கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளமைக்கோலங்கள்

Page 1
GIADHËS
മീ. s S
CyA 17 7:24
fé
༦| பகம் ܵ 1
 


Page 2

வீரகேசரி பிரசுரம் 71
இளமைக் கோலங்கள்
சுதாராஜ்
இ வெளியீடு
வீரகேசரி ,760 த.பெட்டி إيطاليا , Бълорди.

Page 3
Illa mail Kollangal
wRITTEN BY : S. RAJASINGAM
(SUTHARAJ) 28, 4th Lane,
Arasady Road, Jaffna.
First Edition: APR - 1981
Price Rs. 7/90
coPYRIGHTS
RESERVED WITH THE PUBLISHERS
VIRAKESARI PIRASURAM 71
Published by:
V IR A K E S A R P. O. Box: 160, COLOMBO.
Fxpress Newspapers (Cey.) Ltd. | KS, ( irandpa III Road, Colombo - 14.

முன்னுரை
2த்தியோகம் பார்ப்பதற்காக கொழும்புக்கு வருப வர்களில் அறைவாசிகளான பலரது சீவியம் எனது மனதை தொட்டிருக்கிறது. வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்தவர்கள் விதம்விதமான சுபா வங்களைக் கொண்ட வர்கள், சின்னஞ்சிறிய அறைகளில் ஒன்று சேருகிறர்கள். அவர்களில் இளைஞர்கள் (பிரமச்சாரிகள்) இருக்கிருர்கள், குடும்பத்தை ஊரிலே விட்டுவந்த குடும்பஸ்தர்கள் இருக் கிருர்கள். அவர்களுக்கு எத்தனையோ பொறுப்புக்கள், பிரச்சினைகள் ஊரிலே காத்துக்கிடக்கின்றன. இங்கு அறை வசதி, தண்ணீர், சாப்பாடு இப்படிப் பல பிரச்சினை களால் அவலப்படுகிருர்கள். எவ்விதமான வசதியீனங் களையும் பொறுத்துக்கொண்டு அவர்கள் வாழ்ந்தே தீர வேண்டும். தங்களை மலைபோல் நம்பிக்கொண்டிருக்கின்ற சீவன்களை நினைத்துக்கொண்டு போலும் இந்த அரைகுறை வாழ்க்கைக்கு மனதைப் பக்குவப்படுத்திக் கொள்கிருர்
6.
வீடுகளில் பட்டுப்போல, பூப்போல பாதுகாத்து வந்த பெண்களையெல்லாம் இப்பொழுது வேலை க்கு அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அதா வது முன்பு உத்தியோகம் செய்ய விரும்பாது, அது பெண் களுக்கு கெளரவக் குறைவு என்றிருந்தவர்கள் கூட, குடும்ப நிலை காரணமாக அபிப்பிராயம் மாறி படித்து வேலையை எதிர்பார்த்து இருக்கிருர்கள். அப்படி வேலை செய்கிறர்கள் என்று அர்த்தம். ஆனல், துரதிர்ஷ்ட வச மாக இவர்களையெல்லாம் இன்னும் கறுப்புக் கண் கொண்டு நோக்குகிற மனுேபாவம் பலரிடம் மாறவில்லை. சீதனக்கொடுமைகளால் பெருமூச்சுக்களோடு வாழ்கிற பெண்களுக்கு இப்படி இன்னும் எத்தனை இடிகள் விழக் காத்திருக்கின்றன? இந்தச் சமூகக் கொடுமைகளால் முப் பத்தைந்து, நாற்பது வயது கழிந்த பின்னரும் அலுவல கங்களில் பல பெண்கள் செல்விகளாக இருப்பதைக்

Page 4
காண்கிருேம் இவற்றையெல்லாம் நேர்த்தியாக்குகின்ற சக்தி இளைய தலைமுறையினருடைய கைகளில்தான் இருக் கிறது என நிச்சயமாக நம்பலாம். நான், இந்த விஷ யங்களை எழுத வரவில்லை. சில பிரச்சினைகளைக் கோ டிட் டுக் காட்டியிருக்கிறேன்.
இளமைக் கோலங்கள் வெறும் கட்டுக்கதையல்ல. உத்தியோக நிமித்தம் கொழும்புக்கு வந்து பல பிரச் சினைகளுடனும் மனப்போராட்டங்களுடனும் சீவியம் நடத்துகிற இளம் உள்ளங்களின் கதை.
இந்நாவலை புத்தகமாக வெளியிட முன்வந்த ''எக்ஸ் பிரிஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்" ஸ்தா பனத்தினருக்கும் அதன் வெளியீட்டு இலாகா நிர்வாகி திரு. சி. பாலச்சந்திரன் அவர்களுக்கும் எனது மனப் பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன். கதையை தட்டெழுத்திட்டு உதவிய சகோதரிகளுக்கு எனது நன்றி. -
வணக்கம்
அன்புடன்
சுதாராஜ்
*தமிழ்ப்பணிமனை" 28, (4ஆம் ஒழுங்கை) அரசடி வீதி, கந்தர்மடம் யாழ்ப்பாணம்,
1-4-198l.

வாழ்க்கைக் குறிப்பு
1ழ்ப்பாணம் கந்தர் மடத்தைச் சேர்ந்த வர் சுதாராஜ்(சி.இராசசிங்கம்) யாழ். இந்துக் கல்லூரியி லும், இலங்கைப் பல்கலைக் கழகம், கட்டு ப் பெத் த வளாகத் தி லும் கல்வி பயின்ற இவர், எட்டு வரு டங்களாக புத் தள ம் சீமெந்து தொழிற்சாலை யில் பணிபுரிந்தார். தற் ச ம ய ம் * ଜଧି (ଗ u। & & urb சீமென்ற்’-சர்வதேச நிறு
வனத்தில் மின்பொறியியலாளராக குவைத்தில் கட tan) In Win7 Abby Cyrt.
எழுபதுக்களில் எழுத்துத் துறையில் ஈடுபட்ட இவர் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலுமாக இதுவர்ை முப் பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். 1977இல் "பலாத்காரம்" என்னும் பத்து சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் வெளிவந்திருக்கிறது.
இளமைக்கோலங்கள் சுதாராஜ் எழுதிய முதலாவது
நாவல்.
வெளியீட்டாளர்.

Page 5
ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களின் தரமான படைப்புகள் வீரகேசரி பிரசுரமாக
நூலுருவில் வெளிவருகின்றன.
தவறமல் இவைகளைப் பெற்று உங்கள்
இல்லத்தில் ஒர் "குடும்ப நூல் நிலையத்தை" ஆரம்பியுங்கள்.
ஆறு புத்தகங்களை அடுத்து நீங்கள் வாங் கினுல், ஏழாவது புத்தகம் இணுமாக அனுப்பி வைக்கப்படும். இப்பரிசுத் திட்டத்தில் ஏற் கனவே ஆயிரத்திற்கு மேற்பட்ட வாசகர்கள் இணுமாக நூல்களைப் பெற்றுள்ளனர்.
புத்தகங்களைக் கிரமமாகப் பெறுவதில் சிரம மிருந்தால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண் டிய விலாசம்:
விநியோக நிர்வாகி,
வீரகேசரி,
த. பெ. 160, கொழும்பு.

-இள மைக் கோலங்கள்
அத்தியாயம் - 1
Dழை தூறிக் கொண்டிருக்கிறது. பஸ்ஸிலிருந்து இறங்கிய சிவகுமார், நிறுத்தத்திலுள்ள தகரக் கூடாரத் திலே ஒதுங்கிக் கொண்டான். காலையிலிருந்தே வானம் இப்படித்தான் சிணுங்கிக் கொண்டிருக்கிறது.
பஸ் நெருக்கத்தில் நசுங்கியவாறு வந்ததால் இந்த மழை நேரத்திலும் அவனது உடலில் வியர்வை கசிந்து கொண்டிருக்கிறது. கொழும்பிலே பஸ்களில் பிரயாணம் செய்வதென்முல் விசேஷ பயிற்சிபெற வேண்டும். நிறுத்தங் களில் சில விநாடிகள்தான் பஸ் நிறுத்தப்படுகிறது. அந் தக் குறுகிய நேரத்தில் எத்தனைபேர் ஏதோ ஜாலவித்தை புரிவது போல நுழைந்து விடுகிறர்கள்! கண்டக்டர் இயந் திரமாக மெசினை திருகித்திருகி ரிக்கட்டை விநியோகித் துக் கொண்டிருக்கிருன். இறங்க வேண்டியவர்கள் மூச் சைப் பிடித்துக் கொண்டு இடித்து நெருக்கி-சக பிர யாணிகளின் முணுமுணுப்பையும் கண்டக்டரின் கத்தலை யும் பொறுத்தருளிக் கொண்டு இறங்க-டிங். டிங்.-- பஸ் ஓடிக்கொண்டேயிருக்கிறது.
வெளியே இறங்கி விட்டதால் குளிர்காற்று வந்து உடலை அணைக்கும் பொழுது இதமாக இருக்கிறது. சுகமாக மூச்செடுக்கவும் முடிகிறது. "அப்பாடா!" எனப் பெருமூச் செடுத்தவாறே பஸ்ஸினுள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு வந்த நிலையை இன்னுெரு முறை நினைத்துப்

Page 6
多 − இளமைக் கோலங்கள்
பார்த்தான் சிவகுமார்; சனவெக்கை, குமைச்சல், வயிற் றைக் குமுட்டுகின்ற மணம். சீ!
காலி வீதியில் சிறீ வரிசைக் கார்கள் கப்பல்களைப் போல மிதந்து செல்கின்றன. கண்ணுடியில் விழுகின்ற மழைத் துளிகளை வைப்பர்'கள் மெதுமையாக அழித்து விட ராஜ கம்பீரத்துடன் அவை செல்கின்றன! அவை களின் ஒவ்வொரு விதங்களையும் அழகான வர்ணங்களையும் காணும்பொழுது அவனுக்கு சந்தோஷமாகவும் பின்னர் கவலையாகவும் இருக்கிறது. தனக்கும் அப்படி ஒரு வாக னத்தில் பவனி வர முடியவில்லையே என்ற ஆற்ருமை யுணர்வு.
மழை இன்னும் தூறிக்கொண்டேயிருக்கிறது. இப் பொழுது மழையோடு சேர்ந்து சற்று வெயிலும் எறிக் கிறது. இப்படி இரண்டையும் ஒரே நேரத்தில் பார்க்கும் பொழுது அழகாகக் தான் இருக்கிறது. தான் இப்படி மழைக்குப் பயந்து ஒதுங்கி நிற்பதில் பலனில்லை என அவன் எண்ணினன். மழையும் இப்போதைக்கு ஒயப்போவ தில்லை.
அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் அங்குமிங்கும் ஒடி அலைந்து தமது அன்ருடக் கடமைகளில் ஈடுபட்டிருக் கும் மக்கள்! "பெல்பொட்டங்களை’ முழங்கால் வரையில் இழுத்துவிட்டு ஸ்டைலாக (அப்படி நினைத்துக் கொண்டு) நடக்கும் இளவட்டங்கள். தங்கள் "கேர்ள் பிரண்டை ஒரு சிறிய குடையினுள் மிகவும் பக்குவமாக அணைத்துக் கொண்டு செல்லும் பல இளைஞர்கள்! விதவிதமானதும் அரைகுறையானதுமான ஆடைகளை அணிந்தவாறு தாங் களே இந்த நாட்டின் நாகரிக மறுமலர்ச்சிக் கென்று விசேஷமாகச் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என அந்தரங்க மான நம்பிக்கையின் இறுமாப்பில் செல்கின்ற இளமைக் கோலங்கள்! x

இளமைக் கோலங்கள்
சிவகுமார் பஸ் ஸ்ராண்டை விட்டு வெளியேறி "இங்கே கடவுங்கள் இல்லாத இடத்தில் காலி வீதியில் கடக்க முயற்சித்த பொழுது விரைவாக வந்த வாகன மொன்று "சடின் பிறேக்" போட்டது-இவன் ‘அருந் தப்பு!" என மனதுக்குள் நினைத்தவாறே மறுபக்கத்துக்கு ஒடிஞன்.
வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்குப் பக்கத் திலுள்ள பெரிய மரங்களிலிருந்து காகங்களும் வேறு பறவைகளும் நிலத்தை அசிங்கப் படுத்தியிருக்கின்றன. நாள் முழுக்கப் பெய்த மழை நிலத்தையெல்லாம் சேருக்கி அருவருப்பை ஊட்டுகிறது. கைலேஞ்சியைத் தலையில் வைத்து, காற்றில் பறக்காமல் காதினுள் செருகிவிட்டு இவன் நடந்தான்-"இந்தத் துமியளுக்குள்ள நனஞ்சால் தடிமன் பிடிச்சிடும்."
மார்க்கட்டில் வழக்கமான ஆரவாரத்துக்குக் குறைச் சல் இருக்கவில்லை. வீதியோரங்களில் மரக்கறிவகைகளை, தேங்காய், முட்டை இத்தியாதி சாமான்களைக் குவித்து வைத்து மக்களுக்குச் சேவை புரியும் (லாபாய் லாபாய்) வியாபாரிகள்! மாலையில் அலுவலகங்களில் வேலை முடிந்து வரும் ஆண்களும் பெண்களும் மற்றும் உயர் மட்டக் குடும்பஸ்தர்களின் வேலைக்காரர்களும் பொருட்களைப் பேரம் பேசி அள்ளிக் கொண்டிருக்கிருர்கள்! ஒரு பக்கத் தில் கொட்டப்பட்டு அழுகிக் கொண்டிருக்கின்ற மரக்கறி வகைகள் நாற்றமெடுக்கிறது. சில நோஞ்சான் சிறுவர்கள் வீசப்பட்டிருக்கிற மரக்கறிகளை பொறுக்கிக் கொண்டிருக் கிறர்கள்-எப்படி எப்படியோ இறைவன் எல்லோருக் குமே படியளந்து கொண்டுதா னிருக்கிருன்!
நாளை மறுதினம் பொதுமக்களுக்கு அடிக்கப்போகிற அதிர்ஷ்டத்தைப் பற்றி ஜோசியம் சொல்லிக் கொண்டிருக் கிருன் சுவீப் ரிக்கட் வாகனக்காரன். அதைக் கேட்டதும்

Page 7
இளமைக் கோலங்கள்
"ஒரு ரிக்கட் எடுத்தாலென்ன" என்ற அற்ப ஆசை சிவ குமாரின் மனதிலே தோன்றியது. அப்படி சிலவேளைகளில் எடுத்து அதிர்ஷ்டம் அடிக்காமல் போகிற போதெல்லாம் கொடுத்த பணம் நாட்டின் அபிவிருத்திக்குத்தானே பயன் படுகிறது என மனதுக்குச் சமாதானம் சொல்லிப் பழகி யிருக்கிருன். பொக்கட்டிலே காசைக் கணக்குப் பார்த்த பொழுது, அது காய்கறிச் சாமான் வாங்குவதற்கே போதுமானதாக இருந்ததால் அந்த எண்ணத்தையும் கைவிட்டான். கால்களின் பழக்கதோஷம் எக்கவுண்ட் வைத்திருக்கிற கடைக்குள் இழுத்துச் சென்றது.-"ஒரு ரீ அடிச்சிட்டுப் போகலாம்.' −
-"ரீ மேக்கருக்குக் காது கேட்காதோ? இவன் ஏன் இந் தக் கத்துக்கத்துகிருன்?"
தேநீரை அருந்திவிட்டுக் காசாளர் மேசைக்கு வந்து கொப்பியை எடுத்துக் கணக்கை எழுதியபொழுது அவர்,
"என்ன தம்பி. ஒரே மழையாயிருக்குது' எனத் தனது *ரேப்”பை முடுக்கினர். இப்படி இன்று எத்தனைபேரிடம் கேட்டிருப்பாரோ? இவனும் சிரிப்பை வெளிப்படுத்திக் கொண்டே “ஓம்! விடுறபாட்டைக் காணயில்லை!' என்ருன்.
ஓட்டமும் நடையுமாக வந்தபொழுது வீட்டு வாசலில் * லான்ட் லேடி நின்று புன்முறுவலை மலர்த்தினள். பின் னர் 'அங்கிள் தெயார் இஸ் எ லெட்டர் ஃபோர் யூ!" என்றவாறே உள்ளே சென்று ஒரு கடிதத்தை எடுத்து வந் தாள். பிள்ளைகள் அழைக்கின்ற அங்கிள்" பட்டத்தையே அம்மாவும் பாவிக்கிருள். அவளது “ ரைட்ஸ்கேர்ட்டும்" தோற்றமும் ஒரு நடுத்தர வயது மாது என்ரு தோன்று கிறது? இன்னும் எவ்வளவு இளமையாக இருக்கிருள் கடி தத்தைப் பெற்றுக் கொண்டு (தாங்ஸ்) ஒரு புன்முறுவலைப் பதிலுக்குச் செலுத்திவிட்டு வீட்டின் கோடிப்பக்கத்தை நோக்கி நடந்தான். அங்கேதான் அவனது அறை இருச் கிறது!

இளமைக் கோலங்கள்
அறைக்குள் மகேந்திரன் கண்ணுடியின் முன்நின்று தனது நீளமான தலைமுடியை வாரிக்கொண்டு நின்றன். அவன் கண்ணுடியைக் கண்டால் விட மாட்டான்.
*" என்னடாப்பா! பொம்பிளையள் மாதிரி எந்த நேர மும் கண்ணுடிக்கு முன்னலை?” எனத் தனது சினத்தை வெளிப்படுத்தினன், மற்றவன் ஜெகநாதன்.
"பெரிய மன்மதன் என்ற எண்ணமோ?
மகேந்திரன் அவனது கதைக்குக் காது கொடுக்கா மலே துவாயை எடுத்துக் கொண்டு "பாத் ரூமுக்கு நடந் தான். பல நாட்களாக வெயிலேயே கண்டறியாத குறை பாட்டைத் துவாய் பறைசாற்றியது. அவனை எப்படி யாவது மட்டம்தட்ட வேண்டுமென்ற எண்ணத்துடன், "மச்சான்!. தயவுசெய்து உந்தத் துவாயைத் தோச்சுப் போடு. கிட்ட நிக்கேலாதாம்’ என்ருன் ஜெகநாதன். அவன் அலட்சியமாக 'அது மச்சான். வெயிலிலை காயாததாலைதான் புளிச்சு மணக்குது1.” எனக் காரணம் கூறிவிட்டுத் துவாயை அன்போடு தோளிலே கிடத்திக் கொண்டு சென்றன்.
அறைக்கு வந்து உடைகளை மாற்றிக்கொண்டு நின்ற சிவகுமார்-' சரி. சரி, இந்தக் கதையளை விட்டிட்டு வாங்கோ. சமைக்கவேணும்!’ என அவர்களைத் திசை திருப்பினன். 'இப்பொழுதே தொடங்கினல்தான் ஒரு பாடாகச் சமைத்து முடிக்கலாம்."
* மச்சான்!. எனக்கு நேரமில்லை. சிங்கள ரீயூசனுக் குப் போகவேணும். நீங்கள் சமையுங்கோ. நான் பிறகு வந்து இயத்துக்களைக் கழுவுறன்.” எனச் சமாளித்தான் மகேந்திரன்.
ஜெகநாதனுக்கு இது பொறுக்கவில்லை. "நீர் லேசான வேலையைப் பார்க்காமல் வாரும். ஒவ்வொரு நாளும்

Page 8
6 இளமைக் கோலங்கள்
ጆ
இப்பிடி ஒவ்வொரு சாட்டைச் சொல்லிப் போட்டுப் போக லாம் எண்ட நினைவோ?’ எனத் தடுத்தான்.
'இல்லை மச்சான். சோதினையும் கிட்டுது. கிளாசுக் குப் போகாட்டி என்னெண்டு பாஸ் பண்ணுறது?. நாளைக்கு விடியப்புறம் நான் எழும்பித் தனியச் சமைக் கிறன் . இப்ப குழப்பாதையுங்கோ!'
எப்பிடியாவது ஒரு காரணத்தைச் சொல்லி விட்டு அவன் நழுவிவிடுவான்.
سمسمبر
**நீ. ரீயூசன். ரீயூசன் எண் டு சொல்லிக் கொண்டு ரீயூசனுக்குத்தான் போறியேர். அல்லது வேறை என்னத் துக்குப் போறியோ ஆர் கண்டது!’ என்ருன் சிவகுமார்.
‘'சிவா! நீயும் என்னைப் பற்றி அப்பிடி நினைக்கிருயே மச்சான்?’ என அவனுக்கு "ஐஸ்" வைத்தான் மகேந்திரன்.
"சரி. சரி. போய்த்துலே). என்னவோ நல்லாய் வந்தால் சரி!' எனக் கூறிவிட்டு எழுந்து அறையை ஒதுக் கத் தொடங்கினன் சிவகுமார்.
குளியலறையில் மகேந்திரன் “பைப்"பைத் திறந்து விட்டு முகம் கழுவுகின்ற ஓசை கேட்கிறது
** உவன் மச்சான் சரியான ஆள் ஒவ்வொருநாளும் ஏதாவது சாட்டுச் சொல்லிப் போட்டுக் கழண்டிடுவான்." என ஜெகநாதன் முணுமுணுத்தான்.
*ஜெகா! நீ இந்த இயத்துக்களைக் கழுவிக்கொண்டு வா. நான் அதுக்கிடையிலை இவ்விடத்தை ஒருக்கால் கூட் டிறன்' என்றவாறே சமையலுக்குத் தேவையான சில பாத்திரங்களைக் கொடுத்தான் சிவகுமார்.

அத்தியாயம் - 2
சிவாமி அறை, படுக்கை அறை, வரவேற்பறை, சமை யல் அறை என எல்லா செளகரியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள (அப்படிக் கருதப்படுகின்ற) ஒர் அறையே அந்த மூன்று நண்பர்களையும் குடிவைத்திருக்கின்ற புண் னிய கைங்கரியத்தையும் செய்கிறது. வெள்ளவத்தைப் பகுதியில் இப்படி ஓர் அறை வசதியாகக் கிடைத்திருப் பது அவர்கள் முற்பிறப்பில் செய்த புண்ணியமோ என் னவோ! (இப்பிறப்பில் உருப்படியாகச் செய்தது என்ன இருக்கிறது?)
அறையின் யன்னலோரமாக ஒரு கட்டிலும் அதற்கு எதிராக மறுபக்கத்தில் இன்னுெரு கட்டிலும் போடப்பட் டிருக்கின்றன. இந்தக்கட்டில்கள் படுக்கைகளாக உப யோகப்படுவது மாத்திரமின்றி வந்தாரை வரவேற்று அமர வைக்கின்ற இருக்கைகளாகவும் சேவையாற்றுகின் றன. இன்னெரு கட்டில் போடுவதற்கு இடமில்லாத தஞலோ, அல்லது தனது சழ்பளத்தை வைத்துக்கொண்டு கொழும்புச் சீவியமும் நடத்தி ஒரு கட்டிலுக்கும் சொந்தக் காரணுக இருக்குமளவுக்கு வசதியில்லாததனுலோ கட்டி லொன்றின் அவசியத்தைப் பற்றி மகேந்திரன் சிந்தித் ததேயில்லை. ஜெகநாதனுக்குச் சொந்தமான கட்டிலுக்குக் கீழே சுருட்டிப் போடப்பட்டிருக்கும் பாய் இரவு வேளை களில் இவனது தூக்கத்துக்கு வகைசொல்லும் நல்ல துணை யாக இருந்து வருகிறது. -
அறையின் ஒரு பக்க மூலையில் மேசையும் கதிரையும் இருக்கின்றன. இவையிரண்டும் ஜெகநாதன் பெரிய மன சோடு இந்த அறைக்குத் தானம் செய்தவை. மேசையில்

Page 9
8 இளமைக் கோலங்கள்
நெருப்புப்பெட்டி முதல் "டிக்செனறி' ஈருக சகலவிதமான சாமான்களும் பரவியிருக்கின்றன.
மேசைக்கும் மேலே சுவரிலே, ‘யாமிருக்கப் பயமேன்? என இந்த அறை வாசிகளுக்கு அபயமளித்த வாறு தோற்ற மளிக்கின்ற பிள்ளையார் - முருகன் திருவுருவப்படம். அவ் வப்போது கொளுத்தப்படும் ஊதுபத்திகளின் சாம்பல் மேசையிலுள்ள புத்தகங்களின் மேல் உதிர்ந்து கிடக்கின்
sigil.
/ அறைக் கதவின் உட்புறமாக சில அழகான குமரிகளின் கவர்ச்சிப் படங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அந்தப் படங்களில் ஏதோ கலையம்சம் இருக்கிறது என்பது மகேந் திரனின் வாதம். h−
ஒரு மண்ணெண்ணெய் அடுப்பும் வேறு தட்டுமுட்டுச் சாமான்களும் வைப்பதற்காக, அறையின் மறுபக்கத்து மூலையில், பக்கீசுப் பெட்டிப் பலகையில் மேசையுருவில் செய்யப்பட்ட இரு பொருட்கள் உள்ளன. அதற்குக் கீழே சில சிறிய பெரிய போத்தல்களும் ஒரு துருவலையும் வைக் கப்பட்டிருக்கின்றன. வீட்டுச் சொந்தக்காரன் இல்லாத நேரம் பார்த்து சுவரில் அடிக்கப்பட்ட ஆணியில் கொழு வப்பட்டுள்ள கம்பியொன்றில் சில இடியப்பத்தட்டுகளும் ஒரு நீத்துப்பெட்டியும் ஈவிரக்கமின்றி அந்தச் சுவரின் அழ கையே கெடுப்பவை போலத் தொங்கிக் கொண்டிருக்கின் றன.
அன்ருடம் கடைகளிற் சாப்பிடுவதால் "போகவா, நிற்க வா’ என ஊசலாடுகின்ற உயிர்களைத் தடுத்தாட் கொள்வதற்காக அவர்கள் கையாள்கின்ற தந்திரந்தான் இந்தச் சமையற் திட்டம். இதிலே எதிர்பார்த்த வெற்றி யும் கிடைக்கவில்லை. தோல்வியும் இல்லை. மகேந்திரனையும் வழிப்படுத்தி ஒத்துழைக்கச் செய்தால் கரைச்சலாக இருக் காது என்பது ஜெகநாதனின் அபிப்பிராயம். ஜெகநாதன்

காமைக் கோலங்கள் 葛}
ஆாம்பித்து வைத்த இந்த "நாங்களே சமைக்கிற திட் த்தை முறிந்து போகாமல் நல்ல முறையில் ஒப்பேற்றிக் கொண்டு போகிறவன் சிவகுமார்.
அறையைக் கூட்டி ஒதுக்கிவிட்டு மண்ணெண்ணெய் அடுப்பைப் பற்ற வைத்துக்கொண்டே சிவகுமார் சொன் (ன்ை: "மச்சான்! நான் உலைக்குத் தண்ணியை வைச்சிட்டுத் தேங்காயைத் திருவிறன். நீ கறியை ஒருக்கால் கழுவிக் கொண்டு வா!'
மீன் கழுவித் துப்புரவு செய்வதில் ஜெகநாதன் வலு விண்ணன். சிவகுமார் நுணுக்கம் பிடிச்சவன், ஆறச்சோர அமர்ந்திருந்து கழுவுகின்ற அளவுக்குப் பொறுமையும் இல்லாதவன்.
ஜெகநாதன் அறைக்கு வெளியே உள்ள 'பை'புக்குப் பக்கத்தில் ஒரு பலகையைப் போட்டு அமர்ந்தவாறே மீ&ன வெட்டத் தொடங்கினன்.
அதிகாலையில் எழுந்து சமைத்து விட்டு வேலைக்குப் போகும் பொழுது சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு போசு லாம் என்றுதான் ஆரம்பத்திற் கருதினர்கள். ஆனல், அது எல்லோருக்குமே கஷ்டமான காரியமாகத்தான்பட்டது. கொழும்பு உத்தியோகத்தர்களின் வரப்பிரசாதமான பாண் காலை வேளைகளில் கைகொடுக்கின்றது. ஜெகநாதன் ஸ்பெஷலாக "பட்டரும் வேண்டி வைத்திருந்தான். பாணைச் சீவல் சீவலாக வெட்டிப் பின்னர் கரண்டியை எடுத்து மெதுவாக பட்டரில் தடவி அதைப் பாணிலே பூசு வான். இதையெல்லாம் மிகப் பொறுமையாக இருந்து நுணுக்கமாக அவன் செய்வதைப் பார்க்க ஆச்சரியமாக விருக்கும்; ' இவன் சரியான கசவாரம் மச்சான் பாணுக்கு பட்டர் தடவுகிறனே. பட்டரைப் பொலிஷ் பண்ணு கிருனே?. அரை ருத்தல் பட்டரை வேண்டி ஒரு மாத மா குது அப்பிடியே வைச்சிருக்கிறன்' என்று மகேந்திரன்

Page 10
இளமைக் கோலங்கள்
எரிச்சலோடு கூறுவதைக் கேட்டு சிவகுமார் சிரித்துக் கொள் வான்.
மத்தியான நேரத்தில் எங்காவது ஒரு கபேயில் அவ ரவர் பாட்டைக் கவனித்துக் கொள்வார்கள். இரவிலே மாத்திரம் சமைத்துச் சாப்பிடுவதற்கு வசதியான நேரம் கிடைக்கிறது. இப்படித் தாங்களே சமைப்பதால் சத்தான உணவாக இருக்குமென்ற காரணத்துக்காகச் சில சங் கடங்களை மனதார ஏற்றுக் கொண்டார்கள். இது தேகாரோக்கியத்தைப் பொறுத்தவரையிற்தான் பொருந் தும். நாவிற்குச் சுவையில்லாதிருப்பது என்னவோ கசப் பான" உண்மைதான்!
சிவகுமார் தேங்காயைத் துருவி வைத்துவிட்டு அரிசி யைக் களைந்து உலையில் போட்டான். பின்னர் வெண்காயம் மிளகாயை எடுத்து நறுக்கிக்கொண்டே 'ஜெகா. இவ் வளவு நேரமும் என்ன செய்து கொண்டிருக்கிருய்?’ என்று குரல் கொடுத்தான்.
**இந்தா முடிஞ்சிட்டிது. வாறன் மச்சான்!"
ஜெகநாதன் மீன் கழுவிக்கொண்டிருந்த பொழுது அகிலா வாசற்கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந் தாள். வீட்டைச் சுற்றிலும் சிறுசிறு சாடிகளில் வைக்கப் பட்டிருக்கிற ரோசாச் செடிகளில் அழகான மலர்கள் மெல்லிய காற்றின் தழுவலில் அடக்கிமாக அசைவது போல - அகிலா எழிலாக மெல்ல மெல்ல நடந்து வரு சின்ற அழகை இவனது கண்கள் கள்ளத்தனமாக ரசித்தன. மீன் அரிந்துகொண்டிருந்த கத்தி சதக்கெனக் கையைப் பதம் பார்த்து அவனது குற்றத்தை உணர்த்தியது.
அவன் மீன் கழுவிக்கொண்டிருப்பதைக் கவனித்து அகிலா, தான் காண்பதை அவன் உணர்ந்தால் கூச்சம் படக்கூடும் என எண்ணி அதைக் காணுதவள் போல மறு பக்கமாகத் திரும்பிக்கொண்டே வீட்டினுள் நடந்தாள்.

இளமைக் கோலங்கள் 置盟
கழுவிய மீனை அறையினுள் கொண்டு சென்று உப்புப் போட்டு மூடிவைத்தவாறே, "மச்சான் கதாநாயகி வத் திட்டா" என்ருன் ஜெகநாதன். -
"கதாநாயகியோ?. ஆரது விளங்கச் சொல்லன்."
சிவகுமார் தேங்காய்த் துருவலில் பாலைப் பிழிந் தெடுத்தான்.
‘'வேறை ஆர்?. அகிலாதான்!"
காற்றுக் குளிர்மையாக வீசி வந்து உடலைத் தழுவு கின்ற சுகமான ஸ்பரிசம்.
அத்தியாயம் - 3
6th வெளித்து விட்டது. ஆங்காங்கே நட்சத்திரங் சுள் தலைகாட்டிக் கொண்டிருக்கின்றன. மழைஇல்லை. காற்று வீசியதால் தூறல் போட்டுக் கொண்டிருந்த மேகங்கள் விலகிவிட்டன. -
சமைத்து முடிந்துவிட்டதால் பெரியதொரு தலையிடி நீர்ந்தது போலிருந்தது. சிவகுமார் சஞ்சிகையொன்றை வாசித்துக் கொண்டிருந்தான்.
தூரத்தே கடலில் குமுறுகின்ற அலைகள்.
ஜெகநாதன் சிகரட்டைப் புகைத்துக் கொண்டே "விவா! கடற்கரை வரைக்கும் நடந்திட்டு வருவமே?"

Page 11
蜜榜 இளமைக் கோலங்கள்
எனக் கேட்டான். சிவகுமாரும் உற்சாகத்தோடு எழுந் தான்.
கொழும்பில் இயந்திரமயமான வாழ்க்கையில் சற் றேனும் மனதுக்கு ஆறுதலாக இருப்பது இந்தக் கடற்கரை தான். இரவு வேளைகளில் நெடுநேரம் இந்தக் கடற்கரைக் கற்களில் அமர்ந்து கொண்டு பல பிரச்சினைகளைப் பற்றியும் பேசித் தீர்த்திருக்கிருர்கள்.
கடற்கரையை நோக்கி நடந்து கொ ண் டி ரு ந் த பொழுது, "அழகில்லாத பொம்பிளையைக் கலியாணம் முடிக்கிறதைப் பற்றி என்ன நினைக்கிருய் சிவா?" என்று கேட்டான் ஜெகநாதன். عسير
இந்த நேரத்தில் இப்படியொரு சிந்தனை தோன்றக் காரணம் என்னவென்று எண்ணியவாறு; 'ஏன் கேக் கிருய்?" என்ருன் சிவகுமார்.
*’ ஒரு கதைக்காகத் தான் கேட்டனன். சொல்லன் .."-ஜெகநாதன் புதிர் போட்டான்.
*அழகில்லாத பொம்பிளையஞம் கலியாணம் முடிக் கத்தானே வேணும்??
கடற்கரையோரத்துப் புகையிரதப் பாதையின் இரும் புத் தண்டவாளத்தில் கால்களைப் பதித்து நடந்து கொண்டே, 'அதில்லைப் பிரச்சனை. வடிவில்லாத வளை முடிச்சுக் கொண்டு மன நிறைவோடை வாழலாமா எண்டு தான் கேட்கிறன்.?
-பொங்குகின்ற பேரலைகளின் இரைச்சல், "அது அவரவற்றை மனதைப் பொறுத்த விஷயம்!”
ஜெகநாதனுக்கு இந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை. மெளனம் சாதித்துக் கொண்டு நடந்து வந்த இருவரும், வசதியாக ஒரு கல்லில் அமர்ந்து கொண்டனர்.

இளமைக் கோலங்கள் s
"சரி! உன்ரை அபிப்பிராயம் என்ன? . நீ வடிவில் லாத ஒருத்தியைக் கட்டச் சம்மதிப்பியோ?"
சிவகுமாரின் பாடு சங்கடமாகப் போய்விட்டது. , ஒரு வாறு சமாளித்துக் கொண்டு, "ஆரெண்டாலும் வடி வானவள்தான் தங்கடை மனைவியாய் வரவேணுமெண்டு விரும்புவாங்கள்.அப்பிடித்தான் நானும்"
**கூ. க்"குரலிட்டவாறு புகையிரதம் ஓடி வந்தது. பக்கத்திலிருந்து இந்த அலைகளின் ஓசையை எவ்வளவு நேரமும் கேட்டுக் கொண்டிருக்கலாம். இடையிடையே இந்தப் புகையிரதத்தின் இரைச்சலைத்தான் சகிக்க முடிய வில்லை.
"அப்பிடியெண்டால் அழகில்லாதவளெல்லாம் கலி யாணமே முடிக்கக் கூடாதெண்டு சொல்லுறியோ?" சிவ குமாருக்குப் பேசமுடியவில்லை. சற்று முன்னர், "அழகில் லாத பெண்களும் கலியாணம் முடிக்கத்தானே வேணும் எனத் தான் சொன்ன நியாயத்தையே அவன் திரும்பத் தனக்கு உணர்த்துவதை நினைத்தபொழுதுதான் இப்படி வாய் அடைத்துக் கொண்டது.
"என்ன பேசாமலிருக்கிருய்?.சொல்லன்.வடி வில்லாத பொம்பிளையஞம் வாழத்தர்னே வேணும்?. எல்லாரும் அழகிதான் வேணுமெண்டு நிண்டால். Վ9ԱՔ கில்லாதவையளை ஆர் முடிக்கிறது?"
"நான் சொல்லுறன் எண்டதுக்காக எல்லாற்றை கருத்தும் அதுதான் எண்டு அர்த்தமில்லை. வடிவில்லாத பொம்பிளையளை முடிச்சுக் கொண்டு எத்தனையோ பேர் மகிழ்ச்சியாகச் சீவிக்கினம்தானே?.அதுமாதிரி அழ கில்லையெண்டதுக்காக எந்தப் பெண்ணும் ஒதுக்கப்பட மாட்டினம். 9 ፴:
கடதாசிச் சுருளிலுள்ள சுண்டல் கடலையைக் கொறித்த வாறு ஒரு சோடி அன்னநடை போடுகிறது. அவள் அவ

Page 12
14 இளமைக் கோலங்கள்
னுக்குக் கடலையை ஊட்டியும் விடுகிருள். அவள் அவனது மனைவியோ அல்லது காதலியோ தெரியாது.
"சரியடாப்பா!"அப்பிடிச் சொல்லுற நீயே. அழகி தான் வேணுமெண்டு நிக்கிருய்?" ஜெகநாதனும் விடா மல் அவனது மனதைக் குடைந்தான்.
"அது என்ரை விருப்பம் எண்டுதானே சொன்னணுன். அதையும் மீறி நீ சொல்லுறமாதிரி.வடிவில்லாதவளைத் தான் முடிக்க வேண்டி வந்திட்டால் என்ன செய்யிறது?"
"அப்ப, நீ. அழகில்லாத வளைக் கலியாணம் செய் யச் சம்மதமென்டுருய்?' "
" ஒமெண்டுதான் வைச்சுக் கொள்ளண்!".
... இப்ப ஆரைக் கொண்டு வந்து என்ரை தலையிலை கட்டுறதுக்குக் கேட்கிருய்?" என எரிச்சலோடு வினவினுன் சிவகுமார்.
**மச்சான். எனக்கொரு கலியாணம் பேசி வந் திருக்கு. ஆனல், பொம்பிளை வடிவில்லை.அதுதான் யோசிக்கிறன்" எனப் புதிரை விடுவித்தான் ஜெகநாதன்.
சிவகுமாருக்கு ஆச்சரியம் மேலிட்டது. அழகற்ற ஒருத்தியை மண முடிக்கலாமா என அவன் கருத்திற் கொண்டதே பெரிய காரியம்தான். "நீ பொம்பிளையைப் பார்த்திட்டியே?"
"இன்னும் பார்க்கயில்லை.ஆனல், போட்டோ பார்த் த ●
**போட்டோவிலை வடிவில்லாதவையள் சிலவேளை நேரிலை வடிவாய் இருப்பினம்." சிவகுமார் சமாதா
னப்படுத்தினன்.

இளமைக் கோலங்கள்
'இல்லை.நேரிலை பார்த்த ஆக்கள் சொன்னவை யள்.அவ்வளவு வடிவில்லைத்தாணும். 9
'நீ சம்மதம் சொல்லியிட்டியோ?"
'இன்னும் சொல்லயில்லை. ஆனல், அதைச் செய் யலாமெண்டுதான் நினைக்கிறன்.'
ஜெகநாதனின் அழகிற்கும் கம்பீரத்திற்கும் தோதான பெண் எடுப்பதானுல் நல்லதொரு அழகிதான் வாய்க்க வேண்டும் என நினைத்திருந்தது பொய்யாகப் போய்விட்
-தி
'உனக்குச் சம்மதமெண்டால் செய்ய வேண்டியது தானே மச்சான்?. பிறகே ன் யோசிக்கிருய்?"
'இல்லை. இதிலே யோசிக்க வேண்டிய விஷயங்களும் இருக்கு!’
ஜெகநாதன் சிகரட்டை வாயில் வைத்துக் கொண்டு நெருப்புக் குச்சியைத் தட்டி அதைப் பற்ற வைக்க முயன் முன். கடற்காற்று அம் முயற்சிக்குக் குறுக்கே நின்று தடை செய்து கொண்டிருந்தது. புகையிரதப் பாதையில் ஒருவர் புகைத்துக் கொண்டு வரவே இவன், "லைட்பிளிஸ்" கேட் டுப் பற்ற வைத்துக் கொண்டான்.
**அதென்ன புதுப் பிரச்சினை?
'இப்ப மச்சான். நான் அவளைக் கட்டிக் கொண்டு வந்திட்டன் எண் டு வை! நாளைக்கு அவளோடை ருேட் டிஃல போகயிக்கை. நாலு தெரிஞ்சவங்கள் கண்டிட்டு நொட்டை சொல்ல மாட்டாங்களோ?
'நீ ஏன் மற்றவங்களைப் பற்றிக் கவலைப்படுகிருய்?s உனக்குச் சரி எண்டு பட்டால் செய்ய வேண்டியதுதானே?"

Page 13
6 இளமைக் கோலங்கள்
"நல்லாயிருக்கு. நாங்கள் இந்தச் சமூகத்திலை கெளரவத்தோடை வாழவேணுமெண்டால் மற்றவங் களுக்கும் பயப்பிடத்தானே வேணும்?. ஊரிலை எங் களைப்பற்றி என்ன கதைக்கிருங்கள். எப்படி மதிக் கிருங்கள் எண்டதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழே லுமே?"
சிவகுமார் எரிச்சலடைந்தான்; “கெளரவம்" என்று வெளிப்புறமான போர்வையில் மாத்திரம் போலி வாழ்க்கை வாழத்தான இவனும் விரும்புகிருன்?
/**ஜெகா. .அப்பிடியெண்டால் வீணுய் மன அவஸ் தைப்படாமல்.உனக்குப் பிடிச்ச ஒரு அழகியைக் கட் டிக் கொண்டு சந்தோஷமாய் இருக்க வேண்டியதுதானே!"
"ஒண்டும் தெரியாத வன் போலக் கதைக்கிருய் சிவா! .அழகியைக் கட்டினப்போலை பிரச்சினை இல்லையே?. அதுகும் ஆபத்துத்தான்!'
வானத்திலே وہ۔ வண்ணமதியை அணைத்துச் செல்கிற மேகக் கூட்டங்கள் இடையிடையே பூமியில் இருள் கவியச் செய்கின்றன.
"ஆபத்தோ?" இவன் ஆச்சரியத்தோடு கேட்டான்.
** பின்னையென்ன?. வடிவானவளைக் கட்டிப்போட்டு அவளுக்குப் பின்னலையும் முன்னலையும் திரியேலுமே!. அழகு இருக்கிற இடத்திலைதான் ஆபத்தும் இருக்குது. இதாலை பிறகு குடும்பத்திலை பெரிய சச்சரவுகளும் வரும் ... ... இப்படி எத்தனை கே சுகளை நான் கண்டிருக்கிறன்."
சிவகுமார் அவனை விசித்திரமாகப் பார்த்தான். தன் நம்பிக்கை இல்லாமையினுற் தான் இவன் அழகியைக் கட்ட விரும்பவில்லையோ எனத் தோன்றியது. அவனது மனதில் அப்படியோர் எண்ணம் தோன்றுவதற்கு என்ன காரணம்
 

இளமைக் கோலங்கள் 夏7
என்றும் புரியவில்லை. இப்படிச் சந்தேகக் கண் கொண்ட வனுக்கு யார்தான் ஒத்துவரப் போகிருள்?
"அப்ப. நீ என்னதான் செய்யப் போருய் எண்டு சொல்லன்?. பிரம்மச்சாரியாய் இருக்கப் போறியோ?*
ஜெகநாதன் இதுவரை பேசிக் கொண்டிருந்ததை விடக் குரலைத் தாழ்த்திச் சொன்னன், "இல்லை மச்சான் .இப்ப பேசிற சம்பந்தம் நல்ல சீதனத்தோடை வத் திருக்குது!" m
'ஓஹோ இப்பத்தானே எனக்கு உன்ரை பிரச்சினை விளங்குது. இவ்வளவு சீதனத்தோடை வந்த சம்பற் தத்தை விடவும் மனமில்லை. வடிவில்லாத வளைக் கட் டிறதுக்கும் யோசனையாயிருக்குது. அதுதான் புதுவிளக்க மெல்லாம் சொல்லுகிருய்1.
ஜெகநாதன் சற்றுநேர மெளனம் சாதித்து விட்டுப் பின்னர் ஒரு மெல்லிய சிரிப்புடன் சொன்னன்,
**சிவா!.ஒவ்வொருத்தரும் தங்களை மனதிலை வைச் சுக் கொண்டு நியாயம் சொல்லுறதுதான் வழக்கம். உனக்கு என்ன குறை?. அழகான ஒரு காதலி. உன்ரை அதிர்ஷ்டத்துக்கு அவள் பணக்காரியாயும் இருக்கிருள். அதுதான் நீ இந்த ஞாயம் பிளக்கிருய்?. சீதனம் வேண் டாமல் கலியாணம் முடிச்சுப் போட்டுப் பிறகு கஷ்டப்படு றதே?’’
நான் அதுக்காகச் சொல்லயில்லை மச்சான், உண் மையைச் சொன்னல் நான் இந்தச் சீதன முறைக்கே எதிர்ப்பானவன்தான்.இப்ப, உன்னையே எடுத்துக் கொள்ளுவம் சீதனம் வேண்டித்தான் கலியாணம் முடிக்க வேணுமெண்டு என்ன அவசரம்?. சொத்துப்பத்தில் ஃலயோ.வீடு வாசலில்லையோ. கை நிறையச் சம் பளம் எடுக்கிருய்1. வேறை என்ன தேவை?.

Page 14
8 இளமைக் கோலங்கள்
"என்ரை பிரச்சினை என்ணெண்டால் மச்சான் அண்ணை யவையள் ரெண்டு பேரும்.நல்ல இடங்களிலை. பொருள் பண்டத்தோடை ‘மெறி பண்ணி நல்லாயிருக் கிருங்கள். பிறகு, நான் சீதனம் வேண்டாமல் செய் தால். மதிக்கமாட்டினமெல்லே? அவையளைப்போலை நானும் "ஸ்ரேற்றசை மெயின்ரெயின்" பண்ண வேணு மெண்டால் சீதனம் வேண்டத்தான் வேணும்.'
கடல் அலைகள் பெரிதாகச் சிரிப்பதுபோல கற்களில் ம்ோதிக் கொள்கின்றன.
அத்தியாயம் - 4
அறைக்கு வெளியே பின்பக்கமாக, பக்கத்து வீட்டுக் குசினியின் மறைப்புக்காக அடிக்கப்பட்டிருக்கின்ற சீலிங் பலகையின் இடுக்கினுாடாக எதையோ பார்த்துக் கொண் டிருந்தான் ஜெகநாதன். தற்செயலாக அந்தப் பக்கம் வந்த சிவகுமார் " என்ன மச்சான்.கதாநாயகியைத் தேடுருய் போலையிருக்கு?’ என விளையாட்டாகக் கேட்
L-T6ồF .
அவனை இந்த நேரம் எதிர்பாராததினல் சற்றுத் தடு மாற்றமும் கூச்சமும் ஏற்பட, "இல்லை. சும் மா பாத்த னன்."என மெல்லிய சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சமாளிப்பாகக் கூறினன். சிவகுமாருக்கு வேடிக்கையாக இருந்தது; "ஊரிலை கலியாணம் பேசுருங்கள் எண்டு சொல்லுகிருன்.இஞ்ச்ை பக்கத்து வீட்டைக் கள்ளமாய் எட்டிப் பார்த்துக் கொண்டு நிற்கிருன்’

இளமைக் கோலங்கள் 19
"நீ சும்மா பார்த்தனன் எண்டு சொல்லுகிருய். இப்ப கதாநாயகன் வந்தால் விடுவானே?’ எனக் கேட்ட வாறே அறையினுட் சென்ருன் சிவகுமார்.
"ஆரடாப்பா, அது கதாநாயகன்?" என அதிர்ச்சி மேலிடக் கேட்டவாறு அவனைப் பின் தொடர்ந்து ஓடி வந் தான் ஜெகநாதன்.
"மகேந்திரன்தானே? அவன்தான் நெடுக ஏதேர் அலட்டிக் கொண்டிருக்கிறவன். உந்தப் பக்கமும் அடிக் கடி மினைக்கிடுறவன்!"
'அவற்றை விறுத்தத்திலை.கதாநாயகன் பட்டம் வேறையே?'-எரிச்சலுடன் வார்த்தைகள் வெளிவந்தன.
"பின்னை ஆரடாப்பா கதாநாயகன்? நீயே?.நீ அகிலாவைக் கதாநாயகி எண்டதும்.நான் இவன்தானுக் கும் கதாநாயகன் எண்டு நினைச்சன்."
அவனது கேலியான பேச்சைப் புரிந்து கொள்ளாமலே .." சீச்சீ! என்னையேன் இதுக்குள்ளை இழுக்கிருய்?. எனக்குத்தானே கலியாணம் முற்ருகப் போகுது எண்ட ஞன்.
வீதியிலே வாகனமொன்று பிறேக் போடுகின்ற சத்தம் கேட்கிறது. யாரோ குறுக்கே போய்விட்டானே?
கல்வி அறிவு பெற்று, வளர்ந்து உத்தியோகம் பார்க் கும் பெரியவனகி, நாலுபேருடன் பழகி, சமூகத்தில் கெளரவஸ்தணுக மதிக்கப்படுகின்ற நிலையை அடைந்த பின்னரும் சில வேளைகளில் இப்படிச் சிறுபிள்ளைத்தன மான ஆசைகளும் முகிழத்தான் செய்கின்றன!
அகிலா இவர்களுடைய மனதில் எம்மாதிரியான அலை களைக் கிளறி விட்டிருப்பாள்?

Page 15
O இளமைக் கோலங்கள்
பக்கத்து அறைக்கு அவள் குடிவந்து இரண்டு மாதங் களுக்கு மேலாகின்றது. கெதியாகவே இவர்களுடைய அன்ருடப் பேச்சுக்களில் அவளது பெயரும் அடிபடத் தொடங்கினுலும் இன்னும் தொலைவிற்தான் அவள் இருப் பதாகப்பட்டது. "என்ன பெண் இவள்? பக்கத்து வீட்டி லிருப்பவர்கள் என மரியாதைக்காவது ஏறெடுத்தும் பார்க்கிருளா’-இது இந்தப் பக்கத்து அறை இளைஞர்களின் மனக்குறை. w
வெள்ளவத்தையில் காலி வீதியிலிருந்து கடற்கரைப் பக்கமாகத் திரும்புகின்ற ஒழுங்கையொன்றில் உள்ள ஆடம்பரமான ஒரு வீட்டின் பின் பகுதியில் இந்த அறைகள் அமைந்திருக்கின்றன. சிறிய சிறிய சாடிகளில் சீவனம் செய்கின்ற அழகான பூஞ்செடிகள், தோகையை விரித்துக் கொண்டு நிற்கும் இரு சிறு செவ்விளநீர்க் கன்றுகள். தண்ணிர் பாய்ச்சி வளர்க்கப்பட்டு மட்டமாக வெட்ட பட்ட புற்தரை!-வீட்டிற்கு அழகு செய்யும் சாதனங்கள் வீட்டின் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் செல்ல , கூடிய வெவ்வேறு அறைகள் வாடகைக்கு விடப்பட்டிருக் கின்றன.
இப்படிக் கோடிப் பக்கத்தில் சம்பாதிக்கிற தொகை வீட்டுக்காரரின் கொழும்புச் சீவியத்துக்குப் பெரிதும் உதவு கிறது. கொழும்புக்கு உத்தியோகம் பார்க்க வருகின்ற ஆண்கள் வயதெல்லையின்றி இந்த அறைகளுக்குக் குடிவந்து போயிருக்கின்றனர்.
இரண்டு மாதத்திற்கு முன்னர் ஒரு சந்தோஷமான செய்தி வந்தது. பக்கத்து அறைக்கு ஒரு பெண்ணும் அம் மாவும் குடிவருகிருர்களாம். 'உங்களுக்கு ஒரு ஆட்சே பனையும் இல்லையே?’ என வீட்டுக்காரர் அழகான ஆங் கிலத்தில் கேட்டார். அவர் அதிகம் கதைக்கமாட்டார். இப்படி ஏதேனும் முக்கிய தேவைகளுக்குத்தான் தன் திரு வாயைத் திறப்பார். மற்றப்படி "கொறஸ்போண்டன்ஸ்’ எல்லாம் திருமதியோடு தான்.

இளமைக் கோலங்கள் 3.
பக்கத்து அறைக்கு ஒரு குமரி வருவது இந்த நண்பர் களைப் பொறுத்தவரையில் கொண்டாட்டமான சங்கதி தான். அவளது சிநேகிதத்தை யார் முதலில் தட்டிக் கொள்வது என்ற போட்டி மனப்பான்மை இவர்களிடம் ஏற்பட்டுவிட்டது. ஆனல், அவளோ இவர்களை வெளியே காண நேரிடும் வேளைகளில் மென்மையான புன்சிரிப்பை முகஸ்துதியாக மலர்த்திவிட்டுத் தலையைக் குனிந்தவாறு போய்விடுகிருளே! வீட்டில் அவளுடைய குரலைக் கூடக் கேட்கக் கிடைப்பதே அரிது.
*சரியான புறெளவ்ட் பிடிச்ச கேர்ள் மச்சான்' என அடிக்கடி சொல்லிக் கொள்வான் மகேந்திரன்.
அகிலா வேலை செய்கின்ற அலுவலகம், அலுவலகத் துக்குப் போகின்ற வருகின்ற நேரங்கள், பாதைகள், பஸ் சிற்காகக் காத்து நிற்கின்ற இடம் எல்லாவற்றையும் அறிந்து வைத்துக் கொண்டு அவளுடைய கடாட்சத்திற் காக அல்ைவது அவனது சுவையான பொழுது போக்குகளில் ஒன்று எப்படியாவது அவளைத் தன் வலையில் விழுத்திக் காட்டுவதாக அறையில் நண்பர்களுக்குச் சவால் விட்டிருக் கிருன். அந்தச் சாதனையைத் தானே முதலில் நிலைநாட்ட வேண்டுமென்ற அல்ப ஆசை ஜெகநாதனுக்கு கட்டிலிற் படுத்தவாறே சிகரட்டையும் ஊதிக் கொண்டு சற்று முன் னர் கிடைத்த தரிசனத்தில் லயித்து முகட்டைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான்.
வருஷக் கணக்காகத் துப்பரவு செய்யப்படாத துரசிகள் முகட்டில்-மூலைப்பக்கமெல்லாம் சிலந்திப் பூச்சிகள் வல்ை பின்னி விட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் தட்டித் துப்பரவு செய்ய வேண்டுமென யார்தான் நினைக்கிறர்கள்?
அகிலா மறுபக்கத்தில் தேநீர் தயாரித்துக் கொண்டு நின்ற தோற்றம் நினைவில் விரிந்தது. நேரிலே காணும் சந் தர்ப்பங்களில் மென்மையான ஒரு புன்னகையுடன் தலை

Page 16
22° இளமைக் கோலங்கள்
யைக் குனிந்து கொண்டு செல்வது போலவே அவளது ஒவ் வொரு செய்கைகளும் நிதானமாக இருந்தன -பாத்தி ரங்களைப் பட்டுப்போலத் தூக்கினுள். கேற்றிலை நோகா மல் எடுத்தாள். தண்ணிரை ஓசைபடாமல் ஊற்றினுள். தலைமயிர் முகத்திலே விழுந்தபொழுது ஒரு குழந்தைப் பிள்ளையைப்போலப் பக்குவமாக ஒதுக்கினுள்.
-அவளுக்குத் தெரியாமல் பின்பக்கமாகச் சென்று அப்படியே அனைத்துக் கொண்டால்? அவள் நாணத்தோடு திரும்பி அவனைப் பார்ப்பாளோ? அணைத்துக் கொள்கிற அவனது கைகளை மென்மையாக அழுத்தித் தனது விருப் பித்தைத் தெரியப்படுத்துவாளோ? அவளது கணவனுக வரப்போகின்றவனுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.
"இங்கிலீஷ்' பாட்டொன்றின் மெட்டை முணுமுணுத்த வாறு அறையினுள் நுழைந்த மகேந்திரனுடைய வருகை ஜெகநாதனின் கற்பனையை உடைத்தது. அந்த வயிற் றெரிச்சலை உணராமல், *சாய். என்ன வடிவான கேர்ள் மச்சான்!" எனத் தான் சொல்லப் போகின்ற ஏதோ கதைக்கு முன்னுரை போட்டான் மகேந்திரன்.-- அன்ருடம் பஸ் பிரயாணங்களில் கிடைக்கின்ற குளுமை யான அனுபவங்களைச் சுவை குன்ரு மல் நண்பர்களுக்குக் கூறி அவர்களது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதில் அவன் வல்லவன். அவனைப் பொறுத்தவரை பஸ்சின் நெருக்கமே ஒரு குளுமையான விஷயந்தான்!
"நாங்கள் இஞ்சை வாய்க்கிதமாய்ச் சமைச்சு வைக் கிறம். நீர் இப்பிடி ஊருலாத்திக் கொண்டு வாரு மன்' எனத் தனது எரிச்சலை வெளிப்படுத்தினன் ஜெகநாதன்.
**ரேக் இற் ஈஸி மச்சான்" என அவனைப் பார்த்துச்
சிரித்தவாறே தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரட் *பட்டைக் கொடுத்தான் மகேந்திரன்,

இளமைக் கோலங்கள் 35
சிவகுமார் இவர்களுடைய சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல், படுத்திருந்தவாறே கடிதமொன்றை வாசித்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த மகேந் திரன் ‘என்ன மச்சான் மனிசியிட்டை இருந்து வ்ந் ததோ..? வலு கரிசனையோடை படிக்கிருய்” எனக் கேட்ட வாறு உடையை மாற்றத் தொடங்கினன்.
சிவகுழார் கடிதம் வாசிப்பதை நிறுத்தினன். சிந்தனை கள் தடைப்பட்டன. உள்ளத்தை ஊடுருவிப் பாய்கின்ற ஓர் இன்பக் குமுறல்!
அத்தியாயம் -5
Pகேந்திரன் "மனிசி" எனக் குறிப்பிட்டதும் மின்ன &லப் போலத் தோன்றிய கலைச்செல்வியின் நினைவுதான் அவனை அப்படியொரு மனக் கிளர்ச்சிக்குட்படுத்தியது. அடுத்த கணமே அது தந்தையிடமிருந்து வந்த கடிதமென் பது நினைவுக்கு வந்ததும் மனம் ஒருவித தவிப்புக்குள்ளாகி யது. இப்படித்தான் எப்போதாவது இருந்துவிட்டு ஒரு நாளைக்கு எழுதுவார். -
'தம்பி. நீ படிச்சனி. நான் புத்தி சொல்லத் தேவை யில்லை. ஏதோ உன்ரை புத்தியைப் பாவிச்சு நல்லாய் வாத் தெரிய வேணும். குடும்பத்திலை இருக்கிற கஷ்டங் களும் நிலவரங்களும் உனக்குத் தெரியுந்தானே? மனத் நிலை இருக்கிற ஆசாபாசங்களை மறந்து பொறுப்போடை நடக்கத் தெரிய வேணும். இரவிலை வெளியிலை போற nதண்டால் மணிக்கூடு கட்டிக்கொண்டு போகாதை, காலம் கெட்டுப் போய்க் கிடக்குது.

Page 17
24 இளமைக் கோலங்கள்
8 ..இனி என்  ைர காலமெல்லாம் போட்டுது. நீதான் குடும்பத்தைப் பார்க்க வேண்டியவன்." எனத் தனது மனச் சுமைகளையெல்லாம் இறக்கியிருப்பார். அந் தச் சுமைகள் அவனது மனதில் ஏறிவிடும்.
'தம்பி. கண்ட பெடியளோடையும் சேரக்கூடாது. குடிவெறி, சிகரட் பாவிக்கிற பெடியங்களோடை இருக்கக் கூடாது. பிறகு உன்னையும் ஏமாத்திக் கொண்டு போய்க் குடிக்க வைச்சிடுவாங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் மனிசன் நல்லாய் வாறதுக்கும் கெட்டுப் போறதுக்கும் காரணம். ஏதோ கவனமாய் நடந்து கொள்.
சிலவேளைகளில் இதையெல்லாம் வாசிக்கும்பொழுது சிரிப்புத்தான் ஏற்படும். "அப்பா இன்னும் என்னைக் குழந்தைப்பிள்ளையெண்டுதான் நினைச்சுக் கொண்டிருக்கி dջri l’
"இவன் ராசாவின்ரை மறுமொழியும் வந்திட்டுது. எழுதியிருப்பான்தானே? அநேகமாய் வாசிற்றிக்கு அனு மதி கிடைக்குமெண்டுதான் நினைக்கிறன். அதுக்கு வேறை சிலவுகளும் வரும். -
வீடு கட்டுறதுக்குப் பட்ட கடன்தான் பெரிய 9g ji ஒ%னயாயிருக்குது. ஈட்டுக்காரன்ரை ஆய்க்கினையாலை வெளி யிலை தலைகாட்டேலாமல் இருக்குது. இனியெண்டாலும் நான் நிம்மதியாய் இருக்கலாமெண்டால். நீங்களெல் லாம் எப்ப ஆளாகப் போறியள். இந்தக் கடன் தனி யெல்லாம் எப்ப தீரப் போகுது எண்ட கவலைதான். பாங் கிலை ஐயாயிரம் ரூபாய் கடன் எடுக்கலாமெண்டு எழுதி யிருந்தாய். அதையெண்டாலும் எடுத்தால் குடுத்திட்டு மிச்சத்துக்கு ஒரு தவணை கேட்டுப் பார்க்கலாம். பாங் குக்குப் போய்க் கதைச்சியோ? மனேஜருக்குத் தெரிஞ்ச வங்கள் ஆரையேன் புடிச்சியெண்டால் எடுக்கிறது சுல
b.'

1ளமைக் கோலங்கள் és
கடிதத்தை வாசித்து முடித்ததும் அவனையறியர்மலே ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. 'அப்பா இனியெண்டா ஆம் நிம்மதியாய் இருப்பதற்கு, தான் இனி நிம்மதியைத் துறந்துதானக வேண்டும்’ என்ற உணர்வு தோன்றியது. நடுத்தர வர்க்கத்தினரின் சாபக்கேடு இது. பொறுப்புக் களும் சுமைகளும் பூதா காரமாக தன்முன்னே உருவெடுத் துக கொண்டு நிற்பதை உணர்ந்தான்.
“என்ன மச்சான். பெலத்த யோசினேயில் இருக் கிருய் எங்களுக்கும் சொல்லன்?' மீண்டும் அவன் வாயைக்
கிளறிஞன் மகேந்திரன். •
’ ‘வேறை என்ன?. காசுப் பிரச்சினைதான்"
"இவனுக்கு எந்த நேரமும் இந்தப் பிரச்சினதான். ான ஜெகநாதன் அலுத்துக் கொண்டான்.
"உனக்கென்னடாப்பா?.. காசுக்காரன். குடும்
છે. . . - s :
பப் பொறுப்பு இல்ல்ாதனி. உப்பிடித்தான் சொல்லு வாய்." S.
‘என்ன அவசரத்துக்கு இப்ப காசு தேவை? மகேந் இரன் கரிசனையோடு கேட்டான்,
*ஒரு ஈட்டுப் பிரச்சினை. ஈட்டுக்காரன் சித்தார்; சுப் போட்டான். அப்பர் தவனை கேட்டிருக்கிருர். அதுக்குள்ளை கட்டுறதெண் டால் எங்கை போறது??
"எவ்வளவு காசு 8 a a p
"காசு பத்தாயிரம் எடுத்தது மச்சான். இப்ப
பத்து வருசத்துக்கு மேலேயா குது.
இன்னும் கட்ட யில்லையோ? என்னத்துக்காக எடுத்த
-
"நாங்கள் இப்ப இருக்கிற வீடு கட்டினது அப்பா
தான். அதுக்காகப் பட்ட கடன். எடுத்த முதல் கட்டி

Page 18
26 இளமைக் கோலங்கள்
யாச்சு. இப்ப அதின் ரைவட்டி மாத்திரம் ஒன்பதினுயிரம் ரூபா மட்டிலை இருக்குது!"
மகேந்திரன் ஆச்சரியத்தோடு கேட்டான், 'ஏன டாப்பா இவ்வளவு வட்டி வரும் வரைக்கும் விட்டனியள்? ஜெகநாதன் இந்தச் சம்பாசணையில் காது குடுக்காமல் தன் அலுவலைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
"என்ன செய்யிறது.? எடுக்கயிக்கை தெரியாது. பிறகு குடுக்கையிக்கைதானே திண்டாட்டம். அப்பாவும் பெரிய கஷ்டப்பட்டுத்தான் முதல்லை. ஐயாயிரம் பிற கொரு மூவாயிரம் அதுக்குப் பிறகு ஒரு ரெண்டாயிரம் முதலைக் குடுத்தார். இப்ப வட்டியைப் பார்த்தால் மலைபோல நிக்குது"
"என்ன அநியாயம்?’ எனக் கவலைப்பட்டான் மகேத் திரன். V
**அநியாயம்தான் மச்சான். அதுக்காக இனி என்ன செய்யிறது? வட்டி எடுக்கிறவனுக்கு நியாயம் அநியாயம் விளங்காது."
"கடன் எடுக்கலாமெண்டவுடனை போய் அந்த வட் டிக்கு எடுக்கிறதே? காசு பிறகு குடுத்துத் தீர்க்கிற வழியை யோசிக்காமல் எடுக்கிறதே"
மகேந்திரன் தன் தந்தையைத் தாக்கிக் கதைத்ததும், * 'இனி என்ன செய்யிறது? ஒரு மாதிரிக் கட்டத்தானே வேணும். அவரென்ன கடன் பட்டு அநியாயச் செலவு செய்தவரே. எங்கடை வீடு கட்டத் தானே?" எனக் கதைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முயன்ருன் சிவகுமார்.
"அது சரி. நான் இப்ப கொப்பரைக் குறை சொல்ல யில்லை. அவரும் கட்டியிடலாம் எண்ட நம்பிக்கையிலை தான் எடுத்திருப்பார். ஆனல், அது முடியாத காரிய

இளமைக் கோலங்கள் 27
மெண்டு இப்பத்தானே விழங்குது. இப்ப நீ உழைக்கிறது அன்ரு டச் சீவியத்துக்கே போதாது. இந்த விசித்திரத் திலை கட னு ம் அடைக்க வேணும் ஒன்பதாயிரத்துச் சொச்சமெண்டால் சும்மாவா. ? நீ பாங்க் லோன் எடுத்து ஐயாயிரத்தை இப்ப கட்டிருயெண்டு வைப்பம். மிச்ச நாலாயிரத்தையும் கட்டிறதெண்டால். நீ பாங் கிலை எடுத்த ஐயாயிரமும் கட்டி முடிய வேணும். அது முடிய இந்த நாலாயிரம் வளர்ந்து ஒரு பெரிய தொகையாக நிற்கும். அப்படியே சங்கிலித் தொடர்போலை உங்கடை உழைப்பை ஆரோ ஒரு அந்நியனுக்குக் கொட்டிக் கொண் டிருக்கப் போறியள். அவன் எப்பவோ போட்ட முதல் சீவியம் முழுக்க சும்மாயிருக்கச் சாப்பாடு போடுது'
மகேந்திரன் தனது நிலைமைக்குப் பரிந்து கதைப்பது சற்று ஆறுதலாகவிருந்தது.
சற்று நேரம் மனம் திறந்து கதைத்ததில் ஒரு வகை யில் மனச் சுமை இறங்கிய சுகம் தெரிந்தது.
'மச்சான். அப்பா பட்ட கடன்களை நான் உழைச் சு அழிக்கிறன் என்று நினைக்கப் பெருமையாகத்தான் இருக் குது. ஆனல் , நீ சொன்ன மாதிரி அது தேவையில்லாமல் இன்னெருத்தனுக்குத் தாரைவாக்கிற உழைப்புத்தானே? எங்கடை குடும்பத் தேவைகளுக்கே அதை மூலதனமாக்கி னல் எவ்வளவு பிரயோசனமாய் இருக்கும்?”
அதை ஆமோதித்தவாறே மகேந்திரன் கேட்டான் 'பாங்கிலை என்ன சொல்லுருங்கள்?"
'தாறதெண்டுதான். மனேஜர் சொல்லியிருக்கிருர். அதுக்கும் எத்தனை தரம் ஒடித்திரிய வேண்டியிருக்குது. எவ்வளவு அலைச்சல்? அவங்களும் ஒவ்வொருக்காலும் போகையிக்கை ஒவ்வொரு விபரங்களைக் கேட்டுக் கேட்டு அ%லக்கழிக்கிறதைப் பார்க்க. பேசாமல் விட்டிட்டு இருந்

Page 19
es இளமைக் கோலங்கள்
திடலாம் போலையிருக்குது!" சிவகுமார் சலிப்புடன் கூற ஞன்.
**கவலைப்படாதை மச்சான் எல்லாம் வெல்லலாம்!" என அவனைத் தேற்றுவது போலக் கூறினன் மகேந்திரன்.
அவனது பேச்சுக்களும் நடவடிக்கைகளும் சிவகுமா ருக்கு ஆச்சரியத்தையே அளித்தன. அவனைப் போல, எந் தப்ம் பிரச்சினைகளையுமே சாதாரணமாகக் கருதிக்கொண்டு மனம் போனபடி வாழ்வதற்குத் தன்னுல் ஏன் முடிய வில்லை என எண்ணிக் கொண்டான்.
سمبر
பறவையொன்று சிறகடித்துக் கொப்பு மாறுகின்ற ஓசை கேட்டது. வெளவாலாக இருக்கும். அ ைத த் தொடர்ந்து உறக்கம் கலைந்த கோபத்தில், இரு காகங்கள் மாறி மாறிக் கரைகின்றன. பின்னர் நிசப்தம். காலி வீதியில் ஒடுகின்ற வாகனங்களின் இரைச்சல் மட்டும் இடையிடையே கேட்கிறது.
இரவு உறங்கிவிட்டது.
அத்தியாயம் - 6
வெள்ளவத்தைப் பிள்ளையார் கோயிலில் அடி யார்கள் குழுமத் தொடங்கிவிட்டனர். வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் கோயில் களை கட்டிவிடும். தெருக் கூட்டுகின்ற தொழிலாளர் முதல் ஆடம்பர (அல்லது வசதி unt60T) வாழ்க்கை வாழ்கின்ற சிறிவரிசைக்கா(ர)ர்கள் வரை இறைவனின் அடியவராக இங்கு வருகை தந்தாலும்

இளமைக் கோலங்கள் 29
கொழும்பில் நடுத்தர வாழ்க்கை நடத்துகின்ற உத்தியோ கத்தர்களையும் பல்கலைக்கழக மற்றும் தனியார் கல்வி நிலைய மாணவர்களையும் பொறுத்த வரையிற் தான் கோயில் விசேஷம் பெறுகின்றது.
விண்ணப்பங்களோடும் வேண்டுகோள்களோடும் இறைவனைக் காண வருகின்ற பக்தர்களின் மனதில் நண் பர்களையும் உற்ருரையும் கண்டு அளவளாவலாம் என்ற பொழுது போக்குணர்வும் கலந்திருக்கின்றது. இறை வனைத் தரிசிக்க வருகின்ற "நிறங்களைத் தரிசிக்கலாம் என்ற நியாயமான விருப்பமும் பல இளைஞர்களின் மன தில் இளையோடியிருக்கிறது.
சிவகுமாரும் மகேந்திரனும் வந்தபொழுது மாலையும் இரவும் இரண்டறக் கலக்கின்ற நேரம்-பஸ் நிலையத்தில் விபூதி சந்தனத்தோடு காட்சி தருகின்ற காற்சட்டைக் காரர்கள்-தங்கள் நேர்த்திக் கடனை முடித்துக் கொண்டு திரும்பிப் போவதற்கு ஆயத்தமாக நிற்கின்ற நண்பர் களுக்கு முகத்தை மலர்த்த வேண்டியிருந்தது.
**கெதியிலை வா மிச்சான்! பூஜை துவங்கப் போகுது!" என ஜெகநாதனை அவசரப்படுத்தியவாறே நடந்தான் சிவகுமார். சில குடும்பஸ்தர்கள் தங்கள் மனைவிமார் களுக்குப் பின்னல் "பய’ பக்தியோடு பிரவேசிக்கின்றனர்.
கோயிலின் முன் மண்டபத்துப் பக்கத்துத் திண்ணைத் கட்டில் பல இளைஞர்கள் வரிசையாக அமர்ந்திருக்கின் றனர். இந்தத் திண்ணையில் அமர்ந்திருப்பதே ஒரு சுகம் தான். நேரம் போவதே தெரியாமல் இருந்து எத்தனை கவலைகளை மறக்க முடிகிறது! விடிந்ததும் அவசரமாக வேலைக்குச் சென்று உழைத்துச் சோர்வடைந்து மீண்டும் வந்து போய் உழைத்து இயங்கி இயங்கித் தேய்ந்து. (மெய்) ஒரு நாளைக்கு வைத்தியசாலையில் பெரிய "பிறேக் டெளன்' ஆகிக் கிடந்து- w

Page 20
30 * இளமைக் கோலங்கள்
கடைகளில் சாப்பாட்டுப் பிரச்சினைகளை, அலுவலகங் களில் வேலைத் தொல்லைகளை, வீதியிலே விதவிதமான கவர்ச்சிகளை, பஸ்களில் நெரிசலின் சுகங்களை, "கிளப்' களில் மீண்டும் அந்த ஒரே பிரச்சினைகளைக் கதைத்துக் கதைத்து (வாய்)-
இமைகளை மூடி விழிப்பதற்குள் ஈக்களைப் போலக்
குறுக்கும் நெடுக்கும் பறக்கின்ற (ஒடுகின்ற) வாகனங்
களில் மனிதர்களின் அவசர வாழ்க்கைகளை, வீதியில் பிச்
சைக்காரர்களின், பைத்தியங்களின் அழுக்கான தோற்றங்
களையும் அவலமான வாழ்க்கையையும் (ஐயோ பாவம்!). "ஷோசியல் மூவிங்'குகளின் மயிர்க் கூச்செறியும்..மன் னிக்கவும், உள்ளத்தைத் தொடும் காதல் காட்சிகள், ‘ரீன் ஏஜ்’களின் மிகக் குறுகிய ஆடைகளில் பொலிஷ் பண்ணப்
பட்ட. ('காணக் கண்" ஆயிரம் வேண்டுமையா!)-
கொழும்பில் நெருக்கமான பகுதிகளையெல்லாம் கழுவி வருகின்ற சாக்கடை வாய்க்கால்கள், தொழிற்சர்லை களிலிருந்து வெளிப்படுகிற கழிவு வாயுக்கள், பஸ் நெரி சலில் பிணைபடுகின்ற சனங்களின் வியர்வை கசிந்துருகி. (லேஞ்சியை எடுத்து "மூக்கில்" வைத்து) சீ!.
வாகனங்கள், தொழிற்சாலைகளின் இரைச்சல்கள் மலிவு விலை வியாபாரிகளின் காதைக் கிழிக்கின்ற சத்தங் கள். (செவி)-
-இயந்திரமயமான வாழ்க்கையில் தம்மையறியா மலே இரண்டறக் கலந்து விடுகின்ற நிர்ப்பந்தத்தில் விரக்தியடைகின்ற மனதுக்கு ஆறுதலளிக்கின்ற சுகம்.
ஐம்புலன்களை அடக்கி மனதைப் புனிதமாக்கிப் பக்தி டியப் படுத்துகின்ற கற்பூர வாசனை காற்றில் மிதந்து வரு கிறது.-அரோகரா கோஷம். மனதை ஒரு வழிப்படுத்து கின்ற மணியோசை. பூசை ஆரம்பமாகிவிட்டது.

இளமைக் கோலங்கள் 3.
கற்பூர ஆராதனை நடக்கிறது! கூப்புகின்ற கரங்கள் தலைகளுக்கு மேல் உயர்கின்றன. தங்கள் குறை நிறைகளை அந்தரங்கமாக இறைவனிடம் சமர்ப்பித்துப் பரிகாரம் கேட்கின்ற பக்தர்கள் தீபங்களில் அர்ச்சிக்கப்படுகின்ற இறைவனின் ஒளிமயமான தோற்றத்தைத் தரிசிப்பதற்கு இடிபடுகின்றனர்.
இந்த நேர்த்தில் வெளியில் சற்றுப் பரபரப்பு-கப்பல் போன்ற ஒரு கார் ஆலய வாயிலினுள் நுழைகின்றது. கணப் பொழுதிலே சங்கதி மூலஸ்தானம்வரை பரவுகிறது. -வந்திருப்பவர் ஒரு "மினிஸ்றர் பக்த கோடிகளின் முகங்களில் ஆச்சரியம் மேலிடுகிறது, "எட! மினிஸ்றர் கூட வந்திருக்கிருர்!’ •8-.
தரிசனத்தில் நின்றவர்கள் பலர் ஆவலோடு வாகனத் துக்கு அண்மையில் ஓடி வருகிருர்கள். அண்மையில் சென்று தரிசிக்க வேண்டுமென்ற துடிப்பு-இப்படி ஒரு "சான்ஸ்’ பிறகு கிடைக்காதே! கோயிலினுள் நின்ற சனங்களிலும் பலர் முண்டியடித்துக் கொண்டு வெளியில் ஓடி வருகின்றனர். சிலர் கட்வுளைக் கூப்பிய கைகளோடு தலைகளை மாத்திரம் இந்தப் பக்கம் திருப்பி இரு மனதோடு நிற்கிருர்கள். சில கொழும்பு வாழ் முக்கியஸ்தர்கள் முன்னே ஓடி வந்து "மினிஸ்றரை எதிர் கொண்டு வர வேற்றுப் பாதுகாப்போடு உள்ளே அழைத்துச் செல்கின் றனர். அமைச்சர் வந்த புண்ணியத்தில் இறைவனுக்கு ஒரு விசேட பூசையும் நடைபெறுகிறது!
சிவகுமார் ஜெகநாதனைப் பார்த்து-"மச்சான் கட வுளைக் கண்டியோ?" எனக் கேட்டான். 'சும்மா இரடா a- - - அதுகள் பெரிய இடத்துச் சங்கதிகள்" என ஜெக நாதன் அவனது வாயை அடைக்கிருன்.
இப்படியாகப் பூசை முடிந்த பின்னரும் மினிஸ்றர் வந்துபோன செய்தி பலராலும் வாய் நிறையக் கதைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. 、

Page 21
32 இளமைக் கோலங்கள்
கோயிலுக்கு வருவதற்கு முன்னர் சோறு மாத்திரம் காய்ச்சி வைத்துவிட்டு வந்ததால் இனிப் போய்த்தான் கறி சமைக்க வேண்டுமென்பதை நண்பனிடம் நினைவு படுத்தி ஞன் சிவகுமார்.
'சிவா! நான் பம்பலப்பிட்டிக்கு ஒருத்தனைச் சந்திக் கப் போக் வேணும். நீ அறைக்குப் போய் ஆயத்தப் படுத்து.வ்ந்திடுவன். " என்றவாறே இருவரும் வெளி யேறுவதற்கு வந்தபொழுது சிவகுமாருக்குக் காலைவாரி விட்டது போலிருந்தது-அவனது செருப்பைக் காணவில்லை.
سمبر
** மச்சான் செருப்பை ஆரோ அடிச்சிட்டாங்கள்" எனப் பரிதாபமாகக் கூறினன்-இரண்டு நாட்களுக்கு முன் னர் வாங்கிய புதுச் செருப்புக்கள்.
சிவகுமார் அழுவாரைப்போல நின்றன். சகல வெட் டுக் கொத்துகளும் (பைசிக்கல் கடன் + வட்டி, தொழிற் சங்க சந்தா, பண்டிகைக்கால முற்பணம், விசேட முற் பணம்-வட்டியில்லாதது; இனக் கலவரத்தின் பின்னர் வழங்கப்பட்டது, நலன்புரிச் சங்க சந்தா, வைத்திய உதவி நிதி, டிஸ்ற்றஸ் லோன் + வட்டி, ஈ, பீ. எவ் 10%, வரு மானவரி) போக மிச்சமாகக் கிடைத்த சம்பளத்தை யெடுத்து சாப்பாட்டுக் கடைக்காரனுக்கும், அறை வாட கையும் கொடுத்துப் பெற்ருேருக்கும் ஏதாவது (மகன் தந் தைக்கு ஆற்றும் உதவி) அனுப்பிய பின்னர் இருபது ரூபா சொச்சம் மீதியிருந்தது. வெகுநாட்களாகச் செருப்பு வேண்ட வேண்டிய குறையைக் கால்கள் உறுத்திக் கொண் டிருந்ததால்.வாயைக் கட்டி ஒரு சோடி செருப்பை வேண்டினன். அந்தோ,. புதிய செருப்புக்களைப் பொலித்தீன் பையினுள்ளிருந்து பெ ரு மி த த் தோடு, (? இனிக் கொஞ்ச நாட்களுக்கு வெள்ளைக்காரன் மாதிரித் திரியலாம்.') எடுத்த பொழுது இருந்த மகிழ்ச்சியில் மண்ணை அள்ளிப் போட்டவன் யார்?

இளமைக் கோலங்கள் 翰等。
தனது கால்களைப் பார்த்தவாறு தவிப்போடு நின்றன சிவகுமார்; வெறும் காலோடு எப்படிப் போவது?
"மச்சான் ஒண்டுக்கும் யோசியாமல் அதிலை கிடக்கிற திலை ஒண்டை மாட்டிக் கொண்டு வா!”
சீ இதென்ன வெட்கம் கெட்ட வேலை-தானே இன் னுெருவனது செருப்பைக் களவாடுவதா?
"என்ன .என்னையும் போய்க் களவெடுக்கச் சொல் லுறியோ?"--சிவகுமார் சற்று எரிச்சலோடு தான் கேட் int Gör.
**இது களவில்லை மச்சான்!. உன்ரை செருப்புை ஆரோ எடுத்திட்டான். இப்ப எப்படி வெறுங் காலோடை நடக்கப் போருய்?"
"அது கூட உண்மைதான். காலில் செருப்பில்லாமல் எப்படி நடப்பது? ஆபத்துக்குப் பாவமில்லையாமே
"சரி-தன்னை யாராவது பார்க்கிருர்களா என்பதைச் சாடையாகக் கவனித்துவிட்டுச் சென்று ஒரமாக வைக்கழ் பட்டிருந்த ஒரு சோடி செருப்பினுள் (சொந்தக்காரனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்) கால்களை மாட்டி
G தம்பி - a - d - a உங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்
றம்!”
-சற்றுத் தூரத்தில் கதைத்துக் கொண்டிருந்த இளே ஞர்களுள் ஒருவன் ஓடி வந்து இவனது சேட்டைப் பிடித்து இழுத்தான்-சொந்தக்காரனின் கேள்வி: "இதுக்கெண்டு தானே வாறனிங்கள்.?"
சிவகுமாரின் கால்கள் தடுமாறின.-தன்னைப் பரிகாச மாகப் பார்க்கின்ற கண்களைத் தாங்குவதற்குத் திராணி யற்றுத் தலை குனிந்தான். கால்கள் மணலினுள் அமிழ்ந்து

Page 22
34 ܫ இளமைக் கோலங்கள்
கொண்டு போவதுபோல..எல்லோரின் முன்னிலையில் இன்னும் கீழே.கீழே. சீ! என்ன கேவலம்,
* பிளடி ருஸ்க்கல்ஸ்" என்றவாறே இன்னுெருவன் வந்து அவனது முதுகிலே "புள்ள டி" போட ஆயத்தமானுன் -போன கிழமை பாவமன்னிப்புக்கோரிக் கோயிலுக்கு வந்து தன் செருப்புகளைப் பறிகொடுத்த (அப்) பாவி:
ஜெகநாதன் பக்த கோடிகளின் செவிப்பறையில் அறை வது போல உரத்துச் சொன்னுன்; "ஹலோ ஏன் இப்பிடி விசாரிக்காமல் சத்தம் போ டுறீங்கள்? அவனைப் பாக்கக் கள்ளன் மாதிரியே இருக்கு?'-பின்னர் பெரிய சிரமத் தோடு உண்மையை விளக்கிச் சிவகுமாரை விடுவித்தான்.
கோயிலைவிட்டு வெளியேறியபொழுது 'சிவா! கவ லைப்படாதை.இதெல்லாம் சின்ன விஷயம்" என ஆறு தல் கூறிவிட்டு பம்பலப்பிட்டி போவதற்காக வீதிக்கு மறு பக்கமாக நடந்தான் ஜெகநாதன்.
சிவகுமார் அறையை நோக்கி நடக்கத் தொடங்கி ஞன்.
வெறுமையான கால்களில் கற்களின் குற்றல். கன மான மனதிலே அவமானத்தின் குதறல்கள்.

அத்தியாயம் - 7
சீட்டிலுக்குக் கீழே தள்ளி விடப்பட்டிருந்த பழைய செருப்புகளை எடுத்து, ஊசியைக் குற்றிச் சரிசெய்து கொண் டான் சிவகுமார். அவற்றைக் கால்களில் செருகி நடந்த பொழுது ஒரு பக்கத்தில் ஊசியின் சாதுவான நெருடல் இருக்கத்தான் செய்தது. கொஞ்சம் "அஜஸ்ட்" பண்ணி நடக்கலாம் என நினைத்துக் கொண்டான்,
வளக்கமான "சிங்கள ரியூசனுக்கு பல்லவியுடன் சென்ற மகேந்திரன் இன்னும் வரவில்லை; "இரவுச் சாப் பாட்டுக்குக் கறி சமைக்கவும் வேணும்."-சலிப்புத்தட்டு கிற மனதோடு எழுந்து பாத்திரங்களை எடுத்துக் கொண்டு கழுவுவதற்காகப் பின் பக்கமாகச் சென்றன்.
பின் பக்க வேலியோரமாக நிற்கும் குரோட்டன் செடி கள் காற்றில் அழகாக ஆடுகின்றன. அந்தச் செடிகளுக் குள்ளிருந்து பூச்சியொன்று "கிறீச்" எனச் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பூச்சிகளுக்கு ஓர் அற்புதமான சக்தி இருக்கிறதாம். சன சந்தடி சத்தங்கள் அதிகமான பகுதியாயினும் சரி, தனது துணையைத்தேடி ஒரு பூச்சி அழைக்கின்ற ஓசை அதன் சோடிக்கு இரண்டு மூன்று மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் புரிந்து கொள்ளக் கூடி யதாயிருக்குமாம்-எங்கோ வாசித்திருக்கிருன்.
பக்கத்து வீட்டில் மோட்டார் வாகனமொன்று "ஸ்ரார்ட் செய்யப்படுகின்ற ஒசை-எங்கே போகப் போகி முர்களோ?
சிவகுமார் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டு திரும் பிய பொழுது "அனெக்ஸ்ட் பலகையில் யாரோ தட்டுகிற

Page 23
இளமைக் கோலங்கள்
சத்தம் கேட்கிறது. அவன் உன்னிப்பாக அந்தப் பக்கம் கவனித்தான்-தற்செயலாகத் தட்டப்படுகின்ற சத்த மில்லை. யாராக இருக்கும்?
அகிலா அந்தப் பக்கம் நின்று செருமினுள். பதிலுக்கு என்ன செய்வது என்று இவன் தடுமாறினன். பேசாமல் உள்ளுக்கு ஓடிவிடலாம் போல இருந்தது. இதற்கு முன் ன்ர்-ஒருபோதுமே அவளுடன் கதைத்ததில்லை. இப் பொழுது தன்னையே அழைக்கிருள் என்பது சரியாகத் தெரி யாமற் கதைக்கலாமா? அவள் அப்படிக் காரணத்தோடு தான் செய்கிருளோ அல்லது தற்செயல் நிகழ்வுகளோ தெரியவில்லை. தன்னையே அவள் அழைப்பதாக வைத்துக் கொண்டாலும் முதலில் முகம் பார்க்காமல் எப்படிக் கதைப்பது? என்ன கதைப்பது? அவள் எதற்காக அழைக் கிருள்? இதென்னட்ா தர்ம சங்கடம்! அல்லது இன்னுெரு மானக்கேடர்? இன்றைக்கு என்ன முழுவியளம்? பேசா மற் போய்விடலாமா?
தான் இன்னும் அங்கேயே நிற்பதை உணர்த்துவதற் காக் இவனும் வலிந்து செருமினன். உடனடியாக அவ் விடத்தை விட்டுப் போக ஏனே மனது மறுத்தது.
"உங்களத்தான்!”
"Tar.astut?"
**ஓம்!"
காரணம் புரியாத பதட்ட உணர்வு உடலெங்கும் ஊடு ருவியது. அப்படி அவள் வலிந்து கதைப்பதற்கு என்ன ரக
யம் இருக்கும்?
"இஞ்ச கொஞ்சம் வாங்களன்!"
-இவன் மந்திரத்திற் கட்டுண்டவனைப் போல, பல ன் கப் பக்கமாகச் சென்றன். அகிலா வுடன் கதைத்து அவ

இளமைக் கோலங்கள் 37
ளது நட்பைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென அறையில் ஜெகநாதனும் மகேந்திரனும் எவ்வளவு போட்டி போடு கிறர்கள்! இப்பொழுது அந்த அதிர்ஷ்டம் இவனையே தேடி வருகிறதா? ஒருவிதமான பெருமித உணர்வு தோன் றியது. நண்பர்கள் வந்ததும் இதைச் சொன்னல் பொரு மைப்படுவார்கள். அல்லது நம்புவார்கள் தானுே என் னவோ!
தான் பலகைக்கு அண்மையாக வ்ந்து விட்டதை உணர்த்த மீண்டும் ஒருமுறை செருமிக் காட்டினன். சுவரி லிருந்து விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பல்லி "சச் சச்சச்" என்று சாத்திரம் சொன்னது.
'உங்களுக்கு வதக்கி ஆக்கின முருங்கைக்காய்க் குழம்பு பிடிக்கும்தானே?"
சிவகுமார் ஆச்சரிய மேலீட்டால் கதைக்க முடியா மல் சற்றுத் தாமதித்துவிட்டுக் கேட்டான்.
"உங்களுக்கு எப்படித் தெரியும்?"
"சாத்திரம் பார்த்தன்"-அவள் மெல்லிய ஓசையிற் சிரித்தாள். இவன் விழித்தான்.
"சாத்திரமோ??
"இல்லை.அப்ப.நீங்க கதைச்சுக் கொண்டிருந்தது. கேட்டுது!"
''gGurt l'
** என்ன பயப்பிடுறிங்க?"
"நாங்கள் கதைக்கிறதெல்லாம் உங்களுக்குக் கேட் (5DT?""
"ஓ!..நல்ல வடிவாய்க் கேக்கும்!"

Page 24
38 இளமைக் கோலங்கள்
"ஐயோ!"
"என்ன. மறுகாவும் ஐயோ?"
"நீங்கள் கேட்கக் கூடாத கதையெல்லாம் கதைச் சிருப்பம்.அதுதான்." இவன் தடுமாறினன்.
*பயப்பிடாதையுங்க.ஆம்பிளையன் எல்லாம் கதைப் பானுகள்.அப்படிக் கதைகளுக்கெல்லாம் நான் காது குடுக்கிறதில்லை."
/ சிவகுமாருக்கு உண்மையிலேயே இப்பொழுது பய மும் பிடித்துக் கொண்டது. இரவு நேரத்தில் தான் இப் படி நின்று கதைத்துக் கொண்டிருப்பதை ஜெகநாதன் வந்து தற்செயலாகக் கண்டுவிட்டால் என்ன நினைப்பான்? இதையே கரவாக வைத்துக் கொண்டு எத்தனை கதைகளைச் G3Fmr .. ' uT Gör?
"அப்ப.நான் போகட்டா?"
"வந்த விசயத்தையும் மறந்து போறியள்?.முருங் கைக்காய் குழம்பு வேண்டாமா?"
என்ன பதில் சொல்வதென்று இவனுக்குப் புரியவில்லை. வேண்டாமென்று சொல்லி விடலாம். இவ்வளவு வலிய வந்து கேட்டவளுடைய மனத்தை முறித்த மாதிரிப் போய்விடும். கேட்ட மாத்திரமே கைநீட்டி வேண்டுவதற் கும் மனது கூசியது.
"பின்னுக்கு நிண்டு பேசிறது சரியில்லதான் . வீட் டுக்கு வாங்களன்!" என அவள் கூறிவிட்டு இவனது பதிலை யும் எதிர்பாராமற் சென்ருள். நிலைமை தற்காலிகமாகச் சமாளிக்கப்பட்டதில் இவனுக்கும் திருப்திதான். சிவ குமார் ஆச்சரியத்தோடு யோசித்துப் பார்த்தான்; மாலை ஐந்து மணிபோல மூவரும் அறையில் இருந்த பொழுது

இளமைக் கோலங்கள் 39
இன்று என்ன சமைக்கலாம் என்ற பிரச்சினை எழுந்தது. அப்பொழுது தான் சிவகுமார் சொன்னன்:
"மச்சான் வதக்கிக் குழம்பு வைச்ச முருங்கைக்காய் கறி எண்டால் எவ்வளவு ருசியாயிருக்கும்.அப்பிடியெல் லாம் சாப்பிட்டு எவ்வளவு நாளாகுது!"
'சிவா. கிடைக்காத பொருளுக்கு ஆசைப்படக் கூடாது! எங்களைப் பொறுத்த வரை. காய் கறியையும் .வெண்காயம் மிளகாயையும் வெட்டிப் போட்டு.தேங் காய்ப் பாலையும் . தூளையும் தண்ணியையும் உப்புப் புளி யையும் சேர்த்துக் கலக்கி. அடுப்பில வைச்சு இறக்கி எடுக் கிறது தான் கறி..அப்படிச் சாப்பிடுறதுக்கும் ஒரு மாதத் துக்கு மேலை பழகியிட்டம். பிறகேன் உனக்கு இந்த விபரீத ஆசையெல்லாம்?' என வேடிக்கையாகக் கேட்டான் ஜெக நாதன்.
"இல்லை ஜெகா.எனக்கு எதிலையாவது விருப்பம் வந் திட்டால்.எப்படியாவது அதை அடைஞ்சே தீரவேணும். ..இல்லாட்டி மனம்.கேளாது எத்தனை நாளைக்குத் தான்.எங்கடை உப்புச் சப்பில்லாத கறியைச் சாப்பிடு றது?.வாய்க்கு ருசியாய்ச் சாப்பிடுறதுக்காகவெண்டா லும் ஒருக்கால் யாழ்ப்பாணம் போட்டு வரலாம் போல் யிருக்கிறது."
"இதுக்குத்தான்ரா சொல்லுறது.நேரகாலத்தோடை கலியாணத்தை முடியுங்கோ எண்டு .ஒருத்தியைக் கலி பாணம் முடிச்சுக் கொண்டு வந்து பக்கத்திலை வைச்சிருந் தால். இப்பிடிச் சின்ன விசயங்களுக்கெல்லாம் யோசிச்சுக் கொண்டிருக்கத் தேவையில்லைத்தானே?" என இலவச ஆலோசனை வழங்கினன் மகேந்திரன்.
இந்தச் சம்பாஷணைதான் அகிலாவுக்குக் கேட்டிருக் ாக் கூடும் என்ற நினைவுடனே அகிலாவின் வீட்டை (அறையை) நோக்கி நடந்தான் சிவகுமார்.

Page 25
4Q இளமைக் கோலங்கள்
இடம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை நுணுக்கமாக அழகுபடுத்தி வைத்திருக்கின்ற பக்குவம் இவனுக்கு வியப்பை அளித்தது. தங்களுடைய அறைக் கும் இந்த அறைக்குமுள்ள வித்தியாசம் எவ்வளவு! பிரம் மச்சாரிகளுடைய அறைகளின் கதி அதுதான். தங்களைப் போல சமையல் வேலைகளையும் ஒரே அறையிலேயே வைக் திருக்காமல் பின்புறமாக உள்ள அறையாக்கப்பட்ட பகு தியைத்தான் ஒதுக்கியிருக்கிருர்கள்.
, "என்ன?. வந்தவர்.இருக்கக் கூடயில்ல.என்னத்தக் க்ண்டு சொக்கிப்போய் நிற்கிறீங்க?"
"இஞ்சை உள்ள எல்லாமே அழகாய்த்தான் இருக்கு!'
அவனது சிலேடையான குறும்பை அவள் ரசித்தாள். பின்னர் அம்மாவுக்கு. "இவர்தானம்மா பக்கத்து அறை யில் இருக்கிற மிஸ்டர் சிவகுமார்' என அறிமுகப்படுத்தி ள்ை. . -ஒ! இவள் பெயரைக் கூடச் சரியாகத் தெரிந்து வைத்திருக்கிருளே விடிந்தால் வேலைக்குப் போகவும், மாலையில் வந்தால் தானுண்டு தன்பாடுண்டு என இருக் கவும் தான் இவளுக்குத் தெரியும் எனக் கருதியிருந்தது பிழையாகிப் போய்விட்டது.
* வாங்க தம்பி!" என்றவாறு அம்மா ஒரு கதிரையில் அமர்ந்தாள். அந்த அறையில் ஒரு பக்கத்தில் கட்டி லொன்றும் மறுபக்கத்தில் நான்கு வரவேற்புக் கதிரை களும் அழகாக வைக்கப்பட்டிருக்கின்றன.
"கதைச்சுக் கொண்டிருங்க".ரீ போட்டுக் கொண்டு வாறன்" என்றவாறு அகிலா சென்ருள்.
**இல்லை.வேண்டாம்!"

இளமைக் கோலங்கள் 4.
"-இதென்ன தம்பி1.முதல் முதல்ல வந்திருக்கீங்க-- தண்ணி வென்னி குடியாமல்.போறதா?"-அம்மா வற் புறுத்தினள்.
சம்பாஷணைகள் வளர்ந்தன.
அம்மா தனது பிரச்சினைகளையெல்லாம் கவலையோடு கூறினுள். மட்டக்களப்பில் உள்ள ஆரையம்பதி ஊர்அகிலா பெற்ருேருக்கு இரண்டாவது மகள். தந்தை நெச வுத் தொழிற்சாலையொன்றில் காவலாளியாக உத்தி யோகம் பார்க்கிருர், மூத்த மகளுக்குத் திருமணம் முடித்து வைத்ததோடு அவர்களது கைகளும் வரண்டு விட் டன. ஆரையம்பதியில் சொந்தமாகவிருந்த காணித் துண் டொன்றும் சிறிய வீடும் அக்காவுக்குச் சீதனமாகக் கொடுத்தாயிற்று. மற்றைய செலவுகளுக்காகத் தொட்டம் தொட்டமாகப் பட்ட கடன்கள் தலைக்குமேல் இருக்கின் றன. அப்பாவும் மற்றைய தங்கையும் கடைசித் தம்பி யும் அக்காவுக்குச் சீதனமாகக் கொடுத்த வீட்டில் இருக் கிருர்கள்.
"கடவுள் புண்ணியத்தில் அகிலாவுக்கு இந்த உத்தி யோகமாவது கிடைச்சபடியாத்தான் ஏதோ எங்கடை பாட்டையும் பாத்துக் கொண்டு அவனுகளுக்கும். ஏதா வது அனுப்ப முடியுது.அவர் உழைக்கிறது என்னத்தக் காணும்' எனப் பெருமூச்சோடு கூறினுள் அம்மா.
சிவகுமார் இரக்கத்தோடு அகிலாவைப் பார்த்தான். இந்தக் குழந்தைத் தன்மையான பெண்ணுக்குத்தான் எவ் வளவு பொறுப்புக்கள்!
அவளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தனது பொறுப் புக்களும் சுமைகளும் அற்பமானவையாகத் தோன்றின. பெண்ணுகப் பிறந்த ஒருத்தி இவ்வளவு சுமைகளையும் ஏற்று நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தும் பொழுது தன் மூல்ை ஏன் முடியாது என எண்ணிப் பார்த்தான். அடுத்த

Page 26
42 இளமைக் கோலங்கள்
கணமே அந்த எண்ணமும் சுயநலமானதாகத் தோன்றி யது. எந்த ஒரு விசயத்தையும் தன்னேடு ஒப்பிட்டுப் பார்ப்பது ஒரு பலவீனம்தானே என நினைத்தான்.
'என்ன பேசாமலிருக்கீங்க, கதைக்க விருப்பமில் லையா?’ அகிலா அவனது மெளனத்தைக் கலைக்க முயன் ருள்.
'அம்மா கதைக்கிரு தானே.கேட்டுக் கொண்டிருக் கிறன்."
'அம்மாவுக்கு வேலையென்ன?. வாறவனுக எல்லா ரிட்டையும் தங்கட கவலைகளைச் சுமத்தத்தான் தெரியும். இதுக்கெல்லாம் கவலைப்பட்டு என்ன செய்யிற? எல் லாம் அவங்கட அவங்கட தலையில எழுதியிருக்கு!"
"தலையெழுத்தெண்டாப் போல?.கவலைப்படாம முடி யுமா? எண்ட பிள்ளை இப்பிடிக் கிடந்து கஷ்டப்பட வேணு மெண்டு எழுதியிருக்கு?.முருகா.இதுக்கொரு வழியைக் காட்டுவாயா?" அம்மாவின் மனசு அங்கலாய்த்தது.
அவர்களுக்கு ஏதாவது ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்தது சிவகுமாருக்கு; ஆனல், அது தன்னல் இய லாத காரியம் என்பதையும் உணர்ந்தான். ஒருவித கவலை யும் பதட்டமும் மனதிலே உருவெடுத்தன. நண்பர்கள் வருவதற்கு முன்னரே அறைக்குப் போய்விட வேண்டு மென நினைத்தான்.
அவர்களிடம் விடை பெற்றபொழுது அகிலா ஒரு பாத் திரத்தில் கறியைக் கொண்டு வந்து கொடுத்தாள். இவன் நன்றியோடு கேட்டான்:
"நீங்கள் ஏன்.எங்களுக்காக இவ்வளவு கஷ்டப்படு நீங்கள்?"
"இதில் என்ன கஷ்டமிருக்கு?.நீங்க ஆம்பிளையள். வேலையால வந்து களைப்போடை ஆக்கி வாய்க்கு ருசியில்

இளமைக் கோலங்கள் 43
லாமல் சாப்பிடக்குள்ள அதப் பார்த்துக் கொண்டு பேசா மலிருக்க ஏலுமா?"
'பிள்ளை அடிக்கடி சொல்லுறவதான் தம்பி.பாவம் ஆம்பிளையஸ் என்னெண்டு ஆக்கிறது . கஷ்டப்படுதுகள் எண்டு.'
அகிலாவுடைய பெருந்தன்மையான குணத்தை நினைத்து வியப்படைந்தான் சிவகுமார்; "அதுக்கென்ன செய்யிறது?.கடையளிலை சாப்பிட்டு அலுத்துப் போனம் ...நாங்கள் சமைச்சால் துப்பரவாயும் இருக்கும்.சத்தான சாப்பாடும் சாப்பிடலாம் . கடையளிலை. என்னத்தை அவிச்சுப் போடுருங்களோ.ஆர் கண்டது?"
*வேலை செய்யிறனிங்கள் நல்லாய்ச் சாப்பிடவும் வேணும்தானே? . சுவர் இருந்தாத்தானே சித்திரம் எழு தலாம்?"
அம்மாவுடைய பேச்சைக் கேட்டு அகிலா சிரித்தாள். சிவகுமாரும் சிரித்துக் கொண்டே விடை பெற்ருன்.
அத்தியாயம் = 8
இவ்வளவு நேரமாகியும் இவர்களைக் காணவில் *லயே' என்றனண்ணத்தோடு அறைக்கு வெளியேவந்து பார் த்தபொழுது மகேந்திரன் திருமதி வெங்கடாசலத்தோடு (லான்ட்லேடி) கதைத்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. அவன் கதைத்துக் கொண்டு நிற்கின்ற சுவாரஸ்யத்தைப் பார்த்தால் இப்போதைக்கு வரமாட்டான் என்பது நிச்ச யம். இப்படியே கதைத்துவிட்டு வந்து அவளது கட்ட

Page 27
44 இளமைக் கோலங்கள்
மைப்பான உடலமைப்பையும் கவர்ச்சியான சிரிப்பைப் பற்றியும் சொல்வான். அவளது அழகுக்கும் எடுப்புக்கும் அவர் (மிஸ்டர்) தோதான ஆளில்லை என்று வாதிப்பான், தன்னை அடிக்கடி இழுத்து வைத்துக் கதைப்பதற்கும் கார ணம் அதுதான் என்பான்.
இந்த எண்ணங்களெல்லாம் அவனது சலனங்கள் தானே என்று சிவகுமார் நினைத்திருக்கிருன், எந்நேரமும் இதுபோன்ற எதிர்பார்ப்புக்களோடு இருப்பதாற்தான் அவனுல் இப்படியெல்லாம் நினைக்க முடிகிறது போலும். திருமதி வெங்கடாசலத்தை ஒரு வஞ்சகமில்லாத மனுசி யாகத்தான் இவனுற் கருத முடிகிறது. அவளது கள்ளம் கபடமில்லாத சிரிப்பு அப்படித்தான் எண்ணத் தோன்று கிறது?
முருங்கைக்காய்க் கறியின் நினைவு பசியை அதிகரித் துக் கொண்டிருந்தது. "ஜெகநாதனெண்டாலும் நேர வழிக்கு வருகிருனில்லையே' என்று நினைத்த பொழுது வாசற் கதவைத் திறந்து கொண்டு அவன் நுழைந்தான். (அவனுக்கு ஆயுசு நூறு) மகேந்திரன் வீட்டுக்காரியோடு கதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஒரு மனமில் லாத ஒரு புன்னகையை மாத்திரம் உதிர்த்துவிட்டு வந் தான். என்ருலும் அவர்கள் மகிழ்ச்சியாகச் சம்பாஷிப் பது இவனுக்குச் சம்மதமில்லை என்பதை மாத்திரம் முகம் காட்டிற்று. ஜெகநாதன் மனதிலே கற்பனை செய்கிற அளவுக்கு செயற்திறன் இல்லாதவன் செயல் வீரன் மகேந்திரன் மேல் அடிக்கடி இவன் முகச் சுளிப்போடு பாய்வதன் காரணமும் இதுதான்.
மகேந்திரன் ஒன்றுக்கும் கவலைப்படாமல் கதைத்துக் கொண்டிருந்தான்.
ஜெகநாதன் நெடுநாள் பசி கிடந்தவனைப்போல அவ சரப்பட்டான்; 'அவன் கிடக்கட்டும் மச்சான்! நாங்கள் சாப்பிடுவம்"

இளமைக் கோலங்கள் 45
"சரியில்ல.அவனும் வரட்டுக்கும்."
நண்பர்களின் பொறுமையை அதிக நேரம் சோதித்த பின்னரே மகேந்திரன் அறைக்கு வந்தான். எல்லோரு மாகச் சாப்பிட அமர்ந்த பொழுது, கறியை எடுத்து முன் னுல் வைத்தான் சிவகுமார். -
'இதென்னடா புதுக்கறி . நல்ல மணம் குணமா யிருக்குது!' - இருவரையும் ஆட்கொள்ளும் ஆச்சரியம்.
'நான்தான் சமைச்சனன்!"
"ஓ! பெரிய சமையல்காறனெண்டு இவருக்கு எண் ணம்! சொல்லடா விஷயத்தை?" ஜெகநாதன் அவசரப் பட்டான். சிவகுமார் குரலைத் தாழ்த்திக் கூறினன்; 'அகிலா தந்தது!" ஜெகநாதன் எதிர் பார் ப் பது போலவே சங்கதி கவலைக்கிடமானதாக இருந்தது. "சும்மா கதை விடாதை.அவளாவது தாறதாவது.! * அது பொய்யாகவே இருக்கக் கூடாதா என்ற ஏக்கம்.
"உண்மையாகத் தான் மச்சான்! ... நாங்கள் பின் னேரம் கதைச் சுக் கொண்டிருந்தது அவையஞக்குக் கேட் டிருக்குது. பிறகு கூப்பிட்டுத் தந்ததுகள். பாவங்கள். நல்ல சனம்."
"ஒ1.அப்ப மாப்பிளை பிடிக்கிற யோசனை போலை யிருக்கு எங்கத்தை ஆக்களெண்டு தெரியும் தானே?"
சிவகுமார் இப்படியொரு தாக்குதலை எதிர்பார்க்க வில்லை. "மெல்லமாய்க் கதையடாப்பா!...அங்காலை கேக் கப் போகுது. அதுகள் மினக்கெட்டுச் செய்து தந்திருக்குது கள்.நீ என்ன பேய்க்கதை கதைக்கிருய்?" ༤
"கேக்கட்டன். கேட்டால் என்ன பயமே. ஆரை ஏமாத்தி அமத்தலாமெண்டு பாத்தாளவை? உதுக்கு

Page 28
46 இளமைக் கோலங்கள்
ஆரேன் உன் தரவளி இRச்சவாயனைப் போலப் பிடிக்கச் சொல்லு.”
சிவகுமாரது மனம் புகைந்தது? இந்தச் சம்பா ஷணையை அகிலா கேட்க நேரிட்டால் எவ்வளவு மனம் வருந்துவாள் என்ற கவலையும் தோன்றிற்று.
"சரி...சரி. உனக்கு விருப்பமில்லாட்டிச் சாப்பிட வேண்டாம் . வீணுய்த் தேவையில்லாத கதை கதை யாதை"
'சிவகுமார் சாப்பிடத் தொடங்கினன், மகேந்திரன் சங்கடத்துடன்; 'எடுப்பதா.விடுவதா" என்ற யோசனை யோடு ஜெகநாதனை நோட்டம் விட்டான்.
*மகேந்திரன் நீயும் உதைச் சாப்பிடப் போறியே? அதுக்குள்ள.என்ன மருந்து போட்டிருப்பாளவையோ தெரியாது! சொல்லவேண்டிய கடமைக்குச் சொல்லிட் டன்.இனி உன்ரை விருப்பம்.”
வீதியில் யாரோசிலர் நிறை தண்ணியில் தமது கருத் துச் சுதந்திரத்தைப் பிரயோகித்துக்கொண்டு நடக்கிருர் கள். அக்கம் பக்கத்திலும் வீடுகள் இருக்கின்றன, தாங்கள் மணிசத் தன்மையில்லாமல் சத்தம்போட்டுச் செல்வது அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை.
'அதையெல்லாம் நீ நம்பிறியே மச்சான்? மருந்தும் மாயமும்.எல்லாம் மோட்டுக்கதையள்"- மகேந்திரன் சமாதானம் கூறினன். ஜெகநாதன் எதையும் கேட்கத் தயாராயில்லை. அவனுக்கு சிவகுமாரைப் பார்க்கவே எரிச் லாயிருந்தது. தாங்களெல்லாம் அகிலாவைப் பற்றிக் கதைக்கும் சந்தர்ப்பங்களில் அமுசடக்கிக் கள்ளன் மாதி ரிப் பேசாமல் இருந்துவிட்டு "நைசாக வேலையைக்

இளமைக் கோலங்கள் 47
கொண்டு போயிருக்கிருன் என்ற ஆத்திரம் மட்டும் மேலோங்கி நின்றது.
சிவகுமார் யாருடனும் கதைக்க விரும்பாமலிருந் தான்.சமூகம் இவ்வளவு கேவலமானதாகவா இருக்கிறது? படித்தும் பகுத்தறிவில்லாத சனக் கூட்டந்தான் பெருகிக் கொண்டே இருக்கிறது.
விரைவாகவே சாப்பாட்டை முடித்துக் கொண்டு எழுந்து சென்ருன் ஜ்ெகநாதன். இல்லாவிட்டால் எல்லோ ருக்கும் கடைசியாகப் பந்தியை முடிப்பது அவன்தான். இப் பொழுது சுறுக்காக எழுந்து சென்றது மகேந்திரனுக்குச் சிரிப்பாக இருந்தது. இவ்வளவு நேரமும் மெதுவாகவே சாப்பிட்டுக்கொண்டிருந்த அவன் ஜெகநாதன் சென்ற பின்னர், "உவனுக்கு மச்சான்.எல்லாம் கரவுதான்!” என்றவாறே தானும் அந்தக் கறியை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினன்.
சிவகுமாருக்கு சிரிப்பு மேலிட்டது. இவனும் மற்ற வனுக்குப் பயந்துதான் வாழ்கிருன்! பெரிய விண்ணன் களைப் போல கதைக்குக் குறைச்சலில்லை. தங்கடை கருத் துக்களை நேர்மையாய் சொல்வதற்கே முதுகெலும்பில் லாத மடையன்கள்.
"எங்களைச் சூழ உள்ள மனிதர்களையும் இந்தச் சமூகத் தையும் எவ்வளவாக நேசிக்கிருேம். ஆனல், அங்கே எத் தனை பேர் போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிருர் கள்! நேர்மை, இலட்சியப் பிடிப்பு என்பதெல்லாம் காண் பதற்கு அரிதாகவே இருக்கின்றது. சுயநல வாதிகளும் Fந்தர்ப்ப வாதிகளும் ஏமாற்றுக் கும்பல்களும் மலிந்து விட்டனர். இவர்களுடைய பண்புகள் எப்பொழுது நாக

Page 29
48 இளமைக் கோலங்கள்
ரிகமடையப் போகின்றன? நாகரிகம் என்பதே கல்வியில், கலாசாரத்தில், வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களில் ஏற்படுகின்ற முன்னேற்றமான நல்ல மாற்றங்கள் என் பதை ஏன் இவர்கள் உணர்கிருர்களில்லை?
"இந்த மகேந்திரன் தலைமுடியை நீளமாக வளர்ப் பதையும் விதவிதமாக ஆடைகள் அணிவதையும் தான் நாகரிகம் எனக் கருதுகின்ருனே?"
/ சிவகுமார் மெளனமாகவே இருப்பதைப் பார்க்க மகேந்திரனுக்குச் சங்கடமாக இருந்தது.
"என்ன மச்சான் என்னேடையும் கோபமா?"
"சீ . எனக்கென்ன கோபம்? ஒவ்வொருதற்ரை போக்கையும் யோசிச்சன்."
"அதுக்கென்ன செய்யிறது?.அது அவரவற்றை பல வீனம், மனிசனுய்ப் பிறந்தவனுக்கெல்லாம் இப்படி ஏதா வது பலவீனம் இருக்கத்தான் செய்யும்!" எனத் தத்துவம் பேசினன் மகேந்திரன். -
அதற்குப் பதில் கூற விரும்பாதவனைப்போல சாப்பாட் டுக் கோப்பையை எடுத்துக் கொண்டு "பைப் பக்கமாகச் சென்ருன் சிவகுமார்.
இராக் குருவியொன்று அவசரமாக ஏதோ கூறிச் கொண்டு பறக்கிறது. அந்த அவலமான கூவலிலும் ஓர் இனிமை இருக்கத்தான் செய்கிறது.

அத்தியாயம் - 9
அழகை இன்னும் கவர்ச்சியாகக் காட்டுவதற்குப் பெண்கள் விதம் விதமாகப் பல வர்ணங்களில் ஆடைகளை அணிந்து கொள்வது போல வர்த்தக நிலையங்களின் பெயர்ப் பலகைகள் தோற்றமளிக்கின்றன. இலகுவில் விலை போகக் கூடிய பொருட்களுக்குக் கூடக் கவர்ச்சியான விளம்பரங்களும் தேவைப்படுகின்றதே! ஒவ்வொருத்தர் ஒவ்வொரு உத்திகளைக் கையாண்டு மிக நுணுக்கமாகத் தங்கள் பொருட்களுக்குத் தருகின்ற விளம்பரங்கள்! அங் கேயும் ஒருவரை ஒருவர் வென்று செல்வதற்குப் போட்டி கள்; எங்கே தான் போட்டி இல்லை? .
கண்ணுடிப் பெட்டிகளில் காட்சியறைகளிலெல்லாம் "எங்களை எடுத்துக்கொள்ளுங்களேன்' என்பது போல வீற் றிருக்கும் பொருட்கள், பொருட்கள்! அவற்றை விலை கொடுத்து அனுபவிக்க லாயக்கில்லாத பெரும்பாலானேர் நின்று பார்த்து. கவர்ச்சியான உடைகளுடன் எடுப்பாக வீதியில் செல்கின்ற கன்னியரைப் பார்த்து ஏக்கப் பெரு மூச்செடுக்கின்ற சுமாரான இளைஞர்களைப் போல,சொக் கிப்போய் நிற்கின்ற பரிதாபமான கோலங்கள்.
சிவகுமார் காலி வீதி ஒரமாக வர்த்தக நிலையங்களின் "ஷோகேஸ்’களைப் பார்த்தவாறே நடந்துகொண்டிருக்கி முன். இப்படிப் பார்த்துக்கொண்டு செல்வதே ஒரு சுவை யான பொழுது போக்குத்தான். எத்தனை நாட்கள் பார்த் தாலும் அலுக்காது.
வர்த்தக நிலையமொன்றின் முன்னிலையில் பல வேறு ரகங்களிலுள்ள சப்பாத்துக்களும் செருப்புகளும் பார்

Page 30
50 இளமைக் கோலங்கள்
வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. எதைப் பார்த்தாலும் நன்முகத் தான் இருக்கிறது. நவீன மயமாக பலவர்ணக் காலணிகள் கண்களைப் பறிக்கின்றன; மரக்கொப்புகள் கிளைவிட்டுப் பிரிவது போன்ற அமைப்பில் அவை அடுக் கப்பட்டு அவற்றிற்குரிய விலைகளும் குறிக்கப்பட்டிருக்கின் றன. (சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும்!)
சிவகுமார் மிக அவதானமாக அடியெடுத்துவைத்து நடந்துகொண்டிருக்கிருன். இல்லாவிடில் நேற்றையைப் போல நேரம் காலம் தெரியாமல் செருப்பு காலைவாரி விட, அந்த இக்கட்டான நேரத்தில் சந்தி சிரிக்க நிற்கலாமா?
காலி வீதியிலிருந்து கிளைவிட்டுப்பிரிகின்ற வீதியொன் றின் ஒரத்தில் "க. தங்கவேலு" என்ற பெயர்ப்பலகை குறிப்பிடுவது ஒரு பெரிய தாபனம் அல்ல. தங்கவேலு ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. வீதி ஒரத்து மரநிழ வில் பழைய செருப்புக்களைப் பரவிவிட்டு உட்கார்ந்திருக்கி முன், வாயைப் பிளந்துகொண்டிருக்கும் மீன் கருவாடு களைப் போல பல பழைய சப்பாத்துக்கள் அடுக்கப்பட்டி ருக்கின்றன. மற்றும் செருப்புத் தையலுக்குத் தேவை யான ஊசி, நூல், தோல், இரும்புக்கட்டை இத்தியாதி பொருட்களுடன் அவனது தாபனம் எவ்வித விளம்பரங் களும் இன்றி சமூகப்பணி செய்து வருகிறது. க.தங்கவேலு என்ற பெயரை மாத்திரம் கோணல் மாணலாக சிறிதும் பெரிதுமாக சுண்ணும்பினுல் எழுதியிருக்கிருன்.
வாய் நிறைய வெற்றிலையைப் போட்டுக் குதப்பிக் கொண்டிருந்தவன் சிவகுமாரைக் கண்டதும்,
* வாங்க சாமீ" என முக மலர்ச்சியோடு வரவேற் கிமுன். பின்னர் உதட்டில் விரல்கள் இரண்டைப் பதித்து *சளக் கென வெற்றிலைச்சாறை ஒரு பக்கமாகத் துப்பி, தனது பொழுது போக்கிற்குத் தற்காலிகமான ஒய்வு கொடுக்கிருன்.

இளமைக் கோலங்கள்
சிவகுமார் அவன் முன்னிலையில் செருப்பைக் கழட்டி விட்டதும் அதை ஆதரவோடு எடுத்து வருத்தம் இருக் கின்ற இடத்தைக் கண்டு பிடித்துப் பரிகாரம் செய்யத் தொடங்குகிருன்,
அவனுக்குப் பக்கத்தில் சற்று விலகி விரிக்கப்பட்டிருக் கின்ற பொலித்தீன் தாளின் மேல் இரண்டு பிள்ளைகள் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கின்றன. ஒரு குழந்தையின் அரை யில் "யங்கி மாத்திரம் இருக்கிறது. மற்றதுக்கு இது கூட இல்லை. சனசந்தடியும் வாகனங்களின் இரைச்சலும் அவர்களின் தூக்கத்தை எவ்விதத்திலும் பாதிப்பது போலத் தெரியவில்லை. இன்னெரு பக்கத்தில் மூன்று கற் கள் அடுப்பாக அடுக்கப்பட்டு அதன்மேல் பானையொன் றில் ஏதோ அவிகிறது-சமையல் நடக்கிறது எரிகின்ற அடுப்பிற்கு காற்றுத் தடையாக இருக்காமல் ஒரு சிறிய தகரத் துண்டினல் மறைப்புச் செய்திருக்கிருன்.
"என்னப்பா சமையல் நடக்குதுபோலை?" சிவகுமார் தனது சந்தேகத்தை வினவாக்கினன்.
"ஆமங்க சாமி!"
ஆச்சரியமாக இருந்தது! நிரந்தர இருப்பிடமின்றிப் பாதையோரத்தில் வாழ்கின்ற சீவன்களும் இருக்கத்தான் செய்கின்றன! இப்படி மழையையும் வெயிலையும் பொருட் படுத்தாமல் பாதையோரங்களையும் வீதி முடக்குகளையும் நம்பி வாழ்கின்ற எத்தனையோ குடும்பங்களைக் கொழும் பிலே காணலாம்.
'இரவிலையும் இதிலைதான் படுப்பீங்களா?. மழை வந்தால்?.. இந்தக் குழந்தைகளையும் வைச் சுக் கொண்டு கஷ்டம் தானே?" O
*கஷ்டத்தைப் பார்த்தா முடியுங்களா. செல வேளைல இங்கிட்டு ஒதுக்கமா சரிஞ்சுக்குவம்..இன்னெரு

Page 31
52 இளமைக் கோலங்கள்
எண்ணம் வந்துச்சின்னு. ஐயா அவங்கடை கடவாசல்ல போய்த் தூங்கிக்குவம்."
அவன் ஐயா எனத் தன்னையே குறிப்பிடுவது G3 unts ருக்கவே சமசியத்தோடு திரும்பவும் கேட்டுப் பார்க் கிருன். -
"ஆமாங்க.அங்கிட்டு இருக்கே ஐயா அவங்கட
( . . . . . . " என சிவகுமாரையே குறிப்பிட்டுப் பதிலளித் தான் தங்கவேலு.
"இதென்னப்பா.புதினம்1.எனக்கு இஞ்சை ஒரு கடையும் இல்லையே?"
"ஐயா -யாழ்ப்பாணம் தானே? தங்கவேலு சந்தே கத்தோடு கேட்டான்.
'ஓம்!"
"அதுவும் யாழ்ப்பாணத்துக் காரங்கட கடைதானுங்க!"
சிவகுமார் சிரித்துக் கொண்டான். அந்த ஏழையின் மனே நிலையை அறிய ஆச்சரியமாகவும் இருந்தது. ஒரே ஊரவர் என்பதற்காக ஒன்ருகக் கருதுகின்ற உள்ளம் யாருக்கு இருக்கும்? ஆனல் ஊர் ஒன்ருக இருந்தாலும் ஒவ்வொருத்தரும் பிரிந்து பிரிந்து பிரிந்து எத்தனை வேறு பாடுகள்? அக்கம் பக்கத்து வீடுகளில் ஒற்றுமையாக இருக் கின்ற குடும்பங்களை எங்கே காணலாம்?
"என்னப்பா சமையல்?--சிவகுமார் விடுத்து விடுத் துக் கதை கொடுத்தான். அவனுேடு கதைப்பதற்கு மிக விருப்பமாக இருந்தது.
"சோறுதானுங்க!”
"ஒவ்வொரு நாளும் அரிசிக்கு உன்ரை உழைப்புப் போதுமா தங்கவேலு?" சிவகுமார் இன்னும் கரிசனை

இளமைக் கோலங்கள்
யோடு கேட்டான். தனது பெயரை ஆதரவாக அழைத் தது அவனுக்குப் பெரிய புளுகமாக இருந்தது.
"ஆமாங்க.தொறை படச்சவன் படி அளக்கா மலாவுடுவான்?.கெடைக்கிற சல்லியில் அந்திக்கு எதுன் ஞச்சும் வேண்டலாமுங்க.”
"ஒரு நாளைக்கு எவ்வளவு உழைப்பாய்?"
"மூணு றுாபாவும் கெடைக்கும். நாலு றுாபாவும் கெடைக்கும். சில நாளைல எட்டு ஒம்போது றுாபாவும் கெடைக்கும்."-எட்டு, ஒன்பதைக் குறிப்பிட்டபோது தங்கவேலுவின் கண்கள் பெரிய ஆனந்தத்தாலும் ஆச்சரி யத்தாலும் விரிந்து அபிநயம் செய்தன.
"மூன்று ரூபா அரிசிக்குத் தானே காணும்!.கறிக்கு என்ன செய்வாய்?
"அந்திக்கு "மார்க்கெட்"லை கெட்டுப்போன காய்கறி வீசுவாங்க.பொறுக்கிக்குன்னு வந்தா...தெரிஞ்சு எடுத்துக்கலாம். எறைச்சிக் கடயில ஒரு அம்பேசத்தை நீட்டின இம்புட்டு எலும்பு கொடுப்பாங்க. “என இரு கைகளையும் அகற்றிக் காட்டினன். கிடைப்பதை வைத்துக் கொண்டு அவன் திருப்தியாய் வாழ்வண்த அறிய அதிசய உணர்வு மேலிட்டது. இப்படி வீதியோரத்தில் வாழ்கின்ற சீவன்களுக்கு நாள்தோறும் தென்படுகிற செல்வந்தர் களும் அவர்களது ஆடம்பர வாழ்க்கையும் எவ்விதமான பாதிப்பையும் அளிக்காதா?
"தங்கவேலு? w88 உன்ரை சம்சாரம் எங்கை? காண uઃી 6.8.)......''
*சில அம்மா மாருங்க எதுன்னச்சும் பழசு இருந்தா கொடுப்பாங்க அதுதான் போயிருக்கு. . அந்தியாச்சின்ன மாக்கெட்டுக்குப் போயி. வர லேட் ஆகும் தொறை?"

Page 32
54 இளமைக் கோலங்கள்
அட, பரவாயில்லையே! அவனது வாயில் கூட கொழு ம்பு வாடை (லேட்) வீசுகிறதே!
"என்ன உனக்கு இங்கிலிஷ் கூடத் தெரியும் போலை யிருக்கு!" என சிவகுமார் கேட்ட கேள்விக்கு வாய் நிறை யப் பல்லைக் காட்டி வஞ்சகமில்லாத சிரிப்பை வெளிப்படுத் தினன் தங்கவேலு. கதையோடு கதையாக தைத்து முடித்த செருப்புக்களை சிவகுமார் முன்னிலையில் போட்ட தும் அவன் அதைக் கொழுவிக் கொண்டே 'தங்கவேலு வுக்குச் சொந்த ஊர் எது? வீடு வாசல் இல்லையா?” எனக் கேட்டான்.
*" வீடு வாசல் ஏதுங்க?...” என்றவாறே அவன் தனது சொந்த ஊரின் பெயரைக் குறிப்பிடுகிருன். முன் னர் ஒருபொழுதும் கேள்விப்பட்டிருக்காத பெயர். அங்கே தான் அவனது உறவினர்க்ள் சிலர் இருக்கிருர்களாம். ..இன்னும் விபரமாகக் கேட்டபொழுது. அது மலைநாட் டுப் பகுதியிலுள்ள ஒரு சிங்களக் கிராமம் என்று தெரிய வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் தமிழர்கள் பரந்து வாழ்கிருர்கள் என்பதை அறிய மகிழ்ச்சியாயிருந்தது. இவன் வயிற்றுப்பாட்டுக்காக பட்டணத்தை நோக்கி வந் திருக்கிருன். இப்படியே காலத்துக்குக் காலம் ஒவ்வொரு பகுதியாகச் செல்வது வழக்கம். யாழ்ப்பாணத்தையும் கொழும்பையுமே உலகம் என்று நினைத்து வாழ்கின்ற தனது வாழ்க்கையோடு இந்த நாடோடி வாழ்க்கையை ஒப்பிட்டு எண்ணிப் பார்த்தான்-வாழ நினைத்தால் வாழ லாம்!
'தங்கவேலு அப்ப நான் போட்டுவாறன்!" என்ற வாறே கூலியைக் கொடுத்தான் சிவகுமார்.
"ரொம்ப நல்லம்.சாமி!" தங்கவேலு கைகூப்பி விடை கொடுத்தான் ,

இளமைக் கோலங்கள் 55
நினைத்த மாத்திரத்தில் காலிவீதியைக் கடந்து வர முடியாதவாறு அடுக்கடுக்காக வாகனங்கள் விரைந்து கொண்டு செல்கின்றன. அழகழகான, பெரிய கப்பல் களைப்போன்ற ஆடம்பரமான வாகனங்கள். அவற்றைக் காண்கையில் இப்பொழுது ஏக்கப் பெருமூச்சு தோன்ற வில்லை.
அத்தியாயம் = 10
சிவப்பு விளக்கு வாகனங்களை எச்சரித்து நிறுத்தி, பொது மக்களே இங்கே கடக்க” உதவி செய்தது. சிவ குமார் வீதிக்கு மறுபக்கமாக நடந்தான்.
ஒரு "ரீ’ குடித்தால் நல்லது போலிருந்தது. எக் கவுண்ட் கடையை நோக்கி நடக்கத் தொடங்கினன் சிவ குமார். சைக்கிளில் வந்து கொண்டிருந்த பஞ்சலிங்கம் இவனைக் கண்டதும் அவதியாய்க் குதித்து சைக்கிளை இழுத் துப் பிடித்துக் கொண்டு நின்றர்.
'தம்பியைத்தான் ஒரு அலுவலாய்க் காணவேணு மெண்டு நினைச்சஞன்." •
பஞ்சலிங்கத்தார் தொழிற் திணைக்களத்தில் வேலை செய்கின்ற ஒரு "சீனியர் ஹான்ட்", எக்கவுன்ட் கடைகளில் கண்டு அறிமுகமாகிய பழக்கம்.
சைக்கிளுக்கு "பிறேக்" இருந்தாலும் அவர் அதைப் பாவிக்க விரும்புவதில்லை. 'இப்படிப் பாவிக்கிறபடியால் கான் பதினைந்து வருசத்துக்கு மேலை அது கிடந்து உத வுது" எனப் பெருமையுடன் கூறிக் கொள்வார். பஸ்

Page 33
56 இளமைக் கோலங்கள்
போக்கு வரத்து வசதிகள் திருப்திகரமாக உள்ள கொழும் பிற் கூட அவர் தனது சைக்கிளைக் கொண்டு வந்து வைத் திருப்பது அதன் மேலுள்ள காதலினுல் அல்ல - பிரயாணச் செலவுகள் மிச்சப்படுமே என்பதற்காகத்தான்.
‘என்னண்ணை. ஏதாவது அவசரமான அலுவலே?
“g 1...... சும்மா ஒரு காரியமாய்க் கதைக்க வேணும் ---எங்க அறைக்குத்தானே போறிர்?. வாரும். நானும் வாறன் போயிருந்து ஆறுதலாய்க் கதைப்பம்."
"ஓம். வாங்கோ ஒரு ரீ அடிச்சிட்டுப் போவம்."
கடையில் இருவருமாகத் தேநீரை அருந்திவிட்டுச் சிவ குமார் கணக்குக் கொப்பியை எடுத்துத் தனது பக்கத்தில் கணக்கைக் குறித்துவிட்டு வந்தான்.
சைக்கிளை உருட்டியவாறு நடந்து கொண்டே, ‘எங் கை உம்மடை சிநேகிதர் அறையிலைதான் இருப்பினமோ?" எனக் கேடடார் பஞ்சலிங்கத்தார்.
'சனிக்கிழமையெல்லே? .இப்பபோய் அவங்களைப் பிடிக்க மாட்டியள். மகேந்திரன் சிங்கள ரியூசனுக்குப் போயிருப்பான். ஜெகநாதனும் ஏதோ படத்துக்குப் போக வேணுமெண்டவன்.”
என்ன விஷயமாகக் கதைக்கப் போகிருர் என்பது புரி யாமலிருந்தது சிவகுமாருக்கு. அவரது நடவடிக்கையைப் பார்த்தால் விஷயம் ஏதோ முக்கியமானதாக இருக்கும் போலிருக்கிறது.
தனது வழுக்கைத் தலையை ஆதரவோடு தடவி விட்ட வாறே அறையினுள் பிரவேசித்தார் பஞ்சலிங்கம். சிவ குமார் மேசைக்கு முன்னலிருந்த கதிரையை இழுத்துப் போட்டபொழுது, "என்னத்துக்கு நான். இதிலை இருக்

இளமைக் கோலங்கள் 57
கிறன்" என்றவாறே கட்டிலில் தனது புகழுடம்பை அமர்த் திணுர் . (புளிமூட்டை எனப் புகழ் பெற்றது அவரது உடம்பு) மூக்குக் கண்ணுடியைச் சரி செய்து விட்டுக் கொண்டு அந்த அறையை நிதானமாகப் புலனுய்வு செய் தார். கண்கள் ஒவ்வொரு பொருளையும் துளாவியெடுத் தன. அங்கு வீசப்பட்டிருந்த சிகரட் கட்டைகள் அவருக் குத் துப்புக் கொடுத்தன. N.
"உதார் தம்பி. அந்தக் கட்டிலிலை படுக்கிற ஆள்?" *ஏன் கேட்கிறியள்.அது ஜெகநாதன்ரை கட்டில்!"
**நல்லாய்ச் சிகரட் குடிப்பார் போலையிருக்கு...அங் கை பார்த்த இடமெல்லாம் சிகரட் கட்டைதானே!"
சிவகுமார் ஆமோதித்தான்; "சிகரட் இருந்தால் அவ னுக்குச் சாப்பாடும் தேவையில்லை."
ஏதோ பெரிய ஹாஸ்யத்தையே கேட்டு விட்டவர் போல பஞ்சலிங்கத்தார் தனது உடல் குலுங்க கெக்கட்ட மிட்டுச் சிரித்தார். தனது வழுக்கைத் தலையை அன்போடு தடவுகின்ற பணியையும் செய்தார். அவரது அபிப்பிரா யங்களும், சிரிப்பும் கதைக்கின்ற விதமும், இன்று முழுக் கக் கேட்டுக் கொண்டிருக்கலாம் போலிருந்தது.
**நல்லாய்ச் சொன்னுய் தம்பி!. சில பேருக்கு. அது ஒரு பழக்கமாய்ப் போச்சு நானும் முந்தி இப்பிடித் தான்.இப்ப குறைவு. எப்பாலும் இருந்திட்டு டிறிங்ஸ் எடுக்கிற நேரங்களிலை பாவிப்பன்.இவர் எப் படி?. ஜெகநாதன் குடிக்கிறவரே?"
*சில வேளையிலை குடிச்சிட்டும் வருவான். ஆனல் குழப்படி ஒண்டுமில்லை.
"ஓம்! ஒம்.இடைதரம் பாவிக்கிறதிலை பிழையில் இலத்தானே. இனி வயதும் அப்பிடித்தானே?"

Page 34
55 இளமைக் கோலங்கள்
பஞ்ச்லிங்கத்தாரின் கண்கள் கதவின் பின் பக்கத்தில் ஒட்டப்பட்டிருக்கின்ற பெண்களின், கவர்ச்சிப் படங்களை இப்பொழுதுதான் கவனித்திருக்க வேண்டும்-அவற்றில் இருந்து மீள முடியாத தடு மாற்றம்:
'அங்கை. நல்ல நல்ல படங்களும் ஒட்டியிருக்கிறியள் போலை!. ஒரு மாதிரியான படங்களாயிருக்கு." எனக் கூறியவாறு சிரிப்பை வலிந்து வரவழைத்துப் பின்னர் ஏதோ சிந்தனை வ யப்பட்டவர்போல மெளனம் சாதித்து, சற்று நேரம் அப்படியே இருந்துவிட்டு;
سمبر عر
"இவர் . எப்பிடித் தம் பி. ஜெகநாதன் வித்தி யாசமான சிநேகிதங்கள் தொடர்புகள் வைச்சிருக்கிருரே?
'வித்தியாசமான" என்பதன் அர்த்தம் சிவகுமாருக் குப் புரியாமலிருந்தது.
*ஆராவது பெட்டையளோடை தொடர்பிருக்குதோ எண்டு கேட்டனன். தெரியாதே இளந்தாரிப் பொடி யள்'-உடலைக் குலுக்கி வெளிப்படுத்துகின்ற சிரிப்பு.
அவருடைய 'றுாட் மாறிப்போவது இப்பொழுதுதான் சிவகுமாரது உணர்வுக்கு எட்டியது
'என்னண்ணை. ஜெகநாதனுக்குக் கல்யாணம் பேசி றியள் போலையிருக்கு.. அவனிலை நல்லாய்க் கரிசனைப்படு றியள்?"
பஞ்சலிங்கத்தார் ஒர் அசட்டுச் சிரிப்பை உதிர்த்துச் சமாளித்தார். எக்கச்சக்கமாக மாட்டுப்பட்டு விட்ட தனுல் இனி உண்மையை ஒப்புக் கொண்டு சரணடைய வேண்டிய சங்கடம்;
"சரியாய்ச் சொன்னுய் கண்டியோ!. சம்பந்த விஷ யம் தான்."

இளமைக் கோலங்கள் 59
"உங்கடை சொந்தத்துக்கையே?’
'இல்லை. என்ரை மணிசியின்ரை பகுதியிலை.ஒரு வழியாலை தூரத்து உறவான ஆக்கள் தான்.கண்டியோ! ...நான் இஞ்சை இருக்கிறனெண்டாப்போலை. அறிஞ்சு எழுதச் சொல்லி எழுதியிருக்கினம்."
சிவகுமார் மெளனம் சாதித்தான்.
‘எப்பிடித் தம்பி பெடியன்?.நல்லவனே?-பஞ்ச லிங்கத்தார் குடைந்தார்.
இதற்கு என்ன பதில் சொல்லலாமென்று சிவகுமாருக் குப் புரியவில்லை. ஜெகநாதனிடம் சில கூடாத பழக்கங் களும் இருக்கலாம். அவற்றையெல்லாம் உள்ளது உள்ள படியே சொல்லிவிடுவது அவனுடனுள்ள சிநேகிதத்துக்குச் செய்கின்ற துரோகச் செயலாகும். தான் அறியாமல் ஏற் கனவே எதையாவது சொல்லித் துலைத்து விட்டேன என நினைத்துப் பார்த்தான்.
பஞ்சலிங்கத்தார் உற்சாகத்துடன் தனது விசாரணை யைத் தொடர்ந்தார்,
"மெய்ய தம்பி? ஜெகநாதன் சிங்களச் சோதனை பாஸ் பண்ணியிட்டாரே?"
சிவகுமார் சிரிப்புடனே கேட்டான்; ' என்னண்ணை கலியாணம் முடிக்கிறதுக்குச் சிங்களமும் தெரிய வேணுமே?
...பொம்பிளை சிங்களத்தியே?"
'உமக்கு எல்லாம் ஒரு பகிடிப் பேச்சுத்தான் கண் பு:யோ!...அரசாங்க உத்தியோகக்காரர். இருந்தாப் போலை சிங்களம் தெரியாதெண்டு நிப்பாட்டிப் போடு வாங்கள்..இனி ஒரு புறமோசன் கிறமோசன் குடுக்கிற தெண்டாலும் அதைத்தானே பாக்கிருங்கள்!"

Page 35
60 இளமைக் கோலங்கள்
"என்னவோ பழமொழி சொல்லு வாங்கள் அண்ணை. ...நினைவு வருகுதில்லை. உங்களுக்கு உத்தியோகக்கார மாப்பிளையும் வேணும். அவன் சிங்களம் தெரிஞ்சவனப் இருக்கவும் வேணும். ஒரு வேலை செய்யுங்கோவன் ஒரு சிங்கள உத்தியோகக்காரனைப் பார்த்து எடுத்தால் பொருத்தமாயிருக்கும்!"
'தம்பி சிவா. நீர் இன்னும் குழந்தைப் பொடிதான் ..ஒண்டும் தெரியாத மாதிரிக் கதைக்கிருய்?. ஒரு கலி யாணத்தை ஒப்பேற்றிறதுக்கிடையிலை எத்தனை அலைச்சல் தெரியுமே?
சிவகுமார் சிந்தனை வசப்பட்டிருந்தான்; ஒவ்வொரு வருடைய குண நலங்களை உண்மையாக அறிந்தே பெண் கொடுப்பதனல் எத்தனை பேர்கள் கலியாணத்திற்குத் தகுதியானவர்களாவார்கள்?
'அண்ணை சொல்லுறனெண்டு குறை விளங்காதை யுங்கோ1. உதெல்லாம் வீண் வேலை..உப்பிடி, மாப் பிளைமாரைப் பற்றி புலணுய்வு செய்து கொண்டு போற தெண்டால் நீங்கள் இந்த உலகத்திலை ஒரு மாப்பிளையும் எடுக்கமாட்டியள்!"
'நீர் சொல்லுறதும் சரிதான் கண்டியோ! எண்டா லும். இவ்வளவு சீதனத்தோடை பெட்டையைக் குடுக் கிறதெண்டால்.நல்லது பொல்லாததுகளை அறியாமல் குடுப்பினமே?" பஞ்சலிங்கத்தார் சொன்ன நியாயம் சிவ குமாரது எரிச்சலைக் கூட்டியது.
*ஒ1.அப்ப பெட்டையைக் குடுக்கிறதுக்காக இல்லை − + −a இவ்வளவு பொருள் பண்டத்தைக் குடுக்கிறபடியாத் தான் அக்கறையோடை மாப்பிளையைப் பற்றி அறிய விரும்புகின மோ??

இளமைக் கோலங்கள் 6.
"அப்பிடிச் சொல்லாதையும் தம்பி1.பெடியன் எப் பிடி ஊதாரியோ. பொருள் பண்டத்தை வைச்சுப் பாதுகாக்கக் கூடியவனே எண்டு தெரியவும் தானே வேணும்?" -பஞ்சலிங்கத்தாருடைய பேச்சிலும் சற்று சூடேறியது.
"அதைத்தானண்ணை நானும் கேட்கிறன்.பெடி யன் பெட்டையை என்னபாடு படுத்தினுலும் பறவாயில்லை .பொருள் பண்டத்தை வைச்சுப் பாதுகாக்கக் கூடியவ னெண்டால் போதும்.அப்பிடித்தானே?...உங்கடை கதையைப் பார்த்தால்.பொருள் பண்டமில்லாமல் பெட்டையை எடுப்பாங்களெண்டால் எந்த நாயிட்டை யும் பிடிச்சுத் தள்ளுவியள் போலையிருக்கு!"
பஞ்சலிங்கத்தாருடைய முகம் கறுத்துப் போய்விட் டது. இவனேடு கதைத்துத் தப்பேலாது என எண்ணிக் கொண்டார். இவனிடம் வாயைக் கொடுத்தால் தேவை யில்லாத நியாயங்களெல்லாம் பேச வேண்டும் போலிருந்
திதி
அவரது முக மாறுதலைக் கவனித்த சிவகுமார்; ' என் னண்ணை முகம் கறுத்துப் போச்சுது!...நான் சும்மா ஒரு கதைக்குத்தான் அப்படிச் சொன்னஞன். எங்கடை ஆக் களின்ரை சுபாவம்தானே அது?. அதுக்கு நீங்கள் தான் என்ன செய்யிறது.நான் தான் என்ன செய்யிறது?". எனச் சமாதானம் கூறினன்.
"இப்ப தம்பி!. நீர் சொல்லுறதிலையும் ஞாயம் இருக்குக் கண்டியோ! எங்கடை சமூகம் முன்னேழு மல் இருக்கிறதுக்கு முக்கிய காரணமே சீதனப் பிரச்சனைதான் ..இதாலை எத்தனை குமருகள் கரை சேராமல் ஏங்கிக் கொண்டிருக்குதுகள்! இதைப்பற்றி எல்லாரும்தான் வாய் கிழியக் கக் துகினம். ஒரு முடிவையும்தான் காண யில்லை. இதுக்குள்ளை. குலம் கோத்திரமெண்டு எத்

Page 36
62 இளமைக் கோலங்கள்
தினை சாதி பிரிச்சு வைச்சிருக்கிருங்கள். ஒவ்வொரு சாதிக்குள்ளையும் பல சாதிகளாகப் பல கிளைகள் விட்டு. அந்தக் கிளைகளும் பிரிஞ்சு. எத்தனை சாதியள் 1. எத் தினை சிக்கல்கள்!"
அவரது மாற்றமான பேச்சைக் கேட்கச் சிவகுமாருக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தப் பழமையின் உருவத்தி னுள் இப்படி நல்ல கருத்துக்களும் அமிழ்ந்திருக்கின் றனவா? அல்லது தனது மனதைச் சமாதானப்படுத்துவ தற்காகத்தான் அப்படிக் கதைக்கிருரோ என்பதும் புரிய வில்ல.
'அண்ணை ஒருத்தரை ஒருத்தர் மிதிச்சுவாழ வேணு மெண்ட ஆசை எல்லாருக்கும் ஊறிப் போயிருக்கு! அதாலை தான் எத்தனையோ சாதியெண்டு குறைச்சுக் குறைச்சு ஒருத்தனை ஒருத்தன் தாழ்த்திக் கொண்டே போனன்! நல் லாய் யோசித்துப் பாருங்கோ1. ஆகத் தாழ்த்தப்பட்ட சாதியெண்டு ஒருத்தரைச் சொல்லவுமேலாது. எனெண் டால் அவன் தனக்குக் கீழேயும் ஒருத்தனைப் போட்டு மிதிச் சுக் கொண்டுதாணிருக்கிருன். அதுபோலை. . நான் தான் உயர்ந்த சாதியெண்டு சொல்லிக் கொண்டிருக்கிறவனுக்கு மேலையும் ஒருத்தன் ஆட்சி செலுத்திக் கொண்டுதாணிருக் கிருன்!"
"நல்லாய்ச் சொன்னப் கண்டியோ!. எங்கடை சமூக அமைப்பு அப்பிடி! சமூகத்திலை ஒரு கலாச்சார புரட்சி வரவேணும். அப்பத்தான் இதெல்லாம் மாறும் .அது உம்மைப்போல...நல்ல எண்ணமும் துணிவுமுள்ள பெடியளாலைதான் முடியும் ஆணுல். இப்படிச் சீர் திருத்தம் கதைக்கிற பெடியளும் கடைசியிலை நல்ல கொழு த்த சீதனங்களோடையெல்லே கலியாணம் முடிச்சுக் கொண்டு போகினம்!"

இளமைக் கோலங்கள் - 63
சிவகுமார் அவரை வியப்போடு நோக்கினன். அவர் சொல்வதிலும் எவ்வளவோ நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தான் முதலிலே அவரோடு சற்றுச் சூடா கக் கதைத்ததற்காக வருத்தமேற்பட்டது. ஆனல், பஞ்ச லிங்கத்தாருக்கு ஐந்து பெண் பிள்ளைகள் இருப்பதும் அத ஞற்தான் அவருடைய திருவாய் இப்பிடி முற்போக்கான கருத்துக்களை அருளியது என்பதும் அவனுக்குத் தெரியாது.
அத்தியாயம் - 11
DT2, பொழுது 6 - di 565 in uLD fr5 ஜொலித் துக் கொண்டிருக்கிறது - நீர் மட்டத்தில் கண்களைப் பதிக்க முடியாத அளவுக்கு பட்டுத் தெறிக்கின்ற சூரிய ஒளி. செவ்வானத்தில் ஒரு செப்புத் தகடு பதிக்கப்பட் டது போல வட்டமாகத் தோன்றும் சூரியன் தண்ணிரை நோக்கி மெல்ல இறங்கிக் கொண்டிருக்கிருன். கண்களுக் கும் மனதுக்கும் ரம்மியமான காட்சி.
கரையிலே கல்லொன்றில் அமர்ந்திருக்கிருன் சிவ குமார். பஞ்சலிங்கத்தார் வந்து போன பின்னர் அறை யில் தனிமையாய் இருப்பது "போர'டித்தது. தனிமை யென்றல் அவன் மிக விரும்புவது இந்தக் கடல்தான். இருண்டு வெகுநேரமாகும் வரையில் கடலையே பார்த்துக் கொண்டிருக்கலாம், நிலவுக் காலங்களில் இன்னும் அழ காக இருக்கும், தூரத்தில் சிறு சிறு பொட்டுக்களாகக் கண் களைச் சிமிட்டும் விளக்குகளுடன் தோன்றுகின்ற மீன் பிடி வள்ளங்கள். துற்ைமுகத்தை நோக்கிச் செல்லும் பாரிய கப்பல்கள், இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். துறைமுகத்திற்கு அண்மையாக எத்தனை

Page 37
64 இளமைக் கோலங்கள்
கப்பல்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்று கணக்குப் போடலாம்.
இன்னும் இருளவில்லை. மாலை வெயில் கூட மங்க வில்லை. சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு எழுந்து புகை பிரதப் பாதையிலே நடக்கத் தொடங்கினன். பாதையை யும் கடலையும் பிரிக்கின்ற எல்லையைப்போல தாளை மாங் கள் சில இடங்களில் கூட்டம் கூட்டமாகப் பின்னிப் பிணைந்து கொண்டு நிற்கின்றன சில மரங்கள் வளைந்து முண்டு கொடுத்துப் படுத்திருக்கின்றன. கடும் வெயி லெறிக்கும் நண்பகல் நேரங்களிலும் இந்த நிழலில் பல சோடிகள் ஆறுதலாக அமர்ந்திருப்பதைக் கவனித்திருக் கிருன். அந்த நினைவு வந்ததும் அவனையறியாமலே கால் களை இறுக்கி தாளை மர நிழலினுள் கண்களைச் செலுத்தி ஞன.
தங்களையும் இந்த உலகத்தையும் மறந்த நிலையில் பல இளம் சோடிகள் - அவர்களது "கிஸ்" கிசு பேச்சுக்கள்! இவர்கள் யாராக இருக்கும்? பஸ் நிறுத்தங்களில், தியேட் டர்களில் அல்லது நடைபாதைகளில் காண நேர்ந்த தற் காலிக நண்பர்களோ? (மகேந்திரன் கூட சில வேளைகளில் அங்கல்ாய்த்துக் கொள்வானே, "பஸ்சுக்குள்ளை ஒரு ரொப் கேர்ள் ஆப்பிட்டிது மச்சனன். சீ? ஒரு இடம் தான் கிடைக்காமல் போச்சுது." என்று) அல்லது முன் னரே அறிமுகமாகிய வாடிக்கையான நட்பாக இருக் குமோ? இல்லை; அலுவலக நண்பர்களாக. காதலர்
956g nr. 95?
பொங்கி வருகின்ற கடலலைகள் கரையில் மோதுகின் றன; அடங்காத இன்பக் குமுறல்கள்.
**செல்வி!" என ஆசை பொங்க மனதினுள்ளே அழைத்தான்; "உன்னைப் பார்க்க வேண்டுமே!"

இளமைக் கோலங்கள் 65
மல்லிகையின் நறுமணத்தை அள்ளிவரும் தென்றல் தருகின்ற இதமான சுகத்தைப்போல அவளைப் பற்றிய நினைவும் அவனுக்கு இதத்தையே அளிக்கிறது. அந்த இதத்தில் ஏற்படுகின்ற இன்ப ஏக்கமே ஓர் அலாதியான சுவைதான். அவளது குழந்தைத் தனத்தில், அடக்கமான சிரிப்பில், நாணமான பார்வைகளில் எல்லாம் தன்னை
இழந்திருக்கிருன்.
நண்பன் சத்தியநாதனது தங்கை கலைச் செல்வி. அப் பொழுது க. பொ. த. உயர்தரம் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த அவனைத் தனது தங்கைக்கு ரியூசன் கொடுக் குமாறு ஒழுங்குபடுத்தியவன் சத்தியன் தான்.
சிறு பராயம் கடந்து யுவப்பருவமடைகின்ற காலங் களிலிருந்தே தன் ஒவ்வொரு செய்கைகளாலும் மெல்ல, மெல்ல அவனது மனக் கதவைத் திறந்து நிரந்தரமான ஒர் இடத்தைப் பிடித்துக் கொண்டவள் கலைச் செல்வி. ஒரு பெண்ணின் அழகும், அவள் மென்மையும் புன்னகையும் பார்வையும் சாதாரண விஷயங்கள் எனக் கருதிய பருவம் கடந்து, அவற்றையெல்லாம் நிறைந்த அர்த்தங்களுடனும் உணர்ச்சி வசத்துடனும் ஆராய்கின்ற வயதில் அந்த அழ கிய கன்னியுடன் தனி அறையில் மிக அண்மையில் இருந்து பாடம் சொல்லிக் கொடுக்கின்ற சந்தர்ப்பங்கள் அவனது மனக் கதவைத் தட்டியிருக்கின்றன. ஆரம்பத்திலே சல னத்தை ஏற்படுத்தாத ஒவ்வொரு அசைவுகளும் நாளிலும் பொழுதிலும் அவனை அசைக்கத் தொடங்கிவிட்டன. அந்த மந்திரத்தை எண்ணி அவனுல் வியக்க முடியவில்லை - தனது மன மாற்றத்தைத் தவிர்க்க முடியாத பல உணர்வுதான் ஏற்பட்டது. செல்வியை மறந்து விட வேண்டுமென எண் ஈரினலும் அடுத்த கணமே அது முடியாத காரியம் போலத் இதான்றும்.

Page 38
66 இளமைக் கோலங்கள்
2.
செல்வி! இப்படி எதற்காகத் தவிக்க வைக்கின் முய்? இந்த உள்ளத் துடிப்பு உனக்குப் புரியவில்லையா? எ ப் பொழுதும் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்கின் முய்! அப்படியானல் உனக்கு எந்தவித சலனமுமே தோன்றவில்லையா? எனது ஆசைகள் ஏக்கங்கள் எல்லாம வெறும் கற்பனைகளாக, கனவுகளாக அர்த்தமில்லாதவை களாகவே போக வேண்டியது தானு? மனம் உன்னைப் பற்றி எப்படியெல்லாம் கனவுகள் காண்கிறது! உன்னை நினைக்காத நாட்களே இல்லாமற் போய்விட்டது. விடியும் பொழுதெல்லாம் உன் நினைவுடனேயே எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. நாள் முழுதும் உன்னைப் பற்றிய சிந்தனைதான். இரவிலும் உன்னை வட்டமிடுகின்ற எண் ணங்கள் நீண்ட நேரம் உறங்காமற் செய்து விடுகின்றன. இதயத்தில் அடங்காமல் எழுந்து கொண்டிருக்கும் ஒரே கேள்வி- ஒரேயொரு கேள்வி; "நீ என்னை விரும்புகிருயா செல்வி அதற்கு மாத்திரம் பதில் சொல், 'சிவா!' என ஒருமுறை ஆசையோடு அழைத்துவிடு. அப்பொழுது உன் கண்கள் நாணத்துடன் என்னைப் பார்க்கட்டும் - இந்த உல கத்தையே வென்று வருகிறேன். ஆனல், நீ ஏன்.பேசா மலே பதுமையைப் போல இருக்கின்ருய்? என்னை உனக் குப் பிடிக்கவில்லையா? என்னை நீ விரும்ப மாட்டாயா?
அவள் விரும்பக் கூடும். அதை எப்படித் தெரியப் படுத்துவாள்? பெண். அதிலும் எனது மாணவி.
--செல்வி டார் லிங் உன்னை என் மாணவியாக வா கருதுகிறேன்? பார்த்தாயா, எ ன் னை யறி யாமலேயே "டார் லிங்" என்ற வார்த்தையும் வெளிப்பட்டு விட்டது! என் அன்புக்குரியவளாக, பிரியத்திற்குரியவளாக, 6ான் காதலியாக, மனைவியாக! உன்னைச் சுற்றிய ஒரு வட்டத் துக்குள்ளேயே எனது எண்ணங்களையெல்லாம் சுருக்கிக் கொண்டு வந்தாய். பின்னர் வேடிக்கையும் பார்க்கிருய்? ஒரு சின்னக் குழந்தையைப்போல உனது மடியிலே தவழ

இள்மைக் கோலங்கள் 6秀
விரும்புவது புரியவில்லையா? அப்பொழுது நீ என்ன அணைத்துக் கொள்ள வேண்டும்.
-அவன் மனதிலே ஆசைகளின் வளர்ச்சி. அவற்றைத் கடை செய்யும் பொழுது ஏக்கங்களின் வெடிப்பு. அந்த எண்ணங்களை எப்படிப் புரிய வைக்கலாம்? துணிவு எங் கிருந்து வரும்?
ஒரு நாள் அந்தத் துணிவு வந்து விட்டது.
அது ஒரு மறக்க முடியாத மாலை நேரம். அவன் சென்ற பொழுது செல்வியின் வீடு அமைதியாக இருந்தது. வீட்டில் எவருமில்லையோ என நினைத்துக் கொண்டு திரும் பிஞன், முற்றத்தில் பூஞ்செடிகளின் மத்தியில் நின்று கொண்டு கலைச்செல்வி குரல் கொடுத்தாள்.
μο που ή 1’’
இவன் நின்று திரும்பி நோக்கினன்.
அந்த ரோசா மலர்களில் ஒரு மலராக செல்வியின் முகம் மலர்ந்து போயிருந்தது. ரோசாச் செடிகளில் சிலும் பலாக இருந்த சிறிய கொப்புகளை வெட்டி அழகுபடுத்திக் கொண்டிருந்தாள். V
அந்த மலர்களைப் போலவே அவள் உடலும் மென்மை யாக இருக்கும் - மனது குறும்பாகச் சிந்தித்தது. மலரை ஸ்பரிசிக்க வேண்டும் போல உள்ளத்திலே பிறக்கின்ற உந் துதல் - ரோசாச் செடிகளின் அண்மையில் மெல்ல நகர்த் தான். ஒரு மலரில் இதழ்களைத் தொட்டு அதன் பட்டு மென்மையை உணர்ந்து கொண்டு;
"செல்வி வீட்டிலே e » os e p 6 ஒருத்தரும் இல்லையா?
'இல்லை!"
'எங்கை போயிட்டினம்?"

Page 39
68 இளமைக் கோலங்கள்
"அப்பாவும் அம்மாவும். கோயிலுக்கு. அண்ணை யும் வெளியிலை எங்கையோ போட்டார்.”
"வேலைக்காரி இல்லையா?" 'அடுப்படியிலை நிற்கிருள்."
அது ஒரு பெரிய வீடு. குசினியில் நிற்பவளுக்கு முன் னுக்கு நடப்பவைகளைக் கவனிக்க முடியாது.
தனிமை
அவன் செல்விக்காக எண்ணி ஏங்கிய நாட்களிலெல் லாம் கிடைக்காத தனிமை!
வெளியே சென்றவர்கள் தற்போதைக்கு வரமாட்டார் கள் என்ற நம்பிக்கையான துணிச்சல்.
'செ.ல்.வி1"
-அவன் அவளை அழைத்தான். வா iர் த்  ைத க ள் தொடர்ந்து வெளிவராமல் தொண்டையினுள்ளே அடங் கிப் போயின. பதட்டம் ஏற்பட்டது.
அவனது அழைப்பிற்கு நிமிர்ந்து நோக்கிய கலைச் செல்வி மறுகணமே தலையைக் குனிந்து கொண்டாள்.
என்ன பெண் இவள்! இந்த அழைப்பு அவளுக்கு அலட் சியமாகவா தோன்றுகிறது? இவ்வளவு மென்மையாக அழைத்த வித்தியாசத்திலிருந்தே புரிந்திருக்கலாமே? ஆசை பொங்க அணைப்பது போல, மென்மையாய்த் தட விக் கொடுப்பது போல எவ்வளவு இதமான அழைப்பு! அது அன்பு நிறைந்த வார்த்தையாக இருக்கவில்லையா?
ஒரு ரோசா மலரைப் பிடுங்கினன். அதை அவளுக்குச் சூட்டிவிட வேண்டுமெனக் கைகளில் அடங்காத ஒரு துரு துருப்பு ஏற்பட்டது. அவளை ஏக்கத்துடன் நோக்கினன். அந்தப் பார்வையை அவள் புரிந்திருக்க வேண்டும்.

இளமைக் கோலங்கள் 69
மெல்ல, அவளை நோக்கிக் கால்கள் நகர்ந்தன. அண் மையில், மிக அண்மையில், சென்று பின்னர் ஏதோ தடையேற்பட்டது போல நின்றன். செல்வியும் அவனையே பார்த்துக் கொண்டு மெளனமாக நின்ருள். கண்கள் கலந்து கொண்டன. அவள் நாணத்துடன் கண்களை மீட் டாள். பின்னர் மீண்டும் அவனை நிமிர்ந்து நோக்கினள். அந்த அழைப்பு விடுக்கின்ற பார்வையில் எவ்வளவு நேர மும் சிக்கித் தவிக்கலாம் போலிருந்தது.
அவன் கதைக்க முயன்றன். முடியவில்லை. சுவாசித் தலில் மூச்சு விடுவதே கஷ்டமான காரியம் போற் தோன்றி யது. சுவாசப் பையினுட் சென்ற காற்று இயற்கை யாகவே வெளிவர மறுத்தது. முயன்று வெளிப்படுத்திய பொழுது ஒவ்வொரு மூச்சும், "செல்வி’, ‘செல்வி!" என்ற ஓசையுடன் வெளிப்படுவது போலிருந்தது. இந்த விசித்திரத்தில் கதைப்பது எப்படி?
மீண்டும் பெரும் முயற்சி செய்து மூச்சைப் பிடித்துக் கொண்டு; "செல்வி!”
அவள் அவனை மோகத்துடன் நோக்கினுள். அந்த விழிகள் அவனை மயக்கின.
‘செல்வி. உங்களுக்கு..இந்தப் பூவை நானே. குத்திவிடவா?”
இப்பொழுது அவள் கதைத்தாள்;
'ஆராவது பாத்தினமெண்டாலும்!"
-வெற்றி! அவனது உணர்ச்சிகள் கட்டுக்கடங்க மறுத் தன. "யாராவது பார்த்தாலும் என்பதில், "பார்க்கா விட்டால் சம்மதம்" என்ற அர்த்தம் அடங்கியிருக்கிறதே!
ஆதரவுடன் அவள் கூந்தலைத் தொட்டு அதில் மல ரைச் சூட்டினன். அவனது மனதில் பெரிய நிறைவு ஏற் பட்டது. ஆசை பொங்க அவள் முகத்தை நோக்கினன்.
-செல்வி! உன்னைப் பெருமை பிடித்தவள் என்று நினைத் தேன். ஆனல் நீ! எவ்வளவு பணிவோடு எனது அழைப்பை

Page 40
፵0 இளமைக் கோலங்கள்
ஏற்றுக் கொள்கிருய்? எவ்வளவு அமைதியாக எனது ஒவ்வொரு செயல்களையும் அனுமதிக்கிருய்
"முதல்.முதல்.என்னைத் தொட்டுப் பூக்குத்தி
விட்டது நீங்கள் தான்.என்னை.நீங்களே கலியாணம் முடிப்பீங்கள். எண்டு கடவுள் உணர்த்தினது போலை யிருக்குது. 9
அவன் அசந்து போனன். கலைச்செல்வி தான இப் படிப் பேசுகிருள்! அவளுக்கு இவ்வளவு துணிவும் எங் கிருந்து வந்தது அல்லது தன்னைப் போலவே மன ஏக்கங் களுடன் அலைந்து. எப்படியாவது ஒரு முடிவு அறிய வேண்டுமென்ற எண்ணத்தில் அப்பிடிச் சொன்னளா? சிவா! நீ படு முட்டாளடா! எவ்வளவு நுட்பமாக உனது நோக்கத்தைப் புரிந்து கொண்டு தனது எண்ணத்தை வெளிப்படுத்தினுள்! இந்தச் சாதுரியம் யாருக்கு வரும்?
குயிலொன்று கூவுவதைப் போல விட்டு விட்டு ஒவ் வொரு வார்த்தைகளாக அவள் கதைத்த விதம் காதுகளி லிருந்து மறைய மறுத்தது. சொல்லி முடித்து ஏதோ தவறு செய்து விட்டவள்போல கலக்கத்துடன் நின்ருள். அவளது கண்களும் கலங்கிப் போயிருந்தன.
அதைக் கண்டு இவனும் கலங்கிப் போய் விட்டான். *செல்வி! நான் உன்னைக் கைவிட்டு விடுவேனென்றுதான் கலங்குகிருயோ? எனக் கேட்க வேண்டும் போலிருந்தது. "கண்ணே உன்னை என் உயிருள்ளவரை கைவிடமாட் டேன்." எனத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சொல்ல வேண்டும் போலுமிருந்தது. ஆனல், நினைத்தது போல எதையுமே செய்ய முடியவில்லை. கண்ணீர் இ1ை0 களின் தடையையும் மீறி வழியத் தொடங்கியது.
அவனது கண்ணீரைக் கண்டு செல்வி துடித்துப் போனுள், சற்றும் எதிர்பாராத விதமாக அவனது முகத்திலே கை

இளமைக் கோலங்கள் 71
யைப் பதித்து கண்ணிரைத் துடைத்து விட்டாள். அந்த நேரத்தில், தாயொருத்தியின் அணைப்பில் இருக்கின்ற ஒரு குழந்தையின் உணர்வை அடைந்ததும் இன்னும் அழுகை வந்தது. செல்வியின் கையை அவன் பற்றிக் கொண் டான். அப்படியே தன் உதடுகளில் அந்தக் கையைப் பதித்து முத்தமிட்டான். அவன் சொல்ல விரும்பியதை யெல்லாம் சொல்லிவிட்ட நிறைவும் அவளிடம் எதிர் பார்த்த எல்லாமே கிடைத்து விட்ட திருப்தியும் ஏற்பட்
-து
அலையொன்று கற்களில் மோதி சிவகுமார் மீது தண் ணிரைத் தெளித்தது. பழைய நினைவலைகளில் மிதந்து வந் தவன் கல்லொன்றில் அமர்ந்திருப்பதை உணர்ந்தான். அற்புதமான கனவொன்று கலைந்து விட்டதைப் போன்ற மனநிலை ஏற்பட்டது.
அலைகள் ஒய்வதில்லை என்பது உண்மைதான். அதோ தூரத்திலே பொங்கி வருகின்ற கடலலைகள்! முன்னே வரு கின்ற அலைகள் கரையில் மோதிச் சிதறிவிட, மீண்டும் அலைகள் பொங்கி வருகின்றன. இது தொடரும்; அல்ை கள் ஓயாது. S.
‘இனிப் போய்ச் சமைக்க வேண்டுமே!’ என்ற நினைவு தோன்றியதும் சலிப்புணர்வுடன் இருக்கையை விட்டு எழுந்தான் சிவகுமார்,

Page 41
அத்தியாயம் - 12
இருளப் போகின்றது
இரண்டு முப்பது மெட்னி காட்சிக்குப் போயிருந்த ஜெகநாதன் ஏற்கனவே அறைக்கு வந்து விட்டான். முகட் டைப் பார்த்தவாறு கட்டிலிற் படுத்து சிகரட்டில் லயித் துக் கொண்டிருந்த அவனைக் கண்ட சிவகுமார் " என்ன சமிைக்கிற யோசனையில்லையோ?" என எழுப்பினன்.
"சமைப்பம். இப்ப என்ன அவசரம்?" என அவ னிடமிருந்து சோம்பலான பதில் வந்தது.
"சமைக்கிறதுக்கு அவசரமில்லை. பிறகு சாப்பாட் டுக்கு அவசரம் வந்திடுமல்லே?"
அவர்கள் சமைப்பதற்கு ஆயத்தம் செய்து கொண் டிருந்த பொழுது புதிய செய்தியொன்றுடன் அறைக்கு வந் தான் மகேந்திரன்.
"மச்சான்!. ஒரு சங்கதியெல்லே! இண்டைக்கு ஓராள் என்னட்டை எக்கச்சக்கமாய் மாட்டுப்பட்டிட்டுது.'
அவனது புதிரைப் புரிந்து கொள்ள முடியாமல் நண் பர்கள் இருவரும் விழித்தார்கள்.
"என்னடாப்பா? விழங்கக் கூடியதாய்ச் சொல்லன்!" -ஜெகநாதன் அவசரப்படுத்திஞன். அவனது வழக்க மான மன்மதலீலைகளாகத் தான் இருக்கும். வயிற்றெரிச் சலான விஷயமென்ருலும் அவன் தத்ரூபமாக விபரிப் பதைக் கேட்காமல் இருக்கவும் மனது கேளாதே!
"சொல்லத் தானே போறன். அந்த ரகசியத்தை அம்பலப்படுத்தாமல் விடலாமா?"

இளமைக் கோலங்கள் 73
' 'g f... கனக்க அலட்டாமல் சொல்லடாப்பா!'-- அப்படி என்ன ரகசியத்தைச் சொல்லப் போகிருன்?
'எனக்குத் தெரியும் மச்சான்! இவள் சாதாரண ஆளாய் இருக்க மாட்டாளெண்டு. ஊரை விட்டிட்டு வெளிக்கிட்டவுடனை தாங்கள் பெரிய மகாராணிகள் என்ற நினைவு!. நேரி%ல பார்த்தால் இந்தப் பூனையும் பால் குடிக்குமோ எண்டு நினைக்கிற அளவுக்குப் பதுங்கிக் கொண்டு திரிவாளவை. ஊருக்குப் போனல் தாங்கள் பெரிய கற்புக்கரசிகள் என்று நடிக்கிறது. இஞ்சை அவையின் ரை ஆட்டத்தைப் பார்த்தாலல்லோ தெரியும்." எனக் கூறிவிட்டுத் தனது பிரசங்கத்தை இடை நிறுத்தி ஞன் மகேந்திரன், நண்பர்களின் அபிப்பிராயத்துக்குச் சந் தர்ப்பமளிப்பது போல,
ஜெகநாதனல் இனிப் பொறுக்க முடியாது. யாரோ ஒரு பெண்ணுடைய ரகசியம் அம்பலத்துக்கு வருகிறது. இந்த சுவாரஸ்யத்தைக் கேட்காமலிருக்க முடியுமா?
"ஆரையெடா சொல்லுகிருய்?.என்ன விஷயம்??
“வேறை ஆர்?. எங்கடை பக்கத்து வீட்டுப் பதி விரதை. கற்புக்கரசி. அகிலாவைப் பற்றித்தான் சொல்லுறன்!"
-சிவகுமாருக்கு இப்பொழுது அதிர்ச்சி. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்துக் கடைசியாக என்ன அநியாயக் கதையைச் சொல்ல வந்திருக்கிருன்? நாளுக்கு நாள் அகி லாவைப் பற்றி ஏதாவது சொட்டைக் கதைகளைக் கதைக் காவிட்டால் அவர்களுக்கு உறக்கம் வராது. இது கூட அந்த முயற்சிதானு?
ஜெகநாதன் ஆவலோடு மகேந்திரனை உற்சாகப்படுத் தினன். என்ன சங்கதி மச்சான்? உவள் சரியான அமு

Page 42
74 இளமைக் கோலங்கள்
சடக்கிக் கள்ளியாயிருப்பாளெண்டுதான் நானும் நினைச்ச ஞன்
ஒரு பெண் வாய் திறந்து நியாயம் கேட்க வரத் துணிய மாட்டாள் என்பதற்காக நினைத்தபடி எதையும் பேசிவிட் டுப் போகலாமா? மேலும் சகித்துக் கொண்டிருக்க முடி யாமலே சிவகுமார் வாய் திறந்தான்.
"கதைக்கிறதை யோசிச்சுக் கதையடாப்பா. உனக் கும் அக்கா. தங்கச்சி இருக்கினம். ஏன் ஒருத்தி மேலை தேவையில்லாமல் பழி சுமத்திறியள்?"
மீகேந்திரனுக்கு அந்தச்சூட்டைத் தாங்க முடியவில்லை.
"எனக்கு அக்கா, தங்கச்சி இருக்கினமெண்டா ப்போலை . அதுகளும் உவளைப் போலை ஆடிக் கொண்டு திரியுது
களோ?. நான் கண்ணுலை கண்டதைத்தான் சொல்லு றன்." எனக் கூறிவிட்டுப் பின்னர் ஜெகநாதனைப் பார்த்து, "அவவைப் பற்றிக் குறை சொன்னவுடனே
இவருக்கு வர்ற கோபத்தைப் பாரன்!" என்று ஏளனமாகத் தனது எரிச்சலை வெளிப்படுத்தினன். அக்கா, தங்கச்சி யைக் குறிப்பிட்டுக் கதைத்தது அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
ஜெகநாதனுக்குப் பெரிய ஏமாற்றம், சிவகுமாரது குறுக்கீட்டினல் மகேந்திரன் மேற்கொண்டு கதையைச் சொல்லாமல் விட்டு விடுவானே என்ற கவலையும் தோன்றி tugis. ܐܗܝ
"அவன் விசரனை விட்டிட்டு. நீ சொல்லு மச்சான்!" ஆரம்பத்திலிருந்த உற்சாகம் குறைந்து விட்டாலும் ஜெக நாதனின் தூண்டுதல் அவனைத் தொடர்ந்து பேச வைத் هT&5&
"அகிலாவை இண்டைக்குப் பின்னேரம் பிளாசாத் தியேட்டரிலை கண்டனன். மெட்னி ஷோவுக்கு வந்திருந் தாள்."

இளமைக் கோலங்கள் 75
"தனியவோ? அல்லது ஆரோடையேன் வந்தவளோ? ஜெகநாதன் அங்கலாய்த்தான். அவன் கூட பிளாசாவுக் குத் தான் போயிருந்தான். தனக்கு அந்த "சான்ஸ்" கிடைக்கவில்லையே!
"அவள் இன்னுெருத்தனுேடை வந்திருந்தாள். 6τ σόr னைக் காணயில்லை.நான் ரகசியமாய் எல்லாத்தையும் நோட் பண்ணிக் கொண்டுதான் இருந்தனுன்...'
'அடச் சீ! எனக்குத் தெரியாமல் போச் சுதே'-ஜெக நாதன் குறுக்கிட்டான்; 'அவன் யாரெண்டு தெரியாதே?"
"தெரியாது. பொறு!. இன்னும் இரண்டொரு நாளிலை விசாரிச்சுப் பிடிச்சுப் போடுறன். இவ ஒபிசிலை யும் ஒரு மாதிரியெண்டு தான் கேள்வி!"
சிவகுமாருக்கு அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை.
'உங்களுக்கேன் மற்றவயின்ரை கதையள்?.முத லிலை உங்களைத் திருத்திக் கொண்டு மற்றவயின்ரை குறை யைக் கதையுங்கோ!'
மகேந்திரன் நிதானமாகச் சொன்னன்; "நாங்கள் ஆம்பிளையஸ் 1. எப்பிடியும் நடப்பம். நீரேன் அவவுக் குப் பரிஞ்சு கதைக்கிறீர்?" .
ஆம்பிளையஸ் எண்டாப் போலை என்னத்தையும் செய்ய லாமெண்டு எண்ணமோ?. உங்களைப்போலை ஆம்பிளை யள் இருக்கிறபடியாத்தான் அப்பிடியும் பொம்பிளையள் கெட்டுப் போகுதுகள்!"
‘இவர் பெரிய திறம் விடிஞ்சால் பொழுதறFயும் அவவின்ரை வீடே கதியெண்டு கிடக்கிருய்; பிறகு பெரிய ஞாயம் பேசிருய்1.எப்பிடியோ. இப்ப அவளை கெட் டவள் என்றதையாவது ஒப்புக் கொள்கிருய் தானே?"

Page 43
76 இளமைக் கோலங்கள்
அவனை ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது. விரிந்து கட்டிக் கொண்டு ஒரு பெண்ணைக் கெட்டவளென்று பட்டம் சூட்டி விடுவதில் இவனுக்கு என்ன லாபம்? சில நாட்களாக அவளுக்குப் பின்னலும் முன்னலும் திரிந்து பல் இளித்துப் பார்த்து அதிலெல்லாம் தோல்வி கண்ட ஆற்ரு மையினுற் தான் இப்படியொரு பழியைச் சுமத்துகிறன்? அல்லது. அவன் சொல்வதிலும் ஏதாவது உண்மை இருக் குமா? இல்லை; அகிலாவின் கள்ளம் கபடமில்லாத மன தில் இப்படியொரு கீழ்த்தரமான சுபாவம் ஒளிந்திருக்க Gքւդաո Ցl.
*மகேந்திரன் நீ சொல்லுறதை நான் ஒருக்காலும் தம்பமாட்டன். அகிலா பா வம். இப்படி அநியாய மாய் பழி சுமத்தாதை"-சிவகுமாரின் உறுதியான வார்த் தைகளில் இரக்கம் கலந்திருந்தது. மகேந்திரன் சினத் தோடு 'அப்பிடியென்ருல் நான் பொய்யா சொல்லு றன்?" எனப் பாய்ந்தான்.
"அப்பிடியும் இருக்கும்!" என எரிச்சலோடு பதி லளித்தான் சிவகுமார். இது அவனது கோபத்தை இன் னும் அதிகரித்தது.
"ஓ..நீ எப்படி ஒப்புக் கொள்ளுவாய்?.அவள் தானே உனக்கு மருந்து போட்டு மயக்கி வைச்சிருக்கிருள். .அவளைக் குறை சொன்னல் உனக்குச் சுடும் தானே?"
வீட்டுக்காரரின் நாய் எதற்காகவோ, "வாள், வாள்' என்று குரைக்கின்ற சத்தம் கேட்கிறது. அது இப்பிடித் தான்; சில வேளைகளில் ஒன்றுமில்லாத ஒன்றிற்குப்போய் எதையோ பேய், பிசாசைக் கண்டுவிட்டது போல அவதி அவதியாகக் குரைத்துவிட்டு ஒயும்.
"சிவா!...உண்மை சுடும்தான். நீ என்ன நோக்கத்
திலே அவளோடை பழகிறியோ தெரியாது. அவள் உனக்கு நல்லவளாய் நடிச்சுக்கொண்டு வெளியிலை நடத்தை

இளமைக் கோலங்கள் 77
கெட்டுத் திரியிருள். உன்னேடை கூடிப் பழகின குற் றத்துக்கெண்டாலும் புத்தி சொல்ல வேண்டியது எங் கடை கடமை. அதுதான் சொல்லுறம். அவளின்ரை சக வாசத்தை விட்டிடு!" ஜெகநாதன் வலு கரிசனையோடு ஆலோசனை வழங்கினன்
"சும்மா.விசர்க்கதை கதையாதை ஜெகநாதன். -எதையும் தீர விசாரிச்சுப் போட்டுத்தான் கதைக்க வேணும்.கண்ணுலை காணுறதும் பொய். காதால் கேக்கிறதும் பொய். "சிவகுமாரது நெஞ்சிற் குமுற லெடுக்கின்ற வேதனை சீற்றமான வார்த்தைகளாக வெளிப்பட்டன.
"அது லேசிலை விடக்கூடிய சகவாசமெண்டால் விட லாம்.இது முத்திப்போன சங்கதியெல்லே?” மகேந் திரன் ஏளனமாகக் கதைத்தது சிவகுமாரை உணர்ச்சி வசப்படச் செய்தது.
"நான் எந்த வித்தியாசமான நோக்கத்தோடையும் பழகவில்லை. அப்படிப் பழகவேண்டிய அவசியமும் எனக் கில்லை. இதை எவ்வளவு சொல்லியும் நம்பாமலிருந் தால் நான் என்ன செய்யிறது?...ஒண்டை மாத்திரம் உறுதியாய்ச் சொல்லுறன்-அகிலா நல்லவள். அவளைப் பற்றி நீங்கள் என்ன சொன்னலும் நம்பமாட்டன். எல்லா விசயத்திலையும் ஏன் பொம் பிளையளை மாத்திரம் சந்தே கத்தோடை பாக்கிறீங்கள்? இந்தச் சமூக அமைப்பில் அதுகளுக்குக் கிடைச்சிருக்கிற சாபக்கேடு இது உங்களைச் சொல்லிக் குற்றமில்லை.' *
-சிவகுமார் நிச்சயமாக ஒரு மடையன் என முடிவு கட்ட வேண்டியதுதான். எப்பிடிச் சொல்லியும் கேட்கிரு வில்லை, இடையிலை வந்த ஒருத்திக்காக எவ்வளவோ ாலம் பழகி வந்த தங்களது சொல்லை அவன் நம்புகிரு வில்லை; "கடவுளே! அந்த ஆட்டக்காரியை இவன் கலி

Page 44
78、 இளமைக் கோலங்கள்
யாணம் முடிச் சுக் கொண்டு. பிறகு கிடந்து கவலைப்பட வேணும், . அப்பதான் புத்திவரும்’-மகேந்திரன் ஆவே சம் வந்தவனைப் போலக் கூறினன்.
சிவகுமார் மெளனம் சாதித்தான். என்னத்தையா வது சொல்லிவிட்டுப் போகட்டும். இனம் புரியாத கவலை மனதை அரிக்கத் தொடங்கியது, அது;
ஒன்முக இருந்து சீவிக்கின்ற நண்பர்கள் ஏன் இப்படி விரோதிகளைப் போல நடந்து கொள்கிறர்கள் என்பத னலோ அல்லது ஒரு பேதைப் பெண் மேல் எதற்காகப் பழி சுமத்தித் தொலைக்கிருர்கள் என்பதனுலா என்று புரிய வில்லை. உண்மை எது? பொய் எது? யாரை நம்புவது? யாரை நம்பாமல் விடுவது?
ஏதோ நினைத்துக் கொண்டவனைப் போல சிவகுமார் எழுந்து வெளியேறினன். அவன் அகிலாவைக் காணத் தான் போகிருன் என இவர்கள் நினைத்துக் கொண்
It is or
சற்றுநேர அமைதிக்குப் பின் ஜெகநாதன் சொன்னன், மகேந்திரன் நானும் பிளாஸாவுக்கு வந்திருந்தனன். மகேந்திரனின் முகத்தில் சற்று கலவரம் ஏற்பட்டது. தடுமாறியவாறு 'நீ. அவையளைக் காணயில்லையே?" என்ருன். \
'இல்லை..உன்னைக் கண்டனன்!"
"அப்ப.ஏ ன் வந்து கதைச்சிருக்கலாமே? அவன் வந்தானு என உண்மை பொய் அறிய வேண்டுமென்ற ஆவல் மகேந்திரனுக்கு,
" ? . பல்கனிக்குப் போனுய் . எப்பிடி வந்து எதைக்கிறது?...நீ போன போக்கும் சரியில்லை.
பே. . கிரன் மெளனியானன்.

இளமைக் கோலங்கள் 7g
ஜெகநாதன் தொடர்ந்து கேட்டான்; 'ஆரடாப்பா உன்னுேடை வந்த கேர்ள்?"
மகேந்திரன் கள்ளச் சிரிப்பை உதிர்த்தவாறு சொன் னன்; 'அதுதான் நான் சிங்கள ரியூசன் எடுக்கிற கேர்ள்"
வெள்ளவத்தை தேவாலய மணி கணிரென ஒலிக்கத் தொடங்கியது. ـــــ
அத்தியாயம் - 13
காஜலயிற் பூத்த மலர் வாடிப் போயிருக்கிறது. அகிலா வாசலில் நிற்பதைக் கண்டும் எதுவுமே பேசா மல் உள்ளே நுழைந்து கதிரையில் அமர்ந்தான் சிவகுமார். அவளும் அவனது மனநிலையை உணர்ந்தவள் போல மெளனமாக நின்ருள். w
சிவகுமார் இருந்தாற் போல நிமிர்ந்து அகிலாவைப் பார்த்தான். அந்தக் கண்களின் ஆராய்ச்சியை அவளால் தாங்க முடியவில்லையோ? தலை குனிந்து கொள்கிறது. நிமிர்ந்து நேருக்கு நேர் நோக்கும் திராணி இல்லையென் முல். p
சிவகுமாருக்கு குரல் கொடுத்து கதைப்பதற்குக் கூட சக்தியில்லாதது போன்ற சோர்வு;
** அகிலா!'
அந்த அழைப்பை எப்படிப் புறக்கணிக்க (tՔւգայւն? அவள் தலையை நிமிர்த்தினள். கண்கள் கலங்கிப் போயி

Page 45
80. இளமைக் கோலங்கள்
ருக்கின்றன. அவனது பார்வையைச் சந்தித் தும் கண்ணிர் உடைத்துக் கொண்டு வந்தது. அவனுக்கு வேதனை - அறை யில் நடந்த சம்பாஷணையை அகிலா கேட்டிருக்கக் கூடும்.
*அகிலா. கவலைப்படாதையுங்கோ ...' - அதற்கு மேல் அவனுல் கதைக்க முடியவில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு கதைக்கலாம்? துக்கம் தொண்டையை அடைத்தது.
"அவங்களுக்கு வேலையில்லை." என்று மாத்திரம் செரன்னன். அவளது மனதைச் சமாதானப் படுத்த அந்த அளவிற்காவது கதைக்க முடிந்ததே பெரிய காரியம்தான்.
ቋ
"நான். எல்லாம் கேட்டிட்டுத்தானிருந்தன். 9 சிவகுமாரது நெஞ்சிலே "திக் கென்ற அதிர்ச்சி.
அகிலா தொடர்ந்து பேச முடியாமல் நின்ருள். தனக் காகப் பரிந்து பேசுவதற்கு ஓர் உள்ளம் இருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் அவனது நல்ல சுபாவத்தை உணர்ந்திருக் கிருள். அந்த அன்பையும், பரிவையும், பாசத்தையும் எண்ணுகின்ற பொழுது, தான் அதற்கெல்லாம் தகுதியா னவள் தானுே என்ற எண்ணமும் தோன்றியது. அந்தக் காரணத்துக்காகவே அழுகையும் பீறிட்டுக் கொண்டு வந்தது; அவனிடம் எதையுமே மறைத்திருக்கக் கூடாது.
"சிவா. அவனுகள் கதைச்ச. உண்மைதான்!'
எரிமலையொன்று வெடித்தது. சிவகுமார் ஆச்சரியத்து டனும் இப்படியும் நடக்குமா எனும் அதிசய உணர்வுட னும் அவளைப் புதினமாகப் பார்த்தான். -மீளமுடியாத அதிர்ச்சி. இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
பெண்களின் சரித்திரத்தில் எங்கள் சமூகம் எவ்வளவு கரிசனையாயிருக்கிறது! இவள் இப்படி நடக்கலாமா? ஏன் தனக்குத் தானே அழிவைத் தேடிக்கொள்கிருள்? ஆண்கள்

இளமைக் கோலங்கள் 8.
நேர்மையாக நடக்க வேண்டும் என்ற வாதம் ஒரு பக்கம் இருக்கட்டும். இதனல் ஏற்படக் கூடிய பாதிப்பு பெண் களைத்தானே தாக்கும் என்பதையாவது மனதில் வைத்து கவனமாக நடக்கத் தெரிய வேண்டாமா?
சிவகுமாரது மனது அலைக்கழிந்தது, அவள் இப்படி நடப்பதற்கு என்ன காரணம்? அவளை ஒரு கெட்டவளாக வும் கணித்துவிட மனம் இசையவில்லை. யாரையாவது காதலிக்கிருளோ? அல்லது ஏதேனும் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமாக இருக்குமோ?
'அகிலா அழாதையுங்கோ. உங்களுக்கு என்ன பிரச்சினை...? மனசை திறந்து உள்ளபடி சொல் லுங்கோ. என்னுலை முடிஞ்சவரை உதவி செய்யிறன்."
அவளது கண்களை நிறைக்கின்ற கண்ணிர் இப்பொழுது எதையும் சொல்லக் கூடிய மனநிலையில் இருக்கமாட்டாள் என உணர்த்தியது. சற்று நேரம் அழுது தீர்க்கட்டும் எனப் பேசாமலிருந்தான். பின்னர் கவனத்தை வேறு பக்கமாகத் திருப்ப முயற்சித்தான்.
"எங்கை அகிலா. அம்மாவைக் காணயில்லை???
"மார்க்கட்டுக்குப் போஞ."
அப்பாடா! இப்பவாவது இந்தத் திருவாய் மலர்த் ததே. 9
அகிலாவுக்கு வேதனையிலும் ஒரு மென்மையான சிரிப்பு மலர்ந்தது.
'இருங்க தேத்தண்ணி போட்டிட்டு வாறன்’ என்ற வாறு எழுந்து சென்ருள்.
கால்களை நீட்டி தலையைக் கதிரையின் சார்விற் பதித்து மேலே நோக்கியவாறு அமர்ந்து கொண்டு நெற்றியைக்

Page 46
82 இளமைக் கோலங்கள்
கையினல் வருடினன். பூச்சியொன்று "லைட் டைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுச் கொண்டிருக்கிறது. பாவம்; அதி லேயே விழுந்து மாய்ந்து போகுமோ?
சற்று நேரத்தில் ஆகிலா தேநீருடன் வந்தாள். தேநீரை வேண்டி ஆவலோடு பருகினுன். ஒரு தாயைப் போன்று பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அகிலாநன்ருக களைத்துப் போயிருக்கிறன், பாவம்.
'சிவா ஏன் அவனுகளோடை சண்டை பிடிச்சீங்க?"
A - 'பின்னை என்ன?. எவ்வளவு அநியாயமான கதை யெல்லாம் கதைக்கிருங்கள்!"
'இல்லை அவனுகள் சொன்னது உண்மைதான்."
"என்ன உண்மை?”
'இன்னுெருத்தரோடை படத்துக்குப் போனன்தான்'
சிவகுமார் மேற்கொண்டு பேசாமலே இருந்தான். பாவத்துக்குத் துணை போனதாக அவள் ஒப்புவிக்கும் போது என்ன செய்வது? அவள்மேல் கோபமும் பற்றிக் கொண்டு வந்தது. "சீ! நான்தான் தப்புக் கணக்கு போட்டு விட்டேனு!"
அவள் நினைத்தாள்; அவனுக்கு உண்மை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவனது நல்ல மனதுக்குச் செய்கின்ற துரோகமாகும். சொல்லாமல் விட்டதும் தவறு தான
*சிவா, படத்துக்கு என்னுேடை வந்தவர் என்னக் கலி யாணம் செய்ய இருக்கிருர்."
விளக்குகள் சட்டென்று அணைந்தன. கும்மிருட்டில் சிவகுமாரது முக மாற்றத்தைக் கவனிக்க முடியவில்லை.

இளமைக் கோலங்கள் 83
மின்தடை ஏற்பட்டிருக்க வேண்டும். தலைநகரில் இப் படியான ஒரு நிலைமையைக் கற்பனை செய்து பார்த்தான் சிவகுமார். வீதிகள், வியாபார நிலையங்கள், களியாட்ட விழாக்கள் சனங்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் வெளிச்சம் சடுதியாக அற்றுப் போய் இருள் ஆக்கிரமிக் கின்ற பொழுது எப்படி இருக்கும்; பெரியதெருக்கள் எல் லாம் இப்படித்தான் இருக்குமா? அந்த இருளில் வாகனங் கள் கண்களைக் குற்றுகின்ற ஒளியை உமிழ்ந்தவாறு ராஜாக் களைப் போலச் செல்லும், எத்தனையோ பேர் சினந்து கொள் வார்கள். அவை யாருக்காகவும் கவலைப்படாமல் ஒடும்.
அகிலா இருளிலே எழுந்து தட்டுத் தடுமாறி நடந் தாள். மேசை லாச்சியொன்றில் இருக்கும் மெழுகுதிரியை யாவது எடுத்துக் கொளுத்தலாம் என்ற நினைவுடன் லாச் சியைத் திறந்த பொழுது வெளிச்சம் பளிச்சென்று வந்தது, சிவகுமார் சிரித்துக்கொண்டிருந்தான்; ‘என்ன லவ்வரா? என்ருன். V
"உங்கட பாசயில சொன்ன அப்பிடித்தான்.”
அவன் அதைப்பற்றி அபிப்பிராயம் சொல்ல விரும்ப வில்லை. வரப் போகிறவன் நல்லவனுக இருந்தாற் சரிதான். "இந்த நல்ல மனதைக் கவர்ந்த கள்வன் யாரோ?.
"என்ன கேலி பண்ரீங்கள். GunT?”
"இல்லை உண்மையாத்தான் கேக்கிறன்."
"அவரும் எங்கடை ஒப்பீசிலை தான் வேலை செய்கிருர் எங்கட பக்கம்தான். கிழக்கு மாகாணம்."
"அப்ப உங்கட ஊர்க்காரரைத்தான் தேடிப் பிடிச்சி ருக்கிறீங்கள் என்று சொல்லுங்கோ.

Page 47
*4 இளமைக் கோலங்கள்
"அப்பிடியெண்டில்லை. அவர்தான் நான் இன்ன இடமெண்டு தெரிஞ்சிட்டு வந்து வந்து கதைச்சார்.
கொழும்பில் இப்படி ஆரம்பிக்கின்ற எத்தனையோ அலு வலகக் காதல்கள் போகின்ற இடம் தெரியாமல் போகின்ற கதைகள் எல்லாம் அவனுக்குத் தெரியும். அகிலா என்ற மென்மையான மலரை விரும்புகிறவன் நேர்மையான வன்தானே என்னவோ?
*அகிலா. உங்களுக்கு ஒரு சந்தோசமான வாழ்க்கை அமைஞ்சால். முதலிலை மகிழ்ச்சியடைகிற வன் நான் தான்" என ஆரம்பித்து எப்படிச் சொல்வது எனப் புரியாமல் தடுமாறினன். நீங்கள் கொஞ்சமெண் டாலும் முன் யோசனையோடை நடக்கவேண்டும். நான் அடிக்கடி சொல்லுவன். இந்த விஷயத்திலை பொம்பிளை யள் நெருப்பாய் இருக்கவேணும். ஆம்பிளையளிலை எத் தனையோ பேர் நச்சுப் பாம்புகள். அந்த விஷம் பாதிக்கா மல் உங்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கடை பொறுப் புத்தானே?. ஆம்பிளையள் இந்த விஷயத்திலை சுயநல மாய்த்தான் இருப்பாங்கள். சொல்லுறனெண்டு குறை நினையாதையுங்கோ. கலியாணம் முடிக்க முதல் இப்பி டிக் கண்டபடி சேர்ந்து திரியிறது சரியில்லை."
தான் நினைப்பதை எப்பிடிப் புரிய வைப்பது என அவனுக்குப் புரியவில்லை. அவள் புரிந்து கொண்டாள்.
'நீங்கள் என்ன சொல்லுறீங்களெண்டு விளங்குது. நானும் இப்பிடியெல்லாம் திரிய விருப்பமில்லைதான். ஆன.”
"என்ன ஆணுல். எல்லா கேர்ள் சும், இப்பிடித் தான். தங்களை லெவலாய்க் கதைக்கிறது. உங்க ளுக்கு விருப்பமில்லாமலா காதலிக்கிறீங்கள்!” - அவன் கிண்டலாகத்தான் கேட்டான்.

இளமைக் கோலங்கள் 85
அவள் 'தலைவிதி!' என்ருள்.
சிவகுமார் திடுக்குற்றன். அப்படி என்ன தலைவிதி? piritutupi sudr?
*அகிலா! உங்கடை போக்கு எனக்கு ஒண்டும் விளங் குதில்லையே!"
"எனக்கே என்னண்டு விளங்கல’ அகிலா வலிந்து சிரித்துக் கொண்டாள். அவன் எரிச்சலடைந்தான்,
"என்ன விசர்க்கதை கதைகிறீங்கள்?"
"ராஜேசன் நல்லவர். எண்டு தான் நானும் முதல்ல நினைச்சன். நான் வேலைக்கு வந்த புதுசில வலிய வலிய கதைச்சார். ஒரு ஜெண்டில்மன் மாதிரி உதவி செய்தார். அவர் என்னை விரும்புகிருர்போல எண்டு நினைச்சன். t
"அவரும் அப்பிடித்தான் சொன்னர். எண்டா லும் நான் சம்மதிக்கவில்ல எங்கட குடும்ப நிலையை நினைச் சுப் பயந்துதான். அவர் அதையெல்லாம் சொல்லிக் கேட் கல்ல. ஆர் என்ன சொன்னலும் என்னத்தான் கலியா ணம் முடிக்கிறதென்று சொன்னர்.
"அவற்ற பிடிவாதம்தான் என்ன மாத்திச்சு. என் னில இவ்வளவு அன்பும் விருப்பமும் உள்ளவரோட வாழு றதில பிழை இல்லத்தானே எண்டு நினைச்சன். அதோட எனக்கு இப்பிடிபொரு அதிஷ்டம் கிடைக்கிறது, பெத்தவங்களுக்கும் பாரமில்லாமற்போகும் எண்டு தோன்
றிச் சு.
** போகப் போகத்தான் அவர் கண்ட கண்ட கேர்ள்ஸ் சோடை திரியிறது எண்டும் தெரிஞ்சுது . எண்டாலும் 6 Tir Gor () F i ro””

Page 48
86 இளமைக் கோலங்கள்
கண்களில் பணித்த கண்ணிரை விரலினுல் தட்டிவிட் டவாறே தொடர்ந்தும் பேசினுள் அகிலா.
** என்ன இருந்தாலும். அவர் என்னில அன்பு குறையாமத்தான் பழகிஞர். அவரோட இவ்வளவு பழகியாச்சு. சபல புத்தி உள்ளவரெண்டாப் போல
விடுறதா? திருத்தலாமெண்ட நம்பிக்கை இருக்கு. அதுக் காகத்தான் அவர் விரும் புற மாதிரியெல்லாம் நடக்கி றன். இல்லாட்டி வேறை கேர்ள்ஸ்சோட அவர் திரியி றதப் பார்த்துக் கொண்டிருக்கேலுமா?"
சிவகுமார் அவளது மனதை சமாதானப்படுத்துவது போல, "அகிலா மனிசனை உருவாக்கிறதும் அழிக்கிறதும், பெண்களின்ரை கையிலைதான் இருக்குது. நீங்கள் கெட் டித்தனமாய் நடந்து கொள்ளுங்கோ. உங்கடை "லவ்வர்" திருந்துவார். . உங்களைப்போலை. ஒருத்தி கிடைக்கக் குடுத்து வைக்கவேணும்."
அகிலா தன் மனக் குமுறல்களையெல்லாம் மறைத்துக் கொண்டு சிரிக்க முயன்ருள். சிவகுமார் தனக்காக வீணே கவலைப்படக்கூடும் என்று எண்ணியவள்;
**சிவா. இதுக்காகக் கவலைப்படாதீங்க. கொரு மன வருத்தமுமில்லை. அவர் என்னை வைச் சு காப்பாததினு சரிதானே? என ஆறுதல் கூறினுள்.
ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் இயல்பு. ஒரு வரை ஒரு வர் தேற்றுவதற்கு இரண்டு ஒத்துப் போகக் கூடிய உள். ளங்கள் தேவைப்படுகிறது. இப்படி ஒருவரின் கவலையை) மற்றவரால் மறக்கடிக்கப்படக் கூடிய வசதி இல்லா விபி டால் எத்தனை பேருக்கு பயித்தியமே பிடித்துவிடும்?

அத்தியாயம்- 14
மி குமிழ் வெளிச்சம் மேசையில் அடுக்கப்பட்டி ருந்த போத்தல்களில் பட்டுத்தெறிக்கிறது. -மெண்டிஸ் ஸ்பெஷல், அதற்கு "சண்டி யாக பிளேய்ன் சோடா. சில பேருக்கு லெமெனெட்தான் பிடிக்குமாம். ஸ்பெஷலின் கசப்பை அது கொஞ்சம் குறைத்துக் காட்டும் என்பதாற் போலும். பொலித்தீன் தாள்கள் உரிக்கப்படாத சிகரட் பைக் கட்டுக்கள் புதிய பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
கட்டிலில் வந்தமர்ந்த நண்பனுெருவனுக்கு வியர்த் துக் கொட்டுகிறது. பார்ட்டிக்கு சரியான நேரத்துக்கு வர வேண்டுமென்பதற்காக அவசரமாக நடந்திருப்பான். மகேந்திரன் அறையின் யன்னலை திறந்து விடுகிருன், இன் னும் ஒரு சிலர் வரவேண்டியிருக்கிறது. "ரேஸ்ற் றுக்கா கப் பொரிக்கப்படுகின்ற இறைச்சியின் மணம் நாக்கில் ஜலத்தை ஊற்றெடுக்கச் செய்கிறது. பஞ்சலிங்கத்தார் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்திறங்கி தனது சைக்கிளை பவுத்திரமாக ஒரப்படுத்தினர். 'எதுக்கு நேரந் தவறின லும் இதுக்குப் பிந்த மாட்டாங்கள்...' உள்ளே யாரோ ஜோக் அடிக்கிருர்கள்."எல்லாருக்கும் முதல் நீதானே வந் தனி?’ பதில் ஜோக்' தேவையற்ற சிரிப்புக்கள்.
*"வெயார் இஸ் ஜெகா?. விஸ் யூ ஒல் த பெஸ்ற் தம்பி!' என்றவாறே அறையினுள் பஞ்சலிங்கத்தார் நுழைகிருர், அவன் அடக்கமாகத் "தாங்ஸ்’ அளித்தான்.
அறை ஏழெட்டுப் பேருக்குப் போதவில்லை. கட்டில் கள் ஒதுக்காக அடுக்கப்பட்டிருக்கின்றன.
W "ரேஸ்ற் றும் மேசைக்கு வந்துவிட்டது.

Page 49
88 இளமைக் கோலங்கள்
t N "ஏன் சுணங்குவான்?. . ஷால் வீ ஸ்ரார்ட்?" - பல நல்ல கருமங்களை ஒப்பேற்றிய அனுபவம் பஞ்சலிங்கத் தாருக்கு!
சிவகுமார் மேசையில் கிளாஸ்களை எடுத்து, அடுக்கி ஞன்
**இந்தா ருங்கோ நீங்களே ஸ்ராட் பண்ணி வையுங்கோ. ஜெகநாதன் போத்தலை பஞ்சலிங்கத் தாரிடமே ஸ்பெஷலாகக் கொடுத்தான்.
'இல்லை. ஏன்.? நீர்தான். ஆரம்பிக்க வேணும்."
-யார் போத்தலை உடைப்பது என்ற முகஸ்துதிப் பிரச்சினை யாராவது நல்லவன் பெரியவன் ஆரம்பித்து வைக்க வேண்டுமே!
"இஞ்சை 4. கொண்டாடாப்பா. இதுக்குப் போய் இழுபறிப் படுறியள். என்றவாறு மகேந்திரன் அந்த நல்ல காரியத்தைச் செய்ய முன்வந்தான்.
கைகள் கிளாஸ்களைப் பற்றி உயர்த்தின. கோரஸ்; "நண்பர் ஜெகநாதனின் ஒளிமயமான எதிர்காலத்துக்கும் மகிழ்ச்சிகரமான குடும்பவாழ்வுக்கும் வாழ்த்துக்கள் - சியர்ஸ்' - கிளாஸ்கள் முத்தமிட்டன.
-"பச்சுலர்ஸ் பார்ட்டி நடக்கப் போகிறது. பார்ட் டியில் பஞ்சலிங்கத்தாரைத் தவிர மற்ற யாவருமே இன் னும் திருமண மாகாத குமரர்கள்தான். ஆனல், அவர்கள் எல்லாரும் ‘பச்சுலர்கள்' என்பதற்கு எவ்வித உத்தர வாதமுமில்லை. எப்படியிருப்பினும் இந்த விருந்து வைப வத்தைக் குறிப்பிடுகின்ற சம்பிரதாயபூர்வமாக பெயர்"பச்சுலர்ஸ் பாட்டி"

இளமைக் கோலங்கள் 89
ஜெகநாதனுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது. இன் னும் சில தினங்களில் அவன் குடும்ப சமேதராகப் போகி முன். அதற்காக நெருங்கிய நண்பர்களால் ஜெகநாதனின் செலவில் அளிக்கப்படும் பிரியாவிடைதான் இந்தப் பார்ட் டி. திருமணம் பஞ்சலிங்கத்தாரால் பேசி ஒப்பேற் றப்பட்டது. அவருக்கு விசேஷ அழைப்பு. பிரமச்சாரி களின் அறையென் ருல் பார்ட்டிகளுக்குக் குறைவில்லைத் தான். சம்பள தினங்கள், ஓவர்ரைம் தினங்கள் மற்றும் விசேஷ தினங்களில் "சின் டிகேட்” போட்டு சிறிய அளவில் ஆங்காங்கே பார்ட்டிகள் நடைபெறும். இது வீட்டுக்கார ருக்கோ, சுற்ருடலிலுள்ளவர்களுக்கோ இடைஞ்சலளிக்கா மலும் பார்த்துக் கொள்ளவேண்டியது முக்கியம். அல்லது அடுத்தநாளே பெட்டி படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியும் நேரிடலாம். அதற்காகத்தான் ஒரு சுப நாளாகப் பார்த்து இன்றைய தினத்தை தேர்ந்தெடுத் தார்கள்.
பிரபல ஹோட்டலொன்றில் நடைபெறும் திருமண விருந்து வைபவமொன்றுக்கு வீட்டுக்காரர்கள் போய்விட் டார்கள். அந்த பிரபல ஹோட்டலில் ஏறுகின்ற அளவுக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் (பொருளாதாரரீதியாக) என்பது என்னவோ மறுக்க முடியாத உண்மைதான். ஆனல், தங்கள் மேல்மட்ட வாழ்க்கையை உறுதி செய்து கொள்வதற்கு இது போன்ற ஆடம்பரமான வைபவத்தை ஆதரிப்பது மறைக்க முடியாத உண்மை. (கான மயிலா டக் கண்டிருந்த வான்கோழிக் கதை) கொழும்பில் எத் தனையோ வசதி படைத்தவர்கள் இருக்கிருர்கள். அன்ருடம் விருந்துகள் கேளிக்கைகளில் அவர்கள் நேரத்தையும் பணத்தையும் செலவிடுவது சர்வசாதாரண்ம். அந்தப் பொழுது போக்குகளில் மனம் கவரப்பட்டு அல்லது தங் களையும் அவர்களில் ஒருவராகக் காட்டிக் கொள்வதற்காக இன்னும் எத்தனையோ பேர் தங்கள் பொல்லாச்சிறகை விரித்து ஆடுகிறர்கள்!

Page 50
90 இளமைக் கோலங்கள்
கிளாஸ்களை உதடுகள் தடவித் தீர்க்கின்றன. சிகரட் புகை அறையிலுள்ளவர்களைப் பழுக்கப் போடுகிறது. "ரேஸ்ற் எண்டால் ரேஸ்ற் தான்! " - சமையல் செய்த வருக்கு இலவச ' சேர்ரிபிக்கட் கிடைக்கிறது.
**6даuт 1...... யூ ஆர் ஸ்ரில் சிலோ. . டிறிங் வில் யூ.” மகேந்திரனுக்கு மப்பு- அவனது "இன்டிகேசன்’ ஆங்கிலம்தான். வழக்கமாக இங்கிலீசில் கதைப்பதில்லை. தண்ணி பாவிக்கிற நாட்களில் ஆங்கிலம் தாறு மாருகத் துள்ளி விளையாடும். எப்படியோ நாக்கைக் கொழுவிக் கொள்ளாமல் ஒப்பேற்றி விடுவான். மற்றவர்களோடு இங்கிலீசில் சண்டை கூடப் பிடிப்பான் ‘வெல் டண் மகேந்திரன்'
*" என்ன சிவா.. அப்பிடியே வைச்சுக் கொண்டிருக் கிருய்?. குடியன்ராப்பா . நாங்கள் இஞ்சை ரெண் டாவது றவுண்டும் வந்திட்டம்.' ஜெகநாதனின் பரிவான வார்த்தைகள். கொஞ்ச நாட்களாக சிவகுமார் நண்பர் களோடு கூட அவ்வளவு மனம் வைத்து கதைத்ததில்லை. இந்த நேரத்திலாவது அவனைச் சமாதானப் படுத்த வேண் டுமென ஜெகநாதன் கருதினன்.
'என்ன புதுப்பழக்கமோ?’ - பஞ்சலிங்கத்தார் கேட் litri.
". இல்லை. என்ன அவசரம். ஆறுதலாகக் குடிப் lib'
"ஹீ. நோஸ் ஹிஸ் லிமிட். உங்களாலே அவனை
அசைக்கேலாது." - மகேந்திரன் புகழ்கிறன அல்லது பரி கசிக்கிருணு என்பது புரியவில்லை.
நுளம்புகள் நிம்மதியாக இருக்கவிடாமல் தலையைச் சுற்றி வட்டமிட்டு காதுகளுக்கருகே வந்து பொப்பிசைப் புயல் நடத்துகின்றன. வேறு பிராக்காக இருந்து விட்டால்

6T69 to di கோலங்கள் 9.
மெல்ல லான்ட் பண்ணி - 'சடக்" - நுளம்பின் மேல் ரற்பட்ட ஆத்திரம் அடிபட்ட இடத்தைத் தடவ வைக்கிறது. நல்ல அடி! "ரத்தத்தைக் குடிச்சு அதுகளுக்கும் வெறி வரப் போகுது" - ஒரு ஜோக், கோரஸ் சிரிப்புக்கள்.
மகேந்திரன் அலட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டு ஒரு நண்பன் திசையை மாற்றுகிறன்.
** மகேந்திரன். வை டோன்ற் யூ சிங் ஏ சோங்?"
***யேஸ். டெஃபினிற்லி!"
- பூமியென்ன சயிசு என்று அவன் பாடத் தொடங்குகி முன், போட்டாத்தான் அற்புதமான தத்துவங்களும் பிறக் கின்றன!
நண்பனுெருவன் மேசையை மத்தளமாகப் பாவிக்கின் முன். (நாளைக்குத்தான் கையில் வலி தெரியும்.) பார்ட்டி யில் குடு பிடிக்கிறது. இரு நண்பர்கள் எழுந்து ஒமங்கா கக் கால்களைப் பதித்து முன்னும் பின்னும் அசைந்து ஆடு கிருர்கள். பரீட்சைக்குப் பாடமெழுதுகின்ற மாணவனின் அவதானம், அவர்களுக்கு ஆட்டத்தில் இருக்கிறது! ஆடிய படியே அவர்கள் ஜெகநாதனைக் கைகோத்து இழுக்கிருர் கள். அவனுக்கு அவர்களோடு ஈடு கொடுக்க முடியவில்லை. கைகளைத் தட்டி மெல்ல துள்ளல் போட்டு சமாளித்துக் கொள்கிருன்.
பஞ்ச லிங்கத்தார் இன்னெரு "ட்ருமை ஊற்றி உறுஞ்சி விட்டு புதிய உற்சாகத்தோடு எழுந்து பழைய பாகவதர் பாட்டொன்றை இராகம் இசைத்துப் பாடத் தொடங் குகிருர். ஒருபாடாக அவரது பாட்டும் முடிந்தது.
"ஐயா வரவைப் பார்த்து வீட்டில் ஏங்குருங்க!அம்மா. இந்த ஐயா இங்கே கும்மாளம்தான் போடுருங்க சும்மா!' என்று பாடத் தொடங்கினன் மகேந்திரன். அவ

Page 51
4. இளமைக் கோலங்கள்
னேடு நண்பர்களும் சேர்ந்து வேண்டுமென்றே இந்த வரி களைத் திரும்பத் திரும்பப் பாடினர்கள் பஞ்சலிங்கத்தார் இளமை திரும்பியவரைப் போல அவர்களோடு கும் மாள மடித்தார் - "ஒரு சந்தோஷமான பிறவி!"
"நேரம் போகுது. இனி முடிப்பம்" என்ருன் சிவ குமார். மற்றவர்கள் நேரத்தைப் பார்த்தார்கள். பதி ஞெரு.மணி.
நைற் இஸ் ரூ. யங்" என்ருன் மகேந்திரன். பின் னர் "பசுமை நிறைந்த நினைவுகளே’ எ ன் ற பாட்டை ஆரம்பித்தான். அது எல்லாரின் மனதையும் தொடுவதாக இருந்தது. எங்கோ பிறந்து வேலை நிமித்த மாக கொழும்பிற்கு வந்து ஒரே அறைகளில் கோபதாபங் களோடும் இன்ப துன்பங்களோடும் ஒரு குடும்பத்தவர் களைப்போல வாழ்க்கை நடத்திய தங்களது நட்பில் பெரிய பிரிவு நேரப் போவது போன்ற கவலை மனதை வருத்தி Այ Ց].
இப்படியே நெடுநேரம் ஆட்டங்களுடனும் பாட்டுக் சளுடனும் கழிந்த பின்னர் அவரவராக "குட்நைட்" சொல்லி விடை பெற்றனர். "குட்நைற்" சொன்ன பொழுது நேரம் பன்னிரண்டு மணியையும் தாண்டி விட் ! ای شسا
மகேந்திரன் கட்டிலொன்றில் குப்புற விழுந்து கிடந் தான். கட்டிலுக்குப் பக்கத்தில் ஓங்கழித்துச சததியெடுத்
தான்.
"சனியங்கள் குடிக்கையிக்க யோசிச்சுக் கட்டு மட் டாய் குடிக்க மாட்டாங்கள்" எனத் திட்டியவாறே அவ னது நெற்றியைப் பிடித்து கட்டிலிலிருந்து அந்தரத்தில் தொங்குகிற தலையைத் தாங்கிக் கொண்டான் சிவகுமார்.

இளமைக் கோலங்கள் 93
ஜெகநாதன் கோப்பையைக் கழுவிக் கொண்டு சாப் பிட ஆயத்தம் செய்தான். ‘சிவா! வா அவனையும் எழுப் பிக் கொண்டு. சாப்பிடலாம்."
"அவன் இப்ப சாப்பிடக் கூடிய மாதிரியே கிடக்கி ருன்?"
சிகரட் கட்டைகள் அறை முழுவதும் குப்பையாகக் சிதறிக் கிடக்கின்றன. அநாதரவாகக் கிடக்கின்ற கிளாஸ் கள் - விட்டகுறை தொட்டகுறை - மகேந்திரன் எடுத்த சத்தியை மூடுவதற்காக மண்அள்ளுவதற்கு வெளியே வந் தான் சிவகுமார். -
அப்பொழுதுதான் வெங்கடாசலம் தம்பதியர் பார்ட்டி முடிந்து ஒரு ரக்சியில் வந்து இறங்கியிருக்கிருர் கள். மிஸ்டர் வெங்கடாசலத்துக்கு நிறை தண்ணி. நடக் கக் கூடச் சக்தியில்லை. திருமதியார் பெரிய சங்கடத்தோடு அவரைச் சுமந்து இழுத்துக் கொண்டு வருவதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. மனிசன் வருகின்ற வரத் தைப் பார்த்தால் பார்ட்டியில் மனிசிக்காரியின் மானத்தை வாங்கியிருக்குமோ என்னவோ? "ஏன் இந்தப் பாடு? என எண்ணியபொழுது தானும் கொஞ்சம் குடித்திருக்கிமுன் என்ற உணர்வு, நெஞ்சில் உறுத்தியது. பேசாமல் மண்ணை அள்ளிக் கொண்டு அறையினுள் நுழைந்தான். மகேந்திரன் ஓங்காழிக்கிற சத்தம் கேட்கிறது.

Page 52
அத்தியாயம் - 15
யாழ்ப்பாணம் வந்து நாவலர் வீதியில் அலைந்து, நாலு பேரை விசாரித்து, ஒழுங்கையை கண்டு பிடித்து இறங்கி நடந்து இலக்கத்தைப் பார்த்து வீட்டை அடைந்து:
'வீட்டுக்காரர். வீட்டுக்காரர்!"
"ஆரது. இஞ்சாலை வாருங்கோ!"
ஜெகநாதன் உள்ளே நுழைந்து முற்றத்திலே நிம்மதி யாக உறங்கிக் கொண்டிருந்த நாய்க்குப் பிடிக்கவில்லை! எழுந்து பொல்லாத கோபத்தோடு குரைத்துக்கொண்டு ஓடி வந்தது.
"அடிக்1. அடிக்1. ** " "அது கடிக்காது!.. . நீர் வாரும்!"
ஜெகநாதன் நாயை பார்ப்பதா குரல் வருகின்ற திசை யைப் பார்ப்பதா என்று புரியாமல் பயம் கலந்த சிரிப்பை மலர்த்தி தனது சிநேக பூர்வமான வருகையை நாய்க்கு உணர்த்த முயன்ருன்.
அவனது சிரிப்பைக் கண்டோ அல்லது எசமானியின் அதட்டலினலோ நாய் தனது சண்டித்தனத்தை விட்டு சமாதானக் கொடியை (வாலை) ஆட்டியது.
"ஆரைத் தேடுறீர்’ தென்னேலையில் கிடுகு பின்னிக் கொண்டிருந்த பூமணி. ஒலையை ஒரு பக்கத்தில் இழுத் துப் போட்டு விட்டு எழுந்தாள்.
“அருணசலம் மாஸ்டர் வீடு இதுதானே?"

இளமைக் கோலங்கள் 95
ஓம்!. இதுதான் உள்ளுக்கு வாரும்' என்றவாறே வீட்டினுள் நுழைந்து, "இஞ்சருங்கோ. உங்களை ஆரோ தேடி வந்திருக்கினம்!" எனக் குரல் கொடுத்தாள்.
பாய்யொன்றில் ஓய்வாய் புடுத்திருந்த அருணுசலம் மாஸ்டருக்கு எழுந்து வர மனதில்லை. "அதாரப்பா? விளங்கச் சொல்லன்' எனச் சினந்தார்.
' ஆரெண்டு தெரியவில்லை . ஒரு புதுப் பெடியணு யிருக்கு . உங்களைத்தான் காணவேணுமாம்."
ஜிம்மி நாய் இப்பொழுது ஜெகநாதனை ஏற்கனவே தெரிஞ்சது போல சுற்றிச் சுற்றி மோப்பம் பிடிக்கத் தொடங்கியது.
தனது திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்தான் ஜெகநாதன். முதல் வருகின்ற நாளுக்கே கலியாணத்தை முடித்துவிட வேண்டுமென்று பெண் வீட்டுக்காரர் ஒற்றைக காலில் நிற்பதால் திடுதிடுப்பென்று வரவேண்டியதாயிற்று. கொழுத்த சீதனம். விடமுடியுமா? -
ஊருக்கு வந்தவனுக்கு யாழ்ப்பாணம் வரவேண்டிய அலுவல் இருந்தது. மாலை நாலு மணியைப் போல 750ஆம் இலக்க பஸ் எடுத்து யாழ்ப்பாணம் வந்தவன், கையோடு சிவகுமார் வீட்டுக்கும் போய் விட்டு வரலாம் என்ற எண்ணத்தாலும் வந்து நிற்கிருன்.
அரையிலிருந்து விழுகின்ற களிசானைப் பிடித்தபடி அண்மையில் ஓடி வந்த சிறுவனெருவன் 'ஜிம்மி. இஞ்சாலை வா!' எனத் அழைத்தவாறு இவனை விடுப்புக் பார்க்கத் தொடங்கினன். ஜெகநாதன் வீட்டு வாசலைப் பார்த்தபடி நின்னன்.
அண்மையிற் கட்டப்பட்ட வீடு. வீட்டைச் சுற்றவர தோகையை விரித்துக் கொண்டு நிற்கும் தென்னம்கன்று

Page 53
96 ܖ -ر இளமைக் கோலங்கள்
கள். சில வாழைகள். முன்னே அழகாக வெட்டப்பட்டி
ருக்கும் குருேட்டன் செடிகள். பூங்கன்றுகள் பின் பக்கமாக
உயர்ந்து தலையை நிமிர்த்திக் கொண்டு நிற்கும் பனை மரங்கள், .ܓ
படுக்கையிலிருந்து "முருகா!' வைத் துணைக்கு அழைத் துக் கொண்டு வேண்டா வெறுப்பாக எழுந்தார் அருணு சலம் மாஸ்டர். வேட்டியை சரிசெய்து உதறிக் கட்டிக் கொண்டு வெளியே வந்தவர் ஜெகநாதனைக் கண்டதும் "அறியாத முகமாயிருக்குதே' என்ற குழப்பத்துடன் மெல் லிய டின்னகையைக் காட்ட முயன்ருர்,
**ஆரை காண வந்திருக்கிறீர்?"
**அருணுசல மாஸ்ரர் நீங்கள்தானே?"
"ஓம்!,. உம்மைத்தான் எனக்கு விழங்கவில்லை."
* நான் கொழும்பிலை உங்கடை மகனுேடை அறை யிலை இருக்கிறன்."
அருணுசலத்தாரின் மனது பதட்டமடைந்தது. விஷயம் என்னவோ ஏதோ?
*வாரும் . இருந்து கதைக்கலாம். ஏதேன் முக்கி யமான அலுவலோ?"
*அப்பிடியொண்டுமில்லை . , என்ரை ஒரு அலு வலாய் யாழ்ப்பாணம் வரவேண்டியிருந்தது. பின்னைத் தான் சிவகுமாற்றை வீடும் இந்தப் பக்கம் எண்டாப் போலை . பாத்திட்டுப் போகலாமெண்டு வந்தனன்"
அருணுசலம் மாஸ்டர் ஜெகநாதன வசீகரிக்கின்ற சிரிப்பைக் காட்டினர். மகனேடு அறையில் இருக்கின்ற நண்பன் வந்திருப்பது ஒருவித மகிழ்ச்சியையும் ஏற்படுத்

இளமைக் கோலங்கள் 97.
گسم۔۔۔۔۔۔۔۔۔
தியது. பிள்ளைகளது பழக்க வழக்கங்களில் மிகவும் அக் நிறையானவர் அருணுசலம் மாஸ்டர். கண்டிப்பாக வளர்த் கவர். இப்பொழுது கண்காணுத இடத்தில் . என்ன செய்கிருனே . எப்பிடி இருக்கிருனே?’ என்பது அடிக் கடி எழுகின்ற ஏக்கம்.
"எப்பிடித்தம்பி கொழும்புப் பக்கம்?" எனச் சம்பிர தாயபூர்வமாக பேச்சை ஆரம்பித்து வைத்தார் மாஸ்டர்.
அகிலாவுடன் சிவகுமார் அன்னியோன்யமாகப் பழகு வதை ஸ்ப்படியாவது நிறுத்திவிடவேண்டுமென, மகேந்தி னுடன் கூட்டுச் சேர்த்து போட்ட திட்டத்தின் ஓர் அம் * த்தை அமுல் நடத்துவதற்கென வந்திருக்கிற ஜெகநா கனுக்கு இது போதாதா?
சம்பாஷணைகள் வளர்ந்தன.
பூமணி (மாஸ்டரின் மனைவி) தேநீர் கொண்டு வந்து வைத்தாள். அருணுசலத்தார் எதையோ பறிகொடுத்த வர் போல இருந்தார். ஜெகநாதன் கச்சிதமாகத் தனது வேலையை முடித்து விட்டான். மாஸ்டரால் அந்தக் கதை 1ளை எப்படி ஜீரணிக்க முடியும்?
'தம்பி . தேத் தண்ணியை எடுத்துக் குடியும் . ஆறுது!" பூமணி நிலைமையைச் சமாளிக்க முயன்ருள். வைனின் முகமாற்றத்தைக் கொண்டே அவர் மன %லயை அவளால் ஊகிக்க முடியும். கோபம் வந்தால் மாஸ்டர் பொல்லாதவர்.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் மனைவியின் பக்கம் கிரும்பிய மாஸ்டர் ;
"பாத்தியே 1. உன்ரை பிள்ளை செய்திருக்கிற வலையை . எல்லாம் நீ வளர்த்த வளர்ப்புத்தான்!"

Page 54
98. இளமைக் கோலங்கள்
எதிர்பாராத தாக்குதல் - இது மாஸ்டருடைய குணம். அந்தப் பழியை அமைதியாக சகித்துக் கொண்டாள் பூமணி.
அருணுசலம் , மாஸ்டர் அதே சீற்றத்துடன் ஜெகநாத னின் பக்கம் திரும்பி, 'ஒரு பிள்ளை நல்லாய் வாறதும் கெட்டுப் போறதும் . தாய் வளர்க்கிற வளர்ப்பிலை தான் தங்கியிருக்குது' எனக் குற்றம் சுமத்தினர். ஜெக நாதனும் ஆமோதிப்பவன் போலப் பாவனை செய்தான். பிறர்,முன்னிலையிலும் நியாயமில்லாமல் மனைவியின் மேல் குற்றம் சுமத்துவது மாஸ்டருக்கு பழகிப் போய்விட்ட சுபாவம். அப்படிச் செய்வதால் தனது கவலை  ைய க் குறைத்துக் கொள்ள முயல்கிருரோ என்பதும் புரியவில்லை. அவரை மணந்து கொண்ட நாள் முதல் இது பழகிப் போய்விட்ட சங்கதியானதால் பூமணியும் பெரிதுபடுத்திக் கொள்வதில்லை.
'தம்பி! . நான் மானத்துக்குப் பயந்த மனிசன்!. அப்பிடி ஏதாவது . நீர் சொல்லுறமாதிரி ஏறுக்குமா முய் செய்வானெண்டு கண்டால் . பிறகு பிள்ளையெண் டும் பார்க்கமாட்டன் . சுட்டுத் தள்ளிப் போடுவன்.'
" "அப்பிடி ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ . நாங்கள் கவனிக்காமல் விட்டிடுவமே?. ஒண்டாயிருக் கிற நாங்கள் சொல்லாமல் விட் டி ட் டம் எண்டு பிறகொரு காலத்திலை குறை சொல்லக் கூடாதெண்டதுக் காகத்தான் ... என்ரை அலுவல்க்ளையும் விட்டிட்டு மினக்கெட்டு வந்தனன்.”
அருணசலம் மாஸ்டர் ஜெகநாத்னை நன்றியுடன் நோக்கினர். இப்படியொரு குடும்பநிலைமை, பொறுப்பு உணர்ந்த பிள்ளை தனக்கு இல்லையே என்ற கவலை துளிர்த்தது.

இளமைக் கோலங்கள் 99
"நான் இவங்களுக்குப் படிச்சுப் படிச்சு எத்தனை புத் திமதிகளைச் சொல்லியிருப்பன்! பனை மாதிரி வளர்ந்தது தான் மிச்சம் . ஒரு தேப்பன் சொல்லுருனெண்டு அதைக் கேட்டு நடக்கிருங்களே ... ?' மாஸ்டரின் மனத் துடிப்பு. மகன் அடிக்கடி ஊருக்கு வராமல் விட்டதற்கும் இது தான் காரணமோ என எண்ணிப் பார்த்தார், வங்கி யில் எடுக்கிற கடன் பணத்தைக் கொண்டு வருவதாக முதல் எழுதியவன் பின்னர் லீவு கிடைக்கவில்லை என எழுதி காசோலையை அனுப்பி விட்டதற்கும் இதுதான் காரணமாயிருக்கும்.
"வரட்டுக்கும்! எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டு றன் . காலா காலத்திலை ஒரு கால் கட்டைப் போட்டு விட்டால் அடக்கமாய் இருப்பாங்கள்!"
அருணுசலம் மாஸ்டர் பேயறைந்தவர் போல இருந் தார். சிவகுமாரை பணயமாக வைத்துக் கொண்டு அவர் பறக்கடிக்க நினைத்த பிரச்சினைக்ள் எத்தனை? ஆசிரியராக இருந்து உழைத்த சேமிப்பெல்லாம் வீடு கட்டியதோடு கரைந்துவிட்டது. வீடு கட்டுவதற்காக ஈடுவைத்தி காணியை இன்னும் மீளமுடியவில்லை. இந்த விசித்திரத் கிலை திருமணத்திற்காக மூத்தவளொருத்தியும் காத்திருக் கிருள். மற்றப் பிள்ளைகளின் படிப்புச் செலவுகளுக்கே பென்சன் பணம் பறந்து விடும். எல்லாவற்றிற்குமே மலை போல நம்பியிருப்பது சிவகுமாரைத்தான்.
கஷ்டத்தோடு கஷ்டமாக சிவகுமாரைப் படிப்பித்து ஆளாக்கி விட்டும் - அரசதிணைக்களமொன்றில் சாதாரண கிளார்க்கு உத்தியோகம்தான் கிடைத்தது - செல்வாக்கு இல்லாதவர்கள் படித்தும் என்ன பலன்? இருந்தாலும் இது போதும் அவருக்கு. இந்த ஒரு தகுதியை வைத்துக் கொண்டே யாழ்ப்பாணத்து கலியாண்ச் சந்தையில் எத் கன வித்தைகளைக் காட்ட முடியும்! அதற்காக அவர்

Page 55
இளமைக் கோலங்கள் 100
ஓடாத இடங்களும் இல்லை. பார்க்காத புருேக்கர் மாரும் இல்லை, பேசாத சம்பந்தங்களும் இல்லை. எல்லாவற்றிற் கும் காலம் நேரம் ஒத்து வர வேண்டுமே!
-"அதுக்குள்ளை . இந்தப் பெடியன் அவசரப்படு (5gll......
"நான் அப்ப வரப் போறன்!" என அவரது சிந்த னையைக் குலைத்தான் ஜெகநாதன்.
"என்ன தம்பி அவசரம்?"
'பொழுதுபடுகுது. இருளுக்கு முந்திப் போயிட வேணும்!"
"அப்ப பின்னப் போட்டு வாருமன் .. இனிமேலும்
வர்ர நேரங்களிலை இஞ்சாலிப் பக்கம் வந்திட்டுப் போம். அங்கத்தை சங்கதியளையும் அறியலாம்'
"ஒமோம்1. ஆனல், ஒண்டு, நான் இஞ்சை வந்த தைப் பற்றிச் சிவகுமாரிட்டைச் சொல்லிப் போடாதை யுங்கோ . பிறகு குறை விளங்குவார்!"
"சாச்சாய் . நாங்கள் ஒண்டும் பறையமாட்டம் A 0. இன்னெரு அலுவல் . பாரும் நீரெண்டாலும் சொல்லி அவனை ஒருக்கால் வேறை அறைக்கு மாறிப் போகச் சொன்னுல் நல்லது!"
'சொல்லிப்பாக்கிறன் . சொன்னுப்போலை அவர் கேட்கப் போருரே?" என அவரது மனதை இ ன் னும் கலக்கியவாறு புறப்பட்டான் ஜெகநாதன்.
* படலை வரை சென்று ஜெகநாதனை வழியனுப்பி விட்டு இனம் புரியாத கலக்கத்துடன் திரும்பினர் மாஸ் டர்.
காற்றிலே அசைகின்ற பனை ஓலைகள் கலகலத்துச் சிரிக்கின்றன. கீழ் நோக்குகின்ற காவோலைகள்; மேலே உயரும் குருத்தோலைகள்!
-"பனையை வளர்ப்போம் பயனைப் பெறுவோம்"

அத்தியாயம் - 16
கடலலைகளின் தாலாட்டில் இரவு உறங்கிக் கொண்டி ருக்கிறது. கடற்கரைப் பாதையில் வருகின்ற புகையிரதம் இந்தப் பாடலுக்குப் பின்னணி இசைக்கிறது. மென்மை யாக ஆரம்பித்து தாளலயத்துடன் படிப்படியாக உயர்ந்து மீண்டும் அதே தொனியில் மறைந்து போகும்வரை மனதை லயிக்கச் செய்கின்ற ஒசை.
ஜெகநாதன் எதையோ பறிகொடுத்தவனைப் போல கட்டிலில் படுத்திருந்தான். தலையணை அவனது அணைப்பிலி ருந்தது. அவன் கிடக்கிற கோலத்தைப் பார்த்துவிட்டு, "எப்பிடி மச்சான் முதலிரவு?’ என்ருன் மகேந்திரன்.
ஜெகநாதன் ஒரு சிரிப்பை மாத்திரம் உதிர்த்தான்.
பின்னேரம் அவனைக் கண்ட நேரம் முதலே அவனிடம் கேட்க வேண்டுமென மகேந்திரன் நினைத்திருந்த கேள்வி இது. இப்பொழுதுதான் அதற்குச் சந்தர்ப்பம் கிடைத் திருக்கிறது.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஜெகநாதன் மால எங்குமே புறப்படவில்லை. இரவு சாப் பாட்டுக்கு மாத்திரம் கடைக்குப் போய்விட்டு வந்தான். பின்னர் நீண்ட நேரம் கட்டிலிலேயே கிடக்கிருன்.
மகேந்திரன் படுக்கையை விரித்துக் கொண்டே மீண் டும் அதே கேள்வியைக் கேட்டான். ஜெகநாதன் சிவ குமாரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துக்கொண்டான் வெட்கப்படுகிருனே? அல்லது எதையுமே சொல்ல விரும்ப , di Pap(3 unt?

Page 56
102 இளமைக் கோலங்கள்
கட்டிலில் படுத்திருந்தவாறே சிவகுமார் கேட்டான், ‘எப்பிடி கலியாணமெல்லாம்?" -
'பறவாயில்லை."
"என்ன நான் கேட்டதுக்குப் பேசாமலிருக்கிருய். எப்பிடி மச்சான் பொம்பிளை?" என அவனது கவனத் தைத் திருப்பினன் மகேந்திரன். அதற்கும் ஒரு புன்முறு வலை மாத்திரம் உதிர்த்து விட்டு மெளனம் சாதித்தான் ஜெகநாதன். - -
பின்னர் எழுந்து ஒரு சிகரட்டைப் பற்றவைத்தவாறே சொன்னன்; ‘சுவீப் அடிச்ச மாதிரித்தான் . சீதனமும் எக்கச்சக்கம் . பொம்பிளையும் நல்ல வடிவு."
***நல்ல புளியம் கொப்பாய்த்தான் பிடிச்சிருக்கிருய் எண்டு சொல்லு." சிவகுமார் ஏளனமாகத்தான் அப்பிடிச் சொல்கிருஞ என்று புரியவில்லை.
"பின்ன . லேசுப்பட்ட ஆளெண்டு நினைச்சியே?. காரும் வேண்டித்தாறதெண்டு சொல்லியிருக்கினம்."
** அப்ப மாப்பிள்ளையை நல்லாய் பிடிச்சிட்டுது Gurra) ...... எங்களுக்கெல்லோ தெரியும் மாப்பிளையின் ர திருகு தாளங்கள் . பொம்பிளை- எந்தப் பகுதி?" -- மகேந்திரன் குறுக்கிட்டான்.
**உங்கடை ஊர்தான்."
"அதாரடாப்பா எங்கட ஊரிலை இவ்வளவு பணம்
காரர்?' "
ஜெகநாதன் விபரம் சொன்னுன்.
““号,...... இப்ப எனக்கு ஆக்களைத் தெரியும் s s s e a

இளமைக் கோலங்கள் 03
கதை வளர்ந்து கொண்டு போவதை உணர்ந்த சிவ குமார் . * மச்சான் லைட்டை ஒஃப் பண்ணுவம் . வெங்கடாசலத்தார் அண்டைக்கும் பெரிய நியாயங்கள் எல்லாம் பேசினர்.
"என்னவாம்?" - ஜெகநாதன் கேட்டான்.
'அண்டைக்கு பார்ட்டியிலை சொல்ல சொல்ல கூத்த டிச்சுக் கொண்டு நிண்டீங்கள். அந்தாளுக்கு ஆரோ. சொல்லிப் போட்டினம் போலை . பெரிய குறையெல் லாம் சொன்னர். அப்பிடி நாங்கள் செய்தால் தங்களுக் குத்தான் கெளரவக் குறைச்சலாம்."
"அவரும் அண்டைக்கு எங்கையோ போய் குடிச்சிட்டு உலகம் தெரியா மற்தானே வந்தவர் ." - ஜெகநாதன் நியாயம் பேசினன்.
"அது ரகசியமாய்த்தானே," சிவகுமார் தொடர்ந் தான்; "இனியும் இப்பிடி நடக்குமெண்டால் அறையை வீட் டிட்டுப் போகட்டாம் . மற்றது இரவு பத்துமணிக் குள்ளை லைட் எல்லாம் ஒஃப் பண்ணிப்போட வேணுமாம் . அதுக்கு மேலையும் பாவிக்கிறதெண்டால் லைட் பில்லுக்கும் சேர்த்துத் தரவேணுமா ..."
மகேந்திரன் எரிச்சலோடு: "அந்த விசரன்ரை கதையை விடடாப்பா! அவர் ஒருத்தர் தான் இந்த உல கத்திலை வீடு வைச்சிருக்கிற மாதிரிக் கதைக்கிருய் . அவங்கள் நித்திரை . நாங்கள் மெதுவாய்க் கதைப் பம்"
"நித் டுரையில்லை! ... வரயிக்கை வெங்கடாசலத்
தின்ரை இருமல் சத்தம் கேட்டதெல்லே?"
"அவையளுக்குப் பயந்துகொண்டு கதைக்காமல் படுக் கிறதே . இதில்லாட்டி இன்னெரு வீடு. e

Page 57
104 இளமைக் கோலங்கள்
சிவகுமார் சிரித்துக் கொண்டே சொன்னன்; 'நாங் கள் நினைச்சவுடனை போறதுக்கு இங்கை எல்லாரும் வீடு களைத் திறந்தா வைச்சிருக்கிருங்கள்?"
"அந்தத் துணிவிலைதான் . அவரும் இப்பிடிக் கதைக்கிருர்? . ’ என்று கேட்ட மகேந்திரன் சற்றுநேர மெளனத்துக்குப் பின்னர் . “ ‘புது மாப்பிளை வந்திருக் கிமுன் . புது அனுபவங்களைக் கேக்கிறதை விட்டிட்டு இதென்ன தேவையில்லாத கதை கதைச்சுக் கொண்டி ருக்கிருய்? . ஜெகா1. . எப்படி முதலிரவு?" என்ருன்,
அந்தப் புதிய அனுபவங்கள்! அம்மி மிதித்து அருந் ததி பார்த்து . கல்யாண வைபோகம் விருந்து கொண் டாட்டங்கள்! சுபநேரம் இரவு பத்து சொச்சத்துக்கும் பன்னிரண்டுக்கும் இடையில் இருந்தது. சம்பிரதாய பூர்வ மான சடங்குகள் எல்லாம் முடிந்து இளம் மனைவியை இவ னிடம் ஒப்படைத்தபொழுது அதிகாலை இரண்டு மணிக் கும் மேலாகி விட்டது.
முன்பின் அறிமுகமில்லாத ஒருத்தியை . திருமணத் திற்கு சில தினங்களுக்கு முன்னர் தான் காண நேர்ந்த ஒருத்தியை, தனிமையில் . எப்படிக் கதைக்கலாம்? திரு மன நேரங்களிலும் முன்னரும் அவள் சரியாக முகம் கொடுத்துக் கதைக்கவுமில்லை. அந்த அளவுக்கு வெட்கப் பட்டவள். இப்போது நாணத்தைவிட்டு எப்படிக் கதைப் Lunt air?
வெளியே நல்ல நிலவு எறித்துக் கொண்டிருந்தது. குளிர்மையான இளங்காற்றும் வீசியது. மிகவும் மென்மை யான வெளிச்சத்தில் இளம் மனைவி தங்கச்சிலையென இருந்தாள்.
"என்ன யோசிக்கிறீங்கள் . படுக்கயில்லையா?" ஜெகநாதன் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.

இளமைக் கோலங்கள் 105
''... ... நீங்கள் படுங்கோ’ அவள் தலையைக் குனிந்த வாறே பதிலளித்தாள். என்ன கரிசனை எவ்வளவு ஆதர வான வார்த்தைகள்! அவனது சுக துக்கத்தில் அக்கறை கொள்ள ஒருத்தி அவன் ஆதரவோடு அவளது கையைப் பிடித்தான்.
‘என்னடாப்பா! நாங்கள் கேக்கிறம் நீ ஏதோ கோட்டையைப் பிடிக்கிற யோசினையிலை இருக்கிருய்?" மீண்டும் மகேந்திரன்.
ஜெகநாதன் சிந்தனை கலைந்து ஒர் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தான்.
"தாலி கட்டெல்லாம் முடிய நேரஞ்செண்டு போச் சுது . அவவுக்கும் சரியான களைப்பு . "வாழ்க்கை முழுக்க ஒண்டாயிருக்கிற நாங்கள் தானே, இண்டைக்கு என்னத்துக்கு எண்டு சொன்ன . பின்னப் பேசாமல் படுத்திட்டம்."
"நீ சரியான பேயன்ரா ..." மகேந்திரன் ஏளனம் செய்தான்; "இப்பிடி ஒரு அருமையான இரவை ஆரேன் கோட்டை விடுவானே?"
ஜெகநாதனுக்கு, கான் ஏதோ தவறு விட்டதைப் போன்ற உணர்வு முளைவிட்டது. அவனது முக மாற்றத் தைக் கண்டு, "இல்லை . அவன் செய்ததுதான் சரி1. எங்கடை ஆசைகளுக்காக பொம்பிளையின்ர மனசைப் பாதிக்கிறமாதிரி நடக்கக் கூடாது' சிவகுமார் பரிந்து பேசினன்.
'ஆர் சொன்னது மனசைப் பாதிச்சு நடக்கச் சொல்லி? ஆதரவான அணைப்பாலையும் அன்பான பேச்சா லையும் மனதை மாற்றியிருக்கலாமெண்டுதான் சொல் லுறன்."

Page 58
06 இளமைக் கோலங்கள்
"r if ...... Fifi! ... ... அந்தக் கதையை விடு இப்ப என்ன குடிமுழுகிப் போச்சே?. உன்ரை கதையைக் கேட் டிட்டு அவன் நாளைக்கே ஊருக்கு ஓடப்போருன்!"
சிவகுமார் சொன்னதைக் கேட்டு ஜெகநாதன் சிரிப் போடு கூறினன். போய் லீவு போட்டிட்டு வாறனெண்டு தான் சொல்லிப் போட்டு வந்தனன் . நாளையிண்டைக் குப் போக வேணும்.'
"அப்ப நீ இனி . எங்களோடை இருக்கமாட்டா யெண்டு சொல்லு1. ஒண்டு செய்யடாப்பா . . ஒன் றில் யாழ்ப்பாணத்துக்கு மாற்றம் எடு! அல்லது மணி சியை இஞ்சை கொண்டுவா இல்லையெண்டால் வேலைக்கு முழுக்குப் போட வேண்டித்தான் வரும்."
"இந்த வேலையைக் காட்டித்தானே அந்தச் சீதனம் எடுத்தது . பிறகு இதுகும் போயிட்டால்?" மகேந்திர னின் வழக்கமான கேலிப் பேச்சு.
‘இவனுக்கு எப்பவும் பகிடிதான். இனிக் கதைச்சது காணும் , மச்சான் படுப்பம்" என்றவாறே லைட்டை அணைத்து விட்டுப் படுத்தான் சிவகுமார்.
தன் கட்டிலின் பக்கத்தில் பாயில் படுத்திருந்த மகேந்திரனிடம் ஜெகநாதன் ரகசியமாகக் கேட்டான், * மச்சான் உன்னட்டை ஏதாவது புத்தகங்கள் இருக்கோ?”
"என்ன புத்தகமடாப்பா?”
வேறை என்ன?. விளங்காத மாதிரிக் கேக்கிருய் . எங்கடை ஊர்ப் பெட்டைகளைப் தெரியாதே? ஒரு சவமும் தெரியாது!"
மகேந்திரனுக்குப் பெருமையாக இருக்கது. இந்த விஷயத்தில் தன்னை ஒரு பொருட்டாகப் பாவித்து அவன் பாடம் கேட்கும் பொழுது உதவாமல் இருக்கலாமா?

இளமைக் கோலங்கள் 107
"ஒரு ஃபிரண்டிட்டை இருக்குது. நாளைக்கு வேண்டித் தாறன்."
"கட்டாயம். மறந்திடாதை." -- 'நீ ஒண்டுக்கும் யோசியாதை எல்லாம் வெல்ல аутић.”
கடற்கரைப் பாதையில் ஒரு 'சிலோ றெயின்' ஓடிக் கொண்டிருக்கிற சத்தம் இரவின் அமைதியைக் குலைக்கி fDğ5l.
அத்தியாயம் - 17
வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேறவிருக்கும் கட்டுப்பெத்த வளாக தமிழ் மன்ற மாணவர்களின் நாடகத்திற்குப் போகலாம் என மகேந் திரன் சிவகுமாரை அழைத்தான். சிவகுமாருக்கும் அது நல்ல "ஐடியா' வாகத் தோன்றியது. இருவருமாக, கதைத்துக் கொண்டே மண்டபத்துக்கு நடந்து சென்ருர் Sa .
சில ஏழைச்சிறுவர்கள் வீதியோரத்தில் கொட்டப் பட்டிருக்கும் குப்பைகளிலிருந்து அவர்களுக்குப் பெறுமதி யான பொருட்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிருர்கள்.
"இவங்கள் ஏன் குப்பையைக் கிளறிக்கொண்டிருக்கி ழுங்கள்?’ என்முன் மகேந்திரன்.
'குப்பையில்தானே குண்டுமணி கிடக்குமாம்" என்ற வாறு அவர்கள் பக்கமாக சிவகுமாரும் நோட்டம் செலுத்தி

Page 59
108 இளமைக் கோலங்கள்.
ஞன்; வெற்று பால் மாத் தகரங்கள், அரைகுறையாகப் பழுதடைந்த விளையாட்டுப் பொருட்கள், சிறிய போத் தல்கள், கிழிந்த சப்பாத்துக்கள், அறுந்த செருப்புக்கள்! இவற்றைக் கொண்டு சென்று அவர்கள் காசாக்கக்கூடும். சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவுமாமே? எல்லாம் வயிற்றை நிரப்புகிற முயற்சிதான்!
""மச்சான் வயிறு பசியெடுக்குது ஏதாவது கடிச்சிட்டுப் GuntGauntuh.”
o “grif o o
ஏக்கவுண்ட் கடை வரவேற்றது. ஜெகநாதன் கடையி லிருந்து வெளியே வந்தான். நண்பனுெருவன் இரவுச் சாப் பாட்டிற்கு அழைத்திருப்பதாகவும் வருவதற்கு நேரமா கும் என்றும் கூறிச் சென்றன். இரண்டு நாட்களில் வரு வதாக மனைவியிடம் கூறிவிட்டு வந்தவனுக்கு அலுவலகத் தில் லீவு கிடைக்காதது பெரிய மனக்குறை, மேலதிகாரி களுக்கு அவனது கஷ்டத்தைப் புரிந்து கொள்ள மன தில்லை. நேற்றைய இரவும் எங்கேயோ பார்ட்டிக்கு என்று சென்றவன் நிறை தண்ணியிற்தான் வந்தான். ("மாப்பி ளையெண்டால் தங்கக் கம்பி!. பீடி சுருட்டு தொடுற தில்லை. தண்ணிவென்னி பாவிக்கிறதில்லை. " - கலி யாணப் புருேக்கர்கள் வாழ்க!)
கடையினுள் வந்து அமர்ந்து கொண்டே மகேந்திரன் சொன்னன்;
"மச்சான்1. உனக்கு ஒரு சங்கதி சொல்ல வேணு மெண்டிருந்தனன். Ο .
oor Girr ?” ” Y
**ஜெகநாதன் முடிச்சிருக்கிற பொம்பிளையைப் பற்றி . எனக் கூறிவிட்டு மேற்கொண்டு சொல்லத் தயங்குபவன் போல வாயை மூடினன்.

இளமைக் கோலங்கள் 09
"உனக்கு ஆரையேன் பற்றி சொட்டை சொல்லாமல் இருக்கேலாது"1"
* 'இல்லை. இது உண்மைக்கதை மச்சான். அவள் முந்தி ஒருத்தனேடை இருந்தவள்."
is...... நேரிலை கண்டவன் மாதிரிச் சொல்லுருய்?"
* ஊரெல்லாம் தெரிஞ்ச கதைதானே. அவள் முந்தி யூனிவசிற்றியிலை படிக்கயிக்கை. ஆரம்பிச்ச -தொடர்பு, தான்."
"தொடர் பெண்டால்?.."
" "லவ் தான். ரெண்டுபேரும் ஒரே வீட்டிலைதான் இருந்தவையெண்டும் கேள்வி.”
"அப்ப, கேள்விப்பட்ட கதையைத்தான் சொல்லு ருய்?" சிவகுமாரது கேள்வி அவனைச் சினங்கொள்ளச் செய்தது - ・
"உனக்கு ஒண்டும் சொல்லேலாது. நான் உண்மை யைத்தான் சொல்லுறன் . யூனிவசிற்றியாலை வெளிக் கிட்ட பிறகும் . இவ வேலை செய்கிற இடத்துக்கு அவர் யோய்வாறவராம் . சிங்கள வீட்டிலைதான் இவ இருந் தவ . அவரும் அங்கை மாசக்கணக்கிலை தங்கியிருந்தவ் grrrl.'”
** "மறி பண்ணிக் கொண்டோ?"
'அந்த மாதிரித்தான்!”
'பிறகேன் விட்டவையள்?"
* சாதிப் பிரச்சனைதான் 88 அவன் ஏதோ குறை வாம் . இவையள் காசுக்காருக்கள் . விடுவினமே?”

Page 60
110 இளமைக் கோலங்கள்
"பெட்டையும் ஒமெண்டு விட்டிட்டாளே?"
"அதுதானே . பெரிய இழுபறி நடந்து கதையும் சந்திக்கு வந்தது . அவளுக்கு வேலையும் வேண்டா மெண்டு கொண்டு வந்து எத்தினைநாள் வீட்டுக்கை பூட்டி வைச்சிருந்தவங்கள்."
"அவன் இப்ப எங்கை?"
'பாவம் மச்சான்!. இப்ப எங்கேயோ தெரியாது. அவனையும் பெரிய சித்திரவதை செய்துதான் விட்டவங் கள் . காசு என்னதான் செய்யாது?"
இவ்வளவு நேரமும் குறுக்கு விசாரணை செய்து கொண்டு வந்த சிவகுமார் மெளனம் சாதித்தான். அந்த அப்பாவிக்காக வேதனைப்படுகிருஞ இந்தப் பேதையை எண்ணி வருந்துகிருஞ அல்லது அரக்கத்தனமான செயல் களை எண்ணிக் குமுறுகிருஞ என்பது புரியவில்லை. மூன்று கார ணமாகவும் இருக்கலாம்.
கணக்குக் கொப்பியை எடுத்து தேநீருக்குரிய கணக் கைக் குறித்துவிட்டு வெளியேறினர்கள். கஷியருடைய செயற்கையான சிரிப்பு, போலித்தனமான சம்பிரதாயம். "எங்கை நாடகத்துக்குப் போறியளோ?" தேவையற்ற முக ஸ்துதி.
"இப்ப இவள் ஜெகநாதனை முடிச்சிட்டாள்தானே?" -சிவகுமாருக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது.
"காசு எல்லாத்தையும் மறைச்சுப் போட்டுது."
"அவள் மனமில்லாமல் தான் இது நடந்திருக்கும் எண்டு சொல்லுறியோ?"

இளமைக் கோலங்கள் 11
"அது எப்படியோ!. இவன் பேயன் ஏமாந்து போனன்."
ஜெகநாதன் அடைந்திருப்பது உண்மையில் ஏமாற்றம் தானு என்ற எண்ணம் சிவகுமார் மனதில் முளைவிட்டது. ஜெகநாதனது சுபாவத்தோடு ஒப்பிடுவதானுல் அவனுக்கு இது பெரிய இழப்பில்லை. ஆனல், நியாயமாகவே ஆண் கள் அனைவரும் ஒரு புதிய மனைவியிடம் எதிர்பார்க்கின்ற புனிதத்தன்மை இல்லாது போவதே பெரிய ஏமாற்றம் தானே? அப்படி எதிர்பார்ப்பதற்கு அவன் அருகதை உள் ளவனுகவும் இருக்க வேண்டுமே?
*மகேந்திரன் . உனக்கு ஜெகநாதனைப் பற்றித் தெரி யும்தானே?. அவனும் லேசுப்பட்ட ஆளில்லை."
"அது வேறை விஷயம் மச்சான். ஆரெண்டாலும் தனக்கு வருகிற மனைவி முந்தி ஒருத்தனுக்கு வாழ்க்கைப் பட்டவள் என்ருல் ஒத்துக்கொள்வானே?"
சிவகுமாரால் அதை ஒத்துக் கொள்ள முடியவில்லைத்தான் தெரிந்து செய்வது வேறு விஷயம். தெரியாமல் முடித்து ஏமாறுவது என்ருல் கவலைக்கிடமான சங்கதிதான். இந்த நேரத்தில் ஜெகநாதனுக்காக அனுதாபம் ஏற்பட்டது. மடையன், “காசு, காசு" என்று ஆசைப்பட்டதனுற்தானே இது நேர்ந்தது. இனிக்கடைசிவரையும் இது ரகசியமாகவே இருக்க வேண்டும். இடையில் அறிய வந்தால் அவனது குடும்பத்தில் என்னமாதிரியான பிளவுகளும் விளைவுகளும் நிகழக்கூடும். எல்லாவற்றிற்கும் மேலாக அவளும் மன மொத்துத்தான் இவனை மணமுடித்தாளோ என்பதும் கேள் விக்குரிய விஷயமே". அல்லது நிர்ப்பந்தமோ என்னவோ?
"மகேந்திரன்! е в а. е. е е அவளும் மனமொத்துத்தானே செய்திருப்பாள்?’ என்று தனது சந்தேகத்தை மீண்டும் கேள்வியாக்கினன்.

Page 61
112 இளமைக் கோலங்கள்
**அது என்னவோ தெரியாது . . எனக்கெண்டால் ஐமிச்சம் . அவன் முதலிரவுக் கதை சொல்லயிக்கை கேட்டுக்கொண்டிருந்தனிதானே? . ‘வாழ்க்கை முழுக்க ஒண்டாயிருக்கிற நாங்கள்தானே . இண்டைக்கு வேண்
டாம் என்ருளாம்1. ஆரெண்டாலும் இப்பிடிச்சொல்லு வாளவையே?* ۔۔۔۔
மீண்டும் மெளனம் சாதித்தவாறு நடந்து கொண் டிருந்தான் சிவகுமார். உல்லாசப் பிரயாணிகளாக வந்து வாகனங்களில் பவனிவரும் வெளிநாட்டுக்காரர்களின்மேல் பார்வை விசேஷமாகச் சென்றது. இரு ஆண்களுடன் மிக அன்னியோன்னியமாகப் பழகியவாறு செல்லும் "வெள்ளை' உள்ளம் படைத்த பெண இரு பெண்களுடன் செல்லும் ஒரு ஆண். நீண்ட வயது வித்தியாசமான கிழ, இளம் சோடிகள். எல்லோரும் வாழ்க்கையை அக்குவேறு ஆணி வேருக, அனுபவிப்பதையே தங்கள் தலையாய கடமையாகக் கொண்டவர்கள் போன்ற கோலங்கள். இவர்களுக்கு எந் தப் பிரச்சினைகளுமே இல்லையா?
ஆறுமாதங்கள் லண்டனுக்கு உல்லாசப் பிரயாணிக ளாக சென்று வந்த நடுத்தர வயதான அலுவலக நண்ப னும் மனைவியும் சொன்ன விஷயங்கள் சிவகுமாரது நினை விற்கு வந்தது. அங்கெல்லாம் இளைஞர்களும் யுவதிகளும் மிக அன்னியோன்னியமாகப் பழகுகிறர்களாம். தங்களை "செக்ஸ்" சில் திருப்திப்படுத்துகிறவர்களை சரியாக ஊர்ஜி தப்படுத்திக் கொண்டுதான் மணம் செய்கிருர்களாம். நமது நாட்டுத் திருமணங்கள் 'பெரியோர்களால் நிச்சயிக்கப் படுகிற” சங்கதியைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்படுகிறர் கள்! ஒருவரை ஒருவர் பூரணமாக அறிந்து கொள்ளா மல் எப்படி ஒன்று சேர்ந்து வாழ்வது?
உண்மையோ பொய்யோ கேள்விப்பட்ட அவ்விஷ யத்தை மகேந்திரனுக்குச் சொன்னன் சிவகுமார்.

இளமைக் கோலங்கள் 13
**மச்சான் அவங்கடை பண்பாடு . அந்தச் சூழ் நிலையில் வளந்தவர்களுக்கு அது ஒரு பாரதூரமான விஷய மாகவே இருக்காது. எங்கடை பண்பாடு வேறை1. பெண்கள் பூவைப் போல புனிதமாக இருக்க வேண்டு மெண்டு கருதுறவை எங்கடை ஆக்கள்!"
கதையோடு கதையாக இராமகிருஷ்ண மண்டபம் வரை நடந்ததே தெரியவில்லை.
ஒரு தவறு நடந்தால் அதற்கு மன்னிப்பு இல்லையா? அல்லது ஒரு விபத்து நடந்தால் அதிலிருந்து மீட்சியே ? חנuע60%(ג
சிவகுமார் சொன்னன்; இனி என்ன செய்யிறது?. மச்சான்? "நாங்கள் நினைக்கிற மாதிரி வாழ்க்கை அமையா விட்டால் எங்களுக்கு அமையிற வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்'
‘'நீ வலு லேசாய்ச் சொல்லிப் போட்டாய் . தலை பிடியும் காச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும்."
"எனக்கு இப்ப உன்ரை கதையைக் கேக்கத் தலையிடிக் (355 • • . . . . பேசாமல் வா1. நாடகத்தைப் பார்ப்பம்."
அண்மைக் காலங்களில் கட்டுப்பெத்தை வளாக மான வர்கள் தமிழ் நாடகத்துறைக்கு அளித்துவரும் பங் களிப்பை வியந்து பேசினன் மகேந்திரன். சிவகுமாருக்கு அது ஆச்சரியத்தை அளித்தது; இவனுக்குக் கலைஞானமும் இருக்கிறதே! -
நாடகம் நிறைவு பெற்றதும் பலவித அபிப்பிராயங் களுடன் சனங்கள் கலையத் தொடங்கினர்; **நாடகம் தல் லாய்த்தான் இருக்குது. ஆனல் வேறைமொழிக் கதை தானே?" - "வழக்கமான தமிழ் நாடகங்களிலை இருந்து

Page 62
114 இளமைக் கோலங்கள்
இது வித்தியாசமாயிருக்குது . அது நல்ல வளர்ச்சிக் குரிய அறிகுறிதானே? -' பிறநாட்டுக் கதையெண்டா லும் கெட்டித்தனமாய் மொழிபெயர்த்து இயக்கியிருக்கி ருங்கள்" - "இதைப்போல எங்கடை தமிழ் சமூகத்திலை இருக்கிற பிரச்சினைகளையும் . புதுக் கோணங்களிலே அணுகிச் சித்தரிச்சால் நல்லாய் இருக்கும்."
மகேந்திரன் தனது தொலைநோக்குக் கண்களால் யாரையோ கண்டுவிட்டு அவதிப்பட்டான் "மச்சான்!. ஒரு சோடி வருகுது கண்டியோ?"
"ஆரடாப்பா?"
"மிஸ்டர் அன்ட் மிஸிஸ் அகிலா!”*
அகிலா தூரத்தில் வந்து கொண்டிருந்தாள். ஏற்கனவே திருமணமான தம்பதியரைப் போல அவனேடு அணைந்து இணைந்து அவள் வருவதைப் பார்க்க நல்ல பொருத்தமான துணையாகத்தான் தேடியிருக்கிருள். எனத் தோன்றியது. அண்மையில் வந்து சிவகுமாரைத் கண்டதும் புன்னகையை மலர்த்தினுள். அவனையும் அழைத்துக்கொண்டு அருகே வந் தாள். ராஜேசனுக்கு முதலில் சிவகுமாரையும் பின்னர் மகேந்திரனையும் அறிமுகப்படுத்தினுள். சிநேகயூர்வமான சிரிப்புக்கள், சம்பாஷணைகள். ஒரு பண்பாளனைப் போல ராஜேசன் பழகிய விதம் அவனை கள்ளங்கபடமற்ற ஒருவன் என எண்ணத் தோன்றியது. இவனையா மலருக்கு மலர்தா வும் வண்டு என மகேந்திரன் சொல்கிருன்?
அகிலாகூட அந்த மாதிரித்தான் சொல்லியிருக்கிருள். தப்புக்கணக்கா? எப்படியோ இனி அவன் நல்லவனுக இருந்துவிட்டால் போதுமானது.
"ராஜேஸ் . இவங்களும் பக்கத்து அறைதானே? நான் இவங்களோட போறன் . நீங்க போங்களன் "

இளமைக் கோலங்கள் w 15
என அகிலா கூறியதும் ராஜேசனுடைய முகத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டது. தனது புதிய ஹொண்டா சைக்கிளில் அவளை ஏற்றிக்கொண்டு செல்லலாம் என்ற அவனது இத மான எண்ணத்தில் இடி விழுந்துவிட்டது! குளிர்மையான காற்று ஊடுருவும் பொழுது அவள் மென்மையான கரத் தினுல் தனது வயிற்றைச் சுற்றி வளைத்து அணைத்திருப்பா ளென்ற கற்பனையின் சுகமும் போய்விட்டது. வேண்டா வெறுப்பாகச் “சரி” சொல்லிவிட்டுச் சென்று சைக்கிளை எடுத்து சீற்றத்தோடு உதையத் தொடங்கினன். மோட் டார் சைக்கிள் சீறிக்கொண்டு ஓடியது.
இவர்கள் நடக்கத் தொடங்கினர்கள். வர்த்தக நிலை யங்களில் . ஒடுவதுபோல ஜாலவித்தை காட்டிக்கொண் டிருக்கும் விளம்பர விளக்குகளின் சிரிப்பு அகிலா செய்த காரியம் சரியில்லையென சிவகுமாருக்குப் பட்டது. ராஜே ானுக்கு அது சம்மதமாயிருக்குமோ என்று சந்தேகமாயி ருந்தது. அதை அவளிடமே சொல்லலாமெனத் தோன்றினு லும் மகேந்திரனும் கூட வந்ததால் பேசாமலே வந்தான்.
'சிவா, நாளைக்கு இரவு எங்கட வீட்டில சாப்பாடு . மூன்று பேரும் வாங்க!"
"என்ன விசேஷம்?. கலியாணச் சாப்பாடா?"
அகிலா மென்மையாகச் சிரித்தவாறு அவன்மேற் கோபப்படுவது போன்ற பாவனையிற் பார்வையைச் செலுத்தினுள். அந்த கோபமும் சிரிப்பும் கலந்த நளினம் மகேந்திரனை மயக்கியது.
''... ... அப்பிடியில்லை. அதுக்கு இன்னும் நாள் கிடக்கு. இப்ப சும் மாதான்!" "அதென்ன . g2(5 நாளும் இல்லாத திருநாள் சும்மா?"

Page 63
16 இளமைக் கோலங்கள்
மகேந்திரன் தேவையில்லா மற் சிரித்தான். அகிலா வோடு சமமாக நடந்து வருவதிலும் . அவளது பேச் சைக் கேட்பதிலும் அற்ப திருப்தி ஏற்பட்டது.
""நாளைக்கு என்ர பேர்த்டே." என்ருள் அகிலா.
"அப்பிடியா சங்கதி . வெறிகுட் ராஜேசும் வரு sumr rmT?......” .
"அவருக்கும் சொன்னன். . வரயில்லை என்னுட் டார் K. அவர் வீட்டுக்கு அவ்வளவாய் வாறதில்லை . அதுகும் நல்லம்தானே . பிறகு ஏதேன் கதைப்பானு கள். நீங்கள் . இப்பெல்லாம் கடையில தானே சாப் பிடுறிங்க . அதுதான் சொன்னன் . ஒரு "சேன்ஞ் சாய் இருக்கும்தானே? வாங்க .
தெரிந்தோ தெரியாமலோ அவளுக்கு பொருளாதா ரச் சிக்கலை ஏற்படுத்த விரும்பாதவன் சிவகுமார். எனினும் அவளது வற்புறுத்தலையும் புறக்கணிக்கமுடியவில்லை.
"அகிலா . ஜெகநாதனையும் கூட்டியாறதா? அவன் வருவானே தெரியாது . பிறகு நீங்கள் மருந்து போட மாட்டீங்கள்தானே?" என பகிடியாகக் கேட்டான் சிவ குமார்,
அகிலா கபடம் இல்லாமல் சிரித்தாள்.

அத்தியாயம் - 18
இருள்வதற்கு முன்னரே சிவகுமார் வந்து விட் டான். அகிலாவிற்கு "ஹப்பி பேர்த்டே" கிடைத்தது. முகத்திலே தென்பட்ட மகிழ்ச்சி செயற்கையாகப்பட்டது. அப்படியென்றல் மனப்பூர்வமாக இல்லையா? என்ன கார ணம்? ஏதேனும் கவலையாக இருக்குமா? அகிலாவுக்குக் காரணம் கேட்கத் துணிவில்லாமலிருந்தது, குழம்பிய மன நிலையில் அவன் இருக்கும்போது நேரடியாகக் காரணத் தைக் கேட்டால் சிலவேளைகளில் சினந்தும் கதைத்து விடு வான். பின்னர் அதற்காக அவனே வருத்தப்படுவான். அது அவளுக்கும் கவலையைக் கொடுக்கும். சுற்றி வளைத் துத் தான் விஷயத்தைக் கேட்டறிய வேண்டும்.
"என்ன சிவா, உங்கட பிரன்ட்ஸ் வரமாட்டானு களா?.தனிய வந்திருக்கிறீங்க?" -
"வருவாங்கள். ஒசிச் சாப்பாடென்ருல் விடுவாங் களே? 'சிவகுமார் சற்று வேடிக்கையாகப் பேசிய விதம் அவன் அவ்வளவு மோசமான மன நிலையில் இல்லையென் பதை உணர்த்தியது.
"ஐயோ, பாவங்கள்.அப்பிடிச் சொல்லான்த யுங்கோ!"
"நான் விளையாட்டுக்குத்தான் சொன்னஞன். நீங் கள் எல்லாரையும் பாவம் பாக்கிறீங்கள். அவங்களும் அப்படி நினைக்க வேணுமே?
"அவனுகள்...எப்படியும் இருக்கட்டும்.எங்களுக் குத் தொல்லை தராட்டிச் சரி தான்!" f

Page 64
18 ; G it இளமைக் காலங்கள்
"அதைத் தான் நானும் சொல்லுறன்."
*"அது சரி.சிவா?. என்ன ஒரு மாதிரி இருக் கிறீங்க???
"எனக்கு ஒரு குறையுமில்லை நல்லாய்த் தான் இருக் கிறன்.
' * grib toir...... டூப்விடாதையுங்களேன் . குறையில்ல என்கிறதே ஏதோ குறை இருக்கு என்னுமாப்போலை யிருக்கே?"
குசினியிலிருந்து "சுவையான வாசனை வருகிறது. *பேர்த்டே" பார்ட்டிக்கு அம்மா சமையலில் ஈடுபட்டிருக்
கிருள்.
*அகிலா.உங்களுக்கே ன் இந்தத் தேவையில்லாத சிலவெல்லாம்?..."
"இதென்ன பெரிய சிலவு?...கடயில சாப்பிட்டு உங் களுக்கும் அலுத்திருக்கும்.அது தான் "பேர்த்டே"யை சாட்டி வரச் சொன்னன். இல்லைன்ன வரவேமாட்டீங்க. ஒரு நாளைக்காவது உங்கட வயிறு குளிரச் சமைச்சுப் போட வேணுமெண்டு தான் ஆசை.. அது தான் கூப்பிட்டன்."
அகிலா சொன்ன காரணம் அவனை உணர்ச்சி வசப்பட வைத்தது. என்ன பெண் இவள்? அல்லது பெண்கள் எல் லோருமே இப்படித் தானு? அவங்கள் இவளைப் பற்றி இல் லாத பொல்லாத கதைகளையெல்லாம் சொல்லித் திரி வதைத் தன் காதுபடக் கேட்ட பின்னரும் இப்படியொரு எண்ணமா? அவங்கள் தின்ருல் என்ன கிடந்தால் என்ன என்ற கோபம் வரவில்லையா? கடைகளிலும் கன்ரீனிலும் தின்றது பாதி தின்னதது பாதி என்று அவர்கள் திரிவது இவ ளது மனதையும் பாதிக்கிறதா? அல்லது "உங்கள்" என

இளமைக் கோலங்கள் 19
அவள் குறிப்பிட்டது தன்னை மாத்திர மா? அப்படி நினைத்த பொழுது ஒரு குதூகலம் மனதை ஆட்கொண்டது. இந் தக் கையால் சீவியம் முழுக்க சாப்பிட்டுக் கொண்டிருக்க லாமே! மறு கணமே அந்த நினைவு சுருக்" கென்று தைத் தது. அதற்குக் குடுத்து வைத்தவன் ராஜேசன்தான்.
சடுதியாக எதையோ நினைத்துக் கொண்டவன் போலக் கேட்டான்,
"அகிலா நேற்று இரவு நீங்கள் செய்த வேலை சரி udict)?"
அகிலா திடுக்குற்ருள். தான் ஏதாவது தவறு செய்து விட்டேன? அதுதான் அவனது வாட்டத்திற்குக் கார GBT L DIT?
o o GT6ör Gor 6aumr?”
"மிஸ்டர் ராஜேசனை அனுப்பிவிட்டு எங்களோடை தனிய வந்தீங்கள்.அவர் என்ன நினைச்சாரோ தெரியாது"
பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டவள்போல அகிலா சிரித் தாள். 'இதுதான உங்கட கவலை? நான் என்ன தணி யவா வந்தன்?...நீங்க இரண்டு பேர் துணைக்கு வந்தீங்க ..வீணு அவர் அலையிறது ஏன் என்று நினைச் சுத் தான் போகச் சொன்னன்."
"அதை அவர் விரும்பியிருக்க மாட்டார்!"
"நீங்கள் சொல்லுறது விளங்குது.அப்பிடி Syans rif.
சந்தேகப்படத் தேவையில்லை.என்னில எனக்கு நம்பிக் கையிருக்கு."
'நீங்கள் இப்படிச் சொல்லுறீங்கள். ஆம்பிளை யளின்ரை மனம் அதைக் கேட்காது! ஒரு பெண்ணைக் காத

Page 65
20 இளமைக் கோலங்கள்
லிக்கிருனென்ருல் அவன்ரை மனதும் அவளைச் சுற்றியே சுருங்கி விடும்.அவள் எதைச் செய்தாலும் தனக்காகத் தான் செய்ய வேணும் என்று விரும்புவான். உங்கட துணைக்காக வேறை ஆம்பிளை வாறது என்பதே அவனைப் பொறுத்தவரை பாரதூரமாக மண்தைத் தாக்கியிருக்கும்."
அகிலாவுக்கு இனம் புரியாத கவலையொன்று உள் ளத்தை நெரித்தது. ராஜேசன் நேற்றைய இரவு மோட் டார் சைக்கிளுக்கு உதைத்த உதை பளிச்சென நெஞ்சி லிடித்தது. இன்று அலுவலகத்துக்கு லீவு போட்டதற்கும் அது தான் காரணமோ? "சிக்" என்று துண்டு அனுப்பி யிருந்தான். என்ன சிக்? மனமோ? கொஞ்சமாவது முன் யோசனையோடு நடந்திருக்கலாம் தான்.
"இனி என்ன செய்யிற..இருங்க தேத்தண்ணி
போட்டிட்டு வாறேன்" என்றவாறே எழுந்து சென்ருள்.
அவள் அப்போதைய நிலைமையைச் சமாளிக்கத்தான் அப் படிச் செய்கிருள் என அவன் நினைத்தான்.
சற்று நேரத்தில் மகேந்திரனும் ஜெகநாதனும் வந்தார் கள். "ஹப்பி பேர்த்டே ரூ யூ" சொன்னர்கள். (ஆஹா என்ன பண்பு) சிரித்துச் சிரித்துப் பேசினர்கள் பேசிக் கொண்டே இருக்க நேரம் கடந்தது.
சாப்பாடு மேசைக்கு வந்தது. கண்களை மூடிக் கொண்டு மூக்குமுட்டப் பிடித்தார்கள். உண்மையிலேயே நல்ல சாப்பாடு எனப் புகழ்ந்தான் ஜெகநாதன். எதற் கெடுத்தாலும் மருந்து மாயம் எனப் பழி சொல்இற வனுக்கு இன்றைக்கு எப்படி ஞானம் பிறந்தது! தனக்குத் திருமணம் முடிந்து விட்ட படியால் இனி எதற்கும் பயப் படத் தேவையில்லையென நினைக்கிருன் போலும்,
சிவகுமார் அவ்வளவு உற்சாகமாகக் காணப்படவில்லை, நண்பர்கள் விடைபெற்ற பின்னரும் சிவகுமார் அங்கேயே

இளமைக் கோலங்கள் Η Α. Η
இருந்தான். அவனிடம் கவலைக்கான காரணத்தைக் கே. டாள் அகிலா. அன்று வீட்டிலிருந்து வந்திருந்த கடித மொன்றை எடுத்து நீட்டினன் பதிலுக்கு.
கடிதத்தை வாசித்து முடித்ததும் அவளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த மகிழ்ச்சியில் மலர்ந்த முகத்தோடு அவ னைப் பார்த்தாள்.அவன் புன்முறுவல் செய்தான். அதில் நிறைவில்லை.
இந்த விஷயத்துக்குப் போய் யாராவது கவலைப்படு வார்களா என்று தோன்றியது
“என்ன சிவா?.மகிழ்ச்சிப்பட வேண்டிய விஷயத் துக்குக் கவலைப்படுறிங்க!"
"மகிழ்ச்சி தான். ஆனல், என்ன செய்கிறது?"
"ஏன்?" அவனது புதிரைப் புரிந்து கொள்ள முடியா மல் கேள்வி கேட்டாள்.
"இப்ப இதுக்காகக் காசுக்கு எங்கை போறது? இருக் கிற பிரச்சினைக்குள்ள இது வேறை தலையிலை விழுந்திட்டிது .என்ரை கஷ்டம் எனக்குத் தானே தெரியும்."
சிவகுமாரது தம்பி சிவராசனுக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைத்துவிட்ட செய்தி தான் கடிதத்தில் வந் திருந்தது. அதை நினைக்க அவனுக்குப் பெருமையே ஏற்
• lیسا اLJ
தான் படித்து டொக்டராக வேண்டுமென சிவகுமா ரும் நினைத்திருந்தான். குடும்பத்தில் பொருளாதாரச் சிக் கலினல் இடையிலே படிப்பைநிறுத்தி உத்தியோகத்துக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டமை அவ னைப் பொறுத்தவரை பெரிய ஏமாற்றமே. இப்பொழுது

Page 66
22 இளமைக் கோலங்கள்
தனது உடன் பிறந்த தம்பி அந்த ஆசையை நிறைவு செய் யப் போகிறன். அப்படியே ஒடிச் சென்று அவனைக் கட்டி யணைத்துத் தனது நன்றியைச் சொல்ல வேண்டும் போன்ற துடிப்பு. அதையும் மீறிச் சடுதியாக அவனைப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்புவதானல் அதற்கு வேண்டிய செலவு களை எப்படிச் சமாளிப்பதென்ற தவிப்பு.
அகிலாவுக்குக் கவலை மேலிட்டது. எத்தனையோ பேர் எத்தனையோ விதமாகவெல்லாம் பணத்தைச் சேர்த்து வீண் பொழுது போக்குக்களுக்கும் அநியாயக் கிருமங்களுக் கும் செலவு செய்கிறர்கள். இப்படி நல்ல மனதோடு முன்னிேறத் துடிக்கின்ற பிள்ளைகளைத்தான் கடவுள் சோதிக்கின்ருர், بیبیسی"
'சிவா!..எவ்வளவு காசு தேவைப்படும்?”
அவனுக்குச் சிரிப்பு வந்தது.
"என்ன அகிலா.ஏதோ கேட்டவுடனை தரப்போற மாதிரிக் கேட்கிறீங்கள்?"
"சரி1.எனக்கு அவ்வளவு உதவி செய்யிற அருகதை யில்லத்தான்! உங்கட கவலையிலை நானும் சேரக்கூடாதா? சும்மா அறியிறதுக்காகத் தான் கேட்டன்" -பொய்க் கோபம், அதுகூட அவனை அசைத்து விட்டது.
சொன்னன்.
அகிலா தெம்பூட்டினுள் ' என்ன சிவா இதுக்குப்போய் பயப்படுறிங்க.நீங்க ஆம்பிளை தானே?."சிம்பிளா"
யோசியுங்க எல்லாம் சரி வரும்."
"அதுக்கில்லை அகிலா. இப்பவே சம்பளத்திலை மிஞ் சிற தில்லை. வீட்டுக்கு அனுப்புறது. என்ர சாப்பாட்

இளமைக் கோலங்கள் 23
டுச் சிலவுகள்.பாங்க் லோன் எடுத்தது மாதம் நூற்று அறுபது சொச்சம் வெட்டியிடுவாங்கள். இந்த விசித்திரத் திலை நான் இன்னெரு கடனைப்பட்டிட்டு அதை எப்படி அடைக்கிறது? அவன் கம்பசுக்குப் போனுப் பிறகும் மாசம் மாசம் அனுப்ப வேண்டியிருக்குமே?”
* பிறகு வாறதை நினைச்சு ஏன் "வொறி" பண்றிங்க. இதுதான் உங்கள்ளை இருக்கிற பலவீனம். எங்கட கஷ் டத்தைப் பார்த்து ஒரு பிள்ளையிட.படிப்பைக் கெடுக் கிறதா?...இப்ப உள்ள பிரச்சினைக்கு ஏதாவது வழி செய் வம். பிறகு எல்லாம் சரி வரும்.
அதுகூடச் சரியான வாதம்தான். இன்றைக்கு வசதி யில்லையென்று கையை விரித்துவிட்டால் நாளைக்கு அவன் எங்கேயாவது ஒரு சாதாரண கிளார்க்காக. தனக்குத் தானே சுமையாகவும் தனக்கு மேலும் இறக்க முடியாத பளுவைச் சுமந்து கொண்டு?
இரவு நேரம் கடந்துவிட்டது. அவன் விடைபெற்ற போது அகிலா தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி அவனிடம் நீட்டினுள்.
**அகிலா என்ன இது?"
"உங்களுக்குத் தேவையான காசைத் தருகிற வில் லமை இப்ப இதுக்கு இருக்கு."
அவனது வாய் அடைத்துப் போய்விட்டது. முயன்று கதைத்தான்.
"அகிலா.உங்களிட்ட இருக்கிறதே இந்த ஒரே யொரு சங்கிலிதான். நீங்கள் வேலைக்கும் வெளியிலேயும்

Page 67
丑24 ۔۔۔۔۔۔ இளமைக் கோலங்கள்
போகைக்கை இதுதான் கழுத்திலை இருக்குது. அதைச்
கழட்டித் தந்திட்டால்?"
*சிவா, சங்கிலி தங்கத்தில செய்து போடுறது இப்பிடி
ஏதாவது ஆபத்துக்கு உதவுமெண்டுதான்."
அவனுக்கு மனது கேட்கவில்லை.
** வேண்டாம் அகிலா.அம்மாவுக்குத் தெரியாமல் நீங்கள் இதைச் செய்யுறிங்கள்.சரியில்லை.நான் எப் படியாவது காசு பிரட்டுவன். கவலைப்படாதையுங்கோ' எனக் கடத்தினன்.
"அம்மாவுக்கும் சொல்லி யிட்டன்."
**இல்லை. எனக்காகத்தான் இப்படி எல்லாம் சொல் லுறீங்கள். என்ர கஷ்டம் என்னுேடை! தயவு செய்து
9
வைச்சிருங்கோ. என்றவாறு சங்கிலியை வேண்ட
மறுத்தான்.
** என்ன சிவா இது? அது ஒரு நல்ல காரியத்துக்கு உதவுது என்ட சந்தோஷம் எனக்கு இல்லையா?...இதுக் கும் மேலே கேக்காட்டி எனக்குக் கோபம்தான் வரும், கதைக்க மாட்டன்" என்றவாறு அவனது கையைப் பிடித் துக் கொடுத்தாள்.
அவனது கண்கள் பணித்து விட்டன.

அத்தியாயம் - 19
விடியப்புறமாக நாய் குரைத்த சத்தத்தில் எழுந்த பூமணி சிவகுமாரைக் கண்டதும் "எட தம்பி!. இப்ப, தானேடா வாழுய்?" என மகிழ்ச்சியோடு முற்றத்துக்கு இறங்கி வந்தாள். ஆளையறியாமல் முதலில் குரைத்த ஜிம்மிநாய் பின்னர் அவனைச் சுற்றிச் சுற்றி, தொங்கி விழுந்து கைகளை நக்கித் தனது விசுவாசத்தைக் காட்டத் தொடங்கியது. அவனேடு சேர்ந்து விருந்தைக்கும் ஏறியது.
"அங்காலை போ. இறங்கு கீழை.!" என அம்மா அதட்டினுள்.
சிவகுமார் பயணப் பையை ஒரு பக்கத்தில் வைத்து விட்டு சப்பாத்துக்களைக் கழற்றி கால்களை விடுவித்தான். அவனையே பார்த்துக்கொண்டிருந்த அம்மா, "என்னடா தம்பி. சரியாய் வயக்கட்டுப் போனுய்? என அனுதாபப் பட்டாள். அவனுக்கு அதற்குப் பதில் சொல்ல வேண்டும் போற் தோன்றவில்லை. 'இரு தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறன்" என்றவாறே அம்மா குசினிக்குப் போனள்.
அவனுக்கு எரிச்சலாக இருந்தது. "உடனடியாக வர வும்" என்று தந்தி அடித்துவிட்டு காரணத்தைச் சொல்லா மல் இருந்தால்? நேற்றுத் தந்தியைக் கண்டதும் அவன் எவ் வளவு பதட்டமடைந்தான். என்னவோ ஏதோ என்று ஏக்க மடைந்தான். அம்மாவுக்கு ஏதாவது சுகவீனமோ? அல் லது அப்பாவுக்கு? ஒருவேளை அக்காவின் சம்பந்த விஷயங் கள் ஏதாவது ஒப்பேறியிருக்குமோ?

Page 68
126 இளமைக் கோலங்கள்
காலையில் வந்து வீட்டையும் அம்மாவையும் தரிசித்த பின்னரே பெரிய நிம்மதி தோன்றியது. எனினும் என் னவோ ஏதோ என்ற தவிப்பு இன்னும் இருக்கத்தான் செய்தது.
சிவகுமார் வந்திருப்பது தெரிந்து அக்காவும் தம்பியும் எழுந்து வந்தார்கள். இந்த ஆரவாரத்தில் சின்னவனும் எழுந்து சிணுங்கிக் கொண்டே வந்தான்.
"இஞ்சற்ரு பெரியண்ணை வந்திருக்கிருர்!" என அவ னுக்கு ஏதோ அற்புதத்தைக் காட்டுவது போன்ற பாவனை யில் அம்மா அடுப்படியில் இருந்து வந்தாள்.
"என்ன தம்பி எங்களையெல்லாம் அடியோடை மறந் திட்டியோ? இந்தப் பக்கம் வந்து எத்தினை மாசம்?’ என அக்கா குறைப்பட்டாள். அதற்கு ஒரு மெல்லிய சிரிப்பைப் பதிலாக உதிர்த்து சமாளித்துக் கொண்டான்.
தனக்குப் பக்கத்தில் பேசாமல் அமர்ந்திருந்த சிவரா, சனிடம் "உனக்கு எப்ப கம்பஸ் துவங்குது?" எனக் கரிசனை யோடு விசாரித்தான் சிவகுமார். விடியப்புறமே எழுந்து பின் வளவுக்கு தோட்டப்பக்கம் சென்ற அப்பா திரும்பி வந்தபொழுது மகன் வந்திருக்கிற அசுகை அறிந்து ஒன் றும் பேசாமல் செம்பை எடுத்துக் கொண்டு பால் எடுப்ப தற்காக மாட்டுக் கெர்ட்டில் பக்கம் போனர். அது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அப்பா என்ன கோபக்காரனைப் போல ஒன்றுமே பேசாமல் போகிருர்?
இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அவனுகவே கேட்டான். م ..."
"அம்மா! என்னணை ஏதோ அவசரமாய்த் தந்தி அடிச் சியள், பிறகு ஒரு கதையுமில்லாமல் இருக்கிறியள்?"

இளமைக் கோலங்கள் 127
அதற்கு என்ன பதில் சொல்லலாமென்று.சங்கடம் அம் மாவுக்கு. பின்னர் ஒருவாறு சமாளித்துக் கொண்டு; V
** ஏன் அவசரமெண்டாத்தானே தந்தி அடிக்க வேணும்?. நீ இஞ்சை வீட்டுக்கு வந்து எத்தினை மாசம்? வீட்டிலையும் தாய் தேப்பன் சகோதரங்கள் இருக்குதெண்ட நினைவில்லையே உனக்கு?"
சப்பென்று போய்விட்டது. "இவ்வளவு தானு சங் கதி??? -
உங்களுக்கு வேறை வேலையில்லை! நானும் என்னவோ ஏதோவெண்டு பயந்திட்டன்."
"நாங்களும் அப்படித்தான் பயந்து கொண்டிருக்கி pւb.''
சிவகுமாருக்கு "திக் கென்றது. இதென்ன அம்மாவுக் கும் என்னவோ ஏதோ என்ற தவிப்பு?
** என்னணை விளங்கச் சொல்லன்?"
"அதெல்லாம் பிறகு ஆறுதலாகச் சொல்லுறன். நீ போய் முதல்லை கால் முகத்தைக் கழுவிக் கொண்டு வா!'
'தம்பி மறைக்காமல் சொல்லடா? நீயேன் கனநா ளாய் வீட்டுக்கு வரயில்லை?"
"அடிக்கடி வாறதுக்கு நானென்ன பெரிய சம்பளக் Bir prC36or?’’
அம்மாவுக்கு இந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை, “முந்தியெண்டால் அடிக்கடி ஓடி வருவாய்!. இப்ப
இந்தப் பக்கத்தையே மறந்திட்டாய்" எனத் தனது சந் தேகத்தை வெளிப்படுத்தினள்.

Page 69
128 இளமைக் கோலங்கள்
அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனச் சிவ குமாருக்கு புரியவில்லை. உண்மையிலே தான் முன்னரைப் போல அடிக்கடி வராமல் விட்டதற்கு என்ன காரணம்? அந்தக் காரணம் தெரியாமலே அவன் கன நாட்கள் கொழும் பில் நின்றிருக்கிருன். அப்படி ஊருக்கு வராத குறையே அவனுக்குப் பெரிதாகத் தோன்றியதுமில்லைத்தான். கொழும்பு வாழ்க்கை பழகிப் போய்விட்ட காரணமா?
ஊருக்கு வருவதென்முல் சும்மாவா? எப்பொழுது தான் கையில் மேலதிகமாகக் காசு இருந்திருக்கிறது? இப் பொழுது தந்தியைக் கண்டவுடனும் கடன்பட்டுக்கொண்டு தானே ஓடிவந்திருக்கிருன்.
"அம்மா! நெடுகலும் ஒரு மாதிரியே. வர வர எனக்கு எத்தனை பொறுப்புக்கள் கூடுது? அதையெல்லாம் சு மக்கிறதெண்டால் என்ரை ஆசைகளை கொஞ்ச மெண்டா லும் விட்டுக் குடுக்கத்தானே வேணும்? எனக்கு ஊருக்கு வாறதுக்கு ஆசை இல்லையே?’ சிவகுமார் இப்படிக் கூறிய பொழுது கலைச்செல்வியின் நினைவும் கூடவே எழுந்தது.
"எடேய் ராசா. சொல்லுகிறனெண்டு குறை நினை
யாதையடா தம்பி. நீங்களெல்லாம் கொப்பரின் ரை விருப்பப்படிதான் நடக்க வேணும். உங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட மனுசன் அவர். கொப்பற்ரை
குணம் தெரியும்தானே? அவற்றை விருப்பத்துக்கு மாருய் ஏதேன் நடந்துதெண்டால் பிறகு பிள்ளையெண்டும் பாக்க LDrl L–tri. உங்களுக்குள்ளை ஏதேன் பிணக்கெண்டால் பிறகு என்னைக் கண்ணிலையும் காணமாட்டியள்."
அம்மாவின் உபதேசம் சிவகுமாருக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மா இப்படி யெல்லாம் எச்சரிப்பதற்குக் காரணம்? என்ன ஒருவேளை கலைச்செல்வியின் விஷயம் வெளிப்பட்டு விட்டதோ? சத்தியநாதன் வீட்டுக்குசிவகுமார்

இளமைக் கோலங்கள் 129
போய்வருகின்ற சங்கதியும் சாடைமாடையாக அம்மா வுக்குத் தெரியும். 'ஏன் தம்பி சும்மா சும்மா அங்கை போ முய். அங்கை ஒரு குமர்ப்பிள்ளை இருக்குதெல்லே? பிறகு மளர் வேறை விதமாகக் கதைக்கும்" எனத் தடுத்துமிருக் கிருள்.
"இப்ப ஏன் இந்தத் தேவையில்லாத கதையெல்லாம் கதைக்கிறீங்கள்? நான் ஏதோ உங்கடை விருப்பத்துக்கு மாரு ய் ஒருத்தியைக் கொண்டு வந்துவிட்ட மாதிரியெல்லே கதைக்கிறியள். இதுக்குத்தானே இவ்வளவு அவசரமாய்த் தந்தியடிச்சுக் கூப்பிட்டனிங்கள்? சிவகுமார் எரிந்து விழுந் தான். இதற்குப் பின்னர் நீண்ட நேரம் மெளனம் நிலவி யது. தம்பியின் இக்கட்டான நிலைமையைக் காண சுகந்திக் கும் மன வருத்தமாக இருந்தது. அவளும் ஒன்றுமே பேசா மல் எழுந்து சென்றுள்.
மகன் தன்மேல் எரிந்து விழுந்தது பூமணிக்கு கவலையா பிருந்தது. எப்படி இருந்தாலும் குடும்பத்தில் ஒரு சச்சர வும் இல்லாமல் தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையில் சுமு கமான உறவு இருக்க வேண்டும் என்பதுதான் அவளது ஏ க்கம். "மனிசன் ஒரு பிடிச்சிராவி. இதுகளும். இனி தலைக்குமேலை வளந்திட்டுதுகள். ஏதாவது எதிர்க்கதை கதைச்சுப் போடுதுகளோ" என்ற பயம்தான். சிவகுமார் சாப்பிட்டு இடையில் எழுவதைக் கண்ட பூமணி.
'தம்பி . எடேய். GT 6äraorlrt அதுக்கிடையில எழும்பியிட்டாய் .இந்தாடா இன்னுமொருக்கால் போடு
றன் சாப்பிடு!". அவன் ஒன்றுமே பேசாமல் முற்றத்துக் குச் சென்று கையைக் கழுவினன்.
தன்மேல் ஏற்பட்ட கோபத்தினு ற் தான் அவன் இடை யிலை எழுந்து போய் விட்டான் என எண்ணியதும் வயிற் றைப் பற்றி எரிந்தது பூமணிக்கு. அழுகையே வந்துவிடும் போலிருந்தது. அந்த நேரம் அவளுக்கு கணவன் மேலும்

Page 70
30 இளமைக் கோலங்கள்
ஆத்திரம் ஏற்பட்டது பிள்ளைகளின் விருப்பங்களுக்கு கொஞ்சமெண்டாலும் விட்டுக் கொடுக்காமல் ஏன்தான் இப்படி பிடிவாதக்காரராய் இருக்கிருரோ? இந்த அந்நியக் கெட்டதுகளோடை கிடந்து உலையாமல் வேளைக்குத் துலைஞ் சிடலாமெண்டால் இந்தக் கடவுளுக்கும் கண்ணில்லாமல் போச் சுது” என அங்கலாய்த்துக் கொண்டாள்.
விருந்தைக்கு வந்தபொழுது அப்பா முதல்தரமாகக் கதைத்தார்.
* எத்தனை நாள் லீவு போட்டிட்டு வந்தனி?" "مر
கதையை ஆரம்பிக்க இதைத் தவிர வேறு விஷயம் அவருக்கு கிடைக்கவில்லை. அவரது கேள்விக்கு ஒரு சொல் லில் பதிலளித்து விட்டு நின்றன் சிவகுமார்.
'உன்ரை ற்ருன்சர் விஷயம் இப்ப என்னமாதிரி இருக்கு?’ எனக் குறுக்கு விசாரணை ஆரம்பமாகியது.
கொழும்பில் நாலு வருடங்களுக்கு மேல் சேவை செய்துவிட சிவகுமாருக்கு காலிக்கு மாற்றம் கிடைத்திருந் தது. நாட்டில் இனக் கலவரங்கள் நடைபெற்ற க்ாலமாக இருந்தபடியால் அதைக் குறிப்பிட்டு யாழ்ப்பாணப்பகு திக்கு மாற்றம் எடுப்பதற்கு விண்ணப்பிக்குமாறு அருளு சலம் மாஸ்டர் கூறியிருந்தார்.
'கடிதம் எழுதியிருக்கிறன். ஒரு பதிலையும் கான யில்லை. சிலவேளை போகவேண்டி வந்தாலும் வரும்.'
சற்றுநேரம் யோசித்துக் கொண்டிருந்தார். பின்னர் நிதானமாகச் சொன்னர்,
"எல்லாத்துக்கும் பயப்பட்டாமல் சீவிக்கேலுமே? விதிப்
படி நடக்கிறது நடக்கட்டும். இன்ன நேரத்திலை இப்படி நடக்கவேணும் எண்டு எழுதியிருந்தால் அது காலியில்

இளமைக் கோலங்கள் 131
இருந்தாலென்ன கொழும்பிலை இருந்தாலென்ன நடந்து தான் தீரும்."
தந்தை எதைக் குறிபிடுகிறர் என்பது அவனுக்குப் புரிந்தது. இனக்கலவரம் நடந்த பொழுது போக வேண் டாம் என்றவர் இப்பொழுது போகுமாறு பணிக்கிருர், இடையில் அவரிடம் ஏற்பட்ட மாற்றத்துக்குக் காரணம் என்ன என்பது மாத்திரம் புரியாத ஆச்சரியமாகவே இருந் தது. எப்படியாவது மாறிச் செல்லவேண்டிய நிர்ப்பந்த மேற்பட்டால் தான் பயப்படுவேன் என்ற உணர்வில் தெம் பளிப்பதற்காக அப்படிக் கூறினரா அல்லது?
வெகுநேரத்திற்குப் பின்னர் சுகந்தி தம்பியோடு கதைத்துக் கொண்டிருந்தபொழுது ஒரு விஷயத்தைக் கூறினுள்.
'போனமாதம் . உன்ரை றுாம்மேற். ஒருத்தர் இஞ்சை வந்தவர்.”
அவன் எதிர்பாராத சங்கதி இது.
'உன்னைப் பற்றி அப்பா கேட்டவர்"
*"அவன் என்ன சொன்னவன்?"
"நல்லாய் . ஏதோ . அள்ளி வைச்சிட்டுத்தான் போனவன் . உடனை இஞ்சை அப்பா, அம்மாவோடை துள்ளிஅடிச்சுக் கொண்டு வரவெளிக்கிட்டார் . பிறகு
அம்மா ஒரு மாதிரி சொல்லிக்கில்லி நிற்பாட்டினவ."
அவன் என்ன சொல்லியிருப்பான் என்பதில் சந்தேகம் இல்லை. அதுதான் அப்பாவின் மாற்றத்துக்கு காரணம் என நினைத்துக்கொண்டான்.
"நெடுகலும் ஒரு இடத்திலை இருந்து வேலை செய்யக்
கூடாது" எனத் தந்தை கூறியதற்கு வேறு எந்த நியாய முமே தேவையில்லை.

Page 71
I 32 இளமைக் கோலங்கள்
"எல்லாம் விதிப்படிதான் நடக்கும். பயப்படாமல் போ!' எனக் கூறுகின்ற தந்தை, தான் நினைத்துப் பயப் படுவதை போல ஏதாவது நடக்குமென்ருலும் அதையும் ஏன் "விதிப்படி' என நினைத்துக் கொள்ள மறுக்கிருர்?
இப்படியான நினைவுகள் அவனுள் எழுந்த பொழுது இந்த உலக வாழ்க்கை மீதே வெறுப்பு ஏற்பட்டது. எண் னிக் காட்டிவிட்டுப் போகக் கூடிய சில வருட வாழ்க் கைக் குத்தானே இந்தப் போலி கெளரவங்களும் பாராட் டுக்களும்? இப்படி நினைத்த பொழுது கலியாணமே ஒரு தேவையில்லாத விஷயமாகத் தெரிந்தது. எல்லாருமே வலுசீக்கிரத்தில் சாகப் போகிருேம். அதற்கிடையில் வாழ்க்கையை சற்று இலகுவாக்குவதற்கு ஒருவருக்கொரு வர் துணை தேவைப்படுகிறது. யாருக்கு யாரென்று தேர்ந்து கொள்வதற்கு இடையில் இத்தனை சிக்கல்களா?
மனதை ஆட்கொண்டு ஆக்கிரமிக்கின்ற வெறுப்பை யும் விரக்தியையும் தீர்க்கின்ற வழி புரியவில்லை. வீட் டிலே இருந்தால் இந்த மனக்கிளர்ச்சி இன்னும் விகார மடைந்து கொண்டிருந்தது. உடனடியாக ஆறுதல் தேவைப்பட்டது. ---
குழம்பிய மனத்தோடு சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அவன் போகப் போகிற இடம் அம்மா வுக்குத் தெரியும்.
'இவ்வளவு படிச்சுப் படிச்சுச் சொன்னப் பிறகும் எங்கையடா போழுய்?"
அம்மாவின் கண்டிப்பான குரலையும் பொருட்படுக் தாது அவன் செல்வியின் வீட்டுக்குச் சென்று கொண் டிருந்தான்.

அ த்தியாயம் - 20
சிதிக நாட்கள் யாழ்ப்பாணத்தில் நிற்பதற்குப் பிடிக்கவில்லை, சிவகுமாருக்கு. அப்பா கோபக்காரனைப் போல இருக்கிருர், எந்தப் பக்கம் பாடுவது என்ற சங் கடம் அம்மாவுக்கு. இந்த விசித்திரத்தில் வீட்டிலே இருப் பது எப்படி? -
செல்வி கூடச் சிணுங்குகிருள்; "நீங்கள் இப்ப என் னைத் துப்பரவாக மறந்திட்டீங்கள். " "நான் ஒருத்தி இஞ்சை உங்களுக்காக இருக்கிறதே உங்களுக்கு நினை வில்லை."-செல்வியை மறக்க முடியுமா? அவளுக்கு அதை எப்படிப் புரிய வைப்பது. அவனது ஆறுதலே அவள் தானே. அவனுல் தன்னை மறக்க முடியாது என்பது அவ ளுக்குத் தெரியும், ஆனலும் நெடுநாட்கள் காணுது இருக்க முடியாமல் தான் அப்படிக் கூறுகிருள் என நினைத் தான். சகல பிரச்சினைகளாலும் தாக்கப்படுகின்ற மன துக்கு ஒத்தடம் கொடுப்பது போன்ற சுகத்தை அளிப்பது அவளது நினைவு தானே? முன்னரைப்போல அடிக்கடி அந்த நினைவு எழுவதில்லைத் தான். எப்பொழுதாவது இருந்து விட்டுக் கிளர்ந்து வந்து மனதை ஆக்கிரமித்துக் கொள் ளும். அவனது துணைவியாக அவள் இருந்தால் எவ்வளவு நன்ருயிருக்கும்! அவன் எதற்குமே கவலைப்படமாட்டான். எல்லாவற்றையும் அவளே கொண்டு நடத்துவாள்; தேற்று வாள்; ஆற்றுவாள்; அவனை மடியில் கிடத்தி நெற்றியை யும் தலையையும் வருடிக் கவலைகளை மறக்கச் செய்வாள் - இப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிருன், தனிமை யான ஒரு வீட்டிலே அவளோடு அமைதியாகக் குடும்பம் நடத்தி வாழ்வதாகக் கனவு கண்டிருக்கிருன், கை நிறை

Page 72
134 - இளமைக் கோலங்கள்
யச் சம்பளம் தருகின்ற நிரந்தரமான ஒரு உத்தியோகம். ஒரு கார், ஒரு வீடு-வீடு நிறையத் தளபாடங்கள், பூஞ் செடிகள், - மலர்களைப் போன்ற குழந்தைகள். அவள் எல்லாவற்றையும் ஒரு ராணியைப்போல நிர்வகிப்பாள்அவனை இயக்குவாள்; இயக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்திருக்கிருன். இந்த உத்தியோகத்திலிருந்து கொண்டு என்னத்தைத் தான் வெட்டிப் பிடுங்க முடி கிறது? கைநிறையக் காசு வந்தால் மறுநாளே போகிற வழி தெரியவில்லை. அப்படி விலைவாசிகள் உயர்வு. பொறுப் புக்கள், பிரச்சினைகள், சுமைகள்!
அவன் இப்பொழுதுகூட “சரி” என்று ஒரு வார்த்தை சொன்னல் போதுமாம் கையைப் பிடித்துக் கொண்டு வந்து விடுவாளாம்-செல்வி சொல்கிருள். அப்படிச் சொன்ன நேரத்தில் கிளர்த்தெழுந்த இன்பத்துக்கு அள வில்லை. அவனை நம்பி வர-அவனுக்காக ஒருத்தி ஆனல், கூட்டிக் கொண்டு எங்கே தான் போவது? கொழும்பிலே இல்லாத ஒன்றுக்காக இவ்வளவு தலையைப்போட்டு உடைக் கும் அப்பா. இதை அறிந்தால் பொல்லுத் தூக்கிக் கொண்டு வரமாட்டாரா? அப்படியென்ருல் அப்பா சொல்வதுபோல அவர் பார்த்துக் கொண்டு வருகின்ற எங் கேயோ இருக்கிற, முன் பின் தெரியாத ஒருத்திக்குத் தான் தாலியைக் கட்ட வேண்டுமா?-"நோ!"
செல்வியைக் காதலித்திருக்கவே கூடாது. பாவம். எப் படி உருகிப் போய்விட்டாள் - இவனுடைய நினைவாம் மலர்கின்ற பருவத்தில் மொட்டாக இருந்த அவள் மனம், இவனை நினைத்து நினைத்தேஇதழை விரித்து இவனுக்காகவே ஏங்குகின்ற மலர். செல்வியிடம் கண்ணிரிலே விடை பெற்று வந்தாயிற்று-ஒரு முடிவும் சொல்லாமலே 'எல் லாம் கடவுள் விட்ட வழி" என்று சொன்னன். தனது துணிவற்ற தன்மையை மூடிமறைக்க இப்படியானதொரு மடைத் தனமான பதிலைச் சொல்ல வேண்டியிருந்தது. அவன் நினைத்தபடி ஒருத்தியைக் கூட்டிக் கொண்டு வந்

இளமைக் கோலங்கள் 35
தால் என்ன குடியா முழுகிப் போய்விடும்? இது அப்பா வுக்கு ஏன் புரியவில்லை? அப்பா தராதரங்கள் பார்த்துக் கொண்டு வருகிற ஒருத்தி நாளைக்கு இவனது மனத்துக்கு ஒத்துவரா விட்டால் யார் பழி?
கடலின் பரப்பிலிருந்து எதையோ சாதிக்கப் போவது போல வீறுகொண்டு ஓடி வருகின்ற அலைகள் கரையில் மடிந்து போகின்றன.-மீண்டும் அதே அலைகளின் ஆவேச மான ஓசை, A
கொழும்புக்கு வந்தால் மகேந்திரன் புதிய செய்தி யோடு காத்திருக்கிருன். . .
"மச்சான், ஜெகநாதனுக்கும் மணிசிக்காறிக்கும் இடை யிலை குழப்பம்!”
"உனக்கு நல்ல கதையே பேசத் தெரியாதா?’-சிவ குமார் ஆத்திரத்தோடுதான் கேட்டான். ஆனல் அப்படி ஏதாவது ஆகியிருக்குமோ என்ற எண்ணமும் தோன்றியது.
வாகனமொன்று "சடின் பிறேக்" போடுகிற இரைச்சல் -யாரோ குறுக்கே போயிருக்க வேண்டும். நிதானமாக நின்று பார்த்துப் போயிருக்கலாம். அதன் குறுக்கே போயிருக்கவும் தேவையில்லை. அதன் வழியைத் தடை செய்திருக்கவும் தேவையில்லை. எப்படியோ விபத்து நடக்காவிட்டால் சரிதான்.
* மச்சான், உனக்கு நான் என்ன சொன்னுலும் பகிடி தான். ஆனல், இது உண்மை."
மகேந்திரன் காய்கறிகளை நறுக்கியபடியே கூறிஞன். இப்பொழுதும் இடையிடையே சமையல் செய்கிறர்கள். ஊருக்குப் போனல் அம்மா மிளகாய்த்தூள் இடித்துக் கொடுத்து விடுவாள். ('தம்பி நேரங் கிடைக்கிற நேரம்

Page 73
136 இளமைக் கோலங்கள்
ஏதாவது சத்துள்ள சாப்பாட்டைச் சமைத்துச் சாப்பிடு «e » 40 0ı «e w கடையிலை சாப்பிட்டு சாப்பிட்டு எலும்பும் தோலு மாய்ப் போனுய்.")
"உனக்கு எப்பிடித் தெரியும்?"-சிவகுமார் மகேந் திரனிடம் கேட்டான்.
"அவன் தான் சொன்னவன்..நீ இஞ்சை இல்லாத நாளெல்லாம் ஒரே குடிதான் பாவி."
"இப்ப எங்கை போட்டான்?"
"எங்கையாவது குடிக்கத்தான் போயிருப்பான்."
**வரட்டும் கதைப்பம்."
"நீ என்னத்தைச் சொல்லித் திருத்தப் போருய்?. அவனுக்கு அந்த விஷயங்கள் தெரிஞ்சிட்டுது போலையிருக் குது.”
அந்த விஷயங்கள் என அவன் குறிப்பிடுகின்ற, ஏற் கனவே தன் மனைவி ஒருத்தனுக்கு வாழ்க்கைப்பட்ட வள் என்ற சங்கதி தெரிய வந்தால் அவனது மனது எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை உணர முடிந்தது. செல் வியைக் காதலிப்பதாலும் அவளால் காதலிக்கப்படுவ தாலும் தான் அடைகின்ற பெருமையை அவன் அனு பவிக்க முடியாது. தனக்கு வரப்போகிறவள் உள்ளத் தாலும் உடலாலும் தூய்மையான வளாக இருக்க வேண் டும் என்ற ஒர்மம் என் இந்த ஆண்களின் மனதில் பதிந்து போயிருக்கிறது? அப்படி எதிர்ப்பார்க்கின்ற வர்கள் ஏன் அதை ஒரு பக்கமாக மாத்திரம் கற்பனை செய்கிருர்கள்?
ஜெகநாதன் செய்த திருகுதாளங்கள் கொஞ்ச நஞ் சமா? "உன்னிடம் மயங்குகிறேன்" என்று ஒருத்திக்குச்

இளமைக் கோலங்கள் 星37
கடிதம் கொடுத்து, அவளுக்குப் பின்னல் அலைந்து திரிந்து கையும் களவுமாகப் பிடிபட்டு வெள்ளவத்தைச் சந்தியில் வைத்து அவளது ஆட்களால் நல்ல உதையும் பட்டிருக் கிருன். அவற்றையெல்லாம் பழைய கனவுகளாக மறந்து விட முடியுமானல். இவற்றைப் புதிய உறவுகளாக ஏற்க . ஏன் மனது வெறுக்கிறது?
அன்று அகிலா நேரம் கழித்தே வீட்டுக்கு வந்தாள்.
"என்ன பிள்ளை இவ்வளவு நேரமும் செய்தாய்?. இருண்டு போச்சுது. இது எங்கட ஊருகள் மாதிரியா?. சந்திக்குச் சந்தி காவாலிகள் நிற்குருனுகள். நேரத்தோட வீட்டுக்கு வந்திட வேணும்."
அம்மாவின் எச்சரிக்கையான பேச்சை அவ்வளவு பெரிது படுத்தாமலே பதில் சொன்னுள் அகிலா, "ஏனம்மா பயப்படுறிங்க? நான் என்ன சின்னப் பிள் ளையா.உழைக்கிறதுக்கென்று ஊரைவிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறம். அப்பறம் என்ன பயம்?. G 6ોuર્ટo கள் தலைக்கு மேலே இருந்திச்சு. ஓவர்ரைம் செய்தால் காசு தானே?.ராஜேசன் கூட்டி வந்து விட்டிட்டுத்தான் போனவர்.”*
அதற்குப் பிறகு அம்மா பேசவில்லை. அகிலாவின் குர லைக் கேட்டதும் சிவகுமார் எழுந்து வந்தான், "எப்பிடி அகிலா ஓவர்ரைம்?" என்று கேட்டவாறே.
அவனது கேலிக் கதையைக் கேட்டு குப்பென்று முகம் சிவந்தவள், அம்மாவின் முன்னிலையில் அந்தக் கதைை வளர்க்க விரும்பாமல்;
"எப்ப வந்தீங்க சிவா?" எனக் கதையை மாற்றினுள்.
அவனை அம்மாவோடை கதைத்துக் கொண்டிருக்க விட்டு குளித்து உடைமாற்றி வருவதற்குச் சென்ருள்.

Page 74
38 இளமைக் கோலங்கள்
"எப்படித் தம்பி ஊரிலை.பெத்தவங்க.சகோ தரங்கள் பாடு?’
"பரவாயில்லை"
அகிலா தேநீரோடு வந்தாள். "என்ன சிவா, அதுக் கிடையிலை திரும்பிட்டீங்க?"
"ஏன் வரக் கூடாதா?
"அதுக்கில்லை! கனநாளப்க்கப்புறம் போனிங்க. உங் கட செல்வியை விட்டிட்டு இவ்வளவு கெதியிலை வரமாட் டீங்க என்று நினைச்சன்."
செல்வி உண்மை தான்-அவளைவிட்டு எப்படி வர
முடிந்தது? வருகின்ற பொழுது அவள் அழாக்குறையாகச் சொன்னுள்;
'at liuaylb...... செல்வி, செல்வி என்றுதான் கூப்பிடு நீங்கள். பிறகு வாழ்க்கை முழுதும் என்னைச் செல்வி யாகவே இருக்க விட்டிடாதையுங்கோ."
"செல்வி வட் யூ மீன்?"
அவள் கூட அவனைச் சந்தேகிக்கிருளா? அப்பாவுக்குச் சொல்வதுபோல அவளின் பிஞ்சு மனத்திலும் யாராவது நஞ்சைப் போட்டிருப்பார்களேர்?
"என்ன செல்வி சந்தேகமா?"
"இல்லை உங்களைச் சந்தேகப்படேலுமா? நீங்கள் எனக்குத்தான்-அதைவிட வேறை ஆரோடையும் உங் களைச் சேர்த்து நினைக்கக்கூட எனக்கு எலாது. முக்தி அடிக்கடி ஓடி வருவீங்கள். இப்ப எவ்வளவோ நா% க் குப் பிறகு வந்து, வந்த சுவடே தெரியாமல் ஓடிப்

இளமைக் கோலங்கள் 139
போநீங்கள்.'அதற்குமேல் கதைக்க முடியாதவளைப்போல அழுதாள் அதை நினைத்துக் கொண்டு இப்பொழுது இவனது நெஞ்சு குமுறியது. கண்கள் கலங்கிக் கண்ணின் இமைகளை உடைத்துக் கொண்டு உருண்டது. அதைக் கண்டு அகிலா பதறிப் போனள்.
"சிவா என்ன இது? நான் ஏதாவது தேவையில்லா ததைச் சொல்லியிட்டேன?*
அப்பொழுதுதான் அவளுக்கு அவனை வீட்டிலிருந்து உடனடியாக அழைத்த தந்தி ஞாபகத்துக்கு வந்தது. ஒரு வேளை வீட்டில் வேறு கலியாணம் பேசியிருப்பார்களோ?
*சிவா...ஏன் தொட்டதுக்கெல்லாம் கவலைப்படு நீங்க?. வீட்டிலை ஏதாவது பிரச்சினையா?"
"இல்லை."
"அப்புறம் எதுக்குத் தந்தி குடுத்தாங்க" என ஆதர வோடு கேட்டாள். அம்மா அவ்விடத்தில் நிற்கிருளா என்று பார்த்துவிட்டுத் தனது தாவணித் தலைப்பை எடுத்து அவனது கண்ணிரைத் துடைக்குமாறு சொன்னுள். அவனும் ஒரு தாயின் அரவணைப்புக்குக் கட்டுப்படுகிற குழந்தையைப்போல அப்படியே செய்தான்.
**ஜெகநாதன் எனக்குக் கலியாணம் பேசிப் போயிருக் கிருன்" என்று சொன்னன்.
அவளுக்கு விளங்கவில்லை.
**அவர் ஏதோ மிஸிஸ் சோடை மனஸ்தாபப்பட்டுக் கொண்டு இப்ப ஊருக்குப் போகாமல் குடிச்சுக் கொண்டு திரிகிருரே' எனத் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தி ணுள.

Page 75
140 இளமைக் கோலங்கள்
* மற்றவனுக்குக் கெட்டது நினைச்சால் அது தனக்கு நடக்கிறதுக்குக் கனநாள் செல்லுமா?. நாங்கள் நிர்ண யிக்கிற விலையிலேயே தீர்க்கப்படுவம் என்றது அவனுக்குத் தெரியவில்லை" என ஆத்திரத்தோடு சொல்லிவிட்டு, இரண்டு மாதத்திற்கு முன்னர் ஜெகநாதன் திருமணத்திற் காகச் சென்றிருந்த பொழுது தன் வீட்டுக்கும் சென்று இல் லாதது பொல்லாததுகளையெல்லாம் அள்ளி வைத்துவிட்ட சங்கதியைக் கூறினன்.
"எனக்கு இருந்த பிரச்சினைக்குள்ள ஊருக்குப் போக வும் , நேரம் கிடைக்கயில்லை. கடிதமும் போடுறது குறைவு ... அதுதான் அதுகளும் என்னவோ ஏதோ என்று பயந்து தந்தி அடிச்சிருக்குதுகள்." என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே ஜெகநாதன் நிறைதண்ணியில் வந்து பக்கத்து அறையில் அலட்டுவது கேட்டது. சிவ குமார் போக விடைபெற்ற பொழுது அகிலா தடுத்தாள். "வேண்டாம் சிவா. அவரும் வெறியிலை நிற்கிருர். அப்புறம் வீண் பிரச்சினைகள் வரும்."
சிவகுமார் சிரித்தபடி கூறினன். "நீங்கள் பயப்படா தையுங்கோ. நான் அதைப் பற்றி ஒண்டும் கதைக்கமாட் டன். அவங்கடை அவங்கடை மனது அப்பிடி! நாங்கள் என்ன செய்யிறது.மனிசியோ டை சண்டை பிடித்துக் கொண்டு வந்திருக்கிருணும். என்னெண்டு கேட்டுப்
L_unr rit l'ı Lu líb. ʼ ''
சிவகுமாரைக் கண்டதும், ஜெகநாதன் "ஹலோ! சிவா" என்று குசலம் விசாரித்தான். "யூ ஆர் லக்கி
பெலோ மச்சான்' என்ருன்.
"நான் அதிர்ஷ்டக்காரனெண்டு நீதான் சொல்லுருய். எனக்கென்றல் அப்பிடித் தெரியவில்லை--என்ன விஷயம்?"

இளமைக் கோலங்கள் 14
'உனக்கென்ன குறை? ஊரிலை மனம் நிறைஞ்ச காதலி. இஞ்சை நல்லதொரு சிநேகிதி.
'உனக்கு இன்னும் இந்தக் குணம் விட்டுப் போக யில்லை. சரி போகட்டும். உனக்கு என்ன குறை? ஏன் இப்பிடிக் குடிச்சு அழிகிருய்?”
"வேறை என்ன செய்ய மச்சான். காசு வேணும் வேணுமெண்டு பெரிய இடத்திலை கட்டினன்.இப்ப அது கும் இல்லை. இதுகும் இல்லை."
"நீயாக எதையா வது கற்பனை பண்ணியிருப்பாய்?. உன்ரை பழக்கமே அதுதானே?"
'இல்லை அவள் தலைக்கணம் பிடிச்சவள்."
தலைமயிரைக் கோதியவாறு அவன் விரக்தி ததும்பக் கதைப்பதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. மகேந் திரன் தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரட்டை நீட்டி னன். 'இந்தா மச்சான்."
அவன் திரும்பிப் பார்த்துவிட்டு 'வேண்டாம்!" எனத் தலையை அசைத்தான்- 'நான் குறைச் சிகரட் குடிக்கிற தில்லை." மகேந்திரன் வற்புறுத்தவில்லை. ஆனல் அவ னது மாற்றத்தை நினைக்க வியப்பாக இருந்தது. முன்ன ரென்ருல் ஒரு சிகரட் குடிக்க விடமாட்டான்; '' பட்" டைத் தா மச்சான்!" என்று அரைவாசிக்கு வருமுன்னரே பறித்து விடுவான். இப்பொழுது என்ன நேர்ந்தது?
**இந்த ரெண்டு மாதத்துக்குள்ள எத்தனையோ பிரச் சினை வந்தது. எனக்கு அந்த ஊரிலை இருக்கவே பிடிக்க வில்லே, என்னுேடை கொழும்புக்கு வரச் சொன்னலும் மாட்டாளாம். அவள் தினைத்தபடி ஆட நானென்ன மடை யனே? இப்ப உத்தியோகம் பார்க்கப் போறனெண்டு

Page 76
42 இளமைக் கோலங்கள்
நிக்கிருள். எனக்கு அது விருப்பமில்லை. சொல்லிப் பார்த் 56it...... கேட்கிருளில்லை. "நீங்கள் எனக்கு ஒன்றும் சொல்லத் தேவையில்லை’ எண் டு சொல்லுகிருள். அவள் படிச்சவளாம்! பணக்காரியெண்ட திமிர் 1 நான் சொல் லாமல் வேறை ஆர் சொல்லுறது? ...நீ என்னத்தை யாவது செய்யடி ஆத்தை எண்டிட்டு வந்திட்டன்."
*" என்னடாப்பா கலியாணம் முடிச்சு ரெண்டு மாதத் துக்கிடையிலை இப்படியெண்டால்?"
'இனிச் சீவியத்துக்கும் வேண்டாமெண்டுதான் வந் திட்ட்ன்."
"அப்ப என்ன செய்யப் போருய்?’ என்று அனுதாபத் தோடு கேட்டான் சிவகுமார்.
*விளையாட்டுக் கல்யாணமே. வெறும் விபரீத முடி வாகுமே" என ராகம் இழுத்துப் பாடினன் ஜெகநாதன். அவனது கட்டைக் குரலில் அந்தப் பாட்டைக் கேட்ட பொழுது இசைத்தட்டு மெதுவாகச் சுழலும்பொழுது ஏற் படுகின்ற இயக்கமற்ற ஒசையைப்போல அசிங்கமாக இருந் தது. அவன் இருக்கின்ற நிலையில் இதற்கு மேலும் கதைப் பதால் பிரயோசனமில்லையென்றும் தோன்றியது.
“ “ gf tif... ... சரி முகத்தைக் கழுவிவிட்டு வா மச்சான் சாப்பிடுவம்..நீ ஒண்டுக்கும் யோசியாதை...எல்லாம் வெல்லலாம்’ என்று மகேந்திரன் தந்திரமாக அழைத் தான்.
"வேண்டாம்.நான் கடையில சாப்பிட்டிட்டுத் தான் வந்தனன். எனக்கு ஒருதரும் தேவையில்லை. என்ரை காலிலை நிற்கத் தெரியும் எனக்கு" எனக் கூறி விட்டு உடையை மாற்ற முயன்றன். அதுகூட முடியாமல் நிலைதடுமாறி அப்படியே கட்டிலிற் குப்புற விழுந்து படுத்
தான்.

அத்தியாயம் -21
இருள் அகலாத அதிகாலையிலே ஜெகநாதனுக்கு விழிப்பு ஏற்பட்டுவிட்டது. இன்றைக்கும் நேரத்துடனே விழிப்படையச் செய்தது அந்தக் குருவியின் பாடல்தான், ஒவ்வொருநாளும் விடிவதற்கு முன்னரே வந்துவிடுகிறது. அறையின் பக்கத்தே உள்ள செடிகளிலும் வேலியின் மரக் கொப்புகளிலும் தத்தித் தத்தி இருந்து தனது மென்மை யான குரலால் இராகம் இசைத்துப் பாடுகிறது. அந்த ஓசை சோகத்துடன் யாரையோ அழைப்பது போன்ற பிரமை யையே ஜெகநாதனுக்கு அளிக்கிறது.
தூரத்திலே காகங்கள் கரைகின்ற சத்தம். அவைக ளும் இனிக் கலைந்து தங்கள் சாப்பாட்டுக்காகப் பறக்கும். இடையிடையே வீதி வாகனங்களின் இரைச்சல். விடியற் காலையிலே வேலைகளுக்கு நடந்து செல்லும் தொழிலாளிக ளின் காலடி யோசை, வயிற்றுப்பாட்டுக்காக எல்லோருமே எல்லாமே ஆயத்தமாகிவிட, இந்தச் சின்னக் குருவிக்கு மட்டும் அந்த யோசனையே இல்லையா? செட்டைகளை உதறி உடலைச் சிலிர்த்தது. தன் தலையையும் சிறிய கண்களையும் திருப்பித் திருப்பி எங்கோ எங்கோவெல்லாம் பார்க்கிறது. பின்னர் அழுவது போலப் பாடுகிறது. தனது துணையைத் தேடுகிறதோ?
"இப்படி ஒருவரை ஒருவர் பிரிந்து கொண்டு எத்தனை நாட்களுக்குத்தான் சீவிக்கப் போlங்கள்? பஞ்சலிங்கத் தார் அடிக்கடி தூது வந்து கேட்பார் இவன் சீறிச் சினந்து அனுப்பி விடுவான்; உந்த விசர்க் கதையளை என்னுேடை கதைக்காமல் போங்கோ-இணிச் சீவியத்துக்கும் அவள்

Page 77
144 இளமைக் கோலங்கள்
வேண்டாம், அவள் வேண்டாம் என்று சொல்ல முடிகிறது.
ஆனல் அறுபது நாட்கள் ஒன்ருக வைத்திருந்த கட்டிவின் இனிய நினைவுகள்?
ஆறு மாதங்கள் இடைவெளி. ஊர்ப்பக்கமே தலைகாட் டவில்லை. அவள் வேண்டாமென்ருல் ஊரே வேண்டா மென்று அர்த்தமா? அம்மாவும் வேண்டாம் - அப்பாவும் வேண்டாம். யாரை நினைத்தாலுமே வெறுப்புத்தான். ஆனல் இப்பொழுது அவளது நினைவு இடையிடையே இத யத்தை நெருடிக் கொண்டு வருகிறது-குருவியின் சோக கீதத்தைப் போல, 'தூரத்தே வா! வா!" என அழைக்கின்ற கடலோசை,
கட்டிலிற் படுத்திருந்தவாறே பக்கத்துக் கட்டிலில் அயர்ந்து தூங்குகிற சிவகுமாரைப் பார்த்தான், பாவம்அவன் கூட எத்தனை நாட்கள் இவனை வற்புறுத்தியிருக்கி முன்-"இந்த வயதிலை, உன்ரை வாழ்க்கையைப் பாழாக்கி நதுக்கு பின்னடிக்குத் தான் கவலைப்படுவாய்! சொல்லுற தைக் கேள் மச்சான் விட்டுக் குடுத்து வாழ்கிற மனப் பான்மை வேணும்' இவன் எந்தப் பேச்சையுமே கேட்க வில்லை. இவர் பெரிய மனிசன் எனக்குப் புத்தி சொல்ல வாருர்" என ஏளனமாக எண்ணியிருக்கிருன். ஆனல் அவன் , எவ்வளவு துரோகமாகத் தான் நடந்து கொண்ட போதிலும் எதையுமே பெரிதுபடுத்தாமற் பெரிய பண் பாளனுக பழகுகிருன். இந்தப் பெருந்தன்மை - மனப்பக்கு வம் வேறுயாருக்கு வரும்? இப்படி உலகத்தில் எத்தனை பேர் இருப்பார்கள்? எல்லோருமே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு சுயநலம் கருதாமல் உதவிசெய்யும் மனப் பான்மையோடு ஐக்கியமாக வாழப் பழகினல் வாழ்க்கை எவ்வளவு சுலபமானதாகவும் இன்பமாகவும் இருக்கும்!
இப்படியெல்லாம் நினைத்து விட்டு மனவிரக்தியோடு சிரித்துக் கொண்டான் ஜெகநாதன். மகேந்திரன் இருந்

இளமைக் கோலங்கள்
கால் எதையாவது கதைத்து மனப்பாரத்தைக் கொஞ்சம் இறக்கலாம். இன்றைக்கு அவன் இல்லை. இப்பெn (புது கொஞ்ச நாட்களாக அவனைக் காணக் கிடைப்பதே அரி தாகத்தான் இருக்கிறது. எங்கே போய் விடுகிருனே? சில இரவுகளில் படுக்கைக்கும் வருவதில்லை. காரணம் கேட் டால் ஏதாவது உருட்டுப் பிரட்டுக் கதைகளைச் சொல்லிக் குழப்பி விடுவான்.
காலை ஒன்பது மணிக்குப்பின்னர் அறைக்கு வந்தான் மகேந்திரன். சனிக்கிழமையாதலால் நண்பர்களும் அறை யில் இருந்தார்கள். சிவகுமார் பாத் ரூமில் தன் உடைகளைக் கழுவிக் கொண்டிருந்தான். அழுக்கேறுகிற உடைகளைச் சேர்த்து வைத்திருந்து இப்படிச் சனி ஞாயிற்றுக்கிழமை களில் தானே கழுவிக் கொள்வான். எல்லாவற்றையும் 'லோண்டறியில் போடுவதானுல் கட்டாது. அகிலாவி டம் "அயன் இருக்கிறது. அவள் கெட்டிக்காரி, தன் சிறிய சம்பளத்திலேயே இப்படி ஏதாவது பொருள்களை வேண்டி குருவியைப்போல சிறுகச் சிறுக சேர்த்துக் கொள்கிருள். உடைகளைக் கழுவி உலர்த்திவிட்டு அங்கே கொண்டு சென்று அயன் பண்ணலாம். சிலவேளை அகிலாவே அயன் பண்ணிக் கொடுப்பாள். முன்னர் இந்த வசதி இல்லாத போது கழுவி உலர்ந்த பின்னர் இரவு படுக்கைக்கு முன் தலையணைக்குக் கீழ் மடித்து வைத்து விட்டுப் படுத்தால் விடிய அணிவதற்கு "ரெடி' யாகிவிடும்!
சிவகுமார் தனது அலுவல்களை முடித்துக் கொண்டு அறையினுள் வந்து ஆறுதலாக அமர்ந்தபொழுது மகேந்தி ரன் "மச்சான் எனக்கு ஒரு உதவி செய்வாயா?’ என்று கேட்டான்,
"இவன் எ கற்கு அத்திவாரம் இடுகிருன்?" என நினைத்த பொழுது .னம் "திக்" "திக்" என்று அடித்துக் கென
- தி.

Page 78
146 இளமைக் கோலங்கள்
அப்படி என்ன உதவியாயிருக்கும்? ஏதாவது காசு தேவைப்படுகிறதோ? பொதுவாகவே கைவசம் மேலதிக மாகக் காசு இருப்பதில்லை. இந்த நிலையிலை நண்பர்கள் யாராவது அவசரத்தில் கைமாற்றுக் கேட்டால் பெரிய சங்கடம் ஏற்படும். எந்த முகத்தை வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லுவது? சொன்னலும் அவன் நம்பு வானே என்னவோ? அவன் நம்பினலும் அவனுக்கு உள்ள அவசரத்தேவைக்கு கொடுக்க முடியாமற் போய்விட்டதே என்ற கவலை தோன்றும்.
"என். ஞலை. ஏலக் கூடியதென்ருல் செய்யிறன். சொல்லு!' - இவன் 'திக் கித் "திக் கிப் பதிலளித்தான்.
"உன்னலை நிச்சயம் ஏலும்!” - இதென்னடா "தர்ம சங்கடம். காசு தேவையென்றலும் நண்பர்களிடம் இப்ப டித்தான் சுற்றி வளைத்துக் கொண்டு வருவார்கள். காசு கடனுகக் கொடுப்பதென்றலும் அது கூட ஒருவித "தர்மம்' தான். தனது குறைந்த பட்ச தேவைகளுக்காக கைவசம் தற்செயலாக இருக்கிறசொற்ப காசில் பங்கிட்டுக்கொடுத்து விட்டால் அது திரும்புவதற்கு பல மாதங்கள் கூட தவணை யெடுக்கும். சில வேளை திரும்பி வராமலும் விடும். ஏனென் ருல் வேண்டியவனது கையிலும் சம்பளக்காசு மிஞ்ச வேண்டுமே!
"சரி, விஷயத்தைச் சொல்லு என்ன காசு G33560au unr?”
"இல்லை மச்சான். எனக்கு நீங்கள் தான் சாட்சிக்
கையெழுத்துப் போடவேணும் நான் கலியாணம் முடிக்கப் போறன்!"
வெள்ளவத்தை தேவாலய மணி கணிரென ஒலித்து வாழ்த்துக் கூறியது!

இளமைக் கோலங்கள் 147.
'இதென்ன புதுக் கதையாய் இருக்கு. எங்களுக்கு ஏன் இவ்வளவு நாளும் சொல்லயில்லை. ஆரடாப்பா பொம்பிளை???
சுவர்ணு"
நண்பர்கள் இருவரும் யார் அந்தச் சுவர்ணு என்ற சிந்தனையில் ஆழ்ந்தனர்.
"அட உன்ரை சிங்கள ரீச்சரே?" என வினவினுன் ஜெக நாதன்.
‘ஓம்’ என மகேந்திரனிடமிருந்து நிதானமாகப் பதில் வந்தது.
ஆச்சரியந்தான். இப்படி நடக்குமென்று அவர்கள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. மகேந்திரனுக்கு அவ ளோடு "கொனெக்சன்" இருக்கிற விஷயம் சிவகுமாரைவிட ஜெகநாதனுக்குத்தான் கூடத் தெரியும். எனினும் அது இவ்வளவு தூரத்துக்குப் போய் முடியும் என நினைத்திருக் கவில்லை.
"அப்ப வசமாய் மாட்டியிட்டாய் எண்டு சொல்லு. என்ன மருந்தைப் போட்டு மடக்கினவளவை? எனக்கு அப் பவே தெரியும் இப்படி நடக்குமென்று!" ஜெகநாதனது பேச்சு மகேந்திரனுக்குச் சற்று எரிச்சலையும் ஊட்டியது.
""உனக்கு இந்த விசயத்திலை ஞானம் கூடத்தான்-உந்த விசர்க்கதையளை இனியாவது விடு. அவையள் ஒரு மருந் தும் போடவில்லை, மாயமும் செய்யவில்லை. நானுய்த்தான் விரும்பிச் செய்யுறன்" - எனப் பதிலளித்தான்.
ஜெகநாதன் அவனது கோபத்தைப் பொருட்படுத்தா மல் 'ஏன்ராப்பா உனக்கு ஊரிலை ஒரு நல்ல பொம்பிளை கிடைக்கயில்லையே?. போயும் போயும் ஒரு சிங்களத்தியே கிடைச்சிருக்கிருள்?’ என்ருன்.

Page 79
148 இளமைக் கோலங்கள்
மகேந்திரனது ஆத்திரம் எல்லை மீறிக்கொண்டு வந் தது. ‘ஏன் முடிச்சுப்போட்டு பிறகு உன்னைப் போலை விட் டிட்டு வந்து இருக்கச் சொல்லுறியோ?" என ஒரு போடு
போட்டான்.
ஜெகநாதனது வாய் அடைத்துக் கொண்டது. தான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது என்று பிறகுதான் மகேந் திரனுக்குத் தோன்றியது.
இவ்வளவு நேரமும் அவர்களது சம்பாஷணையைக் 956 னித்துக் கொண்டு பேசாமலிருந்த சிவகுமார் இப்பொழுது வாயைத் திறந்தான்.
"மகேந்திரன் ஏன் இப்படி அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்தனி?”
'அவசரப்பட்டில்லை. ஆறுதலாய் கனநாள் யோசித் துத்தான் முடிவை எடுத்தணுன்."
"இந்த வயசிலை இருக்கிற துடிப்பிலையும் ஆசையிலை யும் நீ இப்பிடி ஒரு முடிவை எடுக்கலாம். பிறகு காலம் போகப் போக அதுக்காகக் கவலைப்பட வேண்டியும் வரும். அவள் உன்னேடை ஒத்துவருவாளோ என்றது என்ன நிச்சயம்?"
**முன்னைப்பின்னை தெரியாமல் பேசிச் செய்யிற பொம் பிளையளே ஒத்து வாழ்க்கை நடத்துகினம் - இதிலை என்ன புதிசாய் பார்க்க இருக்கு - நான் அவளோடு கனநாள் பழ கிய பிறகுதான் இந்த முடிவை எடுத்தனன்.”
"என்ருலும்- நீ ஒரு தமிழ் இந்து. அவள் ஒரு சிங் கள கிறிஸ்டியன்’
"இனம் மதம் என்று பிரிச்சுப் பேசிறதாலை என்ன மர் சான் இருக்கு? எல்லாரும் மணிசர்தானே? மதங்கள் எல் லாம் வெவ்வேறு கோணத்திலை ஒரே வாழ்க்கை முறை

இளமைக் கோலங்கள் 及49
யைத்தானே சொல்லுது. மனசு ஒத்துப்போனல் சரி. மொழிப்பிரச்சினை கூட இல்லை! இப்ப. நான் நல்லாய்ச் சிங்களம் பேசுவன். அவள் நல்லாய்த் தமிழ் கதைப் பாள். பிறகென்ன?"
"எண்டாலும் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் வித்தி யாசம் தானே.
"இதிலை கணக்க யோசிச் சு. மண்டையைப் போட்டு உடைக்க ஒன்றுமில்லை மச்சான். பண்பாடு கலாச்சாரம் எல்லாம் மனிசன்ர வாழ்க்கை முறைகளும் அவைய னின்ரை பழக்க வழக்கங்களும் தானே. ரெண்டு பேரும் மனமொத்து வாழ்ந்தால் அதைவிடச் சிறந்த பண்பாடு என்ன இருக்கு?"
' 'g f. உன்ரை விருப்பப்படி செய்யலாம் மச் சான். ஆனல் உன்ரை "பேரன்ஸ்" சம்மதிப்பினமோ?"
‘அவையிட்டையும் அனுமதிஎடுக்க வேணும்தான்.ஆனல் இட் இஸ் ரூ லேற் - இதை இப்ப சொல்லப்போக . அவை யள் போர்க்கொடி உயர்த்திக்கொண்டு வெளிக்கிடுவினம். பிறகு அதைச் சமாளிக்கிறதுக்கு இடையிலை விசயம் முத்திப் போய் விபரீதமாய் முடிஞ்சாலும் முடிஞ்சிடும். இது அவசரமாய் செய்ய வேண்டிய கலியாணம்- பிறகு அவை யளைச் சரிப்படுத்தலாம்."
"ஏன் வற்புறுத்தலா?"
"இல்லை அவளுக்கு இப்ப நாலு மாசம்'
"விளையாட்டுப் பிள்ளைமாதிரித் திரிஞ்சு திரிஞ்சு நீயும் வலுத்த ஆளடா" என ஜெகநாதன் சொன்னுன்.
அதை ஆமோதிப்பது போல மகேந்திரன் சிரித்து விட் டுச் சொன்னுன்:

Page 80
150 இளமைக் கோலங்கள்
** மச்சான் நீ நினைக்கிறது போல நான் எக்கச்சக்க மாய் போய் மாட்டுப்பட்டிட்டன் என்று மாத்திரம் நினை யாதை. நான் நினைச்சால் விட்டிட்டும் ஓடியிருக்கலாம். ஆனல் பாவங்கள் மச்சான். ஏழைச்சனங்கள். என்னிலை நம்பிக்கை வைச்ச வளுக்குத் துரோகம் பண்ணக்கூடாது.”*
சிவகுமாரின் கண்களால் மகேந்திரனை அளக்க முடிய வில்லை. அன்ருடம் பஸ்களில், சினிமாவில், கடற்கரைகளில் என்று எத்தனை கதைகளைச் சொல்லுகின்ற மகேந்திரன இவன்? சிவகுமார் அவனை நிமிர்ந்து பார்த்தவாறு கேட் டான்; r
'**மகேந்திரன் இந்த முடிவை உன்ரை பேரன்ட்ஸ் விரும்புவினமா?"
அவன் பெரிதாகச் சிரித்துவிட்டுச் சொன்னன். 'என்ன மச்சான் கலியாணம் முடிக்கப்போறது நான்தானே?"
இவனல் எப்படி எந்தப் பிரச்சினைகளையுமே சிரித்துச்
சிரித்துச் சாதாரணமாக எடுக்க முடிகிறது நண்பர்கள் ஆச்
சரியப்பட்டவாறு திருமண நோட்டிஸ் பத்திரத்தில் கை யெழுத்துப் போடுவதற்கு பதிவுக்காரரிடம் பயணமானர்
ᏧᏠ5ᎶYᎢ .

அத்தியாயம் = 22
Pகேந்திரன் சுவர்ணுவை மணமுடித்துக்கொண்டு அவ ளது வீட்டிற்கே குடிபோய்விட்டது திருவாட்டி வெங்கடா சலத்தைப் பொறுத்தவரை தான் பெரிய இழப்பாக இருந் தது. மாதா மாதம் கிடைத்து வந்த ஐம்பது ரூபாயில் துண்டு விழுந்து விட்டதே! இதையிட்டுத் தனது திருவாள ரிடம் அவள் அடிக்கடி குறைபட்டுக் கொண்டாள். அந்த மனிசனும் தன் அடிசிற்கிணியாளின் சொற் தவற முடி யாமல் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் அறையில் *வேக்கன்ற் இருப்பதாகச் சொல்லி வைத்தது.
இரண்டு பேர் மாத்திரம் சீவிக்கக் கூடிய அறையில், தாங்கள் மூன்று பேரும் நண்பர்கள் என்ற முறையில்வேறு அறையும் கிடைக்கா மற் போனதால் ஒருவாறு "அட் ஜஸ்ட்' பண்ணி இருந்து காட்டியது தான் தவறு என்று ஜெகநாதன் சொன்னன். முன்னர் இரண்டு பேர்தான் வாடிக்கை. "சரி, இனி என்ன செய்வது, எங்களுக்குத் தெரிந்த யாரையாவது சேர்த்துக் கொள்ளலாம்’ எனச் சிவகுமார் கூறினுன். பஞ்சலிங்கத்தார் இந்த விஷயம் அறிந்ததும் வருவதற்கு விருப்பம் தெரிவித்தார். தற் போது குடியிருக்கும் அறைக்கு நூறு ரூபா அழவேண்டி யிருப்பதால் சற்றுக் குறைந்த விலையில் ஓர் அறை அவருக் குத் தேவைப்பட்டது.
மூன்று கட்டில்கள் போடுவதற்கு இடம் போதவில்லை. "பரவாயில்லை" என்று கட்டிலைப் பொருத்தாமல் ஒரு பக்க மாகக் கட்டிப் போட்டார்-ஒரு பாய் வேண்டினுற் சமா ளித்து விடலாம்’ என்ருர், தவிர இப்படியொரு பொது

Page 81
I 52 இளமைக் கோலங்கள்
வான அறையில் கட்டில் பாவிப்புக்குட்படாமல் இருந் தால் பழுதடையாமலும் இருக்கும் என அந்தரங்கமாகக் கருதினர். முன்னைய அறையில் தனிக்குடித்தனம். அவர் வந்து அறையைத் திறந்து சரியும்வரை அந்தக் கட்டில் அவ ருக்காகவே விசுவாசமாகக் காத்திருக்கும். -
தனது சமையலுக்கென ஒரு பக்கத்து மூலையை ஒதுக்கி எண்ணெய் அடுப்பையும் தட்டு முட்டுச் சாமான் பெட்டி யையும் வைத்தார், 'தம்பியவையள், நான் சைவம் கண் டியளோ!...உங்களோடை ஒத்துவராது. என்ரை கை யாலை சமைச்சாத்தான் மனமாய்ச் சாப்பிடுவன். எனக் காரணம் சொன்னர். ஆனல். அதுகூடப் பொருளா தார ரீதியான ஓர் ஏற்பாடுதான் என்று தோன்றியது இவர்களுக்கு. தனிய என்ருல் எதையும் சமைக்கலாம் ஒரு பச்சடியுடனும் சாப்பிடலாம்!"
"சரியான கசவாரம் மச்சான்.உந்தக் குணத்துக் குத் தான் எல்லாப் பிள்ளையஞம் பெட்டையளாயே பிறந் திருக்குது" என ஜெகநாதன் சிவகுமாரின் காதில் முணு முணுத் தான்.
பஞ்சலிங்கத்தாரைப் பொறுத்தவரை இந்த அறை கிடைத்தது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் கிடைத்த கதை. ஜெகநாதனேடு படிப்படியாகக் கதைத்து அவனது மனதை மற்ற வேண்டுமென்பது ஒன்று-ஊரிலிருந்து மனைவி எழுதுகின்ற எல்லாக் கடிதங்களிலுமே அதைப் பற் றிக் குறிப்பிடுகிருள்; "அந்தப் பெட்டையும் தனிய எவ் வளவு நாளைக்கென்றுதான் இருக்கும்? பெடியனுேடை கதைச் சுப் பாருங்கோ. அதுகள் இஞ்சை அடிக்கடி வந்து பெரிய கரைச்சலாய் இருக்கு. யாருக்காக இல்லாவிட்டா லும் மனைவிக்காகவென்முலும் இந்த விஷயத்தைத் திரும்ப வும் ஒப்பேற்ற வேண்டும் என எண்ணிக் கொண்டார்"பெண் சாதி பகுதியில் சம்பந்தம் பேசி வைத்தால் இது தான் கரைச்சல்."

இளமைக் கோலங்கள் 53
மற்றது சிவகுமார் விஷயம், சிவகுமாரைப்போல ஒரு தங்கமான பிள்ளை எங்கே கிடைக்கப் போகிருன்? அர சாங்க உத்தியோகம், சோலி சுரட்டுக்குப் போகாதவன், தானுண்டு தன்பாடுண்டு” என்று இருப்பவன். தன் மூத்த மகள் லலிதா தேவியோடு அவனை ஒப்பிட்டுக் கற் பனை செய்து பார்த்தார்; 'நல்ல தோதான மாப்பிள்ளை.'
'தம்பி சிவகுமார். நீர் யாழ்ப்பாணத்திலை எந்த இடம்?" என்று கேட்டார். இடத்தைக் கூறியதும் அண் மையில் இருக்கின்ற தனக்குத் தெரிந்த யாரையாவது நினைவு படுத்திக் கொண்டு, 'இவரைத் தெரியுமா?" "அவ ரைத் தெரியுமா?" எனக் குடையத் தொடங்கி விடுவார். எப்படியாவது தனக்குத் தெரிந்த யாராவது அவனுக்கும் தெரிந்திருந்தால் அதன் மூலம் தங்களுக்கிடையில் உள்ள நட்பை (அல்லது உறவை) இன்னும் நெருக்கமாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணந்தான்.
'தம்பி . உமக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.சாத கக் குறிப்பைக் கொண்டு வாரும் . பார்த்துச் சொல் லுறன்' என அவனது கையைப் பிடித்துப் பார்த்துச் சொல்லுவார்.
"அண்ணே. உங்களுக்குச் சாத்திரம் பார்க்கவும் தெரியுமோ?" அவனது ஏளனம் அவருக்குப் புரியாது
" ஓம். கொஞ்சம் கொஞ்சம் தெரியும்" என அடக்க மாகப் பெருமையடித்துக் கொள்வார்.
"ஆணுல், எனக்கு இதுகளிலை நம்பிக்கையில்லை" என அவன் 'சப்பென சம்பாஷணையை முறித்துக் கொள்வான். அவர் விடமாட்டார்.
'இல்லை.அதுகளிலையும் உண்மையிருக்கு..." என கதையை வளர்த்து வளர்த்து-"அப்பாடா!. இந்த உல

Page 82
154 இளமைக் கோலங்கள்
விம் எப்போ உருப்படப் போகுது'-என அவனுக்குச் சலிப்பை ஏற்படுத்தி விடுவார்.
ஒரு முறை ஊருக்குப் போய்விட்டு வந்த பொழுது லலிதாவைக் கையோடு அழைத்துக் கொண்டு வந்து விட் டார். 'பிள்ளை .கொழும்பு பர்ர்க்க வேணுமெண்டு அடிக்கடி ஆசைப்பட்டவள் தம்பி. இப்ப பள்ளிக்கூடங் கள் விடுதலைதானே. மற்றவையளை தாய்க்கு உதவியாய் இருக்க விட்டிட்டு இவளைக் கூட்டி வந்திட்டன்’ எனக் கூறிவிட்டுக் காரணமில்லாமல் சிரித்தார். அதில் சிரிப்ப தற்கு என்ன "ஜோக் இருக்கிறது என்று அவனுக்குப் புரிய வில்லை.
மகளுக்குச் சிவகுமாரை அறிமுகப்படுத்தினர். அவ னைப் பற்றி மிகையாகவே கூறினர்.
லலிதா ஒரு பாவமும் அறியாமல் நின்ருள். ஓர் அந் நிய ஆடவனுடன் முதல் தடவையாக அறிமுகமாகின்ற கூச்சம் இல்லை. அப்பாவின் ஒரு நண்பரைச் சந்திக்கின்ற மரியாதையே அவளது பார்வையில் நிறைந்திருந்தது.
லலிதா கொழும்பிலே நிற்கின்ற நாட்களில் அகிலா வோடு தங்குவதற்கு சிவகுமார் மூலமாக ஏற்பாடு செய் தார் பஞ்சலிங்கத்தார். மாலைகளிலும் லீவு நாட்களிலும் எங்கேயாவது வெளிக்கிடும் பொழுது சிவகுமாரையும் வh புறுத்தி அழைப்பார், அவனுக்குப் பெரிய சங்கடமா கப் போய்விடும், "என்ன மனிசன் இவர்?’ என்ற எரிச்சலும் ஏற்பட்டது. ஆனலும் அதை வெளிக்காட்டாது நடந்து கொண்டான். சில இடங்களுக்குச் செய்வதறியாமல் அவர்களோடு இழுபட்டான்.
இதையெல்லாம் கவனித்த ஜெகநாதன், ‘ “ LDF FIT si , பஞ்சலிங்கத்தார் மாப்பிளை பிடிக்கத் திட்டம் போட்டிகு 4 கிருர் போலையிருக்கு. மாட்டுப் பட்டிடாதை!” என்று

இளமைக் கோலங்கள் , 155
விளையாட்டாக எச்சரிக்கை செய்தான். ஆனல் "சிவகுமார் உண்மையிலேயே அதிஷ்டக்காரன்” என்ற ஒருவித பொரு மையும் அவனுள் எழுந்தது; இவ்வளவு போட்டியும் பொருமையும் தனக்கு இல்லையே?
எப்படியாவது அவர்கள் இரு வரையும் ஒன்று சேர்த்து வைப்பதற்குப் படாத பாடுபட்டார் பஞ்சலிங்கத்தார். ஆளுல் அவனே வளைகின்ற பாட்டைக் காணவில்லை, அகிலா வீட்டிற்கு அடிக்கடி போகின்றவன், இப்பொழுது லலிதா இருக்கும் நேரங்களில் போவதையும் தவிர்த்துக் கொள்கிருன். அவள் இந்தப் பக்கம் அப்பாவோடு கதைப் பதற்கு வந்து விட்டால் இவன் அங்கே போய்விடுவான்.
இவனுக்கு என்ன வந்தது? எந்நேரமும் அகிலாவே கதி என்று கிடக்கிறன். அவளும் எவ்வளவு உரிமையாக இவனேடு நடந்து கொள்கிருள். சில வேளைகளில் இவனது உடைகளைக் கூடக் கழுவிக் கொடுப்பதையும் பஞ்சலிங்கத் தார் நோட்' பண்ணியிருக்கிருர், M
எல்லோரும் சொல்வதுபோல "சங்கதி அது தானே? என மனவருத்தத்தோடு இரை மீட்டுப் பார்த்தார். அகி லாவின் "கறெக்ரர்" கூடச் சரியில்லை என்று கேள்விப்பட் டிருக்கிருரே! இவன் ஏன் அநியாயமாக அங்கேயே மாண்டு போகப் போகிருன்?
"தம்பி. நீர் ஒரு ஆம்பிளை அவள் குமர்ப்பெட்டை இருக்கிற வீட்டிலை அடுகிடை படுகிடையாய்க் கிடந்தால் a 0 பாக்கிற வங்கள் என்ன சொல்லுவாங்கள்?.அந்தப் பெட்டையின்ரை பழக்க வழக்கங்களும் அவ்வளவு சரி யில்லையெண்டு கேள்வி'-எனப் புத்தி சொல்லிப் பார்த் தார்.
'நீர் இப்படித் திரியிறகை அறிஞ்சால் உம்மடை தாய் தேப்பன் என்ன சொல்லுவினம்?.உவையள் ஆர்

Page 83
இளமைக் கோலங்கள்
ஆக்கள். என்ன சாதி எண்டுகூட அறியாமல் திரியிறீர் போலை கிடக்கு.”* -
'அவையள் எப்படியாவது இருந்திட்டுப் போகட்டும் .உங்களுக்கேன் அந்தக் கவலை?" என அவன் சினங் கொண்டு சில வேளைகளில் கேட்பான்.
*அவள். ஒபிசிலையும். ஒருத்தனுேடை "கொனெக் சன்" என்று கேள்விப்பட்டிருக்கிறன் கண்டியோ? உம் மட நன்மைக்குத் தான் சொன்னனன். யோசித்து நட."
ஒருத்தனேடு மாத்திரம் அவளை சம்பந்தப்படுத்தி மிச்
சம் விட்டது பெரிய காரியம் தான் என நினைத்தான் சிவ
குமார். அவரது செயல்கள் ஒரு பக்கம் சிரிப்பையும் மறு பக்கம் எரிச்சலையும் ஊட்டின. ܗܝ
அத்தியாயம் - 23
கிடல் அமைதியாகக் கிடக்கிறது. எப்போதாவது ஒரு நாளைக்கு இந்தக் கடல் இப்படிச் சோகமாய் இருப்பதைக் காணலாம். யாருடனே கோபித்துக் கொண்டதுபோல 'மெளனம் சாதித்துக் கொண்டிருக்கும். அட்டகாசமாகச் சிரிப்பதுபோல இரைந்து கொண்டு ஓடிவருகின்ற கடல் இப்படிச் சும்மா இருப்பதைக் காணக் கவலையாயிருக் கிறது என எண்ணினுன் சிவகுமார். எனினும் இது மனது நாட்டம் கொள்கிற கவலை தரக்கூடிய அமைதி, நெருக்க மும் இரைச்சலும் திணறடிக்க வைக்கிற கொழும்பில் இந் தக் கடல்தானே மனதுக்கு ஒர் ஆறுதல்? கடலுக்கு அண் மையாக அறை கிடைத்தது எவ்வளவு வசதியாய்ப் போய் விட்டது? இப்பொழுது சில நாட்களாக அதிகாலையிலே இந்தக் கடற்கரைக்கு வந்து ஒன்றுமே பேசாமல் ஒரு கல்

இளை மக் கோலங்கள் 157
லில் உட்கார்ந்திருப்பதைத் தான் மனதும் விரும்புகிறது. யாருடன்தான் கதைப்பது? அகிலா கோபக்காரியாகி விட்டாள். இரண்டு மூன்று நாட்களாக அகிலா அவ ணுேடு கதைக்காமலிருக்கிருள். இந்தக் கல்லில் வந்து இருந்து கொண்டு, "அவள் ஏன் இப்படி மாறினுள்?’ என்று சிந்தித்து முடிவெடுப்பதற்குள்ளே மண்டையே வெடித்து விடும் போலிருந்தது. இதைப் போய் ஏன் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டும்? ஒன்றும் புரியவில்லை. எப் போதும்போல, மனதைத் திறந்து கதைக்காமலிருப்பதே பெரிய குறையாக இருக்கிறது. இவனது பிரச்சினைகளுக் கெல்லாம் தீர்வு சொல்லுவாள். கவலைகளைத் தேற்று வாள். சிவகுமாரும் அவள் விஷயங்களில் இதேயளவு பங்கு எடுத்திருக்கிருன். இப்பொழுது என்ன நடந்து விட் டது? காரணம் கேட்டால் "ஒன்றுமில்லை" என்று பேச்சை வெட்டி விடுகிருள்.
'அகிலா! ஏதோ காரணம் இருக்கு இல்லாட்டி இப் படி இருக்கமாட்டீங்கள். மனசைத் திறந்து கதைச்சால் கவலை தீரும்.உங்கடை கவலை என்னென்று எனக்குச் சொல்லக் கூடாதா?"- "எனக்கு" என்பதில் அழுத்தம் கொடுத்தே கதைத்தான், "எந்தப் பிரச்சினைகளையும் என் னுேடு தானே மனம்விட்டுப் பேசியிருக்கிருய்" என்பதை நினைவூட்டுவதற்காக,
'இந்த உலகத்திலை ஆரைத்தான் நம்பேலும்?' விரக்தி யான பதில். என்ன இது? அவனை அகிலா நம்பவில்லையா? இது ஒரு தாங்க முடியாத கவலை. அவள் விஷயத்தில் அவன் எவ்வளவு நேர்மையாக நடந்திருக்கிறன். தன் னேப் பூரணமாக அவள் புரிந்து வைத்திருக்கிருள் எனவும் நம்பியிருக்கிருன். ஆனல் தனது நம்பிக்கை வீண் என்று அறிய வரும் பொழுது எவ்வளவு கவலையும் ஆத்திரமும் பொங்கி வருகிறது. தன்னைச் சந்தேகிக்கிருளா? தவருன நோக்கத்தோடு தான் அவளோடு பழகுவதாகக் கருது sig? GMTT? -

Page 84
158 இளமைக் கோலங்கள்
யார் என்ன பழியைச் சொல்லிவிட்டுப் போனுலும் அது வேலையற்ற வீணர்களின் செயல் என்று கவலைப்படாம லிருக்கலாம். தங்களைப் புரிந்து வைத்திருக்கிற ஒருவர் என்று கருதப்படுகின்ற ஒருவரே அந்தப் பழியைச் சொல் லும் பொழுதுதான் தாங்க முடியாமலிருக்கிறது. எப்படித் தான் அவளால் இவ்வாறு கருத முடிகிறது?
அவளது பிரச்சினைகளையும் சுமைகளையும் அறியும் பொழுது மனப்பூர்வமாக இரங்க முடியுமானல் அவளுக்கு வேறு எந்தத் துரோகம் செய்ய மனம் வரும்? சகோத ரத்துவத்திலிருந்து இம்மியளவு கூடப் பிசகாமல் பழ கியதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லையா?
ஒருவேளை ராஜேசன்தான் அவளைத் தன்னேடு கதைக்க வேண்டாம் என்று கூறியிருப்பானே? அதற்காகத் தான் அவள் இப்படியெல்லாம் நடந்து கொண்டு தன்னைக் கை கழுவிவிட எண்ணியிருக்கிருளோ? அது நியாயமாகத் தோன்றினலும் அந்த நிலையில் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. தான் என்ன தவறு செய்ததற்காக இப்படிப் புறக்கணித்து விடுகிருள்? இனிச் சீவியம் முழு தும் அவளோடு கதைக்கவே கூடாதா? அவளைக் காணவே கூடாதா?
*அகிலா நீங்கள் என்னுேடை கதைக்க விருப்ப மில்லாவிடில்.இஞ்சை வர வேண்டாம் என்ற சொல்லு நீங்கள்?’
"ஆரு சொன்னங்க அப்படி?...எனக்கு மனம் சரி யில்லை. ஆரோடையும் கதைக்க விருப்பமில்லை . இங்கை அம்மா இருக்கிருங்க.வந்து கதைக்கலாம் தானே?"
அவளே கதைக்க வேண்டாம் என்று சொன்ன பிறகு அந்த வீடு எதற்கு? அம்மாவைக் கூட ஒரு சாட்டுக்காகத் தான் சொல்லியிருக்கலாம்-அப்படிச் சொன்ன பிறகும் ஏன் ரோஷம் கெட்டவனைப்போல அங்கே செல்ல் வேண் (6)ւb?

இளமைக் கோலங்கள் 159
*அகிலா நான் எந்தவிதமான கூடாத எண்ணத் தோடையும் பழகயில்லை .ஆனல் . நீங்கள் இப்படி என்னை வெறுத்து ஒதுக்கிறீங்கள்.நான் போறன். இனி நீங்கள் நினைக்கிறமாதிரி கரைச்சலும் தர வரமாட்டன். நான் எத்தனையோ பேருக்கு உதவி செய்திருக்கிறன். ஒரு விதமான பிரதி பலனையும் எதிர்பாராமல் தான் மன நிறைவோடை செய்திருக்கிறன். ஆனல், உங்களொருத்திக் குத்தான் கடமைப்பட்டிட்டன். என்னையறியாமலே, நீங் கள் செய்த உதவிகளையெல்லாம் ஏற்று ஏற்றுக் கடனளி யாயிட்டன் . அதையெல்லாம் எப்படித் தீர்க்கப் போறனே என்ற கவலையோடைதான் போறன்’ என்று சிவகுமார் கண்ணிருக்கிடையே கூறினன்.
அதைக் கேட்டு அவள் அழுதாள். அவன் அதைப் பொருட்படுத்தாமல் வந்து விட்டான். வரும்பொழுது இப்படித் தன்னைச் சந்தேகிக்கிருளே’ என்ற வருத்தமும் இருந்தது.
ஆனல், இப்படித் தனிமையாயிருந்து சிந்திக்கும் பொழுது, அவள் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்று தோன்றுகிறது. மற்றவர்கள் பேசுகிற கதைகளை பும் பொருட்படுத்தாமல் இவ்வளவு நாட்களும் தன்னேடு தளங்கமில்லாமற் பழகியதே அவளது பெருந்தன்மை யைத்தானே உணர்த்துகிறது? தான் அவளோடு பழகி ஏதே எவ்வளவு தவறு என்று இப்பொழுது புரிகிறது. அது தன் வாழ்க்கையையே அல்லாமல் அவளது வாழ்க்கையைத் ான் கூடப் பாதிக்கும் என்பதை முன்பு உணர முடிய வில்லை. இப்பொழுது அப்படித்தான் ஏதாவது நடந்திருக் குமோ? ராஜேசன் தான் நிச்சயமாக அவளைச் சந்தேகப் பட்டிருப்பான். "கடவுளே! அப்படி இருக்கக் கூடாது."
அதிக நாட்களுக்குப் பிறகு அவன் கடவுளை நினைத் தான். அதுகூட அவளுக்காகத் தான். அவளது வாழ்க்கை

Page 85
I 60 இளமைக் கோலங்கள்
சீர்குலைந்து நடுத்தெருவில் நின்ருல் அதற்குக் காரண்ம் தான்தானே எனக் கருதிக் குழம்பினுன். அவள் நடுத்தெரு வில் அபலையாக நிற்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடிய வில்லை. தன்னலம் கருதாமல் உதவிகளைச் செய்தாள். தன்ன்ை ஒரு குழந்தையைப் போலக் கருதி எவ்வளவு ஆதர வாகத் தேற்றியிருக்கிருள். அவளை ஒரு தாயின் ஸ்தானத் தில் தான் கருத முடிகிறது. அப்படியே போய் அவளது கால்களைத் தொட்டு வணங்க வேண்டும் போன்ற உணர்வு பொங்கி வந்தது.
கடல் ஏதோ நினைத்துக் கொண்டதுபோல மெல்ல அலைவீசி, வரத் தொடங்கியது. இப்படி மனதுக்குள் அடக்கி வைத்திருப்பதும், பின்னர் எண்ணங்கள் குமுற லெடுக்கும் பொழுது ஒரு முடிவைக் காண வேண்டுமென்ற ஆவேசத்துடன் பொங்கி வருவதும் கரையைத் தொட்ட தும் தொடர்ந்து வரத்துணிவில்லாத கோழையாகி மீண் டும் அடங்கிப் போய் விடுவதுமான காரியத்தைத்தான் கடலும் செய்து கொண்டிருக்கிறது போலும்-இப்பொ ழுது காற்றடிக்கத் தொடங்கியிருக்கிறது.
“வேலைக்குப் போக நேரமாகி விட்டது!" என்ற நினை வில் எழுந்து அறைக்கு வந்தான். மகேந்திரன் இருந்தால் இப்பொழுது எவ்வளவு ஆறுதலாயிருக்கும் மனைவி வீட் டுக்குச் சென்ற பின்னர் அவன் வருவதும் குறைவு! "மனிசி யைக் கண்டதும் எங்களையெல்லாம் மறந்து விட்டான்' என எண்ணியவாறு இன்று மாலையில் போய் அவனைச் சநீ திக்க வேண்டுமென நினைத்துக் கொண்டான்.
"என்ன தம்பி சிவகுமார்.ஒரு மாதிரி இருக்கிறீர் ..ஏதாவது பிரச்சினையா?" என பஞ்சலிங்கத்தார் கரி சனைப்பட்டார்!
'ஒன்றுமில்லை!"

இளமைக் கோலங்கள் 61
"இல்லை.எனக்கு மறைக்காதையும் . ரெண்டு மூன்று நாளாய் கவனிச்சுக் கொண்டுதான் இருக்கிறன். 56š7lg-Gourl...... அந்த பக்கம் போறதுமில்லை.உம்மட் முகமும் சரியில்லை."
அவன் ஒன்றுமே பேசாமல் அலுவலகத்துக்கு வெளிக் கிட்டுச் சென்ருன்.
மாலை அலுவலகம் முடிந்து மகேந்திரனைச் சந்திக்கச் சென்றபொழுது அவன் இருக்கவில்லை. அறைக்குத் திரும் பினன். கடந்த சில நாட்களுக்குப் பின்னர் இன்று தான் சற்று நேரத்தோடு போகிருன். இல்லாவிட்டால் எங்கா வது காலத்தைக் கழித்துவிட்டு இரவு பத்துப் பதினுெரு மணிக்குப் பின்னர் தான் வந்து படுக்கையில் விழுவான். யாருடனுவது கதைக்க முற்பட்டால் தேவையில்லாத கார ணங்களுக்கெல்லாம் கோபம் பற்றிக் கொண்டு வருகிறது. அதைத் தவிர்ப்பதற்காகத் தனிமை தேவைப்பட்டது.
இன்று அவன் அறைக்கு வருகின்ற நேரத்திலேதான் அகிலாவும் அலுவலகத்திலிருந்து வந்து கொண்டிருந் தாள். சிவகுமார் அவளைக் கண்டும் காணுதவன்போல நடந்து கொண்டிருந்தான். அது அவளுக்குப் பெரிய தாக் கத்தை ஏற்படுத்தியது. “சிவா, இவ்வளவு ரோஷக்காரன?
அவன் அவளை விலத்திவிட்டு முன்னே நடந்து செல் வதைப் பொறுக்காதவளாய் விரைந்து நடந்தாள்.
"சிவா! சிவா!" என அவனுக்கு மட்டும் கேட்கும்படி யாக அழைத்தாள். அந்தச் சத்தம் தொண்டையிலிருந்து பெரிய கஷ்டத்துடனேயே வெளிப்பட்டது அதை முந் திக் கொண்டு அழுகை வந்துவிடும் போலிருந்தது. அவள் அழைத்தது அவனுக்குக் கேட்கவில்லையோ என்னவோ, திரும்பிப் பார்க்காமலே நடந்து கொண்டிருந்தான்.

Page 86
162 இளமைக் கோலங்கள்
வீட்டை அடைவதற்கு முன்னர் அவனேடு கதைத்து விட லாமென்ற துடிப்பிலே விரைவாக நடந்தாள். ஆனல், அவ னும் வேணுமென்றே விரைவாக நடந்திருக்க வேண்டும். அது முடியாமற் போய்விட்டது. கதவைத் திறந்து கொண்டு வீட்டினுள் நுழைந்தவன் இவள் வருவதே தெரி யாதவன்போல கதவைச் சாத்திவிட்டு நடந்தான்.
அகிலா கவலையோடு கதவைத் திறந்தாள். ஒரு ரோசாச் செடி அழகான மலரைப் பூத்திருந்தது. இப் பொழுது அதன் இதழ்களையெல்லாம் உதிர்த்துவிட்டுப் பரி தாபமாய்க் காட்சியளித்தது. அதன் தோற்றம் ரோசா முள்ளைப்போல அவள் கண்களைக் குத்தியது. அழகான மலருக்கு ஏன் நெடுங்காலம் சீவிக்கத் தெரியவில்லை? மிகப் பக்குவமாய் மெல்ல மெல்ல விரிந்து மலர்ந்த இதழ் களை இழந்துவிட எப்படி மனம் வந்தது?
அத்தியாயம் - 24
ஜெகநாதனுக்குப் பெண் குழந்தை பிறந்திருப்ப தாகத் தந்தியில் செய்தி வந்தது. பெண்பிள்ளை என்ற தும் சற்று முகச் சுளிப்புத்தான். ஆனல், அதையும் மீறத் தோன்றிய ஒருவித உற்சாகமான மனக் கிளர்ச்சியைக் கட் டுப்படுத்த முடியவில்லை. தனக்கு ஒருகுழந்தை-நான் அப்பா என்ற உணர்வு ஒரு புதுமையான இன்பத்தை அளிக்கிறது. மண முடித்து மனைவியைப் பிரிந்து வந்து ஏழெட்டு மாதங் கள் தனிமையாக வாழ்ந்தாயிற்று. இந்த இடைக் காலக் தில் வெறுமையும் விரக்தியுணர்வும் தான் கண்ட பலன் இப்பொழுது அந்தக் குழந்தை பிறந்து "நீங்கள் எனக்கு

இளமைக் கோலங்கள் 163
அப்பா" என்று சொல்லுகிறது. அது மழலே பொழிந்து வளர்ந்து சிரித்துச் சிரித்துத் தவழ்ந்து சின்னக் கால்களைப் பதித்து நடக்கப் போகிற நினைவுகள் அவனது மனதை அசைத்தன.
அவள் இனித் தனது சொல்லுக் கேட்கிற ஒருத்தியாக மாறிவிடுவாளோ? குழந்தை பிறந்திருப்பதாகத் தந்தி அடித்திருக்கிருர்கள். அவளது விருப்பத்தின் பேரிலே தான் செய்திருப்பார்கள். அப்படியென்றல் தான் வரு வதை அவள் விரும்புகிருளோ?
குழந்தையின் பக்கத்தில் படுத்திருக்கிற அவளது தோற்றம் நினைவில் வந்தது. அவளது முகத்தை கவ லையோ அல்லது களைப்போ சோபை இழக்கச் செய்திருக் கிறது. தன்னைக் கண்டால் அந்த முகம் மலர்ச்சியடையும் என்று கற்பனை செய்தான். உடனடியாகப் போய் அவ ளைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை பொங்கியது.
இவ்வளவு நாட்களும் ஒரு கடிதம் கூட எழுதாமல் விட் டிருக்கிருளே? "தலைக்கணம் பிடிச்ச வள்" என்ற கோப மும் அடுத்த கணமே தோன்றியது. இப்பொழுது குழந்தை பிறந்த பிறகுதான் என்னைத் தேவைப்படுகிறது, விருப்ப மென்ருல் தேடி வரட்டுக்கும். நான் போகக்கூடாது" என்று எண்ணினன்.
பஞ்சலிங்கத்தார் தருணம் அறிந்து கதைத்தார்" 'தம்பி.நடந்ததை மறந்திட்டுப் போய்ப் பிள்ளையைப் பார்த்திட்டு வாரும். சும்மா நெடுகலும் பிடிவாதமாய் இருக்கக் கூடாது கண்டியோ!"
அவன் பதில் பேசவில்லை.
"பெண் மனசு தம்பி1.இந்த நேரத்திலை புருஷனைக் காணத்தான் துடிக்கும்.முந்திப் பலதும் நடந்திருக்கும்
• • • • « » இனி எல்லாம் சரி வரும் போட்டுவாரும்."

Page 87
Η 64 - இளமைக் கோலங்கள்
'சீவியத்துக்கும் வேண்டாம் என்றுதானே விட்டிட்டு வந்தனன். பிறகேன் அந்தக் கதையளைக் கதைக் கிறி u.6r?'
"உப்பிடி எவ்வளவு காலத்துக்கென்று இருக்கப் போகி Æjዙ?''
"நான் ஆம்பிளை தானே? எப்படியும் இருப்பன்."
'உப்பிடிச் சொல்லாதையும் தம்பி.ஆண் என்ருப் போலை?.அவனுக்கும் ஒரு துணை தேவைதான். கண் டியோ! உம்மடை மனுசியையும் குழந்தையையும் எவ் வளவு காலத்துக்கென்றுதான் விட்டிட்டு இருப்பீர்?" "
"எனக்கு ஒருத்தரும் தேவையில்லை!"
"உப்பிடிச் சொன்ன எத்தனையோ பேரை நானும் கண்டிருக்கிறன்."
மெளனமாக அவர்களது சம்பாஷணையைக் கவனித் துக் கொண்டிருந்த சிவகுமார் சொன்னன்:
**ஜெகநாதன் இப்பிடி நீ பிடிவாதம் பிடிக்கிறதாலை ஆருக்கு லாபம்? கொஞ்சமாவது விட்டுக் கொடுத்து வாழப் பழக வேணும்."
"மச்சான்.நீயென்ருல் கூட என்னைப்போலத் தான் செய்வாய் . . சுய கெளரவத்தை விட்டிட்டுப் போகச் சொல்லுறியோ?"
"அப்படி உன்ரை சுய கெளரவத்தைப் பாதிக்கக் கூடி யதாய் என்னதான் நடந்தது?"
"எத்தனையோ நடந்தது மச்சான்.எல்லாத்தையும்
சொல்லிக் கொண்டிருக்கேலாது. ஒரு பெண் தன்ரை புரு சன்ரை சொல்லுக் கேட்காமல் நடக்கிறதே பிழைதானே?"

இளமைக் கோலங்கள் 65
"பிழை தான் மச்சான் . பிழையைத் திருத்த முயல வேணுமொழிய இப்பிடிக் கைவிட்டிட்டு வரக் கூடாது!"
“என்னல் ஏலாக் கட்டத்திலைதான் விட்டிட்டு வந்த ஞன்."
"நீ எவ்வளவு தான் நியாயம் கதைச்சாலும் எப் பவோ ஒரு நாளைக்கு ஒன்று சேரத்தான் போறிங்கள்! ஏனெண்டால் இப்ப பிறந்திருக்கிற குழந்தையாலை உங் களுக்குள்ளை இன்னும் பிணைப்புக் கூடியிருக்குது. அதை ஆரோ ஒரு அன்னியக் குழந்தை என்று நினைக்க முடியுதோ? ரெண்டு பேராலுமே அது முடியாத காரியம்: பிறகு ஒரு நாளைக்கு இதுக்காக ஒன்று சேரப் போறனிங்கள். .இப் பவே அதைச் செய்தால் என்ன?"
ஜெகநாதன் மெளனம் சாதித்தான். மனது சிந்தனை
வயப்பட்டது.
சிவகுமார் சொல்வதும் உண்மைதான். அவர்களைக் கைவிட்டு இருக்க வேண்டுமென வெளிப்படையாக நினைத் தாலும் நடைமுறையில் அது சாத்தியப்பட்டு வராது. குழந்தை பிறந்த செய்தி அறிந்ததும் தோன்றிய மகிழ்ச்சி யும் துக்கமும் கலந்த மனர்க் கிளர்ச்சியே அதற்குச் சான்று. ஜெகநாதனின் மனதைத் தொடும்விதமாகச் சிவ குமார் தொடர்ந்து சொன்னன்; -
'ஆர் முதலிலே கதைக்கிறது என்ற தன் மானப் பிரச் சினையாலை. அநியாயமாய் உங்கடை இளமையைத்தான் வீணுக்கப் போlங்கள். இதிலை தன்மானப் பிரச்சினைக்கே இடமில்லை. இப்ப இல்லாமல் பிறகு குடு குடு கிழவனுய்ப் போன பிறகு ஒன்று சேர்ந்து என்ன செய்யப் போறியள்? ...நாங்கள் விரும்புகிற வாழ்க்கை எங்களுக்கு அமை யாட்டில். எங்களுக்கு அமையிற வாழ்க்கையை ஏற்றுக்

Page 88
66 இளமைக் கோலங்கள்
கொண்டு சந்தோஷமாய் வாழ வேண்டியதுதான் மச் சான். இதிலை யோசிக்க ஒன்றுமில்லை."
கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே நெடுநேரம் கடந்து போய் விட்டது. அந்த நேரத்திலும் அடங்கிப் போகாத வாகனங்களின் இரைச்சல். இருப்பிடத்துக்குத் திரும்புவதற்கு நேரம் தவறிய பறவையொன்று தனது துணையை ஏக்கத்தோடு அழைத்தவாறு பறக்கின்ற ஓசை சன்னமாக ஒலிக்கிறது.
அடுத்த நாள் புலர்கின்ற பொழுதில், ஜெகநாதன் யாழ்ப்பாணத்துக்குப் பயணமானன். அவனை வழியனுப்பி வைத்துவிட்டுத் தனது சாதுரியத்தினுல் தான் அந்த நல்ல காரியம் கை கூடியது எனச் சிவகுமாருக்குப் பெருமை யடித்தவாறு புகையிரத நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார் பஞ்சலிங்கத்தார்.
அத்தியாயம் - 25
அன்றைய தபாலில் சிவகுமாருக்கு ஒரு கடிதம் வந் திருந்தது. அப்பா அனுப்பியிருந்தார். அப்பா அடிக்கடி கடிதம் போடமாட்டார். ஏதாவது முக்கிய விஷயமென் ருல்தான் எழுதுவார்;
*சிவபெருமான் கிருபையை முன்னிட்டு வாழும் என் றும் என்மேற் பட்சம் மறவாத அன்பு மகன் அறிவது,
--சிவகுமாருக்கு அழுகை வந்தது. அப்பர் நேரி லேயே வந்து பாசம் பொங்க அழைப்பதைப்போல இருந்

இளமைக் கோலங்கள் 167
தது. இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு விடுவது அவனது வழக்கம். அப்பா, அவனேடு அதிகம் பேசாமல் கோபக்காரனைப்போல இருந் தாலும் வழக்கமான அப்பா தான். பிள்ளை என்ற பாசம் இல்லாமற் போய்விடவில்லை. சின்ன வயதில் எவ்வளவு கண்டிப்பாக வளர்த்தாலும், அதையும் மீறிய அன்பினல் எல்லாம் ஆட்கொண்ட நினைவுகள் மனதிலே விரிந்தன. அவனுக்கு ஒரு தலையிடி காய்ச்சல் என்ருல் துடித்துப் போய் விடுவார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புத்திமதி சொல்லி வழிகாட்டியாக இருந்திருக்கிருர். இப்பொழுது அதிகம் கதைக்காமல் விட்டது அவன் பெரியவனுகி விட்ட தற்குக் கொடுக்கின்ற கெளரவமாக இருக்கலாம். பிள்ளை கள் மேல் அன்பாகவும் பாசமாகவும் இருப்பதைப்போல அவருக்கு இனிமையாகக் கதைக்கத் தெரியாது. அதனுல் கதைப்பதைக் குறைத்திருக்கலாம். இந்தக் கல்வியும் உத்தி யோகமும் அவர் இட்ட பிச்சை என்றுதான் சொல்ல வேண்டும்.
பலவிதமான மனச்சலனங்களுடன் கடிதத்தைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தான் சிவகுமார். ஏதோ ஒருவித பயம் மனதைக் கவ்விக் கொண்டுமிருந் திது.
. . . . . . எனக்கும் வயது போட்டுது இன்னும் எவ்வளவு காலத்துக்கென்றுதான் உங்கடை விஷயங்கள் எல்லாத்தை யும் கவனிக்காமல் இருக்கிறது? இந்தச் சின்ன வயதி லேய்ே உனக்கும் பொறுப்புக்கள் அதிகம் தான். இதை யெல்லாம் நான் யோசிக்காமல் இல்லை. அக்காவுக்கும் வயது ஏறிக் கொண்டே போகுது. காலாகாலத்திலை அவ ளது காரியத்தையும் ஒப்பேற்றி வைக்க வேணுமென்று அம்மாவும் நச்சரித்துக் கொண்டிருக்கிருள். 象
-அக்காவும் பாவம், எவ்வளவு காலத்துக்கென்று தான் இப்படி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பாள்?

Page 89
68 இளமைக் கோலங்கள்
அவள் வயதையொத்த சிநேகிதிகள் பலர் மணமுடித்துப் பிள்ளை குட்டிகளோடு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து கிருர்களாம்! அப்பாவும் அவளுக்கென்று பேசாத சம்பந் தங்கள் இல்லை. ஒரு பெண்ணின் அழகையும் பண்பையும் விடப் பணத்தைத் தான் பெரிய தராதரமாக எல்லோரும் கருதுகிறர்கள். அப்படி அள்ளிக் கொடுக்க அப்பாவிடம் என்ன இருக்கிறது? வீடு கட்டுவதற்குப் பட்ட கடனில் சொச்சம் இன்னும் வளர்ந்து கொண்டே போகிறது. தம் பியின் படிப்புச் செலவுகளுக்கு, அப்பா மாறி அவன் மாறி அனுப்ப வேண்டும். அன்ருடம் வீட்டுச் செலவுகள். அலுக்காமல் சலிக்காமல் அதைக் கவனிக்கின்ற அப்பா! எப்பிொழுதுதான் இதற்கெல்லாம் விடிவு பிறக்கப் போகி றதோ?
".கடவுள் இப்பதான் கண் திறந்திருக்கிருர். அல் லும் பகலும் நான் அவனை வேண்டியது வீண் போகவில்லை. அவன் செயலால் ஆகாதது ஒன்றுமில்லை. இப்பொழுது ஒரு நல்ல இடத்துச் சம்பந்தம் கிடைத்திருக்கிறது. மாப் பிள்ளை உத்தியோககாரனில்லைத்தான். சொந்த வியா பாரம் செய்கிருராம். பெடியன் நல்ல குணசாலி. சீதன மென்று அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை. எங்களுக்கு விருப்பப்படி செய்துவிடச் சொன்னர்கள்.
-அக்காவின் நல்ல குணத்துக்குத் தான் இப்படியொரு வாழ்க்கை அமைந்திருக்கிறது-ஒ! இனி அக்காவும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மனம் நிறைந்த மணளனைக் கைப்பிடித்து.
"...ஆனல், அவர்கள் இதை மாற்றுச் சம்பந்தமாகத் தான் செய்ய விரும்புகிருர்கள். மாப்பிள்ளையின் தங் கைக்கு உன்னைக் கேட்கிருர்கள். அவர்களே விரும்பி நல்ல சீதனமும் தருகிருர்கள். நல்ல வசதியுள்ள இடம். பெட் டையும் படிச்சவள்-இந்த இடத்திலை சம்பந்தம் வைத் தால் எங்கடை கடன் தனியெல்லாம் தீரும். அக்கா

இளமைக் கோலங்கள் 169
வின்ரை பிரச்சினையையும் தீர்த்து வைச்ச புண்ணியம் உன் னைச் சேரும். உங்கடை காரியங்கள் ஒப்பேறியிட்டுதென் முல். நான் ஒரு கவலையுமில்லாமல் சின்னவன்ரை படிப் புச் செலவுகளையும் மற்றப்பாடுகளையும் கவனித்துக் கொண்டு காலத்தைக் கடத்துவன். என்ரை பிள்ளையஸ் என்ரை சொல்லைத் தட்டமாட்டுதுகள் என்ற அசையாத நம்பிக்கை எனக்கு இருக்குது. நான் அவையஞக்குச் சரி யென்று வாக்கும் கொடுத்திட்டன். என்ரை வாக்கைக் காப்பாற்றிறது உனது பொறுப்பு. கடவுள்தான் இந்த வழியைக் காட்டியிருக்கிருர்.
-"கடவுளே!" எனத் தன்னை மறந்து அழைத்தான் சிவகுமார்.
அப்பா பிள்ளைமேலுள்ள அசையாத நம்பிக்கையில் வாக்குக் கொடுத்து விட்டார். இனி என்ன செய்வது? ஒரு கலியாணத்துக்கு எத்தனை வாக்குகள் கொடுக்கப்படுகின் றன? அப்பா ஒருத்திக்குக் கொடுத்தாராம்! நானும் ஒருத்திக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன். இன்னும் அம் மாவும் யாருக்காவது சொல்லி வைத்திருப்பாளோ என் னவோ?
" இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்" என்று எழுதி விட வேண்டியதுதான் என எண்ணினன்; எந்த முகத்தை வைத்துக் கொண்டு எழுதுவது? அப்பா அதைத் தாங்கிக் கொள்ள மாட்டார். அவருக்கு மானம்தான் பெரிசு தான் வாக்குக் கொடுத்துவிட்டு, பிறகு இல்லையென்று போனுல் அது அவருக்குப் பெரிய மானம் போகிற விஷயம். அக்கா இப்பொழுது எந்த அளவுக்கு மனக்கோட்டைகளைக் கட்டி வைத்திருப்பாளோ தெரியாது. தம்பியின் முடிவை அறிவதற்கு வழிமேல் விழி வைத்துத் தபால்காரனப் பார்த்துக் கொண்டிருப்பாள் - அவன் கொண்டு போய்க் கொடுக்கிற கடிதத்தைப் பிரித்துப் பார்க்கின்ற நொடிப்

Page 90
70 - இளமைக் கோலங்கள்
பொழுதிலேயே அவளது மனக் கோட்டைகள் இடிந்து போகும். அதை இடித்துப் போடுகிற தைரியம் எனக்கு ஏது? "செல்வி நான் உனக்குத் துரோகம் செய்யப் போகிறேன்? என்னை மன்னித்துவிடு! இந்தக் கோழை யைக் காதலித்த பாவத்திற்காக, இனி நீ வாழ்க்கை முழு தும் அழப் போகிருய். ஏனெனில் எனது (அக்காவையும் பெற்ருேரையும் சிரிக்க வைக்கப் போகின்ற சுயநலக் கார ணத்துக்காக உன்னை அழவைக்கப் போகிறேன். ஒரு பெண் ணைச் சிரிக்க வைக்க வேண்டுமென்ருல் இன்னொரு பெண்ணை அழவைக்க வேண்டுமென்பது தவிர்க்க முடியாத ஒரு நிய தியா?
"...ஒரு நல்ல நாளில் பெண் பார்க்கப் போகலாம்" திகதி குறிப்பிட்டுப் பின்னர் அறிவிக்கிறேன் வரவும்.
இப்படிக்கு,
அன்புள்ள
அப்பா.
-அன்புள்ள அப்பா தான்! தன் பிள்ளைகள் எல்லோ ருக்கும் நல்லது செய்ய வேண்டும், அவர்களை நல்லபடி வாழ வைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு தான் இதை யெல்லாம் செய்கிருர். அவர் பெற்று வளர்த்த பிள்ளை களை அவர் விருப்பப்படி செய்ய உரிமையிருக்கிறது. அக் காவை வீட்டுக்குள் வைத்திருந்ததுபோல எல்லோரை யுமே பூட்டி வைத்திருக்க வேண்டும். பிறகு தனது விருப் பப்படி செய்வதற்கு இலகுவாக இருந்திருக்கும்!
சிவகுமார் கலங்கிக் கொண்டிருந்தான். சாதாரண மாக எதிர் பார்க்கக் கூடிய இந்த முடிவு தனது வாழ்க்கை யிலும் வந்து பெரிய அதிர்ச்சியைத் தரும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. அவன் நினைத்திருந்ததெல்லாம் செல்வியைத் தான். இனி எந்த முகத்தை வைத்துக்

இளமைக் Qa/r a) / ass - 17 Ι
TTTTT SYtLS SLLLL SLLL LLtttL LLLLLL LTLTLLT TTTTT S S TTT மறந்து விடும்படி கேட்பது?
பிரமை பிடி , , வனப்போல வானத்தை வெறித்துப் பார்த்தான். 10.0) வகள் பறக்கின்றன. அவை மீண்டும் வந்து பதிய இருக்கின்றன. அந்தப் பறவைகள் ஏன் வானத்தின் மீது உயர உயரப் பறக்கவில்லை? எல்லாமே ஒரு நியதிக்குட்பட்டவை போலக் குறிப்பிட்ட எல்லைக்குள் ளேயே பறந்து பறந்து மீண்டும் இறங்கி விடுகின்றன. ஒரு பறவையாவது அந்த நியதிகளை மீறி உயரமாகப் பறந்து கொண்டே செல்ல மாட்டாதா என்று ஏக்கத்தோடு பார்த் துக் கொண்டிருந்தான். ஆணுல், ஒன்றிற்காவது அந்தத் துணிவு வரவில்லை. அவை அப்படிப் பறக்காமலிருந்தது பெரிய குறையாக இருந்தது.
இந்த விஷயத்தை யாருடனவது மனம் விட்டுக் கதைத்து ஒரு முடிவு காணமுடியாதா என்று மனது தவித் தது. ஜெகநாதன் ஊருக்குப் போய்விட்டான். பஞ்சலிங் கத்தாருடன் இதையெல்லாம் கதைக்கக் கூடாது. அகிலா தான் சரியான ஆலோசனை சொல்லக் கூடிய ஒருத்தி. ஆணுல், அவளும் இப்போது கோபக்காரியாகிவிட்டாள். எப் படியாவது மகேந்திரனைச் சென்று சந்திக்க வேண்டும் என எண்ணினன்.
அன்று மாலை அவனது வீட்டுக்குச் சென்ருன் சிவ குமார்,
"ஹலோ சிவா!.வெல்கம்1.என்னை நீ இன்னும் மறக்கவில்லைத் தான்! மகேந்திரனின் சந்தோஷமான வர வேற்பு.
"நீதான். எங்களை மறந்திட்டாய்.அந்தப் பக்கம் வாறதுமில்லை.நான் அண்டைக்கும் வந்தனன். உன் னைக் காண முடியவில்லை."

Page 91
172 இளமைக் கோலங்கள்
" தெரியாதே . இப்பிடித் தான் எங்கையாவது போயிருப்பன். உன்ரை பாடுகள் எப்பிடி? முகமெல்
லாம் வாடிப் போயிருக்குது.என்ன விஷயம்?"
மகேந்திரன் சந்தோஷமாய்க் காணப்பட்டான். அவனிடம் மகிழ்ச்சிக்குக் குறைவே இருந்ததில்லை.
*"மச்சான்.உன்னைப்போல எந்த நேரமும் மகிழ்ச்சி யாயிருக்க எனக்கு ஏலாது-அது உனக்குக் கிடைச்சிருக்கிற வரப்பிரசாதம்.உன்ரை விஷயங்கள் வீட்டுக்குத் தெரி யுமே?
"இன்னும் இல்லை.ஆறுதலாய் அறிவிப்பம் பேரப் பிள்ளையோடை போய் நின்முல் ஏற்றுக் கொள்ளத்தானே வேணும். எல்லாம் வெல்லலாம் மச்சான்!"
* சரி இப்ப விஷயத்துக்கு வருவம்
நான் உன்னட்டை ஒரு ஆலோசனை கேட்க வந்திருக் கிறன்." எனக் கதையைத் தனது வழிக்குத் திருப் பினன் சிவகுமார்.
**அதென்னடாப்பா நான் ஆலோசனை சொல்ல வேண் டிய விஷயம்?. நான் அவ்வளவு பெரிய ஆள் என்று
எனக்கே தெரியாது.
மகேந்திரனின் மனைவி தேநீர் கொண்டு வந்து கொடுத் தாள். அந்த நேரத்தில் சிவகுமாருக்கு அது மிகவும் தேவைப்பட்டது.
"தாங்ஸ்" சொன்னன்.
**நொட் அற் ஒல்!”

இளமைக் கோலங்கள் 179
---
சிவகுமார் விஷயத்தைக் கூறினன். அவனது இக்கட் டான நிலையை அறிகதும் ஜெகநாதனும் கரிசனையோடு பேசினன்,
"செல்வியும் நீயும் ஒருத்தரை ஒருத்தர் மனசார விரும்பியிருக, ரீங்கள் . அவளும் காசுக்கா ரிதானே? கொப்பரிட்டைப் போய் விஷயத்தைச் சொல்லு. அவ ருக்குத் தேவையான சீதனத்தைப் பேசி அவளையே செய்து வைக்கட்டும்."
"அது விசர்க் கதை . மச் சான் . ஒருத்தியைக் காதலிச்சுப் போட்டு பிறகு போய் காசு தந்தால்தான் கலி யாணம் முடிப்பன் என்று நிக்கிறது எவ்வளவு கேவலம்?"
‘நீதான் அப்பிடி நினைக்கிருய் செல்வியே இதை அறிஞ்சால் கட்டாயம் உதவுவாள். உங்கடை தேவைக் காகத் தானே காசு கேட்கப் போறியள்? காசில்லாமல் கொக்காவைக் கட்டிக் கொண்டு போக இந்தக் காலத்திலை ஆர் வரப் போருங்கள்?"
"இப்ப பேசியிருக்கிறது மாற்றுச் சம்பந்தம் . அதைச் செய்யிறதாலை அக்காவின்ரை பிரச்சினையும் தீருது எண்டு அப்பா எழுதியிருக்கிருர் . அதுதான் நானும் யோசிக் கிறன்."
"நீ இப்ப செல்வியையே கட்டப் பொருய்என்று வைச் சுக் கொள்ளுவம்-கொக்காவின்ரை அலுவலைக் கவனியா மல் விட்டிடுவியோ?"
'ஆர் சொன்னது? எப்பிடியும் அக்காவுக்கு ஒரு மாப் பிளை தேடிக் கட்டி வைச்சிட்டுத்தான் என்ரை கலியாணத் தைப் பற்றி யோசிக்கிறது என்று இருந்தனன்.அதுக் குள்ளை அப்பா தான் அந்தரப்படுருர்!"

Page 92
174 இளமைக் கோலங்கள்
'நீ உழைச் சு சம்பந்தம் பேசி வைக்கிறதுக்கிடையிலை கொக்கா கிழவியாய்ப் போயிடுவாள் என்று நினைச்சிருப் பார்” என வேடிக்கையாகக் கூறினன் மகேந்திரன். அதில் சற்று நியாயமும் கலந்திருப்ப்தைச் சிவகுமாரன் உணர முடிந்தது.
"அப்ப என்னை என்னதான் செய்யச் சொல்லுருய்?" எனச் சினத்தோடு கேட்டான் சிவகுமார்.
"ஆத்திரப்படாதை!. ஒரு "ரேக் இற் ஈஸி" பொலிசி இருக்க வேணும் மச்சான். எல்லாம் நன்மைக்கே என்று நினை. பிரச்சினைகளைப் பெரிசு படுத்தாதை. கொஞ் ቇ tb ஆறுதல்ாய் யோசிச்சு ஒரு முடிவு எடுக்கலாம். அது சரி இப்ப உன்ரை அகிலா என்ன செய்கிருள்?"
சிவகுமாருக்கு முகம் ஒடிச் சிவந்தது-அகிலாவை "உனது" என அவன் குறிப்பிட்டுக் கன்தத்தது இன்னும் தங் களைக் கரவாகத் தான் கருதுகிருனே என்று சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவனது மாருத மனநிலையை எண்ணி மெல்லச் சிரித்தவாறே சொன்னன்.
"உனக்கு இன்னும் இந்த நக்கல் கதையளைவிட விருப்பமில்லை?"
"அதுக்கில்லை மச்சான்.ஒரு முக்கியமான விஷயம் இதுக்காக நானே வந்து உன்னைச் சந்திக்க வேணுமெண்டு இருந்தனன்."
“ “ GT6ör Gor?”
*ராஜேசனுக்குக் கலியாணம் முற்ருகியிட்டது!"
சிவகுமாருக்கு இந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடிய வில்லை;
"உண்மையைத் தான் சொல்லுறியா?”

இளமைக் கோலங்கள் 175
*ராஜேசன் தான் இதைச் சொன்னன் . யாழ்ப் பாணத்தில்ை நல்ல சீதனத்தோடை முடிக்கப் போருன்...”*
"அப்ப அகிலா?"
"அதை என்னட்டைக் கேட்டு நான் என்ன செய் யிறது? . அதுக்காகத்தான் உன்னைக் காண வரவேணு மெண்டு நினைச்சனன். அகிலா பாவம் தான். நானும் அவனுக்கு எவ்வளவோ சொல்லிப் பாத்தன்.கேட்கிரு னில்லை...'
சிவகுமாருக்கு அதுக்குமேல் அவ்விடத்தில் இருப்புக் கொள்ள முடியவில்லை. உடனடியாகப் போய் அகிலா வைக் காண வேண்டும் போன்ற துடிப்பு. அகிலா சில நாட்களாகச் சோகமே உருவாக இருப்பதற்குக் காரணம் இது தான? அது புரியாது அவளைத் தானும் புறக்கணித்து நடந்ததை நினைக்கக் கவலை பொங்கி வந்தது. மகேந்திர னிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியேறிஞன்.
எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது. வானத்தில் நட்சத் திரங்கள் பூத்துவிட்டன. ஒட்டை விழுந்த மேகம், பொய் யான மினுக்கங்கள். வானத்திலிருந்து ஒரு நட்சத்திரத் தின் வீழ்ச்சி. நெஞ்சை அடைத்துக் கொள்கிற கவலை,

Page 93
அத்தியாயம் - 26
இரவு, நேரம்கடந்த பின்னர் தான் சிவகுமார் அறைக்கு வந்தான், அவன் எப்பொழுது வருவான் என்று பதட்டத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தாள் அகிலா வின் தாய். அவனைக் கண்டதுமே வாசலுக்கு ஓடி வந்தாள்.
/ 'தம்பி.அகிலாவுக்கு ஏதோ சுகமில்லை .. ஒரு க் கால் வந்து பாருங்கோ.
அகிலா வுக்குச் சுகமில்லை என்றதுமே மனது "திடுக்" குற்றது.
"என்ன சுகமில்லை?"
மகேந்திரன் மூலம் ராஜேசன் வேறு கல்யாணம் செய் யப் போகிற செய்தியை அறிந்து கொண்டதுமே அவனது மனதைத் தாங்க முடியாத வேதனை ஆட்கொண்டது. இப் படியொரு செய்தியோடு எப்படி அகிலாவைக் காண்பது என்று புரியாத குழப்பத்தோடு சென்று கடற்கரையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தான். அப்பொழுதெல்லாம் அகிலாவின் நினைவுதான் மனதை ஆக்கிரமித்துக் கொண் டிருந்தது. இப்பொழுது வந்ததும் 'அகிலாவிற்குச் சுக மில்லை" என்றதும் உடலியக்கங்களெல்லாமே நின்று விட்ட தைப் போலுணர்ந்தான்
* பிள்ளை இண்டைக்கு நல்லாய் மழையிலை நனைஞ்சிட்
டாள் போல. வந்து தலையிடிக்குது என்று படுத்தாள். இப்ப பாத்தால். O

இளமைக் .ே கங் . ፲7 7
அம்மாவைத் கொடர்ந்து சிவகுமார் வீட்டுக்குள் நுழைந்தான். அ. கட்டிலிற் படுத்திருந்தாள். ஆழ்ந்த உறக்கத்திலிருப்பவஃப்போல மூச்சு வாங்கினள். முகம் வீக்கமடைந்திருந்தது.
அம்மா அகிலாவைத் தட்டி எழுப்புவதற்கு முயற்சிக் தாள், அவள் விழிக்காமல் இருக்கவே "ஐயோ.என்டை பிள்ளைக்கு என்ன வந்ததோ. " எனப் புலம்பத் தொடங்கினுள். சிவகுமாருக்கு அகிலா கிடக்கும் கோலத் தையும் செய்வதறியாது நிற்கும் தாயையும் பார்க்கப் பெரிய பரிதாபமாக இருந்தது.
"காய்ச்சல் காயுதோ?" எனக் கேட்டவாறே அகிலா வின் கழுத்திலும் கன்னத்திலும் கையை வைத்துப் பார்த் தான் சிவகுமார்; "உடல் குளிர்ந்து போயிருக்குது". என்று கூறினன்.
"டொக்டரிட்டைக் கொண்டு போவமோ?" என்று அம்மாவைப் பார்த்துக் கேட்டான்.
அகிலா தூக்கத்திலிருந்து விழித்தாள். சிவகுமார் வந்து நிற்பது ஒரு கனவு போலத் தெரிந்தது. பெரிய முயற் சியின் பின்னர் கண்களை மெல்ல மெல்ல விழித்தாள். எல் லாம் ஒரே சுழற்சியாகவும் அந்தரத்திலே பறப்பது போல வும் இருந்தது. சிவகுமாரோடு ஏதாவது பேச வேண்டும் என்று மாத்திரம் மனது துடித்தது.
"அகிலா! என்ன செய்யுது? எழும்புங்கோ . டொக்டரிட்டைப் போகலாம்!" என்ருன் சிவகுமார்.
அவள், "ஒன்றும் இல்லை" என்பதுபோலத் தலையை அசைத்தாள். எழுந்திருப்பதற்கு முயன்ருள். அம்மா கையைக் கொடுத்து அணைத்து உதவி செய்தாள்.

Page 94
178 இளமைக் கோலங்கள்
கண்களை விழித்துச் சிவகுமாரை விசித்திரமாகப் பார்த்தாள்.
"அகிலா, என்ன செய்யுது என்று சொல்லுங்கோ. டொக்டரைக் கூட்டி வரவா?" எனத் திரும்பவும் கேட் டான் சிவகுமார்.
அகிலா பிடிவாதமாக மறுத்தாள்.
"வேண்டாம் சிவா!. எனக்கு.. ஒன்றுமில்லை. மழையிலை நனைஞ்சிட்டன். அதுதான் தலையிடி. தலைப் பார்மாய் இருக்கு. டிஸ்பிறின் போட்டிருக்கிறன்.எல் லாம் சரியாயிடும்.நீங்க போங்க" என ஒரு பொய் யைக் கூறினுள்.
சிவகுமார் எவ்வளவோ வற்புறுத்தியும் வைத்திய ரிடம் போவதற்கோ அல்லது வைத்தியரை அழைத்து வரவோ அவள் சம்மதிக்கவில்லை.
சிவகுமார் நீண்ட நேரம் அம்மாவோடு கதைத்துக் கொண்டிருந்தான். அகிலாவும் இருந்தாள். கதிரையி லிருந்தவாறே அவள் உறங்குவதைக் கவனித்த சிவகுமார் 8 & *நீங்கள் போய்ப்படுங்கோ அகிலா...' எனக் கூறி ஞன். தான் போகும்வரை அவளும் படுக்க மாட்டாள் என்ற எண்ணத்தில் பின்னர் விடை பெற்றுச் சென்ருன்,
இரவு வெகுநேரமாகியும் சிவகுமாருக்கு உறக்கம் பிடிக்கவில்லை. அகிலா சுகயீனமாகக் கிடந்த கோலம் சுற் றிச் சுற்றிக் கண்ணுக்குள் வந்து கொண்டிருந்தது. முகமெல்லாம் அதைத்து வீக்கமெடுத்ததுபோல. பார்க்க மிகவும் பரிதாபமாக. அப்படி என்ன சுகபீனம்? .
நிறைய அழுதிருப்பாளோ?
ராஜேசன் இன்னுெருத்தியை முடிக்கப் போகிற விச யம் அவளுக்குத் தெரிந்திருக்குமோ தெரியாது என்ற சமசி

இளமைக் கோலங்கள் 179
யத்தில்தான் முதலில் வந்தான். இதை எப்படி அவளிடம் தெரியப்படுத்துவது என்ற பெரிய சங்கடத்துடனேயே வந்தான். ஆனல், ஏற்கனவே அவளுக்கு விஷயம் தெரிய வந்திருக்கிறது. அந்த அதிர்ச்சி தான் அவளை உருக்குலைத் திருக்கிறது.
அடுத்த நாள் விடியற்காலை சிவகுமார் வந்தான்.
"இப்ப எப்படி அகிலா?"
"எனக்கு ஒன்றுமில்லை...!"
"நீங்கள் சொல்லத் தேவையில்லை. முகத்தைப் பார்க்கத் தெரியுது. சுகமில்லையெண்டு!"
அவள் பேசாமலிருந்தாள்.
*காசுக்காகப் பார்த்துத்தானே டொக்டரிட்டை வர மாட்டணெண்டனிங்கள்? ஆருக்காகத் தான் இப்படி மிச்
சம் பிடிக்கிறீங்களோ தெரியாது’ எனச் சற்றுச் சினத் துடனேயே கேட்டான்.
அகிலா மெதுவாகச் சிரித்து அவனைச் சமாதானப்படுத் தினுள்.
"அதில்லை சிவா, நான் டொக்டரிட்டை வராததுக்கு வேற காரணம்."
"arcirar?”
"அப்புறமாகச் சொல்லுறன்."
சிவகுமாரும் அன்று அடிக்கடி வந்து அகிலாவின்
சுகத்தை விசாரித்துக் கொண்டிருந்தான். அம்மா "மாக் கற்றுக்குப்" போய்விட்ட பின்னர் அகிலா சொன்னுள்.

Page 95
180 இளமைக் கோலங்கள்
"சிவா, நான் ஏன் டொக்டரிட்டை வரயில்லைத் தெரி պւon?''
ஏன்?"
"சாகிறதுக்காக நித்திரைக் குளிசை போட்டிட்டு ஒருத்தி டொக்டரிட்டைப் போவாளா? பிடிபட்டிடுவன் என்ற பயம் தான்.
சிவகுமார் அதிர்ந்து போனன். எவ்வளவு சாதாரண மாகச் சொல்கிருள்! பதட்டத்துடனும் பயத்துடனும் அவனது நடுங்கும் குரல் கேட்டது.
"'என்ன வேலை செய்தீங்க அகிலா? டொக்டரை நான்
சமாளிக்கிறன். வாங்க போவம். * என அவசரப் படுத்தினன்.
'பயப்பிடாதையுங்கோ . எல்லாம் சத்தியெடுத்
துத் தீர்த்திட்டன்.இப்ப நல்ல சுகம்."
அவன் அதிசயப்பட்டான். தூக்க மாத்திரைபோட்டு, பிழைத்து உயிரோடு இருக்கிருள் என்ருல், எதையுமேநம்ப முடியவில்லையே"
**எந்தச் சக்தி என்னைத் தப்ப வைச்சது என்று எனக் குக் கூட அதிசயமாயிருக்கு சிவா. இப்ப சொல்லட்டா? 0 0 அந்தச் சக்தி நீங்கதான். என்ட வாழ்க்கைக்கா மனப் பூர்வமாகக் கவலைப்படுகிறவர் நீங்கள்தானே?. இந்த உலகத்தைவிட்டுப் போயிட வேணுமெண்டு அடிக்கடி சொல்லுவன். இந்த உலகத்தில இன்னும் இருப்பதே உங்கள் ஒருவருக்காகத்தான். உங்கட அன்புதான் என் னைச் சாகவிடாமற் தடுத்திருக்கு.
"இப்படிச் செய்யத் தூண்டிற அளவுக்கு உங்களுக்கு என்ன கவலை அகிலா?.என்னட்டைச் சொல்லியிருக்க லாமே??

இளமைக் கோலங்கள் 18.
*சொல்ல முடியாத அளவுக்குக் கவலையென்ருல் வேறு என்ன செய்யிறது? சொன்னலும் நீங்க தீர்த்து வைக் கவா போறிங்க?. நீங்களும் சேர்ந்து கவலைப்படுவீங்க."
"அப்படி என்ன சொல்ல முடியாத கவலை? ராஜே சன் கைவிட்டிட்டான் என்று தானே? அந்த மடையன் தேவையில்லை . இன்னுமொருத்தனை நான் பார்த்துக் கட்டி வைக்கிறன்."
அகிலா சற்று நேரம் மெளனமாயிருந்தாள். ஒரு பெரு மூச்சு வெளிப்பட்டது. பின்னர் நிதானமாகச் சொன் ணுள்:
*சிவா நான் ஏமாந்து போயிட்டன். ராஜேசனை நம்பி என்ட வாழ்க்கையையே இழந்திட்டன்."
சிவகுமாருக்குப் புரிந்தது போலவும் இருந்தது" அதை எப்படிக் கேட்பது என்றும் புரியாமல் அகிலாவைப் பார்த்தான்.
"நீங்க நினைக்கிறது சரி. ஒரு பெண் எதை இழக்கக் கூடாதோ அதை நான் இழந்திட்டன்."
-ஒருவித குழப்பமுமில்லாமல் அவள் சொல்லிவிட் டாள்! அதனுல் தான் பாதிக்கப்படாதவள்போல நிதான மாக இருந்தாள்.
"அது ஒரு விபத்துப்போல நடந்து முடிஞ்சிட்டுது. என்ட கெட்ட காலம் அன்றைக்கு நான் ஏன் இடம் குடுத் தன் என்றதே அதிசயமாயிருக்குது . சிவா, நான் கொஞ்ச நாளாய் கவலையோடு உங்களோடை கூடக் கதைக்காமல் இருந்ததுக்கும் காரணம் அதுதான்.இனி என்ன செய் யிறது.வாழ் நாள் முழுக்க இப்படியே இருக்க வேண் டியதுதான்."

Page 96
82 இளமைக் கோலங்கள்
சிவகுமாருக்கு நெஞ்சு குமுறியது.
"அகிலா நான்போய் அவனைக் கண்டு கதைக்கட்டா?"
“தேவையில்லை சிவா! நான் எவ்வளவோ அழுது குளறியும் இரங்காதவன் நீங்கள் கேட்டா சம்மதிக்கப் போருன்?..எனக்கு இனி அவன் தேவையில்லை."
சிவகுமாருக்கு அவள் புரியாத புதிராகக் காட்சியளித் தாள். அகிலா அவனது மனதை ஆற்றுவது போலச் சொன்னுள்;
'சிவா! இதிலை கவலைப்பட ஒன்றுமில்லை. நான் ஒரு தற்ற தயவிலை வாழவேண்டிய அவசியமில்லை. நான் உத் தியோகம் செய்து சம்பாதிக்கிறவள். என்ட வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொண்டு உங்களைப் போன்ற நல்ல நண்பர்களின்ரை துணையோட சீவிக்கலாம் தானே? பொம் பிளைப் பிள்ளைதானே என்று விட்டிடாமல் எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையிலும் என்னைப் படிப்பிச்சு விட்ட அப்பாவை இப்பதான் நன்றியோடு நினைச் சுக் கொள்ளு றன் சிவா! அந்தப் புண்ணியத்தாலைதான் இப்ப என்ட காலிலை நிற்க முடியுது!"
சிவகுமாரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன - அகிலா உங்களை என்னல் அளக்கவே முடியாது!"

அத்தியாயம் - 27
திெர்பாராத விருந்தாளியைப் போல ஒரு பெரு மழை வந்தது. வெளித்திருந்த வானம் திடுதிப்பென்று இருண்டு கொண்டு வந்து பெருமழை கொட்டத் தொடங்கியது.
சிவகுமாருக்கு வீட்டிலிருந்து தந்தி வந்திருந்தது - அப்பா சுபநாள் குறிப்பிட்டு அறிவித்திருக்கிருர், பெண் பார்க்கப் போக வேண்டும்!
இடி இடித்தது.
இப்பொழுது என்ன செய்யலாம்? அப்பாவுக்கு அடங் கிய பிள்ளையைப்போல வீட்டிற்கு ஓடிச் சென்று அவர் காட்டுகிற பெண்ணின் கழுத்தில் முடிச்சுப் போட்டுவிட்டு வர வேண்டியதுதான? நோ! முடிச்சுப் போடுகிறவரை அவருடைய பிள்ளையாக இருக்கலாம். பிறகு?
செல்வி அவனைப் பரிதாபமாகப் பார்ப்பதுபோலப் பிரமை ஏற்பட்டது- 'நீங்கள் என்னை மறந்து போகப் போகிறீர்களா?*
-இல்லை செல்வி உன்னை எப்படி மறக்க Փգպմ?
விஷயத்தை ஆரம்பத்திலேயே அப்பாவுக்குத் தெரியப் படுத்தாமல் மூடி மூடி வைத்திருந்தது எவ்வளவு தவருகப் போய்விட்டது! இப்பொழுது போய் ஒருத்தியை விரும்பு கிறேன் என்ருல் அப்பாவே குழம்பிப் போக மாட்டாரா?
பிரச்சினைக்குத் தீர்வு காண அகிலாவிடம் தான் ஆலோ சனக்குப் போக வேண்டும், ஆனல் அவள் கூட இப்

Page 97
184 இளமைக் கோலங்கள்
பொழுது பட்டு நொந்து போயிருக்கிருள். முதலில் அவ ளது பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
அகிலா என்றதும் அவள் எத்தனையோ வகையில் ஆறு தலாகவும் உதவியாகயும் இருந்த சந்தர்ப்பங்கள் நினை வில் வந்தன. பாவம் அகிலா-அவளுக்கு இந்தக் கதியா? இனி அவள் வாழ்க்கைக்கு வழிதான் என்ன? வழியே தெரி யாமல் தானே அவள் இறந்து போய்விட நினைத்திருக் கிருள்.
ராஜேசனைப் போய் கொலை செய்யலாம் போலத் தோன்றியது. அந்த அரக்கனிடம் போய் இந்தப் பேதை எப்படிக் கெஞ்சியிருப்பாளோ என இரக்கத்துடன் எண் ணிப் பார்த்தான்.
''. . . . . . ராஜேஸ் . நான் கேள்விப்பட்டது உண் மையா?. உங்களுக்குக் கலியாணமாமே?." அவன் ஒரு புதுமணப் பெண்ணைப்போல ஒரு பதிலும் சொல்லாது தலையைக் குனிந்து கொண்டிருந்திருப்பானே, முட்டாள்.
"உண்மைதானு. ? சொல்லுங்க. ப்ளிஸ் ..?"
ஒரு தலையசைவில் அவளது தலை வெடித்துச் சிதறுகிற பதிலைச் சொல்லியிருப்பான். அவளுக்கு வாழ்வு அளிப்ப தாகக் கூறி அவளது வாழ்க்கையையே அழித்திருக்கிருன்
அகிலா, ஏன்தானே அவனிடம் தோற்றுப் போனுள்? அவளது புத்தி சாதுர்யமெல்லாம் எங்கே ஒளிந்து கொண் டது? அல்லது அவனது ஆசை வார்த்தைகளில் மயங்கிப் போயிருப்பாளோ? பெண்களுக்கேயுரிய இயற்கையான பெலவீனம் இடம் கொடுத்து விட்டதா? தங்கள் அழகைப் புகழ்ந்து பேசுகிற ஆண்களின் வார்த்தைகளில் மயங்கி மோசம் போகிற எத்தனையோ பெண்களைக் கண்டிருக்

இளமைக் கோலங்கள் 185
கிருன். அந்த வரிசையில் இவளுமா? அல்லது. ஆண் கள் செக்ஸை எதிர்பார்த்து அன்பைப் பொழிகிருர்கள். .பெண்கள் அன்பை எதிர்பார்த்து செக்ஸைக் கொடுக் கிருர்களாம். அந்தக் கதையா?
"அவரோட இவ்வளவு பழகியாச்சு.சபல புத்தி உள் ளவரெண்டால்போலவிடுறதா?. திருத்தியிடலாமென்ட நம்பிக்கையிருக்கு.அதுக்காகத்தான் அவர் விரும்புகிற மாதிரியெல்லாம் நடக்கிறன். இல்லாட்டி அவர் மற்ற கேர்ள்ஸ்சோடை திரியிறதைப் பார்த்துக் கொண்டிருக் கேலுமா?’ என அகிலா முன்பொருமுறை சொல்லியிருக் கிருள்.
அந்த எண்ணத்திற்தான் உன்னை இழந்து விட்டாயா? ப்வ(ர்) கேர்ள். "என்னில இவ்வளவு அன்பும் விருப்ப மும் உள்ள வரோடை . வாழுற திலை பிழை இல்லைத் தானே? எனக்கு இப்பிடியொரு அதிஷ்டம் கிடைச்சா. பெத்த வங்களுக்கும் பாரமில்லாமற் போகலாம் தானே? .." என ஆரம்பத்தில் நியாயம் பேசினுய். இப்பொ ழுது பார்த்தாயா அந்த நாகத்தை?
சிவகுமார் சற்று நேரம்தான் கட்டிலிற் படுத்திருந் தான். எல்லாமே ஒரு கனவுபோல இந்த உலகமே வெறும் போலியாக இருந்தது. முகட்டிலே குடியிருக்கும் குருவி கூட்டிற்குள்ளிருந்து எட்டி இவனைப் பார்த்தது. கவலை யோடு எல்லாப் பக்கமும் பார்த்தது. பின்னர் மிகவும் மெல்லிய குரலில் அழத் தொடங்கியது.
.ஆண்குருவி எங்கேயோ ஒடியிருக்குமோ? அவன் நெஞ்சு நிரம்பிய கவலையோடு தலையணையில் முகத்தைப் புதைத்தான். குருவியின் அழுகை உள்ளத்தை வருத்தி யது. அதற்கு எப்படி ஆறுதல் சொல்லலாம் என மனது துடித்தது.

Page 98
186 இளமைக் கோலங்கள்
இந்த உலகத்திலே இப்படி வாழ்கிற சீவன்களும் இருக் கின்றனவா? எதற்காகக் கணவன் மனைவி குடும்பம் என்ற உறவுகள்? நம்பிக்கை என்ற ஒரு சத்தியத்தை வைத்துக் கொண்டே மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்ருல் அந்த நம்பிக்கைகள் இலகுவாக ஏமாற்றப்படுகின்றன. பிறகு மனநிறைவான வாழ்க்கைக்கு என்ன உத்தரவாதம்?
அகிலாவின் நினைவும் அவளது தோற்றமும் விசுபரூப மெடுத்துக் கொண்டு முன்னே நின்றன. தற்செயலாக அவள் செத்துப் போயிருந்தால்.என்ற எண்ணம் தோன்றியது - வாழ்ந்து என்ன பயன்? செத்தே போய் விடலாம்? என அவள் விரக்தியாகச் சொல்லும் போதெல் லாம் துடித்துப் போயிருக்கிருன். அப்படிப் பேசுவதையே தாங்கிக் கொள்ள முடியாதவன் உண்மையிலேயே நடந்து விட்டால் எப்படித் தாங்கிக் கொள்வேன்? அதற்குப் பிறகு எனது பொறுப்புக்கள், பிரச்சினைகள், சுமைகள். தம்பி, அப்பா, அம்மா, அக்கா. செல்வி?
மேற்கொண்டு அவனல் கட்டிலிற் படுத்திருக்க முடிய வில்லை. சிந்தனைகள் தடைப்பட்டன. தன்னைப் பொறுத்த வரை அகிலாவின் ஆக்கிரமிப்பை உணர முடிந்தது. எங் கும் அகிலா, எதிலும் அகிலா. முதலில் அகிலாவின் பிரச் சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். கவலைகள் எல்லா வற்றிற்கும் பெரிய கவலைகளாக விசுவரூபம் எடுத்துக் கொண்டு நிற்கிற அவளது கவலைகளுக்கு ஒரு தீர்வு காண வேண்டும். அதற்குப் பிறகுதான் இந்த மனசும் சுக tD 600-luib.
நேரத்தைப் பார்த்துக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தான். சில்லிடுகிற குளிர். காலி வீதியில் ஏறி நடந் தான் - பட்டாளக்காரரைப்போல அணிவகுத்து நிற்கிற வீதி விளக்குகள். அவனை வரவேற்று மரியாதை செய் கின்றன! புதிய பலம் வந்தவனைப்போல நெஞ்சை நிமிர்த்

இளமைக் கோலங்கள் 187
திக் கொண்டு நடந்தான்."இங்கு உண்மைகள் தூங்க வும், ஊமைகள் ஏங்கவும் நாணு பார்த்திருப்பேன்?
ராஜேசன் ஒரு சாதுவைப் போல அறையில் பதுங்கி யிருந்தான் - இந்தப் பூனையும் பால் குடிக்குமா? சிவ குமார் நைளாக விஷயத்திற்கு வந்தான் - அவன் மிருகத் தனமாகச் சீறிஞன்.
"நீயும்தான் அவளை வைச்சிருந்தனி?...மறுகா என் னட்ட வாருய்? . . அவ்வளவு கரிசனையென்றல் நீயே அவளை முடிக்க வேண்டியதுதானே?"
இவன் இழுத்துப்போட்டு உதைத்தான். அவனும் உதைத்தான் - கட்டிற் சட்டத்தை எடுத்து விளாசினன், நல்ல அடி எழுந்து என்ன செய்வது என்று புரியவில்லை. பிறகு அவனைப் பார்த்து மன்ருட்டமாகக் கதைத்தான்.
*ராஜேஸ். அகிலா பாவம் . அவளைக் கைவிட உனக்கு எப்பிடி மனம் வந்திது? . பெண் பாவம் சும்மா விடாது . தயவு செய்து அவளைக் கைவிட்டிடாதை."
"பெண் பாவமும் . மண்ணுங்கட்டியும் . மண் தின்னுறதை மனிசன் தின்னுருன் . நீயேன் அவளுக்காக இவ்வளவு கரிசனைப்படுகிருய்?" அவனது ஏளனம்.
சற்று நேரம் பிரமை பிடித்தவனைப்போல நின்றன்
சிவகுமார். பின்னர், **ராஜேசன். நான் விடமாட்டன் & கடைசிவரையும் விடமாட்டன்.ஒரு முடிவு தெரியா மல் இஞ்சையிருந்து போக மாட்டன். ' என ஆவேசம்
வந்தவனைப் போலக் கர்ச்சித்தான்.
அதைக் கண்டு ராஜேசனுக்கு மிரட்சி ஏற்பட்டது. எப் படியாவது அவனை அவ்விடத்தைவிட்டு அகற்றினுலே பெரிய நிம்மதி எனத் தோன்றியது.

Page 99
188 இளமைக் கோலங்கள்
"சிவகுமார். சும் மா.விளையாடாமல் போ!. நான் வேணுமெண்டா இப்படிச் செய்தனன்?"
"எனக்கு எந்தச் சமாதானமும் வேண்டாம்.நீ அகிலாவை முடிக்க வேணும்!" -
'தயவு செய்து எனக்குத் தொல்லை தராமல் போ. என்ர விருப்பத்துக்கு முடிக்க பேரன்ஸ் விடமாட்டாது கள்.”
சிவகுமார் சீறினன், "பேரன்ஸைக் கேட்டா எல் லாம் செய்தனி?. மடையா அவளைக் கலியாணம் செய் யிறதாய் சத்தியம் செய்து குடுத்திருக்கிருய். கடைசி வரை கைவிடமாட்டன் எண்டு நீ சொன்னதை நம்பித் தானே அவள் மோசம் போனுள்.
"பெரிய சுத்தம் பேசாதை!.அவளுடைய வீட்டி லேயே அடுகிடை படுகிடையாய்க் கிடந்தது நீ தான். மறுகா என்ர தலையிலை கொண்டு வந்து கட்டப் பார்க் 45rt Ga5...... 9 ᎵᎦ
ஓர் அற்ப புழுவைப் பார்ப்பதைப்போல அவனைப் பார்த்தான் சிவகுமார்.
'துர!
வெளியேறி நடந்தான்- கடற்கரையை நோக்கிச் சென்றன கால்கள். கடற்கரைப் பாதையில் புகையிரத மொன்று விரைந்து ஓடுகிறது. பாதையோரமாகக் கட லின் கரையில் அமைந்திருக்கிற குடிசைத் தொடர்கள். அவற்றிலே அமைதியாகச் சீவிக்கின்ற ஏழை மக்கள்! புகையிரதங்களின் கோரமான இரைச்சலும்.கடலின் * வருவேன், வருவேன்!" எனப் பயமுறுத்துகிற ஓசையும் அவர்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை!

இளமைக் கோலங்கள் 189
கடல் அலைகள் ஓடிவந்து மண்ணைத் தொட்டுத் தொட் டுப் பார்த்துச் செல்கின்றன. ஒரு நாளைக்கு ஆவேசம் கொண்டு கொந்தளித்து வந்து இந்த மண்ணையும் குடிசை களையும் அழித்துவிட்டுப் போகவும் தயங்காது தன்னேடு ஒட்டி உறவாடித் தன்னை நம்பிச் சீவிக்கிற ஏழைகள் என்ற இரக்கம் அதற்கு இருக்காதோ?
சிவகுமார் ஒரு கல்லில் அமர்ந்து கொண்டான்.
'அவளை நீயும்தான் வைச்சிருந்தனி?...பிறகேன் என் னட்டை வாருய்?"-கடலின் அட்டகாசமான சிரிப்பு அவ னுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து அறையை நோக்கி நடந்தான். W
நிலவு எறித்துக் கொண்டிருக்கிறது-ஒரு பாவமும் அறியாமல் வாசலுக்கு வந்து கதவைத் திறந்தான்.
நிழல்கள்! அவனைச் சுற்றி, அவனை மையமாகக் கொண்டு வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு பருமன் களில் நிழல்கள் தென்பட்டன. அவன் மெல்ல நடந்தான். நிழல்களும் அசைவு பெற்று வெவ்வேறு கோணங்களிலும் பருமனிலும் மாற்றமெடுத்தன.
வீதி விளக்கின் வெளிச்சத்திலிருந்து உருவெடுத்து ஒரு நிழல். வீட்டிலுள்ள வெவ்வேறு விளக்குகளிலிருந்து தோற்றமெடுத்தன சில நிழல்கள். முன் வீட்டு வெளிச் சத்திலிருந்து இன்னும் சில. தூர இருக்கின்ற நிலவின் பார்வையிலும் ஒரு நிழல். அவைகள் எல்லாமே அவனது தோற்றத்தில் தாங்கள் உருக் கொடுக்கிற நிழல்களைத் தான் நிஜங்கள் என்று கருதுகின்றனவோ. மனிதர்களைப் போல தாங்கள் பார்க்கின்ற கோணங்களில்தான் தவறு இருக்கிறது என்பதை யாருமே உணரவில்லை. சரியான நிலைக்கு வந்து உண்மையை அறிந்து கொள்ள-நிஜத்தை உணர்ந்து கொள்ள யாருக்கும் விருப்பமும் இல்லை!

Page 100
190 இளமைக் கோலங்கள்
"அகிலாவை நீயும்தான் வைச்சிருந்தனி? a s 8 அவ்வளவு கரிசனையெண்டால் நீயே அவளை முடிக்க வேண்டியது 5rGaorpo
சரிதான் அறிந்தோ அறியாமலோ அவளது வாழ்க்கை பாதிக்கப்படுவதற்குத்தானும் காரணமாயிருந் திருக்கிறேன் என்ற உண்மை புலப்பட்டது. அந்தப் பேதை செத்துப் போகத் துணியும் அளவிற்குத் தள்ளப்பட்டதற் குத் தனது பங்கும் இருக்கிறது. அதை அவள் மறுத்தாலும் உண்மை அதுதான். மற்றவர்கள் என்ன கதைகளைச் சோடித்தாலும் எங்கள் வரையில் தூய்மையாக இருந்தால் சரி என நினைத்துப் பழகியது எவ்வளவு தவருகப் போய் விட்டது. இப்பொழுது ராஜேசனும் மற்றவர்களில் ஒரு வணுக நின்று அவளைக் கைவிட்டு விட்டான். இனி? அவ ளுக்கு வாழ்க்கை அளிக்க வேண்டியவன் நீ தான்-என அவனது மனச்சாட்சி பேசியது. சிவகுமார் அதற்கு அடங் கினன். தனது மற்றைய சகல பிரச்சினைகளோடு ஒப்பிட் டுப் பார்த்தாலும் அகிலாவுக்கு வாழ்வு கொடுக்க வேண்டி யது தவிர்க்க முடியாதது என முடிவெடுத்தான்.

அத்தியாயம் - 28
விழக்கமாகவே அதிகம் பேசாத சுபாவமுடையவன் சிவகுமார். இப்பொழுது அதுவும் இல்லை! நன்முகப் பழக்கமானவர்களுடனேயே கதைக்க விருப்பமில்லாதிருச் கிறது. ஓரிரு வார்த்தைகளில் சம்பாஷணையை வெட்டிக் கொண்டான். எல்லோரையும் தவிர்த்துத் தனிமையாக இருந்தால் போதும் எனத் தோன்றுகிறது. இந்த உலகம், மனிதர்கள், மரம், செடி, கொடி ஒன்றும் வேண்டாம், எல்லோரையும் உதறிவிட்டுத் துறவியைப்போல இருக்க வேண்டும். அப்படியானற்தான் இப்பொழுது விட்டகுறை தொட்டகுறையாக இருக்கிற உறவுகளின் தொல்லைகளும் இல்லாமற் போகும்!
ஓ! அதுகூட எவ்வளவு சுயநலமான எண்ணம்? தொல்லைகள் இல்லாமல் சுகமாக இருக்க விரும்புகிற மனம்1 மற்றவ்ர்களுக்காக இரங்குவதிலும் அவர்களுக் காக வாழ்க்கையை அர்ப்பணிப்பதிலும் உள்ள நிம்மதி வேறு எங்கே கிடைக்கும்? எதையும் எங்களுக்காக என எண்ணும்பொழுது தான் பிரச்சினைகளே உருவாகின்றன.
ஊருக்குச் சென்றிருந்த ஜெகநாதன் வந்ததும் படுக் கையிலிருந்த சிவகுமாரைக் கவனித்தான். வந்ததுமே பஞ்சலிங்கத்தார் மூலம் செய்தி கிடைத்து விட்டது.
"என்ரை புத்திமதியைக் கேட்டு நடந்திருந்தால் இப் படி முடிஞ்சிருக்குமே?.அநியாயமாய்ப் போய் மாட்டுப் பட்டிட்டாய்.இப்பிடி நடக்குமென்று எனக்கு அப்பவே தெரியும் ." எனத் தனது தீர்க்கதரிசன ஞானத்தைக் குறிப்பிட்டுக் கதைத்தான்.

Page 101
192 இளமைக் கோலங்கள்
'சிவா! நல்லாய் யோசிச்சுத்தான் இந்த முடிவை எடுத்தனியோ?.ராஜேசனேடை அவள் ஆடித் திரிஞ்ச ஆட்டங்கள் தெரியும்தானே?
சிவகுமார் ஏளனமாகச் சிரித்தான்.
"உங்களைப்போல ஆம்பிளையஸ் செய்யிற பாவங் களுக்குப் பிராயச்சித்தமாயாவது இது இருக்கட்டும்." என அவனது வாயை அடக்குவதுபோலக் கூறினன். பின்னர் அங்கிருக்கப் பிடிக்காமல், எழுந்து அகிலாவைக் காண் LT 35 ற்குச் சென் முன்.
மலர்ச்சியோடு வரவேற்ருள் அகிலா. சில நாட்களுக் குள் அவளிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பட் டுத் தெளிந்த புன்னகை. அமைதியான பார்வை.
அவன் கதிரையில் அமர்ந்தபொழுது நேற்றைய அடி யில் பட்ட கைமூட்டு வலியெடுத்தது. கட்டிற் சட்டம் நினைவில் வந்தது. "அம்மா" என முனகியவாறு நிமிர்த் திருந்தான் சிவகுமார்.
அகிலா காரணம் கேட்டாள். பாத்றுாமில் சறுக்கி விழுந்ததாகப் பொய் கூறினன்.
*சிவா! சறுக்கி விழுந்தீர்களா?.ஆராவது பாத் தானுகளா?"
**இல்லையே ஏன்?" புரியாமல் விழித்தான் சிவகுமார். 'சந்தர்ப்பம் ஒரு சகதிநிலம்.அதில் சறுக்கி விழாத வர்கள் மிகவும் சொற்பம்.ஆனல், நாலுபேரறிய விழுந்
தவின் மாத்திரம் நகைக்கப்படுகிருன் என யாரோ லியது ஞாபகம் வந்தது."

இளமைக் கோலங்கள் 193
இவளால் இப்படியெல்லாம் பேசமுடிகிறதே என ஆச்சரியமேற்பட்டது. தனது மனநிலையை மறப்பதற்குத் தான் இப்படி நடந்து கொள்ளுகிருளோ தெரியவில்லை. அல்லது தன்னையே தேற்றிக் கொள்கிருளா?
அவன் மெளனமாகச் சித்தனேயிலாழ்ந்திருந்தான். அகிலாவே வலிந்து கதைத்தாள். "
"என்ன சிவா, கவலைப்பட வேண்டியவள் நானே. பேசாமலிருக்கிறன். நீங்க ஏன் உம்முணுமூஞ்சி கொட் டிக் கொண்டிருக்கிறீங்க?"
சிவகுமார் ஒரு விசித்திரமான சிரிப்பை வெளிப்படுத் தினன். கவலைகள் எல்லாவற்றையும் அனுபவித்து மனம் முதிர்ச்சி அடைந்த நிலை; இன்னும் பல பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கு மனதை வைரமாக்கிய நிலை, மனி தாபிமானத்திற்காக தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்த ஞானம்,
அப்பா அனுப்பியிருந்த தந்தியை அவளிடம் கொடுத்தான் - சுபநாள் அதைப் பார்த்துவிட்டு அகி லாவும் ஆழ்ந்த சிந்தனை வசப்பட்டவள் போல அமைதி யானுள். பின்னர் கேட்டாள். -
'சிவா!...நீங்கள் ஏன் இப்பிடிக் கணக்க யோசிச்சு மண்டையைப் போட்டு உடைக்கிறீங்க?...அப்பா பேசின கலியாணம் பிடிக்காட்டில்.ஒன்றுக்கும் யோசியாமல் போய் செல்வியைக் கூட்டிக் கொண்டு வாங்க.அக்கா வுக்கும் கடவுள் படி அளக்கா மலா விடுவார்?. அந்தக் கவலையையும் பெரிசுபடுத்தாமல் விடுங்க.
"..என்னைப் பற்றியும் கவலைப்பட வேணும். நாங்க நினைக்கிற வாழ்க்கை கிடைக்கா விட்டால். அ ை9 கிற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக

Page 102
194 இளமைக் கோலங்கள்
வாழப் பழக வேணுமெண்டு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க. எனக்கு என்ன குறை? சாப்பாட்டுக்கு வழியில்லாமலா இருக்கிறன்?.
'சிவா!. வாழ்க்கை என்று ஒன்று.இருந்தாலே போதும்.சந்தோஷம் வேண்டாம். இந்த உலகத்திலை எத்தனையோ பொம்பிளையஸ் சீதனப் பிரச்சினையாலேயே கலியாணம் இல்லாமல். அரைகுறை வாழ்க்கை வாழு கினம். அப்பிடி நானும் இருந்திட்டுப் போறன்.
"அதுக்கு நான். ஒருகாலும் சம்மதிக்க மாட்டன் அகிலா. நான் உங்களைக் கலியாணம் செய்ய முடிவு செய்திருக்கிறன்!"
அகிலாவுக்குத் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. என்ன இது? இப்படியும் நடக்கலாமா? சிவா விளையாட் டுக்காக அப்பிடிச் சொல்லுகிருன?
அவனது நிதானம் தவழுத பார்வையை ஏறிட்டு நோக்கினுள். ஒன்றையும் அளக்க முடியவில்லை.
**சிவா. . உண்மையாத்தான் சொல்லுறீங்களா?" எனப் பதட்டத்தோடு கேட்டாள். அவன் பேசாமலிருந் தான். மீண்டும் ஒரு தவறு நடப்பதற்கு தான் உடந்தை யாவது போன்ற பய உணர்வு அவளுள் ஏற்பட்டது. நடுக் கத்தோடு கூறிஞள்
**சிவா.. வேலை இல்லாதவனுகள். ஆயிரம் கதை யளைக் கதைப்பானுகள். அதுக்காக நீங்க இப்படிச் செய்ய வேணும்!"
"நான் ஒருத்தற்றை கதையையும் கேட்கவில்லை. நல்லாய் யோசிச்சு. நானுகத்தான் இந்த முடிவு எடுத்த ஞன்."

இளமைக் கோலங்கள் 95
அகிலாவுக்குக் கண்கள் கலங்கின. ராஜேசன் காரண மாக ஆண் வர்க்கத்தின் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பு இருந்த இடம் தெரியாமல் பறந்தது. சிவகுமாரோடு பழ கக் கிடைத்த சந்தர்ப்பத்தை நினைத்து மனதுக்குள் பெருமை யடைய முடிந்தது. இவனேடு தான் சிநேகிதமாய்ப் பழகி யது எவ்வளவு அநியாயமாகப் போய் விட்டது என மறு கணம் தன் மீதே வெறுப்புத் தோன்றியது. சிவகுமாரின் நிலையை எண்ண இரக்கம் மேலிட்டது.
*சிவா என்னில இரக்கப்பட்டு நீங்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம். மறுகா ...நீங்க தான் அதுக்காகக் கவலைப்படுவீங்க. நான் இதுக்கு ஒருக்காலும் சம்மதிக்க மாட்டன்."
சிவகுமார் வெறிபிடித்தவனைப்போல எழுந்து தனது தலையைச் சுவரோடு பலமாக அடித்தான்- 'என்னை எல் லாருமாய்ச் சேர்ந்து என்னதான் செய்யச் சொல்லுறீங் 567?””
அகிலா ஓடிவந்து அவனைப் பிடித்துத் தடுத்தாள். அடி பட்ட இடத்திலிருந்து இரத்தம் கசிந்தது. "என்ன சிவா இது?.குழந்தைப் பிள்ளை மாதிரி?. *" எனக் கண்டித்த வாறே தனது சேலைத் தலைப்பால் இரத்தத்தைத் துடைத் தாள.
அப்பொழுது அவனுக்கு அழுகை வந்தது. விம்ம லெடுத்து அழுதான்.
ஆதரவோடு அவனது கண்ணீரைத் துடைத்துவிட்ட வாறு அகிலா மெதுவாகக் கேட்டாள்; *செல்வியைப் பற்றி நீங்க நினைச் சுப் பாக்கயில்லையா?"
அவனுக்கு எதையுமே நினைத்துப் பார்க்க முடியாத நிலை. குழம்பிய மனசு, அசதியாக இருந்தது. அகிலா தேநீர் கொடுத்து கட்டிலிற் படுக்க வைத்தாள்.

Page 103
196 இளமைக் கோலங்கள்
"ஒன்றுக்கும் யோசியாமல்.ஆறுதலாய்ப் படுங்க. அப்புறமா முடிவு எடுக்கலாம்!"
ஆழ்ந்த உறக்கத்தின் பின் மாலையில் கண்விழித்தான்.” குளிர்மையான காற்று வீசி வந்தது. அகிலா ஒரு தேவதை யைப்போல அந்த அறைக்குள் பிரவேசித்தாள்.
கட்டிலிற்குப் பக்கத்தில் கதிரையை இழுத்து அமர்ந்து கொண்டாள். சிவகுமாரின் தலைமுடியைக் கோதிவிட் டாள்.
** Ganymr?... ...”'
அவன் பேசாமல் அவள் பக்கமாகத் திரும்பினன்.
'தயவு செய்து நான் சொல்லுறதை ஆறுதலாய்க் கேளுங்க...நாங்க அவசரப்பட்டு ஒரு முடிவும் எடுக்கக் கூடாதுதானே?
* "நீங்க உங்க பக்கத்திலை மட்டும் யோசிக்கிறீங்க.. என்ர பக்கத்திலையும் நினைத்துப் பார்க்க வேணும்தானே? a sp. உங்கட முடிவுக்கு நான் கட்டுப்பட வேணுமெண்டு ஏன் எதிர்பார்க்கிறீங்க. ? சுதந்திரமா முடிவு எடுக் கிற உரிமை எனக்கும் இருக்குத் தானே..?
"இரக்க உணர்வு உங்களுக்கு மட்டும்தான் இருக்க வேணுமா?. நான் அதெல்லாம் இல்லாத மரக்கட்டை யெண்ணு நினைச் சீங்களா?.
"...வெறும் மனச்சாட்சி இல்லாத மிருகமாய் என்னை இருக்கச் சொல்லுறீங்களா?.முந்தியே ஒருத் தனுக்கு, அவர் . விருப்பப்படியெல்லாம் வாழ்ந்த
என்னை. எப்படி இன்னெருகலியாணம்செய்யச் சொல்லு வீங்க?. அந்த அளவுக்கு நான் கேடுகெட்டவளா?"

g3) Syr Rollodd கோலங்கள் 197
-பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள். சிவகுமார் எழுந்து செய்வதறியாது திகைத்தான்.
"அகிலா.ப்ளீஸ்.அழ வேண்டாம்!'
சற்று நேரம் தனது கைகளுக்குள் அழுகையை அடக்கிக் கொண்டு குனிந்திருந்தாள் அகிலா. பின்னர் சேலையால் கண்களைத் துடைத்தவாறே நிமிர்ந்தாள்.
'இல்லை. அகிலா ... ராஜேசனும் உங்களை ஏமாத்தி யிட்டான். அதுதான் நான் இந்த முடிவு எடுத்தன்" என அவளைச் சமாதானப்படுத்த முயற்சித்தான்.
*" மற்றவனுகள் சொல்லுறது போலே. நான் ஆரா வது ஒரு மாப்பிளை பிடிக்கத்தான் திரியிறன் என்று நீங் களும் நினைச்சிருக்கிறீங்களா..?" r
சிவகுமாரால் அந்தச் சூட்டைத் தாங்க முடியவில்லை. அவளே நேருக்கு நேர் நோக்குவதற்குக் கூடத் திராணி இல் லாதவன் போலத் தலை குனிந்தான். பின்னர் வெளி யேறி நடந்தான்- கடல் அழைக்கிறது.
மரங்கள் காற்றில் அசைகின்றன. காற்றில்லாத போது துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்துவிட்டு மீண், டும் காற்றுவர அதே மகிழ்ச்சியோடு ஆடுகின்றன. பற வைகள் தாளப் பறக்கின்றன. தொழிற்சாலைகள் உற் பத்தி செய்து மகிழ்கின்றன. மனிதர்கள் இயங்குகிழுர் கள். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே இரவு வந்து விடுகிறது. யாரையும் எதிர்பாராமல் அடுத்த நாளும் விடிகிறது.
இந்த நியதிகளை மாற்றுவதற்கு இனி யாரும் பிறந்து வரப் போவதில்லை. மாற்றவும் முடியாது. சிவகுமா

Page 104
198 இளமைக் கோலங்கள்
ருக்கு இவை விசித்திரமாகக் கற்பனையிற் தோன்றியது. அவற்றிலெல்லாம் ஏதோ அர்த்தம் இருப்பதாகச் சிந்தனை யில் ஆழ்ந்தான். "எங்களைப் பார்த்து நீங்களும் சந்தோஷ மாக வாழுங்கள்" என அவை சொல்வதுபோல இருக் கிறது.
இரவு புகையிரதத்தில் யாழ்ப்பாணம் போவதற்காக அகிலாவிடம் விடைபெற வந்தான் சிவகுமார். அவள் ஒரு பார்சலை அவனிடம் கொடுத்தாள்--இரவுச் சாப்பாடு. இந் தக் கரிசனை!. இந்த அன்பு1. இதற்கிடையில் பெரிய பிரிவு நேரப் போவது போன்ற ஏக்கம்.உள்ளத்தில் அடங்காது உடைத்துக் கொண்டு வருகிற பாசம், கண்ணி ராகத் துளிர்த்தது.
"ரேக்.இற். சஸி!" என்ருள் அகிலா. ஆனல், அவளது கண்களும் கலங்கிவிட்டன. இனி, அவன் போக வேண்டும்.
(முற்றும்)


Page 105
ட்
உந்தியாகம் பார்ப்ப புச் சீவியத்தி வாழ்க்கை, வெவ்வேறு தவர்கள், விதம் வி கொண்டவர்கள், நி சின்னஞ்சிறு அறைகளி ஆண்கள் மட்டும் என் இ ன்  ைற ய கால (Boarding) வாழ்க்கை கிருர்கள். ஒரு கால யோகம் பார்ப்பது என்றிருந்தவர்கள்கூட மாக படித்து வேலே ெ துரதிர்ஷ்டவசமாக இ கறுப்புக்கண் கொண்டு பாவம் இன்னும் எ மாறவில்லே.
இக்கருத்தை மைய பட்ட இந்நாவல் படி கொள்ளே கொண்டுவி
 
 
 

தற்காக வருபவர்களின் ல் ஓர் அம்சம் ஓரறை சூழ்நிலைகளில் வளர்ந் தமான சுபாவங்களேக் ர்ப்பந்தத்தின் பேரில் ல் ஒன்று சேர்கிருர்கள். ன்ன பெண்கள் கூட * ட் டத் தி ல் ஓரறை க்கு நிர்ப்பந்திக்கப்படு த்தில் பெண்கள் உத்தி கெளரவக் கு  ைற வு குடும்பநிலை காரண சய்கிருர்கள். ஆணுல், வர் க ளே யெ ல் லாம் நோக்குகின்ற மனுே மது இளேஞர்களிடம்
பமாக வைத்து எழுதப் ப்பவர்கள் மனதைக்