாதவை
விவாகமாக முன்னர்
சாதகப் பொருத்தம், சாதிப் பொருத் தம், சமயப் பொருத்தம் பார்ப்பதிலுப் பார்க்க, மருத்துவ ரீதியில் பொருத்த கள் பார்ப்பது நோயற்ற சீருற்ற வாழ விற்கு வழிவகுக்கும். ஒரே குடும்பத்தில் திரும்பத்திரும்ப விவாகம் செய்பவர் ளின் குழந்தைகள் சிறப்பாக தோன்ற தோடு இவர்களுக்கு சில நோய்கள் ஏற்படு வதும் அதிகரித்திருப்பதாக மருத்துவ அறி ஞர்கள் கருதுகின்றனர்.
சில நோய்கள் எங்களில் பரம்பரை வாரியாகக் காணப்படுகின்றன. முக்கிய மாக நீரிழிவுநோய் உள்ள குடும்பத்தி லுள்ள ஒரு பெண்ணிற்கு விவாகம் செய்து கொடுக்கும் பொழுது வருகின்ற சமுதா யம் நீரிழிவு உள்ளவர்களாக மாறலாம். ஆகவே இதனை இன்றைய கலியாணத் தர கர்கள் நவீன முறையாகக் கொண்டு பொருத்தம் பார்த்தல் நன்று.
'வைரத்தின் சிறப்ன கள் இந்துக்களே? என் ஜெர்மெய்ன் என்னும் ே ரத்தினங்களில், சிறப்பு வி வைரக் கற்களின் ஊடாக கள் பாயும். பழங்கால வைரம், பெண் வைரம், A பிரிவுகள் கொண்டதாகு முள்ள வைரங்களே அணி ஹமிஹிரர். சாம்பல் நிற கீறல்கள் உள்ள வைரங்க யாக மக்கள் விலக்குகிருர் உள்ள வைரங்கள் குஷ் நோய்களே வி&ள விக்கும் காரணம்.”

பி. ரி. ஜெயவிக்கிரமராஜா
கலியாணத்திற்கு முன்னர் ஆணினதும் பெண்ணினதும் இரத்தம் பரிசோதிக்கப் பட்டால் மேக நோய்களைப் பரவாது தடுத்து சிகிச்சை செய்யமுடியும். பெண்க ளின் குருதிப் பிரிவு ஆர்-ஏச் சய (Rh-) என்று கண்டு கொண்டால், அதேபோல ஆர் ஏச் (R h) உள்ள ஆணை மணப்பதன் மூலம் பிள்ளைப்ப்ேற்றில் ஏற்படும் சிக்கல் களை தவிர்க்க முடிகின்றது.
இறுதியாக, பல முக்கிய விபரங்களை இந்தச் சிறிய கட்டுரையில் கூற முற்பட்ட காரணத்தால் எந்தவொரு தனிப்பகுதி யையும் மிக விரிவாகத் தரமுடியவில்லை. சாதாரண மக்களுக்கு அதிகமாக விபரிப்ப தஞல் அதிக பலன் கிட்டுவதில்லையென நான் கருதுகிறேன். இயன்ற வரையில் நடைமுறைத் தமிழில் இலகுவாக எழுத யான் முயன்றதால் நீங்கள் ம()ைறக்கக் கூடாதவற்றை உணர்ந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.
ப முதன் முதலில் உணர்ந்தவர் று குறிப்பிடுகிருர் லெயின்ட் மனுட்டு ஆராய்ச்சியாளர். நவ /ாய்ந்தது வை ரமே. உண்மை மட்டுமே எக்ஸ்-ரே கிரணங் முறையின் படி வைரம், ஆண் டுநிசீல வைரம் என மூன்று ம். பெண்கள் முக்கோண வடிவ வது சிறந்தது என்கிருர் வரா ம், கோடுகள் , கரும்புள்ளிகள், ஃ7க் குறைபாடுகள் உள்ளவை/ கள். இத்தகைய குறைபாடுகள் டம், ரத்தசோகை போன்ற என்ற நம்பிக்கையே இதற்குக்

Page 78
(இன்று சட்டமன்ற மொழிகளில் கடக்கவேண் எழுந்துள்ளது. அதனல், தமிழுக்கும் சிங்களத்தி வேண்டிய தேவை ஏற்ப காலகட்டத்தில், முக்கியப களில் ஒன்றன மணவில8 மன்றச் செய்திகளை இங்.ே றர் கட்டுரையாளர்
6
ஒருவனுக்கு ஒருத்தி' - இதுவே பண்டைத் தமிழர் மணவாழ்வினதும் இன் றைய பண்பாடுற்ற நாடுகளின் திருமணஞ் சார் சட்டங்களதும் அடிப்படை முறைமை என்றென்று இருப்பின் அதற்கு முரணும் உண்டு அல்லவா? இது இயற்கை விதிப்பு. "ஒருவனுக்கு ஒருத்தி' முறை, பிறழுவ தும் இதற்கு பரிகாரம் தேடுவதும் இன் றைய மக்களிடையே நிகழ்பவை. பெண் டிர் மட்டுமல்ல-மணப்பிணைப்பைத் தறிக்க வழியறியாது மனைவி தன்னிச்சைப்படி நடப்பினும் 'சிவனே' என்று இருக்கும் அப்பாவி ஆடவரும் உளர். இந்த அப்பா விகளுக்கு ஒளிபோலத்தான் 'மண விலக்கு" நவீனச் சட்டத்துறையில் இடம் பெற்றுள் ளது. அதே நேரம் மண விலக்குச் சட்டத் தையே கருவியாகப் பயன்படுத்தி தனக்கு வேண்டாத கணவனையோ மனைவியையோ தள்ளிவிடும் மகளிரும் ஆடவரும் உளரே.
 

Il Gill fil5 -
மணம் விலக்க
க. திருவருள்வள்ளல்
கடவடிக்கைகள் தேசிய ண்டும் என்ற நிலைமை
ஆங்கிலத்தில் இருந்து bகும் மொழிபெயர்க்க பட்டிருக்கிறது. இந்தக் Dான சமூகப் பிரச்சிஜன
க்கைப் பற்றிய வழக்கு க சுவையாக விவரிக்கி
சமூக - தனிமனித சீர்திருத்தத்திற்கு ஏற்ப, ஏற்பட்ட மணவிலக்கு முறையை நினைத்தபடி பெறச் சட்டம் ஒன்றும் எடுப் பார் கைப்பிள்ளையன்று. கணவனும் மனைவி யும் பிரிய இசைந்தாலும் கூட சட்டத் தைத் திருப்திப் படுத்தும் வகையில் கார ணங்கள் காட்டியே சட்டபூர்வமாக மண விலக்குப் பெறமுடியும்.
காரணங்கள்
இலங்கையின் ஆள் சட்டத்திற்கு (Law of Persons), நம்மிடையே மரபு வழி வ ந் த உள்நாட்டுச் சட்டங்களோடு உரோம- டச்சுச் சட்டமும் ஆங்கிலச் சட் டமும் பல புதுவிதிகளைக் கொடுத்துள. ஆட்சட்டத்தின் ஒரு பிரிவான திருமணஞ் சார் பகுதிக்கும் இவ்வாறே. தென்னுபிரிக் காவில் நிலவும் உரோம-டச்சுச் சட்டஞ்

Page 79
60 uo6oor wh of 67 ziva...
சார் "மணவிலக்கு வழக்குகளில் பிற துணைப் புணர்ச்சியும் (adultery) வேண் மென்று  ைக விட லு மே (Malicion Desertion) 'மண விலக்கு பெற, மன விலக்கு வேண்டுபவர் பெரிதும் நிறுவவேலி டியவை. ஆனல் ஆங்கிலச்சட்டத்தில் மன விலக்குப் பெற, இவற்றேடு கொடுமை படுத்தல் (Crucity) உளச் செப்பமின்ை (Unsound ness of Mind), 5 IsibLugpl’ul, 6 Luft 6iv L. GOOT risë GF (Homosexuality) G6v, குத்தனம், "இருவரில் ஒருவர் இறந்து வி டார் என்ற ஏற்புடைய கருத்து' என்ப6 ஏற்கப் பெறும் .
இவ்விரு சட்டமுrை Eளின் கலை யான இலங்கை மணவிலக்குச் சட்ட பிறன் துணைப்புணர்ச்சி, வேண்டுமென் கைவிடல், தீர்க்க முடியாத புணர்திறன் g?)Gör GOLD (Impotencv) GTSöt Lu Guib6M so GEJ, கிறது.
மணப்பிணைப்பைத் AT uů 69d to u jfr as கருதிவந்ததன் விளைவாக எம்மிடைே மன விலக்குப் பெறுவது எளிதன்று. நீ பதி சன்சோனியின், "மீட்டும் சமரசத்திற் இடமிருப்பின் ஒரு போதும் மணவிலக் வழங்கப் பெறமாட்டாது. என்ற கூற். இங்கே நினைவு கூரற் பாலது.
(அ) பிறர்துணைப் புணர்ச்சி:
அதாவது, தம்பதியருள் ஒருவரு வேறு யாராவது ஒருவரும் கொள்ளு தன்னிச்சையான உடலுறவுத் தொட பாகும். "தன்னிச்சையான" என்பதால் வுட் (Voet) என்பவர் கூறுவதுபோல, த பதியருள் ஒருவர் தன்நினைவற்ற உள செப்பமில்லாத நிலையில் இருப்பின் அ "பிறர் துணைப்புணர்ச்சி சட்ட வரம்புக் உட்படாது?. ஆங்கிலச்சட்டமும் இை ஏற்கிறது.
பிறர் துணைப் புணர்ச்சி காட்டி ம6 விலக்குக் கோருபவர் தமது குற்ற சாட்டை, நியாயமாக எழும் ஐயங்க நீக்கும் வகையில் நிறுவவேண்டும் என்பே நீதியரசர்கள் கிரேஷியன்? எச். என். ஐ ஃபெர்னண்டோ4, என்போரின் கருத்து இம் மரபு கினெசி வழக்கு, பிரெஸ்ட

:
க்
:
H
க. திருவருள் வள்ளல்
ஜோன்° வழக்கு என்பவற்றை அடி யொற்றி வந்த குற்றவியற்சட்ட நிறுவு திட்டப்பாடு (அல்லது திட்ட நிறுவல்)" ஆகும். ஆயினும் எதிர்மாருக, "பிறர் துணைப் புணர்வு நிகழ்ந்திருக்க வியலும் 6T6ör sp fö735p6ny ffissri saav (Balance of Probability) எனும் குடியியற் சட்டத் திட்டப் பாடும் பிரிகின்ஷேர்,8 ரைற்? போன்ற வழக்குகளில் ஏற்கப்பட்டுள்ளன. கள்ள நட்பைப் பற்றிக் கணவனுே மனைவியோ ஒப்புக் கொள்வது போதிய சான்றுக ளின்றி ஏற்கப்படமாட்டா. ஒப்புக்கொள்வ தும் கபட நோக்கின்றித் தூய்மையான தாக இருக்க வேண்டும்.
'தர்மசேன (எ) நவரத்னே" என்ற வழக்கில் வாதியின் மனைவி, தன் உறைவி டத்தின் பின், அடுத்திருந்த இன்னுெரு போலீச r ள ரின் உ  ைற விட த் தி லிருந்து 2ம் பிரதிவாதியால் (* கள்ள நட்பாளர்) தள்ளப் பட்டதை வாதி கண் டார். வாதியின் மனைவி 2ம் பிரதிவாதி யின் மனைவியுடன் நட்புக் கொண்டிருந்த படியால் அங்கு செல்வது வழக்கம். ஆனல் அன்று 2ம் பிரதிவாதியின் மனைவி இல்லை. ஐயமுற்ற வாதி (கணவன்) மனைவியை நையப்புடைத்தபின், 2ம் பிரதிவாதியுடன் உடலுறவு கொண்டதாக மனைவி ஒப்புக் கொண்டாள். ஆளுல் 2ம் பிரதிவாதி மறுத் தான். இவைதவிர வேறு சான்றுகளும் இல்லை. எச். என். ஜி. ஃபெர்ஞண்டோ இச் சான்றுகள் நியாயமாக எழும் ஐயங் களை நீக்கவில்லை என்று கூறி மனைவியின் (Gföp SPüL153v (Confession) sJösuDPA தார்.
சூழ்நிலைச் சான்றுகளைக் 10 கொண்டும் பிறர்துணைப் புணர்ச்சியை நிறுவமுடியும்.
1. Cana karatne’s Case 66 N. L. R. 380 2. Voet 24. 2. 5. 3. Jayasinghe V Jayasinghe 55 N. L. R. 410 4. Darma sena, W. Navaratne 72 N. L. R. 419 5. Ginesi V Gines i 1948 P. 179 6. Preston John's 1951 A. C. 391 7. Standard of Proof 8. Briginshaw's 60 Com. L. R. 336 9. Wright's 77 Com L. R. 191 10. Circumstancial Evidence.

Page 80
மனம் விளங்க.
எடுத்துக்காட்டாக, கணவனது உறவின்றி Eனேவி கருவுறுவது பிறன்துணைப் புணர்வுக் கான வலுவான சான்று. அதற்குக் கண வன், மனைவி கருவுறத்துவங்கும் காலகட் டத்தில், தான் உடலுறவு கொள்ளவில்லை என்பதை நிறுவவேண்டும். கணவனது புணர்திறனின்மை, தொலைவிடத்திலோ வெளிநாட்டிலோ மனைவி சூலுறும் போது கணவன் இருத்தலால் அவளை அணுகும் வாய்ப்பின்மை என்பவற்றைக் கொண்டு இதை நிறுவலாம். மகப்பேறு சிரமமற்ற தாயும் குழந்தை சாதாரணமாகவும் இருந்து 280 நாட்களுக்குள் பிறந்திருப்பின் (அதாவது திருமண நாளிலிருந்து அல்லது கணவன் நெடுங்காலத்தின் பின் திரும்பிய பிறகு) அது கள்ள நட்பின், விளைவு என வலுவாக ஐயப்பட இடமுண்டு. அதுபோல கணவன் இறுதியாக உடலுறவு கொண்ட நாளிலிருந்து 320 நாட்களுக்குப் பிறகு மகப்பேறு நிகழ்ந்தாலும் இதே ஐயப் பாட்டை உருவாக்கும். ஆணுல் இந்த மகப்பேற்றுக் காலவரையறை திட்டவட்ட மானதல்ல. பிரிஸ்டன் ஜோன் வழக்கில் இறுதி உடலுறவின் பின் 360 நாள் கழித் துச் சாதாரணமான மகப்பேறு நிகழ்ந்தது பிறன்துணைப் புணர்வை உறுதிப்படுத்தி மணவிலக்குக்குக் காரணமாயது.
மேலும், முன்பு மேகநோய் (Venereat Disease) இல்லாதிருந்த கணவனுக்கு மண உறவின் பின் மேகநோய் பற்றிஞல் அது மனைவியிடம் மேகநோய் இருக்கும் என்ற ஐயத்தை எழுப்பி, மனைவியின் மீது, "கள்ள நட்பு' வைத்திருப்பாளோ என்ற கருத்தை உருவாக்கும். ரைற் (எ) ரைற் என்ற வழக் கில் இதே நிலை எழுந்தது. வழக்காளி (வாதி) இங்ங்ணம் குற்றம் சாட்டுகையில் ஏற்படும் வலுவான ஐயப்பாட்டை வழக் கெதிரி (பிரதிவாதி) நீக்க வேண்டும். மேக நோய் வேறுயாரும் மேக நோய்க்காரன் பயன்படுத்திய பொருள்களின் தொடர் பால் வந்திருக்கலாம் என்பதைக் காட்டி நிறுவவேண்டும். இதற்கு மருத்துவச் சான் றுகளின் துணை பெரிதும் தேவை.
ரஞ்சித் (எ) விலா 11 என்ற வழக்கில் வீன மருத்துவத்துணை எவ்வளவு பயன் டுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் காண

க. திருவி முன் வள்ளல் மி
ாைம். அங்கு வழக்காளியான (வாதி) கண வன் இறுதியாக உடலுறவு கொண்ட தாய்க் கூறிய நாளிலிருந்து 8 மாதங்களுக் குள் நிறைவான குழந்தை பிறந்தது. மருத் துவர் கணவன்-மனைவி-குழந்தை என்போ ரின் குருதி மாதிரிகளை எடுத்துக் குருதி 

Page 81
62 barž o?67/Vas
இருந்ததுடன் சமரச நிலைக்கு நம்பிக்ை யும் இல்லாதபடியால், கணவன் வேண்டிய "மணவிலக்கு வழங்கப்பட்டது.
மோர்ற்றன் 14 வழக்கில், வழக்காள (வாதி)யான கணவன் 200 மைலுக்கு அ பாலுள்ள ஜோஹானஸ்பர்குக்கு மருத்து வச் சிகிச்சைக்கு சென்றபின் மனைவியுட பிறகு வரவேண்டுமென்று ஏற்பாடு-ஆணு ஓராண்டாகியும் மனைவி வரவில்லை. மனைவி பிரயாணத்துக்கு வேண்டிய அளவு பண1 பெற்றவளுமில்லை. அத்துடன் மருத்துவ மனையில் இருந்தபடியால் கணவனும் அள ளுக்கு வீட்டுவசதிதரும் நிலையில் இல்லை இக் காரணங்களால் மனைவி வராதிருந்தது வேண்டுமென்று கைவிட்டது அல்ல எனத் தீர்ப்பளிக்கப் பெற்றது.
*" கனகரத்னே (எ) கனகரத்னே" யில் நீதிபதி சன்சோனி கூறியது போலத தம்பதிகள் மனமொப்பிப் பிரிந்து வாழ்ந் தாலும், பின்னர் கைவிடும் எ ண் ண ப் இடையிட்டு நிகழின் அது வேண்டுமென்று கைவிட்டதாகிவிடும். அத்துடன் பிரிந்தி ருக்கும் தம்பதிகளில் ஒரு வ ர் மீட்டுட குடும்ப உறவைப் புதுப்பிக்க வந்ததை ம றவர் மறுத்தால், மறுப்பவர் வேண்( மென்று கைவிட்டவர் ஆகிருர் .
ஆனல் ஒரு தம்பதியின் நடத்தை குறையால் அல்லது பிறர் துணைப் புண வால் மற்றவர் மணஉறவைக் கைவிடுவது Constructive Malicious Desertion g(5ub இதில் கைவிடுபவர் குற்றவாளி அல்லர் கைவிடுபவர், 'தன் வாழ்வு அபாயகரம1 னது - பொறுக்கமுடியாதது" என்பதை நிறுவவேண்டும். 'பாபு நோ ஞ (எ கெம்ப்ஸ் 16 வழக்கில் கணவன் மனைவிய னுடைய கொடூரமான செயல்களாலு தாக்குதல்களாலும் தனக்கு மணவாழ்வி பொறுக்கமுடியாத கொடுமை நிறைந்த தாக நிறுவிய போதும், மனைவியின் தங்ை யுடன் கள்ளநட்புக் கொண்டிருந்து மலை விக்குக் குடும்ப வாழ்வு பொறுக்க வியல ததாக ஆக்கிய காரணத்தால் கணவனது கைவிடுகையானது மே ற் குறிப் பிட்ட து அல்ல என நீதிபதி வீரசூரிய தீர்ப்பு வழா கிஞர்.

க. திருவருள் வள்ளல்
s
வேண்டுமென்று கைவிடுதலுக்கு உளச் செப்பமின்மையை ஒரு காரணமாக ஏற்க முடியாது என்பதே இலங்கைச் சட்டம், அத்துடன் கைவிடும் எண்ணத்துடன் ஆறு நாள் பிரிந்திருப்பது கூட வேண்டுமென்று கைவிடுதலே. ஆனல் , அவ்வெண்ணமின்றி ஆறு மாதம் பிரிந்திருப்பிறும் அது வேண்டு மென்று கைவிடுதல் அன்று.
பேராசிரியர் ஹாலோ 17 கூறு வ து போல குற்றவாளியோ குடிகாரனே மனை வியைத் துன்புறுத்தினுலும் அவளை அகற்ற நினைப்பது அரிது. இந்நிலையில் ம ன வி "நீதி முறையிலான பிரிவு' (Judicial Separation) பெறலாம்; "மணவிலக்கு பெற முடியாது.
திருமணச் சலுகைகளை (நலன்கள்) மறுப்பது கைவிடுகைக்குச் சமம். 'விஜே ரத்ன" வழக்கில் 18 மணமுடித்து ஒரு வருட மாயும் மனைவி கன்னியாகவே இருந்தாள் புணர்திறனின்மை, கைவிடுகை, உடலு றவு கொள்ள மறுப்பு ஆகிய குறைகளைச் சாட்டினள். கணவனின் உடலுறவு மறுப்பு வேண்டுமென்ற கைவிடுகை எனத் தீர்க்கப் பட்டது. போதிய காரணமின்றி, ' கருத்த டைக் கருவிகளின்றி உடலுறவு கொள் ளேன்" என மறுப்பது தென்னுயிரிக்காவில் வேண்டுமென்று கைவிடல் என ஏற்கப்பட் டிருக்கிறது. 20 ஆணுல் உடல் நலக் குறைவு, மிகை பரவக்கூடிய மேகநோய் இருத்தல் என்பவற்ருல் உடலுறவு கொள்ள மறுப் பது ஏற்கத்தக்கதே. 21
வேண்டுமென்று கைவிட்டதாக வழக் கெதிரி (பிரதிவாதி) நிறுவினலும் கூட நீதி மன்றம் மிக எளிதில் மணவிலக்கு வழங் காது கணவன்-மனைவியிடையே சமரசம்
14. 1934. C. P. D. 5
15. 66 N. L. R. 380
16. 67 N. L. R. 183
17. Hahlo South African Law of Husband &
Wife' P. 385
18. 47 N. L. R. 324
20. V. V. V. 1939 E. D. L. 81.
21. Ainsbury's Case 1929 A. D. 109

Page 82
மனம் விளங்க. "
ஏற்பட வழி இருக்கிறதா என்பதையே தோக்கும். இதனல் தான் இவ் வழக்குக வில் முதலில் முதல்தீர்ப்பு அல்லது இடைக் காலத் தீர்ப்பு (Decreenisi) வழங்கப் பெறும். இதிலிருந்து மூன்று மாதங்கள் அல்லது அதன்பிறகு இறுதித் தீர்ப்பு அல் avg (!p(p GM Loji grfů (Decree Absolute) வழங்கப் பெறும், இரு தீர்ப்புக்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் சமரச நிலை ஏற் படச் சிறிதேனும் வாய்ப்பில்லாவிட்டால் இறுதித் தீர்ப்பு மணவிலக்கை உறுதிப்ப டுத்தும். இதனுல் தான் தென்னுபிரிக்கா வில், வழக்காளி வழக்குத் தொடர்கையில், "மணஉறவை மீளப்பெறுதல் தவறினல் மணவிலக்கு" என்றே கோருவது வழமை. (இ) தீர்க்கவியலாத புணர்திறனின்மை
(Incurable Impotency)
கணவனிடமோ மனைவியிடமோ தீர்க் கவே முடியாத புணரும் தகைமையின்மை இருப்பின் ஒருவரையொருவர் உடலுறவில் மனநிறைவு செய்ய முடியாது. எனவே மணவாழ்வு கசக்கும். இந்நிலை நீக்கவே, புணரும் தகைமை இல் ல |ா த  ைத க் கொண்டு மணவினையை நீக்கலாம் எனச் சட்டம் இடம் தருகிறது. அந் த த் திற னின்மை மருந்துகளாலோ உளச்சிகிச்சை யாலோ தீர்க்கமுடியாததாக இருப்பது டன் திருமணம் நிகழ்ந்தபோது இருந்தி ருக்க வேண்டும். பொதுத் திருமணச் சட் Lb (General Marriages Ordinance) 367śy 19ம் பிரிவு 2ம் துணைப் பிரிவில் இதைக் கூறு கிறது, மணவிலக்குக்கு ஏற்ற காரணமாக, ஆனல் குடியியற் சட்டக் கோவை (குடியி யல் நடைமுறைக் கோவை) தீர்க்கவிய லாத புணர்திறனின்மை திருமணத்தின் போது இருந்தது என்ற காரணத்தால் 'LD 600rGap 60 LD (Nullity of Marriage) வழங்கப்படலாம் என்கிறது. இதனல் திரு மணமே நிகழவில்லை என்ற கருதுகோள் நிலவத் துவங்கும். அதாவது மணம் செல்லுபடியா காது. ஆனல், மணவிலக் கிலோ திருமணம் முறிந்துவிட்டது" என்ற கருதுகோள் நிலவும்.
pp 60LD is g5 5.0L-3, 6i (Absolute Bars)
இவ்வளவு காரணங்கள் இருப்பினும் ‘மணவிலக்கு" பெற இயலும் என்று மனக்

க. திருவருள்வள்ளல் 63
கோட்டை கட்டமுடியாது. அதனுள்ளும் எத்தனையோ தடை-தடங்கல்கள். மண விலக்குத் தடையாக முழு  ைமத்த  ைட', மேலாணுரிமைத் தடை2 என்பன இருக்கின் றன. இலங்கைச் சட்டத்தில் உள்ள மூன்று முழுமைத் தடைகளும் குடியியற் சட்டக் கோவையின் 600ம் பிரிவில் கூறப்பட்டுள் ளன. அப்பிரிவு, வழக்காளி கள்ள நட்பைக் கண்டுங்காணுது இருந்தால்-அல்லது மன் னிப்பளித்து இருந்தால்-அல்லது வழக் கெதிரியுடன் (பிரதிவாதி) கூட்டாக நீதி மன்றைஏமாற்றும் நோக்கம் (Colusion) கொண்டிருந்தால் - அவ்வழக்கு தள்ளப் படும் எனக் கூறுகிறது.
(அ) கண்டுங் காணுமை*
மனைவியின் கள்ளநட்பை அறிந்திருந் தும் அதைத் தடுக்க வழிவகை செய்யாது, அதுபற்றி அறிய விரும்பாது செயலின்றி இருக்கும் கணவன் பிறன்துணைப் புணர்ச்சி தொடர வெளிப்படையாகவோ மறைமுக மாகவோ ஊக்கப்படுத்துகிறன். அவனுக்கு மணவிலக்குத் தொடரும் உரிமை இல் லாது போகிறது. கள்ள நட்டை அறிந்தும் வேண்டுமென்று அதில் தலையிடாது ஒதுங் கு வது கூட கண்டுங் காணுமையாகும். * 1958ல் ஒரு கணவன் மனைவியின் கள்ள நட்பை அறிந்ததும் அதைத் தடுக்கமுய லாது தானும் அவளுடன் உ ட லு ற வு கொள்ளாது தனியறையில் வாழ க் தொடங்கினன். இதனுல் கள்ள நட்பு நின்றுவிடுமா? 1960ல் மனைவியின் கள்ளக் காதலன் வீட்டு உறுப்பினனுகவே வந்து 1963ல் மனைவியின் பள்ளியறையிலேயே படுத்தான். 1960-1983 இடைக்காலத் தில் மூன்று பிள்ளைகள் பிறந்தன. இத்த கைய வெளிப்படையான சா ன்று க ள் இருந்தும், வழக்கெதிரி வழக்கெதிராடா மல் இருந்தும், வழக்கெதிரி - துணைவழக் கெதிரியின் எழுத்து வடிவ ஒப்புக்கொள். ளல் இருந்தும், கணவன் மூன்று ஆண்டு
Absolute Bar Discretionary Bar Civil Procedure Code
Connivance Belt V Belt 1909 T. S. 500 (510)

Page 83
4 ubayri ao eravas...
இந்நட்பைக் கண்டுங்காணுது இருந்தமை பால் அவனுக்கு மணவிலக்கு அளிக்கப்பட வில்.ை
"கொட்ஃபிரி" வழக்கில்? கணவன் வீடு வந்தபோது (இரவில்) மனைவியும் கள் ளக் காதலனும் தழுவிக்கொண்டிருப்பது கண்டு சீறி-உறுமிவிட்டு 'இந்தக் கண்ரா வியை அறையில் செய்யேன்" என்று கூப் பாடு போட்டு மகனது அறைக்குச் சென்று படுத்தான். காஃலயில் கள்ளக் காதலன் இருப்பது கண்டு விரட்டிவிட்டான். ஒரு தடை நடவடிக்கையும் எடாது கள்ள நட்பை நிகழவிட்டதால் கணவனது கண் டுங்காணுமைப் பிழைக்காக மணவிலச்கு கைநழுவியது.
கண்டுங் காணுமைக்கு மேலெழுந்தவா ரியான அறிவோ, புறக்கணிப்போ , செய லின்மையோ போதாது. மாற்ருனுக்கு மனைவியை வாடகை பேசும் கீழ்த்தர வினை மகள் மைந்தர்கள் கண்டுங்காளுமைக் குற் நத்தினரே. ஆனல் சில சமயம் கள்ளக் காதல் தொடர சில சந்தர்ப்பங்களில் இட மளிப்பது கண்டுங்காணுமையாகாது, " " டக் ளஸ்(எ) டக்ளஸ்' வழக்கில் கணவன், மனை வியின் கள்ள நட்பை அறிந்ததும் ஏற்ற சான்றுகள் கொ ண் டு நிறுவப்போதிய ஆதாரங்களைப் பெறும் நோக்குடன் தான் வேறெங்கோ செ ல் வ த ரீ க க் காட்டி மனைவி-கள்ளக் காதலன் தொடர்பை மறைவிலிருந்து கவனித்து -கவனிப்பித்து ஒலிப்பதிவும் செய்தது கள்ளக்காதலை ஊக் கும் நோக்குடன் அன்று ஆதாரம் பெறும் நோக்குடனேயே! இதனுல் இச் சூழ்நிலை யில் கணவன் "கண்டுங்காணுமல் இருக்க வில்லை. மேலும் இலங்கை வழக்கொன்றில் கணவன் மனைவியின் கள்ளக் காதலை அறிந் தபின் பிரிவினை செய்து கொண்டான். மனைவி வறியவள். இதனுல் இப்பிரிவினை யில் மேலும் கள்ளக் காதலில் ஈடுபடுவாள் என்பது கணவனுக்குத் தெரியும். ஆகவே அவனுக்கு மணவிலக்கு கிடையாது. 9 டக் ளஸ் வழக்கில் கணவனிடம் கெடுதி எண் soor Lb (Corrupt Intention) g)6ï)&ao. Gg (66 எண்ணம், அதாவது தனது இலாபத்திற்கு மனைவியைக் குற்றம் செய்யத் தூண்டுவது அல்லது ஊக்குவது, இருப்பின் அது "கண்

க. திருவருள் வள்ளல்
டுங் காணுமை"யின் பாற்படும். மனைவி "அ" என்பவனுடன் கொண்டிருந்த கள்ளநட்பைக் கண்டும் காணுதிருந்த கணவன், அவள் பின்னர் இ என்பவனுடன் கொண்ட கள்ளநட்பைத் தனக்குச் சாதக மாக்கிக் கொண்டு புகார் செய்யலாமா? ‘ல வரிங்' வழக்கு 10 ‘முடியாது' எனத் தீர்த்தது.
(sg) 9 g. (sb 7 ởh 3h die (Collusion): -
நீதிபதி ரோப்பர் "கூன்(எ) கார்ப்"11 வழக்கில் கறியது போல 'தம்பதிகள் இருவ ரும் தம் விருப்பு-ஆசைகளுக்கிணைய மண விலக்குப் பெற உண்மைகளை மறைத்து அல்லது பொய்ச் சான்று காட்டி அல்லது ஒருவர் வழக்குக் கொணரக் காரணங்க ளைக் கொண்டிருக்கிருர் என்ற சான்று புனைந்து தமக்கு வேண்டியதைப் பெறுவது அடிநோக்கம் கூடிய செயலாகும். எடுத்துக் காட்டாக உண்மையாக நிகழாவிடினும் கள்ளநட்பு இருக்கிறது என்று காட்டல், உடன்பாட்டுடன் வேண்டுமென்று கைவிடு வது என்பன இதன்பாற்படும். ' கூன் வழக் கில் ஒரு தம்பதிக்கு நற்பலன் கிடைக்கும் என்று அவர் வழக்கெதிராடக்கூடாது என்ற உடன்பாட்டுடன், உண்மையாக நிகழ்ந்த திருமணக் குற்ற வழக்கை, மற் றைய தம்பதி கொணருவது அடிநோக்கச் செயலல்ல எனப்படுகிறது. ஒரு தம்பதி தனது குற்றத்தை ஒத்துக்கொள்வது அடி நோக்கத்துடன் கூடிய செயல் என்ற ஐயப் பாட்டை எழுப்பும். இந்த ஐயத்தை மூன் ழும் நபர்கூட ஒரு வழக்கில் கொணர 6Նր լԻ. 12
(இ) மன்னிப்பளித்தல் (Condonation):-
இது "முழு அறிவுடன் முழு மன் னிப்பு'{லூ(எ) லூ)13. கணவன் மனைவியின்
6. Rambe Owos Case 1965-3 WLR 7. Godfrey V Godfrey 1964-3 AER 164 8. 1951-P. 85 (at 96) 9. Dissanappu V Babahamy 10 N.L.R. 343 10. Lovering's Case 162 E.R. 1089 1. Kuhn V Karp 1948-4 S.A. 825 12. Nelson V Poenander 41 N.L.R. 453 13. Louw V Louw 1939. O-P.D. 119

Page 84
மனம் விளங்க
நடத்தைக்கு மன்னிப்பளிப்பதாயின் அந் நடத்தை பற்றி முழு அறிவுடன் இருந்தி ருக்க வேண்டும். பெரும்பாலும் குற்றமி ழைத்த தம்பதியின் குற்ற ஒப்புதலின் பேரில் மன்னிப்பளித்தல் நிகழ்கிறது. ரேய் டன் தன் நூலில் "பிறர் துணைப் புணர்ச்சி' ஒப்புக்கொள்ளப்பட்ட பின் மற்றைய தம் பதி மன்னிப்பதா வழக்குத் தொடுப்பதா என்று முடிவெடுக்க உசாவல் ந ட த் த வேண்டும். அதனுலேயே "முழு அறிவு' பெறமுடியும் என்கிருர் , * ஆணுல் நீதியர யர் ஜோயல்ஸின் ஸ்மித் "ம ன் னி ப்பு நாடும் மனைவி தான் உண்மைகளை மறைக் காது வெளிப்படுத்த வேண்டும்' என் &მფgrr. 15
மன்னிப்பளித்தல் என்பது வெறும் மன்னிப்பு மட்டுமல்ல. மன்னிக்கப்பட்ட தம்பதிக்கு குற்றம் செய்வதற்கு முன்னி ருந்த உறவு நிலையை அளிப்பதும் ஆகும். இவ்வாறு உறவு நிலையை மீள அளித்த தற்கு உடலுறவு கோள்வது தக்க சான்ற கும்.
தம்பதிகளிடையே சமரசம் ஏற்பட்டு, குற்றம் செ ய் த வ ரு ம் தனது பழைய இடத்தை மீளப் பெற்றிருந்தாராயின் உட லுறவு இல்லாவிடினும் கூட மன்னிப்பளிக் கப்பட்டிருப்பதாய்க் கருதலாம். 17 இதே கொள்கைகளை "பப்டிஸ்ட்(எ) செ ல் வ ராஜா' என்ற இலங்கை வழக்கும் ஏற்றுள் ளது 18
ஏய்த்தல் அ ல் ல து வற்புறுத்தல் 19 மூலம் பெறும் மன்னிப்பு மன்னிப்பளிப் பன்று. பல ஆங்கில வழக்குகளின் முடிபு இதே. ஆனல் ரோம-டச்சுச் சட்டப்படி தீர்க்கப்படும் தென்னுபிரிக்க வழக்குகளில் இது ஐயத்திற்கிடமானதாய் உள்ளது. ஃபுட் '' ஒருமுறை மன்னிக்கப்பட்ட கள்ள நட்பை வழக்கெதிராடப் (Defence) பயன் படுத்த முடியாது' என்கிருர், 21 ஆனல் ஆங்கிலச் சட்டப்படி எதிர்கால நன்ன டத்தை பற்றிய நிபந்தனையின் பேரில் மன் னிப்பளிப்பு வழங்கப் பெறும். இதனல் ஆங்கிலச் சட்டமுறையில் மன்னிப்பளிப் பின் பின்னர் கணவன் மீண்டும் கள்ள நட் deiv ஈ டு ப ட் ட (ா ல் முந்  ைத ய

க. திருவருள் வள்ளல் 65
கள்ளநட்பு மன்னிப்பளிக்கப்பட்டதாக கருதப் பெறமாட்டாது.2
பிறன்துணைப் புணர்ச்சி முழுமணக் குற் றம் ஆகையால் மன்னிப்பளிப்பு இக் குற் றத்தை நீக்கும். ஆணுல் வேண்டுமென்று கைவிடுவது உடலுறவுச் செயல்களால் மன்னிக்கப்பட்டதாகக் கருதமுடியாது. மணஉறவைப் புதுப்பிக்கும் எண்ணம் அச் செயலுடன் பிணைந்திருக்க வேண்டும். அப் போதுதான் அது வேண்டுமென்று கைவிட் டதை மன்னிப்பளித்தது ஆகும். வேருெரு சாரார் கூற்றுப்படி மன்னிப்பளித்தல் வேண்டுமென்று கைவிடுதல் விடயத்தில் பயன்படுத்தப்பட முடியாது. ஆனல் ஆக் கிய வன்மக் கைவிடுகைக்கே (Constructive Malicious Desertion) uugiru G.55 at b. ' ஆங்கிலச் சட்டமும் இதையே ஏற்கிறது. ஆயினும் வழக்காளி மனுவைத் தாக்கல் செய்து வழக்குக்கான காரணமும் முன் வைத்தபின் அக் குற்றம் மன்னிக்கப்பட லாம்.25 இலங்கையில் டயஸ்(எ)ஹாமினே வழக்கும் வேண்டுமென்று கைவிடுதலுக்கு மன்னிப்பு பயன்படாது என்றே கூறுகி றது.28
ஆளுல் இப்போது இங்கிலாந்தில் மண விலக்குச் சீர்திருத்த விதி, 1969 (Divorce Reform Act) மன்னிப்பளித்தலுக்கு ஏற்ற உடலுறவை, மணவிலக்குத் தடையைவிட சமரசத்திற்கு ஊக்கமளிப்பதாகவே கருது கிறது. இதனுல் வழக்காளி, இவ் விதியின் படி, வழக்கெதிரியின் கள்ளநட்பை அறிந்த பிறகும் ஆறு மாதங்கள் வரை உடலுறவு கொண்டு அதன்பின் மணவிலக்கு மனுச் செய்திருப்பின் அவ்விடைக்கால உடலு
14., Raydon on ''Divorce' p. 250 15. Inglis V Inglis 1967-2 W. L. R 489 17. El tiot V Eliot- 1925 C. P. D. 286(289) 18, 59. N. L. R. 284 19. Fraudor Duress; Henderson's 1944 A. C. 49 21. VOet. 24-26 22. Richardson's 1950 p. 16
ஆணுல் 1983ன் பின் மன்னித்த கள்ளகட்பு மீட் டும் எழாது. 24. Haho Husband & Wife' p. 392 25. Muslin V Muslin-1952-1 a11 E. R. 477
26. 46. N.L.R. 443

Page 85
66 tos:ðrub ofsorÆ/s...
றவு புறக்கணிக்கப்படும். ஆனல் ஆ மாதங்கட்கு மேல் அந்த உடலுறவு நீடி தால் அது மணவிலக்கு முழுமைத் தை யாய் விடும். அதேபோல 1969ன் பின் மூன்று ஆண்டுகள் போதுமாயிருந்த வே6 டுமென்று கைவிடுதலுக்கு இரண்டு ஆண் களே போதும். வேண்டுமென்று கைவிட் மைக்கு மன்னிப்பளிப்பு வழங்கப்பட்டத கக் கருத ஆறு மாதங்கட்கு மேற்பட் உ ட லுறவு நிகழ்ந்திருக்க வேண்டு. மேலும் இப் புதுச் சட்டத்திஞல் ஒரே வீ டில் பிரிவுடன் தம்பதிகள் வாழ்ந்தாலு அது 'ஒருங்கு வாழ்தல்' எனவே கணி கப் பெறும். எடுத்துக் காட்டாக, மனை கணவனது க ள் ள ந ட்  ைப அறிந்து மணத்தை விலக்க முடிவு செய்தாலும் பி ளையின் படிப்பு அல்லது நோய் தேறு நோக்கத்தினலோ, சொத்து சீர்ப்பா செய்வதற்காகவோ ஒரே வீட்டில் தங் லாம்-ஆனல் ஆறு மாதத்திற்கு மேல் த கினல் அது மணவிலக்குப் பெறத் தை யாய்விடும். மன்னிப்பளித் தற்குத் தேை யான மன்னித்தல், மீளவைத்தல் என்ப தேவையற்றவை ஆகிவிட்டன. இத்திரு. தம் நம்மையும் பாதிக்கலாம். 27
மேலாணுரிமைத் தடைகள்
மேலாணுரிமைத் தடைகள் (Discr tionary Bars) அல்லது மேலாண்தடைக என்பன நீதிமன்று தனது மேலாணுரிை யைப் (Discretion) பயன் படுத்தி மன விலக்குக்கு விதிக்கும் தடைகள். வழக்கு தாக்கல் செய்வதில் காரணமற்றதாமதம் (Unreasonable Delay) 6 paid, it 6th (ounts யின் பிறன்துணைப் புணர்வு, கொடுை (Cruelty), 5L-560) 5ás göIT Gior L– db (Condul Conducing) என்பன இத்தடையின் பா படும். ஆங்கிலச் சட்டமுறையில் அடிநோ கச் செயலும் இதனுள் அடங்கும்.
மேலாணுரிமையை நீதிமன்று பய6 படுத்தும் விடயத்தில் ஆங்கில சட்டவி, களா ரோமன்-டச்சுக் கோட்பாடுகள பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விட கத்தில் இலங்கை வழக்குகளில் ஒருமை பாடு இல்லை. 28 அண்மை வழக்கான 'பெரேரா (ஏ) முத்துபாலி'29 ஆங்கில

க. திருவருள் வள்ளல்
த்
கொள்கைகளை ஏற்றது. அ த வ து ப்ளன்ற்?0 வழக்கில் ஏற்றுக் கொண்ட 'வில் சன்'31 வழக்குக் கொள்கைகளான,
(அ) திருமணத்தின் விளைவான பிள்ளை க
ளின் நிலை, நலன்;
(ஆ) வழக்காளி எதிர்காலத்தில் மறுமணம் செய்யும் நோக்குடன் கள்ள நட்பு பூண்ட மற்றவரின் நலன்;
(இ) திருமணம் குலையாவிடில் தம்பதிகளி டையே சமரசம் ஏற்பட வழி-இடம் இருக்கிறதா என்ற வின; (ஈ) வழக்காளியின் நலன், சிறப்பாக அவர் மறுமணம் செய்து மதிப்புடன் வாழ் வது,
என்பவற்றையும்  ைச ம ன் பி ர பு "ப்ளன்ற வழக்கில் ஐந்தாவதாகச் சேர்த்துக் கொண்ட,
(உ) திருமண வினையின் பிணைக்கும் தூய்மை, முழுமையும் முறிவடைந்த திரும ணத்தை நீடிப்பதும் பொதுப் பூட் கைக்கு முரண் எனக் கருதும் சமு தாய ஆய்வுரை ஆலோசனை என்பவற் றினிடையில் நிகர்நிலை கொண்டு பெறும் சமூகநலம்,
என்பதையும் கருத்திற் கொண்டே நீதி மன்றம் தன்மேலாணுரிமையைப் பயன் படுத்தி மணவிலக்கை அளிக்கவோ மறுக் கவோ செய்யலாம்.
(i) வ ழ க் காளி யின் பிறன்துணைப் புணர்ச்சி பெரேரா வழக்கில் கணவன் இன்னெரு பெண்ணுடன் வாழ்ந்து அவள் மூலம் பிள்ளைகள் பெற்றிருந்தான். மனைவி யும் கள்ளக் காதலனுடன் தனியே வாழ்ந்து பிள்ளை பெற்றிருந்தாள். குடியியல் நடை முறைக் கோவையின் 602ம் பிரிவின்படிநீதி மன்றம் தன் மேலாணுரிமையைப் பயன்
27. Jennifer Levin “Divorce Reform act 1969'-
1970-33 M.L.R. 640-1
28. Seniviratne V Panishamy 29 N.L.R. 97 29. Perera V Muthupa1i 71 N.L. R. 461 30. Blunt V Blunt 1943 A.C. 513
31. Wilson's 1920 P. 20

Page 86
to søðruh sinf?6oraziv ds...
படுத்தி, பிள்ளைகளின் நலன் (அதாவது இம் முறையற்ற பிள்ளைகள் மணவிலக்கின் பின் பெற்றேர் மறுமணம் செய்வதால் முறையான பிள்ளைகள் ஆவர்); வழக்காளி பின் நலன் (மணவிலக்கின் பின் தன் கள் ளக் காதலியைமறுமணம்செய்து மதிப்பாக வாழலாம்); வழக்கெதிரியின் நலன் (வழக் காளியின் நலன் போன்றே); இருவருக்கு மிடையே சமரசமாகும் நிலை இன்மை; என்ற கொள்கைகளின் அடிப்படையில் வழக்காளி கள்ளநட்பு கொண்டிருப்பினும் அவர் சார்பாக மணவிலக்கு வழங்க இவ் வழக்கில் முனைந்தது. "லோரி வழக்கில்? கூறப்பட்டதுபோல மீட்க முடியாத அளவு முறிவடைந்த மணத் தொடர்பை நீடிக்க விடுவதில் பயனே இல்லை. தென்னபிரிக்கா விலுள்ள ரோம-டச்சுச் சட்டத்தின் படி கணவனின் கூடா நடத்தை மனைவியின் கூடா நடத்தைக்கு ஈடுகட்டுகிறது. அதா வது அதை நீக்குகிறது. அதன்படி இரு வரும் கள்ளநட்புக் குற்றத்துக் காளாயி ருந்து, பின் கணவன் கள்ளநட்பை விட்டுக் குறிப்பிட்ட காலம் தூய வாழ்வு வாழ்ந்தா ஞயின் மனைவிமீது, கள்ளநட்பு மீது மண விலக்குக் கோரலாம். 33 இங்கு நீதிமன்று இருவரின் கள்ளநட்பாலும் மணவிலக்கு வழங்கவில்லை. ஆஞல் அதன்பின் வந்த வழக்கில் தென்னுயிரிக்க நீதி ம ன் ற ம் சைமன் பிரபுவின் 5ம் கொள்கையை ஏற்று இருவருக்கும் மணவிலக்கு நல்கி யது.** அவ்வழக்கில் 20 ஆண்டுகளின் முன் மனைவியைக் கணவன் நீக்கி வேறெருத் தியை ஏற்றன். வறிய மனைவி வாழ்வுக்கு சமையல் தொழில் செய்தாள். அப்போது தான் வென்ற்றர் என்பான் அவளுடன் வாழ முன்வந்தபோது, வாழ்விலும் உழைப் பிலும் சலித்த அவள் ஏற்றுக் கொண்டாள் கணவன்-மனைவி இருவருக்கும் இச் சட்ட முரண் வாழ்வு மூலம் பிள்ளைகள் இருந்தன. வழக்காளியான மனைவி ஒழுக்கமிழந்து தறி தலையாய் அலேயவில்லை எ ன் பது ட ன் வென்ற்றருடன் உறுதியான நிலையான வாழ்க்கை வாழ்ந்தாள் என்பதையும் நீதி மன்றம் கவனித்தது. முதல் வழக்கினின்று 14ஆண்டுகளின் பி ன் தென்னபிரிக்க நீதிமுறை ஆங்கி ல த் தாக்கத்தால் இவ்வாறு இளகியிருப்பது காணலாம். கள்ளநட்புக் கொண்ட வ ழ க் கா னி

ds. é?ø5 6v 66provor Gor Gö 67
மண வி ல க் கு க் கோரு கையில் தனது கள்ளநட்பு ן, נ ןb ,!iji L! உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.38 என ஒரு நிரை வழக்குகளும் உண்மைகளை வெளிப்படுத்த வில்லை என்ற ஐயத்தால் மட்டும் மண விலக்கை மறுக்கக்கூாது? என இன்னுெரு நிரை வழக்குகளும் இங்கிலாந்தில் உள. வழக்காளி தன் கள்ளநட்பை ஒப்புக் கொண்டால் அல்லது அதற்கான சான்று இருந்தால் நீதிமன்றின் மேலாணுரிமை நடைமுறைக்கு வரும். இலங்கையில் வழக் காளி தன் கள்ள நட்பை ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
(ii) காரணமற்ற தாமதம்:- வழக்காளி தன் மணவிலக்கு வழக்குக் கொணரக் காரணமற்ற வகையில் தாமதமாய் இருந் தால் நீதிமன்று தன் மேலாணுரிமையால் மணவிலக்கு வழங்காது. லெவலின்' வழக்கில் மனைவி 1943லிருந்து 1953 வரை கணவன் தனக்குக் கொடுமை செய்வதாகக் கூறினள். இறுதியாகக் கொடுமை செய்யப் பட்டுப் பிரிவு நிகழ்ந்ததாய்க் கூறப்படும் நாளிலிருந்து இரண்டாண்டுகளின் பின் னரே வழக்கு வந்தது. அந்த இரண்டாண் டுகளில் கணவன் பிழையுணர்ந்து மன்னிப் புக் கோரியபோதும் மனைவி தான் கொண் டிருந்த கள்ள நட்பால் புறக்கணித்தாள். இதனுல் நீதிமன்று அவளுக்கு மனுவை மறுத்து 'நீதிமன்றம் தனக்கு வேண்டிய நேரத்தில் ஒருவர் வந்து இழப்பீடு கோரும் இடமல்ல' என்றது. எனினும் தாமதத் துக்கு ஏற்ற காரணங்கள் இருப்பின் அது தடையன்று. எ+கா:- அவதூறுக்கு அச் சம், சமரச நம்பிக்கை, பணவசதியின்மை, நோய், வழக்கெதிரியின் இருப்பிடம் தெரி யாமை, அடிக்கடி வேலை இடமாற்றங்கள் என்பன. பெரேரா வழக்கு இக் காரணங் களால் வழக்குத் தொடரத் தாமதம் ஏற் படுவது தடையன்று என ஏற்றது.
32. Lawry V Lawry 1967-1-W.L.R. 789
33. Zelie V Zelie-1944 C.P.D. 209
34. Herman's Case-1958-3 S.A. 118
35. Bainbridge's Case 1934 P. 66 36. Coleman's Case 1955-1 W.L.R. 1235 37. Llewellyn's Case 1955-1 W.L.R. 480

Page 87
8 " upsøPor ub of76oro naivas...
(iii) கொடுமை:- "ரசல் 39 வழக்கி உள்ளது போல கொடுமை என்பது உய உறுப்பு, உடல்நலம் ஆகியவற்றுக்கு உட பளவிலோ உளத்தளவிலோ தீங்கை அ லது அத் தீங்கு பற்றிய நியாயமான அ சத்தை உண்டுபண்ணும் நடத்தைே உரோம-டச்சுச் சட்டத்தில் கொடுை மணவாழ்வை அழிக்க வேண்டும் எனு எண்ணம் பிணைந்திருந்தால் தான் ம விலக்குக்கு காரணமாகும். ஆணுல் ஆங் லச் சட்டத்தில் ' எண்ணம் தேவையா கூறு அன்று. வேண்டுமென்று பே நோயை மனைவிக்குத் தொற்ற வைப்பது ‘கொடுமை") ஆகும். ஆங்கில வழச் களின் படி "கொடுமை' கடுமையா தாயும் பொறுக்க முடியாததாயும் இரு வேண்டும். இன்றைய புதிய இங்கிலாந்து சட்டத்தில் ‘கொடுமை" என்ற சொ கைவிடப்பட்டுளது. "மற்றத்தம்பதி டன் வாழ்வது நியாயமாக முடியாது' எ பது நிறுவப்பட வேண்டும்.
(iv) நடத்தைத் தூண்டல்- வழ காளியின் கூடாநடத்தையால் தா மனைவி பிறர் துணைப்புணர்வில் அல்ல வேண்டுமென்று கைவிடுதலில் இறங்கியிரு பாளாயின்,வழக்காளியின்மணவிலக்கும மறுக்கப்படலாம். வழக்காளியின் வேண் மென்ற புற க் கணிப் பா லும் (Wil Neglect) இக்குற்றங்களை மனைவி செய்தி தால் இதே நிலை நிலவும். கணவன் ரா வத்தில் இருந்தபோது மனைவி வேற்ரு டன்திரிவது கேள்வியுற்று அவளைக் கைவி டான். மனைவிக்கு வசதிகள் இருந்த பெற்றேருடன் வசித்தாள். வேலைக் சென்ருள். எனினும் கள்ளக் காதல் ெ தாள். நீதிமன்று கணவனது கைவிடு: இவளது கள்ளநட்புக்குத்தூண்டல் அ என்றும், கணவனது கைவிடுகை, மனை யினது கள்ளநட்பால், மறைந்தது என்! தீர்த்தது. * அத்துடன் சில ஆங்கில வழ. கள் உடலுறவு கொள்ள மறுப்பது நட தைத்தூண்டற் செயல் என்றன. ** இத முரணுகவும் "பிரெளன்" வழக்கு தீ தது.*

க. திருவருள் வள்ளல்
9)f
.
குச் F uiu
6)
நிறைவுரை
இவ்வாறு மணவிலக்குக்குக் காரணங் களும் தடைகளும் இருப்பது காணலாம். இவை எல்லாம் திருமணப் பிணைப்பின் தூய்மையைக் கருத்திற் கொண்டே உரு
ITS 6).
இன்றைய மணவிலக்குச் சட்டம் நமது சமூகத் தேவையை நிறைவு செய்வதாகக் கூறமுடியாது. சட்டத்தை ஏய்ப்பவர்களும் மீறுபவர்களும் இருக்கவே இருக்கிருர்கள். இதற்காக அஞ்சியோ கடுமையாகவோ சட்டத்தைக் கடுமையாக்குவதும் தளர்த் துவதும் ஆய்ந்து செயற்பட வேண்டியவை. இங்கிலாந்து-ஆஸ்திரேலியாவில் கணவன்மனைவிக்கு சமரசம் ஏற்படுத்த, வழிவகை செய்யக் கூறத் திருமண வழிகாட்டு நிறுவ sids (olyth (Marriage Guidance Institute) FLD Taf LD 67 papal J565lb (Conciliation Bureau) உள. ஆனல் இம் மன்றங்களால் பெரும்பாலான மணவிலக்குச் சிக்கல்களில் சமரசம் ஏற்படுத்த முடியாமல் போயிற் று.
இப்போது ஆங்கில மண விலக்குச் சட் டம் திருத்தப்பட்டுள்ளது.** இதன்படி இப் Gurrgs, ''Scis LD6007 (upsta'' (Break Down of Marriage) மட்டுமே மணவிலக்குக்குக் காரணமாகும். அதாவது பிறர் துணைப் புணர்ச்சி, கொடுமை,  ைக வி டு  ைக போன்ற பிழைசார் காரணங்களாலும் (*Fault' Grounds); g}tir sin - T, Gior G i Utroit) பர இசைவுடன் பிரிதல், ஐந்தாண்டு இயல் பான பிரிவு என்பனவான 'பிழைசாராக் 65 mr ir 60GT piši s Gir fr y G3D (“Non-Fault” Grounds) மணமுறிவு நிகழ்ந்துள்ளதுஎன்று காட்டி மணவிலக்குப் பெறமுடியும். அதா வது மணமுறிவு திருத்த முடியாத அல்லது uß6MT (ypaq-uurt 35 LD GODTyp pólanunt sy (I rretrievable Break-Down) godds Gaucia, Gh. Glogy is
39. Russe1 W Russe1 1 895 P. 315
40. Browning V Browning 1911 P 161 & for Ceylon, Appuhamy V Julihamy-16 N.L.R. 83
41. Richard W. Richard 1952-1-All E.R. 1384 42. Callister V Callister 1947-63 T.L.R. 503 43. Brown V Brown 1956 P. 438 44. Article by Jennifer Levin in 1970 M.L.R. 633

Page 88
பணம் விளங்க.
இந்த மணவிலக்குச் சீர்திருத்தச் சட்டத்
நீல் (1969) ஐந்து ஆண்டு இயல்பாகப் பிரிந்திருந்து (அதாவது பிழைசார் கார Tம் ஏதுமின்றி) பின் கணவன் மணவிலக்கு மனுச் செய்தால் மனைவிக்கு வாழப் பண வசதி செய்து கொடுக்க வேண்டும், இன் றேல் இடைக்காலத் தீர்ப்பு வரை வந்த வழக்கு இறுதித்தீர்ப்பைப் பெருது. இவ் வகைப் பிரிவின் பின்வரும் வழக்கில் வழக் கெதிரி அ நி யா ய மா க ச் சிரமப்படக் கூடாது என்பதே சட்டத்தின் நோக்கம். அத்துடன் மன்னிப்பளித்தல், கண்டுங் காணுமை, அடிநோக்கம், வழக்காளியின் கூடாநடத்தை போன்ற மணவிலக்குத்
தடைகள் புதுச்சட்டத்தில் இல்லை. ஆறு
மாதத்திற்கு மேலான கூடிவாழ்வும், நிதி வசதியின்மையும் (ஐந்து ஆண்டுப் பிரிவில்) தான் தடைகளாகக் கூறப்பட்டுள்ளது. அடி நோக்கம் ஒழிக்கப்பட்டிரு ப் பது வர வேற்கத் தக்கதே. ஏனெனில் அடிநோக் கம் என்பது இருவரதும் இசைவு தானே. அடிநோக்கம் என்று சட்டத்தைச் சுற்றி வளைத்து இருப்பதைவிட இருவரதும் பரஸ்
பர இசைவாக நேராக இருப்பது நன்றல்
லவா? நீதிமன்று குடும்பத்தின் பிள்ளை கட்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்துள்ளதாக நிறைவுடன் கட்டளையிட்டால் அன்றி இறுதித்தீர்ப்பு நசித்துப் போய்விடும்.
இவ்வாறன சீர்திருத்தங்கள் பலவும் இங்கிலாந்து திருச்சபையினதும் சட்டச் சீர் திருத்த ஆணைக்குழுவினதும் நயப்புரை
களின் கலவையால் உருவானவை.
冷
கற/ என்ரு ல் வாழ்நாள் மு. வாழ்வது என்று சொல்வார்கள். பொருந்தும், பழங் காலத்தில் எ இருந்தது. அப்பெ 7ழுது ஒரு நெறி தது. இந்தக் காலத்தில் பந்திரத் வருகிறது, ஆராய்தலும் அனுப காலம் இது. ஆகவே ஒருவ ஃனவி படி நேரலாம். ஒருவனை விடாம தான் தவறு. எப்பே 7து எவ னுட து/ரே கஞ் செய்யாமல் இருந்தால்
ན་-ན་ བས་བབ་ཆེ་ན་ཚ་བ་དམག་དོན་ཐད་འཛིན་ཅ ...་ ...'ன் ‘கரித்து

க. திருவருள் வள்ளல் 69
பிழைசாராக் காரணங்களான பிரிவு களின் பின் மணவிலக்குக்கு வழக்கெதிரி இசையாவிடின் மணவிலக்குக் கோரவிய லாது. மனக்கோளாறு (உளச் செப்ப மின்மை)பற்றிப் புதிய சட்டத்தில் ஒன்றும் இல்லை. ஏ. ஸி. ஹோல்டன் கூறுவது போல 'பிரிவு பற்றிய பகுதியில் தான் இதைச் சேர்க்க வேண்டும்.46
இலங்கைத் திருமணச்சட்டம் ரோமடச்சுச்சட்டத்தையும் ஆங்கிலச் சட்டத் தையும் கொண்டுள்ளது. இதஞல் தான் இலங்கையில் இல்லாத வழக்கு மேற்கோள் களுக்காக தென்னுபிரிக்காவையும் இங்கி லாந்தையும் சார்ந்த சட்ட அறிக்கைகளை நோக்க வேண்டிய கட்டாயம். சிலவேளை ஒன்றுக்கொன்று முரண்பட்டு இரண்டும் இருப்பினும் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்ட நீதிபதிகள் மாறிமாறி இரண் டையும் பயன்படுத்துவது காண்கிருேம் . எனினும் இப்போது ஆங்கிலச் சட்டத்தை நோக்கியே பெரிதும் நகர்வு இருப்பதைக் காணலாம். இதனுல் ஆங்கிலத் திருமண மணவிலக்குச் சட்டத்தில் இடம் பெறுவன எமது சட்டத்திலும் இடம்பெற வாய்ப்பி ருக்கிறது. இப்போது இலங்கை மணவிலக் குச் சட்டத்தைத் திருத்தும் முயற்சி நடை பெறுகிறது.
46. A.C. Holden ''Divorce in Commonwealth' A
(1971)-20 I & C.L.O. 58 (69)
ழுவதும் ஒருவன் ஒருத்தியாக அது பழங்காலத்திற்கு மிகப் கைத்தொழில் வளர்ச்சி மட்டும் 'யும் அதில் நம்பிக்கையும் இருந் தொழில் ைே/கமாக வளர்ந்து/ வித்தலும் மிகுதியாக உள்ள ட்டு இன்னெருவனுடன் வாழும் ஸ் இன்னுெருவனுடன் வாழ்வது ன் வ/ாழ்கின் ருளோ அவனுக்குத்
போதும் அது தான் சுற்/.
1ண்டில் டாக்டர் மு. வரதராசன்ட்

Page 89
9ith the
Kuliyapitiya
Ku
Tphone: 230
罗it护
KUM AR
C
Tphone: 29632
3.3919
 

Best (Éompliments
of
DIC & Oil Mills
liyapitiya.
Catompliments
from
A GENCY
SEA STREET, OLOMBO.

Page 90
4. summarmeniam--
இவர்கள் நம்நாட்டு உழைப்ப/
உழைப்பா நாடு உயர்ந்தால் நாமும் உய
அதற்கு ஒரே வழி -
இ6
V. J H AN
244/, Thalawathu Kelan
Office: 06 l/l, 1st Cross Street,
Colombo-l.
lith fest
ወ፥
T. KANAGALINGA
KANAGANGANM C
17, St. Joh
COLOM)
Telephone: 25883

uuma bb
r67f766r ளிகள் உயரின் நாடு உயரும் r /řGo6ov /rzh
வர்களே ஆதரிப்பதே!
| D) L. O O MVM S6
Henpitya South, iya.
Campiments
p
MPILLA & SONS
GAR NMERCHANTS
n's Road, BO — 1 1.

Page 91
If I (86) ன்ெனுணர்
வீேன தமிழ்க் கவிதை அதற்கு மு திய கவிதைகளினின்றும் பல விதங்களி வேறுபடுவதை நாம் எல்லோரும் நன்க வோம். புதுமைக் கவிதை, மறுமலர்ச்சி கவிதை, புரட்சிக் கவிதை, பழகு தமிழ் கவிதை, என்றெல்லாம் இருபதாம் நூ ருண்டுத் தமிழ்க் கவிதையை - குறிப்பாக பாரதிபரம்பரைக் கவிதையை-இலக்கி மாணவர் வருணிப்பர். பொருளடக்கப் மொழிநடை, பண்பாட்டு நிலை முதலி வற்றை ஆதாரமாய்க் கொண்டே மு கூறிய அடைமொழிகள் வழங்குவை கவிதை வசையின் அடிப்படையிலும் நவீ கவிதையை வேறுபடுத்திக் காட்டலாம்.
இருபதாம் நூற்ருண்டுத் தமிழ்க் க தையில் கணிசமான அளவு தனிப்பாட களாய் இருப்பது வெளிப்படை. அதாவ காப்பியம், பிரபந்தம் முதலிய இலக்கி வடிவங்கள் அருமையாகவே இயற்றப்ப வதும், தனிப்பாடல்களே பெருவழக்கா ருப்பதும் மிகக் குறைந்தளவு இலக்கிய பயிற்சி உள்ளவர்க்கும் புலப்படக்கூடி செய்தியாகும். ஆகவே தனிப்பாடல் எம காலப்பகுதிக்குரிய தலையாய கவிதை வ வம் எனக் கொள்வதில் தவறெதுவு இல்லை. இத் தனிப்பாடல் பெற்றுள் சிறப்பியல்பே இருபதாம் நூற்ருண்டு தமிழ்க் கவிதைக்குத் தனித்துவத்தை கொடுக்கிறது எனலாம்.
தனிப்பாடல் தமிழிலக்கிய உலகுக்கு புதியது ஒன்றன்று. எமக்குக் கிடைத்துள் வற்றுள் காலத்தால் மிக முற்பட்ட சா

jfs IIIL h6
:
b
கலாநிதி க. கைலாசபதி
முேர் செய்யுட்களிற் பெரும்பாலன தனிச் செய்யுட்களே. இவை எட்டுத் தொகை நூல்களாக வழங்கி வருகின்றன. அக் காலந்தொட்டு இன்றுவரை தனிப் பாடல்கள் இடையீடு இன்றி இபற்றப் பட்டு வந்துள்ளன என்பதில் ஐயமில்லை. இலக்கிய வரலாற்று மாணவர் இவ்வுண் மையை நன்கறிவர். கடவுள் வாழ்த்திலி ருந்து கடிதம் வரை (சீட்டுக் கவி) எத்த னையோ சந்தர்ப்பங்களுக்குரிய தனிப் பாடல்கள் தோன்றியிருக்கின்றன. தனி நிலை, தனியன், முத்தகம், தனிநிலைச் செய் யுள் என்பன த னி ப் பா ட ல் களு க் குப் பழைய இலக்கண ஆசிரியர்கள் வழங்கிய பெயர்களிற் சில. ஆயினும் இருபதாம் நூற்றண்டிலே தனிப்பாடல் முக்கியமான குணமாற்றத்தைப் பெற்றது. அதனைச் சுருக்கமாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மேனுட்டவரின் தொடர்பினுல் எமது இலக்கியத்தில் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றே கவிதை பெற்ற குணமாற்றம் என லாம். ஆங்கில இலக்கியப் பரிச்சயத்தினு லும் பயிற்சியினலும் தமிழ் இலக்கிய உல கிற்கு அறிமுகமான கவிதை வகைகளில் ஒன்று லிரிக்' (tyric) எனப்படும் இசைப் பாடல் ஆகும். அது ஒன்றே சென்ற நூற் ருண்டின் இறுதியிலிருந்து தமிழ் இலக்கிய கர்த்தாக்களைக் கவர்ந்து வந்துள்ள ஆங்கி லக் கவிதை வகையாக விளங்குகிறது.
"தனிப்பாடல்', 'இசைப்பாடல்" என்
னும் இரு சொற்ருெடர்களை இங்கு வழங்

Page 92
தமிழிலே.
கும் போது சில மயக்கங்கள் தோன்றக் கூடும். இவை பெயரளவில் எத்தகைய புது மையையும் குறிப்பன அல்ல. ஏனெனில், தனிப்பாடல்களும் இசைப்பாடல்களும் தமிழில் பழங்காலத்திலிருந்தே ஏராள மாக இயற்றப்பட்டிருக்கின்றன. தனிப் பாடல் திரட்டு இடைக் காலத்தில் எழுந்த தனிநிலைச் செய்யுட்கள் அடங்கிய தொகை நூல். இசைப்பாடல்களோ எண்ணிறந் தவை. 'இசை நுவல் மரபின் இயன்ற செய்யுள்' என்று மறைந்து போன தமிழ் இலக்கண நூல்களுள் ஒன்ருன அணியியல் சூத்திரம் ஒன்று செய்யுள் வகைகளைத் தொகுத்துக்கூறுமிடத்துக் குறிப்பிடுகிறது. இசை நுவல் மரபு சார்ந்தவை இசைத் தமி முக்குரிய பாட்டுக்கள். இவற்றை இசைப் பாட்டுக்கள் என்றும் உருப்படிகள் என்றும் ஸாஹித்தியம் என்றும் வழங்கி வந்துள்ள னர். இசைப்பண்பே இவற்றில் முக்கியமாக இருக்கும். ஆனல் நாம் மேலே குறிப்பிட்ட "லிரிக்" வழிவந்த நவீன தனிப்பாடல்கள், தனிப்பாடல் திரட்டு தொகுதிகளில் உள்ள வற்றினின்றும், உருப்படிகளினின்றும் வேறுபட்டவை. எனவே அவற்  ைற ப் பிரித்து அறியக்கூடிய வகையில் வேறு பெயரால் குறிப்பிடுவது பொருத்தமாகும். பேராசிரியர் மு. வரதராசனுர் இலக்கிய மரபு என்னும் நூலிலே (பக். 31-38) 65tfi' என்பதனைத் தன்னுணர்ச்சிப் பாடல் என மொழிபெயர்த்திருக்கிருர். வசதி கருதி அதனையே இவ்விடத்தில் நாமும் வழங்குவோம்.
ஆங்கிலத்தில் 1yrie என்பது 1yre என்ப தன் அடியாகப் பிறந்த சொல்லாகும். 1yre என்பது வழக்கற்றுப்போன நரம்புக் கருவி வகை; யாழ் போன்றது எனக் கொள்ள svirld. இசைக்கருவியுடன் பண்டைக் காலத்தில் ஐரோப்பாவில் பாடப்பெற்ற சிறிய பாடல்களே ‘லிரிக்" என்னும் பெய ரில் வளர்ந்து தனிச்சிறப்பியல்புகளுடன் திகழ்ந்தன. ஆயினும் காலப்போக்கில் இசைக்கருவி இன்றிப் பாடப்பெறும் பாட லாகவும், அதற்கும் பிற்பட்ட நிலையில் இசைப்பண்பு இன்றி அமைந்த கவிதையா கவும் "லிரிக் மாற்றம் பெற்றது. ‘லிரிக்" என்பதன் நேர்பொருள் இசைப்பாடல் என்றிருப்பினும், அதன் வளர்ச்சியில் இசை

க. கைலாசபதி 73
யும் அதன் கூறுகளும் காலப்போக்கில் மறைந்தன. அதற்கு ஈடு செய்வது போல ஆழ்ந்த உணர்ச்சிச் செறிவும், கருத்துருக் கமும், கனிவும், நெகிழ்ச்சியும் மேல்நாட்டு * லிரிக் பாடல்களின் தனிச்சிறப்பியல்பு களாய் அமைந்தன. அதாவது இசையுடன் பாடும் பண்பு குறையக்குறைய பொருள் அழுத்தமும் நுணுக்கமும் அதிகரித்தன என்று கூறலாம்.
ஆங்கில இலக்கியத்திலே "ரொமான் டிக்" இயக்கம் எனப்படும் பாவனை நவிற்சி செல்வாக்குடன் விளங்கிய காலப்பகுதி யில், வேட்ஸ்வொர்த் , கீட்ஸ், பைரன், ஷெல்லி முதலிய கவிஞர்கள் லிரிக் பாக் களையே பெரு விருப்புடனும், பேராற்றலு டனும் அதிகமாக இயற்றினர். இப்புலவர் களது கவிதைகளே ஆங்கிலேயராட்சியின் போது கீழைத்தேயங்களில் பிரபலியமாயி ருந்தன. அவற்றின் தாக்கத்தினுல் இந்திய மொழிகள் பலவற்றில் ‘விரிக் முக்கியத்து வம் பெற்றது. இது வரலாற்றுக் காரணி. இனி, கவிதையின் அக வளர்ச்சியைக் கவ னிப்போம்.
ஆங்கிலேயர் ஆட்சியிலே ஆங்கில இலக்கியக் கல்வியின் செல்வாக்கு எத்துணை வலுவுடையதாய் இ கு ந் தி ரு ப் பினும், "லிரிக்' செழித்து வளரக்கூடிய இயல்பான சூழ்நிலை இருத்திராவிட்டால் அது வேரூன் றியிருக்காது. ஏறத்தாழச் சென்ற நூற் ருண்டின் இறுதிக்காலம் வரை, புலவர்கள் (ஆங்கிலக் கல்வியுடையோரும் கூட) பழைய முறைச் செய்யுட்களையே இயற்றி வந்தனர். காரிகை கற்றுக் கவிபாடியவர் களே பெரும்பாலானுேர் பிரபந்த வகை களை இயற்றுவதே புலமைக்குச் சான்ரு கக் கருதப்பட்டது. மிகுந்த பிரயாசைப்பட் டுப் பல புலவர்கள் எத்தனையோ வகை யான செய்யுள் நூல்களைச் செய்து வந்த னர். பொதுவான அறக்கருத்துக்களையும், நீதிநெறிகளையும் வாய்பாடாக இவர்கள் செய்யுள் வடிவில் அமைத்துக் கொண்டி ருந்தனர்.
இந்நிலையிலேயே ஆங்கிலத் தனிப் பாடல்கள் புதிய ஒரு நோக்கையும் உணர்ச்சியையும் சிலருக்கு ஏற்படுத்தின.

Page 93
74 தமிழிலே.
ஆங்கில "லிரிக்" பாடல்களிற் காண பட்ட தன்னுணர்ச்சி, மரபுவழிவந் தமிழ்க்கவிதைகளில் காணப்படாததொ6 ருகும். இவ்விடத்தில் "லிரிக்” பாடலி வரைவிலக்கணத்தைக் க வ னி ப் ப பொருத்தமாகும். சென்ற நூற்ருண்டிே ஆங்கில லிரிக் பாக்களில் தலைசிறந்தவ 60sp 5 G5 Tg555 (The Golden Treasur (1861) 'பொற்களஞ்சியம்' என்னு பெயரில் வெளியிட்ட எப். ரி. போல் கிரே (F. T. Palgrave, 1844-1897) GT6ör Luntri gy தொகை நூலுக்கு எழுதிய முன்னுரையி பின்வரும் வரைவிலக்கணத்தை கூறினர்
'தனி ஒரு சிந்தனை, உணர்ச்சி அ லது சந்தர்ப்பத்தை ஆதாரமாய் கொண்டு அமைந்த பாடலையே "விரிச் என்று சிறப்புநோக்கி இங்குக் கருது றேன். இதற்கிணங்க, வேகமும், ஓ! டமும், சுருக்கமும், மனித உணர்ச் யும் பொருந்தப்பெற்ருலன்றி, கதை பாடல்களும், வருணனைப்பாடல் ளும், அறநெறிப்பாடல்களும் இ; தொகையல் தவிர்க்கப்பட்டுள்ளன.
போல் கிரேவ் முதல்வாக்கியத்தில் கூ வதே முக்கியமானது. தனியொரு உணர்ச் அல்லது நிகழ்ச்சி, அல் ல து சிந் த ஃ இவற்றை அடிநாதமாய்க் கொண்டு தன் ளவில் நிறைவுடையதான சிறியபாடே இசைப்பாடல், அல்லது தனிப்பாட அல்லது தன்னுணர்ச்சிப் பாடல் என். ஆங்கிலத்தில் வழங்கப்பெறும். ஆயினு இது மிகப் பொதுப்படையான வரைவில கனமே அன்றி முழுமையானது எனக் கூ வதற்கில்லை.
கவிஞன் சிறிய அளவிலான பாடலி தனது சொந்த உணர்ச்சியையோ, மன சலனத்தையோ, எண்ணப்படிவத்தையே வாசகனுக்கு எடுத்துரைப்பதும் தன்னு ணர்ச்சிப்பாடலின் மற்றேர் அம்சமாகும் அதன் காரணமாகவே ‘தன்னுணர்ச்சி பாடல்" என்று ‘லிரிக் விளக்கியுரைக்ச படுகிறது. இவ் வரைவிலக்கணத்தின் ப பார்க்கும்போதே பழைய தமிழ்த் தனி பாடல்களில் பெரும்பாலான தன்னுணர் சிப் பாடல்கள் அல்ல என்பது தெளிவா

க. கைலாசபதி
i.
R
றது. சான்றேர் செய்யுட்கள், குறிப்பாக அகத்திணைப்பாக்கள், கூ ற் று க் க ளா க அமைந்திருப்பதால் புலவர்களின் நேரடி யான குரல் அல்ல. இவை நாடகமாந்த ரின் மொழிபோல் அமைந்தவை. சுட்டி ஒரு வர் பெயர் கூருத பண்பும் தன்னுணர்ச்சி வெளிப்படத் தடையாக இருந்தது என்று கருதலாம். எவ்வாருயினும் , பழங்கா லத் திலிருந்தே தமிழில் தனிப்பாடல்கள் ஏரா ளமாகத் தோன்றி வந்தபொழுதும் தன்னு ணர்ச்சிப் பாட்டு வெகு அருமையாகவே எழுந்தது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. பக்திப்பாடல்களிற் கூட இறைவன் புகழ் பrடும் துதிப்பாடல்களை நீக்கிவிட்டால்,
கவிஞனது சொந்த அனுபவத்தை நேரடி யாக எடுத்துக் கூறும் பாடல்கள். மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். அவற் றுள்ளும் பிரபந்தங்களின் செல்வாக்குக் குறிப்பிடத் த க் க தா யு ள் ளது. இன்னு மொன்று இந்தியாவில் நிலவிய பாரமார்த் திகக் கோட்பாடுகளின் விளைவாக, "தான்' என்ற முனைப்பு வெறுப்புக்குரிய தொன்ரு கக் கொள்ளப்பட்டது. இலக்கியத்திலே கவிஞனது ஆளுமை நேரடியாகப் பிரதி பலிக்காமற் போனமைக்கு இக்கோட் பாடும் ஏது எனலாம். பெரு நூல்களுக்கு உரையெழுதியவர்களும் தமது கருத்துக் களைத் தம்முன்னேர் கருத்தாகவே கூறிய மைந்தனர். இவையாவும் இலக்கிய கர்த்தா வின் சொந்த அனுபவமும் எண்ணமும் இலக்கியத்திற் சிறப்பான இடம் பெறத் தடையாயிருந்தன.
தன்னுணர்ச்சிப்பாட்டோ, 'தன்னை" மறைக்கும் போக்கிற்கு முற்றிலும் மாறு பட்டதாகும். 'என தாவியார், யான் ஆர் தந்த நீ கொண்டாக்கினையே" என்று நம் மாழ்வார் பாடுகையில் ஆளுமையின் ஒடுக் கத்தை நாம் தெளிவாகக் கண்டு கொள்ள லாம். தனது அனுபவம், எண்ணம், கருத்து சிந்தனை என்பன மதிப்புக்குரியவை, குறிப் பிடத்தக்கன. வெளியிடக் கூடியவை எனக் கவிஞன் நம்பும்போதே தன்னுணர்ச்சிப் பாட்டுத் தோன்றுகிறது.
இருபதாம் நூற்ருண்டிலே பாரதியுடன் இத்தகைய தன்னுணர்ச்சிப்பாட்டு ஆரம் பிக்கிறது எனலாம். அதுமட்டுமன்று எவ்

Page 94
தமிழிலே.
வாறு மேனுட்டிலே ' லிரிக் பாவானது இசையிலிருந்து விடுபட்டு கவிதையாக உருப்பெற்றதோ அவ்வாறே பாரதியின் நாவில், சிந்து, கண்ணி முதலிய இசைப்பா வடிவங்கள் உயரிய கருத்துக்களுக்கும் பேரு ணர்ச்சிகளுக்கும் உகந்த கவிதை வடிவ மாக உருமாற்றம் பெற்றன. காவடி யாட்டத்தின்போது பாடப்பெற்ற பாக் களையெல்லாம் கருத்துச் செறிவு மிகுந்த கவிதைகளாக்கித் தன்னுணர்ச்சிப் பாடல் களுக்கு வழிகாட்டினர் பாரதியார். ‘சிந் துக்குத் தந்தை' என்னும் கட்டுரையில் (ஒப்பியல் இலக்கியம், பக். 251-59) 'ஆடலுக்கும் பாடலுக்கும் என்றிருந்த தங்கச் சிந்து முதலியன அரும்பொருள் உணர்த்தும் கவிதையா க” " பாரதி டா ட லில் உருமாற்றம் பெற்றமையை விரிவாக விளக்கியிருக்கிறேன் பாரதிக்குப்பின் பரா திதாசன், தேசிக விநாயகம் பிள்ளை . கம்ப தாசன், ச. து. சு, யோகியார், சோமு, முருகையன் முதலியோர் தன்னுணர்ச்சிப் பாடல்களை இயற்றியுள்ளனர்.
எனினும் 'தன்னுணர்ச்சி' என்னும் விவரணத்தை நாம் சற்று நிதானமாகவே
கையாளல் வேண்டும். பெரும்பாலான * லிரிக்" பாக்கள் கவிஞனது சொந்த-அந்த ரங்கமான - தனிப்பட்ட உணர்ச்சியின்
வெளிப்பாடாக இருப்பினும், பல தன்னு ணர்ச்சிப்பாடல்கள். பொது விஷயங்கள் குறித்துக் கவிஞன் பாடுவன வாயும் உள் ளன. இதுபற்றி கதரீன் இங் என்னும் ஆங் கிலத் திறனய்வாளர் கூறுவது மனங் கொளத் தக்கது:
‘லிரிக் பாவின் அதிமுக்கியமான சிறப்பு அம்சம் என்னவென்ருல், அது ஒரே அளவு ஆர்வத்துடன், தனிப் பட்ட உணர்ச்சி வெளிப்பாட்டுக்கும், அரசியல் சமுதாயப் பிரச்சினைகள் போன்ற பொது விஷயங்கள் பற்றிய ஆழ்ந்த ஆராய்வுக்கும் கையாளப்படு வது தான்' தனிப்பட்ட ஒருவரது சொந்த அனுபவ மும் மனுக்குலத்துக்குப் பொதுவான பிரச் சினையும் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது ஒன்றுக்கொன்று எதிர் எதிரான வையாய்த் தோன்றக்கூடும். ஆனல் சொந்த விஷயமா கட்டும், பொது விஷய மா கட்டும், அது கவிஞனது அனுபவ வாயி லாக வெளிப்பட்டுக் கவிதை வடிவம் பெறும்போது தன்னுணர்சிப்பாட்டு என்ற
தகுதியை அடைந்துவிடுகிறது. உதாரண
Offs.

க. கைலாசபதி 75
"காற்று வெளியிடைக் கண்ணம்மாநின்தன் காதலை பெண்ணிக் களிக்கின்றேன்" என்று தொடங்கும் காதல்பாட்டும்,
‘வெடிபடு மண்டத் திடிபல தாளம்
G3 Jr.'' என்று தொடங்கும் விசுவரூபதரிசனப் பாட்டும்
*நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து
6S LT6)'' என்று தொடங்கும் சமுதாய நோக்குப் பாட்டும் பொருளடிப்படையில் வேறுபாடு டையனவேனும், கவிஞனது உணர்ச்சியிற் கலந்தமைய ல் ஒன்றிய பாட்டுக்களாக இருக்கின்றன. இவை சிறந்த தன்னுணர்ச் சிப் பாடல்களாம். ஆயினும் இருபதாம் நூற்ருண்டுத் தமிழ்க் கவிஞர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் தன்னுணர்ச்சிப் பாடல்கள் அல்ல. ஆயினும் தன்னுணர்ச்சி என்னும் ரஸ் வாதத்தினுல் அரசியல் சமு தாய விஷயங்களையும் உணர்ச்சிச் செறி வுள்ள இசைப்பாடல்களாக்கியமையால் பாரதியார் த மி பூழ் க் க வி ைத யு ல கில் மாபெரும் மாற்றத்தை உண்டாக்கினர் என்பது கவனிக்கத்தக்கது.
ஆங்கிலக் கல்வியின் பயணுக "லிரிக்" தமிழ்க் கவிதையுலகில் முக்கியமான மாற் றங்கள் ஏற்படக் காரணமாயிருந்தது. எனினும் பாரதியும் அவர் வழிவந்த கவி ஞர் சிலரும், அதனைத் தமிழ்மயப்படுத்தி, இசைத்தமிழுக்கும் இயற்றமிழுக்கும் நிாட கத் தமிழுக்குமிருந்த வேறுபாட்டைக் குறைத்து, இசைப்பாக்களை இயற்றமிழ் வடிவங்களாக்கித் நவீன தமிழ்க்கவிதைக்கு வீறும் வேகமும் அளித்தனர். அண்மைக் காலத்தில் "புதுக் கவிதை" என்ற பெயரில் சிலர் மேட்ைடு வசன கவிதைகள் சிலவற் றைத் தமிழில் அறிமுகப்படுத்த முயன்று வருகின்றனர். * 6წ)fმკj;* பா வகையைப் பாரதி எவ்வாறு தமிழ்மயப்படுத்தினன் என்ற சூட்சும்மத்தை அறிய மாட்டாத இவர்கள், தாம் அறிமுகப்படுத்த முயலும் ஒலிமுறிவுக் கவிதைகள் வேரூன்றக்கூடிய சூழலும் தமிழில் இல்லை என்பதை உணரா மையால் கனியிருக்கக் காய் கவர் பவராயி ருக்கின் mனர், சிறுகதையும், நாவலும் எவ் வாறு மேஞட்டு இலக்கியத்திலிருந்து தமி முக்கு வந்து நவீன உரைநடை இலக்கியத் தின் பிரதான பிரிவுகளாக இரண்டறக் கலந்து விட்டனவோ அது போலவே ‘லிரிக்" என்ற கணிப்பாடலும். ( பாங்கும் தன்னுணர்ச்சியும் பின  ைட பிணைந்த நவகவிதையாக நமது இலக்கிட த் தில் நிலைத்துவிட்டது

Page 95
氹it曲 孤
LEWER BROTI LIN

iest (Olishes
FROM
HERS (CEYLON) MITED
t

Page 96
புறப்படு ம
அல்லும் பகலும் அயரா பல்கலைக் கழகம் பயின், பாற்கடல் அமுதம் கை நூற்கடல் குடைந்து ந எதிர் காலத்தின் நுழை கதிரொளி பரப்பக் கால் இளைஞனே ! உங்தன் இ தெளிவுற ஒலிக்கும் தீங் புதுமை புரட்சி புதுமறு நிதமும் உளத்தில் நினை புரட்சி என்னும் புனித மருட்சி கொண்டே மய துடிக்கும் கெஞ்சைத் து குதிக்கும் உதிரம் கொத அறத்தின் பாதை அை நிறுத்தி நிதான நெறியி அறிவிற் புரட்சி காண் முறை கடவாது சாந்த அன்பின் வழியில் அை இன்னு செய்தார்க் கினி துன்னிய பகைவர் துன் நன்றி கொன்ருர்க்கும் வென்றி கொள் புரட்சி சாங்தமும் பணிவும் சற். ஏங்திடு புறப்படு எதற் எங்தன் குரலொலி ஏற்ற வந்திடும் துயர்கள் வா புறப்படு மகனே புறப்ட

கனே.
-யே/7 யோன் பிள்ளே
துழைத்தே ற என்தோழா ! டந்த பான்மையாய் பண்மதி திரட்டி வாயகத்துக்
) கொண்டெழுந்தாய் தயக் கதவில் குரல் கேளாய் மலர்ச்சி rந்தனை அறிவேன்
பதத்தில் ங்கிடல் மடைமை 1ள்ளவிடாது தித்தல் தடுத்து மதிச் சுவட்டில் பிற் செல்வாய் பதே அறிவு
மூர்த்தி போல் மப்பதே புரட்சி யன செய்தல் ாபம் தீர்த்தல் கன்மையே புரிதல்
விதியென அறிவாய் குணக் கொடியும்
கும் அஞ்சேல் pனை யானல் ட்டா துன்னை
IG).

Page 97
(J5LDT JJ 6) Tlif
C756),
ல்ெவெட்டி குமாரசுவாமி முதலியா செல்வாக்கு மிக்க குடும்பத்திலே தோன் யவர். அரசினராற் பெற்ற கெளரவமு. பொருட்செல்வமும் மட்டுமன்றி வித்துவ சிறப்பும் அக் குடும்பத்தின் செல்வாக்கி குக் காரணமாம். குமாரசுவாமி முதலிய ரின் தந்தை கதிர்கா மயூப முதலியார் வ வெட்டி சந்திரசேகர மாப்பாண முதலிய ரின் புதல்வர்; தாயார் வள்ளியம்மை வ வெட்டி கப்டன் சந்திரசேகர முதலிய ரின் புதல்வி.
கப் ட ன் சந்திரசேகர முதலியா வன்னி நாட்டிலே ஒல்லாந்தருக்கு எதிர கத் தோன்றிய கலகங்களை அ ட க் கி பேரெடுத்தவர்; 1 சந்திரசேகரக் குறவஞ் யின் பாட்டுடைத்தலைவர்.2 சந்திரசேக மு த லிய ரா ரு ம் புலமையுடையவராக திகழ்ந்தார் என்பதை ஆளுேல்ட் சதா வம்பிள்ளையின் மேல்வரும் கூற்று எடுத்து காட்டுகின்றது.*
"இவர் அஷ்டாவதானியார் தூர்த் வியாபாரத்தாற் கடை த் தே நி ( போது தம் அனுபவப் பிரயாசங்கை விறலிவிடுதூது எனும் பாடலால் உ கர்க்கு உணர்த்தியது போலத் தாமு அவ்வியாபாரத்தில் அடைந்த பா கேடுகள் நஷ்டதுஷ்டங்களை எல்லா ஒர் நொண்டிப் பாடலில் விம்பி
smrti."*

முதலியாரும் G H I 5 TT f (5T LIt
ாநிதி பொ. பூலோகசிங்கம்
வள்ளியம்மையாரின் சகோதரர்களான முத்துக்குமார முதலியாரும் குமாரசுவா மிப் புலவரும் சிறந்த வித்துவான்களாக விளங்கினர். முத்துக்குமார முதலியாராற் பாடப்பெற்ற பாடல்கள் பல உண்டெ னக் கேள்விப்பட்ட போதும் தமக்கு அவற் றிலொன்றும் கிட்டியதில்லை என்பர் பாவ லர் சரித்திர தீபகத்தின் ஆசிரியர். இவரே தமது மருகர் குமாரசாமி முதலியாருக்கு இலக்கியம், இலக்கணம், சங்கீதம் முத லியவற்றைப் பயிற்றுவித்தார். குமார சுவாமிப் புலவர்,
*"புரந்தரஞடகம் எனப் பெயரிய ஒர் நாடகத்தையும் அறுபத்துநான்கு அடி கொண்ட ஒர் சிந்துடன் பல பதங்களை uqub Lu mr lql6orff ʻ ʼ என்பர் ஆளுேல்ட் சதாசிவம்பிள்ளை,
1. James H. Martyn: The Life and Times of C. W. Katiravel pillai, A. C. M. Press, Jaffna (1904) P. 6.
2. அ. சதாசிவம்பிள்ளே பாவலர் சரித்திர தீபகம் (1886), பக். 128; சந்திரசேகரக்குறவஞ்சியின் ஆசிரியர் தென்னிந்தியாவைச் சேர்க்த புலவரொ ருவர் என்பதொழிய வேறு செய்திகள் அறியுமா றில்லை. இக்குறவஞ்சிக்குரிய பாடலொன்று *குமாரசாமி முதலியார் கவித்திரட்டு” என்னும் நூலில் இடம் பெறுகின்றது. அப்பாடல் சந்திர சேகர முதலியாரின் ‘குலவளம் கூறுகின்றது.
3. பாவலர் சரித்திர தீபகம், பக். 128
. பக், 242. 5. பாவலர் சரித்திர தீபகம், 110

Page 98
ey Lorfaravarta......
"குலவித்தை கல்லாமற் பாதி’ என் பதற்கிணங்கக் குமாரசுவாமி முதலியார் இளமையிலேயே புலமை மிக்கவராகத் திகழ்ந்தார் என்பர். குமாரசுவாமி முதலி பார் கம்பராமாயணத்திற்குப் பொருள் கூறுவதில் மிக்க வல்லபமுடையவரென்று எவர்களாலும் மதிக்கப்பட்டவர் என்பது,
'அவ்விராமாயணச் செய்யுளொன் றில் "மசரதம்" என்ற தொடர்க்குப் பொருடெரியாது முட்டுற்ற அக்கா லத்து ஏனைப் புலவர்க்கெல்லாம் விதி யிலா வி கா ரங் களுளொன் ரு கிய எழுத்து நிலைமாறுதலின்படி தகரத்தை நிலைமாற்றி "மதசர மென்று வைத் துப் பொருள் கூறிப் பலராலும் புக ழப்பட்டார்"
என்னும் கூற்றற் புலஞகும். குமாரசு வாமி முதலியார் தமது கனிட்ட புதல்வர் வைமன் கதிரவேற்பிள்ளை (1829-1904) நடாத்திய வித்தியாதர்ப்பணம் என்னும் மாசிகையிலே கல்வி விருத்தியை வற்புறுத் திச் செய்யுண்டையாகப் பல பாடல்களை இயற்றினவர்.7 "உடுப்பிட்டி திரு. வல்வை குமாரசுவாமியார் பள்ளிக்கூடம்" என்ற பெயரிலே தமது ஊரிலே குமாரசுவாமி முதலியார் பள்ளிக்கூடம் ஒன்றினை நிறுவிச் சில வருடங்கள் நடத்தி வந்தவர்.8
கலைமகளும் திருமகளும் உறவாடிய குடும்பத்திலே தோன்றி, மாணுக்கர் பல ருக்கு ஆசிரியராகத் திகழ்ந்த குமாரசு வாமி முதலியார் தம் காலத்திலே பிரபல் யமுற்றிருந்த ஈழத்துத் தமிழறிஞருடன் நெருங்கிய தொடர்புடையவராய் விளங் கிஞர். இருபாலை சேஞதிராய முதலியார் {-1840), நல்லூர் சரவணமுத்துப் புல வர் (-1845) முதலிய தமிழறிஞரோடு மட்டுமன்றி கிறித்துவ சமய போதகரோ டும் குமாரசுவாமி முதலியார் நெருங்கிய தொடர்புடையவராய் வா ழ் ந் தா ர். சைவக் குடும்பத்திலே பிறந்து வாழ்ந்த குமாரசுவாமி முதலியார் கிறித்தவ சம யக் கோட்பாடுகளை அனுதாபத்தோடு நோக்கியவர். இவர் கிறித்துநாதர் மீது பாடிய ஐந்து கீர்த்தனங்கள் "குமாரசாமி முதலியார் க வித் திரட் டு" என்னும்

பொ. பூலோகசிங்கம் 79
தொகுப்பில் இடம்பெறுகின்றன. குமார சுவாமி முதலியாரின் சமயக் கொள்கை யைப் பற்றிப் பாவலர் சரித்திரதீபகத்தின் ஆசிரியர் மேல்வருமாறு கூறுவர்.?
"இவர் பிறப்பாற் சைவராயினுங் கொள்கையில் அவ்வாறிருந்தவரல் லர். கடவு ள் ஒரு வர் என்னுங் கொள்கை பூண்ட இவர் கிறிஸ்து சம யத்தைத் தழுவாதிருந்தும் அதனை வெறுத்தவருமல்லர். கிறிஸ்த வேதோ பதேசங்களே மெச்சி அமெரிக்க மிஷ ஞரிமார் பேரில் அபிமானமுற்ற ராய் அவர்க்குப் பலவாருகச் சகாயித்து வந்தவர்' "
வல்வெட்டியிலுள்ள ஊரிக்காடு என்ற ழைக்கப்படும் பிரிவிலுள்ள தமது நிலத்தை அமெரிக்க மிஷனரிமாருக்கு வழங்கியவர் குமாரசுவாமி முதலியார் . 19
பழுமரம் தேரும் பறவை போலப் புர வலரைத் தேடியலைந்து வயிற்றுப் பசியை நீக்க வேண்டிய நிலையில் அவரு ைட ய வாழ்க்கை அமைந்திருக்கவில்லை. உடுப் பிட்டி அருளம் பல முதலியாரைப் பாட்டு டைத் தலைவராகக் கொண்டு அருளம்பலக் கோவையை அவர் பாடுவதற்குப் பரிசில் பெறுதல் நோக்கமல்ல; நட்பே காரணமா கும். அருளம்பலக் கோவை தோன்றிய
8. உடுப்பிட்டி சி. ஆறுமுகப்பிள்ளை (தொகுப்பு); குமாரசாமி முதலியார் கவித்திரட்டு, வல்வை: பாரதீநிலைய முத்திராட்சரசாலை, 1887, முகவுரை.
7. Literary Mirror அல்லது வித்தியாதர்ப்பணம் என்னும் மாசிகை 1853 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி முதல் ஏறக்குறைய இரு வருடங்கள் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட விடயங்களேத் தாங்கி வந்தது. (The Life and Times of C, W. Katiravel pillai, p. 40)
8. மு. இராமலிங்கம்: காவலருக்கு முந்திய கல்வி
முயற்சிகள்-2, ஈழநாடு, 29.10.71
9. பக். 111
10. The Life and Times of C. W. Katiravelpilai,
P. 8
11. குமாரசாமி முதலியார் கவித்திரட்டிலே அருளம் பலக் கோவைக்குரிய கான்கு கட்டளைக் கலித் துறைப் பாக்கள் இடம் பெறுகின்றன.

Page 99
80 குமாரசுவாமி.
மைக்கான காரணத்தைக் குமாரசாமி முதலியார் கவித் திரட்டு’ எனும் தொகுப் பின் பதிப்பாசிரியர் மேல்வருமாறு கூறு வர் :
“இவ்வாசிரியரும் அருளம்பல முதலியா ரும் தஞ்சைவாணன் கோவை வாசித் துப் பொழுதுபோக்கியிருந்த ஒரு நாள் அருளம்பல முதலியார் 'இந்நூலை யொப்ப இக்காலத்தார்க்குஞ் செய்ய வியலுமா என்ன, இயலுமென்பதை அடுத்த நாளில் அருளம் பல முதலியா ரையே கவிநாயகனுகக் கொண்டு ஒரு கோவை செய்ய ஆரம்பித்து நூறு செய்யுட்களைச் செய்து காட்டிஞர்'
எனவே தம் காலத்திலே கோதாt நோய் வேகமாகப் பரவுவதற்குக் காரண மாயிருந்த பஞ்சத்தினலே குமாரசுவாமி மு த லி யார் பாதிக்கப்பட்டிருக்கமாட் டார். ஆதலால், அவர் பஞ்சத்தைப் பற் றியோ அதன் ஆட்சியினுல் வேகமாகப் பர விய கோதாரி நோயைப் பற்றியோ பாடி யிருப்பார் என்று எதிர்பார்ப்பது கடினமா கும். ஆயினும் மனிதாபிமான உணர்ச்சி யும் சமுதாய உணர்வும் அவரைத் தப் காலத்திலே தமது ஊரிலும் அயலூர் களி லும் பரவிய கோதாரி நோயைப் பற்றிட் பாடத் தூண்டின. பத்து வருடங்களுக்கு பின்னர், தாது வருடத்திலே, தமிழ் நாட் டைக் குலுக்கிய பஞ்சத்தைப் பற்றி முன் சீபு ச. வேதநாயகம்பிள்ளை (1826-1889) சில பாடல்களைப் பாடியுள்ளார் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. 12
யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அத னையொட்டியுள்ள தீவுகளிலும் பூநகரிட் பகுதியிலும் 1866-ம் ஆண்டிற்கு முன்புப் கோதாரி நோய் பலமுறை தலைதூக்கியி ருக்கின்றது. 1867-ம் ஆண்டிற் சமர்ப்பி3 கப்பட்ட கோதாரி நோய் விசாரணைக் குழு வின் அறிக்கையிலே மேல் வரும் ஆண்டுக ளிலே முற்கிளந்த பகுதிகளிலே கோதா நோயினுல் இறந்தவரின் எ ன் னி க் கை தரப்பட்டுள்ளது13:-
1846-7863 ? 4 287 -ب- 845 } 及55G一23互及 I 85 - 555

பொ. பூலோகசிங்கம்
S52-260 1853-2807 I S54ー5793 I 855-6982 1857-7 1 85 9-س-- Il 4 28 8 س-1864 5 4 7 سر 62 18 27 1 ܚ6:5 8 1
ஆயினும் 1866-ம் ஆண்டிலே பர விய கோதாரி நோய் பறித்துச் சென்ற உயிர்க ளின் எண்ணிக்கை முன்னைய ஆண்டுகளி லும் பார் க் க ப் பெருந்தொகையாகக் காணப்படுகின்றது.
அட்சய வருடத்திலே (1866-1867) யாழ்ப்பாணக் குடா நாட்டினதும் அதனைச் சூழவிருக்கும் பகுதிகளினதும் நிலைமையை Jaffna Free Man (26-7-1866) 6rsig9ld L5 திரிகையிலிருந்து எடுக்கப்பட்ட மேல் வரும் பகுதி ஓரளவுக்கு எடுத்துக்காட்டு கின்றது.
''Never within our own experience or that of the "oldest inhabitant" have the prices of the necessaries of life been known to have ruled so high as at present; and from a appearances around and the continued drought which prevails, we are apprehensive of the approach of a famine or something very much akin to it......... Som etim e ago we had occasion to observe how the effects of the drought were felt in the scarcity and the high price of all the produce of the place. Even the Palmyrah which afforded the means of subsis
12. தொ. மு. சிதம்பர ரகுநாதன்: சமுதாய இலக்கி யம் (1964), பக். 180-184; தாது வருடப் பஞ்சத் தின் நிகழ்ச்சிகளைக் கூறும் தச்சாகல்லூர் அழ கிய சொக்ககாதபிள்ளை பாடிய 'காந்திமதி யம்மை பேரில் கலித்துறை அந்தாதி" பன்னி ரண்டு வருடங்களின் பின்பு இயற்றப்பட்டதாக லாம் (மேற்படி நூல், பக். 187); பிரமனுரர் வில் லியப்பபிள்ளை தாது வருடப்பஞ்சத்தின் நிகழ்ச்சி களே அடிப்படையாகக் கொண்டு இயற்றிய பஞ்சலட்சணத் திருமுகவிலாசம் 1900ம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது. (மேற்படி நூல், பக்.216)
13. Cholera Commission, Sessional Paper No: 2
in Papers Laid Before the Legislative Council of ceylon, 1967. Part I; Printcd in 1868

Page 100
glor 7ár az Artó'... ...
tence to the poor for a good part of the year is now beyond their reach. Competition and scanty produce have combined to raise the price to such a high pitch that only the better class of people can afford to buy it. In parts of the country where dry grain and pulse were always within the means of the poor people, the high prices demanded at present seem to reduce them to the very brink of absolute starvation. In the islands and in other remote country villages, the people are driven to the necessity of subsisting upon the coarsest food. In the town of Jaffna the rice and paddy bankshalls are kept closely shut or are opened only to sell the 'Staff of Life' at fabulous prices. The bankshalls are daily besieged by applicants for rice and paddy who are spurned away; and placards threatening violence and plun- der to the person and property of the
sellers were posted up......'
யாழ்ப்பாணத்து மக்கள் பண் ட டு த் தி விளைச்சல் கண்டுவரும் பூமி, வானம் பார்த்த பூமியாகும். விசும் பின் துளியை "அமிழ்தம்" எனக் கருதும் நிலையிலுள்ள யாழ்ப்பா ணத்து விவசாயிகளுக்கு, அது கிடைக்கப் பெரு விட்டால் பெரு மின்னல்கள் விளைந் தன. அட்சய வருடத்திலும் அவர்களை வற் கடம் பயமுறு த் தி யது. பற்றக்குறையி ஞலே தானியங்களின் விலை விஷவேகத்தில் ஏறிற்று. கள்ளச்சந்தைக்காரரும் கொள்ளை லாபக்காரரும் வேட்டையாடக் களத் திலே புறப்பட்டனர். அவர் க ரூ டை ய செயலே எதிர்த்துச் சிலர் வன்செயல் புரி வோமென்று கூறும் அட்டைகளைக் கூட. ஒட்டித்திரிந்தார்கள் என்று அறியமுடிகின் றது. சாமை, குரக் கன் முதலிய தானியங் கள் மட்டுமன்றி பனங்காய் கூட ஏழை மக் கள் பெறுதற்கரிய பொருளாக விளங்கி யது. வானம் பொய்த்து, வ ற் க ட ம் ஊர்ந்து, ப ஞ் சம் ஏற்பட்ட பூமியிலே கோதாரியும் வந்து சேர்ந்தது.
1867-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட கோதாரி நோய் விசாரணைக் குழுவின்

பொ. பூலோகசிங்கம் 81
அறிக்கையிலே 1866-ம் ஆண்டிலே யாழ்ப் பாணக் குடாநாட்டிலும் அதனைச் சூழ்ந் துள்ள பகுதிகளிலும் நோய் பரவியமைக் கான காரணங்கள் சில தரப்பட்டுள்ளன. தென்னிந்தியாவிற்குச் சென்று ஊர் காவற். றுறைக்குத் திரும்பிய வியாபாரியொருவர் கோதாரி நோயினுல் 1866-ம் ஆண்டு "பெப்ருவரி மாதம் இறந்ததையடுத்துத் தீவுப்பற்றிலே கோதாரி நோய் வேகமா கப் பரவியது என்றும் கதிர்காமம் சென்று மீண்ட யாத்திரிகர் சிலர் அந்நோயுடன் குடாநாட்டிற்குள் வந்தமையாற் குடா நாட்டின் பல்வேறு இட ங் க ளி லும் கோதாரி பரவியது என்றும் குழுவினர் தெரிவித்துள்ளனர். கோ தா ரி நோ ய் 1866-ம் ஆண்டிலே யாழ்ப்பாணக் குடா நாட்டிலே பரவுவதற்கு வெளியூர்களிலி ருந்து வந்தவர்களைக் காரணமாகக் கூறும் விசாரணைக் குழுவினர், அந்நோயை எதிர்க் கும் ஆற்றல் உடையவர்களாக மக்கள் இருந்தார்களா என்பதைச் சிறிது ஆழ மாக ஆராய்ந்திருந்தால் பல உண்மைக ளைக் கூறியிருக்க முடியும் , ஆங்கில அரசின் வளத்தைப் பெருக்கும் நோக்கத்துடன் ஈழத்தின் மத்திய பகுதியிலே ஆரம்பிக்கப் பட்ட தோட்டங்களிலே வேலை செய்யும் பொருட்டு இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர் வன்னிநாட்டை ஊடறுத்துச் செல்லத் தொடங்கிய காலம் முதலாகக் கோதாரி போன்ற நோய்கள் ஈழத்தின் வடபகுதியிலே சகஜமாகத் தொடங்கின என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும், அந்நியராட்சியிலே ஆதரவு குறைந்த நிலையிலே வாழ்ந்த மக்கள் பஞ் சத்தினுல் வாடி வதங்கிய காலங்களிலே கோதாரி போன்ற நோய்கள் அசுரவேகத் திலே பரவின என்பதை நாம் மனங்கொ ளல் வேண்டும். 1866-ம் ஆண்டிலும் (Մ Ib கூறிய நிலைமை யாழ்ப்பாணக் குடாநாட்டி லும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளிலும் காணப்பட்டது. எனவே கோதாரி நோய் தடுப்பாரின்றி வேகமாகப் பரவியது.
கோதாரி நோய் விசாரணைக் குழுவின் அறிக்கை மூலம் இப்பகுதிகளிலே:-
1866 நவம்பர் 1304 பேரும் 1866 திசம்பரில், 227R

Page 101
82 eğ uo (r/rar pv /ru89... ...
1867 ஜனவரியில் 3287 , 1867 பெப்ருவரியில் 1767 , , 1867 Lonrfříj8av 775 , ,
இறந்ததாக அறிய முடிகின்றது, அட்சய வருடத்தின் பிற்பகுதியிலே வேகமாகப் பரவிய கோதாரி நோய் பிரபவ வருடத்தி லும் காணப்பட்டது; ஆனல், அதன் வேகப் குறைந்துவிட்டது. கோதாரி நோய் விசா ரணைக் குழுவின் அறிக்கையின்புடி 1867-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை இப்பகுதிகளிலே இறந்தவர் எண்ணிக்சை 10,210 என்பதை அறியமுடிகின்றது.
கோதாரி நோயின் வேகத்தைக் கண்ட தேசாதிபதி ருெ பின்சன் பிரபு (Sir Her «cules G. R. Robinson) 1867-th Josit (6 மார்ச் மாதம் 3-ம் தேதி விசாரணைக் குழு ஒன்றினை நியமிக்கும்படி ஆணையிட்டார். ஐவரைக் கொண்ட அந்தக் குழுவிலே யாழ்ப்பாண அர சா ங் க அதிபர் டயி ச் அவர்களும் (P, A, Dyke) பிரதம சிவில் வைத்திய அதிகாரி சார்ஸ்லி (W.P. Chars ey) அவர்களும் இடம்பெற்றனர். இக்குழு வின் அறிக்கை ஏப்ரல் மாதம் 20-ம் தேதி தே சாதிபதிக் குச் சமர்ப்பிக்கப்பட்டது, தேசாதிபதி அதனை ஒக்டோபர் மாதம் 2-ம் தேதி சட்டநிரூபண சபைக்குச் சமர்ட் பித்தார்.
ஈழத்தின் வடபகுதியிலே வாழ்ந்த மச் களின் உ யி ர் களை க் கொள்ளைகொண்ட கோதாரி நோய் அந்நிய அரசாங்கத்தைக் கலங்க வைத்து, அரச விசாரணைக் குழு வொன்றினையும் நியமனம் செய்வதற்கு ஏதுவாயமைந்தது; அத்தோடு சமுதாய உணர்ச்சி பொருந்திய தமிழறிஞரையும் சிந்திக்க வைத்தது. அட்சய வருடத்திலே யாழ்ப்பாணப் பகுதி யி லே பரவிய கோதாரி நோயைப் பற்றி, அக் காலத் திலே வாழ்ந்த குமாரசுவாமி முதலியா பாடிய பாடல்களில் ஏழு பாடல்கள் *குமாரசாமி முதலியார் கவித்திரட்டு என்னும் தொகுப்பிலே இடம் பெறுகில் றன.14
இவற்றிலே ஆறுபாடல்கள் குமா சுவாமி முதலியாரின் இறை நம்பிக்ை

பொ. பூவோகசிங்கம்
யைப் புலப்படுத்துவன. இறையருளாலன் றிக் கோதாரி நோய் தீராது என்ற நம்பிக் கையுடையவராகக் குமாரசாமி முதலி யார் காணப்படுகிருர், அத்த நம்பிக்கை யின் அடிப்படையிற் கோதாரி நோய்க்குக் காரணம் இறைவனின் கோபம் என்று கூடக் கருதினர்; அக்கோபமும் மக்கள் சேய்த கொடும் பாவத்தினுல் ஏற்பட்டது என்றும் எண்ணிஞர். எனவேதான் இறை வன் மீது "குளிர்ச்சிப்பாடல்களைப் பாடிய தோடமையாது மக்களையும் இறைபத்தி யுடன் மனமாரப் பூசிக்கும்படி அறிவுறுத்தி ஞர். குமாரசுவாமி முதலியார் வல்வை தீருவில் சுப்பிரமணியர் பதிகம், வல்வை பெரியம்பன் கற்பகப் பிள்ளையார் பதிகமும் ஊஞ்சலும், கோப்பாய் பலானை சுப்பிர மணியர் ஊஞ்சல், பொலிகண்டி கந்தவன நாதர் ஊஞ்சல், மூளாய் சித்திவிநாயகர் ஊஞ்சல், நல்லைக் கலித்துறை முதலிய பிர பந்தங்களைப் பாடியவர்?. எனவே அவர் சிந்தனை தேவனின் நற்கருணையை நாடி நிற்கும் நெறியிலேயே சென்றமை வியப் பில்லை. அந்த நெறி வழியிலே செல்வதே அநுகூலமானதென்று அவர் கருதிஞர்: அதனுற் கோதாரி நோய் வேகமாகப் பர வியதற்கான காரணங்களையோ அதனே அடக்கத் தேவைப்பட்ட வழிதுறைக ளேயோ அவர் உணரவில்லை.
ஆயினும் . குமாரசுவாமி முதலியார் கோதாரி நோய் பற்றிப் பாடிய பாடல் களிலொன்று சிறப்பாகக் குறிப்பிடத் தக் கது. அப்பாடல் மேல்வருமாறு:
14. குமாரசுவாமி முதலியார் 'தனிப்பாடல்களன்றி கோய்க்கிரங்கல் முதலிய சில நூல்களும் செய்த னர்" என்பர் அ. சதாசிவம்பிள்ளே (பாவலர் சரித்திர தீபகம், பக், 111.)
15. 14.குமாரசுவாமி முதலியார் இயற்றிய இந்திர குமரன் நாடகம் அச்சுவேலியாரால் கடிக்கப் பெற்றுப் பிரதியில்லாது அழிந்துபோயிருக்த போது.வாய்ப்பாடமாயிருக்தோரிடம் கேட் டெழுதி மிகுதியையும் தாமாக இயற்றி அச் சிட்டு உபகரித்தார்’ அச்சுவேலி ச. தம்பிமுத் துப்பிள்ளை (பூரீ ச. தம்பிமுத்துப்பிள்ளையின் சரித்திர சூசனம், வயாவிளான்: ஜயசிறி சாரதா பீடேந்திர சாலை, 1932, பக்.55-56)

Page 102
குமாரசுவாமி.
Lu 6v 6w 6
இந்தமருந்தை வெல்லுநல்ல மருந்
தெங்கேதா னுண்டுசொல்லும்
அநுபல்லவி
இந்த மருந்துதெய்வீகம ருந்துரு வில்லா
மருந்துபேர் சொல்லா மருந்து தந்தவரின்னரென் றில் லா மருந்து
தாம்பிர வைப்புக்கற் புல்லா மருந்து (இந்த)
சரனங்கள்
ஐம்புல வேடர் பகைப்பிணி போக்கு
மாறலை கள்வர்க்கஞ் சாமலுங் காக்கும் நம்பியுட் கொண்டவர்க் குட்பிணி தீர்க்கும் நாட்பட்ட ரோகமு நாசம தாக்குங் கொம்பனை யார்குலக் குத்தையு நீக்குங்
குய்யக்குழிவிழுந்தாலுந் தூக்கு மம்பிரண் டுந்துரும் பாமெனத் தாக்கு
மைங்கணை யும்வெந் தழிந்திடத் தீக்கும் (இந்த)
செல்வப் பிணிக்குருட் டாட்டமும் வீறுஞ் செல்வத் திருக்குக றேறலு மாறுங்
கல்விச் செருக்கி லுறும்பிணி பாறுங்
கற்றறி மோழைகடேறறிவூறும் வல்லமை யிற்செய்த தீமையுந் தாறு மாரு நடக்குங் கருவமு நீறு
மெல்ல வருந்தொழச் சன்னத மேறு
மிடக்க ரிடக்கு முடக்கையும் கோறும் (இந்த)
மன்னர் செங்கோலை வளைத்துத் திருக்கும் வஞ்சர் குணங்குடி போக நெருக்கு மன்னர்க்கு மன்னர்க்கென்றுரைச் சுருக்கு மாயப் பசாசர் மநத்தை யுருக்குற் தன்னை யறியாப் பருவத்த ருக்குந்
தலைவனைத் தேடு முணர்வு பெருக்குத் தின்ன முன் னங்கைப்பும் போலவி ருக்குந்
தின்னத்தின் னத்தித்திப் பாக விருக்கும்
(இந்த)

GL/ar. 446svarsstævslå 83
குத்தகை கொண்டு குடிக ளொடுக்குங் குறும்பர் குறும்புப் பிணியைக் கெடுக்குஞ் சத்தப் படாமற் பிறரிற் ருெடுக்குஞ்
சண்டாள நீசர் தமக்கு மடுக்கு மெத்திப் பிறர்பொரு டட்டியெடுக்கு
மீநப்ப சாசுக் குணர்வு கொடுக்கும் பித்தர்க ளேபசு வுக்குந டுக்குப் பிடிக்கப்
புலிக்கிடும் பித்துந் தடுக்கும் (இந்த)
ஈழையு மோட்டு மிருமலு மோட்டு மேறிய பித்தமும் வாதமு மோட்டுஞ் சீழ்வடி ரோகம் பகந்தர மோட்டுஞ்
செப்புங் கிரந்தியு முப்புறத் தோட்டு மாழையொண் கண்ணியர் தந்தரை யாப்பு மாற்றற் கருங்கண்ட மாலையிற்
கோப்பு மீழத் துளகொள்ளை நோய்விளையாட்டு மெத்தேசத் தெந்நோயும் வாட்டியே
நீட்டும் (இந்த)
இப்பாடலிலே ஏனைய கோதாரி நோய் பற்றிய பாடல்களிலே காணப்பட்ட "ஒப்பாரி இல்லாமலிருத்தல் குறிப்பிடத் தக்கது. கோதாரி நோயின் "மகத்துவத் தைக் கூறுமுகமாக ஆசிரியர் சமூகத்தின் ஊழல்கள் சிலவற்றைக் குறிப்பாகக் கண் டித்திருக்கிருர். அவர் கண்டனம் செய்வ தற்குப் பின்பற்றிய பாணி கவனிக்கற் பாலது. துன்பமயமான சூழ்நிலயிலே சமத்காரமான முறையிலே குமாரசுவாமி முதலியார் நையாண்டி செய்ய முயன்றி ருக்கிறர். ஆயினும் பாடலிற் காணப்படும் * பட்டியல்" பண்பு அங்கதத்தின் சிறப்பைக் குறைத்துவிடுகின்றது என்பதை மறுப்பதற் கில்லை.
அட்சய வருடத்திலே ஏற் பட் ட கோதாரி நோய் பற்றிப் பாடிய குமார சுவாமி முதலியார் பவ பூரீ மார்கழி மீ" (1874) மறைந்துவிட்டார். அவர் மறைவு தாது வருடத்திற்குப் பின்பு நிகழ்ந்திருப் பின் தாது வருடத்திலேற்பட்ட பெரும் பஞ்சம் பற்றிய தமிழ் இலக்கியச் சான்று கள் அதிகரித்திருக்கலாம்.

Page 103
Wit
Compl
Distributors o
a t
130, Ce Colc
Tphone: 35.528
Entrust Yo:
KSHH
C
259/1, GALLE ROAD, B
Phone: 84058

h Best
iments of
f
Ford Luggage
runk rading Co.,
entral Road, ombo- 12.
T”grams: PERE STEEL
ur Prescription
to
:S)
AMBALAPITIYA, COLOMBO-4.

Page 104
கட்டழகுப் பெட்ட
கள்ளப் பார்வை கனிமொழிப் வெள்ளைப் பேச்சை விழியென உள்ள மலரை உன்னிடம் தந்,ே எள்ளி நகைக்க இடத்தை அளி பள்ளி கொள்ளும் பருவம் கண்டு துள்ளி ஒடித் துடிக்கும் இதயம் புள்ளி மானைப் பிடிக்கும் புலிபே கள்ளி உனையே அனடயத் துடிக் கண்ணைக் கவ எண்ணச் சிை வண்ண ஒவிய பண்ணும் இ6 மண்ணைத் தே பெண்மை நிை உண்மை. தவ பண்பு அற்ற பஞ்சு போன்ற பட்டுடல் தனைே மஞ்சம் தனிலே - மார்புடன் அை கொஞ்சி குலவி கோதை உந்த நெஞ்சம். குளிர நினைவுகள் இனி வஞ்சி நீஎன் வாழ்வு தனிலே தஞ்சம் புகவே தவிப்புடன் நாே கஞ்சி இன்றி களிப்பும் இன்றி பஞ்சாய் பூவாய் பாடு பட்டேன் தேனே நீயே மானைப் பழி ஆனை தனையு தானை கொ6 மீனை மிஞ்சுப் பூனை போே தேனீ போே மேனி மின்னு
கரும்பு போன்ற கற்கண்(டு) உ அரும்பு மீசை அழகன் நானே
விரும்பி வந்து வீரத்(து) உடே பரிசம் போட்டு பாகம் கேட்ே சிரித்து என்னை சிக்கலில் மாட்ட பருத்த கொங்கைப் பாவை நீ வருத்தி என்னை வாட்டி ஈற்றி திரித்து மணத்தில் சேர்த்து வி

கமே!
ம. சந்திரகுமார்
1fr 6ቖ) ፴፱
ாண்ணி
*தாய்
т Gi)
கும்
ரும் கன்னி உனையே
றயில் இருக்க வைத்து
1ம் வரைந்தே நானும்
சைத்து பட்டாய்க் காப்பேன்
5டி மாடாய் உழைக்கும்
றைந்த டேடிகள் போன்று
றி ஊரை ஏய்க்கும்.
பாவி அல்லன்
ார் தென்றல் காற்று கும் மயக்கு விழியால் ம் அடக்கி வைப்பாய் ண்டு தாக்க வந்தால்
வேலனை விழியால் ) U tu fjög செல்ல ல தீட்டி விடுவாய் |ம் மெல்லிடை யாளே.
ட்டாயே.

Page 105
இருபதாம் Tf)(36ÕÕT ஈழத்தமிழ்க் கவிதை QIGITijf
இ ருபதாம் நூற்றண்டின்-குறிப்பா முதல் மூன்று தசாப்தத்திற்குமுரிய செ யுள் இலக்கியம், சென்ற நூற்ருண்டு செய்யுள் இலக்கிய வளர்ச்சியோடும் போ குகளோடும் தவிர்க்க வி ய ல |ா த வா தொடர்புபட்டுள்ளது. முதலில், இ தொடர்பினைச் சிறிதளவு சுட்டிக்காட் வது பொருத்தமானதாகும்.
பத்தொன்பதாம் நூற்ருண்டில் ஆ கிலேயர் ஆளுகையின் போது மதம்பரப்பு அவர்தம் தீவிர முயற்சிகள், ஈழத்தில் ச யத்துறையில் பரந்துபட்ட ரீதியில் விழி புணர்ச்சியேற்பட வழிவகுத்தன. சிற பாக நாவலர் காலத்திலேற்பட்ட இ தகைய நிலைமையின் ஒரு வெளிப்பாடா 8 சமயஞ்சார்ந்த இலக்கியங்கள் - பிரட தங்கள், பதிகம்-பெரு வரவினவாக எழு தன, சமயத்தோடியைந்த வடமொழி பெயர்பு நூல்களும், தழுவல் நூல்களுட நீதிநூல்களும் தோன்றின. இத்தசை இலக்கிய முயற்சிகள் இருபதாம் நூற்ற டிலும் தொடர்ந்தன எனலாம்.
சுன்னுகம் குமாரசுவாமிப் புல6 (1855-1922) ஆக்கங்கள் மேற்கூறி இயல்புகளைப்புலப்படுத்துகின்றன.மாவை

f ய
Jւն
பதிகம்,சானக்கிய நீதிவெண்பா.இராமோ தந்தம் மேக தூதக் காரிகை, ஏகவிருத்த பாரதாதி, சிவத்தோத்திரத்திரட்டு முத லியன அவரால் இயற்றப்பட்டனவே. 19-ன் பிற்பகுதியிலும், 20-ன் முற்பகுதியி லும் வாழ்ந்த புலவர் அவர்கள் ஒரு விதத் தில் இணைப்புப் பாலமாக விளங்குகிருர் எனலாம். இவரது பரம்பரையினராக வெவ்வேறு விதங்களில், க. மயில்வாகனப் புலவர், நெ. வை. செல்லையா, சோ. நட ராசன், கணேசையர். பெரியதம்பிப்பிள்ளை முதலியோர் காணப்படுகின்றனர்.
இக்காலப்பகுதியில் சமய இலக்கியம் படைத்த சில முஸ்லீம் புலவர்கள் பற்றி யும் விதந்துரைக்க வேண்டியதொன்றுண்டு. குமாரசுவாமிப் புலவர் முதலாஞேர் விருத் தம், கட்டளைக் கலி, வெண்பா முதலிய செய்யுள் வடிவங்களைக் கையாண்டனர். மயில்வாகனப் புலவர், சித்திரக்கவிகள் பலவற்றை இயற்றினர். ஆயின் ஆசுகவி வேலுப்பிள்ளை போன்ற ஒரு சிலர் காவடிச் சிந்து முதலியவற்றைச் சில சமயங்களில் கையாண்டாலும், பொதுவாக முஸ்லீம் புலவர்கள் - அருள்வாக்கி அப்துல் காதி துறுப் புலவர், அப்துல் ற குமான் முதலி யோர்-எளிமைமிக்க பாடல்களைச் சமைத் ததோடு திருப்புகழ், கும்மி வடிவங்களையும் பெருமளவு பயன்படுத்தியுள்ளனர். முன்ன வரின் சந்தத் திருப்புகழும், பின்னவரின் ஞான அகீதாக் கும்மியும் விதந்துரைக்கத் தக்கன.
செய்யுள் இலக்கியத்தைப் பொறுத்த வரையில் , பிறிதொரு வரலாற்று ரீதியான தொடர்பையும் எடுத்துக் காட்டுவது அவ சியமாகும். சென்ற நூற்ருண்டின் பிற் பகுதி தொடக்கம் பழந்தமிழ் இலக்கிய நூல்கள் பதிப்பிக்கப் பெற்றன. இவ்வழி, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, தொல் காப்பியம் முதலிய பண்டைத் தமிழ்ச் செல் வங்களைக் கண்டறிந்தவர்கள் அவை இடைக்காலப் புராண இதிகாச இலக்கிய மரபினின்றும் வேறுபட்டிருப்பதைக் கவி
Ꮣ Ꭽ. Ꮳ lII Ꭲ Ꮷ5 ] T Ꭽ .

Page 106
இருபதாம்.
னித்தது மட்டுமன்றி அவற்றிலே பல சிறப் யியல்புகள் இருப்பதையும் உண ர் ந் து யிரக்ஞை பூர்வமாக அவற்றைப் பின்பற்றி இலக்கியம் சமைக்க முற்பட்டனர். ஆங்கி லத்திலே classic என்னும் உயர் தனிச்செய் யுள் நிலையில் கற்ருேர் படைப்புக்கள் வைத்து மதிக்கப்படலாயின. சிலம்பு, மேகலை முதலியனவும் புதியவொரு மதிப் பும் வாழ்வும் பெற்றன. இப் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் யாப்பமை தியையும் செய்யுள் வடிவங்களையும் பொரு ளையும் அடியொற்றிச் சிலர் இக்காலப்பகுதி யில் செய்யுள் செய்தனர். இத்தகை யோருள் ஒருவராக நவநீத கிருஷ்ண பாரதியார் விளங்குகின்ருர். இவரது உலகி யல் விளக்கம், செழுங்கதிர்ச் செல்வம் முத வியன முற்காலத் தமிழ்ச் செய்யுளை முன் மாதிரியாகக் கொண்டு அமைந்தன. விபு லாநந்த அடிகளார், பேராசிரியர் க. கண பதிப்பிள்ளை, முதுதமிழ்ப்புலவர், மூ. நல்ல தம்பி என்போரும் இப்பிரிவில் சேர்க்கப் பட வேண்டியவர்கள். ஆயினும் இவர்க ளுள் பலர் முற்காலத் தமிழ்ச் செய்யுள் வடி வங்களைப் பின்பற்றினராயினும் புதிய பொருள்களையே பாடினர். விபுலாநந்த அடிகளின் மொழிபெயர்ப்பு முயற்சிகள்செகப்பிரியர், தெனிசன், மில்ரன் பாடல் கள்-சிலவற்றை மாதிரிக்குச் சுட்டலாம். இத்தன்மை வியப்புக்குரியதன்று; தமிழ கத்தில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, பரிதி மாற் கலைஞர் முதலியோரும் இவ்வழிச் சென்றவரே. பழந்தமிழ்ச் செய்யுள்களைப் பயபக்தியுடன் அணுகுவது இவர்தம் இயல் பாகவிருந்தது எனலாம்.
மேலே குறித்து, பண்டைத் தமிழ்ச் செல்வங்களின் பெருமை பற்றிய பெரு மித அருட்டுணர்வும் சில செய்யுள் இலக் கிய நூல்கள் தோன்ற ஏதுவாக இருந்தன. வண்ணை நெ. வை. செல்லையா அவர்கள் இயற்றிய பழமைப்பனுவல் ஐம்பானைந்து இத்தகைய பின்னணியில் வைத்து மதிப் பிடத்தக்க நூலாகும்.
மதம் பரப்புதற்கெடுத்த தீவிர முயற் சிகள் சமயத்துறையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது போல், அவர்தம் பொதுக் கல்வி, ஆங்கிலக்கல்விப் போதனை முயற்சி

ଜ୪. @ u/ /ጠró፱r Arሪም Ar 87
களாலும் சமுதாயத்தில் ஒருவித மாற்ற மேற்பட்டது. ஆங்கிலங்கற்ற, ஆட்சியில் நன்மை கண்ட மத்தியதர வர்க்கத்தினர் தோன்றினர். நாளடைவில் தம் பழக்க வழக்கங்கள், கல்விமுறை, நம்பிக்கைகள் தொழில்முறை முதலியவற்றில் ஒருசில மாற்றங்களை அவர்கள் வேண்டி நின்றனர். அந்நிலைக்கேற்பவே சமுதாயச் சீர்திருத் தங்களும் வேண்டப்படலாயின. மக்கள் மத்தியில் அவை பரவும் அவசியம் கருத்திற் கொள்ளப்பட்டமையால் எளி  ைம யும்
இயல்பாகவே வந்து பொருந்திற்று.
இத்தகைய பண்புகளை ஒருங்கே புலப் படுத்துவனவாகத் தெல்லிப்பழை தெ. அ. துரையப்பாபிள்ளை அவர்களின் (18721929) பாடல்கள் உள. யாழ்ப்பான சுவ தேசக்கும்மி, கீதரசமஞ்சரி முதலிய நூல் களும், "எங்கள் தேசதிலை முதலிய தனிப் பாடல்களும் குறிப்பிடத்தக்கன. பாவல ரது யாழ்ப்பாண சுவதேசக்கும்மி,
தேசோப சாரங் கருதியிக் கும்மியைச்
செப்புகின் றேணுத லாலெ வரும் லேசாய் விளங்க இலகுதமிழில்
இயம்புவ தேநலம் சங்கமின்னே
எனத்தொடங்கி, கிருஷிகம்,கைத்தொழில் கூட்டுமுயற்சி, கல்வி, இலங்கைக்கொரு பல்கலைக்கழகம், தாய்மொழி, பெண் கல்வி அரசாங்க உத்தியோகங்கள், சுயபண்பாடு, புதுமைப் பெண் , எங்கள் பழக்க வழக்கங் கள், சாதியும் சீதன வழக்கமும், மது விலக்கு முதலிய பல விடயங்களைப் பாடற் பொருளாகக் கொண்டுள்ளது. சுருங்கக் கூறின் சமுதாயப் பிரச்சினைகள் இலக்கியப் பொகுளாக மாறும் போக்கை இவற்றில் காணமுடிகிறது. இலகுதமிழ் மட்டுமன்றி, கும்மி, கண்ணி, கீர்த்தன முதலிய ஜன ரஞ்சகமான வடிவங்களையும் ஆ சிரியர் கையாண்டுள்ளார். ஏறத்தாழ இக்காலப் பகுதியிலேயே பாரதியாரும் இத்தகைய பா வடிவங்களைக் கையாளுகின்ருர் எனக் கூறலாம்.
பாவலர் போன்று, வண்ணே நெ. வை. செல்லையா அவர்களும், மதுவிலக்குப் பாட்டு, ஒழுக்க மஞ்சரி, மதுமானிடக்

Page 107
88 இருபதாம்.
கும்மி முதலிய நூல்களை இயற்றியுள்ளார். எனினும் இவர்கள் சீர்திருத்த நோக்கின்
அடிப்படைக் கொள்கை,
"சிற்சில ஐரோப்பிய பழக்க வழக்கஞ் சிறந்ததென் பதற்காட் சேபமில்லை முற்சிந்தனையின்றி நந்தேசாசாரங்கள் முற்றும் விடலாமோ.
e a e ao o so o as - e os e s os e * o * எம்முள் நல்லாயிருக்கும் பழக்கவழக்கத்தை நாம் கை விடலாகாது"
என்பதுவே. அதாவது இருவகை நாகரீக அளவுகோல் கொண்டு சமுதாய முன் னேற்றததை அவர்கள் கணக்கிட முயல்வ தைக் காண் கிருேம்.
ஏறத்தாழ துரையப்பா பிள்ளையின் காலம்வரை (1929) ஏன் அதற்குச் சற்றுப் பின்னருங்கூட - அரசியல் விழிப்புணர்ச்சி, கிளர்ச்சிகள் என்பன தோன்றவில்லை; அதற்கான அவசியமும் வாய்ப்பும் உரு வாகவுமில்லை. ராஜவிசுவாசம் பல்வேறு விதங்களில் வெளிப்பட்டது. இக்காலத்தி லெழுந்த செய்யுள்களில் இவற்றை இனங் காண முடிகின்றது. பின்வரும் "தேச கீதம்" என்பது இதற்குச் சிறந்த எடுத்துக் காட் டாகும்:
பல்லவி
திருவருள் சூழ்க - எங்கள் தேசமே வாழ்க.
கண்ணிகள்
பாரதனில் ஐந்திலொரு
பாகமதை ஆளும் இங்கிலிஷ்
சீர் உறும் செங்கோல் இனிதெம்
தேசமிதிலே சிறக்க
--திருவருள்
இக்காலப் பகுதியில் ' குழந்தைப் பாடல்கள் எழுதும் நாட்டம் சிலருக்கு ஏற்பட்டது.அருணந்தி அவர்களின் தூண்டு தலிஞல், ஒருசிலர், குறிப்பாக மா. பீதாம் பரம், சோமசுந்தரப் புலவர் முதலானேர் இத்துறையில் ஆர்வம் காட்டினர். பின்ன வரது கத்தரித்தோட்டத்து வெருளி,

@eም. Gu/ /ጠró/ff /reም /ዮ
ஆடிப்பிறப்பு முதலியன இப்போது உரு வெடுத்தனவேயாம்.
மேற்கூறிய சில புலவரது குழந்தைப் பாடல்கள் 'பிள்ளைப்பாட்டு’ எனுந்தொகு தியாக வெளியிடப்பட்டது (1935) - இத் தொகுதி வெளியீடு பற்றிய செய்தி முக்கிய மன்று; இதிலிடம் பெற்ற சில பாடல்களே எமக்கு வேண்டியன. ராஜவிசுவாச வெளிப் பாடாகச் சில அமைந்துள.உதாரணமாக,
'வாருஞ் சினேகித மாரே
நாமெல்லாருஞ் சீருடன் கும்மி ஆடிடுவோம் காருண்ய மிக்க நம் ஜோட்ச்
மனனரை க. கடவுள் காக்கப் பாடிடுவோம்'
என்பதைக் குறிப்பிடலாம்.
தென்கோவை. ச. கந்தையபிள்ளை அவர்களின் "ஜோர்ச் மன்னர் இயன் மொழி வாழ்த்து" என்ற செய்யுள் நூலும் இக்காலப் பகுதியிலே தான் வெளிவந் திருக்க வேண்டும். ஏறத்தாழ 200 அடிக ளுடைய நேரிசை ஆசிரியப்பாவாலான நூல் அது.
1930-ம் ஆண்டளவில் ஈழ அரசியலில் ஏற்பட்ட மாற்றம் குறிப்பிடத்தக்கது. இதனலும், ஈழத்து மத்தியதர வர்க்கத்தி னருக்கு அரசமைப்பில் பங்குகிடைத்தமை யாலும் காலப்போக்கில் அரசியல் விழிப் புணர்ச்சி ஏற்பட வாய்ப்பேற்பட்டது. இதுவும் இதே கால இந்தியாவிலேற்பட்ட காந்திய, சுதந்திர இயக்கங்களின் முனைப் பான போக்கும் ஈழத்து இலக்கிய உலகைப் புதுவழிச் செலுத்தின; செய்யுள் இலக்கி யங்களிலும் இவற்றின் குரல்கள் கேட்டன. இவ்வழி, மு. நல்லதம்பி, சோமசுந்தரப் புலவர், ப கு. சரவணபவன் முதலியோரது ஆக்கங்கள் கவனிக்கத்தக்கன. இவர்களு டன், வேந்தனர், யாழ்ப்பாணன் முதலி யோரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மதுவருத்தல், கள்குடித்தல், உயிர்ப் பலியீடு, ஜீவகாருண்யம் பற்றியன ஒரு புறம், மு. நல்லதம்பி முதலியோரது கவிப் பொருளாயின. யாழ்ப்பாணன்,கவிதைகளி லூம் வேள்விக்கடா, காயம்பட்ட பசு,

Page 108
OøSL/ø/reb.
கள்ளுண்போரி காட்சி முதலியன உள்ளன. இத்தியாதி விடயங்கள் கவிதைக்குப் பொருளானதில் காந்தீயத்தின் பங்கு முண் டென்பது-சந்தேகமன்று. w
மறுபுறம், தேசபக்தி, சுதந்திரம், நாட் டபிமானம், விடுதலைவேட்கை என்பன பற் றிய கவிதைகளை இனங்கண்டு கொள்கின் ருேம்.
கட்டியே மடக்கி யென்னைக்
கையினில் விலங்கு பூட்டித் துட்டர்சேர் சிறையே துள்ளித்
துன்பந்தா னிழைத்த போதும் சட்டமே தகர்வு காணச்
சாந்த மென் கருவியாகக் கட்டியிங் குன்னை வாட்டும்
கால்விலங் குடைப்ப னன்னே
எனத் தேசபக்தன் சபத" மொன்று அமை கிறது. பின்வரும் கவிதை பலவித கார ணங்களினல் ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.
"எங்களிலங்கையும் ஆங்கிலேயரின் இல்லமோ-இது - நல்லதோ
தங்க ளாட்சியை இங்கு நாட்டிடச்
சாற்றினுர்-வழி-மாற்றினர்.
காட்டிக் கொடுத்திடுங் காட்சிக்
இலங்கையும் காணியோ-சொந்தப்-பூமியோ நாட்டிற் பிறந்திடும் நாங்க ளனைவரும் நாய்களோ-பெல்லிப்-பேய்களோ
ஆட்சிப் படைபெறு மாங்கில
ராட்சியை அஞ்சிடோம்-இனித்-துஞ்சிடோம் மாட்சி கொள்லங்கை வாழச்
சுதந்திரம் வாங்குவோம் - கொடி -
Sm si, GGGum tb''
இப் பாடல் வரிக்குவரி பாரதியின் சுதந்தி ரப் பாடலொன்றை ஞாபக மூட்டுகின் றது. பொதுவாக, ஈழத்திலெழுந்த சுதந் திரம், விடுதலை சம்பந்தமான பாடல்கள் அனைத்துக்கும் இவ்வியல்புண்டு. இதற் கான முக்கியகாரணமொன்றுள்ளது.

Gaeaf. G?ulu ar str /ref ar 89
ஈழத்தில் வெகுஜன ரீதியாகத் தீவிர சுதந்திரப் போராட்டம் நிகழவில்லை; சுதந்திரத்திற்காகப் பாடுபட்டோரும் மத்தியதர உயர்வர்க்கத்தினரே தூதுக் குழுக்கள், அரசியல் விவாதங்கள் மூலமே அவரது "போராட்டங்களும் நடந்தே றின. (தென்) இந்தியாவில் இந் நிலை காணப்படவில்லை. பாரதியின் சுதந்திர, தேசியக் கவிதைகள் வீறுடையனவாகவும், உணர்ச்சியூட்டக்கூடியனவாகவும் இருப்ப தற்குக் காரணமும் அதுவே. விழிப்பு ணர்ச்சி ஏற்படுத்துவதற்கு மட்டுமன்றி, போராட்டத்திற்கும் தன் கவிதைகளைப் பாரதி பயன்படுத்தினன். நேர்மாமுன இத்தகைய பின்னணியிலேயே ஈழத்தி லெழுந்த விடுதலைக் காலப் பாடல்களை அணுக வேண்டும்; இவ்வழி அவற்றுள் சில பாரதியை நினைவூட்டுவதன் தாற்பரியமும் புலப்படும் .
இதுவரையில், அதாவது விடுதலைக் காலம் வரையிலான ஈழத்துக் கவிதை வளர்ச்சிப் போக்கினை மேலோட்டமாகப் பார்ப்பவருக்குக் கூட ஒன்று புலப்படும் ஈழத்துக்குரிய தனித்துவ பண்புகள், பிரச் சினைகள் என்பன கவிதையின் பொருளாக அமையவில்லை. முற்பட்ட சமயப் பிரபந் தங்களைத் தவிர்த்துப் பார்ப்பின் துரையப் பாபிள்ளை முதலானுேர் வற்புறுத்திய சமூ கச் சீர்திருத்தக் கருத்துக்களும் பெரும் பாலும் பொதுவானவையாகவே இருக்கக் காண்கிருேம். அடுத்த காலப் பகுதியில் காந்தீயத்தின் குரல் ஒலிக்கிறது. விடுதல், தேசபக்தி, சுதந்திரம் பற்றிய கவிதைகள் கூட பிரக்ஞை பூர்வமாக எழுந்தன அல்ல; பாரதியார் கவிதைப் பாணியில் வந்து விழும் வெறும் பொறிகளே அவை. அது மட்டுமன்று: அக்காலக் கவிஞர்கள், "பார" தம் இனிது வாழி', "ஜவகர் வாழிய', " காந்தீயம் வாழி" என இந்திய விடுதலை யுடன் ஒட்டியே ஈழவிடுதலையையும் கனவு கண்டனர்; சுருங்கக் கூறின், ஈழம் தென் னிந்தியாவிலிருந்து வேறுபட்டதெனக் கரு திணுரல்லர்.
ஆயினும், செ ய் யு ள் இலக்கியம் தவிர்ந்த ஏனைய இலக்கிய வடிவங்களில் சிறு கதை, நாவல் முதலியன ஈழத்துப் பிரதேச

Page 109
90 இருபதாம். W.
வழக்குகள், மண்வாசனை, சிற்சில பிரச்சில் கள், சீர்திருத்தக் கருத்துக்கள் ஓரளவு பிரதிபலித்தன. குறிப்பாக, ஈழகேசரி மறுமலர்ச்சி முதலியவற்றில் வந்தவ றைக் குறிப்பிடலாம்.
இவ்வழி, மறுமலர்ச்சிக் கவிதைகள் பற்றிச் சில கூறுவது பொருத்தமாகும் இக்கால, "சாரதா, நாவற்குழியூர் நடர சன், 'மஹாகவி’ முதலியோர் கவிதைகள் பொதுவாகப் புதுமைக் கற்பனை, புதிய சி தனைகளுடையனவாய் விளங்கின. நாவ குழியூராரின் ‘நவீன கோவை'யும், "இல்லை யான காவியமும் இத்தகையன “மஹா கவி'யின் ஆரம்ப காலக் கவிதைகளில் துணிவு, தன்நம்பிக்கை என்பனவும் (யாழ்ப்பாணக்) கிராம மக்களின் இன்ட துன்பங்களும் ஓரளவு வெளிப்பட்டன.
இக்கிராமியப் பண்பு, பேராசிரியர் க கணபதிப்பிள்ளை அவர்களின் காதலி ஆற் றுப்படையிலும் காணப்படுகிறது. அர் நூல் பற்றிப் பல கூறலாமாயினும், யாழ்ட் பாண மக்களின் பழக்க வழக்கம், பேச்ச வழக்குகள், வாழ்க்கைமுறை முதலியவர் றைத் திறம்பட அது சித்தரிக்கின்றது என் பதனை மட்டும் இங்கு குறிப்பிட்டால் போதுமானது.
செய்யுள் இலக்கியத்தைப் பொறுத்த வரையில் இவ்வாறு ஓரிருவர் ஈழத்தையும் தத்தம் ஊர்கள், கிராமங்கள் முதலியவற றையும் இந்தியாவும், ஈழமும் வேறுபட்ட நாடுகள் என்ற உணர்வுடையவராயிருந்த னர் என்பதற்கில்லை.
ஈழம், சுயாதீனமும், சுயாட்சியுட் பெற்ற பின்னரே மெல்லமெல்லத் தேசிய உணர்வு அரும்பலாயிற்று. ஆரம்ப கால கவிதைகளில், சுதந்திரப் பெருமிதம் தேசிய ஒற்றுமை, நாட்டபிமானம் என் பன வெளிப்பட்டன.சோமசுந்தரப்புலவர் நல்லதம்பிப்புலவர், சதக்குத்தம்பிப்பாக லர் முதலியோர் நம் கவனத்துக்குரியவ1 கள்.
ஆனந்தச் சேவல் க ளெங்கெங்கும்
கூவின்
அடிமை வறுமைக ளந்தரம்
போயில்

@eም. ® u/ /ጠrá6/r/rcም/ጠr
4.
t
ஊனந் தவிர்ந்தது சுதந்திரச் சூரியன் உதித்தன னுள்ளங் குளிர்ந்ததுவே
என்று பாடிய சோமசுந்தரப் புலவர்,
அஞ்சு விரலுஞ் சேர்ந்திடில்
அரிய கருமம் புரியலாம்
கொஞ்ச மொன்று நோவுறிற்
கூடுங் கரும மில்லையே
எனத் தேசிய ஒற்றுமையையும் வலியுறுத் துகிருர், சதக்குத் தம்பிப் பாவலர்.
"தேசத்தைத் தேசங்கள்
ஆளவிடோம்-எங்கள் தேவியின் மேனியைத்
536 darll - ef?Gu_trib’ ”
என்று கூறுகின்ருர்; யாழ்ப்பாணனின் ஜெயலங்காவையும் குறிப்பிடலாம்.
இவ்வாறு அரும்பி வந்த தேசிய உணர்வு, ஏறத்தாழ 1956ம் ஆண்டுவரை, பிர க்  ைஞ பூர் வமா க உணரப்பட்ட தென்ருே, பரந்தளவில் இலக்கியங்களில் வெளிப்பட்டதென்ருே கூறுதற்கில்லை. இவ் வழி, 1956ம் ஆண்டில் நிகழ்ந்த அரசியல் சம்பவங்கள் மிக முக்கியமானவை. தாம் தென்னிந்தியாவிலிருந்து வேறுபட்டவர் கள் - ஈழத்தவர்கள்-என்பது அரசியல் ரீதி யாகவும் முதன்முதலாக இப்போது உண ரப்பட்டது. புதிய பிரச்சினைகள் எதிர் கொண்டன. ஒருசில, முன்பிருந்த பிரச்சி னைகள் கூட பூதா கரமானவையாகத்தோன் றின. ஒருபுறம் தமிழ்மொழிக்குச் சம உரிமை, இனவழி அரசியலுரிமை, தனிநாடு என்ற குரல்கள் ஒலித்தன. மறுபுறம் முத லாளித்துவ எதிர்ப்பு, தொழிலாளர் பிரச் சினைகள் மக்கள் போராட்டம் தேசிய ஒற் றுமை, தீண்டாமை ஒழிப்பு என்ற கருத் துக்கள் வலுப்பெற்றன. இவை தவிர்க்க இயலாதவாறு இருவேறு அரசியல் கட்சி கள் சார்ந்து அமைந்தன. இவை இலக்கி யப் பொருளாகியபோது ஈழத்து மக்களின் பேச்சு வழக்குகள், பிரதேச வழக்குகள், சொல்லெளிமை, புதிய, இலகுவான இலக் கிய வடிவங்கள் என்பன முன்னரைவிட வேகமும் வலுவும் பெற்றன. செய்யுள்

Page 110
இருபதாம்.
இலக்கியத்தைப் பொறுத்தவரையில்இவற் றின் வெளிப்பாடு விரிவாக நோக்கத்தக் கது.
தமிழ்மொழிக்குச் சம உரிமைகோரும் வண்ணம் இயற்றப்பட்ட முழுநூலாகச் செந்தமிழ்ச் செல்வம் (1957) விளங்குகி றது. "'தேமரு தமிழின் மேன்மை நாயகன் செவியிற் சொல்ல' எழுந்த இந்நூலில், "தமிழ்த்தாயின் அருமை பெருமைகளையும், காலங்கடந்த பழைமையையும் கூறுவது வியப்புக்குரியதன்று. இவ்வழி காசி. ஆனந்தனின் "உயர்தமிழுக்கு' கவிதைத் தொகுதியும் குறிப்பிடத்தக்கது. அது.
"ஏடா! தமிழ்வீரா! உன
எலிபோல் நினைத்தாரா?
வாடா படை யூடே அற −
வலியின் துணையோடே!'
என அழைக்கின்றது. ‘தமிழ் எங்கள் ஆயு தம்' என்ற கவிதைத் தொகுதியிலும் இத் தகைய பல கவிதைகளுள. இராஜபாரதி, சச்சிதானந்தன், வன்னியூர்க்கவிராயர் கரவைகிழான் முதலியோரும் இத்தகைய கவிதைகள் செய்துள்ளனர்.
'தமிழ்மொழியும் தாய்நாடே
உன்னைக்காக்கத் தலையரிந்து தருவேன்"
என இராஜபாரதி சபதமிட்டார். "தமிழ ரின் உரிமைப் போராட்டமும் அவர்தம் அங்கலாய்ப்புகளும் பிற்காலத்திலெழுந்த *தமிழன் கனவு’க்குப் பொருளாய் அமைந் துள்ளன. இவ்விதங்களில் முன்னைய ஈழத் தேச ஒற்றுமை, இனவழி ஒற்றுமையாகக் குறுகுவதையும் அவதானிக்க முடிகிறது; பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் இடையி லான வேறுபாடு இங்கு நினைவுவராம
இரண்டாம் பிரிவினரது இயல்புகளைப் பசுபதியின் கவிதைகளில் ஒரளவு இனங் காண முடியும்.
"முதலாளி தன்மை முடிப்போம்! -நம்
தொழிலாளர் நன்மை
வளர்ப்போம்!

GF. Gouv Ardasar arr ar 97
இதமான வாழ்க்கை அமைப்போம்!
இன்ப இலங்கையை நன்கு சமைப்போம்! நாசக் காரரை வீழ்த்துவோம்-நம்
நாட்டின் ஒற்றுமை தேக்குவோம் தேச பக்தியைக் கூட்டுவோம்-தினம் தேசம் சிறக்க வாழ்த்துவோம்’!
என்பது "தொழிலாளர் சபத"க் கவிதை யின் சில அடிகள். சுபத்திரனின் சாதி எதிர்ப்புக் கவிதைகளும் குறிப்பிடத்தக் கன. அண்மைக்காலத்தவருள், புதுவை இரத்தினதுரை விதந்துரைக்கத் தக்க வரா கும். இவர்களுள் பலர் கவிதையைப் பிரச் சாரத்திற்கும் பயன்படுத் தி ய மை யா ல் கவிதை சார்ந்த வெவ்வேறு இலக்கிய வடி வங்களையும் கையாண்டுள்ளனர். இவ்வழி வெவ்வேறு விதங்களில் கந்தன் கருணை நாடகமும், "போராட்டத்தீ’, புரட்சிகரப் பாடல்கள் முதலியனவும் அவதானிக்கத் தக்கன.
ஈழத்துக்கேயுரிய சில சமுதாயப் பிரச் சினைகளும் இக்காலப் பகுதியில் கவிதையுல கில் நுழைந்தன;மாதிரிக்குஇரண்டொன்று எடுத்துக் காட்டலாம். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் (*துாவுதும் மலரே') நான்கு கதைப்பாடல்களுள் ஒன்றன சீத னக் காதை, ‘சமுதாயக் கொடுமைகளுள் ஒன்ருன சீதனத்தைப் பற்றிச் செம் டொருள் அங்கதமாகக் கூறுவதாகும். * மஹாகவி'யின் கண்மணியாள் காதை" சாதிக் கொடுமையின் கோர விளைவைப் பாடுவதாகும். (முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் வெளி வந்த) தேயிலைத் தோட்டத்திலே மலையக மக்களின் துன்ப நெடுமூச்சின் வெளிப்பாடாக உள்ளது.
கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளி லேயே ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க மாற்றங்க ளும், போக்குகளும் ஏற்பட்டுள்ளன. அத் தகைய அம்சங்கள் சிலவற்றை, கவிஞர் சிலவற்றைத் தனியாக எடுத்துப் பார்ப்ப தன் மூலம் இனங்கண்டு கொள்வது இலகு வானதாகும்; ஒரு விதத்தில் அது தவிர்க்க முடியாததுமாகும். இவ்வழி, மஹாகவி, முருகையன். தான் தோன்றிக் கவிராயர்,

Page 111
92 இருபதாம்.
நீலாவணன், இ. சிவானந்தன், தா. இர மலிங்கம் முதலியோர் விதந்துரைக்க
தக்கவராவர்.
“மஹாகவி'யின் கவிதைபற்றி முன்
ரும் ஒரிரு குறிப்புக்கள் கூறப்பட்டுள்ளன
" ...சோலை கடல்
மின்னல், முகில், தென்றலின
இன்னல் உழைப்பு ஏழ்மை உயர்வு
என்பவற்றைப் பாடுங்கள்" என்று ஒரு சமயம் பாடிய அவரது கவி பொருளும் பொதுவாக அதுவேயாயிற்று ஆரம்பத்தில் தனிக்கவிதைகளே பாடி ராயினும், 60ம் ஆண்டின் பின் ஒரு பெரி பரப்பில் வாழ்க்கையை நோக்கும் தன்.ை அவரிடம் காணப்பட்டது என்பர். இ வழி, அவர் படைப்புக்கள், காவியங்கள் நாடகங்கள் ஆகமாறின. அவரதுநோக்கு போக்கும், நாளடைவில் "கட்புலக் க3 நெறியையும், பேச்சு மொழிக்குக் கிட்டி நடையினையும், கிராமியப் பேச்சு வழக்கு சொற்களையும் தவிர்க்கவியலாதவா! பெற்றன. பொதுவாக ஒவ்வொரு படை புக்களும் புதுமையும், வளர்ச்சியும் உடை யனவாயினும் அவையாவற்றையும் எடு துரைப்பது இங்கு இயலாதது; மாதிரிக்கு சிலவற்றைக் குறிப்பிடலாம். சாதிப் பிர சினை பற்றியெழுந்த கண் மணி யா ே காதை யாழ்ப்பாண மக்களின் வாழ்க்ை முறை, பழக்கவழக்கம் என்பவற்றை திறம்படச் சித்திரிக்கிறது; கோடை ஒ( விதத்தில் சமகால சமூக வரலாற்று நாட கமாகும். பல இசைத் தன்மை மிக் பாடல்களைக் கொண்டமைந்தது மாநில துப் பெருவாழ்வு. ஒரு சாதாரண மனி னின் கதை "காவியமாகும் நிலையை காட்டி நிற்கின்றது ‘ஒருசாதாரண மனி னின் சரித்திரம்.
கவிதை வளர்ச்சியின் பிறிதொரு நி3 யினை முருகையன் கவிதைகள் புலப்படு கின்றன. குறித்த பொருள் அல்ல. குறித்த விடயம் கவிப்பொருளாக அை யும் நிலை மாறி "உள்ளத்தில் ஒவ்வொ கணமும் தோன்றும் அரூபமான நுண் பெ ருள்களைக் கவிதையில் சிறைப்பிடிக்கு தன்மை அவர் கவிதைகளின் இயல்பு. வி( ஞானக் கருத்துக்களுடன் விளையாடும் நி3

செ. யோகராசா
யினை நெடும்பகல் உணர்த்துகிறது. கவி தை மூலம் சமூக மக்களுடன் உறவாடும் பாரதியின் சிறப்பும் ஒரளவு முருகையனின் கவிதைகளில் வெளிப்படுகின்றன. சிற்சில இடங்களில் பிறமொழிச் சொற்களை அழ காகக் கையாள்வதையும் அவதானிக்க முடிகிறது. 'சரம கவிராயர்" முதலான கவி தைகள் நையாண்டித் தன்மைக்கு எடுத் துக் காட்டத்தக்கன.
இந்நையாண்டித்தன்மையும், அங்கத மும் தான்தோன்றிக் கவிராயர்’ கவிதைக ளில் சிறப்பாக வெளிப்படுகின்றன.
* "பாரதியின் பேராலே பாபர் சலூன் வைத்திடுவோம் ஊரறிய வள்ளுவர் மார்க் ஊதுபத்தி விற்றிடுவோம்'
என வரும் கவிதை இத்தன்மையானவற் றுள் ஒன்ருகும். சிறந்த கவியரங்கக் கவிஞ. ருள் ஒருவராக விளங்கும் இவர், அவ்விதத் தில் கவிதையை மக்கள் சொத்தாக்கிய வரெனலாம். ஆயினும் ஆரம்ப காலத்தில் இவர் கவிதைகளின் சிறப்பாக விளங்கிய அங்கதம், நகைச்சுவை என்பன அண்மைக் காலக் கவிதைகளில் ஒரளவு மலின முற்று அமைகின்றன என்றே கூறவேண்டும். இவர் போன்று கவியரங்கக் கவிதைகளில் நகைச்சுவையையும், நையாண்டியையும் திறம்படக் கையாளும் தன்மை வி. கந்தவ னத்தின் கவிதைகளிலும்இப்போது காணப் படுகின்றது. இத்தன்மை 'கவி' யின் கவி தைகளில் பிறிதொரு நோக்கில் வெளிப்பு டும் இயல்பினைச் செழுங்கமலச் சிலம் பொலிக் கவிதைகள் உணர்த்துகின்றன.
கவிதைக்குச் சிறப் பா க உரிய உணர்ச்சி பாவமும், ஓசை நயமும் முழுமை. யாக வெளிப்படும் நிலையினை நீலாவணன் கவிதைகள் சிறப்பாக வெளிப்படுத்துவன.
கவிதைக்குரிய பொருள் வேருெரு வகையினவாக மாற்றமடையும் வளர்ச்சி நிலையினை இ. சிவானந்தனின் கவிதைகளில் காணலாம். மரபு வழிப் பொருள்களைத் தவிர்த்து, மிசின், டைனமோ, பெற்ருே மக்ஸ், கிருமப்போன் முதலிய சாதனங்கள் - அதாவது விஞ்ஞானத்தின் வெளிப்பாடு

Page 112
இருபதாம்.
கள் பற்றிக் "கண்டறியாதது" கவிதைகள் பேசுகின்றன. விந்  ைத விஞ்ஞானப் பொருள்களின் மர்மங்கள் யாழ்ப்பாணத் தின் உயிர்த்துடிப்புள்ள பாத்திரங்களின் வாயிலாகப் புலப்படும் புதுமை குறிப்பிடத் தக்கது.
அண்மைக்கால ஈழத்துக் கவிதை வளர்ச்சியின் ஒரு முக்கிய, பாரதூரமான மாற்றநிலை புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியுமாகும். தருமு, அரூப் சிவராம் முதலியோரின் வரவேற்புடனும் வேறு சில ரின் பரிசோதனையுடனும் நுழைந்த புதுக் கவிதை, தா. இராமலிங்கம் முதலியோரது கவிதைகளால் நிலையாகக் குடியேறியது. தென்இந்திய எழுத்துச் சஞ்சிகையின் பாதிப்பும் இவ்வழி விதந்துரைக்கத்தக்கது புதுக்கவிதையின் பொதுவான இயல்பு களைக் கொண்டிருந்தாலும் மு. பொன்னம் பலம், அ. யேசுராசா முதலியோரது புதுக் கவிதைகள் சில ஓசை நயமும், தெளிவும்
கொண்டுள்ளன.
மேலைப்புல, நவீன கலைகளின் தாக்கத் தால் உருப்பெற்ற 'கொங்கிறீற் கவிதை வடிவங்களும் மிக அண்மையில் ஈழத்தில் நடமாடத் தொடங்கியுள்ளன. இத்துறை யில் பேரார்வத்துடன் ஈடுபடுபவர்களாக சபா. ஜெயராசா, சம்ஸ் முதலியோர் உளர். இத்தகைய கவிதைகளின் பயனும் விளைவு களும் விரிவாக ஆய்தற்குரியன.
மேற்கண்ட கவிஞர்கள் சிலரின் கவி தைப் போக்குகளையும் இயல்புகளையும் தொகுத்துப் பார்க்கும் போது ஈழத்துக் கவிதை வளர்ச்சியின் பன்முகப் போக்குக ளேயும், மாற்றங்களையும் இனங்கண்டு கொள்ள முடியும். அவ்வழி, தமிழகத்திலி ருந்து சில விதங்களில் வேறுபட்டும், பல விதங்களில் சிறப்பாகவும் வளர்ந்துவரும் ஈழக் கவிதையின் முனைப்பான போக்குக ளும் புலப்படும்.
ஈழத்திலும், தமிழக ம் போன்று குழந்தை, காதல், தமிழ், பக்தி, கவிஞன், கவிதை, இயற்கைக்காட்சி முதலிய மரபு வழிப் பொருள்சள் பாடும் கவிஞருளர் என் பதை மறுத்தற்கில்லை. இங்கு பட்டியல் தருவது நோக்கமன்றெனினும், “அம்பி

Ger. Gu/ (ræsr/rø ar 93
கவி, இ. நாகராஜன், திமிலைச் சகோதரர், தில்லைச் சிவன், அண்ணல், சாரணுகை யூம், சத்தியசீலன், ஈழவாணன், காரை சுந்தரம்பிள்ளை, அமிர்தநாதர் முதலி யோரை மாதிரிக்குச் சுட்டலாம்; ஆயினும் முற்றுமுழுதாக இப்பட்டியலில் இட்டுப் பாகுபடுத்திப் பார்க்க வேண்டிய தவசிய மன்று. அதுமட்டுமன்று இவர் கவிதைகள் பலவற்றில் குறிப்பிடத்தக்க புதுமைக்கற். பண்கள் புதிய சிந்தனைகள், கருத்துக்கள், நகைச்சுவை, தத்துவச்சாயல் என்பனவு முண்டு. எடுத்துக் காட்டாக, அண்ணலின் "மனையறம்", தில்லைச்சிவனின் "பட்டத்து மச்சினி' , கவீயின் "வரமே தருக வருக", சத்திய சீலனின் ‘என்ன கருத்திலடி.” முதலியவற்றைச் சுட்டலாம்.
புதிய தலைமுறையைச் சேர்ந்த கவிஞர் களுள், எம். ஏ. நுஃமான் முதலியோர் விதந்து குறிப்பிடத்தக்கவராகும். அதிமா னிடன், "நாங்கள் கோபமுற்றெழும். போது.?" "எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது. முதலிய அண்மைக்கா லக் கவிதைகள், அவர் கவிதையின் தனித் தன்மை, சிறப்பு முதலியவற்றைக் காட்டு வதோடு, ஈழத்தில் வளமான எதிர்கால வளர்ச்சிக்கும் நம்பிக்கையூட்டுகின்றன.
ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் இன்னு மிரு போக்குகள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கின. ஒன்று மொழிபெயர்ப்பு, தழுவல் முயற்சிகள், மற்றது, கவிதை நாடகங் கள். இவை விரிவாக நோக்கவேண்டியன வாதலால் இங்கு சுருக்கமாகப் பார்ப்பது கடினமானது.
ஆயினும், கவிதை நாடகங்கள் பற்றிச் சில கூற வேண்டும். நித்திலக் கோபுரம் (1953) தொடக்கம், கடுழியம் வரை இத் துறையில் பல்வேறு வளர்ச்சி நிலையினையே காண்கின்ருேம்; இவற்றுள் கோடை, கோபுர வாசல், கடூழியம் என்பன வெவ் வேறு விதங்களில் முக்கியம் பெறுவன. இத்துறைபற்றிச் சுருக்கமாகக் கூறுவதா யின் "இலங்கை இளைஞர்கள் இத்துறையில் வெற்றிபெறக் கூடும்" என்று நம்பிக்கை தெரிவித்து திருச்சிக் கவிஞர் கலைவாணன் ஒரு முறை (முருகையனுக்கு) எழுதியிருந் தமை வீண்போகவில்லை என்றே கூறத் தோன்றுகிறது. O.

Page 113
GQI Sir Glf II IIH 5 J
g
வி
சீதா மண்ணைக் கிண்டுபவறுக்கு ம ணிற்குள் எத்தனையோ ரகஸ்யங்களு மணங்களும் புதுமைகளும் LO 60 sp திருக்கும்; ஆனல் அவை களை வி மேலான ரகஸ்யங்களும் மணங்களு புதுமைகளும் வாழ்க்கையில் எத்த மறைந்து கிடக்கின்றன; ஒ! வாழ்வு எவ் ளவு அற்புதமானது! என்றவாறு மனி வாழ்க்கையையிட்டு வியப்படைந்து நிற் முர் இலங்கையர்கோன் என்று புனைபெய பூண்ட ந. சிவஞானசுந்தரம். இவ்வியப் டைப் பிறந்த குழந்தைதான் வெள்ளி பாத சரம் என்ற சிறுகதை.
இல் லற வாழ் வில் ஈடுபட்டுவிட்டா கணவன்-மனைவிக்கு எத்தனையோ துன்ப கள், துயரங்கள் ஏற்படலாம். கோபங்க அவமானங்கள் ஏற்படலாம். இப்படி எ வெது வெல்லாமோ வ ரு கி ன் ற ன போகின்றன. அவை இருவர் உள்ளங்க லும் எதையெதையோ ஏற்படுத்தியும் வி லாம். உள்ளங்களும் ஒன்றை நினைத் ஒன்று குமுறலாம். ஆணுல் இறுதியில் இ வரின் அன்புப் பிணைப்பும் அதிகமாவ தான் வாழ்க்கை முறை. "ஊடுதல் காம துக் கின்பம்" என்றல்லவா வள்ளு வ கூறிச் சென்ருன்! ஊடல் கழிய ஏற்படு அன்புப் பிணைப்பை, அந்த அபார சக்திை எதுவும் பிரித்துவிட முடியாது; அது "அ றிற் பாசம்’ என்ற நிலைக்கு உயர்ந்துவிடு

மர்சனக் கண்ணுேட்டம்
ஆ. முகம்மது யெகியா
அந்தப் பாசத்திஞற்ருன் வெள்ளிப் பாத சரத்தை ஆசிரியர் அ மை த் திரு க் கிரு ர் போலும்,
புகையிலைத் தோட்ட விவசாயியான செல்லையாவும், மனைவி நல்லம்மாவும் வல் லிபுரப் பெருமாள் கோயிற் கடைசித் திரு விழாப் பார்க்கச் செல்கின்றனர். மனைவிக் காகக் கண்ணுடி வளையல்கள் வாங்குகிருன். மடியிலுள்ள ஆக முப்பத்தொரு ரூபாயில் முப்பது ரூபாய் கொடுத்து ஒரு சோடி வெள்ளிப் பாத சரமும் வாங்குகிருன். தையற் பெட்டிகூட வாங்குகிருன், தன்னி டம் ஐந்து சதம் மட்டுந்தான் இருந்த போது கூட தன் மனைவிக்கு ஒரு வெற்றிலை பாக்குச் சுருள் வாங்க மறவாத நல்லையா வின் ஆசையைப் பலப்பரீட்சை செய்வது போல் அவளின் இடது காற் சங்கிலி காணு மற் போய்விடுகிறது. அதஞல் ஊடலும் ஏற்படுகிறது. அவர்கள் எதற்காகச் சென் முர்களோ அந்தத் திருவிழாவைப் பார்க்க முடியவில்லை. வண்டி புறப்பட்டு விடுகிறது. வண்டியினுள் ஒரு சிந்தனைப் போராட்டம் நடைபெறுகிறது. ஊடல் நீங்கிவிட அன்பு மேலிடுகிறது. "ஞானகு மாரி" என்ற தேவகாந்தாரி ராகப் பாட்டும் பிறக்கி
ADI •
இதுதான் வெள்ளிப் பாதசரம்.

Page 114
Povorofitử tưfoố đ°/rtỏ......
கதையில் வருகின்ற செல்லேயாவும் ரல்லம்மாவும் எ ல் லா மனிதர்களையும் போலவே பலமும், பலவீனமும், நிறையும், குறையும் உள்ளவர்களாகவே ஆசிரியர் படைத்திருக்கின்ற தன்மை இயற்கையோ டொட்டிய ஆசிரியரின் சிந்தணு சக்தியைக் காட்டி நிற்கிறது. வாழ்வில் முற்றும் நல்ல வன் என்ருே முற்றும் தீயவனென்ருே பாரும் இல்லை. றிச்சர்ட் கம்பர் லாண்ட் "Richard Cumber Land) GTairp gir Sev நாவலாசிரியர் இதைத் தெளிவாக விளக்கு கின்றர். 'மனித இனத்துடன் ஒரளவு பழ கிய பிறகு முழுவதும் நல்ல வனக ஒரு கதா பாத்திரத்தைப் படைக்க நான் முயல வில்லை. ஏனெனில் அப்படி ஒருவரை நான் சந்திக்கவில்லை. நல்ல மனிதனிடமும் ஒரு களங்கம் உண்டு; தீயவனிடமும் ஒரு நன் மைப் பொறியுண்டு' என்கிருர், ஜோர்ஜ் FIT or (George Sand) Tairp Loibocco நாவலாசிரியரின் கருத்தும் இங்கு நோக் கற் பாலது. "மனிதனை உள்ள வாறே படைக்கத்தான் நா ன் விரும்புகிறேன். மனிதன் நல்லவனுமல்ல, 4ெ ட் ட வனு மல்ல. அவன் இவையிரண்டிற்கும் சிறிது அப்பாற்பட்டவன். இரண்டும் கலந்தவ ஞக இருக்கும் அவன், உள் மனத்தின் சக்தி யால் ஒரு சிறிது குறை கலந்த நல்லவஞ கவோ, ஒரு சிறிது நிறை கலந்த கெட்டவ ஞகவோ காட்சியளிக்கிருன்' என்கிருர்.
பாத்திர அமைப்பில் இலங்கையர் கோனுக்கு உண்மையில் ஒரு சிறப்பிடம் இருக்கத்தான் செய்கிறது. "பாத்திரங்க ளின் மன நிலையைச் சித்தரிப்பதில் இவர் வல்லவர்' என்று கலாநிதி கைலாசபதி கூறுவதில் நியாயம் இருக்கத்தான் செய் கிறதென்பதை இலங்கையர் கோனின் சிறு கதைகளைப் படிப்பவர்கள் - குறிப்பாக, வெள்ளிப் பாத சரத்தைப் படிப்பவர்கள் இலகுவில் உணர்ந்து கொள்வர். கதாபாத் திரங்களோடு நாம் ஒன்றிவிடும் தன்மை எங்களையறியாமலே கதை படிக்கும்போது ஏற்படுகிறது. கதையில் நடமாடும் செல்லை யாவையும் நல்லம்மாவையும் உண்மையா கவே எ ங் கே யோ பார்த்திருக்கிருேம் என்ற பிரமையும் அடிக்கடி ஏற்படுகிறது. சில இடங்களில் ஆசிரியரே பாத்திரமாக அமையும் தன்மையும் குரல் கொடுக்கும்

ஆ. முகம்மது யெகியா 95
சிறப்பும் பாத்திரப் படைப்பினுாடே எம் மால் கண்டு கொள்ள முடியாமலில்லை. இவ் வாறு உண்மை போல கதாபாத்திரங்க ளின் உள்ளங்களில் தோன்றும் எண்ணங்க ளையும் உணர்ச்சிகளையும் வாசகர் நம்பும் படி செய்ய முனைகிருரே அதில்தான் ஆசிரி யரின் சாமர்த்தியமிருக்கிறது.
நல்லம்மா தன் கணவனின் கையில் மெதுவாக நுள்ளி (கிள்ளி) 'மாடு தன் பாட்டுக்கு நிற்கட்டும் வாருங்கோ' 'என்று கெஞ்சுவது எமது மனக்கண் முன் ஒரு சிறு பிள்ளைக் காட்சியாக நிழலாடுகிறதல்லவா?
**கோயில் வீதிகளிலும் கடைகளிலும் காணப்பட்டதெல்லாம் நல் லம் மா வின் மனத்தில் ஒரு குதூகலத்தை உண்டாக் கின; வாய் ஓயாது தன் கணவனுக்கு ஏதோ சொல்லிக்கொண்டே சென்ருள். ஐந்து வயதுச் சிறுமியைப் போல முழங் கால்கள் தெரியும்படி தன் ஆடையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வீதியைச் சுற்றி ஒரு 'கெந்தல்" போடவேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது ..." இவ்வாறு ஆசிரியர் கணவனுடன் சென்றவளின் மன தில் இன மறியாத ஒரு வகை ஆனந்த உணர்ச்சி தோன்றியதை எ ப் படி யோ அறிந்துவிடுகின்ருர் . இதில் ஆசிரியரின் ஒரு தத்துவப் புதைப்பும் காணப்படுகிறது. மனதில் ஒரு குதூகலம் ஏற்படவேண்டுமா யின், ஏன் குதூகலம் ஏற்பட்டதோ அதை அவள் முற்ருக அனுபவிக்காத தன்மை; அல்லது, அவளின் ஆசையின் கொந்தளிப் பைத்தான் அக் குதூகலம் காட்டிநிற்கும். இங்கு அவளின் ஆசையையும் வறுமையை யும் ஆசிரியர் இக் குதூகலம் மூலம் படம் பிடித்துக் காட்டும் தன்மை அலாதியானது.
அடுக்குப் பெட்டி வாங்கவில்லை. வாங் கிய பாதச ரத்தின் ஒற்றைக் காலான் கழண்டு எங்கேயோ தொலைந்துபோயிற்று. அன்று மத்தியானம் வீட்டில் சாப்பிட்டது தான். அதன் பிறகு ஒன்று மே யில் கல. வறுமை அவளின் பொறுமையைச் சோதிக் குமாப்போல் இன்று அவளின் அன்புக்கும் அவனுக்குமிடையிலல்லவா பலப்பரீட்சை செய்கிறது. இவ்வாறு வறுமையின் கோரப் பிடியில் சிக்கியவள் "அன்பே தெய்வம்"

Page 115
98 வெள்ளிப் பாத சரம்.
ள்ன்று நாதம் எழுப்புகின்ருற் போல ல்வா செல்லையாவைப் படைத்து விட்டா இலங்கையர்கோன்.
நல்லம்மா திடீரென நின்று தன் இட காலை உயர்த்திக் கையால் தடவிப் பார் கிருள். "ஐயோ! கா ற் சங் கி லி  ைய காணேல்ஃப். ' என்கிருள். 'என்னவடிவாய்ப் பார்!" என்கிருன் செல்லையா "ஒரு காலான் எங்கையோ மணலு குள்ளே கழண்டு விழுந்திட்டுது." என்று அவள் கூறுகின்ற போது நமக்கும் ஐயோ பாவம்-என்றிருக்கிறது; குடும்பப் பொரு ளாதார நிலை எமக்குப் பளிச்சிடுகிறது அந்தளவுக்குக் கதையில் எம்மையும் ஈடுட டுத்திவிட்டார் கதையின் ஆசிரியர். இது அவருக்குக் கிடைத்த பெரிய தொரு வெற்றியென்றுதான் நான் கூறுவேன்.
'கொஞ்சம் கவனமாய் வாறதுக் இகன்ன? உனக்கு ஆட்டம் மெத்திட் போச்சு. ஊதாரி நாய்' மறுகணம் செல் லையா" தன் நாக்கைக் கடித்துக் கொண் டிான். ஆம்! இது முற்றிலும் நியாயப் என்று ஏற்கத் தக்கதாகவே இருக்கிறது. இவ்வளவு உணர்ச்சிதானும் இல்லாவிட டால், அவனை ஒரு கணவன் என்று எப்ட டிச் சொல்ல முடியும்? பொதுவாக, எதை யெதை எப்படியெப்படிப் படைக்க வேண் டுமோ அதையதை அப்படியப்படியே ரசா னுபாவத்துடன் க  ைத யி ன் ஆசிரியா படைத்திருக்கிருர் என்ற திருப்தி எமக்கு ஏற்படுகிறது.
"பயப்பிடாமல் என்னேடை 6uחr " י என்று தன் மனைவியின் கையைப் பற்றிய செல்லையா அவளை இழுத்துக் கொண்டு திர் வான் என்றுதானே எதிர்பார்க்கிருேம்: மாருக சிறிது நேரத்தில் அவள் அழகிலுப் இளஞ் செயல்களிலும், ஏன், தன் மனைவி யின் குதூகலத்திலும் தன்னையே மறந்து, 'அவள் இழுத்த வழியெல்லாம் போய்ச் தொண்டிருந்தான்!” இதை என்னென்பது அன்பின் வலிமையென்பதா? அன் பின் பூெருமையென்பதா? அன்றில், அன்பின் ஆழ்மென்பதா? 'பெட்டை, உனக்காக வேணுமென் ட்ால்' என்ர்ை 'உசிரையும் கொடுத்துவிடு
 

ஆ. முகம்மது யெகியா
வேன். நீ ஒண்டுக்கும் பயப்பிட வேண் டாம்' விவாகம் செய்துகொண்ட புதிதில் அவன் அவளுக்குக் கொடுத்த திருமணப் பரிசு இந்த அன்பின் வலிமையைத்தான். ஆம்! " "செல்லையாவின் இடக்கை அவன் மனைவியின் இடையை நோக்கி நகர்ந் தது. ' அன்பின் சிகரத்தை ஏன் அன்பின் ஆழத்தை என்று கூறலாம், அதைக் காண் கிருன். இல்லை - ஆசிரியர் காண வைக்கி ருர். அன்பே தெய்வம். அதுவே அவர் கொள்கை.
தேசிய அடிப்படையிலும் மண் வளத் தோடும் சிறுகதைகள் புனைய வேன்டுமென் பது இலக்கிய உலகில் சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் வைக்கப்பட் டது. அதற்கு முன்னும் பின்னருங்கூடப் பிரபலம் பெற்ற சிறுகதையாசிரியர்கள் பலர் இலங்கையர் கோன் எழுதிய அளவிற் குத் தேசியத்தையும், மண்வளத்தையும் புலப்படுத்தவில்லை. அதற்குமாரு க வேற்று நாடுகளது இ ல க் கி ய நோக்குகளையும் சொற்பிரயோகங்களையுமே கையாள முற். பட்டனர்.
"அஸ்தமிக்கும் சூரியனின் கடைசிக் கிரணங்கள் பனைமரங்களின் தலைகளை இன் னும் தடவிக்கொண்டிருந்தன. ' யாழ்ப் பாணப் பனைமரங்களின் தலைகளைத் தான். கதை நடக்கும் பிரதேசத்தின் இயற்கை யில்தான் ஆசிரியன் எழிலைக் காண்கிருன். எதார்த்தம் படைக்கின்றன்.
* 'யாரோ மணமகன் ஊர்வலம் வருவ தற்காக விரித்துவிட்ட நிலப்பாவாடை போல் வளைந்து கிடந்த தெருவின் இரு மருங்கிலும் நெடி ய பனை ம ர ங் க ள் மெளனப் பூதங்கள் போல் வரிசையாக ஆல வட்டம் பிடித்தன. ’’ இங்கும் வர் னனை இலங்கையர் கோனின் பழகிப் போன எதார்த்தக் கண்ணுேட்டத்தையே காட்டி நிற்கின்றமை அறிந்து இன்புறற் Ly ft 6iv .
*யாழ்ப்பாணத்தின் நீர் வள மற்ற சொற்ப நிலத்தைத் தம் தளராத முயற்சி ஒன்றினலேயே வளம்படுத்திச் சீவி யம் நடத்தும் புதல்வர்களில் அவனும் ஒரு

Page 116
வெள்ளிப் பாத சரம்.
வன்." என்று இக் கதையில் செல்லையா வைக் காட்டுகின்ற போது, அவர், யாழ்ப் பாண உழவர் வாழ்க்கையில் எவ்வளவு மதிப்பும் அநுதாபமும் கொண்டுள்ளார் என்பதனைக் காட்டுகிறது. சிறுகதை எழுத் தாளன், தான் தேர்ந்தெடுக்கும் விடயங்க ளையும் நிகழ்ச்சிகளையும் எங்ஙனமாக ஜீவன் ததும்ப அமைத்து, அவை எதார்த்தமாக நடந்தது போன்ற பிரமையை நம் மனத் தில் உண்டாக்குகிருன் என்பதில்தானே அக்கதையின் சிறப்பு உள்ளது?
பெண்மையின் மென்மையும், நளின மும், நெளிவும்ஆண்மையின், திண்மையும், வன்மையும், தெளிவும் கலந்த எழுத்துக் கள். இலங்கையர் கோனின் தனித்துவம் "" அவர் படைத்த பெண் பாத்திரங்கள்' எனக் கூறிவிடலாம். நல்லம்மா அவனரு கில் கைகூப்பியபடி மூலஸ்தானத்தை ஒரு தரம் பார்ப்பதற்காக அங்கும் இங்கும் தலையை அசைத்து முயலும் காட்சியில் தான் எவ்வளவு மென்மை, நளினம், நெளிவு, தத்ரூபம், பெண்மையே தெரிகி றதே.
அவரது தமிழ்நடை தனித்தன்மை வாய்ந்தது. குறிக்கோளை அ ப் படி யே கொணர்ந்து கொட்டுந் திறனுடையது. புதுமைப்பித்தனைப் போல் உரைநடைப் பிரயோகத் திறனிலும் இவர் இணை
யற்று விளங்கியமையை வெ ள் வி ப் பாதசரம் காட்டி நிற்கிறது. இலங் கையர் கோனின் ந  ைட காவிய
நயமுள்ள் நடை என்று கூறலாம். ஆடம்பரமில்லாத நடையில் அலுப்புத் தட்டாத வகையில் அவசியமான சம்ப வத்தை மட்டும் கொண்டதாகக் கதையை ஆசிரியர் எழுதியிருப்பது செ ய் திருக் க வேண்டிய தொன்றே. சாதாரண, மிக நீளமில்லாத வாக்கிய அமைப்பு. கதை யைப் படிக்கச் செய்வதில் அந்நடைக்கும் ஒரளவு முக்கியத்துவமுண்டு. இவரின் தமிழ் நடையை எளிய, இனிய, உணர்ச்சிகர மான தமிழ்நடை என்ருல் போதாது; அழ கிய அற்புதமான தமிழ் வசனம் என்று கூற வேண்டும். இத்தகைய தமிழ்நடை கைவ ரப் பெற்ற அவர் ஒரு பாக்கியசாலி என்று சொல்லலாம் அல்லவா?.

ஆ. முகம்மது யெகியா 97
புதுமைப்பித்தனின் சிறு கதை களில் நெல்லைத் தமிழ்போல, பி. எஸ். ராமையா வின் சிறுகதைகளில் மதுரைத் தமிழ் போல, தி. ஜானகி ராமனின் சிறுகதைக ளில் தஞ்சைத் தமிழ்போல, அதே வேளை அவ்வப்பிரதேசங்களையும் கோணம் காட் டுவது போல, இலங்கையர் கோனின் சிறு கதைகளிலும் யாழ்ப்பாணத் தமிழ் விரவி
வருகிறது. "பாத்தியளே!", "பசி இல் லையே?", "வெளிக்கிடுங்கோவேன் கெதி யாய் வீட்டை போவம்', 'ஆட்டம் மெத்
திப் போச்சு போன்ற சொற்களை எமது நா நவில்கிறது; யாழ்ப்பாணப் பிரதேச மும் நமது கண்முன் நிழலாடுகிறது. இக் கதையின் உரையாடல் களெல்லாம் வட ஈழமண்ணில் மணம் கமழும் பேச்சுத் தமி ழில் அமைந்துள்ளதென்றலும் புரிந்து கொள்வதில் எவருக்கும் சிரமமேயில்லை. இலக்கியத்தில் பேச்சுத் தமிழ்" என்ற பிரச்சினைக்கு வெகு அழகாகத் தீர்வு கண்டி ருக்கிருர் இலங்கையர் கோன்.
குறிப்பிட்ட பிரதேசத்தில் க  ைத நடப்பதாக எழுதும்போது அந்தப் பிர தேச வழக்குகளைத்தான் கையாள வேண் டும். மற்றப் பகுதிகளில் உள்ளவர்களுக் குப் புரியாது என்ருல், அவற்றிற்கு அனு பந்தத்திலோ வேறு தக்க இடங்களிலோ விளக்கம் கொடுக்கலாம். அதை விட்டு விட்டு எல்லோருக்கும் புரிய வேண்டுமென் பதற்காகப் பிரதேச வழக்குகளை மாற்றி வேறு வார்த்தைகள் போட்டால் சிறு கதையின் இலக்கியத் தன்மை கெட்டு விடும் என்பதில் சந்தேகமில்லை' என்ற கு. அழகிரிசாமியின் கருத்து இலங்கையர் கோனுக்கும் சம்மதம் போலும்.
""நாற்பது ரூபா பெறுமதியுள்ள மாறு கரைச் சால்வை' ஆம்! இதுதான் செல்லை யாவிடமுள்ள உயர்ந்த பெறுமதி என்று நாம் கூறிவிடுகிருேம். இச் சொற்பிரயோ கம் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் செய்யப்படுவது இன்னும் சிறப்பாயமைகி றது. "இரக்கமற்ற பூமியுடன் தி ன சரி நடத்தும் போர்', 'குதூகலம்" என்பன போன்ற சொல்லாட்சிகளும், ஏன் "குண் டூசியால் துளைக்கப்பட்ட ரப்பர் பலூன் போல" என்ற புதிய உவமையும் கூட எத் தன ஆழமானது; அகலமானது.

Page 117
98 வெள்ளிப் பாத சரம்.
*" என்ன-வடிவாய்ப் பார்!" "கொஞ்சம் கவனமாய் வாறதுக்
கென்ன? 'உனக்கு ஆட்டம் மெத்திப்
G3urrës, ""ஊதாரி நாய்!”*
இதுதான் ஆத்திரமடைந்த செ லேயா தன் மனைவிக்குக் கடிந்து கொள்ளு பாணி. படிமுறையில் ஆத்திர வளர்ச்சிை வரைபடம் கீறிக் காட் டு வது போ சொற்களை வசைத்து, மந்திராலோச செய்து அமைத்தாற் போல மைத்திருச் ருர் இலங்கையர்கோன்.
காதல் வெள்ளத்தில் தோன்றி கோபக் குமிழி, சிறிது நேரம் தன் உருவ தைக் காட்டிவிட்டு மீண்டும், அந்த வெ ளத்திலேயே கலந்து கரைந்துவிடும். சுை யான நிகழ்ச்சியை நளினமாக விவரிக் றது கதை. "கொள்ளிவாய்ப் பிசாசு
*. இற்றை நா கூத்து என்றும் உருமா னது, தமிழ்நாட்டிலே ஒரோப்பிய நாடகமுை
நாட்டுக் கூத்து இ மற்றது விலாசம், விலா நாட்டில் ஆதிக்கத்தோ நாட்டுச் சார்பு கலந்தது பின் எழுந்தவை . நாட óf /r/f/ Gorou v 6ooo/.
நாட்டுக்கூத்தை, (o ovply av Godsuv ras 6y th ?. டின் பழைய இசைமுை கொண்டது. ஆணுல் 6 வெளியே இருந்து வ4 கும்.'

ஆ. முகம்மது யெகியா
என்று தெரித்தும் கணவன் செல்லையா "ஆரோ மீன்பிடிகாரர் குள் கொண்டு போகிருர்கள்’’ என்கிருனே, அதுதான் புரை தீர்ந்த நன்மை பயக்கும் "வள்ளுவப் Guntur’ Gurr?
நல்லம்மா தன் கணவன் செல்லையா
Fல் வின் கையில் "நுள்ளி"யது தொடக்கம் கும் மூலஸ்தானத்தைப் பார்க்க அங்குமிங்கும் தலையசைத்தது, தவில் காரணின் குடுமி அவிழ்ந்தது, ஏன், நல்லம்மா கணவனின் 27 உடலோடு தன் உடலை உராய்ந்து கொண் 法综} டது வரை ஆசிரியரின் பேணுவுக்குத் தப்ப
வில்லை. அதனுல் கதைக்கு ஒரு நிறைவான lu கலை வடிவம் கிடைத்து விடுகிறதல்லவா? த் தமிழிற் சிறுகதை இ லக் கியத் துக் குப் । ଜୀir பூரண வடிவம் கொடுத்த பெருந் தொண் )●」 டில் இலங்கையர் கோனின் இந்த "வெள் 法纷 ளிப் பாத சரம் சிறுகதைக்கும் ஒரளவு
பங்குண்டெனக் கூறிக்கொள்ளலாம்.
డEడా
'ட்களில் நாடகத்தை நாட்டுக் (Drama) 676örgp/th L2/?2 yL//f. Çıp sör பிறந்து வளர்ந்தது. பின்னது,
]றயைப் பின்பற்றி எழுந்தது.
ரு வகைப்படும் ஒன்று நாடகம், சம் விசயநகர மன்னர்கள் தமிழ் டு இருந்தபோது/ எழுந்தது, வட து, பதினேழாம் நூற்ருரண்டின் கங்கள் முழுக்க முழுக்கத் தமிழ்ச்
தென்மோடி, வடமோடி என ரிப்பர். தென் மோடி, தமிழ் நாட் றப்படி அமைந்த பாட்டுக்கஃ7க் வடமோடியில் தமிழ்நாட்டுக்கு ந்த இசைமுறைகளும் கலந்திருக்
பேராசிரியர் மு. கணபதிப்பிள்ளை

Page 118
ஈழத் தமிழ்ச் சிறுகதை GIGIT fif
திற்காலத்தில் எழுந்த மேனுட்டுச் சரக்கென்று புதுமைப்பித்தனுல் வர்ணிக் கப்பட்ட சிறுகதை வடிவம் ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் எழுத் தாளரின் கவனத்தைக் கவர்ந்தது. மேனுட் டுச் சிறுகதைகளையும் தமிழ் நாட்டெழுத் தாளரின் சிறுகதைகளையும் நோக்கி ஈழத் திலும் சிறுகதைகள் எழுந்தன. இவ்வாறு ஈழத்திற் பிறந்து வளர்ந்த சிறுகதையின் வரலாற்றை அவதானிக்கும் போது, அதனை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்க லாமென்று தோன்றுகிறது, முதலாவதை ஆரம்பகாலம் என்றும், இரண்டாவதை மறுமலர்ச்சிக்காலம் என்றும், மூன்ருவ தைத் தேசிய விழிப்புணர்ச்சிக்காலம் என் றும் அழைக்கலாம். அவ்வக் கால கட்டங் களின் முக்கிய பண்புகளைக் கருத்திற் கொண்டு இவ்வாறு பிரித்து நோக்கப்படு கின்றதேயன்றிச், சிறுகதையின் வரலாற் றைக் கோடு கட்டி அடக்கும் எண்ணத்தின் விளைவானதல்ல இப்பகுப்பு.
மேனடுகளிலே நிலமானியச் சமூக அமைப்பானது நிலைதளர்ந்த வேளையிலே, அதாவது சமூகத்துக்கும் தனி மனிதனுக் கும் இடையிலிருந்து வந்த பாரம்பரிய உறவு புடைபெயர்ந்த போது, தோன்றிய புனைகதையின் ஒரு வடிவமே சிறுகதையா கும். இவ்வாறு உதயமான சிறுகதையின் வடிவம் தமிழ் எழுத்தாளரைப் பிணித்த காலத்திலே அத்தகைய ஒரு சமூக மாற்றம் மேனுட்டளவு வேகத்திலே தமிழ் நாட் டிலோ ஈழத்திலோ ஏற்பட்டதாகக் கூறு தல் சாலாது. ஆயினும், 1930ஆம் ஆண்

சி. தில்லைநாதன் M. A., M.It.
டையொட்டிச் சனநாயகக் கருத்துக்களும் அமைப்புக்களும் தலையெடுத்தமையையும், கல்வி வாய்ப்பு மக்களுக்குப் பெருமளவில் கிடைத்தமையையும், மத்தியதர வர்க்க வளர்ச்சியையும் விழிப்பையும், பத்திரிகை களின் தோற்றத்தையும் கவனத்திற் கொள்ளவேண்டும். இவற்றின் விளைவாகத் தனிநபரைக் கதாநாயகனுகக் கொண்டு அவனது பிரச்சினைகளைப் பொருளாக்கிச் சிறுகதைகள் படைக்க நல்ல வாய்ப்பும் வச தியும் ஏற்பட்டன.
என்ருலும், மேனட்டிலிருந்து இறக்கு மதியான ஒர் இலக்கிய வடிவால் வசீகரிக் கப்பட்ட எமது ஆரம்பகால எழுத்தாளர், அதன் உருவ அமைதிக்குக் கொடுத்தளவு முக்கியத்துவத்தைத் தமது சமகாலச் சமூக மனிதப்பிரச்சினைகளுக்குக் கொடுத்தனர் என்று கூறமுடியாது.
ஈழத்தின் ஆரம்பகாலச் சிறுகதை யெழுத்தாளர் என்ற பெருமைக்கு முக்கிய உரிமை பூண்டவர்கள், சி. வைத்திலிங்கம், காலஞ்சென்ற இலங்கையர் கோன் (நசிவ ஞானசுந்தரம்), சம்பந்தன் ஆகியவர்கள். மேனுட்டுச் சிறுகதைகளும் தமிழ் நாட்டு * மணிக்கொடி" க் குழுவின் படைப்புக்களும் இவர்களுக்கு ஆதர்சமாக விளங்கின. "மணிக்கொடிக்’ குழுவின் முடிசூடா மன் னணுக மதிக்கப்பட்ட புதுமைப்பித்தணு டையதைவிட, கு. ப. ரா. ந. பிச்சமூர்த்தி மெளனி, சிதம்பர சுப்பிரமணியன் ஆகிய வர்களின் செல்வாக்கு இவர்களின் எழுத் துக்களிற் பெரிதும் காணப்படுகிறது. சி.

Page 119
100 ஈழத் தமிழ்ச்.
வைத்திலிங்கம் காவிய கலா ரசனேயாலு மென்மையான உணர்வுகளாலும் உந்த பட்டவர். இலங்கையர்கோன் கிரா வாழ்க்கையில் ஈடுபட்டவர்; ஆண்பெண் உறவினைத் தடம்புரளாது நளினமாகச் சி தரிப்பதில் வல்லவர். சம்பந்தன் காந்தீ ஆத்மீக நெறியின் வளர்ச்சியில் நாட்ட
கொண்டவர்.
பொதுவாக நோக்கும் போது, ம தாபிமானமும், இலட்சிய ஏக்கமும், த துவ விசார ஈடுபாடும், கலையழகிற் கவ மும் கொண்ட இம்மூவரும் உன்னத ம எழுச்சிகளுக்கு உருவம் கொடுக்க முயன் னர் எனவும், தமது படைப்புகள் சிறந் சொல்லாட்சியும் உருவ அ  ைம தி யு  ெப ா ரு ந் தி ய ன வாய் அமையவேண் மென்று விரும்பினர் எனவும் கூறுவ முழுக்கத் தவழு காது. 'இலக்கிய பூர் மான கலையழகும், க ற் பனை வள மு நிறைந்த கதைகளே இன்றல்ல-எப்பொ ( தும் மக்கள் விரும்பிச் சுவைக்கிறர்கள் என்று சி.  ைவத் தி லிங் கம் (வீரகேச 24 - 10 , 71) கூறியிருப்பது இங்கு அ தானிக்கத்தக்கது.
கால தேச வர்த்தமானங்களை கடந்து உயர்ந்து உணர்வுகளுக்கும் நன்ை தீமைப் போராட்டங்களுக்கும் தலைை தந்து அமைந்த இவர்களது படைப்பு களிலே சம்பவங்களின் தொடர்பாக தோன்றும் உணர்ச்சிகளுக்கு மிகுந்த முக் யத்துவமளிக்கப்பட்டிருக்கிறது. ஆனல் பாத்திரங்கள் தாங்கள் இயங்கும் கால தோடும் நிலத்தோடும் சமூகத்தோடு தொடர்பின்றி விட்டுவிடுதலையாகி நிற்கி றன. சி. வைத்திலிங்கம், இலங்கைய கோன் ஆகியோர் கதைகளில் இலங்ை வர்ணனைகள் உண்டெனினும், இலங்ை மண்ணுேடு பிணிக்கப்பட்ட மனிதப் பிரச் னைகள் சிறப்பாய் எடுத்தாளப்பட்டிருப் தாய்க் கூற முடியவில்லை. எமது எழுத்த ளர்கள் தம்மைச் சூழ்ந்துள்ள பிரச்சி களை ஒன்றி யுணரப் பல வருடங்கள் பிடி தன. ஆயினும், இலங்கையர்கோள் தமது பிற்காலக் கதைகளில் ஈழத்து பேச்சு வழக்கினைக் கையாண்டு, பிற்கா ஈழத்து எழுத்தாளருக்கு அத்துறையி

சி. தில்&லநாதன்
p
t
:
L
முன்ளுேடியானமை குறிப்பிடத்தக்க ஒன் ருகும்.
எமது ஆரம்பகால எழுத்தாளரின் கதைகளைத் தமிழ் நாட்டிலிருந்து வெளி வந்த 'கலைமகள்", "கிராம ஊழியன்’ போன்ற பத்திரிகைகள் சங்கோஜமின்றி வெளியிட்டன. காலப்போக்கில் ஈழத் தோர் படைப்புக்கள் அப்பத்திரிகைகளின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவாமற் போன தால், ஈழத்து எழுத்தாளர் உள்நாட்டுப் பத்திரிகைகளை நாடவேண்டியதாயிற்று. இலட்சிய நோக்குடன் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைகளே கால கதியில் விற்பனை வளர்ச்சி வேண்டி மக் களுக்குக் கவர்ச்சி தரவல்ல விடயங்களை வெளியிடத் தொடங்கின. 'மணிக்கொடி" கூடச் சினிமாச் செய்திகளை வெளியிடத் தொடங்கியது.
1930இல் ஈழத்திலே தொடக்கப் பட்ட 'ஈழகேசரி’ பத்திரிகை எமது நாட்டு எழுத்தாளருக்கு இடங்கொடுத்ததாயி னும் ஓரளவு சுதேச நோக்குத் தலேயெ டுக்க உதவிய அப்பத்திரிகையும் தன் ஆரம்ப காலத்தை இந்திய விடுதலை, காந் தீய இயக்கங்களின் நிழலிலேயே கழித்தது எவ்வாருயினும், 1940ஆம் ஆண்டை ஒட்டி ஈழத்தினருள் பலர் சிறுகதைத் துறையில் ஆர்வங்கொண்டு ஈடுபட உற்சாகமளித் தது "ஈழகேசரி"யாகும். புதிய இலட்சிய வேகத்தோடு தமிழ் நாட்டிலிருந்து வெளி வந்த "கலாமோகினி", கு. ப. ரா. வின் "கிராம ஊழியன்'. "பாரததேவி முதலிய பத்திரிகைகளும் இவர்களை எழுதத் தூண் டின.
தி. ச. வரதராசன், வ. அ. இராசரத் தினம், கனக-செந்திநாதன், அ. செ. முரு கானந்தம், அ. ந. கந்தசாமி, சு. வே. சொக்கன் முதலியோரை முக்கியமாகக் கொண்ட இவ்விளைஞர் பரம்பரையின் தோற்றத்தோடுதான் மறுமலர்ச்சிக்காலம் என்று அழைக்கத்தக்க ஒரு காலம் ஈழத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் உதயமாகி
ஈழத்தமிழ்ச் சிறுகதை, உருவிலும் திருவி லும் சிறக்க உதவியது.

Page 120
ஈழத் தமிழ்ச்.
ஆரம்ப கால எழுத்தாளர்களிடம்இதி சாச, சமய, கலையழகீடுபாடு மிகுந்து காணப்பட, ஈழத்து வாழ்க்கைப் பிரச்சினை களை எடுத்து நோக்கத் தலைப்பட்ட இம் மறுமலர்ச்சி எழுத்தாளர்களிடம் ஒர் இலட்சிய வேகம் மிகுந்து காணப்பட்டது.
தமிழ் மறுமலர்ச்சி இலக்கியத்தின் வெள்ளி முளைப்பு என்று அறிவித்துக் கொண்டு தொடங்கிய 'மணிக்கொடி’ திசை புரளவே, மறுமலர்ச்சி இலக்கியத் திற்கென்று தமிழ் நாட்டிற் கலாமோ கினி’ இதழ் தொடக்கப்பட்ட அதே 1942ஆம் ஆண்டில், ஈழத்தில் இம்மறு மலர்ச்சி எழுத்தாளர்கள் மறுமலர்ச்சி’ என்ற இதழை ஆரம்பித்தார்கள். அவர் களது இலக்கிய ஆர்வத்தையே முதலீடா கக் கொண்டு தொடக்கப்பட்ட இவ்விதழ் எழுத்தார்வத்தை வளர்க்கத் தொடங்கிய தோடு, முடிந்துவிட்டது. யாழ்ப்பாணத் தமிழன் தனித்துவத்தையும் பெருமையை யும் கூறிக் கொண்டு, தொடங்கிய இவ் விதழ், தென்னிந்தியா காட்டிய திசையிற் சென்ற மந்தைப் போக்குப் பின்ஞல் மாற ஒருவகையிலே தொடக்க முனையாக அமைத்தமையையும் மறந்துவிடலாகாது.
இலங்கை சுதந்திரம் பெற்றமை குறிப் பிடத்தக்க சமூக, தேசிய விழிப்புணர்வினை எம் மக்களிடையே ஏற்படுத்தவில்லை. "'என்றெம தன்னைகை வி ல ங் கு க ள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?' என்று ஏங்கியெழுந்த பாரதத்தையொத்த போக்கு இலங்கை யிற் காணப்படவில்லை. சுதந்திரம் பெற் றுப் பத்து வருடங்களுக்கு மேற் சென்ற பின் பகீரதன் என்ற ஓர் எழுத்தாளர் தென்னிந்தியாவிலிருந்து வந்து,சிறுகதைத் துறையில் ஈழம் தமக்குப் பத்து வருடங்கள் பின் தங்கியிருக்கின்றதென்று கூறிய போதோ அல்லது அதற்கும் பத்து வருடங் களுக்குப் பின் கி. வா. ஜகந்நாத ஐயர் (தமிழிலக்கிய ஏடெதையும் பார்க்காதஓரு பிரபல சினிமா நடிகையுடன் சமீபத்திலே தமது வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கலை இலக்கியச் சர்ச்சையை நடாத்திய அதே ஐயர்) ஈழத்தவர் எழுதுவது தமக்குப் புரியவில்லை ஒன்று கூறியபோதோ ஏற்பட்

சி. தில் சீலநாதன் 01
டளவு சுயமான விழிப்புணர்வினைக் கூடச் சுதந்திரம் எமக்குத் ஏற்படுத்தாமம் போனமை துர்ப்பாக்கியமே.
சுதந்திர ஈழத்திலே பாராளுமன்றத் தேர்தலுக்கு நின்ற தமிழ்க் காங்கிரஸ், "சுதந்திரன்' ஏட்டினைத் தொடங்கியது. "தமிழனென்று சொல் லடா தலைநிமிர்ந்து நில்லடா" என்று மேடைகளில் முழங்கிய இக்கட்சியினர், ஈழத் தமிழ் மக்களிடையே தமிழுணர்வினை வளர்க்க எத்தனித்தனர். இதே காலத்தில் இந்தியாவில் நடந்த தனித் தமிழ், சுயமரியாதை, சீர்திருத்த இயக்கங்களின் நிழ அலு ம் ஈழத்தமிழரி டையே பரவியது. பெருமளவில் இங்கு விற். பனையான திராவிட முன்னேற்றக் கழகக் கதைகளும் தமிழ்ச் சமுதாயச் சீர்திருத் தம், தமிழர் பெருமை ஆகியவற்றைக் கரு வாகக் கொண்டிருந்தன. சமத்துவ, இலட் சிய நோக்குக் கொண்ட எமது எழுத்தா ளர்களையும், தி. மு. க. ஏடுகளின் தீண் டாமை, சமயச் சீரழிவு, சீதனம், பெண் ணடிமை , மூடநம்பிக்கை பற்றிய கருத்துக் கள் கவர்ந்தன.
இச் சூழ்நிலையில் வளர்ந்த சமூக சீர்தி ருத்த ஆர்வமானது. சமூக உணர்வு படிப் படியாக வலுவடையக் காலாயிற்று என லாம். இக் காலகட்டத்திலே ஈழச்சிறுகதை இலக்கிய உலகிற் புகுந்தவர்களில் முக்கிய மானவர்கள் என்று எஸ். பொன்னுத்துரை, டொமினி க் ஜிவா, கே. டா னி ய ல் , என். கே. ரகுநாதன், செ. கணேசலிங் கன், சில்லையூர் செல்வராசன், சிற்பி முத லியவர்களைக் குறிப்பிடலாம். சில மறும லர்ச்சி எழுத்தாளர்களின் தொடர்பினுற் ‘சுதந்திரன்' பத்திரிகை இவ்வெழுத்தா ளர்களின் படைப்புக்களை வெளியிட்டது. ஏனைய பத்திரிகைகள் பிச்சை போடுவது போல இவ்வெழுத்தாளர்களின் கதைகளை எப்போதாவது போட்டன".
1 95 6 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தைத் தான் தேசிய விழிப்புணர்ச் சிக் காலமென்று அழைத்தல் பொருந்தும். பாடசாலைகளை அரசு கை யேற்ற தும், போக்குவரத்துச் சாதனங்கள் தேசியமய மானதும், சிங்களம் அரச மொழியான

Page 121
'02 ஈழத் தமிழ்ச்.
தும், தாய்மொழிமூலக் கல்வியும் ஈழத் தமிழ்ச் சமூகத்திலும் தேசிய விழிப் பு னர்ச்சி வளரக் காலாயிற்று. இந்நாட் டிலே தமிழுக்கும் தமக்குமுரிய இடம் பற்றி பும், தமது பாரம்பரியம் பற்றியும், தமக் குத் தனியாயுரிய பிரச்சினைகள் பற்றியும், இந்நாட்டிலே தமக்குரிய எதிர்காலம் பற் றியும், தம் சமூகத்திலுள்ள குறைபாடுகள் பற்றியும் ஈழத்தமிழ் எழுத்தாளர் மிகுதி யான ஆர்வத்தோடு சிந்திக்கத் தலைப்பட்
L. Gb85Y T7 .
1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் சீர்தி ருத்த ஆர்வத்தோடும் சிறந்த சமூக உணர் வோடும் சிறுகதை உலகிற் புகுந்து தளர் நடை நடந்த எழுத்தாளர்கள் இக்காலத் திற்ருன் காலூன்றித் தலைநிமிர்ந்து நின்ற னர் . அகஸ்தியர், காவலூர் ராசதுரை, ஈழத்துச் சோமு, நீர்வை பொன்னையன், நந்தி, அ. முத்துலிங் தம் முதலியவர்களும் இவர்களோடு சேர்ந்து விட்டனர்.
நூலுருவில் அதற்குமுன் ஒரிரு சிறு கதைத் தொகுதி களை யே கண்ட ஈழம் 1956ம் ஆண்டுக்குப் பின் ஐம்பதுக்கு மேற் பட்ட தொகுதிகளைக் கண்டது. நூல்கள் பற்றிய விபரங்களை ஈழத்துத் தமிழ்நூல் வழிகாட்டி (கனக செந்திநாதன்-1966), வரதரின் பல குறிப்பு (நான்காம் பதிப்பு1971), உலகத் தமிழாராய்ச்சிக் கழகத் தின் இலங்கைக் கிளை வெளியிட்ட தேர்ந்த நூற்பட்டியல் (1971) ஆ கி ய வ ற் றி ற் பார்க்க வியலும்.
இக்காலத்தில் ஈழத் தமிழ்ச் சிறுகதையு லகின் முன்னணியிலே நின்ற திறமை வாய்ந்த பலர் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கீழ்ப்படிகளிலிருந்து வந்தவர்கள் என்ப தும், அவர்கள் வலுவுள்ள பல புதிய செய் திகளைத் துடிப்போடு சொல்ல வந்தவர் கள் என்பதும், இதுவரை பலர் கையாளத் தவறிய அல்லது தயங்கிய பிரச்சினைகளைத் துணிவோடும் திறனுேடும் எடுத்து நோக்கி யவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதா கும். சமூகத்திற் புடை நாற்றமெடுத்த சாதிக்கொடுமை போன்ற பிரச்சினைகளை நேருக்கு நேர் நோக்கி இவர்கள் பல சிறுக தைகளைப் படைத்தார்கள்.

சி. தில் சீலநாதன்
தமிழ் நாட்டு எழுத்தாளர்களுக்கு இங் கிருந்து பணம் அனுப்புவதைக் கட்டுப்ப டுத்திய செலாவணிக் கட்டுப்பாடு ஈழத் துப் பத்திரிகைகளை ஈழத்தெழுத்தாளர் கதைகளை வெளியிட வைத்தது. தமது தென்னிந்தியாவின் அபிமான நட்சத்திர எழுத்தாளர்களின் கதைகளை அன்றி உள் ளூரவர்களின் எழுத்துக்களை ஈழத்துப் பத் திரிகைகள் தாங்கிவந்தபோது, முகஞ்சுழித் தவர்கள் கூடப் பல நல்ல சிறுகதைகளை எமது நாட்டின் எழுத்தாளர் படைத்தமை யைக் கண்டு வியந்தனர்.
ஈழத்துச் சிறுகதை வரலாற்றைப் பின் னிழுத்துச் செல்லப் பகீரதன் எடுத்த பிர யத்தனமும், தமிழ் நாட்டுப் பத்திரிகைக ளின் பராமுகமும், சிறுகதை அகத்தியவி லக்கணத்துள் அடக்காத இழிசன வழக் கென்ற மரபு வாதமும் எமது சிறுகதை எழுத்தாளரிடையே தமது திறமையை வெளிக்காட்டும் ஆர்வத்தைத் தூண்டின.
ஈழத்துக்குச் சிறப்பான எதார்த்தப் பிரச்சினைகளை எடுத்தாண்டு ஈழப் பேச்சுத் தமிழைக் கலந்து எழுதப்பட்ட அவர்களது சிறுகதைகள், ஆரம்பகால எழுத்தாளரின் கதைகளைப் போலப் பொது நோக்கோடு உருவ அழகுக்கு முக்கியத்துவம் தராமை யாலும், தமிழ் நாட்டுப் பத்திரிகைகளின் விற்பனைப் பசிக்குத் தீணி போடும் வகையில் அமையாமையாலும், ஈழத்துப் பத்திரிகை ளையே நம்பி நின்றன; எமக்கென ஒரு பாரம்பரியம் உண்டென முரசறைந்து நின் дp60т.
ஈழத்தின் பாமர ரசனைக்குத் தமிழ் நாட்டுப் பத்திரிகைகளே விருந்தளித்தா லும், பிரசித்தி பெற்ற சிறுகதை எழுத்தா ளர்கள் பத்திரிகைத் துறையில் ஏகபோக உடைமையாளராக விலைக்கு வாங்கப்ப டும் தமிழ் நாட்டினைப் போன்ற நிலை இங் கில்லாமையிஞலும், தரம் வாய்ந்த பல சிறுகதைகள் தோன்றக் கூடியதாயிருந் தது. தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் சினிமா நட்சத்திரங்களின் பெயர்களிலே க  ைத களை வெளியிடுவது போன்ற மலிந்த விற் பனை உத்திகளைக் கைக்கொண்ட வேளை

Page 122
ஈழத் தமிழ்ச்.
யில், ஈழத்து எழுத்தாளர் சிறுகதை உத்தி யிற் பல கனமான பரிசோதனைகளை மேற் கொண்டனர்.
செ. கதிர்காமநாதன், செ. யோகநா தன், யோ. பெனடிக்ற் பாலன், தெளி வத்தை யோசப் முதலிய பல புதிய இளை ஞர்களும் ஈழத்துச் சிறுகதை உ ல கி ற் சிறந்த சாதனைகளை நாட்டி வருகின்றனர். தமிழ்ச் சிறுகதையானது பரப்பில் வளர வும் பண்பிற் சிறக்கவும் ஈழத்து எழுத்தா ளர் கணிசமான அளவில் உதவியிருக்கின் ருர்கள் என்பது நிச்சயம்.
LIIIII
*சரித்திர கால எல்ஆலக்.ெ யாழ் எனப் பெயரிய குழவிய பேசி, இடையர் இடைச்சிய என்னும் பேதைப் பருவச் பாடினியொடும் நாடெங்குந்த களிப்பெய்த இன் சொற் கூறி பெயரொடு பெதும்பைப் பரு ரொடு சென்று, குறுநில தமிழ்ப் புலவரும் கொடைவ பெய்தும் வண்ணம் நயம்பட மங்கைப் பருவ மெய்தி, அ ஆடையும் அணிகலமும் பூண் திறமைகாட்டி, மடந்தைப் ப திருநீல கண்டப் பெரும் பா அணியாரோடும் அம்மைu/ கோயில்கள் பலவற்றை வல னுலே அன்பருள்ளத்தின் உ பாராட்டப்பட்டு அரிவைப் ப ளங்குமரிகளுக்கு இன்னுயிர் யாழ் என்னும் மென்மொழி ,
- “u Tü, 5

சி, தில்&லநாதன் 103
இறுதியாகச் சமீபகாலத்திலே தலை யோங்கும் ஒரு தன்மையினைக் குறிப்பிட, வேண்டும். தமிழ் நா ட் டு ப் பத்திரிகை இறக்குமதி கட்டுப்படுத்துவதையொட்டி, அப்பத்திரிகைகள் வசீகரித்து வைத்திருந்த வாசகர் வட்டத்தைக் கவரும் வகையிலே பல கதைகள் இங்கு வெளிவருகின்றன. அதிர் ச் சி யூ ட் டு ம் தொடக்கங்களையும், திடீர்த் திருப்பங்களையும், சுப முடிவுகளை யும் கொண்ட மிகையுணர்ச்சிக் கதைகளுக் கும், முதிரா இளமைக் கற்பனைகளுக்கும் ஈழத்தில் உள்ள சந்தை எதிர்காலத்திற் பெருக்குமா?
கதை
கட்டாத காலத்திலே வில்லி ாயு/தித்து, மழ&லச் சொற் ரை மகிழ்வித்துச் சீறியாழ் சிறுமியாகி பாணனெடும் திாந்து ஏழைகளும் இதயங் ப் பின்பு பேரியாழ் என்னும் வ மெய்திப் பெரும் பாண மன்னரும் முடிமன்னரும் ஸ்ளல்களும் கேட்டு வியப் உரை பகர்ந்து அதன்பின் ப்பருவத்திற்கேற்ப புதிய "டு நாடக அரங்கத்திலே ருவம் வந்து எய்துதலும், ணரொடும் மதங்க துளா /பர் உறைகின்ற திருக் ம் வந்து, தெய்வ இசையி நக்கி முத்தமிழ் விரகராற் ருவம் எய்துதலும், அரசி பாங்கியாகி,. நின்ற
5ங்கை.”
ரலில் சுவாமி விபுலானந்தர்.

Page 123
பாரதியின் ஸ்
- 85. P.
“இ,
ச்சிறிய செய்யுள் - நூல் விளுே தார்த்தமாக எழுதப்பட்டது. ஒரு சில பாட்டுக்கள் இன்பமளிக்கக்கூடியதானுலும் பதர் மிகுதியாகக் கலந்திருக்கக் கூடும். இதன் இயல்பு தன் கூற்றெனப்படும். அதா வது, கதாநாயகன் தன் சரிதையைத் தான் நேராகவே சொல்லும் நடை. இக் காவிய முறை நவீனமானது. இஃது தமிழறிந்த நூலோர்கள் அங்கீகரித்துத் தக்கதுதாஞ என்று பார்க்கும் பொருட்டுச் சிறிய நூலொன்றை முதலில் பதிப்பிடுகிறேன். இதனைப் பதம்பார்த்து மேலோர் நன் றென்பாராயின் இவ்வழியிலே வேறுபல வெளியாக்குவேன்.""
இவ்வாறு 1910ம் ஆண்டு வெளியிட்ட தமது "ஸ்வசரிதை” என்ற சிறிய நூலின் முகவுரையிற் குறிப்பிட்டார் பாரதி. அவர் குறிப்பிட்டது போலவே 'ஸ் வசரிதை' என்ற இந்தச் சிறிய நூல் வினுேதார்த்த மான ஒன்றுதான். இலக்கியத்துறையில் சிறப்பாகக் கவிதைத்துறையில் அவர் செய்த புதிய முயற்சிகளுள் ஒன்ருகவே இது குறிப்பிடக்கூடியது.
வழக்கமான சுயசரிதை (Autobiography) முறையில், தான் பிறந்தது முதற் கொண்டு நூலை எழுதிய காலம் வரை உள்ள வாழ்க்கைச் சரிதம் முழுவதையும் வரன் முறையில் இங்கு பாடிஞரல்லர் பாரதி. கழிந்துவிட்ட வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கையில், மனதில் பதிந்து விட்ட சில சம்பவங்கள், வாழ்க்கையில் அழுத்தமாகத் தம் முத்திரையைப் பதித்து விட்ட நிகழ்ச்சிகள்தாம் இவர் ஸ்வசரிதை

வசரிதை -
சில குறிப்புகள்
ந்திரலேகா -
யில் இடம் பெறுகின்றன். இவ்வாறு வரன் முறையாகவன்றி வாழ்க்கையைப் பின் னுேக்கிப் பார்க்கும் போது மனதில் தைக் கும் சம்பவங்களையே கவிதைகளாக்கி அவற்றின் தொகுப்பை ஸ்வசரிதை என வெளியிட்டது, நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு புதுமையான முயற்சியாகவே f காட்சியளிக்கின்றது.
r சுயசரிதை என்பது நவீன இலக்கிய வகைகளிலே சாதாரணமான ஒன்றுதான். தமிழிலும் மூலம், மொழி பெயர்ப்பு ஆகிய
இருவகைகளிலும் இது கணிசமான அளவு உள்ளது. எனினும் இச் சுயசரிதைகளுடன் பாரதி ஸ்வசரிதை என்ற பெயரில் வெளி யிட்டிருக்கும் கவிதைகளை ஒப்பிட்டு நோக் கும் போது இவற்றிடையே பொருள் அள விலும் கூறும் முறையிலும் சுாணப்படும் வேறுபாடு விதந்து கூறத்தக்கது. இந்த வேறுபாடே பாரதியின் புதுமைப் பாதை யைத் தெளிவுறுத்தி அவர் மனப் போக்கு இலக்கியக் கொள்கை என்பவற்றையும் உணர்த்தி விடுகிறது. ஒரு பானை சோற். றுக்கு ஒரு சோறு பதந்தானே.
பாரதியின் சமகாலத்தவரும் பாரதி போலவே நாட்டு விடுதலை நாடிய வீரரும் இலக்கிய ஆர்வலரும் ஆசிரியருமான வ.
உ. சிதம்பரம்பிள்ளையும் ஒரு சுயசரிதைப் பாடல் பாடியிருக்கிருர், பாரதியின் வேறு பாட்டைத் தெளிவதற்கு வ. உ. சியின்
சுயசரிதையை இங்கு ஒப்பிடுவது பயன் தரும், வ.உ.சி. யின் சுயசரிதையும் கவிதை
t யில் எழுதப்பட்டதுதான். ஆளுல் இவ் விரண்டையும் அருகருகே வைத்துப் பார்க்

Page 124
பாரதியின்.
கும் போது இவ்விரு இலக்கிய கர்த் தாக்க ளுக்கு இடையில் உள்ள வேற்றுமையும் அது அவர்கள் இலக்கியப்படைப்பில் பிரதி பலித்தவாறும் தெரிகிறது. அகவற்பாவில் தம் சுயசரிதையைப் பாடிய வ. உ. சி, தமது பிறப்பு, வளர்ப்பு, கல்வி, தொழில், மணம் என்று ஒவ்வொன் ருக ஒழுங்கு பிச காத முறையில் எழு தி க் கொண்டு போவார். அவ்வாறு கூறும்போதும் முத லில் நாட்டுவளம், நகர்ச்சிறப்பு, குடும்ப வரலாறு என்பவை புராண மரபில் கூறுவ தைக் காணலாம். பழந்தமிழ் இலக்கியங் களில் மிகுந்த புலமை கொண்டவரும், திருக்குறள், தொல்காப்பியம், சிவஞான போதம் எனும் நூல்களுக்கு உரையெழுதி யமையையே தமது முக்கிய இலக்கியப் பணியாகக் கொண்டவருமாகிய சிதம்பரம் பிள்ளை இவ்வாறு பாடியதில் வியப்பில்லை. இவ்வாறு புராணமரபில் தம் வரலாறு கூறும்போது, வ. உ. சி, அவ்வரலாற்றுள் தான் கலந்த நிலையையோ, இணைந்த நிலை யையோ, அதன் காரணமாகப் பாக்களில் வெளிப்படும் உணர்ச்சிக் குமுறலையோ, ஆத்திரத்தையோ, இன்பத்தையோ, துன் பத்தையோ காணமுடிவதில்லை. ஒரே சீராகச் செல்லும் ஒழுங்கான அகவற்பா வில் எவ்வித ஏற்ற இறக்கமுமின்றியே தம் சரிதையைக் கூறிப்போவார் அவர். ஒரு narrater போன்று அவர் செயற்படுகிருர்,
பாரதியின் சுயசரிதை அவ்வாறமைந் ததன்று. சுருங்கச் சொன்னூல் வ. உ. சி. சரிதையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது அது. விருத்தப்பாவில் அமைந்த பாரதி யின் ஸ்வசரிதையில் வாழ்க்கை பற்றி அந் தச் சமயத்தில் அவருக்குட்பட்ட உண்மை யொன்றே முதற் பாடலாக இடம் பெறு கிறது. "வாழ்வு முற்றும் கனவெனக்கூறிய
மறைவலோர் தம் உரையிழையன்று காண் தாழ்வுபெற்ற புவித்தலக் கோலங்கள்
சரத மன்றெனல் யானுமறிகுவேன் பாழ்கடந்த பரநிலையற்றவர் .
பகருமந்நிலை பார்த்திலன் பார்மிசை ஊழ் கடந்து வருவதுமொன்றுண்டோ
உண்மை தன்னிலோர் பாதியுணர்ந்
திட்டேன் , ** என வாழ்வுபற்றிய விதித்தத்துவத்துடன் தொடங்கிய பார தி தன் பிறப்பு, வளர்ப்பு, ஊர், தந்தை தாய் என ஒன்றை யுமே குறிக்கவில்லை. எடுத்த எடுப்பில் தம்

க. சித்திரலேகா 105
வாழ்க்கைச் செய்தியாக அவர் குறிப்பது சிறுவயதில் சேர்ந்து விளையாடத் தோழ மையின்றி தனிமையில் வருந்தியமையைத் தான், புத்தகமும் கையுமாகத் தன்னந் தனியணுய் இருந்தநிலை அவரை மிக வாட் டியிருக்கிறது. பாரதியின் மனதில் அடி ஆழத்தில் பதிந்துவிட்ட நிகழ்ச்சி இது. இதனையடுத்து தனது பிள்ளைக் காதல், பாலி யத் திருமணம், ஆங்கிலக் கல்வி எனத் தெரிந்தெடுத்த, மனதில் ஆணியடித்தாற் போன்று பதிந்துவிட்ட சம்பவங்கள் இடம் பெறுகின்றன, இவற்றை மூறையான சுய சரிதை என்று கூறமுடியாது. வாழ்க்கை யைப் பின்னுேக்கிப் பார்த்துப் Lurr Guid (Flash back) ஒரு வகை இலக்கிய முயற்சி என்றுதான் சொல்லவேண்டும்.
இவ்வாறு சில நிகழ்ச்சிகளையே ஸ்வ சரிதையாகக் குறிப்பிடும்போது அவற்று டன் சேர்த்துத் தனது கருத்துக்களையும் மனக்குமுறலையும் கொட்டி வி டு கிரு ர் பாரதி, உணர்ச்சிக் கவிஞரான பாரதியின் ஸ்வசரிதையில் இந்தத் தான் கலந்து பாடும் நிலையும், இதனை மற்றவர்கள் சுய சரிதையிலிருந்து வேறுபடுத்துகிறது. ஆங் கிலக் கல்வி பயிலத் தன்னைத் தந்தை அனுப்பியதைக் கூறும் போது,
* "நரியுயிர்ச்சிறு சேவகர்தாதர்கள்
நாயெனத்திரியொற்றர் உறவினைப்
பெரிதெனக் கொடு தம்முயிர்விற்றிடும் பேடியர் பிறர்க்கிச்சகம் பேசுவோர்
கருதுமிவ்வகை மாக்கள்பயின்றிடுங்
கலைபயில் கென வென்னை விடுத்தனன்"
என ஆங்கிலக் கல்வி பற்றி த் தா ன் கொண்ட கருத்தையும் வெறுப்பையும் ஒருங்கே காட்டி விடுகிறர். இவ்வாறு தன் னுணர்ச்சியைக் கலந்தும் கருத்துக்களைச் சேர்த்தும் ஸ்வசரிதையை அமைத்ததே அதனை நவீன போக்குடையதாகவும் ஏனைய சுய சரிதைகளிலிருந்து வேறுபடுத் தவும் போதுமானது எனலாம்.
பாரதியின் ஸ்வ சரிதைக்கு இணையான ஒன்று இதுவரை தமிழில் வெளிவரவில்லை. வேற்று மொழி இலக்கியங்களிலும் இவ் வாருன ஒரு முயற்சியைக் காணுவது "அரி தாகவே இருக்கிறது. உண்மையில் பாரதி யின் வாழ்க்கையைப்பாதித்த சம்பவங்கள், அது அவர் மனதில் எழுப்பிய கருத்துக்கள் என்பவற்றின் உந்துதலாலேயே ஸ்வ சரிதை பாடப்பட்டது எனலாம். இந்த வகையில் ஸ்வசரிதை பிரத்தியேகமான,
ஒன்ருகவே விளங்குகிறது. O

Page 125
முத்தமிழ் - மூலக் கருத்துப் ஒரு குறிப்பு
கலாநிதி
தமிழ் மொழியின் சிறப்பமிசங்களில் ஒன்று முத்தமிழ்க் கோட்பாடு என்பர். இயல், இசை, நாடகம் என்ற ஒவ்வொன் றும் அநாதிகாலந்தொட்டே த னி த் தனியே சிறப்புடன் வளர்ந்திருந்ததா லேயே இக்கோட்பாடு தோன்றிற்று என்ற ஊகம் பொதுப் படையாக நில வு வ துண்மை. அழிந்துபோனவையாகக் கொள் ளப்படும் நூல்களின் பெயர்கள் சான்ருதா ரமாக எடுத்துக் கூறப்படுவதும் வழக்கம்.
இக் கோட்பாடு தோற்றுவதற்கான சூழ் நிலைகள் யாவை? எவ்வாறு வளர்ந் தது? சங்க இலக்கியங்களில் இக்கருத் துக் காணப்படுகின்றதா? இவ்வினுக்கள் பற்றிச் சிந்திப்பதற்குதவியாக இ ச் சிறு குறிப்பு எழுதப் பெறுகின்றது.
முத்தமிழ்ப் பாகுபாடு தமிழில் அநாதி காலம் தொட்டுக் காணப்படும் பண்பு 676örgy கொள்ளப்படுவதுண்டு. மொழிகள் அமைப்பாலும் உறுப்பாலும் வேறுபடி னும் அவற்றின் தோற்றம், ஆரம்ப கால வளர்ச்சி முதலியன சிலபொது விதிகட்கு உட்பட்டனவே என்பது எல்லாரும் அறிற் ததே. ஒரு மொழியின் பூர்வீக தொடக்க நிலையில் இத்தகைய பா கு பா டு க ள்

IIÕII
கார்த்திகேசு சிவத்தம்பி
தோன்ற முடியாது என்பது மொழியியல் உண்மை. "நடனம், இசை, கவிதை ஆகிய மூன்று கலைகளும் முதலில் ஒரே கலையா கவே தோன்றின. கூட்டுத் தொழிலில் ஈடு பட்டிருந்தோரின் ஒத்திசை அசைவின் அடி யாகவே இவை தோன்றின. இவ் அசைவு இரண்டு அமிசங்களைக் கொண்டதாய் இருந்தது. ஒன்று உடலசைவு, இதன் அடி யாகவே நடனம் தோன்றிற்று. மற்றது வாயசைவுச் சப்தம்; இதுவே மொழியின் கருவாகும்'. இவ்வாறு கலை க ளின் மூலத்தை எடுத்துக் காட்டுவர் பேராசிரி யர் தொம்சன் 1. பேராசிரியர் கூறும் தோற்றநிலைக்கு எழுத்திலக்கியச் சான்று காட்டுதல் முடியாதது; மணிதவியற்றுறை ஆராய்ச்சிகள் கொண்டே இவ்வுண்மை நிறுவப்படும். புய்கர் என்பார் "தொழிற் பாடல்"களைக் கொண்டு செய்த ஆராய்ச் சிகள் இம் முடிபுக்கு முன்னுேடியாயமைந் தன.2
1. Thomson G. Studies in Ancient Greek Society
Vol II p. 451-London 1961.
2. Bucher. Arbeit Und Rhythmus Leipzig 1919.

Page 126
முத்தமிழ்.
தமிழிலுள்ள மிகப் புராதனமான இலக்கியம் சங்க இலக்கியமாகும். அவ்வி லக்கியத் தொகுதியில் முத்தமிழ்ப் பாகு பாடு காணப்படுகின்றதா என்று பார்த்தல் வேண்டும்.
இயலையும் இசையையும் தனித்தனி பிரிவுகளாக கொள்ளும் பண்பு சங்க இலக் கியங்களிற் காணப்படவில்லை. இ யல் எனும் இலக்கியம் அக்காலத்தில் முற்றி லும் இசை வழிப்பட்டே நின்றது. அக் காலத்திற் பெரிதும் போற்றப்பட்ட அக வல் யாப்பு இசை பற்றியதே. அகவல் என்ற சொல் அகவு என்ற வினையடியாகப் பிறந்தது; அகவு என்ற சொல்லுக்கு ** மயில் போல் சப்தமிடல், பாடுதல், மயில்போல் ஆடுதல், அழைத்தல்' எனும் பொருட்கள் உள என்று திராவிடச் சொல் வரலாற்றகராதி கூறும். இ லக் கி யப் ப டைப்புக்கள் "பாடல்கள் என்றே கொள் ளப்பட்டன. பாடல், பாடு என்னும் வினை யடியாகப் பிறந்தது.
கலி யாப்பின் அடிப்படை அமிசங்க ளேயும் கலித் தொகையிற் காணப் பெறும் உரையாடற் பாக்களேயும் ஆ ரா ய் ந் து கலியில் பாடலும் நடனமும் இணைந்தே காணப்படுகின்றன என்பது நிறுவப்பட் டுள்ளது.
யாப்பமைதியை விட்டு இலக்கிய அகச் சான்றுகளைக் கொண்டு பார்க்குமிடத்தும் இவ்வுண்மை புலஞகின்றது. அவைக்குவந்த புலவன் தன் ஆக்கத்தைப் பாடியே காண் பித்தான். பரிசில் பெறுவோர் நடை முறையை விளக்கமாகக்கூறும் மலைபடுக டாம் புதிய பாடல்களை"விருத்திற்பாணி" என்றே கூறும். இவ்வாறு பாடப் பெற்ற பாடல்கள் சிலவற்றுக்கு விறலி நடனமாடி யதாகக் கொள்ள இடமுண்டு. கூத்தர்கள் ஆடிய கூத்தின் கதை, பாடல்சள் பற்றிய தெளிவான குறிப்புக்கள் பத்துப்பாட்டு எட்டுத் தொகையில் இல்லையெனினும், கூத்தாடிகள் பாடகர்சுளாகப் பாடிப் பரிசில் பெற்றனர் என்பதை நிருபித்து நிற் கின்றன கண்ணுனர், கோடியர், வயிரியர் பற்றி வரும் குறிப்புக்கள்.

கார்த்திகேசு சிவத்தம்பி 107
இவற்றைச் சான்ருகக் கொண்டு பார்க்கும் பொழுது அக்காலத்திலே செய் புள், இசை, கூத்து என்பனவற்றைத் தனிப் பட்ட கலைப்பிரிவுகளாகக் கொள்ளவில்லை என்பது புலனுகும். அக்காலத்து இலக்கிய கர்த்தர்களையும் அவர்கள் தோற்றுவித்த படைப்புக்களையும் நோக்கும் பொழுது இத்தகைய ஒரு பாகுபாடு தோன்றியிருக்க முடியாதென்பது தெரியவருகின்றது.
எனினும், முத்தமிழ்க் கோட்பாட்டின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய்ந்த காலஞ் சென்ற பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை இக் கோட்பாடு பற்றிய முதற் குறிப்புப் பரிபாடலிற் காணப்படுகின்றது எனக்கூறியுள்ளார்.*
பரிபாடல் சங்க இலக்கிய நூலன்று. இலங்கையில் பெருவழக்கிலிருக்கும். கால வரையறை நாமாவளிப்படி, அது சங்க மரு விய காலத்தைச் சேர்ந்தது. வையாபுரிப் பிள்ளை அவர்களே அது மிகப் பிந்திய நூலென்பர்.
முத்தமிழ் பற்றிக் குறிப்பிடுவதாகக் கூறப்படும் பரிபாடற்பகுதி திருக்குறள் பரிமேலழகர் உரையில் வரும் ஒரு மேற் கோளாகும் 23ஆம் குறளுக்கு விளக்கம் கூறியவிடத்து மை ஈற்றுப் பெயர் எண் ணுப் பொருளில் நிற்பதற்கு உதாரணங் காட்டுவதற்கு
*தெரிமாண் தமிழ் மும்மைத்தென்னம் பொருப்பன் பரிமா நிறையின் பரந்தன்று வையை'
எனும் பரிபாடற் பகுதி யை ச் சான்ருக எடுத்துக்காட்டுகின்றர். "பாண் டியனது குதிரைப்படை நி ைரயிலும் பார்க்க நீண்டதன்று வையை" என்பது இதன் பொருள். இதில் வரும் மும்மை எண்ணுப் பொருளில் நின்றது என்றர் பரி
3. flomu šgsbuS . Fr. Drama in Ancient Tamil Society (கலாநிதிப் பட்டத்துக்கான ஆராய்ச்சி Birmingham 1970,
4. வையாபுரிப்பிள்ளை, எஸ் இலக்கியச் சிந்தனேகள், (தமிழ் நாடக வரலாறு பற்றிய கட்டுரை)

Page 127
108 முத்தமிழ்:
மேலழகர், பொதுப்படையாக எண்ணுட் பெர்ருள் என்றனரேயொழிய, இயல் இசை, நாடகம் என்ற மூன்று பிரிவினையும் அவர் திட்ட வட்டமாகக் கூறவில்லை. இருட் பினும் 'மும்மைத் தமிழ்’’-மூன்று தமிழ்இயல் இசை நாடகம் பற்றிய குறிப்பா கவே இருத்தல் வேண்டுமெனக் கொண் டார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, அவ்வாறு கொள்ளும் பொழுது, 'தமிழ்' என்ற சொல் தமிழாகிய மொழியையும் இலக்கியச் செல்வத்தையுமே குறி க் கும் என்றும் கொண்டுள்ளார் என்பது வெள்ளி டைமலை, ஆனல் 'தமிழ்" என்ற சொல் பரிபாடலில் பிறிதோரிடத்தில் தமிழ் நாடு முழுவதையுமே குறித்து திற்பதைக் காண GranTub.
"தமிழ்  ைவ யை த் தண் ல்ண ம் புனல்" (6:60)
இங்கு தமிழ் என்பது நாட்டைச் குறித்ததாதல் வேண்டும். தமிழ் என்ற சொல் தமிழ்நாட்டைக் குறித்தல் சங்க இலக்கியத்திற் பெருவழக்கு (புறநானூறு 35, 30, 51, அகநானூறு 22, 31 ஆகி யன), பதிற்றுப்பத்து 82-ம் பாடலில் தமிழ் என்ற சொல் தமிழ்ப்படையைக் குறித்து நின்றது.
மேற்கோள்வரிகள் ப ா ண் டி யன் போர்ச்சிறப்பைக் கூறுவன . எனவே, இங் கும், தமிழ் என்னும் சொல் நிலத்தைச் குறிப்பதாக இருக்கலாம். அவ்வாரு யின் "மும்மை"-மூன்று என்பதன் பொருள்யா தாக இருக்கலாம்?
பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர் பெற்றிருந்த சிறப்பையும் அவர்கட்கிருந்த புகழையும் வலியுறுத்த வேண்டிய அவசி பமேயில்லை. சங்கப் பாடல்கள் சில, (புற் நானூறு 109. அகநானூறு 31, பதிற்றுப் ப்த்து 20) இவர்களை "மூவ்ர்" என்று மாத் திரமே குறிப்பிடுகின்றன. எனவே "தமிழ் மும்மை என்பது இயல், இசை, நாடகத் தைக் குறியாது, "தமிழ் மும்மைத் தென் னம் பொருப்பன்' என நின்று, மூன்று தமிழ் இராச்சியங்களையும் ஆளுகின்ற ஒரு பாண்டியனைக் குறித்து நிற்றல் முடியும்.

கார்த்திகேசு சிவத்தம்பரி
.இவை யாவற்றுக்கும் மேலாக, இம் மேற்கோள், பூரணமாகக் கிடைத்துள்ள ஒரு பாடலின் பகுதியன்று; ஒரு பாடலில் கிடைத்துள்ள ஒரேயொரு பகுதி இவ்விரு வரிகள் மட்டுமே. எனவே இத்தகைய பூரணமற்ற இரு வரிகளை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு, அதுவும் பிறவிளக் கங்கள் கூறப்படத்தக்க நிலையில், "மும் மைத் தமிழுக்கு ஒரேயொரு கருத்தே இருத்தல் முடியுமெனக் கொள்ளுதல் பொருந்தாது.
மூவேந்தர் மூவர் எனும் சொற்ருெடர் களுக்குள்ள முக்கியத்துவத்தை நோக்கும் பொழுது, முத்தமிழ் எனும் கோட்பாடு சங்ககாலத்திலே தோன்றியிருக்குமேல் இந்த அரசியல் நிலைபாட்டை உணர்த்துவ தாகவே இருத்தல் வேண்டும்.
மேலும், இயல், இசை, நாடகம் என் பன தனித்தனிக் கலைகளாக வளரும் நிலை பரிபாடல் தோன்றிய காலத்தில் நிலவியி ருக்க முடியுமா என்றும் பார்த்தல் வேண் டும். பரிபாடலே இசையும் இயலும் கூட் டுக் கலையாக விளங்குவதற்குச் சிறந்த உதாரணமாகும். சங்க இலக்கியங்கள் யாவற்றுள்ளும் இசையமைப்புக் குறிப்பு டைய தொகுதி பரிபாடலே. எனவே, முத் தமிழ் என்னும் கலை வகுப்பு முறைக்கோட் பாடு பரிடாடலில் குறிப்பிடப்படுதல் சாத் திய மன்று.
இயல், இசை, நாடகம் என மூன்ருக வகுக்கும் இம் முறைமை இம் மூன்று கலை களும் ஒன்றுடன் ஒன்று இணையாது, தனித் தனி, பல்லாண்டுகாலம் வளர்ந்த பின் னரே ஏற்படக் கூடிய ஒன்ரு கும். சங்க காலத்தின் முற் கூற்றில் அதற்கான சூழ் நிலைகள் இருக்கவில்லை என்பதற்குச்சான்று பகருகின்றன புறநானூறு, அகநானூறு போன்ற நூல்கள். பெளத்த, சமணமதங் களின் செல்வாக்குப் பெருக்கம், நகர நாக ரிகத்தின் வளர்ச்சியால் ஏற்படும் தொழிற் பிரிவு, சமூகப் பிரிவுகள், வைதிக மதக் கருத்துக்களினல் ஏற்பட்ட சமஸ்கிருத நெறிப்படுகை ஆகியகாரணங்களிஞலேயே ஆடற்கலைஞரும், பாடற் கலைஞரும், இலக்

Page 128
முத்தமிழ்.
கியப் புலவரும் தனிப்பட்ட குழுவினராக வும், தனிப்பட்ட கர்த்தாக்களாகவும் பரி ணமித்தனர் என்பது வரலாறு கண்ட உண்மை.
பரிபா ட லு க் கு ப் பின் வந்த சிலப்பதிகாரத்திலேயே முதன் முதலில் இத்தகைய பிரிவு முதன் முதலிற் காணப் படுகின்றது. மாதவியின் ஆடற்குழுவில் அங்கம் வகித்த நன்னூற் புலவன் பற்றிக் குறிப்பிடும் பொழுது, இளங்கோ (III: 37一44)
'தமிழ் முழுதநிந்த தன்மையணுகி" எனக் கூறுகின்ருர், சிலப்பதிகார உரை யாசிரியர்கள் இதற்கு 'முத்தமிழும் அறிந்த புலவன்’ என விளக்கம் கொடுக்கின் றனர். இளங்கோ குறிப்பிடும் நன்னுரற் புலவன் ஆடற்கலையில் ஈடுபட்டவனே; அவனை இலக்கிய கர்த்தாவாகக் கொள் ளாது, நாடக ஆசிரியனுகவே கொள்ளு தல் பொருத்தமுடைத்து. அரங்கேற்று 8. தையை ஆழமாக ஆராய்வோர் இவ்வுண் மையை ஏற்றுக்கொள்வர். சிலப்பதிகாரத் தில் 'விலக்கு' என்பது பற்றி வரும் குறிப்பு முக்கியமானதாகும்.
* பலவகைக் கூத்தும் விலக் கி னி ற் புணர்த்து' (111:13)
விலக்கு என்பது கூ த் தி ல் வரும் ப ா ட ல் க ள் என ச் சில ப் ப தி கா ர உரைகாரர் கருத்துக் கூறுவர். இப்பாடல் முற்றிலும் இசைசார்ந்ததாகவும் அசைவு கட்கியைந்ததாகவும் இருந்திருக்கலாம். இலக்கியத்தில் வரும் பா ட லி லி ரு ந் து இதனை வேறுபடுத்தவே "விலக்கு' என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. நாடகத் தில் வரும் 'பாடல்' இலக்கியத்தில் வரும் பாடலிலிருந்து வேறுபட்டதென்பதற்கு எம்மிடத்துள்ள முதலாவது திட்டவட்ட மான சான்று இது. இப்பாகுபாடு, இலக்கி யம், இசை, நாடகம் என்பன வெவ்வேறு நிலையிலுள்ள வெவ்வேறு கர்த்தர்களின் பயில் நிலையினடியாகத் தோன்றியதே.
அவ்வாருயின், இச்சிலப்பதிகாரக் குறிப்பினையே, முத் தமிழ் பற்றிய முதற் குறிப்பாகக் கொள்ளலாமா என்னும் விஞ எழுதல் இயல்பே

கார்த்திகேசு சிவத்தம்பி 109
இயல், இசை, நாடகத்துறைகள் தனித்தனியே வள ர் ந் துள் ள மை யை ஏ ற் று க் கொள் ஞ ம் பொழு தே முத் தமிழ்க்கோட்பாடு, மொழி பற்றி ய தத்துவார்த்தமான பகுப்பாகத் தோன் றும். இசைக்கும், நாடகத்துக்கும் ஒரு மேனிலைக் கணிப்பினைச் சங்க மருவிய காலத்து மேலோர் வழங்கியிருக்க மாட் டார் என்பது ஏலாதி போன்ற நூல்களால் (ஏலாதி 25, 42, 62) தெரியவரும், சமண, பெளத்த மதக் கோட்பாடுகள் ஆதிக்கஞ் செலுத்திய காலத்தில் அத்தகைய ஒரு கணிப்பு ஏற்பட்டிருத்தல் இயலாதென்றே கூறவேண்டும். இசைக் கலைக்கும், நாடகக் கலைக்கும், இலக்கியத்திற் களித்த அதே அளவு மதிப்பினை - சம அந்தஸ்தினை - வழங்குவோர், அக்கலைகளை முக்கியமான வையாகக் கொள்ளக் கூடியவர்களே.
அத்தகைய 'கலைச் சம அந்தஸ்து" பல்லவர் காலத்திற் காணப்பட்டது. பள் ளிகளுக்கும், விகாரங்களுக்கும் எதிராக மக்களாதரவுடன் புரட்சி செய்த பக்தி இயக்கத்தினர் காலத்தில், இலக்கியம் - தேவாரங்கள், பாசுரங்கள் - முற்றிலும் இசைப் பண்பினதாகவே விளங்கிற்று. இக் காலத்திற்ருன் முதற்தடவையாக ஆடற் பெண்கள், அடிகள் மாராகக் கோயில் களிலே இடம்பெற்றனர். சிவன் ஆடல் நாயகளுகவும், விஷ்ணு வேணுகோபாலணு கவும் போற்றப்பட்டனர்.
முத்தமிழ் என்பது இயல், இசை, நாட கம் பற்றியதே என்பது முதன்முதலில் தெளிவாகக் காணப்படுவது நாவுக்கரசர் தேவாரத்திலேயாம்.
" "மூலநோய் தீர்க்கும் முதல்வன்
d5 6ft L-frul முத்தமிழும் நான்மறையும் ஆனன்
as iT Lintui ''
5. Thaninayagam. X. S. Educational Thought in Ancient Tamil (Ph.D. Thesis) Londoh 1957

Page 129
மனித வாழ்க்கைகளின் வரலாறு களே, நிர்மாணங்களின் கதைகள், சாம் ராஜ்யங்களின் எழுச்சிகளும் வீழ்ச்சி களுமே, அந்த இடிபாடுகளின் கதை கள். மதவேட்கைகளின் பிரதிபலிப்பே
இந்தச்
fa ($jTରíରି ଅଗfରିit கதைகள்
Q37. FF Gibal Toir

c秀7a. பொருளாதார, சமூக தேவை களுக்கு அப்பாற்பட்ட அளவு களி ல், மனித சமுதாயங்கள் கோவில்களைக் கட்டி யெழுப்பியிருக்கின்றன. மொழியென்றும் சாதியென்றும் வர்க்க வரம்புகளை மீறி, பாரிய சமூக நிர்மாணங்கள் கோவில்க ளாக எழுந்துள்ளன. வழிபாட்டிற்கென, தலங்களை உருவாக்காத நாகரிகங்கள் இது வரை தோன்றில .
மதவேட்கை மனித கூட்டங்களை ஆட் கொண்டமைக்கு, இயற்கையின் சிதைவிற் குட்படாது நிற்கும் மார்க்கச் சின்னங்கள் தக்க ஆதாரங்களாகின்றன. அபரிமித மான மார்க்கவேகம் ஒரு நா க ரீ க த் தைப் பீடித்திருந்த 60) மக்கு இந்தியக் கோவில்கள் ஒப்பாரும் மிக்காருமில்லாத சான்றுகளாகின்றன. சிற்பமும் சித்திரமும் துணை நிற்க, தனித்துவமான கலாச்சார சின்னங்களை, மடிந்துபோன இந்திய இராச் சியங்கள் விட்டுச் சென்றிருக்கின்றன. எங் கணுமில்லாத, மொழி, சாதி வேறுபாடு களைத் தன்னகத்தே கொண்டவிடத்தும், வர்க்கத்திற்கு வர்க்கம், எண்ணற் கரிய கட் டிட ஆக்கங்கள் எழுந்தவிடத்தும், பரந்த தேசிய உணர்வை உள்ளடக்கிய சிறப்புக்கு இந்தியக் கலைகள் பெயர்பெற்றவை. பன் னுாற்றுப் பிறவிகளைத் தெய்வத்திற்குக் கொடுத்து, அதனை வழிபட பல்லாயிரக் கணக்கில் ஆலயங்களைச் ச  ைம த் த பெருமை இந்தியருடையது.
சமூகத்தின் சமயப்பணியைச் சிரமேற் கொண்டவன்,சிற்பியாகவும், சிறந்த சைத் திரிகளுகவும் கட்டிடக் கலைஞனுகவுமிருந் தான். புராணங்களிலும், உபநிடதங்களி லும், மறைநூல்களிலும் தேங்கி நின்ற சமய தத்துவங்களுக்கு உருக்கொடுக்கும் பணி யில் அன்றைய கலைஞன் ஈடுபட்டான். சித் திர, சிற்ப விதிகளை ஒருமுகமாக நெறிப் படுத்தி, தனித்துவமான கலைத் தத்துவங் சுளைச் சிருட்டித்துவிட்டு இந்தியச் சைத் திரீகன் மறைந்துவிட்டான். அநாமதேயர் களாக, அறிமுகம் தரப்படாதவர்களாக வாழ்ந்து ஒரு தேசிய உணர்வை இந்தியக் கலைக்கோவில்களுக்கு தந்தவர்கள் அக் கலை ஞர்கள்தாம்.

Page 130
சில கோவில்களின் ...,
அசோக சாம்ராஜ்யத்தின்செழிப்பில், கோவிற் கலைகள் உருப்பெறத் தொடங் கின. ஸ்துTபங்களும், மடாலயங்களும், புத்த மதத்தின் எழுச்சிக் காலங்களைப் பிரதிபலிக்கின்றன. துறவற வாழ்க்கையின் தேவைகளும், தனித்து வாழும் சமய நெறி களும், தேடுவாரற்றுக்கிடந்த கற்குகை களைக் கலைக் கூடங்களாக மாற்றின. அஜந் தாவும், எல்லோராவும், சித்திரங்களின் பெட்ட கங்களாகத் திளைக்க புத்த மத குருக்கள் கைவந்த சித்திரக் கலைஞர்களை அமர்த்தினர். விளைவாக, அழியாத சுவ ரோவியங்களை அசோக சாம்ராஜ்யம் விட் டுச் சென்றது.
காஞ்சியும், க ட் டி ட க் க ஃ0 களி ன் கோவில் களின் விளைநிலங்களாகியது.
இந்தியாவின் மிகப்பழைய நிர் மாணப் படிமங்கள் காஞ்சியில் நிறைந்துள் ளன நான்காம் நூற்றண்டின் சிறு கர் கோவில்கள் காஞ்சியில் காணப்படுகின் றன . சிறியதொரு கர்ப்பக்கிரஹத்தை உள் ளடக்கியதாய், கோவில்களின் வளர்ச்சி முறையை நிர்ணயிக்கும் வ  ைக யி ல் , கோவில் நிர்மாண விதிகளின் ஆரம்ப நிலை யாக இக் கற்கோவில்கள் கொள்ளப்படு சின்றன. ஐந்தாம் நூற்ருண்டுத் துர்க்கை பின் கோவில் (Athole எனுமிடத்தில்) வட ந்ேதிய கோவில் வளர்ச்சியின், மூலவர்க்க மாகிறது. கால வளர்ச்சியில் கர்ப்பகிரஹ கங்கள் வளர்ந்து, பாரிய தேவி ஜகதாம் பிகை கோவிலாக, கஜுராஹோவில் முதிர்ச்சியடைகின்றது. தலை சிறந்த இந்தி யக் கோவில் களில் ஒன்றன தேவி ஜகதாம் பிகை கோவில், கஜுராஹோவின் உலகப் புகழுக்கு மெருகூட்டுகின்றது. காணற்கரிய சிற்பங்கள் நிறைந்த இக் கோவில்கள், ஆலய தரிசனங்களில் முதலிடம் பெற வேண்டியவை.
வெறியர்களாலும், அந்நியர்களாலும் சிதைக் கப்பட்ட வட இந்தியக் கோவில்கள் தென்னகத்துக் கோவில்களுக்கு முக்கியத் துவத்தைத் தருகின்றன.

GQaF. af*6ai) 6)/ r6ör 1 1 l
அந்நிய ஊடுருவலில் ஒதுங்கி நின்ற தென்னிந்தியா, கோவிற்கலைகளின் நூாத னசாலையாகிவிட்டது. தம்மகத்தே, உரு வப்பிணைப்பை, ஒருமுகமான கட்டிடச் சேர்வைக் காட்டாதவிடத்தும், வளர்ந் தோங்கிய கோபுரங்களும், பரந்த மண்ட பங்களும், தி ர |ா விட க் கோவில்களை உயர்த்திவிட்டன.
தென்னிந்திய கே எ விற் கலைகளின் பிறப்பிடமாகத் திகழ்கிறது மாமல்லபுரம். ஏராளமான, கலைச்சின்னங்கள் கோவில்க ள T க வும், சிற்பங்களாகவும் பின் ன ய காலங்களில் உருவாக, மாமல்லபுர கல் இரதங்கள் மூலாதாரங்களாயின.
திரெளபதி இரதம்,சிறு கற்கோவில் லாக மாமல்லபுரத்தில் செதுக்கப்பட்ட விடத்து, திராவிடக் கோவில் நிர்மாண விதிகள் தோன்றின. மாமல்லபுரத்தில் திராவிடச் சிற்பி அயர்ந்திலன். கற்களின் குடைவு சிற்பியின் வழியே அர்ஜுன ரதங் களாகவும், தர்மராஜ ரதங்களாகவும் கடற்கரை மணலில் தோன்ற, ஏழாம் நூ ற் ரு ண் டி ல் கோவிற்கட்டிடங்களின் தொடக்க காலம் நிர்ணயிக்கப்பட்டது. இரட்டையராக எழுந்த புக ழ் பெற்ற 'கடற்கரைக் கோவில்கள் மாமல்லபுரத் தில் முதிர்ச்சிபெற்று திராவிடக்கோயிற் கலையின் உசாவு சிற்பங்களாக விளங்குகின் றன. சைவாலயங்களின் எழுச்சியையே, அவைகளோடு ஒன்றி நிற்கும் சிற்பத் திற னுக்கோ ஆதாரங் கண்டுணர வேண்டு வோ ரு க் கு மாமல்லபுரம் முதற்தலமா கிறது.
புகழ்பெற்ற, காஞ்சிபுர கைலாசநாத கோவிலும்,தஞ்சை பிருஹதீஸ்வரர் கோவி லும் மாமல்லபுர ரதங்களின் வழியாக, மிகச் சிறந்த திராவிடக் கோவில் நிர்மா ணங்களாகின்றன. மது ரை மீனுட்சியம் மன் கோவில், சிதம்பரம் ந ட ரா ஜர் கோவில் கள், கலைக்கோவில்களின் வரிசை யைச் சார்ந்து இந் தி ய கோவில்களில் தனியிடம் பெற்றுள்ளன.

Page 131
12 சில கேசவில்களின் .
திராவிடக் கோவில் களுக்கு சிகரமாய் அமைந்தவை உயர்ந்த கோபுரங்களே. கர் பக்கிரஹத்தை அலங்கரிக்கும் வட இந் திய சிகரங்களையோ விமானங்களையோ போலன்றி, நுழைவாயிலை ஊருக்கு எடுத் தாளுகின்றன கோவிலின் கோபுரங்கள். சிற்ப சாஸ்திரத்தில் தென்னகத்து கலை ஞன் சிறப்புற இக்கோபுரங்கள் ஊடகங் களாயின. இந்தியாவின் மிகச் சிறந்த சிற் பங்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலை கோபுரங்களில் சிறந்ததாக்கியது.
நுட்பமான சித்திர வேலைப்பாடுகளை ஆயிரந்தூண் மண்டபங்கள் எடுத்துக்காட் டுகின்றன. திராவிடச் சிற்பி கைவண்ணம் காட்டும் அழகிய தூண்களை தென்னிந்திய கோவில்களில் காணலாம்.
வட இந்திய அலங்காரத்திற்கு தென் னிந்தியாவில் ஈடு செய்பவை  ைம சூர் கோவில்கள். கோபுரங்களை அ நா வ சி ய மாக உயர்த்தாது, அழகிய நுண்ணிய சித் திர வேலைகளைக் கொண்டது மைசூர் கேச வன் கோவில், சோமநாதபுரத்திலமைந்த இக்சோவில் காணற்கரிய அ ல ங் கா ர கலைக்கூடம்.
கோவில் களென்றதும், உடன் நினை க்கத் தோன்றுபவை திராவிடர் கோவில் களே. பகைமையின் சிதைவுக்கு அகப்ப டாத, வட இந்திய அலங்கார கோவில் கள் மிகச் சொற்பம். இருப்பினும், எழி லுக்கும் அலங்காரத்திற்கும் ஒப்புயர்வற் றவை ஒரிசாவில் நிறைந்துள்ள கோவில் கள். வடக்கையும் தெற்கையும் இணைக்கும் சிறப்பு அம்சங்களைக் கொண்டு தன்னிகரில் லாத இந்தியக் கோவில் களாகப் புகழ் பெற்றவை ஒரிஸ்ஸாவின் வானளாவிய கோவிற் சிகரங்கள்.
இந்தியாவின் சிற்பமும், கோவில் நிர்
மாணங்களும் ஒருங்கிணைந்து, முதன்மை பெற்ற மறைத் தலமாக விளங் கு வ து
es

செ. ஈஸ்வரன்
கொன ராக் (Konarak) குரிய ப க வா ன் கோவில். இருபத்தினன்கு பெரும் சக்க ரங்கள் தாங்கும் ஒரு தேர் போ ன் று அமைந்த அலங்காரக் கோவில் என்பதற் காக இக்கோவில்கள் பெயர் பெறவில்லை. மிக அழகாக நெளித்து முறித்து ஒவ் வொரு அங்குலமாகச் செதுக்கப்பட்டவை என்பதற்காகவுமல்ல, மனிதன் இறைவன் பால் காதலையும், மனிதன் மங்கை ப ா ல் காதலையும், சிற்பங்களாாச் சித்தரிக்கின் றன என்பதால் இச் சித்திரத்தேர் புகழ டைந்தது. சமூக வரம்புகளுக்கு அப்பாற் பட்ட முறையில் இவைகள் பிரசித்தமான கோவிலில் காதல் ரசங்களும் மன்மதநிலை களும் செதுக்கப்பட்டுள்ளன. வத்ஸாயன வின் நூலுக்குக் கல்லில் வடிவம் கொடுத்தி ருக்கிருர்கள். கொனராக்கில்,
13ம் நூற்ருண்டில் நரசிம்மனின் முயற் சிகளில் உருவான இந்தச் சூரிய பகவான் கோலில் கலைததும்பும் மன்மதரசங்களால் பலரையும் ஈர்க்கும் முதன்மைக் கோவிலா
கிறது.
10-13 ம் நூற்ருண்டுகளில் செழிப் புற்று விளங்கிய ஒரிஸ்ஸாவின் கோவிற் கலைகள் புவனேஸ்வர் தடாகத்தைச் சூழ எழுந்துள்ளன. ஆயிரங் கோ வில் க ள் நி ைற ந் தி ரு ந் த புவனேஸ்வரில் எஞ்சி யவை ஐநூறே.
பத்தாம் நூற்றண்டின் லிங்கராஜா கோவில் ஒரிஸ்ஸாவின் மதவேட்கைக்கு கற்களில் பதில் தருகிறது. இக் கோவிற் சிகரங்களின் அழகு சொல்லுந் தர மன்று. நுட்பமான சித்திர கைங் கரியங்களுக்குச் சான்முக லிங்கராஜா கோவில் எ மு ந் துள்ளது.

Page 132
கிழக்கிலங்கை ( J5lfÍ 66 İJ
இ
திமிழ் நாட்டிலே சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்த தமிழ் அணங்கு, ஈழவள நாட்டிலும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளாள். அத்தமிழ்க் குமரிக்குத் தமிழ் கூறும் நல்லுலகில் வாழ் பாவலர் பலரும் பாமாலை புனைந்து சூடி, அவளது எழிற் கோலத்தைப் பார்த்துச் சுவைத்தனர். தமிழ் அணங்கின் அழகைச் சுவைப்பதில் தமிழறிந்த எ வரும் பின்நிற்கவில்லை, வேற்று மதத்தவருங்கூடத் 'தமிழ்ப்பு லமை" என்னும் முத்திரையைத் தரித்துக் கொண்டு அத்தமிழ் அணங்குடன் உறவு முறை கொண்டாடியுள்ளனர். தமிழ்ப் புல மையுடன் தன்னிடம் வந்த எல்லோரது பாமாலைகளையும் தனது மனமாலையாகச் சூடிக் காலத்திற்குக் காலம் தமிழ்க் குமரி தன் கன்னித்தன்மையைப் பேணி வந்துள் ளாள். சமணர், பெளத்தர், கிறிஸ்தவர் ஆகியோரைப் போன்றே இஸ் லா மியரும் தமிழிலக்கிய நெறியில் பல ஆக்கங்களை ஆக்கி அளித்து வந்துள்ளனர். 'இஸ்லா மிய மக்களின் உன்னதமான சாதனைகளுள் முதன்மையாக விளங்குவது அவர்களது இலக்கிய சிருஷ்டிகளே. ' அந்த அடிப்ப டையில் ஈழத்து இஸ்லாமியருள், கிழக்கி லங்கை இஸ்லாமிய தமிழ்ப்புலவர்களின் ஆக்கங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இயற்கை எழில்வளம் அமைந்த இப் பிரதேசம் அங்கு வாழ்ந்த கவிஞர்களின்

}ôỉì6ì)IIfIII GT
பாலசுந்தரம் பீ. ஏ. சிறப்பு
கவியுள்ளங்களைத் தொழிற்படுத்திக், கவி தைகளைப் ப  ைட க் கத் தூண்டுகோலாக அமைந்தது. இப்பிரதேசத்தில் வாழும் பழங்குடிகளாகிய தமிழ் ம க் களு ட ன். சேர்ந்து வாழும் இஸ்லாமிய மக்கள், தமிழ் மொழியைத் தம் தாய்மொழியாக வழங்கி வருகின்றனர், 'ஈழத்து முஸ்லிம்களைத் தென்னக முஸ்லிம்களுடன் ஒப் பி ட் டு ப் பார்த்தால் ஆறில் ஒரு பகுதியினரே ஈழத் தில் வாழ்கிருர்கள். இருப்பினும் தமிழ் உணர்ச்சியையும் இலக்கியப் பற்றினையும் வளர்க்கும் பணியில் ஈழத்து முஸ்லிம்கள் - சிறப்பாக கிழக்கிலங்கை வாழ் முஸ்லிம் கள்-முன்னணியில் நிற்கின்றர்கள் என் பது மனநிறைவைத் தருகின்றது. '2 இன் றும் இப்பகுதியில் தமிழ் உணர்வுடன் வாழ் பவர்களைப் போன்றே பண்டும் தமிழ்ப்புல மையும் தமிழ்ப் பற்றும் மிக்க இஸ்லாமியப் புலவர்கள் பலர் இங்கு வாழ்ந்திருக்கிறர்
956,
ஈழத்தில் பல பாகங்களிலும் காலத் திற்குக் காலம் பல இஸ்லாமியப் புலவர் கள் தோன்றி, தமிழிலக்கியச் சோலையில் உலாவியிருக்கின்றனர். இவர்கள் அனைவ ரையும் உள்ளடக்கியதாக 'ஈழத்து இஸ்
1. முகமது ஸமீம், இஸ்லாமிய கலாச்சாரம்-பக்: ஃ3
2. இஸ்லாமிய தமிழ் இலக்கியச் சொற்பொழிவு
கள், அரசு வெளியீடு, பக்கம்-6

Page 133
114 கிழக்கிலங்கை.
லாமியப் புலவர் வரிசை" என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரையே எழுதலாம். இவர் கள் தாம் பாடிய இலக்கியங்களையும் தனிப் பாடல்களையும் ஏட்டுப்பிரதிகளிலே எழுதி வைத்தனர். அவர்களுக்குப் பின்னர் அவற் றின் ம கி மை யை யும் பெறுமதியையும் அறிந்த அவரது உறவினரோ அல்லது அறிந்தவரோ அவற்றைப் பெற்றுத் தமது இல்லங்களில் சேர்த்து வைத்துள்ளனர். அவை காலப்போக்கில் செல்லுக்கும் மற் றும் ஏனைய இயற்கையான எதிர்ச்சக்திக ளுக்கும் இரையாகிவருகின்றன. இவற்றை யெல்லாம் தேடிச் சேகரித்து வெளியிடுவது அப்புலவர்களுக்குச் செய்யும் கைமாரு கும். இதற்கு இஸ்லாமியரிடையே உள்ள தமிழறிஞரும், செல்வந்தரும் ஒன்ரு க இணைந்து செயற்பட முன்வரவேண்டும்.
கிழக்கிலங்கையில் மூதூர், கிண்ணியா, ஏருவூர், காத்தான்குடி, மருதமுனை, கர வாகுப்பகுதி, நிந்தாவூர், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, அக் கரை ப் பற்று, பொத்துவில் முதலிய இடங்களில் முஸ்லிம் கள் அதிகமாகக் குடியிருக்கின்றனர். இக் கிராமங்களில் கால ஓட்டத்தில் பல இஸ் லாமிய தமிழ்ப் புலவர்கள் தோன்றியிருக் கிருர்கள் ஒவ்வொரு கி ரா ம த் தி லும் தோன்றிய இப்புலவர்கள் பாடிய இலக்கி யங்களைத் தொகுத்து வெளியிட வேண்டி யதும் தமிழறிஞர் கடமையாகும்.
மட்டக்களப்பு முஸ்லிம் புலவர் வரி சையில் ஒரு நூற்ருரண்டுக்கு முந்தியவரும், தலைசிறந்த புலவருமாகக் கொள்ளப்படுப வர் "சின்ன ஆலீம் அப்பா' என்பவரா வார். இவர் மட்டக்களப்பிற்குத் தெற்கே 22 மைல்களுக்கு அப்பால் உள்ள மருதமு னைக் கிராமத்தில் மதப்பெரியாராகத் திகழ்ந்தவர். இப்புலவர் பா டி ய  ைவ * "ஞானரை வென்முன்', 'மழைக் காவி யம்', 'தனப்பாடல்கள்' எ ன் னு ப் தொகுதிகளாக வெளி வந்து ஸ் ள ள ஞான ரை வென்றன் என்னும் இந்நூலின் பாடல்களின் தன்மையை அறிய வேண்டு மாயின் இப்பாடல்களின் தோற்றம் பற்றி யும் அதற்கான சூழ்நிலை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

'காலந்தோறும் வேறு இடங்களிலி ருந்து ஷெய்குமார் வருவதும், அவர்கள் பாமர மக்களிடமிருந்து பொருள் திரட் டும் நோக்கோடு அன்னருக்கு நஸிஹத்து (தீட்சை) கொடுப்பதும் வழக்கமாய் விட் டன. அவர்களிடமிருந்து ந ஸி க த் துப் பெற்றவர்கள் தாம் ஞானம் படித்தவர் கள் எனவும், ஏனையவர்கள் போன்று தாம் மார்க்க அனுட்டானங்கள் செய்யவேண்டி யதில்லை எனவும் கூறித்திரிந்தனர். சிலர் 'ஞா ன ம்' என்று எதையெல்லாமோ பேசிக்கொண்டு ச ம ய ஒழுகலாறுகளை அலட்சியம் செய்வதும், அவர் களை த் தொடர்ந்து மேலும் பலர் மார்க்கானுட் டானங்களைத் தெரிந்து கொள்ள விளையா மலும், அனுஷ்டிக்காமலும் அஞ்ஞானிக ளாகத் திரிவதும் சமய போதகராகிய நம் புலவருக்குக் கவலையைத் தரலாயிற்று. மக்கள் வழிதவறிச் செல்லக் காரணஸ்தர் களாகவிருந்த அந்த "ஞானரை' விழிப்ப டையச் செய்யவும், அவர்கள் செல்லும் வழி தவருனது என்பதை உணர்த்தவும் விழைந்தே இந்த "ஞானரை வென்முன்" என்னும் நூலை இயற்றிஞர். என வே போலி வேடதாரிகளுக்கு வாய்யாப்பாக வும், ஞான வழி அறிய விரும்பியோருக்கு முதற் பாடமாகவும் இந்நூல் அமைந்து ள்ளது. ’’ இத்தகைய போலி ஞானிகளை வெற்றி கொள்ளும் வகையில் பாடப்பட்ட மையிஞல் "ஞானரை வென்றன்' என்ற பெயர் இந்நூலுக்கு ஏற்பட்டிருக்கலாம். சித்தர்களுள் ஒருவரான சிவவாக்கியார் பாடிய ஞானவிளக்கப் பா ட ல் களை ப் போன்றே இவரது ஞானரை வென்ருன் பாடல்களும் காணப்படுகின்றன. எனினும் இருவர் பாடல்களுக்கும் கொள்கையடிப்ப டையில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆழ்ந்த புலமை படைத்த சின் ன ஆலிம் அப்பா போன்ற முஸ்லிம் சான்றேர் களைத் தோற்றுவித்த பெருமை மருதமு னைக்கு உண்டு. இவ்வூர் பற்றி இன்னும் ஆராய இடமுண்டு. தமிழ் நாட்டிலே, பழந்தமிழ் இலக்கிய ஆராய்ச்சிகளை நடாத்
3. இஸ்லாமிய தமிழ் இலக்கியச் சொற்பொழிவு
கள், அரசு வெளியீடு, பக்:-61 - 62.

Page 134
கிழக்கிலங்கை.
துவதற்காக பல மகாநாடுகள் கூடிப் பல ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் நடத்தி, அவற்றைப் பின்னர் 'மகாநாட்டுச் சிற்றி லக்கியச் சொற் பொழிவு கள்' என்ற தலைப்பில் வெளியிட்டு வருகின்றன. அதே போன்றே முதன்முதலாக இஸ் லா மிய தமிழ் இலக்கியச் சொற்பொழிவு மகாநாடு கூட்டிப், பின்னர் அதனை நூல் வடி வாக ஆக்கி வெளியிட்ட பெருமையும் இக் கிராமத்திற்கே உரியது என்பதும் நினைவிற் கொள்ளத்தக்கதாகும்.
கிழக்கிலங்கையில் முஸ்லிம் புலவர்கள் தோன்றிய கிராமங்களில் அக்கரைப்பற் றும் சிறப்பிடம் பெறுகின்றது, அங்கு இற் றைக்கு 30 ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்து சென்ற வரகவி ஷெய்குமதார்ப் புலவர் சிறப்பிடம் பெறுகிருர், க ன் பார்  ைவ இழந்த இவர் இறைவனை மனமுருகிப் பாடி, இறையருளால் ஞானம் பெற்று வரகவி ஆஞர் எனக் கூறப்படுகின்றது. ' காலக்க ழிவில் இவர் ஒப்பற்ற பல பாடல்களைப் பாடலாஞர். அவற்றுள் ஹக்குபேரில் முஞ ஜாத்து-நபிகள் நாயகம்-(ஸல்) அவர்கள் பேரில் முனுஜாத்தும், ஒரு பாவொரு பஃ தும், குத் புஷாஹீல் ஹமீது ஆண் ட கை பேரில் ஒருபாவொரு பஃதும், இன்னிசை, பதம், சிந்து, கும்மி முதலியன பாடியுள் ளார். அவற்ருேடு சிந்து, நோன்பின் பறுழு, ஷறுத்து, சுண்ணத்து, வாஜிபு, முஸ்த ஹப்பு, காவியம் என்பனவும் இயற்றியுள் ளார்".* இவற்றைவிட இவரது புயற் காவியம் பிள்ளைக் காவியம் என்பனவும் குறிப்பிடத்தக்கன.
மட்டக்களப்புப் பகுதியி ல் 1907ம் ஆண்டு பங்குனி மாதம் ஒன்பதாம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு கோரப்புயல் ஒன்று வீசி அப்பிரதேசத்தைப் பாழ்படுத்
தியது. அந்த அவல நிலையில், அச்சோ சுக் காட்சியினைக் கண்ணுரக் கண்ட புலவரது
உள்ளத்தின் பிரதிபலிப்பே அவரது புயற் காவியமாகும்.
இப்புயற் காவியத்தை ஈழத்து முஸ்லிம் புலவர்கள் என்ற தொகுப்பு நூலிற் படித்து அனுபவிக்கலாம்.

இ. பாலசுந்தரம் 115
இவர் இந்தியா சென்று நாகூரை அடைந்து, அத்திருப்பதி ஆண்டவனைச் சரணடைந்து நாகூர் சாகுல் ஹமீது ஆண் டகை பேரில் ஒரு பாவொரு டஃது பாடினர், தமது இழந்துபோன கண்பார்வையைத் தந்திடும்வண்ணம் பக்திச்சுவை ததும்ப இரங்கிப் பாடியதே இந்நூலாகும். இவரது பக்திச் சுவைக்குக் கீழ்வரும் பாட்டல் தக்க சான்ரு கும்.
""முண்டகத்தின் பூவே முழுமதியே முச் LG pr அண்டர் கருவே யருமருந்தே ஆணி
முத்தே மண்டலிகர் போற்றும் மருக்கொழுந்தே . . . என்னுடைய கண்டம தின் நோய்துடைப்பீர் காதிர்
கமீதொலியே"
இவர், தன்னை ஆதரித்தவர்களைத் தமது பாடல்களிற் குறிப்பிட்டிருப்பது ஒளவை யார், கம்பர், புகழேந்தி, முதலியோரின் இலக்கிய நெறியைக் காட்டுகிறது.
இப்புலவரின் மகளுகிய முகம்மது ருபிப் புலவரும் மட்டக்களப்பு முஸ்லிம் புலவர் வரிசையில் இடம் பெறுகின்ருர். இவர் பாடிய முஹத்தின் ஒப்பாரி (சமரகவி), தனிப்பாடல்கள் முதலியனவும் இலக்கிய நயம் வாய்ந்தனவாகும். தனது உற்ற நண்பர் ஒருவர் தான் வேற்றுார் சென்றி ருந்த போது இறந்து விட்டமையை மீண்டு ஊருக்கு வந்தபோது அறிந்ததும் உளம் உருகிப் பதறிப் பாடியதே இந்த ஒப்பாரி. இக்கிராமத்திலே தோன்றி, அநேகமான தமிழ்ப்பாடல்களைப் பாடிச்சென்ற முஹம் மது ஹாசிம் புலவரும் குறிப்பிடத்தக்கவ por franu Frr*.
அக்கரைப்பற்றுக் கி ரா மத் தி லே இருந்து வந்த பழைய புலவர் பரம்பரை யில் வந்தோர்களில் ஹாசிம் ஆலிம் பாவ லரும், அவர் சகோதரர் அப்துல் ரஜீத் புலவரும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றர்கள். 'நாடோடிப் பாடற்
4. ஏயாரெம் ஸலிம், ஈழத்து முஸ்லிம் புலவர்கள்,
பிறைப்பண்ணை வெளியீடு, பக்: 12

Page 135
16 கிழக்கிலங்கை.
கவிஞரான உமறுப்புலவர், புயற்பாட்டு, நாட்டுவளம் முதலிய பாடல்களை அறிந்த சே குமதார்ப் புலவர், நாடோடிக் கவிதை கள் போன்ற பாடல்களை உடனுக்குடன் இயற்றுதலில் வல்லவரான அரசன் புலவர் 'மெழுகன்" என்றழைக்கப்படும் உதுமா லெவ்வைப் புலவர், நபிகள் நாயகத்தின் (ஸல்) சீவிய வரலாற்றினை விருத்தப் பாக் கள் சிலவற்றுள் அடக்கி எழுதியிருக்கும் மீரா லெவ்வை முகம்மதுத் தம்பி. புயல் வெள்ளக் காவிய ஆசிரியரான ஒலுவில் முகைதீன் பிச் சை ப்பு ல வ ர், சின்ன லெவ்வை வன்னியன் என்பார் யாவரும் அக்கரைப்பற்றுப் பகுதியை இனிய தமிழ்க் கவிதையால் வளம்படுத்திய பெருமக்களா வர்" . 3 இப்புலவர் பெருமக்களது கவிதை களைத் தேடிப்பெற்று அவற்றை ஒழுங் கான முறையில் வெளியிடுதல் அவ்வூர் மக் களின் நன்றியறிதலுடைய கடமையாகும். இப்பணியில் ஈடுபட்டு உழைத்து வருபவர் அவ்வூரைச் சேர்ந்த ஏயாரெம்ஸ்லிம் என்ற ஆசிரி ய ர (ா வா iர். இவர் பணி மேலும் தொடர்ந்து நடைபெற நிதியுடையோர் அவருக்கு உதவ முன்வரவேண்டும். ஈழத்து முஸ்லிம் புலவர்கள்' தொகுதி-1 என்ற தொகுப்புநூல் இப்பணியில் வெளிவந்த அவரது முதல் நூலாகும்.
மட்டக்களப்புப்பகுதியில் இஸ்லாமிய மதகுருமாராகத் திகழ்ந்த ஆலிம்கள் எல் லோரும் நிறைந்த அரபுமொழிப் பயிற்சி யும் மதப்பற்றும் மதநம்பிக்கையும் நிறைந் தவர்களாகவும், தமிழ்மொழிப்பற்றும் தமிழ்மொழிப் புலமையும் வாய்க்கப் பெற் றவர்களாகவும் இருந்து வந்துள்ளனர் என் பதற்கு இப்பகுதியில் ஆ லிம் க ள |ா க வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் சான்ருக உள் ளனர். அவ்வரிசையில் " அ ட் ட (ா 2ள ச் சேனைக் கிராமத்தில் 1858ல் பிறந்தவரே அப்துல் றஹீமான் லெப்பை ஆலிம் புலவ ராவர்' 8 இவர் 'மண மங்கள மாலை' என்னும் நூலைப்பாடியதோடு' 'மணமங் கள மாலை பாடிய ஆலிம் அப்பா' என்ற புகழையும் பெற்றவராவர். இந்நூல் நபி நாயகம் (ஸல்) அவர்களின் புதல்வியா ரான பீபிபாத்தும்மாவிற்கும் வீரர் அலி (றழி) அவர்களுக்கும் நடந்த திருமணச் சிறப்பினைப் பற்றிக் கூறுவதாம். அதில்

இ. பாலசுந்தரம்
திருமணக்கோலம் புனையப்பெற்ற அன்னு ருடைய நல்லெழிலைக் கண்டு பெண்களே கூறும் வியப்பு மொழிகளை,
*" போற்றுவார் புகழ்வார் தங்கப்
பொருளிதோ விலையோ வென்பார் கீற்றிளம் பிறையோ தங்கக்
கிரீடமோ வலது வெய்யோன் மாற்றிய சுடரோ பஞ்ச
வண்ணநற் சுகமோ யாவும் தோற்றிடும் அனமோ யாதோ
சொல்லுவீர் எமக்கென் பாரே .'
என்னும் பாடலில் அமைத்துள்ளார். இந் நூலில் சீருப்புராணத்திலுள்ள பாத்திமா நா ய கி யா ர து திருமணப்படலத்தின் சாயை காணப்படுகின்றது. இதன் மூலம் இவரது முந்து நூற்புலமை புலனுகிறது. பாத்திமா நாயகியின் திருமணத்திற்காக முஹாஜிரீன் என்னும் அரசன் தன் நகரினை அலங்கரிக்கச் சொல்கிருன்:-
வச்சிரத் தோரணம் நாட்டுங்கோ -
நல்ல வாழை மரக்குலை தூக்குங்கோ மெச்சுநல் வீதி இலங்கிட - நீங்கள் மேன்மை யணிபந்தல் போடுங்கோ'.
'ஏழைஎத் தீம்களைக் கூட்டுங்கோ-நல்ல இயல்பான பால் தயிரூட்டுங்கோ வாழைக் கணியுடன் மாதுளை - இன்ப வருக்கைப் பலாக்கனி ஊட்டுங்கோ'
இச்சிந்துப் பாடல்கள் மணமங்கள மாலை யில் வருவனவாகும். 7 இப்பாடல்களேச் சீருப் புராணத்துப் பாத்திமா திருமணப் படலத்துடன் நாம் ஒப்பிட்டு நோக்க
unrub.
இலங்க மூன்றிங்க டொறுஞ் செழும்
பூம்பந்தரிடுமின் னலங்கொ ளாடை விமானங் கடோ
ரண நடுமின்
5. வி. சி. கங்தையா, மட்டக்களப்புத் தமிழகம்,
uj: 335, 6. ஏயாரெம் ஸலீம், ஈழத்து முஸ்லிம் புலவர்கள்,
jä: 63.
7. வி. சி. கந்தையா, மட்டக்களப்புத் தமிழகம்,
பக்: 294,

Page 136
கிழக்கிலங்கை.
விலங்கன் மாடங்கள் வயின் வயின்
கொடிவிசித்திடுமின் பொலங்கொணன்னகர்ச் சுவர்தொறுங் கோலங்கள் புனைமின் " - 8
'மதுர முக்கனி தேனெய்பா தயிரோ டும் வழங்கிப் புதுவிருந்தினர்க் கிடுமின்க ளெனப்பல போற்றி
முதிரு நன்னகர்த் தெருத்தொறு முகி
லிடை முழங்க
யதிரும் பேரொலி யிடியெனக் கடிமுர
சறைந்தார். "-9
இவ்விரு பாடல்களும் ஆலிம் அவர்களின் மணமங்கள மாலையில் வரும் முன்னர் எடுத்துக் காட்டியுள்ள இரு பாடல்களோ டும் ஒசையிலும் பொருளிலும் பெரிதும் ஒத்த தன்மையுடையனவாக அமைந்திருப் பதைக் கவனிக்கலாம். இவரது பாடல் கள் மக்களாற் பெரிதும் விரும்பிப் படிக்கப் படுகின்றன. இருந்தும் இத்தகையசுவை மிகுந்த பாடல்களைக் கொண்ட இந்நூல் நல்ல முறையில் அச்சேற்றப்படாதிருப்பது வருந்தத்தக்க செயலாகும். இவற்றை இஸ் லாமியத் தமிழன்பர் தொகுத்து வெளி யிடுவார்களாயின் தமிழன்னைக்கும் அவற் றைப் படைத்த புலவர்களுக்கும் பெரிதும் தெஈண்டு செய்தவர்களாவார்கள்.
காத்தான் குடியிலே பிறந்து நமது மத்தியிலே வாழ்ந்தவரும் கவிஞர் அப்துல் காதர் லெவ்வை அவர்களும் குறிப்பிடத் தக்க ஒரு புலவர் திலகமாவார். இவரது கவிதைகள் 1941, 42ல் சென்னை 'தாருஸ் இஸ்லாம்' சஞ்சிகையில் " " அதான்' என்ற புனை பெயரில் வெளிவந்தன. 1960ல் மீண்டும் அதாவது கவிதையூற்று ‘மணிக் குரல்" சஞ்சிகையில் பெருக்கெடுத்தது. அதன் பிரதிபலிப்பாக, “இக்பால் இத யம்' உருவாகிற்று. உமர் கையா மின் "ரூபாய்யாத்' தமிழில் உலாவந்தது. அக் கவிஞருக்கு 1965ஆம் வருடத்திற்குரிய சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றுக் கொடுத்தது. "மெய்நெறி', 'இறசூல் சத கம் * செய்னம்பு நாச்சியார் மான்மியம்’ ஆகிய நூல்கள் அச்சாகி வெளிவந்தன. தஸ்தகீர் சதகம்", " " கலாச்சாரம்"

இ. பாலசுந்தரம் 117
இக்பால் தத்துவம்' ஆகியவை தின பதி, தினகரன், மணிக்குரல் ஆகிய பத்திரி கைகளின் பிரசுரமாகவும், எதிரொலி, இஸ்லாமிய கதைப் பாடல்கள் ஆதியன கையெழுத்துப் பிரதிகளாகவும் நூலுருப் பெறக் காத்து நிற்கின்றன. "முறையீடும் தேற்றமும்' என்ற நூல் அல்லாஹ்வின் ஏகத்துவ ஆற்றலின் அசையா நம்பிக்கை பூண்டு, நமது தகுதியை அகிந்து, காலப் போக்கையும், அதற்கேற்ப நம் தேவை யையும் உணர்ந்து ஒன்று பட்டு உழைக்கத் துTண்டுவதாக அ  ைம ந் து ஸ் ளது . 19 **16-1-72ல் நடந்த கலாச்சாரப் பேர வையின் தமிழ் இலக்கிய விழாவில் இப்புல வர் கெளரவிக்கப்பட்டமையும் இவரது பெருமையைப் பறைசாற்றுகின்றது.
ஈழத்து ஐம்பத்தேழு முஸ்லீம் புலவர்க ளது சில பாடல்களை ஒன்ருகத் தொகுத்து, கடந்த 200 ஆண்டுகளில் ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் முஸ்லீம் புலவர்களது பங்கை எடுத்துக் காட்ட முயன்ற அ. ஸ். அபதுஸ் ஸ்மது அவர்களது முயற்சியில் மலர்ந்த நூலே முற்றத்துமல்லிகை. "இ) ன் று க வி  ைத எழுதிக் கொண்டிருப்பவர்கள் வரை ஈழத்து முஸ்லிம் கவிஞர்கள் என விளங்குபவர்கள் சுமார் நூறு பேர் என லாம்" எனத் தமது நூலில் "என்னுரை'யில் கூறியிருப்பதும் நோக்கற்பாலதாகும். முற் றத்து மல்லிகை ஆசிரியர் கிழக்கிலங்கைக் குரிய கவிஞர்களாக 30 பேரைக் குறிப்பிட் டுள்ளார். பழைய தமிழ் இலக்கிய நெறி யில் சென்று, இஸ்லாத்தையுமிணைத்தும் பாடியவர்களாக 13 புலவர்களையும், சம காலப் பிரக்ஞையோடு, வாழ்க்கைப் பிரச் சினை, சமுதாயப் பிரச்சினை முதலியவற் றைப் புதிய நோக்கோடு பாடுங் கவிஞர்க ளாகப் 17 கவிஞர்களது பேரையுங் குறிப் பிட்டுள்ளார். இக் கவிஞர்களுட் புரட்சிக்
8. உமறுப்புலவர், சீருப்புராணம், பாத்திமா திரு
மனப் படலம் - 74ம் பாடல்
9. உமறுப்புலவர், சீருப்புராணம், பாத்திமா திரு
மணப் படலம் - 75ம் பாடல்
10. கவிஞர் அப்துல்காதர் லெவ்வை, முறையிடும்
தேற்றமும், முன்னுரை

Page 137
118 கிழக்கிலங்கை.
கமால், அண்ணல், ஏ. இக்பால், எம். ஏ. நுஃமான் முதலியோர் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றனர். இச் சந்ததியி னரின் கவிதைகளையும் தொகுத்து வெளி யிட வேண்டும்.
ஒரு நாட்டின் அல்லது ஓரினத்தின் இலக்கிய வளத்தை ஆராயும் போது அந் நாட்டிற்கு அல்லது அவ்வினத்திற்கு உரிய கிராமிய இலக்கியங்களையும் புலவர் இலக் கியங்களையும் ஒருங்கே ஆராய வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் அது ஒரு நாட்டைக் குறித்த பூரணமான இலக்கிய ஆராய்ச்சியாக இருக்க முடியும். சில இலக் கிய ஆராய்ச்சியாளர் ஒரு நாட்டின் இலக் கிய பாரம்பரியத்தை ஆராயும்போது முற் ருகவே அந் நாட்டுக்குரிய கிராமிய இலக் கியங்களைப்பற்றிச் சிறிதும் யோசியாது
“கருத்து/ப் லாம், பலர் கூறு ஆயினும், உயர்ந், காய்க் கூறுபவலு தாகும்'
“ւ04)/t/էջu/th -։ இன்பத்தைத் தா. னும் நூக/வதற்கு /ம் அம்முயற்சியி

63. | Lurgapor isir żb
எழுதியுள்ளனர். இது சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகும்.
ஈழத்தைப் பொறுத்தவரையில் நாட் டுப்பாடல், நாட்டுக் கூத்து கவிகள் என்ற தும் முதலில் மட்டக்களப்பையே யாவரும் நினைவிற் கொள்வர். அங்கு வாழும் முஸ் லிம் மக்களிடையே 'கவி என வழங்கும் நாட்டுப் பாடல்கள் அவர்கள் வாழ்க்கை யில் பெரு வழக்காக இடம்பெறுகின்றன. இப் பாடல்கள் அதிகமாகக் காதல் சம்பத் தமானவை எனினும் வாழ்வியலடிப்படை யிலமைந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாடப்படும் கவிகளை அவ்வூர் முஸ்லிம்களி டையே இன்றுங் கேட்கலாம். கிராமிய இலக்கிய ஆராய்ச்சியிலீடுபடுவோருக்கு இந்நாட்டுப் பாடல்கள் பெரிய இலக்கியச் சுரங்கமாக அமைந்துள்ளன.
பழையதாகவு/மிருக்க றியதாகவுமிருக்கலாம் த முறையில் அழ றுக்கே அது உரிய
- லவெல்
/னு//விக்க முடியாத னும், பிறரும், பின் ச் செய்/ம் முயற்சி ன் விஅளவுமே கக்ல."

Page 138
இலங்கையும் இந்தியாவும் சுதந்திரம் பெற்றதன் பயணுக ஏற்பட்ட பிரதான விளைவுகளுள் ஒன்று தேசிய மொழிகளுக் குக் கிடைத்த முக்கியத்துவமாகும். இந் தத் தேசிய மொழி முக்கியத்துவம் இந்தி யாவை விடக் குறிப்பாகத் தமிழ் நாட்டை விட இலங்கையிலேயே சிறப்பிடம் பெற் றுள்ளது. பல்கலைக்கழக இறுதி வகுப்பு வரை எல்லாப் பாடங்களும் தமிழ் சிங்க ளம் ஆகிய தேசிய மொழிகள் மூலமே பயிற்றப்பட வேண்டுமென்ற முடிவு கூடத் தேசிய மொழிகளுக்குக் கிடைத்துள்ள முக் கியத்துவத்தின் ஒர் அம்சமேயாகும்.
பல்கலைக்கழகத்திலே கலைத்துறைப் பாடங்களைத் தமிழ்மொழி மூலம் பயிற்றத் தொடங்கியதை விட விஞ்ஞான பாடங் களைத் தமிழ் மூலம் பயிற்றத் தொடங்கிய மையே பல்கலைக்கழக வரலாற்றிலும், தமிழ்மொழியின் வரலாற்றிலும் பெரும் திருப்பமாகும்.
நாடு சுதந்திரம் பெற்றதன் விளைவா கத் தமிழ் மொழிக்கு ஏற்பட்ட முதன்மை யைச் சு த ந் தி ர ம் கிடைப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்த தீர்க்கதரி சிகள் சிலரை இங்கு குறிப்பிடுவது பொருத் தமாகும். இத்துறையிலே முன்னுேடிகளா கத் திகழ்ந்த அறிஞர் சிலருடைய ஆக்கங் களுள் இரண்டொன்றைக் குறிப்பிட்டு விட்டுச் சுதந்திரத்துக்குப் பின் இலங்கை யிலே இத்துறையில் நிகழ்ந்தவைகளையும் இன்றைய நிலையையும் சுருக்கமாகக் குறிப் பிடுவோம்,
ராஜாஜி
இவ்வளவு காலத்துக்குப் பின்னும் இவ் வளவு மாற்றங்களுக்குப் பின்னும் இன்னும் சிலர் உயர்தரக் கல்வியை, முக்கியமாக விஞ்ஞானக் கல் வி  ைய த் தமிழ் மூலம் புகட்ட முடியுமா எனக் கேட்கின்றனர். 1937ஆம் ஆண்டில் சக்கரவர்த்தி இராஜ கோபாலாச்சாரி "தமிழில் முடியுமா? என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியுள்ளார்.
கி. லக்ஷ2மணன் M.A.Dip Ed.

9 IIÍ விஞ்ஞானம் போதிப்பதற்குத் தமிழில் விஞ்ஞான நூல்கள்
பெளதிக சாத்திரமும் மாணவர்கள் தமி ழில் கற்கலாம் என்பதைக் காட்டுவதற் கென்று எழுதிய புத்தகம் என்று அந்த நூலிலே அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நூலின் மூலம் பெளதிக சாத்திரத்தைத் தமிழிலே எழுதுவதற்குப் பயன்படத்தக்க புதுச் சொற்கள் பலவற்றையும் ஆக்கித் தந்துள்ளார்கள்.
சுவாமி விபுலானந்தர்
ராஜாஜி இந்த நூலே எழுதி யது 1937இல், ஆணுல் அதற்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1922 இலேயே சுவாமி விபுலானந்தர் அவர்கள் இத்துறையிலே ஈடுபடத் தொடங்கிவிட் டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 1922 யூலையில் வெளியான "செந்தமிழ் இத ழிலிலும் அதை அடுத்து வெளியான இதழ் as Gigi th GSG5 (65m 60s guib (Light of Science) என்ற தலைப்பில் சுவாமி அவர்கள் பல அரிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அக்கட்டுரைகள் எழுதப்பட்டு இன்று ஐம் பது ஆண்டுகளாகிவிட்டன. இன்று நடை முறையில் செயற்படத்தொடங்கும் ஒரு

Page 139
120 உயர் விஞ்ஞானம்.
நிகழ்ச்சிக்கு இற்றைக்கு ஐம்பது ஆண்டு சுளுக்கு முன்பே அடிகோலிய பெருமை சுவாமி விபுலானந்தர் போன்ற தீர்க்கதரி சிகளுக்கே உரியது. சுவாமி அவர் க ள் முன்பே இத்தகைய கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார் என்ற செய்தியே பலர் அறியாததாயிருக்கலாம். தமது முதலா வது கட்டுரையிலேயே தாம் எடுத்தாளப் புகும் விஷயங்களையும் தாம் அவைகளை எழு துவதன் நோக்கத்தையும் அவர்கள் கூறி யுள்ளார்கள். அவர்களது வாக்கையே இங்கு தருவோம்.
"படர்ந்துபட்ட இப்பொருளை எம் முறையாக ஆராய்வமெனின் உற்பத்தி விளக்கம், தத்துவ விளக்கம், பதார்த்த விளக்கம் என மூன்று பிரிவு வகுத்து முதற் பிரிவை 4 அதிகாரமாக்கி சூரிய சந்திரோற் பத்தி (வானநூல் astronomy) மலைகடலுற் பத்தி (பூமிநூல் Geology) தாவரசங்க மோற்பத்தி (தாவர நூல் Botany விலங்கு prev Zoology) ge. Tai (Biology) or 6f - s fourt db L.; S(Physiology, Anatomy) 6T6ar வும் அப்பால் தத்துவ விளக்கத்தினுள் இயக்கத்தினியல்பையும் பொருளின் பொதுவியல்பையும் ஒரதிகாரமாக்கிப் Quirgrougi (Dynamics and properties of Matter) எனவும் பின்னும் ஐந்ததிகாரங் களை முறையே இசையியல் (Sound) ஒளியி uci (Light) g, 607 6í8uci) (Heat and Radient Energy) 5m is 56ílusi Lólaör Gifu Gi) (Magnetism and Electrostatics) fait Gofu issoudu (Dynamic Electricity) 67 6676jub gurg rruar வியல் கூறும் இர ண் ட தி கா ர ங் களை ப் பதார்த்த விளக்கம் என வுங் கொண்டு ஒரு வாறு கூறி முடிப்போம்."
தாம் அந்நூலை எழுதத்தொடங்கும் நோக்கத்தைக் கூறுமிடத்து ஸயன்ஸ் இல் லாதது தமிழ்மாதுக்கு ஒரு குறையென்று பல காற் சொல்லிக்கொள்ளுகின்ற ஆங்கில விற்பன்னரது பழிமொழி இதனேடு தீர்ந்து விடக் கருணை செய்யுமாறு சங்கப் புலவர் நாவினின்று நடம்புரியுந் தண்டமிழ்த் தாயை, இளமை வனப்பென்றுமகலா இன்றமிழ்த் தெய்வத்தை மனமொழி மெய்களால் வணங்கி இந்நூல் முகத்தை முடிப்பாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கி. லகரமனன்
ஏனைய அறிஞர் சிலர்
விபுலானந்த சுவாமி அவர்கள் விஞ் ஞானதீபம் என்ற நூலைச் செந்தமிழ் என் னும் சஞ்சிகை மூலம் எழுதத் தொடங்கி யது 1922ஆம் ஆண்டில் என மேலே குறிப் பிட்டோம் . 1909ஆம் ஆண்டிலேயே தாவர நூல் என்ற பெயரில் அரங்காசாரியார் என்பவர் எழுதிய நூலையும், 1910ஆம் ஆண் டில் V. K. நாராயணசுவாமி ஐயர் என்பவர் இயற்கைப் பொருட்பாடம் என்ற பெய ரில் எழுதிய தாவர நூல், பிராணிநூல், சரீர சுகாதாரம் என்பன அடங்கிய முத. லாம் பாகமும், பெளதிகம், இரசாயனம், இயற்கைத் தோற்றம் என்பன அடங்கிய இரண்டாம் பாகமுமாக இருபாகங்கள் கொண்ட நூலையும், 1911ஆம் ஆண்டு ஆ. ஸி. கஸ்தூ ரி ரங் க ய் ய ர் எழுதிய இயற்கை அற்புதங்கள் என்ற நூலையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
இவர்களும் இவர்களைப் போன்ற ஏனைய அறிஞர் பலரும் பாராட்டுக்கும் நன்றிக்குமுரியர். இவ்வாறு இந்த நூற் ருண்டின் தொடக்கத் தசாப்தத்திலி ருந்தே அறிஞர் பலர் தமிழிலே விஞ்ஞான நூல்கள் எழுதுவது பற்றிச் சிந்திக்கவும் செயற்படவும் தொடங்கியுள்ளனரெனி னும் சுதந்திரத்துக்கு முன் பின்னன ஆண்டு களையொட்டியே இத்துறையில் ஒரு வேகம் ஏற்பட்டது.
1945 க்கும் 1970க்கு மி டைப் பட்ட கால் நூற்ருண்டிலே தமிழ்மொழி சம்பந்த மாக இலங்கைக் கல்வித் துறையிலே ஏற். பட்ட வரலாற்று முக்கியத்துவமுடைய மாற்றங்களையும் அவை நிகழ்ந்த ஆண்டுக ளையும் குறிப்பிடின் போதஞ மொழியில் ஏற்பட்ட திருப்பமும் அதன் பயணுக விஞ் ஞானத்தில் தமிழ்மொழிக்கு ஏ ற் பட் ட வளர்ச்சியும் நன்கு புலணுகும்.
1946-ஆரம்ப வகுப்பில் போ த ஞ. மொழி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற் ஹப்பட்டது.
1955-சுயபாஷைகளில் உயர்தர நூல் களைத் தயாரிப்பதற்கெனச் சுயபாஷைத்

Page 140
உயர் விஞ்ஞானம்.
திணைக்களம் என்ற பெயரில் முதன் முத லாக ஒரு திணைக்களம் நிறுவப்பட்டது. (இது பின்னர் அரசகருமமொழித் திணைக் களத்தின் ஒரு பகுதியாக இயங்கிவந்தது.)
1957-பொதுத் தராதர இறுதி வகுப் புப் பாடங்களைத் தமிழ்மொழி மூ ல ம் பயிற்றத் தொடங்கியது.
1960 - பல்கலைக் கழகத்தில் கலைத் துறைப் பாடங்களைத் தமிழ் மொழி மூலம் பயிற்றத் தொடங்கியது.
1963 - கலைத்துறையில் முதன் முதல் பி. ஏ. பரீட்சை தமிழில் நடைபெற்றது.
1964 - டொதுத் தராதரப் பரீட்சை யில் முதன் முறையாக விஞ்ஞான பாடங்க ளும் தமிழிலே பரீட்சிக்கப்பட்டன.
1966 - பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் (G. C. E. A/L) முதன் முறை யாக விஞ்ஞான பாடங்களும் தமிழிலே
பரீட்சிக்கப்பட்டன.
1966 - அரச கரும மொழித்திணைக் களத்தில் வெளியீட்டுப் பகுதி என்ற பெய ரில் இயங்கிவந்த பகுதி அங்கிருந்து பிரிக் கப்பட்டு கல்வி அமைச்சின் கீழ் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் என்ற பெயரில் தனித் திணைக்களமாக நிறுவப்பட்டது.
வெளிவந்த விஞ்ஞான நூல்கள்
கல்வி வெளியீட்டுத் திணைக் களத்தி ஞல் இதுவரை 72 விஞ்ஞான நூல்களும் 31 விஞ்ஞான கலைச் சொற்ருெ குதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. கலைச் சொற்ருெ குதிகளுள் மிகப் பெரியது பொறியியல் சம் பந்தமானது. அது பத்தாயிரத்துக்கு மேற் பட்ட கலைச்சொற்களைக் கொண்டது. இன் னும் பல நூல்கள் அச்சிலிருக்கின்றன. இவற்றுட் பெரும்பாலன பல்கலைக்கழக வகுப்புகளுக்குரியன. இவை அனைத்துக்கும் அரசாங்கம் மிகப் பெருந்தொகையான பணமும் செலவு செய்துள்ளது.

கி. லக்ஷ்மணன் 121
தமிழகத்து நிலைமை
இலங்கையில் விஞ்ஞானத்தில் பல் வேறு துறைகளில் இதுவரை வெளிவந்த நூல்கள், கலைச்சொற்ருெகுதிகள் ஆகிய வற்றின் தொகை வகையோடு தமிழகத் தில் வெளிவந்தவற்றை ஒப்பிடுவது பயனு டைய செயலாகும். அங்கேயும் தமிழ் வெளியீட்டுக் கழகம் என்ற பெயரில் ஒரு கழகத்தை நிறுவிப் பல நூல்களையும் கலைச் சொற்ருெ குதிகளையும் வெளியிட்டுள்ள னர். ஆயினும் இலங்கைக்கும் தமிழகத்துக் கும் பெரிய வித்தியாசம் ஒன்றுண்டு. தமி ழகத்தில் சென்னை, சிதம்பரம், மதுரை ஆகிய இடங்களில் மூன்று பல்கலைக் கழகங் கள் இருந்தும் ஒன்றிலாவது கலைத்துறைப் பாடங்கள் கூடங் பட்ட வகுப்பு இறுதி வரை இன்னும் தமிழ் மொழி மூலம் கிரம மாகப் பயிற்றத் தொடங்கப்படவில்லை. கலைத்துறைகளிற்கூட இன்னும் ஆங்கிலமே தொடர்ந்து போதனு மொழியாக விருந்து வருகின்றது. இலங்கையில் கலைத்துறையில் பி. ஏ. பரீட்சை தமிழ்மொழி மூலம் நடக்கத் தொடங்கியே ஒன்பது ஆண்டு
களாகிவிட்டன.
தமிழகப் பல்கலைக் கழகங்களிலே கலை யியலிற்கூட ஆங்கிலமே இன்னும் போதனு மொழியாகவிருந்து வருவதால் உயர்தர நூல்களைத் தமிழில் ஒரு திட்டப்படியோ அல்லது குறிப்பிட்ட கால எல்லைக்குள்ளோ தயாரிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் அங்கு ஏற்படவில்லை. இஷ்டப்பட்ட காலத்தில் இஷ்டப்பட்ட நூலை எழுதலாம் என்ற நிலையே அங்கு இன்றும் நிலவுவதா கத் தெரிகிறது. இலங்கையில் நிலை இது வல்ல. இலங்கையில் சுயபாஷைத் திணைக் களம் நிறுவப்பட்டது. 1955 இல், தமிழகத் தில் இத்தகைய ஒரு நிறுவனம் அதாவது தமிழ் வெளியீட்டுக் கழகம் ஏழு ஆண்டு பிந் கியே நிறுவப்பட்டது. இந்த ஒரு சம்ப வமே இலங்கை இத்துறையிற் எவ்வாறு விரைந்து முன்சென்று கொண்டிருக்கின்ற தென்பதை நன்கு புலப்படுத்தும், நிலைமை இவ்வாறிருக்கவும் இங்குள்ள சிலர் தமிழ சுப் பல்கலைக்கழகங்களில் இறுதி வகுப்பு வரை எல்லாப் பாடங்களும் தமிழிலேயே பயிற்றப்பட்டு வருவதுபோலவும், தேவை

Page 141
122 pluvař of G5 G6 r sør ub ... ...
யான எல்லா நூல்களும் கலைச்சொற்களும் அங்கு எப்போதோ இயற்றப்பட்டு விட் டனபோலவும் அங்கிருந்தே நாம் நமக்கு வேண்டியவற்றை இறக்குமதி செய்து கொள்ளலாமெனவும் கருதியும் பேசியும் வருவது அவர்கள் அறியாமையின் விளைவே யாகும்.
இவ்வாறு அரை நூற்ருண்டுகளுக்கு மேலாக ஒரு புறம் அறிஞர்களும் அரசின ரும் இத்துறையிலே முன்னேற்றம் காண்ப தன் பொருட்டு முயற்சிகள் பல மேற் கொண்டு அரும்பாடுபட்டுக் கொண்டி ருக்க, மறுபுறம் தமிழில் இது முடியுமா? முடியுமாயினும் இதைச் செய்ய வேண் டுமா? செய்வது புத்தியா? என்றெல்லாம் இன்றும் பலர் கேட்டுக் கொண்டிருக்கின்ற னர். 'முடியாது; இன்று மட்டுமல்ல; எதிர் காலத்திலும் முடியாது; ஒரு காலமும் முடியாது' என்றும் . 'முடியுமாயினும் அவ்வாறு செய்வது புத்தியல்ல என்றும்' கூறுவோர் பலர் நம்மிடையேயிருக்கின்ற Grrit.
இது ஒரு புறமாக, தங்கள் பிள்ளைகள் தமிழிலே உயர் கல்வி பெறுவதை விரும் பாத தமிழ்ப்பெற்ருர் சிலர் தங்கள் பிள்ளை களை இந்தியப் பல்கலைக் கழகங்களிலே சேர்ப்பதற்குப் பலவித வழிகளைக் கையா ளுகின்றனர். வேறுசிலர் தமிழை ஒரு பொறியாகக் கருதுவோர் போலவும் அந் தப் பொறியில் தங்கள் பிள்ளைகள் அகப் படாது தப்பிப் பிழைக்க வேண்டுமெனத் தவிப்பவர்கள் போலவும் காணப்படுகின்ற னர். அவர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கி லாந்துக்கு அனுப்பிவிட்டு அப்பிள்ளைகளு டைய படிப்புக்குப் பணந் தேடி அனுப்பும் பொருட்டு ஆபிரிக்காக் கண்டத்துக்கும் பிறதேசங்களுக்கும் சென்று அல்லற்படு கின்றனர். இவர்களுடைய பிள்ளைகளுக்குப் படிப்பு முடிந்தபின் உத்தியோகம் எந்த நாட்டிலே இலகுவாகக் கிடைக்குமென்ப தும் அவர்கள் குடியேற எந்த நாட்டில் இலகுவாக இடங் கிடைக்குமென்பதும்

கி. லகரமணன்
தெரியவில்லை. உயர் தமிழ்க்கல்வியிலிருந்து
தப்பி எவ்வளவு தமிழர் இவ்வாறு குடி பெயரமுடியுமென்பதும் தெரியவில்லை.
மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் ஆகிய அனைத்திலும் உயர் கல்வியனைத்தை யும் இன்றில்லாவிடினும் என்ருவது தமிழ் மூலம் புகட்ட முடியுமா முடியுமாயினும் அவ்வாறு செய்வது புத்தியான செயலா குமா என்ற விஞக்களை யாரிடம் வினவுதல் வேண்டும்? இவற்றுக்குப் பதில் கூற உரிமை யும் தகைமையும் உடையவர் யார்? பல் கலைக்கழகப் பேராசிரியர்களும் விரிவுரை யாளர்களுமா? பல்கலைக்கழக மாணவர் களா? பெற்ருர்களா? பொதுமக்களா? உயர்தர நூல்களையும் கலைச் சொற்களை யும் ஆக்குபவர்களா? அரசியல் வாதிகளா ? பதில் கூற எல்லோருக்கும் உரிமையுண் டெனினும் யாருடைய பதில் அதிக மதிப் புக்குரியது? பதில் கூறுபவர் காட்டும் கார ணங்கள் எவை? அவருடைய அந்தரங்க நோக்கமென்ன? அவர் வாழ்ந்த, வாழ்கின்ற சூழல் யாது? என்பன யாவும் ஆராயப் படல் வேண்டும். உதாரணமாக விரிவுரை யாளர் ஒருவர் உயர் கல்வி தமிழ்மூலம் புகட்டுவது முடியாதென்று கூறுகின்ருர் என வைத்துக்கொள்வோம். அவர் மாண வணின் எதிர்காலம்,நாட்டின் எதிர்காலம், இனத்தின் எதிர்காலம், மொழியின் எதிர் காலம், ஆங்கில மொழியைக் கைக்கொள் ளாத றஷியா, யப்பான் போன்ற தேசங்க ளின் வியத்தகு முன்னேற்றம் ஆகியவற் றைக் கருத்திற் கொண்டு அவ்வாறு கூறு கின் ருரோ அல்லது தனக்கு எது இலகு என்பதைக் கருத்திற் கொண்டு அவ்வாறு கூறுகின்ருரா என்பதை அறிதல் வேண்டும்.
இத்துறையில் இலங்கையிலும் தமிழ கத்திலும் செய்யப்பட்டுள்ளவை அனைத் தையும் ஒருங்குசேர்த்து விவரமாகவும் முறையாகவும் ஆராய்வதும் அவற்றைச் சரியானபடி மதிப்பிடுவதும் இத் துறையில் மேற்கொண்டு ஏற்றவற்றைச் செய்வதற்கு இன்றைய நிலையில் மிகவும் அவசியமாகும்.

Page 142
சுகாதாரம் இ
குடற் புமுக்
g குடலிற் புகுந்து நோய் செய்رoth 0لL யும் புழுக்கள் உலகம் முழுவதும் பரவியுள் ளன. எனினும் வெப்ப நாடுகளாகிய இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் இப்புழுக்கள் மிகுதியாகக் காணப்படுகின் றன. இலங்கையில் வாழும் 80 சதவீத மக்களிடையில் மிகக்குறைந்தது ஒரு வகைப் புழுவாவது காணப்படுகிறது. இப் புழுக்கள் குழந்தைகளிடத்து மட்டுமன்றி வளர்ந்தவர்களிடத்தும் காணப்படுகின் றது. வறுமையும் சுகாதார வசதியும் குறைந்து விளங்கும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நாளொன்றுக்கு ஒரு மனிதன் உண்ணும் உணவைவிட அவன் குடலில் வாழும் புழுக்கள் அதிக அளவான உணவை உட்கொள்கின்றன எனக் கூற லாம். இப்புழுக்களை எம் குடலில் இருந்து இலகுவாக எளிய சுகாதார முறைகளா லேயே நீக்கிவிட முடியும் என்பதனை அறி யாமை ஒரு காரணமாக இருந்த போதி லும், அறிந்தும் அதற்கு மக்கள் முக்கியத்து வம் கொடாமல் இருப்பதே இதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. எம் இலங்கை மக்களிடையே பெரும் அளவில் காணப்படும் குடற்புழுக்களையும் அவை எம்மைக் கொடுமைப்படுத்தும் விதத்தை யும், அவைகளை எப்படிப் பொதுச் சுகாதா ரத்தால் தவிர்க்க முடியும் என்பதைப் பற் நியும் கீழ் அவதானிப்போம்.

இன்மையும்
களும்
சோ. கேதீஸ்வரன்பிள்ளை
இலங்கை மக்களிடையில் பெருமள வில் காணப்படும் புழுக்களாவன:
1. Round worm FAJL L-Lül (p(pasir iš su'u yup) 2. Hook worm ov, Tai Sul (p. J. Thread worm Still (up
Round worm nu ČLůLq(ug வாழ்க்கை வட்டம்
நாக்குப் புழுக்களின் முட்டைகள் வாயூ டாக (உணவுடன்) முன்சிறுகுடலை அடை யும் போது அங்கே குஞ்சு பொரிக்கும். மிக விரைவாக வெளிப்படும். இந்த குடம் பிப் புழுக்கள் சிறுகுடற் சுவரைத் துளைத் துக் கொண்டு ஈரலுக்குச் சென்று பின் அங் கிருந்து இதயத்துக்கும் சுவாசப்பைகட் கும் செல்கின்றன. பின் இவை மீண்டும் சிறுகுடலுக்கு வந்து வளர்ந்து பெரிய புழுக் கள் ஆகின்றன.
கெடுதிகள்
இப்புழுக்கள் சுவாசப்பை வழியாகச் செல்வதால் மூக்குக்குழாய் அழற்சியை உண்டாக்குகின்றன. இப்புழுக்கள் குடலில் இருக்கும் உணவைச் சாப்பிட்டு வாழ்வத ஞல் ஏற்கனவே வறு  ைம காரணமாக

Page 143
124 βή και η β γ (γιό .
போசாக்கற்ற நிலையில் உள்ள குழந்தை களினதும், வளர்ந்தவர்களினதும் உடல் நிலையை மேலும் மோசமடையச் செய்கின் றன. இந்நோயாளிகள் பலருக்கு குடலில் வலியும் வயிற்ருேட்டமும் ஏற்படும் புழுக் கள் குடலில் மண்டி பெருகும் நிலையில் pair Lit 560 stub (Intestinal Obs ruction). முதிர்ந்த புழுக்கள் குடற்சுவரைத் துளைத் துக்கொண்டு, கடுமையான சுற்றுவிரி அளற்சி (Peritonitis)யையும் ஏற்படுத்த லாம். குடற்சுவர், பித்தப்பை, ஈரல், போன்ற உறுப்புகளுட் புகுந்து தொல்லை விளைவிக்கலாம். குழந்தைகட்கு இதல்ை பசிக்குறைவு உண்டாகும்,
தடுப்பு
இப்புழுக்கள் நம் வாய் வழியாகவே தான் உடலுட்புகுகின்றன. இதன் முட் டைகள் மலத்தில் காணப்படும். குழந்தை கள் விளையாடும் தரையில் இம்முட்டைகள் கிடக்குமாயின், அவை அவர்கள் கைவிரல் கள் மூலம் வாய்க்குள் சென்றுவிடும். இம் முட்டைகள் நிலத்தில் பல மாதங்கட்கு உயிர் வாழக் கூடியவை. மனித மலம் முத லியவற்றை எருவாக உபயோகித்து பயிர் செய்யும் நிலங்களில் இம் முட்ட்ைகள் பெரும் அளவில் இருப்பது இயல்பு. எனவே காய்கறிகளைச் சமைப்பதன் முன் அவற்றை நன்ரு கக் கழுவிச் சுத்தம் செய்தல் அவசி யம். குளத்து நீரைக் குடிநீராகப் பாவிக் கும் மக்களிடையே இப்புழுக்கள் அதிகமா கக் காணப்படும். எனவே தண்ணிரை நன்கு கொதிக்க வைத்துக் குடித்தல் அவசி யம். கிணற்று நீரைப் பாவிப்பவர்கள் குழந்தைகளை கிணற்றருகாமையில் மலம் கழியாது தடுக்க வேண்டும். மலங்கழித்த பின் னரும், சாப்பிடு முன்னரும் சவர்க்கார மிட்டு கை கழுவுவதை பா வரும் பழக்க மாக்கிக் கொள்ள வேண்டும். நகங்களை வெட்டி சுத்தமாக வைத்தல் அவசியம்.
H00k Worl-கொக்கிப்புழு வாழ்க்கை 6) to
இப் чец நாடாப் புழுவை விட இலங் கையில் அனேக மக்களிடையிற் காணப் படுகின்றது. பெண் கொக்கிப் புழுக்கள்

சோ. கேதீஸ்வரன் பின் ஆன
நாளொன்றுக்கு ஐயாயிரம் முதல் பத்தா யிரம் வரை முட்டையிடும். இவை மலத்தில் வெளிப்பட்டு விரைவில் பொரித்து விடும். இவை சருமத்தைத் துளைத்துக் கொண்டு இரத்தக் குழாய்களுக்குட் செல்கின்றன. அங்கிருந்து நுரையீரல்களுக்குச் சென்று பின் மூச்சுக் குழாய் வழியாக வாயை வந் தடைந்து மீண்டும், உமிழ் நீர் விழுங்கும் சிறு குடல வந்தடையும் போது அங்கே அவை வளர்ந்து பெரிய புழு க் க ள் ஆகின்றன.
கெடுதிகள்
இவை சருமத்தைத் துளைத்து உட்பு கும்போது அந்த இடத்தில் அரிப்பும் வீக்க மும் உண்டாகும். இவை நுரையீரல் வழி யாகச் செல்லுசையில் மூச்சுக் குழாயழற் சியை யுண் டாக்கும். இப்புழுக்கள் குடற் சுவரில் ஒட்டிக்கொண்டு சிறு இரத்தக் குழாய்களினின்றும் இரத்தத்தை உறிஞ்சி வளருகின்றன. நாள் ஒன்றுக்கு ஒரு வளர்ந்த புழு ஏறக்குறைய 0, 1 மி.லீ இரத் தத்தை உறிஞ்சுகின்றது. ஒரு மனிதனின் குடலில் ஏறக்குறைய 3,000 - 5,000 வரை புழுக்கள் இருக்குமாகில் அவன் ஒரு நாளைக்கு 300-500 மி. லீ இரத்தத்தை இழக்கின்றன். இதனுல் குடற்புழுக்கள் சோகை நோயை உண்டாக்கும். இந் நோயுள்ளவர்கள் (Anaemia) வெளுத்துப் பலம் குன்றிக் காணப்படுவார்கள். கிறு கிறுப்பு, தலைவலி, களைத்துப்போதல் முத லிய குறிகள் உண்டாகும்.
தடுப்பு
இப்புழுக்கள் சருமம் வழியாகச் செல் வதால், காலுக்குப் பாதரட்சையணிவதன் மூலம் இப்புழுக்களில் இருந்து இலகுவாகத் தப்பிக் கொள்ளலாம். நாகரீகத்திற்காக மாத்திரம் பாதரட்சையணிவதை நிறுத்தி கக்கூசிற்குச் செல்லும் போதும் ஈர நிலங் களில் நடக்கும் போதும் பாதரட்சையணி வதை பெரியவர்கள் பழக்கமாக்கிக் கொள் வதோடு குழந்தைகளுக்கும் க ற் று க் கொடுக்க வேண்டும். கண்ட இடங்களி லும் மலம் கழிப்பதை நிறுத்தி கக்கூசுகளில் மலங்கழிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள

Page 144
சுகாதாரம்.
வேண்டும். வயல் வட்டங்களில் வேலை செய்வோர் வெறுங்காலோடு வேலை செய் யாமல் பாதரட்சையணிவது அவசியம்.
Thread Worm still (g. வாழ்க்கை வட்டம்
கீரிப் புழுக்கள் சிறியனவாக வெள்ளை யாக இருக்கும். சுமார் கால் அங்குல நீள மிருக்கும். குழந்தைகளில் இது வெகு சாதாரணம். வளர்ச்சியுற்ற புழுக்கள் பெருங்குடலின் மேற்பகுதியில் வாழ்கின் றன. பெண்புழுக்கள் பெருங்குடற் குதம் வழியாக வெளியே வந்து சருமத்திற் துளை யிட்டு அங்கே முட்டையிடும். குழந்தைக ளின் மலத்தில் இவற்றைப் பார்க்கலாம். குழந்தைகள் படுத்துறங்கையில் அவர்கள் ஆசனவாய்ப் பகுதியிற் கூட புழு நெளிவ தைப் பார்க்கலாம். நோயுள்ள பிள்ளைக ளின் கைவிரல் நகங்களுக்கு அடியில் முட் டைகள் காணப்படுவதுமுண்டு. இம்முட் டைகளிற் சில காற்றிற் பறக்கலாம். அல் லது உணவில் விழுந்து கலந்து விடலாம். இம் முட்டைகள் உண்ணும் உணவோடு அல்லது குடிக்கும் தண்ணிரோடு சேர்ந்து குடலுக்குட் சென்று அங்கே குஞ்சு பொரித்துப் பெரிய புழுக்களாகின்றன.
கெடுதிகள்
சிலருக்கு நோய் லேசாய் இருக்கும்; அறிகுறி யொன்றும் தெரியாது. சிலருக்கு ஆசனவாய்ப் பகுதியில் ஒரேயடியாய் அரிக் கும் பசி கெட்டுப் போகும். உடல் எடை, குறைந்து விடும். குமட்டல் வாந்தியாகிய குறிகள் இருக்கும். கீரிப்புழுக்கள் பெண்க ளின் பிறப்பு பாதையிற் புகுந்துவிட்டால் அழற்சியையுண்டாக்கலாம்.
தடுப்பு
இப்புழுக்களில் இருந்து தப்பிக் கொள் வதற்கு உடற் சுகாதாரம் மிகவும் முக்கி யம். கக்கூசிற்குப் போனபின்னரும் சாப் பி முன்னரும் கைகளை நன்ருகச் சவர்க்கா ரம் போட்டுக் கழுவுமாறு குழந்தைகளுக் குத் தாய்மார் கற்றுத்தர வேண்டும்.

சோ. கேதீஸ்வரன் பின் ஆன 125
குழந்தைகளின் நகங்களை வளரவிடாது வாரத்திற்கு இருமுறையாவது வெட்டிவிட வேண்டும். உள்ளே அணியும் உடைகளையும் படுக்கை விரிப்புக்களையும் தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். இப்புழுக்களின் முட்டைகள் மேசை, நாற்காலி யன்னல் மலம் கழிக்கும் இடங்கள், குளியற் தொட் டிகள் இவற்றில் எல்லாம் காணப்படுவ தால் வீட்டுப் பொருட்கள் எல்லாவற்றை யும் தூய்மையாக வைத்திருத்தல் அவசி
O.
குடற்புழுக்கள் தரும் தொல்லைகளை யும் அவற்றை எவ்வளவு இலகுவாக எளிய சுகாதார முறையை மாத்திரம் கடைப் பிடிப்பதால் மட்டும் விரட்டியடிக்கலா மென்பதையும் மேலே பார்த்தோம்.
குடற் புழுக்கள் மாத்திரமல்ல நூற் நில் அறுபது சதவிகித குடல் நோய்கள் பொதுச் சுகாதாரத்தைக் கடைப்பிடிக் காததஞலேயே தொற்றுகின்றன. கிணற்று நீரையும் குளத்து நீரையும் குடிநீராகப் பாவிக்கும் மக்களிடையே இவை அனேக மாகக் காணப்படுகின்றன. கிராமங்களில் கிணறுகளும் குளங்களும் மலம், சிறுநீர் ஆகியவற்றினுல் அசுத்தப்படுத்தப் படு கின்றன. இவ்வாறு அசுத்தப்படுத்தப் பட்ட தண்ணிரை மனிதர்கள் ப ரு கும் போது அதிலுள்ள நோய்க்கிருமிகள் மனித உடலுக்குட் சென்று பெருக்கமுற்று நோயைத் தோற்றுவிக்கின்றன.
முருங்கன், வவுனியா, புதிய குடியேற் றத்திட்டங்களாகிய கல்மடு, கிளிநொச்சி யாகிய இடங்களிலும் விழாக்காலங்களிலே பல இடங்களிலிருந்து மக்கள் ஒன்ரு கக் கூடும் கதிர்காமம், மடு, போன்ற இடங் களிலும் மக்கள் ஆறு ஏரி குளங்களிற் சென்று குளிப்பதும் மலக்கிருமிகள் பெரு கும் படி அவ்விடங்களிலேயே மலம் கழித்த பிறகு கழுவுவதும் பல் தேய்த்து வாய் கொப்பளிப்பதும் தவிர அதே நீரைக் குடத்திற் கொண்டுசென்று உணவு சமைப் பதும் நமக்குப் பழக்கமாகிவிட்ட காரியங் கள். எமது வாயாலும் மூக்குக் குழாயாலும் ஆயிரம் ஆயிரம் கிருமிகள் உட் செல்கின் றன. மனித உடலில் இருத்து வெளியேறும்

Page 145
126 σήάς τ ή η αγιή......
கழிவுப் பொருள்களாகிய மலம் மூத்திரம் சளி, வாய்நீர் முதலியவைகளிலுள்ள இலட்சக் கணக்கான கிருமிகளே இவை.
பிரச்சினை தீர வழி
* எம் தீவில் இத்தொற்று நோய்களுக்கு வறுமை மாத்திரமல்லாமல் அறியா மையும், அறிந்தவர்களிடத்தில் சுகா தார விதிகளைக் கடைப்பிடிக்க வேண் டுமென்ற ஒர் உணர்வும் இல்லாததே முக்கிய காரணம். ஆகவே ஒவ்வொரு வரும் தாம் படித்தறிந்தவற்றை ஏட் டுப்படிப்போடு மாத்திரம் நிறுத்தி விடாமல் வாழ்க்கையில் செயல் முறை யில் நடத்த முன் வரவேண்டும்.
* அரசாங்கமும் வைத்தியரும் இம்மாதி ரியான எளிய சுகாதார விதிகளைப் பற் றிக் கிராமப்புறங்களில் பிரச்சாரம் செய்வதோடு சிறுசிறு படங்கள் மூலம் நாட்டுப்புற மக்களுக்கு விளக்கி எளிய சுகாதார முறையைக் கடைப்பிடிப்ப தன் முக்கியத்துவத்தை உணர வைக்க வேண்டும்.
* மக்கள் மத்தியில், மருந்தெடுப்பதால்
மாத்திரம் நோய் தீர்ந்து விடுகின்றது. என்ற ஓர் பிழையான கருத்து நிலவி வருகின்றது. வைத்தியரும் இம்மாதிரி யான பிழை களைக் களைவதற்கு எவ்வித ஊக்கமும் எடுப்பதில்லை. உதாரண மாக ஒருவருக்கு மலேரியாக் காய்ச்சல் வந்தது என்று வைத்துக் கொள்வோம். மருத்துவர் அதற்கு மருந்து கொடுத் துப் பிணிதீர்த்து விடுகின்ருர் . மேலும் அவர் அந்த நோய் கொசுக் கடியினல் உண்டானது. ஆகவே கொசு உங்களை கடியாமற் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆகவே கொசுவலைக்குட் தூங்க வேண்டும் என்று மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூற வேண்டும். இப்படிச் செய்வதால் கொசுவினுற் பரப்பப்படும் மற்ருெரு வியாதியான யானைக்கால் நோயையும் தடுத்து விட லாம்.
* நோய் உண்டாவதைத் தடுப்பதை விட நோய் வந்தபின் அதற்கு வைத்தி

(?ár r. (3ázási sav r3ör 196ír&or
யம் செய்யும் வழக்கமே நம் மக்களி டையில் நிலவி வருகின்றது. நோய் வந்த பின் நோயாளி படும் அவஸ்தை யும் அதற்காகச் செலவிடப்படும் பண மும் அதிக மென்பதை எம்மக்கள் உண ருவதில்லை. ஏன் உயர் மட்டங்களிற் கூட இந்நிலை நீங்கிய பாடில்லை. இலங் கையில் சுகாதார வசதிக்காக 30 கோடி ரூபா செலவழித்தும் அதில் பங்கே பொதுச் சுகாதார சேவைக் காகச் செலவிடப்படுகின்றது. இந்
நிலை மாறி கூடுதலான பணத்தைப்
பொதுச் சுகாதாரத்திற்குச் செல வளிப்பதாலும் மக்கள் மத்தியில்
பொதுச்சுகாதாரம் பற்றி தீவிரமான
பிரச்சாரம் செய்வதாலும் 100ற்கு 60 விகித நோயை முற்ருக ஒழிக்க (Քւգ պմ.
எனவே எளிய சுகாதார முறைகளாகிய,
1.
குடிதண்ணிரைக் கொதிக்க வைத்துக் குடித்தல்,
பாதரட்சையைத் தி ன ந் தோறும் அணிதல். மலகூடத்திற்குப் போனபின்னரும் சாப்பிட முன்னரும் நன்ற க நுரை பொங்குமளவிற்கு ச வர் க் கா ரம் போட்டுத் தேய்த்துக் கை கழுவுதல். மரக்கறி வகைகளை நன்ருகத் தண்ணி ரிற் கழுவிய பின் சமைக்கும் பொழுது நன்முகக் கொதிக்க வைத்தல், உணவு உண்ணும் பொழுது ஈக்கள்
உணவில் உட்காராமற் தடுத்தல்.
வார மொரு முறையாவது வளர்ந்த
நகங்களை வெட்டியெறிவதோடு நசங்
களின் அடியில் அழுக்குச் சேரா மற் பாதுகாத்தல் .
மலம் கழிக்கும் போது கக்கூசுகளில் மலம் கழித்தல்.
மக்கள் அனேகமாகப் புழங்கும் இடங் களில் துப்புதல், சிறு நீர் வி டு த ல் போன்ற அசிங்கமான Gaua sat நிறுத்துதல் போன்றவைகளைக் கடைப் பிடித்து உங்களுக்கு நோய்வரா மற் பார்த்துக் கொள்வீர்களாக. (...)

Page 146
விஞ்ஞ
றுசீலா வல்லிபுரம்
2O. நூற்ருண்டாகிய இன்றைய உலகில் மாணுக்கர் பலரும் பலதரப்பட்ட அறிவியல்கள், ஆக்கவியல்கள், கலையியல் கள் முதலியவற்றினைக் கற்று அவையொவ் வொன்றுக்கும் இடையேயுள்ள தொடர் பினை நன்காராய்ந்துவருகின்றனர்.அதனல் வரலாறு ஒர் கலை யா? விஞ்ஞானமா? பொருளியல் ஓர் கலையா? விஞ்ஞானமா? பலதரப்பட்ட கருத்திடையே அவரிடை விவாதம் எழுதலை அவ தா னிக் க லா ம். இவற்றில் சில கலையாகவும், பல விஞ்ஞான மாகவும் இருக்கின்றன. பிளற்றியாம் உறும் 'புவியின் மேற்பரப்பில் காணப்ப டும் பொருட்களை ஆராய்தல்" என்பதும், 'பல்வேறு துறைகளின் முடிபுகளைத் தன் ன கத்தே கொண்டது" என்பதும் 'இயற் கைச் சூழலுடன் தொடர்புடைய அறிவி யற் கருத்தினை தொகுத்துக் கூறல்" என் பதும் " "தொகுப்பியல்" என்பதுமான புவி யியல் ஓர் விஞ்ஞானக் கலையா? இல்லையா? என ஆராய வேண்டிய நிலையில் புவியியல் மாணவன் தத்தளிக்கின்றன். இந்நிலையில் புவியியல் தன்மையினை அவன் ஆராய்கை யில் அவன் இந்த உண்மையினை நிரூபித்து விடுகின்றன்.
புவியியல் என்பது பொரு விரி ய ல் போன்ற சமூகக் கலைகளைப் போன்று இன்று நேற்று வளர்ச்சியுற்று வந்த ஒன்று அல்ல. இற்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் படிப்படியாக வளர்ச்சியுற ஆரம்பித்த ஓர் அறிவியல் என்றே இதனைக் கூறிவிடலாம்.

புவியியல் ஓர் ானக் கலையா?
இப்புவியியல் தனி மனிதஞல் நிர்ணயித்து விடக் கூடியதொன்றன்று. வரலாற்ருசிரி யர்களோ, தத்துவஞானிகளோ இதை வளர்க்கவில்லை. தொல மி, ஸ்ராவோ, செனிக்கல் போன்ற பு வி யி ய ல் வல்ல மேதைகளினல் ஆரம்பப் புவி யி ய ல் வளர்க்கப்பட்டது. சமூகக் கலையாக அவர் கள் வளர்க்கவில்லை. விஞ்ஞானக் கலையா கவே அவர்கள் புவியியலினை வளர்த்தனர். இந்நிலையில் புவியியல் ஒர் விஞ்ஞானக் கலை யா கவே வளர்ச்சியுற்று வருகின்றதெ னலாம்.
புவியியல் என்ருல் என்ன? என நாம் ஆரம்பத்தில் நோக்குவோமானுல் உடன டியாக எமக்குப் புவியியல் சமூகக் கலையா? அன்றி விஞ்ஞானக் கலையா? இரண்டுக்கும் இடையில் பாலமாயிருக்கும் ஓர் சாத ன மா? என்பது தெளிவாகத் தெரிந்து விடு கின்றது. புவியியல் என்பது இயற்கைச் சூழ லுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள தொடர்புகளை ஆராயும் ஓர் சாதனமா கும். ஆராய்ச்சி எ ன்  ைக யி ல் சமூக ஆராய்ச்சியினைக் குறிக்கவில்லை. காரணம் கொண்டு இன்ன இன்ன காரணத்தினல் என்ன என்ன தோன்றும் என்பதனை புவியி யல் ஆராய்வதில்லை இன்ன இன்ன விளைவு கள் ஏற்பட்டிருக்கின்றன. இவை எதஞல் ஏற்பட்டன, எப்படி ஏற்பட்டன, எந்தச் சாதனத் தி ன் தன்மையாலேற்பட்டன, எவ்வாறு ஏற்பட்டன என்பதனை ஆராய் கின்றனர். அதாவது ஒரு பிரதேசத்தில் ஓர்

Page 147
128 புவியியல் ஓர்.
ஆக்கவிசையால் நிலைமாற்றம் நடைபெற் றதென வைத்துக்கொள்வோம். உதாரண மாக பனிக்கட்டி தின்னல் வேலையால் பாதிக்கப்பட்ட ஒர் பிரதேசத்தினை எடுப் போமாயின் அப்பிரதேசத் தினது தன்மை யினைக் கொண்டு நாம் அது எதஞல் ஏற்பட் டது என்ன காரணத்தால் ஏற்பட்டது இனியும் பனிக்கட்டியால் என்ன என்ன விளையும் என்பதனை கண்டுபிடிப்பதே புவி யியல் ஆகும். எனவே புவியியலானது தனி யா ன விஞ்ஞானக் கலையாகவுள்ள தென லாம்.
மேலும் புவியியல் பல சமூகக் கலைக் ளின் முடிவைக் கொண்டிருப்பதஞல் அத னைச் சிலர் சமூகக் கலை என்கின்ருர்கள். இது முழுக்கமுழுக்க பொருத்தமற்ற ஓர் அம்ச மாயுள்ளது. ஏனெனில் புவி யி ய லில் காணப்படும் ஒரு சில பொருளாதாரத்தர வுகள் மாத்திரம் பொருளாதாரமாகிய சமூகத்தரவிலிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டன. உதாரணமாக இலங்கையின் ஏற் றுமதி குறித்த இத்தனை கோடி ரூபா, இறக்குமதி இத்தனை ரூபாய் என்பவற்றினை நாம் புவியியல டி ப் ப  ைட யி ல றி ந் து கொள்ளமுடியாது. ஏ னெ னரி ல் அப் புள்ளி விபரங்கள் பொருளாதார இலாகா விஞலோ அன்றி ஏற்றுமதி இலாகா வி ஞலோ எடுக்கப்படுகின்றது. இத்தரவினை படிப்படையாகக் கொண்டு பொருளியல் ரீதியில் நாம் ஆராயின் நாட்டின் உற்பத்தி யதிகரிக்கின்றது. அதற்கு ஆக்கற் காரணி கள் உறுதுணை புரிந்து நிற்கின்றது என்று, உற்பத்தியதிகரிப்பின், ஆராய் வார் க ள். ஆனல் உற்பத்தி குறைந்தால் பண்டங்க ளின் தேவையதிகரிக்கின்றது. ஆனல், பண் டங்களின் உற்பத்தி அதிக அளவிலில்லை, எனவேதான் இறக்குமதி அதிகரிக்கின்றது, என விளக்கம் தருவார்கள். ஆனல் புவியி யியல் அடிப்படையில் ஏற்றுமதி கூடியிருந் தால் அதற்கு என்ன காரணமென ஆராய் வார்கள். காலநிலையில் இந்த மாற்றங்க ளேற்படுவதற்கு வளிமண்டலம் எந்தள வில் துணைபுரிகின்றது, வளிமண்டலாக்கத் தில் சூரியனின் பங்கென்ன? என்பனவெல் லாம் ஆராய்ந்து அதன் பின்னர் மனித முயற்சிகளை சாதக பாதகமாகக் காரணிக ளேக் கொண்டாராய்ந்து, உற்பத்தியதிக

று சிலா வல்லிபு/ரம்
ரித்திருந்தால் அதிகரிக்க சான்றுகளை தக்க சான்றுகளுடனும், அதி க ரி க்க வில்லையெ னின் தக்க சான்றுகளுடன் உற்பத்தியதிக ரிக்கவில்லை. அதனுல்தான் ஏற்றுமதி விகி தம் கடந்த ஆண்டைவிட அதிகரித்தும் இருக்கின்றதுஎன்றும் கூறுவார்கள். எனவே புவியியலடிப்படையில் நாம் ஆராய்கை யில் அது சமூகக் கலை யாராய்ச்சியாகவில் லாது விஞ்ஞான ஆராய்ச்சியாக இருப்ப தைப் புவியியல் மாணவனுல் உணரமுடி ավLD.
அடுத்தபடியாக புவியியல் என்பது பல விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தன் னு ட் கொண்டு தனி விஞ்ஞானமாக இருப்பதை யும் அறிய முடிகின்றது. ஆனல் புவியியல், கல்லூரிகளிலும் சரி, பல்கலைக்கழகங்களி லும் சரி கலைப்பகுதி மாணவருக்கு மட் டுமே போதிக்கப்படுகின்றதே தவிர விஞ் ஞானப் பகுதி மாணவருக்குப் போதிக்கப் படுவதில்லை. காரணம், புவி பற்றிய அறிவி இனப்பெறமுயலும் கலைப்பகுதி மாணவனின் அறிவின் விருத்திக்கு இது வழி வகுக் கு மொன்றேயெனலாம். புவியியல் தனித்தனி விஞ்ஞானமாக காலநிலையியல், சமுத்திர வியல், வளியியல், புவியமைப்பியல், மானி டவியல், மக்கட்பரப்பியலென பல வாரு கப் பிரித்து நாம் கற்க முடிகிறது. தனித் தனிப் பகுப்புக்களே நுணுக்கமாக ஆராய வேண்டுமெனில் தனியாக சமூகக் கலையின் கண்ணுேட்டத்தில் கண்டறிய முடியாது. சமுத்திரத்தினண்மையில் ஒர் இ லக் கிய கர்த்தாவினையும், சமுத்திரவியலறிஞன யும் கொண்டு சென்று விட்டால் இலக்கியக் கர்த்தா சமுத்திரம் பற்றி ஒர் கவிதையி யற்றுவான். ஆனல் சமுத்திரவியலறிஞனே கடலலையடிப்பதற்கு காரணமென்ன? அது ஏன் கரையினை நோக்கி அடிக்கின்றது? அலை யிஞல் தரையியலில் ஏற்படும் மாற்றம் என்ன? அவற்றிற்கு என்னென்ன பரிகாரம் தேடவேண்டும் என்று யோசிப்பான். அதற் கான காரணத்தையும் அவன் வெகுவாக அறிவான், எனவே புவியியல் ஆனது சமூ கக்கஃ0க்குரியவொன்ருகக் கொள்ளப்பட் டாலும் தனி விஞ்ஞானமாகவே அமைந்தி ருத்தலைக் காணமுடிகின்றது. அதாவது புவியியலில் ஏதாவது ஒர் பொருள் பற்றி நிகழும் நீண்ட ஆராய்ச்சி எங்கெங்கெல்

Page 148
புவியியல் ஓர்.
லாமோ சென்று புவியியலுக்கு அடிப்படை யாக விளங்கும் விஞ்ஞா ன க் கலை க்கு ஸ் நம்மைக் கொண்டு சென்றுவிடும். எனவே இந்த விஞ்ஞானக் கலையின் அடிப்படையில் எழும் ஆராய்ச்சியே புவியியலாக இருக்கின் றதால் புவியியல் ஓர் விஞ்ஞானக்கலையே யாகும்.
மேலும் புவியியல் மனிதனைப் பற்றி ஆராயும் ஒரு அறிவியலாகவேயிருக்கின் றது. மனிதனுக்கும் இயற்கைச்சூழலுக்கும் இடையிலான தொடர் பென்ன? இயற் கைச் சூழலின் தாக்கத்தால் மனிதன் எந் தளவில் பாதிக்கப்படுகின்றன். அதஞல் அவனில் ஏற்படும் முன்னேற்றம் அல்லது பின் தங்கிய நிலைகளின் விபரங்கள் என்ப வற்றை ஆராய்கின்றது. விலங்கியல், விலங் குகள் பற்றியாயுமியலாக விளங்குவது போன்று புவியியல் மனிதன் பற்றியாரா யும் ஆய்வன்று. மனிதனுக்கும் இயற்கைச் சூழலுக்கும் இடையில் இருக்கும் தொடர் புகளை யாராய்வதிஞலே அ  ைத ந 7 ம் சமூகவியல் என்று கொள்ளவேண்டியேற் படுகின்றது. ஆனல் அறிவியல் என்றே கொள்ளப்படுகின்றதால் புவியியல் ஒர் விஞ்ஞானக் கலையேயெனலாம்.
அடுத்து புவிச்சரிதவியலையும், புவிய மைப்பையும் நாம் நோக்குவோமாயின் புவியியல் எந்தளவிற்குத் தன்ரி விஞ்ஞான மாயிருக்கின்றது என்பதை அவதானிக்க லாம். பாறையியல், புவிவெளியுருவவியல், பாறைப் பகுப்பியல், கணிப் பொருளியல், பயிர்ச்செய்கை, இவையாவற்றையும் நாம் தனித் தனியாக மிக நுணு க் க ம |ா க ஆராய்ந்து கொண்டு சென்ருேமேயாயின் புவியியல் எந்தளவில் ஒர் தனி விஞ்ஞான மென உணர முடியும். பாறையைப் பகுக் கும் புவியியல் ஆய்வாளன் அது என்ன என்ன மூலகங்களைக் கொண்டு இருக்கின் றது, இதில் காலநிலையாலோ, அல்லது வானிலையாலோ, ஏற்படும் அழிவுகள் என் பன எப்படி ஏற்படுகின்றன, இ வ. ற் றி ன் தோற்றங்களுக்கு என்ன என்ன காரண மென்பதனையெல்லாம் நன்கு ஆராய்ந்து தெளிவாக்குகின்ருன், சமூகவியலில் வரலா றெனில் இது கடந்த இத்தனையாண்டு களாக இவ்விடத்தில் உண்டு. என்றும்

றுசீலா வல்லிபுரம் 129
இலக்கியமெனில் இதன் அங்கமைவு இப் படிப்பட்டதென்றும், உளவியலெனில் இத ஞல் மனிதன் மனதில் ஏற்படும் மாற்றம் என்னவென்றும் ஆய்வார்கள். ஆளுல் புவி யியல் அப்படி அன்று. தனியான ஓர் விஞ் ஞானமாக அதைப்பற்றி ஆராயும். கணிப்
பொருட் பரம்பலைக் கண்டு பிடிக்கும் போதும் புவியியல் தான் முக்கிய இடம் வகிக்கின்றது. இவ் விட த் தி ல் கணிப் பொருள் படிவுகள் இருக்கின்றன, இப்படி வுகளினல் என்னென்ன பயன் உண்டு; இவற் றினை எப்படி அகழ்ந்தெடுக்க முடியும்; இவற்றை கொண்டு நாட்டின் பொருளா தாரத்தை எங்ங்ணம் பெருக்கலாம்; என் பது போன்ற ஆய்வினைக் கொண்டிருக்கும்.
சமூகப்புவியியலில் இடம் பெற்ற மக் கட்புவியியல், பொருளாதாரப்புவியியல், அரசியல் வரலாற்று புவியியல் என்பன விஞ்ஞான ரீதியில் ஆராயப்படாவிட்டா லும் அவற்றின் ஒவ்வொரு அம்சமும் விஞ் ஞானக் கலையிலுள்ள பெளதீகபுவியியல், சமுத்திரவியல், காலநிலையியல், உயிரியல், விலங்கியல், கணிப்பொருளியல், கணித, வியல் என்பவற்றுடன் தொடர்பு கொண் டும் காணப்படுவதாயுள்ளது.
மக்கட்புவியியல் மிக அண்மைக்காலத் ததே. மக்களுடைய பரம்பல் போன்ற வற்றை ஆராய்வது விஞ்ஞானக் கலையுடன் இணைந்ததாயுள்ளது. மக்கட் பரம்பலில் காலநிலை முக்கியஇடம் பெறுகின்றது. கால நிலையின் தன்மையை பொறுத்தே மனிதன் பரம்பலும், வாழ்க்கையும், உடையும், உணவு போன்றனவும் அமைந்துள்ளது. அய னப் பகுதி மக்கள் பருத்தியாடையணிய வும், குளிர்காலநிலைப் பகுதி மக்கள் கம்பளி யுடையணியவும், காலநிலை சாதகமான பகுதியில் மக்களடர்த்தியாகவும், சாதக மற்றதில் அடர்த்தி குறைவாயுமுள்ளது. பூமத்திய கோடடுத்த பகுதியில் மக்கட் பரம்பலதிகம். குளிர்ப் பாலை நிலத்தில் மக் களடர்த்தி குறைவு. நிலவளமுள்ள இடத் தில் மக்கட் பரம்பல் அதிகம், நிலவளமற்ற பிரதேசத்தில் குறைவு. ஐக்கிய அமெரிக்க மாகாணங்களை எடுத்து நோக்கில் கணிப் பொருள்வளமுள்ளஇடம் சனச்செறிவுள்ள தாயுள்ளது. இதே போன்று வளிமண்ட

Page 149
130 /வியியல் ஓர். .
லவியல் தாக்கமும் மக்கட்பரம்பலைப் பாதிக்கின்றது. இந்நிலையில் புவியியல் விஞ்ஞானக்கலை எனலாமா? என்ற கேள்வி எழுகின்றது.
விஞ்ஞானக் கலையுடன் அரசியல் புவி யி ய லும் இணைந்ததொன்ரு கவுள்ளது. ஆணுல் அது ஒர் சமூகப்புவியியலே. அரசி யல் அடிப்படையில் புவியியல் அமை கை யில் காலநிலைபெளதீகவியல், கணிப்பொரு ளியல் போன்றனவெல்லாம் இணைகின்றன. பாக்கிஸ்தானை எடுத்து நோக்கும் கால் அதன் அரசியற் பிரிவில் காலநிலையில், பெளதீகத்தில் கணிப்பொருள் வளத்தில் ஒரே தன்மையினை அ வ தா னி க் க லாம். கிழக்குப் பாக்கிஸ்தான் பயிர்ச் செய்கைக்கு ஏற்ற நிலத்தையும் மக்கள் வாழும் கால நிலையையும் இணைப்பதையும் மேற்குப் பாக்கிஸ்தான் கணிப்பொருள் வளம் உள்ளதாகவும் இருக்கின்றது. விஞ் ஞானக் கலையையும், சமூகக் கலையையும் இணைக்கின்றது. புவியியல் என்றஉண்மையை எடுத்துக் காட்டச் சான்ரு கவுள்ளது.
பொருளாதாரப் புவியியல் சமூகத் தின் பொருளாதார நிலை, பயிர்ச்செய்கை கைத் தொழில் போன்றவற்றினையே எடுத் தியம்பும் சமூகக் கலையாக விளங்கினும், விஞ் ஞானக் கலையாகப் புவியியலில் விளங்கும் காலநிலை சமுத்திரவியல், உயிரினவியல், தாவரவியல், கணிப்பொருளியல் என்பன விலக்கப்பட்ட தொன்ரு கவில்லை. பொரு ளியல் புவியியல் பெளதீகப் புவியியல் முக்கி யம் பெறுகின்றது. மலை நாடுகளில் றப்பர், தேயிலை போன்றவற்றைப் பயிரிட்டு மலை நாட்டின் தன்மையினைப் பயன்படுத்தி பொருளாதாரம் வளர்க்கலாம். வர்த்தக வளர்ச்சிக்கு சமுத்திரவியல் தன்மை முக்கி யம் கொண்டது. பொதுவாக நீரிய லென லாம். காரணம் போக்குவரத்துக் கொண் டியங்கும் இன்றைய பொருளாதாரம் வளர்ச்சியடைய ஏரிப் போக்குவரத்து,ஆற் றுப் போக்குவரத்து, சமுத்திரப் போக்கு வரத்து என்பனவே துணை நின்றன. ஏரிப் போக்கு வரத்தாலேயே வடகீழ் ஐக்கிய அமெரிக்காவின் கைத்தொழில் விருத்திய டைந்தது. கப்பற் போக்குவரத்துக்கு கட லின் தன்மை முக்கியமாகின்றது. அதாவது

றுசீலா வல்லிபுரம்
நீரோட்டமும், அலை வற்றுப்பெருக்குப் போன்றன வர்த்தக முக்கியம் பெற்றது. காலநிலையும் விதிவிலக்காக அமையவில்லை. காலநிலையும் நூல் நூற்றல், பருத்திவளர்த் தல், மந்தைத் தொழில் போன்ற ஒவ் வொரு தொழில் விருத்திக்குக்காரணமா யது. லங்கா ஷ்யர் பருத்தியாலை காலநிலை சாதகமானதாலேயே விருத்தி பெற்றது. கணிப்பொருள் பொருளாதாரம் விருத்திய டைய வைத்தது. கணிப்பொருள் நிரம்பிய அமெரிக்கா, பிரித்தானியா போன்றன வெல்லாம் சிறப்புற்றுக் காணப்படுகி ன்றது. விஞ்ஞானக் கலையானது சமூகக் கலையுடன்இணைந்து காணப்படுதலால் ஒரு பாலமாகப் புவியியல் அமைகின்றதென்ற எண்ணத்தையே மாணவரிடம் தோன்றச் செய்கின்றது.
வரலாற்றுப்புவியியலில் கணிப் பொருள் வரலாற்று ரீதியாகவும், வெப்பம், மழை வீழ்ச்சி, அமுக்கம் என்பன வரலாற்று ரீதி யாகவும் ஆராயப்படுகிறது. கடலோடி கென்றி, வஸ்கொடகாம, கொலம்பஸ் போன்றேர்கள் சமுத்திரவியலைப் பயன் படுத்தி பல இடங்களைக் கண்டதை வர லாற்று ரீதியாக அறியலாம். கணிதவியலி லுள்ள கணிதப்படவரைகலையில் படங் களை வரைய வரலாற்றுப் புவியியல் அறிய வேண்டியுள்ளது. தொலமி என்பார் உல கப்பட ம் வரை ய, இத் தா லிய தேச அறிஞன் புவி உருண்டை வடிவ மெனக் கண்டறிந்தார். இந்நிலை யாவற் றையும் ஒருங்கிணைத்துநோக்குவோமானுல் விஞ்ஞானக் கலையுடன் சமூகக் கலையிணைந் தும், சமூகக் கலையுடன் விஞ்ஞானக் கலை இணைந்தும் தான் காணப்படுகின்றது. எந் நிலை நோக்கினும் புவியியல் தனி விஞ்ஞா னக் கலையோ அன்றி சமூகக் கலையோ இல்லை. எனவே புவியியல் தனி ஒர் விஞ் ஞானக் கலையென்ருே,சமூகக் கலையென்ருே கூறவிடமுடியாது. இரண்டினையும் இணைக் கும் ஓர் பாலம் போன்றதே புவியியல் எனக் கூறிவிடலாம்.
இறுதியாகப் புவியியலைநோக்குகையில் விஞ்ஞானக் கலையையும், சமூகக் கலையை யும் இணைக்கும் ஒர் பாலம் போன்று காணப்படினும் முழுமையாக எல்லாப் புவி

Page 150
புவியியல் ஓர்.
யியல் அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. புவியியல் பெரும்பாலும் ஒர் தொகுப்பியலாகவே காணப்படுகின்ற தென்று கூறினும்முதலில் புவியியல் வளர்ச் சியில் ஈடுபட்ட தத்துவ அறிஞர்களும், வல் லுனர்களும் விஞ் ஞா ன க் கலை யினை ப் போன்றே புவியியலின வளர்த்தனர். புவி யியல் இயற்கை விஞ்ஞானக் கலையினை சார்ந்த வொன்முகக் கொள்ளப்பட்டு வரு கின்றது. எனினும் சமூகக்கலைக்கு அப்பாற் பட்டதெனக் கொள்வது அ வ் வ ள வு பொருந்துவதான ஒன்றல்ல. ஆதலால் புவி யியல் ஒர் விஞ்ஞானக் கலையா? என்பதற்கு புவியியல் ஆசிரியர்கள், அறிஞர்கள் கருத் துக்களைக் கொண்டு நோக்கில் 'புவியியல் ஓர் கலை, விஞ்ஞானம், தத்துவம் என்பதே
“ஓ! எனதருமை குே தீர்க்கதரிசிகளும் தத் இப் பூவுலகத்தை ஆ வரை அல்லது இன்ை ளும், எம்மால் மன்னர் கப்படுபவர்களும் -த உண்மையாகவும் கி வரை, காடுகளில் ஏ ளுக்கும் பிரச்சினைகளு சமுதாயத்தின் ஆக் தீர்வு ஏற்படாது இருக்கும்.”

4g/ df?6a) /r 8/ 6ö 66? u//r uô 13I
யாம். எனவே புவியியல் பெரும்பாலும் ஓர் விஞ்ஞானக் கலையேயாம்!
ஆதாரம்:-
1. இடைநிலைப் புவியியல்: டட்லி ஸ்ரம்ப்
2. புவியியல் ஒர் தொகுப் பி ய ல்:-
ஜோர்ஜ் தம்பையாபிள்ளை
3. புவியியல்பற்றி அறிவு:- க. குணராஜா
4. காலநிலையியல்:- கென்று !
பொருளாத ாரப்பு வியியல்-அரசாங்க வெளியீடு. (பதிப்பு 1965)
GMTmtáë 35 Gör (Glaucon) துவ சாஸ்திரிகளும் ளும் நாள் ஏற்படும் றய ஆட்சியாளர்க "கள் என்று அழைக் தத்துவ வாதிகளாக ஜமாகவும் மாறும் ற்படும் குழப்பங்க ருக்கும் ஏன், மனித சா பங்கங்களுக்கும்
முடிவற்றதாகவே
- பிளேட்டோ

Page 151
lUith Best
fu
A R U MUG
IMPORTERS AND (
07, Fourth
Colon Grams: TRANSACTER
‘Uits tse Be
S. RAMASAM
Specialized in the Expo Contractors & Manuf
P. O.Box 868, 04 Col.
Cables: ESAROY

Θαrmιρέιrnerείο
(21
AM & Co.
COMMISSION AGENTS
Cross Street,
mbo-ll.
Phone. 252.01
st Comptiments
al
s (Exporters) »rt of all Ceylon Produce icturers' Representatives
, Fourth Cross Street, ombo.
Telephone: 298.33

Page 152
é furardfhuir ga-eir ... ... (Gasni Lirijë)
மருத்துவக் கல்லூரியின் நூற்ருண்டு விழாவோடு பல பேர் நிறைய பத்திரிகை களில் எழுதினர்களே'.என்று குறிப்பிட்ட பேராசிரியர் 1870ம் ஆண்டு மருத்துவக்கல் லூரி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கல்லூரி யின் வளர்ச்சிபற்றி எடுத்துக் கூறிஞர்:
"கீழைத் தேசங்களில் சமூக பொருளா தாரப் பிரச்சினைகளுக்கு மலேரியா முக்கிய காரணமாக விளங்கியது. இதன் விளைவாக வன்னி இராச்சியமும் கிட்டத்தட்ட ஒரு நூற்ருண்டுக்கு முன், மலேரியா நோய் செறிந்த இடமாக இருந்தது. இதன் தாக் கத்தால் வன்னியில் குடியேற்றம் தடைப் பட்டும், மக்கள் செறிவு கு  ைற த் தும் காணப்பட்டது. 1869-ம் ஆண்டில் வட மாகாணத்தின் மருத்துவ அதிகாரியாக GO) ias l r di l r spit 6in (Dr. Loos) இப் பிர ச் ச னை க்கு முடி வு காண விழைந்தார். மக்களுக்கு மருத்துவக் கல்வியைப் புகட்ட வேண்டும்; மருத்துவ உதவிகளே எல்லோருக்கும் கிடைக்கக்கூடி யதாக பரவலாக்க வேண்டும்; இவற்றின் மூலமே மலேரியா நோயை கட்டுப்படுத்த முடியும்; இவற்றை அமுல் நடத்த இந்த நாட்டில் ஒரு மருத்துவக் கல்லூரி அவசி யம் என்று நினைத்த Dr. Loos இலங்கை uair as Enri Goru mrs Løjës Sir George Anderson அவர்களுக்கு சிபார்சு செய்தார். இந்த சிபார்சின் பேரில் மருத்துவம், சத் திர சிகிச்சை, பிரசவவைத்தியம் (Midwifery) ஆகிய பாடங்கள் போதிக்கின்ற ut Lh L u jis SG GivøysT ff? (Elementary School) யாக ஆரம்பிக்கப்பட்டது. Dr. L008 அதி பராக நியமிக்கப் பட்டார். வேறு இரு விரிவுரையாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
மருத்துவக் கல்லூரியில் பெளதிக, இரசாயன ஆய்வு கூடங்கள் இருக்க வில்லை. மருத்துவக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் அரசாங்க தொழில் நுட்பக் கல்லூரிக்குச் சென்று பெளதிக இரசாயன பாடங்களைக் கற் முர்கள். ஒரு விரிவுரையாளரே எல்லாப் பாடங்களையும் கற்பிப்பது அன்றைய நாட் களில் பொதுவான நடைமுறையாக இருந்
difer

avrair SS
உடல் கூற்றியல் பிரிவில், நிரந்தர வி ரிவு ரை யா ளர் க ள் இருக்கவில்லை. கொழும்பு மருத்துவமனையின் சத் தி ர சிகிச்சை நிபுணர்களே பகுதிநேர உடல் கூற்றியல் விரிவுரையாளராகவும் கடமை யாற்றினுர்கள்.
1888-ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரி வழங்கிய L. M.S. பட்டம் பொது மருத்து Gnu iš Gnyp s š5 stav (General Medical Council) அங்கீகரிக்கப்பட்டது. மருத்துவக் கல் லூரியின் வளர்ச்சியில் புதுத் திருப்பமாக இருந்தது. சேர். பொன்னம்பலம் அருணுச் சலம் தலைமையில், அறிஞர்கள் இலங்கை பல்கலைக்கழக இயக்கத்தை ஆரம்பித்தார் கள். இதன் விளைவாக 1920-ம் ஆண்டில் பல்கலைக்கழகக் கல்லூரி ஆரம்பிக்கப்பட் டது. இதன் ஆரம்பத்துடன் மருத்துவக் கல்லூரியும் பல்கலைக்கழகத்தின் ஒரு பீட மாக மாறியது. பல்கலைக்கழக பீடங்களில், மருத்துவ பீடமே பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது."
1934ம் ஆண்டு கலாநிதி பி. கே. சண் முகம் விரிவுரையாளராக நியமிக்கப்பட் டார். அப்போது உடற்கூற்றியல் பிரிவில் நிரந்தர விரிவுரையாளர்கள் இருக்கவில்லை இதஞல் உடற்கூற்றியல் பிரிவு ஒழுங்கற்று இருந்ததால் அதைச்சீர்படுத்தி மாணவர்க ளிடையே புதிய ஒழுங்கு முறைகளே உரு வாக்க வேண்டிய பொறுப்பு இவரிடம் ஒப் படைக்கப்பட்டது.
'நல்லநகர் நாவலன் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே, சைவம் காங்கே’’ என்று பெருமைப் படுவார்களே! இந்த அறிஞன உருவாக்கிய யாழ்ப்பாண மத் திய கல்லூரியே வைத்திய கலாநிதி பி.கே. சண்முகத்தையும் உருவாக்கி தனது புகழ் மிக்க பரம்பரையை உருவாக்கிக் கொண் டது. இவரது தந்தையார் மத்திய கல்லூரி யிலேயே தலைமை ஆசிரியர் பதவியை பல காலம் வகித்தவர். அவரிடம் இருந்தே "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, என்ற வாழ்க்கையின் இலக்கணங்களேக் கற்றுக் கொண்டேன்' என்று தமது இளமைக் ஆாலத்தை நினைவு கூர்ந்தார்.

Page 153
134 (Lvir draff af?uvigu 6ði ......
'" இன்று உடற்கூற்றியலில் மாணவர் வெட்டிச் சோதிக்கும் முறையை (Dissection) நீக்கி விட்டு, வெட்டிச் சோதித்த மாதிரிகளை மாணவர்களுக்கு (Dissected specimen) கொடுக்க வே ண்டும் என் கிருர்களே; இதனுல் நேரம் விரயமா கா மல் தடுக்கப்படுகிறது, மாணவர்களும் இல குவில் கற்றுக் கொள்கிருர் கள்' என்று எல்லோரும் கூறும் கருத்தை சொன்னேன் '' இந்த வாதம் செல்லாது' என்று தீர்ப்ப ளித்தார் இவர், வெட்டிச் சோதிக்கும் முறையே மருத்துவக்கல்வியின் அடிப்படை ஒரு சத்திர சிகிச்சை நிபுணனின் திறமை க்கு வழிவகுப்பது அவன் வெட்டிச் சோதிக் கும் முறையில் பெற்ற அனுபவமே என்று குறிப்பிட்ட பேராசிரியர், சித்திரமும் கைப் யழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பழ ந் த மிழ் மொழியையும் சு ட் டி க் காட்டிஞர்.
தான் பேராசிரியராக இருந்தபோது AD. L-iib Sinfðstóuu6v SF iš asub (Anatomical Society) உற்சாகமாக இயங்கியதைக் குறிப்பிட்ட கலாநிதி சண்முகம் மாணவர்களே அறிவுக் கட்டுரை வாசிப்பதுடன், அறிஞர்களின் பேச்சுக்களையும் ஒழுங்கு செய்து பயன்' பெற்ருர்கள் என்ருர் . இது இன்று இயங்கா மல் இருப்பது பற்றி வருந்துகிறேன் என்று குறைப்பட்டுக் கொண்டார். இன்றைய தலைமுறையினர் போதியளவு ஆராய்ச்சித் துறைகளில் ஈடுபடுவதில்லை என்று இளந் தென்றல் ஆசிரியர் அந்நேரம் கட்டிக் காட் டியது மிகவும் பொருத்தமாக இருந்தது.
இவரின் ஆற்றலை அறிந்த உலக சுகா தார ஸ் தா பன ம் (W. H, O, ) 1959 ம் ஆண்டில் பர்மா தேசத்தின் மருத்துவக் கல்லூரியின் உடற்கூற்றியல் பேராசிரியர் பதவியை அளித்தது. ஆறு மாத காலம் அப்பதவியை வகித்த பேராசிரியர் அதை இராஜினுமாச் செய்துவிட்டு தன் தாய்நாடு நோக்கி வந்துவிட்டார், தன்னுட்டு மாண வர்களுடன் காலத்தைக் கழிப்பதற்காக,
சிந்தனையின் ஊற்று; நாட்டின் வருங் காலச் சிற்பிகளை உருவாக்கும் கலைக்கூடம் என்றெல்லாம் பல்கலைக்கழகத்தை வர் ணிப்பது உண்டு. ஆறல், அக்கலைக்கூடத்

ev rair
தில் நடம்ாடும் அறிஞர்களே சில சமயங்க ளில் சுயநலமும் சந்தர்ப்பவாதமும் நிறைந் தவர்களாகி விடுவதுண்டு. உ ய ர் ந் து செல்ல வேண்டிய காலகட்டத்தில் கதவு கள் மூடப்பட்டன. சேர்ந்தவர்களும் தவ றுதலாகப் புரிந்துகொண்டார்கள்' (76irg மனம் திறந்து தனது வாழ்க்கை அனுபவத் தைக் கூறிய பேராசிரியரின் முகத்தில் துன் டக் கீறுகள் படிவதைக் காணக்கூடியதாக
இருந்தது.
Education should give us not on sy a body of knowledge but a quality of mind. it must liberate the spirit of Man from ignorance and superstition, endow him with sense of enduring values and a capacity for discriminating judgement - 676ir p. 55 துவஞானி இராதாகிருஷ்ணனின் கருத்தை ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட பேராசிரியர் மேலும் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களை அரசியலார் நடத்தும் போது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும்; சிந்தனைச் சுதந் திரத்தை பாதிக்கும்; கல்வியின் நோக்கத் தையும் சிதைத்து விடும் என்ருர்.
இன்று இலங்கையில் பல்கலைக்கழகங் கள் யாவும் ஒன்ருக்கப்பட்டதை குறிப் பி ட் ட பேராசிரியர் ' பல ப ல் கலை க் கழகங்கள் நாட்டில் இரு க் கும் போது அவற்றினிடையே போட்டி மனப்பான்மை ஏற்படும். இது அவற்றின் தரத்தை உயர்த் துவதற்கு உதவி புரியும். பல்கலைக்கழகம் கள் சுதந்திரமாக இயங்குவதுடன் தங் கள் சிந்தனைச் சுதந்திரத்தையும் தனிப் பண்புகளையும் பாதுகாக்க முடியும்.'" இ ைவ பே ரா சி ரிய ரி ன் திடமான கருத்துக்கள்.
உயர்ந்து, நிமிர்ந்து நிற்கும் கட்டிடங் களும் நவீன உபகரணங்களைக் கொண்ட ஆராய்ச்சிக் கூடங்களும் பல்கலைக்கழகத் தின் சிறப்புச்சின்னங்களாகாது. எங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ப பல பரிசோ தனகளை நடத்தலாம் என்ற பேராசிரியர் உலகப் புகழ் பெற்ற உடற்ருெழிலியல் நிபுணர் கலாநிதி சாம்சன் ரைட்டு (Dr. Samson Wright) 5607 dig Gelug-d5 6035 uurt 85 á கூறிய சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார்.

Page 154
பேராசிரியருடன் .
இலங்கை இளம் ம ரு த் து வர் ஒருவர் ஆராய்ச்சிக்காக மிடில் செக்ஸ் - மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரிக்கு (Middlesex Hospital Medical School) போயிருந்தார். அவரிடம் சாம்சன் கேட் டாராம் உங்களுக்கு ஒரு பூனையையும் ஒரு துண்டு நூலையும் தந்தால் என்ன செய்வீர்' என்று, அதற்கு அந்த மருத்துவர் தான் அதைக் கட்டித் தூக்கிலிடுவேன் என்று பதி லிறுத்தார் .இந்தப் பதிலைக் கேட்டு சாம் சன் சிரித்துவிட்டு 'ம க னே பூனையை கொல்லுவதற்கு முன் எத்தனை பரிசோ தனைகளை செய்யமுடியும் தெரியுமா?" என்று கூறிஞாரம்.
இப்பொழுதும் இ ள ம் மாணவர்க ளு க்கு விரிவுரையாற்றுவதாக கன வு காண்கிறேன் என்று கூறும் பேராசிரியர் மற்ருெரு சுவையான நிகழ்ச்சியைக் குறிப் யிட்டார். தான் விரிவுரை வகுப்பு ஒன்று நடத்திக் கொண்டிருந்தாராம். சில மாண வர்கள் கதைத்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். விரிவுரை கே ட் க விருப்பமில்லாதவர்கள் வெளியேறுங்கள் என்றேன். சில நிமிடங்களில் என் முன் வெறும் கதிரைகள்தான் காட்சியளித்தன. இது கன வி ல் கண்ட அனுபவம் என்று சொல்லிச் சிரித்தார்.
தமிழ் மக்களும் அறிஞர்களும் விழித் துக் கொண்ட காலம் 1956ம் ஆண்டிற்குப் பின்பே. எங்கள் தாயகம் வட - கீழ் மாகா ணங்கள் இணைந்த 'ஈ ழ த் தமிழ கம்" என்ற உணர்வு அரும்பு விடத் தொடங் கிய நேரம், இந்தச் சூழ்நிலையில் திரும லையை தலைமை ஸ்தானமாகக் கொண்டு தமிழ்ப்பல்கலைக்கழகம் அ  ைம ப் பதற்கு புதிய இயக்கம் தோன்றியது. இதன் முன் னுேடிகளில் பேராசிரியர் பி. கே. சண்முக மும் ஒருவர். வருங்கால இளைஞர் சமுதா யத்தை எண்ணி ஆரம்பிக்கப்பட்ட இயக் கம் இன்று தடைப்பட்டுக் கிட க் கிற து என்று வருந்திக் கொண்டார். இதஞல் தான் அவ்வியக்கத்திலிருந்தே இராஜின
மாச் செய்துவிட்டாராம்.
*று
ଷ୍ଟ

Ꭷ/ Ᏸ7Ꮝir 135
தமிழ் அரசியல் பக்கம் எ ங் களை த் திசைதிருப்பிஞர். தமிழ் அரசியல் தலைவர் கள் தம்மிடையே விட்டுக் கொடுத்து சமர சம் காணும் மனப்பான்மை அறவே கிடை யாது. பேராசிரியர் சி. சுந்தரலிங்கம், எஸ். ஜே. வி. செல்வநாயகம் கியூ. சி., ஜி. ஜி பொன்னம்பலம் கியூ. சி. ஆகியோ ருடன் தான் பல்கலைக்கழக விடயத்தில் திருப்பித் திருப்பிக் கூறியும் பலன் கிடைக் கவில்லை என்ருர், அவர்கள் தமிழ் ம க் களை வழி ந ட த் த த் தவறி வி ட் டார்கள் என்ற ப ர வ லா ன கருத் தையும் அவர் ஏற்றுக் கொண்டார். இந் நாட்டின் ஒரு கால கட்டம் தமிழர்களின் பொற்காலம் என்பார்கள். அறி வி ய ல் துறையின் எல்லாப் பீடங்களிலும் மருத் துவம், பொறியியல், கணிதவியல்,விஞ்ஞா னம் ஆகியவற்றில் தமிழர்கள் முன்னேடிக ளாக விளங்கினர்கள். பேராசிரியர்கள் சண்முகம், எலியேசர், ம யில் வா கன ம் போன்றவர்கள் அறிவியற் கல்வி யின் பெரும் தூண்களாக நின்ருர்கள். இவர்கள் வளர்த்த கல்வியின் வளத்தையும், பயனை யும் வினையையும் இந்நாட்டின் அறிஞர் சமு தாயம் பெற்று மகிழ்ந்தது. இவைகளை அடிக்கற்களாகக் கொண்டே அறிவியற் சமுதாயம் கட்டி எழுப்பப்பட்டது. எழில் வாயில் களை இவர்கள் அழகு செய்தார்கள். கற்கள் பேசுவதில்லையே! அவர்களும் எங் கேயோ முடுக்குகளில் ஒதுங்கி விட்டார் கள். பொற்காலம் முடிந்து விட்டது. இன் றைய தலைமுறையினராகிய நாம் இருண்ட
பாதையைத் தான் எம்முன் பார்க்கிருேம்.
தனக்கு விளம்பரம் வேண்டாம் என்று கூறும் பேராசிரியரிடம் ஒரு புகைப்படம் எடுப்பது பெரும்பாடாகி விட்டது. தன்ன டக்கம் அறிஞரின் சின்னமல்லவா? உங்க ளைப் பற்றி எழுதுவதில் இளந்தென்றல் பெருமைப்படுகிறது என்று நாம் அவரிடம் சொல்லி, பேட் டி கிடைத்தமைக்காக நன்றி கூறி விடை பெற்ருேம்.
鲤

Page 155
Leading House in
Kili
| Ne"Y SingapC
Kandy KLING
F
O PATE O MILK
O GROC
C) AGRC
Prescriptions accurately
and experience
With the Compimenta
of
Ceylon Ceme
Manufacturers of High
KANKESAN - RUH

nochchi
re Pharmacy
y Road,
)CHCHI.
FOR
NT MEDICINES
FOODS
CERES AND
D CHEMICALS
y dispensed by registered di PHARMACISTS.
nf Corpora tion
Quality Portland Cement
UNU & TAMMANNA
CEYLON CEMENT CORPORATION
INDEPENDENCE SOUARE, COLOMBO-7.

Page 156
செல்வம் செழிக்கும் நாடாக
நோயற்ற சமுதாயத்தை
மக்களுக்குத் தேவையான களே காலநேரத்திற்ே செய்வதன்மூலம் எ செய்வே/
கூ. மொ. வி.
21, வொக்ஸோல் வீதி, கொழும்பு-2.
ෆිලෙන0ට්ඨි
 
 

旧 6홍 功 5 -| lae 监 功 bas
正出 s=s. 功 真 斑 e o 川 们广 衍 © ® 们广 è 心
S 历
བྲ 娜娜 游艇序 魔影 娜。 烟 脚
ገ‛ L0/Í ̇ó፩ /
: 20351
தொலைபேசி

Page 157
நுணுக்குக் அப்பால்
"Nothing brings us so close to the middle of life and to solutions as
viruses'
-VVeidel
மெற்றேவர்ஸ் எனும் இடத்தில் உள்ள இடுகாட்டு மைதானத்தில் காணப்படும் ஒரு நடுகல்லில் பின்வருமாறு பதிக்கப்பட் டுள்ளது. "1810-ம் ஆண்டு சித்திரை மாதம் 10-ம் திகதி தமது 79வது வயதில் மரித்த பென்ஜமின் ஜெஸ்டே என்பவரின் ஞாபகார்த்த சின்னம். முதன் முதலில், பசுக்களில் ஏற்பட்ட வைசூரிநோய் அங்கி களை ஊசிமூலமாக மனிதனுட் செலுத்திய வரும், மனத்திடத்துடன் தமது மனைவியி லும் இரு ஆண்மக்களிலும் இந்நோயைப் பரிசோதனை செய்தவரும் இவரே யாவர்.'
இது இப் பொழு து நாம் அறிந்த அம்மைநோயைப் பற்றியும் அம்மை குத்த லைப் பற்றியும் குறிப்பிடுகின்றது. இதற்கு முன்னரேயே அம்மைநோய் உலகின் பல பாகங்களிலும் காணப்பட்டது என சரித்தி ர ம் கூறு கி ன் றது. உ+ம் : கி. மு. I 7 0 0 lb ஆ ண் டி ல் சீன வி லும் கி.பி. 1000 இல் உலகின் எல்லாப் பாகங்க ளிலும் இது காணப்பட்டது. கி.பி.1576-ம் ஆண்டில் மணிஉருவப்பூவில் வைரசு இருந் தது எனவும், கி.பி. 1770 இல் பிரித்தானி யாவில் உருளைக்கிழங்குச் செடியில் பல் வேறுவகை வைரசு நோய்கள் தென்ப்ட்

காட்டிக்கு
– HDIf O IDT KhmbUlr
டன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அக் காலத்தில் வைரசு ஒரு தொற்றுநோய்க் கருவியென எவர்க்கும் தெரியாமையினுல் மேற்கூறப்பட்ட நோய்கள் வைரசு நோய் களாக இருக்கும் எனக் கருதப்படவில்லை.
கி.பி. 1892-ம் ஆண்டில் இவனேஸ்கி (Ivanoski) எனும் உருசியத் தாவரவியலறி ஞர் புகையிலைச் செடியைப் பீடித்த சித்திர வடிவு (Mosaic) நோயைப்பற்றிய ஆராய்ச் சியில் ஈடுபட்டார். நோய்ப்பட்ட செடி யின் சாற்றை எடுத்து நுண்ணிய வடிகருவி யின் ஊடாகச் செலுத்தினர். வடிகருவி யால் பற்றீரியா முற்ருக நீக்கப்பட்டபோ திலும், இச்சாற்றை நோயற்ற புகையிலச் செடிகளில் பூசியபோது இச்செடிகளும் சித் திரவடிவு நோ யா ல் பீடிக்கப்பட்டன. வைரசுநோயைப் பற்றிய முதலாவது, விஞ் ஞான முறைப்படியான செயல் விளக்கம் இதுவேயாகும். இம் மிகக் கருத்துவாய்ந்த அவதானிப்பில் எவரும் கவனம் செலுத்த வில்லை. இவஞேஸ்கியும் அதன் முக்கியத்து வத்தை உணரவில்லை. 7 வருடங்களின் பின்னர் பெய்ஜெரினக் (Beizerinek) என்ப வரே இதனை மீண்டும் உலகின் கவனத்துக் குக் கொண்டுவந்தார். நோயை ஏற்படுத் திய கருவிக்கு தொற்றும் உயிருள்ள பாய் பொருள் என்ற கருத்துப்பட 'Contaம gium νίνum fluidum'' 6τσοτ ου 5 βουτ மொழியில் முதலில் பெயரிட்டார்.

Page 158
நுணுக்குக்காட்டிக்கு.
இது இவ்வாறு இருக்க 1898 இல் Glavnr 96Tri (Loeffler), y Golgt frë ( Frosch) என்பவர்கள் குளம்பு வாய்களின் வியாதி 6Dull usibili (foot and mouth disease) ஆராய்ந்து கொண்டிருந்த போது இவ் வியாதிக்குக் காரணமான கருவியும், பற் நீரியாவை உட்புகவிடாத வடிகருவிக்கு ஊடாக செல்லக் கூடியதெனவும் இவை பெருகக் கூடியன எனவும் விளக்கிக் காட்டி ஞர்கள். இவற்றின் பின்னர் வைரசுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு முன்னேற்ற மும் காணப்படவில்லை. கடந்த முப்பதாண் டுகளுக்குள்ளாகவே மீண்டும் ஆராய்ச்சி கள் தொடங்கின. வைரசுவின் முக்கியத்து வமும் எல்லோர் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது.
கடந்த சில வருடங்கட்குள் மனிதன், விலங்கினம், பற்றீரிய, தாவரங்கள் ஆகிய தொகுதிகளைத் தாக்கும் பல வைரசுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நுளம்புகளினுல் பரம்பும் மஞ்சட்சுரம், நாய்களினல் பரம் பும் விசர்நாய்க்கடி, சுவாசிக்கும்போது காற்றிலிருந்து தொற்றும் சின்னமுத்து. கூவைக் கட்டு, தடிமல், சளிச்சுரம், பொக் களிப்பான், மலக் கழிவுகளுடன் பூமியில் காணப்பட்டு அசுத்தமான உணவின் மூலம் தொற்றும் சிறுபிள்ளை வாதம் ஆகிய வைரசு நோய்கள், மனிதனை நேராகத் தாக்கும் சில எதிரிகளாகும். உருளைக்கிழங் gd; GFLyulair gabuco air (Potato leaf roll) பல வகையான சித்திர வடிவு (Mosaic), கொக்கோவின் அங்குர வீக்கம் (Swolen shoot of Cocoa), U(35& lost (55) GDIT ti as air (Yellowing diseases) g5u60T 5 stal ரங்களைத் தாக்கி விளைபயனைக் குறைத்து மறைமுகமாக மனிதனைத் தாக்கும் எதிரிக ளாகும்.
வைரசு நோய்களினல் மனித இனத் திற்கு ஏற்பட்ட துன்பமும் உயிரிழப்பும் கணக்கற்றவை. பலமுறை நடந்த உலக யுத்தங்களின்போது பல போர்வீரர்கள் மஞ்சட்சுரத்தினுல் இறந்தார்கள். 19181919 இல், 44 வருட காலமாக நடை பெற்ற யுத்தத்தினுல் மா ண் ட வ ரின் தொகையை விட, சளிச்சுரத்தினல் பீடிக் கப்பட்டு மாண்டவரின் தொகை அதிகமா

உமா கந்தையா 139
னது. அம்மைநோயினுல் இந் தி யா வில் 6,000,000 பேரும் இங்கிலாந்தில் 150,000 பேரும் மாண்டனர். குளம்புவாய்களின் வியாதியினல் ஐ ரோ ப் பி ய நாடுகள் கோடிக்கணக்கான பணத்தை இழந்தன. உருளைக்கிழங்கு தொழில்துறையினுல் வரு டாவருடம் 2 2,000,000 அழிந்து போகின்றது.
இவ்வெதிரியின் தன்மை எத் த  ைக
G·
ug:
இக்கருவி இப்போது வைரசு எனப்படு கின்றது. இது கண்ணுக்கோ ஒளி நுணுக்குக் காட்டிக்கோ தென்படாது. இதனுல் இதை அதீத நுண்ணங்கி எனவும் கூறுவர், கலத் தைத் தாக்கிக்கொண்டிருக்கும் போது வைரசுவைப் பார்க்கமுடியாது, கலத்துக்கு வெளியே இருக்கும்போது இ ல த் தி ர ன் நுணுக்குக்காட்டியினல் மாத்திரம் பார்க்க முடியும். இத்தகைய நுண்ணங்கிகள் எத்த கைய சக்தி கொண்டது என்பதற்கு, சிறு பிள்ளைவாத வைரசு வை ஒரு உதாரண மாகக் கொண்டால் விளங்கும். ஒரு துணுக்கை ம னி த னு  ைடய கலத்தில் தொற்றிவிட்டால் சில மணித்தியாலங்க ளுள் 1000 புதிய துணுக்கைகளை உண் டாக்கி, அக்கலத்தை அழித்து, மற்றைய கலங்களுக்குள் பரவிப் பின்னர் நரம்புத் தொகுதியைத் தாக்கி வாதத்தை ஏற்ப டுத்தும். இவ்வாதத்தால் பீடிக்கப்பட்ட பல சிறுவர்களை எம்மத்தியில் காணும் போது அந்நோயின் கொடுமை எல்லோ ருக்கும் விளங்கும்.
கதிர்ச்சமதானிகள், மின்ன யணம் நிறப்பதிவியல், மையநீக்கம், இலத்திரன் நுணுக்குக் காட்டியியல் போன்ற இரசாய னப் பெளதிக செயல்முறைகளை உபயோ கித்தே வைரசுகளின் தன்மையும் அமைப் பும் கற்றறியப்பட்டன. இச் செயன்முறை களை உபயோகித்து ஸ்ரான்லி என்பவர் 1935ம் ஆண்டு புகையிலைச் சித்திர வடிவு நோயுண்டாக்கும் வைரசுவின் (TMV) அமைப்பைக் கண் டு பி டி த் தார். இவ் வாராய்ச்சியின் போது இவ்வைரசு பளிங்கு களாக படியிறக்கம் செய்யப்பட்டது. வைரசு உயிருள்ள அங்கியாக இருக்கலா

Page 159
140 நுணுக்குக்காட்டிக்கு.
மென்ற கரு த் து க் கு எதிர்மாறனதா அமைந்தது. இவ்வாராய்ச்சிகள், வைர கள் பிரதானமாக மையத்தில் நியூக்கிளி கமிலத்தையும் அதைச் சுற்றி உை போன்ற புரதத்தையும் கொண்டிருக்கி றன எனத் தெரிவித்தன. சில பெரிய வை சுகளில் வேறு சில ப தார் த் தங்க ளு காணப்படலாம். பற்றீரிய வைரசுவை போன்றவைகளில் வால், வால்நார்க போன்ற விசேஷ அமைப்புகளும் காணப் டலாம். நியூக்கிளிக்கமிலத்தில், றையோ யூக்கிளிக்கமிலம் (RNA), ஒட்சியற் றையோநியூக்கிளிக்கமிலம் (DNA) எ இருவகை உண்டு. பல தாவர வைரசுக லும் சிறுபிள்ளை வாதம் போன்ற, சி விலங்குவைரசுகளிலும் RNA காணப் டும். பற்றீரியா வைரசுகளிலும், அம்ை வைரசு போன்ற பல விலங்கின வைரசுக லும் ஒரு சில தாவர வைரசுகளிலும் DN காணப்படும். இவ்வைரசுக்களின் பரும
50 மி.மை. - 200 மி.மை. க்கும் (மி மைக்ருேன் 1 மி.மை. -- மி. மீற்றர் இடைப்பட்டது.
வைரசுகள் பருமனில் மிக நுண்ணி தாகவும் அமைப்பில் சாதாரண இரசாய மூலக்கூறுகள் போன்று எளிதானதாகவு இருந்தும், பெருமழிவை உண்டாக்கக் கூ யனவாக இருக்கின்றன. வைரசு ஒரு கல தினுட் புகுந்ததும் அக்கலத்தில் சாதாரண மாக நடை பெற்றுக் கொண்டிருக்கு அனுசேபச் செய்கைகளை உடன் அதிகார துடன் நிற்பாட்டுவதுமல்லாமல், அ கலத்தைக் கொண்டே புதிய வைரசு, துணிக்கைகளைத் தோற்றுவிக்கச் செய்யும் கலத்தினுள், கலத்தின் நிறமணிகளின் ஒ பகுதி போல் நடிக்கின்றது.
இவ்வாறு வைரசு, தாக்கிய கலத் னுள் பெருகும்போது, சில உதாரணங் ளில் தான் பெருகிய கலத்தைக் கொன் விடும். பெருமளவு கலங்கள் படிப்படியா இறந்ததும், விலங்கும் இறக்கநேரிடும் உதாரணம்: சிறுபிள்ளை வாதம் வேறும் சி உதாரணங்களில் கலம் இறக்காது. வைர கலத்துக்குக் கலம் தாளுகப் பெருகும் உ-ம்: கூவைக்கட்டு, இன்னும் சில உதா ணங்களில் தொற்றி கலங்கள் ஒழுங்கற். முறையில் பி ரிய த் தூ ண் ட ப் படும் ae-ib LHAbaG3J5mruiı.

உமா கந்தையா
h
)
19ம் நூற்ருண்டில் இருந்த உயிருள்ள அங்கிகளின் பருமன், மிகப்பெரிய திமிங்கி லத்திற்கும் மிகச் சிறிய பற்றீரியாவிற்கும் இடையிலுள்ளதாக இருந்தது. அன் றி ருந்த மூல க் கூறு க ரூம் இரு அணுக் களாலான ஐதரசன் வாயுவுக்கும் மிகச் சிக்கலுடைய புரத மூல க் கூறு க் கும் இடைப்பட்ட பருமனுள்ளதாக விருந்தது. 150 மி. மை பருமனுடைய பற்றீரியாவை விடச் சிறிய உயிருள்ள அங்கியோ, 22 மி. மை லக்கூறைவிடப் பெரிய மூலக்கூ றுகளோ இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது, உயிருள்ள அங்கிக்கும் உயிரற்ற மூலக்கூறுக்குமிடையில், ஒரு இடைவெளி காணப்பட்டது. 1898ம் ஆண்டு, அன்று வரை அறியப்பட்ட உயிருள்ள அங்கிகள் யாவற்றிலும் பார்க்கச் சிறிதான ஒரு அங்கி கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வங்கி தானகவே இனம் பெருக்கக் கூடியதாகவும் புகையிலைச் செடியில் நோயை உண்டாக்கக் கூடியதாகவும் இருந்தது. 1935ம் ஆண்டு அன்று வரை அறியப்பட்ட மூலக்கூறுகள் எல்லாவற்றையும் விடப் பெரிய இரசா யனப்பொருள் ஒன்று தனியாக்கப்பட்டது. அந்நுண்ணங்கியும் இம்மிகப் பெரிய மூலக் கூறும் ஒரே பொருளான Tnv ஆகும். உயி ருள்ளவைக்குரிய விளக்கத்தையும் உயிரற் றவைக்குரிய விளக்கத்தையும் திருப்திப்ப டுத்தி, உயிரியல், இரசாயனம் ஆகிய இரு பெரும் பிரிவுகளுக்கிடையில் இருந்த இடைவெளியை நிரப்புகின்றது.
உலகத்தின் பொருட்களை இர ண் டு
தெளிவான தொகுதிகளாக நோக்காது
படிப்படியாகச் சிக்கலில் ஏற்றத்தைக் காட் டும் ஒரு தொடர் வரிசையை இப்போது காண முடிகின்றது. இப்போது அமைப்பு முறையில், அணுவிலிருந்து எளிதான மூலக் கூறுகளுக்கூடாக பெரு மூ ல க் கூ றுகள், வைரசு, பற்றீரியா, இழுதுமீன் மனிதன் வரை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய தாயுள்ள பொருட்களை ஒரு வரிசைப்படுத் தக்கூடியதாக, இருக்கின்றது.
“Nature makes so gradual a transitjon from the inanimate to the an im ate kingdom, that the boundary din er which separate them are indistinct
and doubtfu.'"
Aristotle

Page 160
வானிலை அவத
எதிர்வு கூறலும்
ിTഒി& 6T Sri 6 dispái) ( Weather forecasting) உலகநாடுகள் அனைத்திலும் நிகழ்த் தப்படுகிறது. எனினும் வானிலை எதிர்வு கூறலில் உள்ள தொழில் நுட்பம் எங்கும் ஒரே மாதிரி இல்லை எனலாம். குறிப்பிட்ட ஒவ்வொரு நாட்டின் அவதான நிலையங்க ளும் கொண்டுள்ள அவதானிப்புக் கருவி கள், தொழில்நுட்பவிருத்தி, அரசாங்க நிதிவசதி ஆகியன வானிலை எதிர்வு கூற லின் உண்மைத்தன்மையை நிர்ணயிக்கின் றன. தொழில் நுட்பத் துறையில் நன்கு விருத்தியடைந்த ஐ க் கிய அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன் போன்ற நாடுகளில் வ n னிலை அவதானிப்பும் அதைச் சேர்ந்த வானிலை எதிர்வு கூறலும் மிகச் சிறந்த முறையில் நிகழ்த்தப்படுகின் றன. இத்தகைய நாடுகளில் வானிலை அவ தானிப்பு எதிர்வு கூறலுக்கான செயற் கைக் கிரகங்கள் (Forecasting Satellites) இத்துறையில் ஈடுபடுத்தப் படுகின்றன. இன்றைய வானவெளியுகம் (Space age) இதற்குக் காரணமெனினும் அனேக நாடு களில்இந்நிலைமை இல்லை. அதிலும் மிக அண் மைக் காலத்தில் விரு த் தி அடைகின்ற ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடு களில் மிகக் குறைந்த தரத்திலேயே இத் துறை அமைந்துள்ளது. எ னி னு ம் , இன்று எல்லாத்துறைகளிலும் நெருங்கிய நிலையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள உலக நாடுகள் அனைத்தும், இத் துறையில் மிக ஆர்வம் காட்டுகின்றன.
வானிலை எதிர்வு கூறல் என்று கூறு கின்றபோது, குறிப்பிட்ட நேரத்தில் அவ தானிக்கப்பட்ட வானிலை அவதானங்களை

ானிப்பும்
பகுப்பாராய்வு செய்து அடுத்துவரும், நிக ழக்கூடிய வானிலை என்ன என்பது பற்றி எடுத்துரைத்தல் எனலாம். ஆக வே வானிலை எதிர்வு கூறல் மூன்று முக்கிய ஆராய்வுப் டா டி களை க் கொண்டுள்ளது. aureaf8ay sairr Gill (Weather observation), alm Gafabul Luglium til 6 (Weather analysis) onunt Gorfðav STSri ongin späiv (Weather forecasting) என்ற நிலைகள் இதில் அடங்கு கின்றன. இவ்வாறு படி முறையான ரீதி யின் முடிவாக இ ன்  ைற ய எதிர்கால வானிலை அறிக்கைகள் வெளியிடப்படுகின் றன. எனினும் இந்த நவீன முறை ஏற்பட முன் வானிலை அவதானிப்போ அல்லது அது சம்பந்தமான ஏனைய நடவடிக்கை களோ மேற்கொள்ளப்படவில்லை என்பது இதன் கருத்தல்ல. கிரேக்கர்காலத்திலேயே ஒரளவுக்கு ஒழுங்கான வளிமண்டல அவ தானிப்புக்கள் இருந்தன என்பதும், இவை "Pararegna என்னும் வெளியீடுகளாக வெளியிடப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடக் கூடியனவாகும் இதே காலத் தில் கணிப்பு ரீதியான வானிலை அவதா னங்களை இந்தியர், தொடர்ந்து அரேபியர் ஆகியோர்கள் மத்தியில் ஆராயப்பட்ட போதும், வானிலை அவதானிப்பு அபி விருத்தியில் புதிய யுகம், கலிலியோ (Galeleo-1593) வினுல் வெப்பமானி கண்டு பிடிக்கப்பட்டதன் பின்புதான் ஏற்பட்ட தெனலாம். படிப்படியாக வளர்ந்த இத் துறை முதலாம் இரண்டாம் உலகயுத்த
S. பாலச்சந்திரன்

Page 161
142 oy r6öf°đko sy o/ đố (r 6öf? L7 ty tồ......
காலங்களுடன் ஏ ற் பட் ட வானவெளி அறிவு விருத்தி; வளிமண்டல முப்பரி மாண ஆராய்வு அபிவிருத்தி; மேற் காற்று மண்டல அவதானங்கள் ஆகியவற்ருல் நன்கு செழுமை படுத்தப்பட்டது.
வெப்பமானி, மெர்குரி அமுக்கமானி (Mercurial bar o meter), Go g mr ðav ö தொ ட ர் பு, வாயுக்குண்டு, (Baloon), வாயுக்குண்டுக் காற்ருடி (Kites), றேடார், ஏவாயுதம் தொலைக் காட்சிக் கருவி, செயற்கைக் கிரகங்கள் (Satellites) என்ற அடிப்படையில் படிப்படியாக வானிலை அவதானிப்புத் தொழில் நுட்பம் வளர்ச்சி பெற்று தனி ஒரு அறிவியலாக விளங்கு கின்றது. 1957ம் ஆண்டு சோவியத் யூனிய ஞல்வான வெளியில் அனுப்பப்பட்ட" ஸ்புட் னிக்(Sputnk) வான வெளி யுகத்தை ஆரம் பித்து வைத்தது எனலாம். இதன் பின் சோவியத் யூ னி ய ஞ லும் ஐ க் கிய அமெரிக்காவினுலும் பல செயற்கைக் கிரகங்கள் அனுப்பப்பட்டன. எ னி னும் வானிலை அடிப்படையில் 1960 ஏப்ரலில் அனுப்பப்பட்ட Tir S என்னும் செயற்கைக் கிரகம் இத்துறையில் சாத னையை நிலை நாட்டியது. இக்கிரகம் மிகச் சிறப்பான முறையில் வானிலை அவதானப் படங்களை அனுப் பத் தொடங்கியது. எனவே இக்காலத்தில் இருந்து புவிக்கோள ரீதியான வானிலை அவதான யுகம் ஏற்பட் டது எனலாம், இன்னும் பல வானிலை அவ தானிப்புச் செயற்கைக் கிரகங்கள் வான வெளி முழுவதும் மிதக்கின்றன. இதன் கார ணமாக இந்தச் செயற்கைக்கிரகங்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருக்கும் நாடு கள் வானிலை அவதானிப்பிலும் அதில் இருந்து கணிக்கப்படும் வானிலை எதிர்வு கூறலிலும், விருத்தியடைந்த முறையைப் பின்பற்றுகின்றன. இந்நாடுகளின் மேற் பரப்பு நிலைகள் மட்டுமல்லாமல் மேல் காற்று மண்டலங்கள் பற்றிய நிலைகளை இக் கிரகங்களின் தொலைக் காட்சிப் படங்கள் தெளிவுபடுத்துகின்றன. எனினும் இத்த கைய நேரடியான அவதானிப்பை மேற் கொள்ளுதல் இலங்கை போன்ற சிறிய, தொழில் நுட்பத்துறையில் பின் தங்கிய நாடுகளில் விரைவில் நிகழக் கூடியதல்ல.

S. பாலச்சந்திரன்
அபிவிருத்தியடைந்த நிலையில் உள்ள ஒரு பொதுப்பார்வைக்குரிய வானிலை அவ 5T 607 508houLulb (Standard synoptic station) பின்வரும் வானிலை ஒழுங்கு மூலங்களே அவ தானித்தல் அவசியம். நிகழ்கால வானிலை, காற்றின் திசையும் வேகமும், முகிலின் தொகை, மொத்த முகில் வகை, தாழ்முகிற் தொகை, தனிப்பட்ட தாழ்முகில் அல்லது முகிற் திணிவு, முகிலின் உருவம், முகிற் செறிவின் உ ய ர ம், கட்பு ல ளு கு ம் தன்மை, உலர் குமிழ் வெப்பநிலை, ஈரக்கு மிழ் வெப்பநிலை அமுக்கமா னில் போக்கும் தன்மையும். அமுக்க மானியமுக்கம் கடந்த வானிலை, மேற்பரப்பு நிலை, அதிகளவு அடையப்பட்ட வெப்பநிலை (கூடியதுகுறைந்தது), புல் நிலத்தில் குறைந்த வெப் பநிலை, புவிமேற் பரப்பின் கீழ் உள்ள வெப் பநிலை, சூரியஒளி மாறுதல்கள், என்பன மிக முக்கியம் வாய்ந்தனவாகும். இந்த ஒழுங்கு மூலங்களை அவதானிக்கும் அவ தான நிலையம் தனது வானிலை எதிர்வு கூற லில் உண்மைத்தன்மையை மேற்கொள்ள லாம். இத்தகையவற்றின் அவதானங்கட்கு முன் கூறியது போன்ற வானிலை அவதா னிப்புக் கருவிகள் பயன்படுகின்றன. ஆயி னும் இவை மேற்பரப்பு வானிலை அவதா Gof j j gj Lou Gb (Surface observation) அதிகளவுக்கு பயன்படலாம், எனினும் மேற்பரப்பின் மேல் காணப்படுகின்ற காற் றுத் தொகுதிகளில் ஏறக்குறைய 20 கில் லோ மீற்றர் உயரம்வரை அவதானத்தை - Guop G6 ft 6ira 6 dij (Upper air observation) அதிக பயனைத் தரமுடியாது. எ ன வே இவற்றுக்கு ரேடார், தொலைக் காட்சிக் சருவி, வானிலை அவதானக் கருவி, செய் திப் பரிமாற்றக் கருவி ஆகியவை இணைக் கப்பட்ட வானிலை அவதானிப்புச் செயற் கைக் கிரகங்கள் பயன்படுகின்றன. இவற் றின் மூலம் வானிலையைப் பாதிக்கும் மேல் காற்று மண்டலச் சக்திகள் பற்றிய முன்ன றிவிப்பு பெறப்படுகின்றது. சோவியத் யூனியன், ஐக்கிய அமெரிக்கா போன்றவை உலகம் முழுவதற்குமான இத்தகைய அவ தானிப்பைச் செய்கின்றன. சில முக்கிய தரவுகளைப் பொறுத்தவரையில் இந்நாடுக ளின் வானிலை எதிர்வுகூறல் ஏனைய பல நாடு களின் அவதான நிலையங்களுக்குப் பெரும் பயன் சொடுக்கின்றது. இதே துறையில்

Page 162
வானிலே அவதானிப்பு/ம்.
இன்று விருத்தியடையும் நாடுகளான யப்பான், சீன இந்தியா போன்றவையும் முன்னேறுகின்றன என்பது இங்கு குறிப்பி டத்தக்கதாகும். இலங்கையைப் பொறுத் தமட்டில் இலங்கை முழுவதற்கும் பொது வாக நவீன வசதிகளுடன் கூடியமேற்பரப்பு வானிலை அவதான நிலையம் ஒன்றுதான் இருக்கிறது என்பது வருந்தத் தக்கதாகும்.
வானிலை அ வ தா ன த் தி ன் மூலம் பெறப்படும் தரவுகள் வானிலைப் பகுப்பா ராய்வுக்கு உள்ளாக்கப் பட்டபின்புதான் எதிர்வு கூறலில் உபயோகிக்கப் படுகின் றன. இந்தப் பகுப்பாராய்வுகள் வளிமண்ட லத்துக்கு முப்பரிமாண நிலையைக் கொடுக் கின்றன. பொதுவாக நோக்கும்போது வானிலைப் பகுப்பாராய்வில் இரு முக்கிய நோக்குகள் பின்பற்றப்படுவதைக் குறிப்பி டலாம். ஒன்று, பிரித்தறியும் நோக்கு (Diagnostic approach), posibsp (Prognostic A p p r o a c h) GTSrifeny sin spyuh நோக்கு. இதில் முதலாவது, கடந்த வாணி லைத்தன்மைகளில் இருந்து வளிம ண் டல நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதா கும் இரண்டாவது, நிகழும் வானிலைத் தன்மைகளை அடிப்படையாக  ைவ த் து எதிர்காலவானிலைக்குரிய முன்னறிவித்தலை நிர்ணயிப்பது. இவை இரண்டு முறைகளி லும் இரண்டாவதாகக் கூறப்பட்ட முறை வானிலை எதிர்வு கூறலுக்கான பகுப்பா ராய்வில் முக்கியம் பெறுகின்றது. ஆகவே எந்த முறையிலாவது வானிலை அவதா னிப்பைத் தகுந்த முறையில் பகுப்பாராய்வு செய்வதில்தான் வானிலை எதிர்வு கூறல் தங்கியுள்ளது எனலாம்.
வானிலைப் பகுப்பாராய்வில் வானிலை அவதானிப்பின் போது பெறப்பட்ட செய் திகளைப் பரிமாற்றம் செய்வது (Communication) மிக முக்கியமாகும். ஒரு குறிப் பிட்ட நாட்டில் சில நவீன அவதான நிலை யங்களும் தலைமை அவதான நிலையமும் வேறு நிலையங்களும் காணப்படலாம். அல் லது குறிப்பிட்ட சிறுநாடு, வேறு நாடுகளில் உள்ள அவதான நிலையங்களில் இருந்து தரவுகளைப் பெறலாம். எடுத்துக் காட் டாக இலங்கையை எடுத்துக்கொண்டால் கராச்சி, புது டெ ல் லி, ஜாகர்த்தா,

S பாலச்சந்திரன் 143
மனிலா, கல்கத்தா போன்றவற்றில் இருந்து தரவுகள் பெறப்படுகின்றன. உல கின் தலையாய அவதான நிலையங்களுக் கிடையில் (நியூயோர்க், லண்டன், மொஸ் கோ) இவ்வாறு தொடர்பு காணப்படுகி றது. இதேபோல் அவதான நிலையங்கள் செயற்கைக் கிரகங்களில் இரு ந் தும், வானி லை அவதானிப்புக் கப்பல்களில் இருந்தும் சமிக்ஞைகளைப் பெறுகின்றன. எனவே இங்கு செய்தித் தொடர்பு அவை கிடைக்கும் வேகம் என்பன விரைவான பகுப்பாராய்வுக்கு முக்கியமாகின்றது. இச் செய்திகள் பரிமாற்றம் செய்யும் ரெலி பிரிண்டர்கள் மூலமும் வாஞெலிக் கருவி மூலமும் தன்னியக்க செய்தித் தொடர்புக் கருவி மூலமும் பெறப்படுகின்றன. மேலும் விருத்தியடைந்த நாடுகளில் வானிலை அவ தானிப்புச் செயற்கைக் கி ர க ங் களில் இருந்து கிடைக்கும் தொலைக் காட்சிப் புகைப்படங்கள், வானிலைக் குறிப்புகள் மூலமும் பெறப்படுகின்றன. இத்தகைய வானிலைச் செய்திகள் உலக வளிமண்டல வமைப்பு (WMO) வகுத்துள்ள ஒரு சர்வ தேச எண் குறியீட்டு அடிப்படையில்(International Numerical Code) uSull Gell தால் எல்லா நாடுகளின் அவதான நிலை யங்களும் புரிந்து கொள்ளக் கூடியதாயும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று உதவியளிக்கக் கூடியதாகவும் உள்ளது.
இக் குறியீடுகளைத் துணைக்கொண்டு பல வானிலைப் படங்களை அமைத்தல் பகுப் பாராய்வு செய்யப்படுகிறது. இவற்றில் arroof wiGs, it 'Glu l-ib (Weather Chart) மேற்பரப்புக்கான வானிலைக் கோட்டுப் ul-lh (Surface Chart) Gudibupril LDIT gif (Surface Model), Guð6ð sm þM 61Jrr safl&vl' படம், ஹோடோ வரைப்படம் (Hodograph) வெப்பநிலை எண்திரப்பி வரைப் படம் (Tephigram), இன்னும் பல கோட்டு வரைப்படங்கள், முகப்புக்கான சம அமுக் கக் கோட்டுப் படங்கள் ஆகியன முக்கி யம் பெறுகின்றன. இப்படங்களுக்குரிய அளவுத்திட்டம், குறியீட்டு விளக்கம் வண் ணம் ஆதியனவும் WMO வினல் சிபாரிசு செய்யப்பட்டுள்ள வழி முறைக்கு ஏற்பவே பின்பற்றப்படுகின்றன. எடுத்துக் காட் டாக, வாணி லக் கோட்டுப் படங்களைப்

Page 163
144 6v «76of?8kqv sayon/sAr6of uyu/ uö... ...
பொறுத்த மட்டில் முனைவு, இடைவெப்ப, அயனப் பகுதிகளுக்கு ஏற்ற அடிப்படைப் படங்களுக்கான எறியங்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. முனைவுப் பகுதிக ளுக்கு திண்மவரைப்பட எறியம் (நியம அக லக்கோடு 60°); மத்திய அகலக் கோட் டுப் பகுதிசளுச்குலம்பேட் என்பாரின் எறி யம் (நியம அகலக் கோடுகள் 10°-409: 30°-60°); மத்திய கோட்டுப் பகுதிக ளுக்கு மேக் கற்ருேவின் எறியம் (நியம அக லக் கோடு 224) என்பன குறிப்பிடத்தக் கன. புவிமேற் பரப்பு மாதிரிகளில் இருந்து குறிப்பிட்ட பகுதிக்குரிய வானிலைச் செய் முறைகளின் நிலை பெறப்படும். இதுபோல் அல்லாமல் அமுக்கக் கோடுகள் வரையப் படும் மேற்பரப்பு வானிலைக் கோட்டுப் படம், முகப்பு நிலைகளை பகுப்பாராயப் பயன்படுகின்றது. மேல் காற்றுத் தொகு திக்கான கோட்டுப் படத்தில் சம அமுக்க கோடுகள் வரைதலுடன் செங்குத்து நிலை யும் அறியப்படும். மேலும் அமுக்கம் உயர அடிப்படையில் வரையப்படாது Wmo விஞல் சிபாரிசு செய்யப்பட்ட முறையில் சில குறிப்பிட்ட அமுக்கப் பரப்புகளுக்கு என வரையப்படுகின்றன. எந்த ஒரு நாட் டின் தேசிய சேவையும் குறைந்தது ஐந்து அமுக்கங் பரப்புகளுக்கான (850, 700, 500, 300, 200 m.f.) சம அமுக்கக் கோடு களைக் கொண்ட வெளியீடைக் கொண்டி ருக்க வேண்டும் என்பது விதிகளில் ஒன்ற கும். செங்குத்து அடிப்படையான பகுப்பா ராய்வு ஹோடோ வரைப்படம் வெப்ப நிலை எந்திரப்பி வரைப்படம் மூலம் மேற் கொள்ளப்படும். வெப்பக் காற்று, அதன் திசை வேகம் ஆகியவற்றையும் அவற்றின் மாறுதல்களையும் எ டு த் து க் காட்ட GADIT GLIT sư &m pr từ tư t- thị tru! sảT படுகின்றது. எ னினும் வெப்பநிலை 6ʻr 6vfbr 650 gr 'i u9 வ  ைர ப் பட த் தி ல் இதனிலும் தெளிவாக இந்நிலைகளை எடுத் துக்காட்டலாம். பொதுவாக நோக்கும் போது இந்தப் பகுப்பா ராய்வு செய்யப்ப டும் வேகத்திற்கேற்ப வானிலை எதிர்வு கூறலின் நேரமும் பாதிக்கப்படும். எனவே மிக விருத்தியடைந்த நாடுகளில் தன்னி au & as tf Suurt Gaw Lugu tumt pr mr uiù Gny (A ut om ted analysis) மேற் கொள்ளப்படுகின்றது. இத ஞல் மனித உழைப்பில் முப்பது நிமிடம்

S. பாலச்சந்திரன்
எடுக்கின்ற ஒரு பகுப்பாராய்வு 7 செக்கன் டுகளில் நிறைவேற்றப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடக் கூடிய அம்சமாகும்
வானிலைப் பகுப் பாராய்வின் பெறுபேறு கள் வானிலை எதிர்வு கூறலைத் தீர்மானிக் கின்றன. நிகழ்ந்தனவற்றை உத்தேசித்து இனி நிகழப் போகும் நிலைகளை வானிலை எதிர்வு கூறல் உள்ளடக்குகின்றது. இதில் நேரம்தான் முக்கிய காரணியாய் இருத்த லால் அதைப்பொறுத்து எதிர்வு கூறல்நிலை களும் வேறுபடுகின்றன. குறுகியகால 675th a spei (Short range forecasting), அளவான கால எதிர்வு கூறல் (Medium range forecasting), fair L- as may 67 grf6) apei (Long range forecas ing), 676óru6r மிக முக்கியம் பெறுபவையாகும். இதில் குறுகிய கால எதிர்வு கூறல் அடுத்துவரும் 12 தொடக்கம் 20 மணித்தியாலங்களுக் கான அறிக்கை ஆகும். சிலவேளை அடுத்த ஒரு நாள் இரு நாட்களுக்கான வெளிப் பாடாகவும் இது இருக்கலாம். ஆஞல் அள வான கால எதிர்வு கூறல் 4 அல்லது 5 நாட்களுக்கான வெளிப்பாடு ஆகும். இதற்கு மாருக நீண்டகால எதிர்வு கூறல் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் உள்ள டக்குவது எனலாம். இவை பொதுவாக அனேக நாடுகளால் பின்பற்றப்படுபவை. எனினும் சில விசேட எதிர்வு கூறல் வகை களும் பின்பற்றப்படுகின்றன. முதலாம் உலகயுத்த காலத்தின்போது எண் குறி யீட்டு வானிலை எதிர்வு கூறலை (Numerical forecasting) 161) sylgll u00) - 56thai Lewis Fray Richardson 566Tou Dm di Garrf. குறிப்பிட்ட வளிமண்டலத் தன்மையில் இருந்து கணித அடிப்படையில் எதிர்கால நிலையை எடுத்துக் காட்டலாம் என இவர் வலியுறுத்தினர். இந்த வகையான எதிர்வு கூறல், அசைவுச் சமன்பாடு (Equation of motion), தொடர்புநிலைச் சமன்பாடு Equation of continuity), Gaj Liu guj 5 & 3 LD6ör Lut G. Therm dynamical equation) நிலைமைச் சமன்பாடு (Equation of State) ஆகியவற்றைத் தீர்க்க வேண்டும். இதே Gulu ar av Sir Gilbert Walker gjë Suu av Gif மண்டலவியற்றுறையின் அதிபராக இருந்த போது மொன்சூன் எதிர்வு கூ ற லில் புள்ளிவிபர முறை ரீதியான எதிர்வு கூற

Page 164
av r 6öféle gya/3 rsof 7/tb......
லைப் பயன்படுத்தினர். இவ்வாறு பலவகை கள் பாவனைக்குள்ளாகின்றபோதும் தெளி வான ஒரு எதிர்வு கூறல் முகில் நிலை, படிவு வீழ்ச்சி, காற்றுநிலை, வெப்பநிலை, ஈரப்பதன், கட்புலனுகும்தன்மை ஆகியவற் றைக் கொண்டிருக்கும் வரை நாம் நம்ப லாம். எனினும் குறுகிய கால எதிர்வு கூறல்கள் முழுவிபரத்தையும் கொண்டி ருக்கமாட்டா. இதில் வானிலை எச்சரிக் கைகள் ரேடியோ, பத்திரிகைகள் மூலம் விடுக்கப்படுகின்றன. அத்துடன் தொலைக் காட்சி மூலமும் நிகழ்த்தப் படுகின்றன. நீண்ட காலத்தைக் கொண்டவை வானிலை அறிக்கைகளாக வெளியிடப்படுகின்றன. பெரும் வானிலை மாற்றங்கள், ஏற்றத் தாழ்வுகள் சர்வதேச அடிப்படையில் பரி மாறப்படுகின்றன. எனவே இவற்றை நோக்கும்போது Wmoவின் நடவடிக்கை கள் அனைத்து நாடுகளிற்கும், முக்கியமாக பின்தங்கிய நாடுகளுக்கு அனுகூலமான தாகும்.
பெண்கள்,
நமது சமுதாயப் பை
விதை நெல்லேப் பே
வருகின்ற தலேமுறை பயிர் செய்ய வேண்டி
விதை நெல்லே கெ விளே7வு என்ன ஆகு
நினைக்கவே பயமாக

S. பாலச்சந்திரன் 145
பொதுவாக நோக்கும்போது வானிலை
எதிர்வு கூறலில் வானிலை அவதானிப்பில் காணப்படுகின்ற தொழில்நுட்பம் மிக அத் தியாவசியமானதாக உள்ளது. அதே சம யம் பகுப்பாராய்வுத் திறனும் பகுத்தறித லும் முக்கியம் பெறுகின்றன. இதனுல் மிக வும் நேர்த்தியான வளிமண்டலவியல் அறி ஞர்கள் இத்துறைகளில் மிகவும் வேண்டப் படுகின்றனர்.
உசாத்துணை நூல்கள்
1.
2.
Report on the Colombo Observatory for 1966.
Weather Map - An Introduction to weather forecasting. -U. K. Stationary Office.
. The Challenge of the Atmosphere
-O. C. Sutton.
... Weather Business.
. Viewing Weather from the Space.
... Weather Satellites.
ன்ஃணக்கு,
ான்றவர்கள்,
ரயை நன்ருகப் உயவர்கள்.
‘ட்டுச் சீரழிந்தால்,
Lh
இருக்கிறது!

Page 165
ଗାଁରi]Tଗରାଗୀ
இலங்கையில் p
வின் வெளி ஆராய்ச்சியின் வியத்தகு நன்மைகளை எமது இலங்கையும் விரைவில் அனுபவிக்கப் போகிறது. "பூமியிலே பசி யும் பிணியும் போக்கமுடியவில்லையே -விண் வெளி ஆராய்ச்சி என்ன வேண்டிக் கிடக் கிறது?" என்று சலித்துக் கொள்வோரின் வாயை அடைக்க வைக்கும் ஒரு சம்பவம் 1974ல் நடைபெறப் போகிறது.
விண்வெளி சகாப்தத்தில் 1974 Lb ஆண்டு முதல் அடியெடுத்து வைக்க இலங்கை அரசு தீர்மானித்துவிட்டது. செய்தித் தொடர்புச் செய்மதித் திட்டத் தில் இலங்கையும் பங்கு கொள்ளப் போகி ይDé!•
விண்வெளி சகாப்தத்தில் இலங்கை காலடி எடுத்து வைக்கும் சரித்திர பூர்வ மான நிகழ்ச்சிக்கு வித்திட்டவரும் இலங் கையின் செய்தித் தொடர்புச் செய்மதிச் சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் போகின்றவரும் யார் தெரியுமா? பொறியியல் நிபுணரும் கட்டடக்கலைஞரு மான தமிழ் அமைச்சர் கெளரவ செ. குமா ரசூரியர் அவர்களே. தமிழர்கள் பெரு மைப்பட வேண்டிய விஷயம் இது.
விண்ணிலே வலம்வரும் பற்பல செய் தித் தொடர்புச் செ ய் ம தி க ளே ஈ டு

டாக்டர் க. இந்திரகுமார்
M. B., B. S. (Ceylon, Colombo)
தொடர்பு கொள்வதற்கு என்று 2.6 கோடி ரூபாய் செலவிலான தரை நிலைய மொன்று இலங்கையில் அமைக்கப்படவுள் ளது. இதில் 2.2 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஆகும். தரைநிலையம் அமைப் பதற்கான இடம் மீரிகமை என்று தற்காலி கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
செய்திகளை ஒரு இடத்திலிருந்து இன் ஞெரு இடத்திற்கு அனுப்புவதற்கு இன்று உலகில் கையாளப்படும் மிக அற்புதமான வழி இது தான். மூன்றே மூன்று செய்மதி களை பூமியைச் சுற்றி விண்வெளியில் வலம் வரச் செய்வதன் மூலம் முழு உலகத்தை யும் இணைக்கவல்லது செய்மதிச் செய்திச் சேவை.
செய்தித் தொடர்புச் செய்மதிகளின் தத்துவம் என்ன? இவற்றின் இயக்கம் எத் தகையது? - என்பது போன்ற விஷயங்களை இனி நோக்குவோம்.
வானெலியை மார்க்கோனி கண்டு பிடித்த காலந்தொட்டு தந்திச் செய்திகளை ஓரிட த் தி லி ரு ந் து இன்னேரிடத்திற்கு அனுப்புவதற்கு குறைந்த அதிர்வெண் Ed Gir 6MT ft 6ivT , gyðav6lurfh6op F 55 Gir(low frequency 10ng Waves) பயன்படுத்தப்பட்டு வந்துள் ளன. இந்தச் சமிக்ஞைகள் உருண்டை வடி

Page 166
விண்ைெ/விரி சகாப்தம்.
வான பூமியின் வளைவோடு இயைந்து தாமும் ஓர் வளைந்த பாதையில் செல்ல வல்லன. இன்றும் இம் முறை கையாளப் பட்டாலும் உலகில் அதிகரித்து வரும் செய் தித் தொடர்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வருங்காலத்திற்கு இது ஏற்றதல்ல.
ஏனெனில் இவை கொண்டு செல்லக் கூடிய தந்திச் செய்திகளின் அளவு மிகக் குறைவானது. மேலும் ஒலி, தொலைக் காட்சி ஆகியவற்றைப் பரப்புவதற்கு இத்
தகைய அலைவரிசைகள் பயன்படமாட்டா.
ஒலியைப் பரப்புவதற்கெனில் சிற்றலை ou for CurrG69696uli (short wave radio) பயன்படுத்த முடியும். எனினும் வானிலைக் குழப்பங்கள், பூமிக்கு மேலுள்ள அயன Lo střT L. Goš (Ionosphere) G3&snt smirnir go ssir GT Gär பன இதனைப் பாதிக்கும் தன்மை உடை யனவாதலால் இதனுடைய உபயோகமும் கட்டுப்படுத்தப்படுகிறது.
இச் சிக்கலுக்கு விடை என்ன?
சகல விதத் தொடர்புச் சமிக்ஞைகளை யும் எந்தவிதக் குழப்பங்களின் போதும் கொண்டு செல்லக்கூடிய ஒரு ஊடகம் 1950ல் கண்டு பிடிக்கப்பட்டது. இவை தான் நுண்ணலைகள் (microwaves) என்று சொல்லப்படும் மிக உயர்ந்த அதிர்வெண் (very high frequencv) 2. GML uiu ós is gg கிய வாஞெலிச் சமிக்ஞைகள் ஆகும்.
இதிலிருந்து புதியதோரு சிக்கல் பிறக் கிறது. அது என்ன?
நுண்ணலைகள் ஒளியைப் போல் ஒரே நேர்க்கோட்டிலேயே செல்லும் தன்மை உடையவை. எனவே இவை கண்ணுல் காணக்கூடிய ஒரு நேர்க்கோட்டிலேயே செல்லும்,
இச் சிக்கலுக்கு ஏது விடை?
தரையின் மீது சமிக்ஞைகளைப் பரப்பு வதானுல் இச் சிக்கலை மீறுவதற்கு வழி வகைகள் உள்ளன. சுமார் 20-30 மைல் தூர இடைவெளிக்கு ஒருதரம் ஏரியல்கள் பொருத்தப்பட்ட உயர்ந்த கோபுரங்களை

க. இந்திரகுமார் 147
அமைத்து விடவேண்டும். ஒவ்வொரு ஏரிய லும் நுண்ணலைகளைக் கிரகித்து அதற்கு அடுத்ததாக வரும் ஏரியலுக்கு இந்த அலைகளை ஒரு நேர்க்கோட்டில் அஞ்சல் செய்கிறது.
ஆஞல் ஒரு பெரிய சமுத்திரத்துக்கு மேலாக நுண்ணலைகளைச் செலுத்துவது எப்படி? சமுத்திரத்தில் 20-30 மைல்களுக் கொரு கோபுரத்தை நிறுவுவது இயலாத
காரியமல்லவா?
சமுத்திரங்களுக்கு மேலால் நுண்ணலை களைச் செலுத்த முடியாவிட்டால் சர்வ தேசச் செய்தித் தொடர்பு ஏற்படுத்த இய
*மொல்னியா" செய்மதியின் செய்திச் சேவை:
1. பூமியின் மேற்பரப்பில் மொல்னியாவின்
"பார்வைக்கு எட்டிய” பிரதேசம். 2. தரை நிலையங்கள்
3. மொல்னியா,
லாது போய்விடுமல்லவா? இதற்கு என்ன செய்வது?
சமுத்திரத்தில் ஏரியல் கோபுரங்களை நிறுவுவதற்குப் பதிலாக சமுத்திரங்களுக்கு

Page 167
148 விண்வெளி சகாப்தம் .
மேலே உள்ள விண்வெளியில் ஏரியல் தாங் கிய செய்மதிகளை மிதக்க விட்டால், அவை ஏரியல் கோபுரங்களின் பணியைக் கனகச் சிதமாகச் செய்து முடிக்கும் அல்லவா?
இத்தகைய செய்மதிகளை இரு வகை களாக அமைக்கலாம். மந்தவியக்கச் செய் தித் தொடர்புச் செய்மதிகள் (Passive communication satellites) g(5 6 GS as. துரித வியக்கச் செய்தித் தொடர்புச் செய் Ln 6) 35 Gir (Active communica tion satellites) இன்னுெரு வகை
மந்தவியக்கச் செய்மதிகள் மிகவும் எளிதானவை. இவற்றில் எந்தவித இயந் திர சாதனங்களும் இல்லை. இச் செய்மதி களின் மேற்பரப்பு வாஞெலிச் செய்திகளை தெறிப்பதற்கேற்ற L 67 t... u Gnr ui t l T Goti அமைப்பு உடையது. ஒரு முகக் கண்ணுடி ஒளிக்கற்றைகளைத் தெறிப்பது போல் இச்
சோவியத் காட்டிலுள்ள ஒரு செய்தித் தொடர்புச் செய்மதித் தரை நிலையம், மீரிகமைக்கு வரப் போவது இத்தகைய ஒரு தரை நிஆலயந்தான்.
 

க. இந்திரகுமார்
செய்மதியின் மேற்பரப்பு வானெலிச் சமிக் ஞைகளைத் தெறிப்படையச் செய்கிறது.
இத்தகைய தெறிப்புகளின் போது சமிக்ஞைகள் ஒரளவு பலவீனம் அடைகின் றன. ஆகையால் சக்தி வாய்ந்த ஒலிபரப்பி க:ையும் ஒலி வாங்கிகளையும் உடைய தரை நிலையங்களை நிறுவுதல் அவசியமாகின்றது.
அமெரிக்கா பரீட்சார்த்தமாக விண் வெளிக்கு அனுப்பிய எக்கோ - 1 (Echo-1) எக்கோ - 2 (Echo-2) போன்ற செய்தித் தொடர்புச் செய்மதிகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவையே.
துரிதவியக்கச் செய்மதிகள் இவற்றிலி ருந்து முற்றிலும் மாறுபட்டவை. இவை வெறும் சமிக்ஞைத் தெறிப்புச் செய்மதி கள் அல்ல. ஒரு தரைநிலையத்திலிருந்து வரும் சமிக்ஞைகளை இச் செய்மதிகள் பெற்றுக்கொண்டு, அச் சமிக்ஞைகளை

Page 168
விண்வெளி சக ரப்தம் . .
உருப்பெருக்கி இன்னெரு தரை நிலையத் துக்கு அஞ்சல் செய்கின்றன. இச் செய்மதி கள் மிகவும் சிக்கலானதும் சக்தி வாய்ந் ததுமான இயந்திர சாதனங்களைக் கொண் டவை என்பது இதிலிருந்து சொல்லாமலே விளங்கும்.
இத்தகைய சிக்கலான செய்மதிக ளோடு தொடர்பு கொண்டு இயங்கும் தரைநிலையங்களோ அமைப்பில் மிக எளி தானவை. இத்தகைய *அ  ைம ப் பில் எளிய" ஒரு தரைநிலையம் தான் 2, 6கோடி ரூபாய் செலவில் இலங்கையில் அமைக்கப் படவுள்ளது.
விண்வெளிக்குச் சா தா ர ண ம |ா க அனுப்பப்படும் செய்மதிகள் ஒரு நாளில் பல தடவைகள் பூமியை வலம் வருகின் றன. இதஞல் இவை பூமியில் ஒரு குறிப் பிட்ட இடத்திற்கு மேல் நிலைத்து நிற்ப தில்லை. இவை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேலால் தினமும் பலமுறை வந்துபோகும்.
எனவே இத்தகைய செய்மதிகளைக் கொண்டு செய்தித் தொடர்புச் சேவை நடத்துவதானல், செய்மதி ஒரு குறிப் பிட்ட இடத்திற்கு மேலே வந்து போகும் போது மாத்திரமே நடத்த இயலும். அது வும் சிறிது நேரத்திற்கே,
இப் பிரச்சினைக்கு என்ன செய்வது?
பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள் ளும் வேகத்தில் - அதாவது 24 மணி நேரத்திற்கு ஒரு தரம் பூமியை வலம் வரக் கூடிய ஒரு செய்மதியை அனுப்பி வைத் தால் இப் பிரச்சினை சுலபமாகத் தீர்ந்து விடும். பூமி தன்னைத் தானே சுற்றச் சுற்ற, அதே வேகத்தில் செய்மதியும் பூமியைச் சுற்றி வந்தால், செய்மதி பூமிக்கு மேல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆடாமல் அசையா மல் எப்போதும் நிலையாக நிற்பது போல் தோற்றமளிக்கும். அது தோ ன் றி த் தோன்றி மறைய மாட்டாது.
இத்தகைய ஒரு சுற்றுவேகத்தை செய் மதி பெற்றிருக்கவேண்டுமானல் அது பூமிக்கு மேலே 22, 327 மைல் உயரத்தில் உள்ள விண்வெளியில் பூமியை வலம்வந்

க. இந்திரகுமார் 149
தாக வேண்டும் என்று கணக்கிடப்பட்டுள் ளது.
இவ்வளவு உயரத்திற்கு ஒரு செய் மதியை ஏவி, அந்த உயரத்தில் வைத்து அதைப் பூமியை வலம் வரச் செய்வது எளி தான செயலல்ல. இது மனிதனுடைய விஞ்ஞான தொழில் நுட்ப ஆற்றலுக்கே ஒரு பெரிய சவாலாகும்.
எனினும் இச் சவாலையும் சமாளித்து, இன்று சோவியத் நாட்டின் மொல்னியா அமெரிக்காவின் 'இன்டல்சாட்" செய் தித் தொடர்புச் செய்மதிகள் பல பூமிக்கு 22,000-23,000 மைல் உயரத்தில் வலம் வரத்தான் செய்கின்றன.
முழு உலகத்தையும் தொடர்புபடுத்தி ஒன்றேடு ஒன்று இணைக்க இத்தகைய செய் மதிகள் மூன்றே மூன்று போதுமானவை, பசிபிக் சமுத்திரம், அத்திலாந்திக் சமுத்தி ரம், இந்து சமுத்திரம் ஒவ்வொன்றுக்கும் மேலாக ஒவ்வொரு செய்மதியை விண் வெளியில் நிறுவிவிட்டால் போதும்.
பாரிய சோவியத் ரஷ்யாவின் செய் தித் தொடர்புச் சேவைகளில் பெரும் பங்கை மொல்னியா செய்மதிகளே மேற் கொள்ளுகின்றன. சோவியத்தின் மூல்ை மு டு க் கு க ஞ க் கெல் லா ம் வாஞெலி, தொலைக் காட்சி, தந்தி, தொலைபேசித் தொடர்புகள் யாவும் மொல்னியா மூல மாகவே நடைபெறுகின்றன.
செய்தித் தொடர்புச் செய்மதிகள் மூலமாக கல்வி நிகழ்ச்சிகளைக் கூட ரஷ்ய தொலைக்காட்சி நிலையங்கள் அளித்து வரு கின்றன. இது வருங்காலத்தில் உலகக் கல்வி முறைகளில் ஏற்படவிருக்கும் புரட்சி யின் ஒரு அறிகுறியாகும்.
இலங்கையின் தலைநகரிலிருந்து வெளி யாகும் தினசரிகளில் இரு பிரதான பதிப்பு கள் உள்ளன. ஒன்று வெளியூர்ப் பதிப்பு. மற்றது உள்ளூர்ப் பதிப்பு. யாழ்ப்பாணத் திற்குச் செல்லவேண்டிய காலைப் பத்திரி கைகள் முதல் நாள் மாலேயே பிரசுரிக்கப் பட்டு இரவு மேயில் புகையிரத வண்டியில் அனுப்பப்படுகின்றன. இது வெளியூர்}}

Page 169
150 விண்வெளி சகாப்தம்.
சோவியத் ரஷ்யாவி தொடர்புச் செய்மதி.
பதிப்பு. ஆளுல் கொழும்பினுள்ளே விநி யோகிப்பதற்கான உள்ளூர்ப் பதிப்புக்கள் அதிகாலையிலே அச்சேறி ஒரு சில மணி நேரத்திற்குள் கொழும்பு மக்களின் கரங் களை வந்தடைகின்றன.
வெளியூர்ப் பதிப்பு சுமார் 10-12மணி நேரத்திற்கு முன்னதாகவே அச்சேறிவிடு வதால் பிந்தி வரும் செய்திகளை எல்லாம் சுடச்சுட அளிக்க இதனல் முடியாது. இவ் வளவு மணி நேரத்திற்குள் எத்தனை எத் தனை பிரதான நிகழ்ச்சிகள் நடந்து முடிந்து விடுமோ? எத்தனை அரசாங்கங்கள் இரா ணுவச் சதியால் கவிழ்க்கப்படுமோ? எத் தனை உலகத் தலைவர்களின் உயிர் பிரிந்து விடுகிறதோ? வெளியூர்ப் பதிப்புகளுக்கு இச் செய்திகள் எட்டவே எட்டா.
இலங்கையை விட எ த் த னை யோ மடங்கு பெரிய சோவியத் ரஷ்யாவில் உள் ளூர் - வெளியூர்ப் பதிப்புகளிடையே உள்ள செய்தி வேறுபாடுகளை அகற்ற " "மொல்னியா’’ செய்மதிகள் பயன்படு கின்றன.
 

க. இந்திரகுமார்
ன் "மொல்னியா? செய்தித்
எப்படித் தெரியுமா?
சோவியத்தின் தலைநகரான மாஸ் கோவின் பிரதான புதினப் பத்திரிகைகள் அச்சுக்கோர்த்து முடிந்ததும் பிரசுரத்திற்கு தயாராகும் " " மற்றிக்ஸ்’’ (Matrix) நிலை யில் மொல்னியா செய்மதி மூலம் சோவி யத்தின் பற்பல குடியரசுகளுக்கும் அஞ்சல் செய்யப்படுகின்றன. மாஸ்கோவில் "மற் றிக்ஸ் அச்சேறும் அதே நேரத்தில் நாட் டின் மூலைமுடுக்குகளில் ஆங்காங்கே உள்ள அச்சு இயந்திரங்களில் அதே மற்றிக்ஸ்கள் தனித்தனியே அச்சேறுகின்றன.
இதன் விளைவு?
பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள பற்பல இடங்களில் புதினப் பத்திரிகை களின் பிந்திய பதிப்புக்கள் மக்களை ஒரே நேரத்தில் சென்றடைகின்றன.
இது போலவே சீதோஷ்ண நி%லப் பூகோளப் படங்களும் உடனுக்குடன் நாடெங்கும் அஞ்சல் செய்யப்படுகின்றன.
மருத்துவத் துறைகளிலும் இச் செய் மதிகளின் நன்மைகள் நிறைய உள்ளன.

Page 170
விண்வெளி சகாப்தம்.
சோவியத் நாட்டின் மூலைமுடுக்குகளி லுள்ள மருத்துவ நிலையங்களில் ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளின் சிகிச்சைக்கு நிபுணத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொடுப்பதிலும் செய்தித் தொடர்புச் செய்மதிகள் பயன்பட்டுள்ளன. இந் நோயாளிகளின் நோய் அறிகுறிகள்,குணம் கள் என்பனவும், மூளையின் மின் அலைப் பதி Gay 35 Gir (Electro en cephalogram). GU55 Luš தின் மின் அலைப் பதிவுகள் (Electro cardo. gram) போன்ற விசேஷ பரிசோதனைகளும் செய்மதிகள் மூலம் மாஸ்கோவில் உள்ள மருத்துவ நிபுணர்களுக்கோ அல்லது கம்பி யூட்டர்களுக்கோ அஞ்சல் செய்யப்படுகின் றன.
இங்கிருந்து நோய் நிர்ணயம், சிகிச்சை முறைகள் என்பன பற்றிய நிபுணத்துவ அபிப்பிராயம் நோயாளியுடன் இருக்கும் டாக்டருக்கு விரிவாக அஞ்சல் செய்யப் படுகின்றது. இத்தனையும் ஒரு சில நிமிடங் களுக்குள் நடந்து முடிந்துவிடும்.
முதுகு சொறிவுக்குக் கூட "அக்கரைச் சீமையில்' தான் வைத்தியம் செய்விப் பேன் என்று அடம் பிடிக்கும் எமது நாட்டு நோயாளிகள் இச் செய்மதிகளைப் பயன் படுத்தி இக்கரையில் இருந்தபடியே 'அக் கரைச் சீமை அபிப்பிராயத்தைப்" பெற்று வைத்தியம் செய்து கொள்ள முடியும். இத ஞல் பெருமளவு அந்நியச் செலாவணியும் மிச்சமாகும்.
செய்தித் தொடர்புச் செய்மதிகளின் பாரிய சேவையை இலங்கையும் பெறுவ தன் முதற்படி தான் மீரிகமையில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள தரைநிலையமாகும். இந்தத் தரை நிலையத்தில் கோப்பை வடி வானதும் 95-105 அடி விட்டமுள்ளது மான ஒரு இராட்சத ஏரியல் பொருத்தப் படும். இது சக்தி வாய்ந்த ஒரு மாற்றி யோடு (Transformer) அமைந்திருக்கும்.
முதலில் அயல் நாட்டுத் தந்தித் தொடர்புகளை மட்டும் இந்தத் தரை நிலை யம் முழுக்க முழுக்கப் பொறுப்பேற்கும். கொழும்பு மத்திய தந்தித் தொடர்பு நிலை யத்திலிருந்து வெளிநாட்டுத் தந்திப்போக் குவரத்துக்கள் யாவும் மீரிகமையிலுள்ள தரைநிலையத்திற்கு நுண் ண லை க ளா க மாற்றி அனுப்பப்படும். இங்கிருத்து இந்த நுண்ணலைகள் இந் து ச முத் தி ர த் தி ன் மேலுள்ள செய்மதிக்கு அஞ்சல் செய்யப் படும். இச் செய்மதி தான் பெற்றுக் கொண்ட நுண்ணலைகளை உருப்பெருக்கி அவை போகவேண்டிய இட த் து க்கு ச் செலுத்தும்.

க. இந்திரகுமார் 151
இதன் மூலம் செய்மதிச் செய்தித் தொடர்பு அமுலிலுள்ள உலக நாடுக ளோடு இ ல ங்  ைக எளிதில் தந்தித் தொடர்பு கொள்ள முடியும். தொலை பேசித் தொடர்புகள் தெளிவாகவும் பல மாகவும் இருக்கும். வானிலையிஞல் பாதிப் படைய மாட்டாது, இலங்கையின் தற் போதைய அ ய ல் நா ட் டு த் தந்தித் தொடர்பு கடலுக்கடியில் உள்ள தந்திக் கம்பிகள் மூலமாகவும் உயர்ந்த அதிர் வெண் உடைய வானெலி முலமாகவும் நடைபெற்று வருகிறது.
செய்தித் தொடர்புச் செய்மதிகளை இதுவரை அனுப்பிய நாடுகள் சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் மட்டுமே. இத் தகைய செய்மதிகளை அனுப்பி வைப்பதற் கான ஆற்றலும் வல்லமையும் வேறெந்த உலக நாட்டிடமும் இல்லை.
எனினும் தாம் விண்வெளிக்கு அனுப்பி வைத்த செய்மதிகளின் சேவையை உலக நாடுகளின் செய்தித் தொ ட ர்பு க்கு அளிக்க இவ்விரு நாடுகளும் முன்வந்துள் ளன. செய்மதிச் செய்தித் தொடர்புச் சேவையில் பங்குபற்ற விரும்பும் நாடு தனது பூமியில் தரைநிலையமொன்றை அமைத்துக் கொள்ள வேண்டியது தான்.
சோவியத் ரஷ்யாவின் செய்மதிச்செய் தித் தொடர்புச் சேவை 'இன்டர்ஸ்பூட் னிக்" என்று பெயரிடப்பட்டுள்ளது. 1971 நவம்பரில் சோவியத் ரஷ்யா, பல்கேரியா, கியூபா, செக்கோஸ்லோவாக்கியா, ஜேர் மன் ஜனநாயகக் குடியரசு, ஹங்கேரி, மொங்கோலியா, போலந்து, ரூமேனியா ஆகிய சோஷலிஸ் நாடுகள் "இன்டர்ஸ் பூட்னிக்’ திட்டத்தில் கையெழுத்திட் டன. எந்த ஒரு உலக நாடாவது இத் திட் டத்தில் சேரவிரும்பினுல் 1972 டிசம்பருக் குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.
'இன்டல்சாற்" என்று பெயரிடப் பட்டுள்ள அமெரிக்க செய்மதிச் செய்தித் தொடர்புச் சேவையில் குவைற், லெபா னன், இரான், மொறக்கோ, பாக்கிஸ் தான், சூடான், யெமென் போன்ற நாடு கள் சில 1971 ஆகஸ்டில் கைச்சாத்திட்
6.
இவற்றில் எந்தத் திட்டத்தில் சோஷ லிஸ இலங்கை பங்குபற்றப் போகிறது? பொறுத்திருந்து பார்ப்போமே.

Page 171
ஆயுட் காப்புறுதி போல்
உங்கள்
ல், ! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் ஆயு ஏற்பாடு செய்கிறது. ஆயுட் காப்புறுதி நிதிக செய்யப்படுகின்றன. இலங்கையின் கைத்தொழ புரிகின்றன
ஆயுட் காப்புறுதிச் சேமிப்புசு ளிப்பதற்கு மட்டுமல்லாமல், மைப்புத் திட்டங்கள் போன் வதை நீங்கள் காண்பீர்கள்.
9 ஆயுட் காப்புறுதிச் சேமிப்புகள் உங்கள் குடும்ப காட்டின் பொருளாதார முயற்சிகளை ஊக்குவிக்க வைத்திருங்கள்.
விபரங்களுக்கு:
இலங்கைக் காப்புற 288, யூனியன் பி தொசிலபேசி: 2531-4
சோனி கச்சிதமானது, தே இயக்கத்தில் கச்சிதம், வி?
கச்சிதம். சோனி 6R-29 சுபர் ஹெட்டேருேடைன் ே
சீடில்ஸ் சினேரேடியே 9 - / 0, G
கிளைகள்: கண்டி, யாழ்ப்பா6

ஆதரவு தருவது வேறில்ல்ை
சேமிப்பு?
ட் காப்புறுதி உறுதியான சேமிப்பை கள் தேசிய அபிவிருத்தியில் முதலீடு மில் விருத்திக்கு அவை உறுதுணை
ள் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளே சமா பாடசாலைகள் புதிய கைத்தொழில்கள், விவசாய வீட ற பல்வேறு திட்டங்களுக்கு ஒரு மூலதனமாகவும் அமை
த்தைப் பாதுகாப்பதற்கு மட்டுமல்ல, வும் உதவுகின்றன என்பதை கினைவில்
திக் கூட்டுத்தாபனம்
ளேஸ், கொழும்பு-2.
NY
நாற்றத்தில் கச்சிதம் லயில் கச்சிதம் அனைத்துமே ட்ரான்சிஸ்டர் சர்கியூட் கொண்டது.
ლ5. 165|-
கொன்சிஸ்டரி கட்டிடம், கொழும்பு-//.
ணம், கம்பஹா, பம்பலப்பிட்டி

Page 172
முடிந்து "ல்ைப்ர'ரிக்குப் و هیف (ملو)" போய்க்கொண்டிருந்த குமார் மில்க்போட் டில் யாரையோ கண்டதஞல் அவனது கால்கள் தாமாக நின்றன. vn
"நிச்சயமாக சந்திரன்தான். ஆனல் பக்கத்திலிருப்பது யார்? அந்த புளூசாரி, மனேகரியா. ஆமாம். மனேகரியேதான்' என்ற உணர்வலைகளை முறித்துக்கொண்டு அவர்களைக் கெடுக்க விரும்பாமல் நடந் தான்.
உணர்வு பழைய நினைவுகளைத் தூண்டி யது. "கொஞ்ச நாட்களாகவே சந்திரன் அதிகம் கதைப்பதில்லை. ஏதாவது யோசிப் பான். சிலவேளை தனக்குள்ளேயே சிரித் துக் கொள்வான். எத்தனையோ நாள் ஒரே பக்கத்தையே பலமணி நேரம் பார்த்துக் கொண்டு வாசிப்பது போலிருந்திருக்கி

சிறுகதை )
Do
மா. சின்னத்தம்பி
முன். இதைப்பற்றிக் கேட்டபோதுகூட மறைத்துவிட்டானே. இப்போதுதானே காரணம் தெரியிது" என்றெல்லாம் பழை யதை மனம் அசைபோட தொடர்ந்து நடந்தான்.
"குமார் எங்கேடாப்பா, இந்த நேரம் லேப்ரரிக்கு" என்ற-காசிமின் கு ர ல் கேட்டு நிமிர்ந்தான்.
"சந்திரனைக் கண்டியா, மச்சான், அவனைஒரு க்கா சந்திக்கோணும். அதுதான் இங்க இருந்தாலும் ன எண் டு பார்க்கப் போறன்" என்று ஒரு சந்தேகத்தைப் பரி சோதிக்க மணமறிந்து பொய் சொன்ஞன்.
‘'இப்ப தனியே அவனைச் சந்திக்க முடியாது. அவன் சரியான பிஸி. மனேகரி யோடதான் காணலாம். அது சரி நீயே

Page 173
154 ைே/ விகள் .
ரூம்மேட். உனக்குத் தெரியாத விஷ யமா?. நான் போறன். "டியூட் இருக்கு" என்றபடி போஞன்.
மனேகரி ஒன்றும் பெரிய கிளியோ பாத்ரா அல்லதான். ஆணுலும் பார்ப்ப தற்கு கவர்ச்சியாயும், அடக்கமாயும் இருப் பாள். "'போய்ஸ்" எல்லோரும் அவளு டன் பழகுவதற்கு விரும்புவர். அவளது அடக்கத்தால் அவரது எண்ணம் அடக்க மாவது சகஜம். ஆனல் சந்திரன் அவளைக் கவரக் காரணம் ஒன்றும் பெரி ய த ல் ல வாடிய வயிறுகளை நன்கு அலங்கரிக்கத் தெரிந்த பல்கலைக்கழகத்தில்-அவன் அலா தியான போக்குடையவன். ஆனல் உறுதி யான ம ன மும், வார்த்தை ஜாலமும் நிறைந்தவன். இதை மனேகரி மற்றவர் கள் அறிந்துள்ளதைப் போல் அறிந்தது மட் டுமல்லாமல், அதை உணர்ந்தும் கொண்ட வள். இறுதியாண்டு மாணவர்கள் கூட அவர்களது உரிமையான, நெருங் கிய நட்பை தமக்கிடையே ""குசுகுசு" வார்த் தையில் "கொமன் ரூமி'லும், 'கன்றினிலும் கூட விமர்சித்துக் கொண்டனர்.
இதெல்லாம் குமாருக்கும் தெரியும்* சந்திரன் ரூமில் அவளைப் பற்றிப் பேசிய தால் மட்டுமன்றி, சிலவேளை பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியதும், நன்ற க உடுத்தி புறப்பட்ட நாட்களும் முதலில் சந்தே கத்தை ஏற்படுத்தியிருந்தன. பின்பு உண் மையானதால் சந்தேகம் கலைந்தது. சந்தி ரன் 'அவளைப்பற்றி'த் தெரிந்துதான் ஈடு பட்டிருப்பான் என்று நினைத்துவிட்டான் குமார். சந்திரன் முடிவு எடுக்க சிறிது தயங்குவான். ஆனல் முடிவு எடுத்துவிட் டால் மாறவே மாட்டான் என்பது குமா ருக்கு நன்கு தெரிந்திருந்த உண்மை.
an عه عليه عه அன்று நாலு மணியிருக்கும். ரூமுக்கு வந்த சந்திரனிடம் குமார் கேள்விக் கொக் கிகளைப் போட்டு உண்மை ஏதாவது சிக் குமா என முயலலாஞன்
"'என்ன அவள் மனுேவைக் கூட்டிக் கொண்டு திரியிறயாம். நல்ல வயர் என்ட உடனே கூட்டிக்கொண்டு திரியுங்க. பிறகு கொஞ்ச நாளாக சும்மா சோஷியலாப்

மா. சின்னத்தம்பி
பழகின தெண்டு சமாளியுங்க. அவளவை யா ழ் ப் பா ன ப் பெட்டைகள டாப்பா. ஊரைப் பற்றித் தெரியும்தானே. சம்பள முமில்லாமலும் விளம்பரம் நடத்துவினம் , போவம் அந்தப் பிள்ளை.' சி ரித் துக்
கொண்டே இறுக்கினன்,
‘'நீ கேட்டு முடிஞ்சுதா? நான் சொல் லலாமா?' அன்று சற்று சீரியஸாகவே சொன்னன் சந்திரன் மறுபக்கம் பார்த்த படியே, 'நான் முதல்ல சும்மாதான் பழகி னன். ஆணு இப்ப அவட எளிமையும் அடக் கமும் என் மனதில் ஒரு கலையாகவே பதிஞ் சிட்டுது. வெறும் சுழட்டலில்லை, மச் சான். இப்ப . உண்மையாகவே மனமார அவவ விரும்புறன். அவ்வளவுதான். இதுக்கு மேல கேக் காதடாப்பா' முடித்து விட விரும்பியது போல் கூறிக்கொண்டே போய்விட்டான்.
'எப்படியோ இது முறியாமல் இருக் கோணும், வெறும் " கம்பஸ் காதலாகக் கூடாது' என்று அவனறியாமலே அவனது வாய் முனகிற்று.
مه afi مه عه
நாட்கள் நகர்ந்தன. வாலிபத்தின் வளமான கம்பஸ் வாழ்வும் கவலையுடன் நகர்ந்தது. அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை. ஆணுல் இருவரும் எத்தனையோ விரிவுரைக ளுக்குப் போகாமலிருந்ததுண்டு. சந்திரன் சிலவேனை மிகவும் மகிழ்வுடனிருப்பான். சிலவேளை சாதாரணமாயிருப்பான். எப்ப டியோ சந்திக்காமல் இரு க் க க் கூ டி ய துணிவு மட்டும் இருவரிடமும் இல்லாது போய்விட்டது.
நாட்கள் மாதமாயின. மாதங்கள் மாறின. சந்திரனுக்கும், குமாருக்கும் பரீட்சை கூட வந்தது படி ப் பி ல். அப் பரீட்சை முடிந்தது.
சவோய் தியேட்டர் கியூவில் அவர்கள் நின்றர்கள்.
"ஹலோ! குமார், சந்திரன்! எங்கே
படத்துக்கா?" வழமையான அர்த்தமற்ற பீடிகையுடன் பத்மன் வந்தான்.

Page 174
வே விகள்.
'பத்மன், எப்ப கொழும்புக்கு வந்த னிர்' நெருங்கிய பழக்கமின்மையால் "ர்" போட்டுக் கதைத்தான் குமார்.
'இங்க வாசிட்டியிலை எங்கட சொந் தக்காரப் பெட்டை ஒண்டு படிக்குது. நாளைக்கு எக்ஸ்ாம் முடியுது. அதான் கூட் டிக்கொண்டு போக வந்தனன்' என்ருன் பத்மன்,
'யாரது பிள்ளை; எங்களுக்குத் தெரி யாமல்" சந்திரன் குமாரைப் பார்த்தப டியே கேட்டான்.
'மனேகரி எண்டு பெயர். தெரியுமா?" பத்மன் சொன்னன்
*தெரியும். தெரியும்' என்றபடி சந் திரனைப் பர்ர்த்தான் குமார். சந்திரன் உணர்ச்சியற்று தலையாட்டினன். அவனது உள்ளம் **அவள் உனக்குச் சொந்தமா?" என்று விரும்பாத கேள்வியை கேட்டுப் பார்த்தது.
கியூநகர, ரிக் கற்றும் கிடைக்க அவர் கள் படம் பார்த்துவிட்டு திரும்பினர்கள். அன்று ஓடிய படத்தை சந்திரன் நன்கு பார்த்திருப்பான் என்று குமார் நம்ப வில்லை.
ቀ + ع\= ع\=
' என்னடா நீ செய்யிறவேலை? சந்திக் கிறனெண்டு போட்டு மனேகரியை சந்திக் கேல்லையாம், எக்ஸாம் முடிஞ்சு பாத்திட்டு கவலேயோட போகுது எண்டு தயா சொன் ஞள். நீ அவட ஹெ ரஸ்றலுக்கு ஒருக்க போய் சந்திச்சிட்டுவா பாவம் அவ' என்ருன் குமார்.
"யார் பாவம், அவ என்னை ஏமாத்தின துக்கு இனியும் அவளைப் பார்க்கவா வேணும்' என்று ஆத்திரத்துடன் கையிலி ருந்த நாவலை எறிந்தான் சந்திரன்.
*" எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை. என்னடா நடந்தது. சொல்லாமல் துள் ளுற நான் மனேகரியில்லை. குமார் என் னட்ட ஆத்திரப்படாம விஷ ய த்  ைத ச் சொல்லன்”*

மா. சின்னத்தம்பி 155
'பத்மனுக்குச் சொந்தமெண்டா அவ ளும் அவன்றை சாதி தானே. நான் என்ன சாதியெண்டு அவவுக்கு நல்லாத் தெரியும். எனக்கு ஒரு வார்த்தை கூட சொல் லேல்லை, பெரிய உயர்சாதி மாதிரி நடிச் கிட்டா. எனக்கு அப்பவே கொஞ்சம் சந் தே கந்தான், ஆஞலும் அவளைக் கனக்க நம்பீட்டன். ' சந்திரன் ஒய்ந்தான்.
**இதுதான விஷயம். எனக்கு முதலே தெரியும். ஆனல் உன்னைப் பற்றித்தான் நான்கூட சரியா அறியாம இருந்திட்டன். நீ கணேசலிங்கத்தின் ரை நாவலும், சிவப் புப் புத்தகங்களுமாகத்திரிய நா னு ம் சரியா ஏமாந்திட்டன். உனக்கு 'இந்த சாதி, நாதி எல்லாம் பெரிய விஷயமில்லை எண்டு நினைச்சனன். அதனல்தான் நானே அதை ஒரு விஷயமாக உன்னிட்ட சொல் லேல்ல. அவளை ஏன் பேசிற, அவ உன்னை உண்மையாக விரும்பினதால் ஒரு வேளை மறைச்சிருக்கலாம். இது ஒரு பெரிய விஷ யமுமில்லை. அ வளி ன் ற பிழையுமில்லை' குமார் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
"இதனுல்தான் சிவாவும் இ தி லை மினக்கெடாமல் போனவன் எண்டு இப்பத் தான் நினைக்கிறன்'-
‘'நீ இப்பிடிக் கதைக்காத, அவன் ஒரு மனுசனு? சாதி, சாதியென்டு வெறிபிடித்து திரியிறவன். இப்ப அவனும் நீயும் ஒண்டு தான? இப்பத்தான் நீ வெறும் கொள் கையை வாயால் அளக்கிறவன் எண்டு தெரியுது. பெடியங்களே இப்பிடித்தான்' என்ருன் குமார்.
'எனக்கு ஒண்டும் வெறியில்லை. ஆன நீ சொல்றமாதிரி பெடியன் மட்டுமா பிழை? பெட்டைகள் மட்டும் சரியா? உண் மையா விரும்பினுலும், அவனுக்குப் பின் னணியாக உயர் உத்தியோ கம், பணம் , அந்தஸ்து எண்டு போலி அந்தஸ்து இல் லாட்டி, சகோதரணுப் பழகினம் எண்டும் சொல்லுகினம் தானே, பெட்டைகள் மட் டும் திறமோ? ஏன் மனே ஏன் இதை மறைச்சவா? இது மட்டும் சரியோ?. கேள்விகளைக் கொட்டிய களைப்பில் பேசா திருந்தான். பின்பு தொடர்ந்தும், "'நான்

Page 175
156 Goov ?ás vir ......
தயார்தான்-வீட்டார் விடாயினம். அது தான்யோசிக்கோணும். அவவும் வீட்டை போகட்டும். நான் ரிசல்ற்றுக்குப் பிறகு
யோசிக்கிறன்." என்ருன்
'நீ எப்ப யோசிச்சாலும் முடிவு ஒன் ருத்தா னிருக்க முடி யும். ஒன்றுமட்டும் சொல்றன். நீ சொல்லுறமாதிரி பெட்டை யில்லை அவள். உன்னிட்ட புதிய சிந்தனையி ருக்கு. பழைமையின் சீர்கேடும் நல்லாத் தெரியும். அந்த சீர்கேட்டின் சிகரம்தான் இந்த சாதிப்பேய் எண்டு உனக்கு நான் சொல்லியா தெரியவேணும். நீ ஒரு வழி காட்டியாயிரு. ஏட்டுச் சுரக்காயாக இரா த டாப்பா. மளுேவைப் பற்றிய முடிவைப் பிறகு எடுக்கலாம். இண்டைக்கு-மனேவை கட்டாயம் சந்திக்கவேணும்' என்று தீர்க் கமான குரலில் கூறிமுடித்தான் குமார்.
"உனக்காக இண்டைக்கு சந்திக்கிறன். முடிவு பிறகுதான். நான் யோ சி க் கோணும். பிறகுதான் தொடர்வதா இல் லையா என்ற விஷயம்" சந்திரன் முழுதாக தெளிவுபெருத நிலையிலேயே சொல்லி
வைத்தான்.
"சுழட்டேக்க மா த் திர ம் அவட வார்த்தைக்காக அங்கலாச்சுக் கொண்டு திரிஞ்சாய். இப்ப என்னெண்டா கைவிடுகி ற  ெத ண் டு நீயே தீர்மாணிச்சுட்டாய். அவட விசுவாசத்தைப் பற்றி நினைக்கக் கூட விருப்பமில்லை. நீ படிச்சும் என்னடா பயன்?. சரி. சரி இண்டைக்கு சந்திச்சிட்டு வாவன். பிறகு கதைப்பம்" எந்த பதிலை யும் எதிர்பாராமலே மணியோடர் மாற்றி வர கந்தோருக்குப் புறப்பட்டான் குமார்.
ars ae ce مه
'சந்திரன் வந்ததிலிருந்து ஒரு மாதிரி இருக்கிறன். எ ன் னெ எண் டு சொல்ல வும் இல்லை. நீங்களும் கேக்காம இருக்கிறி யள்-கேட்டா என்னவாம்" சந்திரனின் தாய் பாக்கியம் கணவனிடம் முறையிட் டாள்.
"நீதான் உன்ரை மகனுக்கு செல்லம் கொடுக்கிறனி. மற்ற மூ த் த வ ன் க ள் ரெண்டு பேரும் நான் சொல்றபடிதான் வளந்தவங்கள். கவனிச்சன். நீ கடைக்

மா. சின்னத்தம்பி
குட்டி எண்டு சொல்லிச் சொல்லி செல்லம் கொடுத்தாய் நீயே கட்டிக்கொண்டு அழு. அவன் B. A. யும் முடிச்சு ஒரு டீச்சராயும் போப்போரான். நான் சொல்றதைக் கேக் கிறமாதிரி காணேல்ல" - தந்தை சலித் துக் கொண்டார்.
"'உங்களுக்கு அவன்ர போக்கு பிடிக் காதமாதிரி தான். இப்ப அவன் என்ன குல மழியிற காரியம் செய்யிருன். தறுதலை யாவா திரியிருன் . உங்கட கதையை விட் டுட்டு வந்து சாப்பிடுங்கோ" என்று மக னுக்காக வாதாடினுள் பாக்கியம்.
கிழவர் மனதிலிருந்ததை தந்திரமா கக் கக்கிஞர். "இண்டக்கி அவனிட்ட ஒரு முற்றுக் கேட்டுவை. உவன் உடுவில் தங்க ராசுவின்ரை பெடிச்சியை எங்கட சந்திர னுக்கு கேட்டுவர நினைச்சிருக்கினம் எண்டு புரோக்கர் சொன்னவர். நல்ல சீதனமாம். பொடிச்சியும் பரவாயில்லையாம். அயலட் டையில் உள்ள சனம் பறயினம், பெட்டை அவ்வளவு அழகில்லாவிட்டியும் தங்கமான குணமாம். அதோட எங்கட சாதிக்கையு மாப் போச்சு. இதைத்தட்டக்கூடாது. நீ இண்டக்கி சந்திரனிட்ட கேள்" என்ருர்,
"அங்க பாருங்கோ தம்பி அவளுேட படிச்ச பெடியன் கண்டியால யாழ்ப்பா ணத்துக்கு முதல் முதல் வாரனெ ண் டு சொன்னதாம். அந்தப் பெடியளுேடதான் வாரான் போல. நீங்க இப்ப வாயை வைக்காதீங்க. பேந்து குழறுவான்' என்று சொல்லி கிழவரை அடக்கிளுள்.
பிறகு மகனைப் பார்த்து வாஞ்சை யோடு;
'தம்பி வாடா. இதுதாஞ உன்ற சினேகிதன். தம்பி இரும். இப்பத்தானே ரெயில் வந்தது. தான் ஒரு கோப்பி ஊத் திக் கொண்டு வாரன். குளிச்சுப்போட்டு பேந்து சாப்பிடலாம். தம்பி உன்ரை அறைக்கு கூட்டிக் கொண்டு போவன்' என்று கூறிவிட்டு அடுப்படிக்குள் நுளைந் தாள் பாக்கியம்,
so مه سه مه

Page 176
வேலிகள்.
சந்திரனும் நாதனும் அறைக்குள் போயிருந்தனர். தன் சேட்டைக் கழற்றிய படியே சந்திரன் கேட்டான், 'எப்படி நாதன் யாழ்ப்பாணம். முதல் முதல் வந் திருக்கிருய். வந்தும் ஆறு நாளாச்சு உன்ர ஒப்பீனியன்தான் என்ன? உங்கட அப் கன்றி மாதிரி மலையும், குளிரும் இராது. சமவெளியும் வெயிலும் தான் இருக்கும். ஆறு ஓடாது. கிணறுதான் இருக்கும். புதிய இடத்தை நாடா தே தேங்கிக் கிடக் கும் தண்ணிர் எமது பழைமை போல. ஆன லும் உனக்கு ஒரு சேஞ்ச் அ ப் பிடித் தானே."
'இது ஒண்டும் என்னை அவ்வளவு கவ ரவில்லை. ஒன்றுதான் எனக்கு விளங்கவே யில்லை. இந்த ஊரில் ஏன் வழியெல்லாம் சுவருக்குப் பதில் தென்னுேலையால் உயரத் துக்கு மறைச்சு வைச்சிருக்காங்க' புதின மாகக் கேட்டான் நாதன் எங்கோ பார்த்
፰ t-oዚፉ- •
'அது கிடுகு எண்டு சொல்றது. பாதி ஒலையாவை பின்னி வேலி கட்டியிருக்கினம். அது ஒரு மறைப்பாயிருக்குமெண்டுதான்' உற்சாகம் இருக்கவில்லை அவன் குரலில்,
'ஆ. இதுதான வேலி, வேலி என் றும், வேலிச் சண்டையெண்டும் நீ ஓயாமல் சொல்லுவியேடாப்பா. அதேன் இன்னும் கற்சுவரோ அல்லது மற்ற இடங்களில் இருக்கிறமாதிரி பூ மரங்களால் எல்லை வைக்கலாம் தானே. இது அவ்வளவு லச்ச னமாயில்லை. சில இடத்தில் உயரமாயும், கில இடத்தில பதிஞ்சுமிருக்கு. சில வீடுக ளிலே கிணற்றுப் பக்கம் கூட வேலியில்லை. எனக்கு இது புதிராத்தா னிருக்கு. ஆச்சரி யம் என்னெண் டா சில கிணறுகளுக்கு மறைப்பில்லை. வீடுகளை அழகா சக் கட்டி அதற்கு மட்டும் வேலி கட்டியிருங்காங் களே எங்கட பக்கத்திலே எல்லைப் பிரச் சனையே எனக்குத் தெரிய மாட்டேங்
கிறது.'
'இது பழைய நாளிலை இருந்து பின் பற்றி வருகினம். இப்ப மதில் கட்ட வசதி யிருந்தாலும், பழைய ஆட்களை அது அதி கம் கவர்வதில்லை. வேலியும் கனகாலம்

மா. சின்னத்தம்பி 137
பாவிக்காது. அதோடு செலவும்தான். அது தேவையும் இல்லை. இவை பக்கத்து வீட்டா ரோட கோபமெண்டாலும், வேலியை உயர்த்திப் போடுவினம். மதில் எண்டால் இப்பிடியெல்லாம் நினைச்சபடி செய்ய முடி யாதுதானே' என்று மெல்லச் சிரித்துக் கொண்டான் சந்திரன்.
"இல்லைடா சந்திரா, அழகான வீடு கள் எல்லாம் மற்றவங்க பார்க்க முடியாம இந்த பாழாப் போன வேலி அலங்கோலப் படுத் துதே. அதுதான் எனக்குக் கூட ஒரு மாதிரியாயிருக்கு பழைய ச ன ங் க ள் இன்னும் பழைய முறைகளிலிருந்து விடுபட விரும்புவதில்லை. பக்கத்துச் சனத்திலையும் நம்பிக்கையில்லை. சமுதாயமும் ப  ைழ ய மானிய மு  ைற களை க் கட்டிக்காக்கிற "தெண்டுதான் நினைச் சுக் கொண்டிருக்கி னம், சாதி விஷயத்திலையும் கூட இதே நிலை தான். அதைவிடு. அப்பர் கேட்டாலும், துள்ளுவார். சமுதாயத்திலுள்ளோர் மனம் மாறி புதிய மாற்றங்களை ஏற்கத் தயாரா கும் போதுதான் இந்த வேலிகளும் இல்லா மற் போகும் எண்டு நான் நினைக்கிறேன். வேலியே போ காம சாதி எப்பிடிப்போ குமோ! எனக்கும் பயமாயிருக்கு அதை நினைக்கும் போதே’ என்று குரலை அமத்தி யபடி கூறினன்.
'சந்திரன், நான் நினைக்கிறன் யாழ்ப் யாணம் இலங்கையில் ஏனைய மொழி, பண் பாடு நிலவும் நகரங்களிலிருந்து அதிகளவு வேறுபட்டிருப்பது தான் காரணம். யாழ்ப் பாணத்துக்கென்று வந்தாற்ருன் இங்கே வருவாங்க. இது ஒரு ஒதுக்காக இருக்கிற தும்" நீ சொல்ற மாதிரி பழைய கிராமிய அமைப்பும், மானிய சமுதாயத் தன்மை உடைஞ்சுபோகாமல் இருக்க காரணம் என்று நினைக்கிறன்' நாதன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டே கூறிமுடித்தான்.
'சரி நாதன் இந்தா அம்மா வச்ச
தேத் தண் ணியைக் குடி, அங்காலை போவம்
11னையடிக்கு' என்றவாறு தேநீரை நா தனி டம் கொடுத்தான்.

Page 177
758 G3ʼahv 6ô?«S6or... ..
'சந்திரா உன் மனேவிட விஷயம் இப்ப ாப்பிடி, குமாரும் சொன்னனே' பழைய தைப் புதுப்பிப்பது போல கேட்டான் நாதன்.
"அது ஒண்டுமில்லை. பிற குதா ன் தெரியவந்தது அவள் சாதியிலை அவ்வளவு சரியில்லே. எங்களிலும் பார்க்க குறைவு. அப்பரும் அம்மாவும் இதிலை சரியாப் பாப் பினம். நான் எனக்காக ஒண்டும் பாக் கேல்லை. அவையஞக்காகத்தான் யோசிக்கி றன்." சந்திரனின் குரல் வரவர மெலிய லாயிற்று.
'இது உன் வாழ்வுப் பிரச்சினை. வாழப்போறவன் நீதான். உன்ற அம்மா வும், ஐயாவும் உன் வாழ்க்கையை நடத் தப் போறதில்லை. அவர்கள் பழையவர்கள். பழமையின் வாடை இருக்கத்தான் செய் யும். நீயோ புதிய தலைமுறை. பழமை சீர ழியும். புதுமை புகுந்துகொள்ளும். அது தான் நியதியும் நியாயமும் கூட. நீ இதை மறுக்கமாட்டாய் என்றுதான் நினைக் கி றன்" சிந்தனை செய்தவாறே சொன்னன் நாதன்.
"எங்கட சனம் எங்கட குடும்பத்தை ஒதுக்கிப்போடுவினம். அண்ணர் ரெண்டு பேரும் நல்ல இடத்தில்தான் முடிச்சவங் கள். நான் எப்படி ஒரு முரண்பாடாக போறது. அதுதான். " முடிக்கமுடியாமல் முடித்தான் பேச்சை .
'நீ சீதனத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கிருயோ இவள் மனேவிட்ட காசு இல்லை என்று."
"சீ, என்னை நீ புரிஞ்சு கொண்டது அவ்வளவுதான். ஒருத்தியை வாழவைக்க முடியாமல் ஏன் அவளை நான் கட்டோ னும் சீதனம் எனக்குத் தேவையில்லை. அதைவிடன். இந்தச் சாதிதான். நான் ஒருவன் என்ன செய்யமுடியும். சமுதாயத் தைத் திருத்த.'
"பாட்டெழுதியும், கதையெழுதியும், பேசியும் மாத்திரம் சமுதாயத்தை திருத்த முடியாது. செயலிலையும் செய்ய வேண்டும். செல்ல சித்துக் கிட கிற போலி சமுதாய

மா. சின்னத் தம்பி
அமைப்பைத் தட்டித்தூளாக்க உன்னைப் போல ஒருவனது கை முதல் தயாராக வேண்டும். உன்னை நான் கூட நம்புறன் சந் திரன்'" நாதனின் பேச்சால் சந்திரன் சிறிது நேரம் பேசாமலே நடந்தான். அந்த மெளனம் நாதனுக்கு இதமாகவே இருந் தது. தெளிவுடன் தொடர்ந்தான் சந்தி
put 6T.
'எனக்கு மனேவில வெறுப்பில்லை. நான் எப்பவும் தயார். முதலில் அப்பரைப் பகைக்க வேணும், பேந்து அயலட்டைக்க தலைகாட்டேலாது. அதுதான்'
*மனுே உன்னுேட மனைவியா இருக் கிற தகுதி உடையவள் என்று நீயே சொல் லியிருக்கிருய். தகப்பன் முதல் மறுப்பார். பிறகு சரியா வருவார். ஒரு வழிகாட்டி யாக திகழப் போற நீ சில துணிகரமான நடவடிக்கைகளிலேயும் இறங்கத்தான் வேண்டும். சமுதாயத்தைப் பற்றி கவலைப் படுறதில் அர்த்தமேயில்லை. உன்னை உயர் சாதியில வைக்கிறதில அக்கறை காட்டும் அயலவர் உன் வாழ்வு உயர அள்ளித் தர மாட்டார்கள். அதே சமயம் நீ எந்த சாதிக்குள் இருந்தாலும் பொருளாதார ரீதியாக உயர்ந்தால் அதே சமுதாயம் உன் பின்னல் நிற்கவும் தயங்காது. பொரு ளாதாரம்தான் அடிப்படை. அதில் நீ உய ரும் போது மற்றவர்கள் உன்னை நிச்சயம் மதிப்பார்கள். ஆகவே சாதி, உயர்வு, தாழ்வு எல்லாம் இனியும் உயிர் வாழ முடி யாது. செத்தே போயிடும்' ஒரு பெரிய லெக்சரே அடித்த மாதிரி பேசி முடித்
தான.
'நானும் யோசிச் சிட்டன். நான் உழைப்பன், வாழப் போறவன் நான். என் இயல்பான சுய விருப்பத்தையும், ஆசாபா சங்களையும், மனிதரது செயற்கையான சமுதாயக் கட்டுப்பாடுகளைக் கா ட் டி உடைத்தெறியப் பார்க்கிருர்கள். நான் புதியவன். என் தலைமுறையும் புதியது தான். நான் மனுேவைத்தான் கட்டு றது. ' அவனது பேச்சில் உறுதி கொப்ப ளித்தது.

Page 178
வேலிகள் .
"'எனக்கு மகிழ்ச்சியாயுமிருக்கு. ஆணு முழுதும் நம்பவும் முடியவில்லை. பார்ப் போம் சந்திரா" குதூகலத்துடன் கூறி ஞன் நாதன்.
சந்திரன் பேசவில்லை. இருவரும் சந்தி ரனின் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந் தனர்.
ص= عه مه عد
** அம்மா, அப்பர் என்ன சொன்னு லும் எனக்கொண்டுமில்லை. நீங் க ள் சொன்ன தெல்லாம் இதுவரை கேட்ட ஞன். இது என்ர வாழ்வுப் பிரச்சினை. இதில உங்களைவிட எனக்குக் கூடப் பங்கிருக்கு. மறக்காதீங்க' சந்திரன் குமுறிஞன்.
"நாங்கள் என்ன உன்னைப் பாழ் கிணற்றிலயா தள்ளப் பாக்கிறம். உன்ர கொண்ணை மார் ரெண்டுபேரும் நல்லாத் தானே இருக்கினம். நீ அந்தக் கீழ்சாதிக்கை கட்டிப்போட்டு ஊரிலை த லை நிமிர் ந் து திரியவா முடியும்' பாக்கியம் ஆறுதலா கவே கூறினுள்.
'அண்ணைமார் நல்லாத்தா னிருக்கி னம். மூத்தவர் விவாகரத்துப் பண்ணப் போறனென்டு இரண்டுதரம் ஒடிவரேக்க அப்பர் மானம் போகுமென்று துரத்தின வர்தானே. மற்றவரை சீதனத்தால் வாங் கிப் போட்டினம் ஒரு கடுதாசி கூட இல்லை வா ரது மில்லை. சுன்னுகத்துக் கதானே அவற்ற வாழ்வு' - பேசமுடியாதவன் மாதிரி இளைக்க இளைக்கப் பேசினன்.
"இளம் வயது வாய்த்துடுக்கா பேசிற யோசிச்சு முடிவு செய்' அவனேடு போய் அவனைப் பிடிக்க முயன்ருள் கிழவி பாக்கி
II D.
'அவனை என்ன கெஞ்சிருய் பாக்கி யம் , நான் சொல்றதைத்தான் அவ ன் கட்டுறது. அவன் நினைச்சபடி நாங்கள் ஆட ஏலாது. நானும் எத்தனையோ பெடி யளுக்குப் படிப்பிச்சவன்தான்' அப்போது தான் உள்ளே நுளைந்த தகப்பன் தம்பிமுத் தர் பொரிந்தார்.

மா. சின்னத்தம்பி 159
'அவ்பு இதிலை நீ என்ன சொன்னலும் சரி. நான் மாட்டன். அவள் மனுேவைத் தான் கட்டப் போறன். அண்ணர் மாரைப் போல உயர்சாதியெண்டும், சீதனமெண் டும் சொல்லி என்னையும் யாருக்கும் விற்கப் பாக்காதீங்க. அது வாயாது. நான் இப் பவே கொழும்புக்குப் போறன். என்ர முடிவை யாரும் மாத்தேலாது' துணிவை வரவழைத்துக் கொண்டு மள மள வென்று பேசிக்கொண்டே தன் அறைக்குள் நுளைந் தான்"
'நீங்க என்ன சொல்லிப் போட்டு மரம் மாதிரி நிக்கிறியள். தம்பி பெட்டியை அடுக்கிருன்' பாக்கியம் பதறியபடி ஓடி ணுள் அறைக்கு.
*அவனென்ன ஆகமிஞ்சினுல் நஞ்சு குடிப்பன் எண்டு வெருட்டுவான். இவன் மாதிரி கன பேரை நான் கண்டிருக்கிறன். டாக்கியம் நீ விடு அவன் போறதைப் பாப் பம்' கிழவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரவும் அலட் சி ய மா க ச் சொல்லி முடித்தார்.
*"நான் ஒண்டும் வாழத் தெரியாத கோழையில்லை. பழம் பஞ்சாங்கங்கள்தான் அந்தப் பழங் கிடங்கிலிருந்து வெளிய வரத் துணிவில்லாமல் அழுது அழுது சாகிறவை. நீங்க சாதி சாதியெண்டு அதைக் கட்டிப் பிடிச்சு அழுங்கோ. நான் சா சுமாட்டன். வாழ்ந்து காட்டுறன்' பேசியபடியே உடுத் திருந்த சாரத்துடன் பெட்டியை எ டுத்துக் கொண்டு படலைவரை வந்தான்.
"நீ வெளிக்கிட்டிட்டியோடா பெரிய மனு ச ைெ ண் டு, எனக்கு ஐம் பத் தெட்டு வயதெண்டாலும் வைரம் பாஞ்ச உடம்படா! பெட்டியை வையடா! உள்ள போ வண்டா போ!!' கிழவர் தம்பி முத் தர் இளமை மீள ஆத்திரத்துடன் வந்து பெட்டியைப் பறித்தார்.
பெட்டியையும் வேணுமெண்டா வச் சுக் கொள்ளுங்கோ. ஆனல் என்னை அடக்க நினையாதீங்க. அது நடவாது நான் போற தேதான். சாகமாட்டேன். என்ர விருப் பப்படி வாழுறதுதான். "சூட் கேசைத்

Page 179
M60 (?py 676 r ...
தூக்கி எறிந்தான் ஆத்திரத்துடன், அணை உடைத்த புதிய வெள்ளத்தின் உத்வேகத் துடன் புறப்பட்டுப் போயே விட்டான்.
مه مه عد مه 'நான் கறி வாங்கிக் கொண்டு சந்தி யிலை நிக்கேக்க, சங்கானையிலிருந்து வந்த தங்கம்மா சொன்னவா நம்மட சந்திர னுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்காம். மூக்கும் முழியுமாகயிருக்கிருஞம் பெடியன் நான் ஒருக்க போய் பாத்திட்டு வரோனும் என்றவாறு படலையைத் திறந்துகொண்டு கையில் கறியுடன் வந்தாள் பாக்கியம்.
தம்பிமுத்தர் சா ய்வு நாற்காலியில் படுத்திருந்தபடியே பேப்பர் வாசித்துக் கொண்டிருந்தார். பேப்பரைப் பதித்து பேசிக் கொண்டே வந்த பாக்கியத்தை ஒரு முறை முறைத்துப் பார்த்தார்.
"என்ன எ ல் லா ப் பிள்ளைகளுக்கும் செய்த கடமையை உவன் ஒருவனுக்குத் தான் செய்ய முடியேல்லை. உங்களால்தான் அவன் வீட்டை விட்டுப் போயும் ரெண்டு வருஷமாய்ப் போ ச் சு. வாரதுமில்லை. போறதுமில்லை. அவன் எழுதின கடுதாசி யையும் கிழிச்சுப் போட்டியள். பதிலும் போடேல்லை. அவனும் எ ன் ன நினைச் சானே. பேசாமல் இருந்திட்டான். அது தானே "பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' எண்டு சொல்லியிருக்கினம் பெரியவை. ஆனலும் மறந்து இருக்க மாட் டான். உங்கட நரசிம்ம அவதாரத்தைப் பார்க்க விரும்பாமல் பல்லைக் கடிச்சுக் கொண்டு இருந்திருப்டான்' தாய்மையின் உள்ளம் வெதும்பி புலம்பியது. சொற்கள் மெதுவாகவும், விட்டுவிட்டும் ஒலித்தன. முந்தானையால் கலங்கிய க ன் க 3ள த் துடைத்துக் கொண்டாள். கண்ணிர் விழி யில் இல்லாமற் போய்விட்டது. ஆளுல் மனத்தின் சுமை அகலவில்லையே. அந்த திண்ணையிலேயே இருந்து விட்டாள் கிழவி
சஸிசெயரிலிருந்த தம்பிமுத்தருக்கு கோபம் தாழ முடியவில்லை, துள்ளி க் கொண்டு எழுந்தார்.
* யாரடி மகன்? இப்ப யாரைப் பார்க் கப் போருய், இன்னெருக்காச் சொன்ன நீயும் கிளம்ப வேண்டியதுதான். சொல்

மா. சின்னத்தம்பி
லிப்போட்டன், அங்க போன தலைவாசல் மிதிக்கப்படாது சொல்லிட்டன்' ஓய்வெ டுத்துக்கொண்டு தொடர்ந்தார்!
"எங்கட குலமென்ன கோ த் தி ர மென்ன ஒண்டையும் மிதிக்காமல் அவன் என் டைக்கு அந்தச் சாதிக்க கலியாணம் சேய்திட்டான் எண்டு கேள்விப்பட்டேனே அண்டைக்கே அவனைத் தலை முழுகிட்டன். அவனைப்போய் நீயும் மகன், மகன் எண்டு துள்ளுருய். ஒருத்தரும் போகத் தேவை யில்லை . இங்கையும் ஒரு வரும் வரத் தேவையில்லை. ரெண்டு வருஷத்துக்குப் பிறகு இவவுக்கு புத்திர பாசம் பிறக்கு தாம், கண்டறியாத பாசம். இது அவனுக் கிருந்தா - பெத் தவன், படிப்பிச்ச வன் எண்டு நான் கீறின கோட்டைத் தாண்டி யிருப்பாஞ. அவனுக்கில்லையேடி, தாய் தந்தை என்கிற பாசம்' தம்பிமுத்தர் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு திண்ணையில் இருந்து வெளி முற் றத்தில் இறங்கி குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்.
"'உங்கட பிடிவாதத்தா லதான் என்ர பெத்த பிள்ளையைப் பிரிஞ்சு இவ்வளவு நாளும் தவிக்கிறன். மூத்தவன்கள்தான் உங்களுக்கு நல்ல பிள்ளையாயிருந்து வாழ்க் கையில் படாத பாடெல்லாம் படுகுதுகள். உவன் என்ன செய்தான், அவன் விரும்பின பெட்டையைக் கட்டிக் கொண்டான். உங் களுக்குப் பிடி க் கே ல் லை எண்டுதானே இங்க கூட்டிக் கொண்டு வரேல்லை. மன் னிக்கச் சொல்லி எழுதின கடுதாசியையும் கிழிச்சுப் போட்டு பேசின பேச்சை அவ னுக்கு எந்த அறுவான்கள் அண்டி வைச் சாங்களோ. அவன் பிறகு ஒண்டும் எழு தேல்லை. உங்களுக்கு இந்த வயதிலையும் இப்படி பிடிவாதமெண்டா அவனுக்கிருக் காதே இந்தக்குணம்." கலங்கியபடியே குழறிக் கூறினுள் தாய்.
* "உனக்கென்ன பெஞ்சன் காசு வருது உனக்குச் சாப்பாடு இல்லையெண் டால் கேள். வேற ஒண்டும் எவனைப் பற்றியும் பேசக்கூடாது" ஆத்திரம் பொங்கத் தீர்க் கமாகச் சொன்னர் . தா யு ள் ள த் தி ல் வேதனை ஆத்திரமாக பீறிட்டது.

Page 180
வேலிகள்.
"அவனையேன் திட்டித் தீய்க்கிறியள் - அவன் உங்களுக்கு என்ன செய்தவன் படிக் கும்வரை நல்லாத்தானே இருந்தவன். உழைக்கேக்கையும் அவன் தன்ர சம்பளத் நில எங்களுக்கனுப்பினதையும் திருப்பி அனுப்பினதும் நீங்கதானே. இப்பவும் என்ன அவன் தனக்குப் பிடிச்சவளைக் கலி யாணம் செய்தான். அதில என்ன பிழை. அவளும் தங்கமான பிள்ளை யாம். அவன் இப்ப சந்தோஷமாத்தானே இருக்கிருன். அதுதானே எங்களுக்கும் வேணும். இப்ப போஞலும் அவன் எங்களை வீட்டில் இருத்தி சாப்பாடு போடுவான். நீங்கள் தான் கண்டறியாத சாதியைக் கட்டிக்
கொண்டு வெறி கொண்டுதிரியிறியள்'
தம்பிமுத்தர் பாக்கியத்திடமிருந்து வந்த வார்த்தைகளின் கனத்தில் அடிபட் டவராக, விறைத்துப் போய் நின்றர். பாக் கியத்தைப் பார்த்துத் தலையை ஆட்டிய படியே கேட்டார்.
*எடியே நீயும் இப்ப அவன் செய்தது சரியெண்டே ஒத்துப் பாடுற, நீ சொல்லு றமாதிரிக்கு அவளவயன்ற வீட்டை போய் இருப்பாய் போலிருக்கு நானடி அந்தச் சாதியளோட இருக்கப்படாது எ ன் டு தானே சங்கானைக்க இருந்த காணியையும் வித்துப்போட்டு இங்க இருக்கிறன். என்ர உயிர் இருக்குமட்டும் அ ந், த வாசல் படி மிதிக்க மாட்டன். தெரியுமா?’’
"நீங்க உ ங் க ட முரட்டுவாதத்தை விட மாட்டியள். இனிமேல் சாதி பார்த்து வாழவும் ஏலாது. யாரெண்டாலும் என்ற மருமகள்தான் அவள். அவளின்ற பிள்ளை யும் என்ற பேரன்தான் நீங்க கத்திக் கொண்டே கிடவுங்க. நான் இண்டைக் கொருக்க மோன் வீட்டை போய் பாத் திட்டுதான் வரப்போறன்" பாக்கியம் தீர் மானத்துடன்தான் சொன்னுள்.
"போப் டோறியோ போவடி பாப் Lub''
வயது போஞலும் கோபம் துடிப்புடன் வந்தது தம்பி முத்தருக்கு.
'ஓம். நான் போறதுதான். இப்பவே போறன். சமையலும் வேண்டாம். ஒரு சனியனும் வேண்டாம்'. கோ பம் கொண்ட பாக்கியம் வாங்கி வந்த மீனை யும் அடுப்படியுள் வீசி எறிந்து விட் டு உள்ளே போய் சீலை மாற்றத் தொடங்கி ஞள். தம்பிமுத்தருக்கு என்ன செய்வ தென்று புரியவில்லை.

tar. đ76örsor đổ đế tử Lý” 16f
"போனுயண்டா. நீயும் இங்காலப் பக்கம் மிதிக்கக்கூடாது. ஓம். திரும்பவும் சொல்றன், நான் செத்தாலும் இங்காலப் பக்கம் வரக்கூடாது. அவன் என்ற மோறு மில்லை. நீ என்ற பெண்டிலுமில்லை" என்று தொண்டை கிழியக்கத்திஞர்.
பாக்கியம் இனியும் வீட்டை விட்டு வெளிக்கிட மாட்டாள் என்ற துணிவில் மீண்டும் போய் ஈஸிசெயரில் சாய்ந்தார். அப்படியே இருந்தபடியே கைகளிரண்டை டையும் தலைக்கு மேல் மடித்துக் கொண் டிருந்தார். அப்போது எலி பிடிக்கப் பாய்ந்த பூனை பிடிக்க முடியாமல் திருதிருர வென அவ  ைர ப் பார்த்து முழித்துக் கொண்டிருந்தது.
'இனி இந்த வீடும் வேணும்; எனக்குப் பிள்ளைதான். உனக்குச் சாதிக் கெளரவம் வேணும். அதைப் பிடிச்சுக் கொண்டே யிரு. நான் . போறன்' என்று கூறியப டியே பாக்கியம் படலையைத் திறந்து கொண்டு கொதிக்கும் தார் ருேட்டில் எட்டி எட்டி நடக்கத் தொடங்கினுள்.
பழைய தலைமுறையில் புதிய தொனி யைக் கேட்ட தம்பிமுத்தர் ஒரு கணம் திகைத்தார். பாக்கியம் தான் சொல்லிய படியே போய்க் கொண்டிருப்பதைக் கண் டவுடன் அவரது கண்களையே நம்ப முடிய வில்லை. எழுந்தார். திறந்து கிடந்த படலை யினுாடாக ருேட்டைப் பார்த்தார். வாய் முணுமுணுத்தது.
'அவன்தான் தலைகால் தெரியாம போனவன் எண்டு பாத்தா, இப்ப இவளும் அவன் சேய்தது சரி எண்ட மாதிரியெல் லோ போரு. இப்ப நான் மட்டும்தான் பிறத்தியாயிட்டன்' " அ வ ர து முகம் சோர்ந்துவிட்டது. நெஞ்சில் பல ஆயிரம் ஊசிகள் சேர்ந்து குத்துவது போல உணர்த்
é51Tfr.
அடுப்படியை எட்டிப் பார்த்தார் அங்கே பாக்கியம் எறிந்த செத்த மீன்கள் கூட இவரைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றியது.
சர சரவென சத்தம் கேட்க தலையைத் திருப்பி அந்தத் திசையில் பார்த்தார். பழைய வேலிகள் சில கதிகால் உக்கி, கயிற்றின் கட்டுக்கள் அறுந்து, கிடுகுகள் செல்லரித்து விழுந்து கொண்டிருந்தன. O

Page 181
(; 6 J, 260T
உப்பி நின்ற வயறு பாருங்கல்லாகக் கனத்த பொழுதுகூட அதனைச் சுமப்பது ஒரு பொருட்டாக அவளுக்குத் தெரிய வில்லை. ஆளுல், வேதனையின் நிழல்கள் படிந்து நரம்புகளையே சுண்டியிழுத்த உள் ளச் சுமையைத்தான் தாங்கமாட்டாது பெருமூச்செறிந்தாள் அவள். அதன் கார ணமாகவோ என்னவோ, உலகத்தின் துயர மெலாம் தன்னுள்ளே குவிந்தது போலவும் அவையெல்லாம் தானேயாகி அனுபவிப்பதுபோலவும் வளரவாரம்பித்த ஒரு பிரமைக்கு உட்பட்டுத் தவித்தாள் அவள். இன்டத்தின் எல்லையில் அழிவின் தொடக்கமும் வளர்ச்சியின் வடிகாலா கவே இறப்பும் இருப்பதாக நினைத்துக் கற் பனை செய்தாள் அவள். மனத்தளவிலாகு தல் தானே அவளுகி, அவனே தானுகிச் சங்கமித்து, வேழுகுமுன் அனுபவித்து முடித்த இன்ப வாருதியின் நினைப்பு அவள் உள்ளத்தை நெருடிற்று. இந்த நிலையிலும் அந்த 'இன்பங்கள்' அவள் நினைவிற்கு நாணச் சிலிர்ப்பை ஏற்படுத்தின.
அணைந்தும் அணையாமலும் இருக்கும் தணலிலே போட்ட சருகுகளிலிருந்து கிளம்பும் புகைவட்டங்கள் காற்றணுக்களு டன் கலந்து சூனிய வெளியின் ஊடுருவுந் தன்மையைச் சலனப்படுத்தி மறைக்க முயல்வதுபோல, அவளது இன்ப நினைவுக னின் மீது, இடையிடையே எழுந்த துன்ப மூட்டங்கள் கருமையைப் பூசி மறைத்தன.
இடுப்பெலும்புகளிடையே தொடர் கிய வலி, நல்ல உள்ளத்திலே விழுந்த விவு வித்து கெப்பும் வேருமாகப் பரவி அந்த உள்ளத்தையே விழுங்கிவிடுவது போல, அங்கமங்கமாகப் பர்வி அவளை வாட்டி யெடுத்தது. தன் மடிமீது தலைவைத்துப்

நந்தி மஹன்
படுக்கும் மனிதனின் துன்பங்களுக்கு ஆறு தல் கொடுக்கும் தாய்மையின் வடிவமாக நின்ற அவள் தன்னிலை பிறழ்ந்த பொழுது தானே அதற்குள் அடங்கி அந்த வெம்மை யிற் கருகினுள்.
அவள் துடித்தாள். அகப்பட்ட பொரு ளுக்காக அவள் கைகள் துழாவின. துடிப் பின் இறுக்கம் அவள் கைகளிற் பாய்ந்தது. கையிலகப்பட்ட தகரக்குவளையொன்று அவள் கைகளில் நசுங்கி அவள் மனநிலை யைப் பிரதிபலித்தது.
வயிற்றின் சுமையும் உப்பலும் சிறிது சிறிதாய்க் குறைய முயலும் போது மனச் சுமையும் வலியும் பன்மடங்கு அதிகமாகி அவளை முறுக்கிப் பிழித்தன. அவளது எண் ணச் சுழற்சிகளின் கட்டுப்பாட்டுக்கு அடங் கியும் அடங்காமலும் அவளுடல் நெளிற் தது; முறுகியது.
அவள் முனகினுள்.
இரண்டாகிச் சேர்ந்து, பின் ஒன்முகி நின்ற அவள், இன்று அந்த ஒன்றுக்குள் ஒன்முக நின்ற உயிர் துடித்த பொழுது ஏற் பட்ட வாதனையில் தவித்தாள்.
துன்பமே தாஞகி அதிலிருந்து விடு படத் துடிக்கும் பொருளுந் தாளுகி நின்ற அவள், குலையீன்ற வாழைக்குக் கிடைக்கும் அமைதி தானும் தனக்குக்கிடைக்காததை உணர்ந்து நெட்டுயிர்த்தாள். அவள் விட்ட பெருமூச்சில் கலந்து நின்ற மோனத் துயரமே ஒலியுருவாகி வந்தது போன்ற அலறல் காற்பக்கமிருந்து எழுந்து அவளை 'அம்மா" என அழைத்தது.

Page 182
Garr
இன்பத்தின் எல்லை தந்த பரிசைக் கண்டு மகிழவேண்டிய அவள் எதிர் நோக் கும் துன்பத்தை எண்ணி நடுங்கினுள்: ஊருக்குப் பயந்து உறவுக்குப் பயந்து எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்த அவளை நோக்கி எழுந்த அந்த அழைப்பு, சம்மட்டி யைப் போல அவள் இதயத்தைப் பிளந் தது. 'குற்ற உணர்வேயற்ற மனம் எதற் கும் "எதுவுக்கும் அச்சமின்றித் தன் வழி செல்ல முடியும். ஆனல் குற்றமுள்ள மனமோ தன்னைச் சூழ உள்ள ஒவ்வொரு பொருளைக் கண்டும் அஞ்சித் துணுக்குறுகி றது' என்பது தன் விஷயத்தில் மட்டுமா வது உண்மையாகி விட்டதை உணர்ந்து மணஞ் சலித்தாள் அவள் .
ஆனல் அந்த அழைப்புக்கும் அவள் தவிப்புக்கும் காரணமான அச் சின்னஞ் சிறுசோ இன்பமே தாளுகி, தாய்மை ஊற் றின் அடைப்புக்கல்லே எடுத்த பெருமை யின் சிகரமாகி, தன்பொக்கை வாய் திறந் தது; இதழ் மலர்ந்தது. அந்த மலர்ச்சி யிலே மந்தமாருதம் தவழ்வது போலவும், வசந்த ருதுவின் இனிய நினைவுகள் எழுவ தாகவும், பரமோனத் தவமிருந்து கிடைக் கும் அமைதியே ஒருருவாகிச் சாமரம் வீசு வது போலவும், இன்னும் உலகத்தின் அழ கெல்லாம் ஒன்ருகிச் சுடர்விரிப்பது போல வும் உள்ளக் கிளுகிளுப்படைந்தாள் அவள், ஆனல் அதே சமயத்தில், சமூக பாரம்பரி யக் கட்டுதிட்டங்களுக்கு அமைந்தே பழ கிய அவள் அறிவு, தன்னுடைய வாழ்க்கை யையே பாழாக்கக் கூடிய ஒரு சக்தி அந்த அதீதமான அழகிலே மறைந்துறைகின்ற தென இடித்தது. அத்தகையதொரு பயத் தினுல் - மனத்தின் ஆழத்திலே, புற அறி வுக்கு அப்பாற்பட்ட ஒரு மூலையிலே எழுந்து கொண்டிருந்த எதிரிடையான நினைவுகளிஞல், உள்ளக் கிளுகிளுப்பைப் பூரணமாக அனுபவிக்க முடியாத நிலையில் திரிசங்கு சொர்க்கமாகத் தவித்தாள். கறையை விட்டுச் செல்லாத பனித்துளிக ளைப் போலல்லாது, 'மில்ற்றன்" என்ற ஒரு வகை இரசாயனத் திரவத்தால் அழிக் கப்பட்ட மைக்கறைகளைப் போன்று, துன் பச் சுவடுகள் தாய்மை உணர்வின் பிடி யிலே சிறிது நேரஞ் சிக்கிக் கிடந்தன

s vct-~~ நந்தி மஹன் 163
உணர்ச்சிகளின் தாக்குதலினுல் ஏற்ப டக்கூடிய ஆபத்தை என்ருே உணர்ந்த அவள், அவ்வுணர்வுகளின் பெருக்கமாகிய இன்பத்தை இன்று தான் நுகர்கிருள். ஆஞல் அந்த நுகர்ச்சியும் கணநேரமே நீடிக்கும்போது.
ஓ! அவளுடைய அறியாமையைக் கண்டு அந்த மலராத மொட்டுச் சிரிக்கி றதா! என்ருே வாழ்ந்த மக்கள் தமது நாக ரீக அறிவு வளர்ச்சிச் சூழலில் தம்மிடையே ஏற்படுத்திவைத்த சில நடைமுறைகளை, அவை இன்றைய சமூகத்திற்கு ஒவ்வாத தாயிருந்தும் கண்ணை மூடிக்கொண்டு பின் பற்றுஞ் சில "பெரிய மனுசர்"களையும், அவர்களுடைய செல்வாக்கிற்கு அஞ்சி அவர்களுக்குப் பின்னல் மந்தைக் கணக் கில் ஒடும் அடி வரு டி களை யுங் கண்டு துளிர்த்த பரிகசிப்பா அது? பகுத்தறிவற்ற காக்கையும் தன் குஞ்சைக் காக்க வரும் போது, அந்த ஆருவது அறிவிஞலேயே மதியையும் வென்ற மனித இனத்திற்கா இந்தக் கோழைத்தனம்?
6% ஃ
வானம் இருண்டு கொண்டு வந்தது. ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்தது அந்தக் காடு, புதர்களிடையே "விர்விர்'ரென்று புகுந்து சுழன்ற காற்று, சட்டத்திற்கு அவள் செய்கையை அம்பலப்படுத்த முயல்வது போல, அவளது முக்காட்டை
விலக்க முயன்றுகொண்டிருந்தது.
அவளுடைய மார்புடன் ஒட்டியுறவா டிய பிஞ்சுக்கரங்கள் அவளது தாய்மை உணர்வைக் கிளறிவிட்டுக் கொண்டிருந் தன.
அவளுடைய வயது போன நாய் கல் லுடனும் மண்ணுடனும் போ ர r டி க் கொண்டிருந்தாள். கோடாரிக்கு நாளுத கருங்கத லியைப் போன்று. இறுகிக் கிடந்த அந்தத் தரை - மண்வெட்டி தாக்கியபோ தெல்லாம் கொடுத்த எதிர்த்தாக்கலுக்கு ஈடுகொடுக்கமுடியாது தாய்க்கு மேல்மூச் சுக் கீழ்மூச்சு வாங்கிற்று. வயோதிகத்தின் சுமையை உணர்ந்த அந்தக் கரங்கள் உறுதி யுடன் போறாடின,

Page 183
164 வேதஆன
உடல்களைப்பையும் மீறிய ஒன்றினுல் இயக்கப்பட்டுப் போராடிக் கொண்டிருந்த தாயையும், அந்த மன உறுதிக்கு முன்ஞல் நெகிழ்ந்து கொண்டிருந்த தரையையும் கவனித்தவாறு நின்று கொண்டிருந்தாள் அவள். தாய் அனுபவிக்கும் சிரமங்களைக் கண்டு மனந்தாளாது உதவி செய்யமுன் வந்த பொழுது "உன் பச்சை உடம்புக்கு ஆகாது" என்று தன் தாய் தன்னைத் தடுத் ததை நினைத்துக் கொண்டாள் அவள். ஆ! தாய்க்கு எவ்வளவு பாசம்! எதிர்கால நல னில்தான் எத்துணை அக்கறை நினைத்த பொழுது அவள் உள்ளம் பாகாய் உரு கிற்று. கண்களை நீர் திரையிட்டு மறைத்
ه. {56
அளவுக்கு மீறிக் கை கால் சோர்ந்து களைப்புற்ற போதெல்லாம் ஏற்பட்ட சினத்தில், அடிக்கொரு தடவை தன்னைத்
திட்டித் தாய் முணுமுணுத்தது கூடக் காதில் விழாது பழைய நினைவுகளில் அவள்
ஆழ்ந்திருந்தாள்
பருவத்தின் உச்சியிலே, அழகுகள் கொழிக்க, அவள் துள்ளித்திரிந்த நேரம். உள்ளூர்ப் பள்ளிக்கு தமிழ் படித்த ஒரு தலைமையாசிரியர். அங்கு, ஒரளவுக்கு அவர் வைத்ததுதான் சட்டம். அவர் திருநீறு பூசிக் கோவில் சென்று திருவாசகம் படித்தபொழுதுங்கூட சக ஆசிரியர்களுக்கு அவர் மீது நல்லதொரு அபிப்பிராயம் ஏற் படவில்லை. அத்தகைய ஒருவரின் கடைக் கண் பார்வை அ வ ள் மீது விழுந்த பொழுது -
ஒரு பெண்ணுக்கு இயற்கையிலேயே உள்ள அச்சம், பெண்மையை அசந் தர்ப்பங்களிலும் அணிசெய்யும் நாணம், சமூகப் பாரம்பரியங்களிஞலும் கட்டுதிட் டங்களினலும் ஏற்படும் உள்ளுணர்வு - ஆகியவற்றையும் மீறி, உடல் உணர்ச்சிக ளுக்கு அவள் அடிமையானுள். அடிமைத் தனம் நிரந்தரமில்லாவிடினும் - அதனை மனித மனம் மீண்டும் விரும்பாவிட்டா லும், அதனலேற்படும் வடு, உலகிற்கு நிரந்தரமானதாகவே ஆகிவிடுகிறது.

நந்திமஹரன்
நடந்தவற்றை அவள்தாய் அறிந்த பொழுது ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்த ளிப்புக்களை இப்பொழுதும் நினைவு கூர்ந் தாள் அவள். அத்தகைய ஒரு குமுறலுக்கி டையிலும், இரண்டாம் பேருக்குத் தெரி யாது கட்டிக்காத்தவளும் தாய்தான். அவ ளுடைய தாய்க்கு எதிலுமே ஒரு வேகம். குமுறல் எந்த வேகத்தில் எழுந்ததோ அதே வேகத்தில் அடங்கவுஞ் செய்தது. அதே வேகத்தில் இத்தகையதொரு யுக் தியை எடுத்தவளும் அவள்தான், தாய் வேலைசெய்த வீட்டுக் 'கமக்காரனுக்கு வன்னிப் பகுதியில் இருந்தது ஒரு காணி. அதிலிருந்து கமஞ்சேய்யவும் மேற்பார்வை செய்யவும் நம்பகமான ஆளொன்றை அவர் தேடிக்கொண்டிருந்தார். அந்த நிலை யில், கிழவி வலியச் சென்று கேட்ட பொழுது அவருக்குக் கசக்கவா செய்யும்?
அதன்பின்பு - எத்தனை சம்பவங்கள்! பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி, புதிய சூழலில் வாழ்க்கை நினைவுகள் தொடர்ந் தன
இன்ருே நாளையோ என்றிருக்கும் வய திலும் தான் சுமந்து பெற்ற மகளுக்காக ஒரு தாய் சிரமப்படுவதை எண்ணிப் பார்த் தாள் அவள். எந்தத் தாய்மை தன்னைக் காப்பாற்றுகிறதோ அந்தத் தாய்மையின் பிரதிபலிப்பாகத் தான் இருந்தும் அதனே அலட்சியஞ் செய்துவிட்டதை உணர்ந்து, வருந்தினுள் அவள், ஒரு தாய் தன் மகளின் நன்மைக்காக அந்தத் தாய்மையையே பறிக்கலாமா? ஒன்றுமறியாத சிசுவின் மர் ணப் படுக்கையிலா ஒரு மனித உயிரின் நல்வாழ்வு எழுதப்படவேண்டும்?.
அவள் கேவிஞள்.
குழந்தையின் பூப்போன்ற பாதங்கள் அவள் மார்பிலே அழுந்தியபோது, அதன டியிலே கோழைத்தனங்களும் சுயதேவை களும் நசுங்குவதையும், புதியதோர் தார் மீகபலம் ஊறுவதையும் உணர்ந்தாள் அவள். அவளுள்ளே இருந்து, என்ருே புதைந்துபோன நல்ல குணங்கள் இன்று சிலிர்த்தெழுந்தன.

Page 184
வேத&ன
அவள் தனது கைகளால் குழந்தையை இறுக அணைத்துக் கொண்டாள். அது குழந்தைக்கு நொந்தது போ லும், வீரிட்டுக் கத்தியது. அதனைத் , தாய்மை யையுணர்ந்த புதியதோர் பாசத்துடன் தடவிக் கொடுத்தன அவள் விரல்கள். அந்த விரல்களினூடாகப் பாய்ந்த வெது வெதுப்பின் சுகானுபவத்திலே முயங்கிய குழந்தையின் இதழ்கள், பருத்துக் கனத்தி ருந்த முலையிலே அவாவுடன் இறுகப் பதிந் தன, கருமியின் கபாடம் திறந்ததுபோல அங்கே பால் அபரிதமாகச் சுரந்தது. அவள் சொர்க்கமும் பூமியும் ஒன்ருனது போன்ற இனம் புரியாததோர் உணர்வில் ஆழ்ந்திருந்தாள். தேவைக் கதிகமாகவே தன் குழந்தையை ஆசையுடன் தடவி குறள்.
அவளுள்ளே நடந்து கொண்டிருந்த அகப் போராட்டம் ஓய்ந்தது! இந்த உலக மென்ன, அதனைப் படைத்ததாகக் கூறப் படும் ஆண்டவனே வந்தாலும் அவளு டைய தாய்மை இன்பத்தைப் பறிக்க முடி யாது. ஆம்; காரியங்களை மட்டு மே ஆராய்ந்து தீர்ப்புக் கூறும் அவளுடைய சமூகத்திடம் காரணங்களையும் ஆராய்ந்து நியாயங் கேட்க அவள் தயாராகி விட் டாள். அதற்காக, அவளுடைய உயிர், குருதியின் கடைசித்துளியில் இரு க் கும் வரை இந்த உலகத்துடன் எதிர் நிற்பாள்.
அவள் ஒரு முடிவுடன் தலைநிமிர்ந்த பொழுது, குழிவெட்டப் பட்டிருந்தது. அதன் பக் க லி லே கைக்கு முட்டுக் கொடுத்த மண்வெட்டியுடன், அவளேயே வியப்புடனும் அதனல் விளைந்த ஆத்திரத் துடனும் வெறித்துப் பார்த்தபடி தாய் நின்று கொண்டிருந்தாள். தாயின் ஆத்தி ரத்தைக் கண்டு அஞ்சிளுலும், நீரோடும் கண்களுடனும் உறுதிதளராத நெஞ்சுட னும் கெஞ்சினுள் அவள்.

நந்தி மஹன் 165
காரியங்களோடு ஒட்டிய ஒரு தீர்ப்பை வழங்கி, அது தன் நெஞ்சுக்கும் ஒத்ததாக இருந்தால் அதனை விடாப்பிடியாகப் பற் றிக் கொள்ளும் சு பா வங் கொண் ட தாயைச் சமாளிக்க முடியாது திணறிஞள் அவள். வசவுகளையும் கண்டனங்களையும் அமைதி மாருத புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள். இயற்கையாக அமைந்த அறிவுடனும், கல்வியால் கைவந்த ஞானத்
துடனும் தாயுடன் முயற்சித்த அவள் வழியில்
விதி, "பொலிஸ்’ உருவத்தில் குறுக் கிட்டது.
'சிலசமயங்களில், குற்றவாளிகள் கூட இன்ஞெரு சமூக விரோதி தண்டனையடை. வதற்கு காரணமாகி விடுகிருர்கள்" என அவள் அப்பொழுது நினைத்தாள். இல்லா விடில், வேறு எதற்காகவோ அக்காட்டில் நுழைந்த 'பொலிஸ்’ குழுவிடம் அவள் ஏன் பிடிபடவேண்டும்?
தாயின் மீது விழுந்த பழியைக்கூட அவள் தன்மீது போட்டுக் கொண்டாள். குழந்தையைப் புதைக்க முயற்சி செய்கை யில் தாய் வந்து த டுத் த தா லே யே தாயோடு வாக்கு வாதம் ஏற்பட்டது” என்ற கதையை, தாய் மறுத்த பொழுதுங் கூடப் பொலிஸ் நம்பிற்று. ペ
அவள் தலை நிமிர்ந்து நடந்தாள் *தான் செய்ய முயன்ற ஒரு குற்றத்திற்கா கவே தண்டனை பெறுகிருேம்" என்ற ஆத்ம திருப்தி அவளுக்கு. அவள் ஆணவமும் அகம்பாவமும் கொண்ட கல் நெஞ்சக் காரி" எனப் பொலிஸ் நினைத்தது. அவர் கள், அதனைத் தம் செயல்களின் முலமாக வெளிப்படையாகவே காட்டிக் கொண் டார்கள், ஆளுல், அவளோ
வேதனையின் சாயை இதழ்களில் நிழ லாட தலை நிமிர்ந்து நடந்து கொண்டிருந்
தாள. O

Page 185
சந்தேகம்
(juoti தனது கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான். மணி ஐந்தாகி யிருந்தது. அருகில் அவன் காதலி வசந்தி தலை குனிந்தவாறு ஆழ்ந்த யோசனையிலி ருந்தா ள்.
'வசந்தி, எனக்கு நேரமாகி விட்டது. நான் போய் வரவா?"
"அதற்குள்ளாகவா? இப்போதுதானே ஐந்து மணியாகிறது? அரை மணி நேரத் திற்குள் நேரமாகி விட்டது என்று அவச ரப்படுகிறீர்களே!'
*" கடந்த சில தாட்களாக எனக்கு வீட் டில் ஒரே வேலை. அதஞல்தான் நேரத் தோடு போகிறேன். '
'சரி போய் வாருங்கள்'.
'இன்னென்று மறந்து விட்டேன். தாளை நான் உன்னை இங்கு சந்திக்க முடி யாது. நாளை மறுநாள் சந்திப்போம்' .
*"சரி, ம். குமார் . நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்கலாமா?"
"ஓ! தாராளமாகக் கேள்'
'கடந்த சில நாட்களாக உங்களு டைய போக்கு மாறுபட்டிருப்பதாக எனக் குத் தெரிகிறது. அதற்கு என்ன காரணம்?” ஒரு அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு குமார் பேசிஞன்:
'உன் சந்தேகம் நியாயமானதுதான். ஆஞல் உன் சந்தேகம் தெளிவதற்கு இன் னும் நான்கு நாட்களாவது பொறுத்தி ருக்க வேண்டும். அதன் பின்னர் உனக்கு எல்லாம் புரியும்.'
அதற்குமேல் குமாரை வற்புறுத்த வசந்தி விரும்பவில்லை.

பாத்திமா ஆரோக்கியசாமி
குமார் நல்லூரைச் சேர்ந்தவன். அவ னுடைய பெற்றேர்கள் நல்லூரிலேயே இருந்தனர். ஆனல் குமார் படிப்பு முடிந்த தும் வேலை தேடி பட்டணத்திற்கு வந்து விட்டான் இப்போது ஒர் அலுவலகத்தில் குமாஸ்தா வேலையில் ஈடுபட்டிருந்தான். அத்துடன் வசந்தியின் இதயத்திலும் இடம் பெற்று விட்டான். பட்டணத்தில் ஒரு தனி அறையை வாடகைக்கு எ டு த் து அங்கே இருந்து வந்தான்.
குமார் தனது அறைக்குத் திரும்பிய சிறிது நேரத்தில் அவனுடைய அலுவலக நண்பன் முத்து வந்து சேர்ந்தான்.
“ டேய் நான் இன்று வசந்தியைச் சந் தித்தேன். இன்று அவள் என்னிடம் ஏன் உங்கள் போக்கு மாறியிருக்கிறது என்று கூடக் கேட்டாள் 'ான்று பேச்சை ஆரம் பித்தான் குமார்.
'சரி இன்ருவது விஷயத்தைச் சொன் ஞயா அவளிடம்?" என்று ஆவலுடன் வின விஞன் முத்து.
'இல்லை, இல்லை. கடைசி நாள் வரை சொல்லமாட்டேன். எங்கள் நிகழ்ச்சிக்கு அவளுடைய தந்தை தானே தலைமை தாங் குகிருர் . அப்போது அவளும் வருவாள் தானே. அன்று இது ஒர் ஆச்சரியமான விஷயமாக அமையட்டும்'
‘'நீயும் உன்னுடைய விளையாட்டும். விளையாட்டு வினையாய்ப் போய் விடும் ,
கவனம் , '
'அப்படி ஒன்றும் நடக்காது. நீ பேசா மலிரு'
மறுநாள் மாலை ஆறு மணியிருக்கும். பொழுது போகாததால் குமாரைப் பார்த் துவிட்டுப் போக அவனது அறைக்குப்போ ஞள் வசந்தி, அறைக் கதவினருகே சென் றதும் உள்ளே ஒரு பெண் குரல் கேட்ட தால் திடுக்கிட்டு நின்ருள் அவள். அவளே அறியாமலே மேலே பேசப்படுவதை உற் றுக் கேட்டாள் அவள்.

Page 186
சந்தேகம்.
என்னைக் கைவிட்டு விடாதீர்கள், அத் தான். நான் உங்களைத்தான் நம்பியிருக் கின்றேன், பெண்குரல் அழுகையோடு பேசியது.
** என்னை யார் நம்பச் சொன்னது. "' நிச்சயமாக அது குமாரின் குரல்தான்.
" "யாரிடமோ உன் பெண்மையை பறி கொடுத்துவிட்டு இப்போது என்னைக் குற் றம் சாட்டுகிருய். '
அத்தான், நான் என்னுடைய வாழ்வுக் காகக் கே ட் க வி ல் லை. என்னுடைய வயிற்றில் வளரும் சிசுவுக்காகத்தான் மன் முடுகிறேன்."
இதற்கு மேல் வசந்தியினுல் கேட்டுக் கொண்டு இருக்க முடியவில்லை. எப்படி ஒரு அசம்பாவிதமும் நிகழாமல் வீடு வந்து சேர்ந்தாளோ அவளுக்கே தெரியாது. அன்று இரவு முழுக்க அவள் தூங்கவே யில்லே. குமாரின் மாறுபட்ட போக்குக்குக் காரணம் இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. இப்படி எத்தனை பெண்களை அவர் வஞ்சித்திருக்கிருரோ, தெரியாது. ஆனல் ஒரு விதத்தில் அவள் சந்தோஷப் பட்டாள், குமாரின் நயவஞ்சகச் செயல் களுக்கு ஆளாகாமல் இருந்தது குறித்து, எனவே அவள் இனி குமாரை மறந்து விடுவ தாகத் தீர்மானித்தாள்.
இரண்டு நாட்கள் கழிந்தன. அன்று ஜே. டீ. புரொடக்ஷன்ஸாரின் ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. அதற்கு வசந்தியின் தந்தை செல்வநாயகம் தான் தலைமை வகிப்பதற்கு அழைக்கப்பட்டிருந் தார். அவர் தனது மனைவியுடனும் வசந்தி யுடனும் நி க ழ் ச் சிக் கு வந்திருந்தார். நிகழ்ச்சி ஆரம்பமாகியது. சிறிது நேரத் திற்குப் பின் 'உலகே மாயம்’ என்னும் ஒரு நாடகம் நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டது. மு த லா ம் காட்சி ஆரம்பமாகியவுடன் மேடையில் குமார் தோன்றின்ை. வசந்தியால் தன் கண்க ஃளயே நம்ப முடியவில்லை. குமார் எப்படி இந்த நாடகத்தில் நடிக்க வந்தார் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருந்தாள்.
மூன்ரும் காட்சி ஆரம்பமாகியது. குமார் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கின் முன். அருகில் ஒரு பெண் அழு து கொண்டே நிற்கிருள். பார்ப்பதற்குக் கர்ப் பிணி போல் தோற்றமளிக்கிருள். அவள் கூறுகிருள். 'என்னைக் கைவிட்டு விடாதீர்

பாத்திமா ஆரோக்கியசாமி 167
கள் அத்தான். நான் உங்களைத் தான் நம்பி யிருக்கிறேன்' அதற்கு குமார் பதிலளிக்கி முன். 'என்னை யார் நம்பச் சொன்னது யாரிடமோ உன் பெண்மையைப் பறி கொடுத்துவிட்டு இப்போது என்னைக் குற் றம் சாட்டுகிருய்'
"அத் தான் நான் என்னுடைய வாழ் வுக்காகக் கேட்கவில்லை. எ ன் னு  ைட ய வயிற்றில் வளரும் சிசுவுக்காகத்தான் மன் ருடுகிறேன். '
வசந்திக்கு நிலைமை புரிய சிறிது நேர மெடுத்தது. இப்போதுதான் அவளுடைய சந்தேகங்களனைத்தும் உண்மையிலேயே தெளிவாகின. நாடக ஒத்திகைக்காகத் தான் குமார் நேரத்தோடு வீடு செல்கிருன் தான் நாடகத்தில் நடிப்பது முதலிலேயே தெரியக் கூடாது. மேடையில் அவனைக் கண்டு ஆச்சரியப்படவேண்டும் என்றே அவன் விரும்பிஞன். அத்துடன் வசந்தி அன்று குமாரின் அறைக்குச் சென்ற போது ஒத்திகை நடந்து கொண்டிருந்திருக்கின் றது. அதைத் தான் வசந்தி த ப் பா சு ப் புரிந்து கொண்டிருந்திருக்கிருள்.
நாடகம் முடிந்தது. குமார் தனது நண்பன் முத்துவுடன் மேடையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான். வசந்தி தன் த ந் தை மற்ற பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை ர சித் து க் கொண்டு அருகில் நின்ருள். குமார் அரு கில் வந்ததும் செல்வநாயகம் குமாரின் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே, 'சபாஷ், தம்பி, நீ இன்று அருமையாக நடித்தாய்." என்ருர், குமார் அப்போது, 'நன்றி ஐயா." என்று கூறி அருகிலிருந்த முத்துவைச் சுட்டிக் காட்டி, இவன்தான் எனது காதலியாக நடித்தவன். பெயர் முத்து. என்னுடன் வேலை பார்க்கிருன். ஒரு பெண்ணைப் போல குரலை மாற்றி, அரு மையாக நடித்து விட்டான் அல்லவா?" என்று கேட்டான். பெண் புத் தி பின் புத்தி' இ வ  ைர ப் போய் சந்தேகித்தோமே, என்று தனக்குள் நாணிக் கொண்டே வீடு திரும்பினுள் வசந்தி.-- --- ()

Page 187
SRast
Utts Sfest
A.
A. K. S.
JE WEL
UAl
Dial: 519
அன்பளிப்பு/
S.
&მჭრr:
39, K. K. S. வீதி, (B. C. C. GGgsò Giu) யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 284

Comptiments
LLL
& SONS
HOUSE
FFNA.
சின்னத்துரை சகோதரர்
கல்கி மாளிகை
கொழும்பு-/2.
தொலைபேசி: 35821

Page 188


Page 189
தாயும சேயும்
ஆனந்தமாகவும்
O O குடும் பத்
தம்பதிகள் தாம்
விரும்பிய கால
17೧rಶಿ೧76ಶಿ பிள்ளேகள் இல்லாதவ
குடும் பத் இலங்கை குடும்
23/5, ஹோ
கொ தொலைபேசி: 92354 - 94526
 

ஆரோக்கியமாகவும் வாழ வழிவகுப்பது
O O
தி ட் டம் விரும்பிய அளவில், ங்களில் மட்டுமே "ப் பெறலாம் 7ர்களுக்கும் உதவுகிறது
திட்டம்
I hI'LJ Jil Es ட்டன் பிளேஸ், ழம்பு-7.

Page 190
GT LD5
செயற்குழு
ds/rzŻL//ror/f:
Ol vostbol v/ross67/767/f:
தஃலவர்:
உபத&லவர்:
Gaful v6)/ror/f:
இளம் பொருளாளர்:
ஆசிரியர்:
பீடப்பிரதிநிதிகள்:
தி. சோமசுந்தரம் ( த. புவனேஸ்வரி (ப பொ. சடாட்சரம் ( கு. பவானி (இயற்ை இ. மயில்வாகனம்
க, சிராணி (சட்டம்) ஆ. சிவராசா (சமூ 3F. Lu J GLDGivauf (are, செ. ஈஸ்வரன் (கட்
ச. ஜெயலட்சுமி (ப

Fங்கம்
1971 . 72
பேராசிரியர் ஆ. சதாசிவம்
பேராசிரியர் ஆ. அ. ஹனவர்
ஆ. முகம்மது நகியா
ம. தில்லைநடேசன்
பொன். சத்தியநாதன்
இ. வே. வேதநாயகம்
சி. க. சண்முகராஜா
மருத்துவம்)
மருத்துவம்)
இயற்கை விஞ்ஞானம்)
க விஞ்ஞானம்)
saf Llb)
)
க விஞ்ஞானம்)
pக விஞ்ஞானம்)
டிடக்கலை)
மானிட பண்பியல்)

Page 191
சொற்பொழிவு:
தமிழர்
நாகரீக
ஆழி சூழ்ந்த இவ் வைய கத்திலே, தமிழ் அன்னைக்குப் புதல்வர்கள் பலருண்டு. பலர் அவள்தம் திருவயிறு வாய்த் தவர்கள். அவள் பெருமலே, அவள் இளமையில், அழகில், அமைதியில் ஈர்க்கப்பட்டுக் கவினுறு சுவை கண்டு அவ &ளத் தம் தாயாக ஏற்றுக் கொண்ட தவப்புதல்வர்கள் மிகச் சிலர். பெருதபொழு தும், பெற்ற மகனிலும் தாய் உவந்த சிறப்பு அவர்களுக்கு உண்டு. அந்த வரிசையில் நமது பேராசிரியர் கிளா ரன்ஸ் மலோனி அவர்களும் ஒருவர்.
மலோனி அவர்கள் தற் பொழுது நியூ யெர்சியைச் Or tiss Seton Hall 56) rat it லையில் மனிதவியல் - ஆசிய ஆராய்ச்சிகள் பிரிவில் துணைப் பேராசிரியராகக் யாற்றுகிருர், தென் இந்திய நாகரீகங்களின் தோற்றம் என்பதில் ஆராய்ச்சிகள் பல செய்து, பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் கலா நிதிப் பட்டம் பெற்றது இவ ரது சிறப்பு ஆகும்.
60 to
தென் ஆசிய மக்களைப்
பற்றி இவர் எழுதி யு ள்ள
மானிடவியல்
நூல் கூடிய
விரைவில் ( றது. இலங் கழகத்தின்
வைச் சேர்ந்த 55 pt அவர்க சிறியதொரு நூல் அமெரி களி ல் Ls அமையப் பே ரான எமக்கு
ளிக்கும் செய்
பொதுவாக ழர் களி ல் ( யோர், இன் "ருெக்கெற் வித கனவு நிை கிருர்கள். த ருக்கும் சிரம கண் கொண்டு ன த் துட ன் அவர்கள் த சமூகம் வாழு லொருவஞகிய லாம் எ ன் உணர்ந்திருந் சில "உடன்" காக அதனை ப கிருர்கள்.
அடிப்படையே
நிலைதான். ந மான விடயங் குப் புறம்பாயி றுக் கொள்ளு ஞான ரீதியி

த்தின்
9, JÎLID
வெளிவரவிருக்கி கைப் பல்கலைக் சமூகவியல் பிரி திரு. ஒபயசே' ளுக்கும் இதிற் பங்குண்டு. இந் க்கக் கலாசாலை "டப்புத்தகமாக, 1ாவது ஈழத்தவ தும் பெருமைய தியல்லவா?
5, ஈழத்துத் தமி பெரும்பான்மை ஈனும் - இந்த யுகத்திலும் ஒரு லயிலேயே வாழ் ம்ம்ைச் சூழ்ந்தி 1ங்களை அறிவுக் ,ெ தீர்க்க தரிச
பார்ப்பதற்கு }யங்குகிருர்கள். pம் போது அதி ப தானும் வாழ ற உண்மையை தும் கூட, ஒரு
இன்பங்களுக் மறக்க முயற்சிக் இதற்கெல்லாம் L1 <9}4 மக்குப் பிடித்த களை உண்மைக் ருப்பினும் ஏற் ரும் நாம் விஞ்
5) T60T osår 6o Lo
கனவு
களை, நமக்கு பிடித்தமில்லாத பொழுது ஏற்றுக் கொள்ள மறுக்கிருேம். பழம் பெருமை களிஞலும், L פ lb L 60) r "பிடிப்பு" களிஞலும் பாதிக் கப்படாத நடுநிலமைச் சிற் தனையாளர்கள் நம் மத்தியில் நிறையத் தோன்ற வேண் டும். பழைமை, ஒரு மொழி யின், இனத்தின் - அதன் கலாச்சாரத்தின் த னித் து வத்தைப் பேணுவதற்காக மதிக்கப்பட வே ண் டி ய ஒன்றேயன்றி, நமது முன் னேற்றத்தைத் தடுக்கும் சக் தியாகவோ மொழி வெறி
யின் வித்தாகவோ மாறி விடக் கூடாது. மொழிப் பற்று அன்பினுல் கணிவது,
மொழிவெறியோ அதிகாரத் தில் முடிவது. இந்தப் பின் னணி அமைத்துக் கொடுத் துள்ள சூழ்நிலையில்,
ம லே ரா னி அவர் க ள், கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங் க ஆதரவில், மருத்துவக் கல்லூரி உடல் கூ ற் றி ய ல் மண்டபத்திற் கடந்த யூலை மாதம் அழகு தமிழிலே, தமிழனைப்போ லவே நிகழ்த்திய சொற்பொ ழிவின் சாராம்சத்தை கீழே கொடுத்துள்ளோம்.
- ஆசிரியர்

Page 192
செவிமடுப்பு:
10னிடவியல் என்ருல் மனிதனைப் பற்றிய சரித்தி ரம்-அதாவது ஐம்பது லட்ச ஆயிர வருட வரலாறு ஆகும். இலங்கையில் மானிடவியற் கல்வி இல்லை. ஆணுல் புதை பொருள் ஆராய்ச்சி இருக்கி றது, மொழியியல் இருக்கி றது. தமிழர் நாகரீகத்தின் ஆரம்பத்தை அ றி நீ து கொள்ள வேண்டுமானுல் சில கேள்விகளுக்கு நாம் முதலில் விடை தெரிந்து கொண்டாக வேண்டும்.
நாகரீகம் என்றல் என்ன? 'கலாசாரம் வேறு, மொழி வேறு. அதாவது தமிழ்மொழி வேறு. தமிழ் நாகரிகம் வேறு." என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இதனை ஆராய்வோம்.
பட்டணங்கள்-அவற்றின் அமைப்புக்கள், நிர ந் த ர மான கட்டிடங்கள், கோயில் கள், பாடசாலைகள், எழுத் துக்கள் - இவற்றை உள்ள டக்கியதே நாகரீகம் ஆகும். இந்த நிலையில், இவை பற்றி இன்று நமக்கு இரு க் கும் அறிவை வைத்துக் கொண்டு பார்த்தால், "தமிழ் நாகரீகம் இருந்ததா முன்பு?" என்றெரு கேள்வி எழுகிறது. இது வேடிக்கைக்காக எழுப்பப் பட்ட கேள்வி அல்ல! இதற் குரிய பதிலைத் திட்டவட்ட மாக அறிய வேண்டுமாளுல் புதைபொருள் ஆராய் ச் சி தேவை.
இலங்கையிலே கடந்த சில ஆண்டுகளாக புதை பொருள் ஆராய்ச்சி யாழ்ப்பாணம், மன்னர், மாந்தை, அநுராத புரம், பொலநறுவை ஆகிய இடங்களிலும், தென்னிந்தி
யாவிலே கடந்த வருடங்களாகவ கொள்ளப் பட கின்றது. இத்த வாராய்ச்சிகளி ததை விட நமச் றும் தெரியாது l|AD [5f7g9)/TDW 9! ஆகிய சங் க பட்டினங்களைப்
வது நாகரீகத் 6 ஒன்றுஞ் சொல் புறநானூறு யுத் வற்றைக் குறித் னுாறு கலை, அகல றியும் மட்டுமே
கடந்த ஆண்டு ரிப் பட்டினத்ை டிஞர்கள். ஆகு யான புதையுண் காணப்படவில் கற்கள் மட்டுமே கடந்த ஆண்டு முகத்துவாரத்தி யைத் தோ ண் ஆணுல் அங்கும் ( இன்றும் கொறி சிறு கிராமம் உ
சங்ககாலத் துை
தமிழ் நாகரீ ளியில் தோன் குறித்து எனக்கு உண்டு. சிந்து ெ விட மொழி லாம். ஆணுல் அது தமிழ் ெ தமிழ் நாகரிகம் யாவுக்கு எப்ெ தது என்று என் லாது.
சரித்திரத்திற் கற்காலம் மூன் டையது. பழை தில் ம க் க ள் தமது உணவுக்க

5 ஐந்து பத்து பும் மேற் ட்டு வந்திருக் 1கைய அகழ் னுற் கிடைத் கு வேமுென்
ஏனெனில்
க ந f னு று இலக்கியங்கள் பற்றி-அதா தைப் பற்றி லுகிறதில்லை, நீதம் முதலிய தும், அகநா வாழ்க்கை பற் கூறுகின்றன.
டுகளில் காவே தைத் தோண் ரூல் உண்மை னட ந க ர ம் லை; சில செங் கிடைத்தன. தாமிர பரணி ல் கொற்கை r டி ஞ ர் க ள். இதே நிலையே. bகை என்ற ண்டு. இதுவே றமுகம்,
கம் சிந்துவெ றியதா? இது தச் சந்தேகம் வளியில் திரா இருந்திருக்க நிச்சயமாக மாழி அல்ல. தென்னிந்தி பாழுது வந் ல்ை கூற இய
கு முந் தி ய று பிரிவுகளையு ய கற்காலத் மிருகங்களைத்
ாக உபயோ
சி. கே. எஸ்.
கித்தார்கள், அடுத்தது மத் திய கற்காலம், கடைசிப் பிரிவு புதிய கற்காலம். புதிய கற்காலத்திலேதான் விவசா யம் சாகுபடி போன்றவை மக் களுக்குத் தெரியவந்தன. இத ஞல், மக்கள் கூட்டங் கூட்ட மாக ஒரிடத்திலே நிலையாகத் தங்கினர்கள். இதுவே கிராம வாழ்க்கை ஆரம்பமாவதற் கும் கிராமங்கள் தோன்றுவ த b கும் காரணமாயிற்று. கிராமம் நாளடைவில் பட்டி னமாகியிருக்கலாம்.
மைசூர் வட்டாரத்தில், ராமகிரி, பட்டப்பாளை, குர்க் கோ - முதலிய இடங்களில் செய்த அகழ்வாராய்ச்சிக ளின் ப ய ஞ க, S gr rr uo வாழ்க்கை இந்த இடங்களில் கி. மு. இரண்டாயிரம் வரை யில் ஆ ர ம் பித் த தாகக் கொள்ள இடமுண்டு. இதே காலத்திலேயே மக்கள் சாகு படி முறையையும் கால்நடை வளர்ப்பையும் ஆ ர ம் பித் திருக்க வேண்டும். மேலும், கி. மு. 2000 - 1400க்கும் இடையில் சோளம் முதலிய தானியங்கள் விதைக்கப் பட் டதாகவும் தெரிய வந்துள் ளது. திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற அகழ்வுகளின் போது ஐந்து ஏக்கர் பரப் பு ஸ் ள கிராமமொன்றும், ஆயர்பாடியில் அகழ்ந்தபொ ழுது கி.மு. ஆயிரத்து நானுT றில் கிராம வாழ்க்கை இருந் ததற்கான சா ன் று களும் கிடைத்தன. ஆஞல், கிராம வாழ்க்கை வேறு. நாகரிகம் வேறு.
நெற்பயிர்ச் செய்கை கி.மு. இரண்டாயிரம் வரை யி ல் வட இந்தியாவில் இருந்த

Page 193
தற்கு ஆதாரங்கள் உள்ளன, ஆனல், அது தென்னிந்தியா விற்கு எப்பொழுது வந்தது என்பது தெரியாது. நெல் வருகை சரித்திரத்தில் ஒரு முக்கிய திருப்பத்தையும் கால கட்டத்தையும் குறிக்கிறது ஏனெனில் நெல் வருகை மக் கள் வாழ்க்கையில் குறிப்பி டத் தக்க பல மாற்றங்களை ஏற் படுத் தி யி ரு க் க இட முண்டு. எனது கணக்குப்படி நெல் கி.மு. எழுநூறு வரை யில் தென்னகத்திற்கு வந்தி ருக்கலாம், ஏனெனில் கி மு. எழுநூற்றி நாற்பது அளவில் நெல் இருந்தது என்ற செய்தி கிடைத்திருக்கிறது. அதே சமயம், கிராம வாழ்க்கை கி.மு.ஆயிரம் வரையில் தென் னகத்திற்கு வந்திருக்கலாம் என்பது எனது ஊகம். அவ் வாருனல் கி. மு. ஆயிரத் திற்கு முன்பு தென்னகத்தில் நாகரீகம் கிடையாது என் றும் சிந்துவெளியில் மட்டுமே நாகரிகம் இருந்தது என்றும் ஒரு நிலை எழுகிறது. குஜ
ராத்துக்கு கி. மு. இரண்டா
யிரம் அளவில் நாகரீகம் பர விற்று என்று கொள்ள இட மிருக்கின்றது. ஆனல் அவர் கள் என்ன மொழி பேசிஞர் கள் ளன்பது நமக்குத் தெரி
Ամո Ֆl.
சங்க கால இலக்கியங்கள் 3ஆம் நூற்ருண்டை ஒட்டி எழுந்தவை. அதற்கு முன்பு நாகரீகம்இருந்ததா என்பதற் கான ஆ த ர பூர்வமான செய்திகள் இல்லை. இவற்றிற் கெல்லாம் ஒரே வழி தோண் டிப் பார்ப்பதே. மதுரையில் குறிப்பாகக் கோ விலுக்கு அண்மையில் கேணிக்குப் பக் கத்தில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தினுல் சிலவேளை பல உண்மைகள் வெளி யா க க் கூடும். கொற்கையில் நடந்த
அகழ்வுகளின் னம் கிடைக்க சில செங்கற்க டங்களும் கிடைத்தன.
டினம் கி. மு. தாகச் சொல்
இந்த கிர யின் ஆரம் சங்க காலத் இன்னெருகா தாக நான்
இதுவே இரும்
வட இந்தி 1000இல் இ தாக இன்று கின்றது. இது களுக்கு முன் 600 ஆக இரு காலஞ் செ மே லும் ப வெளியாகும் வரையறை கூடும்.
இரும்பு த எப்பொழுது பதை இன்று சான்றுகளை ை வட்டமாகக் இலங்கைக்கு மக்களுடன் யும். அநுராத ஆகிய இடங்க இரும்பு புழக் ருக்கிறது. அ இருந்திருக்க யாவில் f
எனப்படும் ெ இரும்பு உபே இதைப் பற். ஆராய்ச்சிதே
சங்க இலக் பட்டினங்கள் றன. அவை ! பத்திலே அ கக் கூறப்படுகி

போது பட்டி கவில்லை. ஆனல் களும் மட்பாண் நாணயங்களுமே காவிரிப்பூம் பட் 300ல் இருந்த லப்படுகிறது.
ாம வாழ்க்கை பகாலங்கட்கும் திற்குமிடையில் லம் இரு ந் த கருதுகிறேன். }புக் காலம் .
யாவில் கி. மு. நம்பு இரு ந் த
அறியக் கிடக் வே 10 வருடங்
ானதாக கி. மு.
iந்தது. ஆகவே ல் ல ச் செல்ல
ல உண்மைகள்
போது இந்த மாற்றமடையக்
மிழ் நாட்டுக்கு
வந்தது என்
கிடைத்துள்ள வைத்துத் திட்ட
கூறமுடியாது. இரும்பு சிங்கள வந்திருக்க முடி 5.புரம் மாந்தை ளில் கி மு.200ல் கத்தில் இருந்தி தற்கு முன்பும் முடியும் . இந்தி மெகாலெற்ஸ்' " பரிய கற்களில் யாகித்தார்கள். றி இ ன் னும்
ᎧᎼᎠ Ꭷ0Ꮧ .
கியங்களில் பல காணப்படுகின் நதிகளுக்குச் சமீ மைந்திருந்ததா ன்ெறன.
பாண்டியர்களின் நாகரிகம் தாமிரபரணியில் கொற்கை யிலிருந்து ஆரம்பமாகின்றது.
ஈழத்தில் பயிர்ச் செய்கை மாந்தையிலேதான் ஆரம்ப மாகியிருக்க வேண்டும்.
மு ன் னை ய ராஜ்யங்களில் இரண்டு தலைநகர்கள் இருந்தி ருக்கின்றன, ஒன்று துறை முகமாகவும், மற்றது உள் நாட்டிலும் இருந்தன.
பாண்டியருக்குக் கொற்கை யும் மதுரையும், சேரருக்குத் தொண்டியும் க ரு வூ ரு ம், சோழருக்குப் புகாரும் உறை யூரும், இலங்கைக்கு மாந்தை யும் அநுராதபுரமும், பல்லவர்
களு கி கு மாமல்லபுரமும் காஞ்சியும். இந்த இடங்க ளைத் தோண்டிப்பார்ப்பின் பழைய நாகரீகங்களைப்
பற்றி அறிந்து கொள்ள முடி պւb.
அசோ க மன்னனுக்குப் பின்பு வங்காளத்திலிருந்தும் நாகரிகம் இங்கே பரவியது. அந்தக் காலத்திலே தனித்து வமான தனிநாகரிகம் இருக்க வில்லை. யாவும் ஒன்றிலிருந்து ஒன்று எழுந்தவையே.
நாகரிகம் மத்திய கிழக்காசி யாவிலிருந்து பஞ்சாப் ஊடாக குஜராத்திற்கும் கங்கைக்கும் பரவி அங்கிருந்து தென்னிந் தியாவிற்கும் இலங்கைக்கும் பரவிற்று எனக் கொ ள் ள இடமுண்டு.
சில வரலாற்று நூல்கள், தமிழ் நாகரிகம் தென்னிந்தி யாவிலே தாணுகவே தோன்றி வளர்ந்த ஒன்று என்றும் அதற்கு முன்னேடி எதுவும் கிடையாது என்றும் கூறுகின் றன. அது தப்பு, ஏனெனில் தமிழ் எழுத்துக்கள் வட இந் தியாவிலிருந்து உருவம் பெற்

Page 194
றவை. அவை தனி மொழி ஒன்றுக்குச் சொந்தமானவை அல்ல. அவை தென் ஆசிய எழுத்துக்கள். எழுத்துக்கள் குஜராத்திலிருந்து கடல் வழி யாக ஈழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் ப ர வி யி ரு க் க ஏதுண்டு. இ ல ங்  ைக யி லே எழுத்துக்கள் வடக்கிலிருந்து தெற்குக்குப் பரவின, மிகப் பழைய கடற்பட்டினங்கள் இந்தியாவின் தெ ன் க ரை யோரத்திலும் ஈழத்தின் வட பகுதியிலும் இருந்ததும், குஜ ராத்திலிருந்து வியாபாரிகள் முத்து வாங்குவதற்காக ஈழத் தின் வடகரைக்கு வந்து சென் றதும் இங்கே கூறக்கூடிய சான்றுகளாகும்.
பாண்டியர் தென்னிந்தியா விலே தமிழ் நாட்டின் தென் பகுதியை ஆண்டனர். அவர் களுடைய வ ர லா ற் றிலே பழைய மதுரை, கபாடபுரம் என்ற இரண்டு இ ட ங் க ள் காணப்படுகின்றன, இவை சங்க இ லக் கி யங் களி ல் காணப்படவில்லை. இ  ைவ இருந்ததாகக் கூ ற ப் படு ம் இடங்களில் அகழ்ந்து பார்க்க வேண்டும். கடல் கொண்ட தால் இன்று இவற்றைப் பற் றிய சுவடுகள் அழிந்து போயி ருந்தாலும் வியப்பதற்கில்லை. அகழ்வாராய்ச்சிச் சா ன் று கள் இல்லாதிருப்பினும் இவ் விரண்டு நகர்களும் இருந்தி
ருக்கலாம் என நான் நினைக்
கின்றேன். ஏனெனில் சிங்கள இலக்கியமான மகாவம்சத்தி லும், சமஸ்கிருத இலக்கியங் களிலும் இவற்றைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கின் றன.
கிரேக்க இலக்கியங்களும் வேறு பட்டினங்களைப் பற்றிக் கூறுகின்றன. தாலமியினதும் வேறுபல கிரேக்க ஆசிரியர்க
ளினதும் கூற்றுட் களும் பட்டினங் திருக்கின்றன. ( யாவில் 2 மா ந வியாபார ஸ்தல Ti 5(Q51b (city) d5(alth (town) ad 58 ஊர்களும் தாலமி கூறுகி முடா என்ற ப பற்றித் தா ல
கிரேக்க ஆசிரிய பிடும்போது $, "r gח נr Lח u (נ6 greatest empor in India) 6TG வைகைக் கழிமு றைய இராமே6 சமீபமாக) அச கள் செய்யின் வைப் பற்றிய
கள் விளங்கக்கூ
எட்டாம் பத் காம் நூ ற் ரு சேர்ந்த சீன அ &5ë gfntar 687 në g; பேட்டை என் அகப்பட்டிருக்கி ரிப்பூம்பட்டினத் கட் டி ட ங் க
என்று சங்க இ
கூறுகின்றன. ஆ  ைற த் தோலி உறுதிப்படுத்த சீன அரேபிய நாகரிகங்கள் தென தெளிவா கிறது.
முதல் மூன்று ளில் உண்மையா இருந்தது என் லாம். ஏனெனி களும் ராச்சியங் ரமான கட்டிட துக்கள் இருந்த கான செய்திக ஆணுல் கோயில்
தனவா என்ப

படி 100 ஊர் களுமே இருந் தென் னிந் தி கர் க ஞ ம் 6 ங்களும் 2 நக 2 பட்டணங் ள் நாட்டிலே இருந்ததாக ன்றர். பெரி பட்டினத்தைப் மி யும் மற்ற ர்களும் குறிப் மிகப் பெரிய g5 6 lb (The ium of trade *கின்ற ன ர். கத்தில் (இன் ஸ்வரத்துக்குச் ாழ்வாராய்ச்சி பெரிமுடா சில உண்மை
திம்.
தாம் பதினுன் ண் டு களை ச் ரேபிய பாரசீ ஸ் முத்துப் எனுமிடத்தில் ன்றன. காவி தில் மாடிக் ள் இருந்தன இலக்கியங்கள் ஆணுல் இவற் ண்டிப்பார்த்து வே ண் டு ம்.
ஐரோப்பிய
எப்படியான ”க அறியமுடி
நூற்ருண்டுக *ன நாகரிகம் று சொல்ல ñ) 4 u fT LF fT&an) களும் நிரந்த ங்கள் எழுத் ன என்பதற் ஸ் உள்ளன. )களும் இருந் து ஐயப்பா
டான ஒன்று. திருச்செந்தூர் ஆ ல ய ம் இருந்திருக்கலாம் இராச்சியம் இல்லாதவிடத் தில் நாகரிகம் இல்லை எனக் கூறலாம். உ தா ர ண மா க ஆபிரிக்காவில் ராச்சியங்கள் இல்லை. அதனுல் நாகரிகமும் இல்லை.
அடுத்ததாகத் தமிழ் நாக ரிகம் எங்கிருந்து வந்தது? என்ற கேள்விபிறக்கின்றது? அது மத்திய கிழக்காசியாவி லிருந்து வந்ததா? அல்லது தானுக த மி ழ க த் தி லே தோன்றி வளர்ந்த ஒன்ற?
ஈழத்து ர |ா ஜா க் க ஞ ம் எழுத்துக்களும் கலைகளும் இந் தியாவில் மேற்குப்பக்கத்தில் இருந்து குஜ ரா த், சிந்து ஆகிய இடங்களிலிருந்து வந் தன. விஜயன் டாண்டிய அர சியை மணமுடிக்க பாண்டிய நாட்டிற்கு அதாவது தென் மதுரைக்குக் கப்பலில் சென் முன் என கின்றது. ஆகவே இம்மதுரை கடலோரத்தில் இருந்திருக்க
வேண்டும். ܗܝ
மகா வம்சம் கூறு
ஆகவே எழுத்து, ராச்சியம் நாகரிகம் தமிழ் நாட்டின் தென் ஒரத்தில்தான் முதலில் பரவிப் பின்பே தமிழ் நாட் டின் வடபகுதிக்குப் பரவியி ருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். இலங்கை யின் நாகரிகம் தம்பபண்ணை யில் முதலில் ஆரம்பித்து பின் அங்கிருந்து உள்நாட்டிற்கும் அநுராதபுரத்திற்கும் பரவியி ருக்க வேண்டும். ஈழத்திலே தம்பபண்ணை, தென்னகத் திலே தாமிரபரணி நாகரிகம் பரவியமுதலிடங்களின் பெயர் களில் கூட எவ்வளவு ஒற் றுமை! விவசாயத்துடனேயே திராவிட நாகரிகம் தென்ன கத்துக்கு வந்திருக்க வேண் டும்.

Page 195
ஆகவே தமிழர் தமிழ் நாட்
தென் ஆசிய
டுக்கு எப்பொழுது வந்தனர் நாகரிகம் பே என்பதைத் திட்டவட்டமா அடங்கியிருந் கக் கூறமுடியாது. இந்திய மத்திய கி நாகரிகம் பொது வா க த் சிந்துவெளி
31 - 3 in 71
Uலியற் க ல் வி யை ப் பாடத்திட்டத்திலே புகுத்த வேண்டும் என்ற அபிப்பிரா யம் இன்று எழுந்துள்ளது. 96pGuurt Luq-Sex Education ч, Sex instruction se srcarp அபிப்பிராய பேதங்கள் எழுந் Gir GMT 607. Sex Education GT6ör பது வாய் மொழியாகக் கேட் டுப் புரியக் கூடியதல்ல. அது செயன் முறையில் உணரப் படவேண்டிய ஒன்று என் lb, Sex instruction LD 'GGLD
பாடசாலையில் போதிக்கக் கூடியது என்றும், அவ்வாரு
3a are பல்கலைக் கழ திரு. திசேரா கத்திற்கும் சட்டக்கல்லூ ளல் ஆகியே ரிக் கு மி டை யே ஆன் டு ஆதரித்தும் தோறும் நடைபெறும் தமிழ் விவாதக்குழு விவாதம் சட்டக் கல்லூரி திரு. மனேக மண்டபத்தில் திரு. அம்பிகை திரு. லோ.ே பாகன் தலைமையில் ஆவணி பெரி. சுந்தர மாதம் 31ம் திகதி 11 மணிய யோர் தலைப் ளவில் நடைபெற்றது. தேர்ந் வாதிட ஆ தெடுக்கப்பட்ட தலைப்பின் பாலியற் கல்வி காரணமாகவோ என்னவோ ளிலே எத்த மாணவர்கள் எதிர்பார்த்த ளி லே G படி அதிகமாகக் குழுமியிருற் போதிக்கப்ப தனர். முறையாகப்
தான், இள "பாலியற் சல்வி பாட ஒழுக்கம் தன் சாலைகளிலே போ தி க் க ப் பாதையில் ெ
படவேண்டும் இதுவே தலைப்பு திரு. அம்பிகைபாகனின் தலை மையுரையுடன் விவாதம் ஆரம்பமாகியது. பல்கலைக் கழக விவாதக் குழுவினரான திரு. ஞாஞகரன் (தலைவர்)
கா லத் தை கொள்வதை முடியும் என் யங்கள் குறிப் சம்பந்தமான சம்பாஷணைக்

நாகரிகம்; தமிழ் ான்றவை அதில்
தன.
p க் கி லி ரு ந் து நாகரிகம் வந்தி
ஆகவே தமிழ் மக்கள் மட்டுமல்ல மற்றவர் களுக்கும் இந்த நாகரிகத்தில் பங்குண்டு.
ருக்கலாம்.
விவாதம்
ஞல் அவற்றினுடைய கட்டுக் கோப்பும் உள்ளம்சங்களும் எவ்வகையில் இருக்க வேண் டும் என்பது பற்றிய தெளி வில்லாத பல கருத்துக்களும், பாரம்பரியமான கலாசாரத் திற்கும் புதுமைப் போக்கிற் கும் இடையே முரண்பாடுக ளும் நிறைந்த கால கட்டத் தில் 31-8-71 அன்று சட்டக் கல்லூரி மண்டபத்திலே சட் டமும் நமது சங்க வாதக்குழு வும் மோதிக் கொண்டன,
அ த ன் விமர்சனத்தை
இங்கே தருகிருேம்,
, திருவருள்வள் rrrf 5&viso)L சட்டக்கல்லூரி வைச் சேர்ந்த ரன் (தலைவர்), கஸ்வரன், திரு. "லிங்கம் ஆகி பை எதிர்த்தும் ரம் பித் த னர். unt L-F T by as னையோ நாடுக வெற்றிகரமாகப் டுவது போன்று, போதிப்பதளுல் ம் உள்ளங்கள் பறித் தவருன சன்று தம் எதிர் ப் பாழாக்கிக் த் தடைசெய்ய றும், சில விட பாகப் பாலியல்
விடயங்கள் கும் கலந்துரை
யாடலுக்கும் அரு கதையற் றவை என்ற, தமிழ்மக்களி டையே வேரூன்றித் திளைத்த நம்பிக்கை நீங்கி அதனுல் மட் டுமே பாலியற் கல்வியிஞல் நாம் பயன்பெற முடியும் என் றும் தம் விவாதத்தை எடுத்
துரைத்தார் ஞானகரன். அதற்குப் ப தி லிறு த் து ச ட் ட க் கு மு த் தலைவர்
திரு. மனுேகரன் பேசுகை யில் பாலியற் கல்வியைப் untur frðvu (av L ( iš So த மிழ் ச் சமுதாயத்திலே இளம் பெண்களையும் ஆடவர் களையும் சிறுபராயத்திலேயே குலைத்துவிட என்று வற்பு று த் தி ன ர். தமிழ்ப்பண்பையும் கலாச்சா ரத்தையும் நிலைதவறச் செய் யக் கூ டி ய வாதிகளுடைய வாதத்தை, விவாதம் செய்வ துடன் மட்டும் நிறுத்திவிட
வே ண் டாம்

Page 196
வேண்டும் என்றும் அவர் இதற்குப் ப;
வேண்டுகோள் விடுத்தார். டக்குழுவின் மூ
e. ... s. சாளர் செரி. பலகலைக கழக மருததுவ எடுத்துக் கொள் மாணவரான இரண்டாவது விட்டுவிட்டு பேச்சாளர் மாணவர் களி விவாதக் குழு டையே நிலவும் சில தவருண எதையோ பேக அபிப்பிராயங்களே அவர் றும் மாணவர்க
களை, ஒழுக்கங் குன்றியிருக் டிம் சென்று ப கும் இந்த நிலைக்கு இட்டுச் ‘யைப் பற்றிய செல்கின்றன என்றும், தாம் களைத் தீர்த்து ஒரு மருத்துவ மாணவன் வேண்டிய நிலை என்ற முறையில் சில எடுத் யிலே பாலியற் துக் காட்டுக்களைக் காண்பித்து கப்பட்டால் நி அவற்றை நீக்குவதற்கு பாலி படும் என்றும் யற் கல்வி பாடசாலைகளிலே முடியும்? என் போதிக்கப்பட வேண்டும் வைததாா என்றும் வாதிட்டார். சட்ட விவாதத்தின விவாதக் குழுவின் இரண் 47 ன் கீ!--மி ட வ து 鸞 தலேவரின் யுடனதான அ என்று கூறலா வசப்பட்டதலை மாணவர்களை
- முன வழியில்
பேசுகையில் பாலியற் கல்வி பாடசாலையிலே போதிக்கப் படுமானல் மாணவர்`கள் அவற்றைச் செயன்முறை யிலே பரீட்சித்துப் பார்க்க "U" "4 முற்படுவார்களே என்று அங் லககூடிய ஒரு
கலாய்த்த து ம ன் றி, பஸ் கொண்டு விவா தரிப்பு நிலை யங் களி லே 'விதி முற் "காதல்" என்ற போர்வை என்றும் அழிவு யில் ஒரு ஆணும் பெண்ணும் 'ே, இம்முயற்
நெருக்கமாக நடந்து கொண் விட்டுவிடவேண் டதைச் சிறு பையன்கள் சுட் இடித்துரைத்த
கலைக்கழக 6 * தலைவர் இதற்கு லடி கொடுக்க ( தாகவும் இந்த நிலையிலே -.. ) பாலியற் கல்வியைப் பாட
சாலைகளிலே போதிக்கவும் *
டிக்காட்டிச் சிரித்துக் கொண் டதைத் தான் காண நேரிட்ட
வாரம் காணப்
RA *** வுரையைப் " ெ ஆரம்பித்துவிட்டால் நிலைமை ஐ.ஆரம்பித் து 6ை என்னவாகுமோ எனத தாம ஞானகர்னது அஞ்சுவதாகவும் கூறினர். வாதமே சந்
பல் கலை க் க ழ க த் தை ச் மின்றி வலிமை சேர்ந்த திரு. திருவருள்வள் யது என்றவாறு ளல் பேசும்போது இவ்வகை 西座 · தமிழ்ப யர்ன் அச்சம் - ஆதார மற்ற பாலியல் விட தென, மேலைநாடுகளில் சில றிப் பேசவே கூட வற்றைக்குறிப்பிட்டு அங்கு ரையாடக்கூட பாலியற் கல்வி பாடசாலைக கீழ்த் தரமான ளில் கற்பிக்கப்படுவதல்ை பாங்கு நிலை ( ஒழுக்கக் கேடுகள் "குறைந்தி வரை ஒழுக்க ருப்பதாக புள்ளிவிபர ஆதா சீர்ப்படுத்துவது ரங்களுன் வ்ர்தி:ேசீர். மாகும் என்று

திலிறுத்த சட் ன்ருவது ச்ே சுந்தரலிங்கம் iண்ட தலைப்பை பல்கலைக்கழக வினர் வேறு கிமுர்கள் என் ள் பெற்றேரி ாலியற் கல்வி நம் சந்தேகங் க் கொள்ள ) tunt LF T&v கல்வி போதிக் ச்சயமாக ஏற் அது எப்படி றும் கேட்டு
: மிகச்சு 60 வய சடடக கலலூ r முடிவுரை ஆரம்பமானது ம். உணர்ச்சி வர் இள ம் மிகவும் தவ
இட்டுச் செல்
தலைப்பைக் திக்க இனிமே படவேண்டும் க்கு வழிகோ சியைக் கை ாடும் என்றும் போது, 'பல் விவாதக்குழுத் } என்ன பதி முடியும்' என்ற
சபையில் ஆர் է 1ւ -ւ -ֆ]. (Մ)ւգ -
வற்றிகரமாக வத்த திரு. பேச்சு, தம்” தேகத்துக்கிட பொருந்தி அமைந்திருந் 0க்களிடையே
.யத்தைப் பற் 1:
-ாது கவந்து ாது, எ ன் ற எ ண், ன ப்
பெற்றிருக்கும்
க் சுேட்டைச்
மிகச் சிரம ம் அதுமட்டு
கப் போதிக்கப்பட
"இருக்கமாட்டாது
மன்றி இந்த மனப்ப் சங்கு உள் ளவர்க்கு எடுத்துக்காட்டாக விளங்கும் எதிர்க்கட்சித்தலை வரைப் போன்றவர்கள் இத் தமிழ்ச் சமூகத்தினின்று வில கியபின்பு தான் இல்லை அவர் கள் விலக் கப்பட்ட பின்பு தான் பாலியற் கல்வியின் முழுப்பயனையும்.நம் சமூகம் பெற முடியும், இதுபோன்ற விடயங்களில் பரந்த நோக்கு மக்களிடையே தோ ன் ற வேண்டும்; த வருன அபிப்பி ராயங்கள் இளம் உள்ளங்களி னின்று விலகி, வெறும் உட லுணர்ச்சிக்காகவே  ைக  ைய
வாழ்க் அர்ப்பணித்துக் கொள்கிருேம் என்ற நிலை நீங்கி, கணவனுக்கும் மனை விக் கு மி டை யே நான்கு சுவர்க்கு மத்தியிலே மட்டும் நிகழவேண்டிய வாழ்க்கை யின் அடிப்படையான புனித இரகசியம் பாடசாலைகளிலே மாணவர்களுக்கு முறையா வேண்
இந்த
டும் என்றும் கூறினர்.
நிலை அடைந்தால் எதிர்க்கட்
சியின் இரண்டாவது பேச்சா ளர் கூறியது போன்று பஸ் தரிப்பு நிலையங்களிலே கண் கொள்ளாக் காட்சிகள் காண வேண்டிய நிலை ஏற்படாதென் றும் சிறுவர் சுட்டிக் காட்டிச் சிரிப் ப த ந் கும் எதுவுமே எனறும ܝ ܀ * கூறி எதிர்க் கட்சியினரைத் திணறன்வத்ததுமன்றி சபை யினரின் ஏகோபித்த ஆதர
வையும் கரகோஷத்தையும்
பெற்றுக்கொண்டார்.
தலைவரின் நன்றியுரையு டன் விவாதம் நிறைவுபெற்
Ո951,
- சாந்தினி
25-10-71
சொற்பொழிவு ‘விஞ்ஞானமும் விஞ்ஞான
སྡེ༽ Lif
(ypth' (Science and science) "என்னும் பொருளில் சுவாமி
சந்தானந்தா அவர்கள்.

Page 197
எமது 16-வது காடகம்
II LIII
seFlypé
இடம்: சரசுவ
/uh Asarcir: 19 - 2
பிரதம விருந்தினர்; துணைே
2th Assror: 20 - 3
பிரதம விருந்தினர்; திரு H
பங்குபற்றியோர்
சோமசுந்தரம்
சாவித்திரி அரியரட்னம்
ஜயந்தி யோசேப்பு
இரத்தினராஜன்
சிவம்
ஞானுகரன்
சாந்தகுமார்
செல்வராசா
பொன். சத்தியநாதன்
sens, a-morum-do, GB/umeirows:
பொன். சத்தியநாதன்
அரங்க அமைப்பு: ஞானேஸ்வரன், தேவாகாதன்

GOI it
5 நாடகம்
தி மண்டபம், பம்பலப்பிட்டி,
2 - 72
வேந்தர் திரு பி. ஏ. அபயவிக்கிரம அவர்கள்
(இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு)
} - ሽዷ
. W* தம்பையா Q. C. அவர்கள்
(ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி)
பாத்திரங்கள்
- பென்சனியர் முருகேசு
b - சரசுவதி
- பார்வதி
- f5 TT SVAT
- சகீது
- பாஸ்கரன்
- &rari Gopluuiunt
- காசிகாதர்
- இராமசாமி
தயாரிப்பு: ம. தில்லைநடேசன்
chrsoren: உமைபாலன், நேமிநாதன் சாந்தினி லோகிதராசா
và

Page 198
6rsor உருவெடு 62?67ჩ/ჩt 7(?
நம்புகி4ே
L267ტ கள். இ எனப் ெ
ஆண் வந்த தமிழ்ச்
/u/drl/G5 Gorsör.
நான் රෑණීඩා උණු/1 தான். ஆ மில்லாத
நீண்ட '
நான் தொட்டுச் நாடகத்தி
கன்ன கள் Оило அதில் ந தின் உட் கொண்டு காணிக்ை

உள்ளத்தில் கருத்தரித்து, சிசு வாய் த்து, இன்று பிரசவ வேதனேயின் சீல நிற்கும் என் முதல் மழலே உங்க ச்சலுக்கும் ஆசிக்கும் இலக்காகும் என りの7。
2ளக்கு பிறந்தபின் பெயர் வைப்பார் ப்கோ, தோன்றுமுன்னமே "பயணம்' /யர் குட்டிவிட்டேன்.
"டுகள் பலவாய் நெஞ்சை உறுத்தி சிறு கருத்தை மையமாகக் கொண்டு,
சங்கம் எனக் களித்த தருணத்தைப் த்தி இந்நாடகத்தை உருவாக்கியுள்
" நாடகாசிரியனுமல்ல, நழகனுமல்ல ‘வமுள்ள ஒரு மாணவன் - அவ்வளவு யினும், முழுக்க முழுக்க மேடையனுபவ
மாணவரின் துணேகொண்டு, இந்த பயணத்தில்” முதல் அடி எடுக்கிறேன்.
கொண்ட கருத்து உங்கள் நெஞ்சைத்
சிந்திக்க வைக்குமானல், அது ஒன்றே தின் வெற்றி என்பேன்.
ரி முயற்சி என்பதனல், சிறு சிறு பிழை ந பெரு மழையெனப் பொழிந்தால், னேந்து எங்களே வையாமல், நாடகத் கருத்தை உரைத்துப் பார்க்க வேண்டிக் , தமிழ்கூறும் நல்லுலகின் சிந்தைக்கு கயாய் சமர்ப்பிக்கிறேன்
பொன். சத்தியாகாதன்

Page 199
சிலர் அதிகம் பேசுவார்கள்; செயன் வதோ அரிது. இதேபோன்று கம்பெனி லாம். ஆனல், நாம் வேறுபட்டவர்கள். ம எதிர்பார்த்து வழிமேல் விழிபதித்துக் கம்பெனிகளில் ஒன்றல்ல எமது.
நாடிச் செல்லும் விருப்பமுள்ளவர் நாம்.
உலகத் அவற்றை கடந்த மு தர்களாக முயற்சிகள் குறிப்பிடே இடம் அது
பொது இறக்குமதி ஏற்றுமதியாளர் H. The action-oriented trading company
ஒசாகா தலேமை நிக்லயம்:
டோக்கியோ த&லமை நிஆலயம்:
இலங்கையில்:
| கோபாமில் ஏஜன்சீஸ்
54/3, யோர்க் வீதி, 3வது மாடி, அவுஸ்திரேலிய கட்டிடம், கொழும்பு-1.

முறையில் செய் களும் இருக்க
க்கள் வருவதை
காத்திருக்கின்ற
தில் என்னென்ன பொருள்கள் உண்டோ வாங்குவதோடு விற்பதோடு மட்டுமல்ல கடல் லப்பொருளுற்பத்தித் திட்டங்களிலும் பாகஸ் - பங்காளிகளாக இருக்கிருேம். கூட்டு மூவழி வர்த்தகம், நீண்டகால நிதியுதவி. வண்டியது நீங்கள்! செயன்முறை இருக்கும் வானுல், அங்கே நிஷோ-இவாய் இருக்கும்.
கள்:-
NISSHO-IWA CO.,LTD.
இமாபாக்ஷி ஹிக் ஆஷி-கு
நிஹொன்பாஷி தஒ-கு
Territorial Agents in Ceylon:
COBAMI, A GEN CIES,
543, York Street,
3rd Floor, Australian Bldg., Colombo-1.
===

Page 200
செயலாளர் செப்புகிரு
பேணு தாளில் படும் லே கஞ ஆகிப் போன எண் தாம் கண் முன்வந்து கான் செயலாளனுய் அ காலகட்டத்திலே கல்லை காலு காரியமாகிலும் ஆ இல்லை. ஏன் முடியாமல்
eta *
உங்கள் மொழி சொல்லு தங்கள் உதவி வேண்டு *பட்டதாரி ஆகப் போ எங்கே எமக்கு நேரம்? ஈரமே இல்லாமல் விரட் இன்னும் சொல்லவோ எனினும் தோளொடு ே தேனினும் இனிய கண் கெளனம் என்று அவர் மெளனம் வங்து கன்றிய
ه=
என் காலம் கான்கு திங் விவாதங்கள் இரண்டு ெ இரண்டு நாடகம் ஒன்று கடாத்த முடிந்தமை எம
ara عه
முடிவாய் தமிழ்மாணவ கல்லது செய்ய எண்ணி

Gi:
u?om uSG36)
ாணங்கள் நிற்கின்றன. மர்ந்த இந்தக் ா என்று ஆற்றினேனு என்றல்
போயிற்று?
مه
தும் சங்கத்திற்கு ம், என்றபோது கிருேம் காங்கள்
கெஞ்சிலே டினர் சிலர். பலப்பல உண்டு தாள் நின்று உதவிய பர் சிலருக்கு
சொன்னுலும் பாய் நிற்கும்.
பகளாகியபோதும் பெரியோர் உரைகள்
ஆகுதல் க்குத் திருப்தியே
tr
சமுதாயமே ஒன்று நீர் வந்திடுவீர்!

Page 201
..?岛哈994994闽响围e司 qi besigi? En undessDre sĩ LIGĒ ugi · Ims@goloogi, , ) umgogogqo o pogoso (po urī£T£ "TT-urio @imporneos@fire no tę912 rmon -a qi isessiglo y o ffigo, ,qif@ış95 4ırısı use to o ușos@@sre 1ąo uo ugaqio , !
 

, , 1ęs uos@smtā iegs no o
o uri o Qofte umgqosố qi@ o sự ugí o qīIÊo o urm... qernsQs6Oriņgludo o si urte Øoloog) soo 1991, orm un o @ # Notrā uolo) u os@sooo @ lion, ,
60-aisiņi un o mgogoas apso qi@rīg) so ugi so solo, ,

Page 202
—阀_《松》、„_ (__j制-------}→
●●- - , , qiliqi og gigyeɛ mm tog ugi &Ogi (g) ~709 urmg)(3$ bilir. O , , om u---nih---in sia; H. 1/s 1,9 mụcco se ? ~7 wo ɖo ŋmga u oqa u No 1991 e 0,9 JT7 -7 (co o ryw: , ,anggo smrtse) affroșđī) ujo o gre puri isoissolo , ,
 
 

%ダ
sự sụegj q, ? £ © ® ļo-shqi qi@p įro„ego doro 6)--Tov • • ? : un o Inse G'-, go o-igi se un siaseɛ sɛ wɔ șo-i ugi@@> 1,9 ugonos ngo -o quo osno (97aŒes) ugi , , 载。
國躍C)éD亡之| | | || 6(s)

Page 203
சந்திப்பு:
GLIJ TËfullL6T fa) D6JOf G5JňIJ
(3ʼl v L.’L.
GGEE S EEAq qALALeLeAAALLS S SS AA S AAAAAALAAAAAAAqqq AAASA A S SSALLLSASqqSLLSSLLSSSSqqSSq Lq qL0LqLqASqqSLLSS qqqqq
Ce கெளரவ உடற்கூற்றியல் பேராசிரியர் (Prof. Emeritus of Anatomy)
> 1ry F.R.C. S. பரீட்சகராகத் தெரிவு செய்
யப்பட்ட முதல் இலங்கையர்
O தமிழ் கலாசாலை இயக்கத்தின் தாபகர்
களில் ஒருவர்
 

6
a :
“II”
மருத்துவக்கல்லூரி வரலாறு
மாணவப் பருவம்
தன்மொழிக் கல்வி
பல்கலைக்கழகம் ஒன்றயிற்று
சில கருத்துக்கள்
ஓங்கு புகழ் எய்திப் பின்னர் அமைதியு டன் வாழ்பவர் பேராசிரியர் பி. கே. சண் முகம் அவர்கள். அவரைப் பேட்டி கண்டு கட்டுரை ஒன்று எழுத வேண்டுமென்று பணித்தார் இளந்தென்றல் ஆசிரியர்.பேட் டிக்காக ஆசிரியரும் நானும் பேராசிரிய ரின் இல்லத்திற்குச் சென்ருேம். f
குறித்த நேரத்தில் தம் வரவேற்பு அறையில் காத்திருந்த எழுபது வயதைத் தாண்டிய பேராசிரியரிடம் வயதின் முதிர்ச் சியும் அறிவிஞ ல் ஏற்பட்ட பண்பின் பிரதிபலிப்பும் ஒருங்கே திகழ்வதைக் காண முடிந்தது. பேச்சைத் தொடங்குவதற். காக 'மருத்துவக் கல்லூரியின் பழைய சரித்திரம்' பற்றிக் கூறமுடியுமா?" என் றேன்.
133-ம் பக்கம் பார்க்க

Page 204
(Z/- = 1/6II) ÎNos@simfo)####siglo sosiosios įon IIsqof! (og
 

(rege o-vorovo ) • Orsaye) • •eo
(n lou@@go w đì) o)ự fe ayegi o úri o o(q. 102 woo@su osófi) •)Au o au drets·%=
(qi golo@so « «»ąorno) gas uneri · @(q1 issa 404@su seos@rnĠ) qi de-a u-1 · · uri e
●usosiyuoofi) o waoqoố
(ụrnƯso) uốou do fi) aegs £ • • • 3
(groogo n-a) 49 p-1 soos degąog o ga
(q-Tzie) quaeso uns qegn wi ·
(qirstoo@on) y rease los o fishi : o
(gegggg)g』g遺もg」もD g(ụroago) urngas o qī qiofs) - so (aerne logor, -guo lon) yn fho-igernão e) - o(4; uou dormee) lạso wojring sự £ o se uno (q-i-Tae)ựggo u úto • •(y lov uso), rie,qi us & \quo fmlgforeg)o reg)念
:quadro fogyo) 97-13 “1įose įrtoriqīly.: noorts sēąNogi-ig 'pwyrofīņ@@

Page 205


Page 206
ué sub a saeth பற்தி “பிழை
au Gvi 1வது சமுதாயத்தில் தி யாமல், ஏதாவ
7 அடிக் இலக்கம் வேங்கடபதி குறிப்பு 46 630 - I
郡& இலக்கம் 74 The Kingdc
35 இடது 1வது Geguiu Lumrég 66ör
ஆண்!ை
வலது 3வது தன்னலமற்ற நே
மக்களுக்காக சே பலர் முன் வர
58 இடது 2வது முக்கியமாக நீரிழி உள்ள குடும்பத் ஒரு பெண்ணிற்கு
செய்து
罩24 இடது 1வது புழுக்கள் குடலி பெருகும் நிலையில் anth (Intestina O.
Wits Rest Compimen tak
of
DOLLAR

திருத்தம்
ருப்தியடை சமுதாயத்தில் திருப்தியடையா
தொரு. மல், சிலர் ஏதாவதொரு
6. , வேங்கடபதி II கி. பி 64 630 - 164
om Jaffna The Kingdom of Jaffna
எட்டாவது ஜெயபாகுவின் எட்டாவது ஆட்சி ஆண்டைச் ق م.
5ாக்கத்துடன் இவ்வசனம் தவறுதலாக
வை செய்யப் இடம் பெற்று விட்டது. rவேண்டும்
வு நோய் முக்கியமாக நீரிழிவு நோய் உள்ள
திலுள்ள குடும்பத்திலுள்ள ஒரு ஆணை நீரி
விவாகம் பூழிவுக் குடும்பத்திலுள்ள ஒரு
பெண்ணிற்கு விவாகம் செய்து
ல் மண்டி நிலையில் குடற்தடை
a 7-ft d5 (intestinal Obstruction) alear bstruction) u nr 95 eurb
SOAP INDUSTRIES
46, SAUNDERS PLACE, COLOMBO-2.

Page 207
39ith Compliments
from

CRISPA PRODUCTS

Page 208
as węg
ναό κόκαν wns
-
அமுத வாக்கு
பிரம்பும் தடியும் உபயோகிக்கா மல், கோபமும் குறையும் இல்லா மல், சம்பளத்தையும் வெகுமதியை யும் எதிர்பாராமல் நமக்குக் கற்பிக் கும் சிறந்த ஆசான் நூல்களே. நூல் களைச் சென்றடைந்தால், உறங்கா மல் சோர்வு கொள்ளாமல் அவை நமக்கு அறிவு கற்பிக்கும். நீங்கள் தேடும் போது எதையும் மறைக்கா மல் அளிக்கும். நீங்கள் பெருந்தீங்கு செய்தாலும் வசைமொழி கூருமல் உங்கள் அறியாமையைக் கண்டு நகைக்காமல், கற்பிப்பனவும் நூல் களே.
-றிச்சேட்-டி. பியூறி மில்க்வைற் சோப் மேலுறைகளை அனுப்பி அறிவு நூல்களை வாங்கிப் படியுங்கள்.
மில்க்வைற் சோப் தொ)
தொகிலபேசி: 7233
stamsmms
யாழ் உலோகத்
து7ய அலுமீனியப் பாத்திர உலோக வகைகளுக்கு மின்சக்திய
தங்கம் வெள்ளி
பூச்சுக் ெ உன்னத உற் அன்பளிப்புக்கேற்ற எவர் சில்வர்
பொருட் ஏ ற் ற உள்நாட்டுக் கைத்தொழில் அலுமீ
G3 тат: 7049 250-254 காங்கேசன்துறை வீதி,
a&r 63,
கொழும்ப

උ තු ම් වා කාය
වේවැලද කෝටුවද පුයෝජනයට නොගෙන, තරහද නොසෑහීමට පත්වීමද නැතිව, වේතනයද ගාස්තුවද බලාපොරොත්තු නොවී අපට දැනුම වඩන්නෙන් උසස් අදහස් ඇති ගුන්ථ වේ. ග්‍රන්ථ පරි හරනය කළොත් උත්සාහයෙන් සිට අනළසව ඒවා දනීම ඇතිකර දෙයි. ඔබ සොයනවිට කවරක් හෝ නොසඟවා දෙයි. ඔබ ඉතා වීශාල වරදක් කළත් අයහපත් වදන් නොබැන ඔබගේ නොදැනීම දැක විහිළුවට නොසිතා උගන්වන්නේ ශුන්ථය.
- රිචඩ් - ඩි. බියුරි
මිල්ක්වයිට් සෝප් කවර එවා වටිනා තැගි ලබාගන්න.
jjħJAI2). யாழ்ப்பாணம்.
தொழிற்சாலை ங்களின் உற்பத்தியாளர்கள் பினுல் ; i l i (5 G | If III II காடுக்கும் பத்தி நிலையம் பாத்திரங்கள் மற்றும் அலங்காரப் களுக்கும்
இட ம் " னியப்பாத்திரங்களையே ஆதரியுங்கள்
si3: YARL METAL
யாழ்ப்பாணம்.
ஷால் வீதி,

Page 209
جزیی بر %26A AA4
e
THE MALDIVIAN N CORPORATIO
78, RECLANA,
COLON
Compliments
from
WAT TALA PE ARMACY
456, NEGOMBO ROAD,
VWVATTAA

1A ിത്രമല
سمحھ
ATIONAL TRADING N (Cey) LTD.,
ATION ROAD,
VBO-11.
99th 8est complinents
ol
Rasheediya Hotel
BATTCALOA

Page 210
~~~~~
Remember us for:
Building Materis
Agricultural Pum
Domestic Water
Tools & impler
Electric Motors
Rice Hulling M
Diesel Engines
Motor Spargs
Paints
K. N. Abdul Cader Ra
312, Srt Sangara
Colom
Telephone: 32956, 32028, 32007
UMBRELLAS
Ar SUITCAS * TF२,
Serendib lndi
P. O. Bo, COLOM

Рumря
2ents
& Starters
achines
wther & Co. Ltd.,
ja Mawatha, hbo- 0.
SES AVEL GOODS
ustries Ltd.
842
BO,.

Page 211
R A D by A NT
fo
WORLDWIDE
a
GQUAI
St.Anthony's Harc
COLOM
உங்கள் ‘பட்டிக் வேலைப்பா தேவைப்படும் உங்கள் ஏனைய தேவைகளிற்கு எமது புதிய உற்பத்திய உபயோகி (2 இரு பொலித்தீன் டை/க:
த. பெ. இ கொழு
 

OS
ON
r -
RECEPTION d
LITY
во-0.
Ware Stores Ltd.
தேசிய *
Jin (GjJTLIGOTİ
ட்டுச் செய்முறைகளுக்குத்
உப்பிற்கும் வேண்டிய தூய உப்பிற்கும் ான கழுவிய உப்பினை யுங்கள் nரில் விற்பனையாகின்றது.)
J. 334
blj-2.
H

Page 212
விரைவில் வருகிறது !
ரி க் வடிா ச்
LI JITT Jġiji
8of(ોIE
°lОitk beоt Compliиеиte
froи

கா ர ன்
5 GLII Li Πέτεβ.
VARATHAN STORES
Generalo Mferchants
KILINOCHCHI.
=ങ്ങ്

Page 213
Pith the bei
YARD BAKE
Kandy
K||NOC
塞二
aoS
ugi Ji GID TILLTÍ PL )
சைக்கிள் உப உறுப்ப îIFTu J 2 JJF JULI ரயர் வகைக
லூகஸ்,
GLI
இன்னும் பல
உங்கள் தேவைக்கு எம்முட
வே. இ. தம்
&ດໃG | GasnähyGu5: 249

at Cotmpliments
of
RY & HOTEL
Road,
CHCH|.
றுப்புகள்,
புகள்,
னப் பொருட்கள்,
isir,
எக்ஸைட் பற்றறிகள்
ற்ருேலியம் உற்பத்திகள்
பொருட்கள்
ன் தொடர்பு கொள்ளுங்கள்
55i I
நாச்சி.
தந்தி: நெல்

Page 214
6)6OLOLLO ஈழத்தின் இயற்கை வ தோடிணைந்த வியக்கத் பாரம்பரிய வினைத்திற அங்காளில் சிகிரியாவி எழில்மிகு உயிரோவிய '1 ஓவியர் உருவாக்கினர் து இந்நாளில் நாளாந்த ப முன்னேற்றத்துக்கும் 6 எண்ணற்ற துணைக்கரு அளிக்கின்றது. அச்சடிப்பதற்கும், தேவையான K 攀 தர O 6 & கடதாசிகளை x நாம் భ .
Dith the beat (eomplimento ch
CHITHRA F
KANDY ROAD,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளத் தக்க ன்.
T
1ાkકટોr
ாவனைக்கும் கைத்தொழில் 6s2T
துவதற்கும்
கை கடதாசி ஆலைக்
hட்டுத்தாபனம்
யூனியன் பிளேஸ், கொழும்பு-2.
HARMACY
KNOCHCH

Page 215
விரைவில்
எதிர்பாருங்கை
于(
F
ஈஸ்வரன்
Sif G
அழகிய
நிழற் படங்களுக்கு
H{0 shh.GIII
கிளிநொச்சி,
--------

な /
}] T : ର)
ரிெ
தியேட்டர்
.
FASHIONABLE
SILK & COTTON
TEXTILES
SUNDARAM STORES
Kandy Road, KlLINOCHCH.

Page 216
AIR CE
T
BOMBAY
MADRAS
COLOMBO
BANGKOK
KUALA LU
SINGAPOR

YLON
RIDENT
MPUR

Page 217
| A N CEYLONE
DEDICATED
LOCAL
TRADE
COMM
THE HATTON NA
48 I, DARLEY RO,
Branches:
HATTON, KANDY
 

EW SE BANK
TO SERVE
NDUSTRY
E, AND
MERCE
IONAL BANK LTD.
AD, COLOMBO-10.
", NUWARA ELIYA.

Page 218
TALK ABOUT
and we mean PRIN
that is the nearest to
- that is Our SPECIAL
In the
of
Brochures, Prograr
Invitation Cards, L
and also Die-stampi
TIMES OF CEYLON - C

PRINTING.
TING
PERFECTION
LITY.
printing
nmes, Magazines,
etterheads & etc.
ng of Letterheads.
MMERCIAL PRINTING

Page 219
nenqanma ere:
‘uith Best
Au
CEYLON NUTRITI
DISTRIBUTORS OF
440, DARI Colc
ീZ ഗ്ദ്വ ിമരഖ്യ
Zമ
SURYA JEWELLERS
73, Sea Street,
Colombo.
Telephone: 2.9847

Comptiments
f
ONAL FOODS Ltd.,
NESTLE PRODUCTS
LEY ROAD, ombo.
9ith best Compliments
from
Leading
HANDLOOM TEXT LE MERCHANTS
M. XACETMUTEU & Co,
69, Second Cross Street,
Colombo-l.
Telephone: 23696
MTM TiMMMTeTMeSqi ieSeSeSMSMSeSTSeTeSqqTekeSeLTSiMSMTTeSTMMM

Page 220
அன்பளிப்பு:
JAFFNA MUNICIPALIT
OPERATIWE :
CO
74/3 HospiT,
JAFFN
 

K. D. K.
TABLE & PEDESTAL FANS PAR
EXCELLENCE
Distributors:
ephone: 29744/5
ELITE RADIO & ENG. C0, LTD.,
26, Keyzer Street, Colombo-l.
Y MULTIPURPOSE SOCIETY LTD.
A ROAD,
A.

Page 221
அச்சகத்திற்குத் தேவையான உ பெயின்ற், இரும்புச் சாமான் உதிரிப்பாகங்கள், !
இன்னும்
QJ Tỡ II)6)Î
ஏற்றுமதியாளர்களும்
கொட்மிசன்
2011 ஸ்ர IIITII

உபகரணங்கள், எழுது பொருட்கள். ன்கள், கண்ணுடிப் பொருட்கள், மருக்துப் பொருட்கள்.
LIGM') ) )
களஞ்சியம்
இறக்குமதியாளர்களும் &
ஏஜென்ஸ்
ான்லி வீதி, LITGOOI.

Page 222
| ‘llits the Best Camp(timent
Ci:YON CARBON PAP),
Manufacturers o
TYPEWRITER
No: 6, Glenaber Place,
Colombo-3.
*Čelephone: в275з
அழகிற் சிறந்த தங்க ந:
T. S. N. SP. 915)
உரிமையாளர்:
பூநீ முருகன்
212, பிரத கல்மு
G3 réu (o f: 301

ία αβ
MFAN IM:
f: “ASOKA" CARBON PAPERS, R RBBONS 8 STENCILPAPERS.
கைகளுக்கு தகுந்த இடம்
FDD (GFilņLLITÍ
அன் கோ.
ான வீதி, 2aoT.

Page 223
Neat dĺž Hygienic Vega Cafe in the heart of the city
Telephone: 24712
pith best Compliments
of
| KANNAN & Co
182, Bankshail Street, Colombo-11.
T'phone: 26493 24773
 
 

etarian
OÈ, DEN CAFE ||
3l IᏝᏧl
விளம்பரதாரர்களை
ஆதரியுங்கள்

Page 224
09ith the dest (ompliments
S.A. Selvathayagam & Sons
Batticaloa & Kalmunai.
രീം Zeബരle മ
Estate Printing:
From the Simple Letter Heading To the Big Check-Roll At Moderate Charges.
Contact.
Sandasiri Printers
Estate & Commercial Printers, Book Binders & Rubber Stamp Makers.
"RAMYA BUILDING, MAIN STREET, KOSLANDA.
Telephone: S3

99ith (ßest Gompliments from
Colombo Hardware Stores
No. 6, Main Street,
Koslanda.
Phone. 55
-9/6ծrւ/6/hւ/ւ/
எஸ். எஸ். ஏ. JK IIÎJIDJIfUIIDI îiroIII
பிரதான வீதி, கொஸ்லாந்தை.
தொகலபேசி: 512

Page 225
Feel liike getting auvay f
A stay at one of our Resthou,
Tissamaharama, Polor Ambepussa, Ella, Belihulоуа, Daml Pussellawa, Kant Trinc
For Reservations:
TRAVEL BUREAU CEYLON HOTELS
50, Chatham Stree
Tele: 235O1 is 23504
39ith Co
fro
Sri Lanka St (General) (
9, Wehanda R

rom it all for a change?
ses is just the thing for you
na ruWa, Sigiriya,
Kitulgala, pulla, Habarana, alai, Hanwella, comalee.
CORPORATION
t, COLOMBO-l.
mpliments
:ate Trading Corporation
bad, Colombo-2.

Page 226
A happy, contended an wish. Not many of us, however,
security. The People's Bank Account Scheme made You can now save on a contrac & earn 73% interest yea with special loan facilities - i so meet your nearest Branch
EO ECO Eo
The largest number of Bra
 
 
 

ld secure family is every parent's
do anything to ensure our familiesiasting nas, with it's unique investment Savings security very easy for every family. tual basis -(even on account of MINORS) (rly, This savings scheme is linked ncluding long term loans for housing
Manager today and ask him for details,
S BANTE
nches in the island-correspondents throughout the urors.

Page 227
நன்றியுடன் கரங்
* இந்த மலரின் அட்டைமுகப்பை
மாணவன் ஈஸ்வரன் செல்வராஜ
* எங்கள் சஞ்சிகையை சிறப்பிக்கச் யர்களுக்கும், விரிவுரையாளர்க களுக்கும்,
* வேண்டிய நேரங்களில் தமது சி! சனை கூறி, ஊக்குவித்த கலாநிதி அவர்களுக்கும்,
* இம் மலரின் முதுகெலும்பு போ
புரிந்த பேராசிரியர் ஆ. அ. ஹ" ராஜா, திருவாளர்கள் மா. நட ராசா, சி. தியாகராஜா, இராத கறிஞர் செல்வநாயகம், , பேரான பினர்கள் ஆகியோருக்கும்,
* எமது பல்கலைக் கழகத்திற்கு ெ சிறப்பில் கூடிய அக்கறை காட் எஸ். எஸ். ஞானப்பிரகாசம், தி
ரஹ்மான், க. சண்முகநாதன் அவ
* இந்த மலரை முழுமனத்தோடு
ஊழியர்களுக்கும்,
எமது மனமார்ந்த நன்றியை
இந்த மலர் சிறப்படையத் தம் மாணவர்களுக்கும் ந
சத்தியராஜா அருள்குமாரன் பொன். சத்தியநாதன் முகம்மதுநகியா தில்லைநடேசன் சடாட்சரம் மயூரநாதன் இந்திர லிங்கம் ஈஸ்வரன் செல்வராசா நேமிநாதன்

கூப்புகிருேம்
அழகுற வரைந்த கட்டிடக்கலைப்பிரிவு ஜா அவர்களுக்கும்,
* கட்டுரைகள் வரைந்துதவிய பேராசிரி ளூக்கும், பெரியோர்களுக்கும், நண்பர்
ாமத்தையும் பொருட்படுத்தாது ஆலோ கைலாசபதி, கலாநிதி பூலோகசிங்கம்
ன்ற விளம்பரங்களைப் பெறுவதற்கு உதவி வர், டாக்டர். பி. ரி. ஜெயவிக்கிரம ராசா, மா, துரைராசா, மா. செல்வ நாகிருஷ்ணன், அ. ச. புவேந்திரன், வழக் “ந்தம், மற்றும் நண்பர்கள், சங்க உறுப்
வளியே இருந்தும் கூட, இவ்விதழின் டிய இரஞ்சன அச்சக அதிபர் திரு. ருவாளர் இ. சங்கர், திருவாளர் எம். ஏ.
பர்களுக்கும்,
அச்சேற்றித் தந்த இரஞ்சன அச்சக
தெரிவித்துக் கொள்ளுகிருேம்.
மாலியன்ற உதவிகளைச் செய்த சங்க ாம் கடமைப்பட்டுள்ளோம்.
r freer T. Geogrib தவமோகன் காந்தி கிறிசோஸ்தம் ராஜகுகிேந்திரன் சோமசுந்தரம் ஸ்டீபன் வேதநாயகம் சிவபாலன்
யோ செப் தேவேந்திரா இரத்தினேஸ்வரன்

Page 228
ബ
தேசிய சேமி
அறிமுகப்
நன்கொடை
இந்த நன்கொடைச் சீட் டுக்களை உங்கள் நண்பர் கள், குடும்பத்தார் ஆகி யோருக்கு திருமண, பிறந்தநாள் பரிசுகளாகக் கொடுப்பதன் மூல ம் -
இவை ரூபா 5, 10, 25 ஆக சேமிப்பு வங்கியின் கள், அஞ்சல் அ. விற்பனேக்கு
 

susmoa
ees
ப்ெபு வங்கி
படுத்தும்
ர் சீட்டுக்கள்
அவர்களை தற்போது மற் றைய வங்கிகளிலும் பார்க்க மிகக் கூடிய வட்டி யாகிய 7.2% கொடுக்கும் தேசிய சேமிப்பு வங்கியுடன் ஒரு கணக்கை ஆரம்பிப் பதற்கு ஊக்கம ளியுங்கள்
கிய இனங்களில் தேசிய
கிளே அலுவலகங்
லுவலகங்களில் த உண்டு. : JIf QIsld மிப்பு மன்றம்
காழும்பு-8.

Page 229
எங்கள் திறமை ஈழ
உங்கள் எண்ணங்களே niisto எழுத்துக்களிலே நினைவுகளே சிறந்த முறை
உங்கள் மனதையும், கண் bGust. GJ GooTGOOT (BG), 12056ITT6
வியாபாரத்தை மேலும் ெ
அன்ருடம் உலகை நினே நாட்காட்டிகள், நாட்குறி முதலியவற்றிற்கு ஏன் எ
இரஞ்சனு அச்சகம்
98, விவேகானந்தர் மேடு,
#Th|- 13.
P, FHA, FHA PRINTER, J.
 
 
 
 
 

Îîi, îl III
அழகுற அச்சிட யில் வெளியிடுகள்ாக்க
னேயும் கவரும்
ga IGGIT
மருகூட்ட
வூட்டும் ப்பேடுகள், கணக்குப்பதிவேடுகள்
ங்களே காடவேண்டும்?
இதற்குரிய சான்று ,
உங்கள் கைகளில் தென்றலாக தவழ்கிறது
Kini India Hill, Colombo