கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெயர் (இதழ்) 2002

Page 1


Page 2
*、. * s *ზwittà &&მეტioყ * &»¥
y
幽、° *
.... , • ንòሩ›3 :
لما ارة اليون نام و
 
 
 
 


Page 3
sls šasisko Labšs asieši બેક્ષ રીis
Foss, PP SAKAể, 5KOA MAIšsilu. FišðKONÄKUUP GY ||
" ಇಂಗಿತíáé ནི༔ ༣༽fi
duui sirdiği ALI *** IsiSAh * iš
 
 

சிறப்புத் தொகுப்பு - 2002
பேசிக்கொண்டிருக்கும் ஒடு வார்த்தையோடு கூட எனக்கு உடன்பா டில்லை. இருந்தாலும் அதைச் சொல்ல உனக்குள்ள உரிமையைக் கர் ४ः சாகவும் சம்மதம்,
r
ஆசிரியர் வணககம,
த.வேலவன்
ஈழத்து இலக்கிய பரிமாண
பாதைகளில், எமக்கான பாதை ஸ்தாபக ஆசிரியர்கள் | யில் நாமும் நடைபயில முயற் த.வேலவன் சித்து திருக்கோணமலையில் மு.மயூரன் இருந்து ‘விளக்கு’ எனும் பெயரில் நாம் ஆரம்பித்த, சமூக அரசியல் கலை இலக்கியம் சார்
தொடர்புகளுக்கு சஞ்சிகையின் 7வது இதழும்
ஆசிரியர் 6வது அச்சிதழுமாகிய சிறப்புத் 6)olој தொகுப்பு - 2002 ஊடாக 157,கடற்படைத்தள வீதி, சந்திப்பதில் மகிழ்ச்சி.
திருக்கோணமலை,
மானுட விடுதலையொன்றே எங்
O 26-27 7S3 கள் மையநோக்கு.
சமூகத்தில் விடுதலை பெற ஓவியங்கள் வேணி டியுள்ள தனித் தனி (Safiil III65 கூறுகளின் ஒட்டுமொத்தமான விடுதலைக் கூடான மானுட அச்சுப்பதிப்பு விடுதலையை மையப்படுத்திய
ரெயின்போமினிலாப் கருத்துக்களை, எங்களது முத
லாவது இதழிலிருந்து இயன்ற வரை நாங்கள் சொல்லி
.oốøpsvo - 700/= U வந்துள்ளோம் -ܢܠ
1.

Page 4
தொடர்ந்தும் எங்கள் இதழின் தொடர்ச்சிக் கூடாக
படைப்பாளிகளின் பங்குடன் அதனையே நாங்கள் வலியுறுத்தி
ós)(BumTLD.
புரிந்துணர்வு என்பது விடுதலை அல்ல என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.
எங்களுடைய முயற்சியின் இதுவரையான வெற்றிக்குக் காரணமாயிருந்த ஒவ்வொருவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மானுட விடுதலை நோக்கிய இந்தப் பயணத்தில் இணையப்போகும் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் காத்திருப்போம்.
தோழமையுடன், ஆசிரியர்.

சிறப்புத் தொகுப்பு - 2002
நாட்டுப்புறக் கதைகள் இரண்டு - 9s 9(fluttiu6
-சு.வில்வரத்தினம்
நாட்டுப்புறக் கதைகள் நாட்டார் பாடல்கள் போலவே தான் வாய் மொழி மரபாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருபவை நாட்டார் பாடல்கள், நாட்டுப் புறப் பழமொழிகள் சேகரிக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தமை போல நாட்டுப் புறக் கதைகள் சேகரிக்கப்பட்டு நூலுருவாக வெளிவந்தது மிகவும் குறைவு. அதிலும் தமிழ் நாட்டினோடு ஒப்பிடும்போதில் ஈழத்தில் இல்லை என்றே சொல்லி விடலாம்.
நாட்டார் பாடல்கள் சேகரிக்கப்பட்டு வெளிவந்தமை இங்கு குறிப்பிடத் தக்களவில் உள்ளன. எனினும் அதை சேகரித்தோரில் சிலர் அவற்றின் வாய் மொழி மரபுப் பாடல்களில் சில மாற்றங்களையும் செய்ய விழைந்தனா. நாட்டார் பாடலைச் சேகரித்ததில், அவர்களின் பிரதான நோக்கம் அதன் இலக்கியச் சுவை மட்டுமே. நாட்டார் வழக்காற்றியலின் மரபுகளைக் கண்டறிய வேண்டும் என்று ஆய்வறிவு நோக்கில் செயற்படுமளவில் அல்ல. நாட்டார் வழக்காற்று ஆய்வு பரவலான கற்கை நெறியாக அன்று வளர்த்தெடுக்கப்படவில்லை. இன்றும் தமிழ் நாட்டின் பல்கலைக் கழகங்களில் தான் இத்துறை நல்லவளர்ச்சி எய்தியுள்ளது ஈழத்தில் சில கருத்தரங்குகளும் நூல் வெளியீடுகளும் அரசுசார், பண்பாட்டுத்
3

Page 5
of
திணைக்களங்களினாலும், கிழக்கு பல்கலைக்கழகத்தினாலும், மேற் கொள்ளப்பட்டதைத் தவிர வேறு ஆழ்ந்த அக்கறையோடு கூடிய முயற்சிகள் இன்னும் இல்லை.
நாட்டுப் புறக்கதைகள், நாட்டார் பாடல்கள் என்பன வாய் மொழி மரபினுாடாகக் காவிச் செல்லப்படுபவையாக உள்ளன. நாட்டார் பாடல்கள் குறித்தவொரு மொழி பேசுவோர்க்குள் மட்டுமே உலாவுபவை என்பதால் அதிக மாற்றங்களுக்குள்ளாகுபவை அல்ல. அப்பிரதேச மொழி வழக்காறுகளின் தன்மையினாலும் உறவு முறைஉரிமைப்பாடுகளிலுள்ள வித்தியாசங்களினாலும், சிறுச்சிறு மாற்றங்கள் இவற்றில் காணப்படுவதுண்டு. உதாரணமாக தமிழ் நாட்டிலும், ஈழத்திலும், அங்கங்குள்ள பிரதேசங்களிலும் தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் போன்றன இவ்வாறு சிற்சில மாற்றங்களோடு வழக்கில் இருந்து வருகின்றன. முஸ்லிம் மக்களின் நாட்டார் பாடல்களில் ஆங்காங்கு அரபு மொழிச் சொற்களும், இஸ்லாமியப் பண்பாட்டு முறைகளும் இணைவு கொண்டு வழங்கப்படுகின்றன. மாற்றங்களுக்கு ஊடேயும், நாட்டார் பாடல்களின் ஊற்று மூலம் ஒரே மொழி பேசுவோரில் இருந்து தான் என்பதைநாம் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஒரேமொழிக் குடும்பத்தினரிடையேயும் சிற்சில விதி விலக்குகள் இருக்கலாம்.
நாட்டார் கதைகளோ நாட்டார் பாடல்கள், போலல்லாமல் நாட்டார் கதைகள் வாய்மொழி மூலம் இலகுவில் கடத்தப்படக்கூடிய வகையில் புனையப்படுவன ஆதலால் கதைகளுக்கு காற்று வழிப்பயணம் இலகு. கடல்வழிப் பயணம் வரும் போகும் மதயாத்ரீகர்கள், கடலோடி வியாபாரிகள் எனப்பலசாராரும் கதைகள் பல விதமாக மாறி மாறி எல்லைகளுக்கப்பாலும் அவை செல்லக் காரணமாய் இருந்தனர். படையெடுப்புகள், புலப்பெயர்வுகள் எனப்பலவும் நாட்டார் கதைகள் மட்டுமல்ல புராணங்கள் ஐதீகங்கள் சார்ந்த கதைகளும் தேசங்கள் கடந்து பரவிடக் காரணமாயின. இத்தகைய கதைகளிற்கு எந்தத் தேசம், எந்த மொழி ஊற்று மூலம் என்பதைக் கண்டடைதல் இலகுவல்ல/ ஏனெனில் இந்தக் கதைகள் அந்தந்த இடங்களின் பிரதேச சூழல், மரபுச்சூழல் என்பவற்றிற்கு ஏற்ப மாற்றம் பெற்று வரும். இவ்வாறாக மாற்றம் பெற்றுள்ள இரண்டு கதைகளை நாம் இங்கு காண்போம்.
4

சிறப்புத் தொகுப்பு - 2002
1) இந்தியக் கதை
காசிக்கு போய் பாவந் தொலைக்கவென தமிழ் நாட்டிலே இருந்தொருவர் யாத்திரை போனார். யாத்திரை போனவர் கங்கையிலே புண்ணிய தீர்த்தம் ஆடாமல் போவாரா? போனார். புண்ணிய நதியென்று கங்கையைச் சொன்னாலும் மனிதப் பிணங்கள் மாடுகள் கழுதைகள் உள்ளிட்ட விலங்குகளின் பிணங்களும் அதிலே மிதந்து வரும். நதியில் மூழ்கி எழுந்தவர் தலையிலே, கழுதையில் இருந்து கழன்ற வால் மயிர் கற்றை வந்து சிக்கியது. வீசி எறிந்து விட்டு திரும்பவும் மூழ்கி மூழ்கி எழ எழ மீண்டும் மீண்டும் அது வந்து வந்து சிக்கியது. இதனால் அதைத் தலையில் வைத்த படியே மூழ்கி எழுந்தவள், கரையேறும் போது, வெளியிலே அதை வீசி எறிவோமன்று கழுதை வால் மயிரைக் கையோடு கொண்டு வந்தார். கரையில் இவரை எதிர்ப்பட்ட இன்னொருவர் கேட்டார்.
‘என்னாங்க இது கையில மயிரு?"
ஆமா கழுதை வால் மயிரு'
'எதுக்குங்க” ஆமா, இதைத் தலையிலே வைச்சுக்கிட்டு கங்கையில
மூழ்கினா தோஷமல்லாம் போயி புண்ணிய முண்டாகும். என்றார் எரிச்சலுடன்.
'அப்பிடீங்களா? என்று வியந்தவர் அருகில் ஒரு கழுதை நிற்கக் கண்டார். கழுதையின் வாலை அறுத்து தலையில் வைத்து கங்கையில் மூழ்கி எழுந்து வந்தார். வந்தவரை இன்னொருவள் கண்டார் கேட்டார். வந்தவர் விண்டார். இப்படியே கண்டவர் எல்லாம். மயிர் பிடுங்கித் தீர்த்தமாட கழுதைகளுக்குச் சொந்தக்காரருக்கு கொண்டாட்டமாகி விட்டது. எல்லா கழுதைகளும் கங்கைக்கரைக்கு வந்து விட்டன. கழுதை வாலுக்கோ மதிப்பேறிப் போனது. கழுதைகளுக்கோ வால் போனது.

Page 6
%oj
2) யாழ்ப்பாணத்துக் கதை
கீரிமலையிலுள்ள தீர்த்தக் கேணி யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தமானது. ஆடி அமாவாசை உள்ளிட்ட தினங்களிலும், அந்தியேட்டி கிரியைகளின் போதிலும் தீர்த்தமாட மக்கள் இந்த இடத்தையே அதிகமாக நாடி வருவார்கள். அப்படி ஒரு நாளில் தீர்த்தமாட ஒருவர் வந்தார். அவர் கேணியில் இறங்கித் தீர்த்தமாடப் போகும் முன் ஒரு கழுதையைக் கண்டார். கண்டதும் அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அந்தக் கழுதையின் வாலில் ஒரு மயிரை ஒத்திப் பிடுங்கித் தலையிலே வைத்தவாறு நீராடப் போனார். இதைக் கரையில் நின்ற ஒருவர் கண்டார். அவரும் அதில் ஏதோ காரணம் இருக்கத்தான் செய்யும் என்று கருதி தானும் அவ்வாறே கழுதை மயிரை பிடுங்கியவாறு தீர்த்தமாடப் போனார். அவ்வாறே இதனைக் கண்டவர் எல்லாம் அதே மாதிரியாகவே மயிர்பிடுங்கத் தொடங்கினார்கள், கரையேறி வந்த பின்னால் ஒருவர் மற்றவரை கேட்டார்.
"நீ ஏன் கழுதை மயிரை பிடுங்கி தீர்த்தமாடினாய்,”
“அதற்கு அவன் எனக்கு முன்னால் போனவன் அப்படிச் செய்தான். நானும் அப்படிச் செய்தேன்” என்றான்.
இப்படியே ஒவ்வொருவரிடமும் கேட்க அவர்கள் எல்லோரும் அப்படியே சொன்னார்கள். கடைசி முறையாக முதலிலே தீர்த்தமாடியவனிடம் ஒருவன்
"ஏன் இப்படிச் செய்தாய்? என்று கேட்டான்.”
"நான் கேணியில் இறங்கி போகும் போது கழுதை வாலை ஆட்டியது. எனக்கு ஏதோ தோன்றிற்று வாலைப்பிடிச்சு ஒரு மயிரை ஒத்திப் பிடுங்கிக் கொண்டு தீர்த்தமாடினேன்.”
என்று மறுமொழி சொல்ல நின்றவர்கள் முகத்தில் அசடு வழியச் சென்றார்கள். மோட்டுக் கழுதை இன்னும் மொட்டை வாலோடு அசையாமல் நின்றது. கழுதை மயிர் பிடுங்கி
6

சிறப்புத் தொகுப்பு - 2002
தீர்த்தமாடுவோர் தொகை அதிகரித்துக் கொண்டே போனது.
ஒப்பீடு:-
மேலே கூறப்பட்ட இரண்டு கதைகளும் யாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ள கதைகள் தான். முதலாவதாக கூறிய கதையைத் தான் நான் எனது சிறு வயதில் யாழப்பாணத்தின் தீவுப் பகுதியில் கேட்டறிந்தேன். ஒரு செத்தவீட்டுக் கிரியை நடந்து கொண்டு இருந்த போது, என்னருகே நின்ற ஒருவர் இன்னொருவருக்கு கூறக்கேட்டேன். அவ்வாறே அவள் கூறிய போது
“கழுதை மயிர் பிடுங்கி தீர்த்தமாடினவன் கதைதான் எல்லாம்.” என்று இந்த சடங்கு ஆசார மரபுகளை கிண்டல் செய்தார். இந்தக் கதையைச் சொன்னவர் யார்? கேட்டவர் யார்? என்பதெல்லாம் மறந்து போய் விட்டது. கதையின் வாய்மொழிப் பிரதி மட்டுமே என் ஞாபகப் பிரதியாக இங்கே பதிவு பெறுகின்றது. அந்த ஞாபகப் பிரதியை சரிபார்க்க எனது ஊர் மனிதர்கள் இங்கில்லை. தெரிந்த நண்பர்களிடம் இதனை கூறினேன். நண்பர் செ. சிவபாதம் அவர்களிடம் நான் இதைக் கூறிய போது அவர் எனக்கு இது ஒரு இந்தியக் கதையின் மாதிரிப்பிரதி என்றும் வடமாராட்சிப் பகுதியில் இது வேறு விதமாக வழக்கில் உள்ளது என்றும் கூறினார். இந்தியாவில் இக்கதை எவ்வாறு வழக்கிலுள்ளது என்பதைச் சரிபார்க்க ஏதுக்களில்லை. ஆனாலும் வாய்மொழி மரபுக் கதைகளுக்கு துெ மூலப்பிரதி என்ற பிரச்சினை எழுவதற்கு இடமில்லை. ஏனெனில் அதை எழுதியவர் என்று ஒருவர் இல்லை. வாய்மொழி மூலம் கதை காவப்பட்டு, மீளச்சொல்லும் நபரின் படைப்பாற்றல், கதை சொல்பவரின், கேட்டவரின் கதை கூறப்படும் சமூகச் சூழல் என்பவற்றிற்கு ஏற்பப் பிரதி மாறுபடும். உண்மையிலேயே நாட்டுப் புறக் கதைகள் கதை சொல்லும் நபர்கள் மூலம் புதிய வாசிப்புக்களைப் பெற்றே வெளிவருகின்றன. ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு தேசத்திற்கு அது போய்ச் சேருகையிலேயே பிரதிநிலை மாற்றங்கள் நேர்வதுண்டு.

Page 7
இரண்டு கதைகளிலும் உள்ள பொதுத்தன்மைகள்
1. இரண்டு கதைகளுமே தீர்த்தக் கரையில்தான் நிகழ்கின்றன.
2. இரண்டுமே அர்த்தமற்ற சடங்கு முறைகளை (காரணமறிந்தோ அறியாமலோ) பின்பற்றுவதை எள்ளல் செய்கின்றன.
3. இரண்டு கதைகளுமே, சரியாக வாசிப்புச் செய்தால் பொதுவாக இறந்தோர்க்கான நீர்க்கடன் செய்வதற்காக வந்தவர்களால்தான் நிகழ்த்தப்படுகின்றன.
4. கோயில், சடங்காசார மரபுகளிற் கெதிரான எதிர்ப்புக் குரல் சித்தர் இலக்கியங்களில் காணக்கிடப்பது போல் நாட்டுப் புறத்து மரபுகளிலும் எதிரொலிக்கும் என்பதற்கு இரண்டு கதைகளும் சான்றாகின்றன.
இந்தியக் கதை -சில வாசிப்புக.ை
1. இறந்து போன ஒருவருக்காக நீர்க்கடன் செய்ய வந்த ஒருவர் நீராடும் போது இறந்து போன கழுதையின் வாலின் மயிர் சிக்குப்படுவது குறியீட்டுத்தன்மை உடையது. இறந்து போனவர்க்காக கடன் செய்வோர் முடியை மழிப்பது வழக்கம். இறந்து போனவர்க்காக முடிமழிப்பது என்பது திரும்பதிரும்ப முளைக்கும் பந்தத்தை நீக்குவதை அடையாளப்படுத்தும், மழித்து விட்ட பந்தபாசத்தின் அடையாளமான முடி சிக்குப்படுவது அதற்கு காரணமான வினைப்பயன் மீளவும் வந்து சேர்வதை குறிக்கும். அத்துடன் கழுதை என்பதும் பாவத்தின் மூட்டைகளை சுமக்கும் மனிதனுக்கும் குறியீடாகிறது. நீராடுபவர் நீராடிக் கரையேறும் போது கழுதை வால் முடியோடு திரும்புவது, கங்கையில் மூழ்கி எழுந்தாலும் தொலையாத பாவத்தை திருப்பிக்கொண்டு வருவதையும் குறிக்கலாம்.
2. பாவத்தைத் தொலைக்க வந்த இடத்தில் மீளவும் வாழ்க்கையில் சடங்கு என்கின்ற சுமையை மேலதிகமாக கூட்டிக் கொள்வதையும் குறிக்கலாம்.
8

சிறப்புத் தொகுப்பு - 2002
யாழ்ப்பாணத்து வழக்குக் கதை மீதான வாசிப்புகள்.
1. யாழ்ப்பாணத்தின் பேச்சு வழக்கில் மயிர் என்கின்ற சொல் அல்பமானது என்ற பொருளைக் குறிப்பதோடு பேசப்படும் தொனி பேத்ங்களுக்கு ஏற்ற பொருளையும் குறிக்கும் தன்மையானது. உதாரணமாக, 'மயிர் ஒண்டே போச்சு” மயிரைப் புடுங்குவ மயிர் புடுங்குறவேலை
'மயிரைப் பிளத்தல்' 'மயிரைப் புடுங்கி மன்னாருக்கேத்து முட்டையில மயிர் புடுங்கிறது.’ எனப் பலவேறான மரபுச் சொற் தொடர்களைக் குறிப்பிடலாம். மயிர் என்பதும் மசிர் எனத் திருத்திச் சொல்லப்படும் போதும் மிக இழிவானவன் என்ற பொருளில் வருவது, 'மினைக் கெட்ட அம்பட்டன் பூனைக்கு மயிர் சிரைச்சானாம்' என்ற பழமொழி 'மயிராண்டி’ என்ற பெயர் (மயிரை மழித்த ஆண்டிகேலியாடலாக ஒரு நபரைக் குறிக்கப் பயன்படுவது) மயிரை விட்டான் சிங்கன்' என்ற சொல்லாடல் நாடகம் சார்ந்த நிகழ்வின் தொடர்ச்சியாக நகைச்சுவையாகப் பயன் பாட்டில் உள்ள புதிய மரபுச் சொற்றொடராக பயன்பாட்டில் உள்ளது. இவற்றின் பின்னணியில் கழுதை மயிர் பிடுங்கித் தீர்த்தமாடினவன் போல என்ற உவமைத் தொடரும் புழக்கத்தில் உள்ளதையும் கவனத்திலெடுத்தால் அல்பமான பொருளை தலையில் துாக்கி வைத்துப் பெரிய விசயமாக்கி சடங்காகக் கொண்டாடுவது என்ற வாசிப்பும் இங்கு நிகழ்கிறது.
2. யாழ்ப்பாணத்து மரபில் சடங்காசாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப் படுவதை இக் கதை நையாண்டி பண்ணுகிறது. யாழ்ப்பாணத்தில் நீராடுவது என்பதே பெரிய சடங்காக கருதப்படுவது. சனி நீராடுதல் என்பது கிராமங்களில் பெரிய எண்ணெய் முழுக்குச் சடங்காகும். குடும்பத் தலைவன் முழுக்காடுவது என்றால் கிடாய் வெட்டி அயலட்டங்களை அழைத்து கூடியிருந்து விருந்தாடும் மரபு அந்நாளில் இருந்தது. பெண்களுக்கோ பருவம் வந்ததும் குப்பைத் தண்ணியிலிருந்து பூப்புனித நீராட்டு வரையிலான சடங்குகள், தீட்டுக் கழித்து (மாதவிலக்கு) முழுக்காடுதல், விரதகால நீராடல்கள், மாப்பிள்ளை நீராடல், பிணத்திற்கு அரப்பெண்ணை வைத்து நீராட்டு, என வருகின்ற பலவேறு சடங்குகளின் தொடர்ச்சியாக பின்னர்
9

Page 8
of
அந்தியேட்டி ஆடி அமாவாசைத் தீர்த்தம் வரையாக என வருகின்ற இந்த பாரம்பரியத்தின் மீதான ஒரு எள்ளலும் நகையாடலுமாக இந்தக் கதையை வாசிப்புச் செய்யலாம். முக்கியமாக கீரிமலை இறந்தோர்க்கான நீர்க்கடனுக்கான ஒருமுக்கியமான தலம். கீரிமலை என்றதும் அங்குள்ள கோயில் அல்ல தீர்த்தக் கேணிதான் யாழ்ப்பாணத்தாரின் நினைவில் எழும். அத்துடன் அத் தீர்த்தக் கேணியில் நீராடிய முனிவர்க்குக் கீரிமுகம் விட்டுப் போன ஐதீகம் சார்ந்த நம்பிக்கைகளும் சேர்ந்து எழும்.
3. கழுதையின் வாலில் எல்லாரும் மயிர் புடுங்கி தீர்த்தமாட. கழுதையின் வால் மொட்டையாகி விடுகிறது என்பது ஆரேனும் அப்பாவி ஒருவன் அகப்பட்டால் அவனிடம் புடுங்கக் கூடியவற்றை யெல்லாம் (மயிரும் விடாமல்) புடுங்கி மொட்டைவால் கழுதையாக்கி விடுவதையும் குறிக்கலாம்.
4. ஆரேனும் ஒரு கருமத்தை (தேவையில்லாத சடங்காக)ச் செய்தால் கேள்வி நியாயமற்று மோட்டுக் கழுதைகளாக அதைப் பின்பற்றும் மந்தைத் தனத்தையும் காட்டலாம்.
மேற்கண்ட இரண்டு கதைகளிலும் காணக்கூடிய பொதுத் தன்மைகளையும் , இரண்டிலும் நிகழக் கூடிய வெவ்வேறு வாசிப்புகளையும் பார்த்தோம். ஆயினும் நான் கண்டவைதான் முடிவான வாசிப்புகள் என்று கருத வேண்டியதில்லை. அவ்வாறு வேறான வாசிப்பைக் காட்டும் வாய்மொழிப் பிரதிகள் தெரிந்தவர்கள் அதைக்குறிப்பிட்டு எழுதுவது நல்லது. இது போன்று ஈழத்தின் வேறு பிரதேச நாட்டார் வழக்கு கதைகளை வெளிக் கொண்டு வருவது அவசியம். அனேகமான நாட்டுப் புறக்கதைகள், பாடல்களில் ஒரு எதிர்ப்பிலக்கிய, எதிர் மரபுத்தன்மைகள் இழையோடி நிற்கும் மேல் நிலையாக்கத்திற்கு எதிரான குரல் ஒளிந்து நிற்கும். இவற்றை வெளிக்கொண்டு வருவது புதிய படைப்பிலக்கியத்திற்கான தூண்டு கோலாகவும் அமையும்.
10

சிறப்புத் தொகுப்பு - 2002
6)olој
ஒன்றினது-ஒருவரினது அறிமுகத்திற்காய், அன்றாட உச்சரிப்பில் அடிக்கடி உதிர்ந்து போகும்.
-சுரஞ்ஜி
அது “பெயர்’
பெயர்த்தெடுத்தலும் பெயர்ந்துபோதலுமே என்று இந்த “பெயர்’ வினையாகி விளக்கம் சொல்லும்.
விடுதலைக்கான பெயர்ப்பும் விடுதலை நோக்கிய பெயர்வும் இந்த
“பெயர்” இன்
பெயர்வில், எழுச்சி காணும்-இது வெறும் பெயருக்கான பயணமல்ல.
பெரும்பயணம்.
11

Page 9
புதுமைகாண.
பழமைகளை, வெட்டிவீழ்த்தலும் வேரோடழித்தலும்
எமது வேட்கையல்ல. விட்டு விடுதலையாதலும் விடுதலையாக்கலுமே, எமது தேவை!
விடுதலை ஒன்றே இலக்கு !
அதற்காய், பூட்டு விலங்குகள்
நாங்கள் பெயர்ப்போம் ! விட்டு புதிது, புதிதாய் பெயர்வோம் !
 
 
 
 

சிறப்புத் தொகுப்பு - 2002
ஒளியின் கதை
-சந்த்ரராம்
பூவுலகில் ஒளியின் கதை ஆரியனில் ஆரம்பமாகிறது. பூவுலகே முன்னர் ஆரியனின் ஒரு பகுதி தான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குருடர்களைத் தவிர ஒளியை அறியாதோர் இல்லை என்றே கூறலாம். ஆனால் ஒளியைப் பற்றிய முழு விளக்கமும் எமக்குக் கிடைக்கவில்லை. ஒளி இன்றி எதையும் பார்க்கவும் முடியாது. ஒளியின் பயணத்தை எம்மால் பார்க்கவும் முடியாது. ஒளி வெளியே இருந்து வரும் ஒரு சக்தி.
உலகில் நாம் பாவிக்கும் சக்திகள் அனைத்திற்கும் ஆரிய சக்தியே மூல காரணம். நெருப்புக் குஞ்சு என வர்ணிக்கப்படும் ஒளிச்சுடரின் ஆரம்பமும் ஆரியனே, ஆதிகாலத்தில் வானத்தில் ஆரியனின் சஞ்சாரத்தைக் கண்ட மக்கள் பலர் பல விளக்கங்களைக் கொடுத்தனர். எல்லோரும் சூரியனைத் தெய்வமாக வழிபட்டனர்.
தற்கால விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு முன்னர் சூரியனைப்பற்றி பலவிதமான அபிப்பிராயங்கள் நிலவி வந்தன. இந்தஅபிப்பிராயங்களினால் சிலருக்கு உயிராபத்துக்கள் கூட ஏற்பட்டன. அனக்ஸாகொரஸ் (ANAXAGORAS ) என்ற கிரேக்க எண்கணித மாணவன் ஆரியன் ஒருசுடர் விடும் ( கிரேக்கமளவுள்ள) கல் என்ற கருத்தை வெளியிட்டார். அதற்காக அவள் விசாரிக்கப்பட்டு, அவரது வழக்கறிஞரின் வாதத்திறமையால் உயிர் பிழைத்தார். ஆனால் கிரேக்கத்திலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
கிரேக்கமளவுதான் சூரியன் என்று அனக்ஸாகொரன் நினைத்த அளவு ஆரியன் சிறியதல்ல, 9 கோடியே 30 லட்சம் மைல்களுக்கப்பால் இருக்கிறது என்று அப்போது அவர்களுக்குத் தெரியாது. உலகைப் போல் 110 மடங்கு விட்டமுள்ளது சூரியன்.
சூரிய ஒளியை விளக்கப் பல முயற்சிகள் இடம் பெற்றன. பூமியில் இருக்கும் நெருப்பு அணைந்து விடும். ஆனால் ஆரிய ஒளியைத் தரும் நெருப்பு அணையாது இருப்பதால் அது “சுத்தமான
13

Page 10
நெருப்பு” என்று கிரேக்க அறிஞர் அரிஸ்டோட்டில் (ARISTOTLE)
கருதினார். ஐரோப்பாவில் 15, 16ம் நூற்றாண்டுகள் வரை இக்கருத்தே நிலவி வந்தது.
சூரிய ஒளியின் உண்மையான காரணம் தீயல்ல. சூரியனில் இருக்கும் ஹைதரசன் வாயு அணுச் சேர்க்கையால் ஹிலியம் வாயுவாக மாறும் போது வெளியாகும் சக்தியின் வெளிப்பாடே ஆரியஒளி. ( பூவுலகில் இந்த அணுச்சேர்க்கை மூலம் ஹைதரசன் குண்டு வெடிக்கப்படுகிறது)
சூரியனில் நிகழும் அணுச்சேர்க்கையால் வெளிவரும் சக்தியின் 200 கோடியில் ஒரு பகுதியே பூமியை வந்தடைகிறது. ஏனையவை பரவெளியில் எல்லாத்திசைகளிலும் சிதறிச் செல்கின்றன.
ஒளியின் வேகம்
ஒளியின் வேகம் என்ன என்பது பல காலமாக விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்க்கும் விடயமாக இருந்து வந்துள்ளது. விஞ்ஞான அறிவு வளரும் முற்பகுதியில், சிலர் ஒளியின் வேகம் மிகமிக அதிகமானது என்றும் உடனேயே அது பரவுகிறது என்றும் கருதினர். ஏனையோர் ஒளி ஒரு குறிப்பிட்ட அளவு வேகத்தில் செல்கிறது என்றும் அதை அளக்க முடியுமென்றும் நம்பினார்கள். .
ஒளியின் வேகத்தை அளவிட 16ம் நூற்றாண்டில் கலிலியோ பெரு முயற்சிகள் செய்தார். சிறிய தூரத்தில் நடத்திய பரிசோதனைகளெதுவும் ஒளியின் வேகத்தை அளக்க உதவவில்லை.
17ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த (ROBERT HOOKE) றோபட் ஹக் என்பவர் ஒளி அலைவடிவில் செல்கிறது என்றும் மிகக்கூடிய வேகத்தில் செல்கிறது என்றும் ஆனால் அது “உடனடி” (பரவவில்லை) என்றும் கூறினார்.
1644ம் ஆண்டு டென்மார்க்கில் பிறந்த Olo Roamer (ஓலோ ரோமர்) என்பவரே ஒளியின் வேகத்தை கணிப்பதில் வெற்றி
14

2002 - ریزی روی ورو(۶ فوربز روکو
பெற்று ஒளிக்கு வேகமுண்டு என்பதை நிலை நிறுத்தியவர். அப்போதிருந்த கடிகாரங்கள் சிலசமயங்களில் 24 மணி நேரத்தில் 2 மணி நேர வித்தியாசத்தைக் காட்டுபவையாக இருநதன. குறுகிய தூரத்தில் ஒளியின் வேகத்தை அளக்கக்கூடிய எந்தக் கருவிகளும் அப்போது இருக்கவில்லை. இவ்வளவு கஷ்டங்களுக்கிடையிலும் ஒளியின் வேகத்தை அளந்து வெற்றி பெற இவர் புது முறையை நாடினார்.
1676 ல் இருந்த தொலைநோக் கரிகள் மூலம் வியாழனைச்சுற்றி வரும் 12 உபகிரகங்களான சந்திரனில் நான்கினை மட்டுமே அவதானிக்ககூடியதாக இருந்தது. சூரிய மண்டலத்தில் பெரிய கிரகமான வியாழனைச் சுற்றி வலம் வரும் நாலு சந்திரன்களையும் தொலைநோக்கி மூலம் கவனித்த போது அவை வியாழனின் மறுபக்கம் செல்லும் போது தெரியாமல் போவதை அவதானித்தார்.
அவற்றில் ஒன்று எப்போது 2r மறைகிறது எப்போது மீண்டும் தெரிகிறது என்பதை நுணுக்கமாக அவதானித்தபோது சந்திரன் மறைவதில் நேரவேறுபாடு கண்டார். சூரியனைச்சுற்றி வலம் வரும் வியாழன் சில சமயங்களில் மிக அருகிலும் சில சமயங்களில் மிகத்துாரத்திலும் இருக்கும். இந்த இடைவெளித்துாரம் அதிகமாவதே சந்திரன் மறைய அதிக நேரம் பிடிப்பதற்குக் காரணமென சரியாக ஊகித்தார்.
வியாழன் பூமிக்கு அருகில் இருக்கும் போது சந்திரன் மறைந்து தெரியும் நேரத்தையும் அதிக தூரத்தில் இருக்கும் போது சந்திரன் மறைந்து தெரியும் நேரத்தையும் அவதானித்து நேர வித்தியாசத்தைக் குறித்துக் கொண்டார். இந்த நேர வித்தியாசம் பூமியிலிருந்து வியாழன் விலகி இருக்கும் தூர இடைவெளியால் ஏற்பட்டதென்றும் அத்தூரத்தை நேர வித்தியாசத்தால் வகுத்து ஒளியின் வேகத்தைக் கண்டார். அவரின் கணக்குப்படி ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 140,000 மைல்கள் எனக் கூறினார். சரியான வேகமான 186,000 மைல்களை விட இது குறைவாக வந்ததன்
15

Page 11
%ivoj
காரணம், வியாழனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரத்தைச் சரியாக அப்போது அறிந்திருக்காமையே.
ரோமர் ஒளிவேகத்தை அளக்க மிகத் தொலைவிலுள்ள வியாழனின் சந்திரனை பாவித்தார். பூமிக்கும் வியாழனுக்கும் இடையிலுள்ள தூரத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடியாமல் போனதால் விஞ்ஞானிகள் குறுந்துாரம் மூலம் ஒளிவேகத்தைக் கணக்கிட முனைந்தனர். 1849இல்தான் இப்படியாக ஒரு முறையைக் கண்டுபிடிப்பதில் வெற்றி கண்டனர்.
பல்லுள்ள வேகமாக சுழலக் கூடிய சக்கரத்தினைப் பாவித்து வெற்றி கண்டவர் பிரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த/Amand Hippolyte Louir Fizeau 66ÖTAMB 66bGibsT6óî51T6öI.
..பிசு ஒரு குறுகிய ஒளிக்கீற்றை 5 மைல்களுக்கு சிறிது அதிக தூரத்தில் வைக்கப்பட்ட ஒரு கண்ணாடியில் பட்டுத் தெறித்து மீண்டு வருகையில் சுழலும் சக்கரத்தின் இரண்டாவது பல் இடைவெளியால் வரவைத்து இதனை அளந்தார். சுழலும் சக்கரத்தின் வேகத்தையும் ஒளிக்கிற்று சென்று வந்த தூரத்தையும் (சுமார் 11 மைல்) வைத்துப் பெற்ற வேகமான நொடிக்கு 194, 675 மைல் வேகம் சிறிது அதிகமானதே. இருந்தும் அவர் காட்டியவழிமுறையில் பல விஞ்ஞானிகள் வேகத்தைக் கணக்கிட முயன்றனர்.
1862ல் ..பிசுவுடன் இணைந்து வேலை செய்த Lron Foucault (லியோன்ஃபுரொல்ட்) என்பவர் சுழலும் பல் சக்கரத்துக்குப் பதிலாக சுழலும் கண்ணாடியைப் பாவித்து ஒளியின் வேகத்தைக் கண்டறிந்தார். அவர் முறைப்படி கண்ட வேகம் நொடிக்கு 185,777 மைல் என்பதே. இந்த வேகங்கள் பூமியைச் சுற்றியிருக்கும் காற்றினுடாக அளக்கப் பெற்றவை. விஞ்ஞானிகள் முக்கியமாக வானசாஸ்திரிகள் காற்று அற்ற பரவெளியில் ஒளியின் வேகமென்ன என்று அறிய புதிய முறைகளில் முயன்றனர்ர*
அல்பேட் ஆபிரகாம் மைக்கேல்சன் ( Albret Abraham Michelsonn ) என்பவர் ஒரு புது முறையைக் கண்டுபிடித்தார். அமெரிக்கத் தேசத்தைச் சேர்ந்த இவர்தான் அமெரிக்காவில்
16

சிறப்புத் தொகுப்பு - 2002
(1907இல்) முதலாவது நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியாவார். காற்றில்லாத இடத்தில் ஒளியின் வேகத்தைக் கண்டறியும் முறையில் வெற்றி பெற 50 வருடங்கள் அயராது உழைத்தார். மூன்றடி விட்டமுள்ள ஒரு மைல் நீளமுள்ள ஓர் இரும்புக் குழாயைச் செய்தார். விஞ்ஞானிகளினால் அதன் நீளம் மிகவும் துல்லியமாகக் கணக்கிடப்பபட்டது. இந்த ஒரு மைல் நீளமுள்ள இரும்புக்குழாயின் நீளம் 0.02 அங்குல வித்தியாசத்திற்குள்தான் இருக்குமென கண்டறியப்பட்டது. இக்குழாயினுள் இருந்த காற்றைக் கிட்டத்தட்ட முழுமையாக அகற்றி புது முறையில் கண்ணாடியின் உதவியுடன் ஒளியின் வேகத்தைக் கண்டறிந்தார். ஒருமுறையல்ல பல முறைகள் இப்பரிசோதனை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு ஒரு சிறு வித்தியாசங்களுடன் முடிவுகள் கிடைத்தன. இந்த வித்தியாசங்கள் கருவியிலுள்ள சிறு பிழைகளால் ஏற்பட்டவை. மைக்கேல்சனின் சோதனை மூலம் ஒளியின் வேகம் நொடிக்கு 186,270 மைல்கள் எனக் கணக்கிடப்பட்டது.
ஒளியின் வேகத்தைத் துல்லியமாக அறிய மென்மேலும் பல சோதனைகள் நிகழ்த்தப்பட்டு நொடிக்கு 186,000 மைல்கள் என்று ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒளியின் இயல்பு
ஒளி நேர் கோட்டில் செல்லும். இதனால் ஒரு சிறு துவாரத்தினூடாக ஒளிரும் மெழுகுவர்த்தி சுவாலையின் பிம்பம் தலைகீழாகத் தெரிவதைக் காணலாம். எமது கண்ணில் இருக்கும் விழித்திரையிலும் இவ்வாறே பொருட்களின் உருவங்கள் தலைகீழாக விழும். விழித்திரையில் இருக்கும் நரம்பு முடிவிடங்கள் அருட்டப்பட்டு
The UpsIDB-powN PEOPLE மூளைக் குச் சென்று அவை மூளையில் காட்சியாக விளக்கப் படுகிறது. ஒளி புக இயலாத ஊடகத்தில் படும் ஒளி தெறிக்கப் படும். ஒளி வெவ்வேறு ஊடகங்களி *ல் லூடாகச் செல்லும் போது வெவ் வேறு வேகத்தில் செல்கிறது. இதனால் முறிவு ஏற்படுகிறது. அம்முறிவுகளினால் தண்ணீரினுள் இருக்கும் ஒரு பொருள் இருக்கும்
17

Page 12
இடத்தை விட்டு தள்ளி இருப்பது போல் எமது பார்வைக்குத் தெரியும்.
வெவ்வேறு வெப்பநிலையிலுள்ள காற்றினுள் செல்லும் ஒளியில் ஏற்படும் முறிவினால்தான் கானல் நீர் போன்ற மாயத் தோற்றம் ஏற்படுகிறது. காலைச்ஆரியன் உதிக்கும் வேளை காற்று மண்டலத்தின் திண்மையின் வேறுபாட்டால் சூரியன் தொடுவானத்தில் தத்தி தத்தி உதிப்பது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது
ஒளி தள மேற்பரப்புகளில் படும்போது தளத்தின் தன்மையைப் பொறுத்து ஒரு பகுதி தெறிக்கப்படுகிறது, ஒரு பகுதி உறிஞ்சப்படுகிறது, ஒரு பகுதி முறிவடைகிறது.
ஒரு பொருளிலிருந்து வந்து தெறிக்கப்படும் ஒளி, கோளவாடிகளில் பட்டு சிறிய அல்லது பெரிய பிம்பங்களாகத் தோற்றமளிக்கும். இந்த இயல்பை உபயோகித்து கோளவாடிகள் தற்போது மோட்டார் வாகனங்களிலும் பின்னால் வரும் வாகனங்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
ஒளி புகமுடியா பொருட்களினால் நடை பெறும் காட்சிகளைக் காண பெரிஸ் (335 TÜ (Peris Cope) 9) u(3uuTašBü படுகிறது. பெரிஸ் கோப்பில் இரு ஆடிகள் குழாய் ஒனிறினுள் 45° சரிவில் வைக்கப் Jaiaga И ма பெற்று பொருளின் பிம்பம் இருமுறை தெறிக்கப்பட்டு காண்பவர் பார்வைக்கு A SMPEPERIscope தோன்றச் செய்யப்படுகிறது. இக்கருவி நீர் மூழ்கிக்கப்பலில் பாவிக்கப்படுகிறது. முறிக்கப்படும் ஒளியைப் பயன்படுத்தி தொலைநோக்கிகளும் நுண் நோக்கிகளும் செய்யப்படுகிறன.
ஒளியின் நிறங்கள்
அரியத்தினுTடே செல்லும் சூரிய ஒளியானது ஏழு நிறங்களாகப் பிரிகின்றன. இதை நியூட்டனுக்கு முன்னரும் பல விஞ்ஞானிகள் தெரிந்து வைத்துள்ளனர். எனினும் இதன் காரணத்தை
18
 
 

சிறப்புத் தொகுப்பு - 2002
நுணுக்கமாக ஆராய்ந்து வெள்ளை ஒளியில் ஏழு நிறங்கள் உள்ளன என்றும் அவை அரியத்தினுாடாகச் செல்லும் போது வெவ்வேறு அளவுகளில் முறிவடைவதினால் ஏற்பட்டவை என்றும் கூறினார். சிகப்பு நிறம் மிகக்குறைந்த அளவில் முறிகிறது ஊதா அதிக அளவில் முறிகிறது என்றும் கூறினார். கண்ணாடி வில்லைகளை வைத்து தொலைநோக்கி செய்யும் போது ஓரங்களில் தென்பட்ட நிறங்களின் தொல்லையின் காரணத்தை அறிய முற்பட்ட போதே இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது.
ஒளி அலையா? துகளா?
றோபேட்ஹ"க் என்பவர் 1665ல் வெளியிட்ட புத்தகத்தில் ஒளி மிக வேக அதிர்வினால் பயணம் செய்கிறது என்று கூறினார். இந்த அதிர்வுகளில் எற்படும் வேக வித்தியாசமே நிறங்களின் காரணமெனவும் கூறினார்.
ஏழு வருடங்களின் பின் நியூட்டன் தனது கண்டுபிடிப்புக்களை வெளியிட்ட போது ஒளி துகள்களாகப் பயணம் செய்வதாகக் கூறினார். நிறங்கள் ஏற்படும் காரணங்களையும் விளக்கி இருந்தார். வானவில்லில் தோன்றும் ஏழு நிறங்களின் காரணம் வானத்தில் இருக்கும் நீர்த்திவலைகள் அரியம் போன்று செயற்பட்டு ஆரிய ஒளியை ஏழு நிறங்களாகப் பிரிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இக்கட்டுரையை அரச விஞ்ஞான சபைக்கு அனுப்பிய போது றோபேட்ஹ"க் நியூட்டனின் ஒளியின் துகள் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஒல்லாந்தைச் சேர்ந்த கிரிஸ்டியன் ஹ"யென் (CHRISTANHUYGEN ) என்பவரும் ரோபேட்ஹ"க்கின் “அலைக் கொள்கை”யை ஆதரித்தார். இதனால் மனமுடைந்த நியூட்டன் இனிமேல் எந்தக் கண்டுபிடிப்புக்களைப் பற்றியும் எழுதுவதில்லை
19

Page 13
எனத் தீர்மானித்தார். எனினும் பின்னர் புவியீர்ப்புப் பற்றி எழுதியதை வெளியிட்டார். புவியீர்ப்புக் கொள்கைக்குக் கிடைத்த ஆதரவின் பின் பல விஞ்ஞானிகள் நியூட்டனின் துகள் கொள்கை'யை கவனத்திற்கு எடுக்க ஆரம்பித்தனர்.
19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரெஞ்சு விஞ்ஞானியான 9ị56ròọ6öI ..QLIJ6rò6016ò (Auguestin Fresnel) 6ọ6ifì eị60)6òuIII95ü பயணம் செய்கிறதென்ற கொள்கையின் மூலமே பல விடயங்களை திறம்பட விளக்க முடியுமெனக் காட்டினார். இதனால் பல விஞ்ஞானிகள் தங்கள் நிலையினை மாற்றினார்கள். அதோடு நியூட்டன் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தைக் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பின்னடையச் செய்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.
அதிசயிக்கத்தக்க முறையில் 20ம் நூற்றாண்டின் முற்பகுதில் DT356ito | 56ITTri, (MAX PLANCK) gel6to(8LI g6óT6rtolo66T (ALBERT EINSTEN) அவர்களின் “குவாண்டம் துகள் கொள்கையால்” இரண்டு நிலைப்பாடுகளின் சில பகுதிகளை உள்ளடக்கிய புதிய விளக்கம் உருவானது. இதன் பிரகாரம் ஒளி சக்தி துளிகளாக வெளியேறுகின்றன என்றும் ஆனால் அவை அலைகளாகப் பரவுகின்றன, பயணம் செய்கின்றன என்றும் இச்சக்தித் துளிகள் ஒன்றன் பின் ஒன்றாய் பயணம் செய்தாலும் மிகஅதிக வேகத்தில் பரவுவதாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது குவாண்டம் கொள்கை எம்மால் சாதாரணமாக விளங்க நிலையான “சக்தி ஒரே நேரத்தில் துகளாகவும் அலையாகவும் இருக்கிறது” என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
எமது முந்திய கட்டுரையான காட்டு ஊசலின் வேட்டையின் முன்னுரையாக குறிப்பிடப்பட்ட சுவாமி கெங்காதரானந்தாவின் வாசகங்களை மீண்டும் நினைவு கூர்வோம்.
“பிரபஞ்சம் நாத மயமானது. பிரபஞ்ச உற்பத்திக்கு மூல காரணமாக இருக்கிற நாதத்துக்குள்ளே சர்வ சக்தனும் சர்வவியாபியுமாகிய சர்வேஸ்வரன் பிந்து விடுவில் இருப்பதால் இறைவனை நாதபிந்துகலாதி நமோ நம” என்று வழிபடுகின்ற வழக்கங்களும் இருக்கின்றன. −
அலைதுகள் தான் நாதம்பிந்து
20

阎)

Page 14

சிறப்புத் தொகுப்பு - 2002
எழுக என்னருந்தேசசிம!
-சிந்துவம்சன்
அதல பாதாளத்தில் உறங்கும் பாறையின் மீது பொறிக்கப்பட்டது உனது கல்வெட்டு
ஆழமிகு பேராழியின் துயிலாத் திரைகள் மீது எழுதப்பட்டது உனது வரலாறு
நம் சந்ததிகளின் கனவின் புதையலாகிப்போன புதல்வர்கள் மீதான சோகங்களை விழுங்கியது உனது பயணம்
உச்சிக் கொம்பரை உலுப்பிச் செல்லும் காற்றிடமுள்ளது
உனது பாதை
அக்காற்றினதும் திசையறியும், பறவைகளின் சுவீகாரம் உனது வாழ்வு
21

Page 15
"oĵ
நாய்களே ஊளையிட அச்சப்படுகிற நடுநிசிகள் நிரந்தரிக்கப்பட்ட தேசமே என்னருந்தேசமே வட்டுத்தெறித்த பனைகளும் பட்டுச்சிதைந்த மனைகளும் விட்டுத்தொலைந்த மனிதர்களுமாய்க் காவுபோன உன் கிராமங்களினதும் பட்டினங்களினதும் நீறிலிருந்து வீறாய் எழுக
தேசமே என்னருந் தேசமே நீ எழுக.
 

சிறப்புத் தொகுப்பு - 2002
(Ö6ft 6) TGOU
-வி. கெளரிபாலன்
எல்லாம் தெரிந்து வைத்திருப்பவள் போல் சொன்னாள். அவர்கள் இந்தப் பாதையைத்தான் அடிக்கடி பயன்படுத்துவார்கள் என்று. அவள் நினைத்துச் சொன்னவைகளை விட வேறு பல காரணங்களுக்காகவும் அவர்கள் இந்தப் பாதையை கட்டாயம் பயன்படுத்துவார்கள். இருள் சார்ந்த கரும் பச்சை நிறக் காட்டைப் போல் தோற்றம் தந்ததை எல்லையாக கொண்டு, இடைக்கிடை மரங்களும், வடலிகளும், கட்டம் கட்டமான கரும் பச்சை நிற வரப்புகளுமாய், காலையிருள் கலையாது பரந்து கிடக்கிறது வயல் வெட்டை பரந்து கிடக்கும் வயல் வெட்டையில் இவர்கள் தீர்மானித்து போகும் பாதை எதுவெனக் குழப்பமாய்க் கிடக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த பாதையில் அவர்கள் போவார்களா.. ? அவளுக்கு அதிகம் தெரிந்ததாக திமிர். முன்னே காத்துக்கிடந்த இடங்களையும் நாட்களையும் விட இன்றைய தினம் அதிக நம்பிக்கை தருகிறது.
அன்புடையீர்.
தம்பி கொண்டு வந்த பணத்தை திருப்பி அனுப்பி இருந்தீர்கள். எமக்கு பொருட்களின் உடனடித் தேவையையும் அவசியத்தையும் விட சிக்கலானது தம்பி பணத்துடன் நடமாடுவது என்பதைத் தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பொருட்களை கொள்வனவு செய்வதும் அதை இடம் மாற்றுவதும் தங்கள் செளகரியத்தைப் பொறுத்தது. அது எம்முடன் பேசி அல்லது காலம் தாழ்த்தி நிகழ்த்தக் கூடியது என்பதும், தங்கள் நடைமுறை சாத்தியப்பாட்டை பொறுத்து தங்களின் நடவடிக்கைக்கான உரிமையாகிறது. அனுப்பப்பட்ட பணத்தை திருப்புதல் என்பது தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கே உணவளிக்கின்ற கடமையில் இருந்து தவறுவதற்கு ஒப்பானது என்பதை உணர்தல் வேண்டும். அத்துடன் பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் இது சம்மந்தமான எமது கலந்துரையாடலுக்கு எதிர் வரும் நாட்களில் அழைக்கப்படுவீர்கள் என்பதையும் இத்தால் அறியத்தருகிறோம்.
23

Page 16
of
வயல் வெட்டையின் எல்லையில் அடிவானத்தை தொட்டுக் கொண்டிருக்கும் காடு, நிச்சயமாக காடாக இருக்காது. கிட்டப் போகப். போக. தூரம். தூரமாய் நிற்கும் தனி மரங்களாகக் காட்சிதரும். சாறமும் சேட்டில்லாத வெற்றுடம்புமாய் இரு சிறுவர்கள் தோளில் கை போட்டு குதூகலித்துப் போகிறார்கள். அவனும் இப்படித்தான் வெளித்தெரியாமல் சிரிப்பான். அறுத்த வயலின் அடிக்கட்டைகளை காந்திக் கொண்டு மாடுகள் வயல் வெட்டையில் அரக்கி. அரக்கி நகர்ந்தன. எவ்வளவு நேரத்துக்கு காத்திருப்பது . நெஞ்சை வலித்துக் கொண்டு பெருமூச்சு வெளிக்கிட்டுப் போனது. அங்கொன்று இங்கொன்றாய் வயல் வெட்டையில் மாடுகளின் ஊடாட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனைக் கடைசியாக பார்த்த போது வெளிர்நிற பிரவுண் கலரில் கறுப்பு நிற நீளக்கோடு போட்ட சேட்டை ஜீன்சுக்கு வெளியே விட்டிருந்தான். ஒற்றைக் காலை உயர்த்தி தென்னை மரத்தின் அடியில் ஊன்றியபடி தன் முழங்காலுக்கு மேல் கைகளை கோர்த்தபடி தேனி ஆற்றும் தாய்க்கு எதிரில் நின்று கதைத்துக் கொண்டிருந்தான். அவன் உதடுகள் தடித்திருப்பது போல் பட்டது. கன்னங்கள் உப்பி கண்கள் சிறுத்துப் போயிருந்தது. கண்புருவங்கள் தடித்து கறுத்திருந்தது. திக்கி. திக்கி. கதைத்தான். திக்கி. திக்கி . பேசினானா அல்லது வார்த்தைகளை விழுங்கினானா என்பது புரியாமல் இருந்தது. அவன் பேசியதன் சாரமாக, விலத்துவதும் விலகி வருவது என்பதும் தற்கொலைக்கு ஒப்பானது என்றும் இந்தப் பேச்சை எடுத்தால் தான் வந்து போவதும் நின்று போய்விடும் என மிரட்டிச் சென்றிருந்தான். காலை வெய்யிலின் இதத்தில் வைக்கோல் நுனிப்பனி தன்னை இழக்கிறது. மாட்டுச் சாண வாடையும் உலரும் வைக்கோல்வாடையும் சேர்ந்த குளிர் வாடை நாசியில் நனைகிறது. அசதிக்கு ஓய்வு தேவை. அருகில் ஏதோ இருள் நிழலாய் அசைந்தது. வேம்பு. வேரில் குந்தி வேம்பில் உடல்சாய்த்து சுகமாய் ஒரு இருப்பு சோர்வாய் அசைபோடும் கறுத்தக்கன்று . கன்றின் கழுத்துக்கு மேல் தன் கழுத்தை வைத்து ஒளிரும் கண்களால் பார்க்கும் பசு. பசுவும் கன்றைப் போல் கறுப்புத்தான். கன்றின் நெற்றியில் மட்டும் வெள்ளைப்புள்ளி. இலையானுக்காய் கண்ணைக் கூசி தன் தலையை, பின்னங் கால் சந்தில் இடித்து கால்மாறி நிற்கும் பசு. தூரமான வயல் வெட்டை எங்கும் மெளனம் மூட்டை மூட்டையாக நிரம்பிக் கிடக்கிறது. முன்ன மாதிரி இல்ல,
24

சிறப்புத் தொகுப்பு - 2002
இப்ப. கோப் லொறி எண்டாப் போல செக் போஸ்டில் சும்மா விடுறதில்லை.செக்கிங் கடுமதான். ஸ்றொக் புக்,டிலிவரி புக் எல்லாம் செக் பண்ணுகிறார்கள். , வீட்டிலும் முன்ன போல இல்ல. சின்னவள் வளர்ந்திட்டாள். அவளுக்கும் விபரம் புரியும் . லொறியின் கிளினர்களையும் மாற்றி விட்டார்கள். புதியவர்கள் வேறு இனத்தை சேர்ந்தவர்கள். ஏன் லொறியில் மேலதிக சாமான்கள் ஏற்றப்படுகிறது என அவர்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது. ஏற்கனவே திட்டமிட்டு வலுவான காரணங்களை திரட்டிச் சென்றாலும் அவர்கள் ஒரு மர்மப் புண் ணகையுடன் வாதத் தின் பலவீனமான பக்கங்களுக்குள்ளால் ஊடுருவி விவாதத்தை தகர்த்து ஒரு தலையாட்டலை சம்மதமாக வாங்கிவிடுவார்கள். “விர்ர்ர்ரர்’ மெளன மூட்டைகளை தகர்த்துக் கொண்டு இரத்த நாடிகளை அறுத்தெறியும் உத்வேகத்துடன்-அந்த ஒலி-கூர்மையாகி பின் மங்கி . ThirgOLDuJITé காற்றில் கரைந்து. பின் சீறிக் கொண்டு காதுகளை அறுத்துவிடும் வேகத்துடன். காற்றில் தன் இச்சையின்றி வலமும், இடமும், முன்னும், பின்னுமாக கையை விசிற, விரல் நுனிவிட்டு . விட்டு சுள் . சுள். என்று வலித்தது. வேரில் இடிபட்ட மலவாசலில் தொற்றிய நோ மெல்ல முதுகுத்தண்டுக்கு மாறி கழுத்து வரைபரவி நின்றது.தரையில் தலை குத்திக் கிடக்கும் சாணி உருட்டி தரையில் கால் பரப்பி, அதன் கரிய மூடி போன்ற உடலுக்குள் ஒழுங்காக அடைபடாத மெல்லிய பிறவுண் நிற சிறகுகள் வெளித்தள்ளி. காய்ந்த புல் ஒன்று இறகுகளை கிழித்து துருத்திக் கொண்டு நின்றது. வயல் வெட்டையில் மீண்டும் மெளன மூட்டைகள் குவிந்தன. அசதியுடன் இமைகள் செருகிச் . செருகிச் . சோர்ந்தன. வீட்டில் பணத்தை வைத்திருக்கவும் முடியாது.களவு போகலாம், அவ்வாறு நடந்தால் அதை நம்புவார்களா, ரவுண்டப் நடந்து இவ்வளவு பணம் அம்பிட்டால் அதோ கதிதான். பின் மீட்சி என்பது கனவாகத்தான் இருக்கும். வங்கியில் போட முடியாது. அவர்கள் திடீர் என்று திருப்பிக் கேட்டாலோ அல்லது பொருட்களை கைமாற்றும் சந்தர்ப்பமோ கை நழுவிப் போகலாம். அவ்வாறு நிகழ்ந்தால் அவர்களுக்கு விளக்கம் தர முடியாது சந்தேகம் வரலாம். பின் ஒரு துண்டு கயிறு , ஏதாவது ஒருமின்கம்பம். இரத்தம். அருகில் தலையில் அடித்து அழும் களியானி. என்னவென்று புரியாது முழிக்கும் சின்னன். அப்பு. இன்னும் வேறு யார் யாரோ., "க்ர்வோர்ர்க்” வெண்ணிற இறக்கைகளை
25

Page 17
obroj
சட. சடப்புடன் அடித்து . அந்தரத்தில் தரித்து. , கரிய நிற கால்களை குவித்து. , கன்றின் முள்ளந்தண்டில் சிலிர்த்து நின்ற செம்பட்டை மயிர்களை மடித்துக் கொண்டு குந்தும் கொக்கு. , கன்றின் முள்ளந் தண்டில் நடந்து பசுவுக்கு தாவியது. கண்களில் பெருமிதம் தொனிக்க கன்றை நக்கிக் கொடுக்கும் பசு, வாலை உயர்த்தி சிலிர்த்துக் கொண்டு நிற்கும் கன்று, கன்றின் மல வாசலை நக்கிக் கொடுக்கும் பசு, திரும்பத் திரும்ப. சிரத்தையுடன் தலையை உயர்த்தி, தாழ்த்தி வாயில் எச்சில் வழிய. வழிய. கன்றின் மலவாசலை நக்கும் தாய்ப்பசு . கழுத்தில் நெருப்புப்பட்ட சுளிர் வலி, முகர் உயிரைப் போக்கிக் கொண்டது. கழுத்துப் புழுதியும் பிசு. பிசுப்புமாய்க்கிடந்தது. சிறு வயதில் அவனது குழப்படிகள் கொஞ்சம் அதிகம் தான். கடல் ஆமையைப் பிடித்து அதன் ஒட்டின் மீது மெழுகுதிரியை கொழுத்தி ஒட்டி விட்டிருக்கிறான். அது ஊர்ந்து பேர்ய் கொத்தியக்கா வீட்டுத்தாழ்வாரத்தில் போய் ஒண்டி இருக்கிறது. கொத்தியக்கா வீட்டு செத்தையில் தீ பிடித்து விட்டது. கொத்தியக்காவுக்கும் அயல் வீட்டு சுரண்டியக்காவுக்கும் இருந்த பகையால் நாம் தப்பித்தோம். இரண்டு பகுதியும் அடி, தடி என்று இறங்கி வேடிக்கை பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்யமுடியாது போனது. இலைகளை ஊடறுத்து வந்து தாக்கியது வெய்யில் பைத்தியக் காரியின் புலம்பலை கேட்டிருக்கத் தேவையில்லை. குளிர் வாடை மெல்ல மெல்ல. கலைந்து உஷண வாடை அடிக்கத் தொடங்கியிருந்தது. கோடை வெய்யிலின் உஷ்ணத் தகிப்பில் காலை தன்னை இழந்துகொண்டிருந்தது. அறுத்த வயலின் அடிக்கட்டைகளில் கூட வெளிச்சம் வெம்மையாய், கூசுகிறது. தூரத்தே, அடிவானைத் தொடும் மரங்கள் கூட கானல் நீரில் மறைந்து கொண்டு உஷணம் காட்டுது. மாடுகளும் சோர்வாய் அசைபோட்டன. வயல் வெட்டை வனாந்தரமாகிக் கொண்டிருந்தது. ஏதோ உரசுவது போல் கூர்மையான ஒலி கேட்கிறது. பிரமையாக இருக்குமோ. இல்லை. மாடுகள் மேய்ச்சலை விட்டு விட்டு தலையை உயர்த்தி காற்றில் வேற்றின வாடை பிடித்தது. கூர்மையான இரைச்சல் விட்டு. விட்டு. அதே நேரம் உரத்துக் கொண்டும் வந்தது. மாடுகள் மூச்சு விடச் சிரமப்படுவது போல் . மூக்குப் புடைக்கத் தொண்டைக்குள் கமறுது. அங்கொன்று இங்கொன்றாய் நின்ற மாடுகள் கூட்டமாக இரைச்சல் வந்த திசைக்கு எதிர்த்திசையில் நெருக்கி இடித்துக் கொண்டு நகரத் தொடங்கின.
26

சிறப்புத் தொகுப்பு - 2002
“ஏன் அண்ணாச்சி இவ்வளவு நாளும் ஒழுங்காகத்தானே நடக்குது.”
“தம்பி. நீங்க என்ன நினைச்சாலும் பரவாய் இல்ல. என்னால ஏலாது. ஏலா என்டா ஏலாதுதான்.”
“என்னண்ணாச்சி கடைசி நேரத்தில் கால வார்றிங்க.” “இதுதான் கடைசி நேரம் இல்ல எண்டு எனக்கு வடிவாய் விளங்கும். சின்னவளயாச்சும் படிப்பிக்க வேணும். அவளயாச்சும் நோ. வலி தெரியாம வளர்க்க வேணும் . பயம் இரவு பகல் எண்டில்லாமல் விரட்டுது.”
“ஆருக்கண்ணாச்சி பயப்பிடுறிங்க. ஆமீக்கா ...” “இல்ல." “பின்ன மற்ற இயக்கங்களுக்கா.” “இல்ல.” “பின்ன ஏதுக்கண்ணாச்சி பயப்படுறிங்க . “ஊர்ச் சனத்துக்கு ."
நிலம் அதிரும் தட. தடப்பும் . உரசல் ஒலியும் வடலிக் காட்டுக்கு பின்னே இருந்து வந்தது. தமக்குள் இடிபட்டுக் கொண்டு பாதுகாப்புத் தேடி நகரும் மந்தைக் கூட்டம். தாயும் கன்றும் என்னாச்சு. முதுகுவலி பிளந்தெடுக்குது. நெருங்கி அடிக்கும் மந்தைக் கூட்டத்தின் நடுவே இடிபட்டு நெருக்குப்பட்டு, நகர்ந்தன தாயும் கன்றும். முன்னே போக நெட்டித்தள்ளும் தாய்ப்பசு. அசண்டைத் தனத்துடன் போக மறுக்கும் கன்றுக்குட்டி. தலையை கன்றின் கவட்டுக்குள் வைத்து நெட்டித்தள்ளும் பசு. சிரத்தையற்று நகரும் கன்று. திடீர் என்று எகிறி, குதித்து, முன்னே துள்ளி ஓடி, மந்தைக் கூட்டத்தை எதிர்த்து நிற்கும் கன்று. அதன் கண்களில் குறும்பும். தாயை ஏய்த்து விட்ட போக்கும் . முன்னங்கால்களை நிலத்தில் வலுவாக ஊன்றி எது வந்தாலும் எதிர்த்து விடுவேன் என்பது போல. அவன் எதிலுமே கூர்ந்த அவதானம் கொண்டவன் கூட. தாய் தேங்காய் துருவுவதை பார்த்திருந்து விட்டு எழுந்து நடக்காத வயதில் கூட தவழ்ந்து வந்து திருவலையில் அமர்ந்து தேங்காய் துருவுவது போல் உடலை ஆட்டி பாசாங்கு செய்வான். வடலிக் காட்டுக்கு பின்னே இருந்து, இரையும் மூச்சும், மிரண்ட கண்ணுமாய், புள்ளி நாகு தன் உப்பிப்போன பிரமாண்டமான
27

Page 18
o
உடலை தாங்கி நிற்கும் குச் சிக் கால்களை அங்கொன்று இங்கொன்றாய் எகிறி. எகிறி. அதன் வெண்ணிற அடிவயிறும் செந்நிற முலைகளும் அலங்கோலமாய் அசைய உப்பிய உடலை அந்தரத்தில் உயர்த்தி . இடறி. இடறி வந்தது. அதன் பின்னே துரத்திக் கொண்டு கூர்மையான உரசல் ஒலி துல்லியமாக எழுந்தது. மிரண்டு போன மந்தைக் கூட்டம் வெகுண்டு மூர்க்கத்தனமாய் ஒடத் தொடங்கின. மூர்க்கத்தனமாய் கன்றை நெருங்கும் மந்தைக்கூட்டம் கன்று திணறித் திரும்ப முன் மூர்க்கமாய் மோதித் தள்ளி மிதித்து துவைக்கும் மந்தைக்கூட்டம் கால்களுக்கிடையில் மிதிபட்டு, புரண்டு , எகிறி, புழுதி கிளப்பி, அடித்தொண்டைக்குள் கமறி, இழுபட்டு, பெரும் பிரளயமாய் புழுதி கிளப்பி ஓடும் மந்தைக் கூட்டத்தைத் தாண்டி வந்து விழுந்தது கன்று.
“கலக்சனுக்கு வந்த இடத்திலதான் மாட்டியிருக்கான் போல கிடக்கு. கடக்காரன் இரண்டரைக்கு வரச் சொல்லிப் போட்டு மற்றப்பக்கமும் அறிவிச்சுப்போட்டான் எண்டுதான் சனம் கதைக்குது.”
“இல்லாட்டி எப்பிடி தெரியவாறது’
“ஆறு ஏழு பேருக்குக்கிட்ட சிவில்ல வளைச்சிருக்காங்கள் போல கிடக்கு. வேற வழி இல்லாம சாப்பிட்டானாம் எண்டு தான் கண்ட சனம் கதைக்குது ”
“இத சும்மா விடுவாங்கள் எண்டு மட்டும் நினிைக்காத கடக்காரனுக்கு கெதியில இருக்கு .”
மூச்சு வாங்கி. வாங்கி. வந்த நாகு உப்பிப்போன உடலைத் தாங்கிய கால்கள் இடற. இடற. கன்றைத் தாண்டிப் போனது. கூர்மையான இரைச்சலும் தாண்டிப் போனது. பதைத்து வெகுண்டு எழுந்து நின்றது கன்று. கடந்து போகும் நாகு. அதன் நீண்ட கயிற்றில் சிக்கி வரப்பிலும், தரையிலும் மோதி, மோதி கூர்மையான இரைச்சலை ஏற்படுத்திப் போனது காவோலை., ஓடும் மந்தைக் கூட்டத்தைப் பார்த்து அடித் தொண்டைக்குள் கமறும் கன்று . பெரும் புழுதிப்படலம் ஒன்று வயல் வெட்டையின் எல்லையை நெருங்கிக்கொண்டிருந்தது.
28

சிறப்புத் தொகுப்பு - 2002
“ஒரே பதிலாக சொல்லிப் போடு., இரண்டு மூண்டு வருசமா ஒரு தொடர்பும் இல்ல. இப்ப நீங்க வந்து சொல்லித்தான் தெரியும்.”
“ அதுக்கு மேல ஒண்டும் கதைக்காத என்ன கேட்டாலும் ஒண்டும் தெரியாது எண்டு சொல்லிப்போடு. , கடைசியாக இப்ப என்ன சொல்லி கூட்டி வந்தவங்கள் . ”
“ போஸ்மோட்டம் நடக்குதாம்., பிரேதத்தை வீட்ட கொண்டு போகலாம் எண்டு
சொல்லுறாங்கள்,ஆனா இன்னதுதான் எண்டு கையெழுத்து வைச்சு தந்து போட்டு கொண்டு போகட்டாம். ”
* வேணாம் விசர் வேல பாத்திராத . , வேணாம் எண்டு ஒரேயடியா மறுத்துப் போட்டு வந்திரு. கையெழுத்து. கிய்யெழுத்து வைச்சியண்டா அவ்வளவு தான். , பொறியில் விழுந்த மாதிரித்தான். உனக்கு அவன் மட்டும் பிள்ள இல்ல வீட்டில இருக்கிறதுகளுக்கும் சேர்த்து வினைய தேடிக் கொண்டு வந்திராத. சரி. உள்ள கூப்பிள்றாங்கள் போல. ”
“என்ன உள்ள போனான் இன்னும் காணம், என்னவாம் கையெழுத்து கிய்யெழுத்து வைச்சுப் போட்டானா. ”
“இல்ல வேணாம் எண்டுட்டேர் போல கிடக்கு.” “அதுதான் ., அதுதான் -சரி, கொண்டு வந்து போட்டு அயல் அட்டயில பெடி பெட்டயல வைச்சுக் கொண்டு இருக்க ஏலுமா.”
புழுதி படிந்த உடலும், கால்குழம்புகள் மிதித்து கிழிந்து தொங்கும் தோலும், வழியும் இரத்தமும், அப்பிய புழுதி மணலை மீறி துளிர்த்து நிற்கும் இரத்தமுமாய் கன்று முன்னங்கால்களைப் பரப்பி நிலத்தில் விழ்ந்தது. முள்ளந்தண்டில் வலி விண்டு. விண்டு வலித்தது. மூச்சுத் திணற தட. தடக்கும் நெஞ்சுடன் கன்றை நோக்கி நகர. காலடி ஓசையையோ, அதிர்வையோ இரைச்சலையோ பொருட்படுத்தாது நிதானமாக அசைபோட்டது கன்று. அதன் மேல் என்நிழல் படர்ந்தது. அசை போடுவதை நிறுத்தாது திரும்பி முகத்தை நோக்கியது. அதன் ஒளிரும் கண்கள் அச்சுறுத்தின.
பார்வையைத்திருப்பி நிதானமாக அசைபோட்டது. அசை போடப் போட அதன் உடலினின்றும் புழுதிகள் உதிரத் தொடங்கின.
29

Page 19
okoj
நெஞ்சுக் கூட்டுக்குள் வலி விட்டு விட்டு வலித்தது. கிழிந்து தொங்கிய தோல்கள் மீண்டும் ஒட்டிக் கொண்டன. வியர்வை முள்ளந் தண்டில் வழிந்து உருண்டு போனது. கன்றின் உடலில் துளிர்த்துக் கிடந்த இரத்தக் கசிவுகள் உதிர்ந்தன. நிதானமாக அசை போட்டது. அதன் கரிய உடலில் மெருகும் மினுமினுப்பும் கூடிக் கொண்டே வந்தது. அசை போடப். போட கால்களை மடித்து விழுந்து கிடந்த நிலையிலேயே அதன் உடல் அந்தரத்தில் மெல்ல. மெல்ல. எழுந்தது. புவி ஈர்ப்பில் இருந்து விடுபட்டுப் போன உடல் வெட. வெடப்பற்று, காற்று வெளியின் சுழிப்பில் அல்லாடாது நேர் மேலே எழுந்தது. உள்ளங்கால்கள் கூசின. கண்கள் மங்கின. பூமிக்கும் கன்றுக்கும் இடையில் காற்று சுழித்து புழுதியையும் தூசிகளையும் அள்ளிக் கொண்டு போனது. வைக்கோல் அடிக்கட்டைகள் வெட. வெடத்து நடுங்கின. கன்றின் உடலினின்று பரவிய வெம்மையை மூக்கு நுனி உணர்ந்தது. முகம் முழுவதும் வெம்மை பரவியது. தாங்க முடியாத வெம்மை, தன்னிச்சையின்றியே கால்களை பின்னடையச் செய்தது. கன்று விலக . விலக. வெம்மையும் கூடிக் கொண்டு வந்தது. மண்கட்டிகளும், வைக்கோல் அடிக்கட்டைகளும் குதிக்குள் நெருங்கி நெரிபட்டன. வேம்பின் நிழல் இருளாக பின்னே அசைந்தது. கடும் வெய்யில் நாளில் கண் கூசும் தகர மினுக்கத்தை தவிர்க்க மதிலைப் பார்த்த போதுதான் முதல் முதலில் தந்தையின் கடமை கூட செய்ய முடியாமல் போனகையாலாகாத் தனம் மண்டையையும் பிளக்கத் தொடங்கிற்று. காவி அடித்த மதில் சுவரில் செந்நிறமும் ն(ԱLL நிறமும் கலந்த அஞ்சலிப் போஸ்டரில் நெஞ்சளவு படம் போட்டிருந்தார்கள். எப்போதோ மறந்து போன அவன் பெயருடன் கூப்பிடும் பெயரும் இருந்தது. மேல் இருந்து கீழாக வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் தேதிகள் குறிக்கப்பட்டிருந்தது. அன்னையின் மடியில். மண்ணின் மடியில். இரண்டு சுட்டி விளக்குகள் சுடருடன் தத்வரூபமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. உண்மை. உண்மை. இரத்த நாளங்களை அறுத்தெறியும் கூர்மையான இரைச்சல் “விர்ரர்
’ சாணி உருட்டி சாணி உருட்டியேதான். வெறுமையாய்க் கிடந்தது காய்ந்த புல்லின் அடிக்கட்டை, கிழிந்து தொங்கும் பிரவுன் நிற மென் இறக்கையை அகல விரித்து.புழுதி கிள்ப்பி,அதன் கரிய உடலில் பொன் நிறமாய் ஒளிரும். புழுதித் துகள்கள். “ விர்ர்ர்ர்.’ சிறுகுவியலாய் புழுதி கிளம்பி மேல் எழுந்தது. சாணி
30

சிறப்புத் தொகுப்பு - 2002
உருட்டி வேகமாய் காற்றை கிழித்து கால்களை வீசிப் போட்டு வேகமாய் நடந்து போக உலரும் வியர்வை உடலில் குளிர்ந்து சிலிர்த்தது. வெட வெடக்கும் உடலை தாங்கி வேகமாய் இன்னும் வேகமாய் காற்றை கிழித்து கானல் நீரை வயல் வெட்டையில் துரத்தி நடையை துரிதப்படுத்தி ஒட, இரைச்சல் காற்றில் கரைந்து வந்தது. மூட்டுகள் பிடிப்பற்று விலத்தி வழுக்கியது. தலைமுடி காதை அறுத்தது. கானல் நீரை ஊடறுத்து வரும். காட்டோரப் புதர்களில் ஒளி பார்வையை முறித்தது. மண்ணாங்கட்டிகள் சிதைய, வைக்கோல் அடிக்கட்டைகள் மடித்து நிமிர, வரப்புகள் வேகமாய்க் கடக்க , இரைச்சல் இழுபட்டு காற்றில் கரைந்து. கூர்மையாகி. கூர்மையாகி. கிட்டவாக வந்தது. ‘விர்ர்ர்ர்.’பிடரியைத் துளைத்து. சட்டென்று குனிந்து தப்ப. முன்னே பிய்த்த இறக்கையின் வீரியம் குறைந்த பறத்தலுடன் சாய்ந்து. சாய்ந்து. வயல் வெட்டையில் அரைவட்டம் அடித்து வாகை மரத்தை நோக்கி போகும் சாணி உருட்டி, மூச்சு நெஞ்சை வலிக்கச் செய்ய வேகமாய், இன்னும் வேகமாய் நடையை எட்டப் போட்டு. ஒரே முடிவு. தீர்மானமான ஒரே முடிவு. அக்சலேட்டரில் இருந்து நுனிப்பாதத்தை எடுக்காமல் ஒரே அமத்து. 68,75,78,79.அதிரும் முள். எதிர்படும் நிலங்களை, ரோட்டை, மரத்தை, மின்கம்பத்தை, வீடுகளை, முள்வேலிகளை, காவல் அரண்களை உள்வாங்கி பாயும் லொறி. சுலபமான முடிவு.ஒரு மரமோ, மதிலோ, மின் கம்பமோ., தப்பித்தலுக்கு சாத்தியமில்லாத மோதல், ஒய்ச்சல் ஒழிவு இல்லாத இயந்திரமயமான உலகில் இருந்து உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒய்வு நிரந்தர அமைதி, வயல் வெட்டையில் திசையை மாற்றி, எல்லைப் புதர்களை நோக்கி வேகமாய் நடந்து புதர்களை ஊடறுத்து ஒற்றையடிப் பாதையில் சட்டென்று திரும்ப, அதிர்ச்சி தரும் வேகத்தில் சாண் உருட்டி எதிரே வந்தது. நெற்றி கீறுப்பட்டு கிழிபட்டு வியர்வைபட்டு காந்தியது. ஒற்றையடிப் பாதையில் குனிந்து வேகமாய் நடக்க வழி நெடுகிலும் ஆரைக் கொடி முகத்துக்கு நேரே ஆடிக் கொண்டு வந்தது. நெருங்கி வரும் இறப்பைக் கண்டு ஒடி என்னாகப் போகிறது. இறப்பு சுகமானது. இறந்தவர் பற்றிய நினைப்பில்லை. கவலை இல்லை. இருப்பவள் நெருக்கமானவர்களின் மரணம் பற்றி பயம் இல்லை.கூட வரும் கவலையும் இல்லை. உடல் பற்றிய பிரமை இல்லை. அச்சுறுத்தும் எதிர்கால வாழ்வு பற்றிய கவலை இல்லை. உடலைச் சூழ கூடவே வளர்ந்து
31

Page 20
of
கூனிக்குறுக வைக்கும் ஒழுக்கம் பற்றியோ சேர்ந்து ஒழுகுவது பற்றிய சிந்தனை இல்லை. உடையில் ஒப்பனையில் எதிலும் கவர்ச்சி இல்லை. எதை எதையோ கண்ணுக்குக்குத் தெரியாதவற்றை காப்பாற்றுவதற்கும் கட்டிக் காப்பதற்கும் உடலை வருத்தி உழைக்கும் தேவை இல்லை.அரையடி வேலிக்கு அடிதடி தேவை இல்லை. நாளை பற்றி கவலை இல்லை.ஏன் அடுத்த நிமிடம் பற்றிய கவலை கூட இல்லவே இல்லையே. பாதங்களுக்கடியில் கற. முற. என்று உருண்டு தடம்மாறிப்புரளும் கிறவற்கற்கள். இன்னும் காற்றில் அதிர்வு கேட்டபடி இருந்தது. காற்றில் அதிர்வு கூடிக் கொண்டு வந்தது. சட்டென்று திரும்பக் கால்களை குறிபார்த்து இரைச்சல் இல்லாது வந்தது சாணி உருட்டி. கண்ணிமைக்கும் நேரத்தில் கால்களைத் தூக்கி தப்பிக்க முனைய, மோதிய வேகத்தில் செம்புழுதி எழ கிறவற்கற்கள் முன்னே உருண்டது. பெருவிரல் நகக் கண் காந்த, இரத்தம் கசிந்தது. மூச்சுப் பிடித்து வீட்டுப்படலையை நோக்கிப் பாய்ந்து, இடித்துத் திறந்து தப்பிக்க முனைய “ தடால்” செத்தையுடன் மோதும் கதவு.
“தூ.! எரும மாதிரி கதவ இடிச்சு திறக்காதைங்க எண்டு எத்தினதரம் சொல்லி இருக்கன்.”
முற்றத்து மணலில் அவள். முன்னால் மணலில் கிடக்கும் சுளகும், சாக்கும் பக்கத்தில் சின்னன்.
முழங்காலுக்குள் செருகிய சட்டையும் மிரண்ட பார்வையுமாய் சின்னன் குந்திக் கொண்டு இருந்தது.
“கண்டதையும் கேட்டுக் கேட்டு பயந்து போய்க் கிடக்குதுகள் கொஞ்சம் எண்டாலும் அறிவு கிடையாது. ”
அசையும் அவள் உதடுகள் . சின்னன் முகத்தில் மிரட்சி மாறி குறும்பு தாண்டவமாடியது. சட்டையைத் தூக்கிப் பிடித்து எழுந்து நிற்கும் சின்னன். சட்டென்று மடியில் இருந்ததை சுளகுக்குள் கொட்டி, சுளகைத் தாண்டி பாய்ந்து, தாயின் அடிக்குத் தப்பி காலைக் கெந்திக் கெந்தி குளிர்ப் புன்னகையுடன் ஓடிவரும் சின்னன். கூடவே குளிர் வாடையும் வந்தது. கதவை இடித்துத் திறக்கக் கூடாதுதான்.
32


Page 21


Page 22

சிறப்புத் தொகுப்பு - 2002
கனவினுள் கனவு
-எல்லாளன். ஒரு கனவு கண்டேன் விழித்துப் பார்த்தால் விழாக் கோலம் வியந்து போனேன்
துறைசார் கலைஞரை அத்துறையில் சிங்கமென்பதும் புலியென்பதும் வாய்வழி வந்து வழக்கமாகிவிட்டது சாதனை புரிந்தாலும் அப்படித்தான். அவ்வழியில், !
புலியைச் சிங்கமென்பதா? சிங்கத்தைப் புலியென்பதா? எதுவுமே புரியவில்லை. புரியவும் முடியவில்லை.
33

Page 23
என்கண்களை ஒரு முறை கழற்றி என்னுடையது தானா என்று பார்க்க வேண்டும் போலிருந்தது
ஒரு புறம் சிரிப்பு வந்தது மறுபுறம் திகைப்பாய் இருந்தது
எதிர் எதிர் நின்று களத்தில் பலியெடுத்தவர்கள் கைகொடுக்கிற போது, ஒரு புறம் பயமாய் இருந்தது! மறுபுறம் வியப்பாய் இருந்தது!
எப்படி? எப்படி இவர்களால் முடிகிறது? அவர்களின் அடுத்த நகர்விற்காய் ஆவலுடன் - நான். என் கனவு மட்டும்
LM605 LDO-se
விழித்துக் கொள்ளவே விருப்பமில்லாதவனாய் கனவின் மீதிக்காய் காத்திருக்கிறேன்!
கனவுகளே பலிக்காதபோது இது
கனவினுள் கனவு. காத்திருப்பு ஒன்றே நிரந்தரமாய்த் தெரிகிறது.
34

சிறப்புத் தொகுப்பு - 2002
சுகுந்திரத்தை வென்றெடுத்த Gungstulatild6it
-வல்வை.ந.அனந்தராஜ்
தமது வர்த்தகத்தை விரிவுபடுத்தி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் கீழைத்தேய நாடுகளில் கால் பதித்த பிரித்தானியருக்கு நாடுகளைத் தமது பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற ஆதிக்க வெறி மேலோங்கிய பொழுது இந்தியா பிரித்தானியருக்கு எதிரான தமது எதிர்ப்பைக் காட்டத்தொடங்கியது.
காலங்காலமாக வாழ்ந்து வருகின்ற மக்களை அவர்களின் சொந்த மண்ணில் இருந்து அகதிகளாக்கி அவர்களது பொருளாதார மனித வளங்களைச் சுரண்டி அந்த நாடு தமது சந்தை வாய்ப்பு மையமாக்கும் ஏகாதிபத்தியவாதத்திற்கு எதிரான குரல் அன்று இந்தியாவிலும், இலங்கையிலும் ஒலித்தபோது “வெள்ளையனே வெளியேறு” என்ற குரல் ஓங்கி ஒலித்தது.
பிரித்தானியருக்கு எதிரான சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்த மாகாத்மா காந்தியின் பின்னால் ஆயிரம் ஆயிரமாக சுதேசிகள் திரண்டெழுந்தனர்.
35

Page 24
ஆனால் இந்தியர்களின் சாத்வீகமான போராட்டங்களுக்கு பிரித்தானியா விட்டுக்கொடுக்கவில்லை. மாறாக அவர்கள் மீது அடக்கு முறைகளையும் வன்முறைகளையும் தான் பரிசாக வழங்கியது.
அகிம்சை வழியில் போராடி தமது உரிமைகளைக் கோரிய மக் களில் பலர் சுட் டுக் கொல லப் பட்டனர் . 6) ஆயிரக்கணக்கானவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இன்னும் பல பெண்கள் பிரித்தானியப் படைகளினால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டனர். பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்பட்டது. அங்கே வாழ்ந்த இந்தியர்கள் ஒவ்வொருவரும் அடிமைகளாக்கப்பட்டனர்.
சாத்வீகமான போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் மீது வன்முறைகளைப் பிரயோகித்த ஆக்கிரமிப்பு இராணுவத்தின் செயலைக் கண்டு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் கொதித்தெழுந்தார்.
“பிரிட்டன்காரனுக்குப் போய் சாத்வீகம் என்றால் என்ன வென்று புரிய வைக்கப் போகின்றீர்களா? அடிக்கு அடி,இரத்தத்திற்கு இரத்தம். அது ஒன்றுதான் பிரிட்டிஷ்காரனுக்கு அகிம்சையின் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கும்”
தனது நண்பர்கள் முன்னிலையில் சுபாஸ் ஆக்ரேர்ஷத் துடன் கூறிய போது அவர்களில் பலருக்கு சுபாஷின் முடிவு பயத்தைத்தான் ஏற்படுத்தியது.
“சுபாஷ். உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்து விட்டது.? பென்னம் பெரிய வல்லரசு ஒன்றுக்கு எதிராக எங்களால் ஆயுதம் ஏந்திப் போராடமுடியுமா?”
"பெரிய அளவில் மக்களை ஒன்று திரட்டி காந்தியினால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சை வழியிலான போராட்டத்திற்கே மதிப்புத்தராத பிரிட்டிஷ்காரன் எங்களுடைய சிறிய அளவிலான ஆயுதப் போராட்டத்திற்கு எப்படி விட்டுக் கொடுப்பான் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்.?”
36

சிறப்புத் தொகுப்பு - 2002
அங்கே நின்ற ஒரு சில இளைஞர்களின் அச்சத்தை உணர்ந்த சுபாஷ் சிரித்துக்கொண்டே, “எனது அன்பான நண்பர்களே பல்லாயிரக்கணக்கான மக்களின் சாத்வீகப் போராட்டமும், அவள்களின் தியாகங்களும் எமது தேசத்தின் விடுதலைக்கான குரலும் பிரிட்டிஷ்காரனின் இதயத்தை உலுப்பவேண்டுமானால் அவன் எங்களுடைய மண்ணில் அச்சத்துடனேயே உலாவ வேண்டிய ஒரு சூழ்நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். ஆங்காங்கே அவர்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பொழுதுதான் அகிம்சைத் தத்துவத்தின் உண்மையை வெள்ளைக்காரன் உணருவான். அதற்கு ஏன் இவ்வளவு அச்சமடைய வேண்டும். எங்களில் ஒரு சிலர் இதில் இணைந்தால் போதும். நிச்சயமாக நாம் இழந்து கொண்டிருக்கின்ற எமது தேசத்தை மீட்டெடுக்க முடியும். இது எங்களுடைய தேசம், அந்நியன் வந்து எங்களை அடக்கி ஒடுக்க நாம் எப்படி அனுமதிக்கமுடியும்.?” என்று கூறியதும் அச்சத்தில் தவித்தவர்கள் கூட சுபாஷின் பின்னால் அணி திரளத்தொடங்கினர்.
அதன் விளைவு.
பிரித்தானிய படைகளுக்கு எதிரான குண்டு வீச்சுக்கள் ஆங்காங்கே இடம்பெற்று அவர்களைக் கிலி கொள்ளவைத்தது.
பிரித்தானியரி ன் வங்கிகள் அரச நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
பிரித்தானிய ரயில்கள், பஸ் வண்டிகள் குண்டுவீசித் தகள்க்கப்பட்டன. பிரித்தானியருடன் சேர்ந்து காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலில் ஈடுபட்ட சுதேசிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.!
படிப்படியாக பிரித்தானியப் படையினரின் நடமாட்டம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியத் தெருக்களில் தனித்து நடந்து திரிய பிரிட்டிஷ் இராணுவமும், தளபதிகளும் அச்சமடைந்தனர்.
சாத்வீகமான போராட்டத்தின் மகத்துவத்தை உணராத பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள், நேதாஜியின் ஆயுதப்
− 37

Page 25
போராட்டத்தின் சக்தியினால் நிலை குலையத்தொடங்கி விட்டனர்.
பிரித்தானியருக்கு எதிரான ஆயுதப்போராட்டம் படிப்படியாக முனைப்புப் பெற்று வந்த வேளையில் நேதாஜியின் மனதில் உதித்த இன்னுமொரு திட்டம் அப்போது இந்தியர்களையே ஒரு கணம் கதிகலங்க வைத்தது.
ஆம். இந்தியாவை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர்களை வெளியேற்றவேண்டும் என்ற குறிக்கோளில் விடாப்பிடியாக நின்ற நேதாஜி இந்தியசுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திய மகளிர் படை அணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.!
அந்தக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக யப்பான் சென்ற நேதாஜி அங்கிருந்தபடியே பிரித்தானிய இராணுவத்தை எதிர்ப்பதற்கு பெண்கள் படை அணி ஒன்றை உருவாக்கினார். ஜான்சிராணி றெஜிமென்ட் என்ற பெயரில் மகளிரை ஒன்றிணைத்த நேதாஜி அப்பொழுது பல எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தார். “ஜான்சிராணி றெஜிமென்ட்” மகளிர் படையணிக்குத் தளபதியாக லக்ஷ்மி சுவாமிநாதனை நியமித்து அவருக்கு கேணல் தரத்தையும் நேதாஜியே வழங்கினார். இந்த மகளிர் படையணிக்குரிய முறையான இராணுவப் பயிற்சி யப்பானியர்களாலேயே வழங்கப்பட்டது.
“சே” பென்னம் பெரிய வலிமை பெற்ற பிரிட்டிஷ் படையை எதிர்ப்பதற்கு இந்தப் பெண்கள் படையணியால் முடியுமா? அதுவும் மென்மையான போக்கும், நளினத்தன்மையும் கொண்ட எங்களுடைய பெண்களை சுபாஷ் இந்தப்போரில பலி கொடுக்கப் போகின்றாரே?”
சுபாஷின் இந்த முடிவை இந்தியாவின் மிதவாதிகள் கேலி செய்த போது,
பூவுக்குள்தான் பூகம்பம் உருவாகும் என்று கருதிய சுபாஷ் சந்திரபோஷ் இந்தியாவின் வீரம் செறிந்த பெண்கள் படையணியைக் கொண்டே பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அடிக்கமுடியும் என்ற துணிவுடனும் வல்லமையுடனும் செயற்பட்டது. உலகையே
38

சிறப்புத் தொகுப்பு - 2002
ஒருகணம் வியப்படைய வைத்தது. யப்பானில் நன்கு பயிற்சி பெற்றபின் இந்திய மண்ணில் நுழைந்த “ஜான்சிராணி றெஜிமென்ட்” மகளிர் படையணி பிரித்தானியப் படையினருக்கு எதிரான தாக்குதல்களைப் பல முனைகளில் இருந்தெல்லாம் தொடுக்கத் த்ொடங்கியது. மூலை முடுக்குகளில் இருந்து திடீர் திடீரென
அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அதிரடித் தாக்குதல்கள் பிரித்தானிய
அரசை நிலைகுலைய வைத்தது. மகாத்மா காந்தியின் தெடர்ச்சியான
சாத்வீகப் போராட்டம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, இந்தியாவில்
பரவலாக வெடித்துக் கொண்டிருந்த ஆயுதப்போராட்டத்தினால் ஆட்டம்
கண்ட பிரித்தானிய ஏகாதிபத்தியம், தொடர்ந்தும் இந்தியாவில்
நிலை பெற்று இருக்க முடியாத நிலையில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த நிலையில்
சாத்வீகப் போராட்டத்திற்கு மதிப்புக் கொடுப்பது போல் உலகுக்குக்
காட்டி, இந்தியாவுக்குச் சுதந்திரத்தை வழங்கி விட்டு அங்கிருந்து
வெளியேறியது.!
ஆம்.! அடக்கப்பட்ட எந்த ஒரு இனமும், ஆயுதம் ஏந்திய போராட்டத்தினுாடாகவே தமது சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற உண்மையை இது உணர்த்தி நின்றது. உலகின் விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் முன் மாதிரியாக அமைந்தது!
39

Page 26
of
தனித் தனி
நடந்து கொண்டேயிருக்கின்றன. பல லட்சம் கால்களால் இரண்டு சமாந்தர இரும்புப் பாதைகள்
na மு.மயூரன் s
உனக்கும் சம்மதமென்றால்,
மோதி விலகும் பூக்கள் பற்றியோ. நம் காற்சட்டைகளில் முகம் துடைக்கும் புற்கள் பற்றியோ எம்மைத் தவிரவும் இந்த உலகில் இருக்கவே செய்கின்ற மனிதர்கள் பற்றியோ பேசிக் கொண்டு,
அல்லது
எண்ணங்கள் தாமாய்த் தொட்டுக் கொள்ளும் புள்ளியில், அறிவு எழுமாற்றாய் பரிமாற்றம் கொள்ளும் மொழி கடந்த சமனிலையில் பேச மறந்து
உன் வாசனையை சுவாசித்தபடி தோள் உரசி நடப்பேன்.
என்னில் நான் சாய்ந்து எனக்குள்ளே ஒளிந்து எத்தனை நாளைக்கு?
நான் தூறல் மழையென மாறி,
தெளிந்த பார்வையில் வலிய தோள்களில்
40

சிறப்புத் தொகுப்பு - 2002
சிறிய மார்பினில் சாய்வதெனத்தூறி, oilfi),
வழிந்தோடி
உன் மடியில் பாரம் இழந்து தேங்குவேன். நேரம் இழந்து தூங்குவேன்.
உன்னுள் சூல் கொண்டவொரு சிசுவாய் கைகள் விரித்து,
இமைகள் திறந்து,
காலகள உதைதது
நரி விரட்டி’ சிரித்து என்னை முதலில் இருந்து தொடங்குவேன்.
இப்பொழுதுதான் கடந்து போன ரயிலில் கையசைத்த குழந்தையாய் நான் யாரோ .வாகி தூரத் தொலைந்து
அந்த ரயிலின் அடங்கிக் கொண்டிருக்கும் அதிர்வுகளாய பிய்ந்து. பிய்ந்து. துளித்துளியாய்.
துகள் துகளாய்.
ســـا-اب و به ساساق مه ساق-اق ه -ارل-ارل
அவ்வப்போது தொட்டுக்கொண்டும் அவ்வப்போது பின்னிக் கொண்டும் தேவைப்பட்டால் விலகிக் கொண்டும் இணைப்புகள் இல்லாமல் பிரிப்புகள் இல்லாமல் இணைபிரியாமல்
நடந்து கொண்டேயிருக்கின்றன. மனிதர் போட்ட இரும்புப்பாதைகள்.
41

Page 27
தமிழ் - முஸ்லிம் அரசியல் உறவும் முரணும் சில அவதானக் குறிப்புகள்
-அபிநந்தன்
*மனித உரிமைகளை உயர்த்திப்பிடிக்க வேண்டுமாயின், அடிப்படையான மனிதகுல நீதிகளை ஆதரிக்க வேண்டுமாயின், உங்கள் பக்கமுள்ளவர்களுக்கு மட்டும் அதைக்கேட்காதீர்கள். அனைவருக்கும் அந்த உரிமைகளைக்கேளுங்கள்.நமது கலாச்சாரம்,நமது தேசம் இவை சுட்டுகின்ற விஷயங்கள் மட்டுமே சரியானவையாக இருக்குமென நினைப்பது தவறு.”
- எட்வேட் ஷெய்த் -
இன முரண்பாட்டிற்கான தீர்வு தொடர்பான பேச்சுக்கள் மேலேழும் போதெல்லாம் முஸ்லீம் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பான கேள்விகள் மேலெழுவதும் வழமை. கடந்த காலங்களில் இலகுவாக தீர்த்து விடக்கூடியதொரு உதிரிப்பிரச்சினையாகவும் தமிழ் தேசத்தின் அகநிலை பிரச்சினையாகவுமே இது கருதப்பட்டது. ஆனால் இன்று முஸ்லிம் மக்களின் பிரச்சினையின் அரசியல் முக்கியத்துவமும், இனமுரண்பாட்டிற்கான தீர்வில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு வகிக்கும் பங்கும் சகல தரப்பி னராலும் உணரப்பட்டிருக்கிறது. முஸ்லீம் தேசம் தேசியம் போன்ற கருத்து நிலைகள் தொடர்பாக தமிழ் கருத்துருவாக்க பிரிவினர் மத்தியில் அபிப்பிராய பேதங்கள் காணப்பட்ட போதிலும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தூரநோக்குடன் அணுகப்படவேண்டியவை என்பதில் அனைவர் மத்தியிலும் உடன்பாடே காணப்படுகிறது.
42

சிறப்புத் தொகுப்பு - 2002
குறிப்பாக தமிழ் தேசத்தின் தலைமை சக்தியான விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களின் அரசியல் பிரச்சினைகளை மிக நிதானத்துடனும், தூர நோக்குடனும், கையாண்டு வருகின்றனர். அண்மையில் தாய்லாந்தில் இடம்பெற்று முடிந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையின் போது விடுதலைப்புலிகளின் தத்துவ ஆசிரியர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின்
தாயகம் என்று கூறியிருப்பதே இதற்கு சான்று.
தமிழ் -முஸ்லிம் சமூக அரசியல் உறவுகளைப் பொறுத்த வரையில் ஒரே மொழி ஒரே பிரதேசம் ஒரே வகையான பொருளாதாரக் கட்டமைப்பு கலாச்சார ரீதியான சில ஒத்த தன்மைகள் என வடக்கு கிழக்கு வாழ் தமிழ் - முஸ்லீம் மக்கள் மத்தியில் பல்வேறு இணங்கிப் போகக்கூடிய தன்மைகள் காணப்பட்ட போதிலும் முஸ்லிம்கள் தமிழர்கள் என்ற சொற்பதத்திலோ அல்லது தமிழ் தேசியம் என்ற அரசியல் வரையறைக்குள்ளோ தங்களை அடக்கிக் கொள்ள முற்படவில்லை. ஆரம்பத்தில் தமிழ் - முஸ்லிம் தரப்பினரிடையே கல்வி வாய்ப்பு,உத்தியோகம்,நிர்வாகம் போன்ற விடயங்களில் ஓரளவு முரண்பாடுகள் நிலவிய போதும் அம்முரண்பாடுகள் இருசமூகங்களுக்கிடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையில் அமையவில்லை. தமிழ் மக்களின் போராட்டத்தலைமை இளைஞர்கள் கைகளுக்கு மாறிய பின்னரே இரு சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் வலுவடையத் தொடங்கின. 1985ம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கில் பரவலாக இடம் பெற்ற தமிழ் முஸ்லீம் மோதல் சம்பவங்கள் சமரசத்திற்கு அப்பாற்பட்ட முறையில் இரு சமூகங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தியது. இக்காலப்பகுதியில் தமிழ் ஆயுதக் குழுக்கள் அப்பாவி முஸ்லிம் மக்கள்மீது தாக்குதல்களை மேற்கொண்டதும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களான ஜிகாத், ஊர்காவற்படை போன்றன அப்பாவி தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதும் மறுக்க மறைக்க முடியாத வரலாற்று உண்மைகள். இக்காலப்பகுதி சம்பவங்களுக்கு பின்னரே தாம் ஒரு தனித்துவமான தேசிய இனம், தமக்கு தனித்துவமான உரிமைகள் இருக்கின்றன என்ற வாதங்கள் கிழக்கு வாழ் முஸ்லிம்கள் மத்தியில் வலுவடையத் தொடங்கின. எந்த அடையாளம் தமிழ் தரப்பினர் தம்மீது தாக்குதல் நடத்துவதற்கு காரணமாக அமைந்ததோ அவ் அடையாளத்தின் கீழ் முஸ்லிம்கள் ஒன்று திரண்டனர். உணர்வு நிலையில் 43

Page 28
ஒன்றுபட்டனர். முஸ்லிம் தேசம் தேசியம் போன்ற கருத்துரு வாக்கங்கள் தோற்றம் பெற்றன. உண்மையில் 1985 ற்கு முன் முஸ்லிம் மக்கள் தாம் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதையோ, தமக்கு தனித்துவமான உரிமைகள் இருக்கின்றன என்பது பற்றியோ உணரவோ சிந்திக்கவோ முற்படவில்லை. ஆகவே இங்கு முஸ்லிம்களின் தேசிய ரீதியிலான எழுச்சி ஒரு படிமுறை ரீதியான வளர்ச்சியை கொண்டிராமல் ஓர் திடீர் நிகழ்ச்சியாகவே அமைந்தது. ஆனால் கிழக்கு வாழ் முஸ்லீம்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி உணர்வு யாழ்ப்பாண முஸ்லிம்களை பெரிதளவாக பாதிக்கவில்லை. வேண்டுமானால் அது 1990 களுக்கு பின் சாத்தியப்பட்டிருக்கலாம்.
தமிழ் - முஸ்லிம் முரண்பாடுகளை வலுப்படுத்தியதில் அரசபடைகளின் பங்கும் கணிசமானது. அதனையும் நாம் கருத்தில் (odb|T6i,6TITLD6) இருக்கக்கூடாது. ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் இரண்டு சிறுபான்மை இனங்கள் ஒன்றுபடுதல் தனது ஆதிக்க சிங்கள தேசியவாதத்திற்கு ஆபத்தானது என்பதில் சிறிலங்கா அரசு தெளிவாக இருந்தது. இதற்கென ஒரு அரசபடைகள் திட்டமிட்டு செயற்பட்டன. தமிழ் பகுதியினுள் வரும் முஸ்லீம்களை தாக்குதல்,கொல்லுதல்,பழியை தமிழ் இயக்கங்கள் மீது போடுதல், முஸ்லிம் பெயர்களில் சிங்களப்படையதிகாரிகளை தமிழ் பகுதியினுள் அனுப்பி அடாவடித்தனங்களை கட்டவிழ்த்து விடுதல், என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதே போன்று தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக் காக பாடுபட்ட நபர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதன் மூலம் அடக்கும் அரசு இரண்டு விடயங்களை இலக்காக கொண்டிருந்தது. ஒன்று தமிழர் தாயகப்பகுதியில் குழப்பங்களை உருவாக்குவதன் முலம் தமிழர் போராட்டத்தைப் பலவீனப்படுத்துதல், இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் அதிகமாக படைகளில் இணைந்து கொள்ளக் கூடிய ஆழலை உருவாக்குதல்.
தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டின் பிறிதொரு பரிணாமம் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நடவடிக்கைகளில் தங்கியிருக்கிறது. அரச ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டம் இரண்டு தசாப்தங்களை கடந்து நீண்டு ஆருகிறது. இக்காலப்பகுதியில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள்
44

சிறப்புத் தொகுப்பு - 2002
கொல்லப்பட்டிருக்கின்றனர்.பல தமிழ் பெண்கள் அரச படைகளால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக் கப்பட்டுவருகின்றனர். கொல்லப்பட்ட தமிழர்களின் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. தமிழர்களின் நிலப்பரப்பில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு திட்டமிட்ட இன அழிப்பின் போது முஸ்லிம் அரசியல் தலைமைகள் எவ்வாறு நடந்து கொண்டன ?
முஸ்லிம் அரசியல் தலைமைகளை பொறுத்தவரையில் குறிப்பாக பெரும்பாலான முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற்றியங்கும் முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரையில் மாறி மாறி அரசமைக்கும் இனவாத அரசுகளுடன் இணைவதன் மூலம் தனது அரசியல் இருப்பைப் பேணிவருகிறது. இதுவே முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நிலைப்பாடாகவும் இருக்கிறது. இதன் முலம் முஸ்லீம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கிறதா, பாதுகாக்க முடியுமா என்பது முஸ்லீம் தேசத்தின் சிந்தனைக்கும் பரிசீலனைக்கும் உரியது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் மேற்படி நிலைப்பாடு தமிழ்- முஸ்லீம் முரண்பாட்டில் பாரிய செல்வாக்குச் செலுத்தி வருகிறது. இனவாத சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது மிக மோசமான ஒடுக் குமுறைகளை கட்டவிழ்த்து விட்ட போதெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ"ம் ஏனைய முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அதனை கண்டிக்கவோ அல்லது எதிர்த்து குரல் கொடுக்கவோ முற்படவில்லை. மாறாக இனவாத அரசின் பங்காளியாகவும் அவ்அரசை பலப்படுத்தும் உப சக்தியாகவுமே செயற்பட்டன. ஒரு புறம் நாம் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறிக்கொண்டும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மறுபுறம் எந்த அரசு தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கிறதோ எந்த அரசு தமிழ் மக்களை ஒடுக்கியதோ அந்த அரசின் பங்காளியாகவும் அதனை பலப்படுத்தும் சக்தியாகவும் செயற்பட்டு வந்தது ஒரு முரண் அரசியல் நிலையாகும். தென்பகுதியில் உள்ள சிங்கள முற்போக்கு சக்திகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் ஆழலில் ஒரு பொதுத்தாயகத்தில் வாழும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகள் தமிழர்களின் பிரச்சினையில் பாராமுகமாக நடந்து கொண்டதும் இனவாத அரசின் பங்காளியாக 45

Page 29
o
செயற்பட்டதும் தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தொடர்பான வெறுப்புணர்வையும் அவநம்பிக்கையும் ஏற்படுத்தியது. இதனை நாம் தவறென்றும் கூறிவிட முடியாது.
இது ஒரு சிக்கல் வாய்ந்த நிலைமை. ஒடுக்கும் சிங்கள அரசிற்கு எதிராக தமிழ் தேசம் போராடிக் கொண்டிருக்கும் போது ஒடுக்கும் அரசின் பங்காளியாக செயற்படும் முஸ்லிம் அரசியல் தலைமைகளுடன் அரசியல் உறவு, முரண் குறித்து பரஸ்பரம் பேசிக்கொள்வதற்கான நேர்மையானதொரு அரங்கை ஸ்தாபிப்பதன் சாத்தியம் குறைவாகவே இருக்கிறது இருந்தது.எனினும் தற்போது ஏற்பட்டிருக்கும் சுமூகமான சூழலை தொடர்ந்து நிலைமை ஓரளவு மாறியிருக் கரிறது. இந்த மாற்றத் தை முறையாக பயன்படுத்திக்கொள்வது அவசியம்.
இறுதியாக சில வரிகள்
பல முரண்பாடுகளினூடாக ஒரு தனித் தேசிய இனமாக கட்டமைப்பு பெற்றிருக்கும் முஸ்லிம்கள் தாம் இனம் கண்ட பிரச்சினைகளுக்கான ஒட்டுமொத்த தீர்வை முன்வைப்பதிலும் முரண்பாட்டினைக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் அரசியல் தலைமைகள் மத்தியிலும் இது தொடர்பான தெளிவான நிலைப்பாடின்மையே காணப்படுகிறது. முஸ்லிம் காங்கிரஸின் முன்னைநாள் தலைவர் M.H.Mஅஸ்ரப் முஸ்லிம்களுக்கான தீர்வாக தென்கிழக்குமாகாணம் என்றதொரு கோரிக்கையை முன்நிறுத்திய போது முஸ்லிம்கள் மத்தியிலேயே அக்கோரிக்கை தொடர்பான பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. இவ்வாறு முஸ்லிம்கள் மத்தியில் ஒரு தெளிவான நிலைப்பாடின்மை நிலவுவதற்கு முஸ்லிம்கள் படிமுறை ரீதியான தேசிய இயக்கம் சார்ந்த அனுபவத்தை பெறாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அல்லது முஸ்லிம் சனநாயக சக்திகள் முஸ்லிம்களுக்கான தேவை என்ன? என்பதை அறுதியும் இறுதியுமாக முன் வைக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு முன் வைக்குமிடத்தே சக தேசங்கள் அதன் சாத்தியப்பாடு பற்றியும் அல்லது அதன் மாற்றீடு பற்றியும் சிந்திக்க முடியும். இதற்கு தமிழ்த் தேசத்தையே சிறந்ததொரு உதாரணமாக எடுத்து
46

சிறப்புத் தொகுப்பு - 2002
நோக்கலாம். தமிழ் தேசம் ஒரு சுதந்திர தமிழீழ அரசினை கோரி போராடி வருகிறது. எனினும் அதற்கு மாற்றீடாக ஒரு தீர்வை முன்வைக்குமிடத்து அதனை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறது. இதனடிப்படையில் உள்ளக சுயநிர்ணய கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்ட சமஸ்டி அரசு பற்றி பரிசீலிக்கப்படுகின்றது. இங்கு ஒரு மாற்றீடான தீர்வு பற்றி அதிகம் சிந்திக்க வேண்டிய பொறுப்பு சிங்கள தேசத்திற்குரியதாகவே இருக்கிறது. ஆனால் அழிவுகள் இழப்புக்களை கருத்தில் கொண்டு அதனை ஏற்கும் ஏற்காமல் விடும் இறுதித் தீர்மானம் தமிழ் தேசத்திற்குரியது. எனவே ஒரு தீர்வை அறுதியும் இறுதியுமாக முன்வைக்கும் போதே அதனை பல வழிகளிலும் பரிசீலிக்க (Լplգեւյլb.
உண்மையில் தமிழ் - முஸ்லிம் அரசியல் உறவு குறித்து இன்றைய சூழலில் விரிவாகவும் ஆழமாகவும் பேசப்பட வேண்டும்.அரசியல் உறவு குறித்து பேசும்பொழுது முரண்பாடுகள் பற்றியும் பேசவேண்டிவரும்.எனினும் முரண்பாடுகள் என்ற பெயரில் இழப்புக்களை பட்டியலிட்டுக்காட்டுவதும், அதிதீவிரவாதங்களை முன்வைப்பதும் இன்றைய சூழலுக்கு உகந்ததல்ல. அது மேலும் முரண்பாடுகளை வலுப்படுத்தவே வழிசமைக்கும்.ஆகவே நாம் எல்லாவற்றுக்குமாக ஒரு முற்றுப்புள்ளியிட வேண்டியிருக்கிறது. இதற்கான உள்ளார்ந்த தயாரிப்புகளில் ஈடுபடவேண்டியிருக்கிறது.இரு சமூகங்களுக்குமிடையில் பரஸ்பர கருத்துப்பரிமாறல்களுக்கு வழிசமைக்க வேண்டியிருக்கின்றது. இத்தகைய ஒரு சூழலை உருவாக்குவதற்குத் தடையாக இருக்கும் காரணிகழ்ள இனங்கண்டு அகற்ற வேண்டியிருக்கிறது. ஒரு பொதுத்தாயகத்தில் வாழும் தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் சுமூகமான உறவு நிலவ வேண்டியது இன்றியமையாதது. அவ்வாறானதொரு சுமூகமான உறவே இரு சமூகங்களினதும் நிம் மதியான வாழ்வை உத்தரவாதப்படுத்தும். இது எல்லாவற்றிலும் மேலானது.
47

Page 30
of
அமைதி" நலம் பெருக,
-நெடுந்தீவு மகேஷ்
அழிவுற்றோம் கூடி அகிம்சைப் போர் செய்திட்டோம். அடைபட்டோம் அமைதி நிலை காணோம். இழிவுற்றோம். இரங்கஞ்சீர் இல்லார்கைப் புண்பட்டு இடருற்றோம் அமைதியினைக் காணோம்.
போரிட்டோம் உயிர்கொல்லப் புலம் நீங்கிப் Lu6u gTULñ போய்விட்டோம் அமைதிநிலை காணோம். யாரிட்டார் சட்டத்தால் அமைதிதனை நிலைநாட்ட
யாதுண்டு? ஏதுவழி? ஏது?
அரசியலார் கொள்கையதால் அமைதியினை எமக்காக்க ஆகுமெனில் ஏனின்னும் காலம் சிரசினொளி அன்பு, அறம் செய்கருணை சிறப்பாகின் சேராதோ அமைதி நிலை எம்முன்
உள்ளத்தால் நல்லறிவால் உறுதியதால் அன்பினொளி உதயத்தால் உருவாகும் அமைதி வெள்ளங்கொள் வேகமொடு அமைதி நலம் பெருகாமல்
வெற்றிதரு பற்றுறுதி இல்லை.
48


Page 31

சிறப்புத் தொகுப்பு - 2002
நான் எப்போது இறந்தேன்.
கனவின் பசிய இலைகள் உரசும் காலம் நிறையும் வேரடி மண்ணின் வாழ்வு பெயர்ந்தது.
குறுகியது இதயம் நடுங்கியது ஆத்மா தடக்கின வார்த்தைகள். உதிர்தலும் குளிர்தலும் தாங்கி துளிர்க்கும் துணிவை பெற்றன மரங்கள் மட்டும்.
காற்றும் மரமும் கலந்து பாட கையேடும் கோலும் கொண்டு கவிதை பெற்ற காலம் கண்முன் சிரிக்கிறது.
ஓவென்றிரைந்த கடல் வழித்தெருவில் என் காலடி ஓசை மறைந்த நாளில்தான் நான் இறந்து இருக்க வேண்டும்.
குளில் உறையும் இம்முகாமில் அல்ல.
01-05-02
49

Page 32
தவனம்
நந்தினி சேவியர்.
எம். எல். வசந்தகுமாரியின் கச்சேரி நடந்து கொண்டிருந்த போது பாத்றும் போய் வந்த சிவகுமார் காதுக்குள் மெல்ல கிசுகிசுத்தான்.
'நிலமை சரியில்லை. போவது நல்லது.” சன்னமான இருளில் மேடைப் பிரகாசத்தில் எம். எல். வி. கொஞ்சும் புறாவேயை. அட்டகாசமாக ஆரம்பித்திருந்தார்.
ரவியின் கையைப் பிடித்து மெல்ல இழுத்துக் கொண்டு இராமகிருஸ்ணமிசன் மண்டபத்தை விட்டு . அவசரமாக மூவரும் வெளியேறினார்கள்.
வெள்ளவத்தையிலிருந்து கல்ஸ்ரொப் வரும் வரையில். எதுவித பதற்றமும். தெரியவில்லை.
புதிய சோனகத் தெரு 79ம் நம்பர் ஒபிசின் மேல்மாடியில் அமைந்த ரூமுக்குள் போய் சேட்டைக் கழற்றும் வரை நெஞ்சில் கனத்த சுமை. விலகவேயில்லை.
மூன்றாம் மாடியின் மேல்புற கம்பிக்கிராதியில் நின்று. தொலை தூரம் பார்த்தான்.
சுகததாச ஸ்டேடிய விளக்குகளின். பிரகாசமும். விரைந்து செல்லும் வாகனங்களின் பொட்டு வெளிச்சங்களும் . நகரத்தின் பரபரப்புகளும் சந்தோசத்தைக் கொடுப்பதை இன்று தவிர்த்திருந்தன.
50

சிறப்புத் தொகுப்பு - 2002
இடியப்பப்பார்சலும். சொதிப்பைக்கற்றுமாக வந்த செல்வம். பரபரப்போடு இவனைத் தாண்டி தனது அறைக்குள் விரைந்தான். “யாழ்ப்பாணத்தில் 13 ஆமி. அவுட்டாம். தின்னை வேலியிலாம்.” எக்கவுண்டன், ஜி.எம். வெள்ளை பிறேமசிறி. நளிம். எல்லோரும் வந்துவிட்டார்கள்.
ஜி. எம்மின் கறுப்பு வெள்ளை TV 9 மணி ஆங்கிலச் செய்தியில் சாதாரண. செய்திகளை மட்டும் ஒலிபரப்பியபோது சற்று நிம்மதியாகவே இருந்தது.
இரவு நெடுநேரம் இவன் விழித்திருந்தான். காலையில் பிலிங்வத்தையில் கொன்சோட்டியம் போய். கொள்வனவு செய்யும் வேலைக்கு இவனைப் பணித்திருந்தார்கள்.
நாகராணி - லட்சுமி. காமல் பற்றிசியா. மல்காந்தி. யோடு. ஐந்து அரைப் பரல்கள். ஐஸ் கட்டிகளோாடு.ம், கிருஸ்ணனோடும். “சடாச்சரண’ எனப் பெயர் குறிப்பிட்ட அவர்களது கம்பனி லொறியை விக்ரர் செலுத்தும் போது கூறினான்.
“தொரை. நெலமை என்னவோ சரியில்லை தான். எம். டிக்கு. இது வெளங்க மாட்டேங்குதே.”
ஆமர் வீதியால் திரும்பி. சுகதாச ஸ்டேடியப் பின்புறமாக பிலிங்வத்தை பேச்சசிங் சென்றருக்குள் லொறி நுழையும்போது யாருமே. அங்கு வந்திருக்கவில்லை.
காவலாளி அகலமான கதவை விரிய திறந்து விட்டான். நேரம். செல்ல. செல்ல. பதற்றம். ծոlԳԱ l35l.
சுந்தரம் ஜிந்துப்பிட்டியிலிருந்து. குறுக்குப்பாதையால் வேகமாக வந்தான். “ஐயா. நிலமை சரியில்லை. உடனே. வெளிக்கிடுங்க. யாரும் நிக்காதையுங்க.”
தராசில் போடப்பட்டிருந்த CP யின் 20 கிலோ இறால் மட்டும் நிறுக்கப்பட்டிருந்தது.
இறாலை பரலில் கொட்டி கிருஸ்ணன் லொறியில் தூக்கி எறிந்தான். மல்காந்தியும். லக்சுமியும் அழுவதற்கு தயார்.
விக்ரர் வேகமாக லொறியை எடுத்தான். ஆமர் வீதி. எரிய ஆரம்பித்திருந்தது. ரோட்டில் ரயர்கள் குவிக்கப்பட்டிருந்தன. பொல்லுகளும் போத்தல்களும் . கல்லுகளும் . பறவைகளாகி சிதற ஆரம்பித்து விட்டன.
விக்ரரின் சாதுரியமான சாரத்தியத்தால். லொறி சப்பாத்து வீதிக்குள் நுழைந்து ஜெம்பாட்டா வீதியை ஊடறுத்து விவேகானந்த
51

Page 33
of
மேட்டைத் தாண்டி புதிய சோனகத் தெருவுக்குள்ளால் 79ம் நம்பருள் நுழைந்தது.
கலவரம் . நெருப்பு. வீடுகள். கண்ணாடிகள் நொறுங்கும் ஓசை . 79ம் நம்பரின் கதவுகள் இறுக்கச்சாத்தப்பட்டன.
G.M வெள்ளை. எக்கவுண்டன். பிரேமசிறி. சிவகுமார். ரவி. எல்லோரும் 3ம் மாடி கம்பிக் கிறாதியில்,
எட்டிய தொலைவு. புகைமண்டலம்.
கொலன்னாவ. களனி. தொட்லங்கை.
பிரேமசிறி அவசரமாக ஓடி வந்தான். M.D யின்ரை கோல்.
G.M கீழே இறங்கி . பின் மேலே வந்தார். . “ ଗରort[i] - பத்திரமாக வந்து விட்டதா. என்று விசாரித்தார். வெள்ளவத்தைப்பக்கமும். பதட்டமாம்.”
எவரும் எதுவும் பேசவில்லை. மெஸன்ஜர் வீதியில் குழப்பம் ஆரம்பமாகியது. . வானத்தில் போத்தல்களும். கல்லுகளும். பறக்கத்தொடங்கிவிட்டன. a
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக. தகவல்கள் கசியத் தொடங்கிவிட்டன.
எம்.எல்.வி. ஆக்களின் நிலமை இவனுக்குள் அந்தச்சிந்தனை இப்போது தலை தூக்கியது. கதவுகள் சாத்தப்பட்டே கிடந்தன.
ரவிக்கு . தாய் தகப்பனின் நினைவு. அவனுக்கு அழுகை பொத்துக் கொண்டு பீரிட்டது.
சிவகுமாருக்கும் கவலை. பயம் . அழுகையை மரியாதைக்காக கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சித்துக் கொண்டான்.
இவனுக்கு பயமும் . கவலையும் அற்றதான ஒரு நிலை. யார் பற்றியோ, யாரைப் பற்றியோ நினைக்க மனதில்லை.
படித்து முடித்து வேலை தேடி விரக்தியுற்று. உறவுகளால் வெறுப்பேறி மனம் மரத்துப் போயிருந்தது.
ஒரு தேநீருக்காக கூப்பிடும் வரை காத் திருந்த அந்நியமாக்கப்பட்ட தன்மை. தற்கொலை செய்து மாய்ந்து கொள்ள முனைந்து தோல்வியுற்ற அனுபவச் ஆடுகள்.
சகோதர . சகோதரிகளின் புறக்கணிப்பு. பெருநாள் கொண்டாட்டங்களில் தூரமாக்கப்பட்ட. தவிப்பு.
52

சிறப்புத் தொகுப்பு - 2002
ஊர். உறவு. யாவும் வெறுத்துப்போய். மனதை விட்டு தூக்கியெறிந்த நிலை
யாழ்ப்பாணத்தின் பிரபல்யமில்லாத ஒரு கிராமத்தைச் சேர்ந்த இவனுக்கு யாழ்ப்பாணம் நாகவிகாரை. “சிற்றி பேக்கரிப். பானும் பருப்புக்கறியும்’ இவையே சிங்களம் பற்றிய பூரண புரிதலாயிருந்தது.
பின்னர் அற்லஸ் ஹோலில் தபால் மூலம் சிங்களம் 1ம் வகுப்புக்குரிய 4 பாடங்கள் படித்ததோடு அந்த அறிவும் முற்றுப் பெற்றது.
சிவப்புச் சிந்தனை வசப்பட்ட காலத்தில் வாட்சன் பெனான்டோ, ஹிக்கொட தர்மசேன, காந்தி ஒபயசேகரா. என சிங்களத் தோழர்களின் பேச்சுக்களை மொழி பெயர்ப்பின் மூலம் கேட்டு கைதட்டிய அனுபவம் பின்னர் சித்தித்தது.
கொழும் பு. ரயிலில் முதலில பயணப்பட்டது தாயாரின் புற்றுநோய் காரணமாக மகரகமைக்கானது. பின் கொழும்பு இறால் ஏற்றுமதி தனியார் நிறுவனத்தில் கஸ்டப்பட்டு வேலை பெற்று. அப்போது பல சிங்கள நண்பர்கள். ஊழியர்கள். ஆண்கள் பெண்கள்
சிங்களம்- வாயில் நுழைய மறுத்து தமிழ் போல பேசும். ஒரு. தகுதி. வாய்த்த நாட்களிலேயே இந்நிகழ்வு. செல்வராசா - நிறம் வெள்ளை, நிறம் மட்டுமே வெள்ளை. மனம் கறுப்பு. கண்கள் பச்சை M.D யின் உறவு சில நேரம் எரிச்சல் ஏற்படும் வார்த்தைகளும். அதிருப்தியும்.
பிரேமசிறி- வெள்ளை மாத்தையாவுக்கு மிக நெருக்கம் தினசரி அரைப்போத்தல் கறுப்பு. அவனது கடமை மேலதிக கட்டாய கடமை.
தொலைபேசி அடிக்கும் ஒசை. வெள்ளை கீழிருந்து கதைக்கும் குரல். “என்ன. கண்ணாஸ்பத்திரியில் ஒரு ஆளை வானோடை போட்டுக் கொழுத்தியிட்டாங்களோ.”
* வேறை. “ வானுக்கு ஏதேனும் டமேச்சே. வெலிக்கடையிலையும் குளப்பமோ. என்ன.
99
கனபேரைக் கொண்டிட்டாங்களோ.
53

Page 34
oboj
வெள்ளை போனை வைத்து விட்டு பரபரப்பாக ஓடிவந்தான். பச்சை நிறக் கண்கள் சுருங்கியிருந்தன.
மெசஞ்ஜர் வீதி என்கின்ற புதிய சோனகத் தெருக் கடைகள் பெரிதாக எரிய ஆரம்பித்திருந்தன.
மேலே ஹெலிகள் பறப்பது. காதில் விழுந்தது. 3ம் மாடி கம்பிக் கிராதியை விட்டு இவர்கள் நகராதிருந்தார்கள்.
பகல் கழிந்தும் பசியே வரவில்லை. ஊரடங்கு .
பிரேமசிறி தேநீர் போட்டுக் கொண்டு வந்தான். வெள்ளை, லோங்ஸ்சும் சேட்டுமாக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க பிரேமசிறி அவனின் காதைக் கடித்தான். “சாமன் வாங்க முடியும். ஆனால் சாப்பாடுதான் இல்லை.”
தொலைபேசியும் செயலற்றுப் போய். மின்சாரம். இல்லாது. இருள். கவிந்து வந்து 79ம் நம்பரை நிறைத்தது.
” “போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்”
ஜே.ஆரின் பட்டியல். எரிந்தவையை விட எரியாதவையை எரியூட்டத் தொடங்கியது. G.M ரவி, சிவகுமார் இவர்கள் மெளனத்தில் தள்ளப்பட்டார்கள்.
முன்னேரே முரண்பட்ட முகங்கள் சற்று சிநேகித பாவத்துடன் பேச காலம் உதவிற்று.
என்ன செய்வது. 9 மெசஞ்ஜர் வீதி ரேடேஸ் உடைபடும் ஒசை - தமிழன் கடை,
“ நான் தான் ஒடைக்கச் சொன்னேன். ஒரு இறாத்தல் சுவிப்பிங் மா கேட்டேன் கொடுக்கல்லை. நான் தான் ஒடைக்கச் சொன்னேன்.”
சாரத்தை உயர்த்திப் பிடித்தபடி மெசஞ்ஜர் வீதி சண்டியன் நிஸ்தார் கத்திக் கொண்டிருந்தான்.
நிஸ்தார் கத்தக் கத்தக் வெள்ளைக்கு உதறல் எடுத்தது. G.M சினத்தோடு கூறினார். “ வெள்ளை அயலோட ஒத்துப் போக வேணும் . எண்டெல்லாம் சொல்லேக்கை சண்டித்தனம் காட்டுவாய் பாத்தியா. நிலமையை.” பதற்றம். பதற்றம். பயம். பாணில்லை, சோறில்லை. கறியில்லை. தேனீர்மட்டும் . பயத்தோடும், பசியோடும் பகல் கழிந்து இரவு வந்து, மீண்டும் பகல் வந்தது. பயம் விலகாத. ஒரு அமைதிச் ஆழல்.
54

சிறப்புத் தொகுப்பு - 2002
எப்படியோ மின்சாரம் மீள வந்தது. மீண்டும். சலசலப்பு திரும்பவும் கலவரம் உருக் கொண்டது. கொட்டி கொழும்புக்கு
வந்து விட்டதான பரபரப்பு. கம்பிக் கிராதியில். இவனும் வெள்ளையும் ரவியும். செல்வமும்
ரவி கேட்டான். “கொலன்னாவைப் பக்கம் தெரியிறது புதுப் புகையோ. பழம் புகையோ.”
கிடைத்த அமைதிச் சூழல் குழம்பி மனங்களில் இருந்த நம்பிக்கைத் துளிர்கள். கருகிச் சருகாகிப் போய்விட.
என்ன செய்வது ? யாரிடம் போவது ? புதினப் பத்திரிகை நண்பன் போனில் பேசினான். பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் முகாம். அங்கிருந்து கப்பலில் யாழ்ப்பாணம் . செல்லமுடியும்.
இவனது இரண்டு நண்பர்கள் . எரியுண்டதும் . வெட்டுப்பட்டதும் செய்தியாக கிடைத்தது.
மனம் சூனியப்பட்டது. யாழ் செல்ல விருப்பமற்ற தவிப்பு.
கடந்தகால அனுபவத்தின். சூட்டுக் காயங்கள் ஆறாமல் தழும்புகளாக இதயத்தில்.
கலவரம் வெடித்து மூன்று நாட்களாகியும் ஒரு வித ஆறுதலுமற்ற. தனிமை உணர்வு.
இறந்தோர் பட்டியல்களில் பட்டியலாக பலரின் பெயர்களில் . இவனது பெயரும் . இருந்திருக்கலாம்.
பிரேமசிறி. மால்பொறா பைக்கற் ஒன்றை நீட்டினான். புதுப்பழக்கம். புதுப்புகை. தொண்டை வரண்டு கண்டசாலாவின் குரலில். இவன் பேசத் தொடங்க.
டன்ஹில். றிபிள்வைவ். பிரிஸ்டல். கோல்ட் லீவ். பிரேமசிறி எப்படியோ கொண்டு வந்து விடுவான்.
G.M மும் எக்கவுண்டனும் கிடைத்த சந்தர்ப்பத்தில் எங்கோ சென்று யாழ். போனதாக யாரோ சொன்னார்கள். அதுபோலவே செல்வம் உட்பட பலர்.
வெள்ளை, ரவி, சிவகுமார். இவன். பிரேமசிறி. நிலமை வழமைக்கு திரும்பியதாக வானொலி மட்டும் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தது. ஐலெண்ட் லொஜ்
SS

Page 35
வாசலில். இருந்து வான்கள் - மினிபஸ்கள். யாழ் போவதாகத் தகவல்கள் கிடைத்தன.
கோல்ட் லீவ். இப்போது மனதுக்கும் உதட்டுக்கும் பழக்கப்பட. தொடர் சிகரெட் ஊதல்.
ஒன்றரை ரூபாய். ஒரு சிகரெட் . எம்.எல்.வி. ஆட்கள் மிகுந்த சிரமத்துடன் தென்னிந்தியாவுக்கு கட்டுநாயக்காவிலிருந்து பயணப்பட்டதாக. ஐந்து நாள் கழிந்து வெளிவரத் தொடங்கியிருந்த ஒரு தமிழ் தினசரி கூறியது.
வெள்ளை குடும்பத்தைக் காண யாழ் புறப்பட ஆயத்தப்பட்ட போது பிரேமசிறி கவலையோடு கறுப்பு அரையுடன் வந்தான்.
எரிந்த மனமும். கடைகளும் மனிதர்களும். இவன் சலிப்போடு தனித்தான். “M.D கேக்கிறார். ஏய் நீ. யாழ்ப்பாணம் போகவில்லையா”
இவனுக்கு மெல்லச் சிரிப்பு வந்தது. Cold Room இல் இருந்த இறாலையும் கணவாயையும் இவர்கள் பசியில் கிடைத்த அரிசியைப் போட்டுச் கஞ்சி காச்சி சாப்பிட்டதை அறிந்து, அவர் கூறிய வார்த்தைகள் இப்போதும் அவனுக்கு நினைவில் வந்தது. “வெள்ளை நீங்கள் சாப்பிட்டது. உண்மையில் என்னைச் சாப்பிட்டது மாதிரித்தான்.”
G.M யாழிலிருந்து ரெலிபோனில் பேசினார்.
“ சுகமாய் இருக்கிறியா? ” ரவியும். சிவகுமாரும். ஊருக்கு வந்து விட்டார்கள். திரும்பி வருவாங்களோ தெரியாது. நீ வரவில்லையா.
“ இல்லை” ஒரே வசனத்தில் விடைசொல்லி போனை வைத்தான்.
இறால் கோது . எடுபடாமல் கிடந்த கழிவறையிலிருந்து நாற்றம். மூன்றாம் மாடிறும் வரை எட்டி வந்தது.
பிரேம சிறியும் இவனும் . கழிவறையில் மண்ணெண்ணை ஊற்றி. நெருப்பு வைத்தார்கள். பிண. நாற்றம். பிரேமசிறி குமட்டலோடு வாந்தி எடுத்தான்.
இதே போல் . நாறி எரிந்த மனிதர்கள். எத்தனை பேர். p
கட்டிலில் சாய்ந்தபடி இவன் யோசித்தான். புயலடித்து ஓய்ந்த. பத்தாவது நாள்.
56

சிறப்புத் தொகுப்பு - 2002
வானொலி கூறாமலேயே நகரம் வழமைக்குத் திரும்பத் தொடங்கியிருந்தது.
“தொரைக்கு இரவுச்சாப்பாடு என்ன. கேட்டபடி சிரேமசிறி அறைக்குள் வந்தான்.”
பலபேர் தங்கிய 3ம் மாடி இவன் மட்டும் தனியே “பத்து இடியப்பம் சொதி இரண்டு கோல்ட் லீவ் ஒண்ட நீ எடு.” லோங்சின் பின்பக்கமிருந்து ஒரு பத்து ரூபா நோட்டும். சில்லறைகளும். கை மாற.
பிரேமசிறி கீழ் இறங்கினான். இவன் மூன்றாம் மாடி கம்பிக் கிராதிக்கு வந்தான். சீதளக்காற்று முகத்தில் அறைய எம்.எல்.வி யின் ஐயா சாமி. பாடல். கீழ்த்தோட்ட வீடொன்றிலிருந்து காற்றோடு இழைந்தது.
உடம்பும். மனமும். சில்லிட்டது. தூர சுகததாச விளையாட்டரங்கு, ஒளி விளக்குகள், பொட்டுக்களாக ஊரும் வாகன வெளிச்சங்கள்.
வாய் சிகரெட்டுக்குத் தவனப்பட்டது. பிரேமசிறி வரும்வரை இவன் காத்திருந்தான்.
57

Page 36
எப்படி உன்ன06ம் முடிகிறது?
-கெளசிக
தோழி, 臀 எப்படி உன்னால் முடிகிறது?
உன் வீட்டு வீதியில்,
ஏதோ ஒருவகை ரயர் மட்டும் நல்லாகவே தேய்ந்திருந்தது எனக்கே ஞாபகமிருக்கிறபோது, உன்னால் எப்படி முடிகிறது?
சீருடை வயதின், சின்ன சின்ன சேட்டைகள். அறியாத வயதென்று எல்லோரும் சொன்ன போது எனக்குத்தெரியுமென்று, தெரியாமலே தோற்றுப்போய் புரியாமலே போன அந்த நாட்கள். அதன் நினைவுகள். என் சுயத்தையே சுடுகிறபோது உன்னால் எப்படி முடிகிறது?
58

சிறப்புத் தொகுப்பு - 2002
அன்றைய, ஒரு மழை நாளில் தன்குடை தந்து, தான நனைநது. காய்ந்து போன அந்த நினைவுகளை இன்றைய தூறல் என்னுள் ஈரப்படுத்துகிறபோது உன்னால் எப்படி முடிகிறது?
மறக்கமுடியாத,
அந்த நாட்கள். அதன் நினைவுகள். அதையும் தாண்டி, இன்னும் . இன்னும் . மறந்தேயாகிவிட வேண்டுமென்ற நிர்ப்பந்தம். எனக்கே ஏதோ ஆகிவிடும் போலிருக்கிறபோது, உன்னால் எப்படியடி முடிகிறது?
உன்னுடைய இதே மெளனம் தான், உன்னுடைய தெரிவாய் இருக்கவேண்டியதை, உனக்கான தெரிவாக்கித்தந்தது.
உன்னிலிருந்துதானடி - நான் விழித்துக்கொண்டேன். மெளனம் கலையக் கற்றுக்கொண்டேன்.
59

Page 37
சுவாசிப்பது மட்டுமல்ல, உண்ண. உடுத்த. கதைக்க. சிரிக்க. காதலிக்க. இன்னும். எல்லாமே என் சுதந்திரம் எனக்கான சுதந்திரம் இவைதாமென்று, யாருமெனக்குக்கற்றுத்தர வேண்டாம்.
ஒரு வேளை, நான் சுவாசிக்கிறபோது காற்று நின்றுபோனால் கூட நான்,
இயற்கை மீதே கடும் பகை கொள்வேன் என் சுதந்திரத்தை பறித்ததற்காய்.
அப்படியிருக்கையில், மற்றவையெல்லாம்
எம்மாத்திரம்?
 


Page 38
சித்தி அமரசிங்கம்
கா.சிவபாலன்
எல்லாளன் தெ. புவனேந்திரன்
நெடுந்தீவு மகேஸ் முத்து இராதாகிருஸ்ணன் வல்வை.ந.அனந்தராஜ்
 
 
 

திருமலை வாசன் சி. கமலகாந்தன்
கையெழுத்துப்பிரதியாக வெளிவந்த முதலாலது இதழுடன்.
I

Page 39

சிறப்புத் தொகுப்பு - 2002
öldbd6dbago (D60)6) (D(T6) u đì[]]lỡ5606 6)l6IIữở đì
-திருமலை நவம்தமிழில் சிறுகதை வடிவம் ஒன்று முளை கொள்ளத் தொடங்கிய காலமென்பது வ.வே.சு ஐயர், பாரதி அதன்பின் புதுமைப்பித்தன், கு.ப.ரா, மெளனி, பிச்சமூர்த்தி போன்றவர்களின் முன்னோடி வருகை, இப்புதிய வடிவம் தமிழில் வளர்ச்சியடைய ஏதுவாக இருந்தது என்று சொல்லப்படுவதும் ஆதாரப்படுத்தப்படுவதும் வழக்கம். ' &
இவர்களின் காலத்தை அண்டி ஈழத்துச்சிறுகதை வரலாறு பலரால் வளர்ச்சியடையத் தொடங்குகின்றது. அவர்களில் சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தர், சிவபாதசுந்தரம் ஆகியோரை 1930 இன் பின் பகுதிகளில் இவ் வடிவத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய பிதாமக்கள் என்று கூறலாம்.
திருக்கோணமலை சிறுகதை வளர்ச்சியின் வரலாற்றுப் போக்கை சுலபம் கருதி பின்வரும் காலகட்டங்களாகப் பிரித்து நோக்க விளைகின்றேன்.
முதலாவது காலகட்டம் 1940 1960 سس இரண்டாவது காலகட்டம் 1960 - 1970 மூன்றாவது காலகட்டம் 1970 - 98O நான்காவது காலகட்டம் 1980 1990 ہے۔۔۔ 33b5|T6)ight ET6)85.L.D 1990 - 2000 ஆறாவது காலகட்டம் 2000 ற்குப்பின்
முதற்காலகட்டமென்று என்னால் வரையறுத்துக் காட்டப்படும் காலகட்டத்தின் சிறுகதை முன்னோடிகள் என்ற வகையில் 1950ம் ஆண்டுக்குப்பின் வ.அ. என்ற பிதாமகன் திருக்கோணமலை சிறுகதை வளர்ச்சியின் தலைமகனாக இருந்து திருக்கோணமலை சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்டதுடன் இப்பிரதேச சிறுகதை வளர்ச்சி ஆரம்பமாகிறது என்று கொள்ளமுடியும்.
1948 ம் ஆண்டு வ.அ.வின் மழையால் இழந்த காதல்'
என்ற சிறுகதை தினகரனில் வெளிவந்த போது திருக்கோணமலைச்
சிறுகதைப் பதிவு ஏற்படுகின்றது.இதே காலகட்டத்தில் தருமு 61

Page 40
of
சிவராமு, இராயப்பு ஆகியோரைக் குறிப்பிடலாம். வ.அ.வின் முதற்தொகுதியான 'தோணி’ (1962) வெளிவந்தது.15 சிறுகதைகள் இதில் தொகுக்கப்பட்டதுடன் சாகித்திய மண்டலப்பரிசையும் தட்டிக்கொள்கிறது.இவரது ஏனைய தொகுதிகளான ஒரு காவியம் நிறைவுபெறுகிறது (1990),'ஐந்திணைக்கதைகள்’ (2000) ஆகிய சிறுகதைத் தொகுப்புக்கள் பிற்காலச் சிறுகதைகளாகும்.
இவர் காலத்தவரான தருமு சிவராமு மெளனியாக இருந்து சிறுகதையில் அற்புதம் செய்தவராக மதிக்கப்படுகிறார்.அவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் எழுதிய 'கதவைத்தொட்ட கை (1959) இவரது முதல் சிறுகதையாகும். இவரின் இந்தியப் புலம்பெயர்வு காரணமாக திருக்கோணமலை மண்ணும் ஈழமும் நல்லதொரு எழுத்தாளனைப்பிரிந்து விட்டது என்றே கூறவேண்டும்.
1960-1970ற்கும் இடைப்பட்ட சிறுகதை வரலாறு,வீச்சும் வேகமும் கொண்டதாகக் காணப்படுகிறது. ந.பாலேஸ்வரி, தி.அரியநாயகம், க.சா. அரியநாயகம், தா.பி.சுப்பிரமணியம், புரட்சிபாலன், ஆகியோரது காலகட்டமாக இது காணப்படுகின்றது.
இக் காலகட்டத்திற்குத் தலைமை தாங்குகிறவர் ந.பாலேஸ்வரி.இவரது முதல் சிறுகதைத் தொகுதியான 'சுமைதாங்கி 1973 இல் வெளிவந்தது.200 ற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவரது முதல் சிறுகதையான 'வாழ்விழந்த தெய்வம்', 1957 இல் தினகரன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. இவரைப் போலவே புரட்சிபாலனும் சிறுகதையின் வளர்ச்சிக்கு ஓர் காரணமாக விளங்குகிறார்.
மூன்றாவது காலகட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என ப.கணபதிப்பிள்ளை,திருமலை சுந்தா, அருள்சுப்பிரமணியம், கா.இரத்தினலிங்கம் ,மதிமதி சந்திரசேகரம், திருமலை நவம், இராஜதர்மராஜா, தாரணி, வி.தில்லைநாதன், வீணைவேந்தன், ஜிவா,மு.ராஜ்கபூர் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இதில் அருள் சுப் பிரமணியம் , திருமலை சுந்தா போன்றவர்களின் பங்களிப்பு கனதியும் காத்திரமும் கொண்டதாக அமைவதுடன் புதிய பார்வை, புதிய தளம், புதிய பதிவுகளைக் கொண்டு பிறந்தவையாகக் காணப்படுகிறது. அருள்சுப்பிரமணியம் என்ற எழுத்தாளனின் 当数 சிறுகதை மட்டுநகரிலிருந்து

சிறப்புத் தொகுப்பு - 2002
வெளிவந்த 'மலர்' எனும் இதழில் வெளிவந்ததிலிருந்து தனது ஆற்றலை வெளிப்படுத்தியதுடன் மேலும் பல சிறுகதைகளை பல்வேறுபட்ட பத்திரிகைகளில் எழுதி வந்தார்.
அடுத்த காலகட்டமான 1980ஆண்டுக்குப்பின் பெருந் தொகையானவர்கள் சிறுகதைத் துறைக்குள் பிரவேசிக்கின்றார்கள்.
அவர்களில் புல்மோட்டை M.S.A காதர், M.I.M தாஹிர், மு.வே.யோ, யோகேஸ்வரன், முகமட் சாலி, சித்திரா நாகநாதன், புனிதன், இப்ராகிம், அருள்வரதன், அமானுல்லா, ச.சச்சிதானந்தம், கா.நடராஜா, மகாலிங்கம் ஆகியோர் இடம் பெறுகிறார்கள். இவர்களில் சித்திரா நாகநாதன் எனும் பெண் எழுத்தாளரின் பங்களிப்பு அர்த்தமும் பெறுமதியும் கொண்டதாக அமைகின்றது. இவர் எழுதிய ‘கிராமத்து மண்கள் சிவக்கின்றது' என்னும் சிறுகதை அக்காலத்தில் அரும்பு விட்டுக்கொண்டிருந்த போராட்டங்கள், அகதி வாழ்க்கைகள், இனப்பிரச்சினைகள் என்பனவற்றைத் தொட்டுக்காட்டும் சிறுகதை களாக அமைந்தன.
1990க்குப் பின் உள்ள காலகட்டம் வரட்சி அல்லது போதாமை நிறைந்த காலகட்டமாகத் தெரிய வருகின்றது. இக்காலத்தின் இனப்பிரச்சினைச் சூழ்நிலைகள், இராணுவக் கெடுபிடிகள், அகதி வாழ்வு போன்ற காரணிகள் இந்தத்துறையின் வரவைப்பாதித்துள்ளபோதும் ஒரு சிலர் தொடர்ந்தும் எழுதியவர் களாகக் காணப்பட்டார்கள்.
இவர்கள் பின் ஏற்பட்ட தொடர்ந்தேர்ச்சியான சிறுகதை எழுத்தாளர்களின் வரவில் லக் ஷிகா ஹேமச் சந்திரா, வீ.என்.சந்திரகாந்தி, இளையவன், கிண்ணியா அமீர் அலி, தாமரைமகன், என்.சித்திரவேல், தேவகடாட்சம்,ராணி சீதரன் போன்றவர்களின் புதிய வருகை திருக்கோணமலைச் சிறுகதை வரலாற்றைத் துாக்கி நிறுத்தி வைக்கும் கைங்கரியமாக இருக்கின்றது. இவர்களில் கனகசபை தேவகடாட் சத்தின் சிறுகதைகள் மண்ணின் வாழ்வு வடிப்புக்களாகவும் போராட்டங்களின் படியெடுப்புக்களாகவும் காணப்படுவது சிறந்த குணங்குறியென்று சொல்லமுடியும்.
(கட்டுரையின் சுருக்கம் கருதி முழுத்தகவல்களையும் தந்திருந்த போதும் விளக்கமாகத்தர முடியவில்லை.)
63

Page 41
ஒரு அடிமையின் கன2)
erasa 6huprig (paid : H.W. Longfellow தமிழில் : தமிழினி
அவன் திரட்டிப் போடாத அந்த நெற்கதிர்களின் அருகில், கைகளில் அவனது அரிவாளோடு, கூடவே அவன் திறந்த மார்பும் சிதமூறும் தலைமயிரும் மண்ணுள் புதைக்கப்பட்டன. உறக்கத்தின் நிழலுள்ளிருந்தும், மூடுபனியுள்ளிருந்தும் மறுபடியும், அவன் தன் பூர்வீக நிலத்தைப் பார்த்தான்.
அவன் கனவுகளின் வனப்புமிகு நிலப்பரப்பின் ஊடாக, செருக்கு மிகு கம்பீரத்துடன் நைஜா(NGER ) அருவி
பாய்ந்தோடியது, தாழ்நிலச் சமவெளியின் மேலிருந்த பாம் ( PALM )
மரங்களின் அடியில், மீண்டும் ஒருமுறை ஒரு அரசனின் அகல வைத்த
நீண்ட நடையுடன் நடந்தவன், இறங்கிச் செல்லும் மலைவீதி வழியே ஏறிவரும் கூண்டு வண்டிகளின் சிறு மணியோசையைக் கேட்டான்.
64

சிறப்புத் தொகுப்பு - 2002
தன் குழந்தைகள் சூழ நின்று கொண்டிருக்கையில், அவன் மீண்டும் ஒருமுறை, கருநிறக் கண்களையுடைய
தன் தேவியைக் கண்டான். அவர்கள் அவன் கழுத்தை இறுகத் தழுவி கன்னங்களில்
முத்தமிட்டனர்.
கூடவே தங்கள் கைகளுடன் அவனைப் பிணைத்துக் கொண்டனர். உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவனின் மூடிய கண் மடலினூடே
கண்ணிர்த் துளியொன்று வெடித்துச் சிதறி மண்ணுள் வீழ்ந்தது.
அதன் பின்னர் மூர்க்கமான வேகத்துடன், 60.5git (NIGER ) -9(565tfit அணைக்கட்டு நெடுகிலும் அவன் சவாரி செய்தான். நேர்த்திமிகு பொற் சங்கிலிகளும், போருக்கேயுரித்தான
உரத்த சத்தமும் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன, அவன் கடிவாள வார்கள். ஒவ்வொரு தாவலிலும் தன் ஆண்குதிரையின் விலாவின் பக்கவாட்டில் மோதிக்கொண்டிருந்த தன் உருக்கு வாளுறையின் உராய்வை அவனால் உணரமுடிந்தது.
அவன் முன்னே இரத்தச் சிவப்புக் கொடிபோல் ஒளி பொருந்திய பிரகாசத்துடன் நீர் நாரைகள் பறந்தன. காலை தொடங்கி இரவுவரை அவற்றின் பறத்தலை பின் தொடர்ந்தான் அவன். புளிய மரங்கள் செழித்து வளரும் சமவெளிகளின் மேலாக, கபீர்களின் (KAFFIR ) குடில்களின் கூரைகளை
அவன் காணும் வரை. கூடவே பெருங்கடலும் நோக்கும் பொருட்டு
முனைந்தெழுந்தது.
அன்றிரவில் சிங்கத்தின் பெருங்கர்ச்சனையையும், கழுதைப் புலியின் அலறலின் அதிர் குரலையும் அவன்
கேட்டான்.
65

Page 42
of
நாணற்புதர் வழியே அவன் நெரிந்து வருகையில், மறைவான நீரோடையொன்றின் பக்கத்திலிருந்து முரசொன்றின் சிறப்பு மிகு சந்த இயங்குதல் போல் நீர்யானையொன்று கடந்து சென்றது, அவன் கனவின் வெற்றியின் ஆரவாரத்தினுாடே.
அடவிகள் தமது எண்ணிலடங்கா நாக்குகளினால், சுதந்திர உரிமையுடன் ஆர்ப்பளித்தன: உணர்ச்சி வழியும், வரம்பற்ற ஒரு குரலில் பாலைவனத்து அனல்காற்றும் உரத்த சப்தத்துடன்
கதறி அழுதது.
அவற்றின் கடுங்கொந்தளிப்புமிகு மகிழ்ச்சி ஆரவாரத்தைப்
பார்த்து அவன் உறக்கத்தில் சிரிக்க ஆரம்பித்தான்.
வண்டியோட்டியின் சாட்டையின் சொடுக்கையும் அவன்
உணர்ந்து கொள்ளவில்லை, அந்நாளின் சுட்டெரிக்கும் வெப்பத்தையும் உணரவில்லை, மரணம், துயிலின் தரையை ஒளிர்வித்தது. அவன் உயிரற்ற உடல் மண்ணில் வீழ்ந்து கிடந்தது. ஒரு தேய்ந்துபோன பிளந்த கால்விலங்காக,
அந்த ஆத்மா தடயமின்றித் தகர்க்கப்பட்டு எட்டாத் தொலைவிற்குத்
தூக்கி எறியப்பட்டது.
66

சிறப்புத் தொகுப்பு - 2002
என் சின்னஞ்சிறு (Oക്]..!
-அஷ்ரபா நுார்டீன்.-
பரபரத்த இவ்வாழ்க்கையில் உன் ஏக்கப் பார்வை தினமும் என்னை உறுத்துகிறது! சில மணி நேரம் உன் நிலா முகத்தோடு என் முகம் வைத்தின்புறுதலைத்தவிர.
காற்றுப்போல் இலேசாகி மனம் பூரணமாய் லயிக்கின்ற வாழ்வுக்கான என் ஏக்கம் உனக்குப் புரியாது.
நாள் முழுதும் என் மடிமீதே இருக்கவேண்டும் என்கின்ற உன் பிஞ்சுமண ஆவல் விழிகளில் கொட்டித்தான் கிடக்கின்றது தாய்ப்பாலின் மணம் நாடி நெஞ்சிற் புதைகின்ற உன்னை அப்பால் நகர்த்தி
இந்த இழப்பை எப்படி ஈடு செய்வேன்?

Page 43
உன் வயசுக்கான உனது தேடலில் அதிகமாய்க் கிடைக்காத
எனதருகாமை உன்னை எப்படி வாட்டுகின்றதோ?
கிடைக்கின்ற விடுமுறைகளைக்கூட உன்னோடணைந்து களிக்கமுடியாச் சூழல் மன அழுத்தங்களை மட்டுமே தரவல்ல சுற்றம் யதார்த்தங்களை மூடி மறைக்கின்ற சமூகம் இந்தத் திணறல்களில் இருந்து விடுபட முடியா நான்
ஓர் இயந்திரப்பறவையைப் போல் நானாகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தனை இழப்புகள்? என்ற வினாவுக்கு பதில் மட்டும் கிடைப்பதாயில்லை.
 


Page 44

சிறப்புத் தொகுப்பு - 2002
தமிழ்த் தேசியத்தில்.
ஒருபுறம் தமிழ் மக்கள் மறுபுறம் திருக்கோணமலை இன்றையதும் எதிர்காலத்தினதும் நிலைப்பாடு ?
-எஸ்.எஸ்.ராஜன்
திருக்கோணமலை பிரச்சினைகளின் விளைவிடமாகவும் எதிர்காலத்திற்கான முடிவைத்தரும் அமைவிடமாகவும் இருப்பதால் திருமலை பற்றிய சிந்தனைகளும் அங்கு வாழும் தமிழ் மக்கள் பற்றிய அவதானிப்புகளும் தொலைநோக்குடன் அவதானிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது.
தமிழ் ஈழத் தேசியம் வடக்கு கிழக்கு என்றும் அதன் தலைநகள் திருக்கோணமலை என்றும் சொல்லப்பட்டு வருகின்ற கால கட்டம் இது. ஆனால் “திருக்கோணமலை” தான் சர்ச்சைக்குரிய மாவட்டமாக விளங்குகின்றது. வடக்கைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் எழப் போவதில்லை: அதேவேளை கிழக்கில் எழவிருக்கின்ற அம்பாறை மாவட்ட கரையோர அலகுப் பிரச்சினைக்கு இடைக்கால நிர்வாக ஏற்பாட்டின் போது இரண்டில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு விடும். அது சமாளிக்கக்கூடியதும் கூட. ஆனால் வடக்கு கிழக்கின் பாலமாக அமைந்திருக்கும் திருக்கோணமலை தான் பெரியதொரு சவாலை எதிர்நோக்கியிருக்கிறது.
69

Page 45
of
திருக் கோணமலை இல் லாதொரு சுயாட்சியைப் பெறவேண்டும் என்றால் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் கோடிக் கணக்கான சொத்துக்களையும் இழந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருக்கோணமலை தவிர்ந்த வடக்கு கிழக்கை தருகிறோம் என்று அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனா எதிர்க்கட்சி மற்றும் கூட்டணித்தலைவர் அமிர்தலிங்கம் அவர்களிடம் கேட்டபோது அவர் மறுத்து விட்டார். அன்றிலிருந்து இன்றுவரை மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களப் பெரும்பான்மை ஆட்சியாளர்கள், “தமிழன் ஒருபோதும் திருக்கோணமலையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை அதனால் திட்டமிட்டு பிரிப்பதே சரியான வழி’ என்று பல கைங்கரியங்களில் அவ்வப்போது ஈடுபட்டு வந்துள்ளனர்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் போது தமிழர் கள் திருக் கோணமலையில் இருந்து விரட் டி அடிக் கப்பட்டமையும் அதே இடங்களை சிங்களவர்கள் அபகரித்தமையும் இங்கு நிறையவே இடம் பெற்றுள்ளன. இவற்றுக்கு ஆட்சியாளர்களின் ஆசீர்வாதம் நன்கு வழங்கப்பட்டிருந்தது.
திருமலை - ஹபரண வீதியில் குடிமனைகள் ஆக்கிரமிப்பு, இலிங்க நகள் பகுதி மற்றும் காளிகோயில் தீர்த்தக் கரைப்பகுதியான உடாப்பாடு, தாழ்பாடு பகுதிகள் ஆக்கிரமிப்பு, வீரகத்திப்பிள்ளையார் ஆலய காணி உட்பட ஏனைய ஆலயங்களின் காணிகளை அபகரித்துக் கொண்டமை, என்பவற்றைக் குறிப்பிடலாம். மேலும் விரிவாக நோக்குவோமாயின்- தமிழர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதில் சிங்களத் தலைமைகள் அக்கறைப்பட்டு வந்தமையை மறுப்பதற்கில்லை. அதற்கு அவர்கள் கையாண்ட தந்திரோபாயம் திட்டமிட்ட குடியேற்றம். இது தமிழர் தாயகப் பகுதியில் தமிழர்களையே சிறுபான்மையாக்கி, இலங்கை, தனிச்சிங்களப் பெளத்த நாடாக சர்வதேச உலகத்துக்கு பறைசாற்றும் உள்ளார்ந்த நோக்கம். இதற்கு அண்மையில் இடம் பெற்ற வெலியோயா குடியேற்றம் முன்னுதாரணம். திருமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட 65 தமிழ்க் கிராமங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அரசபடைகளின் உதவியுடனான சிங்களக் குடியேற்றங்கள், வடகிழக்கு நிலப்பரப்புடனான தொடர்பை துண்டிக்கும் திட்டமாகும்.
70

சிறப்புத் தொகுப்பு - 2002
அடுத்து திருமலை- மட்டக்களப்பு தாயக நிலத்தொடர்பை துண்டாடும் முகமாக அல்லை. கந்தளாய் குடியேற்றம் இடம் பெற்றுள்ளது. இது தமிழர்கள் செறிந்து வாழும் திருமலையில் நடந்த மற்றுமொரு திட்டமிட்ட குடியேற்றம். அன்றைய காணி அபிவிருத்தி பணிமனை பரிசீலித்த போது முதல் பிரிவில் 118பேர் குடியேற்றப்பட்டவர்களாக இருந்தனர். திருமலையில் இருந்து 18பேரும், வெளிமாவட்டங்களில் இருந்து 100 பேரும் என இத்திட்டம் அரங்கேறியிருந்தது. அடுத்த ஆண்டு அல்லையில் இருந்து ஒரு தொகுதியினரும், 738பேர் கந்தளாயில் இருந்தும் குடி அமர்த்தப்பட்டனர். 1952, 1953, ஆண்டுகள் நிர்வாக அறிக்கைகளே இதனைக் காட்டுகின்றன. உலர் வலயக் காணிகளில் இவ்வாறு இடம் பெற்று வந்திருப்பது நினைவில் கொள்ளத்தக்கது. 200 வருட காலம் கச்சேரி முறையைக் கொண்ட திருமலை மாவட்டத்துக்கு மாவட்ட செயலாளராக இதுவரை ஒரு தமிழன் நியமிக்கப்படவில்லை, என்பது சுட்டிக்காட்டப் படவேண்டிய விடயம்.
அவ்வாறே வடக்கு கிழக்கு மாகாண சபை அமைக் கப்பட்டதன் பிற்பாடு ஒரு தமிழன் ஆளுநராக நியமிக்கப்படவில்லை. “தமிழ்’ அரசகரும மொழி என்று ஏட்டு வடிவில் மட்டுமே இருந்து வந்துள்ளது. ஆரம்பத்தில் திருமலையில் 04 மாவட்டங்கள் வருமானங்களைப் பெற்றுத் தந்தன. தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த இடம் இப்போது 11 மாவட்டச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இரண்டு மட்டுமே தமிழர் வாழும் பகுதியாகி விட்டது.
மனிதவுரிமை மீறல்கள், மக்கள் அன்றாடம் காணாமற் போனது, “வெள்ளை வான்’ பீதி எல்லாம் திருக்கோணமலை எதிர்நோக்கிய பிரச்சினைகள்தான்.
இவையெல்லாம் கடந்த காலங்களில் திருக்கோணமலையை வடக்கு கிழக்கில இருந்து தனிமைப் படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட செயற்பாடுகள். இவைகள் இன்னும் தொடரப்படுபவையாகவே உள்ளன.
அந்நிய நாடுகளின் முதலீடுகள், பிறிமா மா ஆலைக்கு மேலும் அதிகாரத்தைக் கொடுத்தமை, எண்ணைய்க்குதங்கள்
71

Page 46
oboj
இந்தியாவிடம் குத்தகைக்கு விடப்பட்டமை, அமெரிக்க கப்பல்கள் தரித்து நிற்பதற்கும் இணங்கியமை, அனல் மின்னிலையம் அமைக்க திட்டம் தீட்டியமை என நீளும் செயற்பாடுகளில் மேலோட்டமாகப் பார்க்கும் போதுஎமக்கு நன்மை அளிப்பதாகத் தெரியும். ஆனால் உள்ளார்ந்த தத்துவம் வேறு. அது மட்டுமன்றி, வட மாகாணத்துக்கான நிலப்பாதையில் கரையோரம் இருந்த (கும்புறுப்பிட் டி. திரியாய், தென்னைமரவாடி..) தமிழர்கள் நிலாவெளிக்கு இப்பால் முடக்கப்பட்டமை, அனுராதபுரசந்தி, பன்குளம், கன்னியா. என்ற வவுனியாவுக்கான வீதிப்பகுதியில் வசித்த தமிழர்கள் விரட்டப்பட்டமை, கந்தளாய் தமிழர்கள் தம்பலகாமத்துள் புகுத்தப்பட்டமை இவை எல்லாம் வெளிப்படுத்தும் செய்தி என்ன?
இவை அனைத்தும் வடக்கு கிழக் கில் இருந்து திருக்கோணமலையை தனிமைப்படுத்தும் திட்டமிட்ட திட்டம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் தமிழ்ச் சக்திகளும் எத்தகைய எதிர்ப்பைக்காட்டினார்கள் என்பது தெரியவில்லை?
திருக்கோணமலைக்கு இத்தகைய நிலையிருக்கும் போது அங்கு வாழும் தமிழர்களுக்கு இடமில்லாது போய் விடும் என்று எண்ணுவதில் தவறில்லை. இங்கு தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக மதிக்கப் படவேண்டிய சூழலே அதிகம் காணப்படுகின்றது.
பண்டா - செல்வா முதல் சந்திரிக்கா - பிரபா வரை எமது நாட்டில் பல்வேறு கால கட்டங்களில் ஏற்படுத்தப்பட்டு வந்த ஒப்பந்தங்கள் தமிழர் தாகத்தைத் தீர்த்ததாகவோ, சுயகெளரவத்தை வழங்கியதாகவோ இருக்கவில்லை. இதனால் தான் அவை கிழித்தெறியப்பட வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டன.
"அஹிம்சை வழிப் போராட்டங்கள், சத்தியாக்கிரகங்கள், விட்டுக் கொடுப்புகள், ஒத்துழைப்புகள், ஒப்பந்தங்கள் எனப் பலதும் தோல்வியைத் தழுவியதால் தான் ஆயுதப்போராட்டம் வலுப் பெற்றது" என்பதுதான் உண்மை.
72

சிறப்புத் தொகுப்பு - 2002
ஆயுதப் போராட்டத்தின் விளைவு புரிந்துணர்வு ஒப்பந்தம், இது எதிர்பார்த்த அளவுக்கு தீனி போடவில்லை. 1997 ஆம் ஆண்டு திருக்கோணமலையில் நிர்மாணிக்கப்பட்ட பொதுச் சந்தையை ஐந்து வருடங்கள் கடந்தும் திறந்து கொள்ள முடியவில்லை, கன்னியா வெந்நீருற்றுப் பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட பிள்ளையார் ஆலயத்தை கட்டிக்கொள்ள முடியவில்லை. விளாங்குளத்தில் விகாரை கட்டும் பணி கூட நிறுத்தப்படவில்லை. இந்த இலட்சணத்தில் ஒப்பந்தம் திருமலையில் எதைச் சாதித்து விட்டது? 1987 ஆம் ஆண்டு மாகாண கட்டமைப்பைப்புகுத்தி இடைக்கால நிர்வாகம் வழங்கப்படுமானால் அதுவும் திருமலையில் பாதி பலம் அற்றதாகவே காணப்படும்.
இத்தகைய நிலைமைகளைக் கருத்திற் கொண்டும், இன்றைய சமாதானம், பேச்சு வார்த்தைக்கான பேச்சு என்பதனாலும் மக்கள் மதில் மேல் பூனையாகவுள்ளனர். குறைபாடுகள் மலிந்த திருமலையில் எந்த விடயத்தையும் சுகந்திரமாகச் செய்ய முடியவில்லை. ஏட்டிக்கு போட்டியாக சிங்களப்பெரும்பான்மையினர் செயற்படுகின்றனர். திருமலை தமிழனின் கையில் சிக்கி விடக்கூடாது என்பதில் ஜே.வி.பி.சிஹல உறுமய உட்பட பெளத்த பேரினவாதம் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அதனால் தமிழ் தேசியத்தில் தமிழ் மக்கள் பற்றியோ அதன் தலைநகள் திருக்கோணமலை பற்றியோ முடிவு எதுவும் சொல்ல முடியாதுள்ளது. இதனால்தான் தமிழ்த் தேசியத்தில் தமிழ் மக்கள் ஒருபுறம் என்றும் திருக்கோணமலை மறுபுறம் என்றும் எதிர்வுகூறத் தோன்றுகின்றது.
போராட்டம் உச்சக் கட்டத்தை அடைவதற்கு காரணமாக அமைந்ததில் திருக்கோணமலையும் ஒன்று. அதனால் தான் "திருக்கோணமலை’ பேச்சுவார்த்தையில் இடம்பெற்று வருகின்றது. இத்தனை இழப்புக்களின் பிற்பாடு திருமலையை கை நழுவ விடாது. அது தமிழர் தாயகத்தின் தலைநகள் என்ற அந்தஸ்துடன் அதை மீட்கும் தூர நோக்குடைய வியூகங்களை அமைத்து செயற்படுவதற்கான முஸ்தீபுகளில் தமிழ்த் தரப்பினர் முனையும் போது தமிழ்த் தேசியத்தில் தமிழ் மக்களும் திருமலையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலாகி விடும் என்பதில் ஐயமில்லை.
73

Page 47
முற்றுகை
காக்கி உடைதரித்த மனிதப்
-க.அன்பழகன்.
பிண்டங்கள் சுற்றிவர நின்றன கவச வாகனங்கள் ரவைகளைக் கக்கி அபாய ஒலி எழுப்பி அங்கும் இங்கும் அலைந்தன மண்ணுள் விதைக்கப்பட்ட வெடி வித்துக்களைத் தேடி ராணுவச் சிப்பாய்கள் குப்பைகளையும் சேர்த்து கூட்டிக் கொண்டிருந்தனர். சுத்தம் செய்யப்படாத பாழ் இடங்களும் வளவுகளும் பரிசுத்தம் செய்யப்பட்டன.
நான் மட்டும் கொஞ்சம் உயிருடன் உறைந்து கிடந்தேன் எங்கள் இரவுகள் அதிகம் தூக்கம் இன்றியே விடிகின்றது அடிக்கடி வீட்டுச்சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் எங்கள்
குடும்ப அட்டையைப் பார்த்துப் பார்த்து சேதம் போன எங்கள் சுதந்திர வாழ்வு இன்னும் இழக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.
என்னைப் பற்றிய சுயசரிதையை நான் அடிக்கடி வீதிகளிலும் பாழ் வழிகளிலும் போக்குவரத்திலும்
74

சிறப்புத் தொகுப்பு - 2002
தங்கு விடுதிகளிலும் அடையாள அட்டையுடன் அனாமதேயமாய் அவர்களுக்கு உரைத்துரைத்தே முடித்திருந்தேன் விருப்பமற்று
இன்று எங்களின் விடிவுகள் பூட்ஸ்கால்களின் ஒசையிலும் நாய்களின் குரைப்பிலும் கனரக வாகன இரைச்சலிலும் காக்கி உடை தரித்த மனித வாடையிலும் நித்தம் நித்தம் செத்துக்கொண்டே விழித்தன.
ஈழத்தில் எங்கு சென்றாலும் ஏதோ ஒன்றின் கொடுமை எம் சுயபுத்தியைத் தின்று கொண்டும் சுதந்திர தாகத்தை வெட்டிச் சிதைத்து எம்மை ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கின்றன
முடிவற்ற எதுவாகவோ வரண்டு கிடக்கும் எங்கள் பயனற்ற வாழ்வு திமிறவோ நிமிர்ந்து இருக்கவோ முடியாமல் இருக்கும் ஆக்கிரமிப்பு சிராய்ப்புத் தனமாய் குத்திக் கிழித்த காயங்களும் உராய்வுகளும் எங்கள் பண்பாட்டுக் காப்பை கொஞ்சம் கொஞ்சமாய்
எரித்து வர உடைக்க முடியாத ஆக்கிரமிப்பால் நாங்கள் முற்றுகை இடப்பட்டுள்ளோம்.
75

Page 48
ஈழப் புறநானுற்றின்
இன்னொரு பரிணாமம்
-க. மோகனதாசன். -
எங்களது சாத்வீகத் திண்ணையில் இருந்து கொண்டு அதிகாரத்தின் இடுப்பெலும்புகளுக்கு சாட்டை கொடுக்க முடியும் !
அடிமைகளாக கைகளிலும் கால்களிலும் பூட்டப்பட்ட விலங்குகள் தெறித்துக் கொள்ளும் !
எங்கள் அகிம்சை நெருப்பிற்கு முன்னால் அடாவடித்தனங்கள் வெறும் பஞ்சாய் பற்றிக் கொள்ளும் !
76

சிறப்புத் தொகுப்பு - 2002
எங்கள் இருப்புக்களில் கைவைக்க உமக்கு உரிமையில்லை !
சந்தேகச் சாயம் பூசி
6可诏乐6莎}6爪 எதற்குள்ளும் தள்ளிவிடத் தவிக்கிறீர்களே, கொள்கையில்
குழம்பி விடாதநாம் உங்கள் புள்ளிகளுக்குள் சிக்கி விடமாட்டோம் !
சலுகைகளுக்குள் வால் பிடிக்காமல் கைதுகளுக்காக கடும் குரல் கொடுக்கும் எம் இப்போராட்டம் தமிழீழப் புறநானுாற்றில் இன்னொரு பரிணாமம் !
இனத்துவேசத்தின் வேசங்கலைப்பதற்காக
எங்கள் உணர்வுகளை மூலதனமாக்கி எம்
உறவுகளை
விடுவிக்கக்கோரி, அகிம்சையினால் அதிகாரத்திற்கான கட்டளையிது !
77

Page 49
புதிய ஞானம்
-திருமலை வாசன்
வயது சிறிது எண்ணங்கள் பெரிது சிந்தனைகள் சிதறி சீர்கெட்டு போனதாலே திசைமாறியது வாழ்வு வசை ஏற்றது மனது
பருவம் வருமுன்னே பாவையரை தேடி, போதையிலும் ஆடி, தளர்ந்தது என் நாடி.
“பிஞ்சிலே பழுத்தவன்’ சிறப்புப் பட்டம் வேறு
78

சிறப்புத் தொகுப்பு - 2002
உற்றார்கள் எத்தனைதரம் உள்ளத்தில் திட்டியிருப்பார்கள்
மற்றோர்கள் மத்தியில் மனிதனாய் நானும் வாழ, மனம் திருந்தி குணம் திருந்தியபோது வசந்தம் தொலைந்து. வாலிபமும் கரைந்திருந்தது.
நிதியும் இழந்து நிம்மதியும் இழக்க துணைக்கு நின்ற நண்பர் தூரவிலகிப் போனார்
விதியை வெல்வதற்கு மதியை துணைக்கழைத்தேன் விதியும் மதியும் கைகுலுக்கி சேர எனக்கு நானே அந்நியனானேன்
புத்தனுக்கோ
போதிமரம் எனக்கோ தனிமைத்துன்பம் வாட்டி வதைத்திட வந்தது புதிய ஞானம்
இருக்கும் வரைதான் எதுவும் சொந்தம் இல்லையென்றால் இல்லையொரு பந்தம் புரிந்து கொண்டேன் உலகை நானும். புத்தியாய் வாழ்வேன் இனிமேலும்.
79

Page 50
'of
3db lg (D60ot
-கனகசபை தேவகடாட்சம்
கட்டு அவிழ்க்கப்பட்டாயிற்று !
மூதூருக்கு “லோஞ்’ புறப்பட ஆயத்தம்.
துறைமுக வாசலில் பாதுகாப்பு படையினர் சோதனையில் சற்றேனும் தளர்வே இல்லை.
மாணிக்கத்தின் மனதில் எரிச்சல் எரிச்சலாகவே வந்தது. தோளில் தொங்கி கிடந்த பை - இப்போ, சோதனைச்சாவடி மேசையில் கடைவிரித்து பரப்பியாயிற்று.
சோதனையின் நடுவே லோஞ்சை சற்று தாமதிக்குமாறு கையை அசைத்து சமிக்ஞை காட்டிக் கொண்டிருந்தான் மாணிக்கம். சோதனையின் போது அவனின் பாஸ்போட் கண்ணில் பட்டுவிட்டது.
மேலும் தாமதம் - பரபரப்பாகிக்கொண்டேயிருந்தான் மாணிக்கம்.
படையினரின் கேள்விக்கு பதில் சொன்னான்.
“லண்டனிலிருந்து வருகின்றேன். சொந்த ஊர் மூதூர்” இதற்கு மேலும் கதை வளர்ப்பது, மூதூர் செல்வதைத் தடுக்கலாம் என உணர்ந்து கொண்ட மாணிக்கம், மெதுவாக நகர்த்தப்பட்டுத் கைமாறிய “ சென்ற் ’ போத்தல் - விரைவாக சோதனைகளை முடித்து வைத்தது.
'இந்த புதிய அரசு சமாதானத்தை நோக்கி நடைபோடுகிறது’ என்று இலங்கைப் பத்திரிகைகளும் வானொலிகளும் கூறுமளவு இங்கு இல்லை.
80

சிறப்புத் தொகுப்பு - 2002
வழமையைவிட கெடுபிடி அதிகம் போலத் தோன்றுகின்றது.
‘கடுப்பு தெரியாமல் கிடக்கும் படையினர் சமாதானத்தை வெறுக்கின்றார்கள்.
இந்த யதார் தி தங்களை அசை போட் டவாறே தொங்கோட்டமாக "லோஞ்சில் ஏறிக்கொண்டான்.
லோஞ்சை தாமதித்து வைத்தமைக்காக சாரதி தெய்வேந்திரனைப் பார்த்து நன்றியாய்ச் சிரித்துக்கொண்டான்.
இருந்தவர்களில் மாணிக்கத்தை யாரும் அடையாளம் கண்டதாகத் தெரியவில்லை.
வெள்ளிக்கிழமையானதால் சனம் அதிகமாய் இல்லை.
லண்டன் வாழ்வு உடலை ஊதவைத்துத்தான்விட்டது.
'லோஞ்’ பயணிக்கத் தொடங்கிவிட்டது. ஆறுதலாக, அமைதியாக அமர் வதற்கு 'லோஞ் 'சின் அணியம் பொருத்தமாகப்பட்டது. நீட்டி நிமிர்ந்து இருந்தவாறு கடல் பரப்பில் கண்களை மேயவிட்டான்.
காலை இளம் வெயில் - கடல், காடு, மலைகள் எல்லாம் மஞ்சள் கரைத்து தூவிக் கொண்டிருந்தது. மேலும் கீழும் ஆடும் தோணி தாண்டு விடும் போல் தெரிந்தது. முதல் பிடிச்சமீனுக்கு நாலு காசு கூட என்பதற்காக வேகமாக சில தோணிகள் கரையை நோக்குகின்றன.
பாதாள மலை துாரத்தே தெரிந்தது.
இடது புறம் கெவிளி முனை வெளிச்ச வீடு சிறிதாய்த் தெரிந்தது.
இத்தனை ரம்மியங்களையும் அக்காலங்களில் அவன் ரசிக்கவேயில்லை.
81

Page 51
முதிர்ந்த நிலையில் கடந்த நினைவுகளை மீட்பதில் இளமை மாறாத ஒரு சுகம் தெரிந்தது.
கால இடைவெளி மனிதனை எப்படியெல்லாம் மாற்றியமைக்கிறது.
ஆயாசமான ஒரு பெருமூச்சு - அது கடல் காற்றையும் அனலாக்கிக் கொண்டிருந்தது.
அதில் தான் எத்தனை அர்த்தங்கள்!
எத்தனை எதிர்பார்ப்புக்கள்!
இருக்கையோடு தலையை சாய்த்தவாறு மெதுவாகக் கண்களை மூடிக்கொண்டான். மூடிய கண்களின் வழியாக, கண்ணிர் ஊர்ந்து ஓடிக்கொண்டு இருந்தது.
85ம் ஆண்டு! ஆடி மாதம்!
மூதூர் நகரில் சமாதானக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. சூழவுள்ள தமிழ் கிராமங்களின் பெரியவர்களும், சமயத் தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
குழந்தைவேல், செல்லக்குட்டி, விநாயகமூர்த்தி, துரைநாயகம், இப் படி பலருடன் ஆலய தலைவரான மாணிக் கமும் அழைக்கப்பட்டான்.
தமிழன்’ என்பதைத் தவிர வேறு காரணங்கள் இல்லை. சமாதான கூட்டத்திற்காக வந்த இவர்கள் காட்டிக் கொடுக்கும் தரகள்களால், மூதூர் நகரின் மத்தியிலே படையினரால், கைது செய்யப்பட்டனர். ‘சமாதானம் என்ற போர்வையில் அராஜகத்திற்காக அடிகோலப்பட்ட நாள் அன்று. 'அறுவை மாடுகள்’ கொண்டு செல்லப்படுவதைப் போல் அந்த ‘சமாதான விரும்பிகள் கொண்டு செல்லப்பட்டனர்.
82

சிறப்புத் தொகுப்பு - 2002
மாணிக்கத்திற்கு ஓரளவு விளங்கிவிட்டது.
இது விடுதலைக்கான கைது அல்ல. உயிர் விடுதலுக்கான
கைது.
இது தலையால் போன வெள்ளம்.
பயப்பட்டு பலனில்லை.
இறைவனைத் தவிர அவர்களின் தொடர் பிற்கு எவருமேயில்லை. முச்சந்தி தாண்டி, ஆஸ்பத்திரி வீதியால் கொண்டு வரப்படுகின்றனர்.
உயிருக்குயிராகப் பழகியவர்கள் பலர் கண்டும் காணததாக நழுவிக்கொண்டிருந்தனர். இறுதியாக முகத்தைப் பார்க்கும் ஆவலில் பார்த்துத் தலை குனிந்து கொள்கின்றனர் சிலர். தமிழருக்கு இந்த நிலை என்று மாறுமோ என மனதார வெதும்பிக் கொண்டு நின்றனர் சிலர். 'கூத்தாடிகள் பலர் இந்தக் குழப்பம் தமக்குத் தான் ஆதாயம்’ என எண் ணி சந்தோஷித்துக் கொண்டிருந்தனர்.
சற்றுத் தூரத்தே படை முகாம் தெரிகிறது.
இடையே பள்ளிவாசல்.
அன்று வெள்ளிக்கிழமை!
பீதிகொண்ட மாணிக்கத்தின் உணர்வுகளுக்கு 'ஜும்மா' பிரசங்கம் திடன் வளர்த்துக்கொண்டிருந்தது.
‘அத்தியாயம் 7. அல்அ.".ரா..! வசனம் 56 !
மேலும் பூமியில் மனிதர்களே!
சமாதானமும் அமைதியும் உண்டாகி அது சீர்திருத்தமான பின்னர், அதில் குழப்பம் செய்யாதீர்கள்.
83

Page 52
oboj
இரட்சகனுடைய தண்டனைக்கு பயந்தும் அவனுடைய அருளாளனை ஆசித்தும் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள்.
நடையிலே கிரகித்துக் கொண்டிருந்தான். இவ்வேளை அது பெரும் ஆறுதலை முகிழ்த்து விட்டிருந்தது.
மூதூர் மத்திய முகாமிலே இவர்களை சிறையிட்டாயிற்று.
'இரண்டு நாட்கள் வரை வைத்திருந்து விட்டு விடுதலை செய்துவிடுவார்கள்.
பிடிபட்டவர்கள் பேசிக்கொண்டார்கள்.
மாணிக்கத்திற்கு இதில் எள்ளளவேனும் நம்பிக்கையி ருக்கவில்லை. நிரந்தர வாழ்வியல் கொண்ட இனங்களுக்கிடையான மோதலை உண்டு பண்ண எதிரிக்கு இதைவிட வேறு சந்தர்ப்பம் கிடைப்பதரிது. மாணிக்கத்திற்கு இவைகள் யாவும் பிரக்ஞை பூர்வமான புரிதலாக இருந்தது.
நடுநிசி!
ஒரு மணியிருக்கும்!
வாயும் கையும் கட்டப்பட்டு படையினரால் வாகனத்திற்குள் ஏற்றப்பட்டார்கள்.
மாணிக்கம் எதிர்பார்த்தது போல் நடந்து கொண்டிருந்தது.
ஆலமரத்தடி சந்தியைத் தாண்டி மிகவேகமாகச் சென்று கொண்டிருந்தது அந்த வாகனம். சேனைக்கட்டுக் குளத்தைத் தாண்டி சந்தடியில்லாத காட்டுப் பக்கமாகச் சென்று குளத்தருகே தரித்து நின்றது.
அழைக்காத தெய்வங்களே இல்லை. அவர்களின் இதயங்கள் வரண்டு கொண்டிருந்தது.
LD606076l6DuJuT?
பிள்ளைகளையா?
உறவினர்களையா? எவரை நினைப்பது?எவரைத் தவிர்ப்பது?
84

சிறப்புத் தொகுப்பு - 2002
எதை நினைப்பது? எதை விடுவது?
நினைவுகள் சிக்கிச், சிக்கி பின்னியடித்துக் கொண்டிருந்தன.
'இன்றைய எமது மரணங்கள் நாளைய விடிவுக்கான ஒளிக்கதிர்களாக மாறலாம்.! பதற்றமெதுவுமின்றி தெளிவாக சிந்தித்தபடி வாகனத்தை விட்டு இறங்கிக் கொண்டிருந்தான் மாணிக்கம், மற்றவர்களும் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் 'இறக்கப்பட வேண்டியவர்கள்.
அங்கே வானத்து நட்சத்திர ஒளி மட்டும்தான்.
மரணசாசனத்தின் உயில் இனி எழுதப்படப்போகிறது,
கண்சிமிட்டி ஒளி வீசும் நட்சத்திரங்கள் அடர்ந்த காட்டினுடாக இடைக்கிடை தெரிந்து கொண்டிருந்தது,
சோர்வடைந்து வீசும் கச்சான் காற்றால் உந்தப்பட்ட மரக்கிளைகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து கொள்ளும் ஓசை அவலமாக இருந்தது.
தூரத்தே இரண்டு காட்டுப் பூனைகளின் கண்கள் பளிங்குக் கண்ணாடி போல் பிரகாசித்துக் கொள்கிறது.
ஒரமாக தன்பாட்டிற்கே வளர்ந்திருந்த புற்று மெல்லிய வெளிச்சத்தில் பெரு மலைபோல் தெரிகின்றது.
கீழே உதிர்ந்து கிடந்த சருகுகள் ஊர்வனவற்றின் அருட்டலினால் சரசரத்துக் கொள்கிறது.
இந்த மெளன சாட்சிகள் எதுவும் அவர்கள் மனதில் பட்டதாக இல்லை.
வரிசையாக நிற்பாட்டப்பட்டார்கள்.
85

Page 53
o
அனைவருக்கும் இப்போ தெளிவாகத் தெரிந்து விட்டது.
மாணிக்கம் வரிசையின் நடுவே!
காட்டுப் பூனைகள் கண் வெட்டாமல் பார்க்கும் பார்வையைத் தவிர வேறொன்றும் அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை.
கண்ணிமைக்கும் நேரத்துக்குள் துப்பாக்கி வெடிச்சத்தம்.
மின்னல் வெட்டாக மாணிக்கத்தின் புத்தி செயற்பட்டது. துப்பாக்கிவேட்டு தன்னில் பதிய முன்னரே சரிந்து வீழ்ந்து கொண்டான்.
குருதி வெள்ளத்தில் மரணித்துக் கிடந்த அந்த உடல்கள் மீது அவனும் வீழ்ந்து கிடந்தான். துப்பாக்கி வேட்டுச் சத்தம் ஓய்ந்து கொண்டது.
இனியும் அவன் சிந்திக்க அவகாசம் இல்லை.
சரிந்து கிடந்தவன் கடகடவென குளக்கட்டின் சரிவால் உருளத்தொடங்கினான். இப்போ தலையைக் குனிந்து கொண்டு அதி வேகமாக ஓட ஆரம்பித்தான். காலும் மனமும் எதுவித தொடர்பின்றி இயல்பு நிலைக்கப்பால் இயங்கிக் கொண்டிருந்தது.
பின்னால் துப்பாக்கி ரவைகள் துரத்தி கொண்டு வந்தன.
திசையறியா ஓட்டத்திலும் உடலும் உள்ளமும் தெம்புடன் இருந்தது.
"அண்ணா!அண்ணா!”
தட்டி எழுப்பிய போது மாணிக்கம் அதிர்ந்து கொண்டே எழும்பினான்.
கடந்தகாலப் பயம் இன்றுவரை அவனை ஆட்டிவைத்தது.
86

சிறப்புத் தொகுப்பு - 2002
மிரட்சியுடன் விழி பிதுங்கி நின்றான்.
'லோஞ் சுற்கான கட்டண ரிக்கட்டை நீட்டியவாறு 'கண்டக்டர்’ சுப்புரா நின்று கொண்டிருந்தான். மாணிக்கம் அவனை நன்கு அடையாளம் கண்டு கொண்டான். ஏனோ காட்டிக்கொள்ள விரும்பவில்லை. தேவைப்படாதது போல்பட்டது.
காரணமில்லாத ஒரு மனநிலை.
மெளனமாக ரிக்கட்டை பெற்றுக்கொள்கின்றான்.
கடும் செம்மஞ்சளாக அரைவடிவ வட்டத்தில் அந்த கொட்டியார பூமி தெரிகிறது.
ஏறத்தாழ 16 வருடங்களின் பின் சொந்தப் பூமியைக் காண்கிறான்.
இங்குவாழ்ந்த காலத்தில் இந்தப்பூமி இப்படி மனதில் பதிந்ததுமில்லை நெருடியதுமில்லை.
இதன் அருமையை அப்போது விளங்கியதுமில்லை.
இடைவெளி காலங்கள் எப்படியெல்லாம் பாடம் புகட்டிவிட்டன.
ஒவ்வொரு வியர்வைத் துவாரங்களும் குளிர்மையான ஸ்பரிசம் காண்கின்றது.
தாய் மண்ணில் கால் பதித்தாயிற்று.
இனம் தெரியா இன்ப உணர்வு உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை சில்லிட்டுக் குளிர்ந்து கொள்கிறது.
மீண்டும் அதே சோதனைச் சாவடிகள்
அதே சோதனைகள்.
இறங்கு துறையை விட்டு முற்றாக வெளியேறிவிட்டான்.
கால் நடையாக, அதுவும் தனியாக மூதுTருக்குள் புகவேண்டுமென்ற ஆசை.
"பெற்றோல் செட்’ சந்தி: நெருங்கிக் கொண்டிருந்தான்.

Page 54
o
அதே பள்ளிவாசல் தெரிகிறது. தூரத்தே ஆஸ்பத்திரி தெரிகின்றது.
அன்று ஒரு நாள், அந்தப் பயங்கர நாள். இருமருங்கிலும் பலர் பார்த்து நிற்க. பயங்கரமான 85ம் ஆண்டு புதைவுகள் மாணிக்கத்தின் மனப் பதிவுகளிலிருந்து பேரிரைச்சலுடன் எழுந்து கொள்கிறது.
இன்றைய அந்த ஜும்மா உரை,
அது அவன் கடந்து வந்த பாதையின் சோகத்தை ரணமாக்கிக்கொண்டிருந்தது.
அத்தியாயம்! 9. அத்தவ்பா! வசனம் - 52
நபியே! நீர் கூறுவீராக வெற்றி அல்லது வீரமரணம் ஆகிய இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்கின்றீர்களா?
இந்த உயிர் உள்ள வசனங்கள் கடந்த கோரமான காலம் போன்று மீண்டும் ஒரு தரம் இனம் புரியா தென்பை ஊட்டிக் கொண்டிருந்தது.
பதிவுகளிலிருந்து ஒரு கணம் மீட்டிப்பார்த்துக் கொள்கிறான். தீர்க்க தரிசனங்கள் நிதர்சனமானவை.
மனிதனால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அந்தளவு சக்தியுமில்லை.
இந்த நினைவுகளுடன் பள்ளிவாசலைத் தாண்டிக் கொண்டிருக்கின்றான்.
ஏதோ ஒரு நப்பாசை!
அந்த வழியிலுள்ள புஸ்பாக்காவின் வீட்டை அவன் கண்கள் துளாவுகின்றன.
ஐயா வீடு . கிருபாவீடு. நீண்டு கொண்ட அவன் பட்டியல் இவர்களின் 'இருப்பிற்கான சகல அடையாளங்களுமே தொலைந்து கிடந்தன.
88

Ø 2o99 %ዓውoሣ " “99፤
புட்டும் தேங்காய்ப் பூவுமான வாழ்வியல் இப்போ 'வெறும் புட்டாகவே காட்சி தந்தது. {9}b ğ5 LDIT i3 3Lib, 614y5) ile) tI A) இனஒற்றுமையின் பிளவை கட்டியம் கூறி நின்றது. மாணிக்கத்தின் உணர்வுகள் சிறிது சிறிதாய் மாற்றம் கண்டுகொண்டிருந்தது. பிரதான வீதியை அடைந்து விட்டான். அன்ரனி டொக்டர் இல்லாத அந்த வீடு சுடர் இல்லாத தெய்வச் சந்நிதானமாய்க் கிடந்தது. பண்டிதர் நிக்கொலஸ் வீட்டுப்பக்கம் பார்க்கின்றான். இசையில்லாத முத்தமிழாகத் தெரிந்தது.
மொத்தத்தில் மூதூர் மயானமாக தெரிந்தது அவனுக்கு.
வெறி கொண்டவன் போல் நடக்கின்றான்.
ஆலமரத்தடிச் சந்தியைத் தாண்டிவிட்டான்.
அவனை அறியாமல் வசந்தன் வீட்டில் கால்கள் குத்தி நிற்கின்றன. அந்த சமூகஜோதியின் விம்பம் பிரகாசமாய் ஒளிர்வது பிரமையாய்த் தெரிந்தது. நமக்காக தமை ஈந்த வித்துக்களில் ஒன்று. மாணிக்கத்தால் அழத்தான் முடிந்தது,
அப்போது அதுதான், சிதைந்த அவன் உணர்வுகளுக்கு வடிகாலும் கூட மனநோயாளி போல் குழம்பிக் கொண்டிருந்தான்.
மனநிலையில் மாற்றம். ஒரு கணமேனும் தன் சொந்த மண்ணில் நிற்பதற்குக் கொஞ்சம் கூட மனமேயில்லை.!
ஏதோ நினைத்துக் கொண்டான்.
கீழே குனிந்து “ஒரு பிடி மண்” மட்டும் அள்ளிக் கொண்டான். அது பூசிப்பதற்காக எடுத்துக் கொண்ட மண்ணல்ல!
அது மாணிக்கத்தின் பூர்வீக மன்!
நெஞ்சோடு அணைத்தபடி அந்த ‘மண்’மீது சத்தியம் செய்து கொள்கின்றான்.
பத்திரகாளித் தாயே! பரதேசியாக நான் எந்த நாட்டில் மரணித்தாலும், இந்த என் மண் !
என் உடல் மீது 'தூவப்பட அருள் செய்ய வேண்டும். இது உன் மீது சத்தியம்.
89

Page 55
மண்ணின் வாஞ்சை மடையுடைத்து பிரவாகம் கொண்டு
@lԳԱ 15l.
மீண்டும் வந்த வழியே கால்கள் வேகப்பட்டன. 'லோஞ் கட்டவிழ்க்கப்படுகிறது. மாணிக்கத்தின் மனம் பாரித்துக் கொண்டேயிருந்தது. சாளரத்தினூடாக எட்டிப்பார்க்கின்றான். தவிட்டுக் களனி நிறம் கொண்ட அந்தக் கொட்டியாரக் கடலிலிருந்து வங்க கடலினுள் பிரவேசித்துக் கொண்டிருந்தது 'லோஞ்'.
சொந்த மண்ணிலிருந்து அந்நியப்பட்டுக் கொண்டிருந்தான். கண்களில் பொங்கிய நீரினுாடாகப் பார்க்கின்றான். கெவுளிமுனையும், அரைவட்டசெம்மஞ்சள் கொட்டியார பூமியும் கையசைத்து வழியனுப்பின.
கண்ணி திவலைகளுக்கூடாக இவைகள் நீண்டு மறைந்து கொண்டிருந்தது.
நினைவுகள் முழுவதும் கொட்டியாரப் பூமியிலே நங்கூரமிட்டுக் கிடந்தன.
அவன் கண்களால் வழிந்து கொண்ட நீர்த்துளிகள், அந்தக் கடலோடு கலந்து அலையாக மாறி கொட்டியாரக் கரையினிலே அடித்தடித்து ஏறுவதற்காய் முயன்று கொண்டிருக்
கின்றன.
(அவுஸ்திரேலியாவில் இயங்கும்
விக்டோரியா தமிழ் சங்கத்தினால் 2002ம் ஆண்டு நடாத்தப்பட்ட இலக்கியப்
போட்டியில் 2ம் இடத்தைப் பெற்றது
 
 
 
 
 

சிறப்புத் தொகுப்பு - 2002
தமிழரசுக் கட்சி - போராட்டங்களும் GUTtiGD(Döbel5b.
-ச. கெங்காதரன்
இலங்கையின் நீண்ட இனப்போரின் போராட்ட வரலாறு தமிழரசுக் கட்சியுடனேயே தொடங்குகிறது. அஹிம்சைப் போராட்டங்களை நிறுவனப்படுத்தியவர்கள் என்ற வகையில் S.J.V. செல்வநாயகமும் அவரது கட்சியினரும் ஏற்கும் பங்கு மற்றெந்த தமிழ்கட்சியினரை விடவும் காத்திரமானது.
ஆனால் விமர்சன ரீதியிலான ஆய்வுகள் முனைப்புடன் முன்னெடுக்கப்படும் இவ்வேளையில் இவர்கள், உண்மைத் தன்மையுடன் அதாவது தமிழர்களுக்கு ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற உளப்பூர்வமான எண்ணத்துடன் போராட்டங்களை நடத்தினார்களா? என்பது மீளாய்வு செய்யப்பட வேண்டும். G.G. பொன்னம்பலம் தோட்டத் தொழிலாளர் வாக்குரிமைப் பறிப்பை ஆதரித்ததன் மூலம் தமிழர்களுக்குத் துரோகமிழைத்தார் என்ற காரணத்தினால் அவரிலிருந்து பிரிந்து உருவாகிய தமிழரசுக் கட்சி தன் போராட்டத் தடங்களை புனிதத்துடன் வைத்துக் கொண்டதா என்பது ஆய்வுக்குரியது. இக்கட்டுரை தமிழரசின் கொள்கைகள், போராட்டங்கள், தலைமைத்துவம் தொடர்பான சுருக்கமான ஒரு மீளபார்வையாகவே அமைகிறது.
1961ம் ஆண்டின் ஆரம்பங்களில் நடைபெற்ற அறப்போரின் பின்னர் தமிழரக்கட்சி போராட்ட அறிவிப்புக்களை மேடை தோறும் பிரகடனப்படுத்தியதே தவிர செயல்முறையில் காட்டவில்லை. 1963, 1964, 1970, 1972, 1973ம் ஆண்டுகளில் “இதோ போராட்டம் மக்களே தயாராகவிருங்கள்’ என்ற அறிவிப்புகள் செய்யப்பட்டதே தவிர போராட்டமெதுவும் நடாத்தப்படவில்லை. இதுபோலவே
91

Page 56
சிறையிலிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று 31-12.1974 வரை கால அவகாசம் ஒன்றையும் அரசுக்கு வழங்கியது கட்சி. இது இறுதி எச்சரிக்கை எனவும், ஏனைய போராட்டங்களைப்போல் ஒத்திவைக்கப்பட மாட்டாது என்றும் தளபதி அமிர்தலிங்கம் அறிவிப் பொன்றையும் செய்தார் .ஆனால் அவ்வாறானதொரு போராட்டம் நடந்ததாக வரலாற்றால் குறிப்பெடுத்துக் கொள்ள தலைவர்கள் இடந்தரவில்லை.
போராட்டங்கள் எவ்வாறு கைவிடப்பட்டனவோ அது போலவே அறிவிக்கப்பட்ட அல்லது செயலுருவில் கொண்டு வரப்பட்ட சில திட்டங்களும் பூரணத்துவம் பெறவில்லை. 1963இல் “மெய்யம்மை சேரில்லம்’ என்ற பெயரில் மகாத்மா காந்தியின் "சபர்மதி ஆஸ்ரமம்” போன்ற ஒரு அமைப்பு உருவாக்கப்படுவதாகவும், அதில் சேரத் தயாராகவுள்ள தொண்டர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் பின்னர் அது பற்றி தமிழரசுக்கட்சி மூச்சு விடவில்லை. “சாதி” பெரியளவில் ஆதிக்கம் செலுத்திய ஒரு கட்சியால் காந்திபாணியில் இயங்க முடியாது என்ற நிதர்சனம் புரியாதவர்களாகவே இருந்தனர் தலைவர்கள். இதே போன்று அச்சுவேலி, அல்வாய், கரணவாய், புத்துார் ஆகிய இடங்களில் அரசினால் சிங்கள மொழிப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சட்டமறுப்புச் செயற்பாடாக “திருமுருகன் தமிழ்ப்பாடசாலை” கட்சியினரால் 06.04.1973 இல் புத்தூரில் ஆரம்பிக்கப்பட்டது. அரசு இது தொடர்பாக அலட்டிக் கொள்ளாமல் இருந்தும் கூட S.J.V ஐ தலைமைப் போசகராகக் கொண்ட இப்பாடசாலை ஒரு வருடத்திற்கு மேல் நிலைக்கவில்லை. ஆனால் போராட்டங்களோ அல்லது திட்டங் &ளோ தொடர்ந்து நடாத்தப்படாமைக்காக சமாளிப்புக்களைக் கூட பதிலாகச் சொல்லாத அகம்பாவம், தலைமைத்துவத்திடம் நிரம்பியே இருந்தது.
இவை அனைத்தினதும் தொடர்ச்சியாகவே எழுபதின் தசாப்தத்தினைக் கூறலாம். தேசிய அரசுப் பேரவை பகிஷ்கரிப்பு பின்னர் பங்கேற்பு போன்ற நாடகங்கள் ஆரம்பங்களில் மேடையேற்றப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானம், அதிகரித்துவரும் இளைஞர்களின் உள்ளக் குமுறல்களை அடக்குவதற்காக அல்லது தணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதொரு தீர்மானமாகவே பின்னர் வந்த செயற்பாடுகளை மையமாக வைத்து கருத முடிகிறது.
92

சிறப்புத் தொகுப்பு - 2002
தேர்தல் வெற்றியென்ற இலக்கு மட்டுமே எப்போதும் தலைவர்களின் குறியாக இருந்தது
போராட்டங்களைத் தவிர்த்து விட்டு தலைவர்களின் செயற்பாடுகள், கொள்கைகள் பற்றி நோக்கும் போது விசித்திரமான காட்சிகளை இனம்காண முடியும். கொள்கைகள் தடம்புரள்தல் என்பது கட்சியின் எல்லா மட்டத்திலும் வேறுபாடின்றிக் காணப்பட்டதாகவே தோன்றுகிறது.
S.J.V. செல்வநாயகம் கூட ஆரம்பத்தில் இணைந்த தமிழ் தாயகம் என்பதில் தொடங்கி பண்டாரநாயக்காவுடன் பிரிக்கப்பட்ட மாகாணசபைக்கு இறங்கி,அதன் பின்னர் டட்லியுடன் மாவட்ட சபைகளை ஏற்றுக் கொள்ளுமளவிற்கு பக்குவப்பட்டிருந்தார். பின்னர் தமிழீழம்' ஒன்றே தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வினைத் தரும் என்ற நிலைப்பாட்டிற்கு தமது இறுதிக்காலத்தில் வந்திருந்தார். ஐ.தே. கட்சியுடன் 1965 இல் கூட்டரசாங்கத்தில் இணைந்தமை எவ்விதமான உணர்வுடன் மேற்கொள்ளப்பட்ட செயல் என்பது இன்று வரை புரியவில்லை 1957இல் தமிழர்களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களையாவது வழங்கும் என்று நம்பிய பண்டா - செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறியச் செய்த கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது மட்டுமல்லாமல், ஒப்பந்தம் கைவிடப்பட முக்கிய கர்த்தாவாக விளங்கிய J.R.ஜயவர்த்தனாவை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பும் விடுத்தது தமிழரசு. வாலிப முன்னணி மாநாட்டில் கெளரவ அதிதியாகவும், கோண்டாவிலில் "வெங்காய மாலை'யும் அணிவித்து மரியாதையும் செய்வித்தனர் அவர்கள். துரோகத்தனங்கள். அரசியல் சந்தர்ப்பவாதத்தால் எவ்வாறு மறக்கப்படுகின்றன அல்லது மறைக்கப்படுகின்றன என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேடமுடியாது.
ஐ.தே.க. உடனான கூட்டு உடைந்து அரசிலிருந்து வெளியேறியவுடன் 'தமிழினத்தின் முதல் எதிரி ஐ.தே.க. தான் என்று அறிவித்தார் S.J.V. தமிழ் மக்களின் தாயகத்தில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டது அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் என்றும் குறை கூறினார். "முதல் எதிரியுடன்’ முன்னர் கூட்டுச் சேர்ந்ததும், அவர்களை வாழ்த்திப் புகழ்ந்ததும் ஏன் என்று பாமரமக்களுக்குப் புரியாமல் இருந்தாலும், குருட்டு நம்பிக்கையில்
93

Page 57
1970 இன் பொதுத்தேர்தலிலும் அவர்களுக்கே வாக்களித்தார்கள் மக்கள்.
தமிழரசுக்கட்சியின் “தளபதி’ என்று அழைக்கப்பட்ட அ.அமிர்தலிங்கம் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு இலககணமாகவே திகழ்ந்தார். 1965இல் ஐ.தே.க. அரசுடன் கூட்டுச் சேர்ந்த போது “இலங்கையை சீனா போன்ற நாடுகளுக்கு விற்கப்பார்க்கும் துரோகிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றவே அரசில் இணைந்ததாக” காரணம் அவரால் கற்பிக்கப்பட்டது.
தமிழீழ தீர்மானத்தை 1976இல் வட்டுக்கோட்டையில் பிரகடனம் செய்து துண்டுப் பிரசுரம் விநியோகித்து கைதானதும், 1977 பொதுத் தேர்தலில் தமிழீழத்திற்காக வாக்களியுங்கள் என்று வெற்றி பெற்றதும், அடுத்த ஆண்டிலே தமிழ் நாட்டில் 'தமிழீழம் பெறுவது தவிர்க்க முடியாதது, இரத்தம், வியர்வை சிந்தியாவது தனிநாடு அமைப்போம்” என்று சூளுரைத்ததும் எண்பதாம் ஆண்டு மாவட்டசபை உருவாக்கத்தோடு மறைந்து போனது. “மாவட்ட சபைகள் மூலம் பூரணவிடுதலை பெறுவோம்” என்று கூறுமளவிற்கு தன்னை மாற்றிக் கொண்டிருந்தார் அமிர்தலிங்கம்.
தங்களால் நிறைவேற்ற முடியாமல் போனதை மற்றையோர் நடத்தி முடிக்கவும் அமிர் இடங்கொடுக்கவில்லை. இலண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - ஒரு சக்திவாய்ந்த புலம்பெயர் அமைப்பு, ஐ.நா.புகழ் வைகுந்தவாசன் இதன் முக்கிய உறுப்பினர் - கூட்டணியினர் மாவட்ட சபைகளை ஏற்றுக் கெண்டதை நிராகரித்து விட்டு, 1982 தைப்பொங்கல் தினத்திலே தமிழீழம் பிரகடனம் செய்யப்படும் என அறிவித்த வேளையில், அதற்கெதிராகச் செயலில் இறங்கினார் அமிர்தலிங்கம். தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த பிரயத்தனத்துடன் வளர்க்கப்பட்ட தமது செல்வாக்கு அவர்களது பிரகடனத்துடன் செல்வாக்கிழக்குமோ என்ற பயத்தினால் "ஏழாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து தமிழர்கள் எடுத்த தீர்மானம் தப்பானது - தவறானது” என்று அறிக்கை செய்தார். அது மட்டுமன்றி “சுந்தரலிங்கம் தனிநாடு கோரிய பொழுது தந்தை செல்வா அதை எதிர்த்தார். கே.கே.எஸ். (காங்கேசன்துறை) இடைத்தேர்தலில் தவிர்க்க முடியாத ஒரு நிலையில் தான் அவர் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தார்’ எனவும் அறிவிப்புச் செய்தார்.
94

சிறப்புத் தொகுப்பு - 2002
தாம் செய்ய முடியாததை மற்றொருவர் நடத்தி முடிக்கத் துணிகிறாரே என்ற உணர்வு இல்லாமல் சுயலாப அரசியல் நடத்தியே காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தார்கள் தலைவர்கள். தாய் நாட்டுத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்த கட்சியே தனிநாட்டை ஆதரிக்காத காரணத்தினால் இலண்டன் தீர்மானமும் செல்வாக்கற்றுக் கைவிடப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் ஊதுகுழலாய் விளங்கிய சுதந்திரன் பத்திரிகையும் தலைவர்களின் உணர்வுகளையே பிரதிபலித்தது. தமிழரசுக்கட்சியைச் சாராத அனைவரையும் துரோகிகளாகவே அது இனங்கண்டது. 1970 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தமது கட்சிசாராத ஐவரின் பெயர்களை வெளியிட்டு "புதிதாக முளைத்துள்ள தமிழினத் துரோகிகள்’ என்ற பட்டம் வழங்கியது சுதந்திரன். இத்துரோகிகளில் தற்போதைய கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியின் பெயரும் உள்ளடக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சியில் குடியேற்றங்களை அமைக்க ஆதரித்தார் என்ற காரணத்தினால் “இதோ ஓர் எட்டப்பன்” எனவும் பின்னர் அவர் வாழ்த்தப்பட்டிருந்தார். ஆனால் 1974 இணைப்பின் பின்னர் சங்கரி ‘சுதந்திரன்’ பத்திரிகையால் புனிதராக்கப்பட்டார்.
w
எண் பதுகளின் ஆரம்ப காலங்களில் அதுவரை தலைமையைப் புகழ்ந்து கொண்டிருந்த ‘சுதந்திரன் யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட போது, கட்சி அதை நிராகரித்தது. 'உதயசூரியன்’ என்ற புதிய குழல்’ உருவாக்கப்பட்டதோடு, தலைமையை விமர்சித்தார்கள் என்ற காரணத்தினால் சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசனும், முக்கியஸ்தர் ஈழவேந்தனும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
ஒரு வரையறுக் கப்பட்ட எல லைக் குள் நீணி ட காலப்பகுதியைச் சுருக்குவதன் மூலம் பல போராட்ட அறிவிப்புகளும், தலைவர்களது செயற்பாடுகளும் குறிப்பிடப்பட முடியாமல் போனாலும், முக்கியமான ஒரு சில விடயங்களாவது கட்டுரையில் இடம் பெறுகின்றன. ஈழத்தவர்களின் ஆயுதப் போராட்டம், அரசியல் கட்சிகளின் மீதும், தலைவர்களின் மீதும் இளைஞர்கள் கொண்டிருந்த அவநம்பிக்கையின் மீது உருப்பெற்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
95

Page 58
என் 600ம் மக்களுக்க9ம்
-தில்லை முகிலன்
மீளச் சுமை
எமக்கினி
வேண்டாம் வேண்டாம்.
தேசம் தழுவும்
தென்றல் எம்
தேகம்
தழுவும் போது
ஆழம் மிகுந்த
ஈழத்து
உணர்வே அங்கு
இறுகப் பிணைய வேண்டும்.
இங்கிருப்போர் இணைப்பை மறுக்கா காலம் மலர வேண்டும். கறைகள் மறைந்து போக கரங்கள் இணைய வேண்டும். என்று
என் கவிதை வார்த்தையாய் நெடில் வசனமாய் அச்சுக் கோப்பாகி புத்தகத்தில்
96

புகழ் சேர்க்க - என் ஆற்றலை வெளிப்படுத்த ஆயத்தமாகிறேன். ஆனால்,
இந்த அமைதிக்காய் சமாதானத் தென்றலுக்காய் இனத்தின் விடுதலைக்காய் இளம் தளிர்களின் குருத்துப் பால் குடம்குடமாய் வார்க்கப்பட்ட போது நான் எங்கிருந்தேன்?
மண்ணின் பறிப்புக்கு மொழியின் சிதைப்புக்கு இன அழிப்பின் கொடுமைக்கு எதிர்த்தெழுத்து இரத்தச் சொரிவு போர்க் குண்டத்தில் வார்க்கப்பட்ட போது
நான்
எங்கிருந்தேன்
அணை உடைத்து அடக்கு முறை படையெடுத்த போது உயிர் கொடுத்து தீக் குன்றுகளாய் அர்ப்பணிப்பின் நீண்ட படையெடுப்பு நிகழ்கின்ற போது நான்
எங்கிருந்தேன்?
97 -ത്ത
சிறப்புத் தொகுப்பு - 2002

Page 59
போர்ப் புழுதியில் ஊர்கள் உருமாற உறவுகள் சிதற எம்மின் உயிர்கள் தியாகத் தீயில் விடுதலைக்கணலை வீச்சாகக் கொண்ட வரலாற்றுப் பதிவு. சரியாகக் கொண்டோமா? அவர்களின் மரணங்கள் சுதந்திரச் சுவருக்கு, சுண்ணாம்பாய்
கல்லாய்,
மண்ணாய், சீமெந்தாய் கலக்கப்பட்டு காலால் பிசைபடும் போது நான்
எங்கிருந்தேன்?
இதயத் தட்டின் நிறுவைக் கருவியில் எடை போட்டுப்பார்க்கின்றேன் எம் மக்கள்
வாழ்வுக்கு மரணச் சொரிவே உரமாகி நின்றதுவும் இளைஞர் தியாகங்கள் தீயாகி கனன்றதையும் எழுகின்ற சூரியனின் எழுச்சிக் கதிர்ப்பரப்பாய் எந் நாளும் நினைவாக்கி எழுத்தை எடுத்தாள்வோம்
எல்லாம் மக்களுக்காய்!
98
 

சிறப்புத் தொகுப்பு - 2002
gölÚUTöbőlőb606ITÚUÓÓlu ö60ötúl6ÖT
8D6 6665uTuD.
- ஜபார் -
இன்றைக்கு குறைந்தது பத்துப்பேரையாவது சுட்டுக் கொன்றாக வேண்டும் என்றொரு கட்டாயக் கட்டளை தன்மீது பிறப் பிக் கப் பட்டிருப்பதான வன் மத்துடன் இருமி புத தலைக்கவசக்காரன் நின்றிருந்தான். அவனைச் சுற்றிலும் பல துப் பாக்கிக்காரர்கள் நின்றிருந்தனர். பிரதான வீதியின் மேட்டுப்பகுதியில் அவனது காவலரண் இருந்தது. யாரையோ சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்தனர். மனிதர்களும் வாகனங்களும் நிறுத்தப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டன. சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஆகாசனும் நிறுத்தப்பட்டான். இரும்புத்தலைக்கவசக்காரன் ஆகாசனிடம் பல கேள்விகளைக் கேட்டான்.
ஆகாசன் பெயரைச் சொன்னான். ஆகாசன் கிராமத்தைச் சொன்னான். ஆகாசன் வயதைச் சொன்னான். ஆகாசன் பாடசாலையைச் சொன்னான். இரும்புத்தலைக்கவசக்காரன் திடீரென முரட்டுக் குரலில் கத்தினான். 'அடையாளத்தைக் காண்பி. 'அடையாளத்தைக் காண்பி. ஆகாசன் திருதிருவென முழித்தான். இரும்புத் தலைக் கவசக்காரன் மறுபடியும் கத்தினான். 'அடையாளத்தைக் காண்பி. 'அடையாளத்தைக் காண்பி.
ஆகாசன் திடீரென சைக்கிளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறுகையால் காற்சட்டைப் பொத்தான்களைக் கழற்றிக் காண்பித்தான். இரும்புத்தலைக் கவசக்காரனுக்கு கண்கள் சிவந்தன, முகத்தில் கோரம் தாண்டவமாடியது. மூர்க்கத்தனமாக ஆகாசனைத் தாக்கத் தொடங்கினான். தப்பிக்கும் பொருட்டு சைக்கிளைக் கிழே போட்டு விட்டு ஆகாசன் ஓடத் தொடங்கினான். இரும்புத்தலைக் கவசக்காரனும் அவனது துப்பாக்கிக்காரர்களும் ஆகாசனை விர த் 99 −

Page 60
தொடங்கின்ர். பிரதான வீதியை விட்டு விலகிக் குச்சொழுங்கை ஒன்றுக்குள் நுழைந்து ஆகாசன் தப் பியோடி விட்டான். இரும்புத்தலைக் கவசக்காரனது துப்பாக்கிக்காரர்கள் தீர்த்த வேட் டுகளுக்கு செட் டையடித் துப் பறந்த காக் கைகளும் வெருண்டோடிய தெருநாய்களும் மிரண்டு மேய்ச்சலை விட்டு நிமிர்ந்த மாடுகளும் செத்து மடிந்தன.
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடிய களைப்பில்தான் தப்பி வந்து ஒளிந்து கொண்ட சவக்காலையின் கல்லறையொன்றருகே ஆகாசன் தூங்கிப்போனான். மெல்ல இருளத் தொடங்கியிருந்தது.
அன்றிரவு ஒன்று கூடி இறுதியாகச் சில பயனுள்ள முடிவுகளை எடுத்து விடுவதென்று மிகமிக இரகசியமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கமைய தாம் தீர்மானித்த இடத்தில் உலகிலுள்ள அனைத்துத் துப்பாக்கிகளும் குறித்த நேரத்திற்கு ஒன்று கூடி விட்டன. மனந்திறந்த உரையாடல் ஒன்று நிகழ்ந்தது. பெரும்பாலும் கூடியிருந்த துப்பாக்கிகள் அனைத்துமே தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து கொண்டன. ஒரு துப்பாக்கி தான் பறவைகளையும் விலங்குகளையும் கொல்லத் துணைபோனதாகச் சொன்னது. இன்னொன்று தான் வேலிச் சண்டையிலும் கோழிச்சண்டையிலும் பலர் கொல்லப்படத் துணைபோனதாகச் சொன்னது. இன்னுமொன்று உளவாளி என்று நினைத்து பல பிச்சைக்காரர்களைச் சுடத் துணை போனதாகச் சொன்னது. இவ்வாறு பள்ளிச் சிறுமியொருத்தியைக் கடத்திக் கற்பழித்துக் கொல்லவும், கொள்ளைகளிலீடுபடவும் தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக் கொள்ளவும், விமானங்களைக் கடத்தவும், தேசங்களை ஆக்கிரமிக்கவும், மக்களை ஆதிக்கம் செலுத்தவும் துணைபோனது மட்டுமல்லாது இன்னும் எத்தனையோ தீமைகளுக்குத் துணைபோனதாக கூடியிருந்த துப்பாக்கிகள் அனைத்துமே தம்மை ஒவ்வொரு விதத்தில் சுயவிமர்சனம் செய்து கொண்டன. பின் சில முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
1) தமது தரப்புத் தவறுகளை முழுமையாக ஒப்புக் கொண்டு
அறிக்கையொன்றை விடுதல்.
100

சிறப்புத் தொகுப்பு - 2002
2) இனிவருங்காலங்களில் எந்தவொரு தீமைக்கும் தமது
துணையிருக்காது என உறுதி வழங்கல்.
3) கடந்த காலங்களில் தமது துணையால் பாதிக்கப்பட்ட
வர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரல்.
4) தமது உருவாக்கத்திற்கு இனியும் பொறுப்பாக உள்ளவர்
-களை இல்லாதொழித்தல். 5) தாமில்லாத உலகமொன்றுக்காகப் பிரார்த்தித்தல். 6) தம்மில் யாரும் எஞ்சி விடாதவாறு தம்மைத் தாமே கூட்டாக
அழித்துக் கொள்தல். 7) தீர்மானங்களை மூன்று மணிநேர அவகாசத்திற்குள்
அமுலாக்குதல். எந்தவொரு இடைஞ்சலுமின்றி துப்பாக்கிகளின் கூட்டம் நிறைவு பெற்றிருந்தது.
விடிவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் உலகிலுள்ள அனைத்து செய்தித்தாள்களின் முன்பக்கத்திலும் ஒரு செய்தி கொட்டெழுத்துக்களில் அச்சாகிக் கொண்டிருந்தது. துப்பாக்கி வடிவமைப்பாளர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அதே துப்பாக்கிகளால் மரணம். தமது கடந்த காலதவறுகளுக்காக உலகிலுள்ள அனைத்துத் துப்பாக்கிகளும் பகிரங்க மன்னிப்புக் கோரின. தாமில்லாத அழகிய உலகொன்றுக்கான கடைசிப் பிரார்த்தனையுடன் அனைத்துத் துப்பாக்கிகளும் தற்கொலை செய்து கொண்டன. z', ஆகாசனுக்கு மகிழ்ச்சி பீறிட்டது. உதட்டைக் குவித் விசிலடிக்க எத்தனித்தபோது சப்பாத்துக் கால்களின் மிதிப்பில் நெரிபட்டு சருகுகள் எழுப்பும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்த ஆகாசனின் அயர்ந்த தூக்கம் சட்டெனக் கலைந்தது. ஆகாசனின் தலைக்கு மேல் விமானம் வட்டமிட்டது. சுற்றிலும் டாங்கிகள் ஊர்ந்து நகள்ந்து வந்தன. இரும்புத்தலைக்கவசக்காரனும் அவனது துப்பாக்கிக்காரர்களும் நெருங்கி வந்து கொண்டிருந்தனர். தான் உறங்கிக் கொண்டிருந்த கல்லறையைத் தாண்டியோட எத்தனித்த ஆகாசனின் கால்களைத் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. இரும்புத் தலைக்கவசக்காரன் உரத்த குரலில் கத்தினான். "ஆகாசன்! நீ கைது செய்யப்படுகிறாய்” இருள் மெல்ல விலகத் தொடங்கியிருந்தது.
101

Page 61
of
எமக்கு வேறுகிளைகள் இல்லை
WESTERN JEWELLERY
S
CUTTING CENTRE
244, N.C. Road, Trimcomalee. 02 6 - 2 0 ፋ 13
FRANCISENTERPRISES
Genaral Merchants & Commisson Agents
5pare parts,Cement. Out-boat 5pare Parts Authorised Dealers for
YANMAR YAMAHA SUZUK
& Genuine Spare Parts Etc.
Grand Bazar, Mannar. T.P.- 023-32135 O23-32424
102

2002 - ( ڈرص (79% تو (ڈرو”کوی
உங்கள் பார்வையைப் பலப்படுத்தி முகத்துக்கும் அழகாகும் சகலவிதமான மூக்குக் கண்ணாடிகளுக்கும்,
VISION CARE
0PTICALS
(கண் பரிசோதனையையும் olouautubb)
209, Dockyard Road, Trincomalee.
ஆண் பெண் இருபாலாருக்குமான சிகையலங்காரத்திற்கு
LANKA
SALOON
எமக்கு வேறுகிளைகள் இல்லை
"வாசகர்களுக்கு எமது வாழ்த்துக்கள்”
209, Dockyard Road, Trinoomakee
சகலவிதமான தைத்த ஆடைகளுக்கும்,
|LOVEV ST10||
(சகல தையல் ஓடர்களும் எடுக்கப்படும்)
இல,355,பிரதான வீதி, திருக்கோணமலை.
026-23335
103

Page 62
வீட்டுக்குத் தேவையான சகலவிதமான அத்தியாவசியப் பொருட்கள்
p43gud பத்திரிகை வகைகளுக்கு,
BASH SHOP
221, Dockyard Road, Trin Comalee,
Jr Jrrð பெருகT) சிக்கென்ற உங்கள் aforiuri Glarusias
ਣੀਣੀ உங்கள் வியாபார
ககன வலையல சறநத 0 A 2
66 óJ6ö了 ஆடை தேட, நிறுவனத்திற்
விளம்பர பலகைகள், O பதாகைகள் மற்றும் d 6) திரையரங்குகளில் காண்பிக்கப்படும் O சினிமா ஸ்லைட் எம்மோரியம் | .
விலையில் வரைந்து கொள்ள
O ஜீவன் ஆர்ட்ல்
137, வடகரை விதி 26ஈ, கடற்காட்சி வீதி, திருக்கோணமலை. திருக்கோணமலை
தொ.பே. 0777 - 14 12 63 O2 6 - 22 O 3
104

2002 - وز990D ؤږي نو'کی
சகல விதமான மருத்துவத்திற்கும் மருந்துவகைகளுக்கும்
UPPUWELI MED CLINIC
உப்புவெளிச்சந்தி, உப்புவெளி. திருக்கோணமலை.
உங்கள் சிகையலங்காரத்திற்கு, சகல விதமான
F6)6) உபகரணங்களுக்கும்
SALOON
DE LASER
BEAUTY | STATIONERS
54, 24,
Powerhouse Road, Main Street Trincom alee Trincomalee.
U5

Page 63
of
J.S.P.. INTERNET CAFE
Prop-S.Gnanachandran
Internet & E-mail Service,
Computer type Setting (Laser & Color) IDD & Local Calls, Fax,Computer Accessories,
CD Writing. Computer Repairs,Internet Calls.
No.380CourtRoad, Trinoomakee. Tel/Fax-0094262704, 2732,27396
Web Site - gnany.8m.com E-mail : jspint@sltnet.ik &jsp2001int@yahoo.com
OORONATION இலத்திரனியல், மின்னியல் சார்ந்த STORES சகல விதமான உபகரணங்களுக்கும்
Electrical Goods Fancy Goods
Stationary HAR Sports Items ELECTRONICS Baby & Gift Items Wholesale & Retail
172, EHAMBHARAM 102,
ROAD, RajavarothayamStreet, TRIN COMALE E... Trin Comalee,
Ο O26-21867 O26-22445
106

சிறப்புத் தொகுப்பு - 402
நோயல் கொண்ஸ்ரக்ஷ2ண்
கட்டட வேலைகள் கட்டப்பொருட்கள் விநியோகம் என்பவற்றிற்கு எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
323, ஏகாம்பரம் வீதி, திருக்கோணமலை
T.P.- 026-21085
026-23141 FAX - 026-21085
107

Page 64
oboj
குறிஞ்சி alad Tu QJguo nasunais||
உங்களுக்குத்தேவையான R.T KA NT4
விவசாய இரசாயனங்கள்
உரவகைகள் TAILORING
தெளிகருவிகள் / உதிரிப்பாகங்கள் மரக்கறி விதைவகைகள்
நீரிறைக்கும் இயந்திரங்கள் சகலவிதமான ஆடைகளையும் உட்பட அனைத்து விவசாய ಅಸಿನ್ತನ
உள்ளீடுகளுக்கும் எம்மை நாடவும்.
206B,பிரதான வீதி, தி P & P
ருஞானசம்பந்தர் விதி, க்கோணமலை. 40 ಕೌಲ್ಟ್ರ திருக்கோணமலை,
கிளை - 2ம் வட்டாரம், நிலாவெளி.
ESSE
C O M M N CATION
INOOOR & OUTOOORPHOTOGRAPHERS,
VED FILMN & COMPUTER MXN
305A, COURT ROAD, TRINCOMALEE
026-243,2365,2368
108

சிறப்புத் தொகுப்பு - 2002
சகல விதமான கட்டடப்பொருட்களுக்கும்
; WCW 0ே24மAM : COMMAMVY :
28,Seaview Road, Trincomalee.
026-22619
026-22405

Page 65