கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்து நாட்டார் பாடல்கள்

Page 1

மட்டக்களப்பு | மாவட்டம்
IE
O
*
+1

Page 2

ஈழத்து நாட்டார் பாடல்கள் (மட்டக்களப்பு மாவட்டம்)
ஆய்வும் மதிப்பீடும்
கலாநிதி. இளையதம்பி பாலசுந்தரம்
இலங்கைப் பல்கலைக் கழகம்
கொழும்பு வளாகம்
"என்னை நன்ருக இறைவன் படைத்தனன் தன்னை நன்ருகத் தமிழ் செய்யுமாறே.”
தமிழ்ப் பதிப்பகம்
1, கால்வாய்க் கரைச்சாை கஸ்தூரிபாய் நகர்
அடையாறு
ଜଣfଭität-608 020.

Page 3
10,
1.
12,
13.
5.
16.
7.
Bibliographical Data
Title of the book
Author
Language
Edition
Date of Publication
Copy right holder
Paper used
Size of the book
Printing types used Number of pages Number of copies
printed
Printer
Artist
Binding
Price
Publisher
Subject
Ilattu Nattar Patalkal (Mattakalappu Mavattam) - Ayvum Matippitum.
Dr. Elayathampy
Balasundaram
Tamil
First
Nov- 1979.
The author.
The Paper used for this book was supplied by the Govern
ment of India at concessional
rates. 15.2 kg double demy.
12.5 x 18.5cm
10, 12 point XXIV + 421
: 000
Meipporul Achakam,
Madras-23
Almud hone.
Paper back Rupees Eighteen. Tamil Pathippakam, 1.Canal Bank Road, Kastur ibai Nagar, Adaiyaru, Madras- 600 020
Folklore

நா. is 6DO66) (ஆசிரியர் ஆராய்ச்சி)
அணிந்துரை
கலாநிதி பாலசுந்தரம் ஈழத்தில், மட்டக்களப்பு நாட்டுப் பாடல்களை ஆய்வு செய்து ஓர் ஆய்வுரை எழுதி கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார் . அவ்வாய்வுரையே நூலாக வெளியிடப் பட்டுள்ளது .
ஈழத்தில் தமிழ் வழங்கும் பகுதிகளில் மட்டக்களப்பும் ஒன்றாகும் . இப்பகுதியில் வாழும் மக்கள் கேரள நாட்டு மக்களின் பரம்பரையினரோடு தொடர்புடையவர்கள்.இவர்களது சமுதாய மரபுகளில் வாய்மொழிப் பாடல்களைப் பொதுவாகவும் தாலாட்டு, தொழில்பாடல்கள், காதல்பாடல்கள் இவற்றின் அமைப்பை ஆராய்ந்து, அவற்றின் பொருளடக்கத்தை மட்டக் களப்பில் வாழும் மக்களின் சமுதாய மரபுகளின் அடிப்படையில் ஆசிரியர் ஆராய்ந்திருக்கிறார் .
மட்டக்களப்பின் புவியியலை விவரித்து, அங்கு வாழும் மக்களின் வரலாற்றை முடிந்த அளவு ஊகித்துணர முயன்றிருக் கிறார் . இப்பகுதியைத் தமது ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், கிராம வாழ்க்கையும், கிராமப் பண்பாடும் அதிக மாறுதல்களின்றி நிலைத்திருப்பதே என்று பாலசுந்தரம் கூறு கிறார் :- "சமூக வளர்ச்சியும், தொழில்நுட்ப உபயோகமும் குறைந்த கிராமப்புறங்களிலுள்ள பழைய தலைமுறையினரிடம், புதிய கல்வி முறையின் பாதிப்போ, அல்லது நாகரிகத்தாக்கமோ ஏற்படாமையினால் அவர்களிடம் நாட்டார் இலக்கியத்தின் செல்வாக்கு மிகுந்து காணப்படுகிறது’. கல்விமுறை, தொழில் தாக்கம், நகரமயமாதல் முதலிய காரணிகள் கிராம மரபுகளை மாற்றுகின்றன. அவ்வாறு மாறாத வாழ்க்கையை இவர் ஆய்வுப் பொருளாகக் கொண்டுள்ளார் .
நாட்டார் பாடல்களின் பரப்பு மிகப் பெரிதாயிருப்பினும் இவ்வாசிரியர் மூன்று வகைப் பாடல்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது ஏன் என்பதை அவர் தோற்றுவாயில் விளக்குகிறார்

Page 4
iv
"இம்மூன்று வகைப் பாடல்களும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுவனவாதலால் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள், இன்பதுன்பங்கள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள், பண்பாட்டு விஷயங்கள் ஆகியவற்றை ஆராய்வதற்கு இவை தக்க ஆதாரங்கள் ஆகலாம்".
மூன்று வகைப் பாடல்களை இவர் அமைப்பு ஆய்வு செய்ய முயன்றுள்ளார் . இதுவரை தமிழில் அமைப்பாய்வு செய்தவர் கள், நாட்டுக் கதை அமைப்பு பற்றி Propp என்ற ரஷிய ஆய்வாளர் கையாண்ட (1928) அமைப்பு ஆய்வு முறையைப் பின்பற்றி யுள்ளார்கள் . அது Folk tale - க்கு மட்டுமே பொருந்துவது என்று பிராப்பே கூறியுள்ளார் . அதனைக் கதையல்லாத வேறு பாடல் வகைகளுக்கும் பயன்படுத்தி ஆய்வு செய்துள்ளார்கள் . இதனால் ஆய்வுகள் சுருங்கிப்போய் பயனளிக்காமல் போய் விட்டன .
இவர் மொழியியல் ஆய்வை மட்டும் மேற்கொள்ளாமல் பொருளமைப்பையும் ஆராய்கிறார் , மாறாத (functions) என்ற ஒன்றை இவர் பயன்படுத்தவில்லை . பொருள் அடைவு (Motifindex) என்பதையும் இவர் பயன்படுத்தவில்லை . இவை கதைக்கு மட்டுமே பொருந்துவன . தாலாட்டு, தொழிற்பாடல் காதல் முதலியவகைப் பாடல்களின் உணர்ச்சிக்கும், இவ்வுணர்ச்சி தோன்றுகிற சமுதாயச் சூழலுக்கும் உள்ள உறவை ஆராய்கிறார். பாடல் மூலத்திற்கு முதன்மையளிக்கிறார் (Text) . நாட்டார் கலை உத்திகளை ஆராய்கிறார் . உவமை, உருவகம், படிமம் இவற்றில் இலக்கியத்திற்கும் நாட்டுப் பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்கிறார் . இம்மூன்று வகைப் பாடல்களின் இலக்கண அமைப்பை இவர் வரையறுத்து வருணிக் கிறார் .
தாலாட்டில் 12 வகையான வாக்கிய அமைப்புக் காணப்படுவ தாக இவர் நிறுவியுள்ளார் .
இதுபோலவே தொழில் பாடல்களின் சிலவகையும், காதல் பாடல்களில் சில வகையும் வருவதாக இவர் முடிபுக்கு வருகிறார். ஆக மரபு வழியாகச் செய்யப்படும் கதை ஆராய்ச்சி முறையை இவர் பாடலை ஆராயப் பயன்படுத்தவில்லை . நாட்டுப்பாடல் களை ஆராய ஒரு முறையியலை உருவாக்க முயன்றுள்ளார் , இம்முயற்சியில் பல்லியல் அறிவைப் பயன்படுத்தியுள்ளார் . சமூகவியல், மானுடவியல், இலக்கிய ஒப்பியல், மொழி இயல்

Wy
முதலிய அறிவியல்களின் அறிவை இவர் நாட்டுப் பாடலின் பொருளடக்கத்தை அறியப் பயன்படுத்தியுள்ளார் .
நாட்டுப் பாடல்கள் நாட்டார் பண்பாட்டின் ஒருகூறுதான் . இதன் பயன்பாடுபற்றி மாலினாப்ஸ்கி, டர்க்கிம் போன்றவர் களின் கருத்துரைகளைப் பின்பற்றி, ஆசிரியர் விளக்கமாக ஒரு பகுதி எழுதியுள்ளார் . பண்பாட்டு வளர்ச்சியை அறிய (ஏறக் குறைய ஒரு நூற்றாண்டுக்கு) நாட்டுப் பாடல் ஆராய்ச்சி உதவ வேண்டும் . இது பயன்பாட்டின் அடிப்படையில் அறிந்து கொள்ளப்படுவது . ஃபர்த் என்னும் ஆசிரியரின் கூற்றை மேற் கோளாகத் தந்து ஆசிரியர் மட்டக்களப்பு நாட்டார் பண்பாட்டை விவரிக்க அவர்களது வாய்மொழிப் படைப்புகளைப் பயன்படுத்த முயற்சி செய்துள்ளார் . 'இந்த ஆய்வின் மூலம் ஒரு குறிப்பிட்ட நாட்டின் பண்பாடுபற்றி விவரிக்கவும், அதுபற்றி ஆராயவும் வாய்ப்பு ஏற்படுவதோடு பண்பாட்டு வரலாற்றுப் பின்னணியில் வளர்ச்சிநெறி குறித்துச் சரியான முடிவுக்கு வரவும் உதவியாக இருக்கிறது” என்று மாலினாப்ஸ்கி கூறுகிறார் . இந்த மேற் கோளின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர் இத்தொகுப்பிலுள்ள பாடல்களின் சமூகப் பயன்பாடுபற்றி ஆராய்ந்துள்ளார் . தாலாட்டின் பயன்பாடுகளை இவ்வாறு விவரிக்கிறார் : 1. குழந் தையை நித்திரையாக்கப் பயன்படுதல் . 2. அழும் குழந்தையை அமைதியூட்டப் பயன்படுதல். 3 குழந்தைக்குப் பாலூட்டப் பயன் படுதல் . 4. குழந்தைக்கு உடற்பயிற்சி . 5. இசையுணர்வு வழங் குதல் 6. தெய்வத்தின் அருள் வேண்டுதல் 7. தாயின் மகிழ்ச்சி வெளியீட்டுக் கருவியாகத் தாயின் அனுபவங்களைக் கூறல் 8. குழந்தை எதிர்காலம்பற்றிய நம்பிக்கையைக் கூறி, அதனை அவனது குறிக்கோளாக்குதல் 9. குலப்பெருமை கூறி அதனை இழுக்காமல் ஒழுகக் குழந்தையை அறிவுறுத்துதல். 10. குடும்ப நிலை உணர்த்துதல் 11. தன் கருத்தைப் பிறர்க்குத்தெரிவித்தல் 12. குழந்தையின் உறவினருக்குத் தாலாட்டுப் பயன்படுதல்
இப்பயன்பாடுகள் மூலம் குழந்தையின் உளவியல்பை வளர்த்து, அதனைக் குடும்பத்தோடும், பின்னர் சமூகத்தோடும் தொடர்புபடுத்தும் முயற்சியைத் தாய் செய்கிறாள். இதைத் தெளிவாகவே ஆசிரியர் நூலில் காட்டியிருக்கிறார்.
தொழில் இன்றி உலகம் இல்லை. அப்பாடல்களின் பயன் பாடு மிக முக்கியமானது. பொலிப்பாடல்கள், ஏர்ப்பாடல்கள், வயற்களப் பாட்டுகள், நெல்குற்றும்போது பாடும் பாட்டு,

Page 5
vi
முதலிய உழவுத் தொழிற் செயல்களைச் செய்யும்போது உழைப் போடு இயைந்து பாடப்படும் பாடல்களின் பயன்பாட்டைத் தனித்தனியாக ஆசிரியர் விவரித்துச் செல்லுகிறார்: பொது வாகக்களைப்புத் தெரியாமல் இருக்கவும், உற்பத்தியைப் பெருக் கும் ஆசையும் இப்பாடல்களின் முக்கியமான பயன்பாடாகும்" தொழில் சூழ்நிலை, தொழில் அமைப்பு முறை இவையும் பாடலின் உணர்ச்சியைப் பாதிக்கலாம். இது தவிரச் சுவையான பல தொழிற்பாடல்கள் உள்ளன. அவற்றின் பயன்பாடு குறித்துத் தனித்தனியே கருத்துரை எழுதியுள்ளார்.
காதற்பாடல்கள் இயல்பான சூழ்நிலையில் தோன்று வதில்லை எனவும் பாவனை முறையில் (make belief) பாடப்படு கின்றன என்றும் ஆசிரியர் கள ஆய்வுமூலம் முடிவுக்கு வருகிறார். வயல்களிலும் தோட்டக் காடுகளிலும் தொழில்புரியும்இளம் ஆண் பெண்கள், காதலிக்கும் வாய்ப்பு உடையவர்கள். சாதி, பொருள், நிலை இவற்றால் இவ்வுணர்ச்சி, திருமணமாகக் கனியாவிட்டால் ச தோன்றிச் சிறிது நாள் நிலைத்திருந்து பின் சருகாகிப்போகலாம்? அப்பாடல்களில் வெளிப்படும் உணர்ச்சி வெறும் பாவனையாக வோ, போலியாகவோ தோன்றவில்லை. நிறைவேற முடியாத காதலில் பக்கவாட்டுக் கால்வாயாக அவை அமையலாம். சில பாடல்கள் ‘பாவினை'யாக இருக்கலாம். காதல்புரிந்துதான் பாடல்கள் பாடப்படவேண்டும் என்பதில்லை. உணர்ச்சியைச் சாதியோ, செல்வநிலையோ தடைசெய்யாது. உண்மையான உணர்ச்சியின் காரணமாகத்தான் காதல்பாடல்கள் தோன்று கின்றன என்று நான் கருதுகிறேன். காதல்பாட்டுப் பிரிவில் மட்டக்களப்பு திருமணச் சடங்கு, மரபுகளை விரிவாக ஆசிரியர் விவரித்துள்ளார். இவை மானுடவியல் வழக்காறியல் அறிவை வளர்க்கப் பயன்படும். பொதுவான திருமணச் சடங்கு தவிர, திருமணத்தோடு தொடர்புடைய பண்டைய மரபுச் சடங்குகளை இவர் விவரித்துள்ளார். ‘பூருதல்’-புகுதல், கலியாண எழுத்து தாலிகட்டுதல், கலத்தில் போடுதல், முதலிய சில சிறப்பான சடங்கு மரபுகள் மட்டக்களப்புத்தமிழர்களிடையே வழக்காறாக 52 -ᎧhᎢᎧTᎧᎼᎢ.
திருமண உறவு முறைகளையும் இவர் ஆராய்ந்துள்ளார் skinship relations).
தமிழ் மக்களுக்கும், மட்டக்களப்பு மக்களுக்கும் இடையே உள்ள சடங்கு வேறுபாடுகளுக்குக் காரணத்தையும் இவர் ஊகித்து உணருகிறார். இப்பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள்

vii
தாய்வழிச் சமுதாய அமைப்புடையவர்களாவார்கள். ஈழத்தில் வாழும் ஏனையத் தமிழ் மக்களும், சிங்கள மக்கள் தந்தைவழிச் சமுதாய அமைப்பினராவார்கள். தாய்வழிச் சமுதாய அமைப் பில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண் களைப் 'பிள்ளை’ என்றழைக்கும் வழக்கம் இங்குண்டு. குலத் தொடர்ச்சி வித்தாக அமைவது பெண் குழந்தையாதலால் ஒரு குடும்பத்தில் எத்தனை ஆண் குழந்தைகள் இருந்தாலும் பெண் குழந்தை பிறக்காவிட்டால் இவர்கள் பெருங்கவலை கொள் கின்றனர். தாய் தனது குடியாகக் கொள்ளும் மரபினை வேரோடி விளாத்தி காய்த்தாலும் தாய்வழி அன்றி தகப்பன் வழி இல்லை ன்ற முதுமொழியும் வலியுறுத்துகிறது. குடும்பச் சொத்துகள் பெண்ணுக்கே சேரும் முறையும் இச்சமூக அமைப் பில் முக்கிய இடம் பெறுகிறது.
இச்சமுதாயத்தில் மருமக்கள் தாயமுறையும் காணப்படு கிறது. இது தமிழ் நாட்டோடு வேறுபடுவதாகவும், கேரளத் தோடு ஒப்புடையதாகவும் உள்ளது. இதுபற்றி சமூகவியலார் மேலும் ஆராய்தல் வேண்டும்.
இந்நாட்டுப் பாடல்களில் காணப்படும் சமுதாய மரபுகள் பற்றி ஆசிரியரது ஆய்வுகள் மிகவும் பயனுடையவை.
இவர் ஆய்வுக் கெடுத்துக் கொண்ட மூவகை நாட்டுப் பாடல் களிலிருந்து வெளியாகிற சமூக மரபுகள், நம்பிக்கைகள், சடங்கு கள் இவற்றின் சமூகப் பயன்பாட்டை இவர் விவரிக்கிறார். இவை முதல் தரமான ஆய்வுப் பொருள்கள் (Primary material) இவை போன்றவற்றை மேலும் சேகரித்து, மானுடவியல், வழக் காறியல், சமூகவியல்கள் ஆய்வுகள் நடத்தினால் மட்டக்களப்பு மக்கள் பற்றி மட்டுமல்லாமல், உலகத் தாய்வழி சமூகம்பற்றிய புதிய உண்மைகளும், பழைய கருத்துகளை வலியுறுத்தக்கூடிய சான்றுகளும் கிடைக்கும். இதைச் சமூகவியல், மானிடவியல் ஆய்வாளர்கள் மேற்கொள்ளவேண்டும்.
பிற்சேர்க்கையில் மிகவும் பயனுள்ள பகுதி சொல்லடைவு ஆகும். நாட்டார் சொற்பிரயோகங்கள், நகரமக்களுக்குப் புதிய தாயிருக்கும். ஆயினும் ஒரு குறிப்பிட்ட பொருளைக் காரணத் தோடு குறிக்கும் வளம் மிக்க தமிழ்ச் சொல்லாயிருக்கும். தாட்டார் பயன்படுத்தும் கருவிகளான, வண்டி, தோணி, வலை முதலியவற்றில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் இருக் கும். உறவுப் பெயர்கூட வேறாக இருக்கும். பொதுவாகத்

Page 6
viii
தமிழ்மொழியின் ஊற்றாக நாட்டார் மொழி அமையும். இவை இலக்கியத்தால் புறக்கணிக்கப் படலாகாது.
பின்னிணைப்பு-1,
சொல்லடைவு,
என்னும் பகுதியில்
ஆசிரியர் பட்டியலாக்கி அகர வரிசையில் கொடுத்துள்ள சொற்
கள் நாட்டார் சொல்லகராதியாகவே உள்ளது.
சிறுகதை
நாவல் போன்ற நவீன இலக்கியங்களில் இவற்றுள் சில இன்று பயின்று வரக் காண்கின்றோமாயினும்,பொருள் வளம் மிக்கப் பல புதிய சொற்களை நாம் இச்சொல்லடைவில் காண்கிறோம்.
நாம்பன்
நாகு நாமள் நெருப்பு
படுவான்
பாரக்குமர்
ԱՓ5:56ն
பொண்டி G untquuntrio
போறாக
மறவனை மூக்குச் சிவத்தல்
வப்புள்
வரவை வன்னிமை வேலவட
இளம் எருத்து மாடு
நாம் ஒருவர் செய்த கொடுமைகள் நெருப்பாக உருவகிக்கப்பட் டுள்ளது. கொடுமை செய் தோனை அவையே நெருப்பாக உருவெடுத்துச் சுட்டெரிக்கும் என்ற நம்பிக்கை. மேற்குத்திசை-கதிரவன் படுவான மிருக்கும் திசை, திருமணம் செய்ய வசதியற்றுப் பெற்றோருக்குப் பாரமாக இருக் கும் கன்னிப் பெண். புகுதல் (திருமணச் சடங்கு) ஒருத்தன் மனைவி (பெண்டிர்) பண்ணையார்-பெருநிலக் கிழார். (போகிறார்கள்) நெல்லை வழக்
கோடு ஒப்பிடலாம்.
மணவறை குழுஉக்குறி, பெண்கள்
மடைந்ததைக் குறிக்கும்.
பக்குவ
- (சட்டை) முஸ்லீம் வழக்கு.
aqem
காவல் வன்னிப் பிரதேசத்தின் தலைவர் வேலைகள், சிங்களத்தில் வட என்பது வேலையைக் குறிக்கும்.

1X
மரவாரி - வியாபாரி (தமிழ்நாட்டில்
வேவாரி, வேவாரம்)
பின்னிணைப்பு-2, 3, தொழில் பாடல்களில் வரும் அருஞ்சொற் களின் அடைவுகள் காணப்படுகின்றன. இவை மொழியியல் ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடிய மூல ஆதாரங்கள், பிற ஈழத் தமிழ் வழங்கும் பகுதிகளில் வழங்கும், ஒரே பொருளைக் குறிப் பிடும் சொற்களோடு ஒப்பிட்டு ஆராயலாம்.
பின்னிணைப்பு - 8, சில நாட்டுப் பாடல் மூலங்களைப் பொருள் வரிசையில் தருகிறது. இதற்குமுன் சில தொகுப்புகள் மட்டக் களப்பு நாட்டுப் பாடல்கள்பற்றி வெளிவந்துள்ளன வென்றாலும், மிகவும் நயமான பல பாடல்கள் இத் தொகுப்பில் வெளிவந்துள்ளன. தாலாட்டு, ஒப்பாரி போன்ற தலைப்புகளில் தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் பல வெளியீடுகள் வந்துள்ளன. ஆயினும் இவற்றில் சில புதிய அம்சங்கள் காணப்படுகின்றன. தொழில் பாடல்கள் இதுவரை அதிகமாகச் சேகரிக்கப்பட வில்லை. இத்தொகுப்பில் சில பாடல்கள் உள்ளன. அவை பலதுறை ஆய்வுக்குரியன.
பொதுவாக நாட்டார் பாடல் துறையில் நவீனக் கண்ணோட்டத்தோடும், பழைய இலக்கிய ஆய்வைக் கைவிடா மலும் செய்துள்ள ஒரு ஆய்வு முயற்சி, ஈழத்து நாட்டுப் பாடல்கள்.
பாலசுந்தரம் அவர்களை நான் அறிவேன். நாட்டுப்பண் பாட்டியல் ஆய்வாளர்களைச் சந்திக்கவேண்டுமென்ற ஆர்வம் ஆாண்ட அவர் ஆய்வில் ஈடுபட்டிருந்த நாட்களில் என்னை வந்து சந்தித்தார். நாட்டுப் பாடல்களில் அவரது தணியாத ஆர்வம், புதிய கருத்துகளைத் தெரிந்து கொள்வதில் அவர் காட்டிய எல்லையற்ற அறிவுவேட்கை, மட்டக் களப்பு நாட்டுப் பாடல்களைத் தமிழ்நாட்டுப் பாடல்களோடு ஒப்பிடுவதில் அவர் காட்டிய கடினமான முயற்சி ஆகிய அவரது ஆய்வுப் பண்புகளை நான், என்னோடு கழித்த நாட்களில் அறிந்துகொண்டேன். அவருக்கு என்னால் இயன்ற அறிவுரைகளை வழங்கினேன். இலங்கையில், எனது அன்பிற்குரிய, இலக்கியத் தோழமை கொண்ட அறிவாளிகள், படைப்பாளிகள் சிலரில் பாலசுந்தரம் ஒருவர் நாட்டார் பண்பாட்டுத்துறைகளில் அவர் மேலும் சாதனைகள் புரிய நான் வாழ்த்துகிறேன். இந்நூலை எழுதி அவர் பட்டம் பெற்றுவிட்டார். எனது பாராட்டுகள் பட்டத் தோடு, அதற்கதிகப்படியான 'கொசிறு’ ஆக இருக்கட்டும்.

Page 7
Χ
நூலில் அவர் கிளப்பியுள்ள சில அறிவுத்துறைப் பிரச் சினைகளை அவரே மேற்கொண்டும் ஆராயவேண்டும் என்பது எனது விருப்பம். இந்நூலை வெளியிட உதவிய கலாநிதி ச. வே . சுப்பிரமணியன் எனது நண்பர். நாட்டுப்பண்பாட்டு ஆய்வு முயற்சிகளுக்கு என்றும் ஆதரவளிப்பவர். ஒரு கருத்தரங்கை நடத்தி நாட்டுப்புற இயல் ஆய்வு என்ற நூலை, , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் வெளியிட்டுள்ளார். அது கருத்தரங்கில் படித்த கட்டுரைகளின் தொகுப்பாகும். தேசீயப் பண்பாட்டின் பிரிக்கமுடியாத பகுதி நாட்டார் பண்பாடு என்பதை நன்றாக உணர்ந்தவர் நண்பர் ச. வே. சு. அவருடைய முயற்சிகள் வெற்றிபெற எனது வாழ்த்துகளைக் கூறி இந்த அணிந்துரையை நிறைவு செய்கிறேன்.
ஆராய்ச்சி நா. வானமாமலை, நவம்பர் 79

வாழ்த்துரை
புலமை வித்தகர் மட்டுமன்றி பாமரரும் கற்பனை வளத்தில் கவிதைச் சுவையில் தன்னிகரற்றவர் என்பதை நாட்டுப்பாடல் காட்டுவது வெளிப்படை. பரம்பரை பரம்பரையாய்ப் பொது மக்கள் நாவில் பயின்று, கேட்பார்க்கு இன்பத்தேனினைச் சொரிந்து, நினைவில் நீங்கா இடம்பெற்று, அவரவர் மனநிலைக் கேற்ப பல உருமாற்றங்களை அடைந்து தனிப்பொலிவுடன் திகழ்ந்த வாய்மொழியிலக்கியம், இன்று ஏட்டிலக்கியத்திற்கு இணையான இடர் தைப் பெற்றுள்ளது.இனிய ஓசை, உலகியலை அதீத கற்பனையுடன் இணைக்கும் பாங்கு, வேதனைகளையும் சாதனை களையும் வடிக்கும் திறன், நிலவுலகில் கிட்டாததைக் கற்பனை உலகில் பெறுவதாகக் காட்டும் பூரிப்பு, வரலாற்றை வேதமாக்கும் மாண்பு, கள்ளங்கபடற்ற வெள்ளை உள்ளத்தின் பிரதிபலிப்பு உண்மை அன்பின் உயிர்த்துடிப்பு எனப்பல உணர்வுகளை நல்கி இதயத்தைக் கவர்வது இவ்விலக்கியச் சிறப்பு.
நாட்டுப்புற இலக்கியம் இன்று எல்லா மொழியினரையும் தன்பால் ஈர்த்து, இலக்கிய உலகில் தனக்கும் ஓர் சிறப்பிடத் தைப் பெற்றுள்ளது. தமிழ் மொழியில் வானமாமலை, சோமலெ, கி.வா.ஜகந்நாதன்,ஆறு அழகப்பன் போன்ற பலரால் தொகுக்கப் பட்டு ஆய்வு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம் முயற்சிகளுக்கு மேலும் வளம் சேர்க்கும் முறையில் கலாநிதி. இளையதம்பி பாலசுந்தரம் அவர்கள் ஈழ நாட்டின் மட்டக் களப்பு மாவட்டத்தில் வழங்கும் நாட்டார் பாடல்களைத் தொகுத்து அரிய ஆராய்ச்சி நூல் ஒன்றினை அளித்துள்ளார். அன்னரின் ஆய்வு பலரும் பாராட்டத்தக்க வகையில் புதுமைப் பொலிவுடன் விளங்கு கிறது. ஆய்வு நெறி எப்படி அமைய வேண்டும் என்பதற்குச் சிறந்த காட்டாக இந்நூலை ஆசிரியர் படைத்திருப்பது பாராட்டத் தக்கது.
எட்டு இயல்களில் தன் ஆய்வினை வகைப்படுத்தித் தருகிருர். முதலிரு இயல்களும் முன்னுரை போன்று அமையினும், இரண் டாம் இயல் நாட்டார் பாடல்பற்றிய கருத்துக் கருவூலமாக

Page 8
xii
உள்ளது. இவர் பலதரப்பட்டப் பாடல்களைத் தொகுத்திருப்பினும் தாலாட்டு, தொழில், காதல் ஆகிய பாடல்களில் மட்டுமே ஆய்வு நிகழ்த்தியுள்ளார். ஒவ்வொரு பிரிவிலும் அவற்றின் பொருள், இலக்கியச் சிறப்பு, தலைமைக் கருத்து, வடிவம் ஆகியவற்றைத் திறம்பட ஆராய்ந்து, ஒப்பியல் முறையினையும் தேவையான இடங்களில் கடைப்பிடித்து, ஒவ்வொன்றின் சிறப்பியல்புகளையும் நவின்றுள்ளார். இறுதியில் இப்பாடல்களின் பயன்பாட்டினைத் தரும் ஆசிரியர், இவை உணர்த்தும் சமுதாய மரபுகள், நம்பிக்கை களேத் தொகுத்துத் தந்திருப்பது சிறந்த பணியாகும். ஈழத்துத் தமிழரின் சிறப்பியல்புகளை அறிந்துகொள்ள சிறந்த கருவியாக இப்பகுதி அமைகிறது.
மக்களின் வாழ்க்கை முறையில் பயன்படும் வகையிலே தான் இப்பாடல்களின் முக்கியத்துவமும் இவற்றின் நிலைபேறும் தங்கி யுள்ளன; இங்கு ஆராயப்பட்ட மூவகைப் பாடல்களிலே தாலாட் டுப் பாடல்களின் மொழிநடை திருந்திய நடையுடையதாகவும், சொற்களும் சொற்ருெடர்களும் தரங்கொண்டனவாகவும் காணப்படுகின்றன; பாடகரின் வயது, அனுபவம், உணர்ச்சிநிலை, மனேநிலை என்பவற்றுக் கேற்பவே அவர்களது பாடற்பொருளும் அமைந்துள்ளன; ஆண்களின் காதற் பாடல்களில் உணர்ச்சி வேக மும், இணைவிழைச்சிப் பொருளுஞ் சிறப்பியல்புகளாம்; பெண் கள் பாடும் பாடல்களில் இன்ப துன்ப நிகழ்ச்சிகள், குடும்பப் பிரச் சினைகள் ஆகிய பொருளம்சங்கள் சிறப்பியல்புகளாம் என்பன போன்ற ஆசிரியரின் ஆய்வு முடிபுகள் அவரின் ஆழமான ஆய்விய லறிவைக் காட்டுகின்றன,
நூலின் இறுதியில் ஆசிரியர் ஆய்விற்குப் பயன்பட்ட பாடல் களைத் தொகுத்தளித்திருப்பதுடன், அப்பாடல்களில் வழங்கும் அருஞ்சொற்களுக்கு அகராதி படைத்திருப்பதும், சூட்டுக்களத் தில் வரும் சிறப்புச் சொற்கள், மீன்பிடிப் பாடல்களில் வரும் சிங் களச் சொற்கள் ஆகியவற்றைக் கொடுத்திருப்பதும் ஆசிரியரின் உழைப்பின் பெருமைைையப் பகர்வதாக, நூலுக்கு மிக இன்றி யமையாத ஒன்ருக அமைந்துள்ளன.
நாட்டுப்புற ஆய்வில் இன்னும் செய்ய வேண்டியவை, செய்யு முறை ஆகியவற்றைக் கூறியிருப்பதுடன், "இவ்வாய்வாளர் உளவியல் துறையில் அறிவு நிரம்பப் பெற்றவராக இருந் திருப்பின் இங்கு ஆராயப்பட்ட மூவகைப் பாடல்களிள் பயன் பாடுபற்றி ஆய்வு மேலும் நுட்பமாக அமைந்திருக்கும்’ என்று

xiii
கூறுவது, ஆசிரியரின் அவையடக்கத்துடன் நாட்டுப்புற ஆய்வில் உள்ள ஈடுபாட்டையும் புலப்படுத்துவதாக உள்ளது. நாட்டுப் பாடலின் பிற பிரிவுகள் பற்றிய ஆசிரியரின் ஆய்வு எப்பொழுது கிடைக்கும் எனும் உணர்வினை இந்நூல் நல்குகிறது எனில் மிகை யன்று.
இதுபோன்ற பல நூல்களைக் கலாநிதி இளையதம்பி பால சுந்தரம் உலகுக்குக்கொடுத்தல் வேண்டும் எனக்கேட்டுக் கொள் கிறேன்.
அவர் தமிழ்த் தொண்டு வளர்க!
நவம்பர் 1979 அன்பன் சென்னை-20 ச. வே. சுப்பிரமணியன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
பதிப்புரை
இன்று ஆய்வாளரிடையே நாட்டுப்புற இயல்’ மிகுந்த செல்வாக்குடன் வளர்ந்து வருகிறது. அதற்குத் தன்பங்காக, தரமான நூல்களை வெளிட்டுத் தமிழ்ப்பணி புரிவதில் பெருமை கொள்ளும் ‘தமிழ்ப் பதிப்பகம்’ இந்நூலை வெளியிட்டுள்ளது. இந்நூல் திரு. இளையதம்பி பாலசுந்தரம் அவர்கள் தன் கலாநிதி பட்டத்திற்காக இலங்கைப் பல்கலைக் கழகத்திற்கு அளித்த ஆய்வேடு. மிகச் சிறந்த முறையில் பல புதிய கோணங்களில் இவ்வாய்வு நூலை ஆசிரியர் படைத்துள்ளார். தகுதி யுடைய இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிருேம்.
நவம்பர் 1979 தமிழ்ப் பதிப்பகத்தார்

Page 9
நன்றி நவிலல்
இவ்வாய்வுக்குத் தேவையான பாடல்களையும், அவற்ருேடு தொடர்புடைய தகவல்களையுஞ் சேகரிப்பதற்கு நான் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டியதாயிற்று. கள ஆய்வுக்குச் சென்ற போது, என்னை நன்கு உபசரித்துத் தேவையான பாடல்களை ஒலிப்பதிவு செய்யவும், தகவல்களைச் சேகரிக்கவும் என்னுடன்
ஒத்துழைத்த பாடுநருக்கும், அறிவிப்பாளருக்கும் முதலில் என் நன்றி சேர்வதாக,
இளமைக்காலம் முதலாக நாட்டார் பாடலிலிருந்த ஈடு பாடும், பல்கலைக்கழகத்திற் பயிலும்போது நாட்டார் பாடல் பற்றி ஆராயவேண்டும் என்ற ஆர்வமும், ஈழத்தில் இவ்வாய்வு பெரிதும் புறக்கணிக்கப்பட்டிருத்தலும் என்னை இவ்வாய்வில் ஈடு படத் தூண்டிய காரணிகளாம். 1971 ஆம் ஆண்டு பல்கலைக் கழகத்திலே தமிழ் உதவி விரிவுரையாளராகச் சேர்ந்ததும் இப் பாடல்கள்பற்றி ஆராய்வதற்குரிய அரிய வாய்ப்புக்கிடைத்தது. என் விருப்பினையறிந்து இவ்வாய்வினை நான் மேற்கொள்ளக் கொழும்பு வளாகத்திலே அனுமதியையும் ஓய்வு காலத்தையும் பெற்றுத்தந்து, என்னை ஊக்குவித்தும், இவ்வாய்வு நூலின் வழி காட்டியாகவிருந்தும், வேண்டியபோதெல்லாம் மனமுவந்து வழிவகைகளை வகுத்துக் காட்டியும், இவ்வாய்வுநூல் முழுமை பெற எனக்குப் பொன்றத் துணையாகவிருந்த மொழி, பண் பாட்டுத் துறைத்தலைவர், பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர் களுக்கு நான் என்றுங் கடமையுடையவன். இம்முயற்சிகளில் இவருடன் கொழும்பு வளாகச் சிரேட்ட தமிழ் விரிவுரையாளர் கலாநிதி பொ. பூலோகசிங்கம் அவர்களும் தம்மாலியன்ற வழி காட்டும் முறைகளைத் தெரிவித்து என்னை மேலும் ஊக்கப்படுத் தியதற்கு நன்றியுடையேன்.
நாட்டார் இலக்கிய ஆய்வுத்துறையிற் பிறநாட்டினர் மேற் கொண்டுள்ள ஆய்வுகள்பற்றி அறியும் வேணவாவுடன் தென்னகத் தில் 1973 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் முதல் ஐப்பசித் திங்கள் வரையுந் தங்கினேன். முதலிற் கேரளப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பேராசிரியர் வி. ஐ. சுப்பிரமணியம் அவர்களிடம் நாட்டார் பாடல் ஆய்வுமுறைகள்பற்றி இரு திங்கள் காலம் வரையும் பயின்றேன். மதுரைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற காலை தமிழ்ப் பேராசிரியர் அவர்களைச் சந்தித்து இப்பொருள் பற்றிக் கலந்துரையாடக்கூடிய ஒர் அரிய வாய்ப்புங் கிடைத்தது. தென்னகப் பல்கலைக்கழகங்களில் இத் துறையில் எழுதப்பட்ட ஆய்வுநூல்கள், மேனட்டார் இத்துறையில் நடாத்திய ஆய்வு

ΧΥ
வெளியீடுகள் என்பனபற்றியும் படிக்கக்கூடிய வாய்ப்பைப் பல் வேறு பல்கலைக்கழக நூலகர்களும், பொது நூலக நூலகர்களும் அளித்தார்கள். திருநெல்வேலியில் உயர்திரு நா. வானமாமலை அவர்களையும், அவருடன் ஆய்வு நடாத்தும் * ஆராய்ச்சிக்குழுவின ரையுஞ் சந்தித்து, இரு கிழமைகள் அவர்களுடன் தங்கியிருந்து நாட்டார் இலக்கியம்பற்றிய கருத்துப்பரிமாறல்களைச் செய்து கொண்டேன். மதுரை பூரீ சத்குரு சங்கீத வித்தியாலய அதிபர் எஸ். இராமநாதன் அவர்கள் எனது ஒலிப்பதிவு நாடாக்களைத் துணைக்கொண்டு, நாட்டார் பாடல்களுக்குச் சுரவரிசை அமைத் துத்தந்தார்கள். இவர்கள் யாவரும் எவ்வகைப் பயனும்கருதாது காலத்தினுற் செய்த உதவிக்கும், உபசரிப்பிற்கும் 'நன்றி” என்ற சொல்லினல் மட்டும் என் கடமைப்பாட்டினை உணர்த்த முடியாதென்பதை அழுத்தமாகக் குறிப்பிட விழைகின்றேன்.
தென்னகத்தில் இதுகாறும் இத்துறையில் வெளிவந்தனவும் ஈழத்தில் அந்நியச் செலாவணிக் கட்டுப்பாட்டினுற் கிடைக்கா தனவுமாகிய பல நூல்களையுஞ், சஞ்சிகைகளையும் பெற்றதுடன், *கல்கத்தா மக்கள் பண்பாட்டுக் கழக" (Calcutta Folklore Society) உறுப்பினராகச் சேரக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. இவ்வாறு தென்னகக் கல்விப்பயணத்தினுல் இவ்வாய்வுக்கு மேற் கொள்ளவேண்டிய முயற்சிகள்பற்றிய அறிவு அதிதுரித வளர்ச்சி யடைந்தது.
வித்தியாலங்கார வளாகத்துத் தமிழ், இந்துப் பண்பாட்டுத் துறைத் தலைவரும், என் மதிப்புக்குரிய ஆசிரியருமாகிய கலாநிதி ச. தனஞ்சயராசசிங்கம் அவர்கள் இவ்வாய்வு நூலுக்குத் தேவை யான அறிவுரைகளைக் கூறியதோடு, எனக்கு அயரா ஊக்க மளித்து இந்நூலை நிறைவுபெறச் செய்தார்கள். அவர்களுக்கும் கைமாறறியாக் கடப்பாடுடையேன். யாழ்ப்பாண வளாகத்துத் தலைவர், பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் இவ்வாய்வுக்கு வேண்டிய சில அரிய துணை நூல்களைத் தந்துதவி, இத்துறையில் மேனட்டார் சாதனைகள்பற்றி அறிவுறுத்தி, என்னை ஊக்கப் படுத்தியமைக்கு என் அன்பு கலந்த நன்றி உரித்தாகுக. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச்சேவைப் பணிப் பாளர் கலாநிதி. க. செ. நடராசா அவர்களும் பயனுடைய பல அறிவுரைகளை வழங்கி இவ்வாய்வுநூல் சிறப்புற அமைய உதவியதற்கு நன்றி கூற விழைகின்றேன்.
சிங்கள மக்களின் நாட்டார் இலக்கியம்பற்றிய ஆய்வில் ஈடு பட்டுப் புகழீட்டிய கலாநிதிகள் எம். எச். குணதிலகா, நந்த

Page 10
Xνi
சேனரட்ணபாலா ஆகியோரும் இவ்வாய்வுக்குப் பயன்படுங் கருத்துகள் சிலவற்றைத் தந்துதவியதனை நன்றியுடன் குறிப்பிடு கின்றேன்.
நாட்டார்பாடல் ஆசிரியர் இயற்பெயர் போன்று, "சுட்டி யொருவர் பெயர் கொளப்பெரு' மரபில்நிற்கும் பலர் இந்நூல் ஆக்கத்திற்குப் பற்பல வழிகளில் உதவினர். அவர்கள் யாவர் பாலும் என்றும் நன்றியுடையேன்.
அணிந்துரை வழங்கி நூலுக்குச் சிறப்பளித்த உயர்திரு நா. வானமாமலை அவர்களுக்கும் வாழ்த்துரை நல்கி நூலை அணி செய்யும் உயர்திரு. டாக்டர் ச. வே. சுப்பிரமணியன் அவர் களுக்கும் என் நன்றியறிதலைத் தெரிவிக்கிறேன். நூலைச் சிறப்புற வெளியிட்ட தமிழ்ப் பதிப்பகத்தாருக்கும் என் நன்றி.
தவம்பர் 1979 கலாநிதி. இளையதம்பி பாலசுந்தரம்.

உள்ளே
uátsálatoir
தோற்றுவாய்
நாட்டார் பாடல் ஆய்வின் முக்கியத்துவம் 1-8; உலகநாடுகளில் ராட் " "ர் பாடல் ஆய்வு 8-14; மட்டக் களப்பு ம வட்டத்தை ஆய்வுக்களமாகத் தேர்ந்தமைக் குரிய காரணம் 14-16; கள ஆய்வு 17-24; ஆய்வுக்குத் தேர்ந்த பாடல் வகைகள் 24-25; ஆய்வு முறைகள் 25-27.
இயல் - 1 மட்டக்களப்பு மாவட்டம்
இயற்கை அம்ைப்பு 28-31: வரலாறும் மக்கள் பரம் பரையும் 31-36; சனத்தொகையும் இனப்பிரிவுகளும் 36-37; மொழியுஞ் சமயமுங் கல்வியும் 37.43; தொழில் வசதிகள் 43-45.
இயல் - 11 நாட்டார் பாடல் வகைகளுஞ் சிறப்பியல்புகளும்
நாட்டார் பாடல்கள் 46; நாட்டார் பாடல்" என்னும் வழக்கு 47 - 50; பாடல்களை வகைப்படுத் தும் முறை 50-55; பாடல் வகைகளின்விளக்கம் 55-58; பாடற் சிறப்பியல்புகள் 58-74,
இயல் - II தாலாட்டுப் பாடல்களின் அமைப்பாய்வு
தாலாட்டுப் பாடல்கள் 75-78; பொருளமைப்பாய்வு
79-104; இலக்கியச் சிறப்பாய்வு 104-111; தலைமைக்
கருத்தாய்வு 111-121 வடிவ அமைப்பாய்வு 121.138.
இயல் - IV தொழிற் பாடல்களின் அமைப்பாய்வு
தொழிற் பாடல்கள் 139-142; பொருளமைப் பாய்வு 142-169; இலக்கியச் சிறப்பாய்வு 169-172; தலை மைக் கருத்தாய்வு 172-176; வடிவ அமைப்பாய்வு 176-188.
-27
28.45
46-74
75-138
139-188

Page 11
xviii
இயல் - W காதற் பாடல்களின் அமைப்பாய்வு
காதற் பாடல்கள் 189-193; பொருளமைப்பாய்வு
193-220; இலக்கியச் சிறப்பாய்வு 220-228; தலைமைக் கருத்தாய்வு 228-231; வடிவ அமைப்பாய்வு 231-236.
இயல் - V1 பாடல்களின் பயன்பாடு
ப்யன்பாட்டுக் கோட்பாடு 237-238; தாலாட்டுப் பாடல்களின் பயன்பாடு 238-249; தொழிற் பாடல் களின் பயன்பாடு 249-261; காதற் பாடல்களின் பயன் LurG 261-268.
இயல் - VI சமுதாய மரபுகளும் நம்பிக்கைகளும்
திருமணத்துடன் தொடர்புடைய சமுதாய மரபுகள் 269-273; குடிமரபு 273-278; தாய்வழிச் சமூக அமைப்பு 278-279; நம்பிக்கைகள் 279-287; சடங்குகள் 287-289; கிராமிய விவசாய முறைகள் 289-296; கிராமியப் பண் பாட்டு விடயங்கள் 296-302.
இயல் - VII முடிவுரை துணைநூல் அட்டவணை
1. தமிழ் நூல்கள் II. English Books
பின்னிணைப்பு
1. சொல்லடைவு 25 சூட்டுக்களத்தில் வழங்கும் சிறப்புச்சொற்கள் 3. மீன்பிடிப் பாடல்களில் வரும் சிங்களச் . . . சொற்கள்
4. ஒலி ஒழுங்கியல் மாற்றம் 3. கச்ை சொற்கள்
ஈழத்து நாட்டார் இலக்கிய வெளியீடுகள்
பாடுநர் அறிவிப்பாளர் பற்றிய விபரம் ஆய்வுக்குத் தேர்ந்த பாடல்கள் தாலாட்டுப் பாடல்கள் தொழிற் பாடல்கள்
காதற் பாடல்கள்
189-236
237-268
269-302
303-310
311-326 311-315 36-326
327-355
356-358
359-360
360-361
362
363-365
366-367
368-421 368-382
383-400
401-421

பொழிப்புரை
தோற்றுவாய்
மட்டக்களப்பு மாவட்ட நாட்டார். பாடல்களின் ஆய்வும் மதிப்பீடும் என்னும் பொருள்பற்றிய இவ்வாய்வுநூலின் தோற்று வாயில், நாட்டார் பாடலாய்வின் முக்கியத்துவம், உலகநாடு களில் இப்பாடல்கள்பற்றிய ஆய்வு, மட்டக்களப்பு மாவட்டத்தை ஆய்வுக்களமாகத் தேர்ந்தமைக்குரிய காரணங்கள், கள ஆய்வு, ஆய்வுக்குத் தேர்ந்த பாடல்வகைகள், ஆய்வுமுறைகள் என்பன பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
இயல் 1 மட்டக்களப்பு மாவட்டம் பற்றிய முதலாம் இயலில், இம்மாவட் டத்தின் புவியியல், வரலாறு, சமூக அமைப்பு ஆகியன ஆராயப் பட்டுள்ளன. பாடல்களின் பொருளமைப்பாய்வு, பயன்பாடு, சமுதாயமரபுகள், நம்பிக்கைகள் என்பனபற்றிய ஆய்வுகளுக்குப்
பின்னணியாக இவ்வியல் அமைந்துள்ளது.
இயல் 11 நாட்டிார்பாடல் வகைகளும் சிறப்பியல்புகளும் என்னும் இரண்டாம் இயலில் நாட்டார் பாடல்கள் பொதுவாக வகுக்கப் படும் முறைகளையும், அவற்றின் பல்வகைச் சிறப்புகளையும்பற்றிக் கூறப்பட்டுள்ளன. V.
இயல் —— V
மூன்ரும் இயல்முதல் ஏழாம் இயல் வரையுமுள்ளவை ஆய்வு நூலின் முக்கிய பகுதிகளாம். ஏழுவகை நாட்டார் Litt is லிருந்து இவ்வாய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவகைப்பர்டல் களான தாலாட்டுப்பாடல்கள், தொழிற்பாடல்கள், காதற்பாடல்கள் ஆகியனவற்றின் அமைப்புப்பற்றி முறையே மூன்ரும், நான்காம், ஐந்தாம் இயல்களில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பாடல்

Page 12
XX
களின் பொருளமைப்பாய்விற் செந்நெறி இலக்கிய ஒப்புவமை கள் இயன்றவரையும் அடிக்குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளன. பாடற்பொருளை அணிகள் அலங்கரிக்கும் முறை, பாடல்களின் தலைமைக்கருத்துகள் என்பனவும் ஆராயப்பட்டுள்ளன. இசை யமைப்பு வாய்பாடு, எதுகை, மோனையமைப்பு, இயைபமைப்பு, திரும்பத்திரும்ப வரும் அமைப்பு, விரிபமைப்பு, வரியமைப்பு வாக்கிய அமைப்பு ஆகிய ஆய்வுமுறைகளைக் கையாண்டு பாடல் களின்வடிவ அமைப்பு நுணுக்கமாக ஆராயப்பட்டுள்ளது.
இயல் V m ஆய்வுக்குத் தேர்ந்த பாடல்களின் பயன்பாடு ஆராயப்பட்டு, அவ்வகையில் இப்பாடல்கள் எத்தகைய முக்கியத்துவம் பெறுகின் றனவென்பது ஆரும் இயலில் மதிப்பிடப்பட்டுள்ளது.
இயல் V பாடல்கள் குறிப்பிடுஞ் சமுதாயமரபுகள், நம்பிக்கைகள் என்பனபற்றிய கிராமியப் பண்பாட்டியற் கூறுகள் ஏழாம் இயலில் ஆராயப்பட்டுள்ளன.
9uusio VIII இவ்வாய்வுநூலில் நிறுவப்பட்டுள்ள கருத்துகளின் தொகுப் புரை, இன்னும் இத்துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய ஆய்வுகள் என்பன முடிவுரையில் இடம்பெற்றுள்ளன.
துணைநூல் அட்டவணை
ஆய்வுநூலிற் குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் சஞ்சிகைகள், ஆய்வுநூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகியனவற்றின் விபரங்கள் அடங்கிய அட்டவணை இறுதியிலே தரப்பட்டுள்ளது.
பின்னிணைப்பு
ஆய்வுக்குத் தேர்ந்த பாடல்களில்வரும் விசேட வழக்குகளை விளக்கும் சொல்லடைவும், கள ஆய்வுவிபரங்களும், ஆய்வுக்குத் தேர்ந்த மூவகைப் பாடல்களின் மூலங்களும் பின்னிணைப்பு என்னும் பகுதியிற் சேர்க்கப்பட்டுள்ளன.

குறுக்க விளக்கம்
அகம். = அகநானூறு
கலி. se கலித்தொகை
குறுந் = குறுந்தொகை சூத். = குத்திரம்
தொல். s தொல்காப்பியம்
Liš. == Jėj;&5b
புறம் = புறநானூறு
அடிக்குறிப்பிலே தரப்பட்டுள்ள தாலாட்டுப்பாடல்கள், தொழிற்பாடல்கள், காதற் பாடல்கள் ஆகியவற்றின் உபபிரிவுகளைக் குறிப்பிடும் குறுக்கவடிவங்களின் விளக்கம் வருமாறு:
g5T. LunT. I l I தாலாட்டுப் பாடல்கள்-குழந்தையைப்
புகழும் பாடல்கள்.
தா.பா./2/ re தாலாட்டுப் பாடல்கள் - அழுங்குழந்
தையை ஆற்றும் பாடல்கள்.
தா.பா./3/ தாலாட்டுப் பாடல்கள் - தாயின் தவமும் தவப்பயனும் பற்றிய பாடல்கள்.
தா.பா.14| 端 தாலாட்டுப் பாடல்கள் - குழந்தையின்
சொத்துகள் பற்றிய பாடல்கள்.
sm. Lunr. 151 - தாலாட்டுப் பாடல்கள் - உறவினர்
பெருமை பற்றிய பாடல்கள்.
தா.பா./6/ Cea தாலாட்டுப் பாடல்கள் - குழந்தையின்
சடங்குகள் பற்றிய பாடல்கள்.
தொ.பா./பொலி = தொழிற் பாடல்கள் - பொலிப் Lunt L6a) 567.
தொ.பா./ஏர் = தொழிற் பாடல்கள் - ஏர்ப்பாடல்கள்
தொ.பா./ஏற்றம் = தொழிற் பாடல்கள் - ஏற்றப் பாடல்
(56.
தொ.பா./மிதிப்பு = தொழிற் பாடல்கள் - வயல்மிதிப்போர்
unrGh Lurr LlG) 95 Gir.
தொ.பா.அ.வெ.I ன தொழிற் பாடல்கள் - அரிவிவெட்டு
வோர் பாடும் கவிகள்.
தொ.பா.காவல்) R தொழிற் பாடல்கள் - காவற்பரண்
கவிகள்.

Page 13
தொ.பா./நெல்|
தொ.பா./வலை
தொ.பா.தண்டு
தொ.பா.தோணி
sr. Luit. Illgil
கா.பா.11ஆ/ காபா.இ
sit.urt. 11 F1
nr . Lunt.|lo
sr.ut.11a/
கா.பா.11எ
கா.பா./1ஏ!
கா.பா.1ஐ
கா.பா.12அ!
கா.பா.12ஆ
கா.பா.12இ
sit.ust. 2FFl
gт. Lшт/22-l
xxii
தொழிற் பாடல்கள் - நெல்குற்றும் பெண்கள் பாடும் பாடல்கள். தொழிற் பாடல்கள் - வலைஇழுப்போர் பாடும் பாடல்கள். தொழிற் பாடல்கள் - தண்டுவலிப் போர் பாடும் பாடல்கள் தொழிற் பாடல்கள் - தோணி தள்ளு வோர் பாடும் பாடல்கள். காதற் பாடல்கள் - காதலர் நலம் புனைந்துரைத்தல். காதற் பாடல்கள் - காதலர் தம் பிரச்சினை பற்றிக் கூறுதல். காதற் பாடல்கள்-காதலர் உறவுமுறை பாராட்டுதல். காதலர் தனிமையிற் சந்திக்க வழி
கூறுதல். காதற் பாடல்கள் - காதலர் சூளுரை கூறுதல். காதற் பாடல்கள் - காதலர் அலர் மொழி எடுத்துரைத்தல் காதற் பாடல்கள் - ஒழுக்கத்தைப் பேணுதல் காதற் பாடல்கள் - காதலர் நகை மொழி கூறுதல். காதற் பாடல்கள் - இணைவிழைச்சிப் Lunt L6 95 Gir. காதற் பாடல்கள் - காதலரது பிரிவுத் துயர். காதற் பாடல்கள் - காதலர் தூது அனுப்புதல். காதற் பாடல்கள் - காதலரது வெறுப்பு
fosor I LI IT 65TG585)LD . காதற் பாடல்கள் - பொருந்தாத்
திருமணம். காதற் பாடல்கள் - மந்திரவித்தையை
நாடுதல்,

1. xxiii
6T.LIT.131 = காதலிலே தோல்வியுற்றேரது
வேதனைப் பாடல்கள்.
காதற் பாடல்கள் - குடும்ப வ்ாழ்க்கை யுடன் தொடர்புடைய பாடல்கள்.
&fr. Lint./4/
சொல்லடைவிற் கையாளப்பட்டுள்ள இலக்கண வடிவங்களின் குறுக்க
விளக்கம்:
அ.பெ. se அளவைப் பெயர் இபெ3 s இடப் பெயர் ஏ.வி. 茎葱 ஏவல் வினை கா.பெ. காலப் பெயரி கு. வி.மு. = குறிப்பு வினை முற்று சு.பெ. சுட்டுப் பெயர் தொ.பெ. E தொழிற் பெயர் பெ. -; பெயர்
Gol 1.6t. జ- பெயரெச்சம் மு.பெ. జ முறைப் பெயர் வி.எ. s வினையெச்சம் வி.பெ. 零二狐 விளிப் பெயர் வி.மு. வினை முற்று
வி.வி. is வியங்கோள் வினை

Page 14
10. 11.
12.
13.
14.
15,
16.
17.
18.
9.
20.
தமிழ்ப் பதிப்பக வெளியீடுகள்
இலக்கணத்தொகை - சொல் இலக்கணத் தொகை - யாப்பு, பாட்டியல் மொழிக்கட்டுரைகள்
இலக்கிய நினைவுகள்
சிலம்பின் சில பரல்கள்
மாந்தர் சிறப்பு
இலக்கியக் கனவுகள்
ஒன்று நன்று வீரசோழியம்-ஒரு திறனய்வு-மூலமும் கருத்தும் சிலம்பும் சிந்தாமணியும் தொன்னுரல் விளக்கம் கம்பன் கற்பனை
இலக்கிய உணர்வுகள் கம்பன் ஆய்வடங்கல்
தமிழ் இலக்கியத்தில் ஆறு தமிழ் நாடகம் - ஓர் ஆய்வு தமிழ் நாவல் வகைகள் காப்பியப் புனைதிறன் தமிழ் வில்லுப் பாட்டுகள்
குவலயானந்தம், சந்திராலோகம்
e5 69)Lu
3
8
00
00
OO
OO
00
00
OO
09
00
00
O
00
00
00
OO
00
00
00
OO

தோற்றுவாய்
நாட்டார் பாடல் ஆய்வின் முக்கியத்துவம்
உலகின் பல்வேறு நாடுகளில் அறிஞர் பலர் நாட்டார் இலக் கியங்களைத் தேடிச் சேகரித்தும், பாதுகாத்தும்,ஆய்வுநடாத்தியும் வருகின்றனர். அத்தகைய ஆய்வு முயற்சிகளின் அடிப்படையில் மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள் பற்றிய இவ்வாய்வும்? ஒன்ருகும். பரம்பரை பரம்பரையாக வாய்மொழி மரபில் வழங்கி வரும் இப்பாடல்கள் மக்களின் அன்ருட வாழ்க்கையிற் பயன் படும் வகையிலும், ஆய்வுச் சான்றுகளாக அமையும் முறையிலும் மிக்க முக்கியத்துவம் பெறுகின்றன. இவை மக்களின் பல்வேறு பட்ட வாழ்க்கைக் கட்டங்களின் பிரதிபலிப்பாகவும், பழமைக்கும் சமகாலத்திற்கும் பாலமாகவும், செந்நெறி இலக்கியத் தோற்றத் திற்கும், வளர்ச்சிக்கும் அடிப்படையாகவும், வளமூட்டுவதாகவும் அமைந்து காணப்படுகின்றன. மனித சிந்தனைகளினதும் உள வியற் போக்கினதும் பிரதிபலிப்பாக நாட்டார்பாடல்கள் திகழ் வதால் சமூக உளவியல்பற்றி ஆராய்வதற்கும் இவை ஆய் வாளருக்குச் சான்ருகின்றன.* வரலாற்ருவணங்களைவிடப் பெறு மதியிற் சற்றும் குறைவில்லாத அளவிற் கடந்த காலத்தைப் பற்றிய பெருந்தொகையான செய்திகளை நாட்டார் பாடல்கள் கொண்டிருப்பதால், இப் பாடல்கள் பற்றிய ஆய்வின்மூலம் வரலாற்றுண்மைகள் பல தெளிவாக்கப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. மானிடவியலாளர் இப்பாடல்களை மனித சுயசரிதையாகவும், இனவியலாளர் இவற்றை மனிதப்
1. "நாட்டார் பாடல்" என்னும் வழக்குப்பற்றிய
Blisse 2. இவ்வாய்விற்குத் தாலாட்டுப் பாடல்கள், தொழிற்பாடல்கள்,
கள் ஆகிய மூவகைப் பாடல்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதற்குரிய காரணத்தை நூலுள் நோக்குக. 3. வரதராசன், மு. (1972) பக். 346 4. Herskovits, Melville, J. (1958) P. 271.
விளக்கத்தை நூலுள்
காதற்பாடல்
5. Encyclopaedia of Religion and Ethics, Vol. 6(1960) P.58.

Page 15
2 மட்டக்களப்பு மாவட்ட.
பண்பாட்டு வளர்ச்சிநெறியின் சின்னங்களாகவுங் கொண்டு ஆய்வு நடாத்தியுள்ளனர். இவ்வாருக நாட்டார் பாடல்களைப் பற்றிய ஆய்வு உலக நாடுகளின் ஆய்வாளர் பலரின் கவனத்தை ஈர்ந் துள்ளது. *
ஒரு பிரதேச மக்களது சமுதாய மரபுகள், நம்பிக்கைகள் என்பனபற்றி ஆராய்வதற்கு அப்பிரதேச மக்களின் நாட்டார் பாடல்கள் தக்க சான்றுகளாக அமைகின்றன. இப்பாடல்கள் மனித வாழ்க்கையிற் பயன்பாடுடையனவாகத் திகழ்வதால், அவை மக்களது வாழ்க்கை முறையைப்பற்றிய முழுமையான தகவல்களைக் கொண்டிலங்குகின்றன. மனிதன் குழந்தையாகப் பிறக்கும்போது தாலாட்டுப் பாடல்களாகவும், சிறுவனுக விளை யாடும்போது, விளேயாட்டுப் பாடல்களாகவும், உழைக்கும் போது தொழிற்பாடல்களாகவும், வளர்ந்து உலக வாழ்க்கையில் ஈடுபடும்போது கா கற் பாடல்களாகவும், கிரியைகள் வழிபாடுகள் ஆகிய சந்தர்ப்பங்களின்போது வழிபாட்டுப் பாடல்களாகவும், பொழுது போக்கு, கேளிக்கைகளின் போது கதை-கூத்துப் பாடல் களாகவும், இறந்தபோது ஒப்பாரிப் பாடல்களாகவும் பல்வேறு வடிவங்களில் இப்பாடல்கள் மக்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக அமைகின்றன இவ்வாறு மக்களது வாழ்க்கையிற் பல்வேறு சந்தர்ப்பங்களிற் பயன்பாடுடையனவாக விளங்கும் இப்பாடல் கள் இன்றைய வாழ்க்கைமுறையின் ஆணிவேரை அறிந்துகொள் வதற்கும் துணையாக அமைகின்றன."
ஒரு நாட்டினரின் சகல பண்பாட்டுக் கூறுகளையும் உயர்ந் தோர்பண்பாடு, பாமரர்பண்பாடு என இருபெரும் பிரிவுகளாகப் பகுத்துப் பண்பாட்டாய்வாளர் ஆராய்ந்துள்ளனர். * சமூக அமைப்பே இவ விருஷ1கைப்பட்ட பண்பாட்டுப் பிரிவுகளுக்கும் காரணமாகின்றது இவ்விரு பண்பாட்டு நெறிகளும் உயர் வர்க்கம், பாமரவரிக்+ம் என்ற சமூக அமைப்பின் அடிப்படைப்
6. Dundes, Alan. ( : 968) PP 41-42.
Y oder, Don. (1968) PP 62-63.
8. u svim u múlu a viu Aira 5Tr ir 5 o il 643sat Main Stream/Substream, Main Culture/Little Culture, Great traditioni Little tradition GTsirg) to அடிப்படையில் மேற்கொண்டுள்ளனர். இவற்றிற்குச் சான்ருகப் பின்வரு வனவற்றைக் குறிப்பிடலாம்:
1. Singer, Milton. (1966) II, Piecies, America. (1968) , , Do Son, R.M. (1959)
7.

தோற்றுவாய் 3
பிரிவின் அடித்தளத்திலே தோற்றம்பெற்று வளர்ந்துவந்துள்ளன. கல்வி, செல்வம், சமூகமதிப்பு என்பவற்ருற் சிறந்து விளங்கு வோரது பண்பாடு உயர்ந்தோர் பண்பாடாகவும், சமூக அமைப் பின் அடிமட்டத்தில் வாழ்ந்துவரும் பாமர மக்களின் பண்பாடு, பாமரர் பண்பாடாகவும் கணிக்கப்படுகின்றன. இத்தகைய பிரிவு களின் அடிப்படையில் நாட்டார் இலக்கியமும், நாட்டார் கலை களும் பாமரர் பண்பாட்டைச் சார்ந்தனவாகின்றன. எனவே நாட்டார் இலக்கிய ஆய்வின் மூலம் கிராமிய மக்களின் பண் பாட்டு வாழ்க்கைமுறைகள் பற்றி விரிவாக அறியக்கூடிய வாய்ப் புக்கள் காணப்படுகின்றன. அன்றியும் பாமரர்பண்பாடு உயர்ந் தோர் பண்பாட்டுக்கு எத்தகைய பங்களிப்புச் செய்துள்ளது எனவும் ஆராய இடமுண்டு.
குறிப்பிட்ட ஒரு நாட்டினரின் இலக்கிய மரபுகளை முழுமை யாக ஆராய்ந்து மதிப்பிடுவதற்கு அந்நாட்டினரின் செந்நெறி இலக்கியங்களையும் நாட்டார் இலக்கியங்களையும் ஒப்புநோக்கி ஆராய வேண்டியது அவசியமாகும். செந்நெறி இலக்கியத் தோற்றத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் நாட்டார் இலக்கியத்தின் பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுவதால் இவ்விருவகை இலக்கியங்களையும் ஒருங்கே ஆராயவேண்டிய பொறுப்பு இலக்கிய ஆய்வாளருக்கு உரியதாகும். தமிழ் இலக்கியத்திற் காலத்திற்குக் காலம் நாட்டார் இலக்கியப் பாதிப்புகள் ஏற்பட்டு வந்துள்ளமையை இலக்கிய ஆய்வாளர்கள்" குறிப்பிட்டு வந்துள்ளனர் என்பதும் ஈண்டு குறிப்பிடற் பாலது.
தமிழ் மக்களது நாட்டாரிலக்கிய வரலாறு பற்றி ஆராய் வதற்குப் போதிய சான்றுகள் இல்லாதிருக்கின்றன. கிடைக்கக் கூடிய சகல வகையான நாட்டார் இலக்கியங்களையும் பரந்த முறையிற் கள ஆய்வின் மூலம் சேகரிக்கும்போது முழுமை வாய்ந்த நாட்டார் இலக்கிய வரலாற்றை எழுத வாய்ப்புண்டு என்கிருர் பா.ரா. சுப்பிரமணியம்.10 தமிழ் மக்களது நாட்டார் இலக்கிய வரலாறுபற்றிய ஆய்வுக்குச் செந்நெறி இலக்கியங்களைத் துணைக் கொள்ளலாம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியன வற்றில் வருஞ்சில பாடல்களின் மூலம் அக்காலத்தில் மக்கள்
9. Meenakshisundaram, T.P. (1965) PP 38-42, 77, 83.89. 1 ) 4. | )5. 126
154, 164-173, 78-79;
பரமசிவானந்தம், அ.மு. (1964) ; வரதராசன், மு. (1972} க், 81,83, 142, 346.
10. Subramaniam, P.R. (1972) P. 1 1

Page 16
4. மட்டக்களப்பு மாவட்ட .
வாழ்க்கையில் நாட்டார் இலக்கியம் எவ்வாறு பயன்பட்டது என்ற செய்திகள் அறியப்படுகின்றன. " சங்க காலத்தில் வழங்கிய நாட்டார் பாடல்கள் கிடைக்காவிடினும், அக்காலத்து நாட்டார் இலக்கிய மரபினைச் சங்கச் செய்யுள்கள் தரும் செய்தி களைத் துணைக்கொண்டு ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது. * சங்கமருவிய கால அறநூல்கள் நாட்டார் இலக்கியத்துக்குப் பாதுகாப்பளித்துள்ளன எனக் கூறுதல் பொருத்தமுடையதாகும். இதற்குச் சான்ருகப் பழமொழி நானுாற்றில் இடம் பெற்றுள்ள பழமொழிகளையும், இன்ன நாற்பது, இனியவை நாற்பது, ஆசாரக்கோவை ஆகியனவற்றில் இடம் பெறும் நீதிமொழி களையும் குறிப்பிடலாம். இவை நாட்டார் இலக்கிய வரலாற்ற ய்வுக்குப் பயன்படத் தகுந்தவை. இவ்வாய்வுக்குச் சிலப்பதிகாரம் மேலும் பல அரியசெய்திகளைத் தருகின்றது. 19 சிலப்பதிகாரக் காதைகளில் ஒன்ருகிய துன்பமாலை கிராமிய மக்களின் ஒப்பாரிப் பாடல்களை நினைவூட்டுவதாக அமைந் துள்ளது. இளங்கோவடிகள் தம்காலத்தில் வழக்கிலிருந்த ஒப்பாரிப்பாடல்களுக்கு மெருகூ ட் டி த் துன்பமாலையை அ  ைமத் துள் ள |ா ர் என எண்ணத்தூண்டுகிறது. அது மட்டுமன்றிக் கண்ணகி கதையே நாட்டாரிலக்கிய மரபில் வழங்கிவந்தது என்ற கருத்தும் ஈண்டு நினைவுகூரற்பாலது, 14 ஈழத்தில் வழங்கும் கண்ணகி பற்றிய இலக்கியங்கள் யாவும் நாட்டார் இலக்கிய மரபிலே வழங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலப்பதிகாரத்தில் நாட்டார் இலக்கியப் பாதிப்பினை எடுத்துக்காட்டும் வகையில் அதில் இடம்பெற்றுள்ள வரிப்பாடல்களும், குரவைப் பாடல்களும் அமைந்துள்ளன. பல்லவர்காலப் பத்தி இலக்கியங்களில் வரும் அம்மானை, ஊசல், சாழல் முதலிய பிரபந்தங்களும், ஆழ்வார்கள் கண்ணனைக் குழந்தையாகப் பாவனைசெய்து தாலாட்டும் பாடல்களும் அக்
11. பரமசிவானந்தம், அ. மு. (1964)u击。14,16,17,19,31,59-74,
ஜகந்நாதன், கி. வா. (1958) பக். 16-20.
12. அகம் : 336 - 16. புறம் : 109, நற்றினை : 322 : 10 - 12, 358 : 6-7. குறுந் :
23, 89 : 1, 263 = 4. கலி : 20, 42 : 7 - 9, 59 : 17 - 19 70 - 13 - 14, 103;75
- 76, 104 : 63 - 64, 131 : 24, 140 13 - 14, 141 15 - 6, 22, பரிபாடல் : 8 : 80 - 82, 9 : 71 - 78, 17 :12 - 21, மதுரைக் காஞ்சி :89 - 97, 259 - 270 ம?லபடுகடாம் : 302 . 304, 320 . 322, 329, 342. குறிஞ்சிப்பாட்டு - 99 - 101 பொருநராற்றுப்படை : 21 - 22, 109 - 111, 218 - 220, பெரும்பாணுற்றுப் படை : 390 - 392, 161-166, திருமுருகாற்றுப்படை : 238 - 243.
13. Vanamamalai, N. (1969) PP I - 47.
14. வையாபுரிப்பிள்ளை, எஸ். (1957) பக். 93, 106; சிதம்பரஞர், சாமி. (1958)
Lä. 251 - 254.

தோற்றுவாய் 5
கால நாட்டார் பாடல்களை நினைவூட்டுவனவாகக் காணப்படு கின்றன. சோழர் காலத்துத் தெருக்கூத்துகள், இராசராசன் நாடகம் என்பனவும் ஈண்டுக் குறிப்பிடத்தகுந்தவை. நாயக்கர் காலத் தனிப்பாடல்களும், குறவஞ்சி, பள்ளு முதலிய இலக்கியங் களும் நாட்டார்பாடல்களின் சாயலையும் போக்கையும் ஒத்துள்ளன. பிற்கால இலக்கியங்களிலும் நாட்டார் இலக்கியங் களின் பாதிப்பு ஏற்பட்டுள்ளமைக்கு அருணசலக் கவிராயர் இயற்றிய இராமநாடகக் கீர்த்தனை, அண்ணுமலை ரெட்டியார் பாடிய காவடிச்சிந்து, திரிகூடராசப்பக்கவிராயர் பாடிய திருக் குற்ருலக்குறவஞ்சி மற்றும் பள்ளு, நொண்டி நாடகம் முதலிய இலக்கிய வடிவங்களும், பாரதியார் பாடலுட் சிலவும் தக்க சான்றுகளாகின்றன.
இசைத் தமிழ்ப் பிரிவு பன்னெடுங் காலமாக இருந்துவந்த தொன்று எனினும் மேற்கூறிய சிந்து முதலாய இசைப்பாக்கள் பதினெட்டாம் நூற்றண்டிற்கு முன் இருந்ததில்லை என்பர். இலக்கிய வழிவந்த சந்தப்பாக்கள், வரிப்பாடல்கள் ஆகிய வற்றின் பின்னணியில் நாட்டார் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு முகிழ்த்தனவே இவ்விசைப்பாடல்வகைகள் எனக் கூறப் படுகின்றன. எனவே செந்நெறியிலக்கியங்களைத் துணைக் கொண்டு நாட்டாரிலக்கிய வரலாறு ஆராயப்படும் அதே வேளையில், நாட்டாரிலக்கியம் செந்நெறியிலக்கிய வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்து வந்திருப்பதும் தெளிவாகின்றது. இவ் வாய்வுகளின் மூலம் செந்நெறியிலக்கியமும் நாட்டாரிலக்கியமும் காலத்துக்குக்காலம் ஒன்றையொன்று வளம்படுத்திவந்துள்ளமை அறியப்படுகின்றது.
இலக்கிய வரலாற்றில் விடுபட்டுப்போன செய்திகள் நாட் டாரிலக்கிய ஆய்வின்மூலம் நிரப்பப்படலாம் என்பதை மலையாள இலக்கிய வரலாற்ருசிரியர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்." அதுபோன்றே குறிப்பிட்ட ஒர் இலக்கியத்தின் தொடர்ச்சிநிலை பற்றிய செய்திகளையும் நாட்டாரிலக்கிய ஆய்வின் மூலம் அறியக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவற்றிற்கு உதாரண மாகக் கண்ணகி கதையை எடுத்துக்காட்டலாம். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்களுக்குப் பின் இடைக்காலத்திலே தோன்றிய செந்நெறியிலக்கியங்களிற் கண்ணகி கதை இடம் பெறவில்லை. ஆனல் அக்கதை நாட்டார் இலக்கிய மரபில்
15. கைலாசபதி, க. (1972) பக். 248-249 16. Chaitanya, Krishna (1971)

Page 17
6 மட்டக்களப்பு மாவட்ட.
மக்கள் மத்தியில் வழக்குப்பெற்று வந்துள்ளது எனக் கூறக்கூடி யதாக உள்ளது. கண்ணகிகதையைப் பின்னணியாகக் கொண்டு பிற்காலத்திலே தோன்றிய நாடகங்களும், ஈழத்தில் நாட்டார் இலக்கிய மரபில் வழங்கும் கண்ணகி வழக்குரை, கண்ணகி அம்மன் உடுகுச்சிந்து, கண்ணகி அம்மன் ஊர்சுற்றுக்காவியம், கண்ணகி அம்மன் ஊஞ்சல், கண்ணகி அம்மன் குளுத்திப்பாடல் கள், கோவலன் கதை, வாரப்பாடல்கள், வசந்தன் பாடல்கள் ஆகியனவும் கண்ணகி பற்றிய இலக்கிய மரபின் தொடர்ச்சியைக் காட்டுகின்றன. அது போன்று பாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசக்கதைகளின் இலக்கியத் தொடர்ச்சி நிலையையும் நாட் டாரிலக்கிய ஆய்வின்மூலம் தெளிவுபடுத்தக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. பாரதவெண்பா, நல்லாப்பிள்ளை பாரதம், அரங்கநாதக் கவிராயர் பாரதம், வில்லி பாரதம், பாரதியாரின் பாஞ்சாலி சபதம் என்பனவற்றுடன் பாரதக் கதை பற்றிய செந்நெறியிலக்கியங்கள் அமைந்துவிடுகின்றன. ஆனல் அக் கதையின் இலக்கியத் தொடர்ச்சிநிலையை நாட்டார் இலக் கியம் காட்டுகின்றது. ஈழத்தில் நாட்டுக் கூத்துப் பாடல்களிலும், வசந்தன் பாடல்களிலும் பாரதக் கதைகள் பேரளவில் எடுத் தாளப்பட்டுள்ளன. எனவே இலக்கிய வரலாற்றில் இலக்கியங் களின் தொடர்ச்சிநிலைபற்றிய இலக்கியச் சிந்தனைகளை வரையறுத் துக் காட்டவும் நாட்டார் பாடலாய்வு பயன் படுகின்றமை புலனு கின்றது.
ஒரு நாட்டின் பண்பாட்டு வரலாற்றிலும் நாட்டார் இலக்கிய ஆய்வின் முக்கியத்துவம் நிலநாட்டப்படுகின்றது. ஈழத்தமிழ் மக்கள் பழங்காலம் முதலாகக் காலத்துக்குக்காலம் தென்னிந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் குடிபெயர்ந்து ஈழத்தின் பல்வேறு பகுதிகளிற் குடியேறி வாழ்ந்து வந்திருக் கின்ருர்கள். இக்குடியேற்றங்கள் எப்போது நடைபெற்றன, எப்பகுதியிலிருந்து குடிபெயர்ந்த மக்கள் எப்பகுதிகளிற் குடியேறி ஞர்கள், எத்தகைய பண்பாட்டுத் தொடர்பினை ஏற்படுத்தினர் கள் என்பன போன்ற பண்பாட்டுத் தொடர்புடைய விணுக்களுக்கு விடைகாணும் வகையில், ஈழத்து நாட்டார் இலக்கிய ஆய்வு போதிய தகவல்களைத் தருகின்றது. அவ்வடிப்படையில் நாட் டார் பாடல்களை ஆராயும்போது மட்டக்களப்பு மாவட்டத்துக் கும் கேரள நாட்டிற்கும் பண்பாட்டடிப்படையில் மிகநெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்றன. ஈழத்து வரலாற்ருசிரியர்
17. இது பற்றிய விபரங்களை நூலுள் பார்க்க,

தோற்றுவாய் 7
களும் பண்பாட்டாய்வாளர்களும் இத்துறையிற் கூடிய கவனம் செலுத்தினற் பண்பாட்டு வரலாற்று உண்மைகள் பலவற்றை வெளிக்கொணரலாம்.
கேரள நாட்டில் நாட்டார் இலக்கியமாக வழங்கும் "தோற் றம் பாட்டு’, ‘மணிமங்கதோற்றம்’, ‘முடிப்புரைப்பாட்டு’ என்பன கண்ணகி கதையைக் கூறுகின்றன. இவை கண்ணகி கோயில்களில் வழிபாட்டுக் காலங்களிற் படிக்கப்படுவனவாகும்." இவற்றைப் போன்றே மட்டக்களப்பு மா வட் டத் தி ல் நாட்டார் இலக்கிய வழக்கிலுள்ள கண்ணகி இலக்கியங்கள் * கண்ணகியம்மன். கோயிற் சடங்குகாலங்களிற் பயபக்தியுடன் பாடப்படுகின்றன. கேரளத்தைப் போன்றே மட்டக்களப்பிலும் "'கலியாணப்படிப்பு”, “வழக்குரைப்படிப்பு’ என்ற வழக்காறு களும் காணப்படுகின்றன. கொடுங்கலூர் கண்ண்கி அம்மன் கோயில் திருவிழாக் காலங்களில் அங்கு கூடுவோர் அம்மனைக் குறித்துப் பாடும் பாடல்கள் பிரசுரிக்க முடியாதனவாகவும் அவற்றைப் பிரசுரிக்கக்கூடாது என்ற மாபு கொண்டனவாகவும் அமைந்துள்ளன.?' மட்டக்களப்பிற் கண்ணகி அம்மன் வழிபாட் டுடன் தொடர்புடைய கொம்பு முறித்தல். போர்த்தேங்காயடித் தல் தேர்த்தட்டு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகளின்போது பாடப் படும் 'வாரப்பாடல்களும்’ மேற்குறிப்பிட்ட பாடற்பொருளைச் சார்ந்தனவாகவே காணப்படுகின்றன. இவ்விரு தேசத்துப் பாடல் களின் பொருளமைப்பிலும், கருவளம், நாட்டுவளம் என்ற தலைமைக்கருத்தடிப்படையிலும் ஒருமைப்பாடுகள் காணப்படு கின்றன. மேலும் இவ்விரு நாட்டிலும் வழங்கும் கண்ணகி கதை களின் தொடக்கமும் முடிபு ம் ஒத்துக் காணப்படுகின்றன.' கேரளத்துக் கதகளி, துள்ள லாட்டம், கோல்களி ஆகியவற்றுடன் தொடர்புடைய ஆடலும் பாடலும் மட்டக்களப்பு நாட்டுக் கூத்து, வசந்தன் ஆடல் பாடல்களுடன் தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. ?? இவ்வாரு க இவ்விரு நாடுகளின் நாட்டார் இலக்கிய ஒப்பியல் ஆய்வுகளின் மூலம் கேரளநாட்டுக் கலாசாரப் பாதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் மேலோங்கிக் காணப்படுவதை நிலைநாட்டக் கூடியதாக இருக்கின்றது.
18. Anant hampilai, P. (1968) PP. 164-65 19. Luä. 6 Limữd,5. 20. இப்பாடல்களைக் கேரளத்துக் கொடுங்கலூரைச் சேர் 6த அ கிருஷ்ணன் குட்டி (வயது 30) என்பவரிடமிருந்து இவ்வாய்வாளர் ஒலிப்பதிவு செய்துள்ளார். 21. Chaitanya, Krishna. (1971) P, 29 - 30. 22. பாலசந்தரம், இ. (1974ஆ) பக். 25.42

Page 18
8 மட்டக்களப்பு மாவட்ட.
நாட்டார் பாடல்கள் ஒரு நாட்டின் இசைக்களஞ்சியமாக வும் தேசீய இசைச் செல்வமாகவும் கணிக்கப்படுகின்றமையினுற். குறிப்பிட்ட ஒரு நாட்டின் இசை மரபாராய்ச்சியில் இப்பாடல் கள் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன.** மேற்கு நாட்டறிஞர் நாட்டார் பாடல்களை ஒலிப்பதிவு செய்து, அவற்றுக்கு ஒலிக்குறிமானம் அமைத்துத் தேசிய நூலகங்களிற் பேணிப்பாதுகாத்து வருகின்றனர். இருபதாம் நூற்ருண்டில் நாட்டார் பாடல்களில் ஏற்பட்டுள்ள எழுச்சி வேகம் அனைத் துலக நாடுகளிலும் பொழுதுபோக்கடிப்படையிலும், உழைப்பு முறையிலும் நாட்டாரிசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உதவியாயிற்று. 1960 க்குப் பின் " "பொப் இசை” வளர்ச்சியும் நாட்டார் பாடல் இசை மரபுக்கு அதிகம் கடமைப்பட்டுள்ளது?" என்ற கருத்தும் இப்பாடல்களின் முக்கியத்துவத்தைக் குறித்துக் காட்டுகின்றது.
குறிப்பிட்ட ஒர் இன மக்களின் பேச்சுமொழி பற்றி ஆராய் வதற்கு வழிப்படுத் தக்கூடியதாக நாட்டார் பாடல்கள் அமைந்து காணப்படுகின்றன.?’ பேச்சுமொழி ஆய்வாளருக்கு நாட்டார் இலக்கிய ஆய்வாளரின் துணையும் வேண்டப்படுகின்றது என்ற கருத்தும் ஈண்டுச் சுட்டிக்காட்டப்படத்தக்கது.* பிரதேசரீதி யான பேச்சுமொழி இடத்துக்கிடமும் காலத்துக்குக் காலமும் வேறுபட்டுள்ளதைப் போன்றே பேச்சு மொழியிலமைந்த நாட்டார் பாடல்களின் மொழியும் இடத்துக்கிடம் வேறுபட்டுக் காணப்படுகிறது. இவ்வாருக நாட்டார் பாடல் ஆய்வின் முக்கியத்துவம் பல்வேறு துறைகளிற் பரந்து காணப்படுதல் குறிப்பிடற்பாலது.
உலக நாடுகளில் நாட்டார் பாடல் ஆய்வு
இருபதாம் நூற்றண்டில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சியும், விஞ்ஞான முறையிலான நவீன ஆய்வு முறைகளின் விரிவும் நாட்டார் பாடல்களின் முக்கியத்துவத்தையும், அவற்றில் மேற்கொள்ள வேண்டிய பல்கோண ஆய்வின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளன. உலக நாடுகளில் நாட்டார் இலக்கியங்
23. 'It is because folksong is essential to the musical well-being of the
nation of which it is natural musical expression.' Grolier Encyclopaedia, Vol. 7 & 8, (1960) P. 278. 24. The Penguin Encyclopaedia, (1965) P. 234. 25. சுசீந்திரராசா, சு. (1975); கைலாசபதி, க. (1972) பக்.58. 26. Reaver, R., & Boswel, G.W., (1962) P 45.

தோற்றுவாய் 9
களைச் சேகரித்துப் பாதுகாக்கும் இயக்கங்கள் கடந்த இரு நூற்ருண்டுகாலயாக நடைபெற்றுவந்தபோதிலும் பத்தொன் பதாம் நூற்ருண்டின் நடுப்பகுதியிலேதான் ஆய்வியலடிப்படை யிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.?" பிரித்தானி யாவிலே தொடங்கப்பட்ட இம் முயற்சிகள், ஜேர்மனி ஸ்காந்திநேவிய நாடுகள், ரூஷியா, அமெரிக்கா முதலிய நாடு களிலும் இடம்பெறலாயின. ஆரம்பத்தில் இந்நாடுகளில் இலக்கிய அடிப்படையிலும், அதனைத் தொடர்ந்து மொழியியல் நோக்கிலும் நாட்டார் இலக்கிய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. ஜேர்மனிய நாட்டுக் கிறீம் சகோதரர்கள் (Grimm Brothers), மக்ஸ்மூலர் (Max Mulior) ஆகியோர் அவ்வாய்வு நெறியின் முன்னேடிகளாகக் காணப்பட்டனர்.?" அதன் பின்பு பின்லாந்தில் ஜ"லியஸ் கோன் (Juliuis Krohn) என்பவர் நாட்டார் இலக்கியத் தில் வரலாற்றுப் புவியியல் ஆய்வுமுறையை (Historic-Geographic Method) அறிமுகப்படுத்தினர்.? அவ்வாய்விற் பாடல்கள் தோற்றம் பெற்ற இடம், பாடல்கள் ஏனைய இடங்களுக்குப் பரவிய விதம், பாடற்பொருள், மூல பாடங்கள், பாடல்களின் தோற்றக் காலம், மாற்றுவடிவம் எனபனபற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வு முறை பிற்காலத்தில் அன்ரிsITG363T (Antti Aarne), aivfö Qg|Tubanair (Stith Thompson) ஆகியோருக்கு வழிகாட்டியாக அமைந்தது. நாட்டார் இலக்கியங்களை வகைப்படுத்தவும், அவற்றின் தலைமைக் கருத்துக் களை வரிசைப்படுத்தவும், வரலாற்றுப் புவியியல் ஆய்வு முறையையே ஸ்ரித் தொம்ஸன் பின்பற்றினர்.??
அடுத்த தாக, மானிடவியல் அடிப்படையிலும் நாட்டார் இலக்கியத் துறை பில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. பல்வேறு ப்ட்ட சமூகங்கள், இனப் பிரிவுகள், மக்கள் குழுக்கள் ஆகியவற் றிடையே வழக்கிலிருந்த நாட்டார் இலக்கியங்களை ஒப்பியலடிப் படையில் அணுகி, சமுதாய வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி முதலிய விடயங்களை மானிடவியலாளர் ஆராய்ந்து வந்துள்ள னர். மனித சாசனங்களாகவும், அவர்களது ஆக்கப்பாடுகளா
27. Encyclopaedia World Arts. Vol. 5, 1959, PP. 456-457
28. Sokoloy, Y. M. (1950) P. 38.
29 The standard dictionary of folklore, mythology, and legend, (1946)
P. 498.
30 Greenway, John, (1964) P. 290.
31. Malinowski, B. (1931, 1935) Tyler, T.B. (1929),
Frazer, J.G. (1922), Kroeber, A.L. (1970).

Page 19
10 மட்டக்களப்பு மாவட்ட.
கவும் விளங்கிய இவ்விலக்கியம் மானிடவியலாளருக்கு ஆய்வுக் கருவூலமாயிற்று.
மக்கள்மரபியலாய்வு அடிப்படையில் நாட்டார் இலக்கிய ஆய்வு சிறப்பிடம் பெறுகின்றது. மரபுகள், நடைமுறைகள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், வாழ்க்கை நியதிகள், பண் பாட்டு நிகழ்ச்சிகள் என்பனபற்றி ஆராயும் மக்கள் மரபியலாய் வாளருக்கு நாட்டார் இலக்கியங்கள் தக்க சான்றுகளாகும் தன்மைவாய்ந்தன.*
நாட்டார்பாடல் ஆய்வாளரின் முன்னுேடியாகத் திகழ்கின்றவர் ரட்லொவ் (V. V. Radlov) ஆகும். இவர் தாத்தாரிய மக்களின் நாட்டார் பாடல்களைத் துணைக்கொண்டு பாடல்களின் ஆக்கக் கூறுகள், ஆக்கமுறைகள், அப்பாடல்கள் மக்கள் வாழ்க்கையிற் பயன்படும் விதம் என்பனபற்றி ஆராய்ந்து நிறுவிய ஆய்வுமுறை கள் பிற்கால ஆய்வாளருக்கு வழிகாட்டியாக அமைவதாயின ?? பல்கலைக்கழகங்களில் நாட்டார் இலக்கிய ஆய்வு இருபதாம் நூற்ருண்டின் நடுப்பகுதியிலிருந்து பரந்த அள்வில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.** இவ்வகையில் இந்தியான, பென் கில்வேனியா, கலிபோணியா, நியுயோக் ஆகிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் வேகமான முன்னேற்றம் காணப்படுகிறது ??
மேற்கு நாடுகளைப் பின்பற்றி வரையறுக்கப்பட்ட நவீன விஞ் ஞான ஆய்வு முறைகளை அடியொற்றி, இந்தியப் பல்கலைக்கழகங் களிலும் நாட்டார் பாடலில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றுக்கு மத்திய அரசும் மாநில அரசும் உதவி அளிக்கின்றன."
Hart, Don, V. (1964) (p5ourt Got நாட்டார் இலக்கியத்தை மானிடவியல் ஆய்வுக்குப் பயன்படுத்தியோராவர். 32. The Standard Dictionary of Folklore Mytho'ogy and Legend,
(1946) P. 403, 33. Millman Parry, A.B. Lord (p 5 FIT (3 Got Sau J 35 uiu Gayp no 5&amrů 11 Gör
பற்றி ஆய்வுகளே நடத்தியுள்ளனர், 34 'In the 20th Century Folklore as an educational
discipline came finally into its own. Vore than hundred colleges and Universities give courses in Folklore. Some have gone further and devel ped and planned programs to train graduate students and award alivanced degree' Leach, Mac Ec'ward (1968) P. 25. 35. Spiller, Robert, E. (1942) PP. 10-20. 36. Gupta. S.S. (Ed. (1964) P. XI

தோற்றுவாய் 1 .
தமிழகத்திலும் ஈழத்திலும் இத்துறையிற் பலர் உழைத்த போதிலும் இவர்களுட் பலர் இலக்கியரசனையில்மட்டுமே ஈடு" பாடு காட்டிவந்துள்ளனர். இவர்கள் பாடல்களைச் சேகரித்து இலக்கிய இரசனையுடன் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளனரே தவிர ஆய்வுக் கண்ணுேட்டத்தில் அணுகியோர்தொகை மிக மிகக் குறைவென்றே கூறவேண்டும். நாட்டார் இலக்கியத் துறையில் அறிவுவளர்ச்சியும் அறிவுரீதியான ஆய்வுமுறைகளும் தமிழறிஞரிடத்திலே தலைதுாக்கத் தொடங்கியது மிக அண்மைக் காலத்திலேதான் என்று கூறலாம்.??
கேரளப் பல்கலைக்கழகத்தில் கே.பி. எஸ். ஹமீத் (1961), ப.ரா. சுப்பிரமணியம் (1969) ஆகிய இருவரும் அமைப்பாய்வு முறையிலே தாலாட்டு, ஒப்பாரி ஆகிய இருவகைப் பாடல்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர். அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் ஆறு. அழகப்பன், நாட்டார் பாடல்கள்பற்றி ஆய்வு நடாத்தி யுள்ளார்.?? சென்னைப் பல்கலைக்கழகத்திலே சியாமளா பாலகிருஷ்ணன்?? நாட்டார் பாடல்களின் இன்சமுறைபற்றி ஆராய்ந்துள்ளார். சு. சண்முகசுந்தரம், சா வளவன் என்போர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நாட்டார் பாடல்கள்பற்றி ஆய்வு நடாத் து கி ன் ற ன ர் . மதுரைப்பல்கலைக் கழகத்திற்" கே. பழனிசாமி நாட்டார்கதைப் பாடல்கள்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்ருர். இவர்களைவிடத் தமிழகத்தில் நாட்டார் இலக்கியத் துறையில் நீண்டகாலமாக உழைத்துவரும் நா.வான மாமலையும், அவர் நடாத்தும் 'ஆராய்ச்சி’** இதழ்மூலம் அறிமுகமான நாட்டார் இலக்கிய ஆய்வாளரும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
37. Vanamamalai, N. (1969) P. 50,
38. ஆறுமுகம் அழகப்பன் 1973 இலே தமது ஆய்வுக் கட்டுரையை
'நாட்டுப்புறப் பாடல்கள் திறனுய்வு’, என்ற நூலாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
39. 'Shyamala Balakrishnan. has worked in the field of
Folk Music and dances of Tamil Nadu, for over ten
years, as a research scholar and a research Officer
of the Ma dras State Sangita Nataka Sangam”!
The Indian Express Saturday April, 11, 1972.
40. மதுரைப் பல்கலைக்கழகத்தில் முதுகலப்பட்டப் பயிற்சி மாணவர்களுக்கு நாட்டார் இலக்கியம் ஒரு பயிற்சி நெறியாக ஆக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.
41. "ஆராய்ச்சி’ (காலாண்டு ஆராய்ச்சிமலர்) ஆசிரியர் வானமாமலே, நா. 258 -
திருச்செந்தூர் ரோட், பாளையங்கோட்டை, தமிழ் நாடு.

Page 20
12 மட்டக்களப்பு மாவட்ட.
இலங்கைப் பல்கலைக் கழகத்தையும் ஈழத்தவரையும் பொறுத்தவரையில் நாட்டார் பாடல்பற்றிய ஆராய்ச்சியில் இவ் விரிவான பல்கோண வாய்வே முதன் முயற்சியாக அமைகின்றது என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.
ஈழத்தில், நாட்டாரிலக்கியங்களைப் பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்பற்றி ஈண்டுக் குறிப்பிடுதல் பொருத்தமானது. மேற்கு நாடுகளிலே தனியார் முயற்சி யாகவும் நிறுவன அடிப்படையிலும்** நாட்டார் இலக்கியங் களைப் பேணிப்பாதுகாப்பதிலும் அவைபற்றி ஆய்வு நடத்து வதிலும் பரந்துபட்ட அளவில் முயற்சிகள் நடைபெற்று வந்துள்ளன. ஆயினும் அத்தகைய நடவடிக்கைகள் ஈழத்தில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இலங்கை சுதந்திர மடைந்தபின் மொழி, பண்பாடு, வரலாறு ஆகிய துறைகளில் விழிப்புணர்ச்சியோடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.* அவற்றின் பயணுக அரசாங்க உதவியுடன் 1953இல் இலங்கைக் கலைக்கழகம் அமைக்கப்பட்டு, அதன் ஒரு பிரிவாக "நாட்டார் பாடல் நடனக்குழு' அமைக்கப்பட்டது.** இக்குழு நாட்டார் பாடல்களைத் தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்தது. ஆயினும் அக்குழு தொடர்ந்து செயற்படவில்லை நாட்டார் இலக்கியங்களைச் சேகரித்து நூலாக வெளியிடவேண்டும் என்னும் தேசீயக் கலையுணர்வு மாவட்ட அடிப்படையிற் செயற்பட்டது. *பிரதேசக் கலாமன்றங்கள்’** தோற்றம் பெற்று, மாவட்ட அடிப்படையிலே தொகுப்பு நூல்கள் வெளிவரலாயின.* இவற்றைவிட வேறு நிறுவனங்களும்" இத்துறையில் வெளியீட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடற்பாலது."
42. முதன் முதலாக 1878 இல் வலிவில்ஷார்ப் என்பவரால் இலண்டினில் “fiċli li பாடற்கழகம் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜேர்மனி, இந்தியா, ரூஷியா ஆகிய நாடுகளில் நாட்டாரிலக்கியக் கழகங்கள் அமைக்கப்பட்டுத் தொகுப்பு வேலைகளும் ஆய்வுவேலைகளும் நடைபெற்று வருகின்றன.
43. இத்தகைய விழிப்புணர்ச்சி சுதந்திரத்திற்குப்பின் பாரதநாட்டிலும் காணப்படு கின்றது என்று கூறுமளவுக்கு இத்துறையில் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
44. Annual Report of the Arts Council of Ceylon, 1953.
45. மட்டக்களப்புப் பிரதேசக் கலாமன்றம், மன்னார் பிரதேசக் கலாமன்றம், யாழ்ப் பாணப் பிரதேசக் கலாமன்றம் என்பன அரசாங்க உதவியுடன் அமைக்கப் பட்டவையாகும்.
46. மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்-1960 மன்னார்நாட்டுப் பாடல்கள்-1964,
47. இலங்கைப் பல்கலைக்கழக இந்துமாணவர் சங்கம், கொழும்பு; மன்னார் மாவட்டப் பலநோக்கக் கூட்டுறவுச் சங்கம், காரைதீவு இந்துசமய விருத்திச் சங்கம்.
48. பின்னிணைப்பிலே ஈழத்து நாட்டாரிலக்கிய வெளியீடுகள் பற்றிய அட்டவணை
தரப்பட்டுள்ளது.

தோற்றுவாய் 3.
ஈழத்தில் நாட்டார் இலக்கியங்களைச் சேகரித்துப் பேணும் இயக்க வரலாற்றில் 1960ஆம் ஆண்டு ஒரு திருப்புமையமாக அமைகின்றது. இவ்வாண்டுக்குப்பின் நாட்டார் இலக்கியங்களைச் சேகரிக்கும் முயற்சிகள், நாட்டார் கலைஞர்களைப பாராட்டும் நிகழ்ச்சிகள், கிராமியக் கலைவிழாக்கள், மாவட்ட அடிப்படை யிலான நாட்டுக்கூத்துப் போட்டி, நாட்டார் பாடற்போட்டி ஆகியன மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னர், வவுனியா ஆகிய மாவட்டங்களிற் சிறப்பாக நடைபெற்றுவந்துள்ளன. 1960ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நிகழ்ச்சிகள் யாவும் ஈழத்து நாட்டார் இலக்கியத் துறையில் ஏற்பட்ட விழிப் புணர்ச்சிநிலையை அல்லது மறுமலர்ச்சியைக் குறிப்பிடுகின்றன எனக் கூறுதல் பொருத்தமுடையதாகும். தமிழகத்திலும் இதே காலப்பகுதியில் நாட்டார் இலக்கியத் துறையில் மறுமலர்ச்சி காணப்படுவதைத் தமிழக நாட்டார் இலக்கிய வெளியீடுகள் நிரூபிக்கின்றன. தமிழகத்தில் ஏற்பட்ட இத்தகைய விழிப் புணர்ச்சி ஈழத்திலும் அதன் பாதிப்பை ஏற்படுத்திற்ரு என எண்ணத் தோன்றுகின்றது.
ஈழத்து நாட்டார் இலக்கியத்தைச் சேகரித்துப் பதிப்பிப் பதிலே தனியார் முயற்சி குறிப்பிடத்தக்கவகையில் ஆக்கபூர்வ மான பயன் அளித்துள்ளது.* அந்த அடிப்படையில் மு இராம லிங்கத்தினது பணிகள் முதன்மை பெறுகின்றன. அவர் கிராமிய மக்களுடன் நேர்த் தொடர்பு கொண்டும் பல கிராமங்களுக்குத் தாமே சென்றும் பாடல்களைச் சேகரித்துத் தொகுத்துப் பாட பேதக் குறிப்புகளுடன் வெளியிட்டிருக்கும் முறைகளிற் காணப் படும் ஒழுங்குவிதிகள் குறிப்பிடத் தக்கனவாகின்றன.
அனைத்துலக நாடுகளிலும் நாட்டார் பாடல்களைச் சேகரிக்கும் முயற்சியின் ஆரம்ப காலம் பொழுதுபோக்கு அடிப்படையிலே அமைந்து காணப்படுகின்றது." ஈழத்து நாட்டார் இலக்கிய வரலாற்றில் இடம்பெறுபவர்கள் பெரும்பாலானேர் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆதலால், அவர்கள் தமக்குக் கிடைத்த ஒய்வுநேரங்களிலே தாமாகவும், தமது கீழ் உத்தியோகத்தர் மூலமாகவும் பாடல்களைச் சேகரித்துள்ளனர். அவர்களது நடவடிக்கைகள் பொழுது போக்கு முயற்சிகளாகவே அமைந்தன. மேற்கு நாடுகளில் நாட்டார்பாடல்களைச் சேகரிக்கும் முயற்சிகள் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முற் பட்டதாகக் காணப்பட, ஈழத்தில் அம்முயற்சிகள் ஐம்பது ஆண்டுகால வரலாற்றை உடையனவாகவே அமைகின்றன.
49. மேலேயுள்ள 48 ஆம் அடிக்குறிப்புப் பார்க்க. 50. Encyclopaedia World Arts. Vol. 5, (1959) P. 456.

Page 21
14 ــــ மட்டக்களப்பு மாவட்ட.
ஈழத்து நாட்டார் இலக்கியங்களைச் சேகரித்து நூலாக வெளியிட்டோர் வரிசையிலே சி. ச அரியகுட்டிப்பிள்ளை, தி. சதாசிவஐயர், மு. இராமலிங்கம், சு. வித்தியானந்தன் வி. சீ. கந்தையா. எவ் எக்ஸ் லி. நடராசா, அருள் செல்வநாயகம், சி. கணபதிப்பிள்ளை, கா. சிவத்தம்பி, க த. செல்வராஜ கோபால், எம். ஸி. எம். ஸுபைர் என்போர் இடம் பெறுவர்." பொதுவாக இவர்கள் அனைவரும் கள ஆய்வுமேற் கொண்டு பாடல்களைச் சேகரிக்காததால், இவர்களது வெளியீடு களிலே பிழைகள் காணப்படுகின்றன. வரையறுக்கப்பட்ட ஒழுங்குவிதிகளைப் பின்பற்றிப் பாடல்களை ஒலிப்பதிவு செய்து, கள ஆய்வுமூலம் தாமே பாடல்களைச் சேகரித்தும், நாட்டார் பாடல்களைப் பதிப்பிக்கும் விதிமுறைகளுக்கமைய இந்நூல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆதலால் அவற்றிற் பிழைகள் காணப்படுதல் இயல்பாயிற்று அன்றியும் இந்நூல்களிற் பல, பொழுதுபோக்கு அடிப்படையிலும் பிறரது வேண்டுகோளின் பொருட்டும் வெளிவந்தன. அவற்றிற் சேகரிப்பு விதிமுறை களோ அல்லது பதிப்பு ஒழுங்கு முறைகளோ பெரிதும் பின் பற்றப்படவில்லை.
ஈழத்தில் மட்டுமன்றித் தமிழகத்திலும் நாட்டார் பாடல் துறையிலிடுபட்டோரில் அனேகர் கவித்துவ ஆற்றலுடையோ ராகக் காணப்படுதல் ஒரு துர்ப்பாக்கியம் என்றே கூறவேண்டும். பொதுவாகக் கவிஞர்கள் நாட்டார் பாடல்களில் ஈடுபடும்போது அவர்களை அறிந்தோ அறியாமலோ பாடல்களிற் சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர். இந்நிலை ஈழத்தில் வெளிவந்த நாட்டார் பாடல் வெளியீடுகளிற் பெரிதும் காணப்படுகின்றது. நாட்டார் இலக்கியங்களைச் சேகரிப்பதிலும் அவற்றை வெளியிடு வதிலும் முன்னணியிலே திகழும் பின்லாந்தைச் சேர்ந்த லொன்ரொட் ஏலாய்ஸ் (Lonnrot Elias) என்பவரிடம் கவித்துவ ஆற்றல் கைகூடப்பெருமையால், அவர் கரவேலா’ என்னும் நாட்டார் இலக்கியத்தை நன்கு பதிப்பிக்கக் கூடியதாயிற்று என ஸ்ரித் தொம்ஸன் * கூறுவது ஈண்டும் நோக்கற் பாலதாகும். மட்டக்களப்பு மாவட்டத்தை ஆய்புக்களமாகத் தேர்ந்தமைக்குரிய காரணங்கள்
நாட்டார் பாடல் ஆய்வாளருக்குக் கள ஆய்வு அவசியமான தாற், கள ஆய்வு மேற்கொள்ளும்போது 'வரையறுக்கப்பட்ட
51. இவர்களது வெளியீடுகள் பற்றிய அட்டவனே பின்விணைப்பில் தப்பட்டுள்ளன
52. The Standard dictionary of Folklore mythology and, legend, (1946)
P. 382.

தோற்றுவாய் 15
பிரதேச அடிப்படையில் ஆய்வு நடாத்துவதே விதிமுறைப்பட்ட தாகும்.38 நாட்டார் பாடல்கள் பேச்சுமொழியில் அமைந்திருப் பதாலும், சமுதாய மரபுகளையும், பழக்கவழக்கங்களையும் பின்ன .ணியாகக் கொண்டிருப்பதாலும் அவைபற்றி ஆராய்வதற்கு வரை யறுக்கப்பட்ட பிரதேச அடிப்படையிலான ஆய்வே மிகவும் பொருத்தமானது. அவ்வகையிலேயே மட்டக்களப்பு மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இம்மாவட்டம் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு மேல் வருங் காரணங்களும் பின்னணியாக அமை கின்றன.
ஈழத்திலே தமிழ் மக்கள் பெரும் பான்மையோராக வாழும் பகுதிகளில், மட்டக்களப்பு மாவட்டத்திலேதான் நாட்டார் பாடல்கள் மக்களின் அன்ருட வாழ்க்கைமுறையிற் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பெரிதும் பயன்பாடுடையனவாக வழங்கு கின்றன. இம் மாவட்டத்தின் சகல கிராமப்புறங்களிலும், நாட்டார் பாடல்கள், நாட்டார் கலைகள் ஆகியனவற்றின் பயன் பாட் ைடத் தினமுங் காணலாம் ஈழத்தில் * “[5m * strio பாடலகள்', அல்லது ‘நாட்டுக்கூத்து’ என்றதும் எவரும் முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தையே நினைவிற்கொள்ளும் வழக்கமுண்டு என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இயற்கை யோடிணைந்த விவசாயத்தையும், மீன்பிடித் தொழிலையும் ஆதார மாகக் கொண்ட இப்பிரதேசமக்களது வாழ்க்கைமுறை, அத் தொழில்களுடன் இணேந்த நாட்டார்கலைகளுக்குப் பாதுகாப் பளித்துள்ளது. ஆதலினலே இம் மாவட்டத்தில் நாட்டார் பாடல்கள் பெருவழக்காகக் காணப்படுகின்றன
வளர்ந்துவரும் விஞ்ஞான நாகரிக உலகிற் பல்வேறுதுறை களில் இன்று மாற்றங்கள் ஏற்பட்டுப் புதுமைகள் புகுத்தப்படு கின்றபோதிலும், இப்பிரதேசக் கிராமிய மக்கள் அத்தகைய தீவிர மாற்றங்களுக்குப் பேரளவு இடம் கொடுக்காது, தமது பண் பாட்டுத் துறை பிலே தனித்துவமும் திடமான நம்பிக்கையும் ஈடு ப்ாடும் உடையவர்களாகக் காணப்படுகின்றனர். இம்மக்களது இத்தகைய மனப்போக்கும் இம்மாவட்டத்தில் நாட்டார் List Lai சளின் நிலைபேற்றுக்கும் அவற்றேடு இணைந்த மரபுகளின் நடை முறைக்கும் பாதுகாப்பளித்துள்ளது எனலாம்.
சகல வகையான நாட்டார் பாடல்களுக்கும் ஏற்றவகை யிலான ಸ್ಥ8) மும், சூழலும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன. தாயா:ன் தாலாட்டுப் பாடல்களேக் கிராமந்தோறும்
53. Blalock Ama i an i Bialock, H, M. (1963) PP. 239-243.

Page 22
16 மட்டக்களப்பு மாவட்ட.
கேட்கலாம்; சிறுவர்களது கிராமிய விளையாட்டுக்களையும், விளையாடும்போது பாடும் பாடல்களையும் இங்கு அறியலாம்
இப்பிரதேச விவசாய முறையும், மீன்பிடித்தொழிலும், தொழிற் பாடல்களுக்கு வளமூட்டுவனவாக அமைந்துள்ளன. காதற்கவி பாடக்கூடிய சூழல்களும் அப்பாடல்களின் தேவையும் இங்குக் காணப்படுகின்றன. இப்பிரதேச மக்களது வாழ்க்கை முறைகளும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் சகல வகையான பாடல்களுக் கும் வாழ்வும் வளமும் கொடுக்கின்றன. எனவே இத்தகைய பின்னணிகளைக் கொண்டுள்ள இம்மாவட்டம் நாட்டார் பாடல் ஆய்வுக்கு ஏற்றகளமாக அமைதல் பொருத்தமாகின்றது.
ஈழத்தமிழ் மக்களின் சமுதாய மரபுகள் பழக்க வழக்கங்கள் இன்னும் மாவட்ட அடிப்படை பில் விரிவான முறையில் ஆராயப்படவில்லை." இவ்வாய்வுக்கு நாட்டார் பாடலாய்வும் போதிய சான்றுகளைத் தரவல்லது. மக்கள் மரபியலாளர் தமதாய்வுக்கு நாட்டார் பாடல்களையே முதற் சான்ற கக் கொள்வதையும் ஈண்டு குறிப்பிடலாம்."
நாட்டார் பாடல்களைத் துணைக்கொண்டு சமுதாயமரபுகள், நம்பிக்கைகள், என்பன ஆராயப்படுவதாலும், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சமுதாய மரபுக n , நம்பிக்கைகள் என்பன இன்று வரையும் எவராலும் விரிவாக ஆராயப்படாதிருப்ப தாலும் இம் மாவட்டத்தில் நாட்டார் பாடல்களைத் துணைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவும் இம்மாவட்டம் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாய்வாளர் இம் மாவட்டத் தையே தாயமாகக் கொண் டவராதலாலும், கள ஆய்வுமூலம் பாடல்களையும் ஆய்வுக்குத் தேவையான தகவல்களையுஞ் சேகரித்துக் கொள்வதற்கு ஏற்ற வசதிகள் இங்குக் காணப்பட்டமையாலும், இம்மாவட்டத்தினரின் சமூகப் பழக்க வழக்கங்கள், தொழில் முறைகள் முதலியனபற்றிய அடிப்படை அறிவும், அனுபவமும் இவ்வாய்வாளருக்குக் கைவரப் பெற்றிருந்ததோடு, இம் மாவட்டம்பற்றி ஆராயவேண்டும் என்ற ஆர்வமும் இருந்தமையாலும் இம்மாவட்டம் ஆய்வுக் களமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
54. Tib. L. gyrasal air alsTan Louisi) Galafuel 'Tamil Culture of Ceylon'
என்ற நூல் யாழ்ப்பாண மாவட்டம்பற்றியதாகும்.
55. Burne, C. Sophia., (1914) P: 4.

தோற்றுவாய் 17
கள ஆய்வு
நாட்டார்பாடல் ஆய்வாளர் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்." ஆய்வுகளமே நாட்டார்பாடல் ஆய்வாளருக்கு ஆய்வு கூடமாக அமைவதால், அங்கு சேகரித்த சான்றுகளின்மூலம் கருத்துகளை வரையறுத்துக்கூறவும், இது வரையும் வெளிவந்த நாட்டார் இலக்கிய வெளியீடுகளை மதிப் பிடவும் வாய்ப்புக்கிடைக்கின்றது. இவ்வாய்வாளர் பாடல்களைச் சேகரிக்கக்கூடிய இடங்களுக்குத் தாமே நேரிற்சென்று ஆய்வுக்குத் தேவையான பாடல்களையுந் தகவல்களையுஞ் சேகரித்துள்ளார். கள ஆய்வில் ஈடுபடும்போது ஆய்வாளர் நடுநிலைமையுடன் தொழிற்படுதல்," பல்வேறுபட்ட அறிவிப்பாளர்களைச்சந்தித்தல், அவர்களுடன் தங்கியிருத்தல், அம்மக்களது தொழில் முறைகள், களியாட்டங்கள், இன்பதுன்ப நிகழ்ச்சிகள் ஆகியனவற்றிற் பங்கு கொள்ளுதல்°, அவற்றை அவதானித்தல் ஆகிய கள ஆய்வு விதி முறைகளும் இவ்வாய்வாளராற் கைக்கொள்ளப்பட்டன. கள ஆய்வின்போது ஆய்வாளரால் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள்: அ. தாலாட்டுப்பாடல்கள், தொழிற்பாடல்கள், காதற் பாடல்கள் ஆகிய மூவகைப் பாடல்களையும் ஒலிப்பதிவு செய்தல்; இம் மூவகைப் பாடல்களும் பாடப்படும் சந்தர்ப்பங்களை அவதானித்தல்; இ. இப்பாடல்கள் மக்கள் வாழ்க்கையிற் பயன்படும்
முறையை அறிதல்; ஈ. இப்பாடல்கள் குறிப்பிடும் சமுதாய மரபுகள், நம்பிக்கை
கள் என்பனபற்றிய தகவல்களைச் சேகரித்தல்; உ, பாடல்களை யார் பாடுகின்றனர், கேட்போர் யாவர், பாடுவோரின் உணர்ச்சிநிலை ஆகிய விடயங்களை அறிதல்; ஊ. பாடல்களின் இன்றைய நிலைமைபற்றி அறிதல் என்பன
сипић.
ஆய்வுக்குத் தேர்ந்த கிராமங்கள் "
மட்டக்களப்பு மாவட்டம் மிகப் பரந்த பிரதேசமாகும். இம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் அனைத்திலும் ஒரு குறிப்பிட்ட
56. Goldstein, K.S. (1964) P. 16. 57. Galtung, J., (1967) P. 113. 58. Kroeber, A.L. 1970) PP,430-434. 59. நூலிலுள்ள வரைபடம் பார்க்க,
2-Dו

Page 23
18 மட்டக்களப்பு மாவட்ட.
காலப்பகுதியில் தனி ஒருவர் கள ஆய்வு நடாத்துதல் ஆய்வுநெறிப் பட்டதன்று. ஆகையால் இத்தகைய சந்தர்ப்பங்களிலே தெரிவு செய்யும் முறையையே (Sampling Method) ஆய்வாளர் பின்பற்ற வேண்டியவராகின்ருர்." குறிப்பிட்ட பிரதேசத்திற் சில கிராமங் களைத் தேர்ந்து. அங்கு கள ஆய்வு மேற்கொண்டு அதன்மூலம் பெறும் கருத்துகளே அப்பிரதேசம் முழுவதற்கும் பொதுக்கோட் பாடாகக் காட்டுவதே இவ்வாய்வு நெறியாகும்." அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் இனம், மொழி. பண்பாடு ஆகிய விடயங்கள் அஃனத்தும் உள்ளடக்கும் வகையில் மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை, களுதாவளை, காத்தான் குடி ஆகிய ஐந்து கிராமங்களிற் கள ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது. ஏனைய கிராமங்களைவிட இக் கிராமங்களில் நாட்டார் பாடல்களின் வழக்கும் பயன்பாடும் அதிகமாகக் காணப்படுகின்றன. இங்குக் காணப்படும் கிராமிய விவசாய முறைகள், மீன்பிடிமுறைகள், பாய் இழைத்தல், நெல்குற்றுதல் முதலான தொழில் முறைகள் நாட்டார் பாடல்களின் தேவையையும் பயன்பாட்டையும் வலி யுறுத்துகின்றன. கிராமிய வழிபாட்டு முறைகள், சம்பிரதாயங் கள், நம்பிக்கைகள் என்பனவும் நாட்டார் பாடல்களின் நிலை பேற்றுக்கு வழிவகுத்துள்ளன. நகரப்புறப் பழக்கவழக்கத் தாக்கம் இக்கிராமப்புற மக்களை அதிகம் பாதிக்கவில்லை நாட்டார் பாடல்களைப் பாடக்கூடியோரது தொடர்ச்சியான பரம்பரையும் ஆய்வுக்குவேண்டிய தகவல்களைத் தரக்கூடியோரது எண்ணிக்கையும் இக்கிராமங்களிற் போதிய அளவு காணப்பட்ட மையினுல் இவ்வூர்கள் ஆய்வுக்களமாகத் தேர்ந்து எடுக்கப்பட்டன என்பது கருதத்தக்கது. சேகரிப்பாளர் தகுதிப்பாடு
சேகரிப்பாளர் பாடல்களைச் சேகரிக்கும் முறைகளிற் பயிற்சி பெற்றிருப்பதோடு, அவைபற்றிய நூற் பயிற்சியும், சேகரிப்பில் ஆர்வமும் கொண்டிருக்க வேண்டியவராகின்றர். 89 இவற்றிற் கமைய இவ்வாய்வாளர் தம்மைத் தகுதியாக்கிக்கொண்டார் என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. கேரளப் பல்கலைக் கழகத்தில் இதுபற்றிய பயிற்சி பெற்றதோடு, இத்துறையில் வெளிவந்த நூல்களையும் வழிகாட்டிகளாகத் துணைக்கொண்டு இவ்வாய்வாளர் இத்துறையில் ஈடுபட்டுள்ளார்.
60. Blalock, Ann, B. and Blalock, H.M. (1968) PP. 278-327.
61. பா. ரா. சுப்பிரமணியம் (1969) திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இராமங்களைத் தேர்ந்தெடுத்துக் கள ஆய்வு மேற்கொண்டு ஆய்வுரை எழுதிவமை ஈண்டு குறிப்பிடுதல் பொருந்தும்.
62. Royal Anthropological Institute, (1964) P. 28.

தோற்றுவாய் 19
கள ஆய்வு மேற்கொள்ளும் பிரதேசத்து இலக்கியங்களையும் அப்பிரதேசம்பற்றிய நூல்களையும் படிக்கும்போது, அங்கு வாழும் மக்களது சமூகம், வரலாறு, தொழில், கல்வி, சமயம், பொருளா தாரநிலை, வாழ்க்கைமுறை ஆகியனபற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுவதோடு அறிவிப்பாளர்களிடம் மேலதிக விபரங் களையும் அறிந்து கொள்ளவும் இவ்விதிமுறை உதவியாகிறது. 83 பாடகருடனும் அறிவிப்பாளருடனும் சேகரிப்பாளர் நல்ல முறையில் நடந்து அவர்களது மதிப்பையும் நம்பிக்கையையும் நட்பையும் பெற்றுக் கொள்வதோடு எளிமை, நல்லிசைவு மனப் பான்மை, பொறுமை ஆகிய தன்மையுடையவராகவும் இயங்க வேண்டும்." இத்தகைய விதிமுறைகளும் இவ்வாய்வாளராற் கள ஆய்வின்போது கைக்கொள்ளப்பட்டன என்பதும் குறிப் பிடத்தக்கது.
கள ஆய்வில் ஈடுபடும்போது எப்பாடல்களை, எங்கே, எப்போது எப்படிச் சேகரிக்க வேண்டும் என்ற அடிப்படை விதிமுறைகளை மனதிற் கொண்டும் செயற்படவேண்டும்.8 நாட்டார் பாடல் ஆய்வாளருக்குப், பாடல்கள் பாடப்படும் முறைகள் பற்றிய அவதானம் மிகவும் பயன்தருவதாகும். பாடல்களைச் சேகரிப்பதற்கு முன், பாடல்கள் பாடப்படும் முறையினை அவதானித்தலே அவற்றைச் சேகரிப்பதற்கு முதற் படி எனவும் தமக்குக் கிடைத்த பாடல்களின் சரிபிழை அறிய அஃது ஆதாரமாக அமைகிறது எனவும் கூறப்படுகின்றது." பாடல்கள் பாடப்படும்போது அவற்றின் தொடக்கம்,தொடர்ச்சி, முடிவு என்பனபற்றியும், பாடுவோரின் உணர்ச்சிநிலை, கேட் போரின் மனுேநிலை, பாடலின் ஒலிநயம், திரும்பத் திரும்ப வருமிடங்கள் ஆகியன பற்றியும் சேகரிப்பாளர் அவதானிக்க வேண்டியவராகின்றர்." தாலாட்டுப் பாடல்கள், தொழிற் பாடல்கள். காதற் பாடல்கள் ஆகிய மூவகைப் பாடல்களும் பாடப்படும் வேளைகளில் மேற்குறிப்பிட்ட விதிமுறைகளின் படி அவதானிக்கப்பட்டன. சேகரிப்பாளர் ஒரு குறிப்பிட்ட பிரதேச மக்களது கலை, கலாசார நிகழ்ச்சிகள், பாடல்கள் பாடப்படும் சந்தர்ப்பங்கள் யாவற்றிலும் பங்கு கொள்ளும் போது அவைபற்றிய முழுமையான தகவல்களைப் பெறுவதோடு,
ത്ത
63. Burne, C. A. Sophia, (1914) P. 6. 64. Burmae, C.A. Sophia, (1914) P. 13. 65. Royal Anthropological Institute (1964) P. 31. 66. Kroeder, A.L. (1970) P, 446. 67. Goldstein K.S. (1064) P: 92.

Page 24
20 மட்டக்களப்பு மாவட்ட.
அவற்றின் உண்மைநிலைபற்றியும் அறிந்து கொள்கின்றர். இவ்வாறு அவதானம், பங்குபற்றல் ஆகிய கள ஆய்வு விதிமுறை களினற் கிடைத்த அனுபவங்களும், இயற்கையாகவே இவ்வாய் வாளருக்குள்ள நாட்டார் பாடல்பற்றிய பயிற்சியும் அனுபவங் களும் இவ்வாய்வுக்குத் துணையாக அமையலாயின. பாடுநரும் அறிவிப்பாளரும்
சேகரிப்பாளர் நாட்டார் பாடல்களை உரிய முறையிற் பாடக் கூடியோரையும், பாடல்களுடன் தொடர்புடைய சமுதாய மரபுகள், நம்பிக்கைகள் அவற்றின் பயன்பாடுகள் என்பன பற்றிய தகவல்களைத் தரத்தக்க அறிவிப்பாளர்களையும் நன்கு பயன்படுத்த வேண்டியவராகின்றர். பாடகர், அறிவிப்பாளர் என்போரது பால், வயது, தொழில், சமூக அந்தஸ்து, கல்வி என்பனவற்றையும், அவர்கள் பாடல்களை எவ்வாறு அறிந்து கொண்டனர், அவர்களது பாடல்களிலே எத்தகைய வேறு பாடுகள் காணப்படுகின்றன என்பனபற்றியும் சேகரிப்பாளர் அறிந்து கொள்வதன் மூலம், தாம் சேகரித்த பாடல்களையும் தகவல்களையும் மதிப்பீடு செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெறுகின்றர்.98
பாடுநர் பொதுவாகத் தமக்குத் தெரிந்த அல்லது விருப்ப மான பாடல்களிலே அதிக அக்கறை காட்டுவதோடு தமது வசதிகளுக்கும் உணர்ச்சிநிலைகளுக்குமேற்பச் சிலபல மாற்றங் களைச் செய்து பாடுவதுமுண்டு. நாட்டார் இலக்கிய ஆக்க உத்திகள் எளிதாக அமைந்திருப்பதும் அவர்களுக்குத் துணையாக அமைகின்றன. சேகரிப்பாளர் தாம் சேகரித்த பாடல்களை மிகுந்த அவதானத்துடன் மதிப்பிட வேண்டியவராகின்றர். அறிவிப்பாளர்களது அறிவு, உணர்ச்சிநிலை மாறுபாடுகள், கருத்து மாறுபாடுகள் என்பனபற்றியும், அவர்கள் எப்போது, எங்கே, யாரிடமிருந்து தகவல்களைப் பெற்றனர், அவற்றில் ஏதும் மாற்றங்களைச் செய்துள்ளனரா என்பதுபற்றியும் அறிந்து கொள்ள வேண்டும், ஆய்வுக்கு வேண்டிய பாடல்களும் அவற்றேடு தொடர்புடைய் தகவல்களும் சேகரிக்கப்பட்டபோது இத்தகைய விதிமுறைகளும் அனுசரிக்கப்படலாயின.
கள ஆய்வின் போது கிராமங்கள் தோறும் உதவியாக இருந்த பாடகர்கள் அறிவிப்பாளர்கள் பற்றி ஈண்டுக் கூறுதல் பொருத்த முடையது." பாடல்களையும், . அவற்றுடன் தொடர்புடைய
68. Goldstein, K.S. (1964) P.106. 69. பாடுநர், அறிவிப்பாளர் ஆகியோரது விபர அட்டவணை பின்னிணைப்பில்
தரப்பட்டுள்ளது.

தோற்றுவாய் 2.
தகவல்களையும் பெறுவதற்கு வயோதிக ஆண்களும் பெண்களும் பேருதவி புரிந்தனர். பாட்டிமாரிடமிருந்து தாலாட்டுப் பாடல் களும், அப்பாடல்கள் குறிப்பிடும் சமுதாய மரபுகளும் சேகரிக்கப் பட்டன. பொதுவாகத் தாலாட்டுப்பாடல்களைப் பாட்டிமார் பாடுவதே பெருவழக்காகக் காணப்படுகிறது. கிராமியச் சடங் குகள், சம் பிரதாயங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்கையும், அனுபவமும் முதியோரிடமே காணப்பட்டன. வயோதிக ஆண்களிடமிருந்து தொழிற்பாடல்களும் அவற்றுடன் தொடர்புடைய மரபுகளும் நம்பிக்கைகளும் சேகரிக்கப்படலாயின, கிராமிய விவசாயிகள் நாட்டார் பாடல்களைப் பாடுவதிற் பயிற் சியும், சமுதாயமரபுகள்,நம்பிக்கைகள் ஆகியனவற்றில் அதிக ஈடு பாடும் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களிடமிருந்து கமத் தொழிலுடன் தொடர்புடைய பாடல்கள் சேகரிக்கப் பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட நாட்டார் கலைகள், சமுதாய மரபுகள் என்பனபற்றிய ஆய்வில் ஈடுபடுவோருக்கு அண்ணுவி மார் சிறந்த வகையிலே துணையாக அமைவர். இவர்கள் பரம் பரை பரம்பரையாகக் கிராமியக் கலைச் செல்வங்களைப் பாது காத்து வருவதோடு, நாட்டார் பாடல்களை உரிய முறையிற் பாடவும், பாடும் முறையினைக் கற்றுத் தரவும் ஆற்றல் படைத் தவர்களாவர். கள ஆய்வின்போது இவர்களையும் இவ்வாய் வாளர் பயன்படுத்திக் கொண்டார். பாடுநர் தம் குரலமைப் பிற்கேற்ப மாறுபட்ட ஒசையமைப்பிற் பாடல்களைப் பாடுவதும் சேர்ந்து பாடும்போது ஒரேதன்மையிற் பாடுவதும் கள ஆய்விற் கவனிக்கப்பட்டன. காதற்கவிகளை ப் பாடுவோர் கிராமத்திற்குக் கிராமம் வேறுபட்ட இசைமுறையிற் பாடி யமையும் குறிப்பிடத்தக்கது. சில பாடகர் உச்சத் தொனியிலும் சிலர் மெல்லிசையிலும், சிலர் துள்ளலோசையிலும் பாடினர்." அன்றியும் காதற் கவிகளைப் பாடும்போது தாம் விரும்பியவாறு பாடலின் முதலாம், இரண்டாம். மூன்ரும் அடிகளிலே தனிச் சொல் அமைத்தும், அஃதின்றியும் பாடுகின்றமையும் கள ஆய்வில் அவதானிக்கப்பட்டன." காதற்கவிகளை ஆண்கள் பாடுவதற்கும் பெண்கள் பாடுவதற்கும் இசைமுறையில் வேறுபாடுகள் காணப் படுகின்றன. ஆணும் பெண்ணும் தனித்தனியே பாடும்போது காணப்படும் இசைவேறுபாடுகளை ஒலிப்பதிவு நாடாவைத்துணைக்
70. பாடல் ஒசைவிகற்பங்களை இவ்வாய்வாளரின் ஒலிப்பதிவு நாடாக்களிற்
கேட்கலாம். 71. நூலுள் பார்க்க,

Page 25
22 மட்டக்களப்பு மாவட்ட.
கொண்டு, மதுரை வீணைநாராயணனின் உதவியுடன் அவற்றுக்கு
"நடபைரவி" சுரவரிசை அமைத்து இங்குக் காட்டப்படுதல்
காண்க.??
ஆண்பாடுதல்
தண்ணிக்குட மெடுத்து சசச சரிகம η Κν
தனிவழியே போறபெண்ணே பதபம பமகா க கமபம க gf GF
தண்ணிக்குடத் தினுள்ளே sog; † 5ier fig நீ
தளம்புதடி என் மனசு" சரி நிசரிச நிநிநிநீ
பெண்பாடுதல்
ஒடையில போற தண்ணி சரிகமப க ரிகமக ரிம க ரிகரிசr
தும்பிவிழும் தூசிவிழும் சரிமகரி ரீ ரிமக சாமகரிம வீட்டுக்கு வாங்கமச்சான் மாபம் கரி சரிசா சச சசச
குளுந்ததண்ணி நான்தாறன்74 கசாமக ரிம க காம கரிமபம்
–5rf er flerst
இவ்விரு பாடல்களின் சுரவரிசையிற் காணப்படும் வேறுபாடு களைப்போன்றே சகல பாடல்களிலும் பாடுவோரின் தன்மைக் கேற்ப இசை வேறுபாடுகள் இடம்பெற்றுள்ளன. பாடுவோர் குழ்நிலைக்கும் தம் நினைவுக்கும் ஏற்பச் சொற்கள் சொற்ருெடர் கள், வரிகள் ஆகியனவற்றிலும் மாற்றம் செய்து பாடுதல் இயல்பே." மகிழடித்தீவில் ஒருவரிடம் குறிப்பிட்ட ஒரு பொலிப் பாடலை 15.6.72 இலும் மீண்டும் 27.1.73 இலும் ஒலிப்பதிவு செய்து இரண்டையும் ஒப்பிடும்போது அவற்றிடையே வேறுபாடு காணப்பட்டன. அவ்விரு பாடல்களும் பின்னிணைப்பிலே தரப் பட்டுள்ளமை காண்க.78
பாடுவோரின் மனேவியல்பு, இரசிகர்களின் மனேநிலை, இரசிகர் எதனை எதிர்பார்க்கின்றனர் என்பதை அறிந்து
72. ஆய்வாளரின் 7 ஆம் இலக்க ஒலிப்பதிவு நாடாவில் இந்த ஒசைவிகற்பம்
நடபைரவி" சுரவரிசையுடன் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
73. பி. இ. தா.பா.,11அ பாடல் 18.
74. பி.இ., கா.பா.,11அ/பாடல் 23,
75. நூலுள் பார்க்க,
76. பி.இ. தொ.பா.பொலி/பாடல். 4, 5 பார்க்க.

தோற்றுவாய் 23
கொள்ளும் பாடகரின் உளநிலை, பொதுக்கருத்துகள், அவை பற்றிய அனுபவங்கள் ஆகிய விடயங்கள் பாடும்போது முக்கியத் துவம் பெறுகின்றன.' பாடகர்களே, அவர்கள் பாடும் முறையைப் பின்னணியாகக் கொண்டு பின்வருமாறு வகைப் படுத்தலாம்: a
பொருளும் இசையும் பொருந்தப் பாடுவோர். பொருளில் மட்டும் கவனஞ் செலுத்துவோர்.
2
3. சகல பாடல்களையும் இசையுடன் பாடுவோர்.
4. சினிமா, கர்நாடக இசைமரபி%னத் திணித்துப்பாடுவோர்
இந்நான்கு வகையினருள் முதற்பிரிவினர், தமக்குப் பயிற்சி யான பாடல்களைப் பிழையின்றிப் பொருளும் இசையும் பொருந்தப் பாடும் ஆற்றலுடையோராவர். இரண்டாம் பிரிவினர் ஒசை முறை பிற் பயிற்சிக் குறைவுடையராயினும் பாடல்களின் பொருள் பொருந்த ஒப்புவிக்கும் திறமை கொண்டவர். மூன்ரும் பிரிவில் இடம்பெறும் அண்ணுவிமார், நாட்டார் இசைப் பயிற்சியில் மிகத் திறமை வாய்ந்தவர் களாவர் இவர்களது தொகை மிகக் குறைவே. நான்காம் பிரிவினர் சினிமா இசை மெட்டுகளையும், கர்நாடக சங்கீத இசைமுறைகளையும் நாட்டார் பாடலிலே திணித்து அவற்றின் துரய தன்மையைக் கெடுப்போராகக் காணப்படுகின்றனர்.
கள ஆய்வாளர் பாடல்களைச் சேகரிக்கும்போது ஒலிப்பதிவு செய்யும் விதிமுறைகளிலும் கவனம் எடுக்க வேண்டியவரா 66ότζηγή. தொழிற்களங்களிற் பாடல்கள் பாடப்படும்போது அவற்றை அங்கே ஒலிப்பதிவு செய்தல் கஷ்டமானதாகும். சூடுமிதிப்பு. உழவு, வயல் மிதிப்பு முதலிய வேலை நேரங்களில் மாடுகளேச் சாய்த்த வண்ணமே பாடல்களைப் பாடுவது வழக்கம். அது போன்றே மீன்பிடித் தொழிலாளர்களும் தொழிற்பட்ட வண்ணமே பாடுகின்றனர். அத்தகைய இயக்கநிலையிற் பாடல் களை ஒலிப்பதிவு செய்தால் அவை தெளிவற்றனவாகவே காணப் படும். ஆதலினுல் அத் தொழிலாளர்களைத் தனியிடங்களில் அழைத்து அவர்களைக் கொண்டு அப் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்படலாயின. இணைவிழைச்சிப் பாடல்களின்" முக்கியத்
77. Bowra C.V. (1962) PP. 87-89, 92.
78. பாலுணர்ச்சிகளேத் தூண்டும் பாடல்களைக் குறிப்பதற்காக இணைவிழைச்சிப் பாடல்கள் என்ற சொற்றெடரை ஆய்வாளர் கைக்கொண்டுள்ளார். இதனை
gäu (3) ĝ5ĝ5 ŝi) ObScinity Songs 6T 6ör LJ ñ .

Page 26
24 மட்டக்களப்பு மாவட்ட.
துவம் கள ஆய்வில் அறியப்பட்டது. அப்பாடல்களைப் பலர் பாடிக் காட்டிய போதும் அவற்றை ஒலிப்பதிவு செய்வதையும் எழுதிக் கொள்வதையும் சிலர் விரும்பவில்லை. ஆதலினற் பொருளாய்விற் சேர்க்கப்பட்ட இணைவிழைச் சிப் பாடல்களில் இணைவிழைச்சித் தன்மை மிக்க பாடல்களைச் சேர்த்துக் கொள்ள முடியாது போயிற்று.
ஆய்வுக்குத் தேர்ந்த பாடல் வகைகள்
ஈழத்தைப் பொறுத்த வரையில் மட்டக்களப்பு மாவட்டம் நாட்டார் பாடற் களஞ்சியம் எனக் கூறப்படும் அளவுக்கு இங்கு இப்பாடல்களின் வழக்காறு பெரிதுங் காணப்படுகின்றது. நாட்டார் பாடல்களின் சகல வகைகளும் இங்கு வழக்கிலுள்ள தோடு அவ்வப் பாடல்களின் எண்ணிக்கையும் பெருந்தொகை யாக அமைந்துள்ளன." இப்பாடல் வகைகளிலே தாலாட்டுப் பாடல்கள், தொழிற்பாடல்கள், காதற்பாடல்கள் ஆகிய மூவகைப் பாடல்களே இவ்வாய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளன. ஏனைய வகைப் பாடல்கள் பற்றி ஆய்வாளர்கள் தனித் தனியே ஆய்வு நடாத்தக்கூடிய அளவுக்கு அப்பாடல்களின் எண்ணிக்கையும், அப்பாடல்களுடன் தொடர்புடைய சமுதாய மரபுகளும், அப்பாடல்களின் பயன்பாட்டு முறைகளும் அமைந் துள்ளன.
இவ்வாய்வுக்கு மேற்குறிப்பிட்ட மூவகைப் பாடல்களுந் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்குரிய காரணங்கள் வருமாறு:
1. மட்டக்களப்பு மாவட்டம் காதற்கவிகளுக்குப் பெயர்
பெற்ற இடமாக விளங்குதல்;
2. தாலாட்டுப் பாடல்கள் மனிதனின் குழந்தைப் பருவத் திலும், தொழிற்பாடல்கள் தொழில் புரியும் வேளை களிலும், காதற் பாடல்கள் வாழ்க்கை நெறியிலும், பொழுது போக்கு அடிப்படையிலும் பயன்படுவன வாகும். எனவே மனிதனின் பிறப்பு, உழைப்பு, வாழ்க்கை ஆகிய மூன்று விடயங்களையுந் தொடுத்து நிற்கும் இப்பாடல்கள் மனித வாழ்க்கை நெறியிலும் சமூகப் பண்பாட்டு நெறியிலும் முக்கியத்துவம் பெறுதல்;
79. நாட்டார் பாடல்களின் வகைகள் பற்றிய முழு விளக்கங்களையும் நூலின்
இரண்டாம் இயலில் காண்க.

தோற்றுவாய் 25
3. தாலாட்டுப் பாடலும் காதற்பாடலும் அன்பின் அடித் தளத்திலிருந்து தோற்றம் பெறுவனவாயினும் அடிப் படையில் இரண்டும் வேறுபட்டனவாகும். இவை இரண்டிற்குமுள்ள ஒப்புவமைகளை ஆராய்ந்தறிவதற் கும் வாய்ப்புக்கள் காணப்படுதல்;
4. காதற்பாடல்களும் தொழிற்களங்களிலே பயன்படு கின்றமை கள ஆய்வின்மூலம் அறியப்பட்டது. எனவே காதற் பாடல்களைத் தொழிற்களங்களிலே எவ்வாறு பாடுகின்றனர் ; அப்பாடல்களின் பயன்பாடு எவை; அங்கு காதற்பாடல்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது ; தொழிற்களங்களில் ஏன் காதற் பாடல்களைப் பாடுகின்றனர் என்ற வினுக்களுக்கு விடை காண்பதற்கு இவ்விரு வகைப்பாடல்களையும் ஒருங்கே ஆராயவேண்டியிருத்தல் ;
5. இப் மூன்று வகைப்பாடல்களும் மக்களின் அன்ருட வாழ்க்கையிற் பயன்படுவனவாதலால், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள், இன்பதுன்பங்கள், பழக்கவழக் கங்கள், வாழ்க்கை முறைகள், பண்பாட்டு விடயங்கள் ஆகியனவற்றை ஆராய்வதற்கு இவை தக்க ஆதாரங்
களாக அமைதல் என்பனவாம்.
ஆய்வு முறைகள்
நாட்டார் பாடல் ஆய்வில் அமைப்பாய்வு முறையைப் பின் பற்றும் முறை கடந்த சில ஆண்டுகளாக யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது. பாடல்களின் பொருளமைப் பையும், வடிவ அமைப்பையும் ஒருங்கே ஆராய்ந்து, அவற்றின் உள்ளமைப்பையும், வடிவ அமைப்பையும் வெளிப்படுத்துவதே இவ்வாய்வு முறையாகும். மக்கள் மரபியலாய்வுக்குப் புதிதான இவ்வாய்வு முறை, மனிதப் பண்பாட்டு விடயங்களை ஆராய்வதற் குத் தகுந்த ஆய்வு நுணுக்க நெறியாக அமைகின்றது." இந்த ஆய்வுநெறியின் மூலம் பாடலின் பொருளாய்வின் முக்கியத்துவம் உணர்த்தப்படுவதோடு, அவற்றின் பயன்பாடுபற்றி ஆராய் வதற்கும் இதுவே சிறந்த ஆய்வுமுறையாகவும் கருதப்படு கின்றது." பாடல்களின் பொருளாய்வுமுறையின்மூலம் மனிதப் பழக்கவழக்கங்கள், சமுதாயமரபுகள், நம்பிக்கைகள் முதலிய விடயங்கள் பற்றியும், பாடல்களைப்பாடுவோரதும் கேட்போரதும்
80. Richmond, Edson (Ed) (1957) P. 132. 81. Berlson, B. (1952) P. l8.

Page 27
26 மட்டக்களப்பு மாவட்ட .
மனேநிலை, உணர்ச்சி நிலை, மனக்கருத்துகள் என்பனகுறித்தும் ஆராய்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.
நாட்டார் பாடலில் அமைப்பாய்வு முறையை மேற்கொண்டு ஆய்வு நடாத்தியோருள் ருேமன் ஜகோப்ஸன் (Roman Jako bson), G335mTLD6iv GT. SFGML uji (Thomas A. Sebeok) gátu u g)([b6JGIB b குறிப்பிடத் தகுந்தவர்கள்.** இவர்களது ஆய்வுமுறையைத் தமிழக நாட்டார் பாடல் ஆய்வுக்குப் பயன்படுத்தியோர் ஹமீத் (1961) பா. ரா. சுப்பிரமணியம் (1969) ஆகிய இருவருமாவர். இவர்களது ஆய்வுகள் மொழியியல் நோக்கிலே அமையலாயின என்பது குறிப்பிடற்பாலது.
அமைப்பாய்வு முறையைப் பின்பற்றிய இவ்வாய்வு நூலிலே தாலாட்டுப் பாடல்கள், தொழிற்பாடல்கள், காதற்பாடல்கள், ஆகிய மூவகைப் பாடல்களின் பொருளமைப்பு, வடிவ அமைப்பு, அப்பாடல்கள் பயன்படும் விதம், அப்பாடல்களிற் குறிப்பிடப் படும் சமுதாய மரபுகள், நம்பிக்கைகள் என்பன ஆராயப்படு கின்றன. அவ்வகையிற் ஹமீத், சுப்பிரமணியம் ஆகிய இருவரது ஆய்வுமுறைகளிலிருந்து இவ்வாய்வு வேறுபடுவதோடு, விரிவு பட்டதுமாகும்.
பாடல்கள் பாடப்படும் சூழ்நிலைகள், பாடல்களின் பொருட் கூறுகள், பொருட் சிறப்பியல்புகள், தலைமைக்கருத்துகள் ஆகிய ஆய்வுமுறைகளின் மூலம் பாடற்பொருளமைப்பு ஆராயப் பட்டுள்ளது. பொருளமைப்பாய்வில் இயன்றவரை செந்நெறி இலக்கிய ஒப்புமைகளும் அடிக்குறிப்பிற் சுட்டிக் காட்டப் பட்டுள்ளன. பாடலின் வடிவ அமைப்பும், பொருளமைப்பும் ஒருங்கே ஆராயப்படும்போதுதான் அமைப்பாய்வு முழுமை பெறும். எனவே பாடலின் பொருளமைப்பைத் தொடர்ந்து, வடிவ அமைப்பு ஆராயப்பட்டுள்ளது. நாட்டார் பாடல்களைப் பொறுத்தவரையில் அவற்றின் வடிவ அமைப்பு முக்கியத்துவம் பெறுவதால், அதுபற்றிய ஆய்வும் இன்றியமையாததாகின்றது. பாடல்களின் வடிவ அமைப்புக்கு ஆக்கக்கூறுகள் துணையாகின்றன. இசையமைப்பு வாய்பாடு, எதுகை, மோனையமைப்பு, திரும்பத் திரும்ப வரும் அமைப்பு, இயைபமைப்பு, விரிபமைப்பு, வரியமைப்பு, வாக்கிய அமைப்பு என்னும் அமைப்பு முறைகளின் மூலம் பாடல்களின் வடிவ அமைப்பு ஆராயப்பட்டுள்ளது.
82. Subramaniam, P.R (1969) P. 44.

தோற்றுவாய் 27
பாடல்களின் பொருட் கூறுகளையும், பாடல்கள் பாடப்படும் பின்னணிகளையுந் துணைக்கொண்டு மக்களது வாழ்க்கையில் இம் மூவகைப் பாடல்களும் எவ்வாறு பயன்படுகின்றன எனவும் ஆராயப்பட்டுள்ளது.** சமுதாய மரபுகள், நம்பிக்கைகள் பற்றி ஆராயும்போது பாடல்களிற் குறிப்பிடப்படும் விடயங்களே ஆராயப்பட்டுள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
83. நாட்டார் இலக்கியங்களின் பயன்பாடுபற்றி ஆராய்ந்தோருள் மலினுேஸ்கி (1966), டொன் வி. காட் (1964) ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்
களாவர்.

Page 28
இயல் - 1 மட்டக் களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்ட நாட்டார் பாடல்கள் பற்றிய இவ் வாய்வில் இம் மாவட்டப் புவியியல், வரலாறு, சமூகப்பின்னணி, என்பனபற்றி முதலிற் கூறுதல் பொருத்தமானது. இவ்வியலைத் தொடர்ந்து வரும் பாடல்களின் பொருளமைப்பு, மக்கள் வாழ்க் கையில் இப்பாடல்கள் பயன்படும்முறை, சமுதாயமரபுகள், நம்பிக்கைகள் ஆகியனபற்றிய ஆய்விற்கு இம்மாவட்டம் பற்றிய விளக்கம் பின்னணியாக அமைகின்றது.
இயற்கை அமைப்பு
மட்டக்களப்பு மாவட்டம் ஈழத்தின் கிழக்குக் கரையோரமாக அமைந்துள்ளது. வெருகல் ஆறு, வங்காளவிரிகுடாக் கடல், அம்பாறை மாவட்டம், பொலநறுவை மாவட்டம் ஆகியவை முறையே இதன் வடக்கு, கிழக்கு, தெற்கு, எல்லேகளாக அமை கின்றன. 9516 சதுரமைல் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் கிழக்கிலிருந்து மேற்காக நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி ஆகியமுறையில் நாநிலவள அமைப்புடன் திகழ்கின்றது.*
மட்டக்களப்பு இம்மாவட்டத்தின் தலைநகரமாகும். இந் நகரிலே தொடங்கித் தெற்கு நோக்கி முப்பது மைல் நீளமுடைய தாக மட்டக்களப்புவாவி அமைந்துள்ளது. அவ்வாவிக்கு மேற்குப்
1. Census of Ceylon, 1963 Batticaloa District-Table-3.
ஆரியர் போற்றும் அணிசால் இலங்கையிலே
சீரார் குணதிசையைச் சேர்ந்து வளர்புகழும்
ஏரால் இயன்றசெந்நெல் இன்சுவைத்தீங் கன்னலொடு
தெங்கி னிளநீரும் தீம்பலவி னல்லமிர்தும்
எங்குங் குறையா இயலுடைய நன்னுடு
மட்டக்களப்பென்னும் மாநாடு ..." எனச் சுவாமி விபுலாநந்தர் (1947; பக்.எ) வருணித்திருத்தல் காண்க.

மட்டக்களப்பு மாவட்டம் 29
புற்மாகவுள்ள கிராமங்கள் அனைத்தும் 'படுவான்கரை”* என்றும், கிழக்குத் திசையிலுள்ள ஊர்கள் "எழுவான்கரை”* என்றும் வழங்கப்படுகின்றன. படுவான்கரை, எழுவான்கரைப் பகுதிகளில் வாழும் மக்கள் முறையே 'படுவான்கரையார்’ "எழுவான் கரையார்’ என அழைக்கப்படுகின்றனர். இவ் வழக்காறுகள் மக்கள் பேச்சுவழக்கில் மட்டுமன்றி நாட்டார் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன. இவ்விரு பகுதியினரும் பழக்க வழக்கங்களிலும், நடையுடை பாவனைகளிலும் வேறுபடு கின்றனர். நாகரிகத்திலும் கல்வியிலும் சாதியிலும் பொருளிலும் படுவான் கரையினர் தங்களிலும் குறைந்தவர்களெனக் கருதும் மனப்பான்மை எழுவான்கரையினரிடம் காணப்படுகிறது.
மட்டக்களப்பு என்னும் பெயர் ஆங்கமைந்துள்ள வாவியின் பெயரையொட்டியே எழுந்தது எனக் கருத இடமுண்டு. (மட்டம் + களப்பு" = மட்டக்களப்பு) மட்டமான (ஆழமற்ற) சதுப்பேரி என்ற பொருளைத் தரும் மட்டக்களப்பு என்னும் பெயர், அவ் வாவியின் இருமருங்கிலுமுள்ள நாட்டிற்கும் பெயராயிற்று எனக் கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பு என்பது இன்று மட்டக் களப்பு நகரையே சுட்டுகின்றது. மட்டக்களப்பு மாவட்டம் என்ற தொடரே அம்மாவட்டத்தைக் குறிப்பிடுகின்றது. இப் பெயரைச் சிங்களத்தில் "மடகளப்புவ" என்றும், ஆங்கிலத்தில் "பற்றிக்கலோ’ (Batticaloa) என்றும் வழங்குவர். சேறுநிறைந்த
3. தொல்காப்பியம் பொருளதிகார அகத்திணையியற் பத்தாஞ் சூத்திரத்தில் வரும் ஏற்பாடு என்ற சொல்லுக்கு நச்சிஞர்க்கினியரும், இளம்பூரணரும் சூரியன்படும் நேரமாகிய மாலைப்பொழுது எனப் பொருள் கூறுவர். "சூரியன் பட்டுவிட்டது', பொழுதுபட்டுவிட்டது" என்ருல் சூரியன் மறைந்து விட்டது என்பது பொருளாகும். (படுதல் = மறைதல்) "மீன்பட்டது” = மீன் அகப்பட்டது; "கண்ணிற்பட்டது" = கண்ணிற்குத் தோன்றியது என வரும் போது படுதல் என்பது தோன்றுதல் என்ற பொருளிலும் வழங்கக் காணலாம். ஆணுல் பொழுதுபட்டது என்று கூறும்போது மறைதலேயே குறிக்கின்றது. மலையாளத்திலும் இப்பொருளிற் படுதல் வழங்கக் காண்க. 'Padinnaru, Properly padinnayiru meaning the setting sun is more commonly used in Malayalam for west that merku'. (Caldwell. R. 1956, P. 20) யாழ்ப்பாணத் தமிழிலும் பொழுதுபடுதல் என்பது சூரியன் மறைவதையே குறிக்கும். எனவே சூரியன் மறையும் திசையைப் படுவான் திசை என்று கூறுவது காரண காரியத் தொடர்புடைய வழக்காகும்.
4 சூரியன் உதித்தெழும் திசை கிழக்கு ஆதலால், அத்திசையைக் காரண
காரியத் தொடர்பு காட்டி எழுவான் திசை என வழங்குகின்றனர்.
5. கடல் நீரும் ஆற்று நீரும் கலந்து நிற்கும் இடம் களப்பு (Lagoo)
எ னப்படும் .

Page 29
30 மட்டக்களப்பு மாவட்ட.
நீர்நிலை என்று பொருள் தரும் ‘மட்டக்களப்புவ’ என்ற சிங்களச் சொல்லின் திரிபே மட்டக்களப்பு என்பாருமுளர். மட்டம் அல்லது மட்டு, களப்பு என்னுந் தமிழ்ச் சொற்களால் இப்பெயர் ஆக்கம் பெற்றிருப்பதால் அவர்கள் கருத்து ஏற்புடைத்தன்று. அன்றியும் இப்பிரதேசத்திலுள்ள பெரியகளப்பு, கோரக்களப்பு எனத் தமிழால் அமைந்த இடப்பெயர்களும் மட்டக்களப்புத் தமிழ்ப் பெயரென்பதை வலியுறுத்துகின்றன. மட்டக்களப்பு வாவியின் மேற்குப் பகுதியிலுள்ள மரச்சோலைகளிலிருந்து பண்டு தேன் (மட்டு) வடிந்தோடிவந்து வாவியிற் (களப்பில்) கலந்ததால் அவ்வாவி மட்டுக்கலப்பு > மட்டக்களப்பு எனப் பெயர்பெற்றுக் காலப்போக்கில், அது அமைந்துள்ள பகுதி மட்டக்களப்பு என்னும் பெயர் பெறுவதாயிற்று என்று இந்நாட்டு வளத்தில் ஈடுபட்டபுலவர்கள் கூறுவர்."
மட்டக்களப்பு மாவட்டம் தன் இயற்கை அமைப்பினல் இங்குள்ளோரை மற்றேருடன் கலந்து வாழ இயலாமற் செய் துள்ளது. மட்டக்களப்புவாவி நாட்டை இரு கூறுகளாக ஆக்கி யிருத்தலால், வேண்டியபோது அதன் இரு கரையினரும் தம்முட் சந்தித்தல் கஷ்டமாக இருந்தது. மற்றைய மாகாணங்களுக்கும் இம்மாவட்டத்திற்கும் இடையேயுள்ள மலைத்தொடர்கள், ஆறு கள், பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகள் என்பன புறத் தொடர்புகளுக்குத் தடையாக இருந்து வந்துள்ளன. அண்மைக் காலத்திலே இம்மாவட்டத்திற்கும் பிற மாகாணங்களுக்கும் நெருங்கிய போக்குவரத்துத் தொடர்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இத்தகைய நில அமைப்புத் தோற்றத்தால் இம் மாவட்டம் தனிப்பிரதேசமாகக் காணப்பட்டமையால் இப் பிரதேச மக்களது பண்பாடு, பழக்கவழக்கங்கள் என்பன அந்நியக் கலப்புக்கு அதிகம் இடங்கொடாது தனித்துவத்துடன் அமைய லாயின. இத்தகைய தனித்துவ இயல்புகளே இம்மாவட்டத்திற் பெரிதும் நாட்டார் இலக்கியத்தின் பயன்பாட்டுக்கும் நிலை பேற்றுக்கும் காரணமாக அமைவதாயின.
இம்மாவட்டத்தின் வடக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகளில் வயல் நிலங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள உன்னிச்சை என்ற பெரியகுளம், கல்லோயா வாய்க்கால், ஆறுகள் ஆகியவற்றின் மூலமும் இப்பிரதேசம் நீர்வளம் பெற்றுள்ளது. இவண் உள்ள
6. மட்டறல் (Prawn), மட்டத்தேள், மட்டச்சிப்பி, மட்டப்பரண், மட்டப்பலகை
என்ற வழக்காறுகளும் நோக்குக. 7. கந்தையா, வி.சீ. (1964) பக், 2.

மட்டக்களப்பு மாவட்டம் \, 31
ஆறுகளில் வெருகல் ஆறு, மதுறு ஒயா, முந்தானை ஆறு, பட்டிப் ப%ள ஆறு, அடைச்ச கல்லாறு முதலிய ஆறுகள் சிறப்பாகக்குறிப் பிடத்தக்கன.
தொடர்ச்சியான மலைத்தொடர்கள் இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளன. இம்மலைத் தொடர்களுள் மட்டக்களப்பு நகருக்குத் தென்மேற்குத் திசையில் 16 மைல் தூரத்தில் அமைந்துள்ள கதிரகால மலைத்தொடர் குறிப்பிடத் தக்கதாகும். இம்மாவட்டத்தில் மட்டக்களப்பு, கற்குடா ஆகிய
இரண்டும் துறைமுகங்களாம். கண்டிச் சிங்கள மன்னரும் மட்டக்களப்புத் துறைமுகத்தைப் பயன்படுத்தி வந்ததற்குச் சான்றுண்டு. மட்டக்களப்புத் துறைக்கும் கண்டிநகருக்கு
மிடையே காடுகளினுாடாக ஒற்றையடிப்பாதை இருந்ததாகவும் அதனுாடாகவே கண்டி பன்னரும் மட்டக்களப்பு ஆட்சியாளரும் தொடர்புகள் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. அன்றியும் போர்த்தக்கேயரும் ஒல்லாந்தரும் தம் கப்பல்களை இங்கு நிறுத்தி வர்த்தக அடிப்படையிலும், போர் அடிப்படையிலும் இத்துறை யினைப் பெரிதும் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாரு க மட்டக் களப்புத் துறைமுகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது.
நிலப்பரப்பால் அகன்றுகிடந்த, மட்டக்களப்பு மாவட்டம் 1961 ஆம் ஆண்டில் நிர்வாக அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டம், அம்பாறை மாவட்டம் என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருபிரிவுகளாக இம்மாவட்டம் பிரிக்கப்பட்டபோதிலும் சமுதாயமரபுகள், தொழில்முறைகள் வாழ்க்கைமுறைகள் பிரதேச உணர்வுகள் ஆகியனவற்றில் இவ்விரு மாவட்டத்தினருக்குமிடையில் ஒருமைப்பாடு நிலவு வதும் நோக்கற்பாலது.
வரலாறும் மக்கள் பரம்பரையும்
இப்பிரதேச மக்களது சமுதாயமரபுகள், நம்பிக்கைகன் என்பனபற்றி ஆராய்வதற்குப் பின்னணியாக இம்மக்களது வரலாறுபற்றி இங்கு கூறப்படுகின்றது. இம்மாவட்டத்து வரலாறு பற்றி அறிவதற்குப் போதிய சான்றுகள் இல்லாமையும், இத் துறையில் வரலாற்றுய்வாளர் அதிக ஊக்கங்கொள்ளாமையும் இவ்வரலாற்றினை விரிவாக்குவதற்குத் தடையாயுள்ளன. வர
8. iri' -3, GenTI t l LionTsin LB u tn... u A, 62.

Page 30
32 மட்டக்களப்பு மாவட்ட.
லாற்றுக்குமுற்பட்ட காலத்தில் மட்டக்களப்பு மாநிலத்திலே தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள் என ‘இராமாயண சமூகம்’ என்னும் நூலின் ஆசிரியர் குறிப்பிடுகிருர். விஜயன் (கி மு. 540) என்ற முதற்சிங்கள மன்னன் மதுரையிலிருந்து தமிழ்க் குடும்பங்களை வரவழைத்து, அவர்களுட் சிலரை மட்டக்களப்பின் எல்லைப்புறங் களிற் குடியேற்றினன் என்ற செய்தி வரலாற்று அடிப்படையில் முதலிற் குறிப்பிட வேண்டியதாகக் காணப்படுகின்றது. 19 விஜயனின் வழிவந்த குரத்தீசன் காலத்திற் சேனன், கூத்திகள் என்னும் பெயர்களைக் கொண்ட சேரநாட்டு வீரர் இருவர் தமிழ்ப்படைகளுடன் வந்து, ஈழத்தைக்கைப்பற்றி ஏறக்குறைய இருபத்தீராண்டுகள் (177-155 கி.மு.) ஆட்சிசெய்தனர். 11 அக் காலத்திற் சேரநாட்டுத் தமிழ்க்குடிகள் பல ஈழத்திற் குடியேற்றப் படலாயினர். இவ்வாறு சேனன், கூத்திகள் காலத்திற் குடியேறிய சேர நாட்டு மக்கள் மட்டக்களப்பிலும் குடியேறி, அங்கு வாழ்ந்த மக்களுடன் இணைந்து வாழ்ந்தனர்** என்பதற்கு மட்டக்களப்பில் அவர்கள் தொடர்பால் எழுந்தனவாய் இன்றும் நிலவுகின்ற சேர நாட்டுப் பழக்கவழக்கங்கள் ஆதாரமாயுள்ளன. 18 முதலாம் கஜபாகு மன்னன் (கி.பி. 113) சேரன் செங்குட்டுவன் எடுப்பித்த கண்ணகி விழாவிற்கலந்து திரும்பும்போது கண்ணகி சிலையையும் கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய மக்களையும் ஈழத்திற்கு வருவித்தான் என்றும், 2 ஆம் கஜபாகு மன்னன் சேர நாட்டிற்குப் படை எடுத்துச் சென்று 1200 தமிழ் மக்களைச் சிறைப்பிடித்துக் கொணர்ந்து மட்டக்களப்பு மாநிலத்திற் குடியேற்றினன் என்றும் அறியப்படுகின்றன.** எனவே மட்டக்களப்பில் வாழ்மக்கள் தமிழக மக்களுடனும் சேரநாட்டு மக்களுடனும் தொடர் புடைவர்களாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது."
9. Guruge, Ananda, (1960) PP. 12-122. 10. University of Ceylon; (1959) PP 42-43, 95; Mahavamsa, Vol. I 192.
Chapter VII, PP. 48-58. 11. Raghavan, M.D., (1964) P. 34. 12. மட்டக்களப்பு மான்மியம், பக். 21-23, 13. கந்தையா, வி.சி., (1964) பக். 395 14. Ramasinghe, W.P., (1894) PP. 144-150. 15. " The Tamulians inhabit all the eastern coast, from Battikalo northward to Jaffna and from Jaffna southward along the western coast to Puttalam. The general opinion respecting them is, that they at first came over into the island from the opposite coast of India.' Selkirk, James, (1844) P. 66.

மட்டக்களப்பு மாவட்டம் 33 மட்டக்களப்பு மாநிலத்திற் பண்டு தமிழ் மன்னரின் ஆட்சி நிலைபெற்றிருந்தமை பற்றியும், அவர்களின் பரம்பரை, அம் மன்னர்கள் பேற்கொண்ட கலைப்பணிகள், சமயப் பணிகள் என்பன பற்றியும், மட்டக்களப்பு மான்மியம் 18 என்ற நூல் விரி வாகக் கூறுகின்றது. இத்தமிழ் மன்னர்களைப் பற்றிய செய்திகளை ஈழத்தமிழர் வரலாற்றுச் சான்றுகளான தட்சிண கைலாச புராணம், குளக்கோட்டன் கல்வெட்டு, கோயிற் செப்பேடுகள் முதலியன வாயிலாகவும் அறியலாம். ஆயினும் பண்டைய வரலாறுகள் இன்னும் தக்க முறையில் ஆராயப்படாதுள்ளன.
தமிழ் மன்னர்களின் தனி ஆட்சியின் பின் இப்பிரதேசம், உறுகுணைச் சிங்கள மன்னரின் ஆட்சிப் பகுதியின் ஒரு பிரிவாக இணைக்கப்பட்டு அவர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்ச் சிற்றரசர் களால் ஆளப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகின் றது.17 கி.பி. 8 ஆம் நூற்ருண்டு வரையும் தமிழ்ச் சிற்றரசர் களும் பிரதானிகளும் சிங்கள மன்னரின் கீழ்க் குறுநில மன்னர் களாக இருந்து, மட்டக்களப்பை ஏழு உட்பிரிவுகளாகப் பிரித்து ஆட்சி செய்தனர் என இப்பிரதேசத்துக் கோயிற் செப்பேடுகள் செப்புகின்றன. இரண்டாம் மகிந்தன் கி.பி. 8 ஆம் நூற்ருண் டில் அனுராதபுரியைத் தலைநகராகக் கொண்ட இராசரட்டை இராச்சியத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தை இணைத்தான். அதன்பின் காலத்துக்குக் காலம் தமிழகத்திலிருந்து நடைபெற்ற படையெடுப்புகளின்போது இம்மாவட்டம் நேராகத் தென்னிந் தியக் கலாசாரப் பாதிப்புகளுக்கு உட்படுவதாயிற்று.
சோழசாம்ராச்சியத்தின் ஒரு மாகாணமாக ஈழம் இணைக்கப் பட்ட போது (கி.பி. 1017 - 1070) மட்டக்களப்பு மாவட்டமும் சோழ நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. கடலாதிக் கம் பெற்றிருந்த சோழ மன்னருக்கு மட்டக்களப்புத் துறைமுகம் வர்த்தக அடிப்படையிலும் பெரிதும் உதவியாக அமைவதா யிற்று. இவ்வாறு அரசியல், வர்த்தக அடிப்படையில் ஏற்பட்ட
16. ஈழத்து வரலாற்றுச் சான்றுகளுள் தமிழ்நூல் வரிசையில் இந்நூல் முதன்மை பெறுகின்றது என்றும், 13 ஆம் நூற்றண்டுக்கு முற்பட்ட வரலாற்றை இந்நூல் விரிவாகக் கூறுகின்றது என்றும், இந்நூலிற் கூறப்படும் செய்திகள் சிங்கள வரலாற்று நூல்களாகிய மகாவம்சம், சூளவம்சம் ஆகியவற்றிலும் ஒத்துக் காணப்படுகின்றன என்றும், க. இந்திரபாலா (1970; பக். 135) கூறுவதன்மூலம் இதன் வரலாற்று முக்கியத்துவம் உணரப்படுகின்றது.
17. மட்டக்களப்பு மான்மியம், பக். 44 பார்க்க.
ம.3

Page 31
34 மட்டக்களப்பு மாவட்ட.
சோழர் தொடர்புகள் மட்டக்களப்பின் கலத்துறையில் அதிக பயனை அளித்தது. சோழர் கட்டட, சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த கோயில்கள் (எடுத்துக்காட்டாகக் கொக்கட்டிச் சோலைத் தான்தோன்றிச்சுரர் கோயில்) சோழ நிர்வாகிகளாற் கட்டப்பட்டுள்ளன. சோழர் ஆட்சி நிலை தளர்ந்ததும் இப்பிர தேசம் முதலாம் விஜயபாகு மன்னனின் ஆட்சியின் கீழ் உட் படுத்தப்பட்டது. பின்பு, மகாபராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1153 - 1186) இப்பிரதேசத்திற் குளங்கள் பல நிர்மாணிக்கப்பட்டு விவசாயம் விருத்தி செய்யப்பட்டது.
கி.பி. 1215இல் பொலநறுவையில் நடைபெற்ற கலிங்க மாகனின் படையெடுப்பின் பின்பு, மட்டக்களப்பு மாவட்டமும் மாகனின் ஆட்சிப் பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டது. இவன் தனது ஆட்சிக் காலத்திற் பழுகாமத்தில் இராசதானி அமைத்து, நாட்டிற் பல அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டதோடு, கோயில்களைத் திருத்தி அவற்றிற்காகப் பெருந்தொகையான மானியங்களையும் வழங்கினன் என்றும் அறியப்படுகின்றது. அவனது ஆட்சியினை அடுத்து இப்பிரதேசம் கண்டிச்சிங்கள மன்னரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது.19
போர்த்துக்கேயர் கரையோர மாகாணங்களைக் கைப்பற்றிய போது மட்டக்களப்பையும் தமது ஆட்சியின் கீழ் அடக்கினர். மட்டக்களப்புத் துறையின் முக்கியத்துவத்தையுணர்ந்த போர்த் துக்கேயர் அங்கு 1626 இல் கோட்டை ஒன்றைக் கட்டத் தொடங் கினர். ஆயினும் அக்கோட்டையின் கட்டட வேலைகள் ஒல்லாந் தர் காலத்தில் 1682 இலேதான் முற்றுப் பெற்றனவாகக் கூறப்படு கின்றது. 20 போர்த்துக்கேயர் காலத்தில் மட்டக்களப்பிற் கத் தோலிக்க மதப் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுள்ளது.?
ஈழத்திற் போர்த்துக்கேயர் கைபற்றிய கரையோர மாகாணங் களில் வாழ்ந்த முஸ்லிம மக்கள், அவர்களாற் கொடுமைப்படுத்தப் பட்டபோது கண்டி மன்னனிடம் தஞ்சமடைந்தனர். கண்டி அரசன் செனரத் (கி.பி. 1605- 1635) அவர்களில் 4000 மக்களை மட்டக்களப்பிற் குடியேற்றி, போர்த்துக்கேய ஆதிக்கம் அங்கு தலை எடுக்காதவாறு செய்தான் என்ற வரலாற்றுச் செய்தி?? இப்
8 University of Ceylon, (1959) PP. 616-849. 19 இ திராபாலா, கா. (1968) பக். 40-43. 20. மட்டக்களப்பு மான்மியம், பக். 7. 21, மேலது. பக். 60. 22. Perera, S. G., (1949) P. 132.

மட்டக்களப்பு மாவட்டம் 35 பிரதேசத்தில் இஸ்லாமிய கலாசாரப் பின்னணியை வரலாற்றடிப் படையில் தெளிவுபடுத்திக் காட்டுகிறது.
கண்டிமன்னன் இராசசிங்கனின் காலத்தில் (கி.பி.1635-1687) இப்பிரதேசம் ஒல்லாந்தரின் நேரடி ஆட்சியில் அடக்கப்பட்டது. இவர்களது காலத்திலே புறட்டஸ்தாந்து மதப்பிரச்சாரம் நடை பெற்றுள்ளது. தேவாலயங்கள் பலவும் நிறுவப்பட்டன. மட்டக் களப்புக்கு அருகிலுள்ள Dutch Bar என்று குறிக்கப்படுமிடத்தில் ஒல்லாந்துக்கார மக்களின் பரம்பரையினர் இன்றும் வாழ்ந்து வரு கின்றனர். டச்சுக்காரருக்குப் பின் ஆங்கிலேயர் இம்மாவட்டத் தைக் கைப்பற்றி அத%னயும் ஈழத்தின் ஏனைய மாகாணங்களுடன் இணைத்துப் பொதுநிர்வாகத்தின் கீழ்க்கொணர்ந்தனர். ஆங்கி லேய ஆட்சியின்போதே மட்டக்களப்பு மா வட் டம் பிற மாகாணங்களுடன் தொடர்புகொண்டது என்பதும் குறிப்பிடத் தககது.
மட்டக்களப்பு மான்மியம், கோயிற் செப்பேடுகள், பரம் பரைக் கதைகள் முதலியவற்றைக் கொண்டு ஆராயும்போது இப் பிரதேசத்தின் பழங்குடியினர் தமிழரே எனக் கொள்ளலாம். அதே வேளையிலே தமிழகத்திலிருந்து காலத்துக்குக் காலம் நடைபெற்ற படையெடுப்புகள், வர்த்தகத் தொடர்புகள் என்பவற்றின்மூலம் சேர, சோழ, பாண்டிய நாடுகளைச் சார்ந்த மக்களும் இம்மாவட் டத்திற் குடியேறியிருக்கின்றனர் என்பதைக் கலாசாரத் தொடர் புகள் தொடுத்துக் காட்டுகின்றன.
மட்டக்களப்பு மக்களின் பழக்கவழக்கங்களையும், சமுதாய மரபுகளையும் ஆராயும்போது இவர்கள் சேரநாட்டு மக்கள் பரம்
பரையினருடன் அதிக தொடர்புடையவர்களாகக் காணப்படு கின்றனர்,28 மருமக்கள் தாயமுறை, மந்திரப்பயிற்சி, தேங்காய் கலந்த உணவு வகைகள், தலைக்குத் தேங்காய் எண்ணெய் பூசுதல், மங்கல நிகழ்ச்சிகளிற் குரவை போடுதல்,24 கூத்து, கோலாட்டம் கண்ணகி வழிபாடு முதலான பல விடயங்கள் மட்டக்களப்பு மக்கள் பரம்பரையினருக்குச் சேரநாட்டு மக்களுடன் மிக நெருங் திய தொடர்பைக் குறித்து நிற்கின்றன.* மலையாள நாட்டிலும் மட்டக்களப்புக் கிராமங்களிலும் நல்ல முறையிலமைந்த கிராமிய நடனங்களும் கூத்துகளும் இன்றுவரையும் நிலைபெற்றுக் காணப்
23.
நோக்குக.
24: பாலசுந்தரம், இ. (1974அ)
25. கந்தையா, வி.சி. (1964) பக். 8.
நூலின் 6ஆம் 17ஆம் அடிக்குறிப்புச் சுட்டும் விடயங்களையும் ஈண்டுச் சேர்த்து

Page 32
36 மட்டக்களப்பு மாவட்ட
படுகின்றமையும், அவற்றிடையே ஒருமைப்பாடு நில6 கின்றடையும் குறிப்பிடத்தக்கன. இவ்வாய்வாளர் தாம் கேரள நாட்டிலே தங்கியிருந்த காலத்தில் அவர்களது வீடமைப்புமுறை வேலியடைப்பு முறை, மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை கவனித்தபோது இவ்விரு நாட்டவருக்குமிடையேயுள்ள ஒருமை! பாடுகளையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறு நோக்கும்போது கேரளநாட்டு மக்கட்பரம்பரையினருக்கு மட்டக்களப்பு மக்கட்பரம்பரையினருக்கும் இடையிற் பண் பாட்டடிப்படையில் மிக நெருங்கிய தொடர்புகள் காணப் படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் பெருந்தொகையான *முக்குல ர்’ என்ற மக்கட் பிரிவினர் பண்டு கூலிப்படையினராக *மலபார்” என்று அழைக்கப்படும் இந்தியப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பிற் குடியேறியவர்கள் என சி. பத்மநாதன் கூறுவதும் ஈண்டு நோக்கற்பாலது.??
ஈழத்தில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னர், வவுனியா மலைநாடு ஆகிய பிரதேசங்களிலே தமிழ் மக்கள் பெரும்பான்மை யோராகவும், அவ்வவ் பிரதேசத்துக்குரிய தனிப் பண்பாடுடை யோராகவும் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில் வாழும் மக்களிடையே தமிழர்கள் என்ற ஒருமைப்பாடு இருந்த போதிலும் புவியியல், பேச்சுவழக்கு, சமூக அமைப்பு, சமுதாய மரபுகள் ஆகிய அடிப்படைகளிற் பெரிதும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
சனத்தொகையும் இனப்பிரிவுகளும்
1871 ஆம் ஆண்டு நடைபெற்ற குடிசனக் கணக்கெடுப்பின் போது மட்டக்களப்பு மாவட்ட மக்கள்தொகை 93.120 ஆகவும்?? அவ்வாண்டிலிருந்து ஒரு நூற்ருண்டுகளுக்குப் பின் 1971 இல் எடுக்கப்பட்ட குடிசனமதிப்பீட்டின்போது 258.104 ஆகவும் ?? கணிக்கப்பட்டது. இந்த நூற்றண்டுகளுக்கிடையில் மக்கள் தொகை 177.15 விகிதமாக அதிகரித்துள்ளது. இவர்களுள் 80,58 விகிதமானேர் கிராமத்திலும், 19.39 விகிதமானேர் நகரத்திலும் உறைவோராகக் காணப்படுகின்றனர். ** இப்பிரதேச மக்களது குடியிருப்புகளை நோக்கும்போது மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏருவூர் ஆகியன நகர அமைப்புடையனவாகவும், ஏனைய பகுதிகள்
26. Pathmanathan, S; (1972) P. 119. 27. Census of Ceylon, Batticalca District 1953, Table-2. 28. Census of Ceylon, 1971.
29. மேலது.

மட்டக்களப்பு மாவட்டம் 37
கிராமியக் குடியிருப்புப் பிரதேசங்களாகவும் காணப்படுகின்றன. ஆகையால் மட்டக்களப்பு மாவட்ட மக்களிற் பெரும் பகுதியினர் கிராமத்தில் உறைவதால், இங்கு கிராமிய சமுதாய அமைப்பும், அதனேடு தொடர்புடைய பழக்க வழக்கங்களும், கிராமிய விவசாயமுறைகளும் மற்றுந் தொழில்முறைகளும் நிலைபெற்றுக் காணப்படுகின்றன. அன்றியும் இம்மக்களது வாழ்க்கைமுறை, நாட்டார் பாடல்களின் வழக்காற்றுக்கும் நிலைபேற்றுக்கும் வாய்ப்பாகவும் நிலைக்களஞகவும் அமைந்து காணப்படுகின்றது.
காத்தான்குடி, ஏருவூர் ஆகிய இரு இடங்களிலே முஸ்லீங்கள் பெருந் தொகையினராக வாழ்கின்றனர். இவ்விரு குடியிருப்பு களையும் சூழவுள்ளவை தமிழ்க் கிராமங்களே என்பது குறிப்பிடத் தக்கது. பல்வேறு இனப்பிரிவுகள் இங்குக் காணப்பட்டபோதிலும் இவர்கள் ஒரே தன்மைத்தான சூழலிலும் சுற்ருடலிலும் வாழ் வதால் இவர்களது பண்பாடு ஒன்றையொன்று பாதிப்பது இயல் பாயிற்று.
இம்மாவட்டத்திற் பெரும்பான்மையோராக வாழுந் தமிழ் மக்களையடுத்து முஸ்லீங்கள் இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர். மூன்ருவதாகச் சிங்களவரின் எண்ணிக்கை அமைந்துள்ளது. அதனையடுத்துப் பறங்கியரும்," மலாயரும், ஏனையோரும் இடம் பெறுகின்றனர். 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற குடிசனக்கணிப் பின்படி? இப்பிரதேச மக்களது இனப்பிரிவுகளும் அவர்களது எண்ணிக்கைகளும் பின்வரும் அட்டவணை 1இலே தரப்படுகின்றன.
மொழி
ஒரு மொழிபேசும் மக்கள் வேற்றுமொழி பேசும் இன மக்க ளுடன் இணைந்து வாழும்போது மொழிக்கலப்புஏற்படுதல் தவிர்க்க
30. i. போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஈழத்திற்குடியேறி ஈழப்பெண்களைத் திருமணஞ் செய்து அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் பரம்பரை யினரே ஈழத்திற்பறங்கியர் என அழைக்கப்படுகின்றனர்.
ii. '...... the word Paranki is important, During the Crusades
the French, the Franks, took a prominent part and their name came to stand generally for the westerners. But the peoples who came first in great numbers to India were the Portuguese and these were called the Franks or Paranki or Firangi by the Indians. Therefore wherever the word Paranki occurs one may be sure of the Portuguese influence." Meenakshisundaram, T. P. (1961) P. 138,
31. Census of Ceylon, 1971.

Page 33
38 மட்டக்களப்பு மாவட்ட.
முடியாததாகின்றது. ** இப்பிரதேசத்திலும் சிங்களவர், முஸ் லீங்கள், பறங்கியர் ஆகிய மக்கள் வாழ்வதால், தமிழ்மக்களின் மொழிவழக்கிற் பிறமொழிகளின் பாதிப்பு ஏற்படுதல் இயல் பாயிற்று. மட்டக்களப்புப் பிரதேசம் கண்டிச் சிங்கள மன்னரின்
இனப் பிரிவுகள் எண்ணிக்கை விகிதம்
இலங்கைத் தமிழர் 74736 67.69% இந்தியத் தமிழர் 7925 3.07% இலங்கை முஸ்லீம் 61.188 23.72% இந்திய முஸ்லீம் 577 .23% கரைநாட்டுச் சிங்களவர் 54.67 2.12% கண்டிச் சிங்களவர் 2.25 5815 ۔%, பறங்கியர் 2255 .88% Lpan)ft uri 59 .02% 6J&J) (Buurt rf 82 3%
மொத்தத் தொகை 258 104 100%
அட்டவணை - 1
ஆட்சிக்குட்பட்டிருந்த காலந்தொடக்கமாகத் தமிழ்மக்கள் சிங்களவருடன் சேர்ந்து வாழவேண்டிய பல சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. சிங்களவர் மீன்பிடி, வர்த்தகம் என்பனவற்றின் பொருட்டு இங்கு தமிழமக்கள் வாழும் கிராமங்களில் வந்து குடி யேறலாயினர். அவர்களின் தொடர்பால் அனேக சிங்களச் சொற்கள் காலப்போக்கில் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழில் இடம்பெற்று, அச்சொற்களின் மூலவடிவம் மாருமலே தமிழில்
32. Jespersen, Otto, (1954) P. 208.

மட்டக்களப்பு மாவட்டம் 39
வழங்குகின்றன.** அவ்வாறு வழங்குஞ் சொற்கள் சிலவற்றை மீன்பிடிப் பாடல்களில் இடம்பெற்றுள்ள சிங்களச் சொற் களாலும் அறிந்து கொள்ளலாம் * அதுபோன்றே முஸ்லீம் மக்களின் தொடர்பால் அறபுச் சொற்கள் பல இப்பிரதேசத் தமிழ்மக்களின் பேச்சுவழக்கிற் கலந்து காணப்படுகின்றமையுங் குறிப்பிடத்தக்கது.* இவர்களைவிட, போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆகியோரது தொடர்பினுல் அவர்களது மொழிச் சொற்களும் இப்பிரதேச மொழிவழக்கில் இடம்பெற்றுள்ள மையுஞ் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.3°
33. பின்வருஞ் சொற்களை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
சிங்களம் தமிழ்வழக்கு: பொருள்
(அயின) - அயின = அங்கு, அங்கே
(அமாறு) - அமாறு = ஆபத்து
(கனகாட்டுவ) - கனகாட்டு = தொல்லை
கலவல) - களபுள = குழப்பம்
(கொளபத்த) - கோப்பத்த = فقہ )P3یم (قافق
(கபடாவ) is slf = மடைப்பள்ளி பண்டசாலை
(மங்கொள்ள) - மண்கொள்ளை க கொள்ளையடித்தல்.
34. பி. இ. சொல்லடைவில், தரப்பட்டுள்ள சிங்களச் சொற்களின் அட்டவணை
Lur frá86.
35. பேச்சுவழக்கிலுள்ள அறபுச் சொற்களும் அவற்றின் பொருளுந்
தரப்படுகின்றன. அசறு = பிற்பகல் மூன்றுமணி, அல்லது காலை மூன்றுமணி;
ஈமான் = நம்பிக்கை; கந்தூரி - அன்னதானம்; செய்த்தான் = பசாசு
(சாத்தான்); மகரி = மாலைப்பொழுது; மவுத்து = இறப்பு: ராகத்து = அகவுணர்வு; வலாய் = அநியாயம்,செட்டது, கூடாதது; வறக்கத்து = வறுமை; இச்சொல் அறபுமொழியிற் பெருஞ்செல்வத்தைக் குறிப்பதாகும். ஆணுல் இவர்களது பேச்சுவழக்கில் வறுமையைக் குறித்தல் நோக்கற்பாலது. 36. (அ) போர்த்துக்கேய மொழிச் சொற்கள்
அச்சாறு, அவலாங்கு, அலுகோசு, அலுமாரி, அன்னுசி, கசாது, கதிரை கப்பாத்து, கரத்தை, கருவாடு, கழுசான், கான், கிருதி, குதம், குருசு கொய்யா, கோப்பை, சப்பாத்து,சாவி, சிப்பம், சிமேந்து, தவறணை, தீதாள், தோம்பு, பட்டாசு, பட்டாளம், பாதிரி, பிட்டிசம், பீங்கான், பீப்பா, பேனே, போத்தல் மேசு, மேசை, யன்னல், ரேகுவாங்கு,வாத்து விசுக்கோத்து, விஞகிரி, றவுக்கை, றத்தல், றேந்தை, ருேதை. (ஆ) ஒல்லாந்த மொழிச்சொற்கள்
அறுத்தாப்பல், ஆசு, ஆடத்தன், ஏர், கந்தோர், கலாவரை, கேத்தல் கோப்பி, சக்கடத்தார், திறைசேரி, துட்டு, நொத்தாரிசு, பிசுக்கால், புருே, போச்சி, போஞ்சி, வக்கு, வங்குருேத்து, வாங்கு, வாச்சி, ருக்கை, றித்தன்.

Page 34
40 மட்டக்களப்பு மாவட்ட.
மட்டக்களப்புப் பேச்சு மொழிக்கும் மலையாள மொழிக்கும் ஒலியியல் அடிப்படையிற் சில ஒற்றுமைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் ‘இகர உச்சரிப்பு முக்கியத் துவம் பெறுவது போன்று, இப்பிரதேசப் பேச்சுமொழியில் *உகரம்” “இகர* மாகத்திரிந்து வழங்கக் காணலாம். உதாரண மாக இருக்கின்ருன் என்பது இரிக்கான் எனவும், இருக்கின்றது என்பது இரிக்கி எனவுந்திரிந்து இகர ஓசைமிகுந்து வழங்குவதைக் காட்டலாம். வல்லின ஒலிகள் அண்ணவொலிகளாக மாறுந் தன்மையும் (Palatalization) இவ்விரு மொழிகளிலுங் காணப்படு தலுங் குறிப்பிடத்தக்கது." அன்றியுஞ் சில சொல்வழக்கு களும் இரு மொழிக்கும் பொதுவாகவுங் காணப்படுகின்றன.3°
ஈழத்தைப் பொறுத்தவரையிலே தமிழ்ப்பேச்சுமொழி வழக்கை மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்,° மலைநாடு, வள்ளி, மன்னர் ஆகிய பிரதேசங்களை ஒட்டி வகுக்கலாம் இவற்றுள் யாழ்ப்பாணத் தமிழ்பற்றி ஈழத்தவரும் பிற நாட்டவரும் ஆராய்ந்துள்ளனர்." ஈழத்தின் ஏனைய பேச்சு வழக்குப்பற்றிய
37. உ-ம்: இங்கே>இஞ்சே>இஞ்ச
செய்து > செய்ஞ்சி > செஞ்சி
38. se-lo : et Groot/2 edoLoLors = 9 totoo
эйouопт6йт =தாய்மாமன் ஆய்ச்சி/ ஆச்சி 11 ܒܩITLL மணவாளர் . மணமகன் வாத்தியார் . உபாத்தியாயர் வழுதுணங்காய் - நீண்டகத்தரிக்காய்.
39. Jaffna Tamils in the Northern Province of Ceylon and Batticaloa .Tamils in the Eastern Province of Ceylon are regionally and socially two distinct groups of people among the Tamils of Ceylon. It is no exaggeration that there are certain marked difference in the patterns of social structure and language between the two groups in spite of many other common features. From early times people have recognised these fundamental differences and they often spoke of "Batticaloa Tamils' and "Jaffna Tamils", with a lot of social implications. The Tamils in Ceylon, as different social and regional groups, had been murturing certain
soical and regional feelings of differential status among themselves based on several factors such as their place of origin
in South India, ancestry, caste, religion, nationality (at present Indian versus Ceylon), education, wealth, customs and manners speech habits etc.' Suseendirafajah, S. (1973) P. 172.
40. அவற்றின் விபரங்களை நூல் அட்டவணையிற் காண்க.

மட்டக்களப்பு மாவட்டம் 4.
ஆய்வுகள் மொழிவல்லுநர்களால் விரிவாக இன்னும் மேற் கொள்ளப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தின் பேச்சு வழக்குப்பற்றிச் சில ஆய்வுகள் நடந்துள்ளன.* நாட்டார் பாடல்கள் குறிப்பிட்ட பிரதேச மக்களின் மொழிவழக்கைப் பிரதிபலிப்பனவாகும். இவற்றில் மொழிவல்லுநர்கள் கவனம் எடுத்தால் இப்பிரதேச மக்களின் பேச்சுவழக்கின் தனித்துவம் வெளிக் கொணரப்படலாம்.
JFLDu D
மக்களின் பண்பாட்டு வழக்கைமுறையிற் சமயம் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இப்பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகள் சமயதம்பிக்கைகள் என்பனபற்றி ஆராய்வதற்குத் துணை யாக அவர்களது சமயப்பின்னணிகளையும் அறிந்து கொள்ளுதல் பொருத்தமானது.
ஈழத்தில் மிகப்பழங்காலம் முதலாகச் சைவசமயம் நிலை பெற்று வந்துள்ளது என்பதற்குச் சான்றுகள் காணப்படு கின்றன ** கிழக்கிலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு சிவ வழிபாடும், இராவண்ணுற்கட்டப்பட்ட புராதனமான கோணே சர் ஆலயமும் நிலைத்திருந்தன என்று கூறப்படுகின்றது.* காலத்துக்குக் காலம் தென்னிந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த இந்து மக்களது வழிபாட்டுமுறைகளும் இங்கு நிலைபெற்றுக் காணப்படுகின்றன. மேலும் இப் பிரதேசத்திலே தமிழ்மக்களிடம் கிராமிய தேவதை வழிபாட்டுடன் கூடிய சடங்குகளும் நம்பிக் கைகளும் பெரிதும் வழக்கிலுள்ளன. இவைபற்றிய ஆய்வுக்கு நாட்டார் சமயவழிபாட்டுப் பாடல்கள், கதைகள் சிறந்த சான்றுகளாகும். இந்துக்களைவிட, இங்குவாழும் இஸ்லாமியர், கத்தோலிக்கர், பெளத்தர் ஆகியோரது சமயமும் வழிபாட்டு முறைகளும் வழக்கிற் காணப்படுகின்றன.
ழே தரப்பட்டுள்ள அட்டவணைகள் இப்பிரதேசத்தில் வாழும் மக்களைச் சமய அடிப்படையிற் பகுத்துக் காட்டப்பட் டுள்ளது.**
41. II. Zvelebil, Kamil (1966):
II. Suseendirarajah, S. (1973); 11. விபுலாநந்த அடிகள் (1941). 42. Jeyasekera, U.D. (1969) P. 72; Paul, S.R. (1929) P. 229. 43. Paranavitana, S. (1929) PP. 265-271. 44. Census of Ceylon, 1971.

Page 35
42 மட்டக்களப்பு மாவட்ட.
சமயப்பிரிவினர் மொத்தம் விகிதம்
பெளத்த சமயத்தார் 9,624 373 இந்துக்கள் 167,597 64.93 இஸ்லாமியர் 62,519 24.22 ருேமன் கத்தோலிக்கர் ; 14,958 5.79 ஏனைய கிறிஸ்தவர் 3,558 1.31 எஞ்சியோர் 48 02
மொத்தம் 258,104 100.00
அட்டவணை - 2
கல்வி
ஒரு கிராமத்தின் கல்விநிலையைப்பொறுத்தே அக்கிராமத்தில் நாட்டார் இலக்கியத்தின் பயன்பாடும், தேவையும் அமைந் திருக்கும். கல்வி வளர்ச்சியும் அறிவுவிருத்தியும் காணப்படும் போது அங்கு சமூக வளர்ச்சியும் தொழில்நுட்ப உபயோகமும் இணைந்திருக்கும். அச்சூழ்நிலை நாட்டார் இலக்கியம் வழக்கிறந்து போவதற்கு ஏதுவாகின்றது. இக்கருத்தின் அடிப்படையில் நோக்கும்போது, இம்மாவட்டத்திற் கல்வி வளர்ச்சிகளும் தொழில்நுட்ப வசதிகளும் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி நகர், ஏருவர் நகர், கல்லாறு ஆகிய இடங்களிலேயே அதிகம் காணப்படுகின்றன. இப்பகுதிகள் தவிர்ந்த கிராமப்புறங்களிலே சிறப்பாகப் படுவான்கரைப் பகுதிகளிற் கல்வி வளர்ச்சி மிகக் குறைவாகும். சமூக வளர்ச்சியும், தொழில்நுட்ப உபயோகமும் குறைந்த கிராமப் புறங்களிலுள்ள பழைய தலைமுறையினரிடம் புதிய கல்வி முறைகளின் பாதிப்போ அல்லது நாகரிகத்தாக்கமோ ஏற்படாமையினல் அவர்களிடம் நாட்டார் இலக்கியத்தின் செல்வாக்கு மிகுந்து காணப்படுகின்றது.
இங்கு, 1963 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடிசனக் கணக் கெடுப்பின் போது 56.3 விகிதமானேர் எழுத்தறிவுடையோராகக்

மட்டக்களப்பு மாவட்டம் 43.
காணப்பட்டனர்.** இன்று கிராமப் புறங்களிலும் விரிவான கல்வித்திட்டம் செயற்படுத்தப்படுவது அவற்றின் கல்வி வளர்ச்சி நிலையைக் காட்டுகின்றது. இப்புதிய கல்விமுறைமூலம் கல்வி பெருத பழைய தலைமுறையினரே நாட்டார் பாடல்களின் பாது காவலராக விளங்குகின்றனர்.
தொழில் வசதிகள்
ஒரு பிரதேசத்தின் நில அமைப்புக்கு ஏற்பவே ஆங்கு வாழும் மக்களின் தொழில் வசதிகளும் அமைந்திருக்கும். அதன்படி நோக்கும்போது, விவசாயமே இப்பிரதேச மக்களின் முக்கிய பரம்பரைத் தொழிலாகக் காணப்படுகிறது. இத்தொழிலின் மூலமே இவர்கள் தமது முக்கிய வருமானத்தைப் பெறுகின்றனர். இவர்களது வாழ்க்கைமுறையும், வாழ்க்கைத் தரமும் விவசாயத் துடன் இணைந்தனவாகவே அமைந்துள்ளன. 1969 -1970 இல் இலங்கையிற் கணிக்கப்பட்ட சமூகப் பொருளாதார மதிப்பீட்டின் படி விவசாயத்தில் ஈடுபட்டோரது விகிதம் 50.7 ஆகக் காணப் பட்டது."
இவர்களது பரம்பரைத் தொழில் விவசாயமாக அமைந் தமையால், அதனுடன் தொடர்புடைய நிலமானிய சமுதாய அமைப்பும் (Feudal Society) இங்கு நிலவி வந்துள்ளது. காடழித்து வயல்பெருக்கிப் பெரும் நிலங்களுக்குச் சொந்தமாக வாழ்ந்தோர் *போடியார்’*" என அழைக்கப்பட்டனர். அவரது நிலத்திற் கூலிவேலை செய்யும் “செய்கைக்காரன்” என்போர், போடி யாருக்குக் கட்டுப்பட்டவர்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது பொருளாதார வாழ்க்கை போடியாரை அடியொற்றி யதாகும். தமக்கு வேண்டிய நெல்லையோ பணத்தையோ போடியாரிடம் கடனுகப் பெற்று, அறுவடைக்காலத்திற் கட னழிப்பர்.
போடியாரது வயலில் வேலை செய்யும் செய்கைக்காரனுக்குப் பொருத்த அடிப்படையிலேதான் கூலி கொடுக்கப்படும். விளைவில் நாலில் ஒரு பங்குதான் விவசாயிக்குக் கிடைக்கிறது. மிகுதி போடியாருக்குரியது. அவன் பெற்ற காற்பங்கில், அவன் போடியாரிடம் பெற்ற கடனைத் திருப்பிக்கொடுக்கச் சிறு பகுதியே விவசாயிக்குக் கிடைக்கிறது. எனவே விவசாயி மீண்டும்
45. Census of Population-1963. Batticaloa District, Table-18. 46. Preliminary report om Socio-Economic survey of Ceylon, 1969.
1970. P. VIII
47. பி. இ. சொல்லடைவு பார்க்க.

Page 36
44 மட்டக்களப்பு மாவட்ட.
போடியாரிடம் கடன்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப் படுகின்றன். இத்தகைய பொருளாதார நிலமானிய அமைப்புமுறை விவசாயிகளின் பொருளாதார வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி வந்துள்ளது. ஆயினும் இன்றைய நிலையில் அரசாங்கம் அளிக்கும் கடன்வசதிகளாலும், அரசாங்கக் காணிச் சீர்திருத்த உச்சவரம்புச் சட்டங்களாலும் ஏழை விவசாயிகளின் பொருளாதாரநிலை சீரடைந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத் தககது .
விவசாயத்துடன் மீன்பிடி, மந்தை வளர்ப்பு, காட்டுத் தொழில் ஆகியனவற்றிற்கும் இப்பிரதேசம் வாய்ப்பாக அமைந் துள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கெல்லையாகப் பரந்து கிடக்கும் வங்காளவிரிகுடாக்கடல், நாட்டின் உட்பகுதியிலுள்ள மட்டக்களப்புவாவி, குளங்கள், ஆறுகள் என்பன மீன்பிடித் தொழிலுக்கு வசதியாக உள்ளன. இத்தொழிலும் பெரும் பான்மையோரது பொருளாதார வாழ்க்கைக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
மட்டக்களப்புக் கிராமியப் பொருளாதார அமைப்பில் மந்தை வளர்ப்பும் முக்கியத்துவம் பெறுகின்றது. சிறப்பாகப் படுவான்கரைப் பகுதியில்48 மந்தை வளர்ப்போர் தொகை அதிகமாகும். இவர்கள் மாடுகள் தரும் பயன்களை விற்றும், உழவு, வயல்மிதிப்பு, சூடுமிதிப்பு, வண்டில் இழுத்தல் ஆகியன வற்றுக்கு மாடுகளைக் கொடுத்துக் கூலிபெற்றும் பணம்பெறுவர். பெரும்பாலும் பொருத்த அடிப்படையிலே மாடுகளுக்குக் கூலி பெறுதல் வழக்கம். நாட்கூலிக்குக் கொடுக்கும் முறையுமுண்டு. இதனை அத்தைக்கூலி** என்பர்.
காட்டுவளங்களைப் பயன்படுத்தி அத்தொழிலிலும் பலர் ஈடுபட்டுள்ளனர். இவற்றேடு கைத்தறி நெசவு, பாய்இழைத்தல், கிடுகு இழைத்தல், தும்புவேலை முதலான குடிசைக் கைத்தொழில் களும் இப்பிரதேச மக்களின் சில குடும்பங்களின் பொருளாதார வாழக்கைக்கு உறுதுணையாக அமைகின்றன. இன்று அரசாங்க உத்தியோகமும், தனியார் நிறுவன உத்தியோகமும் பெறும்
48. நூலுள் பார்க்க. 49. அற்றை +நாள் + கூலி-அற்றைக்கூலி, அத்தைக்கூலி என மருவி
வழங்குகின்றது.
“அற்றைத் திங்கள்."புறம் பாடல் 112 வரி 1, “அற்றைநாளே. . ’ சீவகசிந்தாமணி 213 ஆம் பாடல்.

மட்டக்களப்பு மாவட்டம் 45
நோக்குடன் இளந்தலைமுறையினர் பெருந்தொகையினராகக் கல்வி கற்று வருகின்றனர்.
விவசாயம், மந்தைவளர்ப்பு, மீன்பிடி முதலிய தொழில்கள் இப்பிரதேச மக்களின் பரம்பரைத் தொழில்களாகவும் சமூக பொருளாதார நடவடிக்கைகளில் முக்கிய இடம்பெறுவனவாக வும் அமைவதால், அத்தொழில் முறைகள், அவற்றுடன் தொடர் புடைய சடங்குகள், நம்பிக்கைகள் என்பனபற்றி ஆராய்வதற்கும் அத்தொழில்களுடன் தொடர்புடைய பாடல்கள் துணையாக அமைகின்றன.

Page 37
இயல் II நாட்டார்பாடல் வகைகளும் சிறப்பியல்புகளும்
நாட்டார் பாடல்கள்
வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் அவற்றினல் ஏற்படும் அனுபவங் களையும் உணர்ச்சிகளையும் கல்வியறிவில்லாத பாமரமக்கள் தமக்கு இயற்கையாக அமைந்த திறமையாலும், பயிற்சி யாலும், மரபுவழிப்பட்ட இசையமைப்புகளுடன் பாடுவர். அத்தகைய பழமை வாய்ந்த இசைமரபுப்பாடல்களே நாட்டார் பாடல்களென வழங்கப்படுபவை. அவை பாமரமக்களாலே தொழில் புரியும் வேளைகளிலும் பொழுது போக்கு நேரங்களிலும், சடங்குகளிலும் கேளிக்கைகளிலும் பாடப்பட்டு, வாய்மொழி மரபிற் பரம்பரை பரம்பரையாகப் பேணப்பட்டு வருவனவாகும்.
தனிமனிதனின் அல்லது சமூகத்தினரின் அனுபவங்களையும், உணர்ச்சிகளையும் எவ்வித தடையுமின்றி வெளிப்படுத்துவன வாகவும், குறிப்பிட்ட ஓர் இன மக்களின் அல்லது பிரதேசத் தினரின் பண்பாட்டுக் கோலங்களைப் பிரதிபலிப்பனவாகவும் அவை இலங்குகின்றன. கடினமான இசை நுணுக்கங்களற்ற, எளிதான ஒசை அமைப்பினைப் பின்பற்றிப் பாடப்படுதல் அவற்றின் சிறப்பியல்புகளில் ஒன்ருகும். பாடல்களின் ஒசை எளிமை பாடுவோரையும் கேட்போரையும் ஒருங்கே வசப் படுத்துவதோடு, பாடற் பொருளமைப்பையும் எளிதில் விளங்கிக் கொள்ளத் துணைசெய்கிறது. அப்பாடல்கள் நிகழ்ச்சி களின் அல்லது நம்பிக்கைகளின் எதிர்விளைவாகவும் மனித தேவையின்நிமித்தம் ஏற்படும் உணர்ச்சிகளின் வெளிப் பாடாகவும் அமைவதால், ஆற்றலும் உயிர்த்துடிப்புங் கொண்டு விளங்குகின்றன.
1 Bowra, C .M. (1962) P. 88.

நாட்டார்பாடல். 47
நாட்டார்பாடல் என்னும் வழக்கு
நாட்டார்பாடல் என்னும் வழக்கைத் தேர்ந்தமைக்குரிய காரணங்களை முதலிற் குறிப்பிடுதல் தகும். இதுவரை காலமும் இத்துறையில் ஈடுபட்டு உழைத்த தமிழ் அறிஞர்கள்பொருட்டுப் பொருத்த முற அமையத்தக்கதொரு சொல்லாட்சியின வழக்கிற் கொண்டு அதனை நிலைபெறச் செய்யவில்லை. வெளி வந்த நாட்டார்பாடல் நூல்கள், பாடல்கள்பற்றிய கட்டுரைகள் யாவற்றிலும் இப்பாடல்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சொல்லாட்சிகள் ஈண்டுத் தொகுத்துத் தரப்படுகின்றன
நாடோடிப்பாடல், நாடோடிப்பாட்டு, நாடோடி இலக்கியம், நாட்டுப்பாடல், நாட்டுப்புறப்பாடல், நாட்டுப்புற இலக்கியம், நாட்டார்பாடல், பாமரர் பாடல், பாமரர் பாட்டு, வாய்மொழி, வாய்மொழிப்பாடல், வாய்மொழி இலக்கியம், கிராமியப் பாடல், கிராமியக் கவிகள், கிராமிய இலக்கியம், இயற்கைப்பாட்டு, காற்றில் மிதந்த கவிதை, ஏட்டில் எழுதாக் கவிதை, பொதுஜனக் கவிதை, பொதுஜன இலக்கியம், மக்கள் இலக்கியம், பழந்தமிழ்ச் செல்வம், புதையுண்ட இலக்கியக் கருவூலம், கர்ணபாரம்பரியப் பாட்டுக்கள் முதலியனவாம்.
இவ்வாறன பல்வேறுபட்ட சொல்லாட்சிகள் தமிழ் மொழி யின் மொழி வளத்தைக் குறித்துக்காட்டிய போதிலும், இப் பாடல்களுக்குரிய சிறப்புப்பெயர் எது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
கி.வா. ஜகந்நாதன் தமது நூல்களிலும் கட்டுரைகளிலும் மேற்குறிப்பிட்ட சொல்லாட்சிகளிற் பெரும்பாலானவற்றினைக் கையாண்டுள்ளார். ஆயினும் 'நாடோடிப்பாடல்’, ‘நாடோடி இலக்கியம்’ என்ற இரு சொல்லாட்சிகளுக்கும் அவர் முக்கியத் துவம் கொடுத்துள்ளார்.? நாடோடி என்ற சொல்லாட்சி இங்குக்க வணிக்கவேண்டியதாகும். நாடோடி என்பதில் நாட்டுக்கு நாடு அலைபவன், நாடற்றவன், ஊரற்றவன், தேசீயம், பண்பாடு ஆகியனவற்றுக்குப் புறம்பானவன் என்ற கருத்துகள் எதிரொலிக் கின்றன. இதன் காரணமாக நாடோடிப்பாடல் என்றதும்
2. ஜகந்நாதன், கி.வா. (1944)

Page 38
A8 மட்டக்களப்பு மாவட்ட.
இன்று ஒரு சிலரிடையே அப்பாடல்கள் மீது ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையும், வெறுப்புணர்ச்சியும் தோன்றக் காணலாம். அன்றியும் நாடோடி என்பது கிராமிய மக்களைக் குறிப்பிடாது, நாடோடி மக்களையே (Gypies) சுட்டுவதால், அது அம்மக்களது பாடலை மட்டுமே குறிக்கின்றது என்ற பொருளுந்தொனிக்கிறது. நாடோடி மக்களிடமும் இத்தகைய பாடல்கள் வழக்கில் உள்ள மையும் நோக்கற்பாலது.
நாடோடிப்பாடல் என்ற சொல்லாட்சியை நோக்கும்போது, *நாடோடி’’ என்பது பாடலுக்கு அடையாக அமைந்து, ஓரிடத்திலே தோன்றிய பாடல்கள் வாய்மொழியாக நாட்டுக்கு நாடு பரவி வழங்குதல், என்ற பொருளையுந் தருகின்றது. இப் பாடல்கள் இடத்திற்கிடம் பரவும் இயல்புடையனவாயினும் அந்த ஒரு பண்பின மட்டும் கொண்டு நாடோடிப்பாடல் என வழங்குதல், அத்துணைப் பொருத்தமாகத் தோன்றவில்லை. நாட்டார் இலக்கியம் நாட்டுக்கு நாடு பரவுந் தன்மை கொண்ட தாயினும், குறிப்பிட்ட ஒரு நாட்டிலுள்ள நாட்டார் இலக்கியங் களையும், பரவல் மூலம் வந்து சேர்ந்த பாடல்களையும் விகிதா சாரப்படுத்தும் போது நாடோடியாக வந்த பாடல்கள் மிகக் குறைவாகவே காணப்படும் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. *நாடோடிப்பாடல் என்ற பெயர் இன்று நம்மிடையே அதிகமாக வழங்கி வருகிறது . மற்யெல்லாப் பெயர்களையும் விட வாய்மொழிப்பாடல் என்ற பெயரே இவ்வகைப் பாடல்களுக்கு மிக்க பொருத்தமுடையது“ எனக் கூறும் மு. அருஞசலம் தமது நூலுக்குக் காற்றில் மிதந்த கவிதை” எனப் பெயரிட்டிருத்தல் நோக்கற்பாலது.
*நாட்டுப்பாடல்’ என்ற சொல்லாட்சியினைப் பொதுவாக இத்துறையில் ஈடுபாடுகொண்ட யாவரும் பயன்படுத்தியுள்ள னர். இச்சொல்லாட்சியிற் பொருள் மயக்கம் காணப்படுகிறது. *நாடு’ என்பது பல்வேறுபட்ட பண்பாடு நிலைபெற்ற பல இன மக்கள் வாழும் நிலப்பரப்பை உட்கொண்ட கிராமம், மாகாணம், நகரம் முதலிய பல உறுப்புகளே உள்ளடக்கிய பெரிய நிலப் பரப்பை அது குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கியங்களில் 'நாடு’, *நாடன்’ என்ற சொல்லாட்சிகள் வருமிடங்களும் நோக்கற் பாலன. எனவே நாடு ஏன்பது நகரங்களையும் சேர்த்த நிலப் பரப்பைச் சுட்டுவதால், நாட்டுப்பாடல் என்பது நகரத்திற்கு முரியதாகின்றது. நாகரிக மோகத்தில் வாழும் நகரமக்களிடம்
3. அருளுசலம், மு. (1943) 1.دة تنورة، وك பக், 1. 4. மேலது.

நாட்டார்பாடல். 49
கிராமிய மக்களின் பரம்பரைச் சொத்தாகிய நாட்டார் பாடல் கள் வழக்கில் இருக்கமுடியா. நகரவாழ்க்கை முறையில் தாட்டார் பாடல்களின் தேவையோ, பயன்பாடோ இடம் பெறு வதில்லை. எனவே இந்நோக்கிலும் நாட்டுப்பாடல் என்ற சொல்லாட்சியின் பொருத்தமின்மை தெளிவாகிறது.
நாட்டுப்பாடல் என்னும்போது தேசியப்பாடல் (National song, National anthem) 6Tairajib Court (D565 iO5(TGohaji Spgil. இத்தகைய கருத்துச் சிக்கல்களைப் போக்கும் வகையில் *நாட்டார்பாடல்” என்ற சொல்லாட்சி கையாளப்பட்டுள்ளது.
*நாட்டார்” என்னும்போது பாடற் கர்த்தாக்களாகிய கிராமிய மக்களையே (நாட்டாரை)? அது குறிப்பிடுகிறது. பாடற் கர்த்தாவின் பெயரில் இப்பாடல்கள் வழங்குவது காரண காரியத் தொடர்புடையதாக அமைதல் மட்டுமன்றி, நேர் பொருளும், பொருள்நயமுங் கொண்ட வழக்காகும். இப்பாடல் களை ஆங்கிலத்தில் Folk songs" என வழங்குவர். Folk என்னும் ஆங்கிலப் பதம் மக்கள், நாடு, நாட்டார் என்ற பொருள் தரும்." எனவே ஆங்கிலத்தில் Folk Song என வழங்குவது போன்று, தமிழிலும் நாட்டார் பாடல் என்ற வழக்குப் பொருந்து வதாகும். நாட்டார் பாடல் என்பது (நாட்டாரின் பாடல்) வேற்றுமைத் தொகையாகும்.
நாட்டுப்பாடல் என்ற சொல்லாட்சி அஃறிணையில் அமைந் துள்ளது. “ஆர்’ விகுதி சேர்த்து (நாடு + ஆர்) நாட்டார் என வழங்கும்போது அஃது உயர்திணையில் அமைவதாலும்)
5. நாட்டான் என்பது கிராமிய வழக்கில் அஃது கிராமிய மக்களையே குறிப்பிடு தல் காண்க. பட்டிக்காடு என்று இழிபொருளாகச் சுட்டும்போது நாட்டான் என்ற சொல்லைப் பயன்படுத்துதலுமுண்டு.
6. I. "Folk Song' is a scientific term of English derivation. It
was first introduced into scientific terminology in 1846, by the English scholar William Thomas. Literally translated “Folklore' signifies the wisdom of the people, the peoples, knowledge. This term was quite rapidly adopted by scholars in other countries, and soon became an international one.' Soklov. Y.M., (1950) P. 3.
II. "This primitive spontaneous music has been called “Folksong”~
a rather awkward translation of the German word 'Volklied' Encyclopaedia Britannica. Vol. 9, P. 442.
7. English-Tamil Dicionary (1965) P; 401
t-4

Page 39
50 மட்டக்களப்பு மாவட்ட.
நாட்டார் பாடல் என்ற வழக்குச் சிறப்புப் பெறுகிறது. இக் காரணங்களைக் கொண்டே இவ்வாய்வாளர் இச்சொல் லாட்சியைக் கையாண்டுள்ளார். மு. இராமலிங்கமே இவ் வழக்கை முதன் முதலாக இத்துறையிற் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடற்பாலது."
நாட்டார் பாடல்களை வகைப்படுத்தும் முறை
நாட்டார் இலக்கியத்தைப் பாடல்கள், கதைகள், விடுகதை கள், (riddles), பழமொழிகள் என நான்காக வகுத்துக் கொள்ளலாம். அவற்றைத் தனித்தனியே பொருள் அல்லது வடிவம் என்ற அடிப்படையில் மேலும்பல உபபிரிவுகளாகப் பகுத்து ஆராயலாம். மேற்கூறிய நான்கு வகைகளில் நாட்டார் கதைகளே ஆய்வாளர் பலரின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்து, ஆய்வியலடிப்படையிற் பல்வேறு கோணங்களில் ஆராயப் பட்டுள்ளன." அத்தகைய விரிவான பல்வேறுபட்ட ஆய்வுக் கோணங்களில் இற்றைவரையும் நாட்டார் பாடல்கள் ஆராயப் படவில்லை.
கடந்த இருநூற்ருண்டுகளாக அனைத்துலக நாடுகளிலும்
நாட்டார் பாடல்களைச் சேகரிக்கும் முயற்சிகளும் ஆய்வு நடவடிக் கைகளும்' நடைபெற்று வந்தபோதிலும் அனைத்துலக நாடு களின் நாட்டார் இலக்கியத்திற்கும் பொருந்தக் கூடியவகையில் இப்பர்டல்கள் வகைப்படுத்தப்படவில்லை. ஆகையால் அனைத் துலக நாடுகளின் நாட்டார் பாடல்களுக்கும் இணங்கும் வகையிற் பாடல்களை வகுத்தல் இனிமேலாயினும் ஆய்வாளர்களின் கவனத்தைக் கவர்வதாக.
உலக இலக்கியங்களைப்பற்றி ஆராய்ந்த சாட்விக் தம்பதிகள் 11 பாடல்களை, அவற்றின் பொருள், வடிவம், தனியியல்புகள் என்னும் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளனர். பொட்கின் (B.A. Botkin) என்பவர் நாட்டார் பாடல்களை இசைப்பாடல்கள் கதைப்பாடல்கள், நாடகப்பாடல்கள் என மூன்ருக வகுத் துள்ளார். 12 அவர் அம் மூன்று பிரிவுகளில் வரும் உபபிரிவுகள் எவை என்பதை வகுத்துக் காட்டவில்லை.
8. I. "நாட்டார் நகை செய்ய.” திருவாசகம், திருவம்மான ஆறம்பாடலி
லும் நாட்டார் என்ற சொல்லாட்சி வருதல் காண்க. 11. இராமலிங்கம், மு. (1961) 9. Aarne, antti (1928); Thompson, Stith, (1960), (1946). 10. இதுபற்றி நூலின் 8 ஆம் பக்கத்தில் ஆராயப்பட்டுள்ளது. 11. Chadwick, H. M. and Chadwick, N.K. (1968) " Vol. III P. XVI.
12. Coller's Encyclopaedia. Vol. 7, (1961) P. 614

நாட்டார்பாடல். 6
பாடுவோரின் இயல்புகளைக் கொண்டும் நாட்டார் பாடல் களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
(1) ஆண்கள் பாடுபவை.
(2) பெண்கள் பாடுபவை.
(3) இருபாலாருஞ் சேர்ந்து பாடுபவை.
இவ்வாருகப் பாடுவோரின் பாடலையொட்டிப் பாடல்களைப் பகுப்பது ஆய்வுக்குப் பொருந்துவதன்று. வயற்களத்திலே அரிவி வெட்டும்போது ஆணும் பெண்ணும் சேர்ந்து பாடும் பாவனையில் ஆண்கள் பெண் கூற்றுப்பாடல்களைப் பாடுவதுண்டு. அது போன்றே நெல்குற்றுதல், பாய் இழைத்தல் முதலிய வேலைகளைச் செய்யும்போது பெண்களும் ஆண்கூற்ருக வரும் பாடல்களைப் பாடும் சந்தர்ப்பங்களுமுள. இவ்வாறு இருபாலாரும் மாறிப்பாடுந் தன்மை கள ஆய்வின்போது அவதானிக்கப்பட்டது. எனவே இப்பாடல்கள் பயன்படும்முறையில் நோக்கும்போது மேற்குறிப் பிட்ட பால் அடிப்படைப் பகுப்புமுறை பொருந்துமாறில்லை.
சிலர் நிலப்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டும் நாட்டார் பாடல்களைப் பகுத்துள்ளனர். இப்பகுப்புமுறை தெளிவான கோட்பாடுகளை ஒட்டியதன்று. தாலாட்டு, ஒப்பாரி, காதற் பாடல், தொழிற்பாடல் முதலியன உலகிற் பெரும்பாலான பகுதிகளிலும் மாற்றங்கள் சிலவற்றுடன் உளவாதலால் இப் பகுப்பு முறையும் தக்கதன்று.*
மக்கள் மரபியலாளர் நாட்டார் பாடல்களை ஆதாரமாகக் கொள்ளும்போது, அவற்றை வகைப்படுத்தி ஆய்வு மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்." அவ்வாறு நாட்டார் பாடல்களை வகைப்படுத்துவதற்கு βρ(5 கோட்பாட்டை அமைத்துக் கொள்ளுதல் அவசியமாகின்றது. பாடல்களை வகைப்படுத்துவதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை நடாத்தவும் அவற்றை வருணிக்கவும், மாருத ஒழுங்கு விதிகளைப் பரந்த விடயங்களில் மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. 16
13. பி.இ. தொ.பா. அ. வெ. பாடல். 14. Vanamamalai, N. (1969) P. 5 15. Thompson, Stith, (Ed.) (1953) P. 276.
I6. I. ''The fundamental reason for classification, is that Science is invariably concerned with discovering and describing uniformities in large numbers of phenomena'. Lundberg, G. A. (1968) P. I04.

Page 40
s: மட்டக்களப்பு மாவட்ட. அனைத்துலக நாடுகளிலுமுள்ள நாட்டார் பாடல்கள் யாவும் கதைப் பாடல்கள் (Narrative), இசைப்பாடல்கள் (Lyrics) என இரு பெரும்பிரிவில் அடங்கும். கதையை மையமாகக் கொண்டு கதைப்பாடல்கள் அமைய, இசைப்பாடல்கள், காதல், இறப்பு முதலியவற்றினல் ஏற்படும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு விளங்குவன. இசைப்பாடல்களிலே தொழிற்களப் பின்னணிகளும், வருணனைகளும் அமைந்து காணப்படும். உணர்ச்சி வெளிப்பாடுகளையே மையமாகக் கொண்டு இசைப் பாடல்கள் அமைந்திருப்பதால் அவற்றை வகைப்படுத்துவ தென்பது இலகுவான காரியமன்று எனவுங் கூறப்படுகின்றது." கள ஆய்வின் மூலம் கிடைத்த பாடல்களை இதிகாச புராண வரலாற்றுடன் தொடர்புடைய கதைப் பாடல்களாகவும் இசைப் பாடல்களாகவும் வகைப்படுத்தி நோக்கக்கூடியனவாக இருந்தன. வடிவ அமைப்பைக் கொண்டு அவ்வாறு பொதுப்பட இரண்டாக வகை செய்யினும் நாட்டார் பாடல்களின் பயன்பாட்டினை ஆராய்ந்து நிறுவுவதற்கு இப்பகுப்பு முறையில் மேலும் ஆய்வு செய்யவேண்டியுள்ளது.
*பண்ணத்தி' என நாட்டார் பாடல்களைக் குறிப்பிடும் தொல்காப்பியர் அவற்றின் வகைகள் பற்றியும் கூறுகின்ருர். * சாமிநாதஐயர் (1927 இல்) பண்டைத் தமிழரிடம் ஐம்பத்தியாறு வகையான நாட்டார் பாடல்கள் இருந்ததாகக் குறிப்பிட்டு அவ் வகைகளின் பெயர்களைத் தந்துள்ளார்." அவற்றுட் சில சங்க இலக்கியங்களிலும் தொல்காப்பியத்திலும் காணப்படுவன. அவர் குறிப்பிடும் சில பாடல் வகைகளின் பொருள்மரபு, இசை ஒழுங்கு என்பனபற்றி இன்று கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு யாதும் கூறுமாறில்லை.
அடுத்ததாக, ஜகந்நாதன் (1958) நாட்டார் பாடல்களைத் தெம்மாங்கு, தங்கரத்தினமே, ராஜாத்தி, ஆண்பெண்
Ii. " 'lt is of course, clear that the main purpose of the classification of traditional narrative. whether. by type or motif is to furnish an exact style of reference whether it be for analytical study or for the making of accurate inventories of large bodies of materials.'
Thompson, Stith- (ed.) (1946) P. 429.
7. Coffin, T.P.- and Hennig Cohen, (eds) (1966) PP. 47-48. 8. தொல், செய்யுளியல் சூத். 173; ஜகந்நாதன் கி, வா, (1958) பக். 8.11 19. சாமிநாதஐயர், உ.வே. (1957) பக். 45.46,

நாட்டார்பாடல 53 சம்பாஷணை, தொழிலாளர் பாடல், கள்ளர் பாடல், குடும்பம், தாலாட்டு, சிறுவர் உலகம், புலம்பல், கும்மி, தெய்வம், பல கதம்பம் என்னும் ஒழுங்கில் பதின்மூன்ருக வகைப்படுத்தி யுள்ளார்." அப்பகுப்பு முறையிலும் அடிப்படையான ஒருமைப் பாடு எதுவும் காணப்படவில்லை. மேற்குறிப்பிட்ட 'ஆண் பெண் சம்பாஷணைப் பகுதியிலிருந்து ‘புலம்பல்" வரையுள்ள ஏழு பிரிவு களும் பொருள் அடிப்படையிலும், தெம்மாங்கும் கும்மியும் வடிவ அடிப்படையிலும், தங்கரத்தினமே, ராஜாத்தி என்னும் இருவகைகளும் பாடல் முடிவுறும் சொல்லைக்கொண்டும் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் அடங்காத பாடல்களை ஈற்றிலே பலகதம்ப்ம் எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாருக இவர் வகைப் படுத்தியுள்ள முறையிலே தனிக்கோட்பாடெதுவும் பின்பற்றப் படவில்லை.
நா. வானமாமலை (1969) மனித வாழ்க்கையைப் பின்னணி யாகக் கொண்டு நாட்டார் பாடல்களைப் பிறப்பு தாலாட்டுப் பாடல், குழந்தைப் பருவ விளையாட்டுப் பாடல், காதற் பாடல், தொழிற்பாடல், சமூகப்பிரச்சி%ன திருமண வாழ்க்கைப் பாடல், ஒப்பாரிப்பாடல், வழிபாட்டுப் பாடல் என ஏழாக வகுத்துள்ளார். இவரது வகைப்படுத்தும் முறையில் ஒருமைப் பாடு காணப்பட்டபோதிலும் ஐந்தாவது வகையாகிய சமூகப் பிரச்சினை திருமணவாழ்க்கைப் பாடல்கள் என்ற பிரிவு ஆய்வுக் குரியது. தாலாட்டுப் பாடல், தொழிற்பாடல், காதற்பாடல் முதலியனவற்றிலும் சமூகப் பிரச்சினைகளின் எதிரொலிப்பைக் காணக்கூடியதாக இருப்பதால் இவ்வாறு ஐந்தாம் பிரிவைத் தனியாக விதந்து கூறியிருப்பது பொருந்துவதன்று.
கே பி.எஸ். ஹமீத் (1961) பாடல்களின் இசையமைப்பையும் யாப்பையும் அடிப்படையாகக் கொண்டு நாட்டார் பாடல்களை இசைப்பாடலாகவும், கதைப்பாடலாகவும், நடனம், கூத்து ஆகியவற்றுடன் தொடர்புடைய பாடலாகவும் மூன்ருகப் பிரித்துள்ளார். அவர் மேலும், அவற்றுக்குக் கொடுக்கும் உதாரணப்பாடல் வகைகளிலும் தாமே முரண்படுகின்ருர், கும்மி, கரகம் என்னும் பாடல்களை முதற் பிரிவிலும், மூன்றும் பிரிவிலும் கொடுத்துள்ளார்.? இவ்வாறு ஹமீத்தின் வகைப் படுத்தும் முறையிலும் கோட்பாட்டு அடிப்படையில் ஒருமைப் பாடு காணப்படவில்லை. நாட்டார் பாடல்களில் ஆய்வு மேற் கொண்டு, அவற்றிலே தாலாட்டு, ஒப்பாரி ஆகிய இருவகை
20. ஜகந்நாதன் கி. வா. (1958) பக். 32-65. 21. Hameed, K.P.S. (1961 ) PP. 10-11.

Page 41
54 மட்டக்களப்பு மாவட்ட.
களைப் பற்றி ஆய்வு செய்த பா. ரா. சுப்பிரமணியம் இப் பாடல்கள் யாவற்றையும் வகைப் படுத்திக் காட்டவில்லை.* இப்பாடல்களை வகைப்படுத்திப் பொதுக் கோட்பாடுகளை வகுப் பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.?9 அன்ரி அரனே (1928), ஸ்ரித் தொம்ஸன் (1960) முதலியோர் நாட்டார் இலக்கியங்களை வகைப்படுத்தும் போது பொருளமைப்பையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர்* என்பது ஈண்டு நோக்கற்பாலது.
நாட்டார் இலக்கிய வகைகளிற் பாடல்கள் மனித வாழ்க் கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் இன்றியமையாத முறையிற் Hன் படுகின்றன.* அத்தகைய பயன்பாட்டின் அடிப்படை யிலேதான் பாடல்களின் வளர்ச்சியும் நிலைபேறும் அமைந் துள்ளன. எனவே நாட்டார்பாடல் ஆய்வாளர் அப்பாடல்கள் பயன்படும் முறையினை ஆராய்ந்து அறிய வேண்டியது இன்றி யமையாததாகின்றது. இதுவரை காலமும் நாட்டார் பாடல்களே வகைப்படுத்தியோர், அவை பயன்படும்முறைகளைக் கருத்திற் கொள்ளாது பொருள், வடிவம், இசைமுறை முதலியன வற்றையே அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தியமையால் அவர்களது பகுப்புமுறையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இக்குறைபாடுகளை நிவிர்த்தி செய்யும்வகையில் இவ்வாய்வாளர், பாடல்களின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பாடல்களைப் பின்வருமாறு வகைப்படுத்துகின்ருர்,
பகுப்புமுறை வருமாறு :
1. தாலாட்டுப் பாடல்கள்.
சிறுவர் விளையாட்டுப் பாடல்கள். தொழிற் பாடல்கள். காதற் பாடல்கள். வழிபாட்டுப் பாடல்கள்.
கதை - கூத்துப்பாடல்கள். 7. ஒப்பாரிப் பாடல்கள். மேற்குறிப்பிட்டுள்ள ஒழுங்குமுறையின்படி இவ்வேழுவகைப் பாடல்களும் மக்களது பிறப்பு முதல் இறப்புவரையும் வாழ்க்கை
22. Subramaniam, P. R. (1969) 23. The Encyclopaedia Americana, Vol. XI, P. 422a. 24. William, Hugh Janson, (1957) PP. 111-112. 25. இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பாடல்களின் பயன்பாட்டு முறைகள்
பற்றி நூலின் ஆரும் இயலிற் காண்க.

நாட்டார்பாடல். 55
நிகழ்ச்சிகளுடனும், சடங்கு சம்பிரதாயங்களுடனும், பொழுது போக்குகள், ஆடல்கள் என்பவற்றுடனும் சந்தர்ப்பம் நோக்கிப் பயன்படுவனவாகும். இப்பாடல்களினூடே மக்களது ல்வேறு பட்ட உணர்ச்சிகள் இழையோடிக் கொண்டிருப்பதை அவற்றைங் படிப்போர் அவதானிக்கலாம்.
ஏழுவகைகளின் விளக்கம்
குழந்தை பிறந்து, வளர்ந்து, ஒடிவி%ளயாடும் பருவம் வரையும் தாய்மார் குழந்தையின் பொருட்டுப் பாடுகின்ற பாடல்கள் அனைத்தும் குழந்தையை அரவணைத்து, அன்பு காட்டித் துயிலூட்டும் தன்மைவாய்ந்தனவே. அவ்வாறு பயன் படும் ஒருமைப்பாட்டின் அடிப்படையில் அப்பாடல்கள் அனத்தும் தாலாட்டுப் பாடல்கள் என வகைப்படுத்தப் பட்டுள்ளன. 28
ஏறக்குறைய ஐந்து வயதிற்கும் பத்து வயதிற்கும் இடைப் பட்ட சிருர்கள் ஒடியும் ஆடியும் கூடியிருந்தும் பாடும் வகையிற் பயன்படுகின்ற சகல பாடல்களும் சிறுவர் விளயாட்டுப் பாடல் கள் என்ற பிரிவிற் சேர்க்கப்பட்டுள்ளன. மட்டக்களப்புக் கிராமப்புறங்களில் நவீன விளையாட்டு முறைகள் அதிகம் இடம் பெருமையினற், கிராமிய விளையாட்டு முறைகளும் அவற்றுடன் தொடர்புடைய ப ா ட ல் களும் இங்கு பெருவழக்காகக் காணப்படுகின்றன. இவ்விளையாட்டு முறைகள் பற்றியும், அவற்றுடன் தொடர்புடைய பாடல் பற்றியும் தனி ஒருவர் ஆராயத்தக்க அளவுக்கு இதுபற்றிய விடயங்கள் பரந்து காணப்படுகின்றன. உதாரணமாகக் கிட்டிப்புள் விளையாட்டின் போது கிட்டிப்பாடல்களைப் பாடுவர். அதுபோன்றே ஊஞ்சல் விளையாட்டின்போது ஊஞ்சற்பாடல்களைப்பாடுவர். இப்பாடல் கள் பொதுவாக நகைச்சுவை மிக்கனவாகவும், அதே வேளையிற் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுவனவாகவும் அமைதல் குறிப்பிடத்தக்கது இவ்விளையாட்டுகளை வீட்டிலிருந்து விளையாடும் விளையாட்டுகளாகவும் (Indoor Games), வீட்டுக்கு வெளியே விளையாடும் விளையாட்டுகளாகவும் (Outdoor Games) வகைப்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளலாம். இத்தகைய விளையாட்டுகள் பற்றியும் அவற்றுடன் தொடர்புடைய பாடல்கள் பற்றியும் மேல்நாடுகளில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளமை காண்க ?"
26. தாலாட்டுப் பாடல்கள் பற்றிய முழுவிபரங்களையும் நூலின் மூன்றம்,
ஆரும் இயல்களிற் காண்க. 27. I ona and Opic Peter, (Eds) (1966)

Page 42
56 மட்டக்களப்பு மாவட்ட"
மனிதன் தொழிற்படும்போது தொழிற்களங்களிலே அவனற் பாடப்படுகின்ற பாடல்கள் யாவும் தொழிற்பாடல்கள் என்ற பிரிவில் அடங்கும். மரபு வழிப்பட்ட கிராமியத் தொழில்முறை களுடன் இணைந்தனவாகவே இப்பாடல்கள் காணப்படும்.** வயற் வேலைகளுடனும், மீன்பிடித்தொழிலுடனும், வீட்டுவேலை (குடிசை தொழில்) என்பனவற்றுடனும் தொடர்புடைய பாடல்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற் காணப்படுகின்றன. ஈழத்தின் மலையகப்பகுதிகளிலே தேயிலை, இறப்பர் தோட்டத்தொழிலுடன் தொடர்புடைய பாடல்கள் வழங்கக் காணலாம்.?*
காதலும் குடும்ப வாழ்க்கையும் (காதலன் + காதலி; கணவன் + மனைவி + பிள்ளைகள்) அன்பின் பிணைப்பினல் இயங் குவனவாதலின், அந்த ஒருமைப்பாட்டின் அடிப்படையில் அவ் விரு பொருள் குறித்த பாடல்களும் காதற்பாடல் என்ற பிரிவில் அடக்கப்பட்டுள்ளன. காதல் வாழ்க்கையிலும், குடும்பவாழ்க்கை யிலும் தமது உணர்ச்சி, அனுபவம், கருத்து முதலானவற்றை வெளிப்படுத்துவதற்குத்தக்க சாதனமாக இப்பாடல்கள் பயன் படுகின்றன. 39
பயன்பாட்டு அடிப்படையிற் பாடல்களை வகுக்கும்போது சில பிரச்சினைகள் ஏற்படலாம். உதாரணமாகத் தொழிற்களத் திலோ, வண்டி பயணத்திலோ காதலனும் காதலியும் அல்லது கணவனும் மனைவியும் சேர்ந்து பாடும்போது அவை காதற்பாடல் களாக அமைதலும் உண்டு. அத்தகைய காதற்பாடல்கள் தொழிற்களப் பின்னணியிற் பாடப்பட்டாலும், அவற்றின் உண்மையான பயன்பாட்டை நோக்கும்போது அவை காதலை வெளிப்படுத்தும் தன்மையிலேதான் முக்கியத்துவம் பெறு கின்றன. எனவே, அவ்வாறு பாடப்படுவனவும் காதற்பாடல் வகையினைச் சாரும்.
அடுத்தபடியாக, சமயவழிபாட்டுப் பாடல்கள் குறிப்பிடற் பாலன. கிராமிய வாழ்க்கை முறையிற் சமயச்சடங்குகளும், சமய நம்பிக்கைகளும், அவற்றேடு தொடர்புடைய பாடல்களும் மிக்க முக்கியத்துவம் பெறுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்த வரையிற் கண்ணகி வழிபாடும், மற்றும் பெண்தெய்வ
28.தொழிற்பாடல்கள்பற்றிய விரிவான ஆய்வை நூலின் நான்காம்
ஆறம் இயல்களிற் காண்க.
29, நவசோதி, க, (1968) பக். 122-129,
30. காதற் பாடல்கள்பற்றிய விரிவான ஆய்வை நூலின் ஐந்தாம், ஆறும்
இயல்களிற் பார்க்க.

நாட்டார்பாடல். 57
வழிபாடும் முதன்மை பெற்றுக் காணப்படுகின்றன. அவற்றை யடுத்து, ஏனைய கிராமிய தேவதைவழிபாடும், மந்திரத்துடன் தொடர்புடைய பேய்நம்பிக்கையும் இப்பிரதேச மக்களிடம் வழக் கிலுள்ளன. இவர்களிடம் வழங்கும் பல்வேறுபட்ட கிராமிய வழிபாட்டுப் பாடல்கள் நூல்களாக வெளிவந்துள்ளன.** இப்
பாடல்கள் பற்றித் தனியே ஆய்வுமேற்கொள்ளத் தக்க அளவு பாடல்களும் அவற்ருேடு தொடர்புடைய மரபுகளும் பெரிதுங் காணப்படுகின்றன. இங்குக் குறிப்பிடப்பட்ட பாடல்கள் யாவும் வழிபாட்டின் போது பயன்படுவன என்பது நோக்கற்பாலது.
கிராமிய மக்களது பொழுது போக்கு, கேளிக்கை, கூத்து என்பவற்றுடன் பயன்படும் பாடல்கள், கதை-கூத்துப் பாடல்கள் என்ற தனிப்பிரிவில் அடக்கப்பட்டுள்ளன. இதிகாச புராணக் கதைகளும், நாட்டு மாந்தர்பற்றிய வீரதீரக்கதைகளும், அம் மானை, பள்ளு முதலிய இலக்கியங்களும் பண்டு கூத்தாக வழங்கி யுள்ளன. காலப்போக்கிற் கூத்தாடும் முறை பெருவழக்கு இழக்க அவை கதைகளாக மட்டும் பாடிக்களிக்கும் முறை ஏற்பட்டிருக் கலாம். கூத்துப்பாடல்கள் கதைப்பாடல்களாக இருப்பதாலும், கூத்தாடும்போது கதைப்பாடல்களே படிக்கப்படுவதாலும் அவற்றின் ஒருமித்த பயன்பாடு நோக்கி அவ்விரு பாடல்களும் ஒரே பிரிவின்கீழ்த் தரப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் வட மோடி, தென்மோடி என்ற ஆடல்நுட்பங்களுடன் ஆடப்படும் கூத்துவகைகள் பாரத, இராமாயண, புராணக் கதைகளைத் தழுவியனவாக வழக்கில் அதிகமாகவுள்ளன. இவற்றுட் சில கூத்துப்பாடல்களே வெளிவந்துள்ளன.?? கிராமங்கள் தோறும் ஏடுகளிலும் கொப்பிகளிலும் முடங்கிக் கிடக்கும் இப்பாடல் களைத் தேடிச் சேகரித்து வெ ரியிடுவது மட்டுமன்றி, அவை பற்றி ஆராய்வதற்கும் அரிய பல வாய்ப்புகள் காணப்படுகின்றன. மேலும் அம்மானை என்ற இலக்கிய வடிவிலும் பொழுதுபோக்கும் நோக்குடன் பாடல்கள் வழங்குகின்றன. அவ்வகையில் மட்டக் களப்பு மாநிலத்தில் வழக்கிலுள்ள கஞ்சன் அம்மானை' நூல் வடிவம் பெற்றுள்ளமையும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
மரணவீட்டிற் பயன்படும் ஒப்பாரிப் பாடல்கள் தனியே ஒரு பிரிவாக வகுக்கப்பட்டுள்ளன. இறந்தோருக்கும், ஒப்பாரி
31. இந்நூல்கள் பற்றிய விவரங்களைப் பின்னிணேப்பிலுள்ள ஈழத்து நாட்டார்
பாடல் வெளியீடுகள் பற்றிய அட்டவ?ணயிற் காண்க.
32. இராமநாடகம். அனுவுருத்திர நாடக்ம் என்னும் இரு கூத்து நூல்களும்
1972ல் வி.சி. கந்தையாவினுல் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
33. கஞ்சன் அம்மான (பதிப்பு) வித்தியானந்தன். சு. 1970.

Page 43
S8 - மட்டக்களப்பு மாவட்ட.
பாடுவோருக்கும், ஏனையோருக்குமுள்ள, பாசத்தின் தொனியே இப்பாடல்களின் பொருளாகக் காணப்படும். அதனுடன் சமுதாயப் பிரச்சினைகள் சம்பிரதாயங்கள் பற்றியும் அப்பாடல் கள் குறிப்பிடுகின்றன. இவ்வாருக நாட்டார் பாடல்கள் பயன் பாட்டின் அடிப்படையில் ஏழு விரிவுகளாக அமைந்துள்ளமை மேலே விளக்கப்படுவதாயிற்று.
நாட்டார் பாடற் சிறப்பியல்புகள்
நாட்டார் பாடல்களின் பொருளமைப்பு, வடிவ அமைப்பு என்பனபற்றியும், அவை மக்கள் வாழ்க்கையிற் பெறும் பயன் பாடு பற்றியும், அப்பாடல்கள் குறிப்பிடும் சமுதாய மரபுகள், நம்பிக்கைகள் ஆகியன குறித்தும் ஆராய்ந்தறிவதற்கு உதவி யாக இப்பாடல்களின் சிறப்பியல்புகளை அறிந்து கொள்வது பயனுடையதாகும்.
வாய்மொழி மரபு
பரம்பரை பரம்பரையாக வாய்மொழி மரபில் வழங்கி வருவது நாட்டார் பாடல்களின் முக்கிய இயல்பாகும். வாய் மொழி மரபு மூலமே அவை அழிந்தொழியாது நி%லபெற்று வரலாயின. வாய்மொழியாக வந்து, அவற்றின் விளங்காத் தன்மையாலும், மாறுபாடுகளாலும் அதிகமான பாடல் சள் அழிந்தபோதிலும் பல பாடல்கள் வாய்மொழி மரபின் மூலம் மாற்று வடிவங்களைப்* பெற்றுப் புதுப்புது வடிவங்களாகத் தோற்றமுற்று வழங்கி வந்துள்ளன.* இன்று நாட்டார் பாடல் கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருப்பதோடு நூல் வடிவாகவும் வெளி வந்துள்ளன. ஆனல் இவற்றின் மூலம் பாடலுக்குரிய திட்டவட்டமான பொருளையோ அல்லது இசையையோ எவரா
லும் வரையறுத்துக் கூற முடியாது. வாய்மொழி மரபு இவற்றுக்குக் காலந்தோறும் மாற்றங்களைக் கொடுத்து வந்துள்ளமையை ரட்லொவ்?? Qg tj;Q6) tai (Sokolov)' முதலியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இசை
நாட்டார் பாடலின் உயிர்த்தன்மை அதன் இசையமைதியிலே தங்கியுள்ளது. இசையற்ற பாடல் உயிர்பிரிந்த உடலுக்குச்
34. நூலுள் பக். 61 பார்க்க. 35. Colliers Encyclopaedia, Vol. 7, P. 615. 36. Radlov, Quoted by Kailasapathy, K. (1968) PP. 135-136. 37. Sokolov, Y, M. (1950) P. 549,

நாட்டார்பாடல். 59
சமமானது.88 நாட்டார் பாடலின் பயன்பாட்டைப் பொறுத்த மட்டில் இசை மிக முக்கியத்துவம் பெறுகிறது. பொருளற்ற சொற்களோ அல்லது ஒலித்தொடர்களோ பாடலிற் காணப் படினும் அவை ஒசை உணர்ச்சியைக் கொடுக்கின்றன. ஒசையே பாடுவோருக்கும்,பாடலைக் கேட்போருக்கும் உணர்ச்சிவேகத்தைக் கொடுக்கிறது. தொழிற் பாடல்களில் இத் தன்மையைச் சிறப்" பாக அவதானிக்கலாம்.இதற்குக் காரணம் தொழிலில் ஈடுபட்டி ருப்பவர் பாடலின் பொருள் நுட்பத்தைக் கவனிக்கமுடியாது. ஆயினும் தொழிலின் தன்மைக்கு ஏற்பவும் உடலியக்கத்திற்கு அமையவும் ஓசையை அமைத்து அவராற் பாடக் கூடியதாக இருக் கிறது. தாலாட்டுப் பாடலின் இசையமைப்பு வாய்ப்பாட்டில் வரும்:
'ராராரோ ராரிரரோ
ராராரோ ராரிரரோ"
என்பதிலுள்ள சொற்களுக்குச் சாதாரணமாகப் பொருள் காண முடியாது. ஆனல் இந்த இசையின் செயற்பாட்டிற்குப் பொருளுண்டு.
பாடல்களின் இசைமரபைத் தனியிசை என்றும் கூட்டுஇசை என்றும் வகைப்படுத்தலாம். நாட்டார் பாடல் இசைமரபானது, சுருக்கமாகவும் எளிதாகவும் இருப்பதால் இவற்றைப் பயில்வோர் அதிக பயனுங் கூடிய ஈடுபாடும்கொள்ள வாய்ப்பாக இருக்கிறது. இசையின் முக்கிய பயன்பாடு கேட்போருக்கும் பாடுவோருக்கும் குறிப்பிட்ட உணர்ச்சி நிலையை உண்டாக்கி அவர்களைத் தொழிற் படுத்துவதாகும்.° நாட்டார் பாடலுக்கு உயிர்நாடியாக அமைந் துள்ள இசைக்கு உயிர் கொடுத்து, அதற்கு இனிமையூட்டும் வண்ணம் சொற்கள், சொற்ருெடர்கள் வரிசையாக அமைக்கப் படுகின்றன.சில வேளைகளிற் சொற்களுக்குப் பொருள் இருக்காது. ஆனல் அவற்றில் இசைநயஞ் செறிந்திருக்கும். ஒசையின் உயிர்த் துடிப்பும் அதன் கவர்ச்சியுமே பாமரமக்களைக் கவர்ந்து பாட லுக்கு ஊக்கமும் ஆதரவும் அளிக்கச்செய்தன. ஒசையின் ஆற்றலினுலேயே நாட்டார் பாடல்கள் பரம்பரை பரம்பரையாக வாய்மொழியிற் பேணப்பட்டு வந்துள்ளன. 5265uib (Rhythm)
நாட்டார் பாடல்களைப் பயன்பாட்டு அடிப்படையில் நோக்கும் போது ஒலிநயம் மிகவும் முதன்மை பெறுகின்றது.
38. Bedi, Sohinder Singh, (1971) P. 104. 39. Lomax, Alan, (1966) P. XV.

Page 44
460 மட்டக்களப்பு மாவட்ட
அன்றியும் பாடல்களைப் பாடும்போதே அவற்றின் பயன்பாடும் தொழிற்படுகின்றது. பாட்டை உரக்கப் படிக்கும் பொழுது பாட்டிலுள்ள ஒலிகள் இயங்குகின்றன. அந்த இயக்கத்தில் ஏற்படும் ஒழுங்கே ஒலிநயம் எனப்படுவது." இந்த ஒலிநயமே பாடல்களின் மூதாதை எனவுங் கூறப்படுகின்றது." ஒலிநய அசைவுகளின் மூலம் சொற்கள் சேர்க்கப்படும்போது பாடலகள தோற்றம் பெறுகின்றன.** உணர்ச்சி மிகும்போதெல்லாம் அதற்கு ஏற்றவாறு ஒலிநயம் தானகவே வந்தமைகின்றது.* உளவியல் அடிப்படையிலும் உணர்ச்சி ரீதியிலும் மக்களை ஒன்று படுத்தும் ஆற்றல் ஒலிநயத்துக்கு உண்டு. நாட்டார் பாடல்களில் ஒலிநய அமைப்பு ஒருபோதும் மாறுவதில்லை எனப் பேயாண்ட்" கூறுகின்றர். இவ்வாறன பண்புகளைக் கொண்டிலங்கும் ஒலி நயம் பாடல்கள் யாவற்றிற்கும் பொதுவானதாயினும் நாட்டார் பாடல்களின் பயன்பாட்டு அடிப்படையிலும், வாய்மொழிமரபில் அவை வழங்கிவரும் வகையிலும் அது நாட்டார் பாடல்களின் முக்கிய பண்புகளுள் ஒன்ருகக் காணப்படுகின்றது ஆதலினலே தான் ஒலிநயத்தின் ஆளுமை நாட்டார் பாடல்களில் முதன்மை பெற்றுள்ளது எனலாம்.
திரும்பத்திரும்பவரும் அமைப்பு
நாட்டார் பாடல்களில் அசை, சீர், தளை, அடி, தொடை முதலிய பாடல் உறுப்புகள் அந்தாதித் தொடையாகவும், திரும்ப திரும்பவரும் அமைப்பினையுடையதாகவும் வரும் பண்பு பெரிதும் காணப்படும்." அதுபோன்றே குறிப்பிட்ட ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்பக் கூறும் பண்பும் (Theme repetition) நாட்டார் பாடல்களின் முக்கிய பண்புகளில் ஒன்ருகும். செந்நெறி இலக் கியங்களிற் கூறியது கூறல் குற்றமாயினும் அது மற்ருெறுை விரிப்பின் தவறன்று என்பர்." ஆணுல் நாட்டார் பாடலின் சிறப்பும், அதன் பயன்பாடும் இப்பண்பிலே பெரிதும் தங்கி
40. சுப்புரெட்டி, ந. (1961) பக். 185.
41. Cauldwell, C. (1946) P. 274.
42. Bowra, C.M. (1962) PP. 29-30
43. வரதராசன், மு. (1965) பக். 206,
44. Bayand, P. (1953) P. 124.
45. ஐங்குறுநூறு, சிலப்பதிகாரம், பத்தி இலக்கியம், பாரதியார், பாடல் ஆகியன வற்றிலும் இப்பண்பு பெரிதுங் காணப்படுகிறது. ஐங்குறுநூற்றில் இப்பண்பு சிறப்புற அமைந்திருக்குமாற்றைத் தமிழவன் (1875) சிறப்புற ஆராய்ந்துள் ளமை ஈண்டு சுட்டிக்காட்டுதல் பொருந்தும்,
46. நன்னூல் சூத். 12.

நாட்டார்பாடல். 6 யுள்ளன. அன்றியும் இப்பண்பு பாடல்களுக்கு அழகுணர்ச்சி யூட்டுவதோடு, உணர்ச்சி நிலையையுங் கொடுக்கின்றது.47 இவ் வமைப்பின் மூலம் மாற்று வடிவங்களும் (Variants)மாற்றுவடிவங் களின் சமவடிவங்களும் (Parallelism) தோன்றுகின்றன என்கிருர் பெளரு.48
நாட்டார் பாடல்களுக்குத் தனித்துவம் கொடுக்கும் இப் பண்பு, பல்வேறு விதமாகப் பாடலில் இடம்பெற்று வருதல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். பாடலின் ஒவ்வொரு வரியிலுமுள்ள ஈற்றுச்சொல் திரும்பத்திரும்பவருதல்" பாடலின் தொடக்கச் சொற்ருெடர் மீண்டும் மீண்டும் வருதல்," பாடலின் அடிதோறும், முதலடியிலும்,? அல்லது பாடலின் முடிவிலும்?? பாடற்றரு திரும்பத்திரும்ப இடம்பெறுதல், பாடலின் முதலடி மூன்ரும் வரியாக அமைதல்,* ஒரு பாடலின் ஈற்றடி வேறு பாடலின் முதலடியாக இடம்பெறுதல்," நீண்ட கதைப்பாடல் களிற் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள், வருணனைகள் முதலியன சிற்சில மாற்றங்களுடன் இயைபுத்தன்மை பெற்றுத் (Improvised) திரும்பத் திரும்பவருதல்" ஆகிய முறைகளில் இப்பண்பு நாட்டார் பாடல்களில் இடம்பெற்றுவரக் காணலாம்.
திரும்பத்திரும்பவரும் அமைப்பு நாட்டார் பாடல்களிலே முதன்மை பெறுவதற்குச் சில காரணங்கள் அடிப்படையாக அமைந்துள்ளன. அவை வருமாறு:
(அ) நாட்டார் பாடல்களுக்கு ஒசையமைதியூட்டுவதில்
இப்பண்பு உயிர்நாடியாக அமைதல்.
(ஆ) பாடலைக் கேட்போரைத் தம் பக்கம் கவரச் செய்வதற் காகப் பாடகர் இதனைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துதல்.
47. Harold, Scheub, (1972) P. 269. 48. Bowra, C.M. (1962) P. 80. 49. 1î. G., 5 T. UT. / 1 || LJ TL6io 1, s2| LI TL6io 1, 2. 50. மேலது, 11 பாடல் 1. 51. மேலது, தொ. பா. பொலி பாடல் 5, 6, 7, 10. 52. மேலது, பாடல் 2, 4 வலை பாடல் 1, 2, 3, lதண்டு பாடல் 1, 2, 3;
தோணி பாடல் 1, 2, 3; 53. மேலது, பொலி/ பாடல் 2, மறுதரு /ஏர் பாடில் 1: 54. Guo6nygss, a5rT. urT... Il-9 | LITTLái) 18, 19. 55. மேலது, It எ பாடல் 6, 7 1ஏ பாடல் 9, 10, 11ஐ பாடல் 1, 2 தொ.பா.
/நெல் பாடல் 3, 4. 56. கண்டிராஜன், ஒப்பாரி, பக். 5, 7, 8, 20.

Page 45
శ62 மட்டக்களப்பு மாவட்ட.
(இ) பாடகர், தொடர்பற்ற விடயங்களையோ அல்லது திடீரென வேறு நிகழ்ச்சிகளையோ கூறும் போது திரும்பத்திரும்பக் கூறும் உத்தியைப் பயன்படுத்துதல் . (ஈ) பாடலில் வரும் கதைத் தொடர்ச்சியிலே தாமதம் அல்லது இடைவெளி உண்டாக்கவும் இப்பண்பு பயன் படுத்தப்படுதல். (உ) பாடகனின் உணர்ச்சிநிலை, பதற்றம் முதலியவற்றற் கதைத் தொடர்பு அற்றுப்போகாமலிருக்கவும், மறதியாற் கதைத்தொடர்பு மாரு திருக்கவும் இப் பண்பு பாடகனுக்குத் துணையாதல், (ஊ) தேவையின் பொருட்டுக் குறிப்பிட்ட பாடலை நீண்ட நேரம் பாடுவதற்கு ஏற்ற துணைக்கருவியாக அமைதல். (எ) பாடகன் தனது கருத்துகளை வலியுறுத்திக் கூறுவதற்
கும் இப்பண்பு வாய்ப்பாதல். (ஏ) இப்பண்பினைக் கையாள்வதன்மூலம் பாடகன் தன்
மூளைக்கும் ஒய்வு கொடுக்கிருன். (ஐ) "இப்பண்பு புதிய கற்பனைகளுக்கு இடமளித்தல்’** (ஒ) பொழுதுபோக்கு அடிப்படையிற் கதை கூறுவோர் அல்லது பாடுவோர் தொடர்ச்சியாக இயங்கமுடியாது. அவ்வாறு தொடர்ச்சியாகப் பாடும்போது, கேட் - போருக்கும் களை தட்டுதல் இயல்பே எனவே அதனைப் போக்கி, அவர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்குடனும் இப்பண்பு பயன்படுத்தப்படுதல் என்பனவாம்.
மாற்று வடிவங்கள்
பரம்பரை பரம்பரையாக வாய்மொழிமரபிற் பாடல்கள் வழங்கிவரும்போது அவற்றில் மாற்று வடிவங்கள் ஏற்படுதல் இயல்பே. செந்நெறி இலக்கியங்களில் இடம்பெருத அளவுக்கு, பல்வேறுபட்ட மாற்றுவடிவங்களைப் பெற்றிருத்தல் நாட்டார் இலக்கியத்தின் தலையாய பண்புகளில் ஒன்ருகும்." நாட்டார் பாடல்களுக்கு வரையறையான பொருளமைப்பு இல்லை ; அவை மாற்று வடிவங்களைப்பெற்றுப் புதுப்புது உருவங்களாகத் தோற்றம் பெறுகின்றன. செந்நெறி இலக்கியத்துக்குப் புலவனல்
57 Chadwick, H- M. and Chadwick, N. K. (1968) Vol. 11, P.73. 38. So Ko lov, Y.M. (1950) P. 12.

நாட்டார்பாடல் 63
ஆக்கப்பட்ட குறிப்பிட்ட பொருளமைப்பு அமைந்து காணப் படும்? செந்நெறி இலக்கியப் புலவனின் படைப்பும், வாய் மொழி மரபிற் பேணப்பட்டு வரும்போது மாற்று வடிவங்களை அடைந்துவிடுதல் இயல்பே. நாட்டார் இலக்கியத்தின் மாறிச் செல்லும் இயல்பை அடிப்படையாகக் கொண்டு இலக்கியத்தை நிலைத்த அமைப்புடையவை, மாறிச்செல்லும் அமைப்புடையவை என ஜான் வன்சின (Jan Vansina) வகைப்படுத்தியிருப்பதும் நோக்கற்பாலது".
கள ஆய்வின்போது குறிப்பிட்ட ஒரு பாடலுக்குப் பல மாற்று வடிவங்கள் கிடைத்தன. அவை ஒவ்வொன்றும் தனித் தனி ஆக்கப்பாடுகளாயினும் அவற்றுட் பொருத்தமான ஒரு வடிவத்தையே ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையும் வெளிவந்த நூல்களிலும் ஒரே பாடல் பல்வேறு வடிவங்களில் பதிப்பிக்கப்பட்டிருப்பதை மேல்வரும் எடுத்துக்காட்டின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
(அ) கடலே இரையாதே காற்றே நீ வீசாதே
நிலவே எறியாதே என்ர நீலவண்டு போய்ச்சேரு மட்டும் மட்டக்களப் ாட்டுப்பாடல்கள்-பக்.
பு ந 23 (ஆ) கடலே இரையாதே கற்கிணறே பொங்காதே
நிலவே எறியாதே - என்ர நீலவண்டார் வருமளவும். (மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் பக். 43)
இ) கடலே இரையாதே காணலே நீ வீசாதே
நிலவே நீ எறியாதே - என் நீலவண்டார் போகு மட்டும் . (மன்னுர் நாட்டுப்பாடல்) பக். 21
(ஈ) காத்தே அடிக்காதே - என்ர காணலே நீ வீசாதே
நிலவே எறியாதே - என்ர நீலவண்டார் போய்ச் சேருமட்டும், (ஈழத்து நாடோடிப் பாடல்கள் :பக், 16)
(உ) கடலே இரையாதே காத்தே நீ வீசா தே
நிலவே எறியாதே - என்ர நீலவண்டார் போய்ச்
சேருமட்டும். (மேலது -பக். 36)
59. Sub amaniam, P. R. (1969 ) P. 4. 60. Vansina, Jan, (1965) PP. 22-23.

Page 46
64 மட்டக் களப்பு மாவட்ட.
செந்நெறி இலக்கியத்திற் பல்வேறுபட்ட மாற்றுவடிவங்கள் காணப்படின் அவற்றை ஒப்பியல் அடிப்படையில் ஆய்ந்து அவற்றின் வடிவத்தை வெளிக் கொணர வாய்ப்புண்டு, ஆனல் நாட்டார் பாடலைப் பொறுத்தவரையில் இத்தகைய ஆய்வுக்கு இடமேயில்லை. குறிப்பிட்ட ஒரு பாடலின் சகல மாற்றுவடிவங் களும் தனித்தனி மனிதனின் ஆக்கப்பாடுகளாதலின் அவை ஒவ்வொன்றும் தனித்தனியே ஆராயப்பட வேண்டியன வாகின்றன.
செவி வழியாகத் தாம் கேட்டறிந்த பாடல்களை எழுத்தறி யாப்பாமரமக்கள் தாம் மீண்டும் நினைவுப் படுத் தி ப் பாடிப்பார்க்கும்போது சில சொற்களோ அல்லது சில வரிகளோ மறந்து போதல் இயல்பே. இச்சமயங்களில், அவர்கள் அவற்றுக்கீடாகச் சில சொற்களையோ அல்லது சில வரிகளையோ புதிதாகப் புகுத்தி இசை ஒழுங்குக்கு அமைவாகப் பாடுகின்றனர். இதனுல் ஒருவர் ஒருமுறை பாடிய பாடலை அவராலே மறுமுறை அவ்வாறே பாடமுடிவதில்லை." நாட்டார் பாடல்கள் குறிப்பிட்ட ஒரேவடிவத்துடன் (set form) தொடர்ந்து நிலையாக வழக்குப்பெருத, வாய்மொழி மரபினலும் தனித்தனி மனிதர்களின் ஆக்கத்திறமையினுலும் காலத்துக்குக் காலம் மாற்றங்களையும் வளர்ச்சியினையும் பெற்றுவந்துள்ளன. உண்மையில் நாட்டார் பாடலில் நிகழும் பெரிய, சிறிய மாற்றங்களின் மூலம் பழைய வடிவங்கள் மறைந்து, அல்லது புதிதாகப் பல்வேறு மாற்றுவடிவங்களைப் பெற்று இப்பாடல்கள் நிலைபெற்று வந்துள்ளன. ?? இவ்வாறு மாற்று வடிவங்களைப் பெறும்போது சமூக, பண்பாட்டுக்கூறுகளையும், உளவியல் அம்சங் களையும் உள்ளடக்கியதாகவே நாட்டார் பாடல்கள் ஆக்கம் பெறுன்றன. பாடல்கள் மாற்றுவடிவம் பெறும்போது சமூக உளவியற் கூறுகள் அவற்றுக்குப் பாதுகாப்பையும், கட்டுப்பாட் டையும் அளிப்பதால் மாற்றுவடிவங்கள் தனிமனித உணர்வு களுடனும் சமுதாய இயல்புகளுடனும் ஒட்டியனவாகவே தோற்றம் பெறுகின்றன.
61. There is Plenty of evidence, indeed, that many singers usually it appears, those most accomplished in the art, have introduced Variants of their own making. Sometimes as has been shown they have been incapable of reproducing exactly what the themselves have sung." Gerovld, Gordon Hall, (1957) P. 163.
62, Boswell, George W., (1972) P, (248)

நாட்டார்பாடல் . 65
பாடல்கள் காலத்திற்குக் காலம் மாற்றுவடிவங்கள் பெறும் முறையை வருமாறு விளக்கலாம்.? 'அ' என்பவரிடமிருந்து'ஆ' என்பவர் பாடலொன்றைக் கேட்டறிந்து கொள்கிருர், அதனை அவர் "இ" என்பவருக்குப் பாடிக்காட்டும்போது தெரிந்தோ தெரியாமலோ அப்பாடலின் சில சொற்களையோ, அசைகளையோ மாற்றிவிடுகின்றர். அதனுடன் அப்பாடலில் உணர்ச்சிகளையும் செயல்களையும் தன் சூழல்களுக்கும் உணர்வுகளுக்கும் ஏற்ப அவர் மாற்ற எண்ணவுங்கூடும். இவ்வாறே ‘அ’ என்பவர் பாடிய பாடலில் மாற்றுவடிவம் ஏற்படுகின்றது. இத்தகைய மாற்றுவடி வங்கள், ‘இ’ என்பவர் 'ஈ' என்பவருக்கும் 'ஈ' என்பவர் ‘உ’ என்ப வருக்கும் கூறும்போது தொடர்ந்தும் ஏற்படலாம். எனவே குறிப் பிட்ட ஒரு பாடல் ஒவ்வொரு தனிமனிதரிடமும் சிற்சில மாற்றங் களைப் பெறுதல் இயல்பாகின்றது. ‘அ,என்பவர் பாடிய ஒரு பாடல் ஒள, என்பவரைச் சேரும்போது ‘அ’ என்பவர் பாடியபாட லுடன் இனங்காண முடியாதவாறு மாற்று வடிவங்களைப் பெற்று விடுதலுமுண்டு. உண்மையில் ‘அ’ என்பவரிலிருந்து 'ஒள' என்பவர் வரைக்கும் அப்பாடலைப் பாடியவர்கள் யாவரும் அப்பாடலின் ஆக்ககர்த்தாக்களே. ஆகவே தனியொருவர் உரிமைபாராட்டக் கூடிய ஒரு பாடல் ஒரு இனத்தின் உரிமையாக மாறுவதற்கு மாற்றுவடிவமே காலாக அமைகின்றது. d
கதைப்பாடல்களில் - மாற்றுவடிவம்
தனிப்பாடல்களிலும் கதைப்பாடல்களிலும் வரும் மாற்று வடிவங்களுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன. இவற்றைத் தனிமனித உயர்வுகளுக்கும், சமுதாய உணர்வுகளுக்குமுள்ள வேறுபாடுகளாகக் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு கதையை எடுத்துக்கூறும்போது கதை கூறுவோருக்கும் கதை கேட்போருக்கு மிடையே நிலவும் உணர்ச்சி நிலையைப் பொறுத்து, கதையில் இடம்பெறும் பல்வேறு பட்ட நிகழ்ச்சிகள், உணர்ச்சிகள்என்பன கூட்டியும் குறைத்தும் கூறப்படுகின்றன. அதுமட்டுமல்லாது அக்கதையினுள்ளே உபகதைகளும் சேர்க்கப்படுகின்றன; கதா பாத்திரங்கள் மாறுபடுகின்றன. ஆயினும் அவற்றின் தலைமைக் கருத்துகள் மாத்திரம் மாறுபடுவதில்லை. கதையின் சகல மாற்று வடிவங்களையும் கொண்டு குறிப்பிட்ட ஒரு கதையின் மூலவடி வத்தை அமைத்துக் காட்டலாம்.
63. Dundes, Alan, (1968 PP.) 47.48.
5

Page 47
66 மட்டக்களப்பு மாவட்ட.
மட்டக்களப்பு மாவட்டத்திற் கூத்துப்பாடல்களாகவும் , வழிபாட்டுப்பாடல்களாகவும் கதைப்பாடல்கள் அதிகமாக வழங்குகின்றன. கூத்துப் பாடலை எடுத்துக்கொண்டால், ஒரு கிராமத்தில் வழங்கும் கதைகள் ஏனைய கிராமங்களிலும் வழக் கிலுள்ளன. ஆனற் கிராமத்துக்குக் கிராமம் அவற்றில் மாற்று வடிவங்கள் காணப்படும். கதையை உருவாக்குபவர்களாலும் , அண்ணுவிமார்களாலும், ஆட்டக்காரர்களாலும், பக்கப்பாட்டுக் காரர்களாலும் இவ்வாறன மாற்றுவடிவங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமிய நாடக மேடையிலும் தனித்தனி மாற்று வடிவங்கள் கொண்ட கதைகள் காணப்படும். கதையை ஆக்கு பவர்களது திறமைக்கும், நடிகர்களது ஆற்றலுக்கும், நேரத்துக் கும் ஏற்றவாறு கதையை ஒப்புவிக்கும் தன்மைக்கும், கதையைக் கேட்டு எழுதிக்கொள்வோரின் இயல்புக்கும் ஏற்ப மாற்று வடிவங்கள் தோன்றுகின்றன.'
கதையில் வரும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளையோ அல்லது உணர்ச்சிப்புலப்பாடுகளையோ வருணிக்கும்போது மாற்றுவடி வங்கள் இயல்பாகவே தோன்றுகின்றன. கதைகளிற் காணப்படும் மாற்று வடிவங்கள் ஒப்பியல் ஆராய்ச்சிக்கு மிகவும் ஆதாரமாக அமைகின்றன." பாடகர் தாம் பாடும்போது, சகல சந்தர்ப் பங்களிலும் ஒரே மாதிரியாகப் பாடுவதில்லை. கேட்போருக்கும், தமது ஞாபகசக்திக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவகையிலே தம்மை அறிந்தோ அறியாமலோ பாடலை மாற்றியோ அல்லது திருத்தியோ பாடுகின்றனர். இதனற் குறிப்பிட்ட ஒரு பாடலுக்கு பல்வேறுபட்ட மாற்றுவடிவங்கள் ஏர் பட்டுவிடுகின்றன. வாய் மொழி மரபில் வழங்கும் இப்பாடல்கள், பயன்பாட்டு அடிப் படையில் இத்தகைய மாற்றங்களைப் பாடகர்மூலம் பெறுவது தவிர்க்கமுடியாத பண்பாகின்றது."
ஆக்கியோர் பெயர் தெரியாதிருத்தல்
நாட்டார் இலக்கியத்துக்குரிய மிக முக்கிய பண்புகளுள் ஒன்று அவற்றை ஆக்கியோர் பெயர் தெரியாதிருத்தலாகும். கள ஆய்வில் ஈடுபட்ட வேளைகளில் அறிவிப்பாளர்களை விசாரித்த போது அவர்கள் தம் பாடல்களை யாரிடமிருந்து கேட்டறிந்தார். களோ அவர்களின் பெயர்கள் மட்டுமே தமக்குத் தெரியும் எனக்
64. Gerovid, Gordon Hall, (1957) P. 65. 65. Chadwick, H. M. and Chadwick, N.K. (1968) Vol. II. P. 135. 60. Radlov, V.V. Quoted by allasapathy, K. (1968) P, 135.

நாட்டார்பாட ல். 67
கூறினர். குறிப்பிட்ட ஒருபாடல் யாரால், எப்போது, எத்தகைய சூழ்நிலையிற் பாடப்பட்டது என்பது வரையறுத்துக் கூறமுடியாத விடயமாகும். பரம்பரை பரம்பரையாகப் பேணப்பட்டு வந்த பாடல்களே இன்று கிடைத்திருப்பன." அவை காலத்திற்குக் காலம் தேவையையொட்டிப் பல்வேறு சந்தர்ப்பங்களிலே பலரா லோ தனித்தோ அல்லது சேர்ந்தோ பாடப்பட்டிருக்கவேண்டும். காலமாறுபாடுகளுக்கு ஏற்பச் சமுதாயக் கருத்து வேறுபாடு காையும் உணர்வுகளையும் உள்ளடக்கி வளர்ச்சி அல்லது மாற்றம் பெற்றுவந்திருக்கும் என்பதும் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே. இப்பாடல்கள் முன் தோற்றம் பெற்ற பழைய வடிவத்தில் இல்லை. அவை பரம்பரைபரம்பரையாகப் பேணப்பட்டு, மாற்றம் பெற்றுவந்த சமுதாயப் படைப்புகளேயாகும். ? ?
அடக்கமும், தம்பெயர் வெளிவராதிருக்க வேண்டும் என்ற மனுேபாவமும் கொண்ட பாமரமக்களே இப்பாடல்களின் கர்த் தாக்களாகவிருக்கலாம். அவர்களுக்கு அவர்களது பிரதேச நாட் டார் இலக்கிய மரபில்ஆழ்ந்த அனுபவமும்,அவற்றைப் பயன்படுத் திப் பாடுவதில் ஆர்வமும் நிறைய உண்டு. அவர்கள் புதிதாகப் பாடல்களை ஆக்கும்போது (சிறப்பாகக் கதைப்பாடல்களை)மிகவும் பிரபல்யமான பழைய ஒரு கதைப்பாடலை எடுத்து அப்பாடலின் அமைப்பைப் போன்றே தமது கதையையும் அமைத்துக் கதைக் கருவிலே தேவை ஏற்படும்போது மாற்றம் செய்வர். அதனுடன் புதிய வரிகளை இடையிடையே சேர்த்துத் தமது பாடலை ஆக்கிக்கொள்வர். அவ்வாறு அவர்கள் சேர்த்துக் கொள்ளும் புதியவரிகள்கூடப் பொதுவாகப் பழைய மரபில் வந்தவையாகவே காணப்படுகின்றன. இந்த அடிப்படையிலே இசைப்பாடல்களும் ஆக்கம் பெறுகின்றன.
நாட்டார் இலக்கியங்களில் ஆர்வமும் ஈடுபாடுங் கொண் டோர் பரம்பரையில் வந்தோருள் இன்னுஞ் சிலரே மிஞ்சி யுள்ளனர்; பாடலே அவர்களுக்கு மிகவும் முக்கியமானது;அதுவே அவர்களது கலையுமாகும், ஆதலினல் தம் கவனத்தை அவற்றிற்
67. “In the case we can judge the date and even guess at the compser
but who can date a folksonk? Indeed a folk song is neither new nor old ; It is like a forest tree with its root deeply busied in the past but which continually puts forth new branches, new leaves and new fruits.'
Encyclopaedia Britannica, * Vol. 9, P. 443. 68. கைலாசபதி, க. (1972) ""பக். 62.

Page 48
68 மட்டக்களப்பு மாவட்ட .
செலுத்திப் பயிற்சி செய்துவந்ததோடு அவைபற்றி விமர்சிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களாகவும் அவர்கள் காணப்படுகின்றனர். இவர்களிடம் காணக்கூடிய இரு முக்கிய பண்புகளாவன:
(1) போக்குவரத்துத் தொடர்புகளற்ற நாட்டுப்புற
வாழ்க்கை முறை.
(2) இவர்களுக்குப் பாடசாலைக் கல்வியோ, நவீன் விஞ்ஞான, நகர, நாகரிகத் தொடர்புகளோ இல்லாமை என்பனவாம்.
எப்பாடலும் ஆக்ககர்த்தா இன்றி எழாது. பாடலுக்குப் பின்னணியாக மக்கள் குழு, சமயம், சமூகம் என்பன அமையும். இவற்றுக்கு ஏற்றவகையில் அவர்கள் பாடல்களை ஆக்கிப்பாடு கின்றனர். பாடகர் பண்பாட்டுத் தொடர்பினை ஏற்படுத்துபவ ராவர். மக்கள்குழுவின் செயல்கள், உணர்வுகள் ஆகியனவற்றைப் பாடல்களாகத் தருவோர், அப்பாடல்கள் பரவுவதற்கும் காரண மாகின்றனர். இவர்கள் சுய அறிவுடனும் வர்த்தக நோக்கற்ற வகையிலும், தாம் செவிவழியாகக் கேட்டறிந்தவற்றை நினைவி விருந்து பாடும்போதும் கடன் வாங்குதல், பாவனை செய்தல், புதி தாகச் சேர்த்துக் கொள்ளுதல் ஆகிய புதிய முப்பண்புகளையும் கைக்கொள்கிருர்கள்."
gonul J65td. ( improvisation)
நாட்டார்பாடல்களை இயைபு நோக்கி இயைபுபடுத்திப் பாடும் மரபு உலகப் பொதுவானதாகக் காணப்படுகிறது. இதன் மூலமே நாட்டார் பாடல்களில் மாற்றுவடிவங்கள் தோன்றுவ தோடு, அப்பாடல்களின் நிலைபேறும் பயன்பாடும் அமைந் துள்ளன. நாட்டார் பாடல்களைப் பாடுவதற்கு மரபுரீதியான சொல்லாட்சிகளும் உவமைகளும் மற்றும் ஆக்கக்கூறுகளும் அமைந்திருந்த போதிலும்,பாடகன் சிலவேளைகளிலே தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப இயைபு நோக்கி அவற்றை இயைபுபடுத்திப் பாடுகின்றன். அதன் மூலமே நாட்டார்பாடல்களின் உண்மைத் தன்மையுங் காணப்படுகின்றது. திறமையுள்ள ஒவ்வொரு பாட கனும் ஒவ்வொரு சணமும் தன் உள்ளத்தின் எழும் உணர்ச்சிப் பெருக்காலே தன்பாடலைச் சமயத்திற்கேற்ப இயைபுபடுத்திப் பாடுவதால், அவன் தன் பாடலை இருமுறை பாடும்போது முதல்
69. Colliers Encyclopaedia, Vol. 7, P. 615.

நாட்டார்பாடல். 69
முறை பாடியவாறு இரண்டாம் முறைபாடுவதில்லை. இவ் வியல்புபற்றிய பெளரு' வின் கருத்து ஈண்டு மேற்கோளாகத் தரப்படுகின்றது.
"வீரப்பாடல்கள் வழக்கமாக மக்களிடம் பாடப்படும் இயல் பின. ஏனென்ருல் இப்பாடல்கள் தோன்றி வளர்ந்த சமுதாயங் கள் தொடக்க காலத்திற் கல்லாதவை. பெரும்பாலான வீரப் பாடல்கள் பாடப்படுவதோடு இயல்பாக எவ்வித முயற்சியு மின்றிப் பாடுவதிற் சில அளவுகளும், இயைபமைப்பு முறைகளும் பின்பற்றப்படுகின்றன. மேலும் சில புலவர்கள் வரம்புமீறி மாற்றிச்சென்ற இடங்களுமுள ஆனல் இயைபுபடுத்திப் பாடுவது பொதுவான இயல்பாகும். அதுவே மக்களின் முன் வீரப்பாடல் களைப் பாடி நடாத்தும் நிகழ்ச்சிக்கு அடிப்படையாகும்.’
கிராமியப் புலவர்கள் சொற்களைத் தேவைக்கு ஏற்பப் பல விதமாக இயைபுபடுத்திப்பாடும் ஆற்றலுடையோராகக் காணப் படுகின்றனர். உதாரணமாகக் கிளி என்னும் சொல்லைக் காதலிக்கு உவமித்துக் கூறும்போது ஆசைக்கிளி, ஆரம்பிழுந்த கிளி, தென்னம்வட்டுக்கிளி, சோலைக்கிளி, பச்சைக்கிளி, ராசகிளி, தங்கக்கிளி, கூண்டுக்கிளி, மருதங்கிளி, எனப்பலவாருக" சொற் களுக்கு அடை கொடுக்கும்போதும் பாடலில் மாற்றுவடிவம் ஏற் படுகின்றது. குறிப்பிட்ட ஒரு செயலுக்கோ அல்லது கருத் திற்கோ சொல்லால் வடிவம் கொடுக்கும்போதும் மாற்று வடி வங்கள் ஏற்படுகின்றன.7?
தொழிற்பாடல்கள், கூத்துப்பாடல்கள் விளையாடடுப் பாடல்கள் ஆகியனவற்றில் இப்பண்பு பயன்பாட்டின் அடிப்படை யில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. உலகமக்களின் ஒப்பா ரிப் பாடல்களைக் கவனித்தால் அவை பெரும்பாலும் ஒரேதன் மையினவாகவே காணப்படும். ஆயினும் பாடுவோருக்கும் சூழ் நிலைக்கும் ஏறப அவற்றை இயைபுபடுத்திப் பாடுந்தன்மையை மரணக்கிரியைகளின் போது கவனிக்கலாம்.?பாடல்களை இயைபு பட மாற்றிப் பாடும் பண்பின்மூலம் அதிகப்படியானபாமரக் கவிஞர்கள் உருவாகின்றனர் எனக் கூறப்படுகிறது."* எனவே
70. Bowra, C, M, (1966) P. 215. 71. நூலிற் காதற்பாடல்களில் வரும் உவமைகளின் பட்டியலில் நோக்குக. 72. பிஇ தாயா (2) 1 ஆம் பாடல் நோக்குக. 73. I. Chadwick, (1968) Vol. Il P. 228 II. Abbott, G.F. (1903) P.102. 74. Lomax Alan, 1966) P. XXVI,

Page 49
70 மட்டக்களப்பு மாவட்ட .
நாட்டார்பாடலிற்பாடல்களை இயைபுபடுத்திப்பாடும் பண்பு பயன்பாட்டின் அடிப்படையில் இன்றியமையாததாகின்றது.
பல்லவி-தரு
பாடலின் இசையமைப்பு குறிப்பிட்ட ஒரு தருவின் (பல்லவி) தன்மைக்கேற்பவே அமைந்திருக்கும். பாடலைப் பாடு முன் அப்பாடலுக்குரிய தருவைப்பாடி பாடலைப் பாடத் தொடங்குவது வழக்கம். பாடலின் இசை அமைதியைக் கருத்திற்கொள்ளவும், இசையை அதிகரிக்கவும், இசை உணர்வையும் உணர்ச்சி வேகத் தையும் ஏற்படுத்தவும், பாடுவோருக்கு ஆறுதலை ஏற்படுத்தவும் தருப்பாடல்கள் பயன்படுகின்றன. பலர் சேர்ந்துபாடும் பாடல் களிலும் பின்னணியாகப்பாடும் (Chorous) பாடல்களிலும் தருப் பாடல்கள் மிகவும் இன்றியமையாதனவாகின்றன. கூத்து ஆடும் போது ஆடுவோரைத் தாளத்துக்கமைய ஆடச்செய்யவும், பாடல்களை ஒழுங்காகப் பாடவும், இவை துணையாகின்றன. கூத்தாடுவோர் பாடலைப்பாட, அதற்குரிய தருப்பாடலைப் பின்னணிப்பாடகர் பாடுவதையும் கூத்துக்களிற் கவனிக்கலாம். பாடகன் பாடும்போது, தன்னேடு சேர்ந்துபாடுவோருக்கு வசதி யாகத் தருப்பாடலையும் ஆக்கிக்கொள்கிருன்." எனவே நாட்டார் பாடலிலே தருப்பாடல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
**தாந் தனந் தன தானு-தன தத் தோம் தானின தானு' என்ற இத் தருப்பாடலைப் பாடும்போது அல்லது இதனை ஒருவர் பாடக்கேட்கும்போது பொருட்புலப்பாடு இல்லாவிட்டாலும் அதன் ஒசைப்பெருக்கிலும், ஓசை இனிமையிலும் ஈடுபாடு ஏற்படு கின்றது.
தருமட்டுமே பாடலாக அமைந்துவரும் தன்மையுங் காணப் படுகிறது. இதுபற்றிய பெளருவின்' கருத்தை ஈண்டு மேற் கோளாகத் தருதல் பொருத்தமானது:
"இப்பாடல்களுக்குப் பொருள் இல்லை; இவை கடந்த
காலத்தின் பரம்பரைச் சொத்தாக, மக்களின் வழக்
கொழிந்துபோன பேச்சுமுறைகளின் சின்னமாகக் காணப்
படுகின்றன. இவை ஒலிமரபில் மாருதவை; குறிப்பிட்ட
சந்தர்ப்பத்தில் அல்லது சடங்குகளிற் குறிப்பிட்ட இசை
75. Bowra, C.M. (1962) P.42. 76, மேலது பக்.58.

நாட்டார்பாடல். 7.
யோடு பயன்படுவன. இவை நீண்ட ஒலியுடையனவல்ல. ஆனற் கூத்து அல்லது விளையாட்டு முடியும்வரையும் திரும்பத் திரும்பப் பாடக்கூடியன’’
எதுகைமோனே
நாட்டார் பாடல்களில் இயல்பாகவே எதுகைமோனை அமைந்து பாடல்களுக்கு ஒசைநயம் கொடுத்தல் அவற்றின் சிறப்பியல்புகளில் ஒன்ருகும். 'உலக இலக்கியங்கள் அனைத் துக்கும் எதுகைமோனை பொதுவானவையாகக் காணப்பட்ட போதிலும்'," அவை பழையநாட்டார் பாடல்களில் அதிமுக் கியத்துவம் பெருது, இயற்கையாக அமைந்து காணப்படு கின்றன, என்று பெளரு" கூறுகின்ருர். செந்நெறி இலக்கியப் புலவர்கள் பாடலை ஆக்குவதற்கு எதுகைமோனையை உத்தி யாகக் கையாள்வது போன்றில்லாது கிராமியக் கவிஞர்களின் படைப்புகளில் எதுகைமோனை இயற்கையாக அமைந்து அவர் களது பாடல்களுக்கு அழகும் இனிமையும் கொடுப்பனவாயின." பாடுவோருக்கும் கேட்போருக்கும் உணர்வையும் உற்சாகத் தையும் கொடுக்கும் வகையிற் பாடல்களில் இவை அமைந்து காணப்படுகின்றன.
மொழிநடை
நாட்டார் பாடல்களின் மொழியும், அதன் நடையும் கடின மின்றி எளிமையுடையனவாக இருத்தல் உலகமொழிகளிற் காணப்படும் பொது இயல்பாகும் நாட்டார்கவிகள் தமது உணர்ச்சிகளையோ அல்லது கருத்துகளையோ புலப்படுத்துவதிலும் சொற்களைக் கையாளுவதிலும் திட்ப நுட்பங்களையோ அல்லது சிக்கலானவற்றையோ பயன்படுத்துவதில்லை. எளிமையும், மொழிச் சிக்கல் இன்மையும் நாட்டார்பாடல்களின் சிறப்பியல்பு களாகவும், பாடல்களுக்கு அழகுணர்ச்சியூட்டுவனவாகவும் அமைந்துள்ளன.
நாட்டார்பாடலின் மொழிநடை செந்நெறி இலக்கிய மொழி நடையைப் போன்றதன்று. அப்பாடல்கள் வழங்கும் பிரதேச மொழிநடையிலே அவை ஆக்கம் பெற்றுள்ளன. ஆயினும் முற்றிலும் பேச்சு மொழியாகவோ, அல்லது கொச்சை மொழி
r
77. Chadwick, H.M. and Chadwick, N.K. (1968) P. 43. 78. Bowra C. M., ( 1966) P. 82.
79. வரதராசன், மு, (1965) பக். 211

Page 50
72 மட்டக்களப்பு மாவட்ட .
யாகவோ இல்லாது திருந்திய மொழி நடையிலும் நாட்டார் பாடல்கள் காணப்படுகின்றன. கள ஆய்வின்போது கிடைத்த தாலாட்டுப் பாடல்கள் ஏனைய பாடல்களைவிடத் திருந்தியமொழி நடையிற் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. க ைதப்பாடல் கள், கூத்துப் பாடல்கள் என்பவற்றின் மொழிநடையும் தர முடையதாகக் காணப்படுகிறது.
பிரதேச அடிப்படையிலான பேச்சுமொழி, வட்டாரவழக்கு என்பன நாட்டார் பாடலிற் காணப்படுதல் மற்ருெரு பொது இயல்பாகும், பாடலின் மொழிநடையைக்கொண்டு அப்பாடல் எப்பிரதேசத்துக்குரியது என்பதைக் கள ஆய்வாளர் ஒருவர் அனுபவ வாயிலாகக் கூறக்கூடிய ஆற்றலுடையவராகின்றர். நாட்டார்பாடலில் வரும் பிரதேச ரீதியிலான சொற்களும் சொற்ருெடர்களும் குறிப்பிட்ட பிரதேச மக்களுக்குமட்டுமே முழுமையாக விளங்கக் கூடியனவாக இருக்கும். ஆனற் செந் நெறியிலக்கிய மொழி கற்றறிபுலவர் யாவராலும் அறியப்பட்ட தாகவே அமைந்திருக்கும். இந்த அடிப்படையிலும் இவ்விரு இலக்கிய நெறிகளும் வேறுபடுகின்றன.
நாட்டார் பாடல்களின் ஆக்கமுறைகள் / எளிதாக அமைந்திருத்தல்
நீண்டகால அனுபவித்தின் காரண்மாகப் பாடலின் ஆக்க முறைகள் பாடகருக்குப் பயிற்சியாக இருப்பதனல், தாம் விரும்பிய பொருள் குறித்து, விரும்பியநேரம், விரும்பியவாறு பாடக்கூடியதாக உள்ளது.* நாட்டார் இலக்கிய ஆக்க முறைகளைப் பாடகர் பரம்பரை பரம்பரையாகச் சந்தர்ப்பத் திற்கும், தேவைக்குமேற்பப் பயன்படுத்திவந்தமையால் இப் பாடல்கள் மக்கள் வாழ்க்கையிற் பெரிதும் பயன்பெறுவனவா யின. பாடல்களின் ஆக்கத்திற்கு அவற்றைப் பாடுவோரின் உடலசைவுகளும் ஒத்தாசையாக அமைகின்றன. உணர்ச்சி களுக்கும் உணர்ச்சிகளின் உந்தல்களுக்குமுள்ளதொடர்புகளினலே அவ்வாறு நடைபெறுகின்றது.* தாலாட்டுந்தாய் தொட்டிலை
80. Radlow, V.V. Quoted, Thomson, G. (1961) P. 530.
81, 'Singing is often accompanied by some kind of action, such as a dance in which bodily movements are repeated on various patterns or mimetic gestures which illustrate what the words say and make their references and implications more forceful, or merely supporting actions like clapping the hands or stamping the feet to emphasize certain points in the tune or the words.' Bowra, C.M. (1962) P, 28.

நாட்டார்பாடல் . 73
மெதுவாக ஆட்டியவண்ணம் அல்லது தனதுமடியிலோ தோளிலோ அணைத்து வைத்திருக்கும் குழந்தையை மெதுவாக அசைத்த வண்ணமே தாலாட்டுப் பாடுகின்ருள். அதனுடன் தாலாட்டுக் குரிய இசையமைப்பு வாய்ப்பாட்டைத் திரும்பத்திரும்பப் பாடும்போது ஒத்திசை அசைவு தோன்றுகின்றது. இந்த அசைவு பாடலின் தோற்றத்திற்கும் ஆக்கத்திற்கும் காரணியாக அமை கின்றது. தொழிற்பாடல்களின் ஆக்கமுறைகள் ஏனைய பாடல் களின் ஆக்கமுறைகளிலிருந்து மிகவும் எளிதாகக் காணப்படு கின்றன. செய்யுந் தொழிலுக்கேற்ப உடலுறுப்புகளும் சிந்தனை யும் இயங்கிக் கொண்டிருக்கும் அதேவேளையில், அவற்றுக்கு இயைபான முறையில் ஒசையும் அதனைத் தொடர்ந்து பாடலும் தாமாகவே தோற்றம் பெறுகின்றன. ஒசையின் தொழிற்பாடு தொழிலாளர்களைச் செயற்படச் செய்கின்றது. எனவே நாட்டார் பாடல்களின் சிறப்பியல்புகளில் அவற்றின் ஆக்க முறைகள் குறிப்பிடத்தக்கனவாகின்றன.
நாட்டார் பாடலிலே தலைமைக் கருத்துகள் (Motif)
நாட்டார் பாடல்களில் வரும் தலைமைக்கருத்துகள் பெரும் பாலான நாடுகளிலுமுள்ள நாட்டார்பாடல்களிலும் பொதுத் தன்மையுடையனவாகக் காணப்படும். இப்பொதுத்தன்மை மனித உணர்ச்சிகளினதும் சிந்தனைகளினதும் ஒருமைப்பாட்டைக் குறிப்பதாக அமைகின்றது. பல நிகழ்ச்சிகளுக்கு மையமாக அமைந்து காணப்படும் பொதுவான கருத்தே தலைமைக் கருத்து எனப்படுகிறது.* தலைமைக் கருத்தை வலியுறுத்த அதனை மையமாகக் கொண்டு பல துணைக்கருத்துகளும் செயல்களும் கூறப்பட்டிருக்கும். இதனைப் பின்வருமாறு விளக்கிக் காட்ட
67 f.
?? தலைமைக் கருத்து • شوہ
అశ్రీ இ FF 26.Π.
கதைப்பாடல்களிற் பல தலைமைக்கருத்துகள் காணப்படும், அவற்றை மையமாகக் கொண்டு பல நிகழ்ச்சிகள் புனையப்பட்டி
82, Encyclopaedia of World Arts. Vol,5, P. 548. 83. அ = ஒரு தலமைக்கருத்து. அதனை விளக்குவதற்காக
ஆ, இ, ஈ, உ, ஊ, முதலிய துணைக்கருத்துகளும் செயல்களும்
கூறப்படுகின்றன,

Page 51
74 மட்டக்களப்பு மாவட்ட .
ருக்கும், உதாரணமாகக் கண்டிராஜன் ஒப்பாரிப்பாடல்’ என்ற கதையில் அரசநீதி, காமவெளியின் கொடுமை, பிறன்மனை நயத்திலின் தீமை, சூழ்ச்சி, பழிக்குப்பழி, செய்ந்நன்றியறிதல் முதலிய பல தலைமைக் கருத்துகள் காணப்படுகின்றன. அப் பாடலைப் படித்து முடிக்கும்போது அந்நூலில் இடம்பெறும் தலைமைக்கருத்துகளே படிப்போரின் மனத்தில் முனைப்பாகத் தோன்றுவனவாகும்.
கதைப் பாடல்களைப் போன்றே இசைப்பாடல்களிலும் தலைமைக்கருத்துகள் அமைந்து காணப்படுகின்றன. உதாரண மாகத் தாலாட்டுப் பாடல்களை நோக்கின், அப்பாடல்களிலே குழந்தையை உறங்கவைத்தல், அரவணைத்தல், தாயின் தவமும் தவப் பயனுங் கூறுதல், உறவினர் பெருமை கூறுதல், குழந்தையின் சொத்துக்சள் பற்றிக் கூறுதல் முதலிய பல தலைமைக்கருத்துகள் பயின்று வருதலும், அவற்றை வலியுறுத்த அல்லது அவைமேலும் விளக்கமாக அமையப் பல செய்திகளும் வருணனைகளும் இடம் பெறுதலும் குறிப்பிடத்தக்கன.
உணர்ச்சி - உள்ளக் கிளர்ச்சி
கவிதையின் முக்கிய பண்புகளில் உணர்ச்சிப்புலப்பாடும் ஒன்ருகும். நாட்டார் பாடல்கள் உணர்ச்சிச் சித்திரம் என்று வருணிக்கப்படுவனவாகும். எனவே அப்பாடல்களில் உணர்ச்சிப் புலப்பாடு முதன்மை பெறுதல் இயல்பே. ‘நனவு நிலையில் நம் முடைய செயல்கள் யாவற்றையும் பாதித்து நிற்கும் பொது உளநிலைமையை உளவியலாளர் உணர்ச்சி என்று குறிப்பிடுவர்,84 அந்த உணர்ச்சி நிலையின் உச்சக்கட்டத்தை அல்லது அந்நிலை யில் ஏற்படும் செயற்பாட்டை உள்ளக்கிளர்ச்சி (Emotion) எனலாம் நாட்டார் பாடல்கள் இவ்விருதன்மைகளையும் பிரதி பலித்துக் காட்டுவதில் முக்கியத்துவம் பெறுகின்றன. பாடலின் பொருள், சொற்பிரயோகம், ஒலிநயம் என்பவற்றின் மூலம் உணர்ச்சியும் உள்ளக்கிளர்ச்சியும் பு ல ப் படுத் த ப் ப டு கின்றன. தாலாட்டுப் பாடல்கள், காதற்பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் முதலியனவற்றிலே தனிமனித உணர்ச்சிகளும் பலர் சேர்ந்து தொழிற்படுதல், வழிபடுதல் ஆகிய சந்தர்ப்பங் களிற் பாடப்படும் பாடல்களிற் கூட்டுணர்ச்சியும் இடம்பெறக் காணலாம்.
84. சுப்புரெட்டி, ந, (1961) பக். 66.

இயல் - II தாலாட்டுப் பாடல்களின் அமைப்பாய்வு
தாலாட்டுப் பாடல்கள்
கிராமியத் தாய்மார் தங்குழந்தைகளை அணைத்து, அமைதியை நாட்டி, நித்திரையாக்கும் பொருட்டுப் பரம்பரை பரம்பரை யாகப் பாடிவரும் இன்னிசைப் பாடல்களே தாலாட்டு என வழங்கப்படுபவையாகும். பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களில் வரும் பத்துப் பருவங்களிற் காப்பு, செங்கீரை முதலிய பருவங் களைத் தொடர்ந்து தாலப்பருவம் கூறப்படுகிறது. ‘குழந்தையைத் தொட்டிலிலிட்டு, அதன் முன்னைச் சிறப்புகளை எல்லாம் தொகுத்துத் தாலாட்டும் பருவமே பிள்ளைத்தமிழின் தாலப் பருவம்’ எனக் கூறுவர். தாலப்பருவம் எட்டாம் மாதத்தில் வருவதாகச் சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் நூற்பதிப்பின் முன்னுரையிற் கற்குளம் குப்புசாமி முதலியார் கூறுகின்றர். ஆனல் அவ்வாறு கூறுவதற்குப் பாட்டியல் நூல்களிலோ அன்றிப் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களிலோ சான்றுகள் காணப்பட வில்லை.2 குழந்தை பிறந்து ஓரிரு வாரங்களிலே தாய்மார் குழந்தையைத் தாலாட்டத் தொடங்குவதே வழக்கமாகும்.
பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களிலே வரும் தாலப்பருவப் பாடல்கள் "தாலேலோ’ என முடிவுறும் பெற்றியன. இப்பிர பந்தங்களிலும் பன்னிருபாட்டியலிலும்? 'தால்’ என்ற சொல் லாட்சியே வருகின்றது, தாலாட்டு என்பது தால் + ஆட்டு 7) தாலு + ஆட்டு என்னும் இரு சொற்களினல் ஆக்கம் பெற்றதாகும். தாலு என்பது நாக்கைக் குறிக்கும் வடமொழிப் பதம். நாக்கைக் ஆட்டிப் பாடும் பாடல் ஆதலால் அது (தால் + ஆட்டு) தாலாட்டு எனப் பெயர் பெற்றது எனக் கூறுவாருமுளர். அவர்களது கருத்துப் பொருந்தாச் சொற்பிறப்
பரமசிவானந்தம், அ.மு. (1959) பக். 21,
மேலது. பக், 18. "காப்பொடு செங்கீரை தால் சப்பாணி " பன்னிருபாட்டியல் குத், 102, Tamil Lexican, vol. III, Part I, 1928, P. 1849.
i

Page 52
76 மட்டக்களப்பு மாவட்ட .
பியல் (Folk - etymology) ஆய்வின் பாற்படுவதாகும்." தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ அல்லது தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணந் தாலாட்டுவதே வழக்கம். 'தால்’ என்ற சொல்லே முன்பு தாலாட்டைக் குறித் துள்ளது என்றும், காலப்போக்கிலே தால், ஆட்டு என்னும் இரு சொற்களும் இணைந்து தாலாட்டு என்ற சொல்லாட்சி ஏற்பட லாயிற்று என்றும் கொள்வது பொருந்தும். கிராமிய வழக்கிலே, தாலாட்டு என்பது “ஆராட்டு’, * "ஒராட்டு’, ஒலாட்டு’ எனவும் வழங்குதல் குறிப்பிடத்தக்கது.
தாலாட்டுப் பாடலைப் பாடத் தொடங்கு முன் “ஆராரே ஆரிரரோ’, ‘ராராரோ ராரிரரோ’ முதலான ஒலித்தொடா களை இசையமைப்பு வாய்பாடாகப் பாடி இசை மீட்பதைக் கவனிக்கலாம். தொடக்கநிலையில் இப்பாடல்களின் இசை யமைப்பு வாய்பாட்டுத் தொடர்களுக்கு மிக்க முதன்மை அளிக்கப் பட்டிருக்கலாம். காலப்போக்கில் மனித சிந்தனையின் வளர்ச்சி யினற் பல்வேறுபட்ட கருத்துச் செறிவும், மொழிநடைச் சிறப் பும் கொண்டனவாக இப்பாடல்கள் தோற்றம் பெறலாயின எனக் கருதலாம்.
குழந்தைக்கு முதன்முதலிற் புலனுகும் உணர்வுகளிற் கூர்மை யானதும், ஆழமானதும், குறிப்பானதும் செவியுணர்வே. தாயையும், பிறரையும் அவரவர் குரலைக்கொண்டே குழந்தை வேறுபடுத்தி உணர்கிறது. இதனுல்தான் குழந்தையின் கவனத்தைத் திருப்பி, ஒரு நிலைப்படுத்தி, அழுகையை நிறுத்தி, அமைதிப்படுத்த விரும்புவோர் முதலிற் குரலைப் பயன்படுத்தி யிருக்கின்றனர்." எனவே தாலாட்டின் ஆரம்பநிலை வெறும் ஒலியை எழுப்புவதாகவே அமைந்திருக்கலாமெனக் கருத இடம் ஏற்படுகிறது.
யாடுவோர்
குழந்தை வளர்ப்பில் முதன்மையுற்று விளங்குபவர்கள் பெண்களேயாகையால் அவர்களே தாலாட்டுப்பாடும் ஆற்ற
5. A folk-etymology is an invented explanation of why a certain form means what it does, and the invention no matter how larfetched, usually turns some how on the Same sort of vague similarity of shape which underlies metanalysis and reshaping.' Hocket, Charles, F. (1958 ) P. 228. 6. நூலுள் இத்தொடர்கள்பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளமை காண்க. 7, Bowra, C.M., (1962) P. 5.

தாலாட்டு-அமைப்பாய்வு 77
லும், அனுபவமும் உரிமையும் உடையவர்கள். தாய் தன் குழந்தை அழும்போதும், அதற்குப் பாலூட்டும் போதும், நீராட்டும் வேளையிலும், அதனை உறங்க வைக்கும்போதும், தனது தாய்மை உணர்வுகளை வெளிப்படுத்தும் வேளையிலும், தாலாட்டுப் பாடுகிருள். தாய் மட்டுமன்றி, பாட்டிமார், தாயின் சகோதரி, தாதிப்பெண் ஆகியோரும் குழந்தையைத் தாலாட்டுகின்றனர். தாலாட்டுப் பாடுவோரில் வயதில் முதிர்ந்தோரே நாணமின்றி, உணர்ச்சிவசப்பட்டுத் தாலாட்டுப்பாடுவது கள ஆய்வின்போது அவதானிக்கப்பட்டது. வயதால் முதிர்ந்தோரே தாலாட்டுப் பர்டுவோரிற் பெரும்பான்மையினராகக் காணப்படுகின்றனர். தன் மகளது குழந்தையைத் தாலாட்டும் பொறுப்புப் பாட்டி யையே பெரும்பாலும் சார்கிறது. சுமார் 40 வயதிற்குட்பட்ட பெண்கள் தாலாட்டுப்பாடுவது கள ஆய்வின்போது அரிதாகவே காணப்பட்டது.
தாலாட்டுப் பாடலோசை மென்மையும் இனிமையும் கலந்த அமைதியான இசை ஒழுங்கு பெற்றிருப்பதால் ஆண்களாலே தாலாட்டுப்பாட இயலுவதில்லை. தாய்ப்பாசத்தில் அல்லது தாய்மையிலிருந்தே தாலாட்டுப் பாடல்கள் தோற்றமாகின்றன என்று கூறக்கூடிய அளவுக்குத் தாலாட்டுப் பாடல் பெண்களின் சொத்தாகவே அமைந்துவிட்டது. தாலாட்டுப் பாடக்கூடிய ஆற்றலுடைய ஆண்கள் இருந்தாலும் அவர்களது திறமை பாராட்டக்கூடியதாக அமையுமேயன்றித் தாலாட்டுப்பாடலின் g2. Gðior GOp Du 1 nT GØT பயன்பாட்டைப்* பெறமாட்டாது என்பது உறுதி. ஆண்கள் தமது திறமையைப் பயன்படுத்தித் தாலாட்டுப் பாடிப் பிள்ளையை அரவணைப்பதும் வழக்கமில்லை. ஆனற் பொழுதுபோக்கு நேரங்களிலே தாலாட்டுப் பாடுவதுண்டு. நாட்டுக்கூத்திலே தாலாட்டுப்பாடல்கள் வரும்போது ஆண்கள் தமது திறமையைக் காட்டத்தவறுவதில்லை.
கேட்போர்
குழந்தைக்காகப் பாடப்படும் தாலாட்டுப்பாடல்களைக் குழந்தை மட்டும்தான கேட்கின்றது என்ற ஐயம் தோன்றுகிறது. பாடலைக் கேட்போர் காட்சி வடிவாகவும் கருத்து வடிவாகவும் பாடுவோருக்குத் தோற்றமளிக்கின்றனர். தாலாட்டுப் பாட லுக்குக் குழந்தையைவிட வேறு சிலரும் கேட்போராக அமை
8. நூலின் ஆறம் இயலிலே தாலாட்டுப் பாடல்கள் பயன்பாடு விரிவாக
ஆராயப்பட்டுள்ளமை காண்க.

Page 53
18 மட்டக்களப்பு மாவட்ட .
கின்றனர் என்பதை அப்பாடல்களின் பொருள் மரபும்" அவற்றின் பயன்பாடும் வலியுறுத்துகின்றன. பல்வேறுபட்ட விடயங்கள் தாலாட்டுப் பாடல்களின் பொருட்கூறுகளாக அமைந்துள்ளனவாயினும், பாடலின் ஒசையமைதியே குழந் தையைத் தாலாட்டித்துயிலூட்டுகின்றது. ஆனல் அப்பாடல் களின் பொருள் பிறரையே கவர்வதாகக் காணப்படுகிறது. அவ்வகையிற் குழந்தையுடன் ஏனையோரும் தாலாட்டுப்பாடலின் கேட்போராக அமைதல் தேற்றமாகின்றது.?
தாய் தன் குழந்தையைத் தாலாட்டும்போது குழந்தையே அப்பாடலை முதலிற்கேட்கின்றது. இரண்டாவதாகச் சிலசமயங் களிலே தாயின் அருகிலோ அல்லது தாலாட்டுப்பாடல் காதில் விழக்கூடியதாக வீட்டின் வெளிப் புறத்திலோ இருக்கும் அவளின் குடும்பத்தினர், உறவினர் ஆகியோரும் பாடலைக் கேட் போராக அமையலாம். அத்தகைய சந்தர்ப்பங்களிலே தாலாட் டுப் பாடுந்தாய் தான் அவர்களுக்குக் கூறவேண்டியனவற்றைத் தாலாட்டில் அமைத்துப்பாடுவது வழக்கம்.
கேட்போர் வரிசையிலே தாய் இடம் பெறுவது அபூர்வ மெனிலும் அதற்கும் ஓர் உதாரணத் தரப்படுகிறது. பாட்டி யொருத்தி தன் பெயரனகிய குழந்தையைத் தாலாட்டு கிருள். ஆனல் குழந்தையோ அழுகையை விட்டபாடில்லை குழந்தைக்குப் பசி எடுத்துவிட்டது என்பதையுணர்ந்து பாட்டி, குழந்தையின் தாய்க்கு இதனை அறிவிக்கும் முகமாகத் தாலாட் டிலே வருமாறு பாடுகின்ருள் :
தம்பிதானே அழுகிருராம்
தாயார் மடிதேடி அல்லி மகாராசாவுக்கு
கிட்டவந்து பால்கொடம்மா’19 இப்பாடலின் கேட்போராகத் தாய் இடம் பெறுகிமுள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாருகத் தாலாட்டுப் பாடல்களைக் கேட்போரிற் குழந்தை முதலிடம் பெறுவதையும் குடும்பத் தினரும் உறவினரும் பாடலைக் கேட்போராக இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
9. இதுபற்றிருாலினுள் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 10, பி,இ.தா.பா.12 பாடல் 5 வரி 13.16.

தாலாட்டு-அமைப்பாய்வு
பொருளமைப்பு ஆய்வு
பொருள் ஒருமைப்பாடு நோக்கிலே தாலாட்டுப் பாடல்கள் இங்கு ஆறுபிரிவுகளாக வகுக்கப்பட்டு, அப்பிரிவுகளின் பொருள மைப்புத தனித்தனியே ஆராயப்படுகின்றது. இங்கு ஆராயப் படும் பாடல்கள் யாவும் பின்னிணைப்பிலே தரப்பட்டுள்ளன. 1 குழந்தையைப் புகழும் பாடல்கள்
இத்தலைப்பின் கீழ் பதினெரு பாடற் பிரிவுகளின் பொருள மைப்பு ஆராயப்படுகின்றது. முதலாம் பாடலிற் ' குழந்தையை *முத்தாகக் கற்பனை செய்து புகழப்பட்டுள்ளது. முத்தின் இளமை, தன்மை, தூய்மை, ஒளி ஆகியவற்றினைக் குழந்தையின் இயல்புகளுடன் ஒப்பு நோக்கியே குழந்தை முத்தாக உருவகக்கப் படுவதாயிற்று. குழந்தையையும் முத்தையும் ஒப்புநோக்கும் நுண்மாண் நுழைபுலம் கிராமியத் தாயிடம் இல்லாவிடினும், மரபுவழிப்பட்டதாகப் பரம்பரை பரம்பரையாக வழங்கிவரும் அவ்வுவமை கிராமியத் தாய்மாருக்குப் பயிற் சி யாக அமைந்துவிடுவதால், தம் குழந்தையைத் தாலாட்ட அவ்வுவமை யைப் பயன்படுத்தலாயினர். தாவடம் (மாலை) எனவும் குழந்தை உவமிக்கப்பட்டுள்ளது. குறத்தி அணியும் தாவடம் மணி அல்லது முத்துக்களாலானதாகும். எனவே. “குறத்தி கையில் தாவடமோ” என்ற தொடர் முத்தையே சுட்டி நிற் பதாற் பாடல் முழுவதிலுமே முத்தாகிய உவமை கையாளப் படுகிறது ‘சாதிப் பெருங்கடலில் சங்கீன்ற வெண்முத்தோ நீ’ எனக் குழந்தையைப் புகழும் தாய், 'ஈனுதமுத்தோ ’’ என்ற தொடர்மூலம் குழந்தைக்குத் தெய்வீகத் தன்மை கற்பித்துப் புகழ்கிருள்.
இப்பாடலின் பொருளமைப்பிற் கண்ணிகள் தோறும்? *முத்து’ எனும் ஐயநிலை உவமைச் சொல் திரும்பத்திரும்பவரும் அமைப்புக் காணப்படுகிறது. பாடலின் முதலாம் கண்ணி, ஏழாவது கண்ணியாக மீண்டும் வந்திருந்தால்குறிப்பிடற்பாலது. குழந்தையைப் புகழுந்தாய், முதலிற் குழந்தையை முத்தாக உவமித்து அந்த முத்துக்கு அடை கொடுத்துக் கூறுவதன்மூலம் அவள் மனத்திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிருள். அவ்வாறு உவமை பெறும் அடைகள் வருமாறு:
11. பி.இ.தா.பா.111 பாடல் 1.
12. ஈரடி இசையமைப்பு வாய்ப்பாடு கொண்ட பாடல்களே ஈண்டுக் கண்ணிகள்
எனக் குறிப்பிடப்படுகின்றன.

Page 54
8) மட்டக்களப்பு மாவட்ட .
அடைகள் + உவமை = குழந்தை
முத்தான + முத்து = குழந்தை முது கடலில் ஆணி + முத்து = குழந்தை கோராத 13 + முத்து = குழந்தை ஈணுத சாதிப் பெருங்கடலிற் + முத்து = குழந்தை சங்கீன்ற வெண் ஆராய்ந்த + முத்து = குழந்தை அலைகடலில் ஆணி + முத்து = குழந்தை கொட்டி வைச்ச + முத்து = குழந்தை குளிச்செடுத்த ஆணி + முத்து = குழந்தை சங்கீன்ற + முத்து = குழந்தை சமுத்திரத்தில் ஆணி + முத்து = குழந்தை (தாவடமாகச் செய்யப்பட்ட) + முத்து = குழந்தை
மேலே வகைப்படுத்தப்பட்டுள்ள உவமை அடைகளின் மூலம் முத்தின் பிறப்பிடமும் அதன் பெருமையும் உணர்த்தப்படுவ தாயின.
குழந்தையை முத்தாக உவமிக்கும் தாய் முத்துக்குக் கொடுக் கும் அடைமொழிகளின்மூலம் மறைமுகமாகத் தன்னையும், தனது தாய்மையினையும் குறிப்பிட்டுப்பாடுவதும் உய்த்துணரப்பாலன. சாதிப்பெருங்கடல், சமுத்திரம், அலைகடல், சங்கு என்பன ஈண்டு தாயைக் குறிப்பிடுவனவாகவும் அமைதல் காண்க.
குழந்தைக்கு உவமையாகவரும் “முத்து’ என்ற சொல், பல அடைமொழிகள் பெற்றுத் தொடர் அடைமொழி அமைப்பாக இப்பாடலில் அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கது.
உ+ம் : முது + கடல் + ஆணி = முத்து
சாதி + பெரும் + கடல் + சங்கு + ஈன்ற + வெண் = முத்து
இப்பாடலில் இடம்பெறும் அடைமொழிகளையும், திரும்பத் திரும்பவரும் சொற்ருேடர்களையும் நீக்கிநோக்கின், ‘முத்தோநீ° *தாவடமோரீ” என்ற இவ்விரு தொடர்களே இப்பாடற் பொருளாக மிஞ்சுமென்க. இலக்கண அடிப்படையிலும், சொற் பொருள் அடிப்படையிலும் பாடலின் ஒவ்வொரு கண்ணியும்
13. "தோளாமுத்து.” போற்றித்திருவகவல், வரி 197; திருவாசகப், புண்ர்ச்
சிப்பத்து, பாடல் 1.

தாலாட்டு. அமைப்பாய்வு 81.
தனித்து இயங்குவதோடு, பொருளமைப்பில் எட்டுக்கண்ணிகளும் ஒரே தன்மையனவாகவே காணப்படுகின்றன. இதனைப் பின் வருமாறு குறியீடுகளைக் கொண்டு விளக்கலாம், பாடல்களின் பொருளமைப்பினைச் சுருக்கமாக விளக்குவதற்குக் கையாளப் படும் குறியீடுகளின் விளக்கம் வருமாறு:
உ = உவமை; உஅ = உவமை அடை; முபெ = முன்னிலைப் Guuuri.
(1) பாடல் 1 கண்ணிகள்:
i. 2.அ D. முபெ
垒一° 2-9 2-9 2.
ii. 42 2 [ضوی. முபெ
உஆ 2-9 سمي
iii. 29 2- முபெ
.உஅ d {9ی - 22
ίν. 2-9 2-9 உஆ முபெ
5 ! 29N 2 کی۔. .
W. உஆ முபெ
உஅ 2 - 9H ܚ2ܧ • vi. உஆ உஆ d முபெ
D-9 °一马 உஆ D-. vii. d. 9 d vn முபெ
உஆ உஅ 2-9 -
viii. 2-9 கி.அ 2 - முபெ Deg D-9 D-.
இரண்டாம் பாடலிற்* கன்று (கண்டு), குயில், வெள்ளி, குலக்கொழுந்து, பிலா, சிலம்பு, பூச்சரம் எனப்பல்வேறு பொருள் களாகக் குழந்தை உவமிக்கப்படுகின்றது. முதற்பாடலைப் போன்றே ஈண்டும் உவமை அடைபெறுந்தன்மையும் காணப் படுகிறது.
உவமை அடை 965) குழந்தை மான் ஈண்ட + கண்டு = குழந்தை மலடிபெத்த + மாங்குயில் = குழந்தை
14. பி.இ.தா.பா./11 பாடல் 2 நோக்குக.
La-6

Page 55
82 மட்டக்களப்பு மாவட்ட.
வானத்து + வெள்ளி = குழந்தை வளரும் + குலக்கொழுந்து = குழந்தை கண்டு + பிலா = குழந்தை கூளன் + பிலா = குழந்தை மாமன்மடிச் + சிலம்பு = குழந்தை மைத்துனன்மார்கைச் + சிலம்பு = குழந்தை
மாமன்மகள் கொண் டைக்கு மலர்ந்த + பூச்சரம் = குழந்தை
மூன்ரும் பாடலிலும் குழந்தையைப் பலவிதமாக உருவகஞ் செய்து, குழந்தையின் பெருமை பேசுவதாக அமைந்துள்ளது. இப்பாடலில் வரும் உருவகங்களுட் சில அடைபெற்றும் அடை பெருமலும் வந்துள்ளமையைப் பின்வருமாறு விளக்கிக் காட்டலாம்:
உருவகஅடை உருவகம் குழந்தை 0 0 ap is . 8 ) = 0 (y LDΓτούτ = குழந்தை O a a • o a மரகதம் = குழந்தை
திரவியம் = குழந்தை - o செண்பகம் = குழந்தை
செந் + தேன் = குழந்தை மல்லிகை -Ւ է է = குழந்தை ஆர் + அமுது" உச குழந்தை என் + கண்ணே = குழந்தை மாற்றுயர்ந்த + பொன் = குழந்தை மறுவில்லா செங் + கரும்பு = குழந்தை
இப்பாடலின் பொருளமைப்பு முறையைப் பின்வருமாறு குறியீடு மூலம் விளக்கலாம். கையாளப்படும் குறியீட்டு விளக்கம்:
உ = உருவகம், உஅ = உருவக அடை, அபெ = அடையும்பெயரும்.
(1) பாடல் 3 கண்ணி:
(அ) உ ad
2-9 2. 2
15. மேலது, !!! பாடல் 3 பார்க்க. 16. 'ஆர் அமுதே. * சிவபுரணம். வரி 63; "ஆரா அமுதே." மேலது. 67.
ஆரா அமுதின்.” திருப்பொன்னூஞ்சல்-பாடல் 1.

தாலாட்டு.அமைப்பாய்வு 83
(ஆ) el
29 உஆ 2- .
(இ) உஅ உ 9. s 9 p.
அபெ
(FF) °一<筠 2 -9 d
2-9 29 9ے۔H 2- o
நான்காம் பாடல்" முன் ஆராயப்பட்ட மூன்று பாடல் களிலிருந்தும் சற்று வேறுபட்ட பொருளமைப்புடையதாகும். இப்பாடலின் முதல் மூன்று கண்ணிகளும் ஒரே அமைப்பிலும், தொடர்ந்து வரும் ஏழு கண்ணிகளும் வ்ேருெரு அமைப்பிலும் காணப்படுகின்றன. இவற்றைப் பின்வருமாறு வகுத்துக் காட்டலாம்:
(1) பாடல் 4 கண்ணிகள்: பிரிவு - 1 அ - 1 ஆம் வரி - சீதையின் பாலகன் - லவகுச 2 ஆம் வரி இராமன்மகன் -லவகுச ஆ. 1 ஆம் வரி - அல்லியின் பாலகன் -அபிமன்னன் 2 ஆம் வரி - அருச்சுனன் மகன் - அபிமன்னன் இ - 1 ஆம் வரி - தூது சென்ற
மாயவன் -கிருஷ்ணன் 2 ஆம் வரி - துவாரகை மன்னன் -கிருஷ்ணன் பிரிவு - 11 ஈ - 1 ஆம் 2 ஆம் - தருமர்கள் -அபிமன்னன்
வரிகள் தந்தவன்
உ - 1 ஆம் 2 ஆம் - பாண்டவர்கள் -அபிமன்னன்
வரிகள் பாற்குடம்
ஊ - 1 ஆம் 2 ஆம் - வில்வளைப்பவன் -இராமன்
வரிகள்
எ - 1 ஆம் 2 ஆம் - சீதை மணவாளன் -இராமன்
வரிகள்
ஏ - 1 ஆம் 2 ஆம் - ஆதிசிவன் மகன் -முருகன்
வரிகள்
V
17. பி.இ., தா.பா.11 பாடல் 4.

Page 56
84 மட்டக்களப்பு மாவடட
ஐ - 1 ஆம் 2 ஆம் - பெருமாள் திருமருகன்-முருகன்
வரிகள்.
ஒ - 1 ஆம் 2 ஆம் - பாண்டவர் துணைவன்-கிருஷ்ணன்
வரிகள்.
இராமாயணம், கந்தபுராணம் முதலிய புராண இதிகாசக் கதாபாத்திரங்களைக் கருத்திற் கொண்டு இப்பாடலில் வரும் பத்துக் கண்ணிகளிலும் குழந்தையை முறையே லவகுச, அபி மன்னன், இராமன், முருகன் என ஐயநிலையுவமையாக அடுக்கிக் கூறும் வகையில் இருவேறுபட்டமுறை பின்பற்றப்படுதல் நோக் கற்பாலது: ܗܝ
பிரிவு . 1 முதல் மூன்று கண்ணிகளிலும் ஒவ்வொரு வரியிலும் தனித்தனியாக உவமை இடம்பெறுகிறது. முதல்வரி யிற்கூறப்பட்டதே 2ஆம் வரியில் வேறுவிதமாகக் கூறப் படுகிறது. இவ்வாறு முதல் மூன்று கண்ணிகளிலும் இடம்பெறும் மூன்று உவமைகளும் இருவிதமாகக் கூறப்படுவதால் (3 x 2) ஆறுமுறை இடம்பெறுவன வாயின.
பிரிவு - 11: இப்பிரிவில் வரும் ஏழு கண்ணிகளிலும் தனித்தனியே ஏழு உவமைகள் வந்துள்ளனவெனினும், ஒரு கண் ணியிற் கூறப்பட்டதே அடுத்த கண்ணியிலும் இடம் பெறும் அமைப்பும் (ஈ + உ) (ஊ + எ) (ஏ + ஐ) காணப்படுகிறது.
இவ்வாறு ஒரே உவமையை இருவிதமாகக் கூறுவதிலிருந்து, அதனைப்பாடும் பெண்ணின் புராண இதிகாச அறிவும், அவற்றி லிருந்த ஈடுபாடும் புலப்படுகின்றன. முதலிரு கண்ணிகளில் முறையே சீதை இராமர் பற்றியும், அல்லி அருச்சுனர்பற்றியும் குறிப்பிடுந்தாய், அதன்மூலம் தனது குடும்பவாழ்க்கை (கணவன் + மனைவி) பற்றியும் நினைவுகொண்டு மகிழ்கிருள் எனலாம்.
ஐந்தாம்பாடற் பொருளமைப்பு இரண்டாம் பாடற்பொரு ளமைப்புடன் இனங்காணக் கூடியதாயினும், விளித்தொடராக வரும் "அழகு கண்டேரீ’’ என்னுந்தொடர் குறித்து இப்பாடல், ஈண்டு வேருக ஆராயப்படுகிறது. தாலாட்டுப் பாடல்களின் ஓசையமைதி குழந்தைக்கு அமைதி அளித்து, அதனைத் துயில்
18. பி. இ; தா. பா. 11 பாடல் 5.

தாலாட்டு.அமைப்பாய்வு 85
கொள்ளச் செய்வதாலேதான் தாய்மார் தாலாட்டும்போது, தம்மால் இயன்றவரை ஓசையை நீட்டி இசைத்துப்பாடுகின்றனர். *அழகு கண்டேநீ’, ‘என்னரசி மகனே நீ" ** என்னரசி மகனருக்கு'*' என்ற தொடர்களும் இவ்வாறு இசை நீட்டத்துக் காகப் பயன்படுவன என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ஐந்தாம் பாடலிலே குழந்தை பின்வருமாறு உவமிக்கப்படு கின்றது:
90 i 6 í Dí EO 4F6DD குழந்தை
L DIT L. -- ւյ(U? = குழந்தை மலைநாட்டு + நங்கணம் = குழந்தை தங்கப்பொன் + நகை = குழந்தை தங்க + வைடூரியம் = குழந்தை ஆலம் + பழம் = குழந்தை அழகுகிளி + மாம்பழம் = குழந்தை வெத்திலை + է է = குழந்தை விரிஞ்சசெந் + தாமரை = குழந்தை
ஆரும் பாடலின்? நான்கு கண்ணிகளும் தனித்தனியே பொருள் தருவதோடு, அவற்றின் ஒவ்வொரு வரியும் பொருள் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது. “செய’ என்னும் வாய் பாட்டு வினை எச்ச வடிவங்களாக வந்துள்ள “தளைக்க” “சொரிய” "பாட”, “தெண்டனிட” என்பன ஈண்டு வினைமுற்ருகப் பயன் படுகின்றன. இப்பாடலில் வரும் ' என்னரசி மகனே’, ‘என்னரசி மகனருக்கு’ என்னும் இரு தொடர்களும் மட்டக்களப்பு மாநிலத்துக்கேயுரிய வழக்குத் தொடர்களாகும். குழந்தை பிறந்ததன் மகிமையினுற் பட்ட மரங்கள் தழைத்ததாகவும், பல கனிகள் சொரிந்ததாகவும் கற்பனை செய்து பாடுகிருள் தாய். *கவிபாட”, “கண்டபுலி தெண்டனிட', 'காட்டானே காவல்”, "கடியசிங்கம் தான் காவல்", "வேட்டைநாய் காவல்’, ‘வேங்கைப் புலி தான் காவல்” எனக் கற்பனை செய்து, குழந்தையின் வீரதீரங் களைப் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
அடுத்ததாக ஏழாம் பாடற் பிரிவு 1 லே?? வரும் கண்ணிகள் யாவும் **கண்ணுறங்கு” என முடிவுறுவனவாகவும், பாடலின்
19. மேலது.
20. மேலது. பாடல் 6. 21. பி. இ, தா. பா, 11 1 பாடல் 6. 22. பி. இ. தா. பா, 11 1 பாடல் 7, 1.

Page 57
36 மட்டக் களப்பு மாவட்ட.
ஒவ்வோரடியும் தனித்தனியே பொருட்கூறுடையதாகவும் அமைந்து காணப்படுகின்றன. இப்பாடலிற் சில சொற்களுஞ் சொற்ருெடர்சளும் திரும்பத்திரும்பவரும் அமைப்புக்கொண் டுள்ளன. அவை வருமாறு:
கண்ணே - 2 தரம் வந்துள்ளது. உறங்கு - - 11 தரம் வந்துள்ளது. கண்மணியே - 3 தரம் வந்துள்ளது. கண்ணுறங்கு - 5 தரம் வந்துள்ளது. உறங்குறங்கு?* - 3 தரம் வந்துள்ளது.
இப்பாடலில் வரும் உருவகங்களையும், திரும்பத்திரும்ப இடம் பெறுஞ் சொற்களையும் நீக்கிநோக்கின், ‘கண்ணே கண்ணுறங்கு” என்னும் ஒரே வரியிற் பாடற்பொருள் அமையுமாறு காண்க.
ஏழாம் பாடலின் பிரிவு 11 இல்** இடம் பெறும் பாடல்கள் யாவும் ‘கண்வளராய்’ என்னுந் தொடரை ஈற்றிற் கொண் டமைந்துள்ளன. இப்பாடல் முன்னுள்ள 2 ஆம், 3 ஆம் 5 ஆம் பாடல்களுடன் பொருளமைப்பில் இனங்காட்டப்பட வேண்டிய
தாயினும், ஈற்றில்வரும் சொற்ருெடரால் வேறுபட்டு நிற் கின்றது. குழந்தையைத் தேற்றவுவமையாக ஏகாரம் கொடுத்து உவமித்துவருஞ் சொற்சளுட் சில அடைபெற்றும் பெருமலும் அமைந்துள்ளமை இங்குக் காட்டப்படுகின்றது.
66th CUSO) 266)d குழந்தை
e o os e o soo தேன் = குழந்தை O po திரவியம் = குழந்தை to o a so கோன் = குழந்தை குல + விளக்கு க குழந்தை a G65 front Gör = குழந்தை தேடக்கிடைக்காத + திரவியம் = குழந்தை தேன் + கடல் = குழந்தை பாடப்படிக்கவந்த + பாக்கியம் = குழந்தை வாடாத?* + է է = குழந்தை வாசமுள்ள மருக் + கொழுந்து = குழந்தை தேடாத + Լէ = குழந்தை
23. உறங்கு + உறங்கு > உறங்குறங்கு. இது அடுக்குச்சொல் 24. பி. இ. தா. பா. | 1| பாடல் 7, 11.
25. பாடாவஞ்சி, நூலாக்கலிக்கம் என்ற சொல்லாட்சிகளுடன் இச்சொல்
ஒப்பிடத்தக்கது.

தாலாட்டு. அமைப்பாய்வு 87
தெள் + அமுது = குழந்தை சீரார் பசுங் + கிளி = குழந்தை ஆரார் பசுங் + கிளி = குழந்தை O P 8 y 9 o ) es செல்வம் = குழந்தை 8 8 சீமான் = குழந்தை a 0 a அன்னம் = குழந்தை
சிவன் உமையாள் Na
ஈன்றெடுத்த --சிவக்கொழுந்து = குழந்தை 0 - O a o o சந்திரர் = குழந்தை P80 op 9 en சூரியர் = குழந்தை சந்திரமதி பாலகன் +(தேவதாசன்) = குழந்தை
இவ்வாருகக் குழந்தையை உவமித்து அன்போடு விளித்துக் *கண்வளராய்' எனப்பாடும் வகையில் இப்பாடற் பொருள் அமைந்துள்ளது.
எட்டாம் பாடல் 29 முன் ஆராயப்பட்ட பாடல்களின் பொருளமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் காணப் படுகிறது. இதன் 1 ஆம் பிரிவிலுள்ள ஆறுபாடல்களின் முதல் மூன்றுவரிகளிற் செய்திகளும் நான்காம்வரியில் உருவகமும், வரியினிறுதியிற் 'கண்வளராய்’ என்ற தொடரும் அமைந்துள்ள ஒரு வரையறுக்கப்பட்ட பொருளமைப்புடையதாக இப்பாடல் கள் அமைந்துள்ளன. இதனை வருமாறு குறியீடு மூலம் விளக் கலாம். குறியீட்டு விளக்கம்: செ = செய்திகள், உ = உருவ கம், கவ = கண்வளராய்.
1 பாடல் 8.1 *செ செ செ செ செ
செ செ செ செ செ செ செ செ செ
உ கவ.”
எட்டாம் பாடலின் 11 ஆம் பிரிவில் இடம் பெறும் பாடல் கிள் (எ+ ஏ) அதன் 1ஆம் பிரிவுப் பாடல்களுடன் பொருளமைப் பில் ஒத்துக் காணப்படினும் பாடலின் இறுதிவரியில் வேறுபாடு காணப்படுகின்றது. இப்பாடல்களின் (எ+ஏ) முதன் மூன்று வரிகளிலும் செய்திகள் அமைந்துவர, நான்காம் வரிகள் பெயர், வினையெச்சம், வினைமுற்றுஎன்பன பெற்று அமைந்துள்ளமையைப் பின்வரும் குறியீடுகள் விளக்குகின்றன.
26. பி. இ; தா. பா. 11 1 பாடல் 8.

Page 58
88 மட்டக்களப்பு மாவட்ட.
குறியீட்டு விளக்கம் : செ = செய்திகள்.
| 1| பாடல் 8 11 எ ஏ **செ செ செ செ
செ செ செ செ செ செ செ செ பெயர்-வினையெச்சம்-வினைமுற்று’
தாய் தனது குழந்தையின் எதிர்கால வாழ்க்கைபற்றிக் கற்பனை செய்வதை இப்பாடல் விளக்குகிறது. சொத்துகளுக்கு வாரிசாகிச் சொத்துச் சுகங்களுடன் தன் மகள் வாழப்போவதை யும் தன் மகள் மணக்கோலத்துடன் காட்சிதரப்போவதையும் தாயுள்ளம் எண்ணிப் பூரிப்படைவதை இப்பாடல் சித்திரிக் கின்றது.
ஒன்பதாம் பாடலில்?' ஆறு கண்ணிகளுள், குழந்தையைப் பலவாருக உவமித்து விளித்து ‘நித்திரைசெய்’, ‘நித்திரைபோ', **கண்ணுறங்கு” எனக் கூறிக் குழந்தையை உறங்கவைப்பதாகப் பாடல் அமைந்துள்ளது. இப்பாடலின் பொருளமைப்பைக் குறியீடு மூலம் விளக்கலாம். குறியீட்டு விளக்கம் வருமாறு : உ - உவமை, உஅ : உவமைஅடை கஉ = கண்ணுறங்காய்; நிபோ = நித்திரைபோநிசெ= நித்திரைசெய்; உஉ = உறங்குறங்கு: தபெ = தன்மைப்பெயர், பெதொ = பெயர்த்தொடர்.
(அ) உ ó历&_ தபெ
299H உஆ Do
(ஆ) உ 22d
92-9 2- நிசெ. (இ) நிசெ நிசெ
d. 9 de 2.
(ஈ) பெதொ
ded நிசெ
(2) Golu தொ ۔۔۔۔
gD. நி GBu urt
(ஊ) நிபோ நிபோ
ded 2- 9
27. பி. இ; தா, பா, 11 1 பாடல் 9.

தாலாட்டு. அமைப்பாய்வு 89
பத்தாம் பாடற் பிரிவில் **நான்கடியான் அமைந்த எட்டுப் பாடல்கள் தரப்பட்டுள்ளன. இவை ஈற்றடிதோறும்வினைமுற்றைக் கொண்டு முடிவுறுவன. கதிரமலை, மாமாங்கம், மண்டூர்-29 ஆகிய தலங்களிலுறை தெய்வங்களின் அருளினல், தான் குழந்தைப்பேறு அடைந்தமையினையும், அத்தெய்வங்களின் கருணை யையும், தெய்வ அருளாற்கிடைத்த தன்மகனையும் தாய் புகழ்ந்து பாடுவதை இப்பாடல்கள் பொருளாகக் கொண்டமைந் துள்ளன. செய்திகளைப் புகழ்ந்து கூறும் ஒரே தன்மையான அமைப்பு: மறையே இந்த எட்டுப்பாடல்களிலுங் காணப்படு கின்றது. தழந்தை மண்டூர்ச் சாமியாகவும், கதிரமலைச் சாமி யாகவும், 17 மாங்கச் சாமியாகவும் உருவகிக்கப்படுகின்றது.
உவமைகளைக் கொண்டு தாயின் உணர்ச்சிகளும், செயல் களும், விளக்கப்படுகின்றன. விளக்கிலிட்ட ‘நெய்போல வெந் துருகி நிற்கயிலே’ என்ற உவமைத் தொடர்மூலம், குழந்தைப் பேறின்றிச் சமூகத்திற் கஷ்டப்பட்ட தாயின் மனே நிலை நன்கு எடுத்துக் காட்டப்படுகின்றது. குடும்பம் கப்பலாக உருவகிக்கப் படுமாறும் காணப்படுகிறது. மழையின்மையால் ‘இலை கருக் கொடி தீய்ந்து போகும் நிலையில் மழைபெய்து, அது தளிர்த்துப் பூத்து காய்த்துப் பொலிதல் போன்று, இதுவரை காலமும் குழந்தையின்றி வேதனையால் மனங்குன்றிக் குறுகிப் போயிருந்த தாயுளம், இறையருளாற் குழந்தைப்பேறடைந்து புது விாழ்வு பெற்றமையைப் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பிள்ளைக்கலி தீர்த்தாரோ',3° “மைந்தன்கலி தீர்த்தாரோ?, **கண்கலக்கந் தீர்த்தாரோ’ ‘துணையிருக்க வந்தாரோ', 'மனக் கவ ைதீர்த்தாரோ’’, ‘கதவு துறக்க வந்தாரோ’, ‘காவலுக்கு வந்திாரோ’ என முடிவுறும் பாடல்களின் முதல் மூன்றடிகளிலும் குழந்தைப்பேறுவேண்டிக் கதிரமலை, மாமாங்கம், மண்டூர்முதலிய தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்த செய்திகளே கூறப்படு
28. Lí. 3. ST. LI T. || 1 || LI TL6io 10.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இத்தலங்களுக்குத் தீர்த்தயாத்திரை சென்று பிள்ளைவரம்பெறும் வழக்கமும், நம்பிக்கையும் இம்மக்களிடம்
காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
$0. (அ) ‘என்னேக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம்புரிய வந்தாய். .* பாரதியார் பாடல் கண்ணன் பாட்டு, கண்ணம்மா என் குழந்தை. பக். 418. (ஆ) ". மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம்
வாழுநாளே” புறம்,-189,
9.
(இ) ‘குழந்தை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்..." சூளாமணிப்
LL6a) , at Lu JL) Tulsaa lo.

Page 59
90 மட்டக்களப்பு மாவட்ட.
கின்றன. இப்பிரிவில் வரும் 'எ' பிரிவு தவிர்ந்த ஏனைய பாடல்கள், ஒரே பொருளமைப்புக் கொண்டுள்ளமையைப் பின்வருமாறு குறியீடு இட்டுக் காட்டலாம். குறியீட்டுவிளக்கம்: * = செய்திகள் --- = வினைப்பயன்.
| 1| பாடல் 10 அ
来 米 米 米
冰 冰 来源 sk 米
2ද ※ 米 冰 ※ 米
பதினேராம் பாடலில்’ இடம்பெறும் எட்டுக் கண்ணிகளும், தெய்வ அருள் மூலம் குழந்தைப் பேறுபெற்ற தாய், அப்போருள் படக் குழந்தையைப் புகழ்ந்து பாடுவதாக နှီးမြှို့ பத்தாம் பாடலைப்போன்று இப்பாடலிலும் குழந்தை தெய்வ அருளின் சின்னமாகவே உருவகிக்கப்பட்டுள்ளது. இப்பாடலின் முதலிரு கண்ணிசளும் பொருளமைப்பில் நான்காம் பாடற் பிரிவின் இ + ஒ கண்ணிகளை8* ஒத்துக் #########၈l üLİlf பின் வருமாறு வகுத்துக் காட்டலாம் :
| 1| பாடல் 11 :
1 ஆம் வரி)
-ஈசுவரஞர் தந்தபிச்சை = குழந்தை 2 ஆம் வரி
3 ஆம் வரி)
- மாயவனர் தந்தபிச்சை = குழகை 4 ஆம் வரி)
ஏனைய கண்ணிகளிலும் தெய்வ அருளைப் புகழ்ந்து பாடுஞ் ச்ெய்தி களே கூறப்படும் அமைப்புக் காணப்படுகிறது. ஆயினும் ஆங் பயின்றுவருஞ் சொற்களும் ஐயநிலையுவமைகளும் பாடல்க உணர்ச்சிவேகத்தைக் கொடுக்கின்றன. இப்பாடலில் வரும் எட்டுக் கண்ணிகளும் பொருளமைப்பில் ஒரே தன்மையனவாகவே
31. Sil... 9. g5m. LI FT. | 1 | lu (TLái) 1 l 32. மேலது|1| 4 ஆம் பாடல்; நால் பக். 83 பார்க்க.
 

தாலாட்டு. அமைப்பாய்வு 9
அமைந்திருப்பதை வருமாறு பாடலின் முதல் இருகண்ணிகளுக்குக் குறியீடு அமைத்துக் காட்டுவது மூலம் விளக்கலாம். குறியீட்டு விளக்கம். ** = செய்திகள், IIIக விளித் தொடர்.
| 1| பாடல் 11.
கண்ணி 1 * * * * * * * * III
米 米 米 米。米 米 米 米
கண்ணி 2 * * * * * * * III
米 举 米 朱 米 朱 来 米 米
இப்பாடல்களின் முதல் நான்கு கண்ணிகளில் 'மகனே நீ” என்ற தொடரும், ஐந்தாம் ஆரும் கண்ணிகளில் ‘இவன்’ என்ற முன் னிலைப் பெயர்ச்சுட்டும் அமைந்துவர, ஏழாம் எட்டாம் கண்ணி களில் ‘எந்தன்” என்ற சொல்லும் பாடலின் அசைத் தொடர் களாக அமைந்துள்ளன.
| 2| அழுங் குழந்தையை ஆற்றும் பாடல்கள்
இத்தலைப்பின் கீழ் ஆறுபாடற் பிரிவுகள் ஆராயப்படுகின்றன. முதலாம் பாடல்?? 'அ' பிரிவிற் குழந்தையை மானே, மாங்குயிலோ எனப் பலவாருக உவமித்துக்கூறி “ஆர் ல்ெம்புறது' , 'ஆர் அழுகிறது’ என வினவும் பாணியிற் பாடற் பொருள் அமைந்துளது. அடுத்துவரும் "ஆ" பிரிவிலுள்ள பாடலும் குழந்தையை முன் உருவகித்த சொற்களால் உவமித்து **அழவேண்டாம்’, ‘வெம்பவேண்டாம்’ எனப் பாடுவதாக மைந்துள்ளது. இவ்விருபாடல்களும் (அ + ஆ) பொருள் மப்பில் ஒரே தன்மையனவாகக் காணப்படுவதைப் பின்வரும் குறியீடுகளால் விளக்கலாம். குறியீட்டு விளக்கம் வருமாறு:
விமு = வினைமுற்று, தபெ = தன்மைப்பெயர், உ = உவமை,
விமு - வியங்கோள் வினைமுற்று.
|p |பாடல் 1 அ!
2. விமு aara தபெ D விமு .
d. விமு m தபெ 92 விமு .
33. G.g., g5 T. Ur. [2] unlai) 1.

Page 60
92 மட்டக்களப்பு மாவட்ட.
芝一 விமு ΣΥ.Σ.Λ.Ο. தபெ
욕. விமு
விமு α . Η தபெ 2. விமு
*一 விமு deas தபெ
@一 விமு
| 2| பாடல் 1 ஆ : விவிமு - தபெ
s விவிமு 2. விவிமு - தபெ
விவிமு
g2 விவிமு - தபெ
s wwwa விவிமு
2- விவிமு - தபெ
s விவிமு
குழந்தை அழும்விதத்தை வருணித்து, "அழுவானேன்’ எனத் தாலாட்டுவதாக "இ" பிரிவுப் பாடல் அமைந்துள்ளது. “வாய்நோக’, **கண்ணுல் நீர்வார”, “மனசை ஏங்கவைச்சு - அழுவானேன்’’ என்ற பொருள்படப் பாடல் விரிவாக அமைந்து செல்கிறது. இப்பாடலில் “அழுவானேன்’ (5 தரம்), “வாய் நோக’ (5 தரம்) என்னுந் தொடர்கள் திரும்பத்திரும்பவ ம் அமைப்பும், “வாய்நோக அழுவானேன்’’ என்ற ஒரே မှိနှီး வைத்துக் கொண்டு பாடலை நீட்டிச் செல்லும் தன்மையும் பொருளமைப்பிற் காணப்படுகிறது.
முதலாம் பாடலின் 'ஈ' பிரிவிலுள்ள முதற் கண்ணியிற் "கொம்புக் கணியாகவும்,’ ‘கோதுப்படாமாங்கனியாகவும்' குழந்தையை உவமித்து, வம்புக்கோ, நித்திரைக்கோ, பாலுக்கோ, கூழுக்கோ, பசித்தோ - நீ அழுதாய் என வினவும் வகையிற் பாடற்பொருள் அமைந்துளது முதற்கண்ணி தவிர்ந்த ஏனைய நான்கு கண்ணிகளிலும் கேள்விகளின் விபரமாகவே பாடல் அமைந்துள்ளது.
இரண்டாம் பாடலில்* அழுங்குழந்தையை யார், எப்படி, எவற்ருல் அடித்து அழச்செய்தார்கள் என வினவும் பாணியி பொருளமைப்புக் காணப்படுகிறது. குழந்தையின் உறவினர்களை குறிப்பிட்டு அவர்கள் அடித்தார்களோ எனத் தாய் விசாரிப்பு தாகப் பாடல் அமைகிறது.
34. I î.g., 5T. LI T. /21 LI TIL 6io 2.

தாலாட்டு. அமைப்பாய்வு 93.
இப்பாடற் பொருளை வருமாறு சுருக்கமாக வகைப்படுத்தலாம்:
கர்த்தா = கருவி
ஆச்சி = ஆமணக்கந்தண்டு, ஆமணக்கம்
கம்பு, சங்கு, ஐவிரல், கை,
பாட்டி = சங்கு, கை, பிரண்டந்தடி
LDT Ló) = மாதாளங்கம்பு, கை
DIT D6ör = மல்லிகைப்பூச் செண்டு
மச்சி (மச்சாள்) = மாதாளந்தண்டு
அப்பச்சி (பாட்டன்) 60 ܩܘܡܘgܕ
அண்ணன் = அருணுக்கொடி (அரைஞாண்கயிறு)
(ஆர்) = ஆளுருவிவேர்
இயற்கைச் சூழலுக்கு ஏற்றதான தாவரப் பெயர்களே இப் பாடலில் இடம்பெறுதல் குறிப்பிடற்பாலது. ஆமணக்கந்தண்டு, மாதாளந்தண்டு, பிரண்டந்தடி என்பன பசுமையையும் மென்மை யையுங் குறித்து வந்துள்ளன. செந்நெறி இலக்கியங்களிற் பசுந் தழை கொண்டு குழந்தையை ஒச்சிய செய்தி? கூறப்படுவதும் ஈண்டு இவ்விரு இலக்கிய நெறிகளின் தொடர்பு நிலையைத் தொகுத்துக் காட்டுகிறது.
பாட்டன் முறையானவர் தனது 'ஆதனக்கையால்’ அடித்த தாகக் கூறப்படுகிறது. ஆதனம், சொத்து, முதுசொம் என்பன ஒரு பொருட் கிளவிகளாகும். ஆதனங்களுக்கு உரிமையுடைய ஒருவர் தனது சொத்துகளைத் தம் பேரப்பிள்ளைகளுக்குத் தன் இறுதிக் காலத்திற் கையளிப்பவர் ஆதலால் அவரது கையைத் தாய் ஆதனக்கை எனக் காரண காரியத் தொடர்புகாட்டிப் புகழ் கிருள்.98
இப்பாடலை நோக்கும் போது ஆச்சிக்கு ஆமணக்கந் தண்டும், மாமிக்கும் மச்சிக்கும் மாதுளந்தண்டும் சிறப்புக் கருவியாகக் கூறப்படுகின்றது. எதுகை மோனை குறித்தே இவ்வாறு பாடப் படுகின்றது எனலாம். தாலாட்டும்போது தாய், தன்னைச் சூழ்ந் திருப்போரது முறைப்பெயர்களையும் குறிப்பிட்டுப் பாடுவது கள ஆய்வில் அவதானிக்கப்பட்டது.
35. கண்ணப்பநாயனுர் புராணம்-பாடல் 23. 86. நூலுள் பார்க்க .

Page 61
-94 மட்டக் களப்பு மாவட்ட.
இரண்டாம் பாடலின் 'ஆ' பிரிவுப் பாடல் ஒரே தன்மை யான பொருள் அமைப்பினைக் கொண்டதாக அமைந் துள்ளமையை வருமாறு விளக்கிக் காட்டலாம்.
2 ஆம் பாடல் ஆ பெயர் வினை - விளிப்பெயர்
கருவி.
பெயர் வினை - விளிப்பெயர்
கருவி.
பெயர் வினை - விளிப்பெயர்
கருவி.
பெயர் வினை - விளிப்பெயர்
கருவி வினை.
மூன்ரும் பாடற் பிரிவில் ஆறுபாடல்கள்?" தரப்பட்டுள்ளன. இவற்றில் இரு வேறுபட்ட பொருளமைப்புகள் காணப்படு கின்றன. 'ஆர் அடிச்சார்”, “ஆரடிச்சு நீ அழுதாய்” என வினவுவதாகவும், "மனம் பொறுத்து நித்திரை செய்’, 'அடிச் சாரைக் கூப்பிட்டு நான் கேட்பேன் கண்ணுறங்காய்’ எனக் கூறுவதாகவும் பாடல்கள் அமைந்துள்ளன.
அழும் குழந்தையை ஆற்றுந்தாய், “ஆரடிச்சார்’, ‘அடிச் சாரைச் சொல்லி அழு’, ‘ஆக்கினைகள்? செய்திடுவோம்” எனக் குழந்தைக்கு ஆறுதல்மொழி கூறித் தாலாட்டுவதாக நான்காம் பாடல்" அமைந்துள்ளது. தாய் கூறும் ஆறுதல்மொழிகள் குழந்தைக்குப் புரியாவிடினும், அதனைக் கூறும் பாணியிலுள்ள ஓசையமைதி அழும் குழந்தையை அமைதியடையச் செய் கின்றது." இப்பாடலிற் குழந்தையை அடித்தும், தொட்டும் அழச்செய்தோருக்குத் தாய் கொடுக்கப்போகும் தண்டனைகளைக் கீழே காண்க.
37, I î.g., 5T. UT. /21 U TL6) 3 Je-2AMI.
38. ஆஞ்சை> ஆக்ஞா> ஆக்கினை = கட்டளை, தண்டனே என்ற பொருள் தருஞ் சொல் இங்கு தண்டனை என்ற பொருளில் வழங்குகிறது. இச் சொல்பற்றிய மேலும் விபரங்களைச் சொல்லடைவில் பார்க்க.
39. பி.இ., தா.பா. 12 பாடல் 4.
40. நூலுள் பார்க்க.

தாலாட்டு. அமைப்பாய்வு 95
ஆக்கினைகள்
சுண்டுவிரல் தறித்தல் கட்டைவிரல் தறித்தல் ஐவிரலையும் வாங்குதல். தோள் மூட்டை வாங்குதல். தோள் விலங்கு போடுதல். சிறை விலங்கு பூட்டுதல். சேவகத்தை மாற்றுதல். சீமைவிட்டு நீக்குதல். கடல்மீது ஏற்றி அனுப்புதல்.** வெண்ணயால் விலங்குசெய்து வெயிலிலே போடுதல்.* மண்ணுல் விலங்கு செய்து தண்ணியிலே போடுதல்.**
அழுதுகொண்டிருக்கும் குழந்தை தாயின் குரலைக் கேட்டோ அல்லது தாயைக்கண்டோ மேலும் வீரிட்டு அழுவதியற்கை. பாட்டியின் மடியிலிருந்த குழந்தை, பசியெடுத்து அழுகிறது; தாயின் குரல் கேட்டதும் மேலும் குழந்தை வீரிட்டு அழத் தொடங்குகிறது. அச்சந்தர்ப்பத்திற் பாட்டி பாடிய பாடலே இஃது. இப்பாடலிற் குழந்தை “அல்லி மகாராசா” என உவமிக்கப்படுகிறது. அல்லியின் கணவனுன அருச்சுனன், கிராமியப் பெண்களின் நினைவில் நீங்காத பாத்திரமாக அமைந் தமையால் ஈண்டும் அருச்சுனன் பற்றியுங் கூறப்படுகின்றது.
41. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தண்டனே முறைகளை
இப்பாடல் குறிப்பிடுகின்றது, இதனை ஒல்லாந்த ஆவணத்துடன் ஈண்டு ஒப்பிடுதல் தகும்.
* . தங்களுடைய அல்லது மற்றவர்களுடைய கோப்பித் தோட்டங்களி
லென்கிலும் கோப்பிக் கன்றுகளே அல்லது மரங்களைப் பிடுங்கவும் வெட்டிப் போடவும் பாழாக்கவுந் துணிகரமுள்ள பேர்களே. அடித்து முத்திரைச் சூடுஞ்சுட்டுக் காதும் மூக்கும் அறுத்து விலங்கும்போட்டு 25வருஷத்தைக் கும் காவுதெவொ ஏஸப் பிறஞ்சவிலே கொம்பஞ்ஞயவில் வேலை செய்யப் போடுகிறதறியவும். முன்றவது முறை அகப்பட்டால்க் கழுத்திலே கயிறு போட்டு மரணபயியந்தம் ஆக்கின பண்ணப்படும்." 17 மே-ஜூன் 1727-ல் வெளியிடப்பட்ட ஒல்லாந்த ஆவணம் : மூலம் தனஞ்சயராசசிங்கம்-ச. (1964). 42, ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திற் பெரிய குற்றஞ் செய்தோர் நன்னம்பிக்கை மு?னக்குக் (Cape of good hope) கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டனர் என ஒல்லாந்தர் ஆவணங்களால் அறியப்படுகிறது.
43, 44. இவ்விரு தொடர்களும் நகைச்சுவைபடக் கூறப்படுவனவாகும்,

Page 62
96 மட்டக் களப்பு மாவட்ட.
ஆரும் பாடல்" இருபத்துநான்கு வரிகளைக்கொண்ட நீண்ட பாடலாக அமைந்துள்ளது. இதற்குமுன்பு ஆராயப்பட்ட பாடல்கள்" "ஆர் அழுகிறது”, “குழந்தையை ஆர் அடிச்சார்’, 'அடிச்சாரைச் சொல்லிஅழு’’, ‘*ஆக்கினைகள் செய்துவைப் போம்’ எனப் பொருள்படும் வகையிலே அமைந்துள்ளன. இப் பாடலிற் குழந்தை அழுதகண்ணிரின் பெருக்கம்பற்றிய வருணனை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. கண்ணிர் ஓடுவது போன்றே தாயின் கற்பனையும் வளர்ந்துசெல்கிறது. குழந் தையின் அழுகையைப் பொறுத்துத் தாலாட்டு நீண்டும் குறுகி யும் அமைவது இயற்கை. குழந்தையின் கண்ணிர் பெருகுவதைத் தாய் உயர்வுநவிற்சியாகக் கற்பனை செய்வதை உரைநடையிற் கீழே தருவாம்:
*கண்ணிர் ஆருகப் பெருகுகிறது; தாயார் மடியை நிறைக் கின்றது; தகப்பனர்தோளை நிறைக்கின்றது; மாமியின் மடியை நிறைக்கின்றது; மாமனர் தோளை நிறைக்கின்றது; சித்திரை மாத சிறுவெள்ளம்போல் பெருகுகிறது; ஆறு பெருகுகிறது; யானை குளிப்பாட்டப்படுகிறது; குட்டை பெருகுகிறது; குதிரை குளிப்பாட்டப்படுகிறது; குளம் நிறை கிறது; குதிரை குளித்தேறுகிறது; முந்நூறு ஆண்டிகள் அமுதுண்டு கைகழுவுகிறர்கள் வாய்க்கால் நிறைகிறது; வழிப்போக்கர் கைகழுவுகின்றனர்; இஞ்சிக்குப் பாய்கிறது; எலுமிச்சை வேர் வழியே ஓடுகிறது; தாழைச்குப் பாய்கிறது; வாழைக்கும் பாய்கிறது’."
13 தாயின் தவமும்** தவப்பயனும் பற்றிய பாடல்கள்
இப்பிரிவிற் பதினெரு பாடல்கள் ஆராயப்படுகின்றன.** குழந்தை வரம் வேண்டித் தாய் நோற்ற நோன்புகள், சென்ற தலங்கள், ஆடிய தீர்த்தங்கள், மேற்கொண்ட அறங்கள் ஆகியன இப்பாடல்களின் பொருட்கூறுகளாக அமைகின்றன. இங்குக் குறிப்பிடப்படும் விடயங்கள் எல்லோராலும் மேற்கொள்ளப்
45. 5.9. g5T. LU (T. 12l Lu Tilgib 6.
46. Gudøvg. /2/ u TL di 1-5.
47. மேலது, 12 பாடல் 6.
48. தவம் என்னுஞ் சொல் தாலாட்டுப் பாடல்களிற் பயின்று வந்துள்ளமையால் இவ்வாறு உபதலைப்பிடப்பட்டுள்ளது. மகப்பேற்றினை விழையுந்தாய் மேற் கொண்டனவற்றையும் விலக்கியனவற்றையும் இச்சொல் குறிக்கின்றது. எனவே தவம் என்பது ஈண்டுத் துறவு நிலையைக் குறிக்கவில்லை என்பதறிக
49. 13.9., 57. lJ.T. 131 ur Lsissit 1-11.

தாலாட்டு.அமைப்பாய்வு 97
படாவிடினும், தாலாட்டுப் பாடல்களில் இவைபற்றி வியந்து பேசும் இயல்பு, தமிழ்த்தாய்மார் அனைவரிடமுங் காணப்படும் பொதுமரபு என்பது வரையறுத்துக் கூறக்கூடியதாக இருக் கின்றது. இப்பாடல்களில் வரும் விடயங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
தவம்பற்றிய வருணனை
* 5 1
“முந்தித்தவமிருந்து'," "வெகுநாள் தவமிருந்து', *கோடிதவமிருந்து’’,92 “தவசு பண்ணி’*** எலுமிச்சம் பழத்தில் ஏழுசி நிறுத்தி ஒருகால் தவமிருந்து,*** "தலை யால் நடந்து தவசுசெய்துவந்தேன்’, ‘சிவனேடு வாதாடி’98
தாய்மேற்கொண்டனவும் விலக்கியனவும்
"அமாவாசை நோன்பிருந்து’87; “வெந்தமாத்தின்ருல் விரதமழியுமென்று பச்சைமாத்தின்று’***; 'வெற்றிலையைத் தின்ருல் விரதமழியுமென்று’ ; “சந்தனத்தைத் தின்ருல் தவம் குலையும்', 'குங்குமந்தின்று" : 'வெள்ளிமெழுகி”* 'சனி மெழுகி சாதம் வைத்து’**0 ‘அள்ளிமிளகுதின்று'.
பூசித்த தெய்வங்கள்
“பார்வதியைப் பூசைசெய்து’92; "முற்பரனைப்பூசை
செய்து’’; *அரனரைப்பூசைசெய்து’**; 'சந்திரனைக் கைதொழுது"64
நேர்த்திக்கடன் வைத்தல்
"மாணிக்கம் நேர்தல்'; "பொன்நேர்தல்” : காணிக்கை நேர்தல்' 'இடைக்கிடை பொன்கொடுத்தல்’88.
50. மேலது. பாடல் 3; 51. மேலது, பாடல் 2; 52, மேலது. பாடல் 11; 53. மேலது, பாடல் 6, 7; 54. மேலது. பாடல் 1: 55. (1) மேலது, பாடல் 2;
(11) * தலையினுடைந் தேன்விடைப் பாகா." செத்திலாப் பத்து.3:3 56. பி.இ.தா. பா/3 பாடல் 7; 57. al. 9, ĝ5T. LI (T. | 3| uJnYLsio 5 ; 58. மேலது, பாடல் 1: 59. மேலது, பாடல் 5; 60. மேலது, பாடல் 2: 61. மேலது, பாடல் 1, 5 62. மேலது, பாடல் 1, 10; 63. மேலது, பாடல் 1: 64, மேலது. Lu TL6 2; 65. மேலது, பாடல் 3;
66. மேலது, பாடல் 13
D-7

Page 63
98 மட்டக்களப்பு மாவட்ட "
தீர்த்தமாடுதல்
udst LDTrigskib ஆடுதல்; மதுரைக்கடலாடுதல்; சிறிரங்க மாடுதல்; திருப்பால் கடலாடுதல்; தைப்பூசமாடுதல் 87; தனித் தீர்த்த மாடுதல் 98; தைஅமாவாசையில் தனுஷ்கோடி நீராடுதல்,89
அறஞ்செய்தல்
“ஆடி அமாவாசையில் ஆயிரம் பேருக்கு அன்னமிடுதல்' ;
தவப்பயன்
தேடிய புண்ணியம்",
பேயுருக்கொண்ட காரைக்காலம்மையார் தலையால் நடந்து சென்று இறையுருக் கண்டாள் என்ற புராணவரலாறு, கிராமியத் தாய்க்குத் தெரியவில்லை என்பது கள ஆய்வில் அறியப்பட்டது. ஆயினும் ‘தலையாலே நடவாதே", "தலைகீழாக நடக்காதே’’ என்ற முதுமொழிகள் வழக்கிலுள்ளமையும் நோக்கற்பாலன. எறும்பு நுழையாத ஈசுவரனர் கோயிலுக்குத் தலையால் நடந்து சென்று தான் தவசு செய்து’ வந்ததாகக் கூறுவது ஈண்டு சிந்திக்கவைக்கிறது. தாயின் இறைநம்பிக்கையைக் காட்டும் வகையில் 'கும்பிட்டு நிற்கையிலே குதித் தோடிவந்த செல்வம்' *சிவனேடு வாதாடி’ என்ற தொடர்கள் அமைந்துள்ளன.
ஆரும் பாடலில்'* வரும் “மதுரைக்கடலாடி’ என்ற தொடர் ஆய்வுக்குரியதாகும். மதுரையிற் கடல் உண்டா இல்லையா என்பது ஈழத்துக் கிராமியத் தாய்மாருக்குத் தெரியாது. ஆனல் மதுரைமீனுட்சி அம்மனின் அருள்பற்றி அறிந்திருக் கிருர்கள். கோயில் உண்டாயின் அதன் அண்மையில் நீர்நிலைகள் இருப்பது இயல்பே. எனவே அங்கேயுள்ள 'ஏதோவொரு நீர் நிலையை’ (திருப்பொற்ருமரைக்குளம்) அவர்கள் "கடல்’ எனக் கொண்டு 'மதுரைக்கடலாடி’ எனப்பாடலாயினர்.78
67. பி. இ. தா. பா. /3/பாடல்.6;
68. மேலது, பாடல் 7;
69. மேலது, பாடல் 10;
70. மேலது, பாடல் 8, 11;
71. மேலது, பாடல் 8:
72. பி. இ., தா. பா. 13 பாடல் 6 ;
73. தமிழக நாட்டார்பாடலிலும் "மதுரைக்கடலாடி” என்ற தொடர்வருதல்
சிந்திக்கப்பாலது. சோமலே (1960) பக். 5 நோக்குக,

தாலாட்டு.அமைப்பாய்வு 99
பொதுவாக இப்பிரிவில் இடம்பெறும் பாடல்களில் உவமை கள் இடம்பெறவில்லே என்பதும் தவக்கொழுந்து, செல்வம் என்பனவாகவே குழந்தை உருவகிக்கப்பட்டுள்ளமையும் குறிப் பிடத்தக்கன. அருச்சுனன் திருவேட்களத்திற் கடுந்தவம்புரிந்து பாசுபதம் பெற்றதாகக் கூறப்படும் பாரதக்கதை நிகழ்ச்சியைத் தான் மேற்கொண்ட செயல்களுக்கு ஒப்பிட்டுத் தாய்பாடுந் திறன் நோக்கற்பாலது.
|4| குழந்தையின் சொத்துகள்பற்றிய பாடல்கள்
இங்கு நான்கு பாடற்ருெகுதிகள் ஆராயப்படுகின்றன74. முதலாம் பாடற்ருெகுதியிற் ' குழந்தையின் தொட்டில் வருணனை இடம்பெறுகிறது. பொதுவாக உலகநாடுகளிலுள்ள தாலாட்டுப் பாடல்களிலே தொட்டில் வருணனை அதிமுக்கிய இடத்தைப் பெறுகின்றது. ஆதலினலே தாலாட்டுப் பாடல் தொட்டிற் பாடல் (Cradle Song) என்ற பெயரையும் பெறுவதா யிற்று. தொட்டிலும், தொட்டில் உறுப்புகளும் முத்ற்பாடலில் வருணிக்கப்படுகின்றன. *பச்சை இலுப்பைத்தொட்டில்”, *ஆணிப்பொன் தொட்டில்’, ‘அன்ன ஊஞ்சல்,” “உயர்ந்த கொப்பு ஊஞ்சல்” எனத் தொட்டில் வருணிக்கப்படுகிறது." * தொடுகயிறு முத்தால', 'வச்சிரவடம்’, ‘பச்சிலைவடம்’, * ஈக்கெடுத்துக்கயிறு பின்னி" எனத் தொட்டிற் கயிறுகூறப் படுகிறது." தொட்டிலுக்குப் பவளக்காலும் மாணிக்கக்காலும் பூட்டப்பட்டுள்ளன என்றும், தோரணங்கள் முத்தாற்செய்யப் பட்டுள்ளன என்றும் பாடப்பட்டுள்ளன. ' .
குழந்தையின் தொட்டிலை ஊஞ்சலாகவும் மஞ்சமாகவும் உரு வகித்துக் கூறப்பட்டிருப்பது, சமுதாயப் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையதாகக் காணப்படுகிறது. முற்காலத்தில் மட்டக் களப்புக் கிராமியப்பெண்கள் இல்லந்தோறும் ஊஞ்சல்கட்டி ஆடிப்பாடிமகிழும் வழக்குடையர். இவ்வழக்கம் இன்று அருகிக் காணப்படுகிறது. அவ்வழக்கத்திற் பழக்கப்பட்ட தாய் தன் குழந்தையின் தொட்டிலையும் ஊஞ்சலாக உருவகித்திருப்பது அவர் களது வாழ்க்கைப் பின்னணியைக் காட்டுவதாக அமைகிறது.
74. பி.இ., தா பா.14 பாடல் 1;
75, GoGo, Lu TL6 l;
76. í B-, Sir. UT. f 41 LI TLii) 1 a, ஆ, இ, ஈ, எ, உ.
77. 66திரார் பவளங்கால் முத்தங்கயிறக."
திருப்பொன்னூசல், பாடல் 1, பார்க்க.
78. பி.இ., தா. பா- 141 பாடல் 1, அ, இ, ஈ, உ,
79, மேலது, பாடல் 1, ஈ, இ, ஆ.

Page 64
100 மட்டக்களப்பு மாவட்ட.
தாய் தனது குழந்தையைத் தொட்டிலில் வளர்த்தித் தொட்டிலை ஆட்டத் தொடங்கியதும் குழந்தை அமைதியாகத் துயிலத் தொடங்குகிறது என்பதையே 'கைபோடக் கண்துரங்கும்’** என்ற தொடர் குறிக்கின்றது.
எல்லோரது இல்லங்களிலும் தொட்டிலிருக்கும் என எதிர் பார்க்க முடியாது. பணவசதியுடைய வீடுகளிலேயே தொட்டிலிற் குழந்தை துயில்கிறது. ஏனையோரது வீடுகளிலே சீலையாற் கட்டப்பட்ட “ஏணை”யே குழந்தைக்குத் தொட்டிலாகின்றது. கள ஆய்வு நடாத்திய இல்லங்களிலெல்லாம் தொட்டில் இருக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீலை ஏணையிற் குழந்தையைக் கிடத்தித் தாலாட்டும் போதிலும்,
*பச்சை இலுப்பை வெட்டி
பால்வடியத் தொட்டில் கண்டி
தொட்டிலுமோ பொன்னுல
தொடுகயிருே முத்தால’
என்று பாடாத தாய்மார் தமிழகத்திலோ அல்லது ஈழத்திலோ இல்லை எனத் துணிந்து கூறலாம். குழந்தைமீது தாய்கொண் டுள்ள அதிவிஞ்சிய பாசத்தின் தூண்டுதலாலே தாய் இவ்வாழுகக் கற்பனை செய்கிருள் எனலாம். குழந்தையின்மீது கொண்டுள்ள பாசத்தின் தூண்டுதலால், எவ்வாறெல்லாம் கற்பனைசெய்து குழந்தையையும், குழந்தையின் சொத்துகளையும் புகழமுடியுமோ அவ்வாறெல்லாம் புகழ்ந்து மகிழ்ச்சியடைகிருள் தாய். ஆயினும் அவளது கற்பனையிற் செந்நெறி இலக்கியங்களிற் காணப்படும் கருத்தளவிலான கற்பனை (Abstract magination) இல்லை. நாட்டார் பாடலில் அதிவிஞ்சிய கற்பனை தாலாட்டுப் பாடல் களிலேதான் அமைந்துள்ளது என்று கூறக்கூடியளவுக்கு இங்கு கற்பனை அமைந்து காணப்படுகிறது.
இரண்டாம் பாடலிற்? குழந்தைக்கு உறவினர் அளித்த பரிசுகள், குழந்தைக்குரிய சொத்துகள், சீதனமாகக் கிடைக்கப் போகும் ஆதனங்கள் 82 ஆகியன குறிப்பிடப்படுகின்றன. இப்
80. ஒர் ஆண்மகன் ஒரு பெண்ணைக்காம இச்சையுடன் தொடுதல் அல்லது தழுவுதல் என்பதையே நடைமுறை வாழ்க்கையிற் “கையோடுதல்" என்பது குறிக்கும். ஈண்டுத் தாய் தன் குழந்தையைத் தன்கைகளால் மெல்ல வருடுதலைக் குறித்தது. 81. L.g., ġe5 T. LI T... 4 LI fr Li3.2. 82. ஆதனம் என்பது சொத்துகளைக் (முது சொத்து) குறிப்பிட்டாலும்
சீதனத்தையும் ஆதனம் என்று கூறும் வழக்குண்டு.

தாலாட்டு.அமைப்பாய்வு 101
பாடல்களிற் குழந்தைக்கு மாமனர் சீதனமாகக் கொடுக்கப் போகும் சொத்துகளும். கிடைத்தபரிசுகளும் சிறப்பிடம் பெறு கின்றன.
சீதனப் பொருள்கள்
நெல், காட்டானை, காட்டெருமை, பால்மாடு, பசுமாடுகள்,
பசுக்காலி, பசுப்பட்டி, நெல்வயல், முத்தட்டுக்காணி??, ஆக் காண்டிவயல்.**
பரிசுப்பொருள்கள்
மாமன் அளித்த பரிசுகள் = தங்கத்தாற் சங்கு,
தங்க அரைஞான், மோதிரம், தங்கப்பாய்,
பாட்டனர் கொடுத்தபரிசுகள் = மோதிரங்கள்.
மூன்ரும் பாடலிற் குழந்தைக்குரிய சொத்தும் சுற்ருட லிலும் கூறப்படுகின்றன. இப்பாடலிலே வீதி, ஊஞ்சல், ஆலமரம், பாலாறு, தெரு, பூம்பந்தல், வெள்ளிவிளக்கு, வெண்கலத்தேர் என்பனபற்றிப் பாடப்படுகின்றன. இவை யாவும் குழந்தை யுடன் தொடர்புபட்டன. குழந்தை வளர்ந்து, ஒடிவிளையாடும் பருவத்தே இவை பயன்படுவன. குழந்தை ஒடிவிளையாடுவதற்கு ஏற்றனவாகத் தெருவும் வீதிகளும் அமைந்துள்ளன என்றும், ஆலமரத்தின் விழுதுகள் மூலமும் பிறவற்ருலுங் கட்டப்பட்ட ஊஞ்சல்கள் இருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது. வீட்டு முற்றத்திற் பால்போன்ற மணல் பரப்பிவைத்திருப்பதையே பாலாறு’ எனத் தாய் உவமித்துக் கூறுகின்ருள். குழந்தை நடைபயிலக் கொடுக்கப்படும் முச்சில்லாலமைந்த நடை வண்டியையே° ஈண்டு “வெண்கலத்தேர்’ என்பது குறிப்பிடு கின்றது. தன் குழந்தை வளர்ந்ததும் ஓடி விளையாடத் தேவையான பொருள்களையும், வசதியான இடங்களையும் இப் பாடலிலே தாய் கற்பனை செய்து பாடியிருக்கிருள்.
83. பி.இ. சொல்லடைவு பார்க்க, 84. மேலது பார்க்க 85. பி,இ., தாபா. 14 பாடல் 3, 86. அ. "பொற்காற் புதல்வர் புரவியின் னுருட்டும் முற்காற் சிறுதேர் முன்வழி
விலக்கும்.”
(பட்டினப்பாலே, வரி 24.25)
ஆ. **பொற்சிறு தேர்மிசைப்பைம் பொற் போதக நற்சிறு அர் ஊர்தலின்."
(சிவகசிந்தாமணி 89)
இ. கண்ணப்பநாயனுர் புராணம் 24 ஆம் 26 ஆம் பாடல்கள். ஈ. பிள்ளைத்தமிழில் வரும் சிறுதேர்ப்பருவம் பார்க்க,

Page 65
102 மட்டக்களப்பு மாவட்ட.
நான்காம் பாடலின்? 'அ' பிரிவிற் குழந்தைக்கு ஆபரணங் கள் செய்து கொடுக்கும் செட்டி, ஆசாரி 88 ஆகிய இருவரைப் பற்றியும், சீலை வியாபாரியான பட்டாணிக்காரன் 89 பற்றியும் கூறப்பட்டுள்ளது. அடுத்து *ஆ” பிரிவிற் பனையோலைபற்றிக் குறிப்பிடுந்தாய், தன்மகன் எதிர்காலத்தில் ஏட்டுக்கல்வி கற்று சமூகத்தில் நற்பிரசையாகத் திகழவேண்டும் என்ற குறிக் கோளுடன் பாடுகிருள். குழந்தைக்குக் காப்பு, தோடு ஆகியன செய்தலை ‘முடிசமைத்தல்’ எனக் கற்பனை செய்திருப்பதிலுள்ள சிறப்புக்காண்க. குழந்தையை மன்னன் -- மன்னவன் -- கோன்- கோமான் என்றெல்லாம் உவமித்த தாய், ஈண்டு ஆபரணஞ் செய்வதை “முடிசமைத்தல்” எனக் கூறியிருப்பது காரணகாரியத் தொடர்பு காட்டிநிற்கின்றது எனலாம். ‘பணங் கொடுப்பார் உன்தகப்பன்’ என்று கூறுவதிலிருந்து தந்தையின் செல்வ நிலையும் குறிப்பிடப்படுவதாயிற்று.
|5/ உறவினர் பெ ருமைபற்றிய பாடல்கள்
இப்பிரிவில்வரும் இருபாடல்களும் குழந்தையின் உறவின ராகிய தாய், தந்தை, மாமன் முதலானுேரைப் புகழ்ந்துபாடு வனவாக அமைந்துள்ளன. இப்பாடல்களின் பொருளை வருமாறு வகைப்படுத்திக் காட்டலாம்:
1. தாய்
கன்றுமான்" கன்னிவாழை" =தாயின் இளமைப்பருவம் கூறப்
படுகிறது. முத்து’
\ 95rTuLurT556)IfT 662!p
பூவாத வாழை" =தாய்மையின் பெருமை புலப்
படுத்தப்படுகிறது. மலடிம இருளி"
87. 13.9-, 5t.usf. |4 பாடல் 4. 88. ஆம் 89 ஆம் அடிக்குறிப்புகளின் விளக்கங்களைப் பி.இ.லுள்ள சொல்
லடைவில் காண்க 90. G.S., 5Tu T.I.5i ustlé 1இ; 91 (1) மேலது, பாடல் 1இ;
(II) முதன் முதலாக கன்னியூப்பதைக் குறித்தது. கன்னிப்பிஞ்சு கன்னிக் காய் என்ற வழக்குகளும் காண்க. Maiden attempt, maiden Voyage, maiden Speech stairus Tapid நோக்குக. 92. G. 9; g5iT. u (T. ||5| lurt-ŝio 7, 93. மேலது. பாடல் 1. 94. Guwaos, uTlố 5. 6;

தாலாட்டு.அமைப்பாய்வு 103
கவரிமான் 95 =தாயின் கற்பும் அழகும் கூறப் 2 படுகின்றன.
. தநதை
அருச்சுனன்? = தந்தையின் வீரமும், திறனுங்
கூறப்படுகின்றன. சூரியன்
= குலப்பெருமை பேசப்படுகிறது. வேந்தன் 97 தருமவான்?* = ஈகைக்குணம் குறிப்பிடப்படுகிறது
3. மாமன்
புண்ணியனர்?? = கடவுள் பக்தி குறிப்பிடப்படுகிறது. பொலிமதிப்பவர் ' = (செல்வநிலை கூறப்படுகிறது.
gig irrtti
= குலப்பெருமை " பேசப்படுகிறது. G66ft 6f 10
4. பெரிதாய்
பேர்அரசு"* = குலப்பெருமை புகழப்படுகிறது.
இப்பாடலில் வரும் “தலைக்காய்’, ‘புதுமலர்” என்பன தாய் தான் முதன்முதலாகக் குழந்தையை ஈன்றெடுத்தமையையும், "புதிர்எடுக்கும் காணி' பொலிவிளையும் பூமி என்பன வயற் களத்தையும் குறிப்பிடுகின்றன. இப்பிரதேசத்தில் நெல் பிரதான செல்வமாகக் கணிக்கப்பட்டுவந்தமையால், மாமன் தனது வயலிலே விளைந்த நெல்லை மதிப்பிட்டுவருகிருர் எனத் தாய் மாமனது புகழ்பாடுகிருள். 'மாமன்மார் ஒருகோடி’ எனவும்,
95. (1) மேலது, பாடல் 1இ;
(11) “மயிர்நீப்பின் வாழாக்கவரிமான்." (திருக்குறள் 969) என்பதற் கிசையப் பிற ஆடவன விழையாத கற்புநிலையைக் குறிப்பிடுகின்றது.
96. 1.9., ġ5T. LIT.15 LI TAL6i 3,7;
97. மேலது, பாடல் 4; 98. (1) மேலது, பாடல் 9;
(11) 'தருமன் தண்ணளியாற்றன தீகையால். “என்ற உவமையினை
நோக்குக. (சீவகசிந்தாமணி: 160)
99. பி.இ., தா. பா. 151 பாடல் 1;
100. மேலது, பாடல் 2: 101. மேலது, பாடல் 4;
102. மேலது, பாடல் 7;
103, "ஒரு குலத்திற் பெண்கள் கொடோம் ஒரு குலத்திற் கொள்ளோம். g எனக் குற்றலத்துக்குறப்பெண்கள் குலப்பெருமை பேசுவதைக் குற்றலக் குறவஞ்சியிற் காண்க.
104. பி. இ. தா. பா. 5 பாடல் 7;

Page 66
104 மட்டக்களப்பு மாவட்ட .
*மச்சினமார் முக்கோடி’ எனவும் பாடுவதன்மூலம் தனது இனத் தவர் பெருக்கத்தைக் கூறித் தனது பலத்தைப் புலப்படுத்து கின்ருள்.
* பிறந்த வீட்டின் பெருமை பேசுவது பெண்ணினத்தின் இயல்பு” 19' இதனைத் தாலாட்டுப் பாடலும் மெய்ப்பிக்கின்றது. *அம்மான்மார் கண்டு, அகமகிழ மேதினியில், பெண்மாது நான் ஈண்ட புத்திரன்’ எனப் பாடுவதன்மூலம் தாய் தனது இனத் தவரைப் புகழ்கின்ருள் என்பது தெளிவாகிறது. இப்பாடல்களில் மாமனைப்பற்றியே அதிகமாகப் புகழப்படுகின்றமையும் பதலில் மாமனைக் கூறியபின்னரே, தந்தைபற்றிக் கூறுவதும் நோக்கற்
696.
/6| குழந்தையின் சடங்குகள்பற்றிய பாடல்கள்
இப்பிரிவில் இரு பாடல்கள் 199 ஆராயப்படுகின்றன. குழந்தை பிறந்த பின்பு நடைபெறும் மருங்கைகொடுத்தல் 97 காதுகுத்துதல், பெயர்சூட்டல்", முதலான சடங்கு முறை களும், அச்சடங்குகளில் மாமனின் கடமை, ஏனையோர் பங்கு என்பனவும் முதற்பாடலிற் கூறப்படுகின்றன. மருங்கையின் பொருட்டுத் தாய்மாமன் கொண்டுவந்த பொருள்களின் அட்ட வணை இப்பாடலிலே தரப்பட்டுள்ளது. அவற்றை மிகைப் படுத்திப் பாடுவதிலே தாயுள்ளம் பெருமிதம் அடைகின்றது. இரண்டாம் பாடலிற் குழந்தை வளர்ந்து, திருமணக் கோலத் துடன் காட்சி தரும்போது தான் ஆராத்தி? எடுக்கப்போகும் எதிர்கால நிகழ்ச்சியைத் தாய் கற்பனை செய்து பாடுகின்ருள். 10 தாலாட்டுப்பாடல்களில் வரும் உவமை, உருவகங்கள்
தாலாட்டுப் பாடல்களின் பொருள் கூறப்படுமாறிலுள்ள இலக்கியச் சிறப்பு ஈண்டு தொடுத்து, வகைப்படுத்தி விரிவாக ஆராயப்படுகின்றது. கிராமியத் தாய்மாரின் தாலாட்டுப் பாடல்களிற் செந்நெறி இலக்கியப் புலவர்களின் இலக்கிய நுட் பங்களைப் பெரும்பாலும் எதிர்பார்க்க முடியாது. ஆயினும்
106. பி. இ., தா. பா. 16 பாடல் 1-2;
107. இச் சடங்கினை யாழ்ப்பாணத்திலே ‘துடக்குக் கழித்தல், என்பர். தொகு
என்ற வினையடியாகப் பிறந்து எதிர்மறை பொருளில் வந்துள்ளது. (Pollusion)
108. மணிமேகலைக்குப் பெயர் சூட்டும் விழா சிறப்பாக நடைபெற்றது என்ற சிலப்பதிகாரச் செய்தியும் (சிலப்பதிகாரம் 15: 37.39) நின்ைவுகொளற் 11 (Tബട്ടീ

தாலாட்டு.அமைப்பாய்வு 105
இயற்கையோடிணைந்த உவமை, உருவகங்கள் இப்பாடல்களுக்கு இலக்கியநயம் அளிப்பனவாக அமைந்துள்ளன.
குழந்தையை வளர்ந்தோர் நிலையிற் கற்பனை செய்தல்
குழந்தையைத் தாலாட்டிச் சீராட்டுந் தாய் அதனைப் பல வாருகப் புகழ்ந்துபாடி, மனநிறைவு கொள்கிருள். தன் குழந்தை யைத் தெய்வங்களாகவும், இதிகாச காவிய கதாநாயகர் களாகவும், வரலாற்றுவீரர்களாகவும் கற்பனை செய்து தாலாட்டு வதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்ருள். அவற்றின் மூலம் அத்தாயின் இலக்கியஞானமும், இலக்கிய ஈடுபாடும் புலணு கின்றன. அவ்வாறு கற்பனை செய்யும்போது குழந்தை வளர்ந் தோர்நிலையில் வைத்துப் புகழப்படுகின்றது. அதே வேளையிலே தாய்தன்னையும் தன் உறவினரையுங், கற்பனை செய்து பாடியிருத் தலும் குறிப்பிடற்பாலது. தாய் தன்னையும் தன் கணவனையும் இதிகாச, புராணக் கதைகளில்வரும் தம்பதியாகக் கற்பனை செய்து, அவர்களின் புதல்வனகத் தன்குழந்தையைப் புகழ்ந்து பாடுதல் ஈண்டு முதலில் வகைப்படுத்தித் தரப்படுகின்றது.
அ. 1. குழந்தையை இதிகாசக் கதாநாயகர்களாகக் கற்பனை
செய்தல் >
அ. இராமாயணம்: 11
சீதைபெத்த பாலகன் ר
லவ+ குசன் 112 = குழந்தை சிறிராமர் தன்மகன்
தான்துலங்கும்வில் எடுத்து )
இராமன் *** = குழந்தை தனியே வளைப்பவர்
சீதை மஞளன் - gurt Lt air 11 = குழந்தை
109. பி. இ, சொல்லடைவு பார்க்க.
10. நூலுள் பார்க்க,
111. We find that the Indian folk singers have actually made Rama and Lakshmana members of their own households. Rama stands
everywhere for a husband. Sita Stands for a wife.o” Pande. Trilochan (1971) P. 426.
112, li. g... ġ5T. Lu T. I1I LI LTL so 4e. 113. மேலது. பாடல்_4ஊ 114, மேலது, பாடல் 4எ;

Page 67
106 மட்டக்களப்பு மாவட்ட.
ஆ. பாரதம்
அல்லிபெத்த பாலகன்
受,,令 அபிமன்னன் ** = குழந்தை அருச்சுனனுர் தன்மகன்
அல்லி மகாராசா -அருச்சுனன் 19 = குழந்தை
தூதுசென்ற மாயவன்
கிருஷ்ணன் ' = குழந்தை துவாரகை மன்னவன்
தருமர்கள் தந்தவன்
தருமர்கள் பாற்குடம்
2.
குழந்தையைப் புராணக் கதாபாத்திரங்களாகக் கற்பனை செய்தல் சிவன், உமை, முருகன் அவதாரம், அரிச்சந்திரன் முதலிய புராணக்கதைகள் என்பனபற்றி அறிந்திருந்த கிராமியத் தாய் மார், தமது வழிபாட்டுமுறையிற் சிறப்பிடம் பெறும் தெய்வங் களையும் புராணக்கதாபாத்திரங்களையும் தம் குழந்தையாக உவ மித்தும் உருவகித்தும் தாலாட்டுப்பாடுகின்றனர்.
"ஆதிசிவன்மகன்” / “பெருமாள் முருகன் = குழந்தை
திருமருகன் 19
“சிவன் உமையாள் ஈன்றெடுத்த
சிவக்கொழுந்து’**9 W முருகன் = குழந்தை
*மாயவனர் தந்தபிச்சை’ ** ஈசுவரனர் தந்தபிச்சை’ "கார்த்திகை யாய்ப் பூத்தவன்’** 龄 முருகன் = குழந்தை
குமரேசா சுந்தரமே 1?? முருகன் = குழந்தை கதிரமலச்சாமி| மண்டூருச்சாமி முருகன் = குழந்தை
115. பி.இ., தா. பா.11 பாடல் 4ஆ, 116. மேலது, 12 பாடல் 5; 117. மேலது, 11 பாடல் 4இ.ஒ. 118. மேலது, பாடல் 4, ஈ, உ, . 119. மேலது, பாடல் 4ஏ ஐ. 120. மேலது, பாடல் 7 ஆ, உ, 121. பி. இ. தா. பா. 111 பாடல் 14 அ, ஆ, இ. 122. மேலது. பாடல் 8 ஆ இ ஈ

தாலாட்டு.அமைப்பாய்வு 07
மாமாங்கச்சாமி!?? பிள்ளையார் = குழந்தை சந்திரர் சந்திரன் = குழந்தை சூரியர் * சூரியன் = குழந்தை சந்திரமதிபாலகன் *** தேவதாசன் = குழந்தை
3. குழந்தையை அரசநிலையிற் கற்பனை செய்தல்
2
மன்னவன் 125, மன்னர்? , அரசு 27, கோன், கோமான் 128 துரைமகன்'*' என்றெல்லாம் குழந்தை சிறப்பிக்கப்படுகிறது. “வேந்தரோ உன் தகப்பன்' எனவும், “பெரிய தாய் பேரரசு’** எனவும் கூறுவதன் மூலம் குழந்தையை இளவரசனுக இளவரசியாக உயர்த்திக்கூறும் மாண்பும் காணப்படுகின்றது.
4. குழந்தையைச் சமூகநிலையிற் கற்பனை செய்தல்
*கொலுவிருக்கவந்த’ *** மணுளனகவும், செல்வச்சீமான கவும் 198 கற்பனை செய்துபாடுவதும் நோக்கற்பாலது.
ஆ. குழந்தையின் உறவினர்பற்றிய கற்பனைகள்
குழந்தைமட்டுமன்றி,குழந்தையின் உறவினர்களையும் புராண இதிகாசப் பாத்திரங்களாகக் கற்பனைசெய்து அதன்மூலம் குழந்தையின் மேன்மையும், புகழும் உயர்த்தப்படும் அமைப்புங் காணப்படுகிறது.
தாய்பற்றிய கற்பனை = தாய் சிதைபெத்த பாலகன்*** = சீதை அல்லிபெத்த பாலகன்197 = அல்லி சந்திரமதிபாலகன் = சந்திரமதி
123. மேலது, பாடல் 10, 124. மேலது, பாடல் 7 அ, உ. 125. மேலது, பாடல் 4 இ 26. மேலது, பாடல் 113
127. மேலது, 12 பாடல் 1ஆ. 128. மேலது, 1, பாடல் 111; அ 129, மேலது, 12 பாடல் 1 அ; 130. மேலது, 15 பாடல் 2 அ; 131. மேலது, 15 பாடல் 1எ. 132. பி.இ. தா. பா. 111 பாடல் 8 ஏ. 133. மேலது, பாடல் 7ஈ; وهى 4 لأ6ساT) ل1 و القنوصة) .134 135. மேலது. பாடல் 4ஆம்

Page 68
108 மட்டக்களப்பு மாவட்ட.
சிவன் உமையாள் ஈன்றெடுத்த88 = D. God LDLuft 6ir எலுமிச்சம் பழத்திலே எழுசிதான்
நிறுத்தி ஒருகால் தவமிருந்து' = அருச்சுனன்.
அருச்சுனன் கடுந்தவம் புரிந்து பாசுபதம் பெற்றது போன்று, தானும் 'ஏழுசிதான் நிறுத்தி - ஒரு கால் தவமிருந்து’ பெற் றெடுத்த அருமைக்குழந்தை எனக் குறிப்பிடுவதன் மூலம் தாய் தன்னை அருச்சுனனுக்கும், அவன் வரமாகப் பெற்ற பாசுபதத் திற்குத் தன்குழந்தையையும் உவமையாகக் கூறியதன் சிறப்பு
நோக்கற்பாலது.
தந்தைபற்றிய கற்பனை தந்தை
சிறிராமர் தன்மகனே = இராமர் அருச்சுனனுர் தன் மகனே = அருச்சுனர் தருமர்கள் தந்தவனே = பாண்டவர் பாண்டவர்கள் பாற்குடமோ = பாண்டவர்கள் ஆதிசிவன் தன்மகனே = ஆதிசிவன் பெருமாள் திருமகனே - பெருமாள் சிவன் உமையாள் = சிவன் சந்திரரோ உன் தகப்பன் = சந்திரர் சூரியரோ உன் தகப்பன் = சூரியர் வேந்தரோ உன் தகப்பன்3° = வேந்தர்
மாமன்பற்றிய கற்பனை LDTIDSöT
சந்திரரோ உன் மாமன் = சந்திரன் வெள்ளியோ உன் மாமன்?? = வெள்ளி
குழந்தையை அஃறிணைப் பொருள்களுக்கு உவமித்தல்
குழந்தையையும், குழந்தையின் உறவினரையும் உயர்திணை யில் இதிகாச, புராணக் கதாபாத்திரங்களாகவும் சமூக உறுப் பினராகவும் உவமை, உருவங்களாகக் கற்பனை செய்திருத்தல் மேலே ஆராயப்பட்டுள்ளது. குழந்தையை அஃறிணையில் உவமை யாக்கிக்கூறும் தன்மை ஈண்டு விரிவாக வகுத்துத் தரப்படுகின்றது. கீழே தரப்படுஞ் சொற்களும் சொற்ருெடர்களும் குழந்தைக்கு உவமையாக வந்தவையாகும்.
136, GLD ags, u (TLs) 72
137. மேலது, 13 பாடல் 1, !
138. மேலே தரப்பட்ட தொடர்கள் இடம் பெறும் பாடல்கள் முறையே தரப்படு இன்றன. பி. இ. தா. பா. 111 பாடல் 4 அ, 4 ஆ, 4 ஈ, 4 உ, 4 ஏ, 4 ஐ. 7 ஆ . உ; 15 பாடல் 2 இ, ஈ,
139. மேலது 15 பாடல் 2 அ.

தாலாட்டு.அமைப்பாய்வு 109
1. செல்வப் பொருள்கள்:
முத்து, மரகதம், தங்கம், பொன், வைடூரியம், பவளம், சங்கு.
2. செல்வத்தைக் குறிக்குஞ் சொற்கள்:
திரவியம், செல்வம், பாக்கியம்,
3, இயற்கைக் கூறுகள்:
வானத்துவெள்ளி, முழுமதி அம்புலி.
4. இலக்கிய வழக்குகள்:
சிவக்கொழுந்து, திருமுடி, தவக்கொழுந்து, தவப்பேறு, புண்ணியம்.
5. சமூகம்பற்றிய சொல்லாட்சிகள்:
குலவிளக்கு, குலக்கொழுந்து.
6. விலங்குகள்:
மான், மான் ஈண்டகண்டு **", கண்டுமான், கவரிமான் கண்டு, குஞ்சரம்.
7. பறவைகள்:
மாங்குயில், மாடப்புரு, மலைநாட்டு நங்கனம் ***, கிளி கொக்கு, அன்னம்.
8. மலர்கள்:
செந்தாமரை, மல்லிகைப்பூ, புதுமலர், வெற்றிலைப்பூ.
9. மரங்கள்:
கன்றுப்பலா, கூளன்பலா.
10. இன்சுவைதருவன:
அமுது, தேன், மாங்கனி - மாம்பழம், செங்கரும்பு.
11. அணிகள்:
சிலம்பு - மடிச்சிலம்பு - கைச்சிலம்பு, தாவடம், மாலை, பூச்சரம்.
12. பாவனைப் பொருள்கள்:
ஒளிவிளக்கு, பாற்குடம்.
140. கன்று> கண்டு, மட்டக்களப்பு,யாழ்ப்பாண வழக்கு, தென்னிந்தியாவிலும்
ஈழமலையகத்திலும் கண்ணு என்று வழங்குவர்.
141 மட்டக்களப்பில் நாகணவாய்ப் பறவையை நங்கண்ம், மைனு என
வழங்குவர். மைனு என்பது சிங்களச் சொல்லாகும்.

Page 69
110 மட்டக்களப்பு மாவட்ட.
இவற்றைவிடக் குழந்தையின் வாயழகை (உறுப்பு) வருணிக் குந்தாய்,அதனைப் பலவாருக உவமித்துக் கூறும் வகையினை வரும் உவமைகள் விளக்குகின்றன;
பொன்னனவாய், கத்தரிப்பூவாய், வெள்ளரிப்பூவாய், செம்பவளவாய், ஏஸ்பூவாய், சந்தனவாய். ** குழந்தையின் பரிசுப் பொருளாகிய மோதிரத்தைச்'சித்திரம் போல் மோதிரங்கள்’** எனப் பொருளுவமையாகக் கூறப்பட் டுள்ளது. இத்தாலாட்டுப் பாடல்களிற் சில தொழிலுவமை களும் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு:
1. “விளக்கிலிட்ட நெய்போல 1** வெந்துருகி நிற்றல்’ 145
(குழந்தைப் பேறற்ற தாயின் நிலை)
2. “இலைதீய்ந்து கொடிகருகி இல்லை என்று போதல் போல’** (இனிக்குழந்தை கிடைக்கமாட்டாது என்ற நம்பிக்கை கொண்ட குழந்தைப்பேறற்றதாயின் நிலை.) 3. ‘சித்திரைமாதம் சிறுவெள்ளம் வந்ததுபோல் 147 4. 'ஆமுகப் பெருகுதல்’ 148
(இவ்விரு உவமைகளும் அழுங்குழந்தையின் கண்ணிர்ப் பெருக்கைக் குறிப்பிடுவனவாகும்.)
தாய் தாலாட்டும்போது குழந்தைமீது தான் கொண்டுள்ள அன்பின் ஆழத்தையும், குழந்தையின் அருமை, பெருமையினையும்
142 பி இ., தா. பா. 12 பாடல் 1இ; 143. மேலது 14 பாடல் 2அ. 144. இவ்வுவமைத் தொடரைக் கீழ்வரும் உவமைத் தொடர்களுடன் ஒப்பு
நோக்குக. அ "தழலது கண்ட மெழுகதுபோலத் தொழுதுள முருகி யழுதுடல்
கம்பி. . " (போற்றித்திருவகவல்: வரி 60-61)
ஆ. "அழல் சேர்ந்த மெழுகே அன்னுர்".
(திருச்சதகம் பாடல் 88) இ. "தீசேர் மெழுகொப்பாய்."
(திருவெம்பாவை பாடல்-7) ஈ. "அழலுறு மெழுகாம் .”
(செத்திலாப்பத்து-4) உ. ‘அனல்சேர் மெழுகொப்ப." ஆசைப்பத்து 8) 145. பி. இ., தா. பா. 111 பாடல் 10 இ. 146, 5.3., 35T. Li T l ll L1 Tlio 10 2. 147. மேலது, 12 பாடல் 6; 148. மேலது,

தாலாட்டு.அமைப்பாய்வு 111
அடிமனத்தேகொண்டு தன்னல் இயன்றமட்டும் குழந்தையைப் புகழ்ந்துபாடுகிருள். அவ்வாறு பாடுவதற்கு உவமை, உருவகங் கள் அவளுக்குத் துணையாக அமைகின்றன. குழந்தையைப் புகழும்போது தான் அறிந்த, கேள்விப்பட்ட பொருள்களையும், தனது வாழ்க்கைச் சூழலிற் காணப்படுவனவற்றையும் பொரு ளாகக் கொள்வதால் அவற்றில் இயற்கைத் தன்மை அமைந் துள்ளது. தாலாட்டுப்பாடற்களிற் புராண, இதிகாசக் கதா பாத்திரங்களையும் தெய்வங்களையும் உவமையாகக் கூறுந்தன்மை யும் பெரிதுங் காணப்படுதல் அறியப்பட்டது. எனினுஞ் செந் நெறி இலக்கியங்களிற் காணப்படும் கருத்தளவில் அமைந்த plaua) D 2 (53), 5,515 air (Abstract Smiles and metaphars) தாலாட்டுப் பாடல்களில் அதிகம் இடம்பெறவில்லை என்பது சிறப் பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.
தலைமைக்கருத்தாய்வு
தாலாட்டுப் பாடல்களின் பொருட்சிறப்பாய்வினை மேற் கொள்ளும்போது, அப்பாடல்களிற் பயின்றுவரும் தலைமைக் கருத்துகள் பற்றி விரிவாக நோக்கவேண்டியது அவசியமாகும். இவ்வாய்வுக்குப் பாடல்களிற் பயின்றுவரும் சொல்லாட்சிகள் பயன்படுகின்றன. இச்சொல்லாட்சிகள் தனிச்சிறப்பு வாய்ந் தவை; இவை தாய்ப்பாசத்தின் அடித்தளத்திலிருந்து தோற்றம் பெறுபவை. தாய்ப்பாசம், தாய்மையனுபவம், குழந்தையின் அருமைபெருமைகள் முதலான விடயங்கள்பற்றி ஆழமாக அறிந்துகொள்வதற்கு இவ்வாய்வு துணையாக அமைகின்றது. தாலாட்டுப்பாடல்களில்வரும் சில தலைமைக் கருத்துகள் உலகப் பொதுவானவையாகக் காணப்படுவதைப் பிற தே ச த் து நாட்டார் பாடல் வெளியீடுகளின் மூலம் அறியக்கூடியதாக இருக் கின்றது. அத்தகைய தலைமைக் கருத்துகள் பற்றி ஆராய்வதற்குத் துணையாகத் தாலாட்டுப்பாடல்களில் வருஞ் சொல்லாட்சிகளைப் பதினெரு வகையாக மேல்வருமாறு பிரித்து ஆராயப்படுகின்றது,
அ. செல்வப்பொருள்கள் எ. இடப்பெயர்கள், ஆ. இயற்கைக் கூறுகள் ஏ. விலங்குகள். இ. புராண இதிகாச கதாபாத்திரங்கள் ஐ. தாவரம். ஈ. செயல்கள் ஒ. உணவுவகை.
உ. விளிப்பெயர்கள் ஒ. சொத்துகள். ஊ. உறவுமுறைப்பெயர்கள்.
மேலே வகுத்துக்காட்டிய சொற்ருெகுதிகளைக் கொண்டு பாடல்களிற் பயின்றுவந்துள்ள தலைமைக்கருத்துகள் ஆராயப்

Page 70
12 மட்டக்களப்பு மாவட்ட.
படுகின்றன. பிரிவு-1இல் சொற்கள் தரப்பட்டு பிரிவு 11 இல் அவைபற்றிய விளக்கம் ஆராயப்படுகின்றது.
கருவளம்"* பற்றிக் குறிப்பிடுதல்
பிரிவு 1-ஆ. கடல், சமுத்திரம், மழைத்துளி, பூமி, முழுமதி,
திருப்பாற்கடல், பாலாறு, பாற்கிணறு.
இ. அல்லி, சீதை, சந்திரமதி, பார்வதி.
ஈ ஈண்ட --- ஈன்றெடுத்த, பெத்த, தண்டுபிரிதல், தழைத்தல், மலர்தல், விரிதல், காய்த்தல், விளைதல், பாலூட்டுதல், பால்கொடுத்தல், மடி, நிறைதல், பிள்ளைக்கலிதீர்த்தல்; உதித்தல், அடை கிடத்தல், கைபோடுதல், நிறைதல், பாய்தல், வேரோடுதல்.
எ. சோலை, மலைநாடு, வாசல், நெற்காணி, மடி.
பசுமாடு, பால்மாடு, பசுக்காலி,
ஐ. கொழுந்து, மருக்கொழுந்து, கன்னிமா, கன்னி
வாழை, கழுகு, தலைக்காய்.
ஒ. பாற்குடம்.
பிரிவு 11. மேலே தரப்பட்டுள்ள சொற்கள் யாவும் கரு வளத்தைக் குறிப்பிடுவனவாக அமைந்துள்ளன. “ஆ’, பிரிவில் வருஞ் சொற்கள் கருவளவழிபாட்டு விடயங்களைக் குறிப்பன வாகும் . குழந்தைச் செல்வங்களுடன் நல்வாழ்வுவாழ்ந்த, இதி காச, காவியக் கதாநாயகிகளுடன் தாய் தன்னை ஒப்பிட்டுப்பாடு வதையும், தான் கருவளம்பெற்று வாழ்வதைப் பெருமையாகப் பேசுவதையும், “இ’ பிரிவுச் சொற்கள் விளக்கமாகக் குறிப்பிடு கின்றன. கருத்தரித்தலையும், குழந்தைப் பேற்றையும் குறித்துக் காட்டும் குறியீடுகளாக (Symbols of conseive) 'ஈ' பிரிவுச்
149. "தெய்வம் உணுவே மாமரம் ...” என்ற தொடக்கத்தையுடைய தொல், பொருளதிகாரம் சூத். 18இற் குறிப்பிடும் கருப்பொருள்பற்றிய விடயம் அல்லாது, கருவளம்பற்றியே (Fertility) இங்கு ஆராயப்படுகிறது. கரு வளம் பற்றிய கருத்தும், அதுபற்றிய வழிபாடும் பொதுவாக நிலத்துடன் தொடர்புடையனவாகவே இருந்துவந்துள்ளன. Fertility goddess, fertility cult முதலியனவை அக்கருத்தின் அடிப்படையிலே தோன்றிய வையாகும். பின்பு தாய் கருவுயிர்ப்பதையும் அது குறிப்பிடுவதாயிற்று.

தாலாட்டு. அமைப்பாய்வு 113
சொற்கள் பாடலிற் பயின்று வந்துள்ளன. ‘அடைகிடத்தல்' “பாய்தல்”, “நிறைதல்', "வேரோடுதல்’, ‘தழைத்தல்' “பூத்தல்’, *காய்த்தல்”, முதலிய 'ஈ' பிரிவுச் சொற்கள் கருத் தரித்தலை நினைவுகொள்ளும் வகையிற் காணப்படுகின்றன. தாய் தனது குழந்தையின் முகத்திற் கணவனின் தோற்றத்தைக் கண்டு மகிழ்தல் இயல்பாதலாற் குழந்தையைத் தாலாட்டும் போது, அவளது குடும்பவாழ்க்கை நினைவுகளும் தாலாட்டில் இடம்பெறுதல் இயல்பே.
பால்மாடு, பசுமாடு ( ‘ஏ’ பிரிவு) என்பன தாய்மையினையும் தாய்மைக்கு அடிப்படையான கருவளத்தையுஞ் சுட்டுவனவாக அமைகின்றன. அவை போன்றனவே 'ஐ' பிரிவுச் சொற்களு மாகும். தாய் தன்னைக் 'கன்னி வாழை” எனக் குறிப்பிட்டுத், “தலைக்காயாகத்" தான் முதற் குழந்தையைக் கருவுயிர்த்து ஈன் றெடுத்தமையைக் குறிப்பிடுவதும் நோக்கற்பாலது. *பாற் குடம்’*** (“ஒ” பிரிவு) என்ற தொடர் நடைமுறை வாழ்க்கை யிற் கருவளத்தைக் குறிப்பிடும் ஒரு சின்னமாகக் கருதப்படுவதும் ஈண்டுக்குறிப்பிடல் பொருந்தும். இவ்வாருகத் தாலாட்டுப் பாடல்களிலே வருஞ் சொற்களிற் பெரும்பாலானவை கருவளத் தைப்பற்றியனவாக வருவதையும், கருவளம்பற்றிய சிந்தனை பாடல்களிலே திரும்பத்திரும்ப இடம் பெற்றுவருவதையும் அவ தானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
குடும்ப வாழ்க்கையைப் பிரதிப்லித்தல்
பிரிவு 1 இ. அல்லி அருச்சுனன் - அல்லிமகாராசா, சீதை
இராமர், சிவன் உமையாள், மணவாளர்1%
கோலமிடுதல், அன்னமிடுதல், தொட்டிலிடுதல், சீதனம் கொடுத்தல், வாழ்ந்திருத்தல், காது குத்தல், தோடு போடுதல், மருங்கை கொடுத்தல், வெள்ளி மெழுகுதல், சனிமெழுகிச் சாதம் வைத் தல், குடிமங்குதல்.
150. கோழி குஞ்சு பொரிப்பதற்காக அடைபடுக்கும் என்ற வழக்கும் நோக்கு .
151. கோயிற் குடமுழுக்கு நடைபெறும்போதும் பாற்குடம் கொண்டு போய்க் கொடுத்தாற் குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
152. **பிள்ளை மணுளன . " எனவரும் பெயாழ்வார் திருமொழிப்
பாடலிலும் (126) மளுளர் என்ற சொல்லாட்சிகாண்க.
LD-8

Page 71
114 மட்டக்களப்பு மாவட்ட.
ஊ. மாமன் -- மாமனர் - தாய்மாமன் -
அம்மான்மார்,மாமி,மச்சி,மச்சினன்மார், தாயார், பெரியதாய், ஆச்சி - பாட்டி, பாட்டனர், தகப்பன், அண்ணன்,
பிரிவு 11. கடந்தகாலக் குடும்பவாழ்க்கை அனுபவங்களிற் குறிப்பாக இன்பநாட்களையும் நிகழ்ச்சிகளையும் நீள நினைந்து மகிழ்ச்சியடைவது மனித இயற்கை. தனித் திருந்து குழந்தையைத் தாலாட்டும்போது தன் குழந்தையைக் கணவனின் அன்புப் பரிசாக நினைந்து இன்பங் காணுந்தாய், கணவன் மனைவி இன்ப வாழ்க்கை அனுபவங்களை நினைந்து உளம்பூரிப்படைதல் உளவியல் சான்ற உண்மையாகும். மேற்கூறிய உளநிலையை எடுத்து விளக்கு வனவாக "இ" பிரிவுச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.
குடும்பவாழ்க்கையில் உற்ருர், உறவினர், குடி, 33 சாதி என்னும் விடயங்கள் இடம்பெறும். தாய் தனது குடியைப் புகழும் வகையில் ‘எங்ககுடி, “மாதாகுடி’, ‘கணத்தகுடி மாமன் மார்கள்’ என்ற தொடர்களைத் தாலாட்டிற் பயன்படுத்து கின்றமை நோக்கற்பாலது. ‘மணவாளர்’ என்ற சொல்லாட்சி மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும், பாலியல் அடிப்படையில் தனது குடும்பவாழ்க்கை அனுபவங்களை எண்ணிப் பார்க்கும் தாய் அவற்றின் நினைவாகத் தன் குழந்தையை *மணவாளர்’ எனக்குறிப்பிடுகின்ருள் போலும்.
குடும்பவாழ்க்கையிலே தாம் மேற்கொண்ட செயல்களையும், நடைமுறை வாழ்க்கை நியதிகளையும் தாலாட்டுப்பாடல்களின் பொருளாகக் கொண்டுபாடும் மரபு பெருவழக்காகக் காணப்படு கின்றது என்பதை இப்பகுதியில் தரப்பட்டுள்ள 6ஈ’ பிரிவுச் சொல்லாட்சிகள் விளக்குகின்றன. தாலாட்டுப்பாடலிற் குடும்ப உறவினரைப்பற்றிப் பாடுவதியற்கை.*** அதனைக் குறிப்பிடும் வகையில் “ஊ” பிரிவுச் சொற்கள் அமைந்துள்ளன.
குழந்தைப் பேற்றினை விழையுந் தாயின் GnyusiygsiT ''
பிரிவு 1 (ஈ) காணிக்கை நேர்ந்து -- காணிக்கை வைத்துசு இடைக்கிடை பொன்கொடுத்து, கோடி தவ
153. நூலுள் பார்க்க.
154. அதற்குரிய காரணத்தை நூலுள் பார்க்க,
155. பாடற்பொருளமைப்பபாய்வில் இதுபற்றி முன் ஆராயப்பட்ட போதிலும் ஈண்டு தலைமைக் கருத்துப்பற்றி, ஆராயும் பொருட்டு அப்பகுதியில் வருஞ் சொல்லாட்சிகள் மீண்டுந்தரப்படுகின்றன.

தாலாட்டு. அமைப்பாய்வு 115
மிருந்து, ஒருகால் தவமிருந்து, கைதொழுது, கும்பிட்டு, பூசைசெய்து, நீராடி, தீர்த்தமாடி, வெள்ளி மெழுகி, சனிமெழுகிச் சாதம் வைத்து அள்ளி மிளகுதின்று, ஆயிரம்பேருக்கு அன்ன மிட்டு, புண்ணியந்தேடி, அமாவாசை நோன் பிருந்து, சிவனேடு வாதாடி, தலையால் நடந்து, வெந்துருகிநின்று, கதிரமலபோய், மாமாங்கம் போய், மண்டூருக்குப்போய்,
பிரிவு 11 மேலே தரப்பட்ட சொற்கள் தாய் குழந்தைப் பேறடைவதற்காகத் தான்மேற்கொண்ட விரதங்கள், தலயாத் திரைகள், வழிபாடுகள், அறங்கள், என்பனபற்றிய செய்திகளைக் கூறுவனவாக அமைந்துள்ளன. குழந்தையின் அருமையையும் தான் குழந்தையை ஈன்றெடுப்பதற்காகப்பட்ட கஷ்டங்களையும், குழந்தைப்பேற்றலே தான்பெற்ற பெருமையினையும் புலப்படுத் தவே தாய்மார் இவ்வாறு மரபுவழியாகப் பாடிவருகின்றனர். இத்தலைமைக் கருத்து தமிழ்மக்கள் அனைவரது தாலாட்டுப் பாடல்களிலும் பொதுவாகக் காணப்படுதல் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
குழந்தைப்பேறடைந்த தாயின் செயல்கள்
டிரிவு 1 (ஈ) 1. கருவளம்பற்றிய சொல் அட்டவணையில் “ஈ” பிரிவிலே தாயின் செயல்களாக பெருஞ் சொற்களை ஈண்டுஞ் சேர்க்க. (பக். 112)
2. இலுப்பைவெட்டி, கால்நாட்டி, வடம்பூட்டி,
லிட்டேன்.
3. மோப்ப,188 பூரித்தல்;1?? விசாரித்தல்
தண்டனை அளித்தல்.
156. 'மோப்பக் குழையும் அனிச்சம் .." என்னுந் திருக்குறளில் (90)
மோப்ப என்னுஞ் சொல்லாட்சி வருதல் காண்க, 157. **அருட்செல்வம் . பூரியார் கண்ணுமுள" என்னுந் திருக்குறளில்
(241) பூரியார் என்பது நீசர், கீழோர் என்ற பொருளில் வந்துள்ளது. ாண்டுப் பூரித்தல் என்பது மனநிறைவு கொள்ளுதல் என்ற பொருளில் வழங்குகிறது.

Page 72
16 LD L-dia,6Tll LDfTaill...
பிரிவு 11. தாலாட்டுப் பாடல்களிற் குழந்தையின் செயல் கள் கூறப்படுவது போன்றே தாயின் செயல்களும் வருணிக்கப் பட்டுள்ளன, மேலேயுள்ள முதற்பிரிவிலுள்ள சொற்கள் தாய் தான் குழந்தையை ஈன்றெடுத்தமையை வலியுறுத்துவதாக அமை கின்றன. இறையருளாற் கருவளம்பெற்றுப், பத்துமாதஞ்சுமந்து, பலகஷ்டங்களையனுபவித்து, அருமையாகக் குழந்தையைப் பெற் றெடுத்தமையையும், தாய்மையின் அருமையையும் பலவாருகச் சொல்லித் தாலாட்டுவதிலே தாய் மனம் பூரிப்படைகின்றது.
இரண்டாம் பிரிவுச் சொற்கள் தாய் தொட்டிலிடும் செயலைக் குறிப்பிடுகின்றன. குழந்தைக்குத் தொட்டில் கொணர்ந்து கொடுக்கும் பொறுப்பும், கடமையும் மாமனுக்குரியதெனில், 88 ஈண்டு தாய் தானே ‘தொட்டிலிட்டேன்’99 எனப்பாடுவது நோக்கற்பாலது. தினமும் “ஏணையை’ ஒழுங்குபடுத்திக் குழந்தையைக் கிடத்தும் தாயின் செயலை இத்தொடர் விளக்கு கிறது.
அடுத்து மூன்றம் பிரிவிலே தரப்பட்டுள்ள சொற்கள் தாய் குழந்தையிடம் கொண்டிருக்கும் பாசத்தின் மிகுதியால் ஏற்படும் உளநிகழ்ச்சிகளைப் புலப்படுத்துவனவாக அமைகின்றன. குழந்தை யின் முகத்தையும் அதன் எழில் உருவத்தையும், குரல் இனிமை யையும் கண்டு, கேட்டு இன்புறும்போது தாயின் உள்ளம் பூரிக் கின்றது; குழந்தை அழுவதைக் கேட்கும்போது தாயுள்ளம் பதறு கின்றது; ஏங்குகின்றது. குழந்தையின் அழுகையையும் தனது மனஏக்கத்தையும் தனிக்கும்வகையிலேயே *விசாரித்தல்”, "தண்டனையளித்தல்”, என்ற பொருள்படச் சிலபாடல்கள் அமைந்துள்ளன என்றும் கூறக்கூடியதாக இருக்கின்றது.
தாய்ப்பாசத்தை வெளிப்படுத்துதல் பிரிவு 1. (உ) கண்ணே, கண்மணியே, அழகுகண்டே, என்னரசி
மகனே, என்மகனே.
(ஊ) என்னரசிமகனருக்கு, மகள்,திருமகன், புள்ள," குழந்தை, கைக்குழந்தை, மடிக்குழந்தை, பாலகன், மைந்தன்.191
T 158. நூலுள் பார்க்க.
159. L?. 9}., 5T. L111., 14l LffLeo 1 FF. 160. பிள்ளை என்பதன் மரூஉ. இவ்வழக்குப் பெரும்பாலும் பெண்ணைக்
குறிக்கும், 161. ஒரு மைந்தன் தன்குலத்துக் குள்ளான் என்பதும் உணரான்.
பெரியபுராணம், திருமலேச் சருக்கம் பாடல் 44 என்ற பாடலிலும் மைந்தன் என்ற சொல்லாட்சியைக் காண்க.

தாலாட்டு.அமைப்பாய்வு 17
குழந்தையைக் கற்பனைசெய்துபாடும் உவமை, உருவகச் சொற்களையும் ஈண்டுச் சேர்க்க
பிரிவு 11 குழந்தையிடம் தாய் கொண்டுள்ள பாசமே யாவற்றிலும் மேம்பட்டது என்பதை யாவரும் ஏற்றுக்கொள்வர். தாய்ப்பாசத்தின் தூண்டுதலாலே தாய் தனது அன்பைக் குழந்தை யிடம் செலுத்தும்போது குழந்தையை அவள் பலவாருகப் புகழ் கிருள். அதன்மூலம் தாய்ப்பாசத்தின் ஆழமும் புலப்படுத்தப்படு கின்றது. இங்குத் தரப்பட்டுள்ள “உ”, “ஊ பிரிவுச் சொற்கள் குழந்தைமீது தாய் கொண்டுள்ள பாசத்தையும், தாய்ப்பாசத்தின் உரிமையினையும் உணர்த்துவனவாக அமைந்துள்ளன. உவமை உருவகச் சொற்கள் யாவும் தாய் குழந்தைமீது கொண்டுள்ள பாசத்தின் மிகுதியினுற் குழந்தையைப் பல்வேறு பொருள்களாக வும், பல்வேறுபட்ட காவியபுருஷர்களாகவும், தெய்வங்களாகவும், கற்பனைசெய்து பாடுகின்றமையைக் குறிப்பிடுகின்றன.
குழந்தைக்குத் தெய்வத்தன்மை கொடுத்தல்
பிரிவு 1 (இ) 'ஆதிசிவன் தன்மகனே’**, “பெருமாள் திரு
மகனே”*, “சிவன் உமையாள் ஈன்றெடுத்த சிவக்கொழுந்தோ”*, *குமரேசா கண்வள ராய்”*, *கார்த்திகையாய்ப் பூத்தாயோ?*182, * சண்முகனே*, குமரேசா’8,168 பார் வதியைப் பூசைசெய்யப் பாலகனய் வந் தாயோ’’,184 ‘பார்வதியாள் பாலகன்’*188 "மாங்கனியாய் வந்தாயோ'
பிரிவு 11 தாய்மார் தமது குழந்தையைத் தெய்வக் குழந்தை யாகவும், தெய்வ சித்தமாகவும் கருதுவர். ஆதலினலே தாலாட்டும்போது குழந்தையைத் தெய்வமாகக் கருதித் தாலாட்டுகின்றனர். 187 ‘சிவன் பிறவாயாக்கைப் பெரியோனுய் முழுமுதல் தெய்வமாகப் போற்றப்பட்டமையின் அவனைப் பிள்ளை யெனக் கொண்டு பிள்ளைத்தமிழ் பாடும் மரபுஇல்லை. எனினும்
162. பி. இ., தா. பா. 111 பாடல் 4ஒ, 7 11உ, 8 இ, 11
163. மேலது, 12 பாடல் 3அ, ஆ, இ,
164. மேலது, 13 பாடல் 10.
165. மேலது, 141 பாடல் 3இ.
166. மேலது, 15 பாடல் 1உ.
167. இம்மாபே, செந்நெறி இலக்கியப்புலவர்களால் தெய்வத்தையும் குழந்தை வடிவவிற் கண்டு, தெய்வீகத் தாலாட்டுப் பாடவழிகாட்டியாகவும்; பொருள் மரபாகவும் அமைவதாயிற்று எனலாம்.

Page 73
118 மட்டக்களப்பு மாவட்ட.
சத்தியாகிய, உமைக்கும், அவர் மக்களான பிள்ளையார், முருகன் இருவருக்கும் பிள்ளைத் தமிழ் நூல்கள் உள்ளன. அவருள்ளும் சிறப்பாக என்றும் இளையனன முருகனுக்கே பிள்ளைத்தமிழ் அதிகம்." குழந்தை அவதாரமாகத் தோன்றிய முருகப் பெருமானைத் தம் குழந்தையாக உவமித்துத் தாலாட்டுவதை மேலே தரப்பட்டுள்ளவற்றில் உடுக்குறி 9-lit illசொற்ருெடர்கள் விளக்குகின்றன. இப்பிரதேசத்தில் முருகன் வழிபாடு மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குவதன் காரண மாக இவ்வாறு தமது குழந்தையை முருகனகக் கற்பனை செய்து தாய் தாலாட்டுகின்ருள். குழந்தையைத் தெய்வமாகக் கற்பனை செய்வதன் மூலம் தெய்வ அருள் கிடைப்பதோடு குழந்தையைத் தெய்வம் காப்பாற்றும் என்ற நம்பிக்கையும் இப்பிரதேச மக்களின் நடைமுறை வாழ்க்கையில் இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
பண்டு, இறைவன் திருமாலுடன் பிச்சாடான வடிவங் கொண்டு அந்தணர் சேரியிலே பிச்சை எடுக்கப்போன புராணக் கதையைக் கிராமியத்தாய்மார் அறிந்ததாகத் தெரியவில்லை. ஆனல், இறைவனே தன்னிடம் பிச்சைக்கு வந்துள்ளான் எனப் பாடுகின்ற தாயின் பாடற் பொருளைப் புராணக்கதையுடன் ஒப்பிடும்போது புராணக்கதையின் தோற்றம்பற்றிச் சிந்திக்க வைக்கிறது. "மாங்கனியாய்’ வந்தாயோ என்பதிற் கண்ணகி பாண்டி நாட்டிலே மாங்கனியாக அவதாரம் பெற்றுவந்த செய்தி குறிப்பிடப்படுகின்றது.
குழந்தையின் செயல்களைக் குறிப்பிடுதல்
பிரிவு 1 (ஈ) 1. அழுதல், வெம்புதல், நீர்வார்த்தல், மடி
தேடுதல்,
2. ஆடுதல், அசைதல், ஒடுதல் விளையாடி
வருதல், ஒளித்தல்.
3. பேர் எழுதுதல், கணக்கெழுதுதல், விளங்கு தல், பாடப்படிக்கவந்த, கொலுவிருக்கவந்த, அரசாளவந்த, காவலுக்கு வந்தாயோ,
4. வளரும், மலர்ந்த - விரிஞ்ச.
5. குதித்தோடி வருதல், உதித்தல்,
ryn
168. பரமசிவானந்தம், அ. மு. (1959) பக். 11.

தாலாட்டு.அமைப்பாய்வு 119
6. பிள்ளைக்கலிதீர்க்க வந்த மனக்கவலை தீர்க்க வந்த - பேராசை தீர்க்கவந்த, கண்கலக்கம் தீர்க்கவந்த, பூப்பித்த,
பிரிவு 11. தாலாட்டுப் பாடல்களிற் குழந்தையின் செயல் களும் அதன் வருணனைகளும் பெரிதுமிடம் பெற்றிருக்கும். இங்கு முதலாம் பிரிவிற் கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் குழந் தையின் அழுகையை விதந்துரைக்கும் வகையில் அமைந்துள்ளன. இரண்டாம் பிரிவிலுள்ள சொற்கள் குழந்தையின் விளையாட்டுத் தன்மையைக் குறிப்பிடுகின்றன. மூன்ரும் பிரிவில்வரும் சொற்கள் குழந்தைவளர்ந்து எதிர்காலத்திற் செய்யவிருக்கும் செயல்களைத் தாய் கற்பனைசெய்வதைக் காட்டுகின்றன. குழந்தை வளர்ந்து ஏட்டுக் கல்வி பயிலப்போவதையும், வளர்ந்து, வாலிபனகி மணுளணுகப் போகும் காட்சியையும், தனது குடும்பச் சொத்துக்களின் வாரிசாக அவற்றைப்பேணிப் பாதுகாக்கப் போகும் எதிர்கால வாழ்க்கைபற்றியும் தாய் கற்பனைபண்ணு வதை இச்சொற்ருெடர்கள் காட்டுகின்றன. நான்காம் பிரிவில் வரும் சொற்கள் குழந்தையின் வளர்ச்சி நெறியைக்குறிக்கின்றன.
தெய்வ அருளாற் குழந்தை பிறந்தமையைக் குதித்தோடி வருதல், உதித்தல் என்னும் இரு சொற்களும் உணர்த்துகின்றன. ஆரும் பிரிவில்வரும் சொற்ருெடர்கள் யாவும் குழந்தை பிறந்து தாய்க்கு ஆறுதல் கொடுத்தமையையும் ஆசைகளைத் தீர்த்தமை யும் உணர்த்துகின்றன. м
குழந்தையிடம் இனிமைத்தன்மை காணுதல் பிரிவு 1. (ஐ) மா, பலா, வாழை, மாதுளை, கரும்பு.
(ஒ) கனி, களை, மாம்பழம் மாங்கனி, செவ்விளநீர்
பால், அமுது, தேன்.
பிரிவு 11 மேலே தரப்பட்டுள்ள சொற்கள் இன்சுவைப் பொருட் பெயர்களைக் குறிப்பனவாகும். தாய் தன் குழந்தையை அன்போடு அழைக்கும்போது இன்சுவை ததும்பப் பேசுவதையும் குழந்தையின் காட்சியினிமையையும் விளக்குவதாக இவை அமைகின்றன. குளிர்மையைக் குறிப்பிடுதல்
பிரிவு 1 (அ) முத்து, மரகதம், பவளம், சங்கு, வைடூரியம்,
மாணிக்கம், சந்தனம்.

Page 74
120
மட்டக்களப்பு மாவட்ட.
(ஆ) கருவளத்தைக் குறிப்பிடுஞ் சொற்களின் அட்ட
வணையில் ‘அ’’ பிரிவிலே தரப்பட்ட சொற்களை
ஈண்டுஞ் சேர்த்து நோக்குக. (பக். 112)
(ஈ) வாடாத, குளிச்செடுத்த, நீராடல், தீர்த்த
(எ)
(ஐ)
மாடுதல், உறைதல். கருவளத்தைகுறிப்பிடும் சொற்களின் அட்டவணை யிலே தரப்பட்ட" எ’’ பிரிவுச் சொற்களைஈண்டுஞ் சேர்த்து நோக்குக. (பக். 122) "இலை. கொடி, பூ, பச்சை இலுப்பை, மாலை என் பவற்றுடன் கருவளம் பற்றிய சொற்களின் அட்டவணையில் 'ണ്ണ' பிரிவிலே தரப்பட்ட சொற் களையும் ஈண்டுஞ் சேர்க்க. (பக். 112)
(ஓ) வெற்றிலை, செவ்விளநீர், பால், பச்சைமா.
பிரிவு 11 இங்கே தரப்பட்டுள்ள ஆறுவகைப்பட்ட சொற் ருெகுதிகளும் குளிர்மையை உணர்த்துவனவாக அமைந்துள்ளன.
குழந்தையின் இளமைப்பருவமும், அது பார்வைக்குக் குளிர்ச்சி யையும், மகிழ்வையும் தரும்தன்மையும் இச்சொல்லாட்சிகளாற் புலப்படுத்தப்படுகின்றன.
செல்வத்தைக் குறிப்பிடுதல்
பிரிவு 1 (அ) திரவியம், செல்வம், பொன் -- தங்கம் -2
(FF)
(gr)
(gp)
தங்கப்பொன், மலைஉயரப்பொன் CZ கைநிறையப் பொன், கோடிப்பொன் தங்கத்தகடு, பணம், பளிங்கு; இவற்றுடன் குளிர்மையைக் குறிப்பிடுஞ் சொற்களின் அட்டவணையில் ‘அ’ பிரிவுச் சொற் களையும் ஈண்டுச்சேர்க்க. (பக். 119) இடைக்கிடைபொன் கொடுத்தல், ஆயிரம்பேருக்கு
அன்னமிடல். கருவளம்பற்றிய "ஏ" பிரிவுச் சொற்களை ஈண்டுஞ் சேர்க்க. (பக். 112) சிலம்பு, தாவடம், பொன்நகை, மோதிரம், பொற் பதக்கம், தோடு, சிமிக்கி, பட்டறை, பொற்கதவு ஆதனம், தங்கத்தட்டினற்பாய். *
169. மகப்பேற்றி?ன விழைவோர் நேர்த்திக்கடனுகத் தங்கப்பாய் செய்து கோயி
லுக்குக் கொடுப்பதும் உண்டு.

தாலாட்டு.அமைப்பாய்வு 121
பிரிவு 11. இங்கே காட்டப்பட்ட சொற்ருெகுதிகளிற் சிறப்
பாக “மலை உயரப் பொன் கொடுத்து’, ‘கை நிறையப் பொன் நேர்ந்து’ ‘தங்கத்தகட்டினுற் штит”, *கோடிப்பொன் கொடுத்து', 'இடைக்கிடை பொன் கொடுத்து”, “ஆயிரம்
பேருக்கு அன்னமிட்டு’, சங்குவளைப் பொற் கதவு’ என்னு ஞ சொற்ருெடர்கள் தாயின் அதிமிஞ்சிய கற்பனையைக் குறித்தாலும் அவ்ை தாய் குழந்தை மீது கொண்டுள்ள பாசத்தின் ஆழத்தையே குறித்துவந்துள்ளன என்பது சாலும்.
வடிவ அமைப்பாய்வு
தாலாட்டுப் பாடல்களின் அமைப்புப்பற்றிய இவ்வாய்வில், இதுவரையும் அப்பாடல்களின் பொருளமைப்புப்பற்றி ஆராயப் பட்டது. அதனைத் தொடர்ந்து அவற்றின் வடிவ அமைப்புப் பற்றி ஈண்டு ஆராயப்படுகின்றது. இசையமைப்பு வாய்ப்பாடு, அசைத்தொடர் அல்லது விளித்தொடர்,எதுகைமோனை அமைப்பு, திரும்பத்திரும்ப வரும் அமைப்பு, இயைபமைப்பு, விரியமைப்பு வாக்கிய அமைப்பு என்ற எட்டு விதிகளின்மூலம் வடிவ அமைப்புப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
தாலாட்டுப் பாடல்களின் இசையமைப்பு வாய்பாடு
இசையமைப்பு வாய்பாடு பாடல் ஆக்கத்திற்கு முக்கிய கருவியாகவும் அளவுகோலாகவும் அமைவதோடு, பாடகருக்கு எளிதிற் பாடக்கூடிய வாய்ப்பையும் வசதியையும் கொடுக்கின்றது. கிராமியத் தாய்மார் இவ்வாய்பாட்டைப் பயில்வதில்லையாயி னும் பயிற்சிமுறையில் அவர்களிடம் இஃது கைவரப் பெறு கின்றது. 179 இவர்கள் தாம் பரம்பரைபரம்பரையாகக் கேட் டறிந்து வந்த தாலாட்டு இசை வாய்பாட்டின்படியே சொற்களை ஒசைபெற அமைத்துப்பாடுகின்றனர்.
பாடல்கள் யாவும் இசையமைப்பு வாய்பாட்டுக்கு அமையவே பாடப்படுகின்றன. பாடகர் பாடத்தொடங்குமுன் பாடலுக் குரிய இசையை இசைத்து அதில் அமைதிகண்டதும், தொடர்ந்து
170. “A formula is a set of words which is used, with little or no change, whenever the situation with which it deals occurs. In principle all these formulae are of the same kind and perform the same function of helping the poet to surmount such and such a need when it occurs.' Bowra, C.M. (1962) P. 222.

Page 75
星22 மட்டக்களப்பு மாவட்ட ச
பாடலைப் பாடத்தொடங்குவர்." இப்பொது விதி நாட்டார் இசைக்கும் பொருந்துவதாகும். தாய் முதலிலே தாலாட்டுக்குரிய இசையமைப்பு வாய்பாட்டை ஓரிருமுறை பாடியபின்னரே தாலாட்டுப் பாடலைப் பாடத் தொடங்குவாள், இது இயற்கை
யாகவே அத்தாயிடம் காணப்படும் பயிற்சியாகும். தாலாட்டு பாடுவதிற் பயிற்சி குறைந்த பெண்களும் தாலாட்டுக்குரிய இசை
யமைப்பு வாய்பாட்டைத் திரும்பத்திரும்பப்பாடிக்குழந்தையை ஆற்றி, நித்திரையாக்குவதில் ஈடுபாடு காட்டுகின்றமையைக் கள ஆய்வின்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் அவதானிக்கக் கூடியதாயிற்று.
கர்நாடக சங்கீதத்தின் அடிநாதமாக ஏழுசுரங்கள் (ச, ரி. ம. ப. த. நி.) அமைந்திருப்பதுபோன்று, தாலாட்டுப்பாடலின் இசையமைப்புக்கும் குறிப்பிட்ட சில எழுத்துகளின் கூட்ட
மைப்பே காலாகவுள்ளது. ஆ, ஒ, ஓ, ர, ரா, ரி, ரொ, ரோ ஆகிய
எட்டு எழுத்துகளும் ஈழத்துத் தாலாட்டுப்பாடல்களின் இசை
யமைப்பு வாய்பாட்டில் இடம் பெறுகின்றன. 17? இவற்றைப்
பின்வருமாறு வகைப்படுத்தலாம்: メ
உயிர் எழுத்து: ஆ ஒ ஒ. மெய் எழுத்து: fi. உயிர்மெய் எழுத்து: ர் + அ = ர; ர் + ஆ = ரா;
ர் + ஓ = ரோ; இங்குக் காட்டப்பட்ட எழுத்துகளால் அமைந்த ஒலித்தொகுதி களான ஆராரோ, ஆரிரரோ, ஒரோரோ, ஒஒஒஒ, ஓராரோ, ரிரிரி, ரோ ரோ ரோ என்னுந் தொடர்களின்மூலமே தாலாட்டின் இசையமைப்புவாய்பாடு ஆக்கம் பெற்றுள்ளது.*** இத்தொடர்
171, “Song begins with some sort of a tune, and to adopt real words
to it is a separate and subsequent task which calls for consi derable dexterity. A mere tune. if hummed, can still satisfy its performers, who fell that it expresses something quite adequa intely and do not demand words to make it more explicite.' Bowra, C.M. (1962) P. 57.
172, 1. உலகமொழிகளிற் பெரும் பாலானவற்றிலுள்ள தாலாட்டுப் பாடல் களில் இத்தகைய ஒலியமைப்புகள் ஒரேதன்மைத்தாகக் காணப்படு 86öı p53). Daiken, Leslie, (1959) P. 9.
1. "தனதான’ என்பதுபோல ஆராரோ, ஆரிரரோ என்பதும் சந்த
மாகும். இதன ராராரோ ராரிரரோ என்றும் ஆரிவரோ என்றும் வழங்குவர். பழந்தமிழ்க் குடிகள் ரூரிரோ, ரூரீரரோ எனவும், நாஞ்சில் தமிழர் ராரா ஒ எனவும் இசையமைத்தலேக் கேட்கிறேம். . மலையாளத்திலும் தெலுங்கிலும் தாய்த்தமிழைப்போலவே முறையே ஆராரோ ஆரிரரோ என்பனவே இசையமைக்கும் சந்தங்களாக இருக் கின்றன.* தமிழண்ணல் (1963) பக், 15.

தாலாட்டு.அமைப்பாய்வு 123
களுக்கு எவ்வித பொருளும் கருதாது ஒசையமைதிக்காகவே தாய் மார் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். மனிதன் மொழியறிவு பெறுவதற்கு முன்னர், அதாவது மொழியின் பயன்பாடு ஏற்படு வதற்கு முன் தன் கருத்துகளையும் செயல்களையும் பிறருக்குப் புலப்படுத்தச் சைகைகளையும், வெறும் ஒலிக்குறிப்புகளையுமே பயன்படுத்தியிருக்கின்றன்.17* அந்த ஒலிக்குறிப்பின் வளர்ச்சி நிலையே பின்பு மொழியாக வளம் பெறுவதாயிற்று. மனிதன் ஆரம்பத்தில் தான் பயன்படுத்திய ஒலிக்குறிப்புகளைப் பேசும் ஆற்றல் பெற்றதும் மெல்ல மறந்துபோகப் பொருளுள்ள சொற்கள் காலப்போக்கில் தோன்றலாயின." அத்தகைய பொருளற்ற ஒலித்தொகுதிகளின் சின்னமாக அல்லது அவற்றின்
தாடர்ச்சியாகவே தாலாட்டுப்பாடலின் GF GOFALU GOLDlul-H வாய்பாடு அமைந்துள்ளது. கள ஆய்வின்போது சேகரித்த தாலாட்டுப் பாடல்களின் இசையமைப்பு வாய்பாடுகள் இங்குத் தரப்படுகின்றன.
1. ஆராரோ ஆரிரரோ - கண்ணே
ஆராரோ ஆரிரரோ.
2. ஆராரோ ஆரிரரோ - கண்ணேநீ
ஆரிரரோ ஆராரோ.
3. ஆராரோ ஆரிரரோ - அம்மாநீ
ஆராரோ ஆராரோ. 4. S? SI TU JTT • • • ... - கண்ணே நீ
ஒராரோ ஒராரோ.
5, rfrfffffff? ........ e - கண்டே
ffffffffff? ..... ...
6. ரோ ரொ ரொ ரொ . கண்ணே
ரொ ரொ ரொ.
سمبر
173. தமிழகத்தில் இத்தொடர்களைவிட வேறுபல தொடர்கள் காணப்படுவதை
வெளிவந்த நாட்டார் பாடல் நூல்களின்மூலம் அறியப்படுகின்றது. 1. தமிழண்ணல்- (1963) பக். 15, 59, 61, 85, 91, 98, 103, 131, 132, 11. ஜகந்நாதன், கி. வா, (1958) பக். 219, 222, 224, 226, 231, 232,
234, 237, 244, 248, 250, 256.
174. "... the sounds have no meaning whatsoever. Nor are they likely to be an in heritance from the past, a relic of an old speech which has passed out of use.' Bowra, C. M. (1962) PP. 58- 59.
175. நூலுள் பார்க்க. (பக் 73)

Page 76
124 மட்டக்களப்பு மாவட்ட.
இவற்றைவிட, இசையமைப்பு வாய்பாட்டில் வேறு ஒருவகை அமைப்புங் காணப்படுகின்றது. முதல்வரியில் பொருளற்ற ஒலித் தொகுதிகளிடம் பெற, இரண்டாம் வரியிற் பொருட்கூறுடைய சொற்கள் இடம் பெறுவதையும் அவதானிக்கக்கூடியதாயுள்ளது.
1. ஆராரோ 178 ஆரிரரோ - என்
ஆராட்டும் நீ கேளாயோ.
2. ஆராரோ ஆரிரரோ 177 - எந்தன்
அம்மாநீ கண்ணுறங்கு
3. ஆராரோ ஆராரோ - நீ
ஆளப்பிறந்தவனே.
4. ஓராரோ ஆராரோ - அழகுகண்டேரீ
ஆராட்டும் கேளாயோ.
அசைத்தொடர் அல்லது விளித்தொடர்
இசையமைப்பு வாய்பாட்டின் முதலாம்வரியின் இறுதியில் வரும் சொல் அல்லது சொற்ருெடர் குழந்தையை விளிப்பதாகவும், பாடலுக்கு இசைப் பெருக்கைக் கொடுப்பதாகவும் அமைந் துள்ளது. இவ்வாறு தாலாட்டுப்பாடல்களிலே வந்த சொற் களுஞ் சொற்ருெடர்களும் இங்கே தரப்படுகின்றன:
என்னரசி மகனே, என்னரசி மகளுருக்கு, மகனே உனக்கு', மகனே உன்*, மகனே நீ* , தம்பி*, கண்ணே*, அழகுகண்டே நீ*,
தாலாட்டுப் பாடுவோர் இச்சொற்களை இசைத்து ஓசை கூட்டிப்பாடுவர். இச்சொற்கள் அல்லது சொற் ருெடர்கள் முதலாம் வரியின் முடிவையும், இரண்டாம்வரியின் தொடக்கத்தையும் அறிவிப்பனவாகவும் அமைகின்றன.
176. ஆராரோ என்ற தொடரை ஆர் + ஆர் + ஒ எனப்பிரித்து, நீர் ஆரே (ா நான் ஆரோ எனப்பொருள்கொண்டு, முற்பிறப்புக் கொள்கைகளைச் சில நூலாசிரியர்கள் பொருத்திக்காட்டுவது ஈண்டுநோக்கற்பாலது.
177. ஆரிரரோ என்பதை 'ஆரிவரோ” என எடுத்து முற்பிறப்புக் கொள்கை களையும், சைவசித்தாந்தக்கருத்துக்களையும் சேர்த்தும் விளக்க த சுறு.
178. உடுக்குறியீடு இடப்பட்டுள்ள சொற்களுஞ் சொற்ருெடர்களும் விளிப் பெயராக இயல்பாயும், ஏகாரம் பெற்றும் வந்தமை காண்க. ஏகாரம் பெற்று வந்த விளிச் சொற்களே பெருவழக்கு. 'இம்முப் பெயர்க் கண்ணியல்பு மேயும் இகர நீட்சியு முருபா மன்னே". நன்னூல் சூத்திரம். 305

தாலாட்டு.அமைப்பாய்வு 125
இவ்வாறன சொற்களையுஞ் சொற்ருெடர்களையும் தாலாட்டுப் பாடல்கள் பெற்று வருவதே பொதுமரபாகக் காணப்பட்ட போதிலும், சிலபாடல்கள் இவற்றுக்கு விதிவிலக்காக இசைத் தொடர்ச் சொற்களைப் பெருமலும் அமைந்துள்ளன.**
எதுகை மோனை அமைப்பு
எதுகை மோனை, பாடல்களுக்கு ஒசை இனிமையூட்டுவதில் உயிர்நாடியாக அமைவதுமட்டுமன்றி, பாடல்களை இயக்கும் இயக்கச் சத்தியாகவும் காணப்படுகின்றன. ஒசையமைப்புக்கு எதுகைமோனை உரமூட்டுவதாக அமைகின்றன. தாலாட்டுப் பாடலின் ஒசையின்மூலம் தன் குழந்தையைத் துயிலவைக்குந் தாய், ஓசையை எழுப்புதற்கு இயைபான, தனக்குப் பயிற்சி யான சொற்களையே பயன்படுத்துகிருள். சாதாரண பேச்சு வழக்கில் எதுகை மோனைகளைக் கலந்து பேசும் தாய், அம்மொழி நடையிலே தாலாட்டைப்பாடும் போது தாலாட்டிலும் எதுகை மோனை அமைவது இயல்பாகின்றது. எதுகைமோனை தாலாட்டுப் ,L-69.jp பெருஞ்செல்வாக்குப் பெற்றுக்காணப்படினும்חוL பழைய பாடல்களில் இவற்றின் செல்வாக்கு அதிகமாகக் காணப் படவில்லை எனக்கூறப்படுகிறது." எதுகை அமைப்பு
தாலாட்டுப் பாடல்களில் எதுகையமைப்பு மிகக் குறை வாகவே வந்துள்ளது. இவ்வியலில் ஆராயப்பட்ட தாலாட்டுப் பாடல்களில் வரும் எதுகைச் சொற்கள் இங்கே தரப்படுகின்றன;
மானே-தேனே (1/3 அ.ஆ; 19 தேனே-கோனே /1/ 7 11 அ தேட-பாட 11/7 ஆ; வாடாத-தேடாத 11| 7 11 இ; சீரார் ஆரார் 11| 711 ஈ; மோப்ப-ஏப்பம் 11| 8 1 அ;
பாலை-சோலை 11| 8 ஈ; நித்திரை-சித்திர /1/ 9 இ-ஈ; கண்ணே-பொன்னே 11| 9அ.ஆ; எங்க-சங்கு /1/10 ஊ;
179. பி.இ., தா.பா./11 பாடல் 3, 7, 11, 8; 12 பாடல் 1இ, 2அ, 3, 4, 6, 13 பாடல் 5, 14 பாடல் 1, 2அ,3, 15 பாடல் 1, 2 ஆ; 16 பாடல் 1,2; 180. II. “Alliteration is not constant in primitive song, but it is quite common, and is evidenly though to be an elegance though not jet a necessity'. Bowra, C.M., (1962) P, 83, II. “In primitive song, rhyme, like a alliteration, is an incidental if not quite an accidental, ornamental, which the singer enjoys and exploits when he chances on it, but which he is under no oblication to use as part of his technique.' Bowra, C.M. (1962) P. 85. 181. எதுகையைத்தொடர்ந்து வரும் இலக்கங்கள் பின்னிணைப்பிலுள்ள
தாலாட்டுப் பாடல் இலக்கங்களைக் குறிக்கும்.

Page 77
26 மட்டக்களப்பு மாவட்ட.
பிள்ள. வள்ளல் 11| 10 எ; தூணுே-மானே 12 1 அ; தேனே-மானே 12 1ஆ கொம்பு-வம்பு 12 1ஈ; பாலுக்கு-கூழுக்கு 12 1ஈ: ஆச்சி-பேச்சு 12| 3 அ; முத்து-சுத்தி 12 3 ஊ; அறையில்-சிறையில் 12/4.4; வெண்ணயால்-மண்ணுல் /2/ 4.4; தாழை-வாழை /26; மாணிக்கம்-காணிக்கை /3/6; காணிக்கை-மாணிக்கம் 13 4; ஆடி-தேடி |3| 13; ஆடி-கோடி 13 14; மாணிக்கஆணிப் 4 1 இ; சங்கு-தங்கம் 1412இ; ஒட-சூட41 3அ; வெள்ளி-வெள்ளி/4| 3ஈ; கன்று-கன்னி |5| 1.3; மலடி-மலடி 15 1-5; இருளி.இருளி 1511.6; சங்கு-சங்கு 152.8.
3ıpm2soru 65nlpÜ H
இங்கே ஆராயப்பட்டுள்ள தாலாட்டுப்பாடல் ஆறு பிரிவு களிலும் மொத்தமாக 604 வரிகள் வந்துள்ளன. இவற்றில் 546 வரிகள் மோஜனத்தொடராகவும் 58 வரிகள் மோனை பெருதும் அமைந்துள்ளமையை அவதானிக்கும்போது, தாலாட்டுப்பாடல் களில் மோனையின் ஆதிக்கத்தையும், ஒசையமைப்புக்கு மோனை பெரிதும் ஒத்தியங்குவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே தாலாட்டுப்பாடலின் வடிவஅமைப்பில் மோனையமைப்பு முதன்மைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திரும்பத்திரும்பவரும் அமைப்பு
தாலாட்டுப்பாடல்கள் இசைவாய்பாட்டுக்கு அமைய ஆக்கம் பெறும்போது, அப்பாடலில்வரும் தொடர்களும் அவ் வாய்பாட்டுக்கு அமையவே இடம்பெறுகின்றன. lurru -5ri குறிப்பிட்ட- ஒருவிடயம்பற்றிப் பாடும்போது பழக்கமான சொற்களையுஞ் சொற்ருெடர்களையும் தமக்குப் பயிற்சியான இசைவாய்பாட்டின் பொருத்தம்நோக்கி, அதன் இசை அமைதிக்கு ஏற்பச் சொற்களை நிறைத்துப் பாடலை ஆக்கு இன்றனர். 18? இப்பொது விதிக்கமையத் தாலாட்டுப்பாடலின் ஆக்கத்தின் போது திரும்பத்திரும்ப இடம்பெறும் வாய்பாடு (Repetitive Formula) பின்பற்றப்படுகின்றது. தாய்மார் தம் சூழலுக்கும் சுற்ருடலுக்கும் ஏற்பவும், தம் அறிவுக்கும் ஆற்ற லுக்கும் அமையவும் தாம் அறிந்த சொற்களையுஞ், சொற்றெடர் களையும், கருத்துகளையும், தம்வாழ்க்கை அனுபவங்களையும் ஆதாரமாகக் கொண்டு தாலாட்டுப்பாடும்போது திரும்பத்
182. Parry, Millman., (1950) P. 78.

தாலாட்டு. அமைப்பாய்வு 27
திரும்ப இடம்பெறும் அமைப்பு பாடலின் ஆக்கத்திலும் வடிவ அமைப்பிலும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
தாலாட்டின் இசையமைப்பு வாய்பாடு ஆக்கம் பெற்றிருக்கும் முறையிலும் இப்பண்பு காணப்படுகின்றமை நோக்கற்பாலது:
ஆராரோ ஆரிரரோ = அ + ஆ ஆராரோ ஆரிரரோ = அ + ஆ
இந்த இசையமைப்பு வாய்பாட்டின் ஒவ்வொருவரியும் இரு தொடர்களால் (அ + ஆ) அமைந்துள்ளதோடு, குறிப்பிட்ட இரு தொடர்கள் திரும்பத்திரும்ப வந்திருத்தலும் கவனிக்கத்தக்கன.
தாலாட்டுப்பாடல்களிலே திரும்பத்திரும்ப இடம்பெறுஞ் சொற்கள்
குறிப்பிட்ட சொற்கள், சொற்ருெடர்கள், வரி, வரிகள் என்பன திரும்பத்திரும்ப இடம்பெறுதல் பெரும்பாலும் நாட்டாரிலக்கியத்துக்கேயுரிய சிறப்பியல்பாகவும், அவ்விலக்கி யத்தின் பயன்பாட்டின் அடிப்படையில் அதிக முக்கியத்துவம் பெறுவதாகவும் காணப்படுகின்றது.183 நாட்டார் இலக்கியங் களிலே தாலாட்டுப் பாடல்களில் இப்பண்பு மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது. முதலாம் பாடற் பிரிவில் இடம்பெறும் முதற்பாடலிற்* பயின்று வருஞ்சொற்கள் வருமாறு:
அலை, ஆணி, (5 தரம்), ஆராய்ந்த, இருளி, ஈணுத, ஈன்ற (2 தரம்), எடுத்த, கடல், (4 தரம்), குளிச்சு, குறத்தி, கொட்டி, கோராத, கையில் (2 தரம்), சங்கு, (2 தரம்), சாதி, சமுத்திரத்தில், தாவடம் (2 தரம்), நீ (8 தரம்), பெரும், முது (2 தரம்), முத்து (15 தரம்), வெண், வைச்ச, (ஒரு தரம்)
இப்பாடலில் மொத்தமாக 56 சொற்கள் வந்துள. இவற்றுள் 14 சொற்கள் ஒரு முறையும், 42 சொற்கள் திரும்பத்திரும்பவும் இடம்பெற்றுள்ளன. இப்பாடலிலே திரும்பத்திரும்ப இடம் பெறும் சொற்களின் விகிதம் (56 : 42) 75% ஆகும்.
இன்னியலில் ஆராயப்பட்டுள்ள ஆறு பாடற்பிரிவுகளிலும்*** இடம்பெறுஞ் சொற்பிரயோகங்களை ஆராய்ந்து, ஒவ்வொரு பாடற்பிரிவிலும் இடம்பெறும் மொத்தச் சொற்களும், அப்பாடல்
183. நூலுள் நோக்குக. 184. fi. g., g5T. Lu T. I1 L1 Tlesio 1. 185. பி. இ. தா. பா. 111
|6 வரையுள்ள பாடல்கள்.

Page 78
28 மட்டக்களப்பு மாவட்ட.
களில் ஒரு தரம் மாத்திரம் இடம்பெறுஞ் சொற்களின் மொத்த எண்ணிக்கையும், திரும்பத்திரும்ப இடம்பெறுஞ் சொற்களின் மொத்த எண்ணிக்கையும் அவற்றின் விகிதாசாரமும் தனித் தனியே தரப்பட்டு ஈற்றில் ஆறுபாடற் பிரிவுகளுக்குமான மொத்த எண்ணிக்கையும் பின்வரும் அட்டவணையிலே தரப்படு கின்றன:
. திரும்பத் திரும்பத் Lunt L-fb9f6 556řir ਕੰ திரும்ப திரும்ப > = வீதம்
வராதன வருவன )
1 ஆம் பாடற்பிரிவு 635 38 317 = 50%,
2 ஆம் பாடற்பிரிவு 505 122 383 - 75.8%
3 ஆம்பாடற்பிரிவு 236 72 164 = 67.8%
4 ஆம் பாடற்பிரிவு 281 93 188 = 66.9%
5 ஆம் பாடற்பிரிவு 184 86 98 = 53.2%
6 ஆம் பாடற்பிரிவு 80 53 27= 33.8%
ஆறுபிரிவுகளிலு முள்ள சொற்களின் 1921 744 1177 = 61.4%
மொத்தம்
அட்டவணை 3
பெயர்ச்சொல், வினைச்சொல் திரும்பத்திரும்ப வருதல்
தாலாட்டுப்பாடல்களிற் குறிப்பிட்ட சிலபெயர்ச் சொற் களும் வினைச்சொற்களுந் திரும்பத்திரும்பவரும் அமைப்புக் காணப் படுகின்றது. முக்கியமாகப் பெயர்ச்சொற்களைப் பல்வேறுவிதமாக அடைகொடுத்துத் திரும்பத்திரும்பப் பாடும்முறை தாலாட்டிற் பெரிதும் பயின்றுவந்துள்ளது.

தாலாட்டு. அமைப்பாய்வு 129
திரும்பத்திரும்பவரும் பெயர்ச்சொற்கள் 186
1.
2.
10.
186
முத்து
கடல்
'பாலகன்
மகன்
குழந்தை
தொட்டில்
பொன்
கண்டு
6nu Tui
. இவை முன்னர்
இந்நூல், பக். 80 பார்க்க.
முது + கடல் (2 தரம்); அலை + கடல். சாதிப் + பெருங்கடல்; தேன் + கடல்: சீதைபெத்த + பாலகன்; அல்லிபெத்த + பாலகன், சந்திரமதி + பாலகன்; அருக் காணிப் + பாலகன்;
சீராமர்தன் + மகன்; அருச்சுனனுர்தன்+ மகன்; ஆரார்திரு + மகன்; ஆதிசிவன் தன் + மகன்; பெருமாள்திரு + மகன்; என்னரசி + மகன் (4 தரம்); கனியில் இனிய + மகன்; சுனையில் இனிய + மகன்
கைக் + குழந்தை; மடிக் + குழந்தை (2 தரம்) சீரார்பசுங் + கிளி; ஆரார் பசுங் + கிளி; சோலைப்பசுங் + கிளி; புனக் + கிளி; பசுங் + கிளி. சித்திரப்பூந் + தொட்டில் (2 தரம்) தங்கநல்ல + தொட்டில்; பொன்னல + தொட்டில்; ஆணிப்பொன் + தொட்டில் (2 தரம்).
மாற்றுயர்ந்த + பொன்; தங்கப் + பொன்; மலையுயரப் + பொன்; கைநிறையப் + பொன்; ஆணிப் + பொன் (2 தரம்); கோடிப் + பொன். மான்ஈண்ட + கண்டு; அழகு + கண்டு (7 தரம்); கன்றுமான் + கண்டு; கவரி மான் ஈண்ட + கண்டு; பிலா + கண்டு பொன்னன + வாய்; செம்பவள + வாய் சந்தண + வாய்; பொக்கை + வாய் ஏலப்பூ+ வாய்; வெள்ளரிப்பூ + வாய்
கத்தரிப்பூ+ வாய்
கூறப்பட்டுள்ளனவாயினும் (இந்நூல் பக். 79.121
திரும்பத்திரும்பவரும் அமைப்புமுறையை எடுத்துவிளக்கும் பொருட்டு அவை ஈண்டுத் தொகுத்துக் கூறப்படுகின்றன.
LDー9

Page 79
130 மட்டக்களப்பு மாவட்ட.
11. கனி, பழம் மாங் + கனி (2தரம்); கொம்புக் + கனி; கோதுப்படாமாங் + கனி, பல + கனிகள்; அழகுகிளிமாம் + பழம்; அணில்கோதா மாம் + பழம்; ஆலம் + ւմtքւb: 12. , மல்லிகைப் + பூ; வெத்திலைப் + பூ;
வாடாத + பூ தேடாத + பூ;
13. மரம் செடிப் பச்சை + இலுப்பை (2தரம்); முத்து +
பெயர்கள் சம்பா (2தரம்) ; அழகு + சம்பா;
தங்கச் + சம்பா, கண்டுப்பனை + ஓலை; கணக்கெழுதநல் + ஓலை; பனை + ஓலை; பெரிய + ஓலை; பேரெழுதநல் + ஓலை; காயாத + வாழை: பூவாத + வாழை, கன்னி+ வாழை; ஐந்துதலைநாகம் அடை கிடக்கும் + தாழை, கண்டுப் + பனை; ஆண் + பனை, கண்டுப் + பிலா, கூளன் + பிலா; மாதாளம் + தண்டு (2தரம்); ஆமணக்கம் + தண்டு; ஆமணக்கம் + கம்பு; மாதாளம் + கம்பு.
14. கை மைதீட்டும் + கையாலே, பால்வார்க்கும்+ கையாலே; பாலூட்டும் + கையாலே; அமுதூட்டும் + கையாலே, ஆதனக் + கையாலே;
15. கிணறு சிறு + கிணறு, உறை + கிணறு: பால்
கிணறு;
இவற்றைவிடத் தமக்குப் பயிற்சியானதும் வழக்கிலுள்ளதுமான பெயரடைகளைப் பலமுறை, பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களிற் பயன்படுத்தும் மரபு தாலாட்டுப் பாடலிற் காணப்படுகிறது. தங்கம், பொன் என்ற சொற்களைப் பெயரடையாகத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியிருக்கும் பான்மையும் நோக்கற்பாலது
தங்கம் தங்கத்தால் + சங்கு; தங்கத்தால் + அரணுக்கொடி
தங்கத்தால் + தோடு; தங்கப்பொன் + நகை; தங்கத்தகடு இழைத்த + தனிப்பாய்; தங்க + நல்ல தொட்டில்.
பொன் பொன்னல + தொட்டில் (2தரம்); ஆணிப்பொன் + தொட்டில் (2தரம்); பொற் + கதவு: பொன்னன +

தாலாட்டு.அமைப்பாய்வு
உன்மாமன்; பொன்னன + வாய்: பொன் + நேர்ந்து (2தரம்) இடைக்கிடைபொன் + கொடுத்து. கோடிப்
பொன் + கொடுத்து.
தாலாட்டுப் பாடல்களிற் பெயரெச்சங்கள், வினைமுற்றுகள்,
வினையெச்சங்கள் என்பனவும் திரும்பத்திரும்ப இடம்பெறும்
அமைப்பும் காணப்படுகிறது.
திரும்பத்திரும்பவரும் பெயரெச்சங்கள்
1. பெத்த-ஈண்ட-ஈன்ற
மான் + ஈண்ட சங்கு + ஈன்ற (2தரம்): சீதை+ பெத்த அல்லி + பெத்த; சிவன் உமையாள் + ஈன்ற;
ஈன்ற; நான் + பெத்த, கவரிமான் + ஈண்ட
2. வந்த
பிள்ளக்கலி தீர்க்க + வந்த (2தரம்); கொலுவிருக்க -- வந்த தானுள + வந்த மைந்தன் + கலிதீர்க்க + வந்த, குதித்தோடி + வந்த, பேராச + தீர்க்க +
வந்த பார்க்க + வந்த
திரும்பத் திரும்பவரும் வினைமுற்றுகள்
1.
அழுகிறது: மானே / அரசோ / தேனே + அழுகிறது.
வெம்புறது
மாங்குயிலோ / அம்புலியோ I துரைமகனே மாங்கனியோ | தெள்ளமுதோ + வெம்புறது.
அழவேண்டாம் அரசே | தேனே / மானே + அழவேண்டாம். வெம்பவேண்டாம்
அம்புலியே / தெள்ளமுதே ! மாங்குயிலே + வெம்பவேண்டாம்
அழுவானேன்
சீறி | வெம்பி I கதறி + அழுவானேன். அழுதாய்
ஏன் ! நீ + அழுதாய்.
நான் +

Page 80
132 ܗܝ மட்டக்களப்பு மாவட்ட .
7. அடிச்சாளோ, அடிச்சாணுே
மாமி / ஆச்சி / பாட்டி / மச்சி | பேச்சி+ அடிச்சாளோ, மாமன் |அண்ணன் + அடிச்சானே.
திரும்பத் திரும்பவரும் வினையெச்சங்கள்:
1. நிறைஞ்சி
தாயார் மடி | தகப்பனுர்தோள் | மாமிமடி !
மாமனர் தோள் / குளமும் / வாய்க்கால்+நிறைஞ்சி, 2. -Li
மாமாங்கம் / மதுரைக்கடல் / சிறிரங்கம் !
திருப்பாற்கடல் / தைப்பூசம் | சிவனுேடுவாது |
தனித்தீர்த்தம் | தனுஷ்கோடிநீர் +, ஆடி. 3. வந்து
சாமி ( 3 தரம்) 1 மழைத்துளியாய் + வந்து.
விணுத்தொடர் திரும்பத்திரும்ப இடம் பெறும் அமைப்பு:
தாலாட்டுப்பாடல்களின் ஆக்கமுறையில் வினத்தொடர்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. ஒரே வினத்தொடரை வேறுவித மாகத் திரும்பத்திரும்ப அடுக்கிக்கூறும் அமைப்புங் காணப்படு கின்றது. இந்த ஆக்கமுறையின்மூலம் தாலாட்டுப்பாடல் நீண்ட வடிவ அமைப்பைப்பெறுகின்றது. “யார் அழுகிறது”, 'யார்வெம் புறது”, “அழுவானேன்”, “ஏன்அழுதாய்” “ஏன் அழுகிருயோ’’, திசயார் அடிச்சாளோ’1" ஆகிய வினத்தொடர்களைப் பயன்படுத்தி நீண்ட நேரம் பாடலைப் பாடக்கூடிய ஆக்க உத்தி கையாளப்படு கிறது. கிராமியத்தாயிடம் தாலாட்டுப்பாடல்களின் இத்தகைய ஆக்க உத்திகள் இயற்கையாகவே பயிற்சி நெறியில் அமைந்து விடுகின்றன.
இவ்வாருகத் தாலாட்டுப்பாடல்களிலே திரும்பத்திரும்ப வரும் பெயர்ச்சொற்கள், பெயரடைகள், பெயரெச்சங்கள், வினை யெச்சங்கள், வினைமுற்றுகள், வினத்தொடர்கள் என்பன கிராமியத் தாய்மாரின் நடைமுறைவாழ்க்கையிற் பேச்சுவழக்கிற் பயின்று வருவனவாகவும், தாலாட்டுப்பாடல்களின் ஆக்கத்திற்கு வேண்டிய தயார்நிலைத் தொடர்களாகவும் *** (Readymade phrases) காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
187. I. 9., g5T. Li f ... I 2 LTL6i 1, 2, 3, 188. இந் நூல். IV ஆம் இயலில் 147ஆம் அடிக்குறிப்புப் பார்க்க.

தாலாட்டு.அமைப்பாய்வு 133
Sonu unds: (improvisation)
தாலாட்டுப்பாடலின் ஆக்கமுறையில் இயைபமைப்புமுறை பெரிதும் காணப்படும். 189 தாய் தான் ஒருமுறை பாடிய தாலாட்டை மறுமுறை பாடும்போது அவ்வாறே அதனை அவளாற் பாடமுடிவதில்லை. மறுமுறைபாடும்போது அசை, சொல், தொடர் என்பவற்றுள் ஒன்ருே அல்லது பலவோ மாற்றம் பெற்றிருத்தலைக் கள ஆய்வின்போது அவதானிக்கக்கூடியதா யிருந்தது. " தாய்மார் தம் இளமைக் காலத்திலிருந்து கேட் டறிந்த தாலாட்டுப் பாடல்களைத் தாம் வளர்ந்ததும், தம் இளைய சகோதரர்களுக்கு, அல்லது தம் மருமக்கள் முறையான குழந்தைக்குத் தாலாட்டுகின்ற வாய்ப்பையும் அனுபவத்தையும் திருமணத்திற்குமுன் பெறுகின்றனர். எனவே நீண்டநாட் பயிற்சியிலும் அனுபவத்திலும் நினைவிலிருக்கும் தாலாட்டுப் பாடல்க%ளப் பாடும்போது, இசையமைப்பு வாய்பாட்டுக்கு அமையத் தாம் விரும்பியவாறு சொற்களை இயைபுபடுத்திப் பாடக்கூடிய ஆற்றலுடையோராகத் தாய்மார் காணப்படு கின்றனர். இதற்கு உதாரணமாகப் பின்வரும் பாடலை எடுத்துக் காட்டலாம்.
1. "பிள்ளவேணுமென்று - நாங்க கதிரமலபோகயிலே”. 11. “மைந்தனில்ல என்று சொல்லி மாமாங்கம் போக
ሀፃ(86)””1 9 1
இங்கு, பெரிய எழுத்தில் தரப்பட்ட பகுதி இயைபமைப்புத் தொட ராக வந்திருத்தல் காண்க. மேலும் இயைபமைப்புப் பெற்று வரு மிடங்களை அடிக்குறிப்பிற் காண்க.19?
6.aif susnudh (Expansion Structure)
குறிப்பிட்ட ஒருவிடயம்பற்றிப் பாடும்போது, அதனேடு சம்பந்தப்பட்ட சகல விபரங்களையும் சேர்த்துப்பாடவேண்டும் என்ற நியதியோ, அன்றிக் கட்டுப்பாடோ பின்பற்றப்பட்ட தாகத் தெரியவில்லை. தாய் தனது நினைவாற்றலுக்கும் பாடுந் திறனுக்கும் ஏற்பவே விடயங்களை விரித்துப்பாடுகிருள்.
制
189. Bow ra, C. M. (1962) P. 218. 190. இதனை வகை ஒலிமாற்றம் (Free variation) என்றும் கூறுப. 191. பி.இ., தா, பா. 111 பாடல் 11: 192. மேலது, 11 பாடல் 11அ./1| 11 ஆ; 12 1; 12 2; 12 3; 24; 13 6:
|3| 7; /3/10; |4|12 |4|4 ց: |5| 39լ: |5|33,

Page 81
134 மட்டக்களப்பு மாவட்ட.
இதற்குக் குழந்தையும் உடந்தையாக அமையவேண்டும். குழந்தை நித்திரை கொள்ள அல்லது அழுகையை நிறுத்த எடுக்கும் நேரத்தைப் பொறுத்தோ, அல்லது குழந்தை பால் அருந்த எடுக்கும் நேரத்தைப் பொறுத்தோதான் தாலாட்டுப் பாடல் சுருங்கியும் விரிந்தும் காணப்படும். எனவே பயன் பாட்டின் அடிப்படையில் நோக்கும்போது தாலாட்டுப்பாடல் தேவைக்கு ஏற்பச் சுருங்கியும் விரிந்தும் அமைவது இயல்பே.
தாலாட்டுப் பாடல்களில்வரும் பெயர்த்தொகைச் சொற்
களிலும் (Nominal compound) விரித்துக்கூறப்படும் அமைப்புக்
காணப்படுகின்றது. இதனைப் பின்வரும் எடுத்துக்காட்டுகள் விளக்கும்.
தொகை se விரிபமைப்பு பொன்தொட்டில் >தொட்டிலுமோ பொன்னுல முத்துக்கயிறு >தொடுகயிருே முத்தால?? முத்துத்தோறணம் >தோறணங்கள் முத்தால?* பவளக்கால் >பவளத்தால்கால் 199 தங்கச்சங்கு >தங்கத்தால் சங்கு 199 தங்க அருளுக்கொடி > தங்கத்தால் அருணுக்கொடி ?" வெண்கலத்தேர் >வெண்கலத்தால்தேர்?? தங்கத்தோடு > தங்கத்தால்தோடு 199
வரியமைப்பு
தாலாட்டுப் பாடல்களின் வரியமைப்புமுறை மிகவும் எளிதானதாகவும், ஒசையமைப்பிற் சிக்கலற்ற யாப்பினையுடைய தாகவும் அமைந்துள்ளது. யாப்பறியாப் பாமரப் பெண்களின் வாயிலிருந்துவரும் ஒசையமைதி, தாலாட்டுப் பாடல்களாகத்
193. GLDITyushugust sits 952sar Post nominal qualifier srirus. 194, 1. பி. இ. தா. பா. 141 பாடல். 1ஆ
11. தோரணம் > தோறணம் (கரண்டி > கறண்டி ஆனது போன்றது)
இச்சொல்லாட்சி, நாச்சியார் திருமொழி 556 ஆம் பாடலிலும் வரு தல் காண்க.
195. In... gs,, g5T. Lum. 4 LITLsi FF;
196, மேலது,பாடல் 2ஈ;
197. 150.g., 35T. Lu T. [4/ U TL6iv 29.
198. மேலது, பாடல் 3ஈ.
19. மேலது, 16 பாடல் 1.அ.

தாலாட்டு.அமைப்பாய்வு 135
தோற்றம்பெற்று, ஒரு மரபுக்கு உட்பட்ட இசைமரபினையுடைய தாக அமைந்து காணப்படுகின்றது.
‘ஆராரோ ஆரிரரோ - கண்ணே ஆராரோ ஆரிரரோ.’
என்ற இசையமைப்பு வாய்பாடே அவர்களது ஒசைப்பெருக்குக்கு வரையறை வகுக்கின்றது.
தாலாட்டுப் பாடல்கள் ஈரடிக்கண்ணிகளால் அமைந்தன வாகும். ஆனற் பொருள் முடிவுருது தொடர்ந்து செல்லும் சந்தர்ப்பங்களில் நான்கடியாகவும் அமைந்துள்ளன. அவ்வாறு நான்கடியாக அமையினும், அவற்றின் ஒசையமைப்பு ஈரடிக் கண்ணிகள் இரண்டின் ஒசையமைப்பினை ஒத்தனவாகும். நான் கடியாயமைந்த பாடல்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவே. ஈரடியாலே தாலாட்டின் இசையமைப்புத்தொடர் அமைந் திருத்தலால் அவற்றின் சிற்றெல்லை இரண்டடி எனக்கூறக்கூடிய தாக இருக்கிறது.
தாலாட்டுப்பாடலின் பொருள் ஒரடியானும், ஈரடியானும் மூன்றடியானும், நான்கடியானும் தொடர்ந்து பல அடிகளிலும் முற்றுப்பெறும் அமைப்புங் காணப்படுகின்றது. பாடலின் வரிகள் இரு சொற்களைச் சிற்றெல்லையாகவும் ஏழு சொற்களைப் பேரெல்லையாகவும் கொண்டமைந்துள்ளமையைப் பின்வரும் உதாரணங்கள் காட்டுகின்றன :
இருசொற்கள்: “மானே | மரகதமே" (பி. இ., தா.பா., 11 13அ)
ஏழுசொற்கள்: "ஆச்சி | தான் / அடிச்சாளோ ! என் | அரசி | மகனே ! உனக்கு’’ (பி. இ., தா. பா. / 2 / 2 ஆ.)
பொதுவாகத் தாலாட்டுப்பாடல்கள் குறுகிய அளவுடையன வாகவே காணப்படுகின்றன. இது பற்றிய ஆறு அழகப்பனின் கருத்தை ஈண்டு மேற்கோளாகத் தருதல் பொருத்தமானது :
'தாலாட்டுப்பாடல்களிற் கதைப்பாடல்கள் தவிர மற்றைய பாடல்கள் குறுகிய அளவுடையன. நினைவில் வைத்துக்கொள்ளத்தக்க நிகழ்ச்சிகளாகவும் பொருள்களா கவும் அப்பாடல்கள் அமைந்துள்ளன. பாடல்கள் சிதைந்து போகாதிருப்பதற்கு இது ஒரு காரணமாகும். பாடல்கள்

Page 82
136 மட்டக்களப்பு மாவட்ட.
குறுகிய அளவாக இருப்பதாற் குழந்தை கண்ணயரும் நேரம் வரை பாடத் தாய் பல தாலாட்டுப்பாடல்களைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியவளாகின்ருள். இவ்வாறு, பல தாலாட்டுப் பாடல்களைத் தெரிந்து வைத்துக்கொள் வதற்குப் பாடல்களின் குறுகிய அளவு, தாய்க்குத் துணை செய்கிறது.’200
வாக்கிய அமைப்பு
குழந்தையை அணைத்துத் துயில் கொள்ளச் செய்வதிலே தாயின் சிந்தனை படிந்துவிடுவதால், ஒசையமைதியிற் சிந்தனை ஒட்டம் அமைந்து காணப்படுகிறது. ஆதலினலேதான் தாலாட்டுப் பாடல்களின் வாக்கிய அமைப்பில் ஒழுங்குமுறை காணப்படவில்லை. இப்பாடல்களில் வரும் வாக்கிய அமைப்புகள் வருமாறு:
1. பெயர்ப் பயனிலைபெற்ற வாக்கியம்
உ-ம்: முத்தான முத்தோ - நீ
முதுகடலில் ஆணிமுத்தோ’ (பி. இ. , தா. பா. / 1 / பாடல் 1)
இதிற் பெயர் ச் சொற்களே இடம்பெற்றிருப்பதோடு, அவையே பயனிலையாகவும் வந்துள்ளன.
2.
எழுவாய்த் தொடர்களே வாக்கியமாக அமைந் துள்ளமை.291 உ-ம்: ** மான் ஈண்ட கண்டு - தம்பி
மலடி பெத்த மாங்குயில்’ (பி. இ. தா. பா. 11 !
பாடல் 3 அ) 3. வினைச் சொற்கள் எதுவுமின்றிப் பெயர்ச் சொற்களே விளியாகத் தொடர்ந்து வாக்கியமாக அமைதல் : உ-ம்: “மானே | மரகதமே / மல்லிகைப்பூச் | செண்பகமே .” (பி. இ, தா. பா. | 1| பாடல் 3அ) 4. எழுவாயும் பயனிலையுங் கொண்ட வாக்கிய அமைப்பு
உ-ம்: 'கண்மணியே கண்ணுறங்கு’’ (பி. இ. தா. பா. | 1| பாடல் 7)
200. அழசப்பன், ஆறு, (1973) பக். 23. 201. பி. இ. தா. பா, 1 / பாடல் 4 அ, ஆ, இ, ஈ, உ, எ, ஏ. பார்க்க.

தா
10.
லாட்டு.அமைப்பாய்வு 137
இப்பாடல்களில்வரும் **கண்ணுறங்கு’, ‘நித்திரைசெய்”* ஆகியன கோடற்பொருளில் வியங்கோள் வினையாக வந்தமை
காண்க.
. எழுவாய் பயனிலை வாக்கியத்திற் பயனிலை விசேடனம் பெற்று
வருதல் :
உ-ம்: "சித்திரப்பூந் தொட்டிலிலே சிகாமணியே நித்திரை செய்’ (பி. இ., தா. பா. | 1| பாடல் 9 ஈ)
இதிற் சித்திரப்பூந்தொட்டிலிலே என்பது வினையடையாம்.
. பாடலின் ஒவ்வோரடியிலும் வினைமுற்றுப் பெறுதல்:
உ-ம்: ‘பSானே அழுகிறது.
மாங்குயிலோ வெம்புகிறது.”
(பி. இ., தா. பா. / 2 | பாடல் 1 அ)
கண்ணிதோறும் வினைமுற்றுப் பெறுதல்.
உ-ம்: தங்கநல்ல தொட்டிலிலே தருமரே நித்திரையோ (பி. இ. தா. பா. | 1| பாடல் 9உ)
நான்கடியாக அமைந்தபாடல்கள் ஒரேவினைமுற்றைக் கொண்டுள்ளமை: 202
உ-ம்: ‘'தேனே திரவியமே
தெவிட்டாத செந்தேனே கோனே குலவிளக்கே
கோமானே கண்வளராய்.”
தொடர்வாக்கிய அமைப்புங் காணப்படுகிறது. உதாரணமாகப் பி.இ, தா. பா. 111ஆரும்பாடலை நோக்குக. வினைமுற்று இன்றி, வினைஎச்சங்களால் அமைந்துவரும் பாடல்களும் காணப்படுகின்றன. உ-ம்: ‘பச்சை இலுப்பை வெட்டி
பால்வடியத் தொட்டில் கட்டி’ (பி. இ, தா. பா. 14 1 பாடல் 1 அ)
202. fi. g., g5T. LI T, l l ll u Tlesio 7 1 , 8 9; 2, l 2l. , u Tlesio 3. 4 u ir resio
1 இ, ஈ, 2, இ, ஈ, உ, ஊ, எ, 3, ஈ, 51 பாடல் 1, 2.

Page 83
138 மட்டக்களப்பு மாவட்ட. 11. எழுவாய், செயப்படுபொருள், கருவி, பயனிலை என்பன
ஒழுங்குமுறையின்றி மாறி அமைந்துள்ளமை: உ-ம்: மாமி / அடிச்சாளோ | மாதாளம் கம்பு | வெட்டி???
- = எழுவாய் | பயனிலை | கருவி | வினைஎச்சம் |
12. வினைச்சொல் அடுக்குத் தொடராகவும் வந்துள்ளது.
உ-ம்: கள்ளே உறங்குறங்கு
கண்மணியே உறங்குறங்கு. (பி. இ, த. பா. / 1 / பாடல் 7 1)
இவ்வாறு பல்வேறுபட்ட வாக்கிய அமைப்புகளையுடையன
வாகத் தாலாட்டுப் பாடல்கள் வடிவம் பெற்றுக் காணப்படு கின்றன.
203. பி.இ., தா. பா, 12 பாடல் 2.

இயல் IV
தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு
தொழிற்பாடல்கள்
மக்களின் அன்ருட வாழ்க்கைப் பின்னணியிலே தொழிற் களங்களிற் பயன்பாடுடையனவாக வழங்கிவரும் தொழிற் பாடல்கள், அவர்களின் பண்பாட்டு விடயங்கள், பொருளாதார வாழ்க்கைமுறைகள், சமுதாய அமைப்புமுறைகள் என்பனபற்றி ஆராய்வதற்குத் துணையாகின்றன. மரபுவழிப்பட்ட தொழில் முறைகளில் ஈடுபடும் மக்கள் தொழிற்களங்களில் இப்பாடல்களைப் பாடத் தவறுவதில்லை. களைப்பை மறந்து, உற்சாகத்தோடு வேலைகளைச் செய்துமுடிக்கக்கூடிய ஆற்றலைத் தொழிற்பாடல் கள் பாட்டாளிமக்களுக்குக் கொடுத்துவருவதனலே, தொழில் புரி மாந்தர் அனைவரும் இப்பாடல்களைப் பயன்படுத்திக் காலத் துக்குக் காலம் இவற்றைப் பேணிவரலாயினர்.
தொழிலாளருக்குப் பாடலோசை ஊக்கசக்தியாக அமைவது போன்றே, கால்நடைகளுக்கும் பாடலோசையானது களைப்பின்றி நீண்ட நேரம் சுறுசுறுப்பாகத் தொழிற்படக்கூடிய ஆற்றலை அளிக்கவல்லது என்பதையும் கிராமிய மக்கள் உணர்ந்திருந்தனர். ஆதலினலேதான் கால்நடைகளால் வயலுழும்போதும், சூடு மிதிக்கும்போதும், வயல் மிதிக்கும்போதும், வண்டிற் பயணத்தின் போதும் பொருத்தமான பாடல்களைப் பாடிக் கால்நடைகளை உற்சாகமூட்டி வந்துள்ளனர்.
இப்பாடல்களின் பொருளமைப்புப் பற்றி ஆராய்வதற்கு ஆதாரமாக, இவற்றுடன் தொடர்புடைய அடிப்படையான சில விடயங்களைப்பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியமாகின்றது. தொழிலாளர் வேலை செய்துகொண்டிருக்கும்போது எப்போது பாடத்தொடங்குகின்றனர் என்பது குறிப்பிடற்பாலது. கள ஆய்வின் மூலம் அறிந்தவகையிலே தொழிலாளர் வேலையைத் தொடங்கிச் சிறிதுநேரஞ் சென்றதும் அதாவது தம்மை மறந்து தொழிலுடன் ஒன்றியநிலையில் வேலைசெய்யும்போதே பாடத் தொடங்குகின்றனர். ஆயினும் பொலிப்பாடல்கள், தோணி தள்ளும் பாடல்கள் என்பனவற்றை வேலையைத் தொடங்கும் போதே பாட ஆரம்பிக்கின்றனர்.

Page 84
140 மட்டக்களப்பு மாவட்ட.
தொழிற்களங்களில் எவரும் யாரையும் பாடும்படி கேட் பதில்லை. தொழில்புரிவோர் யாவரும் பாடக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர்களாக இருப்பதாலும், அவர்கள் தமது களைப்பையும் அலுப்பையும் போக்கி உற்சாகம் பெறவேண்டியிருத்தலாலும் யாவருமே பாடுகின்றனர். எனவே தொழில் புரிவோர் யாவருமே பாடவேண்டியிருத்தலால், அவர்களைப் பாடும்படியாக யாரும் பணிப்பது வழக்கமில்லை. எல்லோரும் சேர்ந்து பாடும் சந்தர்ப் பங்களில் யாராயினும் பாடாதிருப்பக் கண்டால் உடன் பாடுவோரோ அல்லது கூட்டத்துத் தலைவனே குறிப்பிட்ட தொழிலாளியைச் சுட்டிப் பாடி வேலை செய்யும்படி கூறுவதைக் கள ஆய்விற் காணக்கூடியதாக இருந்தது.
எவர் முதலிற் பாடவேண்டும் என்பதிற் சில மரபுகள் பின் பற்றப்படுகின்றன. குறிப்பாகப் பொலிப்பாடல்களைப் பாடும் போது வயல்சொந்தக்காரனே, மாட்டுச் சொந்தக்காரனே அல்லது ஆங்கு தொழிலின் பொருட்டு வந்திருப்போருள் வயதாலும் அனுபவத்தாலும் முதிர்ந்தவர் ஒருவரே முதலிற் பாடத் தொடங்குவார். அவரைத் தொடர்ந்து அங்கிருப்போர் யாவரும் பாடுவது தொழிற்களமரபாக வழங்குகின்றது. அது போன்றே தோணி தள்ளும்போதும் தண்டயல் முதலிற்பாடத், தொடர்ந்து ஏனையோர் பாடுவர். ஆனல் ஏனைய தொழிற்களங் களிற், பாடுவதில் ஆர்வமும் உற்சாகமும் கொண்டிருப்போரே முதலிற் பாடுவதைக் கள ஆய்வு காண்பித்தது.
தொழிலின் தன்மைக்கும், தொழில்புரிவோரின் எண்ணிக் கைக்கு மேற்பப் பாடுவோரின் எண்ணிக்கையும் வேறுபடும். ஏர் பிடித்து உழுவோன்தான் தனியணுகவே முழுநேரமும் பாட வேண்டியிருக்கும். சூடு மிதிக்கும்போதோ அல்லது வயல் மிதிக்கும்போதோ மாடு சாய்க்கும் இருவரும் மாறிமாறிப் பாடுவர். அறுவடைசெய்வோர் தனித்தனியே கவிபாடுவர். சில கிராமங்களில் அறுவடை நடைபெறும்போது பாடுவதற்கென அமர்த்தப்பட்ட பாடற்குழுவினர் பாட்டிசைப்பர். வலை இழுத்தல், தோணி தள்ளுதல், தண்டு வலித்தல் ஆகிய சந்தர்ப் பங்களில் யாவருஞ் சேர்ந்தே பாடுகின்றனர். அப்போது ஒரு மித்துக் குரலோசை கேட்பது போன்றே அவர்களது செயலும் ஒரே முகப்பட்டதாகவே அமைந்திருக்கும். எல்லோருஞ் சேர்ந்து பாடும்போது சமூக அந்தஸ்து உயர்வு, தாழ்வு என்பன கவனிக் கப்படுவதில்லையாயினும், பாடலைத் தொடங்குவதிற் பாடுபவர்
1. பி. இ., சொல்லடைவு நோக்குக.

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 14'
விடயத்தில் மட்டும் கவனம் செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.
பொதுவாகத் தொழிற் பாடலின் தொடக்கம் குறிப்பிட்ட தொழிலுடன் தொடர்புடையதாகவும். தெய்வத்தை பரவுவதா கவுங்காணப்படுவதை அவதானிக்கலாம். நேரஞ்செல்லச் செல்லப் பாடற் பொருட்கூறுகள் பல்வேறு கோணங்களில் விரிந்து செல்லும். ஆணுற் பொலிப்பாடலின் தொடக்கம் கடவுள் துதியாகவே அமைவதோடு, பாடலும் பத்திசிரத்தையுடைய தாகவே அமைந்து காணப்படுதல் சிறப்பம்சமாகும்.
தொழிலாளர் ஒருவரிடம் பாடும் ஆற்றல் அல்லது பாடுந் திறன் எந்த வயதில் எதிர்பார்க்கப்படுகின்றது என்பதுபற்றியும் குறிப்பிடுதல் பொருந்தும். தொழிற்களத்திற் பொதுவாக இருபது வயதுக்கு மேற்பட்ட சமவயதினரே அதிகமாகக் காணப் படுவர். ஆயினும் அவர்களுடன் இளையோரும் முதியோரும் இடம்பெருமலிருப்பதுமில்லை. கிராமியச்சிறர்கள் விளையாட்டுப் பருவம் முதலாக நாட்டார் பாடல்களைப் பாடக்கூடிய பயிற்சி பெற்றுவருபவர்களாகவும் , தம் பெற்றேருடன் தொழிற்களங் களுக்குச் செல்லும்போது செவிப்புலன்மூலம் பாடுந்திறனைப் பெறுவதாலும், உரிய காலத்திற் பாடக்கூடிய ஆற்றலுடை யோராகவுங் காணப்படுகின்றனர்.
வயற்களத்திலோ, மீன் பிடிக்குமிடத்திலோ தலைவன் அல்லது உரிமையாளர் கண்காணிப்பது வழக்கம். வேலையாளர் தாம் பாடும்போது அவர்களைக் கண்டு எவ்வித வேறுபாடுமின்றித் (அதாவது முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு எதுவுமின்றித்) தமது மனவுணர்வுகளை வெளிப்படுத்திப் பாடுகின்றனர். எனி னும் பாலுணர்ச்சிப் பாடல்களைப் பாடும்போதுமட்டும் கவன மாக நடந்து கொள்ளுகிறர்கள். உரிமையாளர் நிற்கும்போது அத்தகைய உணர்ச்சிப்பாடல்கள் பாடப்படுவதில்லை என்பது கள ஆய்வில் அறியப்பட்டது.
இயந்திரமய ஆதிக்கத்தினலே தொழிற்பாடல்களின் பயன் பாடு குறைவடைந்து வருகின்றது. கிராமிய விவசாய முறை யிலும், மீன்பிடித்துறையிலும் இயந்திரசாதனம் பயன்படுத்தப் பட்டு வருவதால் மனித வலுவின் தேவை குறைந்துகொண்டே போகின்றது. ஆதலினலே தொழிற்பாடல்களின் பயன்பாடும் வழக்காறும் குறைந்துபோகின்றன. இயந்திரமயமாக்கம் குறைந்த கிராமப்புறங்களிலே இப்பாடல்களின் பயன்பாடு மிகவும் பயனுடையதாகக் காணப்படுகின்றது.

Page 85
c142 மட்டக்களப்பு மாவட்ட.
பாடுவோர்
கிராமிய சமுதாய அமைப்பிலும், கிராமியத் தொழில்முறை களிலும் ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டுள்ள வயதால் மூத்த பரம்பரையினரே தொழிற்பாடல்களைப் பாடுவோராகவும், அவற்றின் பாதுகாவலராகவுங் காணப்படுகின்றனர். 956 ஆய்வின்போது இத்தகையோரைப் பேட்டிகண்டவிடத்து, தமக்குப் பின்பு இப்பாடல்களைப் பாடக்கூடியோரும், பாடக் கூடிய சந்தர்ப்பங்களும் இல்லாதுபோகும்படியாகத் தொழில் முறையில் இயந்திர ஆதிக்கம் பெரிதும் இடம்பெற்று வருவதாகக் கூறினர். இவர்கள் இளமைக்காலம் முதலாக இப்பாடல்களைக் கேட்டவதானித்துப், பாடிப், பாடமாக்கிப், பயிற் சி யி ற் கொணர்ந்து பயன்படுத்திவந்துள்ளனர். பரம்பரை பரம்பரை யாக இவர்கள் இப்பாடல்களைப் பயன்படுத்தி வந்தமையினல் இவற்றின் வழக்காறு நிலைபேறடைவதாயிற்று. தொழிலாள ருக்குப்பாடுந்திறன் ஒரு தகுதியாகக் கருதப்பட்டமையினலே? தொழில் புரிவோர் அனைவரும் பாடல்களை மனனம் பண்ணிவைப் பதில் அக்கறையுடையோராகவுங் காணப்பட்டனர்.
பொருளமைப்பாய்வு
இவ்வியலில் விவசாயத்துடனும் மீன்பிடித் தொழிலுடனுந்
தொடர்புடைய தொழிற்பாடல்களின் பொருளமைப்பும் வடிவ
அமைப்பும் ஆராயப்படுகின்றன.
பொலிப்பாடல்கள்?
சூடுமிதிக்கும்போது பாடப்படும் பாடல்கள் “பொலிப் பாட்டு” என வழங்கப்படுகின்றன. நெல்லைக் குழு உக்குறியாகப் **பொலி’, எனச் சூட்டுக்களத்திலே வழங்குவர். நெல் பொலிய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இப்பாடல்கள் பாடப்படு வதாற் பொலிப்பாடலென்பது காரணப்பெயராகும். களத்திற் சூட்டைத்தள்ளி, மாடுகளை அதன் மேலேற்றி, இருவர் சாய்க்கும் போது தனியாகவோ அல்லது சேர்ந்தோ பாடல்களைப்பாடுவர் பாடல்களை வேண்டியமட்டும் இசைத்துப் பாடுவதோடுமட்டு
2. சூடுமிதிப்பதற்குத் தொழிலாளர்களைச்சேர்க்கும்போது நன்கு பாடக்கூடி
யோரையே தேர்ந்தெடுக்கும் வழக்கம் ஈண்டுக்குறிப்பிடத்தக்கது. 3. பி.இ., தொ. பா. |பொலி பாடல் 1.10 4. பொலிப்பாடல் இலக்கியங்களில் "முகவைப் பாட்டு" எனப் பெயர் பெறும்.
*அவிநிது குவித்தோர் அரிவுகடாவுறுத்த பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப்பாட்டு’
சிலப்பதிகாரம், 10; 136-137

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 143
மல்லாது ஒவ்வோரடியினிற்றிலும் “பொலிபொலிபொலிஓ. பொலி’, ‘பொலி அம்மா பொலி’, ‘பொலிதாயே பொலி” முதலான இசைத்தொடர்க%ளயுஞ் சேர்த்து இசைத்துப் பாடுவர். அத்தகைய பத்துப் பாடல்களின் பொருளமைப்பு இங்கு ஆராயப் படுகின்றது. பாடுவோரின் நினைவுக்கும் குரல் இசைவுக்கும் ஏற்பப் பாடல்களைப் பாடும்முறையிலும் பொருட்செறிவிலும் வேறுபாடு கள் காணப்படுகின்றன.
முதலாம் பாடலிலே துதி, விருத்தம், மறுதரு என்ற மூன்று பகுதிகள் அமைந்துள்ளன. களத்தில் மாடுகளை முதன் முதலாகச் சாய்க்கும் சந்தர்ப்பத்திலேயே இப்பாடல் பாடப்படுகின்றமை கள ஆய்வில் அவதானிக்கப்பட்டது. துதிப்பாடலை ஒருவர் பாட, தொடர்ந்து அங்குள்ள யாவரும் அதனை மூன்றுமுறை பாடித் தம் வேலையைத் தொடர்ந்து செய்வர். இத்துதிப்பாடலிற் பூமா தேவி, அன்னை சத்தி, தம்பிரான் என்போர் வழிபடப்படு கின்றனர். மண்ணை நம்பி வாழும் விவசாயிகள், பூமியையும், பூமாதேவித்தாயையும் நன்றியறிதலுடன் போற்றுகின்றனர். இப்பிரதேச மக்கள் தாய்வழி மரபினராதலாலும், சத்தி வழி பாட்டில் நம்பிக்கையும் ஈடுபாடுங் கொண்டவர்களாதலாலும் முதலில் அன்னையாம் பராசக்தியை வழிபடும்பொருட்டுத் “தாயே பொலி’ எனப்பாடுகின்றனர்."
பொலி என்ற சொல் நெல்லையும், பொலிக என்ற வியங் கோட்பொருளையும் குறிக்கின்றது. களத்தில் நெல் பொலிய வேண்டும் என்பதே சூடுமிதிக்கும் விவசாயியின் குறிக்கோள். ஆதலினலே, தான் வணங்கும் தெய்வங்களை வழிபட்டு நெல் பொலிய வேண்டுமெனப் பயபக்தியுடன் வேண்டிக்கொள்வதை இத்துதிப்பாடல் பொருளாகக் கொண்டுள்ளது. விவசாயியினது குறிக்கோளும், இறை நம்பிக்கையும் இப்பாடற் பொருளாவதை யும், தொழில் இறைவணக்கத்துடன் தொடங்குவதையும் இப் பாடல் விளக்குகின்றது.
5. பி.இ. தொ. பா. பொலி பாடல் 1,
6. பர்மியமக்களின் குடுமிதிப்புப் பாடல்களிலும் பெண்தெய்வத்தைப் போற்றும்
மரபுங் காணப்படுதல் நோக்கற்பாலது. “Among the Carens of Burma; at the threshing of the rise they say: "Shake thyself. Grandmother; shake thyself, Let the paddy ascend till it equals a hill equals a mountain. Shake thyself Grandmother shake thyself'. Tylor, Edward B. (1929). P. 368.

Page 86
144 மட்டக்களப்பு மாவட்ட. அடுத்து வரும் பாடற்பகுதி 'விருத்தம்” எனக் கூறப்படு கிறது." இப்பாடலில் மரபுவழி விவசாய முறைகள் வருணிக்கப் படுகின்றன. எக்காரியந் தொடங்கும்போதும் 'நல்லநாள் • பார்க்கும் மரபும் நம்பிக்கையும் விவசாயிகளிடமுண்டு. மிதிப்பு அல்லது உழவுக்கு நல்ல நாட்பார்த்து, மாடுகளைச் சாய்ப்பதற் குரிய தடிகளை காட்டுக்குச் சென்று வெட்டி வருவர். இதனையே பாடலின் “நாளது கேட்டு நார்க் கம்பு" வெட்டி’ என்ற வரி விளக்குகின்றது. தொடர்ந்து விவசாய முறைகளும், அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் கூறப்படுகின்றன. அவ்வாறு *கஷ்டப்பட்டுப் பயிராக்கி, அறுவடைசெய்து சூடுமிதிக்கின்ருேம்; எங்களுக்கு நன்கு நெல்பொலிய வேண்டும் தாயே!” எனத் தெய் வத்தைப் பரவும் வகையில் வேண்டுகோடற்பொருள் கொண்ட தாக இவ்விருத்தப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலில் நெல்லின் பொலிவைக் குறிப்பதற்காக நெல் மூடைகளினதும், வண்டிகளினதும் பெருக்கம் கூறப்பட்டிருத்தலுங் கவனித்தற் fun agil.
ஓசை இழுப்புடன் பாடப்படும் மறுதரு என்ற LIT L-fib பகுதியில் அன்னை பராசக்தி புகழப்படுகின்றன் தொடர்ந்து சூடு மிதிக்கும் மாடுகள் புகழப்படுகின்றன. பின் ஆசாரியும், தச்சனும் புகழப்படுகின்றனர்.° சூட்டுக் களத்திலுள்ள பொருள்களான பொலிதுரத்தும் கொட்டன்," பொலி அளக்கும் கணக்கன் (மரக்கால்) என்பனவும் புகழப்படுகின்றன. இறுதியில் 'தாயே! நெல் பொலிய அருள் புரியவேண்டும், எனப் பாடப்படுகின்றது இவ்வாறு இப்பாடற் பகுதியில் மாதாவையும், சூடு மிதிக்கும் மாட்டையும், களத்திலுள்ள பொருள்களையும் புகழ்ந்து பாடுகின்ற பொருளமைப்புக் காணப்படுகின்றது.
amarer
7. ஒசை அமைதியும், வரிவடிவ அமைப்பும் இப்பாடல் அகவற்பா என்பதை *
குறிப்பிடும். மட்டக்களப்பிலே எப்பாடலேயும் உரத்த தொனியில் இசைத்துப் பாடினுல் அதனை "விருத்தம் பாடுதல்" என்பர் ஆதலிஞலேஇப்பாடல் அக வ லாக அமைந்தபோதிலும், பாடும் இசைமுறைக்கேற்ப இதன “விருத்தம்" என்கின்றனர்.
8. இது தவரங் கேட்டிக் கம்பு எனப்படும். 3 அடி நீளமும் 2 அங்குலச் சுற்றளவும்
கொண்ட இம்மெல்லிய தடிகள் எரிதில் முறியமாட்டாதவை.
9. அறுவடை முடிந்து நெல் கிடைத்ததும், அதனைக் கொண்டு, ஆபரணங்கள் செய்தலும், வீடு கட்டுதலும் நிகழ்வதால் ஈண்டு அவற்றை நினைவுகொள் கின்றனர்.
10. பி. இ. சொல்லடைவு பார்க்க,

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 145
இரண்டாம் பாடலின் முற்பகுதியிற் சூட்டுக்களத்தின் அமைப்புப்பற்றியும், பிற்பகுதியிற் சூடு மிதிக்கும் மாடுகளைப் பற்றியும் கூறப்படுகின்றன. களத்தின் நான்கு திசைகளிலும் காவலின் பொருட்டு அச்சரங்கள் பதிப்பது வழக்கம்.** களத்தின் கிழக்குத் திசையிலும் வடக்குத் திசையிலும் சிவபெருமான் அச்சரமும், மேற்குத் திசையில் வைரவர் அச்சரமும், தெற்குத் திசையிலே தேவர்கள் அச்சரமும் பதிக்கப்பட்டுள்ளனவாகப் பாடப்படுகின்றது. அடுத்ததாகக் கந்தின்? மேல் மிதிமாடுகள் ஏறிச்சுற்றி வலம் வருதலும், நெல்மணிகள் உதிர்ந்து பொலிகின்ற காட்சியுங் கூறப்படுகின்றன. ஈற்றில் மாடுகள்பற்றிக் குறிப்பிடும்
போது, “உறுதியுள்ள காலால் ஒடி நடந்திடுங்கோ’ எனப் புகழ்ந்து வேண்டுதலும், "இந்த நடைதானே செல்லனுக்கு இன்னுமுண்டோ அன்னநடை’’, என அவற்றைக் கடிந்து
கொள்வதும் பாடற்பொருள்களாக அமைகின்றன.
மூன்ரும் பாடலிற்*, சூடு மிதிக்கும் கடாமாடுகள் பற்றியும், நெல் பொலிய வேண்டுமெனவும், இராப்பொழுது கழிந்து பொழுது விடிவதற்குரிய அறிகுறிகள் தோன்றுகின்றன என்றும் விபரமாகப் பாடப்பட்டுள்ளன. சூடு மிதிக்கும் மாடுகளைச் *செல்லா” எனச் செல்லமாக விளித்து, “உன் உறுதியுள்ள
காலாலே ஒடி நடந்திடடா” எனவும், "சந்தனக்கால் பொன் சொரிய சாய்ஞ்சி சரிஞ்சி நடந்திடடா' எனவும், 'ஒடி நடந் தால் ஒரு நிமிச நேரம்’ என்றும், “வட்டத்தலையரடா
வாலாட்டும் கொம்பரடா’ என்றும் மாடுகளைப் புகழ்ந்துபாடி, அவற்றை விரைந்து நடக்கும்படி வேண்டுவதாகப் பாடப் பட்டுள்ளது. அவற்றைத் தொடர்ந்து வருங் கண்ணிகளிற் பொழுது விடிவதற்குரிய அறிகுறிகளாகப் “பொற்கோழி கூவுதல்’, ‘பால்மாடுகள் கத்துதல்”, “ஆளரவம் கேட்டல்,’’ “பூத்தேடி வண்டு இரைதல்’ என்பன கூறப்படுகின்றன. இரவில் நிலாக்காலங்களிற் சூடு மிதிப்பதே வழக்கம். நிலவு வெளிச்சத் திலும், வெள்ளி வெளிச்சத்திலும் தமது வேலைகளைச் செய்வர். விடியு முன்பு வேலைகள் யாவும் முடிக்க வேண்டும். எனவே விடியப்போகும் அறிகுறிகளைக் கூறி, மாடுகளை விரைந்து நடக்கும் படி பாடுவதாகப் பாடற்பொருள் அமைந்துள்ளது. இப்
11. பி.இ., தொ. பா. பொலி பாடல் 2. 12. இதுபற்றிய விபரங்களை நூலில் காண்க 13. பி. இ., சொல்லடைவு பார்க்க. 14. பி, இ, தொ. பா. பொலி பாடல் 3
LD-10

Page 87
146 மட்டக்களப்பு மாவட்ட .
பாடலிற் பொழுதுவிடியும் இயற்கை வருணனை கூறப்படும் விதத்திலுள்ள இலக்கிய நயம் குறிப்பிடத்தக்கது.
நான்காம் பொலிப் பாடலிற்19 பிள்ளையார்துதி அமைந்து, அதனைத் தொடர்ந்து முருகன் வள்ளி திருமண விடயங்கள் கூறப் படுகின்றன. பாடலின் முதலாவது கண்ணியிற் “கணபதியே கரிமுகனே கந்தருக்கு மூத்தோனே” எனப் பிள்ளையார்துதி அமைகின்றது. கந்தின்மீது மாடுகள் நடக்கின்றமையை உருவக மாக்கிக், "கந்தரது தேர் ஏறுகிறதாம். கணபதியார் தேர் முன் நடக்கின்றதாம்’ எனப் பாடப்படுகிறது. அடுத்துக் குறவர் வனந்தனில் முருகன் வேங்கை மரமானதும், கோலூன்றித் தள்ளாடி முதிய வேடங் கொண்டதும் கூறப்படுகின்றன இராக் காலத்திற் பறந்துகொண்டிருக்கும் பறவைகள் கோணேசர் கோயில் திருமுடியிலிருந்து பறக்கின்றன என்றும், அவற்றின் இறகுகள் பொன்னலானவை என்றும் சிறப்பிக்கப்படுகின்றன. இவ்வாறு தெய்வ சிந்தனையுடன் பாடலைப் பாடும் அதே வேளை யில், மாடுகளைச் சாய்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதால் பாடலின் இடையே, “வெள்ளி வெளிச் சத்திலே செல்லா விளையாடி நடந்திடடா” என்று மாடுகளை உசார்ப்படுத்தப்படுவதையுங் காணக்கூடியதாக இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து முருகன்வள்ளி திருமணம்பற்றி மீண்டும் பாடல் தொடர்கிறது. இவ்வாறு தெய்வீகக் கதைகளும், இடை யிடையே மாடுகளைக் குறித்துப் பாடப்படுந் தன்மையும் இப் பாடற் பொருள்களாக அமைகின்றன.
ஐந்தாம் பாடலும் தெய்வீக சிந்தனையையே பொருளாகக் கொண்டுள்ளது. இப்பாடலில் முருகப்பெருமானின் அருட் செயல்கள் கூறப்படுகின்றன. 'மாவிலுப்பைத் தோணிவெட்டி கந்தர் மாமாங்கம் போனராம்’ என்றும், ‘மாமாங்கத்திலும் மதுரையிலும் நீராடி, நீறணிந்து, குறவர் வனஞ்சென்று, கோலூன்றித் தள்ளாடி, வேடர் வனந்தனில் வேலர் வேங்கை மரமாகி நின்ருராம்” என்றும் பாடல் அமைந்துள்ளது. “கந்தர் பொன்னவுரிகட்டி, பொன்னவுரிமேலிருந்து பொலியழகு பார்த் தாராம்’ என மனிதச் செயலை ஈண்டு தெய்வச் செயலாகப் பாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இப்பாடலிலும் முருகன்-வள்ளி திருமண நிகழ்ச்சிகள் பொருளாக அமைவதோடு,
15. பி.இ. தொ. பா. பொலி பாடல் 4. 16. பி. இ. தொ. பா. |பொலி பாடல் 5.

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 147
கந்தரே அவுரி' கட்டிப் பொலியழகு பார்ப்பதாகவும் கூறப்படு கின்றது.
ஆரும் பாடலில் 19 உள்ள ஒன்பது கண்ணிகளும் பொருள மைப்பிலே தெய்வீகத் தொடர்பு பற்றியனவாகும். "வேலோனை' விளித்து, கந்தர், கணபதி ஆகியோரது தேர் செல்வதாகக் கூறிப், பிள்ளையாருக்கு நேர்த்திக் கடனுகக் கண்ணடக்கம் பொன்னலும், காற்சிலம்பு முத்தாலும் செய்து கொடுப்பதாக வும், அவற்றைச் செய்வதற்குரிய பொன்னைக் கொடுக்கும் செட்டி மகனையும், அதனைச் செய்து கொடுக்கும் ஆசாரியையும் நினைவு கொள்வதாகவும் பாடல் அமைந்துள்ளது, செட்டி மகன்பற்றிக் கூறும்போது பட்டணத்துச் செட்டி என்றும், பலதுறை வியாபாரி என்றும், பட்டுவிலை கூறுபவன் என்றும் வருணிக்கப்படுகின்ருன். இவற்றின் இடையே நெல் அளக்கும் மரக்கால் பற்றியும் குறிப்பு வருகிறது. இறுதியில் விஷ்ணு பற்றிக் கூறும்போது வானமும் நாகமும் குடைபிடிக்கின்றன என்றும், நற்கருடன் வட்டமிடு கின்றது என்றும் பாடப்படுகின்றது.
ஏழாம் பாடலின் ° முதல் நான்கு கண்ணிகளும் பெண் தெய்வத்தைக் குறிப்பனவாகவும், இறுதியில் உள்ள ஐந்து கண்ணி களும் சூடுமிதிக்கும் மாடுகளைப்பற்றியனவாகவும் அமைந் துள்ளன. பெண் தெய்வங்களை முறையே சீதேவியாள், உத்தமி யாள், பத்தினியாள், தாமரையாள் எனக் குறிப்பிட்டு, அத் தெய்வங்கள் போகும் இடங்களில் முறையே செங்கழுநீர்ப்பூப் பூக்கு மெனவும், உழுத்த மரம் பூத்துளிக்கும் எனவும், பட்டமரம் பால்சொரியும் எனவுங் குறிப்பிட்டுத், தாமரையாள் (இலட்சுமி சரஸ்வதி) பொய்கையிற் சங்கு முழங்குகின்றதெனவும் பாடப் படுகின்றது. ஐந்தாம், ஆரும் கண்ணியில் முறையே வடக்கே சிறு தாழைமரம் நிற்பதாகவும், அது வாசமுள்ள பூந்தாழை எனவும், அத் தாழம்பூவை விழைந்து ஆசைப்படும் ஒருத்திக்குத் தலை நோகின்றது எனவும் கூறப்படுகின்றது.
ஏழாவது கண்ணியிலிருந்து தொடர்ந்துவரும் கண்ணிகளிற் சூடு மிதிக்கும் மாடுகள், களம் என்பன பற்றிக் கூறப்படுகின்றன. மாடுகளைக் கந்தின்மேல் ஏற்றி வலதுபுறமாகச் சாய்ப்பது வழக்கம் மாடுகள் களத்தின் நடுமையத்திலிருந்து (அரக்குப் பதித்திருக்கு
17. பி. இ, சொல்லடைவு பார்க்க.
18. பி.இ. தொ.பா. பொலி பாடல் 6. 19. மேலது பொலி|பாடல் 7.

Page 88
148 மட்டக்களப்பு மாவட்ட.
மிடம்) எல்லைவரை (வாட்டி) வளைந்து வளைந்து நடக்கும். இவ் வாறு மாடுகள் கந்தைச் சுற்றி வளைந்து வளைந்து செல்லும் அடை யாளம் வலம் புரிச் சங்கின் வளைகோடுகளை ஒத்து அமைந்திருத்த லால் அதனை வலம்புரிச் சங்காக உவமித்துப் பாடப்படுகின்றது. அடுத்து 'ஒடி நட கண்டே! , *உலாவி நட கண்டே” எனக் கூறி மாடுகள் விரைவுபடுத்தப்படுகின்றன. களத்தைவிட்டு வெளிப் புற எல்லைக்குச் செல்லாதீர், என்ற பொருளில் "அட்டம் பாராதே அடிப்பேன் பிரம் பாலே’ என மாடுகளை வெருட்டும் பாணியிற் பாடப்படுகின்றது. மாடுகளுக்குப் பயமூட்டும் பாணியிற் பாடிப் பின் அவற்றைப் புகழ்ந்து கூறப்படுகிறது. கடா மாடுகளின் முன்னங்காலில் காணப்படும் வெண்மயிர்கள் அவற்றுக்கு அழகைக் கொடுத்தால் “முன்னங்கால் வெள்ளையடா’ எனவும், முகம் நிறைஞ்ச சீதேவி' எனவும் மாடுகள் புகழப்படுகின்றன. டண்டைத் தமிழ் மக்கள் மந்தையைச் செல்வமாகப் போற்றி வந்தமையின் தொடர்ச்சியாகவே சூடுமிதிக்கும் மாடுகளையும் மட்டக்களப்பு மக்கள் "சீதேவியாகக் கருதுகின்றனர். செல்வம் என்ற பொருளடிப்படையில் மாடுகளைச் செல்லா’ என்றழைப் பதும்?" குறிப்பிடத்தக்கது. 'பார்த்து நட கண்டே பார்வை யுள்ள கண்ணுலே’ எனமாடுகளின் கண்ணழகு வருணிக்கப்படு கின்றது. விரைவாக நடக்கும் படியும், தான் சொல்லும்படி கேட்டு இயங்கும் வண்ணமும் மாடுகளுக்குக் கூறப்படுகிறது. *வேட்டைக்கிடா நாம்பன்’ என மாடுகளின் வீரம் புகழப்படு கின்றது. கொம்பின் அழகும் உறுதியும், ஆற்றலும், ‘விசுகொம் பன்’ என்ற தொடரால் வருணிக்கப்படுகின்றது. இப்பாடலில் வரும் *தாமரையன்' என்ற சொல் மாடுகளின் இயற்பெயராக வழங்குகின்றது.
எட்டாம் பாடலிற்? பல்வேறுபட்ட விடயங்கள் கூறப்படு கின்றன. முதற்கண்ணியிலே கலந்து வருணனை இடம் பெறு கிறது. அடுத்த கண்ணியிற் 'சாந்தால் தரை மெழுகி சந்தனத் தாற் கோலமிட்டு, எனக் களம் அமைக்கப்பட்டிருக்கும் விதமும்,
20. கீழ்வரும் தொல்காப்பியச் சூத்திரம், இச்சொல்லாட்சிக்கு அமைதி
கூறும்.
"ஞாயிறு திங்கள் அறிவே நாணே, கடலே கானல் விலங்கே மரனே, புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே! அவையல பிறவு நுதலிய நெறியாற், சொல்லுந போலவுங் கேட்குந போலவும், சொல்லியாங் கமையும் என்மஞர்புலவர்."
தொல்காப்பியம் செய்யுளியல் சூத். 192 1. பி.இ, தொ. பா. பொலி பாடல்8.

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 149
அதனைத் தொடர்ந்து மாடுகளின் வட்டத் தலையழகும், வடி வான வால்வீச்சும்’ வருணிக்கப்படுகின்றன. தொடர்ந்துவரும் கண்ணியிற் பெண்தெய்வ அவதாரம்பற்றிக் கூறப்படுகின்றது. களத்தின் நடுவே சுற்றிவரும் அரக்குமாட்டை "வல்லரக்கா’ எனக் கூறப்படும் பாணியும் நோக்கற்பாலது. 'ஒடிநடக்கும் படியும் பொழுது விடிவதற்கு இன்னும் ஒரு சாமவேளையல்லோ" இருக்கிறது என்றும் கூறி மாடுகளைத் துரிதப்படுத்துவதாக ஏழாம் கண்ணியமைகிறது. மாடுகளைச் "சிட்டுப்போல் தலையழகா’. “சிங்கார நடையழகா’ என வருணித்து, மெதுவாக நடக்கும் மாடுகளைப் பார்த்து, "இந்த நடைதானே இன்னுமுண்டோ அன்ன நடை" எனக் கேட்டு அவை அதட்டப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்துவரும் கண்ணிகளிற் பாடற்பொருள் மாற்றம் அடைகின்றது.
ஏட்டுக் கல்வியிற் பயன்படும் ஒலையைக் குறிப்பிடும்வகையிற் **கண்டுப் பனைஒலை அது கணக்கெழுத நல்லோலை’ எனப் பாடல் அமைகின்றது. அடுத்த கண்ணியிற் களமும் காலமும் குறிப்பிடப் படுகின்றது. களத்தில் வேலை செய்வோர் பொலிக்கொடியை (வைக்கோல்) நெல்லிலிருந்து பிரித்தெடுத்து வெளியே வீசுவர். பொழுது விடியும் வேளையில் களவேலையும் முடிந்துவிடும். அப் போது நெற் குவியலும் வைக்கோற் குவியலும். வேறுவேருகக் குவிந்து காணப்படும். இதனையே “பொழுது விடியுதங்கே -பொலிக்கொடியும் வளருதங்கே’’ என்ற கண்ணி குறிப்பிடு கின்றது. காலை வேளையில் முக்கண்ணனர் கோயிலில் முரசு முழங்கும் ஒலி கேட்கிறது; பொழுது விடிந்துகொண்டிருக்கிறது; விரைவாக நடந்தால் களமெல்லாம் நெல் பொலிந்து சோதியாக மிளிரும், எனப் பாடுவதாக இறுதிக் கண்ணியின் பொருள் அமைகின்றது.
ஒன்பதாம் பாடலின்?? முதற்பகுதி துதியாகும்.?? 'பொலி பொலி’ எனத் தொடங்கி முறையே “தாயே, தம்பிரானே, பூமாதேவித் தாயே, மண்ணின்களமே மாதாவே, நிறைகளமே, பொன்னின் களமே, பூமாதேவி அம்மா பொலி பொலி" எனத் தெய்வங்களை வேண்டுவதாக இப்பாடற் பொருள் அமைந் துள்ளது. இங்கு பெண்தெய்வம் ஆறுதரமும், ஆண்தெய்வம் ஒரே ஒரு முறையும் குறிப்பிடப்படுகின்றன, களத்தில் நெல் பொலிதல் கருவளத்துடனும், செழிப்புடனும் தொடர்புடைய தாதலால், அதனை அளித்தருளும் பெண்தெய்வத்துக்கு அதிமுக்கி
22. பி.இ. தொ. பா, பொலி பாடல் 9. 23 நூலுள் பார்க்க,

Page 89
50 மட்டக்களப்பு மாவட்ட.
யத்துவம் கொடுத்துள்ளனர். விவசாயிகள் சூட்டுக்களத்திலே தெய்வ சிந்தனையுடன் காணப்படுவதோடு, களத்தையும் புனித மாகவே கருதுவதால் சூட்டுக்களம் இப்பாடலிலே துதி செய்யப் படுகிறது.
பாடலில் முதல் நான்கு கண்ணிகளும் சீதேவியின் புகழ்பாடு கின்றன. ஐந்தாம் கண்ணியிற் சங்கரனர் கோயிலிலே சங்கு முழங்குகின்றமை கூறப்படுகின்றது. ஆரும், ஏழாம் கண்ணிகளில் கருவளம்பற்றியும், எட்டாம் ஒன்பதாம் கண்ணிகளிற் சூட்டுக்கள நிகழ்ச்சிகள்பற்றியும் விவரிக்கப்படுகின்றன. சங்கு, சமுத்திரம், ஆணிமுத்து, பவளம் எனப் பலவாருகச் சீதேவியைப் புகழ்ந்து வெள்ளி வெளிச்சத்தில் விளையாடிவரும்படியாக வேண்டி, இறுதி யாக ‘வாரிக்களந்தேடி வாழுவாளாம் சீதேவி’ எனக் கூறப்படு கின்றது. சூட்டுக் களத்திற் சீதேவி குடிகொண்டிருப்பாள் என்ற நம்பிக்கையின் காரணமாகவே அவ்வாறு பாடுகின்றனர். இப் பாடலில் முறையே சீதேவியையும், முக்கண்ணனுரையும், முருகனை யும் குறிப்பிட்டு, இறுதியாகப் புவியிலுள்ளோர் ஈடேற வேண்டு மெனக் கூறப்படுகிறது.
பத்தாம் பாடலிற் ** சீதேவி, பூமாதேவி, நாரணனுர் ஆகி யோர்பற்றிப் பாடப்பட்டுள்ளது. 'வாரிக் களந்தேடி சீதேவி வருவதாகவும்,” "சீதேவியாள் போனஇடம் செங்கழுநீர்ப்பூப் பூக்கும்’ என்றும், “சீதேவிகால் பதிக்கத்தெருவெல்லாம் பொன்மணியாம்' என்றும், ‘பூமாதேவிகால் பதிக்க செங்கழுநீர்ப் பூப் பூக்கும்’ என்றும் பாடற்பொருள் அமைந்துள்ளது. மேற்கூறிய வற்றிலிருந்து செழுமை, வளப்பம், பொலிவு ஆகிய பண்புகள் சுட்டப்படுதல் தெளிவாகின்றது. இவற்றை மக்களுக்குப் பெண் தெய்வமே அருளுவதால் அதனை உட்பொருளாகக் கொண்டே இப்பாடலிற் பெண்தெய்வம் போற்றப்படுகின்றது. நாரணனுர் பன்றி வடிவம் பூண்டு சிவனடி தேடிய கதையும் ஈண்டு இடம் பெறுகின்றது. அத்துடன் அணிகலன்கள் பூணவும், அவுரி கட்டவும் புதன்கிழமை நல்ல நாள் எனவும் கூறப்படுகிறது. இறுதியாக நாரணனர் பொன்னவுரி கட்டி, அதன்மேலிருந்து பொலியழகு பார்த்து, ஒவ்வொருவருக்கும் படி அளக்கிருர் எனவும் பாடப்படுகிறது. திருமால் அவுரிமேலிருந்து பொலியழகு பார்க்கின்றர் என்று பாடுவதன் மூலம் பூதகணங்கள் பொலியைக் களவாக எடுத்துச் செல்லாமற் பாதுகாக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளும்மனேநிலையும் அப்பாடற்பொருளிலேதொக்கி
24. பி. இ. தொ. பா, பொலி பாடல் 10,

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 151
நிற்கின்றது. இப்பாடற் பொருள் முழுவதிலும் தெய்வசிந்தனையே இழையோடுகின்றது.
இதுவரையும் ஆராயப்பட்ட பொலிப் பாடல்களின் பொருள மைப்பை நோக்குமிடத்து நெல்பொலிய வேண்டும் என்ற குறிக் கோளுடன் தெய்வங்களைப்பற்றிப் பாடுவதும், தெய்வ அருள் வேண்டுவதும் முதன்மை பெற்றுக்காணப்படுகின்றன. அதனை யடுத்துச் சூட்டுக்கள வருணனை. மிதிமாடுகளின் வருணனை, இராக் கால வருணனை என்பனவும் இடம்பெற்றுள்ளன. ஏனைய தொழிற் பாடல்களில் காணப்படுவது போன்று பொலிப்பாடல்களிற் பாலுணர்ச்சி தரும் விடயங்கள் இடம்பெருமையும், இறை சிந்தனையே பாடல்களில் மேலோங்கிக் காணப்படுவதும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனவாகும்.
2. ஏர்ப்பாடல்கள் ??
ஏர் பிடித்து உழும்போது பாடப்படும் பாடல்களே ஏர்ப் பாடல்கள் அல்லது உழவுப் பாடல்கள் என வழங்கப்படுபவை. உழவு இயந்திரம் பயன்படுத்தப்படு முன் எருத்து மாடுகளையும், கடாமாடுகளையுந் துணைக்கொண்டு உழுது வந்தனர், இயந்திர ஆதிக்கத்தினுல் இவ்வழக்கம் மிக அருகிவருகிறது. அதனுல் ஏர்ப் பாடல்கள் மிக வேகமாக வழக்கொழிந்து வருகின்றமையைக் கள ஆய்வின்போது அறியக்கூடியதாக இருந்தது.
வயல் மிதிக்கும்போதும், விதைக்கும் வேளையில் பலகை அடித்துச் சேற்றை மட்டப்படுத்தும்போதும், உழும்போதும் பாடப்படும் பாடல்கள் யாவும் பொதுவாக ஒரே தன்மையன வாகவே காணப்படுகின்றன எனினும் நடைபெறும் தொழிலின் பெயர்மட்டும் இடையிடையே பாடலில் இடம்பெறுவதை அவ தானிக்கலாம். அறிவிப்பாளர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ஒரே பாடலையே மேற்குறிப்பிட்ட மூன்று சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்துவதை ஒப்புக்கொண்டனர். ஏர்ப்பாடலில் மாடுகள்,
தோடு, எவ்வாறு வேலை நடைபெறவேண்டுமென்ற குறிக்கோளும் கூறப்பட்டிருக்கும். முதற் பாடலின்" முதல் மூன்று கண்ணி
25. i பி.இ. தொ. பா.ஏர் பாடல் 1-2
i "ஏரொடு நின்றேர் ஏர்மங்கலமும்."
சிலப்பதிகாரம் 10,135 i “நீர்த்தெவ்வு நிரைத் தொழுவர்
பாடுசிலம்பு மிசை."மதுரைக்காஞ்சி வரி 89.90 26. பி. இ. தொயா, ஏர்/பாடல் 1.

Page 90
152 மட்டக்களப்பு மாவட்ட.
களிலும் கலப்பைபற்றிப் பாடப்படுகின்றன. நுகத்தைக் கலப்பை யுடன் பொருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் குச்சி "மதியாணி எனப்படும். அதனை "வெள்ளிமதியாணி’ என்றும் * வெண்கலத் தாற் செய்யப்பட்ட சுள்ளாணி’ என்றும் வருணித்துப் பாடப் பட்டுள்ளது. அவ்வாணிகள் நன்கு இறுக்கப்பட்டிருந்தாற்ருன் உழக்கூடியதாக இருக்கும். அவ்வகையில் ஆணியின் முக்கியத் துவத்தை உணர்த்துவதாக ‘சுள்ளாணிக்குள்ளே ஒரு - சூத்திரத்தை வைத்தாண்டா’’ என்ற கண்ணி அமைகின்றது. கலப்பை நிலத்தில் ஆழமாகப் பதியும் பொருட்டுக் கலப்பையின் மேற்பகுதியிற் பாரமான கல்லையோ, அல்லது மண்கட்டியையோ வைப்பர். அஃது பாரமாக இருப்பதாற் கலப்பையை இழுப்பது மாடுகளுக்குக் கஷ்டமாக இருக்கும். அதனையே “பாரக் கலப்பை யடா. பாரம் மிகத் தோணுதடா’’ என்ற கண்ணி விளக்கு கின்றது. உழும்போது ஒழுங்காகவும் வரிசை வரிசையாகவும் உழ வேண்டும். முதல் உழுத சால்' பார்த்தே அடுத்த உழவு நடைபெறும். சால் பார்த்து நடக்கும்படி கூறும்வகையிற் 'சார் பாத்த கள்ளனடா’ என்றும், * சொல்வார்த்தை கேளானடா' என்றும் கூறப்படுகின்றன. ’சரி மதியமாகிறது’ என்னுந் தொடர் மாடுகளை விரைந்து நடக்கும்படி தூண்டுவதாக அமை கின்றது. M
ஐந்து முதல் பத்தாம் கண்ணிகளில் மாடுகளின் நடைபற்றி வருணித்து அவற்றை விரைவாக நடக்கும்படி கூறப்படுகின்றது. விரைவாக நடந்தால் மூலையிலும் கலப்பை பதியுமாறு உழலாம் எனக் கூறுவதாக 11 ஆம் கண்ணி அமைகிறது. மாடுகளையும் தன்னையும் சேர்த்துப்பாடும் பாணியில் இருமாடுகளின் எட்டுக் கால்களுடன், தனது இருகால்களையுஞ், சேர்த்துப் "பத்துக்கால்’ 'மூன்றுதலை’ என்றும் பாடுவதை 12 ஆம் கண்ணி காட்டு கிறது. சேற்றுவிதைப்பு நடைபெறும்போது ‘பலகை அடித்தே" (பரம்படித்து) விதைப்பர். சேற்றை மட்டப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் பலகையைச் "சார்ப்பலகை’ என்பர். அப் பலகை இழுத்துச் செல்லப்பட்ட தடமும் "சார்ப்பலகை" எனப் படும், 13 ஆம் கண்ணியிற் சார்ப்பலகை இழுக்கும் மாடுகள் பற்றிக் கூறப்படுகின்றது. பொதுவாக மழைக் காலங்களிலே, மிதிப்பும் உழவும் தடைபெறுவது வழக்கம், உழும்போதும் மிதிக்கும்போதும் மழையை மகிழ்ச்சியோடு வரவேற்பார் கள். ஆணுல் விதைப்பு நடைபெறும்போது மழைபெய்
27. உழவு சால் என்பதே உழவுக் கால் என்றும், உழவுச் சார்
என்றும் வழங்குகின்றது r

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 153
தால் அஃது விதைப்பைப் பாதித்துவிடும். விதைப்புக் காகப் பரம்பு அடித்துக் கொண்டிருக்கும்போது மழைமேகம் கறுத்து இருண்டு தூரத்தே மழைபெய்து கொண்டு போகின்றது. எனவே இனி மழை வரமாட்டாது என்றும், மழை பெய்தால் நமக்கு வானமே குடையாகும் என்றும் பாடுவதை 14, 15 ஆம் கண்ணிகளிற் காணலாம்.
வயற்புறங்களிற், வாய்க்காலிற் படுக்கும் கடாக்கள் தலையை உயர்ந்திருக்கும் வரம்பில் வைத்துக்கொள்ளும் காட்சியையே இரண்டாம் பாடலில் 2° வரும் "வரம்போ தலகாணி (தலையணை) வாய்க்காலோ பஞ்சுமெத்தை’ என்ற கண்ணி விளக்குகின்றது. நன்ருக உழவேண்டும் என்பதைச் ‘சார்பார்த்து நடந்திடடா" என்ற தொடர் கூறுகின்றது. ஒடி நடக்கும்படியும், இப்படி நடந் தால் எப்போது கரைசேர்வது, என்றுங் கூறி, ஏர் இழுக்கும் மாடு களைத் துரிதப்படுத்தி, ‘வட்டத் தலையரடா நீங்க வாலாட்டும் கொம்பரடா’’ என அவை புகழப்படுகின்றன. அதனை அடுத்துத் தமக்குச் ‘சாமிதுணையுண்டு' என்றும் கூறப்படுகின்றது. பின் கலப்பை வருணனையைத் தொடர்ந்து 'உச்சி வெயில் ஓங்காரமாக இருப்பதைக் கூறி, கடுகி நடக்கும் வண்ணம் மாடுகளை வேண்டிக் கொள்வதாகப் பாடல் அமைகிறது.
ஏர்ப்பாடல்களிற் கலப்பை, வயல் நிலம், ஏர் இழுக்கும் மாடுகள், வெயிலின் கடுமை, சாமிதுணை என்பன பற்றிப் பாடப்பட்டிருக்குந் தன்மை நோக்கற்பாலது. 3. ஏற்றப்பாடல்கள் ??
நெல் விதைக்கும்போது வயலிலுள்ள நீரை வற்றச் செய் வதற்கும், வாய்க்காலிலிருந்து நீரை வயலுட் பாய்ச்சுவதற்கும் ஏற்ருல் நீர் இறைக்கும் வழக்கம் உண்டு. மரத்தாற் செய்யப் பட்ட ஏற்றை முக்காலியிற்கட்டி, இருவர் மாறி மாறி நீரை இறைப்பர்.° ஏற்றம் இறைக்கும்போது ஏற்படும் உடற் களைப்பைப் போக்கி, உளச்சலிப்பை அகற்றி, உற்சாகத்துடன் தொழிற்பட அவர்கள் பாடல்களைப் பாட வேண்டியது அவசிய மாகின்றது.
ஏற்றப்பாடல்களைச் சேகரிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஏற்றம் இறைப்போர் பெரும்பாலும் தமக்குத் தெரிந்த கூத்துப்
28. பி. இ. தொ. பா. /ஏர் பாடல் 2. 29, ப. இ.தொ. பா. ஏற்றம் பாடல். 1, 1-3,
30. இவ்வழக்கம் தமிழகத்தில் இராமநாதபுர மாவட்டத்திலும் காணப்படுகிறது.
வானமாமலை, நா. (1964) பக். 485, றது

Page 91
54 மட்டக்களப்பு மாவட்ட.
பாடல்கள், கவிகள் என்பனவற்றையே பாடுவதாகக் கள ஆய்விற் கூறினர். நீரிறைக்கும் இயந்திர உபயோகத்தினுல்ஏற்றம் இறைக்கும் வழக்கம் மிக அருகிக் கொண்டு வருவதனுல் ஏற்றப் பாடல்களின் பயன்பாடும், அவற்றைப் பயன்படுத்துவோரது எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகின்றன. பின்னிணைப் பிலே தரப்பட்டுள்ள ஏற்றப்பாடல் இருவர் மாறி மாறிப் பாடு வதாக அமைந்துள்ளது. பாடலின் முதன்நான்கு வரிகளிலும் ஏற்றைப் பூட்டுவதற்கு முக்காலி கட்டும்படி கூறுவதாகவும், தொடர்ந்து வரும் நான்கு அடிகளிலும் தனியே ஒருவர் நீர் இறைப்பது கஷ்டமானது என்றும், ‘இருவரும் மாறி மாறி நீர் இறைப்போம்’ எனவும் கூறப்படுகின்றது. இரட்டைமாட்டு வண்டியின் பாரச்சுமை இரு மாடுகளாலும் பகிர்ந்து கொள்ளப் படுகின்றது; ஒற்றை மாட்டு வண்டியெனில் தனிமாட்டுக்கே பாரப்பளு சேர்கிறது என்ற எடுத்துக்காட்டு மூலம்தனியொருவர் ஏற்றமிறைப்பதிலுள்ள கஷ்டம் விளக்கப்படுகின்றது. “தண்ணி இறைச்சிடுவோம்’, ‘தரவை 31 கண்டு மகிழ்ந்திடுவோம்” எனப்பாடுவதன் மூலம் உற்சாகத்தோடு நீரை இறைத்து முடிக்க வேண்டும் என்ற பொருள் தொனிக்கிறது.
ஏற்ருல் நீர் இறைக்கும்போது மெதுவாகவே நீர் வற்று கின்றமையை 'மெள்ள மெள்ளத் தண்ணி வற்றிவர” என்ற தொடர் விளக்குகிறது. வயற் பள்ளத்தில் நீர்தேங்கி நின்ருல் அது வடிந்தோடுவதற்குச் சிறு அளை**(வடிகால்) அமைக்கப்படும். விதைப்பதற்குத் தயாராக இருக்கும் வயல் பண்படுத்தப்பட்டிருப் பதாற் சேற்றுப்பிடிப்பு ஆட்டமுடையதாகவே காணப்படும். இதனையே ‘ஆடுற சேத்தில் அளையது வெட்டி நான் ஆயத்த மாக்குவேன்’ என்ற வரி விளக்குகின்றது. நீர் இறைத்துக் கொண்டிருக்கும்போது, நேரம் காலைபத்தரை மணியாகிவிட்டது; நீர்வற்றிய இடங்கள் வெயிலாற் காய்கிறது; நீர் வற்ற வற்ற, வெயிற் குடும் சேர நீரிலுள்ள வரால் ?? மீன்கள் துள்ளிப் பாய் கின்றன. இத்தகைய காட்சிகளும் நீர் இறைப்போருக்குச் சாப் பாடு கொண்டு வரப்படும் செய்தியும்,* சாப்பாட்டின் வருணனை யும், சாப்பாடு கொண்டு வந்த "வள்ளி’ என்னும் பெயருடைய பெண், வரால் மீன்களைப் பிடிக்கின்ற காட்சிகளும் இப்பாடற் பொருள்களாக அமைகின்றன.
31. பி. இ, சொல்லடைவு பார்க்க, 32. மேலது 33. முக்கூடற்பள்ளு. 51 ஆம் பாடல் பார்க்க. 34. மேலது, 96 ஆம், 97 ஆம் பாடல்கள் யார்க்க

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 155
இத்தகைய தனிப்பாடலைவிடக், கவிகளைப் பாடிக்கொண்டும் ஏற்றம் இறைப்பது வழக்கம், அக்கவிகள் ஏற்றம் இறைப்போரின் வாழ்க்கைக் கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் எடுத்துக்கூறுவ தோடு காதல் சான்றனவாகவும் அமைந்துள்ளன.
ஏற்றம் இறைக்கும்போது பாடப்படும் கவிகளாகத்" தரப் பட்ட முதலாம் பாடலில், ஏற்றம் இறைக்குந் தொழிலாளியின் உடல் வேதனை கூறப்படுகின்றது. இரவு முழுவதும் நீர் இறைத்துக் கொண்டிருந்தமையால், நித்திரையின் பொருட்டு அவனுக்குக் "கண்ணைச் சுழற்றுகின்றதாம்’, ‘தலையும் வலிக்கின்ற தாம்'; 'கடும் பசியும் எடுக்கிறதாம்’ எனத் தன்னுடன் தொழில் புரிவோனுக்குக் கூறும் பாணியில் அப்பாடல் அமைகிறது. 2ஆம் பாடலிலே தொழிலாளியின் மனக் குமுறல்கள் சித்தரிக்கப்படு கின்றன. 'பரபரக்க இறைச்சாலும்° பாயுதில்லை தண்ணீரும்’ என்ற தொடர் வேலைப்பளுவின் கடூரத்தைக் குறிப்பிடுகின்றது. நாட்கூலிக்கு ஏற்றம் இறைத்து வாழும் ஒருவன், அத்தொழிலின் கடூரத்தைக் கூறுவதாக 3 ஆம் பாடல் அமைந்துள்ளது. சோறு இன்றிப் பட்டினி கிடந்தாலும் சரி, அல்லது “சுணை? இழந்து’’ வேறு தொழில் புரிந்தாலும்சரி இத்தொழில் 'இனி வேண்டாம்" என இத்தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுகிறது இவ்வாறு இம் மூன்று கவிகளும் ஏற்றம் இறைக்குந் தொழிலாளியின் மனே நிலையைப் பொருளாகக் கொண்டிலங்குகின்றன.
4. வயல் மிதிப்போர்" பாடும் கவிகள்??.
இப்பிரிவில் மூன்று கவிகளின் பொருட்கூறுகள் ஆராயப்படு கின்றன. உச்சி வெயிலில் வயல் மிதித்து கொண்டிருக்கும் ஒர் உழவனை வெயில் வாட்டுகின்றது; மாடுகளும் களைத்துவிட்டன; அந்நிலையில் அவனது சிந்தனை, புழுங்கல்நெல் காயப்போடும் போது தன்மனைவியும் இக்கொடூர வெயிலில் கஷ்டப்படுவாளே என எண்ணியவாறு கவிபாடுவதை 'நடவாக்கிடாமாடும். . .י * என்ற கவி விளக்குகின்றது. மிதிமாடுகளைப் பிணைத்துச் சாய்த்துக் கொண்டு வயலுக்குச் செல்லும் உழவனை வழியில் அவனது
35. பி.இ., தொ. பா ஏற். கவி | பாடல் 1-3.
36. ஒய்வின்றித் தொடர்ச்சியாக நீர் இறைப்பதை இத்தொடர் விளக்குகின்றது.
37. சுணை என்பது தன்மானத்தைக் குறிப்பிடுஞ்சொல்லாகும். வைக்கோல் உடம்பிற்படும்போது ஏற்படும் உடல் எரிவையும் சுணஎன்றே வழங்குவர்.
38. "பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பிற், காரேலு பொருத கண்ணகன் செலுவி, னுழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர்" பெரும்பாணுற்றுப் படை வரி 209-211
39. பி ,இ. தொ. பா, மிதி.கவி பாடல் 1-3

Page 92
56 மட்டக்களப்பு மாவட்ட.
மச்சாள் முறையினள் ஒருத்தி கண்டு உரையாடும்பாணியில் 2ஆம் கவி பாடப்பட்டுள்ளது இப்பாடலில்வரும் 'முன்னுக்குப்போற மச்சான்' என்ற தொடர் பொருள் செறிந்ததாகும். வயல் மிதிப்புக்குச் செல்பவர்கள் அதிகாலை 4 மணியளவில் எழுந்து பட்டி" யடிக்குச் சென்று மாடுகளைப் பிணைத்துச் சாய்த்துக் கொண்டு, விடியும் முன்பு வயலிலிறங்கி மிதிக்கத் தொடங்குவர். அதிகாலையில்வேலை நடைபெறுவதால் அதிக வயற்பரப்பை மிதிக்கத் கூடியதாக இருக்கும், இதனையே உட்பொருளாகக் கொண்டு இப்பாடல் அமைந்துள்ளது. உழவன் ஒருவனின் சேறு படிந்தகோலத்தை அவனது மச்சாள் நினைந்து பாடும் பாவனையில் 2 ஆம் பாடல் பாடப்பட்டுள்ளது. வயல் மிதிக்கும் ஒருவன் தன் போடியாருக்கு ** மாடுகளைப்பற்றி முறையிடுவதாக மூன்ரும் பாடல் அமைந்துள்ளது.
5. அரிவிவெட்டுவோர் பாடும் கவிகள்??
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆண்கள் மட்டுமே அறுவடை செய்வது வழக்கம் தமிழகத்திலும், ஈழத்தின் வடக்கு, மத்திய பகுதிகளிலும் ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து அறுவடை செய்வர். பலர் சேர்ந்து குழுவாகவும், தனித்தனியாகவும் பொருத்த அடிப்படையில்° பங்கு அடிப்படையிலும் அறுவடை செய்வர். அவர்கள் பாடும் பாடல்கள் ** அரிவாள், விளைந்த நெற்கதிர்கள், அறுவடைக் கூலி, பங்கு அளந்தவிதம் என்பன பற்றிக் குறிப்பிடுவனவாகவும், அரிவிவெட்டுவோரின் உணர்ச்சி களையும் பிரச்சினைகளையும் சித்தரிப்பனவாகவும் அமைந்துள்ளன.
கதிர்கள் நன்கு முற்றி விளைந்து, வேளாண்மையின் அடித் தண்டு நன்கு காய்ந்து, ஒரே பக்கத்திற்குச் சரிந்தும் கிடந் தாற்றன் வேகமாக அரிவிவெட்டக்கூடியதாக இருக்கும். இல்லா விடின் வெட்டும்போது பச்சையாக இருக்கும் அடித்தண்டு கத்தியிற் கொழுவிக் கொழுவித் தாமதப்படுத்தி, வெட்டு
40. பி. இ, சொல்லடைவு பார்க்க.
41. பி.இ., சொல்லடைவு பார்க்க
42. பி.இ. தொ. பா. அ. வெ. பாடல் 1 -7.
43. ஒரு ஏக்கர் விளைநிலத்தை வெட்டுவதற்குக் குறிப்பிட்ட தொகை தரவேண்டும் என்ற பொருத்தம் பேசி அiஷவெட்டுதலை இது குறிபபிடும்.
44. அபிவிவெட்டும்போது வசந்தன் பாடல்களையும் பாடுவர், அவற்றில்
அறுவடை செய்வோரின் நடவடிக்கைகள், அறுவடைக்குரிய ஒபூங்குகள் என்பன விவரிக்கப்பட்டிருக்கும். சதாசிவஐயர், தி. (1940) பக். 68 பார்க்க ۔

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 157
வோருக்குச் சினத்தைக் கொடுக்கும் என்பதைப்பாடல் விளக்கு வதாக அமைந்துள்ளது.
அறுவடை செய்வோர் ஆணும் பெண்ணும் பாடும் பாவனை முறையிற் ** கவிபாடித் தொழில் புரிவதுண்டு. அத்தகைய பாடல்கள் காதற் பாடல்களாகவே அமைந்திருக்கும். காதலைப் பின்னணியாகக் கொண்டு அறுவடைக் காலத்திற் பாடப்படுவ தாக மூன்று கவிகள் அமைந்துள்ளன அறுவடை செய்யும் போது அரிவாள் கையை வெட்டுவதுண்டு. ஒருவனுக்குக் கத்தி சையைக் காயப்படுத்திவிட்டது. பக்கத்தே அரிவிவெட்டுவோன் அதுபற்றி விசாரித்தபோது "கத்தியெடுத்துக் கதிர் அரியும் வேளையிலே கள்ள நினைவு வந்து என்ர கையை அறுத்துப் போட்டுதடி’ என்று பாவனையடிப்படையில் விடை கூறுவதாக 3 ஆம் பாடல் அமைந்துள்ளது. "கள்ள நினைவு’ என்ற தொடரில் அகவுணர்வுகள் பொதிந்திருத்தல் நோக்கற்பாலது.
அறுவடைக்காக வயற்பரப்பை நான்கு முழக் கம்பால் (8 x 14) 112 சதுர முழமாகக் கொண்ட பங்குகளாக அளந்து கூலியாட்களுக்குக் கொடுக்கப்படும். அளவுக் கம்பால் அளக்கும் போது நீட்டி அளந்துவிட்டான் என்பதை அறிந்த ஒரு தொழிலாளி, அவனை ‘நாய்’ எனக் குறிப்பிட்டு ‘நாலுமுழக் கம்பால் நாயளந்த வேளாண்மையைப் பகல் எல்லாம் வெட்டி என்ர பழு எலும் பெல்லாம் நோகுதுகா” எனப்பாடுவதாக 4 ஆம் பாடல் அமைந்துள்ளது. சரியாக அவன் அளந்து கொடுத்திருந் தால் குறிப்பிட்ட நேரத்தில் அதனே அவனல் வெட்டி முடித் திருக்க முடியும். ஆனல் நீட்டி அளந்துவிட்டமையாற் பகலெல் லாம்? வெட்ட வேண்டியதாயிற்று எனக் கவலைப்படுவதை அப்பாடல் விளக்குகின்றது. இவ்வாருகத் தொழிலாளர் அறுவடை பற்றியும், அறுவடை செய்யும் போது தமக்கு ஏற்படும் உடல் வேதனைபற்றியும், அளவுமுறைபற்றியும் பாடுகின்றமையை இப்பாடல்கள் உணர்த்துகின்றன.
வேளாண்மை வெட்டும்போது வாதுகவி' பாடுதல் பெரு வாக்காகும். அத்தகைய மூன்று பாடல்கள் இங்கு ஆராயப்படு
45. ஆண்பெண்ணுகவும், பெண் ஆணுகவும பாவனே செய்துபாடும் முறை, செந்நெறி இலக்கியங்களில் நாயன்மாரும் ஆழ்வாரும் தொடக்கி வைத்த இப்பாவனை முறை தொடர்ந்து இலக்கியங்களிற் கையாளப்படுவதாயிற்று. 46. போட்டியடிப்படையிற் பெண்ணும் பெண்ணும், பெண்ணும் ஆணும்,
ஆணும் ஆணும் விணுவும் விடையுமாகவும், எதிர்வாதமாகவும் பாடுங் கவிகள் வாதுகவிகள் எனப்படும். இக்கவிகள் "அடக்கடா உன்கவியை",

Page 93
S8 LDL lió56Tilly LDITaill.
கின்றன. அறுவடைக்குச் செல்வோர் கோஷ்டியாகவே செல்வர். இவர்கள் நண்பர்களாகவும், ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாகவுமே காணப்படுவராதலிற் பொழுது போக்கிற்காக ஏனைய ஊரவர் களையும், குழுவினரையும் நகைசெய்து கவிபாடுவது வழக்கம். குழுவில் ஒருவர் "ஏருவூர்க்” கிராமம்பற்றி நகைசெய்ய, அதே குழுவைச் சேர்ந்த ஒருவர் அதற்கு "ஏருவூரான் என ஏளனமாகப் பேசினுல் மோரு போட்ட கத்தியால்" உனது மூர்க்கத்தனத்திற்கு மருந்து கட்டுவேன்’ எனப் பதில் கூறுவதாக 5 ஆம் பாடல் அமைகிறது.
ஆரும் பாடலில் ஒருவன் மற்றவனைப் பார்த்து ஆமை தூமை* அடைக்கோழிமுட்டை, சங்கு, வளலை (பாம்பு) ஆயெ வற்றைத் தின்பவனே, என்னுடன் வம்புக்குப் பகைக்காதே (சருவதாடா) என்று எச்சரிப்பதாகவும் அதே வேளையில் அவனை இழித்துக் கூறுவதாகவும் அமைந்துள்ளது. இப்பாடலுக்கு எதிர்ப் பாடலாக “பண்டி இறைச்சி தின்னி.” என்ற பாடல் அமை கின்றது. முஸ்லிம்களின் சமயாசாரப்படி பன்றி இறைச்சி சாப்பிடுதல் தவிர்க்கப்பட்டுள்ளது அன்றியும். பன்றி இறைச்சி சாப்பிட்டவர்களது வீட்டிலும் அவர்கள் சாப்பிடமாட்டார்கள். இவற்றைப் பின்னணியாகக் கொண்டு 6 ஆம் 7 ஆம் பாடல்கள் அமைந்துள்ளன. இப்பாடல்களில் வரும் இகழ்ச்சிக் குறிப்புகள் சமூகப் பழக்கவழக்கங்களைப் பின்னணியாகக் கொண்டமைந் துள்ளன. 6. காவற்பரண் கவிகள்*
வயற்களத்திலே தாராக் காவல்,வேலிக் காவல், உப்பட்டிக்" காவல். சூட்டுக் காவல் எனப் பல சந்தர்ப்பங்களிற் காவலாளர் பாடல்களைப் பாடிப் பொழுதுபோக்குவது வழக்கம். அவர்களது பாடல்கள் குறிப்பாகத் தாம் செய்யுந் தொழில்பற்றியும், காவல்
**சருவாதேடா என்னுேட", "பெருமையடா காட்டவந்தாய்”.*சொல்லிவாடி என்பாட்டை", "சொல்லிப்போடா உன் பாட்டை', பிதற்றதேடி பெருமைத் தனம்”, “பிதற்றதேடா பெருமைத்தனம்', 'எடுப்பனடி விளக்கு மாற்றை’, ‘ஏணிவைச்சுப் பல்லுடைப்பேன்" என முடிவுறுவனவாக
அமைந்துவரும். ஏசற்பொருளில் வரும் வாது கவிகள் பெரும் சாலும் அறுவடைக் காலங்களிலும் வண்டிற் பயணத்தின் போதும் பாடப்படுதல் கள
ஆய்வில் அவதானிக்கப்பட்டது. 47. மான்கொம்பு, மாட்டுக்கொம்பு என்பவற்றலும் ஆரிவாளுக்குப் பிடி போடுவர். அதனையே "மோரு போட்ட கத்தி" என்றனர். மோரா, மோரு 6Tayı üDefin gör gəlsirsinfG Tamil Lexicon. Vol. IV Part II, P. 3387. 48. பி. இ. , சொல்லடைவு பார்க்க, 49. பி.இ. தொ.பா. காவல் பாடல் 1-13. 50. பி.இ, சொல்லடைவு பார்க்க.

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 159
புரியும் இடங்கள் பற்றியும், காவலிற் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும் என்பது பற்றியும் பாடுவதாக அமைந்திருக்கும். இரவு வேளைகளிலே தனித்திருந்து காவல் புரிவதால் அவர்களது பாடல்களிலே இணைவிழைச்சுத்தன்மையும் காணப்படுதல் சிறப் பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.
சேற்று விதைப்பு முடிந்ததும், இரவிலே தாராக்கள் வந்து விதைத்த விதை நெல்லைச் சாப்பிடாதவாறு காவலிருக்க வேண்டும் தாராக் காவலிருப்போன் ஒருவன் பாடுவதாக முதற் பாடல் அமைந்துள்ளது. அப்பாடலில் அவனது வறுமைநிலை குறிப்பிடப்படுவதை “வந்தை நெல்லும்? திண்டொழிஞ்சி போடியார் வீட்ட இப்ப போகவரக் காலமாச்சு’’ எனப் பாடு வதன் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
அறுவடையின் பின்பு உப்பட்டிக் காவலிருப்போர் பாடுவதாக இரண்டுமுதல் ஆரும் பாடல்கள் வரை அமைந்துள்ளன. காவற் பரணிலே தனித்திருக்கும் வேளையிற் காம உணர்ச்சிகள் தோன்றுதல் இயல்பே. ஆதலினுலேதான் காதலனும் காதலியும் பாடும் முறையிற் பாவனையடிப்படையில் இக்கவிகள் பாடப்பட் டுள்ளன . இப்பாடல்களில் வயல் விளைந்திருப்பதுபற்றியும், அங்குக் காவலுக்குப்போக வேண்டியதுபற்றியும், காவலுக்குப் போகா விட்டால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும் கூறப்பட் டுள்ளன. பகல் வேளையில் உப்பட்டிக் காவல் இருப்போர், ஆங்கு சாப்பாடு கொண்டு செல்லும் பெண்களை நகைசெய்து பாடு வதும் உண்டு. அவ்வகையில் 9 ஆம் 10 ஆம் பாடல்கள் அமை வதோடு, அவற்றில் இணைவிழைச்சுத் தன்மையும் மேலோங்கிக் காணப்படுகின்றது.
கோழி.கூவுதல், நிலவுபடுதல், வெள்ளி கிளம்புதல் என்ப வற்றைக் கொண்டு நேரமறியும் காவற்பரண் தொழிலாளி ஒருவன் தான், நேரத்துடன் ஊருக்குப் போய்த் திரும்பி வர வேண்டும் எனப்பாடுவதாக ஏழாம் பாடல் அமைந்துள்ளது. எட்டாம்பாடல் வாது கவி பாடத் தொடங்குவதைக் குறிப்பிடு கின்றது
வயற்காவல் புரிவோர் தமது கஷ்டங்களையும், பிரச்சினை களையும் எடுத்துப்பாடி மன ஆறுதலடைவதை இறுதியிலுள்ள மூன்று பாடல்களும் விளக்குகின்றன. காவலிடத்துச் செல்வோர் சமைத்துண்பதற்குரிய அரிசி, தேங்காய், கருவாடு என்பன
51. மேலது,

Page 94
60 மட்டக்களப்பு மாவட்ட.
எடுத்துச் செல்வது வழக்கம். ஆனல் அவை பழுதடைந்துவிட்ட மையால் ‘உண்ண ஒண்ணு (இயலாது) போடியாரே' என முறையிடும் வகையிற்பாடுகின்றனர். வயலிடத்தேயுள்ள குளம், ஆறு ஆகியவற்றில் மீன்பிடித்தும், திராய், வள்ளல் ஆகிய கீரை வகைகளைப் பிடுங்கியும் உணவருந்தி ஒருவாறு பசிக்களை தீர்த்தோம் எனவும் கூறப்படுகின்றது. 'உண்பது சம்பா அரிசி? உடுப்பது கிளிஞ்ச உடை ..” என மனம் நொந்து, தன் வாழ்க்கைக் கஷ்டத்தைக் கூறுவதைப் பதின் முன்ரும் பாடல் விளக்குகின்றது.
7. நெல் குற்றும் பெண்கள் பாடும் கவிகள்??
பெண்கள் நெல்குற்றும்போது குதுகலமாகப் பாடித்தொழிற்
படுவது வழக்கம், அப்பாடல்கள் அவர்கள் உலக்கைபோடும்
வேகத்திற்கு ஏற்றனவாகவே அமைந்திருக்கும்.*
அவ்வாறு பாடப்படும் பாடல்களிற் கிடைத்தனவற்றுள், முதல் நான்கு பாடல்களும் நெல்குற்றுவோரது குதுகல உணர்வு களை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. ‘கையைப் புடிக் காதீங்க கைவளையல் நொறுங்கிவிடும்’ எனப் பாவனைமுறையிற்
52. முதலாம் உலக மகாயுத்த காலத்தில் அரசாங்கத்தால் ஏழைகளுக்குப் பங்சிட்டுக் கொடுக்கப்பட்ட அரிசியே சம்பா ஆகும். அதனை எவரும் விரும்பிச் சாப்பிடுவதில்லே. இந்த ஏழை விவசாயி தான் அதனேயே சாப்பிட வேண்டி யுள்ளது எனக் கவலைப்படுகின்றன்.
53. பி.இ , தொ. பா. நெல் பாடல் 1-10
54. இப்பாடல்கள் இலக்கியங்களில் ‘வள்ளப்பாட்டு" எனப்பெயர் பெறும்" **நெல்லிடிக் குங்கோற்றுெ டியார் குக் குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்". (குயிற்பாட்டு வரி. 35) என்று இப்பாடல்கள்பற்றிப் பாரதியார் குறிப்பிடு கின்றர். கொற்றவள்ளை என்ற பாடற்றுறையும் புறத்திணை இலக்கியங்
களிற் காணப்படுகிறது. ‘மன்னவன் புகழ் கிளந்,
தொன்னுர் நாடழி பிரங்கின்று', எனப் புறப்பொருள் வெண்பாமா?ல வஞ்சிப்படலத்திற்கொற்றவள்ளை பற்றிய 8 ஆம் சூத்திரத்திற் கூறப்படுகின்றது. பண்டு இத்தகைய பாடல்கள் வழக்கிலிருந்தமைக்குப் புறநானூற்றுச் செய்யுள்கள் சான்றுபகர்கின்றன. (உ-ம்: புறம்: பாடல் 41) சுண்ணமிடிப்போர் பாடும் பாடல்களும் இத்தகை யனவே, பண்டையவள்ளைப் பாடல்களின் பொருள்மரபின் வழிவழியாக வந்து, இன்று நெல்குற்றும் பெண்கள் பாடும் பாடல்களின் பொருள் மரபு அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளுடன் ஒட்டியதாக அமைந்திருத் தல் ஈண்டு நோக்கற்பாலது. 55. பி.இ., தொ.பா. நெல் பாடல் 1-2,
"வளைமுன்கை பற்றி நவியத் தெரமந்திட்டு . . . ?? கலி; குறிஞ்சிக் கலி 16 ஆம் பாடல் பார்க்க.

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு l61
பாடுவதில் அகவுணர்ச்சியும் கலந்து காணப்படுகிறது. நெல் குற்றும் ஒருத்தியைப் பார்த்து 'ஆர் கொடுத்த சாயச் சோமன்" ஆலவட்டம் போகுதடி” என வினவுவதாக 3ஆம் பாடல் அமைய. அதற்கு விடையாகத் தனக்கு யாரும் கொடுக்கவில்லை. தகாத வழியிற் பெறவுமில்லை; தான் உழைத்து வாங்கினே" எனப்பாடு வதாக 4 ஆம் பாடல் அமைந்துள்ளது. நெல்குற்றும் பெண்கள் பாவனையடிப்படையிற் காதற்கலிகளைப் பாடுவதுண்டு.* அத்தகைய பொருளமைப்பினையுடையனவாக 5 ஆம், 6 ஆம் பாடல்கள் அமைந்துள்ளன.
நெல்குற்றிக் கொடுத்து ஊதியம் பெற்றுவாழும் ஏழைப் பெண்களின் இன்னல்களை ஏழாம்பாடல் குறிப்பிடுகிறது. அவர் கள் நெல்குற்றும்போது பாடும் பாடல்கள் பெரும்பாலும் அவர் களின் வாழ்க்கைக் கஷ்டங்களை எடுத்தியம்புவனவாகவே அமைந் திருக்கும். சீருஞ் சிறப்புடனும் கணவனுடன் வாழ்ந்தவள், கணவனை இழந்தவுடன் மங்களமான காரியங்களிற் சமூகத்தாற் புறக்கணிக்கப்படுகிருள். அந்நிலைக்கு ஆளாக்கப்பட்ட ஒருத் தி, தான் இப்போது ‘மார்குலுங்க மாவிடித்துப் பிழைக்க வேண்டி யுள்ளதே’ எனத் தன் மனக்க வலையைப் பாடுவதாக இப்பாடல் அமைகிறது. நெல்குற்றல், மாவிடித்தல் என்பன நெஞ்சு நோவைக் கொடுப்பனவாகும். இவற்றைத் தொழிலாகக் கொண்டு தினமும் உழைப்போருக்கு இவை வருத்தத்தையே கொடுக்கின்றன. இதனையே அப்பாடலில் வரும் ‘மார்குலுங்கி மாவிடிக்க” என்ற தொடர் விளக்குகின்றது.
கணவனை இழந்து கஷ்டப்படும் ஒருத்தி தனது ஆதரவற்ற நிலையினைப் பாடுவதாக 8 ஆம் பாடல் அமைந்துள்ளது. கைக் குழந்தையோடு கணவனைப்பிரிந்து துன்பப்படும் ஓர் ஏழைப்பெண், கணவன் தனக்கும் தன் குழந்தைக்கும் செய்துள்ள கொடுமைகள் யாவும் நெருப்பாக உருவெடுத்து, அவனது உடமைகளையும் குடும்பத்தினரையும் சுட்டெரிக்கமாட்டாதோ என உள்ளம் வெதும்பிப் பாடுவதை 9 ஆம் பாடல் விளக்குகிறது. பெண்கள் சேர்ந்து நெல்குற்றும்போது ஊர்ப்புதினங்கள், வீட்டு நிகழ்ச்சிகள் என்பனபற்றிப் பேசிப் பொழுதுபோக்குவர். ஒருத்தியின் மகள் பூப்படைந்து விட்டாள்; கட்டாயமாக வரவேண்டிய உறவு முறையினர் சிலர் அங்கு வரவில்லை, பூப்படைந்த பெண்ணின் கூந்தல் அவிழ்த்து நீராட்டவும் வெள்ளைத் திரைச்சீலை பிடிக்கவும்
56, பி.இ சொல்லடைவு பக். பார்க்க.
57. பி.இ. தொ.பா. நெல் பாடல் 4;
58. கலி, குறிஞ்சிக் கலி 5,6,7,8 ஆம் பாடல்களைப் பார்க்க.
LD-11

Page 95
162. மட்டக்களப்பு மாவட்ட.
ஆலாத்தி எடுக்கவும்," இனம் சனம் ஏன் வரவில்லை’ எனக் கேட்கும் பாணியிற் 10 ஆம் பாடற் பொருள் அமைந்துள்ளது.
மீன்பிடிப்போர் பாடல்கள்
8. வலை இழுப்போர் பாடும் பாடல்கள்"
மீன்பிடிப்போர் வலை இழுக்கும்போது பாடும் பாடல்கள் *வலை இழுப்புப் பாடல்கள்” என வழங்கப்படுகின்றன. அப் பாடல்கள் பொதுவாக மீன்பிடித்தொழில்பற்றிக் குறிப்பிடுவன வாகவும், காமச்சுவை செறிந்தனவாகவும், அதே வேளையில் அவர்களது வாழ்க்கைக் கஷ்டங்களைச் சித்திரிப்பனவாகவும் காணப்படுகின்றன.
முதலாவது பாடலின் பொருளமைப்பை நோக்குமிடத்து பாடலின் வரி தோறும் "ஏலேலோ’ என்ற அசைத்தொடர் இடம் பெறுதல் முதலிற் குறிப்பிடத்தக்கது. பாடலின் நான்கு அடிகளிலுள்ள “ஏலேலோ”, "ஆவேலோ”, “ஆடாட* என்பன பொருளற்ற ஒலித்தொடர் களாகும். அதனைத் தொடர்ந்து "ஐயா’, ‘ஜாலம்மா’, ‘அம்மாமாரி’, ‘முத்துமாரி? என்னும் பெயர்ச்சொற்கள் இடம் பெறுகின்றன. “முத்துமாரி’ என்னுந் தொடர் தோணி தள்ளும் பாடலிலும் இடம்பெறுவதா கும்.* பாடலின் 10 ஆம் வரி தொடக்கம்14 ஆம் வரி ஈருக, சங்கு, சக்கரம், சருகுபித்தாளை, மல்லிகை, முல்லை, மருக்கொழுந்து என்பவற்றைக் குறிப்பிட்டு “ஏலேலோ’, பாடப்படுகின்றது. நினைவில் வருஞ்சொற்களையோ அல்லது சொற்ருெடர்களையோ வலை இழுக்கும் வேகத்தின் தன்மைக்கு ஏற்றவகையில் இசைய மைப்புப் பொருந்தப்பாடும் பொருளமைப்பு இப்பாடலின் முதற் பதினன்கு வரிகளிலும் காணப்படுகின்றது.
அடுத்துவரும் நான்குவரிகளில் (15-18) வலையை மெதுவாக இழுக்கும்படியும், வேகமாக இழுத்தால் அறுந்துவிடும் என்றும் கூறப்படுகின்றன. இப்பிரதேசக் கடற்கரையோரங்களின் மேட்டு நிலங்களிலே தாழைமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவ் மறைவிடங்களில் நடைபெறும் பாலியல் நடத்தைகளைக் குறிப் பிடும்வகையிலே "தாளம்பத்தைக்க மேளம் கேட்குது’’ என்ற தொடர் அமைகின்றது. தமது வாழ்க்கைக் கஷ்டங்களையும் தலைவிதியினையும் நினைவு கொள்ளும் வகையிலே அடுத்துவரும்
59, நூலினுள் காண்க 60. பி. இ. தொ. பா, வலை பாடல் 1-3, 61, மேலது, பாடல் 1: 62, பி. இ. தொ. பா. வலை பாடல்-2,

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 163
வரிகள் (21-28) அமைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து வலையைப்பற்றியும் வலைக்காலில் மீன் காட்சி தருவதுபற்றியும், தலையாரி அவர்களைக் கண்காணிப்பதுபற்றியும். வலை இழுக்கும் போது முதலில் கம்பான் கயிறும், அதனைத் தொடர்ந்து கயிற்று வலையும் இழுபடுவதுபற்றியுங் கூறப்படுகின்றன. விளையாடாமல் வலை இழுக்க வேண்டும் எனவும், வலையிற் சூரை, பாரை முதலிய மீன்கள் காட்சிதருகின்றனவென்றும் பாடப்படுகின்றன. இவ் வாருக இப்பாடலின் முற்பகுதியிற் பொருளற்ற சில சொற்களுஞ் சொற்ருெடர்களும் அமைய, அதனைத்தொடர்ந்து வலையை இழுக்க வேண்டியமுறை, பாலியலில் உணர்வு, விதியின் வலிமை, வலை இழுக்கும்போது நடைபெறும் நிகழ்ச்சிகள் ஆகியனபற்றியும் கூறப்பட்டுள்ளன.
இரண்டாம் பாடல்?? "ஏலேலோ’-ஜலசா’ என்ற இசை யமைப்பு வாய்பாட்டின் அடிப்படையில் ஆக்கம்பெற்றுள்ளது. ஆறுதலாக வலை இழுக்கும்போது பாடப்படும் இப்பாடல் பொருட் செறிவும், ஒசைநயமும் பொருந்தியது. இதன் முதன்னன்கு வரிகளிலும் தோணி தூரத்தில் நிற்பதும், வலையை ஓடி விரைவாக இழுக்க வேண்டுமென்பதும் கூறப்படுவதன் மூலம் வேலைப்பழுவும், தொழிற்படவேண்டிய முறையும் குறிப்பிடப்படு கின்றன. தொடர்ந்துவரும் பதினன்கு வரிகளும் பொருள் அமைப்பிற் சங்கிலித் தொடராக அமைந்துள்ளது. மண்->மரம் அ.கிளை->இலை->பூ>பிஞ்சு->காய்->பழம்->நான்->உன்னை எனத் தொடர் அமைப்புடையதாக, மண்ணே நம்பி மரமும், மரத்தை நம்பி கிளையும், கிளையை நம்பி இலையும், இலையை நம்பிப் பூவும், பூவை நம்பிப் பிஞ்சும், பிஞ்சை நம்பிக் காயும், காயை நம்பிப் பழமும் எனப்பாடி, இறுதியில் ‘உன்னை நம்பி நானிருக்கேன்’ எனவும் பாடப்பட்டுள்ளது. காதலியைப் பழமாக உவமித்துத் தான் உச்சி வெயிலில் உருகுவதாகவும், தனது உள்ளம் உன்னிடமே எனவும் அகவுணர்வுடன் பாடுவதாக இப்பாடற் பொருளமைந்துள்ளது.
மூன்ரும் பாடலிலே*ே தங்கம் எனப் பெயருடைய அவ்வூர்ப் பரத்தைப் பெண்ணைப்பற்றிப் பாலியல் உணர்வுகள் தோன்றப் பாடப்படுகின்றது. தங்கம் என்பவருடன் ஒருவன் கொண்டுள்ள பாலியல் உறவுகளும், உணர்வுகளும் உருவம்கொடுத்துப் பாடப் பட்டுள்ளன. அத்துடன் அப் பெண்ணின் செயல்கள், குணவியல்
63. , 9., G5T. LT. Jaus) uTLsi-2. 64. பி. இ. தொ.பா. வலை/பாடல்-3,

Page 96
164 மட்டக்களப்பு மாவட்ட .
புகள், காமலீலைகள் என்பனவற்றை விரிவாகவும், கேட்போருக்குப் பாலியல் உணர்ச்சிகளும் ஆசைகளுந் தோன்றக்கூடியவகையிலும் பாடப்பட்டிருப்பதும் ஈண்டு, அப்பாடலின் பயன்பாட்டின் அடிப் படையில் முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றது. ** இப் பாடற் பொருளமைப்பிற் பாலியல் உணர்ச்சிகள் மிதமிஞ்சிக் காணப்படுதல் சிறப்பம்சமாகும்.
9. தண்டுவலிப்போர் பாடும் பாடல்கள் 98
துடுப்பின் அசைவிற்கும் தண்டு வலிப்போரின் முயற்சிக்கும் ஏற்பத் தண்டு வலிக்கும்போது பாடல்கள் பாடப்படுகின்றன. இப்பாடல்களைக் கப்பற்பாட்டு,67 தோணிப்பாட்டு," " ஒடப் பாட்டு, ஏலப்பாட்டு, 99 ஏலேலப்பாட்டு எனவும் வழங்குவர்.
முதலாம் பாடலிற்?0 கரைவலை மூலம் மீன்பிடிப்போரின் செயல்களும், அவர்களது ஆசைகளும் கூறப்படுகின்றன. *பொழுது கிளம்புது, கெதியாகச் சாய்ஞ்சி இழுத்து, உசக்க போகணும், நங்கூரமிட்டு மீன்கறுப்புப் பார்த்து, ஒடிவளைஞ்சி, மடிகரையேத்தணும், நங்கூரம் போடணும்’ எனப் பாடற் பொருள் அமைகிறது. அதிகாலையிலே தோணியைத் தள்ளிக் கொண்டுபோய் மீன் வரும்வரையும் காத்திருப்பர் என்பதை "பொழுது கிளம்புது’ என்ற தொடர் விளக்குகின்றது. கடலில் மீன் கூட்டம் கூட்டமாகவே (‘கிளை கிளையாகவே”*) வரும். தூரத்தே அதனைக்காணும்போது கறுப்பாகவே அது காட்சிதரும். அதனைக் கண்டதும் “மீன் கறுப்புத் தெரிகிறது' என்று யாவரும் கூறுவதைக் கள ஆய்வு உணர்த்திற்று. வலையில் மீன் அகப்படும் இடம் ‘மடி’ எனப்படும். அது மடித்துப் பொருந்தப் பட்டிருத்தலாற் காரணப் பெயராயிற்று. அளவுக்கதிக மாக மீன் அகப்பட்டு விட்டால் யாவருக்கும் கழிபேரு வகை ஏற்படும். அதன் அறிகுறியாக தோணியைக் கடலில் நிறுத்தி நங்கூரம்போட்டுக் கொடிபறக்க விடுவர். இவ்விட யங்களை எல்லாம் பாடுவதாக இப்பாடற் பொருள் அமைகின்றது,
65. நூலுள் நோக்குக. 66. பி. இ. தொ. பா. தண்டு பாடல் 1-4 67. மரக்கலம் (கப்பல்) செலுத்தப்படும்போது இப்பாடல்கள் பாடப்படுவதால்
இதனேக் கப்பல் பாடல் என்பர். 68, மரத்தைத் தோண்டிச் செய்யப்பட்ட தோணி ஒடப்பாடுவதால் இஃது
தோணிப்பாட்டாயிற்று. 69. "ஏல.ஏலோ" என்ற ஓசை இசைத்துப் பாடப்படுவதால் இஃது ஏலப்பாட்
டொன்றும் ஏலேலப் பாட்டொன்றும் வழங்கலாயிற்று. 70. பி. இ. தொ. பா, தண்டு பாடல்-1.

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 165
இரண்டாம் பாடலில் 71 118 வரிகள் அமைந்துள்ளன. முதலிரு வரிகளும் இசையமைப்பு வாய்ப்பாட்டுத் தொடர் களாகும். நீண்ட அமைப்புடைய இப்பாடலிற் பல்வேறுபட்ட பொருட்கூறுகள் இடம் பெற்றுள்ளன. தண்டு வலிப்போரின் சிந்தனைகளுக்கும், செயலுக்கும், உழைப்பின் தன்மைக்குமேற்ப அமைந்த இப்பாடலின் பொருட்கூறுகளைப் பின்வருமாறுவகுத்துக் காட்டலாம்:
அ. தண்டு வலிப்போர் இறைசிந்தனை கொள்ளும் தன்மை காணப் படுகின்றது. "சீதேவி” (6), “வங்காள தேவி’72 (22). *மலையாள தேவி’’ (24) "நாவூறுகாளி” (68), 'மாரித் தாய்’ (111), **கண்மணித்தாயே" (கண்ணகி) (112) முதலான தெய்வங்களைப் பாடலிற் குறிப்பிட்டு "ஏலேலோ’ சொல்லித் தண்டு வலிக்கின்றனர். கடலில் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப்போக்கும் கடல்நாச்சியம்மனை வழிபடும் இம் மக்கள் வங்காளவிரிகுடாகடலை "வங்காள தேவியாக’ உருவகித்துப்போற்றுகின்றனர் இறுதியில் 'மாரித்தாயே, கண்மணித் தாயே களவுகள் பண்ணுதே இன்னமும் பேசிடு” (111-114) என்று பாடுவதன்முலம் தெய்வத்திடம் அருள் வேண்டிப்பாடும் பொருளமைப்புக் காணப்படுகிறது.
ஆ. பண்டைய கடல் வணிகமுறையை நினைவுகொள்ளும் வகையிற் கறுவா, சீரகம், மஞ்சள், இஞ்சி, மிளகு முதலான பொருள்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. (7-12)
இ. உச்சி வெயிலிலும், கடலிலும் தொழில் புரிவோருக்குப் பித்தக் கொதிப்பும் மூலவியாதியும் ஏற்படுவதுண்டு. அதற் குரிய மருந்தும் இங்குக் கூறப்படுகின்றது. (15-18)
ஈ. காம உணர்ச்சியைத் தூண்டக்கூடிய செய்திகள் கூறப்படு கின்றன. 'சிவரோரத்திலே சிவக்கும் வெத்தில’’; சின்னப் பெண்டுகள் சப்பும் வெத்திலே’’; ‘மாமி வெத்திலை மயக்கும் வெத்தில” (25-30) என வெள்ளிலை போடும் பெண்களைப் பற்றிப் பாடி, அப் பெண்களின் அழகையும், அவர்கள் ஆடவருக்குக் கொடுக்கும் மயக்கத்தையும் குறிப்பிடுகின்றனர். ஒருவனுக்கு இரு மனைவி இருப்பதையும் (48-49), கணவன் இல்லாத காலங்
71. 1. g., G5 TT. 11 T. |தண்டு பாடல்.2. 72. கடலுறை தெய்வத்தை இப்பிரதேசமக்கள் கடல்நாச்சி. அம்மன் என
வழங்குவர். இவ்வழக்குத் தமிழகத்திலும் உண்டு.

Page 97
66
級T・
மட்டக்களப்பு மாவட்ட.
களில் மனைவி பரத்தை ஒழுக்கம் நடாத்துவதையும் (50-51) பாடுகின்றனர். அதனைத் தொடர்ந்து பெண்கள் பச்சை குத்துவதையும் (52-53), கங்காணியார் மனைவி வெங்காயம் விற்பதையும் (இது பரத்தமை ஒழுக்கத்தையே சுட்டிற்று) (54-57); அதனைத் தொடர்ந்து பெண்களைப்பற்றிய வருணனை கள் இடம் பெறுவதையும் (60-64) காணலாம். இவ்வாருகப் பாடலின் இடையிடையே பெண்களின் அழகு, கவர்ச்சி, பரத்தமை ஒழுக்கம் என்பனவும் பொருளமைப்பில் இடம் பெற்றிருப்பது நோக்கற்பாலது.
தண்டு வலிப்போர் தம்பாடலிற் கடல், தோணி, வலை என்பனபற்றியும் பாடுவதுண்டு. 'தாண்டமண்டலம்’ (36) எனக் கடல் குறிப்பிடப்படுகின்றது. 'ஆழிக்கடலில் அரண்ட நீராம்’ (98.99) எனக் கடலில் ஏற்படும் நீரோட்டம் பற்றிப் பாடுகின்றனர். கடலிற் காணப்படும் பாறைகளைக் குறிப்பிடுவனவாகக் “கல்லடிப் பாடாம்' (71), “கல்லோ மலையோ?? (90) என்னுந் தொடர்கள் அமைந்துள்ளன. தண்டு வலிக்கும் நால்வரும் தனித்தனியே ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்திக்கொள்ளும் வகையிலே "தண்டுக்குத் தண்டு’ ‘* மாறு தண்டு”, 'அணியத்தண்டு’, (4) 'போட்டு வலிக்கணும்' (94.97) என்ற வரிகள் அமை கின்றன. 'ஆடுகஷத்திலே ஒடி மீன்வளைச்சி” (102-103), "முப்புரிக் கயிரும் முப்பத்திமூணு தேடாவளையம்’ (108-110) என்ற தொடர்கள் தோணியிலிருக்கும் வலைபற்றிக் குறிப்பிடுவனவாக அமைகின்றன.
தண்டுவலிப்போரின் பசிக்களைப்பு, உடற் களைப்பு என் பனவும் பாடலிற் குறிப்பிடப்படுகின்றன. (77-78).
சமூக சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் என்பனவும் பாடலில் இடம்பெறுகின்றன. சர்க்கரை அமுது," வயிரவர் பூசை * முதலான சடங்குகள் பற்றிக் கூறப்படுகின்றன. விதிப் படியே தமக்கு அளந்தது கிடைக்கும் என்ற நம்பிக்கை யினைக் கூறுவதாகவரும் 'தம்பிப்பயலே நம்பியிழண்டா’’ என்ற (117-118) வரிகளும் ஈண்டுக் குறிப்பிடற்பாலன. அடுத்ததாகவுள்ள 38 வரிகளைக் கொண்டமைந்த மூன்றும் பாடலில்" இடம்பெறும்பல்வேறுபட்ட பொருட்கூறுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
73. நூலுள் பார்க்க 74. மேலது 75. பி.இ. தொ. பா.தண்டு பாடல்.3.

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 167
அ. தண்டுவலித்தல் கடும் உழைப்புடன் கூடிய தொழிலாத லால், களைப்பை மறந்திருக்க வேண்டிப் பாலியல் உணர்ச்சி யூட்டும் பாடல்களைப் பாடுவர். இப்பாடலில் வரும் *தாயும் மகளும் ராவும் பகலும் வேலைக்காரி” (11-13) என்னுந் தொடர்கள் பரத்தமை ஒழுக்க உணர்வுகளைக் குறிப்பிடுவனவாக அமைந்துள்ளன.
ஆ. நடுக்கடலிலே செல்கின்றவர்களுக்குக் கடல் பற்றிய பயம் ஏற்படுதல் இயல்பே. ஆதலினுல் ஆழிக்கடல் (9) பற்றிக் குறிப்பிட்டு இடையிடையே தெய்வங்களை நினைந்து கொள்ளும் வகையிற் சீதேவி (14) நாயன்’ (18) " அல்லா உற்’ (10) முதலான தெய்வங்களை வேண்டிக் கொள் கின்றனர்.
இ. கடலிற் சூரமீன்கிளை வருதலும் (33) 'வாடை நீர் ஓடுதலும், அதனல் 'வாடை நீர் வாங்கல்" அமைதலும், 'சோள நீரோட்டம்' ஏற்பட, "சோளநீர் வாங்கல்’ அமைதலும் (35-38) குறிப்பிடப்படுகின்றன. நனைந்த வலையைத் தோணியிலேற்றி இரண்டாம் மூன்ரும் பாடுகள் (முறை) கடலிற் செல்லும்போது பாரத்தின் காரணமாகத் தண்டு வலிப்பது சிரமமாக இருப்பதை, 'ஈரவலை ஏத்தி, நால் வரும் தண்டிழுக்க” (31-32) என்ற தொடர்கள் குறிப்பிடு கின்றன.
ஈ. வரலாற்றுச் செய்திகள் பாடல்களில் இடம்பெறுவதுண்டு. இரண்டாம் உலகப்போரில் வங்காளவிரிகுடாக் கடலிற் குண்டுகள் பல வீசப்பட்டதாகவும், சில குண்டுகள் கரை யோரத்தில் வீசப்பட்டதாகவும் கூறப்படும் செய்தியை நினைவிற் கொண்டு பாடுவதை 24-30 ஆம் வரிகள் குறிப்பிடு கின்றன.
நான்காம் பாடல் 78 **ஏலே- ஏலே’ என்ற இசையமைப்புத் தொடருக்கமைவாகப் பாடப்பட்டுள்ளது. முதலாம் பாடலிலும் இஃது இசை வேகங்கொண்டதாகும். 25 வரிகளால் அமைந் திருக்கும் இப்பாடல், நங்கூரத்தை இழுத்து விரைவாகத் தண்டு வலித்துக் கரையை அடையவேண்டும்”, என்ற பொருள் கொண்டதாக அமைந்துள்ளது.
76. பி.இ. சொல்லடைவு பார்க்க; 77. மேலது. பார்க்க 78. பி. இ. தொ.பா. தண்டு பாடல்:4,

Page 98
168 மட்டக்களப்பு மாவட்ட .
10 தோணி தள்ளுவோர் பாடும் பாடல்கள்??
முதலாம் பாடல்" 12 வரிகளால் அமைந்துள்ளது. இப் பாடலின் ஒவ்வொரு வரியின் முதற்ருெடரை ஒருவர் உரத்த தொனியிற்பாட, ஏனையோர் யாவரும் "ஏலே’ எனக் குரல் எழுப்பித் தோணியைத் தள்ளுவர். பாடலிற் பொருள் தொடர் புடையதாக அமையவில்லை. பாடலில் வரும் “பாசக்காறே" * பாசவினேத”, “நாறின் பாச’ என்னுந் தொடர்கள் சிங்களச் சொற்களின் திரிபு வழக்காகும்.** பாடலின் 7 ஆம் வரியிற் 'காளி' ('பெண்தய்வம்) குறிப்பிடப்படுகின்ருள். 88 காளிக்கு *வினேதா’, ‘கம்பன்’ என்னும் இரு அடைகளும் கொடுக்கப் பட்டுள்ளன. 8-ம் வரியில் "உறுக்கிப் பிடிக்கும்படி” கூறப்படு கின்றது. மந்திரம் செபித்து இறுதியிற் 'சும்” என்ற உச்சரிப்புடன் மந்திர உச்சாடனம் செய்வதை "உறுக்குதல்’** என்பர். அது போன்றே **சும்’ என்று ஒலி எழுப்பி வேகமாகத் தோணியைத் தள்ளும்படி கூறப்படுகின்றது. "ஏத்திக் கட்டு' (9) என்னுந் தொடர் உயர்த்தித் தள்ளு என்னும் பொருளில் வந்துள்ளது. முதுகைக் கொடுத்துத் தூக்கித் தள்ளும்படியும் (10-11) கொல் லாக் கட்டிற் பிடித்துத் தள்ளுவோனை உசார்ப் படுத்தப்படுவ தாகவும் (12) பாடல் அமைகின்றது.
ஒருவன் முதலில் ஒஒஓ.டி. ஏலே’ என நீண்ட உரத்த தொனியிற் குரல் எழுப்ப, ஏனையோர் ‘ஏலே’ எனக் கூறித் தோணியைத் தள்ளத் தொடங்குவர். ‘முத்துக்குமாரி", "ராஜகுமாரி" எனத் தோணியைப் பெண்ணுக உருவகித்துத், "தூக்கித் தள்ளு” “கிளப்பியடி’ எனப் பாடப்படுகின்றமை இரண்டாம் பாடலிற்** காணப்படுகின்றது. இவ்வாறு பாடுவதற்குப் பாலிய லுணர்வின் தேவையே காரணமாகின்றது. 89 அணியம்', 'நடுக் கட்டு" என்னுஞ் சொற்கள் அவ்வவ்விடங்களிலே பிடித்துத் தோணி தள்ளுவோரைக் குறிப்பிடப் பயன்படுகின்றன.
79. மேலது தோணி பாடல் 1-3, 80. மேலது தோணி பாடல்-1.
81. இச்சொற்களின் பொருள் பி, இ. சொல்லடைவில் தரப்பட்டுள்ளது.
82. இப்பகுதியிற் சிங்களவர்கள் மீன்பிடிக்க வந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்து தொழில் செய்தமையால் அவர்கள் பாடிய பாடல்களை இவர்களும் மனனம் செய்து கொண்டனர். அதே பாடல்களை இப்போது வேலை செய்யும் போதும் பாடுகின்றனர். புலப்படுமாறில்லை .
இவர்கள் ஆணுல் இவர்களுக்குப் பொருள்
83. நூலுள் பார்க்க. 84. பி. இ. சொல்லடைவு பார்க்க. 85. பி.இ. தொ. பா. தோணி (பாடல்-2 86. நூலுள் நோக்குக

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு : 69
மூன்ரும் பாடலிலே" தோணி பாய்க்கப்பலாக உருவகிக் கப்பட்டுள்ளது. பாய்க்கப்பலில் "அன்னக் கொடி’, ‘கெருடக் கொடி’ ‘அனுமக்கொடி’ என்பன பறக்கின்றன எனக் கூறப்படு கின்றது. பாய்த்தோணிக்கு அச்சாணியாக அமைவது பாய்மர மாகும். ஆதலினல் “அச்சாணியாய்க் காலது நாட்டி’ எனப் பாடப்படுகின்றது. கடலிற் செல்லுந் தோணி காற்றின் வேகத் தினுலும், கடலலைகளின் தாக்கத்தினலும் அசைந்து கொண்டே யிருக்கும் என்பதை “காற்றடிக்க மரமசைய’’ என்ற தொடர் விளக்குகிறது. கடலில் வலைவீசுபவன் கவனமாகச் செயற்பட வேண்டுமென எச்சரிக்கும் வகையிற் “கல்லுப்போட்டாற் தலை யுடையும்’ என்ற தொடர் அமைந்துள்ளது. 89 உடல் வருந்தித் தோணிதள்ளும்போது வியர்த்தல் இயல்பே. அதனையே வேர்த்து’ விட்டாற் சலமுருளும்” என்ற தொடர் குறிக்கின்றது. தோணியின் பாரத்தையும், அதன் பெறுமதியையும் குறிப்பிடும் வகையினிற் “விதமான கப்பலிது’ என்ற தொடர் அமைந் துள்ளது. ஈற்றிலே தொழிலாளரை உற்சாகப்படுத்தும் வகையிற் சாராயம்பற்றிக் குறிப்பிடுவதும் நோக்கற்பாலது. 89
தோணி தள்ளுவோர் பாடும் இம்மூன்று பாடல்களின் பொரு ளமைப்பை நோக்கும்போது முதலிரண்டு பாடல்களிலும் தனித் தனிச் சொற்களைக் குறிப்பிட்டு ‘ஏலே’ ‘ஏலோ" சொல்லித் தோணி தள்ளுவதாகவும், ஆங்குக் குறிப்பிடப்படும் சொற்கள் உணர்ச்சி வேகம் ஊட்டுவனவாகவும் அமைந்து வருதலும், மூன்றம் பாடலிலே தோணி பற்றியும், தொழிற்படும் முறைமை பற்றியும் கூறப்பட்டுஇளமையும் கவனிக்கற்பாலன.
தொழிற்பாடல்களில் வரும் உவமை உருவங்கள்:
தொழிற் பாடல்களில் உவமை உருவங்கள் மிகக் குறை வாகவே இடம்பெற்றுள்ளன. தொழிலாளர் தம் சிந்தனை, செயல், உடல்வலு ஆகியனவற்றை உழைப்பிற் செலுத்தித் தொழிற்படும்போது அதிகம் கற்பனை செய்து அவர்களாற் பாட இயலுவதில்லை." ஆதலினற் கற்பனையோடொட்டிய உவமை உருவங்கள் தொழிற்பாடல்களில் அதிகம் பயின்று வந்தில. ஆயினும் அவர்கள் செய்யுந் தொழிலுக்கும் தொழிற்களப்
87. பி. தொ. பா. தோணி 1 பாடல் -3. 88. நூலுள் பார்க்க. 89, GLDGiugi, u srử&s-
90. ஆணுல் காவற் பரண்களிலே தனியே அமைதியாக இருந்துபாடும்போது
கற்பனையுடன் பாடக் கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது.

Page 99
170 மட்டக்களப்பு மாவட்ட.
பின்னணிகளுக்கும் பொருந்தச் சில உவமை, உருவங்கள் இடம் பெற்று வந்துள்ளன.
உழுதல், சூடுமிதித்தல் ஆகியனவற்றிற்குப் பயன்படுத்தப் படும் கடாமாடுகளைச்' செல்லன்”.*செல்லா’ என உயர்திணையாக உருவகித்து (Personification) அன்புடனும் செல்லமாகவும் அழைக்கும் வழக்கம் இவ்விவசாயிகளிடம் காணப்படுகின்றது.91 அஃறிணையை உயர்திணையாக உருவகிப்பதும், உயர்திணையாக்கி அதனுடன் உரையாடுவதும் என்ற இரு நிலைகளையும் இலக்கண் என்பர்.?? அது போன்றே மாடுகளையும் உயர்திணையாக்கிச்
*செல்லன்” என்று பெயரிட்டழைத்து, அவற்றுடன் உரையாடும்'
3- 2
பாவனையிற் “செல்லன்’, ‘செல்லா’ என்ற சொற்கள் அமைந்து வந்துள்ளன'
* மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்’ என்னும் நூற் பதிப்பாசிரியர், “செல்லன்’ என்ற சொல் இங்கு உழவு எருதுகளையும் உழவு எருமைக் கடாக்களையும் குறிக்கின்றது”99 எனக் கூறுவது பொருத்தமற்றதாகும். எருத்து மாடுகளால் உழும் வழக்கம் இப் பிரதேசத்தில் மிகக்குறைவே. எருத்துமாடு களால் உழும்போது ஏர்பாடல்கள் இடம் பெறுவதுமில்லை; அம் மாடுகளைச் **செல்லன்' என்று அழைப்பதும் வழக்கமில்லை. *செல்லன்’ என்ற இலக்கணை வழக்கு கடாமாடுகளுக்கு மட்டுமே உரியதாகும், "செல்லன்’, ‘செல்லா' என்ற பெயர்ச் சொற்கள் அம்மாடுகள்மீது அவர்கள் கொண்டுள்ள அன்பைக் காட்டுவதோடு மட்டுமன்றி, மாடுகளைச் செல்வமாகக்கருதும், பண்டைத்தமிழரின் பண்பாட்டுத் தொடர்ச்சியினையும் குறிப்பிடுவனவாக அமைகின் றன எனக் கூறுதல் சாலும்.
அடுத்ததாக **என்னரசி கண்டே”** "கண்டே’95 எனமாடு களை விளிக்கும் வழக்குகளும் குறிப்பிடத்தக்கன. இச்சொல் லாட்சிகள் தாலாட்டுப் பாடல்களிலும்," காதற் பாடல்களி லும்" பயின்று வருவதும் நினைவு கொள்ள்ம்பாலது. சிட்டுக் குருவிகளின் தோற்றத்தை ஒத்து மாடுகளின் முகம் காணப்படு
91. நூலுள் பார்க்க. 92. ஞானசம்பந்தன், அ. ச., (1964) பக். 191. 93. வித்தியானந்தன், சு. (1960) பக். 79 94. பி.இ. தொ. பா. பொலி 3 ஆம் பாடல். 95. மேலது 4ஆம் 9ஆம் பாடல்கள் 96. நூல் பக்.84-85 பார்க்க, 97. நூலுள் பார்க்க,

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 7
வதால் "சிட்டுப்போல் தலையழகா” என உவமித்துக் கூறப்படு கின்றது.98 சூடுமிதிக்கும் மாடுகள் உற்சாகத்துடன் வேகமாக நடக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவை ‘சின்னிக் குதிரை’99 என உவமித்துப் புகழப்படுகின்றன.
பொலிப் பாடல்களில் மாடுகளை வருணித்துக்கூறுந் தொடர் களும் கவனிக்கப்படவேண்டியனவாகும். ‘உறுதியுள்ள கால்’ (2,3), சந்தனக் கால்' (3), “வாலாட்டும் கொம்பர்’ (3), "முன்னங்கால் வெள்ளை’ (7), "முகம் நிறைஞ்ச சீதேவி’ (7), "பார்வையுள்ள கண்' (7), *வேட்டைக் கிடா நாம்பன்’ (7), வீசு கொம்பன்” “தாமரையன்’ (7), "வட்டத்தலையழகா’ (8), *வடிவானவால் வீச்சு” (8), "வல்லரக்கா’ (8), “சிங்கார நடை யழகா”(8) ஏர்ப்பாடல்களிலும் "உன் உறுதியுள்ள கால்’ (1), *வட்டத்தலையர்', 'வாலாட்டும் கொம்பர்’ (1) என்ற தொடர்கள் மாடுகளுக்கு அடையாக வருவதும் நோக்கற்பாலது.
மாடுகள் வாய்க்காலுட் படுத்துக் கிடக்கும்போது அருகே யுள்ள வரம்புக்கட்டிலே தலையை வைத்துக் கொள்வதால் வரம்பு மாடுகளுக்குத் தலையணையாகப் பயன்படுகின்றது என்பதை சவரம்போ தலகாணி’ 193 (தலையணை) என்ற உருவகத்தொடர் விளக்குகின்றது. நீர் வற்றியபோது வாய்க்கால் சேறுஞ் சகதியு மாகக் காட்சிதரும். அத்தகைய இடத்தைக் கடாமாடுகள் நாடிச் சென்று உறங்குவதால், “வாய்க்காலோ பஞ்சுமெத்தை’ என்று உருவகமாகக் கூறப்படுகின்றது.
மிதிப்புக் காலங்களில் மழை பெய்வதியற்கை. மிதிக்கும் போது மழை பெய்தால், தொழிலாளிக்கு ஆகாயமே குடையா கின்றது. வயலிலே மலர்ந்திருக்கும் மலர்களின் தண்டை வானக் குடையின் தண்டாகக் (காம்பாக) கற்பனை செய்து பாடுவதை "வானம் குடையாக மல்லிகைப்பூத் தண்டாக’’ +91 என்ற தொடர் குறிப்பிடுகின்றது.
* சங்கோ சமுத்திரமோஇ சமுத்திரத்தின் ஆணிமுத்தோ, முத்தோ பவளமோ’*** என்னும் ஐயநிலையுவமைகள் தாலாட்டுப் பாடல்களிலும் 1° பொலிப்பாடலிலும் வருவனவாகும். பொலிப் பாடலில்வரும் இத்தொடர்கள் பூமாதேவித் தாயை உவமித்து
98. பி. இ, தொ, பா. பொலி 8 ஆம் பாடல்; 99, மேலது 1 ஆம் பாடல், 100. மேலது ஏர் 1 ஆம் பாடல் 101. பி. இ, தொ. பா. பொலி பாடல் 6 ஏர் பாடல் 2. 102 மேலது பொலி பாடல் 9 103. JUTá Lä. 80 u rritähis,

Page 100
72 மட்டக்களப்பு மாவட்ட.
நெல் பொலியும் வண்ணம் வேண்டுவதாக அமைந்துள்ளன. இலக்கியத்தரம்"* வாய்ந்தனவாகக் காணப்படும்இத்தொடர்கள் நாட்டார் இலக்கிய நடையிற் பெருவழக்குடையனவாகக் காணப் படுகின்றன.
அடுத்ததாக மீன்பிடிப் பாடல்களில், வலை இழுக்கும்போது பாடப்படும் பாடல்களிலே பழம் (காதலி), 195 தங்கம் (பரத்தை)" என்ற உருவகங்கள் காணப்படுகின்றன. கிண்ணி முலை எனவரும் உறுப்புவமையும்,' மாம்பழச்சிவப்பி எனவரும் வண்ண உவமையும்,19**கிளிபோலக் கதைச்சிடுவாள்’’என்பதிலே தொழிலுவமையும், 99 அமைந்துள்ளன. தோணிதள்ளும்போது பாடப்படும் பாடலில் ‘ராஜகுமாரி", "முத்துக்குமாரி” எனத் தோணி பெண்ணுக உருவகிக்கப்படுகின்றது.19
தலைமைக் கருத்தாய்வு
தொழிற்பாடல்களிற் பயின்றுவந்துள்ள தலைமைக் கருத்துகள் பற்றி ஈண்டு ஆராயப்படுகின்றது. முதலிற் பாடல்களில் வரும் தெய்வங்களின் பெயர்களை நிரைப்படுத்திக்காட்டி, தெய்வ சிந்தனை பெறும் முக்கியத்துவம் விளக்கப்படுகின்றது. அதனை யடுத்து பொலிவைக் குறிப்பிடுஞ் சொற்களை அட்டவணைப்படுத்தி, பொலிவுத்தன்மையைப்பாடும் தலைமைக்கருத்து பொலிப் பாடல்களில் எத்தகைய முக்கியத்துவம் பெறுகின்றது என்பதும் ஆராயப்படுகின்றது. Y\,
தெய்வ சிந்தனை
பிரிவு 1. அம்மா - தாயே, 11 மாதா, 12 பத்தினியாள் - உத்தமியாள் --தாமரையாள், சீதேவியாள் -2 சீதேவி,114 பூமாதேவி -- பூமாதேவித்தாய் -- பூமாதேவி அம்மா;'
பூவே --ச பொன்னின் களமே -- மண்ணின் களமே -- நிறைகளமே, 18 கணபதி - பிள்ளையார் -2
104 Standard literary phrases. 105. மேலது, வலை 2ஆம் பாடல்; 106; மேலது, வலை பாடல் 3. 107. மேலது, 108. மேலது, 109. மேலது, 10. மேலது, தோணி பாடல் 2. 111. பி.இ. தொ.பா. பொலி பாடல்கள் 1, 3, 5-9, 112. மேலது, பாடல் 9;
113, மேலது, பாடல் 7,
114. மேலது, பாடல் 7, 9, 10;
115. மேலது, பாடல் 1, 9;
116. மேலது.

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 1Y3
கரிமுகன் ~ கந்தருக்கு மூத்தவன்," கந்தர் - வேலர் - கதிரைவேலோன்,' ஈசுவரனர் -2 பரமசிவன் ~ முக்கண்ணன் 7- கோணேசர் - சங்கரனர்,119 நாரணனர்,199 நாகம், 19 நற்கருடன், ?? வைரவர்?? இவற்றுடன் மீன்பிடிப்பாடல்களில் இடம் பெறும் தெய்வசிந்தனைப் பகுதிகளும் ஈண்டுக் குறிப்பிடத் தக்கன. 124
பிரிவு 11: சூடுமிதிப்போர் தெய்வசிந்தனையுடனே தொழிற் படுவர். தமக்கு ஈடுபாடுள்ள தெய்வங்களை மனத் திருத்தி நெல்பொலிய வேண்டும் என்ற ஒரே குறிக் கோளே உட்பொருளாகக் கொண்டு, பாடுவதன் மூலம் நெல்பொலியும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் நிலைத்துள்ளது. அந்நம்பிக்கையின் அடிப்படையிற் பொலிப்பாடல்களிலே தெய்வங்கள் போற்றப்படு கின்றன.
மேலே ஆராயப்பட்ட பொலிப்பாடல்களில் 11 வேறுபட்ட பெயர்களால் பெண்தெய்வங் குறிப்பிடப்படுவதையும், அப் பெயர்கள் 71 முறை பாடல்களில் இடம்பெற்றுள்ளமையும் அவ தானிக்கலாம், ஆண்தெய்வங்கள் 14 பெயர்களால் 31 முறை குறிப்பிடப்பட்டுள்ளன. ஆண்தெய்வங்களில் முருகன் பெயரே 16 முறை இடம்பெறுவதோடு 4 ஆம், 5 ஆம் , 9 ஆம் பாடல்களில் முருகன்.வள்ளி திருமணம் பற்றிய செய்திகளும் கூறப்படுகின்றன. பூமியை 4 தடவை விளித்துப் பாடுவதோடு பூமிக்குப் பெண்மைத் தன்மை கொடுத்துப் போற்றுகின்றனர். இவற்றை நோக்கும் போது பொலிப்பாடல்களிலே தெய்வ சிந்த%னயும், பெண்தெய்வ ஈடுபாடும் அதிகமாகக் காணப்படுவதும் தெளிவாகின்றன. கருவளத்தையும், செழிப்பையும் கொடுப்பவள் பெண்தெய்வ மாதலால் நெல் பொலிய வேண்டிப்பாடும் விவசாயி பெண் தெய்வத்துக்கே பொலிப்பாடலில் முக்கியத்துவம் கொடுத் துள்ளான் எனலாம்
117. மேலது, பாடல் 4, 6; 118. மேலது, பாடல் 4, 5, 6, 9; 119, மேலது, பாடல் 2, 4, 8, 9; 120. மேலது, பாடல் 10; 121. மேலது, பாடல் 6:
122. மேலது,
123. மேலது, பாடல் 2: 124, நூல் பக். 165, 167, 168 பார்க்க,

Page 101
174
மட். க்களப்பு மாவட்ட.
இதுபோன்றே மீன்பிடிப்போரது பாடல்களிலும் ஆபத்தைப்
போக்கி,
அதிக இலாபம் கிடைக்கும் பொருட்டுத் தெய்வ
சிந்தனை இடையிடையே இடம்பெறுவதும் நூலிற் குறிப்பிடப் பட்டுள்ளது.*
பொலிவைக் குறிப்பிடுதல் :
பிரிவு 1.
பொலி,148 "பொலிவளர*-- “பொலிக்கும்பல்தான் வளர, 197 ‘கருங்களங்கன்தான் நிரம்ப" - "கருங் களகன் சோதி மின்ன’’,128 களத்தில் பொலிக் கும்பல் தான் நிறைய’12? ‘சந்தனக்கால் பொன் சொரிய’’189 * தரையெல்லாம் சோதி மின்னும்”* 'சந்தனத்தாற் கோலமிட்டு’ - "சாந்தால் தரைமுழுகி’,*** ** பொன்னல் அவுரிகட்டி" - "பொன்னவுரி மேலிருந்து பொலியழகு பார்த்தல்',188 “வாரிக்களம் தேடி வாழுவாளாம் சீதேவி,”** "வாரிக்களம் தேடி வாருளாம் சீதேவி' - "சீதேவியாள் போன இடம் செங்களனிப் பூ பூக்கும்" - “பூமாதேவி கால் பதிக்கப் பூக்குதாம் செங்களனி" - "சீதேவி கால்பதிக்கத் தெருவெல்லாம் பொன்மணியாம்’18*, ** புதன்கிழமை நல்லதினம் பொன்னவுரி கட்டிவைக்க’**
பிரிவு 11. பொலிப் பாடல்களின் உட்பொருள் நெல் பொலிய
125. 126.
127. 28. 129. 130. 131. 132. 133. 134. 135. 136. 137.
வேண்டுமென்பதாகும். அதன்பொருட்டே இறை சிந்தனைப் பாடல்களைப் பாடிப் பயபத்தியுடன் களத்திற் செயற்படுகின்றனர். 197 அவர்கள் கையாளும் சொற் களும் பொலிவுத் தன்மையைக் குறிப்பனவாகவே அமைந்துள்ளன. மேலே வரிசைப்படுத்திக் காட்டப்
நூல் பக். 165 பார்க்க.
பொலிப்பாடல் யாவற்றிலும் "பொலி" என்ற சொல் இடம் பெற் றுள்ளது.
பி. இ , தொ. பா. பொலி பாடல் 1, 3, 9,
மேலது, பாடல் 2, 9;
மேலது, பாடல் 9;
மேலது, பாடல் 3;
மேலது, பாடல் 8;
மேலது.
மேலது, பாடல் 5;
மேலது, பாடல் 9;
மேலது, பாடல் 10;
மேலது
நூலுள் பார்க்க

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 175
பட்டுள்ள சொற்ருெடர்கள் களத்தில் நெல் பொலிய வேண்டும் என்பதைச் சுட்டுவனவாக அமைந்துள்ளன. செல்வத்தைத் தரும் திருமகளைக் கிராமிய மக்கள் **சீதேவி” என்றே கூறுவர். களத்தின் புனிதத் தன்மையைக் கூறி, அப்புனிதமான களத்திலே சீதேவி வாழ்கிருள் என்றும், களத்தைத் தேடி சீதேவி வருகின்ருள் என்றும் கூறப்படுகின்றது. பொலிப்பாடல் களிலே நெல் பொலிய வேண்டும் என்ற வேண்டு கோடற் பொருள் தலைமைக்கருத்தாக அமைதல் குறிப்பிடத் தக்கது.
இணைவிழைச்சித்தன்மை தோன்றப்பாடுதல் :
பொலிப் பாடல்கள் தவிர்ந்த ஏனைய தொழிற்பாடல்களில் இணைவிழைச்சித்தன்மை பாடப்படுதல் முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டியதாகும். மீன்பிடிப்பாடல்களில் இப்பண்பு பெரிதும் இடம் பெற்றுள்ளது. காதற்பாடல்களிலே வரும் இணைவிழைச்சிப் பாடல்களும்** தொழிற்களப் பின்னணியிலே பாடப்படுவன வாகும். இப்பண்பு தொழிற்பாடல்களிற் சிறப்பிடம் பெறு வதற்கும், தொழிலாளர் இத்தகைய பாடல்களை விரும்பிப் பாடு வதற்கும் இப்பாடல்களின் பயன்பாட்டுநிலையும், பாடுவோரின் மனேநிலையும் காரணமாகின்றன.??
தொழிலாளர் தம் வாழ்க்கைப் பிரச்சினை பற்றிப் பாடுதல் :
தொழிலாளர் தம் வாழ்க்கைக் கஷ்டங்களையும், பிரச்சினை களையும் தம் தொழிற்பாடல்களிற் பாடும் வழக்கமுங் குறிப்பிடத் தக்கதாகும். தாம் அனுபவிக்கும் பொருளாதாரக் கஷ்டங் களையுந், தொழிற்கள இன்னல்களையும் பாடுவதை விவசாயத் துடன் தொடர்புடைய பாடல்கள்" விளக்குகின்றன. அது போன்றே மீனவர் “விதிப்பயணுகத் தாம் கஷ்டப்பட்டுழைக்க வேண்டியுள்ளதே’*** எனப்பாடுவதும் நோக்கற்பாலது. உலக நாடுகளிலுள்ள தொழிற்பாடல்களில் இத்தகைய தலைமைக் கருத்து இடம்பெறுதல் பொது இயல்பாகும்.
138. பி. இ., கா. பா. 11ஐ பாடல்கள் 1-32.
139. இதுபற்றிய முழு விளக்கத்தையுந் தொழிற்பாடல்களின் பயன்பாடுபற்றி
ஆராய்ந்திருக்கும் பகுதியிற் காண்க. 140. பி.இ.தொ.பா. காவல்/ பாட* 11, 12, 13. 141, Guosus louool um-60 l: 21-28.

Page 102
176 மட்டக்களிப்பு மாவட்ட. தொழிற்கள வருணனை :
சகல தொழிற்பாடல்களிலும் அவ்வத் தொழில்பற்றியும், தொழிற் களம் பற்றியும் வருணித்துக் கூறும் தன்மையுங் காணப் படுகின்றது. இப்பண்பு தொழிலாளருக்குத் தம்தொழிலில் அவதானத்தைக் கோடுக்கிறது.
வடிவ அமைப்பு
இதுவரையும் தொழிற்பாடல்களின் பொருளமைப்பும், அதனைத் தொடர்ந்து இலக்கியச் சிறப்பும், தலைமைக்கருத்தும் ஆராயப்பட்டன. அவற்றையடுத்து ஈண்டு அப்பாடல்கரின் வடிவ அமைப்பு ஆராயப்படுகின்றது.
தொழிற்பாடல்களின் இசையமைப்பு வாய்ப்பாடு
தொழிற்பாடலின் ஒவ்வொரு பாடல் வகைக்கும் தனித் தனியே இசையமைப்பு வாய்பாடு அமைந்துள்ளது. இசையமைப்பு வாய்பாடுகளைக் கொண்டு பாடல்களை இனங் கண்டு கொள்ளலாம். தொழிலின் தன்மைக்கேற்ப அங்குப்பாடப் படும் இசையமைப்பு வாய்பாடுகளும் வேறுபட்டுக் காணப்படும். அவ்வவ் இசைவாய்பாடுகளுக்கு அமைவாகவே பாடல்களும் ஆக்கம்பெற்றுள்ளன. மாடுசாய்க்குந் தொழிலாளியோ, தண்டு வலிக்கும் வலைஞனே அல்லது எத்தொழிலாளியாயினுஞ்சரி குறிப்பிட்ட தொழிலுக்குப் பொருத்தமான இசையமைப்புத் தொடர்களை முதலிற் பன்முறை பாடியபின்பே, அதற்கியைவான பாடல்களைப் பாடுகின்றமை கள ஆய்வில் அவதானிக்கப்பட்டது. பெர்லிப்பாடலின் இசையமைப்பு வாய்பர்டு
அ - “பொலிபொலி பொலி ஒஒ. பொலி" ஆ. “பொலி பொலி பொலிஅம்மா . பொலி’
இ = 'ஒஒஒ தாயே பொலீஇ. ’’ ஈ - "பொலி தாயே பொலி’
இவ்வாய்பாடுகளின் அடிப்படையிற் பொலிப்பாடல்கள் ஆக்கம் பெற்றிருப்பதைப் பின்னிணைப்பிலே தரப்பட்டுள்ள பாடல்களைநோக்கி அறிக. மாடுகளைச் சாய்ப்பதற்கு ஒசை ஒலியே வேண்டியிருத்தலாற் பொலிப்பாடலின் இசைவாய்பாடு மீண்டும் மீண்டும் உரத்தகுரலில் இசைத்துப் பாடப்படுதலுண்டு. இந்த இசையமைப்பு வாய்பாட்டுக்கு அமைவாகச் சூட்டுக்கள வருணனை, மாட்டு வருணனை, தெய்வ சிந்தனை, நேரவருணனை

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 177
முதலான விடயங்கள் பாடற்பொருளாக வடிவம் பெற்றுள்ளன. பரம்பரை பரம்பரையாக வழங்கிவரும் இவ் இசையமைப்பு வடிவங்கள் அல்லது இசைவாய்பாடுகள் காலத்திற்குக் காலம் பாடுவோரின் தன்மைக்கும் தேவைக்கும் ஏற்பப் புதுப்புதுப் பொருட்கூறுகளை ஏற்று வருதல் இயல்பே. ஆயினும் வரையறுக் கப்பட்ட பழைய இசையமைப்பு வாய்பாட்டின் அடிப்படை யிலேயே பாடல்கள் வடிவம் பெறும் என்பது பொது நியதி 2*1. gjibعuurT
மீன்பிடிப் பாடல்களின் இசையமைப்புவாய்பாடு
மீனவர் பாடல்களில் வரும் இசையமைப்பு வாய்பாடுகள் இங்கே தரப்படுகின்றன.
ஏலேலோ ... ஏலேலோ (பி இ.தொ.பா. | வலை/
Lunt L6iv 1) ஏலேலோ . ஐலசா (மேலது, பாடல் 2) ஏலேலம் . ஏலேலம் (மேலது பாடல் 3) ஏலலோ . . ஏலலோ (மேலது, | தண்டு | பாடல் 1 ) ஏலேஏலே . ஏலேலோ (மேலது, பாடல் 2, 3) ஏல் ஏலம் . ஏல ஏலம் (மேலது, | தோணி | 4) ஏலே . ஏலே (மேலது, பாடல் 1, 2)
மேலே தரப்பட்ட இசைவாய்பாடுகளில் இறுதியில் உள்ளது இசைவேகம் கூடியதாகவும் ஏனையவை ஆறுதலாகப் பாடும் இசையமைப்புடையனவாகவும் காணப்படுகின்றன. இவற்றை விட “ஹய்ஹய் . . ஹய்ஹய்ட், ஹய் . ஹய்', “ஹய்யா ஹய்யா’’ என்ற இசைவாய்பாடுகளும் மீனவர்களாற் பயன் படுத்தப்படுகின்றன. வலைஞர் பாடும் பாடல்கள் அவர்களது செயல்களோடொத்த இசையமைப்புடையனவாகும் L5) חו( வோரது வசதிக்கும் தேவைக்கு மேற்பப் பாடப்படும் பாடல் களில், 14° அவ்வத் தொழிற்களப் பின்னணியும், காலத்திற்குக் காலம் பொருந்தக்கூடிய புதிய சொற்களும் சேர்த்துக் கொள்ளப்
142. New formula 2 are made by putting new wyrds into the old patterns. If they do n it fit they cannot be used, but the patterns are many and their complexity in great, so that there are few new words that can not be poured into them,' Lord, A, B. (1960) P. 43.
143. பி.இ. தொ.பா, வலை இசையமைப்பு வாய்பாடு நோக்குக.
upー12

Page 103
178 மட்டக்களப்பு மாவட்ட.
படுகின்றன.** இசையமைப்பு வாய்பாடு தனித்தனித் தொடர் களாகவே அமைவதாற், பொருள் தொடர்பு அமையப் பாட வேண்டும் என்ற அவசியமில்லை. அங்கு ஒசைஒலியே முக்கிய மானது; அவ்வோசையின் ஒலிநயமே தொழிலாளரை உற்சாகப் படுத்தி, ஒத்து இயங்கச் செய்கிறது.*** எனவே இசையமைப்பின் எளிய தன்மையினுற் பாடல் ஆக்கமும் இலகுவாக அமைவ தோடு, அவற்றின் வடிவமும் குறுகியதாகக் காணப்படுகின்றது. இங்கு ஆராயப்பட்ட ஏனையவகைப் பாடல்கள் கவி மெட்டில் ஆக்கம் பெற்றிருப்பதால் கவிப் பாடலின் வடிவ அமைப்பு:148 இவற்றுக்கும் பொருந்தும்.
தொடர்கள்
தொழிற் பாடல்களின் வடிவ அமைப்புப்பற்றி ஆராயும் போது அப்பாடல்களில்வருந் தொடர்கள், பொருட்கூறுகள் என்பனபற்றியும் நோக்கவேண்டும். இத்தொடர்களும் பொருட் கூறுகளும் பண்டு தொட்டுத் தொழிலாளர்களாற் பயன் படுத்தப் பட்டு வருவனவாகும். தொழிலாளர் தாம் வேண்டியபோது அத்தொடர்களைக் கையாண்டு பாடல்களை ஆக்கியுள்ளனர். கால மாறுபாடுகளுக்கும் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப வேண்டியபோது அவற்றை மாற்றஞ் செய்து வழங்கி வந்திருப்பாரென்பதும் வரலாற்றுக் கண்ணுேட்டத்தில் எதிர்பார்க்கக்கூடியதே. தொழிலிற் கண்ணும் கருத்துமாக ஈடு படுந் தொழிலாளிக்கு இத்தொடர்களும் பொருட்கூறுகளும் தயார்நிலைத் தொடர்களாகப் பயன்பட்டு வந்துள்ளன என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது."
144, Melodies like these are appropriate to particular occupations, and new words are fitted to them from time to time, For the traditional occupations a new tune is seld pm invented. The tune for each occupation has a special name.' Fox Strangways, A.H. (1970) P. 22.
145. In this respect songs of agriculturists and other occupational groups such as fisherfolk especially those songs which have certain meaningless syllables and which have survied even to this day through folkmemory, may have had thier origin in the actual rhythmic morement of the people participating in such activities.'
Singaravelu, S. (1966). P. 47. 146. நூலுள் பார்க்க. 147. 1. ''The task of composition, which is treated with such care
and seriousness, is helped, as in all oral poetry by the existence of formulae of Ready-made phrases with a man is

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 179
பொலிப் பாடல்களில்* அந்தாதித் தொடர் அமைப்புக் காணப்படுகின்றது. சூடுமிதித்தல் நீண்ட நேரம் நடைபெறும் தொழிலாதலால், நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் பாடத்தக்க பாடல்கள் நீளமாக அமைய வேண்டிய தேவை ஏற்படுகின்றது. எனவே பாடல்களை நீண்ட நேரம் பாடத் தக்கதாகவும், நீளமான பாடல்களை மனனம் செய்துகொள்ள வாய்ப்பாகவும் அமையும் வகையில் இப்பாடல்களில் அந்தாதித் தொடர் அமைப்பு இயல் பாகவே அமைவதாயிற்று.
எதுகை மோனை அமைப்பு
தொழிற்பாடல்களின் பயன்பாட்டு அடிப்படையில் இசை யமைப்பு மிக முக்கியத்துவம் பெறுகின்றது. பாடலின் இசையும், ஒலி நயமும் இயக்க சக்தியுடையனவாகக் காணப்படுகின்றன.149 பாடலில் ஒசையும், ஒலிநயமும் ஏற்றவகையில் அமைய ஒத்தாசை புரிவன எதுகை, மோனை என்பது யாப்பியல் மரபு.
நாட்டார் பாடல்களில் மோனையமைப்பே பெரிதுங் காணப் படுகின்றது" என்ற பொதுநியதியைத் தொழிற்பாடல்களும் நிரூபிக்கின்றன. எதுகை அமைப்பு தொழிற்பாடல்களில் மிக அரிதாகவே காணப்படுகின்றது. தாலாட்டுப்பாடல்கள், காதற் பாடல்கள் ஆகியனவற்றில் இடம்பெறும் ஒழுங்கமைதிபெற்ற எதுகை, மோனையமைப்பு தொழிற்பாடல்களில் இடம்பெற வில்லை. தொழில் புரிவோரது சிந்தனை தொழிலிற் படிவதால் எதுகை, மோனையமைப்பில் அவர்களது புலன்கள் ஈடுபடுவதற் குரிய வாய்ப்புகள் அரிதாக இருப்பதனல், இவ்வமைப்பு தொழிற் பாடல்களில் ஏனைய வகைப்பாடல்களிலும் குறைவாகக் காணப்
படுகிறது.
entitled ani even expected to use when he makes a song.' Bowra, C.M. (1962) P 40.
II. 'If the singer knows a ready-made phrase and thinks of it he uses it without hesitation but he has, as we have seen, a method of making phrases when he either does not know one or cannot remember one.' Lord., A.B. (1960) P. 45.
148. பி.இ. தொ.பா. பொலி/ பாடல் 5,6,10.
149. This function is to expedite the labour of production by impor
ting to it a rhythmnical hypnotic character." Thomson, G, (1954) P. 14.
150. நூல் பக், 71 பார்க்க,

Page 104
180 மட்டக்களப்பு மாவட்ட.
திரும்பத் திரும்பவரும் அமைப்பு
தொழிற் பாடல்களிலே சொற்கள், சொற்ருெடர்கள், பொருட் கூறுகள் என்பன திரும்பத்திரும்ப இடம்பெறும் அமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் இடம் பெற்றுள்ளது. பாடலை ஒருவர் முதலிற்பாட, அவரைத் தொடர்ந்து ஏனையோர் அதனையே மீண்டும் பாடுகின்ற தன்மையினுலும், தொழில் முடியும் வரையும் நீண்ட நேரம் பாடவேண்டியிருந்தாலுந் திரும்பத் திரும்பக் கூறும் அமைப்பு பாடல்களில் இடம் பெறுதல் அவசியமாகின்றது. W
பொலிப்பாடல்களில் இசையமைப்பு வாய்பாடு பாடலில் ஒவ்வோரடியின் இறுதியிலோ அல்லது ஒவ்வொரு கண்ணியின் ஈற்றிலோ திரும்பத் திரும்ப இடம்பெற்றுவரும் அமைப்பைக் காணலாம். 81 சில சொற்ருெடர்கள் மீண்டும் மீண்டும் இடம் பெற்றுவரும் அமைப்பும் காணப்படுகிறது. உதாரணமாக "புகழ் பாடுவேனே’182 *வாட்டியிலே’ 58, ** அச் சரமாம்* 154 ** என்னரசி கண்டே’18 5, 'போனஇடம்’ 56, “கால்பதிக்க* 57 * புதன்கிழமை நல்லதினம்’’**8, “பொன்னவுரி’189 முதலான தொடர்களைக் குறிப்பிடலாம்.
தோணி தள்ளுதல், தண்டு வலித்தல், வலை இழுத்தல் ஆகிய தொழில்களைச் செய்யும்போது பாடப்படும் பாடல்களிலும் இப் பண்பு பாடலடிதோறும் அமைந்துள்ளது. இப்பாடல்களில் இடம் பெறும் "ஏலேலோ”, “ஐலசா”, “ஏலேலம்”, “ஏலே’**சலசலா?? *ஏலோ” என்னும் இசையமைப்புத் தொடர்களும் அடிகள் தோறுந் திரும்பத்திரும்பவரும் அமைப்புடையனவாகக் காணப் படுகின்றன. நீண்டநேரம் ஆறுதலாக இசைத்துப் பாடவும் இவ் வமைப்பு வசதியாகின்றது. இரண்டாவது வலை இழுப்புப் பாடலில் “ஏலேலோ', "ஐலசா’’ என்ற இரு தொடர்களும் மாறிமாறி அமைந்துவரும் தன்மை(ஏலேலோ->ஐலசா> ஏலலோ அஐலசா) சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. அதே பாடலில்
151. பி.இ., தொ. பா, பொலிப்பாடல்களைப் பார்க்க. 152. மேலது, பாடல் 1 153, மேலது, பாடல் 2
154. மேலது பாடல் 2 155. மேலது, பாடல் 3
156. CBLD6)gSI, Lu ITL*i) 7 157. மேலது, பாடல் 10. 158. மேலது, 159, மேலது,

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 18t
'நம்பி’ என்ற சொல்லும் இரு வரிகளுக்கொரு முறை திரும்பத் திரும்பவரும் அமைப்பும் சுட்டிக் காட்டப்படவேண்டியதாகும்.
வலைஇழுத்து முடியும்வரையும் பாடவேண்டியிருப்பதாற் பாடிய பாடலையே மீண்டும் மீண்டும் பாடுதல் வழக்கம். அன்றி யுங் குறிப்பிட்ட ஒரு பாடலிற் சில வரிகளையோ, சொற்களையோ, சொற்ருெடர்களையோ திரும்பத் திரும்பக் கூறும் மரபுங் காணப் படுகின்றது. உதாரணமாகத் தண்டு வலிக்கும்போது பாடப் படும் பாடலின் முதற் பாடலினை நோக்கும்போது அதிற் சில சொற்களும், சொற்ருெடர்களும் இசைத்தொடர்களும் வரிகளும் திரும்பத்திரும்ப வந்திருப்பதை அவதானிக்கலாம். அப்பாடலில் 12 ஆம், 13 ஆம், 14 ஆம், 19 ஆம் வரிகள் தவிர்ந்த ஏனைய வரிகள் திரும்பத்திரும்பவரும் வடிவ அமைப்புப் பெற்றுள்ளன. இவ்வடிவ அமைப்பினைவருமாறு குறியீடு அமைத்துக் காட்டலாம்.
குறியீட்டு விளக்கம்
இங்கே கையாளப்படும் *, 1, 0, , I, +, X, +, % ஆகிய ஒன்பது குறியீடுகளும் பாடலில் வரும் ஒரே தன்மைத்தான சொற் களையும் பொருட்டொடர்களையுங் குறித்து காட்டுவனவாக அமைந்துள்ளமையைப் பாடலுடன் ஒப்பிட்டு நோக்குக.
பி.இ.தொ.பா. தண்டு பாடல் -1
பாடல் வரி இலக்கம் பொருள் இசையமைப்பு வாய்பாடு
1 ஆம் வரி ***//// % % % %
2 ஆம் வரி * * * | | | | 3.
3 ஆம் வரி -- - 0 000
4 ஆம் வரி 0 000 s
3 ஆம் வரி --- 0 000 99
6 ஆம் வரி 00 00 9.
7 ஆம் வரி || || || ----000 29
8 ஆம் வரி || || || ---000 99
9 ஆம் வரி ങ്ങ=== 0 0 0 0
ps
10 ஆம் வரி -- 0 0 0 0

Page 105
182 மட்டக்களப்பு மாவட்ட.
11 ஆம் வரி プ 0000 % % % %
13 ஆம் வரி 0 0 9 14 ஆம் வரி 0 0 参萝 15 ஆம் வரி X X X 0 0 99 16 ஆம் வரி 0 0 00 17 ஆம் வரி ×× X 十ー+ + 十 y 18 ஆம் வரி X x X -- - - -- s 19 ஆம் வரி 99
தண்டு வலிப்போரின் பாடல்களிற் குறிப்பாக நான்காம் பாடலிலும்" திரும்பத் திரும்பவரும் அமைப்புச் சிறப்பாக அமைந்துள்ளது. இப்பாடலில் வரும் நங்கூரம் (2 தரம்) தூக்கு (2 தரம்), கெதியா (5 தரம்), இழுடா (2 தரம்) ஒரு மூச்சு (2 தரம்) போகணும் (2 தரம்) இந்தா (2 தரம்) முதலிய சொற்கள் திரும்பத்திரும்ப இடம் பெறும் அமைப்புப் பெற்றுள்ளன.
இயைபமைப்பு
தொழிலாளர் உடல் வருந்திச் செயற்படும்போது பாடும் பாடல்களில் இயைபமைப்புத் தன்மை பெரிதுங்கையாளப் படுதல் கள ஆய்வில் அவதானிக்கப்பட்டது. தோணி தள்ளுதல், தண்டு வலித்தல், வலை இழுத்தல் ஆகிய சந்தர்ப்பங் களில் உடலுக்குப் போதிய உழைப்புக் கொடுக்கப்படுவதாற், சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவதில்லை. அதனலேதான் அந்நெறிப் பாடல்களிற் கதைத்தொடர்போ, அல்லது தொடர் நிகழ்ச்சிகளோ இடம்பெற்றில. அவர்கள் தாம் விரும்பியவற்றையும், தம் கண்ணுக்குப் புலப்பட்ட வற்றையும் பொருளாகக்கொண்டு பாடல்களை ஆக்குகின்றனர். பெரும்பாலும் தொழிற் பாடல்களிற் பொருட்டொடர்பு குறை பட்டுக் காணப்டடுவதற்கு இயைபமைப்புப் பண்பே காரணமா கின்றது. ஒரு தொடரை வைத்துக் கொண்டு தாம் விரும்பிய வாறு இயைத்துப்பாடும் பண்பைப் பின்வரும் உதாரணங்களைக் கொண்டறியலாம்.
160. பி.இ., தொ.பா. தண்டு பாடல் 4,

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 183
இயைபமைப்புத்தொடர் நிலையான தொடர் மாட்டை ஏற்றிப் + புகழ்பாடுவனே சின்னிக்குதிரை எனப் + புகழ்பாடுவேனு ஆசாரிதச்சனைப் + புகழ்பாடுவேன
பொலிதுரத்தும் கொட்டனைப் + புகழ்பாடுவேணு பொலி அளக்கும் கணக்கனைப் + புகழ்பாடுவேன81
தொடர் நிகழ்ச்சியில்லாது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பாடும் மரபும் சிறப்பாகக் காணப்படுகின்றது. உதாரணமாக 8 ஆம் பொலி பாடலில் வரும் முதற் கண்ணியிற் கதிர்களைப் பற்றியும், 2ஆம் கண்ணியிற் சூட்டுக்களம்பற்றியும், 3 ஆம் கண்ணியிற் குடுமிதிக்கும் மாடுகளைப்பற்றியும், 4 ஆம் கண்ணியிற் தெய்வசிந்தனை குறித்தும், 5 முதல் 9 ஆம் கண்ணிகளில் மாடு களைக் குறித்தும், 10 ஆம் கண்ணியில் ஏட்டோலைபற்றியும், 11ஆம் 12ஆம் கண்ணிகளிற் பொழுதுவிடியும் காட்சியும் கூறப் படுவதை நோக்குமிடத்துப் பாடகர் தமக்கு ஏற்ற, நினைவுக்கு வந்த, காட்சிக்குப் புலப்பட்ட விடயங்களைப் பாடுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. 10 ஆம் பொலிப் பாடலில் இயைபமைப்புத் தன்மை சிறப்பாகக் காணப்படுவதை வருமாறு காட்டலாம்:
நிலையான தொடர்கள் இயைபமைப்புத் தொடர்கள் 1. சீதேவியாள் + போன இடம் செங்களனிப்
பூப் பூக்கும்.
2. பூமாதேவி + கால்பதிக்கப் பூக்கும்
செங்களனி.
3. சீதேவி + காலப்பதிக்கத் தெரு
வெல்லாம் பொன்மணி
unt b. 16.
வலை இழுப்போரும், தோணி தள்ளுவோரும், தண்டுவலிப் போரும் தமது முழு வலுவினையும் ஒருங்கே சேர்த்துத் தொழிற் படும்போது அவர்கள் எழுப்பும் முயற்சி ஒலிகள் பாடலோசை யாக அமைந்துவிடுகின்றன. அவர்கள் தாம் என்ன பாடு கின்ருேம், எப்படிப் பாடுகின்றுேம் எனச் சிந்திப்பதில்லை. ஆனற் பழக்க ரீதியாகவும், பயிற்சி வாயிலாகவும் வரும் ஒசைகளும்,
161. பி.இ. தொ.பா. பொலி பாடல்.1. 162. பி.இ. தொ.பா. பொலி பாடல் 10.

Page 106
184 மட்டக்களப்பு மாவட்ட.
சொற்ருெடர்களும் பாடலாக ஆக்கம் பெறுகின்றன.198 எனவே தொழிற்பாடல்களின் ஆக்கத்திற்கு இயைபமைப்புத் தன்மை மிகவும் பயன்படுகின்றது எனலாம்.
விரிபமைப்பு:
நீண்டநேர வேலைகளின்போது பாடல்களைத் தொடர்ந்து பாடவேண்டியிருத்தலாற், பாடல்களை ஆறு த லா கவும் விரிவாகவும் பாடவேண்டியது அவசியமாகின்றது. அதன் பொருட்டுத் தொழிற் பாடல்களில் விரிபமைப்பு இயல்பாகவே அமைந்துவிடுகின்றது. மாலை தொடங்கி விடியும் வரையும் சூடு மிதிக்கும்போது பாடப் படும் பொலிப் பாடலில் இப்பண்பு சிறப் பாக இடம்பெறக் காணலாம். உதாரணமாக 3 ஆம் பொலிப் List L-65Ga), -
*பொழுது விடியுதம்மா பொற்கோழி கூவுதம்மா, பலபலவென்று விடியுதம்மா பால்மாடு கத்து தம்மா; ஆக்காண்டி கத்துதம்மா ஆளரவம் கேட்குதம்மா வண்டும் இரையுதம்மா’,
TGS அதிகாலை நிகழ்ச்சிகள் விரிவு படுத் த ப்ப டு கின்றமை காண்க. 9 ஆம் பொலிப்பாடலில் வரும் துதிப்பாட லிலும் தெய்வங்களின் பெயர்களை அடுக்கி இசைத்துப் பாடுவதும் அதே பாடலின் முதலிரு கண்ணிகளிலும், Fr.G351 சமுத்திரமோ சமுத்திரத்தின் ஆணிமுத்தோ, முத்தோ பவளமோ முதல்தரத்து ஆணிமுத்தோ’ என விரித்துப் பாடியிருப்பதும் ஈண்டு எடுத்துக்காட்டத் தக்கன வாகும்.
முதலாம் ஏர்ப்பாடலின் 2 ஆம், 3 ஆம், 4 ஆம் கண்ணி களிலும், 2 ஆம் ஏர்ப்பாடலின் நான்குமுதல் ஒன்பதுவரையு முள்ள கண்ணிகளிலும் மாடுகளின் நடைவேகம் விரிவுபடுத்திக் கூறப்படும் பண்பு காணப்படுகிறது.
தண்டு வலிக்கும் பாடல்களிலும், வலை இழுக்கும் பாடல் களிலும் பாடல் விரிந்து செல்லும் பண்பு சிறப்பாக அமைந்
163. "As I have said, singers do not know what words and lines are; What is of importance here is not the fact of the exactness or lack of exactness but the constant emphasis by the singer on his role in the tradition.'
Loard, A.B. (1960) P. 28,

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 185
துள்ளது. பல் வேறு விடயங்களைப்பற்றியதாக விரிந்து, நீண்டு செல்லும் விரிபமைப்புத் தன்மைக்கமையத், தண்டு வலிக்கும் பாடல் ஒன்று 118 வரியில் அமைதல் குறிப்பிடத்தக்கது. 194
வரியமைப்பு
தொழிலின் தன்மைக்கமையப் பாடல்களின் நீளமும், ஓசை அமைப்பும் வேறுபட்டுக் காணப்படுதல் போன்றே, அவற்றின் வரியமைப்பும் வேறுபட்ட அளவுகளைக் கொண்டுள்ளது. பொலிப் பாடல்கள், ஏர்ப்பாடல்கள் ஆகிய இருவகைப்பாடல்களும் இரு வரிக் கண்ணிகளால் ஆக்கம் பெற்றுள்ளன. பொலிப்பாடலில் இடம்பெறும் "விருத்தம்’ என்ற பாடற்பகுதி 18 அகவற்பா போன்று பல வரிகளைக் கொண்டுள்ளது. இங்கே ஆராயப்பட்ட தொழிற்பாடல்கள் பொதுவாக நீண்ட இரு சீர் க ளா ல் அமைந்த வரிகளால் ஆக்கம் பெற்றவையாகும். 188 ஆயினும் அவற்றுள் மீன்பிடிப்பாடல்களின் வரியமைப்பு மிகக் குறுகிய இரு சீர்களால் ஆக்கம் பெற்றுள்ளன. 197 தனி ஒரு சொல்லா லான வரிகளைக் கொண்ட மீன்பிடிப்பாடலுமுண்டு. 188 மீன் பிடிப்பாடல்களின் வரிதோறும் இசையமைப்புத் தொடர்கள் இடம் பெறுதல் சிறப்பு அம்சமாகும். பொலிப்பாடல் சில வற்றிலும் இவ்வரியமைப்புக் காணப்படுகிறது. 189 பொதுவாகப் பொலிப்பாடலிலும் ஏர்ப்பாடலிலும் முதலாம் வரியிலோ அல்லது இரண்டாம் வரியிலோ இசையமைப்புத் தொடர் இடம்பெறும் வரியமைப்பு இடம் பெற்றுள்ளது.
வாக்கிய அமைப்பு
தொழிற் பாடல்களின் வாக்கிய அமைப்பினை ஆராயுமிடத்து,
அவற்றில் வினைமுற்றினைக் கொண்டு வாக்கியங்கள் முடிவது
அரிதாகவே காணப்படுகின்றது. வினையெச்ச அமைப்பும், பெயர்த்
164, பி.இ. தொ.பா. தண்டு பாடல்-2,
165. மேலது, பொலி பாடல்-1
166, 'Most of our folk songs are in binary forms, but some are more
elaborate.' Thomson, G. (1954) PP. 18-19.
167. A shanty was in general, of two forms one with two single solo lines and two alternating refrains, and one with a four line verse and a four or more line chorus. The first of these two main types was that used for hauling, the second for heaving although many heaving songs also had a four line pattern. Hugill, Stan, (1961) P. 26.
168. பி.இ. தொ.பா. தண்டு பாடல் 4, |தோணி பாடல் 2.
169, மேலது, பொலி பாடல் 24,

Page 107
186 மட்டக்களப்பு மாவட்ட.
தொடர் விளிகளுமே பெரும்பான்மையாக இடம்பெற் றுள்ளன. 170 பொலிப்பாடல்களின் வாக்கிய அமைப்பினை நோக்கும்போது முதலாம் பாடலின் விருத்தப்பாடல் முறையே ‘வெட்டி, பிணைத்து, பூட்டி, உழுது, விதைத்து, கண்டு, ஏற்றி, இறக்க’ என்னும் வினையெச்சங்களைப் பெற்று, இறுதியில் பொலி (பொலிக) என்ற வியங்கோல் வினைமுற்றைக் கொண்டு முடி கின்றது. அதன் மறுதரு என்ற பாடற்பகுதி தனித்தனி வாக்கிய மாக வினைமுற்றுடன் அமைந்துள்ளது. இரண்டாம் பொலிப் பாடலின் முதன்நான்கு கண்ணிகளும் வினைச்சொல் பெற்றில. இரண்டாம் பாடலின் ஐந்தாம் கண்ணியில் வினைமுற்று இடம் பெருவிடிலும், இசையமைப்பு வாய்பாட்டிலுள்ள "பொலி’ என்ற வியங்கோள் வினைமுற்றைச் சேர்த்துவினைமுற்றுக்கொண்ட வாக்கியமாகக் கொள்ளலாம். பாடலின் ஆருவது கண்ணிவியங் கோள் வினைமுற்ருகவும், ஏழாவது, கண்ணி வினவிடைக் குறிப்பு வாக்கியமாகவும் அமைந்துள்ளன. மூன்ருவது பொலிப் பாடலின் கண்ணி தோறும் (5 ஆம் கண்ணிதவிர்ந்த) "என்னரசி கண்டே ‘ என்ற விளித்தொடர் அமைந்துள்ளது. பாடலின் 1 ஆம், 2ஆம் 3 ஆம், 5ஆம் கண்ணிகளும் வேண்டுகோள்ப் பொருளில் வியங் கோள்வினைமுற்று வாக்கியமாக அமைந்துள்ளன. 6 ஆம், 7 ஆம் 8 ஆம், கண்ணிகளில் இரண்டு வினைமுற்றுகள் இடம் பெறுகின்றன ஆயினும், 4ஆம் கண்ணியில் வினைமுற்றுக் காணப்படவில்லை. நான்காம் பொலிப்பாடலில் 2 ஆம், 4 ஆம் 5 ஆம், 9ஆம் கண்ணி கள் வினையெச்சவாக்கியங்களாக அமைந்துள்ளன. 3ஆம், 6 ஆம், 7 ஆம், 11ஆம், 12 ஆம், 13 ஆம், கண்ணிகள் வினைமுற்றுப் பெற்ற வாக்கியங்களாகும். 5 ஆம், 6 ஆம் கண்ணிகள் இரண்டும் ஒரே வினைமுற்றைக் கொண்ட தொடர்வாக்கியமாக அமைந்துள்ளன.
ஐந்தாம் பொலிப்பாடலின் முதலாம் கண்ணி பெயர்த் தொடர்களாகவும், 2ஆம், 7ஆம், 9ஆம் கண்ணிகள் வினைமுற்று வரும் வாக்கியங்களாகவும், ஏனையவை வினையெச்சத் தொடர் களாகவும் அமைந்துள்ளன. ஆரும் பொலிப்பாடலின் முதல் 5 கண்ணிகளும் வினைமுற்று வரும் வாக்கியங்களாக ஆக்கம் பெற் றுள்ளன. 6 ஆம், 8ஆம் கண்ணிகள் பெயர்த் தொடர்களாகவும் 7 ஆம் கண்ணி வினத் தொடராகவும் ஏனையன வினையெச்சத் தொடர்களாகவும் அமைந்துள்ளன. ஏழாம் பொலிப்பாடலின் 5 ஆம், 10 ஆம், 13 ஆம் கண்ணிகள் பெயர்த்தொடர்களாக அமைய, ஏனைய 9 கண்ணிகளும் வினைமுற்றுப் பெற்ற வாக்கியங் களாக அமைந்துள்ளன. 8 ஆம் பொலிப்பாடலின் 4 ஆம், 5ஆம்
170, சிறப்பாக மீன்பிடிப் பாடல்களில் இவ்வமைப்பைக் காணலாம்.

தொழிற்பாடல்களின் அமைப்பாய்வு 187
11ஆம் 12 ஆம், 13 ஆம், கண்ணிகள் வினைமுற்றுக் GossmrGoT Lவாக்கியங்களாகவும், 1 ஆம், 2 ஆம் கண்ணிகள் வினை எச்சத் தொடர்களாகவும், 9 ஆம் கண்ணி வினத் தொடராகவும் காணப் படுகின்றன. 9ஆம் பொலிப்பாடலின் விருத்தம் வியங்கோள் வினைமுற்றுக்களால் ஆக்கம் பெற்றுள்ளது. அப்பாடலின் முதலிரு கண்ணிகளும் பெயர்த்தொடர்களாக அமைய, 3 ஆம், 4 ஆம், 5 ஆம் 6 ஆம் 7 ஆங் கண்ணிகள் வினைமுற்றுக் கொண்ட வாக்கியங் களாக அமைந்துள்ளன. 8 ஆம் கண்ணி வினை எச்சத்தொடராக அமைந்து ஈற்றில் “பொலி’ என்ற வியங்கோள் வினைமுற்றைப் பெற்றுள்ளது. 10 ஆம் பொலிப்பாடலின் ஒன்பது கண்ணிகளும் வினைமுற்று வாக்கிய அமைப்புப் பெற்றுள்ளன.
பொலிப்பாடல்கள் ஈரடிக் கண்ணிகளின் தொகுதியாகவே ஆக்கம் பெற்றுள்ளன. பொதுவாக ஒவ்வொரு கண்ணியிலும் தனித்தனிப் பொருட்கூறுகள் இடம்பெற்றிருப்பதாற், கண்ணிகள் யாவும் பொருள் தொடர்புடையனவாக அமைந்துள்ளனவா என்று சிந்திக்க வேண்டிய அவசியமே பாடகருக்கு இல்லாது போகின்றது. பாடகர் தாம் விரும்பிய அல்லது அறிந்த விட யத்தை ஒரே கண்ணியில் அமைத்துப் பாடக்கூடியதாகப் பொலிப் பாடலின் வாக்கிய அமைப்பு அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கது
ஏர்ப்பாடலின் முதலாம் பாடலிலுள்ள கண்ணிகளில் 1 ஆம் 5 ஆம் 9 ஆம் கண்ணிகள் பெயர்த்தொடர்களாகவும், ஏனைய கண்ணிகள் வினைமுற்று வாக்கியங்களாகவும் அமைந்துள்ளன. 2 ஆம் பாடலின் 1 ஆம் 12 ஆம் கண்ணிகள் பெயர்த்தொடர் களாக அமைய ஏனையன வினை முற்று வாக்கியங்களாகும். ஏற்றப்பாடலின் 40 வரிகளிலும் தனித்தனி வினைமுற்றுகள், வினையெச்சங்கள் என்பவற்றைக் கொண்ட பல வாக்கிய அமைப்புகள் காணப்படுகின்றன. விவசாயத்துடன் தொடர் புடைய ஏனைய தொழிற்பாடல்கள் நான்கடியான் அமைந்த தனித்தனிப் பாடல்களாகும். அவை பெரும்பாலும் தனித்தனி வாக்கியமாகவே அமைந்துள்ளன.
மீன்பிடிப்பாடல்கள் பொதுவாக தனித்தனித் தொடர் களாலான வரிகளால் ஆக்கம் பெற்றமையாற், பலவரிகளைக் கொண்டதாக வாக்கியங்கள் அமைந்துள்ளன. முதலாவது வலை இழுப்புப் பாடல் உரையாடும் பாணியில், ஒருவர் நிகழ்ச்சிகளை ஏனையோருக்குக் கூறுவதுபோன்ற வாக்கிய அமைப்புக் காணப் படுகிறது. இரண்டாவது வலை இழுப்புப் பாடலின் முதன்மூன்று வரிகளும் தோன்ரு எழுவாய் கொண்ட வினைமுற்று வாக்கியங்

Page 108
88 மட்டக்களப்பு மாவட்ட.
களாக அமைந்துள்ளன. 'மண்ணை நம்பி’ என்ற தொடர் முதல் *பழத்தை நம்பி நானிருக்கேன்” என்ற தொடர்வரையுமுள்ள வரிகள் வினையெச்சங்களைக் கொண்ட சங்கிலித்தொடர் வாக்கிய மாக அமைந்துள்ளன. அடுத்து வரும் ஆறுவரிகளும் மூன்று தனிவாக்கியங்களாகும். மூன்ருவது வலை இழுப்புப் பாடலில் முதன் மூன்றுவரிகளும், ஈற்றிலுள்ள 25 ஆம் வரிமுதல் 28 ஆம் வரிவரையுள்ள வரிகளும் பெயர்த்தொடர்களாக அமைந் துள்ளன. பாடலின் ஏனையவரிகளில் இருவரிகள் சேர்ந்து வினைமுற்று வாக்கியங்களாக ஆக்கம் பெற்றுள்ளன.
தண்டு வலிக்கும்போது பாடப்படும் பாடல்களில் 1 ஆம் பாடலின் ஒவ்வோரடியும் தனித்தனி வினைமுற்று வாக்கியமாக அமைந்துள்ளன. இரண்டாம் வலை இழுப்புப்பாடலின் 118 வரி களும் பெரும்பாலும் தனித்தனிப் பெயர்த்தொடர்களாகவே அமைந்துள்ளன. இடையிடையே வினையெச்சத்தொடர்கள் இடம்பெற்றுள்ளன. இதுபோன்றே மூன்ரும் பாடல் அமைந் தாலும் அப்பாடலில் வினைமுற்று வாக்கிய அமைப்புங் காணப்படு கின்றது. நான்காம் பாடலில் ஏவல் வினைத்தொடர்கள் இடம் பெற்றுள்ளன.
தோணி தள்ளும் போது பாடும் மூன்று பாடல்களிலும் வாக்கிய அமைப்பை நோக்கும்போது அவை பெயர்த்தொடர் களாகவே அமைந்துள்ளன. முதலாம் பாடலில் வினைத்தொடர் களும், மூன்ரும் பாடலில் வினையெச்சத்தொடர்களும் அமைந் துள்ளனவெனினும் இப்பாடல்களில் வினைமுற்று இடம்பெருமை குறிப்பிடற்பாலது.

Susio-V காதற்பாடல்களின் அமைப்பாய்வு
காதற்பாடல்கள்
காதல் வழிநின்ற கிராமிய ஆடவர் அரிவையரது உள்ளார்ந்த காதலுணர்ச்சி சொல்லோவியமாக வெளிப்படும்போது, அது காதற்பாடல்களாகத் தோற்றம் பெறுகின்றது. கொடுப்போரும் ஏற்போருமின்றி காதலர் தாமே நேரிற் சந்தித்துக்? காதல்புரியும் செய்திகள் சங்க அகத்திணைப்பாடல்களிலும், நாட்டார் காதற் கவிகளிலுங் காணப்படுகின்றன. சங்க அகத்திணைப் பாடல்களில் இடம்பெறும் தோழி, செவிலி, பாங்கன் ஆகியோருக்கு நாட்டார் காதற்பாடல்களில் இடமில்லை. தலைவனும், தலைவியும் அவரவர் பாங்கன், தோழி, செவிலி ஆகியோரின் அறிவுரைகளையும், ஆதரவையும் பெற்றுக் காதல் புரிந்த செய்திகளையே சங்க அகத்திணைப் பாடல்களும், கோவை இலக்கியங்களும் கூறுகின்றன. யாரும் அறியாவண்ணம் காதலனுங் காதலியும் பகலிலோ இரவிலோ சந்தித்து உரையாடி வந்துள்ளமையை நாட்டார் பாடல்கள் குறிப்பிடுகின்றன. தொழிற்களத்திலோ தண்ணீர் மொள்ளுவதற்குப் போகுமிடத்திலோ, பெற்ருேர் வீட்டில் இல்லாதவேளையிலோ வேலிமறைவிலோ காதலர் சந்தித்து வந்ததாக நாட்டார் பாடல்கள் கூறுகின்றன. ஆனற் சங்கப் பாடல்களிலே தலைவனையுந் தலைவியையுங் குறிப்பிட்ட இல இடங்களிற் சந்திக்க வைத்தது சங்ககாலப் புலநெறிவழக்கு,3 சங்க அகத்திணைப் பாடல்களிலே தலைவி கூற்று அதிகமாக இடம் பெறவில்லை. தலைவி, தலைவனுக்குக் கூற வேண்டிய விடயங்களைச் சில வேளைகளிலே தோழியே கூறுவாள். நாட்டார் காதற்பாடல் களிற் காதலனுங் காதலியும் தமது பிரச்சினைகளையும் உணர்ச்ஓ களையும் தாமே ஒருவர்க்கொருவர் நேரில் உளம்விட்டுக் கூறுத் தன்மை காணப்படுகின்றது.
நாட்டார் காதற்பாடல்களுக்கும் சங்க அகத்திணைப்பாடல் களுக்கும் பொருள்மரபில் பெரிதும் ஒற்றுமை காணப்படுகிறது.
1. “நேர் இறை முன்கைபற்றி நூமர்தர
நாடறி நன்மண மயர்க”. குறிஞ்சிப்பாட்டு வரி: 231-232.
2. "யாயும் ஞாயும் யாராகியரோ ...” குறுந்: பாடல் 40.
3. மாணிக்கம், வ. சுப. (1962) பக். 413.414

Page 109
90 மட்டக்களப்பு மாவட்ட.
இதுபற்றித் தமிழண்ணல்" கூறும் கருத்தை ஈண்டு மேற்கோளாகத் தருதல் பொருத்தமானது:
“தமிழ் இலக்கியத்தின் பல மரபுகளை ஆராய்ந்தறி வதற்கு மட்டுமன்று, அவ்விலக்கியப்பகுதிகளைப் புரிந்து கொள்வதற்கும் சுவைப்பதற்கும்கூட நாட்டுப்பாடற் பயிற்சி பெருந்துணை புரியும் என்பதை நம்மிற் பலர் தெளிவாக உணர வேண்டும்.”
நாட்டார் காதற்பாடல்கள் பெரும்பாலும் காதலன் + காதலி, கணவன் + மனைவி, ஆகியோரது கூற்ருகவும், ஊரார் அலர்மொழிப்பாடல்களாகவும் அமைந்துள்ளன. தலைவனை விரைவில் மணம் செய்யத்தூண்டும் பொறுப்பைத் தோழி, செவிலி ஆகியோரிடம் சங்க இலக்கியம் ஒப்படைக்க, நாட்டார் காதற்பாடல்களிற் காதலியே அதனைக் கூறுபவளாகக் காணப்படு கின்ருள்." காதல் கைகூடாத காதலர் ஒருவரை ஒருவர் ஏசிப் பேசும் பாடல்களும், காதலரது நகைமொழிகளும், கற்பைப் பேணும் தற்காப்பு மொழிகளும், பெண்களை வீண்வம்புக்கழைக் கும் ஆடவரது இணைவிழைச்சிப்பாடல்களும்,? நாட்டார் காதற் பாடல்களின் தனித்துவத்தைக் காட்டுவனவாகும்.
மனிதனின் அடிப்படை உணர்ச்சிகளிற் காதலுணர்ச்சியும் முக்கியமானதொன்று. மனிதவளர்ச்சிநெறியிற் காதலுணர்ச்சி தோன்றுவதியல்பே. அவ்வியற்கைநெறிக்கு உயிர்வர்க்கம் அனைத்தும் உட்படுவதோடு, உயிர்களின் பெருக்கத்திற்கும் இயக்கத்திற்கும் இவ்வுணர்ச்சியே அடிப்படையாக அமைகின்றது. மனிதன் தன் காதலுணர்ச்சியைச் சைகை, செயல், பேச்சு, பாடல் ஆகியமுறைகளிற் புலப்படுத்துகிறன். பண்டைத்தமிழ் மக்கள் பண்பட்ட முறையிற் காதல் வாழ்வு வாழ்ந்தனர் என்பதைச் சங்க அகத்திணைச் செய்யுள்களும் தொல்காப்பிய அகத்திணைச் சூத்திரங்களும் எடுத்தியம்புகின்றன. இயற்கைநெறியில் வாழ்வு கண்ட சங்ககால மக்களின் காதல் உணர்ச்சிகளையும் செயல்களை யும் வரையறுக்கப்பட்ட சில மரபுகளுக்கமையவே பாடவேண்டி யிருந்தமையால் இயல்பாக நிகழக்கூடிய பல்வேறுபட்ட காத லுணர்ச்சிகளையும் நிகழ்ச்சிகளையும் சங்கப்புலவர்களாற் சித்திரிக்க
4. தமிழண்ணல் (1960) பக். 17 5. 7.3., asT. LI T... l la- u FTLio 1-10; 6. மேலது, 13
7. மேலது, 1ஏ!
8. மேலது, !1எ!
9.
|al.9). 35.T. uist. 1129||

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 19
இயலாது போயிற்று. ஆதலினற் சங்க அகத்திணைக் காதற்பாடல் களைவிட நாட்டார் காதற்பாடல்களிலே காதலுணர்ச்சி மனித இயல்புகளோடு இணைந்ததாகக் காணப்படுதல் இயல்பாயிற்று.
உண்மைப்பாடல்களும் பாவனைப்பாடல்களும்
மட்டக்களப்பு மாவட்ட நாட்டார் காதற்பாடல்களை ஆராயும்போது, இப்பாடல்கள் உண்மையாகக் காதலர்களாற் பாடப்படுகின்றனவா அன்றிப் பாவனையடிப்படையிற் காதல ரல்லாத ஏனையோராற் பாடப்படுகின்றனவா என்ற ஐயம் கள ஆய்வாளருக்குத் தோன்றும். கள ஆய்வின்போது பாடுநரையும் அறிவிப்பாளர்களையும் விசாரித்தறிந்தவரையிலும், காதற்கவி களின் பொருளமைப்பு அடிப்படையிலும் சில உண்மைகளைத் திடமாகக் கூறக்கூடியதாயுள்ளன. பண்டைச் சமுதாய அமைப்புக் கமையக் காதலனும் காதலியும் சந்தித்து உறவாடி மகிழ்ந்தனர் என்பதும், அவர்களது வாழ்க்கைநெறியிற் காதற்பாடல்கள் பயன்பட்டிருக்கின்றன என்பதும், காலப்போக்கிற் சமுதாய வளர்ச்சி, சூழ்நிலைமாற்றம், அறிவுவளர்ச்சி முதலிய காரணங் களாற் காதற்பாடல்கள் இவற்றின் உண்மையான பயன் பாட்டைப் பெருதுபோயின என்பதும், முன்பு காதல் வாழ்க்கைப் பின்னணியிற் பாடப்பட்ட பாடல்கள் வாய்மொழி மரபிற் பேணப்பட்டு பரம்பரை பரம்பரையாக வழங்கிவந்துள் ளன என்பதும், தேவைக்கும் பாடுவோருக்கும். கேட்போருக்கும் ஏற்ப இவை தொழிற்களப் பாடல்களாகவும் பொழுதுபோக்குப் பாடல்களாகவும் பாடப்படும் நிலையையடைவதாயின என்பதும் பெறப்படுகின்றன.
கள ஆய்விலீடுபட்டு இப்பாடல்களை யார், எப்போது, எத் தகைய சூழ்நிலையில், எவ்வாறு பாடுகின்றனர் என்ற வினக்களுக்கு விடைகாணும்போது இப்பாடல்கள் உண்மையாகக் காதலர் களினற்றன் பாடப்படுகின்றனவா அல்லது பாவனையடிப் படையிற் பாடப்படுகின்றனவா என்ற உண்மை புலப்படும். கள ஆய்வுச் சான்றுகளையும், பாடல்கள் பயன்படும் முறையினையும் பொறுத்தமட்டிற் காதலர் தம் கருத்துக்களை வெளியிடக் காதற் பாடல்களைக் கருவியாகத் தற்போது பயன்படுத்தவில்லை என்ற உண்மை அறியப்படுவதாயிற்று. இங்குக் கிடைக்கும் காதற் பாடல்கள் ‘பாவனை' " அடிப்படையிற் பயன்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
10. நூலின் 157 ஆம் பக்கத்தில், 45ஆம் குறிப்புப் பார்க்க.

Page 110
192 LDLL-di és 6ltüL| LDToul-l-...
Lim636umử :
காதற்பாடலைப் பாடுவதிலும் பாடுவதைக் கேட்பதிலும் யாவரும் ஆர்வமுடையவர்களாகவே காணப்படுகின்றனர் என்ப தைக் கள ஆய்வில் அறியக்கூடியதாக இருந்தது. பொதுவாகக் காதற்கவிகளை ஆண்களே பாவனை முறையிற் பாடுகின்றனர். வயற்களங்களில் (உப்பட்டி கட்டும்போது) ஆண்களுடன் பெண் களும் தொழில் புரியும்போது இருபாலாரும் சேர்ந்து வாதுகவி' பாடும் வழக்குண்டு. ஆயினும் அவ்வாறு சேர்ந்து கவிபாடும் வழக்கத்தை இங்கு வேறு சந்தர்ப்பங்களிற் காணமுடியாது.
தொழிற்களங்களிலோ, வண்டிற் பயணத்திலோ அல்லது தனிமையிலோ காதற் கவிகளைப் பாடும்போது, பாடுவோரது சுய உணர்வுகளும் சிந்தனைகளும் ப்ாடலிற் கலந்தே காணப்படும், வண்டில் ஒட்டிச்செல்வோர் இரவு நேரங்களில் நித்திரை விழிப்புக் காகவும், பொழுது போக்கிற்காகவும் காதற்கவிகளைப் பாடுவர். இப்பாடல்கள் பாவனை ரீதியிற் பாடப்படுவதுடன், இவற்றில் இணைவிழைச்சித்தன்மையை அதிகமாகச் சேர்த்துக் கொள் கின்றனர், வண்டிற் பயணப்பாதை பெண்கள் சஞ்சாரமற்ற தாகவும், இரவு வேளையாகவும் இருப்பதனல் அவர்களது பாடல் களில் இணைவிழைச்சித்தன்மை அதிகமாகக் கலந்து விடுகிறது.? வண்டிற்பயணத்தின்போது உடன்செல்வோர் அனேகமாக நண்பர்களாகவும், சமவயதினர்களாகவும் இருப்பதால் அத்தகைய பாடல்களைப் பாடி மகிழ்வதில் ஆர்வமுடையோராகக் காணப் படுவதைக் கள ஆய்வு உணர்த்திற்று.
பெண்கள் வீட்டிலிருந்து பாய் இழைத்தல், கிடுகு இழைத்தல்? முதலிய வேலைகளைச் செய்யும்போதும், வயற் களத்திற் கதிர்பொறுக்கும் போதும் காதற்கவிகளைப் பாடும் மரபு இவர்களிடம் உண்டெனினும், நடைமுறையில் பாவனைரீதியில் ஆண்களிடமே இப்பாடல்கள் பெரிதும் பயன்பாடுடையனவாக வழங்குகின்றன.
கேட்போர் :
காதற்பாடல்கள் உண்மையான முறையிற் பாடப்படும்போது காதலன், காதலி ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் பாடலைக்
11. வாதுகவி பாடும்போது ஆண்கள் பாடுவதை “ஆண்கல" என்றும் பெண்
கள் பாடுவதைப் “பெண்கலை” என்றும் கூறுவர். வாதுகவிபற்றி நூலின் 157 ஆம் பக்கத்தில், 46 ஆம் குறிப்பிற் கூறியனவற்றையும் நோக்குக.
12. Fox Strangways, A.H. (1970). P. 45. 13. யாழ்ப்பாணத்திற் கிடுகு பின்னுதல் என்றே கூறுவர்.

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 193
கேட்போராக அமைவர். தனிமையில் இருவரும் பாடும்போது கருத்து ரீதியாக ஒருவருக்கொருவர்கேட்போராகப் பாவனைசெய் யப்படுகின்றனர். பாவனைமுறையிலே தொழிற்களப் பின்னணி யிலும் பொழுதுபோக்கு வேளைகளிலும் காதற்பாடல் பாடப் படும்போது கேட்போராக அமைவோர் உடன்வேலை செய்பவர் களும், உடன்பொழுது போக்குபவர்களுமாவர். தொழிற்களங் களில் ஒருவர் கவிபாட அத%னக் கேட்டுக்கொண்டிருக்கும் அயலவர் அக்கவிகளுக்குப் பதிலாக மாற்றுக்கவி (வாதுகவி) பாடுவர். உதாரணமாக மாட்டுவண்டில்களிற் பாரமேற்றிப் பயணஞ்செய்யும்போது முதல் வண்டிற்காரன் ஒரு கவியைப்பாட, அதற்குப் பதிலாக அடுத்த வண்டிற்காரன் பாடுவான். இவ்வாருக ஒவ்வொருவரும் மாறிமாறிப் பாடும்போது உடன்பயணஞ் செய் வோரே கேட்போராக அமைகின்றனர். கேட்போரின் குணங் களுக்கேற்பப் பாடற்பொருளும், உணர்ச்சிவேகமும் வேறுபட்டுக் காணப்படும்.
ஆண்களும் பெண்களும் சேர்ந்து தொழில்புரியும் வேளையிற் பெண்களை நகைசெய்யும் வகையிலே வினவும் விடையுமாக ஆண்கள் பாடும்போது அங்கு பெண்களே கேட்போராகின்றனர். அச்சந்தர்ப்பங்களிற் பரத்த மை ஒழுக்கவிடயங்களே பொருளாவ தையும், பாடல்கள் உண்மை நிகழ்ச்சிகளையே சித்திரிப்பதையும் கள ஆய்வின் மூலம் அறியக் கூடியதாக இருந்தது.
பொருளமைப்பாய்வு
கள ஆய்வின்மூலம் சேகரித்த காதற் பாடல்கள அவற்றின் பொருள் ஒருமைப்பாடு நோக்கி முறையே காதலர் உரையாடும் பாடல்கள், காதலரது பிரிவாற்றமைப் பாடல்கள், காதலிலே தோல்வியுற்றேரது வேதனைப் பாடல்கள், குடும்பவாழ்க்கைப் பாடல்கள் என நான்கு பெரும் பிரிவுகளாகவும், அவை மேலும் பல உபபிரிவுகளாகவும் பகுக்கப்பட்டு அவற்றின் பொருளமைப்பு ஈண்டு ஆராயப்படுகின்றது. *
/11 காதலர் உரையாடும் பாடல்கள். |1அ/ காதலர் நலம்புனைந்துரைக்கும் பாடல்கள்?
காதலர் இருவரும் ஒருவரை ஒருவர் நலம்புனைந்துரைப்பதாக இப்பிரிவில் வரும் பாடல்கள் அமைந்துள்ளன. காதலனை மாம்
14. பின்னிணைப்பு CXVI-CLXIXகாதற் பாடல்கள் யாவும் பெரும்பி விவு,
உபபிரிவு அடிப்படையிலே தரப்பட்டுள்ளமை நோக்குக. 15. 19.9., & T. UT. 1.9l UITLs).5 sit 1-24.
LD ——13

Page 111
194 LDL-l-š56mru'ÒL LIDIT GJILL
பழம், ஏலம், கராம்பு என உவமித்து விளித்து, அவனது மான் கொம்பு போன்ற மீசையையும், உடல்தோற்ற அழகினையும் காதலி புகழ்ந்து டாடுவதாக முதலிருபாடல்களும் அமைந் துள்ளன. தொடர்ந்துவரும் ஏனைய பாடல்களிற் காதலன், காதலியின் நடை, உடை, உடல்தோற்றம், பேச்சு ஆகியன வற்றினை நலம்புனைந்துரைப்பதாகப் பாடப்பட்டுள்ளன. 19 வாடாதபூ, செண்பகம் எனப் பலவாழுகக் காதலி வருணிக்கப் படுகிருள். காதலியின் முல்லைச் சிரிப்பும், 17 வல்லிபோன்ற இடையும், ஆலம் விழுது போன்ற கூந்தலும், கொண்டை அழகும், எழில் வாயும் காதலனல் விதந்து புகழப்படுகின்றன. இவ்வாறு புகழ்ந்து பாடுவதற்கு உவமை உருவகங்கள் அவர் களுக்குத் துணையாகின்றன." இப்பாடல்களிற் பயின்று வரும் தேன், திரவியம்,*" அமுது, முத்து, மாதாளை, மான், என்னும் உவமைகள் தாலாட்டுப் பாடல்களிலும் பயின்றுவந்துள்ளன.? 'ஒசைக்குரல்" (4) ** என்னுந் தொடராற் காதலியின் குரலினிமை வருணிக்கப்படுகிறது. காலி என்ற இடத்தில் விளைந்த சிறந்த தரமுடைய பாக்கையும், களுதாவளை என்ற இடத்து வெற்றிலை யையும், ஏலம், கராம்புடன் சேர்த்துத் தாம்பூலந் தரிக் கும் போது தனிச்சுவையும், வாய்க்கு அழகும் ஏற்படுகின்றன. அவ் வாருன தாம்பூலந்தரித்துச் சிவப்படைந்த காதலியின் வாயழகு (6) காதலனுல் நயந்துரைக்கப்படுகின்றது. செந்நிறச் சேலைகட்டி யுள்ள தன் காதலியின் மார்பகம் சிவந்த மிளகாயின் தோற்றம் போன்றும், கோழியின் கொண்டை போல் நிமிர்ந்தும் காணப்படு வதாகக் கூறப்படுகிறது. காதலியின் ‘முகஇலட்சுமிகரம்" காதலனல் விதந்துரைக்கப்படுகின்றது.
கிராமியப் பெண்கள் பொதுக்கிணறு, ஆறுமுதலிய நீர்நிலை களுக்குச் சென்று நீராடிக்குடத்தில் நீர்மொண்டுவருவதும், அவர் களின் காதலர்கள் அவர்களை வழியிற் சந்தித்துக் காதல்மொழி பேசுவதும் இயல்பே. அவ்வாறு தண்ணீர் மொள்ளப்போகும் பெண்களின் அழகையும் தண்ணிர்க் குடத்தின் தன்மையையும்
16. இப்பாடல்கள் கோவை இலக்கியங்களில் வரும் நலம் புனைந்துரைத்தல்
என்ற பாடற்பகுதிகளுடன் ஒப்பிடத்தகுந்தவை. 17. பாரதியார்பாடல், கண்ணம்மா என்குழந்தை பாடல் 8 பார்க்க. 18. **வல்லியினுெல்கி..? திருக்கோவையார், பாடல்.1. ܫܝ 19. காதற்பாடல்களிற் கையாளப்படும் உவமை, உருவகங்கள் பற்றிய விரிவான
ஆய்வை, பின்னுல்காண்க. 20. "பேடே திரவியமே "பாரதியார்.குயிற்பாடல் வரி.8. 21. நூல் பக். 80-81பார்க்க. 22. இவ்வாறு அடைப்புக்குறிக்குள் வரும் இலக்கங்கள் குறிப்பிடப்பட்ட பாடற்
பிரிவின் பாடல் இலக்சத்தைக் குறித்தல் நோக்குக.

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 195
வருணித்துக் "கொஞ்சம் தண்ணிதா கண்மணியே”** என்று பாடும் வகையில் அமைந்துள்ளபாடல்களும் (18-22) காதலன் காதலியை நலம்புனைந்துரைப்பதாகவே அமைந்துள்ள்ன. தண்ணீர்க்குடம் எடுத்துச்செல்லும் பெண்ணின் அழகும் (18), அவள் அணிந்துள்ள சட்டையின் கவர்ச்சியும் (19). காதலனல் வருணிக்கப்படுகின்றன. தன் காதலியைக் கிளியாக உவமித்து அவள் தண்ணீர்மொள்ளும் தன்மை 22 ஆம் 23 ஆம் பாடல்களிற் கூறப்படுகின்றன. காதலனின் வினவுக்குக் காதலியின் விடையாக 23 ஆம் 24 ஆம் பாடல்கள் அமைந்துள்ளன. இவ்வாருகக் காதலர் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பாடும் பாடல்கள் நயம் செறிந்தனவாகவும், இயற்கையோ டொட்டிய உவமைகளைக் கொண்டனவாகவும் அமைந்துள்ளன.
11.ஆ/ காதலர் தமது பிரச்சினைகள்பற்றிக் கூறும் பாடல்கள்?
காதலன் காதலியின் அழகிலும், இன்ப நாட்டத்திலுமே அதிக அக்கறைகொள்ள, காதலியோ காதலை வற்புறுத்தித் திருமணத்தை முடிப்பதிற் கண்ணுக இருப்பாள். அவ்வகையிற் பெண் கூற்ருக வரும் (1-9, , 27, 29, 30) பாடல்கள் காதலி தனது தனிமையையும், தான்படுங் கஷ்டங்களையும் காதலனுக்குக் கூறி, விரைவில் மணம் முடிக்கத் தூண்டுவனவாக அமைந்துள்ளன. தனிமையிலிருந்து கஷ்டப்படுவதிலும் உடன்போக்குக்குத் தான் தயாராக இருப்பதாகவும், விதியின் வசத்தால் எதுவுஞ் செய்ய முடியாதிருக்கின்றது எனவும் கூறுகிருள் ஒருகாதலி (2), காதலன் தன்னைச் சந்திக்க வருவதைக் குறைத்துக் கொண்டமையால், அவனது கால் தடத்தையே ஒட்டால் மூடிவைத்து, அதனைத் தினமும் பார்த்து ஆறுதல் அடைவதாக ஒருத்தி கூறுகிருள் (5).28 காதலனுடன் உரையாட நீண்ட நாட்களாகக் காத்திருந்தமை யையும் (6), தனிமையிலேதினமும் அழுது பொழுது போக்கு வதையும் (7.9) எடுத்துக்கூறி இக்கஷ்டநிலைகளிலிருந்து விடுதலை பெறத் தனக்கு “நல்லசெய்தி” கூறும்படி கேட்பதாகவும் (10) பாடல் அமைகிறது.
காதலியின் பெற்றேர், உற்றேர் ஆகியோரது நடத்தைகளைக் குறிப்பிடுவனவாக 11 ஆம் 12 ஆம் பாடல்கள் அமைந்துள்ளன. காதலன் காதலியின் வீட்டுக்குச் சென்றபோது காதலி அவனுடன் உரையாடாமையைக் குறையாகக்கொண்டு, அடுத்தநாட் சந்திப்
23. கலி, குறிஞ்சிக்கலி 15 ஆம் பாடல் பார்க்க, 24. பி.இ., கா,பா. 11ஆ பாடல்கள் 1.31. 25. கலிங்கத்துப்பரணி 47 ஆம் பாடலுடன் ஒப்புநோக்குக,

Page 112
196 மட்டக்களப்பு மாவட்ட.
பில் அதனைக் காதலியிடம் கூறுகிருன் ஒரு காதலன் (13). திருமணஞ் செய்வதற்காகத் தான் பல நாட்கள் காத்திருப்பதாகவும்(14) இன்னுஞ்சில நாட்கள் பொருத்திருக்கும்படிக் காதலர் ஒருவர்க் கொருவர் கூறிக்கொள்வதாகவும் (15, 16) பாடல்கள் அமைந் துள்ளன. காதலி தன் காதலைப் பிறர் அறியாதவாறு மறைபொரு ளாக வைத்திருப்பதிற் கண்ணுங்கருத்துமாக இருக்கிருள் (17) என் பதும் பாடலிற் குறிப்பிடப்படுகின்றது. தன் காதலன் அயலூரில் வாழ்வதை விரும்பாத ஒருத்தி, அதனை அவனுக்கு உவமையினுர டாக வற்புறுத்திக் கூறுவது (18) இலக்கிய நயம் வாய்ந்ததாகும்.
காதலர் தாம் குறிப்பிட்டவாறு இரவுக்குறியிலோ, பகற்குறி யிலோ சந்திக்கமுடியாது போனமைக்குரிய காரணங்களைக் கூறி, அதனல் அவர்கள் பட்ட அல்லல்களையும் எடுத்துரைப்பதாக சில பாடல்கள் (19-24) அமைந்துள்ளன. எதிர்பாராத விதமாக வீட்டிற்கு உறவினர் வருவதாலும், வெளியே சென்ற பெற்றேர் திடீரென வீட்டுக்கு வர நேரிடுவதாலும், காதலி தான் நினைத்த வாறு காதலனைச் சந்திப்பது அரிதாகின்றது. பெண்ணின் செய லிலும் நடமாட்டத்திலும், பெற்றேர் ஐயங்கொண்டு அவளது செயல்களைக் கண்காணிப்பதன் மூலம் அவளுக்கு வீட்டிற் பாது காப்புக் கடுமையாகின்றது. எதிர்பாராத விதமாக அவ்வாறு நிகழ்வதாற் காதலனை வரச்சொன்ன காதலிக்குப் பெரிய ஏமாற் றமும் பதற்றமும் ஏற்படுகின்றன. அடுத்த நாட் சந்திப்பின் போது அதனைக் கூறுவதாக 23 ஆம் பாடல்° அமைகிறது.
இரவிற் சந்திப்பதற்காகக் குறிப்பிட்டநாளும் நேரமும் கடந்து பல நாட்களும் சென்றுவிட்டன. எப்படியோ ஒருநாள் காதலனைச் சந்தித்த காதலி தனது நிலையை அவனுக்கு விளக்கிக் கூறுகின்ருள். ‘நம் விதியே நமக்குப் பகையானதாற்?? பெற்றேர் என்னைக் கண்காணித்து வருகின்றனர்,** இனிநாம் சந்திப்பது கடினம்; அதனையிட்டு மனக்குறைகள் கொள்ளாதே’ எனக் கூறுவ தாக 24ஆம் பாடல் அமைந்துள்ளது.
காதலி காதலனின் சுகசெய்தி விசாரிப்பதை 25ஆம் பாடல் சித்திரிக்கிறது. அடுத்த பாடலிற் காதலி தனது அன்பின் ஆழத்தை எடுத்துரைக்கின்ருள். அவள் தான் காதலனை நம்பி வீட்டிற் சிறை இருப்பதாகக் கூறி (27), அவனைத் திருமணத்துக்கு வழிப்படுத்துகிருள். 'உன்னை நம்பியே வாழ்கின்றேன். எந்நேர
26. குறு 246, 292, 352 ஆம் பாடல்களுடன் ஒப்பிடத்தக்கது. 27. “நல்வினையும் நயந்தந்தின்று. * திருக்கோவையார், பாடல்-26. 28. கலி. குறிஞ்சிக்கலிபாடல் 12; குறுந், பாடல் 16 அகம்: பாடல் 7, 12:29,

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 197
மும் உன் நினைவாகவே இருக்கின்றேன் (29-30) எனக் கூறித் தன் பிரச்சினைகளைக் காதலனுக்கு எடுத்துரைப்பதாக இப்பாடல்கள் அமைந்துள்ளன.
தன் காதலனே, அல்லது தன் கணவனே பிறபெண்களோடு சரளமாகப் பேசுவதையோ, உறவாடுவதையோ ஒரு பெண்ணும் விரும்பாள். அப்படிக் கணவன் நடக்காதபோதும், அவ்வாறு கற் பித்துக் கூறித் தம் ஆடவரைக் கட்டுப்படுத்துவதிற் பெண்கள் சமர்த்தர்கள் என்பதை 31 ஆம் பாடல் விளக்குகின்றது.??
|1இ| காதலர் உறவுமுறை கூறும் பாடல்கள்"
ஊரும், பெயரும் உளமும் முறையும் கொண்ட அடிப்படையிற் கிராமியக்காதலர்கள் காதல் கொண்டமைக்குப் பாடல்கள்சான்று தருகின்றன. உறவுமுறையின் அடிப்படையிலும் அந்த உரிமை யிலும் அவர்களது காதல் ஆரம்பித்து வளர்ந்துள்ளது. அத்தகைய தொருசமுதாயப் பின்னணியில் அவர்களது காதல்வாழ்வு குடும்ப வாழ்வாக மலர்கிறது. காதலர் தாம் உறவினர் என்ற உரிமை யுடனே உரையாடுகின்றனர். '"நான் மாமிமகன்தான் மச்சான் முறைக்காறனுந்தான்’ (2), “சொந்த உருத்தாளன் (உறவுமுறை யினன்) என்டு ஓடிவந்தன்கா’ (5) எனக் காதலன் கூற்ருகவுள்ள பாடல்கள் காதலரது உறவுமுறையினைக் கூறுவதாக அமைந் துள்ளன.
** மாமிவிட்டபோனேன் மச்சானைப்பார்ப்பமெண்டு’ (8) எனக்காதலி கூறுவதும், உறவுமுறையினை வலியுறுத்துவதாக அமை கின்றது. தன்வீட்டுக்கு வர நாணமடையும் மச்சானின் காதில் விழும்படியாக ‘எங்க வீட்டவரநாட்டமில்ல’’** என உரிமை யுடன் கூறுவதை 6, 7 ஆம் பாடல்கள் விளக்குகின்றன.
செந்நெறி இலக்கியக் காதற்பாடல்களில் நற்ருய், செவிலித் தாய், மகள், தமர், "அன்னுய்’ முதலிய முறைப் பெயர்களே பெரிதும் இடம்பெற, நாட்டார் காதற்பாடல்களிற் சிறப்பாக மச்சான், மச்சாள், மாமா, மாமி முதலிய முறைப்பெயர்கள் அடிக்கடி பயின்றுவருவதை அவதானிக்கலாம். நடைமுறையில் முறைப்பெயர்களைச் சொல்லி உறவாடுவது போன்று அவர்களது
29. இதனைப் படைத்துமொழிதல் என அகத்திணை இலக்கியமரபு கூறுகிறது;
அகம், 16 ஆம் பாடலும்பார்க்க,
30. பி.இ. கா.பா. 11இ பாடல்கள் 1-8
31 குறுந் 118 ஆம் பாடல் பார்க்க,

Page 113
198 W மட்டக்களப்பு மாவட்ட.
பாடலிலும் அவ்வழக்கம் காணப்படுவது இயல்பாக அமைந் துள்ளது.
11 ஈ/ காதலர் தனிமையிற் சந்திக்க வழிகூறுவதாக அமையும் பாடல்
6i
காதலர் தாம் தனிமையிற் சந்தித்து உறவாடுவதற்குப் பேராவல் கொண்டிருப்பதோடு, அதற்காக அவர்கள் கையாளும் வழிவகைகளும் அளவில என்பதைக் குறிப்பிடும்வகையில், இப் பாடல்கள் அமைந்துள்ளன. காதலன் காதலியின் வீட்டிலுள்ள காவல் அரணைக் குறிப்பிட்டுத் தான் எப்படிச் சந்திக்கலாம், எனக் காதலியிடம் கேட்கிருன் (2, 3, 4, 5) **ராத்திரிக்கு நாமள் தப்பாமல் சந்திப்பதெவ்விடங்கா’ (5) எனக் காதலியிடம் குறியிடம் கேட்ட காதலன், “குளத்தோரம் கூடிமகிழ’ வரும் படியும் (6), "திண்ணையிலே காத்திரு செக்கலுக்கு (மாலைப் பொழுது) நான் வருவேன்’ (7), "தலைக்கோழி கூவியவுடன் வந்தாற் சம்மதமோ” (8) எனத்தானே குறியிடமும் நேரமுங் கூறிச் சம்மதம் கேட்பதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.
காதலியின் வீட்டிற் காவல் கடுமையாக இருப்பதாலே தன்னுற் சந்திக்க வரமுடியவில்லை (2, 3) எனக் கூறிய காதலனுக்கு உறுதியும் உற்சாகமும் அளிப்பதாகக் காதலி கூறும் இரு பாடல் கள் (11, 12) அமைகின்றன. "வீட்டிலே பெற்றேர்கள் இருக்க மாட்டார்கள், “கருக்கலோட* வாங்கமச்சாள்’ என்றும் (12), *போனவர்கள் எதிர்பாராத வகையில் வந்துவிட்டாற் ‘கடவலிற் கடிநாய் கட்டியிருப்பேன் அதனைக் கண்டு போய்விடு’ (13) எனவும் காதலனுக்குக் காதலி களமும் காலமும் குறிப்பிடுகிருள்.?"தந்தை அறிந்தால் 'வாளெடுத்து வீசிடுவார்’ (16), எனவே எச்சரிக்கை யாக வேலிப்பக்கமாக" வரும்படி கூறுகின்ருள் “வளவு மூலையிலே காத்திருப்பன்’ (17), 'வேலியிற் கடப்பெடுத்து வைப்பன் கண்டு வந்திடுங்கோ’ (21), 'திறப்பைக் குறிப்பிட்ட இடத்தில் வைத் திருப்பேன் அதனைக் கண்டெடுத்துத் திறந்து வந்தாற் சம்மதந்
32. 7.9., stT. u T. ll 1FF LI IT Libassir 1-29
33. காதற் பாடல்களில் வரும் வழக்குச் சொற்களுக்குரிய பொருள் விளக்கம்
பின்னிணைப்பிற் சொல்லடைவிலே தரப்பட்டுள்ளன.
34. செந்நெறி இலக்கியங்களிற் குறிப்பிடப்படும் இரவுக்குறி, பகற்குறிபற்றிய செய்திகளும் ஈண்டு நோக்கற்பாலன. சாமிநாதஐயர், உ.வே. 1962, பக். 508 இவைபற்றிக் கூறுதல்காண்க.
35. சங்க அகத்திணைப் பாடல்களில் வரும் சிறைப்புறம் என்ற சொல்லாட்சியை
ஈண்டு ஒப்பிட்டு நோக்கலாம்.

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 199
தான்." (18,19) எனக் காதலி குறியிடம் கூறுவதாகச் சில பாடல் கள் அமைந்துள்ளன.
அடுத்து வரும் பாடல்கள் காதலி களமும் காலமுங் குறித்துக் கூறுவனவாக அமைந்துள்ளன. “பூவலடிக்குப் பொழுதுபட வந்திடுங்கோ’ (20,30) எனவும், "சரிமதியம் வரும்படியும்" (23.24), “விளக்கேத்தி இருசாமம் வெள்ளிநிலா வேளையில் குளத் தோரம் வந்திடுங்க" (29) எனவும் கூறுவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன. பெற்றேர் எப்போது எங்கேசெல்வர் என்பதை அறிந்து, அதற்கேற்பக் காதலனைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு பெண்ணுக்கே கிடைப்பதால் அவளே காதலனுக்குக் காலமுங் களமுங் குறித்துச்சொல்லும் இயல்பினள் ஆகின்ருள். அகத்திணை இலக்கியங்களிற் களமுங் காலமுங் குறிப்பிட்டுக் குறியிடங்கூறும் பாத்திரமாகத் தோழியே பெரிதுங் காணப்படுகின்ருள். ஆனல் தோழி கூற்ருகவரும் சங்க இலக்கியப் பாடல்களின், பொரு ளமைப்பைக்கொண்ட நாட்டார் காதற் பாடல்கள் காதலி கூற்ருகவே அமைந்துள்ளன.
தனது வீட்டுப்புறத்தேயுள்ள “வேலியருகே வந்து வேற்றுக் குரல் எழுப்பி வீதியிற்போகும் மாட்டைத் துரத்துதல் போன்ற குரல் ஒலி எழுப்பினுல் அதனைக் கேட்டு வருவேன்’ எனக் காதலி கூறுவதாக 27 ஆம் பாடல் அமைந்துளது. "குத்துவிளக் கெடுத்துக்° குமிழ் நிறைய எண்ணெய்விட்டு ஏற்றிவைப்பன்’ (28) அதனை அடையாளமாகக் கொண்டு தன்னிடம் வரும்படி குறிகாட்டுகிருள் இன்னெரு காதலி.
|1உ! காதலர் சூள் உரைக்கும் பாடல்கள்??
காதலி காதலனிடம் சூளுரை கேட்கும் வகையில் அமைந்த பொருளமைப்பு முதற்பத்துப் பாடல்களிற் காணப்படுகின்றது. பாடலின் முதன் மூன்று வரிகளிலும் காதலனை உவமித்து விளித்து, நான்காம் வரியில் உறுதியுரை கேட்பதாகச் சில பாடல்கள் அமைந்துள்ளன. * “கழுத்தறுத்துப் போட்டிராத” (2) *1, “கன
36. இரவுக்களவின் தொடக்கத்துக் கூட்டம், தலைவியின் வீட்டுப்புறத்து நடக்கும் என்றும், சிலநாளைக்குப் பின் அச்சம் ஒழிந்து உள்மனையிலும் சென்று களவு நிகழ்த்துவர் என்றும் நச்சினுர்க்கினியர் குறிப்பிடுதல் காண்க, (தொல்:சூத், 1073)
37. கலி: முல்லேக்கலி: 10ம் 16ம் பாடல்கள், 5iðJústir; 156 to u rris; asid,
18 ஆம் பாடல் பார்க்க,
38. "குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்." ஆண்டாள் திருப்
LI TGM Shi : LI TIL 6 19.
39. பி.இ. கா.பா. 11உ! பாடல்கள் 1-24. 40. மேலது, பாடல் 2, 3, 5, 6, 8, 10, 41 பி,இ. சொல்லடைவு பார்க்க,

Page 114
200 О. மட்டக்களப்பு மாவட்ட.
விலும் மறக்க வேண்டாம்” (3), “மறுகுதலை** பண்ணுதேகா’ (5) “மனம் நிறைஞ்ச சம்மதமோ” (6), “நாம சேர்ந்திருப்பதெக் காலம்’ (8) எனக் காதலனிடம் காதலி உறுதிமொழி கேட் கிருள்,48
இளமைப்பருவம் முதலர்கச் சொந்த மச்சானுடன் கூடி வளர்ந்த பெண்,** இப்போது பருவ நங்கையாகிவிட்டாள். தனது மங்கைப் பருவம் இனிக் கண்ணும் கருத்துமாகப் பாது காக்கப்பட வேண்டியமையை விளக்கும் பொருட்டுத் தன்னைக் *கதிருகுடலைப்பருவம்”** என உவமித்துக்கூறித்* தன்னைக் 'கை சோர” விடாதிருக்கும்படி*7 (4) கேட்கிருள். வீண்கதை பேசிக் காலத்தை விரயஞ்செய்வதிற் காதலன் திறமைசாலி என்பதை உணர்ந்த காதலி, “கல்லுருகி நெல்விளையும்,** வண்ணம் கதைப் பீர்?? உமது சொல்லையுமோ நம்புறது’’ (1) எனக் கேட்கிருள். “காவின் எழுதி,*0 கழுத்தில் தாலிகட்டியபின்’ (10) தன்னுடன் உறவாடவரும்படி காதலிகூறுவதும் காண்க. இவ்வாருகக் காதலி காதலனிடம் சூளுரைகேட்பதாக இப்பாடல்கள் அமைந் துள்ளன.
காதலன் கூற்ருகவுள்ள சூளுரைப் பாடல்களின் ( 11 - 24) பொருளமைப்பு நான்கு பிரிவுகளாகக் காணப்படுகின்றது. முதல் மூன்று வரிகளிற் காதலியை உவமித்து விளித்துக் கூறியபின், 4 ஆம் வரியில் உறுதிமொழி கூறுவதாக 18, 22ஆம் பாடல்கள் அமைந்துள்ளன. "நாம் தனித்திருப்போம் ஓர் நாளை’’ (18), *உன்னைக் கட்டாயமாக நான் அணைவேன்’ (22) எனச் சூளுரைக்
42. மேலது,
43. குறுந், பாடல் 53, வரி 6.7 பார்க்க.
44. “செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கயம் ஆடும்
மகளிரொடு கைபிணைந்து தழுவுழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையெனல் அறியா மாயமில் ஆயம்,”
go iib. LI IL-6) 243.
45. பயிர்வளர்ந்து குட?லவிட்டு விரிந்து கதிரானதும் பூச்சி புழுக்கள், விலங்கு, பறவைகள் என்பனவற்றிலிருந்து பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அல்லாவிடின் அஃது அழிந்து பிரயோசனமற்றுவிடுமென்ற கருப்பொருள் நிகழ்ச்சியைத் தன்னிலைமைக்குதாரணமாக்கிக் கூறுவது காண்க.
46. குறுந், 126 ஆம் பாடல் பார்க்க.
47. குறுந் 254 ஆம் பாடல்.
48. இத்தொடர் காதலனின் பேச்சுத்திறனை விளக்குவதாக அமைகிறது.
49. ஈழத்துப் பேச்சுவழக்கிற் கதைத்தல் என்பது பேசுவதை - உரையாடு
வதைக் குறிக்கும்.
50. பி.இ. சொல்லடைவு பார்க்க,

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 201
கின்ருன் காதலன். காதலனது உறுதிமொழிகள் மட்டுமே இடம் பெறும் அமைப்பு அடுத்ததாகக் காணப்படுகிறது." இப்பாடல் களிற் காதலிக்கு ஆறுதல்மொழி கூறித், தான் திருமணம் செய்வ தாகவும் காதலன் சூளுரைக்கின்றன்.
குறிப்பிட்ட காலம்வரையும் காத்திருக்கும்படி சூளுரைப்ப தாக அமையும் பாடல்கள் மூன்ருவதாகக் குறிப்பிடத்தக்கன. தொழில்வயிற் பிரியும் காதலன் 'சீவன் கிடந்து செய்தொழில்கள் ஒப்பேறியதும் ஊருக்கு வந்து மணம் முடிப்பேன்’ (13) எனக் கூறுவதன் மூலம் தனது தொழில் முடிந்து பணம் சேகரித்து வரும்வரையும் காதலியைத் தனக்காகக் காத்திருக்கும்படி கேட்கிருன்..?? "உன்ன முடிச்சி கட்டில்மேலே வைத்துக் கதை கேட்பேன் சீக்கிரத்தில்’ (17) எனவும், ‘செவ்வாய்க் கிழமையிலே அன்னக்கிளியோட அணைய எண்ணம் வைத்தேனடி’ (23) எனவும் கூறுவதன்மூலம் திருமணத்திற்கு நாள் குறித்துக் கூறுகிறன். **ஊர்தான் வெறுத்தாலும் நான் மறவேன்' (12) எனவும் காதலிக்குச் சூளுரைக்கின்றன். M
காதலிக்குத் தேற்றுமொழி கூறிச் சூளுரைப்பதாக அமைந் துள்ள பாடல்களின் பொருளமைப்பு° நான்காவதாகக் குறிப் பிடத்தக்கது. 'உன்நேசம் கலக்க நான் வருவேன் நீ போகிளியே” (14), 'பூவும் மணமும் போல பூவுலகில் நாமிருப்போம்”*108(15), **என் கைவசமாய்ச் சேர்ந்தபின்பு கண்ணைப்போல் வைச் சிருப்பன்’ (19), 'தாலிகட்டப்போறவன் நான்’ (20) எனப் பல வாருக ஆறுதல்மொழி கூறுகிருன் காதலன். அவன் கூறும் தேற்றுமொழிகளில் உறுதி மொழியும் அமைந்துள்ளது.
1ஊ/ காதலர்பற்றிய அலர்மொழிப் பாடல்கள்?*
காதலர்மீது ஊரார் சுமத்தும் அலர்மொழிகளைப் பொரு ளாகக் கொண்டமைந்த பன்னிரு பாடல்கள் இங்கு ஆராயப்படு கின்றன. அலர்மொழிகளே காதலருக்குப் பெரும்பகை, காதலர் தனித்து உரையாடுவதைக் கண்டுவிட்டால் அவர்கள் சமூகத்தில் உலாவமுடியாத அளவிற்கு மக்கள் பழி சுமத்தி விடுவர். இதனைச்
51. பி.இ.கா. பா.1உ| பாடல் 11, 12, 13, 16, 20, 21. 52. 1. பி.இ. கா. பா|1உ, பாடல் 14, 15, 19, 20.
11. சங்க அகப்பாடல்களிலும், கோவை இலக்கியங்களிலும் வரும் பொருள்
வயிற் பிரிவு பற்றிய பாடல்கள் ஈண்டு ஒப்புநோக்கற்பாலன. 53. குறுந் 175 ஆம் பாடல் பார்க்க, 54. பி.இ.கா.பா. 1ஊ பாடல்கள் - 12.

Page 115
202 மட்டக்களப்பு மாவட்ட .
சங்க அகத்திணை இலக்கியங்களிலும்," பிற்கால இலக்கியங் களிலும் வரும் அலர்எடுத்துணர்த்தல் என்ற பகுதியிலும் விரி வாகக் காணலாம். இதுபற்றிய சுப. மாணிக்கத்தின் " கருத்துப் பொருத்தம் நோக்கி இங்கு மேற்கோளாகத் தரப்படுகிறது.
'ஐந்திணை இலக்கியத்துக்கு அழகு செய்பவர் உள்ளூர்ப் பெண்டுகள். அவரின்றேல் அவ்விலக்கியம் உப்பின்றியிருக்கும் *அல்லது செய்தல் ஒம்புமின்’ (புறம் - 195) என்பதற்கு மாருக ஊர்ப்பெண்டிர் செய்வது அல்லதே யாயினும் சமுதாய நெறிக்கு நல்லது என்ற கருத்தால், தமிழ்ச் சான்ருேர் ஊராரையும் அகத்திணை இலக்கியத்துப் போற்றிக் கொண்டனர்.”
கிராமியக் காதலி ஒருத்திமீது அயலவர் அலர்மொழி கூறத் தொடங்கி விட்டனர். அவளால் அதனைப் பொறுக்க முடியாமல் தன் காதலனிடம் “ஊரெல்லாம் கதைகள் பரவிவிட்டன; உன்னை விட்டால் இனி நான் உயிர்வாழப் போறதில்லை" (1) 'ஊரெல்லாம் நம் கதையே அடிபடுகிறது’ (2) உன் தந்தையும் தடுத்தால் நான் என் செய்வேன்’ (3)" எனத் தன் நிலையை விளக்கிக் கூறுகிருள். “நாம் ஊர் வாயைக் கட்ட முடியுமா? நமக்கு இறைவன்தான் துணை (4) என்கிருள் இன்னெருத்தி, தனது நிலையையும் ஊரார் கற்பிக்கும் அலர் மொழியையும் காதலனுக்கு எடுத்துக்கூறி, விரைவில், தன்னை மணந்துகொள்ளும்படி காதலி கேட்பதாக 3 ஆம், 8 ஆம் பாடல்கள் அமைகின்றன.
ஊரில் ஏற்பட்டுள்ள அலர்மொழிகளைக்" குறிப்பிடுவன வாகவும் பாடல்கள் அமைந்துள்ளன.99 காதலர் சந்திப்பிற்குத் தடையாகக் காதலிக்கு அளவுகடந்த காவல் வைக்கப்பட்டுள்ளது.
55, நற்றினே: 63, 143, 149 ஆம் பாடல்கள்:
அகம்: 95, 203 ஆம் பாடல்கள் பார்க்க. 56. மாணிக்கம், வ. சுப. (1962) பக். 70 - 71. 57. குறுந், 97 ஆம் பாடல் பார்க்க. 58, 1. ஊரார் துறைவதற்கு என்னேப் பெண்டென மொழிப."
ஐங்குறுநூறு பாடல் 113; 11. மணிமேகலை ஊரலர் எடுத்துரைத்த காதை வரி. 9. 59. கடைக்கண் நோக்கி, மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச் சிறுகோல் s நற்றிணைபாடல் 149 , வரி 1.4, Ol வலந்தனன் அன்னை? 60. 1î.g., IGIT, UT || 12SM || uTlộ 9, 10, 11, 12.

க்ாதற்பாடல்களின் அமைப்பாய்வு 203
அக்காவலையும் மீறிவந்து காதலன் தினமும் காதலியைச் சந்தித்து வருகின்றமை வருமாறு உள்ளுறையாகக் கூறப்பட்டுள்ளது. *வயலில் நெல் விளைந்துள்ளது; அதனைப் பன்றி அழிக்காதவாறு பன்னிருவர் காவல்காத்து வருகின்றபோதிலும், களவாக ஒவ்வொரு நாளும் பன்றி தின்று வருகின்றது (9) என உள்ளுறைப் பொருளாகக் காதலரின் களவொழுக்கம் கூறப்படுகிறது.* *நடுச்சாமவேளையில் நாற்புறமும் காவல் தப்பி வளர்ப்பயிரை மேய ஒரு காளைவந்து போகிறது’’ (10) எனவரும் உள்ளுறை உவமத்தில் வளர்ப்பயிர் காதலியாகவும், காளை காதலனுகவும் உவமிக்கப்பட்டுள்ளன. காதலன் களவாக இரவிற் காதலியைச் சந்திப்பதை அறிந்த அயலவர் மற்றவர்களுக்கும் அதனைக் கூறு வதைப் 11ஆம், 12ஆம் பாடல்கள் குறிப்பிடுகின்றன. நடுச்சாம வேளையில் அல்லது விடியற்சாமவேளையில் மனித நடமாட்டத் தைக் கண்டதும் மரங்களிலே தங்கியிருக்கும் காகம், ஆக்காண்டி, ஆலா என்பன பறந்து ஆரவாரிக்கும். “காக்கா பொண்டில் வாசலில’ (11) இவ்வாறெல்லாம் நடைபெறுகிறது எனப் பிறர் நம்பக்கூடியவகையிற் கதைகட்டிவிடுவர். வைக்கோலால் வேயப் பட்டுள்ள காதலியின் வீட்டுக் கூரையிலே தட்டிக், காதலன் தான் வந்த குறியைக் காதலிக்குத் தெரிவிக்கின்ருன். இதனை உரிப் பொருளாகக் கொண்டு மாடு கூரை வைக்கோலை இழுப்பதாகக் கருப்பொருள் மேலேற்றிக் கூறி, அலர்மொழி பேசுவதும் (12) ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
|1எ/ ஒழுக்கத்தைப் பேணும் காதலிபாடும் பாடல்கள்?
காதலர் உணர்ச்சி வசப்படுவது இயற்கையாயினும், பெண் ணுடன் பிறந்த நாணமும் கற்பும் என்றும் அழிந்து போவதில்லை, பெண் எப்போதும் ஒழுக்கநெறியிற் கருத்தாகவே இருப்பாள். காதலன் இன்பநுகர்ச்சியை நாடினும், தடுத்து அவனுக்குப் புத்தி சொல்லவேண்டிய பொறுப்புக் காதலியைச் சார்ந்ததே?* இயற்கை நியதியும் அதுவே. இவ்வாறு காதலி ஒழுக்கநெறியிற் கவனமாக இருப்பதைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ள சில பாடல்கள் இப்பிரிவில் ஆராயப்படுகின்றன.
61. சங்க இலக்கியத்திலே தலைவனின் நீடிய களவொழுக்கத்தினைக் கடிவதற்கே கருப்பொருள்மூலம் உள்ளுறை உவமம் கையாளப்பட்டது. அவ்வகையில் இப்பாடல் அமைகின்றது எனலாம்
62. 3.g., sfT. LI T.. I 16TI LI ft Liassir 1-9.
63. சங்க இலக்கியங்களில் உள்ளுறை இதே நோக்குடனே பயன்படுத்தப் பட்டுள்ளமை ஈண்டு கருதத்தக்கது. உ-ம் கலி. குறிஞ்சிக்கலி 26 ஆம் பாடல்; நற்றிணை 9 ஆம் பாடல்.

Page 116
204 − மட். க்களப்பு மாவட்ட.
"தாரமாக ஆகுமட்டும் கெட்ட எண்ணம் வேணும்” (1) “நாமொண்டு சேர்ந்தபின்பு நாடியதைச் செய்திடுங்கோ’** (3) எனக் காலவரையறைக்குட்பட்ட தடை போடுவதன் மூலம் காதலி ஒழுக்கநெறியைப் பேணிக்கொள்கிருள். காதலியின் விருப்பமின்றி நடுச்சாமத்திற் காதலன் வந்து காதலியை எழுப்பு கின்றபோது 'கதவு திறக்கமுடியாது அந்த எண்ணம் வையாத’’ (3) என்றும், இது முறையல்ல (4) எனவும் கூறி அவனைத் திருத்து வதாக இப்பாடல்கள் அமைந்துள்ளன.
காதலனுக்குப் புத்திகூறவேண்டிய நிலையிற் கோபமடைந் தவளாக 'உன் சம்மதிக்கு நான் இணங்க வேட்டைக்கிடாவோ, வேலியில்லா ஒர் பயிரோ," தருமக்கிணருே”88 (5) எனச் சுடு மொழியாற் சாடுகின்ருள். கிடா, வேலியில்லாப்பயிர், தருமக் கிணறு இவை மூன்றும் எவரும் தாம் விரும்பியநேரம் பயன் படுத்தத் தக்கவை. எனவே தன்னைப் பரத்தை என எண்ணினிரோ எனவும், திருமணத்திற்கு முன் இப்படி நடந்துகொள்வது முறை யன்று எனவும் காதலி கூறுவதை இப்பாடல்கள் விளக்குகின்றன. திருமணமாகா முன்பு நெருங்கிப் பழகுதல் ஒழுக்கமற்ற செயல் என்றும் (6, 7) அவ்வாறு பழகினலே தவறுகள் ஏற்படக்கூடும் என்றும் (9) இப்பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
/1ஏ/ காதலர் நகை மொழிப்87 பாடல்கள் 68
காதலரிடையே ஊடல் ஏற்படும்போதும், இன்பமாகக் களிக்கும்போதும் ஒருவரை ஒருவர் நகைப்பது வழக்கம். நாவற் பழம், காயாம்பூ, காகச்சிறகு ஆகியனவற்றின் நிறத்திலும் "கடுங்கறுப்பு மாமிமகள்’ எனக் காதலியை நகை செய்கிருன் காதலன் (1). அதுபோன்றே காதலியும் காதலனை நகைபடக் கூறுகிருள். (2). முப்பத்திரண்டு பற்களில் மூன்றுபற்களே மீதி யாக இருப்பதும், காகக்கறுப்பும், ஒருகால் முடமும் கொண்ட வரே?? என காதலி காதலனை நகைக்கின்ருள் (3). "எட்டாத பழத்திற்கு நீ ஏன் கொட்டாவி விடுகின்ருய்”79 (4) “கட்ட
64. குறுந், 78 ஆம் பாடல் நோக்குக. 65. "வேரல்வேலி வேர்க்கோட்பலவின் ." குறுந், பாடல் 18. 66. 'ஊருணி நீர் நிறைந்தற்றே." திருக்குறள். 215 ஒப்பிடுக. 67. “பாட்டிடை வைத்த குறிப்பினுலும் . பொருளொடு புணர்ந்த நகை
மொழியாலும்.* தொல், செய்யுளின் சூத். 475, 68. பி.இ., கா. பா. 11ஏ பாடல்கள் 1-11 69. பொருந்தாக் காதலர் இருவர் உரையாடுவதாக வரும் கலி. மருதக்கலி
29 ஆம் பாடல் பார்க்க. 70. நரியும் திராட்சைப்பழமும் என்ற கதையும், "அணில் ஏறவிட்ட நாய்போல்"
என்ற பழமொழியும் நோக்குக

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 20S
கட்டைபோல சுடுகாட்டுப் பேய்போல...' (5-6) 'உன்னை மாப்பிள்ளைக்கு ஆரெடுப்பார்” (6) "அவருமொரு மாப்பிள்ளை யாம்’71 (7) என நகை மொழி கூறுவதாக இப்பாடல்கள் அமைந் துளளன.
எட்டாம் பாடலிற் காதலியின் மெல்லிய தோற்றம் நகைச் சுவைபட வருணிக்கப்படுகிறது. காதலியின் சேலையில் இரத்தக் கறை படிந்திருப்பதைக் கண்ணுற்ற காதலன் அதனை நகைப் பதாக ஒன்பதாம் பாடலும், அதற்குக் காதலி கூறும் விடையாகப் பத்தாம் பாடமும் அமைந்துள்ளன. காதலியின் நடை, உடை என்பன பதினேராம் பாடலில் நகைக்கப்படுகின்றன.
|1ஐ இணைவிழைச்சிப் பாடல்கள்??
காதற்கவிகளில் இணைவிழைச்சிப் பாடல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றின் பொருட்கூறுகளாக புணர்ச்சி நலன்கூறுதல், புணர்ச்சி நாட்டம், அங்கவருணனை, பரத்தமை ஒழுக்கம், பிறன்மனை நயத்தல், கற்பழிப்பு முதலிய விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கே ஆராயப்படும் பாடல்களிற் புணர்ச்சி யுடன் தொடர்புடையனவாகச் சில° பாடல்கள் அமைந்துள்ளன. புணரத்துடிக்கும் ஆடவனின் மனேநிலையைக் . குறிப்பன வாகச் (7, 9, 10, 11, 13, - 17, 25, 2 , 26) சில பாடல்களுள்ளன. கனவு அடிப்படையிற் புணர்ச்சிநலம் கூறுவதாக (7, 10, 31) மூன்று பாடல்கள் காணப்படுகின்றன. இப்பாடல்களில் வருஞ் சொல்லாட்சிகளும், உணர்ச்சிப்புலப்பாடுகளுஞ் செந்நெறி இலக் கியத்துக்குப் புறம்பானவை. அல்லவெனிலும் அங்கு அவை கற் ருேரால் ஏற்றுக் கொள்ளப்படும்வகையிற் கூறப்பட்டிருக்கும். ஆனல் நாட்டார் பாடல்களில் அச்சொற்கள் வெறுக்கத்தக்கன வாகத் தோன்றும், கிராமிய மக்களது நடைமுறை வாழ்க்கையில் இச்சொற்கள் நாகரிகமற்றனவாகவோ அல்லது அவற்றைச் சொல்லிவிட்டாற் பெருந்தப்பு என்ருே கருதுவதில்லை. ஆதலினல் அவர்களது பேச்சுமொழியில் உள்ள வழக்காறுகள் பாடலில் இடம் பெற்று இவ்வாறு உணர்ச்சிப் புலப்பாடுடையனவாக
அமைந்துள்ளன.
71. ‘உறவு பேய்க்கணம் உண்பது வெண்டலே, உறைவ தீமம் உடலிலோர் பெண் கொடி, துறைகளார்கடல் தோணி புரத்துறை, இறைவஞர்க்கிவன் என் கண்டன்பாவதே.? திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம். திருப்பிரமபுரம். பாடல் 8. 72. Li...ĝ. 25 m, 1 i T. | lago!! uu TL6iyas siT 1-32. 73. மேலது பாடல்கள் 4, 5, 7, 9-18, 21, 22-26, 31, 32.

Page 117
206 மட்டக்களப்பு மாவட்டக
காதலி, பரத்தைப்பெண், பிறன்மனைவி ஆகியோரது அங்க வருணனையைக் கூறுவதன்மூலம் இணைவிழைச்சியைப் புலப்படுத்து வனவாகச் (1, - 3, 6, 7, 9 - 13, 26, 28) சில பாடல்கள் அமைந் துள்ளன. தொடை (6), "குறுக்கால பிளந்த கொவ்வம்பழம்”* (இதழ்) (7), “ஏறப்பழுத்த இளஞ்சிகப்பு மாம்பழம்' (தனம்) (8), "ஆடுதுடை’ (11), தேமல்முலை (10), 'முந்திரியம்பழம் நாணும் மூக்குச் சிவக்கவில்லை" பையப்பைய" பார்த்தருந்துங்கோ’ (32) முலைச்சோடு (26), குரும்பைமுலை" (3), ஏந்துகொம்பன் (தனம்) (30), ஆகிய தொடர்களின்மூலம் உடலுறுப்புகள் வருணிக்கப் படும்போது இணைவிழைச்சி உணர்வு அதீதமாகத் தோன்றும் வகையிற் பாடல்களமைந்துள்ளன.
நடைமுறை வழக்கிற் பிறன்மனை நாடலோ அல்லது பரத் தையை நகைத்தலோ பொதுவாகக்காணப்படும் விடயங்களாகும். கிராமப்புறங்களிற் பெண்கள் பாய், சட்டி, பானை, காய்கறிவகை ஆகியனவற்றைத் தெருத்தெருவாக எடுத்துச் சென்று விற்பது வழக்கம். அத்தகைய ஒருத்தி தோட்டுப்பாய்" கொண்டு செல்லும்போது அவளிடம் ஒருவன் இணைவிழைச்சியுடன் உரை யாட முயல்வதை 16ஆம் பாடல் குறிப்பிடுகின்றது."* பிறன் மனைவி ஒருத்தியிடம் ஒருவன் நெருங்குகிருன்; அப்போது அவள், தன் கணவன் 'சின்னலெப்பை மச்சான் உன்ட சிரங்கழிச்சி உயிர் குடிப்பார்’ (20) என இடித்துரைக்கின்ருள். இவ்வாறு பரத்தமைக்கு விழையும் ஆடவனையும், அதற்கு இணைவாகப் பேசும் பரத்தையும், அதனை மறுத்துரைக்கும் ஒழுக்க நெறிப் பெண்ணையும் இப்பாடல்கள் பொருளாகக் கொண்டுள்ளன.
கற்பழிப்புச் செய்திகள் செந்நெறி இலக்கியங்களில் இடம் பெறுவது அரிதென்றே கூறலாம்." ஆயினும் அவற்றை நாட்டார்
74. அகம், கொவ்வைச் செவ்வாய் . .**திருக்கோவையார் பாடல்-99 75. காமஞ் சாலா இளமையோள் வயின்.”
தொல். சூத். 995. பார்க்க, 76. பி. இ, சொல்லடைவு. பார்க்க, 77. இப்பாடற் பொருளுடன் பின்வரும் பாடற் பகுதிகள் ஒப்பிடற்பாலன :
அ. நாச்சியார் திருமொழி.பாடல் 5, ஆ. மேலது பாடல் 7: இ. நற்றிணை பாடல் 9. 78. பி. இ. சொல்லடை,ை பார்க்க. 79. "நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளி ரோவெனச் சேரிதொறு நுவலும் அவ்வாங் குந்தி யமைத்தோ ளாய்நின் மெய்வாழ் உப்பின் விலை எய்யாய்”
அகம். பாடல் 390. 80, 20 ஆம் நூற்றண்டு நவீன இலக்கிய வகைகள் யாவும் அதனைச் சித்திரித்துக்
காட்டுகின்றன.

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 207
இலக்கியங்கள் எடுத்துக்காட்டத் தவறியதில்லை என்பதற்கு இப் பிரிவில் வரும் சில பாடல்கள்? சான்ருகின்றன. மக்கள் வாழ்க் கையில் முறைதவறிய காதலும், கற்பழிப்பும் நடைபெறுதல் இயல்பே. தந்தையும் மகளும், தாயும் மகனும், சகோதரனும் சகோதரியும்? ? காதல் கொண்டு புணர்ச்சி மேற்கொண்ட செய்திகள் பற்றி நாட்டார் இலக்கியங்கள் விரிவாகக் கூறு கின்றன. 98 சிக்மண்ட் பிராய்ட் 8* இத்தகைய விடயங்களை “எடிப்பஸ்" (Oedipus) கோட்பாட்டில் அடக்கி, அவற்றுக்கு உளவியல் விளக்கம் கூறியுள்ளார். இவ்வாய்வாளர் மேற்கொண்ட கள ஆய்விற் கிடைத்த இருபாடல்கள் (22,23) தம்பி முறையினன் ஒருவனுடன் ஒருத்தி முறைதவறிப் புணர்ச்சி தலைப்படுவதைக் குறிப்பனவாக அமைந்துள்ளமை காண்க.
/2 காதலரது பிரிவாற்ருமைப் பாடல்கள்
|2அ/ காதலரது பிரிவுத்துயர்ப் பாடல்கள்?"
பிரிவு என்னும் உரிப்பொருள்பற்றிக் குறிப்பிடுந் தொல் காப்பியர் “ஒதல்பகையே தூதிவை பிரிவே**** எனக் கூறுகிருர், இங்கு ஆராயப்படும் பிரிவுத் துயர்ப் பாடல்கள் காதலன் காதலி யைப் பிரிந்து தன்னிடத்தே இருப்பதையே குறிப்பிடுகின்றன. காதலன் பிரிந்து சென்று பல நாட்களாகியும் அவனிடமிருந்து எவ்வித செய்தியும் கிடைக்கப்பெருத காதலி வருந்துவதாக முதலாம் பாடல் அமைந்துள்ளது. தம் பிரிவுக்குக் காரணம் விதியின் செயலே" என இறைபழி கூறுகிருள் இன்னெருத்தி (2). வேருெருத்தி, காதலனின் வண்ணமுகம் காணுமல் (5), வாடி வதங்குகின்ருள்' (4). காதலனின் சூளுரை பொய்த்தமையாலே துயரடைகின்ருள்?? இன்னெரு காதலி (6). தன் காதலன் அதி விரைவில் வரமாட்டானே? என ஒருத்தி ஏங்குகின்ருள் (7).
81. பி. இ. கா. பா., 1ஐ பாடல்கள்.17.24, 27. 82. இச்செய்திபற்றிய பாடல்களைப்பின்வரும் தகவல்களிற் கண்ாக,
1. வானமாமலை, நா. (1964) பக் 250. i. வித்தியானந்தன், சு. (1962) பக். 24,63. i. இராமலிங்கம், மு. (1950) சுதந்திரன், (7-6-1950.18.6. 1950) 83. இராமானுஜன், ஏ. கே. (1974) எழுதிய ஆய்வுக் கட்டுரையில் இவை பற்றிய
விபரங்களைக் காண்க. 84. Frued, Sigmond, (1954) PP. 294-298) 85. பி.இ. , கா.பா. 12அ பாடல்கள் 1.51. 86. தொல், அகத்திணையியல் 25 ஆம் சூத். பார்க்க. 87. திருக்கோவையாயில் விதியொடுவெறுத்தல் எனுந்துறை காண்க. 88. கலி. நெய்தற்கலி. 15 ஆம் பாடல் பார்க்க. 89. **வாரான் அவனெனச் செலவழுங்கினனே" ஐங்குறுநூறு பாடல் 427,

Page 118
208 m மட்டக்களப்பு மாவட்ட.
காதலன் மெய்யின்பம் அளிக்காது சென்றமையை99 நினைக்கும்போது அவளுக்கு ஒரே கவலை; படுத்தால் துயில் வர வில்லை,91 பசியில்லை; 92 உண்டாற் சீரணமில்லை98(8). இவ்வாறு பிரிவுத்துயரால் வாட்டமுறுகின்ருள் 94 ஒரு காதலி. துயிலும் காதலி ஒருத்திக்கு விழிக்கும் போதெல்லாம் காதலனின் நினைவே தோன்றுகின்றது. அவன் எந்தச் சீமையில் நிற்கிருனே’’ என்று அவள் ஏங்குகின்ருள்(9). ஊரவர் பொருமையாலும் அதனல் ஏற்பட்ட அலர் மொழிகளினலும் ஊரையே விட்டுப் போன தன் காதலனை நினைத்து வேதனைப்படுகிருள் இன்னுெரு காதலி (10). “சேர்ந்திருப்பதெக்காலமோ?’90 (11) என ஏங்கித் தவிக்கிருள் இன்னெருத்தி.
காதலனின் பிரிவினுல் உடல் மெலிந்து காட்சிதரும் காதலி, தனக்கு முன்னுல் காதலன் ஒருதரம் வந்துபோனுல் “ஒரு பெருப்பம் பொருத்து தனது பேதலிப்பையும் மறந்திருவன்’ (12) என்று நினைந்துருகுகின்ருள்.* பிரிந்து சென்ற காதலனின் மேலழகைக் காணுமையால் ஊணையே மறந்து வேதனைப்படுகின்ருள்(14). பிரிவுத்துயரால் வாடும் காதலி ஒருத்தி, ஆடும் கொடிபோலவும் அந்தரத்திற்காய்போலவும், வாடும் பயிர்போன்றும் காட்சியளிக் கின்ருள்(15). மச்சானின் கன்னத்துமீசை பிரிந்திருக்கும் காதலி யின் கண்ணெதிரே தோற்றமளித்து அவளுக்கு வேதனையைக் கொடுக்கின்றது (16). பிரிவுத்துயரால் ஏ ங் கும் காதலி, “பொன்னன மச்சான் (உன்னைப் பிரிந்திருக்கப்) பொறுக்குதில்லை என் மனசு’’97(18) என வெதும்புகிருள். ஒருநாள் முற்றும் காதலனைக் காணுத காதலி ‘கண்ணின் பசியால் கதறினதோ நாள் முழுதும்" (19) எனப்பாடுகிருள். நீண்ட நாட்களாகக் காதலனைப் பிரிந்திருக்கும் பெண்ணுக்கு மனத்துயர்கள் ஒன்றன் பின் ஒன்ருகப் பெருகுவதால் அவள் எந்நேரமும் ஏங்கிக்கொண்
90. கலி. நெற்தற்கலி பாடல் 25, வரி 1-5 பார்க்க, 91. நற்றிணை 335 ஆம் பாடல் பார்க்க. 92. "பசியட நிற்றல் கண்துயில் மறுதல் .* தொல்-சூத். 1215. 93. குறுந்- 126 ஆம் பாடல் பார்க்க. 94. பாரதியார் பாடல்கள்; கண்ணன்பாட்டு, கண்ணன் என் காதலன் என்ற
பகுதியில் வரும் பாடல்கள் ஈண்டு ஒப்பிடற்பாலன. 95, 1. நற்றிணை 126 ஆம் பாடல்; கலி பாலேக்கலி 18ஆம் பாடல்; ஐங்குறு
நூறு 335 ஆம் பாடல்; தொல். சூத். 1053 பார்க்க. 95. பாரதியார் பாடல், கண்ணன் பாட்டு, கண்ணம்மா என் காதலி என்ற
பாடல்கள் ஒப்பிடத்தக்கன. 97. கலி. நெற்தற்கலி பாடல் 20, வரி 2-3 பார்க்க. 98. குறுந் 325 ஆம் பாடல். அகம், 294 ஆம் பாடல் பார்க்க

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 209
டேயிருக்கிருள் (20). இவ்வாருகக் காதலனது பிரிவால் வாடும் காதலி, தன் அகவேதனைகளைச் சொல்லோவியமாக வடித்துப் பாடும்போது அப்பாடல்களிற் பிரிவுத்துயர் சிறப்புற அமைந்து காணப்படுகிறது.
தொழில்வயிற் சென்ற காதலன், வயற்களத்திற் காவற் பரணிலோ, வண்டிற் பயணத்திலோ காதலியைப் பிரிந்துவந்த ஏக்கத்தாலும் வேதனையாலும் உள்ளூர வெதும்பி, அவளை நினைந்துருகிப்பாடுவதாகச் சில பாடல்கள் அமைந்துள்ளன.?? * மாமன் மகளே" 199 உன்னை நினைந்து என் “பொன்னன சீவன் மச்சி போகுதடி உன்னல’’ (22), ‘. . நான் சாகிறேண்டி உன்னல"101 (23), “உன் நினைவாலேஉருகிறன்கா இப்பூவுலகில்’ 192 (24), 'என்தேகம் உருக்குலைஞ்சு போகுதடி" (25) எனப் பிரிவுத் துயரால் மனம் உருகிப்பாடுகிருன். தினமும் காதலியின் அன்புக்கதைகேட்டு ஆறுதல்பெற்று வந்த காதலன், பிரிந்திருந்து அதனை நினைக்கும்போது அவனுடைய மனம் மயங்குகிறதாம் (26). பிரிந்திருக்கும் காதலன் ‘உன்னை மறந்திருக்கக் கூடுதில்லை” (27, 28)19* எனப்பாடுகிருன். காதலியின் நினைவுவரும் நேர மெல்லாம் பிரிவுத்துயர் தாங்காது அழுகின்றன்" ஒரு காதலன் (29). பிரிந்திருக்கும் காதலன் தான் காதலியிடம் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை அடிக்கடி எண்ணிப்பார்ப்பதாக இருபாடல் கள் (30, 31) அமைந்துள்ளன.
காதலன் பிரிவுத்துயரின் ஆற்ருமை காரணமாக, "மச்சிநான் ஆர உட்டுக்கூப்பிடட்டும்” (32), “உன் தங்கமுகம் காண்ப தெப்போ’ (33) “என்னை அழைச்சு ஆதரிக்கமாட்டாயா’’ (34) எனப் பாடுகிருன். 198 பிரிவுத்துயர் மீதுர “உன்னிடத்தில் என் ஞசை எள்ளளவும் இல்லையடி’" (35) எனக் கோபமும் தாபமும் உட்படப்பாடுகின்றமையும் நோக்கற்பாலது.
99. L'î.g., 35 m. Lu (T. 2 / U TL6'356sir, 21-41, 100. திருப்பாவை. பாடல்-9, 101. குறுந். 18 ஆம் 32 ஆம் பாடல்கள் ஈண்டு ஒப்பிடத்தகுந்தன. 102. குறுந், 58 ஆம் பாடல் நோக்குக.
103. கலி. குறிஞ்சிக்கலி 20 ஆம் பாடல் பார்க்க.
104. குறுந் , 243 ஆம் பாடல்; 105. மேலது, 135 ஆம் பாடல்
106. ஆருத்தனோடியேன் ஆதரித்தழைத்தால் " திருவாசகம், அருட்
பத்து Z; 107. 1. "அருள் இல்லை இவட்கு என அயலவர் நிற்பழிக்கும்." கலி.
குறிஞ்சிக்கலி பாடல் 23 வரி. 11, குறுந் 174 ஆம் பாடல். LDー14

Page 119
210 LDLL lėš567TIL I DTOILL-...
காதலியைப் பிரிந்துவாடும் காதலன் அவளைக் காணமை யால் அவன் ‘உண்ணுகிறசோறும் உடலில் ஒட்டவில்லையாம்’ (36); “நாலைஞ்சு நாளாகத் தண்ணீர்கூட அவனுக்குச் சிரசில் அடிக்கிறது’’ (37); “உண்ணுகிற சோறும் அவனுக்குத் தொண்டையால போகுதில்லை” (38); காதலியின் அழகையும் அவளது குணத்தையும் பலவாறு புகழ்ந்து, ஈற்றில் "உன்னினை வால் உருகிறண்டி' (40) எனப்பாடுகிருன். தினமுங் காதலியை வேலிக்குமேலாற் கண்டுகளித்த காதலன், இப்போது அதற்குத் தடை ஏற்பட்டுவிட்டமையாலே தன்நிலைமையைப் 'பாலேருச் செந்நெல் பதர்க்கடை போலானேன்டி' (41) எனக் குறிப்பிடு கிருன்,
காதலிக்கு வீட்டில் இற்செறிப்பு ஏற்பட்டமையை நினைக்கும் போதெல்லாம் காதலனுக்கு வேதனை அதிகரிக்கிறது, “நீ சிறை யிருக்க நீதியுண்டோ’ (42) எனவும், தனது மகளது சிந்தனை எதுவுமின்றி” வாழாவிருக்கும் காதலியின் தந்தையைப் ‘புத்தி கெட்ட மாமா” (43) என வைதும் பாடுதல் நோக்கற்பாலன. காதலியின் கண்ணழகு, நடையழகு, கதையழகு, கைவீச்சு (44) என்பன மனத்திரையில் அவன்கண் முன்னே வந்து அவனை வாட்டுகின்றன (44). இவ்வாருகக் காதலியின் அழகையும் அவள் தனியே சிறையிருந்து வாடுவதையும், அவள் தன்மேல் கொண் டுள்ள அன்பையும் நினைத்துப், பிரிந்திருக்கும் காதலன் வருந்து வதை இப்பாடல்கள் (21-24) பொருளாகக் கொண்டமைந் துள்ளன.
காதலர் தம் காதலின்ப நிகழ்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் கனவில் அனுபவித்தல் இயற்கையாகும். காதலன் காதலியின் உறுப்புகளைக் கனவிற்கண்டு களிமகிழ்வு அடைந்ததாகப் பாடு கின்றன். (45, 46) காதலியின் கனவிற் காதலனின் கலிமா விரலும் கல்பதிச்ச மோதிரமும் தோன்றுகின்றன.198 (47). நித்திரையிற் காதலன் வந்து தன்னை எழுப்பியதுபோல் இன்பக் கனவு கண்டதாகவும் (49), தான் கண்ட இன்பக்கனவினல் *வெறும்பாய் திருவி வேறு நினைவானேக்கா' (50) எனவும்
108. (அ) "யாம நடுநாள் துயில் கொண்டு ஒளித்த காம நோயிற் கழீஇய நெஞ்சம்". கலி. நெய்தற்கலி: பாடல் 5 வரி:21 - 22. (ஆ) பாரதியார் பாடல் : கண்ணன்பாட்டுப் பார்க்க. (இ) **நோக்குவ எல்லாம் அவையே போறல்". தொல். சூத். 104509. ‘கேட்டிசின் வாழி தோழி; அல்கல்; பொய்வலாளன் மெய்யுறன் மரீஇய வாய்ந்ததகைப் பொய்க்கணுமருட்ட, ஏற்ற எழுந்து; அமளி தைவந் தனனே." குறுந், பாடல் 30.

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 211
ஒருத்தி பாடுகின்ருள். இன்னெருத்தி "மச்சானுடன் சேர்ந் திருக்கக்' கனவு காண்கிருள் (51), இவ்வாருகக் காதலர் கனவின் மூலமும் தமது பிரிவுத்துயரை உணர்த்தும் வகையிற் பாடுகின்றமையை இப்பாடல்கள் (45-51) குறிப்பிடுகின்றன.
/2ஆ/ காதலரது தூதுச் செய்திகள் பற்றிய பாடல்கள்.111
பிரிந்திருக்குங் காதலர் தாம் ஒருவர்க்கொருவர் தூதனுப்பி ஆறுதலடைவது வழக்கம். இங்கு ஆராயப்படும் தூதுச் செய்தி களைப் பொருளாகக் கொண்டமைந்த பாடல்களிற் காகம், சேவல், குருவி, குளுகுளுப்பை என்பன தூதனுப்பப்படுவனவாகக் கூறப் பட்டுள்ளன.** இப்பறவைகள் கிராமிய மக்களின் வாழ்க்கைச் சூழலிலே தினமுங் காணப்படுவனவாதலால் அவை கிராமியக் காதலருக்குத் தூதுப்பொருள்களாக அமைவதோடு, கிராமியச் சூழலைச் சித்திரிப்பனவாகவும் காணப்படுகின்றன.
சங்க இலக்கியங்களில் அகப்பொருள் பற்றியும், புறப் பொருள் பற்றியும் தூதனுப்பியதாகச் செய்யுள்களுள. அம்மரபு வளர்ந்து பிற்காலத்திலே தூதுப்பிரபந்தங்கள் தோன்றலாயின. பொதுவாகத் தமிழிலுள்ள தூது நூல்களின் அமைப்பை வருமாறு வகுத்துக்காட்டலாம். தூது செல்வதற்குப் பிறபொருள்கள் பயனற்றவை என்று கூறுதல், தூது செல்வதற்கு இது ஒன்றே தகுதியுடையது என்று கூறுதல், தலைவனிடம் கூறவேண்டிய தூது பொருள் உரைத்து வேண்டுதல் என்பனவாகும். 113 இவ்வமைப்பு முறை இங்கு ஆராயப்படுந் தூதுப் பாடல்களிலும் காணப்படுதல் நோக்கற்பாலது.
காதலி தூதுதணுப்புவதாகவுள்ள பாடல்களிலே தூதுதணுப் பும் பறவையும் தூதுச் செய்தியும் வருணித்துக் கூறப்படும் இரு அமைப்புகள் காணப்படுகின்றன. ஒரே பாடலில் மேற்குறிப்பிட்ட
110. 'கைத்தலம் பற்றக் கனவு கண்டேன்." நாச்சியார் திருமொழி:
வாரணமாயிரம்: பாடல்: 6.
111. பி.இ., கா.பா. 12ஆ/ பாடல்கள் 1.22.
112. அன்னம், மயில், கிள்ளை, மேகம், நாகணவாய்ப்புள், குயில், நெஞ்சு, தென்றல், வண்டு என்பனவற்று ன் பாங்கியும் தூதனுப்பப்படலாம் என இரத்தினச் சுருக்கத்தின் ஏழாம் சூத்திரம் கூறுகின்றது. பிற்காலத்துத் தூது இலக்கியங்களிற் கழுதை, காக்கை, செருப்பு, தமிழ், து?ல், நெல், பணம், பிள்ளை, புகையிலை, புலவர், மான் என்பவற்றுடன் விறலியையுந் தூதனுப்பியதாகப் பாடப்பட்டுள்ளன. இது பற்றிய விபரங்களைத் தூது இலக்கியம் என்ற நூல் (செயராமன்: ந. வி. 1965) விரித்தல் 86 T6T86.
113. செயராமன், ந.வீ. (1965) பக். 61.

Page 120
212 மட்டக்களப்பு மாவட்ட.
இரு அமைப்புகளும் இடம்பெற்றிருத்தல், அல்லது அவற்றில் ஒரு விடயம் வருணிக்கப்பட்டிருத்தலைக் காணலாம். தூது யாருக்கு அனுப்பப்படுகின்றதோ அவரைப் பற்றிய வருணனைகளுஞ் சில பாடல்களில் இடம் பெற்றுள்ளன. முதலிரு வரிகளிலே தூது செல்லும் பறவைபற்றிய வருணனையும், மூன்ரும் வரியிலே தூதுச் செய்தியைப் பெறுபவரின் வருணனையும், நான்காம் வரியிலே தூதுச் செய்தியும் இடம்பெறும் அமைப்புச் சிலபாடல்களிற் (1,2,4) காணப்படுகின்றது. மூன்ரும் பாடலிற் கிளி, நங்கணம் இரண்டையும் “தூரப்பறந்து சென்று துயர் கூறிவந்திடுவாய்'14 என்று கூறும் அமைப்புள்ளது. குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, காதலனைக் கண்டு தான் இற் சிறைப்பட்டிருக்கும் செய்தியைக் கூறு என ஐந்தாம் பாடல் அமைந்துள்ளது. ***
காதலி பறவைகளை யழைத்துக் காதலனின் செய்தி கேட்கும் 18 தன்மையும் (4,6), நங்கணங்களைத் தன் துயர்கூற அழைக்கும் முறையும் (10), காணப்படுகின்றன. குயில், ' புழு, நங்கணம் ஆகியனவற்றை வருணித்து விளித்து, காதலனை அழைத்துவரும்படி ' கூறும் அமைப்பும் (7) இடம்பெற்றுள்ளது. ஒருத்தி காகத்திடம் காதலனின் செய்தியை விசாரித்தறிகின்ருள் (8). ‘காதலனின் செய்தியைச் சொன்னுற் பரிசுதருவதாகக் காதலிகூறும்" (9) அமைப்பும் நோக்கற்பாலது. காதலனின் உருவம், அவன் தொழில்புரியுமிடம் என்பவற்றின் வருணனைகளை கூறித் தூதனுப்பும் (10,11) தன்மையுங் காணப்படுகிறது.
114, 'களவுக் காலத்திலே தலைவி தலைவனிடமும் கற்புக் காலத்திலே தலைவன் தலைவியிடமும், தூதுவிடுதல்அகப்பொருள் இலக்கியங்களிற் காணும் பெரும் பான்மையான வழக்கு. தலைவிக்குக் காமம் மிகுந்துழி, அஃறிணைப் பொருள்களிடம் தூது சென்று வருமாறு வேண்டிப் பாடப்பெற்ற காம மிக்க கழிபடர் கிளவித்துறைப் பாடல்களே அதிகம் உள்ளன. செயராமன் ந.வீ. (1965) பக். 24. 115. 1. நற்றி?ண, 193 ஆம் பாடல் 376 ஆம் பாடல்கள் நோக்குக.
11. நம்மாழ்வார், திருவாய்மொழி: அஞ்சிறைப்பத்துப் பாடல்கள் 116. "கேட்குந போலவுங் கிளக்குந போலவும், இயங்குந போலவும், இயற்றுந போலவும், அஃறிணை மருங்கினும் அறையப்படுமே." நன்னூல், சூத். 409. 117. 'சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்விரோ..?
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்: திருப்பழனம்-பாடல் 1. 118. கலி: நெய்தற்கலி 26 ஆம் பாடல் பார்க்க. 119. 1. “சிறையாரும் மடக்கிளியே இங்கேவா.
திருஞானசம்பந்தர் தேவாரம். திருத்தோணிபுரம்-பாடல் 10. 11. திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம்: பாடல்: 27; 11. ஆண்டாள். நாச்சியார் திருமொழி; பாடல் 5. 1v. மறுவில்தூவிச் சிறுகருங்காக்கை:அன்புடை மரபின்நின்கிளை யோடாரப், பச்சூன் பெய்த பைந் நிறவல்சி, பொலம்புனே கலத்திற் றருகுவென்மாதோ. **ஐங்குறுநூறு பாடல் 391
99

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 213
காதலன் தூது அனுப்புவதாக அமைந்துள்ள பாடல்களும் காணப்படுகின்றன. பறவைகளை விளித்துத் தன் காதலியைக் கண்டீர்களோ என வினவுவதாக 13 ஆம் பாடல் அமைந்துள்ளது. ஒருவன் தன் காதலியைச் சந்தித்தால் தன் நிலையைக் கூறும்படி காகத்தைத் தூது அனுப்புகின்ருன் (14). காதலியின் இருப்பிடம் கூறிக் காகம் தூதுதணுப்பப்படுகிறது. (15) காதலியின் அழகும் அவளது அடையாளங்களும் தூது செல்லும் பறவைக்குக் கூறப் படுகின்றன. (16) காதலன் காதலியிடம் தூதுதணுப்பிய காகம் மீண்டும் அவனிடம் திரும்பிவருவதும், அவன் அதனை மீண்டும் அனுப்புவதும் பாடற்பொருளாக அமைதல் (17, 18) குறிப்பிடற் பாலது. காதலி தனிமையாக இருக்கும் சந்தர்ப்பத்திலே தனது தூதுச் செய்தியைக் கூறும்படியாகத் தூதனுப்பும் பாடலுங் காணப்படுகிறது.(19)129 حس
காதலனின் தூதுச் செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த காதலி காகம் கரைவதை நோக்குகிருள். ஆனல் அக்காகம் தொடர்ந்து கரைந்து கொண்டிருக்கிறதேயொழியக் காதலனின் வருகையைக் குறித்துக் காட்டுவதாக இல்லை.** அதனற் கோபங்கொண்ட காதலி காகத்திற்கு ‘எறிஞ்சிருவன் பொல்லால’ (20), “தன் காதலன் சேரும் மட்டும் கத்தாதே' (21) எனக் கூறுகிருள். தினமுங் காகம் வந்திருந்து கரைகின்றமையை அவதானித்த காதலி, காதலன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கை யில் இருக்கின்ருள். ஆனல் நாட்கள் பல கடந்தும் காதலன் வராமையால் ‘உன் சாத்திரமும் பொய்யாச்சே’ (22) எனப் பாடுவதும் பாடற்பொருளாகக் காணப்படுகிறது.
12இ காதலரது வெறுப்பைக் குறிப்பிடும் பாடல்கள். ***
அன்பினுலும் உறவுமுறையினுலும் இணைந்த காதலர் காலப் போக்கிற் பிரச்சினைகளாலும் உறவினர்களின் தூண்டுதல்களா லும், சூழ்ச்சிகளாலும் பிணங்குதலுண்டு. அத்தகைய இயல் பினைக்குறித்துக் காட்டுவதாக இங்கு வரும் பாடல்கள் அமைந் துள்ளன. முதல் ஏழுபாடல்களிலும், காதலனது போக்கிலும் நடத்தையிலும் ஐயங்கொண்ட காதலி அவனுக்குத் தனது
aw
120. "ஆரும் அறியாமல் அந்தரங்கமாக வந்து சேரும்படி இறைக்குச் செப்பிவா
பைங்கிளியே,"தாயுமான சுவாமிகள் பாடல்கள், பைங்கிளிக், கண்ணி-4. 121. காகத்துடன் தொடர்புடைய நம்பிக்கைகளை நூலுள் காண்க.
122. பி, இ. கா. பா. 12இ| பாடல்கள் 1-14.

Page 121
214 W மட்டக்களப்பு மாவட்ட .
வேதனையைக் கூறுவதாக அமைகின்றன.** அவற்றை அடுத்து வரும் பாடல்களில் சீதனம் கேட்கும் காதலனை வெறுத்துப் பேசு வதையும், (8) தன்னுடன் வீண்மொழிபேசாது விலக்கிச் செல்லும் படி கூறுவதையும் (9) அவதானிக்கலாம்.
தன்னேடு அன்பாய்ப் பழகிவந்த காதலி சில நாட்களாகத் தன்னைச் சந்திக்க வருவதைக் குறைத்துக் கொள்வதை அறிந்த காதலன், "உனக்கு என்னேடு என்ன கோபம்’ (12) எனக் கேட் கிருன். குழந்தைப்பருவம் முதலாகக் காதலர் இருவரும் ஒன்மு கவே வளர்ந்து உறவுமுறை கொண்டாடியவர்கள்; ஆணுல் நாட் போகப் போக, அவள் விலகி நிற்பதைக் கண்டு “பெருக்கப் பெருக்க என்னேட பேச மனத்தாபமென்ன’ (10) என்று வினவு கிருன். காதலரிடையே மனத்தாங்கல்கள் ஏற்பட்டபோது *மடியுமட்டும் மனித உறவு இருக்குமென எண்ணியிருந்தேன்: நீங்க அற்பத்துக்குள்ளே மறந்ததென்னகா மதினி” (13) எனவும், தனக்கு அளித்திருந்த சூளை நீ இப்போது மறந்து விட்டாயே (14) எனவும் காதலன் காதலியை வினவுகிருரன். 'ஆலம்பழமும் அணிலும்போல’ அன்புடன் வாழ்ந்த நாம் *காஞ்சுரம் காயைக் காகம் வெறுப்பதுபோல வெறுப்பு மனப்பான்மை கொண்டமைக்குக் காரணம் என்ன (11) எனப்பாடுவதும் நோக் கற்பாலது.
|2ஈ/ பொருந்தாத் திருமணம் *** பற்றிய பாடல்கள் 12"
கிராமப்புறங்களில் உறவுமுறைத் திருமணங்கள் நடைபெறு வதே வழக்கமாதலால், அந்த மரபுக்கமையப் பல பிரச்சினைகளுக் கும் ஆளாகவேண்டிய நிர்ப்பந்தம் காதலருக்குண்டு. சொந்த மச்சான் என்ற கட்டுப்பாட்டினல் வயதால் மூத்தவனையோ அழகாற் குறைந்தவனையோ அல்லது அங்கவீனனையோ?? மனக்க வேண்டிய கட்டாயம் பெண்ணுக்கு ஏற்படுகிறது. அன்றியும் தாரமிழந்தவனையும் மணக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கும் பெற் ருேராற் பெண் ஆளாக்கப்படுகிருள். இதற்குப் பொருளாதார நிலையும் காரணமாகின்றது. ஒருவன் கிராமத்திற் பெருஞ் செல்
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔--مح۔۔۔۔۔۔۔
123. 1. குறுந் 238 ஆம் 285 ஆம் பாடல்கள். 11. கலி. நெய்தற்கலி பர்டல்
20 வரி 18-19,
124, கைக்கிளை, பெருந்திணகுறித்த, பொருந்தாக்காமம் பற்றிய தொல் காப்பிய சூத்திரங்களும், அவைபற்றிய சங்கச் செய்யுள்களும் ஈண்டு ஒப்பிடத்தக்கன.
125. i. g... 6 IT, LI IT.I2FF LI TL-sisassir 1-5.
26. கலித்தொகையிற் கூறப்படும் கூனும் குறளும்பற்றிய மருதக் கலி 29 ஆம்
lu TL6) u Täh86.

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 215
வந்தன்; ஆனல் தாரமிழந்தவன்; பெற்ருேர் அவனது பணத்துக் காகத் தம் மகளுக்கு அவனைத் திருமணம் செய்யமுயல்கின்றனர். *அயலூர் மாப்பிள்ளையைவிடச் சொந்தவூர் முடவன் நல்லது’ என்ற பழமொழிக்கமையச் சொந்த ஊரிலே உறவுமுறை மச்சான் உளதால் அயலூரான் தனக்குத் தேவையில்லை என்று மறுக்கிருள் (1+2). மணமகனை 'தங்கவேட்டி ?? சருகைச் சால்வை அணிந்து, செருப்புப்போட்டு நடந்தாலும்” (3) அவனது, குணம், நிறம், தொழில், நடத்தை முதலிய காரணங்களால் அவனை அவளுக்குப் பிடிக்கவில்லையாம். பந்தலிற் படர்கின்ற பால் அவரையின் பூக்கள் ஒரே திசையை நோக்கியே பூக்கும். அவற்றை மறுதிசைக்கு வளைக்கமுடியா. வளைக்க முயன்ருல் அப் பூக்கள் ஒடிந்து பயனற்றதாகிவிடும். அதுபோன்றே "எந்தன் மனசை இனித் திருப்பப் போறதில்லை' (4) என்று விருப்ப மில்லாத் திருமணத்தை மறுத்துரைக்கும் பெண் தனது உளவுறுதி யைக் கூறுகிருள். ஆற்றிலே மீனைக் கண்டாற் கானன் என்ற பறவை அதனைப்பிடிப்பதற்காக வட்டமிட்டுக்கொண்டே யிருப்பது போன்று என்னை வட்டமிடத் தேவையில்லை; இத் திருமணத்திற்கு நான் சம்மதிக்கப்போவதில்லை (5) என ஒரே முடிபாகக் கூறிப் பொருந்தாத் திருமணத்தை மறுத் துரைக்கின்ற மையை இப்பாடல் விளக்குகின்றது.
|2உ| மந்திரவித்தையை நாடுங் காதலர் பாடும்பாடல்கள் 128
மந்திரவசியம்மூலம் கன்னிப்பெண்ணைத் தன்வசமாக்கித் திருமணஞ் செய்யும் வழக்கமும்,** பரத்தமை ஒழுக்கத்தின் பொருட்டுப் பெண்ணை வலிந்து வரவழைக்கும் முறையும்பற்றிய பாடல்கள் இங்கு ஆராயப்படுகின்றன. காதலர் சந்திக்கும்போது காதல் வசிய மந்திரம்பற்றியும் உரையாடுகின்றனர். "ஆட்டின் பித்து, குறிப்பிட்ட பெண்களின் அடிமண், தலைமயிர் என்பவற்றை எடுத்து உச்சாடனஞ்செய்து அப்பெண்ணைத் தன்னிடம் ஓடிவரச் செய்திடுவேன் (1) ” எனப்பாடுகிறன் ஒருவன். "உள்ளாங்குருவி யின் பித்தை எடுத்துச் “சேர்த்தி மருந்து’’ அரைத்து, மந்திரம் செபஞ்செய்து உன்னை எனணிடம் ஓடிவரச் செய்திடுவேன்’ (2) எனவும் பாடப்படுகிறது. வைரவன் என்ற தெய்வத்தை முன்னிறுத்தி கரையாக்கன் பூவை மந்திரஞ் சொல்லி ஒதினுல் நீ என் காலடிக்கு ஓடிவந்திடுவாய் (3) எனக் கூறிக் காதலியைப்
127. தங்கச்சருகை வேட்டியே தங்கவேட்டி எனக் கூறப்படுகிறது.
128, 16, 9., *T. um. I2a-l uILov 1-3.
129, "தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடல்" என்ற
தொல்காப்பிய சூத்திரம் (994) ஈண்டு நினைவுகொளற்பாலது.

Page 122
216 மட்டக்களப்பு மாவட்ட.
பயமுறுத்துவதாகவும், நகை செய்வதாகவும் இப்பாடல்கள் அமைந்துள்ளன.
/3/ காதலிலே தோல்வியுற்றேரது வேதனைப் பாடல்கள் 180
வெற்றியுந் தோல்வியும் இணைந்ததே வாழ்க்கையாகும். காதலர் அன்பின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் விரும்பி, நம் பிக்கையின்பேரில் இணையக்காத்திருப்பர். நம் பி க்  ைக த் துரோகம் ஏற்படும்போது காதலிலே தோல்வி ஏற்படுவது இயல்பே. அவ்வாறு காதலிலே தோல்வியுற்றேரது வேதனை களைப் பாடுவதாகவுள்ள பாடல்கள் இங்கு ஆராயப்படுகின்றன.
காதலனை ஆளாக்கியவள் காதலி. ஆனல் யாரோ ஒருத்தி அவனை மயக்கித் தன்வசமாக்கிவிட்டாள்.' ‘அங்கே ஒரு தேவடியாள்*** அழைச்செடுத்தாள் ஆண்டவனே” என்று அப் பெண்ணை வைது, ஆண்டவனிடம் முறையிடுவதாக முதற் பாடல் அமைந்துள்ளது.
வேறு திருமணம் செய்துகொண்ட தன் காதலனின் உள் வஞ்சனையை, அவளால் ஊடறுத்து 189 அறியமுடியவில்லை. (2) இந் நிலையில் அவளின் துயரை வெளிப்படுத்த அழுகைதான் உண்டு. “கடலுக்கு அங்காலகாடாரம் பத்தையிலே போயிருந்து அழுதாலும் என்ர பூங்காரம்** தீராது’ (3) எனவும், தனது "கவலைகளைச் சொல்லி அழுதால் ஏழுகடலும் இரையமைந்து கேட்டிருக்கும்' (18) எனவும் தனது உளத்துயரைக் குறிப் பிடுகிருள். ஒருத்திக்கு உற்ருரும், பெற்ருரும் சுற்றத்தினரும் சூழலும் பகையாளியாகிவிட்டமையினல் “இந்தப் பூவுலகில் ஏன் பிறந்தேன்’**** (4), எனக் கலங்கி அழுகிருள். உலகத்தை விளங்காத அப்பெண் "உங்கள நம்பினது என்தவறு' (13) எனத் தன்னை நொந்து கொள்கிருள்.
130, பி.இ., கா. பா. 13 பாடல்கள் 1.27. 131. முக்கூடற் பள்ளு, மூத்தபள்ளி முறையீடாக வரும் பாடல்கள்.
132. பரத்தை, 133. பி. இ. சொல்லடைவு பார்க்க, 134. மேலது,
135. 'யான் உற்ற எவ்வம் உரைப்பின் பலர்த் துயிற்றும் யாமம் நீ துஞ்சலைமன்
.* கலி, நெய்தற்கலி பாடல் 28. வரி. 36-37. 136, 1. 'கல்லா மதியே கதிர்வாணிலவே, செல்லா விரவே சிறுகாவிருளே, எல்லா மெனையே முனிவீர் நினையா, வில்லாளனையா தும்வினித் தீரோ" கம்பராமாயணம் சுந்தர காண்டம், உருக்காட்சிப் படலம் - பாடல் 463. 11. குற்றலக்குறவஞ்சியில் வசந்தவல்லி நிலவைப் பழித்துரைக்கும்
பாடல்களும்(31-32) ஈண்டு ஒப்பிடற்பாலன.

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 217
காதல் கைகூடாத பெண்ணுெருத்தி தன் நிலைக்குக் காரணம் விதிப்பயனே என எண்ணி 'ஆரிட்ட கட்டளையோ’’ (12) என விதியை நொந்து கொள்கிருள். காட்டிற் கலையும் கலைமானும் ஒன்ருக இணைந்து வாழும்போது கலையைக் கலைத்துவிட்டாற் கன்னிமான் என்ன செய்யும் (5) என்ற எடுத்துக்காட்டு மூலம் காதலனை இழந்த காதலி தனது நிலையைப் புலப்படுத்துகிருள். நகமுஞ் சதையும்போல வாழ்ந்த அவர்களது வாழ்க்கையில் இப் போது நஞ்சு கலந்துவிட்டார்களே (6)என்றும், தனக்குக் கடவுள் துணை (16) என்றும் காதலிலே தோல்வியுற்ற ஓர் வஞ்சனையற்ற பெண்கலங்குவதாகப் பாடல் அமைந்துள்ளது.
தனது காதலனுக்குச் சீதனத்துடன் கலியாணம் பேசிச் செய்துவைத்தவள் அவனது மூத்த சகோதரியாகும். அவளைத் தற்செயலாகக் கண்ட காதலி தனது வஞ்சம் தீரும்வகையில், அவள் தலைகுனியும்படியாக 'முத்துக் கொம்பன் பல்லழகி 137 என ஏளனமாக விளித்து உனது, தம்பியை என்ன விலைபேசிச் சீதனத்துக்காகக் கட்டிக்கொடுத்தாய் (9) எனக் கேட்கிருள் . பெண்ணுெருத்தி, தன்னைக்கைவிட்டு வேறுதிருமணஞ் செய்து கொண்ட தன் காதலனைச் சந்தித்து "என்னை விடப் பல்லழகும் கூந்தலழகும் மச்சான் நீ பார்த்தெடுத்த செங்குரங்கிடம் இருக் கின்றதா’ (7) எனத் துணிந்து கேட்கிருள். அவன் அழகுக்காக வன்றிப் பணத்திற்காக வேறு பெண்ணைத் திருமணம் செய் துள்ளமையாலே அவள் அவனது மனைவியைப் 'பார்த்தெடுத்த செங்குரங்கு” எனத்துணிந்து கூறினள். வீடு, மாடு, வயல் என் பனவற்றைச் சீதனமாகப்பெற்று,** விரும்பாப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட தன் காதலனுக்கு அதனைச் சுட்டிக் காட்டி ‘விருப்பமில்லாப் பெண் பெரிதோ அன்றி மானமுள்ள பெண் பெரிதோ’ (11) எனவும் கேட்பதாகவும் பாடல்கள் அமைந் துள்ளன. காதல் கை கூடாத பெண் தனது காதலனைச் சந்திக்கும் போது இவ்வாறு தனது ஆத்திரம் தீரும் வகையில் அவனை வன் மொழியாற் பேசுவதை இப் பாடல்கள் விளக்குகின்றன.
‘தன் காதலனை மாமி தனக்குத் தரமாட்டேன் எனச்சொல்லி விட்டாளே” (22) என்று காதலி ஏங்குகின்ருள். இப்பாடலிற் காதலனின் பெருமையும் அவனை அடைவதிலுள்ள அருமையும் கூறப்படுவதாயிற்று. அத்தகையவனைச் செல்வச் சீமான்கள் சீதனமாகிய அருவிலைகொடுத்து வாங்கக் காத்திருக்கிறர்கள், “இந்த இல்லாத நாய்க்கு” ஏன் கொடுக்க வேண்டும் எனமாமி
137. பல் அவலட்சணம் கூறினுள் என்க. 138. நூலுள் பார்க்க

Page 123
218 மட்டக்களப்பு மாவட்ட.
கூறிவிட்டாளாம் ஒருத்திக்கு (23). காதலி தனது ஏழ்மையினையும் அதனல் ஏற்பட்ட தாழ்மையினையும் "இல்லாத நாய்' என்ற தொடரால் வேதனையோடு வெளிப்படுத்தி வெதும்புகிருள். இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கும்போது அவளது ஏழை மனம் பேதலித்துப் புண்ணுய் உருகுகிறது. அக்*கன்னிக்குமரி”* தனியே இருந்து இவ்வாறெல்லாம்தான் அல்லற்படுவதை"இந்தப் பூவுலகில் யார் அறிவார்’, (3) எனத் தனது துன்பத்தைச் சொல்லிக் கலங்குகிருள். காதலருக்குச் சீதனப் பிரச்சினை ஏற் படும்போது அதனுல் வாழ்நாள் முழுவதும், வேதனைப்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் ஆளாவதை 22, 23, 24 ஆம் பாடல்கள் பொருளாகக் கொண்டமைந்துள்ளன.
காதலி தனக்குரைத்த சூளைப்பொய்ப்பித்து வேறுதிருமணஞ் செய்து விட்டாள் என்பதை எண்ணியெண்ணி ஏங்குகின்ருன் ஒருவன் (19). அவன் அவளை ‘ஈரமில்லா நெஞ்சினள் (26) என்று வைகின்றன். 'சோடிதப்பிப் போச்சு தென்று' வாடிவதங்கு வதாகத் துன்பக்குரல் எழுப்புகின்றன். காதலியின் வீட்டுக்குச் சென்ற அவனுக்கு இருப்பதற்குப் பாய்போடவில்லை." அந்த அவமானத்தை நினைக்கும்போது அவனுக்கு உள்ளம் குமுறுகிறது (27). இவ்வாருகக் காதல்கைகூடாத காதலர்கள் தம் மனத் துயரை வெளியிடுவதாக இப்பாடல்களின் பொருளமைப்புக் காணப்படுகிறது. W
|4| கணவன் மனைவி உறவுமுறைப் பாடல்கள் 141
கணவன் மனைவி உறவு முறைகள். குடும்பப் பிரச்சினைகள், குடும்ப நிகழ்ச்சிகள் என்பனவற்றைக் குறிப்பிடும் பாடல்கள் இப்பிரிவில் அடங்கும் , பிற பெண்களை நாடும் தம் கணவனை இடித் துரைப்பதாக முதல் மூன்று பாடல்களும் அமைந்துள்ளன. பாடற்பொருள் உருவகமாகக் கூறப்பட்டுள்ளது. மனைவி கருப்ப வதியாக இருப்பதை 'வாழையில் குலையிருக்க” (2) என்றதொடர் விளக்குகிறது.
கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையினல் மனைவி யுடன் தொடர்பு எதுவும் கொள்ளாது கணவன் நடந்து கொள் கிருன் என்பதை மனைவி கூறுவதாக 4 ஆம் பாடல் *** அமைந்
139. கன்னி என்றலும் குமரி என்றலும் ஒக்கும். ஒருபொருள் குறித்த இரு
சொற்கள் கன்னியாகுமரி என்ற இடப்பெயரையும் நோக்குக.
140. நூலுள் பார்க்க,
141. பி. இ. கா. பா. 14 பாடல்கள் 1-18.
142. குறுந், பாடல் 102, நற்றிணை 129 ஆம் பாடல்.

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 219
துள்ளது. பிரிந்து வாழும் தன் கணவன் கடமைக்காகப் பல நாட் களுக்கு ஒரு தடவை வந்து செல்வதைச் சுட்டிக் காட்டும் வகையிற் 'காலமொருக்கால் கடனழிக்க வாறதாக்கும்’** (5) என மனைவி பாடுகிருள். கணவனைப் பிரிந்துவாழும் பெண் விதிப்பயனலே தாம் பிரிந்திருக்க நேர்ந்தமையை நினைந்து, விதியை நொந்துகொள்கிருள் (6). இவ்வாருகக் கணவன் மனைவி யருக்கிடையில் நிகழும் குடும்பத் தகராறுகளை உட்பொருளாகக் கொண்டு இப்பாடல்கள் அமைந்துள்ளன.
சீதனப் பிரச்சினைகள் பற்றிப் பின்வரும் பாடல்களிற் கூறப் படுகின்றது. ‘ஏழு அவண நெல், எருமை, கண்டு மாடுகள் என்பன சீதனமாகவும், ஆறுமாதச் சாப்பாடும் தரப்படும்; திருமணத் திற்குச் சம்மதமோ (7) எனவும், மூன்றறையில் வீடுகட்டிச்* சீதனமாகத் தரப்படும்’ (8) எனவும் கூ ற ப் படுகின்றன. அடுத்த இரு பாடல்களிலும் சீதனம் கேட்போரின் கொடுமை பற்றிச் சித்திரிக்கப்படுகிறது. "சீதனமாக உயர்ந்த வீடுகட்டி, ஒடுவேய்ந்துதரும்படி கேட்டால், தன் கணவன் பணத்திற்கு என்ன செய்வான்’ (10) என்ற பொருளிலும், *கல்வீடும் கற்கிணறும் சீதனமாகக் கேட்டவரிடம் எத்தனை கார் (Car) ஒடு கிறது” (9) என ஏளனம் செய்யும் பாணியிலும் பாடல்கள் அமைந்
தனது சகோதரனின் மனைவி திருமணத்திற்குமுன் சட்டை அணிபவள், திருமணத்தின்பின் சேலைகட்டியிருப்பதைக் கண்டு நகையாடிப் பாடுவதாகப் 11 ஆம் பாடல் அமைந்துள்ளது. தன்னை அறியாமற் களவாகத் திருமணப்பதிவு செய்தால் தான் கடலில் விழுந்து தற்கொலை செய்வதாகத் தாய்தன் மகனைஎச்சரிப் பதை 13 ஆம் பாடல் குறிப்பிடுகிறது.
திருமணம் செய்துகொடுக்கப் பணவசதியின்றிக் குமரை வைத்திருக்கும் ஒரு தாயின் வறுமைநிலை 14 ஆம் பாடலிற் கூறப் படுகின்றது. ‘ஈரச்சுவர்’ எத்தருணத்திலும் இடிந்துவிழக் கூடியது; களிமண் சுவரிலிருந்து இடிந்த மண்ணிற் பசைத்தன்மை அற்றுப்போயிருப்பதால் மீண்டும் அது பயன்படுத்த முடியாத தாகின்றது. அதனை உவமையாகக் கொண்டு தனது வறுமை நிலைப் புலப்படுத்தப்பட்டுள்ளது. 15 ஆம் பாடலில் வீட்டின் கஷ்டநிலையும், கணவனின் அக்கறையின்மையும் கூறப்படு
143. பி.இ, சொல்லடைவு பார்க்க, 144, நூலுள் பார்க்க

Page 124
220 மட்டக்களப்பு மாவட்ட.
கின்றன.*திருமணஞ் செய்தும்பிள்ளைப்பேறில்லாது கவலைப்படும் பெண்ணுெருத்தியின் மனக்குமுறலாக 16ஆம் பாடல் அமைகிறது. ‘கடவலுக்கு அங்கால காய்க்கிறதும் பூக்கிறதும்’ என்ற தொடரில் அயலவர்கள் யாவரும் குழந்தைச் செல்வத்தோடு பூரித்துமகிழ்வதைச் சுட்டிக்காட்டித்,*" தனக்குமட்டும் குழந்தை யில்லையே என ஏங்கும் மனைவியின் மனேநிலை இப்பாடலின் பொருளாகின்றது. பாடலில் வரும் பூ, பிஞ்சு, காய் என்பன கரு உற்பத்தியாகிக் குழந்தையாக வளரும்முறையின் அடையாள lota, (Symbols of development offcetus) egy60) LDjög) GiroTGör. 1*7 இறுதியாகவுள்ள இரு பாடல்களிலும் பெண்குழந்தையைப் பெற விரும்பும் தாயின் மனேநிலையும்,பெண்ணைப் பெற்று வளர்த்துத் திருமணஞ் செய்து கொடுக்கவேண்டும் என்ற உளத்துடிப்பும் பாடற்பொருள்களாக அமைந்துள்ளன.
காதற் பாடல்களில்வரும் உவமை, உருவகங்கள்
பாமரமக்கள் தம் உணர்ச்சிகளை எளிதில் வெளிப்படுத்த உவமைகளையும் உருவகங்களையும் பயன்படுத்துவதை அவர்களது பேச்சு வழக்கில் மட்டுமன்றி, நாட்டார் பாடல்களிலும் காண லாம். தமது உணர்ச்சியை ஓர் உவமையாலோ அல்லது ஒர் உருவகத்தாலோ கூற முடியாவிடின், தொடர்ந்தும் அவற்றை அடுக்கிக்கூறும் அமைப்பும் இப்பாடல்களிற் பின்பற்றப் பட்டுள்ளது.
காதற் பாடல்களிற் பயின்றுவரும் உவமைகள் காதலரது செயல்களையுஞ் சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் குறியீடு களாகவும், காதலரது அன்பின் ஆழத்தையும் உணர்ச்சிப்பெருக் கையும் எடுத்துக் காட்டும் கருவிகளாகவும் அமைகின்றன. காதற் பாடல்களில் அன்பு மொழிகளின் குறியீடுகளாக அமைந்துவரும் உவமைகள் பிறர் அறியாதவாறு காதலர் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையிலும் பயன்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.***
145. இவ்வியலின் 131 ஆம்'அடிக்குறிப்புப் பார்க்க.
146. "மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே”. புறம். பாடல் 89.
147. நூல் பக். 102 பார்க்க.
148. The Use of Symbols is seen mainly when a singer wants to suggest the idea or when he does not prefer to describe it openly due to other restrictions'. Pande, Trilochan, (1971) P. 430.

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 22
பொதுவாகக் காதலுணர்ச்சி வேகங்கூடியது எனக் கூறப்படு கிறது. எனவே அவ்வுணர்ச்சியைப் புலப்படுத்தும் வகையில் அவர்கள் கையாளும் பாடல்களும், பாடல்களில் இடம் பெறும் உவமை, உருவகங்கள்என்பனவும் சுருக்கவடிவுடையனவாகவே149 அமைந்துள்ளன. வாழ்க்கைச் சூழலிலே தாம் கண்டனுபவித்த பொருள்கள், கேட்டறிந்த விடயங்கள், பார்த்து மகிழ்ந்த காட் சிகள், அருந்திச் சுவைகண்ட கனிவகைகள் என்பன உவமை, உருவகங்களாக அமைந்துள்ளன. அவற்றில் கிராமிய மண்வாசனை வீசுகின்றது; நாட்டார் இலக்கியப் பண்பும் மிளிர்கிறது.
உவமைகள்:
காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் புகழும்போதோ,
அன்போடழைக்குமிடத்தோ அல்லது நினைவு கொள்ளும் போ தோ பெயர் கூருது," உவமையாகக் கூறும்பண்பே காணப்படு கின்றது." உவமைகளைப் பயன்படுத்தும் போது அவர்கள் எந்த எந்த உவமைகளை யார் யாருக்குக் கூறவேண்டும் என்ற ஒரு பொதுநியதி காணப்படுவதாக இல்லை. பொதுவாக நோக்கு மிடத்தும் பெரும்பாலான உவமைகளும் இருபாலாருக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாடற்பொருளைக் கொண்டே குறிப் பிட்ட உவமை ஆணைக்குறிக்கின்றதா அல்லது பெண்ணைக் குறிக் கின்றதா எனத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. பாடல்களிற் பயன்றுவரும் உவமைகளைக் காதலன், காதலி, இருபாலார் ஆகிய பிரிவுகளின் கீழ் வகுத்துத்தரப்படுகின்றன.
காதலியைக் குறிப்பிடும் உவமைகள்
(அ) கனிகள்: மாம்பழம் - மாங்கனி, ச? வாழைப் பழம், ° ஆலம் பழம், ** முந்திரியம் பழம்,
149, கைலாசபதி. க. (1972) 54 ஆம் பக்கம் பார்க்க.
150, ‘மக்கள் நுதலிய அகனைந்திணையுஞ் சுட்டியொருவர் பெயர்கொளப்
பெரு.” தொல், அகத்திணையியல் சூத், 54,
151. “Instead of addressing by name, especially in case of love, affection one choses a metaphor', Mahapatna, S. (1974). P.319.
152. 5.3. BST. T I 1 s | Li Tlio 1, l 29I LI TLliso 40, 1291 LI mIL6io 12, 12a |
பாடல் 12, 11ஐ பாடல் 9,
153. மேலது 11உ! பாடல் 18, 13 பாடல் 20; 154. மேலது, 12இ! பாடல் 11: 155. மேலது, 1ஐ பாடல் 32.

Page 125
222
மட்டக்களப்பு Drroll
(ஆ) மலர்கள் தாமரை,188 கண்டுவம்மிப்பூ," கடல்
அவரைப்பூ,*** மாதாளம்பூ.1°
(இ) மரங்கள்: சந்தனமரம், 8° தேமல் முதிரை -- சிறு
முதிரை - கல்முதிரை***, பூத்தமரம்,***
(ஈ) செடிகள்: ஆடும்கொடு,18* தாழைமடல்,8* பூமடல்,188
மாந்தனை, 168 வளர்பயிர்,187 கறுத்தக் கரும்பு, 18S மருக்கொழுந்து வெற்றிலை,188 ஏலம், 170 கராம்பு, 17
(உ) பறவைகள்: w
Goff *ஆரம்உழுந்தகிளி' - ஆசைக்கிளி
மான்கிளி - செம்பகிளி - தங்கக்கிளி -- ராசகிளி - கூட்டுக்கிளி 172
குயில்: நீலக்கருங்குயில் - கருங்குயில் 178
மயில் அலங்காரப் பெண்மயில், 74
அன்னம்: அன்னம், 175
புரு: மாடப்புரு, 178
சேவல்: "மாம்புள்ளிச் சாவல்”*177,
நங்கணம்: மலைநாட்டுநங்கணம் - கற்பழியா
நங்கணம்178 வண்டு: வாசமுள்ள வண்டு, செங்குடலைநாக
வண்டு179
156. மேலது, 11ஈ| பாடல் 4: 157. மேலது 2அ பாடல் 39; 11உ| பாடல் 9, 12அ! பாடல் 39. 158. மேலது, 1உ! பாடல் 22, 159. மேலது, 12அ/ பாடல் 42. 160 மேலது, !1ஈ| பாடல் 20: 161. மேலது 11உ! பாடல் 2. 162. மேலது, 11ஐ பாடல் 18. 163. பி.இ.கா.பா 12அ/ பாடல் 15; 164, மேலது, 1உ| பாடல் 18: 165. மேலது, 11அ 5; 166. மேலது 11உ122; 167. மேலது, 11ஊ1,0; 168. மேலது 11ஐ 29, 31: 169. மேலது, 12அ124; 170. மேலது 11அ 1; 171. மேலது. 172, மேலது 11.அ பாடல் 4,21.24, 11 ஆ| 13, 16.18, 11ஐ 1, 28 12அ| 27, 36; 173. மேலது 12அ, 54, 12ஆ| 14 174. மேலது 12அ பாடல் 25, 175. மேலது, 11ஐ 11:1 176. மேலது, 11ஆ112; 177. மேலது 11.அ 15; 11இ| 8; 178. மேலது. 11அ! 3; 11எ/6; 179, மேலது, 11அ15;

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 223
(ஊ) விலங்குகள்: "காராம்பசு ஈண்ட கண்டு, 180 கலை
மான், 81 மான்கண்டு, 18 2 கொம்பன்,188
கன்னிவிரால் 84 வேட்டைக்கிடா4, 185
rr >3 | 8 6
செங்குரங்கு இல்லாதநாய்,*187,188
(எ) பொருள்கள் : மாணிக்கக்கல்,199 நவமணி,4° முத்து
- அறையிலுள்ள ஆணிமுத்து, "* சீனத்துச்செப்பு,1% உருகுமெழுகு - உள்ளுருகும் (да-thц, 193 தங்கக்குடம்,194
பொன்னகை, தங்கம்,198 கந்து விளக்கு,191 கடவலடித்தோரணம், 199 தருமக்கிணறு,199 வெண்ணிலவு,200
மலையில் அடைபொழுது,991 கண் மணி,??? இன்னமுது,209 கற்கண்டு,204 வலதுகையிற் சர்க்கரை," வடிதயிரு,299 ஆற்றுமணல்,297
(ஏ) உயர்ந்தோர் 9-6)}6ð)LD சீதேவி,209
சுந்தரி,209 சிங்கமகாராசாத்தி,219
2. காதலனைக் குறிக்கும் உவமை
(அ) கனி : மாம்பழம்’**
(ஆ) மலர் : மாதாளம்பூ,*** தாமரைப்பூ,***
180. 183. 185. 88.
89. 9. 193.
19S. 197. 199. 20. 203. 205. 207。 209. 211. 212.
மேலது. 11உ! 2; 181. மேலது, 13 5. 182. மேலது, 27; மேலது 11அ! 16; 11ஐ 30; 184. மேலது, 11ள 6;
மேலது, 5; 186. மேலது, 3 7; 187. மேலது 23; மேலே உருக்குறியிடப்பட்ட மூன்றும் இழிபொருள் 2-66onsbesses
வந்துள்ளன.
G.gS. ST. Lu T. ll lg LI TLsi 2, 190, மேலது, 12அ பாடல் 37 மேலது 12இ| பாடல் 14, 12அ! 32; 192. மேலது 11ஆ| பாடல் 14: மேலது, 1ஊ பாடல் 8: 194. மேலது, 11ஈ/ பாடல் 7: மேலது, 12இ! பாடல் 14 196. மேலது. 11ஐ பாடல்கள் 12, 13,
மேலது 2அ பாடல் 28; 198. மேலது,
மேலது 1அ பாடல் 5, 1எ பாடல் 5: 200. மேலது, 1உ| பாடல் 9, மேலது 2அ பாடல் 42, 202. மேலது | உ பாடல் 15 மேலது, 204. மேலது 11ஐ பாடல் 4: மேலது, 2அ பாடல் 40 20 . மேலது, 13/பாடல் 20; மேலது 11அ பாடல் 11, 208. மேலது, 1ஐ பாடல் 14: மேலது 2அ! பாடல் 34, 210. மேலது பாடல் 42. vii.9). RGT. UT. / 1 / 1 TL6io 1, g2-1 LI TIL 3, s 16Jf. I TL6 4; மேலது 11உ! பாடல் 6. 213. மேலது பாடல் 9;

Page 126
24 மட்டக்களப்பு மாவட்ட.
(இ) மரம் : சோலை இளங்கமுகு,214
(ஈ) செடி : கரும்பு -2 கட்டிக்கரும்பு - கறுத்தக் கரும்பு,? “ வள்ளிக்கொடி,218 வளரும் சுரக் கொடி,?" ஈரத்துளிர்,*** மருக்கொழுந்து வெற்றிலை,219
(உ) பறவைகள் : கிளி - ராசகிளி - தென்னம் வட்டுக்கிளி.??? பொன்னிவண்டு, -- தங்க வண்டு,221 ஊர்க்குருவி,2?? கருங்குயில்,??*
(ஊ) விலங்குகள் : கலை - கலைமான்,224 கண்டு,229 சிங்கத்தின்குட்டி,2?? (கொம்பன்) காளை,227 நாகவள்ளி நாம்பன்,228 பன்றி,229
(எ) பொருள்கள் : முத்து --> ஆணிமுத்து,** தாலிக் கொடி,231 மோதிரம்,232 மணிவிளக்கு 239
இன்பக்கடல்’994 glidifia)T - வெண்ணிலவு,298 அரியபொழுது,??? வளர்பிறை,287 கிள்ள வட்டுச் சுண்
ணும்பு.28° வெள்ளிப்பிரம்பு,999
(ஏ) உயர்ந்தோர் உவமை : சீமான்,24 ராசா?* மன் னர்,242 இளம் ராசாவன்னிமை,248
சீதேவி,248
214. மேலது 11ஏ பாடல் 2, 215. மேலது 11ஐ பாடல் 31: 216. மேலது 11ஆ| பாடல் 25; 217. ബgl 218. மேலது, 11உ| பாடல் 6,
219. மேலது, 11ஆ| பாடல் 26; 220. மேலது, 12இ! பாடல் 2, 12ஆ| பாடல் 18, 13 பாடல் 1, 221. மேலது 12ஆ1 பாடல் 3,4; 222. மேலது பாடல் 10, 223. Geucogu, 129 LIT L6i 29, l3l U IT L6i 14, 224. மேலது, 12அ பாடல் 29, 13 பாடல்5, 225. மேலது, 1உ| பாடல் 5;
226. மேலது, 12அ பாடல் 7: 227. மேலது, 1ஊ| பாடல் 12 228. மேலது பாடல் 9; 229. மேலது 3 பாடல் 15: 230. 9.9). 31. UT. L. TL 22, 23; 231, மேலது 1உ| பாடல் 5; 232 மேலது 12அ பாடல் 11; 233. மேலது பாடல் 9, 234. 1. மேலது 11ஆ| பாடல் 26:
11. "கரைமாண்டகாமப் பெருங்கடல் . . “ திருவாசகம்,
திருத்தோணுேக்கம்-14; 235. Gidsugi, 1291 li T. 6 12, 236. | 19 - Lim Lio 9; GLosugi 123 LI ITL 2,
237. மேலது 11ஊ! பாடல்; 3; 238. மேலது 12இ! பாடல் 2: 239. மேலது, 12ஆ1 பாடல் 17: 240. மேலது /1ஐ பாடல் 18. 241. மேலது 11ஆ| பாடல் 1, 1ஈ பாடல் 24, 242. மேலது 12ஆ/ பாடல் 8:
243. மேலது, 11ஐ பாடல் 4: 244. மேலது 12அ/ பாடல் 8

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 225
3. இருபாலாருக்கும் பொதுவாகவரும் டிவமைகள் :***
(அ) கனி : மாம்பழம் (ஆ) மலர் : தாமரைப்பூ, மாதாளம் பூ, (இ) செடி : கரும்பு, மருக் கொழுந்து, வெத்திலை (ஈ) பறவை : கிளி, வண்டு (உ) விலங்கு : கன்று, கலை - மான், கொம்பன் (ஊ) பொருள்கள் : முத்து, மோதிரம், விளக்கு,சித்திரம், நிலவு, பொழுது. (எ) உயர்ந்தோர் உவமை : சீதேவி. இது வரையும் இங்கு வகைப்படுத்தித் தொகுத்துத் தரப் பட்ட உவமைகள் காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் உவ மித்து விளித்துக் கூறும் வகையில் அமைந்துள்ளன. இவ்வுவமை கள் பெரும்பாலும் 'ஏகாரம்” பெற்று தெரிதருதேற்ற உவமை களாகவும், "ஒகாரம்” பெற்று ஐயநிலைவுவமைகளாகவும்பயின்று வந்துள்ளன. ஒன்றன் பின் ஒன்ருகக் கூறும் நிரனிறை உவமை யாகவுஞ் சில பாடல்களில் உவமைகள் இடம் பெற்றுள்ளன.
இவ்வுவமைகள் காதலரை முழுத்தோற்ற அடிப்படையில் உவமித்துக் கூறுவனவாக அமைந்தவையாகும் இவற்றைவிடக் காதலரின் உறுப்பு, செயல், மனேநிலை என்பனவற்றைக் குறிப் பிடும் உவமைகளும் காணப்படுகின்றன. அவை ஈண்டுத் தொகுத்துத் தரப்படுகின்றன
1. பெண்ணின் உறுப்பழகை வருணிக்கும் உவமைகள்.
(அ) வாய் + பல் : மகிழம் பூவாய்,*** குறுக்காலபிளந்த - கொவ்வம் பழம்,** முத்துக்கொம்பன்
பல் ,248
(ஆ) கூந்தல் : ஆலம் விழுது போன்ற தலைமயிர்,?*? தூக்
கணுங் கூடுபோல கொண்டை,239
(இ) தனம் : தங்கம் போல் மார்பு,?" கிண்ணிமுலை,252
சாம்பல் மொந்தன் குலைபோல, 253
245. இவ்வுவமைகள் யாவும் 222.224 ஆம் பக்கங்களில் எடுத்துக் காட்டப்பட்டன
வாதலால் அவற்றிற்கு மீண்டும் அடிக்குறிப்புத்தாப்படவில்லை. 246. 1.9., ast.LI T. |23} / U TL iii) 10, 247. மேலது 11ஐ பாடல் 7.
248. மேலது, 13 பாடல் 9; 249. La.9., & T LI fr. I fig/ La Lao... 1 3 250. மேலது. 251. மேலது, 11ஐ பாடல் 13, 252. மேலது பாடல் 22, 253, மேலது, 14 பாடல் 1,
Lcー15

Page 127
226
(ஈ) உடல் :
(உ) மனம் :
மட்டக்களப்பு மாவட்ட.
வெள்ளைக் கொக்குநிறத்தாள்? 84 வாழை a2L.6Ä), °° ° gFrt L bLu 6ñi) குருத்தழகி,*** தங்கம்,287 "தாமரையல்லோ உங்க மேனி'298 நாவற் பழம்,* காயாம்பூ,* காகச்சிறகு,* போன்ற மேனி,999
'urt 6 GB Tó) D679, '0
2. ஆண்மகனின் உறுப்பைக் குறிப்பிடும் உவமைகள்
மீசை : கல்லாத்து நாவை கறுப்பெறிஞ்சி பழுத்தது
போன்ற கன்னத்துமீசை.”*
மேனி : தாளம்பூமேனி, ??? நாவற்பழம்,* கரித்துண்டு,*
காகச் சிறகு? சுட்ட கட்டை* 'சுடுகாட்டுப் பேய்",* அண்டம் காகம்* என்பன போன்ற GBLD6of). 263
இலக்கியங்களிலோ அல்லது நடைமுறை வாழ்க்கையிலோ ஆண்களின் உறுப்புகள் வருணிக்கப்படுதல் மிகக் குறைவே. அது போன்றே நாட்டார் காதற்பாடல்களிலும் ஆண்களின் உறுப்பு வருணனை அரிதாகவே காணப்படுகின்றது. ஆத்திரமடைந்த பெண்ணுெருத்தி ஆணின் உடற்றேற்றத்தை ஏளனமாக எள்ளி நகைத்துக் கூறுவனவாக மேலே உடுக்குறியிடப்பட்ட உவமைகள் பாடலிற் பயின்றுவந்துள்ளன.
3. தொழிலுவமை
(அ) காதலியைக் குறிப்பன: "அன்னம்போல் நடை’,264 "ஆக்கினசோத்தி அரிசியிருந்து மின்னுமாப்போல்’,285 'தண்ணியில்லா வட்டையில தாமரைபூத்தாப் போல்,*266
254. மேலது, 12அ/ பாடல் 33. 255. மேலது, 11ஐ பாடல் 10. 256. மேலது, 12அ! பாடல் 23, 257. மேலது, 11ஐ பாடல் 12.
258. மேலது, பாடல் 13.
259. மேலது, ஏ| பாடல்கள் பார்க்க. உடுக்குறியிடப்பட்டவை இழிபொருள்
உவமையாக வந்துள்ளன.
260. மேலது, 13 பாடல் 14:
261. பி. இ. கா. பா. 12அ பாடல் 16.
262. மேலது பாடல் 25;
நோக்குக
263. மேலது./1எ| பிரிவுப் பாடல்களை
264. மேலது 11ஐ பாடல் 11, 13,
[29] LI TL6i 25;
265. மேலது, 12அ பாடல் 43;
266. மேலது, 13 பாடல் 21.

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 227
(ஆ) காதலனைக் குறிப்பன: 'ஓடிவந்த தண்ணியில உலா விவந்த மீனதுபோல்”,287 °களியோடை ஆத்திய கானன் வளைக்கிருப்போல்”*** "பூப்பூத்து ஒய்ஞ்சது போல்’’ ??? “சித்தலியன்குட்டி போல சிங்காரமாகக் கைஎறிவன்?????.
4. காதலரின் உளநிலைபற்றிய உவமைகள்
*ஊசிலகாந்தம் உருகிப்பிடிச்சதுபோல்”?71 'வானத்து வெள்ளி மங்காமல் பூத்தது போல்’’** “பூவும் மணமும் போல’??? 'ஆலம்பழமும் அணிலும் போல’974 'காஞ்சி ரங்காயும் காகமும் போல’*** "மாதாளை நாட்டி, மடல் விரிஞ்சி பூத்தது போல??? “பள்ளியடிக் கற்கிணற்றின்பக்கம் இடிஞ்சதுபோல’*77 வண்டழுத சோலையிலே வந்தழுத மான்களைப்போல்’*** "பூவரசம் பூ வாய்ஞ்சி பொட்டியிலே அடைச்சதுபோல்’*** "ஆடும்கொடி, அந்தரத்தில் காய், வாடும்பயிர்”** "தாழக் கிணற்றில் சலம் கொதிச்சுவாறது போல்"28 “பொன்னவரைப் பூப்பூத்து பூவோடு சாய்ந்தது போல’*** பாலேருச் செந்நெல் பதத்கடை போல்’ 283 **வதங்குகிறேன் கீரையைப்போல்’’984
உருவகம்
காதற் பாடல்களில் உவமைகள் பெருந்தொகையாகக் காணப்பட்டபோதிலும், உருவகங்கள் மிகக் குறைவாகவே இடம் பெற்றுள்ளன. அஃறிணையைச் சார்ந்தனவற்றுக்கு உயர்திணை 'ஆர்’ விகுதியைச் சேர்த்துக் கற்பனை செய்திருத்தல் ஈண்டுக் குறிப்பிடற்பாலது.
267. பி. இ. கா. பா. 11ஆ| பாடல் 21, 268. மேலது 12ஈ| பாடல் 5;
269. மேலது 11ஐ பாடல் 5; 270. மேலது பாடல் 19; 271. மேலது 11ஆ| பாடல் 29; 272, மேலது பாடல் 27; 273. Goowgi l l al-I LI IT u 15; 274. மேலது 12இ| பாடல் 11: 275. மேலது. 276. மேலது 11அ/ பாடல் 10. 277. மேலது Iஆ1 பாடல் 30: 278. Guosvg| 129/ штLdo 29. 279. (அ) மேலது பாடல் 3; (ஆ! இவ்வுவமையுடன் பின்வரும் உவமை
களையும் நோக்குக.
1. "வகைவரிச் செப்பினுள் வைகிய கோதை ?
கலி, பாடல் 68, வரி 45; மணிமேகலை -4:65. ii) மடைமான் செப்பிற்றமிய வைகிய பொய்யாப்பூவின்
மெய்சாயினளே.? குறுந், பாடல் 9.
280. மேலது 12அ/பாடல் 15: 282, மேலது பாடல் 22: 283. மேலது பாடல் 41.
284. மேலது பாடல்: 4.

Page 128
228 மட்டக்களப்பு மாவட்ட.
1. காதலியைக் குறிப்பன
լյrr65)6չյաfՒ, 28 ծ மயிலார், 286 மொழியாள், 287 கண்ணுர்?88 தங்குபொழுது நாள்.289
2. காதலனைக் குறிப்பன
மயிலார், 999 கிளியார்- தங்கக்கிளியனூர்,291 நீலவண் டார்,999 கண்டார், 2% கடலார், 294,
செந்நெறி இலக்கியத்தில் மரபு வழிப்பட்ட உவமை, உருவகங்
களே இடம்பெறும். ஆனல் நாட்டார் இலக்கியங்களில் அத் தகைய மரபுகள் எவற்றையும் எதிர்பார்க்கமுடியாது. செந்நெறி இலக்கியத்திற் கொடி பெண்களுக்கு உவமையாகவும் உருவகமாக வும் கூறப்படும். ஆனற் காதலி தன் காதலனை “வள்ளிக்கொடி, ? "வளருஞ் சுரக்கொடி,’ ‘தாளம்பூ-மேனி' என வருணிப்பது229 நாட்டார் இலக்கியத்தின் தனிப்பண்பினை எடுத்துக்காட்டுகின்றது. மரம், 498 பூத்தமரம்?" என்னுந் தொடர்கள் பெண் தன்னைத்
தானே உவமித்துக் கூறுவனவாக வந்துள்ளன. தன் அழகையும் கவர்ச்சியையும் பெருமையினையும் உணர்த்தும் பொருட்டுத் தன்னைச்சந்தனமரம் என்கிருள். இவ்வாருக அமைந்துவரும் உவ மையுருவகங்கள் காதற்பாடல்களின் பொருளமைப்புக்கு வடிவங் கொடுக்கின்றது எனலாம்.
தலைமைக் கருத்தாய்வு
காதற் பாடல்களின் பொருளமைப்பாய்வில் அப்பாடல்களின்
உட்பொருள்நுட்பங்களை ஆராய்ந்தறிவதற்கு அவற்றின் தலைமைக்
கருத்துகள் பற்றி ஆராயவேண்டியது அவசியமாகின்றது.
காதல் வாழ்க்கைபற்றிய உண்மைச் சித்திரம்
காதல்பற்றிப் பாடுஞ் செந்நெறிஇலக்கியங்களையும் நாட்டார் காதற் பாடல்களையும் ஒப்பிட்டு ஆராயும்போது அவற்றிடையே வேறுபாடுகள் காணப்படுதல் இயல்பே. செந்நெறி இலக்கியப் படைப்புகளில் இலட்சியக் காதலுந் தெய்வீகக் காதலுஞ் சித்தரிக் கப்படுவதோடு, அவற்றைக் கூறும் வகையிலுங் கற்பனையுங்
بسیح
285, மேலது 12அ! பாடல் 31;
286, மேலது 11இ| பாடல்; 5; 287. மேலது 12 அ பாடல் 33; 288. மேலது 1உ! பாடல் 11: 289. மேலது, 11அ/பாடல் 12; 290, மேலது 12அ/ பாடல் 30; 291. மேலது/1ஈ/ பாடல் 15,28; 292, மேலது 11ஆ| பாடல் 22: 293. மேலது 12ஈ| பாடல் 5. 294. மேலது /2இ| பாடல் 9. 295. பி.இ. கா.பா 11ஆ| பாடல் 25;
296, மேலது 11ஈ| பாடல் 20, 297. மேலது 1ஐ பாடல் 18.

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 229
கலந்துகொள்வதால் அவற்றிற் கற்பனைக் காதலையே காணமுடி கிறது. ஆனல் நாட்டார் காதற்பாடல்களிற் கிராமியக் காதலர் தம் உணர்வுகளையும் அனுபவங்களையும் தம் மொழிநடையில் இயற்கையாக அமைந்த கவி நயத்துடன் பாடும்போது அவற்றில் உயிர்த்தன்மையும் இயற்கையான காதல் உணர்வுகளும் காட்சி தருகின்றன. இவ்வாறு உண்மைக் காதலைச் சித்திரித்துக்காட்டும் ஒரு பண்பு இப்பாடல்களில் முதன்மை பெறுகின்றது.
உறவு முறைப்பற்றிப் பாடுதல்
கிராமிய மக்களின் காதல்வாழ்வு பொதுவாக உறவினரிடமே ஏற்படுவதாகவும், சொந்த மச்சானும் மச்சாளுமே காதல் கொள் வதாகவும், சொந்த மாமன், மாமி ஆகியோரிடமே வாழ்க்கைப் பிரச்சினைகள் கூறப்படுவதாகவும், காதற்பாடல்கள் அமைந் துள்ளன. காதலர்கள் உறவு முறை கொண்டாடுவதில் மிக்க ஆர்வமும் மகிழ்ச்சியுங் கொண்டுள்ளனர்.”** இவர்களது காதற் பாடல்களிலே மச்சான் என்ற சொல்வழக்கு 55 தரம் பயின்று வந்துள்ளது. ‘மாமிமகன்’ என்னுந் தொடரைப் பத்துத்தரம் பயன்படுத்தியுள்ளனர், அதுபோன்றே "மச்சான் முறைக்காரன்” என்ற தொடரும் இருமுறை கையாளப்பட்டுள்ளது.
பெண்களைப் போன்றே ஆண்களும், தம் காதலியை உறவு முறை சொல்லி அழைப்பதில் ஆனந்தமடைவதோடு உரிமை முறையில் உறவாடவும் முனைகின்றனர். இவ்வகையில் வரும் “மச்சி’ என்ற சொல் காதற்பாடல்களில் 15 முறை வருகின்றது. உரிமையோடு உறவாடும் ‘மாமன்மகள்’ என்ற உறவுமுறைச் சொற்ருெடர் 3 தரம் வந்துள்ளது. முஸ்லீம்கள் மச்சாள் முறைப்பெண்ணை " மதினி ' என்றழைப்பர். " மதினி ’’ என்ற சொல் 4 இடங்களிற் காணப்படுகின்றது. என்ற மச் சாள் சொல்லாட்சி ஒருதடவை மட்டுமே இடம்பெற்றுள்ளது காதலன் காதலியை மாமன்மகள் என மாமனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும்,காதலி காதலனை மாமிமகன் எனக்கூறும்போது, மாமிக்கு முதலிடம் அளிப்பதையும் அவதானிக்கலாம்.
தாயார், தகப்பன், அண்ணன், தம்பி, தங்கச்சி, மகள், பொடியன், உம்மா. வாப்பா, காக்கா" மகன் முதலிய உறவு முறைப்பெயர்கள் இப்பாடல்களில் இடம்பெற்று வந்துள்ளமை குறிப்பிடற்பாலது.
298. நூலுள் காண்க
299, இச் சொற்கள் பற்றிய விளக்கங்களைப் பி. இ. சொல்லடைவிற் பார்க்க

Page 129
230 மட்டக்களப்பு மாவட்ட.
அன்பு மொழி கூறுதல்
காதற் பாடல்களிற் பயின்று வருஞ் சொற்கள் பெரும் பாலானவை அன்புமொழிகளாகவே காணப்படுகின்றன. அத் தகைய சொற்கள் யாவும் உவமை உருவகங்களாகவே அமைந்து வந்திருத்தல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.??? எனவே காதற் பாடல்களின் தலைமைக் கருத்துகளில் அன்புமொழி கூறிக் காதலை வற்புறுத்தும் தன்மையும் முதன்மைபெற்றுக் காணப் படுகின்றது எனலாம்.
இணைவிழைச்சித்தன்மை அமையப் பாடப்படுதல்
தொழிற் பாடல்களைப் போன்றே, காதற் பாடல்களிலும் அவற்றின் பயன்பாட்டு அடிப்படையில் இணைவிழைச்சித் தன்மையைப் பாடும் ஒரு வழக்கும் காணப்படுகிறது. பாடுவோர் வேண்டுமென்றே அப்பாடல்களில் இணைவிழைச்சித் தன்மையைச் சேர்த்துப் பாடுகின்றனர். அவ்வாறமைந்துவரும் பாடல்களின் இடம்பெறுஞ் சொற்கள் பாலுணர்ச்சியைத் தட்டி எழுப்பக் கூடி யனவாகவே அமைந்துள்ளன. அத்தகைய சொல்லாட்சிகள் ஈண்டுத்தரப்படுகின்றன.
*கிண்ணிமுலை","குலுக்கிவிட்டமார்பழகி’,999'கொங்கை குலுங்குதல்” - "முன்னிரண்டும் குலுங்குதல்’,** அணைத்தல்,*** "பஞ்சணையிற் புரளுதல்’, 303 கோர்வை
செய்தல்" -- "போட்டுட்டுப் போதல்” “பையப்பையப் பார்த்தருந்துதல்’80° “வெறும்பாய் திருவி வேறு நினை வாதல்’, 97 ‘ஆடுதுடை’898 என்பனவாம்.
சுற்ருடல் பற்றிப் பாடுதல்
காதற் பாடல்கள் பொதுவாக வயற்புறங்களிலும், வண்டிற் பயணத்தின்போதும் பாடப்படுவனவாதலால், பாடுவோர் இயற்கைச் சூழலையுஞ், சுற்ருடலையுங் கவிகளிற் குறிப்பிட்டுப் பாடுதல் வழக்கமாகும். அவ்வாறு கிராமியச் சூழலைக் குறிப்பிடுஞ் சொல்லாட்சிகள் இங்குத் தரப்படுகின்றன.
300. அன்புமொழிச் சொற்களாக அமைந்த உவமைஉருவகங்கள்வகைப்படுத்திக்
காட்டப்பட்டுள்ளன காண்க. நூல் பக்.222-228 301. , பி, இ. கா. பா. 11ஐ பாடல் 22,
302. மேலது, 2அ பாடல் 23: 303. மேலது.1ஐ பாடல்11, 8 304. மேலது பாடல் 13; 305. மேலது பாடல் 15, 306. மேலது பாடல் 12, 5,32; 307. Guoavgj, 1/2a/ LUFTLfo50,
308, மேலது 1ஐ பாடல் 11.

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 231
*கிணறு’909 பூவல், 31 குளக்கரை, 31 'தண்ணிக்குட மெடுத்துப் போதல்’, 312 வாசல், 313 'திண்ணையிலே பாய் போடுதல்’, 914முற்றத்தில் மாதாளை”, 31° “முகந்தெரியா வேலி", 318 வேலிப்பக்கம், 317 சுற்றிவர வேலி, 318 வளவு மூலை, *** அட்டுவம், ??? ஒழுங்கை *** முதலியனவாம்,
வடிவ அமைப்பாய்வு
இதுவரையும் காதற் பாடல்களின் பொருளமைப்பும் அதனுடன் தொடர்புடைய இலக்கியச் சிறப்பும் பாடல்களின் தலைமைக் கருத்தும் ஆராயப்பட்டன. ஈண்டு அப்பாடல்களின் வடிவ அமைப்புப்பற்றி ஆராயப்படுகிறது.
எதுகை, மோனை அமைப்பு
எதுகை, மோனை அமைப்புக் காதற்பாடல்களின் ஆக்கத் திலும், அமைப்பிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. கிராமிய மக்கள் எதுகை மோனை தரும் இசையமைப்பைத் துணைக்கொண்டு பாடல்களை ஆக்குவதிற் கவனஞ் செலுத்தியுள்ளனர். பேச்சு வழக்கிலும் எதுகைமோனைகளைப் பயன்படுத்துபவர்கள் பாமர மக்கள் என்பதை 'அரிசிகிரிசி”, “சோறுகீறு', 'தின்னக்கின்ன’, “பார்த்துக்கீத்து முதலான தொடர்களிலிருந்து அறிந்து கொள் ளலாம். தாலாட்டுப் பாடல், தொழிற்பாடல்கள் என்பவற்றைப் போன்று காதற்பாடல்களிலும் மோனையமைப்பே பெரிதுங் காணப்படுகின்றது. இவ்வமைப்பு பாடல்களின் ஆக்கமுறை களுக்கும், பாடல்களை மனனஞ் செய்துகொள்வதற்கும் வாய்ப் பாகவும் வசதியாகவும் இருந்தமையாற் பாடல்களில் மோனை பெரிதும் பின்பற்றப்படுவதாயிற்று. மோனை அமைப்பு
மோனை அமைப்புக்கு ஏற்றவாறே பாடல்கள் ஆக்கம் பெற் றுள்ளன. பின்னிணைப்பிற் தரப்பட்டுள்ள 320 காதற் பாடல்களிற் சில பாடல்கள்??? தவிர்ந்த ஏனையன யாவும் மோனை அமைப்புப் பெற்றுள்ளன. இப்பாடல்களில் வரும் மோனை அமைப்பை வரு மாறு வகுத்துக் காட்டலாம்:
309, î. g. 35 T. UT. / 1 el u Tlsio 5; 310. மேலது பாடல் 22; 311. மேலது, !ஈ பாடல் 1 32. மேலது 11அ/ பாடல் 18, 20, 313. மேலது 11ஈ பாடல் 1: 314. மேலது பாடல் 14. 315. மேலது பாடல் 22 316. மேலது, பாடல் 11; 317, மேலது, பாடல் 16; 318. மேலது பாடல் 3,4, 319. மேலது பாடல் 17; 320, மேலது பாடல் 18:
321. மேலது 11இ! பாடல்; 6: 322. 'ಸಿ: u Tlio 14, 12e u tT Li 16, 31 u Tlio 16, 18.

Page 130
232
மட்டக்களப்பு மாவட்ட
(அ) பாடலின் நான்குவரிகளிலும் ஒரே எழுத்து முதல்
எழுத்தாக மோனபெற்று அமைந்துள்ளமை.***
(ஆ) பாடலின் நான்கு அடிகளின் முதன்நான்கு எழுத்து களும் ஒரே இன எழுத்துகளாக மோனபெற்றும் பாடல்கள் வடிவம்பெற்றுள்ளன.??*
(இ) பாடலின் முதன் மூன்றடிகளின் முதல் எழுத்துகள் மோனையாக அமையும் ஒழுங்கும் காணப்படு கின்றது. 32 is
(ஈ) பாடலின் ஈற்று மூன்றடிகளின் முதல் எழுத்துகள் மோனை பெற்றுவரும் வடிவம் கொண்டனவாகச் சில பாடல்கள் வந்துள்ளன.???
(உ) பாடலின் முதலாம், மூன்றம், நான்காம் வரிகளில் முதல் எழுத்துகள் மோண்பெறும் வடிவ அமைப் புடைய இருபாடல்கள் காணப்படுகின்றன.327
(ஊ) பாடலின் முதலாம், இரண்டாம், நான்காம், வரி களின் முதல் எழுத்துகள் மோனை ஒழுங்குபெறும் அமைப்பு ஒரு பாடலில் (பி.இ.கா.பா.12இ/பாடல் 13) அமைந்துள்ளது.
(எ) பாடலின் முதலாம் மூன்ரும் வரிகளின் முதல் எழுத்துகள் மோனைபெறும் அமைப்பும் பாடலின் இரண்டாம், நான்காம் வரிகளின் முதல்எழுத்துகள் மோனைபெறும் அமைப்பும் காணப்படுகிறது. 928
(ஏ) பாடலின் முதலாம், நான்காம் வரிகளின் முதல் எழுத்துகள் மோனைபெறும் வடிவ அமைப்பு ஒரு பாடலிற் காணப்படுகிறது.???
324.
325. 326. 327. 328. 329.
. Guoavgj, lle Lu Tl 18, lll u Tláir 2, |1FFI LI TLói 9, 16 /2| Lumrlo
16, 22. | 1 ml LI TL-isio 22, 131 LITLsi 5, 6, 19 2FFI LI TL6i 1, 1gp u TLsi 9மேலது 11அ பாடல் 24, 11ஈ பாடல் 2. 12அ பாடல் 22இ 11ஆ/பாடல் 18,
la - u ITL ii 4l 16JI LI IT Lii) 9, 3 u Tlio 17. பி.இ.கா.பா.1ஆ பாடல் 29, 11உ! பாடல் 20, 1ஊ பாடல் 2. மேலது, 11அ பாடல் 20, 12ஈ பாடல் 3, 11ஏ பாடல் 23 மேலது, 1ா பாடல் 1,8:
மேலது. 1அ பாடல் 19, 13 பாடல் 18, 19, S.S., ast, u T.129.1 u TLi) 1 2.

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 233
(ஐ) காதற் கவிகளின் முதலிரு வரிகளும் ஒரு சோடி யாகவும், பின்னிரு வரிகளும் ஒரு சோடியாகவும் அமைந்து காணப்படுவதால், இவ்விரு சோடிகளில் முதற்சோடியோ, இரண்டாஞ் சோடியோ மோனை பெற்றுவரும் ஒழுங்கும் காதற்பாடல்களின் வடிவ அமைப்பில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கதாகக் காணப்படுகின்றது.
எதுகை அமைப்பு
காதற் பாடல்களில் மோனையமைப்பு முக்கியத்துவம் பெற் றிருப்பது போன்று, எதுகையமைப்பு முதன்மை பெறவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். இங்கு ஆராயப் பட்ட 320 காதற் பாடல்களில் 80 பாடல்களில் மட்டுமே எதுகை யமைப்புக் காணப்படுகிறது. இஃது மொத்தப்பாடல்களில் 25 விகிதமாகும்.
திரும்பத் திரும்பவரும் அமைப்பு
காதற் பாடல்களில் வரும் பெரும்பாலான சொற்களுஞ் சொற்ருெடர்களும் திரும்பத்திரும்ப இடம்பெறும் அமைப்பைக் கொண்டுள்ளன. இவ்வாறு திரும்பத்திரும்பவருஞ் சொற்களில் அன்புமொழிச் சொற்கள்??? முதன்மைபெறுகின்றன. பெயர்ச் சொற்கள் புதுப்புது பெயரடைகளைப் பெற்று பன்முறைபல்வேறு பாடல்களிலே திரும்பத்திரும்ப இடம்பெற்றுள்ளன. உதாரண மாகக் கிளி என்ற பெயர்ச் சொல் காதற் பாடல்கள் பலவற்றிற் பல்வேறு அடைகளைப் பெற்று வந்திருத்தல் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அடைகளைப் பெறுந்தொடர்கள்,பாடல் ஆக்கத் திற்குத் தயார்நிலைத் தொடர்களாக (Readymade phrase) அமைகின்றன. அன்றியும் குறிப்பிட்ட ஒரு பாடலில் வரும் ஒரு பெயர்ச் சொல்லுக்குப் பல்வேறு அடைகொடுத்துத் திரும்பத்திரும்பக் கூறும் அமைப்புங் காணப்படுகின்றது.391
உ-ம்: "ஆத்துமணலே அலையாத்து வெண்மணலே
தொந்தி மணலே - உன்னைத் / தொட்டகையும் பூமணம்டி”. (பி.இ.கா.பா. 11அ/பாடல் 11)
330, நூல் பக். 126 பார்க்க.
331. 3).g9Q., assm. Lu (T. :/19H/ U TL. 6ñ) 8. 12, 1FT"/LuETLsi) 2, 3, 10, 25, | 16T/ LI FTL6ñ)
23, 11ஐ பாடல் 24, 25, 28.30, 12 அ பாடல் 5, 10, 14, 15,23 2/2ஈ/ umL6ão 4; f4! UTlio 1 » 2, 11

Page 131
234 மட்டக்களப்பு மாவட்ட.
என்ற இப்பாடலில்'மணல்’ என்ற சொல் அடைகளைப் பெற்றுத் திரும்பத்திரும்ப இடம்பெறும் அமைப்புக் கொண்டிருத்தல் நோக்கற்பாலது. வரிவடிவ அமைப்பு
காதற் கவிகள் நான்கடிகளால் ஆக்கம் பெற்றுள்ளன. ஒசை யமைப்பில் முதலிரு அடிகளும் ஒரு தொடராகவும், ஈற்று ஈரடி களும் ஒரு தொடராகவும் அமைந்துள்ளன. *** இவ்வமைப்பு முறையை வருமாறு வரைகோடிட்டுக் காட்டலாம்.
1 ஆம் வரி: "அன்ன நடையாளே 2
அலங்காரப் பெண்மயிலே
2 ஆம் வரி:
3 ஆம் வரி: உன்னலே என்தேகம் 下プー
4 ஆம் வரி: உருக்குலேஞ்சு போகுதடி”,988
பாடல்வரிகளிலே தனிச்சொற்கள் இடம் பெறும்போது மேற் காட்டப்பட்ட வரியமைப்பில் அல்லது இசைத் தொடர்ச்சியில் மாற்றமேற்படுவதை அவதானிக்கலாம். அவ்வாறு வரும் தனிச் சொற்களுள் விளிப்பெயர், சுட்டுப்பெயர், முறைப்பெயர் என் பனவே அதிகமாகக் காணப்படுகின்றன. இங்கு ஆராயப்பட்ட காதற்பாடல்களிற் பயின்று வந்துள்ள தனிச்சொற்கள் ஈண்டுத் தொகுத்துத் தரப்படுகின்றன:
அது, அதை, அந்த, அவர, அவருட, ஆரும், இங்க இங்கு, இந்த, இப்ப, இப்போ, உங்க, உங்க2உம்மா, உங்கள், உங்களுக்கு, உந்தன், உம்மா, உன் உன்ர, உன்ன, உன்ன நாள், ஊரார், எங்கட, எந்த, எந்தன், என், என்ட, என்ர, என்ன, என்னேட, எனக்கு, ஒரு, கண்டாரை, கதிஜாஒரு, கொஞ்சம், சும்மா, தாகம், நம்மட, நம்மள, நல்லா, நாங்க நாம், நாம, நான், நீ, நீங்க, மச்சாள், மச்சி, மச்சான் நீ மச்சானின், மச்சிஉன், மச்சிஉன்ன, மச்சிநான், மரம், மன்ன வரின், மன, மாமி, ராசா. இத் தனிச்சொற்கள் பாடல்களில் இடம்பெற்றுள்ள வகை முறை இங்கே காட்டப்படுகின்றது.
1 ஆம் வரியிலே தனிச்சொல் பெற்ற பாடல்கள் 7 2 ஆம் வரியிலே தனிச்சொல் பெற்ற பாடல்கள் 13
332. நூல் பக். 233 பார்க்க, 333. ti.D., sn.usr. |2-1| us-so 25,

காதற்பாடல்களின் அமைப்பாய்வு 235
3 ஆம் வரியிலே தனிச்சொல் பெற்ற பாடல்கள் 144 4 ஆம் 3 ஆம் வரியிலே தனிச்சொல் பெற்றபாடல்கள் 16 2 ஆம் 3 ஆம் வரியிலே தனிச்சொல் பெற்றபாடல்கள் 8 தனிச்சொல் பெருத பாடல்கள் 132
மொத்தமாகவுள்ள 320 பாடல்களிலும் தனிச்சொல் பெற்றுவந்த பாடல்கள் 188 ஆகும். இது மொத்தப்பாடலின் 38.75 விகித மாகும். பாடலிலே தனிச் சொல் பெற்றுவருமிடங்களில் ஒசை அமைப்பில் விட்டிசைப்பு ஏற்படுதல் குறிப்பிடத்தக்கது. இதனைப் பின்வருமாறு வரைகோடுகளால் விளக்கிக் காட்டலாம். சாய்வு கோடுகள் இடப்பட்டிருக்குமிடமே தனிச்சொல்பெற்ற விட்டி சைப்பு ஏற்படுமிடமாகும்.
ஆம் வரியில் தனிச்சொல் 1 ///۔ہسحصصحبحصہ سے tb 6uthڑھے 1 .yو
2 ஆம் வரி
3 ஆம் வரி 4 ஆம் வரி سے வரியமைப்பிலே தனிச்சொற்கள் வேறுவேறு இடங்களில் இடம்
பெறுவதன்மூலம் விட்டிசைப்பு ஏற்படினும், கவிமெட்டுக்கு அமை வாகவே இவ்வோசையமைப்புப் பாடகராற் கவனிக்கப்படுகிறது.
வாக்கிய அமைப்பு
காதற் பாடல்கள் யாவும் தனித்தனியே பொருள் கொண்டன வாக அமைந்துள்ளன. பெரும்பாலும் இப்பாடல்களின் நான்காம் வரியில் வினைமுற்று இடம்பெறும் அமைப்புக் காணப்படுகிறது. சில பாடல்கள் விஞத்தொடர் வாக்கிய அமைப்புக் கொண்டுள்ளன.
வினைமுற்று வாக்கிய அமைப்பில்வரும் வினைமுற்றின் இறுதி யில் 'கா' விகுதி இடம்பெறுகிறது. இம் மொழிவழக்கு இம் மாவட்ட மக்களின் பேச்சுவழக்கிற் குறிப்பிடத்தக்கதாகக் காணப் படுகிறது.??? வினைமுற்றுடன் 'கா' விகுதி சேர்ந்து வழங்கு வதற்கு உதாரணமாகக் கூவுதுகா (< கூவுகின்றது கா)வந்தன்கா (< வந்தேன்கா) முதலியனவற்றைக் காட்டலாம். இவற்றைவிட ஏவல்வினையுடன் 'கா' விகுதி சேர்ந்து வழங்குவதுமுண்டு.
334. பி.இ. பக்க பார்க்க,

Page 132
236 மட்டக்களப்பு மாவட்ட .
இதற்கு எடுத்துக் காட்டாக **விரசிடுகா’ (< துரத்திவிடு கா). செய்கா (செய்+கா) முதலியனவற்றைக் காண்க,
தன்மை ஒருமை வினைமுற்றின் விகுதியில் வரும் ஏகாரவுயிர் அகரவுயிராக மாற்றம்பெற்றுப் பேச்சுவழக்கில் இங்கு வழங்கு கின்றது. நானிருந்தன் ( < நானிருந்தேன்), வருவன் ( < வரு வேன்) வைப்பன் (< வைப்பேன்) முதலான வினைமுற்றுகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்.??*

guisi) VI பாடல்களின் பயன்பாடு
பயன்பாட்டுக் கோட்பாடு
மலினேஸ்கி, ரட்கிளிப் பிறவுண்*, உவிற்ஜென்ரின் 8, எமில் டேர்கம் முதலிய மானிடவியல், சமூகவியல் அறிஞர்கள் பயன் பாட்டுக் கோட்பாடுபற்றிய தத்துவார்த்த விளக்கங்களைத் தந்துள்ளனர். எமில்டேர் கம்4 என்பவர் பயன்பாட்டுக் கோட் பாடுபற்றிக் கூறும்போது சமூகவியலாய்வுக்குப் பயன்பாட்டு அடிப்படையிலான ஆய்வு முதற்படியாக அமைகின்றது என் கிறர். மொழி ஆய்விலும் ஒரு குறிப்பிட்ட இனமக்களிடையே அவர்களது மொழி எவ்வகையிற் பயன்படுகின்றது என்ற ஆய்வு அவசியமென்பதை மலினேஸ்கி வலியுறுத்தியுள்ளார். சொற் களின் பொருள் அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையிலேதான் அமைந்திருக்கிறது என்றும், குறிப்பிட்ட ஒரு சொல் எவ்வாறு பயன்படுகிறது என்பதை ஒருவர் ஊகித்துணரமுடியாது என்றும் அது பயன்படும் முறையை அவதானித்தே அறிய வேண்டும் என்றும் உவிற்ஜென்ரின்" கூறுவது ஈண்டு நாட்டார்பாடல் ஆய்வுக்கும் பொருந்துவதாகும். குறிப்பிட்ட ஒரு நாட்டார் பாடல், எப்படி, எங்கே, எப்போது, யாராற் பயன்படுத்தப் படுகிறது என்பதைக் கள ஆய்வின்மூலம் அறியும்போதே அப் பாடலின் உண்மையான பொருள்நிலை புலப்பாடாகும் என்பது குறிப்பிடற்பாலதாகும்.
பல்வேறுபட்ட நாடுகளிற் கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டியலாய்வு சமூகவியல் பற்றிய ஆராய்ச்சியில் முக்கிய இடம் வகுத்து. வந்துள்ளது," இந்த ஆய்வின்மூலம் ஒருகுறிப்பிட்ட நாட்டின் பண்பாடுபற்றி விவரிக்கவும், அதுபற்றி ஆராயவும் வாய்ப்பு ஏற்படுவதோடு, பண்பாட்டு வரலாற்றுப் பின்னணியில்
Malinowski, B. (1926) Radcliffe-Brown, A, R. (1952) Wittgentein, L. (1958) Radcliffe-Brow , A.R., (1952) P. 178 Firth, J R. (ed) (1968) P. 94 Wittgentein, L. (1958) P. 109. International Encyclopaedia of the Social Sciences, Vol. VI (1968) P. 29.

Page 133
238 மட்டக்களப்பு மாவட்ட.
வளர்ச்சி நெறிகுறித்துச் சரியான முடிவுக்கு வரவும் உதவியாக இருக்கிறது என மலினேஸ்கி கூறுகின்ருர். மக்களின் பழக்கவழக் கங்களையும், நம்பிக்கைகளையும் ஆராய்ந்து அறிவதற்கும், அவர் களது உறவுமுறைகள் பற்றி உணர்வதற்கும், இவ்வாய்வுமுறை பயன்படுகிறது என்பதைப் பேர்த் என்ற அறிஞர் ஆராய்ந்து விளக்கியுள்ளார்.
பயன்பாட்டு ஆய்வின் அடிப்படையில் மக்களின் அன்ருட வாழ்க்கையிலே தாலாட்டுப்பாடல்கள், காதற்பாடல்கள் தொழிற்பாடல்கள் ஆகியன எவ்வாறு பயன்படுகின்றன, அவ்வகை யில் அவை எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றன என்பனபற்றி இவ்வியலில் விரிவாக ஆராயப்படுகின்றன.
தாலாட்டுப் பாடல்களின் பயன்பாடு
தாலாட்டுப் பாடல்கள் பொதுவாகக் குழந்தைகளைத் துயிலச் செய்வதற்கும், அழும் குழந்தைகளை ஆற்றுவதற்கும் பாடப்படுவனவாகும். ஆயினும், இவ்வாய்வாளர் மேற்கொண்ட களஆய்வுச் சான்றுகளையும் அப்பாடல்களின் பொருட்கூறுகளையும் பின்னணியாகக்கொண்டு நோக்கும்போது மேலும் பல்வேறு அடிப்படையில் அவை பயன்படுவதையும் அவதானிக்கக்கூடிய தாகவுள்ளது.அவை இங்கே விரிவாக ஆராயப்படுகின்றன.
குழந்தையை நித்திரையாக்கப் பயன்படுதல்
குழந்தையைத் துயிலச் செய்வதே தாலாட்டுப் பாடல்களின் தலையாய பயன்பாடாகும். இதுபற்றிச் சுப்புரெட்டி" கூறுவது பொருத்தம் நோக்கி ஈண்டு மேற்கோளாகத் தரப்படுகின்றது.
*.தாய் தாலாட்டுப் பாடலைப் பாடித் தொட்டிலை ஆட்டு வாள். அல்லது குழந்தையைப் பக்கத்தில் வைத்துக் கிடத்திக் கொண்டு அதன் முதுகை மெதுவாகத் தட்டுவாள். பாட்டின் ஒலிநயத்தைக் குழந்தை உணரத் தொடங்கியவுடன் அல்லது தொட்டிலின் ஒழுங்கான அசைவை அறிந்தவுடன் அல்லது அன்னையின் கை தன் முதுகை மெல்லத் தட்டும் ஒழுங்கை அறிந்தவுடன் குழந்தையின் மனம் உறக்கத்தில் ஈடுபடத் தொடங்குகிறது; சிறிது நேரத்திற் கண்ணயர்கிறது.”
8. Firth, J. R. (1968) PP. 125-126 9, மேலது, பக். 81-82. 10. சுப்புரெட்டி, ந. (1961) பக். 18

பாடல்களின் பயன்பாடு 239
குழந்தையைத் துயில் கொள்ளச் செய்யுந் தாய், அதனைக் காவியத் தலைவர்களாகவும், தெய்வங்களாகவும், அரும்பொருள் களாகவுங் கற்பனை செய்து பாடுகின்ருள். ஈரடிக் கண்ணிகளால் ஆக்கம் பெற்றுள்ள இப்பாடல்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளவும், குழந்தை துயிலும் வரையும் இசைத்துப் பாடவும் ஏற்றவகையில் அமைந்துள்ளன. "நித்திரைக்கோ நீ அழு தாய்’’’ என வினவியவாறு தாலாட்டுந் தாய், தன் குழந்தை துயிலப் போகின்றமையை உணர்ந்து அதனை நித்திரையாக்கும் வகையிலே தாலாட்டுப்பாடுவது பயன்பாட்டு அடிப்படையிற் குறிப்பிடற்பாலது.
அழும் குழந்தையை அமைதியூட்டப் பயன்படுதல்
அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்கும் ஆயுதமாக அன்னையரிடம் தாலாட்டுப்பாடல் அமைந்திருக்கிறது. 18 வீரிட்டு அழுதுகொண்டிருக்கும் குழந்தை அன்னையின் தாலாட்டைக் கேட்டதும் உடனே அழுகையை நிறுத்துவது இயல்பே. அழு கின்ற குழந்தையைத் தோளிலோ அல்லது மடியிலோ வைத்துக் கொண்டு “மானே அழுகிறது மாங்குயிலோ வெம்புகிறது"14 எனப்பாடத் தொடங்கக்குழந்தையும் அழுகையைநிறுத்துகின்றது. தாய்பாடும் தாலாட்டின் பொருளையோ, தாயின் அன்புமொழி களையோ அல்லது ஆறுதல் வார்த்தைகளையோ" பாலகன் அறியு மாறில்லை. ஆனல் அவற்றைத் தாலாட்டாக இசைத்துப்பாடும் போது ஏற்படும் ஓசை அமைதியினற் குழந்தை அழுகையை நிறுத்தி, அமைதி பெறுவதைக் காணலாம். இவ்வாறு பயன்படும் வகையிலே தாலாட்டுப்பாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
குழந்தைக்குப் பாலூட்டப் பயன்படுதல்
பசித்தழும் குழந்தைக்குத் தாலாட்டியவாறே பாலூட்ட வேண்டும். அல்லாவிட்டால் அது தொடர்ந்து அழுதுகொண்டே யிருக்கும். குழந்தையைத் தாலாட்டிச் சீராட்டிப் பாலூட்டு வதற்கும் இத்தாலாட்டுப்பாடல்கள் பயன்படுகின்றன. குறிப் பாகப் பாலூட்டும்போது,
11. நூலுள் பார்க்க. 12. பி. இ. தா. பா. {2| பாடல் 1,2. 13. அழகப்பன், ஆறு. (1973) பக், 18; 14. uih.9Q., g551T, LI rT. /2/ u fTL. 6Ä 1Joe: 15. மேலது, 12 பாடல் 2, 3

Page 134
240 மட்டக்களப்பு மாவட்ட.
“பாலுக்கோ நீ அழுதாய் பசித்தழுது வந்தாயோ கூழுக்கோ நீ அழுதாய் குழுந்த பசி ஆறலையோ??18 என்ற பாடலைத் தாய் ஒருத்தி பாடியமையைக் கள ஆய்விற் கவனிக்கக் கூடியதாக இருந்தது.
தாயிடம் பால் குடிக்க மறுத்து அழுங் குழந்தை, தாயின் தாலாட்டைச் செவிமடுத்ததும் அழுகையையும், பால் குடிக்க மறுத்து அடம்பிடித்தமையையும் மறந்து, பால் அருந்த ஆரம்பிக் கிறது. எனவே குழந்தைக்கு எளிதாகப் பாலூட்டத் துணை செய்யும் வகையிலும் இப்பாடல்கள் பயன்படுகின்றன.
குழந்தைக்கு உடற்பயிற்சியளிக்கும் வகையிற் பயன்படுதல்
குழந்தை மகிழ்ச்சியுடன் சிரித்து விளையாடும்போது, அதற்கு விளையாட்டுக் காட்டும் நோக்குடன் பாடல்கள் பாடப்படுவது வழக்கம்." குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு 'சாய்ஞ் சாடம்மா சாய்ஞ்சாடு. "1" என்ற பாடலைப் பாடுவர். இப் பாடல் குழந்தைக்கு விளையாட்டுணர்வை அளிக்கும் அதேவேளை யிற், குழந்தையின் முதுகெலும்புக்கும் பயிற்சி கொடுப்பதாக அமைதல் கருதற்பாலது. குழந்தை தவழத்தொடங்கியதும், கால்களையும் கைகளையும் நிலத்தில் ஊன்றி யானைபோல் அசைந் தாடும். அதனை “ஆனை ஆடுதல்” என்று கூறுவர். அவ்வாறு குழந்தை ஆடுவதைக் காணும்போது தாயுள்ளம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது." ஆடி அசைந்து யானை செல்வது போன்று குழந்தை தவழ்ந்து செல்லும்போது “ஆனையாடுமாம் புள்ள ஆனை யாடுமாம். *" என்ற பாடலை ஒருவர் பாடத்தொடங்கியதும், மகிழ்வுடனும் வேகமாகவும் குழந்தை யாடத் தொடங்கும். அதன் மூலம் குழந்தையின் கால்களுக்கும் கைகளுக்கும் மற்றும் உடல் உறுப்புகளுக்கும் பயிற்சி ஏற்படுகின்றது. குழந்தையின் மூக்கு, கால், கை ஆகியன நன்கு வளரும்பொருட்டு நேராகப்
16. Ġonogy, | 1 | L TLsi 12:
17. Iona and Opic. Peter, (1966)
18. சாய்ஞ்சாடம்மா சாய்ஞ்சாடு, சாயிரமயிலே சாய்ஞ்சாடு, வட்டிக்கும் சோத்துக்
கும் சாய்ஞ்சாடு, வாழைப்பழத்துக்கும் சாய்ஞ்சாடு." (பாடியவர் இலக்கம்: 6).
19. *ஓடிவருகையிலே-கண்ணம்மா, உள்ளங் குளிருதடி, ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய், ஆவி தழுவுதடி" என்ற பாரதியார் பாடல் (கண்ணன் பாட்டு.என் குழந்தை-3) நோக்குக.
20. ஆனை ஆடுமாம்புள்ள ஆனையாடுமாம், என்னுனை அது பொன்னுனை, எங்க
குலத்துக்கு அரசானே' (பாடியவர்: இலக்கம்:6)

Lurrulásarfer Lulluerunt6 24
பிடித்துவிடும்போதும் பாடல்கள் பாடப்படுகின்றன. இவ்வாருகக் குழந்தை விளையாடும்போது தாய், பாட்டி முதலியோர் பாடும் கொஞ்சுமொழிப் பாடல்களும், 'மூக்கு வளர்வளர்”, “கை வளர் வளர்’ முதலான தொடர்களும் குழந்தைக்கு உடற்பயிற்சி அளிக்கும் வகையிற் பயன்படுகின்றன.?
குழந்தைக்கு அறிவூட்டும் வகையிற் பயன்படுதல்
தம்குழந்தைகளுக்கு அறிவுபோதிப்பதிற் பெற்ருேர் கண்ணுங் கருத்துமாக இருப்பர். நல்லறிவும் இறை நம்பிக்கையும் ஏற் படக்கூடிய வகையிற் பிள்ளைகளை வழிப்படுத்துவது பெற்றேரின் கடமையாகின்றது. தாலாட்டுப் பாடலின்மூலம் குழந்தைக்கு அறிவூட்டுதல் என்பது முடியாத காரியமாயினும், தாயுள்ளம் தனது போதனையைத் தாலாட்டு மூலமாகவும் செய்யத் தவறு வதில்லை என்பதைத் தாலாட்டுப் பாடல்கள் நிரூபிக்கின்றன. பிறை வணக்கத்திலுள்ள ஈடுபாட்டினலும் நம்பிக்கையினலும் தன் குழந்தையையும் பிறையை வணங்கும்படிப் பாடுகிருள் ஒரு தாய். 'மாசிப்பிறையைக் கும்பிடம்மா உன்மாதா குடிவாழ்ந் திருக்க.”** என வரும் பாடல் குழந்தைக்கு அறிவூட்டும் என்பது தாயின் நம்பிக்கை. தன் மகனும் ஏட்டுக் கல்வி பயில வேண்டு மென்ற எதிர்காலக் கற்பனையின் அடிப்படையிற் 'கண்டுப்பனை ஒலை மகனே உனக்கு கணக்கெழுத நல்லோலை.’’** எனப்பாடுதல் ஈண்டு பயன்பாட்டு அடிப்படையில் நோக்கற்பாலதாகும்.
குழந்தை பிறந்த ஐந்தாம் ஆரும் மாதங்களிற் பெற்ருேரை இனங்கண்டு, குரல் கொடுத்து விளையாடத் தொடங்குகின்றது. அது தான் எழுப்பும் குரல் ஒலியைமீண்டும் மீண்டும் செவிமடுத்து மகிழ்ந்து, விளையாடுகின்றது. அன்றியும் தன் காதிற்படும் ஏனைய ஒலிகளைத் தானும் ஒலிக்க முயல்கிறது. அத்தருணத்திற் பிறர் செய்வதைத் தானும் கற்றுக்கொள்ளும் ஆவல் குழந்தைக்குத் தோன்றுகிறது. எனவே குழந்தை, தாய்பாடும் தாலாட்டுப் பாடல்களைச் செவிமடுத்து, அவற்றின் ஒலித் தொகுதிகளைத் தானும் இரட்சித்துக் கொள்கிறது.
பண்டு தொட்டு ஆத்திசூடி, நன்னெறி, நீதி நெறி விளக்கம் முதலிய அறநூல்கள் வழக்கிலிருந்து வந்துள்ளன. இன்றுஞ் சிலர்
21 ''When a mother has done plaiting her daughter's braids she swings them thrice upwords saying: May the maid grow up and her hair long bellow' Abbott, G. F. P. 122 (1903).
22. பி. இ. தா. பா. 151 பாடல் 2ஆ. 23. lî g. 5 T. UT. /4 u TL644.
լք-16

Page 135
242 மட்டக்களப்பு மாவட்ட.
குழந்தை இலக்கியம் படைக்கும்போது நீதிக் கருத்துகளையும் அறப்போதனைகளையும் கையாள்வதையும் கவனிக்கலாம். எனவே கிராமியத்தாய் தனது தாலாட்டினூடாகக் குழந்தைக்கு அறி வூட்டும் வகையில் அறக்கருத்துகளையும் நல்லறிவுப் போதனை களையும் சேர்த்துக் கொள்வதில் வியப்பில்லை. குழந்தை அவற்றைப் புரிந்து கொள்ளாது எனினும், அவற்றைக் கூறுவதிலே தாயுள்ளம் அமைதி அடைகிறது எனலாம்.
குழந்தைக்கு இசையுணர்வு ஊட்டுதல்
இசைநுட்பங்களை உணரும் ஆற்றல் குழந்தைக்கு இல்லா விட்டாலும் இசைக்குக் கட்டுப்படும் ஓர் இயல்பு குழந்தையிடம் காணப்படுகிறது. கிராமியச் சூழலில் வாழ்வோர் தம் வாழ்நாளிற் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டார் இசைப்பாடல்களுடன் தொடர்புபட்டு வாழ்வோராகவே காணப்படுகின்றனர். அவ்வாருகத் தன் வாழ்நாளில் இசைப்பாடல்களைப் பயன்படுத்தி வாழப்போகும் குழந்தைக்குத் தாலாட்டுப்பாடல் வடிவமாக இசையுணர்வு ஊட்டப்படுகின்றது. இதுபற்றிய கே. எஸ். அருள் நந்தியின் ** கருத்து ஈண்டு மேற்கோளாகத் தரப்படுதல் காண்க. w
"குழவிப் பருவத்தில் இவ்வோசைத் திறங்கள் கேட்கப்படு மாயின், குழந்தைகளின் செவிப்புலன் சீரடைந்து எஃகுச் செவிவளம் உண்டாகும். அதனுற் பிற்காலத்தில் அப்பிள்ளை கள் இசைக்கல்வியையும் செய்யுள் இயற்றலையும் எளிதாகக் கற்றுக்கொள்வர்’’.
தெய்வத்தின் அருள் வேண்டுதல்
தாலாட்டுப் பாடல்களிலே தாய் தன் குழந்தையைத் தெய்வங்களுக்கு ஒப்பிட்டுத் தான் தெய்வ அருளினலே குழந்தைப் பேறடைந்ததாகவும் பாடுவதைக் காணலாம்." அவ்வாறு பாடு வதன்மூலம், குழந்தைப்பேறடைவதற்கு அருள் பாலித்த இறைவனுக்குத் தாய் நன்றி கூறுகிருள். அன்றியுந் தன் குழந்தைக்குத் தெய்வத்தின் அருளும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடனும் தாலாட்டிலே தெய்வத்தைப் பாடுகிருள் எனக்கூறின் மிகையாகாது. இப்பாடல்கள் தாயின் கடவுள் நம்பிக்கையை எடுத்துக்காட்டுவனவாகவும் அமை கின்றன. “குழந்தையின் மனத்தில் ஆரம்பம் முதலே தெய்வ
24. சோமசுந்தரப்புலவர் (நந்தன வருடம்) பக், 11 25. ?., 9., ĝ5T, LI PY., 13/ LI TL6v856ir LI PTÁräzis,

lurrldss6f6ầr Lu Lu6örlurrG) 243
வரலாறுகள் ஆழமாகப் பதிந்துவிட வேண்டும் என்று தாய்மார்கள் விரும்பியதனலே இத்தகைய பாடல்கள் எழுந்தன’’ என அழகப்பன் (1973 பக். 26) கூறுவதும், தாலாட்டுப் பாடல் களின் பயன்பாட்டு அடிப்படையிற் குறிப்பிடத்தக்கதாகும்.
தாயின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கருவியாதல்
குழந்தையின் புன்முறுவலிற் புளகாங்கிதம் அடைந்து தனது கவலைகளை எல்லாம் மறந்து மனநிறைவுகொள்ளும் தாய், தனது மகிழ்ச்சியைத் தாலாட்டினூடாகப் புலப்படுத்துகின்ருள். அவ்வகையிற் குழந்தையைப் பலவாருக உருவகித்துக் கற்பனை செய்து பார்ப்பதற்கும் இப்பாடல்கள் தாய்க்குச் சாதனமா கின்றன. குழந்தையைப் புகழும் பாடல்கள் அனைத்தும் அன்னை தனது உளப்பூரிப்பை வெளிப்படுத்தியதன் பிரதிபலனகத் தோன்றியனவேயாகும். தாய் தன் குழந்தையை அரும்பொரு ளாக உருவகித்துப் பாடும்போது, அவள் பூரணமான மன நிறைவும், மகிழ்வும் அடைய இப்பாடல்கள் வழிவகுக்கின்றன
குழந்தை பிறந்தமையினுற் “பட்டமரம் தழைப்பதாகவும்", கொடிய விலங்குகள் தன் குழந்தைக்குச் சேவகம் புரிவ தாகவும்”** தாய் கற்பனை செய்து பாடி, அதன்மூலம் குழந்தையின் பெருமையினையும் அருமையினையும் எண்ணிப் பெருமிதமும் பூரிப்புங்கொள்ளும் வகையிலும் இப்பாடல்கள் பயன் படுகின்றன.
திருமணமாகி ஈராண்டுகளுக்கிடையிற் குழந்தைப்பேறு அடையாவிட்டால், கிராமிய மக்கள் அவர்களுக்கு ‘ மலட்டுப் பட்டம்” சூட்டி, அவர்களை இழித்துரைக்கத் தொடங்கிவிடு வார்கள். தமக்கு “மலடி”, “இருடி' என்ற அவப்பெயர் சமூகத்தில் ஏற்படாதவாறு வந்துதித்த தம் மழலைச்செல்வத்தைத் தாலாட்டும்போது, அச்சேதியையும் பாடலிற் குறிப்பிடு கின்றனர்.*" குழந்தைப்பேற்றின்மூலம் தான் அடைந்த பெருமையினையும், சமூகத்திலே தனக்குள்ள மதிப்பையும் உட் பொருளாக வைத்துப் பாடப்படும் பாடல்கள் தாயின் மனே வுணர்வுகளை வெளிப்படுத்தக் கருவியாகின்றன, தன்னம்பிக்கை யையும் மனநிறைவையும் எடுத்துக்கூற இப்பாடல்களைத் தாய் பயன்படுத்துகிருள் என்றும் கூறலாம்.
26. I.g., jg5T. LIT. I1LI TL-isti 6. 27. பி.இ. தா, பா./11 பாடல் 11

Page 136
244 மட்டக்களப்பு மாவட்ட.
தாயின் அனுபவங்களைக் கூறப்பயன்படுதல்
குழந்தைச் செல்வத்தைப் பெறுவதற்காக அன்னையர் அனுபவிக்கும் அல்லல்கள் அளவற்றன. “மலடி” என்ற பெயர் வந்துவிடுமோ என்பதை அவள் எண்ணிப்பார்க்கும்போது அவளது உள்ளம் குன்றிக்குறுகி, வெந்துருகி வேதனைப்படுவதா யிற்று. அவள் போகாத தலமில்லை; வேண்டாத தெய்வமில்லை . இவ்வாறு தான்பட்ட கஷ்டங்களையும், இன்பதுன்ப உணர்ச்சி களையும் எடுத்துக்கூறுவதன்மூலம் தாயுள்ளம் மனநிறைவடைய இப்பாடல்கள் துணையாக அமைகின்றன. இதுபற்றி மங்கை?? கூறுவது ஈண்டுப் பொருத்தம் நோக்கி மேற்கோளாகத் தரப்படு கிறது:
*குழந்தை இசையைத்தான் அறியும், பின் ஏன் சொல்லும் பொருளும் சேர்ந்த தாலாட்டுகள் பாடப்படுகின்றன? பாட்டின் பொருள்மூலம் பிறருக்குத் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் தாய் தன் எண்ணங் களுக்கு வடிகாலும் அமைத்துக்கொள்கிருள்.”
குழந்தையின் எதிர்காலம்பற்றிப் பாடப்பயன்படுதல்
தன் குழந்தையின் எதிர்காலத்தைக் கற்பனை செய்துபாடி, அதிற் பெருமையடைவது தாயுள்ளத்தின் இயல்பாகும். தன் மகன் வளர்ந்து வாலிபனகி, மணக்கோலம் பூண்டு, முற்றத்திலே அமைக்கப்படும் மணப்பந்தலிலே உற்ருர் உறவினர் புடைசூழ வீற்றிருக்கப்போகும் காட்சியைப் பொருளாகக் கொண்ட தாலாட்டுப்பாடல்?? தாய்க்கு மனமகிழ்வைக் கொடுக்கிறது. அக்காட்சியைக் கற்பனையிற் காணும்போது பெத்தமனம் பித்தா கின்றது. பாட்டனரின் பெரும் சொத்துகளுக்கு உரிமைபூணும் தன் குழந்தையின் எதிர்கால வாழ்க்கையையும்," மாமன்மார் பெருஞ்சீதனங்களுடன் மணம் பேசுவர்?' என்பதையும் நினைந்து மகிழ்வடையவும் இப்பாடல்கள் பயன்படுகின்றன எனலாம்.
கிராமியத் தாய்மார் தாம் பார்த்தனுபவித்த கூத்துகள், கேட்டனுபவித்த அம்மானைப் பாடல்கள் ஆகியனவற்றில்வரும் இலட்சியக் கதாபாத்திரங்களையுங், கருத்துகளையும் தம் குழந்தை
28. மங்கை, டி, (1974) பக். 337.
29, 19.9., goset. Lurr. || 1 || LITlsé 2;
30. (3ud6w35, | 1 | urTulio 85T. | 1 | u Frolŝiy 7, 2 a3..., Ill u T si) 10 5J", [2] u Tulio
3 ஊ, 12 பாடல் 4, 13 பாடல் 9.
31. மேலது, 14 பாடல் 2 ஆ.

பாடல்களின் பயன்பாடு 245
யுடன் ஒப்புநோக்கி, குழந்தையின் எதிர்காலத்தை உன்னததிலை யிற் கற்பனை செய்து மகிழவும் இப்பாடல்கள் தாய்மாருக்குக் கருவியாகின்றன.??
புராண, இதிகாசக் கதைப்பாடல்களைப் பொழுதுபோக்கு அடிப்படையிலும், சடங்குகளிலும் கேட்டுப்பழக்கப்பட்ட தாய் மாருக்கு அக்கதைகளில்வருஞ் செய்திகளும், பாடல் வரிகளும் நினைவிருத்தல் இயல்பே. அத்தாய்மார் குழந்தைகளைத் தாலாட்டும்போது தமக்கு நினைவிலுள்ள பழைய இலக்கியங்களில் வருஞ்சொற்கள், சொற்ருெடர்கள், வரிகள் என்பன அவர்களது தாலாட்டில் இடம்பெறுதலுண்டு. “பட்டமரம் தழைக்க பலகனி கள்தான் சொரிய.”** எனவரும் பாடல் இதற்குத்தக்க உதாரண மாகும். இவ்வாறுவரும் பாடல்கள் தாலாட்டுப்பாடுந் தாயின் நாட்டார் இலக்கிய ஞானத்தையும், அதனைத் தாலாட்டாகப் பாடும் புலமையினையும் புலப்படுத்துங்கருவியாகவும் பயன்படு கின்றன.
குலப்பெருமை பாராட்டப் பயன்படுதல்
தம் குலப்பெருமையைப் பேசுவதிற் பெண்கள் பெருமகிழ்ச்சி யடைகின்றனர்.* தாய்வழிச் சமுதாய அமைப்பில் ஊறிய இப் பிரதேசமக்கள் தாய்வழிச்சமூக ஆதிக்கத்தில் நம்பிக்கையுடைய வர்களாகக் காணப்படுகின்றனர்." ஆதலினற் குழந்தையைத் தாலாட்டும்போதும், தாய் தன் குடும்பப் பெருமையைப் பெரி தாகப் புகழ்ந்து பாடுகின்ருள். அவ்வாறு பாடும்போது அடக்க மான முறையிலே அதாவது தன்னைப் புகழாது, தனது சகோதரனை (குழந்தையின் மாமனைப்) புகழ்வதிலுள்ள சிறப்புக்குறிப்பிடற் பாலது. மாமன்மாரின் சொத்துகளையும் அவர்கள் குழந்தைக்குக் கொடுத்த பரிசுகளையும் விதந்து கூறுமுகத்தான் தன் குலத்தையும் புகழ்ந்தாளாயிற்று. எனவே தாய் தன் குலப்பெருமையினையும் உற்ருர் உறவினரையும் புகழ்ந்து பாடுவதற்கும் இப்பாடல்கள் துணையாக அமைகின்றன.
குடும்ப நிலைமையைக் கூறப் பயன்படுதல்
தாலாட்டுப் பாடல்களிலே அவரவர் குடும்பப் பொருளாதார நிலையிற் பிரதிபலிப்பைத் தனிப்பட்ட முறையிற் காண முடியா
32. A.3., 5 T. u T. I 1 I LI TL6io 6, 121 LI IT L6i 5. 33. அம்மானைப் பாடல்களில் இச்சொல்லாட்சி இடம்பெறக் காணலாம். 34. பி.இ. தா.பா. 15 பாடல்கள் நோக்குக.
35. grgir u Tää.

Page 137
246 மட்டக்களப்பு மாவட்ட.
துள்ளது. இல்லோரும் உள்ளோரும் ஒரே தன்மைத்தான பாடலையே பாடுகின்றனர். ஏழை விவசாயியின் மனைவி தன் குழந்தையைச் சீலையாற் கட்டப்பட்ட ஏணையிற் கிடத்தித் தாலாட்டும்போது "மாணிக்கக்கால்நாட்டி, வச்சிரவடம் பூட்டி ஆணிப்பொன் தொட்டிலிட்டேன்’ என்றும், “ஆளப்பிறந்தவனே அரசாள வந்தவனே’ என்றும் பாடுகின்றமை நோக்கற்பாலது. வர்க்க வேறுபாட்டைத் தாலாட்டுப்பாடல்களில் மட்டக்களப்பு மாநிலத்திற் காணமுடிவதில்லை.° சீருஞ் சிறப்புடனும் எதிர் காலத்தில் வாழப்போகும் தன் குழந்தைக்குத் தமது வறுமை நிலையைக் கூறுவதைத் தாய்மார் தவிர்த்துள்ளனர் என்றே கூற வேண்டும். எனினும் தமது குடும்பச் சொத்து, பொருளாதார நிலை என்பவற்றை எடுத்துக்கூறும் வகையிலும் இப்பாடல்கள் பயன்படுவதை அவதானிக்கக்கூடியதாயிருக்கிறது.87
தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவித்தல்
தான் நேரிற் பிறருக்குக் கூறமுடியாதவற்றைத் தாலாட்டினுர டாகக் கூறும்வகையிலும் இப்பாடல்கள் பயன்படுகின்றன. உதாரணமாகக் குழந்தை பால்குடிக்கும்போது பிறர் அருகே இருப்பதைத் தாய் விரும்பாள். அதனுற் குழந்தைக்குக் கண்ணுாறு பட்டுவிடும் என்பது அவளது நம்பிக்கை. எனவே குழந்தைக்குப் பால் கொடுக்கத் தொடங்கும்முன் “பாலூக்கோ நீயழுதாய் பசித் தழுது வந்தாயோ’ எனப் பாடும்போது பக்கத்திலுள்ளோர் தாய் பால் கொடுக்கப் போவதையுணர்ந்து அகன்றுவிடுதல் கள ஆய்வில் அறியப்பட்டது. அவ்வகையிலும் இப்பாடல்கள் பயன் படுகின்றன,
தாய்மார் வீட்டுவேலைகளைச் செய்யும்போது பாட்டிமார் குழந்தைகளைக் கவனிப்பது வழக்கம். அப்போது குழந்தை பசி எடுத்து அழத்தொடங்கினல் 'தாயார் மடிதேடித் தம்பி தானே அழுகிருராம். கிட்ட வந்து பால் கொடம்மா”** எனத் தாலாட்டினூடாகப் பாட்டி தாயை அழைப்பதும் தன் கருத்தை
36. "செல்வச் செழிப்பில் திளைக்கும் நிலவுடைமையாளர்களின் வீட்டில் குழந்தையைச் செல்வம் ஆளவந்த சீமான் என்று வரவேற்றுப் போற்று கிருர்கள். ஆணுல் எல்லாச் செல்வத்தையும் தனது உழைப்பினுல் படைக்கும் உழவர் வீட்டிலேயோ “எங்கள் துன்பத்தில் பங்கு கொள்ள நீயும் ஏன் பிறந்தாய்?’ என்று குழந்தையைப் பார்த்துத் தாய் கேட்கிருள். குழந்தைப்பேறு என்ற ஒரே நிகழ்ச்சியைச் செல்வமுள்ளவர்களும் இல்லாத வர்களும வெவ்வேறு மனப்போக்கோடு காண்கிறர்கள்?’ என வானமாமலை கூறுவதும் காண்க. வானமாமலை. நா. (பதிப்பு) (1960) பக். 3.
37. பி.இ., தா.பா. 111 பாடல் 10, 1111 பாடல் 8 இ, உ,ஏ, 12 பாடல் 3ஊ, 11
பாடல் 10, ஊ, 12 பாடல் 3 இ, 14 பாடல் 2 அ.
38. ti. SãQ., g5(T. Lu fT. /2/ u Tl6ñ) 5.

பாடல்களின் பயன்பாடு 247
மற்றவருக்குக் கூறத் தாலாட்டுப் பயன்படுகிறது என்பதை விளக்குகிறது.
குழந்தையின் உறவினருக்குத் தாலாட்டுப்பாடல் பயன்படுதல்
தாலாட்டுப் பாடல்கள் குழந்தையின் பொருட்டுப் பாடப் ப்ட்ட்போதிலுஞ் சில சந்தர்ப்பங்களிற் பாடற் பொருள் ஏனை யோரையும் கவர்வதாக அமைவதைக் கவனிக்கலாம். தாலாட் டிலே உறவினர்களைக் குறிப்பிட்டு அவர்களது செயல்களையும், பெருமைகளையும் மாண்புபடுத்திப் பாடுவது வழக்கம், தமது வேலைகளைக் கவனித்தவண்ணம் தாலாட்டுப் பாடலுக்கும் காது கொடுத்துக் கொண்டிருக்கும் உறவினர் அப்பாடலைக் கேட்டதும் மனேவியலடிப்படையில் உளத்திருப்பதியடைவதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
தந்தை
கணவனின் பெருமை, குழந்தையின் எதிர்காலம் என்பன பற்றித் தாலாட்டிற் குறிப்பிடும்போது அவற்றைக் கேட்குந் தந்தை பெருமிதமும் மகிழ்ச்சியுமடைவதோடு, குழந்தையின் எதிர்காலம் பற்றியுஞ் சிந்திக்கிறர். குடும்பப் பொறுப்பு இன்றித் திரியும் கணவனுக்குக் காதில் விழும்படியாகக் குழந்தையைத் தாலாட்டுவது போன்று, தன் குடும்பக் கஷ்டங்களைத் தாலாட் டாகப் பாடிக் கணவனை மனந்திருந்தச் செய்யவும் இப்பாடல்கள் பயன்படுகின்றன. தந்தை பெருமை அடையும்வகையிலே தாலாட்டுப் பாடப்படுவதைக் கேட்கும்போதெல்லாம் தந்தை தன்னுள் உவகைகொள்ளவும் அதனல் மேலும் மேலும் குழந்தை யிடமும், மனைவியிடமும் பாசம் பெருக்கெடுத்தோடவும் இப் பாடல்கள் வழிவகுக்கின்றன,
பாட்டன், பாட்டி
சில பாடற்பொருள் பாட்டனையும் பாட்டியையும் கவர்வ தாக அமைந்துள்ளன. "ஆச்சி. Lum L. L9....... பாட்டன் அடித் தார்களா’*** எனவும், “பாட்டனர் பரிசு தந்தார்’ எனவும் " தாய் தாலாட்டுவதைக் கேட்கும் பாட்டனும் பாட்டியும் மகிழ்ச்சி யடைந்து குழந்தையிடமும் தாயிடமும் அதிக அன்பும் ஆதரவும் காட்டத் தலைப்படுகின்றனர்.
39. பி.இ. தா. பா. 12 பாடல், 2, 3; 40. மேலது 4 பாடல் 2அ,

Page 138
248 மட்டக்கணப்பு மாவட்ட.
"பாட்டனராண்ட பழுதில்லா ராச்சியத்தைத் தாஞள வந்தவன்”** "அப்புச்சி அடிச்சாரோ ஆதனக்கையாலே”** என வரும் பாடல்கள் பாட்டனுரைப் பொறுத்தவரையில் முக்கியத் துவம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. பல சொத்துக் களைப் பெற்றிருந்த பாட்டன "ஆதனக் கையுடையவர்” என வருணிக்கிருள் தாய். இத்தகைய பாடல்கள் பாட்டனரை, மனமிரங்கச் செய்து, தம் சொத்துக்களைக் குழந்தைக்கு அன்பளிப்புச் செய்யத்தூண்டுகின்றது என்பர்.
ஏனைய உறவினர்
குழந்தையின் தாய்வழி உறவினரான மாமன், மாமி, மைத்துனன் என்போர் சிறப்பாகத் தாலாட்டுப் பாடலிற் குறிப் பிடப்படுகின்றனர். குழந்தையின் மாமன்மார்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் கொடுத்த பரிசுகள்,* குழந்தைக்குச் சேரவிருக்கும் மாமனிடமுள்ள சொத்துக்கள்,**குழந்தை வளர்ந்த பின்பு சீதனமாகக் கொடுக்கப்படுபவை,** குழந்தைக்காக அவர் கள் செய்த சீர்வரிசைகள்,** என்பனபற்றிய பாடல்கள் மாமன், மாமி, மைத்துனன் ஆகியோருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பனவாக அமைகின்றன.
தாய் குழந்தையைத் தாலாட்டும்போது, தனது மூத்த குழந்தைகளும் ஆங்கிருப்பதைக் கவனித்துத் தனதுகுலப்பெருமை, கணவன் பெருமை என்பனபற்றிப் பாடுகிருள். தாலாட்டி னுாடாக அறங்களையும், நற்போதனைகளையும் ஊட்டுகிருள். அத் தகைய பாடல்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவனவாகவும், தன் குலத்தைப்பற்றி அவர்களுக்கு அறிவுறுத்துவனவாகவும் அமைகின்றன.
உறவினரின் நல்லெண்ணத்தைப் பெறத் துணையாதல்
தாலாட்டுப் பாடல்களிலே தாய் உறவினர்களைப் பற்றியும்,*7 அவர்கள் குழந்தைக்குக் கொடுத்துள்ள பரிசுகள்பற்றியும்*8 புகழ்ந்து பாடி, அதன்மூலம் அவர்களுக்கு நன்றியறிதல் செய் கிருள். குழந்தைக்குப் பரிசளித்த உறவினர்களை நன்றியுணர்ச்சி
M**ra
41. மேலது 111 பாடல் 8ஆ-ன: 42. மேலது, 12 பாடல் 3இ. 43. Sa... g... g5T. u T. l4l u tT Liv 29, l6l u Tlesi 1. 44. மேலது, 14 பாடல் 2அ, ஆ, 45. மேலது, 46. Goods, 14/ Lu TL 2-o. 47. பி. இ. தா. பா. 15 பாடல்கள் பார்க்க. 48. மேலது, 14 பாடல்கள் பார்க்க,

பாடல்களின் பயன்பாடு 249
யுடன் தாலாட்டில் ஏற்றம் கொடுத்துப் பாடும்போது தாய் அவர்களின் நல்லெண்ணத்தையும், மகிழ்ச்சியையும் பெறுகின்ருள் எனக் கூறுதல் சாலும்.
தொழிற்பாடல்களின் பயன்பாடு
தொழிலாளர் தம் களைப்பை மறந்து உற்சாகத்துடன் தொழிற்படும் நோக்குடன் தொழிற்பாடல்களைப் பாடுகின்றனர். அவ்வடிப்படையிலேதான் இப்பாடல்களின் பயன்பாட்டின் முக்கி யத்துவம் அமைந்துள்ளது. இவ்வாய்வாளர் தொழிற்களங்களில் மேற்கொண்ட கள ஆய்வின் மூலமும், தொழிற்பாடல்களின் பொருளாய்வு மூலமும் பல்வேறுவகைகளில் இப்பாடல்கள் தொழிலாளர்களுக்குப் பயன்பாடுடையனவாகக் காணப்பட்ட மையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அவைபற்றி ஈண்டு விரிவாக ஆராயப்படுகின்றது.
பொலிப்பாடல்களின் பயன்பnடு
பொலிப்பாடல்களின் பொருளமைப்பாய்வில் இப்பாடல்கள் ஏனைய தொழிற்பாடல்களைப்போலன்றி, தெய்வ சிந்தனையுடன் தொடர்புடையனவாகவும், புராணக்கதைகளைக் கூறுவனவாகவும் அமைந்திருத்தலும்,* சூட்டுக்களத்தில் வேலை செய்வோர் இறை நம்பிக்கையோடு தொழில்புரிவதும்" கள ஆய்வில் அவதானிக் கப்படலாயின. களத்தில் வேலை தொடங்கமுன், கிரியைகள் செய்வதும் 1 அங்கு சிறுபந்தலிட்டுச் சானகத்தாற் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு செய்தலும் இடம்பெறும். இத் தகைய தொழிற்களப் பின்னணியிலே தொழிற்படும் விவசாயி களின் மனம் மாசுபடாதிருக்கும்பொருட்டே பொலிப்பாடல்கள் தெய்வசிந்தனை கொண்டனவாக அமைந்துள்ளன. எனவே பொலிப்பாடல்கள் தொழிலாளர்களுக்குத் தெய்வசிந்தனையைக் கொடுக்கும் வகையிற் பயன்படுகின்றன என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.
தெய்வங்களைப் பற்றிப் பாடுவதன்மூலம் களத்தில் நெல் பொலியும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் நிலைபெற்றுள்ளமை ஈண்டு நினைவு கொளற்பாலது.** இப்பிரதேசமக்கள் பெண்
49. நூல் பக். 143-147, 149-151, பார்க்க,
50. சிங்களமக்கள் சூட்டுக்களத்தின் தூயதன்மைமைப் பாதுக்காக்கும் பொருட்டு அங்கு பெண்கள் வருவதற்குத் தடைவிதித்துள்ளமையும் ஈண்டு குறிப்பிடுதல் சாலும்,
51. நூலுள் காண்க
52. நூல் பக். 143, 144, 147, 149,150, பார்க்க,

Page 139
250 மட்டக்களப்பு மாவட்ட.
தெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கையுடையவர்களாதலாலும் வளத்தையும் பொலிவையும் அளிப்பவள் பெண்தெய்வமேயாத லாலும் பொலிப்பாடல்களிற் சிறப்பாகப் பெண்தெய்வமே போற்றப்படுகின்றது. பெண்தெய்வங்களைப் புகழ்ந்து போற்றி, நெல் பொலிய வேண்டும் என அருள் வேண்டிப் பாடுகின்றனர். எனவே, பொலிப் பாடல்களின் பொருட்கூறுகளை நோக்கும் போது பயன்பாட்டு நோக்கில் இப்பாடல்கள் தெய்வ சிந்தனை யுடையனவாக அமைந்திருத்தலின் அடிப்படை தெளிவாகின்றது.
கிராமிய மக்கள் எக்காரியந் தொடங்கும்போதும் கடவுளைப் பரவியே தொழிற்படுவர். அது அவர்களது நடைமுறை வாழ்க் கையில் இடம்பெறும் பழக்கமுறையாகும். ஆதலினற் சூட்டுக் களத்தின் தொடக்க நிகழ்ச்சியாகக் கடவுட்பரவுதலும், அதனைத் தொடர்ந்து கடவுளைப்பாடும் பொலிப் பாடல்களும் பாடப்படு கின்றன. அவ்வாறு இவர்கள் தொழிற்களப் பின்னணியிற்பாடும் தெய்வ சிந்தனைப் பாடல்கள் மறைமுகமாக இவர்களது ஆன்ம ஈடேற்றத்திற்கும் துணைசெய்கின்றன என்றுங் கூறலாம். “சாதாரண கிராமிய மக்களாற் பாடப்பட்ட பாடல்களிலும் ஆழ மான மதவுணர்ச்சி தோய்ந்த கருத்துகள் கருவாக அமைந்திருந் தனவென்றும், நெல்வயலைக் காவல் செய்துகொண்டிருந்த பெண்ணுெருத்தியாற் பாடப்பட்ட சிங்களப்பாடல் ஒன்றைக் கேட்ட அறுபது பிக்குகள் அருகர்நிலை எய்தினர்’ எனவுங் கூறப் படுவது? ஈண்டுச் சிந்திக்கற்பாலது.
களத்திலுள்ள நெல்லைப் பூத கணங்கள் திருடிக்கொண்டு போய்விடும் என்ற நம்பிக்கை இவர்களிடம் இருப்பதால், பூத கணங்கள் களத்துட் புகாவண்ணம் தடுக்கும் பொருட்டும் பொலிப்பாடல்கள் பாடப்படுவதாகக் களஆய்வில் அறியப் பட்டது. பொலிப்பாடலைப் பாடாவிட்டால், களத்தில் ஆட்கள் இல்லை என்றெண்ணிக் களத்தின் வெளியே சந்தர்ப்பம் பார்த்து நிற்கும் பூதங்கள் நெல்லைத் திருடிச் சென்றுவிடுமாதலாலேயே, அவற்றைத் தடுப்பதற்காகவும் பொலிப்பாடல்கள் பாடப்படு கின்றன எனவுங் கூறப்படுதல் பயன்பாட்டு அடிப்படையில் நோக்கற்பாலது.
பொலிப்பாடல்களிலும் ஏர்ப்பாடல்களிலும் மாடுகள் புகழ்ந்து
பாடப்படுகின்றன.”* மாடுகள் அவற்றைக் கேட்டு மகிழ்ச்சி
53. Adikaram, E. W. (1953) P. 130.
54. பி.இ. தொ. பா. பொலி முதற் பாடல் மறுதரு 3 ஆம் வரி. 2ஆம் பாடல் மறுதரு 3 ஆம் கண்ணி, 3 ஆம் பாடல், 4 ஆம் பாடல், 7ஆம் பால் 10 ஆம் பாடல்களிலும், ஏர் 1ஆம் 2ஆம் பாடல்களிலும் மாடுகள் புகழப் பட்டிருத்தல் காண்க.

பாடல்களின்பயன்பாடு 251
யடைந்து, சுறுசுறுப்பாக இயங்குகின்றன என்ற் நம்பிக்கை பயன்பாட்டு அடிப்படையில் நோக்கற்பாலதாகும். மாடுகளை உயர்திணையில் இலக்கண வழக்காகப் புகழ்வதும் இதே நிமிர்த்த LDTG5 Lh.
சூடுமிதிக்கும் மாடுகளை இவர்கள் அடித்துத் தொல்லைப் படுத்துவதில்லை. அவற்றின் காதில் விழும்படியாக உரத்த தொனியிற் பொலிப்பாடல்களைப்பாடி, இடையிடையே மாடுகளை அதட்டிச் சாய்ப்பர். பாடல் ஓசையும் அதட்டல் ஒலியும் மாடுகளை விரைவாக நடக்கத் தூண்டுகின்றன."
விடியும் வரையும் நித்திரை விழித்து மாடுசாய்ப்போர் நித்திரைத் தூக்கத்தைப் போக்குவதற்காகவும் பொலிப்பாடலை மாறிமாறிப் பாடுகின்றனர். மாடு சாய்ப்போருக்கு மட்டுமன்றி அவர்களுடன் வேலை செய்யும் ஏனையோரது நித்திரையைப் போக்குவதற்கும் இப்பாடல்கள் உதவியாக அமைகின்றன. பாடலில் இடம்பெறும் நேரவருணனை' உடன் வேலை செய்வோரை விரைவாக வேலை செய்யத்தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இரவில் வேலை செய்யும்போது உடற்களைப்பு அதிகமேற்படா விடினும், நித்திரை விழிப்பினல் உடற்சோர்வும் மனச்சலிப்பும் ஏற்படவே செய்யும். எனவே அவற்றை மறந்து, உற்சாகத்துடன் தொழிற்படும் வகையிற் பொலிப் பாடல்கள் அவர்களுக்குத் துணையாகின்றன.
மாடுகளைச் சாய்க்கும் வரையும் பொலிப்பாடலைப் பாட வேண்டியிருத்தலாலும், நித்திரையைப் போக்கி விழிப்புடன் இயங்க வேண்டியுள்ளதாலும் பாடலின் ஒவ்வோரடியையும் வேண்டிய மட்டும் இசைத்துப் பாடுவர். அந்த அடிப்படையிற் பாடலின் ஒவ்வோரடியின் இறுதியிலும் **பொலி பொலி பொலி ஒ . பொலி”, “பொலி அம்மா பொலி’ முதலான இசைத்
55. If at the season of the winter sowing on one of the clear cloudless days of early December, you go out into the Portuguese country side ...... you will hear a music which cannot differ greatly from the primitive singing of the celts of Lusitania. As they guide the oxen with their long goads, the plough men intone an endless chant to encourage the hard worked beasts. It makes them happy, they say and unless the oxen are happy they cannot work well', Gaklop, Rodney, (1961) P. 199.
56. பி.இ. தொ.பா. பொலிபாடல் = 6;7ஆம், 8ஆம், 9ஆம் கண்ணிகள்; ஆம் பாடல் .7 ஆம் கண்ணி, பாடல் 8-11ஆம் 12ஆம் கண்ணிகள்; பாடல்
9-5 ஆம் கண்ணி,

Page 140
2S2 மட்டக்களப்பு மாவட்ட .
தொடர்களைப்பாடுகின்றனர். சூட்டிலிருந்து கதிர்களைத் தள்ளிக் களத்திற் குவித்தபின், மாடுகளை ஏற்றி முதன்முதலாக மூன்று தரம் வளைக்கும்போது குறிப்பிட்ட விருத்தப்பாடலை மூன்றுதரம் பாடுவர். அப்பாடல்" அச்சந்தர்ப்பத்தில் மட்டுமே பயன் படுத்தப்படுகின்றது.
களத்தின் நான்கு திக்குகளிலும் பதிக்கப்பட்டிருக்கும் அச்சரங்கள் பற்றியும், நடுவே பதிக்கப்பட்டிருக்கும் அரக்குப் பற்றியும் 9° குறிப்பிடப்படும் பாடல்களும் நம்பிக்கையின் அடிப் படையிற் பயன்படுகின்றன. அச்சரங்கள் களத்துட் பதிக்கப் பட்டிருப்பதைப் பற்றிப்பாடும்போது அதனைக் கேட்கும் பூத கணங்கள் களத்துள் நுழையமாட்டா என்ற நம்பிக்கையும் அவர் களிடம் காணப்படுகிறது." எனவே பூதங்களை அகற்றும் வகை யிலும் பாடல்களின் பொருட்கூறுகள் பயன்படுகின்றமை நோக்கற் LITT Gloggs.
பாடல்களில் இடையிடையே வரும் ‘ஒஒஓ’, ‘ஓகோ? ஏய்’ முதலான நெட்டொலித் தொடர்கள் பாடலை நீண்ட நேரம் பாடுவதற்கு மட்டுமன்றி, அதட்டுந் தொனியாகவும் அமைந்து மாடுகளைச் சாய்க்கப் பயன்படுகின்றன.
ஏர்ப்பாடல்களின் பயன்பாடு
ஏர் இழுத்தல், வயல் மிதித்தல், பரம்படித்தல் ஆகிய வற்றுக்குப் பயன்படும் மாடுகளைச் சாய்ப்பதற்காக ஏர்ப்பாடல்கள் பயன்படுவதோடு, விவசாயி, தான் செய்து முடிக்கவேண்டிய வேலைப்பளுவையும் அடிக்கடி நினைவு கொள்ளும் வகையிலும் இப் பாடல்கள்° துணையாகின்றன.
விண்ணையும் மண்ணையும் நம்பிவாழும் விவசாயிக்கு மாரி பொழிந்து வயல் வளம்பெருகினுல்தான் நல்ல பயன்கிடைக்கும். அதற்கு இறைவன் அருள்புரியவேண்டும். ஈண்டு உழவன் தான் இறைவன்மீது கொண்டுள்ளநம்பிக்கையைப்புலப்படுத்துவதற்குப் ப்ாடல் கருவியாகின்றமையைச் ‘சாமி துணையுண்டு, பூமிதுணை யுண்டு’ என்ற பாடற் பொருள் குறிப்பிடுகின்றது.
57. மேலது, பாடல் 1: விருத்தம்; பாடல் 9 - விருத்தம் நோக்குக,
58. நூலுள் காண்க,
59. மேலது,
60. பி.இ. தொ. பா. /ஏர் பாடல் 1, 4 ஆம் கண்ணி, ஆம் பாடல் - 8 ஆம்
கண்ணி,

பாடல்களின் பயன்பாடு 253
ஏர்ப்பாடலிற் கலப்பை புகழப்படுகின்றது." கலப்பையை எடுக்கும்போதும், உழுதுமுடிந்து திருப்பிக்கொண்டுவைக்கும் போதும் கடவுளின் திருநாமத்தைக் கூறுவதே அவர்களின் வழக்க மாகும். மேழிச்செல்வமே உழவர் வாழ்க்கைக்கு உறுதுணையாக அமைவதாற் கலப்பையைப் புகழ்ந்து பாடுவதற்கும் இப்பாடல்கள் பயன்படுகின்றன எனலாம்.
வெயிலும் மழையும் விவசாயிகளுக்குப் பழக்கமானவை யெனினும், இயற்கையின் ஆற்றலுக்கு யார்தான் ஈடுகொடுக்க முடியும். உச்சிவெயிலின் கொடுமையையும், அதனுலே தமக்கு ஏற்படும் களைப்பையும் பாட இப்பாடல்கள்? அவர்களுக்குக் கருவியாகின்றன. தம் கஷ்டமான வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டவும், தம் நிலச் சொந்தக்காரனுக்குத் தம் அல்லல்களை அறி விக்கவும் இப்பாடல்கள் 99 துணையாக அமைகின்றன. வயற் களத்தே இயந்திர சாதனம் புகுத்தப்பட்டு, மாடுகளைக்கொண்டு தொழில் புரியும்முறைகள் கைவிடப்படுமேயானல் இப்பாடல் களின் தேவையும் அவற்றின் பயன்பாடும் இல்லாதுபோய்விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.*
வயற் களங்களிற் கவிப்படல்களின் பயன்பாடு
சூடுமிதிக்கும் சந்தர்ப்பம் தவிர்ந்த ஏனைய தொழில்கள் நடை பெறும்போது காதல் குறித்தும், காமங்கண்ணியதாயும் காதற் கவிகள் பாடப்படுதல் வழக்கம். காதலும் காமமும் தொழி லாளருக்குப் புத்துணர்ச்சியையும் மனவெழுச்சியையும் ஊட்ட லால், உடற்களைப்பை மறந்து, உற்சாகத்துடன் தொழிற்படக் கூடிய ஊக்கசக்தியாக இக்கவிகள் பயன்படுகின்றன.
செய்தொழிலுடன் தொடர்புடையனவாகவும், அத்தொழி லின் அடிப்படையிற் பயன்படுவனவாகவும் சில பாடல்கள் அமைந் துள்ளன. வயல்மிதிப்போன் ஒருவன் பாடுங் கவி ஒன்றில்?
61. பி.இ. தொ பா. /ஏர்/ பாடல் 1, கண்ணி 9, பாடல் 2, கண்ணி 1, 2, 3, 62. மேலது, ஏர் பாடல் 1, கண்ணி 11. 63. மேலது, ஏர் பாடல் 2, கண்ணி 15. 64. இக்கருத்துப் பற்றிய ஆர்தர் பீல்டின் (Arthur Field) கருத்தையும்
நோக்குக: “As a sociologist I am convinced that tales have very special functions for those who tell them, and that when those functions die the tale dies...... 9s
Thompson, Stith, (1953)P. 285.
65. பி.இ. (மிதிப்பு) பாடல் 1;

Page 141
254 மட்டக்களப்பு மாவட்ட.
நல்ல மிதிமாடுகளை ஒழுங்கு செய்துதரும்படி வயற்சொந்தக் காரனைக் கேட்பதை உட்பொருளாகக்கொண்டு பாடப்பட்டிருத் தல் அப்பாடலின் பயன்பாட்டின் தொழிற்பாட்டைக் காட்டு கின்றது. ஏற்றம் இறைக்கும் ஒருவன் பாடல்களின் மூலம் தான் படும் கஷ்டத்தையும், வேலைப்பளுவையும் தன்னுடன் நீர் இறைப் போனுக்கு எடுத்துக்கூறி, மன ஆறுதல் அடையும்வகையில் இக் கவிகள்" பயன்படுகின்றன. தமது மனக் கவலையை மற்றவருக்கு எடுத்துரைக்கும்போது கவலை குறைவடைகின்றதென்ற மனேதத் துவ உண்மைக்கமையத், தொழிலின் கடுமையாற் கஷ்டப்படுத் தொழிலாளி தான்படும் இன்னல்களை மற்றவனுக்கெடுத்துரைத்து மனஆறுதலடைகிருன்.
அரிவி வெட்டுவோர் தமது உடற்களைப்பையும், வெயிலின் கொடுமையையும் மறந்து உற்சாகத்துடன் களைப்பின்றித் தொழிற் படுவதற்காகக் கவிபாடுவது வழக்கம். மட்டக்களப்பு மாநிலத் தில் ஆண்கள் மட்டுமே அரிவி வெட்டுவதால்," அவர்கள் கவி பாடும்போது விரும்பியவாறெல்லாம் உணர்ச்சிப்பெருக்கோடு பாவனையாகப் பாடிமகிழ்வர். அறுவடை செய்வோருக்குப் "பங்கு’** அளந்துகொடுக்கும்போது அளவுகம்பை நீட்டிஅளப்பது முண்டு. அவ்வாறு நீட்டியளந்தவனைச் சாடுமுகமாகவும் கவிகள் பாடப்படுதல் கள ஆய்விற் கவனிக்கப்பட்டது. 'நாலு முழக்கம் பால் நாயளந்த வெள்ளாம்" எனச் சுடுமொழி கூறுவதிற் பாடு பவனின் நோக்கம் பயன்பாட்டின் அடிப்படையிலே புலப்பாடா இன்றது. ஏழைத் தொழிலாளி தன்னைச் சுரண்டி வாழும் ஒருவனை வைதுபாட இக்கவி பயன்படுகின்றது எனலாம். அரிவி வெட்டு வோர் பாடும் வாதுகவிகள்" உடன் தொழில்புரிவோரின் பழக்க வழக்கங்களை நகைசெய்யவும், தமது ஊர்ப்பெருமைகளை எடுத் தியம்பவும் பயன்படுகின்றமையை இப்பாடல்களின் பொருட் கூறுகள் விளக்குகின்றன.
காவல்புரியுந் தொழிலாளி இரவுவேளையில் நித்திரை விழிப்புக் காகவும், தனிமையினல் ஏற்படக்கூடிய பயத்தைப் போக்கவும் கவிகளைப் பாடுகின்றன்." நித்திரை விழிப்போடு பனிக்காற்றுக் குளிரில் இரவிலே தனிமையாக இருப்போனிடந் தோன்றும்
66. பி.இ. தொ.பா. எற். கவி பாடல் 1.3; 67. நூல், பக், 229 நோக்குக. 68. நூல் பக்கம். 231 பார்க்க, 69. பி.இ. தொ.பா. அ.வெ. பாடல் 4 70, மேலது, அ.வெ. பாடல் 5, 6, 7. 71. மேல்து, காவல் கவி 8.

பாடல்களின் பயன்பாடு \ 255
பாலியலுணர்வுகளுக்கு 'உருவம் கொடுத்துப்பாடும்போது உளவியல் அடிப்படையில் அப்பாடல்கள் அவனுக்கு மனஅமைதி யைக் கொடுக்கின்றன. காவல்புரியும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதையும், களவுபோனல் அதற்குத் தானே பொறுப்பு என்பதையும் அடிக்கடி கவிகளில் 72 நினைவுபடுத்திக் கொள்வதும் பயன்பாட்டு அடிப்படையில் நோக்கற்பாலது.
தூர இடங்களுக்கு வயற்காவலுக்குச் செல்வோர் அரிசி, தேங்காய், கருவாடு முதலிய உணவுப்பொருள்களை எடுத்துச் சென்று ஆங்குச் சமைத்து உண்பர். சிலவேளைகளில் வயலிற் கிடைக்கக்கூடிய கீரை வகையைக் கொண்டும் கறி சமைத்துச் சமாளித்துக்கொள்வர். இவ்வாருகத் தாம் உணவுக்குக் கஷ்டப் பட வேண்டியுள்ளதே எனப்பாடும்போது, வயற் சொந்தக் காரரின் இரக்கத்துக் காளாகி, அவர்களது சன்மானத்தைப் பெற இப்பாடல்கள்? துணையாகின்றன. “எங்கப் பரிதாபத்தை ஆர் அறிவார்”* எனவரும் கவியின்மூலம் தாம் அனுபவிக்கும் அல்லல் களைக் கூறித்தம்"* மனத்தைத் தேற்றிக் கொள்ளும் வகையிலும் இப்பாடல் பயன்படுகின்றது.
நெல்குற்றும்போது பாடப்படும் பாடல்களின் பயன்பாடு
நெல்குற்றும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படுமுன் நில வுரல்,78 கல்லுரல், மரவுரல் ஆகியனவற்றைப் பண்டைக்கால மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அவ்வாறு நெல்குற்றும் பெண்கள் தம் களைப்பைப் போக்கவும், மனச்சலிப்பை அகற்றவும் உலக்கையை வேகமாகப் போடவும் பாடல்களைப் பாடித்தொழிற் பட்டுள்ளனர். இப்பாடல்கள் பண்டைய மக்களின் வாழ்க்கை முறையினை உணர்ந்துகொள்ள ஆதாரங்களாகப் பயன்படு கின்றன.77
நெல்குற்றும் பெண்கள் பாடுகின்ற பாடல்கள் அவர்கள் உலக்கையைப் போடுவதற்கும்', 'எடுப்பதற்கும் பொருந்தக்
72. மேலது, காவல் கவி; 7, 8
73. பி.இ., தொ.பா. காவல் வி; 12-13;
74. மேலது காவல் கவி. 24;
75. இதுபற்றித் தொம்ஸன், எஸ். (1953:124) கூறுவது காண்க:
“Folklore is a way of expressing people's feelings and difficul. ties, their hopes and aspirations.'
76. பெரும்பாணுற்றுப்படை, வரிகள்: 53, 54; 95-97,
77. Krappe, A.H. (1964) P. 163,

Page 142
256 மட்டக்களப்பு மாவட்ட.
கூடியவகையில் ஒசைப் பொருத்தமுடையனவாகக் காணப்படு கின்றன. இப்பாடல்களின் சந்தமும், நெல்குற்றும்போது காணப் படும் முயற்சியும் ஒரேதன்மையனவாகும்.
மீனவர் பாடல்களின் பயன்பாடு
மீனவர் தோணியைக் கடலிலே தள்ளும்போதும், கரை யேற்றும்போதும், தண்டு வலிக்கும்போதும், வலை இழுக்கும் போதும் தம் முழுவலுவையும் பயன்படுத்துவதையும், அவர் களது கடின உழைப்பையும் ஆங்குக் காணலாம். அத்தகைய சந்தர்ப்பங்களிலே தமது களைப்பைப் போக்கவும், அனைவரது முயற்சியையும் வலுவையும் ஒருமுகப்படுத்தவும் பாடல்கள் அவசியமாகின்றன. அவ்வடிப்படையில் இப்பாடல்களின் பயன் பாட்டின் முக்கியத்துவம் புலனுகின்றது.
வலை இழுப்போர் தாம் வலைஇழுக்கின்ற வேகத்திற்கும் தம் மனேநிலைக்கும் பொருந்தக்கூடிய பாடல்களைப் பாடித் தொழிற் Lu Ganrif. அவர்களது உடலசைவுகளுடன் ஒத்தனவாகவே அவர்கள் பாடும் பாடல்களும் காணப்படுகின்றன.78 வலையை ஆறுதலாக இழுக்கும்போதே பொருள்செறிந்த பாடல்களைப் பாடுகின்றனர். வலைஇழுப்போர் ஏறுவெயில் தொடக்கம் உச்சி வெயில் வரையும் வெயிற்காய வேண்டியிருத்தலாலும், வலை இழுப்பதால் ஏற்படக்கூடிய களைப்பை மறந்து உற்சாகத்துடன் வலை இழுக்கவேண்டியிருத்தலாலும் புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய பாலியல் உணர்ச்சிப்பாடல்களை விரும்பிப் பாடுகின்றனர்.79 அத்தகைய பாடல்களைப் பாடக்கூடியோரைத் தமது குழுவில் விரும்பிச் சேர்த்துக் கொள்வதோடு, அவர்களைப் 'பாட்டுக்காரர்’ என்றும் அழைப்பர். அவர்கள் பாடும் காம உணர்ச்சிப் பாடல் கள் உச்சி வெயிலில் உடலுருகி, மெய்வருந்தி உழைக்குந் தொழிலாளிக்கு உவகையூட்டுவதோடு, மனநெகிழ்வை அளித்து அவர்களுக்கு உற்சாகத்தையும் ஊட்டப் பயன்படுகின்றன.
இணைவிழைச்சிப்பாடல்களைப் பாடும்போது சந்தர்ப்பமும் சூழலும் கவனிக்கப்படுகின்றன. வெயிலின் கடுமையும், வலை
78. “On account of this interrelation, rhythmic body movements released rhythmic articulations, that is, songs.' Singaravelu, S. (1966) P. 47.
79. 'Not only the music of the songs but sexual thoughts in them often give pleasure to the labours. There is little scope for out. wards show and happiness in their lives. So, naturally sexual pleasure assumes great importance. Freud mentions this in his theory of libido'. Gupta, S. S. & Upadhyaya, K. D. (1964) P. 63.

பாடல்களின் பயன்பாடு V 257
இழுப்பாற் சோர்வும் பசிக்களையும் ஒன்முகச் சேர்ந்து காணப் படும்போதுதான் இத்தகைய பாடல்கள் அதிகமாகப் பயன் படுத்தப்படுகின்றன. "தங்கம்’ என்னும் பரத்தைப் பெண் ஒருத்தியைப் பற்றிய பாடலில், அப்பெண்ணுடன் ஒருவன் கொண்டுள்ள அந்தரங்க உறவுகளுக்கு உருவம் கொடுத்துப் பாடும்போது, ஏனையோரும் தமது களைப்பையும் மனச்சலிப்பை யும் மறந்து பாடலை ஆர்வத்தோடு கேட்டவாறே, உற்சாகத் துடனும் புதுவேகத்துடனும் வலைஇழுக்க இப்பாடல் துணையா கின்றது.
விவசாயிகளின் பாடல்களில் இடம்பெருத அளவுக்கு, மீனவர்களின் பாடல்களில் இணைவிழைச்சித்தன்மை விஞ்சிக் காணப்படுவதற்கு இப்பாடல்களின் பயன்பாட்டுப் பின்னணியில் விளக்கம் கூறவேண்டியுள்ளது. மீனவர்களின் சிந்தனைகளும், மனேவியல்புகளும் மீன்பிடித் தொழிலுக்கு ஏற்றனவாகவே காணப்படும். விவசாயிகள் அன்பு, அமைதி, ஈகை, பணிவு முதலான பண்புகளுடன் அடக்க மனப்பான்மையுடையோராகக் காணப்பட, மீனவர் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும்போது ஒருவகை வேகம் கொண்டவர்களாகவே தொழிற்படுகின்றனர் என்பது கள ஆய்வில் அறியப்பட்டது. மீனவர்களிடம் பொது வாகத் தொழிற்களத்திற் பரிவு, இரக்கம் என்பனவோ அன்றி நற்சிந்தனைகளோ இடம்பெறுவதில்லை. மீன்பிடித் தளங்களில் அவர்கள் பேசும்மொழியும் அருவருக்கத்தக்கதாகக் காணப்படும். அன்றியும், அத்தொழிலில் ஈடுபடுவோர் பொதுவாகப் பல்வேறு இடங்களிலிருந்து வந்து சேர்ந்தோராதலாலும், அவர்களிடையே நெருங்கிய உறவுமுறையினர் மிகக்குறைவாகவே காணப்படு வதாலும், அவர்கள் உரையாடும்போதும், பாடும்போதும் இணைவிழைச்சி உணர்வு மிக்குக்காணப்படுகின்றது. ஆனல் விவசாயிகள் ஒரே குடும்பத்தினர் அல்லது உறவுமுறையினர் சேர்ந்தே தொழிற்படுதல் வழக்கமாதலால், அவர்களால் இணை விழைச்சிப் பாடல்களைப் பாடமுடிவதில்லை. எனவே மீனவர் பாடல்களில் இணைவிழைச்சித் தன்மை விஞ்சிக் காணப்படு வதற்கு, அப்பாடல்களைப் பாடுவோரது குணவியல்புகளும், தொழிற்களப் பின்னணியும், அவற்றின் பயன்பாட்டுமுறைகளும் காரணிகளாக அமைகின்றன எனலாம்.
80. பி.இ., தொ. பா. வலை பாடல் 3.
81. 'Much has written about obscinity in the shanties. Some declare
they were not as dirty as share folk like to imagine.' Stan, Hugill (1961) P. 58.
a-17

Page 143
258 LD-d&671 LDr6.
வலை இழுக்கும்போது ஒரே வேகத்தில் மூச்சுப்பிடித்து இழுப்பதுமில்லை; அதுபோன்று ஆடி அசைந்து ஆறுதலாக இழுப்பதுமில்லை. வலையில் மீனை அகப்படுத்திக் கரைசேர்ப்பதற்கு வலையை இழுப்பதிற் சில நுட்பங்கள் கையாளப்படுகின்றமை கள ஆய்விற் கவனிக்கப்பட்டது. ‘ஏலே ஏலே’ ‘ஏலையா ஏலே” என்ற இசையமைப்பு வாய்ப்பாட்டினடிப்படையிற்* பாடல்கள் பாடப்படும்போது வலை ஆறுதலாகவும், *ஏலே-ஏலே’’, *ஹய்-ஹய்’, ‘ஹய்யா-ஹய்யா” ஆகிய இசைத்தொடர்கள் பாடப்படும்போது வேகமாகவும் வலைஇழுக்கப்படும். 'ஒஒடிழு” எனக் குரல் கொடுக்கப்பட்டதும் யாவரும் அதிவேகமாக வலை இழுப்பர். இவ்வாறு வலைஇழுக்கும்போது தேவைக்கேற்ற வேகத்தில் வலையை இழுப்பதற்குத் தாரகமந்திரமாகப் பாடல் களும் இசைத்தொடர்களும் பயன்படுகின்றன.
மீனவர்களின் வாழ்க்கை பொதுவாகப் பொருளாதாரத்திற் பின்தங்கியதாகவே காணப்படுகின்றது. பாடலிலே°? தம் கஷ்டங் கவலைகளைப் பாடும்போது ஒருவகையில் அவர்கள் மனஆறுதல் அடைகின்றனர். பாடலின் இடையே “தலையாரி வாருண்டா அடிச்சுப் போடுவான்’** எனக் கூறுவது வலை இழுப்போரை எச் சரித்துத் துரிதமாகத் தொழிற்படத் தூண்டுவதாக அமைகின்றது. வலையினுள் மீன் ஒடுவதைக் கண்டதும் வலைஞர் அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் காணப்படுவதைக் கள ஆய்வு காட்டிற்று. அந்த அடிப்படையிலே “டேய் அங்க பாரூடா வலைக் காலில் . கடிச்சமாதிரிக் கிடக்கு. சூரையோ பாரையோ. கிழவள்ளாவோ" என வரும் பாடற்பகுதிகள் மீனவருக்கு உற் சாகம் ஊட்டும் வகையிற்பாடப்படுவனவாகும்.
தண்டுவலிப்போர் தண்டுவலிக்கும் முயற்சிக்கும் வேகத்திற் கும் அமைவாகப் பாடல்களைப்பாடுவர். தண்டுவலிக்கும்போது ஆறுதலாகத் தொழிற்படும் வேலையிலே பாடல்கள் பாடப்படு வதையும், வேகமாக வலிக்கும்போது இசையமைப்புத் தொடர் களை மட்டுமே பாடுவதையும் கள ஆய்வு காண்பித்தது. தண்டு வலிக்கும்வரையும் பாடக்கூடியதாக இப்பாடல்கள் திரும்பத்திரும் பப் பாடப்படும். துடுப்பை நீருட் செலுத்தும்போது “ஏலலோ’
82. மீன்பிடிப்பாடல்களின் இசையமைப்பு வாய்பாடு பற்றி முன்பு ஆராயப்பட்ட தாயினும் ஈண்டு அவற்றின் பயன்பாடு பற்றி மீண்டும்கூறப்படுகிறது.
83. til. S. G35II. Lisr. [su?ú | urLð 1, 6ufl: 23-28
84. மேலது, வரிகள், 34-35,
35. மேலது, வரிகள் 65-70.

பாடல்களின் பயன்பாடு 259
என்ற தொடரும், வலித்து இழுக்கும்போது "ஏலே ஏலே’ என்ற தொடரும் பாடப்படும். துடுப்பை நீருட் செலுத்தவும், செலுத்திய துடுப்பை வலிக்கவும், அவற்றுக்கு அமைவாகப் பாட வும் எடுக்கும் நேரங்கள் சமமாகவே அமைந்து காணப்படும்." இப் பாடல்களின் பயன்பாடுபற்றி ஆறு. அழகப்பன்' கூறுவது பொருத்தம் நோக்கி ஈண்டு மேற்கோளாகத் தரப்படுகிறது.
*சென்ற செயலை முடிக்கவும் படகுசெலுத்துபவர்களுக்கு இப்பாடல்கள் மின்விசைபோல் பயன்படுகின்றன. படகிற் செல்லுபவர்கட்கும் தாங்கள் தண்ணீரிற் செல்கின்ருேம் என்ற அச்சத்தையும் தனிமையையும் போக்கத் துணையாகவும் இப்பாடல்கள் துணைபுரிவதுண்டு.”*
இப்பாடல்கள் தொழிலாளர்களை நீண்டநேரந் தொழிற் படவும், சோர்வுருது இயங்கவுஞ் செய்கின்றன. இத்தகைய பாடல்கள் மிகப்பழங் காலத்திலிருந்து நெய்தல்நில மக்களாற்றந் தொழில் பற்றியும் வாணிபங் குறித்தும் கடலிற் செல்லும்வழி உடற்களைப்பை நீக்கி, ஊக்கமும் மனவெழுச்சியும் அடையும் பொருட்டுப் பாடப்பட்டு வந்துள்ளன. பின் மன்னர்களும், படைத்தலைவர்களும் போர்குறித்து மரக்கலங்களிற்சென்றபோது அவர் மேலதாகப் பாடப்பயன்பட்டன.98
தோணியைக் கடலில் இறக்குவதற்குச் சுமார் இருபது பேராயினுந் தேவை. அவர்கள் அனைவரது முயற்சிகளையும் ஒரு முகப்படுத்தித் தோணிதள்ளுவதற்கு அங்குப் பாடப்படும் பாடல்கள் துணை செய்கின்றன. பாடலில்° வரும் “காளி” என்ற சொல்லாட்சி, பயன்பாட்டு அடிப்படையில் மிக முக்கியத்துவம் பெறுகிறது. ‘காளி" உக்கிரம் கொண்ட தெய்வமாதலாற், காளியின் பெயரைக்கூறியதும், தோணிதள்ளுவோர் அதி உக்கிரம்கொண்டு வேகமாகத் தோணி தள்ளுதல் கள ஆய்வில் அவதானிக்கப்பட்டது, தோணி தள்ளுவோருக்கு வேகமும்
86. “The work of rowing a boat involves a simple muscular opera
tion, repeated at regular intervals without variation. The time is marked for the oarsmen by a repeated cry, which in its implest form is disyllabic : O-Op! The se çond syllab'e marks the moment of exertion; the first is a preparatory signal.' Thomson, G. (1954) P. 14.
87. அழகப்பன், ஆறு. (1973) பக். 70,
88. இவ்வாறு மக்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்படுவன மக்கட் பாடாண்டி2ணயின் பாற்படும். நாளடைவிலே தெய்வங்களேப் பாடும் கப்பற் பாடல் தோன்றின. அவை தேவபாடாண்டிணையின் பாற்படுவனவாகும்.
89. பி. இ. தொ. பா. தோணி பாடல் 1:

Page 144
260 மட்டக்களப்பு மாவட்ட.
உக்கிரமுந் தோன்றும் நோக்குடனே "காளி” என்ற தெய்வத் தினை நினைவுகொள்கின்றனர் என்பது சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. கற்பூரங் கொளுத்தி, இறைவழிபாடு செய்தபின்பே தோணிதள்ளத் தொடங்கு வ தா ல், இறைவழிபாட்டின் தொடர்ச்சியாகக் காளியை நினைவு கொள்ளும் வகையிலும் காளியின் பெயரைப் பாடுகின்றனர் எனலாம். -
தோணிதள்ளுவதற்குக் கடும்முயற்சி தேவைப்படுவதாலும் தொழிலாளர்கள் விரைவிற் களைத்துவிடுவதாலும், இணை விழைச்சிப் பாடல்கள் பாடவேண்டிய தேவை ஏற்படுகின்றது. தோணியை 'ராஜக்குமாரி’, ‘முத்துக்குமாரி” எனப்பெண்ணுக உருவகித்து "தூக்கித்தள்ளு’’, ‘கிளப்பியடி’ (கிளப்பி + அடி) எனப்பாடும்போது? ஆங்கு இணைவிழைச்சியுணர்வு மேலோங்கி நிற்பதையும், அப்பாடலைக் குதூகலத்துடனும் உரத்த தொனியு டனும் பாடித் தோணியை வேகமாகத் தள்ளுவதையும் கள ஆய்வில் அவதானிக்கக்கூடியதாக இருந்தன.
தோணிதள்ளும்போது ஒருசிலர் உற்சாகமின்றியோ, களைப்புற்ருே அல்லது சோம்பலாகவோ காணப்படின் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடாது, அவர்கள் பிடித்துத் தள்ளும் தோணியின் பகுதிகளைக் குறிப்பிட்டுப் பாடுவர். 'அணியம்”, 'நடுக்கட்டு’ எனப் பாடலில் வருஞ் சொற்கள் ? அவ்வடிப் படையில் அங்குப் பயன்படுகின்றன. எனவே தோணி தள்ளும் போது உற்சாகமின்றிக் காணப்படுவோரை உற்சாகப்படுத்தும் வகையிலும் இப்பாடல்கள் பயன்படுகின்றன. பாடல்களின் வரி தோறும் ஈற்றில்வரும் “ஏலே'," ஏலோ', 'ஏலஏலம்’ முதலான தொடர்கள் கடுந்தொழில் புரிவோர் சற்றுநேரம் களைப்பாறு வதற்குத் துணைசெய்யும்வகையிற் பயன்படுத்தப்படுகின்றன.”*
வேலைசெய்வோரை கவனமாகத் தொழிற் படு மாறு எச்சரிக்கும் வகையிலுஞ் சில பாடல்கள் பயன்படுகின்றன. கடலில் வீசப்படும் வலையின் கீழ்ப்பாகத்திற் கல்லும், மேற் பாகத்தில் மிதப்புக்கட்டையுங் கட்டப்பட்டிருக்கும். வலையைக் கடலில் வீசும்போது கல்கட்டப்பட்ட பகுதி கீழே போகத்தக்க தாகவே வீசவேண்டும். தோணி ஒடும் வேகத்தினலும் அவசரத் தினலும் தவறுதலாகக் கல்கட்டப்பட்ட பகுதி மிதப்பின்மேல்
90. மேலது, 1 தோணி பாடல் 2.
91. பி, இ. சொல்லடைவு நோக்குக.
92. “Sometimes the Cry ends with a syllable of relaxation, like the Russian hauling Cry: E-Uch-nyeim! Thomson, G. (1954) P. 15.

Luntli).56fair Luugirl IITG 26t
விழுந்துவிட்டால் வலைமுழுவதுமே கடலில் ஆழ்ந்து, மீன் அகப்படாது புறப்பட்டுச் சென்றுவிடும்; அவர்களது முயற்சியும் வீணுகிவிடும். எனவே வலை வீசுபவனை எச்சரிக்கும் முகமாகக் * கல்லுப்போட்டால் தலையுடைய’ எனப்பாடுகின்றனர்.
தோணிதள்ளும்போது பாடப்படும் பாடலிற் கப்பலில் ஏற்றிவரும் பொருள்களும் கூறப்படுகின்றன. 'உடலிலே வெறி கொள்ளும். முந்திரியச் சாராயம்*** என்ற தொடரும் அப்பாடலில் இடம் பெறுகின்றது. கடுந்தொழில் புரியும் உழைப்பாளிகள் தமது உடல்நோவைக் குறைப்பதற்காகச் சாராயம் அருந்தும் பழக்கமுடையவராவர். ஈண்டுச் சாராயத்தைப்பற்றி நினைவுபடுத்துவதோடு, அதற்குக் கொடுக்கப் படும் அடைமொழிகளுஞ் சிந்திக்கற்பாலன. சாராயத்தை நினைவு படுத்தியதும் அவர்களுக்குப் புத்துணர்ச்சி ஏற்பட்டு, அவர்கள் உற்சாகமாகத் தோணி தள்ளுவது கள ஆய்வில் அவதானிக்கப் கப்பட்டது. எனவே பாடலிற் கூறப்படும் விடயங்களைத் தொழிலாளர்களைத் தூண்டக்கூடிய வகையில் அமைத்து, அவற்றை அந்நோக்கத்திற்காகவே பாடுகின்றனர் என்பதும் பாடல்களின் பயன்பாட்டினடிப்படையிற் கவனிக்கற்பாலது.
காதற் பாடல்களின் பயன்பாடு
காதற்பாடல்களின் பயன்பாடுபற்றி ஆராயும்போது, இம்மாவட்டத்தில் இப்பாடல்கள் பாவனைமுறையிலே பாடப் படுவதால், அவ்வடிப்படையில் இவற்றின் பயன்பாடு முதலில் ஆராயப்படுகின்றது. அதனையடுத்து இப்பாடல்கள் எவ்வாறு உண்மைக் காதலருக்குப் பயன்பட்டிருக்கலாம் எனவும், சமூக சீர்திருத்த நோக்கில் எவ்வகையிற் பயன்படுகின்றன எனவும் ஆராயப்படுகின்றன.
பாவனையடிப்படையிற் பயன்படுதல்
பண்டைக் கிராமிய வாழ்க்கைமுறையும் சமுதாய அமைப்பும் பழக்க வழக்கங்களும் காதலர் காதற்கவி பாடி மகிழ வாய்ப் பளித்தபோதிலும் தற்போதைய சமூகவளர்ச்சியும் பழக்க வழக்கங்களும் காதலர்கள் கவிபாடி மகிழ இடங்கொடுப்பு இல்லை.99 எனவே இன்றையநிலையிற் காதற்பாடல்களின் பயன் பாட்டைத் தொழிற்களங்களிலும் பொழுது போக்கிடங்களிலுமே காணக்கூடியதாக இருக்கின்றது. ஆண்களும் பெண்களும்
93. பி.இ. தொ. பா. தோணி பாடல் 4. 94. பி.இ. தொ. பா. 1 தோணி பாடல் 4, 95. நூலுள் பார்க்க.

Page 145
262 மட்டக்களப்பு மாவட்ட.
பாவனையடிப்படையிற் காதற்கவிகளைப் பாடிச் சந்தோசமாகவும் சுறுசுறுப்பாகவும் தொழிற்படுகின்றனர், காதற்பாடல்களின் தேவையும் முக்கியத்துவமும் தொழிற்களப் பின்னணியிலேதான் காணப்படுகின்றன. ஆண்களே ஆணும் பெண்ணும் பாடும் முறையிற் பாவனை செய்துபாடுவதில் ஆர்வமுடையோராகத் தொழிற்படுகின்றனர். வேலைப்பளுவை மறந்து செயற்படவும், உச்சிவெயிலின் கொடுமையைப் பொருட்படுத்தாதிருக்கவும், இராக்காலங்களில் நித்திரைவிழித்துத் தொழில் புரிவோரது நித்திரையைப் போக்கவும், தனித்திருந்து தொழில்புரியும்போது தனிமையையும், தனிமையினுல் ஏற்படும் மனச்சஞ்சலங்களையும் மறக்கச் செய்யவும் இக்கவிகள் தொழிலாளருக்கு மிக இன்றி யமையாதவகையிற் பயன்பாடுடையனவாகத் திகழ்கின்றன.
வயற்களங்களிற் குடுவைக்கும் காலத்தில் ஆங்கு ஆண் களுடன் பெண்களும் காணப்படுவர். நெற்கதிர்களைக் கட்டாகக் கட்டிச் சுமந்து செல்லும்போது சிந்தும் நெற்கதிர்களைப் பொறுக்குவதற்காகப் பெண்கள் அங்கு வந்திருப்பர். அவர்கள் பெரும்பாலும் ஆங்கு வேலைசெய்யும் ஆண்களின் ஊரினராகவும், உறவினராகவும் அமைவதோடு, அவர்களுட் சிலர் பொதுமகளி ராகவும் காணப்படுவதுண்டு என்பதைக் களஆய்வில் அறிவிப் பாளர் அறிவித்தனர். ஆண்கள் நெற்கதிர்களைக் கட்டாகக் கட்டும்போதும், அக்கட்டுகளைச் சுமந்து செல்லும்போதும் தம் அருகே காணப்படும் பெண்களைச் சுட்டியும், சுட்டாமலும் பாவனை முறையிற், பெண்களைப் பலவாருக வருணித்துப் புகழ்ந்து கவிபாடுவர். அதே வேளையில் ஆங்கே நெற்கதிர்களைப் பொறுக்கும் பெண்களுட் சிலர் ஆண் பாடிய கவிக்குப் பதிலாக ஆண்மகனைப் புகழ்ந்து பாடுதலுமுண்டு.??
வயற்களங்களிலே வேலை செய்வோர் சிறுபூவல்" தோண்டி அதிலுறுந் தெளிந்த நீரையே குடிக்கப்பயன்படுத்துவர். ஆண்கள் வேலைசெய்து கொண்டிருக்கு மிடத்திலுள்ள பூவலில், நீர் குடித்துக் கொண்டிருக்கும் பெண்களை நகைசெய்யும் பாவனை யிலும்,அவர்களுடன் சரசமொழிபேசும் வகையிலும் ஆண்கள் கவி பாடுவர். அப்பாடலுக்கு மாற்றுக்கவியாகப் பெண்களும் பாடு வதுண்டு. அல்லது ஆண்கள் தாமே பாவனை முறையிற் பெண் கூற்ருகப் பாடுவதையும் வயற்களங்களிற் காணலாம்."
96. பி. இ. கா. பா. 11அ பாடல் 1-17. 97. பி. இ. சொல்லடைவு பார்க்க. 98, 5, ge, astT. u T. Ilsell u Tlib 18-24.

பாடல்களின் பயன்பாடு 263
குறியிடம் கூறும் பாடல்கள் பாவனையடிப்படையில் அமைந்த போதிலும், உண்மையிலே தொழிற்களத்தில் உடன் வேலை செய் யும் பெண்களுடன் உரையாடும் பாணியில் அவை அமைந்திருக் கின்றன என்பதும், இரவு வேளைகளில் அவர்களைத் தனிமையிற் சந்திக்க இப்பாடல்கள் வழிகாட்டுகின்றன என்பதும் குறிப்பிடற் பாலன." இரவுக்குறியிற் காதலனுடன் உரையாடும் பாவனை யிலும், காதலனுக்குப் புத்திமதி கூறும் பாவனையிலும்," இரவுக் குறியிடத்தே வந்து காத்துநின்று ஏமாற்றத்துடன் திரும்பிய காதலனை மறுநாட் சந்திப்பிற் கண்டு விளக்கம் கூறும் பாவனை யிலும் அமையும் பாடல்களும் ஆண்களாலே தொழிற்களத்தே விரும்பிப் பாடப்படுகின்றன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
பாய் இழைத்தல், தண்ணீர் மொள்ளப்போதல், நெல்குற்று தல், வயற்களத்திற் கதிர்பொறுக்குதல், வயற்களத்திற்குச் சோறு கொண்டு போதல் ஆகிய சந்தர்ப்பங்களிற் பெண்கள் கவிபாடுவதுண்டு. குடும்பப் பிரச்சினைகள், காதல் உணர்வுகள், வாழ்க்கைக் கஷ்டங்கள், ஊர்வம்புகள், காதலனைப் பிரிந்து ஏங்கும் காதலியின் துயர் என்னும் பொருள்கள் பற்றிவரும் பாடல்களைப் பெண்கள் பாவனைசெய்து பாடிப் பொழுது போக்குவர்.
கன்னிப்பெண்கள் தொழிற்களங்களிற் காதற்கவிகளைப் பாடும்போது, பொதுவாக அக்கவிகள் அவர்களது சொந்த உணர்ச்சிகளையும் பிரச்சினைகளையுஞ் சித்திரிப்பனவாகவே அமைந் திருக்கும். தான் விரும்பாத ஒருவனைத் தனக்குத் திருமண ஒழுங்கு செய்திருப்பதை மனம் நொந்து பாடித் தனது கவலையை உடன் வேலை செய்யும் பெண்களுக்குக் கூறி, மன ஆறுதலடையும் வகையிற் பொருந்தாத் திருமணம் என்ற பகுதியிலே தரப்பட் பட்டுள்ள பாடல்கள்' பயன்படுகின்றன.
வயற்களத்தில் ஆண்களும் பெண்களும் காணப்படும் சந்தர்ப்பங்களில், பெண்களை நகையாடவும், ‘மந்திரவித் தையைப் பயன்படுத்தி அவர்களைத் தன் காலடிக்கு வரவழைப் பேன்’ எனப்பாடிப் பொழுது போக்கவுஞ் சில கவிகள் ? பயன் படுகின்றன. காதலர்களது நடத்தையைப்பற்றியோ அல்லது தனி ஒருவரின் கூடாவெழுக்கம் பற்றியோ, அலர்மொழி கூறி மகிழ்வதில் ஆர்வமுடையோராகத் தொழிலாளர்கள் காணப்
99. மேலது, 1ஈ/ பாடல்கள் 1-29; 100. மேலது 11எ பாடல்கள் 1-9 101. L. g., ST. Lu T. / 2F/ u TL61-5; 102. மேலது 2உ! பாடல்1-3;

Page 146
264 மட்டக்களப்பு மாவட்ட.
படுகின்றனர். தொழிற்களங்களிலே தம்மருகே நின்று கதிர் பொறுக்கும் பெண்களைக் குறித்து இத்தகைய பாடல்களைப் பாடுவது வழக்கம்,
தொழிலாளர்கள் பொழுது போக்கிற்காகப் பாடும் 'வாது கவிகள்’*108 அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கின்றன. போட்டி யடிப்படையிலும் தனிப்பட்டோரைக் குறிப்பிடும்வகையிலும் பாடப்படும் இப்பாடல்கள் சில சந்தர்ப்பங்களில் அவர்களுக் கிடையே கோபதாபத்தையும் ஏற்படுத்துவதுண்டு. அவ்வாறு ஒருவரைக் கோபத்துக்குள்ளாக்கி, ஏனையோர் யாவரும் சிரித்து மகிழ்ந்து செயற்படும்போது, தொழில் வேகமாக நடப்பதாகவும், வேலைப்பளு தெரியாதிருப்பதாகவும் கூறப்படுவதால் அவ்வகை யில் இப்பாடல்கள் பயன்படுகின்றன. வாது கவிபாடுவோர் கவியின் உட்பொருளில் அதிக கவனம் செலுத்துவதால் வேலைக் களைப்பு அவர்களுக்கு அதிகம் தோன்றுவதில்லை. வண்டிற் பயணத்தின்போதே வாது கவிகள் பெரிதும் பயன்படுத்தப்படுதல் கள ஆய்வில் அவதானிக்கப்பட்டது. நகைமொழிகளாக அமைந்து வரும் இப்பாடல்களின் பொருள் தொழிலாளர்களுக்கு மகிழ்ச் சியைக் கொடுத்து வேலையிற் சலிப்பு ஏற்படாவண்ணம் தொழில் புரிய உதவியாகின்றன.
வயற்காவல், தோணிக்காவல், வண்டிற் பயணம் ஆகிய வேலைகளின்போது நித்திரை விழித்துத் தொழிற்பட வேண்டிய தொழிலாளிகள் காதல் தழுவியும், காமங்கண்ணியதாகவும் பாவனை செய்து கவிபாடிப் பொழுதுபோக்குவதற்கும் காதற் கவிகள் துணையாகின்றன. இத்தகைய சந்தர்ப்பங்களில் ஆண்கள் இணைவிழைச்சிப் பாடல்களை19* அதிக விருப்புடனும், ஆர்வத் துடனும் பாடுகின்றனர். இப்பாடல்கள் பயன்பாட்டடிப்படை யில் இவர்களுக்கு மிகவும் இன்றியமையாதனவாக அமைகின்றன. இணைவுழைச்சிப்பாடல்கள் பாடப்படும்போது பாடுவோரும் கேட்போரும் உளக்களிப்படைகின்றனர். இவை இவர்களுக்குக் காம உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு ஒருவகையில் உளத்திருப் தியையும் கொடுக்கின்றன. நாட்டார் இலக்கியத்தில் நாட்டமும் பயிற்சியும்கொண்ட முதியோர்கள் தாம் தனித்திருந்து பொழுது போக்குகின்ற வேளைகளிலே காதற் பாடல்களைப் பாடி மகிழ் கின்றனர் என்பதும் குறிப்பிடற்பாலது.
103: நூலுள் பார்க்க. 104. பி. இ. கா. பா. 11ஐ பாடல் 1-32

பாடல்களின் பயன்பாடு 265
உண்மைக் காதலர்கள் காதற்பாடல்களைப் பயன்படுத்துதல்
பழைய கிராமியச் சூழலிலும் சமுதாய அமைப்பு முறை யிலும் வாய்ப்பும் வசதியும் பெற்றிருந்த கிராமியக் காதலர்கள், தம் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தவும், உரையாடவும் தூதுச் செய்திகளை அனுப்பவும், தம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வும் ஒருவரையொருவர் புகழ்ந்து நலம்புனைந்துரைக்கவும் இப் பாடல்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
காதலர் தாம் தனிமையிற் சந்திக்கும்போது ஒருவரை ஒருவர் நலம் புனைந்துரைக்கும் இயல்புகள் சங்கஇலக்கியம் முதலாகவுள்ள இலக்கியங்களிலும், நடைமுறை வாழ்க்கையிலுங் காணப்படும் செய்திகளாகும். இக்காதற் பாடல்களின் பொருட்சிறப்பும் ஒசையினிமையும் காதலர் இருவரையும் கருத்தொருமிக்கச் செய் யும் வகையிற் பயன்பட்டுள்ளன. நகைமொழிப் பாடல்கள் காதலர் உல்லாசமாகப் பொழுதுபோக்கத் துணைசெய்துள்ளன.
காதலர் தம்மை எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், தேவை களையும் உரையாடித் தீர்த்துக்கொள்வது போன்றே, அகத்தே தோன்றும் உணர்ச்சித் துடிப்புகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதற்கு உரையாடல் முறையில் அமைந்துவரும் பாடல்கள் அவர்களுக்குக் கருவியாகின்றன. சில கிராமங்களிற் பெண்கள், குடிதண்ணிர் அள்ளிவரச் செல்வது வழக்கம், நீர் கொண்டுவரச் செல்வதையே சாட்டாகக்கொண்டு வெளியே செல்லும் பெண்கள், அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தமது காதலர்களைச் சந்தித்துக் காதல்மொழி பேசி மகிழவும், அவ்வுரை யாடல்மூலம் தம் காதலை வளர்க்கவும் இப்பாடல்களைப் பயன் படுத்தியுள்ளனர். அதுபோன்றே தம் காதலர்களைச் சந்தித்துத் தம் குடும்பப் பிரச்சனைகளையும் சுகதுக்கசெய்திகளையும் எடுத் துரையாடவும் இப்பாடல்கள் பயன்பட்டுள்ளன.
காதலன் காதலியிடம் தண்ணிர் கேட்கும்பாணியிற் காதல் நாடகத்தைத் தொடங்கும் வழக்கம் பண்டுதொட்டு இலக்கியங் களிற் காணப்படும் ஒரு நிகழ்ச்சியாகும்." அதுபோன்றே "தண்ணிக் குடமெடுத்து தனிவழியே போறபெண்ணே.” என வரும் காதற்கவிகளும்" பெண்களுடன் உரையாடவும் அவர் களின் காதலை வளர்க்கவும் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளவும் பயன்பட்டுள்ளன.
105. கலி. குறிஞ்சிக்கலி பாடல் 15: 106. u.g. st. UT. /1al u TL 18-24.

Page 147
266 மட்டக்களப்பு மாவட்ட ,
சங்க இலக்கியங்களிற் காலமுங் களமுங் குறித்துக் குறியிடங் கூறும் பொறுப்புப் பெரும்பாலும் தலைவனையே சார்ந்திருந்தது. ஆனல் நாட்டார் பாடற்களிற் காதலியே குறியிடமும் நேரமும் வரும்வழியும் கூறும் பாத்திரமாக அமைகிருள். நடைமுறைவாழ்க் கையுடன் இவற்றை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, குறியிடமும் நேரமும்கூறித் தலைவனைப் பெண்வரவழைப்பதே நிகழக்கூடியதும் பொருத்தமானதுமாகும். வீட்டில் யார் எப்போது வருவர், போவர் என்பது வீட்டிலிருக்கும் பெண்ணுக்கே தெரியும், காதலன் கூறும் இடத்திற்குக் காதலி செல்வதிலும் பார்க்கக் காதலி கூறும் குறியிடத்திற்குக் காதலன் செல்வது எளிதாகும். கிராமியச்சூழலிற் கட்டுண்டு கிடக்கும் பெண் வெளியிடத்திற்குச் செல்வதற்குத் தடையுண்டு; காவலுண்டு, ஆனல் காவலையும் தடையையும் நன்கு அறிந்து, வீட்டில் யார் எப்போதிருப்பர்; எப்போது வெளியே செல்வர் என்றறிந்து காதலனை அழைக்கக் கூடிய வாய்ப்புக் காதலிக்குண்டு. ஆதலினுற் காதலி காதலனுக்கு வழி கூறுவதாக அனேக பாடல்கள்' காணப்படுகின்றன. இவ் வாறமைந்துள்ள பாடல்கள் காதலர்கள் தனிமையிற் சந்திக்க வழிவகுத்துள்ளன.
பிரிவுத்துயர் காதலரைப் பெரிதும் வாட்டுவதொன்ருகும். தனித்திருக்கும் வேளைகளிற் பிரிவுணர்ச்சிகளைக் கவியாகப் பாடும் போது அவர்கள் ஒருவகையில் மனஆறுதலடைகின்றனர். காதலர் ஒருவருக்கொருவர் சூளுரை கூறவும், அலர்மொழிகளை எடுத்துக் கூறித் திருமணத்தை விரைவுபடுத்தவும், தப்பெண்ணத் துடன் தன்னுடன் உறவாடும் காதலனைத் திருத்தவும் இப்பாடல் கள் பயன்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐயங் களாலும் மாறுபட்ட கருத்துகளாலும் பிறரது சூழ்ச்சிகளினலும் காதலரிடையே மணமுறிவு ஏற்படுதலியற்கையே. அத்தகைய சந்தர்ப்பங்களிற் காதலர் அதற்குரிய காரணங்களை விளக்கி, ஐயம் நீக்கும்வகையில் அவர்கள் பாடும் பாடல்கள் பயன்பாட்டு அடிப்படையிற் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன. 108
காதலிலே தோல்வியுற்றேர் தமது மனக்குமுறல்களை வெளிப் படுத்திப் பாடும்போது ஒருவாறு மனஅமைதி அடைகின்றனர். தன்னை ஏமாற்றிவிட்டுப் பணத்திற்காக வேறு திருமணஞ்செய்து கொண்ட தன் காதலனைக் கண்டவிடத்து, அவன் தனக்குச் செய்த கொடுமையையும், வஞ்சனையையும் கூறி, வைது பாடுவதன்மூலம் அப்பெண் மனஅமைதியடைகின்ருள். அதுபோன்றே காதலியால்
107. al.9. 5T.ui. iFFI Li Tilsilasir 10.29 108. மேலது, 12அ, 11உ1, 11ஊ1, 11எ/ பார்க்க,

பாடல்களின் பயன்பாடு , 267
ஏமாற்றப்பட்ட காதலன் பாடும் கவிகளும் அவனுக்கு ஆறுதல் அளிக்கின்றன. 199
காதற்பாடல்களில் இணைவிழைச்சித் தன்மை காணப்படுதல் இயல்பே. சங்கஇலக்கிய அகப்பாடல்கள் புலநெறிவழக்கிற் கமையப் பாடப்பட்டமையால் ஆங்கு இத்தகைய உணர்ச்சிப் புலப்பாடு பெரிதும் இலதாயிற்று. ஆணுல் நாட்டார் பாடலில் உணர்ச்சிப் புலப்பாடுகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் இருக்கவில்லை. கிராமிய மக்கள் தாம் விரும்பியவற்றை, விரும்பியவாறு சொல் லோவியமாக வடித்துத் தந்துள்ளனர். உடலுறுப்புகளின் வரு ணனை அல்லது உடலுறவு அனுபவங்கள், ஆசைகள் என்பனவற்றை எவ்வித ஒழிவுமறைவின்றிப் பாடிமகிழ்ந்தனர். அத்தகைய பாடல் கள்" காதலர்களுக்குக் கழிமகிழ்வு கொடுத்தனவென்க.
கிராமிய மக்களின் நடைமுறை வாழ்க்கையிற் கனவும் அதன் பயனும் மிக முக்கிய இடத்தைப் பெறுவதைக் களஆய்வு வலி யுறுத்திற்று. தாம் கண்ட கனவை இன்பத்திலும் துன்பத்திலும் தமக்கோ, தம் சுற்றத்தினருக்கோ ஒப்புநோக்கிப் பொருள் கொள்ளும் வழக்கும், நம்பிக்கையும் கிராமிய மக்களிடம் காணப் படுகின்றன. 'தமிழ் இலக்கியங்களிற் கதாபாத்திரங்கள் தம் விருப்பங்களைப் பூர்த்தி செய்யவோ, எதிர்கால நிகழ்ச்சிகளையும் தமது உட்கருத்துகளையும் வெளிப்படுத்தவோ கனவு பெரிதும் பயன் படுத்தப்பட்டுள்ளது.*** நாட்டார் இலக்கியத்திலும் இப் பண்பு பெரிதும் காணப்படுகிறது. ? கனவு நிலைப்பற்றிச் சிக் மன்ட் பிராய்ட்" உளவியல் அடிப்படையில் விரிவானமுறையில் ஆராய்ந்திருப்பது நாட்டார் பாடல்களுக்கும் பொருந்துவதாகும். காதலர் கனவுநிலையில் இன்பந்துய்க்கும் மனேநிலையைச் சில பாடல்கள் விளக்குகின்றன. காதலரின் உறுப்புகளையும், உடலுறவு உணர்ச்சிகளையுஞ் செயல்களையும் கனவிற் காண்ப தாகவுஞ் சில பாடல்கள்'* அமைந்துள்ளன. இவ்வாறமைந்து வரும் பாடல்கள் பாடகர்களுக்கு உளத்திருப்தியளிக்கும் வகையிற் பயன்பட்டுள்ளன.
சமூகச் சீாதிருத்தம்
இன்றைய சமூகத்திற் சீதனக் கொடுமை ஏழைப்பெண்களைப் பெரிதும் பழிவாங்கும் சத்தியாக மாறிவிட்டது. பெண்ணெருத்தி
109. பி.இ. கா.பா. 13| பாடல்கள் 1-27. 110. மேலது, 11ஐ பாடல்கள் 1-32 1 11. Subrama niam S.V. (1966)P, 165. 1:2. Bowra, C.M. (1966) P. 291. 1 13. Freud, Sigmond, (1954) 114 பி.இ. கா.பா. 12 அ பாடல்கள் 45.51.

Page 148
268 மட்டக்களப்பு மாவட்ட.
தன் வறுமைநிலை காரணமாகத் திருமணம் செய்ய முடியாதிருக் கின்றமையை நினைந்து தன் மனக்குமுறலைப் பாடுகிருள். ' அப் பாடல்கள் அவளது மனக்கவலைகளை வெளிப்படுத்தும் கருவியாக அமைவதோடு, சமூகக் கொடுமைகளைச் சுட்டிக்காட்டவும் பயன் படுகின்றது. காதலியைக் கைவிட்டுச் சீதனம் வாங்கி, வேறு பெண்ணைத் திருமணம் செய்த அயோக்கியத்தனத்தை வைது பாடும்வகையில் அமைந்த கவிகள் சமூகச் சீர்திருத்தத்திற்கும் வழிவகுக்கின்றன. 118
இப்பாடல்கள் மேலும் சில சமூகக் குறைபாடுகளை எடுத்துக் காட்டுவனவாகப் பயன்படுகின்றன. காதல்வாழ்வுக்குச் சமூகத் திற் போட்டியும் பொருமையும் ஏற்படுதலுண்டு. காதலர் இருவர் சேர்ந்துவிடுவதை ஏனையோர் பொருமையுடன் நோக்கு கின்றனர். அவர்கள் காதலரைப்பற்றி அலர்மொழி கூறத் தொடங்கிவிடுவார்கள். அத்தகையோரைச் சிந்திக்கவைக்கும் வகையிலும் இப்பாடல்கள்" பயன்படுகின்றன எனலாம். மேலும், அலர்மொழிப்பாடல்கள் காதலரின் கூடா ஒழுக் கங்களைச் சுட்டிக்காட்டி அவர்களை நல் வழிப் படுத்தும் வகையிலும் பயன்படுகின்றன. 'கெட்ட எண்ணம் வேணும் கேவலப்படுத்திடுவாக”*** எனவரும் பாடல் தவருண முறையிற் பழகும் காதலனை நன்னெறிப்படுத்துவதாக அமைகிறது. பெண் களைக் காதல் என்ற போர்வையில் ஏமாற்றுவோரையும் இப் பாடல்கள்' சாடுகின்றன. பெற்ருேர் பணத்திற்கு ஆசைப் படடுத் தாரமிழந்தவனையோ, வயது முதிர்ந்தவனையோ, நோயாளியையோ கன்னிப்பெண்ணுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் சமூகக் கொடுமைகளையும் இப்பாடல்கள் 129 கண்டிப் பனவாக அமைகின்றன.
115. மேலது, 13 பாடல்கள் 1-27 116. பி.இ. கா:பா 13| பாடல்கள், 9, 11, 21, 23, 24, 117. மேலது 11ஊ பாடல்கள் 1.12 118. மேலது 11எ பாடல் 1. 119; மேலது பாடல் 5. 120. மேலது 12ஈ பாடல் 1-3.

இயல் V சமுதாய மரபுகளும் நம்பிக்கைகளும்
கிராமிய மக்களின் வாழ்க்கையில் மிக்க பயன்பாடுடையன வாக விளங்கும் நாட்டார் பாடல்கள் அவர்களின் பல்வேறுபட்ட உணர்ச்சிகள், செயல்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் முதலியனவற்றை எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் உட்படாது, ஒளிவு மறைவின்றிச் சித்திரித்துக் காட்டுகின்றன. ‘பண்டைய மனிதர்கள் அதிக கலையுணர்வு பெற்றிராமையால் அவர்களின் படைப்புக்களில் மிகைபடுத்திக் கூறுந் தன்மையோ, அல்லது அதீதக்கற்பனையோ இடம்பெற்றில’ என மலினேஸ்கி கூறுவதும் ஈண்டு நோக்கற்பாலது. ஒரு நாட்டினது உண்மைச் செய்தி களையும் பண்பாட்டுவிடயங்களையும் அறிந்துகொள்வதற்கு நாட்டார் பாடல்கள் பெருந்துணையாக அமைகின்றன. சமூக வியல், மக்கள் பண்பாட்டியல், வரலாறு, மொழியியல் ஆகிய பல்கோண அடிப்படையில் நாட்டார் பாடல்களை அணுகும்போது ஒரு நாட்டின் பண்பாட்டு விடயங்கள்பற்றி அறிந்துகொள்ளக் கூடிய தகவல்களை இப்பாடல்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
கிராமிய சமுதாயப்படைப்பாக? விளங்கும் இப்பாடல்களில் அவர்களின் சமுதாயமரபுகள், நம்பிக்கைகள் தொழில்முறைகள் என்பன எவ்வித மாற்றமுமின்றி உட்பொருளாக இடம்பெறுதல் இயல்பே. ‘இன்றைய வாழ்க்கைமுறையின் ஆணிவேரை அறிந்து கொள்வதற்கு நாட்டார் பாடல்கள் ஆதாரமாகின்றன’ என டொன்யோடர்° கூறுவதும் ஈண்டுப் பொருந்தும், இவ்வியலில் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மூவகைப்பாடல் களிலுங் குறிப்பிடப்படும் சமுதாயமரபுகள், நம்பிக்கைகள் தொழில்முறைகள், கிராமியப்பண்பாட்டு அம்சங்கள் ஆராயப் படுகின்றன.
திருமணத்துடன் தொடர்புடைய மரபுகள்
மட்டக்களப்புத் திருமணச் சடங்கு முறைகள் மரபுவழிப் பட்ட சம்பிரதாயங்களைப் பின்பற்றியனவாகவே காணப்படு
1. Malinowski, B. (1926) Р. 13.
2. நூலுள் பார்க்க 3. Yoder, Don, (1968) PP. 62-63.

Page 149
270 மட்டக்களப்பு மாவட்ட.
கின்றன். இப்பிரதேச மக்களின் திருமணச்சடங்கிற் பிராமணர் களுக்கு இடமில்லை. ஊர்ப் பெரியார்கள், உறவினர், பெற்றேர் முன்னிலையிலே திருமணம் நடைபெறும். ‘உற்ருர் அறிய, ஊராரும் தான் அறிய, பெற்றேர் அறிய நாம் சேர்ந்திருப்பதெக் காலம்’ ’ 5, 4 ஊரார் அறிய, நாம் ஒண்டுசேரக் காத்திருக்கன்”8 என வரும் பாடல்கள் மேற்கூறிய சமுதாயப் பின்னணியைக்
காட்டுவனவாக அமைகின்றன. இங்கு திருமணத்தைக் 'கலியாணம்’ என்றே வழங்குவர். யாழ்ப்பாணத்தில் இதனைச் சடங்கு’ என்பதே பெருவழக்கு. ஆனல் மட்டக்களப்பில்
*சடங்கு' என்பது தெய்வங்களைக் குறித்து வீட்டிலோ அல்லது கோயிலிலோ செய்யும் சிறப்புப் பூசைகளையே குறிப்பிடு, ‘சாமத்தியக் கலியாணம்’, 'கலியாணக்குரவை’, ‘கலியானவிடு", **கலியானக்கால்', 'கலியாணச் சோறு', 'கலியாணக்கூறை”, “கலியாணக் காலம்’ என்னும் வழக்குத் தொடர்கள் மட்டக் களப்பிற் 'கலியாணக் காலம்’ என்ற சொல்லின் செல்வாக்கினைக் காட்டுவனவாக அமைகின்றன. இப்பிரதேச மக்களுடன் மலையாள மக்களின் கலாசாரத் தொடர்பைக் "கலியானம்? என்ற சொல்வழக்கும், பிராமணர் கலியாணச் சடங்கில் இடம் பெருமையும் காட்டி நிற்கின்றன."
பூருதல்’ ( < புகுதல்)
தான் விரும்பிய பெண்ணினதும், பெண்ணின் பெற்றேரதும் விருப்பத்துடன், ஆண்மகன் தனக்குத் துணையான நண்பனின் உதவியுடன் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து "தான் மணஞ் செய்யப்போவதாகக் கூறும் மரபினைப் ‘பூருதல்’ என்பர். இவ்வாறு கிராமப்புறங்களில் நடைபெறும்போது, பெண்ணின் பெற்றேர் அதனைப் பெரும்பாலும் மறுப்பதில்லை. அவன் முறைமையுடையவனுகவும், பெண்ணை விரும்பியவனகவும்
4. தற்கால நடைமுறை வழக்கங்களுக்கமைய பணவசதியுடைய வீடுகளில் பிராமணர் ஒமம் வளர்த்துச் சடங்கு செய்யும் முறைகளும் இடம்பெற்று வருகின்றன. எனினும் கிராமப்புறங்களில் 99 சதவிகிதமான மன விடுகளில் மரபுவழிப்பட்ட சடங்குமுறையே பின்பற்றப்படுகின்றது.
5. Lĩì.9). Etr.um. 11e-1 LI (IL50 7, 8, 1291 um- cũ 11.
6. மேலது பாடல் 9.
7. "The absence of any priest, marriage under the customary rites. Socially recognised constituting a valid marriage is typical of Malabar.” Raghavan, M. D, Tamil Culture of Ceylon : on Introduction. P. 205. M
8. பி.இ., தொ. பா. காவல் பாடல் 9.

சமுதாய மரபுகளும் 271
இருப்பதாலும், சீதனப்பிரச்சினைகள், திருமணச் செலவுகள் என்பன தோன்ற திருப்பதாலும், இம்மரபு சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைகின்றது. மணமகளின் பெற்ருேர், திருமணத்திற்குத் தடையாகவோ அல்லது காலதாமதப்படுத்து வோராகவோ இருப்பின் ஆண்மகன் “பூரும்’ சந்தர்ப்பம் ஏற்படும். பெரும்பாலும் மணமகன் இரவு நேரத்திலே பூரும் வழக்கமுண்டு. அவ்வாறு நிகழ்ந்ததும், உடனே அல்லது மறுநாட் காலையிலோ மணமகனின் பெற்ருேருக்குச் செய்தி அறிவிக்கப்படும். மணமகனின் பெற்றேர் இதற்குச் சம்மதிக்கா விட்டால், இரு குடும்பத்தினரிடையிலும் சச்சரவுகளேற்படும். பொதுவாக இரு குடும்பத்தினரும் அடுத்த நாட்காலையில் மகிழ்ச்சியான முறையிற் புதுத் தம்பதிகளை வாழ்த்தி வைப்பது வழககம.
கலியான எழுத்து?
உற்ருர் உறவினர் அறியத் திருமணம் நடைபெறும் அதே வேளையிலே திருமணப்பதிவும் இடம் பெற்றுவந்துள்ளது." ஒவ்வொரு கிராமத்திலும் தோம்புதோர் என்றழைக்கப்படும் இறப்புப் பிறப்பு, விவாகப் பதிவுகாரர் இருப்பார். அவரிடம் தோம்பு என்ற இடாப்பு இருக்கும். திருமணச் சடங்கின்போது தோம்புதோர் வந்து திருமணப்பதிவு செய்துவைக்கும் முறை இன்றும் கிராமப்புறங்களில் நடைமுறையிலுள்ளது. திருமணப் பதிவை இஸ்லாமிய மக்கள் “காவின் எழுதுதல்”, “காவின் முடித்தல்’ என்பர்.
தாலிகட்டுதல்?
பண்டைத் தமிழரின் திருமணச் சடங்கிலே தாலிகட்டும் வழக்கு இருந்தமைக்குச் சான்றுகளில்லை. ஆரியப்பண்பாட்டின் ஊடுருவலின் பின்பு தமிழர் திருமணத்திலே தாலி முக்கியத்துவம் பெறுவதாயிற்று. ஆபரணமாகப் புலிப்பல் தாலியையும், ஐம்படைத்தாலியையும் அணியும் வழக்கம் தமிழ் மக்களிடம்
--
9. மேலது, 1உ! பாடல் 10; 10. திருமணத்திற்குச் சாட்சி sள் வேண்டப்படுகின்றன. ஆதிகாலத்திலிருந்தே அநாகரிக நிலையிலிருந்த மக்களும் திருமணத்திற்குச் சாட்சிகள் அவசியம் எனக்கருதி வந்திருக்கிறர்கள். 11. Abeyasinghe, Tikiri, (1966) P. 112. 12. ஆரும் இயலின் 9 ஆம் அடிக்குறிப்புப் பார்க்க. 13. அகநானூறு 86, 136, 221ஆம் செய்யுள்களிற் கூறப்படும் திருமணமுறை
கள் தமிழர் பண்பாட்டின ஒட்டியனவாகவே காணப்படுகின்றன. 14. Srinivasa Iyangar, P.T. (1927) PP. 78-81.

Page 150
272 LDL. L-is61TL'ÒL LIDTAILL •••
பண்டுதொட்டு இருந்துவந்துள்ளது. தமிழரது ஆபரணமாக விளங்கிய தாலி காலப்போக்கிலே திருமண அணியாக மாறிற்று. தாலி பொருளாதார நிலைக்கேற்பப் பொன்னலும், மணியாலும், மஞ்சள் நூலாலும் அமைவதுண்டு. 'தாலிகட்டிபின் தன்னுடன் உறவாடும்படி காதலி கூறுவதும், 'தாலிகட்டப்போறவன் நான்' ‘தாலிக்கொடியே’’ எனக் காதலன் கூறுவதும் பெண் களுக்குத் தாலி வேலியாக அமையும் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
தாலிகட்டும் வழக்கம் இலங்கை முஸ்லீம்களிடமுங் காணப் படுகிறது. இதுபற்றிச் ஸ்மீம்" கூறும் கருத்தை ஈண்டு மேற்
கோளாகக் காண்க.
“இவ்வழக்கம் இலங்கை, இந்திய முஸ்லீம்களைத் தவிர வேறு எந்த நாட்டு முஸ்லீம்களும் முக்கியமாக அரபியா போன்ற மத்திய கிழக்காசிய நாட்டு முஸ்லீம்கள் கடைப்பிடித்த தாகவோ, அல்லது கடைப்பிடித்து வந்ததாகவோ சான்று களில்லை. தாலி கட்டும் வழக்கத்தைத் தமிழரிடமிருந்துதான் பெற்றனர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை,”
"கலத்திற் போடுதல்'
மரபு முறைப்படி மணமகளின் தந்தை தன் மகளைக் கைப் பிடித்து, மணமகன் கைக்கொடுத்து மங்கல வாழ்த்துக் கூறியபின் *கலத்திற் போடுதல்’ என்னும் நிகழ்ச்சி நடைபெறும். கலத்திற் போடுதல் என்பது பெரியதோர் வெங்கல வட்டியில் அல்லது தலைவாழைஇலையிற் படைத்த 'ஏழுமரக்கறி கூடிய அறுசுவை யுண்டியை மணமகனும் மணமகளும் ஒருவருக்கொருவர் மும்முறை ஊட்டி உண்டு, உறவுகலக்கும் நிகழ்ச்சியாகும். காதலி ஒருத்தி, தன் காதலனிடம் கலத்திற் சோறுபோட்ட பின் தன்னுடன் உறவாடும்படி கூறும் பாடலின்?" மூலம் திருமண மரபில் இந்நிகழ்ச்சி முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். 'பச்சை நெல்லுக்குத்தி, பால் மணக்கச் சோருக்கி, கலத்திலே போட்டு வைக்கன், கண்மணிவா சோறருந்த’** எனவரும் பாடற் பகுதிகள் கலத்திற்போடும் நிகழ்ச்சியைக் குறிப்பிடு கின்றன.
15. Thaninayakam, Xavier, S. (1953) P. (08. 16. பி.இ. கா. பா. 11உ! பாடல் 10, 20
17. மேலது பாடல் 5.
18. ஸமீம், முகம்மது, (1960); 19. மேலது 9 ஆம் அடிக்குறிப்புப் பார்க்க
20. மேலது, 24. மேலது, தொ.பா. நெல் பாடல் 6,

சமுதாய மரபுகளும். 273
ஆறுமாதச் சோறு கொடுத்தல்?*
திருமணத்தின் பின் மணமகன் மனைவியின் வீட்டிலே தங்கி யிருக்க வேண்டியது இப்பிரதேச மரபாகும். அதன் பின் அவன் தன் பெற்றேருடன் கொண்டுள்ள நெருங்கிய தொடர்புகள் நாளுக்குநாள் குறைந்து, மனைவியின் குடும்பத்துடன் புதுத் தொடர்புகள் அதிகரிக்கின்றன. இப்பிரதேசத்திலுள்ள பெற்றேர் தம்மருமகன் (மகளின் கணவன்) தம் குடும்பத்துடன் மிக்க அன்பாகவும், அக்கறையாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக மேற்கொண்ட மரபு ரீதியான ஒருவழக்கமாகவே, ஆறுமாதச் சோறுகொடுத்தல் என்ற மரபு காணப்படுகிறது. புதுத்தம்பதி களுக்கு மணமகளின் பெற்றேர் ஆறு மாதங்களுக்குத் தங்கள் செலவில் உணவு அளிப்பர், பெரும்பாலும் இவ்வுணவு தரம் மிக்க விருந்தாகவே அமைந்திருக்கும் பெற்ருேருக்குப் பணக்கஷ்டம் இருந்தாலும், அவர்கள் எவ்வாறயினும் தமது கடமையைச் செய்யத் தவறுவதில்லை. அவ்வாறு ஆறுமாதச் சாப்பாடு கொடுக்கத் தவறுமிடத்துக் குடும்பங்களிடையே சச்சரவுகளும் பிரிவுகளும் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. முதல் ஆறுமாத காலத்திற்கும் புதுமணத் தம்பதிகள் எவ்விதமான வெளியுலக இன்னல்களையும் அறியாது இன்பம் அனுபவிக்கவே இவ்வாறு உணவு முதலான எல்லாவற்றையும் தாமே கவனித்துக்கொள்ளும் வழக்கம் பெற்றேரிடமுண்டு. கலியாணம் பேசும்போது முக்கிய மாக, ஆறுமாதச் சோறு கொடுப்பது பற்றியும் பேசிக்கொள்வது வழக்கமாகும்.
சீதன முறை
மட்டக்களப்பிற் சீதனமுறை பிரச்சினைக்குரிய ஒன்ருக இல்லாமல், மரபுவழிப்பட்ட சீதனமுறையே வழக்கிலுள்ளது. கிணற்றுடன் கூடிய வீடு, வளவு சீதனமாகக் கொடுக்கவேண்டியது கட்டாயமான வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது. இத்தகைய சீதனமுறை மிக அவசியமானதாகவும், யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் காணப்படுகிறது. ஏனைய சீதனம் அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப அமையும் இப்பிரதேச மக்கள் தம் நாட்டுவளத்திற்கும் வசதிக்கும் ஏற்ப நெல்லைச் சீதன மாகக் கொடுக்கும் வழக்கம் உடையர். நெல்லுடன் மாடுகளையுஞ் சீதனமாகக் கொடுக்கும் மரபுண்டு. ‘ஏழவண நெல்லும் எருமை கண்டு மாடுகளும்’** என்ற பாடல் பழைய சீதனமுறைக்குச் சான்ருகும். வயல், மாடு நெல், என்பனவற்றைச் சீதனமாகக்
22. பி.இ., கா.பா.4 பாடல், 23, 5 g , T, T. LUFT. [4] Lu TL6v, 7;
18-מL,

Page 151
274 மட்டக்களப்பு மாவட்ட .
கொடுத்த வயற்காணியில் முதன்முறையாக Lorrl og9ilb மைத்துனன்மாரும் சேர்ந்து முதலீடுசெய்து நெல்விதைத்து, அறு வடைசெய்து வரும் நெல்லை மருமகனிடம் ஒப்படைக்கும் வழக்க மும் சீதனமுறையில் இடம்பெறுவதை ‘மாமன் பொலி அளக்க மச்சனன்மார் கொண்டுவர”** என்ற பாடலடிகள் குறிப்பிடு கின்றன. மாடுகளைச் சீதனமாகக் கொடுக்கும்போது பட்டியாகக் கொடுப்பதே வழக்கம் என்பதைப் பாடல்களும்?” சான்றுபடுத்து கின்றன. எனவே முறைப் பெண்ணை ஒருவன் மணஞ் செய்யும் போது சீதனங்கள் பல அவளை வந்தடைகின்றன. இதனையே 'அம்மான் மகளானலும் சும்மா வருவாளோ?” என்ற பழமொழியும் வலியுறுத்துகிறது. சில சந்தர்ப்பங்களிற் சீதனப் பிரச்சினை ஏற்படுதலுமுண்டு என்பதைச் சில பாடல்கள் விளக்கு கின்றன.?? YA
உறவுமுறைத் திருமணம்
கிராமப்புறங்களில் உறவுமுறையினரைத் திருமணஞ் செய்யும் வழக்கமே உண்டு. ஒரே கிராமத்தில் மணஞ் செய்யும்போதும் தன் சொந்தக்காரரை விட்டுப் ‘புறத்தியாரை’த் திருமணம் செய்வதில்லை. இப்பிரதேசத்திலே தாய்வழிமரபு நிலைபெற்றிருப் பதால் மணமக்கள் உறவினராகவும், தத்தம் பெற்ருேர் வழியால் இரத்த உறவு கொண்டோராகவும் அமைவர். இம் மக்கள் உறவுமுறைத் திருமணத்திற் கொண்டிருக்கும் நம்பிக்கைக்குப் பழமொழிகளும்?" சான்று பகர்கின்றன. பின்னிணைப்பிலே தரப்பட்டுள்ள காதலர் உறவு முறைபேசும் பாடல்களும்? உறவு முறைத் திருமணத்தின் முக்கியத்துவத்தையும் சமூக வழக்கங் களையும் குறிப்பிடுகின்றன.
தாயின் சகோதரனின் அல்லது தந்தையின் சகோதரியின் மகனை அல்லது மகளை மணஞ்செய்யும் மரபே (Cross cousin marriage) இங்கு வழக்கில் உள்ளது. இத்தகைய உறவு முறைத் திருமணத்தை இங்குத் தரப்பட்டுள்ள அட்டவணை-4, காட்டு
24. பி.இ.தா.பா./4/ பாடல் 2 ஆ;
25. மேலது பாடல் 2அ; 26, மேலது
26, பி.இ.கா.பா. 131 பாடல் 10, 11, 12இ! பாடல் 8; 141 பாடல் 7.10, 14:/1ஆ
LUTLsi 16,
27. அ. உதிரத்துக்கல்லோ உருக்கம் இருக்கும்.
ஆ. இனம் இனத்தைக் காக்கும். இ. உற்றர் உதவுவாரோ ஊரார் உதவுவாரோ, ஈ. அயலூர் அழகனிலும் உள்ளூர்முடவன் வாசி.
28. 1.9., sT, LI T... 19 u ITLsicaEssir 1-8, LI Tfitos.

சமுதாய மரபுகளும். 275
கின்றது. உறவுமுறைத் திருமணத்தின் மூலம் சீதனப்பிரச்சினைகள் தோன்ரு திருப்பதோடு, சொத்துகளும் பிரிந்து போ!' வண்ணம் பாதுகாக்கப்படுகின்றன.??
உறவுமுறைத் திருமணம் (CROSS COUSIN MARRIAGE)
குடும்பம்-1 குடும்பம்-2
6ssif மனைவி குழந்தைகள் கண்வன் மனைவி குழந்தைகள்
-- سس۔ --سے --س۔ سس۔ م> Jfbl356irازقT) قائق حمے سے سس۔ --~~ --خ
--> சகோதரங்கள் <--
உ--உமச்சான்+மச்சாள் முறையினர் <--
அட்டவணை-4
குடி மரபு
குடி என்னுஞ் சொல் சாதிப்பிரிவின் உபபிரிவுகளைக் குறிப் பதாகும். இங்குவாழ் தமிழ் மக்கள் வேளாளர், முக்குவர், சீர் பாதக்காரர் என முப்பெரும் பிரிவினராகவும், பல்வேறுபட்ட குடிப்பிரிவினராகவும் காணப்படுகின்றனர் 99 வேளாளருக்குத் தொண்டுபுரியும் பொருட்டுப் பதினேழு சிறைக்குடிகளும் இருந்த தாகக் கூறப்படுகின்றது. இப்பிரிவில் இடம்பெறும் வண்ணுர், அம்பட்டர் ஆகிய இருபிரிவினரும் மட்டக்களப்புச் சமூக, சமயச் சடங்குகள் சம்பிரதாயங்களிலே முக்கிய பங்கு வகிப்பதால் இவர்களைக் குடிமகன்’ எனக் கூறும் வழக்குண்டு. குடிப்பிரிவு களிற், சிறு சிறு உபபிரிவுகளைக் 'கத்தறை என்பர். தாய்வழியிற் குடிமுறையைத் தழுவும் பிள்ளைகள், பல்கிப் பெருகித் தனித்தனிக் குடும்பங்களாக விளங்கும்போது அதனைக் கத்தறை என்றும், “தத்தியார்’ என்றுங் கூறுகின்றனர். இங்கு வாழும் முஸ்லீம்களி டமும் இக் குடிமரபுகள் காணப்படுகின்றமை இப்பிரதேசத்துத்
29. “Cross cousin marriage, as a form of exagamy, the only form of exagamy, under dual organization, is often explained to be a device for avoiding payment of a high hride price, and also for maintaining property in the household.' Majumdar, D. N. and Madan T.N. (1961) P. 82. 30. இக்குடிகள் பல்கிப் பெருகிக் காணப்படுவதால் இவை பற்றித் தனியே
ஆராயவாய்ப்புண்டு,

Page 152
276 LDll disatild LDreill...
தமிழ் முஸ்லீம் மக்களின் கலாசார ஒருமைப்பாட்டைக் குறித்துக் காட்டுகின்றன.91
குழந்தைகளே பெற்றேரின் குடிமரபுத் தொடர்ச்சியையும்,
பெயரையும் நிலை பெறச் செய்பவர்களாவர் ?? இப்பிரதேசத் திற் குழந்தைகள் தாய் வழிமூலமே தமது குடித்தொடர்ச்சியைப் பெறுகின்றனர்.98 குறிப்பிட்ட ஒரு குடும்பத்திலே தந்தையின் குடித் தொடர்ச்சியை அவனது குழந்தைக்குப் பதிலாக அவனுடைய சகோதரியின் குழந்தையே தொடர்கிறது.
தாய்வழிக் குடிமரபுத் தொடர்ச்சியை விளக்கும் அட்டவணை
குடும்பம்-1 குடும்பம்-2 ・一 一 தாய்(மனைவி) தந்தை(கணவன்) தாய்(மனைவி) தந்தை(கணவன்)
W V
குழந்தைகள் சகோதரர் அ* <--
பெண் + ஆண் *இ குழந்தைகள் ---------------------ܝܠ سے حضــــــسے سس W V, N, Y W astil6 ioðsrr sil கணவன் மனவி பெண் + ஆண்
g | * இ* سس۔ س~~--سمس- سســـــ س--س--
W W குழந்தைகள் குழந்தை "ஸ் மனைவி கணவன்
*இ ý பெண் ஆண் குழந்தைகள் --- |
cーーー | Ꮤ W V 66T6asir Lożsa 6ń கணவன் மனைவி
፴* இ*
Vý W குழந்தைகள் குழந்தைகள்
அட்டவணை-5
31. இக்குடிமரபுகள் பற்றி மொஹீடின் கூறுவது நோக்கற்பாலது.
Folktales as recited by village e'ders, trend to indicate a Mukkuvar origin for the Muslim “Kudis”, (VMohideen M.Z. 1964 PP. 25-27) 32. ஈபி., இ. தா. பா. 151 பாடல் 1ஆ4 33. நூல்பக். 278 பார்க்க.

சமுதாய மரபுகளும். s 277
அ (*) ஒரு குடும்பத்திலுள்ள ஒரு தந்தையும் மறுகுடும்பத்தி லுள்ள தாயும் சகோதரங்களாக அமையும்போது குடும்பம் 1 இலுள்ள தந்தையின் (சகோதரனின்) குலத் தொடர்பு குடும்பம் 2 இலுள்ள தாயின் (சகோதரியின்) மூலம் தொடரப்படுகின்றமை காண்க.
ஆ (*) ஒரே குடும்பத்திற் பிறந்த ஆண் பெண் சகோதரங்கள் வளர்ந்து வேறு வேறு திருமணம் செய்து வாழும்போது, சகோதரி,தனது குடிக்குரிய குழந்தைகள் பெற்றெடுக்க, அவளது சகோதரன் மனைவியின் குடிக்குரிய குழந்தை களைப் பெறத் துணையாகின்றமை காண்க.
இ (*) கணவனுக்கு அவனது குடும்பத்திற் குலத் தொடர்ச்சி
இல்லாதிருத்தல் நோக்குக.
திருமணஞ் செய்த பெண் ஒருத்திக்குக் குழந்தைப் பேறில்லா விட்டால், அப்பெண்ணின் குடியின் மீது பிறர் குறைகூறத் தொடங்கிவிடுவர் என்பதை, “எங்க குடி மங்குதென்று எதிர்க் குடிகள் ஏசாம’** என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.திருமண வாழ்க்கையிலும் குடிமரபின் செயற்பாட்டைக் கவனிக்கலாம். திருமணத்தின் பின்பு கணவனின் குடிமரபு வலுவற்று அல்லது செயலற்றுப் போகின்றது. திருமணத்தின் மூலம் குடிமரபிற் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒருத்தி தன்னிலும் உயர்ந்த அல்லது குறைந்த குடியைச் சேர்ந்த ஒருவனைத் திருமணஞ் செய் விதாற் பெண்ணின் குடிமரபில் எவ்வித மாற்றமும் ஏற்படு வதில்லை. ஆனுல் குறைந்த குடியைச் சேர்ந்த ஒருவன் உயர் குடிப்பெண்ணை மணஞ்செய்யும்போது அவனுக்குச் சற்றுமதிப்பு ஏற்படுவதோடு, அவனுக்குப் பிறக்கும் குழந்தை தாயின் உயர் குடியைத் தன்து குடியாகக் கொள்கிறது. * ஆனல் இத்தகைய தொரு சந்தர்ப்பத்தில் ஆண்வழிச் சமூகத்தில் அவனுக்குப் பிறக் கும் குழந்தை தந்தையின் குறைந்த குடிமரபினையே சாரும் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
34. பி. இ. தா. பா. 11| பாடல்.10உ.
35. 'Up to marriage a daughter shares her father's caste status and after marriage her husband's. But a man himself does not lose caste Status or ritual purity by marrying a lowcaste Woman, though his offspring would suffer from a partial lowering from their father's caste status.' Majumdar, D, N. and Madam, T. N.
(1961) P,85. s

Page 153
278 மட்டக்களப்பு மாவட்ட.
ஒரு குடியினைச் சேர்ந்தோர் அதே குடியிலே திருமணஞ் செய் வதில்லை, தாய்வழியிலே குடிப்பிரிவு அமைவதால் ஒரு குடியினைச் சேர்ந்த ஏனைய குடும்பத்தினரும் பொதுவாகச் சகோதரமுறை யினராகவே காணப்படுவராதலினற் குடிமாறியே திருமணஞ் செய்தல் வழக்கம் ஆயினும் ஒரு கிராமத்தார் பிற ஊர்களிலே திருமணஞ் செய்யும்போது குடிமரபுகள் அதிகம் கவனிக்கப்படு வதில்லை. குடிமுறைத் திருமணத்தின்மூலம் ஒரு தாயிடம் பிறந்த பெண்களுக்குப் பல்வேறு குடிகளைச் சேர்ந்த மணமக்கள் கிடைப் பதாற் சகல குடிகளும் இணைந்து வாழக்கூடிய ஓர் ஒற்றுமையான சமூக அமைப்பும் இக் குடிமரபிற் காணப்படுகிறது.
தாய்வழிச் சமூக அமைப்பு"
இப்பிரதேசத்தில் வாழுந் தமிழ் மக்கள் தாய்வழிச் சமூக அமைப்புடையவர்களாவர். ஈழத்தின் ஏனைய பகுதிகளில் வாழுந் தமிழ் மக்களும், சிங்கள மக்களும் தந்தை வழிச் சமூக அமைப்பினராவர். தாய்வழிச் சமூக அமைப்பிற் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண்ணைப் 'பிள்ளை" என்றழைக்கும் வழக்கம் இங்குண்டு. குலத்தொடர்ச்சிக்கு வித்தாக அமைவது பெண்குழந்தையாதலால், ஒரு குடும்பத்தில் எத்தனை ஆண்குழந்தைகள் இருந்தாலும்பெண்குழந்தை பிறக்கா விட்டால் இவர்கள் பெருங்கவலைகொள்கின்றனர்.37 தாய் வழிச்சமூக அமைப்பிலே தாயின் குடிமரபையே குழந்தையும் தனது குடியாகக் கொள்ளும் மரபினை** "வேரோடிவிளாத்தி காய்த்தானும் தாய்வழி அன்றித் தகப்பன்வழி இல்லை’ என்ற முது மொழியும் வலியுறுத்துகின்றது. குடும்பச் சொத்துகள் பெண்ணுக்கே சேரும் முறையும் இச்சமூக அமைப்பில் முக்கிய இடம் பெறுகிறது.
பெற்றேர் தம் சொத்துகளை மகள் திருமணஞ் செய்யும் போது மகளுக்கு உரிமையாக்கிவிடுவர். இப்பிரதேசத்திலுள்ள பழைய உறுதிகளை (deed) நோக்கும்போது சொத்துரிமை பெண் வழியே வந்து கொண்டிருப்பதைக் கவனிக்கலாம். இவ்வாறு வருஞ் சொத்துகளைத் 'தாயதி’ ‘தாயதிமுதுகொம்’ என்றுங் கூறுவர். அவ்விதக் காணிகளில் ஆண்பிள்ளைகளுக்கு உரிமை யில்லை. தாய் தன் மகளுடன் கோபித்தோ, அல்லது தன் மகன் மீதுள்ள அன்பினலோ சொத்துகளை மகனுக்கு எழுதமுடியாது. குடும்பத்திற் பெண்குழந்தை இல்லாதபோது, பெண்ணின் சகோ
36. f. g., 5T. LI T. /l/ u TL di 8 6r; 37. Liĵ). ĝ., asrto. LI PT... /1PP| LJ TListo
17, 18,;
38. grao u d. 276 u Trstås,

சமுதாய மரபுகளும். 279
தரிக்கு உரிமை செல்லும். அவளுக்குப்பின் அவளது பெண்பிள்ளை கள் சொத்துரிமை பெறுவர்.
சில கோயிற் காணிகள் இம்முறையிற் பெண்வழியினரால் உரிமைப் பேணப்பட்டுவருதலும் ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. சுாணிகள் கோயிலுக்குச் சொந்தமாகவே இருக்கும்; ஆனல் அவற்றை ஆண்டு அனுபவித்துக் கோயிற்றிருப்பணிகளைச் செய்துவர உரிமையுடையோர் பெண்வழிப்பிறந்த பிள்ளைகளே யாவர். முஸ்லீம்களிடமும் இவ்வழக்கம் காணப்படுவது மட்டு மன்றி, அவர்களது பள்ளிவாசற் சொத்தாகவுள்ள காணிகளும் தாய்வழிப் பெண்பிள்ளைகளுக்கு உரிமை சேரல் கவனிக்கற் பாலது.
தாய்வழிச் சமூக அமைப்பு முறையுடன் இணைந்ததாகவே மருமக்கள் தாயமுறை காணப்படுகிறது. இம்முறை சேர நாட்டிலே தோற்றம் பெற்றதாகச் சோமசுந்தரபாரதியார் கூறியபோதிலும், இது பற்றிய கருத்துவேறுபாடுகள் அறிஞரி டையே நிலவிவந்துள்ளன.?? சொத்துரிமை அடிப்படையிலும் உறவுமுறையில் பின்னணியிலும் தோன்றிய ஒரு சமூக அமைப்பு முறையே மருமக்கள் தாய முறையாகும் *மருமக்கட்டாய முறையில் மாமன்மாரும், அவர் சகோதரியின் வயிற்று மருமக்க ளும் ஒருவர் பின் ஒருவராக வயக்கிரமத்தில் மூத்தவன் முறையே ஆட்சி பெறுவது வழக்கு’ என இராகவையங்கார்" கூறு கின்றர்.
இம்மாவட்டத்தில் தாய்வழி மரபே பெரிதும் நிலைபெற்ற போதிலும் இங்கு வாழும் முக்குவர் என்ற குடிப்பிரிவினரிடம் மருமக்கள் தாயமுறை வழக்கில் இருப்பதாகக் கூறப்படுகிறது.4 எனவே இம்மக்கள் சேரநாட்டிலிருந்து குடிபெயர்ந்து வந்திருக்க வேண்டும் என்ற வாதமும் இதன்மூலம் வலுவாகின்றது.
நம்பிக்கைகள்
கிராமிய மக்கள் எக்கருமந்தொடங்கும்போதும் இறைவனைத் தியானித்து, இறைநம்பிக்கையோடு கருமத்தில் ஈடுபடுதல் அவர்
39. இராகவையங்கார், மு. (1964) பக்.339.398
40. இராகவையங்கார், மு. (1964) பக். 342.
41. "...... Aarumakalthayam law is the Mukkuwa law which is prevalent among the Mukku was of Ceylon. The Mukku was came from the present Malabar district of South India in the early period of Ceylon history and therefore brought with them the pristine principles of the old maruma-kathayam law.” Thambiah, H.W. (1972) P. 220,

Page 154
280 LDL-dia,6ttily LDraill...
கள் இயல்பு. கடவுள் நம்பிக்கை, விதியில் நம்பிக்கை, இயற்கைக் கூறுகளில் நம்பிக்கை, என்பவற்றைவிடச் சமுதாயமரபுகளிலும் தொழில் முறைகளிலும் சில நம்பிக்கைகள் என்பன இவர்களிடங் காணப்படுகின்றன.
இறைநம்பிக்கையும் குழந்தைப்பேறும்
இறையருளின்மூலமே குழந்தைப்பேறு கிடைக்கின்றது
என்றும், விதிப்பயனுல் மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது என்றும் கிராம மக்கள் நம்புகின்றனர். "இதிகாசங்களிலும் நம் நாட்டுப் புறங்களிலும்கூட இந்த நம்பிக்கையின் வழிநன்மக்கட்பேறடைந்த பல பெரியார்களைக் காணமுடிகிறது’ எனப் பரமசிவானந்தம் (1974, பக், 12) கூறுவதும் ஈண்டுக் குறிப்பிடற்பாலது. இறை யருளினுற் குழந்தைப்பேறு கிடைத்ததாகவரும் ‘பூவாதமாவினை பூப்பிடித்த புண்ணியன்” “பிள்ளைகலி தீர்த்தாண்டி', 'பிள்ளைக் கலி தீர்க்கவந்த பெருமாள்திருமுடி’** முதலிய பாடலடிகள் தாயின் இறைநம்பிக்கையைக் குறித்துக்காட்டுகின்றன.
கதிரைமலை, மாமங்கம், மண்டூர் ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபட்டுவந்தாற் குழந்தைப் பேறுண்டாகும் என்ற நம்பிக்கை இப்பிரதேச மக்களிடம் நிலைபெற்றுள்ளது. அதன்படி தீர்த்த யாத்திரை செய்து, இறையருளாற் குழந்தைப் பேறடைந்த தாய், அதனைப் பாடற்களிற் குறிப்பிட்டுத் தாலாட்டி, அத்தெய்வங் களுக்கு நன்றி கூறுவதைக் காணலாம்.* கதிரமலச்சாமிவந்து எங்கட கண்கலக்கந் தீர்த்தாரோ" என்ற பாடற்பகுதி குழந்தைப் பேறின்மையாற் சமூகத்தில் அவளுக்கேற்பட்ட அவமானத்தை இறைவனே நீக்கினன் என்ற நம்பிக்கையைப் புலப்படுத்துவதாக அமைகின்றது.
நேர்த்திக்கடன் வைத்தல்*
குழந்தைப்பேறற்றேர் இறைவனுக்கு நேர்த்திக்கடன்வைத்து விரதம் அனுட்டத்துக் குழந்தைப் பேறடையும் வழக்கமுண்டு. குழந்தை பிறந்ததும் தாம் நேர்ந்தவாறு, நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர். “மாணிக்கம் நேர்ந்து, மலையுயரப் பொன் நேர்ந்து, காணிக்கை நேர்ந்தேன் எனக்கொரு கைக்குழந்தை வேணுமெண்டு' எனவரும் பாடல் இந்நம்பிக்கையை வலி யுறுத்துவதாக அமைகிறது.
42. 5.9., 35T. Lu T. I 1 I LI TLlio 11, 43. (3up6bg, [4] Li mTLśi) 103, 104, 10FF; Hurt, Don, V. (1965) P.11 . 44. மேலது, பாடல் 10இ. 45. மேலது பாடல் 13 ஆம் பிரிவுப்பாடல்களைப் பார்க்க. 46. மேலது பாடல் -3.

சமுதாய மரபுகளும். 281
அறஞ்செய்தல்
தான தருமஞ் செய்தாற் குழந்தைப் பேறுகிடைக்குமென்ற நம்பிக்கையும் காணப்படுகிறது. முற்பிறவியிலோ தாமோ, தமரோ அல்லது முன்னேரோ செய்த பாவவினையாற் பிள்ளைப் பேறு கிடைக்காது என்ற நம்பிக்கையும் இவர்களிடமுண்டு. அத்தகைய பாவவினைகளைப்போக்கி குழந்தைப் பேறடை வதற்காக அறஞ்செய்யும் வழக்கமுடையோராகக் காணப்படு கின்றனர். தாலாட்டில்வரும் **ஆடிஅமாவாசையில் ஆயிரம் அன்னமிட்டு'*' என்ற தொடர் இத்தகைய நம்பிக்கையினைக் குறிப்பிடுவதாக அமைகிறது. அன்னதானமே மிகச்சிறந்த அறச் செயல் என இவர்கள் கருதுகின்றனர். ஆதலினலேயே கணவனின் பெருமைபற்றிக்கூறும்போது "பசித்தாரை ஆதரித்து ஆதரவாய் அன்னமிடும் . உன்தகப்பன்** எனப்பாடுவதும் காண்க.
தாய்ப்பால் சுரத்தல்பற்றிய நம்பிக்கை
தமிழகத்திலும், ஈழத்திலும்வழக்கிலுள்ள தாலாட்டுப்பாடல் களிற் "பச்சை இலுப்பைத் தொட்டில்’, 'பால்வடியத் தொட்டில்கட்டி’ என்ற தொடர்கள் இடம்பெறக்காணலாம். இஃது தாய்ப்பால் சுரத்தலுடன் தொடர்புடைய நம்பிக்கையினைக் காட்டுவதாகும். தொட்டிலில் வளருங் குழந்தைக்குப் பால் உணவாகின்றது. தாயிடம், பால் நன்கு இருந்தால்தான் குழந்தையும் நன்கு அருந்தி வளரும். பால்மரமாகிய இலுப்பைப் பலகையாலே தொட்டில் செய்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும் என்ற நம்பிக்கை தாய்மாரிடம் இருப்பதைக் களஆய்வில் அறியக் கூடியதாகவிருந்தது. 'வாசலிலே பாற்கிணறு,’ 'வாசலெல் லாம் பாலாறு’, பாற்கிணற்றைப் பார்க்கவந்த பாலகன்’** என்னுந் தொடர்களும் தாய்ப்பால் சுரக்க வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலே தாலாட்டுப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மலரும் சமுதாய மதிப்பீடும்
சமூகக்கோட்பாடுகளின் அடிப்படையிலும் தனிக்குடும்ப வாழ்க்கையிலும் குழந்தைப்பேறு முக்கியமான ஒன்ருகக்கணிக்கப் படுகிறது. குழந்தைச் செல்வமற்றேர் சமூகத்தில் 'மலடன்’ மலடி என்ற அவச்சொல்லுக்கு ஆளாகி, மங்கள நிகழ்ச்சி களிற் புறக்கணிக்கப்படுகின்ற ஓர் இழிநிலைக்குத்தள்ளப்படு கின்றனர். அவையில் அவர்களுக்கு முதலிடம் இல்லை. பிரயாணம்
47. பி.இ., தா.பா. 13 பாடல் 8, 11: 48. மேலது 15 பாடல் 2 அ5. 49. மேலது 4 பாடல் 3 ஆ, இ,

Page 155
282 மட்டக்களப்பு மாவட்ட.
செய்யும்போது விழிவிசேடத்துக்கும் இவர்கள் தகாதவர் எனக் கருதப்படுகின்றனர். இதில் நம்பிக்கையுடையோர், தமது வழிப் பயணத்தில் இவர்களைக் காணநேர்ந்தாற், பயணத்தைத் தொட ராது திரும்பிவந்துவிடுவர். மலட்டுத்தன்மையுடையோர் சமூகத் தில் மட்டுமன்றித் தம் குடும்பத்திற் பெறும் வெறுப்பும், புறக் கணிப்பும் மிகக்கொடியன. உதாரணமாகத் திருமணமாகிப் பல ஆண்டுகளாகக் குழந்தைப் பேறின்றி “மலடி’யாக விளங்கும் ஒருத்தியின் சகோதரனுக்குத் திருமணம் நடைபெறும்போது ஆலாத்தி எடுத்தல், கூறைப்பெட்டி, தாலிப்பெட்டி என்பன எடுத்துச் செல்லுதல் ஆகிய கடமைகள் அவளுடையனவாக இருந்தபோதிலும் மலடி என்ற காரணத்தால் அந்த உரிமைகள் யாவும் அவளிடமிருந்து பறிக்கப்பட்டு விடுகின்றன. இத்தகைய சமூகக் கொடுமைகளை மலட்டுப்பெண் அனுபவிக்க வேண்டி யுள்ளது. 'மலடி மலடி என்று மானிடத்தார் ஏசாமல்’** வந்துதித்த தன்மகனைத் தாலாட்டும் தாயின் குரலில் மேற்கூறிய சமுதாய மரபுகளும் நம்பிக்கைகளும் அடங்கிக் கிடத்தல் தெளி வாகின்றது.
விதியில் நம்பிக்கை
தமிழர் பண்பாட்டில் விதிபற்றிய கோட்பாடுகளும் நம்பிக் கைகளும் தொடக்க காலத்தில் மிகக் குறைவாகவே இருந்த தாகச் சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன." காலப்போக்கில் விதியில் அதிக ஈடுபாடும், நம்பிக்கையுமுடையோராகத் தமிழ் மக்கள் காணப்படுவதை இலக்கியங்களும், மக்களின்நடைமுறை வாழ்க்கை நியதிகளும் எடுத்தியம்புகின்றன.
வாழ்க்கையில் நன்மையுந் தீமையுந் விதிப்படியே நிகழ் சின்றது என்பது கிராமிய மக்களின் நம்பிக்கை. விதியின்மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைபற்றி அறிவதற்கு நாட்டார் பாடல்கள் தக்கசான்ருகும். குழந்தைப்பேறு கிடைப்பதும்கிடைக் காமற்போவதும் விதியின் செயல் எனக் கிராமிய மக்கள் நம்பு கின்றனர். ** விதிப்பயனகத் தமக்குக் குழந்தைப் பேறுகிடைக் காத பெண்கள் இறைவனைத் தியானித்து குழந்தைப்பேறு வேண்டிப்பாடும் பாடல்களுங் குறிப்பிடத்தக்கன."
50. பி.இ., தா.பா. 151 பாடல் 1உ, ஊ, பாடல் 2, 111 பாடல் 10, 11,
51. வித்தியானந்தன், சு. (1964) பக். 146.147.
52. பி.இ., தா.பா. 111 பாடல் 10, 11, 13 பாடல் 1,2,4,5,9.8, 15 பாடல் 1ஆ
இஈ,உஊ.
53. La.ga... asiT. urt, 14/ LJ Tulsio 16; Halt, Don W. (1965) P, 10.

சமுதாய மரபுகளும் , 283
விதியின்மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, விதிப்பயன் விதியின் செயல்கள் என்பன காதற்பாடல்களில் விரிவாகக் கூறப் பட்டுள்ளன. காதலர் தம் திருமணவிடயத்தில் விதியின் செயல் என்னவாகுமோ என ஏங்குவதை ‘நம்மட எழுத்து வண்ணம் எப்படியோ’’** என்ற பாடல் விளக்குகிறது. திருமணம் விரை வில் நடைபெறுவதும், தடைப்படுவதும் அவரவர் விதிப்பயன், என மக்கள் நம்புகின்றனர். நல்வாழ்வு எப்போது கிடைக்குமோ என ஏங்கும் ஒருத்தி, “எல்லாம் எந்தன் தலைஎழுத்து’** எனக் கூறி, விதியின் ஆற்றலை நொந்துகொள்வதைக் கவனிக்கலாம்.
அன்ருட நிகழ்ச்சிகளையும் விதியின் செயல்களாகக் கணிக்கும் அளவுக்கு விதியின் செல்வாக்கு இவர்களைப் பாதித்துள்ளது. காதலர் இரவுக் குறியிலோ, பகற்குறியிலோ சந்திக்கத்தடை ஏற்பட்டால் அஃதும் விதியின் செயலே எனக்கூறிக் கவலைப்படுதல் குறிப்பிடத்தக்கது.?? துக்கமடைந்த ஒருவருக்கு மேலும் மேலும் துன்பம் வந்து சேர்வதற்குக்காரணம் விதியே என ஏங்குவதையும் கவனிக்கலாம். "
தொழிற்பாடல்களிலும் விதியில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை பிரதிபலிக்கின்றது. விதிப்பயணுகவே தாம் வலை இழுத்துக் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியுள்ளது என மனம் நொந்து பாடுவதை * நம்மளப் படைச்ச ஆண்டவன் வார்த்து, நம்மடதலையில் இப்படி எழுதினன் எல்லாம் நம்மட விதிதான் தம்பி ...”** என்ற பாடலடிகள் விளக்குகின்றன.
நல்லநாள் பார்க்கும் வழக்கம்
கிராமிய மக்கள் எக்கருமத்தையும் "நல்லநாள்” பார்த்துச் செயற்படுவதிற் பழகிப்போனவர்களாவர், தொழில் தொடங் கவோ, விருந்துக்குப் போகவோ, வீடுகட்டவோ, சடங்குகள் செய்யவோ, பிரயாணஞ் செய்யவோ எதற்கும் நாள் கணித்தே கருமந் தொடங்குவர். இத்தகைய சமூகப் பழக்கங்களை நாட்டார் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
குழந்தைக்குக் காதுகுத்தல், மருங்கை கொடுத்தல், பெயர் சூட்டல் ஆகியனவற்றுக்கு நாட்பார்க்கும் மரபு இம்மக்களிடம்
54; மேலது 12ஆ| பாடல் 2,3, இவற்றுடன் கீழ்வரும் பழமொழிக ளுநினைவு கொளற்பாலன. தாரமுங் குருவும் தலையின எழுத்து; "வேளையும் விதியும் வந்தால் வேலியால் வரும் மாப்பிள்ளை”,
55. மேலது, பாடல் 3; 56. மேலது பாடல் 23,
57. மேலது, 12/அ பாடல்.2
58. பி.இ. தொ.பா./வலைபாடல் 1 வரி 23-28

Page 156
284 மட்டக்களப்பு மாவட்ட.
காணப்படுதல் குறிப்பிடத்தக்கது. 89 'செவ்வாய்க்கிழமையிலே சேர்ந்த ஒருநாளையிலே’89 எனப்பாடுங் காதலன் செவ்வாய்க் கிழமையை நல்லநாளாகக் கணித்துத் திருமணத்தை ஒழுங்கு செய்யும் தன்மை காணப்படுகிறது.
நல்ல நாள் குறித்து வேலையைத் தொடங்கும் விவசாயி அந்நாளை "ஏர்நாள்’ எனக் குறிப்பிடும் வழக்கம் கவனிக்கத் தக்கது. ஏர்நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மண்வெட்டியுடன் வயலுக்குச் சென்று தெய்வத்தை வழிபட்டுச் சிறிது நேரம் வேலை செய்து திரும்புவர். அதுபோன்றே மதிப்பு, உழவு, விதைப்பு, அறுவடை, குடுமிதிப்பு ஆகியனவற்றுக்கும் நல்ல நாள் பார்க்கும் வழக்கம் இம்மக்களிடம் காணப்படுதல் குறிப்பிடத் தக்கதாகும். சூட்டுக்களத்தில் அவுரி கட்டுவதற்கும் நல்லநாட் பார்க்கும் வழக்கம் உண்டென்பதைப் ‘புதன்கிழமை நல்லதினம் பொன்னவுரி கட்டிவைக்க”8? என்ற கண்ணி குறிப்பிடுகின்றது. நல்ல நாளில் அவுரி கட்டுவதன் மூலம் நெல் பொலியும் என்பதும் இவர்களது நம்பிக்கை யாகும். ,
ஆடை, அணிகலன் அணியவும் நாள் பார்க்கும் வழக்கம் பின் பற்றப்படுகின்றது. “பூணுரம் பூணப் புதன்கிழமை நல்லதினம்’** என்ற பாடல் இதனைச் சான்றுபடுத்துகின்றது. வெள்ளிக் கிழமை வேண்டியதோர் நற்கிழமை’** என்ற பாடல்வரியும் ஈண்டு நோக்கற்பாலது.
ஆலாத்தி எடுத்தல்: (ஆரத்தி)
சமூகச் சடங்குகளுடனும் நம்பிக்கைகளின் அடிப்படையிலும் தோன்றிய சமுதாய மரபுகளுள் ஆலாத்தி எடுத்தலும் ஒன்ருகும். ஆலாத்தி எடுக்கப்படுவோரைத் தூய்மைப்படுத்துவதையே (Purif cation) இது நோக்கமாகக் கொண்டுள்ளது, குறிப்பிட்ட ஒருவரைத் தூய்மைப்படுத்தி அவருக்கு எவ்வித இடையூறும் வராமற் பாதுகாப்பளிக்கும் ஒரு காரணகாரியத் தொடர் புடையதாகவே ஆலாத்தி எடுக்கும் நிகழ்ச்சி அமைகின்றது. இதனைக் கண்ணுாறு கழித்தல்' என்றும் வழங்குவர்.
59. L. g., 5rr. Lu TT. /6/LI TL6 1 ; 60. 15. g. 5 T. LI T. /12 I U TL6iv 23;61.
*நாளதுகேட்டு நார்க்கம்பு வெட்டி,” (பி.இ.தொ.பா./பொலி/பாடல் 1: 62. பி.இ.தொ. பா பொலிபாடல் 10. கண்ணி 7; 63. மேலது, பாடல் 10 கண்ணி 6: 64. மேலது. பாடல்4 கண்ணி 16: 65. பி.இ. சொல்லடைவு பார்க்க;

சமுதாய மரபுகளும். 285
மங்கலமான சமூகச் சடங்குகளில் ஆலாத்தி இடம் பெறு கின்றது. குறிப்பிட்ட சடங்கில் முதன்மைபெறுபவர் புத்தாடை அணிந்து, எழிற்கோலம் புனைந்து, கண்டோரால் விரும்பப்படும் எழிலுருக்கொண்டிருக்கும்போது, காண்போர் அவர்மேல் ஆசை கொண்டால் அவருக்குக் கண்ணுரறு ஏற்படும் என்பது நம்பிக்கை.88 கண்ணுாற்றினல் தலையிடி, வாந்தி, மயக்கம், சுழற்சி என்பன ஏற்படுதல் வழக்கம் மங்கலமான சடங்கினை மேற் கொள்பவர் கண்ணுரற்றுக்கு அளாகி, இத்தகைய அல்லல்களுக்கு ஆட்படாதிருக்கவே ஆலாத்தி எடுக்கப்படுகிறது.
ஆலாத்தி எடுக்கும் பெண்கள் சுமங்கலியாகவும் குழந்தைச் செல்வமுடையவளாகவும், மச்சான் முறையினள் ஆகவும் இருக்க வேண்டும். கள ஆய்விற் கிடைத்த பாடல் ஒன்றிற் சாமத்தியக் கலியாணவீட்டில் ஆலாத்தி எடுக்கும் மரபுபற்றிய செய்தி அமைந் துள்ளது. பெண் பூப்படைந்த ஏழாம் நாளில் அப்பெண்ணை நீராட்டிச், சடங்குகள் செய்வதுண்டு, தாய் வழியிலிருந்தும் தந்தை வழியிலிருந்தும் உறவு முறைப் பெண்கள் யாவரும் வந்து கூடுவர். மச்சாள் முறையான ஒருத்தி அப்பெண்ணை அழைத்து வந்து வெள்ளை விரித்த இருக்கையில் அமர்த்துவாள். பிறர் காணுவண்ணம் அப்பெண்ணை மறைத்து வெள்ளை கட்டப்படும். மாமிமுறையானவள் அப்பெண்ணின் கூந்தலை அவிழ்த்து விடுவாள். உறவுமுறையான ஒவ்வொருவரும் பெண்ணின் தலையில் தண்ணீர் வார்த்தல் வேண்டும், மச்சிமுறையானவர்கள் ஒரு தட்டில் எண்ணெய்த் திரிகளைக் கொழு த்தி ஆலாத்தி எடுக்க, ஏனையோர் குரவைபோடுவர். 87 இதில் யாரும் பங்குபற்றத் தவறினலும், யாரையும் பங்குபற்றிச் செய்யத் தவறிஞலும் மனத் தாங்கல் ஏற்படுவதுண்டு. இத்தகைய சமுதாயப் பின்னணிகளைக் **கூந்தல் அவிழக்க,”88 என்ற பாடல் குறிப்பிடுதல் காண்க. தன் குழந்தையின் எதிர்காலத்தைக் கற்பனை செய்து மகிழ்வடையும் தாய், குழந்தை வளர்ந்து பெரியவனகித் திருமணம் செய்கின்ற காலத்தில் தன் மகனுக்கு அரிவையர் எடுக்கும் ஆலாத்திகளைக் கற்பனை செய்து தாலாட்டுவதாகவரும் பாடலும் 99 ஈண்டுக் குறிப் பிடத்தக்கது.
மந்திர வழக்கு"
ஆற்றல் வாய்ந்த சொற்கோப்பினைப் பலதடவை உருப் படுத்துதல்’ மூலம் (திருப்பித் திருப்பிச் சொல்லுதல்) மந்திரவாதி
66. இத்தகைய நம்பிக்கை உலகில் பல நாடுகளிலும் காணப்படுதல் நோக்கற்
LITang. Gennep Arnold Van (1965) P.50.
67. பாலசந்தரம், இ (1974 அ); 68. பி.இ.தொ.பா,/நெல்/கவி 10
69, மேலது.தா.பா./6/பாடல் 2; 70. மேலது,கா-பா-2உ|கவி.2;

Page 157
286 மட்டக்களப்பு மாவட்ட.
தான் நினைத்ததைச் செய்து முடிக்கின்ருன். ஆதிகால சமூகங்களி டையே மந்திரப்பிரயோகம் பெரிதும் வழக்கிலிருந்துள்ளது." மனவளத்தின் முன்னேற்றத்தினற் சமய உணர்ச்சி கடவுட்பற்றும் தோன்றுவதற்கு முன்பே மக்களிடம் மந்திர வழக்கம் இடம் பெற்றிருந்ததென்பதை மனித நாகரிகவளர்ச்சி வரலாறுகள் தெரிவிக்கின்றன. ‘மந்திரம் உலகம் அனைத்துக்கும் பொதுவான தாயிருத்தலால் எந்த ஒரு மொழியினருக்கும் அதனை நாம் உரிமைப்படுத்திக் கூறுதல் இயலாதாகும்.”*
மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கையில் மந்திரமும், மந்திரச் செயல்முறைகளும் மிக்க முக்கியத்துவம் பெற்றுள்ளன. பண்டு முதல் மக்கள் வாழ்க்கையில் ஊறிப்போன மந்திரப் பயிற்சிகள், காலமயக்கினல் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகப் படிப்படி யாக மறைந்துவந்தாலும், இங்கு அவற்றின் சுவடுகள் மறைந்து போகாமற் பதிந்து கிடக்கின்றன. கிராமப்புறங்களில் மந்திர வைத்திய முறைகளும், மந்திர சக்தியால் மேற்கொள்ளும் நன்மை தீமையான செயல்களும் இடம்பெற்றுவருகின்றன. "மலையாள நாட்டு மந்திரம்’ போன்றே மட்டக்களப்பு நாடும் மந்திரத்துக்குப் பெயர்பெற்றுக் காணப்படுகிறது. இவ்வடிப்படையில் மட்டக் களப்பு மக்களை மலையாள நாட்டவருடன் இனங்காணக் கூடிய தாகவுள்ள பண்பாட்டுத் தொடர்பு நோக்கற்பாலது.
மட்டக்களப்பில் வழக்கிலுள்ள பல்வேறுபட்ட மந்திரப் பயிற்சி முறைகள் பற்றி விரிவாக ஆராய வாய்ப்புண்டெனினும் இவ்வாய்வுமுறைக்கமைய பாடல்களிற் குறிப்பிடப்படும் விடயங் களே ஈண்டுக் குறிப்பிடப்படுகின்றன. தாம் விரும்பிய பெண்ணையோ அல்லது ஆடவனையோ அடையும் பொருட்டுச் *சேர்த்திமருந்து கொடுக்கும் வழக்கம் இங்குண்டு. மருந்து என்ற சொல் பொதுவாக நோய்க்குரிய சகல மருந்துகளையுங் குறிப்பதாயினும் மட்டக்களப்பில் வேருெரு குறிப்புப் பொருளை யும் அது கொண்டுள்ளது. ஆண் பெண் இருவரது மனேநிலை களையும் ஒன்றுசேரச் செய்வதற்காக இரகசியமாகக் கொடுக்கப் படும் வசிய மருந்தையே இச்சொல் சுட்டுகின்றது எண்ணெய், தூள், குளிகை வடிவமாக இம்மருந்து தயாரிக்கப்படும். உணவிற் கலத்தல், உடையில் அல்லது கூந்தலிலே தடவுதல் மூலம் இம் மருந்து பிறருக்குச் சேர்ப்பிக்கப்படுகிறது. பெண்ணை வசியப் படுத்துவதாயின், அவளின் கூந்தல் மயிர், அடிமண் என்பன வற்றை எடுத்து ஏனைய மருந்து மூலிகைகளுடன் சேர்த்து மருந்து
71. Tylor, Edward. B. (1929) PP. 137-141. 72. கந்தையா, வி. சி. (1964) பக். 338-339.

சமுதாய மரபுகளும். 87
அரைக்கப்படும்??. பெண்களும் ஆண்களுக்கு வசிய மருந்து போடும் வழக்கமுண்டு.”* -
காகத்துடன் தொடர்புடைய நம்பிக்கைகள்
கிராமப்புறங்களிற் காகம், மீன்கொத்தி, ஆந்தை, நாய் என்பனவற்றின் குரலோசையை அவதானித்து, அவற்றின் பலனுக என்னநடைபெறும் என ஊகம்கொள்ளும் நம்பிக்கை இவர்களிடங் காணப்படுகிறது. காகம் வீட்டுமுற்றத்திற் கரைந்து கொண்டிருந்தால் விருந்தினர் நிச்சயம் வருவர் என்பதைக் காகத்தின் செயலிலிருந்தும் அறிந்துகொள்ளுந் தன்மையை இம்மக்களிடங் கவனிக்கலாம்." காகம் வீட்டின் முற்றத்திலோ, வேலியிலோ வந்திருந்து தொடர்ந்து கரைவதை யும், காகங்கள் முற்றத்தில் சண்டைபிடித்துப் புரள்வதையும் துர்ச்சகுனம் எனக் கருதுகின்றனர். காகச் சாத்திரம் பெரும் பாலும் பொய்ப்பதில்லை. அப்படிப் பொய்த்தால் மீண்டும் காகம் கரையும்போது அதனைப் பேசித் துரத்துவதையும் கவனிக் கலாம். ? ?
சடங்குகள்
தெய்வத்தைப் பரவி நடைபெறும் சடங்குகள் சமயச் சடங்குகளாகவும், சமூகக் களியாட்டங்கள், நிகழ்ச்சிகள் என்பன வற்றுடன் தொடர்புடையன சமூகச் சடங்குகளாகவும் கணிக்கப் படும். மனித கூட்டு வாழ்க்கையின் அடிப்படையாகத் தோன்றிய, இச்சடங்குமுறைகள் பல்வேறு கோணங்களில் மக்கள் வாழ்க்கை யில் முக்கியத்துவம் பெறுகின்றன. தாலாட்டுப்பாடல்களில் மருங்கை கொடுத்தல், காது குத்துதல், பெயர்சூட்டல் ஆகிய சடங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.?? இவை சமூகச் சங்கின் பாற்படுபவை.
குழந்தை பிறந்து முப்பத்தோராம் நாள் இச்சடங்குகள் நடைபெறும். அத்தினத்தில் குழந்தையின் உற்ருர், உறவினர்
73. பி.இ. கா.பா. 12உ| பாடல் 1-3.
74. மேலது, 14 பாடல்.3.
75. (அ) மேலது, 12ஆ| பாடல் 20, 21, 22.
(ஆ) "காக்காச்சி மூக்காச்சி கறுத்தப் பொண்டாட்டி, கட்டுச்சோறும்
கருவாட்டுக் குழம்பும் கட்டித்தாறேன், வாறவர் ஒடிவாருரா கடந்து வாருரா, எண்டு தெத்திக்காட்டு" (கூறியவர் இல. 6) என்ற வாசகத்தைக் காகம் கரையும் போது கூறுவதைக் கிராமப்புறங்களில் அவதானிக்கலாம்.
76. பி.இ. கா.பா. 12ஆ| பாடல் 22,
77. 15.g9. g5(T.LI (T, |6| tu (T 6Ä) 1.

Page 158
288 மட்டக்களப்பு மாவட்ட.
யாவரும் அழைக்கப்பட்டிருப்பர். குழந்தைக்கு முதன்முதலாக முடிமயிர் வழித்துக் காது குத்தப்படும். குடிமையாக வேலை செய்யும் நாவிதன் வந்து முடிவழித்துக் காது குத்துவான். அவனுக்குக் கூலியாகவும் சன்மானம்ாகவும் அரிசி, காய்கறி என்பனவும், பணமும், மதுபானமும் கொடுக்கப்படும். குழந்தையை நீராட்டிப் புதுஆடைகள் அணிவித்ததும், தாய் மாமன் அரைஞாண்கொடி, மாலை, காப்பு என்பனவற்றைப் பரிசாக அளிப்பார். இச்சடங்கிலே தாய்மாமன் முக்கியத்துவம் பெறுவதோடு, அவர் கொடுக்கும் பரிசுகளும் யாவராலும் கவனிக்கப்படுகின்றன. குழந்தை தனது சகோதரியின் பிள்ளை யாகவும், தனது குலத்தின் வாரிசாகவுந் தோன்றியிருப்பதால், அக்குழந்தை வளர்ந்து தனது குடும்பத்துடன் திருமணத் தொடர்பு கொள்ளப்போவதாலும் தாய்மாமன் அதிகமுக்கிய கவனம் எடுக்கின்ருர். அவரே மருங்கைக்கு வேண்டிய ஒழுங்கு களையும் செலவுகளையும் பொறுப்பேற்பதுமுண்டு.78
சர்க்கரை அமுது??
சர்க்கரை அமுது என்பது இங்கு சமூகசமயச் சடங்காக (SocioreligiouSrites) நடைபெற்றுவருகின்றது. பெண்தெய்வ வழிபாட்டின் அடிப்படையில் நிகழும் இச்சடங்கு குலதெய்வங் களைச் (மாரியம்மன், பேச்சியம்மன்) சாந்திப்படுத்தி, அருள் பெறும் நோக்குடன் நடாத்தப்படுகின்றது. இச்சடங்கின்மூலம் கொடிய நோய்களும், துன்புறுத்தும் கொடிய தேவதைகளும் தம் இல்லம் அணுகமாட்டா என்ற நம்பிக்கை இவர்களிடம் நிலவு கின்றது. நேர்த்திக்கடன் வைத்து ஆண்டுக்கு ஒரு தடவை இல்லந்தோறும் சர்க்கரை அமுது நடாத்தும் வழக்கமுடையர்.
திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் இச்சடங்கு நடைபெறும். சடங்கிற்கு முதல் நாள், வீட்டுக்காரர் தம் சுற்றத் தவரிற் பத்துவயதுக்குட்பட்ட பெண் சிறுமிகள் ஐவரையும் அவர் களுடன் வண்ணன், அம்பட்டன், தட்டான் ஆகிய மூன்று சாதி யருள்ளும் மேற்குறிப்பிட்ட வயது அடிப்படையில் மூன்று பெண் பிள்ளைகளையுஞ் சடங்கிற்கு அழைப்பர். சடங்குவேளையில் இப் பிள்ளைகள் பெண்தெய்வத்தின் பிரதிநிதிகளாகப் பாவனைசெய்யப் படுகின்றனர். மேற்குறிப்பிட்ட மூன்று சாதிப்பிள்ளைகளையும் சடங்கிற்கு அழைப்பதன்மூலம் கொடிய தேவதைகள் தம் இல்லம் வர அஞ்சும் என இவர்கள் நம்புகின்றனர்.
78. பி.இ. தா.பா. 16 பாடல் 2. 79. பி.இ. தொ.பா. தண்டு பாடல் 2, வரி 41

சமுதாய மரபுகளும். 289
இச்சடங்கு நடைபெறும் தினத்திற் சாணத்தால் வீடு மெழுகிச், சுவாமி அறையில்° நிறைகுடம் வைத்து வேப்பிலையால் வீடு அலங்கரிக்கப்படும். அதன்பின் வீட்டுத் தலைவி வேப்பிலை யுடன் உறவினர் வீடுகளுக்குச் சென்று ‘மாரியம்மன் பெயரால் மடிப்பிச்சையாக’ அரிசி பெற்று வந்து அதனைத் தம் அரிசியுடன் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் பொங்கப்படும். சடங்கிற்கு வரவழைத்த பிள்ளைகளின் கால்களை மஞ்சள் நீராற் கழுவி, நெற்றிக்கு நீறணிந்து, சந்தனப்பொட்டிட்டு,கண்ணுக்கு அஞ்சனம் தீட்டுவர். பின்பு பிள்ளைகளை வெள்ளைச் சீலையின்மேல் இருத்துவர். பொங்கல் அம்மன் கும்பத்தின்நேரே படைக்கப்படும். அப்பிள்ளை களும் ஏனையோரும் அம்மனைப்பூசிப்பர். பின்பு அப்பிள்ளைகளுக்குத் தனித்தனியே சர்க்கரைப் பொங்கல் பகிர்ந்தளிக்கப்படும். அவர்கள் “அம்மன் உங்கள் யாவரையும் ஒரு துன்பமும் வராது காப்பாள்” என்று நல்வாக்குக் கூறிப் பொங்கலை உண்டர். அப்பிள்ளைகளை அனுப்பும்போது வீட்டுத்தலைவி அவர்களை அழைத்துச் சென்று கடவலடியில்' நிறுத்தி “சுகம் தந்தீர்களா சுகம் தந்தீர்களா? என்று கேட்டவண்ணம் வேப்பிலையால் மஞ்சள் நீரைப் பிள்ளைகளின் மீது தெளிப்பாள். பிள்ளைகள் “ஓம், ஓம்’ என விடைகூறிச் செல்வர். அவர்கள் சென்ற பின் வேப்பிலை கடவலிற் சொருகிவிடப்படும். இவ்வாறு செய்வது கடவலைக் கடந்து துர்நோய்கள் வளவினுள் வராது என்ற நம்பிக்கையின லாகும்.
அன்று மாலையில் ஆதினவரவர், கெங்கைவைரவர் ஆகிய தெய்வங்களுக்கு ரொட்டி* சுட்டு வைத்து வழிபாடு செய்வர். இது காவல் தெய்வங்களுக்காகச் செய்யப்படும் சடங்காகும்.
கிராமிய விவசாய முறைகள், கிரியைகள், நம்பிக்கைகள்
தொழிற் பாடல்களில் வரும் குறிப்புகள், கள ஆய்வுச் சான்றுகள், ஆகியனவற்றைத் துணைக்கொண்டு மரபுவழிப்பட்ட கிராமியவிவசாய முறைகளுடன் தொடர்புடைய கிரியைகள் நம்பிக்கைகள் என்பனபற்றி ஈண்டு ஆராயப்படுகின்றன. மரபு வழிப்பட்ட இவ்விடயங்கள் நவீன விஞ்ஞான வசதிகளாலும், இயந்திர ஆதிக்கத்தினலும் கைவிடப்பட்டுவருவதால் அவை பற்றி ஆராய்தல் பயனுடைத்தாம்.
80. நூல் பக். 297 பார்க்க; 81. பி.இ. சொல்லடைவு பார்க்க. 82. பி.இ., தொ. பா. தண்டு பாடல் 2, வரி 42-43,
LD--19

Page 159
290 மட்டக்களப்பு மாவட்ட ,
ஏர்நாள்88
நல்ல நாட்பார்த்து முதன்முதலாக ஏர்க்களஞ் செய்வதை “ஏர்நாள்’ என்பர்." இவ்வாறு நல்ல நாளில் வேலையைத் தொடங்கினல் தம்முயற்சி இனிது நிறைவேறும் என்பது உழவர் நம்பிக்கையாகும்.
உழவும் மிதிப்பும்"
இப்பிரதேசத்தில் உழவுக்கும் மிதிப்புக்கும் கடாமாடுகளே பயன்படுத்தப்படுகின்றன. இவ்வழக்கம் சிங்களமக்களிடமுங் காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திலும், தென்னிந்தியாவிலும் உழவுக்கு எருத்துமாடுகளே பெரிதும் பயன்படுகின்றன. மட்டக் களப்பு மாவட்டத்திற் கடா மாடுகள் பெரிதுங் காணப்படுதலும், அவை நீண்ட நேரம் களைப்படையாது தொழிற்படக்கூடிய ஆற்றலுடையனவாக இருத்தலும் குறிப்பிடத்தக்கன. மாட்டுச் சொந்தக்காரரிடம் மாடுகளைக் கூலிக்குப் பெற்றுத்" தொழிற் படுத்தும்போது, அவற்றை அடித்து அல்லற்படுத்தமாட்டார்கள். அவ்வாறு அவற்றை வருத்தினுல் நல்ல விளைச்சலை எதிர்பார்க்க முடியாது என இவர்கள் நம்புகின்றனர்.
விதைப்பு"
சேற்றுவிதைப்பு, புழுதி விதைப்பு என இருவிதமான விதைப்பு முறைகள் இங்குக் காணப்படுகின்றன. சேற்று விதைப்பின்போது முளைத்த நெல்லையும் புழுதிவிதைப்பில் விதைநெல்லையும் விதைப்பர். இப்பிரதேசத்தின் பெருந்தொகையான வயற்பரப்பு இருப்பதனற் அவற்றில் நாற்றுநடுவதற்குத் தேவையான கூலி யாட்களைப் பெறுவதிலுள்ள கஷ்டத்தினுலும், அம்முறையிற் பொருளாதார விரயமும் ஏற்படுவதனலும் நாற்றுநடும் வழக்கம் இங்குக் காணப்படுமாறில்லை. புதிய விவசாய விஸ்தரிப்பு முறை யினைப் பின்பற்றிச் சிலர் நாற்றுநடுகையை இப்போது மேற் கொண்டு வருகின்றனர். விதைப்பு நடைபெறும்போது, தொழிலாளர் அனைவருக்கும் போடியார் வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் பெருவிருந்து முறையிலான உணவை உண்டு களிப் பதிலே தொழிலாளர் திருப்தியடையும் ஒருமரபும் காணப்படு கின்றது. நெல்விதைக்கத் தொடங்கும்போது யாவரும் இறை
83. பி.இ. தொ. பா. பொலி/ பாடல் 1, 84. நூலுள் நோக்குக, 85. பி.இ., தொ.பா. ஏர்ப்பாடல்களைப் பார்க்க. 86. நூல் பக், 44 பார்க்க. 87. பி. இ. தொ. பா. /ஏற்றம் பாடல்கள் பார்க்க,

சமுதாய மரபுகளும். 291
வணக்கஞ் செய்வது வழக்கம். நெல்விதைப்பவர் முளைநெல் நிரம்பிய கடகத்திற் பிள்ளையாருக்கு மடைவைத்துக் 'கற்பூரம் கொளுத்தித் தேங்காய் உடைத்துவழிபட்டு, அக்கடகத்தைத் தலையில் வைத்து இருகைகளாலும் முளைநெல்லை எடுத்து, கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று மூன்றுதரம் நெல்லை வீசி, விதைக் கத் தொடங்குவார்.
புதிர் எடுத்தல் ??
புதிர் எடுத்தல் நிகழ்ச்சிஎன்னும் வயல்விளைந்து அறுவடைக்கு ஒரிருவாரங்களுக்குமுன் நடைபெறும்." ஒவ்வோராண்டும் புதி தாகநெல்வரும்போது அதனைப்புதிர் (புதியது) என்பர். நல்லநாள் பார்த்து அதிகாலையில் யாவரும் அவரவர் வயலுக்குச் சென்று, வழிபட்டபின், ஒரு தூக்கு அளவுக்குக் கதிர்களை அறுத்துக் கட்டாகக் கட்டி, வீட்டுக்குக் கொண்டுவருவர். மனைவி வீட்டில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றிக் காத்திருப்பாள். கணவன் புதிர் கொணர்ந்ததும் அதனை நிறைகுடத்தின் முன்பு வைத்து யாவரும் வழிபடுவர். பின் அக்கற்றையை எடுத்துத் தமது பூசை அறையில்" அடுத்த ஆண்டு வரும் வரையும் தொங்கவிடும் வழக்க முண்டு.புதிர் எடுத்தல் சிலகிராமங்களில் விழவாகக்கொண்டாடப் படுதலுமுண்டு.விவசாயிகள் அவ்வூர்க் கோயிற் பூசகர்,வண்ணக்கர் முதலானேர் புடை சூழ, மேளவாத்தியங்களுடன் வயலுக்குச் சென்று புதிர்எடுத்துவரும்முறை அண்மைக்காலம் வரையும் இருந்து வந்ததாயினும் இப்போது அவ்வாறு புதிர் எடுக்கும் விழாவாக இது அமைவதில்லை.
போடியாரிடம் வயலைக் குத்தகைக்கு எடுத்துச் செய்யும் கமக் காரனும், போடியாரது மேற்பார்வையில் வயல்செய்யும் செய்கைக்காரனும் முல்லைக்காரனும் போடியாருக்கு புதிர் கொண்டுபோடும் ஒரு சம்பிரதாயமும் காணப்படுகிறது. இது நிலமானிய சமுதாய அமைப்பின் ஒரு செயலாகும். புதிர், வாழைக்குலை, தயிர்ப்பாளை என்பவற்றைச் சன்மானமாகக் கொண்டு போய்க்கொடுக்கும் ஒருமரபு இருந்துவருகின்றது.
88 u.9. g5T. u T. 51 u TL6io 2 o... 2. 89. இங்குக் குறிப்பிடப்படும், விவசாய முறைகளும், அவற்றுடன் தொடர்புடைய ஓரியைகளும் சயாம் நாட்டு விவசாயமுறைகளுடனும் கிரியைகளுடன் நம்பிக் கைகளுடனும் ஒத்துக்காணப்படுதல் குறிப்பிடத்தக்கது Rajadham Phya Anuman, (1961) PP. 7-59. 90. நூல் 297 பார்க்க.

Page 160
292 மட்டக்களப்பு மாவட்ட.
சூடுமிதிப்பதற்கு ஒழுங்கு செய்தல்?
ஞாயிறு, வியாழன் தவிர்ந்த ஏனைய நாட்களிற் களம் செதுக்கப்படும். ஒரே இடத்திற் பலர் சேர்ந்து தத்தம் சூடுகளை வைப்பதால் அவர்கள் யாவரும் களம் செதுக்குவர். அவர்களுட் இசிலர் குடுமிதிப்பதற்குரிய உபகரணங்களைச் சேகரித்தல், மிதிமாடு ஒழுங்குபடுத்தல், கூலி ஆட்கள் பிடித்தல் என்பன வற்றைக் கவனிப்பர். இதனை "அடுக்குப்பண்ணுதல்’ எனக் கூறுவர். "கோலம், "கட்டைமிலாறு’ ‘கேட்டிக்கம்பு" என்ப வற்றுக்குத் தேவையான தடிகளையும், கொப்புகளையும் வயலுக்கு அண்மையிலுள்ள காட்டுக்குச் சென்று எடுத்துவருவர். சுமார் 5அடி நீளமும் 3 அங்குல சுற்றளவுமுள்ள ஒருதடியின் நுனியில் ஈர்க்குப்போன்ற மெல்லிய வைரமானதடிகளைத் துடைப்பம் போன்று வைத்துக் கட்டப்பட்டதே ' கோலம்’ எனப்படும். களத்தில் நெல்லைக் கூட்டிக்குவித்துக் கோலம் (அழகு) செய்யவும் நெல்துரற்றும்போது நெல்லையும் பதரையும் பிரித்து ஒதுக்கவும் கோலம் பயன்படும். காயா அல்லது கேட்டிமரத்தின் சிறிய கிளைகளை அப்படியே வெட்டிவந்து வெயிலிற்காயவிட்டு, இலை கள் உதிர்ந்தபின், அவற்றைக் கயிற்ருற் கட்டிய கொப்பினை (கட்டைமிலாறு) களத்திலே வைக்கோலை அகற்றவும், நெல் தூற்றும்போது கூளங்களைத் தட்டிவிடவும் பயன்படுத்துவர். பத்தடி நீளங்கொண்ட இருதடிகளை இரண்டடிச் சமாந்தரமாக வைத்து, அவற்றின்மீது சூட்டிலிருந்து உப்பட்டிகளை இழுத்துக் குவித்துக் காவிக்கொண்டு, களத்திற்குவிப்பதற்குப் பயன்படும்" தடிகளைச் சூட்டுக்கம்பு’, ‘கட்டுக்கம்பு’ என்றுகூறுவர் இவ் வாருன பொருள்கள் யாவற்றையும் களம் செதுக்குவதுடன் சேகரித்துக்கொள்வர்.
சூட்டுக்களம்
குடுவைக்கப்படும் இடம் களவட்டிவரவை’ என்று வழங்கப் படும். சூடு வைக்கப்பட்டிருக்கும் திசைக்குச் சரி வடக்குப் பக்கமாகவே களம் அமைக்கப்படும். வடதிசை மங்கலகர மானதும், பொலிவைத்தருவதும் என நம்புகின்றனர். ஆயினும் கள ஆய்வின்போது வேறு காரணங்களும் அவதானிக்கப்படு வதாயின, "மானவரி’ விளைவின்போது சூடுமிதிக்கும் காலம் மாசி, பங்குனி மாதங்களாகக் காணப்படுவதால், அக்காலத்திற் குணதிசையிலிருந்து வேகமாக வீசும் ‘கொண்டல்’ காற்று நெல் தூற்றுவதற்குப் பயன்படுகிறது. களத்தின் மேற்குப்பக்க ஒரமாக வைத்தே நெல் தூற்றப்படுவதனற் கூளம், பதர் என்பன
91. பி.இ. தொ. பா. பொலி/ பாடல் 1,

சமுதாய மரபுகளும். 293
களத்திற்கு அப்பாற்காற்றேடு சேர்ந்து பறந்து விடுகின்றன. மிகுதியைக் கட்டைமிலாற்ருலே கூட்டிக் களத்தைத் தூய்மை யாக்குவர். இவ்வாறு பொலிதூற்றுவதற்கு வசதியாகவும், களத்தைத் தூய்மையாக வைத்திருப்பதற்கு வாய்ப்பாகவும், சூட்டிற்கு வடபக்கமாகக் களம் அமைக்கப்படுகிறது. கொண்டற் காற்றில் நெல்துாற்றும்போது கூளம், பதர் யாவும் சூட்டின் மேல் விழுந்து சூட்டைப் பழுதாக்கி விடுமாதலினுற் கிழக்குத் திசையைத் தேர்ந்திலர். தெற்குத்திசை " யமதிசை" எனக் கருதப்படுகிறது. மேற்குத்திசை இலட்சுமிகரமற்றது என்ப பதாலும்,கொண்டற்காற்று வீசும்போது சூட்டுக்கு மேற்கே களம் அமைந்தால் காற்று சூட்டிலே தடைப்பட்டு நெல்துாற்றமுடியா திருக்கும் என்பதாலும், மேற்றிசையைத் தேர்ந்திலர். சூடு அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் சரியாக வடக்கே சற்று இடைவெளி விட்டுச் சரியாகப் பதின்மூன்று கவடுகள் வடக்குத்
சூட்டுக்களத் தோற்றம்
6) .

Page 161
294 LDLL-åö61rtil LDTøll L–-
தெற்காகவும் கிழக்குமேற்காகவும் அளந்து அவற்றை அளவு கோடுகளாகக் கொண்டு வட்டமாகக் களம் அமைக்கப்படும், இதனைப் பின்வரும் படம் விளக்கிக் காட்டுகின்றது.
1. களவட்டிவரவை
2. குடு 3. களத்தின் நடுவே அரக்குப் புதைக்கப் பட்டிருக்குமிடம்.
நான்கு திக்குகளிலும் அச்சரம் புதைக்கப்பட்டிருக்குமிடம். களத்தின் ஒரம். (வாட்டி) களத்தின் வெளியே வைக்கோல் வீசப்படுமிடம். பொலி தூற்றுமிடம் சூட்டிலிருந்து களத்திற்குக் கதிர் பிரித்தெடுக்குமிடம். . சூட்டைவளைத்துள்ள முட்கம்பி வேலி. 0, காவற் பரண் அமைக்கப்பட்டிருக்குமிடம்.
அரக்குப் பதித்தல்??
நவதானியம், நவரெத்தினம் ஆகியவற்றுடன் வெள்ளி, செம்பு அல்லது பொற்றகட்டில் அச்சரம் எழுதி, மந்திர உச் சாடனஞ் செய்து ஒரு செம்பினுள் வைத்துக் களத்தின் நடுவே புதைத்து வைக்கப்படும் "காவற்சின்னமே" அரக்கு என்பதாகும். நடுவே ஒரு முழ ஆழமும் அரைமுழவிட்டமுமுடைய ஒரு சிறு குழி தோண்டி,° அதனுள் வாழையிலைவைத்துப் பிள்ளையார் பூசை செய்து, அதன்மேல் அரக்குச் செப்பும், ஒரு பழையமண்வெட்டித் துண்டும் வைத்து அக்குழிமூடப்படும். மகிழடித்தீவில் அவற்றுடன் ஒரு சாராயப்போத்தலும் வைக்கப்படுவதாகக் கள ஆய்வில் அறியப்பட்டது. அரக்கு என்பது மது?*' என்ற பொருள் தருத லால் சாராயப் போத்தலைக் களத்திற்பதித்தல் என்ற பொருளை யும் இத்தொடர் குறிக்கின்றது. உளவியல் நோக்கிலும், சமய நம்பிக்கையின் அடிப்படையிலும் அரக்குச் செப்புடன் சாராயப் போத்தல் வைக்கப்படுவதற்கு விளக்கம் கூறலாம். நிலத்துட் பதித்து வைத்திருக்குஞ் சாராயத்தை சூடுமிதிப்பு முடிந்ததும் யாவரும் அருந்திக் களிக்கலாம் என்ற சிந்தனை அவர்களிடம் இருப்பதால், வேலை துரிதமாக நடைபெற அது இடமளிக்கிறது. அத்தகைய நினைவு தொழிலாளருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து
: *
92. பி.இ. தொ.பா. பொலி பாடல் 2.
93. நூல் பக். 293 , வரைபடம் 2 பார்க்க
94. 9D digs - Sprits distilled from the fermented sap of Sundry palms. Tamil Lexicon, Vol. PP. 115-116. G356rsgisi pJäs என்ற சொல் சாராயத்தையே குறிப்பதாகும்.

சமுதாய மரபுகளும். 295
உற்சாகத்தை அளிப்பதால் உளவியல் நோக்கில் அந்நிகழ்ச்சியின் நோக்கம் புலனுகின்றது. சூட்டுக் களத்திற்குப் பூதகணங்கள் வந்து நெல்லைத் திருடும் நம்பிக்கை இவர்களிடம் காணப்படு கிறது." பூதங்களுக்குப் பலி கொடுத்தால் அவை நெல்லைத் திருடமாட்டா என நம்புகின்றனர். மதுவும் ஒருவகைப் பலிப் பொருளாதலாற் பூதகணங்களுக்கு மதுப்பலியாகச் சாராயப் போத்தல் அரக்குக் குழியிற் புதைக்கப்படுகிறது எனச்சமய நம்பிக் கையின்படி (Mytholozical Interpretation) விளக்கம் கூறலாம்.
குழியினுள் அரக்கை வைத்தபின், சூட்டிலிருந்து ஒருபிடி நெற்கதிர்களை இழுத்துவந்து, அதனை ஒருமுழ நீளமுள்ள முதிரை மரத் தடியுடன் சேர்த்துக்கட்டி, அரக்கின்மேல் நிறுத்திவைத்து, அக்குழியை மூடிவிடுவர். நெற்கதிர்மட்டும் வெளியே நிமிர்ந்து நிற்கும். அதன்பின், களத்தின் நான்கு திக்குகளிலும் நான்கு இரும்புக் கம்பிகள் அல்லது அச்சரத்தகடுகள் புதைக்கப்படும்." நான்கு திக்குப்பூதகணங்களும் களத்தினுட் புகாதவாறு அவ்வாறு செய்யப்படுகிறது. இரும்பைக் கண்டாற் பேய், பூதம் அகன்று விடும் என்ற நம்பிக்கை இவர்களிடம் காணப்படுகிறது."
அதன்பின் களம் "காவல்’ செய்யப்படும். அரக்குப் பதித் தவர் சூட்டிலிருந்து நெற்கதிர்களை இழுத்துவந்து அரக்கின்மீது தூவியவண்ணம் அதனை மூன்றுதரம் வலம்வருவார். இது “முதற் காவல்’ எனப்படும். மீண்டும் நெற்கதிர்களை இழுத்துவந்து, நான்கு திக்குகளிலும் நின்று அரக்கின்மீது விழும்வண்ணம் கதிர் கள் வீசப்படும். இது "இரண்டாம் காவல்” எனப்படும். நெற் கதிர்களைச் சூட்டிலிருந்து இழுத்தெடுத்து ‘வேலைக்காரன் கம்பிற்”* சேர்த்துக்கட்டி, அதனைத் தலையில் வைத்துக்கொண்டு அரக்கின்மீது தொங்கும்படியாகப் பிடித்து, ஒரு கையால் நெல்லை உதிர்ப்பர். அரக்கை மூன்றுதரம் வலம்வந்து, கதிர்களை அரக்கின் மீது வைப்பர். இது “மூன்ரும் காவல்’ எனப்படும். இக்கிரியை கள் யாவும் களத்திற் பூதங்கள்வந்து நெல்லைத் திருடிச் செல்லா மல் தடுப்பதற்கும், நெல் நன்கு பொலிய வேண்டும் என்ற நோக் குடனும் நடாத்தப்படுகின்றன. இக்கிரியைகளை வயதால், மூத்த அல்லது மந்திரப்பயிற்சியுடைய ஒருவரே செய்வார். களம் காவல் செய்யப்பட்டபின், இருவர் சூட்டின்மீதேறி, தேங்காய்உடைத்து சூட்டைத்தள்ள, ஏனையோர் அவற்றைக் களத்திற்குவித்து ஐந்து
95-96. பி.இ., தொ.பா. பொலி பாடல் 2.
97, இரவிற் பயணஞ் செய்வோர் பேய்க்குப் பயந்து கையில் இரும்புத்துண்டு
ஒன்று வைத்துக்கொள்ளும் வழக்கமும் உண்டு.
98. பி.இ. சொல்லடைவு, பார்க்க.
ASSAASSSS AAASSMSTSTLSSASAAALTAeLTqLqALJSLeLLLLSS

Page 162
96 மட்டக்களப்பு மாவட்ட.
அல்லது ஆறு சோடிக் கடாமாடுகளை ஒன்ருகப் பிணைத்து, முதலிலே துதிப்பாடலைப்பாடிய வண்ணம் கந்தின்மீது மாடுகளைச் சாய்ப்பர்° அதனைத் தொடர்ந்து சூடுமிதிப்பு நடைபெறும்."
சூட்டுக்களத்தில் வழங்குஞ் சிறப்புச் சொற்கள்
குறிப்பிட்ட சில நம்பிக்கைகள் அடிப்படையிற் சூட்டுக்களத் தில் வழங்குஞ் சொற்களைக் குழு உக்குறியாகவே பயன்படுத்து கின்றனர். நெல்லைப் 'பொலி’ எனக்கூறுவதன்மூலம் நெல் பொலியும் என நம்புகின்றனர். ஆதலினலே வைக்கோலையும் “பொலிக்கொடி’ என வழங்குவர். “நெல்’ எனக் கூறின் பூதங்கள் அதனைக் கேட்டுவந்துவிடும் எனப்பயந்து,191 அதனை மறைத்துக் கூறுவதற்காகவே “பொலி’ என்ற சொல் பயன் படுத்தப்படுகிறது எனவுங் கூறப்படுகிறது. எடு, தா, வா, போ, என்னுஞ் சொற்களைக் "கட்டு’ என்ற சொல்லாற் குழுஉக்குறி யாக வழங்குகின்றனர். களத்தின் வெளியே தருணம் பார்த்துக் கொண்டுநிற்கும் பூதங்கள், அடிக்கடி ‘கட்டு’ எனக்கூறின் தம்மைப் பிடித்துக் கட்டப்போகிருர்கள் எனப்பயந்து ஓடிவிடும் என்றும் நம்புகின்றனர். இவ்வாறு வழக்கிலுள்ள சூட்டுக்களச், சிறப்புச் சொற்கள் வழக்கொழிந்து வருவதாலும், அச்சொற் களின் மொழிவழக்கை எடுத்துக்காட்டும் நோக்குடனும் அவை, பின்னிணைப்பிற் சொல்லடைவின் இறுதியில் தரப்பட்டுள்ளமை காண்க.
கிராமியப் பண்பாட்டு விடயங்கள்
கிராமிய சமுதாய அமைப்பு நிலைபெற்றுள்ள கிராமப்புறப் பண்பாட்டு விடயங்கள்பற்றி ஈண்டு ஆராயப்படுகின்றன.
வீடமைப்பு
மட்டக்களப்புக் கிராமப்புறங்களிலுள்ள மிகப்பழைய வீடுகள் மூன்று அறைகளையும், உயர்ந்த திண்ணையினையும் (Werandah) கொண்டனவாகக் காணப்படும். 192 வீட்டின் நடு அறை “உள்வீடு" எனவும், அதன் இடப்பக்க அறை 'மஞ்சூடு” எனவும், வலப்பக்க அறை ‘சாமான் அறை' என்றும் பெயர்
99. நூல் பக் 143 பார்க்க. 100. சூட்டுக்களத்துடன்தொடர்புடையனவாக மேலே கூறப்பட்ட விடயங்கள்யாவும் சிங்கள மக்களது விவசாய முறையிலும் இடம்பெறுதல் சிறப்பாகச் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும். இதுபற்றி H.C.P. Bell (1883), பக், 44, 93) என்பவர் விரிவாக ஆராய்ந்துள்ளார். 101. நூலுள் பார்க்க. W
102, s.S., aa" Li T. 4 uFli 8 ;

சமுதாய மரபுகளும். 297
பெறும். உள்வீடு எனப்படும் நடுவறை தூய்மையாக வைக்கப் பட்டிருப்பதோடு அதனைப் பூசை அறையாகவும் பயன்படுத்துவர். அதனைச் ‘சாமி அறை" என்றும் கூறுவர். அவ்வறையிலே தயிலாப் பெட்டி, பெட்டகம், விலையுயர்ந்த பொருள்கள் என்பனவற்றை வைத்துப் பேணுவர். அடுத்து, "மஞ்சூடு” என்பது பெண்களுக் குரிய அறையாகும். மஞ்சம் மணக்கட்டிலைக் குறிக்கும். பேரழர் தம் மகளுக்குத் திருமணஞ்செய்து கொடுத்தபின்பு, புதுத்தம்பதிகளுக்கு மஞ்சூடு எனப்படும் அறையைப் படுக்கை அறையாகக் கொடுப்பர். *** அவ்வறையிலே (மஞ்சம்) மணக் கட்டில் போடப்படுவதாற். பொருளாகுபெயராய் “மஞ்சூடு” எனப் பெயர்பெற்றது. வீட்டுக் கூரைகளைத் தென்னை ஒலைக் கிடுகுகளால் வேய்ந்து, அதன்மேல் வைக்கோலையும் 19* வேய்ந்து வி மரபும் இப்பிரதேசக் கிராமிய மக்களிடம் இன்றும் காணப் படுகின்றது. வீட்டின்முன் பக்கக்கூரை மிகப் பதிவாகவே அமைந்திருக்கும். இதனை 'இறவானம்’ என்று கூறுவர். முன் கூரையைத் தாங்கிநிற்பதற்கு வைரமான மரத்தூண்களை
ந fட்டியிருப்பர்.
கொட்டுக் கிணறு?
வைரமான மரத்தின் அடிப்பகுதியை அறுத்து, அதனை உட் குடைந்து, நிலத்துட் பதித்துக் (குழாய்க்கிணறுபோல்) கிணருகப் பயன்படுத்தும் வழக்கம் மட்டக்களப்பில் அண்மைக்காலம்வரை இருந்துவத்துள்ளது. இதனைக் கொட்டுக்கிணறு’ என்பர். இவ்வழக்கம் ஈழத்தின் மேற்குக்கரையிலுள்ள மன்னரிலும், மலையாள நாட்டிலும் உண்டென்பதுங் குறிப்பிடற்பாலது.
முற்றத்திலே பட்டறை வைத்தல்"
இப் பிரதேசம் ஈழத்தின் நெற்களஞ்சியம் என வருணிக்கப் படுமளவுக்கு இங்கு நெல்விளைச்சல் அதிகமாகக் காணப்படுவதால் அறுவடை செய்த நெல்லைத் தமது வீட்டு அறைகளிற் குவித்து வைப்பர். அறைகள் போதாதிருந்தால் வீட்டின் முற்றத்தில் வைக்கோற் பட்டறை' செய்து அதனுள் நெல்லைக் குவித்துப் பாதுகாப்பர். பட்டறை வயற்களங்களிற் காணப்படும் குடு போன்று காணப்படும். கடும் மழைபெய்யினும் தண்ணிர் உட் செல்லாதவாறு வைக்கோலால் நன்கு வேய்ந்திருப்பர்
103. நூலுள் காண்க. 104. I.3., astT. LIT. I12a) LI Tlib 12. 105. I.3., ST. LI T... 1 ep l LI TL-isti ; 106. il-g..., stT. u T. I 1 I u ITLlio 10w; 12 l LI TL6i 32aa. 107. பி.இ. சொல்லடைவு பக். XXV பார்க்க,

Page 163
298 மட்டக்களப்பு மாவட்ட.
அதிலிருந்து நெல் எடுப்பதற்குத் தக்கவாறு துவாரம் வைத்திருப்பர். அல்லது உலக்கையால் இடித்துத் துவாரம் உண்டாக்கி அதன்மூலம் நெல்லை எடுப்பது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புறங்களில் முற்றத்தே இவ்வாறு பட்டறை வைக்கும் வழக்கம் நிலைபெற்றுவந்ததாக அறியப்படுகிறது. ஆனல் இப்பொழுது அரசாங்கம் விவசாயி களிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதால் ட்டுக்கு நெல்லைக் கொணர்ந்து பட்டறையிற் கட்டிவைத்துப் பாதுகாக்கும் வழக்கம் தேவையில்லாது போய்விட்டது. வீட்டிற் பட்டறை வைத்திருத்தல் பெருமையாகவும், பொருளா தார நிலையை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது.'
முற்றத்தில் மரங்கள்
கிராமப்புறங்களில் வீட்டுமுற்றம் குறிப்பிடத்தக்கவகையிற் சில மரபுகளுக்குட்பட்ட அமைப்பினையுடையதாகக் காணப்படும். முற்றத்தில் விழிவிசேடத்திற்கேற்ற மரங்களை நாட்டிருப் I†. அவற்றுள் மாதுளைமரம்" மிக முக்கியமானது மாதுளை மரம் புனிதமானதாகவும், கண்ணகி, மாரியாகிய தெய்வங்க ற். சின்னமாகவும் கணிக்கப்படுகின்றது. மாதுளைமரம் பூத்துக் குலுங்கும்போதும், காய்த்துப் பழங்கள் நிறைந்து காணப்படும் போதும் பார்வைக்கு அவைமிக்க மகிழ்வைக் கொடுக்கின்றன. கருவள உணர்ச்சியைக் கொடுக்கும் ஓர் அடையாள மரமாகவும் (Fertility Symbol) மாதுளை பயன்படுகின்றது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
வீட்டுமுற்றத்தின் ஒரத்தே தென்னமரம் நடும் வழக்கம் உண்டு,119 தென்னையைத் "தென்னம்பிள்ளை' என்றே கூறுவர். புதுவருடத்தின்போது புத்தாடைகளை முற்றத்தின் எதிரேயுள்ள தென்னை மரத்திற் வளைத்துக்கட்டிய பின்பே தாம் அணிந்து கொள்வது வழக்கம், தென்னை முதன்முதலாகப் ιμπάοίτ போட்டாற் வெடிகொளுத்திக் குரவைபோட்டு மகிழும் தன்மையும் தென்னை மரத்தின் முக்கியத்துவத்தைக் காட்டு
108. சங்க இலக்கியங்களை ஆராயும்போது தமிழ் மக்கள் பழங்காலம் முதலாக முற்றத்திலே நெற்பட்டறை வைத்திருந்த வழக்காறுபற்றிய செய்திகள் அறியப்படுகின்றன. குதிர் என்ற சொல்லே பண்டுபட்டறையைக் குறித்து வழங்கியிருக்கிறது. ‘பிடிக்கணத்தன்ன குதிருடை முன்றில்" என்ற பெரும்பாணுற்றுப்படை 186 ஆம் வரியினுலும், பொருநராற்றுப்படை 245ஆம் வரிக்கு உ. வே. சாமிநாதஐயர் கூறும் உரையானும் அறியக்கிடக் கின்றது. சாமிநாதஐயர், உ. வே. (1935) பக், 127.
109. If... Is sr,ur. 11F LI PEL : 22, 25 10. மேலது பாடல் 22,

சமுதாய மரபுகளும் . 299
கின்றது. வீட்டு வளவிற் பப்பாசி, வாழை, முருங்கை. வேம்பு *** முதலிய மரங்களும் நடப்படும் மரபும் பாடல்களிற் குறிப்பிடப் பட்டுள்ளது.
Gas 112
கிராமியச் சூழலில் வேலி மிக முக்கிய இடம் வகிக்கின்றது. வீட்டுவளவைச் சுற்றி வேலி அடைத்தலும், வீட்டு முற்றத்தைப் பிரித்து வேலி அமைத்தலும், கிணற்றைச் சுற்றி மறைப்பு வேலி கட்டுதலும் கிராமப்புறத்தில் இடம்பெறும். மட்டக்களப்புக் கிராமிய வேலிஅடைப்பு முறைகள் மலையாள வேலியமைப்பு முறைகளுடன் ஒத்தனவாகக் காணப்படுகின்றன. வேலிக்கு மேலால் ஒருவர் முகந்தெரியாத வண்ணம் கட்டும் உயரமான வேலி அமைப்பும், ஒலைக்கிடுகுகளை நிறுத்திவைத்து வேலி அடைக்கும் முறைகளும், வேலிக்கு வரிச்சுக் கட்டும்முறையும் மலையாளத்துடன் தொடர்புடையன. வேலியிற் கடப்பு வைக்கும் முறையும், அக்கடப்பினுாடாகப் புகுந்து செல்லக் கூடிய அமைப்பும், திறந்து செல்லக்கூடிய படலை அமைப்பும் கிராமிய வேலியமைப்பில் இடம்பெற்றுள்ளன. இத்தகைய வேலியடைப்புகள்பற்றி நாட்டார் பாடல்கள்*** அறியத் தரு கின்றன.
வீட்டுக்குவருவோரை வரவேற்கும் முறை
கிராமங்களிலே வீட்டுக்கு வருவோரை வரவேற்கும் முறை யிற் பல மரபுகள் பின்பற்றப்படுகின்றன. வீட்டுக்கு உறவினரோ அல்லது விருந்தினரோ வந்ததும் அவர்களை வரவேற்றுப் பாய் விரித்து அதில் அமரச் செய்த பின்பு, அவர்களுக்கு வட்டாக் (தாம்பூலத்தட்டு) கொடுக்கப்படும்.' விருந்தினரைக் கண்ட வுடன் இவ்விருபொருள்களும் உடனே கொண்டுவரப்படுதல் களஆய்வில் அவதானிக்கப்பட்டது. இவ்விரு பொருள்களும் விருந்தினரை வரவேற்குஞ் சின்னங்களாகப் பயன்படுகின்றன. விருந்தினருக்குப் பாய்விரித்து வட்டாக்கொடுத்து வரவேற்க மறந்துவிட்டால், அல்லது வேண்டுமென்றே அவ்வாறு செய்தால் அஃது பெரும் குறையாகக் கருதப்படுகின்றது."
111. 1. g., SGT. UT. /1FF) Lurrusio 25, 25, 26, 112. பி.இ, கா.பா. 11ஈ| பாடல் 2, 3, 10, 11, 27; 12அ/ பாடல் 41 113. மேலது, 1ஈ| பாடல் 11: 114. மேலது பாடல் 21, 26; 115. Lâ.S. ST. Lu T. [16r] LI TLối 8, 1 FF || LI TL6io 14; 116. மேலது, 13 பாடல் 27.

Page 164
300 மட்டக்களப்பு மாவட்ட.
திண்ணைப்பள்ளிக் கூடம்
திண்ணைப்பள்ளிக் கல்விமுறை இங்கு இருந்துவந்தமைக்கு நாட்டார் பாடல்களுஞ் சான்ருகின்றன.117 இக்குருகுலக் கல்விமுறை இங்கு கிராமியப் பின்னணியில் இயங்கி வந் துள்ளது. கிராமங்களிலே குருகுலம் நடாத்தியோர் தத்தம் இல்லத்திலுள்ள திண்ணையில் வகுப்பு நடாத்திவந்துள்ளனர். மாணவர்கள் பனை ஓலையில் எழுதியே படித்தனர்.*** ஆசிரி யருக்குக் கொடுக்கவேண்டிய சன்மானம் ஊர்ப் பொதுமக்களிட மிருந்து சேகரித்துக் கொடுக்கப்பட்டது. அறுவடை முடிந்து நெல் வீட்டுக்கு வந்து சேரும் காலமாகிய ஆவணி, புரட்டாதி மாதங்களில் "எண்ணெய்ச் சிந்துப் பாடல்கள்” மாணவர்களால் வீடுதோறும் பாடப்படும். ஆசிரியரது வருவாய்க்காகவும், பெற்றேர் ஆசிரியரது அறிமுகத்தை வளர்த்துக் கொள்ளவும், இராமிய பாரம்பரியத்தை நிலைநாட்டவும் இவ்வழக்கம் பின் பற்றப்படுகிறது. வயல் பெருக்கி, நெல் வளம் வாய்க்கப் பெற் றிருந்த போடியார்மார்', தமது இல்லத்திற்கு ஆசிரியரும் மாணவரும் வந்து சிந்துபாடுவதை ஒரு மரியாதைச் செயலாகக் கருதினர். மக்கட் பேறில்லாது வருந்தும் தம்பதிகளின் இல்லத் தில் எண்ணெய்ச்சிந்து பாடும் மாணவருக்கு மோர் அல்லது இளநீர் கொடுத்தால் அடுத்த வருடம் அவர்கள் வரும்போது அக்குடும்பத்தினருக்குக் குழந்தை பிறந்திருக்கும் என்ற நம்பிக்கை யும் இப்பிரதேச மக்களிடம் காணப்படுதல் சிறப்பாகக் குறிப்
பிடத்தக்கதாகும்.
gosiassir س60۱l
இராமிய மக்களின் மரபுவழிப்பட்ட ஆடை அணிகள் பற்றிய செய்திகளை நாட்டார் பாடல்கள் அறியத் தருகின்றன. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், கிராமியப் பெண்களிடம் பச்சவடச் சேஆல490 பெரிதும் வழக்கிலிருந்து வந்ததாகக் கூறப்படுகின்றது.
117 g.g., 5T.T. |4 || LJ TL6iv 4;G5IT. UT. /GUT súil || LI TL6i 8; 18. இப்பிரதேசத் திண்ணப்பள்ளிக்கூட மாணவர்கள் தம் ஆசிரியருக்குக் கொடுக்குந் தட்சணயைக் கிராமத்தவரிடம் சேகரித்துக் கொடுப்பதற்காக இல்லந்தோறுஞ் சென்று ‘எண்ணெய்ச்சிந்து” என்னும் பாடல்களைப் பாடுவர். இப்பாடல்களில் குருகுலம் பற்றியும், கல்விமுறைபற்றியும், குழந்தைப்பேறு, குழந்தையின் அருமை, தாயின் அருமை பெருமை என்பனவும் கூறப்பட்டிருக்கும். இப்பாடல்களும் இவ்வாய்வாளராற் சேகரிக்கப்பட்டுள்ளன. 119. பி.இ. தா.பா. 4 பாடல் 4ஆ; தொ. பா. பொலி/ பாடல் 8 கண்ணி.10 120. 1î.N. 35T, U TT || 1. u TLSv 7, 14/ u FK Liv 11,

சமுதாய மரபுகளும். 3t)
சிவப்பு நிறமுடைய இச்சீலையைச் சாயச்சீலை என்றும், சோமன்121 என்றும் வழங்கினர். ‘சோமன்சோடு’ என்பது மணமகன் அணியும் பட்டுவேட்டியும் சால்வையுமாகும். ஆண்கள் சருகை வேட்டியும், சருகைச் சால்வையும் அணிதல்பற்றிய குறிப்பும் பாடலில் ?? வந்துள்ளது. சாறம்*** முஸ்லீம்களின் பாரம்பரிய உடையாகும்.
கிராமிய மக்கள் தமது அணிகலன் “பூணுரம்”** (பூண் + ஆரம்) என்றே வழங்குவர். அணிகலன்களிலே தாலி முக்கியமான தாகக் கருதப்படுகிறது. இங்குள்ள ஆண்களும் காதுகுத்தி, மின்னி, கடுக்கன் அணியும் வழக்கம் மிக அண்மைக்காலம் வரை யும் இருந்துவந்துள்ளது. கல்பதித்த மோதிரம்** அணியும் வழக்கமும் கூறப்படுகின்றது. ஆண்கள் அரையிலே பொன்னலும், வெள்ளியாலும், நூலாலும் ஆக்கப்பட்ட அரைநான்கயிறு ?? அணியும் வழக்கம் தொடர்ந்து இருந்துவருகிறது. பெண்கள் கொண்டைச்சீப்பும்?" பயன்படுத்தியுள்ளனர்.
சந்தனப்பொட்டு **
சந்தனப்பொட்டு, சந்தனமரம் பற்றிய குறிப்புகள் பாடல் களில் இடம்பெற்றுள்ளன. இந்துக்களின் சமயாசாரச் சின்னங் களுள் ஒன்ருகிய சந்தனம் முஸ்லீம்களது வாழ்க்கையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முஸ்லீம்கள் சந்தனத்தைத் திலகமாக வைப்பது வழக்கமில்லை. ஆனல் கையிலும் கழுத் திலும் பூசிக்கொள்வர் முஸ்லீம் பெண்கள் திருமணம் நடந்து மூன்று அல்லது ஏழுநாட்கள்வரை புதுத்தம்பதிகளின் இல்லத் திற்குச் சந்தனம் கரைத்துக்கொணர்ந்து மணமகனுக்குக் கழுத் திலும், உடம்பிலும் பூசிவிடுவர். இந்நிகழ்ச்சியை அவர்கள் *சந்தனக் கிண்ணிகொண்டு போதல்’ என்று கூறுவதும் நோக்குக.
மருந்தோண்டிபூசும் வழக்கம்?"
பண்டைத் தமிழ்ப் பெண்கள் செம்பஞ்சிக் குழம்பினலே தொயில் எழுதித் தம்மை அலங்கரித்தது போன்று, இப்பிரதேச
121. மேலது, 11 ஏ| பாடல் 11; தொ.பா. காவல் பாடல் 9, 10; 122. பி.இ. கா.பா. /2ஈ/ பபடல் 3; 23. மேலது, 12இ பாடல் 3; 124. மேலது, 13 பாடல் 10, தொ.பா. பொலி/ பாடல் 10 கண் ணி.6; 125. GiosugbJ, 5 T. LI T.. I2I LI TL6io 47;
126 மேலது, தா.பா. /4/ பாடல் 2உ;
127. மேலது, கா.பா. 12அ பாடல் 52. 128. மேலது 11.அ பாடல் 19, 20, 11ஈ| பாடல் 20. 129. பி.இ. கா.பா. 11ஐ பாடல் 28;

Page 165
302 மட்டக்களப்பு மாவட்ட.
முஸ்லீம் பெண்களும் ஆண்களும் மருதோண்டி என்னும் செந் நிறமை கொண்டு தமது உடம்பை அழகுபடுத்திக் கொள்வர். மருதோண்டி என்னுஞ் செடியிலிருந்தே இது தயாரிக்கப்படு கிறது. முஸ்லீம்களது திருமணத்திற்கு முதல்நாள் மணமகன் வீட்டிற்குப் பெண்கள் “மருதோண்டி எடுத்துச் செல்லுதல்’’ என்னும் ஒரு மரபு ரீதியான நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இதனைப்
“பரிசம் கொண்டுபோதல்’’ என்றும் கூறுவர். மட்டக்களப்பு முஸ்லீம் சமூகத்தில் முக்கிய சம்பிரதாயமாகக் காணப்படும் இந் நிகழ்ச்சியில், பெண்களே பங்குகொள்வர். மணமகளுக்கும்
மாப்பிள்ளைக்கும் பெண்களே மருதோண்டிபூசுவர்.189 இவர்கள் கைவிரல் கால் விரல் நகங்களிலும், உள்ளங்கை, புறங்கால் களிலும் அழகான முறையில் மருதோண்டி பூசிக்கொள்ளும் வழக்கம் உடையர்.
130. ஸமீம், முகமது, (24.4.1960)

முடிவுரை இயல் VIII
இவ்வாய்வின் மூலம் நாட்டார் பாடல் ஆய்வின் முக்கியத்துவம் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, நாட்டார் இலக்கிய ஆய்வாளர் கள ஆய்வு மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை யும், கள ஆய்வுமேற்கொள்ளாது இத்துறையில் ஈடுபட்டோரின் முயற்சிகளிலுள்ள குறைபாடுகளையும் இவ்வாய்வாளர் வலி யுறுத்திக் காட்டியுள்ளார்.
கிராமியப்பின்னணிகள், தொழில் முறைகள், சமுதாய மரபுகள், நம்பிக்கைகள், உணர்ச்சியனுபவங்கள் என்பவற்ருேடு, புராண இதிகாசக் கதைகளும் பாடற்பொருள்களாக அமைந் துள்ளமை, தாலாட்டுப் பாடல்கள், தொழிற்பாடல்கள் காதற் பாடல்கள் ஆகியனவற்றின் பொருளமைப்பாய்வில் விளக்கப்பட் டுள்ளது. பாடல்களின் ஆக்கமுறைகளைத் துணைக்கொண்டு இம் மூவகைப்பாடல்களினதும் வடிவ அமைப்பும் வரையுறுத்துக் காட்டப்பட்டுள்ளது,
மக்களின் வாழ்க்கை முறையிற் பயன்படும் வகையிலேதான் இப்பாடல்களின் முக்கியத்துவமும், இவற்றின் நிலைபேறும் தங்கி யுள்ளன. நாட்டார் இலக்கிய ஆய்வாளர் இத்துறையிற் கவனஞ் செலுத்த வேண்டியது மிக இன்றியமையாததாகும். மேற்கூறிய மூவகைப்பாடல்களின் பயன்பாடுபற்றி ஆராயப்பட்டு இவற்றின் முக்கியத்துவமும் புலப்படுத்தப்பட்டுள்ளது. இவ் வடிப்படையில் ஏனைய வகைப்பாடல்களும் ஆராயப்பட வேண்டும்.இத்துறையிற் சமூகஉளவியலாளர்(Socio Psychologist) ஈடுபடின் இவ்வாய்வு மேலும் ஆழ அகலம் கொண்டதாக அமை யும். இவ்வாய்வாளர் உளவியற்துறையில் அறிவு நிரம்பப் பெற்றவராக இருந்திருப்பின் இங்கு ஆராயப்பட்ட மூவகைப் பாடல்களின் பயன்பாடுபற்றிய ஆய்வு மேலும் நுட்பமாக அமைந் திருக்கும்.
ஒரு நாட்டின் பண்பாட்டு வரலாற்றில் நாட்டார் இலக்கியம் பெறும் முக்கியத்துவம் தோற்றுவாயில் வற்புறுத்தப்பட்டுள்ளது. கள ஆய்வின்போது இவ்வாய்வாளருக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சமுதாயமரபுகள்,நம்பிக்கைகள் ஆகியனபற்றிய தகவல் களும், சான்றுகளும் போதியஅளவு கிடைத்தனவெனினும்

Page 166
304 மட்டக்களப்பு மாவட்ட.
விரிவஞ்சியே இவ்வாய்வுநூலில் மூவகைப்பாடல்களிற் குறிப் பிடப்படுஞ் சமுதாய மரபுகள், நம்பிக்கைகள் என்பனபற்றி ஆராயப்பட்டுள்ளன. ஈண்டுக்குறிப்பிட்ட எஞ்சிய இயல்புகளை அமயம் வாய்க்கும்போது ஆய்வதே ஆய்வாளரின் நோக்க மாகும்.
குழந்தையைப் புகழ்ந்து பாடுவதிலே தாய் மட்டில்லா மகிழ்ச்சியடைவதைத் தாலாட்டுப்பாடல்கள் புலப்படுத்து கின்றன. குழந்தையைப் புகழும் பொருட்டுத் தாய் தானறிந்த புராண, இதிகாசக் கதாபாத்திரங்களுடனும், கதைநிகழ்ச்சி யுடனும் குழந்தையையும் தன்னையும் உறவினரையும் தொடர்பு படுத்திப்பாடியிருக்கும் மாண்பு பொருளமைப்பாய்வில் நன்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. குழந்தைக்குக் கிடைத்த அரிய, விலையுயர்ந்த பரிசுகளும், உடமைகளும் கூறப்பட்டிருப்பது தாயன் பின் ஆழத்திற்குச் சான்ருகும்.
குழந்தைப் பேறின்மையால் “மலடி” என்ற அவப்பெயராற் கட்டுப்பட்டுச் சமூகத்தினல் ஒதுக்கப்படும் இழிநிலையைத் தான் அடையாவண்ணம் தனக்குத் தாய்மையினை அளித்துக்குடும்பப் பெருமையினையும், குலமரபுத் தொடர்ச்சியினையும், காப்பாற்றிய தன் குழந்தையைப் புகழ்ந்து பாடுவதிலே தாய் கருத்துடையோ ளாகக் காணப்படுதலும் தெளிவாக்கப்பட்டுள்ளது, தாய்மைக்கும் சமூகத்திற்குமிடையேயுள்ள சமுதாயக் கண்ணுேட்டத்தை இணைத்துக்காட்டுவதாகத்தாலாட்டுப்பாடலின் பொருளமைப்புக் காணப்படுகிறது. விடயம், விபரம் என்னும் இரு அமைப்புகளின் கூட்டிணைப்பாகவே இப்பாடல்கள் ஆக்கம்பெற்றுள்ளன. குழந்தையைப் புகழ்தல், அழுங்குழந்தையை ஆற்றுதல், தாயின் தவமும் தவப்பயனும், உறவினர்பெருமை, குழந்தையின் சொத்துகள், சடங்குகள் என்னும் விடயங்களின் விபரமாகவே தாலாட்டுப்பாடல்களின் பொருளமைப்பு அமைந்திருத்தல் ஆய்வில் அவதானிக்கப்படுவதாயிற்று.
உவமை, உருவகம் ஆகிய ஈரணிகளும் தாலாட்டுப் பாடல் களின் பொருளமைப்பை ஆக்கஞ் செய்வதால் இப்பாடல்களில் இவை பெரும் செல்வாக்குடன் விளங்குகின்றன. ஒரே உவமை திரும்பத்திரும்ப இடம்பெறும் அமைப்பும் குறிப்பிட்ட உவமை வேறுவேறு அடைகளைப்பெற்றுத் திரும்பத்திரும்பவரும்அமைப்பும் தாலாட்டுப்பாடல்களின் பொருளமைப்பிற் குறிப்பிடத்தக்கதாக வுள்ளன. குழந்தையை வளர்ந்தோர்நிலையிற் கற்பனை செய்து பாடுந்தன்மையுங் காணப்படுகிறது. இப்பண்பே பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களிற் கையாளப்பட்டிருத்தல் காண்க.

முடிவுரை 305 ,
தாலாட்டுப் பாடல்களின் யாப்பினை நோக்குமிடத்து, இவை பெரும்பாலும் ஈரடிக் கண்ணிகளால் அமைந்த வடிவம் பெற் றுள்ளன. சில பாடல்கள் நான்கடியாலும் வடிவங்கொண் டுள்ளன. பாடலின் ஒவ்வோரடியும் இரு தொடர்களால் ஆக்கம் பெற்றும், கண்ணியின் முதலாம் வரியின் இறுதியில் அசைச்சொல் அமைந்தும் இப்பாடல்கள் வடிவம் பெற்றுள்ளமை அவதானிக்கப் படுவதாயிற்று.
இங்கு ஆராயப்பட்ட மூவகைப் பாடல்களிலே தாலாட்டுப் பாடல்களின் மொழிநடை திருந்திய நடையுடையதாகவும், சொற் களும் சொற்ருெடர்களுந்தரங் கொண்டனவாகவுங் காணப்படு கின்றன. இல்லில் இருந்து அமைதியான முறையிலே தாலாட்டுப் பாடப்படுவதாலும், தாயின் சிந்தனை தாலாட்டிலே பதிந்துவிடு வதாலும் ஏனையவகைப்பாடல்களைவிடத் தாலாட்டுப் பாடல் களின் மொழிநடை சிறப்புடையதாக விளங்குகின்றது எனக் கூறுதல் சாலும்,
தாலாட்டுப்பாடல்கள் கண்ணிதோறும் மோனைபெற்றுவ்ரும் அமைப்புடையன. குழந்தையைத் தாலாட்டுவதற்கு ஏற்றவகை யில் இழுபட்டுச் செல்லும் மெல்லோசையமைதியைத் தோற்று விப்பதற்கு மோனையமைப்பு ஏதுவாக அமைந்துள்ளது. எதுகை யமைப்பு மிகக் குறைவாகவே இடம்பெற்றுள்ளது. பெயர்ச் சொற்களுக்குப் பல அடைகளைக் கொடுத்து விரித்துக் கூறும் அமைப்பும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலும் ஈழத்திலும் வழங்கும்தாலாட்டுப்பாடல்களுக் கிடையே பொருளமைப்பிலும் சொல்லமைப்பிலும் நிலவும், ஒற் றுமை, இப்பாடல்கள் பரவியவிதம், இவற்றின் பிறப்பிடம் என்பன பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டுமென்ற எண்ணம்இவ்வாய் வாளருக்கு இவ்வாய்வினை நிகழ்த்தியபோது எழுந்திருக்கிறது.
தொழிற்பாடல்கள் தொழிலாளரின் களைப்பையும் சலிப்பை யும் போக்கி அவர்களுக்கு உற்சாகமளிப்பனவாகவும், அவர்கள் தம் கவலைகளையுங் கஷ்டங்களையும் மறந்து மகிழ்வுடன் தொழிற் படச் செய்விக்கும் இயக்கச்சத்தியாகவும் அமையுந் தன்மை யினலுந் தொழிலாளர் இப்பாடல்களை விரும்பிப் பாடுகின்றனர் என்ற பொதுக்கருத்தின் உண்மை களஆய்வின்போது உறுதி. செய்யப்பட்டது. இப்பாடல்களைத் தொழிற்களத்திற் பாட
வண்டும் என்ற மரபும் பின்பற்றப்படுகிறது.
Lô — 20

Page 167
306 LDL Lėšos GMTÜLH LIDmt GNU-L-...
யார், எவருடன், எப்போது, எச்சந்தர்ப்பங்களில், எவ்வாறு தொழிற் பாடல்களைப் பாடுகின்றனர்? பலர் சேர்ந்து தொழில் படும்போது யார் முதலிற்பாடுகின்ருர்? பாடுவோரை யாரும் பாடும்படி கேட்கின்றனரா? பாடும்போது அவர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றனவா? எவ்வாறு பாடும் ஆற்றலைப் பெறுகின்றனர்? இவ் வினக்களுக்குக் கள ஆய்வின் மூலம் விடை காணக்கூடியதாக இருந்தது இயந்திர உபயோகத் தினலே தொழிற்பாடல்கள் வழக்கொழிந்து போகின்றமையுங் கள ஆய்வில் அறியப் பட்டது. இப்பாடல் யாவற்றையும் உரிய முறையில் ஒலிப்பதிவு செய்து, தேசிய நூலகங்களிற் பாதுகாக்க முயற்சி எடுப்பதோடு, அவற்றை நூல் வடிவில் வெளிக் கொணரவும் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கவேண்டும் என்பதும் வலியுறுத்தப்படத் தக்கன
தொழிற்பாடல்களிற் பொலிப் பாடல்கள் தெய்வ சிந்தனை யையும், நெல்பொலிய வேண்டும் என்ற வேண்டுகோளையுந் தலைமைக்கருத்துகளாகக் கொண்டமைந்துள்ளன. சூட்டுக்களம் மாடுகள், இராப்பொழுது, பொழுது விடிதல் முதலியன பற்றிய வருணனைகள், புராண இதிகாசக் கதைகள் பற்றிய செய்திகள், சமுதாயப் பழக்க வழக்கங்கள், கடவுள் நம்பிக்கை ஆகிய விடங்கள் இப்பாடல்களின் பொருட்கூறுகளாக அமைந்துள்ளன. பொலிப் பாடல்களிற் பாலியல் உணர்வுகளோ, அவைபற்றிய சிந்தனைகளோ இடம் பெருமை சிறப்பாகக் குறிப்பிடற்பாலது. இப்பண்பு ஏனைய தொழிற்பாடல்களிலிருந்து, பொலிப்பாடல்களை வேறுபடுத்திக் காட்டுவதோடு, அவற்றின் தனித்தன்மையினையுங் குறிப்பிடு கின்றது. கடவுள் சிந்தனையுடனும், நம்பிக்கையுடனும் பொலிப் பாடலைப் பாடினுற், களத்தில் நெல்பொலியும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் இருத்தலால், பாடலின் பயன்பாட்டுப் பின்னணி, பாடலின் பொருளமைப்பையுங் கட்டுப்படுத்துகின்றது.
பொதுவாகப் பொலிப்பாடல்கள் தவிர்ந்த ஏனைய தொழிற் பாடல்களுக்கு இன்னதுதான் பொருள் என்று வரையறுத்துக் கூற முடியாதுள்ளது. தொழிலாளரின் கட்புலனுக்குத் தோன்று வனவும், அவர்களின் நினைவலையில் ஊசலாடுவனவும், அவர்களின் விருப்பு, வெறுப்பு, குறிக்கோள் என்பனவும் பாடற்பொருளாக அமைதல் கவனிக்கப்பட்டது. அன்றியுந் தொழிற்பாடல்களிலுங் காதற்பாடல்களிலும் ஆண்பெண் உறவும், அவ்வுறவின் அடிப் படையில் நிகழுங் காமம், கனவு, துயரம், பரிகாசம் என்பனவும் பாடற் பொருளமைப்பில் முக்கியத்துவம் பெறுதலும், அவை பயன் பாட்டடிப்படையில் இன்றியமையாதனவாகக் காணப்படுதலும் ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

(рц6у69)дт 307
வயல் வேலையுடன் தொடர்புடைய ஏனைய தொழிற்பாடல் களின் பொருளமைப்பிலே தொழிற்களப் பின்னணியும். தொழிலாளரின் தன்னுணர்ச்சி அனுபவங்களும், சிந்தனைகளும் அவர்களது வாழ்க்கைக் கஷ்டங்களும் இடம் பெற்றுள்ளன. சூடு மிதித்தல் தவிர்ந்த ஏனைய தொழிற்களங்களிற் 'கவி பாடும் மரபு இப்பிரதேச மக்களிடையே காணப்படுதல் கள ஆய்வில் அவதானிக் கப்பட்டது. தாம்புரியுந் தொழில்களையும், தம்வாழ்க்கைப் பிரச்சினைகளையுங் தொடர்பு படுத்திக் கவிபாடப்படுகின்றமையும், அவை பெரும்பாலும் காதற்பாடல்களாகவே அமைந்துள்ள மையும் அறியப்பட்டன. தொழிலாளர் தொழிற்களங்களிற் காதலுணர்ச்சிக் கவிகளைப் பாவனையாகவும், போட்டியாகவும், பாடுவதில் அதிக ஆர்வமும் உற்சாகமுங் கொள்வதைக் கள ஆய்வில் அவதானிக்கக்கூடியதாக விருந்தது.
மீனவர், பொதுவாக ஏனைய தொழிலாளர்களைவிட உடல் வருந்தித் தொழிற்படுபவர்களாவர். எனவே உடற்சோர்வைப் போக்கி உற்சாகமும், உளச்சலிப்பை அகற்றிப் புத்துணர்ச்சியும் பெறவேண்டி அவர்கள் பாடல்களைப் பாடுகின்றனர். இவர் களது பாடல்களிலே இணைவிழைச்சித்தன்மை மிதமிஞ்சிக் காணப் படுதலும், அதற்குரிய காரணமும் விளக்கப்பட்டுள்ளன. இத் தகைய பாடல்களை இவர்கள் விரும்பி, ஆர்வத்துட்ன் பாடுவதைக் கள ஆய்வில் அவதானிக்க முடிந்தது. மீன்பிடிப்பாடல்களிற் சிங்கள மொழிச்சொற்கள் காணப்படுதல், இவ்விரு மொழிபேசும் மக்கள் கூட்டுத்தொழில் புரிந்தமையினையும், பண்பாட்டுத் தொடர்பினையும் தொடர்புபடுத்திக் காட்டுகின்றது.
தொழிற்பாடல்களை ஏனேயவகைப்பாடல்களுடன் ஒப்பிடும் போது, இவற்றில் உவமை, உருவகங்கள் மிகக்குறைவாகவே இடம்பெற்றுள்ளன. தொழிலாளரின் கவனம் தொழிலிற் பதிந்துவிடுவதாலும் உடல் வருந்தித் தொழிற்படுவதாலும் இவர் களாற் கற்பனை செய்து பாடமுடிவதில்லை என்பது பொருந்தும். எனினும் ஆறுதலாக இருந்து தொழிற்படும்போது (காவற்பரண் கவிகள்) பாடப்படும் கவிகளிற் கற்பனநலம் இடம்பெறுதலும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
தொழிலாளரின் இயக்கநிலைக்கு ஏற்றதாகவே பாடல்களின் வடிவ அமைப்பும், இசையமைப்புங் காணப்படுகின்றன. ஆறுத லாகத் தொழிற்படும்போது (உழுதல், மிதித்தல், சூடுமிதித்தல்) பாடும்பாடல்கள் நீண்ட அமைப்புடையனவாகவும், வேகமாகத் தொழிற்படும்போது பாடும்பாடல்கள் (மீன்பிடிபாடல்) குறுகிய வடிவங்கொண்டனவாகவும் அமைந்துள்ளன.

Page 168
303 மட்டக்களப்பு மாவட்ட
சங்க அகத்திணைப்பாடல்கள் பழந்தமிழ் மக்களின் காதல் வாழ்க்கை நெறிபற்றிய செய்திகளைக் கட்டுக்கோப்புடைய புல நெறிவழக்கிலே சித்திரித்துக் காட்டுகின்றன. ஆனல் நாட்டார் பாடல்களிற் காதல் உணர்ச்சிகளும், காதல்வாழ்க்கையும் எவ்வித மரபுகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படாது கூறப்பட்டிருத் தல் சிறப்பம்சமாகும். பண்டைக் கிராமிய சமுதாய அமைப்பிற் காதற்பாடல்களின் காதல் சார்ந்த பயன்பாடும், தேவையும் காணப்பட்டன. ஆனல் இன்றைய சமுதாய வளர்ச்சிநிலை, சூழ் நிலைமாற்றம் என்பவற்ருற் காதற் பாடல்கள் காதலருக்குப் பயன் படுவனவாக இல்லை என்பதும், அவை தொழிற்களப் பின்னணி யிலும் பொழுதுபோக்கு அடிப்படையிலும் பயன்பட்டுவரு கின்றன என்பதும் கள ஆய்வின்மூலம் வரையறுத்துக் கூறக் கூடியதாகவுள்ளன. எனவே இன்று வழக்கிலுள்ள காதற்பாடல் கள் யாவும் பாவனையடிப்படையிற் பயன்படுகின்றன என்பது தேற்றமாகும். இப்பாடல்களிற் கிராமிய மக்களின் காதலுணர்ச்சி களும், கிராமிய வாழ்க்கைமுறையும், பழக்கவழக்கங்களும் பொருள்களாக அமைந்துள்ளன.
பாடகரின் வயது, அனுபவம், உணர்ச்சிநிலை, மனேநிலை என்ப வற்றுக்கேற்பவே அவர்களது பாடற்பொருளும் அமைந்துள்ளன. ஆண்களின் காதற் பாடல்களில் உணர்ச்சிவேகமும், இணை விழைச்சிப்பொருளுஞ் சிறப்பியல்புகளாம். பெண்கள் பாடும் பாடல்களில் இன்பதுன்ப நிகழ்ச்சிகளுள், குடும்பப் பிரச்சினைகள் ஆகிய பொருளம்சங்கள் சிறப்பியல்புகளாம். தொழிற்பாடல் களிலும் காதற்பாடல்களிலும் இணைவிழைச்சித்தன்மை பெரிதுங் காணப்படுவதற்குப் பாடல்களின் பயன்பாடும், அவை பயன் படும் பின்னணியுமே காரணங்களாகும்.
தாலாட்டுப்பாடல்களைப் போன்றே காதற்பாடல்களிலும் உவமை உருவகம் பெரும்செல்வாக்குப் பெற்றுள்ளன. ஒரே உவமை உருவகம் இருபாலாருக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளமை யும் குறிப்பிடற்பாலது. பாடற்பொருளைக் கொண்டே பாடலிற் பயின்று வந்துள்ள குறிப்பிட்ட உவமை, உருவகம் ஆணையோ அல்லது பெண்ணையோ குறிக்கிறது என அறிய வேண்டியுள்ளது. செந்நெறிஇலக்கியங்களில் மரபுவழிப்பட்ட உவமை,உருவகங்களே கையாளப்படும். நாட்டார் பாடல்கள் அத்தகைய மரபுகளுக்குக் கட்டுப்பட்டனவல்ல. செந்நெறி இலக்கியத்திற் பெண்ணைக் கொடியாகக் கற்பனைசெய்வதே புலவர் வழக்கு. நாட்டார் பாடலில் இதற்கு மாருகப் பெண் ஒருத்தி தன் காதலனைக் கொடி யாகக் கற்பனை செய்திருத்தல் ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பிடற் Lu 6n)ğ5I .

முடிவுரை 309
செந்நெறி இலக்கியமும் நாட்டார் இலக்கியமும் இருவேறு நெறிப்பட்டன எனக் கூறப்படினும், இவை ஒன்றையொன்று வளம்படுத்தி வந்துள்ளமையால், இவற்றிடையே ஒற்றுமைகள் காணப்படுதல் இயல்பே. இவ்விரு இலக்கியங்களிடையே சொல் லிலும், பொருளிலும், வடிவிலும் ஒற்றுமைகள் இடம் பெற்றுள்ளன. ஆதலினலேயே இங்கு ஆராயப்பட்ட மூவகைப் பாடல்களுக்கும் இயன்றவரை செந்நெறி இலக்கிய ஒப்புவமைகள் காட்டப்பட்டுள்ளன.
நாட்டார் இலக்கியத்தைப் பொறுத்தவரையிற் பயன்பாட்டு ஆய்வு மிக்க இன்றியமையாதது. மக்கள் வாழ்க்கையில் இப் பாடல்கள் எவ்வாறு எத்தகைய சூழ்நிலையிற் பயன்படுகின்றன என ஆராயும்போதே அவற்றின் பொருள்நிலை முழுமையாகப் புலப்படு வதோடு அவை குறிப்பிடுஞ் சமுதாயமரபுகள், நம்பிக்கைகள் என்பனபற்றி அறியவும்வாய்ப்புஏற்படும்.அவ்வடிப்படையிலேஇம் மூவகைப்பாடல்களும் எவ்வகையிற் பயன்படுகின்றன என்பதைத் தனித்தனியே ஆராய்ந்து அவற்றின் முக்கியத்துவம் ஆரும் இயலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
கிராமிய சமுதாய அமைப்புகளும், மரபுகளும், பண்பாட்டுச் சின்னங்களும் (Material Culture) நகர நாகரிகத்தாக்கத்தினுலும் விஞ்ஞான வளர்ச்சியின் பாதிப்பினலும் சீரழிந்துவரும் இந்நாட் களில், நாட்டார் இலக்கிய ஆய்வின்மூலம் பழைய கிராமியப் பண்பாட்டு விடயங்கள் விளக்கம்பெறுகின்றன. ஏற்கனவே வழக்கொழிந்து போனதும், இன்றைய மக்களால் அண்மைக் காலங்களிலே மறந்து விடப்பட்டதுமான சமுதாயமரபுகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் என்பன நாட்டார் பாடல் களின் மூலம் அறியக்கூடியனவாக இருக்கின்றன. எனவே கள ஆய்வின்மூலம் இப்பாடல்களையும், இவற்றுடன் தொடர்புடைய சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் முதலானவற்றையுஞ் சேகரித்து ஆய்வுமேற்கொள்ளும்போது குறிப்பிட்ட ஒரு பிரதேச மக்களின் கிராமியப் பண்பாட்டு விடயங்களை ஆய்வாளர் நிறுவக் கூடியவராகின்றர். அம்முறையில், இவ்வாய்வாளர் நாட்டார் பாடல்கள் குறிப்பிடும் தகவல்களைக்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சமுதாயமரபுகள், நம்பிக்கைகள் கிராமிய பண்பாட்டுச் சின்னங்கள் என்பனபற்றி விரிவாக ஆராய்ந் துள்ளார். இப்பிரதேச மக்களின் சமுதாயமரபுகள்பற்றிய ஆய்வுக்குரிய விடயங்கள் இன்னும்பல விரிந்துகிடப்பதைக் கள ஆய்வில் அறியக்கூடியதாகவிருந்தது. இத்துறையில் மேலும் ஆய்வாளர் ஈடுபடக்கூடிய அரிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

Page 169
310 மட்டக்களப்பு மாவட்ட.
இம்மாவட்டத்தில் நாட்டார் பாடல்களின் பல்வகைப்பாடல் களும், கதைகள், பழமொழிகள், விடுகதைகள் என்பனவும், நாட்டுக்கூத்து, வசந்தன், கரகம் முதலிய கிராமிய நாடக, நடன வகைகளும் பெருவழக்கிலுள்ளன. இவைபற்றித் தனித்தனியே ஆராயத்தக்க வாய்ப்புகள், ஆய்வாளர் பலரை எதிர் நோக்கி யுள்ளன என்பதும் குறிப்பிடற்பாலது. இப்பிரதேச மக்களுக்கும் கேரள நாட்டினருக்கும் பண்பாட்டுத் தொடர்புகள் காணப்படு கின்றன. பண்பாட்டியலாளரும் வரலாற்ருய்வாளரும் நாட்டார் இலக்கியத்தைத் துணைக்கொண்டு இப்பிரச்சினையை ஆராயும் போது பண்பாட்டு, வரலாற்றுண்மைகள் பல வெளிவரக் கூடிய சூழ்நிலைகள் தென்படுகின்றன. ஈழத்திற் சிங்கள மக்களுந் தமிழ் மக்களும் மிக நீண்ட காலமாக வாழ்ந்துவருகின்றமையால், இவ் விரு இனத்தவரிடையே பண்பாட்டுத் தொடர்புகள் காணப்படு தல் இயல்பே. கண்ணகி வழிபாட்டுடனும் தொழிற்றுறை களுடனுந் தொடர்புடையனவாக இவர்களிடையே வழக்கிலுள்ள நாட்டார் இலக்கியங்களிலே ஒற்றுமைகள் காணப்படுவதால் இத்துறையிலும் ஒப்பிட்டு ஆய்வினை மேற்கொள்ளுதல் பயனுடைய தகும்,
பின்னிணைப்பிலே தரப்பட்டுள்ள பாடல்கள் இப்பிரதேச மக்களின் மொழிநடையைப் பிரதிபலிப்பனவாக அமைகின்றன. மொழிவல்லுநர் இப்பாடல்களைத் துணைக்கொண்டு இம்மக்களின் பேச்சுமொழிபற்றி ஆராய்வதற்கும் வாய்ப்புண்டு,
இவ்வாய்வில் மூவகைப் பாடல்கள் பற்றியே ஆராயப் பட்டுள்ளன. ஏனைய வகைப்பாடல்கள் பற்றியும் ஆராயப்படும் போதுதான் மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள் பற்றிய ஆய்வு முழுமைபெறும். ஈழத்தின் ஏனைய மாவட்டங்களிலுள்ள நாட்டார் பாடல்கள்பற்றி ஆராய்ந்து, அவற்றை ஒப்பியல் அடிப் படையில் நோக்கும் போதே ஈழத்தின் நாட்டார்பாடல்கள் பற்றிய பொதுவியல்புகளை ஆராய்ந்து நிறுவக்கூடியதாக இருக்கும்.

துணைநூல் அட்டவணை
1 - தமிழ் நூல்கள்
அருணசலம், மு. (1943) காற்றிலே மிதந்த கவிதை, மதுரை,
சென்னை, சக்தி காரியாலயம். --- (1949) முக்கூடற்பள்ளு, 2 ஆம் பதிப்பு, சென்னை,
தமிழ்நூலகம். அருளம்பலவனர், சு. (1967) (உரை) திருவாசகம், காரைநகர்
பூரிலங்கா புத்தகசாலை. அழகப்பன், ஆறுமுகம் (1966) (தொகுப்பு) தாலாட்டுப் பாடல்கள்,
சிதம்பரம், பாண்டியன் அச்சகம். ---- (1973) நாட்டுப்புறப் பாடல்கள் - திறனுய்வு, சென்னை,
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். ஆறுமுகநாவலர் (1957) திருக்கோவையார், 7 ஆம் பதிப்பு சென்னை
நாவலர் அச்சகம். உ (1963) நன்னூல் காண்டிகையுரை 23 ஆம் பதிப்பு
சென்னை, ஆறுமுகநாவலர் அச்சகம். இராகவையங்கார், மு. (1964) ஆராய்ச்சித் தொகுதி, 2 ஆம்
பதிப்பு, சென்னை, பாரிநிலையம். இராமலிங்கம், மு. (1961) வட இலங்கையர் போற்றும் நாட்டார்
பாடல்கள், யாழ்ப்பாணம். கந்தையா, வி. சீ. (1964) மட்டக்களப்புத் தமிழகம், யாழ்ப்பாணம்
ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டுமன்றம். காசிமடம் (1960) (பதிப்பு) திருக்குறள், திருப்பனந்தாள்,
திருக்குறள் பதிப்புநிதி வெளியீடு. காசிவிசுவநாதன் செட்டியார், வெ.பெரி.பழ.மு., (1960) (பதிப்பு)
கலித்தொகை, சென்னை. குமரகுருபரன்பிள்ளை, f). 6 turb... (1961) பதிப்பாசிரியர்,
திருஞானசம்பந்தர் தேவாரம், பூரீவைகுண்டம், பன்னிரு திருமுறைப் பதிப்புநிதி வெளியீடு. --- (1961) திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
பூரீவைகுண்டம் பன்னிருதிருமுறைப் பதிப்பு நிதி வெளியீடு.

Page 170
312 மட்டக்களப்பு மாவட்ட.
--- (1964) பதிப்பாசிரியர், சேக்கிழார் பெரியபுராணம், பூரீவைகுண்டம், பன்னிருதிருமுறைப் பதிப்புநிதி வெளியீடு, கைலாசபதி.க. (1972) இலக்கியமும் திறனுய்வும், யாழ்ப்பாணம்,
வரதர் வெளியீடு. கோபாலமாசாரியர், வை.மு. (1963) (உரை) கம்பராமாயணம், சென்னை, வை.மு. கோபாலமாசாரியர் கம்பனி. சதாசிவஐயர், தி. (1940) (பதிப்பு) மட்டக்களப்பு வசந்தன்
கவித்திரட்டு, கல்முனை. சாமிநாதஐயர், உ.வே. (1927) (பதிப்பு) சிலப்பதிகாரம், சென்னை,
கேஸ்ரி அச்சகம், X ---- (1961) பத்துப்பாட்டு, 6 ஆம் பதிப்பு சென்னை, கபீர்
அச்சகம், --- (1956) பரிபாடல், 4 ஆம் பதிப்பு, சென்னை, கபீர்
፰ அச்சகம், ---- (1957) ஐங்குறுநூறு, 5 ஆம் பதிப்பு, சென்னை, கபீர்
அச்சகம். --- (1957) சங்ககாலத்தமிழும் பிற்காலத் தமிழும், சென்னை
கபீர் அச்சகம். --- (1962) குறுந்தொகை, 4ஆம் பதிப்பு, சென்னை, கபீர்
அச்சகம் --- (1963) புறநானூறு, 6 ஆம் பதிப்பு, சென்னை, கபீர்
அச்சகம். சிதம்பரனர், சாமி (1963) சிலப்பதிகாரம், 2ஆம் பதிப்பு, சென்னை.
ஸ்டார் பிரசுரம், சுப்புரெட்டி, ந. (1961) கவிதை அனுபவம், சென்னை, சைவ
சித்தாந்த நூற்பதிப்புக்கழகம். செயராமன், ந.வீ. (1965) தூது இலக்கியங்கள், சிதம்பரம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், (1959) சிற்றிலக்கியச் சொற்
பொழிவுகள், (பிள்ளைத்தமிழ்); சென்னை. ---- (1961) (பதிப்பு) திருக்குற்றலக் குறவஞ்சி, சென்னை. --- (1963) (பதிப்பு) தொல்காப்பியம், சென்னை. ---- (1963) (பதிப்பு) பன்னிருபாட்டியல், சென்னை, சோமசுந்கரப் புலவர், (நந்தனவருடம்) சிறுவர் செந்தமிழ்,
யாழ்ப்பாணம்.

தமிழ் நூல்கள் 313
"சோமலே (இலக்குமணச் செட்டியார்) (1921) கன்னியா குமரி
மாவட்டம், சென்னை. ---- (1960) செட்டிநாட்டுத் தாலாட்டு, சென்னை, பாரிநிலையம். ஞானசம்பந்தன், அ. ச. (1956) இலக்கியக்கலை, 2 ஆம் பதிப்பு,
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ர். 'தமிழண்ணல்" (இராம, பெரியகருப்பன்) (1960) காதல் வாழ்வு,
காரைக்குடி, செல்வி பதிப்பகம். ---- (1963) தாலாட்டு, காரைக்குடி செல்வி பதிப்பகம். நாராயணசாமிஐயர், ஏ. (1956) (உரை) நற்றிணைநானூறு,
சென்னை, சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம். பரமசிவானந்தம், அ.மு. (1964) வாய்மொழி இலக்கியம், சென்னை,
தமிழ்க் கலைப்பதிப்பகம். மணலிலக்ஷமணமுதலியார், (1950) (வெளியீடு) நாலாயிரத்திவ்வியப்
பிரபந்தம் சென்னை, ஸ்பெசிபிக் எண்டோமெண்ட்ஸ், மாணிக்கம், வ. சுப. (1962) தமிழ்க் காதல். காரைக்குடி, செளத்
இந்தியா பிரசு, முத்துச்சண்முகன் (மு. சண்முகம்பிள்ளை) (1973) இக்காலத் தமிழ்
2 ஆம் பதிப்பு, மதுரை, சீயோன்பதிப்பகம். வரதராசன், மு. (1959) இலக்கியத்திறன், சென்னை, பாரிநிலையம். --- (1972) தமிழ் இலக்கிய வரலாறு, புதுதில்லி, சாகித்திய
அக்காதெமி. வானமாமலை, நா. (1960) (தொகுப்பு) தமிழ் நாட்டுப் பாமரர்
பாடல்கள், சென்னை, எல். சி. எச். பிரைவேட்லிட். --- (1964) (தொகுப்பு) தமிழர் - நாட்டுப் பாடல்கள்,
சென்னை, நியூசெஞ்செரி புக்ஹவுஸ் பிரைவேட் லிட். வித்தியானந்தன், சு. (1954) தமிழர் சால்பு (சங்ககாலம்) கண்டி,
தமிழ் மன்றம். ---- (1960) (பதிப்பு) மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள்,
கொழும்பு. விபுலாநந்த அடிகள், (1947) யாழ் நூல், கரந்தைத்தமிழ்ச்
சங்கம். வேங்கடசாமி நாட்டார், ந. மு. துரைசாமிபிள்ளை, ஒளவை. சு. (1964) (உரை) மணிமேகலை, சென்னை, பா. த. வை.இ.
தமிழ்ச்சங்க வெளியீடு. வேங்கடசாமி நாட்டார், ந. மு. வெங்கடாசலம்பிள்ளை (1944
1946) (உரை) அகநானூறு, சென்னை.

Page 171
314 மட்டக்களப்பு மாவட்ட.
வையாபுரிப்பிள்ளை, எஸ். (1957) தமிழ் இலக்கியத்திற் காவிய
காலம், சென்னை, தமிழ்ப் புத்தகாலயம், ஜகந்நாதன், கி. வா. (1944) (பதிப்பு) நாடோடி இலக்கியம் (கட்டுரைகள்), மயிலாப்பூர், சென்னை, கலைமகள் காரியாலயம். ---- (1958) (பதிப்பு) மலையருவி, சென்னை, தஞ்சை
சரஸ்வதி மஹால், வெளியீடு.
ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்திரபாலா, கா. (1968) "கிழக்கிலங்கைச் சாசனங்கள்",
சிந்தனை, மலர் 2, இதழ் 2, 3 ஜூலை - ஒக்டோபர்,
பக். 40-48. சதாசிவம், ஆ. (1963) “தொல்காப்பியரின் இலக்கணக்
கொள்கைகள்' கலைப்பூங்கா இலங்கை சாகித்திய
மண்டல வெளியீடு, இதழ் 1, பக். 19-36
சுசீந்திரராசா, சு. (1973) “நாட்டார்பாடல் மொழி’, வெள்ளி விழாமலர், பாலர்ஞானேதயக் கழகம், மயிலிட்டி,ஏப்ரல் பக். 5-10,
சுப்பிரமணியம், நா. (1968) ‘சிலம்புச் செல்வியும் சிங்கள இலக்கியமும், இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டு ஆராய்ச்சிக் கருத்தரங்கு மலர், மூன்ருந் தொகுப்பு, உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம், சென்னை, பக். 156-167.
தமிழவன் (1975) “ஐங்குறு நூற்றில் நாட்டுப்பாடல் பண்பு” புலமை, பல்கலைக் காலாண்டு இதழ், சென்னை 1:4 பக், 51-71.
நவசோதி, க. (1968) இலங்கை இந்தியத் தோட்டத் தொழி லாளரின் வரலாற்றினை ஆய்ந்து, தேர்வதற்குரிய மூலாதாரமாக நாட்டுப் பாடல்கள் வகிக்கும் இடம், இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டு ஆராய்ச்சிக் கருத் தரங்கு மலர், மூன்ருந் தொகுப்பு, உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம், சென்னை, பக். 122-129. பரமசிவானந்தம், அ. மு. (1959) "தலைமையுரை', சிற்றிலக்கியச் 'சொற்பொழிவுகள் (பிள்ளைத்தமிழ்) சென்னை, சைவ சித்தாந்த நூற் பதிப்புக்கழகம், பக். 1-34. --- (1974) 'நாடோடிப் பாடல்காட்டும் நம்பிக்கை’, நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள், சென்னை, தமிழ்ப் பண்பாட்டுமன்றம், பக்.9-24.

தமிழ் நூல்கள் W 315
பாலசுந்தரம், இ. (1974அ) "பண்டைக் குரவைக் கூத்தும் மட்டக்களப்புக் குலவை போடுதலும், நான்காவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
soos www wx.wwww - x (1974ஆ) இலங்கை நாட்டார் இலக்கியத்தில் வசந்தன்
பாடல்கள், நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள், சென்னை, தமிழ்ப்பண்பாட்டு மன்றம், பக். 25-42. மங்கை, டி. (1974) தாலாட்டு ஓர் சமுதாய மதிப்பீடு' ஆராய்ச்சி, மலர் 4, இதழ் 4, ஒக்டோபர் பக். 337-343. விபுலாநந்த அடிகள் (1941) ‘சோழமண்டலத் தமிழும் ஈழ
மண்டலத் தமிழும்', கலைமகள், தொகுதி, 19. செய்தித்தாள்கள் : இராமலிங்கம், மு. (1950) “கிராமியப் பாடல்கள்’ சுதந்திரன்,
7. 6. 1950, 18. 6, 50. ஸமீம், முகம்மது (160) “மட்டக்களப்பு முஸ்லீங்களின் திருமண
சம்பிரதாயங்கள்" தினகரன், 24, 10. 1960.

Page 172
II. É NGLISH BOOKS
Aarne, Antti, (1928) The types of the Folktales, a classification
and bibliography, Translated by Stith Thom pОSn Helsinki. Abbott, G.F. (1903) Macedonian Folklore, Cambridge
Combridge University Press. Abeyasinghe, Tikiri (1966) Portuguese rule in Ceylon 1954-16I2
Colombo, Lake House Investments. Adikaram, E.W. (1953) Early History of Buddhism in Ceylon,
Colombo, M.D. Gunesena & CO, Bedi, Sohinder Singh, (1971) Folklore of the Punjabi, New Delhi
National Books Trust. Berlson, Bernard, (1952) Content analysis in Communication
research, Illinoise, Glence, Bhagwat, Durga, (1958) An outline of Indian Folklore, Bombay
Popular Book Depot,
Blalock, Ann Bonar and Blalock, Herbert Mosre, (1968)
Methodology in social research, NewYork, McGraw-Hill.
Bowra, C.M., (1962) Primitive Songs, London, Weidenfeld &
Nicolson.
- - - (1966) Heroic Poetry, NewYork, Macmillan
and Co.,
Burne, C. Sophia, (ed.) (1914) The hand book of Folklore,
London, Folklorê Society.
Canagaratnam, S.O. (192) Monograph of the Batticaloa
District, Colombo.
Cauldwell. C. (1946) Illusion and reality, London.
Cauldwell, Robert, (1956) A Comparative Grammar of the Dravidian or South Indian family of Languages, Madras, University of Madras.
Ceylon, Arts Council (1953 Annual Report of Art Council.

ஆங்கில நூல்கள் 317
Ceylon, Department of Census and Satistics, (1953)
Census of Ceylon, Vol. IV, Part, I. - - - (1963) Census of Ceylon Batticaloa District.. - - - (1963) Census of Population, Batticaloa District.
- - (1971) Preliminary Report on socio-economic survey
of Ceylon, 1969-1970 October. - - - (1971) Census of Ceylon. Chadwick. H. Munro and Chadwick N. Kershaw, (1968) The growth of literature, Vols : 1, 1, 111, Cambridge, Cambridge University Press, (Reprint).
Chaitanya, Krishna (1971) A History of Malayalam Literature
New Delhi, Orient Longmans,
Coffin, Tristram, P. & Cohen Henning (eds) (1966) Folklore in America, Tales, Songs, Suppertions. Prorebs, fiddles, Games. Folk Dramas, and Folkfestinals, NewYork, Doubbday. Daiken, Leslie, 1959) The Lullaby book, London, Edmand
Ward Publishers. Dorson, R. M. (1959) American Folklore, Chicago, University
of Chicago Press. w Dundes, Alan, (ed) (1961) The Folklore Research Around the
World, Bloomington, 1ndiana University. - - - (1965) The Study of Folklore, Englewood,
Colifornia, Printice-Hall lınc.. Firth, Raymond, (ed.) (l968) Man and Culture : an evaluation of the work of B. Malinowski, 4th Edition, London, Routlege and Kegan Paul, (reprint). Fox Strangway, A. H. 1970, The music of Hindustan, 4th Editions
Oxford, Clarendon Press (Reprint) Frazer, James George, (1922) The Golden Bough: a study in magic and religion, London, Macmillan & Co. Freud, Sigmond, (1954) The Interpretation of dreams.
Translated by James Strachey, London, George Allen & Unwin. Gallop, Rodney, (1961) Portugal: a book of folk-way,
Cambridge, Cambridge University Press.

Page 173
318 மட்டக்களப்பு மாவட்ட.
Galtung, John (1967) Theory and methods of social Research,
London, George Allan & Unwin.
Gennep, Arnold Van. (1960) The rites of passage, Translated by Morika B. Vizedon and Gabrielle, 1. Caffee, London, Routledge & Kegan Paul. Gerovld, Gorden Hall (1957) The ballad of tradition,
NewYork, Oxford University Press. Godakumbura, C. E. (1955) Sinhalese, Literature, Colombo,
Colombo Apothecaries. Goldstein, Kenneth. S. (1954) A guide for field workers in folklore, Pennsylvaniya, The American Folklore Society. Greenway, John (1964) Literature among the Primitives
Hatboro, Pennsylvania, Folklore Associate.
Gupta, Sankar Sen and Upadyaya, K.D. (eds.) (1964) Studies in India folk culture : folk songs, folk arts, and folk Literature, Calcutta, Indian Publications, Folklore
Series, No. 3. Gupta, Sankar Sen, (1965) Folklorists of Bengal: life sketches and bibliographical notes, Calcutta. India publications. Guruge, Ananda, (1960) The society of the Ramayana,
Maharagama, Saman Press. Halliwell, James Orchard, (1970) (Collected) Popular rhymes and nursery tales of England London, The Bodley Head. Hameed, K.P. S. (1961) Folklore of Tamil Nad, M. Litt.
Thesis, University of Kerala, Unpublished typescript: Harris Marvin, (1968) The rise of anthropological theory: a history of theories of culture, London, Routledge and Kegan Paul. Hart, Don. V. (1964) Riddles in Pilipino folklore:- an anthru pological analysis, NewYork, Syracuse University Press. Hart, Don. V., Rajodhon, Phya Anuman and Coughlin, Richard J. (1965) South East Asian birth customs: Three studies in humun reproduction, New haven (Conn), Human Relation area files Press.

ஆங்கில நூல்கள் 319
Herskovits, Melville, J., (1958) Cultural anthropology, Calcutta
Oxford & IBH Publishing Co...
Hokett, Charles F., (1958) A course in mordern linguistics,
New York, Macmillian Co.
Hosbel, Edward Adamson (1968) Man in the Primitive world:
an introduction to anthropology 2nd Edition, London, McGraw - Hill. m
Hugill, Stam, (1961) Shanties from the Seven Seas, London,
Routledge and Kegan Paul
Tona, and Opie, Peter (eds.) (1966) The Oxford dictionary of nursery rhymes, Oxford, The Clarenden Press,
Jespersen, Otto (1954) Language, its nature, development and
origin, London, George Allen Unwin, Teith Impression.
Jeyasekara, U.D. (1969) Early History of Education in Ceylon,
Colombo.
Kailasapathy, K. (l)68) Tamil heroic poetry, Oxford, Oxford
University Press.
Krappe, Alexander H. (1964) The Science of folklore,
New York, W.W. Norton and Co.
Kroeber, A.L. (ed.) (1970) Anthropology today: an
encyclopaedic inventory, Chicago, University of Chicago
Press.
Lomax, Alan, (1966) The folk songs of North America in the English Lauguage, 3rd Edition, New York, Doubleday & Company. Lord, Albert, B. (1960) The Singer of tales, Cambridge
Havard University Press. Lundberg, G.A. (1968) Research Methodology in social relation,
New York, GreenWood Press. Majumdar, D.N. and Madan, T.N. (1961) An introduction to social anthropology, Bombay, Asia Publishing House. Malinowski, Bronislaw, (1926) Myth in primitive psychology, メ London. Kegan Paul, Trench, Trubner.
---- (1966) Coral gardens and their magic, Vol. I.
London, George. Allanó,Unwin,

Page 174
320 மட்டக்களப்பு மாவட்ட.
Meenakshisundaram, T.P. (1961) Prof. T. P. Meemakshi - sundaram's sixty first birth day Commemoration Volume Annamalai Nagar, Annamalai University.
-- - - (1965) A History of Tamil Literature, Annamala
Nagar, Annamalai University.
Mukergee, Shyamchand (1969) Folklore museum, Calcutta,
Indian Publications.
Perera, S.G. (1949) A History of Ceylone for Schools1505-1911,
Colombo. The Associated News papers of Ceylon.
Radcliffe - Brown A.R. ( 1939) Taboo the Frazer Literature,
Cambridge, Cambridge University Press.
Radcliffe-Brown, A.R. (1952) Strueture and function in Primitive
Society, London, Cohen & West Ltd.
Raghavan, M.D. (1964) India in Ceylonese History, Society and Culture, New Delhi, Indian council for cultural relations.
------- (No date) Tamil Culture in Ceylon: a general
Introduction, Colombo, Kalai Nilaiyam Ltd.
Rajadhan. Phya Anuman (1951) Life and ritual in old Siam: three studies of Thai Life and customs, Translated and Edited by William J. Gedney. New Havan, Haraf
Press. Reaver, Russell & Boswell, Geogrge W. (1962) Fundamentals of folk literature, Oosterhout, Anthropological Publi
cation. Richmond, W. Edson, (ed) (1957) Studies in folklore in honor of
distinguish service of prof. Stith, Thompson. Bloomingto
Indiana University Press.
Royal Anthropological Institute of Great Britain and Ireland (1964) Notes and queries on anthropology, 6th Edition, London, Routledge and Kegan Paul.
Selkirk, James, (1844) Recollection of Ceylon, London, J.
Hatchard and Sen.
Sebeok, Thomas, A. (ed.) (1960) Style in language, Cambridge,
U.S.A. MIT Press.
Singaravelu, S. (1966) Social life of the Tamils: the classical period, Kuala Lumpur, Department of Indian studies monograph series.

ஆங்கில நூல்கள் 321
Singer, Milton, (ed.) (1966) Krishna myths, rites and attitudes,
Honolu lu, East-West centre Press.
Sokolov, Y.M. (1950) Russian folklore, Translated by Gatharine Ruth Smith, New York, Macmillan Company.
Spiller, Robert, E. (ed) (1962) A time of harvest, America
Lit. 1910-1916, New York, Hill & Wong.
Subramaniam, P.R. (1969) Folklore of South India with special reference to Tamil folk songs, Ph. D. Thesis, University of Kerala, Unpublished typescript.
------- (1972) An introduction to the study of Indian folklore, Srivaikuntam, Tamil Nad, Sri. A V. Press.
Suseendirarajah, S. (1967) A descriptive study of Ceylon Tamil with special reference to Jaffna Tamil, Ph.D. Thesis, University of Annamalai, Unpublished typescript.
Thambiah, H.W. (1972) Principles of Ceylon Law, Colombo,
H.W.Cave & Co.
Thaninayakam, Xavier S. (1953) Nature in ancient Tamil Poetry: concept and Interpretation, Tuticorin, Tamil Literature Society. Thananjayarajasingham, S. (1972) The phonology of nominal forms in Jaffna Tamil, Ph.D. Thesis, University of Edinburgh, unpublished typescript. Thomson, George, (1954) Marxism and poetry, New Delhi,
People's Publishing House
------- (1961) Studies in ancient Greek Society, Wol. I,
London, :
Thompson, Stith (ed.) (1946) he folk tales, New York, Holt,
Renehart and Winston.
------- (1953) Four symposia on folklore, Bloomington,
Indiana, Indiana University Press.
LzLSLSLS LLLLS SSLSSSMSSSSSSS S LL0LLMLMLSLSL S LSSL S LSSSLLSSLS SASLSLSL (1966) Motif index of folk literature (in six volumes) Bloomington, London, Indiana University
Press.
Tylor, Edward B. (1929) Primitive Culture, Research into the development of mythology, philosophy, religion, LD-21

Page 175
322 மட்டக்களப்பு மாவட்ட.
Language, art and custom, Vol. II, London, John Murray.
University of Ceylon (1959). History of Ceylon, Vol, I, Part. I,
Peradeniya.
Vanamamalai, N. (1969) Studies in Tamil folk Literature.
Madras.
Vansina, Jan (1965) Oral tradition, a study in historical methodology, Chicago, Aldine Publishing Company.
Westermak, E. (1926) Ashort History of marriage, London,
Macmillan.
Wittgenstein, L. (1958) Preliminary studies for the philosophical
investigation, New York, Harper.
JOURNALS AND RESEARCH PAPERS
Ananthampillai, P. (1968) “The Kannaki legend and the
Tottem Pattu’ Kerala Studies Gopala Menon Commemoration. Pp. 164-165.
Bell, H.C.P. (1883) “Sinhalese Customs and ceremonies connected with paddy cultivation', R.A.S.C. B., Vol. 8, No. 26, Pp. 44-93.
Bayand, P. (1953) “American folk songs and their music', Southern Folklore Quarterly, Vol. XVII. No. 2, June, Pp. 120-126.
Boswell, George W. (1972) “Metrical alliteration in folk singing", Journal of American Folklore, Vol. 85, Pp. 288-297.
Dundes, Alan (1968) “Ways of studying folklore', American Folklore, (ed) Coffin, T.P., Madras, Higginbotham, Pp. 41-50.
Fischer, J.L. (1963) “Socio-psychological analysis of folk
tales' Current Anthropology, Vol. 4, Pp. 235-295.
Gupta, Sankar Sen (1974) “The area scope and objective of
folklore study in India, Folklore (Calcutta), Vol. 15 16. No, 1, 2, Pp. 25-35, 136-160.

ஆங்கில நூல்கள் 323
Harold, Scheub (1972) “Fixed and nonfixed symbols in Xhosa and Zulu oral narrative tradition', Journal of American Folklore, Vol. 85, Pp. 265-270.
Herbert, Halpert (1962) “Folklore and obscenity, definitions and problems', Journal of American Folklore, Vol. 75, Pp. 195-199.
Indrapala, K. (1970) “The origin of the Vanni-Chieftaincies of Ceylon, The Cultural Journal of the Humanities, Vol. I, No. 2, July, Pp. 10-15.
Jacksen, G.P. (1974) “The rhythmic forms of the German folk songs”, Modern Philology, Vol. XII, No. 5, Pp. 61-81.
Kanapathippillai, K. (1958) “The Jaffna dialect of Tamil',
Indian Linguistics, Vol. 19. Pp. 219-227.
Kuiper, F.B.J. (1962) “Notes on old Tamil and Jaffna Tamil',
Indo Iranian Journal, Vol. 5, No. 1, Pp. 52-64.
Leach, Mac Edward (1968) “The men who made folklore a scholarly discipline', American Folklore, (ed.) Coffin T.P, Madras, Higginbotham, Pp. 17-25.
Lewis, J.P. (1929) “Paddy Cultivation ceremonies in Central provinces', The Ceylon Antiquary and Literary Register, April, Pp. 101-107.
Mahapatna, S. “Similes and metaphors in Oria folk ballads”,
Folklore (Calcutta), Oct. Nov., 1974, Pp. 315-329.
Mohideen, M.Z. (1964) “The Kudi Maraikkayar of Batticaloa”
Moors Islamic Cultural Home, 1944-1964, Pp 25-27.
Pande, Trilochan (1971) “Themes of Indian Folk Songs',
Folklore (Calcutta) Vol. XII, No. 1 1.
Paranavitana, S. (1929) “Pre-Buddhist Religious Beliefs in Ceylon,' Journal of Royal Asiatic Society (Ceylon Branch), Vol. XXX, No. 82, PP- 265-271.
Paredes, Amrica (1964) Some aspect of folk poetry' Studies in Literature and Language, Vol. 6, PP. 72-77.
-------(1968) “Tributaries to the Main-stream: the ethnic
groups, American Folklore, (ed.) Coffin, T.P.
Madras, Higginbotham, PP. 79-89.

Page 176
324 மட்டக்களப்பு மாவட்ட.
Parry, Millman (1950) “Studies in efic technique of oral verse making””, Harward Studies in Classical Philology, Vol. XLI, Pp, 78-85.
Pathmanathan, S. (1972) '' Feudal Polity in Medieval Ceylon: An Examination of the Chieftaincies of the Vanni”, The Journal of Historical and Social Studies, Vol. II, No. 2, PP. 119-130,
Paul, S.R. (I929) “Pre-Vijayan legend and traditions pertaining to Ceylon, ''Journal of Royal Asiatic Society (Ceylon Branch) Vol. XXXI, No, 82, PP. 229-237.
Raghavan, M.D. (1951) “Pattini cult as a socio-religious Institution,” Spolio Zelanica, Vol. 26, Part, II, PP. 251-261.
Ramanujan, A. K. (1974) "The Indian “Oedipus' with special reference to Dravidian myth and tales,' 4th International Conference Seminar of Tamil Studies, Sri Lanka, (Duplicated),
Ranasinghe, W. P. (1894) “ “Which Gaja Bahu visited India” Journal of Royal Asiatic Society (Ceylon Branch), Vol. XIII, No. 15, PP. 144-150.
Sakett, S.J. (1963) “Metaphors in folk Songs, Folklore and
folk music archiveist, Vol. V, PP.6-16.
Shanmugampillai, M. (1962) “A Tamil dialect of Ceylon',
Indian Linguistics, Vol. 23, PP. 90-98.
Subramaniam, S.W. (1966) “Treatment of dreams in Cilappatikaram', Proceedings of the First International Conference of Tamil Studies, Vol. II, PP. 165-169.
Suseendirarajah, S. (1973) “A Study of Pronouns in Batticaloa Tamil', Anthropological Linguistics, April, PP. 172-182
Yoder, Don (1958) ''Folklife, American folklore, (ed.) Coffin, T.P. Madras, Higginbotham, PP. 53-63.
Thananjayarajasingham, S. (1964) “A Phonological and Morphological Study of a Tamil plakkaat, Tamil Culture, April-July. PP. 175-200.

ஆங்கில நூல்கள் 325
--- (1974) “The plosives after nasals in Jaffna Tamil',
Indian Linguistics, Vol. 35, No. 4, PP. 294-299.
---- (1974) “Adjectival system in Jaffna Tamil: a prosodic analysis', Indian Linguistics, Vol. 33, No. 1, PP. 31-43.
---- (1974) "Nominal Compounds in Ceylon Tamil: A grammatical analysis”, Acta Orientalia, Vol. 36,
PP. 157-16).
--- (1975) “Nasalization in Jaffna Tamil, Linguistics: an International Review, Vol. 149, PP. 65-73.
---- , and Balasubramaniam, T. (1972) "Some observation on the plosivesinin colloquial Tamil as
spoken in Jaffna', “Indo-Iranian Journal, Vol. XIV, Nos. 3, 4, PP. 218-238.
William, Hugh Janson (1957) “Classification performance in the study of verbal folklore,' Studies in Folklore (ed.) Richmond, W. Edson, Bloomington, Indiana University Press.
Zvelebil, Kamil (1966) “Some features of Ceylon Tamil,”
Indo-Iranian Journal, Vol. 9, No. 2, PP. 113-138.
DICTIONARIES AND ENCYCLOPAE DIAS.
English Tamil Dictionary (1965) Malras, University of Madras,
Standard Dictionary of Folklore, Mythology and Legend, (1949) (Ed.) Leach, Maria, New York, Funk & Wagnalls Company.
Tamil Lexicon, (1936) Madras, University of Madras.
Collier's Encyclopedia, Vol. 7 (1960), New York, Collier's
publishing Company.
Encyclopaedia Britannica, Vol. 9 (1962), Chicago, Encyclopaedia
Britannica Ltd.
Encyclopedia of Religion and Ethics, Vol. 6 (1960), Edinburgh,
TOT. Clerk.
Encyclopedia of world Arts, Vol. 5 (1959), New York, Mcgraw
Hill.

Page 177
326 மடடக்களப்பு மாவட்ட.
International Encyclopedia of the Social Scinences, Vol. 5 + 6 (1968), The Macmillan Company & The Free Press,
Grolier Encyclopedia, Vol. 7 (1960) Toronto, Grolier
Society of Canada Limited.
Penguin Encyclopedia, (1965) (ed.) Sir John Summerscale,
Harmondsworth, Penguin Books,
The Columbia Encyclopedia, Vol. 2, (1959) W. Birdgwater & S. Kurty, London-New York, Columbia University Press.
The Encyclopedia Americana,: Vol. II (1958), New York,
Americana Corporation.

பின்னிணைப்பு-1
சொல்லடைவு
அங்கலாப்பு (கா. பா. 12அ| 9) = < அங்கலாய்த்தல் பெரு
விருப்புக் கொள்ளுதல்; தொ.பெ.**
அங்கால (தொ. பா. /வலை 1:41) = < அங்கு + ஆல் சு. பெ. அசலூரு (கா. பா. /2இ| 12) = < அயல் + ஊர்; பெ. அசறு (கா. பா. 11ஆ| 19) = மாலை அல்லது காலை மூன்றுமணி நேரத்தைக் குறிப்பிடும் அறபுச்சொல். அஸறு என்பது முஸ்லீம்களின் தொழுகை நேரங்களில் ஒன்ருகும்; பெ. அட்டம் (தொ. பா. |பொலி| 7:8) = ஒரம், தொங்கல்; பெ.
அட்டுவம் (கா. பா. 11ஈ! 18) = மரத்தாற் கட்டப்பட்ட உயர் பீடம், பலகை, தடி, விறகு என்பன நிலத்திற்கிடந்து, மழையில் நனைந்து உக்காமலும், கரையான் அரிக்கா மலும் பாதுகாப்பாக இருக்கும்பொருட்டு அவற்றை அட்டுவத்தில் அடுக்கிவைப்பர். வீட்டின் வெளிப்புறச் சுவர் ஒரத்தில் அட்டுவம் கட்டப்பட்டிருக்கும். வீட்டின் உட்புற மச்சுப்பகுதியையும் அட்டுவம் என்பர்; பெ.
அடிச்சாளோ (தா. பா. 12 2அ) = < அடித்தாளோ, வி. மு.
அண்டு (தொ. பா தண்டு 2:42) = < அன்று: கா. பெ.
அண்ணுவியார் (ஆய்வுநூல் பக். 30) = கிராமிய நாடக ஆசிரியரை அண்ணுவியார் என்பது ஈழத்து வழக்கு. நாட்டுக் கூத்துப் பழக்கும் அண்ணுவியார் சிறந்த கலைஞ ராகவும் சமூக மதிப்புடையவராகவும் கணிக்கப்படு கிருர்; பெ. நாஞ்சில்நாட்டுத் தமிழிலும் இவ்வழக் குண்டு, (சோமலே (1921) பக். 106).
அணியம் (தொ. பா. தோணி 2:9) = தோணியின் நுனிப்பகுதி. நுனிப்பகுதியிலிருந்து தண்டுவலிப்போன் இருக்குமிடத் தையும் இது குறிக்கும்; பெ.
& சொல்லடைவில் வழக்குச் சொற்களும், அவை பயின்றுவரும் பாடல்களின்
இலக்கமும் சொற்பொருளும் முறையே தரப்பட்டுள்ளன.
** இங்கு கையாளப்படும் குறுக்கங்களுக்குரிய விளக்கங்களை ஆய்வுநூலின் குறுக்க
விளக்கத்திற் காண்க. பக். எ-கo

Page 178
328 மட்டக்களப்பு மாவட்ட.
அந்தரித்தல் (தொ. பா. நெல்/9) = <அந்தரம், அவதிப்படு
தல், அல்லற்படுதல்; தொ. பெ.
அப்புச்சி (தா. பா. (2/3இ) - < ஆச்சி + அப்பு -> அப்பு +
ஆச்சி-> அப்புச்சி, பாட்டன்; மு பெ.
அம்மான்மார் (தா. பா. 11| 8 1 ஆ) = மாமன் தாய்மாமன்
மாரை அம்மான்மார் என்றும் வழங்குவர்: மு. பெ.
அயத்தல் (கா. பா. 12இ2) = < அயர் + தல் > அயர்தல்,
மறத்தல்; தொ. பெ.
அரட்டினது (கா. பா. /2அ/ 49) = <அரற்றியது, எழுப்பியது. அரற்று> அரட்டு; நித்திரையால் ஒருவரை எழுப்புதல், நீரைச் சூடாக்குதல் என்னும் பொருளில் இச்சொல் வழங்குகின்றது; தொ. பெ.
அரண்டநீர் (தொ. பா. |தண்டு 2:99) = கடலில் ஏற்படும் நீரோட்டத்தின் தொடக்கநிலை; சூடாகிய நீர் என்றும் பொருள் உண்டு; பெ. எ.
அரிஞ்சரிஞ்சி (கா. பா. 11ஐ 6) = <அரிந்து + அரிந்து, வி. எ.
அருக்காணிப்பாலகன் (தா. பா. 11/ 3இ) = அருமையான - குழந்தை என்பது பொருள்; பெ.
அருணக்கொடி (தா. பா. /3/2அ) . < அரைஞாண்கயிறு, பெ.
அருவாக்கத்தி (தொ. பா. தண்டு 2:65) = <அரிவாள் +
கத்தி, அரிவாள்மணை என்றும் கூறுப; பெ.
அல்லே (கா. பா. /1ஈ|4) = < எல்ஜல, ஆறு, குளம் ஆகியனவற்
- றின் கரையோரங்களிற் பன்செடி முளைத்து நிற்கும்
பகுதி; பெ.
அல்லா (கா. பா. 1உ| 24) = அல்லாஹ்; பெ.
அலயவைத்தல் (கா. பா. /3/3) = < அலையவைத்தல்; தொ. பெ
அலுவல் (கா. பா. 12ஆ| 18) = வேலை, விடயம், தொழில்,
அலுவலகம் என்ற வழக்கும் நோக்குக; பெ.
அவணம் (கா. பா. /2இ8) = 6 கொத்து = ஒரு மரைக்கால், 30 மரைக்கால் = ஒரு அவணம். முகத்தல் அளவையைக் குறிப்பிடும் இவ்வழக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. அவணம் என்பது 7 புசலுக்குச் சமமானது. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திற் கொட்டைப்

சொல்லடைவு : 329
பாக்கு விற்பனைக்கு இவ்வளவு முறை பயன்படுத்தப் பட்டதாக அறியப்படுகிறது; அ. பெ.
அவவுட (கா. பா. 11அl 12) = < அவளுடைய < அவள் +
உடைய, அவ + உடைய-> அவ + உடய-> அவவுட:
சு. பெ. 6-ஆம் வேற்றுமை.
அவிசாரி ஆடுதல் (தொ. பா. நெல் 4) = பரத்தை ஒழுக்கத்தில் ஈடுபடுதல், அவிசாரித்தனம் என்ற வழக்குமுண்டு; தொ. பெ.
புளை (தொ.பா. /ஏற்றம் 1:21) = வயலில் நீர் வடிந்து ஓடும் பொருட்டு வெட்டப்படும் வடிகால், கையளை  ைசிறு வடிகால், கால்அளை = பெரியவடிகால், தாயளை -- பேரளை = சிறுவடிகால்கள் வந்துசேரும் பெரிய வடிகால், விதைப்பு நடைபெறும்போது விதைப்பதற்கு எளிதான முறையில் வயற்பரப்பைச் சிறு சிறு பகுதியாக வகுப் பதற்கு அமைக்கப்படும் மிகச்சிறிய வடிகால் தட்டளை எனப்படும்; பெ. R
அழகுகிளிமரம்பழம் (தா. பா. /1/5) = கிளி அலகு போன்று
வடிவுடைய ஒருவகை மாங்கனி; பெ.
அழுகிறது (தா. பா. /2/1அ) = <அழுகின்றது; வி. மு. ஆக்கள் (கா.பா. 11ஊ| 4) க <ஆட்கள்; பெ. ஆக்காண்டி (தொ. பா. |பொலி 3:8) = ஆட்காட்டிப்பறவை;
பெ.
ஆக்காண்டிவயல் (தா. பா. 12/2அ) = மட்டக்களப்புக்குத் தென் பகுதியிலுள்ள ஒரு வயற் பிரதேசத்திற்குரிய பெயர்; இ. பெ. ஆக்கின (கா. பா./2அ| 43) = <ஆக்கிய = சமைத்த, பெ. எ. ஆக்கினை (தா.பா. 12/4) = ஆய்வுநூல் மூன்ரும் இயலின் 38-ஆம் 41-ஆம் 42-ஆம் அடிக்குறிப்புகளில் ஆக்கினைப்பற்றிய முழுவிபரங்களையும் நோக்குக; பெ. ஆசாரி (தொ.பா. |பொலி| 1:19) தட்டான், பொற்கொல்லன்;
பெ. ஆடாட (தொ.பா. வலை 1:4) = < ஆட + ஆட = ஆடாட, வலை இழுக்கும்போது இச்சொற்ருெடர் பாடப்படு கின்றது; வி.எ.
ஆடுதுடை (கா.பா. 11ஐ 11) = அடித்தொடை பெ.

Page 179
330 மட்டக்களப்பு மாவட்ட.
ஆணம் (தொ. பா. /ஏற்றம் 135) = பாற்சொதி புளியாணம் என்பது பழப்புளி சேர்த்த சொதியாகும்; பெ.
ஆத்தி (தொ. பா. /காவல்/4)= < அத்திமரம்; பெ.
ஆதனம் (தா. பா. /2 3 இ) = சொத்து; சீதனம், முதுசொம்
என்பனவற்றையும் இச்சொல் குறிக்கும்; பெ.
ஆம்புள (கா. பா. /4/ 17) = < ஆண்பிள்ளை-> ஆம்பிள்ளை -> ஆம்
பிள்ள -> ஆம்புள்ள-> ஆம்புள; பெ.
ஆய்ஞ்சி (கா. பா. (1ஆ/14) = < ஆய்ந்து (ஆய்தல், பறித்தல்,
பிடுங்குதல்); வி.எ.
ஆருடா (தொ. பா. வலை/ 1:55) = < யார் + அடா = யாரட
(யாவர் + யார் ஆர்); வி. பெ.
ஆரோட (தொ, பா. |காவல் 78) = <யாரோடு; யாவர்+ஒடு>
யார் + ஒடு -> ஆர் + ஓடு -> ஆர் + ஒட = ஆரோட' வி. பெ.
ஆலாத்தி (தா. பா. /6/2) = < ஆரத்தி மங்கல நிகழ்ச்சிகளின் போது கண்ணுாறு கழிப்பதற்காகத் தீபத்தினற் குறிப் பிட்டவரைச்சுற்றி ஆரத்தி எடுக்கப்படும். இதுபற்றிய முழுவிபரத்தை ஆய்வுநூல் 408,409 பக்கங்களிற் பார்க்க; பெ.
ஆளரவம் (தொ. பா. |பொலி| 3:8) = < ஆள் + அரவம்-மனித
சத்தம் பெ.
ஆறுருவி (தா. பா. /2/2ஆ) - ஒருவகை மூலிகைச் செடி; பெ.
ஆருயம் வெள்ளி (கா. பா.11ஆ19) = மாலைப்பொழுதில் உதய மாகும் ஆறுநட்சத்திரங்கள் சேர்ந்த வெள்ளிக்கூட்டம்;
ll.
இஞ்ச (தொ. பா. |வலை ;54) = < இங்கே -> இஞ்சே -> இஞ்ச, இதுபோன்றே இஞ்சால, இங்கால, இங்கிட்டு என்ற சொல்லாட்சிகளும் வழங்குகின்றன; சு. பெ.
இணல் (கா. பா. /4/ 16) = < இணர்; நிழல்; பெ.
இதரக்கிணறு (கா. பா. 11அl 5) = இதரவாழைமரங்கள் குழவர நாட்டப்பட்டிருக்கும் கிணற்றடி. நீர் குளிர்ச்சியாக இருக்கும் பொருட்டும், வாழைக்கு எளிதில் நீர்பாய்ச்சும் வகையிலும் கிணற்றடியில் வாழைநடும் வழக்கம் உண்டு; Ga)Lu.
இருட்டறுத்து (கா. பா. 11ஈ| 14) = இருளை 2விடறுத்து என்பது
பொருள் வி. எ.

சொல்லடைவு 33
இருளி (தா. பா. 15 1 ஊ) = மலடி பெ.
இலஞ்சியம் (தா. பா. 11| 8 அ) அரும்பொருள்; பெ.
இலைச்சி (தொ. பா. /வலை 1:29) = < இலைத்து, கடலில் மீன் கூட்டம் நீர்மட்டத்திலே தோன்றும் காட்சியை "மீன் இலைத்தல்' என்று கூறுப:த்த->ச்ச் வி.எ.
இலுமிச்சை (கா. பா. 11ஐ 25) = எலுமிச்சம்பழம். எலுமிச்சை தேசிக்காய் என்றும் கூறுவர். தெகி என்பது சிங்கள வழக்காகும்; பெ.
இழுக்கணும் (தொ. பா. தண்டு 1) = < இழுக்கவேண்டும்->
இழுக்கவேணும்-> இழுக்கணும் வி. மு.
இழுக்காட்டி (தொ. பா. /வலை 1:32) = < இழுக்காவிட்டால்;
வி. எ.
இளந்தாரி (கா. பா. /1ஏ0 1) = < இளமை + தாரி, இளைஞன்
s பெ.
இறைக்கணும் (தொ. பா. /ஏற்றம் 1:12) = < இறைக்க
வேண்டும்-> இறைக்கவேணும்-> இறைக்கணும்; வி.மு.
இறைச்சால் (தொ. பா. /ஏற்றம் 1:12) = இறைத்தால் த்த்->ச்ச்
வி.எ.
ஈண்ட- ஈனத (தா.பா. 11| 1) = < ஈன்ற; ஸ்ற் ->ண்ட் ஈணு தல் என்ற சொல்லடியாகப் பிறந்த இச்சொற்கள் அஃறிணை உயிர்களுடன் தொடர்புடையனவாகவே வழங்குகின்றன. ஆனல் உயர்திணையில் மகப்பேற்றினைப் பெறுதல் என்ற தொழிற்பெயரால் வழங்குவர்; பெ. எ,
உப்பட்டி (தொ. பா. |பொலி| 1) = அறுவடை செய்வோர் மூன்று அல்லது நான்குபிடி நெற்கதிர்களை ஒன்ருகச் சேர்த்துக் குவித்துச் செல்வர், அச்சிறு நெற்கதிர்க் குவியல்களே உப்பட்டி எனப்படுபவை; பெ,
உம்மா (கா.பா. 11ஆ| 23) = முஸ்லீம்கள் தாயை உம்மா என்ற
முறைப்பெயரால் வழங்குவர்,
உரமாய்இழு (தொ, பா, வலை 1:17) = வேகமாய் இழு; ஏ, வி,
உரல்தடை (கா. பா. 12ஆ| 17) = உரல்வைத்துநெல்குற்றுமிடம்:
இ. பெ.
உருத்தாளன் (கா, பா, 11இ| 3) = < உரிமை; சொந்த உறவு முறையினன் அல்லது இரத்த உறவினன். அதுபோன்றே

Page 180
33 மட்டக்களப்பு மாவட்ட.
"அடக்கு உருத்தாளன்' என்பதும் மிகநெருங்கிய உறவினரைக் குறிப்பதாகும்; மு. பெ.
உருவுதல் (கா. பா. /1ஊ/ 12) = இழுத்தல். வைக்கோற்போரி லிருந்து வைக்கோலை இழுப்பதை உருவுதல் என்பர். நெற்கதிர்களிலிருந்து நெல்மணிகளைக் கையால் உதிர்த்து வதையும் உருவுதல் என்று கூறுவர். கை, கால்களில் நோவு,ஏற்பட்டபோது,பிடித்துத்தடவு தலையும்இச்சொல் குறிக்கும்; கரமைதுனத்தைக் குறிப்பிடும் குழுஉக்குறி யாகவும் இச்சொல் வழங்குகிறது; தொ. பெ.
உள்ளான்குருவி (கா. பா. /2உ| 2) = ஒருவகைச் சிறுபறவை;
பெ.
உறங்குறங்கு (தா. பா. 11| 1) = < உறங்கு + உறங்கு; அடுக்குத்
தொடர்,
உறுக்குதல் (தொ. பா. | தோணி/1:8)= எச்சரித்தல். கடிநாயை அடக்குவதற்காகப் பகைவர் மந்திரத்தால் அதனை வாய்பேசாதிருக்கும் வண்ணம் சபிக்கும் மந்திரமும் ""உறுக்குதல்’’ எனப்படும். சத்தமிட்டு, வேகமாகத் தோணி தள்ளுவதையும் "உறுக்கித்தள்ளுதல்’ என்பர்; தொ. பெ.
ஊடறுத்தல் (கா. பா. | 3| 2)= தீர்மானித்தல், அனுமானித்தல் என்ற பொருளில் வழங்குஞ் சொல்லாகும்; தொ. பெ.
ஊத்துநீர் (தொ. பா. / ஏற்றம் 11:23) = <ஊற்றுநீர் ற்ற்->த்த:
பெ.
எங்ககா (கா. பா. 11ஆ/20) = <எங்கே + கா; வி. பெ; மட்டக் களப்பு மக்களின் பேச்சுவழக்கிற் 'கா' என்னும் அசை நிலை இடைச்சொல், சொற்களின் ஈற்றிற் சேர்ந்து ஒலிப்பது வழக்கம். "யாகாபிற." என்ற தொல் எழுத் ததிகாரம் 279-ஆம் சூத்திரத்திற்கு சேனவரையர்கூறும் உரையின் மூலம் "கா’ உயர்ந்தோர் வழக்காகக் குறிப் பிடப்பட்டிருப்பதும், பிற்காலஇலக்கியங்களிலும் பேச்சு வழக்கிலும் அது அருகி, வழக்கொழிந்தமையும், அதே வேளையில் மட்டக்களப்புக் கிராமப்புறங்களில் இன்றும் பேச்சுவழக்கிற் 'கா' ஈற்றுச் சொற்கள் வழங்குவதும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன; “மொழியின் வளர்ச்சியும் தேய்வும் பிராந்தியங்களிலும், குறிச்சிகளிலும் மிக விரைவில் நடைபெறும் (சதாசிவம். ஆ.19663:24) என்பதற்கு 'கா' ஈற்றுச்சொல் தக்கசான்ருகும்.

சொல்லடைவு にヘ 333
எங்காவாம். (கா. பா./3/22) = என்று கூறுகின்ருவாம்,< என்று+ கா + ஆம் ->என்று + காவாம்->என் + கா வாம்->
எங் + காவாம், வி.மு.
எட்டுப்பணம் (கா. பா. 11ஐ 27) = 64 சதம் ஒரு பணம்; 50 சதம் எட்டுப்பணமாகும். இது பழைய கிராமிய வழக்கு; பெ. எழுத்துவண்ணம் (கா. பா./1ஆ2) = தலைவிதியின் செயல். பெ
எழுதிவைச்சப்பெண் (கா. பா./1எ/8) = திருமணப்பதிவு செய்த
பெண். பெ. எழுவான் (தொ. பா. / பொலி 2:1) = கிழக்குத்திசை பெ. எறிஞ்சிருவன் (கா. பா./2ஆ/20)= எறிந்திடுவேன் எறிஞ்சிடுவேன்
எறிஞ்சிருவன், வி.மு. ஏசிராத (கா. பா./1இ/1)= ஏசிடாதே, வி.மு. ஏத்தணும் (தொ. பா. தண்டு1) = ஏற்றவேண்டும் ஏத்தவேணும்
ஏத்தணும்; வி.மு. ஏத்து (தொ. பா /ஏற்றம் 1:1) = ஏற்றம், ற்ற்->த்த், பெ.
ஏத்திக்கட்டு (தொ. பா தோணி|1:9) = உயர்த்தித்தள்ளு; தோணி யைத் தோளினல் அல்லது முதுகினல் உயர்த்தித் தூக்கித் தள்ளுவதை ஏத்திக்கட்டுதல் என்றுகூறுவர்; ஏ.வி.
ஏலேலோ (தொ. பா. வலை/1) = இது இசைக்குறிப்புத் தொட ராகும். இது போன்றே ஏலேலம், ஏலலோ, ஏலே ஏலஏலம் என்னுந் தொடர்களும் காணப்படுகின்றன.
ஐயாடா (தொ.பா./வலை/1:5)= ஐயாவுடைய பெ. ஒசெரம் (கா. பா.12ஆ11) = உயரம்; பெ.
ஒண்டுசேரல் (கா. பா. 11உ11) = ஒன்றுசேரல்: திருமணத்தின்மூலம்
கணவனும் மனைவியும் இணைதல்.
ஒண்ணு (தொ. பா. காவல்/11) = ஒல்லா . இயலாது என்பது பொருள்: கு.வி.மு. ‘ஒட்டுங்காலை ஒழிக்கவும் ஒண்ணு’ சிலப்பதிகாரம்.
ஒழுங்கை (கா.பா. 11இ6) = சிறியதெரு, பெ.
ஒள்ளம் (கா. பா. 11அ/ 21) = எள்ளுப்போல அளவு என்ற தொடர் ஒள்ளுப்பம் எனவும், ஒள்ளம் எனவுந்திரிந்து வழங்குகிறது. ஒள்ளம் என்பதற்குச் சிறிது என்பதே பொருள்; பெ.

Page 181
334 மட்டக்களப்பு மாவட்ட.
கக்கிசம் (கா. பா. 12ஆ/12) = கஷ்டம்; பெ. கச்சான் (கா. பா. /1ஐ| 3) = மேற்றிசைக்காற்று; பெ.
கட்டிக்கொடுத்தல் (கா.பா./4/18) க திருமணஞ் செய்து
கொடுத்தல், தொ.பெ.
கட்டு (தொ.பா./பொலி|1) = ஒருவர் தலையிற் அமந்து செல்லக் கூடிய அளவு பாரமுடைய நெற்கதிர்களை ஒன்றுகச் சேர்த்துக் கட்டிய சுமையைக் கட்டு என்பர். முக்கூடற் பள்ளு 138-ஆம் பாடலிலும் இச்சொல்லாட்சியைக் காண்க.
கடக்கரை (கா.பா /3/1) = < கடற்கரை. கடல் + கரை, பெ.
கடப்பு (கா.பா./1ஈ/26) = < கட, கடந்து செல்லுமிடம் கடப்பு
எனப்படும்; தொ.பெ.
கடவல் (கா.பா./1ஈ/21) = < கட ; போக்குவரத்துக்காக வேலியில் விடப்படும் இடைவெளி; கட என்ற வினையடி யாகப் பிறந்த தொழிற்பெயர்.
கடனழிக்கவருதல் (கா.பா.1415) = பொறுப்பு, விருப்பின்றிக் கடமைக்காக ஒருவர் வந்து போவதை இத்தொடர் குறிக்கும்; தொ. பெ.
கண்குளிர்ந்த (கா.பா./2அ18) = கண்ணுக்குக் குளிர்ச்சியான;
பெ.எ.
கண்டயளோ (கா.பா. /2இ|13) < கண்டீர்களோ வி.மு.
கண்டுப்பிலா (தா.பா./1/2) " < கன்று + பலா-> கண்டு + பிலா
-> கண்டுப்பிலா, பெ.
கண்ணடக்கம் (தொ.பா. |பொலி16:3, 4) = கோயிலுக்குப் பொன்னலோ, வெள்ளியாலோ கண்மணி செய்து நேர்த்திக்கடன் கொடுப்பது வழக்கம். அவ்வாறு நேர்த்திக்கடனுகக் கொடுக்கப்படும், க ண் மணி *கண்ணடக்கம்’ எனப்படும்; பெ.
கணக்கன் (தொ.பா./பொலி|1) = முகவை அளவைக் கருவி யாகிய மரக்கால். கணக்குடன் அளக்கப்படும் கருவி யாதலால் இது காரணப்பெயராகும்; தந்திரமானவன் என்ற பொருளிலும் இச்சொல் வழங்குகிறது; கல் வெட்டுகளில் இச்சொல் கணக்கெழுதுவோனைக்குறித்து வருகின்றது.

சொல்லடைவு 335
கணக்கு (தொ.பா|பொலி/8:10) = எழுத்து; எண்கணிதத்தையும் கணக்கு என்ற சொல் குறிப்பிடும். கணக்கு என்பது எழுத்து எனத் திவாகரம் குறிப்பிடுகிறது. Tamil Lexicon Vol. II, Part I, P. 701. கதறினன்கா (கா.பா./2அ/19) = < கதறினேன் + கா; வி.மு. கதிரு (கா.பா./1உ/4) = நெற்கதிர்; கதிர் > கதிரு. பெ. கதிரை (தொ.பா./பொலி| 6:1) = > கதிரைமலை; இ. பெ. கதைக்காய் (கா.பா./1இ|2) = < கதைக்கின்ருய், பேசுகின்ருய்;
வி.மு. கதைக்கிறது (கா.பா./1ஊ/4) = < கதைக்கின்றது; பேசுகிறது;
வி.மு. கதைகதைச்ச (கா.பா./1ஊ/8) = கதைபேசிய; பெ.எ. கதைத்தல் (கா.பா./1ஈ| 29) = பேசுதல்; தொ.பெ. கந்து (தொ.பா. |பொலி12:5) = வயலில் நெற்கதிர்க%
ஓரிடத்திற் சிறுகுவியலாகக் குவித்து வைத்திருப்பதைக் கந்து என்பர். சுமார் 50 கட்டுக் கதிர்களைக் கொண்ட குவியல் கந்து என்றும், அதற்கு மேற்பட்டது சூடு - போர் என்றும் கூறப்படும். பெருங்குவியல் சூடு -- போர் எனப்படும். வைக்கோற் போரை வைக்கோற் கந்து என்றும் கூறுவர்; சிறிய மரக்கிளையையும் கந்து என்பர்; பெ. கந்து விளக்கு (கா.பா./2அ/ 28) = சிறுவிளக்கு, மரக்கிளையைக்
கந்து என்றும் கூறுவர்; பெ. கம்பான் (தொ.பா./வலை 1:40) = < கம்பாகம், மொத்தமான
கயிறு; பெ.
கருக்கல் (கா.பா./1ஈ| 9) = < கருகு,
(அ) செம்மானம் ஏற்படும் செக்கர் வேளைக்கு அடுத்து
வரும் மாலைப்பொழுது. (ஆ) நாட்டு வைத்திய முறையிற் சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, உள்ளி என்பனவற்றை வறுத்து, நீரில் அவித்து வடித்த மருந்து நீரையுங் கருக்கல் என்பர். (இ) பன்றியின் தோலை நீக்கிச் சமைக்குங் கறியும்
கருக்கல் எனப்படும். இதனைப் ‘பண்டிக்கருக்கல் என்பர்; பெ.

Page 182
336 மட்டக்களப்பு மாவட்ட.
கருவாடு (கா.பா./2ஆ/9) = மீன்வற்றல்; Caravado என்ற
போர்த்துக்கேயச் சொல் நோக்குக; பெ.
கரைசேர்வமடா (தொ.பா./ஏர்/1:4) = < கரை + சேர்வோம் +
அடா, வி.வி.மு.
கரையாக்கன் பூ (கா.பா/2உ|3} = காட்டுப்புறங்களில் வளரும் ஒரு வகைச் செடியின்பூ. இப்பூ செந்நிறமானது. இதனை மந்திரத்துடன் கூடிய கிரியைகளுக்கு மட்டும் மந்திர வாதிகள் பயன்படுத்துவர்; பெ.
கல்பு (கா. பா. 11உ/14) = மனம்; அறபுச்சொல் ; பெ.
கல்லாத்து (கா பா (2அ16) = < கல்லாறு என்ற இடப்பெயர்
அத்துச்சாரியை பெற்றுள்ளது.
கலத்திற்போடுதல் (தொ.பா./நெல்/6) = ஆய்வுநூலின் 393-ஆம் பக்கத்தில் இது பற்றிய விளக்கம் காண்க; தொ. பெ.
கலிமாவிரல் (கா.பா.12அl 47) = இஸ்லாம் மதத்தின் ஐந்து மூல மந்திரங்கள் கலிமா எனப்படும். ‘வாயிலாக இல்லல் லாஹ், முகம்மதூர் றஸ்லூால்லாஹ்' = இறைவன் வேறு யாருமில்லை, முகமதுநபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்- என்பது ஒரு கலிமா மந்திரம் அவர்கள் தொழும்போது இறைவன் ஒருவனே என்று கலிமாச் சொல்லிச் சுட்டிக்காட்டும் விரலே கலிமா விரல் எனப்படுகிறது; பெ.
கவுத்துவலை (தொ.பா. /வலை 1:60) = <கயிற்றுவலை, கயிறு + வலை. கயிற்றுவலை-> கயித்துவலை-> கவுத்துவலை; பெ.
கழுத்தறுத்தல் (கா.பா. 11உ/2) = கழுத்து + அறுத்தல், ஏமாற் றுதல் என்பதே இத்தொடரின் மறைபொருளாகும்; மரபுத்தொடர்; தொ.பெ.
களிஓடை ஆறு (கா.பா. 12ஈ/5) = மட்டக்களப்பு மாவட்டத்
துக்குத் தெற்கேயுள்ள ஒரு ஆற்றின் பெயர்.
கறுப்புப்பார்த்தல் (தொ.பா. தண்டு 1:12) = கடலில் மீன் கூட்டம் ஒடும்போது நீர்மட்டத்திற் சுழிகள் தென்படும் . அவை பார்வைக்குக் கறுப்பாகத் தோன்றும். அவற் றினைத் துணைக்கொண்டு மீன்வருகின்றமையை அவதா னிப்பதை மீனவர் “கறுப்புப்பார்த்தல்’ என்பர்; தொ.பெ.
கறுப்பெறிஞ்சிபமுத்ததுபோல் (கா.பா. /2ஈ| 16) = நாவல்மரத்திற் பழம் நிறைந்து பழுத்துக் காட்சி தரும்போது, அஃது

சொல்லடைவு 337
கறுப்பாகவே தோன்றும். அதனை இத்தொடர் விளக்கு கிறது; மரபுத்தொடர். கன்னிக்குமர் (கா,பா. 13| 21) = ஐந்தாம் இயலின் 139 ஆம்
அடிக்குறிப்புப் பார்க்க. ஒருபொருட்கிளவி, பெ.
கன்னிமா (தா.பா. 1511ஆ) = காய்க்கும் பருவத்தை யடைந்த இளம் மாமரம் மூன்ரும் இயலின் 91 (11) ஆம் அடிக் குறிப்புப் பார்க்க; பெ. கனகாலம் (கா.பா. /1ஆ| 6) = ghna கன என்பது அதிகம், பல என்ற பொருளில் வழங்கும்; வடமொழிச் சொல்லாகும்; பல நாட்கள் என்பது பொருள் பெ. கனத்தபசு (தா.பா. 13| 2அ) = அதிகமான பசுக்கள் பெ. கனியருந்துதல் (கா.பா. 11ஐ 32) = இப் பாடலில் இத் தொட ரின் நேர் பொருளின்றி, காதலன் காதலியிடம் பெறும் இதழின்பத்தைச் சுட்டுகின்றது; தொ.பெ. காக்கா (கா.பா. 11ஈ| 12) = தமையனைக் குறிக்கும் முஸ்லீம்
முறைப் பெயர். நானு என்றும் கூறுவர். மு. பெ.
காச்சுமூச்செண்டு (கா.பா. 11ஊ| 1) = <காச்சுமூச்சு + என்று,
இசைக்குறிப்புத் தொடர். சாசு (கா. பா. 11ஆ| 17) = பணம், ஐந்து சதத்தை ஒரு காசு
எனக் கூறுவர்; பெ. காத்த மரம் (கா.பா. 11ஐ 18) = பாடலில் நேர்பொருள் தராது,மறைபொருளாகமனைவியைக்குறிக்கின்றது; பெ.
காம்பறை (கா.பா. 11ஈ| 23) = வீட்டு அறை, இது
போர்த்துக்கீசச் சொல்லின் திரிபாகும். காமறய என்பர்.
காம்பரு சிங்களத்திற் Camera என்ற ஆங்கிலப் பதத்தி
திரிபென்றும் கூறுவர்.
காய்ச்சி (கா.பா. 11அl 10) = காய்த்து; த்த -> ச்ச வி.எ.
கால்பாவுதல் (தொ.பா. /ஏற்றம் 1:27) = விதைக்கும்போது சேற்றைக் காலாலே தட்டி மட்டப்படுத்துவதாகும். பரவுதல் > பரவுதல் என மருவியுள்ளது; தொ.பெ.
காலபோகம் (தொ.பா. /ஏர் 1:7) = மாரிப்போகம்;
நம்பிச் செய்யப்படும் என்பர்.
மழையை விவசாயத்தைக் கால போகம்
தையில் அறுவடையாகும் செய்கையே கால போகமாகும்; பெ.
tpー22

Page 183
338 மட்டக்களப்பு மாவட்ட.
காவின் எழுதுதல் (கா.ப்ா. |1உ| 10) = முஸ்லீம்கள் திருமண
எழுத்தைக் காவின் எழுதுதல் என்பர். தொ.பெ.
காஞன் (கா.பா. 12ஈ| 75) = ஒருவகைச் சிறுபறவை. பெரும்
பாலும் வயற்புறங்களில் வாழ்பவை; பெ.
கிராவுதுகா (கா.பா. 11ஊ| 11) = காகம் கரைவதைக் கிராவுதல்
என்பர். (கிராவுகின்றது + கா); வி.மு.
கிள்ளவட்டுச் சுண்ணும்பு (கா.பா. 12இ| 2) = < கிள்ளவடு + அத்து + சுண்ணும்பு; தாம்பூலத்தட்டிற்சுண்ணம் வைத் திருக்கும் சிறிய பாத்திரம் கிள்ளவடு எனப்படும்; பெ.
கிளவள்ளா (தொ.பா. |வலை 1:68) = கடலிற் பிடிக்கப்படும்
ஒரு வகை மீன்; சிங்களப்பெயர்.
கிளம்புது (தொ.பா. தண்டு 1)  ை< கிளம்புகின்றது; வி.மு.
கிறுகி (தொ.பா. தோணி| 72:13) = இச்சொல் மட்டக்களப்பில் மட்டுமே வழங்குகிறது. திரும்பி என்னும் இறந்த கால வினையெச்சச் சொல்லின் பொருளிலே கிறுகி என்பதும் வழங்குகின்றது. திரும்புதல் என்னுந் தொழிற் பெய ருக்கு ஒப்புடையதாகவே கிறுகுதல் என்ற வழக்குச் சொல் காணப்படுகிறது. மயக்கம், சுழற்சியைக் குறிக்கக் "கிறுகிறுப்பு” என்ற சொல் வழங்குகிறது; வி.எ.
கிறுகிறுப்பு (கா.பா. 11ஐ 16) = < கிறுகிறு; மயக்கம், சுழற்சி;
இது இரட்டைக்கிளவியாகும்.
குடலை (கா.பா. 11உ| 4) = நெற்கதிர் வெளியே வருமுன்பு உள்ள
பூப்பருவம் குடலை எனப்படும்; பெ.
குடி (தா.பா. 11 | 4உ) = நூலின் 275-278 ஆம் பக்கங்களில்
இதுபற்றிய விளக்கத்தைக் காண்க; பெ.
குமராளி (தொ.பா. /ஏர். கவி| 3) = < குமர் + ஆள் + இ; திருமணஞ் செய்யும் பருவத்தையுடைய கன்னிப் பெண்ணையுடைய தந்தை; பெ.
குலுக்கிவிட்டமார்பு (கா.பா. /2அ/ 23) = தனங்கள் நிமிர்ந்து நிற்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ள மார்பை இத் தொடர் குறிக்கின்றது; பெ.
குறட்டை (தொ.பா. காவல்/3} = < குறள் ஒருவகைச் சிறு மீன், இது குளம், ஆறு என்பனவற்றில் வாழும் வரால்

சொல்லடைவு s 339
மீன் போன்று தோற்றமுடையதாயினும், சிறியது. “குறவை- ’ முக்கூடற்பள்ளு-பாடல் 51; பெ. குறுக்குவையா (கா.பா. 11ஆ120) = நடமாட மாட்டா என்பது
பொருள். வி.மு.
குளுகுளுப்பை (கா.பா. 12ஆ| 13) = ஊதா நிறங்கொண்ட ஒரு
வகைச் சிறுபறவை; பெ.
கூடம் (கா.பா. 11ஈ| 1) = கிராமப்புறங்களில் வீதியோரங்களி லுள்ள மரநிழலிற் சிறுபந்தல் அமைத்து வழிப்போக் கருக்குக் குடத்தில் நீர் வைத்தல் வழக்கம். அச்சிறு பந்தலைக் கூடம் என்பர். பாடலில் இதனையே இச் சொல் குறிக்கின்றது.
கூத்தி (கா பா 12இ| 3 = பரத்தை; பெண்கள் தாம் பிறரை
வையும்போது இச்சொல்லைப் பயன்படுத்துவர்; பெ.
கூப்பிடுகா (கா.பா. 11அl 5) = < கூப்பிடு + கா; வி வி.
கூளன்பிலா (தா.பா. 11/2) = < கூளன்+பலா. பலா மரத்தில் ' வருக்கன், கூளன் என இருவகையுள; வருக்கன் சுவை
மிக்கது, கூளன் தரங்குறைந்தது; பெ. கெதியா (தொ. பா. தண்டு 1:5) = விரைவாக, கதி அ. கெதி:
வி. எ. கேக்குதம்மா (தொ. பா. |பொலி 3:8) = கேட்கிறது +அம்மா->
கேட்குது + அம்மா -> கேக்குது + அம்மா வி. மு.
المس"
கேட்டிருவன் (கா. பா. 12அ1 19) = < கேட்டிடுவேன்; வி. மு.
கைசோரவிடுதல் (கா. பா. 13| 17) = கைவிடுதல், மறுத்தல்;
தொ. பெ.
கைவளிய (தா. பா. /3/ 2 அ) = கைநிறைய கை வழிய: பெ. எ.
கொக்குச்சான் (கா. பா. /1ஏ| 8) = ஆறு, குளம் என்பவற்றில்,
வாழும் ஒருவகைமீன். பெ.
கொட்டன் (தொ. பா. |பொலி 1) ஊ சிறு பெட்டி, சிறுகடகம்; இதனைக் கடகப் பெருவாயன்’ என்றும் கூறுவர்; மாடு களைச் சாப்ப்பதற்குப் பயன்படுத்தும் தடிகளையும் இது குறிக்கும். யாழ்ப்பாண வழக்கில் சாதாரணமாகத் தடியைக் கொட்டன் என்பர்; பெ.
கொட்டுக்கிணறு (கா. பா 11ஐ 77) = இதுபற்றிய விபரங்களை
நூலுள் காண்க; பெ.

Page 184
340 மட்டக்களப்பு மாவட்ட.
கொண்ணன்மார் (கா. பா. |1ஆ| 11) = அண்ணன்மார்; க்+ அண் ணன்மார். ககரம்முன்னிலைப்பெயராகிய உன் என்பதன் உடமைப்பொருளை உணர்த்தும் முன்னெட்டாகும். கொத்து (கா. பா. /4/ 15) = நான்கு காற் சுண்டு அளவு கொண்டது ஒரு கொத்து; (Quart) ஆறுகொத்து ஒரு மரக்கால் ஆகும்; அ. பெ. கொம்பன் (கா. பா. /1ஐ 30) = கொம்புடைய மாடுகள் கொம்பன் எனப்படும். பாடல்களில் ஆணையும், பெண்ணையும் உவமித்துக் கூறப்பட்டுள்ளமை காண்க, பெ. முக்கூடற்பள்ளு 71-72 ஆம் பாடல்கள் பார்க்க; கொல்லாக்கட்டு (தொ. பா. /தோணி 1:9) = தோணி ஆழ்ந்து விடாதிருக்க, தோணிக்குச் சமாந்தரமாகக் கட்டப் பட்டிருக்கும் சிறு மரம், தோணிபுரளாமலிருப்பதற் காகவும், அது தோணியுடன் பொருத்தப்பட்டிருப்பதால் ஆட்களைக் கொல்லாது பாதுகாக்கும் தன்மையது என்ப, தாலும் அது காரணப்பெயராயிற்று. கொலுவிருத்தல் (தா. பா. 11| 81 ஏ) க மணப்பந்தலில் மாப் பிள்ளைக் கோலத்துடன் இருப்பதைக் குறிக்கிறது. தொ. பெ. கொவ்வம்பழம் (கா. பா. 11ஐ 7) " < கொவ்வைப்பழம்; பெ. கொழியல் அரிசி (தொ. பா. காவல்/ 11) = < கொழி + அல்,
நன்கு தீட்டப்படாத அரிசி; பெ. கோடி - கோடிப்புடவை (கா. பா. /1ஏ| 9 = புதிய ஆடை, வீட்டின் பிற்பகுதியையும் (கொல்லைப்புறம்) கோடி
குறிக்கும்; பெ. கோணியல் (தொ.பா. |பொலி 1) = சாக்குப்பை பெ. (Gunny
bag)
கோணேசர்கோயில் (தொ. பா. |பொலி 4:5)= திருக்கோணேஸ்
வரர் கோயில்; இ. பெ. கோர்வைசெய்தல் (கா: பா. 11ஐ 12) = உடலுறவு கொள்ளுதல்
(கோர்வை < கோவை); தொ. பெ. །:
கோவம்பழம் (கா. பா. 12இ| 12) = கொவ்வைப்பழம்; பெ. சம்புக்களப்பு (தொ. பா. |காவல் 12) = மட்டக்களப்புக்குத் தெற்கேயுள்ள ஒரு களப்பின் பெயர். களப்பு என்ற சொல்லின் விளக்கத்தை நூலின் 29-30ஆம் பக்கங்களிற் காண்க; இ.பெ.

சொல்லடைவு 34l
சர்க்கரையமுது (தொ.பா. தண்டு 241) = சர்க்கரை + அமுது இது பற்றிய முழு விபரங்களும் நூலின் 288 - 289 ஆம் பக்கங்களிலே தரப்பட்டுள்ளன; தமிழ்க்கல்வெட்டு களில்இதுபற்றிய செய்திகள் இடம்பெறக் காணலாம். சரக்கு (கா.பா./2அ| 32) = வியாபாரப் பொருள்கள், கடைச் சரக்கு = கடைப்பொருள்கள், சரக்குக்கப்பல் = சாமான் கப்பல்; கறிச்சரக்கு = கொத்தமல்லி, மிளகு, சீரகம் முதலிய பொருள்கள். மருந்து மூலிகைகளையுஞ் சரக்கு என்பர். சரக்குள்ளவன் எனின் விசயம் : அறிந்தவன் என்பது பொருளாம். சரிஞ்சி (தொ.பா. |பொலி 3:2) = < சரிந்து->சரிஞ்சு->சரிஞ்சி
இவ்வொலிமாற்றத்தை ASSimilation என்பா, வி.எ. சருவுதல் (தொ.பா. |அ| வெ. 6) = வீண்வம் புக்குச் செல்லுதல்: இதே பொருளிலே தளகுதல் என்ற சொல்லும் வழங்கு கிறது. தொ. பெ. சல்லிக்காசு (கா.பா. /4/ 15) = ஒருசதம். இது பழைய வழக்காகும்
சிங்களத்திற் சல்லி என்பது பணத்தைக் குறிக்கும், பெ. சவர் ஆறு (தொ. பா. பொலி 8:6) = உப்பு நீருள்ள ஆறு; பெ.
சவர் நிலம் = விளையாநிலம். சவள் (தொ. பா. வலை 1:39) = துடுப்பு, சுக்கான் பிடிக்கும் போதும், துடுப்புவலிக்கும் போதும் துடுப்பு வளைந்து கொடுப்பதால் (துவஞதல் = வளைதல் துவஞதல்) அது சவள் என்ற காரணப் பெயர் பெறுவதாயிற்று. சள்ளல் (தொ.பா. Iஏற்றம்/ 134) = உப்பேரியில் வளரும் ஒரு வகை மீன்; பெ. "குதிக்கும் சள்ளை .”* முக்கூடற்பள்ளு url-di 50.
சாச்சி (கா.பா.11ஆ19) = சாட்சி; முஸ்லீம்கள், தமது சிறிய தாயைச் சாச்சி என முறைப்பெயர் கூறுவதும் நோக்குக: தொ.பெ. சாய்ந்தமருதுகளா (தொ.பா./பொலி| 8:6) = சாய்ந்தமருது
என்னும் கிராமத்தைச் சேர்ந்தவை: பெ. சாயச்சீலை (கா.பா./1ஏ/10) = சாயம் + சேலை, சிவப்புநிறச் சேலையைச் சாயச் சீலை என்பது வழக்கு. இதனைப் பச்சை வடச்சீலை என்றுங் கூறுவர்; பெ. சாயச்சோமன் (தொ.பா./நெல் 3) = சிவப்புச்சேலை; பெ. சாய்ஞ்சி (தொ.பா.|பொலி| 3:2) = < சாய்ந்து->சாய்ஞ்சுஅ
சாய்ஞ்சி; வி.எ.

Page 185
342 மட்டக்களப்பு மாவட்ட.
சாயண்டா (தொ.பா./வலை 1:16) = < சாய் + ஏன் + sg|L-IT =
சாயேனட்ா-> சாயண்டா, ஏ.வி.
சார் (தொ.பா./ஏர்/ 1:2) = < சால், உழவுச்சால் என்பதே
உழவுச் சார், உழவுக்கால் என வழங்குகின்றது; பெ. சார்ப்பலகை (தொ.பா. /ஏர் 2:13) = < சால் + பலகை
விதைக்கும் போது பரம்படிக்கப் பயன்படுத்தப்படும் பலகை. அப்பலகை இழுத்துச் செல்லப்பட்ட தடமும் சார்ப்பலகை எனப்படும்; பெ.
சாவல் (கா.பா./1எ/4) = உத்தரியம்; பெ. சாவல் (கா.பா./1அ/15) = < சேவல்; பெ. சாளை (கா.பா./3/20) = கடல்மீன்; பெ. ‘பண்ணைச்சாளை."
முக்கூடற்பள்ளு, பாடல் 50. சாறன் (கா.பா. /2இ|3) = < சாறம்; பெ. இது மலாய்ச் சொல்
லாகும். சித்தலியன் (கா.பா./1ஐ/19) = < சிறு + அலியன்->சிற்று +
அலியன்; சித்து + அலியன்; பெ. சிமிக்கி (தா.பா./61) = ஒரு வகைக் காதணி, பெ. சிரிச்சி (கா.பா./1ஆ/12) = < சிரித்து->சிரிச்சு-> சிரிச்சி; வி.எ. சிறுக்கன் (கா.பா./1ஏ/10) = < சிறு + மை, நுளம்பு, பெ. சிறையிருக்கன் (கா.பா./1ஈ| 27) = < சிறையிருக்கிறேன்; வி.மு. சின்னலெவ்வை (கா.பா./1ஐ 20) = முஸ்லீம்களின் ஆண்பாற்
பெயர்: ப்ேபறுத்து (கா.பா./1ஈ| 14) = பாய் இழைப்பதற்குப் பயன்படும் பன்னை வகிர்ந்து எடுப்பதைச் சீப்பறுத்தல் என்று கூறுவர். வி.எ. சீமான் (கா.பா./1ஐ|18) = செல்வந்தன், நல்லவன், செல்வச்
சீமான் என்ற வழக்கும் உண்டு; பெ. சீமை (கா.பா./2அ19) = தூர இடத்தைக் குறிப்பிடுஞ் சொல். இங்கிலாந்து நாட்டையும் சீமை என்பர். சீமைத்துரை வெள்ளைக் காரனைக் குறிப்பதாகும்; பெ. சீனட்டிநெல் (கா.பா./1உ| 8) ஒருவகை நெல்; இதன் உமி கருஞ் சிவப்பாகவும், கறுப்பாகவும் இருக்கும். சகல நெல்வகை களிலும் இது அதிக சத்துள்ளது. ஆதலினலே பெண்பூப் படைந்த காலத்திற் சீனட்டி நெல் அரிசிச் சோறு கொடுக்கப்படுகிறது; பெ;

சொல்லடைவு 343
சுணைஇழத்தல் (தொ.பா. / ஏற்றம் - கவி|3) = மானம் மரியாதை, இழத்தல்; சுணைகெட்டவன் எனின் மானங் கெட்டவன் என்பது பொருள்; தொ.பெ;சுணை- கூர்மை தினவெடுத்தல் என்ற பொருளிலும் வழங்குகிறது. சுள்ளாணி (தொ.பா./ஏர்/1:9) = கலப்பையுடன் நுகத்தடியைப் பொருத்துவதற்குப் பயன்படும் வைரமான மரக்குச்சி; மதியாணி என்றும் கூறுவர். பெ. சூத்திரம் (தொ.பா./ஏர்/2:1) = நுட்பம்: பெ. சூரை (தொ.பா./வலை/1:57) = கடல்படுமீன்; பெ. செக்கல் (கா.பா,/1ஈ/7) = செக்கர்ப்பொழுது செம்மானம் பூணும்
மாலைப்பொழுது; பெ. செப்பம் (கா.பா./1ஆ/12) = செம்மை, வண்ணம், அழகு, சிறப்பு;
தொ.பெ. செல்லன் (தொ.பா./பொலி|+/ஏர்/) மிதிமாடுகளைச்செல்லமாக அழைக்கும் பெயர். இது இலக்கண வழக்காகும்; பெ.
சொல்லாட்டி (கா.பா.12ஆ16) = <சொல்லாவிட்டால்; வி எ, சொல்வயளோ (கா.பா./4ஆ/10) = <சொல்வீர்களோ->சொல்+
வீர்களோ->சொல் + வயளோ வி.மு.
சொன்னயளோ (கா.பா./2ஆ/17) = < சொன்னீர்களே->சொல் +
நீர்களே->சொன்னீர்களே->சொன்னயளே வி.மு.
சோடுரெண்டு (தொ.பா./காவல்/10) = <சோடி + இரண்டு;
பாடலில் இருதனங்களையும் சுட்டிற்று; பெ.
சோத்தாலே (தொ.பா./ஏற்றம் கவி/3) = < சோற்ருலே; ற்ற்->
த்த்; பெ.
சோமன் (தொ.பா.காவல்/9) = சாயச்சேலைசோமன்சோடு என்பது வேட்டியையும் சால்வையையும் குறிக்கும்; பெ.
சோமாரக்கூட்டம் (தொ பா |தண்டு/3:28) = வெள்ளைக்காரன்
கூட்டம். பெ.
சோளகம் (தொ.பா./ஏற்றம்/1:3) = தென்மேற்றிசைக்காற்று; பெ
சோளநீர் (தொ. பா தண்டு/3:38) = கடலிலே தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் நீரோட்டத்தைச் சோளநீர் என்பர்; பெ.

Page 186
344 மட்டக்களப்பு மாவட்ட.
சோளநீர்வாங்கல் (தொ.பா.தண்டு/3:38) = சோளநீரோட்டத்
தின் ஈர்ப்புச்சத்தி. பெ.
தங்குபொழுது (கா.பா.11ஐ/17/) = மாலைப்பொழுது; பறவை, விலங்கு என்பன தங்கள் இருப்பிடம் நாடித் தங்கச் செல்லும் நேரம் மாலையாதலால், அந்நேரத்தைக் காரணப் பெயராகத் தங்குபொழுது என வழங்கு கின்றனர். பெ.
தட்டளை (தொ.பா./ஏற்றம்/1:25) = அளை என்ற சொல் பார்க்க.
தட்டு (தொ.பா./ஏற்றம்/1:26) = விதைக்கும்போதுநாற்சதுரமாக நிலத்தை சிறுசிறுபிரிவாக வகுப்பர். அச்சிறு பிரிவுகள் தட்டு எனப்படும். பனையோலையாற் பின்னர்ப்பட்ட தட்டையான சிறுபெட்டியும் தட்டு எனப்படும். பெ.
தண்டயல் (தொ.பா.தண்டு/3:34) = தோணிக்குச் சுக்கான் பிடிப்பவர். தண்டு = சவள், துடுப்பு, தண்டையில் எப்போதும் கையிலே வைத்திருப்பவர் ஆதலால் காரணப்பெயராயிற்று. பெ.
தண்டுக்கை (தொ,பா-தண்டு2:14) = துடுப்பிற் பொருத்தப்
பட்டிருக்குந்தடி, பெ.
தயிலா (கா.பா./2ஈ/1) = மரத்தாற் செய்யப்பட்ட உடுப்புப்
பெட்டி. பெ.
தரவை (தொ.பா./ஏற்றம்/1:10) = < தரை, தண்ணீர்நிறைந் துள்ள இடத்திலே தென்படும் நிலப்பகுதி தரவை எனப்படும். பெ.
தலகாணி (தொ.பா./ஏர்/1:1) = தலையணை. பெ.
தலைக்காய் (தா.பா. 15 11இ) = முதன் முதலாகக் காய்த்த
காய். பெ.
தலையாரி (தொ.பா./வலை/1:34) = தலைவன் < தலையாளி
தலையதிகாரி. பெ.
தலைவலதாண்டா (தொ.பா. |வலை 1:42) = <தலை + வலை + தான்
-- egy L-fT.
தளும்பினதாம் (தா. பா. 12/6) = < தளும்பியது + ஆம்; வி.மு. தன்மைப்படுதல் (கா. பா. 12ஆ| 5) = கஷ்டப்படுதல்; தொ.பெ.

சொல்லடைவு 345 தாமரையன் (தொ. பா. |பொலி| 7:12) = மிதிமாடுகளுக்குரிய
பெயர்: இலக்கணை வழக்கு; பெ. தாமரையாள் (தொ. பா. |பொலி| 7:4 = தாமரையில் வீற்றிருக் கும் தெய்வம் சரஸ்வதியெனினும், பாடலில் இலக்குமியே குறிப்பிடப்படுகிருள்; பெ.
தாய்மாமன் (கா. பா. /2அl27 = தாயின் சகோதரன்: மு. பெ. தாயதி (தா. பா. 111811 ஏ) = தாய்வழிவரும் சொத்துகள்.
இதுபற்றிய விபரங்களை நூலின் 278-279 ஆம் பக்கங்களிற் காண்க. பெ.
தாவன் (கா. பா /4/ 17) = < தா + ஏன் -> தாவேன்->தாவன்
தரவும்; வி. வி. மு. தாறன் (கா. பா. /2ஈ/1) = < தருகிறேன்; தா + கிறு + ஏன்;
வி. மு. திகட்டுதல் (கா. பா. /2அ| 46) = < தெவிட்டுதல்; தொ. பெ" திண்டு (தொ. பா. காவல் 12)= <தின்று, ன்று -> ண்டு; வி. எ 5ôaöörä00T (35mt. Luir. / 1rqF/ 14) = வீட்டின் முன்னுள்ள விருந்தைத் திண்ணைக்கல்வி என்ற வழக்கும் நோக்குக; பெ. திருவி (கா. பா. /1ஐ| 31) = தடவி; வி. எ. தீண்டாமல் (கா. பா. 12அ/8) = பாடலில் உடலின்பத்தைக்
குறிக்கின்றது; வி.எ.
தூமை (தொ. பா. /அ. வெ. /6 ) = பெண்களின் குதகம் பெ. தூறு (கா. பா. 11ஊ/5) = அலர்மொழி; பெ.
தெரிவு (தொ. பா விலை 1:49) = கடலில் வீசப்பட்ட வலையில் மிதப்புக் கட்டிய மேற்பாகத்தையும் கல்கட்டப்பட்ட கீழ்ப்பாகத்தையும் பிரித்து எடுத்தல் தெரிவு எடுத்தல் எனப்படும்; தொ. பெ.
தேடா (தொ. பா. தண்டு 210) = மொத்தமான கயிறு; பெ.
தேத்தா (கா. பா. 11அ/15) = ஒருவகைமரம்; பெ.
தேரோட்டுதல் (கா. பா. 11உ|20) = குடித்தனம் நடாத்துதல். குடும்பம் தேராக உருவகிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் சக்கரம் என்ற தொடரும் நோக்குக; தொ. பெ.
தோட்டுப்பாய் (கா. பா. |ஐ| 16) = நெல்காயப்போடும் பெரிய
பாய்; பெ.

Page 187
346 மட்டக்களப்பு மாவட்ட.
தோணுது கா கா. பா. 12 அ45) = < தோன்றுகிறது + கா ->
தோன்று துகா -> தோணுதுகா. வி. மு. நகை (தா. பா. 11| 5 ) = ஆபரணம், நகைநட்டு, என்ற தொட
ரும் அணியையே குறிக்கும்; பெ. - நங்கணம் (கா. பா 11அ/ 3) = நாகணவாய்ப்பறவை. மைனு
என்றும் கூறுப. மைனு என்பது சிங்களவழக்கு; பெ. நட்புதல் (கா. பா. |1ஆ/ 21) = நட்புடமை, தொ. பெ. நடுக்கட்டு (தொ. பா. /தோணி 2:10) = தோணியின் நடுப்பகுதி நம்புறது (கா பா, |tஉ| 1) = < நம்புகிறது; வி.மு. நம்மட (கா. பா. 11ஊ/22) = எம்முடைய-> நம்முடைய ->
நம்மடைய-> நம்மட, சு/பெl நம்மள (தொ, பா. /வலை 2:23) = எம்மை -> நம்மை -> நம்மனை
நம்மள; சு. பெ. நாகவள்ளிநாம்பன் (கா. பா. 13 15) = எருத்து மாடுகளுக்குரிய
பெயர். நாம்பன் (கா. பா. 13:15) = இளம் எருத்துமாடு. நாகு = பெண்;
நாம்பன் = ஆண் பெ. நாமள் (கா பா. 11ஈ/5) = நாம் + கள் -> நாங்கள் -> நாம் + அள்
நாமள்; சு. பெ. நார்க்கம்பு (தொ. பா. |பொலி 1) = உறுதியுள்ள, எளிதில் முறி
யாதமெல்லிய தடி; பெ. நிண்டா கா. பா; |2ஆ1 19) = < நின்றல், ன்ற் -> ண்ட்; வி.எ. நிண்டாராம் (தொ. பா |பொலி| 9:7) = < நின்ற ராம்; வி. மு நிறைஞ்சி (தா. பா. /2/6) = < நிறைந்து, ந்த் -> ஞ்ச்: வி.எ. நீங்கெல்லாம் (தொ. பா. வலை 1:54) = < நீங்கள் + எல்லாம்;
பெ. நெஞ்சு (கா. பா. 1ஐ 2) = பாடலிலே தனத்தைச் சுட்டிற்று :
சினையாகுபெயர். நெடுப்பம் (கா. பா. 12ஆ 11) = < நெடு. நீளம் - நீண்டது;
Gog T. Lurt.
நெருப்பு (தொ. பா. /நெல், 9) = குறிப் பிட்ட Lu rul 65i), ஒருவர் செய்த கொடுமைகளை நெருப்பாக உருவகிக்கப் பட்டுள்ளது. கொடுமை செய்தோனை, அக்கொடுமை

சொல்லடைவு 347
களே நெருப்பாக உருவெடுத்து அழிக்கும், என்பது நம்பிக்கை; பெ.
நெறுநெறென(தொ. பா./பொலி| 9:8) =ஒலிக்குறிப்புத்தொடர்.
பச்சவடிச்சேலை (கா. பா. 11அ7) = சிவப்புச்சேலை; சாயச்சீலை
என்றும் கூறுப; பெ.
பட்டறை (தா. பா. 10ஏ| = (அ) ஏழாம் இயலில் இதுபற்றிய விபரங்களைக் கான்க. (ஆ) பட்டறை என்பது பட்ட டை என்பதன் திரிபாகவும் வழங்குகிறது. பட்டடை கம்மாலை - உலோகத் தொழிற்சாலை; பெ.
பட்டாணி (தா. பா. /3/4அ) = முஸ்லீம் சீலைவியாபாரி; பெ.
பட்டி (தா. பா. 13| 2அ) = (அ) கூட்டம், மந்தைக் கூட்டத்தை மாட்டுப்பட்டி என்றே வழங்குவர். (ஆ) குவியல் என்ற பொருளிலும் இச்சொல் வழங்குகின்றது. உ-ம்; சாணகப்பட்டி (இ) விருது என்ற பொருளிலும் இச் சொல் வழங்குகின்றது. பட்டி கழன்றவன் என்ருல் புகழிழந்தவன், மானம் இழந்தவன் என்ற பொருளு முண்டு: பெ. ’ "நோதக்கசெய்யும் சிறு பட்டி’ கலி: குறிஞ்சிக்கலிபாடல், 15
பட்டியடிப்புட்டி (கா.பா. 12ஆ| 3) = இடப்பெயர். மாட்டுப்
பட்டி கட்டப்படும் மேட்டுநிலம் என்பது இத்தொடரின் பொருள்; இ.பெ. படலை (கா.பா. /1ஈ| 11) = வேலியில் விடப்பட்ட கடப்பை அடைப்பதற்குப் பயன்படுந் தட்டி படலை எனப்படும். தென்னையோலை, பனையோலை, கிடு, மிலாறு, தடி என் பவற்ருற் படலை கட்டப்படும் பெ. படிக்கம் (கா.பா. 11ஆ| 13) = தாம்பூலந்தரிப்போர் உமிழ் வதற்கு வைக்கப்படும் வெண்கலப்பாத்திரம். இவ் வழக்கம் இன்றும் முஸ்லிம்களிடமுண்டு. பெ. படுகுதுகா (தொ.பா. காவல்/ 7) = < படுகின்றது + கா; வி.மு.
படுவான் (தொ.பா. |பொலி 2:2) = மேற்குத் திசை பெ.
படுவான்பொழுது (கா.பா. 11ஈ| 21) = மாலைப்பொழுது படு வான் பொழுது பந்தபொழுது என்றும் வழங்கும். சூரியன் மேற்குக் கடலிற் புகும் நேரமாதலால் (புகுந்து > பூந்த) அது புகுந்தபொழுது > பூந்தபொழுது எனவும்

Page 188
348 மட்டக்களப்பு மாவட்ட .
வழங்கப்படுகிறது. மயண்டை என்றும் இந்நேரம் குறிப் பிடப்படுகிறது. சூரியன் அந்தி வானில் மயங்கும் நேரம் மாலையாதலால் அதனை மயன்றை > மயண்டை என்கின்றனர்; பெ.
பண்ண (தொ.பா. நெல்/9) = <பண்ணை, குடும்பம், சொத்து பெ.
பண்ணுறது (கா.பா. உ| 21) = < பண்ணுதல் செய்தல் பண்ணு தல் என்பது தனித்து வரும்போது திருமணத்தையே குறிக்கும்; வி மு. பண்ணு என்ற சொல்லின் வழக்காறு பற்றிய விரிவான விளக்கத்தை மு. சண்முகம்பிள்ளை (1973) விரித்துக் கூறியிருத்தல் காண்க. பணம் (கா.பா. 11ஐ 27) = 64 சதத்தை ஒரு பணம் என்பது
கிராமிய வழக்கு எட்டுப்பணம்-ஐம்பது சதம்; பெ. பதக்கடை (கா.பா. 12அl 41) = பதர். நெல் தூற்றும்போது காற்றேடு பறந்து கடைசியில் விழும் பகுதியே பதர் எனப்படுவது. எனவே கடைப்பதர் > பதர்க்கடை > பதக்கடை என வழங்குகிற்து எனலாம்; பெ. பந்தம் (தா.பா. |S| 2அ5) = தீப்பந்தம். இலங்கைத் தமிழில் இலஞ்சம் கொடுப்பதைப் பந்தம் கொடுத்தல் என்றும், ஒருவரைக் காக்காய்பிடித்தல் என்ற தமிழ்நாட்டு வழக்கை இங்கு பந்தம் பிடித்தல் என்றுங் கூறுவர்; பெ. பரபரக்க (தொ.பா. /ஏற்றம் 1:2) = இசைக்குறிப்புத் தொடர். பரவுகம்பு (தொ.பா. காவல் 13) காவற்பரணில் இருப்பதற்கும் உறங்குவதற்கும் வசதியாகத் தட்டிகட்டப் பயன்படும் மெல்லிய தடிகளே பரவுகம்பு எனப்படுபவை; பெ.
« லபலவென்று (தொ.பா |பொலி/3:7) = இசைக்குறிப்புத்தொடர்
பறங்கி (தொ.பா. அ.வெ. 17) = நூலின் 37 ஆம் பக்கத்தில்
30 ஆம் அடிக்குறிப்புப் பார்க்க; பெ.
பாடுபடுதல் (தொ.பா. நெல் 4) = உழைத்தல்; தொ.பெ. பார்க்கணும் (தொ.பா. தண்டு 1) = < பார்க்கவேண்டும் ->
பார்க்கவேணும்->பார்க்கணும்; வி.மு. பார்ப்பம் (கா.பா. 11இ| 8) = < பார்ப்போம்: வி.மு. பாரக்குமர் (கா.பா. 14/14) = திருமணஞ் செய்ய வசதியற்றுப் பெற்றேருக்குப் பாரமாக இருக்கும் கன்னிப்பெண் களைப் பாரக்குமர் என்பர்; பெ.

சொல்லடைவு 349
பாரை (தொ.பா. |வலை 1:67) = கடல்படுமீன்; பெ. பாலேருச்செந்நெல் (கா.பா. /2அ| 41) = பதர்; பெ. பிசகு (கா.பா. 11ஈ| 13) = தடைகள், சச்சரவுகள் தொல்லை,
தொ.பெ. பிஞ்சிரும் (தொ.பா. /வலை 1:18) = < பிய்ந்துவிடும்->பிய்ஞ்சி
+ விடும் -> பிஞ்சிரும்; வி.மு. பிணைஞ்சி (கா.பா. |1உ17) = < பிணைந்து, ந்த்->ஞ்ச், வி.எ. பிரித்தண்டா (தொ.பா. /ஏற்றம் 1:26) = < பிரித்தேன் +
அடா, வி.மு. பிள்ள (தா.பா. 11| 10அ) = < பிள்ளை; பெ. புட்டி (கா.பா. 12ஆ) = < பிட்டி, மேட்டுநிலம்; போத்தல்; பெ. புழுங்கல் (தொ.பா. /ஏர்-கவி 1) = அவித்தநெல்; தொ.பெ. புள்ள (கா.பா. /4/ 17) = < பிள்ளை; பெ.
புளங்குதல் (கா.பா. 11ஐ 18) = பழகுதல், உறவாடுதல்;
தொ. பெ.
புறதனம் (கா.பா. 11ஐ 19) = ஏளனம்; தொ.பெ. புறவிடுதி (கா.பா. /4/ 15) = போகுமிடங்களிலே தங்கியிருத்தல்
தொ.பெ. புறிஞ்சி (கா.பா. /4/6) = < பிரிந்து; ந்த்-உஞ்ச்; வி எ. புறியம் (கா.பா. /2இ| 9) = பிரியம்; விருப்பம்; தொ.பெ. பூக்கொள்ளை (கா.பா. 11ஊ| 6) = பூங்கொத்து, பூந்துணர்; பெ, பூங்காரம் (கா.பா. /3/ 3) = மனவருத்தம், மனக்கொதிப்பு.
ஆத்திரம், உள்ளக்குமுறல்; பெ. பூணுரம் (கா.பா. /3/10) = < பூண் + ஆரம்; தொ.பெ. பூருதல் (தொ.பா. காவல்/9) = < புகுதல் நூலின் 270-271 ஆம் பக்கங்களில் இதுபற்றிய விளக்கந்தரப்பட்டுள்ளது காண்க; தொ.பெ. பூவ (தொ.பா. வலை/ 2:13) = < பூவை 2ஆம் வேற்றுமை. பெ. பூவல் (கா.பா. 11அ/22) = < கூவல்; குடிநீர் எடுப்பதற்காக வயலிலே தோண்டப்படும் சிறிய நீர்க்குழி; பெ. 'கூவ லன்னவிடரகம்’ மலைபடுகடாம் 366; “உவலைக் கூவல்’’
ஐங்குறுநூறு 203.

Page 189
350 மட்டக்களப்பு மாவட்ட. பெட்டகம் (கா. பா. /3/8) = மரத்தாற் செய்யப்பட்ட
உடுப்புப்பெட்டி, அலுமாரி; பெ. பெண்மாது (தா. பா. /5| 1அ) = பெண், ஒரு பொருட்கிளவி. பெருப்பம் (கா. பா. 12அ, 12) = < பெரு, பருமன், தொ. பெ பெருநாட்டான் (தொ. பா. /நெல்/7) உயர் குடியிற்பிறந்தோரை w யும், அயலூரினரையும் குறிப்பிடும்; பெ. பேர்நயம் (தொ. பா. நெல் 7) பெயர்; ஒருபொருட்கிளவி, பேரளை (தொ. பா. /ஏற்றம்) அளை என்ற சொல்பார்க்க. பையப்பைய (கா. பா. /1ஐ| 32) = மெதுவாக, “காளையொரு பையவியலிப்.’’ ஐங்குறுநூறு 389 ஆம்பாடல் பார்க்க பொடியன் (கா. பா. 11ஐ 19) = < பொடி + அன்; பையன்,
மருமகன்; பெ. பொண்டி (கா, பா. /4| 11) = < பெண்டிர், ஒருத்தனின் மனைவி யைப் பொண்டி எனக் கூறுகின்றனர்; மு பெ. பொண்டுகள் (தொ. பா. தண்டு 2:27) = பெண்டுகள்; பெ. பொம்புள (கா. பா. /4/ 17) = < பெண்பிள்ளை, பெ. பொருபொருவென்று 9 கா. பா. /2அ, 49) = இசைக்குறிப்புத்
தொடர் பொலி (தொ. பா. |பொலி! ) = நெல்; முக்கூடற் பள்ளு, 138 ஆம்
பாடல் பார்க்க; பெ. பொலிக்கொடி (தொ. பா. |பொலி| 8:11) = வைக்கோல், பெ. பொழுது (கா. பா. /1ஐ|1) = சூரியன், 'பொழுதும் எல்இன்று'
குறுந்- 161 ஆம் பாடல் பார்க்க பொழுது தங்கி (கா. பா. 11ஐ 17) = பொழுதுதங்கியதும்; மாலைப்
பொழுது; வி. எ. பொறுதிசெய்கா (கா. பா. 11ஆ/ 15) = பொறுமையாக இருத்தல்,
தொ. பெ.
பொறுதிபொறு (கா. பா. 11ஆ1 16) = பொறுமையுடன் காத்திரு
தொ, பெ. பொன்னங்கணி (தொ பா. /ஏற்றம் 1:35) = வயலில் முளைக்கும்
ஒருவகைக் கீரை, பெ. பொன்னின் களம் (தொ. பா. |பொலி/9) = நெல்லைப் பொன்னக உருவகித்து; சூட்டித்து நெல்எடுக்கும்குட்டுக்களத்தைப் பொன்னின்களம் என்பர்; பெ.

சொல்லடைவு 35
போகட்டோ (கா. பா. 12 அ154) = < போகட்டுமா, வி.மு.
போகணும் (தொ. பா. தண்டு 1) = < போகவேண்டும் ->
போக + வேணும் -> போகணும்; வி. மு.
போகாட்டி (தொ. பா. காவல்/4) = < போகாவிட்டால்; வி எ.
போட்டுட்டுப்போதல் (கா. பா. 11ஐ 5) = போடு + விடு +
போதல்; உடலுறவு கொள்ளுதல், மதுவருந்திப்போதலை யும் இது குறிக்கும். அதுபோன்றே கைநழுவ விடுவதை யும் சுட்டும்; தொ. பெ. V
போடணும் (தொ. பா. தண்டு 1) = < போடவேண்டும்;
போடியார் (தொ. பா. காவல் 1,12) = பெரும் வயற்சொந்தக் காரன், பண்ணையார், போஷித்தல் என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம் எனக் கருத இட முண்டு. போடியார் ஏனைய உழவர்களைப் போஷிப்பவர் ஆதலால் போடியார் என்ற வழக்குவந்திருக்கலாம்; பெ.
போயிரும் (தொ. பா. வலை 1:33) = < போய்விடும். போர் (தொ. பா. |பொலி 3:5) = சூடு, வைக்கோற் குவியலையும்
வைக்கோற்போர் என்பர்; பெ.
போர்ஏற (தொ. பா. |பொலி| 9:9) = சூடுமிதிக்கும்போது நெல்லையும் வைக்கோலைப் பிரித்து வைக்கோலைக் களத் திற்கு வெளியே வீசுவர் வைக்கோற் குவியல் களத்திற்கு வெளியே உயரமாகக் காட்சிதரும். அதனையே இத் தொடர் குறிப்பிடுகிறது; வி.எ.
போருக (கா. பா. /4/3) = போகிருரர்கள்; போ + கிறு + ஆர் +
கள், வி. மு.
மடி (தொ. பா, தண்டு 1:14) = கடல்வலையில் மீன் அகப்படு மிடம் மடி எனப்படும். அது பின்னப்பட்ட வலையால் மடித்துப் பொருத்தப்பட்டிருப்பதால் மடிஎனக்காரணப் பெயராயிற்று.
மதித்தல் (தா. பா. 15 2அ2) = மதிப்பிடுதல்; அளவிடுதல்,
அடையாளம் கண்டுபிடித்தல்; தொ. பெ.
மதினி (கா. பா. 12ஆ| 17 = மச்சிமுறையைக் குறிக்கும் முஸ்லீம்
முறைப்பெயர். மைத்துணி என்பதன் திரிபாகலாம்.
மருக்காலங்காய் (கா. பா. 11ஐ 2) ஒருவகைச் செடியின்
காய்; பெ.

Page 190
34 lol -l-é456 Tiúl i ionresult -i-.
மருங்கை (தா. பா. 1612) = (அ) குழந்தை பிறந்து முப்பத் தோராம் நாள் நடைபெறும் சடங்கு. மருங்கு = மரி யாதை, மானம், என்னும் சொற்களிலிருந்து தோன்றி யதே மருங்கை. இச்சடங்கைக் குழந்தையின் மாமன் முன்னின்று நடாத்தி, தன் பெருமையை நிலைநாட்டு வதால் இச்சடங்கு காரணப்பெயராம். (ஆ) மருங்கு = பக்கம்; பக்கத்தினர் = உறவினர். உறவினர் பொருட்டு நடாத்தப்படும் சடங்கு; பெ. மருதோண்டி (கா. பா. /ஐ 28) = செம்பஞ்சிக்குழம்பு போன்று, மருதோண்டிச் செடியிலே தயாரிக்கப்படும் செந்நிறக் கலவை; பெ. மருந்து (கா. பா. /2உ| 2) = வசியமருந்து, இதனைச் சேர்த்தி
மருந்து என்றும்கூறுப; பெ. மருந்துபோடுதல் (கா. பா. /4| 3) = வசியமருந்துபோடுதல்,
தொ. பெ. மறவணை (கா. பா. /4/18.) = மணவறை > மறவணைஎனமாற்றம் பெற்றுள்ளது; பெ. இவ் வொலிமாற்றத்தை Metathesis. 676öILIri. மறவன் (கா.பா 11உ/12) = < மறவேன்; தன்மை எதிர்மறை
வினைமுற்று. மறுகுதலை பண்ணுதகா (கா.பா./1உ/5) = ஏமாற்ருதே என்ற பொருளிலும், பிடிகொடாதிருத்தல் என்ற பொருளிலும் வழங்குகின்றது. வி.மு. மன்னிமன்னி (கா.பா.1ஐ|1) = < மன்னுதல், மெதுமெதுவாக. மாசிக்கடலோட்டம் (தொ.பா./பொலி/3:1) = மாசிமாதத்தில் மாமாங்கம் என்ற தலத்தில் தீர்த்தமும், தேர்த்திரு விழாவும் நடைபெறுவதை இத்தொடர் குறிப்பிடு கின்றது; தொ.பெ. மாரு இலுப்பை (தொ.பா/பொலி/4:13) = ஒருவகை இலுப்பை மரம், இதனை மரவிலங்கு மரம் என்றும் கூறுவர்; பெ ܗ மாறுசெய்தல் (கா.பா./3/19) = ஏமாற்றுதல்; தொ.பெ. மாறுதண்டு (தொ.பா./தண்டு/2:95) தோணியின் வலப்பக்கத்தே வலிக்கப்படுந் துடுப்பு. பெரிய தோணியிலே தண்டயல் சுக்கான் பிடிக்க, நால்வர் துடுப்புவலிப்பர். மூவர் இடப்பக்கத்திலும், ஒருவர் வலப்பக்கத்திலும் துடுப்பு வலிப்பது வழக்கம். மாறு தண்டை இடது கைவலுவின் மூலமே வலிக்க வேண்டியிருப்பதால், இதிற் பயிற்சி யுடையோரே இதனை வலிப்பர். பெ.

சொல்லடைவு 353
மாருவாரி (தொ பா./ஏர்/1:6) = வானவாரி -> மானவாரி -> மாரு வாரி வானம்பார்த்த வேளாண்மைச் செய்கையை மானவாரி, வானவாரி என்பர். வானம்பூ, மானம்பூ என்ற வழக்கினை நோக்குக. முடிப்பன் (கா.பா./1உ/17) = < முடிப்பேன், கட்டுவேன்முடித்தல் என்பது தனியே வரும்போது சிறப்பாக திருமணம் முடிப்பதையே குறிப்பதாக வழங்குகின்றது; தன்மைவினைமுற்று. முடுகி (தொ.பா/ஏர்/2:11) = விரைவாக, வி.எ. முத்தட்டுக்காணி (தா.பா./3/2ஆ) = மூன்றுபிரிவுகளாக அமைந்
துள்ள வயற்காணி; இ.பெ. முன்னிரண்டும் (கா.பா./1ஐ/8) = இத்தொடர் பாடலில் இரு
தனங்களையும் சுட்டிற்று; பெ. மூக்குச்சிவத்தல் (கா.பா,|1ஐ/32) = இத்தொடர் குழுஉக்குறி யாகப், பெண்பக்குவமடைவதைக் (பெரியபிள்ளையாதல்) குறிக்கும்; தொ.பெ. மோருபோட்டகத்தி (தொ.பா./அ.வெ./5) = மான்கொம்பு,
மரம் என்பனவற்ருற் பிடிபோட்டகத்தி. வங்கிசம் (தொ.பா./பொலி/4:8) = <வம்சம்; பெ. வட்டா (கா.பா.11ஆ/13) = வெற்றிலைத்தட்டம்; இது வெண் கலத்தாற், சித்திரவேலைப்பாடுடையதாகச் செய்யப் பட்டிருக்கும். வெற்றிலைத் தட்டு வட்டமாக இருப்ப தாலும், விருந்தினர் வட்டமாக இருந்து தாம்பூலந் தரிப்பதாலும் காரணப்பெயர் பெறுவ தாயிற்று எனலாம். வடிதயிர் (கா.பா./3/20) நீர்பிழிந்து அகற்றப்பட்ட தயிர்; இதனைச் சீலையில் முடிப்பாகக் கட்டிவைத்துப் பல நாட் களுக்கு உபயோகப்படுத்துவர்; வினைத்தொகை. வத்துது (தொ.பா./ஏற்றம்/1:19) = <வற்றுகிறது, ற்ற்->த்த
வி.மு. வந்துக்க (கா.பா./1ஈ/23) ஊ <வந்துகொள்ள, வி.எ. வந்தைநெல் (தொ.பா.காவல்/1) = விதைப்பதற்காக நீரில் ஊறவிட்டுப் பதப்படுத்திய நெல், முளைக்காவிட்டால் அதனை வந்தைநெல் என்றுகூறுவர்; பெ. வப்புள் (கா.பா./1ஈ25) = பப்பாசி முஸ்லீம் வழக்கு, பெ, வம்புவசை (கா.பா./1எ/9) = வசைமொழி; ஒருபொருட்கிளவி
LDー23

Page 191
354 LDL-l-desortly Drt all L.
வரம்பு (தொ.பா./ஏர்/2:11) = வயற்பரப்பைச் சிறு சிறு பிரிவு களாகப் பகுத்துக் கொள்வதற்குக் களிமண்ணுற் குவித்துக்கட்டப்படும் சிறிய கட்டுக்கள் (அணைகள்) வரம்பு எனப்படும். வயற்பிரிவுகளை வரையறுத்துக் காட்டுவது. இதுவாதலால் வரம்பு என்பது காரணப் பெயர் ஆகும்.(வரம்புபடுத்தல் > கட்டுப்படுத்தல்). பெ. வரவை (தொ. பா. காவல் 2)= பெரிய வயற்பரப்பை வகுத்துப் பிரிக்கப்பட்ட சிறுசிறுபகுதி வரவை எனப்படும். நான்கு வரம்புகளுக்கு உட்பட்டபகுதி வரவையாகும். சிறு வரவையைக் "கனட்டி’ என்று கூறுவர்; பெ. வருகுது (தொ. பா. |வலை 1:56) = < வருகிறது-> Gucu) (5.05 ->
வருகுது; வி. மு. አ வலைக்கால் (தொ. பா. /வலை 1:65) = கடலில் வீசிய கரைவலை யினை இழுக்கும்போது ஒவ்வொருபக்கத்து விலையையும் ,ே 3 + "வலைக்கால் என்பர்; பெ. W - . வள்ளல் (தொ. பா. காவல் 12) = ஆறு, குளம், வாய்க்கால் என்பனவற்றின் கரையோரங்களிலும், நீரோட்டமற்ற நீர்நிலைகளிலும் முளைத்துக் கொடியாகப்படர்ந்து கிடக் கும் ஒருவகைக் கீரை, பெ. வளலை (தொ. பா. அ. வெ. 6) = சிறிய தோற்றமுடைய விசப்.
பாம்பு, பெ. வளையணும் (தொ. பா. தண்டு 1) = < வளையவேண்டும்; வி.மு வன்னிமை (கா. பா. 11ஐ|4) = வன்னிப்பிரதேசத்தின் தலைவராக இருந்தோர் வன்னிமை என்று அழைக்கப்பட்டனர்; பெ. வாங்கிவிட (தா. பா. 12/4) = ஒடித்துவிட, 'புலிக்குரல்மத்தம் Հ. * ஒலிப்ப வாங்கி." பெரும்பாணுற்றுப்படை 156, οή, στ. வாட்டி (தொ. பா. |பொலி/2:1) = ஒரம். சிங்களத்திலும் இச் சொல் இதே பொருளில் வழங்குகின்றது, பெ, வாடுறங்கா (கா. பா.11ஆ| 14) = < வாடுகிறேன் + கா: வி. (Մ)»
வாடைநீர் (தொ. பா. தண்டு 3:35) = வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஒடும் கடல் நீரோட்டத்தை வாடை நீர் என்பர்; பெ. t
வாடைநீர்வாங்கல் (தொ. பா. தண்டு 3:35,36) = வாடைநீர் ஒடும்போது ஏற்படும் ஈர்ப்புச் சத்தி; தொ. பெ.
வாப்பா (கா. பா. 11ஈ/ 12) = தந்தையைக் குறிக்கும் முஸ்லீம்
உறவுமுறைப்பெயர்.
',

சொல்லடைவு 35
வாய்ச்ச (கா. பா. 11ஐ 21) = < வாய்த்த; த்த->ச்ச; பெ. எ. வாரி (தொ. பா. |பொலி|9:4) = நெல்; பெ. வாரிக்களம் (தொ. பா. |பொலி| 9:4) = நெற்களம் > சூட்டுக்
களம்; இ, பெ, வாழுறது (கா. பா. 2ஈ| 2) = வாழ்கிறது; வி. மு. வாறதாக்கும் (கா. பா. /4/ 5) = < வருகிறது + ஆகும் வி. மு. விசளம் (கா. பா. 12ஆ| 8) = < விஷயம் -> வியளம் ->
விசளம்; பெ.
விரசிடுகா (கா. பா. 11ஈ/27) = < துரத்திவிடுகா என்பதுபொருள் விரால் (தொ. பா. /ஏற்றம் 1:39 = < வரால், கெண்டை; பெ. வில் (கா. பா. 11ஊ| 12) = குளம், வில் என்று முடிவடையும் தம்பிலுவில், ஒலுவில், எருவில், கோண்டாவில், கொக் குவில், இணுவில், மிருசுவில் முதலான இடப்பெயர்களும் காண்க. இதுபோன்றே சிங்களத்திலும் (வில - குளம்) காலவில, கலவில, களு-போவில முதலிய இடப்பெயர் களுள. வெம்புறது (தா. பா. 12 1) = < வெம்புகிறது; வி. மு. வெள்ளாம (தொ. பா. அ. வெ. 1) = < வேளாண்மை; பெ. வெள்ளாப்பு (கா. பா. 12அ/ 6) = விடியற்காலை; பெ. வேணும் (கா. பா. 11ஏ| 1) = < வேண்டாம், வே + ண் + ட் டி.
ஆம் வேணும். வி. மு. வேணும் (கா. பா. 11ஈ| 23) = < வேண்டும், வே + ண் + ' +
உம் வேணும். வேலவெட (தொ. பா. /நெல்/) = வேலைகள். சிங்களத்தில் வட
என்பது வேலையைக் குறிப்பதாகும். இத்தொடரில் வரும் வெட 'வட” என்பதன் திரியாகும்; ஒருபொருட் கிளவி, வைச்சி (கா. பா. 11உ| 10) = < வைத்து; த்த் -> ச்ச், வி.எ. வைச்சிநடத்தி (கா. பா. 11உ! 10 = < வைத்து நடாத்தி,
கொண்டுநடாத்துதல்; வி. எ. வைப்பமர் (தொ. பா. தண்டு 1) = < வைப்போமா, யாவாரி (தொ. பா. |பொலி| 6:8) = < வியாபாரி; பெ.

Page 192
356
பின்னிணைப்பு-2
மட்டக்களப்பு மாவட்ட
சூட்டுக்களத்தில் வழங்குஞ் சிறப்புச் சொற்கள்
அட்டம்
அடைக்கலச் செல்லி
அரக்கன்
அரக்கு
அரைவயிறன் அவுரி
உருட்டுவான் கட்டு
கட்டைக்கூழம்
கடற்கரும்பு
கணக்கன்
கந்து கந்துமுறி கருங்களங்கள் கருங்காய் கரைஞ்சான்
கலங்கல்
சூட்டுக்களத்தின் ஒரம், எல்லை. பெண்பிள்ளை.
சூடுமிதிக்கும் மாடுகளில் முதன்மை யானது. களத்தின் அரக்குப் ப்தித் திருக்குமிடத்தில் நின்று அம்மாடு குடுமிதிப்பதால் அது காரணப் பெயராம்.
சூட்டுக்களத்திற் வைக்கும் பேழை.
கா வ ற் பண் ணி
உள்ளீடு நன்குநிரம்பப் பெருத நெல். சூட்டுக்களத்தில் உயரத்தே ஏறிநின்று நெல் தூற்றுவதற்குப் பயன்படும் முக்காலியாலான உயர்பீடம்.
கயிறு வா, போ, எடு, கொடு; ஒருவர் சுமந்து செல்லக் கூடிய பாரமுடைய நெற் கதிர்ச் சுமை நெல்துாற்றும்போது பறக்கும் பெருங் கழிவுகள்.
Lair
மரக்கால், கணக்குடன் அளக்கப்படும் கருவியாதலால் காரணப்பெயரா யிற்று.
சொல்லடைவு பார்க்க தண்டுடன் காணப்படும் நெல். நன்கு முற்றிவிளைந்த நெல்.
Lunt ig5
வாழைப்பழம்
நீர்

பின்னிணைப்பு-2
கலைதல்
களம் களவட்டி களம்பொலிதல்
குஞ்சுவாயன் குரல்காட்டுதல் கூரைக்கோடு கூளக்கையன்
கொம்பு
கொட்டன் கோணியல்
கோல் கோலம்
செல்லன் தலைப்பொலி
வைரப்பொலி தாமரையன் தோல்வாயன் நார்க்கம்பு நெடுமின்னி நெடுமுழவன் பட்டறைப்பெரு
- 6}|fTIL) 6ÖT
படுவான் பல்லிளிச்சான் புகைஞ்சான் பெருக்கம் பெருகு பெருமாள் பெருவாயன்
357
குடுமிதித்து முடிந்ததும், களத்திற் பொங்கி மகிழ்வுடன் யாவரும் தங்கள் ஊருக்குக் கலைந்து செல்வதாற் காரணம்பற்றிக் 'கலைதல்” என்ற தொழிற் பெயர் இறுதிநாள் நிகழ்ச் சியைச் சுட்டிற்று. சூட்டுக்களம் சூடுபோட்டு மு டி ந் து வீட்டுக்குச் செல்லுதல் சிறுபெட்டி. பொலிப்பாட்டுப்பாடுதல் வீடு
பேய் - நெல்துாற்றும்போது நெற்குவியலின் விளிம்பிற் சிதறிக்கிடக்கும் நெல்,
கலைந்து
மாடுசாய்க்குந்தடி,
சாக்கு
சாணகம் களத்தைக் கூட்டுவதற்குப் பயன் படும் குச்சிகளான கூட்டுக்கம்பும்
கோலம் எனப்படும்.
மிதிமாடுகளின் பெயர்
தூற்றிய நெற்குவியலின் சிறந்தபகுதி. மாடுகளின் பெயர்
சாக்கு
கேட்டிக்கம்பு
மரணம்
கயிறு, வேட்டி, சால்வை.
பட்டறை
மேற்குத்திசை தேங்காய்ப்பாதி புகையிலை
இல்லை
வா, போ ஆண்பிள்ளை
கடகம், சாக்கு

Page 193
358
பெருவெளிச்சம் பொலி பொலிக்கொடி பொலிமதித்தல் பொன்னின்களம்
G8 Tř மம்பட்டிக்கொல்லன்
மின்னிக்கட்டுதல்
வலிச்சான் வருணன் வாட்டி வாட்டிகட்டுதல்
வாரி
வாரிக்களம் வாரிக்காலன்
விசுக்குவாள்
வெள்ள வெள்ளபெருகுதல் வெள்ளம்
வெள்ளோடன்
வேலைக்காரன்
வைரப்பொலி
மட்டக்களப்பு மாவட்ட.
நெருப்பு நெல்
வைக்கோல்
நெல் அளத்தல்
நெற்களம்
குடு
மண்வெட்டி
நித்திரைசெய்தல்
ரொட்டி
மழை
களத்தின் ஒரம்
சூடுமிதிக்கும்போது நெற்கதிர்கள் களத்தின் ஓரங்களிற் சரிந்து கிடப்பின் அவற்றை ஒதுக்கி நடுவேகுவித்தல்.
நெல் நெற்களம், சூட்டுக்களம் சூடுமிதிக்கும் மாடுகள். அவைதம் கால்களால் நெல்லை (வாரி) உதிரச்
செய்வதா ல் காரணப்பெயர்
பெற்றுள்ளன.
in T (B) 5 &rt d: கேட்டிக்கம்பு. சோறு சோறுசாப்பிடுதல் յ5rՒ
தேங்காய்
சாய்க்கப்பயன்படும்
சூட்டுக்களத்தில் வேலை செய்வோர்  ைவ க் கோ லை க் கிளறுவதற்காகப் பயன்படுத்தும் நுளிவளைந்த கம்பு.
முதல்தரமான நெல்,

பின்னிணைப்பு-3 359
பின்னிணைப்பு-3
மீன்பிடிப் பாடல்களில் வரும் சிங்களச் சொற்கள்"
அல்லங் கொல்லக்க (தொ.பா. தண்டு 2:3) = எல்லோருமாகிப்
பிடி. - - - - அல்லப்பங்புத்தே (தொ.பா. /வலை 2:83) = பிடியடா மகனே. அல்லங்வரே (தொ பா. தண்டு 2:87) = பிடித்துவாடா அப்பிட்டதேவி (தொ.பா. தண்டு 2:89) = எங்களுக்குக்
கிடைக்கும். அய்யாக்கபொர (தொ.பா. தண்டு 2:20) = அண்ணனுடன்
F65.6 s MSW* அவுறுது தெக்காய் (தொ.பா. தண்டு 2:43) = இருவருடங்கள். அறுக்குளா (தொ.பா. /வலை 2:66) = அறுக்குளாமீன். அன்னவரே (தொ.பா. தண்டு 2.87) = அந்தமாதிரி. ஆய்தியங் (தொ.பா. தண்டு 2:92) = திரும்பவும் இழு. உருளே (தொ.பா. தண்டு 2:70) = சூடைமீன், ஒன்னரஜ் (தொ.பா. தண்டு/ 2:82) = இதோபார். (நட்பின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் இவ்வாறு அழைப்பது வழக்கம்) R. Y a ஒயாங் ஆவே (தொ.பா. |தண்டு 2:80) = அங்கே வருகிறது. ஒக்கம் (தொ.பா. தண்டு 2:14) = எல்லோருமாக. கிளவள்ளா (தொ.பா. /வலை 1:68) = கிளவள்ளா என்னும்
கடல்படுமீன். * > கெதரே நெத்தி வெலாவே = வீட்டில் இல்லாத நேரத்தில். கொந்த (தொ.பா. தண்டு 2-81) = நல்ல கோஸ்லந்த (தொ.பா. |தண்டு 2:107) - சத்தமிட்டு இழுங்கோ
தம்பலவட்டி (தொ.பா. தண்டு 2:46) = மரக்கறிக்கூடை. நாறின்பாச (தொ.பா. |தோணி 1:59 = வலையைப்போக
விடாது இழு.
பாசக்காறே (தொ.பா. /தோணி 1:3) = வலைக்காரன். புத்தே (தொ.பா. தண்டு/2:83) = மகனே. மாதலசீதல (தொ.பா. தண்டு 2:5) = பெரியவலை சிறியவலை.
பாடல்களில் வருஞ் சிங்களச் சொற்களும், பாடல் இலக்கமும், சிங்களச் சொல்
வடிவமூம், அதன்பொருளும் முறையே இங்குத் தரப்பட்டுள்ளன.

Page 194
$360 மட்டக்களப்பு மாவட்ட.
மாலு (தொ.பா. தண்டு 2:69) = மீன். மூலமெத்தனி (தொ.பா. /வலை 1:9) = தொடக்கம் இதோ. யனவாபாறே (தொ.பா. தண்டு 288) = பாதையிற் போகிறது. லங்கடிலங்காய் (தொ.பா. தண்டு 3:22) = கிட்டக்கிட்ட வரட்டவரே (தொ.பா. தண்டு 2:85) = வேகமாகவா வரட்டயன்ன (தொ.பா. தண்டு 286) க வேகமாகப்போ, வாட்டிய ஒக்கே (தொ.பா. தண்டு 2:47) = தொங்கல் அதோ.
ஜாலம்மாஜாலி (தொ.பா. தண்டு 2:32) = இது ஐயாவா மொழிச் சொல் எனக் கூறப்படுகிறது. இசைத்தொடர்.
ஜாலிஜாலங் (தொ.பா. தண்டு 2:19) = இசைத்தொடர்.
பின்னிணைப்பு:4
ஒலி ஒழுங்கியல் மாற்றம்
உயிர் ஒலி மாற்றம்:
அ-அஎ = உயரம்->ஒயரம்->ஒசெரம் g->2. a gir21T-Y-L16iralt
= பிரியம்->புறியம்
= கயிறு->கவுறு உ->ஊ = புகுதல்-அபூருதல் உயரம்->ஒசெரம் = جي حيحسطه எல்லை.அ.அல்லை = لإلى حد 67 பெண்டுகள்->பொண்டுகள் = ډېره حيد6T
gy = வையாதே->வையாதو حT gr→三塁 = சேவல்->சாவல் ஐ->அ = தலைவலை->தலவல வைப்போமா->வைப்பமா = لاقى حسجg
மெய் ஒலி மாற்றம்:
ri = புகுதல்->பூருதல்جمہ ங்க்->ஞ்ச் = இங்கே->இஞ்சே ஆட்கள்->ஆக்கள் = نئی حمL
க கேட்கிருய் அகேக்காய்

பின்னிணைப்பு.4 361
ட்அர் = ஏசிடாதே->ஏசிராதே
= கேட்டிடுவேன்->கேட்டிடுவன் Lu = கேட்போம்->கேப்பம்حیم"L
சாட்சி.அ.சாச்சி = نئی حسL த்த்->ச்சி = இறைத்து->இறைச்சி
= இலைத்து->இலைச்சி ந்த்->ஞ்ச் = அரிந்து->அரிஞ்சி ய்->ச் = அயல்->அசல்
க உயரம்->உசரம் If1> 6iu = கயிறு->கவுறு ய்-> ஆ = யாரடா-அஆருடா si->Gö = கதிர்->கதிரு இணர்->இணல் = (و حدس rj fi உ சால்-த-சார்حجسدلته ற்->க் = நிற்கட்டோ->நிக்கட்டோ ற்ற்-சத்த க ஏற்ருல்-> ஏத்தால ற்ற்->ட்ட் = அரற்றுதல்-அரட்டுதல் ன்ற்->ண்ட் = கன்று->கண்டு
= நின்ருல்->நிண்டால்
வினையெச்சங்கள் சில உகர ஈற்றுகுக்ப் பதிலாக இகரவடிவம் பெறுகின்றன:
ஆய்ந்து --> ஆய்ஞ்சி இறைத்து -> இறைச்சி எறிந்து -> எறிஞ்சி காய்ந்து --> காய்ச்சி சாய்த்து -> சாய்ஞ்சி சிரித்து --> சிரிச்சி பிணைந்து جسـ L؟l007ھت@g{ பிரிந்து --> பிரிஞ்சி வைத்து --> வைச்சி எழுத்துகள் ஓரினமாதல்.
ஆய்ந்து --> ஆய்ஞ்சி இங்கே --> இஞ்ச கேட்போம் --> GLID தோன்றுகிறது --> தோணுது படுகிறதுகா --> படுகுதுகா வருகிறது -> வருகுது

Page 195
362 மட்டக்களப்பு மாவட்ட.
பின்னிணைப்பு 5
கலைச்சொற்கள்
அமைப்பாய்வு Structural Analysis அறிவிப்பாளர் జా Informants இசைக்குறிமானம் ge * Music Notation இசையமைப்பு வாய்பாடு = Introductory Formula இசைப்பாடல்கள் ܒ Lyrics இணைவிழைச்சிப்பாடல்கள் = Obscinity Songs இயைபமைப்பு = Imrpovisation உயர்ந்தோர் பண்பாடு = Main Culture எடுத்துக்காட்டுஆய்வுமுறை = Sampling Research
... Method
ஒலிநயம் = Rhythm கருவள வழிபாடு Fertility Cult கள ஆய்வு Fieldwork
Communal Authorship Socio-Psychologists Socio-Linguists Readymade Phrases Motifs Repetitive Formula
சமுதாயப் படைப்பு = சமூக உளவியலாளர் بح சமூக மொழியியலாளர் = தயார்நிலைத் தொடர்கள் = தலைமைக் கருத்துகள் : திரும்பத்திரும்ப வரும் = வடிவ வாய்பாடு
பண்பாட்டாய்வாளர்
பயன்பாட்டு ஆய்வு பாமரர் பண்பாடு
மக்கள் மரபியல் மக்கள் மரபியலாய்வாளர் மாற்று வடிவம் விரிபமைப்பு
Culturalists
Functional Analysis Little Culture Folklore
Folklorists
Varriant
Expansion Structure

பின்னிணைப்பு-6 363
பின்னிணைப்பு-6
ஈழத்து நாட்டார் இலக்கிய வெளியீடுகள்
அரியகுட்டிப்பிள்ளை, சி. அ. (திகதி குறிப்பிடப்படவில்லை) (பதிப்பு) அருவிச்சிந்து, கதிரையப்பர் பள்ளு, பண்டிப்பள்ளு, குருவிப் பள்ளு, யாழ்ப்பாணம். ஆசீர்வாதம், மு. வி. (1962) (பதிப்பு) எஸ்தாக்கியர்நாடகம், யாழ்ப்
பாணம், ஆசீர்வாதம் அச்சகம். --- (1968) (பதிப்பு), விசயமனேகரன்(நாட்டுக்கூத்து), யாழ்ப்
பாணம், அசீர்வாதம் அச்சகம். இராமலிங்கம், மு. (1951) (பதிப்பு) இலங்கை நாட்டுப்பாடல்கள்,
கொழும்பு, சுதந்திரன் பிரின்டர்ஸ். --- (1960) (பதிப்பு) கிராமியக் கவிக்குயில்களின் ஒப்பாரி,
கொழும்பு, சுதந்திரன் அச்சகம். ---- (1961) (பதிப்பு) வடஇலங்கையர் போற்றும் நாட்டார்
பாடல்கள், சுன்னகம், திருமகள் அழுத்தகம்.
---- (1962) (பதிப்பு) களவுக்காதலர் கையாண்ட விடுகதைகள்,
மைலாப்பூர், சென்னை, ராதாபிரசுரம்.
---- (1970) (பதிப்பு) பொது அறிவு விடுகதைகள், கொழும்பு,
இளம்பிறை அச்சகம்.
---- (1971) (பதிப்பு) நாட்டார்பாடல்களில் பாண்டித்தியம்,
யாழ்ப்பாணம், சக்தி அச்சகம்.
கணபதிப்பிள்ளை. க, (1971) (பதிப்பு) மகாமாரித்தேவி திவ்யகரணி
யாழ்ப்பாணம், விவேகானந்த அச்சகம்.
கந்தையா, வி. சீ. (1958) (பதிப்பு) கண்ணகை அம்மன் குளுத்திப் பாடல்கள் (முதலிய நான்கு நூல்கள்,) மட்டக்களப்பு, இளங்கோ அச்சகம்.
--- (1968) (பதிப்பு) கண்ணகி வழக்குரை, காரைதீவு, காரைதீவு இந்துசமய விருத்திச் சங்கவெளியீடு.
--- (1969) (பதிப்பு) அனுவுருத்திர நாடகம், மட்டக்களப்பு, மட்டக்களப்பு பிரதேசக்கலாமன்ற வெளியீடு.
--- (1969) (பதிப்பு) இராமநாடகம், மட்டக்களப்பு, மட்டக்
களப்பு பிரதேசக் கலாமன்ற வெளியீடு.

Page 196
364 மட்டக்களப்பு மாவட்ட.
கலாநிலையம், சஞ்ன் அம்மானை, கொழும்பு, (திகதி குறிப்பிடப்
படவில்லை)
சதாசிவ ஐயர், தி. (1940) (பதிப்பு) மட்டக்களப்பு வசந்தன் கவித்
திரட்டு, கல்முனை, ஆசிரியர் சங்கம்,
சரஸ்வதி புத்தகசாலை (பதிப்பு) கண்டிராஜன் ஒப்பாரி, கொழும்பு.
சிவத்தம்பி, கா. (1963) (பதிப்பு) மார்க்கண்டன் நாடகம், வாள
பிமன் நாடகம், கொழும்பு, இலங்கைப் பல்கலைக்கழக,
கொழும்பு இந்துமாணவர் சங்க வெளியீடு. செல்லையா, மா. செ. (1962) (பதிப்பு) கோவலனுர் கதை, பருத்தித்
துறை, கலாபவன அச்சகம்.
செல்வநாயகம், அருள் (1957) 'பூசணியாள் ஊஞ்சள் கவிதை,
கொழும்பு, சரஸ்வதி புத்தகசாலை.
செல்வராச கோபால், க. தி. (1970) (பதிப்பு) கபோத காதை,
தேற்றத்தீவு, ஜீவா பதிப்பகம்.
நடராசா, எவ்.எக்ஸ். ஸி. (1960) (பதிப்பு) எண்ணெய்ச்சிந்து,
கொழும்பு.
(1960) (பதிப்பு) கண்ணகி வழக்குரை (முதற்பாகம்),
கொழும்பு.
---- (1962) (பதிப்பு) ஈழத்து நாடோடிப் பாடல்கள், யாழ்ப்
பாணம், ஆசீர்வாதம் அச்சகம்.
வித்தியானந்தன், சு (1960, 1962) (பதிப்பு) மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள், கொழும்பு, இலங்கைக் கலைக் கழகத் தமிழ் நாடகக் குழுவெளியீடு. ---- (1962) (பதிப்பு), அலங்காரரூபன் நாடகம், கொழும்பு, இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக் குழு வெளியீடு. ---- (1964) (பதிப்பு) எண்டிறிக்கு எம்பரதோர் நாடகம், மன்னர், மன்னர் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் வெளியீடு.
--- (1964) (பதிப்பு) மன்னர் நாட்டுப்பாடல்கள், மன்னர், மன்னர் மாவட்டப் பலநோக்கக் கூட்டுறவுச்சங்கங்களின்
வெளியீடு.

பின்னிணைப்பு-6 365
---- (1966) (பதிப்பு) மூவிராசாக்கள் நாடகம், மன்னர் மன்னுர் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் வெளியீடு
---- (1967) (பதிப்பு) ஞானசவுந்தரி நாடகம், மன்னர், மன்னர் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் வெளியீடு, ---- (1970) (பதிப்பு) கஞ்சன் அம்மானே, கண்டி, ருேயல்
பிரிண்டஸ்.
யாழ்ப்பாணப் பிரதேசக்கலாமன்றம் (1961) (பதிப்பு) வாய்மொழி இலக்கியம், யாழ்ப்பாணம், நாட்டுப்பாடல், நட்ன, நாடகக்குழு வெளியீடு.
ஸ0 பைர், எம். வி. எம். (1969) கண்ணுன மச்சி, சென்னை, திரீயெம்
பப்ளிஷர்ஸ்

Page 197
பின்னிணைப்பு - 7
பாடுநர், அறிவிப்பாளர் பற்றிய விவரம்
எண் Qì LI u ở s பால் வயது தொழில் கல்வி
மகிழடித்தீவு
க. உசுமுண்டாப்போடி ஆண் 65 SLOo ஏட்டுக் கல்வி 2 சி. திசவீரசிங்கம் ஆண் 32 slob ஏட்டுக்கல்வி 3 ப. ஞானமுத்து ஆண் | 40 |அண்ணுவியார் ஏட்டுக்கல்வி 4. ம, தருமலிங்கம் ஆண் 35 BESIDívil ஏட்டுக்கல்வி
மீன்பிடி 5 வ. சிந்தாத்துரை ஆண் 32 கமம் எஸ்.எஸ்.சி. 6 திருமதி க. கற்பகப்பிள்ளை பெண் | 48 mera 7 திருமதி வே செல்லமுத்து பெண் 1 52 mwin -
பண்டாரியாவெளி
8 க. சுந்தப்போடி ஆண் | 50 கமம் ஏட்டுக்கல்வி
வட்டவிதானை 9 ஞா, அலேயப்போடி ஆண் 45 »Âಒr ஏட்டுக்கல்வி 10 க கந்தப்போடி gosT 52 கமம் ஏட்டுக்கல்வி
தோம்புதோர் 11 ம. வேலாப்போடி ஆண் 47 மீன்பிடி 12 ப. வேதப்போடி ஆண் | 49 asiott 13 க. செம்பாப்போடி ஆண் 55 85LDüibo 14 அழகிப்போடி கணபதிப்பிள்ளை ஆண் 35 கமம் ஏட்டுக்கல்வி 1S சின்னத்தம்பி கண்ணம்மை பெண் 52 16 சித்திரன் தெய்வானை பெண் 48
17 சின்னத்தம்பி நாச்சிப்பிள்ளை பெண் 46 an ar.

பிண்னிணைப்பு-7 367
எண் (ôì u u ữ பால் 1 வயது தொழில் கல்வி
கொக்கட்டிச் சோலே
18 அ. கதிர் காமப்போடி ஆண் 55 Gupo ஏட்டுக்கல்வி
19 க. பாலிப்போடி ஆண் 60 Supo ஏட்டுக்கல்வி
20 ச. சின்னத்தம்பி ஆண் 53 கமம்
மீன் பிடி
21 த. செல்வ நாயக ஆண் 45 solo எஸ்.எஸ்.சி.
ஆசிரியர்
22 திருமதி. க. செல்லையா (ðu6ðir || 50
களுதாவளை
23 இ. வேலுப்பிள்ளை ஆண் 58 கமம் ஏட்டுக்கல்வி
தோட்டம்
24 சி. தங்கராசா ஆண் 50 கமம் ஏட்டுக்கல்வி
அண்ணுவியார்
25 வ, கணபதிப்பிள்ளை ஆண் 45 சோதிடர் ஏட்டுக்கல்வி
26 திருமதி சின்னச்சிக்குட்டி பெண் 53
27 திருமதி வயிரமுத்து பெண் 51
காத்தான் குடி
28 அ. அசஞர் லெப்பை ஆண் 70 அண்ணுவியார்
29 மு, சுலைமா லெப்பை ஆண் 65 வியாபாரம்
30 க. கச்சி முகம்மது ஆண் 56 வியாபாரம் ஏட்டுக்கல்வி
31 மு. உமறு லெவ்வை ஆண் 60 மீன்பிடி ஏட்டுக்கல்வி
அண்ணுவியார்
32 அலியார் அசஞர் ஆண் | 64 கமம் W

Page 198
தாலாட்டுப்பாடல்கள் 368
பின்னிணைப்பு- 8
பாடல் 1
பாடல் 2
தாலாட்டுப் பாடல்கள்
/1/ குழந்தையைப் புகழும் பாடல்கள்
முத்தான முத்தோ - நீ
முதுகடலில் ஆணிமுத்தோ கோராத முத்தோ - நீ
குறத்திகையில் தாவடமோ ஈனுத முத்தோ - நீ
இருளிகையில் தாவடமோ சாதிப் பெருங்கடலில் - நீ
சங்கீன்ற வெண்முத்தோ ஆராய்ந்த முத்தோ - நீ
அலைகடலில் ஆணிமுத்தோ கொட்டிவைச்ச முத்தோ - நீ
குளிச்செடுத்த ஆணிமுத்தோ முத்தான முத்தோ - நீ
முதுகடலில் ஆணிமுத்தோ சங்கீன்ற முத்தோ - நீ
சமுத்திரத்தில் ஆணிமுத்தோ (7) *
மான் ஈண்ட கண்டோ - தம்பி
மலடிபெத்த மாங்குயிலோ வானத்து வெள்ளியோ - தம்பி வளருங் குலக்கொழுந்தோ கண்டுப் பிலாவோ - தம்பி
கணியில் இனியமகன் கூளன் பிலாவோ - தம்பி சுளையில் இனியமகன் மாமன் மடிச்சிலம்போ - நீ
மைத்துனன்மார் கைச்சிலம்போ மாமன்மகள் கொண்டைக்கு - நீ
மலர்ந்த பூச்சரமோ (7)
* பாடல்களின் இறுதியிற் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் பாடகரைக் குறித்து
காட்டுவனவாகும். எண்களின் விளக்கத்தைப் பின்னி?ணப்பில் L LI ஆம் பக்கங்களில் கண்க,

தாலாட்டுப் பாடல்கள் 369
urlsi 3
அ. மானே மரகதமே மல்லிகைப்பூச் செண்பகமே ஆ. தேனே திரவியமே தெவிட்டாத செந்தேனே இ. ஆரமுதே என்கண்ணே அருக்காணிப் பாலகனே ஈ. மாற்றுயர்ந்த பொன்னே மறுவில்லாச் செங்கரும்பே (7)
பாடல் 4
அ. சீதைபெத்த பாலகனே - நீ சிறிராமர் தன்மகனே ஆ. அல்லிபெத்த பாலகனே - நீ அருச்சுனனர் தன்மகனே இ. தூதுசென்ற மாயவனே - நீ துவாரகை மன்னவனே ஈ. தானே வந்தவனுே - நீ தருமர்கள் தந்தவனே
அஞ்சு குடிக்கரசோ - நீ பாண்டவர்கள் பாற்குடமோ ஊ. தான்துலங்கும் வில்லெடுத்து தனியே வளைப்பவரோ எ. சீதைமண வாளரோ - என் செல்வமே கண்வளராய் ஏ. ஆரார் திருமகனே - நீ ஆதிசிவன் தன்மகனே ஐ, பிள்ளைக்கலி தீர்க்கவந்த பெருமாள் திருமகனே ஒ. வனம்போன பாண்டவருக்கு - நீ
வழித்துணையாய்ப் போனவரோ (15) பாடல் 5
மாடப் புருவோ - அழகுகண்டேரீ
மலைநாட்டு நங்கணமோ தங்கப்பொன்னே தம்பியரோ - அழகுக்கண்டேரீ
தங்க வயிடூரியமோ ஆலம்பழமோ - அழகுகண்டேரீ
அழகுகிளி மாம்பழமோ வெத்திலைப் பூவோ - அழகுகண்டேரீ
விரிஞ்ச செந்தாமரையோ (15) பாடல் 6
LDー24
பட்டமரம் தளைக்க - என்னரசிமகனே
பலகனிகள் தான்சொரிய கரடி கவிபாட - என்னரசிமகனே கண்டபுலி தெண்டனிட காட்டான காவலடா - என்னரசிமகனருக்கு
கடியசிங்கம் தான்காவல் வேட்டைநாய் காவல் - என்னரசிமகனருக்கு
வேங்கைப்புலி தான்காவல் (15)

Page 199
370
மட்டக்களப்பு மாவட்ட.
பாடல் 7
1.
II. Say.
<翌·
கண்ணே உறங்கு றங்கு - என்கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு முத்தே பவளமே - என் முழுமதியே கண்ணுறங்கு கண்ணே உறங்குறங்கு - என் கண்மணியே உறங்குறங்கு (6)
தேனே திரவியமே தெவிட்டாத செந்தேனே கோனே குலவிளக்கே கோமானே கண்வளராய்
தேடக் கிடைக்காத திரவியமே தேன்கடலே பாடப் படிக்கவந்த பாக்கியமே கண்வளராய்
இ. வாடாத பூவே வாசமுள்ள மருக்கொழுந்தே
தேடாத பூவே தெள்ளமுதே கண்வளராய்
ஈ. சீரார் பசுங்கிளியே செல்வமே சீமானே
ஆரார் பசுங்கிளியே அன்னமே கண்வளராய் உ. சந்திரரோ சூரியரோ சந்திரமதி பாலகரோ
சிவன்உமையாள் ஈண்டெடுத்த
சிவக்கொழுந்தே கண்வளராய் (6) an L6 8
1. அ. மோப்பஒரு மூக்கினுக்கும் மொழியஒரு நாக்கினுக்கும்
ஏப்பம்தரும் மகிழ்ச்சி இலஞ்சியமே கண்வளராய்
ஆ. அத்தை மடிமேலும் அம்மான்மார் தோள்மேலும்
வைத்து முத்தாட்டும் மரகதமே கண்வளராய்
இ. முத்துமுத்துச் செவ்விளநீர் முத்தமெல்லாம் கொத்தமல்லி
II. GT.
கொத்தமல்லி காக்கவந்த குமரேசா கண்வளராய் பாலை விரும்பினையோ பணியாரம் வேண்டினையோ சேரலைப் பசுங்கிளியே” என் சுந்தரமே கண்வளராய் பசித்தாய் என்றுணக்கு பாலூட்டித் தாலாட்டி ஒத்திரப்பூந் தொட்டிலிலே சிகாமணியே கண்வளராய் பாட்டனர் ஆண்ட பழுதில்லா ராச்சியத்தை தாயதி ஆளவென்று தானுள வந்தாயோ முத்திடிச்சு மாவுதெள்ளி முத்தமெல்லாம் கோலமிட்டு கோலமிட்ட முத்தத்திலே கொலுவிருக்க வந்தாயோ (6)

தாலாட்டுப் பாடல்கள் 371
LumTL sio 9 அ. கண்ணே கண்ணுறங்கு - என்ர கண்மணியே நித்திரைசெய் ஆ. பொன்னே உறங்குறங்கு - என்ர புனக்கிளியே நித்திரைசெய் இ. நித்திரைசெய் நித்திரைசெய் நெடியபுவி மன்னவனே ஈ. சித்திரப்பூந் தொட்டிலிலே சிகாமணியே நித்திரைசெய் உ, தங்கநல் தொட்டிலிலே தருமரே நித்திரைபோ ஊ. நித்திரைபோ நித்திரைபோ நெடிய புவி மன்னவனே (17)
பாடல் 10
அ. பிள்ள வேணுமெண்டு - நாங்க கதிரமல போகயிலே
கதிரமலச் சாமிவந்து பிள்ளக்கலி தீர்த்தாரோ ஆ. மைந்தனில்ல எண்டுசொல்லி மாமாங்கம் போகயிலே மாமாங்கச் சாமிவந்து மைந்தன்கலி தீர்த்தாரோ இ. விளக்கிலிட்ட நெய்போல வெந்துருகி நிற்கயிலே
கதிரமலச் சாமிவந்து - எங்கட கண்கலக்கம் தீர்த்தாரோ ஈ. மக்களில்லாக் கப்பலிலே மாமலடி வாசலிலே மண்டுருச்
சாமி - எங்ளோட துணையிருக்க வந்தாரோ. உ. இலைதீய்ந்து கொடிகருகி இல்லளண்டு போகயிலே
மழைத்துளியாய் வந்து - எங்கட மனக்கவலை தீர்த்தாரோ ஊ. எங்ககுடி மங்குதெண்டு எதிரிக்குடிகள் ஏசாம
சங்குவளைப் பொற்கதவு தான்துறக்க வந்தாரோ எ. பிள்ள என்னும்ஆச பேராச தீர்க்கவந்த வள்ளலே எந்தன் வடிவழகோ என்னரசு ஏ. முத்துமுத்துச் செந்திரு முத்தமுள்ள பட்டறையில்
நெல்களவு போகுமெண்டு - மகனேநீ
காவலுக்கு வந்தாயோ. (22)
பாடல் 11
மலடிக் கொரு குழந்தை - மகனேநீ
மாயவனர் தந்தபிச்சை இருடிக் கொருகுழந்தை - மகனேநீ
ஈசுவரனர் தந்தபிச்சை காயாது காய்த்தாயோ - மகனேநீ
காத்திகையாய்ப் பூத்தாயோ

Page 200
372
/2/
பாடல் 1
•Hے
::"، . (بي أولاذ)
LDL-dió56Tll-LDITQull-...
பூவாத மாவினையே - மகனேநீ
பூப்பித்த புண்ணியனே பிச்சைக்கு வந்தாண்டி - இவன் பிள்ளக்கலி தீர்த்தாண்டி இல்லாக் குடிக்கு - இவன்
ஒளிவிளக்காய் வந்தாண்டி பிள்ளக்கலி தீர்க்கவந்த - எந்தன்
பெருமாள் திருமுடியோ மைந்தன்கலி தீர்க்கவந்த - எந்தன்
மன்னரோ என்னரசு. (27)
அழும்குழந்தையை அரவணக்கும் LT L5D366iT
மானே அழுகிறது - என் மாங்குயிலோ வெம்புறது
அரசோ அழுகிறது - என் அம்புலியோ வெம்புறது மானே அழுகிறது - என்மாங்கனியோ வெம்புறது அரசோ அழுகிறது - என் அம்புலியோ வெம்புறது தேனே அழுகிறது - என் தெள்ளமுதோ வெம்புறது
அரசே அழவேண்டாம் - என்
அம்புலியே வெம்பவேண்டாம் தேனே அழவேண்டாம் - என்
தெள்ளமுதே வெம்பவேண்டாம் மானே அழவேண்டாம் - என்
மாங்குயிலே வெம்பவேண்டாம் அரசே அழவேண்டாம் - என்
அம்புலியே வெம்பவேண்டாம்
சீறி அழுவானேன் சிறுகண்ணுல் நீர்வார வெம்பி அழுவானேன் பொன்னன வாய்நோக கதறி அழுவானேன் கத்தரிப்பூ வாய்நோக வெம்பி அழுவானேன் வெள்ளரிப்பூ வாய்நோக சீறி அழுவானேன் செம்பவள வாய்நோக ஏன்தான் அழுகிருயோ ஏலப்பூ வாய்நோக பொக்கை வாய்ப்புன்னகையால் பூரிக்கும் என்மனசு பூரிக்கும் என்மனசை ஏங்கவைச்சு ஏன் அழுதாய்

தாலாட்டுப் பாடல்கள் 373
ஈ. கொம்புக் கனியோ . நீ கோதுபடா மாங்கனியோ
வம்புக் கழுகிருயோ - உன் வாய்எல்லாம் தேன்ஊற நித்திரைக்கோ நீயழுதாய் - உன் சித்திரப்பூந்
தொட்டிலிலே பாலுக்கோ நீஅழு தாய்-கண்ணே பசித்தழுது வந்தாயோ கூழுக்கோ நீஅழு தாய் - உன் குளுந்தபசி ஆறலையோ (16) பாடல் 2
அ. மாமி அடிச்சாளோ மாதாளம் கம்புவெட்டி
ஆச்சி அடிச்சாளோ ஆமணக்கந் தண்டுவெட்டி பாட்டி அடிச்சாளோ பால்வார்க்கும் சங்காலே மாமி அடிச்சாளோ மைதீட்டும் கையாலே பாட்டி அடிச்சாளோ பாலூட்டும் கையாலே ஆச்சி அடிச்சாளோ ஐவிரலால் தொட்டாளோ பாட்டி அடிச்சாளோ பால் வார்க்கும் கையாலே அண்ணன் அடிச் சானே அருணுக் கொடியாலே
ஆ. ஆர்தான் அடிச்சாரோ - என்னரசிமகனே உனக்கு
ஆளுருவி வேராலே ஆச்சிதான் அடிச்சாளோ - என்னரசிமகனே உனக்கு
பால்வார்க்கும் சங்காலே மாமிதான் அடிச்சாளோ - என்ன ரசிமகனேஉனக்கு
மாதாளங் கம்புவெட்டி ஆச்சிதான் அடிச்சாளோ - என்னரசிமகனே உனக்கு
ஆமணக்கங் கம்பாலே பாட்டிதான் அடிச்சாளோ - என்னரசிமகனே உனக்கு
பிரண்டந் தடிமுறிச்சி.
இ. மாமன் அடிச்சானே - மகனே உனக்கு மல்லிகைப்பூச் செண்டாலே மாமி அடிச்சாளோ - மகனே உனக்கு
மாதாளந் தண்டாலே மச்சி அடிச்சாளோ - மகனே உனக்கு
மாதாளந் தண்டாலே ஆரடிச்சி நீயழுதாய் - மகனே நீ
அடிச்சாரைச் சொல்லியழு (22)
பாடல் 3
அ. ஆச்சி அடிச்சாளோ அமுதூட்டுங் கையாலே
பேச்சி மனம்பொறுத்து சண்முகனே நித்திரைசெய்.

Page 201
374
Tsii) 4
மட்டக்களப்பு மாவட்ட.
மாமி அடிச்சாளோ மைதீட்டுங் கையாலே நிமிசம் மனம்பொறுத்து நித்திரைசெய் கண்மணியே
அப்புச்சி அடிச்சாரோ ஆதனக் கையாலே கூப்பிட்டு நான்கேட்பேன் குஞ்சரமே கண்ணுறங்காய்
. கண்ணை அடிச்சாரார் கற்பகத்தைத் தொட்டாரார்
கூப்பிட்டு நான்கேட்பேன் குமரேசா கண்ணுறங்காய்
ஆண்பணையிற் கொக்கே அணில்கோதா மாம்பழமே ஆரடிச்சு நீஅழுதாய் அஞ்சனக்கண் மைகரைய
முத்துமுத்துச் செங்கதிரு முத்தமுள்ள பட்டறையை சுத்திவந்து காவல்காக்கும் சுந்தரனை ஆரடிச்சார் (27)
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்திடுவோம் தொட்டாரைச் சொல்லியழு
தோள்மூட்டை வாங்கிவிட அடிச்சாரைக் சொல்லியழு
ஐவிரலையும் வாங்கிவிட ஆரடிச்சு நீஅழுதாய்
ஆக்கினைகள் பண்ணிவிட ஆளப் பிறந்தானை
அஞ்சாமல் s24, JL q-diřárrtrio அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் பண்ணிவைப்போம் தொட்டாரைச் சொல்லியழு
தோள்விலங்கு போட்டுவைப்போம் செய்தாரைச் சொல்லியழு
சேவகத்தை மாற்றிவைப்போம் அறையில் அடைச்சுவைப்போம்
ஆக்கினைகள் பண்ணிவைப்போம் சிறையில் அடைச்சுவைப்போம்
சிறைவிலங்கு பூட்டிவைப்போம் கட்டை விரல்தறிச்சு
கடல்மீது ஏற்றிவைப்போம்

தாலாட்டுப் பாடல்கள் 375
பாடல் 5
பாடல் 6
சுண்டு விரல்தறிச்சு
சீமைவிட்டு நீக்கிடுவோம் வெண்ணயால் விலங்குசெய்து
வெயிலிலே போட்டிடுவோம் மண்ணுல் விலங்குசெய்து
தண்ணியிலே போட்டிடுவோம் (26)
வம்புக்கோ நீயழுதாய்
வாயெல்லாந் தேனேட ஆரும் அடிக்கவில்லை
ஐவருந் தீண்டவில்லை தாயார் குரல்கேட்டு - தம்பி தவிச்சு அழுகிருராம் ஆரும் அடிக்கவில்லை - தம்பியை
அங்கொருவர் தீண்டவில்லை தாயார், மடிதேடி - தம்பி தானே அழுகிருராம் தம்பிதானே அழுகிருராம் தாயார் மடிதேடி அல்லிமகா ராசாவுக்கு
கிட்டவந்து பால்கொடம்மா (6)
ஆரடிச்சோ கண்ணிர் ஆருய் பெருகியது தாயார் மடிநிறைஞ்சு தகப்பனுர் தோள்நிறைஞ்சு மாமி மடிநிறைஞ்சு மாமனுர் தோள்நிறைஞ்சு சித்திரை மாதம் சிறுவெள்ளம் வந்தாப்போல் ஆறு பெருகி ஆன குளிப்பாட்டி குட்டை பெருகி குதிரை குளிப்பாட்டி குளமும் நிறைஞ்சி குதிரை குளிச்சேறி’ முந்நூறு ஆண்டிகள் அமுதுண்டு கைகழுவி வாய்க்கால் நிறைஞ்சு வழிரிேக்கிரிக்கைகழுவி இஞ்சிக்குப் பாய்ஞ்சி.இலுமிச்சிைவேரோடி தாழைக்குப் பாய்கையிலே இத்ஞ்பிேணிதீர்மீ"க்ண்ணீரு வாழைக்குப்பர்கய்கையில்ே இறிதின்தhtகண்ணீரு (16)
È cana

Page 202
376
மட்டக்களப்பு மாவட்ட .
/3/ தாயின் தவமும் தவப்பயனும் பற்றிய பாடல்கள்
Um Lei 1
பாடல் 2
பாடல் 3
முந்தித் தவமிருந்து - நான்
முற்பரனைப் பூசைசெய்து அள்ளி மிளகுதிண்டு - நான்
அரஞரைப் பூசைசெய்து வெந்தமா திண்டால்
விரதம் அளியுமெண்டு பச்சைமாத் திண்டு - நான்
பார்வதியைப் பூசைசெய்து எலுமிச்சம் பழத்தில் - நான் ஏழுசி தான்நிறுத்தி ஊசி நிறுத்தி - நான்
ஒருகால் தவமிருந்து தவமிருந்த புண்ணியத்தால் - எனக்குத்
தந்தார் பரமசிவன் கடக்கரை ஓரத்திலே
கந்தருட வாசலிலே இடைக்கிடை பொன்கொடுத்து
ஏந்திவந்தேன் பாலகனை (27)
வெள்ளி மெழுகி. நான்
வெகுநாள் தவமிருந்து
சனிமெழுகிச் சாதம்வைச்சு - நான்
சந்திரனைக் கைதொழுது எறும்பு நுழையாத
ஈசுவரனுர் கோயிலிலே தலையாலே நடந்து . நான்
531 5.5Garnt செய்துவந்தேன் தவசுசெய்து பெத்தெடுத்த - என்
செல்வத் தவக்கொழுந்தே.
மாணிக்கம் நேர்ந்து - நான்
மலேஉயரப் பொன்நேர்ந்து
காணிக்கை நேர்ந்தேன் - எனக்கொரு
கைக்குழந்தை வேணுமெண்டு,

தாலாட்டுப் பாடல்கள்
பாடல் 4
பாடல் 5
umje 6
t-п,4 7
un li 8
و umL
37.
காணிக்கை நேர்ந்து
கைநிறையப் பொன்நேர்ந்து
மாணிக்க மெண்டு
மடிக்குழந்தை ஏந்திவந்தேன்
மடிக்குழந்தை ஏந்திவந்தேன் - என்
மனக்கவலை தீரவெண்டு, (6)
அள்ளி மிளகுதிண்டு
அமாவாசை நோன்பிருந்து வெத்திலையைத் திண்டால்
விரதம் அழிஞ்சுபோகுமெண்டு சந்தனத்தைத் திண்டால்
தவங்குலைஞ்சு போகுமெண்டு குங்குமத்தைத் திண்டல்லவோ
கும்பிட்டேன் கோயிலெல்லாம் கும்பிட்டு நிற்கயிலே
குதித்தோடி வந்தசெல்வம்.
மாமாங்கம் ஆடி - நான் மதுரைக் கடலாடி சிறிரங்கம் ஆடி - நான் திருப்பால் கடலாடி தைப்பூசம் ஆடி - நான் தவசுபண்ணி வந்தவரோ
சிறிரங்கம் ஆடி. நான் சிவனேடு வாதாடி தனித்தீர்த்தம் ஆடி - நான் தவசுபண்ணி வேண்டினதோ
ஆடி அமாவாசையிலே - நான்
ஆயிரம் பேருக்கு அன்னமிட்டு
தேடிய புண்ணியத்தால் - நீ
செல்வமாய் உதித்தாயோ
மாலையாய்த் தந்தாலே - எனக்கு வாடிவிடு மெண்டுசொல்லி
திருநீருய்த் தந்தாலே - எனக்கு
செல்வழிஞ்சு போகுமெண்டு

Page 203
378 மட்டக்களப்பு மாவட்ட.
பிள்ளயாய்த் தந்தாரே
பேருலகு ஆளவெண்டு ஆளப் பிறந்தவரோ - நீ
அரசாள வந்தவரோ
பாடல் 10
தைஅமாவாசையில் - நான்
தனுஷ்கோடி நீராடி
பார்வதியைப் பூசைசெய்ய - நீ
பாலகஞய் வந்தாயோ
Li nru 6 l 1
ஆடி அமாவாசையிலே உங்களப்பா
ஆயிரம்பேருக்கு அன்னமிட்டு
கோடி தவமிருந்து - கண்ணே
கொண்டுவந்த பாலகனே (15)
/4/ குழந்தையின் சொத்துகள்பற்றிய பாடல்கள்
பாடல் 1
அ. பச்சை இலுப்பைவெட்டி
பால்வடியத் தொட்டில் கட்டி தொட்டிலுமோ பொன்னல
தொடுகயிருே முத்தால ஆ, பச்சை இலுப்பைவெட்டி
பால்வடியத் தொட்டில்கட்டி தொட்டிலுமோ பொன்னல
தோறணங்கள் முத்தால
இ. மாணிக்கக் கால்நாட்டி வச்சிரவடம் பூட்டி ஆணிப்பொன் தொட்டிலிலே
அருமருந்தே நித்திரைசெய்
ஈ. பச்சிலை வடம்பூட்டி
பவளத்தால் கால்நாட்டி ஆணிப்பொன் தொட்டிலிட்டேன்
அருமருந்தே நித்திரைசெய்

தாலாட்டுப் பாடல்கள் 379
2.
பாடல் 2
ege
ஈக்கெடுத்துக் கயிறுபின்னி
இசையநல்ல ஊஞ்சலுங்கட்டி ஊஞ்சலோ பறக்குதில்லை
உயர்ந்த கொப்போ அசையுதில்ை எல்லோரும் ஆடும்உஊஞ்சல்
இலையசையும் கொப்பசையும் தம்பி ஆடும் ஊஞ்சல்
கைபோடக் கண்துரங்கும்
ஆடுமாந் தொட்டில்
அசையுமாம் அன்னஊஞ்சல்
தொட்டில் அசையத்
தோளன்மார் தானுட
மஞ்சம் அசைய
மச்சினமார் தானுட (17)
முத்துச் சம்பா நெல்விளையும்
முத்தட்டுக் காணியும் அழகுசம்பா நெல்விளையும்
ஆக்காண்டி வயலும் தம்பிக்குச் சீதனமாய்
தான்தருவார் உன்மாமன் கனத்தபசு மாடுகளாம் - தம்பிக்கு பட்டிநிறைஞ்ச பசுக்காலி பட்டியோடு சாய்த்து
தான்தருவார் உன் மாமன் சங்கினல் பால் கொடுத்தா
சந்தணவாய் நோகுமெண்டு தங்கத்தால் சங்குசெய்து
கொண்டுவந்தார் உன்மாமன் தங்கத்தால் அருணக்கொடி
தம்பிக்கு கைவளியமோதிரமும்
கொண்டுவந்தார் தாய்மாமன்
மருமகனைப் பார்ப்பமெண்டு சின்னஞ்சிறு விரலுக்கு
சித்திரம்போல் மோதிரங்கள் பாட்டனர் கொண்டுவந்தார்
பசுங்கிளியைப் பார்ப்பமெண்டு

Page 204
380 மட்டக்களப்பு மாவட்ட.
தங்கத்தகடு இளைத்து
தனிப்பாய்தான் சமைத்து
சோடிப்பொன் தான் கொடுத்து
கொண்டுவந்தார் உன்மாமன்
ஆ. மாமன் பொலிஅளக்க - அழகுகண்டாருக்கு
மச்சினமார் கொண்டுவர காட்டான காட்டெருமை - அழகுகண்டாருக்கு
கறக்கநல்ல பால்மாடு (22)
LumTLđiv 3
அ. ஒடநல்ல வீதி ஒளிக்கநல்ல முன்நிலவு
ஆடநல்ல ஊஞ்சல் அசையநல்ல ஆலமரம் ஆ. வடக்கே சிறு கிணறு வாசலெல்லாம் பாலாறு
தெற்கே சிறுகிணறு தெருவெல்லாம் பூம்பந்தல்
இ. வடக்கே உறைகிணறு வாசலிலே பாற்கிணறு
பால்கிணற்றைப் பார்க்கவந்த பார்வதியாள் பாலகனே
ஈ. வெள்ளி விளக்கெரிய வெண்கலத்தால் தேர்ஒட
வெள்ளி வெளிச்சத்திலே - தம்பி விளையாடி வாருளும் (22) பாடல் 4
அ. முத்துவிற்பான் செட்டி - மகனே உனக்கு
முடிசமைப்பான் ஆசாரி பட்டுவிற்பான் பட்டாணி - மகனே உனக்கு
பணங்கொடுப்பார் உன் தகப்பன் ஆ. கண்டுப் பனைஒலை - மகனே உனக்கு
கணக்கெழுத நல்லோலை பனையோலை பெரியோலை - மகனே உனக்கு
பேரெழுத நல்லோலை (7)
/5/ உறவினர் பெருமைபற்றிய பாடல்கள் பாடல் 1 (தாய்)
அ. அம்மான்மார் கண்டு
அகமகிழ மேதினியில் பெண்மாது நான்ஈன்ற
புத்திரனே கண்ணுறங்காய்

தாலாட்டுப் பாடல்கள் 381
ஆ. எங்க குலம்விளங்க
என்கணவன் பேர்துலங்க தவப்பேருய் நான்பெத்த
தவக்கொழுந்தோ புண்ணியமோ
இ. கன்றுமான் கண்டே
கவரிமான் ஈண்டகண்டே கன்னிமாப் பூப்பூத்து
தலைக்காயாய்க் காய்த்தாயோ
阿F。 காயாத வாழை
கன்னிவாழை தண்டுபிரித்து பூவாத வாழை
புதுமலராய்ப் பூத்தாயோ
உ. மலடிமலடி எண்டு
மானிடத்தார் ஏசாமல் மலடி வயித்தினிலே
மாங்கனியாய் வந்தாயோ
ஊ. இருளிஇருளி எண்டு
இங்குள்ளோர் ஏசாமல் இருளி வயித்தினிலே
ஒளிவிளக்காய் வந்தாயோ எ. பெத்ததாய் முத்தோ - மகனே உன்
பெரியதாய் பேர்அரசோ (6)
பாடல் 2 (மாமன் - தந்தை)
அ. 1. வடக்கே சிறுகிணறு
வாசலிலே பாலாறு
பூவெடுத்துப் பூசைசெய்யும்
புண்ணியஞர் உன்மாமன்
2. புதிர்எடுக்கும் காணியிலே
பொலிவிளையும் பூமியிலே
பொலிமதித்து வந்தார்
பொன்னன உன்மாமன்
3. ஐந்து தலைநாகம்
அடைகிடக்கும் தாழையிலே அஞ்சாமல் பூவெடுக்கும்
அருச்சுனனுர் உன்தகப்பன்

Page 205
282
மட்டக்களப்பு மாவட்ட.
4. சந்திரரோ உன் மாமன்
சூரியரோ உன்தகப்பன் வெள்ளியோ உன்மாமன்
வேந்தரோ உன்தகப்பன்
5. பந்தம் பிடிச்சு
பசித்தாரை ஆராய்ஞ்சு ஆதரவால் அன்னமிடும்
அருச்சுனராம் உன்தகப்பன்
<翌, மாசிப்பிறையைக் கும்பிடம்மா - உன்
மாதா குடி வாழ்ந்திருக்க தைப்பிறையைக் கும்பிடம்மா - உன்
தகப்பன்குடி வாழ்ந்திருக்க இ. தங்கச்சம்பா நெல்விளையும்
தருமவான் காணியிலே முத்துச்சம்பா நெல்விளையும் உன்மாமன் நெற்காணி
FF。 சங்கு முழங்குதங்கே
சங்கரனர் கோயிலிலே சங்கெடுக்கப் போனவர்கள்
சந்திரரோ சூரியரோ
2. மாமன் ஒருகோடி - அழகுகண்டாருக்கு (17)
மச்சினமார் முக்கோடி
/6/ குழந்தையின் சடங்குகள்பற்றிய பாடல்கள்
பொழுதால் அடிஅளந்து புத்தகத்தில் நாள்பார்த்து காதுகுத்தி தோடுபோட்டு நல்லதொரு பேருமிட்டு மருங்கைவைச்சு உன்மாமன் சீர்வரிசைகள் செய்வாராம் தங்கத்தால் தோடுசெய்து காதுக்குச் சிமிக்கியும்கொண்டு காதுகுத்த வருவார்கள் கனத்தகுடி மாமன்மார்கள் பாக்குப் பதினெண்கலமாம் பச்சரிசி முக்கலமாம்
இளநீர் இருகலமாம் இளந்தேங்காய் முன்னுாரும்
கட்டோடு வெத்திலையாம் கழுகம் களிப்பாக்காம் இத்தனையும் கொண்டு இறக்குவார் தாய்மாமன் முத்திடிச்சு மாக்குழைச்சு முத்தமெல்லாம் கோலமிட்டு என்மகனே உந்தனுக்கு எடுத்திடுவேன் ஆலாத்தி ஆணிப்பொன் தொட்டினிலே ஆலாத்திதான் எடுத்து என்னருமை மைந்தனுக்கு எடுத்திடுவேன் ஆலாத்தி (7)

தொழிற் பாடல்கள் 383
தொழிற் பாடல்கள்
>1. பொலிப் பாடல்கள்
பாடல் 1
துதி
தாயேபொலி தம்பிரானேபொலி பூவேபொலி பூமாதேவிபொலி பொலி பொலி
விருத்தம்
நாளதுகேட்டு நார்க்கம்புவெட்டி நல்லகிடாக்கள் இரண்டுபுணைச்சு ஏரது பூட்டி இடம்படஉழுது எல்லைஇல்லாத செந்நெல்லும்விதைச்சு செந்நெல்லும் கதிரும் சிறப்புறக்கண்டு ஆளதுகொண்டு அருவிவெட்டி உப்பட்டிபிரட்டி கட்டாகக்கட்டி பேரராகவைச்சு பொலியெனக்கண்டு பாண்டியன்எருது பன்னீராயிரம் சோழன்எருது தொண்ணுாருயிரம் கடலுந்திடலும் கோணியலாக இரவும் பகலும் ஏற்றிஇறக்கப் பொலி வளரப் பொலிஅம்மா .பொலி.பொலி.பொலி.
மறுதரு
மண்ணின்களத்தில் கட்டைத்தள்ளி , மாட்டைஏற்றி மாதாவைப் புகழ்பாடுவேனே சின்னிக்குதிரையெனப் புகழ்பாடுவேனே ஆசாரிதச்சனைப் புகழ்பாடுவேனே பொலிதுரத்தும் கொட்டனைப் புகழ்பாடுவேனே பொலிஅளக்கும் கணக்கனைப் புகழ்பாடுவேனே யாரைச்சொல்லிப் புகழ்பாடுவேனே பொலிபொலி பொலிஅம்மா . பொலி .
பாடல் 2
1.
2.
எழுவான் வாட்டியிலே - பொலிபொலி . பொலி ஈசுவரனர் அச்சரமாம் 9 ) Aas P , பாடுவான் வாட்டியிலே - , u to 0 ps வைரவர் அச்சரமாம் PP, Dov as,

Page 206
384
LDL-é66rüLH Lom 6ll -L--
3. தென்புற வாட்டியிலே - , , 8 to
தேவர்கள் அச்சரமாம் 9 a o o 4. வடதிசை வாட்டியிலே - ,, on 8 p. பரமசிவன் அச்சரமாம் oe e 9 po
மறுதரு: 5. கந்துநறுநறென ஒ ஓ ஒ . . .
கருங்களங்கன் தான்நிரம்ப - பொலிபொலி ஒஒ. 6. ஒடிநடந்திடுங்கோ ஒ ஓ ஒ .
உங்கள் உறுதியுள்ள காலாலே பொலிபொலி ஒஒ. 7. இந்தநடைதானே செல்லனுக்கு
இன்னுமுண்டோ அன்னநடை பொலிபொலி ஒஒ. 8. வெள்ளிவெளிச்சத்திலே செல்லா - நீ
விளையாடி நடந்திடடா பொலிபொலி ஒஒ . 9. வெள்ளிசனிக்கிழமை உங்களுக்கு
வேண்டியதோர் நற்கிழமை - பொலிபொலி. .
(2)
LumL6i) 3 1. செல்லாநீ ஒடிநடந்திடடா . என்னரசிகண்டே
உன் உறுதியுள்ள காலாலே - பொலிபொலிஅம்மா . . ஓகோ பொலி . 2. நீசாய்ஞ்சுசரிஞ்சு நடந்திடடா - என்னரசிகண்டே
உன்சந்தனக்கால் பொன்சொரிய - பொலிபொலிஅம்மா . ஒகோபொலி. 3. அம்மாநீ ஒடிநடந்தியண்டா - என்னரசிகண்டே
உனக்குஒரு நிமிசநேரமம்மா - பொலிபொலிஅம்மா . ஒகோபொலி. 4. வட்டத் தலையரடா - என்னரசிகண்டேநீங்க
வாலாட்டும் கொம்பரடா - பொலிபொலிஅம்மா . . ஒகோபொலி. 5. போரேறப் பொலிவளர - என்னம்மாதாயேநம்ம
பொலிக்கும்பல் தான்வளர - பொலிபொலிஅம்மா . ஒகோபொலி. 6. பொழுது விடியுதம்மா - என்னரசிகண்டேநம்ம
பொற்கோழி கூவுதம்மா - பொலிபொலிஅம்மா . . ஒகோபொலி sep

தொழிற் பாடல்கள் 385
7.
10.
o
8.
1().
1.
12,
3.
பலபல வென்று விடியுதம்மா - என்னரசிகண்டேநம்ம பால்மாடு கத்து தம்மா - பொலிபொலிஅம்மா . . . ஒகோபொலி. ஆக்காண்டி கத்து தம்மா - என்னரசிகண்டேஎங்கும் ஆளரவம் கேக்கு தம்மா - பொலிபொலிஅம்மா . . . ஒகோபொலி. வண்டும் இரையுதம்மா - என்னரசிகண்டேதேன் வாசமுள்ள பூத்தேடி - பொலிபொலிஅம்மா . . .
ஒகோபொலி . இந்தநடைதானே - என்னரசிகண்டேஉங்களுக்கு இன்னுமுண்டோ அன்னநடை - பொலிபொலிஅம்மா . ஒகோபொலி. பொலிபொலி அம்மா ஒகோ ஒ ஓ பொலிபொலி அம்மா (18)
LIT Li 4
பொலிபொலிபொலிஒ.பொலி கணபதியே கரிமுகனே கந்தருக்கு மூத்தவனே , 9s கந்தரது தேர்ஏற கணபதியார் தேர் முன்னடக்க 9 வேடர்வனத்தினிலே வேலர் வேங்கை மரமானராம் , குறவர் வனத்தினிலே கந்தர் கோல் ஊண்டித் தள்ளாடி , கோணேசர் கோயிலிலே திருமுடியில் தானிருந்து s பறக்கும் சிறுகுருவி சிறகுரெண்டும்பொன்னல , 2 வெள்ளிவெளிச்சத்திலே செல்லா விளையாடி
நடந்திடடா 99. 99 வேடர் குலமோ வேளார் வங்கிசமோ s ஆற்றிலே தலைமுழுகி ஆபரணத்தால் கோலமிட்டு 92 வெள்ளிக்கிழமை உங்களுக்கு வேண்டியதோர்
நற்கிழமை 9. ஒ புன்னைமரமாம் அது பூக்கும்பூ ஆயிரமாம் 2s த9 ஆயிரம் பூக்கொல்லையிலே கந்தர் அல்லிமணம்
கொண்டாராம் 9 92 மாரு இலுப்பைத் தோணிவெட்டிக் கந்தர் 9 και 3 வங்காளம் போனராம் (1) 99 LD 25

Page 207
386 மட்டக்களப்பு மாவட்ட.
பாடல் 5
1. மாசிக் கடலோட்டம் மாமாங்கத் தேரோட்டம்
ஒஒஒ தாயே பொலீஇ மாவிலுப்பைத் தோணிவெட்டி மாமாங்கம் போரைாம்
ஒஒஒ தாயே கந்தர் மாமாங்கம் ஆடி மதுரையில் நீராடி s நீராடி நீர்க்குளிச்சு நெத்தியிலே நீறணிஞ்சு s குறவர் வனந்தனிலே கோலூண்டித் தள்ளாடி s வேங்கை மரமாகி வேடர்க்குத் தூணுகி s வேடர் வனந்தனிலே வேங்கை மரமானுராம் 罗罗 பொன்னல் அவுரிகட்டி பொன்னவுரி மேலிருந்து 9 : பொன்னவுரி மேலிருந்து பொலியழகும் பார்த்தாராம் (1)
2.
பாடல் 6
1. வந்தவினை தீர்த்தருளும் வாழ்கதிரை வேலோனே
ஒஒஒ தாயே பொலீஇ 2. கந்தன் தேரோட கணபதி தேர் முன்னடக்க s
3. முன்னடக்கும் பிள்ளையாருக்கு கண்ணடக்கம்
பொன்லை 9. 4. கண்ணடக்கம் பொன்னல காற்சிலம்பு முத்தால Ü 9g» 5. முத்துவிற்பான் செட்டிமகன் முடிசமைப்பான் ஆசாரி , 6. ஆசாரி தச்சனையும் அளக்கும் கணக்கனையும் s 7. பட்டணத்துச் செட்டிமகன் பட்டுவிலை கூருனே 8. பட்டணத்துச் செட்டிமகன் பலதுறையில் யாவாரி , 9. தாளையிலே பூவிருக்க தலைநோகுதென்பாள்
மெல்லியளும் s 10. வானம் குடையாக மல்லியப் பூத்தண்டாக 11, நாகம் குடைபிடிக்க நற்கருடன் வட்டமிட (8)
TLs) 7
1. சீதேவியாள் போனஇடம் செங்களனிர்ப் பூப்பூக்கும்
ஒஒஒ தாயே பொலீஇ உத்தமியாள் போன இடம் உழுத்தமரம் பூத்துளிக்கும் , பத்தினியாள் போனஇடம் பட்டமரம் பால்சொரியும் , சங்கு முழங்குதங்கே தாமரையாள் பொய்கையிலே , , வடக்கே சிறுதாளே வாசமுள்ள பூந்தாளை y
வாட்டி வலமாக வலம்புரிச் சங்காக ஒடிநட கண்டே உலாவிநட கண்டே
s
ss

தொழிற் பாடல்கள்
ஒஒஒ தாயே பொலீஇ
8. அட்டம் பாராதே அடிப்பேன் பிரம்பாலே རྒྱ,
9. முன்னங்கால் வெள்ளையடா முகம்நிறைஞ்ச சிதேவி , 10. பார்த்து நடகண்டே பார்வையுள்ள கண்ணுல se 11. கேட்டு நடகண்டே கிருபையுள்ள காலால 12. வேட்டைக் கிடாநாம்பன் வீசுகொம்பன் தாமரையன் ,
பாடல் 8
1. கந்தோ நறுநறுக்க . பொலிதாயே
கருங்களமோ சோதிமின்ன - பொலி 2. சாந்தால் தரைமுழுகி . பொலிதாயே
சந்தணத்தால் கோலமிட்டு - பொலி 3. வட்டத் தலையழகா . பொலிதாயே
வடிவான வால்வீச்சு - பொலி 4. ஈன மலடியம்மா . பொலிதாயே உன்னை
ஈன்றஇடம் கங்கையம்மா - பொலி 5. வாட்டி வலமாக . பொலிதாயே வளைஞ்சுவா வல்லரக்கா - பொலி 6. சாய்ந்தமருதுகவா . பொலிதாயே நீங்க
சவர் ஆருே படுக்கைகளா - பொலி
7. ஒடிநட செல்லா .. பொலிதாயே உனக்கு
ஒருசாம வேளையல்லோ - பொலி
8. சிட்டுப்போல் தலையழகா . பொலிதாயே
சிங்கார நடையழகா - பொலி 9. இந்த நடைதானே . பொலிதாயே
இன்னுமுண்டோ அன்னநடை - பொலி 10. கண்டுப்பனை ஓலை . பொலிதாயே கணக்கெழுத நல்லோலை - பொலி 11. பொழுதோ விடியுதங்கே . பொலிதாயே
பொலிக்கொடியும் வளருதங்கே - பொலி 12. முரசு முழங்குதங்கே . பொலிதாயே
முக்கண்ணன் கோயிலிலே - பொலி
13. சாய்ஞ்சு நடந்தயெண்டா . பொலிதாயே
தரையெல்லாம் சோதிமின்னும் - பொலி

Page 208
388 மடடக்களப்பு மாவட்ட.
பாடல் 9
பொலிபொலிதாயே பொலிதம்பிரானே பொலிபூமாதேவி தாயேபொலிபொலி மண்ணின்களமே மாதாவேநிறைகளமே பொன்னின் களமே பூமாதேவிஅம்மா பொலி பொலி .
1. சங்கோ சமுத்திரமோ சமுத்திரத்தின் ஆணிமுத்தோ - பொலி 2. முத்தோ பவளமோ முதல் தரத்து ஆணிமுத்தோ - பொலி 3. வெள்ளி வெளிச்சத்திலே விளையாடி வாருமம்மா. பொலி 4. வாரிக் களந்தேடி வாழுவாளாம் சீதேவி - பொலி 5. சங்கு முழங்குதல்லோ சங்கரனர் கோயிலிலே - பொலி 6. வேடர் வனந்தனிலே கந்தர் வேங்கைமர மானராம் - பொலி 7. குறவர் வனந்தனிலே கந்தர்கோலூண்டி நிண்டாராம்-பொலி 8. கந்து நெறுநெறென்ன களத்தில் பொலிக்கும்பல் தான் பொழிய- பொலி 9. போரேறப் பொலிவளராய் புவியிலுள்ளோர் ஈடேற-பொலி
பொலி . (14)
Lursio 10 1. வாரிக் களந்தேடி . பொலி பொலி பொலி ஒ . பொலி
வாருளாம் சீதேவி 2. சீதேவியாள் போன இடம் . 9 9 وو
செங்களனிப்பூப் பூக்கும். 3. பூக்குதாம் செங்களனி . 9 3雳
பூமாதேவி கால்பதிக்க
4. பூமிக்கடி அறிய . 's s
போனராம் நாரணனர்
5. சீதேவி கால்பதிக்க . ' . 39
தெருவெல்லாம் பொன்மணியாம்
6. பூணுரம் பூணப் . , 9 y
புதன்கிழமை நல்லதினம்
7. புதன்கிழமை நல்லதினம் . 9 sy
பொன்னவுரி கட்டிவைக்க
8. பொன்னவுரி மேலிருந்து . 59
பொலியழகு பார்த்தாராம்
9. பார்த்துப் பொலியளந்து . es 9s
படிஅளந்தார் நாரணனர். (24)

தொழிற் பாடல்கள்
பாடல் 1
1.
10,
2. ஏர்ப்பாடல்கள்
வரம்போ தலகாணி . செல்லா உனக்கு வாய்க்காலோ பஞ்சு மெத்தை . ஒகோகோ ஒஒ சார்பார்த்து நடந்திடடா செல்லா நீ சரிந்து நடந்திடடா . ஒகோகோ ஒஒ ஒடி நடந்திடடா செல்லா நீ உன் உறுதியுள்ள காலாலே . ஒகோகோ ஒஒ இந் நடை நடந்து - செல்லா நாம எப்ப கரை சேர்வமடா . ஒகோகோ ஒஒ வட்டத்த லேயரடா - செல்லா நீங்க வாலாட்டும் கொம்பரடா . ஒகோகோ ஒஒ மாரிமழை பெய்ஞ்சு - செல்லா நம்ம மானுவாரி தான்விளைய. ஒகோகோ ஒஒ கோடைமழை பெய்ஞ்சு - செல்லா நம்ப காலபோகம் தான் விளைய . ஒகோகோ ஒஒ சாமிதுணையுண்டு - செல்லா நமக்கு பூமி துணையுண்டு . ஒகோகோ ஒஒ வெள்ளியால் சுள்ளாணி - செல்லா உனக்கு வெங்கலத்தால் மதியாணி . ஒகோகோ ஒஒ கடுகிநட கண்டே - செல்லா நம்ம கலப்பை பதிஞ்சிரட்டும். ஒகோகோ ஒஒ
உச்சிவெயில் இப்போ. செல்லா
ஓங்காரமாகுதடா.
வெள்ளி மதியாணி - செல்லனுக்கு வெண்கலத்தால் சுள்ளாணி சுள்ளாணிக் குள்ளே - செல்லா ஒரு சூத்திரத்தை வைச்சாண்டா பாரக் கலப்பையடா - செல்லனுக்கு பாரமெத்த தோணுதடா சார்பார்த்த கள்ளனடா - செல்லன்
சொல்வார்த்தை கேளாண்டா
389
(23)

Page 209
390
10:
11.
12.
13.
14.
15,
மட்டக்களப்பு மாவட்ட.
சார்பார்த்து நடகண்டே - செல்லா சரிமதியம் ஆகுதிப்போ செல்லன் நடந்தநடை - இப்போ சொல்லவொண்ணு அன்னநடை இந்த நடைதானே - செல்லனுக்கு இன்னமுண்டோ அன்னநடை இந்தநடை நடந்து - செல்லா நாம் எப்பகரை சேர்வமடா. தள்ளாடித் தள்ளாடி - செல்லன் சாய்ந்தாடிப் போருண்டா
த ள் ள |ா தே கண் டே - நீ சலியாதே நல்லகண்டே
மூலைவரம் போரம் - செல்லாநீ முருகிவளை நல்லகண்டே எட்டுக்காலோடே are- நமக்கு இருகால் தலைமூன்று
சாரை அறிவாண்டா - செல்லன்
சார்ப்பலகை தப்பாண்டா கறுப்பாய் இருண்ட மழை - அங்கே காலுழுந்து போகுதடா
வானம் குடையாமோ - நமக்கு மல்லிகைப்பூத் தண்டாமோ, (2)
3. ஏற்றப் பாடல்கள் ஏத்தாலே தண்ணி இறைக்கணுமே எங்கள் வயலை விதைக்கணுமே காத்தது சோளகம்வீசுதடா கட்டடாமுக்காலி சட்டனவே தனியே இழுப்பதுதணிவண்டிமாடண்ணே தம்பியுமண்ணனுமா யிறைச்சால் குனிஞ்சுஇறைச்சால் கூடிய தண்ணியை கோலியிறைக்கலாம் அண்ணுவே தம்பியேதண்ணி இறைச்சிடுவோம்.

தொழிற் பாடல்கள் 39丑
10.
20.
தரவை கண்டு மகிழ்ந்திடுவோம் நம்பியே பத்துமணிகூரைக்கும் நல்லாய் இறைக்கணும் தம் பியரே மேடுதரவையாய் பள்ளமே தண்ணியாய் மெள்ளமெள்ளத் தண்ணிவத்திவர ஆடுறசேற்றில் அளையது வெட்டி நான் ஆயத்தமாக்குவேன் அண்ணுவே நேரமோபத் தரை மேலாச்சி நிலமும வரண்டுவரலாச்சி தூரமாய் இருந்த தண்ணிவத்துது.
துள்ளிக்குதிக்குது விராலினம்
அளையை வெட்டி வருகிறனே தம்பி ஆன வரைக்கும் நீ தண்ணிஇறை அளையில் ஊத்து நீர் வத்தும்மட்டும் ஆடிப்பாடி இறைச்சிடுதம்பி
தட்டளைபேரளை போட்டண்டாதம்பி
30
தனித்தனித்தட்டாய்பிரித்தண்டாதம்பி எட்டும்வரைக்கும் கால்பாவினனே இனி விதைகொண்டு வாருந்தம்பியரே விதையது தட்டுக்க்ள் தப்பாமல்
மெல்லமெல்ல வந்துவீசிவா நேரமோ பண்ணிரண்டாச்சி
தூரமே சாப் டா டு கொண் டுவாருர் சாப்பாடுபோட்டேன்விராலிமீனும்பொரியல்
சள்ளல்மீன் குளம்பும் ஆணழும்
வாய்ப்பான பொன்னங்கனிச்சுண்டலும்
40.
வந்து சாப்பிடுந் தம்பியரே தம்பியுமண்ணனும் முன்னம் உண்ண தையலாள்வள்ளி தனிநடந்து தும்பிபோல்பாயும் விரால்மீன்களை சோடுசோடாய்ப் பிடிச்சாளே. (8)

Page 210
392 மட்டக்களப்பு மாவட்ட. ஏற்றம் இறைக்கும்போது பாடப்படும் கவிகள் 1. தண்ணி இறைச்சி தலைவலியு மாகுதடா
கண்ணைச் சுழத்தி கடும்பசி எடுக்குதண்ணே. 2. பாயுதில்லை தண்ணி பரபரக்க இறைச்சாலும் ஒயுதில்ல வேல ஒழிச்சலில்ல எங்களுக்கு
3. சோத்தாலே கெட்டு சுணையிழந்து போனுலும் ஏத்தால சோறு இனிவேனும் வாப்பாவே.
4. வயல் மிதிக்கும்போது பாடப்படும் கவிகள் 1. நடவாக் கிடாமாடும் நானும் இந்தப் பாடுபட்டால்
காயாப் புழுங்கலும் - என் கண்மணியும் என்ன பாடோ 2. மூன்று புணையல்கட்டி முன்னுக்குப் போறமச்சான் - உன்
செல்ல முகத்திலே சேறு தெறிக்காதா.
3. மாடும் வயதாளி மாட்டுக்காரன் குமராளி
நானும் சாய்சசிப்பார்த்தன் நடக்குதில்ல போடியாரே. (30)
5. அரிவி வெட்டுவோர் பாடும் பாடல்கள் 1. பச்சைநிறம் வெள்ளாம பழுத்தநிறம் பூங்கதிரு
இச்சையுடன் வெட்டுதற்கு ஏற்குதில்ல என்மனசு. 2. பொழுது கிளம்மி பூமிஇந்தச் சூடுசுட்டால்
வெள்ளாம வெட்டும் - உங்க மேனிஎன்ன சூடுசுடும். 3. கத்தி எடுத்துக் கதிர் அரியும் வேளையிலே
கள்ள நினைவுவந்து - என்ர கைய அறுத்துப் போட்டுதடி, (3) 4. நாலுமுழக் கம்பால் நாயளந்த வெள்ளாம
பகலெல்லாம் வெட்டி - என்ர பழுவெலும்பு நோகுதுகா. 5. ஏழுவூரான் எண்டு ஏளனமாய்ப் பேசாதடா
மோரு போட்ட கத்தி - உன்ர மூர்க்கத்திற்கு மருந்து கட்டும். 6. ஆமைதின்னி துமைதின்னி அடைகோழி முட்டைதின்னி
சங்குவள லைதின்னி - இப்போ சருவாதடா என்னேட. 7. பண்டி இறைச்சிதின்னி பறங்கிவீட்ட சோறுதின்னி
பீங்கான் வழிச்சிநக்கி. உன்ர பெருமையடா காட்டவந்தாப்.

தொழிற் பாடல்கள்
l
10.
11.
12.
13.
393
6. காவற்பரண் கவிகள்
வயலும் விதைச்சொழிஞ்சு வந்தைநெல்லும் திண்டொழிஞ்சு போடியார் வீட்ட - இப்ப போகவரக் காலமாச்சு. ஆலையடி வரவை அதற்கடுத்த நீள்வரவை கதிர்விளைஞ்சு நெல்விளைவு காவலுக்குப் போய்வாறன். குஞ்சுமீன் தீயல் குறட்டைமீன் புளியாணம் கண்டுவந்தன் பெண்ணே காவலுக்குநான் போறதில்ல. ஆத்தியடி வரவை அதுக்கடுத்த நல்வரவை காவலுக்குப் போகாட்டி கதிர்களவு போகுமல்லோ, கதிர்களவு போனல் கடன்வேண்டி நான் இறுப்பன் முலைகளவு போகாமல் - நீ மூலையிலே பாய்போடு. காவற்பரணிலே கண்ணுறங்கும் வேளையில கண்ணுன மச்சிவந்து காலூண்டக் கனவுகண்டன். (28) விடியுதுகா விடியுதுகா விடிகோழி கூவுதுகா நிலவும் படுகுதுகா - நான் ஊர்போய் வரவேணும் ராவு நடுச்சாமம் நானுறங்கும் வேளையில ஆரோடு மக்சான் - நீ வாதுகவி பாடவந்தாய். சோமன் உடுத்து சோறுகொண்டு போறபெண்ணுர் ஊடுவந்து பூருமட்டும் - உன்ர சோடுரெண்டும் பத்திரங்கா
(30) சோமன் உடுத்து சோறுகொண்டு போறபெண்ணே - உன்ர சோமனுக் குள்ளிருக்கும் சோடுஒண்டு என்னவில. கொழியல் அரிசியும் குலமுறிஞ்ச தேங்காயும் உழுத்த கருவாடும் உண்ணஒண்ணு போடியாரே. சம்புக்களப்பில் நாங்க தளச்சவள்ளல் பிச்சுவந்து கறியாக்கித் திண்டு . நாங்க களை தீர்த்தோம் போடியாரே. உண்ணுறது சம்பா உடுக்கிறது கிளிஞ்சஉட படுக்கிறது பரவுகம்பு -எங்கட பரிதாபத்தை ஆரறிவார் (25)
7. நெல்குற்றும் பெண்கள் பாடும் பாடல்கள் நெல்லுக் குத்துற பெண்ணே அங்க பார்க்கிற என்னே புருசன் வாருன் பின்னே புடைச்சுப் போடடி கண்ணே. வாசலிலே கல்லுரலாம் புடைச்சுப்புடைச்சி குத்துருளாம் கையைப் புடிக்காதீங்க கைவளையல் நொறுங்கிவிடும். முத்தத்து திட்டியில முழுப்புளுங்கல் தீட்டும் பெண்ணே ஆர்கொடுத்த சாயச்சோமன் ஆலவட்டம் போடுதடி.

Page 211
394
10.
மட்டக்களப்பு மாவட்ட.
ஆருங் கொடுக்கவில்லை அவிசாரி ஆடவில்லை கை எரியப் பாடுபட்டு கட்டினன்டி சாயச்சோமன். (27) முத்தால முத்துருள முகத்தால வேர்வ சிந்த தங்கரட்ண மார்குலுங்க தனியுலக்க ஏன் போட்டாய் பச்ச நெல்லுக்குத்தி பால்மணக்கச் சோருக்கி கலத்தில போட்டுவைக்கன் கண்மணிவா சோறருந்த பேர்நாமம் வீசஓரு பெருநாட்டான் உண்டுமெண்டா மார்குலுங்க மாவிடிக்க - எனக்கு
மனம் வருமோ சொல் ராத்தா. வேற நினைவு மில்ல வேல விட முந்துறல்ல ஆற நிழலுமில்ல - நான் அந்தரிக்கங்கா மதினி. ஏழை நெருப்பு என்நெருப்புப் பத்தாட்டி பாலன் நெருப்பு - அவண்ட பண்ண எல்லாம் பத்தாதோ.
கூந்தல் முடியவிழ்க்க குறுக்கால வெள்ளகட்ட ஆலாத்தி வீச - உங்க ஆக்கள் எங்கபோனங்க. (22)
8. வலை இழுப்போர் பாடும் பாடல்கள்
Lu TL6io 1
10.
20.
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஆவேலோ 99 e-92),!--RTL -- βρt) ! Πτις 99. ஜாலம்மா அம்மா மாரி 99 முத்துக்குமாரி
மூலமெத்தனி * s சருகு பித்தாளை s எங்கும் அப்படி , மல்லிகை முல்லே மருக்கொழுந்தே , வலையைப் பார்த்து மெதுவாய்ச் சாயண்டா ஏலேலோ
உரமாய் இழுத்தா , வலை பிஞ்சிடும் ஏலேலோ தாழம் பத்தைக்க
சங்கு சக்கரம்
மேளம் கேட்குது 99 நமக்கு அமைத்தது 29 கிடைக்கும் தம்பி s நம்மளப் படைச்ச ஆண்டவன் பார்த்து , நம்மட தலையில் இப்படி எழுதினன் , எல்லாம் நம்மட ps விதிதான் தம்பி q9 மீன் இலைச்சி
உடுக்குறியிடப்பட்ட சொற்கள் சிங்களச்சொர்களின் திரிபுவடிவங்களாகும், இச்சொற்களின் பொருள் பி.இ; 3 இல் தரப்பட்டுள்ளது.

தொழிற் பாடல்கள் 395
30. வலைக் காலுக்கு ஏலேலோ வருகுது மக்காள் ஏலேலோ
நாம இழுக்காட்டி , புறப்பட்டு போயிரும் , தலையாரி வாறண்டா , அடிச்சிப் போடுவான் , இழுத்து வாடா 9 தோணியைப் பாருடா , அடிப்பான் எண்டு , சவளைக் காட்டுருன் s
40. கம்பானை இழுக்கணும் ஏலேலோ
அங்கால வருவது ஏலேலோ தல வலதாண்டா ஏலேலோ அதோ பாருடா ஏலேலோ
எட்டிப் பார்க்குது 29 தல வல தம்பி 99 தோணியில் இருப்பவன் , வலய அகட்ட 99 சொல்லுருன் தம்பி , தெரிவை எடுத்துவாடா , 50. ஒருவன் போடா 99 வல சுத்த த ஆக்கள் இல்லாத நேரம் , நீங்கல்லாம் போன , இஞ்ச ஆருடா 9 » வலயிழுப்பது கடலில நீரும் S 3 உழுந்து வருகுது y நம்மட உயிர வாட்டப் போகுது , , 60. கவுத்து வல w வந்திட்டு தம்பி 9 நாம இனி விளையாடப் போடா , டேய் அங்க பாருடா வலக்காலில
ஒருகடிகடிச்ச மாதிரிகிடக்கு ஏலேலோ
சூரையோ பாரையோ ஏலேலோ
கிழவள்ளாவோ* தெரியாது , ஒடி இழுக்கணும் , (30)
பாடல் 2
வான முட்ட ஏலேலோ நிற்கிருனே ஜலசா ஓடி ஓடி 9s இழுக்கவேணும் 99 மண்ண நம்பி s மரமிருக்க மரத்த நம்பி 99 கிளையிருக்க 99 கிளைய நம்பி 9 இலயிருக்க 92 இலைய நம்பி 99 பூவிருக்க 99. பூவ நம்பி 99 பிஞ்சிருக்க 99
29
பிஞ்சை தம்பி p.9 காயிருக்க f

Page 212
396
மட்டக்களப்பு மாவட்ட.
காய நம்பி ஏலேலோ பழமிருக்க
நானிருக்கேன் நானிருக்கேன்
பழத்த நம்பி 99 உன்ன நம்பி 99 உச்சி வெயிலில் 99 உள்ளம் மட்டும் , ஏலேலோ ஐலசா.
பாடல் 3
0.
20.
தங்கமெண்டா தங்கமல்லோ அவள் எண்ணுசைத் தங்கமல்லோ என்னருமைத் தங்கமல்லோ அவள் எனக்காகக் காத்திருப்பாள் ஆசைமச்சான் வருவாரெண்டு ஆக்கிவெச்சிக் காத்திருப்பாள் ஆக்கிருப்பாள் பொரிச்சிருப்பாள் ஆசையுடன் தந்திடுவாள் கண்ணுமச்சான் வருவாரென்று கறிசமைச்சி வைச்சிருப்பாள் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு கடக்கரைக்கும் வந்திடுவாள் வழிய வழியப் பார்த்திருப்பாள் வழியில் வந்து காத்திருப்பாள் என்னருமைத் தங்கமல்லோ அவள்என்வரவைப் பார்த்திருப்பாள் கைநிறைய உழைக்கவேணும் கைநிறையக் கொடுக்கவேணும் விடியவிடிய என்னுடனே விடிஞ்சும் அவள் என்னுடனே கிள்ளிக்கிள்ளித் தந்திடுவாள் அள்ளிஅள்ளி அணைச்சிடுவேன் கிண்ணிமுலைக் காரிஅவள் கிளிபோலக் கதைச்சிடுவாள் மாம்பழச் சிவப்பியடா மடிநிறைஞ்ச தேமலடா தங்கமெண்டா தங்கமல்லோ அவள் என்னுசைத் தங்கமல்லோ
g6) 5 ft
உழுகிறேனே உன்னிடமே
9
29
99
s
s
so
99.
99
9.
99.
s
姆鲁
99.
se
99
s
99
(l 1)
(20)

தொழிற் பாடல்கள் 397
9. தண்டு வலிப்போர், பாடும் பாடல்கள்
பாடல் 1
பொழுது கிளம்புது ஏலலோ பொழுது விடியுது ஏலலோ
கெதியாப் போகணும் , உசக்க போகணும் ,
கெதியாப் போகணும் ,, , உசக்க போகணும் , சாய்ஞ்சி இழுக்கணும் , சரிஞ்சி இழுக்கனும் , கெதியாப் போகணும் , (10) கெதியாப் போகனும், உசக்க போகனும் 9s . கறுப்புப் பாக்கணும் , ஓடி வளயனும் 99 மடிகரை ஏத்தணும் , நங்கூரம் போடணும் , உசக்க போகனும் , நங்கூரம் வைப்பமா, $ 姆 நங்கூரம் வைப்பமா , 19. போதும்டா தம்பி 9 (4)
பாடல் 2 •
ஏலே ஏலே ஏலேலோ ஏலையா ஏலே ஏலே லோ அல்லாங் கொல்லக்க* , கொல்லக்க மாதுள* , மாதுள சீதுள* ,, , , மாதுள சீதேவி* 9. உள்ளி கறுவா 9 s கறுவா சீரசம் உருவா கறுவா 99 சீரகம் மஞ்சள் 99 மஞ்சள் இஞ்சி 99. இஞ்சி மிளகு 3 Sy கள்ளியின் தின்னம்பால் , ஒக்கம* தண்டுக்கை கலந்துண் எண்ணெய் ,, , பித்தக் கொதிக்கு 99 மூல வியாதிக்கு , , உச்சில தப்புவன் 9 p. ஜாலி ஜாலங்* ٭ ٭ : 20. அய்யாக்க பொர* ஏலேலோ, தேவி தேவண்ணு ஏலேலோ
வங்காளத் தேவி 99 மலையாளத்தில 罗罗 மலையாள தேவி 99 சிவரோரத்தில 9 p சிவக்கும் வெத்தில 9 சின்னப் பொண்டுகள் , சப்பும்வெத்தில 's மாமி வெத்தில se 30. மயக்கும் வெத்தில , ஏலிஏலா? is ஜாலம்மா ஜாலி * ஜாலோ ஜாலி * s ஜாலி யம்புறு * 99 ஒவேலா வலி 9
உடுக்குறியிடப்பட்ட சொற்கள் சிங்களச்சொற்களின் திரிபுவடிவங்களாகும். இச்சொற் களின் பொருள் பி இ. 3ல் தரப்பட்டுள்ளன.

Page 213
398 மட்டக்களப்பு மாவட்ட.
தாண்ட மண்டலம் 9 தவிட்டுக் குண்டலம் 9 சந்திர மண்டலம் s தாக்கட்டாபுலி 99 40. அக்கரைப்பத்தில ஏலேலோ சக்கரை அமுதாம் ஏலேலோ அண்டு ராவைக்கு s வயிரவன் பூசையாம் , தTவறு மடமாம் மடத்தம்மா ஐயா s தம்பல வட்டி* , வாட்டியனக்கே* s அவுறுது தெக்காய்* s தெக்க* மடமாம்* 9 50. அம்மா கெதரே* , நத்தி வெலாவே* s
ஏழு பச்சை , எடுத்துக் குத்த 3梦 கங்காணி பெண்சாதி , வெண்காயம் விக்காவாம், காசிக்கு ரெண்டாம் , கடனுக்கு நாலாம் s
வாருண்டி வாருண்டி, ஊமைப் பட்டாளம் ஏலேலோ s 60. மஞ்சள் அழகி ஏலேலோ மஞ்சள் அரைடி ஏலேலோ
மார்பில பூசடி s வட்டாவக் கொட்டி , மடியில கட்டி அருவாக் கத்தி 9 அறுக்குளா? வெட்டி , நாவலப்பிட்டி sy நாவூறு காளியாம் s அறுக்குளா மாலு? s 70. உருளே மாலு? s கல்லடிப்பாடாம் s காடு வனந்தரம் s வனந்தி சோலை ss சோலை வனமாம் , கொழுந்து வெத்தில s ஏலத்தண்டு சோறுபோட்டா VM y தின்பன் என்னுது , ராசயா கோஷமோ? , 80. ஒயாங் காவே* 参多 கொந்த வேலாவே* , ஒண்ண ரஜ" , அல்லப்பாங் புத்தே , ஒண்ண வரே* 9 வரட்டே வரே* 多多 வரட்டேயண்ண* s அன்னே வரே* - யனவா பாறே* s அப்பிட்ட தேவி* 3 ) 9. கல்லோ மலையோ ஒவேலய்யா% s ஆய்த்தியங்* s அல்லே வரே* gy தண்டுக்குத் தண்டு , மாறு தண்டு ' s அணியத் தண்டு s போட்டு வலிக்கணும் , ஆழிக்கடலாம் 参多 அரண்ட நீரில 9. 100. இருண்ட சோலை சோலை வனமாம்
ஆடு கவுத்தில p ஓடி மீன் வளைச்சி
வாழைப்பச்சடி g வாழைமீன் கிச்சடி

தொழிற் பாடல்கள்
வறுத்துக் கொட்டடி,
முப்புரிக் கயிரும் 110. தேடா வளையம்
மண்மணி தாயே
99
9
இன்னமும் பேசிடு , இன்னமும் சொல்லிடு,
118. நம்பி யிழண்டா
கோஷாலந்தே* முப்பத்திமூணு ம்ாரித்தாயே களவுகள் பண்ணுதே ஒலந்தான் போடாதே தம்பிப் பயலே
399
(56)
9
பாடல் 3
ஏலே ஏலே ஏலேலோ ஏலந்தண்டு ஏலேலோ பொட்டுட்டே பொட்டு , மயூட்டே பொட்டு, பூவண்ண பூவே 99. புளியம் பூவே பொன்னம்மா கொண்டைக்கு ஏலேலோ தாழம்பூவே 2 ஆழிக் கடலில் 10. அல்லா தருவான் s தாயும் மகளும் ராவும் பகலும் 99 வேலைக்காரி
சீதேவி ரங்கந்து* பூமாலைக் கொடி நாயனே பேயனே ps 20. அம்பாவைச் சொல்லி ,
லங்கடி லங்காய்* ஜாலக் கல்பன?
99
99
9s
99
ரங்கந்து* பூமாலை
மலமலக் கொடி
பேயனே ரங்கந்து*
தண்டு இழண்டா ஒண்ண* முத்தே
போட்டாணும் போட்டானும் குண்டொண்டு போட்டானும்
துக்கிப் போட்டானம், ஆகாயக் கப்பல் ஈரவல ஏத்தி சூரக்கிளை வளைய வாடை நீராம் சோள நீராம்
பாடல் 4
நங்கூரத்த கெதியா நங்கூரத்த கெதியா
ஏலே
99
சோமாரக் கூட்டமாம்
9
99
30. அணிஅணியாய் வந்ததாம் , நால்வரும் தண்டியிழுக்க
99
சுணக்கமென்ன தண்டயலே,
வாடை வாங்கலாம்
38.சோளக வாங்கலாம்
தூக்கு
gyp L-AT தூக்குடா
ஏலே
s
9
ஏலே
99
99
99

Page 214
ஏலஏலம்
400 மட்டக்களப்பு மாவட்ட.
இந்தா 10. இந்தா ஒரு மூச்சு s ஒரு மூச்சு ஒடி. 罗梦 இழுடா - s தம்பிமாரே s அண்ணன்மாரே , கெதியா s கறுப்பு தெரியுதடா ●多 20. கரைக்கு 9 கெதியா as போகணும் கெதியா 99 போகணும் 99 25. ஏலே M (35)
10. தோணி தள்ளுவோர் பாடும் பாடல்கள். (20) u (TL6ñ) l
ஓடி ஏலே ஏலைக்கிலம்* ஏலே பாசக்காறே 變證 Lunt FGGGGG335* நாறின்பாஷை* s வினேதகாளி s கம்பன்காளி 99 s உறுக்கிப்புடிரா s ஏத்திக்கட்டு s 10. முதுகைக்கொடுத்து , கிளப்பியடிரா 爱罗 கொல்லாக்கட்டு 99 பாடல் 2
gagg or டி ஏ லே ஏலே . ஏலே ஏலே . s ஒடி எலே s முத்துக்குமாரி s ராஜக்குமாரி s தூக்கித் தள்ளு ஏலே கிளப்பியடி ஏலே அணியம் s நடுக்கட்டு 多多 ஏலே g ஒடித்தள்ளு is 9 கிறுகித் தள்ளு s ஏலே ஏலே ஏலே ஏலே. UTLs) 3
ஏல் ஏலம் ஏலஏலம் அன்னக்கொடி ஏலஏலம் கெருடக்கொடி அனுமக்கொடி தான் பறக்க 9 அச்சாணியாய் 9 காலகிநாட்டி Φ ό அழகான s பாயைவிரித்து காற்றடிக்க s மரமசை sa கல்லுப்போட்டால் , தலையுடையும் s வேர்த்துவிட்டால் , சலமுருளும் g விதமான s கப்பலிது உடலிலே 爱势 வெறிகொள்ளும் s முந்திரியச் சாராயம் ,

10.
11.
12.
13.
14.
15.
காதற்பாடல்கள்
|1/ காதலர் உரையாடும் பாடல்கள்
/1அ/ காதலர் நலம் புனைந்துரைக்கும் பாடல்கள் மச்சானின் அழகுக்கும் மான்கொம்பு மீசைக்கும் ஏலரிசிப் பல்லுக்கும்-நான் என்ன சொல்லிக் கூப்பிடட்டும் மச்சானே மாம்பழமே மாமிபெத்த மாம்பழமே ஏலங்கிராம்பே-உன்னை என்னசொல்லிக் கூப்பிடட்டும். மாமன் மகளே மலைநாட்டு நங்கணமே ஏலங்கிராம்பே-உன்னை என்ன சொல்லி கூப்பிடட்டும். ஆசைக் கிளியே -என்ர ஆசியத்து உம்மாவே ஒசைக் குரலாலே-உங்க உம்மாவை கூப்பிடுகா. இதரக்கிணறே இரக்கமுள்ள பூமடலே வாசமுள்ள வண்டே-உன் வாசலுக்கு நான் வரட்டா. காலிவிளை பாக்கிற்கும் கருதாவளை வெத்திலைக்கும் ஏலங் கிராம்பிற்கும் ஏற்றதுகா உன் எழில்வாய் கொச்சிப் பழம்போல கோழித்தலப் பூப்போல பச்சவடச் சேல -மச்சிஉன் பால்முலைக்கு ஏற்றதுகா. மானுக்கு மேலழகு மயிலுக்கு வாலழகு தேனுக்கு ஈயழகு -எங்கட தேன்மொழிக்கு நானழகு. வாடாத பூவே வாசமுள்ள செண்பகமே தேடாத் திரவியமே தெள்ளமுதே வள்ளியம்மை, மாதாளே நாட்டி மடல்விரிஞ்சி பூப்பூத்து காய்ச்சிப் பழுத்ததுபோல் கருத்திலுள்ள சந்தோசம். ஆத்து மணலே அலையாத்து வெண்மணலே தொந்தி மணலே-உன்னைத் தொட்டகையும் பூமணம்டி. கொண்டை அழகும் கூர்உழுந்த மூக்கழகும் நெத்தி அழகும்-கண்ணுர்என்ர நெஞ்சஉட்டு மாறது. ஆலம் விழுதுபோல அவவுட தலைமயிரு தூக்கி முடிஞ்சா - அது தூக்களுங் கூடுபோல. முல்லைச் சிரிப்பழகும் முகத்தழகும் கண்ணழகும் வல்லியிடை அழகும் - என்ர மனசைஉட்டுப் போகுதில்ல. மாமிவளர்த்த மாம்புள்ளிச் சாவலொண்டு தேத்தாவின் கீழருந்து - சிறகு தட்டிக் கூவுதுகா.
LD 26

Page 215
402
16.
17.
18.
9.
20.
21.
22.
23.
24.
மட்டக்களப்பு மாவட்ட.
தேசமொதுங்கி நம்மட தெருவாலபோனலும் - என்ர முத்துநகைக் கொம்பனைப்போல்
முகலெட்சுமியைக் காணயில்ல. வானை வளைச்சி வானவில்லுப் போட்டாப்போல மார வளைச்சி - ஒரு மஞ்சள்வில்லுப் போட்டதென்ன. தண்ணிக் குடமெடுத்து தனிவழியே போறபெண்ணே தண்ணிக் குடத்தினுள்ளே தளம்புதடி என்மனசு. (30) சட்டைபோட்டுப் பொட்டெழுதி
தண்ணிஎடுத்துப் போறமச்சி சட்டைபோட்ட கையாலே - கொஞ்சம்
தண்ணிதா கண்மணியே. சட்டைபோட்டுப் பொட்டெழுதி
தண்ணிக்கு வாறவர்கள் தங்கம்பூண்ட கையாலே - கொஞ்சம்
தண்ணிதந்தால் ஆகாதோ. ஆசைக்கிளியே எந்தன்
மாமிபெத்த மாங்கிளியே தண்ணித்தாகம் மச்சி - ஒள்ளம் தண்ணிதா கண்மணியே. பூவலைக் கல்லி புதுக்குடத்தக் கிட்டவைச்சி ஆரம் உழுந்தகிளி கிளி அள்ளுதுகா நல்லதண்ணி. ஒடையில போறதண்ணி தும்பிவிழும் தூசிவிழும் வீட்டுக்கு வாங்கமச்சான் குளுந்ததண்ணி நான்தாறன். வாய்க்காலில் தண்ணி வண்டுவிழும் தூசிவிழும் வீட்டுக்கு வாங்கமச்சான் வெந்ததண்ணி நான்தாறன். (31
/1ஆ/ காதலர் தமது பிரச்சினைபற்றி உரையாடும் பாடல்கள்
1.
2.
தனிய இருந்துநான் தன்மப் படுகிறதை காகம் ஒன்றுவந்து கதைக்கலையோ ராசா. பட்சமிருக்கு மச்சான் பறக்கச் சிறகிருக்கு எண்ண மிருக்கு - நம்மட எழுத்துவண்ண மெப்படியோ. எல்லாம்எந்தன் தலைஎழுத்து ஏங்கிஏங்கி வாடுகிறன் நல்லாயிருக்க எனக்கு நாள்ளப்ப விடிஞ்சிருமோ. வாவெண்டு அழைச்சிருவன் வாசலில பாய்தருவன் வாப்பா அறிஞ்சாரெண்டா வாளெடுத்து வீசிடுவார். தங்கமுடி ராசாட தடமழிஞ்சி போகுமெண்டு ஒட்டால மூடிவைச்சன் - ராசா
உள்ளிரக்கம் வைப்பாயெண்டு.

AR AT Bb Lumrl-Ad56îr
10.
1.
12.
13.
14.
5.
16.
17.
18.
19.
20.
21.
403
அன்புக் கரசே அழகொழுகும் ஆடவரே காத்திருந்து கதைபேச கனகாலம் நானிருந்தன். (29) நெஞ்சிலே பாரம் நினைச்சால் பெருங்கவலை - என்ர கண்ணுல் ஒடினதை - ஆரும் கண்டதுண்டோ கிளியே. தாமரைக் குளத்திலே தலைதெரியா ஓடையிலே நீராடும் போது - உங்க நினைவுவந்து போகும்ராசா. வண்டறுத்த சோலையிலே மரமழுது போறதுபோல் நிண்டழுவன் மச்சான் - உங்க நினைவுவாற நேரமெல்லாம். தாழ்வு கடலே தங்கமுடி ராசாவே செல்வம்நிறைஞ்ச கண்டே - ஒரு
செய்திகேட்கச் சொல்வயளோ. தெருவால போகவொண்ணு தேன்போல மணக்கிறது உறவாட நான்வருவன் - உங்க
கொண்ணன்மார் காவலாமே. மாடப் புருவே மலைநாட்டு நங்கணமே கூடப் பறப்பதற்கு - உங்க குடும்பத்தார் செப்பமில்ல. (33) வட்டாப் படிக்கம் வளைஞ்சிருந்து என்னசெய்ய செம்பகிளி வாயால - கொஞ்சம்
சிரிச்சிருந்தால் போதாதோ. சீனத்துச் செப்பே சிறையிருக்காய் எண்டுசொல்லி ஆய்ஞ்சிவைச்ச பூப்போவி ஆனுதினமும் வாடுறங்கா. கூவும் பருவமில்ல குஞ்சுவிடை கொள்ளவில்ல பூமுளையாச் சாவலிது பொறுதிசெய்கா மாமிமகள். வாள்பூட்டி மரமறுத்து வாஞ்சைவைச்சு வீடுகட்டி பூட்டு இணக்கமட்டும் பொறுதிபொறு கிளியே. காசுதரட்டோ மச்சி கதைச்சிருக்க நான் வரட்டோ தூதுவரக் காட்டிரட்டோ - இப்போ சொல்கிளியே வாய்துறந்து. எல்லாக் கிளியும் இணல்மரத்தில் தங்கிறதாம் அமிர்தம் என்னும் ராசகிளி அசலூரில் தங்கிறதாம். (2) ஆருயம் வெள்ளி அசருலே சாயுமட்டும் காத்திருந்து போனனெண்டு - உன்ர கதவுநிலை சாச்சிசொல்லும். பேயும் குறுக்குவையா பேய்ஞ்சபனியும் தலையில இந்நேரம் வந்தகண்ணே எங்ககா போகவந்தாய், ஓடிவந்த தண்ணியிலே உலாவிவந்த மீனதுபோல் நாடிவந்தன்கா மச்சி - உன்ர நட்புதல் வேணுமெண்டு.

Page 216
404
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
3.
மட்டக்களப்பு மாவட்ட
கடலே இரையாதே கற்கிணறே பொங்காதே நிலவே எறியாதே - என் நீலவண்டார் போகுமட்டும். என்னசெய்வேன் மச்சான் - நம்மட
எழுத்தழிஞ்ச மாதிரியை கண்ணுன உம்மா - இந்தக்
காம்பறையில் போட்டடைச்சா. ஈரத் துளிரே இலங்குமந்தச் சூரியனே மாதாளம் பூவே - மச்சான் மனக்குறைகள் வைச்சிராத, (5) வள்ளிக் கொடியே வளரும் சுரக்கொடியே v தாளம்பூ மேனியரே - உங்களுக்கு தலைவலியாம் மெய்தான? மாமி மகனே - என்ர மருக்கொழுந்து வெத்திலையே இன்பக் கடலே - எனக்கு இரக்கமெல்லாம் உன்மேல. வானத்து வெள்ளி மங்காமல் பூத்ததுபோல் சீனத்தின் வண்டே சிறையிருக்கன் உன்னல. காசி தரவும் வேண்டாம் கதைச்சிருக்க வரவும்வேண்டாம் தூது வரக்காட்டாதங்கோ - ஒரு துப்பரவாகு மட்டும் ஊசில காந்தம் மச்சான் உருகிப் பிடிச்சதுபோல் உன்னத் தாவிப்பிடிச்சன் - நம்மட நல்லுறவு வேணுமெண்டு உன்னை நினைச்சுவிட்டன் ஒசையுள்ள பெருமூச்சு பள்ளியடிக் கற்கிணத்தின் பக்கம் இடிஞ்சதுபோல். நடையழகி இடையழகி நாகசித்திர வடிவழகி கதையழகி கதிஜா உம்மா - உங்க கைலேஞ்சை ஏன்பறிச்சா,
/1இ/ காதலர் உறவுமுறை கூறும் பாடல்கள்
ஊரார் மகனெண்டு உன்ரவாயால ஏசிராத மாமிமகன் மச்சான் - எண்ட மாங்கிளியே தேன்கரும்பே மாமிமகன் தான்நான்
மச்சான் முறைக்காரனுந்தான் - எண்ட மாணிக்கக் கல்லே - நீ மாற்றுமொழி ஏன் கதைக்காய் மாமிமகன் எண்டால் மச்சான் முறைக்காரன் எண்டால் அடக்கு உருத்தாளன் எண்டால் - என்ன
அலயவைக்க மனம் வருமோ? مر மாமி மகளிருக்க மயில்போல பெண்ணிருக்க தாராக்குண்டுப் பெண்ணுக்கு தாலிகட்டச் சம்மதமா? மாமிமகன்தான் மச்சான் முறைக்காரனுந்தான் சொந்த உருத்தாளன் என்டு ஓடிவந்தன்கா மயிலார்.

காதற் பாடல்கள் 405
7,
ஒட்டியொட்டி நிற்பாய் மச்சான்
ஒழுங்கையில வந்துநிற்பாய் என்னநினைப்பாய் மச்சான் எங்கவீட்டவர நாட்டமில்ல. ஒடிஓடி வருவாருகா ஒழுங்கையில நிற்பாருகா என்ன நினைப்பாருகா எங்கவீட்டவர நாட்டமில்ல. மாமிவிட்ட போனன் மச்சானைப் பார்ப்பமெண்டு தேத்தாவுக்குக் கீழநிண்டு-சாவல் சிறகு தட்டிக் கூவுதுகா.
/1ஈ/ காதலர் சந்திக்க வழிகஉறுவதாக அமையும் பாடல்கள்
l.
10.
11.
12.
கூடம் அறியன் குளக்கரைதான் அறிவன் கூடத்தடையாளம் கூறுவர் ஆர்எனக்கு, சுற்றிவர வேலி சூழவர முள்வேலி எங்குமொரு வேலி-நான் எங்கால வந்திரட்டும். வாசலெல்லாம் வேலி வளைச்சுவர முள்வேலி எங்குமொரு வேலி - நான் எங்கால வந்திரட்டும்.
அல்லையிலே நின்று அழகுகாட்டும் தாமரையே
செங்குடலை நாகவண்டே-எனக்கு சேரவரப் புத்திசொல்லு, அப்படியெண்டா எந்தன் ஆரணங்கே ராத்திரிக்கு
தப்பாமல் நாமல் சந்திப்பதெவ்விடங்கா,
கூடி மகிழக் குளத்தோரம் நான்வாறன் அன்ன நடையழகி, ஆசியம்மா நீவாகா, தங்கக் குடமே தத்தியோடும் நங்கணமே
செக்கலுக்கு நான்வருவன் திண்ணையில காத்திருப்பாய். சாமமொறுத்து தலைகோழி கூவுகயிலே
சந்திக்க நான்வந்தால் சம்மதமா கண்மணியே கருக்கலுக் குள்ளிருந்து களைக்குமட்டுங் கவிபாட காகம் கரையும்-அப்போ காத்திரு கண்மணியே. (35) காவல் அரணுமுண்டோ கள்ளனுக்கு முள்ளுமுண்டோ வேலி அரணுமுண்டோ வேண்டியிருப்பவர்க்கு முப்படலாம் சங்கிலியாம் முகந் தெரியா வேலிகளாம்
வேணுமென்டிருந்தால் வேலியொரு பாரமாமோ வாப்பாவும் வயலிலதான் உம்மாவும் ஊரிலில்ல காக்காவும் கடையிலதான் கருக்கலலோட வாங்கமச்சான்(30)

Page 217
406 மட்டக்களப்பு மாவட்ட.
13. வாற வழியில் வழிப்பிசகு கண்டிருந்தால்
கடிநாயும் சங்கிலியும் கட்டிருப்பன் தலைவாசலில 14. இருட்டறுத்து வழிநடந்து என்னிடத்தே வந்தாயெண்டால் சீப்பறுத்துப் பாயிழைச்சு-என்ர திண்ணையில போட்டிருவன் 15. தாயாருமில்ல தகப்பன் வெடிக் காட்டில்
அண்ணன் தினைக் காவல் ஆணிமுத்தே வாமயிலார் (9) 16. வாப்பா அறிஞ்சாரெண்டால் வாளெடுத்து வந்திடுவார் வந்திடுங்க வேலிப்பக்கம் வாயினிக்கப் பேசிடலாம் 17. அங்குமில்ல இங்குமில்ல என்வளவு மூலையில
கண்ணுன மச்சான் காத்திருப்பேன் நிச்சயமாய் 18. அட்டுவத்து ஓரத்தால அருகுவளைத் தொங்கலில
துறப்பு சொருகியிருக்கும் துறந்து வந்தா சம்மதந்தான். 19. அம்மியடியில் மச்சான் அருகுவளைத் தொங்கலில துறப்புச் சொருகிவைப்பன் துறந்துநீ வந்திடுகா. 20. சந்தன மரத்தைச் சந்திக்க வேணுமெண்டால் பூவலடிக்கு மச்சான் பொழுதுபட வந்திடுங்க. 21. படுவான் பொழுதில பாவக்கொடி மூலையில
கடவல் எடுத்துவைப்பன் - அதைக் கண்டுவரச் சம்மதமா? 22. முற்றத்திலே மாதாளை முன்னலே தென்னமரம்
வேலிக்குள்ளே வேப்பமரம் விருப்பமெண்டால் வாகிளியார்
(30) 23. வந்துக்க நேரமில்ல வசதிவந்து கிட்டயில்ல
சந்திக்க வேணுமெண்டா சரிமதியம் வா கிளியே. 24. வந்துவந்து போகிறது வயிற்றெரிச்சல லாயிருக்கு - என்ன
சந்திக்க வேணுமெண்டா சரிமதியம் வாராசா. 25. வாசலில வாழைமரம் வலதுபுறம் வப்புள்மரம்
கடவலில் காய்முருங்கை-நீங்க கண்டறிஞ்சு வாங்கமச்சான். 26. வாழையடிப் பக்கத்தில வடபுறத்து மூலையில
கடப்பு எடுத்துவைப்பன் கண்டெடுத்து வாங்க மச்சான். 27. வேலியில வந்துநின்று வேற்றுக்குரல் எழுப்பி
வீதியில போறமாட்டை விரசிடுகா நான் வருவன். 28. குத்து விளக்கெடுத்து குமிழ்நிறைய எண்ணெய்விட்டு
தங்கக் கிளியனருக்கு தயவாக நான் வைப்பன். 29. விளக்கேத்தி இருசாமம் வெள்ளிநிலா வேளையில
குளத்தோரம் வந்திடுங்கோ கூடிக் கதைச்சிடலாம். (34)

காதற் பாடல்கள் 407
10,
11.
12.
13.
4.
15,
16.
/1உ/ காதலர் சூள்உரைக்கும் பாடல்கள்
கதைப்பீர் கதைகளெல்லாம் கல்லுருகி நெல்விளைய
சிரிப்பீர் கொடுப்பாலே - உமது சொல்லையுமோ நம்புறது தோமல் முதிரை சிறுமுதிரை கல்முதிரை காராம்பசு ஈண்டகண்டே கறுத்தறுத்துப் போட்டிராத மச்சானே மாம்பழமே - எந்தன் மாமிபெத்த பாலகனே கட்டிக்கரும்பே மச்சான் - என்னைக்
கனவிலும் மறக்கவேண்டாம். குஞ்சு குழந்தையிலே கூடிவளர்ந்த மச்சான் கதிருகுடலையிலே என்னேக் கைசோர விட்டிராத . தாலிக் கொடியே - எண்ட தாய்மாமன் ஈண்டகண்டே
மாமிக்கொரு மகனே - மச்சான் மறுகுதலை பண்ணுதகா. ஈரத் துளிரே இலங்குமந்தச் சூரியனே
மாதாளம் பூவே மச்சான் மனம்நிறைஞ்ச சம்மதமோ உற்ருர் அறியமச்சான் ஊராரும்தான் அறிய
பெற்ருர் அறிய - நாம பிணைஞ்சிருப்ப தெக்காலம் கறுத்தக் கரும்பே கைநிறைஞ்ச மோதிரமே சீனட்டி நெல்லே - நாம சேர்ந்திருப்ப தெக்காலம் தாமரைப் பூவே தவமிருக்கும் வெண்ணிலாவே ஊராரறிய நாம ஒண்டுசேரக் காத்திருக்கன் காவின் எழுதி கழுத்திலயும் தாலிகட்டி
வைச்சி நடத்தி விடியெழும்பி வார்த்தை சொல்லு மாறுவனே கண்டார் மறுப்பனுேடி உன் உறவை நாடி வருவன் - என்ர சீவனுள்ள மட்டிலயும் ஊரே வெறுத்தாலும் உலகந்தான் எதிர்த்தாலும் யார்தான் பகைத்தாலும் நான்மறவன் மாங்கனியை. (33) சீவன் கிடந்து செய்தொழில்கள் ஒப்பேறி ஊருக்கு வந்து - உன்னை மணம்முடிப்பேன் கண்மணியே. கல்புதனில் போட்டு கணக்க எல்லாம் நோட்டமிட்டு
நேசம் கலக்க நான் வருவேன் நீபோகிளியே அன்பில் விளைந்த எந்தன் இன்னமுதே கண்மணியே பூவும் மணமும்போல பூவுலகில் நாமிருப்போம் கூண்டுக் கிளியாளே கோலஞ்செய் மச்சாளே ஆசைக்கிளியே அடுத்தநிலவில் நம்கல்யாணம்

Page 218
408
17.
18.
19,
0.
21.
22.
23.
24.
7.
மட்டக்களப்பு மாவட்ட.
உன்ன முடிச்சி - மச்சி உசந்த கட்டில் மேலவச்சி கன்னந்திருப்பி மச்சி கதைகேட்பன் சீக்கிரத்தில் வாழைப் பழமே வருந்தாத இன்னேரத்தில் தாழை மடலே - நாம தனித்திருப்பம் ஒர்நாளை (35) பொன்என்று சொல்லி பூஎன்று நீர்தெளிச்சு - என் கண்ணைப்போல் வைச்சிருப்பன் கைவசமாய் சேர்ந்த பின்பு தாலிகட்டப் போறவன்நான் தேரோட்டப்போறவன் நான் தங்கக் குடமே - உன்ன பூசுறது நான்தானே கோயில் அறிய கொழுத்தும் விளக்கறிய பத்தும் விளக்கறிய - உன்னப் பண்ணுறது கட்டாயம்
கடல் அவரைப்பூவே - எங்கட கன்னிசிறு மாந்தளையே
கதை நளினக்காரமச்சி - உன்ன
கட்டாயமாக நான் அணைவன் செவ்வாய்க் கிழமையிலே சேர்ந்த ஒருநாளையிலே அன்னக் கிளியோட - நான் அணையளண்ணம் வைத்தேனடி கைவிடுவேன் எண்டுஎண்ணிக் கவலைப்படாதே கண்ணுர் அல்லா அறிய மச்சி - உன்ன
அடையாட்டிக் காட்டுப்பள்ளி (11)
/1ஊ/ காதலர் பற்றிய அலர்மொழிப் பாடல்கள்
காச்சு மூச்செண்டு கதைகள் பிறந்திரிக்கு உன்னவிட்டால் மச்சான் உயிர்வாழப் போறதில்ல. ஊரெல்லாம் எண்டகதை ஒழுங்கயில நப்மபேச்சு உங்க வாப்பாவுங்கூட வழிமறிச்சால் என்னசெய்வன். ஊரெல்லாம் தூறு ஒழுங்கைஎல்லாம் ஒங்ககதை வாப்பாவுங் கோவம் - எண்ட
வளரயிறையே நான் உன்னுேட கண்ட இடத்தில் - நாம கதைக்கிறதாம் எண்டுசொல்லி ஆக்கள்கதை சொல்லுருங்க அல்லாஇருக்கான் நமக்கு கறுத்தக் கரும்பெண்டு கண்டெடுத்துத் தின்னமுதல் வீணன தூறுவர - நான் உட்டெறிஞ்சன் குப்பையில. சந்தியில நின்று சந்தனப்பூக் கொன்னைய ஆய்ஞ்சு முகந்ததெண்டு ஆக்களெல்லாம் ஏசுருங்க (35) உன்மனசும் என்மனசும் ஒண்டாக இருந்ததெண்டா ஊரொதிங்கி வந்தாலும் - நம்மள
ஒண்டுஞ்செய்யப் போறதில்ல.

காதற் பாடல்கள் 409
8.
உருகு மொழுகானேன் உள்ளுருகும் செம்பானேன் கடுகு நிறமானேன் - ஊரார் கதகதைச்ச நாள்முதலாய்
9. கதிருமொரு கதிரு காவலுமோ பன்னிரெண்டு
10.
11.
12.
பன்னிரெண்டு காவலுக்கும் பண்டிதின்ன நாளுமில்லை. நடுச்சாம வேளையில நாப்புறமும் காவல்தப்பி வளர்பயிரமேய ஒருகாள வந்து போகுது கா. ஆக்காண்டி கத்துதுகா ஆள்மதிப்புக் காட்டுதுகா காகம் கிராவுதுகா - நம்மட காக்காபொண்டில் வாசலில. கோளாவில் மாடுவந்து கூரைய உருவுதெண்டு
ஏசாதாகா உம்மா - நம்மட எருது வந்துபோகுதுகா. (28)
11எ/ ஒழுக்கத்தைப் பேணும் காதலி பாடும் பாடல்கள்.
கெட்ட எண்ணம் வேணும் கேவலப் படுத்திடுவாக தப்பெண்ணம் வேணும் - நாம தாரமாக ஆகுமட்டும் சோலை இளங்கமுகே திறக்கவொண்ணு என்கதவு நாமொண்டு சேர்ந்த பின்பு நாடியதைச் செய்திடுங்கோ சோலை இளங்காற்றே துறக்கஒண்ணு என்கதவு ஆலமுளுந்த மச்சான் அந்தஎண்ணம் வையாத என்னை நினைத்து -என்ர திண்ணையிலே வந்திருந்து அடித்த நுளம்பை- மச்சான் அள்ளுமாகா உன்கால்வையிலே. வேட்டைக் கிடாவோ வேலியில்லா ஒர்பயிரோ தருமக் கிணருே - உன் சம்மதிக்கு நாணிணங்க. கன்னி விராலே கற்பழியா நங்கணமே தங்கமுலாக் கோப்பயில நான்குடிக்கத் தந்தாலென்ன (11) தங்கமுலாக் கோப்பையிலே குடிக்கத் தந்தனெண்டா மானமென்னுங் கண்ணுடி மங்கிடாதோ நானறியன். வட்டாக் கொடுக்க வந்தவுடன் பாய்கொடுக்க இருஎண்டு சொல்ல - நீங்க எழுதிவைச்ச பெண்ணுமோ.
அந்திவிடிஞ்சி மச்சான் அனுதினமும் ஓடிவாரு ய் பூவில்ஒரு பிஞ்சு புடிச்சதெண்டா வம்புவசை,
/1ஏ/ காதலர் நகைமொழிப் பாடல்கள்
நாவல் பழத்திலயும் நற்காயாம் பூவிலயும் காகச் சிறகிலயும் கடுங்கறுப்பு மாமிமகன்.

Page 219
10.
11.
மட்டக்களப்பு மாவட்ட.
நாவல் பழம்போல கரிக்கட்டித்துண்டுபோல காகச்சிறகுபோல-மச்சான் கடுங்கறுப்புக் கொண்டதென்ன.
8 முப்பத்தி ரெண்டிலயும் மூணுபல்லுத்தான் மீதி (8) காகக் கறுப்பு நிறம் - ஒரு காலுமல்லோ முடமவருக்கு. மச்சானே மாம்பழமே மாமிபெத்த பாலகனே எட்டாத பழத்திற்கு - நீ கொட்டாவி விடவேண்டாம். சுட்ட கட்டைபோல சுடுகாட்டுப் பேய்போல அட்டை முகரு - நீ அடுப்படிக்கும் ஆகுமோடா. சுட்டகட்டை போலமச்சான் சுடுகாட்டுப் பேய்போல மாட்டட்டை போல உன்னை மாப்பிள்ளைக்கு ஆரெடுப்பார். சுட்ட கரியப் போல சுடுகாட்டுப் பேயப்போல அண்டம் காகம்போல அவருமொரு மாப்பிள்ளையாம். இடுப்புச் சிறுத்தபொட்ட இருதொடையும் நொந்தபொட்ட கொக்குச்சான் பொட்ட - உனக்கு கோபமென்ன #၏။ ဧဗု ( கோடி உடுத்துக் குளத்தோரம் போறபெண்ணே - உன்ர கோடிப் புடவையில கொக்கு ரெத்தம் பட்டதென்ன. கொக்கு ரெத்தமில்ல - மச்சான் குருவிரெத்த மில்லயிது சிறுக்கனிருந்த - ஒரு சில்லிரத்தம் பட்டதுகா. சாயச்சீலை கட்டுறதும் சளிக்க எண்ணெய் பூசுறதும் ஏவிஏவி நடக்கிறதும் - எந்த
இளந்தாரிக்கு வாழ எண்டோ. (5)
/ஐ/ இணைவிழைச்சிப் பாடல்கள்
மாரளவு தண்ணியில மன்னிமன்னிப் போறபெண்ணே-உன் மார்புக்குக் கீழரிக்கும் மாதுளங்காய் என்ன விலை. மாதுளங் காயுமில்ல மருக்காலங்காய்ப் பிஞ்சுமில்ல. பாலன்குடி மறந்த பால்முலைடா சண்டாளா, (28) கச்சான் அடிக்க கயல்மீன் குதிபாய மச்சானுக்கெண்டு வளர்த்தன் வளர்த்ததன் குரும்பமுல. என்னதான் நித்திரையோ இளம்ராசா வன்னிமைக்கு
கண்ணத் துறந்து - இந்த கற்கண்டைத் திண்டாலென்ன வந்தா ரெண்டா - மச்சான் வாசலெல்லாம் தங்கநிறம் போட்டுட்டுப் போன - ஒரு பூப்பூத்து ஒய்ஞ்சதுபோல்! அறிஞ்சரிஞ்சி நிலவெறிக்க அவளிருந்து பாயிழைக்க துண்டுடுத்துத் துடைதெரிய துடரமனம் தூண்டுது

காதற் பாடல்கள் 411
10.
ll.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
குறுக்கால பிளந்த கொவ்வம் பழத்த நறுக்கெண்டு கடிக்க நான்கனவு கண்டேனே. ஒலக்கட்டுக் கொண்டு ஒடிஓடிப் போறபெண்ணே முன்னிரண்டும் குலுங்காதோ முதுகெலும்பு நோகாதோ(29) ஏறப் பழுத்த எளஞ்சிகப்பு மாம்பழத்த என்னதான் வந்தாலும் எடுத்தருந்தத் தாகிளியே தேமல் முலயும் தேன்போன்ற உன்பேச்சும்
வாழை உடலும் - என்ன வாட்டுதடி நித்திரையில் அன்னம் அலேஞ்சுவர ஆடுதுடை மின்னிவர கொங்கை குலுங்கிவர - உன்ன கொஞ்சுறது எக்காலம். அள்ளினு தங்கம் அணைச்சால் அமிர்தகனி கொஞ்சின இஞ்சிமணம் கோர்வை செய்தா வேறுமணம் தங்கம்போல் உங்கமார்பு தாமரையல்லோ உங்கமேனி அன்னம்போல் உங்கநடை அணைத்தல்லோ பார்க்கவேணும். அள்ளி அணைச்சிடவும் அந்தரத்தில் தூக்கிடவும் சேர்ந்து படுத்திடவும் - நல்ல சீதேவி அல்லவோ (4) நெஞ்சோடு நெஞ்சணைய நேருக்குநேராய் நாமிருக்க பஞ்சணையில் நாம்புரள பலநாளாய்க் காத்திருக்கன் தோட்டுப்பாய் கொண்டுசெல்லும் தோகை மயிலாளிடம் கேட்டுப் பார் - நம்மட கிறுகிறுப்பத் தீர்ப்பாளெண்டு (28) மருதங் கிளியாளே மனசு மிச்சமுன்னேட பொழுது தங்கி விளையாட - உங்க புருஷன் எங்கபோனதுகா பூத்த மரத்தடியில் புளங்குவது நீதியல்ல உங்களக்காத்த மரமிரிக்கி - நீங்க கனியருந்துங்கோ சீமான் பொடியன்பொடியன் எண்டு புற தனமாய்ப் பேசவேண்டாம். சித்தலியன் குட்டிபோல சிங்காரமாய் கைஎறிவன் என்ன என்னப் பார்த்துச்சும்மா ஏளனமாப் பேசா தடா சின்னலெவ்வ மச்சான் - உன்ட சிரங்கிழிச்சி உயிர்குடிப்பார் (35) பத்தைக்குள் போகாதகா பாம்பு பதுங்கியிருக்கும்
இச்ச தீப்பதற்கு இதுதான வாய்ச்சஇடம் கிட்டப் படுப்பன் கிண்ணிமுல நான் தருவன் தாகம் தெளியவைப்பன் - நீ தம்பியல்லோ ஒருமுறைக்கு கிட்டப் படுப்பன் கிளிபோல கத கதைப்பன் - உன்ர தாகந் தணிப்பன் -நீ தம்பியல்லோ ஒருமுறைக்கு (30)

Page 220
412 மட்டக்களப்பு மாவட்ட.
24. படுக்கப் பாய் தருவன் படுத்துளத்த மெத்ததருவன
கொஞ்ச முகந்தருவன் - ஒரு
குழந்தைவந்தால் என்னசெய்வன் 25. இஞ்சி மணமோ இலுமிச்ச வேர்மணமோ
மஞ்சள் மணமோ, மயில்படுக்கும் மெத்தயில 25. இஞ்சி மணங்கா இ லுமிச் சைவேர் மணங்கா
மஞ்சள் மணங்கா - உன் மார்முலயின் சோடுரெண்டும் (11) 27 கொட்டுக் கிணறடைச்சு குனிஞ்சி நிண்டு தண்ணி பள்ள
எட்டுப் பணத்தாலே எறிவந்து விழுந்ததப்பா. 28. மஞ்சள் குளிச்ச கிளி மருதோண்டி போட்டகிளி
நெஞ்சு பெருத்தகிளி நேற்றுவந்து பேன்கு துகா. (8) 29. கறுத்தக் கரும்பில் கண்போட்டு என்னசெய்ய சூப்பி எறிஞ்சதும்பு இன்பமில்ல உந்தனுக்கு. 30. ஆயிரங் கெ" ம்பன் அதிலஒரு ஏந்துகொம்பன்
ஏந்துகொம்பன் இல்லாமல் ஏற்குதில்ல என்மனசு. 31. கரும்பை நினைச்சு மச்சான் கண்ட கனவாலே
வெறும்பாய் திரு விநான் வேறு நினைவானேன்கா. 32 முந் திரியம் பழம் நானும் மூக்குச் சிவக்கவில்ல
பையப்பைய நீங்க பார்த்தருந்துங்கோ சீமானே. (28)
/2/ காதலரின் பிரிவாற்றமைப் பாடல்கள் /2அ/ காதலரின் பிரிவுத்துயர்ப் பாடல்கள்
1. அஞ்சுதிங்கள் அஞ்சுவெள்ளி ஐயாறு முப்பதுநாள்
மறுபிறையுங் கண்டேன் - அவருட மறுமொழிக் காணயில்ல. 2. துக்கம் அடை ஸ்நசவருக்கு சுகம்தருவான் எண்டிருந்தன்
நம்மளவில் அவன் நாடவில்லை யாயிருக்கும். 3. பூவரசம் பூவாஞ்சி பொட்டியில அ ைடச்சதுபோல்
வாடுகிறன் ராசா - உன்ர வண்ண முகம் காணுமல். (2) 4. வாடுகிறன் ராசா வதங்குகிறன் கீரையப்போல்
சோருகிறன் ராசா - எனக்குச் சோறுதண்ணி இல்லாமல். 5. உண்ணும வாடயில்ல உறங்காம வாடயில்ல
கண்ணுன மச்சான் . நான் கவலையிலே வாடுகிறன். 6. வெள்ளி விடிவெள்ளி வெள்ளாப் பாகு மட்டும்
சொன்ன கதையெல்லாம் சொப்பனமாய் மறந்தாயோ! (2) 7. ஏறும் பொழுதே இறங்குகிற சந்திரரே
சிங்கத்தின் குட்டி - இப்போ சீக்கிரமாய் வந்திடாதோ

காதற் பாடல்கள் 413 ܗ
8.
10.
1.
12.
13.
14,
15.
16.
17.
18.
19.
20.
21.
22,
23.
24.
படுத்தால் விடியுதில்ல பசிக்குதில் ல சோறுதின்ன திண்டா செமிக்குதில்ல - என்ன தீண்டாமப் போன யளே. அரண்டெழுந்த கண்ணுக்கெல்லாம்
அங்கலாப்பு கொண்டழுதன் . என்ட திரண்ட மணிவிளக்கு - எந்த சீமையில தங்கிறதோ (20) ஆலில் கிளிதுரங்க அடிமரத்தில் தேன்தூங்க உன் மார்பில் நான்துரங்க உலகம் பொறுக்குதில்ல கறுத்தக் கரும்பே கைநிறைஞ்ச மோதிரமே சீனட்டி நெல்லே - நாம சேர்ந்திருப்ப தெக்காலம் என்ர நெத்திக்குநேர நிண்டயெண்டா தங்கநிலா நான்ஒருபெருப்பம் பெருத்து
என்ர பேதலிப்பயும் மறந்திடுவன் (5) பீங்கானில போட்டசோத்த பிரட்டிஉண்ணும் வேளையில தாங்காத நினைவுவந்து தலைகுனியச் செய்யுதுமச்சான் கஞ்சி குடிமறந்தன் காலத்தால ஊன்மறந்தன் வெந்நீர் குடிமறந்தன் - உன்மேலழகைக் காணுமல். ஆடும் கொடியானன் அந்தரத்தில் காயான ன் வாடும் பயரானன் . மச்சாளின் வண்ணமுகம் காணுமல்,(11) கல்லாத்துநாவை கறுப்பெரிஞ்சி பழுத்ததுபோல்-மச்சாண்ட கன்னத்துமீசை - என்ர கண்ணெதிரே தோணுதுகா. (9) பச்சைக் கிளியே - என்ர பட்டணத்து நற்சரக்கே வெள்ளிப் பிரம்பே - நீங்க வருவனென்டு சொன்னயளே. கண்ணன மச்சான் - என்ர கண்குளிந்த சீதேசியே பொன்னன மச்சான் எ பொறுக்குதில்ல என்மனசு. வயிறு பசித்தால் வாயால கேட்டிருவன் - என்ர கண்ணின் பசியால் கதறினன்கா நாள்முழுதும். தாழக் கிணத்தில் சலம் கொதிச்சுவாறதுபோல் என்னேரமும் மனசு ஏங்கினப்போல் நானிருக்கன் மாமன்மகளே மருதங்கிளி வாகனமே ஏலங் கிராம்பே - உன்னை என்னசொல்லிக் கூப்பிடவோ,(19) பொன்னவரைப் பூப்பூத்து பூவோடு சாய்ஞ்சதுபோல் பொன்னன சீவன் - மச்சி போகுதடி உன்னல.
கூந்தலழகி மச்சி குலுக்கிவிட்ட மாரழகி சாம்பல் குருத்தழகி - நான் சாகிறன்டி உன்னல.
மாமி மகளே மருக்கொழுந்து வெத்திலயே உன் நினைவாலே உருகிறங்கா இப்பூவுலகில்.

Page 221
414 மட்டக்களப்பு மாவட்ட.
25. அன்ன நடையாளே அலங்காரப் பெண்மயிலே உன்னலே என்தேகம் உருக்குலைஞ்சு போகுதடி. 26. அந்திபட்ட நேரம் - உங்கட அன்புக்கதை கேளாட்டி
மங்கி யிருந்து மயங்குதுகா என்மனசு, 27. தங்கக் கிளியே - எண்ட தாய்மாமன் ஈண்ட கண்டே
மையிட்ட கண்ணே - உன்னை மறந்திருக்கக் கூடுதில்ல. (24) 28. கந்து விளக்கே கடவலடித் தோரணமே
மாணிக்கக் கல்லே - உன்ன மறந்திருக்கக் கூடுதில்ல. 29. வண்டழுத சோலையிலே வந்தழுத மான்கலைபோல்
நிண்டழுதேன் கண்ணே - உன்ர நினைவுவந்த நேரமெல்லாம். 30 எண்ட கண்ணுக்குள்ளிருக்கும் கருமை மொழியாரே நானறிவன் உன்னருமை நாடறியப் போறதில்லை 31. கண்ணிரு கண்மணியே கறுத்தமொழிப் பாவையரே உன்னிலஉள்ள பட்சம் ஊரறியா என்மனம்அறியும். 32. கடையில் சரக்கு என்ருல் கைவிலைக்கு வாங்கிடுவன் - என்ர
அறையிலுள்ள ஆணிமுத்தே - மச்சிநான்
ஆரவிட்டுக் கூப்பிடட்டும். 33. வேப்பயடி வீட்டாளே வெள்ளக்கொக்கு நிறத்தாளே
தங்கு பொழுதாளே - உன்
தங்கமுகம் காண்பதெப்போ (33) 34. சுந்தரியே அம்புயமே சொல்லுக்கொரு நங்கணமே
அந்தரித்த என்னை அழைச்சாதரிக்க மாட்டாயா 35. உன்னசை கொண்டுமல்லோ உலகமெல்லாம் பேராணன்
என்னுசை உன்னிடத்தில் எள்ளளவும் இல்லையடி 36, கூண்டுக் கிளியக் கண்டு கதைபேசாமல்
உண்ணுற சோறும் உடலில ஒட்டுதில்ல. 37. நாலஞ்சு நாளாக நவமணியக் காணுமல்
செம்பில் குடிக்குந்தண்ணி சிரசில் அடிக்குதப்பா (34) 38. பாலைப் புளிஞ்சன் பழத்தச் சுரமறுத்தன்
சோத்தப் பினைஞ்சன் - எண்ட தொண்டையால போகுதில்ல 39. ஒல்லிக் குளத்திலே உசந்துநிற்கும் தாமரையே
கண்டுவம்மிப் பூவே - உன்ன கண்டுவெகு நாளாச்சு (28) 40. வாழைப் பழமே வலதுகையிற் சக்கரையே உள்ளங்கைத் தேனே உருகிறன்டி உன்னல 41. வேலிக்கு மேலால - உன் வெள்ள்ைமுகம் காணுமல்
பாலேருச் செந்நெல் பதக்கடை போலானேண்டி

காதற் பாடல்கள் 415
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
மாதாளம் பூவே மலையில் அடைபொழுதே சிங்க மகாராசாத்தி - நீ சிறையிருக்க நீதியுண்டா. ஆக்கின சோத்தில அரிசியிருந்து மின்னுமாப்போல் புத்திகெட்ட மாமாவீட்டில் ஒரு
பொண்ணிருந்து மின்னுதப்பா. கண்ணழகும் கால்நடையும் கதையழகும் கைவீச்சும் எந்நேரமும் என்முன்னே இடிக்குதுகா என்புறவி குஞ்சிமுகமும் - உன்ர கூர்விழுந்த மொக்காடும் நெத்தி இளம்பிறையும் - எ ர நித்திரையில் தோணுதுகா வட்ட முகமும் வரிசையுள்ள பல்லழகும் தேமல் முலயும் திகட்டுதுகா நித்திரையில் நித்திரைக் கண்ணிலையும் நினைவிலையும் தோணுதுகா.உங்கட கலிமா விரலும் கல்பதிச்ச மோதிரமும் நித்திரைக் கண்ணில் - உங்கட லேஞ்சி மணத்தால்போல் கண்ணை முழிச்சன் - உங்கள காணயில்ல ராசா பொன்பூத்த மலரதுபோல் பொருபொரு என்று அண்டிரவு நித்திரையில் - என்ன அரட்டினது போலிருந்தது கரும்பை நினைச்சு - மச்சான் கண்ட கனவாலே வெறும்பாய் திருவி - நான் வேறு நினைவானேன்கா. மானத்தில் வெள்ளி மங்காமல் பூத்ததுபோல் - என்ர சீனத்து மச்சானுடன் சேர்ந்திருக்க கனவுகண்டேன். (24)
/2ஆ/ காதலரது தூதுச் செய்திகள்பற்றிய பாடல்கள் பச்சைக்கிளியே பறந்துசெல்லும் பட்சிகளே இச்சையுள்ள மச்சானுக்கு எந்தன்துயர் கூறிவிடு சோலைக் கிளியே சோறுதின்னும் நங்கணமே தூரப்பறந்து சென்று துயர்கூறி வந்திடுவாய். புத்தலுக்குப் போவாயெண்டால் - காகம்
பொன்னிவண்டைக் கண்டாயெண்டால் இருகால் விலங்கோட - சிறை இருக்கனெண்டு சொல்லு ஆகாசக் கொப்பில அறையறையாய்க் கூடுகட்டி தங்கும் புருக்கள் - என்ர தங்கவண்டைக் கண்டயளோ உசரப் பறக்கும் ஒருசோடி நங்கணங்காள் தாழப் பறங்கோ - என்ர தன்மகளச் சொல்லியழ பட்டியடிப் புட்டியிருந்து பறந்துவரும் நங்கணங்காள் - எங்க மச்சாள் இருக்கும் மாளிகையைக் கண்டிங்களோ, (9)

Page 222
416 மட்டக்களப்பு மாவட்ட.
7. சோலைக் குயிலே தோகைமயில் நங்கணமே
கூவும் புருவே - அவர கொண்டுவந்து சேர்த்திடுங்கோ 8. காகம் இருந்து கால்கடுக்க ஏன் அழுதாய்
மன்னர் விசளத்தை மனங்குளிரச் சொல்லாம 9. உள்ளதைக் காகம் ஒளியாமல் சொன்னியெண்டால் காசி கொடுத்துநான் கருவாடு வாங்கித்தாறன் 10. ஊருக்குப் போனயெண்டால் காகம்என்
ஊர்க்குருவியைக் கண்டுசொல்லு கையெடுத்துக் கண்ணில்வைத்து - நான்
கடிய சலாம் சொன்னனெண்டு (30) ஒசெர நெடுப்பமில்லை உசந்தமூக்கு வெள்ளைநிறம்
கடையிலிருப்பார் அவரைக் கண்டால்வரச் சொல்காகம் 12. ஈக்கில் தெரிச்ச இளவட்டுத் தென்னையில
காகமிருந்து நம்மட கக்கிசத்தைக் சொல்லுதுகா. (32) 13. காகங் குருவி குளுகுளுப்பை நங்கணங்காள் - என்ர
மாடப் புருவே - எங்கட மச்சியையுங் கண்டயளோ
1
14. கரையிறையே காகம் - என் கருங்கு பிலேக் கண்டாயோ
சந்தித்துக் கேட்டால் - என்ர சரித்திரத்தைச் சொல்காகம் 15. பள்ளி மதிலில் பறந்துகொண்டு விழுந்தாயெண்டா அவள் வீடுதெரியும் - நீ உள்ளபடி சொல்காகம் 16. கறுத்த நிறமேனி சிரித்த முகமாயிருப்பாள்
சொல்லாட்டித் தேவையில்ல - நீ
தெரிந்துகொள்வாய் போகாகம் 17. குத்தும் உரக்கடையில் கொண்டுழுந்தேன் ஒர்சாமம்
உலக்கை எடுத்து அடிக்கவந்தாள் உன்மதனி 18. உலக்கை எடுத்து அடிக்கவந்தால் என்மதனி
அரிசியள்ள வந்ததில்ல அலுவலுக்கு வந்ததெண்ணு. 19. ஆளோடு நிண்டா - அதை அந்நேரம் சொல்லாமல் தனியாகக் கண்டுஎந்தன் தவிப்புநிலை சொல்காகம். 20. கத்தாதே காகம் கதருதே காகம்
எத்தாதே காகம் எறிஞ்சிருவன் பொல்லால. 21. கத்தாத காகம் கதருதே என்வாசலில
எத்தாத காகம் எசமான்வந்து சேரமட்டும். 22. விடியவிடியக் காகம் வேலியல தங்கிறது
சண்டாளக் காகம் - உன்ர சாத்திரமும் பொய்யாச்சே, (9)

காதற் பாடல்கள் 417
10.
11.
12.
13.
14.
/2இ/ காதலரது வெறுப்பைக் குறிப்பிடும் பாடல்கள் கல்புக் குசக்க காய்ச்சகணி எண்டிருந்தன் - உங்கள் இன்பங் குறைஞ்சதனுல் இனிவேணும் சீமானே. கிளியே மொழியே கிள்ளவட்டுச் சுண்ணும்பே அரிய பொழுதே - நீங்க அன்பயத்துப் போனதென்ன. (30) சாறன் உடுத்த தங்கமச்சான் என்றிருந்தன் கூத்தி குடியோ - நீங்க கூடாமப் போனதென்ன. பொன்னெழுத்துக் கோப்பயில பொரிச்சகறி திண்டவண்டே என்னகுற்றம் செய்தேனென்டு என்னைவிட்டு நீமறந்தாய். வேம்புங் கரும்பாச்சோ வெத்திலையும் நஞ்சாச்சோ நானும் பகையாச்சோ நல்லசொல்லும் பொய்யாச்சோ உங்ககுணம் எங்கமனம் ஒண்டுதான் என்றிருந்தன் மேலுக்கு நீங்க வேறு குணமானதென்ன. தின்னத் தெவிட்டினதோ சொல்வார்த்தை கசந்ததுவோ மங்காத ஆணிமுத்தே - நீங்க மறந்துபோன தென்னகுணம். பத்தவன நெல்லும் பால்மாடும் தானிருந்தா மாமிமகளை நான் மண்டியிடத் தேவையில்ல (24) பொங்கு கடலாரே புறியமில்லாட்டிப் போங்க வம்புக்கதை கதைச்சு - எண்ட மனசை முறியாமலுக்கு மாமியிர தங்கம் மகிழம்பூ வாயுடையாய் பெருக்கப் பெருக்க - என்னுேட பேசமனத் தாபமென்ன ஆலம் பழமும் அணிலும்போல் நாமிருந்தோம் காஞ்சிரம் காயும் காகமும் போலானமடி (9) ஆலம் பழமே அசலூரு மாம்பழமே கோவம் பழமே கோபம்என்ன என்னேட மனிதன் உறவு மடியுமட்டு மென்றிருந்தன் -நீங்க அற்பத்துக் குள்ளே மறந்ததென்னகா மதினி (32) கறுத்தக் கரும்பே கனியில் உயர்ந்தமுத்தே தெளிவுகண்ட பொன்னகையே - உன்ர
சொல்நிறைவேற்றினதோ
/2ஈ| பொருந்தாத் திருமணம்பற்றிய பாடல்கள் தங்கத் தயிலாவை தாறனெண்டு சொன்னலும் தாரம் இழந்தவனுக்கு - நான் தாரமாகப் போறதில்ல. ஊரான ஊரிருக்க உற்றமச்சான் தானிருக்க வெள்ளவாய்க் காட்டு வேடனுக்கோ வாழுறது.

Page 223
48 மட்டக்களப்பு மாவட்ட. 3. தங்கத்தால் வேட்டி சருகையால் சால்வை போட்டு
செருப்பில் நடந்தாலும் -அவரை சேரமனம் சொல்லுதில்ல. 4. பந்தல் அவரை பால் அவரை பூத்தாப்போல் எந்தன் மனசை இனித்திருப்பப் போறதில்ல. 5. களிஓடை ஆத்தில கானன் வளைக்கிருப்போல்
ஏன்வளைக்காய் கண்டார் - உனக்கு
நான்கிடைக்கப் போறதில்ல.
/2உ/ மந்திர வித்தையை நாடுங் காதலர் பாடும் பாடல்கள் 1. ஆட்டின் பித்தெடுப்பேன் அடிஅடியாய் மண்ணெடுப்பேன்
கொண்டைமயிர் எடுப்பேன் - மச்சிஉன்ன
கொண்டுவர என்காலடிக்கு. 2. உள்ளான் குருவியின்ர உள்ளிருக்கும் பித்தெடுத்து
சேர்த்தி மருந்தரைத்து - மச்சிஉன்ன
சேரவைப்பன் என்காலடிக்கு. 3. கரையாக்கன் பூவாய்ஞ்சி கைவசமாய்க் கொண்டுவந்து
வயிரவனை முன்னிறுத்தி - உன்ன வரவழைப்பன் காலடிக்கு. (24)
/3/ காதலிலே தோல்வியுற்றேரின் வேதனைப் பாடல்கள் 1. தென்னம்வட்டுக் கிளியெடுத்து தீன்கொடுத்து வளர்த்தன்
அங்கஒரு தேவடியாள் அழைச்செடுத்தாள் ஆண்டவனே. 2. மனசை மனசறியும் வஞ்சனையை நெஞ்சறியும்
உள்ளிருக்கும் வஞ்சனையை ஊடறுக்கக் கூடுதில்ல. 3. கடலுக்கு அங்காலே காடாரம் பத்தையிலே
போயிருந்து அழுதாலும் - என்ர பூங்காரம் தீராது. (9) 4. எல்லாம் எதிரி - இந்தக இலைகுழையுந் தானெதிரி
புல்லு மெதிரி - இந்தப் பூலோகில் ஏன் பிறந்தன் 5. கலையும் கலைமானும் காடேறி மேய்கையிலே
கலையைக் கலைத்தால் கன்னிமான் என்னசெய்யும் 6. நகமும் சதையும்போல் நாமிருந்த நேசத்துக்கு
நகத்துக்கும் சதைக்கும் - இப்ப நஞ்சுகலந்த தென்ன 7. என்னில் அழகில்லையோகா ஏந்துகொண்டைக் காரியோகா
பல்லா லழகியோகா - மச்சான்நீ
பார்த்தெடுத்த செங்குரங்கு (11)

காதற் பாடல்கள்
8.
9.
10.
1.
12.
13.
14.
49 மாமிர பெட்டகத்தில் மகிழம்பூ பட்டெடுத்து குலைச்சு மடிச்சுடுக்க - நான் குழந்தைமுதல் காத்திருந்தன் மூத்த மதினியாரே முத்துக்கொம்பன் பல்லழகி தங்கம்போல் மேனியரே - உன் தம்பிவித்த தென்னவில் (30) கம்புக்குப் போட்டால் கதிச்செழும்பும் பூணுரம் உன் பொண்ணுக்குப் போட்டால் என்புறங்கால்
அழகுமில்ல. மாடுபெரிசோ உங்களுக்கு மானமுள்ள பெண்பெரிசோ வீடுபெரிசோ - ஒரு விருப்பமில்லாப் பெண்பெரிசோg வேம்பும் கரும்பாச்சே வெத்திலயும் நஞ்சாச்சே நானும் பகையாச்சே ஆரிட்ட கட்டளையோ, புத்தி அறியேன் பொய்கதைக்கவுந் தெரியா நாவு பிரட்டு - உங்கள நம்பினது என் தவறு. தோடங்காய் போலத் தொண்டையிலே கட்டிடுவான் -
என்ர
பால்போல மனசைப் பதறவைச்சான் ஆண்டவனே.
5.
16.
7.
18.
19.
20.
21.
22.
23.
கட்டிலுக்குக் காலிணக்கம் கடதாசிக்கு மையிணக்கம் நாகவள்ளி நாம்பனுக்கு நாணிணக்கம் போதாதோ. (19)
எனக்குத் தீமைசெய்ய வேணுமெண்ட உங்களுக்கு தீர்ப்பு இதுதானுக்கும் அல்லாஇருக்கான் நேசர் (35 குஞ்சு குழந்தையில கூச்சம் தெளிவிச்ச மச்சான் கதிரு குட லையில - என்னக் கைசோர விட்டதேனு என்ர நெஞ்சிலிருக்கும் கவலைகளைச் சொன்னவுடன் ஏழுகடலும் இரைஅமந்து கேட்டிருக்கும்
மடியும் வரைக்கும் மாறுசெய்ய மாட்டேன்என்டு மாறுசெய்து விட்டால் மனம்பொறுக்குமா கிளியே வாழைப் பழமும் வடிதயிரும் இங்கிருக்க சாளைக் கருவாட்டுக்குச் சம்மதித்த மாயமென்ன தண்ணியில்லா வட்டையில தாமரை பூத்தாப்போல்
நான் கன்னிக் குமரிரிருந்து கலங்கிறதை ஆரிஅறிவார் (24) கப்பலில ஏறிக் கடலில் குதிபாஞ்சி சிப்பியில எடுத்தமுத்தை - மாமி தரேன் என்காவாம்
சிப்பியில் எடுத்தமுத்தைச் சீமான்கள் வாங்கிறது இந்தஇல்லாத நாய்க்கு ஏன்கொடுக்கன் எங்காவாம்

Page 224
49 மட்டக்களப்பு மாவட்ட.
24. எண்ணுத எண்ணி என்ர ஏழைமனம் பேதலிச்சுப்
புண்ணுயுருகிறதை - இந்தப் பூவுலகில் ஆரறிவார் 25. வாடினன்கா உன்னல வதங்கினன்கா என்மேனி சோர்ந்தன்கா கீரையைப்போல் சோடிதப்பிப்
போச்சுதெண்டு 26. காய்ஞ்ச மனமும் கசிவு இல்லாமாதிரியும்
ஈரமில்லா நெஞ்சும் - நாங்க அறிந்தோம்கா மதினி 17. மாமியிற்றப் போனன் மாங்கண்டைப் பார்ப்பமெண்டு
புல்லாழிழைச்சு - ஒரு புல்பாயும் பஞ்சமாமோ (2)
/4/ கணவன் மனைவி உறவுநிலைப் பாடல்கள் 1. சாம்பல் மொந்தன் குலைபோல சமைஞ்சகொம்பன்
. நானிருக்க ஏந்துகொம்பன் குழந்தையோட - உனக்கு என்னவிருப்பம் வந்ததுகா. 2. வாழையில குலையிருக்க வாழ்மயிலாள் சிறையிருக்க சேனையில நீயிருக்க - சீனிப்பிள்ளை தேடிவரக்
காரணமேன் 3. போருக வன்னியனுர் பொத்துவிலப் பார்ப்பமெண்டு -
t என்ன
மருந்துகளப் போட்டு மயக்குகிருளோ தேவடியாள். 4. வாறதும்தான் போறதும்தான் வளவைச்சுத்திப்
பார்ப்பதும்தான் செப்பைத் துறந்து - மச்சான் தேன் எடுத்துத்
திண்டதில்ல, 5. கோடைக்குப் பூத்த கொடமல்லிகைப் பூப்போல காலமொருக்கால் கடனழிக்க வாறதாக்கும். 6. ஒண்டாக இருந்தோம் ஒருகல்லையில் சோறுதிண்டோம்
பொல்லாத காலம்வந்து புறிஞ்சிபோனும்
ஆளுக்கொருதிக்கில, 7. ஏழவண நெல்லும் எருமை கண்டு மாடுகளும் ஆறுமாதச் சோறும் தாறதுதான் சம்மதமோ 8. முதிரை மரமறுத்து மூணறையில் வீடுகட்டி சன்னலும் பூட்டி தாறதுதான் சீதனமாய். 9. கல்வீடும் கல்கிணறும் கதவும் நிலையுங்கூட
இத்தனையும் கேட்டவர்க்கு எத்தனைகார் ஓடுதுகா

காதற்பாடல்கள்
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
421
ஊடுகொத்திக் கட்டுமெண்டார் உயர்ந்தவளை
ஏத்துமெண்டார் ஒடடுக்கித் தாருமெண்டார் உள்ளவனெ என்புருஷன் காக்காபொண்டி காக்காபொண்டி கண்கறுத்த
காக்காபொண்டி எட்டுமுழச் சேல - இப்ப இணங்குதுகா காக்காபொண்டி கடவலுக் கங்கால காய்கிறதும் பூக்கிறதும் இந்தப் பாவியிைத்தில - ஒரு காயுமில்ல பூவுமில்ல (30) என்ன அறியாம - நீ கள்ளக்காவின் முடிச்சயெண்டா கண்டுமகன் நான் கடலில கொண்டுழுவன் (28) ஈரச் சுவரானேன் இடிஞ்சுழுந்த மண்ணுனேன் பாரக் குமரானேன் - இந்த பழிமுழுதும் உன்னுேட. அரக்கொத்து அரிசியில்ல அஞ்சு சல்லிக் காசு மில்ல போகப் புறப்படுபார் புறவிடுதி சொல்லாம. இணலுக்கு இணலிருந்து எல்லோரும் பால்கொடுக்காள் - நான் கைவிசி வாறேன் காத்தருளும் ஆண்டவனே. (30) ஆம்புளப் புள்ளவேணு அதிலே ஓர் ஆசைவேணு பொம்புளப் புள்ளஎன்னு பூலோகத்தில் தாவனல்லா. கட்டிக் கொடுக்கவேணும் கண்குளிரப் பார்க்கவேணும்
மறவ%ணயில் வைக்கவேனும் நல்மகளாரைத் தாவனல்லா. (24)

Page 225
um,
půlkssmrů u Lotulub
s
s
é.
Sỳ
i
வயற்பிரதேசம் மலைக்குன்றுகள் கீாட்டுப்பிரதேசம் 6) குளங்கள்
ங்கம் ட்டக்களப்பு நகர்
3\இாத்தான்குடி
颂 fr
O
 
 
 
 
 
 
 


Page 226