கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளந்தென்றல் 1977-1978

Page 1


Page 2
For Quality
Highclass \
LE T C H U M
111, SEA STREET,
Bring your old jewellery anc
Our sovereign gold o
BRAINC
43, Colombo Road,
GALLE. PHONE: 2 4 2 3
இதயம் நிறைந்த
வழங்கு
பிரகாஷ் ந இல, 106, செ
கொழும்பு

ewellery and Workmanship
J E W E L L E R S
COLOMBO 11.
exchange them for new one.
naments are guranteed.
HIES
42, i ttangi
42, aluwella, Galle.
த வாழ்த்துக்கள்
டுவது
கைமாளிகை
UN OS505,
11.
தொலைபேசி .299 80

Page 3
இளந்ெ ILANTH
இதழாசிரியர்கள்
EDORS:
 

தன்றல் | EN RA
T: கந்தையா சதாசிவம்
சிதம்பரப்பிள்ளை தர்மசீலன்
Kandiah Sathasivam Sithamparapillai Tharmaseelan
தமிழ்ச்சங்கம் - இலங்கைப் பல்கலைக் கழகம் கொழும்பு வளாகம்,
The Tamil Society University of Sri Lanka Colombo Campus

Page 4
Caractivities are as the needs O'
A growing nation's needs grow, change more especially in the challenging circumstant of today. And banking must keep pace. In ma parts of the island where people are worki striving towards a more prosperous futu our bank is working with them, financi projects in industry, exports, agricultu tourism, housing. Our mobile unit reach the less accessible places, extending courteous personal service, encouraging t banking habit. In short, our bank i. picked up the challen
翰 Hatton Natio
Head Office: 16, Janadhipathi
A dynamic personalise
臀
 
 
 
 

: as diversified
. ces ; o s:
f the nation
και τις
مر - مميتة ܪ܊ . . ܊ · . 2à -ܣܛܢ 宅** 。
2. خریخ --سمیت
alBankLimited
Mawatha (Queen St.) Colombo 1,
dbanking service
ン
ل
asaK a ab

Page 5
காணி
ஆகஸ்ட களத்தினிலே ஆ( தார்மிஷ்ட் ஆட்சியிலே த. ஒடிச் சிவந்ததினுல் உணர்வ வாடி யிருந்திடாது வழமைே தூர திருஷ்டியுடன் தொட வீரமிகை யுடையோர்க்கே
தேசியநீ ரோட்டத்தின் ே வீசிடுமே இளந்தென்றல் ே

க்கை
முகப் பெருகி ரைநிறைந்த குருதி வுகள் திசைமாறி பாற் கூடி டர்ந்துபணி ஆற்றுகிற
விருந்தாகத் தருகின்றுேம்!
தக்கநிலை போக்கி வேதனைகள் ஆற்றி !

Page 6
எங்கள் அன்னையின் இ8 எடுக்கும் விழாவிது gിങ இன்னும் ஆயிரம் ஆண் இமயப் பணிகளைச் சங்க
எஸ். பி
உற்பத்தியாளர்களும் நுகர்வோரு உழைப்புக்கேற்ற உயர்ந்த மதிப்பு!
இவற்றிற்காகே
எஸ். பி. என்.
S. P. N. & C
w- 181, 185, KEYZE
COLOMB(
Telegrams : Espeyen.

ளய செல்வங்கள்
சிதாய் முடிந்திடும் டுகள் வாழ்ந்து மாற்றிடும். f
, என்.
iம் உவகையுடன் நாடுவது
தரத்திற்கேற்ப சிறந்த கணிப்பு
வ ?
& கம்பனி
OMPANY
R STREET,
) 1.
Phone : 20 615

Page 7
காப்பாளரின் ஆசிச்
இலங்கைப் பல்க சங்க ஏடான "இளந்ெ வுடன் வெளிவருவது கு பூர்வமான படைப்புக் வரும் இத்தமிழிதழ் இ நாட்டும் என்பதில் ஐ மதிப்பீடுகள் முதலிய ( பொருளியல் முதலிய மிளிரும் இம்மலர் பல்
யுலக மாணவர்க்கும் 1
கடந்த காலத்தி யாற்றியோரும், இள வெளியிட்டோரும் பல் யேறிய பின்னர் தொ வதன் மூலம் தமிழ் கூ தைப் பெற்றுள்ளமைவு படைத்தோர் பெருை மக்கள் உவந்தேற்றுப்
MA

செய்தி
லேக் கழகக் கொழும்பு வளாகத்தின் தமிழ்ச் தன்றல் வழமைப் போல் இவ்வாண்டும் பொலி தறித்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். ஆக்க களையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தாங்கி இலக்கியவுலகில் சிறந்தவோர் சாதனையை நிலை பமில்லை. கவிதைகள், சிறுகதைகள், இலக்கிய பொருள்கள் மட்டுமன்றி, வரலாறு, புவியியல், அறிவியற்றுறைக் கட்டுரைகளையும் கொண்டு ஸ்கலைக் கழக மாணவர்க்கு மட்டுமன்றி வெளி பிறர்க்கும் மிக்க பயனைத் தருவதாகும்.
ல் இளந் தென்றல் இதழாசிரியராகக் கடமை ந்தென்றலில் தமது க ைனிப் படைப்புக்களை
ஸ்கலைக்கழகப் பட்டப்படிப்பை முடித்து வெளி
டர்ந்தும் தம் படைப்புக்களை வெளி க்கொணர் றும் நல்லுலகத்தில் தமக்கெனச் சிறந்த இடத்
*யக் கருத்திற் கொள்ளும் போது இம்மலரைப் ம தெற்றென ப் புலஞகும். இம்மலரைத் தமிழ் படித்துப் பயனுறுவார்களாக,
கலாநிதி ஆ. சதாசிவம் A. (Cey,j D, Phil) (Oxony Pandit (Madura)

Page 8
WITH BEST COMPIL MENT
Cambridge utorial College
Thirtinelvely Junction,
FAFFNA.
ܝܼ ܢ ܀ @ ܡܼܲܐ
Úicina buti
52, ஸ்ரான்லி வீதி.
G. A. G. B. A., B. Com, G.
சிறந்த பட்டதாரி ஆசிரியர் விரிவுரையாளராலு
மனித வாழ்க்கையின் மிகப் பெரிய அ
யாரை எங்கு சந்திக்கப் போகிருேம் எ6
நண்பர்களை எப்படிப் பிரிவோம் என்
தெரிதுபயாதிருப் தான்

Donated. By
T. LOGANATHAN
84, Palaly Road, JAFFNA.
o Senter
யாழ்ப்பாணம் C. E. L.A. G. C. E. O'L
5ளாலும், பல்கலைக்கழக ம் போதிக்கப்படுகிறது.
திசயம் என்னவெனில்
பதும் சந்தித்த
தும் முன் கூட்டியே

Page 9
காப்பாளரின் ஆசி
பொருளியற்பகுதி,
இலங்கைப் பல் தின் 'இளந் தென் நாட்டின் பல பகுதி ளதும், விரிவு : ரய அவற்ை மலரச் Gai r. அே வந்து கொண்டிருக்( டிருக்கின்றன. இந் குறையாமல் புது ப
* இளந்தென்ற ஒரு கலை, இலக்கிய களுக்குக்கூடிய முக்கி சியமானதே. கலை,இ ஆக்கங்களை வெளி மன்றிப் பல்கலைக்கழ யில் குறுகிய ஒர் கொண்டிருத்தல் மி
மலர் வெளிய
தெரிவித்து "இளந்( மென்று வாழ்த்துகி
இலங்கைப் பல்கலைக் கழகம்,
கொழும்பு வளாகம் , கொழும்பு 3.

ச் செய்தி
ஸ்கலைக் கழகம், கொழும்பு வளாகத் தமிழ்ச் சங்கத் றல்' பண்டும் ஒரு முறை மலர்ந்திருக்கின்றது.
ாளர்களதும் ஆக்கங்கள் பெருகியுள்ள நிலையிலும் செய்வதற்குரிய மார்க்கங்கள் மிகவும் குறைவாக த நோரத்தில் அதிகரித்து வரும் செலவுகள் வெளி கும் ஒரு சில பிரசுரங்களையும் பயமுறுத்திக் கொண் iநிலையில் 'இளந்தென்றல் எவ்வகையிலும் மெருகு > ணம் பரப்புவது பாராட்டுக்குரியது.
ல்", ஆரம்ப காலங்களைப் போன்று, வெறுமனே மலராக அல்லாமல் அறிவியல், சமூகவியல் அம்சங் கியத்துவமளித்திருப்பது கவனிக்கத்தக்கது.இது அவ லக்கிய ஆக்கங்களை விட அறிவியல், சமூகவியல் பிடுவதற்கு மர்க்கங்கள் குறைவாயிருப்பது மட்டு ழகத் தமிழ்ச் சங்கமொன்றின் மலர் என்ற வகை எல்லைக்குள் நிற்காமற் பரந்த ஒரு நோக்கைக் க விரும்பத்தக்கதாகும்.
பீட்டில் ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டுத்
தென்றல்’ என்றென்றும் இதமாக வீச வேண்டு ன்றேன்,
கலாநிதி வி. நித்தியாளந்தம்

Page 10
7TH BES" COM
ΟΕ'
A. S. Sangarappill,
l5 & 17, DAN S
COLOMBC
உத்தரவாத
உணவு மருந்துகள் சட்டத்தின்
கோப்பி என உத்தரவாத
வியாபாரத் தொடர்பு :-
பிரவுண்சன் (
89 14, பிறைஸ் பிளேஸ்,
 

2ᏞᎻᎷᎬNTS
ai Sons & CO.,
TREET,
) 12.
தம்
கீழ் 100% தூய்மையான
மளிக்கப்படுகிறது.
தொலைபேசி: 27 197

Page 11
காப்பாளரின் ஆசிச்
பொருளியற்பகுதி,
இலங்கைப் பல் தின் "இளந் தென்
நாட்டின் பல பகுதி
ளதும், விரிவு ரயா அவற்றை மலரச் ( வே உள்ளன. அ:ே வந்து கொண்டிருக்கு டிருக்கின்றன. இந் குறையாமல் புது ம
* இளந்தென்ற ஒரு கலை, இலக்கிய களுக்குக்கூடிய முக்கி சியமானதே. கலை,இ ஆக்கங்களை வெளிய மன்றிப் பல்கலைக்கழ யில் குறுகிய ஓர் கொண்டிருத்தல் மி
மலர் வெளிய
தெரிவித்து 'இளந்ே
மென்று வாழ்த்துகி
இலங்கைப் பல்கலைக் கழகம்,
கொழும்பு வளாகம் , கொழும்பு 3.

* செய்தி
கலைக் கழகம், கொழும்பு வளாகத் தமிழ்ச் சங்கத் றல் மீண்டும் ஒரு முறை மலர்ந்திருக்கின்றது. களிலும் வளாகங்கள் திறக்கப் பட்டு மாணவர்க rளர்களதும் ஆக்கங்கள் பெருகியுள்ள நிலையிலும் செய்வதற்குரிய மார்க்கங்கள் மிகவும் குறைவாக த நோரத்தில் அதிகரித்து வரும் செலவுகள் வெளி தம் ஒரு சில பிரசுரங்களையும் பயமுறுத்திக் கொண் நிலையில் 'இளந்தென்றல் எவ்வகையிலும் மெருகு உணம் பரப்புவது பாராட்டுக்குரியது.
ல்", ஆரம்ப காலங்களைப் போன்று, வெறுமனே மலராக அல்லாமல் அறிவியல், சமூகவியல் அம்சங் யத்துவமளித்திருப்பது கவனிக்கத்தக்கது.இது அவ லக்கிய ஆக்கங்களை விட அறிவியல், சமூகவியல் பிடுவதற்கு மர்க்கங்கள் குறைவாயிருப்பது மட்டு முகத் தமிழ்ச் சங்கமொன்றின் மலர் என்ற வக்ை எல்லைக்குள் நிற்காமற் பரந்த ஒரு நோக்கைக் க விரும்பத்தக்கதாகும்.
சீட்டில் ஒத்துலழத்த அனைவருக்கும் பாராட்டுத்
தென்றல்" என்றென்றும் இதமாக வீச வேண்டு ன்றேன்.
கலாநிதி வி. நித்தியாளந்தம்

Page 12
TTH REST CO
O
A. S. Sangarappi
15 &. 17, IDAM
COLOMB
s
உத்தரவா
உணவு மருந்துகள் சட்டத்தில் கோப்பி என உத்தரவாத
வியாபாரத் தொடர்பு :-
பிரவுண்சன்
80 14. பிறைஸ் பிளேஸ்
 

IPILIBIENTS
lai Sons & CO.,
STREEF,
O 2.
தம்
ன்கீழ் 100% தூய்மையான 5 மளிக்கப்ப்டுகிறது.
இன்டஸ்றிஸ் մ, கொழும்பு 12.
தொலைபேசி: 27 197

Page 13
முதல்வர் மொழி
தமிழ்ச் சங்கம்
இளந்தென்ற தமிழ்நெஞ்சங்களு களைக் கடந்து விழ வந்த பாதையினை கொள்வோமாக! பாடு இன்று போ
சேற்று இன் மின்றி மதிக்கும் சான்ருக அலர்த் தவழ்ந்து கமழ்கிற மிலருக்காகத் தங் பெறும் இதழாசி நிற்கிருரர்கள்!
பல்கலைக் க துவப்படுத்தப்பட் மாணவாகளுககாக சமூக நோக்கின் தேங்கிடுமாயின்
வாழ்க தம்
இலங்கை பல்கலைக் கழகம்
கொழும்பு

கிறர்
}லின் இனிய சுகந்தத்தினை முகர்ந்திட முந்துன்கிற க்குச் சிலவார்த்தைகள், ஐம்பத்து மூன்று ஆண்டு 2ாவெடுத்துப் பூரிக்கும் இவ்வேளையில் சங்கம் கடந்து யும் காத்திருக்கும் பயணத்தையும் எண்ணித் திடங்
ஆதரிக்கும் கரங்களின் தமிழார்வத்தின் வெளிப் "ல் என்றும் இளந்தென்றலாக வீசட்டும்.
பிறப்பினையும் செந்தாமரை விரிப்பினேயும் மாற்ற மனப்பக்குவம் பெற்றவர்கள் தங்கள் ஆற்றலுக்குச் தியுள்ள 'இளந்தென்றல் உங்கள் கரங்களிடைத் 0து. இறுதியாண்டு மாணவர்களாய் இருந்துங்கூட கள் பொன்னன காலத்தினை அர்ப்பணித்து இசை ரியர்கள் இந்த நேரத்திலே இதயத்தை நிறைத்து
ழக மாணவர்கள் பொதுஜன மட்டத்திலிருந்து தனித்
டவர்கள் என்ற மாயையைப் போக்கிச் சாதாரண
-சாதாரணமானவர்களாக நாம் அ த்திட முக்கந்த
சாதாரண முனைப்பு உங்கள் சிந்தையில் சிறிதேனும்
அது போது மென நாம் நிறைவுறுவோம்:
ழ். வளர்க தமிழ்ச்சங்கம்!
au Gxy53ur
وHہا تھ6یے
வி. ரி. தமிழ்மாறன்

Page 14
Gas - : -ti: piimseart es from:
SWA DISPENSARY
Kudiyiruppu,
y"AVUN YA..
இளந் தென்றல் நீடு
இனிது ம்னம் விசிடு, !
நியூ லலிதா
a s , i::J t4ڑ . وی۔
I

7H THE BEST COMPLIMENTS
OF
Borella Textiles & Tailors
1207, Maradana Road,
BORELLA
இளந்தென்றலுக்கு எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !
லா ஸ்ரோர்ஸ் (ரெக்ஸ்ரைல்ஸ்)
12:23, பொரளை மாடி,
பொரளை .
நாதன் பிரதர்ஸ் (ரெக்ஸ்ரைல்ஸ்)
7, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை,
கொ (பழம்பு 2.

Page 15
இதழாசிரியர்கள் இ
எதிர்காலம் ப தாக்கி ஒலிக்கிறது!
பல்கலைக் கழக கற்கள்! ஒரு வழியாய் ஒழியாது எத்தனை 8 யேறிவிட்டாலும் ! புள்ளிகள் போடுகின்ற குதித்து வந்து காத்தி யிலே இருந்து கொ
ஏளனங்கள் கூட எங்
வர்க்க பேதங்க நம்பி வாழ்பவர்கள் புச் சுவையன்றி வேறு சொர்க்க பிரமனவள் உழைப்பின் திருவுரும் அவன் வதனம் மலரு தாமும் கட்டியம் சு
கோடுகள் கிழி களைத்து ஆடிக்குப்பின் உரிய வழிமாற்றது வாஞ்சை மிகவுடைே கும் எல்லாமும்’ என்
தமிழில் மலர் ( தலையசைப்போர் எ, நாங்கள் என்றைக்கு தந்தார்கள் உதவி! இ பலம், அதையே *அழுகுரலை"க் கேட்கு மகிழ்வடைகின் ருெம்
முனைந்திடுவீர்! முச

இயம்புவது . . .
ற்றிய ஏக்கநிலை எங்களதும் இதயச் சுவர்களைத்
த்திற்கு வரும் வழியிலேதான் எத்தனை தடைக் தப்பி உட்புகுந்தோமானலும் இங்கேயும்ஒயாது நாய்வுகள், சீராய்வுகள், பட்டம் பெற்று வெளி நிம்மதியாய் மூச்சு விடத்தான் முடியுமா? ற புதுக்கலைகள் அங்கும் கொள்ளிசொருகுவதற்குக் ருக்கும்! எல்லைகள் இல்லாத இடுக்கண்கள் மத்தி " ண்டு இப்படியும் ஓர் ஆசை எழலாமா என்ற வ்கள் காதுகளுக்கு எட்டியதுண்டு!
5ள் அற்ற வளமான ஒரு வாழ்வு வருமென்று -- அதற்காய் வருந்துபவர்கள் நாங்கள். உவர்ப் சுவை தான் அறியாது சோறிடும் தொழிலாளின் உடுத்ததுணியன்றி அடுத்த உடை அறியாத வம்-உதிரத்தின் வடிகால்கள். ஏழை எம்பங்காளி ம் அந்தத் திருநாளை அவனியிலே காண்போமென உறிடுவோம்!
த்துத் தம்மைக் குறுக்கி எல்லை வகுத்து ஆடிக் எனலே அனல் விளைத்தார் நமக்கு ஓடி ஒளியாது சீரிய நெறி காட்டும், செம்மல்கள் வழி செல்லும் யார் மலருக்கு வளமூட்டியுள்ளார்கள். "எல்லார்க் பது இந்த மலரினதும் இதய நாதமாகும்.
போடத் தாருமுதவியென் ருல் "தாராளம்' என்று த்தனை பேர்? இருந்தாலும் என்ன இதயத்தால் ம் ஏந்தல்களே என்று இனங்காட்டித் தம்மைத் இறும் பூது எய்து கிருேம்! ஆர்வம் ஒன்றே எங்களது மதித்துத் தந்தவர் பலர், அன்னையின் வேதனை ம் வரை தானே! பேறு கண்ட தாயாளுேம் பெரு,
5ர்ந்திடுவீர்!! இன்புறுவீர்!!!

Page 16
அனைத்து வளாக தமிழ் மாண செயலாளரின் வாழ்துரை
அ ர நூற்றுண்டு கால கொழும்பு வளாகத் தமிழ்ச் இள்ந்தென்றல் மலரை வெ தமிழ்ச்சங்கத்தினரின் தொட இம்மலர் திகழ்கின்றது.
தற்போதைய சூழ்நிலை ருக்கும் பல்வேறு வகைய தமிழுக்குத் தொண்டாற்ற டிருக்கும் தமிழ்ச் சங்கத்தி: தாகும். பல்கலைக் கழக மாத்திரமில்லாது கலை, இ படு வர்க்கத்தினராக மாறே மிானுல் அதுவே அம்மலரின் தமிழ்ச் சமூகம் முதலிற் க
Ꭿ5 fᎢ &ᎼᎢ .
அனைத்து வளாகங்களு வர்களுக்கு மத்தியில் கலை, களே ஏற்படுத்த இளந்தென், நம்புகின்றேன். வளாகங்கள் பயிலும் தமிழ்ப் பேசும் ம ஒன்பட்டவர்களே, அந்த அ தமிழ்ப்பேசும் மாணவர்களது தில் பெருமகிழ்வு கொள்கின்

ாவர் ஒன்றிய
த்திற்கும் மேலான வரலாற்றைக்கொண்ட சங்கம் இவ்வருடமும் தனது வெளியீடாகிய Rயிடுவதையிடடு மிகவும் மகிழ்கின்றேன். டர்ச்சியான தமிழ்ப்பணிக்கு ஒரு சான் ருக
பில் பல்கலைக் கழகத் தமிழ் மாணவர்களுக் பான நெருக்கடிகளின் மத்தியிலும் கூட
வேண்டும் என்ற விழைவில் செயற்டட் னரின் பணிகள் பாராட்டப்படவேண்டிய மாணவர் வெறும் புத்தகப் பூச்சிகளாக லக்கிய சமூக நோக்குக் கொண்ட டன் வேண்டிய தேவையை இம்மலர் உணர்த்து ஆகப் பெரிய வெற்றியாகும். இன் ையற ருத்திற் கொள்ள வேண்டியதும் இ$6.ே
க்குமிடையேயுள்ளை தமிழ்ப் பேசும் மான இலக்கிய முயற்சிகளில் நெருங்கிய உறவு றல் எதிர்காலத்தில் வழிசமைக்கும் என்று ள் ஆங்காங்கு பரந்து கிடந்தாலும் அங்கு ாணர்வுகள் எண்ணத்தால், உணர்வால் டிப்படையில் அனைத்து வளகங்களினதும் து சார்பில் இம் மலருக்கு ஆசி வழங்குவ *றேன்.
இங்ஙனம் ,
சி. தண்டாயுதபாணி
செயலாளர்.
அ. வ. த . பா. ஒ.

Page 17
தென்றலிலே வீகயவை
கற்பனையும் வரலாறும்
ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முடியுமா
உலக விவசாயத்தின் சமநிலை
ஒரு பொது நோக்கு
தங்கம்மா (கவிதை)
மூன்ரும் உலக நாடுகளின் விருத்தியில்
* அங் டாட்”
ாங்களுள் ஒருவன் (கவிதை)
நவகாலனித்துவம்-ஆசிய ஒருமைப்
பாட்டில் தாக்கம்
நெஞ்சம் அலைமோதுதே (சிறுகதை)
விடிவை நோக்கி (சிறுகதை)
தத்துவமும் கல்வியும்
ஈழத்துப் பள்ளு பிரபந்த இலக்கியம்
தாத்தா சொன்ன கதை
வரண்டவலயமும்-நெற்பயிர்ச் செய்கையும்

பக்கம் லாநிதி பொ. பூலோகசிங்கம் 7
ரேஷ்ட விரிவுரையாளர் தமிழ்த்துறை)
ம். எல். நஜிமுதீன் 25
( L. Lf لأL له إن زنود
)ாநிதி வி. நித்தியானந்தம் 28
சிரேஷ்ட விரிவுரையாளர்
பாருளியற்துறை)
விஞர் பசில் காரியப்பர் 45
டிமன் போட் 57
பொருளியற் சிறப்பு)
ம். எச். எம். ஷம்ஸ் 岔9
அபிவிருத்திக்கல்வி)
த்திதுரைராஜா 73
:பொருளியல் சிறப்பு)
சல்வி கலாவதி கந்தையா, 8
மருத்துவபீடம்)
ாவலூர் ஜெகநாதன் 85
@・L・ சந்திரசேகரம் 89
சிரேஷ்டவிரிவுரையாளர் கல்விப்பீடம்
லாநிதி இ. பாலசுந்தரம்
ரிவுரையாளர் தமிழ்த்துறை
“ன். சண்முகலிங்கன் 99
கல்விப்பீடம் )
இ. பரராசசிங்கம் 0.
அபிவிருத்திக் கல்வி)

Page 18
OR PRECISION WORK IN MAXIMUM COVERAGE G
YET REMAINS
| U
64 1#3, DAM
COLOMB
PhOነíe : 3137{}
p
Lauxmu 1
Main Street, Nel
கட்டிடப் பொருட்கள் கூட்டுத்த
வர்த்தகப் பிரதிநிதி ( உங்களுக்குத் தேவையான :
அஸ் பெற்ருள் சிற், தக்சுவேலைக்கான
உங்களுக்கு தேவையான பூட்டுவன் கடகிப்பாட்டு விலைக்கு பெற்று தொடரீபு கொ6
S. 7. Thanara 9ρταα,
NELLIADDY KAR

E PRINTING AND F CR LOBE PRINTING INK
JNSURPASSED
NOSTRES
STREET,
O 2 -
Cablic : Rajalitho
raders
iady Karayeddy
தாபன, உத்தரவுபெற்ற உடுபிட்டி)
உபகரணம்ங்கள். மற்றும் ககள் இன்னும் பலவற்றை க் கொள்ள எம்முடன ாளுங்கள்.
ia A. 5auxing
9**ළ
AV EDDY.

Page 19
கற்பனையும் வரல
巧m"歌蠶°鷲 தமிழ் இலக் * ததல முறையே, பத்தொ. பதாம நுற்ற எல் டி. கடைக்கூறிலும் , இ பதிாம நூற்ருண்டின் ஆரம்ப தசாப்தங் ளிலும் "கால்கொள்ளத் தொடங்கிய புதி இலக்கிய வடிவங்கள். இவ்வடிவங்கள் க பனைப் பண்ணையிலே செழித்து வளர்வன ஆயினும், வெறும் கற்பனையாக மட்டு தம் பண்டப்புக்களை முன் வைத்தால் அவ றிற்கு மக்கள் ஆதரவு கிடைக்குமோ என்: அச்சமும் அக்காலத்தில் நிலவியிருக்கின்றது ஆரம்பகாலங்களில் எழுந்த பிரதாப முத யார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரப் பத்மாவதி சரித்திரம் போன்றவை சரித் ரம் என்ற போர் வையுடன் வழக்கப்பெற் மை குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்க அக்காலம் வரை பழக்கப்பட்டு வந்த நெ மு றயே (இதற்குக் காரணமாதல் வேலி
டும்.
நவீன இலக்கியத்தின் தோற்றத்திற் முன்னர் தமிழ் மக்களிடையே வரலா கலந்த கதைகளும் நாடகங்களும், வரலா றுச் சாயல் கொண்ட காவியங்களும் செ வாக்குப்பெற்றிருந்தன. ஐவர் ரா சாக்க கதை, கன்னடியன் படைப்போர், மூன் லகு கொண்ட அம்மன் கதை, வெட்டு பெருமாள் கதை, ராமப்பையன் அம்மிாஃ இரவிக்குட்டிப்பிள்ளை போர், சிவகங்கை வி மானை, பூலுத்ததேவன் சிந்து, கட்டபொ. மன் கதைப் பாடல் முதலிய கதைப்பாட கள் நாட்டுமக்களிடையே வாய்மொழிய கப்போற்றப்பெற்று வந்த சிறப்பு மிக்கவை இவற்றிலே கற்பனை எவ்வளவு, வரலாறு எவ்வளவு என்று யகுத்துணர மக்கள் முய வில்லை. இராம சரிதமும், பாரதக் கை யும் வரலாற்று நிகழ்ச்சிகளாகப் போற்ற பெற்று வந்துள்ளன. மூவேந்தர் கால, திலே தோன்றிய தனிப்பாடல்கள் முதலா அவற்றின் செல்வாக்குப் பெருகி வந்துள்ளத ஈழத்திலே கூட இராம சரிதத்தோடு தொட புடைய இடங்களாகச் சில இடங்கள் பொது மக்களால் நம்பப்பட்டு வருத சுட்டத்தக்கது. பத்தினி கதையாகச் சே நாட்டில் வழங்கி வந்த க~த பத்தின கோட்டம் அ ~மக்க வழிவகுத்ததோடு நி: லாது சிலப்பதிகார காவியத்திற்கே தூண்

ாறு கலாநிதி பொ. േീia
m
7
சிரேஷ்ட விரிவுரையாளர் கொழும்பு வளாகம்
கோலாக விளங்கி விட்டது. கி.பி. இரண் டாம் நூற்ருண்டு வரையிற் சேரனுெருவன் பத்தினி கோட்டம் அமைத்ததைக் காரணி யாகக் கொண்டு, புலவரொருவர் ஒரிரு நூற்ருண்டுகளுக்குப்பின் காவியம் படைத்த போது தம்மையும் அச்சேரனின் சகோதர ணுகக் கூறிக் கதை நிகழ்ச்சிக்குத் தம்மை யும் சாட்சியாக 3 வத்துள்ளார். இன்று வரை சிலப்பதிகார காலத்தை நிர்ணயிப்ப திலே புலவர் தம்மைச் சாட்சியாக வைத்த மை தடையாக அமைந்து வந்துள்ளது. காவியத்தின் மொழி நடையையோ, தமிழ் மொழியின் வளர்ச்சிக் கிரமங்களையோ அல்லது காவியத்தின் புதுமைகளையோ சிந் திக்கவிடாத அளவிற்குப் புலவர் சாட்சி அரணுக அமைந்து விட்ட க!. சிலப்பதி காரம் 1892 ஆம் ஆண்டிலே பதிப்பிக்கப் பெற்றபோது,
‘‘த பழி நாட்டு அரச கிய செங்குட்
டவ ைவடநாடு செ.மு. வடவேந் தர்களை வென்று கண்ணகியின் படி மச்சிலை கொணர்ந்த செய்தி மிக்க விம்மித்தை உண்டாக்கியது.”*
என்பர் அதன் பதிப்பாசிரியர் உ. வே. சாமிநாதையர் (என் சரிதம் , 1950, பக்; 973-974), பத்தொன்பதாம் நூற்ருண் டின் கடைசியிலே விசுவரூபம் கொண்ட பிராமணிய எதிர்ப்புக்குச் சிலம்பு சிறந்த ஆயுதமாக உதவாமல் விட்டுவிட வில்லை. ஆயினும் அதன் கற்பனையை வர லாருகக் கொண்டு மயங்கும் மருட்சி தொ டர்ந்து நிலைத்து விட்டது. நாயன் மாரும் ஆழ்வாரும் தோற்றுவித்த பக்தி வெள்ளத் திலே சமண பெளத்த முதன்மையைத் தகர்க்கச் சோடிக்கப்பெற்ற முச்சங்க வர லாறு பல்கலைக் கழக ஆராய்ச்சி வெளியீடு களிலும் வேதவாக்ககாக இடம் பெறும் நிலை மை மாறிவிடவில்லை.
இத்தகைய பின்னணியில் இலக்கிய சிருஷ்டிகர்த்தாக்கள் பற்றியும் பல்வேறு

Page 20
கற்பனையும் வரலாறும்
கதைகள் உருப்பெற்றுள்ளமை வியப்புகுக் உரியதன்று. மூவேந்தர் காலத்துப் பெண் பாற் புலவர் ஆதி மந்தியார் வரலாறு சிலப் பதிகாரத்திலே கற்பனை மெருகுடன் இடம் பெற்றுள்ளது. பல்லவர் காலத்தில் நாக் கொண்டு மானிடம் பாடாத அடியார்களைப் பற்றிச் சோழர் காலத்திற் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பல கதை கள் உருவாகிவிட்டன. அகத்தியருக்கும் தொல்காப்பியருக்கும் இடையே பகைமை ஏற்பட்ட வராலறு ஒன்றினை நச்சிஞர்க்கினி யர் தந்துள்ளார். இறுவரை இருவரையும் இ3ை3ணத்துக் காண்பதற்குச் சித்தாந்தமான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது மனங்கொளத்தக்கது. கபிலர் அகவலிற் கால்கொண்ட எழுவர் பற்றிய கதை யொன்று திருக்குறட் பதிப்புகளிலே திருவள்ளுவ நாயனர் சரிதமாக, ரசோ பாங்கமாக வருணிக்கப்பட்டுள்ளது. 'தனிப் பாடல்களைத் தொகுக்கப் புகுந்த தமிழ் நாவலர் சரிதை ஆசிரியரும் வரலாற்று உண் மைகள் போலக் கற்பனைச் செய்திகளை வழங் கத் தவறவில்லை. இந்நிலையிற் பதினேழாம் நூற்ருண்டினை ஒட்டித் தோன்றிய சதக நூல்களும் தாம் எடுத்துக் கொண்ட புலவர் பற்றிப் பல செய்திகளைக் கற்பனை நயத்து டன் மேற்கொள்ளத் தவறவில்லை. தொண் டை மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், சோழ மண்ட சதகம், கொங்கு மண்டல சதகம் முதலிய சதகங்களிற் புலவர்களின் செய்திகள் பல இடம் பெறுகின்றன. ஒட்டக் கூத்தரையும் புகழேந்திப் புலவரையும் சம காலத்துவ ராகக் கொண்டு கதை கூறி, விநோதரச மஞ்சரியுடையாருக்கும் புலவர் புராண முடையாருக்கும் வழி காட்டியாக அ மந்த வர் தொண்டை மண்டல சதக ஆசிரியர் படிக் காசுப்புலவர் என்பது குறிப்பிடத்தக்க க *. கம்பர், ஒட்டக் கூத்தர், ஒள ைவ யார் முதலியோர் சதகங்கள், லே படுப்பாடு விசனத்திற்கு உரிய தாகின்றது.
முன்னேர் வழியைப் பொன் போலப் போற்றிக் கதை சொல்லப் புறப்பட்டவர் அட்டாவதானம் afu frt f. செடியார். இவர் பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற் பகுதி வரை வாழ்ந்தவ்ர். பேர்சிவல் பாதிரி யாரும் பின்னர் சி. வை. தாமோதிரம் பிள்ளையும் ஆசிரியராக விளங்கிய தின வர்த்தமானி எனும் வாரப் பத்திரிகையில் இவர் பொய்யாமொழிப் புலவர், கம்பர் ஒட்டகக் கூத்தர், புககிழந்திப்புலவர், காள மேகப்புலவர், ஒள ைவயார் முதலியோரை பொருளாகக் கொண்டு விநோதரசமான
8

கலாநிதி. பொ. பூலோகசிங்கம்
டயங்களை எழுதிஞர். இவருக்குப் புலவர் ரின் காலவேறு டாடு த ைடயாக அமைய ல்லை. பல்வேறு காலத்தவ ைரயும் ஒரே லத்தவராகக் கொண்டு, வரலாற்று மாந் ர்களைக் கற்பனை மாந்தர்களாக மாற்றிக் நாபிரசங்க பாணியிலே எழுதியுள்ளார். வருக்கு வாரிசு போல, இவர் காலத்தின ற் கூறிலே தண்டபாணி சுவாமிகள் விளங் னர். இவருடைய புலவர் புராணத்திலே ான கம்பர் மகன் விம்பிகாபதி கதை மந்த கற்பனையுடன் கூறப்பெற்றுள்ளது.
இத்தகைய கதைகளிலே வரலாற்றம்சத் தத் தேடித் துன்பம் அனுபவித்தவர்கள 0 குறிப்பிடத்தக்கவர் ‘தமிழ் புளுராக்” ன்னும் தம்ழ்ப் புலவர் சரிதம் கூறும் ங்கில நூலை முதன் முதலாகத் தமிழுல க்கு 1859 இலே தந்த கற்பிட்டி சீமான் சிச் செட்டியவர்கள்.
‘எங்கள் புலவர்களின் சரிதம் பற்றி ஒரு நூலை மக்களுக்கு அளக்கவே ண் டும் என்பது நெடுங்காலமாக எனது எண்ணமாயிருந்தது. ஆஞல், தமி ழிலே பண்டைக் காலத்திலோ அல் லது தற்காலத்திலோ எழுந்த வாழ்க் கைச் சரித நூல்கள் இன்மையால், நான் எதிர்பார்த்ததிலும் பார்க்க, நூலுக்கு வேண்டிய விஷயங்களைப் பெறுவது பெரும்வேலையாக இருந் தது. இதனுல் நான் எடுத்துக் கொண்ட முயற்சியை ஆற்ருமையாற கைவிட்டு விடுவதாகப் பெரும்பாலும் தீர்மானித்திருந்தேன். ஆயினும் மக்கள்  ைடயே நிலவிய கர்ண பரம் பரைக் கதைகளைச் சேர்த்து, அவற்றி லிருந்து கீழைத்தேயக் கற்பனையாளர் விழையும் புனைவுச் செய்திகளையும் முருகியற் செய்திகளையும் நீக்கினல் தேவையான செய்திகள் கிடைக்கு மென்பதை விறிந்து, அம் மூலத்தை ஆராய்ந்தேன். விதன் விளைவு இப்பொ ழுது மக்கள் முன் னிலையிற் குறைபாடு களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.”*
ன்று அவர் தம் ஆங்கில முன் னுரையிற் றியுள்ளார். காசிச் செட்டியவர்கள் டபிடித்த நிதானத்தை அவர் பின் த பாவலர் சரித்திர தீபக (1886) ஆசிரி பின்பற்றவில்லை என்பது ஈண்டு சுட்டத் கது. ஆயினும் இன்று ‘தமிழ் புளூராக்” லிலும் பல பகுதிகள் வரலாற்று க் சுற்று ால்ல என்று ஒதுக்கிவிடத்தக்கனவாய்க் ணப்பெறுகின்றன.

Page 21
கற்பனையும் வரலாறும்
காசிச் செட்டியவர்கள் போற்ற விழைந்த வரலாற்றுணர்வைப் பின்பற்றிச் சிலராவது இலக்கிய சரிதம் எழுத முற்பட்டமையாலே தான், இன்று தமிழ் இலக்கிய சரிதம் உருவாகிக்கொண்டு வருகின்றது என்று கூற லாம். ஆயினும் இவர்கள் எதிர்நோக்க வேண்டிய பிரச்சி%னகள் சொல்லுந்தரமல்ல. உண்மைக்கு மதிப்புக் கொடுப்பவரிலும் உணர்ச்சிக்குச் சிறப்பு அளிபபவர்களே அதிக மாகக் காணபபடுகின்றனர். அரசியல் அலை களால் உந்தப் பெற்று தமிழுணர்ச்சி வீறு கொண்டு நிற்போர், உண்மைகாணத் தயங் குகிருர்சள், அவ்வாறு காட்ட முற்பட் டோரைப் பலி கொள்ளவும் அவர்கள் தயங் குவதில்லை. பேராசிரியர் ச. வையாபுரிப் பிள்ளை ககுத் தமிழ்நாடு கொடுத்த மரியா
தையை உதாரணமாகக் கூறி அமையலாம்.
தமிழுணர்ச்சி மட்டுமன்றிச் சுய உணர்ச்சி யும் எதிர்நோக்க வேண்டிய பிரச்சினைகளுள் ஒன்ருகக் காணப் பெறுகின்றது. தம் முன்னேர் பற்றிய சரிதங்களைக் காவிய ரூபத்திலே காண்பதற்குப் பின்னேர் விழை வது வியப்பிற்குரியதன்று. ஆயினும் அவற் றை வரலாறு என்று சுறவைத்தல் சாலாது. வரலாறு பவித்திரமானது. உண்மையே அன்றிப் பொயமைக்கு அங்கு இடமில்லை. பொய்மையும் பு?னவும் கற்பனையும் ஒரு பொருட்டன.
1970 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் வெளிவந்த ‘தமிழ் இலக்கியத்தில் ஈழத் தறிஞரின் பெரு முயற்சிகள்’’ என்ற நூலின் முன்னுரையில் ஆசிரியர், சிவராத்திரி புராணத்தைப் பாடிய நெல்லை நாதர் பாண்டிய நாட்டினர் என்றும் ஆசிரியர் நாடு பற்றி வேறு அபிப்பிராயமும் நிலவு கின்றது என்றும் எழுதியுள்ளார். ஆசிரியர் சுட்டிய வேறு அபிப்பிராயம் யாதென? அந்நூலை இலங்கை வானெலியின் 'கலைக் கோலம்" நிகழ்ச்சியில் விமர்சனம் செய்த முதலியார் குல சபாநாதன் அவர்கள் கூறி ஞர்கள். அவர்கள் சிவராத்திரி புரா ணம் பாடிய நெல்லைநாதர் என்பவர், தெல்லிப்பழை நெல்லைநாத முதலியார் என்று தம்மிடம் வித்தகம் பத்திராதிபர் தென்கோவைப் பண்டிதர் ச. கந்தைய பிள்ளை (1879-1958) கூறியதாகச் சொன் ஞா.
சபாபதிப்பிள்ளை கந்தைய பிள்ளையின் தாயார் கந்தப்பிள்ளை என்பவரின் புதல்வி கந்தப்பிள்ளையின் தாயார் பர்வத வர்த்தனி அம்மையார் அவருடைய தந்தை இருபாலை சேஞதிராய முதலியார்; அவருடைய தந்

கலாநிதி. பொ. பூலோசசிங்கம்
9
தையே தெல்லிப்பழை நெல்லைநாத முதலி யார். எனவே வித்தகம் பத்திராதிபர் தம் முன்னேர் பற்றிய விபரத்தையே கூறியுள் ளார் என்பது புலணுகும். அவர் கூறியது மறைக்கப்பட்ட அல்லது மறக்கபபட்ட உண்மையா என்பதை நோக்கவேண்டியவர் களாக இருக்கிருேம்.
"தமிழ் புளுராக்" எனும் ஆங்கில நூலி லே சேஞதிராய முதலியார் சரிதம் கூறும் சீமான் காசிச்செட்டி அங்கு நெல்லைநாத் ரைச் சுட்டிய போதும், அவர் புலமை பற்றி ய7 ம் கூற5'லை. அவர் இலங்கை ருே?யல் ஆசிய சங்கத்தின் சஞ்சிகையில் (CBRAS 2.4.59-80, 2. 5. 180-187) எழுதிய நூற்பட்டியலிலே ஏட்டு வடிவிலிருந்த பல புராணங்களைச் சுட்டியபோதும் தெல் லிப்பழை நெல்லைநாதர் பாடிய புராண மெதனையும் சுட்ட வில்லை. நீதித்துறையி லே நீதிபதியாக விளங்கிய காசிச்செட்டி யவர்கள் தம்மைப் போல் நீதித் துறை யிலே தரணியாகப் பணிபுரிந்து சிறப்புற்ற சேனதிராயர் குடும்பவிபரங்களை நன்கு அறிந்திருப்பார் என்பது எதிர்பார்க்க வேண் டியதாகும். சில பாடல்களை மட்டுமே பாடிய ஈழத்தவரைக் கூடத் தனித் தனியே விதந்து கூறிய பாவலர் சரித்திர தீபக ஆசிரியர் நெல்லைநாத முதலியாரை விதந்து கூற வில்லை. சிவராத்திரி புராணத்தைப் பரி சோதித்தவரும் பதிப்பித்தவரும் வட்டுக் கோட்டையைச் சேர்ந்தவராக இருந்த போதும், அவர்கள் ஆசிரியர் தெல்லிப்பழை நெல்லைநாதர் என்று கூறவில்லை. 1881
ஆம் ஆண்டுப் பதிப்பு வெளிவந்து ஐந்து
வருடங் கழித்துத் தீபகம் தந்த ஆசிரியர் புராண ஆசிரியரின் ஊர், சாதி, காலம் முதலியன தெரியவில்லை என்று கூறுகிருர், ஒரு நூல் வெளி வரு முன்பும் வெளிவந்த காலத்தைத் தொடர்ந்தும் ஆசிரியர் மர்ம மாக இருந்தாலும், சிறிது காலஞ்செல்ல அவர் வெளிப்பட்டிருப்பார். 1886 இலே கூட ஆசிரியர் விபரங்கள் வெளிவர வில்லை. நெல்லைநாத முதலியாரின் புலமை கூடத் தீபகவாசிரியருக்குத் தெரியவில்லை.
இந்திய வித்துவானின் தருக்கை அடக்கி யவர் சேனதிராயர் என்பர் தீபகவாசிரியர். மாணிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை யாழ்பபாணச்சரித்திரத்தில் (1912) முதன் முதலாக அப்பெருமையை நெல்லைநாத முதலியாருக்குத் தந்தார். வித்தகப் பத்தி ர்ாதிபரின் ஆசிரியர் சுன்ஞகம் அ. கும்ார சுவாமிப்புலவர் தமிழ் புலவர் சரித்திரத்தில் (1916) தீபக வாசிரியர் கூற்றினையே வழி மொழிந்து, சிலர் డ நெல்லைநாத

Page 22
கற்பனையும் வரலாறும்
கலியார் மேல் ஏற்றுவர் என்பர். 沅G CHಸ್ಲಿ"? அடக்கி, இரு ۔ ۔ யை வித்தியாபீடமாக மாற்றிச் சிவராத்திரி புராணம் பாடியவராகக் கருதப்பெற்ற நெல்லைநாத முதலியாருக்குக் குமார சுவாமிப் புலவர் தனியிடம் அளித்துச் சிறப் பிக்கர்ன்ம கவனிக்கத்தக்கது. ஆயினும் வேலுப்பிள்ளையவர்கள் யாழ்ப் டா ண வைபவ கெளமுதியில் (1918) முத்துத்தம்பி பிள்ளை கற்ற்ையே ஆதரித்துள்ளார். வித்த கத்தில் 8. 3. 1934 முதல் புன்னலைக்கட்டு வன் வித்துவான் சி. கணேசையர் எழுதிய விடயங்களே ஈநழாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதத்திலே (1939) தொகுக்கப்பெற்ற வை. இதனுள் 28.6.1934 இலே நெல்லை நாத முதலியார் பற்றி வித்துவான் கணே சையர் எழுதியுள்ளார். இதிலே வித்து வான் கணேசையர் நெல்லைநாத முதலியா ரைக் காவிய நாயகன் போலப் போற்றி எழுதியுள்ளமை கவனிக்கத்தக்கது. Fէք - நாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதத்தின் முக வுரையிலே;
**இதன் கண் வரும்புலவர் சரிதங்களுள் இருபாலை ஏகசந்தக்கிராகி எனப் போற்றபபடும் நெல்லைநாத முதலி யார். . . . முதலிய பலர் சரிதக் குறிப்புக்கள் தென்கோவைப் பண்டி
தர் பூரீமாந் ச. கந்தையபிள்ளை அவர் களால் எமக்கு உதவப்பட்டன’’
என்பர் வித்துவான் கணேசையர். ஆயி னும் அவர் கூட,
awmdawwdawwasewalwaw , * مصصمسه
தமிழராகிய நம்மிடம் ஒரு பெரு அது வேறென்றும் அல்ல, பிற பேதமை நமக்கு மிகுதியாக இ
30

கலாநிதி, பொ, பூலோகசிங்கம்
‘இவர் இயற்றிய நூல்களாயினும் தனிச் செய்யுள்களாயினும். இப் போ து கிடைத்தல் அரிதாயின."
என்று கழியுள்ள ம (ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்: பக். 30) கவனிக்கத்தக்கது, நெல்லைநாத முதலியாருடன் சிவராத்திரி” புராணத்தை இ2லக்கும் கருத்து 1939, இலே உருவாகவில்லைப் போலும்
நெல்லைநாத முதலியார் பாத்திரம் இரு பதாம் நூற்றண்டின் முதலாம் தசாப்தத் தை அடுத்து வளர்ச்சிபெறத் தொடங்கி யுள்ளது. இந்தியப்புலவரின் தருக்கை அடக்கி, ஏகசந்தக்கிராகி ஆகி, இருபாலை யை வித்தியாபீடமாக்கி நின்ற”நெல்லை நாத்_முதலியார் சிவராத்திரி புராணத்தின் ஆசிரியருமாகிவிட்டார். நெல்லைநாதமுதலி யாரின் வளர்ச்சியிலே s946): rio il npl , 9o6a5rri- . சிறந்த பங்குகொண்டி ருக்கின்றனர் என் பது தெளிவாகத் தெரிகின்றது. r
கற்பனை வரலாறு ஆகாது. கற்பனையை
வெளிப் படுத்த இன்று சிறந்த வாயில்களாக
நாவல், சிறுகதை போன்ற இலக்கியவடி
வங்களுள. அவற்றின் செல்வாக்கும்
பெருக்கமும் மறைமுகமாக இன்று வரலாற்
றின் தூய்மையைப் பேண உதவுகின்றன.
கல்கியின் சிவகாழி சபதத்தின் இரு முக்கிய
பாத்திரங்களான சிவக யும் நாகநந்தியடி
களும் கற்பனைப் பாத்திரங்கள் என்ற அறிவு
பெரும்பான்மையோருக்குண்டு வரலாற்று நாவல்களிலேயே கற்பனை யப் பகுத்துணரக் கூடிய பயிற்சியை நவின இலக்கியம் அளித் துள்ளன மயால் வரலாறு வளம் பெற்று உய், யும் சூழல் அமைந்துவிட்டது.
《མས།།
ங்குறை இருந்து வருகிறது. நடைய சொல்லால் மயங்கும், க்கிறது.
தம்பிக்கு -ாக்டர். மு. வ.

Page 23
ரதி ப
ஒரு பக்
ரதி பான்வ அலங்காரம் அற்புதம் !!
ரதி
* மன63தக் கவரும்
* கைவளையல்கள்,
* மயில் தோ கைெ
(ւp(ԿԲt. ரதி
★ 、 Air - Ar 5 女 L
ரதி
53A நவீனசந்தை
Sest Complimer:
Mahes
General Me
22
Phone ; 288 79

ான்வழி ஹவுஸ் க்கம் பார்த்தால் கற்பனை : லியைப் பார்த்தால் அற்புதம் 11
கலக்கும் அழகு சாதனப் பொருட்கள் பான்வி ஹவுஸ் b மணிமா லேகள் கான் பாக்ஸ், போஃர்ட் குட்கேஸ்கள் யனக் கூந்தலினையும் முடிமயிர் வலீககள் னதோடு தெரிவு செய்ய பான்வறி ஹவுஸ்
அழகு சாதன அன்பளிப்பு அலங்காரப் பொருட்கள் இல்லத்தின் பாவனைப் பொருட்கள் பாலர் விளையாட்டுப் பொருட்கள் நமோடு தேர்வுகண்டிட
பான்வலி ஹவுஸ்
யாழ்ப்பாணம்.
ומסs fr:
swari Stores
rchants & Commission Agents.
6, KEYZER STREET,
COLOMBO 11.

Page 24
SUNDARA MOOR
76, HOSPITAL
JAFFNA
நூராணி N
unrf U
கப் C
வாள் S;
செவான Sl
ஒடுகள் கையிருப்பாளர்கள் :- சுந்:
76, ஆஸ்பத்திரி வீதி,
மறீமுருகன்
விற்பனைப் பொருட்கள் :
உப்பு, அரிசி, பாக்கு, தவிடு,
தேங்காய் எண்ணெய்,
மொத்த பாகவும் சில்லறையாகவு
93, ஆஸ்பத்தி
யாழ்நகர்
உரிமையாளர் எஸ். எஸ். கனகேந்தி

THY & SONS.
ROAD,
OOR AN
N |C () R N
U
AW
EWANA
தரமூர்த்தி அன் சன்ஸ்
யாழ்ப்பாணம்.
ஸ்ரோர்ஸ்
கரி, எள்ளு, பிண்ணுக்கு,
கயிறு வகைகள் ம் பெற்றுக்கொள்ளலாம்.
வீதி,
,
நிரம் தொலைபேசி: 7535

Page 25
எனது
வாழ்த்துக்ச

V. P. sGGOTFGöT
70, பேங்க்சால்வீதி கொழும்பு 11

Page 26
உள்ளூர் உற்பத்திப்டெ
வெலிகம
இல. 139, 4ம்
கொழு
தொலைபேசி : 23271
WITH BEST
NASZA OG ANM
149; 4th CR
COL

ாருட்கள் விற்பனையாளர்
ஸ்ரோர்ஸ்
குறுக்குத் தெரு,
ம்பு 11.
COMPLIMENTS
EBROTHERS
OSS STREET,
OMBO 11.
Phone : 28805

Page 27
ஆவிகளுடன் தொ (ւpւգպւք T P
இப்போதே இறந்து போனவர்களி ஆவிகளை அழைப்பதும், தொடர் கொள்வதும், வேண்டியன கேட்டறிதலு மிகப் பழைய காலம் முதலே நடைமுை யில் இருந்து வருகிறது. ஆவிகளை அழை துப் பரீட்சை முடிவுகளை அறிகின்றனர் து 26: தேடுவோர் தக்க துணைவ ைரத் தெ கின்றனர்; சுட கருமங்களைத் தொடங் நினைப்போர் பேறுகளை அறிகினறனர். ஆ கட்குத் தீர்க்கதரிசனமும், அபாரசக்தியு இருப்பதால் ஆவியின் தொடர்பும், அவ யமும், முக்கியத்துவமும் நாளுக்கு நா அதிகரித்து வருகின்றது. ஆவிகளுட தொடர்பு கொள்வதிலும், அது பற்றி அ வதிலும் உளவியலாளர் மட்டுமன்றி, எ லோரும் ஆர்வங் காட்டி வருகின்றன
கொழும்பில் உள்ள பிரபலமான க லுரி மாணவி ஒருத்தி ஆவிகளை அழைத் உரையாடுவதன் மூலம் மாணவர்களி பரீட்சை முடிவுகளை முன் கூட்டியே தெ விக்கும் வல்லமை பெற்றவளாக இருந்தா இன்னும் பலர் ஆவிகளுடன் பேசவு தொடர்பு கொளளவும் முடிந்தவர்கள இருக்கின்றனர், ஆவிகளுடன் தொட் கொண்ட விந்தையான சம் வங்களை வில் கும் ஆச்சரியமான கட்டுரைகள் அடிக்க பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன.
ஆவிகளைத் தொடர்பு கொள்ள முக்கி மான இரண்டு முறைகள் கையாளப்பு கின்றன. முதலாவது முறை பிளஞ்செ (PLANCHETE) (pö pu T(h. 3 முறையில் இதய வடிவான அட்ை யொன்று அதன் மூன்று அந்தங்களிலு மூன்று மெல்லிய கால்கள் மீது நிறுத் பட்டிருக்கும் அட்டையின் நடுவிலுள் துவாரத்தின் வழியாக ஒரு பென்சில் செலு தப்படும். இந்த அட்டையின் கீழ் வெ ளைத் தாள் ஒன்று வைக்கப்பட்டிருக்கு ஆவியுடன் தொடர்பு கொள்பவர் ம லான ஒளியில் இந்த அட்டையின் முன் ஞ் உட்கார்ந்து இருந்து பென் சில் மேல் எ கலி வைத்துக் கொண் டு இருப்பார்; வே ண் பு ஆவியின் பெயரைச் சொல் அழைக் படும். ஆவி வந்து விட்டதாயின் வர் விட்டதைக் குறித்துத் தாளில் எழு படும். பின்னர் தான் பேச வேண்டியல் 'றை ஆவியோடு பேசுவார். ஆவியின் விை

டர்பு கொள்ள
எம். எல். நஜிமுதீன் மருத்துவ பீடம், கொழும்பு
;
ாக்
s
கள் இவரின் கை மூலமாகத் தாளில் எழு தப்படும்.
இரண்டாவது முறை, குவளைப் பேச்சு (TUMBLERTALK) (p63 purtéř. 9)ř. முறையில் சதுரமான, அழுத்தமான ஒரு அட் டை மீது A தொடக்கம் Z வரை எழுத்துக்களும், 0-9 வரை இலக்கங்களும் சதுரத்தின் நான்கு பக்கங்களிலும் எழுதப் பட்டிருக்கும். சதுரத்தின் மத்தியில் ஒரு அழுத்தமான குவளை குடிக்கும் பக்கம் அட் டையில் இருக்கத் தக்கதாக வைக்கப்படும் மங்கலான ஒளியில் இந்த உபகரணங்கள் வைக்கபபடும். இதில் ஆவியுடன் தொ
டர்பு கொள்வதற்கு உதவியாக இன்னுெரு
வரும் இருப்பார். இருவரும் குவளையின் இரண்டு பக்கங்களிலும் இருந்து வலது சுட்டு விரல்களை வைத்துக் கொண்டிருப்பார்
கள். தேவையான ஆவி அழைக்கப்படும்.
25
வேண்டியன கேட்கப்படும். ஆவியிடம் கேள்விகள் கேட்கப்பட்டதும் குவளை எழுத் துக்களை நோக்கி அசையும். அசைகின்ற எழுத்துக்களைச் சேர்த்து வாசித்தால் ஆவி யின் பதில் கிடைக்கும்.
ஆவியுடன் தொடர்பு கொள்வதென்பது மனித உணர்ச்சிக்கு அப்பாலான விசேட gibioart (Tib. (EXTRA SENSORY PERCEPTION) இந்த ஆற்றலால் வேறு பல அதிசய சாதனைகளையும் சிலர் ஆற்றி வரு கின்றனர். ஆயிரக்கணக்கான் ல் மல்கள் தொலை துரத்தில் உள்ளவர்களுடன் எவ் வித சாதனங்களும் இன்றித் தொடர்பு கொள்கின்றனர்; உரையாடுகின்றனர். (TELEPATHY) தொலை தூரத்தில் உள்ள பொருட்களைக் கையால் தொடாமல் கண் ஞல் பார்த்த மாத்திரத்திலேயே அ ைசக்கக் கூடியவர்களாய் இருக்கின்றனர் (TELEKNESIS). சிலர் எதிர் காலத் ைதப் பற்றியமுழு வ ைதயுமே சொல்லக் கடி பூவர்களாக இருக் கின்றனர். (CLAIRVOYANCE) இந்த அசா g5rt D'637 eg, ibo Gv (Super Natural Power) மிகவும் அபாரமானதாயும், ஆச்சரியமான தாயும் இருப்பதால் இதைப்பற்றி ஆராய வென உளவியல் ஆராய்ச்சி நிலையமொன்று 1882 ஆம் ஆண்டில் இலண்டன. ஸ் நிற விப் ul'l-g . (SOCETY OF PSYCHİ AL RESEARCH OF LONDON) g u Gó: G Lu65&avéj; கழகங்கள் இதில் முப் முரமாக ஈடுபட்டன.

Page 28
ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முடியுமா ?
வில்லியம்ஸ் ஜேம்ஸ், வில்லியம் டொகல், சிக்மண்ட பிராய்ட், எட்மண்ட் கேரணி, ஒலிவர் லொட்ஜ், ஹரி பிறைஸ் , ஜே. பி. ரைன் , திருமதி ஒரு சின் ரைன் போன்ற உலகப் புகழ் வாய்ந்த உளவியலாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இவர் களில் மிக அதிகமான ஆராய்ச்சிகளையும் பரிசோதனைசளையும் நடாத்தியவர் டாக்டர் ஜே. பி. ரைன் அவர்களும். அவரது மனைவி யான டாக்டர் லு:சின் ரைன் அவர்களு மாகும். அவர்கள் எழுதிய 'மனத்தின் Ligul at Goa)'' (New Frontier of Mind) ld 607:55.65, Galli)is. (The Reach of Mind) புலனுணர்வுக்கு அப்பாலான அ றி வு (Extra Sensory Perception) Lur go GMTGÁFuLuổio (pt Li Si () (5 L 2, Drt tig3 (My Thirty Years of Psychial Research) -93. Li ஆக்கங்களும் இன்னும் பல ஆராய்ச் சிக் கட்டுரைகளும் இத்துறைக்குப் பெரும் செல்வாக்கையும், திருப்பத்தையும் ஏற்படுத் தின. அவர்கள் ஆராய்ச்சியின் பேருகப் பல முக்கியமான உண்மைகள்வெளியாகின. இந்த அபார சக்தி உலகில் திட்டமாகவே இருக்கிறதென்று குறிப்பிடப்பட்டது. இந்த ஆற்றல் உள்ளவர்கள் எத்தனை ஆயிரக் கணக்கான மைல்கட்கு அப்பாலே தொடர்பு கொள்ள முடிந்தவர்களாய் இருக் கின்ற்னர், அது மாத்திரமன்றி உயர்ந்த கோபுரங்கள், கட்டிடங்கள் போன்ற எத் தன பெருந்தடைகள் இருந்த போதிலும் எந்த சங்கடங்களும் இன்றித் தொடர்பு கொண்டனர். இவைகளில் இருந்து இந்த அபார சக்தி ஒரு வகைக் கதிர்வீச்சாலேயே (Radiation) நடைபெறுகின்றது என்ற அபிப்பிராயம் நிராகரிக்கப்படுகின்றது. இத் தன அபாரமானதால் இது ஒரு சட்டத்து வத் தன்மை (PHYSICAL) என்ற எண்ண மும் ஒதுக்கப்படுகின்றது.
இந்த அபார சக்தி (E. S. P.) கொண் டிருப்பதாகச் சொல்லிக் கொள்கின்ற அனை வருக்கும் இந்த சக்தி இல்லை; சில மெஸ் மரிச வாதிகள் இந்த சக்தி இருப்பதாகக் குறிபபிடுவது கவலைக்குரியதாகும். இந்தப் அபார சக்தி பல பேருக்குண்டு; ஆல்ை அதைத் தெரியாதிருக்கின்றனர். தெரிந்த சிலருங் கூட எளிய விளம்பரம், அபார சக்தி பற்றிய பயம் போன்ற காரணங்க ளால் வெளிப்படுத்தாது இருக்கின்றனர். இந்த சக்தி தனிப்பட்ட எந்த விசேட ஆளுமை உடையவர்கட்கு (Personality) மாத்திரம் சொந்தமானதல்ல. யாரிடத் தும் உருவாகலாம்; இது இயல்பாகவே உள்ளதே தவிர இதை யாரும் உருவாக்க வோ அபிவிருத்தி செய்யவோ முடியாது.
f
雳6

எம். எல். நஜிமுதீன்
இந்த ஆற்றல் பெரும் புதிராகவே இருக் றது. ஏனெனில் இதற்குச் சிந்தனை ரீதி (TGOT 6 at jig, h g i2hu. ( No Rational Xplanation). அது மாத் திர ம ன் றி தவையானபோது கட்டளைகள் மூலம் இந்த க்தியைப் பிறப்பிக்க முடியாதாகையால் தைப் பரிசோதிப்பது மிகக் கஷ்டமாகும். து தவிர "உணர்வற்ற நிலையில்"(UNCONCIOS) ஏற்படுவதால் இதை ஆராய்ச்சி 'சய்ய முடியாதிருக்கிறது. அது தவிர உணர்வற்ற நிலையில் ஏற்படுவதால் சம் ந்தப்பட்டவரின் உணர்வுகளால் உண்மை லை பாதிக்கப்படுகின்றது. தனிப்பட்ட ரின் ஆளுமைக் காரர்ைகளும் (Personality actors) உண்மையைப் பாதிக்கின்றன. பிற்காலத்தில் இந்த ஆற்றல் பற்றி ஆராய்ந்த சோல்ற்றர், பேட்ரண்ட் ரசல், ஹாட்கென், பார்வோ போன்ற உலகப் கழ் பெற்ற உளவியலாளர்கள் பல ஐயங் ளைத் தெரிவித்திருக்கின்றனர். கிறிஸ் தாபர் ஸ்கொட், ஜே. பீ, பிறைஸ் ஆகி யாரின் கருத்துப்படி ஜே. பீ. ரைன் டாத்திய பரிசோதனைகள் எல்லாம் பெரும் ழுவுடையனவாய் இருந்தன. ஆனல் ந்த வழுக்கள் திருந்த முடியாதனவாய் ருந்தன. ஏற்கனவே குறிப்பிட்ட கஷ்டங் ள் இருப்பதால் முறையான பரிசோதனை ய அமைப்பது மிகவும் கஷ்டமாகும். ஆவி ளுடன் தொடர்பு கொள்வதும், துரத் ல் இருப்போருடன் உரையாடுவதும் ஒர் ணர்வுப் பரிமாற்றமும், கற்பனையுமே விர உண்மையெதுவும் இல்லை என்று கில் ர்ட் குரே என்ற உளவியலாளர் குறிப்பிடு டூர், ஆவிகளுடன் தொடர்பு கொண்டு ழுது வ ைத வித்தையாலும் (Cojurers ick) செய்து காட்ட முடியுமென்று டவி, ரிச்சர்ட், ஹொக்சன் ஆகியோர் தரிவித்துள்ளனர். ஒரு காலத்தில் ஆவி ள் சம்பந்தமான சாதகமான கருத்துக்கள் வளியிட்ட எட்மண்ட்கேர்னி பிராங்பாஉமோர் ஆகியோர் பிற்காலத்தில் ஆவி ளே இல்லை என்று எழுதலாயினர். ஆவி ளுடன் தொடர்பு கொள்வோர், ஆவி சால்வதாக சொல்பவையெல்லாம் அவர் ளது சொந்த மாய எண்ணங்களேயாகும் ubjective Hallucination ) G. g. It L if ly காள்வோர் பெறுகின்ற விடைகள் எல் ாம் அவர்களது எண்ணங்களை சார்ந்தன ாகவே இருக்கின்றன. அவர்களது.எண்ண ாங்கள் ஒரு உணர்வில்லா நிலையில் மறை கமாக வெளியாகின்றன. உதாரணமாக பூவியொன்றை அழைத்துக் கேள்விகள் கட்கும் போது கேட்பவருக்கு தெரிந்த 1ற்றுக்கு மாத்திரம் சரியான பதில் கிடைக்

Page 29
ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முடியும
கிறது, கேட்பவருக்கு தெரியாதவற்றுக்கு குறிப்பிட்ட ஆவிக்கு தெரிந்தாலும் தெ யாது என்றே பதில் வருகிறது. மருத்து டாக்டர் ஒருவர் சாதாரண ஒருவரின் ஆ யுடன் தொடர்பு கொண்டு மருத்துவ பற்றிய கேள்விகள் கேட்டால் சரியா பதில் கிடைக்கும், அதே நேரத்தி சாதாரண ஒருவர் மருத்துவ டாக்டர் ஒ வரின் ஆவியுடன் தொடர்பு கொண்டா அதற்குச் சரியான பதில் இல்லை.
தொடர்பு கொள்பவரின் மொழியி மாத்திரமே ஆவி விடைதகுவது வியப்பு குரியதாகும். அழைக்கப்படுகின்ற ஆவிக் ஒரு மொழி தெரிந்தாலும் தொடர் கொள்வோருக்கு தெரியாது விடில் உன மையான பதில் கிடைப்பது இல்லை. ஆ கள் இருப்பது உண்மையாய் இருந்தா ஆவிகட்கு மொழிகள் இல்லை. எம் மொ யிலும் பேசமுடியும். ஆகவே ஆவிகளுட தொடர்பு கொள்வது என்பது ஒரு என ணத் தோற்றப் பாடே என்பது இக் கட் ரையின் தனிப்பட்ட அபிப்பிராயமாகுப்
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறி பிட்ட மாணவியை இங்கு நினைவு கூ வேண்டியிருக்கிறது. இம் மாணவி பரீட்ை முடிவுகளை முன் கூட்டியே வெளியிட்ட கூட உணர்வற்ற நிலையில் தோன்றிய அ ளது எண்ணப் பிரதிபலிப்புக்களேயாகுப் மாணவிகளின் ஆற்றல் நிலை அவளுக் தெரிந்து இருந்தால் அவளுடைய 'ஆவி தொடர்பு" முடிவுகளும் பெரும்பாலும் ச யாகவே இருந்தன. உளவியல் பரிசோதை யின் போது இந்த உண்மை தெரியவந்தது
அப்படியானுல் 'ஆவித்தொடர்பு முை களில் ஏற்படும் அசைவு கட்குக் காரண என்ன உளமும், உடலும் ஒன்ருே டொன். பிரிக்க முடியாத நெருங்கிய தொடர்பு ளன. உளம் வருந்த, உடல் வருந்துகின் A) gj! ; உளம் நினைக்க உடல் செயற்ப படுகிறது. கால்கள் ஊனமாகி விட் தாக உளம் நினைக்கும் போது 'உண்ை யிலேயே' கால்கள் பல மற்று நடக்க மு. யாமல் ஆகி விடுவதை உளவியல் நோயா6 5 aidi (HYSTERICAL PARALYSIS) sna ஐாம். ஆவிகளுடன் தொடர்புகொள்ளு போது கைகளில் அசைவு நிகழ வேண் மென்று உள்ளம் நினைக்கிறது. ஆனல் ஒ மோன உணர்வில் இது இடம் பெறுவதா இந்த நினைவைத் தொடர்பு கொள்பவ அறியாதிருக்கிருர், உள்ளம் அசைக்கதினை கும் போது கை அசைகிறது. ஆகவே இந் அசைவுகள் உடலும், உளமும் சார்ந்

IT ?
う。 iff)
事
எம். எல். நஜிமுதீன்
sgy68 56/5GGITun (5b. (PSYCHOSOMATIC MOVEMENT) -
ஆவிகளுடன் தொடர்புகள் பற்றி இரண்டு முரன் பட்ட கருத்துக்களைக் காண லாம். புகழ் பெற்ற உளவியலாளர்களில் ஒரு சாரார் இந்த அபாரசக்தி மனத்துக் குண்டு; ஆகவே ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் என் கின்றனர். இன் ணுெரு சாரார் ஆவிகளே இல்லை யென்றும் தொடர்பே கொள்ள முடியாது என்றும் சாதிக்கின்றனர். ஒருவன் க உளவியல் நோ unt6) ( GLOSSOLALIA ) ut65 slLul டவர்களே ஆவிகளுடன் தொடர்பு கொள்வதாகவும், ஆவிகள் கதைப்பது போல் கொள்வதாகவும் சில உளவியலாளர் கருதுகின்றர்கள், 1938ம் ஆண்டில் இந்த அபார சக்தி பற்றிய அமெரிக்க உளவிய லாளரின் அபிப்பிராய மதிப்பீடொன்று நடத்தப்பட்டது. 352 உளவியலாளர் களில் 2% மானேர் இந்த சக்தி நிறுவப் LJ 'L- SP(b D-6ðs 6ð LD ( ESTABLISHED FACT ) என்றனர். இந்த சக்தி Gabj6 (upiq up glasgj (LIKELY POSSIBILITY ) : 7 % i ut fT G8 (GP) ri 5 CU5 G னர். இந்த சக்தி இருப்பது அபூர்வ LDTG.I. (REMOTE POSSIBILITY) என்று 36% வீதமானேர் தெரிவித்தனர். இபபடியொன்று இருக்கவே முடியாதென்று 15% வீதமாஞேர் அபிப்பிராயப்பட்டனர் 'தமக்கு எதுவுமே சொல்ல, முடியாமல் இருக்கிறது" என்று 42% வீதமானேர் ஒப்புக்கொண்டனர். இந்த அபார சக்தி பற்றிய ஆராய்ச்சி இப்போதும் நடை பெற்று வருகிறது. உலகின் குறிப்பிடத் தக்க உளவியலாளர்களில் ஒருவராக மதிக் கப்படும் எடின் பரோ சர்வகலாசாலையின் உளவியல் பேராசிரியர் ஜோன் பெலொட் இது பற்றி பல ஆராய்ச்சிகளை மேற் கொண்டுவருகிருர்,
இந்த அபார சக்தி விஞ்ஞான ரீதியாக இன்னும் நிறுவப்படவில்லை; ஆனல் இதற் காக அந்த சக்தி இல்லவே இல்லை என்று முற்ருகப் புறக்கணித்து விடவும் முடியாது இருக்கிறது. இப்போதுள்ள சான்றுகளைக் கொண்டு இதை ஏற்பதா அல்லது இன்னும் பல சான்றுகள் தேவையா என்பதே இப் போதுள்ள பிரச்சினையாகும். 'ஒரு கிழிந்த புத்தகத்தின் விடுபட்ட ஒற்றைகள் போல வே" இதுவும் குழப்பமான ஒன்ருகவே இருக்கின்றது.
ஆவிகளுடன் தொடர்பு கொள்வது சாத் தியமாஞல் இறந்து போன எத்த%னயோ உள்ளங்கள் உறவாடும். காலம் ஒரு பதில் சொல்லுமா?

Page 30
உலக விவசாயத்தின் ஒரு பொது நோக்கு
றைவிருத்தி நாடுகளின் அபி விருத்திப் பிரச்சினையில், அபி லிருத்தியடைந்த நாடுகளை விட அவை ட்கவும் குறைந்தளவு வளர்ச்சியை அடைந்
துள்ளன. என்பதை விட, அட 5த் .ெ டை ந்த நாடுகளுக்கும் அ ` 5* L-պւb நாடுகளுக்குமிடையிலான வ3 சசிமட்ட
வேறுபாடு நாளடைவிற் குறைவனிடத்து செல்வதற்குப் பதிலாக அதிகரித்து வரு ேெத அபிவிருத்திப் பொருளியலாளரை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனையாக இருந்து வருகின்றது. இந் நிலைமைக்கு இரு காரணங்கள், முக்கியமாகப், பொறுப்பாக இருந்துள்ளன எனலாம் ஒன்று, அறிவியல், தொழில்நுட்பம் என்பவற்றின் அடிபபடை பில் சில நாடுகளின் வருமானம், உற்பத்தி என்பவை, ஏனைய நாடுகளை விட விரைவாக அதிகரிக்கக் கூடிய புதியதொரு சூழ்நிலை தோன்றியிருத்தல் மற்றது. விரைவாக வளர்ச்சியடையும் நாடுகளிலிருந்து எமது வளர்ச்சியடையும் நாடுகள் நோக்கி இந்த நன்மைகள் பரவுவதற்கு ஏற்பட்டிருக்கும் தடைகள். குறைவிருத்தி நாடுகளின் கைத் தொழில், விவசாயம் ஆகிய இரு துறை களின் வளர்ச்சியும் இதனுற் பாதிக்கப்பட் டுள்ளது எனினும், அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும் குறைவிருத்தி நாடுகளுக்கு திடையிலான ஏற்றத்தாழ்விற் கைத் தொழிற் துறையின் அம்சங்களைப் பெரிதும், வலியுறுத்தி விவசாயத்துறையின் வேறுபாடு களைப் போதியளவு கவனத்துக்கு எடுக்காம விருத்தல் ஓரளவு வழக்கமாயிருந்து வரு கின்றது. ஆணுல், நடைமுறையில், இந் நாடுகளின் விவசாயத்துறைகளுக்கிடையே ஏற்படக்கூடிய தராதர வேறுபாடே கூடிய ளவு முக்கியத்துவம் வாய்ந்ததெனலாம். ஏனெனில், குறைவிருத்தி நாடுகளின் விவ சாயத்துறை, அதில் ஈடுபட்டிருக்கும் ஊழி யத்தின் அளவு, அது நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு வழங்கும் பங்கு, என்ற இரண்டைப் பொறுத்தவரையும் மிகப் பெரி யதாயிருப்பது மட்டுமன்றி, ஒரு நீண்ட கால மரபையும் கொண்டதாகும். ஆகவே கைத்தொழிற்துறை வளர்ச்சியடையாத
28

சமநிலை:
கலாநிதி வி. நித்தியானந்தம் பொருளியற்துறை, கொழும்பு வளாகம்
விடத்து பி விவசாயத்துறையிற் கணிசமான ளவு வளர்ச்சி ஏற்பட்டிருத்தல் அவசியமா கும் எனினும் அபிவிருத்தியடைந்த நாடு கனின் வில்சாய முன்னேற்றங்களுடன் ஒப் குறைவிருத்தி நாடுகளின் و 5 - خ - با نه ها விவசாயம் மிகவும் பின் தங்கியதொன் ருக வே காணப்படுகில்- m து. உலக விவசாயத் தை எடுத்து C ன்ெ அது மிகவும் சம் மற்ற ஒரு முறையில் வளர்ச்சிய ைந்திருப்பு தைக் காண முடிகின்றது. இத்தகைய சமமற்ற தன்மை எவ்வாறு உருவாகியது அதற்குரிய காரணங்கள் எவை என்பதை ஆராய்வதும்; இதனை நீக்கி உலக விவசா யத்தைச் சமநிலைப்படுத்துவதற்கு எடுக்கப் பட்டிருக்கும் சில முயற்சிகள் யாவை, என் பதை எடுத்துக் கூறுவதுமே இந்தக் கட்டு ரையின் நோக்கமாகும்.
19ம் நூற்றண்டின் இறுதியளவில் உரு வாகிய சர்வதேசப் பொருளாதார முறை மையின் கீழ் உலகத்தின் பொருளாதார நிலைமை பெருமளவுக்குச் சமநிலையடையு மென எடுத்துக்கூறப்பட்டது. இம்முறைமை யில் விவசாயப் பொருட்களும், மூலப் பொ ருட்களும் அயன மண்டலக் குடியேற்றப் பிரதேசங்களிலிருந்தும், ஐரோப்பியர் if 5 அண் ைமயிற் குடியேறிய நாடுகள் லிருந்தும் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படக்,  ைகத்தொழிற் பொருட்கள் அபிவிருத்தியடைந்த நாடுகள் லிருந்து குறை விருத்திப் பிரதேசங்களுக்கு ஏற்று மதி செய் யப்பட்டன. இது அபிவிருத்தியடைந்த நாடுகள், குறைவிருத்தி நாடுகள் ஆகிய இரு சாராருக்கும் நன்மை பயக்குமெனப் பட்டது. ஏனெனில், ஒவ்வொரு பிரதேச மும் ஒப்பீட்டு அடி ப்படையில் 'இயல்பாக வே நன்மை' தரும் பொருட்களின் உற். பத்தியில் ஈடுபடுவதாகக் கருதப்பட்டது. எனினும் இந்த முறைமை முதலாவது. உலக மகா யுத்தத்தின் பின் முறிவடையலாயிற்று. இரண்டாவது உலக மகாயுத்தம் முடிவடை யும் தறுவாயில் உலக விவசாயத்தின் சம

Page 31
உலக விவசாயத்தின் சமநிலை: ஒரு பொது நோ
நிலை முற்ருகச் சீர்குலைக்கப்பட்ட ஒரு நிலை யில் இருந்தது. விவசாயத்துறையின் வர்த் தகத் தொடர்புகள், எதிர்பார்க்கப்பட்ட தற்கு மாருக, ஒர் அடிப்படை மாற்றத் துக்குட்பட்டிருந்தன. அபிவிருத்தியடை யும் நாடுகள், உணவுப் பொருட்களின் தேறிய ஏற்றுமதியாளராக மாறியிருப்ப தற்குப் பதிலாகத் தேறிய இறக்குமதியாள ராகவே ஆகியிருந்தன.
ஆகவே அபிவிருத்தியடைந்த நாடுகள், குறைவிருத்தி நாடுகள் ஆகிய இரு சாரா ரும் பின்பற்றிய கொள்கைகள் உலக விவ சாயத்தைச் சமநிலைப் பாதையில் இட்டுச் செல்வதற்குப் பதிலாகப் பரந்ததொரு சம நிலையின்மையையே ஏற்படுத்தியிருந்தன.என் பது தெளிவாகும். உள்நாட்டு வர்த்தகம் சர்வதேச வர்த்தகம் என்ற இரு நிலைகளி லும் இக் கொள்கைகள், காரணிச் சந்தை விலை, உற்பத்திச் சந்தை விலை என்பன மிகத் தவருகப் புலப்படுத்துவதற்கே உதவி செய் Ꭶ5ᎶᎼᎱ . அபிவிருத்தியடைந்த நாடுகளும், குறை விருத்தி நாடுகளும் பின்பற்றிய தேசி யத் தன்மை வாய்ந்த வர்த்தக, அபிவிருத்தி திக் கொள்கைகள் நாடுகளுக்கிடையிலான காரணி அசைவு, உற்பத்திப் பொருள் அசைவு என்பவற்றைத் தடுக்கும் வகையி லேயே அமைந்திருந்தன. இது மட்டுமன்றி, நடைமுறை உற்பத்திக்கான வளங்களின் ஒதுக்கீடு, மற்றும் முதலீடு, தொழில்நுட்ப அபிவிருத்தி என்பவற்றுக்கான சந்தைத் தூண்டுதல்களும், பிற தூண்டுதல்களும் தவருனவையாகவ்ே இருந்தன. இதஞற் குறைவிருத்தி நாடுகளின் விவசாயம் எதிர் பார்த்தபடி பெருவளர்ச்சி அடைய முடிய வில்லை.
இவ்வாருக உலக விவசாயத்தின் சமநிலை யின்மை வளர்ந்து வருவதற்குரிய அடிப் படைக் காரணம் குறைவிருத்தி நாடுகள் தமது விவசாயத்தை இயற் ைக வளச் சார் புடைய ஒரு நிலையிலிருந்து அறிவியற் சார் புடையதாக மாற்றுவதிற் பின்தங்கியிருத்த லேயாகும். அபிவிருத்தியடைந்த நாடுக Oன் விவசாயம் நவீன பொருளியல் வளர்ச் சிக் காலப்பகுதி பூராவுமே மூலவளச் சார்பு டைய ஒரு தொழில் என்ற நிலையிலிருந்துஅறி வியற்சார்புடைய ஒரு தொழில் என்ற நிலை நோக்கி மாற்றமடைவதொன் ருக வளர்ந்து வந்திருக்கின்றது. மனித மூலதனம், தொ ழில்நுட்ப உள்ளீடுகள் என்ற இரண்டும் வ வ சாய வெளியீட்டின் வளர்ச்சிக்காதாரமாக இருந்துள்ளன. ஒப்பீட்டு நன்மையின் அடிப்

கலாநிதி வி. நித்தியானந்தம்
படை இயற்கை வளங்களின் கொடை என்ப திலிருந்து அறிவியல், கைத்தொழிற் திறமை என்பவற்றின் கொடை என்பதாக மாற்ற மடைந்திருந்தது. விவசாய உற்பத்தியி லான ஒபபீட்டு நன்மை, இதன் விளைவாகக் குறைவிருத்தி நாடுகளிலிருந்து அபிவிருத்தி யடைந்த நாடுகளை நோக்கிப் பெயர்ந்திருக் கின்றது. குறிட்டாக இரண்டாவது உலக
மகாயுத்தத்திற்குப் பின்பு இந் தப் பெயர்ச்சி
கூடியளவு வேகம் பொருந்தியதொன்முக ஆகியுள்ளது. ஏக்கருக்கான தலா உற்பத்தி, தொழிலாளிக்கான தலா வெளியீடு என்ற இரண்டும் இரண்டாவது உகல மக்ாயுத்தத் திற்குப் பிந்திய முதலிரு தசாப்தங்களிலும் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும், குறை விருத்தியடைந்த நாடுகளுக்குமிடையிற் பெருமளவு வேறுபட்டுள்ளது. உதாரண மாக, 1960-64 (சராசரி) க்கும் 1968ம் ஆண்டுக் குமிடையில் அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது தானிய உற்பத்தியை 123 மில்லியன் தொன்களால் அதிகரித்தன. ஆனல் குறைவிருத்தி நாடுகள்: அபிவிருத்தி யடைந்த நாடுகளை விடக் கூடிய சனத் தொகையையும், உயர்ந்த சனத்தொகை வளர்ச்சி விகிதத்தையும் கொண்டவையாக இருந்தும் கூட இதே காலப்பகுதியிற் தானிய விளைவை 52 மில்லியன் தொன்களால் மட்டுமே அதிகரிக்க முடிந்தது.
எனினும் இத்தகைய ஏற்றத்தாழ்வு அறி வியல், தொழில் நுட்பம் என்பவற்றின் அடிப்படையில் எற்பட்டதாயினும் ஏன் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கிறதென் பது ஆராயப்படவேண்டும். இரண்டாவது உலக மகாயுத்தத்தைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியிற் குறைவிருத்தி நாடுகளுக்குத் தனிப்பட்ட முறையிலும், பல்வேறு திட்டங் களின் அடிப்படையிலும் ஏராளமான தொழில்நுட்ப உதவி வழங்கப்பட்டது. இது தவிரக் குறைவிருத்தி நாடுகள் தாமாகவே பல விவசாய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டிருந்தன. ஆஞல் இவை உலக விவசாயத்தைச் சமநிலைப்படுத்துவதற்குப் பெருமளவு உதவியிருப்பதாகத் தெரிய வில்லை. அதற்குப் பதிலாகச் சமநிலையின் மை தான் கூடியளவுக்கு அதிகரித்துச் சென் றிருக்கின்றது. ஆகவே அறிவியல், தொ ழில்நுட்பம் தவிர்ந்த வேறு காரணிகளே இதனை ஊக்குவித்திருக்க வேண்டும். இவற் றில் முக்கியமானவை அபிவிருத்தி அடைந்த நாடுகளும் குறைவிருத்தி நாடுகளும் விவ சாய அபிவிருத்தி பற்றி உள்நாட்டிற் கைக்
கொண்டிருந்த கொள்கைகளாகும், பின்
29、

Page 32
உலக விவசாயத்தின் சமநிலை: ஒரு பொது நோ
வரும் இரு பகுதிகளும் முறையே இந்தக் கொள்கைகளை ஆராய்கின்றன.
அபிவிருத்தியடைந்த நாடுகள் உள்நாட் டிற் பின்பற்றிய விவசாயப் பாதுகாப்புக் கொள்கை, உலக விவசாயத்தின் ஏற்றத் தாழ்வுக்கு ஒரு முக்கிய காரணமாயிருந் திருக்கின்றது. விலைகளுக்கு ஆதரவாயிருத் 'தல், உயர்ந்த இறக்குமதி வரிகள், கட்ட ணங்கள், அநுமதிப்பங்கு எனபவற்றின் அடிப் படையில் இறக்குமதித்தடைகளை விதித் தல் என்பவை மூலம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் விவசாயப் பொருட்கள் பாது காக்கப்பட்டுள்ளன. மறுபுறம், குறைவி விருத்தி நாடுகள், தமது கைத்தொழிற் துறையைப் பாதுகாப்பதற்கான செலவை விவசாயத்துறை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு கொள்கையைப் பின்பற்றின. அர சாங்க சந்தைத் தனியுரிமைகளைப் பயன் படுத்தி விவசாய விலைகளைக் குறைந்த மட் டத்தில் நிலைப்படுத்தியதுடன், விவசாய ஏற்றுமதிகளின் மீதும் வரி விதித்தன. இதன் மூலம் கைத்தொழிற் துறையின் தொழி லாளருக்கு உணவுப் பொருட்களை மலிந்த விலைக்கு வழங்க முடிந்ததுடன், கைத்தொ ழில் மயமாக்கத்துக்கு வேண்டிய நிதியை யும் பெற்றுக் கொள்ள முடிந்தது. திறமை குறைந்த உள்நாட்டு உற்பத்தியாளரைப் பாதுகாக்கும் பொருட்டுச் செய்ற்கை உரம் போன்ற விவசாய உள்ளீடுகளின் விலைகள் அதே நேரத்தில், உலக விலைகளை விட் உயர்வாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. இதன் விளைவாக, விவசாயப் பொருட்களின் விலை கள் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உயர் வாகவும், குறைவிருத்தி நாடுகளிற் குறை வாகவும் மதிப்பிடப்பட்டிருந்தன. சாதா ரண வர்த்தக மார்க்கங்கள், சலுகை பெற்ற வர்த்தக மார்க்கங்கள் என்ற இரண்டின் வழி யாகவும் அபிவிருத்தியடைந்த நாடுகளின் மேலதிக விவசாயப் பொருட்கள் சர்வதேச சந்தையிற்குவிக்கப்பட்டமை இந்தச் சமநிலை யின்மையை மேலும் அதிகப்படுத்துவதா யிருந்தது.
குறைவிருத்தி நாடுகள், காரணிகளின். உற்பத்தித் திறமையை அதிகரித்து, உற் பத்தியில் விரைந்த வளர்ச்சியைக் கொண்டு வந்து, விவசாய ஏற்றுமதிகளை விரிவாக்கு வதில் எதிர்நோக்கும் முக்கியமான தடை பாதெனில், நிலவும் விலைகளில் அபிவிருத்தி யடைந்த நாடுகளிற் காணப்படும் மிகை
30

க்கு கலாநிதி வி. நித்தியானந்தம்
an
உற்பத்தித் திறன் ஆகும், உதாரணமாக: ஐக்கிய அமெரிக்காவின் உற்பத்தித் திறன் அத்துணை பெரியதொன்ருக இருந்ததால் 1970 ம் ஆண்டு ஏறக்குறைய 50 மில்லியன் ஏக்கர் பயிர் செய் நிலம் ஒரு தசாப்தத்துக்கு மேலாகச்செய்கைக்குட்படுத்தப்படாமலிருந் சிது ஆத்துடன் சலுகை பெறற நிபந்தன்ை களின் மேல் நடைபெறும் வர்த்தகத்தினுர டாக விவசாய ஏற்றுமதிகள் சர்வதேச சந் விதிகளிற் குவிக்கப்பட்டன. பொதுச் சட் டம் 480 ன் கீழ் அந்நிய நாணயங்களுக்கான Gfall frtu விற்பனை, இரு விலை முறை? மயி னுாடாக நடைபெறும் வர்த்தகம் என்பன் ^க்தகைய சலுகைகளிற் குறிப்பிடத் தக்க
இரு விலை முறைல்மயின் கீழ் உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் தமது உற்பத்திப் பங்குக்குக் கூடிய ஒரு விலையை யும், ஏற்றுமதி செய்யப்படும் பங்குக்குச் சர்வதேச சந்தை நிலைை மக்கேற்ற ஒரு விலை யுமாக இரு விலைகளை ஒரு விவசாயி பெற்றுக் கொண்டான். ஐக்கிய் அமெரிக்கா தவிர்ந்த ஏனைய அபிவிருத்தியடைந்த பிரதேசங்களி லும் இதே நிலைமையே காடைபட்டது. மேற்கு ஐரோப்பாவின் ஐரோப்பிய பொரு ளியற் சமூகத்தில் (EEC) அங்கம் வகிக்கும் நாடுகளில், தானியவிலைகள், பல சந்தர்ப் புங்களில் உலக விலைகளை விட இரு மடங் காகக் காண படுகின்றன, வழங்கபபடும் ஏற்றுமதி உதவிப் பணத்தின் அளவு அத் துணை பெரியதாயிருப்பதால், அது மிக நீண்ட தூரத்திலிருக்கும் தென்கிழக்காசிய ஏற்றுமதியாளர்களின் விலைகளையே பாதிக்க வல்லதாயுள்ளது. 1969ம் ஆண்டு ஐரோப் பிய பொருளியற் சமூக நாடுகள் Լյոն பொருட்களின் மிகை உற்ப்த்திகளைக் கை யாளுதல், இருப்பில் வைத்திருத்தல், விற் பனே செய்தல் என்பவற்றுக்கு மாத்திரம் ஏறக்குறைய ஒரு மில்லியன் டொலர்களைச் செலவிட்டிருந்தன. ஐக்கிய இராச்சியமும் எப்போதும் விவசாயத்தில் ”சுயதேவைப் பூர்த்தி செய்யும் ஒரு கொள்கையையே பின் பற்றி வந்துள்ளது. இதே போன்று ஜப்பா னும் உயர்ந்த ஒரு பாதுகாப்புக் கொள்கை யைப் பின் பற்றி வந்திருபபதைக் காண முடிகின்றது, 1960ம் ஆண்டுக் காலப் பிற் பகுதியில் ஜப்பான் அரிசி இறக்குமதி செய் யும் நாடு என்ற நீண்ட கால் நிலையிலிருந்து அரிசி ஏற்றும்தி செய்யும் ஒரு நாடாக மாற்றமடைந்தது. ஜப்பானிய அரிசி உற் பத்தியாளருக்கு வழங்க பட்ட விலைகள் உலக விலைகளின் இரு மடங்குக்கு மேன் பட்டனவாக இருந்தன. உதவிப்பணத்திற்

Page 33
உலக விவசாயத்தின் சமநிலை: ஒரு பொ,
மூலமும் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்ட மாட்டிறைச்சி, அயனமண்டலப் பழவ கள் போன்றவற்றின் இறக்குமதிகள் ே மளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டன.
கட்டில்லா வர்த்தகக் கொள்கை அடிப்படையில் எந்த ஒரு துறையின் பத்திக்கும் பாதுகாப்பு உண்மையில் அ கப்பட்டிருக்க கூடாது. எனினும் விருத்தியடைந்த நாடுகளின் விவசா துறை எபபொழுதும் பாதுகாக்கப்ப ஒரு நிலையிலேயே இருந்து வந்திருப்பத கூறலாம். கைத்தொழிற் புரட்சிை தொடர்ந்து வந்த காலப்பகுதியிலும்,இ டாவது உலக மகாயுத்தத்தைப் தொடர்ந்த காலப்பகுதியிலும் ஒரு ே பட்ட நோக்க ஒளுக்காக அபிவிருத்தியடை நாடுகள் தமது விவசாயத் துறையைப் ட காக்க முன்வந்தன. எனினும் இத்தை பாதுகாப்பு முயற்சிகளின் விளைவு ஒன் வே இருந்தது. 6 கத்தொழிற் புரட் காலத்தில் வேண்டப்பட்ட பாதுகா முக்கியமாக, இரு காரணிகளைப் பின்ன யாகக் கொண்டிருந்தது. (1) விவசா துறை, கைத்தொழிற் துறை என்பவற். தொழிலாளரிடைய்ே உற்பத்தித்திற வருமானம் என்பவை வேறுபட்டிருத்த (t) நாடுகளின் நவீனமயமாக்கத்தின் டே வளங்களின் பெரும் பகுதி விவசாயத் ருந்து கைத்தொழிலுககுத் திருபப்ப விடத்து, ஏனைய வெளிநாட்டு விவச உற்பத்தியாளருடன் பார்க்குமிடத்து, பிட்டு நன்மையை இந்நாடுகளின் விவச கள் இழந்திருந்தமை. ஆணுல் இரண் வது உலக மகாயுதத்தத்திற்குப் பின் விே டப்பட்ட பாதுகாப்பு வேருேர் அடிப்ப யிலிருந்தெழுந்திருந்தது. அபிவிருத் டைந்த நாடுகளின் விவசாயம் மூலவ சார்புடைய ஒரு தொழில் என்ற நி: லிருந்து அறிவியற் சார்புடைய ஒரு தெ லாக மாற்றமடைந்து கொண்டிருந்த யில் விவசாயத் துறையின் உற்பத்தித் தி வளர்ச்சி, கைத்தொழிற் துறையின் பத்தித்திறன் வளர்ச்சியை விடக் கூ தொன் ருக இருந்திருக்கின்றதுஎனினும் : நாட்டுச் சந்தைகளில் விவசாயப் பொ களுக்கான கேள்வி ஒப்பீட்டு ரீதியில் நெ ச்சியற்றதாகவே காணபபட்டது. இத வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த உள்நா விலைகளுக்கெதிராக விவசாயிகள் பாது புக் கோரி நின்றனர்.
விவசாயிகளின் இந்த வேண்டுகோ கிணங்க, அபிவிருத்தியடைந்த நாடுகை

து நோக்கு கலாநிதி வி. நித்தியானந்தம்
-து. [ 6Ꮘ ᏪᏏ
}ւմ(5
sı
அரசாங்கங்கள், உள்நாட்டு விவசாயத்தைப் பாதுகாக்கும் பொருட்டுக் கூடியளவு சிக் கல் மிகுந்த தேசியக் கொள்கைகளை வகுத் துள்ளன. இந்தத் தேசியக் கொள்கைகள், முக்கியாமக மூன்று அம்சங்களை உள்ளடக்கி யுள்ளன (i) இறக்குமதிகளைப் பலவீனப் படுத்தல், இதனை நடைமுறைபபடுத்தும் வகையில் இறக்குமதித் தீர்வைகள், அளபf ரீதியிலமைந்த கட்டுபபாடுகள், அரச வர்த் தகம், பன்முறை மாற்று விகிதங்கள் என் பன கையாளப்பட்டுள்ளன. (i) ஏற்று மதிகளை ஊக்குவித்தல், ஏற்றுமதி உதவிப் பணம், பன்முறை மாற்று விகிதங்கள் என் பன இதற்குக் கையாள பட்டுள்ளன். (i) உள்நாட்டு உற்பத்தியை நேரடியாக ஊக்குவித்தல் விலைகளுக்கு ஆதரவாயிருத் தல், குறைவுக் கொடுபபனவுகள் என்பன இதற்குச் சார்பாகக் கையாளபபட்டன, இம்முறை களெல்லாவற்றினதும் தேறிய விளைவு யாதெனில் உயர்ந்த அளவிலான பாதுகாப்பேயாகும். இத் த  ைக ய *புதிய பாதுகாப்பு முறைகளின் சிக்கலான தன்மை காரணமாக அவற்றை நாடுகளி டையே ஒபபிடுவது கடினமாக உள்ளது. எனினும் 2 வது உலக யுத்தம் முதல் 1960 ம், ஆண்டுக் காலபபகுதி வரையிலான தரவுகளை வைத்துப் பார்க்குமிடத்து விவ சாயத்துறைக்கு அளிக்கபபட்ட பாதுகாப் புப் பெரும்பாலான அபிவிருத்தியடைந்த நாடுகளில் அதிகரித்துள்ளதென்பது மட்டும் உண்மையாகும்.
மேற்கூறிய "பழைய" அல்லது "புதிய பாதுகாப்பு, தேசியப் பொருளாதாரக் கொள்கையில் எவ்வாறு பிரதிபளித்துள்ள தென்பது நாட்டுக்கு நாடு பரந்த வகையில் வேறுபட்டுள்ளது. உலக நாடுகளில் இங்கி லாந்து மாத்திரம் தான் விவசாயப் பாது காப்புக் கொள்கையை ஒரு குறுகிய காலப் பகுதிக்குக் கைவிட்டிருந்ததெனக் கூறலாம், 19ம் நூற்றண்டில், அதன் ஒப்பீட்டு நன்மை உறுதியான ஒரு முறையில் கைத் தொழிற் துறையைச் சார்ந்திருப்பது தெளி வாகியிருந்தது, கைத்தொழிற் பொருட் களுக்கான கேள்வி வெளிநாட்டுச் சந்தை களில் மிகக் கூடிய நெகிழ்ச்சியுடையதாக இருந்தது. இதனுல் விவசாயம் பாதுகாப் புக் கொள்கை, கட்டற்ற வர்த்தகத்துக்கு இடமளிக்க வேண்டியதாயிருந்தது. 1846ம் ஆண்டு தானியச் சட்டங்கள் நீக்கபபட்ட மை இதன் எதிரொளியேயாகும். எனி னும் கைத்தொழிற் புரட்சி ஏற்பட்டு ஏறக்
குறைய அரை நூற்றண்டு காலம் சென்ற

Page 34
உலக விவசாயத்தின் சமநிலை: ஒரு பொது நோக்கு
பின்பே இது ஏற்படுவது கவனிக்கத் தக்க தாகும். பெரிய பிரித்தானியாவில் கைத் தொழில் உற்பத்தியாளன், நுகர்வோன் ஆகிய இரு சாராரது நலனும் ஒன்ருகஇருந் தது. அவர்கள் மலிந்த உணவை வேண்டி நின் றதால், விவசாயிகளுக்கெதிராக இருவரும் இணைந்து கட்டற்ற வர்த்தக்த்தைக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றனர், ஆனல் வேறெந்த நாட்டிலும் இவ்வாறு வர்த்தகக்கைத்தொழிற்துறையைச் சார்ந்த வரது நலன்களும், நுகர்வோரது நலன்களும் ஒன்றுபட்டிருந்ததாகக் கூற முடியாது. ஏனைய ஐரோப்பிய நாடுகளிற் பலவும் கைத் தொழிற் துறையின் தமது ஒப்பீட்டு நன் மையைச் சந்தேகித்ததுடன், கைத்தொழிற் பொருட்களுக்கான வெளிநாட்டுச் சந்தை யும் பெருமளவு நெகிழ்ச்சியற்றதெனவே கருதின. உதாரணமாக, 1870 1880ம் ண்டுக் காலப்பகுகளிற் புதிய கண்டங்களி விருந்து தானியம் பிரான்சிலும், ஜேர்மனி யிலும் குவிய முற்பட்டபோது அவை பாது காப்புக் கொள்கையையே கையாள முற் பட்டன. இக் காலப்பகுதியில் நிலவிய உல மந்தம் இதனை மேலும் ஊக்குவிப்பதாயிருந் தது. 1879ம் ஆண்டு ஜேர்மனியில் பிஸ்மார்க் விதித்த தானிய இறக்குமதி மீதான வரி ஜீஸ்கர் வர்த்தகத்தினர், இரும்பு உருக் குக் கைத்தொழிலாளர் ஆகிய இரு சாராரது வேண்டுகோளையும் பூர்த்தி செய் வதாகவே இருந்தது. ஆகவே விவசாயிகள், கைத்தொழிலாளர் ஆகிய இருவருமே இதன் மூலம் பாதுகாக்கப்பட்டனர். 1890ம் ஆண்டு வர்த்தக விரிவாக்கதிதினை ஏற்படுத் தும் பொருட்டு இந்த வரி குறைக்கப்பட்ட போதும் , பாதுகாப்பு ஒரு போதும் முற்ருக ஒழிக்கபபடவில்லை. பிரர்ன்சிலும் விவசாயப் பொருட்களின் இறக்குமதி மீதான வரி. 1892ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு, 1895ம் ஆண்டு மேலும் உறுதிப்படுத்தப்பட்டு முத லாவது உலக மகாயுத்தத்தின் பின் மீண்டும் உயர்த்தப்பட்டது. 1930 ம் ஆண்டுக் க்ாலப் பெருமந்தத்தின் போது, வரிகளின் எண்ணிக்கை மேலும் உயர்த்தப்பட்டது. பிரஞ்சுக் கைத்தொழிலின் பலம் குறைந்த நிலையும், ரஷியா, அவுஸ்திரேலியா, அமெ ரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்த மலிந்த தானிய இறக்குமதிகளின் பயமுறுத்தலுமே பாதுகாப்புக் கொள்கைக்குரிய முக்கிய காரணங்களாயிருந்தன.
1930ம் ஆண்டுக் காலப் பகுதியிலேற் பட்ட உலகப்பெருமந்தம் வர்த்தகத் தாராண்மையின் முடிவைப் பூர்த்தி செய்து வைக்கும் ஒரு நிகழ்ச்சியாயிருந்தது. உலக

கலாநிதி வி. நித்தியானந்தம்
டுகள் அனைத்துமே வரிகளின் எல்லையை பர்த்தி விட்டன. உதாரணமாக, ஐக்கிய மெரிக்காவில் விவசாய விலைகளுக்கு ஆதர சித்தல், இதன் பின்பு, அதன் விவசாய ாள்கையின் நிரந்தர அம்சமாகி விட் 1. ஆரம்பத்தில் இறக்குமதித் தீர்வை ", விலை ஆதாரங்கள், உற்பத்தி அநுமதிப் குகள் என்பன விவசாயப் பொருட்களின் கிழ்ச்சியற்ற நிரம்பலுக்கெதிரான ; ரத்த கேள்விச் சுருக்கத்தில காரணமாக பசாய விலைகள், வருமானம் எல் பன tச்சியடையாமற் பாதுகாக்கும் பொருட் விதிக்கப்பட்டன. ஆனல் இதன் பின்பு பட்ட வளர்ச்சிகள் ஆவற்றை நிரந்தர க்கி விட்டன. இதில் முக்கியமானது ம் ஏற்கெனவே குறிப்பிட்ட, மூலவளச் ர்புடைய நிலையிலிருந்து அறிவியற் சார் டய நிலை நோக்கி விவசாயம் ப்ெயர்ந்து ன்றமையும், அதன் மூலம் ஏற்பட்ட பத்தி அதிகரிப்புமாகும். ஐக்கிய அமெ காவில்விவசாயத்துறையின் ஊழிய விளை }ன் 1925-50 க்குமிடையில் வருடாந்,
3.0% க்கு மேலாகவும், 1950 ம் 60ம் ஆண்டுக் காலப் பகுதிகளில் வரு ந்திற்கு 6.0%க்கு மேலாகவும் அதிகரித் க மதிப்பிடப்படுகிறது. ஆனல் உற் தி அதிகரித்த அதே நேரத்தில்விவசாயப் ாருட்களுக்கான கேள்வி மிகக் குறைந்த அளவிலேயே அதிகரித்துக்கொண்டிருந் 1. உணவுப் பொருட்களுக்கு ஏற்பட்ட க் குறைந்த வருமான நெகிழ்ச்சியே நற்குக் காரணமாகும். வருடத் துக்கான ள்வி அதிகரிப்பு 2.0%க்கும் குறைந்த iான்ருகவே கணிக்கப்பட்டது. இதனுல் ாநாட்டு வர்த்தக மாற்றுவிகிதம் விவசா துறைக்கெதிரானதொன் ருக மாறி நந்தது. இந்நிலையில் விவசாயிகள் கூடிய பு பாதுகாப்பை வேண்டி நின்றதுடன் ாநாட்டில் விலைகளுக்கு ஆதரவளித்தல், த்தின் பாவனை மீது கட்டுப்பாடு என்ப ]றையும் கோரினர்.
இத்தகைய பொருளாதாரக் காரணிகளை சியல், சமூகக் காரணிகள் மேலும் பலப் த்தின. ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், பான் ஆகிய எல்லா நாடுகளிலும் சந் iச் சக்திகளிலிருந்து விவசாயிகளைப் பாது ப்பது பிரபல்யம் வாய்ந்த ஒரு கொள்கை கி விட்டது. அத்துடன் விவசாயியை தன்மையாகக் கொண்டிருக்கும் குடும்பப் ானையை அடிப்படையாகக் கொண்ட சாய முறைமையைப் பேணுவதன் மூல சமத்துவம் வாய்ந்த ஒரு சமுதாயத்தை தியான அரசியல் முறை யையும்

Page 35
உலக விவசாயத்தின் #ഥp:: ஒரு பொது
அமைக்கலாமென்ற நம்பிக்கை இன்னுட மேற்கு நாடுகளில் நிலைத்திருப்பதொன்.( கவே காணப்படுகின்றது.
அபிவிருத்தியடைந்த நாடுகளில், பா: காப்புக் கொள்கைகள் தொடர்ந்தும் தர வாய்ந்த முறையிற் கையாளபபடுத்துவத கும் இன்னுெரு முக்கிய காரணம் அவற்றி நிர்வாகத்திறமையாகும், ஆரம்பத்தி விஜலகளைச் செயல் முறைப் படுத்தல், 2. பத்தி முகாமை, வருமான மறு பங் என்பனவற்றுக்கெனக் கையாளபபட்ட ஒே முறை வரிவிதிப்பேயாகும். ஆனல்1 வ உலக மகா யுத்த காலத்தில் ஆரம்பித்து பின்பு 11வது உலக மகாயுத்தத்தின் போ விரைவாக வளர்ச்சியடைந்த அரச நிர்வ கக்கட்டுப்பாட்டின் காரணமாக விலைகளுக் ஆதரவளித்தல், நிலப்பாவனைக் கட்டுப்பா போன்ற புதிய பல முறைகளையும் அரசா கம் திறமையாகக் கையாள முடிந்தது. அ சாங்க நிர்வாகம், கட்டுப்பாடு என்பவற்றி இவ்வாறு ஏற்பட்ட மிகக் கூடிய முன்னே ஹத்தை ஹிக்ஸ் "அரசாங்கத்தில் ஏற்பட் நிர்வாகப் புரட்சி" என்றே அழைக்கின் ரு இதனுல் இன்று அபிவிருத்தியடைந்த நள் களின் அரசாங்கங்கள் ம க ச் சிக் க மிருந்த கொள்கைத் திட்டங்களையு. நேரடிக் கட்டுப்பாடுகளையும் நன்கு நிர் கிக்கக் கூடியனவாயுள்ளன, ஆகவே இ பாதுகாப்புக் கொள்கைகளின் வெற்றின்
யும் நன்கு உறுதிப்படுத்துகின்றது.
எவ்வாருயினும், அபிவிருத்தியடை நாடுகள் தமது விலைக்கொள்கை, வர் கக் கொள்கை என்பவற்றைக் குறைவிரு நாடுகளின் நன்மையைப் ப்ாதிக்காமற் ன் கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிட தக்கது. உதாரணமாக, அபிவிருத்தியன ந்த நாடுகள், சீனி வர்த்தகத்தின் ! விதித்திருக்கும் பலவிதமான கட்டுப்பா களையும் நீக்கி, அதனைக் கட்டற்ற முறைய நடைபெற அனுமதிக்குமானல், அதன் மூல சீனி ஏற்றுமதி செய்யும் அபிவிருத்தியன யும் நாடுகள் வருடமொன்றுக்கு ஒரு மில் யன் டொலருக்கும் கூடியதொரு தொ6 யைச் சீனி ஏற்றுமதி மூலமான தேற பெறுமதியில் அதிகமாகப் பெற முடியுபெ மதிப்பிடப்படுகின்றது.
ஆகவே இவ்வார் க, அபிவிருத்தியடை நாடுகளின் பாதுகாப்புக் கொள்கைக உலக விவசாயத்தின் சமநிலையைக் குலை தில் பெரும் பங்கு வகித்தன. ஆளுல் ஆ விருத்தியடைத்த நாடுகளின் திறமைய

நோக்கு கலாநிதி வி. நித்தியானந்தம்
ந்த ள், لان
t
●3
பிதிர பலிப்பு என எடுத்துக் கொண் டாற் குறைவிருத்தி நாடுகளின் திறமையின்  ைம இந்தச் சமநிலையின்  ைமயை மேலும் அதி கரிப்பதாயிருந்தது.
I
இரண்டாவது உலக மகா யுத்தத்துக்குப் பிந்திபஇரு தசாப்தங்களிலும் குறைவிருத்தி நாடுகள் பின்பற்றிய அபிவிருத்திக் கொள் கைகள் பெருமளவுக்கு வளங்கள் தவருன முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு வழி வகுத்துள்ளன. கைத்தொழில் அபிவிருத்தி விவசாய அபிவிருத்தி என்ற இரண்டைப் பொறுத்தவரையும் கையாளப்பட்ட கொள் கனகள் காரண களின் கொண் டயை எவ்வ  ைக யிலும் கருத்திலெடுத்திருப்பதாகத் தெரியவில்லை. அரசாங்கத்துக்குப் பொறுப் பாயிருந்தோர் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத் துக்குச் சார்ப்பான வன கயிற் கொள்கைகளை வகுத்தமை, அபிவிருத்தி திட்டமிடுவோர் அவற்றை சரியான படி பாகுபடுத்தத் தவறி யமை என்ற இரண் டுமே இதற்குப் பொறுப் பாயிருந்தன.
முன்னேற்றமடைந்திருந்த ந க ர ப் பொருளாதாரங்களின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டுமென்பதே இந்தக் கொள் கைகளின் அடிப்ப ைட நோக்கமாக இருந் தது. குறைவிருத்தி நாடுகள் பலவும் குடி யேற்றநாட்டு வாதத்துக்குட்பட்டிருந்த நிலை யில் மேற்கத்திய வல்லரசுகள் பின்பற்றிய வர்த்தகக் கொள்கையின் பயஞகவும்: அவற் றின்  ைகத்தொழில் உற்பத்தித் திறமையின் காரணமாகவும், குறைவிருத்தி நாட்டுக் கைத்தொழில்கள் யாவும் (சிறப்பாகக் கைத் திறக் எ கத்தொழில்கள்) சீரழிக்கபபட்டிருந் ததோடு, இந்நாடுகள் மூலப்பொருள் உற் பத்தி, முதல் விளைவுப் பொருள் உற்பத்தி என்பவற்றிற் சிறப்புநிலை அடைந்த நாடு களாகவும் உருமாற்றப்பட்டிருந்தன. மே
லும் இந்தச் சிறப்புநிலை உற்பத்திக் கூடப்
பெரிதும் அந்நிய ஆதிக்கத்து க்குடபட்ட தொன் முகவே இருந்தது ஆகவே குறை விருத்தி நாடுகள்ன் அரசியற் தலைமையின் முக்கிய நோக்கம், இத்தகைய ‘முதலாளத் துவ முறையை வேறு வகைப் புதிய பொரு ளியல் ஒழுங்குமுன்றகள் ஞற் பிரதியீடு செய்த இவற்றின. மரபுவழி வந்த சுரண் டல் நிலையை நீக்குவது டன், ன கத்தொழில் அமைப்பொன்றை உருவாக்குவதன் மூலம் அபிவிருத்தியட்ைந்த நாடுகளின் மீது தங்கி யிருத்தல்யும் பெருமளவுக்குக் குறைத்த
லாகும். இத்தகைய கொள்கை தேசிய

Page 36
உலக விவசாயத்தின் சமநிலை: ஒரு பொது நோக்கு
ந்ன்மையை முக்கியமாக முன்வைத்திருந்த தென்பது தெளிவு. எனினும், கொள் கையின் ந  ைட மு  ைற  ைய தோ க் கு மிடத்துத் தனியா ர் முயற் சிக் குப் பதிலாக அரசாங்க முயற்சிகளை விரும்பும் ஒரு போக்குத் தென்படுவதை அவதானிக்க லாம். சிறப்பாக உள்நாட்டுப் பொருளா தாரத்திற் தனியுரிமை நிலை வகிக்கக் கூடிய பொதுசன சேவைகளைப் பொறுத்தவரை இது பெரிதும் உண்மையாகும். வேறு துறைகளிற் கையாளபபட்ட தேசிய பொரு ளாதாரக் கொள்கையையும் சுதேச முயற்சி யை வலியுறுத்தவதாகவே அமைந்திருந்தது. இத்தகைய கொள்ள க, இயல்பாகவே, வளங்களின் பாய்ச்சலை நெறிப்ட த்து வதற்கு வரிகள், ர்ேவைகள், செலாவணிக் கட்டுபபாடுகள், "லக்கொள்கைகள் என்ப வற்றைக் கையாள்வதாக இருந்தது. C சிய
நன்மை பற்றிய உணர்வு சமவுடமைச்
சித்தாந்தத்தால் உறுதிப்படுத்தப்பட்ட நிலை களில், தொழில்களின் பொது உடைமை எல்லாத் துறைகளையும் ஆக்குவித்துக் கொள்ள முற்பட்டதெனலாம். உதாரண மாக, ரியூனிசியாவில் 1960ம் காலப்பகுதி யின் பிந்திய கட்டங்களில் ஆது சிறுகைத் தொழில்கள், விவசாயம் விநியோகம் என்ற துறைகளைக் கூட உள்ளடக்கியிருந்தது.
பொதுவாகக் குறிப்பிடுமிடத்துக் குறை விருத்தி நாடுகளின் விவசாயத்துறையின் விரைந்த வெளியீட்டு வளர்ச்சிக்கு இயை பான கொள்கைகளைப் பின் பற்றுவதற்கு அவை தவறி விட்டன வென்றே கூற வேண் டும். சில சந்தர்ப்பங்களில், விவசாய அல் லது பெருந்தோட்டத் துறை மீது பெரு மளவுக்குத் தங்கியிருந்த அரசியற் செல் வாக்குடையோரிடமிருந்து வ ரு மா ன ப் பாய்ச்சலைத் திருப்பிவிடும் வகையிலான கொள்ள ககள் எ கயாளப்பட்டன. வேறும் சில சந்தர்பபங்களிற் பொருளியல் ரீதியான தூண்டுதல்களுக்குக் குடியான்கள் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு நிறுவன ரீதியான தடைகள் நிலவுவதால் 'வசாயத் துறையினூடாகப் பொருளாதார வளர்ச்சி யை ஏற்படுத்த முடியாதென்று கருதப்பட் -gil *1.க அதிகமான குடியான் கள் . பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முட்டுக் கட்டையாகக் கொள்ளபபட்டுக் கைத்தொ ழில் வளர்ச்சி மேற்கூறிய தடைகளை இல் லாமற் செய்து பொருளாதார அபிவிருத் திக்கு இட்டுச் செல்லுமெனப் பட்டது. இத் தகைய எண்ணக்கருக்களின் விளைவு யாதெ னில் பரம்பரையாகச் செல்வாக்குப் படைத் தோர், குடியான்கள் ஆகிய இரு சாராரிட
34
GBL

கலாநிதி வி. நித்தியானந்தம்
ருந்தும் வருமானப் பாய்ச்சலே மத்திய ர்க்கம் நோக்கியும், குறிபபாக படித்த த்திய தர வர்க்கம் ஒழுங்கு செய்யப்பட்ட ழியம் என்பவை நோக்கியும் மறுவழிப் த்ெதியமையாகும். ஹரி ஜோன்சன் ARRY G. JOHNSON) győri 3, G56 -u - நத்தப்படி, புதிய நீா டெ 7 ை ன் ஆரம்பகால வளர்ச்சியில் உறுதியான முதபாமொன்றையும் மக்களாட்சியையும் டியெழுப்புவதற்கு இது உதவியதெனி லும், நீண்டகாலப் பொருளாதார ளர்ச்சியைப் பொறுத்தவரை இது உகந்த தாரு கொள்கை எனக் கொள்ள முடி 7 5.
எத்தகைய தாண்டுதல்களின் அடிப்படை ல் இ கொள்கைகள் உருவாக்கப்பட்டி ப்பினும், உலக விவசாயத்தின் சமந்லை ாதிக்கப்படுவதற்கு இவை பெரிதும் உத ன. கார ச் சந்தை உற்பத்திச் சந்தை னறஇரண்டாலும் விவசாயம் ஒரளவு பரா கமாக நோக்கப்பட்டா ம உற்பத்திக்குரிய க்குசக்தியை இல்லாமற் செய்து விட்ட தனலாம். கையாளப்பட்ட விலைக்கொள் ககள் பெருந்தோட்டத்துறை, குடியான் irதுறை என்ற இரண்டிலுமான பொரு யல் மிகையைப் பெற்றுக் கொள்ளும் கையில் அமைந்திருந்ததேயன்றிப் பண்ணை ட்டத்தில் உற்பத்தித் தீர்மானங்களை நங்கிணைப்பதற்குதவி செய்வதாகவோ, றைகளிடையிலான சாதன ஒதுக்கீட்டுத் ர்மானங்களுக்குதவுவதாகவோ இருக்க ல்லை. புதிதாகப் ஆரம்பிக்கப்பட்ட கைத் தாழில்கள் தேசிய பொருளாதார அபி ருத்தி நோக்கங்களைக் கொண்டிருந்த ாதும் விவசாய அபிவிருத்திக்கு அவசிய ான உயிரியல், இரசாயன, எந்திரவியல் ள்ளிடுகளை வழங்கத் தவறிவிட்டன. கத்தொழில் மயமாக்கத்திற் கவனம் லுத்தப்பட்டவிடத்து விவசாய அபி ருத்திக்கவசியமான ஆராய்ச்சி விவசாய ற்பத்தித் திறமையைக் அதிகரிக்கக்கடிய N முறைகள் என்பன புறக்கணிக்கப்பட்
t
இல்ங்கையைப் பொறுத்தவரை விவசா துறை அபிவிருத்தி ஒரு முக்கிய குறிக் ாள் எனத் தொடர்ந்து வந்த பல அர ங்கங்களும் எடுத்துக்கூறிய போதும், டமுறைக் கொள்கைகள் இதற்கேற்ப மந்திருந்தன எனக் கூற முடியாது. ரயொரு உதாரணத்தை மாத்திரம் டிக்கர்ட்டுவது பொருத்தமானது.

Page 37
உலக விவசாயத்தின் சமநிலை: ஒரு பொது
1959 ம் ஆண்டுக்குப் பிந்திய தசாப்தத்தில் மிகத் தீவிரமானதோர் அந்நியச் செல வணி நெருக்கடி நிலைமை ஏற்பட்டபோது பெருமளவு இறக்குமதிகளிற் செலவாகி கொண்டிருந்த அந்நியச் செலாவணி ை மீதப்படுத்துவது அவசியமாயிருந்தது இதனைச் சாதிக்கக் கூடிய முக்கிய மார்க் iDfT乐 இறக்குமதிப் பதிலீட்டுக் கொள்ை கையாளப்பட்டது. இந்நிலையில் கைத்தெ ழில் நுகர்வுப் பொருட்கள், உணவு பொருட்கள் என்ற இரண்டையுமே நாடு இறக்குமதி செய்து கொண்டிருந்த போது கைத்தொழிற் பொருட்களைப் பொறுத்த வரையே இறக்குமதிப் பதிலீட்டுக் கொள் கை கையாளப்பட்டது. இலங்கை ஒரு விவ சாய நாடு எனப் பெயர் பெற்றிருந்த போதும் அந்நேரத்தில் அது ஏராளமாக இறக்குமதி செய்து கொண்டிருந்த உட உணவுப் பொருட்களை உள்நாட்டிற் பயி டுவதற்கு எத்தகைய முயற்சியுட் எடுக்கட் படவில்லை. அதற்குப் பதிலாகப் பெரு மளவு அதுபவம் பெற்றிராத கைத்தொழில் முயற்சிகள் நோக்கியே தூண்டுதல்கள் அளிக் கப்பட்டன, உப உணவுப் பயிர்களை உள் நாட்டிற் சிறப்பாகப் பயிரிடுவதற்கேற்ற வசதிகள் உண்டா என்பது சம்பந்தபபட்ட ஆராய்ச்சிகள் எதுவுமே மேற்கொள்ளபபட் டிருக்கவில்லை. 1970 ம் ஆண்டுக் காலட் பகுதியளவில் செலாவணி நிலைமை மேலுட் மோசமடைந்து இறக்குமதிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டியிருந்த நிலையிற்தான் உப உணவுப் பொருட்கள் ள் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டது மாத்திரமன்றி சில பொருட்களைப் பொறுத்தவரை முற்ருகத் தடுக்கவும் பட்டது. பெருமளவு நேரடித் தூண்டுதல்கள் எதுவுடன்றி இப் பொருட் களிற் பலவற்றை இலங்கை விவசாயிகள் உள்நாட்டில் வெற்றிகரமாகப் பயிரிட்டன ம தகுந்த வகையில் ஊக்கமளிக்கப்பட்ட7ருந் தால் அவர்கள் இவற்றை எப்போதோ பயிர்செய்திருப்பார்கள் என்பதை எடுத் துக் காட்டியது அரசாங்கத்தின் பராமுகம் காரணமாகவே இத்தா கய அபிவிருத்தி நெடுங்காலம் பிற்போடப்பட்டி ந்ததெனக் கொள்ளுதல் பொருந்தும் நெடுங்கால முயற்சியின் மத்தியிலும் விவசாய அபிவி ருத்திக்கு வேண்டிய சில அடிப்படைத் தேவைகளாகிய தகுந்த கடன் வசதி, சந் தைப்படுத்தும் வசதி, தரமான முறையிற் பாதுகாத்து வைக்கும் வசதி, தகுந்த நில உடைமை என்பவை பொறுத்து இலங்கை இன்னும் பின்தங்கியதொரு, நிலையில் இருப் பதாகவே கூறமுடியும்,

நோக்கு கலாநிதி வி. நித்தியானந்தம்
iv
V
ஆகவே மேற்கூறிய வற்றிலிருந்து அபி விருத்தியடைந்த நாடுகள், குறைவிருத்தி நாடுகள் என்ற இரண்டுமே தமது கொள் கைகள் வாயிலாக உலக விவசாயத்தின் சம நிலையைக் குலைப்பதற்குத் துணை புரிந்திருப்ப தைக் காணலாம். அபிவிருத்தியடைந்த நாடுகள் உயிரியல், எந்திரவியல் நுட்பங்க ளில் ஏற்பட்ட அபிவிருத்திகளின் வாயிலான் புதிய உற்பத்தி அதிகரிப்பின் நன்மையைப் பெற்றுக் கொண்டு அதே நேரத்தில் விவசா யத்தின் பாதுகாப்பு நோக்கியும் பெருத் தொகை செலவுகளை மேற்கொண்டன. ஆனல் குறைவிருத்தி நாடுகள் நவீன விவ சாய உள்ளீடுகளின் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதிற் பின்தங்கியிருந்ததுடன், திற மையற்ற விலைக் கொள்கைகளின் வாயிலாக விவசாயத்துறையில் ஏற்பட்டிருக்கக் கூடிய
லாபகரமான முதலீடுகள் எல்லாவற்றையும்
தடுத்து விட்டிருந்தனர்.
உலக விவசாயத்தின் இத்தகைய சமநிலை யின்மையை நீக்கும் பொருட்டுப் பலவேறு வகையான முயற்சிகள் சமீபகாலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமானவை நிறுவன ரீதியில் விவசா யத்துக்கிருக்கக் கூடிய தடைகளை நீக்குவதும் விவசாயத்துக்குதவக்கூடிய சில இயலள வான அடிப்படை அம்சங்களை உருவாக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் முதலீடுகளு மேயாகும். நிறுவன ரீதியான தடைகள் நீக்குவதில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் முக்கியமாக நில உடமை, சந்தைப்படுத்தல், கடன் வழங்கல், எ ல் ற துறைகளை உள்ள ளடக்குகின்றன, அதே நேரம் விவசாயத் துக்குதவக்கூடிய அடிப்படை வசதிகள் கருதி விவசாயிகளின் கல்வித்தரத்தை உயர்த்தல், நில வள நீர்வள அபிவிருத்தி என்ற துறைக ளில்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும் இந்த முயற்சிகளின் மத்தியி லும் அடையப்பட்ட வெற்றி மிகவும் மட் டுப்படுத்தப்பட்ட தொன் றென்றே கூற வேண்டும். இதனல் உலக விவசாயத்தின் சமநிலையின்மை தொடர்ந்து நீடித்திருக் கும் ஒரு பிரச்சினையாக உள்ளது.
35

Page 38
WITH BEST CO
2xternal Studie
Heal Office
RAMYA ROAD,
COLOY1BO 4.

MPLM, HNTS
) -
S Grganization
s
Branch
14.1, STANLY ROAD.
JAFFNA.

Page 39
THE FAMOUS NA
JAYA
UEWELLE
NO. 109,
COLO
With Bes
t
137,
C
T, PHONWRC. 28787

gg
ME IN JEWELLERY
)ísé
CHITRA RY PALACE
SE STREET
MIBO- 1 I.
t Compliments
rom
ni Gola Žfouse
SEA STREET,
OLOMBO-11.

Page 40
with best c
fror
LINGAM
DRYFISH & GENER
லிங்கம் டிரேடர்ஸ்
T. PHONE, 26739
With Best (
fron
S. A. CHEL
T. PHONE: 2228

compliments
*RADERS AL Ml ERCH : ANTS
ලීoගම්, ටෙඩර්ස්
100, 4th CROSS, STREET
COLOMBO-11.
Compliments
LIAH & C0.
FOURTH CROSS STREET
COLOMBO-I II.

Page 41
நலன்
ஆர். என். ே 20, 22, Блопiog
கொழு
இளந்தென்றல் இன
PEOPLES TRA
பலவகை உள்ளூர் வி
No. 143, Maliban Stre
COLO
T'grams : “SARAVANAN 9

விரும்பி
க. ஏ ஜன் சீஸ் iறுக்குத் தெரு,
b-11.
தொலைபேசி : 2 2 2 0 8
துபெற வாழ்த்துகிறேம்
DE & SUPPLIES
ா பொருள் விற்பனையாளர்.
t, 112, 4th Cross Street,
MBO 11.
Т”рһопе , 25389 23509

Page 42
WITH BEST C
OF
AAW (C) Y
Leading Emporium for Quali
68, GRAND
JAFFN
வாழ்த்து
தனலக்ஷமி General Merchants &
Dealers in Cey
ஸ்ரோர் :
122, நீர் கொழும்பு வீதி,
பேலியாகொடை

OMPLIMENTS
AFV(M) (VSA)
ty Fancy Goods in North.
BAZAAR,
A.
கிறேம்,
ரிரேடர்ஸ்
Commission Agents
In Produce
185, கெய்ஸர் வீதி,
கொழும்பு 11.
GBLurr65 : 20615

Page 43
SPACE DONA'EL) BY
B O N Đ o S IN S T H T U TE
2742, HOSPITAL ROA),
JAFFNA.
WITH BEST COMPLIMENTS
NATHA TRA DERS,
8, S.JOHNS ROA)
COOLO) MO -
Phomme : 3 284 2

WITH BEST COMPLIMENTS
FROM
JOSEPH STORES
42, ST.JOHNS ROAD,
COLOMBO
Phone 24305
WITH BEST COMPLIMENTS
Ol'
SWANESAN STORES
20, ST.JOHNS ROAD,
COOMBO .
A. S. ARUMUGAM & SONS
Phome 33360

Page 44
யோகு றேடிங் கோ.
உழுந்து, உழுத்தம் பருப்பு, பயறு, பயற்றம் பருப்பு, தட்டாய் புயறு தட்டாய் பருப்பு, நவதானிய வகை கள் மொத்தமாகவும் சில்லறையாக வும் நிதான விலையில் பெற்றுக் கொள்வதற்கு,
யோகு றேடிங் கோ. 284, ஆஸ்பத்திரி விதி,
யாழ்ப்பாணம் .
e
வாழ்த்து கிருேம்
'திறீ கொயின்ஸ்"
சுறுசுறுப்பு யாழ்நகரில்! M− சுவையிருப்பு திறீ கொயின் ஸில்!!
73, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பா σ00Τ ιf .

இளந் தென்றல் இனிதே வீழக!
எஸ். பெரியண்ணுபிள்ளை
அன் கோ.
228, கெய்ஸர் வீதி,
கொழும்பு 11.
தந்தி: பிரிந்தா தொலைபேசி 28,297
வண் னமலரிதன் வாசனை தன் னை வாங் கியே வீசி, வாழ்ந்திடும் -"இளந்தென்றல்'
ஜோர்ஜ் அன் கொம்பனி
76 , நாலாம் குறுக்குத் தெரு,
கொழும்பு 11. போன் : 25973

Page 45
WITH BEST COMPLIMENT
FROM
THEVAGAN COMPANY
General Merchants
& Commission Agents.
208, FOURTH CROSS STREE
COLOMBO .
Phone 28556.
BEST ('OJI PILI MENTS
FROI
SIVAYOGA JEWELLERS
54, SEA STREET,
COLOMBO 11.
Phone 34954.

NATHAN & BROTHERS
General Merchants. Commission
Agents & Dealers Made Tea
NATHAN & BROTHERS
197, FOURTH CROSS STREET.
(OLO A3 () .
Phone 238.19
WITH BEST COMPLIMENTS
FRON1
SRI LANKA TRADES 16 ST.JOHNS ROAD,
COLOMBO II.
Phone 324.15

Page 46
BEST COMPLIMIENTS
()ዘሓ
MURUGAN ELECTRICAL STORES
6, 8, STANIEY ROAD,
JÁF1FNA.
WITH THE BEST COMPLIMENTS
(I'
NEW SUREKA JEWELLEERS
1:39, SEA STEREET,
(OLOMBO l.
፲`†”፥is rre' 33360 P)

BEST COMPLIMENTS
FROM
SRI DEWI CHEMICAL
125, BANKSHALL STREET,
COLOMBO 1.
"ITH BEST CO31PI, NIENTS
'()MjI
SEWAM'S TEXTLES
345, MAIN STREET',
COLOMBO ,
'ዑ?ገé' 2 1 4 7 5

Page 47
(எமது அகில இலங்கை ரீதீயான கவிதைப் ே
தங்
t
啤
( et 88 sedge
பொங்கும் துயரங்கள் பொசுங்கும் முகத்தோடேன் தங்கம்மா இந்தத் தனிமரத்தின் கீழ் அமர்ந்தாய்...?
ஆஸ்பத்திரி வாகை அடி நிழலில் நீ இருந்து காசநோய் வாட்டைக் கவனமொடு பார்த்திருந்தாய்! பன்னிரண்டு மணிஇன்னும் ஆகவில்லைப்போலும் உன்னை விடமாட்டார்! மணியோசை காத்திருந்தாய்!
ஆண்துணையா கூட்டிவந்தாய்? ஆா?வதுமகஞ. . . .? ஏன்ஏன் சிணுங்குகிருன்....? இடித்திடித்துக் கேட்பதென்ன? பிஞ்சுமகன் முந்தானைப் பிடவைதனைப் பிடிக்கக் கெஞ்சுகிருய் கண்களினல்
கேட்கமாட்டான் போலிருக்கு!
கண்ேைலனக் கசக்குகிருன் ! காலை உதறுகிருன் ! இன்னேர் முகத்தை அவன் எனக்குள்ளே காட்டுகிருன்? உன் மகளார் அச்சும்மா ஓ! அந்த மடிந்த மலர் தன்னுடைய தோற்றத்தைத் தம்பியிலும் பதித்தாளோ..? கொச்சை உலகம் கொன்றழித்து விட்ட உந்தன் அச்சும்மா எந்தன்
அகத்தினிலே தோன்றுகிருள்!
குச்சுகளாற் செய்த இரு கைகளும் சூம்பற் கால்களும்

பாட்டியில் முதலிடம் பெற்றது.)
--> -- 0-0-----00-00
கம்மா
i
800000080000000-000
45
ஜனுப். பசில் காரியப்பர்
பச்சையமே இல்லாது பழுப்பேறிப் போன இலைமேனியும், போர்வாள் இரண்டு பொருதவரும் காட்சி சொல்லும் காறை எலும்புகளும் கதைபயிலும் இருவிழியும் பறட்டைத் தலையும் அதில் பழஞ்சீலைப் பூமுடிச்சும் வரண்ட குறுஞ்சிரிப்பும் வயிறுசிறு முட்டியுமாய்ப் பாலர் வகுப்பில் நான் பார்த்தேன்! ஒர் ஒரத்தே காலிற் சிறு சிரங்கைக்
கைவிரலால் என்ன செய்தாள்?
பள்ளிக்கு வருவாள்! ஒ! பலவேளை நீவருவாய் 'பிள்ளைக்குச் சுகமில்லை பெரிய ஆஸ்பத்திரியில் சொல்ல வந்தேன்" என்று சொல்லிச் சோகங்கள் செல்லிடுவாய் செல்லரித்த வாழ்க்கையதன் சிதவல்களைக் கண்டிருந்தேன்!
**நல்ல வயிற்றிலிந்த நரம்பு பிறந்திருந்தால் இல்லாமல் நோய் இவளே எழுந்திருப்பாள்! நான் மற்றப் . பிள்ளைகளைப் பார்ப்பதுவா-இவள் பிணி தன்னைப் பார்ப்பதுவா? நெல்லுப்பாய் உழைப்பாலும் நீங்காத பட்டினியே’’ இப்படியாய்ச் சொல்லியதும் நீதான் சுடுமனத்துள் நீறுபூத்த

Page 48
தங்கம்மா
கொள்ளியினல் ஆ! நீஇக் குவலயத்தைச் சுட்டெரித்தாய்
நல்ல வயிறும் இந்த நாட்டில் சிலபேர்க்கா இல்லையடி தங்கம்மா இனி அதனை மறுதலிப்போம் என்றுரைத்த வார்த்தை இன்னும் பலிக்கவில்லை அன்றை விடவும் நீ அயர்வுடனே தோன்றுகிருய்!”
எத்தனை இடங்களை ஊசிநூல் கொண்டு தைத்திருக்கின்ருய் சேலைத் தலைப்பு மட்டும் தெரியலையா..... இத்தனைக்குள்ளும் உனக் குள்ளே ஒளிந்திருக்கும் மெத்தச் சோகம் கலந்த மிருதும் முகவெட்டும் வைத்திருக்கின்ரு ய் அந்த வழிப்போக்கன் உன்முகத்தை எத்தனை முறைகள் திரும்பி எதைப் பார்த்துச் செல்கின்ருன்?
கண் 28ணக் கசக்கித்தன் காலை உதறிய உன் சின்ன மகன் தார்ரோட்டைச் சேர்ந்தாற்போல் ஒதுங்குகிருன் வந்த மனிதரிடம் வலக்கரத்தை நீட்டுகிருன்! உந்தன் இளைய பயிர் ஒரு வழியைக் காண்கிறதா..?
மணியோசை கேட்கிறது" மகனை நீ கூப்பிட்டாய். பிணியாளர் தனைப்பார்க்கும் மனிதரிடை கலக்கின்ருய்
கட்டில் அருகில் வெறும் கையோடு நிற்கின்ருய் தட்டைப் பீங்கானில் பாண் துண்டு தெரிகிறது! சின்னவனின் கையில் அது சேர்கிறது. . . தந்தையினை உன்னிப்பாய்ப் பார்க்கின்றன் ஓ! அவரும் அணைக்கின்ருர்!
கம்புகளால் கைகாலும் காசநோய்க் கிருமிகளின் துன்பியலைத் தாங்கும் , விலாஎலும்புக் கூட்டோடும் தன்மனையாள் முகம் கண்டு
46
w
::

ஜனப். பசீல் காரியப்பர்
தழும்பும் விழியோடும் அம்மனிதர் உனக்கென்ன ஆறுதலைச் சொல்லிவிட்டார். ...?
அங்கு மணியோசை
அதட்டல் ஏ! தங்கம்மா
ாங்கு நீ போகின்ருய். . . . . . p
ரன் வெறித்துப் பார்க்கின்ருய்....?
ான்ன இது? நீ தானு? ரனிந்தச் சனங்களிடைக் கன்னங் கறுத்துக் ால்தளர்ந்து போகின்ருய்! இமையை உயர்த்துகிருய் ான் விழியைச் சந்தித்தாய் நமையும் மனத்திடையே குறுநகையை வரவழைத்தாய்! ான்ன சிரிப்பு அது ாத்தனை பெரிய சோகம் நின்னலாய்ப் பாய்ச்சிப்பின் மீண்டும் கீ கூம்பிவிட்டாய்!
நங்கம்மா உன்னுடைய ட்டை பிய்ந்து போனதென்ன? அங்கோர் கொடு நகத்தின்
டையாளம் தெரிவதென்ன?
-ன்னுடைய வீட்டுக்குள் ஊரே ஒதுங்கியதாம் ண்குளிர உன்னுடைய ளவை அறிந்தார்! உன் குச்சிக் குடிசைக்குள் ாப்படியாய் இந்தக் காச்சிக்காய் வியாபாரி-உன் isட்டுறவைப் பெற்றதுவும்...?
ழுங்கை முகப்பக்கம் உருசிறிய திறப்பெடுத்து 1ழந்தகரத்தால் ஒரு 5ட்டியினைக் கட்டிவைத்தாய் |ட்டிக் கடைதன் ?னப் பாட்டு வயிர் வளர்க்கும் ட்ெடத்தை அமுலாக்கத் தண்டித்த திவர்தானு. . .?
இச்சனங்கள் உங்கள் இருவர் தனிமையிலும் காச்சை ரசம் கண்டோ
iமுறி எழுந்ததுவும். ..?

Page 49
5right frt
தார்ரோட்டில் தெய்வத் தலத்திற்கு?ன அழைத்து மார்க்கக் கடனிறுக்க மனங் கொதித்து வந்தார்கள்! அச்சும்மா போய்விட்டாள்! ஆறு குழந்தைகளை வைத்துவிட்டே வீட்டில் வீதி வலம் வருகின்ருய். . . . .
உன்னுடைய குஞ்சுகளே உனைக் காத்துக் கொண்டிருப்பார் உன்னே டிருந்தவனை ஊர்வலத்தில் காணவில்லை!
சட்டத்தரணி வந்து சரிப்பண்ணி வீடு சென்ற கெட்டித்தனத்தை நீ கேட்டறிந்து கொள்வாய்தான்!
ஒதிப் படித்தவர்கள் ஊர்வலத்தில் கலந்தார்கள், ! நாதியில்லா உன்னை நடுவீதிப் பவனியிலே ஊர் சிரிக்கக் காறி உமிழ சிரட்டை தட்ட தாறுமாமுகத் தமிழ்பேச என்றெல்லாம்
விதியிலே உனக்கோர் விழாவே எடுத்தார்கள் சாதுவாய்ப் போனப் நீ சாது வாய்ப் போனுய் நீ...!
தங்கம்மா உந்தனுக்குத் தனியே ஒரு விளம்பரந்தான் தங்கம்மா என்ற பெயர் எங்கும் பிரபல்யம்! தெம்பு சிறிதளவு தெரிகிறதே! உன் முகத்தில்! தங்கம்மா எங்கே நீ தனியாகப் போகின்ருய்!
சட்டைப் பிடவையெல்லாம் சரிகை மினுங்கிவிழி பட்டுத் தெறிக்கிறதே பெளடர் மணக்கிறது! நெற்றி விளிம்பில் அந்த ஒற்றை ந ைர! அதனைச் சுண்டிப் பிடுங்கித் தூர எறிகின்ருய்!

ஜனப் பசீல் காரியப்பர்
துப்பரவாய்ச் சற்றே
துவண்ட நடையோடும் தப்பிதங்கள் செய்யும் சகாக்களொடும் உன்கணவர் சினனராசா என்பவரின் சீக்கோடும் பெற்றெடுத்த கண்மணிகள் ஆருேடும் கனத்திருக்கும் வயிற்ருேடும் இப்போது நீ ஒழுங்காய் இருக்கின்ருய் என்றிவர்கள் செப்பியதைக் கேட்டேன் பின் சேதிஒன்றும் தெரியவில்லை!
தங்கம்மா என்னை ஏன்வெறித்துப் பார்க்கின்ருய் மங்கிய உன்விழிகள் மலர்ந்தே இருப்பதென்ன..
கந்தையொடும் ஊத்தைக் கறைபடிந்தும் கையிலொரு மந்திரக்கோலா? அதால் மண்ணில் என்ன கீறுகிருய்...? கையில் ஒரு பால்பேணி கம்பும் அதேகையில் ஐயோ என்ருெருமனிதர் ஐந்து சதம் வீசுகிருர்!
பஸ்தரிப்பில் நிற்கின்ருய் வசனங்கள் பேசுகிருய் இஸ்டம்போல் அங்கும் இங்கும் திரிகின்ருய்
பத்திரமாய்ப்போ அவளின்
பக்கத்தால் போகாதே! கைத்தடியால் நேற்றேர் "கொண்டக்டர் அடிபட்டார்." ப்ள்ளிச் சிறுமி அவள் பக்கத்துத் தோழியிடம் மெல்ல உரைக்கின்ருள் மேலும் நடக்கின்ருய்...!
எங்கே போகிருய் நீ எதையோ வெறித்துப் பார்த்தபடியே
எங்கே போகிருய் நீ?
47
ബത്ത്

Page 50
A um Harry
institute of Comn
FOR
G. C. E A/L, G. C.
I. A. B. (Lon.j I. A. .
66, Sivanpannai Road,
JAFFNA.
செ. சிவபாத
வைரக்கல் நகை
* சிறந்த வேலைப்பாடுள்ள தங்கந.ை
தெரிவு செய்யலாம்,
ஓடர்கள் குறித்த தவணையில் சிற செய்து கொடுக்கப்படும்.
220, கஸ்தூரியா
யாழ்ப்பாண

Iercial Studies
E. OIL
A. (Lon.)
Director:
S. Kandasamy
நலிங்கம்
வியாபாரம்
5களை விரும்பிய டிசைன்களில்
ந்த முறையில்
வீதி,

Page 51
JAFFNARADIO & ELECTRICA Woiaks,
FOR
REPAIRS OF ERA) OS кикстнci EQUIPMENT
915, HOSPITAL ROAD.
JAFFNA,
BEST COMPLLIENTS
O'
RANJANA CAE
125, FrrTH (Ross STREET,
COLOMBO 1.
’phonet 22388
 
 

BEST COMPLINIENTS
FROM
SIV. A TRA DERS
15126, NEW, MOOR STREET.
COLOMBO 12
WITH BEST COMPLIENTS
(OF
SRI LANKA GENERAL STORES
238, KEYZER STREET,
COLOMBO LL.
Photypte 22859

Page 52
You are for us, We are for you
You tell as eny thiug Wnat you like
Visit
O SLACKS O SHORTS
to SHIRTS O CHILDREN
GAR MENTS
REFINE & CO.
40. Grand Bazaar,
JAFFNA
SSTTSS SSSSqqq SqqSqSqS SMSASMASS SSSS
BEST COIPLI. JENTS
FROI
Independent Trading Co.
51, A 1st Cross Street,
Colombo 11. A
Tphone : 2,294 3.
Dealers in Paper, Stationery
Electrical Equipment etc. Ca

எங்கள் விளம்பரதாரர்களை
ஆதரியுங்கள்.
WIHT BEST COMPLIMENTS
FORM
. JEEWAJEE 8 BROS.
Paper Merehants & Stationers
uthorised Dealir for Eastern Paper Mills Corporation
50, New Moor Street, COLOMBO 12
bles; **PABAND’* ToPhoue: 32861

Page 53
BEST COMPLIMENTS
FROM
NEW P LAUS
5 & 6, MODERN MARKET,
JAFFNA.
Our Highclass Workmenship
for Your Orders
Reasonable Price for your
Old Gold, Carat Gold & Silva
WJTHAJE WELLERY
u95, SEA STREET, COLOMBO II.
Phone : 35 024

HOTEL WOODLANEOS
&
BAKE HOUSE
NALLUR MARKET,
JAFFNA,
Prop:...T.. Jeyabalasingham.
BEST COMPLLIENTS
RO
UMA TRADING CENTRE
57, FOURTH CROSS STREET, COLOMBO II.
Gram. : Umatco Plu0ነie : 274ö7..
r

Page 54
BEST COfPLIMENTS
SINGAMPS (FEXTELES
172, K. K. S. Road, JAFFNA,
சகலவிதமான மருந்துச் சாமான் களையும் பெற்றுக்கொள்ளவும்
நிதானமான விலைக்கும்
சி. ஸ்ஸ், கைலாசம்பிள்ள்ே & சன்ஸ் 76, பெரிய கடை, யாழ்ப்ப்ாண்ம்.
தொலைபேசி 7135
.

தானவிலை! சிறந்தரகம் !!
நற்கால நவநாகரீகத்திற்கு ஏற்ற
தரமிக்க
ஜவுளிகள்
அனைத்தையும் பெற்றுக் கொள்ள
கனேசன் ஷ்ரோர்ஸ்
யாழ்ப்பாணம். । (ତ! -', ) ! ஃலபேசி : 71.69
யாழ் நகரில் உளுர் உற்பத்திப் பொருட்களை மொத்தலாகவும் ல்லா றயாகவும் நீதான விலையில் பெற்றுக்கொள்ள இன்றே
விஜயஞ்செய்யுங்கள்.
வகுமார் ஸ்ரோர்ஸ்
282, ஆஸ்பததிரி வீதி,
யாழ்ப்பாணம்.
தொகலபேசி 7738

Page 55
சங்கச் செய்திகள்
சங்கத்தின்
காப்பாளர்கள் : ー C
--H-- 5
பெரும் பொருளாளர் -
தலைவர் :
து3ைணத்தலைவர் : - செயலாளர் ۔---' : ;
துனேச்செயலாளர் :
இளம் பொருளாளர் - தி
இதழாசிரியர்கள் : - தி (ویک --- ,
பீடப் பிரதிநிதிகள் : Mww.

அங்கங்கள்
பேராசிரியர் ஆ. சதாசிவம் லாநிதி வி. நித்தியானந்தம்
லாநிதி க. பாலசுப்பிரமணியம்
திரு. வி. ரி. தமிழ்மாறன் ஜனுப். எம். எல். நஜிமுதீன்
திரு. ஐ. நடேசன்
திரு. மா. கணபதிப்பிள்ளை
ரு. சு. சிவசம்பு
ரு. சி. தர்மசீலன் ரு. க. சதாசிவம்
சல்வி. நா. புவனேஸ்வரி (கலை) சல்வன் . கு. சிவகுமார் (மருத்துவம்) சல்வி வே. சுகுளு (மருத்துவம்) னப் இப்திக்கார் முகமது (சட்டம்) சல்வி சி. சசிகலா (சட்டம்) சல்வன் சி. கந்தசாமி (கல்வி) சல்வி பெ. எலிசபெத் (கல்வி)
சல்வன் எ. டிமன் போட் }னப் ஏ. சத்தார்
சல்வன் ரி. பிரிதிவிராஜ் சல்வி க. கலாவதி சல்வன் கே. மயில்வாகனம்

Page 56
செயலாளர் சொல்
அகரத்து வளாகங் சங்கம் இன்று ஐம்பத்து களின் அடிச்சு வட்டில் அட உள்ளம் பெருமையில் இ. பொருளாதாரப் பிரச்சி வெளியிட்டு தமிழுக்கு ஆ ருல் நல்லிதயம் படைத் களென்ற துணிவுதான்.
சுய மொழி "த ப பற்றுதல்கள் மீறிய நிலைய அல்லல்கள், துயரங்க வில் அகலக்கூடியனவல்ல மாக சிந்தித் 5 ஆக்கபூ நடத்தி வருகின்ருேம். எமது செயல்கள் வரைய கவிதைப் போட்டிகள் நட
கடந்து வந்த பா நிராகரிக்காது அந்த அறி னுேம் . அவர்களின் து வாழவைக்கும் சிரஞ்சீவி : அந்த நம்பிக் ஓ க ஒளியை அவநம்பிக்கைகள் புனிதப வேண்டுமென்ற இலட்சிய ஒருமைப்பாடுகளில் உயர் முதல் பேசும்மொழிவரை L EDIT 55 .

கிறர் . . . . .
களின் தமிழ்ச்சங்கங்களில் மூத்ததான எமது மூன்ருவது அகவையில் அயராத முயற்சி டியெடுத்துவைப்பதை எண்ணும்போது எனது றும் பூதெய்து கின்றது. பல்வேறு கஷ்டங்கள் னைகள் மத்தியிலும் 'இளந்தென்றல் மலர் அவுதும் கொழும்பில் விழாவெடுக்கிருே மென் த நல்லவர்களும் நம்மிடையே இருக்கின் ருர்
ற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக சிலர் பில் ஒருவகை வெறி கொள்வதஞல் ஏற்பட்ட ள், அழிவுகளின் தளுப்புகள் விரை நாமும் இதனை உணர்ந்து உணர்வு பூர்வ ர்வமான வழிகளில் எமது சங்கத்தை வழி குறுகிய வட்டமிட்டு வளாகத்தில் மட்டும் றுக்காது அகில இலங்கை ரீதியாக சிறுகதை -ாத்தி வியாபித்தோம்.
தைகளை உணர்ந்து சிலரை இனங் கண்டு வீனங்களை புத்திசாலித்தனங்களாக எண்ணி ாரதிருஷ்டியற்ற கற்பணுவாதங்களை எம்மை களென நம்பினுேம் . கால வோட்டங்கள் அவநம்பிக்கைச் சிதறல்களாக்கின. அந்த (ான புதியதான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேட் ைகன ய உருவாக்கின. ஆம்! அடி மட்ட ர் மட்டக் கொடுல மகளை சாகடித்து பசி சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போ
ஐ. நடேசன்
செயலாளர்

Page 57
9 Z - ZZ 6 I 1994?!?!?!?!ło 1ço ĝoĵoosif
 

(f)%) șę uregg) sẽ gia è fi puseo@sağ
· s ·ą le qi ofi)q? Jaeges · (đò@ po ureggi)(@@ : -rego seq9oC), (ĵ)o) foute įgi) oroso) osgo 19 ora@ 0909 oC)(đĐỌ șę urteggi) gillosgïo oes '(4119 ugofno(o)piccogs@) 1:21,9507@rı 1999? -1107 ( ĝuse uuesī) uralo) queŐ) Fiqi fortoto ‘o©@ # % urte ysgs) y uqa@nosť · @(ųīrmųjų51,fiosố 109°23) 199098 on yo : · (đò@ @olufe sg)ğrease loog)sehi · ugi 5909 oC)• (đò@ po urte ysgỈ) Lao oes? 'e8_(5969 fo@) (qī aorte 1@qīg)gı-TŐ)
(puso uqornog)) 1994-ig)oj oso (41191,711%)qi qoq los urn@@@ -0,9 @@juaoo * (4,191,77 Loo)qi ftoeg uoff o
·łą, įrmųjų31ī drag) '(4) redo??)19a) Jonsigloss sy '59• (įjuje suures) unlo) qi@rī£)) qirmųogo.gif|5ī£T£ do un oso (ĝiĝi usloo· (pronggo $1ocoạs@)1995 đì)ģgi (ap 19 'q119·(grmų,3 uđi@số logogő)qi ftoeg 11, o ‘o
(qiāorto 1@gi sunga-Tő) : 119
:ųsoựrwng gỗ
os įreniņo)$

Page 58
அகில இலங்கை ரீதி போட்டிகள்
ஆக்க இலக்கியத்தின் படைப்பாளிகளு களின் திறமைகளை வெளிக்கொணரவும் உருவாக்குவதே. அந்த ரீதியில் நாமும் எ அகில இலங்கை ரீதியாகவும் வியாபிக்க ே கவிதை போட்டிகளை நடாத்தினுேம், கு! அளித்தபோதும் நூற்றுக்கணக்கானவர்கள் காய்தல், உவத்தலின்றி பரிசீலிக்கக் கூடிய செல்வராசன், கலாநிதி இ. பாலசுந்தரம் , வழங்கினர். போட்டியில் கலந்த கொண்ட பரிசில்களை வழங்கியோர், நடுநிலைத்தீர்ப்பு தினசரிகளின் ஆசிரியர்கள் அனைவர்க்கும் எ
போட் கவிதை :
முதலாம் இடம் : - இரண்டாம் இடம் :
மூன்ரும் இடம் :
சான்றிதழ்கள் பெறுவோர் : - செ. கு
நா. க.
சிறுகதை :
முதலாம் இடம் : இரண்டாம் இடம் :
மூன்றும் இடம் : சான்றிதழ் பெறுவோர் : --திருா6 வி. ரி. இள
"இாமாயணம்' நாட்டிய நாடகம் :
எந்த நிகழ்ச்சியை நடாத்தியும் நிதி யை நடாத்தி நிதி சேகரித்தோம். பை தயாரிக்கப்பட்ட திருமதி கார்த்திகா கே மேடையேற்றினுேம், ஈழத்து நாட்டியத்து யத்தில் காலத்தை அவம் செய்யாது புதிய உ காவிற்கு எமது பாராட்டுக்கள்.

$யான எமது
ருக்கு ஊக்கம் கொடுக்கவும் , புதிய படைப்பாளி ஏற்ற சாதனம் அவர்கள், டையே போட்டிகளை மது செயற்பாடுகள் வளாகத்தினுள் மட்டுமன்றி வண்டுமென ற இலட்சிய வேட்கையில் சிறுகதை றுகிய காலத்தை படைப்பாளிகளுக்கு நாம் கலந்து கொண் ட ைர். ந்ெத படைப்புக் நடுவர்களான நீர் ன வ பொன் னையன், சில்லையூர் ஆகியோர் வின் ரவுடனும் நடுநிலை செய்து தீர்ப்பு - கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அதற்கான வழங்கிய நடுவர்கள், செய்திகளை வெளியிட்ட rமது வாத்துல்யமான நன்றிகள்:
டி முடிவுகள் :
- ஜனப் பசீல் காரியப்பர்
- திரு. புதுவை இரத்தினதுரை - திரு. இரா. சடகோபன்
ணரத்தினம் , க. ப. லிங் கதாசன் சண்முகநாதபிள்ளை , ஐங்கரன், ஜணுப் ஈழமேகம்
- காவலுர் எஸ். ஜெகநாதன்
- திரு. த. பரமலிங்கம்
- திரு. கே. ஆர். டேவிட் ார்கள் டானியல் அன்ரனி, மாத்தளை செல்வா ங்கோவன், மொழிவரதன், இ. சே. புஸ்பராசன்
சேகரிக்க வேண்டும் என்றில்லாது நல்ல நிகழ்ச்சி ழய கூத்துக்களுக்கு, நவீன வடிவம் கொடுத்து ணசரின் ‘இராமாயணம் நாட்டிய நாடகத்தை எறையிலே அ ைரத்த மாணவ அரைக்கும் கைங்கரி த்திகளில் கலையுணர்வை வெளிப்படுத்தும் கார்த்தி
செயலாளர் தமிழ்ச்சங்கம்

Page 59
எமது கலை விழாவில் கொஞ்சும்
சதங்கைகள் நாட்டிய விருந்தளிக்கும்
செல்வி கலாவல்லி தயாமதி
8 6958: F65)
(செ. பீறிட்ஜஸ் கல்லூரி) அவர்தம் கலைப்பணி சிறந்து விளங்க
நெஞ்சம் நிறைய வாழ்த்துகிறேம்
தமிழ்ச் சங்கம், கொழும்பு வளாகம்
கணி
 

1ளாக இறுதியாண்டு மாணவர்
ன்றலும் புயலும்’ திரைப்பட ார் நண்பர் நா. சாம்பசிவம் வர்தம் கலைப்பணி தொடர
"இளந்தென்றல்” டன் வாழ்த்தி மகிழ்கிறது.

Page 60
மூன்றம் உலக நா( *அங்டாட்”
ர்வதேச வர்த்தகம் பற்றி 19 ஆம் * நூற்றண்டில் வெளியிடப்பட் கொள்கையானது, நாடுகளிடையே தலையி டாக் கொள்கை கையாளப்படும் நிலையில், விவசாய நாடுகளுக்கும் கைத்தொழில் நாடு களுக்குமிடையிலான வர்த்தக மாற்று விகி தம் சமனக இருக்குமென எடுத்துக் கூறப் பட்டது. “ஒப்பிட்டுச் செலவு கோட்பாட் டின்" அடிப்படையில் இதனை விளக்கிய பழம் பொருளியலறிஞர்களான அடம்சி மித்,டேவிற்றிக் காடோ போன்றவர்களும், அவர்களின பின் வாய்ப்புச் செலவு அல் லது, சந்தர்ப்பு செலவினடிப்படையில் வி ள க் கி ய "ஹாபேலர் போன்றேர், இரு வெவ்வேறுபட்ட உற்பத்திக் காரணி களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இவ்விரு நாடுகளிடையேயும் பாயும் சூழ்நிலையில் அங்கு வர்த்தக மாற்று விகிதமானது சமனக இருக்குமென வாதிட் டார்கள். ஆனல் 19 ஆம் நூற்ருண்டில் வெளியிடப்பட்ட இக் கொள்கையானது உண்மையில் கைத்தொழில் Gísla)! GITu நாடுகளிடையே ஓர் ஏற்றத்தாழ்வான வரு மானப்பங்கீட்டினையே கொண்டதாக அமைந்து காணப்பட்டது. எனவே சர்வ தேச வர்த்தகம் மூலம் இன்று அபிவிருத்தி யடையும் நாடுகளான விவசாய நாடுகள் இது பற்றி, சர்வதேச கண்ணுேட்டத்துட னேயே நோக்கி வருகின்றன.
எனவே சர்வதேச வர்த்தகத்தில் வளர் முக நாடுகளின் நிலையினைப் பற்றி ஆராயப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகையில் இலத்தீன் அமெரிக்க நாட் டைச் சேர்ந்த 'றவுல் பிஹெபிஷ்' குறை விருத்தி நாடுகளைப் பொறுத்த வரையில் தகுந்த புள்ளி விபரங்கள் கிடைக்காமையி ஞல் 19 ஆம் நூற்றுண்டின் பிற்பகுதி தொடக்கம் 1930 ஆம் ஆண்டின் பிற் பகுதிவரையிலான இங்கிலாந்தின் வர்த்தக மாற்று விகிதப் போக்கினை அடிப்படையா கக் கொண்டு, முதல் விளைவுப் பொருட்

டுகளின் விருத்தியில்
எ. டிமன்போட் பொருளியற் சிறப்பு, 3 ஆம் வருடம்
களுக்கும் கைத்தொழிற் பொருட்களுக்கும் இடையிலான வர்த்தக மாற்று விகிதம் பற் றிச் சில கருத்துக்களை வெளியிட்டார். இவற் றில் உலக வர்த்தகத்தில் அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளின் பங்கு குறைந்து வந்தமையும் எடுத்கக் காட்டப்பட்டது. உதாரணமாக 1950 ஆம் ஆண்டில் உலக வர்த்தகத்தில் குறைவிருத்தி நாடுகளின் பங்கு 30% மாகக் காணப்பட்டது. ஆனல் இது 1970 ஆம் ஆண்டு 18% மாகக் குறை வடைந்துள்ளது. இவை மட்டுமன்றி இங்கி லாந்தின் முதல் விளைவுப் பொருட்கள் 40% மான கைத்தொழிற் பொருட்களையே கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்த மை, முதல் விளைவுப் பொருட்களின் விலை வீழ்ச்சிப் போக்கினை எடுத்துக் காட்டக் கூடி யதாகச் சுட்டிக் காட்டப்பட்டது. ஆனல் இவரது ஆராய்ச்சியில் பல குறைபாடுகள் காணப்பட்டதாக ஹாபேலர், மெயர் போன்ற பொருளியலறிஞர்களால் கூறப் படினும் அதில் பெருமளவு உண்மை இருப் பதனை மறுக்கமுடியாது. இக் கருத்தினை யே எச். டபிள்யூ. சிங்கர், “மிர்டால் போன்ருேரும் வலியுறுத்தினர். சர்வதேச வர்த்தகத்தில் வளர்முக நாடுகள் உண்மை யான பலனே அனுபவிக்கான மக்கு அபிவி ருத்தியடைந்த நாடுகளின் வர்த்தகக் கொள் கைகளே காரணமாக அமைந்துள்ளன. சுருங் கக் கூறின் விருத்தியடைந்த நாடுகளன் உள்நாட்டு விவசாயத்தைப் பாதுகாக்கும் கொள்கைகள், தொகைக் கட்டுப்பாடுகள் (QUOTAS)விதிக்கப்பட்டமை, செயற்றிறன் வாய்ந்த பாதுகாப்பு விகிதம் (EFFECTIVE TARIFF) அதிகரித்தமை, பாகுபடுத்தப் பட்ட வர்த்தகக் கொள்கைகள் போன்றன, காரணமாக அமைந்து காணப்பட்டன. ஆயினும் **வர்த்தகம் சம்பந்தமான பொருளாதார வளர்ச்சியானது' , சில நாடுகளைப் பொறுத்தவரையில் குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஆஜெந்தின, அவுஸ் திரேலியா போன்ற நாடுகளில் சார்பான தாகக் காணப்பட்டாலும்சில நாடுகளைப் பொறுத்தவரையில் பாதகமானதாகவே

Page 61
மூன்றும் உலக நாடுகளின் .
காணப்பட்டது. புள்ளி விபரங்களின் படி விருத்தி பெறும் நாடுகளின் ஏற்றுமதி 1953 ற்கும் 1967 ற்கும் இடையில் 90% ஆக அதிகரித்த பொழுதும் உலக வர்த்தகத்தில் இவற்றினது பங்கு 25.5% த்தில்இருந்து 18.8% மாகக் குறைவடைந்தது. மேற் கூறிய நிலைவளர்முகநாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் கொண்டிருக்கும் நிலையினைத் தெளிவாக்குகின்றது.
விருத்தி பெறும் நாடுகள் உலக வர்த்த கத்தில் சமனுன பங்கினைப் பெருத காரணத் தினல் இவை தமது பொருளாதார விருத் திக்காகச் சர்வதேச வர்த்தகத்தினை ஒழுங்கு படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே மேற்படி பிரச்சினைகள் காரணமாக 1964 இல் 120 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட 2000 க்கும் மேற்பட்ட பிரதிநிதி களைக்கொண்டதான 'வர்த்தகமும் அபி விருத்தியும் பற்றிய ஐக்கிய நாடுகள் மகா pit (''United Nations Conference on Trade and Development) 3, L.Li Lil L-5. g.gif "வர்த்தகம் இறப்பு மீதான பொது ஒப் பந்த விருத்திபெறும் நாடுகள்’’ என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையின் படி, **சர்வதேச வர்த்தகத்தில் ஒழுங்கு விதி கள் தேவையானவை; என்பனபற்றிஎது வித பிரச்சினையும் இல்லை. ஆனல் இவ் வொழுங்கு விதிகளின் தன்மை என்ன என்பதே கேள்வியாகும். உலக நாடு கள் அனைத்தும் ஒரே தன்மை வாய்ந்த தாக இருப்பின் வர்த்தகம், இறுப்பு மீதான பொது ஒப்பந்தம் கூறுவது போல் பேதப்படுத்தப்பட்ட இறுப்புக் கொள்கை கையாளப்படலாம். ஆணுல் உலக நாடுகள் பொருளாதார அமைப் புக்களைப் பொறுத்தவரை, பொருளா தார வளர்ச்சி மட்டத்தைப் பொறுத் தவரை வேறுபட்டன என்பது ஏற்கப் படுமாயின் எவ்வித இறுப்புக் கொள் கைகள் கையாளப்பட வேண்டிய தென்பது முக்கியமானதாகும். என வே அந்நாடுகள் வர்த்தகம், இறப்பு மீதான பொது ஒப்பந்த அமைப்பிற்கு உட்பட்டே, அல்லது புதிய தாபன அமைப்பி%ன ஏற்படுத்துவதன் மூல மோ விருத்தி பெறும் நாடுகளுக்குச் சாதகமான சூழ்நிலையி%ன உருவாக்க வேண்டும்' எனக் கூறிற்று. எனவே இதன் அடிப்படையிலேயே "அங்க்டாட்' மாநாடானது பல பிரேர%ண களை நிறைவேற்றியது. இம் மாநாட்டில் விருத்தி பெறும் நாடுகளின் வர்த்தகப் பிரச் சினை என்னவென்றும், இந்நாடுகள் அபி
8 فه

எ டிமன் போட்
விருத்தி பெற முனையும்போது அங்கு என் னென்ன தடைகள் ஏற்படு கின்றனவென் றும் ஆராயப்பட்டது. ஆகவே இந்நாடு களின் பிரச்சினைகளை ஆராய இங்கு 5 குழுக் கள் வகுக்கப்பட்டுப் பிரேரணைகள் நிறை வேற்றப்பட்டன.
(1) முதல் விளைவுப் பொருட்களின் சர்வ
தேச உடன் படிக்கை.
(2) கைத்தொழிற் பொருட்கள், அரை குறைப் பொருட்கள் மீதான வர்த் g5 (5 O.
(3) சர்வதேச வர்த்தக விருத்திக்கு நிதி
வழங்கல்.
(4) நிறுவன ஒழுங்குமுறைகளைக்கையா
3G).
(5) சர்வதேச வர்த்தகத்திற்கும், பொ ருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்து வம் அளித்தல்.
இம் மாநாட்டின் சிபார்சினை அடிப் படையாகக் கொண்ட பிரேரணைகள் "கற்? (GATT)ல் கூறப்படும் பேதமின்மை விதி, தலையிடாக் கொள்கை என்பவற்றினை முற் முக நிராகரித்தது. முதல் விளைவுப் பொருட்களில் குறைவிருத்தி நாடுகள் வர்த்த கத்தினை மேற்கொள்ளும் போது அவற்றின் ஏற்றுமதிகளுக்கு எதிராக இருக்கும் கட்டுப் பாடுகள் நீக்கப்படல் வேண்டும் எனவும், அத்துடன் இந் நாடுகளின் பாரம்பரியமற்ற ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஊக்கமளிக்கப் படவேண்டுமெனக் கொண்டது. ஏனெனில் வளர்முக நாடுகள் விருத்தி பெற்ற நாடுக ளுக்கு ஏற்றுமதியினை மேற்கொள்ளும்போது அவை செயற்றிறன் வாய்ந்த பாதுகாப்பு வீதத்தைநாடுவதே சர்வதேச விலைகளுக்குத் தொடர்பில்லாத தேசிய விலைகளே உருவாக்கப்படுகின்றன. இது மட்டுமன்றி இச் செயற்றிறன் வாய்ந்த பாதுகாப்பு வீத மானது மூலப்பொருட்களுக்குச் சார்பான தாகவும் முடிவுப் பொருட்களுக்குப் பாதக மானதாகவும் அமைந்துள்ளன. எனவே இபபாதுகாப்பு மூலம் வளர்ச்சி பெற்ற நாடு கள் தமது உள்நாட்டு விவசாய உற்பத்தி யை அதிகரிக்கினறன. உயர்ந்த விலைகளி னடிப்படையிலமைந்த வளர் முக நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்கள் இவற்றுடன் போட்டியிட முடியாத நிலை இவற்றினுல் ஏற்படுகின்றது, அத்துடன் இவை மேலதிக நிரம்பலுக்கு வழி வகுத்து உலக சந்தையிற் குவிக்கபபடுகின்றது, உதாரணமாக அமெ ரிக்காவின 'பி, எல். 480** திட்டம்: மற்றும் குவித்தல் என்பவற்றினுல் இவை வளர்முக நாடுகளை நோக்கிப் பாய்வதனல்,

Page 62
மூன் (Rம் உலக நாடுகளின்
நியாயமானமுறையில் அந்நாடுகளின் வில் சாய உற்பத்தியினைப் பாதிக்கின்றது. இத் ணுல் பாதுகாப்புக் கொள்கையினை நீக்குட முகமாக ஏற்படுத்தப்பட்ட "கெனடிய Gill-'' (Kennedian Round) ஒப்பந்த மானது ஒரளவு இறுப்புச் சலுகையை பெற்றதாக அமைந்துள்ளது. 1963 ஆட ஆண்டு ஏற்பட்ட இப்பேச்சு வார்த்தை வருடங்களாகத் தொடர்ந்து இறுதியில் அமெரிக்கா தனது எல்லா இறக்குமதிகள் மீதும் 50% இறுப்புத்தடை குறைப்பா ஒப்புக்கொண்ட மயால் விருத்தி பெறு! நாடுகளின் ஏற்றுமதிகள் 11%ல் இருந்து 19% ஆக அதிகரித்தது. மாநாட்டி? நிறைவேற்றப்பட்ட இப் பிரேர26னயானது நடைமுறையில் முதல் விளைவுப் பொருட களில் விருத்தி பெற்ற நாடுகளுடன் போட யிடாத பொருட்களுக்கு மட்டுமே சலு.ை காட்டப்பட்டதாகக் காணப்பட்டது இதனைத் தவிர இவற்றுடன் நேரடியாக போட்டியிடும் பொருட்கள், மறைமுகமாக போட்டியிடும் பொருட்கள் பற்றிச் சலு.ை கள் அளிக்கப்படவில்லை. 32-35st J 6007 1.DfT. *கெனடிய வட்ட*’ ஒப்பந்த அடிப்படையி: அமெரிக்கா தனது எல்லா இறக்குமதிகளு கும்இறுப்புத் தடைக் குறைப்பினை மே கொள்வதாக உறுதி அளித்தாலும், பருத்! நெசவுத் தொழில், பீட், சீனி என்பவ றைப் பொறுத்தவரை தொடர்ந்து இறு புக் கொள்கைகளைக் கையாள்வதாக மு! வெடுத்தது, எனவே இவை இந்நாடுகளில் அரசியல், பொருளாதாரக் கொள்கையி வேரூன்றியவையாகக் காணப்படுகின்றன.
"அங் டாட்' மாநாட்டின் சிபார்சி: அடிப்படையில் ‘சர்வதேச பண்ட ஒப்ப
5 iš 55 Giro” (International Commodi Agreements) உருவாக்கப்பட வேண்டு எனக் கொண்டது. ஏனெனில் விருத்
பெறும் நாடுகள் சர்வதேச சந்தையில் அதி நன்மை பெற இயலாத நிலையினுல் பண் ஒப்பந்த அடிப்படையில் தமக்கிடையிலா ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு ஒப்பந்தங்க? ஏற்படுத்தியது. பொக நலவாய அறிஞ குழு "மெக்கின்டயர்' அறிக்கையின்ப கூறப்பட்ட 8 கொள்கைகளில் 7 பண் ஏற்றுமதிகளுடன் தொடர்புபட்டதாக காணப்பட்டது, இதன் அடிப்படையி அங்டாட்டினது தாங்கியிருப்புத் திட்டமு அதற்கான பொது நிதித்திட்டமும் ஏற்படு தல் அவசியம் எனக் கூறியது, ஏனெனி சர்வதேச சந்தையில் பேரம் பேசுதல் சாத் யம் அற்றதாக இருக்கும் நிலையிலுள்ள ( நாடுகள் தமக்கிடையிலான பண்ட ஒப்

எ. டிமன் போட்
霹
தங்களை ஏற்படுத்தல் மூலமே, தமது ஏற்று மதி விலையினை உறுதியாக வைத்திருக்க முடியும், அதாவது பண்டங்களின் விலை யசைவுகளும், நீண்டகாலப் போக்கினதான வீழ்ச்சித் தன் மையும் , வர்த்தகச் சக ட ஒட்டக் கொடுமைகளும் இந் நாடுகளின் சென்மதி நிலுவையிலும், வர்த்தக மாற்று விகிதத்திலும் மிகப். பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. உதாரணமாக 1965 இல் விருத்தி பெற்ற நாடுகளுக்கும் விருத்தி யுறு நாடுகளுக்குமிடையிலான இடைவெளி 200 கோடி டொலராகக் காணப்பட்டது, இதனை நிவர்த்தி செய்ய 'றவுல்பிறெபிஷ்' மூன்று திட்டங்களை வகுத்தார். வளர்ச்சி யடைந்து வரும் நாடுகளின் ஏற்று மதிப் பொருட்களின் விலையினை உயர்த்தல்; இந்நாடுகளின் ஏற்றுமதியை ஊக்குவித் தல், உதவி, என்பவைகளாக இவை அ ைமந் தன.
எனவே ஏற்றுமதிப் பொருட்களின் விலை உறுதியினை ஏற்படுத்தும் முகமாக 1946 முதல் இன்றுவரை 6 பண்ட ஒப்பந்தங்கள் மட்டுமே கைச்சாத்திடப்பட்டன, இவை கோ துமை, சீனி, தகர ஒப்பந்தங்கள், 1969 இல் ஏற்படுத்தப்பட்ட தேயிலை ஒப்பந்தம், மற்றும் கோப்பி ஒப்பந்தம் என்பவைகளா கும், இவற்றில் கோதுமை, சீனி, ஒப்பந்தங் கள் வளர்ச்சியடைந்த நாடுகளின் உற்பத்தி யாளர்களைப் பாதுகாக்கும் நோக்குடனேயே ஏற்படுத்தப்பட்டதெனலாம். விருத்தி பெறும் நாடுகளைப் பொறுத்தவரையில் சீனி கோப்பி என்பன வெளி நாட்டுச் செலா வணி உழைப்பதில் முதன்மை பெறுகின் றன. 1975 ல் எண்ணெய் தவிர்ந்த மேற் படி பொருட்களிலிருந்து 9 மில்லியன் டொலர் பெறப்பட்டது. விருத்தியடைந்த நாடுகளினுல் இதுவரை கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் தகர ஒப்பந்தம் சாதகமான சூழ்நிலையை அனுபவிப்பதிஞல் இது அமுல் நடாத்தபபடவில்லை. ஆனல் கோப்பி ஒப் பந்தம் ஒன்று மட்டுமே, பிறேசிலில் சாதக மான சூழ்நிலை காணப்படுவதனுல் திறமை யான முறையில் செயற்படுகிறதெனலாம். எனவே தொகுத்து நோக்கின் இதுவரை கைச்சாத்திடப்பட்ட பண்ட ஒப்பந்தங்கள் நடைமுறையில் பயன் ஆளிக்கவில்லை எனக் கருதக் கூடிய வகையிலேயே அமைந்துள் 6Ա 60] •
வளர்முக நாடுகள் தமது ஏற்றுமதிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் சர்வதேசப்பண்ட ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது மட்டுமன்றி, வளர்ச்சியடைந்த நாடுகள் பாதுகாப்புக்

Page 63
மூன்ரும் உலக நாடுகளின் . .
கொள்கைகள் மூலம் ஏனைய நாடுகட்கு ஏற் படுத்திய தீங்கிற்கு நட்டஈடு அளிக்கும் வகையில் ஒர் திட்டத்தினை ஏற்படுத்த வேண்டுமென மர்நாட்டில் இரு பிரேண் கள் நிறைவேற்றப்பட்டன. இதனை நடை முறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் ஏனய உறுப்புக்களான *சர்வதேச நாணய *3” (I.M.F.), சர்வதேச புனருத் அரண் அபிவிருத்தி வங்கியும் (I.B.R.D) இணைந்து செயற்பட வேண்டும் எனக் கூறி து குறை விருத்தி நாடுகளின் சென்மதி நிலுவைப் பற்ருக்குன்றப் பிரச்சினையைத் தீர்க்க இவ்ை போதியதாகக் காணப்பு வில்லை. அத்துடன் சர்வதேச நாணய நெருக்கடிகளும், பண வீக்க நிலைகளும், குறைவிருத்தி நாடுகள் சர்வதேச வர்த்த கத்தில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடி யாத நிலைக்குக் கொண்டுவந்திருந்தன. உதாரணமாக 1950 ஆம் ஆண்டு தொடக் கம் 70 ஆம் ஆண்டு வரையிலான 20 ஆண்டு காலப்பகுதியை நோக்குமிடத்துப் LGT வீக்கமானது 1 % அதிகரித்தது. ஆணுல் சடுதியாக 70ம் ஆண்டின் முற்பகுதியில் இது 7% ஆக உயர்வடைந்து, இன்று 17% த்தினை எட்டியுள்ளது. எனவே தான் *யேல்" பல்கலைக் கழகப் பேராசிரியர் 'ட்ரிஃபின் உலக உற்ப்த்தியை அடிப்படை பாகக் கொண்டே சர்வதேச, நாணய முறை மாறவேண்டும்’ என்ற கருத்தினைத் தெரிவித்தார். ஏனெனில் உல்கப்பண்வீக்க நிலையைத் தீர்ப்பதற்கு இவ்வமைப்பு மாற் றம் அவசியமானதாகக் காணப்பட்டது.
எனவே முதலாவது அங்டாட் LDirpstru டில் ஏற்படுத்தப்பட்ட இரு பிரேரணைகளில் பிரான்சினல் கொண்டு வரப்பட்ட முதலா வது பிரேரலை, வளர்ச்சி யடைந்த நாடு கள் தாம் வளர்ச்சி யடையும் நாடுகளி விருந்து இறக்குமதியினை மேற் கொள்ளும் போது, இறுப்பின் ஒரு பகுதியையோ அல் லது முழுத் தொகையையோ இந்நாடுக ளுக்கு நட்டஈடாக அளிக்க வேண்டும் எனக் கூறியது. மற்றும் சுவீடனல் கொண்டு வரப்பட்ட குறைநிரப்பு நிதி நிதியத்தின் ( Supplementery Finance Fund Luig வளர்ச்சியுற்ற நாடுகளின் வர்த்தகக் கொள் கை காரணமாக வளர்முகநாடுகளின் ஏற்று மதிகள் பாதிக்கபபடும்போது அந்நாடுகளின் அபிவிருத்தித் திட்டங்கள் பாதிக்கப்படுவ தினுல்; இதனை ஈடாக்கும் வகையில் f5 'llஈடு அளிக்க வேண்டும் எனக் கொள்ளப்
ill-gil.
மேலும் வளர்முக நாடுகளின் வெளி நாட்டு உதவிகள் குறுக்கி விடப்பட்ட நிலை யில் இருப்பதன் காரணமாக இந்நாடுகளின்
60
ö@

எ. டிமன்பேர்ட்
வளி நாட்டு உதவி சம்பந்தமான கொள் நகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமென புறுத்தப்பட்டது. உ தா ர ன ம க ரூத்தி பெற்ற நாடுகள் தமது தேசிய நமானத்தில் 1% த்தினை வெளிநாட்டு தவிகளாகக் கொடுப்பதற்காக ஏற்றுக் ாண்டபோதும் உண்மையில் இதற்குக் றைவான தொகையே வழங்கபபட்டது. தாவது 0.3% மே வழங்கப்பட்டிருந்தது. வை மட்டுமன்றி சர்வதேச நாணய நிதி ல் விசேடமாக உருவாக்கப்பட்ட விசேட Qu'il difði LD356f6ão” (Special Drawing ghts) 1970 க்கும் 1975 க்கும் டையில் சேர்ந்த 1000 மில்லியனில் % மட்டுமே வளர்முக நாடுகளை டைந்தன. மிகுதி 97% மும் செல்வந்த rடுகளினற் சுவீகரிக்கபபட்டிருந்தன. மே ம் வளர்முக நாடுகளுக்குக் கொடுக்கப் ட்ட வெளிநாட்டு உதவிகள் தேறிய டிப்படையிலேயே’’ இதுவரை வழங்கப்" ட்டு வந்தன. இது சில வேளைகளில் எதிர்க் ணிையமாக அமைந்து- காணப்பட்டதால் ம் மாநாட்டின் முடிவின் படி, இவ்வுதவி ள் அதன் முழுப் பெறுமதியிலேயே வழக் ப்பட வேண்டுமென வலியுறுத்தபபட்டது. ருத்தி பெறும் நாடுகள் அபிவிருத்தி பற்ற நாடுகளிடம் விடுத்த வேண்டுகோள் ஸ் அபிவிருத்தியடைந்த நாடுகளால் பெரு ளவு கருத்திலெடுக்கப்படவில்லை. எனவே ளர்ச்சியடையும் நாடுகள் தம்மிடையே பாருளாதாரக் கூட்டுக்களை அமைப்பதன் லமே இவைகளுக்குத் தீர்வு காணலாம். னக் கொள்ளப்பட்டது. **լ Գthւ` լ-65r „Ľ6ň)"" ( Brettonwoods. ) இல்" வாதிக்கப்பட்ட " அடிப்படைச் சமநிலை னம்" என்னும் தொடர்பான பிரச்சினை ளூக்கு இது முக்கியமானதாக இருக்கும் னச் சுடடிக்காட்டப்பட்டது.
கைத்தொழிற் பொருட்களின் வர்த்தகம் தாடர்பாக "அங் டாட் மகாநாடானது ரண்டு பிரேரணைகளைக் கொண்டுள்ளது. வையானது விருத்தி பெறும் நாடுகள் ரதேசக்கூட்டுக்களை அமைத்தலும் ” ருத்தி பெறும் நாடுகளின் கைத்தொழில் ற்றுமதிகளுக்கு இறுப்புச் சலுகை அளிக்க வண்டும் என்பதுமாகும். ஏனெனில் 2 ‘ ம் உலக யுத்தத்தின் பின்னர் வளர்ச்சி டைந்த நாடுகள் தமது சுயதேவைப் பூர்த் யை அடிப்படையாகக் கொண்ட கூட்டுக் ாாக இணைந்தன. உதாரணமாக ஓ.ஈ. சீ., ஈ.எவ்.ரி.ஏ. போன்ற இக் கூட்டுக் ரினல் இவை தம்மிடையே இறுப்புச் சலு க மூலமும், தொகைக் கட்டுப்பாடு மேற்:

Page 64
மூன்றும் உலக நாடுகளின் விருத்தி. . . .
கொள்ளல் மூலமும் தம் கைத்தொழி களைப் பாதுகாத்தன. இந்நி லையில் சர் தேச சந்தையில் ஒப்பீட்டுச் செலவு அடி படையிலான நன்மைகளைப் பெறமுடியா, நிலையிலேயே குறைவிருத்தி நாடுகள் காண பட்டது. எனவே இறுப்புச் சலுகை மூல உற்பத்தி, திறமையான முறையில் ஏ, பட வழிவகுக்குமெனக் கூறப்பட்டது. ஆன இது அமெரிக்காவினுல் எதிர்க்கப்பட்டத யினும் 1964 இன் பின் "அபிவிருத்திக்கான பொருளாதாரக் கூட்டு நிறுவனத்தின் (O.E.C.D.) கவனத்திற் கொள்ளப்பட்டு பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மன் அெ ரிக்கா போன்ற கைத்தொழில் நாடுகள் இ பொருட்களுக்குச் சலுக்கை அளிக்கவேண் மென, 1968 இல் புதுடில்லியில் நடை பெற்ற இரண்டாவது மாநாட்டில் ஏற்று கொள்ளபபட்டது.
இதுவரை நடைபெற்ற நான்கு மாநா களும் எந்தளவு-செயலாற்றின என்பது கூ முடியாத நிலையிலேயே காணப்படுகிறது முதலாவது அங்டாட் மாநாட்டில் எடுக்க ப்ட்ட முடிவுகளின் படி குறை நிரப்பு நி: உதவுத்திட்டம் போதிய நிதியின்மையா கைவிடப்பட்டது. இவைகளின் விளைவு 1964 ஆம் ஆண்டு 200 கோடியாய் இருந்: மதிப்பீட்டு இடைவெளியானது 1980 ஆ ஆண்டளவில் 1000 கோடியாக வளர் திருப்பதனைக் காணமுடிகின்றது. அபிவிரு. தியடைந்து வரும் நாடுகளின் ஏற்றும் ளின் 1% தில், 10/1 பங்காவது வளர்மு நாடுகளினுல்ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தா பிறெபிஷ் கருதியபடி இவ்விடைவெளி சுலபமாக நிரப்பப்பட்டிருக்கும். எனேே றவுல் பிறெபிஷ் தனது பதவியை ராஜ ஞமா செய்தமை இம் மாநாட்டின் தீ மானங்கள் எந்தளவு தோல்வியடைந்: தென்பதை எடுத்துக் காட்டுகிறது 1971 இல் சந்தியாகோவிலில் நடை பெற்ற மூன்றுவது மாநாட்டில் மேற்கொன ளடப்ட்ட சீர்திருத்தம் தொடர்பாக இ மாநாடு ஏற்கனவே நடைபெற்ற மாநாடி டிரின விடத் தனது எண்ணங்களையும், கரு துக்களையும், மாற்றிக் கொண்டது. இ ஞல் வளர்ச்சியடைந்த நாடுகளின் தனி பட்ட பலமாக விளங்கிய சர்வதேசநிதி விட யத்தில் குறைவிருத்தி நாடுகளும் சேர்ந்து முடிவெடுக்க அனுமதிக்கபபட்டமை இதன் பெரும் சாதனையாக விளங்கியது. பொ( ளாதாரக் கூட்டுக்கள் அமைத்தல் தொட பாக எண்ணெய் வள ஏற்றுமதி (ஒபெக் தாடுகளுடன் இணைந்ததான பொருளாத, ரக் கூட்டுக்களை அமைப்பது தொடர்பா

Sh
;
எ. டிமன்போர்ட்
6.
1976 இல் நைரோபியில் நடைபெற்ற 5 வது மகா நாட்டில் ஆராயப்பட்டது , சுருங் கக்கூறின் அங்டாட் 1, 2, 4, இவைகளின் விருத்திக் கோரிக்கைகளுக்கு விருத்தியுற்ற நாடுகள், ‘நீங்கள் கேட்பதையெல்லாம் நாங்கள் கொடுக்க முடியாது, உங்கள் நாட்டினைச் செப்பனிடுங்கள் அப்போதுதான் ஒரு நல்ல சாம்ராஜ்ய நன்மைகளை அடையலாம்" என்ற வகையில் அண்மந்த தாகக் காணப்பட்டது.
சர்வதேச வர்த்தகம் தொடர்பாக வளர் முக நாடுகள் ஒரு சார்பான நன்மையினை அனுபவிக்கும் பொருட்டு அங்டாட் மாநாடு ஏற்படுத்தப்பட்டதாயினும், அது அமைக் கப்பட்டதன் இலக்குகளை அடையாத நிலை யிலேயே காணப்படுகின்றது. உதாரண மாக விருத்திக்கான அந்தத் தசாப்தத்தின் மாத்த வளர்ச்சி வீதத்தில் 5% விதத் தானும் இந்த நாடுகளால் அடைய முடிய வில்லை. எனவே ஏகாதிபத்திய, சமூக ஏகாதி பத்திய நாடுகளுடன் போட்டி போட முடி யாத நிலையில் இந்த நாடுகள் வேறு ஒழுங்கு முறைகளைக் கையாள வேண்டியதாக உள் ளது.
இது மட்டுமன்றி 1964 இல் உள்ள நிலையினை விடச் சில் நாடுகள் முன்னேறிய நிலையிற் காணப்படுகின்றன. உதாரண மாக இலத்தீன் அமெரிக்கா தனது அபி விருத்தி நிலையினை அடைந்து விட்ட தென் ற கூறலாம். எண்ணெய் வள ஏற்றுமதி (ஒபெக்) நாடுகளும் தமது பொருளாதார அரசியற் கொள்கையினல் முேைனறிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்நிலையில் இந் நாடுகளைத் தவிர தற்போது இலங்கை இந்தியா, ஸாகேல், ஆபிரிக்கா, தென் கிழக் காசியா போன்ற ‘நான்காம் உலக நாடு கள்’’ உருவாகிக் கொண்டு வருகின்றன, எனவே ஜேம்ஸ் ருெ பின் சனின் கருத்துப் படி "வர்த்தகம் வளர்ச்சியை ஏற்படுத்து வதற்கான சிறந்த கருவி' என்பது, இந் நாடுகளைப் பொறுத்தவரை ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாகி விட்டது. ஏனெனில் காலனித்துவ, நவகாலனித்தவ சுரண் டல் களின் தாக்கங்கள் இந் நாடுகளுடன் பின் னிப் பி6ைலந்திருப்பதாகக் காணப்படுகிறது. எனவே வளர்முக நாடுகளின் பிரச்சினைன் யப் பொறுத்தவன் ர அங் டாட்டானது அவற்றி னைத் துணிந்து எடுத்துக்கூறிய தொன் ருக வே அமைந்துள்ளது. ‘சர்வதேச வர்த்த கம் பொதுவாகச் சமத்துவமற்ற நிலை" யப் பிறப்பிக்கும் போக்குடையதாகக் காணப் படுகின்றது' என்ற சுவீடிஷ் பொருளியல் நிபுணர் மிர்டால் இன் கருத்து இங்கு குறிப்பிடக்கூடியதொன் ருக உள்ளது.

Page 65
With Best Co.
of
W. Kanagalingam
17, ST. JOHNS
COLOMBO
Phone : 25883
VVith Best Co
W. N. THAMBIRA
importers Exporters of Sr and General M
26, New Moor Street,
Colombo 12.
Sri Lanka. (Ceylon)

rm plfnmentş
pillai & Sons.
ROAD,
1.
Grams : Kancigars
Dmpliments
AJAH & C0.
i Lanka Praduces
erchanos.
Phone : 31122
Cable : Weentco

Page 66
Wifh Best
F
S. T. R. Salay
245, MAIN
COLOM
Telephone : 20536

Compliments
rOfY
Mohamed Ltd.
STREET,
BO 11.
Telegrams : Perdeshi

Page 67
WITH BEST COMPLIMR
MAYFAIR
BAMBALA
SPACE DONATED BY
Saravanas re
General Merchants & Commissi
61, 4th Cross St.
Tphone : 2,7437

UTS FROM
HOUSE
PITIYA.
ding Gompang
ns For Local Produces Agents.
et, - Colombo-1 1
Tgrams : “Thillai'

Page 68
WEEKEND
G. A. GQ., B. A.
As AST AW 1A M
AF/RST W CO
1. A, B, l. A. A (PA
/ WSTITUTE OF
G. C.E O/L, All
S. கலை, விஞ்ஞான, வ
The Jaffna
Main Str
Branches
The Jaffna Law Centre
B. M. C. Lane,
(Welington Taeatre Junction) Clock Tower Road JAFFNA

| GL ASSES
V, E. U. EB
MMERCE, B. COM/.
RT I & II)
CHARTED ACCOUMTS
ர்த்தக பாடங்களுக்கு
Law Centre
eet, Jaffna.
K. K. S. Road, KOKUVIL

Page 69
With Best
fr
MODERN
Nelliady -
bol
With Best
fr
7ý7'ercury
Neliady -

Compliment
ore
STORES
- Karaveddy.
*ܘܒܡܚܫ
Compliment
Ofi
Instituzte
Karaveddy.

Page 70
WITH BEST COPLIMENTS
FROM
R. M. K. & SONS
214, FOURTH CROSS STREET,
COLOMBO 1.
Phone 2795
|-------
அன்பளிப்பு
CENTRAL PHARMACY
179, POWER HOUSE ROAD,
JAFFNA.

WITH BEST COMPLIMENTS
Iላkየ0üf
VEL MURUGAN STORES
29, ST.JOINS ROAD,
COLOMBO 1.
Phome 31048.
BEST COMPI, IMENTS
FROMI
JAFFNA TRADERS
General Microhants comničn Agents los, HOSPITAI, ROAD, JAFFNA.
Phone 7704

Page 71
WITH COMPLIMENTS.
FROM
MEENA JEWEILLERS,
98, SEA STREET,
COLOMBO 1.
]”h 0ክe 2258ö
WITH THE BEST COIPLIIENTS
FROM
A. S. P. SIVANPILLAI
214, KEYZER STREET,
COLOMBO l.
Phone 21693

SPACE DONATED BY
E. K. THANGARAJAH 761, HOSPITAL ROAD,
JAFFNA.
Grams Ekatee Phone 7314
ITH T'HE BEST COMPI, l'AIENT
ᎤᎬ"
K. K. KRISHNAPILLA & CO. 71, FOURTH CROSS STREET cOLOMBOı.
gran Baktihan Phone 29325

Page 72
- எம். எச். எம். ஷம்ஸ்
நிறுத்துங்கள் நிறுத்துங்கள் போதுமினிப் போர்முரசம் எல்லாள மன்னவனே யானை விட்டிறங்குங்கள் காமினிக் கொற்றவனே அமிர ட்டும் எல்லாளன் வழங்குங்கள் ஓர் இருக்கை.
ரபர் மரத் தோப்பினிலே அரிவாளை ஏந்தி வந்து பால் வெட்டிச் சேகரிக்கும் பார்வதியே -உன் புன்னகைக்கும் செவ்விதழில் எல்லாளன் சிரிப்பு:திரும் . பனிக் குளிரில் சுடு வெயிலில் தேயிலைச் செடிக் கீழே கையுளைய முதுகுடைய வியர் முத்தம் சிந்திவிழ பாடுபடும் நித்யகலா ! எல்லாளன் தங்கை நீ. பார்வதீ! நித்யகலா! மாணிக்கக் கங்கையிலே மகிழ்ந்தொன்ருய் நாம்குளித்தோம் பாதமலைப் பயணிகளாய் நாமி6ை3ணந்து பாலின சத்தோம். ஒரிடத்தில் நாமிருந்தோம். ஒன்ருகக் கலை பயின் ருேம்
69

ஒருவன
தோசைக்கடை மேசையிலே ஒன்றிருந்து வடையெடுத்து உண்டவர் நாம் .
பணிமனையின் மாலினிக்கு கதிர்காமத் திருவிழாவில் முகவரியைக் கொடுத்தவனுர்?
சிவலிங்கம்
* "எல்லாளன் - காமினியின் யுத்தம் - ஆம் பெரும் யுத்தம். தோற்றவனும் எல்லாளன் காமினிக்கோ பெருவெற்றி" நிறுத்துங்கள் கரகோசம்! நிறுத்துங்கள் கர கோசம்!! விழித்துளியின். . . .ஒர். . . . . திவலை எங்குளது? அவர்க்காக அத்துளியை காணிக்கையாய்ச் சிந்திவிட யார் வருவார்? உயிர்நீத்த அவ்வீரன் எங்களுள் ஒருவனப்பா! சொந்த ரத்தம் ஒடுகின்ற உறவோன் அவன் ஆம் உறவோன்!
(சிங்கள மூலம் : பராக்கிரம கொடிதுவக்கு),

Page 73
SR SAKTHIY
ACADEMY
(Commerce and General
Education Centre)
Rare Opportunity for Students.
Conducting classes in Commerce
Arts and Science G.C.E. (A/L)
Up in All i hrec Languages
258/22, Dam Street. Colombo-12.
Phome : 21375
தமிழ் நாட்டின் தலைசிறந்: அற்புதமான புத்தகங்கள் வ இலங்கை
த. தம்பித்து
பிரபல புத்தக வி
226, ஆஸ்பத்திரி
கொழும்பு
84. லோறிஸ் ருே

'இளந்தென்றல் சிறக்க
இனிய வாழ்த்துக்கள்
M/S. SANDAGIRI
FANCY PALACE
430 A, Maradana Colombo 10.
த எழுத்தாளர்கள் எழுதிய ானதி பதிப்பக வெளியீடுகள். 5 ஏஜன்ட்
ரை & சன்ஸ்
பிற்பனையாளர்கள்
வீதி - யாழ்ப்பாணம்.
காரியாலயம்
ட் - கொழும்பு-4.

Page 74
To the Prc
TO PRODUC)
FISH N
Nissho
Unitik
ل
IS PLEASED TO
Ceylon Pet
FOR THE ESTABILI
Liason Agents:
Cobamil Agencies,
543/1, Australia Bui
York Street,
Colombo-I.

gress of the Nation
E CHEAPER TEXTILES, ETS, TYRE CORL)
Iwai Co, Ltd,
UAFPAN,
AND
a Límíted.
APAN.
O BE ASSOCIATED WITH
roleum Corporation
SHMENT OF A 6 NYLON PLANE.
iding, GRAMs - COBAMIL
TELEX - 1213
TELEPHONE- 2 4 591 245 96

Page 75
w EIENT YKrout NrEED
My EV/
OR?ቨዡ≤ ዘV1 7`A ፪ -
M. US foca L.
/ MSTR OR
if you wish to Repair your M
Please Cartact
The Bombay Harr Music Peo
122, SEA STREET, CO)
Dial: 258 17
BEST COMPLT ME
Sujikala lnd
சுசிகலா இன்ட
Grreting Gards Publishers Calen Manufacturers
13, A, 1.9 TH LAWE ST
C O L OM MJEB O -
Branch: 1351, Sea St., Colombo

лмEлу тs
usical Instruments
nonium Co. ble
LOMBO-11
ustries
ஸ்ரீஸ்
dar & Wesalk Goods
ACE ROAD,
4.

Page 76
நவகாலனித்துவம்பாட்டில் தாக்கம்
ன்றைய மூன்றும் மண்டல அல்லது குறைவிருத்தி நாடுகளின் வரலாற் றில், ஏதோ ஒரு காலப்பகுதியில் அவை அந்நிய நேரடி ஆதிக்கத்திற்குட்பட்டு இரு தமையைக் காணமுடிகிறது. இவற்றில் குறிப்பாக ஆசிய நாடுகள் உலக வல்லரச் களான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளின் ஆதிக்கத்தில் ஒரு குறு கிய காலப்பகுதியிலோ, அன்றி நீண்ட்தொரு காலப்பகுதியிலோ ஒர் அடிமைத்தனத்தை அல்லது தரக்குறைவான ஒரு நிலையை அனு பவித்து வந்துள்ளன. ஆல்ை அண்மையல் பல நாடுகள் அரசியல் ரீதியில் சுதந்திரப் பெற்றதுடன் தமது அரசியல் இறைமையை பாதுகாக்க முற்பட்டதை தொடர்ந்து, இத் தகைய வல்லரசுகளுக்கு நேரடியான பொரு ாதார, அரசியல் ரீதியான ஆதிக்கத்தை செலுத்த முடியவில்லை. மாரு?க மறைமுக ாகவோ அல்லது மாறுவேடத்திலோ அன்ற திரையிஞல் மூட்ப்பட்ட செயல்களின் மூலப் மூன்டும் மணடல நாடுகளில் பொருளா தார சுரண்டல்களை மேற்கொள்ள தஜலட பட்டுள்ளன. இத்தகைய ஒர் மறைமுக ஆதிக்கத்தையே "நவகாலனித்தவம் என்ற பதம் பொதுவாக குறித்து நிற்கிறது.
爱 தவகுடியேற்றநாட்டு வாதம் - ஏகாதி
பத்தியத்தின் இறுதிக் கட்டம்' என்ற நூலில் இந்த அம்சத்தை ‘என் குருமா? தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார்.7 நவ
குடியேற்றநாட்டு வாதத்தின் சாரம் சட என்னவெனில், அதற்கு ஆட்பட்டுள்ள ஒரு நாடு தத்துவார்த்த ரீதியில், சுதந்திரி (DT Gorgi. சுதந்திர இறைவு மயின் சகல வெளிப்புற அலங்காரங்களைக் கொண்டதா காட்சியளிக்கும். ஆனல் யதார்த்தத்தில் அதன் பொருள்ாதார அமைப்பும், அதி சியல் கொள்கைகளும் வெளியிலிருந்தே உத் தரவிடப்படுகின்றன.
*முதலாளித்துவத்தின் அரசியல் பொரு எாதாரம்" என்ற நூலில் டயான ம் ல்லா பின்வருமாறு கூறியுள்ளார். ‘நவ குடி யேற்ற நாட்டு வாதம் என்பது ஆசிய,

-ஆசிய ஒருமைப்
நித்தி துரைராஜா 3ம் வருடம் பொருளியல் சிறப்பு
然
73
ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க மக்களை முத லாளித்துவ அபிவிருத்திப் பாதையில் வைத் திருப்பதற்கும், அவர்களை பொருளாதார ரீதியாக சுரண்டுவதற்கும் செயல்படுவதற் கான நிதி முதலீடும், முதலாளித்துவ அரசுச் சக்தியும் தனியொரு இயந்திர அமைப்பாக ஒன்றிேைலயும் அரசியல் தலைமைத்துவமு மாகும்’ எனக் கூறியுள்ளார். இத்தகைய சுரண்டல்களையும், மறைமுக ஆதிக்கத்தை யும் ஆசிய நாடுகளில் பிரயோகிக்க நவ காலனித்துவ சக்திகள் பல வழிகளில் செயல் படுகின்றன. ஆசிய நாடுகளின் பொரு ளாதாரங்களை தமது பொருளாதாரங்க ளுடன் இணைத்துவிடுவதோடு, இவ்வாசிய பொருளாதாரங்கள் தாம் அளிக்கும் உணவு நிதி, கைத்தொழில், தொழில்நுட்ப உதவி களை வாரி வழங்குவதன் மூலம் மறைமுக நவகாலனித்துவ நாடுகளி ைமேல் தங்கி யிருக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளன.
ஆசிய நாடுகளின் அபிவிருத்திக்கு பிராந் திய அல்லது பிரதேச ஒருமைப்பாடு (Regional Integration) glass3 unt Qi gulf என கடந்த சில காலமாக உணரப்பட்டு வந்துள்ளது. இத்தகைய ஒரு ஒருமைப் பாடும், கூட்டுறவும் நவகாலனித்துவ சக்தி களுக்கு பயமுறுத்தலாக அமையும் என ஏகாதிபத்திய நாடுகள் உணர்ந்து கொண் டன. எனவே ஆசிய நாடுகள் .ை ஒருமைப் பாடு தமது ஏகாதிபத்திய அல்லது சுரண் டட்ல் இலக்குகளை அடையும் முகமாக திசை திருப்பப்படவேண்டுமென்ற முயற்சியில் தற் போது வில்லரசுகள் இறங்கியுள்ளன. இதன்ை சிறப்பாக செய்வதற்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரங்களில் புகுந்து, அவற்றினது நவகாலனித்துவ சக்திகளுக்கு எதிரான சகல அம்சங்களையும் அகற்றுவதோடு அந் நாடுகளை தமது பொருளாதார கூட்டுக்க ளில் சேர்த்துக் கொள்ளவும் முற்படுகின் றன. இத்தகைய கூட்டுக்களை உருவாக்கு வதன் மூலம் ஏகாதிபத்திய அரசியல், பொருளாதார இலக்குகளை அடைவது மட் மன்றி, தமது இராணுவ குறிக்கோள்களை யும் அடைய எத்தனிக்கின்றன.

Page 77
நவ காலனித்துவம் .
ஆசிய குறைவிருத்தி நாடுகளின் அபி விருத்திக்கு அந்நிய தனியார், அரசாங்க முதலீடுகள் அத்தியாவசியம் என வலியுறுத் துவதுடன் அவை பொருளாதாரத்தை தூண்டுவதற்கும் வழிவகுக்கும் என தீவிர பிரச்சாரம் இந்தகாலனித்துவ சக்திகளால் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு நிறுவன ரீதியான முயற்சிகள் மிக முக்கிய கருவி களாக நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக ஆசி நாடுகளில் பல நிதி நிறுவனங்களை அமைத்து அவற்றின் மூலம் அந்நிய முதலீடுகளை வர வேற்பதால் ஏற்படும் ‘நன்மைகளை எடுத் துக்கூறி இவ்வாசிய நாடுகளுக்கு ‘உதவி என்ற பார்வையின் கீழ் நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் அந்நிய அல்லது நவ காலனித்துவ முதலீடுகளை இந்நாடுகளில் குவிக்கின்றன.
ஆசியாவில் இத்தகைய அந்நிய நிதி முதலீடுகளே வரவேற்கவேண்டுமெனக் கூறிவரும் ஒரு முக்கிய நிதி நிறுவன மாக ஆசிய அபிவிருத்தி வங் கி" (Asian Development Bank) Giotti (33 spg). 1970 இல் இவ்வங்கியில்ை வெளியிடப் பட்ட ‘தென்கிழக்கு ஆசியாவின் பொரு ளாதாரம், அபிவிருத்திக் கொள்கைகள்" என்ற அறிக்கையில் இத்தகைய சிபாரிசுகள் செய்யப்பட்டன. மேலும் அந்நிய முதலீடு களை வரவேற்கும் முகமாக ஆசிய நாடுகளில் ஒர் நல்ல சூழ்நிலையும், சுங்கவரி இறப்புக் கள் நீக்கப்படல், வரி சலுகைள், தேசிய மயமாக்கலுக்கு எதிரான நடவடிக்கை களுக்கு உத்தராவதம், இலாபுங்களை வெளி நாடுகளுக்கு மாற்ற அனுமதி போன்ற தூண் டிகளைக் கடைப்பிடிக்குமாறுமேலும் சிபாரிசு கள் செய்யப்பட்டது.
தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய மான ஓர் பொருளாதார கூட்டாக(Econoல் mic Uuion) is:? GT Iš (g. GJ 35J o “giàuu 5ór”” (Asian) or irmo 4. LILL-TrGLћ. (Asian of the South East Nations). 1967 ඉණි) ஆரம்பிக்கப்பட்ட 'ஆசியன்" மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை அங்கத்த வர்களாகக் கொண்டு உள்ளது. அபிவி ருத்தி, வர்த்தகம், கல்வி, கலாச்சாரம், ஆகிய துறைகளில் அங்கத்துவர்களுக்கிடை யே நெருங்கிய கூட்டுறவுகளை முக்கியச் குறிக்கோளாகக் கொண்டுள்ள "ஆசியன்” இன்று ஆசியப் பிராந்தியத்தில் வலிமை மிக்க ஓர் கூட்டமாக விளங்குகிறது:
w
t
r
4.

நித்தி துரைராஜா
1965 இற்கும் பின்னர் தனியார் மூல னத்தை ஏற்றுமதி செய்வதற்கு fS)55jf ாதகமான சூழ்நிலையை அளிப்பதாக இந்த ஆசியன்" காணப்பட்டது. அமெரிக்க, ப்டானிய, அவுஸ்திரேலியா, மேற்கு *ரோப்பிய வங்கிகளைக் கொண்ட ஒரு நிறு பனமாக, "தனியார் முதலீட்டுக் கம்பனி' ICA (Private Investment Company of
sian) நிறுவப்பட்டதுடன் זח 1_ן fh u J pதலீடுகளை மேற்கொள்ள JFT 5 Gðir Dnts tயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க
காதிபத்திய செயல்களுக்கு உதவும் வகையி லேயே இன்யூ ஆசியன் செயலாற்றுகிறது. "ஆசியனின்" கணிப்பொருட்கள் விவசாய முலப்பொருட்களை ஆசியனுக்கு மிகச் சாதக )ான நிபந்தனைகளின் கீழ் கொள்வனவு செய்வதோடு இத்தகைய மூடப்பட்ட உப SuG5 F (5(p552.77 (Sub-regional groupings) பொதுப் பிராந்திய நோக்கங்களுக்கு எதி ாக அமைப்பதையே ஆதரிக்கிறது.
ஆசிய நாடுகள் நவகாலனித்துவ சக்தி 5ளின் பொருளாதார கூட்டுக்களுடன் ஒத் துழைப்பதன் மூலம் நன்மை அடையலாம் ான்பதை வலியுறுத்துக்ம் முகமாக 1964 இல் ஜக்காட்டாவில் (Jakrta) நடை பெற்ற 'ஆசியன்-ஐரோப்பிய பொருளா தார சந்தை மகாநாட்டின் முடிவுகளை இங்கு குறிப்பிடலம்ை. அதாவது ஆசிய Eன் ?ே கத்தொழில் பொருட்கள் ஏற்று மதிக்கு சுங்க கட்டணத்தை நீக்குவதாகவும், 30 விவசாயப் பொருட்கள் மீது விதித் திருந்த வரியை கணிசமான அளவு குறைப்ப தாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
*அரசியல் நடுநிலைமை" எனக்கூறிவரும் ஆசியன் 1969 இல் இலங்கை அங்கத்துவ மாக சேர விண்ணப்பித்த போது, இலங்கை அந்நேரம் சீனுவுடன் வைத்திருந்த நெருங் கிய வர்த்தக உடன்படிக்கையின் காரண Dாக அங்கத்துவம் மறுக்கப்பட்டது இங்கு சட்டிக்காட்டப்படவேண்டும். மேலும் 'ஆசி பன்’ நாடுகளில் அமுல்நடத்தப்படும் மிகக் ாடுமையான கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கு ாதிரான அடக்குமுறைகளும் இது ஏகாதி பத்திய சக்திகளின் கைப்பொம்மை என்பதை தெளிவுப்படுத்துகிறது.
எனவே பொருளாதாரக் கூட்டு என்ற போர்வையின் கீழ் ஆசியாவில் ஏகாதிபத்திய க்திகளுக்குச் சார்பான குழுக்களை உருவாக் த் துணைபுரிவதுடன் நவகாலனித்துவ சக்தி iள் தமது உற்பத்திப் பொருட்களுக் சிறந்த

Page 78
நவ காவனித்துவம் . . .
சந்தைகளையும், மூலப்பொருட்களை வாரி வழங்கும் மூலங்களை ஏற்படுத்தவும் இக்கு ழுக்களை ஆதரிக்கின்றன. குறைவிருத்தி நாடு களின் பிரதேச ஒருமைப்பாட்டை சீர்குலைய வைப்பதற்கு பிரதேச உபகுழுக்களை உரு வாக்கி பிராந்திய நாடுகளுக்கிடையே அரசி யல், பொருளாதார பகைமைகளை மூட்டி விடுவதன் மூலமும், கம்யூனிஸ்ட் ஆதிக்கத் தின் துன்புறுத்தல் போன்ற பயமுறுத்தல் களை மேற்கொள்வதன் மூலமும் பிரதேச ஒருமைப்பாட்டைக் கலைக்கின்றன.
"ஆசியன் அபில' க்திக்கான பிரதேச di. L. G. so 6 (RCD) Seato, Cenfo, Giris, ஆசிய பசுபிக் கவுன்சில், ஆசிய அபிவிருத்தி 1.B.R.D. ஆசிய கைத்தொழில் அபிவிருத்தி கவுன்சில் போன்ற திடமான நிதி நிறு வனங்கள் இத்தகைய உப கு மு க் க ளுக்கு நிதியுதவி அளிப்பதுடன் ஏகாதி பத்திய ஆதிக்கத்தை மறைமுகமாக நடை முறைப்படுத்தும் ஸ்தாபனங்களாக விளங் குகின்றன. − •
ஏகாதிபத்திய அல்லது நவகாலனித்துவ சக்திகளுக்கு எதிரான அரசாங்கங்களை கவிழ்க்கும் முயற்சிகளிலும், சதி,நாசவேலை களைச் செய்வதிலும் நவகாலனித்துவ சக்தி கள் ஈடுபட்டுள்ளன. இவ்வரசாங்கங்க ளுக்கு எதிரான பிற்போக்குச் சக்திகளுக்கு நிதியுதவி, ஆயுதங்க ள் வழங்குவதன் மூலம் இவ் விலக்குகள் அடையப்படுகின்றன. பங்களாதேஷ், தாய்லாந்த இராணுவ அர சாங்கங்களின் புரட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து அமெரிக்க வல்லரசு என்பதே தெரிந்தது.
ஆசிய பிரதேச நவகாலனித்துவ கொள் கைகஃாக் கடைப்பிடிக்கும் முக்கிய நவ காலனித்துவ நாடுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் இன்று முன்னிலை யில் திகழ்கின்றன. தமது பொருளாதார, அரசியல், இராணுவ நோக்கங்களை அடை வதற்கு குறை விருத்தி நாடுகளில் பிராந்திய கூட்டுக்களே ஊக்குவிப்பதில், கூட்டு முயற்சி யை மேற்கொள்கின்றன. சமாதானத்தை .யும், சனநாயகத்தையும் பாதுகாக்கும் வர லாற்றுப் பணியொன்றை நிறைவேற்று வதற்கு தாம் அழைக்கப்பட்டுள்ளதாக சாக்குக் கூறி இந்தோசீனு, கொரியா, போன்ற நாடுகளின் இராணுவ நாடகங் களில் ஈடுபடுவது உலகறிந்ததே.
இராணுவப் பலத்தை ஆசிய பிரதேசத் தில் மேலும் திடப்படுத்த முன்னய பிரித்

75
நித்தி துரைராஜா
தானிய காலனித்துவ தீவான டியாகோ கார்சியாவில் 1971ம் ஆண்டு இராணுவத் தளமொன்றை அமைத்தது யாவரும் அறித் ததே. இது இந்து சமுத்திரத்தில் பலம் மிக்க கடற்படையொன்றை நிறுவுவதுடன அப்பிரதேச நாடுகளின் அரசியல் இறை மைக்கு மறைமுகமான அச்சுறுதத்ல்களை மேற்கொள்ள வழிவகுக்கின்றது.
1971 இல் பங்களாதேஷின் விடுதலைப் போரின் உச்சக் கட்டத்தில் அமெரிக்க Gúll DIT6ðrð, 5n 6Éu Irr Gði (Aireraft carrier) "என்டர்பிரைஸ்" ( Enterprise ) தேசிய விடுதலை வீரர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பதற்கே வங்காள விரிகுடாவினுள் நுழைந்தது.
ஜப்பான் ஆசியாவின் முதலாளித்துபே வல்லரசு என்ற ரீதியில் பிற வல்லரசுகளை விட நவகாலனித்துவ செயல்முறையை மேற் கொள்ள வாய்ப்பாகவுள்ளது. எண்ணெய் நெருக்கடிக்குப் பின்னர் ஆசிய நாடுகளின் சந்தைகளைக் கைப்பற்றல், மூலப் பொருட் களைச் சுரண்டல் ஆகிய செயல்கள் வலிமை பெற்றன. 1970 காலப்பகுதியில் ஜப்பா னில் எண்ணெய் தேவைகள், ல் 80%தை மத்திய கிழக்கு நாடுகள் பூர்த்திசெய்தன. ஆல்ை இந்தோனேசியா எண்ணெய தற் பாது ஜப்பானின் எண்ணெய் தேவைகளில் கணிசமான அளவை பூர்த்தி செய்கிறதைத் தொடர்ந்து, ஜப்பான் இந்தோனேசியா மீது அதிக அக்கறை காட்டி வருகிறது.
மூன்ரும் உலக நாடுகளுக்கு விற்கப்படும் 'அபிவிருத்தித் திட்டங்கள்' அவற்றினது தேசிய தேவைகளை அறிந்து வரையப்பட்டன வையல்ல. இன்று அபிவிருத்தி என்பது வரலாற்று ரீதியாக அனுபவித்து வந்த அடி மைத்தனத்தை மேலும் சர்வதேச அமைப் பில் தொடரச் செய்வதற்கும், ஏற்கனவே வறிய நிலையுள்ள நாடுகளை உறிஞ்சுவதற் வம், தரமான வாழ்க்கைத் தரத்தை அனுட வித்துக்கொண்டு இருக்கும் செல்வந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்துவதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஓர் சாதனமே ஆகும்.
உலக ரீதியில் சமத்துவம் ஏற்பட வேண்டு மாயின் செல்வந்த நாடுகள் இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கும் பல அனுப வங்களை இழக்கவேண்டி நேரிடுவதால், தமது சமூகங்களிலும் பொருளாதாரங்களிலும் ஏற்படக்கூடிய பெரும் வெடிப்புக்களை சமா ளிக்க முடியாத நிலையில் இருக்கவேண்டி

Page 79
நவ காலனித்துவம் . . .
ஏற்படலாம், முதலாளித்துவ பாதையில் அபிவிருத்தியடைந்த நாடுகள் எதிர்நோக் கும் இரு முக்கிய சமூக, பொருளாதார பிரச்சினைகளைப் பின் வரும் புள்தரிலிபரவியல்
காட்டுகிறது.
1963 உடன் ஒப்பிடுமிடத்து 1970 இல் பின்வரும் வீதங்களில் வாழ்க்கைச் செலவு
அதிகரித்தது .
அமெரிக்கா --25.2' --س%, பிரித்தானியா - 33% ஜேர்மனி --19.9 --س% பிர்ான் ஸ் -29.1 ----س% ஜப்பான் --- 42% இத்தாலி ❤ 26%
மற்றும் வேலையின்மையைப் பொறுத்தவரை வேலையற்றேரின் தொகையைச் சில குறித்த முதலாளித்தவ நாடுகளில் காட்டப்பட்டுள் ள்து. 1971ம் ஆண்டு
பிரான்ஸ் - 336 (ஆயிரத்தில்) ஜப்பான் - 639
பிரித்தானியா - 849 5,307 LIT - 552 ஜெர்மனி - 174
அமெரிக்காவில் 5 மில்லியன் மக்கள் வேலை யற்றுக் காணப்பட்டனர். எனவே நவகால னித்துவ சக்திகளுக்குட்பட்டு முதலாளித் துவ அபிவிருத்திப் பாதையில் செல்வதும் பிற ஆசிய நாடுகளைப் பகைத்துக் கொள்வ வதும், ஆசிய ஒற்றுமையை சீர்குலைப்பதும்
புத்திசாலித்தனமான செயல்களாக தெரிய
ஆசியாவின் தொழிலாளர் படையில் 70% விவசாயத்திலும், 17% வர்த்தக சேவைகளிலும், 13% கைத்தொழில்கs: லும் தங்கியிருக்கின்றன. அதாவது தொழி லாளரின் எண்ணிக்கை, தரம் குறைவாக இருப்பதும், இத்தொழிலாளர்களுக்கிடை யே வர்க்க ஒற்றுமை இல்லாததுமே, நவ
காலனித்துவ சக்திகள் இலகுவில் திறமை
யாக செயற்பட காரணமாக இருக்கின்றன.
ஐரோப்பிய பொருளாதார சமூகத்தைப் போன்று, ஆசிய நாடுகளுக்கிடையே ஒர்
கூட்டு ஏற்படுதவற்கு சாத்தியக்கூறுகள்
உடனடி எதிர்காலத்தில் காணப்படவில்லை. இதற்கு அவற்றினது வேறுபட்ட அரசியல் கொள்கைகளும், குறைந்த வளர்ச்சி வீத
டிம, மரபுரீதியான விவசாயத்தின் முக்கி
பத்துவமும், கைத்தொழில் நாடுகளின்

நித்தி துரைரஐ
பொருட்களின் இறக்குமதியில் தங்கியிருப்ப்.
துமே காரணங்களாக உள்ளன.
ஆசிய நாடுகள் தமது அபிவிருத்திக்கு வரி, நாணய கட்டுப்பாடுகளை பரஸ்பர ரீதி பில் நீக்குதல், தமக்கிடையே மூலதனம், உழைப்பு அசைவைத் தூண்டல் போன்ற நடவடிக்கைகள் பிரதேச ரீதியாக சகல நாடுகளுக்கும் நன்மை பயக்கும்.
உற்பத்தி துறையைப் பொறுத்தவரை ஆசிய் குறைவிருத்தி நாடுகள் ஏற்றுமதித் துறைசார்ந்த கூட்டுக் கைத்தொழில் முயற்சி களில் ஈடுபடுவது அதிக அனுகூலங்களை வழங்கலாம். மற்றும் பின் வரும் துறை களி ல் கூட்டு முயற்சியில் ஈடுபடுவது தனித் தும், பிரதேச ரீதியாகவும், பொருளாதார” பலத்தை ஈட்டிக் கொடுப்பதுடன சுபீட் சப் பாதையில் இட்டுச் செல்லலாம்.
(1) விவசாயத்தினது உற்பத்தித் திறன்ை அதிகரிப்பது: பற்றிய 3, LG ஆராய்ச்சிகள். (2) நீர்வளங்களை மிகத்திறம்பட கூட்
டாகப் பயன்படுத்தல் . (3) போக்குவரத்து திட்டங்களை அமுல் நடத்தல் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆசிய பிரதேசத்தில் ஒற்று மையும் ஒருமைப்பாடும் உள்ள சூழ்நிலையி லேயே சாத்தியமாகும்.
ஆசியாவின் அபிவிருத்தியில் உண்மையில் அக்கறை இருக்குமாயின், அத்தகைய நாடு கள் அதாவது செல்வந்த நாடுகள், வறிய ஆசிய நாடுகளின் அபிவிருத்தியில் ஏற்பட் டுள்ள தடைகளை நீக்கும் முயற்சியில் ஈடு படவேண்டுமேயன்றி, அவற்றின் அபிவி திக்கு செல்வந்த நாடுகளால் தீட்டப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைத் திணிக்க முற்
டக்கூடாது. -
ஆசிய நாடுகள் நவ் கால்னித்துவ சக்தி "ளுக்கு இரையாகாது விழிப்புண்ர்ச்சியுடன் 5மது தேசியக் கதவுகளை இத்தீய சக்திக்கு முடி, தாமாகவே தாம் செய்யவேண்டிய தை இனங்க்ண்டு, மேற்கொள்வதன் மூல மம், பிரதேச ஒருமைப்பாட்டைத் தமக்கி டயில் பாதுகாத்து, பரஸ்பர நன்மை யக்கும் வகையில் வளர்ப்பதிலுமே நிரந்தர, மய்ப் பொருளாதார பலத்திற்கும் சுதந் ரமான் அரசியல் இறை ைமக்கும் வழி குக்க முடியும்.

Page 80
காரைநகரில் உள்ளுர் விளைபொருட் களை மொத்தமாகவும், சில்லறை யாகவும் நிதான விலையில் பெற்றுக்
கொள்ள
விஜயஞ் செய்யுங்கள்
திலகா ஸ்ரோர்ஸ்
துறைமுகம்,
காரைநகர்.
யாழ்நகரில் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து தங்களைத் திருப் திப் படுத்துவதே எங்கள் ஒரே நோக்கம்,
w ۹م)ر : ஆகவே எம்மிடம் விஜயம் செய்து
தரமான மலிவான உங்கள் தேவைப் பொருட்களை
வாங்குங்கள்!
குணரத்தினம் ஸ்ரோர்ஸ்
(பலசரக்கு மாளிகை) 96, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 5 5 6

வாழ்த்து கிருேம் !
குமாரவேல் கம்பனி
217 ஐந்தாம் குறுக்குத் தெரு,
கொழும்பு 1.
தொலைபேசி: 21057
வெளிநாடு சுற்றுப் பிரயாணிகளுக்கு தேவையான ஏலம், கராம்பு, கறுவா, ஜாதிப்பூ, ஜாதிப்பருப்பு, மற்றும் தேவைக்கும் ஒத்துழைப்பு நல்கும்
ஸ்தாபனம்
தேவராஜா ஸ்ரோர்ஸ்
91. ஏ, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்,
தொலைபேசி: 7560.

Page 81
நல் வாழ்த் துக்கள்
என். ஏ. வர்ணகுலசிங்கம்
மொத்த வியாபாரிகள்
அன் கமிஷன் ஏஜண்ட்ஸ்.
173, கெய்ஸர் வீதி
கொழும்பு 11.
தொலைபேசி : 25577
கே. கே. வி.
யாழ்ப்பாணம் நகை மாளிகை
தங்க , பவுண் , வைர நகைகள் எங்களிடம் பெற்றுக் கொள்ளலாம். வி. பி.பி. உடன் கவனிக்கப்படும்.
கே. கே. வி. யாழ்ப்பாணம் நகை மாளிகை
82/4 , கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணி ம்.
தொலைபேசி 362

லிங்கம் ஸ்ரோர்ஸ்
விவசாய மருந்து வகைகளும்
கோழித்தீன் வகைகளும்
உரக் கூட்டுத்தாபன ஏக விநியோகஸ்தர்கள்.
லிங்கம் ஸ்ரோர்ஸ்
168, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 7576
அன்பளிப்பு
சுந்தரம் பிறதர்ஸ்
175, மின்ஸார நிலைய வீதி,
யாழ்நகர்.

Page 82
அன் பள்ப்பு
நல்வாழ்த்துக்கள்
ஹரன் ஜனவலர்ஸ்
நகை வைர வியாபாரிகள்
ஆர். ஜி. பில்டிங்
50 கன்சூனதிட்டி ருேட் யாழ்நகர்.
உரிமையாளர் : க. கிருபாகரன்
த*தி ரத்னம்ஸ் போன் 444
WITH BEST COMPLIMENTS
FROM
M. K. MYLVAGA NAV & CO.
68, FOURTH CEROSS STREET,
COLOMBO .
Phome 22250,

இதயத்தால்
வாழ்த்து கிருேம்!
எஸ். கே. செல்லையா
புங்குடுதீவு 10.
BEST COMPLI1ENTS
FROI
ASIA ENTERPRSE Impcrters, Exor orters & Ger eral Mercants, Dealers in Petert Medici es undries Stationery, Oilman Gcc ds etc.
197, 5TH CROSS STREET,
COLOMBO 11.

Page 83
நமLக்கை நாணயம் உத்தரவாதத் துடன் கூடிய கட்டித் தங்க நகை களுக்கு
அமுதா நகை மாளிகை!
கண்2%னக் கவரும் தவீன டிசைன்
களில் உங்கள் விருப்பம் போல்
நகைகளைப் பெறுவதற்கு
அமுதா நகைமாளிகை!!
மணமகள் மனம் மகிழ ஆபரணங்களைத் தெரிவு செய்ய
அமுதா நகைமாளிகை!!! உங்கள் ஒடர் நகைகளைக் குறித்த தவஃ)
யில் கு ஏறந்த செலவில் திருப்தி கரமாகச் செய்விப்பதற்கு
அமுதா நகை மாளிகை
363, கே. கே. எஸ். முேட்
யாழ்ப்பாணம்.
நல்வாழ்த்துக்கள்
வூட்ல்ண்ட்ஸ் ஹோட்டல்
192, நாலாம் குறுக்குத் தெரு.
கொழும்பு-11.

இலக்கியச் சோலையில் இனிதே வீசுக!
றத்கம ஸ்ரோர்ஸ் 64, நாலாம் குறுக்குத் தெரு, கொழும்பு-1 1.
5п ХарC3 33 : 2 0 693
அன்பளிப்பு
இராசமலர் களஞ்சியம் 79, கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்."

Page 84
*நெஞ்சம் அ
లో కొత్త ఆద பிரிவைத் தேர்ந்தெ "டுத்து மேலே படிக்கப் போவதாய்க் கூறியபோது அவன் தந்தையிடமிருந்து அவ னுக்குப் பலத்த எதிர்ப்பு! அது அந்த சமூகத்தின் கேவலமான அங்கமாம் ! ஒரு கண்ணியத்தையோ மதிப்பையோ அவன் எதிர்காலத்திற்கது வழங்கா தாம் !
*உன்னுடைய திற ைமக்குப் போயும் போயும் மூளை இப்படிப் புத்தி கெட்டுப் போயிருக்க வேண்டாம்' என்ற பாணி யில் தந்தை உரையாடிய போது அவன் முடிவாய்ச் சொன்னுன் , "அதுக்கென்ன ப் பா! நோய் என்று வந்தால் மரியாதையான நோய், "அவமரியாதையான நோய் என் *றெல்லாம் எண்ணிப் பார்ப்பது எங்களு டைய கடமை இல்லையே! சமூகத்தின் எந்த அங்கமும் நமக்கொன்றுதான். உணர்வு கள் கடந்த பணியில் நலம் பெறுகின்ற உயிர் களின் மலர்ச்சிதானே நம் குறியப்பா!' - அவன் வாதங்களை மேலே ஏற்கவோ எதிர்க்கவோ விரும்பாதவராய் அவன் தந் தை முகத்தைச் சுளித்துக் கொண்டு எழுந்து விட்டார். அதை அவன் பொருட்படுத்த வில்லை.
தன் எண்ணத்தில் வெற்றிகரமாய் செயல் பீட்டு விரைவிலேயே நகரின் ஒதுக்குப் புற மாயமைந்த சிகிச்சைச்சாலையில் பணியை ஆரம்பித்தவன், மலைத்துப் போனன் . உள் மன அரிப்புக்களை, நெஞ்சின் கேவல ஆசை களை - தணிப்பதற்காய் இருட்டை நாடிய வர்கள், பகிரங்கமாய் சிகிச் ைசக்கு வந்த போது "அன்று அவன் தந்தை சுட்டிக் காட்டிய "சமூகத்தின் கேவல அங்கத்தை" சிருஷ்டித்திருப்பவர்களை அவன் இனங் கண்டு கொண்டான். கண்ணியத்தையும் மதிப்பையும் வெளியுலகில் வாங்கிக் கொள் கிற பலர்தான் காத தூரம் இரகசியமாய் ஒதுங்கி இச்சை தீர்த்து நோய் கண்டவர் கள்-என்பதை அறிய நேர்ந்தபோதுஅவனுக்கு அருவருப்பாயும் வெறுப்பாயு
萝瓷8,

2ல மோதுதே”
*செல்வி கலாவதி,கத்தையா ம்ே வருடம் , மருத்துவ பீடம்.
மிருந்தது. அதே சமயம். . . . . . . வாழ்க்கை
:யின் பயங்கர அலைத் தாக்குதல்களில் திணறி, வேறுவழியின்றி உடல் பின ழப்பிற்காய் தம் மை ஊனமாக்கிக்கொண்ட பெண் நோயாளி களின் கண் ணிரைக்காண நேர்ந்தபோது. அவனுக்கு குற்றம் எவர் மீது? என்று கூறத் தெரியவில்லை. ஆ ல்ை, அவர்களுக்காக அவன் பரிதாபப் பட்டான்.
சனிக்கிழமை மாலைகளில் ஒரு மைல் தொலைவிலிருக்கும் வேணு கோபாலன் சன்னதிக்கு அவன் நடந்து போய்வருவது வழக்கம். சிறிய கோவில்! ஆஒல் பெரிய விஸ்தாரமான ஆலயங்களில் பெற முடி யாத நிர்மலத்தூய்மைகள் அங்கு கிடைப்ப தாய் அவன் உணர்ந்தான் . ஒரு சனிக் கிழமை அவன் கோவிலை விட்டு வெளியே வரும்போது அடை மழை சிறிய அந்த முகப்பு மண்டபத்தில், மழை சற்று ஒயட் டும் என்று காத்துக் கொண்டிருந்தபோது **ஆட்சேப மில்லாட்டா. . . . . . இந்தக் குடையைக் கொண் டு போயிட்டு, அடுத்ததடவைவருகிறப்போ கொண்டுவந்து கொடுத்தாப் போதும்’-அந்தப் பழக்க மற்ற மென் குரல். அவன் ஒரு நன்றிப் புன்னகையோடு, தரிசனத்தை முடித்துக் கோண்டு வந்த அவளை நிமிர்ந்து பார்த் தான். பிரதி சனிக்கிழமையும் அந்த குழலுதும் கிரிதாரியின் அற்புத சோபை நிறைந்த திவ்யப் பேருருவைத் தரிசித்து விட்டுத் திரும்பும் வேளைகள் ல், உலகின் செளந்தர்யங்கள் ஒன்றிணைந்த பிரதிவிம் பமாய் அர்ச்சனைத்தட்டோடு எதிர்ப்படுகிற அவள் அரங்கம் கண்டு பள்ளி கொண்ட அண்ணலின் பிரகாரச் சங்குவடிவச் சட்ட விளக்குகளின் நெய்யூறிய தீச்சுஉர் சிந்தும் அமைதிப் பேரொளி யின் பூரண எழிலில் அவன் நிலைத்து நின்றிருக்கிற எத்தனையோ தடவைகளில், 'ஆஹா பாட்டா இது?’’ என்று அவனை மனதினுள் வியப்பைச் சிந்த வைக்கும் விதமாய், தேன் போன்ற குரலில்

Page 85
"நெஞ்சம் அலே மோதுதே "
ஆகர் ஷிக்கும் பூவிதழ் மென்மை இழை யோட உணர்வொன்றிப் பாடியுள்ள திற மை கொண்ட அவள்! h
நெஞ்சின் சலனங்கள் நிர்மல நிவாரணம் பெறும் பூடாளத் தூய்மைகள்! ஹரம் ஷத் வணியின் கம்பீரங்கள்! மத்யம்ாவதியின் மங்களங்கள்! பந்துவராளியின் உருக்கும் குழைவுகள்! சக்ரவாகத்தின் காந்தர்வ கான ரஸங்கள் அபாரமாய் ஒன்றி%ந்து கண் மடல்கள் தன்னிச்சையாய் ஒட்டுறவு கொள் ளத் துடிக்கும் கனிந்த அந்த கானத்திற் குரிய வரப்பிரஸாதியான அதே அவள்!
*அதெப்படி. . . இருக்கிற ஒரு குடை யையும் என்னிடம் கொடுத்திட்டா..?* அவன் போலி மரியாதைக்காக கூறிவைத்
தான் .
'ஒன்றும் ஆகியிடாது. அந்த புளூ
பெயின்ட்டட் ஹவுஸ். . . . அதுதான் என வீடு. கொஞ்சம் மழை ஒய நாலு அடி வைச்சாப் போயிடலாம். நீங்கள் குடை
யைக் கொண்டு போகலாம்? அவள் பிடி வாதமாய் கூறிய போது அவன் பலமாய் மறுத்து விட்டான் ஆனல் அவள் மேலே ஒன்றும் பேசாமல் ஒரு புன்னகையோடு குடையைக் கையில் தந்தபோது, அதை இன் னும் மறுப்பது இங்கிதமாகப் படவில்லை. விரித்த குடையுடன் நடந்தபோது-மகிழம் மலர்களின் ரம்ய ஆக்ரமிப்பாய் சுகானு பவச் சிதறல்களிடையே-நெற்றியிலிட்ட குங்குமத்திலகத்தின் செந்துகள்களில் சில அவளது கூரிய நாசியில் தவறுதலாய்ப் பட்டே தனி அழகாய் மிளிர்ந்த தன்மையை ரஸ்னேயுள்ள அவன் நெஞ்சம் அசை போட் L-தி.
மறுநாள் மதியம்-நண்பனெருவனைப் பார்த்துவிட்டு அதே வழியால் திரும்பிக் கொண்டிருந்த போது மறக்காமல் குடை யோடு ‘அந்த வீட்டருகில் இறங்கினன். மதியப் பூஜையை முடித்துக் கொண்டு எதிரே வந்த கிருஷ்ணர் கோவில் அர்ச்ச கரை நோக்கி அவன் முறுவலித்தபோது விசனத்தோடு அவர் கேட்டார், ‘தம்பீ உங்களுக்குக் கூட இங்கு பழக்கமா’’’

செல்வி கலாவதி கந்தையா
"உங்களுக்குக் கூட" என்ற வார்த்தையில் ஏன் அந்த அழுத்தம் என்று புரியாமல், வினுக்குறியோடு அவன் நிமிர்ந்த போது, ..
**இது உங்களை மாதிரி நல்ல  ைபயன் களுக்கு ஏற்ற இடமில்லை தம்பி" அர்ச்சகர் போய்வட்டார். அவன் புதிரோடு, அதே சமயம் பூட்டுத்தொங்கிய கேற்றிலிருந்து ஏமாற்றத்தோடு பார்வையை ரிட்ட போது, பக்கத்து வீட்டிலிருந்து; ஒரு சிறுமி துள்ளி ஒடி வந்தாள்.
‘பாப்பா ! இந்தக் கு ைடன் ய இந்த வீட்டி லிருக்கிற அக்கா கிட்டே கொடுத்திட முடி யுமா?’ அவனை சிறுமி வினுடி நேரம் உற் றுப் பார்த்து விட்டுக் கேட்டாள், ‘இங்கே உங்களை மாதிரி நிறைய ‘மாமா? எல்லாம் வருவாங்களே! பெயரைச் சொன் ( ைஎந்த
மாமா கொடுத்தார் என்று காயத்ரி அக்கா
கிட்டே சொல்லலாம். நீங்க எந்த மாமா?*
அவன் அதிர்ந்து போனன்! ஏதோ உன் னதங்களெல்லாம் ஊறு கண்டது போல் இதயம் வலித்தது. இந்த பகுதியிலிருக்கும் பல பெண்களைப் போால். . . . . இவளும். அவர்களுள் ஒருத்தி தான? அவஞல் அதை ஏற்க முடியவில்லை. இனமறியா வேதனை யும் ஏமாற்றமும் நெஞ்சக் குழிவில் திண றின. நிமிர்ந்தான், சந்தேகமில்லாமல் அதே புளு பெயின்ட் ஹவுஸ். g டென்று காலடியில் கிடந்த காகிதத்தை குணிந்தெடுத்துப் பேவைால் எழுதின்ை, 'ஏதோ எல்லாம் நினைத்தேன் , உன்னைப் பற்றி, ஆணுல் அந்த நினைப்பெல்லாம் ரொம்ப சாதாரணமானவை என்பதை இன்று புரிந்து கொள்ள முடிந்தது’*- ****இதையும் குடையோடு அவகிட்டேகுடுத் திடு பாப்பா? அவன் காரில் ஏறிக்கொண்
GT
மறுவாரம் சஞ்சலமும் விரக்தியும் சூழ்ந்த மனத்தோடு அவன் கோவிலுக்குப் போய் விட்டு ஓர் அவசரத்தோடு திரும்பிய வேளை, அவனுக்காகவே காத்திருந்ததுபோல் பிர காரத்தின் வெளியே அவனெதிரே அவள் கண்களின் பிரவாகம் கன்னத்தில் கோடிட தலைகுனிந்து நின்ற அவள்ை அவன் மெளன மாய் நிமிர்ந்து பார்த்தான்.

Page 86
* நெஞ்சம் அலை மோதுதே'
'அழுகிறதுக்குக் கூட யோக்யதைை எதிர்பார்க்கிற உலகிலே, நான் அழுகிற கூடக் கேவல்மாப் படலாம். . . .' நெ சின் ஏற்ற இறக்கமும் விம்மல்களும் அவ மனத்தின் வேக ஒட்டங்க்ளே அவனு குணர்த்திற்று. அவளே தொடர்ந்தா6 'ஒரு விபச்சாரியோடை மகளை ... தகப்பன் யார் என்று தெரியாத பெண்ணை கல்யாணஞ் செய்து கொண்டு இந்த ச கத்திலே வாழத் தயாரா... யாராவது 8 தன்மானமுள்ள ஆண் தைரியமா முன் வ: ருந்தா. . . . . . இன்றைக்கு இப்படி. . . -- கேவலமா நான் வாழவேண்டிய நிலை வ! ருக்காது’’. அவள் கண்ணிர் மாலைக தரைக்கு அர்ப்பணமாக்கிவிட்டுப் பே விட்டாள்.
அந்த உருக்கமான வார்த்தைகள் அல நெஞ்சில் கீறல்களாய் விழுந்தன! யாே செய்த பாபத்தில் பிறந்து, பாபங்களி ருந்து மீட்சிக்கு வழி தெரியாமல், :ண் அதே இடத்தில் இன்று அவளை உழல ை திருப்பதற்கு. சமூகத்தின் போ கெளரவங்களின் ‘கட்டாயம் தான் க்
ணம்! அந்த நிலைக்கு விடிவுகள்......?
ஆற்றல் மிக்க அவன் பெருந்தன் 6 பரந்த மனப் பாங்கில் அந்த முடிவி வந்தது. தொடர்ந்து 'அவளை அந்த மான காரியத்திலிருந்து காப்பாற்றி தா திருமணஞ் செய்வதால். . . . . அவளது சில் * அன்று சிதைந்த இனிய இல் காவியஸ்தானக் கனவுகளில் பாதியா உயிர் பெறக் கூடும்! நாளை. அவனே ! வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குை
s/wa/ar
அற்ப விஷயங்களில் பலவீனமாய் இருப்

செல்வி.கலாவதி கந்தையர்
βει η ற்கு FiF6ზf னே நஞ் லற துெ நாடி *றய
லாம்! எல்லாவற்றிற்கும் மேலாய் ஒரு நல்லகாரியத்தைச் செய்த எல்லையற்ற நிறைவை அவன் மனம் எய்தலாம்.
மறு நாள் மாலை வைத்தியசாலையில் வெளி நோயாளர்களுக்கான சிகிச்சைகளை முடித்த் விட்டு, தன் முடிவை அவளுக்கு கூறி அவளே மகிழ்வில் மல்ர்த்தும் புனித நினைவுகளோடு வந்தபோது வீட்டில் காரைக் காணவில்லை. *ஓ! அப்பா திடீரென்று எங்கோபுறப்பட்டுப் போய்விட்டாராக்கும்' எண்ணிக்கொண்டவணுய் அவள் விட்ட நோக்கி ஒரு உற் சாகத்தோடு நெருங்கியபோது, ... அவன் கால்கள் தடுமாறின! வாசலில். .. அவனது நீல மேகவர்ண "ஒஸ்ரின் கார்! அடிக்கடி இரவுகளில் "கிளப்' என்று தந்தை கூறிவிட் டுப் புறப்படுவது நினைவில் இடறியது! விக்கித்துப்போன உணர்வுகளோடு ப்புளு பெயின்ற் அடித்த அந்த வீட்டு மாடியைப் பார்க்கிரன். அங்கு சூழ்ந்திருந்த இருள் அவன் நெஞ்சை சூன்யமாக்க தன் காரை விரல்களால் நெருடிய படி தூரத்தே பரந்து கிடந்த அச்சூன்யக் கருமையில் இதயம் இரும்பாய்க் கணம் - காண அவன் நிற்கி @? ଶୈr •
கண்ணியம். மரியாதை....! வாய்வலிக் கப் பேசும் திறமை வாய்ந்த அவன் தந்தை uqtb. . . . . சமூகத்தின் அதே கேவல அங்கத்த வர் தான்.
* காயத்ரி! நீ இந்த சமூகத்தின் g IT Lié, தேடா?** அலை மோதும் அவன் நெஞ்சக் கேள்வி; விடை கிடைக்காமல் விஸ்வரூபம் கொள்ள அவன் திரும்பி நடக்கிடூன்"
േക~~ ava/Ya^
பலவீனம்
ஈடுபடுவது மனம்
பதைக் காட்டும்.
-கெளப்பர்
&3

Page 87
With Best Co.
from
TRUST TRAVEL
410, BLOEMENDHAL
COLOMBO 1.

npliments
SERWICE
ROAD,
3.

Page 88
(GTit 3 அகில இலங்கை ரீதியான சிறு கதைப்போட்டியில் முதற்பரிசு பெற்றது)
விடிவை நோக்கி .
(-1)
பொ, சாயும் நேரம் . இரவைக் கண்டு டகல் பயந்தோடிக்கொண்டிருந்தது.
முற்றத்தில் அமர்ந்திருந்தாள் விமலா, ஏக்கத்தை வெளி படுத்தும் முகத்தை முழங் காலி ை'க தாங்கிக் கொண் டு இருந்தாள். கைவிரல் நிலத்தில் என தயெதையோ கீறிக் கொண் பு; ருந்தது. நம்பிக்ன கயான எதிர் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவள் போல் எத்தனை தடவைகள் விமலா இதே முற்றத்தில் அமர்ந்திருப்பாள்.
பதினேந்து வருடங்கள். . . . . . .
அவள் பெரியவளாகி பருவத்தின் கனவு களுக்கு, எதிர்பார்ப்புகளுக்கு மனதில் உருக் கொடுத்து பதினைந்து வருடங்கள் காத்தி ருந்து விட்டாள். திரையிட்ட கண்ணின் ரத் து ைடத்துவிட எண்ணியபோது திண் & Cன யில் கேட்ட பேச்சுக்குரல் அவளைத் தடுத் தீது .
* பிள்ளை களைப் பெத்து ப் போட்டால் காணு மா? அது களையும் ஒரு க ைரயில் சேர்க்கவேணும்" சற்று மு ைதான் தோட் டத்தில் வேலை முடிந்து வந்த செல்லத்துன ர மீது அவர் மனைவியின் தாக்குதல் தொடங்கி விட்டது. M
**உணர்ச்சியே இல்லாமல் இருந்தால் அவள் குமராகவே சாகவேண்டியது தான். ... அவளுக்கும் முப்பது வயசாகியிட்டது"
*நானென்னடி செய்வன் . உள்ள தெல் லாத்* தயும் வழிச்சு மூத்தளுக்குக் குடுத்தப்போட்டு அந்தக் கடனே முடிய தில்லை' தனக்கும் உணர்ச்சி இருப்பதை வெளிப்படுத்திஞர். செல்லத்துரை.
விரக்தியுடன் இதழ்களைச் சுழித்தாள் விமலன. ஒன்ரு இரண்டா எத்தனை தட ைவ கள் இதே வார்த்தைகளை கேட்டுக் கேட்டு .தனது எதிர்காலத்தின் மீதே நம்பிக்: 6 கயிழந்து வேதனைத்தீயில் வெந்திருக்கிருள்.
85

垒。。、 3. iசாவலு ர் எஸ். ஜெகநாதன்
ஏக்கத்துடன் கழித்துவிட்ட பதினைந்து வருடங்களின் தடத்தில் விமலாவின் மனக் கோடுகள் நீள்கின்றன.
ஃ ஃ
நாலைந்து வருடங்கள் நெசவுசா லேயில் றிதகளோடு போராடியதால் விமலாவின் உழைப்பை உறிஞ்சிக் கொடுத்த சீட்டுகள் ...மூத்தவர்களுக்குச் சீதனம்’ ஆகியது.
வீடு வளவு, நகை நட்டு. , . இட்டுக் ஒரு ஐயாயிரம் ரூபா இவ்வளவையும் கொடுத்துத்தான் குலசிங்கத்தை மருமகளுக வாங் கிஞர் செல்லத்துரை. “ஏதோ ஒரு பால் பண்.3லயில் சோதிக்கிற. . கவுண் மேந்து உத்தியோகமாம்" அ வ்வளவும் கானதா? அந்த நாட்களில் செல்லத்துரை தலை நிமிர்ந்துதான நடந்தார்.
ஊர்ப்பள்ளிக்கூடத்தில் செலவில்லாமல்" படித்துக் கொண்டிருந்த சுந்தரத்தால் செல் லத்துரைக்கு சுமை ஏதும் இருக்கவில்லை. இருந்தாலும் அது சுமையாகத் தெரியாது. * . . . . . . .ஒரே மகனல்லவா?
செல்லத்துரை வீட்டில் ஒரு குமர் வாழ்ந்து விட்டால் ஊர் மக்களன் கவனம் திரும்பாமல் இருக்குமா? அவர்களின் வயிற் றெரிச்சல் புகையத் தொடங்கிவிட்டது. **நெசவுக்கு வேலைக்கா போஞள். கண்ட்குமரியளோடையும் ஆடவெல்லோ போ போஞள்’’.
நெசவுக்கு நூல் எடுப்பதற்காக யாழ்ப் பாணம் போஞல் அவள் திரும்பி வரு வதற்கு முன்பே "ஆரோ ஒருத்தஞேட படத்4 க்குப் போயிற்ருள்' என்று 'தந்தி' கொடுத்து விடுவார்கள்.
செல்லத்துரையின் பொறு ைமக்கும் சோதனை ஏற்பட்டு விட்டது. ‘மூத்தவளும் க ைர சேர்ந்திட்டாள். இனி அடுத்ததாக வாழப்போறவள் வீட்டிலைதான் இருக்க வேணும்” στου. Οι ff.
அவள் விரும்பியா நெசவுக்குப் போளுள், அவள் தான் நெசவுச் குப் டோக, 1 லி ரு ந்

Page 89
விடிவை நோக்கி . . .
தால் மூத்தவள் கல்யாணத்தை இன்றை
வரைக்கும் முடித்துத்தான் இருப்பாரா?
விமலா நெசவுக்குப் போகாமல் நின்று
விட்டாள். அடுத்ததாக வாழப்போறவள்”
என்று சொல்லித்தான் செல்லத்துன ரஅவளை
நெசவுக்குப் போகாமல் நிறுத்தினுர். அவர் சொல்லி ஒன்பது வருடங்களும் கழிந்து விட்டன. ஆனல், அந்த 'அடுத்ததுதான் வருவதாக இல்லை.
** அவனெண்டாலும் படிச்சு நல்லா வந் திட்டானென் ருல் நான் ஒரு மூலையில் பேசா மல் படுத்திரலாம்' எனறு கூறத் தொட ங்கி விட்டார் செல்லத்துரை. “ஒரு மூலை பில் பேசாமல் கிடப்பது இப்போது எல்
லாருக்கும் பிடித்து விட்டது. சுந்தரம்
யாழ்ப்பாணத்தில் ஏ. லெவல் படித்துக் கொண்டிருந்தான் ,
கம்பனியில் கடனுக்கு எடுத்த தையல் மெசினில் விமலாவ்ன உழைப்பு தொடர்ந் தது. பக்கத்துக் கிராமத்தில் மீனவர்களின் குடியேற்றத்திட்டம் இருந்ததால் கிறிஸ்து மஸ் போன்ற பெருநாட்காலங்களில் இரவு பகலாக தையல் மெசினுேடு மெசினுகி விடு ᎧᏗ ᎱᎢ ᎧlᎢ .
அவள் வீட்டின் பின்(றல் கண்ணு க்கெட் டிய தூரம் வரை பரந்துகிடக்கும் தோட்டப் பகுதியின வரம்பினுல் நடந்து சென்று
காட்டுப்பகுதியில் புறங்கிரூல் குடியேற்றத்
திட்டம் வந்து விடும்.
மீனவர்களிடம் துணி தைத்துக்கொடுத்து விட்டு காலச வாங்குவதற்காக குடியேற்றத் திட்டத்துக்குச் செல்வாள் விமலா, மேசை, கதிரை என்றெல்லாம் அந்த வீடு இவ்வளவு நாளும் காணுத பொருட்களை யெல்லாம் கனைடது. றேடியோப் பெட்டி கூடப் பாடத் தொடங்கிவிட்டது. குடியேற்றத்திட்டப் பகுதியில் நெருஞ்சி முட்கள் விமலாவின் பாதத்தை எத்தனை தடவைகள் வருத்தி யிருக்கும். எத்தனை கற்கள் இடறியிருக் கும்?
சுந்தரத்துக்கு யூனிவர்சிற்றியில் அட்மி சன் கிடைத்தக. இந்த மூன்று வருடங் களும் தையல் மெசினில் அவள் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்த சீட்டுகள். . . அவனைக் கொழும்பு வளாகத்துக்கு அனுப்பியது.
கிராமத்தவர்களின் மனங்களில் கொழுந்துவிட்ட பொழுமைத்தீ 'சுவாலை
86

காவலூர் ஹெகநாதன்
விட்டுப்பரவ இவ்வளவும் காணுதா? செல் லத்துரை வீட்டின் றேடியோப் பெட்டியில் இருந்து புறப்பட்ட நாதஸ்வர இசை கூட அவர்களின் காதுகளைக் கடித்தது,
*செல்லத்துரையின் ர மகள் மின் பிடிக் கிறவர்களோட ஆடுடுள்’’ என்ாறு அவர்கள் விதைத்த விதை கற்பூரவள்ளி போல் “கிசு கிசு வென்று வளர்ந்தது. செல்லத்துரை சொன்னர், ‘இனிமேல் தெற்காலை காலெ டுத்து வைக்கப்படாது? ?
‘தெற்காலை போகவில்லையென் ருல் மெசி னைப் பூட்டி வைக்கவேண்டியது தான்."
‘பட்டினி கிடந்து செத்தாலும் பரவா யில்லை நீ தெற்காலை போகப்படாது.”*
அவள் விரும்பியா போனுள்" அவள் தான் போகாமல் இருந்திருந்தால் சுந்தரத் 6 த யூனிவர்சிற்றிக்கு அனுப்பியிருக்க (pli
μΗ Lρ π 2
குடியேற்றத்திட்டப் பக்கமே போகாமல் நின்று விட்டாள் விமலா .
(3)
* கவுண்மேந்து உத்தியோகத்தை நம்பி தனிக்குடித்தனம் நடத்தச் சென:ற குலசிங் கம் மூன்று பிள்ளைகளை உற்பத்தி செய்து கொண்டு வந்து சேர்ந்தான். மூத்த மகனின் உடல் நிறைய செல்லத்துரை சோடித்து அனுப்பிய நகைகளெல்லாம விடைபெற்று விட வெறுமையாகத்தான் வந்தாள்.
சுந்தரம் யூனிவர்சிற்றியில் இருந்து லீவில் வந்து நிற்கும் போதெல்லாம் சமுதாய LfbgOI மலர்ச்சி, சாதி ஒழிப்பு. . . . இப்படியெல் ஒாம் ஏதேதோ சொல்வான். அவற்றிலெல் லாம் வீட்டிலுள்ள யாருமே அக்கறை காட்டுவதில்லை.
சின்னராசாவும் இன்னும் சின்ன மீனவர் களும் தோட்ட நிலங்களைச் சொந்தமாக வாங்கிக் கொண்டு குடியேறினர்கள். அவர் களின் வளர்ச்சியைக்கண்டு சுந்தரம் மனம் பூரித்தான்.
செல்லத்துரையும் குலசிங்கமும் உழைப்பு தும் குடிப்பதுமாக இருந்ததால் வீட்டில் , "ஆட்சி நடத்திய வறுமை விமலாவை விரட் " டியது. கிராமத்துப் பெண்களுடன் தோட்

Page 90
விடிவை நோக்கி . . .
டங்களில் கூலி வேலைக்குப் போகத் தொடங் "கிவிட்டாள்.
வெங்காயம் நடுவது. . . . களை பிடுங்குவது . . .சின்னராசாவின் தோட்டத்திலும் அவை நடக்கும் ,
பதினைந்து வருடங்களாக கனவுகளை மட் டுமே கண்டு. ஆன சகளை வளர்த்து எதிர் காலத்தைப்பற்றிய நம்பிக்கையை இழந் திருந்த விமலாவின் கொடியான uf 637 LÈ கொழுகொம்பைத் தேடியது. அந்தத் "தேடலை பெற்றவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கையை இழந்துவிட்ட நிலையில் அவ ளாகவே தன் து6ைலயைத் தேடிவிட வேண் டும் என்ற மன ஆவேசம் . . . . . . .
அன்று. மாலையின் மயக்கம் மங்குகின்ற வேளை-விமலா புதிய அனுபவத்தை சின்ன ராசாவிடமிருந்து பெற்றபோது சொன் ஞன் 'விமலா என்ன ட் ைட நீ எதனை எதிர் பார்த்தாலும் கட்டாயம் அதனை நிறை வேற்றுவேன்'
அந்த நாள் கூட கழிந்து ஒரு மாதத்து துக்கு மேலாகிவிட்டது. ஆனல் அவள் கண் aர்தான் ஒய்ந்தபாடில்லை. வீட்டில் வாழாமல் இருப்பதை விட சமூகத்தை எதிர்தென்ருலும் சின்னராசாவுடன. . . . . . . அந்த முடிவுக்கு வர அவள் உள்ளம் பக்கு வப்பட்டுக்கொண்டிருந்தது.
‘‘இருட்டினப் பிறகும் முற்றத்திலை இருந்து என்னடி கீறிக்கொண்டிருக்கிருய்?" தாயினுடைய அதட்டல்தான் அவள் நினை வுச்சங்கிலியை அறுத்தது.
பெருமூச்சுடன் எழுந்தாள் விமலா,
சில வாரங்கள் தான் கழிந்திருக்கும், அவள் எதிர்பாராததெல்லாம் நடப்பது போல் இருக்கிறது. செல்லத்துரையின் செயல்களில் ஒரு சுறுசுறுப்பு. தந்தி கிடைத்ததால் சுந்தரம் யூனிவர்சிற்றியில் இருந்து வந்து நிற்கின்றன். *லோங்" வீவில் குலசிங்கம் வீட்டில் நின்றன்.
விமலாவுக்கு மாப்பிள்ளை பார்க்கப் போ ஞர்கள். மாப்பிள்ளையே வந்து பெண் %ன யும் பார்த்து தலைய ைசத்தபோது செல்லத் துரை மகிழ்ச்சியின் உச்ச நிலைக்கு வந்து விட்டார்.

காவலுரர் ஜெகநாதன்
87
மாப்பிள்ளை போய் சில நிமிடங்கள்தான் கழிந்திருக்கும். கட்டாயப்படுத்தியதால் செய்து கொண்ட அலங்காரங்களை கலைக் காமலேயே கட்டிலில் விழுந்த விமலா தலை யனையில் முகம் புதைத்து விம்மினுள்.
துடித்துப்போய் அருகில் சென்ற சுந்த ரம் கேட்டான் 'என்னக்கா ஏன் அழு 6)(?ան ' ' -
'எனக்கிந்த கலியாணம் வேணும்'
‘என்னடி சொல்லிருய்' அவள் கூறி யது திண்லையில் இருந்த செல்லத்துரைக் குக் கேட்டுவிட்டதால் குறுக்கிட்டார்.
"எனக்கிந்தக் கலியாணம் வேணும்'
‘அதுவுமொரு கதை ஓமோம்" στεί τί η fί செல்லத்துரை,
"எனக்கு மாப்பிள்ளையைப் பிடிக்க வில்லை "
'நான் பார்க்கிற மாப்பிள்ளையைப் பிடிக்காவிட்டால் ஆருபார்க்கிற மாப்பிளே யடி பிடிக்கும்.”*
‘எல்லாருமாச் சேர்ந்து என்னைக் லுக்குள்ள தள்ளப் பார்க்கியறள்’’
“இப்ப பார்க்கிற அப்பனும் தம்பியும் தானே எப்பவும் உனக்கு மாப்பிள்ளை தே!- வேணும்' தான் தப்பினர் குலசிங்கம . இந்த 'தான் தப்புகிற புத்தி நம்மவரின் இரத்தத்தோடு கலந்து விட்டது.
பதிலின்றி விம்மி விம்மி அழுதாள் விமலா .
** அவளின்ர விருப்பத்தைப் பார்த்துக் . கொண்டிருந்தால் குமாரகவே சாகவி வேண்டியதுதான். நாளைக்கு உலகம் தான் என்னைப் பழி சொல்லும் என்று விட்டு கல்யாண எழுத்துக்கான ஏற்படுகளைப்பற்றி மருமகனுடன் ஆலோசனையில் இறங்கிவிட் டார் செல்லத்துரை.
இருவருக்கிடையிலும் புகுந்து தன் கருத் தைக் கூறினல் பெரிய யுத்தத்தில்" தான் போய் முடியும் என்பது சுந்தரத்துக்குத் தெரியும். விமலாவுக்கு அருகில் அமர்ந்து கொண்டவன் ‘* உன் ர மனசில் என்னதான் இருக்கு. சொல்லக்கா உன் ர விருப்பத் துக்கு மாருக எதுவும் நடக்கவிட மாட்டன்” என்டுன் , s

Page 91
விடிவை நோக்கி .
M4RMKK:GRYFY*** --********aa*s* - * :
பதிலின்றிக் கண் ஒர் வடித்தாள். அவள்
கண் tர் கந்தரத்தின் இதயத்தைத் தீன் Dr勢 குது. அதே கண்ணிரால் அவள் கருவில்
வளரும் உயில் ரக் கரைக்க முடியாதே.
KO (4) . . . . w
நான் விடிந்தால் கல்யாண எழுத்து. கட்டிலில் கிடந்த விமலாவின் கண்கள்
உறங்கவில்லை, உள்ளமும் உறங்கவில்லை. கல்யாண எழுத்து முடிந்து விடும். தாலி
கழுத்தில் ஏறுமுன்பே வயிற்றில் உள்ள *களங்கம் வெனப்பட்டுவிட வருகின்ற " "நோஞ்சானும் விட்டுச் சென்று விடுவர்ன்,
பிறகெல் ? வாழ்வே நஞ்சாகிவிட கண் விவன் கண்கள் :ே நிலைபெற்றுவிடும். அப்படி கண்
aர் விடுவதைவிட சின்னராசாவுல் tொழ்ந்து கண் னிர்விட்டாலும் LJU'sr62ju76)? என்று எண்ணினுள்.
வாழ்க்கை அவஜ அழைத்தது. அழைத்த வாழ்க்கையின் தடத்தில் விவள் இறங்கி Gaur Gir.
'ஒடினது தான் ஒடிஞள் மீன்பிடிக்கிறவ னுேடயா ஒடவேணும் தன் கெளரவம்ே சிதைந்துவிட்டதாக துள்ளிக்குதித்தான் குலசிங்கம்.
'தான் இனி உயிரோட இருக்கிறதில்ஆ என்ருர் செல்லத்துரை.
'ஒரு. அத்தான் வீடிலைட் இருந்து என்ன பார்த்தவர் எல் டு என்னைத்தான் எல்ல ரும் குறை சொல்லப் போஇனம். சரி போனவன்-கண்காணுத இடத்துக்குப் போ. ஞளா? பக்கத்தில் வந்து இருக்கிருள்"
மனம் விரும்பியவனுடன் விக்க நன்ருக வாழவேண்டுமென்று மனமார விரும்ப்ஞன் சுந்தரம். .
‘இனி அவள் இந்த வீட்டுப் பட2ல மீ திக் கப்படாது. ஆரும் ஆவளோடு கை தச்சது கண்டால் இந்த வீட்டிலை பிணம்தான் விழும். அவள் அயலுக்கை குடியிருக்கிற தை நானும் பார்க்கிறன்" என்று விட்டு திண்6ை0 பில் இருந்த கட்டிலில் படுத்துக் கொண்டான் குலசிங்கம். விமலா உன் التي يطا வாங்கிய அட்டில் விது.
இரவு தன் ஆட்சியைத் தொடங்கிப் பல மணிநேரம், கழித்து விட்டது. மெல்ல மெல்ல மூண்டு "பக்" கென்று பற்றிக் கொண்ட தீச்சுவாலைகள் சின் னராசாவின் குடிசைன யிப் பற்றிக் கொண்டன. கையில் பெரிய தடி ஒன்றுடன் குலசிங்கம் நின் முன் ,
விமலாவும் சின்னராசாவும் வெளியே ஓடி வந்தார்கன்.
83
குல: விழு தடு வ ை
கொ
தாக
சின் துக்ெ விட்
கிறன விடுகி கிறது Giff
of அ வர் Η πτΠ 3
 

காவலுர் ஜெகநாதன்
‘‘மானம் கெட்டவள். நீ மட்டுமல்லா ல் எ களை யுப் பானப் கெடுத்துப் போட் ாய் தபு 6 ய ஓங்கியபடியே நேருங் கி 6. குலசிங் கம். சீறிப் பரவிய தீயி ை ாக்குகளைப் போல் அவனது வெறி வேகம் 7ற்றது . ':ன் பிடிச்சுக் கொண்டு கிட்-லுக்குள்ள டந்தனி நடப்பாடா காட்டுருட்' வ வ து குரலோடு தடி சின்னராசாவில து
ாதும் சத்தமும் கலந்தது. s ‘வெள்ளாளனுேடசண்டைக்குப் போகப்-ாது’ என்று கூறிக்கொண்டு இன்னரா வின் சமூகத்தினரும் உதவிக்கு வராமல் iங்கிக்கொண் டனர். செல்லத்துை ரயூம் மனைவியும் வீட்டுக்குள் நந்து குலுங்கிக் குலுங்கி அழுதார்கள். 2யோ, ஐயோ?* என்ற விமலாவின் பறல் பெற்றவர்களின் வயிற்றில் தீயாகப் றியிருக்காதா? குலசிங்கத்தை எதிர்ப்பதஞல் பெரியக்கா ன்று பிள்ளைகள், இவர்களின் வாழ்வைப் ழாக்க வேண்டி ஏற்படும் என்பதால் ாளம் எரிமலையாகக் குமுற வீட்டுக்குள்
டபட்டுக்கிடந்தான் சுந்தரம். அக்காவைப் போல் நம்மினத்தில் எத் ா ஆயிரம் பெண்கள் இருப்பார்களோ தினை கண் ரீர் ஆறுகள் பாய்கின்றன ா? அத்தனையும் ஒன்று சேர்ந்தால் ல்'திரு வேளை மக்ாவள கங் ைகன Lu Gu L-5, திருப்ப வேண்டிய அவசியமே ஏற் ாதோ? அவனது சிந்தனை பாழ்டட்ட தக் கொடிய சமுதாய வீதியில் நடந்தது. ‘நானும் பார்க்கிறன் நீங்க வாழுற ைத " ஆறு உறுமியபடி களைப்புடன் நடந்தான் சிங்கம், அவனுக்கும் சில உதைகள் ந்துவிட்டன. ஆனல் சின்னராசாவுக்கு? பதற்கு முயன்ற விமலாவுக்கு? 'ஒரு ர ஒருவர் ஆதரவோடு அஃ:3த்துக் ண்டார்கள். G5!?, að fað u. SS upę த் தின்று விட்டது. காட்டத்தின் வேலி ஓரத்தில் அமர்ந்த 0ராசா தன் மிடி மீது விமலான வச் சரித் Nகாண்டு அவள் கண் a ன் ரத் ஆதி ைடத்து — fT að. - அந்த வீட்டிலே இருந்து கண்ணிர் வீடு தவிட உங்க மடியிலை இருந்து கண் வீர் றது எவ்வளவோ மேல்.... ë (67 --dj, க்கு உங்கட கைகள் இருக்கிறதல்ல
ாழ்வுக்காசப் போராடும் உறுதியோடு கள் விடின் வ'நோக்கி விழ்த் திருந்
(யாவும் கற்பனை)

Page 92
தத்துவமும் கல்விய
த்துவம், மனிதனுடைய சிந்தை
கள்,ஒழுக்காக அமைகின்றனவா என ஆராயும் தன்மை கொண்டது. அச்சிந் தனைகள் காரண காரியங்களை அடிப்படை யாகக் கொண்டனவா என்றும் அறிவது,
மனிதனிடத்தில், சிந்தனையும் உயிரும் எக் காலும் ஒன்றிய வ. மெய்யியல், தரிசனம் எனற பெயர்கள் பெறும் தத்துவமானது மனிதன் எவ்வாறு சிந்திக்க வேண்டுமென்று நிர்ணயிப்பது , உலகில் நாம் காணும், உருவாக்கப்படும் துறைகள் எல்லாவற்றிற் கும் பொதுவானது சிந்தனை. *。・
உளவியல், உயிரியல், உடலியல் போன்ற ஒழுக்கங்கள் எல்லாம் உளவளர்ச்சி பற்றியும் மனிதனுடைய இயற்கையினையும், அவனது உடற்பண்பைப்பற்றியும் விவரிப்பவை. சமூகவியல், மனிதன் எவ்வாறு தனது சூழ் நிலையோடு இணங்கி வாழ்கிருன் , வாழ எத் தனிக்கிரு?ன் என்பதை விளக்குகிறது கல்வியியல் மனிதனுடைய உள்ள வளர்ச் சியை ஒழுங்கு படுத்தும் போது கல்வி யியல், வாழ்க்கைக் குறிக்கோளினைச் சீருற வைக்கின்றது.
கல்வியின் மூலம் மனிதனல் உருவாக்கப் படும் குறிக்கோள்கள், அறிவு நிலை, இயற் றல் நிலை, உணர்ச்சி நிலை ஆகிய உளவியல் அம்சங்களைத் தழுவி உருவாக்கப்படுகின்றன. இம்மூன்று நிலைகளும் உண்மை, நன்மை, பான்மை ஆகிய இலட்சியக் கருத்துக்களை உணர்த்துகின்றன. அறிவு நிலை, இயற்றல் நிலை, உணர்ச்சி நிலை ஆகிய நிலைகளின் வெளியீடுகளாகிய உண்மை, நன்  ைம, பான் மை எனும் தன்மைகள் தருக்கம், அழகியல், அறிவியல் எனும் இயல்கள் மூலம் அறிவு றுத்துகின்றன,
தருக்கம், சிந்தித்தலாகிய உளச் செய லின் நன்முறைச்சிந்தனை, எதிர்மறைச் சிந் தனை ஆகியவற்றினை எடுத்துரைக்கும் தன் மை கொண்ட்து. அழகியலும், அறிவிய லும் பொதுப்படையாகத் தருக்கவியலைச்
8

ப. சந்திரசேகரம் D சிரேட்ட விரிவுஎ ரயாளர் கல்விப்பிடம் ,
கொழும்பு வளாகம்.
சார்ந்தவை. و ما يقا لا 5 كلا عن அறிவி யலும், தருக்கவியலுக்கு முரன் பாடுறக்கூடாது எனும் கருத்து தருக்கம் முழுவி ம கொடை இயல் எனும் கருத்தினை வலியுறுத்துகின் நிறது.
மனிதன் பகுத்தறிவுள்ளவன்; ஆய்வுத் திறன் பெற்றவன் ; தொகுத்தறியும் ஆற்: றல் கொண்டவன்.
உளணுால், மனிதனே அறிவது; அவனது உள வளர்ச்சியை அளவிடுவது", உளவளர்ச் சிக்கு உறுது?): யாயிருப்பது. நாம் நமது மக்களது உளவளர்ச்சியை அறிந்தாலன்றி கல்வி வளர்ச்சிக்கு கால் கோள் செய்ய முடி யாது. தருக்கம், உளவியலுக்கு, இன்றி யமையாதது என்பதற்கிணங்க, கல்வி மணி தனுடைய உள்ளத்தையும், உடற்பன் பை யும் சார்ந்தது. தருக்கம் மனிதனுடைய உள வெளிப்பாட்டினை மதிப்பிடுவது, என வே, தருக்கம் கல்வியாளனுக்கு சிறந்த தொரு கைக் கருவியாகும்.
"இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசறு காட்சியவர்க்கு என்றவாறு, அறியான மயை நீக்கி, மெய்யறிவை, மெய் யுணர்வை உண்டாக்கும் இன்ப நிலை தருக் கம். அழகியல், அறிவியல் ஆகிய ஒன்றி னைந்த ஒழுக்கத்தினுடாகப் பிறக்கும் தத்து வம் மூலமே பெறுதல் முடியும்.
கல்வி பெறும் மாணவர்களுக்கும், மான வர்களது வாழ்க் ைகனய நெறிப்படுத்தும் ஆசிரியர்களுக்கும், கல்வி பெற வாய்ப்பளிக் கும் பெற்றேர்களுக்கும், கல்வியினுல் பயன் பெறும் மக்களுக்கும் தத்து வத்துக்கும் கல் விக்குமுள்ள ஒன்றினைப்பு இது வழி எழு கின்ற கல்வித்தத்துவம் பற்றிய அறிவு ஆகி யன வேண்டற்பாலது.
தத்துவம் பரந்தது, ஆழ்ந்தது, மக்களுக்கு மெய்யறிவை அளிக்க வல்லது, அறிவினை ஒருமைப்படுத்தியும் , தொடர்பு படுத்தியும் முழுமை பெற்ற அறிவாக உருவாக்கும் தன் மையது. முறைப்பட்ட, ஒருங்கிணைந்த

Page 93
தத்துவமும் கல் வியும்
முழுமையான அறிவைப்பெற மனிதனுல் மேற்கொள்ளப்படும்முயற்சி தத்துவமாகும்.
கல்வியின் முழுப்பயனை மனிதன் பெறு வதற்குத் தத்துவ ஞானிகளே வழிகாட்டு பவர்கள். வாழ்க்கையின் அடிப்படைக் கூருண தத்துவம் வாழ்க்கையை விளக்க முற்படும், அறிவியலுமாக விளங்குகின்றது.
அது சிந்தனையென்றும், கோட்பாடென்றும்
கருத்தியலென்றும், கொள்ளப்ப்டும். தத்து வத்தின் சிறப்பு அம்சமான கல்வி சிந்தனை யுடனும், கருத்தியலுடனும், தொடர்பு
கொள்ளச் செயற்படும் சாதனமாகும்.
தத்துவம் காட்சி என்ற பொருளைத் தரும் கண்களாற் காண்பது காட்சி. அது மெய்மை முழுவதையும் ஒருங்கே பார்க் கும் பார்வையாகும். எனவே தத்துவம் அல்லது தரிசனம் எனும் கருதுகோள் பாரதத்திற்குச் சொந்தமான தத்துவத்தின் அடிப்படையும், முடிவும் ஒரு நேர் அனுப வம் எனும் பண்பினை உணர்த்தும்.
மக்கள் மெய்மனம் பற்றி நிறைவான அறிவை நாடுவது, ஒரு வடயத்தை அறிந் தோம் என்ற வெறும் திருப்திக்கு மட்டு மென்று கொள்ளல் முறையாகாது. மனித னுக்கு, இயல்பாகவே அறிவில் நாட்ட முண்டாகின்றது. ஆனல் வாழ்க்கையும், வாழ்க்கைப் பிரச்சினைகளும், இந்த நாட் டத்தின் ஊற்ருக விளங்கும். மனிதன் தனது வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர் நோக்கி, தீர்க்கத் தன் சூழ்நிலையைப் பற்றி, அறிவும், தன்னைப்பற்றிய அறிவும் முக்கிய மாகும். இக்காரணத்தால், மனிதனிடத் தில், அறிவு நாட்டம், ஆராயும் விருப்பு ஆகியன இயல்பூக்கமாகவே அமைந்திருக் கின்றன.
மனிதன் தான் காண்கின்ற நிகழ்ச்சிகள், பெறுகின்ற அனுபவங்கள், ஊடாக, வியப்பு அடைகின்ருன் எனும் கருத்து கிரேக்கச் சிந்தனையாளர் பிளேட் டோவின் கருத்தா கும். இந்த வியப்புணர்ச்சி வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்க வாழ்க்கையை மேம் படுத்த உதவும் சிறந்த அம்சமாக விளங்கு கின்றது.
மேல் நாட்டுத் தரிசனத்தின் தாயகம் ரேக்கநாடு என்று கொள்வது சாலவும் பொருந்தும். உலக அறிஞராம் சொக்கிர தீசரும், அவ்ரது உத்தம மானுக்கராம் பிளேட்டோவும், மக்கள் உய்ய தரிசனம் போதித்தவர்கள்; பரப்பியவர்கள். தரி
90

ப. சந்திரசேகரம்
w
சனம் போதித்தவர்கள் சிறந்த் ஆசிரியர்கள். இறைவனுக்கே உரித்தான இவ் வாசிரியர்கள் ஞானி எனும் நாமத்தினுல், அழைக்க முடி யாவிட்டாலும் இவர்கள் ஞான வேட்கை யர், ஞானத்தைக் காதலிப்பவர்கள் என்று” கூறுவது பொருத்த மெனக்கூறுவர்.
ஞான வேட்கை எனும் இலட்சியம் பற் பல காலங்களுக்கேற்ப, நாடுகளுக்கேற்ப, கலாசார மரபுச் சூழ்நிலைக்கேற்ப விரிந்த பொருளைக் கொண்டது. இவ்விலட்சியம் தனிப்பட்ட உண்மைகளின் தொகுதியைக் குறிப்பதோடு, உலகின் அடிப்படை இயல் $3 பயும் உலகில் நடாத்த வேண்டிய வாழ்க் 68 கயின் நெறியையும், அறியும் பொருட்டு நாம் செய்யும் ஆராய்ச்சிகளையும் அதனுல் எய்திய மெய்யறிவையும் குறிக்கும். என வே தரிசனத்தை மெய்யறிவு என்றும் கொள்ளலாம்.
தரிசனத்தின் துறைகள் u Sv. சிறந்த
சிந்தனையாளர்கள் எல்லோரும் தங்கள் துறைகளைத் திறம்பட விளக்கினுலும் இத் துறைகளை ஒப்ப விளக்கிஞர்கள். என்று
கொள்ள முடியாது. சில துறைகளை நன்கு ஆய்ந்தவர் சிலர்; ஒரு சில துறைகளை ஆய்ந் தவர் சிலர். ஆணுல், பலதுறைகளையும் முற்ற விளக்க நிறைவான தரிசன ஆராய்ச்சி முக்கியத்துவமாகின்றது.
தரிசனம், நிறைவான தரிசனம், அல்லது நிறைவுத்தரிசனம், ஆய்தரிசனம் ஆக்க் தரி சனம் என்று பொதுவாக வரையறுக்கப்பட லாம். தரிசனம் முழுமை கொண்டது ஒற்றுமை கொண்டது. என்று கொள்வதே முறையானலும் தரிசனத்தை பகுத்தறிந்து அவற்றின் முழுமையை அறிவதும் பொருத் தமாகும்.
ஆய் தரிசனத்தினை, அறிவியல், நியாயம் என இருவலகப் படுத்தலாம் அறிபவனு டைய வினை யாகிய அறிதல், என்றதன் இயல்பையும் அவன் அறிவும் பொருளா கிய விடயத்தைப் பற்றிய அறிவின் தன் மையையும் ஆராய்ந்துவிளக்கும்.
நியாயம், தொல் மரபு நியாயம், தத் துவ நியாயம், கணித சின்ன நியாயம், விஞ்ஞான ஆய் முறை நியாயம் எனப் பகுக் கப்படலாம்.
தொல் மரபு நியாயம். விசேடமாகத் தத்துவஞானி அரிஸ்ரோட்டில் அவர்களால் வகுக்கப் பெற்று அவர் வழி வந்தது. ஜேர்

Page 94
தத்துவமும் கல்வியும்
மன் நாட்டுச் சிந்தனையாளர் ஹெகல் அவ. -களின் கருத்துதத்துவ நியாயமென்று வ.ை யறுக்கப் படுகின்றது. அறிவும், மெய்!ை யும் ஒன்று என்பது அவரது கருத்தாகும் அறிவும், மெய்மையும் ஒன்றே எனும் அே ரது கருத்துக்கிணங்க அவரது தத்துவம் நியாய விளக்காமகத் தொடங்கி தத்து 6 ஞானமாக முடிகின்றது.
இருபதாம் நூற்றண்டில் வாழ்ந்து உலக தத்துவ இயக்கத்துக்கு மலர்ச் அளித்த அறிஞர்கள் அல்பிறெட் உவை கெட், பேட்ரம் ரசல் ஆகியோராவர். அவ களால் விளக்கப்பட்டது, கணித சின்ன நியாயமாகும்.
விஞ்ஞான சரித்திரங்களின் மரபில் வளர்ந்து அவற்றின் அடிப்படையான ஆராய்ச்சி முறைகளை விளக்கிக் கூறுவது விஞ்ஞான ஆய்முறை நியாயமாகும்.
ஆக்க தரிதனம், தத்துவ ஞானம் பயன யல் எனப்பிரியும். தத்துவ ஞானம் பர பொருளியல், ஆன்மவியல் எனும் பிரி0 களைக் கொண்டது, பயனியலுக்கு வ'ை யறை காணும் பொழுது பயன் பொதுவிய6 அதாவது, பொதுப் பயன்களைத் தருபவை பயன் சிறப்பியல், அதாவது சிறப்புப்பயல் களைத் தருபவை என்ற பொருள் படும் இது கீழைத்தேய தத்துவ ஞானத்தின் சிறந்த அம்சமாகும்.
பயன் பொதுவியல், நலன், மதிபுடை மை, இலட்சியம், எனும் பொதுவிலக் ணத்தை விளக்கும், பயன் சிறப்பியன் நோக்குங்கால், அது சமயவியல், கல்வியில் முருகியல், சமூகவியல், ஒழுக்கவியல், விஞ ஞான சாத்திர வியல், அரசியல் போன் *பல துறைகளாக விளங்குவதைக்காணலாம்
பல்லாயிரம் விதமான பத்தி
வந்தாலும், அந்த மொழி சேமிப்புக்குப் பொருள் வழங்

g
i
ப; சந்திரசேகரம்
நிறைவான தரிசனத்தின் துறைகள் இவ் வாருக, இவற்றுடன் நெருங்கிய தொடர் புடையதாயும், இவற்றிற்கு வேருனதையும் கொண்டதே தரிசன் வரலாறு,
காலப் போக்கில் வழங்கிய தரிசனக் கொள்கைகளின், தோற்றத்தையும், வளர்ச் சியையும், சிந்தனையாளர்களுடைய முயற்சி களையும் சிறிய விந்துக்களாகிய கருத்துக்கள், பெரிய விருட்சங்களாகிய கொள்கைகளாக
"விரிந்த தன்மையும், கால ஒழுங்கு மாறு மல்
ஆய்ந்து கூறுவது தரிசன வரலாருகும்.
மேல் நாட்டு தரிசன வரலாற்றைக் கூறு மிடத்து தரிசனத்தின் வளர்ச்சி நோக்கியும், விளக்கத்தின் எளிமை தோக்கியும், பொது வழக்கின் படியும், அத்தரிசன வரலாற் றை பண்டைக்காலம், இடைக்காலம், புதுக் காலம், நிகழ் காலம் எனப் பிரிப்பது மரபு
பண்டைக்கால தரிசனத்துள் கிரேக்க தரி சனமும், உரோமர் தரிசனமும் அடங்கும். பாரத, சீன தரிசனங்கள் கீழைத்தேய தரி சனங்கள் எனக் கொள்ளப்ப்டும்.
பொதுப்படக் கூறின் பல தத்துவங்க ளும், சான்ருேர்களை உருவாக்குவதும், ஒழுக்கத்தையும் சட்டத்தையும் நி லை நாட் டுவதும், தேசியப் பன்பினை வளர்ப்பதும், சமுதாய அறத்தினைப் பரப்புவதும், அறி முறை, ஆய்முறைகளைப் புகட்டுவதும் கல்வி, அறிவு, சிந்தனை ஆகிய வற்றிற்கு புத்து யிர் ஊட்டுவதுமாக பணியைக் கொண் டுள்ளன.
தத்துவத்தின் சிறந்த அம்சம் கல்வி என் என்பதும் தத்துவம் கல்வியின் பொது விதி என்பதும் நாம் ஏற்றுக் கொள்ளக்கடிய கருத்தாகும். w
rary
ரிகைகள் ஒரு மொழியில் நடந்து பின் நாளைய நிதிக்குவை என்ற பகுபவை இலக்கிய ஏடுகளே
9
*புதிய பார்வை” நா. பார்த்தசாரதி

Page 95
6,000
DEPOSI
WTH
NATIONAL
BAN
CANNOT BE W T IS THE - ONLY BAN
HIGH EST IN
TAX CONCE
AND SERVECE PHROUGH A AND SUB POST OFFICES

,000 TORS
HE
SAWINGS K
WRONG: K THAT OFFERS
盐
s
TEREST
SSIONS
RANTEE
LL POST OFFICES IN THE SLAND

Page 96
ஈழத்துப் பள்ளும் 1
கலாநிதி இ. பாலசுந்தரம் விரிவுரையாளர், கொழும்பு வளாகம்
திமிழிலுள்ள பிரபந்த இலக்கியவடிவங் களுள் பள்ளுப் பிரபந்தமும் ஒன்ருகும். குற வஞ்சி, அம்மானை, கும்மி, தாலாட்டு, நொண்டி நாடகம், கீர்த்தனை முதலிய இலக் கிய வடிவங்களைப் போன்று பள்ளுப் பிரபந்தமும் பொதுமக்கட்சார்புலி டய இலக்கிய வடிவமாகும், நாட்டாரிலக்கிய வடிவங்களிலிருந்து ஏட்டிலக்கியம் ஏற்றுக் கொண்ட இலக்கிய வடிவங்களுள் பள்ளும் குறவஞ்சியும் மிகச் சிறப்புவாய்ந்தல வ. இவற்றின் தொடக்கம் முதல் முடிபுவரை நாட்டரிலக்கியப் பண்புகளே மிகுந்து காணப்படுகின்றன. உழவர்களின் வாழ்க் கை முறைகளைப் பின்னிையாகக் கொண்ட பழைய உழத்திப் பாடல்களே பள்ளுப் பிர பந்தத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முன்னுேடியாக அமையலாயின.
உழவர்களின் ஒரு பகுதியின ரான பள்ளர் களின் வாழ்க்கை முறையை இசை நாடக வடிவில் அமைத்துக் கூறும் இலக்கிய வடி மே பள்ளுப் பிரபந்தம். மூத்தபள்ளி , இளைய பள்ளி என்னும் பாத்திரங்களை முன் னிறுத்தி, அவர்கள் வாழும் நாட்டுவளன் , வயல்வ ளன் மழைவளன், ஆற்றுவரவு என்பன பற்றியும் பள்ளரின் வயல் வேலைகள், அவர்களது உரை பாடல்கள், தொழில் முன் திகள் என்பன பற்றியும், அவர்கள் பண்னை யாரிடம் சுறும் முன் நயிடுகள் பற்றியும் இதிற் சுறப்பட்டி ருக்கும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலப் பகுதியிற் தோற்றம் பெற்ற ஆற்ற மிக்க இலக்கியங்களாக விளங்கியன வ பாமர மக்களைப் பாத்திரங்களாகக் கொண்டு எழுந்த, பள்ளு, குறவஞ்சி, நாடகம், கீர்த் தனை என்பனவாகும். இவ்விலக்கிய வடிவு வங்கள் கிராமிய மக்களுக்குச் சொந்த பான வை. அவற்றின் உள்ளடக்கமும் பொது மக்களின் வாழ்க்கையையே சித்தரிப்பதா யிற்று. மக்கட்சார்புடைய இவ் விலக்கிய

பிரபந்த இலக்கியம்
@計
வடிவங்கள் அக்காலப் புலவர்களின் திற மைக்குத் திறவுகோலாக அமையலாயிற்று , இன சச்சிறப்பு, நாடகப்பண்பு, காமச்சுவை, பொதுமக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு வழக்கு, பழமொழி முதலிய அம்சங்கள் அமைய இவ்விலக்கியங்கள் ஆக்கப்பட்டமை யால் இவை பொதுமக்களால் பெரிதும் விரும்பப்பட்டன.
காலப்போக்கில் பள்ளுப் பிரபந்தம் சிற் றிலக்கிய கர்த்தாக்களின செல்வாக் ைகப் பெற்றதோடு மட்டுமன்றி, பொது மக்களை யும் பெரிதும் கவர்வதாயிற்று. இதஞலேயே **படித்தால் பள்ளைப்படி ?, *" நெல்லு வகையை எண்ணினுலும் பள்ளுவன கன ய எண்ணமுடியாது' என்ற பழமொழிகளும் தோன்றலாயின. நவயுகக் கவிஞர் பாரதி யார் கூட ‘ஆடுவோமே பள்ளுப்பாடுவோ மே" என்று பாடியிருப்பதும் பள்ளின் பெரு மையை நமக்குணர்த்துகிறது .
பழைய இலக்கண நூல்களில் வரும் துறை ஒன்றைப் பற்றி விரிவாக நூல் செய்யும் வழக்கம் பிற்காலத்தில் எழுந்தது. 'நா- னிக் கண்பு ைதத்தல்' என்ற ஒரு துறை யைப்பற்றி நானூறு பாடல்கள் அமைத்துப் பாடிய ஒரு துறைக்கோவையும் இதற்குச் சான்று. இது போல்றே பள்ளுப் பிரபந்தி மும் தோன்றலாயிற்று. ஏர்க்களமும், போர்க்களமும் பாடுதற்குரிய சிறந்த டொ ருள்கள்.
**ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்'
என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்திலே குறிப்பிடப்படும் "ஏரோர் களவழி", சிலப் பதிகாரத்திலே வரும் ‘ஏர்மங்கலம், பன் னிரு பாட்டியல் குறிப்பிடும் **உழத்திப் பாட்டு" முதலிய துறைகளை அடியொற்றி யும் திணைநிலை வரிவப்பாடல்களாகவும், கூத்துக்கேற்ற துள்ளல் களாகவும் நாட் டிற் பரம்பல ரயாக வழங்கி வரும் பாடல் களின் சுவை கருதியும் இவற்றைப் பின் பற்றியமைந்த இயலில் ச நாடக முத்தமிழ் நூலாகப் "பள்ளு" என்ற நூல் தோன்றி

Page 97
ஈழத்துத்துப் பள்ளுப் .
யது. இந்த நூலின் அமைப்பு முறையை முதன் முதலிற் செய்தவர் எவரெனறு தெளி வாகக்கூறப் போதிய சான்றுகள் கிடைக்க வில்லை எனினும் பழைய துறை யாகிய 'ஏரோர்களவழி **யே இங்ங்ணம் நூலா கவிரிவதற்கு வித்தாக அமைந்தது எனச் சேதுரகுநாதன் குறிப்பிடுகின் ருர், குறிஞ்சி நில மக்களின் வாழ்க்கை முறைன் யப் பற்றிக் குறவஞ்சி தோன்றியது போன்று மருதநில மக்களின் வ்ாழ்க்கைச் சூழலை அடி யொற்றிப் பள்ளுப் பிரபந்தம் அமைவதா தாயிற்று:
பள்ளுப் பிரபந்தம் பிற்காலத்திலே தோன்றியதெனினும், அவற்றின் தோற் றத்திற்கான தோற்று வாயினைத் தொல் காப்பியர் குறிப்பிட்டுள்ளார். நூல்களுக் குரிய வனப்புக்களாக அம்மை, و () لایح தொன் மை ; தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எட்டையும் கூறிய பின், புலன் பற்றி வருமாறு விளக்கிக் கூறு &მცm?fir:
*சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தம் வேண்டாது குறித்தது . . தோன்றிற்
புலனென மொழிப புலனு ணர்ந்தோரே'
இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் 'வழக் குச் சொல்லினுனே தொடுக்கப்பட்டு, ஆராயவேண்டாமற் பொருள் தோன்றுவது புலனென்னுஞ் செய்யுளாம்" என உரை வகுத்துள்ள்ார். மேலும், இந்நூற்பாவுக் குப் பேராசிரியர் உரைஎழுதும்போது 'சேரி மொழி என்பது பாடிமாற்றங்கள். அவற் ருனே செவ்விதாகக் கூறி ஆராய்ந்து காணு மைப் பொருள் தொடரெனத் தொகுத்துச் செல்வது புலனென்று சொல்வர். புலனு "ணர்ந்தோர் என்ற வாறு அதை விளக்கத் தார், கூத்து முதலாகிய நாடகச் செய்யுள் கள் வெண்டு றைச் செய்யுள் போல்வன என்பது கண்டு கொள்க’ என்று கூறுகிருர், பள்ளு இலக்கியம் மேற் கூறப்பட்ட இலக்க ணம் பொருந்த அமைவதால் அவை தொல் காப்பியர் கூறும் புலன் என்னும் வனப் புடையன GT di Gol)|TfD .
பிரபந்த இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களில் பள்ளுப் பிரபந்தம் பற்றி எது வும் கூறப்படவில்லை. ஆனல் "உழத்திப் பாட்டு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 12ம் நூற்ாண்டிலே ஆக்கப்பட்ட பன்னிரு பாட்டியலிலே வருமாறு உழத்திப்பாட்டு
இலக்கணம் கூறப்படுகிறது:

கலாந்தி இ. பாலசுந்தரம்
"புரவலர் கூறி அவன் வா ழியவென்
றகல்வயற் ருெழிலை ஒருமை யுணர்ந்தன எனவரும் ஈரைந்துழத்திப் பாட்டே
அதன் உரைக்காரர் “உழத்திப் பாட்டுச் செங்கோல் அரசனை முதலிற் கூறி, அவன் வாழ்க என்று வாழ்த்தி, ஆழத்தி அகன்ற
வயல்களின் தொழில்கள்ை ஒப்ப்ற உணர்ந்து
கொண்டாள் என்று பத்துப் பாட்டாற் பாடப்படும் என்பது? எனப் பொருள் கூறி யுள்ளனர். எனவே உழத்திப்பாட்டானது ஆரம்பத்தில் பெண்பாற் கூற்ருய் புரவலனே வாழ்த்தி, வயற்ருெழிலை வருணித்து பத்துப் பாடல்களால் அமைந்திருந்தது என நாம் கொள்ளலாம். 14ம் நூற்ருண்டில் எழுந்த நவநீதப் பாட்டியலில் இடம் பெற்றுள்ள மிகைச் செய்யுள்கள் நான்கு மட்டும் "உழத் திப் பாட்டின் இலக்கணம் கூறி, அதனைப் 'பள்ளுமென்பர்" எனக் கூறுகிறது. பள்ளுப் பிரபந்தங்கள் 16ம் நூற்ருண்டில் எழுந்தன வென்றே பொதுவாகக் கருதப் படுகின்றது. அதற்கு முன்னர் பள்ளு இலக்கியங்கள் இருந் தனவா என்பதும் அறிதற்தில்லை. எனவே பள்ளுப் பற்றிக் கூறும் நவநீதப் பாட்டியல் மிகைச் செய்யுள்கள் பிற்காலத்தனவாக
இருக்கலாமோ என ஐயந்தொனிக்கிறது.
வீரமாமுனிவரும் பன்னிரு பாட்டியலைப் போன்றே இப்பிரபந்தத்தினை "உழத்திப் பாட்டு எனக் குறிப்பிட்ட போதிலும், அவர் தம் காலத்தில் வழக்கிலிருந்த பள்ளுப் பிரபந்தங்களை நன்கு அவதானித்து அவற் றுக்கு இலக்கணம் வகுத்துள்ளார் எனக் கொள்வது பொருந்தும். அவர் கூறும் உழத்திப்பாட்டு இலக்கணம் வருமாறு:
‘கடவுள் வணக்கம், முறையே மூத்த பள்ளியிளைய பள்ளி குடும்பன் வர வோடு அவன்பெருமை கூறல், முறை யே யவர் வரலாறு, நாட்டுவளன், குயிற்கூக்கேட்டல், மழைவேண்டிக் கடவுட் பரவல், மழைக்குறி ஒர்தல் ஆற்றின் வரவு, அதன் சிறப்புக்காண் டல், இவற்றிற்கிடை அகப்பொருள் துறையுங் கூறிப் பண் 23. த் தலைவன் வரவு, பள்ளிகள் ருவர் முறையீடு, இளை யாளை அவன் உரப்பல் பள்ளன் வெளிப்படல், பண்23) சி செயல் வின வல், அவனது கூறல், ஆயரை வருவித் தல், அவர் வரல், அவர் ' பெருமை கூறல், மூத்த பள்ளி முறையீடு, குடும் பன் கிடையிருந்தான் போல் வரல், அவனைத் தொழுவில் மாட்டல், அவன் புலம்பல், மூத்தபள்ளி டி சிற் கொடு

Page 98
ஈழத்து !!ள் இரு.
வசல், அவன் அவளோடு கூறல், அவ னவளை மன்னித்தல், கேட்க வேண் டல், அவள் மறுத்தல், அவன் சூளு றல், அவளவனை மீட்க வேண்டிப்பண் ஜனத் தலைவனைப் பரவல், விதை தலிய வளங்கூறல், உழவருழல் காளை வெருளல், அது பள்ளனைப் பாய தல், பள்ளிகள் புலம்பல், அவனெழு ந்து வித்தல், அதைப் பண்ணைத் த% வற் கறிவித்தல், நாற்றுநடல், விந தபின் செப்பஞ் செயல், நெல்வள, தல், மூத்தபள்ளிமுறையீடு, பள்ளி. ளொருவர்க்கொருவர் ஏசலென இ6 வுறுப்புக்களிறப்பாட்டுடைத் தலைவன பெரு ைம யாங் காங்கு தோன்றச் சி தும் விருத்தமும் விரவி வரச் இவ, ருற் பாடுவது உழத்திப்பாட்டு. ’’
பாட்"; யல்நூல்களும், சதுரகராதியு உழத்திப்பாட்டு’ எனக் குறிப்பிடுவதனை கொண்டு நோக்கும் போது, உழத்திப்பாட் என்ற தனி இலக்கியம் ஒன்று இருந்திருக் வேண்டும் எனவும், அதனின்றும் வே. பட்டதே 'பள்ளு என்பது எனவும் துணி லாம். ஆயினும் சதுரகராதியிற் கூறப்படு உழத்திப்பாட்டிலக்கணம் பள்ளுப் பாட்டி கும் பொருந்தும். எனவே பள்ளுப் பிரட தத்தையே "உழத்திப்பாட்டு’ என்ற தெ டர் குறிப்பதாயிற்று என ஐயுற (86 ! স্ট্রেীড়া யுள்ளது.
பள்ளுப் பிரபந்தங்கள் தமிழ் நாட்டி 16ம் 17ம் நூற்றண்டுகளில் தோற்ற பெறத் தொடங்கி விட்டன. ஆங்கு தோன்றிய பள்ளு இலக்கியங்களுள் முக் கடற்ப்ள்ளே காலத்தால் முற்பட்டதெனவி அது 17ம் நூற்ருண்டின பிற்பகுதியி (தி.பி. 1680) எழுந்ததெனவும் அந்நூலி முதற் பதிப்பாசிரியரான மு. அருளுசல குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் தமி கத்தில் தோன்றிய பள்ளுப் பிரபந்தங்களr முக்கூடற்பள்ளு, திருவாரூர் பள்ளு, கு ட்ர்ப் பள்ளு, திருமலைப் பள்ளு, சிவ சயின் பள்ளு, )ே விசியப்பள்ளு, வடகள் ரவப் பள் சீகாழிப் பள்ளு, தில்லைப்பள்ளு, கண்ணுை யம் மெப் பள்ளு, சேற்றுப்பள்ளு, திருவிே மருதூர்ப்பள்ளு, மாந்தைப்பள்ளு, கூட பள்ளு, தஞ்சைப்பள்ளு, இராசநாய்யக் பள்ளு, புருவைப்பள்ளு, மன்னர் மோகன பள்ளு, திருநீலகண்டன் பள்ளு என் ப குறிப்பிடத்தக்கனவாகும். தமிழகத்தை போன்றே சமகால வரலாற்றுடையதா. பள்ளுப் பிரபங் தங்களின் தோற்றம் வ6 ச்சி காணப்படுகின்றது. இவ்வரிசையி க்ழத்திலே தோற்றம் பெற்றவை கதிரமை

கலாநிதி இ. பாலசுந்தரம்
ன்
:
s
9
5
பள்ளு, ஞானப் பள்ளு, பருளை விநாயகர்
பள்ளு தண் டிகை கனகராயன் பள்ளு, த்ம்பி லுவிற்பள்ளு முதலிய,ை வாகும்.
கதிரைமலைப் பள்ளு:
கதிரையப்பர் பள்ளு எனவும். கதிரை மலைப் பள்ளு எனவும் வழங்கும் இந்நூ லில் கதிர்காமைக் கந்தன் புது பாடப்பட்ட தாகும். இந்நூலாக்கியோன் பெயர் தெரிய வில்லை. இதனை முதன் முதலாக 1906 ல் முல்லைத்தீவைச் சேர்ந்த தா. கைலாசபிள்ஃ: என்பவர் பதிப்பித்துள்ளார். அவர் பதிப் பிற் காணப்படும் கடவுள் வாழ்த்துப்பாட லாக வரும்,
கந்த மேவு கார்முகத் தோனே
கரு3ைலயாகிய சங்கரி மைந்தா,
முன்பு போலெனை அன்பு வைத்தாளும்
முள்ளியவளை மூத்த நயிந்தை'
என்ற பாடலில், முள்ளியவளையிற் கோயில் கொண்டுள்ள மூத்த நயினுராகிய விநாயகப்
பெருமானைக்குறிப்பிடுவதால் இவ்வூரைச்
சார்ந்த புலவரொருவர் இதனைப் பாடின ரோ என ஐயுறலாம். இந்நூலை இரண்டாந் தடவையாக 1935-ம் ஆண்டில் தெல்லிப் பழை வ. குமாரசுவாமி அவர்கள் பதிப்பித் துள்ளார். இந்நூலில் 130 பாடல்களும், பாடபேதமாக ஏழு பாடல்களும் தரப்டட் டுள்ளன. இந்நூல் கி. பி. 16ம் நூற்ருண் டின் பிற்பகுதியில் முதலாம் இராசசிங்கன் காலத்தில் பாடப்பட்டிருக்கலாமென இந் நூற் பதிப்பாசிரியர் கருத கிருர். ஆயினும் ஆகச்சான்றுகள் இதனை நிரூபிக்குமாறில்லை.
இந்நூலில் இடம் பெறும் 'அமரர் நாத:
புதல்வன் தர்ம நாயகன்' என்னும் பெயர் யாரைச் சுட்டுகிறது என்பது புலப்பட வில்லை. இந்நூலியற்றியவர்: "கதிர்காமக் கந்தனிடம் மிகுந்த பக்தியும், அன்பும் உடையவரென்பதை முருகக்கடவுளைக் குறிக் கும் பக்தி ரசம் கனிந்தொழுகும் பாடல் களால் அறியலாம்.
ஈழத்துப் பள்ளுப் பிரபந்தங்களுட் காலத் தால் முந்தித் தோன்றியது கதிரையட்டர் பள்ளே. இப்பள்ளி ல் வரும் பள்ளனும் அவ னது மூத்த மனைவியான மூத்தபள்ளி யும் , ஈழநாட்டினர்ாகவும், இரண்ட்ாம் மனைவி
யான இளைய பள்ளியின் தாய்கம் இந்தியா
என்றும் கூறப்படுகின்றது. இவர்களுக்கு ப்
பெயர் முறையே மகா வலிகங் எ சப்புள்ளன் ,
மகாவலிகங்கைப் பள்ளி, பகீரதா கங் ைசப்" பள்ளியாகம். இதில் கதின் ரமலை முருகனைக்

Page 99
ஈழத்துப் பள்ளுப் . . .
குலதெய்வமாக்க் கொண்டு அவர்க்கு வழி வழி அடிமைபூண்டொழுகும் மூத்த பள்ளி சுப்பிர மணியர் பெருமையையும், இளைய பள்ளி விநாயகர் மகிமையையும் பாடுவதை யும் கவனிக்கலாம்.
பள்ளு இலக்கியத்தில் அகப் பொருட் பாடல்கள் இடையிடை விரவி வரத் தொ டுக்கப்படுவது 19ரபாகும். ஆஞல் கதி ைர மலைப்பள்ளில் இப்பண்பு இடம் பெறவில்லை. இந்நூல் காலத்தால் முந்தியதாகையால், மேற்குறிப்பிட்ட் மரபு பள்ளு இலக்கியத் தில் இடம் பெறும் வழக்கம் தோன்று வதற்கு முன்னர் இப்பள்ளு தோன்றியிருக்க வேண்டும்.
இந்நூல் ஈழத்துச் சூழலில் வைத்துப் பாடப்பட்டதாகையால் ஈழவளச் சிறப்புக்க ளெல்லாம் மூத்த பள்ளிலின் வாயிலாக ஆசிரியர் வருணித்துச் செல்கிருர்,
‘பொன்னு லோகம் பொருவுநன் னட்டின் பொழிலிற் ருேகை மயில்நின்றுலாவும் :ன்ன வேலன் கதிரைக் குமரேசன்
மாவலி கங்கை நாடெங்கள் நாடே'
இது மூத்தபள்ளி கூற்முக அமைந்து வரும் ஈழச்சிறப்புக் கூறும் பாடல்களில் ஒன்ருகும். இந்நூலிலே மூத்தபள்ளிக்கும் இளைய பள்ளி க்கும் இடையில் நிகழும் உரையாடல்கள் படிப்போன ர மகிழுறச் செய்வன். அவர் களது உரையாடல்களிற் சேரிமொழிகளும் அவர்களது ஒழுக்க நிலைகளும் இடம்பெற் றுள்ளன. சைவத்தின் பெருமையையும் கதி (ரைமலைப் பெருமானின் அருட்சிறப்பையும் எடுத்துக் கூறும் ஈழத்து பழைய இலக்கிய மாக இப்பள்ளுப் பிரபந்தம் திகழ்கிறது.
ஞானப்பள்ளு
மினுக்குலத்தை fert rfj; 35 வழியிற் செலுத்த எழுந்த நூல்கள் பல. செய்யுள லும் வசனங்களிலும் அத்தகைய நூல்கள் ஆக்கப்பட்ட 53 . ஞானப்பள்ளு செய்யுள் வடிவத்தில் ஞான மார்க்கத்தை போதிப்பப தற்கு எழுந்த நூலாகும். ஆதலால் ஞானப் பள்ளு என்ற காரணப் பெயர் பெறுவதாயிற்று. இந்நூல் கத்தோலிக்க சமயத்தைப் புகழ்ந்து இயேசுநாதரைப் பாட் (நிடைத்தலைவராகக் கொண்டது. சமயப் ாேதன *1 தமிழ் நாட்டில் மேற்கொண்ட பிற சமயத்தார் தமிழ் மக்களிடையே பெரு வழக்கிலிருந்த இலக்கிய வடிவங்களைக் கையாண்டு, தம் மத இலக்கியங்களை ப் படைத்து, அவற்றிறுரடாக மதப்பிரசாரத்
96

கலாநிதி இ. பாலசுந்தரம்
தை மேற்கொண்டது போன்று இந்நூலாசி யரும் , ஈழத்தவரிடையே அக்காலத்தில் பெருவழக்குப் பெற்றிருந்த பள்ளு இலக்கிய வடிவத்தை ஊடகமாகக் கொண்டு, ஞானப் பள்ளு என்னும் கத்தோலிக்க மதநூலைப் படைக்கலாயிஞர். இக்குறிக்கோளை ப் பள் ளில் வரும் 78ம்பாடல் சான்றுபடுத்துகிறது.
‘வாரிக் கரையில் வளர்வா னுலகமென்
மாநிலத்திற் பாரிக்கை யாக அபிராங் கிளைகள்
பலுகவைத்த சீருக் குகந்த திருத்துவ ஏகனைச்
சிந்திப்பார் ஆருக்கு முந்திப் பரலோக நன்மை
யடைவர்களே? * இந்நூலாசிரியர் யார் என்பது இன் னும் அறியப்படவில்லை. இந்நூலில் சத்தியவேத உண்மைகள் பல பொதிந்துகிடப்பதால் இந் நூலாசிரியர் கத்தோலிக்கர் என்பதும் அவர் பாழ்ப்பாண நாட்டில் வாழ்த்திருக்க வேண் டும் என்பதும் நூலில் அறியக்கிடக்கின்றது. இந்நூலின் tெயர் ஞானப் பள்ளு என்ப" தைக் காப்புச் செய்யுள் செப்புகிறது. இந் துரலுக்கு 'வேத்ப்பள்ளு" என்ற பெயரும் உண்டு என்பதை நூலின் 4ம் செய்யுளால் உணரப்படுகிறது.
போர்த்துக்கேயர் ஆட்சி ஈழத்தில் நிலை பெற்ற காலத்தில் அவர்களது சமயமும், பழக்க வழக்கங்களும், சமூகக் கோட்பாடு 5ளும் தமிழ் மக்களிடத்தும் பாதிப்பை ஏற் படுத்தியிருத்தல் இயல்பாக நிகழக் கூடியன வே. போர்த்துக்கேயரிடம் சமயக் காப் புணர்ச்சி அதிமாகக் காணப்பட்டதாக வர லாறு கூறுகிறது. தம்காலத்தே கதிரை மலைப் பள்ளு சைவராற் பெரிதும் பாராட் டப்படுவதைக் கண்ட க்த்தோலிக்கர், அதற்
%ணயாகத் தாமும் ஓர் இலக்கியம் 1டைக்க வேண்டும் என்ற நோக்கோடு நானப்பள்ளைப் படைத்துள்ளார் எனக்
கூறப்படுகிறது. இந்நூல் கி.பி. 1642ல் இயற்ப்பட்டிருக்கலாமென சுவாமி ஞானப் பிரகாசர் குறிப்பிடுகின் ருர். இந்நூல் முதன் முதல் 1904 ல் மாதகல் தைரியநாத அச்சுயந்திரசாலையில் வ. யோ, அடர்தாம் பிள்ளை என்பவரால் பதிப்பிக்கப்பட்டிருக் றெது. m
5தின் ரம்மலைப் பள்ளி ல்அ. சத்து லிறகள் விரு விக்கப்பட்டிருப்பது போன்று, ஞானப்பள்ளி லும் அகத்துறைச் செய்யுட்கள் இடம் பெத் நில . ஆயினும் அதற்குப் பதிலாகப் பாதனை முறையில் அல மிந்த அறிவுறுத்தற்

Page 100
ஈழத்துப் பள்ளுப் . . .
பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன கதைப்போக்குடன் தொடர்பற்ற இப்ப டல்கள் பாட்டுடைத்தலைவனைப் போற்றி வாசகரை மதநெறிப்படுத்தும் நோக்கோ( பாடப்பட்டுள்ளது. ம தெளிவாகின்றது.
இந்நூல் ஜெருசலம் நாட்டையும் ருே நாட்டையும் க த நிகழ்டமாக 3 வத்து பாடுவதால் இந்நூலில் வகுப் பள்ள. பல ளியர் ஆகியோர் அந்நாடுகஃ1 க் சேர்ந் தோராகவே படைக்கப்பட்டுள்ளன. ர். இ துரலில் வரும் பண் ஃ7க்காரன மதகுருவல் சாயலைப் பெறுகி. ரூன் . இதில் வரு மூத்தபள்ளி, இஃாயப்பள்ளி ஆகியோ உருவக அடிப்படையில் படைக்கப்பட்டு: ளனர். வெண்பா, கலிப்பா, கலித்துறை விருத்தம் இவற்றில் ஞானுர்த்தங்களை கோர்த்தும் , சிந்து வ6:கயில், பள்ளுத்தல் மைகளை ஏற்றியும் யாழ்ப்பான ப் பேச் தடையில் நூல் செய்யப்பட்டுள்ளது. இ நூற்பெயர் “ஞானப்பள்ளு" என விருத்த ஏனைய பள்ளுகளிலுமிருந்து இதனை ஒ( வகையில் வேறுபடுத்திக் காட்டுகின்றது.
பருளைவிநாயகர் பள்ளு :
ஈழத்துப் பள்ளுப் பிரபந்தங்களுட் சில னத் தம்பிப்புலவர் இயற்றிய பருளை விநா கர் பள்ளு சிறந்ததாகும். இந்நூல் 188 லும் 1932 லும் 1956 லும் பதிப்பிக்க பட்டுள்ளது. இந்நூலாசிரியர் 18ம் நூ. குண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்திருக் வேண்டுமெனக் கூறப்படுகிறது. சிறு பா பத்திலே இவர் புலமை பெற்றிருந்தப என்பதற்கு 'பொன்பூச் சொரியும் பெ விந்த செழுந்தாதிறைக்கும்.’’ என பாடலைச் சான் ருகக் காட்டுவர் அத காரணமாகவே அவருக்குச் "சின்னத்த பிப் புலவர்' என்ற காரணப் பெயர் ஏ பட்டதென்றும் அவரது இயற்பெயர் செ துங்க மாப்பாண முதலியார் என்றும் கூ ali.
இந்நூல் சுழிபுரத்திலுள்ள பரு என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கு விநாயகப் பெருமானைப் பாட்டு ைடத்தலை ராகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. பல ணைக்காரன் , பள்ளன , மூத்தபள்ள , இளை பள்ளி என்னும் பாத்திரF களை எ வத்து கதையமைத்து ப{rளை விநாயகர் பெருை பேசப்படுகிறது. இந்நூலில் வரும் மூத் பள்ளி, ஈழமண்டலப்பள்ள யாகவும், இளை 1ள்ளி சோழமண்டலப் பள்ளி யாகவு அமைத்து இருவர் மூலமகாவும் முறைே

罗
9 7
கலாநிதி இ. பாலசுந்தரம்
ஈழநாட்டுப் பெருமையையும், சோழநாட் டுப் பெருள் மன யயும் புலவி ர் புகழ்ந்து பாடியுள்ளார்.
பள்ளு இலக்கியத்தின் உறுப்புக்கள் யாவும் அ6 மய, சிந்தும் , விருத்தமும், கலிப் பாவும், : ரவிச் செய்யப்பட்ட பருளை விநாயகர் பள்ளில் அகப்பொருட்து எ ற விர விய செய்யுள்களும் இடம் பெற்று, எல்லா மாக 130 செய்யுள்காளால் இந்நூல் ஆன மந் துள்ளது . 'இலங்கை விளம்' என்ற நூலி லே சோமசுந்தரப் புலவர் ஈழவளநாட்டில் வளங்களை வளமுறப் பாடியுள்ளது போன்று சின்னத்தம் பிப் புலவரும் ஈழவுளத்தை விதந்து பாராட்டி யுள்ளார். மூத்தபள்ளி யாம் "ஈழமண்டலப் பள்ளி'யின் வாயிலாக ஈழத்தி, நிலவளம், மலேவளம், என வளம் நீர்வளம், கடல் இளம் , தமிழ் வளம் , யாவற்றைப் புகழ்ந்து பாடுகின் ரு? ர். நம் நாட்டின் 'தமிழ்மொழி வளர்ச்சியினைக் கூறுப் போது இன் சயும் பொருளும் அ ைம யப் பாடிய புலவர்கட்குப் பொற்கிழி வழங் கும் பெருமையினையுடைய நாடெனப் புகழ் &მცyri” .
**பண்ணிற் ருேய்ப் பொருண் முடிப்
புக்கட்டிப் பாடும் பாவலர்க் கீந்திட வென்றே எண்ணிப் பொன் முடிப்புக் கட்டி
எ வத்திடு மீழமண்டல நாடெங்கள் நாடே"
- (25)
ஈழமண்டலத்தில் யாவும் பொலிந்து நிறைந்து விளங்குகின்றன. மயால் குறை யொன்றுமில்லையோ வெனின் உண்டு எனப் புலவர் ஒப்புக் கொண்டு 'இரப்பு' என் னும் பெருங்குறை உண், டென் கிருர், எத் தகைய இரப்பு நம் நாட்: ல் இருந்ததென் பதை வருமாறு விளக்குகிருர்:
* பரப்பு மேககலை மங் ைசயர் போலும்
பயில வேண்டி யினர் சார் முக த யிரப்பு தேயின்றி வேறிரப் பில்லாத
விழபண்டல நாடெF ச ஞ டே’ (19)
மாரி பொழியுங் காட்சியினை சொல்லோவி யமா தரும் சிறப்பும் படித்து ச் சு ைவிக்கத் தக்க தாகும் .
**வெருண் டு விரியுடல் கருஸ் டு துயில்புரி
விடங்கொ ஞரகமு நடுங்கவே உருண்டு நிலமின் ச புரஸ் டு நடைமலை யுடைந்து விதலையொ டோடு: கவே

Page 101
ஈழத் தப் பள்ளுப் . . .
மருண்டு குழியத ரிடங்கர் நெளிதர
வரம்பில் வனசரர் கலங்கவே யிருண்டு புவிமயில் கிழிந்து விடநிரை யெழுந்து கனமழை பொழிந்ததே (72) தண்டிகை கனகராயன் பள்ளு;
இந்நூல் சின்னக்குட்டிப் புலவர்ாற் கால ர்க்காட்டிலிருந்து வந்து தெல்லிப்பளை யிற் குடியேறிய வேளாள குலத்தவரான கனகராயர் மீது பாடப்பட்ட பள்ளுப் பிர பந்தமாகும். ஆரியச்சக்கரவர்த்தியால், கெளரவிக்கப்பட்டு, தண்டி03 கக் கனகராயர் என்ற பட்டமும் பெற்ற கனகராயர், அவ ரது சகோதரர், மாமன், எ மத்துனன் கனக ராய முதலியார் முதலியோரும் இந்நூலிற் பாராட்டப்படுகிலறனர். காரைக் காட்டு வேளாளகுலமும் புகழப்படுகின்றது.
இந்நூல் ஏனைய பள்ளு இலக்கியங்களின் போக்கிலிருந்து சற்று வேறுபட்டுக் காணப் படுகின்றது. நாட்டு வளம் கூறிய பின்பு, பிரபஞ்ச உற்பத்தி, வருண உற்பத்தி, கனக ராயன்கிளே என்பனவும், நூலினிடையே தெல்லிப்பழையார் வாழ்த்தும் இடம் பெறு கின்றன. மேலும் கனகராயர் பரம்பல ரயி லுதித்த 34 பேர்களும் புகழ்ந்துரைக்கப்படு இன்றனர். இவ்வாருகப் பாட்டுடைத்தலை வனும், மயிலிட்டி, தெல் ஜிப்பழை ஆகிய இடங்களில் வாழும் அவனது உறவினரும் நூலிற் புகழப்படும் முற பள்ளு இலக்கிய நெறியில் ஒரு புதுமையினே க் காட்டுகிறது. யாழ்ப்பாண ஆரியதிராவிட பாஷா விருத் ச் சங்கம் கிடைத்த 153 பாடல்களைத் இரட்டி 1932-ல் இந்நூலை வெளியிட்டுள்
ளது .
தம்பிலுவிற் பள்ளு :
மட்டக்களப்பு லுக்கரைப்பற்றைச் சேர்த வேலஸ்போடியார் (1804-1880) இந் நூலைப் பாடியுள்ளார். தம்பிலுவில் என்ற ஊரில் இருந்த நீர்ப்பாசன அதிகாரி ஒருவ ருடைய பிழையான காதற் தொடர்புக்காக அவ்வதிகாரி காதறுக்கப்பட்டுத் துரத்தப் பட்டதையும், காதலி மனம் வருந்தி அவ ருக்குப் பால் மாடுகளைக் கொடுத்தனுப்பிய "தயும் வரலா(யிகக் கொண்ட ‘தம்பிலுவிற் பள் வரு’ என்ற நூலை இவர் இயற்றியுள்ளார். அதில் வரும் ஒரு பாடல் உதாரணமாகத் தரப்படுகின்றது:
* காதறுந்த வேதனைக்குப் பால் கறந்து
உண்ணவென்று காரி கையாள் மாடுகன்று தான்
கொடுத்ததாகவும் காதறுந்து நா வரண்டு காமவிடா
யால் மெலிந்து காட்டகத்திற் பேயதுபோல் ஒடலுற்
முலும்”*
98

கலாநிதி இ. பாலசுந்தரம்
ான்னிப் பகுதியில் வழங்கும் பள்ளுப் fit L G5GT
வாய்மொழிமரபில் பரம்பன் ரயாக 1ழங்கிவரும் பள்ளுப் பாடல்கள் வன்னி வசாயிகளிடம் வழக்கிலிருந்து வருகின் ன. இவற்றுள் வன்னிப் பள்ளும், குருவிப் ள்ளும் குறிப்பிடத்தக்கவை. சி. அ. அரிய திட்டிப் பிள்ளையவர்கள் இத்தகைய பாடல் ள் பலவற்றைத் திரட்டி **அருவிச்சிந்து, தி ல ரப்பள்ளு, பண்டிப்பள்ளு, குருவிப் 'ள்ளு’’ என்ற பெயரில் இந்நூற்ருண்டின் தாடக்ககாலப்பகுதியில் நூல்வடிவில் வ யிட்டுள்ளார்கள். இந்நூல் இன்று டைப்பது அரிதாதலின் இதனை மீண்டும் திப்பித்தால் அவ்விலக்கியப்பெருமையை ாவரும் அறியவாய்ப்பாகும். வயற்கள வலைகளின் போது பொழுதுபோக்கு அடிப் டையிற் பாடப்பட்டு வரும் பன்னிப் பொ 1ளின் உட்ற்பொருளானது நெற்காணியை நாக்கி வரும் பன்றிக் கூட்டத்தில் ஆண் 1ண்றி தன் மனயாளுடனும் குட்டிகளு றும் உரையாடும் பாணியில் அ ைமந்துள் ாது. ஆண் பன்றியிற் கூற்ருக வரும் பாடல்
ன்று வருமாறு : *கன்னல் களையும் செந்நெல் விளை யும்
காலமென்றறியாயோடி காட்டுப் பிழைப்பு ஒட்டு மான்டர்
நாட்டிற் சென்றிடலமாடி மண்ணில் நமது கண்ணுக் கினிய
மக்களைத் துரந் தழையடி, வன்னவயலிற் செந்நெல் நாம்
வருந்தி யருந்தலாமடி' பன்றிப் பள்ளைப் போன்றே குருவிப்பள் நம் இப்பிரதேச மக்களால் பெரிதும் பாடப் டுகின்றது. நெற் கதிர்களைச் சாப்பிடக் iருவிக்கூட்டங்கள் கூட்டம் கூடிடமாக வரு 1தையும் அவை தம்முள் உரை யாடுவதை ம் பொருளாகக் கொண்டு 89 அகவற்பா டிகளால் அமைந்தது இப்பள்ளுப் பாடல் ஆண் குருவி தன் மனைவியிடம் உரையாடும் று பகுதி ஈண்டு தரப்படுகின்றது : *செல்வமாகிய குஞ்சள் த விட்டுநாம் சிறந்த செந்நெல் அருந்திடலாமோ அல்ல காணும் மனைவியரே கேளும் ஆ) சமைந்தனர நாம் கொண் டு
G F 357 Gigi வல்ல மானிடர் கல்லால் எறிந்தால் மனத்தேம் போடு பறக்கவும் மாட்டோம்" இவ்வாருக ஈழத்துப் பள்ளுப் பிரபந்த லக்கியங்களை நோக்கும்போது, அவை ஏட் லக்கிய மரபிலும், நாட்டாரிலக்கிய மர லும் போற்றப்பட்டு வருவதையும், இப் ள்ளுப் பிரபந்தர்கள் செந்நெறி இலக்கிய ரபில் , ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் ரபந்த வரிசையில் சிறப்பிடம் பெறுவதை ம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

Page 102
தாத்தா சொன்ன !
முதுமைக் கரையின் முடிவில் இருந்து முழுதாய்த் திரும்பிப் பார்க்கின்றேன் இதுந்ாள் வ ைரயில் முழுதாய் வாழ்ந்த மழலைக் கனவை நினைக்கின்றேன்.
மழலைக்கனவே மழலைக்கனவே மறையுங் கிழவன் அலி ழக்கின் றேன்
மழலைக்குலமே மழலைக்குலமே
மலரும் உலகே அழைக்கின்றேன்
சாலைப்புழுதிச் சாய்விற் கிடந்து சாகுங் குழந்தைக்ளைக்கண் டால்-அன்னை பாலைத்தள்ளிப் பாய்ந்தேயந்தப் ܫ பாலர்க்காக அழுவிரே - இந்தக்
கோலப் பருவக் குணங்கள் எல்லாம் கொண்ட இந்தத் தாத்தா
காலக் கடலிற் கரைந்து கல ரந்திக் கோலங் கொண்டேன் பாப்பா
மாயச் சமூக மயக்கில் மயங்கி மழலை நினைவை யிழந்தேன் பேயன் எனவோ ரோட்டைப் படகில் பயணம் தொடர்ந்து வந்தேன்.
நீசத்தனங்கள் நிறையச் சொல்லும் நேசக்கரங்கள் நீள
 ைசக்கனவில் அன்பை மாய்த்தே
அழிவுச் சுழியில் ஆழ்ந்தேன்
அட்டை சொல்லுங் கதை
ஏரேந்தும் உழவன் அவன்து முதுகொடிய சுமை தாங்கு மண்வளமெல்லாம் தன் வ உழைப்பே உயர்வென்ற உ உணர்த்தும் இவர்தம் எழி
வரைவு:
திரு. மொமுயஸ் (வீரகேசரி நிறு

கதை என். சன்முகலிங்கன்
அரும்பு மலரின் ஆன சக்குலமே அழைக்கும் வேகம் அறிவீர் திரும்ப முடியாத்தீவின் கரையில் தவிக்கும் என்னைக் கேளிர் -
முன்னே வினையும், மன்னர் கதையும் பின்னும் பழமை கேட்டே என்னை இழந்த முன்னேச் சோகம் இன்னுந் தொடர வேண்டாம்
என்ன மயக்க மின்னல் வந்து என்ன கதை சொன்னுலும் மின்னும் நாளை மேன்மை காக்கும் தன்மை தவற வேண்டாம்
தாத்தா பாட்டி சொல்லுங்கதையின் தன்மை நோக்க வேண்டும் பாப்பா புத்தி மயக்கும் முன்னேப் பாடந்தள்ள வேண்டும்
இந்தத்தாத்தா சொல்லும் கதையில், ஏதும் வஞ்சமில்லை முந்திக்கேட்ட பழமைக்கதையின் மூச்சுக்கூட இல்லை.
குட்டி ராஜர் போலத் துள்ளிக் குதித்து ஓடி வாரீர் 4. மட்டியுலகின் மாயம் நீக்கும் மணி வெளிச்சந் தாரீர்.
ணை எழில் நங்கை ம் தோழன், யமாக்கும் உழைப்பாளி !
ன்னதத்தை ல் வாழ்வில் நாமும் இணைவோம் !
வனம்)
99

Page 103
EXPORTERS OF SRI LANKA
IMPOR
AGENTS & RE
EXPORTE
CEYLON DESICCATED coconuT
TEA
SPICES
COFFEE
BETEL NUTS
COCONUT oL
FRESH COCONUTs
102, SECOND
PRINCE S.
COLOMB
CABLE - Crystal
TELEX :

GBo 6 innićeci
PRODUCE &' PRODUCTS
TERS
PRESENTATIVES
SESAME SEEDS
MUSTARD SEEDs
COCOA BEANS
BLACK PEPPER
READY MADE GARMENTS cocoNUTSHEELL CHARCOAL Etc., Etc., Etc.,
FLOOR,
TREET,
O 1.
TELEPHONES-2443 & 26575
2, 4 4

Page 104
வரண்ட வலயமும் செய்கையும்
ം:കെ விவசாயப் பொருளாதாரத் தை உ6;டய ஒரு நாடு. நாட்டின் விவசா யம் தேயிலை, றப்பர், தெனனே ஆகிய வர்த் தகப் பயிர்களை உள்ளடக்கும் பெருந் தோட்ட விவசாயத்தையும், நெல்லையும் ஏனைய உப உணவுப்பயிர்களையும் கொண் டி ருக்கும் உள்நாட்டு விவசாயத் ைதயும் கொண்டு அணி மந்துள்ளது. உள்நாட்டு வி. வ சாயம் அதன் அமைப்பு இயல்புகள் பொறுத்து சாதாரண குடியானவரின் பயிர்ச் செய்கை எனவும் அழைக்கப்படுகிறது. நாட்டிற்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக் கும் துறையாக பெருந்தோட்டத்துறை அமைந்து ஸ்ளபோதிலும் நாட்டு மக்களின் தானிய நுகர்வில் ஏறக்குறைய 70 வீதத்தை அரிசி கொண்டிருப்பதால், உள்நாட்டு விவ சாயத்தின் முக்கியத்துவம் சாதாரணமாக ஒவ்வொரு குடி மகனு ைடயதும் வாழ்க்லி க யில் பிரதிபலிப்பதை அவதானிக்கக்கூடிய தாக உள்ளது . அதனைவ ட உள்நாட்டு விவசாயத்துறையின் உற்பத்தி நாட்டுமிக்க ளின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யாதபடியால் கணிசமான அளவு அ ரிசி இறக்குமதியை வருடாவருடம் செய்ய வேண்டியிருப்பது இத்துறை வில் ரவில் அபிவிருத்தி செய்யப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்து கின்றது.
காலநிலையின் அடிப்படையில சிறப்பாக
மழைவீழ்ச்சியின் அடிப்படையில் இலங்கை வரண்ட வலயம், ஈரவலயம் என இரு
பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. 75' மழைவீழ்ச்சிக்கோடு இவ்விரு வலயங்களின் தும் எல்லையாக அமைந்துள்ளது . இலங்
கையின் மொத்த நிலப்பரப்பில் ஏறக்கு றைய 2/3 பங்கினை (10, 663, 864 ஏக்கர்) கொண் டுள்ள வரண்ட வலயத்தில் பருமட்ட மாக 1557193 ஏக்கர் நிலத்தில் மாத்திரம் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகிறது . மேற்குறித்த நிலப்பரப்பில் 1,085,124

நெற்பயிர்ச்
இ. பரராசவ்ேகம் 3ம் வருடம். விவசாயமும் மீன் பிடி யும் கொழுப்பு வளாகம் .
Η Ο Ι
ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்ச்செய்லி க ந ைட பெறு கி ைறது .
நெல் உற்பத்தியில் தன் னில் றவு பெறுதல் என்பது எமது நாட்டின பயிர்ச் செய்ஸ் கக் கொள்கையின் முக்கிய இலக்காக 1930ஆம் ஆண்டு தொடக்கம் இருந்து வருகி ைறது. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் நிலப் பரப்பினை அதிகரித்து அதன் அடிப்படையில் நெல் உற்பத்தியினை அதிகரிப்பதென பது அரசின் பிரதான இலக்காக இருந்தது. இவ் இலக்கினை எய்தப் பெறுதற்கு குடியேற்றத் திட்டங்கள் அதிகளவில் வரண்ட வளயத் தில் அமைக்கப்பட்டன. இத்தகைய திட் டங்களி ல் பராக்கிரம சமுத்திரத் திட்டம் , மன்னேரியாத்திட்டம், நுவ ரவீவா விஸ்த ரிப்பு திட்டம் , கந்தளாய் ம. எ கயாக்கு திட் படம், இரணைமடு விஸ்தரிப்பு திட்டம், பதவியா திட்டம், பாவற்குளத்திட்டம் என் பன குறிப்பிடத்தக்கனவற்றில் ஒரு சில வாகுப் எனினும் குடியேற்றத்திட்டங்கள் மூலம் அரசு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்க வில்லை. உண் ைமயில் இக்காலப் பகுதியில் கணிசமான அளவு நிலப்பரப்பு வரண்ட வலயத்தில் நெற்பயிர் செய்கை யில கீழ் கொண் டு வரப்பட்டு உற்பத்தி அதிகரித்த போதும், குடியேற்ற திட்டங் களி ல் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டுடன் ஒப்பிட்டு பார்க்குமிடத்து அவற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற பலாபலன்கள் குறிப்பிடத் தக்கனவாகக் காணப்படவில்லை.
சுதந்திரத்தை தொடர்ந்து குறிப்பாக 1956 ஆம் ஆண்டுகளை அடுத்து இலங்கை யின் பயிர்ச் செய் ைகக் கொள் எ க, முன் னேற்றமடைந்த நாடுகளி ல் புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட தொழில் நுட்பங்கள் பயிர்ச் செய் முன றகள் என பவற்றை உள்ளடக்கிய தான செறிவுப் பயிர்ச்செய்கை முன் றயில் அடிப்பன் ட்யில் ஏக்கருக்குரிய விளை எ வ அதி கரிப்பதனை அடிப்ப ைடயாகக் கொண் டு காணப்பட்டது. இக் கொள்கை பொது

Page 105
வரட் ட வலயமும்
வாக இலங்கைக்குரிய ஒன்ருக இருந்தபோதி அலும் இக்கொள்கையின் பிரதிபலிப்பை வரண்ட வலயத்தில் அதிகளவில் அவதானிக் கக்கூடியதாக இருந்து 57.
இருக்க முற்ற தொழில் நுட்பங்க% அடிப்படையாகக் கொண்டதான செறி வுப் பயிர்ச்செய்கையின் குறிப்பிடத்தக்க அம்சமாகக் காணப்பட்டது, உயர்ந்த விளைவைக் கொடுக்கக்கூடியதான திருந்திய புதிய நெல் வகைகளின் அறிமுகமாகும். புதிய திருந்திய நெல்லினங்கள் ஈரவலயத்
த விட வரண்ட வலயத்தில் அதிகளவில்
உபயோகிக்கப்பட்டன. 1969 ஆண்டு மத்திய வங்கியினுல் மேற்கொள்ளப்பட்ட் ஒரு ஆய்வு புதிய நெல்லினங்கள் வரண்ட வலயத்தில் அதிகளவல் உபயோகிக்கப்பட் !-தின் விளைவாகவே வரண்ட வலயத்தில் ஏக்கருக்குரிய நெல் விளைவானது 195960 ஆண்டுகளி ல் 37, 7 Hசல்களாக இருந்து 1969-69 ஆண்டுகளில் 52.2 H fgi 356m. It is அதிகரித்தது எனக் குறிப்பிட்டுள்ளது. இன்று வரண்ட வலயத்தில் விளைவு க்கப்படுப் நெல் வலி ககளி ல் பி. ஈழி. 11. 11, எல். Lo . 6 6 , 70 Lar ஏறக்குன றய فرg. 273 6T@ • نہ آ6 சதவீதமாகக் காணப்படுஇ f) G.G. .
புதிய நெல்லினங்களின் அறிமுகத்துடன் இணைந்து ஏற்பட்ட மற்ருெரு மாற்றம் இரசாயன வளமாக்கிகளின் உபயோகம் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்பட்டமையா கும். ஏனெனில் புதிய வகை நெல்லினங் கள் அவற்றின் திறமையான உற்பத்திக்கு இரசாயன வளமாக்கிகளை வேண்டி நின்றன. 1951 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப் பட்ட வளமாக்கிகளின் உபயோகம் பின் வந்த காலப்பகுதிகளில் படிப்படியாக அதி கரிக்கத் தொட்ங்கியது. பின்வரும் அட்ட வணை வரண்ட வலயத்தில் வளமாக்கிகளின் உபயோகத்தில் ஏற்பட்ட வளர்ச்சிை காட்டி நிற்கின்றது.
வரண்ட வலயத்தில் வளமாக்கிகளின் உபயோகம் (தொன் களி ல்
உபயோகிக்கப்பட்ட ஆண்டு வளமாக்கிகள் (தொல் களில்)
196 I 4368 v. 1966 l 1328 1972 23 18
இதே போன்று ஒரு ஏக்கரில் உபயோகிக்கப் பட்ட வளமாக்கிகளன் அளவும் , வ ரண் ட வலயத்தில் 1958 59 ஆம் ஆண்டுக் காலப் பகுதிகள் ல் 18 இருத்தல்களாக இருந்து
I O2

இ. பரராசசிங்கம்
e /*
1971-72 ஆம் ஆண்டுகளை அடுத்து 38 இருத்தல்களாக அதிகரித்தது. 1962ஆம் ஆரசு கமத்தொழிற் தி?"க்களம் மற்றும் விவசாய நிலையங்கள் மூலம் வளமாக்கிகளின் உபயோகம் குறித்து மேற்கொண்ட பிரச்சாரம் வளமாக்கிகளின் உபயோகத்தில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கான முக்கிய காரணம் எனலாம். 1964 ஆம் ஆண்டில் அரசு இலங்கையில் உரக்கூட்டுத் தாபனம் ஒன்றினை ஆரம்பித்து, அதன் மூலம் விவசாயிகளுக்கு ஒழுங்கான முறையில் வள மாக்கிகள் திை டப்பதற்கு வழி செய்துள் துெ .
விவசாய விரிவாக்க உத்தியோகத்தர்களி ஞல் தூவி விதைத்தலை விட் தாற்று நடுகை usiv அதிகளவு விளைச்சல் பெறப்பட (LDւգ யும் என்பதனை எடுத் தக்காட்டுவதற்கு மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் செறிவுப் பயிர்ச்செய் ைகயி3 பிற்டுெரு படியாக அமைந்தன. இலர் - க மத்திய வக்கியிஞல் 1986 67ஆம் ஆண் டுகள் ஸ் மேற்கொள்ளப் பட்ட 22 மாவட்டங் கள் துை ம் நெற்பயிர்ச் செய்கையை உள்ளடக்கியதான ஒரு ஆய் வான 5ா "வி கத்தல் மூலம் ஒரு ஏக்க ாக்குரிய 3ளவு 30. 7 புசல்கள் ஆகவும் , நாற்று நடு கயின் மூலம் ஒரு ஏக்கருகுரிய விளைவு 47.3 புசல்களாகவும் இருப்பதனை Tடுத்துக்காட்டியது . பொதுவாக இலங் கை என்ற மட்டத்தில் வைத்து இவ் வம்சத் நினே கருத்திற் கொள்ளும் போது நாற்று 5டுகை முறையினை விட் ஆாவி விதைத்தல் P - றயினையே நாட்டின் விவசாயிகளற டிடிய பங்கினர் (ஏறக்கறைய 60 வீதமான 1ff 5 σίτι) σε கக்கொள்கின்றனர் எனலாம். ாற்று நடுகை முறையில் உள்ள தொழி ாளர் செலவு, காலதா மதம் என்பன அம் மறயின குறைந்த உபயோகத்திற்கு கார னங்கள் என அறியப்படுகின்றது. வரண்ட 1லய நெற் செய்எ க ைப பொறுத்தும் இவ் ாம்சம் வதிவிலக்காக அை மிந்துள்ளது என்று டறுவதற்கில்லை. பின்வரும் அட்டவஜெ 971-2 கால போகத்தின் போது வரண்ட லயத்தின் சில மாவட்டத்த நாற்று ாற்று நடுகை, தூவிவி தைத்தல் அளவினை 'த அளவுகளில் காட்டி நிற்கின்றது .
ரண்ட வலய மாவட்டங்கள் சிலவற்றி து நெல் விதைப்பு முறை (வீத அளவில்)
விதைப்பு அம்பாந்- பொலமுறை தோட்டை நறுவை "ற்று நடுகை 36. 6 76.9
விவிதைத்தல் 63.4 23.

Page 106
GillJoir t_ வலயமும், . .
குருநாகல் மன்ஞர்
நாற்றுநடுகை 37.8 43.7 தூவிவில் தத்தல் 62.2 56.3
அநுராதபுரம் மட்டக்களப்பு நாற்று நடுகை 27. 6 52.6 தூவிவிதைத்தல் 72.4 47. 4.
அட்டவணையின் அடிப்படையில் ஆ திெT னிக்கும்பொழுது வரஸ் டவ லயத்தில் இம் மு 7 றகள மாவட்டததிற்கு மாவட்டம் தி கள3 ல் வேறுபடுகிற போதும் ஒரு பொது வான போக்காக விவ வதைத்தல் முறை யே கூடியளவில் பின்பற்றப்படுவது அவதா னிக்கத்தக்கது.
சுதந்திரத்தின் முன்னர் நிலத்தை உழுவு வதற்கு ‘டிரக்டர் களன் உபயோகம் எை பது உண்டே மயில் ஒரு நவீனமாகக் கருதப் பட்டது. ஆனல் 1960 ஆம் ஆண்டுகளை அடுத்து இந்நிலைமையில் பிரபடக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. 1965-1970 ஆண், டிற்கும் இடைப்பட்ட ஒரு காலப்பகுதி யில் மாத்திரம் 10 கோடி ரூபா பெறு பத யான 10, 000 மேற்பட்ட டிரக்டர்கள் இறக்குமத செய்யப்பட்ட00. டி ரக்டர்க ள,  ைஉபயோகத்தல் ரவுண். ட .ெ லயத்தற் கும், ஈரவலயததற்குபட  ைடயே 6 ,تی fi(ت ن,زی. தரை அலி மப்பு காரணமாக அதிகளவு வத்தியாசங்கள் காணப்படுகிeறன. அப பாந்தோட்டை மாவட்டத்தில் 93 வீத மான விவசாயிகள் இரண்டு சக்கர உழவு யந்திரத்தை உபயோகிக்க, கண்டி மாவட் டத்தில் 95 வீதமான விவசாயிகள் உழுதல் நடவடிக்கைக்கு எருமைகளை உபயோகித் தல் மேற்கூறிய உண்.ை மயை விளக்கிக் காட்ட சிறந்த உதராணமாகும். நெற் பயிர்ச்செய் ைக பொறுத்து நிலத்தை பண் படுத்துதல் என்பது முக்கியமான ஒரு அம்ச மாகும். எருமைகளை உபயோகித்து நிலத் தை உழுவதனை விட, டிரக்டர்களின்’ மூலம் ஆழமாக உழுது நிலத்தை பயிர்செய்கைக்கு உகந்ததாகப் பண்படுத்த (p-6gil-G, , விரைவாகவும் உழ முடிகின்றது. எவ்வா றிருப்பினும், 1974 ஆம் ஆண்டில் ஏற் பட்ட எண்ணெய் விலை உயர்வைத் தொ டர்ந்து டிரக்டர்களின் உபயோகத்தில் சிறிய அளவான வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருப்பதாக 1975 ஆம் ஆண் டின் மத்திய வங்கி ஆண்டறிக்கை தெரி விக்கின்ற.
உள்நாட்டு விவசாயம் பொறுத்து நிறு வன ரீதியான இயக்கங்களின் பங்கு குறித்து சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலங்களி ல் அதி

T. பரராசசிங்கம்
களவில் வற்புறுத்தப்பட்டன. சுதந்திரத் தின் படிப்படியாக ஆட்சிக்கு வந்த அரசாங் கங்கள் உள்நாட்டில் விவசாய அபிவி ருத்தி யில் நிறுவனங் கள வின் பங்கினை ولم يكن ப்பதற்கு தயக்கம் காட்டவில்லை. நெல்லுக்கென உத்தரவாத விலைத்திட்டம் ஒன்று 1942 ஆம் ஆண்டு முதற்கொண் டே நை ட-முன் நிப்
படுத்தப்பட்டபோதும் , அத்திட்டத்தில் அ3 ப்படையில் வசாயிகளே S க்கு ப்ப
தற்கென பிற்பட்ட காலங்கள், ல் இவ் உத்தர வாத விலை உயர்த்தப்பட்டு இன்று புசல் ஒன்று 45 ரூபாவுக்கு அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்படுகிறது. இத்தகைய கொள்வனவுச் செய்ல் க ைய இறுை நெற் சந்தைப்படுத்தும் சபைகள் ஆற்றிவருகின் றன. நெற் சத் *தப்படுத்தற் சபைகள் ஆரம் பிக்கப்படுமு னனர் அதிகாரம் பெற்ற பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இக்கடமை ஆற்றியபோகம், பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கக 3 ல் சிலவிய களஞ்சியப்படுத்துவ தற்கான பற்ருக்குறை, உடனடிக்கொடுப் பணவின் ம எல் பன காரணமாக விவசாயி கள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங் களுக்கு தமது உற்பத்தியினே வழங்க தயங் ர்ெ வழமையாக ஈர வலய வி ைசாயிக ைவிட வரண்ட  ைலய வசாயிகளே கூடியளவில், தமது உற்பத்திகளை அரச நிறுவனர் களுக்கு வழக்கி வருபவர்களாதலால், அவர்களே பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் தமது உற்பத்திகளே சந்தைப்படுத்த முடியாத நி2) யில் நடுவர்கள் என் பிடியில் சிக்கி அவதிப்பட வேண்டியதாயிற்று.
வரண்டவலய உள்நாட்டு விவசாயத் தைப் பொறுத்தமட்டில், அரசினல் ஆரம்பிக் கப்பட்ட கடன் திட்டம், பயிர் காப்புறு தித்திட்டம் என்பன குறிப்பிடத்தக்க வெற் றியை அளித்தன என்று சொல்வதற்கில்லை. ஆரம்பத்தில் பல நோக்குக் கூட்டுறவுச் சங் கங்களிலுைம், அண்மைக்காலங்களில் இலங் கை வங்கி, மக்கள் வங்கி போன்ற வங்கி நிறுவனங்களினுலும் விவசாயிகளின் முக்கிய பிரச்சினையாக 6. ஸாங்குகின்ற கடன் பிரச்சி னையை ஓரளவுக்காயினும் இலகுபடுத்தற்கு கடன் வழங்கப்படுகினறபோதும், இக்கடனை திருப்பிச் செலுத்துவது சம்பந்தமாகவே பிரச்சினை எழுகின்றது. 1972 ஆம் ஆண்டில் மாத்திரம் வரண்டவலயத்தில் 82 வீத மான விவசாயிகள் தமது கடனை திருப்பிச் செலுத்தாதிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது .
வெள்ளம் வரட்சி போன்ற வற்றி ருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக
O3,

Page 107
6117 (soft_ வலயமும்
1958ஆம் ஆன் டில் ஆரபிக்கப்பட்ட பயிர் காப்புறுதித் திட்டம் உள்நாட்டு விவசாயி களே பொறுத்தவரையில் 5 16 மி அஎ க்கும் ஒரு திட்டமாக கருதப்பட்வில்லை. எப்போ 'து இது சந்தர்ப்பத்தில் வெள்ளத்தினு
Ժռէգ Ամ է 1ւլն)rՒ நாசத்திற்காக வழங் கப்படும் நிவாரணப் பணத்திற்காக வருடந்தோறும் , பயிர் காப்புறுதிப் பணத் ைத கட்டுவதை பொதுவாக விவசாயிகள் விரும்பான பயே அதற்கான அடிப்படைக்காரணமாகும் s. இதனுலேயே இத்திட்டத்தை அரசிஞல் விவ சாயிகளில டயே விவி ரவில் புகுத்த முடியா துள்ளது. 1962 ஆம் ஆண் டி ல் 11 மாவட் படங்களை உள்ளடக்கிய ஏறக்குறைய 65,000 ஏக்கர் நிலங்கள் பயிர் காப்புறுதித் திட்டத் தின் கீழ் கொண்டு வரப்பு" இன்று மொத்த நிலப்பரப்பில் 16 7 சத வீதமான ைவ காப்புறுதித் திட்டத்தின் கீழ் அடங்குகின்றன." இவற்றில் 70 சதவித மானவை வரண்டவலயத்தில் அடங்குகின் நிறன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பயிர் அழிவினை வரட்சி காரணமாக சு டி யளவில் எதிர்நோக்குபவர்கள் வரண்ட வலய விவசா யிகளே யாதலால் அவர்கள் கூடுதலாகத் தமது நிலங்களை காப்புறுதி செய்துள்ளனர்.
இவ்வாருக செறிவுப் பயிர்ச் செய் ைக முறை, உள்நாட்டு விவசாயத்தின் நிறுவக இயக்கங்கள் ன பங்கு எ ைற அ.புப்படையில் உண்மையில் வரண்ட வலய விவ சாயமானது கணிசமான அளவு பங்கு முன்னேற்றத்தினை அசி டந்துள்ளது . 1946-1960 இடையில் நெல் உற்பத்தியானது வரண்ட வலயத்தில் மாத்திரம் 250 விதம் அதிகரித்திருப்பது அதற்கு சான்று பகர்வதாக உள்ளது. இலங் கைல் யப் பொறுத்தமட்டல் இது வ ைரயில் செறிவுப் பயிற்செய்கைக்கான முயற்சிகள், விவசாயிகளின் சாதாரண பிரச்சினைகளை தீர்த்து அவர்களை மேன் மேலும் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்துவதற்காக மேற்
லோ, அல்லது வரட்சியி அலோ ஏற்ப்டக்
கொள்ளப்படும் முயற்சிகள் Go T'56 L. Gor
ஏனைய விருத்தியன ட்ந்து வரும் நாடுகளு டன் ஒப்பிடுமிடத்து குறைவுபட்டன என்று கூறுவதற்கில்லை. வருட்ந்தோறும் வரவு செலவுத்திட்டங்களின் கணிசமான அளவு முதலீடு இம் முயற்சிகளின் பொருட்டு ஒதுக்
கப்பட்டு வருகின்றது. எனவே இந்நிலையில்
அரசு மேற்கூறிய முயற்சிகளுடன் நில அபி விருத்திக் கொள்கையை செயற்படுத்திமுயற் சித் : வருகின்றது.
இன்றைய நிலையில் அரசின் நெல் உற் பட்டு பொறுத்த அபிவிருத்திக் கொள்கை
104

இ. பரராசசிங்கம்
லய வரண்ட வலயத்திலேயே செயற்படுத் தக்கூடியதாக உள்ளது . ஏனெனில் நிலப் பயன் பாட்னி டப் பொறுத்தமட்டில் ஈர வலயம் ஏறக்குறைய முழு ைம யாக பயன் படுத்தப்பட்டு விட்டதெனலாம். ஆனல் வரண்டவலயத்தில் நிலவளத்தின் பெரும் பகுதி இன் ஐம் பொருள் யல் அடிப்ப ைட யில் முக்கியத் ஈ வம் உர* டயதாக பயன் படுத்தப்பட5 ல்லை. ஏறக்குள் றயய 90 இலட்சம் ஏக்கர் நிலங்கள் வரண்ட வலயத் தில் எதுவித பயன்பாடு அற்றநிலையில் காணப்படுகின்றன. இதற்கான பிரதான காரணம் அங்கு நிலவும் கடு ைமயான வரட்சி யாகும். தற்போது கூட காலபோகத்தின் போது ம் பயிரிடப்படும் நிலப்பரப்பில் ஏறக்குறைய பங்கிற்கும் குறைவான நிலப்பரப்பிலேயே சிறு போகத்தின் போது பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. சிறுபோகத்தின் போது நிலவும் கடு ைமயான வரட்சியில், நீர்ப்பாசனம் கிடைக்கப்பெறும் பகுதிகளி ல் மட்டும் வரண்ட வலயத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே இவற்றிலிருந்து வரண்: டவலய நில அபிவிருத்தி என்பது நீர்பாசனத்துடன் இ26இனந்தது என்பது விளக்கப்படவேண்டிய ஒன்றல்ல.
வரண்டவலய நீர்த்தேவை என்பது இன்று நேற்று உணரப்பட்ட ஒன்றல்ல என்பதனை இலங்கையில் விவசாய ம,ை ர்ைகள் ல் வர லா" எடுத்த க்காட்டுகிறது . எனினும் அந்நியரின் ஆட்சிக்காலப்பகுதியில் முழு ைம யாக எ கவிடப்பட்ட வரண்டவலய விவசா யம் சுதந்திரத்திற்கு சிறிது முற்பட்ட காலம் தொடக்கம் மீண் டும் புனருத்தாரணம் செய் யப்பட்டு வருகின்றது. இப்புனருத்தாரண நடவடிக்கைகளில், புதிதாக நீர்ப்பாசனத் திட்டங்களை ஆரம்பித்தல், பழைய குளங் கள், வாவிகள் என்பவற்றை திருத்தி அமைத் தல் என்பவற்றிற்கு அதிகளவு முக்கியத்து யத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. 1949-1960 ஆம் ஆண்டுகள்  ைடயே வரண் வலயத்தில் நீர்ப்பாசன வசதியுடைய நிலப் பரப்பின் அளவு 40வீதத்திவிருந்து 62 வீத மாக அதிகரித்துள்ளது. இத்தகைய நீர்ப் பாசன திட்டங்களில வரண்ட வலயத்தில் எதிர்காலத்தில் நில அபிவிருத்தியை பெரி தும் ஏற்படுத்தக்கூடிய திட்டமாக மகாவலி கங்கை அபிவிருத்தித் திட்டம் அன மகின்
றது. இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் ஏறக்குறைய 4030 சதுர மைல்களி ல் பரந்து கிடக்கும் இந் நதியினை வடமத்திய மாகா ணத்திற்கு தி ைச திருப்புவதன் மூலம்

Page 108
வரண்ட வலயமும் . . .
9,25,000 ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாச னம் கிடைக்கப்பெறும் என நம்பப்படுகிறது ஆரம்பத்தில் 670 கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தபோதும் தற் போது மொத்தமாக சுமார் 1,000 (35 frig ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள் ளது. இத்திட்டத்தின் முதலாவது கட்டத் தின் முதலிரு பகுதிகளும் பூர்த்தியடந்துள் ளன. இந்தப்பகுதியின் கீழ் கலாவெவவின் கீழ் 57,000 ஏக்கர் புதிய நிலமும் கந்தலா மவின் கீழ் 14,000 ஏக்கர் நிலமும், அபி விருத்தி செய்யப்பட்டு 28,000 குடும்பங் கள் குடியேற்றப்படும். மிகவும் அண்மையில் தொடக்கப்பட்ட மூன்ருவது பகுதி வேலே யில் கந்தளாயின் கீழ் 9,000 ஏக்கர் புதிய நீலமும், கவுதுல்லா திட்டத்தின் கீழ், 11,000 ஏக்கர் நிலமும் அபிவிருத்தி செய் யப்பட உள்ளன. அண்மையில் பதவி யேற்ற புதிய அரசாங்கம் மகாவலித்திட் டத்தை அதிக காலம் நீடிக்காது 6 வருடங் களில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்டுள் ளது. மகாவலிகங்கைத் திட்டத்தை பூர்த்தி செய்வதில் உள்ள பிரச்சினை சிறப்பாச
இலங்கை காப்புறு
267, யூ6 @ଗ,
 

இ. பரராசசிங்கம்
அதற்கு தேவையான முதலீட்டின் அடிப் படை.லே எழுகி றது எனலாம்.
எனவே இன்றைய நிலையில் இலங்கை யின் நெற்பயிர்ச்செய்கையின் எதிர்காலம், அதாவது அதன் உற்பத்தியில் ஏற்படும் அதி கரிப்பு முழு மயாக வரண்ட வலயத்திலே யே தங்கியுள்ளது எனலாம். எனினும் வரண்ட வலயத்திலும் நெல் உற்பத்தியின் அதிகரிப்பு அங்கு கிடைக்கப்பெற இருக்கும் நீர்ப்பாசனத்தை பொறுத்துள்ளது. தற் பொழுது ஆரம்பிக்கப்பட்டு திட்டவேலைகள் நடைபெற்றிருக்கும் மகாவலி கங்கை பூரண மாக நிறைவேற்றப்படின் , கணிசமான
அளவு வரண்ட் வலயப்பகுதிகள் Lu9f母 செய்கையின் கீழ் கொண்டுவரப்படலாம். இப்பொழுது : கவிடப்பட்ட நிலையில் இருக்
கும் குளங்களும், கால்வாய்களும் எண்ணி றைந்த அளவில் வரண்டவலயத்தில்காணப் படுகின்றன. இவையும் நீர்ப்பாசனத்தை பொறுத்து தமது பங்கினை வழங்குமாயின் எதிர்காலத்தில் வரண்ட வலயம் பண்டை மன்னர்களின் காலத்தில் இருந்த செழிப்பு ; நிலையை எய்தப் பெறலாம்.
ஆயுள் காப்புறுதி போல்
ஆதரவு தருவன
வேறில்லை
திக் கூட்டுத்தாபனம்
Eயன் பிளேஸ் காழும்பு-2
O 5

Page 109
யாழ்நகரில் தலைசிறந்த உபசரிப்பு
உங்களை வரவேற்கிறது.
* பிறிஸ்டல் ஹோட்டல்'
சுவைமிகு தேநீர், சுவீட்ஸ்,
ருசிமிக்க சர்பத், மற்றும் சிற்றுண்டி
வகைகளுக்கு!
பிறிஸ்டல் ஹோட்டல்
68, பீ, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்
இந்தியா, மலேயா, சிங்கப்பூர்,
அரேபிய நாடுக ள், மற்றும் உலகின் எப்பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய பாஸ்போர்ட்
gigst விமான நுழைவுச் சீட்டு என்பன பெற்றுக்கொடுப்பவர்களும்
வட தென் இந்திய யாத்திரை ஒழுங்கு செய்வதற்கும் யாழ் நகரில்
சிறந்த ஸ்தாபன: ,
கிருஷ்ணு ஏஜென்வR
W . . ܀ ܖܗ݈ܝ .؟“ ”ش گو
111, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணப் .
6

உங்க்ள் புகைப்படங்களை மிகச் சிறந்த முறையில் தருபவர்கள்
செல்லம்ஸ்
94, 96, கஸ்தூரியார் வீதி,
யாழ்நகர்.
தாலைபேசி: 436,
செய்து கொடுக்கப்படும்.
உங்க்ளது
ாணய முள்ள நவீன, தங்க,
வைர நகைகளுக்கு
சிற்ந்த"ஸ்தாபனம்.
1ள கிருஷ்ணு ஜுவல் ஹவுஸ்
200, கே. கே. எஸ். ருேட், யாழ்ப்பா ை .

Page 110
தகவு கண்டு தரம தவிர்க்கமுடியாத வ
இம் மலரில் விெ
அன்பளிப்பு
கே. டானியல்

ானதாகத் தெரியப்பட்டு
சதியீனங்கள் காரணமாக
பளியிடி முடியான மக்கு
ந்துகிறேம்.
இதழாசிரியர்கள்
புதுமை விரும்பும் நங்கையரே உங்கள் இயற்கை அழகை மேலும்
அழகுபடுத்த
நவீன வேலைப்பாடுகளுள்ள தங்க, வைர, நகைகளை அணிந்து கொள்ளுங்கள்
விரும்பிய டிசைன்களில் உத்தரவாதத் துடன் நகைகளைப் பெற்றுக்கொள்ள இன்றே விஜயஞ் செய்யுங்கள்.
அபிராமி ஜனவலர்ஸ்
ஒடர் நகைகள் குறித்த தவனையில் செய்துகொடுக்கப்படும்.
387, கே. கே. எஸ். ருேட்,
யாழ்ப்பாணம்.

Page 111
மான நகைகளுக்
யாழ்நகரி
கலைவாணி நை
111 B கஸ்தூரியா
யாழ்ப்பாண
SPACE DONATED BY
LIBRA JEWELLE
JEWELLERS & PAW.
74, SEA STRE COLOMBO 1
ALFRED ST
உள்ளூர் உற்பத்திப் பொருட் விலையில் வாங்கவும் விற்கவும்
அல்பிரட் ஸ்
பிரதான வீதி, ஊர்காவற்றுை
திருமண வைபவங்கள், திருநாட்கள்
தரமான பிடவை வகைகளுக்கு என்
சிவம் ரெக்
54, சுருவில் வீதி, ஊ

கமாளிகை
RY STORES
N BROKERS
ET, 1.
TORES ,
களை நியாயமான ) சிறந்த இடம்
ரோர்ஸ்
). தொலைபேசி : 532
ܚܝ
t
அனைத்துக்கும் உகந்த றும் மறவாதீர்கள்!
ஸ்ரைல் காவற்றுறை.
தொலைபேசி : 537

Page 112
நன்றி சொல்ல இவர்களுக்கு
- இம்மலரின் அட்டைமுகப்.ை -- சஞ்சிகையை அலங்கரிக்கும்
ந :பாக ருக்கு: - அனுகுகின்ற போதெல்லா
பூலோகசிங்கம், கலாநிதி க
அவர்கட்கும். - எம்மை அனுசரித்து அன்பு
கரங்களில் சேர முக்கிய கி தேவைப்பட்டபோது வளா கம்பனி அதிபர் கே. கனக் குன சீலன் அவர்கட்கும், ெ (95LD - மலரினை சிறப்பாக அச்சிட்ட கும் குறிப்பாக அதன் நிர் - விளம்ப்ரக் கள் சேரிக்க உத லாளர் திரு. வி. எ . சி கோபால் ஆகியோர்க்கும் வி, தேவதாசன் நித்தி gbló J J TéFIT செல்வி என். சிவசுப்பிரமை ஜனுபா ஏ. எம். கதிஜ ஆர். கு ணசிங்கம் செல்வி எஸ். நிர்மலா செல்வி பூரீவதனி செல் பி பத்பாச ைகுபல ர மற்றும் பலருக்குதவிய நிர்வாகக் குழு உ!

வேண்டும்
ப அழகுற வசி ரந்த நண்பர் பொருயஸ் அவர்கட்கும் ஆக்கங்களை யும் உதவிய விரிவுரையாளர்கட்கும்,
ம் ஆலோசனைகள் தந்து தவிய கலாநிதி பொ. . பாலசுப்பிரமணியம், கலாநிதி வி. நித்தியானந்தம்
டன் விளம்பரம் கொடுத்த இம் மலர் உங்கள் ாரணமாக இருந்த விளம்பரதாரர்கட்கும் கத்துக்கு வெளியே இருந்து உதவிய எஸ். பி. என் கசபை, மற்றும் வளாக மாணவர் திரு. ஏ. எஸ். சல்விகள் இ. பரிமளா, இ. திலகேஸ்வரி ஆகியோர்க்
- சீமாக் அன் ட ஹிஸ்வி லிமிடெ ஸ்தாபனத்தினர் வாக அதிபர் ஜஞப் ஏ. ஸி. ஏ. கபூர் அவர்கட்கும் நவிய நிதித் திட்டமிடல் அமைச்சின் உதவிச் செய வராசா, வளாக விரிவு ரயாளர் திரு. செ. நந்த
சங்க மாணவர்களான
கே, பேர்ணுட் இ. பூஜிரஞ்சன்
- சியம் ஜனுபா எம். ஜெசீலா
செல்வி பீ. சத்தியபாமா
ச. கோபாலகிருஷ்ணன்
அ. செபஸ்ரியன்
வை. திருதாவுக்கரசு μ., Π. ரவி < ரசரத்தினம் றுப்பினர்கட்கும்.

Page 113
உளமார வாழ்த்துகிருேம்
வி. சோமசுந்தரம் அன் கோ.
234, கெய்ஸர் வீதி,
கொழும்பு I l.
தொலைபேசி 26462.
உள்ளுர் உற்பத்திக் பொருட்களை வாங்கவும் விற்கவும் ஏற்ற இடம்
ஏ. எஸ். ஆறுமுகம் அன் சன்ஸ்
பிரதான வீதி,
ஊர்காவற்றுறை.
தொலைபேசி : 524.

நல்லெண்ணெய்களில்
ராஜா வி. எஸ். பி.
விசேட சாப்பாட்டு எண் ைெ8
--மட்டுமே--
ஏக விநியோகஸ்தர்கள் :
பரிமளா ஸ்ரோர்ஸ்
26, ஏ, மானிப்பாய் வீதி,
யாழ்ப்பாணம்.
தெர்லேபேசி: 7 2 2 4.
உத்தரவாதமும் உறுதியும்
நவீன
வேலைப்பாடும் உள்ள
நகைகளுக்கு
செ. கந்தசாமி அன் சன்ஸ்
206 , கே. கே. எஸ். ருேட்,
யாழ்ப்பாணம்.

Page 114
For all your Re
VM7 E DI CA I
EfVGWWE E R W
A CCO U WTA IV
EjVG LISAV 2 7
AfASArf sOM JO
MOVE I S
KA ARPA TE A W
CONTA CT
/1// Ceylon
P. O. BOX 86.
353-7, DAM STR)
(NEAR COLOMBO
COLOMBO 12.
Telephone : 34529

Iuirements in Books :-
pra Z
CY
"A MM17 || MMA GAZ VES
VARAWA LS
) C PHILDREWS” EBOOKS
ADistributor's
ET.
OURTS, POST OFFICLE
Telegrams : “Kenvíadies”’ .

Page 115
i COMP Servic
EPEOP
Larqest network ()f branches in th
 

e Offer You amic And ETE Banking

Page 116
இலங்கை - நோர்வே
காரைநகர் ,
* கடற்ருெழில் அபிவிருத நோர்வே மக்களால் நி
* நோர்வே நல்லொழுக் வுடனும் உதவியுடனு * சீ-நோரின் சாதனைகள்
கண்ணுடி நாரிழையிலா இரும்பும் சீமெந்திலுப பனிக்கட்டி உற்பத்தி கண்ணுடி நாரிழை மரத் நவீன வசதிகொண்ட திருத்துதல். மீன் ருல் வகைகள் குள மீன் பிடிப்பதற்கான குறுலோன் வலை உற்
சீ-நோர் அபிவி
இறங்குதுை
கிளை - வலைத் தொழிற்சா
தொலைே

அபிவிருத்தி நிறுவனம்
தொலைபேசி: 80 4
த்திக்கு உதவும் வகையில் தி உதவி வழங்கப்படுகிறது. க வாலிபர் சங்கத்தின் ஆதர ம் இயக்கப்படுகிறது.
ir, -
‘ன மீன்பிடிப் படகுகள் கட்டுதல். Dான படகுகள் கட்டுதல் செய்தல். த்திலான வள்ளங்கள் திருத்துதல் தொழிற்சாலையில் இயந்திரங்கள்
ரிரூட்டுதலும் பதனிடுதலும்.
பல்வேறுவகை நைலோன்
பத்தி.
ருத்தி நிறுவனம்
ற காரைநகர்.
லை, குருநகர், யாழ்ப்பாணம்.
լ 19) : 760 4

Page 117
UOith. Best (
UNION Corbide
U N ( CARBI
Cables... Unicarbide Colombo
Printed by Semak & Rizvi Ltd., 157,

Bompilmenés
Ceylon Ltd.
) N
DE
፲””Phone : 07 6– 45 2
ha Weerasekera Mazevatha Colombo 10.