கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1977.07

Page 1
szwoww kısınow Nossoso, aemus, s.
图图图
 

t භ්‍රමු:
දී:බ්‍රඹිස්ය්
ཅེ་

Page 2
·kaaaaas.----
* சுத்தமான
சுவையான
* சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட
சகல உணவு வகைகளுக்கும் a 5
கொழும்பு மாநகரில் பிரசித்தி பெற்ற
சைவக் கிளப் T தொலைபேசி: 24712
கோல்டன் கபே
98, பாங்சோல் வீதி, கொழும்பு - 11
* சிறந்த முறையில் சேவை செய்வதற்கான
நவீன இயந்திரக் கவிருகளின் துணைகொண்டு
எமது ஸ்தாபனம் கீழ்க்காணும் வேலைகளை விசேஷமான கவனிப்பு முறையில் செய்து கொடுக்கின்றேம்.
x லொறி ஹவ்வமிங் செய்தல்
x லோஞ்ச் சாவ்ட் சீர்ப்படுத்துதல் தொலைபேசி :
740 ஐ டிராக்டர் கிப்பிங் செய்தல்
x கிறஸர் சாவ்ட் செய்தல்
பைனல் ரேணிங் வேக்ஸ் 103. கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்,

4/mųjųoso –
! 1!ootsioogoljow), Hg-use) ige-ids)que usosolygi ogū) ngelsnegro)&)aesneg) orgūške moos, quoi reg)helo o qīles spējīgnyeree, ~777 unuras) sourie) • Bogeçmişi sī£ urē,
· æqoon nuoress --Trīņựso uos, o sợG; 'qi ugoosprece sıçıs@ke gđÐ19 se urm †ileo-~a 1994/fermotive spođDas õęøgsgespoi oqi ustodo osoșiųoog) pugoņi driqi lege sourm Rowosog) șoș@ægi • quae&q&òričiędùgoro @șơ71» uogo y du@uoqjo rng H • quae o șose
IỆș& 1ço-los)que1,99 gigi qøų,9o&fire asrı -o quáðg) 1999 qīgi tingereg) o o ugifte ựfīņasqa qogą rūšiųē și o ș@gỉ số qīhmflø0,91g uæqøgf qıñngosiðffice soț¢& 199ųoogoo uq'is5īko rmgode($ as urnơngo .ns-3 *a9a2fmongo-lo pueso qiagą, Jon Øgonus
Nortos@aeveloc) șụortse) d wo ɖo a goqjēj
qīhmụoto) ș@șơng; sorīņs) th || .
topoulog) șųogo togs 19 19:34, og 911 mgựao($ 1,919 qi@ș@smoņi-a 1919-æ qidi)o?--Tulose-æ Œ œ urm 颂s99@@49哈自的 D岛 95可g@g4@ doda · @ ngof, swegeqoqi nogoșunoșđỉns
食· Affaf logo@Ġ úrlegiertes) 4,9ơn €) ngofo Norte £)ąofòrçeğrı içe çmosos geopā 哈4!@@4了D寻回 9母舰鸣5di g喻9岭g
iņasơn 6 logos, fisės sąšole
| 930,39|59|90||深
dorso qıhçıvarurie,
garsoạopeo 飞捆蹄顧麟exueri yışi sogeņices/ 3ーrmg), grigos?*V Ngow f.· quæ uriņsura oooo..##off, 'peos os x x ovoz$ ye "apso oog) oog) v -yɛz 宿衞韩waaɔs ɔțuļuaoq suoŋp3ansŝoșųøņwono) įmụoo đi@rø §§hoogspanIvy II, IZIVIAI ' ' sụrsso
əuszpềowfiņųquoJAV 24įssəuổouci, „spạillp!/V,
3ggaggg7
02@部 Zs. 6 I
, plures) ips@ @ toņoso aoggi asso ya'yı grierīņ–1af qisię9-10-Trio), quouse-a - qøụoodogo smloogēnō torn goso qi ng@să 4956) un ĢĒ@soo

Page 3
Ĝ oplopop1, 1ços 1911@@@1,9
ış9Ųucusuysdfið LúsošgÎmỗto)
sngás、g ass :rgi üīZTí719 o 199sto pro-agos qimųosơıú51ņiego un o sg)- -:fie@faragøé8 utgšķieg)sēs), opus :segrasīgie & giuniệgặđì) o ysử :Fisiqiweko +0,93 dươIỆĝasqɔsɔ o ugi yfīgsunggi qo-Turi oqi so ore o șoseo? ngog: }@@thaf yder, quosq'on qĝoỆo o so opus ‘quo 'sysopmű30 uầujúsákosítvapeys o apus ( ‘Īúgqī£ „ffibuląoxo‘ışɔmɛgiúc) loggses *útos@osasąveio ·īgi Ī yfișuregi
"orofysgogų, o opus'sysop@ì iềusitoqwsu) os@se@ugg (puñišęs
i logoslle qi@nto) ugi qošastā —ırıņútesg ssigloss $otessas@
 

தேர்தலும் தேர்தல் விஞ்ஞாபனங்களும்
புதிய அரசியல் யாப்பினடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள - சர்வ வல்லமை படைத்த இறைமையுள்ள - இலங்கைக் குடி யரசு, தனது முதலாவது பொதுத் தேர்தலுக்குரிய கட்டத்தில் இன்று வந்திருக்கின்றது. V
இந்தப் பொதுத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின் றன. போட்டியிடும் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை யும் இன்று மக்கள் மத்தியில் வெளியிட்டு தம்மை ஆதரித்து வெற்றி பெறச் செய்தால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கண்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என மக்களுக்குச் சத்தியம் செய்து உத்தரவாதம் கொடுத்து வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி தன்னைச் சோஷலிஸத்தை நம்பும் கட்சியாகப் பொது மக்களுக்குக் காட்டி வாக்கு வேட்டை ஆடு கின்றது. தமிழ் மக்களுக்கு எரியும் பிரச்சினையாக இன்று உள்ள அவர்களினது நியாயமான உரிமைப் பிரச்சினைகளைப்பற்றி விஞ் ஞாபனத்தில் ஒன்றுமே கூருமல் மட்டக்களப்புப் பொதுக் கூட் டத்தில் அதன் தலைவர் திரு. ஜே. ஆர். தான் பதவிக்கு வந்தால் உடனடியாகத் தமிழ் மக்களது பிரச்சினை தீர்த்து வைப்பேன்" என்கிருர்!
சுதந்திரக் கட்சியின் தலைவியும் நாட்டின் பிரதமருமான திரு மதி பூரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களும் தங்களது லிஞ்ஞா பனத்தில் என்றுமே இதைப்பற்றிச் சொல்லாமல், கிளிநொச்சிக் கூட்டத்தில் "தமிழ் மக்களது பிரச்சினையை நான் உடனடியாகத் தீர்க்கத்தான் விரும்பினேன்; துரதிர்ஷ்டவசமாக திரு. செல்வநா யகம் இந்தச் சமயத்தில் காலமாகி விட்டார்!" எனக் கூறி வைத் தார். தொடர்ந்தும் முயற்சிப்பதாகக் கூறியுள்ளார்;
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் "தமிழ் நாட்டுக்கான கடை சிப் போராட்டத் தேர்தல் களமிது. நாம் தனிநாட்டுக்காகவே பொதுசன வாக்கெடுப்பாக இதைக் கருதுகின்ருேம் தனித் தமிழ் ஈழம் காண்பதே நமது நோக்கம்! எனத் தமது விஞ்ஞாபனத்தில் விளங்கப்படுத்தியுள்ளனர். ۔
ஒரு நாட்டைத் துண்டாடி , த E நாடாகப் பிரகடனஞ் செய்வதானுல் சமாதானமான முறையில் பெரும்பான்மை இன் மக்களின் உதவியுடன் பிரிய வேண்டும்; இது நடைமுறைச் சாத்

Page 4
தியமானதல்ல. அடுத்துப் போராடி உள்நாட்டு யுத்தத்துக்கு முகம் கொடுத்து. பலாத்காரமான வழிமுறைகளில் பிரியவேண்டும். இது நினைத்துப் பார்க்கவே முடியாத படு பயங்கர விளைவு களை ஏற்படுத்தும். நம்பவே முடியாத கற்பனைக் கோஷமிது!
இக் கோஷம் இளந் தலைமுறையின் நேரிய உணர்சிகளைத் தூண் டிவிட்டு, இன வெறியை வளர்த்துத் தற்காலிக தேர்தல் இலா பத்தை இதஞல் பெற முடியுமே தவிர, ஆக்க பூர்வமான நன்மை யொன்றையும் நிரந்தரமாக இந்த உணர்ச்சியினுல் பெற்றுக் கொண்டுவிட முடியாது. வரலாற்று உண்மை இது.
நாலாவதாக ஓர் அருமையான நடைமுறைத் திட்டத்தைமுற்போக்கு அம்சங்களை உள்ளடக்கிய முழுத் தேசத்தின் நன்மை யையும், அதே சமயம் தேசிய சிறுபான்மை இன மக்களின் நியாய மான சகல பிரச்சினைகளுக்கும் தெளிவான தீர்வு காணப்படும் ஒரு ஜனநாயக - முற்போக்கு உள்ளடக்கத்தைக் கொண்ட தேசி யத் திட்டத்தைத் தனது தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிட் டுள்ளது இடதுசாரி ஐக்கிய முன்னணி.
எவ்விதமான கோபதாபமுமில்லாமல் - உணர்ச்சி வசப்ப டாமல் - இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒரு தடவை படித் துப் பார்த்துச் சிந்திக்கும்படி தமிழ் இளைஞர்களைத் திறந்த ம8 துடன் வேண்டிக் கொள்ளுகின்ருேம்.
தேர்தலுக்காகவல்ல; தேர்தல் முடிந்ததின் பின்னுல் மிக நிதானமாக - சிந்தனைத் தெளிவுடன் ஆறுதலாக வீற்றிருந்து - இந்த U. L, F - வின் விஞ்ஞாபனத்தைப் படித்துப் பார்க்கும் வண்ணம் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் தமிழ் வாலிபர்களைக் கேட்டுக் கொள்ளுகின்ருேம்.
இதில்தான் நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் - பிரச் சினைகளேச் சரிவரப் புரிந்து கொண்டு அதற்குத் தீர்வுகாணும் அம்சங்கள். வெகு துல்லியமாகச் சொல் லப் பட்டிருப்பதைக் காணலாம்.
மிக முக்கியமான தேசியப் பிரச்சினைகளுக்குப் பரந்த அளவில் திட்டம் தீட்டியுள்ளது போலவே, தமிழ் மக்களினது உடனடி - வருங்கால - அவசர - அவசியப் பிரச்சினைகளின் வேர் களை ப் புரிந்து கொண்டு இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைத் தயாரித்தது மாத்திரமல்ல இன்று நடைபெறும் பொதுத் தேர்த லில் இது பெரும்பான்மைச் சிங்கள முற்போக்கு மக்கள் மத்தியி லும் எடுத்துச் செல்ல்ப்பட்டு அங்கீகார்ம் பெறப்பட்டுள்ளது.
எனவே நமது தாய்த் திருநாட்டை நேசிக்கும் சகல தேச பக்தர்களுக்கும் முன்னுல் - ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட சகல முற்போக்குவாதிகளுக்கு முன்னுல் - பாரிய கடமை ஒன்றுண்டு . நேச சக்திகள் யார் - யார் என இனங் காணவேண்டும் பிரச்சினைகளை உண்மையாகவே தீர்க்கக் கூடிய சகோதரச் சக்தி கள் எவை எவை என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களினது நியாயமான குறைபாடுகளைத் தீர் க் ச உண்மையிலேயே மணம் விரும்பும் தமிழ்த் தலைவர்கன் இந்த இடதுசாரி முன்னணியினரது தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பற்றித் தமது கருத்துக்களைப் பகிரங்கமாகக் கூறவேண்டும். -
ஏனெனில் இதுதான் தமிழ் மக்களுக்குக் கடைசிச் சந்தர்ப்பு மல் ல இரதான் இற்தத் தேச்த்தில் கடைசித் தேர்தலுமல்ல!

تسخ
圆门
பதின்மூன்ருவது ஆண்டு மல்லிகை மலர் வெளிவர இருக்கின் றது என்ற அறிவிப்பைப் பார்த்தபோது நெஞ்சில் ஒருவகை மகிழ்ச்சியும் மன நிறைவும் எனக்கு ஏற்பட்டது ன்ன்ற உண்ம்ையை முதலில் நான் சொல்லிக் கொள்ளத்தான் வேண்டும். W
சி-ம் 10-ம் 11-ம் 12-ம் ஆண்டு மலர்கள் இப்பொழுதும் எனது கைவசத்தில் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒருங்கு சேர வைத்துப் பார்க்கும்போது உண்மையாகவே உங்களது உழைப்பின் பெறுமதியை முற்ருக உணர்ந்து கொள்ளுகின்றேன்.
தமிழுக்குத் தொண்டு செய்வோம் எனத் தேர்தல் பாணியில் சும்மா வாய்ச் சவடால் அடிப்பது வெகு சுலபம். ஆக்கபூர்வமா கத் தமிழை, கமிழ் மக்களது மத்தியில் வளர்ப்பது - அதிலும் நமது ஈழத்தில் வளர்த்தெடுப்பது - மகா சிரமம்.
தமிழால் இன்றும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பலரை எனக்குத் தெரியும் ஆணுல் தமிழுக்காக - தமிழின் கலா சார முன்னேற்றத்துக்காக - நீங்கள் உழைத்து வரும் இந்தப் 12 வருட கால உழைப்பு இருக்கின்றதே இதை எண்ணி எண்ணி நான் மனதிற்குள் வியப்பதுண்டு.
எந்த விதமான தன்னகங்காரமோ, தற்பெருமையோ, படா டோபமோ இன்றி நீங்கள் செய்து வரும் தொண்டை உழைப்பை, ஊக்கத்தை நினைக்கும் போது காலத்தால் அது மறைக்கப்பட முடியாது என்றே சொல்லத் தோன்றுகிறது. தமிழ்ச் சஞ்சிகை உலகிற்குக் கல்கி வழி காட்டியது போல, நீங்களும் இக் நாட்டுச் சஞ்சிகைகளின் வளர்ச்சிக்குச் செய்யும் உரமிடும் வேலை பற்றி நான் நண்பர்களிடம் அடிக்கடி கதைப்பதுண்டு. s
உங்களது கருத்துக்கள் புதுமையானவை. மிகத் தெளிவா னவை. எந்த விதக் காய்தல் உவத்தலுமற்ற நேரிய கூரம்பைப் போன்று கருத்துக்களைச் சுமந்து வரும் சொற்கள் மிக ஆணித் தரமானவை. உங்களது பேச்சுமே அப்படித்தானும்
உங்களை எனக்கு நேரில் தெரியாது.
நேரில் தெரிந்தவர்கள் மூலம் உங்களைப் பற்றிக் கடந்த ஐந்து ஆண்டுக் காலமாக அறிந்து வைத்திருக்கின்றேன். தமிழகத்து ஜெயகாந்தன் போன்ருேரின் கருத்துக்கள், செய்திகளைப் படிக்கும் போது இயல்பாகவே எனக்கு உங்களது ஞாபகம் அடிக்கடி வருவ துண்டு, அவருக்கும் உங்களுக்கும் பல விசயங்களில் வித்தியாசங் கள் இருந்த போதிலும் கூட, அவரிடமுள்ள அசாத்தியத் தன் னம்பிக்கை, எந்தப் பிரச்சினை பற்றியும் ஆழமாகவும் புதுமையா யாகவும் பார்க்கும் பார்வை, எதிரிகளைத் தூக்கியெறிந்து பேசும் அலட்சியப் பேச்சு மனுேபாவம், கொம்பன்" கள் விவகாரத்தில் "போய்யா. போ!' என ஊதித் தள்ளும் மன ஓர்மம் இவை

Page 5
சளில் நீங்களிருவரும் ஒரே தன்மை வாய்ந்தவர்கள் என நான் எனக்குள்ளே நம்பிக் கொள்வதுண்டு.
ஆண்டுகளை முழுமையாக்கி 13 வது ஆண்டில் காலடி வைக்கப் போகும் மல்லிகைக்கு நீங்கள் ஆசிரியராகக் கிடைத்ததே ஒரு பெருமை எனலாம். d - 4 இதழ்களைப் பரபரப்புடன் நடத்தி மூடு விழாச் செய்யாமல் கருத்தாழமுள்ள இலக்கியத் தாக்கத்தை இந்தீ மண்ணில் ஏற்படச் செய்தமைக்காக வருங்காலத் தலை முறை உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கின்றது. Y& ஹட்டன் சோம. நடேசன் 女 女 உங்களது தூண்டில் பகுதியை விரும்பிப் படிப்பவன், நான். சில சில பதில்களில் உங்களது இலக்கிய நேர்மை நெஞ்சத்தைப் புரிந்து கொள்ளும்போது மனதை உருக்குகின்றன. உதாரணமாக ஒரு நண்பர் கேட்ட மேடைகளில் மிக உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகின்றீர்களே!" என்று கேட்டதற்கு நீங்கள் சொன்ன பதில் அப்பட்டமாக \உங்களது நெஞ்சத் தூய்மையை வெளிப்புடுத்தக் கூடியதாக அமைந்துள்ளது.
தூண்டில் பகுதியை இன்னும் விரிவு படுத்தினுல் என்ன? இம் முறை வரும் ஆண்டு மலருடன் நீங்கள் ஒரு புதிய படி யில் காலடி எடுத்து வைக்க வேண்டும்.
தேசம் முழுவதும் பரந்துபட்டு நல்ல இலக்கிய ரசனையாளர் கள் வாழ்கின்றனர். ஒருதடவை நான் பதுளை யி ல் இருந்து கொழும்பு செல்லும் வழியில், பஸ்ஸில் ஒரு மலையகத்து இளை ஞன் மல்லிகையை வெகு விருப்பமுடன் வாசித்து வருவதைக் கண்டேன். அந்த இளைஞனை நான் - மெல்ல விசாரித்துப் பார்த்த பொழுது கொழும்பில் இருந்து நண்பன் மூலமாக மல்லிகையைத் தருவித்து மாதா மாதம் படிப்பதாகச் சொன்னன். எனக்கு மன தில் நிறைவாக இருந்தது.
வெறும் சினிமா ரசனையில் வளர்ந்து வரும் இளைஞர் மத்தியில் இப்படியான தரமான இலக்கிய ரசனை வளர்ந்து வருவதையிட்டு உண்மையிலேயே நான் ஆன்ந்தப்பட்டேன்.
இதற்காக நீங்கள் கொடுக்கும் உழைப்பின் விலை சாமானியமா னதல்ல என்பதும் எனக்குத் தெரியும்.
உண்மையில் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல, நீங்கள் நடத் துவது இலக்கிய வேள்விதான். இந்த யாகத்தின் அருமை இன்று வாழ்ந்து வருபவர்கள் அநேகருக்குத் தெரிந்தும் தெரியாமலுமிருக் கலாம். ஆனல் நாளைக்கு வரக் கூடிய நல்லறிவுச் சந்ததியினர் பரம்பரை உள்ளது இந்த வேள்வியின் ஆக்சத்தால் ஏற்பட்டுள்ள பூரா நன்மைகளையும் உணரும்போது உங்களை உங்களது இடை யரு உழைப்பை - மானஸிகமாகப் பாராட்டத்தான் செய்வார் கள். இது வெறும் புகழுரையல்ல! ^ بربر
நீங்கள் இந்தப் போராட்டத்தில் எப்பொழுதாவது மனஞ் சலிக்க ஏற்பட்டால் எம்மைப் போன்றவர்க%ள ஒரு த ட  ைவ எண்ணிப் பாருங்கள். உங்களது நெஞ்சில் புத் தூக்கம் பிறக்கும். அதுவே நமது அன்புப் பாலமாகும். பதுளை, ard). ăurursii

அட்டைப் படம்
~~~ ~ ~ ~س ؟
புலவர்மணி ஏ. பெரியதம்பிபபிளள
மணி த் தி ரு
ந; டெங்கள் நாடே" - என்று தேசிய உணர்வுடன் பாடல் இயற்றிய புலவர் மணி ஏ. பெரிய தம் பிப்பிள்ளை அவர்களை அவரது அருமை நண்பரான தேசிய கட தாசி ஆலைக் கூட்டுத்த பன்த தஃலவர் திரு. கே. சி. தங்தர சா அவர்களது இல்லத்தில் சந்திக் கிறேன். y,
"இலங்கை
மெலிந்த நெடிய தோற்றம், தி ட் சண்யமான கண்கள்.
அமரர் பண்டாரநாயக்கா பிறந்த தினமன்றே த ரா மு ப் பிறந்ததாகப் பெருமிதத்துடன்
Luis
சொல்கிருர், மண்டூரில் ஆரம் கல்வியை மேற்கொண்ட "புலவர் மணி 13 வயதிற்குள்
திருச்செந்தூர் புராணம், வில்லி புத்தூரர் பாரதம், சூடாமணி நிகண்டு, கந்தபுராணம் முதலி யவற்றை கற்றுத் தேர்ந்திருந் தாா
யாழ்ப்பாணம் வண் ணு ர் பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் உயர்கலைப் பீடத்தில் பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளையுடன் உடன் மாணுக் கராக இருந்தார். பண்டிதமணி யும், புலவர் மணியும் இரட்டை யர்கள் என்று அழைப்பதுண்டு. 1917 - A921 காலத்தில் சுவாமி விபுலானந்தருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
அறிவை இலங்கை
முருகபூபதி
சிறிய வயதிலேயே புரட்சி கரமாகச் சிந்தித்த புலவர் மணி 1921-ல் இந்தியாவிற்குச் சென்ற பொழுது காந்தியடிகளது இயக் கத்துடன் தம்மைப் பிணைத்துக் கொண்டார். 1936-ன் பின்பு திருகோணமலை 2 துக் கல்லூரி, கத்தோலிக்க ஆசியர் பயிற்சிக் கல்லூரி, மட்டுநகர் அரசினர் உயர்தரக் கல்லூரி ஆகியவற் றின் ஆசிரியராகவும், விரிவுரை யாளராகவும் கடமையாற்றி ஞர்.
இலங்கைக் கலைக்கழகத்தில் , மைச் சேர்த்துவிட்டவர் அறி ஞர் ஏ. எம். ஏ. அஸிஸ் அவர் கள் என்பதை மிக நன்றியுணர் வோடு குறிப்பிடுகிருர், தமது வானெலி கல்விச் சேவை, அரச விதானச் சபை ஆகியவற்றுக்கு ஆலோச
கிராக இருந்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது. மட்டுநகர்
தமிழ் கலைமன்றம் 1950-ல் இவ ரு க் கு "புலவர் மணி" என்ற பட்டத்தை ' வழங்கிக் களர வித்தது. இதர ட் ட் டங்கள் "மதுரகவி", 'சித்தாந்த ஞான u j fTg9)I' `
"எழுதிய நூல்கள் କrଟffr୩r' ? '' என்று கேட்கிறேன். 'இலங்கை மணித்திரு நாடெங்கள் ந்ாடே" என இராகத்தோடு பாடுகிருர்,

Page 6
இப்பாடல் 1986 ல் இயற்றப் பட்ட தாம் பகவத்கீதை வெண்பா", கர்ம யோகம்"
ஆகிய நூல்களேயும் எழுதியுள் LLLLL YS S S Y S 0 S SK LYTaTT LLL LLLLLLLaa என்னும் நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது
நூலுருவில் வெளிவராத பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல உண்டாம்,
தேசிய உணர்வு மிக்க பாடல்கள் இயற்றியவரிடம் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு எவ்வளவு தூரம் மேலோங்கி
யிருக்கும் என்று கூறத் தேவை
யில்லே, தேசிய இனப் பிரச்சினே யின் நீர்வுக்காக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட 120 அம்சத் திட்ட க் குழு பிலும் இவரது அங்கத்துவம் முக்கியமானது. ஈழத்தின் தேசிய இனங்கள் தத் தமது தனித்துவத்தை பேணிக்காத்து ஒருமைப்பாட்டை வளர்க்க வேண்டும் என்ற கருத் தினக்கொண்டவர் கொள்கை, கருத்து வேறுபாடு இருக்கலாம். மனித வேறுபாடு இருக்கக் கூடாது" என்று கூறுகிருர்,
இன்றைய நவீன இலக்கி யங்கள் தேசத்தை நிலக்களஞ கக் கொண்டிருத்தல் வேண்டும். அத்தகைய இலக்கியங்கள்தான் இன்று தேவைப்படுகிறது" சங்க கால இலக்கியங்களுடன் நெருங் கிய ஈடுபாடு கொண்டிருந்தவர் நவீன இலக்கியங்கள் பற்றியும்= அது எப்படி இருக்க வேண்டு மென்பதையும் மேற்படி கூற் நறின் மூ லம் உணர்த்த முற் படுகிருர்,
வயோதிய கா வத்திலும் எழுத்துப்பணியைத் தொடரும் புலவர் மணி, உள்ளதை உள்ள படி விமர்சிக்கும் பண்பு விமர் 守、_击 வளரவேண்டும், அத்தகைய வளர்ச்சியை என் றும் மதிப்பவன். முகத்திற்காக விமர்சிக்கும் நிலே இலக்கிய டில் கில் நிலவுவதால் பல சிக்கல் கள் தோன்றுகின்றன" என்ருர்,
யாழ்ப்பாணத்தில் நடந்த இலங்கை முற்போக்கு எழுத்தா ளர் சங்கத்தின் மா நாட்டில் தமக்கு "வெள்ளித்தட்டு" வழங்கி கெளரவிக்கப்பட்டதை மகிழ்ச்சி யுடன் குறிப்பிடுகிருர்,
தொடர்ந்து மல்லிகையைப் படித்துவரும் தரமான இலக்கிய ரளிகர்களுக்குப் பிரதானமான
பொறுப்பொன்றுண்டு. இந்த மண்ணில் காத்திரமான கே இலக்கிய நாட்க வளர்ச்சியை
நீங்கள் மனதார வளர்த்தெடுக்க வேண்டுமென விரும்பிஞரல் நமது
நிறைகளே நண்பர்களுக்கு கூறுங்
கள் குறைகளே எமக்கு எழுதுங்
aligit.
இந்த நாட்டில் சஞ்சிகை ஒன்றை வெற்றிகரமாக நடத்துவ தென்பது அசுர முயற்சியாகும். சர்வாங்க உழைப்பையும் இதற் காக உருக் கூட்டி ஒருமைப் படுத்திச் செயல்பட்டாலே மாதிதி ரம் இது சாத்தியமாகும். இந்தப் போராட்டமே ஓர் இலக்கிய
(FIFA.
இந்த இயக்க வேள்வியில் தம்மையும் அர்ப்பணிக்க
முடியும் என்த் திடமாக நம்புபவர்கள் சந்தாவாக ரூபா 12/ஐ
அனுப்பி உதவலாம்.
 
 
 

1967 ஜூன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு
பத்தாண்டுகள் தரும் படிப்பின
1967 புத்தத்தின் போது தான் கைப்பற்றிய 0ே ஆயிரம் சதுர மைல்களேக் கொண்ட அரபு மண்ணே இஸ்ரேல் எத்தனே கா வத் துக் வைத்திருக்கப் போகிறது? ရွှံ့မှိ? ஒரிங் இன் னும் எத்தனே இஸ் ரே விய ராணுவ காவல் குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளன? தாயக மண்ணுக்கப்பால் வெறும் மணல் வெளிகளில் இன்னும் எத்தனே எத்தனே பாலஸ்தீனர்கள் பிறந்து மடியப் போகிருர்கள்
ஜூன் புத்தம் முடிந்த பத் தாவது ஆண்டு நின்றவில் இக் கேள்விகள் தாம் மத்திய கிழக் கில் கேட்கப்படுகிறன. தீர்மா னங்ா மாநாடுகள் இன் றைய ராஜதந்திரங்கள் ஆகிய வற்றைக் கொள்ட இந்தி ப் பத்தாண்டுகளுக்குப் பின்னரும் மத்திய கிழக்கு தீர்வுக்கார்க் காத்துக் கிடக்கும் அவசர சியமான சர்வதேசப் பிரச்சி கள் கொண்ட பதட்டநியே மிக்க பகுதியாகவே இருந்துவருகிறது. து ஜெனிவாவில் சோவி
யத் வளி நா ட் டமைச்சரும் அமெரிக்க ராஜாங்கச் செயலர் ள ரு ம் அண்மையில் சந்தித்த OTu uTL LYS SLTO OLLLSLYL LLS S Suuu S S SS TTT கை பி லும் குறிப்பிட்டுள்ளது השנE 3 פL எத்தனே அவசியமோ அதிர்னே அவசியமிக்கது கேந்திர முக்கியத்
ਲੁਝ
அரசியல் அவதானி
துவ மிக் க போராயுதங்களேக் கட்டுப் படுத்தும் பேச்சு வார்த்தை என்பதை சோவியத் யூனியன் இங்கு தெளிவுபடுத்தி புவின் து
அடுத்த இலேயுதிர் காலத் தின்போது மத்திய கிழக்குக் குறித்த ஜெனீவா மகர்நாட் டைக் கூட்டுவது குறித்து நட வடிக்கைகளே எடுப்பதென்று குரோமிகோவும் வான் ஸ்" ம் ஒத்துக் கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக மாஸ்கோவிலும் வாஷிங்டனிலும் தூதரக மட் டத்தில் ஆலோசனேகள் நடை பெறும் அடுத்த மாதமளவில் குரோமிகோ எகிப்திய வெளி நாட்டமைச்சர் ஃ பா மி யைச் சந்திக்கவுள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் அண்மை ஆண்டுகளில் சில அரபு நாடுக ளின் தலைநகரங்களில் மாஸ்கோவின் முதுகின் பின்னே பகுதி பகுதியான உடன்படிக் கைகளே செய்வதற்குத் தமது சக்திகளக்னத்தையும் பிரயோகித் தன் ஆணுல் இக் குறுக்கு வழி களரினத்தும் தோல்வியுற்றது டன், விரிவான நீர் வினே க் நாது வேண்டுமென்று அவசியம் மேலும் வலுப்பட்டுள்ளது.
சில அரபு நாடுகளின் தலே பயர்கள் சோவியத் யூனியனுட குன அரசியல் ஒத்துழைப்புக்

Page 7
களினின்றும் தம்மை வெட்டிக் கொண்டுள்ளதானது இ ன் று பொதுவான அரபுக்களது நலன் களை மிக மோசமாகப் பாதிக் கிறது எ ன் ப ைத முஹமத் ஹெய்கல் போன்ற எதார்த்த பூர்வமான சிந்தனை உள்ளவர் கள் இன்று ஒத்துக் கொண்டுள் ளார்கள். இப்படிச் செய்ததன் மூலம் அவர்கள் மாஸ்கோவைப் புறக்கணித்து விட்டு, சமாதா னத்தை முன்னுேக்கிச் செல்லும்
ஏக தளபதியாக அமெரிக்கா விட ம் சரணுகதியடைந்துள் ளனர்.
வெள்ளை மாளிகையின் நிர் வாகத்திலேற்பட்டுள்ள மாற்ற மும், அதன் பயனக புதிய ரக மத் தி ய கிழக்குக் கொள்கை குறித்த வாக்குறுதிகளும் வாஷிங் டன் ஒரு அற்புதத்தைச் செய் யும் என்ற அரபு வட்டாரங்க ளது கற்பனைகளுக்கு மே லும் தூபமிட்டன.
இந் நேரத்தில் வரலாற்றின் கடிகாரமோ ஒவ்வொரு ஆண்டு களையும் விழுங்கிக் கொண்டிருந் தது. லெபனுணிய யுத்தகாலத் தில் தமக்குக் கிடைத்த சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இஸ்ரேலியர்கள் 1473 அக்டோ பர் யுத்தத்தில் தாமிழந்த நம் பிக்கைகளையும் ஆயுதங்களையும் மீண்டும் கட்டியெழுப்பி விட்ட னர். அரசியல் அரங்கில் ஆயுதப்
போட்டி மூலமாகவும், வரியிறுப்
பாளர்களின் பண த் தி லும் ஊதிய பெரும் இஸ் ரே லிய பூர்ஷ"வாக்களைக் கொண் ட லிகுட் அணி தன்னை வளர்த்துக் கொண்டு விட்டது. பெரித்ாக விளம்பரப்படுத்தப்பட்ட FD" தான் முயற்சி க ள் அடங்கி விட்டன.
வாஷிங்டன் அ ற் பு தம் நிகழ்த்தும் என்று சில அரபு நா டு களின் தலைநகரங்கள் வைத்த குருட்டு நம்பிக்கை கார
10
முன்னுள்
ணமாக, 1987 ஜூன் யுத்தம் முடிந்த இந்த பத்தாண்டுகளுக் குப் பின்னரும் கூட ஒரு தீர்வு மின்றித் தத்தளித்துக் கொண் டிருக்கின்றது. எனவே மாஸ் கோவையுதறித் தள்ளியவர்கள் கூட, இன்று மத்திய கிழக்கில் நியாயமான சமாதான மென்பது சோவியத் யூனியனின் ஒத்துழைப் பின்றிக் காணககூடியதல்ல என்ற நிலைக்கு வந்துள்ளனர்.
இஸ்ரேலில் இனவெறிப் பிர சாரத்தைத் தூண்டிவிட்டு தேர் தலில் வெற்றி பெற்றுள்ளார் "பயங்கரவாதக் 象 வின் தலைவர். 250 CSS படுகொலை செய்தவரென வர் ணிக்கப்படும் பெகின்ஸ், ஜோர் டானின் மேற்குக்கரை பைபிள் காலம் முதலே இஸ்ரேலுக்குச் சொந்தமாகவிருந்தது. பாலஸ் தீனிய நாடு என்பது நினைக்கவே முடியாதது என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் மத்திய கிழக் குத் தீர்வுக்கான கண்ணுேட் டத்தை முற்று முழுதாக ஏன் மூடிவிட்டுள்ளது என்பதை அனை வருமே- ஐ. நா. பொதுச் செய லாளர் முதல் பாலஸ்தீன விடு தலை இயக்கத் தலைவர்கள் வரை அ னை வகு மே நன்கறிவர். எதார்த்த பூர்வமான மத்திய கிழக்குக் கொள்கையைப் பின் பற்ற மறுத்த வாஷிங்டன் மீது போட முயல்கிறது. அதே நேரத் தில் அமெரிக்கக் காங்கிரஸில் உள்ள யூதர்களுக்கூடாக அமெ
ரி க் கா வின் வெள்விவகாரக்
கொள்கைகளில் செல்வாக்குப் பெறுவதற்கான சாத்தியத்தை இஸ்ரேலின் அதிதீவிர தலைமைப் பீடம் பெற்றுள்ளது என்று
ரிக்சுப் பத்திரிகைகள் குறிப் பிட்டுள்ளன.

உணர்வுகள்
கட்டுடிைத்தால்
உள்ளங்கள் வாய்திறக்கும்!
கே. ஆர். டேவிட்
யோகநாதன் விட்டெ றிந்த ஐம்பது சத நாணயம் நிலத்தில் கிடந்த ஒரு கல்லில் மோதி - தெறித்தெழும்பி திரும் பவும் நிலத்தில் விழுகிறது.
யோகநாதனின் கண் கள் சிவந்துபோய் விட்டன! அவ்வ ளவு கோபம். VM
கனகம் இப்படியொரு சம்ப வம் நடக்குமென்று எதிர்பார்க் கவில்லை. கடந்த நாற்பது வரு டங்களுக்குள் நடந்து முடிந்த இப்படியான சம்பவங்களின் தொகுப்பின் வலிமையால் - நடந்த சம்பவத்தின் தாக்கத்தை வெளிக்காட்டிக் அமைதியாக நிற்கின்ருள்.
அந்த ஐம்பது சதம் கிடக் கும் மண்ணின் மேற்பரப்பையும் யோகநாதனின் முகத்தையும் மாறி மாறிப் பார்க்கின்ருள், கனகம். என்ன நடந்ததென்ப தைச் சரிவர அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கின்ற அமைதி என்று கூறு
வார்களே அந்த அமைதி நிலவு
கின்றது.
": 3 stresser "வசந்தமாளிகை’ எ ன் று ஊர்மக்களால் சிறப்பாக அழைக் கப்படுகின்ற யோகநாதனின்
கொள்ளாமல்
வீட்டு முன் பிளேற்றின் கீழ் கனகம் நிற்கின்ருள். முன் மண் டப வாசலோடு யோகநாதன் நிற்கின்ருர். அவருக்குப் பின்னல் அவரது நண்பர்கள் சிலர் நிற் கின்றனர்.
நடந்து முடிந்த சம்பவதி தின் அடித்தளம் புரி யா ம ல் நின்ற கன கம் சூழ்நிலையை
அனுசரித்து சம்பவத்தின் விளக்
கத்தைக் கேளாமல் குனிந்து அந்த ஐம்பது சத நாணயத்தை எடுத்து படிக்கட்டில் வைத்து விட்டுத் திரும்பவும் தான் நின்ற இடத்தில் வந்து அடக்கமாக நிற்கின்ருள். VA
"ஒரு ஐம்பதுசதக் காசுக்கு என்னைப் பெறுமதி இல்லாதவ ஞக்கிப் போட்டாய் என்னடி..? நானென்ன ஊரைவிட்டு ஒடப் போறனே. அப்பிடி ஒடிஞலும் உ ன்  ைர ஐம்பது சதத்தைக் கொண்டுபோய் கோட்டை கட் டிப் போடுவனே. எடி. ஒரு நாளைக்கு இந்தக் கையாலை எவ் வளவு காசு சிலவழிக்கிறனெண்டு உனக்குத் தெரியுமே? ஒரு ஐம் பது சதத்துக்கு நம்பிக்கையில் லாமல் திருப்பிவிட்டிட்டாய். அவளவு திமிர் யோகநாதன் வ்ாய்க்கு வந்தபடி பேசுகிருர்
கனகம் மெளனமாகவே நிற்
O
கிருள்:

Page 8
*பிறகேனடி நிக்கிருய். p எடுத்துக்கொண்டு போவன்"
இப்ப
*8ցաn......
மாவாங்கக்
நடந்து போச்சு?
காசு காணுது. அதுதான் வந்த
ஞன். இல்லாட்டி. seafsh பயத்தில் குழைகிருள்:
"என்னடி கனகம் கதைக் கிருய். இண்டைக்கு இந்த ஐம் பது சதம் இல்லாட்டி உன்ரை சிவன் போதிடுமே”
இப்போது நான்கு மணி இன்று காலை எட்டு மணியிலி ருந்து இந்த ஐம்பதுசத நான யம் தூக் எறியம்படும்வரை யில் யோகநாதன் கனகத்திற்குக் கடன்காரன்தான்!
இன்று காலை எட்டு மணிக்கு இரண்டு ரூபா பெறுமதியான அ ப் பத்  ைத க் கொண்டுவந்து கொடுத்த கன கம் பெரிய இடம்" என்ற பயத்தில் காசைக் கேட்காமல் போய்விட்டாள்.
அந்தக் கா சைக் கேட்க வந்த இடத்தில் ஏற்பட்ட விளைவு
தான் இந்தநிலை
6τις... ... இந்தக் கிராமத் தையே விலைக்கு வாங்கக்கூடிய வன்ரி இந்த யோகநாதன். தனது பணத்தகுதியை மார்பு தட்டிக் கூறுகிருர் யோகநாதன், கனகம் மெளனமாகவே நிற்கி ருள்.
சஆரிட்டைக் கே க் கிற ம் எண்ட எண்ணம் வேண்டாமே. ஒரு ஐம்பது சதக்காசுக்கு வழி யில்லாதவனக்கிப் போட்டாய். உனக்குத்தான் மான வெக்கம். இல்லையெண்டால். எனக்கும் இ ல் லை ய்ே எடுத்துக்கொண்டு Gurr66áro
"ஐயா. கோபப்படாமல் நான் Tசொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோ" கன கம் கெஞ்சு கிருள். -
என்ன
என்னடி சொல்லப்போழுய்? "ஐயா நீங்கள் பெரிய மனி சன், உங்களிட்டைக் காசு கேக் கக்குடாதெண்டுதான் காலமை நான் பேசாமல் போனன். இப்ப மா வாங்கக் கா சு காணுது, லீவாய் இருப்பியள் எண்டுதான் வந்தஞன். நீங்கள் குடுக்கவேண் பதைக் குறைச்சுக் குடுத்திருந் யள். சிலவேளை கணக்குத் தெரியாமல் விட்டிருக்கலாம் எண்டு நினைச்சுத்தான் திருப்பி 69 LG96ir. நம்பிக்கையீனப் பட்டில்லை"
"எனக்குக் காசுக் கணக்குத் தெரியாதே?
"மறந்திருப்பியள். "இவளவை வெச்சுப் பழகி றன் மறதியில்லை. இந்த ஐம்பது சதத்திலையே மற தி. அப்பிடி யெண்டாலும் உடனைத் தீர்க்க
வேணுமே. நாளைக்கு வந்து கேட்டிருக்கலாம்"
என்ரை சீவியமே இதிலை தானே"
"ஐம்பது சதத்திலை என்னடி பெரிய சீவியம்"
"எனக் குத் தரவேண்டிய காசைத்தானே நான் கேட்டன்" இப்படிக் கன கம் கேட்டுவிட லாம் கேட்கின்ற உரிமையுண்டு, நாக்குமுண்டு. அவள் தாக்குப் புரள மறுக்கின்றது. அந் த க் கேள்வியை அவளால் கேட்டு விட முடிய வி ல் லை. அவள் மெளனமாக நிற்கிருள்
இந்தக் கிராமத்தில் யோக நாதன் பெரிய மனிதர். கிட் டத்தட்ட நாற்பது வயதிருச் கும், பொருளாதாரப் பல ம் மிக்கவர். இந்தக் கிராமத்தோடு தொடர்பு வைப்பதென்முல் யோகநாதனேடு தொடர் பு வைத்தால் சரி என்ற சிறப்புப் பெற்றவர். அவ்வளவு செல் வாக்கு

கனகமும் இதே ஊரைச் சேர்ந்தவள்தான். அப்பச்காரக் கனகம்" என்று கூறிஞல் சகல ரு க் குந் தெரியும்.
மாணவள். தினசரி பலகாரம் சுட்டு அதைக் கொண்டு திரிந்து விற்று அதில் வருகின்ற வருமா னத்தில் வாழ்பவள்.
கால்பரப்பு நில ம் அதில் ஒரு குடிசை. இதுதான் அவளது சொத்து.
விடியப்புறம் நாலு மணிக் கெல்லாம் எழுந்துவிடுவாள். விடிய ஆறு மணிக்குள் ஏதோ முடிந்தளவு பலகாரம் சுட்டு பெட்டிபில் வைத்துக் கொண்டு புறப்பட்டால், விற்று முடிந்த பின்புதான் வீடு திரும்புவாள். பழுத்து காய்ந்து சுருங்கிய பேரீச்சம் பழம்போன்று தசைப் பிடிப்பின்றி எலும்பில் சுருங்கித் தொங்குகின்ற கறுத்த தோல், வயதால் வளைந்து கேள்விக்குறி போலான உடல், கழுத்தில் ஒரு கறுத்தக்கயிறு. பற்களின்றி உள் நோக்கி மடிந்துபோயிருக்கும் உதடுகள். இந்த வயதிலும், இந்தக் கோலத்தோடு இவள் சுறுசுறுப்பாகத் தி ரி வ  ைத க் கண் டு ஆச்சரியப்படாதவர்கள் இருக்கமுடியிாது!
இன்று கனகம் அப்பம் சுட் டிருந்தாள். இப் படி அப்பம் சுடும் நாட்களில் யோகநாதன் வீட்டுக்கென்று சிலதொகை அப்பங்களைச் சுட் டு புறம்பு படுத்தி வைத்துக் கொள்வாள். அந்த அ ப் பங்க ளில் பால் நிறைந்துபோயிருக்கும்.
பெரிய இடத்து வாய்களுக் குன் போகின்ற அப்பமல்லவா. " ஆசைச் சாப்பாடு" சுவை அவ சியந்தானே!
இன்று தன் வழமையான வியாபாரம் முடிந்து புறம்பு படுத்தி வைத்திருந்த அப்பர்
பலகாரம் சுடுவதில் அவ்வளவு பிரபல்ய
களை எடுத்துக் கொண்டு யோக
தாதன் வீட்டுக்கு வந்துவிட்
டாள்.
"என்ன கனகம் இந்தவய திலை உ ப் பி டி நெருப்புக்கை கிடந்தால் உடம்பு என்னத்துக் குதவும் யோகநாதனின் மனைவி தனக்குக் கனகத்தின் மேலுள்ள அக்கறையைக் காட்டிக் கொள் வதற்காக இப் படி க் கேட்ட போது,
"இந்த நெருப்பு க் கை காயாட்டித் தங்க ச் சி சுடலை நெருப்பிலை கருகவேண்டி வரும்" என்று தனது பொறுப்பைச் சிரித்தபடி கூறி முடித்துவிட்
tfT eir .
அங்கு வந்த யோகநாதன் அப்பத்தை எடுத்து கடவாயால் பால் வளியவளியத் தின்று, அந்தச் சுவையில், கனகம் நீ எங்கடை குடும்பத்திலை அக் கறைதான். இனைச்சுத்தான் சுட்டிருக்கிருய்" என்று கூறிவிட் டார். கனகத்திற்கு உள்ளூரப் பெருமைதான்! இந்த ஊர் பெரிய மனிதன் புகழ் மொழியில் பெருமை இருக்காதா என்ன?
அப்பத்துக்குரிய காசு. அதை அவள் கேட்கவுமில்லை
அவர்கள் கொடுக்கவும் இல்லை,
இன்று பின்னேரம் நாலு மணியளவில் நாளைய பலகாரத் தேவைக்காக மா வாங்கப் புறப்பட்டு காசு இல்லாததால்" இங்கு வந்துவிட்டாள்.
எவ்வளவுதான் கன கம் யோகநாதன் வீட்டாரின் அக் கறைக்குரியவளாக இருந்தாலும் என்றும் அவளை குசுனி வாச லோடு, அல்லது முன் பிளேற் றின் கீழ்வைத்துத்தான் கதைப் பார்கள்; முன் மண்டபத்திற் கூட ஏற அனுமதிப்பதில்லை.
காசுக்காக வந்தவள் வழமை போல் பிளேற்றின் கீழ் நின்று

Page 9
வேலேக்காரனிடம் கா சு க் கு சி கிசால்லி விட்டிருந்தாள்
மொத்தமாக இரண்டு ரூபாே யோகநாதன் ஒன் ற ைர ரூபா மட்டும் கொடுத்துவிட்டி ருந்தார். இன்றைய தேவைக்கு அவ்வளவும் போதாமல் இருந்த தால் மிகுதி ஐம்பது சதத்தை யும் தரும்படி சொல்லிவிட்டிருந்தாள் கனகம் அது யோகநாதனுக்குப் பிடிக்க வில்லை.
நண்பர்கள் மத்தியில் ஒரு ஐம்பது சதம் காசுக்காக, அது வும் ஒரு அப்பக்காரி எப்படித் திருப்பிவிடலாம். இது தா ன் யோகநாதனின் கோபம்.
யோகநாதன் அந்த ஐம்பது
சதக் காசைக் கொண்டுவந்து தூக்கி வீசிவிட்டு நிற்கின்றர்.
சிவந்த கண்கள் சிவந்தது
தான்! உணர்ச்சி வசப்பட்டு நிற்கிருர் யோகநாதன்.
"சரி. சரி. யோகநாதன் வாருங்கோ. காகம் திட்டி மாடு சாகிறதே. உதுகளை வ்ெ க் க வேண்டிய இடங்களிலை வெக்க வேணும் அவருக்குப் பின்னல் நின்ற ஒரு நண்பன் சமாதான முயற்சியில் இறங்குகிருன்.
"இல்லைப்பாருங்கோ ଗର୍ଦ (ତ தேடிக்கொண்டு வந்திட்டாளே எண்டிட்டு வாங்கினம். எனக்கு எத்தினை தொல்லை. gy g) డిలి காசைக் குடுக்க மறந்திட்டன் இப்பவும் நான் உதைப்பற்றி யோசிக்கயில்ல்ை, வேலைக்காரன் வந்து கனகம் இரண்டு ரூபா கா.சு வாங்கியரட்டாம் எண் டான். எனி இதுக்காக ஒழும் புப்போய் பொட்டி திறக்கிறதே. என்ரை இளையவன் வெச்சு விளை யாடிக் கொண்டிருந்த காசை எடுத்துக் குடுத்துவிட்டன். ஐம் பது சதம் குறைஞ்சு போச்சு.
வலைக்காரனிடம்
மானம் பெரிசடி
ானிமேல் இஞ்சை
அது க் குத் திருப்பிவிட்டிருக் கிருள்" w
"இதுகளைப் போலை ஆக்க ளிட்டைக் கடன் வெச்சால் இப் பிடித்தான். நேரங்காலந் தெரி யாமல் வந்து நிக்குங்கள்" தண் பன் கூறுகிருன்,
"என்னையா உயிரே போனது மாதிரிக் கலங்கிறியள் கனகம் கேட்கிருள். -
"எடி எனக்கு உயிரைவிட உனக்குத் தெரியுமேயடி மா ன த்  ைத ப் பற்றி"
இப்ப உங்கடை மானத் துக்கு என்னையா வந்திட்டுது"
எடி உனக்கு நான் கடன் காரனெண்டால் பிறகென்னடி
உஇந்த உலகத்தில் ஆரையா கடருளியில்லை எ ல் லா கும் ஏதோ ஒரு விதத்தில் கடனளி யள்தான்"
"எடி நிண்டு கதைச்சு என்ரை மானத்தை வாங்காதை. உந்தக் காசை எடுத்துக் கொண்டு போ. வராதை"
"ஐயா. உங்களை அவமா னப்படுத்த என்னுலை முடியுமா என்னைப் பாருங்கோ. தினசரி நெருப்பு வ்ெக்கையுக்கை கிடந்து எரிஞ்ச கொள்ளிக்கட்டையாய்ப் போனன். இண் டை க் கோ நாளைக்கோ கட்டையிலை போக வேண்டியனன். நான் ஏன் உங் க3ர் அவ மா ன ப் படுத்தப் போறன் கனகம் மிகவும் தாழ் மையாகக் கதைக்கின்ருள்.
pë சரிக்குச் சரி கதை
"எடி செரல்ல வெளிக்கிட்டிட்டாய் என்னடி" யோகநாதனுக்குக்
கோபம் ஆறவில்லை.
"ஐயா அதிகம் ஏன் கதைப் பான். எனக்குத் தரவேண்டிய தைத்தானே கேட்டன்" இ?

வரை கேட்கத் துணிவில்லாமல் இருந்தவள் இப்போது கேட்டு விட்டாள்.
"அதுதானே இஞ்சைகிடக்கு எடுத்துக் கொண்டு போவன் எனிமேல் இஞ்  ைச ஒண்டும் கொண்டு வெராதை, இருக்கிற மானமும் போகிடும்"
"என்னையா இப்பிடிச் சொல் லுறியள். தும்பாய் எடுத்துக் கூடு கட்டி றது போலை ஒவ்மொரு சதமாய் சேர்க்கிற காசிலைதான் சீவியம். உங்களைப்போலை என்னட்டை யும் காசிருந்தால் நான் ஏன்
இப்படி அலையப்போறன்"
"சரி சரி நடந்தது நடந்து போச்சு, என்ன செய்யிறது. கனகம் நீ ஐயாவிட்டை மன்னிப் புக் கேட்டுப்போட்டுப் போ" அங்கு நின்ற யோகநாதனின் நண்பன் ஒருவன் நடு நிலைமை வகித்துக் கூறுகின்றன்.
"நான் இப்ப என்ன தவறு செய்துபோட்டன் மன்னிப்புக் கேக்கிறதுக்கு" கன க த் தின் பேச்சில் ஓரளவு வைரம் செறிந் திருக்கின்றது,
Gజీ காசு கேட்டது பிழை தானே m
குரு வி ஒவ்வொரு
திடீ
என்னடி? யோகநாதன் ரென்று கூறுகின்ருர்,
அலேயைத் தாழ்த்தியி 动 கனகம், த ஜல ை 'ತಿತ್ಲಿ யோகநாதனைப் பார்க்கின்ருள். அவளது முகம் சிவந்து, சில வினுடிகளில் கருஞ் சிவப்பாகின் றறு. யோகநாதனின் d56752hr போல, 魏
அவளது பேரீச்சம்பழ pe L-6i)
நடுங்குகின்றது,
"நீங்கள் என்ன சொல்லுறி *
பள்? எனக்குத் தரவேண்டிய
காசை நான் கேட்டது பிழையே.
தென்ன ஞாயம்" க ன் கம் றுக்கமாகவே கேட்கிருள்
யோகநாதனுக்கும். கனகத் திற்கும் நடுநிலைமை வகித்த அந்த நண்பன் மெளனமாக நிற்கின்றன்.
யோகநாதனின் சி வ ந் த
ஆளுல்,
கண்கள் கடுஞ்சிவப்பாகின்றன.
"ஐம்பதுசதத்துக்கு ஊம்பிற நrய. ஞாயம்
கதைக்கிருய்
கட்டறுபட்ட அவள் சுய மரியாதை உணர்வு பெருங்காளை வடுத்து. அவளது"இதயத் தைக் குத்திப் பிளக்கின்றது."
gis Listiana . வெட்டாமல் தொடர்கிறது.
என்னடி ஒரு மாதிரிப்பாக் கிருய்" யோகநாதன் அடிப்பது போல் கேட்கின்ருர்,
"இப்ப என்ன சொன்னனிங் கள்" கன கம் நிதானமாகக் கேட்கின்றுள்.
'8ம்பது கதத்துக்கு உவம் பிற தாம். ”*
சீஆர் 变 "நீதான்’
"ஐயா நாக்கும் ՀյՈrպւծ கிடக்கெண்டதுக்காக எதையும் க  ைத ச் சுப் போடக்குடாது. ஐம்பது சதத்தையென்ன ஐம்ப தினயிரத்தையும் துாக்கியெறிய  ைத ரிய ம் உங்களுக்கிருக்கு. நான் அப்படிச் செப் யேலாது இது நான் நெருப்புக் குளிச்சு சேத்த பணம் அது கின்ரை அருமை எனக்குந்தான் தெரியும். இந்த ஐம்பது சதம் இண்டைக்கு” எனக்கில்லாட்டி மா வாங்கோலாது, 6) 55rruħ. சுடேலாது.
i5

Page 10
  

Page 11
டும் மீண்டும் அவர் காதுகளில் ஒலித் துக் கொண்டிருந்தன: இந்த விஷயங்களை எல்லாம் துரையிடம் போய்க் கூறி அவர் தன்னுடைய நிர்வாகத் திற மையை குறைவா எடை GB nr. *GB விடக்கூடாது என்று நினைத்து தொரையிடம் கூறு வேன். பேர் போட மாட்டேன்" என்று பயமுறுத்தினர். ஆனல் அதெற் கெல்லாம் பயந்த காலம் என்ருே மலையேறிவிட்டது. இனி மே ல் து  ைரயிடம் கூறிவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. இனி மேல் நடக்கப் போகும் விளைவு கள் அனைத்திற்கும் தாமேதான் காரணமாகி விட்டேஞே என்று தன்னைத்தானே பரிசீலனை செய்து கொண்டார் துரையிடம் கூறி ஞல் என்ன நடக்குமோ என்ற பயமும் பதட்டமும் பிடரியை பிடித்து உலு ப்ப ஆபீஸை நோக்கி ஓடுகிருர் 噪、
இரண்டே "டிவிஷன்" உள் ளது அந்த இராணிமலைத் தோட் டம். அந்தத் தோட்டத்துத் தர்பார் நாடகத்தில் பெரிய கங்காணிதான் ராஜ பா ட். தொழிலாளரின் குடும்பப் பிரச் சீன தொட்டு கொலுமண்டபம் வரை செல்லும் வேலைக்காட்டுப் பிரச்சனைவரை எல்லாவற்றிலும் நுழைந்து வருவார். துரைமார் போடும் சட்டங்களை எல்லாம் தூக்கிக்கொண்டு வந்து தொழி லாளர் மீது சுமத் துவ தும் "பாலுக்கும் காவலாய் பூனைக் கும் தோழஞய்" இருதரப்பிலும் நடந்து கொள்வது அ வ ர து பழக்கம். இர ண் டு பக்கமும் தனக்கு ஆதாயம் இருக்கவே நடந்து கொள்வார். அது அவ ரின் திறமை. நிர்வாகம் தனது இலாபத்திற்காகக் கொண் டு வரும் சட்ட்ங்களே எல்லாம் ஊசி யாக நின்று தொழிலாளர்களின் உடலுக்குள் செலுத்தி துரை
யின் நல்லெண்ணங்களைச் சம்பா தித்துக் கொள்வார். அதற்காக மக்களைப் பலியிடவும் தயங்க Lont L. L-7 f. -
தொழிலாளர்களின் நன் மைக்காக உருவான ஒரு சட் டத்தை பலமிழக்கச் செய்து அச்சட்டத்தைக் கொண் டே மக்களின் உழைப்பினைச் சுரண்டி வந்தது நிர்வாகம், நிர்வாகத் தின் முதலாளித்துவ சுரண்டலை மக்கள் அறியவில்லை. அவர்களின் அறியாமையே நிர்வாகத்தின் மூலதனம். அந்த மூலதனமும் பெரி ய வ ரின் ஒத்துழைப்பும் து  ைரக் குக் கைகொடுத்தது. மாணிக்கம் போன்ற இளைஞர் கள் கிந்தித்தார்கள். தங்களு  ைடய உழைப்பும் ஊதியமும் சுரண்டப்படுவதை க சுரண்டப்
பட்டுக் கொண்டதை உணர்ந்
தார்கள். பெரிய கங்காணி
தூ க் கி க் கொண்டு வந்த சட்
டத்தை அவர் தலையிலே வைத் துக் கட்டி திருப்பி அனுப்பி விட்டார்கள். செய்வதறியாமல் திகைத்த பெரியாணி ஒட்டமும் நடை யுமாக ஆபீஸிற்கோடு கிருர்
2
எங்கோ தூரத்தில் இருக்கும் ஸ்டோரில்" ஊதப்படும் சங் கொலி இரையும் கொசுவாக வந்து காதுக்கு நுழைகிறது. ரோட்டிலே நிற்கும் கங்காணி கைக்கடிகாரத்தை தி ரு ப் பி ப்
பார்த்துக் கொண்டே "எல்லாம்
s
கொழுந்து நிறுக்க வா" என்று ஒரு காட்டுக் கத்தல் போட்டு விட்டு கோவிலை நோக்கி நடக் கிருர், கைகளிலிருந்த கொழுந் துகளை கூடைக்குள் ாட்டு விட்டு தேயிலை வாதுகளைப் பிடித் துக் கொண்டே வறக்கட்டுகளில் மெதுவாக அடிவைத்து இறங்கி கான்களை குதித்துத் தாண் டி ரோட்டிற்கு இறங்கி கோயில்

மடுவத்தை நோக்கி நடக்கின் றனர் பெண்கள். கூடையின் பாரத்தை குனிந்த முதுகில் தாங்கிக்கொண்டு பெண்கள் வரிசை வரிசையாகச் செல்கின் றனர்
கோவில் கொழுந்து நிறுப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக் கின்றன. சாக்கு வேலைசெய்யும் ஒருவன் பண்டாரத்தின் வீட்டு ஸ்தோப்பில் சுருட்டிக்கிடக்கும் பெரிய படங்கைக் கொண்டு வந்து விரிக்கின்ருன். மடுவத்து உத்திரத்தில் பெரிய தராசை 5 L二母凸 தொங்கவிடுகிமுன். பெரிய வட்டமான மூங் கி ல் தட்டுக் கூடையை எடுத்துக் கொண்டுவந்து தராசில் கோத்து விடுகிருன். மார்பளவு உயரம் இருக்கும் ஒரு சாய்வு மேசையைக் கொண்டுவந்து மடுவத்துத் தூண் அருகில் வைக்கிருன், v . .
கொழுந்துப் பெண்கள் வரி சையாகக் கூடையை இறக்கி வைத்துவிட்டு தலை வேட்டியை எடுத்து முகத்தை துடைத்து விட்டு மீண்டும் தலையில் போட் டுக் கொண்டனர். குனி ந் த படியே கொழுந்தாய்ந்த படி யால் புண்ணுக வலியெடுக்கும் உடலிலுள்ள அத்தனை நரம்பு களுக்கும் சற்று இதமாக இருக்க உடலை நிமிர்த்தி லேசாக முறுக்கி விடுகின்றனர். a
"நட்ட மரமாட்டம் நிக்காம த்தெல காதுமுடிச்சி கெடந்தா பாறுக்கி எடு என்று கங்காணி கத்துகிருன். பெண்கள் குனிந்து கூடையைக் கிண்டுகிருர்கள்.
இங்க ப ா ரு டீ ஏவுட்டு
வெரல. என்னமா வெடிச்சி கெடக்கு. சரியான மாதிரி
Tfulig...... ”
எனக்கு இப்ப எல்லாம் எரியாது. கொச்சிக்கா அரைச்சி வழிக்கயிலதான் எரியும்"
и (5. வத்தில்
இன்னைக்கு நாப்பது கிலோ வுக்கு தானும் பேரு."
"ஆமா நேத்தே சொல்லிரில நா ப்பது கிலோவுக்கு மேல எடுத்திரனும்னி."
"கொழுந்து எடுக்க முடியாத ஆளுகல எல்லாம் வரவேஞனுட் L-ITs..."
"மாணிக்கண்ணே யிலயே சொல்லிறிச்சி எப்பவும் போல பதினஞ்சு கிலோ எடுங் கன்று. கூட எடுக்க வேணும்னு சொல்விச்சி.*
*பேரு போடலன்ன என்னு செய்யிறது"
எ ல் லா ருக்கு மே பேரு போடாம இருந்திருவாங்களா" "இஞ்ச புள்ள. என்ன வள வளன்று பேசிகிட்டு. பேசாம குனி ஞ் சி முத்த எ ல கலை பொறுக்கு கங்காணியின் கத் தல் குறுக்கிடுகிறறு
அப்பொழுது பெரிய கங் காணி கொழுந்து நிறுத்துப் பெயரிபோட வருகிறர். எல்லா ரும் அமைதியாய் கூடைகளைக் கிளறிக் கொண்டிருக்கிறனர்: பெரிய கங்காணி மடுவத்துக் தூணில் வசதியாகச் சாய்ந்து கொண்டு சாய்வுமேசையை அரு கில் இழுத்துப் போட்டு அதன்
மீது "செக்ருேலை விரித்து வைத்
துக்கொண்டார்
*கங்காணி கொழுந்து கொண்ட" என்று கத்தவும் வரிசையில் நிற்கும் முதலாவது பெண் கொழுந்தைக் கொண்டு வந்து தராசில் கொட்டுகிருள்: கோணல்மாணலாக ஆடிக் குதிக் கும் தராசைப் பிடித்து நிறுத் தியபடி அவளை ஒரு முறை
பார்த்துவிட்டு தராசை உற்றுப்
பாரிக்கிருன்:
ஒரு சிறிய துண்டில் கொழுந்து நிறையைக் குறித்து

Page 12
அப்பெண்ணிடம் கொ டு த் து விட்டு மற்றக் கூடையை நிறுக் கிருன் கொண்டவள் அதைக் கொண்டு போப் பெரிய கங்காணியிடம் மிகவும் மரியாதையுடன் இரண்டு
கைகளாலும் கொடுக்கின்ருள்
பகல் எடுத்த கொழுந்து நிறுவை யுடன் இதையும் கூட்டிப்போட்ட கங்காணி திடீரெனக் கத்துகி Cyfft: ,
எ ன் னது இருவத்தஞ்சி கிலோதான..! நேரத்தியே சோன்னேன்ல நாப்பத்திஐந்து கிலோவுக்குத்தான் பேருன்னு. படிச்சி படிச்சி சொன்னேன். ஒனக்கு பேரு கெடையாது"
அவள் தயங்கித் தயங்கி நிற்கிருள். அதற்குள் மற்றப் (Luar துண்டுடன் வருகிருள்.
©ಲ್ಡಣ್ಣ வெலகு. மத்த ஆளுக்கு பேரு போடனும்"
அடுத்தவள் நாப்பத்திஐந்து கிலோவுக்கு அதிகமாக எடுத்
திருப்பாள் என்ற எதிர்பார்ப்
பில் "பாத்தியா இந்தாளு அம் பது கிலோ எடுத்திருக்கு" என்று அ வளிடம் கறும் ஆவலில் துண்டை விரைவாக வாங்கி செக்ருேவில் பதிந்தார்.அவருக்கு ஏமாற்றம்: ஆத்திரம் பற்றிக் கொண்டு வருகிறது. அதே காட் டு க் கத்தல் நாப்பத்தி ஐந்து கிலோவுக்குத்தான் பேரு என்று கூறி ஒனக்கும் பேரில்ல்ை என்ற பல்லவியைப் பாடி சரி ஒதுங்கு என்று முடிக்கிருர்,
தான் எதிர்பார்த்த அளவு கொழுந்தை யாரும் எடுக்காமல் போகவே செக்முேலை டப்? பென்று கோபத்தோடு மூடிவிட்டு பேணுவை கோட்டினுள் திணித் துக் கொண்டார்.
கொழுந்து நிறுத்த தும்
நிறுக்காததும்ாய் வ்ெ ற் று கி கூடைகளேத் தாக் கி தலையில்
து ன் டை வாங்கிக்
வைத்துக் கொண்டு குதித்தோ டும் பெண்கள் இன்று பின்ன்ரிப் பின்னி" நிற்கின்றனர். அவர்க ளைப் பார்க்கப் பார்க்க பெரிய கங்காணிக்குக் கோபம் தலைச் கேறுகிறது.
"இன்னக்கி என்ன கேடn வந்திரிச்சி ஒங்களுக்கெல்லாம். நேத்தே சொன்னேன் நாப்பத்தி ஐந்து கிலோ எடுத்தாத்தான் ஒன்னரை ப்ேரு போடுவேன்னு, பாவம்ன்னு தொரை போயா வுக்கும் வேல குடுத்து ஒன்னர பேரு போடச் சொல்லுராறு நீங்கல் லாம் என்னடான்கு ராங்கி” பண்ணுரது."
போன மாசம் வேல இல் லாம மூன்ஞப் பேரும் நாலு நாப் பேரும் போட்டது. அறிவு இல்ல. அரிசி மாவுக்கும் சம்ட ளம் இல்லாம செக்ருேல்ல கடன் வச்சிட்டு ஒரு ரூவாயும் ரெண்டு ரூவாயும் வாங்கினது வெக்க மில்ல. வேல குடுத்தள் ஒழுங்கா செய்யனும்
அப்பொழுது மாணிக்கமும் மற்றும் சில இளேஞர்களும் கோவில் நோக்கி கண்ட பெரிய கங்காணிக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வரு கிறது: "இவனுகளுக்கு பேரு போடுற என்ன வேல!
மாணிக்கமும் மற்றவர்களும் கோவில் மடுவத்திற்கு வந்ததுப் கூட்டத்தில் சலசலப்பு எழுந்து மடிகின்றது. பெண்களுக்கு சற்று உற்சாகம் ஏற்படுகிறது. பெரி யாணி தொடுவானையே வெறித் துப் பார்த்தபடி அலட்சியமாக நிற்கிருர் கூட்டமாக நிற்குப் பெண்களை நோக்கி "கொழுந்து நிறுத்தாச்சில்ல. பின்ன போவாம ஏ நிக்கிறீங்க்' என்று கேட்கிருரி
பெரியவரு பேரு போட மாட்டேங்கிருரு" என்று ஒருத்தி

S
கூட்டத்தில் ஒளிந்தபடி கூறு
கிமுள்
மாணிக்கம் பெரியாணியைப் turf isogair. G) , u tiffi uu mr Goof
கோபத்தோடு திரும்பிப் பார்க் கிருர், "நேத்தே சொன்னேன். படிப்படியாச் சொன்னேன். நாளைக்கு ஒன்னர பேரும் ராப் பத்திஐந்து கிலோ கொழுந்து எடுக்கலும்னு இன்னைக்கு என் னடாளு இருவதும் முப்பதும்
எடுத்துகிட்டு வந்திருக்காக. ஒன்னர பேரு போடமுடியுமா?
இல்ல தெரியாமத்தான் கேக் கிறேன்" -
ஒன்னரப் பேரு போட ஏலாட்டி ஒரு பேர போடுங் களேன்?
"இன்னைக்கு என்ன நாளு. ல்ல என்ன நாளுன்னு கேக் றேன். போயா நாளு, போயா வுக்கு வேல கொடுத்தா ஒன்ன ரப் பேரு போடணும். அதான் சட்டம். அதுகூடதி தெரியாம வக்காலத்து வாங்க வந்திட்டாக வக்காளத்து"
போயாவுக்கு வேலசெஞ்சா ஒன்னர பேரு போடனுமோ”
"ஆமா அதுதான் சட்டம்
*அதுக்காக நப்பத்திஐந்து
கிலோ எடுன்னு எந்தச் சட்டத்
தில இருக்கு"
குண்டூசியால் குத் தி யது
போல் நருக்கென்று திருப்பிப்
பார்க்கிருர் பெரியவர்.
ஒஹோ. சட்டம் பேசுறி களோ சட்டம்! அப்ப சட்டம் பேரு போடும் பாப்பம்"
ஆமா சட்டந்தர்ன் பேரு போடும். கிலோவுக்குப் பேரு போடனும், மேலதிக நெறைக்கு மணிக்காசு பதியனும் தெரியுங்களா சட்டம்"
"நாங்க சட்டம் பேசலாமா நீங்க பேசலாம் நீங்க பேசிஞ
சட்டப்படி இருபது
சட்டமா இருக்கும் நா பேசிஞ ருங்கியாயிருக்கும்!"
மாணிக்கத்தின் தோழர்கள் ஆளுக்கொருவராய் பெரியவரு டன் சாடுகின்றனர் அவர்களை பேசாமலிருக்கும்படி கையமர்த்தி விட்டு மாணிக்கம் பெரியவரிடம் கூறுகிருன். ༄་་་
எல்லாம்
"இந்த ஆளு க அம்பது ருத்தலுக்கு கொறயாம கொழுந்து ள்டுத்திருக்காங்க
பேருக்குப் போக மீதிக்கு மணிக் காசு போட்டிருங்க. அதுதான் நாயம் சட்டம்"
"அடேயப்பா நீங்க எனக்கு யோசனை சொல்லிக் குடுக்கிறீ களே. முப்பது கிலோவுக்கு ஒன்னர பேரு போட ஏலுமா! இல்ல ஏலுமாங்கிறேன். தொர ரொம் ப மனத்துக்கிருவாரு நாளைக்கு எடுக்கிற கொழுந்தயும் சேர்த்து ஒன்ன ரப் பேரு போடுறன்" .
*அதா நடக்காது"
பிரன் நடக்காதுங்கிறேன்"
*ஏணு இன்னைக்கு நீங்க பேரு போடலன்ன நாளைக்கு இந்த ஆளுக மலைக்கு வராது
வராதா. வராட்டி தோட் டம் மூடிப்பொயிரும். ஒர்க வயி றுதா காஞ்சி பொயிரும்"
இதா ஒங்க முடிவா.. பேரு பேர்டாம இந்த இடத்த விட்டு பொயிர ஏலுமா ஒங்க லால" ஒருவன் ஆட்களை ஒதுக் கித் தள்ளியபடி கங்காணியை நோக்கிப் பாய்கிருன். அவனை இழுத்து அடக்கிய மாணிக்கம் கங்காணியை நோக்கி "சட்டப் படி வேல செஞ்ச ஆளுகளுக்கு பேரு போடலன்ஞ ந |ாங் க லேபர் கோட்ல பேசிக்கிமுேம்" என்கிருன்,
பெண்கள் பயந்தபடியே பெரியவரையும் கண்காணியை
A.

Page 13
யும் மாறி மாறிப் பார்க்கின்ற
●..."ዙ ; VIS
க்கு வந்தாச்சு. தொரகிட்ட
சால்லி ஒனக்கெல்லாம் வேல நிப்பாட்றேன இல்லையான்னு பாரு" கூட்டத்தை நோக்கி பிரம்பை ஆட் டி க் காட்டிய
படியே மடுவத்தை விட்டு
இறங்கி கோபமாக நடக்கிருர்
பெரிய கங்காணி,
"பெண்களிடையே சலசலப்பு ஏற்படுகிறது. மாணிக்கமும் நண்பர்களும் பலமாகப் பேசிக் கொள்கின்றனர். அப்பொழுது பீட்றக்” வந்து கொழுந்துச் சாக் குகளை ஏற்றிச் செல்கிறது.
ஒன்னரை பேருதான் போடு முகளே கூட கொழுந்துதானே எடுக்கனும்
ஒன்னரைப் பேரும் ஒரு பேரும் இல்ல"
இனிமே போயி எப்ப அருசி இட்டு றது. எப்ப தண்ணி வெண்ணி காச்சிரது?
ஆட்கள் பொறுமை இழக் கின்றனர். மாணிக்கம் அவ்ரி களை நோக்கி அட பொறுங்க ஆளுகளா கொஞ்சம் பொறுங்க. அப் பி டி ஒடி'ஓடி பொழச்சி என்ன கோட்டய கட்டிப்புட் டீங்கி, காலம் பூராவும் எழவுக்கு மாரடிச்சதுதான் மிச்சம். ஒரு நாளைக்காச்சும் கொஞ்சம் நேரத்த பாக்கம எதித்து நின் குதான் சரிவரும், வேல விட் டது ஒடி சோத்தாக்கி சாப்பிட் இட்டு ஒடியாந்து வேல செஞ்சி கிட்டே இருந்தா குந்தக்கூட நேரமில்லாம செக்கு LDrtG கணக்கா இன்னமும் கீழ யே இருக்க வேண்டியதுதான்,
இன்னக்கி போயா நாளு நமக்கெல்லாம் லீவு நாளு; ஒய் வா வீட்ல இருக்கனும்: ஆதரவுனு பிந்துதுகொழுந்து முத்திரும் அப்பிடின்னு (லீவு நாளேயிலேயும் நம் மலா வேல்
ஓகோ அவ்வளவு தூரத்
செய்யச் சொல்லுரதால கூேட அரச் சம்பளம்) கொடு" எனு அரசாங்கம் சொல்லுது, அதான் ஒன்னர பேரு. ஞாயித் து கெளமை ப்ோயி ஒரு தந்தி அடிக்கனும்னு தவாலாபீஸ்ல டபல் சார்ஸ்" தான் கட்டனும் இல்லையா ஏன். வீவு நாளையில வே ல செய்யனும்கிறதுக்காக டபல்சார்ஸ்'தான் கட்றேனே இரண்டு தந்தி ஆடின்னு சொல்லு பாப்பம், இ ஆலு த் து அறைவான். ஆன இங்க ஒன்ன ரப் பேருக்கு எண்ப ருத்தல எடும்பா, நீங்க எடுத்துகிட்டு வாங்க, அப்படீன்ன அந்தச் சட்டத்தால நமக்கு என்ன பிர யோசன்ம். சட்டத்தால நம்மல வேல வாங்கிக்ருெக, எத்தனை ஞாயித்துக் கெ ழ  ைம வேல செஞ்சிருக்கிங்க: இப்ப *டியே யோசிச்சி பாத்தீங்களா? பெண்களுக்கு ஏதோ விடு கதை விடுப்பது போல க் கிறது. சிலர் மாணிக்கத்திட்ம் நெருங்கி வருகின்றனர். ஒருவித ஆதரவு உணர்ச்சியுடன் சில கைகளைத் த ட் டி தாவாயில் வைத் துக் கொள்கின்றனர். "என்ன அநியாயமடி" என்ற 11ւԴ- ,
"இன்னக்கு பேருபோடாட்டி என்ன செய்யிறது"
"பேரு போடாம இருக்க இலாது" சட்டப் படி Tபேரு போடாட்டி குத்தம்,
"நம்ம தலவரு கூட தப் பத்தி சொல்லல ,
"தலவருக்கு லேசா கங்காணி வேல கொடுத்து வைச்சிருக்கா ணுகளே ஏன் ਨੰn
கோடலிக் காம்புதானே கொலத்துக்கு நாசம் וb Lמ கைய எடுத்து நம்ம கண்ணயே குத்திடுவானுக. நீங்க எல்லாம் கால யி ல பெறட்டுக்கு வர வேணும் நாங்க சொல்றவரை
AA

பெண்கள் அரை மனதுடன் ஏதேதோ பலமாகப் பேசிய படி கூடைகளைத் தூக்கி தலை யில் வைத்துக் கொண்டு மெது வாக நடந்து செல்கின்றனர். கோயில் மடுவம் வெறிச்சோடிக் கிடக்கின்றது. சிதறிய கொழுந் துகள் திப்பி திப்பியாகக் கிடக் கின்றன. தொடுவானம் சிவக்க சூரியன் மலையின் வயிற்றிற்குள் மறைந்து கொண்டான். மாலை யின் அமைதியும் ம ன ங் க வர்
குளிர்ச்சியும் மலையகம் எங்கும்
பரவிக் கொண்டிருந்தது.
女
பங்களாவைவிட்டு வெளியே வந்த பெரியதுரை "போர்டிகோ" அரைசுவற்றில் வைக்கப்பட்டி ருந்த பூந்தொட்டிகளில் இருக் கும் அண்டூரியம்" செடிகளே ரசித்துக் கொண்டு சற்று நேரம் நின்ருர். பொன்னக மின்னும் இளம் பச்சை தேயிலை மலைகள் மீது சூரிய கதிர்கள் ன்ம்ை
f ல் இல. ரட்டை ரசித்துப் புகைத்துக் கொண்டிருந்த துரை பெரிய "கண்காணி' அவசரமாக வருவ தைக் கண்டு ஏதேதோ சிந்தித்து குழம்பிக் கொள்கிருர். துரை யைக் கண்டதும் மிகவும் பணி வுடன் மரியாதையையும் வலிந்து வரவழைத்துக் கொண் டே "சலாம்" செய்கிருர், பெரியவ ரின் அவசர விஜயத்தை அறி யும் ஆவலில் என்ன விஷயம் என்று அமைதியாகக் கேட்கிருர், பெயருக்கு அதிக மாகக் கொழுந்து எடுக்க வேண் டாம் என்று மாணிக்கமும் சில ரும் தொழிலாளரைத் தூண்டி விட்டிருப்பதாகவும் தா ன் சொன்னதையும் கே ள |ா மல் தொழிலாளர் வழமை போலவே கொழுந்தெடுத்திருந்ததை யும், தான் பெயர் போட மறுத்து விட்டதையும் o fr sofi di 5 b தொழில் கோட்டில் வழக்குப்
வரக்கூடாது.
B
போடப்போவதாக பயமுறுத் தியதையும் அதனைத்தொடர்ந்து இன்று யாரும் பெறட்டிற்கு வராததையும் மிகவும் பதட்டத் துடனும் பயத்துடனும் கூறி முடித்தார். பசுங் கம்பளத்தை போர்த்தியபடி எழுந்து மடிந்து கிடக்கும் மலைகளை வெறித்துப் பார்த்த வண்ணம் யோசித்துக் கொண் டி ரு ந் தார் துரை தொந்தி கலங்க உடல் நடுங்க நின்றிருந்தார் பெரியவர். நீட் டிக் கொண்டு போகும் ஒவ் வொரு நிமிடமும் அதன் அமை தியை, கனத்தை தாள முடிய வில்லை அவரால், வெடுக்கென்று
பெரியவரைப் பார்த்தார் துரை.
"உனக்கு ரொம்ப வயசாகிப் போச்சு இல்லியா?"
து  ைரயின் சம்பந்தமற்ற பேச்சினல் பெரியவர் குழம்பிக் கொள்ளும் மு ன் பே துரை தொடர்கிருர்,
"அதான் ஆட்களிடம் வேல வாங்க முடியல "லேபர் கண் ருேல்" இல்லை. ஆல்ரைட்"
*என்னுடைய மெனேஜ் மண்ட்ல ஸ்ட்ரைக் என்ற பேச்சே
ட் களு க் பெயரை போட்டுட்டு இன்னைக்கு வேலைக்கு வந்திடச் சொல்லிடு. ஒகே. மாணிக்கம், அவனை ஒபீசிற்கு வரச்சொல்லு, நான்
ஜனவசத்துக்கு எழுதிர்ரேன்
நீ ரிேட்டையர்" ஆகிக்கொள்!"
அலட்சியமாக அவரைப் பார்த்து
விட்டு கடைசியாக ஒருமுறை அந்த உயர்ரக சி க ரட்  ைட இழுத்து விட்டு காலடியில் போட்டு நசுக்கிவிட்டு மீண்டும் பங்களாவிற்குள் நுழைந் து கொண்டார். தனியே விடப் பட்ட பெரியவர் ஏதேதோ எண்ணிக் குழம்பியபடி மாணிக் கம் வீட்டை நோக்கி நடை யைக் கட்டினர். மூடிவைக்கப் பட்டே இலாபம் ஈட்டித்தந்த இரகசியம் அம்பலமான ஆத்தி ரம் துரையைஅதிர வைத்தது.*

Page 14
வருக!
நீ போன பாதையிலே
நான் போக வேண்டுமென
நீண்டநாள் தொட்டு
நினைவூட்டி வந்துள்ள
என்இனிய நண்பா
இதயத்தைக் கூறுகிறேன்
உன்னுடைய பாதை
உவப்பென்றே கூறுகிருய் என்ருலும் என்ஞல் இசைந்தப் #'සූද්” செல்ல மனம் இல்லை! சிறந்தவழி வேறுளதே! அந்த வழியே அகம் விரும்பிச் செல்கிறது
முந்தையர்கள் நோயில் முடைபட்டுச் செத்தார்கள்! இன்றும் அதுபோல எத்தனைபேர் சாகின்ருர்,
இத்துயரம் இங்கேஇனித்தொட்ரா மார்க்கத்தை
உன்னுடைய பாதை உரைக்கவிலை ஆதலினல் அவ்வழியே செல்வதற்கு ஆசை சிறிதுமிலை செக்கச் சிவந்தவழி செல்வந்தர் ஏழையெனப் பேதமிலா நல்லுலகைப் பேணும் இனியவழி
இஸ் லெனின்", "ஏங்கல்ஸ்" படைத்த புதியவழி அங்கேபார் செல்கிறது அவ்வழியே நம்வழியாம்!
கல்லுகளும், முள்ளுகளும் காட்டு விலங்குகளும், தொல்லைதரல் கூடும் தொடர்ந்தோம் பெருவழியில்! சோர்ந்து திரும்பி சுயநல்த்தைப் பேணுேம் நாம்! கொள்கை வழியே குதித்து நடக்கின்ருேம்! எங்கள் வழியை இடைமறித்து ஆபத்துக் காளாக வேண்டாம்! இவ்வாசைவழி வந்திடு நீ! Ep sundsøer
24

மிக்ஹெய்ல் துதின் ஒரு போர்வீரர் - கவிஞர். 60 வயதான இந்த லெனின் கிராட் வாசியின் இளமைப் பராயம் இரண்டாவது உலகப்போரில் கழிந்தது. இவர் போர் முனையில் கடமையர் ற்றும் போதுதான் அவரது முதல் கவிதைத் தொகுதி வெளியானது எழுத்தாளர் சங்கத்தில் துதின் உறுப்பினரானதும் அப்போதுதான்.
எமக்குள்ளது ஒர் உலகம்!
மிக்ஹெய்ல் துதின்
அரை நூற்ருண்டுக்கு முன்னர், நடன பாடசாலைக்குச் சென்ற போது எனது முதலாசிரியர் எமக்குச் சொல்லித்தந்த பாடல் இது:
சுதந்திர வேட்கை தம்மைச் சுட்டெரிக்கும் கணப் போதில நலந்தரு நீதியை நாம் நமதுள்ளம் ஏற்கும் கணப் போதில் நமதாத்மா ஜனிக்கின்ற நல்லுணர்வு யாவையும் எமதன்னை மண்ணுக்கே இனிதாய் அர்ப்பணிப்போம்.
புஷ்கினுடைய இந்த வரிகள் அன்று தொட்டு எனது நெஞ் சிலும் சக மாணவர்களது 'ெ சிலும் என்றுமே அழிக்க முடி யாத வகையில் பதிந்து விட . இவை தாம் என்னிடத்தில் நீதி நெறிக் கருத்துக்களைப் பரதிபலித்தன. •
எனது தலைமுறையினர் தா? கத்தின் பால் கொண்டுள்ள விஸ் வாசத்தை வெறும் வார்த்தைச சூலைல்ல செயலின் மூலம் நிரு பிக்க வேண்டும். யுத்தகாலக் கவிஞர்களும் போர் வீரர்களாக விருந்தனர். எனது நண்பரான லெனின்கிராட் கவிஞர் செர்ஜி ஒர்லொவ் யுத்தத்தின்போது டாங்கியை ஒட்டிச் சென்ருர். யுத் தம் அவரது இதயத்தில் மட்டும் தனது தழும்பைப் பதிக்கவில்லை: அவரது முகத்தையும் தழும்பாக்கிவிட்டுச் சென்றது.
பாஸிஸத்தை எதிர்த்துப் போராடும் ஒரு பிரஜையினதும் கவிஞனதும் பிரதான பணியை நாம் செய்து முடித்தோம். அந்த நேரத்தில் எமக்கு இது மிக உயர்ந்ததொரு நெறியாக இருந்தது. சில காலத்துக்கு முன்னர் முன்னுள் மாலுமியான டெனிஸ் க்ளோ வர் என்ற நியூஸிலாந்துக் கவிருனச் சந்தித்தேன். அப்போது எம்மிடத்தில் எந்தவித வேறுபாடான மனவுணர்வுகளுமிருக்க வில்லை. ஏனெனில் நாமிருவரும் முன்னர் போர்வீரர்களாக இருந் ததுதான். இது எமது முதல் ந்திப்பாக இருந்தபுோது நாம் வருவரைப்பற்றி ஒருவர் மிக அ :புதமாகப் புரிந்து கொண்டோம், ளோவர் தமது கவிதை நூலே எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அதை மொழிபெயர்க்க எண்ணியுள்ளேன். தேசத்தின் தலைவிதி
A.

Page 15
யிலும் மகோன்னதமான மனித நேயக் கருத்துக்களிலும் தன்னை ஆயுதமாக ஈடுபடுத்தினுல் தான் மெய்யான கவிதை மலரும் என்று நான் நம்புகிறேன். . தார்மீக உரிமை
ஒரு கவிஞன் கவிஞஞக இருப்பதற்குத் தார்மீக உரிமை உண்டு. இந்த உரிமை அவன் மக்களுக்கான பணிகளில் தன்னை சீடுபடுத்திக் கொண்டதன் விளைவாக அவனுக்கு ஏற்பட்டது. மனித உறவுகளின் சிருஷ்டிய்ையும் அழகையும் பா டு வது ம் மறைந்து கிடப்பதையும் சாத்தானையும் இனம்காண்பதை கவிதை யின் வரலாற்றுப் பணியாக நான் காண்கிறேன்.
என்னைப் பொறுத்த வரையில் படைப்புச் சுதந்திரமென்பது மிக உயர்வான அம்சமாகும். மனிதனிலிருந்து மனிதனை வேறு படுத்திவைக்கும் சகலவற்றிலும் தலையிடுவதற்கான சுதந்திரம் எனதுரிமையாகும். விரும்பியதை எழுதலாம் பேசலாம். நான் அதையே செய்கிறேன், ஆனல் எனது பணியைப் பொறுத்தவரை நான் பூரண பொறுப்புணர்வைக் கொண்டுள்ளேன். எனவே எனது பணி நல்லதற்கும் நீதிக்கும் சேவை செய்கிறது.
நீதிநெறிக் கருத்துக்களின் அடித்திளங்கள் ஒரேமாதிரியான வையேதாம். ஆனல் அவை புதிய அர்த்தத்தினுல் நிறைந்துள்ளன. இன்று ஒரு பொதுமனிதனினதும் கலேஞனினதும் பணிகள் அகம் றவை. இளைய தலைமுறையினது பணியானது எம்மைக் காட்டி லும் சிக்கலானது. "܂ܢ a
அனைவருக்கும் உள்ளது ஒரு உலகே. இதை யுத்தங்கள், அழிவுகள் இறுதியாக மனிதனே கட்டவிழ்த்து விட்ட அழிவுச் சக்திகளிலிருந்துகாப்பது எமது அனைவரினதும் முதன்மைய னபணி. வாழ்க்கையை ஒரு அற்புதமாக நாம் பாட வேண்டும். சமூக வாழ்வில் கலையானது வல்லமை மிக்க செல்வாக்கைச் செலுத்து கிறது. சூழலைப் பாதுகாப்பது பற்றி ஒரு விஞ்ஞானி எழுதுகின் முன், மனித நடவடிக்கைகள் ஏற்படுத்தக்கூடிய நாசங்களை அவன் நியூபித்துக் காட்டுகிருன். ஒரு கலைஞனும் இதையேதான் செய் கிருன்; ஆனல் வேருெரு வழியில், அந்த வழியும் ஆற்றல் குறைந் ததல்ல. அவன் ஆத்மாவின் அடித்தளத்தைத் தட்டி வாழுமனைத் தின் அழகில் தன்னை இணைக்க வழிகாட்டுகிருன்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் புஷ்கின் மற்ைந்தார். ஆனல் அவரது சொற்களான "பிணக்ருகள் மறைய பிணைப்புறும் குடும் பம்" என்பது இன்னமும் சர்வதேச பதாகையில் பொறிக்கப் பட்டுள்ளன். , -
இன்று விஞ்ஞானப் புனைகதை ஆசிரியர்களும் விஞ்ஞானிகளும் இப் பிரபஞ்சத்தில் வாழும் இதர நாகரீகங்கள் குறித்து ஏராள மாக எழுதுகிறர்கள். பூமியில் நமக்கிருக்கும் ஒரே நாகரீகத்தை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று நான் நம்புகிறேன். இது நடைபெற்ருல் வாழ்க்கை எமக்குப் பெரும் வெகுமதியாகவிருக்கும். நாம் வேறுபாடுகளைப் பெரிதாக மதிக்காது மனிதர்களின் அன்பு ணர்வை, அவர்களை மிக நெருக்கமாக்கக் 43. gti u சாதனங்கள். வழிகளைப்பற்றி சிந்திக்க வேண்டும் , இக் கூப் பணி பெரும் அரசி யல்களால் மட்டுமல்ல இலக்கியக.ாாg . முடியும்,

“மேஜ நீ இண்டைக்கு வேலைக்குப் போகேல்லையோ?" அசதியாக அயர்ந்துபோயி ருந்த ராசரத்தினத்தைப் பூர ணம கிழவி தட்டி எழுப்பினுள். அவன் போர்வையை இழுத் துத் தலைவரை போர்த்துக் கொண்டு மறுபுறம் புரண்டு அனுபவித் துக் குறையில் நிறுத்திய நித்தி ரைச் சுகத்தை மீண்டும் அணு பவிக்கத் தொடங்கினன். பூர ணம் எதையெதையோ நினைத் துப் போர்வையைக் கழுத்து வரை நீக்கினுள். அவனது நெற் றியையும், கழுத்தையும் அவ ளது வலதுபுறப் புறங்  ைக தொட்டுப் பார்த்தது.
"சும்மா இரணை" போர்வையின் நீளம் மீண் டும் அவனது தலைவரை நீண்டது. Co3OT, தலையை மூடிக் கொண்டு படுக்கக் கூடாது. உன்னை எத்தினை தரம் வடக்கை தலைவச்சுக் கொண்டு படு க் காதை எண்டு சொல்லுறஞன். என் நீ புத்தகத்தில் படி க் (23s6ầvåa Kuu?”
சாமத்திற் கூ வ மறந்த அயல் வீட்டுச் சேவலொன்று,
அப்போதுதான் விடிந்துவிட்ட
மையை அறிந்துகொண்டது.
S3
:
ஒரு நிலவும் :
அந்தாளும் கிட்டத்தட்ட நாப்பது வருடத்துக்கு முற்தி 2ů upësir Gär ar p h Lu nT un de படுத்திருந்து. ஒரு அசுமாட்ட மும் இல்லாமல்லலே ஊரிலே முந்தியிருந்த கொட்டில் வாங் படுத்திருந்தது! ஐயோ, நான் வந்து தட்டி எளுப்பிப்
பார்த்த பிறகல்லோ.
என்ரை பிள்ளையும் இல் லாட்டி, இந்த ஒரு அறைக் கிள்ளை கிடந்து நான் சான்னத் தைச் செய்யிறது?
"மேனை, எழும்பன் ரா சா'
"எணேய்., இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமையில்லேன?"
ஒ, சொன்ஞப்போலை நான் அயத்துப்போனன், ராசா. ஏன் நேத்து முந்த நாளும் நீ போகேல்லைத்தானே??
உவன் கைக்குழந்தையாய் இருக்கேக்கையே அந்த ரா ள் போட்டுது. தேப்பனைப் படத் திலை தானே பிள்ளை பாத்திருக் கிருன்.
ராசரத்தினத்தின் நித்திரை யில் குழப்பம். போர்வை நீக்கி, அதற்குள் கழ ன் றிரு ந் த' சாரத்தை லபக்கென்று கைப் பிடிக்குள் சிக்கவைக்கும் பெரு முயற்சி. சாரத்துள் தனது
፳፻

Page 16
sygopruyt.ao also as arras LOTவைத்துக் கொண்டான். கை விரலொன்றை மூக்குத் துவா ரங்களினுள் நுழைத்து, அவற் றுக்குக் கால்ப் பயிற்சி அளிக் கப்பட்டபின், நிலத்தில் ališ கப்பட்டிருந்த பாய்க்கும் அவ னுக்கும் தொடர்பு அறுந்தது.
"நான் இல்லாட்டி நீ என்ன செய்யப் போறியோ தெரியாது"
கிழவியின் பெரிதான புறு புறுப்பு. அவனது படுக்கையைச் சுருட்டி அந்த அறையின் ஒரு மூலையில் வைத்துவிட்டு, சமை யலறையாகப் பாவிக்கப்பட்டு வந்த அதே அறையின் இன் ஞெரு மூலக்கு வந்து, எரிந்து கொண்டிருந்த அடுப்பை ஒரு முறை ஊதிவிட்டாள். சுடுநீர்ப் um ðar Gsm Sá sg .
உவன்ரை வயசுக்கு இத் நேரம் நான் மூண்டு நாலு பேரப்பிள்ளையளைக் கை யி லை வச் சி ரு க் க வேண்டியனுன் அல்லே! ம்.. i
தேநீர் தயாரானது. சீனிப் பேணியை எடுத்துப் பார்த்த போது, அதற்குள் சீனியைவிட நுள்ளான்களே அதிகமாக உலா வின. கண்பார்வை பூ ர ண ம், நுள்ளான்களையும் சீனியென நினைத்து, தேநீருக் குள் போட்டுக் கறள் பிடித்த பழைய கரண்டியால் கலக் ஞள். அந்த ஒரே மூக்குப்பேணி யில் கரண்டி பட்டுப் பட்டுத் தெறித்த  ைச, பின்புறம் போயிருந்த ரா சரத்தினத்தின் செவிகளில் பழக்கப்பட்ட இனிய நாதமாக ஒலித்துக் கொண்டி ருந்தது5
போன கார்த்திகையோட உவனுக்கு முப்பத்தியெட்டு முடிஞ்சிருக்க வேணும். இவன்
 ைகக் குழந்தையாய் இருக் கேக்கை
பிறந்தவள். அவள் அண்டைக்கு
உல்கின்
குறைந்த
தம்பியின்ர பெடிச்சி
படமாளிகையடியில இவனைக் கண்டிட்டுக் கண்டும் காணுதது மாதிரி புரியனுேட விறுக்கு விறுக்கெண்டு போட் டாளாம். புரியன் கூப்பன்கடை இஞ்சுபெத்தர் எண்டு அவவுக் குப் பெரும் தடப்பு.
அறை வாசலில் காலத்
தட்டிக் கொண்டே வந்த ராச
ரத்தினம் ஒரு புறத்தில் வய தாகிக் கொண்டிருந்த ஸ்ரூல் ஒன்றின்மீது, கட ன் பட் டு ச் "செக் கன் ான்ட் டாக
வாங்கி வைத்திருந்த ரேடியோ
வைத் தமிழ் வர்த்தக சேவைக் குத் திருப்பினன்.
உங்கை பாரன், கன்னம் பிடரி எல்லாம் த ரை ச் சு க் கொண்டு வருகுது. நெஞ்சு மயிர் கூட நரைக்கத் துடங்குது. நான் என்னத்தைச் செய்ய ஒரு குமரை வச்சிருக்கிற மாதி ரியில்லோ நான் இவனை வச்சிருக் கிறன்.
ரேடியோ பாட, ராசரத் தினமும் பின்னணியாக விசில டித்தபடி பற்பொடியைத் தேடி எடுத்து, பல் துலக்குகிருன்.
* G3 s åser, வீட்டுக்குள்ளே நிண்டு பல்லு மினுக்காதை. அதுதானே தரித்திரம், உதேன் கண்டதையும் கடியதையும் வாங் இப் பல்ல்ைப் பழுதாக்கிருய்? உமிக்கரியாலை மினுக்கள்"
ஓமண் ஓம். உன்ர கரி யால மினுக்கிப் பல்லெல்லாம் கறுப்புக் கறுப்பாய் ஒட் டி க்
கொண்டிருக்கவோ?’
என்னெண்டாலும் கெதி யாய் முகத்தைக் கழுவிப்
போட்டு வந்து தேத்தண்ணி யைக் குடி"
வெறும் தேநீரைத்தான்
முன் புTபாவித்த மருத்துகள் போல் குடித்தாள், பூரணம்,
霹

T6Nuuh dit&am 6r i Lu, Gör இனிப்பாய்க் குடிக்கட்டும்.
மனத்தைக் கசக்கிப் பிழிந்து ஒருவாறு ரொட்டி தட்டி முடித் தாள.
5'Luðawi Gumråkao · sala னு க் கும் ரொட்டியெண்டா உயிர். நானும் எத்தினை நாளைக் கெண்டுதான், பிள் ஃா க் குச் சமைச்சுக் குடுத்துக்கொன்டு இருக்கப்போறன். நானில்லாட்டி என்ர அத்தரிச்சுப் போம். -
தட்டு ஒன்றில் அடுக்கப் பட்டிருந்த ரொட்டிகளுக்கு முன் குல் ராசரத்தினம் சப் ரணி கட்டிக் கொண்டான்.
"மேன், எ ந் த நேரமும் நெ த் தி யில விபூதி இருக்க
- Seiränt
வேணும். இர வில படுக்கப் போகேக்கிள்களயும் அ ந் த ச் சிவத்தை நிண்ச்சுக் கொண்டு
நெத்தியில விபூதி பூசிக்கொண்டு படுக்கவேணும், மேன. ராத் திரி நீ நெடுகவும் வாய் புலம் பிக்கொண்டிருந் ,ாய்; ' பிற கு நான் எழும்பிவந்து வீயூதி பூசி விட்டஞன்”
ராசரத்தினம் ச  ைம ய ல் மூலக்கு எதிர் மூ ைபில் இருந்த 50euGluguorr éir, பிள்ளையார், லட்சுமி படங்களே வணங்கி,
கண்களை மூடி அண்ணுந்து நின்று
விபூதி பூசிக்கொண்டு திரும்பி பழையபடி சப்பாணி கட்டினன். "எணை, ரொட்டியும் சம்ப லும் வலு திறமாய் இருக்கு.
'மிச்சம் விடாமல் போட் டுச் சாப்பிடு. ம்.. நாளைக்கு இப்பிடி என்ர கையா லேயே ரொட்டியும், சம்பலும் சாப்பிடப் போழுய் தா ன் ம ன ச் சந்தோசமாய்ச் சாக முடியேலையே. மேனே,
தாயின் மன உளைச்சலை ராசரத்தினம் புரிற் து நெடு
J sir Gnu ub,
மோட்டர்
சிரித்துவிட்டுப்
ஏஜண்டே
எத்தினை
ee
நாட்கள் ஆகியிருந்தன. அவ னுக்குப் பிரைக்கேறுவது போல இருத்தது. பூரணம் செம்பில் தண்ணிரைக் கொடுத்துக் குடிக் கச் ச்ெய்தாள். அவனது தலை ు *நூறு நூறு' என்ற தட் 6۔ مE
'ஆர் நினைக்கிளிமோ தெரி
எங்களை கிறது?"
காலேயுணவுச் ச ட ங் கி ன் முடிவினையடுத்து, அறையின் வெளியிலே சற்றுக் காற்ருட வந்து நின்றன். கார்களும், வஸ்களும், வான்களும், லொறி களும், சைக்கிள்களும் தாறு மாருக ஒடியோடி நகரத்தை இரைச் சற்படுத்திக் கொண்டிருந் தன. கார்களிலும், ஸ்கூட்டர்
பைசிக்கிள்களிலும் போகிறவர்களில் அவ ன த் தெரிந்த எத்தனையோ பேர்கள் அவ மிகச் சாதாரணமாகப் பார்த்துவிட்டு, தங்கள் பாதிை யிற் சென்றுகொண்டிருந்தனர்.
ஆரனை நினைக்
சைக்கிளிலும், நடந்தும் செல் கின்ற தெரிந்தவர்களில் சிலர்
to t.
டு ம் அவனைப் பார்த்துச் போகின்றனர்.
தானென்ன கவுண்மெத் என்னைப் பாத்து எல்லாரும் &íflést Gurru "...GI'
போக?
இரண்டு இளம் குமரிகள் போகிற வாக்கில் ராசரத்தி னத்தை நோக்கிவிட்டுச் சென்று கொண்டிருந்தனர்.
சீ! பெனியனைப் போட்டுக் கொண்டு நிண்டிருக்கலாம்.
தனது நரைத்த தெஞ்சு உரோமங்களை வேதனையோடு பார்த்துக்கொண்டான்.
சிவப்பி கம்மா நிறந்தான் பொதுதிறப் பெட்டை வலு

Page 17
இதர் இருக்கிமூன் 置) குக் கிடைச்சிருக்க வேணும். என்ன மாதிரிச் சும்மா.
ார வடிவ்ரா பேட்டை
பளிலேயும்தானே விருப்பமாய்க்
கிடக்கு கவியானம் செய்யாட் டில் என்ன, இஞ்சை கொழும் பில் எத்தின்பேர் கவியானம் செப்பேன்ஸ் என்டு சொல்விக் கொண்டு என்ன சந்தோசமா இருக்கிருங்கள்.
எங்களுக்கு உது கன் சரி El PTT.
| மணியம் ஒருத்தன்போதுமே அவன் இப்ப திண்டிருக்க வேணும் ஐந்தப் பொதுநிறப் பெட்டையைக் கர்னாவேனும் பிறகு அவன் வார்புப் பார்க்க வேதும்.
சொன்னுப்போசில ந ல் வ இங்கிலிஸ் படமொண்டு இண்டைக்கு விடக் தமிழ்ப்
୍ତ (ତ $('')+'', *Ls、 蔷凸凸r。
齿," சங்சார ருத்திரக் அவன் நேரடியாகக் காணுவிட்டாலும், அவனது மூச்சு நிச்சயம் தனது பெருமூச்சைப் இருக்கும் என்ற முடிவு
எங்கள் தரவளி ரங்கினே இங்கிலிஸ் படத்தைப் பார்த் துத்தான் காந்தள்ள வேண் டிக் கிடக்கு. அதுக்குத்தான் எங்கட சம்பளமும் கட்டும்.
தள்னேப் பற்றிய நின்ேவி வேயே சுயநவமாக மூழ்கியிருந்த ராசரத்தினத்துக்குச் சட்டென்று
தாயின் ஞாபகம் வருகிறது. திரும்பி, ஒரு வீட்டின் சகல அம்சங்களுமாக அவர்களுக்கு
இருந்த அந்த ஒரே அறைக்குள் போனுன்
பூரன்ம் கிழவி பத்தியா ரேச் சமையலுக்காக முதல்நாள் ராசரத்தினம் வாங்கி வந்திருந்த காப் பிஞ்சுகளேக் கத்தியால்
PsA LINEĀTRAT
பிரிவின்ே செய்துகொண்டிருந் தாள் அவனும் பதவியென்ற பெயரில் தாயின் பக்கத்தில் குந்திக்கொண்டான்.
"நீ மேனே நேத்தையைப் போலே தேங்காயையும் திருவி வெங்காயத்தையும் உரிச்சவை நான் சீமைச்சு முடிக்சிடுறன்"
ராசரத்தின்ம் இர ண் டு நாட்களுக்கு ஆன் உண்டத்து மீதம் வைத்திருந்த தேங்காய்ப் பாதியை மெதுவாகத் துருவத் தொடங்கினுள்
என்ர பிள்ளேயை ரத்தினே நாளேக்கென்டு நான் இப்பிடிச் செய்விக்கிறது என்னுலுேதான் இந்த வ ய சிவ அடுப்போட கிடந்து உய ஏலுமே வும் தன் ஆசையாே அடக்கி வீச்சுக்கொண்டு . நான் என் னத்தைச் செய்ய?
உள்வனவு தேங்கா யும் போதும் மிச்சத்தை நாளேக்கு வை. பூண் கவ்விப்பாடும். மாப்பெட்டிக்கை வச் சு மூடி :)"
ராசாரத்தினம் வெங்காயத் தோடு மிளேக்கெடத் தொடங் சிஞன். வெளியிலே அவன்ேக் குரங் கொடுத்து யாரோ சுப் பிட்டது போலிருந்தது மணி பம் நின்றுகொண்டிருந்தான். நண்பன்ே துறையின் உள்ளே அழைத்துவந்து சுவாமிப் படங் களுக்குச் சமீபமாக இருந்த கதிரை பின் அமர்த்தினுன் கதிரை கிறிச்சிட்ட குர வில் தனது இயலாமையை வழக்கம் போல் தெரிவித்துக்கொண்டது. ஆர், தம்பியே! பதிங் வேண்டாத கேள்வியைக் கேட்டு விட்டு பூரணம் கிழவி தனது - அலுவல்களிாக் கவ ணித் துக் கொண்டிருந்தாள்.
ராசரத்தினமும்,
Th கடமையாற்றும்
நிறுவனத்தின் 5 0ן חש מן EL
|
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலமை பற்றியும் நடைவெற் நுக் கொண்டிருக்கும் வே வே நிறுத்தம் பற்றியும் குரலில் பேசிக்கொண்டார்
பூரணம் கிழவி சமையல் தேவைக்கா விதி தண்ணீர் எடுப் பதற்குச் சற்றுத் தொல்வி லுள்ள பொதுக் குழாயடிக்குக் குடத்துடன் சென்ருள்
பேச்சினிடையே மணியத் துக்குத் தூரத்து உறவு து வில் கல்யான்ம் பொருந்திவிட் டது என்ற செய்தியும் கலந்து கொண்டது.
மறிையம் தனது கலிபானச்
செய்தியைச் சொல்லிவிட்டு கேள்வியூான்றுக்குத் தன்க்கத் தயார் செய்தான்
என்னடா மரியம்ான்ன கேக்கப் போருப்ரி"
'இல்லே மச்சான் உனக்கும்
வயது நாப்பதை நெருங்கிக் கொண்டிருக்குது ன்னும் உனக்குக் கலியான யோசன் வரேல்லேயே?
அமைதியான கேள்வி தனது நாயகமே ஆழமாகத் தைத்தது
நான் முந்தி முந்திபு கேட்டிருக்கிறன் மழுப்பிப்
போட்டாப் மெய்யே ரவிரா" நல்லவேள்ே அம்மா இல்ங். ாங்னு யோசனே? சொல்லு பர்சான்
மன்சியம், அம்மா என்னேக் கஷ்டப்பட்டு வாத்தது । குத் தெரியும். இப்பிடி வேலே விடைச் பிறகும் அவதான் எனக்கு ஆறுதல் என்ர சம்ப ாத்துக்குக் கொழும்பில் இந்தக் குச்சறையில்தான் ா என் ஆஸ் இருக்கமுடியும் இந்த அன்
தாழ்ந்த
இந்த அறையில் என்னுல ாப்
பிக் குடும்பம் நடத்த முடியும்? வாறவளுக்காகப் பெத்த அம்மா வைக் கில்க்க முடியுமே?"
பூரம் கிழவி மெதுவாகத் துர்ேக்குடத்தைக் குசினிக் குள் வைத்தாள்.
சாப்பிடும் போது அத்யந்த வாத்ஸ்கியத் தோடுதாபின் கண்கள் அவ தழுவிக்கொண்டிருந்தன்
இப்பிடிப்பட்ட அம்மா தான் எனக்கு வேணும் எனக் குக் களியானம் வேண்டாம்.
அம்மா நாள் ஒருக்காப் படத்துக்குப் போட்டுவாறன்" மரியம் பாரிடமாவது காசு கடனு: வங்கித் தருவான் என்ற நினேப்பு
மேன்ே கண்டபடி சிலவழி பாதை கவனம் மேனே'
ராசரத்தினம் படத்தில் பரும் கிளுகிளுப்பையூட்டும் சில
காட்சிகளில் நிளேவைப் பதிய விவத்தவண்ணம் அன்றக்குள்
அன்றி இருண்டிருந்தது அம்மா பக்கத்து விடெங்
கையோ போயிருக்க வேணும்
இப்பெட்டியைத் தேடியவ வின் காவில் ஏதோ தட்டுப் பட்டது. சாசர்த்தினம் டுருளுக் குள் துழாவினுன்
'அம்மா!
பூனம் விழவி பின்ன்ேரம் தனது விட்டில் காய்கறிக்குத்
தெளிக்கும் மருந்து கொஞ்சம்
கடஞகப் பெற்றுச் சென்றதா சுப் பக்கத்து விட்டு மனுஷி அவசரமாக வந்து சொன்னுள்
அந்த அறை திரப்போகும்
விவியும் அம்மா என்னுேட தனிமையை உணர்ந்து ராசதுக் இருக்கிரு' என்ற சம்பள ம் தினம் விம்மி, அறையிலிருந்து ரீல்டு சிவனுக்கே பத்தாது. நீங்கிவிட்ட அன்பின் குளிர் அதோட அம்மா இருக்கக் ம்ைக்காக்த் தவிக்கத் தொடங் கூடியதா இன்குெருத்தியோட கிருன்

Page 18
சோவியத் இந்தியவியலாளர்கள் இந்திய தேசிய விடுதலை இயக்கம் பற்றி விரிவான ஆராய்ச்சிகள்
செய்து வருகின்றனர். பல முக்கிய,
Sf606 L TST
பிரச்சினைகளுடன் கூடவே அவர்கள் புகழ்மி திய தேசிய வீரராகிய பகத்சிங்கின் 蠍蠶 மற்றும் பங்ணி குறித்தும் ஆராய்ச்சி செய்கின்றனர். அவரைப்பற்றி சோவியத் அறிஞர்களின் ஒரு புதிய ஆராய்ச்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பகத் சிங்கின் சாஸனம்
பிரிட்டிஷ் இந்தியாவின நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி 1931 மார்ச் 23 -ல் தலைசிறந்த புரட்சி வீரராகிய பகத் சிங்
தூக்கிலிடப்பட்டார். அப்போது
அவருக்ரு வயது 24 தான். இத் திய சுதந்திரத்தின் இத் தலை சிறந்த வீரரின் உருவம் மக்க ளின் நன்றியுணர்வுமிக்க நினை வில் எப்போதும் நிலைத்திருது கும். இந்திய வரலாற்றில் பக: சிங் உன்னதமான ஒர் இடத்தை வகிக்கிருர், பிரிட்டிஷ் காலன ஆதி க் க வாதிகளிடமிருந்து தமது சுதந்திரத்தை வலிந்து பெறும் இந்திய மக்களின் வளை யாத உறுதியின் சின்னமாக விளங்கிற்று அ வ ர து நாமம். அவரது தனிச் சிறப்பு வாய்ந்த தீரம், தனது இன்னுயிரைத தியாகம் செய்யத் தயாராய இருந்தமையை, விசாரணையின் போதும், தூக்கிலிடப்பட்ட போதும் அவர் நடந்துகொண்ட விதம் ஆகிய  ைவ அவரைக் காவிய நாயகனுகவும், முறை தலைமுறையாக இந்திய இளைஞர்கள் பின்பற்ற வேன் உதாரணமாகவும் "ח פ$ ש-עו - மாற்றியது. காலஞ் செல்லச் செல்ல அவரது புகழ் அதிகரிக கத் தொடங்கியது.
தவை
எல். மித்ரோன்ே ஏ , ரெய்க்கோவ்
சித்தாந்த பாரம்பர்யம் இதர பல சுதந் திர வீரர்களையும் ஆட்கொண்டது.
gssipr ua sor u ' fr sir so to கொண்ட அறிவுத் துறையின ரின் பிரதிநிதி என்ற முறையில் இந்திய தேசிய விடுதலை இயக் த்தில் அடியெடுத்து வைத் ார் பகத்சிங், பிரிட்டிஷ் ஆட் சியின் கொரிகளுக்கு srВаттат சதிகளு தனிநபர் பயங்கர வாதமுடய கால னி ஆதிக்கத் துக்கு எதிரான போராட்டத் துக் ப் பயன்மிக்க வழிமுறை கள : குமென இந்தத் தீவிர மனப்பான்மை கொண்ட அறி வுத் துறையினர் கருதினர்.
வி. இ. லெனினது கருத் துக்களின் செல்வாக்காலும், மாபெரும் அக்டோபர் சோ லிசப் புரட்சியின் வெற்றியினது செல்வாக்காலும் பகத்சிங்கின் கரு த்து க் கள் அடிப்படையி :u மாற்றம்டைந்தன 3) ע6 $) வெகுஜன இயக்கங்கள் ஆற் றும் தீர்மானமான பங் கினை அவர் நன்கு உணர்ந்து கொண்
—т пї.
இந்தியாவில் மட்டுமல்லா
அவரது மல், உலகு முழுவதிலும் சோஷ

சலி சமுதாயத்தை நிர்மாணிப் பதே புரட்சிப் போராட்டத் தின் இறுதி இலட்சியமாகும் என்ற கருத்தையும் அவர் ஒப் புக் கொண்டார். பகத்சிங்கின் கருத்துக்களில் ஏற்பட்ட மாற் றமும், பூர்ஷ"வ தேசியவாத சித்தாந்தத்திலிருந்து மார்க்சிய சித்தாந்தத்துக்கு மாறியதும் அவர் 1929 ஏப்ரலில் கைது செய்யப்படுவதற்கு மு ன் பே உருவாகிய அம்சங்களாகும் எனினும், கைது செய்யப்பட்ட பிறகு, பகத்சிங்கு மிகுந்த விடா முயற் சியுடன் மார்க்சிய நூல்களைப் பயின்ருர் . -
அண்மையில் கண்டுபிடிக்கப் பட்ட புதிய த ஸ்தாவேஜுகள் பகத்சிங் சிறையிலிருந்த காலத் தைக் குறிப்பிடுகின்றன. இவை அவரது உலகக் கண்ணுேட்டத் தின் பரிணுமத்தை மே லும் விளக்கமுறச் செய்கின்றன; மற்
றும் இந்த இளம் புரட்சியாளர்.
தனது கிட்டத தட்ட இரண் டாண்டுக் காலச் சிறை வாழ்க் கையின் போது உறுதி வாய்ந்த மார்க்சிய வாதியாக மாறிஞர் என்பதையும் மறுக்க முடியாத படி எடுத்துக் காட்டுகின்றன. பகத் சிங் சிறையில் இருந்த போது தான் படித்த புத்தகங் கள் பற்றித் தயாரித்த ~ குறிப் புக்கள், திய பகுதிகள் ஆகியவற்றிலி ருந்து இது தெளிவாகப் புலன
கின்றது. பின்னர் சிறைத் துறை புரட்சியாள
நிர்வாகத்தினுல் ரின் குடும்பத்துக்கு இந் த க் குறிப்புக்கள் வழங்கப்பட்டன. இவை இப்போது ஹசியாகுவில் உள்ள பரிதாபாத்தில் வாழ்ந்து வரும் இவரது இளைய சகோத ரரான குல்பிர் சிங்கின் வசம் உள்ளன. இ  ைவ 28 ல் எல். மித்ரோகிணிடம் பிர சுரத்துக்காக தரப்பட்டன.
சிறைக்கூடத்தில்தான்
 ைத ப்
அவற்றிலிருந்து எழு
1 976 ° Ꮳuo '
புரட்சியாளரின் குடும்பத்தால் பேணிக் காக்கப்பட்டன என்ப த7 ல் மட்டுமல்லாமல், இவை பகத் சிங்கின் கைப்பட எழுதப் பட்டவையுமாகும் என்ற உண் மையில் இந்த தஸ்தாவேஜவகள் நம்பகத் தன்மை தெளிவாசி நி ரூ பண மாகின்றதெனலாம்: கடைசிப் பக்கத்தில் அதாவது 304 ஆவது பக்கத்தில் இவரது பெயரின் முதல் எழுத்துகளும் "11 - 9 - 1929 என்ற தேதியும் குறிப் பி டப் பட்டிருப்பதைச் காணலாம். 63 ஆம் பக்கத்தில் பகத் சிங்கின் கையெழுத்துப் போ ட ப் பட்டி ருப்பதுடன் * - 7 - 1930" என்ற தேதி யும் குறிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறிப்புகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை! இவற்றை முழுமையாக ஆராய வேண்டும். இவை புரட்சியாள ரின் வளம் மிகுந்த அக உலகத் புலப்படுத்துவதுடன் அவர் எவ்வளவு பாடுபட்டுத் தமது அறிவாற்றலைப் பெருக் கிக் கொண்டார் என்பதையும் கF திகின்றன. இந்த தஸ்தா வெஜ" களை மேலோட்டமாகப் பார்வையிட்டால்கூட இ  ைவ சம்பிரதாய்மான கருத்துக்கரேத் தகர்த்தெறிந்து, இந்த சகாப் தத்தின் சிந்தனைகளை ஏற்க வல் லவராயிருந்த புகழ்மிக்க அருந் தி ற ன் கொண்ட ஒருவரால் எழுதப்பட்டவை என்பதைத் தெரிந்து கொள்ளலாம் ,
பகத்சிங்கின் குறிப்புக்கள் அவரது வாழ்க்கை இலட்சியங் கள் சிலவற்றையும் விவரிக்கின் றன எனலாம். அவர் இந்தி நாட்டின் சுதந்திரத்தை விரும் பினர்; அதனுல்தான் விடுதலிை இலட்சியத்தைப் போற் றி ப் பு கழு ம் பைரன். விட்மன்' வேர்ட்ஸ்வொர்த் போன்ருேரது கவிதைகளின் சில பகுதிகளைப்
38

Page 19
பிரதியெடுத்து வைத்திருந்தார். ரஷ்யப் புரட்சியாளர் ଗ୍ଯାpn† பிக்னரின் நாட் குறிப்பிலிருந் தும், ரஷ்யப் புரட்சியாளரும்,
நரோத்னயா வோல்யா எனும் புரட்சி அமைப்பின் உறுப்பின
ருமான என். ஏ. மொரஸோவ் எழுதிய புத்தகங்களிலிருந்தும் சிறை வாழ்க்கையின் துன்ப துயரங்கள் பற்றி அவர் குறித்து வைத்துக் கொண்ட பகுதிகள் அவரது உணர்ச்சிக்ளுக்கு இசைந் தவையாக இருந்தன. பிரிட்டிஷ் இந்தியாவின்) நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கிக் கொண் டிருந்த ச ம ய த் தி ல் வாழ்க்கை மற்றும் மரணம் ஆகிய பிரச்சின் பற்றி எழுதிய குறிப்புகளும் இதில் உள்ளன
பகத்சிங், தன் வழக்கு விசாரணைக்கு ஆயத் த மா க இருப்பதற்காகச் சட்டப் புத்த கங்களையும் படித்தார்.
வரலாறு, தத்துவம் சம் பந்தமான எண்ணற்ற புத்தகங் களிலிருந்து அவர் எ டு த்த குறிப்புக்கள் மிகவும் சுவாரசிய மானவை. குறிப்பிட்ட ஒரு திட்டவட்டமான முறையை பின்பற்றுவதற்கு அப்போதைய
லைமைகள் அவரை அனுமதிக்க
வில்லை. எனினும் நூல் ஆசிரி
பர்கள் பாலான தர்க்க ரீதி யான கண்ணுேட்டத்தையும், தேர்வு செய்வதில் முன் பின்
முரணற்ற போக்கையும் அவர் கடைப்பிடித்ததை அவருடைய குறிப்புக்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம் . Po: 18 ஆம் it? 6 day Lq.6ئr >ملا علاو 蒿 புரட்சிகளின் சித்தாந்தத்தின்பால் ரூஸோ, தாமஸ்பெய்ன், ஜெபெர்சன், பாட்ரிக் ஹென்றி ஆகியோர் சுதந்திரத்தைப் பற்றி 4 ம் மனிதனின் இயல்பான, மாற்ற வெண்ணுத"உரிமைகள் பற்றி யும் கொண்டிருந்த கருத்துக்கள்
அவர்
பணக்காரர்களுக்கான கம் என்றும் ,
பால் இந்தியப் புரட்சியாளர் கள் பாரம்பரியமாகக் காட்டி வந்த ஆர்வத்தை அவா ஆரம் பத்தில் பாராட்டியுள்ளார்.
இக் குறிப்புக்களில் பெரும் பகுதி தற்கால முதலாளித்துல சமுதாயத்தின் வளர்ச்சி சம்பந் தப்பட்ட விதிகளைப் புரிந்து கொள்ள இந்தியப் புரட்சியா ளர் எடுத்துக் கொண்ட பிர யத்தனங்களைப்பற்றி கூறுகிறது: அமெரிக்காவிலும் பிரிட்டனி லும் முனைப்பாகத் தெரிந்த சமூக முரண்பாடுகளைக் காட்டு வதற்கு பகத்சிங் தேர்ந்தெடுத் திரு ந் த புள்ளி விவரங்கள் அவர் முதலாளித்துவ சமுதாய
அமைப்பை அடியோடு நிராக
ரித்தார் என்பதைக் குறிப்பிடு கின்றன.
இதே சமயத்தில் அவர் பூரிஷ"வ்ா ஜனநாயகக் கருத் தையும் நிராகரித்தார். இக் குறிப்புக்களின் 46 ஆம் பக்கத் தில், அமெரிக்க சோஷலிஸ்டு மோரிஸ் ஹில்கொயெட் எழு திய 'மார்க்ஸ் முதல் லெனின் வரை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி முதன் முதலாக வி. இ லெனினைக் குறிப்பிடுகிறது. இந்த மேற் கோள் பகுதியானது, "முதலா ளித்துவ சமுதாயத்தில் உள்ள ஜன நா யக் மீ பொதுவான ,
கோட்பாட்டு ரீதியான ஜன
நாயகம் அல்ல குறிப்பிட்ட பூர்ஷ"வா ஜனநாயகம் அல்லது லெனின் சொல்லுவது டோல பூர்ஷ"வா வர்க்கத்துக்கான ஜனநாயகமாகும்" எனக் கூறு கிறது. இன்னும் 31 ஆம் பக் கத்தைப் பார்ப்போமானல், பூர்ஷ"வா ஜனநாயகத்தைப் சுவர்க் சுரண்டப்பட்ட மக்கள், ஏ  ைழ மக்களுக்காக விரிக்கப்பட்ட கவர்ச்சியுள்ள வலை என்றும், வஞ்சகப் பொறி

கூறுகின்ற லெனினது
Tairyb
பகத் சிங்
வார்த்தைகளையும் குறிப்பிட்டிருப்பதைக் g) TLD -
சோஷலிசம்தான் சமுதா பத்திற்கு ஒளிமயமான எதிர் காலத்தை வழங்கமுடியும் என்று பகத்சிங் திட நம்பிக்கை கெ ண் டிருந்தார் என்பதற்கு அவர் எழுதிய குறிப்புகள் தெளிவான சான்ருகும் , முதலாளித்துவத்தி வி ரு ந் து சோஷலிசத்துக்கு மாறிச் செல்லும் irjg?ar AFLb பந்தமான சமூக சீர்திருத்தக் கண்ணுேட்டத்தை ஆரம்பத்தி லே)ே அவர் நிராகரித்து விட் Tர் என்பதும் குறிப்பிடத் தக்க சிறப் பு அம்சமாகும். பிரிட்டிஷ்_தொழிற் s "64 sår ஏகாதிபத்தியத் தலைவர் என்று ராம்சே மக்டொனல்டை அவர் அழைத்ததை உதாரணமாகக் குறிப்பிடலாம் 92 0 de
தொழில் கட்சியினர் பிரிட்டிஷ்
7 டா வி வர்க்கத்துக்கு இழைத்த துரோகம் சம்பந்த மாகவும் அவர் குறிப்புகள் எடுத்துக் கொண்டார்: இரண் டாவது அகிலத்தின் சீர்திருத்த வாதத் தலைவர்கள் முதலாம் லப் போரின்போது, சர்வ தேசப் பாட்டாளி வர்க்க இலட் சியத்துக்கு இழைத்த துரோகத் தையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.
முதலாளித்துவம் எவ்வகை யிலும் அபிவிருத்தியடைவது சாத்தியமல்ல என்று பகத்சிங் கருதிஞர் என்பது அவ்ரது பல குறிப்புகளிலிருந்து
நமது தற்போதைய நாகரிகம் மாற்றப்பட வேண்டுமா என்பது பிரச்சினை அல் ல: எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்பதே பிரச்சினையாகும்" என்று அவர் எழுதிஞர்.
மார்க்சியம் - லெனினியத் தின் மூலவர்களாலும், •ወዘé
காண
தெளிவாகி
காலத்தைச் சேர்ந்த மார்க்கிய நூலாசிரியர்களாலும் கவரப் ப்ட்ட பகத் சிங், முதல்ாளித்து வம் தூக்கியெறியப் படுவதும் மனித குலத்தின் நலனை முன் னிட்டு இயற்கை வளங்களின் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத் துவதுமே இனி வரவிருக்கும் உலகப் புரட்சியின் இலட்சியமா கும் என முழங்கும் பல குறிப் புக்களே எழுதி வைத்துள்ளார். அதே சமயம் சோஷலிசத்தின் வெற்றியை எதிர்கால சமுதா யத்தில் மேலாதிக்க வரிக்கமாக விளங்கப்போகிற பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துடன் நேரடியாகப் பிணைத்தார் பகதி ஒ. '69 ஆம் பக்கத்தில் கம்யூ விஸ் டு "அறிக்கை” யிலிருந்து எடுக்கப்பட்ட பகுதியைக் காண லாம். போட்டாளி வர்க்கத்தை ஆளும் வர் கி க அந்தஸ்துக்கு உயர்த்துவதே தொழிலாளி வர்க்கப் புரட்சியில் மேற்கொள் வரப்பட வேண்டிய முதல் நட வடிக்கையாகும்’ எனவே, பகத் ஒர் குறிப்புகளின் ஓர் ஏட்டில் சர்வதேசப் பாட்டாளி வர்க் கத்தின் கீதமான இேன்ட்டர் நேஷனேலும் இடம் பெற்றி ருப்ப்தில் வியப்பில்லை.
சோஷலிசப் புரட்சி பற்றிய பாதை, புதிய சமுதாய நிர்மா ணம் ஆகியவை சம்பந்தமான பிரச்சின்யில் இற்தியப் புரட்சி பாளர் விசேட கவனம் செலுத் தினூர். இவ்வகையில் சோவியத் ரஷ்யாவும் 1917 அக்டோப ரில் ரஷ்யப்பாட்டாளி வர்ச் கம் வெற்றிகரமாக நடத்திய புரட்சியும் அவரது கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன. அவரது குறிப்புக்களின் 36ஆம் பக்கத் திலேயே போல்ஷிவிக் ரஷ்யா என்று முதன்முதலாகக் குறிக் கப்படுகிறது; மற்றும் போல்ஷி விசம் பற்றியும் அக்டோபர் புரட்சி பற்றியும் ப்ல்வேறு ஆகி
e5

Page 20
ரியர்கள் எழுதியுள்ள புத்தகங் களின் பட்டியலும் குறிப்புகள் எழுதப்பட்ட பக்கங்களின் ஒரத் தில் இடம் பெற்றிருக்கக் காண லாம். காவியப் புகழ் பெற்ற இந்த இந்தியப் புரட்சியாளர், சே (ாஷ லி சப் புரட்சியானது மிகம் பெரிய நிர்மானப் பணி களுடன் இணைந்துள்ளதெனக் கருதிஞர், இந்தப் பணிகளின் அடியாழத்தை புரிந்து கொள் வதற்காக. வி. இ. லெனினது புத்தகங்களைத் திரும்பத்திரும் வப் பயின்ருர். அவற்றிலிருந்து, அல்லது இதர ஆசிரியர்கள் இயற்றிய நூல்களிலிருந்து நேர டியாக மேற்கோள்கள் காட்டி
ஞர். 沙
முன்பு வெகுஜனங்களுடன் நெருங்கிய பிணைப்புக்கள் இல் லாதிருந்தவரும் இந்தியப் புரட் சியாளர் முன்னணிப் படையின் பிரதிநிதியுமான அவர் வெகு ஐனங்களே ஈர்த்து வெற்றி கொள்வதுபற்றிய லெனினது கருத்துக்களை வரித்துக்கொண் டது பெரும் முன்னேற்றம் என் பதில் ஐயமில்லை. அதே சமயம், புதிய ஆட்சியை நிலை நாட்டு வதில் கட்சிக்குப் பெரும் பங் குள் ளது; எண்ணிக்கையில் குறை வாக உள்ள வார்க்க உ னரி வு படைத்தவர்கள் தொழிலாளர்களில் விரிந்த வெகுஜன ப் பகுதியின்ருக் குத் தலைமை தாங்கி வழி காட் டுவது அவசியம் ' என்ற லெனி னது கருத்தின்பால் கவனம் செலுத்திஞர், வர்க்க உணர்வு படைத்த இந்தச் சிறுபான்மை யினரே கட்சிக்கு அடிப்படை யாக விளங்குகின்றனர். தொழிற் சங்கங்கள், கூட்டுறவுக் கழகங் கள், இளைஞர் சங்க க் கள் போன்ற பல்வேறு அமைப்புக் கள் மூல மாக கட்சியானது தனது செல்வாக்கை *ஜனங்களிடையே
患食
மலிபன் வீதி,
பக் கருத்துக்களைப் செய்து கொள்ளும்
புரிந்து கொண்டார்.
வெகு பலப்படுத்து
கொழும்பில் "மல்லிகை" ஆசிரியரைச் சந்திக்கும் முகவரிகள்
ஒவ்வொரு மாதத்தினுடைய க  ைட சி வாரத்தில் ஆசிரியர் கொழும்பில் கீழ்க்கண்ட முகவ ரிகளில் தங்கியிருப்பார்: 137, 182, முதலாம் குறுக்குத்தெரு, 24, பூg கதிாே சன் வீதி. தொ?லபேசி: 23712
விரும்பியவர்கள் தொடர்பு
கொள்ளலாம்.
கின்றது என்ற லெனினது மேற் கோளேயும் குறித்து வைத்துள் ளார் பகத் சிங்.
பற்பல நாடுகளைச் சேர்ந்த பல புரட்சி யாளர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த து போல வே பகத் சிங்குக்கும் சிறைக்கூடம் ஒரு பல்கலைக் கழ கமாக, மார்க்சியம் - லெனினி பரிச்சயம் இடமாய் அமைந்தது என்லாம். இத்த மாபெரும் போதனையின் அடிட்
படைக் கோட்பாடுகளின் அடி
யாழத்தை வியத்தகு வண்ணம் குறுகிய காலத்திலேயே இவர் குறிப்புச் களின் இறுதியில் மார்க்சின் புகழ் பெற்ற கோட்பாட்டை எழுதி வைத்தார். "சித்தாந்தி கள் இந்த உலகைப் பற்றி பல் வேறு வழிகளில் வியாக்கிய
னம் மட்டுமே செய்துள்ளனர்
எனினும் இந்த உலகை மாற்று வதே முக்கியமான விஷயமா கும்"
பகத்சிங் புரட்சிப் போராட் டம் பற்றிய மார்க்சிய விஞ்ஞா னத்தை ஆயுதமாகக் கொண்டு போராட்டத்துக்குப் பூ ர ன ஆயத்தமாகிய சம ய த் தி ஸ்

52O இஜக்திய முகுஇதழ்
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 12 - 00
மலர் உட்பட) தனிப்பிரதி و ۴ متحسم
இந்தியா, மலேசியா 18-00
(surrò செலவு உட்பட
வேதனை தரத்தக்க வகையில் அவரது வாழ்க்கை முடிவுற்றது. எனினும்  ைறக் கூடத்தில் அ வர் புரிந்த பெரும் பணி விளுகி விடவில்லை. Tபகத் சிங் சிறை க் கூட த் தி ல் கற்றுக் கொண்ட பல விஷயங்கிளைத் தனது சக கைதிகளும் தெரிந்து கொள்ள எப்படியோ வகை ( செய்து கொண்ட்ார், நண்பர் களுக்குப் பல விஷயங்கள் குறித்து, கடிதங்கள் எ f* . . அக்கடிதிங்க்ள் Fಳಿ? வெவ்வேர் வழிகள் மூலமாக் கொண்டு செல்லப்பட்டன. ldr if itsu gird sofair வீச்சினல் அவர் சிறையில் எழுதிய முக் கியமான சில தஸ்தாவேஜூன் இன்றுவரை கண்ணின் “மணி யெனப் பேணிக் காக்கப்பட் டுள்ளன. பகுத்சிங்கின் சொந்த e9Spi LJAGpuh ()As தல்தாவேஜி களும் தம்றைவுப் பணியில் ஈடுபட்டிருந்த அவரது நண்பர்
திலிருந்தும்,
ளுக்குப் புதிய
ஏகாதிபத்திய
க%ளயும், தோழர்களையும் பெரி தும் உனக்குவித்தன; அவர்கள் குட்டி பூர்ஷாவா புரட்சிவாதத் சதிகள் புரிவதை யும் தனி நபர் பயங்கரவாதத் தையும் போற்றுவதிலிருந்தும் விடுபடுவதற்கும். அவர் கள் மார்க்சியவாதிகளாகப் பரிண மிப்பதற்கும் உதவின.
அரசியல் வானில் ஒர் ஏரி நட்சத்திரம்போல் பிரகாசித் தார் என்று இந்தியக் கம்யூனி ஸ்டு இயக்கத்தின் புகழ் மிகு தலைவரும், இந்தியப் புரட்சி யாளரான பகத் சிங்கின் நண் பரும் சகாவுமான அஜய்கோஷ் பின்னர் எழுதினர். அந் தி ம் கால த் தை ச் சந்திப்பதற்கு முன்பு லட்சோப லட்சம் மக்க இந்தியாவின் உணர்வு, நம்பிக்கை ஆகியவற் றின் சின்னமாகவும் மரணத் தைக் கண்டு இம்மியும் அச்ச மடையாத பெரு வீரராகவும், ஆதிக்கத்தைத் தூள் தூளாக்குவதற்கும் அதன் இடிபாடுகளிலிருந்து மாபெரும் இந்திய நாட்டில் சுதந்திரமா னதொரு மக்கள் அரசை நிர் மாணிப்பதற்கும் வைராக்கியம் பூண்டவராகவும் திகழ்ந்தார் பகத் சிங், 女
伞伞伞伞伞伞伞伞伞伞伞伞 தீர்ப்பு
frr'autb p estreouroseir பொய்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. சாட்சியுள்ள. பொய்கள் / உண்மைகளாக
நிரூபிக்கப் படுகின்றன:
“பூ அரசி"
虫虫虫虫虫虫虫虫虫虫虫虫

Page 21
காத்திருப்பேன்
உனக்காக
பதினைந்தாவதாக இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெளிவந் துள்ள தமிழ்த் திரைப்படம் இலங்கையின் சகல பகுதிகளிலும் இப்பொழுது திரையிடப்பட்டுள்ளது.
இதுவரையும் வெளிவந்த அத்தனே படங்களையும் விட, இதில் தொழில் நுணுக்க, நுட்ப வளர்ச்சி மேலோங்கி இருப்பதைப் பார்க்கும் போது எதிர்கால நம்பிக்கை இன்னும் இன்னும் தீவிர மடைகின்றது. , - . ܫ
இதுகாலவரை வெளிவந்த படங்களை விட, காட்சியமைப்பும் படப்பிடிப்பும் தரமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
கதையம்சம் அப்படியொன்றும் பிரமாதமானதல்ல. சுமார் ரகம் தான், அத்துடன் திடீர் திடீரென படத்திற்காகக் கதாபாத்தி ரங்கள் சாகும் காட்சி ஒப்பக்கூடியதாக அமையவில்லை. பெரிய பெலவீனம் இது,
கதாநாயகனுக வரும் சிவராமனின் நடிப்பு இன்னும் மெரு கேறிஞல் எதிர்காலத்தில் ஈழத்துத் தமிழ்க் கதாநாயகர் தட்டுப் பாட்டை நிச்சயம் நீக்கலாம் எனத் துணிந்து கூறலாம். அழ கான முக அமைப்பு, பரபரப்பற்ற நடிப்பு, இளமைத் தோற் றம் இவையனைத்தும் இவரிடம் உள்ளன.
கதாநாயகி கீதாஞ்சலியிடம் சில கட்டங்களில் செயற்கைத் தன்மை குறுக்கிட்ட போதிலும் நம்பிக்கையூட்டுகின்ருர்,
அப்பாக்களாக வரும் நா. செல்லத்துரை, தர்மலிங்கம் ஆசிரியர் போன்ருேர் குறிப்பிடத்தக்கதாகப் பாத்திரமறிந்து நடித்துள்ளனர். '.
கதாநாயகன் தம்பியாக வரும் விஸ்வநாதராஜின் நடிப்பு நம்பிக்கைக்கே நம்பிக்கையூட்டுகின்றது. நல்ல எதிர்காலமுள்ள நடிகராக இவர் மிளிரப் போவது திண்ணம்.
லத்தீப் தன் பாத்திரத்தைக் குறைவின்றிச் செய்துள்ளார். ருக்மணி தேவியின் பழுத்த அநுபவம் நன்கு சோபிக்கின்றது.
சில பாடல்கள் அற்புதமான கருத்தாழத்துடன் ஒலிக்கின் றன. இசை அமைப்பு அவற்றில் நன்கு கவனம் செலுத்தப்பட் டிருந்தால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.
கமராவைக் கையாண்ட தேவேந்திரன் உண்மையில் பாராட் டுக்கு மிகவும் பொருத்தமானவரே. இயக்குநர் சிந் தி ர னி ன் திறமை சில கட்டங்களில் பிரமிக்க வைக்கின்றது. எடிட்டிங் நன்கு கையாளப்பட்டுள் து.
மொத்தமாகக் கூட்டிச் சொன்னுல் இலங்கைத் தமிழ் த் திரைப்பட உலகம் நிமிர்ந்து எழுந்து கொண்டிருப்பதை இப்படத்
தின் வெற்றி நிரூபித்துவிடும் ★
 

இக் கருத்துக்களுக்குத்
இந்த விவாதத்தில் பங்கு Garcir(Bar†
அனைவரும் தமது கருத்துக்களைப் பகிரங்
கமாக எழுதலாம் . இலக்கிய வளர்ச்சிக்கு கருக்துப் போராட்டமே இன்றியம்ை யாத பசளே: இது நமது கரு த் து. தொடர்ந்து இக் கருத்துப் ப்ோரைச்
செழுமைப்படுத்த விரும்புவோர் தொட
pi Gift.
- ஆசிரியர்
தாழ்வுச் சிக்கல்தான் முக்கிய காரணம்
"தெணியான்" க ட் டு  ைர மூலம் எழுப்பிய பிரச்சினைக் குரிய விவாதமான 'ஈழத்து இலக்கியமும் தலைமையும் அதன் தவறுகளும்" என்பது சம்பந்த ம்ாக மற்றும் இதழ்களில் வெளி வந்துள்ள கட்டுரைகளை வெகு அவதானத்துடன் கருத்தூன்றிப் படித்துள்ளேன்.
வளாகங்கள் மீதும் கலா நிதிகள் மேலும் போர்ப் பிரக டனம் செய்துள்ள ஆரம்பக் கட்டுரைக்குச் சாதகமாகவே மற்றைய கட்டுரைக் கருத்துக் கள் அமைந்துள்ளதையும் நான் உற்று நோக்கத் தவறவில்லை.
வளாகங்கள், கலாநிதிகள் போன்றேர் மீது இப்படியான தாக்குதல்கள் ஏற்படுவது நியா
யமானதா என்பதைச் சற்றுச்
சிந்தித்துப் பார்க்க வேண்டும். கலாநிதிகளைச் சாடுவோரிடம்
நிச் சயமாக மறைந்திருப்பது
தாழ்வு மணிப்பான்மைதான் என் பது எனது தாழ்மையான அபிப் பிராயமாகும். காரணம் இக் குற்றச் சாட்டை முன் வைக் கும் பல எழுத் தா ளர் கள் பட்டதாரிகளல்ல, எனவே பட்ட
தாரிகளிடம் இயல்பாகவே இவர்
களுக்கு வெறுப்பு வளர்வதற்கு
ஆர். வாமதேவன்
ஏதுவாக அமைந்து விடுகிறது: அப் பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலைக் கழகப் படிக்கட்டில் தானும் ஏறி இறங்க வகையற் றுப் போன இவர்களுக்கு வளா கம் என்ருலே வாந்தி வருவது அப்படியொன்றும் அதிசயமல்ல. எனவேதான் தமது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தத் திணறிக் கொண்டிருந்த இவர் களுக்கு இந்த ஒரு பிடி அவல் கிடைத்து விட்டது. 始 உடனே வளாக ஆதிக்கத் துக்கு எதிராகவும் கலாநிதிக ளுக்கு எதிர்ப்பாகவும் ஒரே சமயத்தில் இரட்டை எதிர்ப்புக் களைக் காட்ட் முனைந்து விட்ட Gorf;"
இதில் இன்னுமொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் வளாகம் ஆரம்பிக்கப் பட்டதின் பின்னர் தான் இப்படியான கருத்துக்கள் இலக்கியவட்டாரத்தில் தோன்றி யிருப்பதையும் ஏதோ தற்செய லான நிகழ்ச்சி என நாம் அலட் சியப்படுத்தி விட முடியாது. யாழ்ப்பாணத்தில் இப்படியொரு வளாகம் தோன்றுவதை எதிர்த்த அரசியல் சார்பு கொண்டவர் கள் அது தோல்வியடைந்தவு
岛9

Page 22
டன் வளாகத் தலமையையும் நிர்வாகத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி வரும் இலக்கிய அடித்தளத்தைக் கொண்டவர் சுள் மீது ஏற்பட்ட காரணமாகவே வளாகத்தையும் கலாநிதிகளேயும் இலக்கியப் பின் னணியை ம்ையமாகக் கொண்டு இந்தவிதமான தாக்குதல்கள் ஆரம்பி த்துள்ளனரே என சந்தேகப்படுவதில் நியாயம் இல்லாமல் இல்லே
எனவேதான் இக் கூக்குரல் எடுபடும் என்ற நப்பாசையில் இலக் கியத் தாக்குதல்காேத் தொடுத்துள்ளனர்.
இன்னுமொன்றையும் JTourTLh. PLD5) #To"o இவர் கிய விமர்சகர்கள் கலாநிதிகளே ఫ్లోస్లో தமிழகத்தில் மிகச் றப்பான களரவமுண்டு. அங் குள்ள கலாநிதிகரே விட இவர் ரின் பார்வை, நோக்கு கீன் ளுேட்டம் ஒரு புதிய அடிப்படை கொண்ட சர்வதேசச் சித்தாந் தத்தை அடியொற்றி இருப்பது கண்டு தமிழகத்துப் படித்த வட்டாரமே'இன்று புதிய பார் வையுடன் இவர்களது கருத்துக் களே கேட்க ஆவல் காட்டி வருகின்றது.
கடந்த தசாப்தங்களாக தமிழகத்தின் கருத்துக்கள்தான் தமிழ் கூறும் நல்லுலகத்துக் கருத்துக்கள் என்ற இலக்கிய விலக இவர்களினது பங்குப் பணி சும்மா பட்டதல்
சிறிய நாடாக இருந்தாலும் நமது தேசத்தின் தமிழிலுக்கியக் கருத்துக்கள் வளம் மிக்கவை பின்பற்றத் தக்கவை இ நோக்கக் கூடியவிை என்பதை நடைமுறைச் சாத்தியமாக்கிய ாள் வெறும் படைப்பானி கள்ல்ஸ், இப்படியான ஆராய்ச்சி 'ாேண்ட் வளாக்ப் பின்
தோன்றியதன்
னrயில் இயங்கும் கலாநிதிகள் தான் என்பதை நாம் பரந்த மனதோடு ஒப்புக் கொள்ளத் தாங் வேண்டும்.
முடிவாகச் சிெ ால் ப் போகுல் வளாகங்களேயும் கலா நிதி:ாயும் தவிர்ந்த ஈழத்துத் தரமான இலக்கிய Tri-jig
என்ற கூற்றே அர்த்தற்றதா
இம். நமது நரிய இலக்கிய வளர்ச்சிக்குக் குந்தகம் செய்வ அமையும்.
GT I I, E பின்னர்தான்
ன்று இலக்கிய ngjali i GTIT எதிர்ப்பு, கலாநிதிகள் எதிர்ப்பு ஆரபித்துள்ளதாக மேலே கட்டுரை எழுதிய நன்பர் - பிட்டுள்ளார், இதில் அர Lபின்னணி உண்டு எனவும் குற் நஞ் சாட்டியுள்ளார்.
(பாழ்ப்பாண
யாழ்ப்பாணத்தில் வளாகம் அமைக்கிப்பட ஆயத்து வேல் கள் செய்யப்படும் பொழுது அதற்கு எதிராக அரசியல் இயக் ஆம் நடத்தி மிக மட்டாக்மா முறையில் பிரசாரத்தை முடுக்கி விட்டிருந்த சமயம் ĠiGTriTa, Lin பாழ்ப்ான மண்ணில் தோன் நத்தான் வேண்டும் என்று எதிர்க் குரல் கொடுத்து மிகத் துனிச்சில்ாக நார்வலம் வைத் துப் பொதுக் கூட்டம் நடத்திய சாதனேயாளர்கள் பு தி தியில் நண்பர் குறிப்பிட்டுள்ள லோகாலேப் படிக்கட்டுக்களிலே ஏறி இறங்காத பல மி எழுத்தாளர்கள் முன் நின்று ஆன்றத்ததை இங்கு நாம் குறிப் பிட்டுச் சொல்ல வேண்டும்.
சமூக, பொருளாதார சாதித் திமிர் அடிப்படையினுல்
கம்க்கு மறுக்கப்பட்ட ஆவி தமது பின் பரம்பரைக் குக் கிடைக்கப்பட வேண்டும்

என்ற நன் நோக்கத்திஞலேயே அவர்கள் இந்த இயக்கத்தில் முன்னின்று போரிட்டனர். பல பிடித்த பெரியவர்கள் - கல்வி மர்ன்கள் - கற்றுனர்ந்தவர்கள் அரசியல் எதிர்ப்புக்கு அஞ்சி ஒதுங்கிக் கிடந்த சமயத்தில் பர்மரப் படிப்புப் படித்தி இந் தப் படைப்பிலக்கியவாதிகள் து னிச் சலுடன் களத்தில் காலூன்றி நின்று இயக்கம் நடத்தியது சரித்திர உண்மை, எனவே இந்த இ விக்கிய ப் போராட்ட்த்தில் தாழ்வுச் சிக் கல் இடம் பெறுவதும் ஒரு காரணம் என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லே
வளாகத்தில் இன்று கல்வி கற்கும் மாண்வர்களுக்கும் கடமை புரியும் விரிவுரையாளர் களுக்கும் இந்த ஆக்சுப் பணிக்கு உற்சாகமாக உழைத்த நரசியல் தலைவர்களுக்கும் இந்த உண்மை தெரியும் வளாக அமைப்புப் போராட்டத்தில் இந்த தட்டுப் படைப்பாளிகளின் பங்களிப்பு அப்படியொன்றும் அற்பு தொற் பமானதல்ல. இதை ச் சிலர் நெஞ்சில் நினேவாக வைத்திருப்
து நல்துெ ஆசிரியர்
குருத்துக்கள்
குருக்குத்தி
அடித்துவிடக் TI
எம். ஜெயபாரத்தின்ாம்
விவாத மேடை" கருத்துக் சுனேத் தொடர்ந்து படித்து வரு கின்றேன். தமிழுக்கு இது புது சாக இருக்கில்ாம் கிட்டத்தட்ட இப்படியான ஒரு கயிறிழுப்புப் ப்ோர் சிங்க்ள இலக்கிய வட்
சுத் திங்
பாரத்தில் நடைபெற்று வந் துள்ளதை விஷயமறிந்தவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.
கொழும்பு வளாகம்-பேரா தன் வளாகம் என் ப் பங்கு பிரித்து இலக்கியச் போட்டுவரும் சிங்கள இலக்கியப்
புத்திஜீவிகள் மத்தியில் இப்படி
யான வாதப் பிரதிவாதங்கள் கடந்த காலத்தில் நடந்து வரு வதைப் பின்னணியாக வைத்தே இந்த விவாத அம்சங்களேயும் நான் நோக்குகின்றேன்.
விவாதங்களில் வாதத்தை
முன் நிறுத்தி வாதிக்க வேண்
டுமே தவிர குதுர்க்கம் பேசி நோக்கத்தைத் திசை திருப்பி விடக் ட்ாது. சம்பந்தப்பட்ட வர்கள் இதில் விசேஷ கவனஞ் செலுத்துவது நல்லது
சென்ற இதழில் வெளிவந்த
நெல்லே பேரனுடைய கருத்துக்
களில் தொக்கி நிற்பவை கருத் துக்களல்ல வயிற்றெரிச்சல் கடந்த சாகித்திய மண்டலத் தெரிவில் அவரது தொகுதி பரிசு கிபறவில்லே என்ற ஆதங் வெளியிடப்பட்டதே அன்ஞரது கருத்தாகும் என்பது எனது அபிப்ராயமாகும்"
இப்படி எதையோ மனதில்
வித்துக் கொண்டு எதையோ
குறிபார்த்துக் கல்ல டிப்பது இலக்கிய விவாதமாகாது.
இ இன்னுமொன்றையும் நான்
ங்கு
குறிப்பிட வேண்டும் நடுச் சந்தியில் நின்ருே அல்லது நாலு பேர்களுக்கு மத்தியில் நின்ருே சண்டப் பிரசண்டம் செய்யும் இலக்கிய ஜரம்பவான் கள் இப் படி யான் விவாத
மேன்ட்களில் கலந்து கொள்ளா
பல் ஒதுங்கியிருப்பது அன்ஞரது
கோழைத்தனமோ என நான்
சந்தேகப்படுகின்றேன்
இப்படியான விவாதங்களில்
அவர்கள் கலந்து தமது ।

Page 23
துக்களை முன் வைப்பது ஆரோக்
என்னைப் பொறுத்தவரை மஞ்
கியமான இலக்கிய வளர்ச்சிக்கு நன்மை பயப்பதுடன் என்னைப் போன்ற ஆரம் ப இலக்கிய மாணவர்களுக்கு அது பெரிதும் பயன்தரத் தக்கதாக அமையும்.
ஆசிரியர் அவர்களும் இதில் ஏனே தானே என்றிருக்காமல் பல சிரேஷ்ட எழுத்தாளர்கள் கருத்தாளர்களை அணுகி இந்த விவாதத்தில் அவர்களையும் பங்கு கொள்ள ஆக்கினைப் படுத்த வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை காலத்துக்குக் காலம் எரியும் பிரச்சினைகள் பற்றி இலக்கியக் கருத்து மோதல்களுக்குக் களம் அமைத்துத் தந்தால் அது பல உண்மைகளையும் கருத்துக்களை யும் வெளிக் கொணரச் செய் வதுடன் நமக்கும் இலக்கியப் பிரச்சினைகளைக் இரகித்துச் சிந் திக்க ஏதுவாக அமையும்.
தமிழகத்திலிருந்து வெளி வரும் சக ல சஞ்சிகைகளையும் நான் தவருது படித்து வருகின் றேன்
சிறிய,
நடத்தப்படும் வர்த்தக நோக் கமற்ற சில சஞ்சிகைகளில் இப் படியான இலக்கிய விவாதங்கள் இடம் பெறுவதுண்டு. அதிலும் குறிப்பர்க கோஷ்டி சேர்ந்து "கொண்டு ம ஞ் சள் இலக்கியப் பாணியில் பிடிக்காத எழுத்தா ளர் மீது அவதூறுகளை அள்ளி வீசி அதுவே இலக்கிய விமர்
சனம் என எம்மை நம்பவைக் கப் பகீரத முயற்சிகள் செய்யப்
படுவதுண்டு.
ஆனல் மா ரு க
அதற்கு
இலக்கியத்துக்கா கவே இ லக் கிய நோக்கோடு.
யில் - இலக்கியக்
துப் போரிட களமமைத்துள்ளது.
சள் இலக்கிய அவதூறுப் பிர. சாரங்கள் தொடர்ந்து படிக்கும் போது மனதில் எரிச்சலை மூட்டு கின்றது. ந்மக்குள் நாமே கற் றுத் தேறுகின்ற மஞேபாவம் குறைபடுகின்றது . " . .
விரும்பியோ விரும்பாமலோ கலாநிதிகள் இந்தப் பிரச்சினை
களத்தில்இழுத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் பேசாமல் வாய் மூடி இருக்க இனிமேல் முடியாது. அவர்களும் தப ; கருத்துக்களை ஒளிவு மறைவிடி ஹிச் சொல்ல வேண்டும் அப்பொழுதுதான் இந்த விவாத மேடை பயனுள் ளதாக அமையும்.
மல்லிகையையும் ସ୍ଥି [5 $
விவாதத்தைத் தொ டர் ந் து
மல்லிகை நேர்மையுடன் ஆரோக்
கியமான இலக்கிய வளர்ச்சியை அடிநாதமாகக் கொண்டு பிரச் சினைகளை விவாதித்துக் கரு, துக் களைப் பக்கம் பக்கமாக வைத்
கொண்டு செல்ல வேண்டும். மல்லிகையின் கருத்துக்களுக்கு உடன் பட்டதோ இல்லையோ, சக ல கருத்துக்களும் இந்த மேடையில் இடம்பெற வேண் டும். அ பொழுதுதான் தேசம் முழுவதும் பரந்து வ மும் இலக்
கிய ரசிகர்களின் எண்ணக் கருத்
துக்களை நாம் இலகுவில் புரிந்து கொள்ள வசதியாக அமையும்,
வளாகங்களின் இலக்கிய ஆதிக் க மும் கலாநிதிகளின் தனிப் பெரும் நாட்டாண்மை
யும்" என்ற பிரசசனைபற்றி மாத் திரமல்ல, சகல இலக்கியப் பிர்ச் சினேகள் பற்றி b விவாதங்க ளைத் தொடர் வேண்டும். இனித் தொடர்ந்து வெளிவரும் இதழ் களில் இப்படியான விவாத அரங்குகளைத் தொடர்ந்து நட த் த வேண்டுமென நான் விருழ்புகின்றேன் ,
முதிர்ச்சியடைந்த இலக்கிய போதிகளின் காலத்தைப் போன்ற
ல்ல காலம், இப் பொழுது பள்ளிக் கூடங்களிலும்
4路

அடுத்த இதழ்
பூத்இழன்ருவூதி
ஆண்டுமல்ரி
தயாராகின்றது
கதை, கட்டுரை கவிதை அனுப்புவோர் உடன் அனுப்பி எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். ,
கல்லூரிகளிலும்வளாகங்களிலும் நாடகம், இலக்கியம், கலை சம் பந்தப்பட்டவை பக்டமாகவே வந்து விட்டன. இளைஞர்கள் மத்தியில் இலக்கிய ஆர் வம் இயல்பாகவே வளர்ந்து வருகின் றது. இதை நாம் நன்கு புரிந்து கொண்டு சரியான திசைவழி யில் அவர் களை வழிநடத்த முயல வேண்டும்.
இதில் தவறிஞல் பிரபல திலகங்களின் சினிமாக் கவர்ச்சி யில் இவர்களின் ஆர்வம் திசை திருப்பப்பட்டு விடும் வளரும் குருத்துக்கள் பின்னர் குருக்குத்தி அடித்து நலிந்து போய் விடும்,
இதற்காகவாவது இந்த விவாதங்கள் மிக மிகத் தேவை
என்பதையே நா ன் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். !
அறுபதுக்களில் வெளி
வந்த எழுத்தாளர்களில் பல ருக்கு இருந்த வாய்ப்பு நம்மைப் போன்று வளர்ந்து வரக் கூடிய இளம் எழுத் தா ள த் த முறைக்கு இ ன் று இல்லவே யில்லை.
அந்தக் கால கட்டத்தில் பல இலக்கிய விமர்சனங்கள், இலக்கியக் கூட்டங்கள், நூல் வெளியீட்டு அரங்குகள், எழுத் தாளர் இயக்கக் கலந்துரையா டல்கள் தாராளமாகவே நடை பெற்றுவந்தன:
இலக்கிய ஆர்வமுள்ளவர் கள் அதில் கூடிக் கலந்து கொள் ளவும் த மது கருத்துக்களைச் செழுமைப் படுத்தி வளர்த்துக் கொள்ளவும், தாமே வளரவும் அவை பேருதவியாக அமைந் தன.
ஆனல் இன்ருே நிலைமை வேறு. இலக்கியக் கூட்டமென் ருல் ஆடிக்கொரு தரம் ஆவ ணிக்கொருதரமே இடம் பெறு கின்றது. அதிலும் தலைப்பட்டி னத்தைத் தவிர வேறு பிர தேசங்களில் இன்று முறையாக இலக்கியக் கலந்துரையாடல் களோ கருத்துரைக் கூட்டங் களோ நடைபெறுவதில்லை.
இந்தப் பின்னணியில் வைத் துத்தான் நான் மல்லிகையின் இந்த இலக்கிய விவாதத்தை வரவேற்கின்றேன்.
செழுமையான வி வா த ப் போக்கு நமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதமாகும். இன்னும் * தரமான கருத்துக்கள் இந்த மேடையை அலங்கரிக்க வேண் டும். s'
அதனுல் ஏற்படும் இலக் கிய விழிப்வுணர்ச்சி நாடு பூரா வும் பரந்துள்ள நல்லிலக்கிய நெஞ்சங்களுக்கு இன்னும் நல் லூக்கத்தையும் சந்துஷ்டியையும் நல்கும் என உறுதியாக நம்ப 61) frgh

Page 24
ஜனுழலுமுத்தி.ை
மாறும் மனிதர்கள்!
அந்தப் பிரமுகரை ":"൭ நீண்ட நாட்களாகத் (Թ, պւb, புத்தகக் கடைகளில் அடிக்கடி தான் அவரைப் பார்த்தபடியால் அவரது முகம் எனக்குப் பழகிப் போயிருந்ததால் நா ன வ  ைர அறிந்து வைத்திருந்தேன்.
அந்தக்காலத்துக் கல்கியை வாங்கி, மடித்துப் பிடித்துக் கொண்டு போவதில் அவருக்கு
ஒரு ஆத்ம திருப்தி. தமிழகத் துப் பிரபல எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாங்கிக் குவி தில் அவர் தனிப்டட். ஆ 3 ம் காட்டுவதுண்டு.
புத்தகக் கடைப் பையன் கள் வேண்டுமென்றே அவரைச் சீண்டுவதுண்டு. இல்ங்கைச் சஞ் சிகைகளை அவர் முன் ல் எடுத் துப் போட்டு லிட்டு, 'guurt; கணக்கில் இ ன த ப் போடட் டுமா?" எனக் கேள்வி கேட் பார்கள்,
அவரோ எவ்வித சலனமும் இல் லா மல் புறங்கையால் அவற்றை ஒதுக்கிவிட்டு, பையன் ஒரு கழு குப் பார்வை Jitrřůuntíř.
இவங்கள் என்னத்தை எழு திக் கிழிக்கிருங்கள். இவங்கட் யிலை என்னதை கு r க் Լյւգ-*
கேட்டபையன்கள் மறுபக் கம் போய்விடுவர்.
புதிய ஈழத்து நூல்கள் ?காவது வந்திருந்தால் இதே
曾绩
காட்சி திரும்பவும் நடக்கும். எதிரொலியும் அநேகமாக இப் படியாகவே அமைந்திருக்கும்.
இது எனக்குப் பழக்கப்பட்ட சம்பவமானபடியால் நான் இவ வரைப்பற்றி அதிகம் அக்கரைப் படுவதில்லை,
இதை எப்போதோ மறத்
திருந்தேன்.
ஒரு நாள் புத்தகக் கடைப்
பையன் மூண்டு மாச மல்லிகை
எனக்கு அவசரம் வே ணு ம். சிவத்தம்பி ஏதோ தொடர் கட்டுரை எழுதியுள்ளாராம், நாடகத்தைப் பற்றி. அந்த மூண்டும் வேணும்' என்ருன்.
எனக்கு அதிசயம்;
என்னைப் பொறுத்தவரை அந்த ந் த மாத இதழ்களைத் தவிர, ஒரிதழைக் கூட்" நான் விற்பனவுக் கடைகளில் தொங் கப் போடுவதில்லை. சகல விற்பு னவு நிலையங்களிலுமிருந்தும் விற்காத இதழ்களைத் திரும்பப் பெற்று விடுவேன்.
ஆர்வமுள்ளவர்கள் அந்த மாதமே அந்த மாத இதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது திட்டம். சும்மா அலட் சியமாக விட்டு வைப்பவர்கள் கடைசியில் ஒர் இலக்கிய prafar அநுபவ இழப்புக்கு உள்ளாக வேண்டும். இது அவர்களுக்கு ஒரு தண்டனையாகவே அமைய வேண்டும் என்பது எனது குறிக்
காள , '
 

உண்மையான ாளிகர்கள் தற்செயலாகத் தவற விட்டிருந்தால் அவர்களுக்கு உத வுவதற்கும் நா ன் பின்நிற்ப தில்லை,
*இவ்ளவவு ஆர்வமாக அந்த மூண்டு இதழ்களையும் கேட்கிற வர் ஆர்? என வினவினேன்.
அந்த ஐயாதானும்!
டெயிலி நியூஸில் ஆங்கிலத் சிவகுமா ர ன் அந்தத்
தில் தொடர் கட்டுரை பற்றி சிலா கித்து எழுதியிருந் தாராம். ஆகவேதான் அதை எப்படியும் படிக்க வேண்டும் என்று அந்த ፰፬ ዚu fr அசைப்படுகிருராம், விலக்குத் தரமுடியுமா?" என்று கேட்டான் பையன்,
பழைய பிரதிகள் கடையில் விற்பது மல்லிகை வரலாற்றில் கிடையாது. வேண்டுமென்ருல் நேரில் மல்லிகைக் காரியாலயத் திற்கு வரச் சொல்லவும்" எனச் சொல்வி வைத்தேன்.
፴Gö கிழமையாக பையன் என்னைத் நச்சரித்தான். எனக்காக இதைச் செய்யுங்க ளேன் எனக் கெஞ்சினன்.
முதலில் சொன்ன பதிலையே திரும்பத் திரும்பச் சொன்னேன்.
பின்பும் ஒரு வாரம் கடந் 岛岛i· *
Fru Jtåstrevlib மல்லிகைக் காரி
ஒரு நாள் அதே ஐயா,
யாலயத்திற்கு என்னைத் தேடி
வந்தார். த ன் னை அறிமுகப் படுத்திக் கொண்ட அவர் மேற் படி இதழ்களை விலைக்குத் தரும் படி என்னைக் கேட்டார்.
விற்பனைக்குத் தரக்கூடிய தாக மேற்படி s மூன்று இத்ழ் களும் என்னிடம் அப்பொழுது இல்லை;
இ லக் கி ய
அந்தப்
விரித்தேன்
"முடியும் பில் ஒன்று செய் யுங்கள். எமது பாதுகாப்புப் பிரதிகளில் மூன்றைத் தருகின் றேன் இங்கேயே இருந்து படித் துப் போட்டுத் தாருங்கள்" என
நான் கையை
கடைசியில் ஆலோசனை கூறி னேன்.
அவருக்குள்ளேே L3 ז60 מ* சங்கடம்.
கடைசியில் ஒப்புக் கொண்ட அவர் காத்திருந்து அந்த த் தொடர் கட்டுரையைப் படித்து முடித்து விட்டுப் போளுர்,
அவரை அப்போது Luftriats எனக்குப் பரிதாபமாக இருந்தது. இது நடந்ததின் பின்னர் வழி தெருக்களில் நானவரைப் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் சந்தித்திருக்கின் றேன்.
ஒரு புன்முறுவல்: ஒரு தலை யசைப்பு. ஒரு விடை பெறும்
பார்வை,
பரஸ்பரம் இருவரும் பரி
மாறிக் கொள்வோம்:
புத்தகக் கடைகளிலும் அவ
 ைர ச் சந்தித்திருக்கின்றேன்.
ஆனல் பேசுவதில்லை.
இன்று ஈழத்துப் புத்தகக் களை வாங்குவதில் சஞ்சிகை களைப் படிப்பதில் - அவர் ஐயா காட்டும் ஆர்வம் பிர மிக் க வைக்கின்றது.
- சில சமயங்களில் சிலரை நாம் தவழுகப் புரிந்து கொண்டு விடுகின்ருேம். ஆணு ல் உண் மையை நாம் நேரில் உணரும்
போது நமது மனம் எப்படி
யெப்படியெல்லாம் த ப்பு க் கணக்குப் போட்டு விடுகின்றது என்பதைக் கண்டு கொள்ளுகின் Gapub.

Page 25
மூதூர்,
parroznar- புதுமையான
கேள்விகள் விரும்பப்படுகின்றன
ஒவ்வொரு
கேள்விகளுக்குப்பின்னும் ஒவ்வொரு நெஞ் முண்டு என்பதை 蠶 :: :
ல்ட்டேபிள் உங்கள்து கேள்விகள் அங்மங்
கால் நல்லது இத் தொடர்பு நம்மே லும் நெருக்கப்படுத்தும்
இன்றைய இலக்கிய வளர்ச் சிக்குப் புதுக் கவிதை எவ்
வாறு தனது பங்களிப்பைச்
செய்கிறது
விாகிருமுகமட்
புதுக் கவிதை இலக்கியமா Tori (at arrior II. T. In இன்று புதுக் கவிதையில் இலக் கியத் தரம் உயர வேண்டும் என்ற கருத்து நிலவத் தொடங் கியுள்ளது. இது ஒருபடி முன் னேற்றம் சிறுகதையும் ஆரம்ப காலத்தில் இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதில்பே, இன்று நிலமை வேறு வானம் ப்ாடி வட்டாரம் எனத் தென் னகத்தில் உதித்த புதுக்கவிதைக் குழுவினரின் இலக்கியப் பங்க விப்பு வருங்காலத்தில் குறிப் பிடக் கூடியதொன்ருக அம்ை
חIII
சமசமாஜக் கட்சித் தவர் களான தோழரிகள் என் எம் கொல்வின் போன்ருே
-ஆசிரியர்
தாங்கள் இன ங்
டோமிரிக்ஜீவா
ரைப் பற்றி உங்களது அபிப்பி F זהחליף זה, חוו ווח ח
தட்சணுமூர்த்தி
FIT துறை நீலாவனே.
முதிர்ச்சியடைந்து அரசியல் தவர்கள் இந்தத் தேசத்திற் காக த ம்ன் அர்ப்பணித்த தொண்டர்கள் ஆரம்ப காலத் திலிருந்தே உழைக்கும் மக்களுக்
போராடியவர்கள். 1984-ல் என். ம் ஆப்பொழுது அமைந்த இடதுசாரி முன்ன
Eமை இடை நடுவில் காட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால் இந்த நாட்டின் அரசியல் தலே விதியே வேருக இருந்திருக்கும். கொல்வின் தவசிறந்த பேச் FFTr
கண்டு
வைத்துள்ள இாேய தலே முறையைச் சேர்ந்த படைப் பாளிகள் ஐவரின் பெயரைக் சுறுங்கள்
+।Hकrfता था
s ாஜயோகி
S S S S S S S S S S S S S S
,
 
 
 
 
 

சாந்தன் முருகபூபதி, திக்கு வல்லக் கமால் ஆக்சி கந்த சாமி, ராஜ குரீகாந்தன்.
தமிழர் விடுதல்த் கூட்டணி பின் தனி ஈழத் தமிழ் நாட்டுக்
கோவும் பற்றி என்ன கருது
கின்றிர்கள் மூங்கானே வி. ராஜயோகி
வெறும் தேர்தல் கோஷ்ம் இது அடிப்படை ஆதாரமற்து
கோஷத்திற்கான் கோஷ்மிது.
| L வாம் ஆணுல் நடைமுறைச்
சாத்தியமற்றது. டார்ச்சி வசப்
படாமல் இஆேர்கிள் சிற்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் அரசியல் ரூபமாக இது சாத்தி யப்படும் சங்கதியா, என்ன? நில வள ம், பொருளாதார அமைப்பு ஒரு தனி நாட்டுக் குத் தேவையாவின் பிரதேசம் மக்கள் தொகை, உற்பத்திப் பொருட்கள் உண்டா இல்லேயா
து போசிக்க வேண்டும்
நமது வணிகர்கள் இன்று கோடிக்கினக்கான பணத்துை மூலதனமிட்டு ॥ சித்திற்கு அப்பால் வர்த்தகம் செய்கின்றனர். வர் கிள் து எதிர்கால்ம் இலட்சத் தவிர தர்ன் அரசாங்க் நாழியர்களின் எதிர்கால வாழ்வு பரந்துபட்டு வாழும் தமிழ் மக்களின் வருங் கால வாழ்வின் இப்படியாகப் பலதையும் சீர் துக்கிப் பார்த்தே நாம் சிந்திக்க வேண்டும்.
நாலரைக்கோடித் தமிழக்தி
தமிழ்ர்களே இன்னும் தவி நாட்டுக் கோஷம் எழுப்ப முன் வரவில்லே. நாம் இதில் யிருப்பதுதான் வேடிக்கை
எதற்கும் நாம் இடையூறு செய்யக் கூடாது என்பதற்கா ஆவே ஒர் ஆண்டு கோஷ்பெழுப் விகளுக்கு அவகாசம் கொடுத்து
உத்தரவாதம்
முந்தி
,
ஒதுங்கியிருக்கின்ருேம். பொறுத் துப் பார்ப்போம்.
நம்மைப் பொறுத்தவரை ஒன்றைத் தெளிவாக வே சொல்வி வக்கின்ருேம் தமிழ் மக்கள் இந்த மன்ன்ரில் இரண் டாம் தரப் பிரஜைகளாக உரி மையற்று வாழமுடியாது அதிை முழுமூச்சுடன் எதிர்க்கின்ருேம் தமிழ் மக்களுக்குச் சகல உரிசை
புேம் பெற்றுத் தரத்தக்க பிரதேசசுயாட்சி முறையே ஆகச்
சிறந்தது. தனிநாட்டுக்காரர்கள்
கட்ைசியில் இந்த முடிவுக்குத் தான் வருவார்கள்
* உங்களுக்கு GNIFI"...mi ili;
அடிதங்கள் பயமுறுத்தில் ருெட்ட்ங் கடிதங்கள் வருவ துண்டா?
| சா மனுேதரன் இடையின்டமே வருவ துண்டு பயமுறுத்தில் கடிதங்
க்ள் எழுதுவதுதான் தமிழரின்
தரிப் பெரும் வீரமாச்சே! சிவர் படம் வரைந்து கூட அனுப்புவார்கள். வேறு சிவர்
நீ பிறந்த சாதியை இழிந் து ரத்தும் எழுதுவதுண்டு கீழே கையெழுத்தோ முகவ ரிய்ே இருக்காது. நான் சிரித் துக் கொண்டே கிழித்துப் போட்டு விடுவேன். ஒன்றைத் தெளிவாகச் சொல்விக் கொள்ள் விரும்புகின்றேன். இது பனங் காட்டு அரசியல் நரி இந்தச் சவப்புகள் இதற்குப் பழகிப் பானதொன்து.
உங்காது அநுபவமுத்திலுர
கள் ஐந்து, ஐந்து இதழ்களில் வெளிவந்துள்ளன், போல மற்றவர்களின் அநுப iங்களேயும் வெளியிட உத்தே ரா? அல்லது உங்களுடையவிது மாத்திரம் வெளியிட்டுத் தனி நவம்பேணுவதுதான் நோக்கமா?
புங்குடுதீவு, கு. திருநாமம்
- If

Page 26
அநுபவங்கள் பலாகம் பல விதம், ரசனேயான= ரளிகர்கள் சுவைத்துப் படிக்கத்தக்க எந்த அநுபவமாக இருந்தாலும் எழு தலாம். அத்துடன் வாழ்க்கை யில் நடந்த மறக்க முடியாத சம்பவம், சிறிய நிகழ்ச்சிகரிேக் கூட எழுதி அனுப்பலாம் எதி தொடரைப் பாராட்டிப் பலர் எழுதுகின்றனர் நானும் நான் இட்ர்ப்பட்டு வளர்ந்து ವ್ಹಿ துள்ள பாதையைத் இரும்பிப் பார்க்க இது ஒரு சந்தர்ப்பமான படியால் எழுத்தில் அதை வடிக் கின்றேன். இதைத் தனி நல் மென்ருல் நான் என்னதிலிங் சொல்வது?
* நான் ஓர் அமைச்சராகுல் என்ன நடக்கும்? நீங்கள் ஒரு மந்திரியானுல் என்ன செய்வீர் #ffbfff
வல்: ச. குமார்
நீங்கள் அமைச்சந்து இந்த் நாட்டில் கேள்வி ஆமிர் சர் என்ருெரு புதுப் பதவி அர சாங்கத்தில் தோற்றுவிக்கப் படும் நான் மந்திரியானுல் - நான் உங்களப் போல பசில் கனவு காண்பவனல்ல. எனக்குத் தினச்ரி நிறைய வேலே உண்டு.
உங்களது நாவாவது அது பவத்தில் வெளிவந்த கட்டு ரையில் அந்தச் சொறி நாயைத்
கட்டிப் பிடித்துக் கொண்டு தாங்
கிய இலக்கிய நண்பன் யார்?
மன்ஞர். எஸ். திரவியம்
அந்த இலக்கிய நண்பனின் பெயரைச் சொல்லலாம். ஆளுன் ஒரு யேரசனே. அந்தச் சொறி நாயின் கேளரவத்தைப் பற்றித் தான் யோசிக்க வேண்டியுள்ளது.
அமெரிக்காவின் மனித நட்ரி மைகள் இயக்கம் பற்றி கிங் களது அபிப்பிராயம் என்ன?
எஸ். பாலச்சந்திரன் உரும்பர்ாய்.
மார்ட்டின் லூதர் சிங்கைத் கொலே செய்தி தம்து ஐகுதி பதி கென்னடியைச் சட்டுக் கொன்ற சிலியில் அலென்டே பைக் கொலே செய்வதற்குச் சதி செய்த சி. ஐ. ஏ. யின் திருவிளே பாடல்கள்ே அனுமதித்த அமெ
ரிக்க ஆளும் கூட்டம் த விக
மனித உரிமைகள் பற்றிப் பேசு வது உங்களுக்கே வேடிக்கையா கத் தென்படவில்லேயா?
சங்கானேயில் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருக்
கும் எமது சனசமூக EJu ஆண்டு விழாக் கூட்டத்துக்குத் திமே தாங்க உங்களே அழைத் தால் அழைப்பை ஏற்றுக்
சங்கா: ப. ராஜன்
|L யக் கேட்டுக் கேட்டு தடங்களது காது புவிக்கவில்லேயா, இன் ம் தமிழன் பேசிப் பேசிக் கட்டுப் போவதைத் தவிர, அவரிடம் ட்ருப்படியாகச்செய்ய என்ன இருக்கிறது என நான் யோசிப்பதுண்டு செயல் ஊக் கத்திற்குப் பேச்சு அவசியமா ல் பரவாயில் லே. நமது 畿 வெறும் காவ விரயம் இதையும் மீறி நீங்கள் என்னே அழைக்க விரும்பினுல் தொடர்பு கொள்ளுங்கள். * இலக்கிய வாதிகளிடையே நீங்கள் அசாதரண் தன்னம்
LEGG TGIFTIGITAJ TITGL r.
■
BRIT" TITI", த, தவசிகன்
இதை நீங்கள் என்னேக்
கேட்டுத்தானு தெரிந்துகொள்ள
 
 

SS T S S SS S S S S SLS S S S S S L S S L L S SDSDDSSS SL SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS
சுன்னுகம் ப. நோ. கூ. சங்கம்
சுன்னுகம் (வரைவுள்ளது)
事革 நுகர்ச்சிப் பொருட்கள் விநியோகத்தில்
ता, बा முப்பத்திஞன்கு ܒܥܐ நுகர்ச்சிப் பொருள் விநியோக நிலையங்களைக் கொண்டு, தன்னிகரற்று விளங்குகின்றது.
புடைவை, கட்டிடப் பொருள், கிராமிய வங்கியுடன் பாண், பீடி, காகித உறைத் தொழிற்சாலைகளையும் சிறப்பாக நடத்தி வரும்
கூட்டுறவு ஸ்தபானம்
(ireeting (Cards
CEY LON PICTORIALS features the finest selection of top quality cards for every occasion. It
CHRISTMAS & NEW YEAR CARDS BIRTHDAY CARDS
KIDDY CARDS
FUNNY CARDS
SWEET HEART CARDS ANR SPECIAL OCCASION CARDS AWAILA BLE
The best and most beautiful variety in a wide range T HHTLLLL HHTL HHLLa CCGGLLS HGLCCCT LSC LLLLL SS LLCLLS
(LY ON DI(TODALS
HEMAS BUILDING YORK ST. COLOMBO-1 P26820 ::סחר)ח

Page 27
| Valikai
Registered as a News,
8 மல்லிகையின் ! சிறப்புடன் தொடர
寶 மகாராஜா (வரையறு * தரமிக்க அழகு சா
* x S Lon (எஸ் லோலி
s இணைப்புகள்
幫
விவசாயக் கிருமி ந
நபிஸா றபர் ருேல
டங்ஸ்ரம் (Tungsra
பெரக் (Beree) பற்.
O அனைத்திற்கும்
* விண்பனேயாளர்கள் விற்பனையாளர்கள்
* விநியோகஸ்தர்களு
8 - H
O O கல்கி சன் 147. ஸ்ரான்லி வீதி, | யாழ்ப்பாணம். ' போன் 7711
* 飞
、 234A, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பா வெளியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களா ரீ லங்கா அச்சகத்திலும் அட்டை யா. மாநகர பல சிடப்பெற்றது.
 
 

S. July 1977 سمي____ paper in Sri Lanka. ***
இலக்கியப் பணி வாழ்த்துகிருேம்
58 ljuto L} நிறுவனத்தின் தனப் பொருட்கள்
ண்) பைப் வகைகள் *
ரசின்ரிருள்
序
m) பல்ப் வகைகள்
pit steps assir
|
. 1 : 11 1 5. Αν τον
துமி வி 11 ο ΙΙ το ο * Το I
b).
να 5:11܁ܐ
முகவரியில் வசிப்பவரும் ஆசிரியரும்,
ல் மல்லிகை சாதனங்களுடன் யாழ்ப்பாணம் நோக்குக் கூட்டுறவு சங்க அச்சகத்திலும் அச்