கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கண்களுக்கு அப்பால்

Page 1


Page 2


Page 3

5
கண்களுக்கு அப்பால்
நந்தி
சென்னை புக் ஹவுஸ் (பி) லிட், 6, மேட்லி சாலை, Gayaireostar - 17.

Page 4
கவிகளுக்கு அப்பால் சிறுகதைத் தொகுப்பு. (C) நந்தி.
முதற் பதிப்பு. ஆகஸ்ட், 1984.
மேலுறை ஓவியம் ஞானவேலு
அச்சுப் பதிவு வெற்றி அச்சகம், சென்னை - 5.
விலை கு. 7 - 00

2.
13,
பொருளடக்கம்
முன்னுரை
ஒரு பகலும் இரவும்
அசுரனின் தலைகள்
. கண்களுக்கு அப்பால்
élt.66lreny gyeöreiratérésre
காப்பு
சதையும் சாம்பரும்
துப்பல்
கிழவனும் கிழவியும்
பச்சைப் பூக்கள்
ஆண்களோடு
பார்த்தால் தெரியும்
Qyrdisprair
0.
16
26.
39
42>
5ま
6.
7罗
0
87
9 4

Page 5

கலாநிதி கா. சிவத்தம்பி அவர்களின் முன்னுரை
(அ) நந்தி" எனும் எழுத்தாளன்: (ஆ) சமூக அநுபவமும் இலக்கியத் தரிசனையும்
(இ) சிறுகதையின் தொடர்ச்சிக்கான படைப்பியல்
uuruJüLu ().
நந்தி’ எனும் புனைபெயரிற் சிறுகதை, நாவல் எழுதும் சமூக மருத்துவத்துறைப் பேராசிரியர், செ. சிவஞான சுந்தரம், 'ஈழத்து எழுத்தாளர்" எனத் தமிழகத்திற் பெயர் பெற்றுள்ள எழுத் தாளர் பட்டியலில் மேலுக்கு நிற்பவரல்லர். ஆனால் ஈழத்துத் தமிழ் எழுத்தின் சமூக உண்மைத் தேடலையும் கலைச்சத்திய வேட்கை யையும் நன்கு அறிந்து கொள்ள விரும்புவோர் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டிய ஒருவ ராவர். "கண்களுக்கு அப்பால்" என்னும் இச் கிறுகதைத் தொகுதி, நந்தியின், பிரகடனப்படுத் தப்படாத கணிப்புக் கோரிக்கைகளை நியாயப் படுத்தும் இலக்கிய ஆவணமாகும்.
நந்தியின் சில கிறப்பமிசங்களை இங்கு குறிப் பிடல் அவசியம்.
நற்தியின் மலைக் கொழுந்து" (1963) நாவல் சழத்தில் 1950களில் தோன்றிய இலக்கிய விழிப்

Page 6
V
சிே காலத்தில் தோன்றிய மலையகம் LafðLv (இலங்கையிலுள்ள இந்தியத் தோட்டத் தொழி லாளர்கள் பற்றிய) முதலாவது நாவலாகும். அவரது முதற் சிறுகதைத் தொகுதி “ஊர் நம்புமா” (1966) என்பதாகும்.
நந்தி ஒரு டாக்டர்-மருத்துவர். @ଶ வெறும் அந்தஸ்துச் சின்னத்துக்கான முகவரி யாக அமைந்து விடாது, அவரது இலக்கிய ஆளுமையின் இன்னும் குறிப்பாகச் சொல்ல போனால் அவரது படைப்பியல் தொழிற்பாட் டுக்கு வேண்டிய முடுக்கு சக்தியாக - தளமாகஅமைந்துள்ளது. அதாவது நந்தி தமிழ்ச் சிறு கீதைக்குத் தரும் சிறிதளவு பரிமாண விஸ்தரிப்பு, அவர் மருத்துவராக இருப்பதனாலேயே ஏற்பட் டுள்ளது.
படைப்பாக்கங்களை விடச் சமூக மருத்துவத் துறை நிலை நின்ற சில கட்டுரைகளையும் நற்தி நூல் வருவில் வெளியிட்டுள்ளார்.
நந்தியின் ‘இலக்கிய அணி? நிலைபாடுகளும் முக்கியமானவை. ஈழத்தின் முற்போக்கு இலக் கியப் போராட்ட காலத்தில் (1954-65) gpsd போக்கு அணியின் ஆதரவாளர்களிலொருவராக இருந்தவர்.
நந்தி ஒரு நல்ல நடிகர், நாடகாசிரியம்.
தற்தியும் நானும் ஒருவரையொருவர் நீண், areolors egy gól Gauntb. நாமிருவரும் ஒரே காலத்தில் மாணவர்களாயிருந்த வர்கள். வானொலி, மேடை நீடிகர்களாயிருந்தவர்கள். தான் முதன் முதலில் உத்தியோகத்திற் சேர்ந்த

wii
*பொழுது, நான் உத்தியோகம் பார்ப்பதற்கான உடலியல், உளவியல் தகுதியுடையவன்தான் என்ற வைத்திய அத்தாட்சியைச் செய்தவர் நந்தி. ஆனால் இந்த முன்னுரையை அத்தகைய பழங்
காலத் திளைப்புகளுக்கான களமாக ஆக்கி விடாது, நந்தியின் இச்சிறுகதைத் தொகுதி
வழியாக மேற் கிளம்பும், இலக்கிய விமர்சனம் தொடர்பான, இரண்டு முக்கிய விடயங்கள் பற்றி ஆராய்வதற்கான தளமாக கொள்ள விரும்பு கிறேன். பொழிப்பு நிலையிலிருந்து பருப்பொருள் A56) a digid Qarsi) sairo (from the abstract to the
* Concrete) ஒன்றாக இம்முன்னுரையை அமைத்துக்
கொள்ள விரும்புகிறேன்.
முதலாவது எழுத்தாளனின் ஆளுமைக்கும் இலக்கியம் பற்றிய தரிசனைக்குமுள்ள தொடர்பு (the personality of the writer and his literary perception. ggéão augih perception GT6ãir G h சொல்லைத் தரிசனை" எனமொழி பெயர்த்துள் ளேன். தரிசனம்" என்பதனை முழுமையான நோக்கு, பார்வையைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டு, தரிசனை’ என்பதனை, அதனோடு தொடர்புடைய, ஆனால் அதனிலிருந்து சிறிது வேறுபட்ட அறிகை நிலையைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்துகின்றேன்).
இப்பிரச்சினை உண்மையில் படைப்பாற்றல் படைப்பு முறைமை பற்றிய ஒரு பிரச்சினையே யாகும். நமது விமரினங்களில் நாம் இன்று பெரும்பாலும் சமூக விமரிசனத்தினையே செய்வ தால், இந்நிலைப்பட்ட இலக்கியச் சொல்லாடல் கள் (dialogues) நம்மிடையே குறைவாகவே புள்ளன. -

Page 7
viii
இரண்டாவது, சிறுகதை என்னும் இலக்கியல
வடிவம் மனிதவிழுமிய மாறுபாடுகள், பெயர்ச் சிகளின் பொழுது, மனித நிலையைக் குத்திட்டுக் காட்டும் ஓர் இலக்கிய வடிவமாக உள்ளது என் பதனைமீள வலியுறுத்தலாகும். வெகுசன வாசிப் புக்காக உற்பத்தி செய்யப்படும் இலக்கியத் தயாரிப்புகளில் இந்நிலைமை சாதுரியமாக மறைக் கப்பட்டாலும், அங்கொருவர் இங்கொருவராக சில எழுத்தாளர்கள் இப் பண்பினை, (பிராங்க் ஒ கொணர் சொன்னது போன்று) தனிக்குரல்" களாக (lonely voices) நின்று எடுத்துக்காட்டி வருகின்றனர். சிறுகதையின் அடிப்படையான தோற்ற நியாயப்பாடு இதுவேயாகும். இதனை யும் இங்கு ஒரு சிறிது நோக்குவோம்.
முதலில் எழுத்தாளனிடத்துக் காணப்படும் தரிசனை" (விளக்க அறிகைப்) பண்பினைப் பார்ப் போம். கலைஞனுக்கும் மற்றவர்களுக்குமுள்ள முக்கிய வேறுபாடு அவனிடத்துள்ள, பல்வேறு சாதனங்கள் மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் ஆற்றல் தான். இந்த ஆற்றல் அவ னுக்கு அவனிடத்துள்ள தரிசனையுணர்வு வழி யாகவே வருகின்றது. இது மிகவும் நுண்ணிய தாகும். இந்த நுண்ணிய தரிசனையுணர்வு காரண மாக அவனிடத்து ஒரு அசாதாரணமான சுய தரிசனைத் திறனும், பிறரை பிறவற்றைத் தரிச னைப்படுத்திக் கொள்ளும் திறனும் காணப்படும். இத்தரிசனைத் திறன்தான் அவனிடத்துக் 'கருத்து நிறைந்த கற்பனையைத்" தூண்டுகின்றது. எனவே கலைஞனின் படைப்பாற்றலில் அவனிடத்துள்ள தரிசனைத்திறன் முக்கியமாகிறது. இது இல்லாது கலையாக்கத்துக்கான மற்றைய திறன்கள் வராது

ஒருவனின் தரிசனைக்கும் சமூக இருக்கைக்கும் தொடர்புண்டு. சமூக இருக்கை (social being) வழிவரும் உறவுகள் பற்றிய தரிசனைதான் அவனது கருத்து நிறைந்த கற்பனைக்கான களமா கின்றது. தரிசனைத் திறன் தான் அந்தக் கற்பனைக்கு ஓர் அசாதாரண வலிமையைக் கொடுக்கிறது. புனை கதையைப் பொறுத்த வரையில், ஒரு புனைகதைப் படைப்பை மீளக் கூறப்படும் ஒரு கதை" என்ற சாதாரண நிலையி லிருந்து உயிர்ப்புள்ள ஜீவனுள்ள, மற்றைய பொருள்களின் மீதும் தனது விளக்க ஒளியைப் பாய்ச்சுகின்ற ஒன்றாக (அதனால் நேரடியாகச் சம்பந்தப்பட்ட பிரச்சினை, மனிதர்களை மாத்திர மல்லாது இணைந்து கிடக்கும் பிரச்சினைகளை யும் மனிதர்களையும் விளங்கிக் கொள்வதற்கான ஒன்றாக) மாற்றும் திறன் அடிப்படையில் அந்த எழுத்தாளன் அந்த ஆக்கத்தை எவ்வாறு ““岛f Gég”á கொள்கின்றான் என்பதையே பொறுத்திருக்கின்றது.
இந்தத்தரிசனையைப் பெற்றுக் கொள்வதற்கு எழுத்தாளனுக்கு (கலைஞனுக்கு)ப் படிப்பு, sós (education) G56) auGScirpg. இது பள்ளிப் படிப்பன்று இந்தப் 'படிப்பு"க்கு அவனது சமூக அனுபவம்" பெரிதும் உதவுகிறது. அவனது தரிசனையை ஆழப்படுத்திக் கொள்வதற்கும் அகலப்படுத்திக் கொள்வதற்கும் எவை உதவுமோ அவை, அந்தப் 'படிப்பி”னைத் தருவனவாக அமைகின்றன. இதற்காகத்தான் மேனாடுகளில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அதிகம் பயணம் மேற்கொள்வார்கள். பிரயணம், “அனுபவங் களை"த் தருவது. தொடர்ந்த வாசிப்பும் (முக்கிய

Page 8
*
ா உலகத்துச் சிறந்த ஆக்கங்களை வாசித்துக் கொள்வது) உதலும்,
தமிழ் நாட்டின் திறமைமிக்க எழுத்தாளர்கள் பலர், காலம் செல்லச் செல்ல திரும்பத்திரும்ப ஒன்றையே கூறுபவரிகளாக மாறுவதற்குக் காரணம் அவர்களது சமூக அனுபவ விஸ்தரிப் பின்மையேயாகும். சமூக அனுபவம் விஸ்தரிக்கப் படாவிட்டால், தரிசனைத்திறன் இறுக்கணித்துப் போய்விடும்(கன்றிப்போஸ்விடும்). சிரேஷ்ட எழுத்தாளர்கள் பலரை எதிர்நோக்கும் பிரச்சினை இத்தரிசனைத்தறுக்கணிப்பேயாகும்.
இதுவரை கூறப்பட்டவை தனியொரு எழுத் -57ளன்/கலைஞன் பற்றியவை. முழுமையான ஒரு இலக்கியத் தொகுதியை எடுத்து நோக்கும் பொழுது இந்தத் தரிசனை வேறுபாடுகள்தான் அந்த இலக்கியத்துக்கு வளத்தையும் பலத்தையும் ஊட்டுவனவாகவிருக்கும்.
*சிொலத் தமிழ் எழுத்துலகினை நோக்கும் பொழுது, தரிசனை வேறுபாடின்மை ஒரு பண் பாகவே மேற்கிளம்புகின்றது. ஆரம்ப காலத்தில் திரிசனைத்திறனுடன் தொழிற்பட்ட எழுத்தாளர் கிள் தமது திரிசனை ஆழத்தை வளர்த்துக் கொள் *மில் இருப்பது ஒன்று மற்றது பலதிறப்பட்ட தரிசனைப் பயிற்சியுடையவர்கள் அதிகமானோர் இல்லாமல்லிருப்பதாகும். அ று து களி ல் முன்னிலையைப் பிடித்துக் கொண்ட் கு. சின்னப்ப *ாரதி போன்றோர் விலகிக் கொள்வதும், ஜெய *கிாந்தன் போன்றோர் அதிக வித்தியாசமற்ற

xi
ஆக்கங்களைப் படைப்பதும், அகிலன், நா. பார்த்த சாரதி போன்றோர் வாசிக்க முடியாதவர்களாகி விடுவதும், நுண்ணிதாக நோக்கப்படல் வேண்டும். அப்பொழுதுதான் தரிசனைபற்றிய முக்கியத்துவம் புலனாகும். விஸ்தரிக்கப்படாத தரிசனைகளில் புதிய பிரக்ஞைகள் காணப்படா.
தரிசனையின் இந்த இலக்கிய முக்கியத் துவங்களை (அதாவது தனிப்பட்ட எழுத்தாளர் மட்டத்திலும், இலக்கியத் தொகுதியொன்றின் மட்டத்திலும், உள்ள அதன் முக்கியத் துவங்களை) விளங்கிக் கொள்ளும் பொழுது தான், பெரும் பாலான எழுத்தாளர்களிலிருந்து பின்புல வேறு பாடுடைய எழுத்தாளர் தனிப்பட்ட முறையிலும், அந்த இலக்கியத் தொகுதியின் வளர் நிலையிலும், முக்கியமாவதை நன்கு விளங்கிக் கொள்ளமுடியும்,
உண்மையில் ஒவ்வொரு புதிய எழுத்தாளனும் தான் பயிலும் இலக்கிய உலகில் தனது முத்திரை யைப் பதிப்பது தனது தரிசனைத் தனித்துவத்தி -னாலேயே. சமூகப் புறநிலைப்பட்ட வாழ்க்கை மட்டங்களிலுள்ளவர்கள் பற்றிய ஒரு புதிய தரிசனை தான் ஜெயகாந்தனின் வருகையைப் பதிவு செய்தது. சமூக உறவுகளைப்பற்றிய தரிசனைகள் ஒரு புறமாகவும், புதிய சமூக வட்டங்களை பற்றியதரிசனைகள் ஒரு புறமாகவும் வரும். மேலும், ஒவ்வொரு எழுத்தாளனும் தன் னுடைய வளர்ச்சிப் பின்னணியின் வழியாகவும், பயிற்சிப் பின்னணியின் வழியாகவும் புதிய தரிசனைகளுடன் வந்து சேருவான். பொறி யியலாளனான நிலபத்மநாபன் மின் பொறியிய அலாளனான சுஜாதா (கஜாதாவின் தரிசனை

Page 9
Rii
வெகு சீக்கிரத்தில் தறுக்கணித்துப் போம்விட்டது அதற்குக் காரணம் மிகைவணிகவாக்கலாகும்) ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தியமைக்குக் காரணம் இதுவேயாகும்.
இவ்வாறு நோக்கும் பொழுது தான் நந்தி முக்கியமானவராகின்றார். நற்தி முக்கியமா கின்றார் எனும் பொழுது, வைத்தியத்துறைப் பேராசிரியர் செ. சிவஞானசுந்தரத்தின் கல்வித் தரத்தையும், சமூக அந்தஸ்தையும் நான் குறிப் பிடவில்லை, சிவஞான சுந்தரத்தின் வைத்திய அறிவையும், அகண்ட அனுபவத்தையும் நந்தி பயன்படுத்திக் கொள்ளும் முறைமை பற்றியே இங்கு குறிப்பிடுகின்றேன்.
நந்தியின் கதைகளை வாசிக்கும்பொழுது ஓர் உண்மை புலனாகின்றது. நந்தி ஒரு வைத்தியராக நின்று, வைத்தியருக்குள்ள கண்ணோட்டத்துடன் எழுதவில்லை. இதயமுள்ள சாதாரண மனிதன்" என்ற நிலையில் நின்று கொண்டுதான் பார்க் கிறார். சாதாரண கிளார்க், பியூன், கமககாரன் முதலியோராகத் தன்னைக் கண்டுகொள்ளும் ஒரு வேட்கை கூட இத் தொகுதியிலுள்ள கதைகளில் தெரிகிறது. அவ்வாறு ஒரு சாதாரண மனிதனாக நின்று கொண்டு பார்த்து, மனித அவலத்தை மன்னிக்கப்பட முடியாத ஒவ்வாமைகளைச் சுட்டு கின்றபொழுது, அந்த அவலங்களையும்,ஒவ்வாமை களையும் கண்டு கொள்வதற்கு வைத்திய நிபுணத் துவம் வழியாக வரும் சில தரிசனைகள் உதவுகின் றன. நந்தியின் கதைகளில் விவரங்களை முனைப் புப்படுத்திக் கூறும் ஒரு பண்பினை அவதானிக்க ல்ாம். அந்த விவரணம் தான் மறைந்து கிடக்

xiii
கின்ற மனித அவலத்திை ஒவ்வாமைகளை வெளிக்கொணருகின்றது. நந்தி தனது எழுத் தினை இன்னும் ஒரு விருப்பு முயற்சியாகவேஉள்ளுயிர்த்திருப்திக்காகச் செய்யப்படும் ஒரு தொழிற்பாடாகவே-கொண்டுள்ளதால், அதாவது மலினப்படுத்தாதலால் அவரிடமுள்ளதரிசனைகள் இலக்கிய நேர்மையுடன் தொழிற்படுகின்றன. இவ்வாறு கூறும்பொழுது எல்லாச் சிறு கதை களும் சமமான இலக்கியத் தரமுடையவை என்ப தாகி விடாது; இவரிடத்து ஓர் இலக்கிய சிரத்தை யுள்ளது என்பதே வலியுறுத்தப்படுகின்றது.
மனித நேசமுள்ள படைப்பிலக்கிய கர்த்தன், நோய் அறிநோக்கு (Clinical approach) டன் விவ ரித்துக் கார ணகாரியத் தொடர்பினை இயைபு படுத்தும்பொழுது மனதைக் கவ்விப் பிடிக்கும் இலக்கியப் படைப்புத் தோன்றி விடுகின்றது என் பதற்கு காப்பு" அருமையான உதாரணம் *கண்களுக்கு அப்பாலும்" குறைந்ததன்று. எந்த நிகழ்வையும் அது உணரப்படும் முறையிற் Jaša G. Gas T6ir aus (a pathological understanding) வைத்தியனுக்குள்ள முக்கிய பண்பாகும். அந்தப் பண்பினை நந்தியின் கதைகளிற் காண முடிகின் றது. ஆனால் சம அளவில் அல்ல. சிலவற்றில் அது சிறப்பாகக் காணப்படுகிறது. சிலவற்றில் அத்துணை சிறப்பாகவில்லை. படைப்பினை மீள மீளத் திருத்தஞ் செய்து பூரணப்படுத்தும் பொழுது தான் அந்தப் பண்பு சிறக்கும்.
தரிசனையைப் பற்றிப்பேசும் இவ்வேளையில் எழுத்தாளனின் ஆளுமை அவனது óቻeupdo ←ወሃፀ! பவம் எவ்வாறு அவனது இலக்கியதரிசனைகளுக்கு

Page 10
Χίν
ஒரு கூர்மையை வழங்குகின்றது என்பதற்கு, "வி"க்ரன்" ஒரு நல்ல உதாரணம், மத்திய கிழக் குத் தரும் வேலை வாய்ப்பின் அடியாழத்திற். காணப்படும் மனித நிலைமைகளை அக்கதை மிக்க அசாதாரணமான ஒரு கோணத்திலிருந்து காட்டு கின்றது.
இந்த இலக்கியத் தரிசனை J577sgaarday பல்வேறு மனநிலைகளில் வெளிப்படுகிற து. அங்கத வரும்பொழுது (ஒரு பகலும் இர, <别夺仍
யும் பெற்றுக் கொள்கிறது. ஆனால் பொதுவில், போர்வையாளனின் நிலைதான்.
இந்தத் தரிசனையைச் சீமூக மாற்றத்துக்கான இரு தரிசனமாக மாறும்பொழுது நந்தியின் இலக்
கிய முக்கியத்துவம் முற்று முழுதாக உணர்ந்து கொள்ளப்பட்டு விடும்.
எழுத்திாளினின் தரிஜ Abútů míře நாம் இச் சிறுகதைத் தொகுதி திரும் உந்துதல் வழிநின்று அடுத்து நோக்க வேண்டியது, சிறு கதை என்னும் இலக்கிய வடிவத்தின் நிலையான இலக்கியப் பெறுமானமான மனித நிலைச்சித்தரிப் பாகும். சமூக உறவுகளில் தெறித்து மேற்கிளம் அம் மனித நிலையினை மேகக் கிருமையின் பின் புலத்தில் தோன்றும் வானவில் வினை வரை கவர்ச்சியுடனும் பின்புல உறைப்புடனும் காட்டும் பொழுதுதான், சிறுகதை தனக்குரிய பொலி வுடன் ஜொலிக்கிறது. வெகுசனப் 6öw Lunrigsår

XV
தேவைகட்காக இந்த *ஜொலிப்பினை" வான் கோழித் திறமையுடன் எடுத்துக்காட்டும் சஞ்சி கைகளில் வரும் பெரும்பான்மையான சிறுகதை. களை வாசித்து வாசித்து நமது சிறுகதைச்சுவையே ஓரளவு மரத்துப் போயிருக்கின்ற பொழுது, சிறுகதையின் தோற்றகாலப் பயன் பாட்டுப் பொலிவுடன் சிறுகதையைப் படைக்கும் ஒரு முயற்சியைக் காணும் பொழுது எமக்கு 2RGj திருப்தியே மேலோங்கி நிற்கின்றது.
நந்தியின் சிறு கதைகளில் மனித இன்னல், மனித அவலநிலை, அருந்தற்பாடு உள்ளீடாகவும் நேரடியாகவும் எடுத்துப் பேசப்படுகின்றன. யாழ்ப் பாண வாழ்க்கையிற் காணப்படும் சொத்துணர்வு ஏற்படுத்தும் மனித விகாரஉணர்வுகளையும் அந்த உணர்வு விகாரங்களுக் கிடையேயும் குமிழிவிட்டு மேற்கிளம்பும் மனிதாயதத்தையும் ‘காப்பு" காட்டுகின்றது. மீண்டு பெறப்படும் கண் பார்வை சமூகக் கொடுமையொன்றினை அழுத் திக்காட்ட உதவுகின்றது. நமது சமூகப் பார்வை களின் குருட்டுத் தன்மையைக் *கண்களுக்கு அப்பால் காட்டுகின்றது.
இப்படிப் பார்க்கும் பொழுது தான், சிறுகதை யின் கதைப் பொருளே’ அந்தச் சமூகத்தின் ஒரு. குறியீடாக மாறிவிடுகிறது.
மனித அவல விடுவிப்புத்தான் உண்மையான கலை, இலக்கியத்தின் தேடற் பொருளாகும். அந்த அவலங்களை சரிவர காட்டாமல் அந்த அவலங்களை அழித்துவிட இன்றைய முடியாது. நிலையில், முதலாளித்துவ சமுதாயத்தின்

Page 11
vi
உள்ளார்ந்த மனித அவலங்களினை அவற்றின் வெளிப்பாட்டு நிலையில் எடுத்துக் காட்ட சிறுகதை உதவுகின்றது. நாவல் வாழ்க்கையை விமரிசிக்க சிறுகதை வாழ்க்கையின் மறக்க முடியாத கணங்களை நிலைகளைச் சித்திரிக் கிறது.
இந்தச் சிறுகதைத் தொகுதியில் அத்தகைய கணங்கள் நிலைகள் சிலவற்றைக் காணலாம்.
கார்த்திகேசு சிவதம்பி
நடராஜ கோட்டம்,
வல்ரெட்டித்துறை, .--7 - 1984

ஒரு பகலும் இரவும்
ஒரு கோவணம், ஒரு ஒமேகா கைக்கடிகாரம், ஒரு மூக்குக்கண்ணாடி இவை மட்டும் பிறந்த மேனியை மறைக்க, திருவாளர் பொன். தணிகாசலம், சிரம்மேல் ஒரு குடம் குளத்து நீரை ஏந்தி வந்தார். அவரது லான நெற்றியில் மூன்று குறி திருநீறு, அதன் நடுவில் ஒரு பொட்டு சந்தனம், முதுகிலும் நெஞ்சிலும் அருட்டான திருநீற்றுக் குறிகள், ஆமாம், இவையும் அவரது மேனியை ஓரளவு ஒளித்தன.
அன்று அவரைத் தொடர்ந்து மூன்று ஆசிரியர்களும் சுமார் முப்பது வாலிபர்களும் நனைந்த வேட்டிகள், துவாய்கள், கட்டைக் களிசான்களுடன் எறும்பு வரிசையில் வந்தனர். அவர்களில் பலரின் சிரம்மேலும் நீர் நிறை செம்புகள் இருந்தன. இப்படியான ஒருவர் பின்னால் சென்று அவருடை சிவலிங்கத்திற்கு அவரோடு அபிஷேகம் செய்து, அவருடைய உபதேச மொழிகளைக் கேட்டு வந்தோம் என்று ஒரு காலம் கூற முடியும், என்ற சரித்திர உணர்வு அவர்களுக்குக் கண்டிப்பாக இருந் திருக்கும். உண்மையில் நாளைக்கே பாடசாலை திரும்பியதும் அவர்களுக்கு ஒரு தனிமதிப்பு சுடச்சுஇருக்கும். அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு இரத்தியேக பஸ்ஸில் அந்தக் கோவிலுக்கு வந்தவர்கள்.

Page 12
ஜி. சி. ஈ. வகுப்பு மாணவர்களும் அவர்கள் சரித்திர, சமய இலக்கிய ஆசிரியர்களும்.
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றி.
பொன். தணிகாசலம் அவர்களின் குரலுக்குக் குரல் கொடுத்து அந்தப் பஜனை கியூ வந்துகொண்டு இருந்தது.
கோவில் இல்லா ஊர்பாம், குளம் இல்லா கோவில் பாழ் என்ற அவமதிப்பிலிருந்து அந்தக் கிராமத்தைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே, 'சிவனே’ என்று இருந்த அந்த ஊர்ப்பிள்ளையார் கோவிலுக்கும், மலமும் மலரு மாக இருந்த பக்கத்துக் குளத்திற்கும், கடந்த மூன்று வருடங்களாக சரித்திர, சமய, இலக்கிய-ஏன்-அரசியல் அந்தஸ்துக்கூட வந்துவிட்டது. நாளும் பொழுதும் அழுக்காகி வந்த குளத்தின் கோதாரி நீர் கோவிலுக்கு ஆகாது என்று தீர்மானித்த ஊர்ப் பெரியோர்கள் ஒரு கிணறு வெட்டினர். அரைவாசி தோண்டியதும் ஒரு சிவலிங்கம் அகப்பட்டது.
நாம் நினைப்பதுபோல் ஒன்றும் நடப்பது இல்லை. மிக உயர்ந்த அரசாங்க உத்தியோகத்தில் இருந்து ஒய்வுபெற்று, மற்றவர் புத் தி கேட்டு, தேர்தலில் சுயேச்சை யாகக் கட்டுக் காசைப் பறிகொடுத்துவிட்டு மூத்தமருமகன் உதவியுடன் நைஜீரியாவில் ஒரு தற்காலிக மூன்று வருட உயர் உத்தியோகம் எடுக்க திரு. தணிகாசலம் யோசிப் பதற்கும், பதினாறாம் நூற்றாண்டுச் சிவலிங்கம் பூதம் எனப் புறப்படவும் காலநேரம் சரியாக இருந்தது. பத்திரி கைகளில் புதினமும் படமும் வந்ததும் கொழும்பில் இருந்து அந்த ஊருக்கு கார் ஒட்டி வந்தார். அவர் சரியான நேரம் வந்ததால் பல்கலைக்கழக சரித்திர விரிவுரையாளர், புதை பொருள் ஆராய்ச்சியாளர் இவர்களின் மரண விசாரணைக்

3
குப்பின் சிவலிங்கம் கொழும்பு நூதன சாலைக்குப் போகாது தடுக்கப்பட்டு, அங்கே ஒரு தற்காலிக கொட்டி லில் கோவில் கொண்டது.
பொன். தணிகாசலம் போன்றவர் கையில் புல்லும் ஆயுதமாம். வெடிப்புக்கள் இருந்தாலும் சிவலிங்கக்கல் வெறும் புல்லா, பில்லா? ஒருமாத காலமாக பணம் சேர்க்கும் வேண்டுகோள் பத்திரங்கள். திரு. பொன். தணிகாசலம் ஒய்வு பெற்ற-அதிபர், கை ஒப்பத்தோடு வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு எல்லாம் அரசாங்க அலுவலகங்களில்
உலாவின. ஆறு மாதங்களில் சிவலிங்கத்திற்குக் கட்டப் பட்ட மண்டபம் பூர்வீக பிள்ளையார் கோவிலுக்கு, பிந்தி வந்த கொம்புக்கும் முந்தி இருந்த காதுக்கும் உள்ள உறவு ஆகிற்று. குளமும் பகிரங்க மலசலக்கூட நிலையில் இருந்து தடாகமாக மாறிற்று.
பொன். தணிகாசலத்தின் நிர்வாக அனுபவம் கோவி லுக்கும் குளத்திற்கும் சுவறியது மட்டுமல்ல. அக்கம் பக்கக் கடைகள், தபால் கந்தோர், பஸ் நிற்பாட்டும் இடம், பாடசாலை எல்லா இடங்களையும் ஆக்கிரமித்தது. கடை களில் மச்சம் மாமிச உணவு விற்கப்படாது, பாடசாலைப் பெண் பிள்ளைகள் முழங்கால்கள் மட்டத்திலாவது சட்டை அணியவேண்டும், தபால் கந்தோர் ஊழியர்கள் கூட்டாக வருடம் ஒரு திருவிழா செய்யவேண்டும் என்ற அவர் ஆணைகள் நடைமுறைக்கு வந்தன. கோவில் மணி கேட்கும் தூரத்தில் இருந்த ஒரு கள்ளுக்கொட்டில் மூடப் ull-gil.
அவரும் கோவிலுக்கு அண்மையில் ஒரு ஒலை வீடு அமைத்து, அதற்குக் குடிசை” என்ற பிளாஸ்டிக் பெயர்ப் பலகை மாட்டி, அங்கேயே தனியாக (ஒரு வேலைக்காரப் பையனுடன்) குடிகொண்டார். கடந்த மூன்று வருடங் காளக, காலையும் மாலையும், அவர் கோவண எளிமை

Page 13
4.
யுடன் சிவலிங்கத்திற்குத் தலையில் நீர் கொண்டுவந்து கண்ணப்ப பக்தியை ஞாபகமூட்டும் பாவனையுடன் அபிஷேகம் செய்வது கண்காணும் புராணக்கதை. அவருக்குப் பின்னால் தாமும் ஒரு செம்போ குடமோ தலையில் கொண்டுவந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது திவ்வியமாக ஆசாரமாக, கடமையாக, கெளரவ மாகத் தோன்றியது, அவ்வப்போது கோவிலுக்கு, வருபவர்களுக்கு பஸ் நிறைய பிள்ளைகளும் பக்தர்களும் வந்தால் அது ஊர்வலமாக இருக்கும்.
நடபஜனையின் கர்ஜனை புராணப்படம் காட்டும் படமாளிகைக்கு வெளியே கேட்பது போல் ஓகோ என்று ஒலிக்கும். ஊர்வலம் போய்க் கொண்டு பாடியது.
போற்றியெல் லாவுயிர்க்கும் ஈரும் இணையடிகள் போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றி.
'காலை நீட்டி சாப்பிடச் சொத்து இருக்கு. பிள்ளை கள் நல்லாயிருக்கு. மனிசன் ஏன் இப்படித் திரியுது? ஊருக்காகத் தானே” என்று கைகூப்பி மட்டும் கும்பிடாத, நிலையில் கூறினார் ஒரு வாத்தியார்.
*ஊரின்டை நன்மைக்குதான்" என்றார் மற்றவர்.
மனிசனுக்கு என்ன குறை?”
6 பே மனிசன் இலெக்ஷன் கேட்டிருக்கப்படாது; கேட்காமல் இருந்திருந்தால் ஒரு சின்ன மந்திரிப் பதவி என்றாலும் குடுத்திருப்பான்கள்” என்றார் இன்னொருவர். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து முடிந்ததும், தனது கைகளால் தரையில் தேங்கிய நீரைத் தள்ளிக் கொண்டிருந்தார் பொன். தணிகாசலம், வர்ண அலங்கார

5
உடை அணிந்த ஒரு அமெரிக்கன் சோடி இதைப் பார்த்துக் கொண்டு நின்றது. “அவர் சும்மா ஆளல்ல, அரசாங்கத் தில்.ஆக இருந்தவர்.”
என்ற விஷயத்தை அவர்கள் காதிற்குள் அவ்விடத்தில் நின்ற ஒரு ஓய்வுபெற்ற கிளார்க் கூறி இருக்க வேண்டும். வெள்ளையன் உடனே ஒரு போட்டோ தட்டினான். சிறிது நேரத்தி ல் அவ்விடம் வந்த பொன். தணிகாசலம், அவர்களுக்கு சிவலிங்க உருவின் தத்துவத்தை விளக் கினார். அவர் கூறிய எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சிவபூசையில் கரடி குழறியது போல், அந்த அமெரிக்கப் பெட்டை கேட்டாள்:
*அப்போ, அந்தக்கால இந்துக்கள் குடும்பக் கட்டுப் பாட்டு கருவிகளை தெரிந்தவர்கள் தானா?”
நல்ல வேளையாக இன்னொரு பிராணி அந்த ஊர் போஸ்ட் மாஸ்டர், அப்போது அங்கே வந்து சேர்ந்தது. *ஸேர்,இப்போது பம்பலப்பிட்டியில் இருந்து டிரங்க்கோல் வந்தது. அம்மா போன் செய்தா. மூத்த மகனும் குடும்பமும் கனடாவில் இருந்து இன்று ஏழு மணிக்கு வருகிறார்களாம், நீங்கள் கட்டாயம் பண்டாரநாயகாவிமான நிலையத்திற்கு வரவேண்டுமாம். கஸ்டம்ஸ் காரரைப் பிடிக்க வேண்டுமாம்.’’ என்று ஒரே மூச்சில் ஒப்புவித்தார் வந்தவர். *நாளை சிவராத்திரி இ!" என்றார் தனிகாசலம் மூக்குக் கண்ணாடியைத் துடைத்தபடி. * மன்னிக்க வேண்டும் ஸேர், கார் புறப்பட்டு விட்ட தாம், ஸேர், நாளைக் காலையே நீங்கள் திரும்பி விடலாமாமம்.*
அப்போது ஒரு பேஜோ 404 அவ்விடம் வந்து சேர்ந்தது.

Page 14
என்ன பி. எம். உமது டிரங்க்கோல் வருவதற்கும் எனது கார் வருவதற்கும் நேரம் சரியாக இருக்கின்றது” என்று கேலி செய்தார் தணிகாசலம்.
போஸ்ட் மாஸ்டர் தபால் சக தந்தி இலாகாவின் சார்பில் ஒரு மன்னிப்புச் சிரிப்புச் சிரித்தார். பொன். தணிகாசலம் தனது குடிசைக்குச் சென்று ஒரு துவாய் அணிந்து கொண்டு, சாய்வு நாற்காலியில் இருந்து ஒருகிளாஸ் பால் அருந்தினார். கடைசி மிடறுடன் இரு வைட்டமின் மாத்திரைகளைப் போட்டுக்கொண் டார். அவரது சிவலிங்கத்தின் ஒரு பெரிய போட்டோ அவர் முன்னால் தொங்கிற்று. அதைச் சுற்றி அங்கும் இங்குமாக பல வர்ணங்களிலும் பல அளவுகளிலும் வேறு படங்கள் தொங்கின. இராமகிருஷ்ணர், விவேகானந்தர், சக்திய சாய்பாபா, யோக சுவாமி இப்படியாக, பக்கத் தில் ஒரு ஸ்டூலில் திருவாசகம் திறந்தபடி கிடந்தது. “என்ன புதினம்’ என்று கொழும்பிலிருந்து வந்த டிரைவரைக் கேட்டார் அவர். *கனடா தம்பி வருகின்றார்" என்றான் அவன். அவர் சிரித்தார். *கையில் என்ன பார்சல்?" என்று கேட்டார். *ஆரியதாசாவுக்கு உணவுப் பார்சல், அம்மா தந்தா" என்றான் டிரைவர். ஆரியதாசா, பலகாலம் தணிகாசலம் குடும்பத்துடன், சேர்ந்த பந்தத்தினால், கடந்த மூன்று வருடம் இந்தக் குடிசையில் மச்சமாமிசம் இல்லாமல், பீடி, சிகரெட் இல்லாமல் காயும் புழுக்கை, எப்போதாவது இப்படி கார் வரும்போது தணிகாசலத்தின் மனைவி இரங்கி இரகசிய மாக அசைவ உணவு அனுப்பி வைப்பாள். பெரும்பாலும்

7
அது இரண்டு மூன்று நாட்கள் வைக்கத்தக்க கட்லட்கள், பொரித்த மீன் துண்டுகள், மாசிபோட்ட சீனிச் சம்பல் இப்படியாக இருக்கும்.
பொன் தணிகாசலம் தூய நஷனல் உடுப்பு அணிந்து
கொண்டார்.
崇
அவரைக் கண்டதும் கஸ்டம்ஸ்காரர் தாமாகவே விஷயம் விசாரித்து, பாரங்களைப் பூர்த்தி செப்து, அவர் மகன் குடும்பத்தின் பொதிகளைப் பரிசீலனை செய்யாமலே, திறக்கப்படாத பெட்டிகள் மேல் சுண்ணாம்புப் புள்ளடி இட்டனர். அவர் கட்டுநாயக்காவுக்கு வந்திருக்க வேண்டியதில்லை. தான் புகுந்த ஊரில் இருந்தே போன் பண்ணியிருக்கலாம். அந்தக் கஸ்டம்ஸ்காரர் ஒரு காலம் அவரின் கீழ் வேலைசெய்து உதவி பெற்றவர்கள்.
திருமதி தணிகாசலம் கஸ்டம்ஸ்காரருக்கு நன்றி தெரி வித்து, அவர்கள் சவரம் செய்ய வில்கின்சன் பிளேட்கள் அனுப்புவதாகத் தெரிவித்தார்கள்.
தணிகாசலத்தின் மூத்த மகன் சிவநாதன் கனடாவில் ஓர் ஆஸ்பத்திரியில் (டொக்டர் நேதன் என்ற பெயருடன்) வேலை செய்பவர். அவருக்கு முன்று பெண் பிள்ளைகள்: கடைக்குட்டி ஈசா (புவனேஸ்வரி) கனடாவில் பிறந்து, தபால் மூலம் பாட்டன் தணிகாசலத்தால் பெயர் வைக்கப் பட்டவள். ஈசா கட்டைக் களிசான் அணிந்திருந்தாள் அனா (அன்னபூரணி) பெல்பொட்டம் சும், சிவா (சிவ னேஸ்வரி) மினியும் அணிந்திருந்தார்கள். அவர்கள் U TL L-IT ġ562cies irr9r Goġó 60o 35 கனடா டெலிவிஷனில் பார்த்ததாகக் கூறி பந்தம் பாராட்டினர். சென்ற வருடம் கனடா டெலிவிஷன் கொம்பனி, இலங்கையின் கோவில் களையும் கோவில் நடைமுறைகளையும் படம் பிடித்தது.

Page 15
தணிகாசலம் ஜலம் கொண்டு வரும் காட்சி காட்டப் பட்டு, அவர் இந்து சுவாமியாக வர்ணிக்கப் பட்டார்.
டொக்டர் நேதன் தம்பதிகள் விமானத்தில் பலவித உணவு அருந்தியதால், இராப்போசனம் உடனே பரிமாறப் படவில்லை. பம்பலப்பிட்டி வீட்டில் நெருங்கிய உறவினர் கள் வந்திருந்தனர். விஸ்கியும் பிரண்டியும் பரிமாறப் பட்டது. தணிகாசலம் சோடா மட்டும் அருந்தினார்.
*நான் கடந்த மூன்று வருடங்களாக மது மாமிசம் அருந்தவில்லை” என்று பெருமையுடன் கூறிக் கொண் umř.
இறைச்சிக் கட்லட், பொரிச்ச இறால், வறுத்தி கசுக்கொட்டை மது அருந்துபவர்களுக்கு வந்தது.
*உங்களுக்குத் தான்” என்று பரிமாறினார் தணி காசம், என்னுடைய காலம் போய் விட்டது.”
பக்கத்து அறையில் பெண்கள் கனடாவில் இருந்து வந்த பொருட்களை யார் யாருக்கு என்று தீர்மானித்து களிப்படைந்தனர். அமெரிக்கன் துணிகளில் தைக்கப் பட்ட பலவித சட்டைகள், பெண்பால் களிசான்கள், ஆண் களுக்கு சூட்கள், பெளண்டன் பேனாக்கள், கைக்கடிகாரங் கள், ட்ரான்சிஸ்டர், நூதனப் பொருட்கள். தூரத்து இனப்பெண்களுக்கு பிராசியர்களும், ஆண்களுக்குச் சவர பிளேட்களும் ஏராளம்.
சாப்பாட்டுக்கு முன் மெல்லமாக மகன் டொக்டர் நேதன் ஆங்கிலத்தில் கேட்டார்.
"தகப்பனா ரே மிகவும் களைத்திருக்கிறீர்கள். மருந்து போல் கொஞ்சம் பிரண்டி குடியுங்கள்.” கொஞ்சம்” என்றார் பொன். தணிகாசலம்,

9
சூரியன் உதிப்பதற்கு முன் அவர் தனது கோயிலுக்கும் குளத்திற்கும் போக வேண்டும். அவருக்கு முதலில் மச்சம் இல்லாத உணவு போடப் பட்டது.
திருமதி தணிகாசலம் அவருடைய பெட்டிக்குள் அவ ருக்கென வந்த பொருட்களை அடுக்கினாள். ஒரு காவி நிறசுவெற்றர், ஒரு தேமோஸ் பிளாஸ்க், ஒரு ஷேஃபர் பேனா, பட்டரி இயக்கும் சவர மெஷின்.
வெளிநாட்டு வெள்ளைத் துணியில் நீளமான சில துண்டுகளை வெட்டி அவசரமாக ஓரங்களைத் தைத்துத் தாயிடம் கொடுத்தாள் கடைசி மகள். அவள் அவற்றை யும் பக்குவமாக அந்தப் பெட்டிக்குள் மடித்து வைத் தாள்.
- விரகேசரி வார வெளியீடு 8-10-72

Page 16
அசுரனின் தலைகள்
மார்பிலே சேலையைக் குறுக்காகக் கட்டிக் கொண்டு இன்னும் ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு 35-40 வயது இருக்கும். அவளுடன் ஒரு சிறு பிள்ளை" துள்ளி வந்தது.
*குளிச்சியா?” என்று அந்தப் பெண்ணைக் கேட்டார் கிளாக்கர் கந்தப்பிள்ளை.
嫌
ஒம ஐயா.
*உம், ஒடிப் போய்க் கும்பிடு” என்று அனுமதி வழங்கி -னார் கந்தப்பிள்ளை.
அவள் தனது சிறு வயது தொடக்கம் கும்பிட்ட கோவில் தான் அது. ஆனால், இன்று தான் கோவில் உள்ளே சென்று, கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் சிவலிங் கத்தை, இதுவரை காலமும் மறைத்துக் கொண்டு இருந்த நந்தியையும் மீறி நின்று, கும்பிடப் போகிறாள்.
இன்னும் சிலர் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். முதல் முறையாக வாக்குரிமை பெற்றவர்கள், தேர்தலின் போது வோட்டுப் போடப் போவது போல, அவர்கள் தடையில் உரிமை உணர்வின் ஓட்டம் இருந்தது.

உம், போய்க் கும்புடுங்கோ? கோவில் வாசலில் நின்றபடி கந்தப்பிள்ளை,
குளிச்சிங்களா? இப்ப சந்தோஷம் தானே?" *இதுக்கேன் இவ்வளவு சண்டை?” "அதுகளும் கும்பிடத்தானே வேணும்!”
*நாங்களும் மணிசர் தான், அதுகளும் மணிசர் தான்!”. இப்படியாக ஓரிரு கேள்வி- ஆச்சரிய அனுதாபக் குறிப்பு" களுடன் போய்க் கும்புடுங்கோ!" அனுமதிச் சீட்டு வழங்கினார்.
இதைப் பார்க்கும் போது, எனக்கு உண்மையில்
ஆச்சரியமாக இருந்தது. கிளாக்கர் கந்தப்பிள்ளை தனது
கோவிலைத் தாழ்த் தப்பட்ட மக்களுக்குத் திறந்து விடு கின்றார். நம்ப முடியவில்லையே!
கந்தப்பிள்ளை, யாழ்ப்பாணத்தில் ஒரு Gourfu u அலுவலகத்தில் ஹெட் கிளாக்காக இருக்து, ஒய்வு பெற்ற வர். நான் அவருடைய பீயோனாக இருந்து ஒய்வு பெற்ற வன். அவர் வேலை பார்க்கும் காலத்திலே, காலையில் வந்ததும் பத்திரிகை u Lq Unit fi . பத்திரிக்கையில் கோவில்களைத் தாழ்த்தப் பட்ட மக்களுக்குத் திறந்து விடும் செய்தி அல்லது பிரச்சினை ஏதாவது காணப் பட்டால், மனித மலத்தில் மிதித்தவர் போல் துள்ளிக் குதிப்பார். அன்று முழுதும் எங்கள் மேல் பொரிந்து
"* ஒரு நாள் அவர் எனக்குக் கூறியது ஞாபகமிருக்D&W -
*கந்தையா, எந்தக் கோவிலை எந்தச் சாதிகளுக்குத் திறந்து விட்டாலும், என்றை கோவிலிலை அவன்களைக் கால் எடுத்து வைக்க விடமாட்டன்."

Page 17
2
வெறும் பேச்சோடு கிளாக்கர் கந்தப்பிள்ளையின் சாதியாணவம் நிற்கவில்லை. உயர் சாதிக்காரர் என்று தமக்குப் பட்டம் சூட்டிக் கொள்பவர்கள், கோவில்களில் உரிமை கொண்டாடி, ஏற்படுத்தும் துன்பியல் நாடகங்கள் அத்தனையும் அவருடைய கோவிலிலும் நடைபெற்றன. அவர்தானா?. அதே கந்தப் பிள்ளைதானா, இன்று கோவில் திறப்பு விழாவை நடாத்துகிறார்? *உம். போய்க் கும்புடுங்கோ?”
கந்தப் பிள்ளைக்குப் பக்கத்தில், அரசாங்கத்தில் பெரும் செல்வாக்குள்ள ஒரு சிங்கள அரசியல்வாதி, மிஸ்டர் அத்த நாயக்கா, நின்றார். அவர், அன்று காலை யில்தான் கொழும்பில் இருந்து மனைவி மக்களுடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார். மயிலிறகை உடுத்தது போல், ஒரு நீல நிற பிரின் றட் சாரியை, நாரியில் சுருக்கு கள் விசிறி விழ உடுத்திருந்தார் அவர் மனைவி அவர் களுடைய இரு குமரிப்பிள்ளைகள் மொட்ஸ்டைல்" உடை களுடன், குளிர்க் கண்ணாடி அணிந்து நின்றனர். அந்த அரசியல் வாதியின் தலைமையில் தான் இந்தக் கோவில் கதவுத் திறப்பு விழா நடை பெறுகிறது. கந்தப்பிள்ளையின் மகன் செல்வ விநாயக மூர்த்தி (செல்வா) மிஸ்டர் அத்தநாயக்காவுடன் மிகப் பணிவுடன் நின்றார். அவர் பி. ஏ. மூன்றாம் வகுப்பில் சித்தி யடைந்து, மலை நாட்டில் ஒரு பாடசாலையில் படிப்பித் தார். மூன்று மாதங்களுக்கு முன், நான் கந்தப் பிள்ளை ஐயா வீட்டிற்குப் போன போது, அவர் கதையோடு கதை யாக, மகனுக்கு யாரையாவது பிடித்து மூன்றாம் தர பிரின்சிப்பல் பதவி எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது அவர் மகள் கூறினாள்: "நீங்கள் ஊரோடு ஒத்து நடக்கத் தெரியாதனிங்கள் ஐயா தம்பியை யார் வேலைக்குச் சிபார்சு செய்யப் போகிறார்கள்??

3
போன கிழமை நான் ஐயா வீட்டிற்குப் போன போது, அவர் கூறியதில் இருந்து தம்பிக்கு மூன்றாம் தர பிரின்சிப்பல் உத்தியோகம் என்ன; வட்டாரக் கல்வி இன்ஸ்பெக்றர் பதவியே வரும் வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. எனக்குச் சந்தோஷம் தான். தம்பி, நான் சைக்கிள் பழக்கிய பையன் தானே மூன்று மாதங் களுக்கும், போன கிழமைக்கும் இடையே கந்தப் பிள்ளை ஐயா ஊரோடு ஒத்து நடக்கப் பழகியது மட்டுமல்ல, ஊருக்கே முற்போக்குப் பாதையைக் காட்டும் அளவுக்கு முன்னேறி விட்டார்!
சில பிள்ளைகள் கோவிலுக்குள் நுழைந்தார்கள். கந்தப்பிள்ளை அத்தநாயக்காவுக்குக் கூறினார் - சசேர் இந்தப் பிள்ளைகளுக்குக் கல்வியும் ஒரு பிரச்சினை. எல்லோரையும் சமமாக மதிக்கத் தெரிந்த ஒருவர் இந்த வட்டாரத்துக்குக் கல்வி இன்ஸ்பெக்றராக வந்தால்தான், இந்தப் பிள்ளைகளின் கல்வி நிலை திருத்தமடையும்”* திருமதி அத்தநாயக்காவின் கையிலிருந்து நழுவி விழுந்த கைக்குட்டையை, தம்பி செல்வ விநாயமூர்த்தி குனிந்து எடுத்துக் கொடுத்தார்.
2
மதிய உணவை அத்தநாயக்கா குடும்பம், கந்தப் பிள்ளை ஐயா வீட்டிலேயே வைக்க ஏற்பாடு. அந்தச் சாப்பாட்டு விருந்தில், எங்களுர் அரசியல்வாதி ஒருவர் கல்வி அதிகாரி, பொலீஸ் இன்ஸ்பெக்றர் ஆகியோருடன் அடியேனும் கலந்து கொள்ள அழைப்புக் கிடைத்தது.
கந்தப் பிள்ளை ஐயாவின் வீடும் வளவும் கோவிலில்
இருந்து ஒரு கட்டை தூரத்தில் இருந்தன. உள்ளூர் அரசியல்வாதி கொண்டுவந்த காரில் அத்தநாயக்கா

Page 18
4
தம்பதிகளும், கல்வி அதிகாரியும், தம்பி செல்வவிநாயக மூர்த்தியும் ஏறினர். பொலீஸ் இன்ஸ்பெக்றர் மோட்டார் சைக்கிளில் வந்தார். ஐயாவின் காரில் அத்தநாயக்காவின் இரு பெண்பிள்ளைகள் ஏறினர். ஐயா முன் சீற்றில் உட்கார்ந்தார். நான் காரை ஒட்டினேன். போகும் வழியில், குளத்தங்கரைப் பிள்ளையார் கோவிலில் ஒரு சிறு கூட்டம் நின்றது. அன்று அந்தியில் அங்கே கயமுக அசுர சம்கார திருவிழா. அசுரன் தனது மூன்று தலைகளுடன் மாறி மாறி வந்து பிள்ளையாரை எதிர்க்க, சுவாமி அவன் தலைகளை ஒவ்வொன்றாகத் துண்டிக்கும் நிகழ்ச்சி நடக்கும். கோவில் வாசலில் மரத்திலான ஒரு பெரிய அசுர உருவம் வைக்கப்பட்டு, அசுரனின் வெவ்வேறு தலைகளை அந்த உருவத்தோடு பூட்டியும் கழற்றியும் பார்த்தனர். சிறு பிள்ளைகள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். இதைக் கண்டதும் அத்தநாயக்கா, குமாரிகள் அங்கிள், ஸ்டொப் ஸ்டொப்" என்றனர். நான் காரை நிறுத்தினேன். அப்போது அசுரனின் யானை முகத்தைக் கழற்றி, சிங்க முகத்தைப் பூட்டி நாலா பக்கமும் ஆட்டிப் பார்த்தார் ஒருவர். கூடி நின்ற பிள்ளைகள் ஆர்ப்பரித்தனர்.
காரில் இருந்தபடியே கயமுக அசுரனைச் சுவாமி சம்காரம் செய்யும் கதையைச் சுருக்கமாகக் கூறி, இந்த விழா அந்தியில் நடக்கும் என்று கூறினார் கந்தப்பிள்ளை BitLin - அப்படிக் கூறும்போது அவர் தலையும், தற்காலிகமாகப் பூட்டப்பட்டதுபோல, அப்படியும் இப்படியும் ஆடியது.
குமாரிகளில் இளையவள் கொஞ்சம் துடுக்கானவள். அவள் காரின் கதவைத் திறந்து "அந்தத் தலைகளைக் கையில் எடுத்துப் பார்க்கப் போகிறேன்” என்று விறுவிறு எனக் கோவிலை நோக்கி நடந்தாள்.

5
*கம் ஹியர், குசுமா” என்று ஒரு தகப்பனுக்குரிய
கண்டிப்புடன் அழைத்தார் கந்தப்பிள்ளை.
அவள் திரும்பி வந்து காருக்குள் ஏறினாள். எனது விலாவில் ஐயா முழுங்கையால் இடிக்க, நான் காரை மறுபடியும் செலுத்தினேன்.
ஐயோ அங்கிள், அதைப் பார்க்கப் போகிறோம்ச என்றாள் குசுமா. &
*அங்கிள், அந்தியில் கொழும்புக்கு றயில் எடுப்பதற்கு முன் இந்த விழாவை நாம் பார்க்க முடியுமா?’ என்று அமைதியாகக் கேட்டாள் மற்றவள்.
“சீ" என்றார் கந்தப்பிள்ளை. *எங்கள் கோவிலில் இதுமாதிரி சூரன் போர் நடக்கும்போது உங்களை அழைக்கிறேன், வந்து பாருங்கள்’ என்றார் ஐயா.
சஏன் அங்கிள், இதையே பார்க்கலாமே? என்று “G3ás ”LTGT (g s Lorr. இல்லை பிள்ளைகள், நாங்கள் இந்தக் கோவிலுக்குப் போவதில்லை’ என்றார் கந்தப் பிள்ளை ஐயா.
அப்படி அவர் கூறும்போது seyan (560L-ULU தலை ஆடாமல் அசையாமல் நிரந்தரமாகப் பூட்டப்பட்டது போல் இருந்தது.
- தினகரன் வார மஞ்சரி 9-5-76

Page 19
கண்களுக்கு அப்பால்.
அப்பாவுக்குத் தேநீர்க் கோப்பையைக் கொடுத்து விட்டு, என் முன் வந்து நின்று கலகல என்று சிரித்தாள் பாக்கியம். ஐயருக்குத் தெரியாது. கோயில் ஆதிமூலத். திற்குள் புகுந்து சுவாமியைத் தொட்டுவிட்டு வந்த கள்ளக் குறும்பு அவள் முகத்தில் விளையாடியது.
“u ዞፓ é8ዘuth፡ அப்பா உன்னைக் கண்டுகொள்ள வில்லையா? என்று கேட்டேன், மோதகம் ஒன்றிற்குள் உள்ளுடலை வைத்தவாறு.
*இல்லை அக்கா.”
கோப்பையைத் தட்டாமல் கொட்டாமல் எடுத்திட்
TT rr?”
அவர் கையைப் பிடித்து, கையிலேயே கோப்பையைக் கொடுத்திட்டேன்" என்றவாறு எனக்கு முன்னால் தரையில் உட்கார்ந்தாள் பாக்கியம். பேச்சு மூச்சு இல்லை" என்று சொல்லிச் சிரித்தாள். நானும் சிரித்தேன். சிரிக்கும். விஷயமா இது? எவ்வளவு துணிகரமான, பயங்கரமான செயலைச் செய்துவிட்டோம்!
*உனக்குப் பிள்ளை, இப்ப ஒன்றிலும் அக்கறை இல்லை. * என்று தொடங்கி, அப்பா என்னைக் கண்டித்துப் பேசுவது கேட்டது. அவர் முன் வராந்தாவிலே சாய்வு நாற்காலியில் இருந்தார். தேநீர்க் கோப்பையை

17
பாக்கியம், வீட்டு ஹாலுக்குள்ளால் சென்று. அவருக்கு (அதிலும் அவர் கையையே பிடித்து) கொடுப்பாள் என்று அவர் கனவிலும் கண்டிருக்க மாட்டார். தப்பித் தவறி அது அவருக்குத் தெரிந்திருந்தால், கோப்பை இதுவரை போர்த் தேங்காயா கிச் சிதறியிருக்கும். தேநீர்க் கோப்பையைக் கையிலே தந்தது நான்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.
தேநீர் கொண்டு வருமாறு கடந்த அரைமணி நேர மாகச் சத்தம் போட்டார். நான் குசினியில் மோதகம் பிடிக்கும் வேலையாக இருந்ததால் சுணங்கிவிட்டது அப்பா எப்போதும் ஒரு அவசரக்காரன். அவர் ஆனை யிடும் எந்த வேலையையும் சில நிமிடங்களில் நான் செய்திாக வேண்டும். ஒரு வருடமாக அவருடைய இரண்டு கண்களிலும் பார்வை முற்றாக மறைந்துவிட்டது. இப்போதெல்லாம் அவருடைய அவசரமும், ஆணைகளும் அதிகரித்து வருகின்றன; சில வேளைகளில் தாங்கமுடியாத ஆக்கினையாக இருக்கும்.
அப்பாவின் கண்களில் சத்திர ஒஇச் செய்து, இறந்த ஒருவரின் கண் சவ்வைப் பொருத்தி அவருடைய பார்வையை மீட்க முடியும் என்பது யாழ்ப்பான ஆஸ்பத்திரிக் கண் நிபுணரின் அபிப்பிராயம். கொழும்பில் இருக்கும் எனது பெரியண்ணா இதைப் பற்றி கண்தான சங்கத்துடனும், கொழும்பு பெரியாஸ்பத்திரியுடனும் தொடர்பு கொண்டிருக்கிறார். அதே வேளையில், யாழ்ப்பாண டாக்டர் ஆப்ரேஷனை இங்கேயே செய்ய முடியும் என்றும், கண்களைத் தானம் செய்த ஒருவரின் கண்கள் கிடைக்கும் வரை காத்திருக்கும்படியும் சின்னண்ணாவிடம் கூறியிருந்தார்.
கின்னண்ணா யாழ்ப்பாணக் கச்சேரியில் és LDIT TIT6ör உத்தியோகம் பார்த்தார். எங்கள் கிராமத்திலிருந்து laid

Page 20
8
மூலம் காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பினார். அவர் வீடு வந்து சேர்ந்ததும், தம்பி, பேப்பர் கொண்டு வந்தியா? என்ன புதினம்?" என்று கேட் பார் அப்பா. அதன் அர்த்தம் * செய்திகளைப் படித்துக் காட்டு” என்பது தான். சின்னண்ணா வீடு வந்த பின்பு நான் அப்பாவுக்குச் செய்ய வேண்டிய குற்றேவல்கள் குறையும். விளக்கு வைக்கும் நேரமாக எங்களுக்கு தொட் டாட்டு வேலை செய்யும் மாணிக்கனும், தனது சொந்த வேலைகளை முடித்துவிட்டு வருவான் “மாணிக்கன், என்ன புதினம்?” என்று அவனையும் கேட்பார் அப்பா. வானொலி யிலும், பத்திரிகைகளிலும் வராத, வரமுடியாத அந்த ரங்கச் செய்திகளைக் கோப்பரேஷன் கள்ளுக் கடைகளில் சேகரித்து வருவான் மாணிக்கன். அது மட்டுமா? தான் சீவப் போகும் வீடுகளின் பனைகளிலும் தென்னைகளிலும் உச்சியில் இருந்தவாறு, எங்கள் கிராமத்தைக் குருவிப் பார்வை பார்த்து வரும் உள்ளூர் செய்தி நிருபரும் மாணிக்கன் தான். எங்கள் வீட்டு வாசற்படியில் தனது சால்வையைத் தட்டிப் போட்டு விட்டு இருந்தபடியே மாணிக்கன் புதினங்களைக் கூறும் போது அப்பாவுக்குப் பார்வை வந்தது போல் இருக்கும்
மாணிக்கனின் மகள் தான் பாக்கியம். அப்பாவுக்கு மாணிக்கன் வாசற்படி உறவு. எனக்குப் பாக்கியம் வெளி வளவு உறவில் இருந்து, அப்பாவின் கண் பார்வை மங்க மங்க, படிப்படியாக முன்னேறி, இப்போது உள் வீட்டுப் பிள்ளையாகி விட்டாள். ஆனல் வீட்டின் முன் வராந்தா வுக்கு ஆகக்கூடிய தூரத்தில் இருந்த குசினியில்தான் பெரும்பாலும் என்னுடன் இருப்பாள். பாக்கியம் எனக்கு சமையல் வேலைகளில் கைகொடுக்கும் விஷயம் மட்டும் அப்பாவுக்குத் தெரிந்திருந்தால் அவருக்கு காலரா பேதி வந்திருக்கும்!

卫9
ஒரு நாள் ஹாலில் என்னுடன் இருக்கும் போது சற்று உரக்கப் பேசி விட்டாள் பாக்கியம், 'ஆர் பிள்ளை அது? என்று கேட்டார் அப்பா.
*ரேடியோ” என்றேன் நான்.
D. Gior Gao LDu 6ão ரேடியோவும் அந்த நேரம் பேசிக் கொண்டு தான் இருந்தது. அன்று அந்தியில் சின்னண்ணா வந்ததும், அப்பாவை ஏமாற்றிய ரேடியோ நிகழ்ச்சியைக் கூறிச் சிரித்தேன்.
* அப்பா போல் இந்த நாட்டுக் கிழடுகளுக்கெல் லாம் கண் கெட்டுப் போனால் தான் இந்தச் சாதிக் கொடுமையை ஒருவாறு சமாளிக்கலாம்." என்று தனது சீர்திருத்தப் பேச்சு ஒன்றை ஆரம்பித்தார் சின்னண்ணா உள்ளத்தின் வெறுப்பு உணர்ச்சி, அவர் முகத் தசைகளைத் திரட்டிச் சிறு கட்டிகளாக்கியது.
"அப்படிச் சொல்லாதே அண்ணா" என்று சமாதானம் கூறினேன் நான். சின்னண்ணா அப்பாவை மனமார நேசித் தாலும், அவரின் சாதி வைராக்கியத்தை முற்ருக வெறுத் தார். இப்படிக் கோபம் வந்தால் கண்டவாறு திட்டுவார். இந்தச் சபிப்புக்கு அம்மா கூட விதி விலக்கு அல்ல.
மூன்று வருடங்களுக்கு முன், ஒரு புரட்டாசிச் சனிக் கிழமை, அப்பாவுக்கு அனுசரணாயாக அம்மாவும் ஏதோ பேசினா. ஒ! ஞாபகம் இருக்கிறது. அன்றும் பாக்கியம் வந்திருந்தாள். அவளுக்கு அப்போது பத்து வயது இருக் கும். வெளியே மழை தூறியதால், குசினி வராந்தாவில் இருத்திச் சாப்பாடு போட்டேன். அப்போது வீட்டிற்கு வந்த அப்பா, அம்மாவிடம் கேட்டார். “பெட்டைக்குச் சாப்பாடு போட வேறு இடம் இல்லையா?" என்று. அம்மா என் முகத்தைப் பார்த்தா. மழை" என்று ஒரு சொல்லிலே விளக்கம் கூறித் தடுமாறினேன் நான்.பாக்கியம் தானாகவே

Page 21
2莎
எழுந்து விட்டாள். உண்ட குறையுடன் வாழை இலையைக் கோவிக்கொண்டு வெளி வாசலில் போய் நின்றாள்.
* வெளியே போ, நாயே" என்று உறுமியபடி அப்பா தனது அறைக்குச் சென்ருர். அங்கிருந்து சொன்னார்: *மழை என்றால் கண்டசாதிகளைக் கட்டிலிலையும் படுக்க விடுவீர்கள் போலை, அந்தப் பேச்சில் கடுமை இருக்க, வில்லை. அருவருப்பான கிண்டல் தான் தொனித்தது.
*உண்மை தானே” என்று அப்பாவை ஆமோதித்தா அம்மா, "நீ செய்தது பிழை.”
எது உண்மை? எது அம்மா பிழை?" என்று அம்மா
வுக்குச் சவால் விட்டார், குசினியில் சாப்பிட்டுக் கொண் டிருந்த சின்னண்ணா. தொடர்ந்து அம்மாவுக்கும் சின் னண்ணாவுக்கும் இடையே வாக்கு வாதம் குசுகுசு குரலில்,
ஆனால் காரசாரமாக நடந்தது. முடிவில் சின்னண்ணா *உங்களுடைய சந்ததி செத்து ஒழிந்த பிறகு தான், இங்கே
நீதி நியாயத்திற்கு விமோசனம் உண்டு" என்று இறினார்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஆறு மாதத்திற்குள், அம்மா டைபாயிட் வந்து இறந்து போனா. ஒருவர் திட்டியதால் இன்னொருவருக்கு டைபாயிட் வருவதில்லைத்தான். என்றாலும் அன்று சாவை இழுத்துப் பேசியதற்காக அண்ணா இப்போதும் மனம் கலங்குகிறார்.
அம்மாவின் சாவிட்டிற்கு கொழும்பில் இருந்து வந்த அண்ணி, எங்களுடன் மூன்று மாதங்கள் தங்கி விட்டுத் தனது வீட்டிற்குப் போய்விட்டாள். குடும்ப வேலைகள் என் கைகளிலேயே விடப்பட்டன.
இந்த நிலையில், முன்னம் அவ்வப்போது மட்டுமே வந்துபோன பாக்கியத்தை மாணிக்கன் எனக்குத் துணைக்காக தினமும் அனுப்பினான். அவள் வந்து வெளி வேலைகளை-வளவில் தேங்காய்களைப் பொறுக்குவது,

2
அவற்றை உரிப்பது, விறகு வெட்டுவது, கிடுகு முடைவது -இவற்றைச் செய்வாள். வேலைகள் முடிந்ததும் பின்புற வாசற் படியில் இருந்தவாறு பேசிக் கொண்டிருப்பாள். தான் * ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ"வை குசினிக்குள் கொண்டுவந்து வைத்திருப்பேன். அதிலிருந்து “உங்கள் விருப்பம், எங்கள் விருப்பம், நேயர் விருப்பம்." என்று வெளிவரும் சினிமாப் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்போம். அவள் இரண்டொரு சினிமாக்கள்தான் பார்த்திருக்கிறாள். ஆனால், இலங்கைக்கு வந்த எல்லாத் தமிழ்ப் படங்களின் கதைகளும், அவற்றின் பாடல்களும் அவளுக்குத் தெரியும். மாணிக்கன் அப்பாவுக்கு கிராமத்தின் செய்தி நிருபர் என்றால், பாக்கியம் எனக்குச் சினிமாப் பகுதித் தேனி. கமலஹாசனைப் பேட்டி கண்டவள் போல் ரசனையாகப் பேசுவாள்.
காலப்போக்கில் அப்பாவுக்குத் தெரியாமல் வாசற் படியில் இருந்தவாறே, அவள் வெங்காயம் உரித்தும், தேங்காய் துருவியும், காய்கறிகள் துண்டாக்கியும் எனக்கு உதவினாள். அதன் பின்பு, அப்பாவுக்குப் பார்த்தாலும் காணமுடியாத நிலை வந்ததும் மெளனமாக குசினிக் குள்ளே ஹாலிலே, எனது அறையிலே, சாமி அறையிலே. அவள் என் இணை பிரியாத தோழியாகி விட்டாள்.
米 sk
கடந்த மூன்று நாட்களாகச் சோனாமாரியாகப் பெய்தி மழை இப்போது கொஞ்சம் ஓய்ந்து இருந்தது. தூரத்திலே மாணிக்கன் ஆட்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து கூக் குரலும், ஒப்பாரியும் கேட்டது பாக்கியம் வரும்போது விபரம் தெரியும் என்று இருந்தேன். ஆனால் பக்கத்து வளவுக் குஞ்சியாச்சி, சில காலம் எங்களுடன் பேசாமல் பறையாமல் கோபம் சாதித்தவ, என்னை அழைத்து

Page 22
22
வேலிக்கு மேலால் சொன்ன செய்தி கேட்டதும் நான் இடி விழுந்தவள் போலானேன். குசினுக்குள் ஒடிப்போய் அழுது கொட்டினேன். அப்பா,மாணிக்கன் செத்துப்போனாராம்" என்று குளறி அழுதேன். காலையிலே சீவலுக்குப் போன மாணிக்கன், ஒரு தென்னையிலிருந்து வழுக்கி விழுந்து, யாழ்ப்பான ஆஸ்பத்திரிக்கு வாடகைக் காரில் கொண்டு போகப்பட்டு அங்கே இறந்து போனான். பிரேதம் இன்னும் அவர்கள் வீட்டிற்கு வரவில்லை.
நாம் நினைக்காத எத்தனையோ நிகழ்ச்சிகள் எமது வாழ்வில் நடைபெறுகின்றன. மாணிக்கனின் கண்கள் அப்பாவுக்குப் பொருத்தப்படப் போகும் நிகழ்ச்சியும் அதில் ஒன்றோ?
நான்கு வருடங்களுக்கு முன் வெசாக் பெருநாள் அன்று, கண்தான இயக்கத்தைச் சேர்ந்த சில பெளத்தர்கள் எமது கிராமத்திற்கு வந்திருந்தனர். குருட்டுக்கு ஒளிதர தமது கண்களைத் தானம் செய்ய விரும்புவோரின் பெயர்களை அவர்கள் சேகரித்தனர்; விருப்பத்தை கையெழுத்து மூலம் அல்லது வலது கைப் பெருவிரல் அடையாளம் மூலம் பெற்றுக் கொண்டனர். கண்தானம் கொடுத்தவர்களில் மாணிக்கனும் ஒருவன்.
கண்தான இயக்கத்தினருடன், தாழ்த்தப்பட்ட மக்களின் உள்ளூர் அரசியல் தலைவர் ஒருவரும் வந்திருந்ததால், மாணிக்கன் வாழும் பகுதியில் முக்கால்வாசிப்பேர் தெரிந்தோ, தெரியாமலோ, தாமாகவோ, வற்புறுத் தலாலோ கண்தானம் செய்தனர். மற்றப் பகுதிகளில் ஒரு சிலரே இறந்தபின் தமது கண்களைக் கொடுக்கச் சம்மதித் தினர். எனக்கு நல்ல ஞாபகம். எங்கள் வீட்டிற்குக் கண் தானக்குழு வந்த போது, நாங்கள் ஏற்கனவே கொழும்பில் கண்டொனேஷன் செய்து விட்டோம்” என்று அப்பா பொய் சொன்னார். அவர்கள் போன பின் அப்பா அம்மாவுக்குக்

23
கூறினார் செத்தபின் எரிந்து சாம்பலாகப் போகும் கண் களை மற்றவர்களுக்குக் கொடுப்பது புண்ணியதானம்தான்" ஆனால் என்னுடைய கண்களைக் கண்ட கண்ட சாதிக் கெல்லாம் ஒட்டுவதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்!”. மாணிக்கனின் கண்கள் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் இருந்து கொழும்புக்குப் போய் அங்கிருந்து இலங்கையின் நல்லுறவுச் சின்னமாக வேறு சில கண்களுடன் பாகிஸ் தானுக்குப் பறக்க இருந்தது. அப்படி நடந்திருந்தால் இலங்கையிலும், கராச்சியிலும் பத்திரிகைகளில் ‘இந்து தொழிலாளியின் கண்களால் முஸ்லிம் லட்சாதிபதி பார்க் கிறார்’ என்றோ பாகிஸ்தானுக்கு பூரீலங்காவின் கண்கள்" என்றோ, வேறு கண்கவர் தலைப்புகளுடனோ செய்திகள் வந்திருக்கும். ஆனால் சின்னண்ணாவின் தலையீட்டாலும், யாழ்ப்பாண கண் டாக்டரின் அவசர சிபார்சினாலும் கண் சிங்கம் மாணிக்கனின் கண்களை அப்பாவுக்குத் தானம் தந்தது.
இந்த விஷயம் பத்திரிகைகளில் வராதவாறு தடுப்பதற்கு சின்னண்ணா பெரும் முயற்சி எடுத்தார். அப்படியிருந்தும், கொழும்பில் அச்சாகும் ஒரு சிங்களப் பத்திரிகையில் "உயர் சாதிக்காரனுக்கு ஹரிஜன் கண்கள்’ என்ற பீடிகையுடன் ஒரு செய்தி வந்ததாகப் பெரியண்ணா எழுதினார். தமிழ்ப் பத்திரிகைகளிலும் “யாழ் ஆஸ்பத்திரியில் கண் ஒட்டு சத்திர சிகிச்சை” என்ற உருவத்தில் பேரும் ஊரும் காட்டாத ஆபத்தில்லாத செய்திகள் வரத்தான் செய்தன. ஆகவே அப்பா உண்மையை அறியச் சந்தர்ப்பம் இல்லை.
அப்பா ஆஸ்பத்திரியில் கண்சிகிச்சை பெறும் போது சின்னண்ணா இரா உணவு அருந்தியவாறு எனக்குக்
கூறினார் ‘தங்கச்சி இதைப்பற்றி எனக்கு இப்போது இரண்டாம் அபிப்பிராயம் உண்டு.”
* என்னண்ணா?"

Page 23
2会
நாம் எதற்காக அப்பாவிடமிருந்து உண்மையை மறைக்கவேண்டும்? வாழ் நாள் முழுவதும் சாதிபேதம் காட்டிய அவர், இனியாவது திருந்துவதற்கு இது நல்ல சந்தர்ப்பம். சின்னண்ணா ஒரு குட்டி விரிவுரை யாற்றினார். வேண்டாம் அண்ணா வேண்டாம்!” என்று அன்பாக வும், பணிவாகவும் கெஞ்சினேன் நான். அவர் கையலம்பும் போது அண்ணா, தான் பார்ப்பது மாணிக்கனின் கண் களால் என்று அப்பாவுக்குத் தெரிந்தால் அவர் அந்தக் கண் களையே பிடிங்கி விடுவார். ஒரு நாளும் சொல்லாதே என்று எங்கள் அம்மா ஆணையாகச் சத்தியம் கேட்டுக் கொண்டேன். அப்பா புரணகுணமடைந்து எங்கள் வீட்டிற்கு வந்த அன்றுதான் பாக்கியமும் பழையபடி வந்தாள். சாவீட்டுத் துடக்கு நேற்றுத் தான் கழிந்தது. ஆனால் பின்புற வாசற் படியிலேயே இருந்துவிட்டாள். கெட்டிக்காரி அப்பாவுக்கு இப்போது கண்பார்வை திரும்பியதால் இனிமேல் அவள் நிரந்தரமான துடக்கை” அனுசரிக்க வேண்டும் அல்லவா? அவள் தொடர்ந்து வெளி வேலைகளை மட்டும் செய்வாள். *பாக்கியம் மாடு அழுகிறது. தவிடுகரைத்து வை” என்று கூறிவிட்டு அறையில் இருந்த அப்பாவுக்கு தேநீர் கொண்டு போய்க் கொடுத்தேன். நான் குசினிக்குத் திரும்பிய போது, தேநீர்க் கோப்பை வீசப்பட்டு வராந்தாவில் விழுந்து சிதறியது. "அப்பா!' என்று அலறியவாறு அவர் அறைக்கு ஓடினேன் நான் - அங்கே அப்பா நெருப்பை விழுங்கியவர் போல் துடிதுடித் தார். *பாக்கியத்தை கிணற்றில் தண்ணீர் அள்ள ஆர் சொன்னது?. எவ்வளவு நாளாய் இது நடக்குது?. கேள்விகளைக் கக்கினார் அப்பா.

25
*பாக்கியம் கிணற்றடிக்குப் போவதில்லை” என்று வாயில் வந்ததைக் கூறிவிட்டேன். அவள் மாட்டுக்குக் கொடுப் பதற்கு மறந்து போய் கிணற்றில் நீர் எடுத்திருப்பாள் என்பது ஞாபகத்திற்கு வரவில்லை. அப்பாவின் அறை ஜன்னல் வழியாக எங்கள் கிணற்றடியைப் பார்க்கலாம் என்பதையும் மறந்து போனேன்.
"ஏன்டி, பொய் பேசுகிறாய்" என்று என் முகத்தில் வார்த்தைகளை உமிழ்ந்தார் அப்பா. கண்கள் கோபத் தால் சிவந்து விட்டன. "நான் என் கண்களாலேயே கண்டேன்’ என்று கதறினார்.
இவற்றை எல்லாம் வராந்தாவில் இருந்து கேட்டுக் கொண் டிருந்த சின்னண்ணா, உணர்ச்சிவசப்பட்டு "அப்பா, அந்தப் பிள்ளை கிணற்றில் நீர் அள்ளுவதை யார் கண் களால் பார்த்தீர்கள்?’ என்று உரக்கக் கேட்டவாறு அறைக்குள் வந்தார்.
"ஐயோ! அம்மாவின் ஆணையாகக் கெஞ்சிக் கேட்கிறேன்"
ஒன்றும் போசாதே!" என்று சின்னண்ணாவை வழிமறித்து, அனைத்து வெளியே தள்ளினேன் நான். ‘அண்ணா இது கண்களுக்கு அப்பாற் பட்ட விஷயம்.”
- வீரகேசரி 20-2-77

Page 24
அடிவளவு அன்னவன்னா
இருபதுவருடத்து ஞாபகம். நான் நல்லூரில் அவர்கள் வீட்டிற்குப் போகும் வேளைகளில், தங்கம்மா குஞ்சியாச்சி எனக்குச் சொல்லுவா:
தம்பி, ராணிக்கு நீயும் ஒன்றைப் பாரன், அவளுக்கும் வயசு இருபத்து மூண்டாய்ப் போச்சு.” * கவுண்மேந்து உத்தியோகமாய்ப் பார்." "நாங்கள் புளங்கத்தக்க பகுதியாய்ப் பார்.”
தங்கம்மா, எனது அம்மாவின் தூரத்து உறவினள்.
குஞ்சியாச்சி என்று நான் பாராட்டப் பழகி விட்டேன்; உண்ம்ையில் ஒருவித மாமியாகவோ, மச்சாளாகவோ
இருக்கலாம். ‘குஞ்சியப்பு கந்தையர் சிலகாலமாக ஒரு போக்கு. ஒன்றிலும் அக்கறையில்லை. புல்லானாலும் புருஷன் என்ற கெளரவத்துடன் மட்டும் அந்த வீட்டில் புழங்கிவந்தார். அவர்களுக்கு வேறு பிள்ளைகள் இல்லை.
அவர்களுடைய மாதாந்த, வருடாந்த வருமானத்தைப் பற்றிய விபரம் எனக்குத் தெரியாது.
*வீடும் வளவும் என்டை நகை நட்டுக்களும் அவளுக்குத் தான்” என்பா தங்கம்மா குஞ்சியாச்சி.
இதிலிருந்து பணமாக ரொக்கம் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்போலும். வீடும், வெறும் மண்வீடு. வளவு மட்டும் மூன்று பரப்பு: அங்கே ஒரு விசாலமான அம்பலவி மாமரம், கள்ளுக்குக் கொடுக்கப் பட்ட சில தென்னைகள், மற்றும்

27
அன்னவன்னா, மாதுளை, கொய்யா...அடிவளவு செடி களாக சோலையாக இருக்கும். அவ்விடத்தில் இருந்து ராணியுடனும், குஞ்சியாச்சியுடனும் பேசுவது குசாலாக இருக்கும். அப்போது கொய்யா இருந்தால் கொய்யா, அன்னவன்னா இருந்தால் அன்னவன்னா, அவை இல்லா விடில் புழுக்கொடியல் சாப்பிடுவேன். இந்தப் பொழுது போக்கு எனக்கு விருப்பமான ஒன்றாகும். நான் லீவில் ஊருக்குப் போகும் வேளைகளில் ஒரு அந்தியையாவது ராணி வீட்டில் கழிப்பேன். நான் அவர்களுக்கு அவ்வ போது கொடுக்கும் தேயிலைப் பக்கட்களை மிக விருப்பத் துடன் வாங்குவார்கள்.
*அண்ணையிண்டை கருணையாலை நல்ல தேத்தண்ணி குடிக்கிறோம்" என்பாள் ராணி. என்னை வழியனுப்பும் போது குஞ்சியாச்சிகூறுவா: "நீதான் எங்களை மறக்காமல் இருக்கிறாய்.இவள் ராணிக்குத்தான் ஒண்டைப் பார் 5ibu9 o
எனது வீட்டிலுள்ள மற்றவர்கள் தங்கம்மா குஞ்சியாச்சி வீட்டிற்கு ஒழுங்காகப் போவதில்லை அம்மா, எப்போ தாவது வாதப் பரியாரியார் வீட்டிற்குப் போகும்போது 97 குஞ்சியாச்சியையும் எட்டிப் பார்ப்பா அதுவும் கந்தையர் இல்லாத வேளைகளில் தான். அம்மாவுக்கு கந்தையரின் நையாண்டிப் பேச்சுக்களை முன்னமே பிடிட் பதில் லல. ஆனால் சமீபகாலமாக, எனது அக்காவின் கலியான” வீட்டிற்குப் பின்பு எங்கள் குடும்பத்தோடு அவர் நன்றாகப் பகைத்துவிட்டார். அக்கா, தான் படிப்பிக்கும் பாட. சாலையில் ஒரு சக ஆசிரியரை விரும்பி, சம்பந்தப்பட்ட குடும்பங்களின் ஆசீர்வாதத்துடன் கலியாணம் செய்தவள். அப்படி இருந்தும், அக்காவை கந்தையர் “ஓடிப்போனவள்” என்றும், மைத்துனர் குடும்பத்தை “குறைந்த பகுதி” என்றும் குறிப்பிட்டு நொட்டை சொன்னதாக நம்பிக்கை. யான செய்திகள் கிடைத்தன. அதன் பின்பு அம்மாவுக்கு

Page 25
2&
கந்தையரைக் கண்ணிலும் காட்டப்படாது. ஆனாலும் நான் குஞ்சியாச்சி வீட்டிற்குப் போய் வருவதை யாரும் தடுப்பதில்லை.
நான் நாவலப்பிட்டி றயில்வே ஸ்டேசனில் கிளார்க் வேலை பார்த்தேன். கதிரேசன் கல்லூரியில் ஆசிரியராக இருந்த சிவலிங்கம் என்னுடைய நண்பன் நாவலப்பிட்டி இந்து மாமன்றத்தில் ஏற்பட்ட தொடர்பு. சிவலிங்கத்தின் தகப்பன் இறந்து போனார். தாய், தனது மகள் குடும்பத் துடன் எஸ்டேட்டில் இருந்தா. சிவலிங்கத்திற்கு யாழ்ப்பாணத்தோடு தொடர்பு ஏற்படுத்த ஒரு ஆசை. இதை நான் பல தட வைகளில் அவதானித்திருக்கிறேன். ஆனால் அதற்குக் காரணம் மொழியா, சமயமா. அரசியலா, நண்பர்களின் தொடர்பா என்று நான் ஆராய்ச்சி செய்யவிரும்பவில்லை. இப்போது அந்த விருப்பத்தைச் சாதகமாக்கி 'எனக்கு தங்கச்சி முறையான ஒரு பெண் இருக்கிறன். வடிவான பிள்ளை. நல்லூரில் மூன்று பரப்புள்ள காணி அவர்களுக்கு இருக்கிறது” என்று ஒரு அறிமுகம் செய்து வைத்தேன்.
சிவலிங்கத்திற்கு இன்னும் இரண்டு ஆசைகள். ஒன்று, தனது தாயை யாழ்ப்பாணம் கொண்டுபோய் ஊரும் கோவில்களும் காட்ட வேண்டும் என்பது, அதுநிறைவேற வில்லை. சில மாதங்களில் தாய் இறந்துபோனா, மற்றது, தான் தொடர்ந்து படித்து ஒரு பட்டதாரியாக வேண்டும் என்பது. இதைக் காலம் நிறைவேற்றும் என்பது எனது நம்பிக்கை.
ஒருமுறை, நான் குஞ்சியாச்சி வீட்டிற்குப் போன போது ஒரு கலியாணத்தரகர் அங்கே இருந்தார்.
**தம்பி, நீ வந்தது நல்லதாய்ப் போச்சு” என்றா
குஞ்சியாச்சி.

29
தரகரோடு, அன்று பிற்பகல் புன்னாலைக் கட்டுவனுக்குப் போனேன். தரகு பேசப்படும் பையன் மானிப்பாய் தபால் கந்தோரில் பீயோன் வேலை பார்த்தான், அவனுடைய தகப்பன் ‘கல்வீடு, வளவு, நகை, காசு இருபதினாயி, டொனேஷன் ஐயாயிரம்” இப்படியாகச் சீதனம் கேட்டார். s
நான் திரும்பி குஞ்சியாச்சி வீட்டிற்குப் போகவில்லை. எனது வீட்டிற்குப்போய் அடுத்த நாள் நாவலப்பிட்டிக்குத் திரும்பினேன்.
சிலநாட்களில், தங்கராணியின் கையெழுத்தில், “இப்படிக்கு குஞ்சியாச்சி, க. தங்கம்மா’ என்று முற்றுப்பெற்ற gRCD5 கடிதம் வந்தது. அதில் நான் எதிர்பார்த்தபடி தரகனை ஏசி எழுதப்பட்டிருந்தது. அத்துடன் “நீ ஒன்றைப் பார்” என்ற வழக்கமான ஆணையும் எழுத்தில் இருந்தது.
அப்போது சிவலிங்கம் என்னுடன் இருந்தார். நான் அவருக்கு கடிதத்தின் விஷயத்தைக் கூறாது, எழுத்தைக் காட்டினேன். *இவள் தான் எனது தங்கை முறையான பெட்டை” என்றேன்.
அழகான எழுத்து” என்றார் சிவலிங்கம். "தலை எழுத்து எப்படியோ?” என்றவாறு கடிதத்தை மடித்து வைத்தேன். சிவலிங்கம் சிரித்தார்.
அன்று மனம் திறந்து பேசினோம். சிவலிங்கம் ராணியை மணக்கச் சம்மதம் தெரிவித்தார். 68சேர், நீங்கள் அழகென்று சொன்னா குணமான பிள்ளை என்று சொன்னா, சரி?” என்றார். அன்றே குஞ்சியாச்சிக்கு ஒரு. கடிதம் எழுதினேன். 'நல்ல பையன், வடிவான பையன், ஆசிரியர், சீதனக் கதையே பேசாதவன்” என்ற விபரங் களுடன் சிவலிங்கம் குடும்பத்தினருக்கு இலங்கைப் பிரசா உரிமை கிடைத்துவிட்டது. என்பதையும் நான் அறிவிக்கத்,

Page 26
3
தவறவில்லை, அத்துடன் சிவலிங்கம் அன்று எனக்குத் தந்த தேயிலைப் பக்கட்டையும் பார்சல் செய்து ராணிக்கு அனுப்பினேன். **அவரின் முதலாவது அன்புப் பரிசு” என்று ஏதோ ஒரு கேலிக் குறிப்பும் போட்டதாக ஞாபகம்.
நான் எழுதிய அந்தக் கடிதத்திற்கு எந்த விதமான மறு மொழியும், ஒரு மாதமாக வரவில்லை. சிவலிங்கம் என்னைக் காண்பதற்கு ஒழுங்காக வந்து போனார். நான் லீவில் நல்லூர் சென்று, குஞ்சியாச்சி வீட்டிற்குப் போனபோது குஞ்சியாச்சி அடுக்களையில் இருந்து வெகு நேரமாக வெளியே வரவில்லை. ராணி ஒரு அந்நியப் புன்னகையோடு என்னை வரவேற்றாள். ** என்டை பிள்ளையை உந்த இடமெல்லாம் கட்டிக் கொடுக்கப் போறாயா? நீ கலியாணம் பேசினது போதும்” என்று சொன்னார் கந்தையர். எனக்குத் திடீரென ஏற்பட்ட இந்த மனப்புண்ணுக்கு முதல் சிகிச்சை செய்வது போல், எனதுகையில் ஒரு அன்னவன்னாப் பழத்தை அமத்தினாள் ராணி. குஞ்சியாச்சி ஒரு கோப்பை கோப்பியுடன் வந்தா. *நீ எழுதினது வேண்டாம்,” என்றா. “இவ்வளவு நாளும் வைச்சிருந்திட்டு தோட்டப் பகுதிக்குத் தள்ளச் சொல்லுறியா?” நான் குஞ்சியப்பருடனும் குஞ்சியாச்சியுடனும் எதிர்த்து வாதாடவில்லை. எனக்கு மிகவும் மனக்கவலையாக இருந்தது. என் முன்னால் நின்ற ராணிக்கு மட்டும் சொன்னேன்: ‘'தங்கச்சி, முற்றத்து மல்லிகை சிலருக்கு மணப்பதில்லை. அதுபோல் ஒருவருடைய அடிவளவு அன்ன வன்னாவும் சிலருக்கு ருசிப்பதில்லைப் போலும்.” *போடி உள்ளே” என்றார் கந்தையர். நான் நண்பர் சிவலிங்கத்திற்கு ஒரு பொய் சொன்னேன். *நான் உனக்குச் சொன்ன அந்தப் பெட்டையை, அவர்

3
கள் உறவினர் ஒருவருக்குக் கட்டிக் கொடுக்கப் போறார் கள்” என்று கூறி சிவலிங்கம்-ராணி சம்பந்த சுபவிஷயத் திற்கு முற்றுப் புள்ளிவைத்தேன். பத்து வருடங்களுக்குப் பின்பு, நான் கூறிய அந்தப் பொய், உண்மை ஆயிற்று. குஞ்சியாச்சி கண்களை மூடியதும், கந்தையர் ராணியை இரண்டாந்தாரமாக ஒரு உறவினருக் குக் கட்டிவைத்தார். மாப்பிள்ளையின் முதல் தாரம், தலைப் பிரசவத்தின் போது வயிற்றுப் பிள்ளையோடு இறந்து போனாளாம். அடுத்த வருடம் கந்தையரும் *போய்” விட்டார். குஞ்சியாச்சியின் மரண வீட்டிற்கும் ராணியின் கலியாணத்திற்கும் நானும் அம்மாவும் போனோம். அதன் பின்பு ராணி வீட்டிற்கும் எனக்கும் தொடர்பு இல்லாமல் போயிற்று.
அடுத்த பத்துவருடங்களில், அவ்வபோது நான் ராணியைத் தெரு ஒழுங்கைகளில் சந்தித்திருக்கிறேன். அவளோடு வறுமை நெருங்கி வளர்வது போல் தோன்றியது. வயிற்றி லும், கைகளிலும் அவள் பிள்ளைகளைச் சுமப்பதையும் நான் அவதானித்திருக்கிறேன். வளவில் இரண்டு பரப்பு களை அந்தச் சோலைப்பகுதி உட்பட விற்று விட்டார் களாம். அந்த இடத்தில் ஒரு ஓய்வு பெற்ற ஒவசியர் மாடி வீடு ஒன்றைக் கட்டி எழுப்பியிருந்தார்.
நான் கொழும்புக்கு மாற்றலாகிப் போனதோடு சிவ லிங்கத் தின் தொடர்பும் அற்றுப் போயிற்று.
1977 தை மாதம் நான் ஒரு அலுவலாக யாழ்ப்பாணக் கச்சேரிக்குப் போன போது சமூக சேவைப் பகுதியில் ஒரு மலை நாட்டுத் தமிழரான சிவலிங்கம் சமூகசேவை உத்தியோகத்தராக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நான் சமூகசேவைப் பகுதிக்குப் போன போது அங்கே ஒரு நீண்ட கியூ வரிசை நின்றது. ஏழைகளுக்கு பாடப்

Page 27
2
புத்திகங்கள் இலவசமாக வழங்கப்படுவதாகவும், அதற் காகவே அந்த வசதியில்லாதோர் கியூ வரிசை என்பதையும் அறிந்தேன். அலுவலக யன்னல் சேலையைத் தாழ்த்தி எட்டிப் பார்த்தேன். எனது நண்பர் சிவலிங்கம்தான் இலவசப் பாடப்புத்தகங்களை விநியோகம் செய்தார்.
ராணி சில புத்தகங்களை அவரிடம் இருந்து பெற்றுக் க்ொண்டு கைகூப்பி வணங்கி விட்டு ஒரு எட்டு வயதுப் பையனுடன் வெளியே வந்தாள். அவள் என்னைக் காண வில்லை. சிவலிங்கம் என்னைக் கண்டு கொண்டார். எழுத்து வெளியே வந்து GT6õT 60 Gor அணைத்துக் கொண்டார்,
அவர் அழைப்பின் பேரில் அவர் வீட்டிற்கு அன்று இராப் போசனத்திற்குச் சென்றேன். சுண்டிக் குளியில் ஒரு வசதியான வாடகை வீட்டில் அவர் குடும்பத்துடன் இருந்தார். அவர் இப்போது பட்டதாரி மட்டுமல்ல, அரசாங்க நிர்வாக சேவையில் ஒரு உத்தியோகஸ்தர். ஆனால் கதிரேசன் கல்லூரியையும், நாவலப்பிட்டி இந்து மன்றத்தையும், பழைய நட்பையும் மறக்கவில்லை. ஆனால் ஏனோ ராணியின் பேச்சை அவர் எடுக்கவில்லை. ஆகவே நானும் பேசவில்லை. உண்மையில் ராணியின் பெயர் அவருக்கு இப்போது ஞாபகத்திலிருக்க நியாய, மில்லைத்தான்.
அவருடைய மனைவி தேநீர் கொண்டு வந்தாள். குசுமா, என்னுடைய பழைய நண்பர்” என்று என்னை அறிமுகப் படுத்தினார் சிவலிங்கம். நானும் அவளுடைய புன்னகையை வரவேற்று “யாழ்ப்பாணம் எப்படி? என்று கேட்டேன். “ஹொந்தாய்’ என்று சுருக்கமாகக் கூறிச் கிரித்தாள் திருமதி சிவலிங்கம்.

காப்பு
கைகளை மடக்கிக் காப்புக்களை நெஞ்சோடேயே வைத்துப் படுத்திருக்கிறாள் குழந்தை பூமணி. பக்கத்தில் ஒரு சாக்குக் கட்டிலில் இருந்தவாறே தினது மகளின் முகத்தில் வழியும் புன்னகைச் செல்வத்தை அனுபவிக் கிறான் சண்முகம். அவள் கனவு காண்கிறாளோ?
ஆமாம், பாதி நித்திரை தான். பிஞ்சு விரல்கள் மற்றக் கையின் காப்பைத் தடவிப் பார்த்துக் காவல் செப் கின்றன.
அடேயப்பா, அந்தக் காப்புக்களை வாங் எவ்வளவு அடம் பிடித்தாள் அவள். அவள் தமிழர் நாகரிகத்தின் குட்டிப் பெண்ணல்லவா? நி*ை ஆசை இல்லாரல் போகுமா?
முகத்தில் மீண்டும் ஒரு மலர்ப் புன்னகை. *կեւռ6նոն, இந்தப் புன்னகை வளர்ந்து, பூரித்துப் பக்குவமாகி." சண்முகத்திற்குச் சிந்தனையை வளர்க்க ஆனந்தமாக இருந்தது. பெருமையும் ஓரளவு வெட்கமும் கூட. அவனுடைய மகள் குமரியாகும் போது மிக மிக கவர்ச்ெ யாக இருப்பாள். அவன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நல்லவன் கையில் கொடுத்து.
அவள் கைகளை மெல்லத் தொடுகிறான்.
g- 3

Page 28
34
-*ம் ம் ம்” -ஒரு முனகல், இன்னும் ஒருதரம். செல்லமாகஒரு திடுக் காட்டிய அசைவு. வட்டக் கருவிழிகள் மடல்கள் பிளந்து உருண்டன. அவன் கைகளை வெடுக்கென இழுத்துக் கொண்டான். *களவெடுக்கிறாய் ய் ய்” கோபச் சிணுங்கல். w *இல்லையடி குஞ்சு. நான் இனித் தொடமாட்டேன். அப்பா காப்பு வாங்கித் தந்தவர் களவெடுப்பாரா?” **அப்ப ஏன் தொட்டே ஏ ஏ”
**ஆசைக்கு”
**ஆசைக்கா?" வெடுக்கென்று ஒரு கேள்வி.
* 'ډي ، له
*பொப், களவெடுக்க." *குஞ்சுன்ரை காப்பை நான் களவெடுப்பேனா?” -*ம் ம் ம்". குழந்தை மறுபடியும் கனவு உலகில் வழுக்கி விழுந்து மகிழ்கிறது.
அன்றுதான் அவன் ஒரு ஜோடி காப்பு வாங்கிப் போடடான். “கற்பூர, பீங்கான், பிளாஸ்டிக், நைலோன் வளையல்களுக்கும் தமிழ் நாட்டின் பொற்காப்புக்கு
மிடையே பேதமை தெரிகிறதே இந்த நான்கு வயசுப் பெட்டைக்கு!”
சிந்தனை இன்பத்தைத் தான் அள்ளிக் கொட்டுகிறது.
* மனம் இருந்தால் வறுமை சின்ன விஷயம். சுருட்டுக் கொட்டில் முதலாளியிடம் நான் வாங்கிய கடன் காசு ரூபா நூற்றைம்பது என்ன காசு? பத்து மாதம் கொஞ்சம் இறுக்கிப் பிடித்தால் கட்டி முடிக்கலாம். நூற்றைம்பது

35
ரூபாய்க்காக ஒரு பச்சைக் குழந்தையின் துளிர் மனத்தைத்
துவள விடலாமா?"
**இந்தாங்க நீங்க அவளுக்கு அதிகம் செல்லம் கொடுக் கிறீங்க” சண்முகத்தின் மனைவி அன்று காலையில் கண்டித்தாள். ஆனால் அவள் உதடுகளிலும் கண்களிலும் குறும்பு வர்க்கப்புன்னகை அவன் செயலையே ஆமோ தித்தது.
**காப்பு ஏது?*
“Great seasy raif.'
*“劣r5?””
* கடன் வாங்கினேன்.”*
a és -6örfT ?”
ഉ.?
*திருப்பிக் கொடுப்பது?”
*மாசம் பதினைந்து ரூபாயாக பத்து மாசத்தில்.”
**(pigtunn?' -
*முடியாதா? நல்லம்மா நான் இனிமேல் மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டை வரயில்லை. அந்த ஒரு மணித்தியாலத்திலை ஐம்பது அறுபது சுருட்டினால் ஒரு நாளைக்கு அறுபது சதம் அதிகமாக உழைக்கலாம்.”
‘ “ “ Fru Gumru o Gymr?”
*ஐஞ்சு மணிக்கு வந்து சாப்பிடுறேனே.”
*இந்தக் கயிட்ட மெல்லாம் எதற்கு?”
அ*அதற்கு-" என்று சுட்டிக் காட்டுவது போல பூமணியின்
பக்கம் திரும்பினான் சண்முகம்.

Page 29
36
*"என்ரை அப்பா வாங்கித் தந்தவர்”- கைகளை பரத நாட்டிய கமல முத்திரையில் பிடித்தவாறே காப்புக் களைக் காட்டிப்புழுகிக் கொண்டிருந்தாள் பூமணி. "என்ரை அப்பா" என்ற போது தனது மகள் அன்பைச் சந்தனமாகக் குழைத்துத் தனது உடலெல்லாம் பூசியது. போல் சிலிர்த்தது சண்முகத்திற்கு. பூமணியைச் சுற்றி அயல் வீடுகளின் ஜயா, புஷ்பா, வரதா, வாணி. எல்லாமாக ஏழு எட்டுப் பெண் குழந்தை கள் சதுரங்க விளையாட்டுக் காய்கள் போலக் குந்தியிருக் தனர்= பூமணி ஒரு இராசாத்திக் காயக அவர்கள் மத்தியில் இருந்: தாள். கைகளில் ஒரு சோடி திங்கக் காப்பு.தலையில் மகுடம் என்ற யோசனையோ?
மற்றப் பிள்ளைகளின் கைகளில் தங்கம் இல்லாமலில்லை. அவர்களின் கழுத்துக்களில் கூட சின்னஞ்சிறு சங்கிலிகள். இவைதாம் ஒன்று மறியாத பூமணிக்குத் தங்கக் காப்பு" ஆசையை மனதில் விதைத்தன. ஆனால் இன்று இந்தப் புத்தம் புதிய சோடிக்குத் தான் மகிமை. அது குழந்திை: உலகமல்லவா? சண்முகத்தின் கண்மணி பூமணிக்குக் காப்பு வந்த செப்தி புதிசாகவே இருக்கின்றது. இரு கிழமைகள் கூட காலத்தின் எல்லையில் மறையவில்லை.சாகவில்லை.
糖
கைகளை மடக்கிக் காப்புக்களை நெஞ்சோடேயே
வைத்து.
கைகளை மடக்கி அப்படியே வைத்திருக்கிறார்கள். குளிப் பாட்டி, பூச்சட்டை மாட்டி, சாந்துப் பொட்டு இட்டு. முகத்தில் அதே கனவுச் 6thւնւկ.

37
*பாரென் நித்திரையிலை படுத்திருக்கிறதுபோலை தானை கிடக்கிறாள்.” *" என்னக்கா, மூன்று நாள் காய்ச்சல் தானே” தனது மூக்கைத் துடைத்து முந்தானையில் துடைக்கிறாள் மற்ற வள். **எங்களுக்கே மனம்பதறுகுது எண்டால், பெத்தவளுக்கு எப்படி இருக்கும்?” இனத்தவரின் இப்படியான பேச்சுக்கள் சண்முகத்தின் உள்ளத் தீயில் எண்ணெய் வார்க்கின்றன. சவப்பெட்டி யின் பக்கத்தில் அப்படியே இருந்து விட்டான். *குஞ்சு...உன்ரை அப்பா பக்கத்தில் இருக்கிறார். அப்பா காப்பு வாங்கித் தந்தவரல்லவா?.” மூளை சிந்திக்க இதயம் அழுதது. *குஞ்சு. நீ இனிப் பேச மாட்டாயா? அப்போ, அப்பா
என்று கூட கூப்பிட மாட்டாய்? ஏன் அப்படித் தானே..? இதயம் சிந்திக்க அவன் குழந்தையைப் போல் அழுதான்.
யாரை நோவது? விதியையா? விதியின் துர்தனாக வந்த பரிகாரியையா? அல்ல பரிகாரியின் உருவில் தான் விதி வந்ததோ!
மூன்று, நான்கு நாட்களுக்கு முன் பூமணிக்கு மெல்விய காய்ச்சல். அடுத்த நாள் சாப்பாட்டை LD gUDI ğ6 g57 விட்டாள். தொண்டையில் நோவு. யாழ்ப்பாணப் பெரிய ஆஸ்பத்திரிக்குப் போக முத்திரைச் சந்தையடி பஸ் நிறுத்தும் இடத்தில் சண்முகம் நின்றான். அவன் இடது தோளில் பூமணி சாய்ந்திருந்தாள். வலது கை அவள் முதுகைத் தடவிக் கொடுக்கிறது.
பஸ் வரவில்லை.
பரிகாரி தம்பிப்பிள்ளை தான் செம்மணி ரோட்டில் வந்தார்.

Page 30
38
நோயாளி பக்கம்-பரிகாரி சம்பாஷணையும், பரிசோதனை யும் சந்தியிலேயே நடந்தது. கழுத்தை வருடி முதுகைத் தடவி குழந்தையின் கையைப் பிடித்து மணிக்கட்டு நாடியின் மேல் தனது வலது விரல்களை வைத்து நாதஸ்வர மேதையைப் போல் தொட்டும் தொடாமலும் மாற்றி மாற்றி விரலடித்து. "கழுத்தில் இரு வாய்வுக் கட்டிகள்?’- நான்கு சின்ன வார்த்தைகளில் விளக்கமாக *டயக்னோசிஸ், கை, மருந்துக்கு ஆலோசனையும் அனுமானமும் கையோடயே கிடைத்தன.
*சே! பரிகாரி குழந்தையின் வாயைத் திறந்து கொஞ்சம் பார்த்திருக்கக்கூடாதா? அல்லது அந்த பஸ் தான் கொஞ்சம் முந்தி வந்திருக்கக் கூடாதா? விதியோ வியா தியோ மூன்று நாட்களிலேயே முத்தி முறுகி குழந்தையின் தொண்டையைஇயமக்கைகளுடன் இறுக்கியது.
ஆஸ்பத்திரிக்குக் கார் பிடித்து ஓடினர்கள். அங்கே நெளிந்த வெள்ளித் தகடால் மெல்ல நாக்கை அமுத்த வாயைத் திறந்து வெளிச்சம் பிடித்துப் பார்த்து. தொண்டைக் கரப்பனாம்.
44சே!..கடைசி நேற்றாவது வந்திருக்கப்படாதா? வேதனையுடன் டாக்டர்கேட்டார், பரிசோதனை அறையை விட்டு வெளியே வரும்போது கங்காணி பரஞ்சோதி-நல்லுார்ப் பையன்-**என்ன சண் முகண்ணை பிள்ளையைக்கொன்று போட்டாய்” என்று கவலையுடன் ஆனால் முரட்டுத்தனமாக அங்கலாம்ப்த் தான். இந்தக் கேள்விகளின் ஒலி அலைகள் எல்லாம் இப்போது அவன் காதுகளில் அங்குசங்களாகக் கிழிக்க இதயம் ஒளறியது. நல்லம்மாவின் தமையன் மார்க்கண்டு காப்பைக் கழற்ற கையை விலக்குகின்றான்.

39
*மச்சான் சுடலையில் கழற்றலாம்” என்று கூறி ஓ’ வென்று கதறினான் சண்முகம். சவப்பெட்டி மூடப்
• التي ساسا لا
* ஊரார் கிடங்கு வெட்ட உற்றவையோ மண் போட்டார் அயலார் கிடங்கு வெட்ட அந்நியரோ மண் போட்டார்.
18 8 0 as a b d e o a to
வீட்டுப் பெண்களின் ஒப்பாரி கேள்விகளாக, சண்முகம் விடை தெரியாது திணறினான்.
**வாய்க்காலோ மெத்தை?
வரம்போ தலைக்கணை?’’. ஒரு தனி வயோதிப ஒப்பாரி கம்மிய குரலில் கிணற்றடியிலும் தொடர்ந்து கேட்டது. மனக்கவலை துலா மிதிக்கச் சண்முகம் அழுதுகொண்டே சூத்திரப் பாவையைப்போல் தாய்ந்தான்.
உறவினர் வீட்டுச் சோறு பரிமாறப்படுகிறது. வாணி வீட்டுச் சோறா?
ஜயா, புஷ்பா, வரதா, வாணி.
էլմ: 6մմi?
அவள் காப்பு
** மச்சான் சுடலையிலை காப்பைக் கழற்ற மறந்து போனோம்” மார்க்கண்டு ஏங்கினான்.
"நீ கழற்றுவாய் என்றிருந்தேன்.”
**நீ கழற்றுவாய் என்ற ல்லோ நினைச்சேன்."
** என்ன கதைக்கிறியள், காப்பைக் கழற்றவில்லையா?* நல்லம்மாவும் கேட்டாள்.

Page 31
40
*என்ன விலை?”-சபையில் ஒருவர் செலாவணி மதிப்பில் நிலைமையைக் கணிக்கப்பார்க்கிறார்.
9 8 sp a s s & 8
அடுத்தநாள் விதரனை சுகாதார வைத்தியர், நீதிபதி முதலியோரைக் கண்டு சவக்குழியைத் தோண்டிச் சவத்திற் குப் போட்ட காப்பைக் கழற்ற அனுமதி பெற்றார்கள்.
மார்க்கண்டு மயானத்தின் ஏகாந்த அமைதியைக் கலைக்க விரும்பாதவன் போல் குழியை மெல்லத் தோண் டிக்கொண்டிருந்தான்.
பக்கத்தில் குந்தியிருந்த சண்முகத்தின் இதயம் நிறை மாதக் கருப்பையின் பிரசவத் துடிப்பைப் போல் அவதி யுடன் சுருங்கிச் சுருங்கி விரிந்தது. "செத்த பிறப்பல்லவா? விபரீத பிரசவமல்லவா?’ யோசனை உணர்ச்சிகளை மடக்கித் திருப்ப, அதே இதயம் சில வேலைகளில் மெளன விரதம் இருந்தது.
அவன் பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தான். சவப் பெட்டி திறக்கப்பட்டது.
சண்முகத்தின் கண்ணிர்த் திரையூடாகச் சவம். அல்ல. அவன் மகள் பூமணிதான் தெரிகிறாள்.
கைகளை மடக்கி, காப்புக்களை நெஞ்சோடேயே வைத்து.
அந்தக் கைகளை மெல்லத் தொடுகிறான்.
குஞ்சு!"

4 I
கைகளை வெடுக்கென உதறி இழுத்துக் கொள்கிறான். அவள், அப்பா வாங்கிக் கொடுத்த காப்புகளைத் தன் ஈநெஞ்சோடேயே வைத்துக் கிடக்கிறாள்.
பெட்டியை அமைதியாக மூடிவிடுகிறான் அவன். குழியும் நிரம்புகிறது.
சண்முகத்தின் கண்னிர் நனைந்த முகத் தசைகளின் சோக அசைவுகளோடு
அவன் உதடுகள் படபடக்கின்றன.
* குஞ்சு, அப்பா உனக்குக் காப்பு வாங்கித்தந்தவர். 卷 களவெடுப்பாரா???
வீரகேசரி 39-12.62

Page 32
சதையும் சாம்பரும்
மனிதனைப்போல் மூளை விளைந்த ஒரு பிராணி கடலில் வாழ்வதானால் சந்தேகமின்றி அங்கும் சுடலைகள் இடை யிடையே காணப்படும். அந்தச் சுடலைகள் ஒன்றில் ஒரு சாகாத நீர் வாசி எப்போதாவது என்னைப்போல் இருந்து சிந்திக்கும். தனது குற்றம் குறைகளை எல்லாம் மன நீதியுடன் ஆராய்ந்து உணர்ந்து உருகும்.
கீரிமலையில் - அந்தச் சுடலையின் சுவர் இடிந்த, தரை வெடித்த, சிறு மடத்தின் குந்திலிருந்து என் முன்னே நீண்டு பரந்து கிடந்த நீல நீர்ப்பரப்பை பார்த்துக் கொண் டிருந்தேன். கடல் நீர் மலையாகி, அலையாகி, நுரையாகித் தரையை மருவியது. கரைக்கு வந்து சேர்ந்த குக்காய் நண்டுகள் அவசர கதியில் பக்கவாட்டாக ஒடி பொந்துக்குள் மறைந்தன. இறந்த நண்டுகளின் ஓடுகள், சிப்பிகள், சோகிகள், நத்தைகள், கடற் சாமந்திகள், பஞ்சுகள், நட்சத்திரங்கள். கடலின் ஓரத்தில் வந்து பதிந்து கோலமிட்டன. சுடலை புதிய சாம்பர் மேட்டின் ஒரம் கரைந்து கடலோடு மெல்லக் கலந்து கொண்டிருந்தது.
மனித பரிணாமத்தில் அவன் ஆதிகால மூதாதையரும் . ஒரு செல் உரு அமீபா தொடக்கம் ஈரூலக வாழ்வுள்ள தவளை ஈறாக - நிர்வாழ்வனவல்லவா? அவன் சாம்பர் இயற்கையின் நியதியின்படி நீரோடு சேர உரிமையுண்டு. இந்த தர்மத்தை உணர்ந்தோ என்னவோ, கடலை ஒட்டி இப்படிச் சுடலைகளைப் போய் அமைத்தானே மனிதன் :

43
நிச்சயமாக அவன் மூளையின் சிந்தனா பீடம் பூரணமாக வளர்ந்து விட்டது என்பதற்கு இந்த அறிகுறி ஒன்றே போதுமே!
மூளை விருத்தியடைந்தும் என்ன? அது சுடலையின் தார்மீகச் சூழலில் மாத்திரமல்லவா பரோபகாரச் சிந்தனை யுடன், தன்னலமின்றி. தத்துவ ஞானத்தின்படி சிந்திக்கத் தெரிந்து வைத்திருக்கிறது! சுடலையில் அல்லவா மனிதனில் தெய்வத்தைக் கண்டுகொள்ள முயற்சி செய் கிறது. கை பிடித்த மனைவியைத் தன் வாழ்வின் இணைந்த சக்தியாக, தாயைக் கண் கண்ட- தெய்வமாக. சே! இந்த ஞானம் எனக்குக் காலையில் விடிந்திருந்தால்? எனது சொற்கள் அணு அம்புகளாகச் சிதறியிருக்குமா? அவை அம்மாவையும், அவளையும் எப்படித் துன்புறுத் தினவோ இதயத்தைச் செடில் குத்தி ஆட்டிச் சித்திர'
செய்கின்றனவோ! நா சுட்ட இதய வடுக்கள் மாறாதாமே! *என்ன டி!” - காலையில் அவளை அடக்க ஒரு பல்லுக்
கிட்டிய ‘டி’ போட்டுச் சிறினேனே! ஒரு படித்த தமிழ் பண்டிதருக்கு இது பண்பாகுமா? கீழைத் தேயப் பெண்மையின் பணிவமைதியுடனும் தாயாகப் போகிற வளின் பொறுப்புணர்ச்சியுடனும் அவள், 66 என்ன கோபிக் இறீர்கள்?’ என்று குழைந்தாள் என்னைச் சமாதானப் படுத்துவதற்காக, அப்போதாவது வெட்கமடைந்தேனா? உணர்ந்தேனா? சிந்தித்தேனா?
* என்னடி உன்ரை அப்பன் விட்டுச் சொத்தையா செலவு செய்கிறாய்?’ என்ற ஒரு சிறு கேள்வியில் கோபத்தையும், ஏளனத்தையும் பொருத்தமான பிரமாணப்படி கலந்து வெளியிட்ட பெருமிதத்துடன் அவளைப் பார்த்தேன். அதன் விளைவு எனக்கு வெற்றி தான்-காலையில் நான் இருந்த மனோநிலையில். அவள் கண்கள் நீர் முட்டிப் புடைத்தன.

Page 33
44。
“உங்களுக்கு என்ரை ஆக்கள் வந்து நிற்பது பிடிக்கவில்லை. அதுதான் சீறி விழுகிறீர்கள். சொல்லுங்கள் நான் என்ன அனாவசியச் செலவு செய்கிறேன்???
"ஏன் உன்ரை சீதனக் காசு இருக்குதல்லவா. கொட்டித் தொலைக்க.?? "அப்போ போதிய அளவு தந்துதானே விட்டவர் 9 *ஓ! தந்து கிழித்தவர். பாரி வள்ளல். சொல்லடி இன்னும் ஒருதரம்" - பொருளாதார ரீதியில் கதை வளர்ந்தது; பயங்கர உருவத்தில் பெருத்தது. பள்ளிப் பிள்ளைகளைப் பதம்பார்த்த கை விறுவிறுத்தது. நல்லவேளையாக, எனது கோப உணர்ச்சியை அடக்கவும் அவளது பூரண கர்ப்ப நிலை உதவிக்கு வந்தது. நான் எழுத்து விட்டேன்.
சே! வீண் சண்டை. பணம் என்பது பிணம் என்ப துடன் எவ்வளவு ஒற்றுமையாக.
s e 来源
மடத்தின் குந்திலிருந்து எழுந்து, அந்தச் சிறு கடலையின் சாம்பர் பாதங்களில் நீறு பூச ஞான நடை போடடேன். ஓர் எலும்பு தட்டுப்பட்டது. ஐந்து அங்குல நீளமுள்ள ஓர் எலும்பு. அதற்கு ஒரு தண்டு, தலை, Gup6õp6ቘr • ህ ዞ፣ ïï எலும்போ? lut(baot -u to606or al Gur? tin Giao Liu அன்னையோ? தடவி அன்பு காட்டி அமுதூட்டிய கையோ? பால் மார்பைத் தாங்கிய விலாவோ? எனது கைவிரல் களுடன் அதைச் சமாந்தரமாக பிடித்துப் பார்த்தேன். இது விரல் எலும்பல்ல. இது பெரிது; விரல் சிறிது. ஒ! நாயெலும்பா? நாயானால் என்ன? அதுகூட முலை சப்பி வளர்ந்து, காதலித்து, இனம் பெருக்கி, முலை கொடுத்து வளர்த்து.
நாய் கூட ஒன்றின் தாய் என்றால் பொறுமையின் இருப்பிடந்தானே.

45
“என்ன தம்பி, அவளை ஏன் விடிந்தது தொடக்கம் நச்சரிக்கிறாய். சீதனம்தராமல் அவளின்ரை தாய் தகப்பன் ஏமாற்றியதை இப்ப ஏன் எடுத்துக் கதைக்கிறாய்” என்றாள் என் அம்மா காலையில். *நீ தானே என்னை இந்தப் படுகுழியில் தள்ளினது.”* 'போனது போகட்டும். அவளும் தாயாகப் போகிறாள். இனியாவது.”
*போ மூதேவி. நீ எனக்குத் தாய் உருவில் வந்த பிசாசு. எனக்கு எல்லோரும் சேர்ந்து உயிரோடு கொள்ளி வைத்து விட்டீர்கள்.”
அம்மா கண் கலங்கினாள். அவள் வயோதிப முகத்தில் சோகத்தின் சுருக்குகளைப் பார்க்க எனக்கு ஏதோ மாதிரி இருந்தது. என்றாலும் நான் தோல்வியடையும் மனப் பான்மையில் இருக்கவில்லை. நான் தோல்வியடைவதா?
நேஷனல் பெனியனை எடுத்து உட்புறத்தைப் புரட்டி வெளிப்புறமாகப் போட்டுக் கொண்டு வெளியேறினேன்.
**6TrivG3asun ulert Gurrigortui?”
"எங்கே போகிறீர்கள்???-ஏக காலத்தில் எனது தாயும் எனக்காகத் தாயாகப் போறவளும் வினவினார்கள். படலையைச் சாத்திவிட்டு விறுவிறுவென்று நடந்தேன். கீரிமலைக் கடலில் குளித்துவிட்டு, கடலோரமாக அரைக் கட்டை நடந்து இந்தச் சுடலையை அடைந்த போதுதான் அந்த விறுவிறுப்பு அடங்கியது.
“எனக்கு உயிருடன் கொள்ளி வைத்து விட்டடீர்கள்" என்று நான் பொருத்தமில்லாமல் - அவசியமில்லாமல் பசப்பினபோது ஏன் எனது அம்மாவின் கண்கள் கனிந்தன? ஒ கொள்ளி என்று சொன்னேனா? அது ஒரு வாழ்க்கைச் சரித்திரத்தின் முடிவு கோலல்லவா! உயிர் பிரிந்த பின்பும்

Page 34
46
சடலத்தை வைத்து அப்பா, அம்மா, அம்மான், ராசா என்று தானே கட்டி அழுகிறோம். மற்றவர்களுக்குப் பிணம் என்றிருந்தாலும் உரித்துள்ளவருக்கு இன்னும் அதற்குச் சொந்தம் பாராட்டுவதற்கு உரிமையோடு உருவமும் உண்டு. அந்த உரிமையைச் சுட்டுச் சாம்பராக அழித்து, கனவாக, மன நிழலாக, எப்பவோ இருந்த ஒன்றாக ஆக்குவது கொள்ளி அல்லவா?
சிறு கொள்ளிக் கட்டைகள் அந்தச் சுடலையில் அங்கு மிங்குமாகப் புதைந்தும் புதையாமலும் கிடந்தன. அவற்றைக் காலால் தட்டிப் பார்த்தேன். இன்னும் எத்தனையோ பொருட்கள் அகப்பட்டன. சின்னஞ்சிறு காலியான போத்தல்கள் மண்ணுக்குள் புதைந்து கிடந்தன. அழுக்கடையாத ஒரு போத்தலை எடுத்து, புதைபொருள் ஆரா ப் க் சி யா ள ரி ன் நுட்பமான ஆர்வத்துடன் ஆராய்ந்தேன். இனிமையான சென்ட் வாசனை இன்னும் மறையவில்லை. சென்ட் போத்தல்கள்!
உயிரில்லாத சடலத்திற்குக் குளிப்பு, வாசனைத் திரவங்கள், தலைப்பாகை, தாம்பூலம், பொட்டு, பூமாலை. இறந்தவரின் பெயரை வைத்து விருந்து, விழாக்கள், சிலை, பாமாலை. வாழ்பவன் தனது மனத்தின் வெளியீடாக இன்னும் எத்தனையோ
இறக்க முன்
மூதேவி!
பிசாசு.
சாம சிந்தனை என்னை அந்தச் சிந்தனையில் வைத்துக் கொன்று கொண்டிருந்தது. உடைந்த கொள்ளிப் பானை களின் குயவன் வைத்த வாய் எனனைப் பரிதாபமாகப் பார்க்க, அலங்கோலமான ஒரங்களுடன் உடைந்து தனது கோரைப் பற்களைக் காட்டிய மற்றப் பக்க சவாய்” என்னை மண் பூதங்கள் போல் பயமுறுத்தின.

கண்களை மூடி ஒரு நிமிட தியானத்தில் நின்றுவிட்டு மடத்தின் குந்தில் மறுபடியும் குந்தினேன். என் கால்களில் கோவில் வலம் வந்ததுபோல் ஓர் இன்ப விறுவிறுப்பு. மனம் கழுவப்பட்டதுபோல் ஓர் நிர்மலமான உணர்ச்சி பல வருடத் தவத்தின் பின் ஞான வரம் பெற்றதுபோல் ஒரு மன விடிவு
உடனே போய் வீட்டில் என் அன்னையின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்புக் கேட்டுவிட்டு, அவளையும் வருடி **குமுதா, நான் ஏசியதையெல்லாம் மறந்துவிடு. நீ என் அறியாமையை மன்னிப்பாயல்லவா? நான் இப்போது புது மனிதன். நீ எவ்வளவு நல்லவள் மனிதர் எல்லோருமே நல்லவர்கள். இனி நான் உன்னுடன் கோபிக்க மாட்டேன், ஏச மாட்டேன். சண்டை போட மாட்டேன்." - இப்படியெல்லாம் கெஞ்சி என் வாழ்க் கையின் திருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும்போல் @@曲ég,
ஆம் மனிதரில் தெய்வத்தைக் காணும் ஆத்மீகச் சிற்பியாகி விட்டேன் நான். வெறும் கல்லை உளியால் செதுக்கி சிலையாக்கிச் சிரஞ்சீவித் தன்மை தருகிறான் கலைச்சிற்பி. நான் பெற்ற ஞான ஒளியால் எனது சகோதரரை நானும் செதுக்குகிறேன். அவர்களில் நான் முன்பு கண்ட குற்றம் குறைகள் துகள்களாகச் செதுக்கப் பட்டு விழ நல்ல பண்புகள் மட்டும் உருவமெடுத்து மானசீகத் தெய்வச் சிலைகளாகத் தோன்றுகின்றன. ஒவ்வொரு வரையும் அன்பினால் செதுக்கினால் அவர்கள் நடமாடும் தெய்வங்கள்தாம்! கைகூப்பி வணங்க வேண்டிய வர்களே! நடராசா சட்டம்பியார் - எனது சக ஆசிரியர் ஒரே ஊர்க்காரர், நண்பர். அன்று ஒரு நாள் நான் பாட சாலையில் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். நடராசா சட்டம்பியார் தான் என்னைத் தாங்கினாராம். ஆஸ் பத்திரிக்குக் கொண்டுபோய் அனுமதித்தாராம். எனது

Page 35
48
இரத்த சோகையைத் திருத்த இரத்த தானம், செய்தாராம், அவர் என்னுடனேயே அன்று முழுதும் நின்று தாயாக - தோழனாகப் பராமரித்தார். அந்த அன்புத் தியாகம் ஒன்றே போதுமே! அவர் அன்பை மெழுகாக்கி உருவம் அமைக்கின்றேன். ஆகா! ஒளி தரும் சிலையொன்று உருவமாகிறது - தெய்வ உருவம்தான். பெரியப்பா காட்சி தருகிறார். நான் சிறுவனாக இருந்த போது என்னைக் காலையில் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்? பாலப்பம் தருவார். திண்ணையிலே என்னை இருக்கச் சொல்லி ஒரு கைபிடி வெள்ளை மண் குவித்து அதைப் பரப்பி இலேசாகத் தடவி. ‘அ’ எழுதிக். காட்டுவார். பின்பு எனது சுட்டு விரலை அதன் மேல் ஒட விட்டு அ, ஆ, இ, ஈ. பெரியப்பா. எனக்கு எழுத் தறிவித்து என்னை ஆளாக்கிய இறைவன்.
இப்படி எல்லோருமே எனக்குத் தெய்வீகத் தன்மை, யுடையவர்களாகத் தோன்றுகிறார்கள்.
நான் ஞானியாகி விட்டேனா?
ஹோ ஹோ" என்ற ஓங்காரத் தொனியுடன் பக்கத் திலிருந்த கடல் துள்ளிக் குதித்து ஓடி வந்து நிலமகளோடு சல்லாபித்து விட்டு பின் வாங்குகிறது. நீர்க்குமிழ்கள் ஒன்றாகி நுரையாகி "பொல பொல” என்று வெடித்து மறைகின்றன. சுடலையின் சாம்பர் மேடு மெல்ல மெல்லமாகக் கரைகிறது.
நானும் தவம் குலைந்த தபசியைப்போல் மெல்ல, எழுந்தேன். வீட்டை நோக்கிப் பிரயாணமானேன்? எனது நிழலின் திசை இப்போது எதிர் பக்கமாக இருந்தது. சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். நீலக்கடலின் அடிவானம் குங்கும நிறமாக மாறிக் கொண்டிருந்தது. வானமும் கடலும் ஒன்றாகி அந்தி வானம் தோன்றப் போகும் ஒரு மயக்க இயற்கை நிலை.

49
நனைந்த கடற்கரை குரு மண்ணில் எனது பாதச் கவடுகள் மிக அழகாகப் பதிந்து கொண்டிருந்தன. சில சுவடுகளை உடனுக்குடனேயே கடலின் நுரை அலைகள் திரப்பி அழித்துக் கொண்டன. கரையில் படர்ந்து கிடந்த இராவணன் மீசைகளுக்கிடையே ஒரு பெரிய சிங்கி நண்டின் பல வர்ண ஓடு என் கண்களுக்குப் பட்டது.
அதை எடுத்து அதன் விநோத அழகை ரசித்தவாறு கீரி மலையில் பஸ் நிற்பாட்டும் இடத்தை அடைந்தேன். சிங்கி நண்டின்சதை எப்பவோ இறந்து மறைந்து போய் விட்டது. ஆனால் வானவில்லைக் குழம்பாக்கிப் பூசப் பட்டது போன்ற இந்த ஒடு.அதன் ஒரு அடி நீளமுள்ள சோடிக் கொம்புகள்.என்றும் எனது கூடத்திலே மாட்டப் பட்டு அழகு தரும். நடராசா சட்டம்பியார் வந்து அதைப் பார்த்ததும் திகைத்துப் போவார். தனது வீட்டில் மூலைக் கொரு மான் தோலும் கொம்பும் மாட்டி வைத்திருக் கிறானே மனிசன். அன்று ஒரு மான் தோலைக் கேட்டேன், **சட்டம்பியார் உதை மாத்திரம் கேட்காதேயும். அவை ஒவ்வொன்றும் எனக்கு ஒரு கதை சொல்லும். எல்லாம் நான் வேட்டையாடிக் கொண்டு வந்த மான்கள்” என்றார். கதை சொல்லுமாம் கதை நடராசாவாத்தியார் பொரு ளோடு சாகிறவன்!
யாழ்ப்பான பஸ் இன்னும் வந்த பாடில்லை. பொல் லாத அலுப்பாக இருந்தது. பக்கத்திலிருந்த ஒரு கல்லில் குத்தி இருந்தேன். கீரிமலைக் கேணியில் குளித்து விட்டு அழகான கார்களில் அரசாங்க உத்தியோகஸ்தர்களும் வ்ாடகைக் கார் பிடித்து வந்த சில குடும்பங்களும் போய்க் கொண்டிருந்தனர். அறிமுகமான கார்கள் ஒன்று இரண்டைக் கண்டதும் எழுந்து கையைக் காட்டினேன். அவர்கள் நின்றால் தானே! நான் என்ன பணக்காரனா? அரசியல் ‘வாதியா? ஊரில் பெரிய மனிதனா அவர்கள்
என்னை மதிக்க. ஒரு தமிழ் வாத்தி தானே! -

Page 36
50
கடைசியாக பஸ் வந்து நின்றது. சுற்றவர இருந்த கடை களுக்குள் இருந்தவர்கள் ஓடிவந்து முட்டி மோதி ஏறினர். உடலெல்லாம் திருநீறு, சந்தனம் என்றிருந்த ஒரு சாமி உருவம் என்னுடன் மோதி. "என்ன சாமி உனக்குக் கண்ணில்லையா?? கேட்டேன் நான்.
"Társor ஐயா.விலாவிலை ஊசி போலை குத் திட்டு.” எனது சிங்கி நண்டின் ஒட்டைப் பார்த்தேன்.
அதன் வலது கொம்பு உடைந்து தனது பெருமை, மதிப்பு அலங்காரம் எல்லாவற்றையும் இழந்திருந்தது; பஸ் ஒடும் போது அதை யன்னல் வழியாக தூக்கி எறிந்துவிட்டேன்? சே! கைக்கெட்டினது.
சாமியா அவன்! வேஷதாரி. கடவுளின் பெயரை முதலாக வைத்து என்ன என்ன விதங்களில் மனிதன் வியாபாரம் செய்கிறான்.
யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் இறங்கி ஆஸ்பத்திரி வீதி யால் நடந்து கொண்டிருந்தேன். பெரிய ஆஸ்பத்திரிக்குள்
ஓர் அம்புலன்ஸ் அவசரமாகத் திரும்பியது. சுவரால் எட்டிப் பார்த்தேன். குறுக்குக் கட்டிய சில பெண்கள் இறங்க ஸ்ரெச்சரில் ஒருவரை இறக்கினர். அடி சண்டையோ. சாதிக் குழப்பமோ? இந்த எளிய சாதிகளுக்கு இப்ப கண் கடை தெரியுதில்லை. சரிசமனுக்கு வரப்பார்க்குதுகள்.
உலகம் கெட்டுப்போச்சு.
நான் எனது வீட்டை நோக்கி விரைவாக நடந்தேன். உடைந்து உருக்குலைந்ததெருக்கள், தேங்கி நாறும் சாக்கடை நீர், கைவிளக்கோடு போட்டி போடும் மாநகர சபையின் மின்சார ஒளி இவையெல்லாவற்றையும் சமாளித் துக் கொண்டு பெரிய விஷயங்களில் சிந்தனையை அலைய விட்டு நடந்தன். அரசியல், ஆத்மீகம், இலக்கியம் மீண்டும் ஒரே குழப்பம் தான். இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை பொருளாதாரம் ஐயா பொருளாதாரம் நம்மவருக்கு,

5.
மூளையிலும் இதயத்திலும் பார்க்க வயிறு பெருத்துவிட்டது. நன்றாகப் பெருத்துவிட்டது" தார் ரோட்டைவிட்டு அமாவாசையாகிவிட்ட எங்கள் ஒழுங்கைக்குள் திரும்பினேன். எதிர்பாராத விதமாக எனது வேட்டியின் கீழ் ஒரத்தை ஏதோ கவ்வி இழுக்க பின்னங்காலால் ஓர் அடி அடித்தேன். ‘வள்” ஒரு மூதேவி நாய் வேலிக்குள்ளால் சரசரத்துக் கொண்டு ஓடி ஒ” என்று ஒப்பாரி வைத்தது. **ஆற்றா குட்டித் தாச்சி நாய்க்கு அடிச்சவன். பொன்னி உஞ்சு பொன்னி” ஓ! பெரியப்பற்றை நாயா கருமிக் கிழவன் நாய்க்குக் கொடுக்கிற மதிப்பு மனிதனுக்குத் தருவதில்லை. மலட்டுக் கிழவன் சொத்தை என்ன செய்யப் போகுதோ அன்னியர் கொண்டு போறதுதானே. கிழவன் நல்லவன் என்றால் நான் இப்படி இருப்பேனா?
நாம் பிடித்த பிடியும் நான் அடித்த அடியும் எனது இதயத்தை வேகமாகத் துடிக்கவைத்து விட்டன. வியர்வை வெள்ளத்திலே மயிர்கள் குத்திக் கொண்டு நின்றன.
எனது வீட்டுப் படலையில் அம்மாவும் குமுதாவும் நின்றார் கள்.
இதென்ன இளவப்பா. இந்த நேரத்தில் ஏன் ஒழுங்கை யில் நிற்கிறியள்?” **உங்களைப் பார்த்துக் கொண்டு தான் நிற்கிறம்.?? "நான் சாகவில்லை. இருக்கிறன்.”
நனைந்திருந்த நஷனல் பெனியனைக் கழற்றி முகம் கால் கழுவி விட்டு வந்தேன்.
"சாப்பிட்டியளா?* குமுதா வினவினாள், **இல்லை. எனக்குச் சாப்பாடு வேண்டாம் போ,

Page 37
5艺
*ésrőir Gasnlí9á85írsair.
பின்னை என்னைச் விரிக்கச் சொல்கிறாயா?" இந்தக் கேள்வி அவளை அழ வைத்து விட்டது.
*ந்ான் காலையில் ஏதாவது தப்பாகக் கூறியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்." கண்களைத் துடைத்த படியே குமுதா கெஞ்சினாள்.
*போய்ச் சாப்பிடுமேனை” அம்மாவும் கெஞ்சினாள். இருவரும் கெஞ்சினார்கள். எனக்குத் திருப்தியாக இருந்தது. இது கடலையல்ல; வீடு
வீரகேசரி 11-2-82

துப்பல்
பஞ்சாட்சரம் மாஸ்றர் அன்று காலையிலே எழும்பும் போது அவருக்குத் தொண்டைக் கரகரப்பு இருந்தது. அண்ணத்தில் கடுமையாக வலித்தது. உப்பு நீரினால் ஒரு முறை கார் கல்” பண்ணிவிட்டு ஒரு பனடோல் குளிகையை விழுங்கினார்.
அன்றோ விஜயதசமி லீவு எடுக்க முடியாத நாள். "தேவர்களின் கலைக் கோஷ்டி" என்ற ஒரு புதினமான பொருள் பற்றித் தனது பாடசாலை வாணி விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்கு ஒப்புக்கொண்டு விட்டார். அத்துடன் அவரது நா ராசி மேல் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்த சில பெற்றோர்கள் தமது சிறார்களுக்கு அவர் மூலம் வித்தியாரம்பம் செய்யச்சொல்லி வைத்திருந் தார்கள். மிகவும் சிரமப்பட்டு வெந்நீரால் முகம் கைகால் அலம்பிவிட்டு, சூடான பால் கோப்பியுடன் இன்னும் ஒரு பனடோலைப் போட்டுவிட்டு களிசான் புஷ்சேட்டுடன் & infl-dfrtooa) digit put t-ntri. தேகத்திலே அப்போது இருந்த மெல்லிய சூடும் வியர்வைக் கசிவும் அவரை ஆப்க்கினைப் படுத்தியது. தொண்டையை ஏதோ ஒரு பிராணி உள்ளிருந்து பிறாண்டுவது போல் அருவருப்பான வேதனை இன்னொரு புறம். கடந்த எட்டு மாதங்களாகப் பழகிவிட்ட அந்தக் கிராமத்தின் ஒழுங்கையாலே பார்த்தும் பார்க்காமலும், நடந்து போனார். பஞ்சாட்சரம். வழியிலே அவரைக்

Page 38
54
கண்டு 'உம், வாருங்கோ போய் வாருங்கோ” என்பது போல் சிலரது சம்பிரதாய தலை அசைவுக்கும், ஒரு பகுதி யினரின் வழி ஒதுங்கலுக்கும் அவரும் முகம் தளர்த்தி, அவற்றை ஆமோதிப்பது போல் நடந்து. as tail கோவிலடியில் அவரே வழமைபோல் ஒருதரம் நெஞ்சைத் தொட்டு தாயே" என்று மெளன வணக்கம் செலுத்தினார். தொண்டையில் நீர் கருக்கூட்டியது. ஒழுங்கையின் ஒரு முடக்கில், தொண்டையைக் காறி வலியோடு வெளிவந்த சளித் துப்பலை 'தூ' என்று இடது பக்க ஒரமாக வெளி யேற்றினார். அப்போது தான் யாரோ சொல்லி வைத்தது போல், அந்த முடக்கால் வலது பக்கமாகவும் எதிர் முகமாக வும் அன்னமுத்து பறட்டைத் தலையுடன் தனது அழுக்கு நீல நிறச் சேலையின் மாறாடியைப் போர்வையாகப் போட்டுக் கொண்டு வந்தாள். அவரை அவள் தாண்டிப் போனபோது தான், மாஸ்றர் அவளை இனம் கண்டு கொண்டார். ‘மனிசி பிள்ளையார் கோவில் வயல் கரைக்குக் காலைக்கடன் கழிக்கப் போயிருக்க வேண்டும்”
மாஸ்றர் தீவிரமாகச் சிந்தித்தார். வாணியும் நாரதரும் இரட்டை வீணை, நந்தி மத்தளம், நடராஜர் உடுக்கு கண்ணன் புல்லாங்குழல்.சபாஷ்!ஒர்க்கெஸ்ற்ரா பிரமாத மாக இருக்கும். அவருடைய வாணி விழாப் பேச்சும் புதிய சிந்தனையாக இருக்கப் போகின்றது. அதே வேளையில், அன்னமுத்துக் கிழவிக்கும் உடலில் சூடு ஏறியது. ‘என்னைப் பார்த்துக் காறித்துப்ப இவன் ஆர்? முந்த நாள் வந்த வரத்தான்" என்று தனக்குள் கேள்வி கேட்டபோது அவளுக்கும் தொண்டை கரகரத்தது. "எல்லாம் அவன்ரை மாமிக்காறியும், பெண்சாதிக் காறியும் ஓதிவிட்டது” என்று நினைத்துக் குமைந்தாள்.
அன்னமுத்து தனது வீட்டை அடைந்த போது, பக்கத்து வளவில் பஞ்சாட்சரம் மாஸ்றரின் மாமியார் குணுக்கு

55
(அவரது பெண் சாதியின் தாய்) மாட்டுச் சாணியை அள்ளி எரு அடைப்புக்குள் வீசுவதை, வேலிக்கு மேலால் பார்த் தாள். ஒருதரம் தொண்டையைக் காறாப்பிச்சு வலோற் காரமாக வந்தசளியோடு ஒரு மூன்றெழுத்துச் சொல்லைத் துப்பினாள். சாணியைப் போட்டுவிட்டுத் திரும்பிய குணுக்கு, தான் காறியதைக் கேட்டதாகவோ, அவள் முகத்தில் தூஷணம் பட்டதாகவோ அன்னமுத்துவுக்குத் தோன்றவில்லை. ஏமாற்றத்துடன் வேரசையளுக்கு பட்டணத்து வெள்ளாள மாப்பிளை வந்தபிறகு கண்கடை தெரியுதில்லை" என்று தனக்குள் சொல்லுவது போல் சொல்லிவிட்டுத், தனது அடுக்களைக்குள் நுழைந்தாள்' அந்த மதன கணைகளின் வேலைப்பாட்டை அவள் நன்றாக அறிவாள்.
*எங்களுக்கு கண்கடை தெரியுது, உங்களுக்குத் தான் கொதி. ஆரையெடி வேசை எண்டனி?” என்று கேவினாள் குணுக்கு. அவள் தொடர்ந்து சொன்னாள் ‘என்றை குமர் கரைசேர்ந்து விட்ட கொதி உனக்கு, கெட்டமனம். உன்ரை குமரியை பச்சை வேலிச் சந்தையிலைதான் விலை கூறவேணும், ஓ!"
*ஆருக்கெடி சொல்லுறாய்?" என்று உள்ளத்தால் ஆவி வீசக் கேட்டார் அன்னமுத்துவின் அவர் (பத்திவிநாயகம்). அவர் சிறிது முன்புதான் ஈரக் கோவணத்துடன் கிணற்றடி யில் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு இந்த உலகிற்கு இறங்கியவர் ‘எங்கடை பிள்ளையை சந்தையிலை விற்கிறம். உன்றை மேன் பட்டணத்திலை மாப்பிளை பிடிச்சவள் அதைச் சொல்லு. வெக்கங் கெட்டவளவை. அவருடைய மகள் அடுக்களையால் வெளிவந்து தகப்ப னைக் கூப்பிட்டாள். அவள் கையில் கோப்பி இருந்தது. அவர் தனது வீட்டிற்குள் போனார். குணுக்குவும தனது அடுக்களைக்குள் மறைந்தாள்.

Page 39
56
குணுக்கு பத்திவிநாயகத் தாற்தை கூடிப்பிறந்த தங்கை. பஞ்சாட்சரம் மாஸ்றர் குணுக்கு வீட்டிற்கு மேள தாளத்துடன் வருவதற்கு முன், இரு வீடுகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க சண்டை சச்சரவு இருக்க வில்லை. கிராமத்துச் சண்டைகளிலே அவர்கள் ஒரு பக்கமாகவே இருந்தனர்.
சிறிது நேரத்தில் குணுக்குவின் புருஷன் வேலும் மயிலும் வெளியே வந்து மாட்டுக் கொட்டிலடியில் நின்றபடி நிதான மாகவும் பக்குவமாகவும் பேசும் தோரணையில் வேலிக்குச் சொன்னார்: “பெண்கள் சண்டைக்கு ஆம்பிளையள் வரப் P. lng. மணிசனை நிம்மதியாக வான விடுறியள் இல்லை"
அப்போது அன்னமுத்து கோழிகளைக் கலைத்தாள். அவளைப் பார்த்ததும் வேலும் மயிலும் நிதான-பக்கு, வத்தை அடக்கிவிட்டுக் கேட்டார்: "ஆரடி, மாப்பிளை பிடிச்சது?
**என்னை என்ன கேட்கிறாய். போய்க் கேளன் உன்ரை மேளை" என்று பதிலளித்தாள் அன்னமுத்து. கொதித்தபடி *கொட்டிப்போடுவண்டி உன்ரை பல்லை” என்றுஎச்சரிக்கை விடுத்த வேலும்மயிலும் இன்னும் ஒருக்கா சொல் பார்ப்பம்” என்று சவால் விட்டார்.
அப்போது அவரிடம் சாத்திரம் கேட்பதற்காக, அவருக்கு ஏற்கனவே தெரிந்த,ஒரு வயோதிபச் சோடி வந்தனர்." ஏன் இப்போது வந்தோம்’ என்ற தடுமாற்றத்துடன் அவர்கள் படலையடியில் நின்றபோது, வேலும் மயிலும் சொன்னார்: "நீங்கள் வாருங்கோ. சும்மா இருக்கச் சண்டைக்கு, வாறாளவை. அவள் சொன்னதைக் கேட்டியளே?
வந்தவர்கள் அவர் ஏசியதைத்தான் கேட்டார்கள்: கூழுக் குள் விழுந்த பல்லியைப் பார்ப்பது போல் அவரைப் பார்த்தார்கள். "வாருங்கோ” என்று அவர்களை அழைத்து

57
வீட்டுத் திண்ணையில் உட்கார வைத்தார் வேலும் மயிலும். அவர் தனது மனச்சூடு ஆறத் தனது கதையை முதலில் சொன்னார்.
* பாருங்கோ, உங்களைப் போலைத்தான் ?@ பொருத்தம் பார்க்க என்ரை மருமகன் பகுதி வந்தினம். அவையள் கொண்டு வந்த சோடி பொருந்தவில்லை. பெட்டைக்கு பாவக்கிரகம் இல்லை. பொடியனுக்கு ஏழிலை செவ்வாய்.என்னை நம்புங்கோ. அப்ப நான் என்ரை மகளைப்பற்றி யோசிக்கவில்லை. தெரியாதே, அவையள் ஆரோ நாங்கள் ஆரோ. அவையள் பொடியன்ரை சாதகத்தை என்னட்டை தந்து விட்டுப் போய் விட்டினம் தங்கச்சிக்குப் போட்டுப் பார்த்தன். சரிவந்திட்டுது’ குணுக்கு வந்து சொன்னாள்: ‘இதெல்லாம் பக்கத்து வீட்டுக்குத் தெரியும். ஆனால் பிள்ளை டியூசன் படிக்க பட்டணம் போய்வாறது. அதை வைச்சு மாப்பிளை பிடிச்சவள் எண்டு வாய்க்கு வந்தபடி பேசுறாளவை.
*பாருங்கோ, கலியாணம் நடந்த நாட்களிலை அமளி,
இப்ப ஆறு ஏழு மாசமாய் ஒரு பேச்சும் இல்லை.
இண்டைக்கு நல்ல நாள் பெரிய நாளிலை வலுவுக்கு சண்டை துவங்கியிருக்கினம்’
事 霉 s
பஞ்சாட்சரம் மாஸ்றரின் தகப்பனுக்குச் சாதகங்கள் நூற்றுக்குத் தொண்ணுறு வீதம் பொருத்தம் என்ற வுடன் அந்தச் சம்பந்தத்தை விட விருப்பம் இல்லை. சிவன் கோவில் குருக்களும் கலியாணப் பொருத்தத்தில் எட்டு உத்தமம், இரண்டு மத்திமம், இரண்டு அதமம் என்று கூறி, செய்யலாம்” என்றார். கலியாணம் ஒப்பேறி விட்டது. பத்திவிநாயகம் தனது மனைவியுடன் கலியாண வீட்டிற்கு வந்தவர்; ஆனால் பந்தி போசனத்தில் பங்கு கொள்ளவில்லை. அறுகரிசி போட்டதுடன் சொந்த பந்தத்தை முடித்துக் கொண்டார்.

Page 40
58
‘என்னுடைய மகனுக்கு என்ன குறை? வேலும் மயிலும் ஏன் சாதி விட்டுச் சாதிபாய்ஞ்சவன்? எல்லாம் பணத்திமிர் இப்படியாக தன் மனத்திற்குள் புழுங்கினார் பத்திவிநாயகம். அவருடைய மகன் ஜீ. சீ. ஈ. பரீட்சையில் சித்தியடைந்திருந்தான். காலக்கிரமத்தில் ஒரு வேலை கிடைக்காமலா போகும்? தனது மகனைப் பற்றிச் சிந்தித்த போது, அவன் மேலும் அவருக்குக் கோபம் பொங்கித் தள்ளாமல் இல்லை. "படிச்ச பொடியன் ஏன் இப்படி கண்ட விடுகாலியளோடை சேர்ந்து ஊர் சுத்துறான், கள்ளும் குடிக்கிறானாம்.? S.
票 岑 s
பஞ்சாட்சரம் மாஸ்றர் வாணி விழாவிலே பேசியபோது தொண்டைக் கரகரப்பை மறந்தே போனார். பேசி முடிந்த உற்சாகம் கலைந்த போது வேதனை அதிகமாக இருந்தது. அதைக் கூட அவர் பொருட்படுத்த இல்லை, அவர் விழாவுக்கு வருகை தந்த பல பெரியவர்கள் மத்தியிலே இருந்தார். அவருடைய வட்டாரக் கல்வி அதிகாரி, உதவி அரசாங்க அதிபர், ஆசிரிய பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர், தனது பாடசாலை அதிபர்-இவர்கள் அனைவருமே அவரைப் பலவாறு பாராட்டினர். பஞ்சாட்சரம் மாஸ்றருக்கு ஏதோ இறகுகள் இரண்டு முளைத்தது போல் உடல் இலகு வாக இருந்தது. அப்போதுதான் அவருக்குப் பச்சை வேலிக் கிராமப் பையன் ஒருவன் மூலம் ஒரு அவசரச் செய்தி வந்தது. (குறிப்பிட்ட) பொலிஸ் ஸ்டேசனிலை அவருடைய வாக்கு மூலத்தைப் பதிவதற்கு உடனடியாக வருமாறு அந்தப் பையன் சொன்னான்.
இறகுகள் ஒடிந்த நிலையில் மாஸ்றர், ஒரு வாடகைக் கார் பிடித்து பொலிஸ் ஸ்டேசனுக்குப் போனார். பச்சை வேலிப் பையன் மூலம், போகும் வழியிலே, விஷ்யத்தை

59
ஓரளவு தெரிந்து கொண்டார். தனது வீட்டினருக்கும். பக்கத்து வீட்டு பத்திவிநாயகம் வீட்டினருக்கும் இடையே அன்று முழுதும் சண்டை நடந்திருக்கிறது. பத்தியற்றை மகன் நாகராசன் நடுவேலியைப் பிடுங்கியிருக்கிறான்; மகள் கல் வீசியிருக்கிறாள். ஒரு கல் தனது மாமியின் தலையில் பட்டுக் காயம் ஏற்பட்டிருக்கிறது. பச்சை வேலிக் கிராம ஆஸ்பத்திரியில் மருந்து கட்டப்பட்டிருக் கிறது. மாமா வேலும் மயிலும் சாஸ்திரியார் பொலிசில் முறையீடு செய்திருக்கிறார். இப்போது மற்றப் பகுதியும் தாமாகவே பொலிசுக்கு வாடகைக் காரில் போயிருக் கிறார்கள். இப்படியாக பத்திரிகைத் தலைப்புச் செய்தி களைப் போன்ற விஷயங்களைச் சேகரித்தார் அவர்.
பொலிஸ் நிலையத்தில், சம்பந்தப்பட்ட இரு குடும்பங் களுக் கிடையே உள்ள கோபதாபங்களைப் பற்றி அவருடைய வாக்கு மூலத்தை ஒரு பொலிஸ்காரர் பதிவு செய்தார். அவர் மாஸ்றருக்குச் சொன்னார்: "பாருங்கோ பஞ்சாட்சரம், பழைய கோபம் அவர்களுக்கிடையே எப்படி இருந்தாலும், இண்டைக்குச் சண்டை நீங்கள் காறித் துப்பியதில் இருந்துதான் துவங்கினதெண்டு அன்ன முத்து வாக்கு மூலம் குடுத்திருக்குது."
மாஸ்றருக்கு அப்போது ஒன்றுமே புரியவில்லை. எப்போது எந்தச் சந்தர்ப்பத்தில், எதற்கு, யார் முன்னால் துப்பிய தாக அவருக்கு நினைவு இல்லை. பொலிஸ்காரர் மாஸ்றரின் பதட்ட நிலையைப் பார்த்து விட்டுச் சொன்னார். "மாஸ்றர் வாணி விழாவிலே பேசி விட்டு வருவதாகச் சொன்னீர்கள். உங்கள் பேச்சுக்கு இருக்கிற மதிப்பு, உங்கள் துப்பலுக்கும் இருக்கு, போய் வாங்கோ, இந்த வளக்கு கோர்ட்டுக்குப் போகும்.” மாஸ்றர், தான் வாக்கு மூலம் கொடுத்த அறையில் இருந்து, அந்த பொலிஸ் நிலையத்தின் விறாந்தைக்கு வந்த

Page 41
60
போது, அவருடைய தொண்டை கரகரத்து நீர் ஊறியது. அதே வேளையில் அங்கே ஒரு வாங்கில் அன்னமுத்துவும் அவள் மகன் நாகராசனும் இருப்பதைக் கண்டார். அன்ன முத்துவைப் பார்த்த பார்வையோடு தொண்டை அரிப்பும் சேர்ந்து, அன்றைய அதி காலை நினைவுகளைப் புகைப் படமாக அவர் மனக்கண்களுக்குக் கொண்டு வந்தன. தொண்டையில் ஊறிய நீர்ச் சளியை அப்படியே விழுங்கி விட்டார் பஞ்சாட்சர மாஸ்றர்.
மல்லிகை ஒக்டோபர் 1979

கிழவனும் கிழவியும்
மிகவும் களைத்திருந்து கூட கிழவனுக்கு நித்திரை வர மறுத்தது. வீட்டில் மற்றவர்கள் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் படுத்து உறங்கினார்கள். இரண்டு நாட்களுக்கு முன் கிழவிக்கு அறிவு மயங்கியதிலிருந்து ஒருவருக்கும் மனதில் அமைதியில்லை. "சீரியஸ்' என்று தந்திகள் போவதும் உற்றார் உறவினர் வந்து அழுவது மாக வீடு சாக்களை கட்டியது. இங்கிலாந்தில் அக்கவுடன்சி படித்துக் கொண்டிருந்த அவள் இளைய மகனைத் தவிர மற்றப் பிள்ளைகள் - மூன்று ஆண்களும் ஐந்து பெண்களும்-தமது குடும்பங்களுடன் வந்திருந் தார்கள். மூத்த "பையன்” வருகிற வருடம் தமது ஐம்பத்தைந்தாவது வயதின் எல்லையைத் தொட்டு விட்டு, அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு எடுத்துவர இருந்த ஒரு தெரு ஒவசியர், கிழவி படுக்கும் அந்தப் பெரிய அறையின் மூலையில் ஒரு வெறும் பாயில் படுத்திருந்தான். சிறிது தூரத்தில் குத்து விளக்கின் தனிச்சுடர் ஒன்று அமைதி யாக மோனத் தவம் செய்தது.
கிழவன் தனது கட்டிலில் இருந்து எழுந்தபோது கட்டிலின் கால் மூட்டுக்கள் "கிறீச் சென்றன. புதிய புதிய கட்டில் களைக் கொண்டுவந்து போட்டார்களே மக்கள். கிழவன் அவற்றை விரும்பினாரா? தனது கை கால் மூட்டுக்களின் வயோதிய உளைச்சல்களை முனகல் பாஷையில் இரவிர வாகத் தெரிவிக்கும் நேரங்களில் கிழவியையும் அந்தக் கட்டிலையும் தவிர வேறு யார் கேட்டார்கள். வயக

Page 42
62
வந்தால் அந்த மாதிரித் தான் அப்பு’ என்று சொல்லு வதைத் தவிர வேறு ஏதாவது சிந்திக்க அவர்களால் முடிந்ததா? இன்று அவள் போய் விட்டாள். இனி அவருடைய அந்தரங்கக் கவலைகள் அந்தக் கட்டில் மட்டுந்தான் அனுதாபத்தோடு சினேகித அன்புடன் புரிந்து கொள்ள வேண்டும். கிழவன் அறையை விட்டு வெளியே வந்தார். தை மாதத் தின் பணி நிலவு "ஜில்" என்று உடலைத் தாக்கியது. கிழவன் அன்று அந்த கம்பளிச் சட்டையைப் போடாமலே படுத்து விட்டார்.
*உங்கடை கம்பளிச் சட்டையைப் போட்டுக் கொண்டு படுங்கோவன்; காலமையிலே பொல்லாத பணிபல்லே." இப்படிக் கரிசனயோடு ஞாபகப்படுத்துவதற்கு இனி யார் இருக்கிறார்கள்? அவள் அன்று சுட்டுப் பொசுக்கப்பட்டு விட்டாளே!
கூடத்திலும் விறாந்தையிலும் மூலைக்கு ஒருவர் இரு வராகப் போர்த்துக் கொண்டு படுத்திருந்தனர். ஐம்பத் தைந்து வருடங்களுக்கு முன் அவரும் அவளும் தொடங்கிய அந்தத் தனிக் குடும்பம் இப்போது ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி. பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் எல்லா இடங் களிலும் எங்கு பார்த்தாலும் படுத்திருக்கிறார்கள். பேரப் பிள்ளைகளின் பெயர்கள் கூட கிழவனுக்கு மறதித் தடுமாற்றம். அவர்களைப் பார்க்க, நினைக்க கிழவனின் உடலுக்கு இதயம் மெல்லிசாகச் சூடேற்றியது. கிழவன் மெல்ல விறாந்தையின் படிகளால் இறங்கி முற்றத் திற்கு வந்து கொல்லைப் பக்கமாகச் சென்றார். கிழவியைக் குளிப்பாட்ட எடுத்த சாய்மனைக் கதிரை மாதுள மரச் செடிக்கருகில் அப்படியே கிடந்தது. இப் படித்தான் இனி எல்லாம் கிடக்கும். சொல்லிச் செம்விக்க ஆள் வேணும். கிழவனின் வாய்முணுமுணுத்தது.

63
அவர் அரசாங்க சேவையில் பல வருடகாலம் வேலை செய்தபின், ஒய்வெடுத்து இருக்கலாம். ஆனால் வீட்டு நிர்வாகம் இவ்வளவு வருடங்களாக, முந்தா நாள் வரை அவள் கைகளில் தானே இருந்தது. ஆரம்பத்தில், அவள் பதினாறு வயதுப் புதுப் பெண்ணாக இருந்தபோது, தனது பத்து வருடகால வயது வித்தியாசத்தை  ைவத் துக் கொண் டு *இந்தா இப்படிச் செய்; தெரிந்ததா?’ என்று அவன் மிரட்டியதுண்டு. ஆனால் கல்யாணமாகி ஒரு வருடத்திற்குள்ளேயே கையிலே தாய் மையை அவள் ஏந்திய போது வீட்டு அலுவல்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலையில்லாமல் இருங்கள்” என்று ஒருநாள் கூறினாள். அந்த வீட்டுக் கவலையின் பெரும் பகுதியை அன்று தொடக்கம் முந்தா நாள் வரை அவள் தன்மேல் போட்டுக் கொண்டாள். கிழவனின் கண்களை நினைவு நனைத்தது. மாட்டுக் கொட்டிலிலே கறுப்பி கிழவனைக் கண்டதும் எழுந்து தலையை ஆட்டியது. நேற்றெல்லாம் கறுப்பி துடி துடித்துக் கதறிற்று. கறுப்பி கிழவியைக் கண்டால் அடங்கிவிடும். கறுப்பியின் முலைகளின் ஸ்பரிசம் கிழவிக்கு மட்டும்தான் தெரியும். அதற்கு அண்மையில் வேறு யார் போகப்போகிறார்கள்? காலையில் மாட்டுக் கொட்டி லுக்குப் பக்கத்திலே பாடை கட்டியவனை எட்டி முட்டி கறுப்பி செய்த நாடகத்தையும் செத்த வீட்டிற்கு வந்தவர் கள் விரைவில் மறக்க முடியுமா? போதிய வைக்கோல் இருக்கிறதா என்று பார்த்து விட்டுக் கிழவன் திரும்பிய போது தொண்டை புகைந்து கிழவனுக்கு இருமல் வந்தது. "காலையிலே இனி மேல் நல்ல முட்டைக் கோப்பி போட்டுக் கொள்வதற்கு நானே பழகிக் கொண்டால், மற்றவர்களை நம்பியிருக்க வேண்டிய தில்லை" என்று கிழவன் தனக்குள்ளே தனது எதிர் காலத்தைப் பற்றிப் படிப்படியாகச் சிந்தித்துக் கொண்டு. விறாந்தையின் படிகளில் ஏறினார்.

Page 43
64.
கிழவன் அறைக்கு வந்த போது குத்து விளக்கின் தீபம் குங்குமஒளிப் பொருட்டாக இருந்தது. திரியைத் தூண்டிப் பக்கத்திலிருந்த போத்தலை எடுத்து விளக்கிற்குத் தேங்காயெண்ணெயை வார்த்தபோது அவரது மூத்த மகன் குளிரில் முனகுவது போல் முனகித் திரும்பிப் படுத்தான். “என்ன தம்பி போர்க்க ஒன்றுமில்லையே?’ என்று கிழவன் கேட்ட கேள்விக்கு ஒரு பதிலும் வரவில்லை. கொடியில் கிழவியின் ஒரு ஆறுமுழ காடுவெட்டிச் சேலை இருந்தது. அதை எடுத்துத் தனது மகனின் நெஞ்சை மூடிக் குவிய லாகவே கிழவன் போட்டார். மூத்த மகன் பிறந்த பின் இந்த அறை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக அவரது வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக் கின்றன. பல மறந்து ப்ோன சம்பவங்கள். சில நிகழ்ச்சி கள் இப்போதும் நினைவிற்கு வரக்கூடியவை. ஆனால் மகன் பிறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் கல்யாணம் செய்து கொண்ட ஆரம்ப காலத்தில் நடந்த அந்த மனப் போராட்டம் அதன் வெற்றி, அதனால் வந்த வாழ்க்கை யின் முழுமை அவற்றை ஒருபோதும் கிழவன் மறக்க முடியாது. மறக்க முடியாதென்றாலும் கிழவன் அதை இது வரை காலமும் ஒருவருக்கும் சொன்னது கிடையாது. ஆமாம், அவளுக்குக் கூடச் சொன்னதில்லை, அ அவளுக்குச் சொல்லக் கூடியதா?
அந்தக் காலத்தில் அவன் எப்படியிருந்தான்? இப்போது நார்ச் சிக்கல்களாகியிருக்கும் திசைகள் விம்மிப் புடைத்துக் கட்டி கட்டியாகத் திரண்டிருந்தன. வழுக்கலாகி விட்ட தலையில் அடங்காத சுருண்ட மயிர்கள் நடுவகிடிலிருந்து சிலிர்த்து நிற்கும். உள்ளத்தின் உணர்ச்சிகளோ சூளையி லிருந்து வெளிவரும் புகை போல் காற்றடித்த பக்கம் திரும்பி மேகமாகும்.
அந்த நேரத்திலேகூட, வந்த ஒரு சூறாவளியில் அலையாது அவன் தனது உணர்ச்சியைத் திரட்டி அடக்கி

65
பதை நினைக்க கிழவனுக்கு மிகவும் சந்தோஷமா யிருந்தது. கிழவனுக்கு வேறு எந்த நிகழ்ச்சியும் இவ்வளவு ஆனந்தத்தைத் தந்ததில்லை. தனது கட்டிலில் இருந்து விரிவாகச் சிந்திக்க வேண்டும் போலிருந்தது.
岑 岑 鞠
அப்போது அவன் தனது உத்தியோக அலுவலாக ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தான். வீட்டில் ஒரு கிழமை யென்றால் வெளி ஊர்களில் ஒரு மாதம் என்ற தோரணை யில் வேலை. "கல்யாணம் செய்து புதிசு. கொஞ்சக் காலம் ஊரோடு தலைமை ஆபீஸிலேயே வேலை தாருங்கள்? என்று மனுப்போட்டுப் பல தடவை ஞாபகப் படுத்தி, மன்றாடிப் பார்த்தான். "இந்த வயதில் இப்படி யான வேலை செய்ய முடியாதென்றால் வயது வந்தவர் களுக்கா கொடுக்கச் சொல்கிறாய்? அல்ல, பிள்ளைகள் பிறந்த பின்பா நீ செய்ய ஒப்புக் கொள்வாய்” என்று அதிகாரிகள் கேட்டு அவன் வேண்டுகோளை நிராகரித்து விட்டார்கள். தலைமை அதிகாரியை நேரிலே கண்டு *எனது மனைவி ஒரு விபரமறியாதவள். வயதில் மிகவும் குறைந்தவள். போதியதுணையில்லை" என்று அழுதான். * மனைவியா? உத்தியோகமா? என்று தலைப்புத்தொனிக்க மேலதிகாரியிடமிருந்து பதில் வந்தது. அவனுக்கு மனைவி தான் பெரிது. ஆனால் அவனைக் காப்பாற்றக் கிடைத்த உத்தியோகத்தைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. ஊர் ஊராக அலைந்தான். அவன் வீடு திரும்பிய நேரங்களில் அவளுடைய அன்பு புதுப் புது வேகத்துடன் கிடைத்தது. அதில் அவன் திருப்தி கண்டான்.
ஒருநாள் அவனுக்கு விசர் பிடித்துவிட்டது. நல்ல வேளையாக அவன் தனது தலைமை ஆபீஸில் ஒரு மூலையில் சுகமில்லையென்று கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டான். அல்லாவிடில் என்ன செய்திருப்பானோ
ஒ-5

Page 44
66
அவன் கையில் அன்று தபாலுடன் வந்த ஒரு அனாமதேயக் கடிதம் கையை விறைக்கச் செய்தது. இதயம் விசர் பிடித்து நெஞ்சுக் கூட்டுக்குள் அலைந்தது.
அவன் மனைவி ஒழுக்கம் தவறினவளாம்; அவன் இல்லாத நேரங்களில் தினம் ஒருவனுடன் காதலன் காதலியாக வாழ்கிறாளாம். அவனது ஒரு உறவினன் அவளது காதலன் இன்னும் நேரங்கள், சம்பவங்கள், பேச்சுக்கள். எல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தன. அவனுக்குத் தற் கொலை செய்ய வேண்டும் போல் மூளை கலங்கியது. *சே! பெண்கள் மிகக் கெட்டவர்கள். அதிலும் இவள் மகாபாதகி. அவளுக்காக நான் எவ்வளவு தூண்டுதல் இருந்தும் எனது கற்பைக் காப்பாற்றி வருகிறேனே இதற்குத்தானா?”மூளை விவாதிக்க உணர்ச்சிகள் கொலை காரனைப் போல் சிந்திக்கத் தூண்டின.
அவள்; அவனுடைய மனைவியே அவனை ஏமாற்று கிறாளல்லவா? அவன் உத்தியோக அலுவலாக பிற ஊர் களுக்குப் போவது அவளுக்கு மிகவும் அநுகூலமாக இருந் திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் வீடு திரும்பும் போது, தன் உணர்ச்சிகளையெல்லாம் அன்பாகப் பொழிந்து நீங்கள் அருகில் இருந்தால் எனக்கு ஒன்றுமே வேண்டியதில்லை,” என்றாள். இந்தச் FSf769r வார்த்தைகள் பலருடைய வாழ்க்கையில் அர்த்தமில்லாமல் போயிருக்கலாம். ஆனால் அவனைப் பொறுத்தவரையில் அது எவ்வளவு பெரும் பொய் என்பதை இப்போது தெரிந்து கொண்டான். அந்த உணர்ச்சிகளும், அன்பும், அணைப்பும், வெறும் நடிப்புத்தான். சந்தேகம் என்ற வன்மைவிஷம் அவன் குருதியில் ஒருசிறு துளியாகக் கலந்தது.
மூலையில் எழுந்து நின்று சுவரோடு சாய்ந்தபடி சிந்தித்தவன். அன்று லீவு போட்டுவிட்டு ஆபீஸிலிருந்து வீட்டிற்குப் புறப்பட்டான். வெளியே கடும் வெய்யில்

67
காய்ந்து கொண்டிருந்தது. பார்த்த பொருட்களிலெல்லாம் சூரியக்கதிர்களின் வெக்கைச் சிதறல் கண்களைக் கொதிக்க வைத்தன. தார் ரோட்டில் கண்ணுக்கெட்டிய தூரத்திலே, நீர் தேங்கிய குட்டிக் குளம், அது வனாந்தரத்தின் கானல் நீர் போன்ற ஒரு நாடகம். கானல் நீரே தான்! கிட்டப் போனதும் அதுமறைகிறது. கானல் நீர் அழகான பொம். அதன் மறைவு மனத்திற்குத் துன்பம்; ஏமாற்றம். வாழ்க்கையில் நாம் கண்டவற்றிலும் கேட்டவற்றிலும் துன்பமான பொய்மை இருக்கலாமல்லவா? அதின் மறைவு.!
அவனால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. ஒரு பஸ் நிற்பாட்டும் இடத்தில் நின்றான். அதில் அவன் நிற்பதிற்கு ஒரு தனி மர நிழல் இருந்தது. நிழல் குளிர்மையாக இருந்தது. அவனது சிந்தனையிலும் சீதளம். மிகத் தெளிவாக பலதும் பத்தும் யோசித்துக் கொண்டிருந்தான். நமது பழம் பெரும் இலக்கியங்கள், சமயக்கோட்பாடுகள், வேதாந்த அறிவுரைகள் இவற்றில் அவனுக்குத் தனிப்பட்ட ஈடுபாடு. வயதில் மிக இளைஞனானாலும் நவீன நூல் ஆராய்ச்சியிலும் பார்க்க பழைய தத் துவங்களில் அவனுக்கு நம்பிக்கை அதிகம். துன்பம் வரும்போது சிக்கலான ஆராய்ச்சியிலும் பார்க்க மப்பான வேதாந்தம் தான் விளங்காது போனாலும் உதவிக்கு வந்திருக்கிறது.
இப்படியாக அவன் சிந்தித்துத் தனது நிலைமையை மீண்டும் ஒருமுறை ஆராய்ந்தான். வண்ணான் சொல் கேட்டுச் சீதாதேவி மேல் சந்தேகம் கொண்ட வால்மீகி ராமன் முதல் சந்தேக வலையில் சிக்குண்ட எத்தனையோ காவிய சரித்திர புருஷர்கள் அவன் மனக் கண்முன் தோன்றினார்கள். இவர்கள் கதைகள் தனக்காக எழுதப் பட்டவை என்றும் அவற்றின் நிறை குறைகளின் அடிப் படையிலே தனது வாழ்வும் மலர்கிறது என்றும் அவன் பெருமைப்பட்டான். பஸ் ஒன்று வெகுதூரத்தில் வந்து

Page 45
68
கொண்டிருந்தது. அவன் உடனடியாக வீட்டிற்குப்போக விரும்பவில்லை ஆபீஸுக்கும் திரும்பிப்போக மனமில்லை. அந்திவரையும் எங்கெல்லாமோ நடையிலே அலைந்து விட்டு திறந்த மனத்துடன் வீடு திரும்பினான். அவன் மனைவி வீட்டு வாசலில் நின்றாள். அவனின் புன் முறுவல் முற்றாக ஆமோதிக்காமலே அவள் கண்களை நோக் கினான். அங்கே களங்கமோ வேஷப்பார்வையோ இருக்க வில்லை. ஒரு வாழ்வு வாழ அவனை நாடிடும் புனிதமான பெண்மையின் பிரதிபலிப்பைத்தான் அவனால் காண முடிந்தது. சட்டைப் பையில் இருந்த அந்தக் கடிதத்தை எடுத்து, மெல்லமாகக் கசக்கி அடுக்களையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டான்.
来源 事 米
இதையெல்லாம் இப்போது அசை மீட்டபோது கிழவனுக்கு எவ்வளவு மன நிறைவாக இருந்தது. தான் வாழ்ந்த வாழ்வை தான் காப்பாற்றிய வாழ்வை மீண்டும். ஒரு நிமிடத்தில் தனது மன ஊர்தியில் சுற்றியது போல் இருந்தது. AV
கிழவனுக்குத் தனது சமய அறிவிலும், கல்வியிலும் நம் பிக்கை இருந்தது. சிறுவனாக இருந்த போதே இவற்றை நன்கு கற்று மேடைகளில் பேசி அதன் படியே நடந்ததாக சந்தர்ப்பம் கிடைத்த வேளைகளில் கிழவன் பெருமையுடன் சொல்லிக் கொள்ளத் தவறுவதில்லை. ஊர் பேர் சொல்லத்திராணி இல்லாத ஒருவரின் கடிதம் தோல்வி யடைந்து தனது குடும்ப வாழ்க்கை பூரண வெற்றி யடைந்ததற்குத் தனது கல்வியும் அறிவும் தான் காரணம் என்பது கிழவனின் முடிவு. சான்றோர்கள் அருளித் தந்த அறிவுரைகளைத் தெரியாதவர்களிடமோ கல்வியை முறை யாகக் கற்காதவர்களிடமோ இப்படியான ஒரு கடிதம் என்ன விபரீதத்தை விளைத்திருக்குமோ என்பதை நினைக்

69
கவே கிழவனின் மனம் விரும்பவில்லை. அவளைப் பற்றித் தான் மனம் சிந்தித்தது. அவள் கூட மூன்றாம் வகுப்பி லிருந்து எழுதிப் படிக்கத் தெரிந்த தும் வெளி யேறினவள் தானே! நல்ல வேளையாக அவளது அறிவுக் குறையை தனது அறிவு ஒளி நீக்கிக் குடும்ப வண்டியை அரை நூற்றாண்டு செலுத்தியதாக கிழவன் பெருமைப்பட்டுக் கொண்டார்.
ஆமாம். கிழவனுக்கு நித்திரை வர மறுத்தது. காலம் தெரியாத சில சேவல்கள் ஓரிரு வீடுகளில் கூவின. கிழவன் பழையபடி கட்டிலிலிருந்து இறங்கி ஒரு சுருட்டைப் பற்றிக் கொண்டார். குத்துவிளக்குப் பக்கத்தில் கிழவியின் ஒரு மரப்பெட்டி இருந்தது. கிழவன் அதை ஒரு நாளுமே திறந்து பார்த்தது இல்லை. அப்போது அதை திறந்து ஆராயவேண்டும் போல ஒரு ஆசை தோன்றிற்று.
பெட்டி பூட்டப்படவில்லை. காலையிலே அதிலிருந்து தான் ஒரு சேலை எடுத்து பிணத்திற்கு உடுத்தார்கள். அதன் பின்பு யார் பூட்டுவது?
கிழவி அதற்குள் நல்ல சேலை ஒன்று இரண்டு தான் வைத் திருந்தாள். மற்றதெல்லாம் பொக்கிஷங்கள்."
கிழவன் கையை வைத்து ஒவ்வொன்றாக எடுக்கப் பார்த் தார். கிழவியின் கையை அழுத்தித் துளாவி "சந்தை யாலை என்ன கொண்டு வந்தனிர்?" என்று ஒரு சில வேளைகளில் தனது மனைவி சந்தையால் வரும்போது கிழவன் கேட்டதுண்டு. அந்த நினைவில் கிழவன் பெட்டியைத் துளாவியபோது ஒருவித தாம்பத்திய அன்பைக் கண்டார். அவர்கள் இருவரின் சாதகங்கள் பிள்ளைகளின் குறிப்புப் புத்தகங்கள் காணியின் உறுதி இவ்விதமான பொக்கிஷங்கள் அங்கே இருந்தன.

Page 46
70
அடியிலே கிழவியின் கூறைச் சேலை கிடந்தது. சா? கலியாணக் கூறை, அவள் அதைக் கட்டிக் கொண்டு பெண்பிள்ளைத் தோழியோடு ஆடி அசைந்து மண வறைக்கு வந்தது கிழவனின் ஞாபகத்திற்கு வந்தது; உடல் புல்லரித்தது.
கூறைச் சேலைக்குக் கீழே ஒரு கடித உறை கிடந்தது. தான் எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்களில் இதற்கு என்ன மதிப்பு இருந்தது இப்படிக் காப்பாற்றி வைக்க?
கிழவன் பெட்டிக்குள் கிடந்த கிழவியின் கண்ணாடியையே போட்டுக் கொண்டார். இருவரின் கண்ணாடிகளையும் அவர்கள் வசதிக்கு ஏற்றபடி மாற்றிப் போட்டுக் கொள்வது வழக்கம். தபால் உறையில் ஒட்டியிருந்த தபால் தலையில் கிழவனது கலியான காலத்து மகாராணி விக்றோரியாவின் முகம் இருந்தது.
உறையிலிருந்த கடிதத்தை எடுத்துப் பிரித்து குத்துவிளக் கின் சுடருக்கு மிக அண்மையில் பிடித்தவாறு கிழவன் எழுத்தெண்ணிப் படித்தார்.
அது அவர்கள் கலியாணம் செய்த காலத்தில் அவளுக்கு யாரோ எழுதிய கடிதம். கிழவன் அதை அவசர அவசர மாக வாசிக்கப் பார்த்தார். முடியவில்லை. பின்பு தைரி யத்துடன் மெல்லமாக வாசித்தார்.
அது கிழவனைப் பற்றிய ஓர் அனாமதேயக் கடிதம். வாலிப காலத்துக் கடிதம்.
அவன் ஒழுக்கம் தவறியவனாம். வேலை செய்வதாக ஊர் ஊராகச் சென்று பெண் வைக்கிறானாம். அவளை உடனடியாக அவள் தாய்தந்தையிடம் ஒட்டி விடுவானாம் அவன் லீலைகளை விளக்க நேரங்கள், சம்பவங்கள் பேச்சுக்கள்!

7
கிழவன் கடிதத்தை வைத்துவிட்டு அப்படியே சிறிதுநேரம் இருந்து விட்டார்.
மூன்றாம் வகுப்பு மட்டும் படித்த, சான்றோர் அறிவுரை களின் ஒளியை அனுபவியாத, பதினாறு வயது நிரம்பிய, அவரது மனைவி அவன் முன்னிருந்த குத்து விளக்கின் அழகிய சுடரில் தோன்றினாள்.
ஒரு அறையை நிரப்பும் ஒரு சிறு சுடர்போல், அவள்அவள் கூட ஒருவாழ்வைக் காப்பாற்றி, பலரை வாழ வைத்தவள் தான்.
பெட்டியை மூடி விட்டுக் கிழவன் கட்டிலில் படுத்துக் கொண்டார்,
வீரகேசரி 4-12-66

Page 47
பச்சைப் பூக்கள்
ற்ேபது வருட காலமாக வேலுச்சாமிக்கு மகாக்கந்தைத் தேயிலைத் தோட்டம் ஒரு பெரிய தேசம்போல் இருந்தது. தோட்டத்துப் பெரியதுரை மூன்றரை வருடத்துக்கு ஒரு முறை இங்கிலாந்து போய் வருவதுபோல், வேலுச்சாமி அதே கால இடை வெளியில் கண்டிக்குப் போய் வந்தான். அத்தனைக்கும், மகாக்கந்தைக்கும் கண்டிக்கும் உள்ள தூரம் சுமார் ஏழு மைல்கள் தாம்; கண்டியிலிந்து பேராதனைக்கு வந்து, பின்பு மகாக்கந்தைக்குச் சிறிது ஏற்றம்.
ஆறு வருடங்களுக்கு முன் பெரியதுரை இங்கிலாந்துக்குப் போகப் பெட்டியைப் பூட்டியபோது, வேலுச்சாமியும் மூட்டையைக் கட்டி வெளியேறினான். அவனது உலகம் கொழும்பு வரை விரிந்தது.
米 事
அவனது பெற்றோரும் மனைவியும் மகளும் அந்தத் தோட்டத்திலே இறந்துபோனார்கள். அவனுடைய ஒரே ஒரு மகன் இளமையிலேயே மகாக்கந்தையை-விட்டு ஓடி விட்டான்.
*நாம் பொறந்த மண் செல்வம் விளைகிற பூமி. அதை விட்டு ஓடிவிட்டான், தறுதலை, அவன் எங்கே வாழப் போகிறான்” என்று அவனைத் திட்டிவிட்டுத் தனது தேயிலைச் செடிகளை பராமரித்தான் வேலுச் சாமி. இது

73
அந்தக் காலத்தில், அதன் பின்பு அவன் பல வருடங் கிளாகத் தன் மகனைப் பற்றி, உண்மையில் மகா க் *ந்தைக்கு வெளியிலிருக்கும் யாரைப்பற்றியுமே சிந்திக்க வில்லை,
அவனுடைய மகள் அஞ்சலையும் அவளுடைய கொழுந்து கிள்ளும் தோழிகளும் போய்க் கொண்டிருப்பார்கள்.
*போங்க புள்ளைங்க, கொழுந்துகளைப் பார்த்துக் கிள்ளுங்க. முத்திலைகளை விட்டுடுங்க” என்பான், வேலுச் சாமி.
அவர்கள் மலைகளில் ஏறுவதைப் பார்த்துக்கொண்டு அப்படியே நிற்பான். அழகிய பல வர்ண மலர்களைக் கொண்ட பூங்காவனத்தை மேலே இருந்து பார்ப்பது போல, அதே உள்ள நிறைவுடன், அவன் தனிப் பச்சைத் தேயிலைச் செடிகள் நிரம்பிக்கிடக்கும் மலைகளைக் கீழே நின்று பார்ப்பான், அவனுக்கென்ன பயித்தியமோ? அவன் அப்படி வெகுநேரம் பார்த்துக் கொண்டே ஏதோ வாய்க்குள் சொல் விக்கொள்வான்.
தலைப் பிரசவத்தின்போது அஞ்சலை, பிள்ளை பிறக்க முடியாமல் இறந்து போனாள்.
"மலையில உன்ட தோழிகளை விட்டுட்டு போயிட்டியா மவ" என்று கதறினான் வேலுச்சாமி.
சவம் போய்க் கொண்டிருந்தது.
அன்று காலை மழை பெய்திருந்ததால் நனைந்த அந்தத் *"தோழிகள்” தனது மகளுக்காக இலை இலையாக அழுததாக அவன் கற்பனை செய்தான்.
அவன் தனது வேலைகளைத் தொடர்ந்து செய்தான்; வருடங்களாக புல்லுப் பிடுங்கினான் ஸ்டோர் வேலை

Page 48
74
செய்தான்.நிரந்தரமாகக் கங்காணி வேலை கிடைத்தது.
அவனுடைய மனைவி சோலையம்மாளும் இறந்து வருடங்" கள் எத்தனையோ. அவளைப் புதைத்த இடத்தில் இப்போது தேயிலைச் செடியொன்று கொழுத்து வளர்ந்தது. அவன் அந்தச் செடியைக் கொஞ்சம் அதிக மாக நேசித்தான். அந்தச் செடியை முத்துக் கறுப்பன் கல்வாத்துப் பண்ணிக்கொண்டிருந்தான். *முத்து, வேலையை நல்லாச் செய்” என்றான் வேலுச் a TLÁl.
*செய்யாமல் என்னண்ணே” நமக்குச் சோறுபோடுகிற செடியல்லா?” என்றான் முத்து.
"ஆமா தம்பி, அது நாட்டுக்கே சோறு போடுகிற செடி” என்று உருக்கமான பதில் வந்தது.
இதற்கு இகு வருடங்களுக்கு முன் நடைபெற்ற திோட்டத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் மகாக்கந்தையும் கலந்து கொண்டது; நிர்வாகம் கண்டித்தது; ‘கண்டிசன் பேசியது” கடைசியில் நாட்டின் பொருளாதார நிலையைக் காட்டிக் கெஞ்சியது. அப்போதுதான் நமது நாடு எவ்வளவு தூரம் தேயிலைச் செல்வத்தில் தங்கியுள்ளது என்று வேலுச்சாமிக்குப் புரிந்தது. அதன்பின் தேயிலைச் செடிகளைக் கண்போல் பார்ப்பது அவன் சொந்த விஷயமல்ல; தனியே அவன் தோட்ட விவகாரமுமல்ல; தனியே அவன் கூறுவான்:
*அது இந்த நாட்டிற்கே சோறுபோடுகிற செடி”*
炸 事 家
தோட்டத்திலிருந்து ஓடிப்போன சந்தனம், வேலுச்சாமி யின் மகன், கொழும்பில் கடவுளேயென்று நல்லாக இருந்

ሃ 5
தான். அவனுக்குத் துறைமுகத்தில் கூலிவேலை. ஜிந்துப் பிட்டித் தெருவில் பிள்ளைகுட்டியோடு ஒரு சிறுவீட்டில் இருந்தான். மகாக்கந்தையில் தனது தகப்பன் வேலையில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டான் என்று அறிந்ததும், அங்கு வந்து, தகப்பனிடம் மன்னிப்புக்கேட்டுக் கெஞ்சி அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
6 போயிட்டு வர்ரேன்” என்று தனது சிக தொழிலாளரிடம் விடைபெற்றான் வேலுச்சாமி. மலைமலையாக வாழ்ந்தி, சோறுபோடும் செடிகளையும் கண் நிறையப் பார்த்துக் கொண்டு போனான்.
கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலுக்குத் தன் Gurro பிள்ளைகளைக் கூட்டிப் போகும் பின்னேரங்களில் வேலுச்சாமி அவர்களை ஒவ்வொருவராகத் தூக்கி மேலாக துறை மதிலுக்கு முகத்தைக் கா ட்டுவான். “பாட்டா, கப்பல்லே என்ன போகுது?’ என்று கேட்பான்' ஒரு பையன்.
stillai(Saunt'
**ஆம் பாட்டா"
*நம்ம நாட்டுத் தேயிலை போகுது".
தேயிலையா?*
**ஆமா ஆ”
வேலுச்சாமிக்குப் பெருமையாக இருக்கும். பிள்ளைகளை வீட்டிற்குச் சாய்க்கும்போது மகாக் கந்தையைப் பற்றிக் கதை கதையாகச் சொல்லுவான். காலத்தால் சாகாத உபகதைகளைப் போல் தேயிலைத் தோட்டத்து? வாழ்வைப் புதிய உணர்வோட்டத்தோடு விதம்விதமாகக் கூறுவான்.

Page 49
76
:மலைகள், குளிரு கம்பளம், படங்கு, லயம், பங்களா, ஸ்டோர், சாமிகோவில், தொழிலாளர்.அப்புறம் சோறு போடும் செடிகள்!
*தேயிலை மரம் பச்சையா பாட்டா ?” “Dimr”
“ “ “ Gumruhu”
G3 auguši sfar ó Ghu'Lurr6ör.
தனது மகனின் வீட்டிற்கு முன்னால் இருக்கும் குச்சு முற்றத்திலே ஒரு தேயிலைச் செடியை வளர்க்க வேண்டும் போல் இருக்கும் அவனுக்கு. அங்கே அப்போது ஒரு தனி ரோசாச்செடி இருந்தது. இரத்த சோகை நோயாளியின் உதடுகள் போல் ஓரிரு வெளிறிய பூக்களை அது அவ்வப் போது பூக்கும். சந்தனம் தினமும் அந்தியிலே அதற்கு நீர் ஊற்றுவான்.
*பாட்டா, ரோசாச் செடி நல்ல வடிவு ஏன்?"
வேலுச்சாமி பரிசாக முகச் சுழிப்பை முகத்தில் வலித்துக் காட்டுவான்.
*ம், உன்னுடைய தேயிலை மரம் இதிலும் வடிவா?”
**ஓ, பெஸ்”
வேலுச்சாமி பெருமையுடன் இளம் வட்டப் பேரப்
பிள்ளைகளுடன் இப்படிக் குஸ்திபோடுவான்.
* se
மகாக்கந்தையிலிருந்து வந்து ஆறு வருடங்களின் பின், வேலுச் சாமி தனது மூத்த பேரனை அழைத்துக்கொண்டு கண்டிக்குப் போனான்

77
**கண்டிக்குப் போப் பெரஹரா பார்த்துவிட்டு, பேராதனை யிலே பூந்தோட்டத்தையும் பெரிய தம்பிக்குக் காட்டி. விட்டு வர்றேன்" என்று தனது மகனிடம் sửaiot - . பெற்றான்.
**ஆமா, படிக்கிற பையன் பார்க்க வேண்டிய விஷயங்கள் தான்’ என்றான் சந்தனம்.
போகும் வழியிலே தனது பேரனுக்கு வேலுச்சாமி கூறினான்
**தம்பி, உனக்கு மகாக்கந்தைத் தேயிலைச் செடியைக் காட்டப்போகிறேன்.”
அவன் தொடர்ந்து விவரித்தான்: *தம்பி, உனது பாட்டன், பாட்டி. அத்தை, மாமன் எல்லோரும் வளர்த்த செடிகள். அவற்றை நீ பார்க்க வேண்டும்." பையனுக்குப் பாட்டனின் இதயப் பாஷை நன்கு விளங்கும். அவன் கேட்டான்:
**ஏன் பாட்டா, அவை நமக்குச் சோறுபோடும் செடி, களல்லவா?*
வேலுச்சாமி தனது பேரனுக்குச் சுண்டல்கடலை வாங்கிக் கொடுத்தான்.
掌” 朱 李 ,
"மகாக்க்ந்தை தேயிலைத் தோட்டம்" என்று இருந்த இடத்
தில் மகாக்கந்தை வீடமைப்புத் திட்டம்" என்ற பலகை தொங்கியது.
பேராதனைச் சர்வகலாசாலைப் பூங்காவில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் முதலியோருக்கு பங்களாக்கள் போதா

Page 50
78
மல் போகவே, சர்வகலாசாலை நிர்வாகம் மகாக்கந்தை தேயிலைத் தோட்டத்தை வாங்கி அங்கே பங்களாக்கள்
கட்டிக் கொண்டிருந்தது, வேலுச்சாமி தனது பேரனுடன் தோட்டத்தின் வழியே போய்க் கொண்டிருந்தான். தொழிலாளரின் லயங்களி ருந்த இடங்களில் பெரிய பங்களாக்கள் காணப்பட்டன. அந்த பங்களாக்களில் இருந்தவர்கள் சர்வகலாசாலை மாணவருக்கு, முக்கியமாக மாணவிகளுக்கு விடுதியளித் திருக்க வேண்டும். மாணவிகள் அசையும் பூச்சரம் போல் வந்துகொண்டிருந்தனர். கொழுந்து கிள்ளும் பெண்களை அந்தப் பாதையில் பார்த்துப் பார்த்துப் பழகிய வேலுச்சா மிக்கு, இப்போது அவ்விடம் இதற்கு முன் காணாத தேசம் போல் இருந்தது. மேலே மலைகளைப் பார்த்தான். அங்கே வேலை துரிதமாக நடந்துகொண்டிருந்தது. புதிய பங்களாக்களைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். கட்டப்பட்ட பங்களாக்களுக்குமுன் அழகிய சிறு பூந்தோட்டங்கள் இருந்தன. சில பங்களாக் களின் முற்றங்களில், அவ்விடத்து மனைவிகள் ஒன்று சேர்ந்து, அந்த நேரத்திலும் பட்மின்டன் விளையாடிக் கொண்டிருந்தனர். *பாட்டா, தேயிலைச் செடிகள் எங்கே?” என்று கேட்டான் பொல்லாத பேரன். சோறு விக்கியதுபோல், வேலுச்சாமியின் குரல்வளை மேலும் கீழும் எழுந்து தாழ்ந்தது பேச்சு வரவில்லை. தேயிலைத் தோட்டம் அழிக்கப்பட்டு விட்டது. அங்கே வேலை செய்த தொழிலாளரிற் சிலர் வேறுதோட்டத்திற்கு மாற்றப்பட்டு விட்டார்கள். சிலர் வேறு வேலை தேடிப் போய்விட்டார்களாம். வேலுச்சாமி, போர்க்களத்தில் தனது இதயத்தவரின் சட லங்களைத் தேடும் ஒருத்தரின் மனநிலையில், எங்கெல் லாமோ அலைந்தான்.

79
பையன் சந்தோஷப்பட்டான். ஒரு காலத்தில் தானும் பேராதனைப் பெரிய பாடசாலையில் படிக்க இங்கிருந்து போக வேண்டும் என்று நினைத்தான்.
வேலுச்சாமி திரும்பிப்போக எண்ணும்போது, முத துக் கறுப்பன் இப்போது இந்த பங்களாக்களின் பூந்தோட்டக் காரன் என்பதை அறிந்தான்.
வரும் வழியிலே, முத்துக்கறுப்பன் வேலை செய்வது தெரிந்தது. அவ்விடம் வேலுச்சாமியின் மனைவி சோலையம்மாள் புதைக்கப்பட்ட இடம். ஆமாம், அதே இடத்தில் நின்ற செடியைத்தான் முத்துக்கறுப்பன் பராமரித்துக் கொண்டு நின்றான். அதையாவது தனது பேரனுக்குக் காட்டலாம் என்று நினைத்தான் வேலுச்சாமி. அவனைக் கண்டதும் முத்துக்கறுப்பன் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான் **பாரு அண்ணே, உன் பெண்டாட்டி ஞாபகமாக இந்தச் செடி வளருது” என்றான்.
ஆனால்
வேலுச்சாமியின் தொண்டையில் இதுவரை விக்கிக்கிடந்த துக்கம், அவன் அந்தச் செடியைப் பார்த்ததும், அழுகை யாக வெடித்தது. முத்துவைக் கட்டி அணைத்து அழுதான். அங்கே நின்றது தேயிலைச் செடியல்ல; பூத்துச் சிரிக்கும் ஒரு ரோசாச் செடி!
- மல்லிகை 15-8-66

Page 51
ஆண்களோடு
தர்மலிங்கம் மாஸ்டர், தனது தூரத்து உறவினரும், ஒரு காலத்தில் நெருங்கிய நண்பருமான திரு. பரமகுரு வீட்டிற்கு வந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. மாஸ்டர் தயாரிக்கும் நாடகத்தில், தனது மகள் ரேணுகா நடிக்க முடியாதென்று பரமகுரு ஐயத்திற்கு இடமின்றிக் கூறி 6íl-l-Ti.
மாஸ்டரைக் கண்டதும் உடனடியாக முகத்தில் அடித்தாற். போல் அவர் அப்படிக் கூறவில்லை. மிகவும் பக்குவமாக ஒருமணிநேர சுமுகமான விளக்கத்தின் பின், மன்னிப்புக் கோரும் தோரணையில்*அதைமட்டும் கேட்காதேயுங்கோ" என்ற வேண்டுகோளுடன் முள்வேலியில் விழுந்த பட்டுச் சேலையை விலக்குவதுபோல, ரேணுகாவை எதிர்நோக்கி யிருந்த **அவமானத்திலிருந்தும் ஆபத்திலிருந்தும்” அவளை விடுவித்துவிட்டார்.
அவருக்குத் தனது சாமர்த்தியமான பேச்சிலும் சொல் திறனிலும் மிகுந்த நம்பிக்கை உண்டு. சோதிட ரீதியாகப் பேசும்போது தனது வாக்கு ஸ்தானம் பலம் பெற்றிருப்ப தாகக் கூறுவார். “நான் நிர்வாக சேவையில் இருந்த போது, எத்தனை விசாரணைகளின்போது எதிராளிகளை யும் சாட்சிகளையும் மடக்கியிருக்கிறேன்" என்று சான்றுகள் காட்டிப் பெருமைப்பட்டுக்கொள்வார். அர சாங்கசேவையில் மூன்றாம்தரக் கிளார்க்காகச் சேர்ந்த அவர், நிர்வாக ஏணியில் படிப்படியாகவும் தாவியும் ஏறி,

81
ஒய்வெடுக்கும்போது ஒரு இலாகாவின் அதிகாரியாக இருந்ததற்கு அவருடைய இந்த நாவன்மை பெருமளவு உதவியதை மறுக்கமுடியாது.
பரவச பக்திமணி பரமகுரு (இது ஆலையங்காடு ஆதீனம் அவருக்கு பொன்னாடையோடு போர்த்த பட்டம்1. அரச சேவையில் இருந்து ஒய்ந்த பின்பும், இந்தச் சொற்சாலம் அவருக்குத் தொடர்ந்து கைகொடுத்திருக்கின்றது. அவர் இப்போது சமய நெறி சார்ந்த பல ஸ்தாபனங்களின் தலைவர், தர்மகர்த்தா, தனாதிகாரி, இத்தியாதி. இந்தத் தகைமைகளை அவர் வீட்டின் முன்விறாந்தையில் பல வர்ணக் கோலங்களில் பிரேம்போட்டுத் தொங்திய பாராட்டு, வரவேற்பு பிரியா விடைப் பத்திரங்கள் கிட்ட அழைத்துக் கூறின. அத்துடன் உள் வாசல்களுக்கும் யன்னல்களுக்கும் மேலே கோவணம் தரித்த பட்டினத்தார் தொடக்கம் உள்ளங்கால்நீள காவி மேல் அங்கிசகித சாயிபாபாவரை அவரின் மனத்தைத் தொட்டவர்கள்.
தர்மலிங்கம்மாஸ்டர் பரமகுரு வீட்டிற்கு வந்தபோது காலை ஏழரை மணி. உள்ளறை ஒன்றிலிருந்து சாம்பி ராணி, ஊதுபத்தி நறுமணத்தோடு, தேவாரத்தின் இவ்விய ஓசை வீசியது. ரேணுகாதான் பாடிக்கொண் டிருந்தாள். அவள் அப்பாவும், அம்மாவும் அவள் பாடுவதைப் பக்தியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் போலும்.
அவள் பாடினால் எவ்வளவு நேரமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அலுப்புத்தட்டாது.
அவருடைய நாடகத்தில் அவள் பாட்டுச் சொல்லிக்
கொடுக்கும் கலியாணமாகாத மூதாட்டியாக நடிக்க
வேண்டும். இருபதுவயது ரேணுகாவை ஐம்பதுவயது
ஒ-6

Page 52
82
அம்மையாராக்க நல்ல மேக்கப் போடவேண்டிவரும். அந்த மூதாட்டியார் மேல், தாரம் இழந்த ஒரு பேராசிரியர் ஒருவித ‘அன்பு"கொள்கிறார். அவர் ஒரு இசைப் பித்தன். பேராசிரியராக தர்மலிங்கம் DT esňo Gir நடிப்பார் அவருடையதுதான் மூலக்கதை, வசனம், டைரக்ஷன்.
மணி எட்டரை ஆகியும் பாட்டு முடிவடைந்தும் ஒருவரும் விறாந்தைக்கு வருவதாக இல்லை. தர்மலிங்கம் tion 6) ti தனியாக அங்கே இருந்தார். ஒரு பொமிரேனியன் குட்டி நாய் அவ்வப்போது வந்து அவர் கால்களில் உரசிப்போகும். அவரை விறாந்தைக்கு அழைத்து வந்து உட்கார வைத்த அந்த வீட்டுக் கார் டிரைவர் வெளிமுற்றத்தில் காரைக் கழுவிக்கொண்டு நின்றான்.
மாஸ்டர் எழுந்து சென்று அவனைக்கேட்டார், *தம்பி ஐயா வர நேரமாகுமோ??
*"சாப்பிடுகினம் போலை. வந்திடுவார்." என்று கூறி விட்டு அவன் காரைத்துடைத்தான்.
*வெளியாலை போகப் போறாரோ..?? என்று கேட்டார் மாஸ்டர், “இல்லை. சின்னம்மாதான் வீணை படிக்கப் போறநேரம்? என்றான் டிரைவர்.
ஒரு கோவிலின் சிற்பம் நிறைந்த ஒரு தூண். அந்தத் தூணின் முன்னால் இருந்தவாறு அவரது மூதாட்டியார், வீணை மீட்டிக்கொண்டிருக்கிறார், ஆகா! கோவில் சிலைகள் ஒவ்வொன்றிற்கும் ஏககாலத்தில் கான அபி ஷேகமும் கீத ஆராதனையும் நடக்கின்றதோ? அந்த நேரத்தில் பேராசிரியர் தன்னை மறந்த நிலையில் அம்மையார் முன்வந்து நிற்கிறார்.இப்படி ஒரு புதிய ஒன் மாஸ்டரின் சிந்தனையில் கருக்கொள்ள, அவர் அடிமேல் அடிவைத்து வந்து மெய்மறந்தி நிலையில் ւյ6ծէքաւյգ, விறாந்தையில் இருந்த கதிரையில் உட்கார்ந்தார்.

83
இறிது நேரத்தின் பின் பரமகுரு அவ்விடத்திற்குச் சிரித்துக் கொண்டுவர, மாஸ்டர் எழுந்து அவரைக் கைகூப்பி வணங்க, பெரியவர் ‘இருங்கோ மாஸ்டர்’ என்று கூறி மரியாதை செய்தார். சந்திப்பின் முகவுரையாகப் பழைய நட்பின் பலதும்பத்தும் பேசிய பின், நாடக அறிமுகம் நடந்தது. தர்மலிங்கம் மாஸ்டர் நாடகக் கதையைச் சுருக்க மாக மிக உற்சாகத்துடன் பரமகுருவுக்குச் சொல்லியும், சில வசனங்களைப் பேசியும், தன்னை மீறிய நிலையில் மெல்லிய நடிப்பு நடித்தும் தெரிவித்தார். ஒடும் றயிலில், பிச்சைவேண்டி, யாரும் கேட்டுக்கொள்ளாமலே, குருவிக் குரலில் பாடியும் அபிநயம் காட்டியும் நம்மை மகிழ்விப் பதாக நினைக்கும் ஒரு சிறுமியைப் பார்க்கும் நிலையில் மாஸ்டரைப் பார்த்தும் பார்க்காதவர் போல் இருந்தார் பரமகுரு. இந்தக்காலத்து நாடகங்கள் சமூக நன்னடைக்கு ஏற்றவையாக இருக்க முடியாதென்பது அவருடைய முன் (plg., G.
மாஸ்டர்சொன்னார்: “பாருங்கோ, நாடக ஒத்திகைகள் எனது வீட்டிலேயே நடைபெறும். என்னுடைய மனைவி இதற்கெல்லாம் ஒத்துழைப்பு தருவா. வேண்டுமானால் இங்கேயே வைக்கலாம்; அது உங்களுக்குச் சிரமம்.”*
தூரத்தில் இருந்து புதினப் பத்திரிகை படிப்பது போல் இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பரமகுருவின் மனைவிக்கு, ரேணுகாவை நாடகத்திற்கு ஒப்பந்தம் செய்ய மாஸ்டர் வந்திருக்கிறார் என்பது இப்போது முழுமையாகப் புரிந்தது. எழுந்து வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
போருங்கோ அம்மா.இந்தி நாடகத்தை நான் எழுதத் தொடங்கியபோது உங்கள் மகளை எனது மனைவி ஞாபக முட்டினா. பின்பு அவளை மனத்தில் வைத்து மிகுதியை எழுதி முடித்தேன்” என்றார் மாஸ்டர்.

Page 53
84
போதிய முன்னெச்சரிக்கையாக இருக்க விரும்பி அவசர மாகத் தொடர்ந்து விளக்கினார்: "பாருங்கோ, இந்தக் கதையிலே காதல் கீதல் இல்லை. ஒருவிதமான சைக்கோலொஜிக்கல் அன்புதான் ஊடுருவிச் செல்கின்றது. ஒரு கலியாணமாகாத மூதாட்டியாரை அவரது சங்கீத மேதாவிலாசத்திற்காகத் தாரமிழந்த ஒரு பேராசிரியர் காதலிக்கிறார். ரேணுகாதான் அந்த மூதாட்டியார்: நான் பேராசிரியர் பாத்திரம்.”
பரமகுருவும் அவர் மனைவியும் ஏககாலத்தில் கைகொட்டு வதுபோல் சிரித்தனர். மாஸ்டர் தனது நாக்கை நறுக்காத குறையாகக் கெஞ்சினார்: "உண்மையில் இது நீங்கள் நினைக்கிற காதல் இல்லை.நான் சொன்னது தவறு. இது ஒருவிதமான ஆத்மார்த்த அன்பு திேவீகத் தொடர்பு; உன்னத உறவு.” மாஸ்டர் உணர்ச்சிவசப்பட்டு விட்டதை ஊகித்த பரமகுரு இடைமறித்தார் ‘காதல் புனிதமானது; அதில் தவறில்லை மாஸ்டர். கடவுள் மீதும் காதல் கொள்ளலாம்.”
பரமகுருவைத் தரைக்கு இறக்க விரும்பி, அவர் மனைவி சொன்னாள்: "இந்தக் காலத்திலை பொடியள் கீதல் அல்லோ செய்துகள்.” ஒரு சீரியஸ் சம்பாஷணைக்கு இது நல்ல முடிவு. எல்லோரும் சிரித்தார்கள்.
அந்த நேரம் ரேணுகா அங்கே வந்துசேர்ந்தாள். வரும் போதே 'டிரைவர்” என்ற அதிகார அழைப்போடு வந்தாள்.அவளைக் கண்டதும் **உன்னுடைய விஷயமாகத் தான் வந்திருக்கிறேன்!” என்று தர்மலிங்கம் மாஸ்டர் ஆரம்பிக்கும்போதே தாம் அவள்மேல் ஒரு பார்வையை வீசினாள். கண்சிமிட்டலா, கண்டிப்பா, எச்சரிக்கையா என்று அந்தப் பார்வையை ஆராய மாஸ்டருக்கு நேரம் கிடைக்கவில்லை. "அந்தோணிமுத்து” என்று பரமகுரு

85
டிரைவரை அழைத்து ஆணையிட்டார்: "பிள்ளையைக் கூட்டிப்போ ,நேரமாச்சு.”*
"அன்றணி, வீணையை எடுத்து வை என்று டிரை வருக்குக் கூறிவிட்டு ரேணுகா, மாஸ்டர் பக்கம் திரும்பிச் சொன்னாள்; "மாஸ்டர், எனக்கு எல்லாம்கேட்டுது” தொடர்ந்து ஒருவிதசெல்லமான கொஞ்சல் குரலில் சொல் லியபடி காருக்கு ஓடினாள். "ஐயோ! எனக்கு நடிக்கத் தெரியாது!"
மாஸ்டர் ஏதோ கூற வாய் திறந்தபோது கார்க் கதவு சாத் தப்படும் ஓசை கேட்டது.
சென்றவருடம் ரேணுகா படித்த கொன்வென்றில், ஒரு ஆங்கில நாடக விழாவிலே அவள் ஜூலியஸ் ஸிஸராக நடித்தாள். அதைப் பார்த்த தர்மலிங்கம் மாஸ்டர், அவள் நடிப்பைப் பாராட்டி பரமகுருவுக்கு ஒரு ‹ጫtፉቓtb எழுதினார். "இவளா தனக்கு நடிக்கத் தெரியாது' என்று கூறுகிறாள்?
இதைப்பற்றித்தான் மாஸ்டர் சிந்திக்கிறார் என்பதை ஊகித்துக்கொண்ட பரமகுரு கூறினார்: “பாருங்கோ பெண்கள் பாடசாலையிலே, எல்லாரும் பெண்பிள்ளைகள். பெண்கள் நடிக்கும் நாடகத்திலை நடிப்பது ஒன்று ஆண் களோடு நடிப்பது வேறு விஷயம்.”
தாய் அணை கட்டினாள்: ‘'இப்ப எல்லாம் பெட்டையள் நடிக்குதுகள்தான். ஆனால் எங்களுக்கு விருப்பமில்லை. ஒரே பிள்ளை, பிறத்தியார் கதைகட்ட ஏன் வைப்பான்."
தகப்பன் தொடர்ந்தார்: "நீங்கள் கேட்கும்போது மறுக்க மாட்டன். அவளுக்கு ஒரு கலியாண பேச்சுக்கால் இருக்கு. போனமுறை பரீட்சையில் ஒரு *எஸ்" தான் எடுத்திருக் கிறாள். படிப்பை நிறுத்தி ஒரு இடத்தில் விடப்போறன்"

Page 54
86
மேலும், தாய் கூறினாள்: "அந்தப்பகுதி, அவள் நாடகத் திலை நடிப்பதை விரும்பமாட்டினம். பொடியன் இங்கிலாந் திலை படிக்கிறான். எங்களைப் போலை ஒழுக்கம் பார்க்கிற ஆட்கள். பிள்ளை பரதநாட்டியம் பழகுறதையே நிற்பாட் டச்சொல்லி எழுதியிருக்கிறான். மேடையிலை ஏறி ஆடப் படாதாம்."
இதேவேளையில் அவர்கள் கார் பெளத்தலோக மாவத்தை யால் போய்க்கொண்டிருந்தது. "நடிப்பு பிரமாதம்!” என்று சொன்னான் டிரைவர் அந்தோணிமுத்து. பின் சீற்றில் இருந்த ரேணுகா சொன்னாள்: "நீர் நினைச்சிருப் பீர், நான் இன்றைக்கு வரமாட்டேன் என்று. இன்று வீணை வகுப்பு இல்லைத்தானே.” அதற்கு அவன் சிரிக்க அவள் தனது சுட்டுவிரலால் அவன் முதுகில் குத்தினாள். அவன் கேட்டான்: ‘குஞ்சு, இன்றைக்கு எங்கே 6urrCGarribPoo
வீரகேசரி 25-10-80

பார்த்தால் தெரியும்
1938-ம் வருடம் மே மாதம் கடைசித் திங்கள். காலை எட்டுமணி, கினிகத்தேனை-நாவலப்பிடடி ரோட்டில் யாழ்ப்பாணத்துப் பொன்னுத்துரை வாத்தியாரின் சைக் கிள் சக்கரங்கள் வெகு வேகமாக உருண்டன. ஆயிரக் கணக்கான தமிழரின் காலச்சக்கரம் தாறுமாறாகச் சுழன்ற அந்தப் பொல்லாத நாளில், வழக்கம்போல் umTLசாலைக்குப் போய்க்கொண்டிருந்த இந்த ஆசிரியரை சுமார் பத்துச் சிங்கள முரடர்கள் விட்டுத் துரத்தினர். கற்களையும் சொற்களையும் அவர்மேல் வீசி அவர் உடலையும் உள்ளத்தையும் புண்படுத்தினர். ஒரு கல் பொன்னுத்துரையின் வலது கணைக்காலில் படவே அவர் சைக்கிளிலிருந்து தவறிக் கீழே விழுந்தார். அவருடைய புத்தகங்களும் டிபன் பெட்டியும் நாலாபக்கமும் சிதறின. கத்தி, கோடரி, தீப்பந்தம் எல்லாம் கொண்டுவந்த இன வெறியர்கள் அவரை அணுகுமுன்,"இங்கே வாங்கமாஸ்டர்; நம்ம வீட்டுக்குப் போகலாம். ஒடிவாங்க" என்ற கீச்சிட்ட குரல் வந்த பக்கமாக நொண்டி ஓடினார் ஆசிரியர். சரஸ்வதி எஸ்டேட் ரோட்டில் புத்தகங்களுடன் வந்து கொண்டிருந்த சக்திவேலின் அழைப்புத்தான் அது. சக்தி வேல் பொன்னுத்துரையின் மாணவன். மூன்றாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தான்.
ஆசிரியரையும் மாணவனையும் தேயிலைத் தோட்டத்தின் ரோட்டு வழியே பின் தொடர்ந்தனர் முரடர்கள். ஆனால்

Page 55
88
தோட்டத்திலே வேலை செய்துகொண்டிருந்த தொழி லாளர்களின் தடிகளையும் கவ்வாத்துக் கத்திகளையும் எதிர்க்க முடியாமல் திரும்பி விட்டனர்.
வாத்தியார் பொன்னுத்துரை லயனில் சக்தி வேலின் வீட்டுக்குள் குனிந்து நுழைந்தார். சக்தி வேலுக்கு சந்தோஷம் எல்லை கடந்தது. பெருமை தாங்க முடிய வில்லை. அவன் அறிய அந்த வீட்டுக்கு வந்த பெரிய மனிதர் பொன்னுத்துரை வாத்தியார்தான். எஸ்டேட் சுப்றின்டன், அவன் அப்பா சேர்ந்திருந்த, தோட்டத் தொழிலாளர் யூனியன் தலைவர்கள், எஸ்டேட் சுகாதார வைத்திய அதிகாரி எல்லோரும் வந்திருக்கிறார்கள். ஆனால் லயனுக்கு ஐம்பது யாருக்கு அப்பால் நின்று கொண்டே *ஏ மாரிமுத்து, ஏய் திருவாயி’ என்று அவன் அப்பாவை அல்லது அம்மாவை அழைத்து ஏதாவது சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஒரே ஒரு அறையுள்ள அந்த வீடல்லவா ஐந்து சீவன்கள் வசிக்கும் அவனுடைய மாளிகை. அங்கே இப்படி ஒரு பெரிய விருந்தாளியும் படிப்பாளியும் வந்தது இதுதான் முதல் நாள். கடவுள் தான் வாத்தியார் ரூபத்தில் வந்தாரா அல்லது வாத்தியார் வரவேண்டிய இச்சந்தர்ப்பத்தை உண்டாக்கியதுதான் கடவுளா என்று சிறியவனான சக்தி வேலால் நிர்ணயிக்க முடியவில்லை.
*கோவிச்சுக்காதேங்க. நம்ம வீட்டில் தாற்காலி இல்லேங்க. இந்தப் பாயிலை உட்காருங்க" என்று தரையில் கிடந்த ஒரு கிழிந்த பாயைக் காட்டினான் சக்தி. அதில் ஒரு மூலையில் தங்கப் பாவை போன்ற ஒரு பெண் குழந்தை நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. ‘இது என் தங்கச்சி கறுப்பாயி’ என்று அறிமுகப் படுத்தினான் சக்தி. அப்போது நிர்வாணமாக கையில் சிறு தடியுடன் வந்த ஓர் ஐந்து வயது நிரம்பாத பையன் அவங்களை நான் ஓட ஓட அடிச்சேன். தடிப்பயங்க” என்று வீரம் பேசினான்.

89
மாஸ்டர் இவன் என் தம்பி சுப்பு. இவன் யாருக்குமே பயமில்லை. வீட்டிலே ஒரே புரளி. * என்று அறிமுகம் செய்து விவரித்த சக்திவேலை அரைகுறையாக நிறுத்தி "ஆமா, நான் தான் கட்டபாண்டிய வீரபொம்மன்” என்று தன் நெஞ்சில் தட்டினான் இளையவன். மூச்சு மேலும் கீழும் வாங்கியவாறு சிறுவன் பேசினதைக் கேட்க பொன்னுத்துரைக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் அவன் பக்கத்தில் இருக்கும்போது தனது உயிருக்கும் மானத் துக்கும் ஆபத்து இனி இல்லை என்ற ஒரு விரிக்க முடியாத தெம்பு அவர் மனதில் குடிகொண்டது.
சக்திவேல் ஒரு மூலையில் அடுக்கியிருந்த இரண்டு ட்ரங்க் பெட்டிகளைக் கிளறியவாறு பாருங்க வாத்தியார் உங்க காலுக்குக் கட்ட கிளிஞ்ச துணியில்லை. நம்ம லயனுக்கு ஒரு மருந்துப் பெட்டி வைச்சா நல்லது" என்று சொன்னான். அப்போது தான் தனது வலது காலிலிருந்து கசிந்த இரத்தமும் ஏற்பட்ட வேதனையும் வாத்தி யாருக்குத் தெரிந்தது. வேண்டாம் சக்தி என்னிடம் கைக்குட்டை உண்டு என்று அவர் ஒரு கைக்குட்டையைக் கொடுக்க, சக்தி அதை மடித்துக் கடடினான்.
பொன்னுத்துரை அந்த அறையை ஆழம்பார்த்துக் கொண் டிருந்தார். வீட்டுச் சுவரிலும் கதவிலும் பிள்ளையார் முருகன், மாரியம்மன் முதலிய தெய்வங்களினதும் கட்ட பொம்மன், பாரதியார், ராஜாஜி போன்ற மகான்களி னதும், சினிமா நட்சத்திரங்களினதும் படங்கள் ஒட்டப் பட்டிருந்தன. இதிலிருந்து பக்தி, வீரம், தியாகம், அறிவு கலை இவற்றிற்கு அந்த வீட்டில் இருந்த மதிப்பை ஒரு -வாறு அளந்து கொண்டார் பொன்னுத்துரை ஒரு மூலையில் வாசிகசாலை" என்று சுண்ணாம்பால் எழுதப் பட்ட ஒரு பெட்டி மீது சில புதினப் பத்திரிகைகளும் இரண்டு மூன்று புத்தகங்களும் இருந்தன. வாத்தியாரின் கவனம் பெட்டிமேல் இருந்ததைக் கண்ட கட்டபொம்மன்

Page 56
90
என்னும் சுப்பு வாசிகசாலையைத் தூக்கி வந்து அவர்முன் வைத்தான். அதில் அட்டையில்லாத மாரியம்மன் தாலாட்டும், பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையும், ஒளவையார் படப் பாட்டுப் புத்தகமும் தமிழ்ப் புதினப் பத்திரிகைகளின் சில மிகப் பழைய பிரதிகளும் கிடந்தன. பத்திரிகைகளில் இருந்து கத்தரிக்கப்பட்ட படங்கள் தான் வர்ணம் தீட்டப்பட்டு வீட்டை அலங்கரித்தன, சக்தி மாரியம்மன் தாலாட்டு புத்தகத்தை எடுத்துப்பாட சுப்பு ஒரு சிறு காவடியை எங்கிருந்தோ தூக்கி வந்து தோழில் வைத்து ஆடினான். அந்த ஆடலின் அழகைச் சொன்னால் விளங்காது; பார்த்தால் தான் தெரியும்.
இதெல்லாம் ஒரு எட்டு வயதுப் பையன் சின்னஞ்சிறு பாட சாலை ஒன்றில் மூன்றாம் வகுப்புவரை படித்ததால் வந்த விளைவு. ‘இவனைப்போல் எஸ்டேட் பிள்ளைகள் அனை வருமே படித்தால்?" என்று யோசித்த பொன்னுத் துரையின் உடம்பு புல்லரித்தது. அவருக்குண்டான ஆனந்தத்தையும் அதிசயத்தையும் சொல்லுவது எப்படி? படகில் இருந்து தவறி விழந்தவன் காப்பாற்றப்படும் போது அவன் கையில் முத்துச் சிப்பி இருந்தால் அவன் மனம் எப்படி இருக்கும்? தீரா தென்று கூறப்பட்ட வியாதி யுள்ளவன தன் உயிரை மாய்க்க நஞ்சென்று குடித்த திராவகம் அவன் வியாதியையே குணப்படுத்தினால் இவர்கள் நிலையில் பொன்னுத்துரை இருந்தார். அவர் உள்ள ததில் ஊற்றெடுத்துப் பெருகிய ஆனந்த வெள்ளம் கண்களுடாக வெளிவந்தது கண்ணிர்த் திரை வெளிக்காட்சியை மறைக்க அவர் மனக் கண்களுக்கு ஒரு வருடத் திற்கு முன் தன் பாடசாலையில் நடந்த ஒரு காட்சி நொடிப் பொழுதில் தோன்றி மறைந்தது.
本 冰 e
மத்திய மாகாண வைத்தியப் பகுதியினர் சுகாதார வார விழாவையிட்டு மாணவர்களிடையே பேச்சுப் போட்டி

9
ஒன்றை ஏற்படுத்தியிருந்தனர். நாவலப்பிட்டியில் நடை பெறவிருக்கும் கடைசி நாட் கொண்டாட்டத்தில் பங்கு பற்ற ஒவ்வொரு பாடசாலையும் மிகச் சிறந்த ஒரு மாண வனை அல்லது மாணவியை அனுப்ப வேண்டும் என்பது நிபந்தனை. பொன்னுத்துரை படிப்பிக்கும் பாடசாலையில் மிகச் சிறந்த மாணவன் சக்திவேல் தான் என்பது அனை வரும் ஒப்புக்கொண்ட உண்மை, சக்திவேலின் மூளை முனையும் நாவன்மையும் சுகாதாரப் பேச்சுப் போட்டியில் முதற் பரிசைப்பெற மட்டுமல்ல, போதிய உதவி கிடைக்கு மானால் ஒரு காலத்தில் நோபால் பரிசையே அடையக் கூடியவன் என்பது பொன்னுத்துரை அறிந்ததுதான். ஆனால் பொன்னுத்துரையின் அக்காளின் மகன் சுந்தர ராசாவும் சக்திவேலின் வகுப்பில்தான் படித்து வந்தான்* சுந்தரராசாவை மனிதனாக்கி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பு வதாக அவர்தன் அக்காளிடம் சொல்லி அவனை அழைத்து வந்திருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் முதற்படியாக சுந்தரராசாவை பேச்சுப் போட்டிக்கு அனுப்ப யோசித்தார். தனது கண்காணிப்பிலே தனது மருமகன் முதற்பரிசை அடையலாம் என்று நம்பினார். *சக்தி எஸ்டேட் GoLuaLu 67. பேச்சுப் போட்டியில் பரிசு கிடைப்பதால் அவனுக்குப்பிரமாதமாக ஒன்றும் வந்து குவிந்துவிடமாட்டாது. வயது வந்ததும் தோட்டத்திலே கூலி வேலைசெய்யப் போறவன் தானே”இப்படியாகத் தன் மனதைச் சமாதானம் செய்து கொண்டார் பொன்னுத் துரை. வேறு யாராவது விசாரித்தால் "சக்திக்கு பிரசா உரிமை கிடையாது. ஆகையால் போட்டியில் பங்கு கொள்ளமுடியாது பாவம்" என்று பொய் சொல்லி மழுப்பினார். இதைக் கேட்ட சக்திவேலும் அவன் அப்பாவிடம் "எனக்கு பெரிசா உரிமை கிடையாதாம். அதாலெ போட்டிக்கு போகமுடியாது என்று வாத்தியார் சொன்னார். ஏனப்பா, நமக்கு பெரிசா இல்லாது போனாலும் இப்படி சிறிசா உரிமை கூடக் கிடையாதா” என்று கேட்டான்.

Page 57
92
போட்டியில் சுந்தரராசாவுக்குப் பரிசு கிடைக்க வில்லை; வேறு ஒரு பாடசாலை மாணவனுக்குத் தான் பரிசு. அத்துடன் வெற்றியடைந்த மாணவனை வெகுவாகப் புகழ்ந்த ஒர் அரசாங்க அதிகாரி அவனைத் தானே படிப் பிப்பதாக வாக்களித்தார். அன்று பொன்னுத்துரையின் மனம் மிகவும் வேதனை அடைந்தது. “பரிசு பெற்ற பையனை விட எங்கள் சக்தி எவ்வளவோ வல்லவன்; அவன் வந்திருந்தால் இந்தப் புகழையும், பரிசையும், பண உதவியையும் அவனல்லவா அடைந்திருப்பான்’ என்று நினைத்து அவர் உருகினார்.
岑 事 e
'ஏன் மாஸ்டர் அழுகிறீங்க. கால் நோகுதா’ என்று சக்தி கேட்க பொன்னுத்துரையின் யோசனை கலைந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டார். ‘இல்லை சக்தி "என் கண்ணே, என் காவின் புண் நோக வில்லை. மனப் புண்ணைத்தான் நோக விட்டுட்டேன்; என் உயிரை நீ இன்று காப்பாற்றினாய். ஆனால் நான் அன்று. வேண்டாம் பழைய கதை. அது எங்கள் பொல்லாத காலம். சக்தியை அணைத்துக்கொண்டு பொன்னுத்துரை தொடர்ந்து உருக்கமாகப் பேசினார்: "சக்தி, அடுத்த வருடப் பேச்சுப் போட்டியில் முதற் பரிசைப் பெறப் போறவன் நீ தானடா. இல்லை மாஸ்டர் அடுத்த மாசத்தில் இருந்து நான் ஸ்கூல் விட்டுடுறேன். எங்க அப்பா தோட்டத்திலே வேலை செய்யச் சொன்னாங்க” என்றான் சக்தி.
“இல்லை நீ படிக்கவேண்டும். நான் உன் அப்பாவிடம் சொல்லிவிடுகிறேன்.இனி உன்னை படிப்பிக்கும் பொறுப்பு என்னுடையது. நீ நாவலப்பிட்டியில் கதிரேசன் காலேஜில் படிக்கப் போகிறாய். அதன் பின்பு பேராதனை சர்வகலா

93
சாலைக்கே போப் பட்டங்கள் பெறப் போகிறாய்” என்று தன் ஆசையைத் தெரிவித்தார் பொன்னுத்துரை.
'நாவலப்பிட்டி பெரிய ஸ்கூலில் நான் படிக்கிறதா. உண்மைதானா மாஸ்டர்" என்று இந்த சந்தோஷச் செய்தியைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவன் அப்பா அம்மாவுக்குச் சொல்லத் துள்ளி ஓடினான் சக்திவேல், சுப்புவும் கூவா' என்று சத்தம் போட்டுக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்தான். இந்தச் சத்தத் திலே திடுக்கிட்டு விழித்த குழந்தை ஆசிரியரைத் தன் வட்டக் கருவிழிகளால் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தது. அந்தக் குமிண் சிரிப்பில் வாத்தியார் பொன்னுத்துரை நல்லதோர் எதிர்காலத்தைக் கண்டார்.
கதை, 1960

Page 58
ஷ"க்ரன்
*ரணி, இன்று அந்தியில் எனது நண்பர் ஒருவரின் வீட்டிற்குப் போகிறோம். அவர்கள் வீட்டில் ஒரு பூரீலங்காப் பெண் பிள்ளை வேலைக்கு வந்திருக்கின்ருள். பெயர் நல்லா. சோ! உனக்கு ஒரு சினேகிதி” என்று எனது எஜமான் டாக்டர் அப்தல்லா ஆங்கிலத்தில் கூறினார். அவர் காட்டிய உற்சாகத்தை நானும் புன்னகையினால் அங்கீகரித்தேன். நல்லா! தமிழ்ப் பெயர் மாதிரித் தோன் றிற்று. எனக்கு அதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
நான் அவர்களுடன் அரபிப்பாணும் ஹோமோசும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எனது எஜமானி மடாம் ஷாடியா என்னைக் கேட்டா: "நல்லாவை பூரீலங்காவில் உனக்குத் தெரியுமா? " இல்லை" என்றேன் நான். *நல்லா என்ற பெயரையே நான் கேள்விப்பட்டது இல்லை. நல்லம்மா போன்ற பெயராக இருக்கலாம். இதைக் கேட்டுக் கொண்டிருந்த எஜமான் பக்கத்திலிருந்த டெலிபோனை எட்டி, எண்களைச் சுழற்றினார். சமஹ்ஹபா" என்று வரவேற்புத் தெரிவித்து அரபியில் பேசிவிட்டுச் சொன்னார்: "அந்தப் பெண்ணின் முழுப்பெயர் நல்லம் மாதான்." “தெரியுமா?’ என்று மீண்டும் கேட்டா ஷாடியா. *லா? இல்லை என்று சொன்னேன்.
ஆகா! ஜோர்தான் தேசத்திலே, தமிழில் பேசுவதற்கு ஒரு சினேகிதி கிடைத்துவிட்டாள். மகிழ்ச்சியில் எனக்குப்

95
பாண் விக்கியது. தேநீர் உறிஞ்சினேன் அந்தப் பிள்ளை இருக்கும் வீட்டின் டெலிபோன் நம்பரைக்கேட்டு, எஜமானும் மடா மும் வேலைக்குப் போன பின்பு அவளோடு தமிழில் பேச வேண்டும் என்ற ஆவல் துடித்தது. ஆனால் என்னை அடக்கிக் கொண்டேன். இப்போது அளவுக்கு மிஞ்சிய உற்சாகத்தை இவர்களுக்குக் காட்டக் கூடாது நாளை தொடக்கம் எந்த நாளும் எவ்வளவோ நேரம் டெலிபோன் மூலம் அவளுடன் பேசலாம்தானே : தமிழில் பாடலாம்தானே பாடச் சொல்லிக் கேட்கலாம் தானே!
தினமும் காலையில் 8-30 க் கெல்லாம் எஜமானும் மடா மும் தங்கள் வேலைகளுக்குப் போய் விடுவார்கள். எஜமான் அல்பவர் வைத்தியசாலையில் குழந்தை வைத்திய டாக்டர்.மடாம் தனியாகப் பல்வைத்திய கிளினிக் வைத் திருந்தார். அவர்கள் போனபின், பிற்பகல் 6 மணி வரை வீட்டில் நானும் அவர்களின் மூன்று வயதுப் பெண் குழந்தை ஆலியாவும்தான். சில வேளைகளில் 2 மணியி லிருந்து 4 மணி வரை மடாம் வந்துபோவார்.
ஆலியா படுத்திருந்தாள். நித்திரை. ஊ, என்ன அரபிய அழகு அவளைப் பராமரிப்பது தான் எனது முக்கிய வேலை. அதற்சாகத்தான் எனக்கு மாதம் 50 டினார் தருகிறார்கள். நேற்று அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது. நான் போன மாதம் அனுப்பிய 40 டினாருக்கு ஊரில் 2400 ரூபா கொடுத்தார்களாம். எனது தம்பியும் தங்கையும் தொடர்ந்து பாடசாலை போவார்கள். என்னைப்போல், வகுப்பில் கெட்டிக்காரியாக இருந்தும், ஆறாம் வகுப்போடு பாடசாலையை விட்டு வேலைக்குப் போக வேண்டிய கவலை இருக்காது. அப்பா மாதாமாதம் சேமிப்பு வங்கி

Page 59
96
யில் ஆயிரத்துக்குமேல் போடுகிறாராம். ஆயிரத்துக்கு மேல்! நான் மனத்திற்குள்.வாய் விட்டுச் சிரிக்கிறேன்.
இரண்டு வருடங்களுக்கு முன் பேராதனையில் ஒவசியர் கந்தப்பு வீட்டில் நான் வேலை செய்தபோது, எனக்கு அவர்கள் தந்த மாதச் சம்பளம் 15 ரூபாவை 20 ஆகக் கூட்டும்படி அப்பா கேட்டபோது, அவர்கள் அப்பாவை என்ன என்ன மாதிரி ஏசினார்கள்! எனக்குத் தீனி போட மாதம் 200 ரூபா வேண்டுமாம்; அவர்கள் வீட்டுச் சாப் பாட்டிலே கொழுத்துப் போனேனாம்; அன்று அவர்கள் வீட்டை விட்டு எங்கள் தோட்டத்திற்குத் திரும்பினேன். நான் அப்படி அவருடன் வெளியேறியது அப்பாவுக்குக் கோபம். அட்டன் போகும் பஸ் வண்டிக்காக நாங்கள் நின்றபோது சினத்தார்: அவங்க ஏசிட்டுப் போறாங்க, அதற்காக நீ என்னோட வரணுமா? தோட்டத்தில் உனக்கு இப்போ வேலை இருக்கா? நம்ம கஷ்டம் உனக்குத் தெரியுமா? இன்னும் எவ்வளவோ பிரச்சினைகளை வைத் துக் கேள்விகள் கேட்டார். விடை வேண்டாத ஏச்சுக்கள்,
*ரணி” ஆலியா எழுந்து அழைத்தாள். ‘த்தாலி? என்றேன்; வந்தாள். "பித்தக் ஹலிப்?’ கேட்டேன்; சலா? என்றாள். அவள் பால் குடிக்க விரும்புவதில்லை. ஆலியா வோடு பேசிப் பேசி நான் ஓரளவு அரபி பொறுக்கி விட்டேன். நாம்-ஆம், லா-இல்லை, மஹ்ஹபாவணக்கம், குவெய்ஸ்-நன்று, ஷ"க்ரன்-நன்றி.
போன வருடம் நான் ஜோர்தான் வந்த ஆரம்ப காலத்தில், எனக்குத் தெரிந்த சில ஆங்கிலச் சொற்களை வைத்தே முன்னும் பின்னுமாகச் சொல்லியும், ஊமையாகக் கையசைப்பை உபயோகித்தும், புன்னகையைப் புன்னகை யால் வெட்டியும் காலம் தள்ளினேன். பின்பு அரபிச் சொற்களை உபயோகிக்கத் தொடங்கினேன். மடாம் ஷாடியாவுக்கு ஆங்கிலம் சுமாராகத்தான் தெரியும். ஆகை

97
யால் என்னுடன் அரபியில் அதிகம் பேசத் தொடங்கினா. நான் அரபியில் ஏதாவது சொன்னால் "குவெய்ஸ்" என்று பாராட்டுவா. எனக்கு மொழிகள் இலகுவாக வரும் என நினைக்கிறேன்.
நான் அட்டன் பாடசாலையில் படித்தபோது தமிழ்ப் பாடத்தில் மிகவும் கெட்டிக்காரி என்று பெயர் வாங்கி யவள் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதக்கூடியவள் என்றும், தோட்டக்காட்டு உச்சரிப்பு இல்லாமல் தமிழ் பேசும் தோட்டப்பிள்ளை என்றும் யாழ்ப்பாணத்து ஆசிரியர் என்னை அறிமுகப்படுத்துவார். ஆனால் அதே ஆசிரியர் தனது மைத்துனரான கந்திப்பு ஒவசியருக்கு என்னை வீட்டு வேலைக்காரியாக அப்பாவுடன் பேசி அனுப்பியதை நினைக்க ஆச்சரியமாக இருந்தது. ஆசிரி யரின் தம்பி அட்டன் நகரில் பலசரக்குக் கடை வைத்திருந் தார். அப்பா அந்தக் கடையில் கடன்பட்டவர். ஆகவே, ஆசிரியர், கடை முதலாளி, ஒவசியர் ஆகிய இனத்தவரின் முக்கோணச் சிபார்சுக்கு எதிராக அப்பா நியாயம் பேச முடியவில்லைப் போலும், " என்ன புள்ள, நீ படிச்சு உத்தி யோகமா பார்க்கப் போறாய்?" என்று சொல்லி ஒவசியர் வீட்டில் விட்டுவிட்டார். ஆனால், அப்பா அன்று வீடு திரும்பியபோது அவர் கண்கள் கலங்கிவிட்டன. "ராணியை உங்க பிள்ளைபோலக் கருதி வளருங்கம்மா. போய் வரட்டுமா?’ என்று ஒவசியர் ஐயாவின் மனைவி அம்மாவிடம் விடைபெற்றபோது அப்பா பெரிதாக
அழுதார்.
அப்பா போனதும் சிறிது நேரத்தில் எனது பெயரை மாற்றினார்கள். காரணம் கந்தப்பு ஐயாவின் மகளின் பெயரும் ராணிதான்.
ஒவசியர் அம்மா கேட்டா, "மெய்யே! உனக்கு ராணி தானே சொந்தப் பேர்?
ஒம7

Page 60
9 8
"ஆம்" என்றேன்.
அப்போது அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஒரு சர்வ கலாசாலைப் பேராசிரியரின் மனைவிக்கு ஒவசியர் அம்மா ஒரு தனிசான ஏளனத்துடன் சொன்னா: "இந்தக் காலத் திலை இதுகள்தான் நாகரிகமான பேர்களை வைக்குதுகள்."
பேராசிரியரின் மனைவி என்னைக் கேட்டா ‘உன்ரை அம்மாவின் பேர் என்ன?”
*ஆராயி’ என்றேன்.
*அப்ப, ஆராயி என்று கூப்பிடுங்கோ" என்று ஆலோசனை கூறினா அந்த அம்மா.
வேண்டாமுங்க" என்று கெஞ்சினேன் நான்.
வேறு பெயர் வையுங்கோ" கடைசியாக ராணித் தங்கச்சி யின் புத்திப்படி என்னை "மெனிக்கா" என்று அழைக்கத் தீர்மானித்தார்கள். எனக்கு முன் இருந்த வேலைக் காரியின் பெயர் மெனிக்காவாம்!
அந்த வீட்டு ராணிக்கு என்னிலும் பார்க்க இரண்டு வயது அதிகம். ஆனால், 'தங்கச்சி” என்றே அவளை அழைக்கும் படி எனக்குச் சொன்னார்கள். அப்படியே அம்மா அழைப்பா. அவள் அப்பாவும் அண்ணாவும் "ராணி? என்பார்கள். நானோ எல்லோருக்கும் மெனிக்கா? தான். அந்த வீட்டில் கைதியாக இருந்த ஒரு பச்சைக்கிளி உட்பட
அந்த வீடு எனக்குப் பொல்லாததாக இருந்தது. எனக்கு என்று ஒரு உயிர் உண்டு, உடல் உண்டு, எனக்கும் பசி தூக்கம் எடுக்கும். மாத சுகவீனம் வரும், சிறு சிறு விருப் பங்கள், ஆசைகள் மனத்தைக் கிளறும் என்று யாரும் கருது வதாக இல்லை. ராணித்தங்கச்சி ஓரளவு தனது வயதுக் கேற்ப என்னுடன் தோழமை கொண்டாலும், அது

99.
ஒவசியர் அம்மாவால் முறியடிக்கப்படும். ஒரு வெள்ளிக் கிழமை, ராணித் தங்கச்சிக்கு மாத சுகவீனம் இருந்ததால் அவளை என்னோடு விட்டுவிட்டு அனைவரும் கண்டிப் பிள்ளையார் கோவிலுக்குப் போய்விட்டார்கள். நாங்கள் இருவரும் தாயம் விளையாடினோம். கோவிலில் இருந்து வந்ததும், தரையில் கீறப்பட்ட தாயக் கோட்டைப் பார்த்து விட்டு, அம்மா ராணியை ஏசினா; வேலைக் காரியை யாரிக்கு வைச்சு விளையாடினால், தலைக்கு மேலே ஏறுவாள்” என்ற பேச்சு மட்டும் எனது ஞாபகத்தில் இருக்கிறது.
எனது கஷ்டகாலம், அடுத்த நாளே அம்மா குறிகூறியது பலித்துவிட்டதாம்! நான் குசினியில் எல்லோருக்கும் தேநீர் தயாரித்தேன். தங்கச்சி பக்கத்தில் இருந்த ஒரு அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தா. தங்கச்சி, வந்து டீ குடியுங்கோ’ என்று அவளை அழைத்தேன். இது அம்மாவுக்குக் கேட்டுவிட்டது. குசினிக்குப் பாய்ந்து வந்து ‘ஏண்டி, கொண்டுபோய்க் குடுத்தா குறைஞ்சு போவியா? கொழுத்திட்டாய். பிள்ளை படிச்சுக் கொண் டிருக்கிறது தெரியவில்லையா? யாரிக்கு வைச்சால் இப்டித்தான். மூதேசி" அவவுக்கு மூச்சு மேலும் கீழும் இழுத்தது. எனக்குச் சொத்தையில் நகம் படக் கிள்ளுக் கிடைத்தது.
அதை நினைத்தால் எனக்கு இப்போதும் வலது சொத்தை யில் நோகிறது. ஆனால், நான் இப்போது எதை எண்ணிச் சிரிக்கிறேன்? எனக்குக் கந்தப்பு ஒவசியர் வீட்டு வாழ்க்கையையும், இந்த ஜோர்தான் தேசத்தில் டாக்டர் அப்தல்லா தம்பதிகளோடு எனது சீவியத்தையும் மாறி நோக்கும் போது இப்படித் தொடர்பில்லாதது போல் சிந்திக்கவும் காரணமில்லாதபோது சிரிக்கவும், அவசிய மில்லாதபோது அழவும் தோன்றும். இன்று எனது

Page 61
100
தேசத்துத் தமிழ்ப் பெண் பிள்ளையைப் பார்த்துப் பேசப் போகும் சந்தோஷத்தில் கொஞ்சம் அதிகமாகச் சிந்திக் கிறேன்; சிரிக்கிறேன். அதிகமாக வயிற்றில் பசிக்கவும் செய்கிறதே! குளிர்ப் பெட்டியில் கையை விட்டு ஒரு முட்டையை எடுத்துப் பொரித்துச் சாப்பிடுகிறேன். திராட்சைப் பழங்களை ஒவ்வொன்றாக வாய்க்குள் எறிகிறேன். மேசை மீது வெண்கலத் தாம்பாளத்தில் குவிந்திருக்கும் வட்ட வட்ட சொக்லற்களை ஆவியா வுக்கும் கொடுத்து ரசிக்கிறேன். அவளுடன் தரையில் விரிக்கப்பட்ட கம்பளத்தில் இருந்து பார்க்கின்றேன்; டி வியில் ஒரு கொழுமையான அழகி அடித் தொண்டை யில் பாடுகிறாள், மனசைக் குலுக்கும் அரபி ஓசையில்.
நான் ஜோர்தான் வருவது எனது அம்மாவுக்கு விருப்பம் இல்லை அப்பா கொழும்பு போனபோது வெளிநாடு களுக்குப் பணிப்பெண்களை அனுப்பும் ஒரு ஏஜன்சிக் காரரைச் சந்தித்தார். பணத்தை எங்கேயோ மாறி நான் ஜோர்தான் வருவதற்கு ஒழுங்கு செய்துவிட்டார். வீடு திரும்பியபோது அவர் கொஞ்சம் அதிகமாகச் சாராயம் குடித்திருந்தார். ஆராயி கேட்டுதா? நம்ம ராணி வடிவான பிள்ளையென்று'சொன்னேன். ஏஜென்சிக்காரன் எடுத்திட்டான்; அந்தத் தேசத்திலே வடிவான பிள்ளை களைத்தான் வீட்டிலை வைத்திருக்க விரும்புறாங்களாம்."
இதைக் கேட்டதும் அம்மா "ஐயோ’ என்று தலையில் கைவைத்து அப்படியே இருந்திட்டா. இரண்டு நாட் களுக்கு முன்புதான் பத்திரிகையில் வந்த செய்தி ஒன்று அம்மாவின் காதுக்கு எட்டியது மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு-பெயர் ஞாபகம் இல்லை- போன ஒரு சிங்கள யுவதி தறகொலை செய்து உடல் இங்கே பெட்டியில் வந்த தாம். அவள் வேலை செய்த வீட்டு எஜமான் ஒழுக்கம் தவறியதுதான் தற்கொலைக்குக்காரணம் என்றது செய்தி. நான் அம்மாவைத் தேற்றினேன். 'அம்மா எந்த ஊரிலும்

0.
நல்லவங்களும் கெட் டவங்களும் இருப்பாங்க. நாம நல்லாக இருக்கணும். என்மேல நம்பிக்கை வச்சிரு. நான் தவறமாட்டன். உசிரைத் தற்கொலை செய்யவும் மாட்டன். நான் கூறியதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இருந்தது. மீண்டும் ஒவசியர் வீட்டுக்கதைதான்.
ஒவசியர் அம்மாவின் தம்பி ஒருவர், யாழ்ப்பாணத்தில் வாடகைக் கார் ஒட்டுபவர், பேராதனை வந்திருந்தார். வீட்டில் அனைவரையும், என்னையும் கூட ஒரு இந்திப் படம் பார்க்க அழைத்துக் கண்டிக்குச் சென்றார். ஒவசியர் குடும்பத்தினரோ இப்படிப் போகும்போது என்னை வீட்டிற்குள் பூட்டிப்போட்டுப் போவார்கள். இவரின் நல்ல மனதை மெச்சினேன். ஆனால், அன்று இரவு நடுச்சாமத்தில் நான் படுத்திருந்த குசினிக் கதவைத் திறக்க முயன்றார். எழுந்து யன்னல் ஊடாகப் பார்த்தேன். ஒரு டொஃபி தந்தார். இரண்டு, மூன்று. 'திற” என்றார். நான் திறக்கவில்லை. குடிநீர் கூட வெளியிலே சாப்பாட்டு மேசைமீது கூசாவில் இருந்தது; இரவு மிஞ்சிய சாப்பாடும் இருந்தது. தீப்பெட்டி ஒன்று அவரிடம் உண்டு. அதற்கு மேல் என்ன பசி? தாகம்? நெருப்பு? அடுத்த நாள் அதி காலையிலேயே அவர் தனது ஊருக்குப் போய்விட்டார்.
எனது தெரியாத்தனம்! இந்தச் சம்பவத்தைச் சொந்தத் தாய்க்குக் கூறுவதுபோல் நான் சமையல் செய்யும்போது ஒவசியர் அம்மாவுக்குக் கூறினேன். கேட்டதும் எனது சொத்தையில் கிள்ளினா என்ன விண்ணானக் கதை எல்லாம் சொல்லப் பழகி விட்டாய்." அன்று எடுத்ததற் கெல்லாம் அடி கிடைத்தது. அந்தியில் வழக்கமாக வரும் பேராசிரியரின் மனைவி தோன்றினா. அவவுக்குத் தேநீர் கொடுத்துவிட்டு நான் திரும்பும்போது, எனது காதில் குத்தும்படியாக அம்மா சொன்னா வேலைக் கெண்டு வருகுதுகள் வந்து கொஞ்சக் காலத்திலை மாப்பிளை பிடிக்கத் திரியுதுகள். இதைக் கேட்ட நான் தற்கொலை

Page 62
92
செய்யவில்லை. மத்திய கிழக்கிலா சாகப்போகிறேன்? இருந்தும், எனது அம்மாவுக்கு நான் இதை எல்லாம் கூறவில்லை.
ஜோர்தான் விமான நிலையத்தில் ஏஜன்சியின் பிரதிநிதி யாக இலங்கையர் நஜீப்பும் எனது எஜமானாகப் போகிற டாக்டர் அப்தல்லாவும் வந்திருந்தனர். டாக்டர் அப்தல் லாவைப் பார்த்ததும் இந்திப் படத்தின் கதாநாயகன் என் கண்களில் தோன்றினான்-அந்த நிறம், அந்த அழகு, அதே இளமை. படத்தில் அவன் கதாநாயகன் மட்டு மல்ல; நாகரிகமான , முறையில் பல பெண்களைக் கற்பழிக்கும் நாயகன் கூட. இனிப் படம் பார்த்த இரவு அந்த மனிதன் டொஃபி போட்டது, போதாததற்கு விமான நிலையத்திலும் வெளியேயும் பனி மழைக் குளிர், *ஏன் வந்தேன்" என்றிருந்தது.
ஆனால், கடந்த ஒரு வருடமாக இந்தக் கேள்வியை என் மனம் கேட்டதில்லை. அப்படிக் கேட்டிருந்தாலும் "எனது பூர்வ புண்ணியம்" என்பதுதான் பதிலாக இருக்கும்! இந்த வீட்டில் என்னைத் தங்களில் ஒருத்தியாகவே கணிக் கிறார்கள். அவர்களுக்கு நான் ஒரு சகோதரி.
ஆறு மாதங்களுக்கு முன்பு, ஒருநாள் நஜீப் டெலிபோனில் பேசினார். ஏஜென்சி மூலம் வந்த பணிப் பெண்கள் (ஹவுஸ் மெயிட்ஸ்) இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை லீவு எடுத்து வெளியே வரலாம் என்றார். தனது வீட்டிற்கு இப்படியானவர்கள் வந்து உணவு அருந்தி, மகிழ்ந்து, ஊர்பார்த்து ஷொப்பிங் செய்து அந்தியில் திரும்புவார்களாம். நான் அங்கே சென்று இலங்கைப் பெண்களைச் சந்திக்க விரும்பினேன்.
அடுத்த வெள்ளிக்கிழமையே திரு. நஜீப் வந்து தனது வீட்டிற்குக் காரில் அழைத்தும் சென்றார். அவர் வீட்டில், என்னைப் போல் லீவு எடுத்து வந்த ஏழு எட்டுப் பணிப்

; 163
*பெண்கள் பைலா சங்கீதத்திற்கு ஆண்களோடு கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்கள் மது குடித்திருந்தனர். சிகரட் புகைத்தனர். எனக்கு இவர் களைப் பார்க்க வெறுப்பாக இருந்தது. ஒரு பெண் ஆட்டத்தோடு இசைவாக வந்து என்னை இழுத்து அவர்கள் மத்தியில் விட்டாள்; என் முன்னால் கைகொட்டி ஆடினாள். சில நொடிகளில் நான் அவளிடம் இருந்து தப்பி எனது இடத்திற்கு வந்து உட்கார்ந்தேன். அந்தப் “பெண் மீண்டும் என்னைத் தீண்டுவதற்கு முன் நல்ல வேளையாக, ஒரு மூலையில் டி குடித்துக் கொண்டிருந்த ஒரு அம்மா எழுந்து வந்து எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்தா. அவவின் பெயர் மிஸஸ் ஜயசூரியா. இலங் கையில் பல வருட காலமாக சமூக சேவை இலாகாவில் டைப்பிஸ்ட்டாக இருந்திருக்கிறா. அதே வேலை இங்கே நல்ல சம்பளத்துடன் கிடைக்கும் என்று நம்பி வந்தவ, அது கிடையாது போகவே தற்போது பணிப் பெண்ணா கவே ஒரு வீட்டில் இருக்கிறா, மாதம் 30 டினார் சம்பளத் தில். அவவிற்கும் இந்தப் பெண்களின் கும்மாளம் பிடிக்க வில்லை.
அவ சொன்னா: "மருதானையில் தெருவிலே சுற்றித்
திரிந்த இந்தப் பெண்கள் இங்கே வந்து எங்கள் நாட்டின் பெயரையே அழுக்காக்குகிறார்கள். அம்மான் நகர வீதி
களிலே இவர்களுக்கு நலல பெயர் இல்லை. டாக்சிக் காரன்களுக்கு பூரீலங்கா வாசிகள் என்றால் இவர்கள்தான். இனிமேல் நான் இந்த வீட்டிற்கு வரப்போவதில்லை."
நான் மெளனமாக இருந்தேன். தொடர்ந்து சொன்னா: *நீ நல்ல பிள்ளைபோல் தோன்றுகிறாய். இங்கே வந்து கெட்டுப் போகாதே."
அன்றைக்குப் பின்பு நான் அங்கே போகவில்லை. நஜீப் அவ்வப்போது போனில் அழைத்து சுகம் விசாரிப்பார். திருமதி. ஜயசூரியா, சுகமில்லாது ஊரில் இருந்த அவரது

Page 63
04
கணவன் இறந்து போனதால், இலங்கை போய் விட்டா" என்று அவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமைகளில், எனது வீட்டுக்காரர் உல்லாசப் பிரயாணம் போவார்கள். பெரும்பாலும் 10, 15 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் சவுக்கு மரத் தோப்புகளுக்குக் காரில் சென்று, தரையில் கம்பளம் விரித்து உட்கார்ந்து பேசி மகிழ்வார்கள். பக்கத்தில் இறைச்சித் துண்டுகளை அடுப்பில் “பார்பக்கியூ”வதக்கல் செய்து நான் கொடுப்பேன்: அரபிப் பாணுடன் உண்போம்.
சில வெள்ளிக்கிழமை உல்லாசம் நீண்ட பயணமாகும்.
இப்படியாக, ஜோர்தான் தேசத்து புராதன இடங்களான பெற்ரா, ஜெராஷ் போன்றவற்றிற்கு அவர்களுடன் நான்
போயிருக்கிறேன். போகும் சில வழிகள் நாலாபக்கமும் வனாந்தரம்; அங்கே ஒட்டகங்கள்-தனியாக, சோடிகளாக,
மந்தைகளாக, முதல் முறையாக நான் கழுதையைப் பார்த். ததும் அங்கேதான். "ராணி, டொங்கி” என்று மடாம் எனக்குக் காட்டினா. நான் சிரித்தேன். ஒவசியர் அம்மா
என்னைக் கழுதை, எடி கழுதை” என்று ஏசுவது ஞாபகம் வந்தது, சிரிக்கிறேன்; கண்களிலோ நீர்த்திரை.
p s
அன்று அந்தியில் எஜமானும் மடாமும் நேரத்துடனேயே வீட்டிற்கு வந்துவிட்டார்கள். எஜமான் எப்போதும் வெளியே போகும் போது முழுமையாக சூட் உடுப்பார். நண்பர் வீட்டிற்குப் போவதற்குத் தலையில் அரபியர்கள் அணியும் கஃபாயாவும் போட்டுக் கொண்டார். டி. வியில் வரும் அரபிய கதாநாயகனைப் போல் மிகவும் கம்பீரமாக இருந்தார். மடாம் அவருக்கேற்ற கதாநாயகி; மஞ்சள் பட்டுடையில் சந்திரஜோதியாகத் தோன்றினா. ஆவியா வுக்கு நான் உடுப்பு மாட்டினேன். அவள் ஒரு மேல்நாட்டு:

105
வாக்கி-டோக்கி பொம்மைதான்! என்னை அன்று ஜீன்ஸ்
போடச் சொன்னார்கள். மடாம் எனது கழுத்தில் ஒடிக் கலோன் தடவினா. எனது பின்ன லிலே தன்னுடைய ஹெயர் கிளிப் ஒன்றைப் பொருத்தினா. நானும் அழகாக இருப்பது, எனது தலைமயிர் சுருளாக இருப்பது அவர் களுக்குச் சந்தோஷம். எஜமான் சொன்னார்: நண்பர் வீட்டு நல்லா உன்னைப் போல் இல்லை; அவள் நல்ல கறுப்பு நிறம்.”
மேர்சிலஸ் பென்ஸ் காரில் எஜமானும் மடாமும் முன்னால் இருக்க, நானும் ஆலியாவும் பின் சீற்றில் இருந்தோம். ஜோர்தானின் தலைநகரமான அம்மான் ஏழு மலைகளில் (ஜெபல்களில்) இருப்பதாக எஜமான் கூறுவார். எங்கள் வீடு ஒரு ஜெபலிலும், நண்பர் வீடு தூரத்திலே வேறு ஒரு ஜெபலிலும் இருந்தன. கார் மலை களிலும் பள்ளத்தாக்குகளிலும் ஏறி இறங்கும் போது, அந்தக் காட்சிகள், குறிப்பாக இரவில், ஒரு நேரம் வான வெளி போலவும் இன்னொரு நேரம் கனவு போலவும் இருக்கும்.
எனது எஜமானின் நண்பர் வசித்த வீடு எங்கள் வீட்டிலும் சிறியது. அவர் வைத்தியசாலையில் எஜமானின் உதவி யாளர்; புதிதாகத் திருமணமானவர் எங்கள் காரைக் கண்டதும் கேற்றுக்கே வந்துவிட்டார் நண்பர். எஜமான் இறங்கியதும் கட்டி அனைத்து அவரின் இரு கன்னங் களிலும் முத்தமிட்டு வரவேற்றார். அவரின் பின்னால் பார்வைக்கு இனிப்பூட்டும் அவரது இளம் மனைவி; அவர் களைத் தொடர்ந்து வந்தது-கறுப்பாக, தடிப்பாக, அதே மேலெழுந்த முன் இரு பற்களாக - என் கண்களை நம்பு வதற்குச் சிறிது நேரம் எடுக்கவைத்த 'தங்கச்சி’-ஒவசியர் ஐயாவின் மகள் ராணி எனது ஆச்சரியத்தை மட்டுப்படுத் தனேன்.

Page 64
06
நாங்கள், இரு பணிப்பெண்களும் அந்த வீட்டுக் குசினியில் பேசி, எங்கள் செய்திகளைச் சுருக்கமாகப் பரிமாறினோம். நான் அவவை "அக்கா’ என்று அழைத்தேன். அவவினு டைய பிறப்புப் பதிவுப் பெயர் நல்லம்மாவாம்; ராணி என்பது சும்மா வீட்டுச் செல்லப் பெயர்தான். ஒவசியர் ஐயா மாரடைப்பினால் இறந்து ஆறு மாதமாகிறது. அவர் இறப்பதற்கு முன் எத்தனையோ தொல்லைகளாம். அவருக்கு எதிராகப் பெட்டிசன், அதனால் வேலை இழப்பு, இப்படியாக, ஆறுதலாகக் கூறுகிறேன் என்று சொன்னா. அவவின் அண்ணா ஒரு கத்தோலிக்கப் பறங்கியைக் காதல் கலியாணம் செய்ததால், வீட்டில் இருந்து கலைக்கப்பட்டு ஜேர்மனி போய் விட்டாராம். அக்கா இங்கே வந்து மூன்று மாதம் ஆகிறது. மாதம் முப்பது டினார் கொடுக் இறார்கள். எங்கள் ஊர்ப் பணத்தில் 1800 ரூபா என்றா. அங்கே யாழ்ப்பாணத்தில் ஒரு புடவைக் கடையில் சில மாதங்கள், மாதம் 300 ரூபா சம்பளத்தில் வேலை செய் தாவாம்.
"ராணி" என்று மடாம் அழைத்தா. ‘வாறன்’ என்று அக்காவிற்குக் கூறிவிட்டு அவர்கள் பேசிக் கொண்டிருந்த ஹோலுக்குப் போனேன். ஆலியா தாயுடன் இருந்து புரளிபண்ணினாள். என்னை அவளுடன் அந்த செற்றியில் இருக்கச் சொன்னார்கள். "ரணி, ரணி” என்று எனது மோவாயைத் தடவித் தான் கொண்டுவந்த படப்புத்தகத் தைப் புரட்டினாள் ஆலியா. எஜமானின் நண்பரின் மனைவி பல வகையான இனிப்புப் பண்டங்களைப் பரி மாறினா. ஷ"க்ரன்’ என்று நன்றி தெரிவித்து ஒவ்வொன் றையும் எடுத்துக் கொண்டேன். நல்லம்மா அக்கா தேநீர் கொண்டுவந்து பரிமாறினா. எனக்கும் ஒரு கோப்பைத் தேநீர். "ஷ"க்ரன்’..மீண்டும் ஒரு பழைய நினைவு.

எமது சிறந்த இலக்கிய வெளியீடுகள்
நிரஞ்சனா
நினைவுகள் அழிவதில்லை
க. கைலாசபதி
திறனாய்வுப் பிரச்சினைகள் இலக்கியமும் திறனாய்வும் ஒப்பியல் இலக்கியம்
கா. சிவத்தம்பி
இலக்கியத்தில் முற்போக்கு வாதம் தமிழ்ச் சமூகமும் அதன் சினிமாவும்
கோ. கேசவன்
மண்ணும் மனித உறவுகளும் இயக்கமும் இலக்கியப் போக்குகளும்
பறம்பைச் செல்வன்
புல்லுருவிகள்
மிருணாள் சென்
சினிமா ஒரு பார்வை
ஜார்ஜ் தாம்ஸன்
மனித சமூக சாரம்
தணிகைச் செல்வன்
நண்பர்களைப் போல் நடிப்பவர்கள்
12
20
20
0
00
00
00
00
O)
00
0 0
00
00
OO
90.
50・

Page 65


Page 66


Page 67