கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானொலி மஞ்சரி 1999.12

Page 1
〜
Ź,
*8 22,-
**
3深
전서원 &ZZZZZZZZZZZZZZZ
22,2 |-沁 s.*...! い %、 ^*ZZZZZZZZZZZZZ 爵) ŹŹ Źz.
《》)
"
N
s. 绍
"
A.
T
""
È
இ
円
 
 

*翼) soos (*
|혁환的* Ź,
^
^
- 影[
而)
N
舞
藏
ா தேவதாஸ்
---| || !=- ---- 5년『불 -----! *** TT -= 잃舞舞蹟 511 -_-, o.几–, s 3. * 후 현, 홍: MF 또 : 義的 하 邬明帝派汀 . 니사: 山國 := * *T
AH THENATHAS

Page 2


Page 3
டிசெம்பர். 1999
காப்பாளர்கள் திரு. ஜனதாச பீரிஸ் (தலைவர்/இஒ.கூ)
திரு. எரிக் பெர்ணாண்டோ (மா. அதி பர்/ இ.ஒ.கூ)
திருமதி அருந்ததியூரீரங்கநாதன் (பணிப்பாளர் தமிழ்ச் சேவை இஒகூ)
துணை ஆசிரியர்
மயில்வாகனம் சர்வானந்தா
(рды GO)16. ரி உருத்திராபதி
ஆசிரியர் குழு ராதை குமாரதாஸ் பி.என். ஜயசீலன் எம்.எச்.எம். ஹாரிஸ்
வானொலி மஞ்சரி
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தபால்சிட்டி gà: கொழும்/- 07
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 4
இ ங்ங்னம், இல்லறத்தைப் பந்தத்துக்கு அதாவது தீராத துக்கத்துக்குக் காரணமென்றும், துறவறம் ஒன்றே மோகூடித்துக்குச் சாதனமென்றும் கூறும் வேறு சில துறவிகளைப் போலவே சொல்லாமல், இரண்டும் ஒருங்கே மோகூடித்துக்குச் சமமான சாதனங்கள் என்று சொல்லியதே நமக்குப் பெரிய ஆறுதலாயிற்று. சம்சார சுகங்கள் கூடத் துன்பங்களுக்கே வழிகாட்டுகின்றன வென்றும், ஆகவே எல்லா வகையினும் இகலோக வாழ்க்கை துன்பத்தைத் தவிர வேறில்லை யென்றும் சொல்லிச் சில பிற்காலத்துத் துறவிகள்'வீட்டையும் பெண்டு பிள்ளைகளையும் துறந்து விட்ட மாத்திரத்திலேயே ஒருவன் இகலோக வாழ்வைத் துறந்து விட்டானாகிறான்’ என்ற பிழைக் கருத்துக் கொண்டவர்களாய், ஊர்தோறும் சுற்றிக்கொண்டு வீடு வாயில் சுற்றும் துணை இனம் ஏதும் இல்லாதவர்களாய், பரிச்சையெடுத்து வயிறு வளர்க்கிறார்கள். இக் கூட்டத்தாரின் வாழ்க்கை மகா பரிதாபகரமானது. இந்தக் கூட்டத்தாரில் இடையிடையே சிற்சில இடங்களில் சிற்சில மகான்கள் அளவற்ற பக்தியுடையோராகவும், வரம்பற்ற ஜீவகாருண்யமுடையோராகவும் தோன்றுகிறார்கள். மற்றும் அவர்களில் பெரும்பான்மையோருக்கு ஒரு விதமான முக்தித் தோட்டம் இருக்கத்தான் செய்கிறது. எனினும் இவர்களில் மிகப் பெரிய மகான்கள் கூட, உலகத்தில் மானுடர் எய்தற்குரியதாகிய பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தனர் என்று கூறத் தகாது. வேத காலத்தில் இந்தத் துறவு வழி ஹிந்துக்களுக்குள்ளே இருந்திருப்பதாக சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். வசிஷ்டர், வாமதேவர் முதலிய வேதரிஷிகள் அத்தனைபேரும் மணம் புரிந்து கொண்டு மனைவி மக்களுடனேயே இன்புற்று வாழ்ந்தனர். புலன்களை அடக்கியாளும் பொருட்டாக, அக் காலத்து ரிஷிகள் பிரம்மசாரிகளாக இருந்து நெடுங்காலம் பலவகைக் கொடிய தவங்கள் செய்ததுண்டு. ஆனால், குறிப்பிட்ட காலம்வரை தவங்கள் செய்து முடித்துப்
 
 
 

பகவத்கீதை
Iguilei
பின்பு இல் வாழ்க்கையுட் புகுதலே மகரிஷிகளுக்குள் வழக்கமாக நடைபெற்று வந்தது. மஹா பாரதத்திலும் மற்றப் பூர்வ புராணங்களிலும் வேதரிவுகளைப் பற்றிய கதைகளும் சரித்திரங்களும் ஒரே சித்தாந்தமாக வேத ரிஷிகளுக்குத் துறவறம் என்ற விஷயமே இன்னதென்று தெரியாது என்ற என் வார்த்தையை நிலைநிறுத்து கின்றன. மேலும் சுவாமி விவேகானந்தர் வேதத்தின்
பிற்சேர்க்கைகளாகிய D-LI நிஷத்துக்களையே முக்கியமாகப் பயின்றவர். இந்த உப நிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம் இவை வேத ரிஷிகளால் சமைக்கப்பட்டனவல்ல. பிற்காலத்தவர்களால் சமைக்கப்பட்டன. ஸம்ஹிதைகள் என்று மந்திரங்கள் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள் அவையே ஹிந்து மதத்தின் வேர். அவை வசிஷ்ட வாமதேவாதி தேவ ரிஷிகளின் கொள்கை களைக் காட்டுவன உபநிஷத்துக்கள் மந்திரங்களுக்கு விரோமல்ல, அவற்றுக்குள் சாஸ்திபுர முடிவு. அவற்றின் சிரோ பூஷணம் ஆனால், பச்சை வேதமென்பது மந்திரம் அல்லது ஸம்ஹிதை எனப்படும் பகுதியேயாம்.
இந்த மந்திரங்கள் அல்லது ஸம்ஹிதைகள் பழைய பழைய மிகப் பழைய ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருக்கின்றன. அதாவது. வேத்ங்களின ஸம்ஸ்கிருதம் மதுரைச் சங்கத்துக்கு முந்திய தமிழைப் போலவும் உபநிஷத்துக்களின் பாஷை சங்கத்துக்குப் பிந்திய தமிழைப் போலவும் இருக்கின்றன.
எமது இதயங்கனிந்த நத்தார் வழித்துக்கள்
(தொடர்ச்சி. பக்கம் 18)

Page 5
மிகவும் பழைய காலந்தொட்டு மார்கழி மாதத்தை கடவுளை வழிபடுவதற்கான சிறந்த மாதமாகக் கரு வந்திருக்கிறார்கள். இறைவனை வழிபடவே இம் மாதத்ை ஒதுக்குவதால் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் இம் மாதத்தி நடத்தப்படுவதில்லை. மனிதர்களுடைய ஒரு ஆண்( தேவர்களின் ஒரு நாள். அதன்படி தை மாதம் தேவர்களுக்கு ஞாயிறு. அது முதல் ஆறு மாதம் அவர்களுக்குப் பக விடியற்காலம். எனவே அப்போது - அதுவும் பிரம்ம நல்வே6ை எனப்படும் வைகறை நேரத்தில் செய்யப்படும் வழிபா( உள்ளத்தைப் பண்படுத்த வல்லது.
மார்கழித் திருவாதிரை நாளன்று அதிகாலையி நீராடி தெய்வீக பாவையைக் குறித்து நோற்கப்படும் பாை நோன்பு தமிழ்நாடு முழுவதும் நோற்கப்பட்டு வந்தது. இந் நோன்பு இப்பொழுது சேர நாடான கேரளத்தில் சக கன்னிகைகளாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அவர்கள் விடியற்காலை துயிலெழுந்து ஒவ்வெர்ருவரும் வீடு வீடாக சென்று தோழிகளுடன் நீராடச் சென்று நீராடி இறைவனை
வழிபட்டு உதயத்திற்கு முன் வீடு திரும்புவர். இவ் விரதே ஆண்டாள் மாணிக்கவாசகர் காலத்தில் சோழ, பாண்டி நாடுகளிலும், மாணிக்கவாசகர் தன் திருவெம்பாவையிலு குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த நோன்ன பெண்களே அனுஷ்டிப்பது வழக்கம். மழை பெய்து, நா செழிக்கவும், நல்ல கணவர்களை அடையவும், மணமானவர்க தங்கள் கணவர் தீர்க்காயுசுடன் இருக்கவும் இவை எல்ல பொருத்தமாகத் திருவெம்பாவை, திருப்பாவையி கலந்திருக்கின்றது. இப்பாடல்களில் பிரஸ்தாபிக்கப்ப( தூக்கம் அஞ்ஞானத்தைக் குறிப்பிடுகிறது. பனி நீராட பக்தியுடன் இறைவனோடு ஒன்றியிருப்பதைக் காட்டுகிற அறியாமையை உதறித்தள்ளி விட்டு மயக்க இருளை வி ஞான சூர்யோதயம் காண இப்பாடல்கள் அழைக்கின்றன இப்பாவையமுதங்கள் மார்கழி மாதத் தெருவெல்லாம் மணம் பரப்பி பக்திச் செழுமையும், இன திறமையும் வளர்த்து மக்களைப் பரவசப்படுத்துகின் திருவெம்பாவை மாணிக்கவாசகப் பெருமான திருவண்ணாமலையில் பாடப்பெற்ற சுவை மிகுந்த கவினு பாமாலையாகும். திருவெம்பாவை ஒதும் போது ஆரு திருநாளில் தன் ஆடல் காட்டி அருள்பாலி பொன்னம்பலவாணரை நினைந்து உருகித்தொ
 
 

வாய்ப்புகள் கிட்டுகின்றது. பரமன் அகண்ட வஸ்து. அவன் பெரும் ஜோதி. அவன் மகிமையை நாங்கள் பாடிக் கொண்டு வருகிறோம். தோழி நீயோ தூங்கிக் கொண்டிருக்கிறாய். "ஈதே எந்தோழி பரிசலோர்" எம் பாவாய் தோழி நீ இதை ஒர்ந்து எண்ணிப்பார். இப்பெரு நிலையைப் பெற முயல்வாயாக, என்று ஒருத்தி பாடுகிறாள். இதிலே பரபோதத்தில் வழிப்படைந்த ஜிவாத்மாவையும் பக்தி லட்சணம் விளங்கப்பட்டுள்ளது. மக்கள்
உலக வாழ்க்கையில் உழன்று கொண்டு இருக்கின்றனர். அப்படி இருப்பது உறங்குவதற்கு சமானம். அவர்களுக்கு உலக விஷயம் பகலாகவும், தெய்வீக விஷயம் இரவாகவும் இருக்கும். பரபோதத்தில் இருப்பவர்க்கு தெய்வீக விஷயம் பகலாகவும், உலக விஷயம் இரவாகவும் இருக்கும் என்பதாகும்:
அழகிற் சிறந்த பெண்ணே, தொடக்கமோ, முடியோ இல்லாத அரும்பெரும் அகண்ட ஜோதி வடிவினனான பரமேஸ்வரனை நாங்கள் நாவினிக்கப் பாடுவதைக் கேட்டுமா நீ தூங்குகிறாய்? உன் காதுகள் செவிடா? விரக்கழல் அணிந்த திருவடித்தாமரையை போற்றி புகழ்பாடுவதைக் கேட்டதும் என்ன செய்வதென்றறியாமல் தன்னை மறந்து மலர் தூவிய படுக்கையில் நின்றும், புரண்டும் தரையில் விழுந்து ஒருத்தி செய்வதறியாமல் தவிக்கிறாள். நீயோ இன்னமும் தூக்கத்தில் இருந்து விழித்தெழாமல் இருக்கிறாயே. என்ன ஆச்சரியம் என்று கூறிக் இருக்கும் ஒரு பெண்ணை அவ் வீட்டின் முன் நின்று அழைக்கிறார்கள். செவி படைத்த பயன் ஈசனின் திருநாமங்களைச் சொல்லிப் பாடுவதைக் கேட்டு இன்புறுவதற்கே. கண்படைத்த பயன் பெரியோர்களை நாடிச் சென்று அவர்கட்கும் நல்வழியில் செல்வதற்கே. இதை உணராது படுத்து உறங்குகிறோமே என்ற உள்ளுணர்வு தூண்டுவதாகும். திருவெம்பாவைப் பாடல்களில் மகளிர் நாடு வளஞ்செழிக்க. மழை பொழிய வேண்டும் தாம் விரும்பிய தலைவர் தமக்கு கிடைக்குமாறு வேண்டுவதும் அவ்வாறு தம்மால் விரும்பப்படும் தலைவர் இறைவனது தொண்டராய் இருப்பவராய் அமையுமாறு வேண்டுவதுமாகிய கோரிக்கை களை நிறைந்து கிடக்க காண்கிறோம். சிவபிரானின் அடியவர்க்கு தாம் வாழ்க்கைப்பட்டு அவ்வாழ்க்கையினூடே சிவபிரானுக்குத் தொழுகை செய்வதையே கேட்கிறார்கள் எனக் காட்டப்பட்டுள்ளது. திருவெம்பாவை பாடல்கள் ஒவ்வொன்றும் படிக்கும் போது இசைச் செறிவாய், தேனாய் இனித்து சொல் வனப் போடிணைந்து பொருள் வளத்தால் தெவிட்டாத இலக்கியமாய் மலர்ந்து நுணுகி நோக்கத் தக்க தத்துவப் பொருளாய் விரிந்து நின்று இன்பம் பயப்பன.
(தொடர்ச்சி. பக்கம் 18) *

Page 6
ரெலாறு என்றால் வந்த வழி என்று பொருள்
மலையக மக்கள் வந்த வழி எது? சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் கோப்பித் தோட்டங்களும் தேயிலைத் தோட்டங்களும் ஆரம்பிக்கப்பட்ட போது இந்தியாவில் இருந்து வந்த இந்த மக்களின் வழி எது?
காடுகள், மலைகள், கொடிய விலங்குகள் நிறைந்த ஒற்றையடிப் பாதைகளில் மலையகத்தைச் சென்றடைந்தனர் இந்த மக்கள். மலைகளின் அகமாக விளங்கிய மலையகத்தைத் தமது அகமாக மாற்றிக் கொண்டவர்கள் இந்த மக்கள். இந்த மக்கள் வரும் போது கூட வெறுமனே வரவில்லை.
உற்றார், உறவினரைத் துறந்து சிறப்பான வாழ்வு கிடைக்கும் என்ற நம்பக்கையில் இந்த மக்கள் கடல் கடந்து இலங்கை மண்ணில் காலடி வைத்தபோது, அவர்கள் எதிர்பார்த்த உதயசூரியன் அவர்களின் வாழ்வில் உதிக்கவில்லை. வெள்ளைக்காரர்களின் ஏஜெண்டுகளான கங்காணிகளால் இவர்கள் வஞ்சிக்கப்பட்டனர் வந்த வழியில் நோயுற்றோர்.பலர் கொடி விஷ ஜந்துக்களால் உயிரிழந்தோர் பலர் சொர்க்க பூமிக்கு அழைத்து வரப்பட்ட இவர்களில் எஞ்சியவர்கள் மிகக் குறைந்தவர்கள் தான்.
ஏறக்குறைய எழுபது வருட காலம் ஆங்கிலேயத் துரைமாருக்கும் தம்மை அழைத்து வந்த கங்காணிமார்களுக்கும் கொத்தடிமைகளாய் இருந்த மக்களுக்கு விமோசனம் அளிக்க யாரும் இருக்கவில்லை.
வெள்ளைத் துரைகளும் கங்காணிமார்களும் இட்டதே தோட்டத்துச் சட்டம். வெள்ளைத் துரைமாரும் கங்காணிகளை நம்பித்தான் இருந்தார்கள். அவர்களுக்கு வேண்டியது தொழிலாளர்களின் உழைப்பு. அந்த உழைப்பைப் பெற்றுக் கொடுக்க, ஒரு சில பென்ஸ் பணத்துக்காகத் தொழிலாளர்களை ஈவிரக்கமின்றி சுரண்டினர் இந்தக் கங்கானிமார்கள்.
பென்ஸ் பணம் என்றால் என்ன? ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு வேலைக்குச் சென்றால் அதற்காக, நன்றிக் கடனாகக் கங்காணிக்குக் கொடுக்கப்பட்ட பணம் தான் பென்ஸ் இந்தப் பென்ஸ் பணத்தில் கங்காணிமார்களும்பெரும் பணக்காரர்களாக மாறினர். இந்த வெள்ளையர்களும் சரி கங்காணிமார்களும் சரி இந்த மக்களைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை.
1939ம் ஆண்டு ஜுலை மாதம். பண்டித ஜவஹர்லால் நேரு இலங்கைக்கு வந்திருந்தார். அரசாங்கத்தில் பணியாற்றிய இந்தியத் தமிழர்களை சேவையில் இருந்து
 

நிக்குவதற்கு இலங்கை அரசாங்கம் முடிவு செய்திருந்தது. இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்காகவே நேரு இலங்கை வந்தார். அன்றைய தினம் அதிகாலையில் தான் அதுவும் அதிகாலை 120க்கு இலங்கை - இந்தியன் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அது தொடர்பான உடன்பாட்டில் நேரு கைச்சாத்திட்டார்.
அரசாங்க உத்தியோகத்தில் இருந்த இந்தியர்களுக்க ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்ப்பதற்காக இலங்கை - இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போதிலும் ஜவஹர்லால் நேரு இந்தப் பிரச்சினையை வேறு விதமாகப் பார்த்தார். இந்தப் பிரச்சினை அரசாங்க உத்தியோகம் பார்த்தவர்களுக்கு மாத்திரமல்ல, தோட்டங்களில் தொழில் புரிவோருக்கும் உரியதாக இருக்கும் என்பதை அவர் கண்டார். இதன் காரணமாக, கொழும்புக்கு வெளியிலும், குறிப்பாக மலையக் பகுதிகளிலும் இலங்கை இந்தியன் காங்கிரஸை உருவாக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். இலங்கை - இந்திய காங்கிரஸ் இவ்வாறு உதயமானது என்றால், அதன் முதல் கதிர் கம்பளையில்தான் முகிழ்ந்தது. இத்தகைய ஒரு அமைப்பு தமக்குத் தேவை என்பதை தொழிலாளர்கள் எந்த அளவுக்கு உணர்ந்திருந்தார்கள் என்பதெல்லாம் புதுமையானதல்ல.
இந்தக் கம்பளை மாவட்டக் குழுதான் இலங்கையின் சரித்திரத்தை மாற்றி வைக்கும் ஒன்றாக உருவெடுத்தது என்றால் அது மிகையல்ல. வெள்ளையர்களின் ஆதிக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்திய மக்கள்

Page 7
விரோதம் ஆகியன எல்லாம் முறியடிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை அன்றைய மலையகத் தலைவர்கள் உணரத் தலைப்பட்டனர். 1939ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி கம்பளையில் ஒரு மாநாடு நடந்தது. இலங்கை இந்தியக் காங்கிரஸ் உருவாகி ஒரு மாத காலத்துக்குள் கூட்டப்பட்ட இந்த மாநாட்டில் மூவாயிரம் பேர் கலந்து கொண்டார்கள்.
இந்த மாநாட்டில் தான் மாதவன் உதித்தான். ஆமாம், மலையக மககளின் இருளைப் போகக, அவர்களை வழிநடத்த ஒரு மாதவன் தோன்றினான். அஹிம்சை என்ற ஆயுதத்தை ஏந்தி, அகிலமெல்லாம் போற்றிட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் வல்லமை படைத்த ஒரு மாதவன் தோன்றினான்.
ஆம். லட்சோப லட்சம் மக்களுக்குத் தெய்வப் பிறவியாக விளங்கிய தொண்டமானுக்கு அவரது தந்தையார் கருப்பையாவும் அவரது தாயாரும் வைத்த பெயர் மாதவன். பின்னர் அவர் செளமியமூர்த்தியானார். பின்னர் செளமியமூர்த்தி தொண்டமான் ஆனார். மாதவன் என்று பெயர் வைத்த பெற்றோர், அவர் இந்த மண்ணுக்கு விழவெள்ளியாக விளங்குவார் என்று எண்ணியிருக்க மாட்டார்கள். ஆம் கம்பளையில் நடந்த இலங்கை -இந்தியன் காங்கிரஸ் மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராகத் தெரிவானார். அதன் பின்னர் கம்பளை மாவட்டக் குழுவின்தலைவராக ஏகமனதாகத் திரு. தொண்டமான் தெரிவானார்.
இலங்கை - இந்தியக் காங்கிரஸின் கம்பளை மாவட்டத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தொன்டமான், மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கான போராட்டத்தின்தலைமைப பொறுப்பையும் அன்று ஏற்றுக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும். இந்தியத் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் இன்று நேற்று ஆரம்பமானவை அல்ல. அவற்றின் வேர்கள் 1939ம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தவை. இவை எல்லாம் தொண்டமானின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தவை
இலங்கை - இந்தியன் காங்கில் ஒரு பொது அமைப்பாக இருந்தாலும் அது தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதாக இருக்கவில்லை. இலங்கையில் இருந்த இந்திய வம்சாவழியினரின் பொது அமைப்பாக அது விளங்கியது. எனவே, தொழிலாளர்களான இந்திய வம்சாவழியினரின் உரிமைக் குரல் எழுப்ப தனியானதோர் அமைப்பு வேண்டும் என்ற எண்ணம் வெகு சீக்கிரத்திலேயே உருவானது. 1940 ம் ஆண்டு மே மாதம், அப்புத்தளை கதிரேசன் கோவிலில் இலங்கை இந்தியக் காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் உதயமானது. இந்தியாவில் இருந்து தேர்ச்சியற்ற தொழிலாளர்கள் வருவதன் மீது விதிக்கப்பட்ட தடையுடன் மலையகத்தில் தொழிற்சங்கங்கள் மலர்வரும் சாத்தியமாயிற்று. இலங்கை - இந்திய காங்கிரஸின் தொழிலாளர் சங்கம் ஆரம்பித்த பின்னர் தொழிலாளர்கள் நடத்திய முதலாவது வேலைநிறுத்தம் புசல்லாவரம்பொடைத்
 

தோட்டத்தில் 1940ம் ஆண்டு ஏப்ரில் 13ம் திகதி நடந்தது. தோட்டத்துக் கணக்குப்பிள்ளையை வேலைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் தொழிலாளர்கள் அனைவரையும் பெரிய கங்காணி அம்மையப்பப் பிள்ளையின் பொறுப்பில் இருந்து தோட்டக் கணக்கில் பெயர் பதியவேண்டும் என்றும் 700 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இதற்கு ஒரு մոéégյé(ծ முன்னர் தான் ஹேவாஹெட்டையில் முள்ளோயா கோவிந்தன் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானான். இந்த நாட்டின் தொழிலாளி வார்க்கத்துக்காக உயிர்துறந்த முதல் மனிதன் இவன்தான்.
முள்ளோயா தோட்டச் சம்பவம் தொண்டமானின் சிந்தனையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.தோட்டத் தொழில்துறையில் தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சிக்கு முள்ளோயோ வேலைநிறுத்தம் ஒரு முக்கியமான அம்சம். மலையக் போராட்டத்தின் வரலாறு இங்கிருந்துதான் ஆரம்பமாகின்றது எனலாம். 1940ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மாநாடு இலங்கையில் இந்தியத் தொழிலாளர்களின் நிலைமையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. இந்திய - இலங்கை அரசாங்கத் தூதுக்குழுக்களுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் இளைஞனான இருந்த தொண்டமான் இந்தப் பிரச்சினைகளில் தீவிரமாக ஈடுபட்டார். இந்த மாநாடு 1940ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெற்றது. இந்தத் தூதுக்குழுவுக்குப் பெரி சந்தரம் தலைமை தாங்கினார்.தனது உதவியாளராக திரு. தொண்டமானை அழைத்துச் சென்றார் பெரி சுந்தரம் 1936ம் ஆண்டு டி.எஸ். சேனநாயக்க அமைத்திருந்த அரசாங்கம் இந்தியத் தொழிலாளர்களை ஒரு தலைப்பட்சமாக வேலைநீக்கம் செய்யவும் அவர்களை நாடுகடத்தவும் தீர்மானித்திருந்தது. இத்தகைய உனர்வுகள்தான் இலங்கை -இந்தியன் காங்கிரஸை உருவாக்கக் காரணமாக இருந்தன. இத்தகைய அனுபவம் தொண்டமானைப் புடம் போட்டது. இருந்த போதிலும் அந்தக் காலப்பகுயில் மலையகத்தில் இருவேறு போக்குகள் தோன்றின என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்தக் காலப்பகுதியில் பெரிய கங்காணிமார் சங்கம் கூட உருவாகியது. இதுபோன்று மலையகத்தில் அப்போதுதான் சங்கங்கள் உருவாகத் தொடங்கின. அந்தக் காலப்பகுதியில் பெரும் பாலும் பெரிய கக்ாணிகள், கங்காணிகஆகியோருக்கு எதிராகத்தான் முறைப்பாடுகள் கிடைத்தன. தோட்டத் தொழிலாளர்களைக் கங்கானிமாரின் தளையில் இருந்து விடுவித்து தோட்டக் கணக்கில் சேர்க்குமாறு கோரிக்கைகள் எழுந்தன. 1940ம் ஆண்டுகளில் ஆரம்பமான லங்கா சமசமாஜக் கட்சி போன்றவை இந்தக் கங்காணிமார் முறையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கத் தொடங்கின. கங்கானிமார் முறை மலையத் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக வைத்திருந்தது என்பதை நாம் பிறந்துவிட முடியாது. 1940ம் ஆண்டு ஜுலை மாதம் கைச்சாத்திடப்பட்ட

Page 8
ஏழு அம்சத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள தோட்ட நிர்வாகி மறுத்தனர். தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற பேச்சுவார்த்தைகள்நடத்துவதற்காகத் தொழிற்சங் பிரதிநிதிகள் தோட்டங்களுக்குச் செல்வதற விதிக்கப்பட்டிருந்த தடை அறுபதாம் ஆண்டுகளில் தா நீக்கப்பட்டது. இலங்கை வாழ் இந்தியர்களுக்கு எதிராக தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்யி போதிலும் 1944 ம் ஆண் அக்டோபர் மாதம் 12ம் திகதி இலங்கை வந்திரு இலங்கைக்கான இந்திய முகவர் எம்எஸ்னேயை வரவே நிகழ்ச்சியில் தொண்டமான் உயைாற்றினார். 'இலங்கை வ இந்திய சமூகத்தினர் நாட்டில் உள்ள ஏனைய சமூகங்களுட சேர்ந்து பணியாற்றுவும் தேசிய முன்னேற்றத்துக்கு நல்வாழ்வுக்கும் பணியாற்றவும் விரும்புகின்றன துரதிருஷ்டவசமாக 1928ம் ஆண்டின் டொனமூர் அரசி, அரசியல் யாப்பின் காலத்தில் இருந்து இந்திய சமூகத்தி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகவும் இ நாட்டில் இந்தியர்கள் அந்நியர்களாகக் கருதப்படுகின்றார்க என்று வலியுறுத்தினார் தொண்டான்.
திரு. தொண்டமானை அரசியலுக்குக் கொண் வந்த சம்பவம் தான் நேவ்ஸ்மையர் தோட்ட விவகார கேகாலை புளக்கோபிட்டியவில், அதாவது வெற்றிலையூா உள்ள தோட்டம்தான். 777ஏக்கர் தோட்டம் அகலவத்தைை சேர்ந்த ஈ.எல்.எம். இப்ராஹிம் லெப்பை மரைக்க என்பவருக்குச் சொந்தமாக இருந்த, டி.எஸ்.சேனநாயக்கவின் அரசாங்கம் இந்தத் தோட்டத்ை வாங்கி இந்தியர்களை வெளியேற்ற முனைந்தது. கிர விஸ்தரிப்புத் திட்டங்களின் பெரும்பான்மை மக்களை குடியேற்ற முனைந்தது. அரசாங்கம் பகீரதயப் பிரயத்தன செய்தும் தொழிலாளர்களை விரட்ட முடியவில்லை. இந்: சம்பவம் தொண்டமானின் மனதில் ஆழப் பதிந்திருந்த 1945ம் ஆண்டு ஏப்றல் மாதம் நாவலப்பிட்டியில் நடந மாநாட்டில் இலங்கை - இந்தியக் காங்கிரஸின் தலைவராக தொண்டமான் மீண்டும் தெரிவானார். மலையகக் காந்திஎண் போற்றப்பட்ட கேராஜலிங்கம் பொதுச் செயலாளர்ஆனார். ஒ வருடம் கழித்து, நுவரெலியாவில் இலங்கை இந்திய காங்கிரஸின் ஆறாவது மாநாடு நடந்த போது தொண்டமா , இப்படிச் சொன்னார். "சோல்பரிஆணைக்குழுவின் அறிக்ை பற்றி ஆராய்ந்த போது, ஒரு வருட காலத்துக்குள் தன தலைமுடியே நரைத்து விட்டது."
திரு. தொண்டமான் இலங்கை இந்த காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய காலம் - 1939 முத 1945/1946 வரை மிகவும் சிரமமான காலகட்டம் இரண்டாவ உலக மகாயுத்தம் அப்போதுதான்நடந்து கொண்டு இருந்த இலங்கையில் சிவில் உரிமைகளை மேற்கொள்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தொழிற்சங்கங்க பெரும் சிரமங்களை எதிர்நோக்கின. தோட்ட நிர்வாகிக தொழிலாளர்களை, அதுவும் தொழிற்சங்கங்கள ஈடுபட்டவர்களைப் பழிவாங்கினர். நிர்வாகிகளை
 

கட்டுப்படுத்த யாரும் இருக்கவில்லை. இந்தநிலையில் 1947ம் ஆண்டு செப்டம்பர்16 திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை இந்தியக் காங்கிரஸ் நிறுத்திய வேட்பாளர்கள் எட்டு பேரில் ஏழு பேர் வெற்றி பெற்றனர். அப்புத்தளை தொகுதியில் நான்கு இந்திய வம்சாவழியினர் போட்டியிட்டதால் அதில் தோல்வி ஏற்பட்டது. திரு. தொண்டமான் நுவரெலியா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். 24 ஆயிரத்து 368 வாக்குகளைப் பெற்று தொண்டமான் வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜேம்ஸ் ரட்னத்துக்கு 3251வாக்குகள் கிடைத்தன. யுத்த காலத்தில் இலங்கை - இந்திய காங்கிரஸ் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது. ஒரு புறம் வெள்ளையர்களான தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் மீது நடத்திய அடக்குமுறை, மறுபுறத்தில் இலங்கை சுதந்திரம் பெறுவதற்காக துடித்துக் கொண்டிருந்த போது தேசிய மட்டத்தில் ஏற்பட்ட இனத்துவேஷம் பல்வேறு கொள்கைகளைக் கொண்ட தொழிற்சங்கங்களுடன் போட்டியிட்டு இலங்கை இந்திய காங்கிரஸை பலப்படுத்த வேண்டிய நிலைமை ஆகியன இந்தக் காலப்பகுதியல் முக்கியஅம்சங்களாகும். இவற்றை அமைச்சர் தொண்டமான் தனக்கேயுரிய பாணியில் நிதானமாக செயற்பட்டு வெற்றி கொண்டார்
இதுவரை காலமும் கருத்து முரண்பாடுகள் இல்லாமல் இருந்த இலங்கை இந்தியக் காங்கிரளயிலும், இலங்கை இந்திய தொழிலாளர் சங்கத்திலும் கருத்து
வேறுபாடுகள் வெளிப்படத் தொடங்கின. என்வே, உள்
மோதலினால் அது பாதிக்கப்பட வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது. இந்தத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட சூழ்நிலை இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 20 ஆண்டு கால முயற்சியின் பின்னர் 1948ம் ஆண்டு இந்திய வம்சாவளியினருக்கு பிரஜா உரிமை மறுப்பதில் டீ.எஸ். சேனநாயக்க வெற்றிபெற்றார். 1947ம் ஆண்டில் தான் இந்தியர்களின் வாக்குரிமையின் தாக்கம் உலகுக்குத் தெரிய வந்தத 1931 1936 தேர்தல்களின் போது மொத்தம் 50 ஆசனங்களில் இரண்டு இந்தியத் தமிழர்கள் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் ஆனால், 1947ம் ஆண்டு 7 பேர் தெரிவானார்கள். இந்தத தேர்தல் முடிவுகள் மற்றவர்கள் மீது செல்வாக்கைச் செலுத்தும் நிலையை ஏற்படுத்தியது. இந்தச் சட்டம் டி.எஸ். சேனநாயக்க கொண்டு வந்த இந்திய பாகிஸ்தானிய பிரஜா உரிமைச் சட்டம் 1948ம் ஆண்டில் குடிவரவு - குடியகல்வுச் சட்டம், 1949ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தானின் குடியுரிமைச்சட்டம் என்பன சுதந்திர இலங்கையில் மலையக மக்களுக்கு இருந்த சுதந்திரத்தைப் பறித்தன. இந்தக் காலப்பகுதியில் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்துவதிலும் அமைச்சர் தொண்டமான் முக்கிய இடத்தை வகித்தார்.
1952ம்ஆண்டின் பின்னர்மலையக மக்களுக்கு ஒரு மிகவும் சிரமமான கால கட்டமாகும். 1948ம் ஆண்டில் நாடற்றவர்களான இந்த மக்களின் தலையெழுத்து 40

Page 9
வருடங்கள் நீடித்து 1948லேயே முடிவடைந்தது. இந்த நாட்டை தமது தாயகமாகக் கருதிய இந்தியத் தமிழர்களின் அரைவாசிக்கும் அதிகமானோர்.தமிழகம் சென்ற பிறகு இந்த நிலைமை சாத்தியமானது. 1952ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 142 நாட்கள் இந்தச் சத்தியாக்கிரக போராட்டம் நடந்தது. இதன் மூலம் இலங்கை வாழ் இந்திய வம்சாவழியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறுக்கப்பட்ட உரிமையை உலகிற்கு எடுத்துக் காட்ட உதவியது.
இத்தகைய சூழ்நிலைகளிலும் இலங்கை இந்திய காங்கிரசோ அதன் தலைவர்களோ வன்முறைகளில் ஈடுபடவில்லை. காந்தியடிகள் போதித்த அமைதி வழியையே பின்பற்றினார்கள். 1958ம் ஆண்டு நடந்த கலவரத்திலும் மலையகத்தவர்கள் கணிசமான அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள். நாட்டின் பொருளாதாரம் என்ற ஒரே கோட்பாட்டை ஆதாரமாகக் கொண்டு அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதன் மூலம் ஆட்சியாளர்களை இனங்கச் செய்து, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் அமைச்சர் தொண்டமான் ஈடுபட்டிருந்தார் 1950ம் ஆண்டுகளில் இலங்கை இந்திய காங்கிரஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரளாக பெயர் மாற்றம் பெற்றது. 1955இல் இலங்கை தொழிலாளர் காங்கிரசிலிருந்து அளிஸ் பிரிந்து சென்றார். அவர் ஜனநாயக தொழிலாளர் காங்கிரளை ஸ்தாபித்தார்.
இதன் காரணமாக மலையக தொழிற் சங்க இயக்கம் இரண்டு பிரிவுகளாக உருவானது. அஎபீஸ் - தொண்டமான் ஆகிய இரண்டு பேருமே தத்தமது தொழிற்சங்களை உள்ளுரில் கட்டி வளர்ப்பதிலும் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெறுவதிலும் முனைந்திருந்தார்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்றது. ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உலக தொழிற் சங்க சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்றது. இருந்த போதிலும் திரு. தொண்டமான் தன்னுட்ைய அயராத உழைப்பால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை தெற்காசியாவிலேயே மிகவும் ஒரு பலமுள்ள அமைப்பாக கட்டியெழுப்பினார். 1952ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாநாட்டின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக திரு. தொண்டமான் தெரிவு செய்யப்பட்டமை அவரது உயர்ந்த தலைமைக்கு ஒர் எடுத்துக் காட்டாகும். திரு.தொண்டமானை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் எவரும் வென்றது கிடையாது. தொண்டமானை வீழ்த்தவேண்டும் என்று பலர் கனவு கண்டதுண்டு.அவர்கள் தமது சக்தியை அபரிமிதமாக மதிப்பிட்டது தான் இதற்குக் காரணமாகும். ஆனால், எத்தகைய போராட்டத்திலும் இறுதி வெற்றி தொண்டமானுக்கே கிடைத்தது. உண்மையில் சொல்லட் போனால் 1960ம் ஆண்டுகளின் பின்னர்திரு.தொண்டமானை ஒதுக்கி வைப்பதற்கு பிரதான அரசியல் கட்சிகள் விரும்பினாலும் கூட அவரிடமிருந்த மக்கள் சக்தி இந்த அரசியல் கட்சிகள் அவரிடம் நாடி வரவேண்டியேற்பட்டது.
 

இதன் விளைவாக 1960ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டுவரை தொடர்ந்து பத்து வருட காலம் திரு. தொண்டமான் பாராளுமன்றத்தில் நியமன அங்கத்தவராக நியமிக்கப்பட்டார். முதலில் பூரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்திலும் பின்னர் டட்லி சேனாநாயக்காவின் அரசாங்கத்திலும் அவர் நியமன உறுப்பினராக இருந்தார்.
1970ம் ஆண்டு வரை இருந்த வந்த நியமன பாராளுமன்ற அங்கத்தவர் முறை 1972ம் ஆண்டில் அரசியல் யாப்போடு மரணித்த விட்டது. எனவே பாராளுமன்றத்திற்கு வரவேண்டுமானால் எவரும் போட்டியிட்டுத் தான் வரவேண்டும் என்ற ஒருநிலைமை உருவானது 1977ம் ஆண்டு திரு. தொண்டமான் நுவரெலியாத்தொகுதியில் போட்டியிட்டு 3வது பாராளுமன்ற உறப்பினராக தெரிவு செய்யப்பட்டார். உண்மையில் பெரும்பாலான மலையகத்தவர்கள் இந்தியாவுக்குச் சென்ற பின்னர் பலர் பிரஜா உரிமை இல்லாத சூழ்நிலையில் திரு. தொண்டமான் இந்தத் தொகுதியில் பெற்ற வெற்றி மகத்தானது என்றால் அது மிகையல்ல. 1947ல் 7 அங்கத்தவர்களைப் பெற்றிருந்த இந்திய வம்சாவழி மக்கள் 1977ல் ஒரேயொருவரை மாத்திரம் தெரிவு செய்யுமளவுக்கு பலமிழந்திருந்தார்கள். இருந்த போதிலும் திரு. தொண்டமான் தன்னடைய பங்கைச் செலுத்தத் தவறவில்லை. 1977 1978 காலப்பகுதியில் திரு. தொண்டமான் பாராளுமன்றத்தின் பொதுக் கணக்ககுள் குழுவின் தலைவராக விளங்கினார். அரசியல் யாப்பை திருத்துவதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் பணியாற்றினார். இந்தப்பணிகளைப் பற்றி எவருக்கும் தெரியாது.
1978ம் ஆண்டு கிராமியக் கைத்தொழில் அபிவிருத்திஅமைச்சராக நியமிக்கப்பட்டதிரு. தொண்டமான், மலையக் பகுதிகளை மாத்திரமன்றி ஏனையப் பகுதிகளிலும் கிராமியக் கைத்தொழிலின் அபிவிருத்திக்கு பங்காற்றினார். அவருடைய காலத்தில் நாட்டின் பாலுற்பத்தி அதிகரிப்பதற்கு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போதும் அவர் 1984 ஏப்றல் மாதம் தோட்டத்தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தத்தை நடத்தினார். உண்மையில் அரசாங்கத்திற்கு உள்ளே இருந்து கொண்டே அரசாங்கத்திற்கு எதிராக ஆனால், மக்களின் நன்மைக்காக போராடியவர் அவர் இது மலையகத் தொழிலாளர்கள் தமது வரலாற்றில் ஆகக்கூடிய சம்பளத்தைப் பெறுவதற்கு வழிவகுத்தது. இவை எல்லாவற்றையும் விட திரு. தொண்டமான் மலையகத் தமிழர்களை நாடற்றவர்கள் என்ற அவப்பெயரிலிருந்துநிக்கிவைத்த பெருமக்குரியவர்ஆகிறார். 1986ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நாடற்றவர்களுக்கு பிரஜா உரிமை வழங்கும் சட்டத்தை கொண்டு வருவதில் அமைச்சர் தொண்டமான் ஆற்றிய பணிஇன்னமும் போற்றத்தக்கதாகும் அதனைத்தொடர்ந்து 1988ம் ஆண்டு நாடற்றவர்களுக்கு பிரஜா உரிமை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டதி. அதி இலங்கையின் நாடற்றவர்கள் என்ற ஒரு பதத்தையே

Page 10
இல்லாமல் ஒழித்துக் கட்டியது. எந்த ஐக்கிய தேசியக் மலையக மக்களின் வாக்குரிமை பறித்ததோ, அதே கட்சி கொண்டு அதே மக்களுக்கு பிரஜா உரிமையை பெற் கொடுத்து சாதனை புரிந்தவர் திரு. தொண்டமான்.
அமரர் தொண்டமான் இலங்ை தொழிலாளர்களின் குரலைக் கடந்த 50 ஆண்டுகளாக உ அரங்கில் ஒலித்து வந்தவர் சர்வதேசத் தொழிலாளர்அயை சர்வதேச சுதந்திரத் தொழிற்சங்க சம்மேளனம் ஆகியவற் அவராற்றிய உரைகள் இலங்கைத் தொழிலாளரின் உண் நிலையை உலகிற்கு எடுத்துக் காட்டின. மலையகத்தின்ட அக்கறை கொண்டிருந்த தொண்டமான் அவர் தமிழினத்தை, தமிழினத்தின் ஐக்கியத்தை ஒரு போது மறந்தவரல்ல. தமிழர் விடுதலைக் கூட்டணியை அமைப்பத் முப்பெரும் தலைவர்களில் அவரும் ஒருவராக விளங்கின தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அ முன்வைத்த கருத்துக்கள் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளா போதிலும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றுதா வழி என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்கு ஏற வகையில், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் முக்கி அங்கம் வகித்த தரப்பினருடன் அவர் ஒத்துழைப்பையு ஆதரவையும் வலுப்படுத்தினார். தமிழ் வளர்ச்சியில் அவ காட்டிய அக்கறை, குறிப்பாகச் சமீப காலத்தில் அவ மேற்கொண்ட முயற்சிகள் உண்மையில் குறிப்பிடத்த கவையாக விளங்கின.
உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்த் தலைவர்களின் ஒற்றுமையை உருவாக்கப் பாடுபட் தொண்டமான் அவர்கள், சமீப காலத்தில் தமிழ் இணையத்:ை உருவாக்குவதிலும், இலங்கையில் அது சம்பந்தமான மாநாட்டை ஏற்பாடு செய்வதிலும் முன்னின்று உழைத்தா அவருடைய தலைமை இல்லாமல் தமிழ் இணைய மாநாடு நடைபெறபபோவது ஏதோ ஒரு வெறுமையாகத்தான் இருக்கு என்பதில் சந்தேகம் இல்லை. திரு. தொண்டமான் அவர்கள் எல்லா பெரும்பான்மைக் கட்சிகளுடனும் உறவுபூண்டிருந்தா அவற்றின் அரசாங்கங்களிலும் அங்கம் வகித்தார். அதற்கு நியாயமான காரணம் இருக்கவே செய்தது.இலங்கையின் இரு பெரும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் மலைய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்ப;ை உனர்ந்து அவர் செயல்பட்டார். அது முற்றிலும் உண்ை என்பதை அவரது அரசியல் சாணக்கியம் இப்போது நிரூபித்திருக்கின்றது. அதற்கென அவர் கையாண்ட வழி ஒரு புறத்தில் ஒத்துழைப்பு, அந்த ஒத்துழைப்பைப் பயன்படுத்த மறுபுறத்தில் போராட்டம் போராட்டமும் ஒத்துழைப்பும் அவரது இரண்டு கண்களாக விளங்கின. அதன் விளைவால் தான மலையக மக்கள் இன்று தமது வாழ்வை ஒளிமயப்படுத்தி கொண்டு மேலும் மேம்பாடு கான போராடுகின்றனர்.
இலங்கையின் 50 வருட கால சுதந்திர வாழ்வி இந்திய வம்சாவளி தமிழர்களின் முதற் பிரதிநிதியா அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தொண்டமான்
 

s
தனது அரசியல் சாணக்கியத்தால் அகிம்சை வழியின் மூலம் இனவாத மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடி இருக்கிறார். இவை அனைத்திலும் வெற்றிக் கம்பத்தை அடைந்தவர்இவர் ஒருவர் தான். 1994ம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் பொதுஜனஐக்கிய முன்னணி அரசு ஆட்சிக்கு வநததும் அவர் அதில் சேர்ந்து
கொண்டார். ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா
பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்க ஆதரவாக மக்களை அணி திரட்டினார்.
அமைச்சர் தொண்டமானின் நோக்கம் என்ன என்பதை நன்று அறிந்து கொண்ட ஜனாதிபதி மலையகத் தொழிலாளர்களின் நன்மை கருதி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஒன்றை உருவாக்கி அதற்கு பொருத்தமான திரு. தொண்டமானையே அமைச்சராக நியமித்தார். அமைச்சர் தொண்டமான் தனது அமைச்சின் மூலம் மலையகத் தோட்டப் பாடசாலைகள், பொதுவசதிகள் போன்றவற்றை அபிவிருத்தி செய்வதற்கு அயராது பாடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் காலன் அவரை கவர்ந்துவிட்டான். பொதுஜன ஐக்கயி முன்னணி அரசியலில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டத்தில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று முன்மொழிந்தவர்திரு. தொண்டமான், அந்த அளவுக்கு தமது மக்களின் மீது ஜனாதிபதியின் கவனம் இருக்கிறது என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார். அதற்குக் காரணம் தொண்டமான் என்றால் ஒரு தனி நபரல்ல. அவருக்குப் பின்னால் ஒரு சமூகமே இருக்கிறது என்பதுதான் அர்த்தமாகும்.
அது மாத்திரமன்றி அண்மையில் இலங்கை இந்திய வம்சாவழி பேரணியின் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது அதில் தொண்டமான்தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். எதையும் ஜனநாயக வழியில் அணுகும் திரு. தொண்டமான் தன்னுடைய குரலுக்கு செவிசாய்க்க லட்சோபலட்சம் மக்கள் தயாராக இருந்த போதிலும் அந்தத்திர்மானத்தை நிறைவேற்ற தாமே முன்வந்தார். அதாவது, இலங்கை இந்திய வம்சாவழி பேரணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை ஆதரிக்க வேண்டும் என்று அவர் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் திரு. தொண்டமான் நோய் வாய்ப்பட்டார் மலையகம் எனற ஒரு பிரதேசமும் தொழிலாளர் வர்க்கம் என்ற ஒரு வர்க்கமும் அகிம்சை என்ற கோட்பாடும் இருக்கும் வரையில் திரு. தொண்டமானின் நாமம் என்றென்றும் நிலைத்திருக்கும். மாமலையாக விளங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் இறைவனின் திருவடியில் சங்கமமாகி விட்டார். அவர் கட்டிக் காத்த ஒற்றுமையை, அஹிம்சையை, நெஞ்சுறுதியை மேலும் முன்னெடுத்துச் செல்வது தான் அவருக்குச் செய்யும் நன்றிக் கடனாக, உன்னத அஞ்சலியாக இருக்கும் 幾
வானொலி நிகழ்ச்சி 4-77-99ல் ஒலிபரப்பானது

Page 11
வ்வொரு இனத்துக்கும் சமயத்துக்கும் தனக்கென காலக் கணிப்புகள் இருக்கின்றன. எத்தனை
விதமான கணிப்புகள் இருந்தாலும் உலகம் கிறிஸ்தவ யுகத்தைத்தான் பொதுவான ஒன்றாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது. மிலேனியம் என்பது ஆயிரம் ஆண்டு என்று பொருள். எதையுமே கடன் வாங்கிக் கொள்ளும் மனிதனுக்குச் சொற்களையும் கடன் வாங்குவது சுலபமல்வா! மிலேனியம் என்ற சொல் இரண்டு இலத்தீன் மொழிற் சொற்களைக் கொண்டது. மில்லே என்றால் ஆயிரம். எனஸ் என்றால் ஆண்டு. எனவே, ஆயிரம் ஆண்டுகள் என்பதைக் காண்கின்றோம். கிறிஸ்தவத்தைத் தழுவிய ஐரோப்பாவில் இது முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டது. கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின்னர் ஆயிரம் ஆண்டுகளானதும் உலகம் முடிந்துவிடும், அழிந்து விடும் என்று கிறிஸ்தவ மக்கள் நம்பினார்கள். எனவே ஆயிரம் ஆண்டுகள் என்பது, கிறிஸ்து பிறந்த பின்னரான முதல் ஆயிரம் ஆண்டுகளையே குறித்தது. இந்த ஆயிரம் ஆண்டுகள் முடிவடைந்ததும் உலகம் அழிந்து விடும் என்ற நம்பிக்கைக்கு மிலேனியலிசம் என்றும் நாமகரணம் சூட்டினார்கள். இது விலிலிய நூல்களைத் தான் அடிப்படையாகக் கொண்டிருந்தது. டேனியல், வெளிப்படுத்தல் ஆகியவற்றில் இது காணப்படுகின்றது. இது, இயேசுக் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை, வருகையை வாக்குறுதியாகக் கொடுக்கின்றது. இயேசுக் கிறிஸ்து, இரண்டாவது தடவையும் வந்து, சாத்தானைத் தூக்கி வீசி, தியாகிக்ளை உயிர்ப்பித்து, ஆயிரம் ஆண்டுகள் நீதியாகவும் சமாதானமாகவும் ஆட்சி செலுத்துவார், சாத்தான் என்றென்றைக்குமாக ஒழியும் வரையில் இறுதிப் போராட்டம் நடக்கும் வரை அவர் அரசோச்சுவார், என்ற வாக்குறுதியை அது வழங்கியது. மிலேனியலிசத்தில் நம்பிக்கை வைத்தவர்கள் யார்? நெருக்கடி காலத்தில், இக் கட்டான நேரத்தில், சமூக -
 

பொருளாதார நிர்ப்பந்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை இந்தக் கூற்று கவர்ந்தது, கடவுள் காப்பாற்றுவார் என்று நாம் இன்னமும் கூறிக் கொண்டேதான் இருக்கின்றோம். அந்தக் காலத்தில் அட்டூழியம் புரிந்தவர்களைச் சாத்தானுடன் மக்கள் ஒப்பிட்டார்கள். ஆகவே, தம்மை மீட்கக்கூடிய, பொருளாதார, ஆன்மீக ஆசியையும்
வழங்கக்கூடிய இறைதூதர்களை, வழிகாட்டிகளை அவர்கள் நாடினார்கள். இந்தச் சாத்தான்களை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது,உடனடியான, வன்முறை சார்ந்த மாற்றத்தை இந்த மிலேனியலிஸ்ட்டுகள் விரும்பினார்கள். அந்த ஆரம்ப ஆண்டுகளில் தேவாலயமும் அதனுடன் இணைந்திருந்த அரசுகளும் இயேசுவின் விசுவாசிகளை அவமதித்தன. ஆரம்ப கிறிஸ்தவர்கள் மத்தியில் இயேசுக் கிறிஸ்துவின் இரண்டாவது வருகை பற்றிய எண்ணம் மேலோங்கி இருந்தது. உரோமர்களின் துன்புறுத்தல்களில் இருந்து தம்மை மீட்பதற்காக இயேசுவின் இரண்டாவது வருகை உடனடியாக அமைய வேண்டும் என்று அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். இதற்கிடையே அரசுக்கும் திருச்சபைக்கும் இடையிலான கருத்து பேதங்கள் படிப்படியாக போயின. எனவே, திருச்சபை, அகஸ்தீனின் கருத்துக்களை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தது. மிலேனியம் சம்பந்தமான விவிலிய விளக்கங்கள் ஒரு சம்பிரதாயக் கூற்று என்பதே அகஸ்தீனின் கருத்து.
இருந்த போதிலும், இயேசுவின் மீள் வருகையைப் பற்றிய கருத்துக்கள் மக்கள் மத்தியில் வேரூன்றவே செய்தன. இயேசுக் கிறிஸ்து பிறந்த பின்னரான 999 ஆண்டுகள் எத்தனையோ ஆக்கிரமிப்புகள், அழிவுகள், துன்பங்கள், எல்லாவற்றையும் கொண்டதாகவே இருந்தன. ஆயிரம் ஆண்டுகளுடன் ஒரு புதிய உலகம் பிறக்கும் என்று மக்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை பற்றிய கருத்துக்கள் கிறிஸ்தவத்துடன் மாத்திரம் நின்று விடவில்லை. ஏனைய சமயப் பிரிவுகளிலும் தென்பட்டன. செளராஷ்டிர மதத்தினர் மூன்றாவது மீட்பர் ஒருவரைப் பற்றி நம்பிக்கை வைத்தார்கள். அவர், தூய்மையான உலகத்தை உருவாக்குவார், இறந்தவர்களை உயிர்ப்பிப்பார் என்று நம்பினார்கள். மைத்ரேய புத்தர் பூமியில் சுவர்க்கத்தை உருவாக்குவார் என்று கருதப்பட்டது. தெய்வீக அருள் பெற்ற மஹ்தி, புதியயுகத்தைத் தோற்றுவிப்பார் என்று நம்பப்பட்டது. இதுவே சூடானில், கலவரத்துக்குக் காரணமாக இருந்தது, பஹாய், அஹமதியா இயக்கங்கள் இதன்

Page 12
காரணமாகவே தோன்றின. இன்றும் கூட எத்தனை மதப் பிரிவுகள், அமைப்புகள் எல்லாம் தோ இருப்பதற்கு மனிதனின் நிம்மதியற்ற துன்பகரப வாழ்வுதானே காரணம். இயேசுவின் மீள்வருகை நம்பிக்கை வைத்த மக்கள், தொள்ளாயிர தொண்ணுாற்றொன்பது ஆண்டுகளும் 364 நாள்க முடிந்த பின்னர், அதாவது முதல் ஆயிரமாயி ஆண்டின் இறுதி நாளன்று, நாளை என்ன நடக் என்று எதிர்பார்த்தார்கள். முதலாவது ஆயிரம ஆண்டுகளில் என்ன நடந்தது. ஐரோப்பா6 சமயங்களின் நிலைமை என்ன? இவற்றைப் பற் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஸ்பானியாை தவிர, ஐரோப்பா முழுவதுமே பல்வேறு கிறிஸ்த நாடுகளாகப் பிரிந்திருந்தன. இந்தக் காலப்பகுதிய ஐரோப்பாக கண்டம் முழுவதிலும் கிறிஸ்தவ வெகுவேகமாகப் பரவியிருந்தது. இந்த நாடுகளி முன்னர் இருந்த சமயங்கள் எல்லாம் மறைந்தொழிந் விட்டன. கடவுளர்களும் தேவதைகளு மறைந்தொழிந்துவிட்டார்கள். இந்த ஐரோப்பிய நாடுக கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டன. ஆனால், இன் இருப்பதைப் போல் இருக்கவில்லை. அவை முற்றிலு வித்தியாசமானவையாக இருந்தன. அவற்றின் மக்க வித்தியாசமானவர்களாக இருந்தார்கள்.
ஐரோப்பிய மக்கள் தம்மைப்பிரெஞ்சுக்காரர்க என்று கூறிக் கொள்ளவில்லை. ஆங்கிலேயர்கள் என் கூறிக் கொள்ளவில்லை. ஜேர்மானியர்கள் என்று கூறி கொள்ளவில்லை. வறிய விவசாயிகள் பெரு துன்பங்களை அனுப்வித்தார்கள். தமது நாட்டைப் பற் அவர்கள் தெரிந்திருக்கவில்லை. தமது நாட்டில் புவியியல் பற்றி தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். தா அனைவரும் உழைப்பவர்கள், தாம் அனைவரும் தம பிரபுக்கள் சொல்வதைச் செய்பவர்கள் என்பை மாத்திரமே தெரிந்து வைத்திருந்தார்கள்.
அது மாதிரித்தான் இந்தப் பிரபுக்களு அவர்களுக்கும் தாம் யாரென்று தெரியாது. நீங்க யாரென்று அவர்களைக் கேட்டால் தாம் ஏதாவதொ பகுதயின் பிரபு, ஏதாவதொரு மன்னர் அல்லது குறுநி மன்னரின் வாரிசுகள் என்று கூறுவார்கள். இத்தகை ஒரு நிலப்பிரபுத்துவ முறை ஐரோப்பா முழுவதிலும் பர6 இருந்தது. இனம் என்றால் என்ன, மொழி என்றால் என்6 என்பது பற்றி அவர்கள் கவலைப்பட்டதில்லை. எந்த தேசிய இனத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றி பெருை
 

ġjl
r
கொண்டதும் இல்லை. அந்தக் காலத்து ஐரோப்பியர்கள் தேசிய உணர்வு இல்லாதவர்களாகவே இருந்தனர். அந்தக் காலத்துப் பிரபுக்கள் பரந்த பகுதிகளைக் கைப்பற்றி வைத்திருந்தார்கள். தமக்குப் பணியாற்று வதற்காகக் கொத்தடிமைகளை வைத்திருந்தார்கள். மக்களின் வேதனை, துன்பம், துயரம் ஆகியவற்றுக்கு விடுதலை வேண்டாமா? எனவேதான், முதலாவது
ஆயிரமாண்டின் இறுதி நாள் தமக்கு விடுதலையைப்
பெற்றுத் தரும் என்று அவர்கள் நம்பினர். அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும், கிறிஸ்துவின் இரண்டாவது வருகை இடம்பெறும் என்று நம்பினார்கள். இந்த மிலேனியம், ஒரு சிறந்த உலகத்துக்கான திடீர் மாற்றத்தையே பொருள்படுத்தியது எனலாம். ஐரோப்பாவில் பெரும் துன்பம், கொடிய துன்பம் நிலவியது. இது பெரும்பாலான மக்களுக்கு நிம்மதியைக் கொண்டு வந்தது. மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது. இது எப்படி நடந்தது? அனேகமான பிரபுக்களும் நிலச் சொந்தக்காரர்களும் தமது நிலங்களைக் குறைந்த காசுக்கு விற்றுவிட்டு பாலஸ்தீனத்தை நோக்கிப் பயணமாகினர். உலகம் முடியப் போகிறது என்பதால் இயேசு கிறிஸ்து பிறந்த மண்ணைத் தரிசிக்க அவர்கள் பயணமாகினர். ஆனால் உலகம் அழியவில்லை. முடிவு நெருங்கவில்லை. ஜெருசலத்தை நோக்கிச் சென்ற பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்களைத் துருக்கியர் துன்புறுத்தத் தொடங்கினர். அவர்களை மோசமாக நடத்தினர். இவ்வாறு பயணம் செய்தவர்கள் ஐரோப்பாவுக்குத் திரும்பி வந்தார்கள். ஆத்திரம் ஒரு புறம், வஞ்சம் தீர்க்கும் எண்ணம் மறுபுறம், புனித மண்ணில் தாம் பட்ட துன்பத்தை, துயரத்தை எல்லாம்
அவர்கள் கதைகதையாகச் சொன்னார்கள்.
இவ்வாறு தான் முதலாம் ஆயிரம் ஆண்டுகள் முடிவடைந்து இரண்டாவது ஆயிரம் ஆரம்பமாகின. முதலாம் ஆயிரம் ஆண்டுகளின் முடிவு உலகத்துக்கு ஒரு புதிய உந்து சக்தியைக் கொடுத்தது. மனிதன், தான்படும் துன்பத்திற்கு வேறு யாருமே காரணமல்ல. மனிதனே காரணம் என்பதை உணர்த்தியது. ஒரு அத்தியாயம் முடிந்தாலும் அடுத்த அத்தியாயம் தொடர வேண்டுமல்லவா? இந்த இரண்டாவது ஆயிரமாண்டின் தொடர்ச்சியாகவே முதலாம் ஆயிரம் ஆண்டுகள் முடிந்தன. ஆயிரத்தோராவது ஆண்டு ஆரம்பமானது.
'காலச்சுவடுகள்"நிகழ்ச்சியிலிருந்து

Page 13
வம் உங்: ,
نمابر) . . . . ." هممر
ニ* 2考AもァAメぶ 57ᏜᏈ73
 

இன்றைய நேயர் அரை மணித்தியால நிகழ்ச்சியாகிறது
வர்த்தக சேவையில் சுமார் முப்பதாண்டுகளாக வார நாட்களில் ஒலிபரப்பாகி வரும் இன்றைய நேயர்' நிகழ்ச்சி கடந்த நவம்பர் 1ம் திகதி முதல் வாரநாட்களில் மாலை 5.30 முதல் 600 மணிவரை ஒலிபரப்பாகிறது.
1970ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்ச்சியில் இதுவரை ஆயிரக்கணக்கான நேயர்கள் பிரதிமூலம் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கின்றனர். திங்கட்கிழமைகளில் யாழ்ப்பான, கிளிநொச்சி வவுனியா, முல்லைத்தீவு அனுராதபுரமாவட்ட நேயர்களும் செவ்வாய்க் கிழமைகளில் பொன்னறுவை மற்றும் கிழக்கு மாகாண நேயர்களும் புதன்கிழமைகளில் மேல் மாகாண மற்றும் தென் மாகாண நேயர்களும், வியாழக்கிழமைகளில் மலையக மற்றும் குருநாகல் மாவட்ட நேயர்களும், வெள்ளிக்கிழமைகளில் மன்னார் மற்றும் புத்தளம் மாவட்ட நேயர்களும் கலந்து கொள்கின்றனர்.
சமீப காலமாக இந்நிகழ்ச்சி பற்றிய ஒரு குறை நேயர்களிடையே நிலவி வந்தது. புதிதாக வெளிவரும் பாடல்கள் பொதுவாக 5நிமிடங்களுக்கு மேற்பட்டவையாக இருக்க, 15 நிமிடங்களில் மூன்று பாடல்களையும் முழுமையாக ஒலிபரப்ப முடியாமலிருந்ததே அக் குறையாகும். நேயர்களின் இந்தக் கருத்தை நினைவிற்கொண்டே வர்த்தக சேவை இப்பொழுது இந் நிகழ்ச்சிக்காக அதிக நேரத்தை ஒதுக்கியுள்ளது.
மார்கழியில் நிகழ்ச்சி மாற்றங்கள் திருவெம்பாவை அஞ்சல் 14.12.1999 முதல் 23.12.1999 வரை காலை 5.45 முதல் 6.30 வரை
LốGanz II Tifa6oo6ou இந்த வருடத்தில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள்) 37121999இரவு 10.15 முதல் 15 வரை
'காலச்சுவடுகள்" நிகழ்ச்சிஇம்மாதம் 10ம் திகதி முதல் ஜனவரி மாதம் 70ம் திகதிவரை இரவு 9.25க்கு ஒலிபரப்பாகும்.

Page 14
940களில், 18,000 வால்புகள் கொண்ட ஓர்
அறையின் இடத்தைப் பிடிக்கக் கூடியளவு முதற் கணனிப் பொறிகள் காணப்பட்டன. இவை வினைத்திறன் மிக்க, கணிதக் கணிப்புகளை மேற்கொள்ளும் இயந்திரம். | இதுபோன்ற பாரிய கணனிப் பொறிகள் போருக்குப்
பிந்திய காலங்களில் உருவாக்கப்பட்டன.
1960 - 1970 காலப் பகுதிகளில் திரான் சிஸ்டரின் கண்டுபிடிப்புடன் கணனியின் அமைப்பில், செயற்பாட்டில் மாற்றங்கள் தோன்றின. சிக்கலான கணிப்புகளை மேற்கொள்ளவும் தகவல்களை (PROCESS) செய்வுமபயன்படத் தொடங்கின. இவை MAINFRAME COMPUTERS TGT அழைக்கப்பட்டது. KEY BOARD பிரிவு, மத்திய பகுதி, நினைவுப் பகுதி என்ற பல பிரிவுகள் கொண்ட அமைப்பாகியது. இக் கணனிப் பொறியை வைப்பதற்கென விசேட அறைகள் இருந்தன. விலை கூடியதாகவும்,அதிக சக்தியை நுகர்வு செய்ததாகவும் இவை இருந்தன. ஆய்வு நிறுவனங்களும் அரச திணைக்களங்களும் தான் இக் கால கட்டத்தில கணனிகளைப் பயன்படுத்தி வந்தன.
1980 56faSBig PERSONAL COMPUTERS பாவனைக்கு வரத் தொடங்கின. இக் கணனிகளில் பிரதான பிரிவான மத்திய பகுப்பாய்வுப் பிரிவு CPU ஒரு சிறிய CHIP எனும் இலத்திரனியல் சாதனத்தினுள் அடங்கி விடுகின்றது. இதனால் கணனிகளின் வினைத்திறன் கூடுவதுடன் அளவிலும் சிறுத்து விடுகின்றன. ஏனைய நினைவுப்பகுதி KEYBOARD
 

ஆகியவற்றையும் உள்ளடக்கி ஒரு மேசையில் வைக்கும்
அளவிற்குச் சிறியதாக வடிவமைக்கப்பட்டன. முதலாவது 6)}66) 5 PERSONAL COMPUTERS gy, Sir கோர்ப்பரேஷன் மூலம் வடிவமைக்கப்பட்டது. அதன் பின்னர் தான் COMMODORE, IBM ஆகியன தமது வகைகளை உருவாக்கத் தொடங்கின. அதே வேளையில் அப்பிள் கோர்ப்பரேஷன் தனது உற்பத்தியான SOFTWARE, HARDWARE uglife, sit Gart 6ior GL கணனியை உற்பத்தி செய்தது. ஆனால் IBM 6Jig 6.60Ln5g, PERSONAL COMPUTERS 89 (6) இலத்திரனியல் கம்பனிகள் உற்பத்தி செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்டது. இன்று அந்த IBM வகை மிகத் தரமுள்ளதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று மிகச் சர்வ சாதாரணமாக எல்லோராலும், எங்கும் gig, PC 6T60TLIGuh PERSONAL COMPUTERS பயன்படுத்தப்படுகின்றன. w−
gig, PERSONAL COMPUTERS 8, it தகவல்களை நினைவுப்பகுதியில் PROCES செய்வற்கு 128 கிலோ BYTER கொண்டுள்ளன. ஆனால் 1990ன் LS sit 66.60Ln55ul'L MULTIMEDIA PERSONAL COMPUTER 95.356T6's 95T6 gil 16 MEGABYTES கொண்டுள்ளன. இதன் காரணமாக இக் கணனிகளில் பட வரைபுகள் காட்டல், ஒலி, VIDEO போன்றன தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இலத்திரனியல் சாதமனான சில CHIPS மூலம் உருவாக்கிய VIDEO CARD மூலம், கணனிகளில் உள்ள எண்ணிலக்கத் தரவுகள் மூலம் ஒளி ஒலி காட்சியையும் கணனியில் சேர்த்துக் கொள்ள முடிந்தது. இந்த அட்டைகளை ஒரு PERSONAL COMPUTER 9 L6óT GALJT(5ğgj6gJep6o(GLOT அல்லது நிரந்தரமாக இணைப்பதன் மூலமோ இக் d5 600T 6of MULTIMEDIA PERSONAL 6T66Tp60.pd,3, படுகின்றது. உயர் குறிப்பிடுதிறன் இவ்வட்டைகள் இணைக்கப்படுவது தவிர ஏனைய விடயங்களில் இக் 66006af af Tg TIJ 600T PERSONAL COMPUTER போன்றதே. பல தரவுகளின் ஒன்றிணைப்பு, பாட விடயங்கள், பலவித விம்பங்கள், ஒலி போன்றவற்றை எளிய எண்ணிலக்க தகவற் சூழலில் கொண்டிருத்தலே MULTIMEDIA PERSONAL GT60TfLIGépg. 5i (ELT5) பிரபலமாகப் பேசப்படுவது இந்த MULTI MEDIA கம்பியூட்டரே.

Page 15
திவரங்களின் தொழிற்பாடுகளைப் பரம்பரை
அலகுகளே கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வொரு தொழிற்பாட்டையும் குறிப்பிட்ட பரம்பரை அலகு அல்லது அலகுகள் கட்டுப்படுத்துகின்றன. எனவே குறிப்பிட்ட பரம்பரை அலகைக் கண்டு பிடித்தால் தாவரங்களின் தொழிற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதன் மூலம் வாரங்களிலிருந்து கூடிய பயனைப் பெறலாம். விளைச்சலை அதிகரிக்கலாம். இதே போல விளைபொருளின் தரத்தையும் விருத்தி செய்யலாம். உதாரணமாக பயிர்களில் போசணைச் சத்துக்களின் அளவை அதிகரிக்கலாம்.
தாவரங்களில் இரும்புச் சத்தை அதிகரிப்பதற்கு அவசியமான பரம்பரை அலகை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இப் பரம்பரை அலகு FRO2 எனப்படும். இப் பரம்பரை அலகில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலம் தாவரங்கள் அதிகளவான இரும்புச் சத்தை உறிஞ்ச உதவலாம். இதன் மூலம் தாவர விளைபொருள்களில் கூடிய இரும்புச் சத்து காணப்படும். இயற்கையில் மண்ணில் இரண்டு வடிவங்களில் இரும்பு காணப்படுகின்றது. இவை பெரிக் (Fe+++), பெரஸ் (Fe++) என்பனவாகும். மண்ணில் பெருமளவு
காணப்படுவது பெரிக் (3+) வடிவமாகும். ஆனால்
இதனை தாவரங்கள் உறிஞ்ச முடியாது. எனவே இதனை
பெரஸ் (2+) வடிவமாக மாற்றியே தாவரங்கள் உறிஞ்ச வேண்டும். தாவரங்களில் உள்ள ரிடக்டேஸ் (REDUCTACE) என்னும் நொதியம் பெரிக் வடிவத்தை, பெரஸ் வடிவமாக மாற்ற உதவும். இந்த ரிடக்டேஸ் நொதியம் உற்பத்தி செய்யப்படுவதற்கு FRO2 என்னும் பரம்பரை அலகே காரணமாகும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இப் பரம்பரை அலகில் சில
மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிகளவில் ரிடக்டேஸ்
 

6 fu FIÉ) 77 116oofru II ani
நொதியத்தை உற்பத்தி செய்யலாம். இதனால் தாவரங்கள் வளமற்ற மண்ணிலும் கூடிய இரும்புச் சத்தை உறிஞ்சலாம்.
அரெபிடொப்சிஸ் (ARABIDOPSIS) அல்லது தலோசிரஸ் (THALECRES) என்ற தாவர இனத்தில் முப்பதாயிரம் தாவரங்களை ஆராய்ந்த பின்னரே இப்பரம்பரை அலகை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தி உள்ளனர். இத் தாவரம் ஐரோப்பாவில் காணப்படும் ஒரு வகை களையாகும்.
உலகில் 3.7 பில்லியன் மக்கள் இரும்புச் சத்துப் பற்றாக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக எத்தியோப்பாவில் 50 வீதமான பெண்களும், சிறுவர்களும் 25 வீதமான ஆண்களும் இரும்புச் சத்து பற்றாக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.போதியளவில் இரும்புச் சத்து இன்மையால் குருதியில் குறைவான அளவிலேயே செங்குருதிச் சிறுதுணிக்கைகள் காணப்படும். இதனால் குருதிச் சோகை நோய் ஏற்படும். மனிதனுக்கு இரும்புச் சத்தை வழங்குவதில் தாவரங்களே முன்னணி வகிக்கின்றன. எனவே இக் கண்டுபிடிப்பு போசாக்கின்மையால் வாடும் மக்களுக்கு பெருமளவில் உதவும் என்பதில் ஐயமில்லை.
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பரம்பரை அலகுகளில் மாற்றம் செய்து உணவை உற்பத்தி செய்யும் கண்டு பிடிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இவ்வேளையில், இப்புதிய முயற்சி மனித குலத்திற்கு பெரும் பயனுள்ளதாகும். எனினும் இப்பரம்பரை அலகைப் பயன்படுத்தி கூடிய இரும்புச் சத்தைக் கொண்ட தாவரங்களை வர்த்தக ரீதியில் பயிரிடும்முன் மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டு இதனால் ஆபத்தில்லை என்பதை நிரூபிப்பது அவசியமாகும்.

Page 16
சியாவில் நெல் பயிரிடப்படும்
பகுதிகளில் நெற் தாவரத் தத்திகள் மிக முக்கியமான பூச்சிப் பீடைகளாகும். இலங்கையிலும் இவை முக்கியமான நெற்பீடைகளாகும். ஜப்பானில் பல தடவைகள் இப் பூச்சிகளினால் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அறுபதுகளின் மத்திய பகுதி வரை இப்பூச்சிகள் எங்கே மறைந்துள்ளன என்பது கண்டு பிடிக்கப்படாமலேயே இருந்தது. ஆனால் 1967ல் இந் நிலைமை சடுதியாக மாற்றமடைந்தது.
ஜப்பானில் தெற்குப்பக்கமாக 500 கிலோ மீற்றர் தொலைவில் பசுபிக் சமுத்திரத்திற்கு மேல் பெருங் கூட்டமாக நெற் தாவரத் தத்திகள் பறந்து சென்றதை வானிலை அவதானக் கப்பல் ஒன்று கண்டது. ஜப்பானுக்கு வெளிநாடுகளில் இருந்து கடலின் மேல் பூச்சிகள் வருவதாக அதுவரை எவரும் நம்பவில்லை. ஆனால் கூட்டமாகப் பறந்த பூச்சிகள் இந் நம்பிக்கையைப் பொய்யாக்கின. இன்று இப் பூச்சிகள் ஜப்பானிற்குள் வருவது நிரூபிக்கப்பட்டதொரு விடயமாகும். நெற் தாவரத் தத்திகள் மழைகாலத்தில் ஜப்பானிற்கு வருகின்றன. ஜப்பானின் நெல் வயல்களில் இவை இனப்பெருக்கமடைந்து கோடை காலத்தில் இறந்து விடுகின்றன.
ஜப்பானின் இந்த அவதானிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு சீனா ஆய்வொன்றை ஆரம்பித்தது. இப் பரிசோதனையில் தத்திகளின் இறகுகளில் வர்ணம் பூசப்பட்டது. பின்னர் இவை ஏற்கனவே பூச்சிகளை அவதானித்த தென் பகுதியில் விடுவிக்கப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்டன. 54 மில்லியன் பூச்சிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டன. ஆனால் ஆறு
 

பூச்சிகள் மாத்திரமே மீண்டும் பிடிக்கப்பட்டன. இதில்
ஒரு பூச்சி 720 கிலோ மீற்றருக்கு அப்பால் பிடிக்கப்பட்டது. 10 மில்லியனுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இப் பூச்சிகள் பிடிக்கப்பட்டன. இப் பரிசோதனையின் மூலம் சீனாவில் பூச்சிகள் இடம் பெயரும் உண்மை நிலை என்ற விகிதத்தில் இப் பூச்சிக் கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்பட்டன. பூச்சிகள் நீண்ட தூரம் இடம் பெயர்வதை ஜப்பானில் நடாத்தப்பட்ட ஆய்வுகளும் வெளிப்படுத்தின.
இந்த ஆய்வு எமக்கு மறைமுகமான பல செய்திகளை வழங்குகின்றது. இலங்கைக்கு அண்மையில் உள்ள நாடு இந்தியா. எனவே சில வேளைகளில் இந்தியாவிலிருந்து கூட குறிவ்வாக தென்னிந்தியாவிலிருந்து கூட எமது நாட்டிற்குள் இவ்வாறான பீடைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதே போல் இலங்கையிலும் தூர இடங்களிற்கு கூட இவை காற்றால் இடம் பெயரலாம். உதாரணமாக அம்பாறையிலிருந்து அனுராதபுரம் அல்லது பொலன்னறுவை மாவட்டத்றகுப் பூச்சிகள் பரவலாம். எனவே பூச்சிகளின் இடப்பெயர்ச்சி, வானிலை போன்றன தொடர்பாக மேலும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமாகும்.
பூச்சிகளின் இடப்பெயர்ச்சி, வானிலை, பயிர்ச்செய்கை காலம் போன்ற பல அம்சங்களில் விவசாயிகள் தெளிவான அறிவைக் கொண்டிருப்பது அவசியமாகும். இதன் மூலம் விவசாயிகள் பூச்சிப்படைகளைச் சிறப்ாக கட்டுப்படுத்தலாம். இதனால் பூச்சிநாசினிகளின் பாவனை குறைத்து"சூழல் மேலும்
பாதுகாக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

Page 17
புனிதமிகு ரமழான் மாதம் வருவது கண்டு எந்த முஸ்லிமுடைய உள்ளம் சந்தோஷம் அடைகின்றதோ அவரே உண்மையான விசுவாசியாவார்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். பூத்துக்குலுங்கும் புனித ரமழான் ஆண்டுக்கு ஒருமுறை வருகின்றது. விட்டுப்பிரிகின்றது. நாமும் வரவேற்கின்றோம். lfflunofloodL கொடுக்கின்றோம். ஈற்றில் பெருநாள் கொண்டாடு கின்றோம். அத்துடன் அதனை மறந்து விடுகின்றோம். கடைசியில் பழைய கதை தான்.
இந்த நிலைமை மாற வேண்டும் அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் முஸ்லிம்கள். அல்லாஹ்வைப் பற்றிய பயம் நம் உள்ளத்தில் எப்போதும் இருக்கவேண்டும். அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகுந்த கருணையுள்ளவன், மனிதர்கள் செய்கின்ற
பாவங்களை தெளபாவின் மூலம் பாவ மன்னிப்பு வழங்குபவன். செய்த பாவத்தின் காரணமாக மனிதர்கள் நரக நெருப்பில் கருகுவதை அல்லாஹ் ஒரு போதும் விரும்புவதேயில்லை. அதே போன்று மனிதர்கள் தாம் செய்து கொண்ட பாவச் செயல்கள் காரணமாக கபுறுகளில் வேதனைப்படுவதையும் அல்லாஹ் விரும்பவில்லை. குறிப்பாகச் சொல்வதானால் விசுவாசிகள் இவ்வுலகிலும் மறு உலகிலும் கபுறுடைய வாழ்விலும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு அருட்கொடைகளை வழங்கியிருக்கிறான். அந்த அருட்கொடைகளில் ஒன்றுதான் எம்மை அடைந்துள்ள புனித ரமழான் மாதம்
புனித ரமழான் மாதம் எத்தனையோ வகைகளால் புனிதத்துவம் பெறுகின்றது. புனித குர்ஆன் அருளைப் பெற்றதும் இந்த ரமழான் மாதத்தில் தான் மனிதர்கள் செய்யும் ஒரு நன்மைக்கு 67 (Լggi நன்மைகளுக்கான கூலி வழங்கப்படுகிறது. ஒரு சுன்னத்தான் அமலுக்கு ஒரு பர்ளுக்கான நன்மை வழங்கப்படும் மாதம் தான் இது. அல்லாஹ்வின் திருப்தியை நாடி நன்மைகள் புரிவோருக்கு அவன்
 
 

அளப்பரிய கூலியைத் தருகின்றான். இதனால் தான் அல்லாஹ் புனித நோன்பைப் பற்றிக் கூறும்போது நோன்பு எனக்குரியது. அதற்குரிய கூலியை நானாகவே வழங்குகிறேன் என்று கூறுவதில் இருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். ஏழைகளின் பசியறிந்து அவர்கள் கஷ்டம் நீங்க அவர்களுக்கு உள்ளன்போடு தர்மம் செய்யத் தூண்டும் மாதம் தான் இந்த ரமழான் மாதம். ஆகவே இதனை தருமத்தின் ஸதகாவின் மாதம் என்றும் அழைக்கப்படுகின்றது. நோன்பு ஒரு நோய் நிவாரணி இதனை அன்றைய மருத்துவர்களும் இன்றைய நவீன உலகமும் ஏற்றுக் கொள்கின்றது. உணவைக் குறைத்து உடலுக்கு ஆரோக்கியத்தையும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி உள்ளத்துக்கு நல்ல பயிற்சியையும் இந்த நோன்பு பெற்றுத் தருகின்றது. அத்தோடு இது ஒரு பொறுமையுடைய மாதமாகும். பொறுமையுடன் வாழும் மனப்பக்குவத்தை இந்த நோன்பு LILLf)jiżgp/62flejjeflloiifpġ.
அல்லாஹ்வின் கருணையினால் கறுபுடைய வேதனைகள் குறைக்கப்படும் மாதம் நரகவேதனைகள் நிறுத்தப்படும் மாதமும் இதுவாகும். அது மட்டுமல்ல புனித இஸ்லாம் அன்று பதுறு ஸஹாபாக்களால் பட்டினியுடன் போராடிக் காப்பாற்றப்பட்ட மாதம். எல்லாவற்றுக்கும் மேலாக ஆயிரம் மாதங்களை விட உயர்வான புனித இரவாம் புனித லைலத்துல் கத்ரு என்ற இரவை மானிடர்களுக்கு வழங்கிய மாதம் இந்த ரமழான் மாதம்தான். இறுதியாகச் சொல்வதானால் இந்தப் புதிய ரமழான் ஒவ்வொரு வருடமும் வந்து மனிதர்களைப் புனிதர்களாக்கவே அல்லாஹ் இதனை அருளியிருக்கிறான். மனிதர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று தொழுது, நோன்பு நோற்று, தானதருமம் செய்து, பொறுமையுடன் வாழ்ந்து நிறைவான நன்மைகள் செய்து சகலரும் நிம்மதியுடன் சாந்தி சமாதானமாக வாழவே இந்தப் புனித நோன்ப்பு வந்திருக்கிறது. நாம் அதனை வரவேற்று பயன்பெற்று, நல்லவர்களாக வாழ திடசங்கற்பம் பூணுவோமாக, பூத்துக் குலுங்கும் புனிதமிகு ரமழானே வருக, எம்மைப் புனிதர்களாக மாற்றுவாயாக. ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் யாஷஹ்ரு ரமழான். VM

Page 18
மூன்று வயதில் தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் சீர்காழி. இவ்வூரில் இனிப்புப் பண்ட வணிகம் செய்தவர் சிவசிதம்பரம் செட்டியார். அவர் வணிகரானாலும் கலை ஆர்வம் காரணமாக சீர்காழி தோணியப்பர் ஆலயத்தில் ஆண்டு தோறும் ராமாயணக் கதையை இசை நாடகமாக நடத்தி வந்தார். இந் நாடகத்தில் பாலராமர் வேடம் ஏற்று நடித்தவர் கோவிந்தராஜன். 19.01.1933ல் சிதம்பரச் செட்டியார் அபயம்பாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். அப்பாவின் கலை ஆர்வம் சிறுவன் கோவிந்தராஜனிடம் ஒட்டிக் கொண்டது. சித்தப்பா வீட்டு கிராமபோன் பெட்டி அவரை ஒரு புது உலகத்துக்கு இட்டுச் சென்றது. அந்த இசைத் தட்டில் ஒலித்த கிட்டப்பாவின் குரல்
அவனைக் கவர்ந்து விட்டது. சேர்ந்து பாடிப்பார்த்தான். அந்தக் குரல் அவனுக்கு மட்டும் இனிமையாகத் தெரியவில்லை. அயலவர்களுக்கும் இனிமையாக இருந்தது.
1942ல் கோவிந்தராஜனுக்கு வயது எட்டு ஆகும். அப்பொழுதே அவன் தேவி நாடக சபாவில் சேர்ந்து கொண்டான். வேடங்களில் தோன்றி நடப்பதும் பாடுவதும் அவன் வேலை. 1946ல் 12 வயதில் சேலம் மாடர்ன்ஸ் தியேட்டர்ஸின் மாதம் ஏழரை ரூபாய் சம்பளத்தில் துணை நடிகராக கோவிந்தராஜன் சேர்ந்து கொண்டார். பதினான்கு வயதுப் பாலகன் கோவிந்தராஜனுக்கு டி.ஆர். சுந்தரத்தின் அனுமதியுடன் தனி அறையில் சாதகம் பண்ண வாய்ப்புக் கிடைத்தது. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சாதகம் பண்ணிவான்.
இந்த அறையில் இருந்து கோவிந்தராஜன் பொழிந்த இசைமழை அடுத்த கட்டத்திலிருந்த இசைமேதை ஜி ராமநாதனின் காதை நனைத்தது. கோவிந்தராஜனின் சித்தப்பாவிடம் ஜி ராமநாதன் இப்படிக் கூறினார். "சிறுவனின் சாரீரம் பிரதமாதமாக இருக்கிறது. சங்கதிகள் நன்றாகப் பேசுகின்றன. சென்னைக்கு அழைத்துச் சென்று பயிற்சி கொடுங்கள் இவனுக்கு நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு. கோவிந்தராஜனின் சென்னை வாழ்க்கை 1947ல் ஆரம்பமாகியது. 1949ல் தமிழ் இசைக் கல்லூரியில் இசைமணி’ பட்டம் பெற்றார்.
 
 
 

சோபாலகிருஷ்ண பாரதியார் பாடற் போட்டியில் முதற் பரிசாக தம்புரா கிடைத்தது. அப்பரிசை அப்பொழுது கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி வழங்கினார். கோவிந்தராஜனுக்கு கர்நாடக சங்கீதத்தை மேலும் பயில வேண்டும் என்ற ஆசை வந்தது. 1951ல் கோவிந்த்ராஜனை தன் சீடனாக வரித்துக்
கொண்டார் இசை வித்தகர் தரும்பாம்பரம் சுவாமிநாதபிள்ளை. மூன்றாண்டு குருகுல வசத்தின் பின் கர்நாடக சங்கீதத்தின் நுணுக்கங்களை அறிந்து கொண்டார் கோவிந்தராஜன். பல கச்சேரிகள் செய்தார்.
இவரது கணிர் குரலும் கர்நாடகப் பாடல்களும் சினிமாப் பக்கமும் கேட்டது. இந்த இசைமணிக்கு 1952ல் சினிமாவில் பாட வாய்ப்பு வந்தது. ஏற்றுக்கொள்’ என்றார் சித்தப்பா பி.எஸ். செட்டியார். குருவின் அனுமதி கேட்டார் கோவிந்தராஜன். t சினிமாவில் பாடுவதில் தப்பேதும் இல்லை. அது தம்மை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய * துறை நன்றாகப் பாடி விட்டு வா. உன்புகழ் ஓங்கும் என்று வாழ்த்துக்கூறினார் குரு. கோவிந்தராஜன் சினிமாத்துறை நோக்கி சிரிப்புடன் புறப்பட்டார். கோவிந்தராஜன் பாடிய முதற்பாடல் 'சிரிப்புத் தான் வருகுதையா’ என்று ஆரம்பமாகிறது. கல்வியின் நாவலொன்றைத் தழுவி எடுக்கப்பட்ட பொன்வயல் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் சுத்தானந்த பாரதியார் இயற்றிய இப் பாடலுக்கு இசை அமைத்தவர். துறையூர் ராஜகோபால சர்மா. ஐ முதலாவது பாடலே பிரபலமாகி விட சினிமா

Page 19
வாய்ப்புகள் குவிந்தன. காதல், பக்தி, தத்துவம் நகைச்சுவை எழுச்சி என்று பல தரப்பட்ட பாடல்களை பாடி விட்டார். எந்தப் பாடலுக்கும் பொருத்தமானவர் சீர்காழி கோவிந்தராஜன் என்ற நிலை வந்தது ரம்பையின் காதல்படத்தில் இடம்பெற்ற சமரசம் உலவுப் இடமே எனும் பாடல், "தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் இடம்பெற்ற 'அமுதும் தேனும் எதற்கு என்ற பாடல் போன்றவை கோவிந்தராஜனின் பன்முகத் திறமையை வெளிக் காட்டின. பாராட்டுகளை வாங்கித் தந்தன.
1957 ஆண்டளவில் சிவாஜிக்கு பின்னணிக்குரல் ரி.எம். செளந்தரராஜன் என்றால் எம்.ஜி.ஆருக்குப் பின்னணிக்குரல் கோவிந்தராஜன் என்ற நிலை உருவாகியது. திரைக் கதையில் திருப்பு முனை பிரச்சினை வெடிக்கும் பொழுது அந்தச் சிக்கலை 6(5 List L6) வெளிப்படுத்தும். அப்பாடல் கோவிந்தராஜனின் குரலில் ஒலிக்கும் அது அசரீரிப்பாடலாகவும் ஒலிக்கும்.
'ஒற்றுமையாய் வாழ்வதாலே(பாகப் பிரிவினை ‘எங்கிருந்தோ வந்தான்’ (படிக்காத மேதை) ‘ஒடம் நதியினிலே (காத்திருந்த கண்கள்) நல்ல மனைவி நல்ல பிள்ளை' (நம்ம வீட்டுப் பக்கம்) போன்ற பாடல்கள் இப்படியான பாடல்களாகும். இலக்கிய செறிவ மிக்கவர்களும் தெய்வ நம்பிக்கையும் தெய்வீக உணர்வும் பிரதிபலிக்கும் பாடல்கள் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஒலிக்கும் பொழுது ஒரு வித நிறைவு கிடைக்கும் இவரது குரலில் அபிராமி அந்தாதி ஒலிக்காத இந்து வீடுகளே இல்லை எனலாம்.
கோவிந்தராஜனை பின்னணிப்பாடகராக மட்டுமன்றி முன்னணி நடிகராகவும் மாற்றியவர் ஏ.பி நாகநாதன். அவரது ‘கந்தன் கருணையில் நடிக்கத் தொடங்கினார். 12 படங்களுக்குமேல் நடித்து விட்டார் அகத்தியர்’ படத்தில் அகத்தியராகத் தோன்றி பாடி நடித்தார். ரி.எம்.சௌந்தரராஜனுடன் பல படங்களில் போட்டி போட்டுப்பாடினார். இலங்கைக்கு இரண்டு முறை வந்து இசைக்கச்சேரி செய்திருக்கிறார். முதலாவது முறை வல்வெட்டித்துறையிலும், இரண்டாவது முறை புங்குடுதீவிலும் கச்சேரி செய்திருக்கிறார். பிரபல வர்த்தகர் ரத்தம சண்முகம் இவரது வருகைக்காக புங்குடுதீவில் ஒரு புது மண்டபத்தையே கட்டினார் உலகெங்கும் இசைபரப்பி வந்த இசைமணி’ இசைப்பேரறிஞர்', 'பத்மபூரீ சீர்காழி கோவிந்தராஜன் 24.03.1988ல் அமரரானார். ஆனால் அந்த இசைமணியின் இனிய குரல் இன்றும் வானொலியில் உங்களுள்ளும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.
 


Page 20
(3ம் பக்கத் தொடர்ச்சி.)
புனல் குடைந்தாடும்பூவையர்அம்மையப்பரின் புகழ் பாடிய வண்ணம் அவ்ா தம் பெருமைகளைச் சிந்தித்தவாே நீராடுகின்றனர். சிந்தனையும், பேச்சும், சிவனும் உமைவு பற்றியதாகவே இருந்ததால் அவர்கள் பார்க்கும் பொருள்கள் யாவும் பராபரனும் பராபரையும் ஆகவே தோற்றமளிக்கின்றன அவர்கள் நீராடும் சுனை தானும் நீலமேனி வாலிழை பாகை நினைவுறுத்துகின்றது. எழில் மிகு சுனையே இறைவனாகவும் இறைவியாகவும் காட்சியளிக்கிறது. திருவாதவூரடிகள் பாவையர் பாய்ந்தாடும் பசுஞ்சுனையானது கருங்குவளை மலர்களையும் செங்கமலப் பூக்களையும கொண்டு திகழ்கின்றது. நீல கண்டம் நிகர்த்து கருங்குவகை விளங்குவதாலும், மலர்மாலையுடையாலும் அரவம் அமைந்து வருவதாலும் சிவபிரானை ஒத்திருக்கின்றது. நீர்ச்சுனையில் இறைவர்க்கு உரிய சிறப்புகள் எல்லாம் இறைவிக்குரியதா: காட்டியதோடு இச் சிறப்புகள் யாவும் தடாகத்து பொருள்களில் காணப்படுகின்றன என மணிவாசக பாடுகிறார். மெய்யடியார்கள் எங்கும் எதிலும், இயற்கையின் எழிலும் இறைவனைக் காண்கிறார்கள். பார்க்குமிடமெல்லா நீக்கமறநிறைந்திருக்கிறான்இறைவன், என்பதை நாம் உன வேண்டும்.
திருவெம்பாவையில் நான்காவது பாடலில் வந்து எழுப்பிளவளின் குரலைக் கேட்டபடியே படுத்திருந்தவள் பிறகும் உறங்கிப் போகிறாள். தேவர்களுக்கு அரிய மருந்:ை வேதத்தின் உட்பொருளைக் காண்பதற்கு இனியவனைப்பா உள்ளம் கசிந்து நிற்கிறோம். நீயே எழுந்து வந்து பார்த்து கொள். யார் யார் வந்திருக்கிறார்கள், யார் யார் வரவில்:ை என்பதை எங்களால் எண்ணிப் பார்க்க முடியாது யாராவது வரவில்லையெனில் நீ மீண்டும் போய் துரங்கலாம் என்று மீண்டும் தோழிகள் சொல்கிறார்கள். திருவருள் பெற். பெரியார்கள் எம்பெருமான் பெருமைகளைப் பற்றிப் பேசியு அவன் நாமங்களை சொல்லிக் கொண்டிருப்பார்கள் வீண்பொழுது போக்க மாட்டார்கள் கடல்நீரைக்குடித்த மேக மேலே கிளம்பி உமாதேவியின் கார் நிறத்தை பெற் விட்டதாகவும் மின்னலானது அம்பிகையின் மின்னிை யெனவும், மேகம் இடிஇடித்தது அம்பிகையின் திருவடியி சிலம்பு ஒலித்ததற்கு சமானமெனவும் என்றெல்லாம் கற்ப!ை செய்கிறார்கள். மேலும் சிவன் முதலில் அன்பருக் அருள்மழை பொழிந்த பின்னர் பெண்களாகிய எமக்கும் அரு சுரக்கட்டும் என்கிறார்கள். இறைவனின் கருணையைப் பெறு பக்தர்களுக்கு ஆகவேண்டித்தான் பின்னணியில் நிற்பதை காணக்கூடியதாய் இருக்கிறது. ஆண்டாள் அருளி திருப்பாவைப் பாடல்களும், மணிவாசகர் அருளி திருவெம்பாவைப்பாடல்களும் அடிப்படையில் ஒரேமாதிரியா ஒற்றுமைகளைக் கொண்டவை. "மாதங்களில் நான் மார்கழ என கிருஷ்ண பகவான் கூறியதற்கிணங்க இப் பாடல்க6ை பாடி மார்கழி மாதத்தை சிறப்பித்து வருகின்றனர்.
எனவே இவற்றின் பொருள் உணர்ந்து வ இனிக்க நாமும் பாடி இறைவனின் அருளைப் பெறுவோமா
 

(2ம் பக்கத் தொடர்ச்சி. 人
f
ஆனால், இந்த உவமானம் முற்றிலும் பொருந்தியதாகக் கூறலாகாது. இன்னும் அதை உள்ளபடிவிளக்குமிடத்தே, ஸம்கிருத பாஷையிலுள்ள மற்றெல்லா நூல்களும் ஒரு பாஷை, வேதம் மாத்திரம் - அதாவது, ஸம்ஹிதை அல்லது மந்திரம் மாத்திரம் - தனியான பாஷையாக இருக்கிறது. இஃதொரு பெருவியப்பு அன்றோ?வேத ஸம்ஸ்கிருதம் வேறெந்த நூலிலும் கிடையாது. உபநிஷத்தில் ஒரு சில மிகச் சில பகுதிகளில், விசேஷமாக வேத மந்திரங்களை மீட்டுமுரைக்கு மிடத்தே, வேத பாஷையைக் காணலாம். மற்றபடி உபநிஷத்துக்கு முழுவதும் பிற்காலத்துப் பாஷையிலேயே சமைந்திருக்கின்றது.
இங்ங்ணமிருக்கப் பிற்காலத்து ஆசாரியர் களிலே சில் வேதத்தைக் கர்மகாண்டம் என்றும் அதனால் தாழ்ந்த படியைச் சேர்ந்ததென்றும் உபநிஷத்தே ஞானகாண்டம் என்றும் ஆதலால் அது வேதத்தைக்
காட்டிலும் உயர்ந்ததென்றும் கருதுவாராயினர்.
இங்ங்ணம் பிற்காலத்து ஆசாரியர்கள் நினைப்பதற்கு
உண்டான காரணங்கள் பல. அவற்றுட் சிலவற்றை இங்கே தருகின்றேன். முதலாவது காரணம், வேத பாஷை மிகவும் பழமைப்பட்டுப்போனபடியால் அதன் உண்மையான பொருளைக் கண்டுபிடித்தல் மிகவும் துர்லபமாய் விட்டது. நிருத்தம் என்ற வேத நிகண்டையும் பிராம்மணங்கள் என்று சொல்லப்படும் பகுதிகளிலே காணப்படும் வேதமந்திர விளக்கங்களையும் கற்ற பரின்னரே, ஒருவாறு வேத மந்திரங்களின் பொருளையறிதல் சாத்தியமாயிற்று. வேதம் பிரம்மாண்ட நூல் அதில் இத்தகைய ஆராய்ச்சி செய்வார் மிக மிகச் சிலரேயாவர். இப்போது வேதத்திற்கு விளக்குப் போலே நிற்கும் சாயனரென்ற வித்தியாரண்ய சங்கராசாரியின் பாஷ்யம் பிராம்மணங்களையும் நிருக்கத்தையுமே ஆதாரமாகவுடையது. பிராம்மணங்களில் பெரும்பாலும் வேத பதங்களுக்குச் சரியான பொருளே கூறப்பட்டிருக் கிறது. ஆனால், பல இடங்களில் அதன் தாது நிச்சயங்கள் மிகவும் சமயத்துக்கு இடமாகவும் சில இடங்களில் அதன் பொருட்கோளே பிழைபட்டதாகவும் இருக்கிறது.

Page 21
காலை
05:00 05.05 05.10 05.20 05.35 05:40 05.45 O5.50
05.55
06.00 06.20 06.30 06:40 06.45 06.50 07.00 07.10 07.15 08.00 O8.05 08.10 08.30 0.30
நாதவந்தனம்
தேவாரம்
to 606)
சமய நெறி சைவநற்சிந்தனை அருளிசை இஸ்லாமிய நற்சிந்தனை கிறிஸ்தவ / கத்தோலிக்க நற்சிந்தனை போதிமாதவனின் போதனைகள் துதிப்பாடல்கள் வாத்திய விருந்து செய்திகள் அறிவிப்புகள் நிகழ்ச்சி முன்னோட்டம் மெல்லிசைப் பாடல்கள் மாகாணச் செய்திகள் தேன்தமிழ் நாதம் கல்விச் சேவை உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கல்விச் சேவை முஸ்லிம் சேவை ஒலிபரப்பு முடிவு
நண்பகல்
12.00 12.45 13.00 13.30 14.00 14.30
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச் சிமிழ்
மதுர கீதம்
தேன் மதுரம் ஒலிபரப்பு முடிவு.
IᎠfᎢ60Ꭰ6Ꭷ
05.00 05.15
05.30 05.45
06.00 06.10
06.15 06.30 O6.45
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை களத்து மேடு
வயலோடு வசந்தங்கள் விவசாய நாடகம் செய்திகள் அறிவிப்புகள் - தேசபக்திப்பாடல்கள் ஒற்றுமை கீதம் செய்தித் தொகுப்பு gunuЈепЈth
07.00 இதய 07.30 உலகக் 07.40 காற்ற 07.45 கிராட
இசை இரவு 08.00 முஸ் 09.00 செய் 09.10 அறி 09.20 பக்தி 09.30 கலந் 09:45 S.S.6 10.15 இசை வாரம்) சிந்ை
வாரம் 10.45 பண்
5-h 100 நினை 11.15 ஒலிப
Gd
காலை 05.00 நாத 05.05 தேவ 05.10 திருப் 05.20 ஞான 05.35 6ն)Ժ6, 05.40 அரு 05.45 இஸ் 05.50 கிறி நற்சி 05.55 போ, GLIT 06.00 துதி 06.20 6 IT 06.30 செப 06.40 அறி 06.45 நிக 06.50 GTLD 0700 LDé 07.10 தே 07.15 கல் 08.00 g 6 08.05 (GLO 08.10 கல் 08.30 10.30 ஒலி
 

சங்கமம்
செய்திகள் னில் ஒரு கீதம் ய இசை(2-4ம் வாரம் ) ரங்கம் (+ம், 3, 5ம் வாரம்)
ம் நிகழ்ச்சிகள் திகள் ப்ெபுகள்
பாடல்கள் நுரையாடல் லியின் தமிழோசை
ஆய்வரங்கம் (5-ம் த உருக்கும் 2-ம், 4-ம் வாரம்) னும் பரதமும் (1-ம்,3-ம், வாரம் ) ாவில் நிறைந்தவை ரப்பு முடிவு
சவ்வாய்
வந்தனம்
ாரம்
புகழ்
Γ6)μπσου
நற்சிந்தனை ரிசை vாமிய நற்சிந்தனை ல்தவ/கத்தோலிக்க ந்தனை
மாதவனின் னைகள் பாடல்கள் திய பிருந்தா திகள்
விப்புக்கள் ச்சி முன்னோட்டம் லிசைப் பாடல்கள் "ணச் செய்திகள் தமிழ் நாதம் ச்ெ சேவை ச் செய்திகள் லிசைப் பாடல் ச்ெ சேவை ஸ்லிம் சேவை ரப்பு முடிவு
நண்பகல்
12.00 12.45
13.00
3.30
14.00
14.30
ᏞᏝbIᎱ60Ꭰ6Ꭷ
05.00
05.15 05.30
05.45
06.00 06.10
06.15 06.30 06.45
07.00 07.30 07:40 07:45
இரவு 08.00
09.00 09.10
09.20 09.30
09.45
10.15
10.30
10.45
11.00
11.15
நாளும் ஒருவலம் செய்திகள் - அறிவிப்புக்கள் குங்குமச்சிமிழ் இசைக் கச்சேரி இலக்கியச்சோலை ஒலிபரப்பு முடிவு.
மெல்லிசைப் பாடல்கள் குரல் வகை விந்தை உலகம் விடியலை நோக்கி செய்திகள் அறிவிப்புகள் - ஒற்றுமை கீதங்கள் நிகழ்வின் நிழல் செய்தித் தொகுப்பு சைவநெறி குன்றின் குரல் உலகச் செய்திகள் காற்றினில் ஒரு கீதம் கிறிஸ்தவ /கத்தோலிக்க சிறுவர் நிகழ்ச்சி
முஸ்லிம் நிகழ்ச்சிகள் செய்திகள் அறிவிப்புகள் பக்திப் பாடல்கள் உரைச்சித்திரம்/விவரணச் சித்திரம் பி.பி.ஸி.யின் தமிழோசை ராகரசம் (3-ம் வாரம் ) நாதாமிர்தம் (1-ம் வாரம்) கச்சேரி (3-ம் வாரம்) "
இசைக்கச்சேரி பி தரம் (2-ம், 4-ம் வாரம்) மெல்லிசை நினைவில் நிறைந்தவை ஒலிபரப்பு முடிவு
காலை
05.00
05.05
05.10
O5.20
புதன்
நாதவந்தனம் தேவாரம்
LLT606) சமயநெறி

Page 22
05.35 சைவ நற்சிந்தனை 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 05.50 கிறிஸ்தவ/கத்தோலிக்க
நற்சிந்தனை 05.55 போதி மாதவனின்
போதனைகள் 06.00 துதிப்பாடல்கள் 06.20 வாத்திய பிருந்தா 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்கள் 06.45 நிகழ்ச்சி முன்னோட்டம் 06.50மெல்லிசைப்பாடல்கள் மெல்லிசை 07.00 மாகாணச் செய்திகள் 07.10 தேன்தமிழ் நாதம் 07.15 கல்விச் சேவை 08.00 உலகச் செய்திகள் 08.05 மெல்லிசைப் பாடல் 08.10 கல்விச் சேவை 08.30 முஸ்லிம் சேவை 10.30 ஒலிபரப்பு முடிவு. நண்பகல் 12.00 நாளும் ஒருவலம் 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள் 13.00 குங்குமச் சிமிழ் 13.30 கான மஞ்சரி 14.00 இனிய நினைவுகள் 14.30 ஒலிபரப்பு முடிவு
T606) 05.00 மெல்லிசைப் பாடல்கள் 05.15 குரல் வகை 05.30 கதம்பம் (1ம், 3ம், 5ம் வாரம்),
சந்தனமேடை (4ம், வாரம் இசைச்சித்திரம் (2ம் வாரம் 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் -
தேசபக்திப்பாடல்கள் 06.15 ஒற்றுமை கீதம் 06.30 செய்தித் தொகுப்பு 06.45 அருளமுதம் 07.00 சந்தித்ததும் சிந்தித்ததும் 07.30 உலகச் செய்திகள் 07.40 காற்றினில் ஒரு கீதம் 07.45 விஞ்ஞான தீபம் இரவு 08.00 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 சித்தத்தினுள்ளே 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 தாளவாத்தியக் கச்சேரி 10.45 தமிழ் மணிச் சுடர்கள் 1100 நினைவில் நிறைந்தவை
甘.15 11.00
T6)6)
05.00 05.05 05.10 05.20 05.35 05:40 05.45 05.50
05.55
06.00 06.20 06.30 06.40 O6.45 06.50 07.00 07.10 07.15 08.00 O8.05 08.10 08.30 10.30
ஒலிபர ஒலிபர
வி
நாதவ தேவா திருப்பு சாயிப8 சைவ அருளி இஸ்லா கிறிஸ் நற்சிந் போதி
போதன துதிப்ப வாத்தி செய்தி அறிவி நிகழ்ச் மெல்லி
O856 தேன்த கல்விச் உலகச் மெல்லி கல்விச் முஸ்லி ஒலிபர
நண்பகல்
12.00 12.45 13.00 13.30 14.30
o666)
(5.00 05.15 05.30 06.00 06.10
06.15
06.30 06:45 07.00 07.30 07:40 07:45 இரவு 08.00 09.00
நாளுட செய்தி குங்கு இசை ஒலிபா
மெல் குரல் கிராட செய் அறில் ஒற்று 5600 செய் இந்: é}'L|-
9-6Սւ சொ
66T
முஸ் செ1
 

முடிவு (Լpւg.6ւլ.
பாழன்
ற்சிந்தனை
F
மிய நற்சிந்தனை
வ/கத்தோலிக்க 6060
ாதவனின் னகள்
டல்கள்
பிருந்தா
கள்
ப்புக்கள் சி முன்னோட்டம் சைப் பாடல்கள் னச் செய்திகள் மிழ் நாதம்
சேவை
செய்திகள் சைப் பாடல் * சேவை ம் சேவை
մL Աբգ64
ஒருவலம் கள் - அறிவிப்புக்கள் மச் சிமிழ்
கச்சேரி
մL ՄդճՎ.
சைப் பாடல்கள்
J60) சஞ்கிகை . கள் ப்புகள் - மை கீதங்கள் ாக்கோலங்கள் த் தொகுப்பு Fமயப்பேச்சு ம் சமூகமும் செய்திகள் வளம் பெருக்குவோம் ம் பயிர்
ம் நிகழ்ச்சிகள் கள்
09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 செய்தி மஞ்சரி 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 இசைகச்சேரி பி தரம் 10.45 மெல்லிசை 100 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு
வெள்ளி
566)
05.00 நாதவந்தனம்
05.05 திருமுறைப்பாடல்கள் 05.35 சைவ நற்சிந்தனை 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 05.50 கிறிஸ்தவ/கத்தோலிக்க
நற்சிந்தனை 05.55 போதிமாதவனின் போதனைகள் 06.00 துதிப்பாடல்கள் 06.20 வாத்திய மஞ்சரி 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்கள் 06.45 நிகழ்ச்சி முன்னோட்டம் 06.50 மெல்லிசைப் பாடல்கள் 07.00 மாகாணச் செய்திகள் 07.10 தேன்தமிழ் நாதம் 07.15 கல்விச் சேவை 08.00 உலகச் செய்திகள் 08.05 மெல்லிசைப்பாடல் 08.10 கல்விச் சேவை 08.30 முஸ்லிம் சேவை 10.30 ஒலிபரப்பு முடிவு. நண்பகல் 1200 நாளும் ஒருவலம் 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள் 13.00 குங்குமச் சிமிழ் 13.30 தெய்வீககானம் 14.00 வீட்டார் விருந்து 14.30 ஒலிபரப்பு முடிவு.
LT66) 05.00 மெல்லிசைப் பாடல்கள் 05.15 பண்ணோடு இசை பாடல் 05.30 வண்ணமருதம் 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் - 06.15 ஒற்றுமை கீதங்கள் 06.30 செய்தித் தொகுப்பு 06.45 ஞானக்களஞ்சியம்

Page 23
07.00 இதய சங்கமம் 07.30 உலகச் செய்திகள் 07.40 பேச்சு 07.50 மெல்லிசைப் பாடல்கள் இரவு 08.00 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 கவிதைக்கலசம் 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 லயவிந்யாசம் - 1.h3th 5th
வாரம் இசைநாடகம்(2ம் 4ம் வாரம்) டி30 கதாபிரசங்கம் - ம் வாரம்
இசையமுதம் - 3ம் 5ம் வாரம் ராம நாடகம் 2/4 11.00 நினைவில் நிறைந்தவை 115 ஒலிபரப்பு முடிவு.
சனி
, T606)
05.00 நாதவந்தனம் 05.05 சுப்ரபாதம்/தோத்திரமாலை 05.35 சைவ நற்சிந்தனை 05.40 அருளிசை 05.45 இஸ்லாமிய நற்சிந்தனை 05.50 கிறிஸ்தவ/கத்தோலிக்க
நற்சிந்தனை 05.55 போதி மாதவனின்
போதனைகள் 06.00 துதிப்பாடல்கள் 06.20 வாத்திய பிருந்தா 06.30 செய்திகள் 06.40 அறிவிப்புக்கள் 06.45 நிகழ்ச்சி முன்னோட்டம் 06.50 மெல்லிசைப் பாடல்கள் 07.00 மாகாணச் செய்திகள் 07.10 தேன்தமிழ் நாதம் 07.15 கல்விச் சேவை 08.00 உலகச் செய்திகள் 08.05 மெல்லிசைப் பாடல் 08.10 கல்விச் சேவை 08.30 முஸ்லிம் சேவை 10.30 இசைப்பயிற்சி 10.45 நாடகம் 11.15 அரங்கேற்றம் 130 தமிழ் மூலம் சிங்களம் 11.45 ஓடிவிளையாடு பாப்பா
606 05.00 நாதவ 05.05 2/4G, 05.35 608F6ፂ! 05.40 அருளி 05.45 இஸ்ல 05.50 கிறிஸ் நற்சிந்தனை 05.55 போதி போதனைகள் 06.00 துதிப் 06.20 வாத் 06.30 செய்
06.40 அறி
 
 

ருவலம்
ரு வலம்
- அறிவிப்புக்கள்
சிமிழ்
ஈக் கோலங்கள்
(ply 64.
சப் பாடல்கள்
காலங்கள்
T
கள் திப் பாடல்கள் தொகுப்பு ழுமியங்கள்
செய்திகள்
ல் ஒரு கீதம் சைப் பாடல்கள்
நிகழ்ச்சிகள் ്
புகள்
JTL6)856ir சந்ததி யின் தமிழோசை கச்சேரி - தரம்1 ம்,3-ம் வாரம்) வாரம் மறு ஒலிபரப்பு) வில் நிறைந்தவை பு முடிவு
ாயிறு
தனம் ாத்திரமாலை ற்சிந்தனை
፱)öቿ மிய நற்சிந்தனை வ/கத்தோலிக்க
ாதவனின்
டல்கள்
பிருந்தா கள் புக்கள்
06.45 நிகழ்ச்சி முன்னோட்டம்
கிறிஸ்தவ கீதங்கள் 06.50 மெல்லிசைப் பாடல்கள் 07.00 மாகாணச் செய்திகள் 07.10 வாரம் ஒருவலம் - நேரடி
ஒலிபரப்பு 08.00 உலகச் செய்திகள் 08.10 கிறிஸ்தவ கீதம் 08.15 மெல்லிசைப் பாடல்கள் 08.30 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 10.30 குரல் வகை 10.45 கோதையர் கோலம் 11.15 சிறுவர் மலர் 11.45 மெல்லிசைப் பாடல்கள் நண்பகல் 1200 நாளும் ஒருவலம் 12.45 செய்திகள் - அறிவிப்புக்கள் 01.00 குங்குமச் சிமிழ் 0130 தங்கக் கொழுந்து 0200 நர்த்தனக் கவிகள் 02:30 ஒலிபரப்பு முடிவு.
6)6)
05.00 மெல்லிசைப் பாடல்கள்
05.15 குரல் வகை 05.30 நவசக்தி 05.45 நலமாக வாழ்வோம். 06.00 செய்திகள் 06.10 அறிவிப்புகள் 06.15 ஒற்றுமை கீதங்கள்
கோயில் அஞ்சல் ( கடைசி வாரம்) (30 நிமிடம் ) 06.30 செய்தித் தொகுப்பு 06.45 கிறிஸ்தவ கீதங்கள் 0700 கிறிஸ்தவ/கத்தோலிக்க
நிகழ்ச்சி 07.30 உலகச் செய்திகள் 07.40 காற்றினில் ஒரு கீதம் 07.45 வெளிநாட்டுச் செய்தி
விமர்சனம் இரவு 08.00 முஸ்லிம் நிகழ்ச்சிகள் 09.00 செய்திகள் 09.10 அறிவிப்புகள் 09.20 பக்திப் பாடல்கள் 09.30 கலைப்பூங்கா 09.45 பி.பி.ஸி.யின் தமிழோசை 10.15 ராகம்- தாளம்- பல்லவி 2/5 இசைக்கச்சேரி 1/3 4(மறுஒலி) 100 நினைவில் நிறைந்தவை 11.15 ஒலிபரப்பு முடிவு *

Page 24
| Gigges
O530
05:45
| 06:00
06.30
O645
0800
O830
O902
፲0.00
፲030
1700
fi3O
፲200
245
300
፲3 ፫6
4.02
፲5.02
16:02
f630
፲Z00
፲Z፲5
Z30
፲800
፲8 ፲5
f330
1900
fg30
2፯00
2茂だァ
273O
2135
2200
ஞாயிற்றுக் கிழமை
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்திகள்/அறிவித்தல்கள் பொங்கும் பூம்புனல் 62/T6076շնհծ
என் விருப்பம்
கதம்பமாலை எமரல்ட் கலைக் கதம்பம் விடுமுறை விருப்பம் நகைச்சுவை இசையும் கதையும் விடுமுறை விருப்பம் தொடரும் செய்திகள்/அறிவித்தல்கள் வைத்தியரைக் கேளுங்கள் விடுமுறை விருப்பம் தொடரும் பாட்டொன்று கேட்போம் விடுமுறை விருப்பம் இதய ரஞ்சனி விடுமுறை விருப்பம் விடுமுறை விருப்பம் தொடரும் பிறந்த நாள் வாழ்த்து இன்றைய நேயர் செய்திகள்/அறிவித்தல்கள் மங்கள கானங்கள் நினைவூட்டுகிறோம் திரைக்கதம்பம் தேனிசை தெரிவுகள் செய்திகள்/அறிவித்தல்கள் இரவின் மடியில் சொர்ன கானங்கள் இரவின் மடியில் (தொடர்ச்சி) ஒலிபரப்பு முடிவு
O5.30
O5.45
O600
O6.30
O645
0800
O330
திங்கட்கிழமை
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்திகள்/அறிவித்தல்கள் பொங்கும் பூம்புனல் 62.76076)fli)
என் விருப்பம்
0900
f0.00
ft.00
7z3O
200
245
3.00
3.30
fa.f5
74.30
1500
15.30
f345
1600
f6.30
f700
፲Z፲5
た。30
፲8.00
፲8 j5
፲830
1900
1930
2i(OO)
2.75
230
235
2200
கதம்பமாலை பாட்டொன்று திரை தந்த நீங்கள் கேட் சித்திர கான செய்திகள்/ சிந்தனை மு முத்துவிதா6 பெண்குரல்
மகளிர் கேட் மலரும் மங்க இன்றைய ே விளையாட்டு இசைக் கள பாட்டும் பதழு நீங்கள் கேட் பிறந்த நாள் இன்றைய ே செய்திகள்/ மங்கள கான நினைவூட்டு இதய கீதம்
தேனிசை ெ செய்திகள்/ இரவின் மடி சொர்ன கா இரவின் மடி ஒலிபரப்பு மு
செவ்வாய்க்கியூ
O5.30
0.45
06.00
06.30
06:45
0800
08:30
0900
0.00
ft.00
ft3O
፲200
245
கீதாஞ்சலி ஆனந்த கா என்றும் இன் செய்திகள், பொங்கும் பூ வானவில் என் விருப்ப கதம்பமா6ை பாட்டொன்று நம்நாட்டுப் நீங்கள் கே சித்திர கான செய்திகள்,
 
 
 

கேட்போம் இசை
L60621
th அறிவித்தல்கள் த்துக்கள்
Ti
6,962 கையும்
ஜாடி
அரங்கு ஞ்சியம்
ழம் டவை
வாழ்த்து
[5եւ ՈT அறிவித்தல்கள் 7ங்கள்
கிறோம்
தரிவுகள் அறிவித்தல்கள் ufial)
னங்கள் யில் (தொடர்ச்சி)
tջ 62/
26ᏇᎤᎬᏝᏅ
னங்கள்
ரியவை அறிவித்தல்கள் ம்புனல்
th
y கேட்போம் ாடல்கள் (புதியவை) டவை
rம்
அறிவித்தல்கள்
3.00
3.30
f4.00
14.15
f4.30
f5. OO)
15.30
፲3:45
f600
f630
/00
たZだ5
፲Z30
፲800
1815
f8:30
3.00
1930
2100
之茂だァ
2.30
2፲35
2200
ஹிந்திப் பாடல்கள் (புதியவை) முத்துவிதானம் ஒருபடப் பாட்டு
ஆண்குரல் மகளிர் கேட்டவை
ஆடவர் அரங்கம் இன்றைய நட்சத்திரம் மலையாளப் பாடல்கள் இசைக் களஞ்சியம் இசையும் கதையும் நீங்கள் கேட்டவை பிறந்த நாள் வாழ்த்து இன்றைய நேயர் செய்திகள்/அறிவித்தல்கள் மங்கள கானங்கள் நினைவூட்டுகிறோம் குடும்ப விருப்பம் தேனிசை தெரிவுகள் செய்திகள்/அறிவித்தல்கள் இரவின் மடியில் சொர்ன கானங்கள் இரவின் மடியில் (தொடர்ச்சி) ஒலிபரப்பு முடிவு
புதன்கிழமை
05:30
O5.45
06.00
O6.30
O645
O300
O900
10 00
1100
ft.30
፲200
፲245
፲300
f3.5
3.30
fz.00
14.15
fa.30
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்திகள்/அறிவித்தல்கள் பொங்கும் பூம்புனல் என் விருப்பம்
கதம்பமாலை பாட்டொன்று கேட்போம் எழுத்தலங்காரம் நீங்கள் கேட்டவை சித்திர கானம் செய்திகள்/அறிவித்தல்கள் ஒரே ராகம் ஒரு முகம் பல குரல் முத்துவிதானம் ஒருபடப் பாட்டு முத்துக் குவியல் மகளிர் கேட்டவை

Page 25
ama
15.00 மலரும் மங்கையும் 1830 நினைவூட்டு 15.30 இசை அமைப்பாளர் 1900 குடும்ப விரு 1345 விளையாட்டு அரங்கு 1930 தேனிசை ே 1600 இசைக் களஞ்சியம் 2100 செய்திகள், 16.30 தேர்ந்த இசை 2415 இரவின் மடி 1700 நீங்கள் கேட்டவை 2430 சொார க 1715 பிறந்த நாள் வாழ்த்து 2135 இரவின் மடி 1730 இன்றைய நேயர் 2200 ஒலிபரப்புழு 1800 செய்திகள்/அறிவித்தல்கள் 1815 மங்கள கானங்கள் வெள்ளிக்கிழக 1830 நினைவூட்டுகிறோம் 05.30 கீதாஞ்சலி 1900 இதய கிதம் 05:45 ஆனந்த க 1930 தேனிசை தெரிவுகள் 06.00 என்றும் இ 2100 செய்திகள்/அறிவித்தல்கள் 06:30 செய்திகள், 2415 இரவின் மடியில் 06:45 பொங்கும் பூ 2130 சொர்ன கானங்கள் 0800 வானவில் 2135 இரவின் மடியில் (தொடர்ச்சி) 08:30 என் விருப் 2200 ஒலிபரப்பு முடிவு 0900 கதம்பமாை 1000 பாட்டொன் வியாழக்கிழமை 100 நம்நாட்டுப் 05.30 கீதாஞ்சலி (பழையவை 05:45 ஆனந்த கானங்கள் 1130 நீங்கள் கே 06.00 என்றும் இனியவை 1145 கல்ப் லங்க 06:30 செய்திகள்/அறிவித்தல்கள் 7200 L/ög5li7 L/ITL 06:45 பொங்கும் பூம்புனல் 1245 செய்திகள், 0800 வானவில் 1300 இசைப் புய 08:30 என் விருப்பம் 1330 முத்துவிதா 0900 கதம்பமாலை 1400 அல்லியின் 1000 பாட்டொன்று கேட்போம் விருப்பம் 1100 மண் வாசனை 1430 நியு பாஹி 1130 நீங்கள் கேட்டவை 1445 ஸ்ராலைற் 1200 சித்திர கானம் 15.00 மீவோண்ட் 1245 செய்திகள்/அறிவித்தல்கள் 15.15 சிற்றி பொ 1300 ஹிந்திப் பாடல்கள் (பழைய) முடிந்தால் 1330 முத்துவிதானம் 15.30 6062161 Lh Lói 1400 ஒரு படப்பாட்டு நிற்கும் ஆ 1430 மகளிர் கேட்டவை 1345 திரைப்படட் 15.00 வாலிப வட்டம் 1600 இசைக் க 15.30 கவி உள்ளம் 1630 தேனும் பா 15.45 լ0606ՍեւյՈ6ում Լյուճն867 1700 நீங்கள் ே 1600 இசைக் களஞ்சியம் 1715 பிறந்த நா 1630 வானொலி குறுக்கெழுத்துப் 1730 இன்றைய போட்டி 1800 செய்திகள் 1700 நீங்கள் கேட்டவை 1815 மங்கள க 1715 பிறந்த நாள் வாழ்த்து 1830 நினைவூட 1730 இன்றைய நேயர் 1900 இதய கித 1800 செய்திகள்/அறிவித்தல்கள் 1930 தேனிசை 1815 மங்கள கானங்கள் 2100 செய்திகள்
 

கிறோம்
பம்
நரிவுகள் அறிவித்தல்கள் uflრl)
னங்கள் பில் (தொடர்ச்சி)
ջ ճ2/
a)
னங்கள்
ரியவை அறிவித்தல்கள் ம்புனல்
Ꮦ)
று கேட்போம் LዘTL6ùö6ir
)
ட்டவை
வெள்ளி விருப்பம் ல்கள் /அறிவித்தல்கள் i
னம் ஹலோ உங்கள்
பரவசப் பயணம் சங்கீத சாகரம் சுவைக் கிண்னம் பின்ற் வெல்ல வெல்லுங்கள் ஸேர் நெஞ்சில் 0ժցեճir
பாடல்கள் ாஞ்சியம்
பம்
ட்டவை r 6)/Tijižey
நேயர் (அறிவித்தல்கள் னங்கள்
கிெறோம்
தரிவுகள் (அறிவித்தல்கள்
之がたう
21.30
2135
2200
இரவின் மடியில் சொர்ன கானங்கள் இரவின் மடியில் (தொடர்ச்சி) (ரொப்ரெக்ஸ் தேன் மலர்கள் 43 வாரம்)
ஒலிபரப்பு முடிவு
சனிக்கிழமை
O5.30
O5.45
O600
06.30
O6.45
0800
O830
O900
f000
1100
፲200
た。45
3.00
3.30
፲4.00
fa,30
፫600
15.30
f345
1600
f700
Z方
f730
፲800
፲8 j5
f830
፲9.00
930
2000
2100
2Zだ写
2,30
2.35
2200
கீதாஞ்சலி ஆனந்த கானங்கள் என்றும் இனியவை செய்திகள்/அறிவித்தல்கள் பொங்கும் பூம்புனல் ajit070ffl');
என் விருப்பம்
கதம்பமாலை பாட்டொன்று கேட்போம் சங்கமம் (அறிவிப்பாளர்கள்/ஏனைய நிலைய ஊழியர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி) விடுமுறை விருப்பம் . செய்திகள் ஆரோக்கிய இல்லம் (சுவயியச) ஒரு படப்பாட்டு ஒலிமஞ்சரி
சந்தன மேடை அன்றும் இன்றும் பொப்பிசைப் பாடல்கள் விளையாட்டரங்கம் /விவிருப்பம் ஒலிச் சித்திரம் விடுமுறை விருப்பம் பிறந்த நாள் வாழ்த்து இன்றைய நேயர்(கண்டிகேகாலை, மாத்தளை) செய்திகள்/அறிவித்தல்கள் மங்கள கானங்கள் நினைவூட்டுகிறோம் குடும்ப விருப்பம் கானலைத்தேடும் மான்கள் (தொடர்நாடகம்) தேனிசைத் தெரிவுகள் செய்திகள்/அறிவித்தல்கள் அஞ்சல் பெட்டி - 574, சொர்ன கானங்கள் இரவின் மடியில் ஒலிபரப்பு முடிவு

Page 26
அதிகாலை 310 ஸஹர் நிகழ்ச்சிகள் ஆரம்பம் 3.15 ஹிட்லுல் குர்ஆன் 405 தர்ஜமதுல்குர்ஆன் 430 அல்குர்ஆன் விளக்கம் 445 ஸஹர் சிந்தனை - மலாய்மொழி -
ஞாயிறு தினங்களில் 450 ஸஹர் சிந்தனை (ஆங்கிலம்) 455 ஸஹர்சிந்தனை (சிங்களம்) 5.00 ஸஹர்சிந்தனை (தமிழ்) 5.10 துஆ 520 67u607Ոճrvir gյցjkշնE560/m"Lջն) தொழுகைக்கான அஸான் 5.40 ஒலிபரப்பு முடிவு
திங்கட்கிழமை
ᏯᏏfᏤ6Ꮫ26Ꭷ 5.45 இஸ்லாமிய நற்சிந்தனை 8.30 அல்குர்ஆன் முறத்தல் 8.35 மாதர்மஜ்லஸ் 905 இன்றைய சிந்தனை 910 தர்ஜமதுல்குர்ஆன் 930 இன்றைய மதுரசாக்கள் 9.55 சுவடிக்கூடத்திலிருந்து
இரவி/ 6.15 இப்தார்விசேட நிகழ்ச்சிகள் 700 இஸ்லாமிய விழுமியங்கள் 710 தொகுப்புரை /அஹதிய்யா /
இஸ்லாமிய கிதம் 7.30 முஸ்லிம் உலகம் வாரமஞ்சரி 740 இஷாத்தொழுகைக்கான அஸான் 755 வரலாற்றில் ஒர் ஏடும் குறிப்பும்
ஸலவாத்தும் 1000 சொற்சமர் 10.20 கலந்துரையாடல் 10.45பயானுல்குர்ஆன்
செவ்வாய்க்கிழமை ᏪᏎᏏ/1 622 ᏯᏆ2 545 இஸ்லாமிய நற் சிந்தனை 8.30 அல்குர்ஆன்முறத்தல் 8.35 மாதர் மஜ்லிஸ் 905 இன்றைய சிந்தனை 910 தர்ஜமதுல் குர்ஆன் 930 ஆரோக்கிய சந்திப்பு 1000 நாடகம்
இரவு 6.15 இப்தார் விசேட நிகழ்ச்சிகள் 700 அல்குர்ஆனியக் கலைகள் 710 நாடகம் 7.30 முஸ்லிம் சிறுபான்மை நாடுகள் 740 இஷாத்தொழுகைக்கான அஸான் 755 வரலாற்றில் ஒர் ஏடும் குறிப்பும்
6ոյ6Ս67ոքgյին 10.00 தொலைபேசி நிகழ்ச்சி - மாதர் 1020முஸ்லிம் உலகம் - சிங்களம் 10.30 தொலைபேசி நிகழ்ச்சிகள் - மாதர்
//தன்கிழமை ᏧᏎᏏfrᏍᎤᏍᎧ 5.45 இஸ்லாமிய ந 830 அல்குர்ஆன் 835 மாதர்மஜ்லிஸ் 9.00 தொலைபேசி 10.15 ஊடுருவல் ச
இரவு
6.15 இப்தார்விசேட 700 இளைஞர் இத் 720 இஸ்லாமிய கி 735 அல்குர்ஆன் 740 இஷாத்தொழு 755 வரலாற்றில் ஒ
ճiv606չInégյլն 1000அல்குர்ஆன் 10.15 மணிமொழிக
1025 மாதர் மஜ்லிஸ் -
வியாழக்கிழ.ை diff GQs
5.45 இஸ்லாமிய ந 8.30 அல்குர்ஆன் 8.35 மலாய் மஞ்சரி 905 இன்றைய சிந் 910 தர்ஜமதுல்குர் 9.30 மாதர்மஜ்லிஸ் 10.00 எங்கள் கிரா
இரவி/
6.15 இப்தார் விசே 700 ஸரத்துன்நபி 710 அல்குர்ஆன் 725 மணிமொழிக 735 அஸ்மாஉல்ஹ 740 இஷாத்தொழு 755 வரலாற்றில்
бтЈяЈ62//7göф/й 10.00 தொலைபேசி
வெள்ளிக்கிழ
ᏪᏏfrᏍ2ᏍᎧ 5.45 இஸ்லாமிய 8.30 அல்குர்ஆன் 835 உறுதுமஞ்ச7 905 இன்றைய சி 910 தர்ஜமதுல்கு 9.30 மணிமொழி 940 அல்குர்ஆன் 9.55 குத்பாப்பிரச 10.20 களிதா
It/Taos) 6.15 இப்தார் வி
இரவி
700 dig60607 as 770 குத்பாப்பிர
 

730 இதயத்தில் வாழ்வோர் 740 இஷாத்தொழுகைக்கான அஸான்
சிந்தனை 755 வரலாற்றில் ஒர் ஏடும் குறிப்பும் றத்தல் ஸலவாத்தும்
10.00 எபிங்கிதிலொவின் கழ்ச்சி 10.20 தராவீஹ் பயான் கச் சித்திரம் 1040 பொவுன் ஹண்ட் நிகழ்ச்சிகள் ஐக்கிழமை t 5.45 இஸ்லாமிய நற்சிந்தனை நிறத்தல் 830 அலகுாஆனமுறததல கைக்கான அஸான் 835 மாணவர் மன்றம்
ஏடும் குறிப்பும் 900 செளத்துல் அவ்லாத்
930 தொடர்நாடகம் விளக்கம் 945 தொலைபேசி நிகழ்ச்சி r 10.40இஸ்லாமிய கீதம் - சிங்களம் --Ꮋ 10fr6226Ꭷ V A. 6.15 இப்தார் விசேட நிகழ்ச்சிகள்
ர்சிந்தனை இரவு முறததல 700 நபித்தோழர்கள்
710 நமது வளங்கள்/இலக்கிய மஞ்சரி தனை 725 இஸ்லாமிய கீதம் ஆகின 740 இஷாத்தொழுகைக்கான அஸான் ம் 755 வரலாற்றில் ஒர் ஏடும் குறிப்பும்
6106.6/siggifth 1000 தொலைபேசி நிகழ்ச்சி - சிறுவர் நேரடி ட நிகழ்ச்சிகள் 1040 சிங்களம்- மணிமொழிகள்
1050ஆங்கிலம் - பேச்சு விளக்கம் 方 வெள்ளிக்கிழமை Pஸ்னா dist Goa கைக்கான அஸான் 5.45 இஸ்லாமிய நற்சிந்தனை ர் ஏடும் குறிப்பும் 8.30 அல்குர்ஆன்முறத்தல்
835 மலாய்மஞ்சரி நிகழ்ச்சி - நேரடி 905 இன்றைய சிந்தனை 9.10 அல்குர்ஆன் வகுப்பு ᎠᎷᏝ) 920 அறிவுக் களஞ்சியம்
M r 9.50 நேயல் குரல் ற்சிந்த»7 10.00 சுவைக் கதம்பம் முறத்தல 1025இஸ்லாமிய கிதம்
2: ᎪᏝbfr ᏍᏈ26ᏂᎩ f 6.15 இப்தார் விசேட முஸ்லிம் நிகழ்ச்சி விளக்கம் கம் தொகுப்பு இரவி/
700 ஜங்கடமைத் தெளிவு 710 உரையரங்கம் 740 இஷாத்தொழுகைக்கான அஸான் ட நிகழ்ச்சிகள் 755 வரலாற்றில் ஒர் ன்டும் குறிப்பும்
ճnյ606շinég/ւն 10.00 சுவடிக் கூடத்தில் இருந்து 5/76062 1030 fill titly கம் ta
10.45 சதஹம் சாரய

Page 27
46Ꮼ4ᏍgzᏃᏛ
195, giftIII
195, ELննIւ
TENGELIG :
 

$1[[OS: XD3 & - 810'89919-1-[[O'GILIOŞ : 101 - 1S}
8545, 33O588
Ş, 丝跳舞
脉。
YMV

Page 28
புத்தாயிரம் / 6ᎠᏎ6Ᏸ/
195, at Gi
- J - S. ب:
ت ܛܠܝܼܬ݂ܵܐ" ー N. Fd S6).J60
rெ ܠ 叉
W I
|
فر א
ཡིག་ཚང་སྔ་
ՀնjնիԱԼ gumau p
a D O) ம GER ளுக்கும்
( தமிழ், சிங்களம், ஆங்கிலம் 马 அச்சுவேலைகள்வி அச்சுவேலையோடுதொடர்புை ஒரே இடத்தில் செய் குறைந்த செலவில் நிறைத்
நாடவேண்
alene 5 44
 
 

சிறந்த நிறுவனம்
வேலை செய்து கொள்வதற்கும். |கிய மொழியில் சகலவிதமான ப்துகொள்வதற்கும். = //அனைத்து வேலைகளையும் து சிகாள்வதற்கும். த பயனை அடைவதற்கும் /////9). If,
jigg,