கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1980.03

Page 1


Page 2
".،ن s உங்களது 2 -னவு வகைகளுககான
அரிசி வகைகள் தானியங்கள்
மா வர்க்கங்கள்
தகர உணவுகள்
சில்லறைச் சாமான்கள்
சாய்ப்புப் பொருட்கள் மற்றும் பொருட்களின தும்
மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரிகள்
aiä666ä6i JT 66LTi Git)
151. ஐந்தாம் குறுக்குத் ,ெ
கொழும்பு - 11. தந்தி: முழுமதி ஹலோ: 32962

i
அன்புள்ள அபிமானிகளுக்கு
வாழ்க்கைச் செலவு ஏற ஏற, பொருட்களின் விலை உயர உ ய ர "ரில்லிகையையம் பாதிக்கவே செய்கின்றது. <罗š என்ன கஷ்டங்கள் வந்த போதிலும் எந்த விதி 10ான நெருக்கடிகள் நம்மை அலைக்க ழித்த போதிலும் நாம் சலனப் பட்டோ, பின் வாங்கியோ விட மாட்டோம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கு உறுதியாக கூறி வைக்க விரும்புகின்ருேம். இ த் த னே சிரமங்காையும் நாம் பொறுத்துக் கொள்வதற்கு எமக்கு உந்து சக்தியாக விளங் குபவர்கள் நீங்கள்தான் என்ற நன்றி உணர்ச்சியை நாம் என்
றுமே மறந்து விடுவதில்லை.
கடந்த பல ஆண்டுகளாக மல்லிகையைத் தமது வாழ்வின் ஓர் அம்சமாகக் கருதி வரும் ஆயிரக் கணக்கான இனிய இலக் கிய நெஞ்சங்கன்தான் ந ம து பிரதான பலம் என்பதும் எமக்
குத் தெரியும். '
வலிந்து நாம் மல்லிகையை யார் மீதும் திணிப்பதில்லை.
அதே சமயம் ரஸிக அபி மாணிகளை இ ன ங் காண்பதில் நாம் அசட்டையாகவும் இ ந்து விடவில்லை. இந்தக் 蠶 சூழ்நிலையில் fb to gil கரத் தை இன்னும் வலுவாகப் பற்றிப் பிடியுங்கள் என்பதே நமது வேண்டுகோளாகும்
குறிப்பு:
அடுத்த இதழ். கவிஞர் பட்டுக்கோட்டையின் பொன் ஞண்டுச் சிறப்பிதழாக மலரு கின்றது.
ஊ ஆசிரியர்

Page 3
அந்தரங்கங்களும் மெளனங்களும்
த மி ழ க த் துத் தேசிய" தமிழ்ச் சஞ்சி  ைக களை த் தொடர்ந்து படித்து வருபவர் களுக்கு ஓர் உண்மை புரிகிறது. அதாவது தாங்கள் விரும்பி -- தங்களது இஷ்டத்திற்குத் தரக்
கூடியவைகளைத்தான் வாசகப் பெருமக்கள் படிக்க வேண்டும் என்ற தலை கனத்த போக்கு
பெரும்பாலான சஞ்சிகைகளின் உட்கிடக்கையாக இரு ட் பது போல எனக்குப் படுகின்றது.
தங்களது தமிழக களைப் பற்றி அவர்கள் இந்தக் கருத்துக் கொண்டிருப்பதைப் பற்றி அங்குள்ளவர்களே சரியா கச் சிந்திக்க வேண்டும். ஆனல் இந்தத் திமிர்த் திணிப்பு மனே பாவத்தைக் கடல் கடந்த தமி ழர்கள் மீது - குறிப்பாக எம் மீது - திணிப்பதை நாம்வன்மை யாகக் கண்டிக்க வேண்டும்,
இந்த நாட்டு முற்போக்கு இலக்கியவாதிகள் இங்கு வந்து குவியும் கழிசடை இலக்கியங் களைத் தடை செய்ய வேண்டும் எனப் பேரியக்கம் நடத்துவதின் அடிப்படை நோக்கமே இதுவா கத்தான் இன்று இருக்கிறது.
பேராசிரியர்நா.வ்ா. இறந்து
இரண்டு மாதங்களுக்கு மேலா கின்றது. ஆனல் இதுவரையும் இந்தத் தமிழகத்துத் தேசிய சஞ்சிகைகள் = குமுதம், கல்கி,
வாசகர் ,
ஆண்டுகளாக நடத் தி
டொமினிக் ஜீவா
சாவி, இ த யம் பேசுகிறது. தினமணிக் கதிர், விகடன், குங் குமம் - ஒன்றுமே அ வரை ப் பற்றி எழுதவில்லை. குறிப்புக்
கூடப் போடவில்லை.
தினமணிக் கதிர் மணிவண் ணன் கேள்வி - பதிலில் ஓர் இடத்தில் மாத்திரமே ஒரு குறிப் புக் கண் சிமிட்டிக் காட்டியது.
மற்றும் சிற்றிலக்கிய ஏடு கள் தாமரை தீபம் போன்ற வைகள் விரிவாகத் தமது அஞ் சலியை வெளியிட்டிருந்தன.
பேராசிரியருடைய அரசி யல், சமூக, இலக்கியக் கருத் துக்கள் இந்தத் தேசிய சஞ்சி
கைகளுக்குப் பிடித்தமில்லாமல் இருக்கலாம். ஓரளவு வெறுப் பைத் தரக் கூடியதாகக் கூட இருக்கலாம். ஆனல் கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழ் மண் ணுக்கு அந்த மனிதன் செய்த தொண்டை எப்படி மறந்துவிட முடியும்? 'ஆராய்ச்ச்சி’ என்ற ஆய்வு இலக்கியச் சஞ்சிகையைப் பல சிரமங்களுக்கு மத்தியில் பல வந்த அந்தப் பெரு மகனின் தமிழ் ஆர்வத்தை எப்படி இருட்டடிப் புச் செய்துவிட இயலும்?
கர்ணுடக மாநிலத்தில் காரி வளர் பல்கலைக் கழகத்திற்கு நாட்டார் இலக்கிய ஆய்வுப்

பணிக்காக அவர்களே விரும்பி அழைத்த அந் த விஞ்ஞான ஆராய்ச்சி உள்ளம் படைத்த நா. வா. அவர்களைத் தெரியவே தெரியாது என ச் சொல்லப் போகின்றனவா இந்தச் சஞ்சி கைகள்?
இன்று பிரபல எழுத்தாளர் என இந்த ச் சஞ்சிகைகளால் வர்ணிக்கப்பட்டு, வள ர் த் து விடப்பட்ட நட்சத்திர எழுத் தாளர் சுஜாதா *கரையெல் லாம் செண்டகப் பூ" என்ருெரு கதையை லிகடனில் எழுதி வந் தார். அதன் முடிவுரையாகச் சிலருக்கு நன்றியும் தெரிவித்தி ருந்தார். அதில் தலையாக நன் றிக்குரியவராகப் பேராசிரியர்
நா. வானமாமலேக்கு த ன் றி தெரிவித்திருந்தார். அவரது அயராத உழைப்பால் சேகரிக்
கப்பட்ட நாட்டுப் பாடல்களைத் தான் இந்தத் தொடர் கதை யில் எ டு த் தாண்டிருப்பதாக அந்த நன்றியுரையில் குறிப்பிட்
டிருந்தார் சுஜாதா. - இ ந் த எழுத்துக்கள் எல்லாம் விகட னில் பெட் டி கட்டி வந்த
எழுத்து வடிவங்கள்.
தொடர்ந்து விகடன த்
துருவித் துருவிப் பார்த்தேன், திரு. வானமாமலை மறைவைப்
பற்றி ஒரு செய்தி கூட இது வரை வெளியிடவில்லை;
தமிழகத்துச் சினிமா நடி
கர்கள் அ ல் ல து நடிகைகள்
மேக்கப் ரூமில் அந்தரங்கமாக யாருடன் பேசிக் கொண்டிருந் தார்கள் எனக் கிசு கிசு" க்கும் இந் த ச் சஞ்சிகைகள், நமது காலத்தில் நம்முடன் வாழ்ந்து மறைந்த ஒர் ஆராய்ச்சி அறி ஞனின் மறைவைத் திட்டமிட்டு
இருட்டடிப்புச் செய்திருக்கின் றன என்பதை "எண்ணும்போது எ ன் னை ப் போன்றவர்களால்
மன உணர்ச்சிகளைக் கட்டுப்
றேன்
படுத்த முடியவில்லை. "தமிழகத் துச் சஞ்சிகைகளே உங்களுக்கு மனச் சாட்சிக்குக் dialபஞ்சமா வந்துவிட்டது? எனக் கேட்கத் தோன்றுகின்றது:
இந்த நாட்டில் இருக்கும் நாங்கள் மடையர்களோ நன்றி கெட்டவர்களோ அல்ல என்ப தற்காகத்தான் இந்தக் குறிப் புகளை இங்கு கூறிவைக்கின்
நீண்ட நாட்களுக்கு எமது தலைமீதும் தமிழகத்துத் தரமான வாசகர்கள் உச்சி மீதும் மிள காய் அரைக்க முடியாது என்
பதைச் சம்பந்தப்பட்ட சஞ்சி கைாள் புரிந்து கொள்வது இலக்கியத்தின் பேரால் அவர்
சளுக்கே நல்லது.
குமுதத்தில் கண்ணதாசன் "இவ்வாரம் சந்தித்தேன்" என் ருெரு பகுதியைத் தொடர்ந்து எழுதி வருகிருர். அந்தத் தொ . ரில் மூன்ருவது கட்டுரையாக நமது அமைச்சர் இராசதுரை பற்றியும் எழுதி இருந்தார். அமைச்சராவதற்கு முன்னரே கண்ணதாசனின் நண்பர் இராச துரை. பல தடவைகள் தமிழ கத்திற்குச் சென்று வந்திருக்கி ரு?ர். அவரது புகைப் படங்கள் பல பத்திரிகைகளில் வெளிவந் தும் இருக்கிறன. அந்தக் கண்ண தாசன் கட்டுரையில் அமைச்சர் தொண்டைமான் பட த்  ைத ப் பிரசுரித்து விட்டு கீழே அமைச் சர் இராசதுரை எனப் போட் டிருந்தது குமுதம்.
இந்தச் சஞ்சிகையாளருக்கு யாரைப் பற்றியும் எதைப் பற் றியுமே வித்தியாசம் தெரிய வேண்டியதில்ல்ை, காலத்திற்குக் காலம் - மார்க்கட் , நிலவரம றிந்து - தங்கள் தங்கள் நிலைப் பாட்டை வித்தியாசப்படுத்திக்

Page 4
கொண்டாலே என எண்ணிக் முர்கள் போலும்;
போதுமானது கருமமாற்றுகி
பக்கத்து நாடு; கடலால் ஒரு சில மைல்களால் பிரிக்கப் பட்டுள்ள தேசம். தமிழகத் தைத் தவிர்ந்து தமிழர்கள் அதிகப்படியாக வாழும் ஒரு பிரதேசம். இப்படியான எமது நாட்டைப் பற்றி எந்தவிதமான அடிப்படை அறிவுமே இல்லா மல் தமிழ் கூறும் நல்லுலகைப் பற்றியும் சர்வ தேச விவகாரம் பற்றியும் சும்மா கதையளப்பது
தமது பணத் தொந்தியை நிரப்
பிக் கொள்வதற்கே த வி ர, தமிழ் வளர்ச்சிக்காக அல்ல என்ற உண்மையை நாம் எப் போதோ உணர்ந்து விட்டோம் என்பதற்கு அறிகுறியாகவே தமிழகச் சாக்கடை இலக்கியல் சளைத் தடை செய் என இயக் கம் நடத்தி கடந்த அரசாங்க காலத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்தோம். அர சாங்க மாற்றம் காரணமாகத் திரும்ப வும் அந்தச் சாக்கடைக் கழிவு நீரெல்லாம் நமது வீட்டு முற் றத்துக்குள் பிர வே சித் து ஊன ரயே கலங்க அடித்து வரு கின்றது. நாற்றம் எமது இளைய தலைமுறையைப் பீடித்து அவர் களை மயக்கத்துக்குள்ளாக்கி விடு கின்றது,
நாம் தற்காலிகமாகப் பின் னடைந்து விட்டோமே தவிர தோல்வியடைந்து ஓய்ந்துபோய் விடவில்லை:
தொடர்ந்து போராடுகின் ருேம். ஏனென்ருல் கடைசியில் வெற்றி பெறுகின்றவர்கள் நாங் களாகத்தான் இருப்போம் என் பது எமக்குத் திடமாகத் தெரி έγιός ہے۔
f
மாத்திரமல்ல,
இந்தச் சாக்கடை இலக்கிய இறக் கு ம தி க்கு எதிரான போராட்டம் வெறுமனே எழுத் தாளர் சுளுக்குரிய போராட்டம் ஈழத்து எழுத் தாளர்களுக்கு மாத்திரம் உரிய போராட்டமுமல்ல. ஒரு நல்ல ஆரோக்கியமான கலை - இலக் கிய வளர்ச்சியைத் தமிழில் விரும்பும் சக ல ஆர்வமிக்க மக்களினது போராட்டமாகும் இது, பல ஆண்டுகளாக முற் போக்குக் கருத்துக்களைத் திட்ட மிட்டு ஒதுக்கி, தமது நாட்டி லும் எமது தா ய க த் தி லும் ஆரோ க் கி ய மா ன கருத்து
வளர்ச்சி ஏற்பட விடாமல் வெறும் பணம் பண்ணும் சாத னமாகச் சஞ்சிகைகளை உரு
வாக்கி வியாபாரம் செய்து வந் துள்ள வலிமை மிக்க "பேப்பர்" சக்திகளுக்கு எதிரா க நாம் தொடுக்கும் இந்தப் போராட் டத்திற்குத் தமிழகத்திலுள்ள பல இலக்கிய நல் நெஞ்சங்கள் தமது தார்மீக ஆதரவை நல் குவதையும், கருத்து வடிவத் தில் நம்முடன் இணை ந் து பிணைந்து ஓரணியில் நிற்பதை யும் இன்று நாம் தெளிவாகக் காண்கின்ருேம்.
எனவே இது பொது ப் போராட்ட வடிவத்தை இன்று எடுத்து வருகின்றது. சிற்றிலக் கிய ஏடுகள் இன்று வலிமையு டன் வளர்ந்து வருவதற்கான
நல்ல சூழ் நிலை கூட இந்த நிலையை எடுத்துக் காட்டும் வெளிப்பாடுகளேயாகும் எ ன நான் கருதுன்கிறேன்.
༧ཚུས་

தினசரி வாழ்க்கையே
ஒரு சுமையாக மாறிவிட்டது!
சமீப காலமாக இந்த நாட்டு மக்கள் சகலரும் வேறெந்தக் காலத்தையும் லிட, மிகப் பார தூரமாகப் பரிதவிக்கின்றனர். தினசரி வாழ்க்கையே அவர் சளுக்கு ஒரு சுமையாக - பளு வாக - பாரம் மிக்கதாக மாறி விட்டது.
வாழ்க்கைச் செலவின் உயர்வு ஒவ்வொரு குடுப்பத்தையும் தாக்கித் தடுமாற வைத்துள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களான மா, சீனி, பாண், அரிசி போன்றவைகள் விலையேற்றம் பல குடும்பங்களையே நிலை குலைய வைத்துவிட்டது. བ་
பல உழைக்கும் குடும்பங்களில் முன்னரே அரைப் பட்டினி கால் பட்டினி,
இன்று முழுப் பட் டி னி நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டனர்.
உணவு முத்திரை விநியோகம் என்பது சீரற்ற காரணத்தால் திரி சங்கு நிலயில் பல குடும் பங்கள் சிக்கித் தவிக்கின்றன.
முத்திரை கிடைக்குமா. கிடையாதா, கிடைத்த முத்திரை யாவது விசாரணைக்கு உட்படாமல் தப்பிப் பிழைக்குமா இல் லையா என்ற அவல நிலையில் உழைப்பு வர்க்கத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் இன்று தினசரி ஏங்கித் தவிக்கின்றன.
கிராம சேவகர்கள் இல்லத்தில் தினசரி கூடும் கூட்டத்தைப் பார்க்கும் போது, இந்த மக்கள் தமது தினசரித் தொழிலுக்குச் சென்று 'நாலு பணம்" சம்பாதிப்பதா? அல்லது இப்படி வெயி லில் நாட்கணக்காகத் தவம் கிடந்து விரக்தி அடைவதா என நல்லெண்ணம் படைத்த கனவான்க்ள் மன இரக்கப்படும் நிலைக்கு இன்று அவர்களுடைய நிலை உருவாகி விட்டது:
ஏழை மக்களுக்கு வாழ்க்கையே வேண்டத்தகாத சுமையாகி வருகின்றது. m
"எட்டு ருத்தல் தானியம் தருவோம்" எனச் சொல்லி ஆட் சிக்கு வந்தவர்கள், இன்று பசிக்க வயிறினருக்குத் தர்மோபதே இக் செய்கின்றனர்

Page 5
இன்று இந்த நாட்டில் மிக மிக மலிவாகக் கிடைக்கக் கூடிய ஒரே ஒரு பொருள் உபதேசமாகும். பத்திரிகைகளைப் படிக்க எடுத்தால் இந்த உபதேசப் பொன் மொழிகள் வரிக்கு வரி கண் ணில் படுகின்றன.
"ஏழைக்கு இறைவன் சோற்றுப் பருக்கையில் காட்சி தரு வான்" என்பதும் ஒரு காந்தீய மொழிதான்.
ஆனல் இந்தச் சோற்றுப் பருக்கைப் பொன் மொழி இன்று வசதிக்காகப் பலராலும் மறக்கப்பட்டு விட்டது.
எந்தப் பெரிய தர்மவானுடைய பொன் மொழிகளும் வயிற் றுக்கு ஒரு நேர உணவைத் தர முடியாது.
"கியூ வரிசையை இல்லாமல் ஆக்குவோம்!" எனக் கோஷ மெழுப்பி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் இன்று கியூ வரிசையையே இல்லாமல் செய்து விட்டனர். மக்களால் அன்ரு டப் பாவனைப் பொருட்களை வாங்கக் கூடிய சக்தி அற்றுப்போய் விட்டது. விலைகளோ எக்கச் சக்கம்! கியூ இயல்பாகவே இல்லா மல் ஒழிந்து விட்டது. -
வயிறைப் பொறுத்தவரையும், பசியைப் பொறுத்தளவிலும் அதற்கு இனவாதம், மொழி வெறி, பிரதேசக் கொதிப்பு இல்லை.
தெரிந்த பாஷை, வயிற்றுப் பசிக்கு ஆகாரம், உண்ண உணவு வேண்டும்; அவ்வளவுதான்.
நமக்குத் தெரிந்த வரையில் எத்தனையோ குழந்தைகள் காலை ஆகாரம் உண்ணுமலே பள்ளிக் கூடத்திற்குச் செல்லுகின்றனர்:
பசித்த வயிறுள்ள மூளைக்குள் கல்வி எப்படி உட்செல்லும்?
பாமர மக்கள் மாத்திரம் இந்தப் பரிதவிப்புக்கு உட்பட வில்லை. அலுவலகங்களில் வேலை பார்க்கும் மத்திய தர வர்க்கப் புத்தி ஜீவிகளே மலங்க மலங்க விழிக்கின்றனர்.
எடுக்கும் சம்பளம் பத்து நாட்களுக்குக் கூடப் போதாது. கடன்படலாம் - எத்தனை நாட்களுக்கெனக் கடன் படுவது? - இது ஒரு சிக்கல். −
இன்று இந்த நாட்டில், வாழும் பிரச்சினையே - வயிற்றுப் பிரச்சினையே - பெரும் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
அபிவிருத்தித் திட்டங்கள் ஒரு நாட்டுக்குத் தேவைதான் மக்களைப் பட்டினி போட்டு அதன் மீது எழுப்பப்படும் திட்டங் களால் யாருக்குப் பயன் கிடைக்கும்? -
அபிவிருத்திகள் வெற்றி பெறலாம்: ஆல்ை மக்கள் - மக்க ளது குடும்பங்கள் - வாழ்க்கையின் எதிர்காலக் கனவுகள் சிதறிச் சின்னபின்னமாகப் போய் விடுமே!
ஆட்சிக்கு வருவதற்காகப் பல வாக்குறுதிகளைத் தந்து அதி கார பீடமேறியவர்கள், மக்களுக்குத் தந்த வாக்டிறுதிகலை நிறை வேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகின்ருேம்.
இந்த நாட்டு மக்களுக்கு ஒரு புதிய சுபீட்சமான எதிர்காலம் தேவை. பசி, பட்டினி, வறுமை, வாழ்க்கைச் சுமையற்ற சுபீட் சமான மனித வாழ்க்கை வேண்டும் அது மக்களினுடைய கசகி களிலேயே தங்கியுள்ளது) -

ዘዞ"ካካumዞዞ"llካካu።ሡ"hካu።ሀዞhክካካ። R 码
அட்டைப் படம்
量
பொன் ஆண்டு எழுத்தாளர்
*நந்தி?
"சொக்கன்" அவர்களை அவரது பொன் ஆண்டில் கெளர விப்பதில் மல்லிகை முந்திக் கொள்கிறது.
1930-06 - 02-இல் பிறந்த சொக்கன், தனது 14 வயது தொடக்கம் எழுதி வருகிருர் .
1956 க்குப் பின் உதித்த நவ இலக்கிய சகாப்தத்திலே - நமது சமூகத்தின் அடிப்படையான பிரச்சினைகள் கதைகளில் கருவான காலத்தில், முற்போக்கு எழுத்து என்ற வரைவிலக் கணம் அந்தக் க  ைத களு க் குக் கொள்ளப்பட்ட வேளையில், கைலாசபதியின் தினகரன் காலத்தில் - சொக்கன் காலத்திற்கு ஏற்ப மறுபிறவி எடுத்து டானியல், டொமினிக் ஜீவா, பெ7ள் னுத்துரை, காவலூர் ராஜதுரை, ரகுநாதன் சந்ததியோடு அடை யாளம் காணப்பட்டவர். அந்தச் சந்ததியின் சாதனைகள் Fէ05ֆl இலக்கிய வரலாற்றில் தனித்துவமாகக் குறிப்பிடத்தக்கவை. அந்தச் சாதனைகளின் விளைவு சுடுத்த 5-10 வருட காலகட்டத் தில் பேராதனை பல்கலைக் கழகத்திலே யோகநாதன், பெனடிக்ற் பாலன், மெளனகுரு, கதிர்காமநாதன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் வயதுக் குழுவிலே இன்னெரு தனித்தன் மையான வசன நடை முத்திரையுடன் தொடர்ந்து பருணமித் தது. மூத்த சொக்கனின் அன்றைய படைப்புக்கள் இந்த ዴ]äm u፡ வரின் எழுத்துடனும் இனம் காணப்பட்டது, அவரை அறிந்து ஆராய்பவருக்குப் புதினமாகத் தோன்ருது.
ன்று, இந்த மூன்று காலம் பிரிவைச் சேர்ந்த ஒரு சிலரின் பேஃே மட்டுமே இலக்கிய முயற்சியில் : சொக்கன் அவர்களுடைய பேணு புதுப் பொலிவுடன் வற்ருது இயங்குகின்றது. நான் முன்னம் எழுதியதையே இப்போதும் கூற விரும்புகிறேன்.
காலத்திற்கும்,சமூக மாற்றங்களுக்கும் ஏற்பத் தம் இந்த னையைப் பக்குவமாக்கி, எழுத்துநடையை வளர்த்து, எழுத்தின் பல துறைகளில் பிரகாசிக்கும் சொக்கன், தமிழ் இலக்கிய உல கில் தனித்தன்மை உடையவர். சொக்கன் சிறந்த கவிஞன், பரிசு பெற்ற நாடகாசிரியர், நாவலாசிரியர், புதுமை மிக்க ஒறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், வானெலி எழுத்தாளர்.
சமீபத்தில் திரு சொக்கலிங்கம், கல்லூரி அதிபர் தேர்வுச் குச் சென்றபோது, தான் எழுதி நூலாக வெளிவந்தவற்றை எடுத்துச் சென்ருராம்:நாவல்கள் மூன்று. நாடகங்கள் நான்கு கட்டுரைத் தொகுப்புகள் ஆறு, சமய நூல்கள் பதினென்று,
7

Page 6
சிறுகதைத் தொகுப்பு ஒன்று; ஆக மொத்தம் 23 நூல்கள். "என்ன, உமது பாடசாலையின் லைப்ரரியையா கொண்டுவந்திருக் கிறீர்?" என்று அவரை நேர்முகப் பரீட்சை செய்த சிங்களக் கல்வி அதிகாரி கேட்டாராம் உண்மையில் சென்னையில் கிடைக் கக் கூடிய பிரசுர பிரசார விற்பனை வசதிகள் அவருக்கு இங்கே இருக்குமானுல், அவர் தரமான 239 நூல்கள்ை. கொண்டு சென் றிருப்பார். அத்துடன் அவர் பணத்திற்காகவோ, நூல் பட்டிய லின் நீளத்திற்காகவோ எழுதியிருந்தால் அவை 30 ) ஆக இருக் கும். சொக்கன் மாதம் ஒரு நூல் அல்லது வாரம் ஒரு நூல் எழுதும் ஆற்றலும் அமைதியும் வாய்க்கப் பெற்றவர். அவர் இரவிலே வானத்தைப் பார்த்து சமயக் கட்டுரைகள் எழுதி விட்டு, காலையில் பூமியைப் பார்த்து முற்போக்குக் கதைகள் எழுதுபவர். நாடகம் எழுதிவிட்டு, அதைத் தயாரித்து மே ைஏற்றுபவர்; நடிப்பவர். வீட்டிலே தனது அறையிலே 45 வய திலே எம். ஏ. பட்டத்திற்கு ஆய்வுக் கட்டுரை எழுதிய பின், குழந்தைகளையும் குழந்தை உள்ளம் படைத்த மனைவி திருமதி தெய்வானையையும் கண்காணித்துப் பராமரித்துவிட்டு, வெளி யிலே இலக்கிய சமூக- சமயத் தொண்டு செய்யக்கூடியவர். தற்போது பொதுச் செயலாளர், முத்தமிழ் வெளியீட்டுக் கழ கம், உபதலைவர் அகில இலங்கைச் சேக்கிழார் மன்றம், தலைவர் திருமுறை மன்றம், அங்கத்தவர், கல்வி அமைச்சின் பாடப் புத் தக வெளியீட்டு ஆலோசனைக் குழு இப்படியாக, அத்துடன் அதிபர் இராமக் கிருஷ்ண வித்தியாலயம், கோண்டாவில்,
சொக்கன் அவர்களுடைய பேணுவிலே ஒரு ஜீவ ஊ ற் று உண்டு. அவர் வீட்டு அ பிறயின் இருட்டிலே கற்பனைக்கு ஆழ்ந்த அமைதி உண்டு. அவர் எழுத ஒளி உதவும் பழைய அரிக்கன் லாந்தரிலும் ஒரு வித மனேவசிய கதிர்கள் உண்டுபோலும் . அத் துட்ன் அவரது எழுத்துக்கு உறுதுணை மனைவி மக்கள், மூக்குப் பொடி அவ்வளவு தான். அவரது பேணுவும் அரிக்கன் லாந்தரும், ஒரு நாள், அவரது ரசிகப் பெருமக்களில் யாராவது ஒருவரால் களவாடப்படும் என்ற பயம் எனக்கு இருந்தது. இதுவரை அது நடக்கவில்லை. சமீபத்தில் நான் அவரைக் காணச் சென்றபோது வீட்டிற்கு வயரிங் செய்து பல்புகள் பூட்டியிருந்தார். அவ்வளவு தான். ஆனல் இன்னும் இருட்டும் களவு போகவில்லை.
அவருடைய வேகமான சமூக சேவை ஒட்டத்திலே ஈர்க்கப் பட்டவர்கள் தாம் தீவிரம (ா ன பக்தியுள்ளவர்கள் போலும். 1978 ஆம் ஆண்டு மே மாதம் அவர் அகில இலங்கைச் சேக்கி ழார் மன்ற வேலையில் ஈடுபட்டிருந்த போது, சட்டத் தரணி சோமசுந்தரம் வீட்டிற்கு முன்னுல் அவரது சைக்கிள் களவாடப் பட்டது! அவரது மூத்த மகன் (மாணவன்) தந்தைக்கு உதவி யிருக்கிருன். நடந்து நொந்து போகாது, தொடர்ந்து ஓடி இலக்கிய, சமூக சேவை புரிவதற்குத் தனது சைக்கிளை தகப்ப னுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிருன்!
இந்த வருடம் அவரது பொன் விழாவிலே அந்தச் சைக்கி வின் பின் கரியரிலே "இலக்கிய நெஞ்சங்கள்" அவருக்கு அணியப் போகும் பல பூ மாலைகளைக் கட்டிச் செல்ல அது உதவும் போலும்,

ஈழத்துப் பாநாடகங்கள்
எம். ஏ. நுஃமான்
முருகையனும் மஹாகவியும் சமகாலப் பின்னணியில் எழுதிய வானெலி நாடகங்கள் மொழியிலும் பொருளிலும் புதுமைகள் எதையும் ஈட்டவில்லை என்றே கூறவேண்டும். ஆணுல் சமகாலப் பின்னணியிலே அவர்கள் மேடைக்காக எழுதிய நாடகங்கள் மிகவும் முக்கியத்துவம் உடையவை. இந்த நாடகங்கள்தான் நாங்கள் பா நாடகம் பற்றிச் சிந்திப்பதற்கே காரணமாக அமைந் தவை. ஈழத்து நாடக வளர்ச்சியிலே - பொதுவாக தமிழ் நாடக வளர்ச்சியிலே - அவை குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறு வன. மஹாகவியின் கோடை, முற்றிற்று, புதியதொரு வீடு, முருகையனின் கடூழியம். அப்பரும் சுப்பரும் ஆகிய ஐந்துமே இதுவரை சமகாலப் பின்னணியில் எழுதப்பட்ட நாடகங்களா கும். இவற்றுள்ளே முற்றிற்று, அப்பரும் சுப்பரும் ஆகிய நாட கங்கள் மேடையேற்றட படவோ, பிரசுரிக்கப்படவோ இலலை. கையெழுத்துப் பிரதியாகவே உள்ளன. இவைபோன்று வேறு யாரும் நாடகங்களை எழுதி வைத்திருக்கவும் கூடும். அதுபற்றி விபரம் தெரியவில்லை. கையெழுத்தில் மட்டும் உள்ளவற்றைக் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளலாமா என்ற கேள்வி எழக் கூடும். நமது நாட்டு வெளியீட்டுச் சூழ்நில்லயில் இது அவசியம் என்றே நான் நினைக்கின்றேன். இல்லையேல் இவைபற்றிச் சிலவேளை தெரியவராமலே போகலாம்.
இந்த ஐந்து நாடகங்களும் சமூக யதார்த்தத்தையே அடிப் படையாகக் கொண்டிருப்பினும் அவற்றின் அமைப்பிலும் பொரு ளிலும் மிகவும் வேறுபட்டவை. இவ்விரு கவிஞர்களின் கலை நோக்கிலே உள்ள வேறுபாடுகள் இந்நாடகங்களிலும் நன்கு தெளிவாக வெளிப்படுகின்றன. இவ்வகையிலே இந்நாடகங்களை இரண்டு பிரிவாக நாம் வகைப்படுத்தலாம்.
ஒன்று பாவனை நவிற்சியான குறியீட்டு நாடகங்கள்g மற்றது நேரடியான யதார்த்த நாடகங்கள்
முருகையனின் இரண்டு நாடகங்களும் முதல் வகையைச் சேர்ந்தன. பொருளிலே அவை இரண்டும் \ வளிப்படையான அரசியல் நாடகங்கள். 3 டிவிலே அவை பாவனை நவிற்சியான குறியீட்டு நாடகங்கள். S. Nயம் தொழிலாளர் வர்க்கம் கடுமை யாகச் சுரண்டப்படுவதையும் படிப்படியாக அவர் கள் விழிப் படைந்து ஆளும் வர்க்கத்தை வீழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற் றுவதையும், புதிய ச11 துவ சமூகத்தை அமைப்பதையும் ćh pj கின்றது. மாறி மாறி இரு கட்சிகளையே ஆட்சிக்குக் கொண்டு
9

Page 7
வருவதால் எவ்வித பயனும் இல்லை என்றும் இந்த விளையாட்டை நிறுத்தி புதிய வழியைக் காண வேண்டும் என்றும் அப்பரும் சுப்பரும் நாடகம் கூறுகின்றது. இவ்விரு நாடகப் பொருளும் சமகால வாழ்க்கை யதார்த்தத்தில் இருந்து கிரகித்துக் கொள் ளப் பட்டவை சித்தாந்த பூர்வமானவை. இச் சித்தாந்தங் களுக்குக் குறியீடுகள் மூலம் முருகையன் மேடையில் வடிவம் கொடுக்கின்ருர். உதாரணமாக அப்பரும் கப்பரும் நாடகம் எவ் வாறு வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.
அப்பர் சுப்பர் இருவரும் இரண்டு அரசியற் கட்சிகளின் குறி யீடுகளாக உள்ளனர். அன்னம்மாள் தேசத்தின் குறியீடு. அவளு டைய கையிலே ஒரு தொப்பியுண்டு; அது அதிகாரத்தின் - வாக் குரிமையின் குறியீடு. தொப்பி யாருடைய தலைக்குப் போகிறதோ அவர் நிருவாகத்தை நடத்துவர். மேடையின் ஒரு புறத்திலே அன்னம்மாளின் குடிசை. மறு புறத்திலே அலுவலசும், அன்னம் மாள் மேடையின் நடுவிலே நின்று தொப்பியைக் கழட் டுகிருள். அப்பரும் சுப்பரும் அதைப் பிடிக்க முயல்கின்றனர். இம்முறை தொப்பியைத் தமக்கே தரும்படி இருவரும் கேட்கின் றனர் வாக்குறுதிகள் அளிக்கின்றனர். தொப்பி முதலில் அப்ப ருக்குப் போகின்றது. அவரது ஆட்சி நடக்கின்றது. வாக்குறுதி கள் நிறைவேறவில்லை. ஊழல் பெருகுகிறது. அன்னம்மாள் அப் பரை வீழ்த்தி தொப்பியைக் கைப்பற்றுகிருள்.
திரும்பவும் தொப்பி கழட்டல் நிகழ்கிறது. அப்பரும் சுப்ப ரும் வருகின்றனர். இம்முறை தொப்பி சுப்பருக்குப் போகின்றது. அவருடைய ஆட்சியும் வழமைப்படியே. சுப்பரின் தொப்பியும் கழற்றப் படுகின்றது. அன்னம்மாளின் இளைய மகன் வன்முறை யில் நாட்டங் கொள்கின்றன். இது சமீப கால இளைஞர் கிளர்ச் சியின் குறியீடு. இளையவனை நல்வழிப் படுத்த என்றே அடுத்த முறை மீண்டும் தொப்பியை அப்பருக்கு வழங்குகிருள் அன்னம் மாள். அப்பருடைய ஊழல் ஆட்சி திரும்பவும் ஆரம்பம். எதிர்ப் புக் கிழம்புகிறது; அப்பரின் ஆட்சி பறிபோகிறது. திரும்பவும் மேடையில் தொப்பி சுழலத் தொடங்குகின்றது. அப்பரும் சுப்ப ரும் அதைப் பிடிக்க முயல்கின்றனர். அன்னம்மாள் மேடையில் தோன்றி விளையாட்டை நிறுத்துகிருள். அன்னம்மாளும் பிள்ளை களும் புதிய சங்கற்பம் பூணுகின்றனர். நாடகம் முடிகின்றது.
இந்த நாடகத்திலே எல்லாப் பாத்திரங்களும் குறியீட்டுப் பாத்திரங்கள் என்பது வெளிப்படை. அதாவது உண்மை மனிதர் கள் அல்லர் குறியீட்டு மனிதர்கள். நிகழ்வுகளும் அப்படியே, கடூழியமும் இத்தகைய அமைப்புடைய நாடகமேயாகும். முருகை யன் சமூக யதார்த்தத்தின் சாராம்சத்தைச் சித்தாந்த பூர்வமா கச் கிரகித்துக் கொண்டு அச் சித்தாந்தத்தைக் குறியீட்டு வடி வில் விளக்குகின்ருர், இன்னும் ஒரு வகையில் சொன்னல் யதார்த்த உண்மைகளே அவர் பொதுமைப் படுத்துகிருர் எனலாம். அந்த வகையில் அவரது நாடகங்கள் கருத்து ரூடமாக உள்ளன. இதுவே முருகையனுடைய பொதுவான இலக்கிய நெறியும் ஆகும்.Tஅவ ரது பெரும்பாலான கவிதைகளிலும் நெடும்பகல், ஆதிபகவன், முதலிய காவியங்களிலும் இக்கலை நெறியே பின்பற்றப் பட்டுள் ளது. ஒரு விஞ்ஞான உண்மையைக் கணிதவியல் குறியீடுகள் கொண்டு விளக்குவது போன்றதே இது முருகையனுடைய விஞ்
0

ஞானப் புலமை அவரது இலக்கிய நெறியின்மீது செலுத்திய ஆளுகையாக நாம் இதனைக் கருதலாம். அவரது இக்கலை நெறி தமிழுக்கு ஒரு புதிய பரிமாணம் என்றே கூறவேண்டும்
மஹாகவியின் நாடகங்கள் இதில் இருந்து முற்றிலும் வேறு பட்டவை. யதார்த்தத்தை யதார்த்தமாக அணுகுவதே மஹா கவியின் கலை நெறியாகும். முருகையனின் நாடகங்கள் காலஇட எல்லைகளுக்கு உட்படாதவை மஹாகவியின் நாடகங்கள் உட்பட்டவை. முருகையன் விசயத்தைப் பொதுமைப் படுத்தி நோக்குகின்ருர் என்ருல் மஹாகவி தனிமைப் படுத்தி நோக்கு கின்ருர் எனலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட கால - இடச் சூழ்நிலைக்கு உட்பட்ட குறிப்பிட்ட மனிதர்களின், வாழ்க்கை நிகழ் வுகளைச் சித்திரிப்பதன் மூலம் பொதுமைக் கருத்துக்களை வெளிப் படுத்துகின்றர். அந்தவகையில் மஹாகவியின் நாடகங்கள் நேரடி யான யதார்த்த நாடகங்களாகும். ஆகவே அவரது நாடகப் பாத்திரங்கள் குறியீட்டு மனிதர்களாக அன்றி உண்மை மனிதர் களாக உள்ளன. மஹாகவியின் மூன்று மேடை நாடகங்களிலும் நாம் இந்தப் பண்பைக் காண்கின்ருேம். வானெலி நாடகமான திருவிழாவிலும் நாம் இதைக் காண்கின்ருேம். அவரது பெரும் பாலான கவிதைகளிலும் காவியங்களிலும் இப்பண்பே காணப் படுகின்றது. இது தமிழின் பிறிதொரு பரிமாணம் ஆகும்:
இவ்விரு நாடக நெறியிலே உள்ள வேறுபாடு நாடகச் செய் யுளிலும் வெளிப்படுகின்றது. முருகையன் தனது நாடகங்களைக் குறியீட்டுப் பாங்கில் அமைத்துக் கொண்டதால் நாடகச் செய்யு ளையும் அதற்கு இசைவாக தராதர இலக்கிய நடையிலேயே அமைத்துக் கொண்டார். சத்தியச் சத்துச் சாறு நாடகத்திலே பேச்சுவழக்கைக் கலந்து உரையாடலை அமைத்துள்ளார் எனினும் தூய இலக்கிய வழக்கே அவரது நாடக மொழியின் அடிப்படைப் பண்பாகும். பண்டைய, இடைக்கால இலக்கியங்களில் கூடிய புலமையும், மரபுணர்ச்சியும் முருகையனிடம் இருப்பதும் அவரது நடையிலே செந்நெறிச் சாயல் காணப்படுவதற்குக் காரணம் என லாம். தனது நாடகத்தில் செய்யுள் வாக்கியத்தைப் பேச்சுக்கு இசைவாக அமைப்பதே அவரது வேலையாக இருந்தது. இந்த இசைவாக்கம் கடூழியத்தை விட அப்பரும் சுப்பரும் நாடகத்தில் மிக வெற்றியாக அமைந்துள்ளது எனலாம்: '
மஹாகவி யதார்த்த நெறியையும் உண்மையான சமூக மனி தர்களையும் தன் நாடகங்களுக்கு அடிப்படையாகக் கொண்டதால் தனது நாடகச் செய்யுளைப் பேச்சுத் தோரணைக்கு ஏற்ப இசை வாக்கம் செய்யவேண்டி இருந்ததோடு பாத்திரங்களின் கிராமிய மொழிவழக்கையும் இணைக்க வேண்டி இருந்தது; அவ்வகையிலே பேச்சு வழக்குச் சார்ந்த ஒரு செய்யுள் நடையை அவர் உருவாக் கினர். இ தி ல் பெருமளவு அவர் வெற்றி பெற்ருர் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக கோடை நாடகம் இவ்வகையில் ஒரு சாதனையாகும் செய்யுளிலே மஹாகவி பேச்சு வழக்கைக் கையாண்டமை பற்றி மஹாகவியும் வழக்குத் தமிழும்" என்னும் கட்டுரையிலே விரிவாக விளக்கியுள்ளேன், ஆகவே அதுபற்றி இங்கு விவரிக்கத் தேவை இல்லை.
发剔

Page 8
3
இன்னும் ஒரு வகையான மேடைப் பா நாடகங்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும். கூத்து மரபு தழுவிய "நவீன இசைப்பா நாடகங்களே அவை. நமது பாரபம்ரியக் கூத்துக்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே அமைந்துள்ளன. எனினும் நாம் இன்று கருதுகின்ற நாடகம் என்ற அர்த்தத்தில் அவற்றைப் பா நாடக வகையுள் சேர்த்துக் கொள்ள முடியாது என்பது வெளிப்படை ஆயினும் 1960 - ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இருந்து நவீன நாடக மேடை உத்திகளையும் பாரம்பரியக் கூத்து மரபையும் இணைத்த புதிய நாடக வடிவம் ஒன்று இங்கு தோற்றுவிக்கப் பட்டது. இவை பழைய அர்த்தத்தில் இன்னும் கூத்துக்கள் அல்ல. கிராமங்களில் விடிய விடிய ஆடப்படும் கூத்துக்களில் இருந்து இவை முற்றிலும் வேறுபட்டவை. நகர்ப்புற ரசிகர்களுக் குச் சுருக்கிக் கொடுக்கப்பட்ட கூத்துக்கள் அல்ல இவை. பாட் டின் இசையையும் ஆட்ட முறையையும் கூத்துக்களில் இருந்து பெற்ருலும் எல்லா வகையிலும் மெருகிடப்பட்ட புதிய வடிவமே அவை. இவற்றின் பிரதிகள் பாரம்பரியக் கவிஞர்களால் எழுதப் பட்டவையல்ல; நவீன கவிஞர்களே ,வற்றை உருவாக்கினர். இவ்வகையிலே பேராசிரியர் க. வித்தியானத்தன் தயாரித்தளித்த ராவணேசன், வாலி.வதை, மெளனகுருவின் சங்காரம், அம்பலத் தாடிகள், கந்தன் கருணை ஆகியவை முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவை. முன்னவை இரண்டும் ராமாயணக் கதையைக் கூறப் பின்னவை இரண்டும் சமூகப் பிரச்சினைகளைக் கூறுகின்றன. இவ் வகையிலே மட்டக்களப்பில் மேடையேறிய ஏர்முனை வேலன், பரியாரி மகன் ஆகிய அங்கத நாடகங்களும் குறிப்பிடத்தக்கன. இதுவரை குறிப்பிட்ட நாடகங்களைப் போல் பேச்சோசையை அன்றி இவை பாட்டோசையையும் ஆட்டத்தையும் அடிப்படை யாகக் கொண்டவை. இதனலேயே இவற்றை இசைப்பா நாடகம் எனக் குறிப்பிட்டேன் இத்தகைய நாடகங்கள் தொடர்ந்து உரு வாகவில்லை எனினும் இன்றைய நவீன நாடகங்கள் சிலவற்றிலே இவற்றின் செல்வாக்கினைக் காணமுடிகின்றது.
4
இறுதியாக சிறுவர்களுக்கான பா நாடகங்கள் பற்றியும் மொழிபெயர்ப் முயற்சி பற்றியும் குறிப்பிட வேண்டும். தமிழிலே சிறுசிறுர் நாடக முயற்சி மிகக் குறைவே. சமீபத்தில் மேடை யேறிய 'கூடிவிளையாடு பாப்பா" ஒன்றே இவ்வகையில் குறிப்பி டத்தக்கது. பாடசாலைகளில் அப்போதைக் கப்போது சிறுவர் நாடகங்கள் மேடையேறினும் அவற்றுள் பா நாடக முயற்சிகள் மிகக் குறைவே. நான் அறிந்தவரை நீலாவணன், பா. சத்திய சீலன் ஆகியோரே இத்துறையில் சில படைப்புக்களைச் செய்துள், ளனர். நீலாவணனின் கல் முனை ப் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற ஒரு நாடகப் போட்டியில் மேடையேறியது. அது ஒன்றுதான் அவரது முயற்சி என்று நினைக்கின்றேன். சிறுவர் இலக்கியத்துறையில் கூடுதல் ஈடுபாடு காட்டும் கவிஞர் சத்திய சீலன் இத்துறையில் சற்று அதிகம் முயன்றுள்ளார். இவரது

"பாட்டுக் கூத்து" என்னும் நூலிலே இடம் பெறும் புத்திமான் பலவான் பிழைதிருத்தம் ஆகிய நாடகங்கள் குறிப்பிடத் தக் கன. இவை கொழும்பு, மன்னர், மானிப்பாய் முதலிய இடங் களில் பாடசாலை மாணவர்களால் நடிக்கப்பட்டதாகத் தெரிய வருகின்றது.
பாநாடக மொழிபெயர்ப்பு என்ற வகையில் இ. இரத்தினம் மொழிபெயர்த்த "மன்னன் ஈடிசு" நாடகத்தை மட்டுமே குறிப் பிடலாம். உலக ப் பிரசித்தி பெற்ற கிரேக்க நாடகாசிரியர் சொபக்கிளிசின் இந்நாடகம் - பிராய்டின் உளவியல் கொள்கை யினல் இந்த நாற்ருண்டில் மேலும் பிரசித்தி பெற்ற இந்த நாடகம் தமிழ் மொழிபெயர்ப்பில் வெற்றி பெறவில்லை என்றே கூறவேண்டும். மு ற் றி லும் செயற்கையான வழக்கிறந்த ஒரு மொழிநடை இ தி ல் கையாளப்பட்டுள்ளது. பா நாடகத்தின் மொழிநடை எவ்வாறெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு இம் மொழிபெயர்ப்பு ஒரு எடுத்துக்காட்டாகும் ,
5
பா நாடகத்தின் எதிர்காலம் பற்றிச் சில வார்த்தைகள் கூறி இக்கட்டுரையை முடிக்கலாம். பா நாடகத்தைக் கோட்பாட்டு ரீதியாக நிராகரிப்பதோ நியாயப்படுத்துவதோ பொருளற்றது. நாடகம் செய்யுளில் எழுதப்படுகிறதா அல்லது வசனத்தில் எழு தப்படுகிறதா என்பது முக்கியமல்ல. அது நாடகமாக இருக்கின் றதா என்பதுதான் முக்கியம். பார்வையாளனுக்குப் பொருள் உடையதாக அவனை ஈர்க்கக் கூடியதாக இருக்கிறதா என்பது தான் முக்கியம். அதாவது அதற்குச் சமூக ஏற்புடமை இரு ெ றதா என்பதுதான் முக்கியம். கோடை, புதியதொரு வீடு ஆகி யவை பல மு  ைற மேடையேறியதும் பல மட்டத்தினராலும் பாராட்டப்பட்டதும் பா நாடகங்களின் ஏற்புடமையை நிரூபிக் கின்றன. அப்பரும் சுப்பரும் மேடையேறினல் அதற்கும் நிச்சயம் ஏற்புடமை இருக்கும்.
ஆஞல் பா நாடகம் தொடர்ந்து எழுதப்படுமா என்பதுதான் கேள்வி. மேடைக் கலை அறிந்த, வாழ்வு, கலை பற்றிய சுய பிரக் ஞையுடைய, செய்யுள் ஆற்றல் மிக்க கவிஞர்களால்தான் சிறந்த பாநாட்கங்களை ஆக்குவது சாத்தியம். இன்று நம் மத்தியிலே அத்தகைய கவிஞர்கள் எத்தனை பேர் உள்ளனர்? முருகையன் ஒருவரைத்தான் கூறலாம். முருகையன் கடூழியம் எழுதியது 1970 ல். அப்பரும் சுப்பரும் எழுதியது 1979 ல், 9 ஆண்டு இடை வெளிகளில்தான் இரண்டாவது நாடகம் உருவாகியுள்ளது , சமீப காலத்திலே யாழ்ப்பாணத் ல் காணப்பட்ட ஆரோக்கியமான நாடகச் சூழலே அந்நாடகத்தின் பிறப்புக்குக் காரணம் எனலாம். இத்தகைய சூழல் தொடருமானுல் முருகையன் மூலம் இன்னும் சில நாடகங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம் . அவரைத் தவிர இத்துறையில் வேறு நம்பிக்கைகள் காணப்படவில்லை.
(முற்றும்)

Page 9
இ. மு. எ. ச.
வெள்ளிவிழாக் கருத்துக்கள்
நெல்லை க. பேரன்
கடந்த பெப்ரவரி 23, 24 தினங்களில் கொள்ளுப்பிட்டி
கல்விக் கழகத்தின் குளிரூட்டப்பெற்ற
மண்டபத்தில்
நடைபெற்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க
வெள்ளிவிழா நிகழ்ச்சிகளின் போது
களில்
பல்வேறு கட்டங்
பலராலும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் மிக முக்கியமானவற்றை மட்டும் இங்கு
தருகின்ருேம்.
தொகுத்துத்
பிரதேச அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு செ. இராசதுரை
5prւDrr607 இலக்கியங்களை மட்டும் வர வே ற் க வேண்டும் என்ற கருத்தினை நான் வரவேற்கின் றேன். இலங்கை எழுத்தாளர் கள் பண்டைய இலக்கியங்களி லும் பரிச்சயம் மிக்கவர்களாக விளங்க வேண்டும். இந்த ஆண் டில் நான் இலங்கை எழுத்தா ளர்களின் நூல்களை உள்ளூராட்சி மன்றங்கள், um L-grsrðavsøflaör நூலகங்களுக்குச் சந்தைப்படுத் துவதற்கு ஆவன செய்வேன். உங்களுடைய ஆக்கபூர்வமான செயற் திட்டங்களுடன் என்னை அலுவலகத்தில் சந்தியுங்கள். உங்கள் ஆலோசனைகளை முன் வையுங்கள். என்னை அமைச்ச ராக மட்டும் கருதாமல் உங் கள் உணர்வுகளோடு ஒன்றிய சகோதரனுகக் கரு துங் க ள். எனது அலுவலகக் கதவுகள் எழுத்தாளர்களின் பிரச்சனைகளை அணுகுவதற்காக என்றும் திறந் திருக்கும்,
4
இலங்கை வாசகர்கள்
பிரேம்ஜி ஞானசுந்தரம்
எமது கடந்தகால போராட் டங்களினல் இலங்கை எழுத்தா ளர்களுக்கு உரிய அங்கீகாரத் தையும் பத்திரிகைகளில் சன்மா
னத்தையும் பெற்றுக் கொடுத் தோம். சுதந்திர இறக்குமதி யால் இன்று நச்சு இலக்கியங்
கள் பரவி எம்மைத் தலைதூரக் காமல் செய்கின்றனரு எழுத்தா ளர்களின் நூல்களை வெளியிடு வதற்காகப் படைப்பிலக்கிய காரர்களின் நிறுவனம் ஒன்றை உருவாக்கி இருக்கிருேம்.
முன்னுள் நீதியரசர் வி. சிவசுப்பிரமணியம்
மொழியின் சிறப்பு அம் மொழியின் இலக்கியத்தில்தான் தங்கியுள்ளது. கடந்த அரசாங் கம் இ. மு. எ. ச. முன்வைத்த 12 அம்சத் திட்டங்களைச் செயற் படுத்தியிருந்தால் 77 ஆக ஸ் டுக் கலவரமே நிகழ்ந்திருக்காது:

சுபைர் இளங்கீரன்
இந்திய நச்சு இலக்கியங்கள் எமது கலாசாரத்தை அழித்து வருகின்றன. மலிவுப் பதிப்புகள் எ ன் ற போர்வையில் இலங் கையை ஒரு காகிதச் சந்தை யாகக் கருதி நசிவு இலக்கியங் கள் இங்கு வந்து குவிகின்றன. கெளரவ அமைச்சர் இந்த நச் சுக் காற்றைத் தடை செய்வ தற்குத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். மக்கள் எமது நூல்களை வாங்கும் நிலைக் குக் கொண்டுவர வேண்டும். வானெலி நாடகத் துறையிலும் எமது எழுத்தாளர்கள் ஈடுபட் டுப் பாமர மக்களும் கேட்டுப் பயனடைகின்ற மாபெரும் ஊட கமான வானுெலியை ந ன் கு பயன்படுத்த வேண்டும். மேடை நாடகங்களில் புதிய உத்திகளை யும் பரிசோதனைகளையும் மேற் கொள்ளும் கிொழும்பு தெற்குத் தயாரிப்பாளர்கள், கொழும்பு வடக்கில் உள்ள தரமான கலை ஞர்களையும் அர வணை த் து ச் செல்ல வேண்டும். தேசீய மட் டத்தில் தமிழ் நாடக வளர்ச் சிக்கு அனைவரும் உதவ வேண் டும் இ. முருகையன்
இதுகாலவரையில் சோஷ லிச யதார்த்தவாத இலக்கியத் தைய்ே இ. மு. எ. ச. பிரதி பலித்து வருகின்றது. நாடகங் களுக்காக உத்திகளா அல்லது உத்திகளுக்காக நாடகங்களா என்ற நிலைமாறி நல்ல நாடகங்
கள் உருவாகுவதற்குத் தயாரிப்
பாளரும் பிரதி எழுத்தாளரும் இணைந்து செயற்படல் வேண்டும்.
கா. செ. நடராசா
தமிழின் தொன்மைப் பரப் புக்களையும் இன்றைய எழுத்தா
ளர்கள் அறிந்து கொண்டு பழ
மையில் புதுமைகாண விழைதல் வேண்டும்3
I5
எழுத்தாளர்களாகக்
தேசீய
கி. இலட்சுமண ஐயர்
இ. மு. போ. எ. ச. உறுப் பினர்கள் பலர் எனது நண்பர் கள். நான் இச் சங்கத்தின் முயற்சிகளை மதித்து வருபவன்.
புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
என து "பயிற்சித் լճ)ւb’ மாஸ்கோவிலும் డి. றது. பண்ண்டய இலக்கியங்க ளைத் தெரியாதவர்களைப் Աtr6ծմ கொள்ள முடியாது.
எம். எம். சமீம்
இ ள ம் எழுத்தாளர்கள் தனித்து நின்று பணி செய்வதை
விட ஒரு இயக்கமாக இருந்து இயங்கினுல் நல்லது.
எச். எம். பி மொஹிதீன்
இலக்கியம் வாழ்க்கையின் விமர்சனம் என்ருல் சிறுகதை எழுத்தாளன் வாழ்க்கையின்
விமர்சகன். இச் சிறுகதை எழுத் தாளனை விமாசிக்கும் விமர்சகர் களுக்கோ பக்கத்து வீட்டுக்கா ரர்களையே தெரியாது. 1969 - 79 வரை சுமார் 39 புதிய எழுத் தாளர்கள் தோன்றியுள்ளார் கள் இவர் க ள் தொண்ணுரறு வீதமும் காதலையும் சா தி ப் பிரச்சனையையும் தவிர்த்து இலங் கைக் களத்திலேயே எழுதுகின் ருர்கள். இலங்கை எழுத்தாளர் கள் உபதேசிப்பது கு  ைற வு. இ ன் று புதுக்கவிதைகள் பல நீண்டுவிட்டன. புதுக்கவிஞர்கள் க வி ைத க ளி ன் நீளத்தைக் குறைக்க வேண்டும், நாடகத் து  ைற க் கா க இ. மூ. எ. ச. நாடக ஆ லே ரா சனை க் குழு ஒன்றை நியமிக்க வேண்டும். இ ன ஒற்றுமைக்காக எழுதியே நாம் இன விடுதலைக் கான சரியான பாதையைக் காண்பித்துள்ளோம்.

Page 10
அன்பு ஜவகர்ஷா
தேசியப் பத்திரிகைகளில் புதுக்கவிதுை இன்று அங்கீகரிக் பட்ட இலக்கியம்ாகிவிட்டது. இந்து சக வங்கா' பிபி தென் பிப் போன்ற மொழிபெயர்ப்பு நூல்கள் எய்க்கு மேலும் உத சாகமூட்டுகின்றன. எமது ' நிதிகளும் புதுக்கவிதைகளுக்குக் கன்தியான் பர்சனங்கள்த் தரவேண்டும். ரபா, ஜெயராசா
πιή ή εί με τί ή " " அவரின் அளவு கோல்கள் ட்டுரைகள்ே ஆய்வதற்கா சீரியம்'பெற்ற வைகளாக இல்லே. கடந்த பத்து ஆண்டுகளில் ைேத நாவல், கவிதைத் தொகு
ETT GIL அதிகமானளவு
(1) கட்டுரைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன: girlf T.
பின் நாம் ரன் கட்டுஇ இலக்
リcm a m cm、○ーリ அவிநீகக்கிடாது, மெளனது திே வரலாற்று நூல் ஒன்றில் சு " டு பின் இலக்கியத்திற்கு துரிய இடம் அளிக்கப்படவில்லே. வேறும் பல சேர்த்துப்- tlhIգիր டிய சங்கதிகள் இதில் விடுபட் டுப் போயின. ஒரு காலகட்டத் தில் பல்வேறு துறைகளிலும் குறைவான பங்களிப்பைச் ['all', தவர்களின் பெயர்கள் வரலாறு களில் இடம் பெதும்போது கூடுதலான பங்களிப்பைச் டு ய் தவர்கள் ஏன் தங்களுக்கு உரிய இடத்தை அளிக்கவில்ல்ே என்று கேட்பது நியாயமானது எனது 出凸0 、 கட்டுரேன்யயும் இங்கு வாசிக்க முடியாது பின்பு வரும். சி. சுதந்திர ராஜாவின் மழைக்குறி' நாவல் பற்றிய விமர்சனங்கள் பரவி
வர் வெளிவரல் வேண்டும்.
துே மகாலிங்கம்
வழக்குறி நாவல் Trini குப் பிடிக்கவில்லே அதன் கதை
If
வெளியாக சிறு
வளர்ப்புப் போக்கு எனக்கு உடன்பாடாக இல்லே அந்தனி ஜீவா
நீங்கள் முற்போக்கு இயக் கத்துடன் சம்பந்தப்பட்டிருந்து தால் ஒருவேளே பிடித்திருக்கும். நாடகம் பற்றிய வரலாற்று நூலில் நடிகம்ன்னி வைரமுத்து
வீரமணி போன்றருே ருக்கு உரிய இடம் கொடுக்கப் படவில்லே, பல்கலேக்கழக மட் டத்தில் மாத்திரம் ஆராய்வுகள் நடைபெறுவதை நாம் அனும திக்க முடியாது. நாடகம் பத் நிய ஆய்வுகள் பரவலாக இடம் பெற வேண்டும். நா. சுத்தரலிங்கம்
இன்று புதிய தலைமுறைத் தயாரிப்பாளர் த மக்கே எல் இாம் தெரியும் தான்ற போக்கு டன் இருக்கிருர்கள். அரங்கச் சாதகர்கள் பத்துவிதமும் அதற் கான பிரச்சாரம் தொண்ணுரது வீதமுமாக இருக்கின்றது. புதிய தலைமுறையின்ரில் இன்று யார் அரங்கியலே முறையாகக் கற்றுள் விார்கள்? நடிகர் ஒன்றியம், யாழ் நாடக அரங்கக் கல்லூரி இலங்கை அவைக்காற்று கலக் கழகம் ஆகியவற்றின் நாடக முயற்சிகள் குறிப்பிடத்தக்கன். கே. எஸ். சிவகுமாரன்
மலேயக நாடகங்கள் இன் ணும் சினிமாப் பாணியில்தான் இருக்கின்றன. தாசி சியசின் பொறுத்தது போதும் போன்ற நாடகங்கள் கிழக்கு மலேயக மாவட்டங்களுக்கும் சென்று அரங்கேறவேண்டும்.
(இவ்விழாவில் முதல் நாள் காவலூர் இராசதுரையின் போன்மணி திரை ப் படம் கா'ஸ் பிக் கப்பட்ட மையும் மறைந்த தமிழக அறிஞர் பேரா சிரியர் நா.வானமாமலேக்கு அஞ்சஜிசெலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.)
 
 

வெளி உலகும்
ஏ. ஜே. க =
இலக்கியமும் திரை படமும் இரு வேறு ஊடகங்கள' இருப் பதி ஞ ல் (சற்று மட்டமான ਸੰ திரைப்ப்ட்மாக்கப்படும் போது சில வேளகளில் "urԹ"
படுவதற்கு இதுவே
ஒரு நாவல் திரைப்படமாகும்
i ஒடடோடு தில் சுஞைனுக்கு 品ü 、 டங்கள் ஏற்படலாம்.
நாவலும் திரைப்படமும் வெவ்வேறு கலே L_ r. அவற்றை ஒப்பிடவே |-
ஒர் எாதிடுகின்றார் 蜘、 岛、芭h தனிச் சிறப்பியல்புகள் உள்ளன என்ற வகையில் இதில் ஒரளவு நியர்யம் இருக்கவாம்.
இன்னுெரு தரர் படம் எந்தின் விற்கு தரவவில் வரும் சம்பவங்கள்ே அடியெழு இருக்கின்றது எங் அவதானித்து அ  ைத யே 马甲*T呜 கொள்கின்றனர். இவர் து டைய நோக்கில் ஒரு நாவலேத் ĝ} Go) (J. DJ LJ டாக்குவதென்பது நகல் எடுக்கும் । 匈鹉“屁 、 காப்பி அணுகுமுறை முன்னேயூ 岛ä rG市芮 ° நிலப்பாடு երքո քնIT th:
இந்த இரண்டு நிலப்பாடு தளிவிருந்தும் முறை பயனுள்திரப் இருக்கும் "நினைக்கின்றேன். நாவலும் திரைப்படமும் இரு வேறு விட 鬣点町章°° பியல்புகள் உண்டு என நன்கு உணரும் அதே 蠶量」 」
இரண்டும் வாழ்க்கைத்
தரிசனத்தை ஒப்பிடுவது சால
। கிறேன். இவ் வா று ஒப்பிட மறுப்பது ஒரவி முயற்சியாகவே எனக்குப் படு கின்றது. இரண்டு இாடங்களும் தத்தமக்கே உரிய இத்தரிசனத்திை வெளிப்படுத்த முனேகின்றன்.
@岛、 அன் மயில் யாழ்ப்பாணத்தில் திரை பட்ட குயிற் கூட்டிற்கு வேகப் பறந்தது ஒன்று Tள் தும் படத்தைப் பற்றிப் EUம்ே முதலில் இப்படத்திற்கு அடிப்படையாக இருந்த நாவ இப் பார்ப்போம்.
இதன் தேசி எழுதிய நாெ வின் தலைப்பு மன நோயாளர் திலே யாத் தைக் குறிக் கும்.
■■ @」T的四ó *五孟五』 *āL芮岛 பம் என்ற பொருள் ஆங்கிலத் நில் கொண்டிருக்கிறது. இந்தத்
இலப்பு ஒரு நாடோடிப் பாட விலிருந்து கடன் பெறப்பட்ட விரி பறந்தது ஒன்று' என்பது இதில் இந்த நிலையத்திலி பிருந்து தப்பியோடி பவரைக் குறிக்கும்
இந்நேரியின் நாவல் தற் சுற்றுகவே அமைகின்றது. ரெவ் விந்தியக் கலப்புட்ைய சீவ் 品、 ur壶、 (இவரே இறுதியில் த ப் பி ஓடுகிது) । ।।।। கேர்னத்தில் நாவலிலே வரும் மனநோயாளர் விடுதிகுயிற் கூடு - வெளியேயுள்ள முதலாளித்துவ தின், உயிர்ப் நிதி சாகடிக்கும் உலகின் குறி
டாக அமைகின்றது. சுற்று நடத்தி மும் குயிற் கூடும் வெளி வரும் இயல்பாகவும் அடிக்கடியும் தொடர்புபடுத்த படுகின்ற பு தவாளித்துவதி நிற்கு வேண்டி முறை பி ஸ் மனிதர்களின் ஆளுமைகளே பதப்
—

Page 11
படுத்தும் பதனிடு தொழிற்சாலே யாக்வே விடுதி விளங்குகிறது. வெளி உலகின் பிரதிபிம்பமாக வும் அதே வேளே அவ்வுலகிற்கு ஆறுதுகின்பாக நிற்கும் நிறுவ மாகவும் இக்குயிற் கூடு 그 무 பனிக்கிறது
இதுவே நாவல் தரும் திரி சனத்தின் சாரம் என்னுடைய ஆரிப்பிங் கடந்த இரு பது ஆண்டுகளுக்குள் வெளிவந்த திமெரிக்க நாவல்களில் குறிப் பிடத்தக்க ஒன்ருதி யின் படைப்பு திகழ்கின்றது: இத்தளுேக்கும் ஆசிரியர் in Fri நிவாதி அல்ல வேண்டுமென் முல், ஹிப் பி கண்ணுேட்டம்
வர் எனலாம்
இந்த நாவலே அமெரிக்கா வில் இப்போது குடியேறியுள்ள செக்கோள்வரவிய நெறியாளர் ஒரே போர்மன் திரைப்பட மாக்கினூர் நிரை நாடகத்தை உருவாக்கியவர் நாவலாசிரியர் அஃது, ஐந்து பரிசுகளேத் திட் டிக் கொண்ட பெருமையும் இப் ப்பத்திற்கு ஆண்டு எ ல் வி நடிகர்களும் மிகத் திறமையாக நடித்துள்ளமை இதன் சிறப்பம் சம் எனவாம்; துணேப்பத்திரங் களே ஏற்று நடித்தவர்களும் சேபை போகவில்லே.
நெறியாளர் ப்டர்க்க லேயே கதையை வளர்த்துச் செல்லுகிருர் அதிலே சுயிT ந்ே:ள் மூலம் நாவலின் தற்கற்று உத்திக்கு வி பி ஈட்ாக நெறியாளர் கதையைச் சொல்வியிருக்கலாம், ஆனு ஸ் அவ்வாறு செய்ய அவர் முயல் ຂຶ
இதுதவிட ஆடிப்பன்மாற்றம் என்னவென்ருங் கமிரா குயிற் கட்டிற்குள்ள்ேே பாலும் சுழல்வது - ஓரிரு T. சிகத் தவிர, குயிற் கூட்டிற் கும் வெளி உலகுக்கும் இடை
பில் உள்ள பிண்ேப்பை நாவல் எவ்வாறு அம்பலுமாக்கியதென் பதை ஏற்கெனவே சுட்டியுள் ளேன். அந்தப் பரிமாண ம் திரைப்படத்தில் அறவேயில்லே இதனுல், நாவலில் வரும் சம்ப வங்களே ஒட்டியே திரைப்படம் ாடுக்கப்பட்ட போதிலும் முக் கிய சமூகப் பரிமானம் இழக்கப் பட்டு விட்டது எனலாம்.
திரைப்படத்தைப் பொறுத்து வரை எமக்குக் கிடைக்கும் தரி சாம் இவ்வளவுதான் கடும் தடுப்பாடுகளே விதிக்கும் தலே மைத் தாதிக்கு எதிராக உயிர் துடிப்புமிக்க ஒருவன் கிளர்த் திெழுகிருன் இந்த முயற்சி நர்ச்சுவையின் நாடே ஈற்றில் தற் கொலேயிலும் இரக்கக் கொலேயிலுமே முடிவடைகின் றது. சற்றுப் பொதுமைப் படுத் இக் கூறுவதானுஸ் தளிரிைத ஆரின் உயிர்வீரியத்தை எவ்வாறு நிறுவன அமைப்பு சாகடிக்கின் றது என்பதைக் காட்டுவதா நவே திரைப்படம் அமைகிறது.
கட்புலன் சார்ந்த ஊடகத் நிற்கும் மொழிசார்ந்த ஊடகத் திற்குமிடையே உள்ள இயல்பு வேறுபாடுதான் இந்த மாற்றங் களுக்கு காரணமெனச் சிலர் வாதிடலாம். எனக்கு அப்படிப் படவில்லே, நெறியாளர் விரும்பி யிருந்தால் நாடகத்திற்கு ஏற்ப இல் மாற்றங்கள் செய்து நாவ வாசிரியரின் த ரிசன தி தை வெளிப் படுத்தி யிருக்கலாம். ஆஞல் அவ்வாறு செய்ய அவர் முயலவேயில்லே.
தன்னளவில் இத்திரப் படம் வெற்றிப்படைப்பு என்ற போதிலும், ஒப்பிட்டடிப்படை யில் இது எமக்கு ஏமாற்றமா குயிற்சுடும் வெளி உலகும் ஒன்றை ஒன்று தழுவி நிற்கின்றன. திரைப்படத் தில் வெளிஉலகு குறைக்கப்பட்டு குயிற்கூடே எஞ்சியிருக்கிறது;
 

இலங்கை
1958 - ல் இலங்கையில் ஏற் பட்ட எழுச்சியும் புதிய மாற்ற மும் கலே இலக்கியத் துறையி லும் பிரதிபலித்து ஒரு திருப் பத்தையும் விறுவிறுப்பையும் LTIT. அரசிய வில் காணப்பட்ட சில தவருள் போக்குகள் மத்தியிலும் - குறிப் பாக தேசிய இனவாதம், அப் போது பதவிக்கு வந்த பண்டார் நாயக்கா அரசு கடைப்பிடித்த
ஒருதலேப் பட்சமான கொள்கை
ஆகியவற்றின் மத்தியிலும்சரியான தேசிய உணர்வும், முற்போக்கான கருத்துக்களும்
மேலும் பரவலாகப் பெருக் கெடுத்தன். இதன் விளேவாக
மு. எ. ச. தனது வேலேத் திட்டத்தைச்செயல்படுத்தவும், முன்னெடுத்துச் செல்லவுமான சூழ்ந்ஃப் ஏற்பட்டது, இதற் அமைவாக மகாகவி பாரதியா ரின் விழாவை விரிந்த அளவில்
கொண்டாட் இ. மு. எ. க. முன்வந்தது.
இருபதாம் நூற்றுண்டின் முதல் இரு தசாப்தங்களில் தமிழ் இலக்கியத்தில் தேசிய உணர்வையும், முற்போக்குக்
கருத்துக்களேயும் புதிய தமிழை யும் தொடக்கி வைத்த வர் மகாகவி பாரதிதான். எனினும் பாரதியாரைப் பற்றி 1956
SMS SeLS SLSLSLSTSLSSMSLS SLS SLSLMLSSLSLSTSLSS SLSSL LS L TSA S S STS L T SLLSL ML SLS S SLSLTSLSTSLSTSLSTSLSL S LS SL SS SLSS SLS A A SSLS S S S SLS SLSLSLSTSLS
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வரலாறும் அதன் சாதனைகளும்
இளங்கீரன்
வரை இலங்கையில் பேசியும் எழுதியும் வந்தவர்கள் மேலெ ழுந்த வாரியாக பாரதியாரின் தமிழ்த் தண்டயும் கவிதை பி.ப அவர் புகுத்திய புதுமை யையும் சிலாகித்துக் கூறிவந் தார்களே தவிர பாரதி இலக் வியந்தின் முழு உள்ளடக்கத்தை யும், அதன் உண்ர்வு பூர்வ மான இலட்சியத்தையும் மக்க ளுக்குச் சரிவர விளக்கிக் காட்ட
鲇。岛应ra) 山rs员um ரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய உணர்ச்சி, சகோதர
மொழிகளேயும் சகோதர இனங் களேயும் அவர் மதித்த விதம், ஆங்கில மொழி ஆதிக்கத்திற்
கும், தமிழ் மொழி மீது படித்
தவர் மத்தியில் நிலவிய தாழ் அணர்ச்சிக்கும் எதிராக தாய்
மொழிப் பற்றை ஊட்டிய
பாங்கு, தேசிய ஐக்கியத்தில் அவர் கொண்டிருந்த பற்றுறுதி. சாதிக் கொடுமையை வெறுப் போ டும் வெஞ்சினத்தோடும் சாடிய முறை, முப்பது கோடி ஜனசங்கம் முழுமைக்கும் பொது வுடைமையை வேண்டி நின்ற அ வருடைய சமுதாயக் கொள்கை அவரில் காணப்பட்ட சர்வதேச உண்ர்வு, நெஞ்சம் நிறைந்த மனிதாபிமானம் ஆகிய வற்றைக் கூறிடவில் காாளம்
置晶

Page 12
நிலப்பிரபுத்துவ அம்ைப்பின் பிற்போக்கான சமூகக் கருத்துக் களை யு ம் கோட்பாடுகளையும் மனுேபாவத்தையும் கொண்டி ருந்த அவர்களால் மேலே கூறப் பட்ட பாரதியாரின் முற். பாக் கான அம்சங்களை அங்கீகரிக்க விரும்பாததுதான். சொல்லப் போனல் த மிழ் மொழிக்கும் தமிழ்க் கவிதைக்கும் ஒரு மறு மலர்ச்சியை உண்டாக்கிய ஒரு புதுமைக்கவி என்ற மட்டில்தான் அவரைத் தெரியப்படுத்தினரே
தவிர (பண்டித வர்க்கம் இத
னைக் கூட ஒப்பவில்லை) அவரு டைய முழு  ைம ய ர ன தரிச னத்தை - அவர் ஒரு மகா ? என்பதை விளக்கிக் கூறவில்லை. இரசிகமணி கனக செந்திநாதள் கூட அப்போது பாரதியாரை மகாகவி என ஒப்புக்கொள்ள வில்லை பின்னர் ஏற்றுக் கொன் டார் என்ருல் மற்றவர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை,
இந்தக் காலகட்டத்திலே தான் இ. மு. எ. ச. வின் ஸ்தா பகர்களில் ஒருவரான இளங் கீரன் பாரதி இலக்கியத்தை நன்கு அறிமுக ப் படுத்தும் நோக்கத்தோடு பல சொ ற் பொழிவுகளை நிகழ்த்தியதோடு, "பாரதி கண் ட சமுதாயம்" என்னும் நூலையும் வெளியிட் டார். அத்துடன் பாரதியாரின் ஜீவாதாரமான இந்த உள்ளடக் கத்தை - அவருடைய முழுவடி வத்தை ஈழத்துத் தமிழ் மக்க ளுக்கு மேலும் துலாம்பரமாக எடுத்துக் காட்டி விளக்குவதன் மூலம் தனது கொள்கை நிலைப் பாட்டுக்கு உரம் தேடிக் கொள்ள முடியும் என்று இ. மு. எ. ச. அப்போது எண்ணியது. எனவே 1956 ல் நாடு பரந்த அளவில் பாரதிவிழாவை நடத்தியது. இவ்விழாவில் கலந்து கொள்வ தற்காக பிரபல எழுத்தாளரும் ஒலிர்ை இகரும் கவிஞருமான திரு.
மாத்தளை,
ஆகிய ஊர்களில் மான விழாக்களும்,
சிதம்பர ரகுநாதன் தமிழ் நாட் டிலிருந்து வருகைதந்திருந்தார். கொழும்பு, குருநாகல், கண்டி, திருக்கோணமலை, யாழ்ப்பாணம் பிரமாண்ட மலையகம் உட்பட பல்வேறு இடங்களிலும், பாடசாலைகளிலும் நூற்றுக்கதி கமான கூட்டங்களும் நடந்தே றின். சொ ல் லப் போனல் இ. (ம. எ. ச. நடத்திய இந்தப் பாரதி விழாவைப்போல் வேறு எ ந் த வொ ரு ஸ்தாபனமும் அதற்கு முன்பும் பின்பும் நடத் தியதில்லை.
அனுராதபுரம்,
பாரதி விழாவோடு புதிய வேகத்துடன் ஆரம்பித்த இ. மு. எ பின் இயக்கம் அதன் தலை மைக்குழு உறுப்பினர்களின் அய ராத உழைப்பினுலும், தொடர்ச் சியுான வேலைகளாலும் ஏனைய
உறுப்பினர்களின் ஆதரவின லும் முன்னேக்கிச் சென்றது. இ. மு. எ. சவின் கொள்கைக
ளும் செயல் முறைகளும் ஈழத்து எழுத்தாளர் பெரும்பாலோரை
மேலும் அதன்பால் ஈர்த்தன.
பல்கலைக்கழக கல்விமான்களிலி ருந்து சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எழுத்தா ளர்வரை இ. மு. எ. சவின் கீழ் அணிதிரண்டனர் இ த ஞ ல் ஸ்தாபனம் வலுப்பெற்றதோடு, ஈழத்துத் தமிழ் எழுத்தாளரைப் பிரதிநிதித்துவப் படுத் தும் மாபெரும் சங்கமாகவும், ஈழத் துக் படைப்பிலக்கியத்தை நெறிப் படுத்தும் ஆசானுகவும் விளங் கியது.
இ. மு. எ. சவின் வளர்ச்சி யும் அதன் ஸ்தாபன பலமும் 1957 ல் அதன் மு த லா வ து மாநாட்டை நடத்த வழிகோ லின. கொழும்பில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மண்ட பத்தில் வெற்றிகரமாக நடந்த

அ ந்,த மாநாட்டில் அபக்ஹி சுக்கோவ், பெப்லா நெருடா, பொற்றேகாட் ஆகிய வெளி நாட்டு எழுத்தாளர்களும் தமது ஸ்தாபனங்களின் பிரதிநிதிகளா கக் கலந்து கொண்டனர்.
இம் முதலாவது மாநாட் டில் சங்கத்தின் பொதுச்சபை, தலைமைக்குழு, செயற்குழு ஆகி யன உறுப்பினர்களின் தொகைக் கேற்ப விஸ்தரிக்கப்பட்டது. அதே வேளையில். இறுக்கமும் சுட்டுக்கோப்பும் பெற்றதாயும், செயல்வேகம் கொண்டதாயும் மலர்ந்த ), இதற்கு முக்கிய காரணம், இ. மு. எ. சவின் உறுப்பினர்கள் இலக்கியத்தை ஒரு பொழுது போக்கு முயற்சி யாகக் கொள்ளாமல் இலக்கியத் தின் மூலம் தேசிய, சமூகப் பணி யைத் தாம் செய்வதாகக் 7% தியதேயாகும். அவர்கள் தமது பொதுக் கடமைகள் பணிகளில் இ. மு. எ. ச. வின் நோக்கத்தை நிறைவேற்றும் வகைபில் செயல் பட்டனர்.
இ. மு. எ. ச. ஈழத்து இலக் கிய ஆரங்கில் தனிப் பரும் சக்தியாக வளர்ந்தது. சிங்கள இலக்கியகாரர்கள் மத்தியில் கூட இ. மு. எ. ச. வைப் போன்ற சக்தியுள்ள ஓர் எழுத்தாளர் சங்கம் இல்லை எனலாம். எனவே சகோதர சிங்கள எழுத்தாளர் மத்தியிலும் இ.மு.எ.ச, அறிமுக மாயிற்று. இலங்கைப் பத்திரிகை யாளர் சங்கம், பூறிலங்கா எழுத் தாளர் சங்கம் போன்றவை இ. மு. எ. சவை ம தி த் தன. இலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் இ. மு. எ. சவின் பிரகி நிதிகளாக எச். எம், பி. மு5: னையும், இளங்கீரனையும் தனது தலைமைக் குழுவில் சேர்த்துக் கொண்டது. அதேபோல் இ. மு. எ ச. இலங்கையின் மற்றைய கலே, இலக்கிய எழுத்தாளர்
orm F6ör,
ஸ்தாபனங்களுடனும் உ ற வு வைத்துக் கொண்டது,
உள்நாட்டில் மட்டுமல்லா
மல் வெளிநாடுகளிலும் இ. மு. எ. ச. அறிமுகமாயிற்று. அதன் கொள்கைகளையும், இயக்கங்க ளையும் தெரிந்து கொண்ட வெளி நாட்டு எழுத்தாளர் சங்கங்களும் இ. மு. எ. சவை ம தித் த ன. 1958 ல் தாஷ்கண்டில் நடந்த
முதலாவது ஆசிய - ஆபிரிக்க
எழுத்தாளர் மாநாடு இ. மு. எ. சவுக்கு அழைப்பு அனுப்பிக் கெளரவித்தது. சங்க த் தி ன் பொதுச் செயலாளர் பிரேம்ஜி அதன் பிரதிநிதியாக அம்மாநாட் டில் கலந்து கொண்டார். அதே போ ன் று 1961 ல் சென்னை கமிழ் எழுத்தாளர் சங்கம் நடத் திய தமிழ் எழுத்தாளர் மாநாட் டில் ஈழத்துச் சோமு, பத்மா சோமகாந்தன் ஆகியோரும், பம்பாய் த மி பூம் எழுத்தாளர் மாநாட்டில் “சில்லையூர் செல்வ சுந்தா ஆகியோரும் கல்கத்தா தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கைலாசபதியும் மற் றும் பல சர்வதேச பத்திரிகை யாளர், எழுத்தாளர்கள் மாநா டுகளுக்கு எச். எம். பி. முகி தீ னும் இலங்கையினதும் இ. மு. எ. ச. வினதும் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர். அம்மாநா டுகளில் ஈழத்து இலக்கிய பற் றியும், எழுத்தாளர்களின் அபி லாஷைகளையும் மேற்கூறியோர் எடுத்து விளக்கினர். பம்பாய் மாநாட்டில் சில்லையூர் செல்வ ராசனின் முயற்சியினுல் தமிழ றிஞர் சி. கனேசைப்பரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக் கும் தீர்மானம் நிறைவேற்றப் பூட்டதையும் இங்கே குறித்தாக வேண்டும்.
(9). Ղք. 6T. Ժ. தோன்றியதி லிருந்து 1963 வரை, பத்தாண்டு
காலத்துக்குள் அது நடத்திய
இலக்கிய விழாக்கள் பல. கூட்

Page 13
பங்களும் கருத்தரங்குகளும் கனக்சுற்றவை இந்நிகழ்சிக எளில் இந்தியப் பத்திரிகையாளர்க கும் எழுத்தர்னர்களுமான் சிதம் பர ரகுநாதன் முகவை இராஜ | 应s L Tf击点 சாரதி விஜவிபாஸ்கரன், பகி ரன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இ. மு. எ. ச. பல இனக்கிய வகுப்புக் களேயும் நடத்தியது. இவை மட்டுல்ஸ் அது நடத்திய இயக் கங்களின் பயனுசு பல சாதனே கள் நிலநாட்டப் பெற்றன.
1. ஈழத்துத் தமிழ் இலக்கியத்
ற்கென தனிப் பாரம்பரி பம் டண்டென்பதை ஆதார பூர்வமாக நிறுவியது. அதன் தொடர்ச்சியாக இந்தத் தனித் துவமான பாரம்பரியத்தை மன தில் கொண்டு ஈழத்தின் நவின தமிழ் இலக்கியத்தை நெறிப் படுத்தி வெற்றி கண்டது. அதா வது தமிழ் நாட்டின் நவீன தமிழ் இலக்கியத்தின் பிரதியாக அமைப்ாது ஈழத்து மக்களே பும், அவர்களின் இதயத்தை பும், அவர்களின் வாழ்க்கையை யும், சமூக அநீதிக்ளேயும் பிரச்சி னேகளேயும் யதார்த்த பூர்வமா சுப் படைப்பி3 க் விபத்தில் கொண்டுவர வேண்டும் என்பது. இக் கோட்பாட்டின்படி இலங் கையின் பல்வேறு பிரதேசங் களின் பகைப்புடின் வாழ்க்கை முறை பேச்சு வழக்கு ஆகியன இடம் பெறுதல் அவசியமா யிற்று. இது வே யதார்த்த இலக்கியம் மண்வாசனை என்று கூறப்பட்டது. ஈழத்தின் பெரும் பாலான படைப்பாளிகள் இதன்
ஏற்றுத் தமது இலக்கியங்கள் ஆக்கினர். 3. நமது எழுத்தாளர்களின்
படைப்புகளுக்கு வீரகேசரி தினகரன் போன்ற பெரிய பத் சிெகைகளில் இடமளித்துச் சன்
மான்மும் வழங்க வேண்டும் என்று நடத்திய இயக்கத்தில் வெற்றியிட்டியது. இதை ச் சிறிது விவரிப்பது அவசியம்.
1980க்கு முன்பு தினகர னில் இந்திய நாழுத்தாளர்களின் கதைகளும் நாவல்களும் ஈழத் துப் பண்டிதர்களின் இலக்கியக் கட்டுரைகளும், (பெரும்பாலும் பழந்தமிழ் இலக்கியம் பற்றி பவை) கவிதைகளுமே பிரசுர மாயின. ஈழத்துச் சிருஷ்டி எழுத்தாளர்களப் பொறுத்தி வ  ைர இளங்ரேரின் நாவல்க ளேத் தவிர ஏரேய எழுத்தாளர் களின் படைப்புகள்ே அப்பத்தி
சிகை வெளியிடாமல் புறக்க எண்ணிப்பு மனுே பாவத்துடன் நடந்து கொண்டது. இமு.
எ சவின் கலேமைக்குழு உறுப்பி னரான் க. கைலாசபதி 1959 ல் தினகரனுக்குப் பிரதம ஆசிரிய
ராக வந்ததும் ஈழத்து எழுத்
தாளர்களின் படைப்புகள் அப் பத்திரிகையில் தொடர்ந்து
வெளிவராயின் அவர்களின் படைப்புகள் புதிய வீறும் வீச் சும் பெற்றன. அவர்களின்
படைப்பாற்றலே ஈழத்து வாசி கர்கள் அங்கீகரித்து அவற்றை விரும்பிப் படித்தனர். டொமி எரிக் ஜீவா, டானியல் நீர்வை போர்:ான் ரே ஆண்ேசவிங் கன், அகஸ்தியர், நந்தி (டாக் டர் சிவஞான சுந்தரம்) எஸ். பொன்னுத்துரை, க.ச.அரிய நாயகம், அ. ந. கந்தசாமி சொக்கன், வ அ. இராசரத்தி ளம் ஆகியோரின் சிறு த  ைது களும், இளங்கீரனின் நாவல்க இருக்கும் வாசகரின் தொகையை பெருகியது. சில்வேயூர் செல்வ ராசன், புரட்சிக் கமால், ராஜ பாரதி போன்ற கவிஞர்களின் கவிதைகளுக்கும் மெளக ஏற் பட்டது
இவை மட்டுமல்ல தமிழ் நாட்டு ஓவியர்களுக்கு நிகரான
扈
 
 
 
 

றிச்ட் நகரில் ஒத்தாரியே என்னும் இடத்தில் குயுக்தியா ஒரு ஹோட்டல் முதலாளி வருமாறு தன் ஹோட் டல் எழுதியிருந்தார். "எழுபது வயதிற்கு மேற்பட்ட எல்லோருக்கும் இலவச விருந்து கிடைக்கும். ஆனூல் அவர்கள் வரும்போது தமது தகப்பனுரை யும் கூட்டிவர வேண்டும்"
பால - ரகுவரன்
ஓவியர்களும், கேவிச் சித்திரக் க்ாரர்களும் ஈழத்தில் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் ஓவியர் மூர்த்தியின் சித்திரங் ள் கதிை:ளயும், கவிதைகளே யும், நாவல்களேயும் அலங்கரித் தன. சுந்தரின் (சிரித்திரன் சிவ ஞானசுந்தரம்) கேவிச்சித்திர ான சவாரித்தம்பரை பல்லா பிரக் கனக்கானுேர் ரசித்து மகிழ்ந்தனர். தினகரன் ஞாயிறு வார்ம்ஞ்சரி இலக்கியத்திரமான பத்திரிகையாகப் பரி இது மி பெற்றது. இதனேத் தொடர்ந்து வீரகேசரியு'ஈழத்து இலக்கியப் படைப்பாளிகளுக்கு இடமளித் தது. இப் புதிப் திருப்பத்துக்கு
பெரும் உந்துசக்தியாக இ.மு
T மின்னணியில் இயங் கியது.
3துச் செல்வி போன்ற பஸ் இலக்கியச் சஞ்சிகைகளும், ஈழ ாடு, சுதந்திரன் திே சாபி ார் ஆகிய பத்திரிகைகளும் சரஸ்வதி, தாமரை ஆகிய 고 ழக சஞ்சிகைகளும் F ழ 岳、 எழுத்தாளர்களின் படைப்பு ஆர்வத்துடன் ப்ேரிட்டுவந் தன். நூல்களாகவூம் வெளிவரத் தொடங்கின் இவ்வாறு ஈழத் துப் பட்ைப்பிலக்கியங்களின் பிர
சுரக் களம் விரிவடைந்தது. இதனே இ. மு. எ. ச படுத்தி, ஏற்றுக் கொள்ளப் பட்ட ஈழத்தின் நவீன இலக்கிய நெறியை மேலும் வளர்க்கவும், வலுப்படுத்தவும் பல விமர்சன் அரங்குகளே நடத்தியது இ. மு. ச' வின் இதழான் புதுமை
இலக்கியத் தில் சகோதர Etni
சவம் எனும் பகுதியில் இவர் களின் படைப்புகள் சகோதர எழுத்தாளர்களால் விமர்சிக்கப் பட்டன. அத்துடன் புத் தரு விமர்சனம் எனும் தனிப்பகுதி பும் புதுமை நிலக்கியத்தில் திடம் பெற்றது. இதைப் பற்றி கா. சிவத்தம்பி தள்து கட்டுரை ஒன்றில் க்றியுள்ளதை இங்கே எடுத்துக் காட்டுவது பொருந்
|-
த்ெதகைய விமரிசன் வளர்ச்சி தமிழின் ஆக்க இலக் ஒப வார்ச்சியில் புதியதொரு நெறியிளேத் தோற்றுவித்தது ாரலாம். அத்து 骷岛山 ஆக்கமும் விமரிசன் மும் இணைந்து செல்கின்ற ஒரு பண்பு இதனுல் ஏற்பட்டது. இலக்கிய ஆக்கங் சுள் இட்சியத்தன்மையுடைய னவாகவும், செம்  ைம் யான் பொருள் உருவ அமைதியுடை பனவாகவும் அமைவதிற்கு ரிசகர்கள் உதவுவார். இலக்கிய விமரிசனம் வெறுமனே கோட் பாடு மீட்பாக அமைபாது பிரயோரு விமரிசனமாவதற்கும் விமரிசனத்தில் எழுதிதாள்லும் அவனது ஆக்கமும் நுணித்து ஆராயப்படுவதற்கும் இவ்வியக் கம் பெரிதும் தவிற்று தமிழ் கத்தில் நவீன இலக்கியப் பரி சேர்த்ர்ேக் காலம் என்று விவ ரிக்கப்படும் மணிக்கொடி காலத் திற் கூட ஆக்கமும் விமரிசன் மும் இவ்வாறு இன்ேக்கப்பட வில்லே எனலாம்'
(தொடரும்)
፵ቆ

Page 14
ஹிே ராடுமாவி list ஹீரோக்கள்
ஹிரோசிமாவின்
இஒரின் வேர்கள் இன்னும் - இன்னும் அழிவுப் புகயைச் :க் கொண்டே இருக்கின்றன்
ர் பினங்கள் リinrcm G"" நிரோசிமாவின் ஹீரோக்களின் வாழ்வு இமைகள் கருகிப் GLITTEI FET ;
மனிதப் பருக்கைகளே
யூட்ரன் الات الانات التاليين நன்னத் தயாராகும் இருப்புக் திரங்களின் அணுகுண்டு சிருஷ்டிகள் இன்னும் இன்னும் தொடர்கின்றன:
ஜீவமரங்களே ராய்த்தே
டிட் ஜடங்கள்
ਸੰ குஷ்டரோக இதயங்கள் இன்னும் – இன்னும் காத்திருக்கின்றவி
NGF i நுனியாகிய டுரிய விரல்களே சூப்பியப் படியே எதிர்காஸ் நதிகளின்
Golpi II,
விடிவு வெள்ளத்திற்காய்
ாதித் வாசலில் தவமிரு க்கும் ஹீரோக்களின் இதயங்கள் சாஹாராவின் GJELILITITË
孟、 தோண்டே இன்னும் - இன்னும்
சோக ஒளியை உமிழ்கின்றன
ஓ ஹிரோசிமாவின் ஹீரோக்களே!
இன்னும் இன்னும்
எனும் முகாரித் தாளங்களால்
அழிவாகும் உங்கள் தல்முறைகள்
ஆனந்தி வேள்வி நான
ஒரு பொழுதில் விஞ்ஞான சிவனின் நெற்றிக் கண் ஆக்க் ஒளி சிந்தும்:
அன்று
நியூட்ரன் பன்றிகள்
ரது சாந்தடையில் 品站可 Ló* 晶L鸟一 ஜட்ங்களிலேயே சமாதித் தொட்டிலாய் காணும்
அதுவதே" TLDLHCry Gill Er
நேரங்களே காத்திருங்கள்
இரவுகளேப் போல்
 

திசையில்
கொறித்தபடி,
குடித்துவிட்டுத்
Gr Gi) 26.) B, ir.
-
மகேந்திரன்
- -
IெT த்தில் கொஞ்சம் கருமுகில்கள் கானப்பட்டாலும் சூரியன் கிராங்கள் கிழக்குத் இருந்து புறப்பட ஆரம்பித்து விட்டன. கரு முகில் படைகளின் எல்லேகள் அழிந் தழிந்து புதிதாக உருவாகின்
= التي لا .
தோட்டத்தில் வெங்காய இறைப்பு முறை என்றபடியால், கந்தப்பர் விடியமுன் எழுந்து மிசிரேயும் இழுத்துக் கொண்டு リrt_LL」リh リ」エ cm L二 L-Tm、○scm リf cm cm திருந்த பழஞ்சோற்றை ஒரு மண் சட்டியில் கோட்டி, துண்டு துண்டாக வெட்டிய வெங்காயத் தையும் பச்சை மிளாபையும் அதற்குள் போட்டுத் தேசிக் காய்ப் புளியும் மோரும் விட் டுப் பிசைந்து து விட ஒரு கையில் ரசித்துக் மற்ருெரு கை
Graf
나 GurLó 岛马岳
品击。L、r、
அதற்குள் பிசைந்த தோற்தை அள்ளிப்
வயிறு நிறையும்வரை தான் செல்வாச்சி. சுந்தப்பர் காவேயில் எதுவும் சாப்பிடுவ தில்லே. வெறுந் தேநீர் மட்டும் 鲇s L凸学 கம் போகுல் மத்தியானம் இரண்டு மணிக்கு மேல் வந்து
தான் சாப்பிடுவார். பன்னிரண்
டரைக்குப் பிறகு டலே வைத் தாலும் பக்ரறிச் சங்கு இரண்டு
பகு ட் டு த்
கிடங்கு கிண்டி
சோறும் மரவள்ளிக் கிழங்குக் கறியுந்தானே!
பன்னிரண்டரை மணிவரை நீண்டு கிடக்கும் இந்த நேரத்
தில் இன்று எபடியும் ஒரு நாலு
பூவரசங் கதியாலாவது வெட்டி வேலி இல் லா ம ல் கிடக்கும் பனங்காணிக்குப் போடவேண் டும். கந்தப்பரின் பனங்காணிக் கும், அவரின் மச்சான் சின்னத் தம்பரின் வீட்டிற்குமிடையில் உள்ள வேலி பல வருடங்களாக அடையாமல் கிடந்து இழுபடு கிறது. எல்லேக்கு அடையாள் மாக இருப்பது நன்ருகப் பருத்து வளந்து அங்கொன்றும் இங் கொன்றுமாகச் சிதறி நிற்கும் மூன்று நாலு முட்கிழுவைகள் மாத்திரமே!
தாழ்வாரத்தில் கிடந்த முக்காலியை எடுத்து வைத்து அதன்மேல் ஏறி, வீட்டு வேலி பின் ஐந்ாறு பூவரசங்கதியால் களே வெட்டிக் கொண்டு, பாரை யும் எடுத்துக் கொண்டு காணிக் குப் போனு ன் செல்லாச்சி, இரண்டு கிழுவங் கதியாலுக்கு மிடையில் கயிறு கட்டி, கயிற் துக்குத் தெற்குப் புறமாக - அதாவது உபாத்தியாயர் சின் னத்தம்பரின் வளவுப் பக்கமாய்க் கயிற் றை அவிழ்த்துவிட்டுக் கதியால்களேக் கிடங்கில் வைக்கும்போது வீட்டு விருந்தையில் நின்று மெதுவாக எட்டிப்பார்த்தாள் தங்கமுத்து.
* GTGATGor., ..., G.N. Gigartij. Er மச்சாள் கதியால் போடுறியள் போலக் கிடக்கு விருந்தையில் நின்றபடியே உரத்துக் குரல் கொடுத்தாள்
"ஒம் தங்கமுத்து எத் தின்ே வருஷமாத்தான் எல்லே
மண்ணிக்கு மத முன்னர் மை யில்லாமல் கிடக்கிறது. பனங் பல் முடித்து விடுவதில் வ்ெ காப், விறகு க ரூ க்கு ஒரு லாச்சி சுெட்டிக் காரிதான் அறுக் கை இருக்கத்தானே

Page 15
பார்த்தாளோ
வேணும்.
தனது முகத்தில் தொற்றவிட்டு
கூட, பனங்காயும் விறரும் தாங் கள் களவெடுப்பதா இ வுள் solar II. für LHF என ஒரு ஐயப்பாடு பளதில் ஐதிக்க, அதை வெரிக்காட்டிக் கொள்ாரம்வே, ஒறோம். போடததான் வேனும்" என்று
| GFr7 liefd, (RFIFFH G| FTE ERAD.P.G.Er Lin.
கொண்டு அளந்து வந்தாள்
நிறுத்தி மங்போட்டு பாரை 匾_酉岳fā mā
岛山r É二*击
:) Ĝi ĉi G, L, J, IT தங்கமுத்துவின் தாளில் தி ரென மாற்றம் தென்பட்டது.
ਪ, என்டு நினேசசுக்கொண்டு நினச் " - 두 - போல்ே கிடக்குடி
இப்போது மச்சாள் என்ற உரிம்ை, நீங்கள் என்ற மரியா தைப் பன்மை எல்லாம் மெது வர்க ஒடி ஒளிந்து விட்டன.
ஏன் என்ன பிழைர்
ந்தபடியே தந்பை
ான்ன பிழையோ பற கதியால் எங்கை நிர்ந்து புதுக்
தியால் எங் ட ெ குள்ள ஒரு முழப அள்ளி நிர் இது விேக் கார் பிடிக் கிறது- தனக்குள் 岛、呜 高r、 、 、 பிரித்துக் கனக்சு, வெஞ்சினம் தொனிக்
凸r厅岛酉f
கும் குரல் உச்சஸ்தாயில் ஏறி ஒலித்தது.
பொத்தடி வாய் ஆர் கள வாக் கான்னி பிடிக்கிறது? உங் கடை பரம்பரையிலேதான் உந்
ਨ।
கட்டி நேராத்தான் போட்டிருக்
தங்கமுத்துவுக்கு இப்போது ரோசம் வந்துவிட்டது. சேலேயை இழுத்துச் சொருகிக் கொண்டு. த தி ஆனேக்கால் போன்ற கயை மடித்து நீட்டிக் காலே ஒரு அடி முன்னுல் வைத்து 亭、 57°*歳 என்ப்ே பொத்தடி வாய் எண்டு சொல்ல நீ ஆரெண்டு கேர்திறன் சொல்லுவியோ, சொல் ஆளாவிட்டியோ . எப்ப வந்த பனம் உங்களிட்டை வினு வாயைக் காட் டிஜ உன் ரை மண்வெட்டிப் பல்வேக் கொட்
டிக் கையிலே தருவன் ஒ."
இரண்டு । । 匾 凸河*J嘻甸岳芭 மூச்சு இரைத்தது.
பலமாகிக் கதைப்பதற்கு மிகவும் விடப்படுகின்ற தன் து தாய் நரத்துக் கதைந்த சந் தடி கேட்டு உள்ளிருந்து வெளி
॥
- | iii ਸੰਪੰ 凸、 扈 リTf
"அம்மா ஒரு அரை அங்கு வள் பாணிக்காண்டி விஞ ஏன்
| lai போங் கோ மாமி நீங்களும் போங்கோ தன்னே ஒரு இண்ட பினக்சுவர் என்று எவ்வாரிடமும் ré、ó击 Gā 高店、 குமார் நியாயமாகவே பேசினுள் ஆஞல் தங்கமுத்து அவனேப்
HLH..
போ மோனே உள்ளுக்கு உாக்கு உவையின்னர குளம் தாயாது" என்று மெதுவாகத்
 

r"
தொடங்கி, இடம் குடுத்தால் துலேக்குமேலே ஏறி நிப்பினம். இண்டைக்கு அரை முழம் பிடிப் | iii தும் தங்களின்றே எண்டு நிப் என்று படிப்பாக உயர்த்தி, விட்டிட்டுப் பேசா மல் நிக்கிறதே?" என்று உச்சர் தாயில் முடித்தாள்.
செல்லாச்சியும் தங்கமுத்து வும் பிரச்ச ரே ப் படுகிரர்கள் என்ற செய்தி Tரில் உள்ள செய்தி காவும் அலுவளர்களால்
*L、 தோட்டத்தில் இறைத் துக் கொண்டிருந்த கந்தப்பருக்கு
எட்டிவிட்டது அவர் இடுப்பில் சொருகிய கு  ை க் சுந்தியும் தலப்பான்காமா 岛一面5 rf நோக்கி
இவ்வளவும் நடக்கும்வரை இருண்டது விடிஞ்சது நெரி யாமல் பேப்பர் படித்தபடி சி செயரில் படுத்து நித்திரையா । । தம்பு ■山r、uruf。 வந்து எழுப்பிய பிறகே சோம் பல் முறித்தபடி எழுந்துவந்தார்.
வேடிக்கை L厅f、
ஒழுங்கையில் சேர்ந்துவிட்ட பந்
ਪੰਜਾ। பின், பஞ்சுப் பரிபாரியார் மாத் திரம் ச | ர ம் செய்யவென் முன்னுக்கு வந்தார்
ான்ன செவ்வார் அக்கா உதுக்கெல்லாம் அடிபிடிப்படுகி றதே . மச்சாரும் நச்சாரும்,
குப் ாேஞன் எத்தின் ஆயிரம் @互aar,匣而 r邬fá 、 uu H S S S K S S Y S SY LLLS
। பின்
என்று ஒரு புத்துப் பேருக்கா
வது நிருபிக்காமல் சமரசம் செய்யக் கூடாது என்று நிளேத்த தங்கமுந்து
माrnी-ो|Ur|th
* It i GT రీ பிடாதேங்கோ டிவையள் தங்
டப்பிடித்தான் ஒரு முழம் ஒரு முழா ஒரு பரப் புப் பிடிச்சுப் போட்டினமாம்
| , அவற்றை காரி இப்ப இரண்டு பரப்புக் குறையுதாம். அந்தச் சேட்ட எங்களியும் விடப் |- சரிவராது" என்று மூச்சு இரைக்க இ விர க் நிறுத்தி நிறுத்திச்
விக் கொண்டிருக்கும்
|-
பிரே ஒருபுற அள்ளி முடிக் துந் கொண்டு முன்னுக்கு வந்த
:ெவார்ரி, தங்கமுந்துவின் கு க்கு மவே கேட்கும்படி
வார்ந்தைகள் சிதறிப் பறந்தன.
|- | எங்களுக்குத் தெரியாதெண்டு
ஆர்டி அதி கள்ளக் கோழி பிடிக்கிறதெண்டு சொல் நீ
ਘ முந்து அதற்கு மேல் உரத்துத்
லும் பயத்திலும் உடல் பதிறப்
। "இஞ்சை பாருங்கோவன் இவள் என்ளேக் கள்ளக் கோழி பிடிச்சரெண்டு சொல்லுருள் நீங்கள் கேட்டுக் கொண்டு சிறியள். இன்னுெரு ஆம்பிளே யெடா.." என்று உபாத் பாயரைத் துவக்கு அழைத்து அவரின் ரோசத்தையும் தூண்டி விட்டாள் இதுவரை தனது பாளி எதற்காகச் சண்டை பிடுகிருள் என்பது புரியாதவ ராப் விழித்துக் கொண்டு நின்ற பாத்தியாயர் தங்க முத் து
ਸੰ தைக் கண்டதும் வேட்டின் படித்துக் கட்டிக் கொண்டு

Page 16
செல்லாச்சி பெண்ணுய்ப் பிறந்தவளாய்க் கிடக்கு இல் வாட்டி இப்ப நடக்கிற சங்கதி வேறை" என்று விர வசன்ம் பேசி நிலத்தில் கிடந்த செல் லாச்சியின் கத்தியையும் கையில் எடுத்துக் கொண்டார். சிெல் லாச்சி ஒரு பெண் என்றபடி பால்தான் உபாத்திபாயர் கத் தியைக் கையில் எடுத்தார் என் பதும், முன்ஞல் ஒரு ஆண்மகள் நின்றிருந்தால் அவர் துன்னிந்து சண்டைக்குப் போகமாட்டார் என்பதும் ஊர் அறிந்த ரகசியம் த ன து விரத்தைச் சோசிப்ப தற்கு ஒரு உரைகல்லாக இந்தச் சந்தர்ப்பத்தை அவர் பயன் படுத்த விரும்பிஞர்.
உபாத்தியாயர் கை பில் கத்தியை ஓங்கிக் கொண்டு நிற் பதையும் தனது மன்ேவி உரத் துக் கத்துவதையும் தூரத்தில் வரும்போதே பார்த்து விட்டுக் கத்தியுடன் ஓடிவந்தார் கந்தப் பர். கோபத்தில் அவரது மயிர்க் கால்கள் குத்திட்டு நின்றன.
செல்லாச்சியைத் தனிய வைச்சுக் கொண்டு அவை புரு ஷனும் பெண்டிலுமா வெருட்டி னேமோ. நான் ஒருத்தன் இருக்கிறதை மறந்துபோச்சி எம் போல.
சுந்தப்பர் ஓடிவருவதைக் கண்டுவிட்டு, ஓங்கிய கத்தியைத் தாழ்த்திக்கொள்வது கெளரவக் குறைவு என்று நினத்த உபாத் தியாயர், அந்தக் கத்தியால் செல்லாச்சி போட்டிருந்த கதி பால்சளயெல்லாம் தயவு தாட் FESTILLsol. fl. பரபரவென்று வெட்டிக் கொட்டிஞர்.
கந்தப்பரின் சிவந்த விழிகளே யும் துடிக்கும்  ை க ளே யும் தூரத்திலேயே கண்டு விட் ட உபாத்தியாயரின் மகன். அந்த இன்ரலெக்சுவல் விஷயம் விபரி
த மா கப் போவதாக எதிர் ாார்த்து முற்றத்தில் சாத்தி பிருந்தி சைக்திரே எடுத்துக்
உபாத்தியாயரும்
கொண்டு பொலிஸ் ஸ்டேசனுக்கு ஒடிஞன்
செல்வாச்சி போட்ட கதி பா: வெட்டிறியோ. நியோ" என்று கந்தப்பரும் கதியாலும் இழுபறி ப் பட்ட தில், கந்தப்பரின் பத்தி உபாத்தியாயரின் கையைக் கீறி விட்டது.
கந்தப்பர் வெட்டிப் போட்டான்." என்று கத்திக் கொண்டே பாத்தியாயர் விட் டிற்குள் ஒட தனது தேகத் ஒன்தக் ஈர்க்க முடியாமல் சுமந்து கொண்டு அவரின் பின்னுல் ஓடி ஞள் தங்கத்து எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாமல் அந்ந்குள் டிவிட்ட இருபத் விதந்து ரப்பது ஊர்ச் சினம் கந்தப்பரையும் கல்லாச்சியை
பும் வீட்டிற்கு அனுப்பி வைத்
தான் போட்ட கதியால்
கள்ே வெட்டிஞர் என்று உபாத் தியாயர் மேல் வழக்குப் போட் டிருக்கிருர் கந்தப்பர், தனக்குக் கத்தியால் குத்த முயன்ருர் என் தும் மனேவியை அவமானப்படுத் திஞர் என்றும் உபாத்தியாயர் வழக்குப் போட்டிருக்கிருர்,
"வழக்குச் செலவு எவ்வ இாவுரி ஒரு அங்குபெக் காவிரியின் பெறுமதி எவ்வளவு?" பஞ்சுப் பரி பாரியார் உபாத்தியாயரிடம்
பெறுமதி பற்றி ஒண்டுமில் வேக் கானும், செல்லாச்சி, சுத் தப்பர் செய்தது பிழையெண்டு நீதவான் சொல்லவேனும்
உபாத்தியாபரின் கடுகடுப்பு ஒயவில்வே சொந்தங் கள் எல்லாம் பிசிறின்றி அறுந்து போவது பற்றி, மச்சான், மச் சாள் என்ற நெருங்கிய உறவு களுக்கிடையில் பெரிய எல்ல்ே கள் போடப்பட்டு விட்டது பற்றி யாருக்கு என்ன கவலே ே
*“
 

ஏ. ஜே. கனகரட்னு
தமிழாக்கம்
முற்ருெ டர்
அதிகாரி ஆட்சி,
சோசலிசம்,
இலக்கியம்
பெப்ரவரி 1917-இல் நடை பெற்ற புரட்சியில் அலெக்சான் டர் கெரன்ஸ்பியின் தப்ேமையின் பூர்ஷ்வா ஜனநாயகி 马、芷 கம் பதிவிக்கு வந்தது. சார்
மன்னன் முடியைத் துறந்தார்.
ஆயினும் நேச நாடுகளின் புத்த
நோக்கங்களுக்கு ஆதரவளித்து வந்த கெரன்ஸ்கியின் அரசாங்
கம் விரைவிலே மக்கள் ஆதர வையும் தனது அதிகாரத்தை
யும் இழந்தது. ஒக்டோபரில்
கைத் தொழில் துறையைச் சார்ந்த தொழிலாள வர்க்கம்
பொல்ஷெவிக்குகளுக்குப் பின்
அணிதிரண்டு துரதிர்ஷ்ட சாலி பாண் கெரன்ஸ்கியை வரலாற் றின் குப்பைத் தொட்டிக்குள்" விசியது. முற்றிலும் எதிர்பார்க் காதவர்களிடமிருந்து புதிய அர சாங்கத்திற்கு ஆதரவு கிடைத் பியுகரிச குறியீட்டுவாதக் கவிஞர்களான அலெக்சான்டர் புளொக்கும், ஆன்ரே பெவியும் ஆனந்தப் பரவசத்தோடு புரட் சியை ரஷ்யாவின் நாழிக் கூத் தாக வரவேற்றனர். புளொக் வருமாறு எழுதிஞர் "பயங்கரச் சூர்வளியையோ பனிப்பு ஃபோ போன்று ஒரு புரட்சி எப்பொழுதுமே புதிய எதிர் பாராதவற்றைக் கொண்ர்ந்து
■■
அலன் ஸ்விஞ்வுட்
பல பேரை இரக்கமற்று ஏமாற் ருகிறது. அதன் சுழிகள் நல்:
வர் ாே விழுங்கி தகுதியற்றவர்
சாக் காப்பாற்றுகின்றன. ஆஞல் அதுவே புரட்சிகளின் இயல்பு. அதனுல் நீரோட்டத்
தின் முழுமொத்த திசை மார்க் கம் மாறுவதுமிங், அதனுடன் பிறந்த செவிடுபடுத்தும் பயங் கர ஆரவாரமும் ஒய்வதில்லே. அதன் பேரிரைச்சல் அ த பின் உன் தத்தின் வெளிப்பாடு.
ஏனய ரஷ்ய எழுத்தாளர் கள் இத்துனே ஆர்வம் காட்ட விங்ஃ. 1922 ரன்வில் பெரு மாவிங் ரஷ்ய எழுத்தாளர்கள் மேற்கு ஐரோப்பாவிற்குப் படை பெடுத்துக் சென்றமை பொல் ஷெவிசம் மீது கற்றறிந்தோர் חווהG חי ולהיוו ל "rraí LעHrö"חr,H#nh r_jווה. கொண்டிருந்ததைக் குறிக்கின் றது. ஐவன்பனின், லியோனிட் அன்ரேயேவ், அலெக்சியி ரெமி சொவ் ஆகியோர் நிரந்தரமா சுவே தாய்நாட்டை வி ட் டு வெளியேறினர். அலெக் சயி ரோஸ்டாப் தோர்க்சி, ஏரின் பேர்க் ஆகியோர் தற்காவிக நாடோடிகளாயினர். ரஷ்யா வில் தொடர்ந்தும் வாழ்ந்த புரட்சிக்கு முற்பட்ட ரன்

Page 17
எழுத்தாளர்கள் புதிய நிலை மைக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்வதில் சங்கடப்பட்டதால் முக்கியத்துவம் வாய்ந்த அதிக படைப்புக்களை உருவாக்கவில்லை,
ய தார் த் த இலக்கியத்திற்கு
புரட்சி புத்துயிரளித்து சோசலிச இலக்கியத்தை உருவா க்கு ம் என்ற எதிர்பார்ப்புகள் விரை விலே கலைந்தன; புரட்சி க்கு உடன் பின்வந்த ஆண்டுகளிலே முன்னணிக்கு வந்த புதிய எழுத் தாளர் தலைமுறை 19 ம் நூற் ருண்டு இலக்கிய ஆசான்களால் அல்ல. குறியீட்டு வாதம், பியு சரிசம் ஆகியவற்ருல் பாதிப்புற் றிருந்தனர். மொடனிசம் நசுங் குண்டிருப்பதற்குப் ப தி லாக வலுவாக உயிர்ப்புப் பெற்றது. பு ர ட் சி யை விமர்சனக் கண் ணே ட்ட த் தோ டு ஏற்றுக் கொண்ட அதே வேளை அதை ஒதுங்கி நின்று ஐயுற வாக நோக்கிய எழுத்தாளர்களினூ டாகத்தான் - இலக்கிய உடன் பிரயாணிகள்" என ரொட்ஸ்கி இவர்களை அழைத்தார்-யுரட்சி தனது உச்ச கலை வளிப்பாட் டைப் பெற்றது; பில்னியாக் சாம்யாட்டின் பெடின், ஒலெசா, லியேனேவ். புரிவதற்கு கடினமா யிருப்பதாக லெனின் குறிப் பிட்ட மொடளிசத்திற்கு ஒரு
புதிய, ப ற் று று தி வாய்ந்த யதார்த்தம் சரியான சவால் விடவில்லை. 1920 களில் ஏறக்
குறைய ஒருவகை தற்போக்குக் கொள்கையே ரஷ்ய பண்பாட் டுத் துறையில் பரவியிருந்தது. ஆணுல் 1930 கள் அளவில் மிகக் க ட் டு ப் பெ ட் டி த் தனமான, நெகிழ்ந்தே கொடுக்சு மறுத்த வைதீகப் போக்கு பல்வகைத் தன்மையையும் பரிசோதனையை யும் அக்ற்றிவிட்டது. 1934 ல் நடைபெற்ற சோவியத் எழுத் தாளர் மகாநாட்டில் முதன் முத 际)师”高 எடுத்துரைக்கப்பட்ட
ஸ்டாலினிசம்
சே (ா ச லி ச யதார்த்தவாதக் கோட்பாடு இலக்கியத் துறை யிலே செல்லுபடியாகக் கூடிய வற்றின் அரசியல் உரைகல் ஆகிற்று. ஸ்டாலினுடைய கலா சார சீர்திருத்தங்கள்’ சோவி யத் இலக்கியத்தை சிறைப்படுத் தத் தொடங்கிய காலகட்டத் திலேதான், மேற்கத்தைய எழுத் தாளர் புரட்சியின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அரசியல் - இலக் கிய விவாதம் ஒன்றில் சிக்கிக் கொண்டனர். இந்த விவாதமே நவீன சோசலிச நாவலின் தலை விதியை நிர்ணயித்தது எனலாம். யதார்த்த வாதம் குறித் து
எழுந்த விவாதத்தில், நேரடி u urf 95GBanunr மறைமுகமாகவோ மால்ரோ, டொஸ் பஸ்சொஸ்,
ஹெமிங்வே, கேஸ்லர், ரொமெ யின் ரோலண்ட், கீற், பார்புசே,
மார்ட்ரின் நெக்சோ (டானிஷ் எழுத்தாளர்), இ ஷ வுர் ட்,
லியோன் பியுட்வங்கர், ஹைன்
ரிக் மான் ஆகியோர் சம்பந்தப் பட்டனர். சோவியத் யூனியன் மீதும், சோசலிசம், மார்க்சிசம்
எனத் தாங்க ள் விளங்கிக் கொண்டதற்கும் பலர் உறுதி யற்ற நம்பிக்கை விசுவாசம் கொண்டனர். புரட்சிகரக் கட் டத்தை கம்யூனிசம் தாண்டி விட்ட பின்னர்தான் மேற்கு ஐரோப்பாவின் முக்கிய எழுத் தாளர் சிலர் அக் கோட்பாட் டினல் ஈர்க்கப்பட்டு பாதிப்புற்
றனர்; 1917 ஆம் ஆண்டு இலட்
சியங்களான சர்வதேசீயத்திற் கும் ஜனநாயக சோசலிசத்திற் கும் பதிலாக தேசியவாதமும்
அதிகாரி வர்க்கத்தின் மேலா திக்கமும் அப்பொழுது நிலவின. தவிர்க்கமுடியாதவாறு - குறிப் பாக 1939 இல் உ ரு வா கி ய நாசி - சோவியத் ஒப்பந்தத்திற் குப் பின் - மாயை கலை ய த் தொடங்கியதும், வெறுமனே Q La Gis a ri خن ها :

சோசலிசமும், மார்க்சியமும் சில சமயங்களிலே ஜனநாயக மும் கூட நிராகரிக்கப்பட்டன.
இந் த ப் போக்கு ஒர்வெல், கேஸ்லர், கெமு. சாத்ரே டொரிஸ் லெசிங் ஆகியோரு
டைய அரசியல் நாவல்களிலே காணப்படுகின்றது. 1920 களின் துன்பகரமான நிகழ்ச் g is air ப்ாஸ்ரணுக்கினதும் சொல்சனிட் சனினதும் படைப்புக்களிலே ஆவிகள் போல் உலாவுகின்றன.
ஸ்டாலினிசத்தின் வளர்ச்சி மொடனிசத்தின் எல்லா எச்ச சொச்சங்களையும் அழித்தது. பல எழுத்தாளர்கள் அளுமை தேயங்களாக தொழில் முகாம் களில் இறந்தனர். வேறு சிலர் தாய்நாட்டை விட்டுச் செல்வ தற்கும் மெளன விரதம் அனுட் டிப்பதற்கும் நிர்ப்பந்திக்கப்பட் ட்னர் (சாம்யாட்டின், ஒலெஷா புல்ககொவ்). சிலர் தற்கொலை செய்தனர் (மாயாகொவ்ஸ்கி): அல்லது அதிர்ஷ்டத்தாலோ நேர்மையீனத்தாலோ தம்மை விற்கத் தயாராகவிருந்ததாலோ உயிர்பிழைத்தனர் (ஷொலொக் கோவ், அலெக்சயி டொல்ஸ் ராய், பெடின் லியோனுேல்) புரட்சி மீது பொதுப்படையான பற்றீடுபாடு என்ற கொள்கை உருமாறி ஸ்ராலினுடைய வர லாற்றுத்திரிபு மீது விடாப்பிடி பற்ருகிற்று. ஸ்ராலினுடைய சொற் களி ல் கூறுவதானல், எழுத்தாளன் - குறிப்பாக நாவ திரியர் - ம்ணித ஆன்மாவின் பொறி அமைப்பாளனக மாற
வேண்டும் பொது இலட்சியத் திற்காகவே தனது க லை  ைய உருவ1 க்க வேண்டும். எனவே
பற்றுறுதி மிக்க GFIT's 5t, யதார்த்த இலக்கியம் "மொடி னிச த்தை மறுத்ததோடு சமூக cogos Gpital Lotuit is உள் வாறே வர்ணிப்பதையும் நிரா கரித்து, சமூக நம்பிக்கை, ஆர்
go 66
வம், நம்பிக்கை மிக்க இலட்சிய கதாநாயகன், வீரம்மிக்க தொழி லாளர், நேர்மையான கட்சித் தொண்டர் - 1934 - ம் ஆண்டு நடைபெற்ற எழுத் தா ன ர் மகாநாட்டில் பிரகடனம் செப் யப் பட்ட "செயலூக்கமிக்க" இலக்கியம் இவ் வ |ாறே வடி லெடுத்தது. m
இவ்வாறு இலக்கியத்திற்கு அதிகாரிகளினல் தளையிடப்பட் டமை, எழுத்தாளர் அணிவகுக் கப்பட்டு அரசியல் நிர்வாகத் திற்கு உட்படுத்தப்பட்டமை, இவற்றின் விளைவாக அவர்கள் செயலூக்க இலக்கியக் கோலம் பூண்டமை எல்லாம் போல்சவிக்
கோட்பாட்டினது - குறிப்பாக கட்சி, இலக்கியம். அரசியல் ஆகியவற்றிற்கிடையே நில வ
வேண்டிய தொடர்புகள் பற்றி லெனின் கொண்டிருந்த எண்ணங் களினது - தர்க்கரீதியான, வர லாற்றுத் தொடரின் கூட்டு மொத்தம் எனச் சில சமயங் களிலே சுட்டிக்காட்டப் படுகின் றது. ஒரு கட்சியே அனுமதிக் கப்பட்ட அரசியல் பற்றீடுபாடு அற்ற எழுத்தாளனுக்கு இடமே யில்லை எனப்படுகிறது. எனவே தான் 1920 களில் எழுத்தாளர்
களுக்கும் இலக்கியக் குழுக்களுக்
கும் ஓரளவு சுதந்திரம் வழங் கப்பட்டமை, கம்யூனிஸ்ட் கட்சி கலைத்துறையிலே ஆதிக் க ஞ் செலுத்துவதற்கான முழு அதி காரத்தையும் வல்லமையையும் பெற மு ன் பு செய்யப்பட்ட. இடைக்கால ஒழுங்காக- உறுதி யற்ற நிலையில் மேற்கொள்ளப் பட்ட தற்காலிக உத்தியாகசிலரால் கணிக்கப்படுகின்றது. ஆனல் இத்தகைய வாதம் அக் கால கட்டத்தின் மிக முக்கிய அம்சம் ஒன்றைப் புறக்கணிக்கி றது: அக்கட்டத்திலே இரு குழு க் கள் ஒன்றை ஒன்று எதிர்த்து அரசியல் போராட்டம்
3.

Page 18
நடத்தின. யம் சமூகப் பொறுப்பும், பய னும் வாய்ந்ததென வாதிட்ட னர். மறுசாரார் நிர்வாக ஆணை க ள |ா லோ "கூட்டத்தோடு கோவிந்தா போடும்" மனப் பான்மையாலோ கலை படைக் கப்பட முடியாதென்றும், கலை அரசியல் நெருக்குவாரங்களுக்கு உ ட் படுத்தப்படலாகாதென்றும் இயம்பினர். 1930 கள் அளவில் பின்னைய போக்கு ஏறக்குறைய நசுக்கப்பட்டு விட்ட ஆ. இதனல்
1928 ல் தாயகம் மீண்ட மாக்
சிம் கார்க்கி "விமர்சன யதார்த்த வாதத் திற்கும் , “ (3F mr.gr 65g யதார்த்தவாதத்திற்குமிடையே உள்ள அடிப்படை வேறுபாடு முன்னையது ம னி த ன் தனது அடிமை நிலையிலிருந்து விடுத லையை நாடுவதற்கான வழியைக் காட்டமுடியாமையே எனக் கூற முடிந்தது. சோசலிச யதார்த் தம் வெறுமனே சமூகத்தின் சீர் கே டு க ஃா அம்பலப்படுத்துவ தோடு மட்டும் நில்லாது, சோச லிசத்தின் அதன் சாதனைகளையும் ஆக் க பூர்வமாக பிரதிபிம்பம் செய்ய வேண்டும் என கார்க்கி வாதிட் டார். "விமர்சன யதார்த்த த் தைத் தாண்டி-சமூக வாழ்வின் எதிர்மறையான நம்பிக்கையை இழக்கச் செய்யும் இருண்ட பகு திகளுக்கு அது கொ டு க் கும் அழுத்தத்திற்கு அப்பாலே - அனைத்துலக தொழிலாள வர்க் கத்தைத் தட்டியெழுப்பி அதன் உரிமைகள் பற்றிய புரட்சிகர அ றி வுணர்  ைவ "சோசலிச யதார்த்த எழுத்தாளர்கள் தூண்ட வேண்டும் என தார்க்கி வற்புறுத்தினர். "மனித ஆன் மாவின் பொறி அமைப்பாளன்" என்ற மு  ைற யி ல் வர் க் க உ ண ர்  ைவ உருவாக்குவதே எழுத்தாளனின் பணி: 6 இனங்கள் வாழும் சோவியத் ஒன்றியத்திலே எவ்வாறு நோக்க
نے 3
ஒரு சாரார் இலக்கி
தவிர்க்கமுடியாத,
படைப்பாற்றலையும்
ஒருமைப்பாடு பற்றிய உணர்வு தோன்றியதென அவன் காட்ட வேண்டும்'. இக் கூற்றின் படி, இலக்கியம் எதிர்காலத்தைச் சார்ந்து நிற்கிறது: சமூகத்தின் முற்போக் கான உருமாற்றத்தில் அது பற் றுறுதி கொண்டிருக்கிறது. எழுத் தாளனின் கடமை வாய்மை போ ன் ற அகமயமான கலை ஆணைகளுக்கல்ல; வரலாற்றின் உள்ளார்ந்த நோக்கத்திற்கே அவன் பொறுப்பு வாய்ந்த வன்:
வரலாற்றின் நோக்கத்தை அர சும் அதன் அதிகாரிகளும் அதி
கார பூர்வமாக வெளிப்படுத்தி மிகப்பெரிய பொலிஸ் அட கிகு முறை இயந்திரம் மூலம் நிறை வேற்றுகின்றது. க: m க்கியின் அதிகாரப் பாங்கான திட்டத் தில், சமூக ரீதியாகவும் கலே ரீதியாகவும் இலக்கியம் ஒரு சித் தாந்தமாகப் பணியாற்றுகின் றது; வர்க்கத் தொழிற்பாடு, அரசியல் அமைப்புகள் ஆகிய வற்றின் வெறும் துணை உறுப் பாகத்தான் எழுத்தாளன் இருக் கிருன்; முதலாளித்துவத்தை அகற்றி சோசலிசத்தைக் கட்டி
யெழுப்பும் முயற்சிகளில் அவன் ஓர் உறுப்பு.
உலகை இலக்கியம் அறிவு
பூர்வமாக உருமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை சோசலிச யதார்த்தவாதம் சாராம்சத்தில் தன்னுள் அடக்கியுள்ளது. இந் நிலைப்பாட்டிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கே விஞ்ஞான பூர்வமான வரலாற்றுணர்வும், இன்றைய, வருங்காலப் பணிகள் பற்றிய தெளிவான விளக்கமும் இருப்ப தால் இலக்கியத்தின் உள்ளடக் கத்  ைத யும் தன்மையையும் வரையறுப்பதற்கு 'அ' த ற் கே உரிமையும் அதனிடமே வழி வகைகளும் உண்டு என்ற கருத்
நிலைக்கும் அதிக இல்லை. கட்சியின் ஆற்றுப்படுத் தலில் எழுத்தாளன் "சீருடை

في
கடற்க்ரையில் இயற்கைச் சூழலில்
இயற்கைப் பின்னணியை செனகரியமாக அமைந்த இயல்பாகக் கொண்டதும்; Qaf 6 Kurtar Joy60p&dër
கொண்டதும்:
ரச க்குத் தகுந்தமாதிரியுமான உள்நாட்டு, வெளிநாட்டு ' • asasiupmrear LuG9 dieczo aJ aJ aJF Áî aSeir, ... . மதுபான வகைகளும் போக்கு வரத்துக்கு வாய்ப்பான இங்கு பெற்றுக் கொள்ளலாம், சூழ்நிலையைக் கொண்டதும்
For A Comfortable Stay in Jaffna Amidst Pleasant Surroundings
శే W | G R A N D H O TE I FOREIGN Li QUOR AWALABLE
37, BEACH ROAD. Tophone : 544 , JAFFNA.
தொழில் நுட்பப் பயிற்சிகள்
வெல்டிங், இலெக்றிக் வயறிங், G f டியோ,
P M. C., C. E. l. City & Guilds, Building Technology,
National Institutes
57, பாங்சோல் வீதி,
யாழ்ப்பாணம்'

Page 19
Malika
III, | । RGIsi EREDASA NEWSPAPE YS S S SS SAAASAAAS SqS S SYS
DEALERS IN:-
. Timber, | . Chiphoard í : Wall panell
| || VIII
ரா காந்
Pl.: Sw. Sewu
இபதிகை 284B காங்கே * விெற்பவருமான G|-alfa ஜியா ஆர்களா
匾。、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NOVA
W.
мдвсн 19
IN SRI LAN KA
*ó *。
*
gånga Chinettian
"I 140, ARMOUR STREET,
COLOMBO-12.