கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சூரியனின் கதை

Page 1

■エ ●リエー

Page 2
w ー。
s W ՈjlՀնւմ i
s
っつて ar ܓܔ܌ - - O − N - "ކ ހ ހި
- f
/N ཙལ་བསྔགས་འོང་། っ一て -14 A. ` ܀ ܓ ` யூழ்ே)( ’ ހދ، ; è همرار をい ܫ , Na -- ན་ ' 1 . . . .. ~പ
 
 
 

அறிவியல் நூல் வரிசை - 1
சூரியனின்
கதை
୫. குணராசா, B. A. Hons (Cey. ), M. A. S. L. A. S.
(செங்க்ை ஆழியான்)
விற்பனையாளர்:
மரீ லங்கா புத்தகசாலை, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம், பூபாலசிங்கம் புத்தகசாலை
பஸ் நிலையம், யாழ்ப்பாணம் -

Page 3
முதலாம் பதிப்பு: ஒக்டோபர் 1986 (C) Mrs. Kamala Kunarasa அச்சுப் பதிவு: மரீ லங்கா அச்சகம், யாழ்ப்பாணம். 6&av; egunr: 6 - OO
க. குணராசா,
(முன்னுள்:
O
புவியியல் உதவி விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக் கழகம்,
பேராதனை - கொழும்பு, புவியியல் ஆசிரியர், கொக்குவில் இந்துக் கீல்லூரி, பகுதிநேர விரிவுரையாளர், தொழில் நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாணம் அதிதிப் போதனுசிரியர், ஆசிரிய கலாசாலே, கொழும்புத்துறை, ஆலோசக ஆசிரியர், “புவியியல் காரியாதிகாரி, கிண்ணியா; உதவி அரசாங்க அதிபர், துணுக்காய்.)
உதவி அரசாங்க அதிபர், (தலேமைப்பீடம்) கிளிநொச்சி.
அறிவியல் நூல் வரிசை:
மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகு வில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும். அவ்வகையில் "சூரியனின் கதை" முதல் நூலாக வெளிவருகிறது.
பதிப்பவர்

சூரியனின் கதை
பிரபஞ்சம்
நாம் வாழ்கின்ற நாடு இலங்கை; இலங்கை ஆசியாக் கண் டத்தின் ஒரு நாடு. ஆசியாக் கண்டம் உலகத்தின் ஒரு பகுதி: உலகம், பூமி என்ற கோளத்தின் ஒரு பாகம். பூமியோ ஞாயிற்றுத் தொகுதி (Solar System) என்ற சூரிய மண்டலத்தின் ஒரு பகுதி. ஞாயிற்றுத் தொகுதி பால் வழி (Milky Way) என்ற அண்டத்தின் ஒரு பாகம்; அண்டமோ பிரபஞ்சம் என்ற (Universe) பேரண்டத்தின் ஒரு துகள். பிரபஞ்சத்தில் இதுதான் நமது நிலை. பிரபஞ்ச வெளியில் நமது பூமி ஒரு குண்டூசியின் கூர் நுனியிலும் பருமன் குறைந்த ஒரு நுண் துகளாகும்.
தெளிவான வானம் கொண்டதொரு இரவு வேளையில் வானத்தை அண்ணுர்ந்து நோக்கும்போது, கோடிக் கணக்கான ஒளிச் சிதறல்கள் வானில் சிதறுண்டு கிடப்பதைக் காண முடியும். அவை நட்சத்திரங்களும், கோள்களும், அவையொத்த பல்வேறு வான் பொருட்களுமாகும். சிமிட்டுகின்றவை நட்சத்திரங்களாக வும் (உடு), சிமிட்டாது பிரகாசமாக ஒளிர்பவை கோள்களாக வும் விளங்குகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரமாகும். தாமாகவே ஒளிவீசக்கூடியன நட்சத்திரங்களாகவும், நட்சத்திரங் களிலிருந்து பெற்ற ஒளியைத் தெறித்துப் பிரகாசிப்பன கோள் களாகவும் வரையறுக்கப்படுகின்றன. கோடிக் கணக்கான அண் டங்களைக் கொண்ட வான் வெளியே பிரபஞ்சமாக விரிந்து கிடக்கின்றது.
ஆதியும் அந்தமும் வரையறுக்கப்பட்ட எல்லைகளும் அற்ற வான் வெளியே பிரபஞ்சமாகும். இப்பிரபஞ்சம் எவ்வாறு உரு வாகியது?
பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணில், ‘இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் காரணமாக ஆக்கப்பட்ட கடின மான பழைய பொருட்கள் யாவும் ஒன்று சேர்ந்து ஒரு சக்தித் திரளாகக் (Ball of Energy) காணப்பட்டன. கண்ணிற்குப் புலனுகாத அண்டத் துகள்களும், குறைந்த அடர்த்தியுடைய வாயுக்களும் (ஐதரசன், ஹீலியம், ஒட்சிசன், நைதரசன்) இணைந்து புகையுரு அல்லது நெபுலா (Nebula) வாகக் காட்சி தத்தன. இந்த ஆதி நெபுலாதான் பிரபஞ்சத்தின் மூலக் கருவாகும்.

Page 4
臺 ரியனி வி
இப்பிரபஞ்ச மூலக்கரு ஒரு கிட்டத்தில் வெகு விரைவாக விரியத் தலைப்பட்டது. பிரபஞ்சய் பொருட்களான் அண்டத் துகள்களும் வாயுக்களும் தம்மளவில் அதிகரிக்கவில்ல்ே ஆணுல், பிரபஞ்சப் புகையுரு விரிவடைய அதனுள் மிக அடர்த்தியாகவும், இறுக்கமாகவும் சேர்ந்திருந்த அண்டத் துகள்களும் வாயுக்களும் தம் நில விட்டு விரிந்து ஐதாகப் பரவின.
இப்பிரபஞ்சம் பெருக்கமடைய ஆரம்பிக்குமுன் பிரபஞ்சப் பொருட்களின் அடிப்படை மூலகங்கள் அனேத்தும், பிரபஞ்சப் புகைபுருக் கோணத்தின் மத்தியில் நெருப்புப் பிண்டமாகச் சேர்ந்து கிடந்தன. இவற்றின் வெப்ப நிலே கற்பனேக்கு எட்டாக அளவு உயர்ந்திருந்தது. இந்த அதி வெப்பத்தில் பொருட்களின் அணுக்கள் சிதைந்து, அவற்றிலுள்ள நியூட்ரான்கள் சிவாய்ச்சி நியிேல் கொந்துளிக்கத் தொடங்கின. இந்த நிவேயில் யூ தன் பிரபஞ்சம் விரிவடையத் தொடங்கியது. நியூட்ரான்கள் ஒன்று சேர்ந்ததும், எகிபக்ட்ரான் துகள்கள் சிதர் பிளக்க விரிவடைந்து கொண்டிருந்த ஆதிப் பிரபஞ்சப் புகாத் வெடித்துச் சிதறியது. அதனுள் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறித் தெரிக்கப் பட்டு திரள் திாளாக அமைந்தன. அவ்ையே அண்டங்களாக மாறின.
அண்டங்கள்
ஆதிப்பிரபஞ்சப் புண்கயுருளிலிருந்தே அண்டிங்கள் பிறந்தன. அண்டங்களின் அண்டத் தூசுகிரும் வாயுக்களும் கடினமான பழைய பொருட்களும் காணப்பட்டன. அப் பொருட்கள் தத் தமது ஈர்ப்புக் காரணமாக ஒன்றையொன்று ஈர்த்து ஒன்ருே டொன்று இனேந்தும் மோதியும் கொண்டன. மோதியதால் அவை வெப்பத்தையும், சுழற்சியையும் பெற்றன. சுழற்சி, அண்டப் போருட்களே ப் பெருங் கோளங்களா அ மாற்றிவிட்டது. ஒவ்வொரு அண்டத்திலும் கோரக் கணக்கான புகையுரு நெபு லாக்கள் உருவாகின. அவை ஒன்றுடன் ஒன்று போதி வெப் டத்தையும் சுழற்சியையும் பெற்றதால், பிரகாசிக்கத் தொடங் கின. பெரியபெரிய புகையுருக்கோள்களாகப் பிரகாசித்த இவை, சுருங்கத் தொடங்கின. அவை சுருங்கிக் தொடங்கியதும் உன் இளார்ந்த வெப்பசி அதிகரித்தது. அதனுல் அவற்றின் பிரகாசம் இன்னமும் கூடியது. கோடிக் கனக்கான நட்சத்திரங்கள் இவ் வாறே உருவாகின. நமது சூரியனும் இவ்வாறே பிறந்த ஒரு நட்சத்திரமாகும், அண்டங்களுள் நட்சத்திரங்கள் உருவாகுவதற் குச் சுமார் 200 கோடி ஆண்டுகள் பிடித்திருந்தன.

சூரியனின் கதுை
பிரபஞ்சத்தில் நாம் இன்று ஓரளவு அறிந்த அண்டமாக GásafT PŘIgGGAugs LIITÄ SAAM (Milky Way) ஆகும். பால் வழி அண்டத் திற்கு மிக அருகில் கீானப்படும் "அன்ட்ரோவி " , என்ற அண்டமும் ஓரளவு அறியப்பட்டிருக்கின்றது. இவற்றைவிட கோமா பெர்னீர்ெஸ் அண்டம், ஒனரயன் விண்மீன் தொகுதி யிலுள்ள பெரிய நெபுலா அண்டம், தனுசு விண்மீன் தொகுதி யிலுள்ள முப்பிளவு நெபுலா அண்டம், கனெஸ் வெனுரிகி, சைக்னஸ் நீள்நெபுலா என்பன நிமக்குத் தெரிந்த அண்டங் களாகும்.
ட்டம் : 1. அன்ரோடோ அண்.
அன்ரோமிடா அண்டம், பூமியிலிருந்து 20 இலட்சம் ஒளி யாண்டுத் தூரத்தில் அமைந்துள்ளது. எனவே, நாம் இன்று அன்ரோமிடாவைப் பார்க்கும்போது காணும் தோற்றம், உண்மை யில் அன்ரோமிடாவின் 20 இலட்சம் ஒளி ஆண்டுகளுக்கு முற் பட்ட தோற்றமாகும்: வினுழு ஒன்றுக்கு 1,88,000 மைல் வேகத் தில் ஓர் ஆண்டில் ஒளி செல்கின்ற நீரத்தை ஒளியாண்டுத் திாரம் என்பர். ஒர் ஒரியாண்டு ச8880000000 சிமைல்களுக்குச் சமகுகும்.
5- di, A.

Page 5
படம் 3. பி. 5-த் தி:ள் Fரின் ஈ (Cygnus) நீள் நேபு வர
 

துரியனின் கதை
ாேல் வழி
மேது சூரியனும் அதன் கோசிகளும் அமைந்துள்ள அண்டத் கினேப் பால் வழி என்பர். இரவு வேண்யில், தெளிவான வானத் தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக் கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ தோளிகள் "ஆகாய கங்தை என்றார்.
படம் : 4. பால் நதி அண்டம். ம்
சி) ஈருளி வடிங்பூம் " (ஆ) மகுடி a.nav (A) + என்று அடையாளம் நமது சூரிய மண்டலத்தின் நிக்பயத்தைக்
குதிக்கின்றது.

Page 6
சூரியனின் கதை
பால் வழி அண்டத்தினேச் செங்குத்தாக நோக்கும்போது, சுருளி வடிவமானதாகக் காணப்படுகின்றது. குறுக்குப் பக்கப் பார்வையில் நோக்கும்போது, தொடக்கத்தில் நீண்டு ஒடுங்கி, மகுடி வடிவில் அமைந்து காணப்படுகின்றது. பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைத்திருக்
கின்றன.
பால் வழி அண்டத்தின் குறுக்களவு ஒரு இலட்சம் ஒளி யாண்டுத் தூரமாகும். மத்திய பார்கத்தின் தடிப்பு 10 ஆயிரம் ஒளியாண்டுத் தரமாகும். நமது சூரியன் பால் வழி அண்டத்தின் மையத்திலிருந்து 8 ஆயிரம் ஒளியாண்டுக் ஆாரத்தில் அமைந் திருக்கின்றது. ஒரு இலட்சம் ஒளியாண்டுத் துரத்தினேக் கொண்ட ஒரு இராட்சதச் சக்கரமாகப் பால் வழி கழங்கின்றது. இச்சக்கரம் ஒரு தொடர்ச்சியாக இராமல், இரு சுருள் வடிவங்களேக் கொண்ட Hயங்களால் ஆன வடிவத்தினேக் கொண்டிருக்கின்றது. இச் சுருள் புயங்களில் தான் நட்சத்திரங்கள் அதிக அளவில் அமைந்திருக் கின்றன. பால் வழி தன் மையத்தைச் சுற்றிச் சுழல்கிறது. ஒரு விமானம் மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் பறந்து செல்லுமாயின் அது பால் வழியைக் குறுக்கே கடந்து செல்ல 800 கோடி ஆண்டுகள் பிடிக்கும். +1 "
சூரிய மண்டலம்
பால் வழி என்ற அண்டத்தின், சுருள் வளையம் ஒன்றின் விளிம்பில், கோடானுகோடி நட்சத்திரங்களில் ஒன்றுகச் சூரியன் விளங்குகிறது. பல்வகைச் சடப்பொருட்களின் துணிக்கைகளையும் எண்ணற்ற தூசிகளேயும் அடக்கிய பெரிய புகைபுருவாகப் பால் வழி இருந்தது. பால் வழியில் காணப்பட்ட சடப் பொருட்கள், ஒன்ருேடொன்று மோதி வெப்பத்தையும் சுழற்சியையும் பெற்றுக் கொண்டன. ஆதியில் வெப்பம், சுழற்சி ஆகிய தன்மைகள் இல்லாத இப் பொருட்கள் ஒருங்கிண்ேத்து சுழ்ற்சியையும், வேப் பத்தையும் பெற்று வெப்பமான சுழல்கின்ற புகையுருக் கோள மாக மாறின. இவ்வாறு மாறியதில் ஒன்றே, மூலச் சூரியன் (ஆதிச் சூரியன்) ஆகும். இம் மூலச் சூரியனிலிருந்தே, சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள், துணேக் கோள்கள் என்பன பிறந்தன.
சூரிய மண்டலம் என்பது சூரியனேயும், அதனே மையமாகக் கொண்டு நீள்வட்டப் பாதையில் சுழலும் ஒன்பது கோள் கண்பும் சந்திரன் போன்ற துதினக் கோள்களே புர் குறிக்கும் இவை எவ்வாறு தோன்றின.

சூரியனின் கதை 劃
சூரிய மண்டலம் எவ்வாறு, ார் காலத்தில் தோன்றியது என்பதை விளக்க ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இத்தகைய ஆராய்ச்சிக்கு அண்டத்தில் காணப்படு. வால் இவன்னிஆன், ஈரி வெள்ளிகள், அண்டத் தூசிகள் என்பன துரிய ஈவுள் ஒன. அத்துடன் அண்டத்திலிருநது பூமியின் மீது விரிந்தி, ஆகாயக் கற்களும் உதவுகின்றன. இவற்றின் தன்மைகளே ஆராய்வதன் மூலம் புவியின் தோற்றும்பற்றி அபிப்பிர்ரியங்கள் வெளியிடப் பட்டுன்னன. இவற்றில் மூன்று கருதுகோள்கள் முக்கியமானவை: மோதுகைக் கருதுகோள் பால் வழியின் காலப்பட்ட சடப்பொருட்கள் திரண்டு, சுழற்சியையும் வெப்பத்தையும் கொண்ட " இச் சூரியன்களிேத் தோற்ர வித்தன எனக் கிண்டர்டாம். கோடிக் கணக்கான முடிச் சூரியன்களில், ஒன்று நமது ஆதிச் சூரியன் ஆகும். இந்த ஆதிச் சூரியதுட ண், பாள் சுழி அண்டத்தில் காணப்பட்ட இன்துெரு நட்சத்திரம் மோதியது. இவ்வாறு மோதியதன் வின் வாக வெளியே சிதறிய பருப்பொருட்கள் திரண்டு, இன்றைய பூரி முதr ஒன கோன்களாக உருவாகின. இக் கருத்துக்களே பேரறிஞர் கண்ான ஜி. எல். பங்போன், பிங்சுேட்டன் என்போர் வெளி பிட்டனர்.
படம்: ஆங்ச் சூரியதுடன் சிறிதோஇ நட்சத்திசம் போதுகின்றது.
- - - - - -
மூ 配。事一

Page 7
சூரியனின் கதை
புகையுருக் கருதுகோள்
இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் காரணமாக ஆக்கப்பட்ட கடினமான பழைய பொருட்கள் தத்தமக்குரிய ஈர்ப்புக் காரணமாக ஒன்றையொன்று ஈர்த்தன. இங்வாறு கவரப்பட்டு ஒன்ருேடொன்று மோதி வெப்பந்தையும் சுழற்சியை பும் பெற்றன. ஆதியில் வெப்பம், சுழற்சி இரு தன்மைகளும் இல்லாத இவை இப்போது சுழற்சியையும் வெப்பத்தையும் பெற்று வெப்பமாகச் சுழல்கின்ற புகையுருக் கோள்களாக மாறின. சுழற்சி காரணமாக புகையுருக் கோளத்தில் மைய நீக்கவிசை தோன்றியது. இம்மைய நீக்கவிசை விளிம்புகளில் அதிகமாகக் காணப்பட்டது. இதனுல் புகைபுருக் கோள்களின் இயற் பொருட் கள் பரந்த வெளியில் வீசப்பட்டன. வீசப்பட்ட இப்பொருட்கள் தனித்தனியாக இறுதிக் கோளகளாக அமைந்தன. இவ்வாறு தோன்றிய கோள்களில் ஒன்று பூமி ஆகும். ஆதியில் காணப் பட்ட புகையுருக் கோளத்தின் எஞ்சிய பாகமாகச் சூரியன் இருக்கிறது. (படம்: ஐே அவதானிக்கவும்.) இப் பு: சயுருக் கருது கோள்களே இமானுவேல் கான் ங், பியர் சைமங் டி காப்பிளாஸ், வொன் வைஸ்சாகர், ஒட்டோசிமிட், ரேட்ஹே யில், ஜி. பி. குய்ப்பர் முதலானுேர் தெரிவித்துள்ளனர்.
பெருக்குக் கருதுகோள்
ஆதிச் சூரியனுக்கு அருகாசு வெதுெரு நட்சத்திரம் வர நேர்ந்தது. அதனுல், பெருக்குவி ை அல்லது ஈர்ப்பு விசை ஏற்பட்டது. இப்பெருக்கு விசையினுள், ஆதிச் சூரியனிலிருந்து சடப்பொருட்கள் வெளியே இழுக்கப்பட்டது. அவை திரண்டு
படம் , பேருக்குக் கருதுகோள் முதுச் சூரியக்ாப் பிறிதோரு பு:பும் நட்சத்திரம் அதுவேதாங், மூங்சி
Soarese துேனியே இழக்கப்பட்ட நாச கோள்காம மாதுது
 

சூரியனின் அதை
.சுழற்சியைக் L கொண்ட புகைபுரு
கிழி நீவி சாதனார்: விம்பு நீக்கம் இார்படுகிறது
igušketo
போருட்கள்
st L. i.g. கோர :
குரியாேர் சுற்றிக் FantT கள் ELISTMLTEarl-Era"
lig+ +=g? arrgif # (#7ہا = نا : نظl = الیس“

Page 8
「발 சூரியனின் ககதி
கோள்களாகின இத்தகைய சுருத்துக்களை டபிள்யு.எப். செற்ச்விச் சாம்பர்லின், மோல்ரன் ஜேம்ஸ் ஜீன்ஸ் முதலான அறிஞர்கள் வெளியிட்டனர்.
ஒன்பது கோள்கள்
* சூரிய மண்டலத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூன் புளூற்றுே என்னும் ஒன்பது கோள்கள் உள்ளன. இத்தி ஒன்பது கோள்களில் புதன், வெள்ளி, பூமி. செவ்வாய் ஆகிய நான்கு கோள்களேயும் அகிக் கோள்கள் (Inner Planets) என்பர். வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூன், புளூற்றுே ஆகிய ஐந்து கோள்களேயும் புறக் கோள்கள் (outer Playets) GT sirLPf. 574 JUNI கோள்கள், சந்திரன் போன்ற துணைக் கோள்களைக் கொண்டிருக்கின்றன. சந்திரன் பூமியின் ஒரேயொரு துணைக்கோன். செவ்வாயும், நெப்டியூனும் இவ்விரு துணைக் கோள்களையும், யூரேண்ஸ் ஐந்து துஜோக் கோள்களே மரம், வியாழன் பன்னிரண்டு தரேர் கோள்களேயும் கொ ண்டிருக்கின் றன. இக் கோள்களும், துணேக் கோள்களும், சூரியனிலிருந்து ஒளியைப் பெற்றுப் பிரகாசிக்கின்றன.
பால் வழி அண்டத்தில் நமதி மூலச் சூரியன் சுமார் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டும். மூலச் சூரியனிலிருந்து பூமி முதலான தோன்கள் தோன்றி சுமார் 20 கோடி ஆண்டுகள் இருக்கும் எனக் கணித்துள்ளனர்.
மி முதலான கோள்கள் தோன் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றது என்று எப்படிக் கணித்தனர்?
இயற்கையில் அதற்கான தடயங்கள் உள்ளன. யுரேனியம் என்பது ஒரு மாறு உலோகம். பூமியில் காண்ட் டூம் இந்த யுரேனியம், பூமி உருவான காலத்தில் புதின் தள் st gay Tiff திருக்க வேண்டும் . ॥ ar +"_rl, FFT Fir 4" " المية=;"| IL F:: -+jلي யம் தோன்றி 22 சோடி ஆண்டுகள் அானக் கனி அா ஆதலால், பூமியின் ரது 29 31 டி ஆண்டு ராசிரிந்து
ஆதிவாள், பூமியின் சகோதரக் " தாள்களும் தோன்றி 2 கோடி
ஆண்டுகள் எனத் துடினியலாம்.
मी it! விசை ஆசியனே மையமாகக் கொண்டு. ஒன்பது கோள்களும் நீன் வட்டம் பாகையில் சூரியசினச் சுற்றி வருகின் r, அவிை ஒன்
துடன் ஒன்று மோத பல், சைனா மாங்க்கப்பட்ட சீரான டாதையில் சுற்றி வருவது எவ்வாறு சா த்தியமானது?

சூரியனின் கதை
ஒரு பந்தைக் கயிற்றில் கட்டி, கயிற்றின் நுனியை நீங்கள் கரத்தால் பிடித்தபடி, தலக்கு மேல் கரத்தைத் தூக்கி, பந்தைச் சுழற்ஜிதுல், பந்து ஒரு சீரான தடத்தில்,"உங்கள்": சுற்றிச் சுழலும். பந்தையும் கரத்தையும் இணைத்திருக்கும்மெல்லிய கயிறு, அதனை விடுபட்டுப் போகவிடவில்லை. அவ்வாறு கட்புல ணுகாத ஒரு கயிறு ஞாயிறையும் ஒவ்வொரு கோளேயும் பின்த்து வைத்திருக்கின்றது. அதனே ர்ப்பு (Gravity) என்பர். பிரபஞ்சத் திலுள்ள ஒவ்வொரு வான் பொருளும் ஒன்றினுேடு ஒன்று ஈர் பினுல் பிணக்கப்பட்டிருக்கின்றன. 7ஆம் நூற்றுண்டில் வாழ்ந்த ஐசெக் நியூற்றன் என்பவரே இந்த ஈர்ப்பு விதியைக் கண்டு பிடித்தார்.
தரியமண்டலத்திலுள்ள ஒவ்வொரு கோளும் இரண்டு இயக் கங்களேயுடையன. அவை: சுற்றுகை, சுழற்சி. ஒவ்வொரு கோளும் தன்னத் தானே சுழல்வதுடன், சூரியனேயும் சுற்றிவருகின்றன.
சூரியன்
சூரியன் இல்லாவிட்டால் பூமியில் உயிர் இயக்கமே இருக்க "+"து. பூமி தனக்குத் தேவையான சக்தி முழுவதையும் சூரியனிலிருந்தே பெறுகின்றது. வெப்பம், மழைவீழ்ச்சி, காற்றின் இயக்கம், தாவர வளர்ச்சி முதலான யாவற்றிற்கும் மூலச்சக்தி சூரியனுகும்.

Page 9
14 சூரியனின் கதை
நமது பூமியைவிட 10 இலட்சம் மடங்கு பருமனில் பெரியது சூரியனுகும். சூரியமண்டலக் கோள்கள் ஒன்பதும் ஒன்று சேர்ந்தால் கூட சூரியனின் பருமன் 750 மடங்கு அதிகமாகவே காணப்படும்: சூரியனின் பிரமாண்டமான அளவினை அதன் விட்ட அளவிலி ருந்து அறியலாம். பூமியின் விட்டம் 12756 கிலோ மீற்றர்களாக இருக்க, சூரியனின் விட்டம் 13,92,000 கிலோ மீற்றர்களாகவுள் ளது. சூரியன் பூமியிலும் பார்க்க 30 இலட்சம் மடங்கு கனமா னது. சூரியனின் எடை அதிகமாக இருந்தாலும் அதன் அடர்த்தி மிகக் குறைவு. சூரியனின் அடர்த்தி குறைவாக இருக்கினும், பூமியில் இருக்கும் ஈர்ப்புச் சக்தியிலும் பார்க்க 28 மடங்கு அதி கமானது. பூமியில் 45 கிலோகிரும் பாரமுடைய ஒருவன், சூரி யனின் மேற்பரப்பில் நிற்க முடிந்தால் அவன் 1260 கிலோ கிரும் பாரமுடையவனக இருப்பான். சூரியன் பூமியில் இருந்து சுமார் 1495 கோடி கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. ஒரு விமானி மணிக்கு 1600 கிலோ மீற்றர் வேகத்தில் சூரியனை நோக்கி இரவு பகலாகப் பறந்து செல்வானுகில், அவன் சூரியனை அடையப் பதினெரு ஆண்டுகள் பிடிக்கும். சூரியனிலிருந்து ஒரு ஒளிக்கதிர் (ஒளிக்கதிரின் வேகம் வினடிக்கு 186000 மைல்) பூமியை வந்தடைய எட்டரை நிமிடங்கள் எடுக்கின்றது.
சூரியன் வாயுக்கோளம்: பூமி திடப்பொருட்களாலும் (நிலம்) திரவப் பொருட்களாலும் (நீர்), வாயுப் பொருட்களாலும் (வளி மண்டலச்) ஆகியது. ஆனல் நமது சூரியன் முற்ருக வாயுப் பொருட்களால் ஆனது ஆகும். பிரபஞ்ச வெளியில் மிதக்கும் திரள் வாயுக்கோள் தான் நமது சூரியன். சூரியன் வாயுத்திரள் என்ருல் வாயுக்கள் எப்படி வான்வெளியில் விரிந்து பரவாமல் ஒருங்கே சேர்ந்து இருக்க முடிகிறது? பூமியின் மீது வளிமண்டலம் இருக் கிறது. அவ் வளிமண்டலத்தைப் பூமியோடு பிடித்து இழுத்து வைத்திருப்பது புவிஈர்ப்பு ஆகும். அதேபோல சூரியனின் ஈர்ப்பு, வாயுத்திரளை வெளியேறவிடாமல் பிணைத்து வைத்திருக்கின்றது.
சூரிய சக்தி; சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 11000 பாகை பரன்கைட்டாகும். இது 6000 பாகை சென்ரி கிரேட்டாகும். சூரியனின் உட்புற வெப்பநிலை 35000000 பாகை பரன்கைட், (20000000 செ) சூரியனின் வெப்பநிலை உயர்வைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? கணிப்பொருட்களில் (உலோகம்) அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடிய ரங்ஸ்டன் எனும் உலோகம் 3380 பாகை சென்ரிகிரேட் வெப்பத்தில் உருகிவிடும். இவ்வளவு வெப்பத்தைத் தாங்கக்கூடிய ரங்ஸ்ரன் சூரியனது மேற்பரப்பில் இருக்கில் ஒரு விஞடியில் உருகி ஆவியாக மாறிவிடும். நமது

சூரியனின் கதை 5
பூமியில் ஒரு நாளில் விழும் சூரிய சக்தி, உலகத்தில் இவ்வளவு நாளும் எரிக்கப்பட்ட எரிபொருட்களை (விறகு, பெற்றேல், நிலக்கரி முதலான) எரிப்பதனுல் உண்டாகும் சக்திக்குச் சமான மாகும். இவ்வாறு அதிக வெப்பச் சக்தியைக் கொண்ட சூரிய னில் இருந்து சக்தியானது, எல்லாத்திசைகளிலும் ஓயாது சென்று கொண்டே இருக்கின்றது.
ஒவ்வொரு நிமிடமும் ஒரு சதுர அங்குலத்திலிருந்து 600000 கலோரி வெப்பச் சக்தியைச் சூரியன் எல்லாத் திசைகளிலும் வாரி இறைக்கின்றன். இவ்வாறு நாலா திசைகளிலும் வழிந்தோடிக் கொண்டிருக்கும் சூரிய சக்தியில் பூமி பெறுவது இரண்டு இலட் சம் கோடியில் ஒரு பங்கு ஆகும். ".
சூரிய சக்தி: இவ்வளவு பிரமாண்டமான சக்தியைச் சூரியன் எவ்வாறு உற்பத்தி செய்கின்றது? நெருப்புப் பிழம்பான சூரிங் னது உட்புறத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் சதா வெடித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு சிறிய ஹைட்ரஜன் அணுக்குண்டு வெடிக்கும்போது எவ்வளவு சக்தி வெளிப்படும்? மிகப் பிரமnண்ட மான ஹைட்ரஜன் குண்டாகச் சூரியன் உள்ளது. விஞ்ஞானி ஐன்ஸ்டன் என்பவர், 'இவ்வளவு பிரமாண்டமான சக்தி உண்டா வதற்கு ஒவ்வொரு வினடியும் 40 இலட்சம் தொன் பொருள் எரிந்தாக வேண்டும்” எனக் கணித்துக் கூறியுள்ளார். சூரியனின் எடையில் 35 சதவீதம் ஹைட்ரஜன் ஆகும். ஒவ்வொரு வினடியும் 40 இலட்சம் தொன் நிறையுள்ள ஹைட்ரஜன் எரிந்து 56 கோடி தொன் ஹீலியமாக மாறிக்கொண்டிருக்கின்றது. ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும்போது அபரிமிதமான சக்தி வெளிப்படுகின்றது. இவ்வளவும் சதா எரிந்து கதிர் வீச்சாகப் பாய்ந்து, ஒளியாகவும் வெப்பமாகவும் வான் வெளியில் பிரவாகித்துப் பரவுகின்றன.
சூரியனின் மேற்பரப்பு
நமது பூமியை விட 10 இலட்சம் மடங்கு பருமனில்பெரிய சூரியனின் மேற்பரப்பில் (அ) அரிசிமணித் தோற்றம், (ஆ) சூரிய களங்கங்கள், (இ) சூரிய சுவாலைகள் ஆகிய மூன்று தோற்றங் களைக் காண முடிகின்றது.
அரிசிமணித் தோற்றம்: சூரியனின் மேற்பரப்பை சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் அவதானிக்கும் போது, 'சோற்றுப்பான கொதிக்கும்போது அதனுள் இருக்கும் அரிசி மணிகள் அங்குமிங்கும் அசைந்தாடிக் கொண்டிருப்பது போன்ற தோற்றம்" தெரிகிறது. சூரியனின் மேற்பரப்பில் காணப்படும் இந்த 'அரிசி மணிகள்" உண்மையில் தோன்றி மறையும் வாயு

Page 10
சூரியனின் கதை
உருண்டைகளாகும். ஒவ்வொரு அரிசி மணிகளும் பலநூறு மைல்கள் விட்டமுடையன. உண்மையில் இவ்வாயு உருண்டைகள், சூரியனின் மையப்பகுதியில் வெப்பம்"க்கப்பட்டு, மேற்பரப்பிற்கு மிதந்து பிரகாசநாத த் தெரிகின் r .
படம்! 9. சூரியனின் மேற்பரப்பில் தேசியும் அரிசிமணித் தோற்று,
கரும்பாப்பு சூரியனின் களங்கங்காைகும்.
சூரிய களங்கங்கள்: சூரியனது தெளிவான விம்பத்தில் அடிக்கடி சில கறைகள் உருவாகின்றன. இவற்றைச் சூரிய களங் கங்கள் என்பர். சூரியனது மேற்பரப்பில் கரும்புள்ளிகளாகத் தெரியும் இச்சூரிய களங்கங்கள் சில 80000 கிலோ மீற்றர் குறுக்களவுடையன. சூரிய களங்கங்களின் எண்ணிக்கையும் ரு ம்னும் நாளுக்கு Fgr மாறி வருகின்றன. பதினுெரு ஆண்டு களுக்கு ஒரு முறை இக்கிளங்கங்களின் தொகை அதிகரிப்பதை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர்; சூரிய களங்கங்கள் எவ்வாறு உருவாகின்றன? சூரியனின் மையப் பகுதியிலிருந்து வாயுக்கள் மேற் பரப்பிற்குப் பீரிட்டுக்கொண்டு வருகின்றன. வெளிவரும்போது சூரியனின் மேற்பா "பில் ன் மிகள் உருவாகின்றன. இவ்வாயுக்கள் அமுக்கக் குறைவுள்ள மேற்பரப்பிற்கு வந்து விரிவதால், வெப்பம் குறைந்து கரிய நிறமாகத் தென்படுகின்றன. இவை சூரிய கனங்கங்களாகத் தெரிகின்றன.
 

சூரியனின் கீதை 7
சூரியனின் சுவாலேகள் சூரியனின் மேற்பரப்பில் இருந்து பிரமாண்டமான தீச்சுடர் நாக்குகள் இலட்சக்கணக்கான எம்பி சுன் உயரத்திற்கு கொழுந்துவிட்டு எழுவகைச் சூரியகிரகண காலத்தில் அவதா ரிக்கப்ாம், இவற்ன்ரறச் சூரிய ரவாதிகள் என் பர். சில சூரி liniri -olisir – ஆரிபுகளின் வான rெiளியின் 2: ற்பத்தி யாகி, சூரியன் பேல் மழை பொழிவினகப் போன்றும் தெரியும். இவ்வகைச் சுவாலேசன் சூரியனில் உற்பத்தியாகி வெளிநோக்கிச் சுடர் தாக்குகளாக நீள்கின் ரன். பிகா கித்தெழும் இச்சூரிய கவாஃn rரின் ச் சவேகம் விடிைக்கு 725 கிலோ மீற்றர்களாகும். சில த வாஃகள், 16 இலட்சம் ଖୈର୍ଖ, ଞ ୮ | fil: Diff உயரத்திற்கும் கொழுந்துவிட்டெரிகின்றன் இவற்றைச் சூரிய பிதுக்கங்கள் எனவும் ஒழங்குவர்.
புதன்
அகக்கோள்களில் முதற்கோள் கணுகும். இாயிற்றுத் தொகுதியிலுள்ள கோன்களில் மிகவும் சிறிய கோள் புதனுகும். புதன் கோனின் விட்டம் ஏறத்தாழ 4850 கிலோ மீற்றர்களாகும் சந்திரனிலும் பார்க்க புதன் ஈற்றுப் பெரியது. தன் சிறிய கோளாயினும், அதன் ஈர்ப்புக் குறைவானதன்று புவியில் 22.5 கிலோ கிரும் நிறையுடைய ஒரு பொருள் சந்திரனில் 38 கிலோ கிரும்களாகவும். புதனில் 9 கிலோ கிரும்களாகவும் இருக்கும். எனினும் புதனின ஈர்ப்பு புதனைச்சுற்றி வளிமண்டலம் அமைவதற்கும் போதுமானதாகவில்லே. வளிமண்டலத்திை ஈர்த்து வைத்திருக்கக்சுடி பளவு ஈர்ப்பு புதனிடமில்லே.
புதன் மிகச்சி நிய கோளாக இருந்தும்கூட நமது மூதாதை பர்கள் புதன நன்கு அறிந்திருந்துள்ளனர். மேலேநாட்டவர்கள் புதனேக் கடவுளின் துரதன் என்று நம்பினர்.
புதனுக்கும் சூரியனுக்கும் இடையிலான காரம் 58 கோடி கிலோ மீற்றர்களாகும். புதன் தன்ஃகத்தனே ஒருமுறை சுழல் வதற்கு 88 நாட்களே எடுத்துக்கொள்கின்றது; அது சூரியனே நீள்வட்டப் பாதையில் சுற்றிவருவதற்கும் 88 நாட்களேயே எடுத் துக் கொள்கின்றது. புதன் ஒருதடவை தன்சீனத்தானே சுழல் வதற்கும், ஒரு தடவை சூரியனேச் சுற்றி வருவதற்கும் எடுக்கும் காலம் ஒரே காலம்; ஆதலால் எப்போதும் தன் சூரியனேச் சுற்றி வரும்போது ஒரே பக்கத்தைக் கா புக்கொண்டே சுற்றி வருகின்றது. அதனுல்தான் எங்களுக்குப் புதனின் ஒரு பக்கம் எப்போதும் தெரிகின்றது. மறுபக்கம் ஒருபோதும் தெரிவதில்லை.

Page 11
18 gthause fhéile asidae
குரியனை நோக்கியிருக்கும் புதனின் பக்கத்தில் எப்போதும் வெப்பநிலை மிகமிக உயர்வானதாக இருக்கும். ஈயத்தை உருக்கக் கூடியளவிற்கு, வெப்பநிலை 510° சென்ரிகிரேட்டாக இருக்கின் றது. புதனின் மறுபக்க வெப்பநிலை மிகமிகத் தாழ்வானது: 210° சென்ரிகிரேட்டுக்கும் குறைவாக இருக்கின்றது; இக்குறை வான வெப்பநிலையில் பூமியின் வளிமண்டலமே உறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியன் உதிப்பதற்குச் சிறிதுமுன்னர் கிழக்கு அடிவானத் திலும் புதனை நாம் அவதானிக்க முடியும். மாலை நேரத்தில் தெரியும் புதனை அப்போலோ என்றும், காலை நேரத்தில் தெரியும் புதனை மேர்குயுரி என்றும் நமது முன்னேர் அழைத்தனர்; அவர் கள் புதனை இருகோள்கள் என நம்பியிருந்தனர்.
புதனின் ஒருபக்கம் ஈயத்தை உருக்கி ஆவியாக்கிவிடக்கூடிய சூடு, மறுபக்கம் உறைநிலைக்கும் தாழ்வான குளிர். அதனல் புதனில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகளில்லை. .
புதனின் மேற்பரப்புத் தோற்றம் குறித்து அண்மையாண்டு களில் தெளிவான செய்திகள் கிடைத்துள்ளன. மரினர் (Mariner) என்ற செய்ம்மதி புதன் கோளிற்கு மிக அருகே சென்று எடுத்து அனுப்பிய புகைப்படங்களிலிருந்து, புதனின் மேற்புறத் தோற்றம் எத்தகையதென அறிய முடிகின்றது. புதனின் மேற்பரப்பு சந்திரனின் நிலத்தோற்றத்தைப் பெரிதும் ஒத்திருக்கின்றது. கிண்ணக்குழிகளை ஒத்த எரிமலைவாய்கள் (Craters) புதனின் மேற்பரப்பில் காணப்படுகின்றன.
வெள்ளி
வெள்ளி சூரியனிலிருந்து 108 கோடி கிலோ மீற்றர்களில் அமைந்திருக்கின்றது. வெள்ளி பூமியிலும் பார்க்கச் சற்றுச் சிறிய கோள். இதன் விட்டம் 1104 கிலோ மீற்றர்களாகும். ஞாயிற்றுத் தொகுதியில் மிகப் பிரகாசமான கோள் வெள்ளி யாகும். வெள்ளி பூமியிலிருந்து பார்ப்போருக்கு ஏனைய கோள் களிலும் பார்க்க மிகவும் பிரகாசமாய்த் தெரிகின்றது. இக் கிரகம் தன் மேற்பரப்பில் படும் சூரிய ஒளியில் 75 சதவீதத்தைத் தெறித்துவிடுவதால்தான் அதிக பிரகாசமாகக் காணப்படுகின்றது.
புவியிலிருந்து நோக்குவோருக்குத் தெரிகின்ற வெள்ளியின் பிறைநிலைகள் தனித்துவமானவை. வெள்ளிக்கோள், சூரியனுக் கும் புவிக்குமிடையில் வருவதால், சந்திரன் போன்று வளர்பிறை

சூரியனின் கதை
தேய்பிறை வடிவங்களில் தெரிகின்றது. ஆனல் அதன் வளர் பிறை தேய்பிறை வடிவங்களில் காணக்கூடிய சிறப்பம்சம், அதன் வடிவத்தின் பருமனுகும். வெள்ளியின் பிறை வடிவம், முழு வடி வத்திலும் பார்க்கப் பெரிதாகத் தெரிகின்றது. இதற்குக் கார ணம் புவிக்கும் வெள்ளிக்குமிடையில் நிலவும் அண்மை, சேய்மை நிலைகளாகும். வெள்ளி புவிக்கு அருகில் வரும்போது பிறை வடி வமும், தூரத்தில் வரும்போது முழுவடிவமும் தெரிகின்றது. அத குல் தான் பிறைவடிவம் பெரிதாயும், முழுவடிவம் சிறியதாயும் நமக்குத் தெரிகின்றது.
படம்: 10. வெள்ளிக் கோள் - அதன் பிறைநிலைகள் உருவாகும் விதம்,
பிறைவடிவங்கள் பெரிதாயும் முழுவடிவம் சிறிதாயும் தெரிகின்றன.
வெள்ளி தன்னைத்தானே சுழல்வதற்கு 243 நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதற்கு 225 நாட்களும் எடுத்துக்கொள் கின்றது. வெள்ளியின் ஒருபக்கம் எப்போதும் சூரியனை நோக்கியே காணப்படும். வெள்ளிக்கோளைச் சுற்றி வளிமண்டலம் காணப் படுவது குறிப்பிடத்தக்கது. வெனரா - 9 (Venera-9) செய்ம்மதி எடுத்து அனுப்பிய படங்களிலிருந்து வெள்ளியைச் சுற்றியுள்ள வளி மண்டலம் 29 கிலோ மீற்றர் தொட்டு 40 கிலோ மீற்றர் வரையிலான தடிப்பினைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. (புவியின் வளிமண்டலத்தின் தடிப்பு 96 கிலோ மீற்றர் என்பது கவனிக்கத்தக்கது.) வெள்ளியின் மேற்பரப்பு பெரும்பாலும் பழுப்பு நிறப் பாறைகளாலானதாகத் தோற்றுகின்றது. இதன் மேற் பரப்பு வெப்பநிலை 475° சென்ரிகிரேட்டிற்குச் சற்று அதிகமாகும்.
woesburw°

Page 12
சூரியனின் சற்ை
வெள்ளி, மாலேவெள்ளியாகவும், விடிவெள்ளியாகவும் வானத் தில் காணப்படுவது ஒரு தனிச் சிறப்பாகும். சூரியன் மறைந்த பின் மேற்கு வானத்தில் மாஃப் வெள்ளியாகவும், சூரியன் உதய மாவதற்கு முன் கிழக்கு வானில் விடிவென்னியாகவும் இது தோற்றுகின்றது.
பூமி
ஞாயிற்றுத் தொகுதியிலுள்: ஆன்முவது கோள் பூமியாகும். இது சூரியனிலிருந்து 149 கோடி கிலோ மீற்றர்கள் தூரத்தில் அமைந்துள்ளது. ஆாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்களில் நன்கு ஆராய்ந்து அறியப்பட்ட கோள் இதுவாகும்.
புவியின் வடிவம்: பூமி உருண்டை வடிவமானது என்பதை நம்பவும், ஏற்கவும் மறுத்து, பூமி தட்டை வடிவமானது என்று மக்கள், நம்பி வாழ்ந்திருக்கின்றர்கள். விஞ்ஞான ஆராய்வுகள் விசிங்டையாத ஒரு காலகட்டத்து மக்கள், தாம் வாழ்ந்த ஒரு குறுகிய நிலப்பரப்பின் தட்டை வடிவத்தினை நோக்கி, உலகமே தட்டை வேடங்மாவினது என்று நம்பி வாழ்ந்தனர்: ஆனூல் விஞ்ஞான ஆய்வு வளர்ச்சியால் இன்று பூமி கோள வடிவமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மகெலன் என்ற கடலோடி 1522-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலிருந்து கப்பலில் புறப்பட்டு, உலகத் தைச் சுற்றிவந்து, உல்கம் உருண்டையானது என்று நிரூபித்தான்
இன்று விஞ்ஞானம் எவ்வளவோ ஆரம் முன்னேறிவிட்டது. நவீன சாதனங்களேத் துனேக்கெண்டு, வானவெளியினின்று பூமி யைப் படம் பிடித்துள்ளார்கள். துெக்கட், செயற்கைக் கிரகங் கள் என்பன பூமியை எடுத்துள்ளி நிழற்படங்கள், பூமியின் உருண்டை வடிவத்தினேத் தெளிவாகக் காட்டுகின்றன.
1989-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவர் முதன் முதல், டெரிய இராட்சத ருெக்கட்ழலும், சந்திரன்ன அடைந்தனர். பூமியிலிருந்து சந்திர உதயத்தை நாம் பார்ப்பது போல, அவர்கள் சந்திரனிலிருந்து பூமி உதயமாவதைக் கண் டனர். அப்போது பூமி, சந்திரனேப்போல உருண்டை வடிவ பரிசீவே காணப்பட்டது.
பூமி உருண்டை வடிவமானது" என்று கூறும்போது, அது பந்து போன்று உருண்டையானது என்று அர்த்தமன்று. பூமி பின் கிழக்கு மேற்கான மத்திய விட்டம் 1371 கிலோமீற்றர் கண்ாகவும், டேக்குத் தெற்கான முரே சட்டம் "F"10 கிலோ . . ஆrஅணின்று பூமி

சூரியூனின் கதை
படம் 11. பூமிாேநபர் சந்திரனின் நின்றுகோண்டு grస్ FF at:
। i . .
தோடம்பழம் போன்று உச்சிகளில் சிறிதளவு தட்டையானது என்
ாத உணர ம் .
பூமி இரண்டு செயல்களேச் செய்கின்றது. அவையாவன: (1) புவிச்சுழற்சி, (2) புளிர்ாற்றுகை. பூமி கன்னேயே சுழல் வதைப் புவிச் சுழற்சி என்பர். சூரியசீன நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதைப் புவிச் சுற்றுகை என்பர். புவிச் சுழற்சியின் காரணமாக இரவு பகல் தோன்றுகின்றன: புவிச் சுற்றுகையினுள் பருவகாலங்கள் தோன்றுகின்றன.
வடமுனேவையும், தென்முனேவையும் பூமிக்கூடாக இனேக் கும் கற்பனேக் கோட்டை அச்சாகக் கொண்டு புவி சுழல்கின்றது. பூமி தன்ஃனத்தான சுழல 24 மணித்தியாலங்கள் செல்கின்றன. புவிச் சுழற்சி மேற்குக் கிழக்காக நடைபெறுகின்றது. பூமி சுழற் பெற்றிருக்குமானுல், பூமியின் ஒரு பகுதியே சூரியனே என்றும்

Page 13
சூரியனின் கதை
எதிர்நோக்கியிருக்கும் அப்போது எதிர்நோ க்கியிருக்கும் அவ் வொரு பகுதி என்றும் பகலாகவும், மறுபுறம் இரவாகவும் காட்சி யளிக்கும். ஆணுல், பூமி ாழிற்சியுடையதாக இருக்கின்றது. அத இல் பூமியின் ஒவ்வொரு பகுதிகளும் சூரியனின் ஒளிக்கதிர்க3ளப் பெறுகின்றன. பூமியின் ஒரு மேற்பரப்பு சூரியனே நோக்கி இருக் கும்போது அங்கு பகலும், அதே மேற்பரப்பு சூரியனே நோக்கி பிராதபோது அங்கு இரவும் தோன்றுகின்றன. எனவே, புளிச் சுழற்சியினுல் இரவும் "சிலும் மாறி மாறிப் பூமியில் தோன்று கின்றன.
புவிச் சுற்றுகை பூரி மேற்குக் கிழக்காகர் சுழல்வதோடு, சூரியனேயும் ஓரளவு நீள்வட்ட , கையில் கற்பி வருகின்றது. பூமி சூரியனேச் சுற்றிர பீர் நாட்கள் எடுக்கின்றது. அதா திெ ஒரு ஆண்டு ,ெ ஒக் ' .. । ।।।। நீள்பட்டப் "Tio?” J. | | ñîoĵL | T 1 [- 1, +, -ar-oor- ", , , F." is . . . கில் பூமியின் அச்சு 23' சாய் காந்துள்ளது. இiச்சு சப் போதும் ஒரே திசையை 5ே கியே அமைந்து கான படும் புவியச்சின் திசை எதிநிவேயிலும் ம துெ கிடையாது.
செவ்வா
செவ்வாய் சூரியனிருந்து நான்காவது கோா துள்ளது. மூன்றுவது .ே மித பூமியாகும். சூரிய எளி ளிருந்து செவ்வாய் 2-8 சுே + கிலோ மீற்றர் துரத்தில் து சித் துள்ளது. இதன் பிரகாச மும் பிசந் நிறமும் காரணமாக இதழ் "செங்கோள் எனவும் வழங்குவர். செவ்வாய் தன் ஆக் தாரே சுழல 24 மணி 36 நிமி, ங்களும், சூரியார் சுற்றிவர 87 நாட் ளுேம் எடுக்கின்றது. புவியின் 'ரு' சரில் அரைப்பங்கிரேக் கொன் டிருக்கும் செவ்வாயின் விட்டம் 6790 கிலோ மீற்றர்களாகும்.
ஒரு தொலேநோக்கியின் மூலம் :ெ அா:தானித்தால் செவ்வாயின் வடமுஃாவிலும் தென் முனே வி லும் பூமியைப் போன்று பனிக்கவிப்புகள் இருப்பதைக் காதை எம். பருவத்திற் துப் பருவம் இந்தப் ானிக்க விபுகள் உருவி கிழிந்து Tெள்வதைக் கீாணலாம். மேலும் ரெ: ' மேற்பரப்பிங் பிறிதொரு விசேஷ அம்சம் உள்ளது மேற்பரப்பில் கால்வாய்கள் போன்ற அமைப்புக் காணப்படுகின்றன. . । பக், ங் செவ்வாயின் சில பகுதிகள் நீலப்பள்ளிமாசவும், கோடை காலத் தில் கபில நிறமாகவும் சான்னப்படுகின்றன. இத்திற பற்றும் தாவரங்களின் பருவ நிறமாற்றமா செல்வம் பூமி போன்ற வளிமண்டலத்தைக் கொண்டிருக்கும் ஒரு கோளமாகும்.

சூரியனின் கதை 轟轟
அப்படியாயின் செவ்வாயில் உயிரினம் இருக்கின்றதா? எந் போன்ற மனிதவினம் அங்கு உயிர் வாழ்கின்றதா? வளிமண்டல மும் பருவ காலங்களும் இருப்பதால் மனித வாழ்விற்குரிய நிஃமைகள் அங்கு உள்ளனவா? முனேவுகளில் உருகும் பனி நீரை பெரும் பெரும் கால்வாய்கள் மூலம் கொண்டு வந்து பயிர் செய்து வாழ்கின்றனரா? இத்தகைய பல கேள்விகள் இன்னமும் சந்தேகங்களாகவே இருக்கின்றன,
-
| = செவ்வாய்க் கோரி ப்கு போபொஸ், டெமோஸ் எ இரு சிந்திரன்கள் உள்ள் 1 . மே 1 டெரா  ே மீற்பர்கள் விட்ட முள்ள சிபி கோரு து ைகோள். டேநோ: 3 கிே பீற்றர்கள் குறு ர் 7 விடாது.
பரினர் : : வ்று செய்தி செவ்வாயிற்கு அண்மையில் சென்று எடுத்த ஆப்பிய படங்களிலிருந்து செல்வரன் இருப்பு தாங்க் விருதப்பட்ட கால்பாய்கள்" நமது வரசரிஆயரது ர்க்ளுக்குத் தெரிந்த பொய்த் தோற்றம் என்றறியப்புரு கின்றது. ஆப்படத் கரிலிருந்து செய்வாயின் மேற்பரபுபு கிண்னக் குழிகளே பும் புழுதி படிற்கு தரையையும் கொண்டுள்ளது சம் ரியபகிேன்றது.

Page 14
24 சூரியனின் கதை அத்துடன் எரிமலைகள், ஆற்றுக்குடைவுகள், வரண்ட பள்ளத் தாக்குகள் போன்ற நிலவுருவங்களையும் காணமுடிகின்றது. இக் கோளில் வீசுகின்ற கடும் காற்றினல் உருவாகின்ற புழுதிப் புயல்களே, செவ்வாயில் பருவத்திற்குப்பருவம் ஏற்படும் நிறமாற் றங்களுக்குக் காரணங்களாக விளங்குகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
வியாழன்
சூரியமண்டலத்திலுள்ள கோள்களில் மிகப் பெரியது வியா ழஞகும். சூரியனிலிருந்து ஏறத்தாழ 778 கோடி கிலோ மீற்றர் தூரத்தில் இக்கோள் அமைந்துள்ளது. வியாழனுள் பூமியின் பரும னுள்ள 1300 கோள்களை அடக்கிவிட முடியும். மிகப்பெரிய கோளான வியாழன் தன்னைத்தானே ஒரு ஒற சுழல.9 மணி 50 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது. இ. லிருந்து, அதன் சுழற் சியின் அசுரவேகம் புலனகும் இவ்வளவு வேகமாகச் சுழல்வ தால்தான், வியாழனின் மத்தியகோட்டுப் பாகம் அகன்றும், முனைவுப் பாகங்கள் சிறிது தட்டையாகவும் காணப்படுகின்றன. வியாழனின் மத்தியகோட்டு விட்டம் 142600 கிலோமீற்றர்கள். முனைவு விட்டம் 133225 கிலோமீற்றர்கள். வியாழன் சூரியனை ஒருதடவை சுற்றிவர 11 வருடங்கள் 10 மாதங்கள் எடுக்கின்றது.
வியாழனின் மேற்பரப்பில் கவனத்தைக் கவரக்கூடிய இரண்டு அம்சங்களுள்ளன. அவையாவன:
(அ) வியாழனின் மத்தியகோட்டிற்குச் சமாந்தரமாகச் செல்
கின்ற பட்டைகள்.
(ஆ) பெரிய செம்புள்ளி.
(அ) வியாழனின் மத்திய கோட்டிற்குச் சமாந்தரமாகப் பல கரிய பட்டைகள் அமைந்திருப்பதைக் காணலாம். இவற்றினை நீளிகள் என்பர். வியாழனின் வளிமண்டல முகில் தோற்றமே இந்த நீளிகள் போன்ற வடிவங்களைத் தருகின்றன என இன்று அறியப்படுகின்றது. வியாழனை மூடியுள்ள முகில் கூட்டம் வியா ழனின் மேற்பரப்பை முற்ருக மூடுவதற்குப் போதியனவாகும். வியாழனின் சுழற்சி வேகத்தின் காரணமாகவே முகில்களின் கீற்று வடிவம் அமைந்தது எனக் கருதப்படுகின்றது. மத்தியகோட்.ை அடுத்த முகில்கள் வியாழனின் முனைவு அகலக்கோடுகளை அடுத் துள்ள முகில்களிலும் பார்க்க அதிக வேக கச் சுழல்கி ஜின. வியாழனின் மேற்பர்ப்பில் ஏழு அல்லது ட்டு நீளிக்ள் ஒளி
***
வலயத்தளும் இரும்வ:ைங்களுமாக மாறி மாறி அமைந்துள்லS

சூரியனின் கதை ይ5
ப.ம்: 13, வியாழன் - கரிய நீளிகள் அமைந்துள்ளன அம்புக்குறியால் சுட்டிக்
s காட்டப்பட்டிருப்பது செம்புள்ளியாகும்.
(ஆ) வியாழனின் பெரிய செம்புள்ளி என்பதன் தோற்றம் அவதானிக்கப்பட்டிருக்கின்றது. இச் செம்புள்ளி 48270 3Garr மீற்றர் அகலமும் 112630 கிலோ மீற்றர் நீளமுமுள்ள ஒரு இறக்கமாகும். இது நீள்வட்ட வடிவமானது. இதனை வியாழனின் மேற்பரப்பில் முதன் முதல் 1664 இல் றிச்சார்ட் கூக் என்பவர் அவதானித்தார். இச் செம்புள்ளி வியாழனின் மேற்பரப்பில் ஒரு சதவீதத்தையே மூடியிருக்கின்றது. இச் செம்புள்ளி ஒரு நாளில் 8000 மைல்கள் தன் நிலையில் மாற்றமடைவது அவதானிக்கப் பட்டது. அதிலிருந்து இப்புள்ளி வியாழனின் திண்ம மேற்பரப் புடன் தொடர்புற்றில்லை எனவும், வியாழனின் மேற்பரப்பில் ஏற்படுகின்ற எரிமலை இயக்கத்தினல் வளிமண்டலத்தில் ஏற்படும் குழப்பமே இவ்வாறு செம்புள்ளியாகத் தெரிகின்றதெனவும் முடி விற்கு வந்துள்ளனர்.
பயணியர் என்ற செய்ம்மதி, வியாழனைப்பற்றி அறியத்தந்தவற். றிலிருந்து வியாழனைப் பற்றிய பழைய கருத்துக்கள் இன்று மாறிவிட் டன. வியாழனின் வளிமண்டலம் மிகவும் தடிப்பானது. இவ்வளி மண்டலம் முக்கியமாக ஹைட்றஜன் ஹீலியம் ஆகிய வாயுக்களைக் கொண்டமைந்துள்ளது. அமோனியா, மீத்தேன் போன்ற விஷ்'

Page 15
சூரியனின் கதை
வாயுக்கள் கூடுதலாகப் பரந்துள்ளதாக முன்னர் கருதப்பட்டது. வியாழனின் மேற்பரப்பு திரவக்கோளமாகும், என்று இன்று sa5uliuGSair soil. (liquid planet)
வியாழன் 13 துணைக்கோள்களைக் கொண்டிருக்கின்றது. (12 அல்ல) இத் துணைக் கோள்களில் இரண்டு புதனைவிடப் பெரியன; இரண்டு சந்திரன் அளவிலானவை. வியாழன் மட்டும் சுயமாகப் பிரகாசிக்கும் கோளமாக இருந்தால் குரியமண்டலம் போல ஒரு வியாழமண்டலமும் உருவாகியிருக்கும்.
சணி
சூரியனில் இருந்து சனி ஏறக்குறைய 1427 கோடி கிலோ மீற் றர் தூரத்தில் அமைந்துள்ளது. வியாழனைப் போன்று சனியும் ஒரு இராச்சதக்கோளாகும். இதன் மத்திய கோ ட் டு விட்டம் 1,20,000 கிலோ மீற்றர்களாகும். முனைவு விட் டம் 1,08,000 கிலோ மீற்றர்களாகும். சனியும் தன்னைத்தானே ஒருதடவை சுழல 10 மணி 14 நிமிடம் எடுத்துக் கொள்கின்றது. இந்த அசுர வேகம் காரணமாகத்தான் வியாழன் போன்ற முனைவுப் பகுதிகள் சிறிதளவு தட்டையாகவுள்ளன. சனி சூரியனை ஒரு தடவை சுற்றி வர 29 ஆண்டுகள் செல்கின்றது.
சனி ஏனைய கோள் களி லும் பார்க்கத் தனித்துவமான கோளாக விளங்கி வருவதற்குக் காரணம் அதன் கவர்ச்சியான மத்திய வளையமாகும். சனியைச் சுற்றி 27,50,000 கிலோ மீற்றர் விட்ட அகலம், 16 கிலோ மீற்றர் தடிப்புமுடைய வளையம் ஒன்று, 14500 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்து காணப்படுகின்றது. இவ்வளையம் பணித்துளிகள், தூசிகள் என்பவற்ருல் ஆன தாக இருக்க வேண்டுமெனக் கருதப்படுகின்றது. இவ்வளையம் தூசுப் பாங்கானதாயும் சனியின்மேற்பரப்பினை மறைக்காத இயல்புடைய தாயும் விளங்கி வருகின்றது. சனிவளையம் ஒழுங்கற்ற வடிவ முடைய பெருந் தொகையான பாறைத் துண்டுகளால் அமைந்த தென்றும் அப்பாறைத்துண்டுகள் ஒரு சில சதமமீற்றர்களிலுங் குறைந்த அளவின எனவும் கருதப்படுகின்றது.
சனி சூரியனிலிருந்து மிகத்தொலைவில் இருப்பதால் அதன் மேற்பரப்பு வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கின்றது. மேற் பரப்பு வெப்பநிலை - 176° செ. இருக்கவேண்டும் என நம்பப்படு கின்றது. சனிக்கு ஒன்பது துணைக்கோள்கள் இருக்கின்றன. பத்தாவது துணைக்கோள் ஒன்றும் இருப்பது அண்மையில் அவ தானிக்கப்பட்டிருக்கின்றது. இத்துணைக்கோள்களில் மிகவும் பெரியது ரிற்றன் (Titan) ஆகும். இத்துக்ணக்கோள் புதனின் அளவினது.

சூரியனின் கதை ፵?
wn
படம்: 14. சனி
யூரேனஸ்: சூரியனிலிருந்து 287 கோ டி கிலோமீற்றர்கள் தாரத்தில் யூரேனஸ் கோள் அமைந்துள்ளது. இது ஒரு தடவை தன்னைத்தானே சுழல 10 மணி 45 நிமிடங்களையும், ஒரு தடவை சூரியனைச் சுற்றிவர 84 ஆண்டுகளையும் எடுத்துக் கொள்கின்றது. நமது பூமியிலும் பார்க்க யூரேனசின் விட்டம் நாலரை மடங்கு அதிகமாகும். யூரேனசின் மத்திய கோட்டு விட்டம் 5 2000 கிலோ மீற்றர்களாகும். யூரேனஸ் 5 துணைக் கோள்களைக் கொண்டுள் ளது. யூரேனசின் வளிமண்டலம் வியாழனின் வளி மண்டலத்தை ஒத்தது. யூரேனஸ் வெகுதூரத்தில் இருப்பதால் அதன் மேற் பரப்பு பற்றிய விபரங்கள் அதிகம் அறியப்படவில்லை.
நெப்ரியூன்: சூரியமண்டலத்தின் எட்டாவது கோள் நெப்ரி யூன் ஆகும். இது சூரியனிலிருந்து ஏறத்தாழ 4497 கோடி கிலோ மீற்றர்கள் தூரத்தில் அமைந்துள்ளது. யூரேனசிலும் பார்க்கச் சிறிய இக்கோளின் விட்ட அளவு 48000 கிலோ மீற்றர்களாகும். புவியைப் போன்று இதன் பருமன் மூன்று மடங்கு அதிகமாகும். நெப்ரியூன் தன்னைத்தானே ஒரு தடவை சுழல 15மணி 50 நிமி டங்களும், சூரியனை ஒரு தடவை சுற்றிவர 164 ஆண்டுகளும் 298 நாட்களும் எடுத்துக் கொள்கின்றது. இக்கோள் 1848 இஸ்தான் கண்டுபிடிக்கப்பட்டது. நெப்ரியூனுக்கு றிற்றன் (Trilon) நெரியட் என்று இரு சந்திரன்கள் உள்ளன, - -

Page 16
2& சூரியனின் கதை
புளூற்றே: குரியமண்டலத்தில் இதுவரை அறியப்பட்ட இறுதிக்கோள் புளூற்றே ஆகும். இது சூரியனில் இருந்து 590 கோடி கிலோ மீற்றர்கள் தூரத்தில் இருக்கின்றது. புளூற்ருேவின் விட்ட அளவு 3000 கி. மீற்றர்கள். இது செவ்வாயிலும் பார்க்கச் சிறிய கோள். இது தன்னைத்தானே ஒரு முறை சுழல 6 நாள் 9 மணியும், சூரியனை ஒருதடவை சுற்ற 247 ஆண்டுகளும் 255 நாட்களும் எடுக்கின்றது. புளுற்றேவிற்குத் துணைக்கோள்களில்லை.
ஏனைய வான் பொருட்கள் குறுங்கோள்கள்
செவ்வாய்க்கும் வியாழனுக்கும் மத்தியில் ஆயிரக்கணக்கான குட்டிக் கோள்கள் கொண்ட ஒரு கூட்டம் இருப்பது அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றினை உடுப்பொலி கள், கோட்பொலிகள், குறுங்கோள்கள் (Planetoids or asteroids) எனவும் வழங்குவர். முதன் முதல் செவ்வாய்க்கும் வியாழனுக் கும் இடையில் ஒரு சிறு கோளை 1801 ஆம் ஆண்டு பியாஸி என்ற அறிஞர் கண்டுபிடித்தார். அக்கோளிற்குச் செரேஸ் என்று பெயரிட்டனர். இக்கோளின் குறுக்களவு 775 கி. மீற்றர்கள் எனக் கணித்துள்ளனர். அதன் பிறகு செவ்வாய்க்கும், வியாழனிற்கும் இடையில் விஞ்ஞானிகளின் கவனம் சென்றது. அதன் பலனக
تهییجیپیا
படம்: 15. உடுப்போலிகள் (குறுங்கோள்கள்). செவ்வாய்க்கும் வியாழனுக்கும்
இடையில் காணப்படும் ஆயிரக்கணக்கான் சிறு கோர்கிள்,
 

சூரியனின் கதை 感参
இன்று ஏறத்தாழ 2000 மேற்பட்ட சிறுகோள்கள் செவ்வாய்க்கும் வியாழனிற்கும் இடையில் ஒரே திரண்ட கூட்டமாகச் சூரியனைச் சுற்றி வருகின்றன என அறிந்துள்ளனர். இச் சிறுகோள் திரளில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சிறுகோள்கள் இருக்குமெனக் கணித்துள்ளனர். இவற்றில் நாற்பது மைல்களுக்கு அதிகமான விட்டத்தையுடையன மிகச் சிலவேயாகும். செரேஸ், பல்லாஸ், ஜூனே, வெஸ்டா, ஹென்கே, அடோனிஸ், ஹெர்மிஸ், அப்பொல்லோ, ஜக்காரஸ், ஈராஸ் என்பன குறிப்பிடத்தக்க சில கோள்களாகும்.
இந்க உடுப்போலிகள் ஞாயிற்று ஒளியைத் தம் ஒழுங்கற்ற உருவங் பில் பட்டுத் தெறிக்கச் செய்கின்றன. அதனுல் அவை ஒரு சில மணி நேரத்துக்கு ஒளிர்ந்து மங்குவனவாக விளங்குகின் றன. செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் முன்பு காணப் பட்ட ஒரு கோள் சிதறி உடைவுற்றுப் போனதன் விளைவாகவே இச் சிறு கோள் திரள் உருவானது எனக் கருதுகின்றனர்.
வால்வெள்ளி
வால்வெள்ளிகளின் (Comets) அல்லது வால் நட்சத்திரங் களின் தோற்றம் உலக மக்களுக்குப் பயத்தை ஏற்படுத்தியிருக் கின்றது. நமது பண்டைய மக்கள் வால்வெள்ளிகளின் தோற் றத்தைக் கண்டு பூமியில் தீமைகள் நிகழ்வதற்கான அறிகுறிகள் என்றனர். வால்வெள்ளி என்பது தலையும் வாலும் கொண்ட நீண்டதோர் ஒளிப்பிழம்பு ஆகும். வால்வெள்ளியின் தலைப்பாகம் புகைமண்டலமாகக் காணப்படும். வெப்பத்தால் இத்தலைப்பாகம் பலவாயுக்களை வெளிவிடுகின்றது. கார்ப்பன், மானக்சைட், சயனசன், சோடியம், இரும்பு, நிக்கல் என்பவற்றின் ஆவிகள் உள்ளன. சூரியன்ன் ஒளிக் கதிர்கள் இவ்வாயுக்களில் படும்போது வாயுக்களும் அவற்றினைச் சேர்ந்த துர்சுக்களும் சூரியனுக்கு எதிர்ப் புறமாகத் தள்ளப்படுகின்றன. பிரகாசிக்கின்றன. இவ்வால் சில வேளைகளில் லட்சக்கணக்கான கிலோ மீற்றர்களுக்கு நீளமான தாகக் காணப்படும். எப்போதும் சூரியனுக்கு எதிர்த்திசையில் தான் காணப்படும்.
வால்வெள்ளிகள் எப்படி உற்பத்தியாகின்றன என்று இன்ன மும் தெளிவாகவில்லை. வானவெளியில் எங்கிருந்தோ சூரியமண் டலத்திற்குள் இவை பிரவேசித்து விடுகின்றன. வால்வெள்ளியின் தலை ஒரு சிறுகோளிற்குச் சமானமாக இருக்கும். பெரும்பாலும் வால்வெள்ளிகள் சூரியனுக்கு மிகவும் அருகில் செல்கின்றன. சூரியனுக்கு வெகு அப்பால் சென்று மறைந்துவிடுகின்றன.

Page 17
சூரியனின் கதை
படம் ,ே த பிங் ஒ'பிர்ரி
கானித்திற்குக்காலம் வாஸ்rெள்விகள் வரவில் தோன் ாள்வான். rண்வெள்ளியின் துரவுகள் ஒண்வொன்பிற்தும் வென்வேருனனை. ஆகிப்பேசிய வான்வெள்ளி ானத்தில் ஒரு வில்லாக 8 கோபு கி. மீற்றர்கள் நீண்ட விாந்திருச்சின்றன. இன் வால் ஒன்வோர் நீண்ட வட்டப் பாதையிங் இாயிற்றுக்தொகுதியின் வான்வெளியில் பயணம் செய்கின்றது. அவை தமது ஒழுக்கின் பானம் செய்வதற்கு 10 ஆண்டுகளிலிருந்து கோடி ஆண்டுகள் வரையிலும் ஆகின்றன. 19-ம் நூற்றுண்டில் ஆறு ஒளி மிகுந்த வாள்வெள்ளிகள் நமது வானில் தோன்றின. 20- நூற்றுண்டில் ஒரேயொரு வான்வெள்ளியே நமது வாவில் தோன்றியது. rigs ஹவியின் வாங்வெள்ளி (Haly's rேet) ஆகும். இன் வாள் வெள்ளி மீண்டும் 1988இல் மறுபடியும் தோன்றியது.
உற்கைகள் (எரிவெள்ளிகள்)
சந்திரனற்ற வானத்தில் திடீரென நீள்வரி ஒனிசொன்று தோன்றி மாறயும். அதனே லீள்வெள்ளி என்பர். நதுவே உற்கை எனப்படும். உற்கைகள் புவியின் வளிமண் த்திற்குள் பிரவேசிக்கின்ற சிறு உடுக்கள் என முன்னர் சீருதப்பட்டது. ஆணுல் இன்று அது தவறென அறிந்துள்ளனர். மண்மணியள அடைய Fair நிக்கள் இரும் க் துகள்கள் வளிமண்டலத்திற்குள் பிரவேசிக்கும் போது, பிராங் து உாய்வினுள் சூடேறி, தீப் பிழம்பாக எரிகின்றன ஈர்க் கண்டறிந்துள்ளனர். சிஜனேரேகனில் ஆயிரக்கணக்கான உற்ாககள் மழைபொ சிவாதப் போன்று வானத் தில் பொழிவதைக் காrாம். இந்த உற்கைகள் புவியின் மேற் பாப்ப வந்தடை விளிண்டம் விவேகிங்ஃ.
 

குமியனின் கதை
ஆகாயக் கற்கள்
வானில் எரிந்துகொண்டு விழ்கின்று விண்கற்க்ளேயே ஆகாயத் கற்கன் என்பர். அவ்விடத்தில் காணப்படுகின்ற பல்வேறு விட்ட அளவினதான ஆகாயக்கற்கள் வேகமாக தமது வளிமண்டலத் திற்குள் புகும்போது வளிமண்டல உராய்வு காரணமாக வெப்ப மடைந்து எரிந்து அழிகின்றன. பெரும்பாலும் அவை புவியை வந்தடைவதில்ஃ. அடைவதற்கு முன்பே எரிந்து அழிந்து போகின்றன. ஸ்ரவெரியிலிருந்து விழுகின்று பொருட்கள் தாம் க்ரிவெள்ளிகளாக பூமியில் தெரிகின்றன. ஆங்ாமங்கீற்கள் சிடி சமயங்களில் முழுவதும் எரிந்து போகாரால் பூமியில் வித்து விழ மாதுண்டு. இந்த விண்கற்கள் சிறிதும் பெரிதுபாது உலகில் பது பாகங்களில் விழுந்திருக்கின்றன. ஆக்கிய அமெரிக்காவில் அரி சோணுப் பகுதியில் விழுந்த ஆகாயக்கல் ஒன்றினுல் 1200 மீற்றர் அவரும் 180 மீற்றர் ஆறிமுகமான பெரியதொரு குழி அல்வது இழக்கம் உருவாகியிருக்கின்றது. கிறீன்லாந்தில் விழுந்த விண்கல் ஒன்று மியூயோக் மியூசியத்தில் இன்றுமுள்ளது. பத்திய துரையீரியா வி விழுந்த விண்கல் ஏறத்தாழ 10,000 சதுர கிலோ மீற்றர்
ரப்பிற்குச் சேதம் வினோவித்தது.
ஏறத்தாழ 80 தொன் எடையுள்ள ஆகாமல் சில்வேrங்று தென் ஆபிரிக்கிாவில் குருட்பரின்ட்டைன் கன்ற இடத்தில் நிலத்துள் புகழ்ந்து கிடக்கின்றது. இதுவே இதுவரை புவியில் கrhப்பட்ட ஆகாயக்கற்களில் மிகவும் விபரியதாகும்.
சந்திரன்
பூமியின் துவக்கோள் சந்திரனுகும். பூமியிலிருந்து 3,78,000 JJ ir மீற்றர்கள் தூரத்தில் இது அமைந்துள்ளது. இதன் விட்டம் ஏறந்தாழ 380 கிலோ மீற்றர் ஆகும். சந்திரன் புவிச்ை சுற்றிவருவதற்கு 29 நாட்களே எடுத்துக் கொள்கின் து. தன்னேந்தானே சுழல்வதற்கும் அதே அளவு காலமே ாடுத்துக் கொள்கின்றது.
சந்திர நிலத்தோற்றம் ஒப்புர்வானது என நமது முன்னுேம் கள் நீண்டகாலமாக நம்பி வந்திருக்கிறர்கள். அரிஸ்டோட்டிலின் புராதன கருத்தும் அதுவாகவே இருந்தது. ஆனூல் 1810 ஆம் ஆண்டில் கலிலியோவின் தொஃகாட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் சந்திரனின் மேற்பரப்புப் பற்றிய ஆரம்பக் கருத்துக்கள் மாற்றமடைந்தன. சந்திரனின் மேற்பரப்பு மலேப்பாங்கான் நிலத்தோற்றத்திக்கக் கொண்டிருப்பதைக் மீண்டறிந்த்னர், 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 4ஆம் திகதி ருஷியர் செய்ம்மதி

Page 18
சூரியனின் கதை
ஸ்புற்ணிக்-1 சந்திரனின் நிலத்தோற்ற ஆய்விற்கு ஒரு புதிய வழிகாட்டியாக அமைந்தது. 1969 யூலை 20 ஆம் திகதி அமெரிக்க அப்போலோ-11, இரு விண்வெளி வீரர்களுடன் சந்திரத்தரையில் இறங்கியது. அதன் பின்னர் சந்திரனின் நிலத்தோற்றம் குறித்த தெளிவான உண்மைகள் உலகிற்குக் கிடைத்தன;
புவியைப் போன்றே சந்திரனும் பாறைகளால் ஆகியதாகும். புவியிலிருப்பதை ஒத்த பாறைப் பொருட்களே சந்திரனிலும் உள்ளன. சந்திரனும் புவி தோன்றிய மூலத்திலிருந்தே உருவாகி யிருக்கின்றது. சில விஞ்ஞானிகள் பசுபிக் சமுத்திரத்திலிருந்து வானத்தில் வீசப்பட்ட பகுதியே சந்திரனுக விளங்குகின்றது எனவும் சொல்லியுள்ளனர். சந்திரனில் வளிமண்டலமோ வளியோ இல்லை. உயிரினமோ மண்ணுே இல்லை. அதனுல் சந்திர நிலத்தோற்றம் வரண்ட ஒரு பாலைநிலத்தினை ஒத் து.
ஆய்வுக்குரிய நூல்கள் 1. Exploring the Universe - G. O. Abell,
(Holt, Rinehart and Winston, New York, 1964, 2. Origin of Solar System - H. Alfven,
(Oxford University press, 1954) 3. The Solar System - Z. Kopal,
... . (Oxford University press, 1972) 4. The Universe Around Us - J. Jeans.
(Cambridge - University Press, 1944)
5. The Origin of the Earth - W. M. Smart,
(Penguin Books, 1955)
6. Exploring other Worlds - R. Wyler and G. Ames
(Pan Books - 1968)
7. Stars, Men and Atoms - Heinz Haber,
之 (Golden Press, New York - 1962) 8. The Birth and Death of the Sun - George Gamow . (A Mentor Book, New York - 1952) 9. Captives of the Sun - James S. pickering,
(Doid, Mead & Co, New York - 1961) 10, Space Sciences, New Windows to the Universe -
(Essays - Science Today, Bombay, June - 1979)
11. ஞாயிற்றுத் தொகுதி - க. குணராசா,
(பூரி லங்கா வெளி )

90.0 l seus co z owo zor- ••• • • • •soosoross.ל. פרשgshל 00:21qe ugi 9 g z * @rto #91(g) → u si zaά 0 0 0 8νA ; ᏮᎭ Ꭽapfīgi ņos) · oors i••• • • • • ! (...) een oroooooo9・トgg•ቃ~“o" 00° g6puo. 291 · ·ŵ asoz 역% Pr:ren0 IooooooiZ. Z ŽIựso co sie••• • •· @ to I l | ° §ī£ 09•••6oooooo1•••••após urnos. i 1:0 | pus z ze n-ions i s gig ze••·---- • 6,9s·r·In urwiso oso 00.1 qı-more I·g·s os seo . «9 g 2'3 Ig6 * # [ ] sin cs-0 . •••go zao los ř01 z 18. ^ I•••• *0.0哈4999ựngson y I le 1.gf ogossorog 49 șH 00 ‘ og Þog ɛ sɛ-ựas JT 6 Iso Lsj 9 x 000’23” si----ıạomg@ ( 1 =터리,, ᏗᏙᏕ Ꮮ ᏠᎿ q\,, Lo40úsýgi sao@$ 디터e g . 原岭un可ș • • 41 gosoșwuss f’s fiso .qi-17 so 'optı vooɓgolio] ymne) -ș isso ngoà-· Isègoàɔɔŋɔmų;o)-
&? 1 os, și@ąogn i ©

Page 19

roles - ուս ետ