கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறப்பு மலர் ஆய்வரங்கு 2006 சங்க இலக்கியமும் சமூகமும்

Page 1
மேம்ப மண்
Ölü öGUğüU
 
 

| 2006 ம் முற்றும்
| fjhusfly Gylfishi jollääbli

Page 2


Page 3
фpiіцш ஆய்வரங்கு
'''[ii (i litill|[|]
சமய விவகார அமைச்சு - இந்தசமய,கல
විශේෂ සගරාව සමිමන්නුණnt5 2006
"සාග කාල දෙමළ සාහිත්‍ය හා සමාජය'
ආගමික කටයුතු අමාත්‍යයංශය
හින්දු ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව

லர்
20O6
ாசார அலுவல்கள் திணைக்களம்
OUVENIR
MİNAR 2006
ANGAM LITERATURE AND SOCIETY"
nistry of Religious Affairs partment of Hindu Religious & ltural Affairs
2006

Page 4


Page 5
உள்ளே.
சங்க இலக்கியங்
சங்க இலக்கியங்
பண்டைத் தமிழரின் இ
பழந்தமிழச் செ
புறநானூறு புலப்படுத்தும் ச
சங்ககாலம் -
புறநானூறு புலப்படுத்தும் உ
பழந்தமிழர் படைகளும்
சங்க காலக்
சங்ககாலக் கல்

கள் - 1
கள் - 11
இலக்கிய நோக்கு
ய்யுள்மரபு
ங்ககாலச் சமய நிலை
ஆட்சிமுறை
யர்நெறிக் கொள்கைகள் படைக்கலன்களும்
காசுகள்
வெட்டுகள்

Page 6


Page 7
சங்ககாலம் தமிழ் நாட்டு வரலாற்றில் முதன்மை தான் தமிழருடைய வரலாறு சீராகத் தொடங் ஏராளமான வரலாற்றுச் செய்திகளை நமக்குத் தர சமுதாய அரசியல் நிலைகளைப்பற்றிய தெளிவான
பாண்டிய மன்னர்கள் தமிழ்ச்சங்கம் என்ற பேணி வளர்த்தனர் என்றும் மூன்று சங்கங்கள் இ குறித்தும் பேசப்படுகின்றது. இறையனார் அகப்பொழு வீழ்ச்சி என்பன பற்றி சுருக்கமாகவும், தெளி சங்கங்களிலும் முதல் இரண்டு சங்கங்கள் கடல் கூறுகின்றன. கடைச்சங்க நால்கள் மூலமாகவே நா உள்ளத. எனினும் இச் சங்க நால்களிலே சங்க
சங்க இலக்கியங்களிலே அவையம், சங்கம் 6 என்ற சொல் கையாளப்பட்டிருக்கிறத.
நிலனாவில் திருதரு உம் நீண்மாட புலனாவில் பிறந்த சொற் புதிதண்
என்ற கலித்தொகைச் செய்யுளின்மூலம் மதரையில் பாடும் செய்யுட்திறம் ஆகியவற்றை அறியமுடிகி
இத்தகைய தமிழ் வளர்த்த புலவர் சபை நாயனாரான திருநாவுக்கரசர் தேவாரப்பதிகம் ஒன்றி திருமங்கையாழ்வார், பரஞ்சோதி முனிவர் போன்ே தமத பாடல்களில் கூறியுள்ளனர்.
இத்தகைய சிறப்புப் பெற்ற சங்ககாலத்தில் ம வாணிபம், சமயம், கல்வி, ஆகியவற்றில் சிறந்து சங்க இலக்கியங்கள் மூலமாக அறியமுடிகின்றத

dDaigo1
வாய்ந்ததொரு காலமாகும். இச் சங்ககாலத்தில் தகின்றது எனலாம். சங்க இலக்கியங்கள் ந்தவண்ணம் இருக்கின்றன. அன்று நிலவிய கருத்துக்களை இவை உள்ளடக்கியுள்ளன.
அமைப்பை தொன்று தொட்டு உருவாக்கிப் ருந்தமை குறித்தம் அவை தமிழ் வளர்ந்தமை குளுரையில் சங்கங்களின் தோற்றம், வளர்ச்சி, வாகவும் கூறப்பட்டுள்ளது. இம் மூன்று கோளினால் அழிக்கப்பட்டதாக வரலாறுகள் ம் பெருமளவு செய்திகளைப் பெறக்கூடியதாக ம் என்ற சொல் குறிப்பிடப்படவில்லை.
ான்ற சொற்களுக்குப் பதிலாக புணர், கூட்டு
க் கூடலார் ணும் பொழுதன்றோ
கூடியிருந்த சான்றோர் அவர்தம் நாவன்மை, ன்றத.
பற்றி கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ல் கூடியிருந்தார். அதே போன்று ஆண்டாள், றாரும் தமிழ்ச் சங்கம் பற்றிய செய்திகளைத்
க்கள் பொருளாதரம், தொழில், வெளிநாட்டு விளங்கினர். இவை பற்றிய செய்திகளைச்
هل

Page 8
திணைக்களம் வருடாந்தம் நடத்தும் அ கொண்டதாக அமைகின்றன. அவ் வகை என்னும் பொருளில் ஆய்வரங்கு அமைகி மலர் வெளியிடப்படுவத குறித்த மகிழ்ச்சி விடயங்களைக் குறித்த பல்வேறு அறிஞர் அமைகின்றத.
இச் சிறப்புமலர் தமிழ் மொழி கற்கும் ஆர்வலர் ஆகியோருக்கு ( (LO)60)LugbsT8 ஆய்வரங்கு தொடர்பாக அனைத்து ஆே மலரின் தேவை பற்றியும் எமக்கு உண வெளியீட்டுப்பணியில் எமக்குதவிய 2 ஆகியோருக்கும், கட்டுரையைத் தெரிவு ெ மகேஸ்வரன், திரு. ம. சண்முகநாதன், திரு சிறந்த முறையில் அச்சுப்பதித்துதவிய கெ உரியதாகும்.

தய்வரங்குகள் பல்வேறு விடயத் தலைப்புக்களைக் யில் இவ்வருடம் 'சங்க இலக்கியமும், சமூகமும், ன்றது. இவ்ஆய்வரங்கினை முன்னிட்டு இச்சிறப்பு படைகின்றேன். இச் சிறப்பு மலர் சங்ககாலம் பற்றிய கள் எழுதிய சில கட்டுரைகளை உள்ளடக்கியதாக
மாணவர்கள் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்கள், தமிழ் அமையும் என்பத எமது நம்பிக்கையாகும். இவ் vாசனைகளையும் வழங்கியதோடு இத்தகையதொரு ர்த்திய பேராசிரியர் சி. பத்மநாதன், இம் மலரின் உதவிப்பணிப்பாளர் திரு. எஸ். தெய்வநாயகம் சய்த உதவிய திரு. க. இரகுபரன், கலாநிதி, வ. நமதி தேவகுமாரி ஹரன் ஆகியோருக்கும் இதனைச் ாரி அச்சகத்தினருக்கும் எமத மனமார்ந்த நன்றிகள்
சாந்தி நாவுக்கரசன், பணிப்பாளர், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம்.

Page 9
I am glad to send this message offelicitati Department of Hindu Religious and Cultural Research Seminar, organized by the Depart
Iam made to understand that the Departr Affairs organize research seminars every y Linguistics, Tamil folklore, Tamil Drama and ture, Fine Arts in Hinduism etc.
This year the Departmentis organizing as community of that period. The Sangamperio deals with the Economy, Culture, Civilizatic cilities and Trading activities of the Tamils du
I hope the scholars who will gather for the about the life and civilization of the Sangamp that the participants of the Seminar will be n
As with the research books published by I hope this year's Seminar articles too may be students who study Tamil as a subject in Col
I offer my sincere thanks to the Directo Hindu Religious and Cultural Affairs for orga scale.

MESSAGE FROM THE DEPUTY MINISTER OF RELIGIOUS AFFAIRS
ions for the Souvenir published by the Affairs on the occasion of the Annual
ment.
ment of Hindu Religious and Cultural lear on various topics, such as Tamil Theatre, Hindu Temple and Architec
Seminar on Sangam Literature and the dcontains a lot of rich literature which )n, Urban development, Highway Fa
ring the period.
Seminar will submit valuable articles eriod Tamil community. Iam confident nuch benefited.
the Department during the past years, 2 compiled as a book for the benefit of leges and the Universities.
rand the Staff of the Department of unizinga Research Seminaron a grand
Hon. Tissa Karalliyadda, M.P, Minister of Indigenous Medicine & Deputy Minister of ReligiousAffairs

Page 10
MES MINISTRY
It gives me great pleasure in published on the occasion of the a ment of Hindu Religious and Cult
The research seminar will foc also on the ancient way of living
The scholars who participate changing theirideas and contribut bebeneficial to the future generat
l take this opportunity to cong of the Department of Hindu Relig successful research seminar.

SAGE FROM SECRETARY OF RELIGIOUS AFFAIRS
sending this message to the Souvenir which is nnual research seminar organized by the Departural Affairs.
us not only on the Sangam Tamil Literature, but Such as their culture, civilization, economy etc.
in the seminar will have great opportunity of exetoproduce a valuable documentation which will ion Specially students and researchers.
atulate the Directorand the members of the staff ious and Cultural Affairs who have made this a
B. N.Jinasena Secretary Ministry of Religious Affairs

Page 11
சங்க இலக்
பேராசிரியர் எஸ். 6
தமிழின் பெருமை
இப்போது கிடைக்கும் பழைய தமிழ்ச் செய்யுட்களில் கில கிறிஸ்த அப்தத்தின் தொடக்கத்தில் இயற்றப்பட்டவை. ஆதலால் தமிழ் இலக்கிய சரிதம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னமேயே தொடங்கியுள்ளத. இப் பெருமை எல்லா மொழிகளுக்கும் உரியதன்று. மலையாள மொழியில் கி.பி. பதினாலாம் நாற்றாண்டிலும், தெலுங்கு மொழியில் பதினோராம் நாற்றாண்டிலும், கன்னட மொழியில் ஒன்பதாம் நூற்றாண்டிலும் ஆதி இலக்கியங்கள் தோன்றின. இப்பொழுது பல தேசங்களிற் பயிலப்பட்டு பெருஞ் சிறப்புடன் விளங்கும் ஆங்கில மொழிகளிலேகூட இலக்கியம் முதன்முதலில் தோன்றியத கி.பி. ஒன்பதாம் தற்றண்டில்தான். ஆரியம், சீனம், லத்தீன், கிரேக்கு, எபிரேயம் முதலிய ஒரு சில மொழிகளில் உள்ள ஆதி ! இலக்கியங்களே தமிழ் இலக்கியங்களின் அளவு பழைமை வாய்ந்தவை. c
as a v336D
மிகப் பழைமையான காலந் தொட்டே தமிழ் சிறப்புற்று உ” + துவந்த இடம் பாண்டிய நாடு என்று கூறுவர். விலப்புத்தாரர் இயற்றிய பாரதத்தின் சிறப்புப் பாயிரத்தில், அவர் மகனார் வரந்தருவார்.
பொகுப்பில் பிறந்த, தென்னன் புகழிலே வளர்ந்து, சங்கத்(து) இருப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை
ன்ைறு தமிழைக் குறித்துக் கூறுகின்றார். இப்பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதரையிலே ஒரு தமிழ்ச் சங்கம் ! இகுத்தது என்பது கர்ணபரம்பரைச் செய்தி. கிறிஸ்த ே அப்தத்தின் இரண்டாம் நூற்றாண்டு இச்சங்கம் இருந்த

கியங்கள் - 1
வையாபுரிப்பிள்ளை
காலம் என்பர் ஆராய்ச்சியாளர். தமிழ்ச் செய்யுட்களையும் புலவர்களையும் ஆராய்ந்து சீர் தாக்கி மதிப்பிடுதல் இச்சங்கம் செய்த வந்த பணி என்று கூறப்படுகிறது. நானூற்று நாற்பத்தொன்பது புலவர்கள் இச்சங்கத்தில் இருந்தார்கள் என்பர். சங்கத்தைப் பற்றிய வரலாறு இறையனார் களவியல் உரை என்ற நாலிலே விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இது கடைச்சங்கம் என்றும், இதற்கு முன் இரண்டு சங்கங்கள் இருந்தன என்றும், களவியல் உரை கூறும். தலைச்சங்கம் 4440 ஆண்டுகளும், இடைச்சங்கம் 3700 ஆண்டுகளும், கடைச்சங்கம் 1850 ஆண்டுகளும் இருந்தனவாம்.
கடைச்சங்க காலத்த நால்களே நமக்கு இப்போது கிடைப்பவை. இந்நால்களையே நாம் சங்க இலக்கியங்கள் என வழங்குகிறோம். தொல்காப்பியம் 'ഞ്ഞp ഗേഴ്സുകങ്ങ് நூல் இடைச்சங்க காலத்து இறுதியில், அதாவது சுமார் கி.மு.5000 ல் தோன்றிய த எண்றம், தலை, இடைச்சங்கங்களிலே பிறந்த ஏனை நால்கள் கடல் கொள்ளப்பட்டு அழிந்து விட்டன என்றும் பரம்பரை வரலாறு கூறுகிறத. ஆனால் தொல்காப்பியர் காலம் கி.பி.3-ம் நாற்றண்டிற்குப் பிற்பட்டதென்பதற்குத் தக்க சான்றுகள் உள்ளன.
பத்துய்பாட்ரு
சங்க இலக்கியங்களைப் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை ான இரு பெருங் கூறாகப் பகுக்கலாம். பத்துப் பாட்டுக்களாவன : முருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறபாணாற்றுப்படை, பத்தப்பாட்டு, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப் பாட்டு மதரைக் காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை , மலைபடுகடாம் என்பன. இவற்றை,

Page 12
முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை, பெருகு வளமதுரைக் காஞ்சி ~ மருவினிய கோலநெடு நல்வாடை, கோல்குறிஞ்சி பட்டினப் பாலை, கடாத்தொடும் பத்து.
என்ற செய்யுளால் ஞாபகத்தில் வைத்தக்கொள்ளலாம். மலைபடுகடாம் என்ற நாலுக்குக் கூத்தராற்றுப் படை என்ற பெயரும் உண்டு.
முருகாற்றப் படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என்ற ஐந்த பாட்டுக்களும் ஆற்றுப்படை என்ற நால் வகையைச் சார்ந்தவை. கொடையாளி ஒருவனிடம் பெருஞ் செல்வத்தைப் பரிசாகப் பெற்றுத் திரும்பும் கூத்தர் முதலியோர் வழியிலே எதிர்ப்பட்ட இரவலரைக் கண்டு, அக்கொடையாளியின் பெருமையைக் கூறி, அவனிடம் சென்று தாம் பெற்றது போல் பெருஞ் செல்வம் பெறுமாறு வழிப்படுத்துதலே இந்த நூல் வகையின் கருத்து. ஆறு ~ வழி : படை ~ படுத்ததல், ஏனைய ஐந்து பாட்டுக்களில் மதரைக் காஞ்சி நிலையாமையை ஓர் அரசனுக்கு அறிவுறுத்தி, இவ்வுலகில் வாழும் நாட்களை உயர்ந்த லட்சியங்களை மேற்கொண்டு இனிதாகக் கழித்தல் வேண்டும் என வற்புறுத்தகிறத. குறிஞ்சிப்பாட்டு ஓர் ஆரிய அரசனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்தும் பொருட்டு இயற்றப்பட்டத என்று சரித்திரம் வழங்குகிறது. இப்பாட்டுக்களுள் சில அகப்பொருளையும் சில புறப்பொருளையும் பற்றியவை. அகம் என்பது காதல் பற்றிக் கூறும் பகுதி, புறம் என்பத அறமும் பொருளும் பற்றிப் புறத்தே நிகமும் ஒழுக்கத்தைக் கூறும் பகுதி.
பாண்டியருள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும், சோழருள் கரிகாற் பெருவளத்தானும், தொண்டைமான் இளந்திரையனும் பத்தப்பாட்டிற் புகழப்பட்டிருக்கின்றனர்.
எட்டுத்தொகை
எட்டுத் தொகையாவன: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்த, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன. இவற்றை,
நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநாடு) ஒத்த பதிற்றுப்பத்(த), ஒங்கு பரிபாடல்,
2

கற்றறிந்தார் ஏத்தம் கலியே, அகம், புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை
என்ற செய்யுளால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம், இவற்றள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநாறு கலித்தொகை, அகநானூறு என்னும் ஐந்த நால்களும் அகப்பொருள் பற்றியவை: ஏனைய மூன்றும் புறப்பொருள் பற்றியவை. ஐங்குறுநாற்றில் ஐந்நாறு செய்யுட்களும், பதிற்றுப்பத்தில் நாறு செய்யுட்களும், பரிபாடலில் எழுபது செய்யுட்களும், கலித்தொகையில் நாற்றைம்பத செய்யுட்களும் உள்ளன. ஏனைய நால் களர் ஒவ்வொன்றிலும் நானூறு செய்யுட்கள் உள்ளன. கலித்தொகை கலிப்பாவாலும், பரிபாடல் பரிபாட்டாலும் இயன்றன. மற்றை ஆறு தொகை நால்களும் ஆசிரியப்பாவால் இயன்றன. அகம் பற்றியவற்றுள் ஐங்குறுநூறு, திணை ஒவ்வொன்றிற்கும் நூறுவீதம், குறிஞ்சி, பாலை, மருதம், முல்லை, நெய்தல், என்ற ஐந்த திணைகளுக்குமாக ஐந்நாறு செய்யுட்கள் கொண்டது. புறம் பற்றிய நூல்களுள், ஒவ்வொரு சேரனுக்கும் பத்தச் செய்யுள் வீதம், பத்துச் சேர அரசர்களுக்கு உரிய நாறு செய்யுட்கள் கொண்டது. பதிற்றுப்பத்த, எட்டுத்தொகை நநூல்களுள் பரிபாடலுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பு உண்டு. அதிலுள்ள பாட்டுக்கள் பண்முறையால் தொகுக்கப்பெற்று உரிய பணிகளுடனர் பாடப் பெற்று வந்தவை. கலித்தொகையிலுள்ள தாழிசைகள் இசையோடு பாடுதற்கு ஒத்தனவாயுள்ளன.
தொகை நூல் ஒவ்வொன்றிலும் உள்ள செய்யுட்கள் பல புலவர்களால் பாடப்பெற்றவை. அப்புலவர்கள் ஓரிடத்தவரல்லர்; ஓரினத்தவரல்லர்: ஒரு காலத்தவருமல்லர்; ஒரு சமயத்தைச் சார்ந்தவருமல்லர். அவர்களைக் கணக்கிட்டு நானூற்று நாற்பத்தொண்பதின்மர் என்று களவியல் உரை கூறும்.
சில புலவர்களுடைய பெயர்கள் காணப்படவில்லை. ஒருவருக்குக் கல்பொரு சிறுநரையார் என்று பெயர். அவர் இயற்றிய செய்யுளில்,
கல்பொரு சிறுநரை போல மெல்ல மெல்ல இல்லா குதமே (குறுந்-290)
என்று வந்தள்ளது. இங்கே காணும் உவமானத் தொடரினின்றம் அவருக்குப் பெயர்

Page 13
எழுந்துள்ளமை வெளிப்படை ஆசிரியர் காலத்தே அவர்க்கு வழங்கிய இப் புனைப்பெயர் பிற்காலத்தும் வழங்கி அதவே பெயராக முடிந்திருக்கலாம். அல்லத அவர் பெயர் மறைந்த போன பிற்பாடு, செய்யுளின் தொடரினின்றும் ஒரு பெயர் பிற்காலத்தாரால் கொடுக்கப்பட்டும் இருக்கலாம். சில பெயர்கள் முற்கூறிய படியும், சில பெயர்கள் பிற்கூறியபடியும் தோன்றியிருத்தலும் கூடும்.உண்மை இதவென்று இப்போது நாம் தெரியக்கூடவில்லை. இங்ங்ணம் புனைபெயருள்ளவர்கள் சுமார் இருபத்தைந்து ஆசிரியர்கள். இவர்களை நீக்கிப்போலும் களவியல் உரைகாரர் கணக்கிட்டத.
பெண்பாற் புலவர்கள்
பெயர் தெரிந்த புலவர்களுள் சுமார் இருபத்தேழு பெண்பால்- புலவர்கள் காணப்படுகின்றார்கள். அதாவது நாற்றுக்கு ஆறு விழுக்காடு கணக்காகின்றத. பொதுமக்களிடையே கல்வி பரவாத முற்காலத்த இவ்வளவாகப் பெணி பால் ~புலவர் இருந்தமை பாராட்டுதற்குரியது. இவருள்ளே ஒளவையார், வெள்ளி வீதியார், காக்கை பாடினியார், நச்செள்ளையார், பாரிமகளிர் முதலியோர் குறிப்பீட்டுக் கூறத்தக்கவர்கள்.
தொகை நூல்களும் கிரேக்க அந்தாலஜிகளும்
தமிழிலே தொகை நால்கள் மிகப் புராதன காலத்துத் தானே தொகுக்கப்பட்டமை போல, கிரேக்க மொழியிலும் மிகப் பழைய காலத்தில் அந்தாலஜி என்று கூறப்படும் தொகை நால் தொகுக்கப்பட்டுள்ளதென அறிகின்றோம். கிரேக்கத் தொகை நூலின் வரலாற்றைக் குறித்து ரிச்செர்ட் கார்நெட் என்ற ஆசிரியர் விளக்கமாக எழுதியிருக்கின்றனர். அந்தாலஜி என்ற சொல்லுக்குப் பூந்துணர் என்று பொருள். சுமார் கி.பி. 90 ~ல் மிலிகள் என்பவரால் இத்தொகை நூல் தொகுக்கப் பெற்றதாம். இத்தொகை நாற் செய்யுட்கள், தெய்வங்களையும், புகழ் பெற்று விளங்கிய அரசர் முதலிய பெரியோர்களையும், பெரு நிகழ்ச்சிகளையும் பொருளாகக்
9

கொண்டு அமைந்துள்ளன. சுருங்கச் சொல்லல், பொருள் ஆழமுடைமை, நவின்றோர்க்கு இனிய நன்மொழி புணர்த்தல், பொருளின் ஒருமை என்ற குணங்கள் இவற்றில் நன்கு விளங்கின என்று சொல்லப்படுகிறது. இவ்வகை இயல்புகளோடு பொருந்திய கிரேக்கத் தொகை நால் புறநானூறு என்னும் தமிழ்த் தொகை நாலோடு பெரிதும் ஒப்பிடற்பாலதாய் உள்ளது. மிலீகரத தொகை நாலுக்குப் பின் நான்கு தொகை நால்கள் ஒன்றின் பின் ஒன்றாகத் தோன்றின. இவைகளெல்லாம் அந்தாலஜி என்ற பெயராலேயே வழங்கின. இறுதியில் தொகுக்கப்பட்டது ஜஸ்டினியன் என்னும் அரசன் (கி.பி. 483-565) காலத்திலாகும். இந்தத் தொகை நூலிலே காதற் செய்யுட்கள் பல தறைகளாகப் பகுக்கப்பட்டுச் சேர்க்கப் பெற்றுள்ளன என்று கூறப்படுகிறது. இதனோடு தமிழ்த் தொகை நூல்களுள் அகப்பொருள் கூறுவனவாய் அமைந்துள்ள நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்ற ஐந்தம் ஒப்பிடத்தக்கன.
தொகைநூல்களின் பயன்
பழைமையிலும், பொருள் அமைதியிலும், செய்யுள் நயத்திலும் மாத்திரமே யன்றி, வேறு சில அமிசங்களிலும் இந்த இரு மொழிகளிலும் உள்ள தொகை நால்கள் ஒப்பிடற்கு உரியன. கிரேக்க நாகரிகம் நீடித்திருந்த காலத்தில் அதனி நிலைமை பலபடியாக மாறிவந்திருக்கிறத. இம் மாறுபாடுகளுக்கு இடையேயும் கிரேக்கத்தொகை நால் கிரேக்கர்களுக்குப் புத்துயிர் கொடுத்து உதவிய அமிர்த சஞ்சீவினியாய் நீடித்து நிலைத்து வந்திருக்கின்றது. இதுவே போன்றுள்ளன தமிழ்த் தொகை நூல்களும். இரண்டிலும் பழைய நாகரிகங்களும் பழுக்க ஒழுக்கங்களும் பிரதிபலித்துக் காண்கின்றன. பிற்காலத்து எழுந்த இலக்கியங்களின் நெறியை வரம்பு கட்டுதற்கும் இத்தொகை நால்கள் உதவின. இவ்வாறாகப் பலபடியாலும் இரு தேசத்தத் தொகை நால்களும் ஒன்றோடு ஒன்று உவமிக்கக் கூடியனவாயுள்ளன.

Page 14
சங்க இல
சங்க இலக்கியய் பொருள்கள்
சங்க இலக்கியங்களிலே கூறப்பட்டுள்ள பொருள்க காதலும், போர் முதலிய புற நிகழ்ச்சிகளுமாம். தொ6 நால்கள் எட்டில் ஐந்த நால்கள் காதலைப் பற்றியனே இந்த ஐந்த நால்களினும் 1850 செய்யுட்ச அடங்கியுள்ளன. பத்தப் பாட்டிலும் மூன்று நெடி பாட்டுக்கள் காதல் பற்றியனவாம். போர் முதலிய நிகழ்ச்சிகளைப் பொருளாகக் கொண்ட நால்8 பதிற்றுப்பத்து, புறநானூறு என்ற இரண்டேயாகும். இவற் அடங்கிய செய்யுட்கள் 500. பரிபாடல் என்ற ந தெய்வங்கள், வையை, மதுரை இம்மூன்றைய பற்றியதாகும். இந்நூலிலும் காதல் பற்றிய பகுதிகள் உள்ளன. r
வீரமும் காதலும்
காதலும் போரும் நமத பணி டைத் தமி இலக்கியங்களுக்கு மட்டும் தனித்தரிய பொருள்கள் என நினைத்தல் தவறு. கிரீக், லத்தீன் முதலிய மொழிகளிலுள்ள பணி டைச் செய்யுட்களு இவ் விஷயங்களைப் பற்றியே பெரும்பாலு அமைந்துள்ளன. வீரமும் காதலுந்தான் பண்டைக் கால லட்சியங்கள்.
காதல் விஷயங்களை அகம் என்பதும் போர் முதல் புற நிகழ்ச்சிகளைப் புறம் என்பதம் தமிழ் வழக்கு.
அகப் பகுதியை எடுத்துக்கொள்வோம். இது ஒருவது ஒருத்தியும் தம்முளே காதல் கொண்டு மணம் புரி இல்வாழ்வு நடத்தகின்ற செய்திகளைப் பல படிய வகுத்தக் கூறுவத. இப் பகுதிக்குரிய செய்யுட்கள் நாம் வாசித்தால், பண்டைக் காலத்தத் தமிழ் மக்கள் இல்வாழ்வும் உயர்ந்த லட்சியங்களும் நன்கு புலனாகு

க்கியங்கள் - 11
Sய
b ந்த
ாத நம்.
காதல் என்பது கேவலம் மிருகப் பிராயமான உணர்ச்சியன்று, காதலுக்குக் கங்குகரை இல்லை; ஒரு நெறியில் நிற்பினும், எல்லையற்றுப் பரந்து பெருகித் தோன்றவத. இக் கருத்து எவ்வளவு அழகாகக்
கூறப்பட்டிருக்கிறது பாருங்கள்:
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று: நீரினும் ஆரள வின்றே: சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
(குறுந் 3)
காதல் - தொடர்பு
இவ்வகையான காதல் நிகழ்வதற்கு ஏதாவது குடும்பத் தொடர்பு அல்லது உறவு முறை இருத்தல் வேண்டு மென்ற நியதியே இல்லை. உள்ளத்தைக் கயிறு கொண்டு கட்டிச் சிறையிடுதல் ஏலுமா ? ஒரு காதலன் தன் காதலியிடம் கூறுவதைக் கேளுங்கள்:
யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நரந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதம்? செம்புலப் பெயல்நீர் போல அண்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே! (குறுந், 40)
எனது தாயும் உணத தாயும் ஒருவருக்கு ஒருவர் யாராவர்? என் தந்தையும் உன் தந்தையும் ஒருவருக்கு ஒருவர் என்ன முறையினர்? ஒரு முறையும் இருப்பதாக தெரியவில்லையே. நானும் நீயும் எப்படி ஒருவரை ஒருவர் அறிந்தோம்? நமத அன்புடைய நெஞ்சங்கள் , பயிரிடுவதற்குப் பக்குவமான செம்புலத்திற் பெய்த நீர்போல, கலந்த விட்டனவே!

Page 15
நாடகக் காதல்
காதல் நிகழும் சந்தர்ப்பத்தைப் பிற்காலத்த நூல்கள் விரித்துச் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். தன்னிகளில்லாத தலைவன் ஒருவன் தனது துணைவர்கள் உடன் வர வேட்டைமேற் செல்வான் என்றும், தன்னிகளில்லாத் தலைவி ஒருத்தி தனது தணைவியர்கள் உடன்வரச் சோலையில் விளையாடுதற்குச் செல்வாள் என்றும், உடன் வந்தோர் தம்தம் தொழில்மேற் பிரிந்து செல்லத் தலைவனும் தலைவியும் தன்னந் தனியராய் ஒருவரை ஒருவர் எதிர்ப்படுவார் என்றும், அவ்வாறு கண்ட இடத்துக் காதல் நிகழும் என்றும் இந்நால்கள் ஓசை நிரம்பிய சொற்களால் அலங்காரமாக விரித்தக் கூறும். இத முற்றும் நாடகக் காதலேயாகும். இயற்கைக் காதல் தோன்றிய சந்தர்ப்பத்தைப் பாருங்கள்:
சுடர்த்தொடீஇ கேளாய்! தெருவில் நாம் ஆடும் மணற்சிற்றில் காலிற் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யுஞ் சிறுபட்டி, மேலொர்நாள் அண்ணையும் யானும் இருந்தேமா, இல்லிரே உண்ணுநீர் வேட்டேன்! என வந்தாற்கு அன்னை, அடற்பொற் சிரகத்தால் வாக்கி சுடரிழாய், உண்ணுநீர் ஊட்டிவா என்றாள்; என யானும் தன்னை அறியாது சென்றேன்; மற்றென்னை வளைமுன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு, அண்ணாய், இவனொருவண் செய்ததுகாணி !
என்றேனா, அண்ணை அலறிப் படர்தர, தன்னை யான், «A உண்ணுநீர் விக்கினான்" என்றேனா, அன்னையும் தன்னைப் புறம்பழித்து நீவ, மற்றென்னைக் கடைக்கண்ணாற் கொல்வாண்போல் நோக்கி நகைக் கூட்டம் செய்தாண் அக் கள்வன் மகன் (கலித் , 51)
இயற்கைக் காதல்
காதலி தெருவில் விளையாடுவது; காதலன் அங்கு வந்து குறும்பு செய்வது; அவன் காதலி வீட்டுக்கு வந்த உண்ணும் நீர் வேண்டுமென்று பொய் சொல்லி அவளைக் காண முயல்வத; காதலியின் அன்னை களங்கமின்றி அவளை நீர் கொடுத்து வரும்படி ஏவுவத, வந்திருப்பவன் இன்னானென்று அறியாத காதலி நீர் கொண்டு வருவது;

அவன் அவளுடைய முன் கையைப் பற்றி அழுத்தவத; எதிர்பாராத இச்செயலாலே அவள் திடீரென்று கூச்சலிடுவத, கூச்சல் கேட்டு அன்னை அலறிக் கொண்டு வருவத: நிகழ்ந்ததை மறைக்க எண்ணி அவன் நீர் விக்கினன் என்று மகள் கூறுவது; நீர் விக்காதபடி அன்னை அவன் முதகைத் தடவிக் கொடுப்பத, தடவும் போது காதலியைக் கடைக்கணிணால் நோக்கி இடையிடையே புண் ணகைகள் செய்த அப்புண் ணகைகளால் அவள் உட்குறிப்பையும் உடன்பாட்டையும் தான் அறிந்ததாகப் புலப்படுத்துவத; இக் காட்சிகளெல்லாம் நம் மனத்தை விட்டு நீங்க முடியுமா? இம்முறையில் ஆராக் காதல் கொண்டவள் எப்பிறப்பிலும் அவனையே காதலனாக அடைய வேண்டும் என்று கருதவத எத்தனை இயல்பானத! அவள் உறுதிப்பாட்டைக் கோளுங்கள்:
இம்மை மாறி மறுமை ஆயினும் நீ ஆகியர் எங் கணவனை யான் ஆகியர் நின் நெஞ்சுநேர்பவளே (குறுந், 49)
இவ்வுறுதிப்பாடுடையவள் தன் காதலனை மணம் ரிந்து இன்பவாழ்வு வாழவேண்டுமென்று யார்தான் விரும்ப மாட்டார்கள்? இருவருக்கும் மணம் நிகழ்கின்றது. இல்லறத்தில் அன்பு நிரம்பிய இன்ப உலகில் இவர்கள் வாழ்கின்றார்கள். இங்கே ஓர் அன்புக் காட்சியைப் பாருங்கள:
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கணி குய்ப்புகை கழுமத் தான் தழுந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவண் உண்டலினர் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.
( குறுந்- 167)
அகமுடையாள் ஒருநாள் சமையல் செய்தாள்: அவள், சல்வக் குடியிலே பிள்ளைக்கலி தீர்க்க வந்த பெண்கொடி, அருமையாக, செல்வமாக வளர்ந்தவள்; இதற்குமுன் வீட்டு வேலை செய்தறியாதவள்; ஆதலால் தொட்ட இடமெல்லாம் இடர்ப்பாடாக இருந்தது, அதி காலையில் ாழுந்த நீராடித் தாய ஆடையுடுத்தச் சமையல் தாடங்கினள்; முற்றிய தயிரைத் தன் மெல்லிய விரலாற் சைந்த பக்குவப்படுத்தினள்; அதற்குள் அவளது ஆடை

Page 16
சிறிதே கட்டு நெகிழ்ந்தது; அவசரத்தில் அதனைக் 6 கழுவாதே இறுக உடுத்துக் கொண்டாள்; பின்பு தாளிக் தொடங்கினாள்; தாளிதத்தில் எழும் நறும்புகை அவ தெளிந்த கண்களிலே குப்பெண்ற பட்டத, கண் கரித்த எனினும் கண்ணைத் தடைத்தக் கொள்ளவில்ை பக்குவம் தவறி விடுமென்று அஞ்சி. இங்ங்ை பக்குவப்படுத்திய இனிய புளிப்பையுடைய குழம்6 உணவிலிட, ‘என்ன ருசி, என்ன ருசி என்று சொல்6 கணவன் உண்டனன்; அதனைக் கண்டவுட அகமுடையாள் முகமானத புதியதொரு சோபை பெற்ற உள்ளக் களிப்பானத அவளுடைய முகத்திலே க் புன்னகையாக நடனமாடியத. இக்காட்சி நம் இதயத்ை பிணித்து விடுகிறது. அன்பு இருக்குமானால், எல்ல இன்பமயமே என்ற பேருண்மை நமக்குப் புலப்படுகிற இத ஒரு புறம், தன் கணவனுக்குப் பொருள் வருவ குறைந்து நிற்கும் நிலைமையில் செல்வக் குடியிற் பிற ஒருத்தி எவ்வாறு தனத உணவையும் குறைத்தச் சீக்கன செய்கிறாள் பாருங்கள் :
பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை யேந்தி புடைப்புறத் தாற்றுப் பூந்தலைச் சிறுகோல் உண்ணெண் றோக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்தற்று அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரீஇ மெலிந் தொழியப் பந்தரோடி ஏவல் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந் தனள்கொ6 கொண்ட கொழுநன் குடிவறண் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கு அறல் போலப் பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையளே.
(bib. II
காதலியின் அறிவும் ஒழுக்கமும்
“தேன் கலந்த தீம்பாலுணவை ஒரு பொற்கி ணத்திலேந்தி உண்ணு என்று சொல்லிச் செவிலித்த வற்புறுத்தவும், உண்ணாத இல்லத்தின் முற்றத்தேயுள் பந்தரைச் சுற்றிச் சுற்றி யோடித் தாயின் ஏவலை மறத்த சிறு விளையாட்டுச் செய்த இச் சிறு பெண்ணுக்கு இ அறிவும் இந்த ஒழுக்கமும் எங்கிருந்து வந்தன? இவற்ை எப்பொழுது தெரிந்து கொண்டாள்? தனத கணவன

ο)
ய்
துச்
குடி வறமையுற்று விட்டதென உணர்ந்ததும், உண்ணவேண்டும் நேரத்த உண்ணாது, பொழுது மறத்தண்டு சமர்த்தாயிருக்கிறளே ! தன் தந்தை தனத நிலையை உணர்ந்து அனுப்பிய பொருள்களை யெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லையே” என்பது இதன் கருத்தது.
தலைவனைய் பிரிந்த தலைவி
வாழ்விலே இன்பமும் தண்பமும் கலந்ததான் காணப்படுகின்றன. தண்பமுற்றவர்க்கலால் ~ இன்பமில்லை! என்று கூடத் தமிழ்க் கவிகள் சொல்லுகிறார்கள். எப்பொழுதும் இன்பக் கனவுலகத்திலே மகிழ்ந்து வாழ்தல் கூடுமா? தன் ஆருயிர்த் தணைவியைப் பிரிந்து காதலன் செல்ல வேண்டியதாகிறத. இந்நிலையிலே தலைவிக்குத் தண்பம் சகிக்க முடியவில்லை. அவள் வருந்ததலைப் பாருங்கள்:
யாம் எம் காதலற் காணே மாயின் செறிதுணி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநரை போல மெல்ல மெல்ல இல்லா குதமே (குறுந். 290)
“ஆற்றுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது, குமிழிகளும் நரைகளும் சுற்றி, ஓடி வட்டமிட்டு வருகின்றன; ஆற்றின் ஒரத்திலே ஒரு பாறை, இப்பாறையின் மீது ஒரு சிறு நரை மெல்ல மெல்ல மோதகிறத; மெல்ல மெல்ல இல்லையாய் அழிகிறது. இச்சிறு நரையைப் போல, வருத்தம் நிரம்பிய நெஞ்சோடு கூடிய நான் சிறிது சிறிதாக உயிர் தேய்ந்து அழிவு எய்தகிறேன” என்பது பொருள். எத்தனை அழகிய உவமம்! இதனைப் பாடிய புலவர்க்குக் கல்பொரு சிறுநரையார் என்றே பெயர் வழங்கி விட்டது!
இல்வாழ்வு-லட்சியவாழ்வு
இங்ங்ணமாக, இல்வாழ்க்கை சித்திரிக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் இதைப் போன்று எத்தனையோ அழகிய சித்திரங்களைக் காணலாம். பண்டைக்காலத்துச் சமுதாய வாழ்வில் ஒரு பெரும் பகுதியான இல்வாழ்வு இன்றும் நம் உள்ளத்தைக் கனிவிக்கின்றது; இன்றும் நம்மால் போற்றத்தக்கதாயுள்ளது. இன்றும் நமக்கு லட்சிய வாழ்வாக விளங்குகின்றது.

Page 17
சமுதாய வாழ்வும் அரசியல் நிலையும்
சமுதாய வாழ்விலும், கல்வியிலும், கவித்தவத்திலும் சிறந்த லட்சியங்களை மேற்கொண்டு, தமக்கும் தமிழ்நாட்டிற்கும் என்றும் இறவாப் பெரும்புகழ் படைத்தக் கொண்ட பணிடைக் காலத்தத் தமிழ் மக்கள் இல்வாழ்க்கையில் இன்பந்தய்த்தலோடு மட்டும் அமைந்து விடவில்லை. அக்காலத்தச் சமுதாய நிலையும் அரசியல் நிலையும் அங்ங்ணம் அமைந்து விடுவதற்கு இடமும் கொடுக்கவில்லை. சமுதாயத்தையும் அரசியலையும் எப்பொழுதும் பாதகாக்க வேண்டியிருந்தது. நாட்டை எப்பொழுதும் போருக்கு ஆயத்தமாக வைத்திருக்கவேண்டும் அவசியம் ஏற்பட்டிருந்தத. தமிழ் மக்கள் வீரத்திற் குன்றாதவர்களாக இருந்தார்கள். ஆகவே வீர வாழ்க்கையிலும் அவர்கள் சிறந்த லட்சிய புருஷர்களாக விளங்கினார்கள். பெண்டிருங்கூட இவ்வீர வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள். ஒருத்தி செயலைக் காணுங்கள்:
மேனாள் உற்ற செருவிற்கு அவள் தன்னை யானை எறிந்து களத்து ஒழிந் தணனே நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் பொருநரை விலங்கி ஆண்டுப்பட்டனனே இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று முயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீ இப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிக் செல்கென விடுமே. (புறம். 279)
வீர வாழ்க்கை
முந்தின நாள் நிகழ்ந்த போரிலே இவளுடைய தமையன் யானையைக் கொன்று வீழ்த்திச் தானும் மடிந்தான்; நேற்றைப் போரிலே இவள் கணவன் பகைவர்களை மேல் முனைந்த வரவொட்டாத தடுத்த ஓட்டுவித்து தானும் அழிந்தான், இன்றோவெனின் போர்ப்பறை கேட்டதும் தனது ஒரே மகனை அன்போடு உயிருறத்தழுவி, வேலைக் கையிற் கொடுத்த, வெண்மையான உடை உடுத்த, குடுமிக்கு எண்ணெயிட்டு வாரிமுடித்தப் போர்க்களத்தக்குச் செல்லவிடுகின்றள். இவளன்றோ வீரத்தாய்! இவளை யொத்த வீரத்தாயரன்றோ பண்டைத் தமிழகத்தின் புகழை வளர்த்தவர்கள். இவ் வீரத்தாயரிடம் பால் குடித்து வளர்ந்த ஆண்மக்கள் எத்தனை சிறந்த வீரர்களாய்த் திகழ்ந்திருத்தல் வேண்டும்! ஒருவன் செயலை நோக்குங்கள்:

வேந்தடைத் தானை முனைகெட நெரிதர ஏந்தவாள் வலத்தன் ஒருவ னாகித் தண்ணிறந்து வாராமை விலக்கலிற் பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ (புறம். 330)
"பகையரசனத சேனாசமுத்திரமானது அலைமேல் அலையாய் மோதிப் பரந்தெழுந்து தன் சேனையை நெருக்கித் தாக்க, தான் ஒருவனாகவே வலத கையில் வாளேந்தித் தன்னைக் கடந்த அச் சேனாசமுத்திரம் செல்லாதபடி தடுத்து ஒரு வீரன் நிற்கின்றான். இந்நிலையில் அவன் சமுத்திரத்திற்குக் கரைபோலத் தோன்றுகிறான். இவனது வீரம்தான் என்ன” என்பது இதன் கருத்து. இத்தகைய வீரவாழ்க்கைச் சித்திரங்கள் பலவற்றைச் சங்க இலக்கியங்களிலே காணலாம். இவ்வீர வாழ்க்கை இப்பொழுதுங்கூட நமக்குப் பேருணர்ச்சியை உணி டு பணி னி நமக்கு லட்சிய வாழ்வாக அமைந்திருக்கின்றது.
நட்பு வாழ்க்கை
பகைவர் மீது போர் தொடுத்து நிகழ்த்தும் வீர வாழ்க்கை இங்ங்ணமாக, பண்டைத் தமிழ் மக்கள் நட்பாடல் செய்தஅருமை பெரிதும் பாராட்டிப் போற்றத் தக்கது. பின்வரும் புறநானூற்றுச் செய்யுள் நோக்கற்குரியத:
பொன்னும் தகிரும் முத்தம் மண்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய ஆயினும், தொடையுணர்ந்(து) அருவிலை நண்கலம் அமைக்குங் காலை ஒருவழித் தோன்றி யாங்(கு) என்றுஞ் சான்றோர் சான்றோர் பால ராய சாலார் சாலார் பால ராகுபவே (புறம் 218)
சொற்செறிவும் ஆற்றலும் அமைந்த கவி
இத பிசிராந்தையாருக்கும் கோப்பெருஞ் சோழனுக்கும் இருந்த நட்பினைக் கண்டு கண்ணகனார் என்ற புலவர் ாடியது. இனம் இனத்தோடு என்ற பழமொழியின் கருத்து இச்செய்யுளோடு ஒப்பிடத்தக்கத. சான்றோர் வெவ்வேறு இடங்களில் தோன்றி வாழ்ந்தபோதிலும், ஒருவரோடு ஒருவர், நெருங்கிய கேணிமை கொள்வர் என்பது சய்யுளின் கருத்து. இதற்கு ஓர் உபமானம் தரப்படுகிறது. பான்னும், பவளமும், முத்தும், இரத்தினமும் ஒன்றினின்று

Page 18
ஒன்று வெகு தாரத்தில் தோன்றியபோதிலும், விலை மி: நல்ல அணிகலம் என்று அமைக்குங் காலத்த அை ஒரு கோவையிற் பொருந்திச் சேருகின்றன என்ப உபமானம். இதன் அழகும் நயமும் அறிந் இன்புறத்தக்கன. "சாலார் சாலார் பாலராகுபவே" என்ப சொல்லி யொழிக்க வேண்டியதாதலாலே, அவ்வடிை இலேசாக உச்சரித்து விட்டுவிடுதல் வேண்டும். உபமான செல்லும் வரையும் எதகை மோனை நயங்களா செய்யுளின் அடிகள் சிறந்த விளங்குவதம், அத முற்றி பின், கருத்தின் தனி ஆற்றலே தணையாக, மோை முதலிய நயமின்றியும் பேரழகுபடக் கடைசி இரணி அடிகள் அமைந்திருப்பதம் புலவரின் கவித்வ சக்திை அறிவுறுத்தகின்றன. கருத்தக்கு ஏற்ற சொற்கள் சுவைத்துத் தேர்ந்தெடுத்த சொற்கள், கட்டுரைச் சுவைட அமைந்த சொற்செறிவு, எளிமையும் ஆற்றலும் படை செய்யுள் நடை, கம்பீரமான ஓசைநயம், பொருள் செல்லு கதியும், செய்யுளின் கதியும், ஒன்றை ஒன்று தழு நிற்கும் அமைதி - இவை அனைத்தம் இச்செய்யுளி விளங்குகின்றன. இவ் இயல்புகள் சங்கச் செய்யுள்களு பெரும்பாலானவற்றிற் காணப்படுகின்றன. இத்தசை செய்யுட் செல்வம் நம்மவரால் என்றும் போற்றுதற் உரியத.
சங்க இலக்கியக் கவிஞர்கள்
இங்கே காட்டிய செய்யுட் சித்திரங்களிலெல்ல
இக்கட்டுரைகள் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் சென்னை, 1956)

ாம்
கருத்தின் எளிமையும் நேர்மையும் உண்மையும் ஆத்ம குணங்களாக விளங்குகின்றன. சங்க காலத்தக் கவிஞர்கள் இயற்கை உண்மையைச் சித்திரிப்பதில் ஆர்வமுடையவர்கள். தெளிந்த அறிவுக்கு எட்டாத மயக்கப் பொருள்களில் மனத்தைச் செல்லவிட்டு அவர்கள் குருட்டாட்டம் ஆடவில்லை. மிகைபடக் கூறுதலை அவர்கள் பெரும்பாலும் மேற்கொள்ளவில்லை. மக்கள் வாழ்வை அழகு செய்வனவாக எவையெல்லாம் உளவோ அவை எல்லாவற்றின் மீதும் பேரார்வம் கொண்டிருந்தனர். அவர்கள் கையாண்ட தமிழ் அவர்களது கருத்தக்களை வெளியிடுவதற்கு ஏற்ற இனிய அழகிய கருவியாக வாய்ந்திருந்தது. சுவைத்துச் சுவைத்துத் தேர்ந்தெடுத்த சொற்கள்; பொருள் ததம்பும் தொடர்கள்; கருத்தோடு பிணைந்து இயலும் இனிய இசை, அழகு நிரம்பிய வடிவங்கள்; உணர்ச்சி ததம்பும் செய்யுட்கள்; இவை
நால் நயம்போலும் எனத் திருவள்ளுவர் கூறியுள்ளது இந்த இலக்கியங்களைக் கருதியே போலும்!
செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே ~ எங்கள் தந்தையர் நாடென்னும் பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!
என்று தேசிய கவி பாரதி பாடிய பாவின் ஆழ்ந்த கருத்து இப்போத நமக்கு ஒருவாறு புலனாகிறது.
ன்'இலக்கிய சிந்தனைகள் என்ற நூலிலிருந்து பெறப்பட்டன (பாரிநிலையம்

Page 19
பண்டைத் தமிழரின் இ
இலக்கியக் கருவி
ஏ.வி. சுப்பிரமணி
பண்டைக் காலத் தமிழ்ப் புலவர் வகுத்தக் கொண்ட பொருள் பாகுபாடும் முத்தமிழ்ப் பாகுபாடும் அவருடைய இலக்கிய தத்துவத்தின் முக்கியமான இயல்புகள். தமது தகல்களை ஆக்குவதற்கு அவர் கையாண்ட இலக்கியக் கருவி எத்தன்மையத என்று கவனிக்க வேண்டும். அவர் எடுத்துக் கொண்ட இலக்கியக் கருவியாப்புக் கட்டுக்குள் ளடங்கிய செய்யுள், செய்யுளின் உறுப்பு, அமைப்பு, பொருள் முதலியவற்றின் இலக்கணம் நண்ணிய கலைப் பாங்குடன் தொல்காப்பியத்தில் விரிந்த காணப் பெறுகிறது. உரை வகைகளைப் பற்றியும் நால் வகைகளைப் பற்றியும் தொல்காப்பியம் வரைந்திருந்த போதிலும் அவைகளுக்கு உதாரணங்களாய் உள்ள பழைய நால்கள் பெயரளவில் தான் இருக்கின்றன. செய்யுள் இலக்கணத்திற்குத் தான், அதை விளக்கும் இலக்கியம் அதிகமாக இருக்கிறது. ஆகையால் பண்டைத் தமிழ்ப் புலவர் செய்யுளுக்குத்தான் தனிச் சிறப்பும் முக்கியத்தவமும் அளித்தார். செய்யுளின் அசை, சீர் போன்ற அமைப்பிலக்கணத்தை ஆராய்வது
இந்தக்கட்டுரைக்கு அவசியம் இல்லை.
பழைய இலக்கணம் வகுத்த யாப்பு விதிகளுக்குட்பட செய்யுள்களாகவே சங்க காலப் பாடல்கள் எல்லாம் அமைந்திருக்கின்றன. அவைகளைப் பாடிய புலவரில் பலர் நல்ல கவிகளாய் இருந்தார் என்பதை ஒருவரும் மறக்கக் கூடாத, கவிதைக்கு எத்தனையோ இயல்புகள் இருக்க வேண்டும். இருந்த போதிலும் திட்பமான வாக்கிலும் கற்பனா பாவத்திலும், ஓசைப்பண்புடன் பொருள் சமைக்கப்படுவத தான் இன்றியமையாத இயல்பு. யாப்பு நடையில் இயங்குவதினால் மாத்திரம் ஒரு கட்டுரை அல்லத பாட்டு கவிதை ஆகாத, இந்தக் கருத்த தொல்காப்பியத்திலேயே தென்படுகிறது என்று முன்னர்க் காட்டியிருக்கிறோம். புலவரின் மனேயாவத்திலும், கற்பனையிலும், வாக்கிலும் பாட்டுகள் பெறும் உருவமும், இசைத் தன்மையும் பொருட்

லக்கிய நோக்கு
யும் பொருளும்
mum ணிய ஐயர்
ாலிவும் கவிதைக்கு உயிர் நாடிகள் போன்றவை. கையால் உள்ளதை உள்ளபடி சரித்திரப் பான்மையுடன் றுவதோ விஞ்ஞானப் பாங்குடன் வரைவதோ கவிதை னைவதற்கும் அதற்கியைந்த செய்யுளாக்கத்திற்கும் ம்பாயுள்ள முயற்சியாகும்.
தமிழரின் சமுதாயத்தைப் பற்றியும் பழக்க ழக்கங்களைப் பற்றியும் பண்டைக் காலத் தமிழ்ப் டல்களில் கிடக்கும் சித்திரங்கள் ஓரளவு வாழ்க்கையைத் ழவியதாகவே இருக்கின்றன. ஆனால் இவ்வித ாழ்க்கைச் சித்திரங்களும் வருணனைக் குறிப்புக்களும் rய்யுள் நடையால் ஆக்கப்பெற்ற கவிதையில் ருப்பதின் காரணத்தால் அவை புலவரின் கற்பனா ந்தியாலேயே தீட்டப்பெற்றிருக்கின்றன. விசேஷ }பனாவிகாரமின்றி உள்ளதைக் கூறும் பெற்றியைக் காண்ட தன்மை நவிற்சியில் விளையும் பாடல்களுக்கும் ண்ணணியாகக் கற்பனைத் திரை அவசியமாயிற்று. னென்றால் பாடல்கள் எல்லாம் சுவை பயக்கும் படி ழதப் பெற வேண்டும் மென்ற அரிய இலக்கியக் கொள்கை ஸ்வரின் சமயமாய் இருந்தது. ஆகவே சங்க காலப் வர் கவிகளாய் இருந்த காரணத்தால் அவர் பாடல்களின் ாருளில் காணப் பெறும் சம்பவங்கள் நடைமுறையில், வைகளில் கூறப் பெற்றவாறே நிகழ்ந்தன என்றாவது, வைகளைப் பற்றிய குறிப்புக்கள், பிரஸ்தாபங்கள் ழவதம் நாற்றுக்கு நாறு சரித்திர உண்மைகள் என்றாவது நாள்ள முடியாதது. இருந்தபோதிலும் பண்டைத் தமிழ் "ட்டின் நிலைமையைத் தெரிவதற்குச் சங்ககால லக்கியம் இன்றியமையாத ஆதாரக் கருவியாய் மைந்திருக்கிறத என்பதையும் மறக்க முடியாது
பண்டைக் காலத் தமிழ்ப் புலவர் தங்கள் பாடல்களுக்கு டுத்தக் கொணி ட பொருளின் முக்கியமான

Page 20
அம்சத்திலிருந்தும் அவருடைய இலக்கிய லட்சியத்தின் தன்மைகளை அறியலாம். முன்னால் குறிப்பீட்டிருப்பத போல் அவர் இயற்றிய பாடல்களில் பெரும்பாலானவை பரிசில் பெறுவதற்காக அரசர் வள்ளல்கள் குறுநில மன்னர் முதலியோரைப் புகழ்ந்து போற்றிய வகையைச் சேர்ந்தவை. 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்" என்னும் கொள்கையில் பூரண நம்பிக்கை வைத்து, தங்களை ஆதரித்த, சோறு ஆடை காசு முதலியன கொடுத்த உபசரித்த அரசர், குறுநில மன்னர், பெரு நிலக்கிழார், வள்ளல்கள் ஆகியோரைப் புகழ்ந்து போற்றிக் கவிதை பாடுவதையே, தமது வாழ்க்கைப் பேறாகவும் இலக்கிய லட்சியமாகவும் அவர் கொண்டார். இவ்வாறு பண்டைத் தமிழ்ப் புலவர் ஏராளமான பாடல்களை இயற்றியிருப்பதால் இந்த லட்சியம் பண்டைத்தமிழ் இலக்கணத்திலும் இடம் பெற்றது. அதைக் கையாளும் முறைகளைப் பற்றி விதிகளையும் இலக்கணம் வகுத் திருக்கிறது. தொல்காப்பியத்தில் புறத்திணை இயலில் வரும் பாடாண் திணை இந்த இலக்கணத்தைக் கூறுகிறது. இதைப் பற்றிய விபரங்கள் புறப்பொருள் வெண்பா மாலையிலும் காணப் பெறுகின்றன. ஒருவனுடைய கீர்த்தியையும் , கொடையையும், வலியையும், ஏனைய பெருமைகளையும் புலவர் போற்றிப் புகழ்ந்து பாடி அவனை மகிழ்வித்துப் பரிசில் பெறுவத பாடாண் திணையின் இயல்பு. இந்த முறையில் கடவுளைப் போற்றிப் பாடுவதம் பாடாண் திணையில் அடங்கும் என்று கருதப்பெற்றது. பண்டைத் தமிழகத்தில் மற்றத் திணைகளுக்கும் வாழ்க்கைக்கும் இருந்த தொடர்பு எவ்வாறாக இருந்த போதிலும், பாடாண் திணையில் எழுதப் பெற்ற பாடல்கள் வாழ்க்கையைத் தழுவியே அமைந்திருக்கின்றன என்பது எளிதில் புலப்படும். பெரும்பாலும் புலவர் அரசருடைய அவையிலிருந்து அவருடைய பெருமைகளையே கவிதைப் பொருளாகக் கொண்டு பாடல்களைப் புனைந்தார். இவ்விதப் பாடல்களைப் பரிசில் பெறுவதற்கு அவர் இயற்றும் போது தாங்கள் சரித்திரம் எழுதி வைப்பதாகப் புலவர் கருதவில்லை. அரசருடைய பெருமைகளைக் கவிதை ரீதியாக புகழ்ந்து இலக்கியம் செய்வதையே தங்களுடைய லட்சியமாகக் கொண்டார். பரிசில் பெறுவதற்குப் பாட வேண்டியிருந்தாலும் இயற்கையாகவே அரசர், மற்றெல்லா மனிதரைப் போல, புகழ்ச்சியால் மகிழ்ந்ததாலும் , அவரைப் போற்றிப் புகழ்ந்த மகிழ்விக்க வேண்டிய அவசியம்
II. yDrib ~ 18

புலவருக்கு ஏற்பட்டத. அதற்காகவே கற்பனைப் பாங்குடன் புகழ்ந்து புனைந்துரைகளை அவர் பாட வேண்டியதாயிற்று. சிலப்பதிகாரத்தில் மாடலன் சேர அரசனுக்கு அறிவுரை கூறும்போது ‘அரும்பொருட் பரிசிலேனல்லனியானும் என்று பீடிகையாகக் கூறியதாய் இளங்கோ அடிகள் வரைந்திருப்பத ஊன்றிக் கவனிக்கத்தக்கத. இதிலிருந்து பரிசில் பெற வருவோர் உண்மையை மிகுத்துக் கூறுவதம் வெறும் கற்பனை யடிப்படையில் புகழ்ச்சிகளைக் கூறுவதம் புலவருக்கு
இயல்பாயிருந்தது என்று தெரிகிறது. எக்காலத்திலும் எந்த நாட்டிலும் புகழ்ச்சியை விரும்புவத மனித இயற்கை; ஆகையால் தெய்வங்களின் இயற்கையும் இதுவேயாக வேண்டுமென்று கொள்ளப் பெற்றது. இது தான் பண்டைத் தமிழ்ப் புலவர் கைக்கொண்ட பாடாண் திணையின் அடிப்படையான தத்துவம். இதைக் கையாண்டதால், அரசர், வள்ளல் முதலியோரின் கடமை புலவருக்குச் சலியாமல் கொடுப்பது என்றும் கொண்டு, அதைப் பற்றி எத்தனையோ பாடல்களைப் பாடியிருக்கிற்ார்.’ இவைகளிலிருந்து பண்டைத் தமிழ்ப் புலவரின் இலக்கிய நோக்கின் ஒரு இயல்பு தெளிவாகிறது.
1. சிலப்பதிகாரம் : காதை - 28 : 171
2. "இந் நக்கீரருக்கு (தொகை நூல்களில் காணப்பெறும் ஆசிரியரான நக்கீரர்) தமிழ்நாடு, தம்மைப் போன்றார் பெறும் பரிசிலின் பொருட்டு உளதாகிய உலகமாகத் தோன்றிற்று. இரவலருக்கு அருங்கலம் அருகாத ஈதலே அரசன் மேற்கொள்ள வேண்டும் ஒழுக்கமென இவர் கருதினர். (புறம் ~ 56) செல்வத்தின் பயன் ஈதலே (புறம் -189) என வற்புறுத்துகிள்றார். இப்பரிசிலின் பொருட்டுச் சேர சோழ பாண்டிய நாடுகளிலும் குறுநில மன்னர் நகர்களிலும் வள்ளல்கள் ஊர்களிருலும் சுற்றித் திரிந்து பாடியிருக்கிறார்கள். தெய்வங்களைக் கூட மக்கட் பிறப்பு வரை இழித்துக் கொணர்ந்து, தாம் பரிசிலின் பொருட்டுப் பாடுகின்ற அரசர்களை ஒப்பிடக்கூடிய பொருள்களாக்கி விடுகின்றன. மகளிர் பொற்கலத்திலேந்திக் கொடுக்கும் மதுவுண்டு களித்தலையே சிறந்த வாழ்வென அரசர்க்கு அறிவுறுத்தி ஆசி கூறுகின்றர்" திருமுருகாற்றுப் படை இலக்கிய தீபம். ~ எஸ். வையாபுரிப் பிள்ளை, பக்கம்35,
3. உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் விண்ணுலகத்தில் இல்லாததால் அதைவிடச் சிறந்தது சோழன் ஒருவனின் நாடு என்றும், ஏனென்றல் அங்கே புலவர் பாடிப் பரிசில் பெறலாமென்றும், பகைவர் நாட்டிலிருந்த கூட அவன் நாட்டிற்குப் பரிசில் பெற புலவர் வருகிறார் என்றும் ஒரு புறப்பாட்டில் காணப் பெறுகின்றன. புறம் - 38.

Page 21
பரிசில் பெறுவதற்குப் புனைந்தரைகளும் புகழுரைகளும் செய்வதற்குச் சற்றுப் புறம்பாக, அரசரின் உண்மை வரலாறுகளைக் கூறுவதம், அக்காலத்திலேயே தோன்றிப் பின்னர் பெரிதும் வளர்ந்த ஒரு முறையாக இருந்தது. இப்படிச் செய்வது மெய்க் கீர்த்தி வரைதல் என்று கொள்ளப் பெற்றது. அதற்கு இலக்கணம் பன்னிரு பாட்டியல், நவநீதப் பாட்டியல், வச்சணந்தி மாலை முதலிய பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. இதைப் பற்றிய பிரஸ்தாபம் தொல்காப்பியத்தில் இல்லை; அதன் ஆசிரியர் பாடாண் திணையிலேயே இத அடங்கும் என்று நினைத்தார் போலும், பன்னிரு பாட்டியலில் உள்ள பாட்டு கோவூர் கிழாரால் செய்யப்பெற்றதாகக் குறிப்பு இருக்கிறது. கோவூர்கிழார் சங்ககாலப் புலவரில் ஒருவர். அவர் பாடல்கள் பதினைந்த புறநானுாற்றிலும் ஒவ்வொன்று நற்றிணையிலும் குறுந் தொகையிலும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் மெய்க்கீர்த்தி வரைதல் என்பது ஒரு பழைய முறை என்றே கருதலாம்; இது பரிசிலுக்காகப் புலவர் பாடுவதினின்றம் வேறுபட்ட ஒருமுறை என்பத வெளிப்படை. ஏனென்றல் வேந்தன் மெய்ப்புகழ் எல்லாம் சொல்வது மெய்க்கீர்த்தி என்கிறார். இதனால் உண்மை இல்லாத வெறும் புகழ்ச்சிகளும் புனைந்தரைகளும் மெய்க்கீர்த்தி ஆகா என்பத தெளிவாகிறது. நவநீதப் பாட்டியல் உரையிலும் அரசருடைய உண்மைப் புகழைக் கூறுவது மெய்க்கீர்த்தி என்றிருக்கிறது. இதில் வரும் அரசனி செயல் என்பதிலிருந்தம், வச்சணந்தி மாலையிலிருக்கும் செய்தி இசைப் பர் என்ற
1. சீர் நான்காதி யிரண்டடித் தொடையாய்
வேந்தன் மெய்ப் புகழெல்லாஞ் சொல்லியு மந்தத்தவன் வரலாறு சொல்லியு மவளுடன் வாழ்கெனக் சொல்லியுமற்றவ னியற் பெயர்ப்பின்னர் சிறக்க யாண்டெனத்
திறப்பட வுரைப்பத சீர்மெய்க் கீர்த்தி நிலைபெறு சீர்மெய்க் கீர்த்தியினந்த முரையாய் முடியுமென வுரைத்தனரே.
- கோவூர் கிழார். பன்னிரு பாட்டியல் 311. - 38
சிறந்த மெய்க்கீர்த்தியரசன் செயல்சொற் றவையாயச் செய்யுள் அறைந்த தோர் சொற் சீரடியாம்.
~ நவநீதப் பாட்டியல்
தொழிலார்ந்த மெய்க்கீர்த்தி சொற்சீரடியால் எழிலரசர் செய்தியிசைப்பர்.
- வச்சணந்திமாலை. செய்.
11

தொடரிலிருந்தம், இந்தக் கருத்த தெளிவாக்கப் பட்டிருக்கிறத. மெய்க் கீர்த்திகள் அரசருடைய போர்ச் செயல்களையும் கொடைகளையும், பிற விஷயங்களையும் உள்ளதை உள்ளபடி கூறம் பாடல்கள் ஆகும்.
கொள்கை யளவில் இலக்கணம் இவ்வாறு இருந்தம், நடைமுறையில் மெய்க்கீர்த்திகள், புலவரால் எழுதப்பெற்றதால், அவைகளில் உயர்வு நவிற்சிப் பாண்மையில் சம்பவங்கள் பாடப்பெறும் தன்மையும், அரசரைப் பற்றிச் சரித்திர சம்பந்தமில்லாத வெறும் புகழ்ச்சிகளும் புனைந்துரைகளும் புகுந்திருக்கின்றன. மெய்ப் புகழுக்குரிய நிகழ்ச்சிகளும் இவ்வித புனைந்துரைகளுடன் கலந்து விடுவதால் அவைகளில் எவை உண்மையான வரலாற்றுரைகள் என்று, திட்டமான பிற சான்றுகள் இல்லாத போத, கண்டு பிடிப்பதில் கவுர்டங்கள் ஏற்படுகின்றன. சரித்திரம் சிக்கல்களுடனேயே இயங்கும் நிலைதான் எழுகிறது. உதாரணமாக கி.பி. பதின் மூன்றாம் நாற்றாண்டிலிருந்த பாண்டியன் முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் மெய்க்கீர்த்தி ஒன்றைப் பார்க்கலாம். அதில் காணப்பெறும் முதல் பகுதி வெறம் புகழ்மாலை; இதில் கொஞ்சங்கூட சரித்திரப் பான்மை இல்லை . பிற்பகுதியில் இந்த பாண்டியன் சோழ அரசனாகிய மூன்றாம் குலோத்தங்கனுடன் போர் செய்து வென்ற செய்தியை மிகைப்படுத்தி ஓங்கிய கற்பனைப் பாங்குடன் கூறப்பட்டிருக்கிறது. வெற்றி பெற்ற பாண்டியன் தோற்ற சோழனின் ராஜ்யத்தை அவனுக்கே திரும்பக் கொடுத்த செய்தியும் புனைந்துரைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இந்த பாண்டியன் போசள மன்னனாகிய வீர நரசிம்மனால் தோல்வியுற்று, சோழ நாட்டை அந்த மன்னனின் ஆணையால் மூன்றாம் ராஜ ராஜனுக்குக் கொடுத்த செய்தி
1. எண்டிசை யளவுஞ் சக்கரஞ் செல்லக் - கொங்கணர்- கலிங்கள், கோசலர், மாளுவர் சிங்களர், தெலிங்கள், சீனர், குக்கரர், வில்லவர், மாகதர், விக்கலர், செம்பியர் ~ பல்லவர் முதலிய பார்த்திவர் எல்லாம் உறைவிடம் அருள் என ஒருவர் முன் ஒருவர் ~ முறை முறை கடவதந்திறை கொணர்ந்திருறைஞ்ச" etc. மாற வர்மன் சுந்தர பாண்டியன் மெய்க்கீர்த்தி 1 பெருந்தொகை. - மு. இராகவைய்யங்கார் - பக்கம் 212.
2. பாண்டியனோடு போர் புரிந்த தோற்றவன் மூன்றாம் குலோத்துங்கன் அல்ல என்றும் அவன் மகன் மூன்றாம் ராஜாதி ராஜனே என்பர் டி. வி. சதாசிவ பண்டாரத்தார். பாண்டிய வரலாறு பக்கம் 123.

Page 22
இந்தக் கீர்த்தியில் குறிப்பிடப்படவில்லை. பிற்காலப்புலவர் அரசரைப் பற்றிய மெய்க்கீர்த்திகளிலேயே இவ்வாற கற்பனையுடன் சில செய்திகளை மிகுத்தம் வேற சிலவற்றைத் தவிர்த்தம் எழுதியிருப்பதைக் கவனித்தால் பண்டைக்காலப் புலவர் பாடாண் திணையைத் தழுவி அரசரைப் புகழ்ந்திருக்கும் பாடல்கள் முழுவதும் சரித்திரட் பாங்குடையவை என்று எவ்வாறு கொள்ள முடியும்? இந்த விஷயம் மூன்றாம் பகுதியில் பின்னர் விரிவாக ஆராயப்பெறும்.
பண்டைக்காலத் தமிழ் இலக்கியத்தில் ஆற்றுப்படை என்ற ஒரு வகைப் பாடல் வழங்கி வந்திருக்கிறத. இதற்கு இலக்கணமும் கூறப்பட்டிருக்கிறத. இவ் விதட் பாடல்களின் தன்மையைக் கவனித்தால் புலவர் அரசரையும் வள்ளல்களையும் வாயார வானளாவட் புகழ்ந்த பரிசில் பெற்ற முறையையே அவை வலியுறுத்தகின்றன. பத்தப் பாட்டில் உள்ள ஆற்றுட் படைகளும் புறநானூறு பதிற்றுப்பத்த ஆகிய தொகை நால்களில் உள்ள சில பாடல்களும் இந்த இனத்தை சேர்ந்தவை. பத்துப் பாட்டில் ஐந்து ஆற்றுப் படைகள்
1. மெய்க்கீர்த்தியில் தோற்ற சோழனை சுந்தர பாண்டியன் தானாகவே அழைத்ததாகவும் சோழன் வந்து "வெற்றியரியணைக் கீழ் வீழ்ந்த தொழு திரப்ப” அவனது நாட்டையும் முடியையும் கருணை கூர்ந்த அவனுக்குக் கொடுத்தான் என்று உண்மை திரித்துக் கூறப் பெற்றிருக்கிறது. இனி, சுந்தர பாண்டியன், தான் கைப் பற்றிய சோழ நாட்டைச் சில தினங்களுக்குள் ராஜ ராஜனுக்கு அளித்தமைக்குக் காரணம் போசள மன்னனாகிய இரண்டாவத வல்லாள தேவனும் , அவன் மகன் வீர நரசிம்மனுக்கும்இடையிர் புகுந்த இச் சோழ மன்னனுக்குப் பல்வகையாலும் உதவி புரிய வந்தமையாம். அன்னோர் முயற்சி யிலதேல் சுந்தர பாண்டியன் சோழ நாட்டைத் திரும்பக் கொடுத்திருக்க மாட்டான் என்பத திண்ணம், பிற்கால சோழர் சரித்திரம் - டி. வி. சதாசிவ பண்டாரத்தார் பக்கம் 188. மெய்க்கீர்த்திகளில் உண்மைச் செய்திகள் தான் எழுதப் பெறும் என்பதற்கில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்
1. ஆற்றுப் படையின் இலக்கணம் தொல்காப்பியத்தில் இவ்வாற
அமைந்திருக்கிறது :- கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழக் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறஅர்க்கறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்
- தொல். பொருள் புறத்தினை இயல் 3
பின்னர்த் தோன்றிய பன்னிரு பாட்டியல் கூறுவதாவது:- புரவலன் பரிசீல் கொண்டு மீண்ட

அடங்கி யிருக்கின்றன: அவைகளில் திருமுருகாற்றுப் படை தனிச் சிறப்புடையத. தொல்காப்பியரின் இலக்கணப்படி இது ஆற்றுப்படை ஆகாது என்பதும், ஆகும் என்று கூறும் நச்சினார்க்கினியர், சூத்திரத்தை வலிந்து பொருள் கூறுகிறார் என்பதும் சில அறிஞரின் கருத்து திருமுருகாற்றுப் படையைப் பாடின புலவர் பெருவளம் என்பதற்கு விரிந்த பொருள் கொண்டு புலவர் பெறக்கூடிய பரிசீலைப் பொருட் செல்வமாகக் கொள்ளாமல் வீடு பேறாகக் கொண்டு அழகாகக் கற்பித்துப் பாட்டைப் புனைந்திருக்கிறார். பாட்டின் தலைப்பும் ஆற்றுப்படும் புலவர் பெயரால் இல்லாமல் அவர் வணங்கப் போகும் முருகக் கடவுள் பெயரால் அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வகையான பாட்டுக்கு அதன் பொதக் கருத்தக்குட்பட்டு, புலவர் தமது மனோ தர்மப்படிப் பொருத்தமாய் அதை விரித்து வேறுபாடு செய்து கொண்ட கற்பனை முறை இத. மக்களுக்கே பொருத்தமான அகப்பொருள் தறைகளைக் கடவுள் மீதேற்றிப் பாடப் பெற்ற திருக்கோவை போன்ற கோவைப் பிரபந்தங்களும் இந்த விதியைத் தழுவியே எழுதப் பெற்றிருக்கின்றன. தவிரவும் பன்னிரு பாட்டியலிலும் புறப்பொருள் வெண்பா மாலையிலும் திருமுருகாற்றுப்படை வகையைச் சேர்ந்த ஆற்றுப்படைப் பாடல்களுக்கும் இலக்கணம் கூறப்பட்டிருக்கிறது. இவை திருமுருகாற்றுப் படை தோன்றிய பின்னர் அதற்கே விதி செய்யும் முறையில் அமைந்திருக்கலாம். அப்படியே இருந்தாலும் அதில் குற்றம் ஒன்றும் இல்லை. இலக்கியம் தோன்றிய பிறகு தானே இலக்கணம் வரும்.
விரவலன் வெயில்தெறும் இருங்கானத்திடை வறுமையுடன் வரூஉம் புலவர் பாணர் பொருநர், விறலியர் கூத்தர்க்கண்டு அப் புரவலன் நாடு, ஊர், பெயர், கொடை பராஅ யாங்கு நீ செல்கென விடுப்பது ஆற்றுப்படை
~ பன்னிரு பாட்டியல் 318, தொல்காப்பிய இலக்கணத்தில் சேர்க்கப்ப்டாத புலவர் இதில் காணப்
பெறுவதைக் கவனிக்க வேண்டும்.
1. திருமுருகாற்றுப் படை முன்னுரை பக்கம் 3~ எஸ். வையாபுரிப்
பிள்ளை. செந்தமிழ்ப் பிரசுரம் 68.
2. இருங்கண் வானத்திமை யோருழைப்
12
பெரும்புலவனை யாற்றுப்படுத்தன்று.
- புறப்பொருள் வெண்பாமாலை. உலவாவூக்க மொடு உன்னியத முடிக்கும் புலவராற்றுப்படை புத்தேட்கு முரீத்தே.
* பன்னிரு பாட்டியல்

Page 23
பத்துப் பாட்டிலுள்ள மற்ற ஆற்றுப் படைகளை ஊன்றி நோக்கினால் சில விஷயங்கள் புலப்படுகின்றன. பண்டைத் காலத்தில் பெரும்பாலான புலவர் வறுமையில் வாடினர். சமுதாயத்தில் அவர்களுக்குத் தனிமதிப்பு இல்லை. அவருக்கு மற்றவரை அணுகியே வாழ்க்கைக்கு வேண்டிய பொருளைத் தேடிக் கொள்ள வேண்டியிருந்தத. உணர்டியின் பொருட்டு அவர் அரசர், வள்ளல் முதலியோரைப் பாடிப் பரிசில் பெற்றார். இவ்வாறு நல்குரவில் நலிந்து வாழ்ந்த புலவர் குழாத்தில் இயற்கையாகவே ஒருவரை யொருவர் நேசித்தார். ஒரு வள்ளலிடமிருந்து, அவனைப் புகழ்ந்த பாடிப் பரிசில் பெற்றுத் திரும்பும் புலவன் ஒருவன், வறுமையில் வறண்டு வழியில் வரும் மற்றொரு புலவனைப் பார்த்த அவனிடம் மிகுந்த அதுதாபங்கொண்டு, அவனைத் தனக்குதவிய வள்ளலிடம் போய்ப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெறுமாறு கூறி அனுப்பி, அவ்வள்ளலிடம் போவதற்கு வழியையும் அவன் நாட்டின் பெருமைகளையும் வளங்களையும் காட்டும் பாவத்தில் இப்பாட்டுக்கள் அமைந்திருக்கின்றன. ஆற்றுப் படைப் பாடல்கள் நாடக வழக்கைச் சேர்ந்த கற்பனைச் சித்திரங்கள் அல்ல. உலகியல் வழக்கைச் சேர்ந்த அருமையான வகுணனைப் பாடல்கள். இவைகளின் பொருள் தெளிவாயிருக்கிறது. பட்டினியால் வாடின இப் புலவருக்கு வள்ளல்கள் நல்ல சோறும் இறைச்சியையும் வழங்குவது கணிந்த உணர்ச்சியுடன் புலவரால் பாடப்பட்டிருக்கிறது. ஆனால் வறுமையில் வாழ்ந்த அப்புலவருக்கு அரசரும் வள்ளல்களும், அவர் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து, தேர்களையும், யானைகளையும் குதிரைகளையும் பொன்னால் செய்த பல அணிகளையும், லட்சக்கணக்கான பொற் காசுகளையும் பரிசில்கள் கொடுத்ததாகக் கூறப்பெறும் விபரங்களைக் கவிதைக்குரிய உயர்வு நவிற்சிப் பாண்மையில் சொல்லப்பெறும் கட்டுரைகளாகக் கொள்வதே பொருத்தமாய் இருக்கும். அவைகளைச் செய்திகளாகக் கொள்வது பொருந்தாது.
1. சோழன் கரிகால் பெருவளவன் பட்டினப் பாலையைக் கேட்டு அகமகிழ்ந்து அதைப்படிய கடியலூர் உருத்திரங் கண்ணனாருக்கு பதினாறு லட்சம் பெண் அளித்தான் என்பதம், நார்முடிச்சேரலைப் பாடிய காப்பியாற்றக் காப்பியனார், நாற்பத லட்சம் பொன் பெற்றார் என்பதும், செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடிய கபிலர், நறாயிரம் காணமும், நன்றவென்னும் குண்றேறி நின்று தம் கண்ணிற் கண்ட நாடு முழுவதையும் வாங்கினார் என்பதம், இத போன்று பழைய நூல்களில் கூறப்பெற்ற பிற விபரங்களும் ஓங்கிய கற்பனாபாவத்தில் புலவரால் ஆக்கப்பெற்ற புனைந்துரைகளாகவே
13

இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். பண்டைக்காலத்தில் தமிழகத்தில் புலவர், பாணர், கூத்தர், பொருநர், விறலியர், போன்றவர் , நண்கலைகளில் நல்ல தேர்ச்சி பெற்று மக்களுக்குத் தாய்மையான மகிழ்ச்சியையூட்டும் கலைப் பணியில் தங்கள் வாழ் நாள் முழுவதம் ஈடுபட்டிருந்தார். இருந்த போதிலும் அவர்களுக்கு, முன்னர்க் கூறியத போல் சமுதாயத்தில் உயர்ந்த ஸ்தானம் இருந்ததாகக் கூற முடியாது. அவருக்கெல்லாம் செல்வ முடையவரை அண்டி வாழும் வாழ்க்கைதான் கிட்டியிருந்தது. அரசர், சில புலவருக்கு உயர்ந்த மதிப்புக் கொடுத்து அவரைப் போற்றி ஆதரித்து அவரிடம் அரிய நட்புக் கொண்டிருந்த போதிலும், புலவர் குழாம் முழுவதற்கும், அவர் கலையின் பொருட்டு ஏற்றம் மேவியிருந்ததாகக் கருத முடியாது. பாரி~ கபிலர், கோப்பெருஞ் சோழன் ~ பிசிராந்தையார், பரணர்செங்குட்டுவன் போன்ற தொடர்புகள் நட்பு காரணம் பற்றி எழுந்த உயிருறவுகளே யொழிய, வெறும் புலமைக் காரணம் பற்றிப்பிறந்த தொடர்பு அல்ல. இவை விதிவிலக்காய் அமைந்த அருமையான நேசப் பண்பின் கவிதை . அரசரின் அலுவலுக்காகப் பிற நாடுகள் சென்ற புலவருக்கும், அரசரின் தேவியர் அந்தப்புரத்தில் ஊடல் செய்யும் காலங்களில் அவ்வூடலைத் தீர்க்கும் பணியைத் தலைமேற் கொண்ட வாயில் புலவருக்கும் தனி மதிப்பு இருந்தது. இதில் விந்தை யொன்றும் இல்லை.
பண்டைக் காலத்தில் பெரும்பாலான தமிழ்ப் புலவருக்குப் பரிசிலுக்காகப் பாட வேணி டிய வாழ்க்கையே கிட்டியிருந்தது என்பத உண்மை. இருந்த போதிலும் இதற்கு விலக்காகவும் சில புலவர் இருந்திருக்கிறார். தங்கள் கலையின் மேன்மையையும் அறிவின் திறத்தையும், கவிதையின் சிறப்பையும் உணர்ந்த வள்ளல்களை அண்டிப் பிழைக்கும் வாழ்வை உதறித் தள்ளித் தன் மதிப்புடன் வாழ்ந்த புலவரும் சிலர் இல்லாமல் இல்லை. வேறு சிலர் கொடுக்கும் வள்ளல்களைப் போற்றுவதடண் நின்று விடவில்லை. கொடுக்காதவரைப் பழிக்கும் தணிவும் கொண்டிருந்தார். கொடுப்பாரேத்திக் கொடாஅர்ப் பழித்தல்
தோன்றுகின்றன. இவ்வளவு பெரும் பொருளை அவர் பெற்றிருந்தால் அதைப் பாதுகாப்பதிலேயே அவருடைய முழு கவனமும் சென்று புலமைத் தொழிலை நடத்தியிருக்க மாட்டார். பட்டினப் பாலைக்குக் கொடுத்த பரிசிலைப் பற்றி முதலாவதாகப் பல நாற்றண்டுகளுக்குப் பின் தோன்றிய சயங்கொண்டார், தமது கலிங்கத்துப் பரணியில் குறிப்பீட்டிருக்கிறார்.

Page 24
என்பது பாடாண் திணையின் ஒரு தறை என்றும், இத் மூன்று பிரிவுகளையுடையத என்றும் தொல்காப்பிய வகுத்திருக்கிறது. இதற்கு இளம்பூரணர் நேரடியா6 பொருள் தருகிறார். ஆனால் பினர்னர் வந் நச்சினார்க்கினியர், புலவர் கொடுக்காதவரை அ காரணத்திற்காகப் பழிப்பத சரியாகாதென்று பிறர் கருத கூடுமென்ற நினைத்தப் பின்வருமாறு சமாதான கூறுகிறார் - “சான்றோர்க்குப் பிறரை இழித்துக் கூறற்கன அத தக்க தன்றேனும், நன் மக்கள் பயன்பட வாழ்தலும் தீயோர் பயன்படாமல் வாழ்தலும் கூறக் கேட்( ஏனையோரும் பயன்பட வாழ்தலை விரும்புவர் என்ப பயப்பக் கூறலின் இவர்க்கு இங்ங்ண் கூறுத6 தக்கதாயிற்ற" இந்த உரையாசிரியரின் சமத்காரம் தா6 இதில் விளங்குகிறது.அரசர் பரிசிலை வரிசை யறிந் கொடுக்க வேண்டும் என்றும் ஒரு புலவர் பாடியிருக்கிறார்
அரசருக்கு அவர் நன்மையைக் கருதிப் புத்தி சொல்6 அறிவுரைகளை இடித்துக் காட்டி அவரை நல்வழியி நடத்திச் செல்லும் ஆற்றல் பெற்ற புலவரும் சிலர் பண்டை காலத்தில் இருந்தார். இப்படிக் கூறுவதால் தாம் அரசரின் சீற்றத்துக் குள்ளாகலாம் என்பதையும் பொருட்படுத்தாம8 அவர் தங்கள் கடமையைத் தைரியத்தடன் செய்தா இவ்வாறு புலவர் கூறும் முறை பாடாண் திணையில் ஒரு தறையாகிய வாயுரை வாழ்த்தாயிற்று. அவர் பரிசி பெறுவதை ஒரு பொருட்டாக நினைக்காமல் தங்க உயர்வைத் தாங்களே மதித்தக் கொண்டு வெறு புகழ்ச்சிகளைக் கூறாமல் அரசருக்கு நல்லறிவு புகட்டு முறையில் பாடியிருக்கிறார். சோழ அரசராகிய நலங்கிள்ள நெடுங்கிள்ளி என்ற இருவர் தமக்குள் பகைமை கொண் போர்ச் செயல்களில் ஈடுபட்டிருக்கையில், சோழர் குலத்தி பெருமையை உன்னி, கோவூர்க்கிழரர், அவரிருவரிடமு சென்று ஒரே வம்சத்தைச் சேர்ந்தவர் பகைமையா கட்டுண்டு போர் செய்வத தகுதியற்றத எண் உருக்கமாகக் கூறி அவரை நல்வழியில் திருப்பினார் வேள் பேகன் ஒரு சமயம் பரத்தையரை அடைந்த கற்புக் கரசியாகிய தமத மனைவி கண்ணகியை வெ
1. தொல், பொருள் ~ 90. புறத்திணை இயல். 2. தொல்காப்பியம் நச்சினார்க்கினியம், சி.வை. தாமோதரம்பிள்ை
பதிப்பு; பக்கம் 203. 3. கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியத. புறம். 121. 4. (JD5[T]h[[D 4445.

s
14
நாட்கள் தறந்து வாழ்ந்த காலத்தில் புலவர் திலங்களான கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றார் கிழார் ஆகியோர் பேகனிடம் சென்று அவன் தன் அருமை மனைவியைத் தறந்து பரத்தையரின் இன்பத்தில் வாழ்வது சரியில்லை என்று, அறிவுரைகளை நெஞ்சை உருக்கும் முறையில் கூறியதாகப் புறநானூற்றில் பல பாடல்கள் காணப் பெறுகின்றன. பெருஞ்சித்திரனார் என்ற சீரிய தன்மானமுடைய புலவர், பரிசில் பெற அதியமான் நெடுமான் அஞ்சியைக் காணப்போன போது, அவ்வள்ளல், புலவரைப் பார்க்காமல் அவருக்கு ஏதோ ஒரு பரிசில் அனுப்பிவிட, அந்தப்புலவர், இவ்வாறு வள்ளல்கள் செய்வத தகுதியற்றதென்றும், தாம் வாணிபப் பரிசீலன் அல்லேன்' என்றும் , தமது தகுதி யறிந்து தரும் பரிசில் சிறிதாயினும் அதைத் தாம் இனிது ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் ஒரு அழகான பாட்டைப் பாடியிருக்கிறார். இதைப் போன்ற எத்தனையோ விபரங்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன.
ஆகவே, சங்க காலப் புலவர் மானிடம் பாடுவதையே தங்கள் இலக்கியக் குறிக்கோளாகக் கொண்டார் என்று தெளிவாகிறது. ஒரு சிலர் சிந்தனைக்குரிய அரிய கருத்துக்களையும் நல்வாழ்வுக்குரிய பண்புகளையும் தங்கள் பாடல்களில் பொதிந்து வைத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலோர் கடவுளைப் பொருளாகக் கொண்டோ, ஆத்மீக விஷயங்களைப் பற்றியோ பாடவில்லை. பண்டைத் தமிழ் இலக்கியத்தை எடுத்து கொண்டால் கடவுளை நேரடியான பொருளாகக் கொண்டு விரிந்த முறையில் உள்ளக் கிளர்ச்சியுடன் எழுதப்பெற்ற தனிப் பாட்டு திருமுருகாற்றுப் படையும் பரிபாடலும் சங்க காலத்திற்குப் பின் எழுதப் பெற்றவை என்று சில அறிஞர்கள் கருதகிறார். அவ்வாறே இவை, கிறிஸ்து சகம் முதல் மூன்று நாற்றாண்டுகளில் ஆக்கப் பெறவில்லை என்று கொண்டாலும், சமய குரவரின் காலத்தின் தொடக்கத்திலோ
I. (gDfb/Tg), D 208.
2. புறநானூற்றில் இந்த வகையைச் சேர்ந்த பாடல்கள் பல இருக்கின்றன. இவைகளுக்கு உதாரணமாக பிசிராந்தையார் யாண்டு பலவாக நரையிலவாகுதல் என்ற முதல் வரியையுடைய பாட்டையும், கணியன் பூங்குன்றனார் யாதம் ஊரே யாவரும் கேளிர் என்று தொடங்கியிருக்கும் பாடலையும் கூறலாம். தமிழறிஞர், பண்டைத் தமிழரின் லட்சியங்களைக் கூறும் போது இவ்விரண்டு பாடல்களையும் அடிக்கடி எடுத்தக்காட்டுவதை எல்லோரும் அறிவர்.

Page 25
அதற்கு சற்று முந்தியோ தோன்றியிருக்க வேண்டும் என்பதைப் பாடல்களின் அமைப்பும், நடையும் பொருளும் காட்டுகின்றன. சைவத் திருமுறைகளில் சேர்க்கப்பட்ட பாடல்களில் காலத்தால் முந்தியவை திருமுருகாற்றுப் படையும் காரைக்காலம்மையின் பாடல்களுமே சமய குரவர் காலத்திற்கு முன்னாலுள்ள பக்தி ரசப் பாடல்களைத் திருமுறைகளில் சேர்க்க நம்பியாண்டார்நம்பி தேடும் போது இவை தான் கிடைத்திருக்கலாம் அல்லது கிடைத்த பழைய பாட்டுக்களில் இவைதான் திருமுறை வகுப்பில் இருக்கத் தகுதியுடையன என்று அவர் கருதியிருக்கலாம். பரிபாடலைத் தவிர மற்றத்தொகை நால்களிலுள்ள பாடல்களில், பின்னர் பாரதம் பாடிய பெருஞ்தேவனார் இயற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல்களைத் தவிர்த்தால், கடவுளைப் பற்றி வெறம் பிரஸ்தாபங்களே காணப் பெறுகின்றன. சிவபெருமானை அகநானூற்றில் ஒரு பாட்டும் புறநானூற்றில் ஐந்தம் குறிப்பிடுகின்றன. திருமாலை ஒரே ஒரு அகப் பாட்டு தான் குறிக்கிறத, முருகனைப் பற்றி ஏழு பாட்டுக்களில் குறிப்புக்கள் இருக்கின்றன. புறப்பாட்டு ஒன்றில் சிவன், முருகன், கிருஷ்ண்ன், பலராமன் ஆகிய நான்கு கடவுள்களும் பேசப்பட்டிருக்கின்றனர். ராமாயணம், பாரதம் ஆகியவைகளைக் குறிக்கும் சில பாடல்கள் புறநானூறு அகநானூறு முதலிய தொகை நால்களில் காணப்பெறுகின்றன.
பண்டைக் காலத் தமிழ்ப் புலவர் அரசரையும் வள்ளல்களையும் போற்றிப் பாடுவதையே தமது வாழ்க்கையின் லட்சியமாகவும் இலக்கியத்தின் குறிக்கோளாகவும் கொண்டார் என்றும் மேலே கூறியிருக்கிறோம். இதனால் அவருடைய இலக்கியக் கலைத் திறனும் பாடல்களின் கவி நயங்களும் சிறித கூடப் பாதிக்கப்படவில்லை என்று திட்டமாய்க் கூறலாம். வீர மன்னர் மீதம், அவரது கொடை மடம் மீதும், வள்ளல்கள் மீதும், அன்பு கொண்ட இப்புலவர் கவிதா தேவியைத் தொடர்ந்து உபாசனை செய்த வந்தார்; தங்கள் புலமையைப் பேணி வளர்த்துக் கவிதைக் கலைக்குச் சலியாத தொண்டு ஆற்றினர். அரசரையும் வள்ளல்களையும் போற்றும் முறையில், அவருடைய குணாதிசயங்களையும், நாடுகளின் இயற்கைச் செல்வத்தையும், வனப்புகளையும், நகரங்களின் நாகரிகத்தையும், மக்களின் வாழ்க்கையையும், பழக்கவழக்கங்களையும், பண்பாடுகளையும், கூர்மையான தர்சனா சக்தியுடனும், எளிமை, அழகு, திட்பம் முதலிய
15

குணங்கள் பொருந்திய கற்பனைத் திறனுடனும் புலவர் செம்மையான கவிதை புனைந்தார். அத்தடன் மனித உள்ளத்தில் எழக்கூடிய பல்வேறு உணர்ச்சிகளின் இயல்புகளைச் சித்திரித்திருக்கிறார். இவைகளைப் பாடிய புலவர் ஆண்மை பெண்மையின் இணை விழைச்சில் விளையும் காதல் உணர்ச்சியை எத்தனையோ பாவங்களில் கற்பனைப் பொலிவுடனும் விந்நியாச விகற்பங்களுடனும் படிப்போர்க்கு மட்டற்ற இன்பம் பயக்கும் முறையில் பாடிப் பண்டைத் தமிழ்இலக்கியத்திற்குத் தனிச்சிறப்பு தேடிக் கொடுத்திருக்கிறார். சங்க இலக்கியம் பண்டைத் தமிழ்க் கவிதையின் உச்ச நிலையைக் காட்டுகிறது என்று ஐயமின்றித் தணியலாம்.
இலக்கிய விமரிசனம் இந்த நூலின் நோக்கத்திற்குப் புறம்பான போதிலும் சங்க இலக்கியத்தின் பெருமையைப் பற்றி ஒரு வார்த்தை கூற வேண்டும். கவிதா ரீதியாக மாத்திரம் பார்த்தால், பத்துப் பாட்டில் மதுரைக் காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, முல்லைப் பாட்டு, நெடுதல் வாடை ஆகியவையும், புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, கலித் தொகை நால்களிலுள்ள பாடல்களில் சுமார் பாதியும், அகறானூறு, ஐங்குறுநாறு தொகைகளில் சுமார் மூன்றிலொரு பங்கும், பரிபாடலிலும் பதிற்றுப் பத்திலுமுள்ள பாடல்களில் ஒரு சிலவும் கற்றறிந்த ரசிகருக்கு அளவற்ற இன்பம் தர வல்ல முதல் தரமான கவிதை என்பதைத் தமிழ் மணம்நகரக்கூடிய எவராலும் மறுக்க முடியாதது. கவித்வ நயங்களில் சற்றுக் குறைந்திருக்கும் ஏனைய பாடல்களும் தமிழறிஞர் புறக்கணிக்கக்கூடியவை அல்ல. பண்டைத் தமிழரின் வாழ்க்கையை அவை சித்திரிப்பதால் அவை அரிய முக்யத்வம் வாய்ந்தவை.
இந்த தலைமுறையில் சங்க இலக்கியம் தமிழ் மாணவராலும், தமிழ் அறிவை நாடும் ஏனையோராலும், முன்னோர் பயின்றது போல், நன்றாய்ப் பயிலப் பெறாமல் இருப்பது தமிழரின் தர்ப்பாக்கியமே. அதைப் பயின்ற ஒரு சிலர், சங்கப்பாட்டுக்களின் கவிதை யழகுகளையும் இலக்கியச் சிறப்புக்களையும் மறந்து, தங்களுடைய விருப்பு வெறுப்புக்களுக்குட்பட்டுக் கற்பித்துக் கொள்ளும் பழந் தமிழரின் வாழ்க்கை வரலாற்றிற்கு ஆதாரமாகவே அவைகளைப் பயன்படுத்தி, இன்றும் அந்த வாழ்க்கையைச் சில இயல்புகளில் பின்பற்ற வேண்டும் என்று கருதி வருகிறார். சங்க காலத் தமிழின் இயல்புகளையும், சொற்களையும் இன்றையத் தமிழ் நடைக்குப் பூராவும் பயன்படுத்தலாம் என்று கூட அவர் நினைக்கிறார். சென்ற

Page 26
தலைமுறையில் பழைய முறையில் தமிழ் கற்ற சி சங்க இலக்கியத்திற்கு ஒப்ப தமிழில் வேறு கவிதை இல் என்று சொல்வதம், அதில் தற்காலத்தோர் படி இன்புறக்கூடிய கவிதை போதிய அளவில் இல்லை எ6 சில புதுமைப் புலவர் சாதிப்பதும், இன்று தற்காலத் இலக்கியப் பயிற்சிக்குப் பொதுவாக அவசியமான நித மனப் பாண்மையை நாடு இழந்த நிலையை காட்டுகின்றன. சங்க காலப் பாட்டுக்கள் கடினமான6 தான்; படித்தப் பொருள் தெரிந்து கொள்வதற்குப் பெ முயற்சி தேவை தான்; அவை சித்திரிக்கும் வாழ்க் வழக்கொழிந்த பழமையாதலால் அதை வாசக கற்பனையின் மூலமே தெரிந்து கொள்ள இயலும், தற்ச மாணவருக்கு உதவும்படியான நல்ல முகவுரையுட பொருள் எளிதில் தெரியக்கூடிய குறிப்புக்களுடன
ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் எழுதிய'தமிழ் ஆராய்ச்சியின் வ

பொருள் இலக்கணத்தைச் சார்ந்த விளக்கங்களுடனும் கூடிய தெளிந்த பதிப்புக்களும் இல்லை. டாக்டர் சாமிநாதய்யர் முதலியோரின் அரிய பதிப்புக்களும் எல்லாம் தமிழ்ப் பயிற்சியில் மிகுந்த புலவருக்கே பயன்படும் முறையில் இருக்கின்றன. சமீபத்தில் வெளி வந்திருக்கும் மலிவுப் பதிப்புகள், வரவேற்கத் தக்கனவாயினும், மாணவருக்குப் பயன்படும் முறையில் பதிப்பிக்கப் பெறவில்லை. இருந்த போதிலும் ஓரளவு தமிழ்ப் பயிற்சி பெற்றவர் சங்க இலக்கியத்தைப் படித்த அதிலுள்ள கவிதையை அநபவித்த இன்புற முயல வேண்டும். ஏனென்றால் தமிழ் மொழியின் தன்மையையும் ஆற்றலையும், தமிழ் இலக்கியத்தின் பரப்பையும் பெருமையையும் பண்டைத் தமிழ் இலக்கியப் பயிற்சி இல்லாமல் தெரிந்து கொள்ள முடியாது.
ார்ச்சி என்ற நூலின் இயல் ஒன்று இங்கு தரப்பட்டுள்ளது.
16

Page 27
பழந்தமிழச்
:
பேராசிரியர் வி.
பண்டைக்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவதற்குக் கடந்த ஐம்பத ஆண்டுகளாக அறிஞர்கள் முயன்றபோதம் அவர்களுள் ஒருவரேனும் சங்க காலத்திலும் சங்கமருவிய காலத்திலும் நிலவிய இலக்கிய மரபின் வளர்ச்சிக் கிரமத்தை வரலாற்று முறைப்படி எழுதுவதில் அனுகூலமடையவில்லை என்றே கொள்ள
வேணி டியுள்ளத. இவ் வரலாற்றை அறிவதில்
விருப்புடையோருக்கு இவ்விடயம் ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. ஒரு சமுதாயத்திலே, மக்களுடைய வாழ்க்கையிலும் பணி பாட்டிலும் தொடர்பாக வளர்ச்சியேற்பட்டு வந்திருந்தால் அந்த மக்களினுடைய இலக்கிய மரபிலும் வளர்ச்சி ஏற்பட்டு வந்திருத்தல் வேண்டும் எனக் கொள்ளுதல் பிழையாகாது. பண்டைக்கால மக்களுடைய வாழ்க்கையில் இத்தகைய சமூக, பண்பாட்டு வளர்ச்சித் தன்மை காணப்பட்டிருந்தமையால் அரசியல் வரலாற்றிலே களப்பிரர் காலம் ஒரு இருண்ட காலமாக இருந்தபோதும் அக்காலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் சமூக வாழ்வு தொடர்புற்று விளங்கியமையால் இலக்கிய வரலாற்றிலும் தொடர்பும் வளர்ச்சிக்கிரமமும் இருந்திருத்தல் வேண்டும் என அனுமானிக்கலாம். பண்டைய இலக்கிய மரபில் இருந்து வந்த இத்தொடர்ச்சியினை நாம் தெளிவாக கணித்து அறிந்தாலன்றிப் பண்டைத் தமிழிலக்கிய வரலாற்றைத் தெளிவாகக் குறிக்க முடியாது. ஐரோப்பிய மொழிகளிலேயுள்ள பண்டைய இலக்கிய வரலாறு எழுதப்பட்டமைபோலத் தமிழிலக்கிய வரலாறு எழுதப்படவில்லை. ஆகவே இச்சங்க காலத்து இலக்கிய வரலாற்றைச் சரித்திர முறையாக எழுதவதில் ஏற்படக்கூடிய இடர்பாடுகள் சிலவற்றைக் குறிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சங்கமருவிய காலப்பகுதியின் இலக்கிய வரலாற்றை எழுதப்போகும்போது இதிலும் கூடிய இடர்பாடுகள் ஏற்படுதல் கூடும்.

செய்யுள்மரபு
செல்வநாயகம்
பத்தப் பாட்டும் எட்டுத் தொகையும் சங்க காலத்திற்குரியவை என்றும் சங்ககாலப் பிரிவு முன்னூறு ஆணிடுகளைக் கொண்டத என்றும் கடறவர். இந்நூல்களையும் தொல்காப்பியப் பொருளாதிகாரத்தையும் ஆதாரமாகக்கொண்டே சங்ககால இலக்கிய வரலாற்றைக் கணிக்க வேண்டியுள்ளது. முன்னூறு ஆண்டுகளைக் கொண்ட இந்நீண்ட காலப் பிரிவிலே தோன்றிய இலக்கிய மரபில் வளர்ச்சி அல்லது தேய்வு இல்லாமல் அத ஒரே தன்மைத்தாய் இருந்தத எனக் கூறுவத பொருத்தமற்றத. ஆகவே, இந்த வளர்ச்சியை அல்லது தேய்வை நாம் இந்த நால்களைக் கொண்டே கவனிக்க வேண்டியுள்ளது. அங்ங்ணம் செய்வதற்குமுன் இத்தொகை நால்களையும் அவற்றிலே வந்தள்ள செய்யுட்களையும் கால முறைப்படி அமைத்தப் பார்த்தல் இன்றியமையாததாகின்றது. இத்தகைய ஒரு முயற்சியிலே பலர் ஈடுபட்டனர். எனினும், அதிலே அவர்கள் வெற்றிபெற்றதாகத் தோன்றவில்லை. பதிற்றுப்பத்த என்னும் நால் சங்க காலத்தில் வாழ்ந்த சேர மன்னர்களைப் பற்றி சரித்திர சம்பந்தமான குறிப்புக்கள் பலவற்றைக் கொண்ட ஒரு நால் என அவர்கள் கொண்டமையே இதற்குக் காரணமாகும். அந்நூலில் வந்த பதிகத்தைப் பிற்காலச் சாசனங்களைப் போன்ற சரித்திர வரலாற்றைக் கணிப்பதற்குள்ள ஒரு சாதனம் என்று கொண்டார்கள். அங்ங்ணம் கொண்டமையால் அவர்கள் பிழையான முடியுகளுக்கு வரவேண்டியதாயிற்று. ஆகவே, தமிழ் இலக்கிய வரலாற்றை வரன் முறைப்படி எழுதவத தடைப்படலாயிற்று.
பதிற்றுப்பத்திலுள்ள செய்யுட்களை நணுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் போது, அதாவத அச்செய்யுட்களின் மொழிநடை சொல்லாட்சி, பொருளமைதி, அப்பொருளைப் புலவன் கூறும் வகை, அதிற் காணப்படும் ஒரு செயற்கைத் தன்மை, அனுபவப்போலி இன்னோரன்ன பல ஏதுக்களை

Page 28
எடுத்து ஆராய்ந்து பார்க்கும்போது அச்செய்யுட்கள் யா சங்ககாலப் புலவர்களாற் பாடப்படவில்லை எண் பிற்காலத்திலே இருந்த ஒரு சில சேர அரசர்கள் தம்முை முன்னோரைப் பற்றிப் புகழ்ந்து பாராட்டும் நோக்கமாக சில புலவர்களை வைத்துக் கொண்டு கற்பனைய சில சரித்திர நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி உருவாக்கிய பே கவிதைப்படைப்பு என்றும் கூறலாம் போலத் தெரிகி இங்ங்ணம் கூறியவற்றை விரித்த ஆராய்வத இக்கட்டுரையில் இடம் போதாதாகலின் அதனை விடு இந்நாற் செய்யுட்கள் சங்ககாலச் செய்யுட்கள என்பதற்கு ஆதாரமாகச் சில சொற்களை மட் எடுத்தக்காட்டி அப்பாற் செல்லலாம். அச்செய்யுட்க வந்தள்ள ஐம்பதக்கு மேற்பட்ட சொற்களு சொற்றொடர்களும் சங்ககாலப் புலவர் எனக் கொள்ளப் கபிலர், பரணர் முதலானோர் பாடிய சங்கச் செய்யுட்க காணப்படாதவை. உதாரணமாக மனாலக் கலை நணையமகள், பாகுடி, நாலாக் கலிங்கம், தொற என்னும் சொற்களை நோக்கலாம். இதவொன்றே அ பிற்காலச் செய்யுட்கள் என்பதற்குப் போதிய சான்றா
கலித்தொகை என்னும் நால் சங்ககாலத்தது எ கடறினும் சங்ககாலத்த இலக்கிய மரபில் வகுத்தறிவதற்கு இத பயன்படமாட்டாது. ஏனென இந்நூலிலுள்ள செய்யுட்களிற் பல சங்ககாலத்திற் பிற்பட்ட காலப்பகுதியில் இயற்றப்பட்டவை எ கொள்வதற்குப் பல ஆதாரங்கள் இந்நூலிலுள. ஆக சங்ககாலத்த மரபினையும் அதற்குப் பிற்பட்ட கால மரபீனையும் கொண்டு அவ்விரண்டு காலத்திலும் த யாப்புமுறை வளர்ச்சியுற்றவாற்றை அறிந்து கொள்வத அந்நாற் செய்யுட்கள் பயன்படக்கூடியவை. இந்நாலி நல்லந்தவனார் கோத்தார் என்று நாச்சினார்க்கினி கூறுகிறார். சங்கமருவிய காலத்திலோ அதற்குப் பின்ன வாழ்ந்தவரான நல்லந்துவனார் என்னும் புலவர் தம்முை காலத்திலும் அதற்கு முன்பும் தமிழ் நாட்டிலிரு கலியாப்பில் இயற்றப்பட்ட செய்யுட்களுள் நாற்றைம் செய்யுட்களைத் தெரிந்தெடுத்து ஒரு தொகை நால கோத்தார் என்று கொள்வது பொருத்தமானத. அவ்வ கோக்கும்போது ஐந்த திணைக்களாக வகுத்து அவற்ை கோத்திருத்தல் கூடும். பிற்காலத்தில் வாழ்ந்த ஒரு ஐந்த பகுதிகளையும் ஐந்து புலவர்களே பாடினர் எ6 கூறியிருத்தல் கூடும். எங்ங்ணமாயினும், அந்ர செய்யுட்களிலுள்ள யாப்பு அமைதியினை நோக்குமிட

ாலிக்
DĝHj. ற்கு த்த
606)
ளில் ரும் படும் ளிற்
D6) ரத்த
கும்.
ன்று
OD 60 ரில், குப்
ாறு
வர் ண்று தூற் ந்து,
18
வெண்பாவிலிருந்து வெண்கலியும், வெண்கலியிருந்து ஒத்தாழிசைக் கலியும், அதிலிருந்து கொச்சகக் கலியும் பிற கலியினங்களும் தோன்றி வளர்ந்தவாற்றை நாம் தெளிவாகக் காணமுடிகிறது. இங்ங்ணம் பல ஆணர்டுகளாகக் கலி எனினும் யாப்பு வகை வளர்ச்சியுற்றவாற்றை அறிவதற்கு உபயோகமாகவுள்ள இந்நூலிற் கோக்கப்பட்டுள்ள செய்யுட்கள் யாவும் ஒரு காலத்திற்குரியவை எனக் கொள்ளுதல் பொருந்தாது. அன்றியும் அச்செய்யுட்களின் மொழிநடை, அவைகூறும் அகத்திணை மரபு, அவற்றின் கண் புலவன் கையாண்ட உவமை உருவகங்கள், கூறப்பட்டுள்ள நீதிமுறைகள், அரசியல் வளர்ச்சிக் கிரமம் இன்னோரன்னவற்றை நோக்கும் போது அச்செய்யுட்கள் யாவும் ஒரே காலத்தில் ფ)ტ புலவனால் அல்லத பல புலவர்களால் இயற்றப்பட்டவையெனக் கொள்ளுதல் எவ்வாற்றானும் பொருந்தாது. ஆகவே, இந்நூலும் சங்ககால இலக்கிய மரபினை வகுத்தறியப் பெரிதும் தணைபுரியமாட்டாது.
பரிபாட்டு என்னும் நாலிலே உள்ள செய்யுட்களை ஆதாரமாகக் கொண்டு நாம் சங்ககால மரபினை வகுத்தறிதல் முடியாததாகும். கலியைப் போலவே பரிபாட்டும் வெண்பாவிலிருந்து தோன்றி வளர்ந்த ஒரு யாப்பு வகையாகும். பரிபாட்டு எழுபது பாடல்களைக் கொண்டதாகக் கூறப்படும். அவற்றுள் இருபத்திரண்டு பாட்டுக்களே இன்று எமக்கு முழுப்பாட்டுக்களாகக் கிடைத்துள்ளன. எல்லாப்பாட்டுக்களும் கிடைத்திருப்பின் இப்பாட்டுவகை வெணி பாவிலிருந்த தோன்றி வளர்ந்தவாற்றை தெளிவாக அறிந்த கொள்ள முடிந்திருக்கும். இப்போதுள்ள பாடல்களைக் கொண்டு பரிபாட்டு என்னும் செய்யுள் வகையின் வளர்ச்சியையோ அகத்திணைப் பொருள் மரபின் வளர்ச்சிக் கிரமத்தையோ அறிந்த கொள்ள முடியாது. ஒரு காலத்தில் அகத்திணைப் பொருளுக்கு உரியதாய் இருந்த இப்பரிபாட்டு, காலம் செல்லச் செல்ல இறை வழிபாட்டிற்கு உரிய ஒரு செய்யுள் வகையாக மாறிவிட்டது. அங்ங்ணம் மாறுவதற்கும் பல ஆண்டுகள் சென்றிருத்தல் கூடும். எனினும்,பரிபாட்டு ஆரம்பித்த வளர்ந்த பூரண நிலை அடைந்த வரலாற்றினை இப்போதுள்ள பரிபாட்டைக் கொண்டு நாம் ஓரளவு அறியலாம். பல்லவர் காலப் பத்தி இயக்கம் ஆரம்பித்த காலத்திற்கு அணித்தாக இப்பாட்டுவகை சிறப்புற்று விளங்கியிருத்தல் கூடும். ஆகவே இப்போதுள்ள இப்பாட்டுக்களைக் கொண்டு சங்ககாலச் செய்யுள் மரபினை நாம் வகுத்தறிய முடியாத,

Page 29
இனி, மேலே குறிப்பிடப்பட்ட பதிற்றுப்பத்த, கலித்தொகை, பரிபாட்டு என்பவற்றை விட்டுக் குறுந்தொகை, அகநானூறு, நற்றினை ஆகிய அகத்திணைத் தொகை நால்கள் சங்க கால இலக்கிய மரபினர் வளர்ச்சிக் கிரமத்தை அறிந்தகொள்ள உதவுகின்றனவா என்பதை நோக்குவோம். இம் மூன்று தொகை நால்களும் அமைப்பில் ஒரேவித தன்மையைக் காட்டுவன: அதாவது, அகவற்பாவாற் பாடப்பட்ட இப்பாடல்கள் அவற்றின் குறுமை நெடுமைக்கேற்ப ஒவ்வொன்றிலும் நானூறு நானூறு செய்யட்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு புலவர்களாற் தொகுக்கப்பட்ட போதம் அவற்றுட் பெரும்பாலானவை குறிப்பிட்ட ஒரு காலப் பகுதிக்குரிய கவிமரபிற் கிணங்க அமைக்கப்பட்டிருத்தலை நாம் அப்பாடல்களைப் படிக்கும் போது அறியலாம். புறநானுற்றிலுள்ள பாட்டுக்களின் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள பாடினோர், பாடப்பட்டோர் ஆகியோரைப் பற்றிய அடிக்குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்டு தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுடைய காலத்தில் வாழ்ந்த கபிலர், பரணர், முதலானோர்களின் தொகையை ஒருவாறு நிச்சயிக்கலாம். உதாரணமாக, இடைக்குன்றார் கிழார் தொடக்கம் மருதனிளநாகனார் வரை பதினெட்டுப் புலவர்கள் அவ்வேந்தனை அகத்திணைப் பாக்களிலும் புறத்தினைப் பாக்களிலும் பாராட்டியுள்ளனர். இப்புலவர்களுள் கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றாாக்கிழார் முதலானோர் பேகன் மனைவி கண்ணகி காரணமாக அவனைப் பாடியிருத்தலிலிருந்து அவர்கள் எல்லோரும் சமகாலத்தோர் என்பது பெறப்படும். ஒளவையார் அதிகமான் அஞ்சியைப் பாடும்போது பரணரை நிகழ்காலத்திலே குறிப்பிடுவதிலிருந்து பரணர், ஒளவையார், அதிகமானஞ்சி என்போர் சமகாலத்தவர் என்பதைத் தெளிவாக அறியமுடிகிறது. இவ்வாறே முடியுடை வேந்தருள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் முதலானோரும் சம காலத்தவர் என்பதும் அவர்களைப் பல்வேறு சந்தர்ப்பங்களிற் பாடியுள்ள புலவர்களும் அவர்களாற் பாடப்பட்ட வேந்தர்களும் வள்ளல்களும் பிறரும் சமகாலத்தவர் என்பதும் வரலாற்று முறைப்படி ஆராய்ந்த நிறுவப்படக்கூடியவை. இம்முறையைப் பின்பற்றிக் கபிலபரணர் காலத்திலிருந்து புலவர்களை நிச்சயித்த பின்பு நற்றிணை முதலிய மூன்று தொகை நால்களுள் அப்புலவர்கள் பாடிய பாடல்களைத் தெரிந்து அவற்றைப் பாலை, முல்லை, குறிஞ்சி, மருதம்,
19

நெய்தல் என ஐந்தாக வகுத்து ஆராய்வோமாயின் கபில பரணர் காலத்து வழக்கிலிருந்த செய்யுள் மரபினையும் அகத்திணைப் பொருள் மரபினையும் ஒருவாறு நிச்சயிக்கலாம். அங்ங்னம் நிச்சயித்தபின் அப்புலவர் காலத்தக்கு முன்னும் பின்னுமாக வாழ்ந்த புலவர்களை நிச்சயித்த அவர்கள் பாடிய பாடல்கள் குறிக்கும் பொருள்மரபு முதலியவற்றை வகுத்தக்கொண்டால், இம்மூன்று காலப்பிரிவுகளிலும் அகத்திணைப் பொருள் மரபு வளர்ந்தவாற்றை வரலாற்று முறைப்படி ஒருவாறு தெளியலாம். இங்ங்ணம் தெளியும்போதுதான் சங்ககாலம் எனப்படும் கபிலபரணர் காலத்தப் பொருள் மரபு தெளிவுறும். அதனை ஆதாரமாகக் கொணி டு அம் மரபு விருந்தியடைந்தவாற்றை ஏனைத்தொகை நால்களின் உதவி கொண்டு ஆராய்தல் முடியும். இத்தகைய ஆராய்ச்சியிலே ஐந்குறுநாறு என்னும் நால் சிறப்பிடம் பெறுதலைக் காணலாம்.
அகத்திணைப் பொருள்மரபு அக்காலத்திலும் அதன் பின்பும் வளர்ந்தவாற்றை அறிந்த கொள்ளுவதற்கு ஐந்குறுநாறு உறுதணையாக உள்ளத. அந்நால் கபிலபரணர் காலத்தக்குப்பின் எழுத்தது எனக் கொள்ளுதற்கு அந்நாலிலேயே ஆதாரங்கள் பலவுள. அவற்றை நோக்கின் அத ஒருவராற் பாடப்பட்ட ஐந்திணைச் செய்யுட்களைக் கொண்ட ஒரு நூலாகக் கொள்ளத்தகுமன்றி ஐந்த புலவர்களாற் பாடப்பட்ட செய்யுட்களின் தொகுதியாகக் கொள்ளுதற்கு இயலாது என்பது தெளிவாகும். கபில பரணர் காலத்திலே குறிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியை அல்லது பொருளைக் காலம், இடம், சூழல், பாத்திரங்கள் இன்னோரன்னவற்றை ஆதாரமாகக் கொண்டு ஒரு செய்யுள் அமைத்தக் காட்டுதலே மரபாக இருக்கிறத.ஐந்குறுநாற்றுக் காலத்தில் ஒரு நிகழ்ச்சியை அல்லது பொருளை ஒரு பாட்டிலே அமைக்காத பத்துப் பாட்டுக்களில் அமைத்துக்காட்டுதலே வழக்காறாக இருந்திருத்தல் வேண்டும். அதனைத் தழுவியே ஐந்குறுநூற்று ஆசிரியர் ஐம்பத பதிகங்களை அமைத்துள்ளார் என்பது தெரிகின்றது. ஒரு பொருளைப் பத்தப் பாட்டுக்களில் எப்படி அமைக்கலாம் என்று அப்புலவர் செய்ததுள்ள ஒரு பரிசோதனை என்றே அதனைக் கூறலாம்.இம்முயற்சி பல்லவர்காலப் பக்திப் பாடல்களுள் சிறப்பாகக் கையாளப் பட்ட பதிக முறைக்கு வழிகாட்டியதென்று கூடச் சொல்லலாம். இந்நால் கபிலபரணர் காலத்துக்குப் பிந்தியத என்பதை அத காட்டும்

Page 30
ஏனைய வழக்குகளை ஆதாரமாகக் கொண்டும் நிச்சயிக்கலாம். உதாரணமாக, கைக்கிளை என்னும் ஒரு தலைக்காமம் கபிலபரணர் காலத்தில் இருந்திருக்கவில்லை. அத முதன் முதலாக ஐந்குறுநாற்றுக் காலத்திலேயே தோன்றியுள்ளத எனக் கூறலாம். அத வளர்ச்சியடைந்தவாற்றைக் கலித்தொகைப் பாடல்களில் நாம் கண்டு தெளியலாம். இனி, ஐவகை ஒழுக்கமும் ஐவகை நிலங்களிலும் கலந்த வருதலுக்கு இந்நூல் ஒர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. கபில பரணர் காலத்தில் ஒரு நிலத்திற்கு ஓர் ஒழுக்கம் உரியதாகவிருந்த மரபு நீங்கப்பெற, இந்நூல் எழுந்த காலத்தில் எந்த ஒழுக்கமும் எந்த நிலத்துக்கும் உரியதாக வருதல் கூடும் என்னும் மரபு கைக்கொள்ளப்பட்டதென்பதற்கு இந்நூல் ஓர் எடுத்தக்காட்டாகும். இயற்கை வருணனையைப் பாத்திரங்களின் உணர்ச்சி பேதங்களை வெளிப்படுத்துதற்கு ஒரு கருவியாகக் கையாண்டமையைக் கபில பரணர் காலத் தப் பாடல்களிலும் சிறப்பாக ஐந்குறுநாற்றுப்பாடல்களிற் காணக்கூடியதாகவிருக்கின்றது. இண்னோரன்ன பலவற்றை ஆதாரமாகக் கொண்டு ஐந்குறுநாறு சங்ககாலத்துக்குச் சற்றுப் பிந்தியத என்பதை நாம் ஒருவாறு தெளியலாம்.

மேற்கூறியவற்றிலிருந்து எட்டுத்தொகை நால்களுள் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு ஆகிய நரல்களிலுள்ள கபிலபரணர் காலத்தில் எழுந்த செய்யுட்கள் சங்ககால இலக்கிய மரபினை நாம் அறிந்து கொள்ள ஆதாரமாக உள்ளன என்பதும் கபிலபரணர் காலத்தக்கு முன்னும் பின்னும் எழுந்த செய்யுட்களும் அத்தொகை நால்களின் உதவிகொண்டு அறியலாம் என்பதம், அக்காலப்பிரிவுகளைத் தொடர்ந்து எழுந்த ஐங்குறுநாற்றைக் கொண்டு அந்நூல் எழுந்த காலமரபினை அறியலாம் என்பதும் மேற்கூறியவற்றால் ஒருவாறு புலனாகும். பத்துப்பாட்டிலுள்ள செய்யுட்கள் எவ்வெக் காலத்தில் எழுந்தவை என்பதை நிச்சயித்தல் இலகுவானதன்று: எனினும், மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை முதலிய சில பாட்டுக்கள் கபில பரணர் காலத்தக்குரியவையாதலின் அவற்றின் உதவி கொண்டும் அக்கால இலக்கிய மரபினை நாம் தெளிதல் கூடும். இவ்வாற வரலாற்று முறைப்படி அமைத்து, அவற்றின் உதவிகொண்டு பண்டைய இலக்கிய வரலாற்றைக் கணித்த பின்னன்றிப் பழந்தமிழ் இலக்கிய வரலாற்றை நாம் தெளிந்து கொள்ளுதல் முடியாதது.

Page 31
புறநானூறு பு சங்ககாலிறச் ச
முனைவர் செ.
கடவுள் நம்பிக்கை
கடவுளுணர்வும் கடவுள் நம்பிக்கையும் பழந்தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பது சங்க இலக்கியங்களிலிருந்து தெரிகிறது. எனினும் சங்க காலத்தில் கடவுள் நம்பிக்கை குறிப்பிட்ட சமயப்பற்றாக உருவாகவில்லை எனக் கொள்ளலாம்.
"இரண்டாயிரம் ஆணிடுகட்கு முற்பட்ட தமிழிலக்கியங்களில் , ‘சமயம் என்ற சொல்லே இல்லை. அதற்குப் பிற்பட்ட நால்களிலேதான் ‘சமயம், "மதம் என்ற சொற்கள் காணப்படுகின்றன. எனவே சங்க காலத்தில் லுக்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பினும் அவர்கள் சிவன், திருமால், போன்ற கடவுளர்களை வழிபட்டாலும் சைவசமயம், வைணவ சமயம் போன்ற சமயப்பற்று வெகுன்றவில்லை என்பது தெரிகின்றத, சமயம் அல்லத மதம் என்பத வடநாட்டிலிருந்த சமணர்களாலும் பெளத்தர்களாலும் கொண்டுவரப்பட்டத. அதற்கு முன்பு தமிழகத்தில் குறிப்பிட்ட மதமோ சமயமோ இல்லை வளலாம்" என்று தா. ஏ. ஞானமூர்த்தி கூறுகிறார். சங்க இலக்கியங்களை நணுகி ஆராயுங்கால், இவர் கூற்று பொருத்தமாகவே தோன்றகிறது.
தொல்காய்யியத்தில் தெய்வம்
தொல்காப்பியம் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், ஆகிய நான்கு நில மக்கள் முறையே திருமால், முருகன், இந்திரன், வருணன், என்ற "கடவுளர் களை வழிபட்டனர்"
னக்குறிப்பிடுகிறது.*
4 டாக்டர் தா. ஏ. ஞானமூர்த்தி, ‘சங்ககாலச் சமுதாயம்"
gфыäбѣлбха, 1981, ш. з53. 2. தொல், அகத். நா. 5.
21

லப்படுத்தும்
FLDU GOGO
பழனிச்சாமி
அவற்றுள் 'தெய்வம் ஒன்பது இடங்களிலும், "கடவுள் முன்று இடங்களிலும் இடம் பெற்றுள்ளன என்றும் தெய்வம் என்பது அந்தந்த நிலக் கடவுளைக் தறிப்பதென்றும், தா. ஏ. ஞானமூர்த்தி உரைக்கின்றார்.
வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்த பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே
இந்நூற்பாவில் "வழிபடு தெய்வம்' என்ற தொடரால்' அந்தந்த நில மக்கள் வழிபடுவதற்கென குறிப்பிட்ட \தய்வம் இருந்தது என்பது புலனாகிறத' என்று அவர் நிறுவுகிறார்.
தொல்காப்பியர் ஒவ்வொரு நிலத்தின் கருப்பொருள் களைக் குறிப்பிடுங்கால்,
தெய்வம் உணாவே மாமரம் புட்பறை"
என அக்கருப்பொருள்களுக்கெல்லாம் முதன்மையாகத் தய்வத்தைச் சுட்டுவது குறிப்பிடுதற்குரியத. இதனின்றும் அக்கால மக்களுக்கிருந்த உறுதியான தெய்வ நம்பிக்கை புலனாகிறத.
சங்க இலக்கியங்களில் கடவுள்
சங்க இலக்கியங்களில் சிவன், முருகன், திருமால், பலதேவன், கொற்றவை, ஆகிய கடவுளர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். புறநானூற்றுப் பாட்டுக்களிலும் இக்கடவுளர் இடம்பெற்றுள்ளனர்.
. டாக்டர் தா. ஏ. ஞானமூர்த்தி, ‘சங்ககாலச் சமயம் (கட்டுரை)
முத்துக்கோவை, 1981.ப.356. தொல், அகத், நா.18:1.

Page 32
புறநானூற்றில் சிவன்
பாண்டியன் பல்யாகசாலை முதகுடுமிப் பெருவழுதியை காரிக்கண்ணனார் வாழ்ந்துங்கால் "பகைவர் அரண்களை கைப் பற்றி, அங்கிருந்த கொள்ளப்பட்ட நல் அணிகலன்களைப் பரிசிலர்க்கு நல்கி, முனிவர்களா தொழுப்பெறும் முக்கண் படைத்த இறைவனது கோயிை வலம் வரும் பொருட்டு நின் தலை வணங்குவதாக. எனச் சிவனை வழிபடுமாறு அப்புலவர் அம் மன்னனுக் அறிவுறுத்தகிறார்.
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே இறைஞ்சுக பெருமநின் சென்னி"
என்பன அப்புலவர் மொழிகள். இவை சிவபெருமாை வழிபடும் மரபு உண்டு என்பதை உணர்த்தகின்றன.
இலவந்திகைப் பள்ளித் தஞ்சிய நண் மாற மூவேந்தருள்ளும் மிகச் சிறப்பெய்தி விளங்குகிறான் எ மருதனிளநாகனார் பாடுகிறார். "மலையை வில்லாகவு பாம்பை நாணாகவும் கொண்டு அம்பு பூட்டி முப்புரத்ை எரித்தத் தேவர்கட்கு வெற்றியைக் கொடுத்த கரி மிடற்றையுடைய இறைவனது பிறை சேர்ந்த நெற்றியி விளங்கும் கண்போல மூவேந்தருள்ளும் மேம்பட் விளங்கும் பூந்தாமரையுடைய மாற' என்ற பொரு அமைய அவனை அப்புலவர் முன்னிலைப் படுத்தி பாடுங்கால் முப்புரம் எரித்த சிவபெருமானின் நெற்றிக்கன பகைவரை அழிப்பதில் எத்தணை ஆற்றலுடையதே அத்தணை ஆற்றலை நண் மாறனர் பொருந் மூவேந்தருள்ளும் விளங்கித் தோன்றுகிறான் என்ற அவ பேராற்றலைப் புகழ்கிறார். இங்கு நன்மாறனின் ஆற்றலுக்கு சிவபெருமானர் நெற்றிக் கணி உவமையாக கூறப்பட்டுள்ளத.
அதியமான் நெடுமானஞ்சியிடமிருந்து நெடுங்கால வாழவைக்கும் நெல்லிக் கனியைப் பெற்ற ஒளவையா
பால்புரை பிறைநதற் பொலிந்த செண்ணி நீலமணிமிடற் றொருவன் போல மண்ணுக பெரும நீயே
Dh. 6: I8-19. புறம் 55. 3 புறம் , 91: 5~ 7.

என அவனை வாழ்த்துகிறார்
22
பால் போல் விளங்கும் பிறையை அணிந்த சென்னியினையும் நீலமணி போன்ற திருமிடற்றினையுமுடைய சிவபெருமான் போல நிலைபெற்று வாழ்வாயாக’ என்ற கருத்தமைந்த இப்புறநானூற்றடிகளில் அதியமான் இடையூறுகளைக் கடந்து நெடுங்காலம் வாழ்வதற்கு அழிவற்ற பரம்பொருளாகிய சிவபெருமான் உவமையாகக் கூறப்பெற்றதுள்ளார்.
'நீண்ட சடையையுடைய இறைவனது வாய்விட் ட கலாத நன்கு ஆராயப்பட்ட நான்கு பகுதியும் ஆறங்கமும் உடைய வேதத்தை நன்குணர்ந்து பொய்யர்களது உரையை மெய்யென்று கருதாமல் உண்மைப் பொருளை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி இருபத்தொரு வேள்வித் தறையையும் குறைவறச் செய்து முடித்த புகழ் பொருந்திய தலைமையையுடைய அறிவுடையோர் மரபில் உள்ளவனே' என்று சோணாட்டுப் பூஞ்சாற்றுள்ப் பார்ப்பான் கௌனியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் புகழ்ந்தரைக்கிறார்.
நன்றாய்ந்த நீணிமிற் சடை முத முதல்வன் வாப்போகா தொன்றுபுரிந்த ஈரிரண்டினர் ஆறுணர்ந்த ஒரு முதநால்"
என்பவை நான்கு பகுதிகளோடு ஆறங்கங்கள் கொண்ட வேதம் நீண்ட சடையையுடைய சிவபெருமானது நாவில் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதைக் குறிக்கின்றன. இங்கு வேதத்தின் பெருமையைக் குறிக்கச் சிவபெருமான் சுட்டப்பெறுகிறார்.
வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் என்ற புலவர், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனின் செல்வம் என்றும் நிலைபேறுடையது என்பதை ,
ஆலமர் கடவுள் அன்னநின் செல்வம்"
என்ற அடியால் உணர்த்துகிறார். 'ஆலமரத்தின் கீழ் அமர்ந்த முக்கட் செல்வனாகிய இறைவனைப் போன்று நின் செல்வம் நிலைபேறுடையது என்பது இவ் வடியின் பொருள். ஈண்டுச் சிவபெருமானி நண் மாறனினர் நிலைபேறுடைய செல்வத்திற்கு உவமையாகக் கூறப்பெற்றுள்ளார்.
1 [[jp[ჩ. I ხნ : 1~9 2. புறம். 198 : 9

Page 33
மேற் குறிப்பிட்ட புறப்பாட்டுகளுள் காரிக்கண்ணனார் பாட்டு மட்டுமே சிவனை வழிபடுதல் வேண்டும் என்றும் ஏனையவற்றில் சிவன் உவமையாகக் கூறப் பட்டுள்ளமையும் குறிப்பிடுதற்குரியன.
dpub356ir
பல புறப்பாட்டுக்கள் முருகக் கடவுளைக் குறிப்பிடுகின்றன.
சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலரின் கையைப் பற்றி, அது மெல்லியதாக இருப்பதாகக் கூறியபோத, கபிலர் " போரினிடத்து முருகக் கடவுளுக்கு ஒப்பானவனே! கறியையும் சோற்றையும் உண்டு வருந்தம் செயலல்லது வேறு செயலறியாவாகலின் எம் போன்ற புலவர் கைகள் மெல்லியவையாக உள்ளன; பகைவரோடு அஞ்சாத போர் செய்தலின் நின் கை நிலம் போல வலிமையுடையது என்கிறார்.
இப் பொருளமைந்த புறப்பாட்டில், செல்வக்கடுங்கோ வாழியாதன், போரில் முருகக் கடவுளுக்கு ஒப்பானவன் என்பதை 'செருமிகுஞ்சேய்' என்ற தொடர் உணர்த்துகிறது.
செல்வக்கடுங்கோ வாழியாதனின் போர் வீரத்திற்கு உவமையாக முருகக் கடவுகளின் வீரம் இங்கு சுட்டப்படுகிறத.
போரில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் சீற்றம் முருகக்கடவுளின் சீற்றம் போல கடுமையானதும் அஞ்சத்தக்கதமாகும் என்பதை,
முருகற் சீற்றத் தருகெழு குருசில் *
என்ற தம் பாடலடியின் வாயிலாகப் பாண்டரங்கனார் என்ற புலவர் குறிப்பிடுகிறார். இங்கு முருகக் கடவுளின் சீற்றம் உவமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சீரிய இயல்புகளைப் புகழ்ந்து பாடும் பாடலில் கல்லாடனார் நெடுஞ்செழியனின் வீரர்கள் கார்காலத்த நறிய கடம்ப மரத்தின் இலைகள் விரவிய மாலை அணிந்த சூரபண்மாவைக் கொன்ற முருகனத சுற்றத்தக்கு ஒப்பானவர்கள் என்று கூறுகிறார்.
1 புறம். 14:14~19. 2. ggplib. I6:12.

'கார் நறுங் கடம்பினர் பாசிலைத் தெரியல் சூர்நவை முருகன் சுற்றத்தண்ன நின் கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர்'
முருகனின் வீரர்களைப் போன்று நெடுஞ்செழியனின் வீரர்கள் கூர்மையான அம்புகளையும் வளைந்த விற்களையுமுடைய பெரு வீரர்கள் என்பதை இவ்வடிகள் சுட்டுகின்றன.
முருகக் கடவுளின் சுற்றத்தினை நெடுஞ்செழியன் வீரர்களுக்கு ஒப்புமையாக இப்பாடல் குறிப்பிடுகிறது.
வெற்றியையுடைய பாரியின் நாடு தனக்குமுன் நிற்கலாற்றாது புறங்கொடுத்தோடும் பகைவரின் வீரக்கழலின் ஒலியைக் கேட்டு நிற்கும் முருகனுக்கு ஒப்பானத என்பதை, -
ஓடு கழற் கம்பலை கண்ட செருவெஞ் சேனப் பெருவிர னாடே”*
என்ற அடிகளில் கபிலர் உரைக்கிறார். இதில் பாரியின் நாடு முருகக் கடவுளுக்கு ஒப்பிடப்பட்டுள்ளத.
சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையும் சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளியும் போரிட்ட போது சோழன் நலங்கிள்ளிக்குத் தணையாக இருந்த தேர்வண் மலையனை, “நின்னை நட்பாகவும் பகையாகவும் பெற்றோர்க்கு நீ, மழைக்கு இருப்பிடமாக உயர்ந்த மலையையுடைய முருகனுக்கு ஒப்பாவாய்' என்று வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் புகழ்ந்து பாடுகிறார். முருகக் கடவுளின் பகைவர்கள் அக் கடவுளால் வெல்லப் பெற்றதைப் பெருமையாகக் கருதுவது முருகனிடம் அன்புடையவர் அவன் அருளைப் பெற்று மகிழ்வர், தேர்வணி மலையனின் பகைவர்களும் நண்பர்களும் அப்பெற்றியராவர் என்பது கருத்து. இங்கு முருகன் உவமையாகக் கூறப்பட்டுள்ளமையை உணரலாம்.
பாணி டியன் இலவந்திகைப் பள்ளித்தஞ்சிய நன்மாறனை, மதரை இளநாகனார் என்ற புலவர்
1 gDrib.: 23: 3-5. 2 qapıb. 120:20~2ı. 3. ஒருநீயாயனை பெரும் பெருமழைக்கிருக்கை சான்ற
வுயர்மலைத் திருத்தகு சேஎய்நிற பெற்றிசி னோர்க்கே
~புறம், 125; 18-20.

Page 34
"ஞாயிற்றைப் போன்ற வெய்யதிறலையுடைய வீரமும் திங்களைப் போன்ற மென்மையும் மழையைப் போன்ற வள்ளண்மையு முடைய நீ ஆழமான நீரையுடைய கடலின் கண் அலைவீசும் திருச்செந்தாரில் முருகவேள் நிலைபெற்ற தறையினிடத்துக் காற்றால் குவிந்த ஓங்கிய மணற்குன்றின் மணலினும் பலகாலம் வாழ்வாயாக" என வாழ்த்தகிறார். முருகனின் திருச்செந்தார் அத அமைந்த கடற்றறைக்குப் பெருமை தருவதாக இப்பாடல் குறிப்பிடுகிறத.
பொன்முடியார் என்ற புலவர் சிற்றார் மன்னனின் குதிரைகளின் வீரத்தைச் சிறப்பித்துப் பாடும் பாடலில் முருகன் கோட்டத்தப் புனிதத் தன்மையைச் சுட்டுகிறார். "பருத்தியை வேலியாகவுடைய ஊரினை ஆட்சி செய்யும் மன்னனின் குதிரைகள் உழுந்தின் சக்கையைத் தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடையவாயினும் அவை கடல்நீரைப் போழ்ந்த செல்லும் தோணியைப்போல பகைவருடைய படைகளைப் பிளந்த சென்று போரைச் செய்யும் ஆற்றலையுடைய" என்றும், "மருதநிலத் தர்களை ஆண்டுவரும் அவனுடைய பகிை மன்னனின் குதிரைகள் நெய்யிட்டமைந்த உணவை உண்டு ஒழுங்காகக் கத்தரிக்கப்பட்ட பிடரியினையுடைய வாயினும் முருகனத கோட்டத்திற்குச் செல்லாமல், ஒதங்கி நிற்கும் பூப்பால் விலக் குணி ட மகளிரைப் போலப் பின்னிட்டு நின்றொழிந்தன" என்றும் பாடுகிறார்.
சிற்றார் மன்னனின் குதிரைகள் உண்பதற்கு உரமான உணவு இல்லையாயினும் பெரு மன்னனின் வலிமை வாய்ந்த குதிரைகளை வெல்லும் தன்மையன என்பதை இப்பாடல் சுட்டுகிறது. பெரு மன்னனின் குதிரைகள் சிற்றர் மன்னனின் குதிரைகளுக்குப் பின்வாங்கியதற்கு, விலக்குண்ட மகளிர் முருகன் கோட்டத்திற்குச் செல்லாமல் ஒதுங்கி நிற்பத உவமையாகக் கூறப்பட்டிருப்பது முருகன் கோட்டத்தின் தாய்மையைப் புலப்படுத்தவதாகும்.
புறப்பாட்டுக்கள் பலவற்றில் முருகக் கடவுளைப் பலவகையிலும் உவமையாகப் பயன்படுத்தியுள்ளமை மேலே கண்ட சான்றுகளிலிருந்த தெளிவாகிறத. அதோடு முருகக் கடவுள் எழுந்தருளி இருப்பதால் திருச்செந்தரின் பெருமையும், முருகன் கோட்டம் புனிதமாகப் போற்றப்பட்டமையும் விளங்குகின்றன.
1 புறம். 55: 13~21. 2 புறம். 299.
24

திருமால்
இலவந்திகைப் பள்ளித் தஞ்சிய நண் மாறன் திருமாலுக்கொப்பான புகழ்சான்றவன் என்பதை,
'........................... மாயோனன்ன
உரைசால் சிறப்பிற் புகழ்சால் மாற"
என்று காரிக்கண்ணனார் அவனை முன்னிலைப்படுத்திச்
சிறப்பித்தப்பாடுகிறார்.
இங்கு நன்மாறன் புகழுக்குத் திருமால் உவமையாகக் கூறப்பட்டுள்ளமையை உணரலாம்.
சோழன் குராப்பள்ளித் தஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத் தஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்த காட்சியைக் கண்டு காரிக்கண்ணனார் மகிழ்ந்த, அக் காட்சி பாலி நிற மேனியும் பனைக்கொடியுமுடைய பலதேவனும் நீலமேனியும் ஆழிப்படையுமுடைய திருமாலும் ஒருங்கிருத்தல் போல உள்ளதெனப் புகழ்ந்த பாடுகிறார்.
பாணிற வுருவிற் பனைக் கொடி யோனும் நீனிற வுருவி னேமி யோனுமென் றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்கு”*
என்பன அக் காட்சியை அப்புலவர் புகழ்ந்து பாடும் அடிகளாகும். சோழ, பாண்டியராகிய இரு வேந்தர்கள் ஒருங்கேயிருக்கும் காட்சிக்குப் பலதேவன், திருமால் ஆகிய
கடவுளர் உவமையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
தன் முன்னோனாகிய சோழ மன்னன் பகைவரோடு பொருத இறந்தபட்டதனால் சோழநாடு தண்பத்தில் ஆழ்ந்திருந்தபோத மலையமான் சோழியவேணாதித் திருக்கண்ணன் பகைவரைப் புறங்கண்ட சோழநாட்டவர் தன்பத்தை நீக்கினான். இதற்கு உவமையாக, பிறரை வருத்தும் அசுரர் கூட்டம் ஞாயிற்றைக் கொண்டுபோய் மறைத்ததனால் எங்கும் இருள் சூழ்ந்து உலகம் தண்புற்ற காலத்தில் அஞ்சனவண்ணனாகிய கண்ணன் ஞாயிற்றைக்
1 புறம். 57 : 2-8 2 புறம். 58 : 14-16

Page 35
காண்டு வந்த உலகின் இருளை நீக்கியதை மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் தஞ்சிய நன்மாறனைச் சிவபெருமான், பலதேவன், திருமால், முருகன் ஆகிய கடவுளர்களோடு ஒப்பிட்டு நக்கீரனார் பாடுகிறார். எம் மன்னன் சீற்றத்தால் சிவனையும் வலிமையால் பலதேவனையும் புகழால் பகைவரைக் கொல்லும் திருமாலையும் கருதியத முடித்தலால் முருகனையும் ஒத்தவன் என அவன் ஆற்றல், வலிமை, வீரம், நினைத்தது நிறைவேற்றல் ஆகிய சிறப்பியல்புகளை நக்கீரர் எடுத்துரைக்கிறார். இங்கும் நான்கு கடவுளர்களும் உவமையாக உரைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு புறநானூற்றில் சிவன், முருகன், திருமால், மலதேவன் ஆகிய கடவுளர்கள் பெரும்பாலும் மன்னர்களின் பேராற்றலையும் பெருவீரத்தையும் சிறப்பிக்கும் வண்ணம் உவமைகளாகவே கூறப்பட்டுள்ளனார். ஒரு பாட்டில் சிவனை வழிபடுதலும் முருகனைக் குறிப்பிடும் பாட்டுக்களுள் ஒன்றில் முருகன் எழுந்தருளி இருக்கும் திருச்செந்தாரும் இன்னொன்றில் முருகன் கோயிலின் புனிதத் தன்மையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
புறநானூற்றில் உள்ளதைப் போலவே ஏனைய சங்க இலக்கியங்கள் பலவற்றுள் இக் கடவுளரைப் புகழ்ந்து கூறும் குறிப்புக்களே காணப்படுகின்றன. கடவுளரை வழிபடும் முறை அவற்றுள் சொல்லப்படவில்லை. திருமுரு காற்றுப் படையிலும் பரிபாடலிலுமே கடவுளின் வழிபாட்டு '
1 அணங்குடை யவுணர் கணங்கொண் டொளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணா திருள்கண் கெடுத்த பருதி ஞாலத் திடும்பை கொள் பருவர ரீரக் கடுந்திறல் அஞ்சன ஒருவன் தந்த நிறுத்தாங்கு
புதுமையி னிறுத்த புகழ்மேம் படுந’ - புறம் 174: 1-16.
pab. 56: I~14.
புறநானூற்றில் தமிழர் பண்பாடு என்னும் நூலிலுள்ள ‘சமயம் என்ற தலை
25

முறைகளைக் காண்கிறோம். முன்பே குறிப்பிட்டபடி புறநானூற்றில் ஆங்காங்கே சூழ்நிலைக் கேற்பக் கடவுளர்கள் குறிப்பிடப் பட்டுள்ளனர். கடவுளர்க்கு உயர்வு தாழ்வு கூறும் சமயப்பற்று சங்க காலத்தில் இல்லை எனலாம்.
ஆரியருடைய வேள்வி முதலிய கொள்கைகள் சங்க காலத்திலேயே புகுந்தன. இராகுயம்வேட்ட பெருநற்கிள்ளி, பல்யாகசாலை முதகுடுமிப் பெருவழுதி, முதலிய மன்னர்களின் அடைமொழிகள் அக்காலத்தில் ஆரியக்கொள்கைகள் தமிழகத்தில் புகுந்ததை உணர்த்தும். ஆனால் அக்கொள்கைகள் சங்க காலத்தில் தமிழகத்தில் வேரூன்றவில்லை. சங்க காலத்திற்குப் பிறகு ஆரியக் கொள்கைகள் மிகுதியாகத் தமிழகத்தில் பரவலாயின.
புறநானூற்று அடிப்படையிலும் ஏனைய சங்க இலக்கியங்களின் அடிப்படையிலும் சங்க காலத்து சமயம் என்று கூறவேண்டுமாயின் அந்தந்த நிலத்தவர்கள் தாம் வழிபடும் கடவுளைக் கொண்டிருப்பதாலும் சமுதாயத்தில் மக்களிடையே கடவுள் நெறியை பொறுத்த வரையில் எவ்வகையான வேற்றுமை மனப்பான்மையும் இல்லை என்றே கொள்ளலாம். "கடவுள் நம்பிக்கை என்ற ஒரே சமயம் தான் சங்க காலத்தில் இருந்தது’ என்ற தா.ஏ. ஞானமூர்த்தியின் கூற்று பொருத்தமுடையத எனலாம்.
பல கடவுளர்களையும் வேற்றுமை மனப்பான்மையின்றி வழிபடும் பண்பாடு மக்களிடையே இருந்ததென்பது புறநானுாற்றிலிருந்து அறியும் உண்மையாகும்.
புறம். 16. 2 புறம். b. 5 டாக்டர் தா. ஏ. ஞானமூர்த்தி, ‘சங்ககாலச் சமுதாயம்"
முத்தக்கோவை, 1981, ப. 362.
ப்பிலான இயல் இங்கு தரப்பட்டுள்ளது. தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

Page 36
சங்ககால
முனைவு
அரசு என்னும் மாளிகை அழகுடனும் அசை உறுதியுடனும் அமைய வேண்டுமென்றால் ஆட்சிமுை என்னும் அடித்தளம் அதற்கேற்ப ஆழமாயும் உறுதியாய திட்டப்படியும் அமைந்திருக்க வேண்டும். சங்க கால தமிழக அரசு சிறப்புற இயங்கியதென்றால் அதற்கு முக்க் காரணம் அதன் ஆட்சிமுறை அக்கால இயல்பிற்கே பல சிறப்பம்சங்களைக் கொண்டிருந்ததுதான். பண்டை தமிழகம் முடியுடை வேந்தர் மூவரால் ஆளப்பட்டு வந்த என்பத அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்ை அந்த முடியாட்சி, மக்களின் மனம் பொருந்திய இயல்பா ஆதரவு, பற்றுறுதி என்ற அடிப்படையி கட்டப்பட்டிருந்ததால் செல்வாக்குடன் செழித்தோங்கிய
முடியாட்சி அமைப்பு
பண்டைத் தமிழகம் சேர, சோழ, பாண்டிய மரை சேர்ந்த மூன்று முடியுடை மன்னர்களால் ஆளப்பட வந்தத. இவர்கள் மூவரும் தங்கள் தங்கள் ஆட் பகுதியில் முழு இறைமை வாய்ந்த மன்னர்களாக ஆ புரிந்தனர். யாரும் யாருக்கும் உட்பட்டவர்கள் அல்ல போரின் மூலம் ஒன்றையொன்று வெல்ல முயன்றாலு ஒவ்வொன்றும் தனித்தனி அரசாகவே இயங்கி வந்த
வடமொழி இராமாயணம், மகாபாரதம் அர்த்தசாஸ்தி அசோகரின் கல்வெட்டுக்கள் மெகஸ்தனிஸ் குறிப்புக்க ஆகிய வரலாற்று மூலச்சான்றகளிலே சேர, சோ பாண்டிய நாடுகள் பற்றிய குறிப்புக்கள் இருப்பத
1. நாட்டின் பெரும்பகுதி கடற்கரையாக விளங்கியதால் சேர் இத சேரநாடு எனப்பட்டது. சோற்றுவளம் மிகுதியாக இருந்த சோழநாடு சோழநாடு எனவும், பண்டையர் என்ற சொல்லிலிரு பாண்டியர் எனவும் வழங்கியத. (தமிழ்நாட்டு வரலாறு சங்கக அரசியல், 1983, பக். 528-29)

ம் - ஆட்சிமுறை
ர் ஜி. சேதுராமன்
ப்பு) நால்
ாலம்
26
இவ்வரசுகள் வரலாற்றுக் காலந்தொட்டே இயங்கி வந்திருக்க வேண்டும். இவர்கள் கட்டுப்பாட்டில் பல சிற்றரசர்கள் ஆண்டனர். அவர்கள் சிறு பகுதிகளை ஆண்டதால் குறுநில மன்னர் என அழைக்கப்
படலாயினர்.
அரச பதவியின் தோற்றம்
அரச பதவி காட்டைச் சார்ந்த முல்லை நிலத்தில் இருந்தே தோன்றியதாக பி. டி. சீனிவாச அய்யங்கார் குறிப்பிடுகிறார். தமிழ் மொழியில் அரசன் கோன் எனப்படுகிறான். 'கோன் என்ற சொல் இடையனின் 'கோல் என்பதிலிருந்து தோன்றியது. இடையனின் பணிக்கும் அரசனின் பணிக்குமிடையே ஒத்த உறவு உள்ளதால் இடையர்களின் முல்லை நிலத்திலிருந்தே தோன்றியிருக்க வேண்டும் என்பது ஓரளவிற்குப் பொருத்தமாயுள்ளது. எனினும் அரசபதவி எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான அடிப்படையில் தோன்றியிருக்க முடியாது. ஒவ்வோர் இடத்திலும் ஒவ வோர் சூழ்நிலையில் தோன்றியிருக்கக்கூடும் என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது.
சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தருள்ளும் சேரரே முதலில் கூறப்பட்டிருப்பதால் அவரே மூத்த குடியினர் என்று சொல்லிவிட இயலவில்லை. எனினும் பாண்டியர் எனும் பெயர் பண்டையர் அல்லத தொன்மை என்பதிலிருந்து வந்தள்ளதால் அதவே மூத்தகுடியெனக் கொள்ள ஒளரவு இடமிருக்கின்றது. இதற்கு ஆதரவாகச் சோழ மன்னர் ஒருவர் பாண்டியரின் தொண்மை பற்றிப் பாடியுள்ளதைக் கலித் தொகை கவிதையாக எடுத்துரைக்கின்றது.
1. மதரைக் காஞ்சி, பாடல் 776 2. கலித்தொகை 104, 1~4.

Page 37
சேரர்கள், வானவர், வில்லவர், குட்டுவர், பொறையன் என்ற சிறப்புப் பெயர்களாலும் பாண்டியர்கள், மீனவர், பஞ்சவர், செழியர், மாறவன், வழுதி என்ற மரபுப் பெயர்களாலும் குறிப்பிடப்பட்டனர்.
மரபுவழி அரசு முறை
சங்ககாலத் தமிழகத்தில் தந்தைக்குப்பின் மூத்த மகன் அரசுரிமை எய்ததல் என்ற மரபுவழி அரசே நிலை பெற்றிருந்தது. எனவே மூத்த மகனுக்கு இளமையிலேயே ஆட்சித் தறையில் போதிய பயிற்சியளிக்கப்பட்டது. அந்த இளவரசர்கள் இளஞ்செழியர், இளஞ்சேரல் இளங்கோ, இளம்பொறை எனப்பட்டனர். மூத்தவன் இருக்க இளையவன் அரியணை ஏறுதல் முறையன்று என்றே எண்ணினர். எனவே தான் அண்ணன் குமணன் இருக்க தம்பி இளங்குமணன் ஆட்சியைக் கைப்பற்றியதை முறையற்ற செயல் என்ற புலவர்கள் கண்டித்தனர். இக்காலத்தில் போர் மூலம் நாட்டைக் கைப்பற்றுதல் வீரமெனக் கருதப்பட்டதால் தந்தையைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தனயர்களும் இருந்தனர். கோப்பெருஞ்சோழனுக்கு எதிராக அவனத புதல்வர்கள் ஆண்டனர். இரு சகோதரர்கள் ஒருவரோடு ஒருவர் போரிட்டு, நாட்டைப் பிரித்த அரசோச்சிய நிலையும் இருந்திருக்கின்றத. ஒன்றுவிட்ட சகோதரர்களான நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டு நாட்டைப் பிரித்த ஆண்டனர். ஒரு தந்தைக்குப் பல மைந்தர்கள் இருந்தபோது அவர்களுக்குள் சச்சரவின்றிச் செயல்பட தந்தையே தம்மக்களுக்கு நாட்டைக் கூறுபோட்டு ஒதக்கி விட்ட கதையை அறியலாம். உதாரணமாக சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மைந்தர்கள் மூவரும் முடிசூட்டி ஆண்டனர். பாண்டிய நாட்டிலும் இத்தகைய ஒற்றுமை இருந்தது. சோழநாட்டில் கரிகாற் சோழன் தனக்கு முறைப்படி சேர வேண்டிய அரியணையைப் பெற்றான் எனப் பட்டினப்பாலை கூறுகின்றது. சில வேளைகளில் தந்தையும் மகனும் இணைந்து இணையாட்சியாளர்களாக ஆட்சி புரிந்தனர் என்றும் தெரியவருகின்றது. இவ்வரசுரிமை தந்தை வழி சார்ந்தே வந்தள்ளது. பெண்கள் அரசுரிமை பெற்றதாகத் தெரியவில்லை. மெகஸ்தனிஸ், ஹெராக்லிஸின் மகள் பண்டைய இந்தியாவின் தென் கோடியை
1. பட்டினப்பாலை 227

ஆட்சிபுரிந்ததாகக் கூறுவது ஏற்புடைத் தாயில்லை. அரசு கட்டிலில் ஏறுவதற்கு வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. தேவையானபோது இளம் வயதிலேயே அறியணை ஏறியோர் பட்டியலில் கரிகாற் சோழனி , தலையாலங்கானத்தச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், அதியமான் நெடுமான் அஞ்சி ஆகியோர் அடங்குவர்.
முடிசூட்டு விழா
அரசன் பதவி ஏற்கும் வைபவம் முடிசூட்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அரச குடும்பத்த முதியவர்களோ மற்றும் ஆலோசகர்களோ முடிசூட்டியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனை அரியணை ஏறுதல் எனவும் முடிகவித்தல் எனவும் கூறுவர். மன்னன் முடிசூடிய ஆண்டிலிருந்துதான் ஆட்சிக்காலம் கணக்கிடப்பட்டது. முடிசூட்டு விழா நாளும் ஆண்டுதோறும் மண்ணுமங்கலமாகக் கொண்டாடப்பட்டத. பொதவில் பாரம்பரியமாக அணியப்படும் மணி முடியும் மற்றும் மாலைகள் போன்றவைகளும் அந்நாளில் சூடப்படும். சில காரணங்களால் முறையான முடியும் மாலையும் கிடைக்காத காரணத்தால் சேர மன்னன், ஒருவன் முடிசூட்டு விழாவில் நாரினால் ஆன முடியையும் கறுப்பு மணிகளாலான மாலையையும் அணிந்ததாகத் தெரிகிறது. அதனால் அவன் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் என அழைக்கப்பட்டான். முடிசூட்டு விழா போன்றே அரசரின் பிறந்தநாள் விழா பெருமங்கலம் என்று கொண்டாடப்பட்டத.
93FGOa
அரசனுக்கு அறிவுரை கூறி சிறந்த முறையில் ஆட்சி நடத்த உதவும் மன்றம் அரச அவையாகும். இத அவையம், ஒலக்கம், இருக்கை எனப்பட்டது. அவையத்தின் எண்வகைச் சிறப்புக்கள் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:1) நற்குடிப்பிறப்பு 2) நற்கல்வி 3)நல்லொழுக்கம், 4)வாய்மை, 5)தாய்மை, 6) நடுநிலைமை, 7)அழுக்காறாமை 8) சுயஅவாவின்மை ஆகியவைகளாகும்.
1. K. A.Nilakanta Sastri. Foreign Notices of South India, 1972p41. 2. பதிற்றுப்பத்த 38:4
7

Page 38
அமைச்சர்கள்
தங்களுக்கு ஆலோசனை கூற சங்ககால மன்னர்கள் அமைச்சர்களை நியமித்திருந்தனர். அவர்கள் எப்போதும் அருகிலிருந்ததால் உழைஇருந்தார் எனப்படுகின்றனர். கடியலுார் உருத்திரங்கண்ணனார் அவர்களைச் சுற்றம் என்று கூறுகின்றனர். "கருவியும் காலமும் , செய்கையும். செய்யும் அருவினையோடு வன்கண், குடிகாத்தல் கற்றறிதல், ஆள்வினை, ஆகிய பண்புகளே அமைச்சரின் மாண்புகள்" என வள்ளுவர் கூறுகின்றார். மேலும் ஒரு அமைச்சருக்கு சொல்வன்மை, வினைத்தாய்மை, வினைத் திட்பம், வினை செயல்வகை, மன்னரைச்சார்ந்தொழுகல், தாது செல்லும் திறம், அவையறிதல், குறிப்பறிதல், அவை அஞ்சாமை ஆகிய பண்பு நலன்களும் இருக்க வேண்டுமென அவர் கூறுகிறார். தரோகமிழைக்கும் அமைச்சர்கள் 59 கோடிப் பகைவர்களைவிடக் கொடியவர்கள் எனவும் அவர் கூறுகின்றார். பெருஞ்சேரல் இரும்பொறைக்கு அரிசில் கிழாரும், இளஞ்சேரர் இரும்பொறைக்கு மையூர் கிழாரும் விளங்கியதைப்
பதிற்றுப்பத்து கூறுகின்றது.
தூதர்கள்
சங்க கால அரசர்கள் தாதர்களைக் கொண்டிருந்தனர். ஓர் அரசனின் பிரதிநிதியாக மற்றவர்கள் அவையில் செயல்பட்டவர்களே தாதர்கள் ஆவர். உயிர்க்கிறதி பயப்பினும் அஞ்சாத அரசனுக்கு உறுதிபயக்கும் தாதர்கள், இயற்கை அறிவு, விரும்பத் தக்க தோற்றம் , ஆராய்ச்சியுடைய கல்வி ஆகிய மூன்று இயல்புகளைக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் இருவகைத் தாதர்கள் இருந்ததாகப் பரிமேலழகள் கூறுகின்றார். முதல் வகையினர் அமைச்சர் அந்தஸ்து பெற்றிருந்தனர். பிறநாட்டு அரசவையில் தம் நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கென நியமிக்கப்பட்டவர்கள். இரண்டாவது வகையினர், ஒரு குறிப்பிட்ட பணிக்கென சிறப்பாக அனுப்பப்படுவார்கள். இந்த வகையில் புலவர்கள் கூட தாதர்களாக அனுப்பப் பெற்றுள்ளனர். அதியமான் நெடுமானஞ்சியின் சார்பில் ஒளவையார் தொண்டைமானிடம் தாது சென்று போரைத் தவிர்த்த ராஜதந்திர சாதனையும், கோவூர்க்கிழாரும் பொதநலன் கருதி நெடுங்கிள்ளியிடம் தாத சென்றதும்
1. பதிற்றுப்பத்து பதி. 8 & 9.
2. புறநானூறு 95

குறிப்பிடத்தக்கவை. அந்தணன் ஒருவண் படைத் தணையோடு தாதோலை எடுத்துச் சென்ற செய்தி
அகநானுற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒற்றர்கள்
சங்ககால அரசுப் பணியில் அமர்ந்திருந்த முக்கிய பணியாளர்களுள் ஒற்றர்கள் முக்கியமானவர்களாவர். “எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எல்லாக் காலத்திலும் ஒற்றர்களைக் கொண்டு அறிதல் அரசர்க்குரிய தொழில்” என வள்ளுவர் கூறுகின்றார். இரகசியச் செய்திகளைக் கேட்டறியும் திறனும் அறிந்த செய்திகளை ஐயத்திற்கிடமின்றிக் கூறும் தணிச்சலும் ஒற்றர்கள் கொண்டிருந்தனர். ஒற்றர்க்கு வெளிப்படையாக எவ்வெகுமதியும் அளித்தலாகாத என திருக்குறள் (590) கூறுகின்றது.
அரசனது பணிகள்
சங்ககால மன்னர்கள் தம் மக்களை நன்னடத்தை யுடையவர்களாகச் செய்யும் கடமை பெற்றிருந்தனர். சங்ககால அரசன் இறைவன் எனக் கருதப்பட்டதால் மக்களைக் காத்து முறையாக நீதிவழங்கும் பொறுப்பினை உடையவனாயிருந்தான். மற்றும் இயற்றலும் ஈட்டலும், காத்தலும், காத்து வகுத்தலும் ஆகிய பணிகளையும் திறம்பட ஆற்றினான். குடிதழிஇக்கோலோச்சி, குற்றங்கடிதலும், கொலையில் கொடியோரை ஒறத்தலும் அரசன் தொழில்களாகக் கருதப்பட்டன. சங்ககால அரசன் சட்டக் கொடையாளராக அல்ல, சட்டக் காப்பாளராகவே கருதப்பட்டான். சட்டங்களை உருவாக்குவது அரசன் பணியன்று, தொன்று தொட்டு நாட்டில் நிலவி வந்த
அறப்பண்புகளே சட்டப் பாரம்பரியங்களாக ஏற்றுக்
28
கொள்ளப்பட்டிருந்தன. அளவில்லா அதிகாரங்களையுடைய மணி னணி இந்த அறப் பணி பாடுகளுக்குக் கட்டுப்பட்டிருந்தான். அவற்றை மீறினால் அவன் கொடுங்கோலன் ஆகின்றான். நாட்டில் நடைபெறும் அனைத்த நிகழ்ச்சிகளுக்கும் அவனே பொறுப்பேற்க வேண்டியவனாகின்றான்.
தம் மனைவி, பிள்ளைகளின் கண்ணிலும் மக்களின் கணிணிரைப் பெரிதெனக்காணி பத மண்னனினர்
1. அ , அகநானூறு 337 ~7-8

Page 39
கடமையாயிருந்தத. நடுநிலை தவறாமையும், பணிந்தோரை மன்னித்தலும் அவன் பண்புகளாகக் கருதப்பட்டன. தனது தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது திருந்திக்கொள்ளும் நற்பண்பு வேண்டும். குளம்தொட்டு வளம் பெருக்குவதம் காட்டை அழித்து நாடாக்குவதும் அரசினின் கடமையாயிருந்தன.
கொடை மாட்சி மன்னனின் சிறந்த பண்பாகக் கருதப்பட்டத. கற்றறிந்தோர்க்கும் புலவர்க்கும் பாணர்களுக்கும், வாரி வழங்கியதற்கு ஏராளமான இலக்கியச் சான்றுகள் உள.
வேள்விகளியற்றுவதம் மன்னனின் மற்றொரு முக்கிய பணியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இராஜசூயயாகம் வேட்ட பெரு நற்கிள்ளி, பல்யாகசாலை முதகுடுமிப் பெருவழுதி, கரிகாலன், பல்யானை செல்கழுகுட்டுவன் ஆகியோர் வேள்விகள் இயற்றியதாக இலக்கியங்கள் கூறுகின்றன.
அரசுச் சின்னங்கள்
கொடி, குடை, முரசு, குதிரை, யானை, தேர், மாலை, முடி முதலியன அரசருக்குரிய இன்றியமையாச் சின்னங்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அவை தவிர படை, செங்கோல், அரியணை, காவல்மரம் ஆகியவைகளும் அரசருக்குரிய பதவிச் சின்னங்களாகக் கருதப்பட்டன.
I. 6a, Tul
சங்க கால மன்னர்கள் தனித்தனிக் கொடிகளைக் கொண்டிருந்தனர். சேர மன்னர்கள் தம் கொடியில் வில்லினையும், சோழர் புலியினையும், பாண்டியர் மீனையும் சின்னமாகக் கொண்டிருந்தனர். இக்கொடிகளின் வண்ணங்கள், அளவுகள் எதுவும் தெரியவில்லை. போரில் வெற்றி பெற்றபோது வெள்ளை நிறக்கொடி பிடிக்கப்பட்டத மட்டும் தெரிகின்றது. கொடிகளைக் கோயில்கள், பாசறைகள், அரண்மனைகள், யானைகள், தேர்கள் ஆகியவற்றின்மீது பறக்கச் செய்தனர். கொடியைப் பறித்தல் அல்லத அழித்தல் என்பது அக்கொடியினைப் பற்றியிருந்தவருக்கு அவமானத்தையும் அழித்தவருக்கு
1. இப்பண்பு இலாதவரைப்பற்றி திருக்குறள் இடிப்பாரை இலாத ஏமரா
மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்று கூறுகின்றது.

வெற்றியையும் தருவதாகக் கருதப்பட்டத. அரசனுக்குரிய கொடிபோல் வணிகர்களுக்கென அடையாளக் கொடிகளும், திருவிழாக்காலக் கொடிகளும், சொற்போர் செய்வோர்க்கான அடையாளக் கொடிகளும் அவ்வப்போத பறக்க விடப்பட்டன.
III. GODIL
சங்ககால மன்னர்கள் வெண்ணிறத்தில் வட்ட வடிவமான பெரிதான குடைகளைக் கொண்டிருந்தனர். இது வெண்கொற்றக்குடை என்று அழைக்கப்படலாயிற்று. இக் குடை நால் களைக் கொணர்டு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டதெனத் தெரிகின்றது. இது அரச சின்னமாகும். அத ஆற்றல், வெற்றி, வெல்ல முடியாத தனி மை ஆகியவற்றையும், குடிமக்களுக்கு இடையூறுகளிலிருந்த பாதுகாப்பையும் அளிக்க வல்லது என்பதை எடுத்தக் காட்டியத. மக்களைக் காக்கும் குடையே வெண்குடை அரசன் செல்லுமிடமெல்லாம் போர்க்களத்திற்கு கூட குடை எடுத்துச் செல்லப்பட்டது. போர்களத்தில் பகை வேந்தர்களின் குடையைக் கைப்பற்றுதல் பெரும் வெற்றிச் செயலாகக் கருதப்பட்டத.
I. முரசு
சங்ககால மன்னர்கள் முரசைப் புனிதமாகக் கருதினர். அதனைப் புனித நீராட்டி மாலையிட்டு, அதற்கென அமைக்கப்பட்ட முரசுகட்டிலில் வைத்தனர். விழாக்கள் போன்றவற்றை அறிவிக்கவும், பொழுதின் விடிவை அறிவிக்கவும், போர் தொடங்கியதை அறிவிக்கவும் முரசுகள் முழங்கின. இம்மன்னர்கள் வீரமுரசு, நியாயமுரசு, தியாகமுரசு ஆகிய மூவகை முரசுகளைப் பெற்றிருந்தனர்.
IV. öásog
அரசர் அமர்ந்த செல்லும் குதிரை அரசரின் பெயரால்
அழைக்கப்பட்டத.காரி, ஓரி, ஆகியோரின் குதிரைகள்
முறையே அவர்தம் பெயரிலேயே அழைக்கப்பட்டன.
V. AJ6O60
பட்டத்து யானை அரசரின் சிறப்பூர்தியாகும். நகர்வலம்
வரும்போது அதன்மீதே பவனி வந்தார். களிறு என்னும்
ஆண் யானைகளே பயன்படுத்தப்பட்டன.
1. நெடுநல்வாடை 184
2. புறநானூறு 229 : 19

Page 40
VI. தேர் /
இருசக்கரங்கள் கொண்டு குதிரைகள் பூட்டப்பட்ட தேரை சங்ககால மன்னர்கள் பயன்படுத்தினர். மன்னவர் மட்டுமன்றி திருவிழாக்காண்போரும், நீராடுவோரும், பெண்டிரும் தேர்களில் சென்றுள்ளனர்.
VII. Offso)6)
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களுக்கென முறையே பனம்பூ, அத்தி, வேம்பு ஆகியவற்றால் ஆன மாலைகளைச் சூடினர். போர்க் காலங்களில் போர்த்தொழிலைக் குறிக்கும் வெட்சி, கரந்தை, வஞ்சிகாஞ்சி, நொச்சி, உழிஞை, தம்பை, வாகை போன்ற மாலைகள் சூட்டப்பட்டன. இம் மாலைகள் தார் எனவும் அழைக்கப்பட்டன. இவ்வணிகள் அரசர்க்கு மட்டுமன்றி வணிகர்க்கும், மன்னரால் சிறப்பிக்கப்பட்ட பிறர்க்கும் இருந்திருக்கின்றன.
VIII. p.
முடி மன்னருக்குரிய சிறப்பணி. ஒவ்வொரு மரபினரும் மரபு வழிவந்த முடியையே சூடினர். தோற்ற மன்னரின் அணிமுடியிலிருந்த தங்கத்தை எடுத்துக் காலில் அணிந்து கொண்டனர்.
IX. GODIL
இங்கு படையெனப்பட்டது வாள் ஆகும். மக்களின் பகைவர்களை அழிக்கும் வீரத்தின் சின்னமாக வாள் கருதப்பட்டது. இதவன்றி நாட்டு நலன் காக்கும் வீரர்களைக் கொண்ட அரசபடையும் படையெனப்பட்டது.
X. Geff Gassrs
கோல் என்பது அரசனது ஆளும் அதிகாரத்தைக்
குறிக்கும் சின்னமாகும். ஆட்சியானத அறநெறி வழுவாத
முறை கோடாத இருந்தால் செங்கோல் எனப்பட்டத.
X1. அரியணை
அரசர்களினர் இருக்கை சிங்கங்களால் தாங்கப்பட்டிருப்பவை போன்று அமைக்கப்பட்டதால் அவை அரியணை எனப்பட்டன. சிம்மாசனம் என்றும் அழைக்கப்பட்டத. அரச அவையில் அத நீதியின் இருப்பிடமாகக் கருதப்பட்டது.
1. குறுந்தொகை 393 6

30
XII. a5/T6hJ6ö (oyib
சங்ககால மன்னர்கள் தம் மரபிற்கும் அரசிற்கும் உரியதாய்க் கொண்டிருந்த மரம் ஒன்றினை கடிமரம் அல்லது காவல் மரம் என அழைத்தனர். இம்மரம் தெய்விகத் தன்மையுடையதாகக் கருதப்பட்டத. பகைவரால் வெட்டப்பட்டால் அரசே வீழ்ந்துபட்டதற்குச் சமமாகும். தம் யானையினை பகையரசன் காவல் மரத்தில் கட்டிவிட்டால் அத வெற்றியைக் குறிக்கும் செயலாகும்.
வருவாய் வரிக் கொள்கை
அரசனது வருவாய் உறுபொருள், உல்கு பொருள், ஒன்னார்த்தெறு பொருள் ஆகியவை வாயிலாகக் கிட்டியது என அறிகிறோம்.
இதில் உறுபொருள் என்பது நில்வரி எனப்படுகிறது. இத விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியாக வசூலிக்கப்பட்டத.
உல்கு பொருள் என்பது ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரியும் சுங்கமும் ஆகும். ஒன்றார்த்தெறுபொருள் என்பது போரில் பெற்ற கொள்ளைப் பொருளும், தோற்ற அரசர்களால் செலுத்தப்படும் திறையும் ஆகும்.
நீதி
நீதி வழங்கல் மன்னனது தலையாய பணியாகக் கருதப்பட்டது. அவனது செங்கோல் நீதியின் சின்னமாக விளங்கியது. மனுநீதிச் சோழன் கதை அதனை விளக்குகிறது.பொதுவாக நீதி வழங்குதல் கிராம அவைகளின் பணியாகக் கருதப்பட்டது. கரிகாற்சோழன் தானே முதியவர்போல் வேடம் பூண்டு வழக்குத் தொடுத்தவர்களை விசாரித்து நீதி வழங்கினான் என்று ஒரு கதை கூறப்படுகின்றது. கோவலனை முறைதவறிக் கொன்ற குற்றத்திற்காகத் தன்னையே மாய்த்துக் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியனின் கதை அக்காலத்தில் நீதி முறைக்கு மனினர் கொடுத்தவந்த மதிப்பினை விளக்குகின்றது. தன் மீது தஞ்சமென விழுந்துபட்ட புறாவுக்காகத் தன் சதையை அறத்தக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி கதையும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால்
1. இக்கதை புத்த ஜாதக்கதைகளில் ஒன்றான சிபிஜாதகத்தில் உள்ளது.
இதன்படி புத்தரே புறாவைக் காத்துள்ளார். இதன் ஓவியம் அஜந்தா
குகைகளில் அழகுற அமைந்தள்ளத.

Page 41
இக்கதையனைத்தும் உண்மையானவையா எனத் தெரிய வில்லை. அரசன் வழிதவறம் போது கணிணிர் வடித்தக்காட்டித் திருந்தும் பாவைச் சிலை ஒன்று புகார் நகரத்தப் பாவை மன்றத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
ஊராட்சிமுறை
சங்ககாலத்தில் முடியரசு தலையாய ஆட்சி செய்த வந்ததெனக் கண்டோம். அவர்களுக்கு அடங்கியும், சுதந்திரமாகவும் ஆங்காங்கே குறநில மன்னர்கள் ஆண்டனர். கிராமங்களில் அரசு அலுவலரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோரும் ஆட்சியில் பங்கேற்ற செய்தி சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கிராமங்களிலும், நகரங்களிலும் நடத்திய நிர்வாக முறையே ஊராட்சி முறை எனக்கூறப்படுகின்றத. இங்கு பலவகை அவைகள் செயல்பட்டன. மக்கள் கூடிய அவை அவைக்களம் என்றும், நல்லோர் கூடிய அவை நல்லவை என்றும் சொல்லப்பட்டு வந்தது. மதரை நகரில் மக்களவை செயல்பட்டதாக மதரைக் காஞ்சி கூறுகின்றது. கள்ளூரில்
1. தமிழ்நாட்டு வரலாறு, சங்ககாலம், அரசியல், ப. 584 2. மதரைக்காஞ்சி , 161 4 p4
இக்கட்டுரை முனைவர் ஜி. சேதுராமன் எழுதிய 'தமிழ்நாட்டு சமுதா 2001) எனும் நூலில் இருந்து பெறப்பட்டது.

அவை ஒன்று இருந்த செய்தி அகநானூற்றில் உள்ளது. ஊரை நிர்வகிக்கும் பணி அவர்களிடம் விடப்பட்டிருந்தது. அவர்கள் ஊர் ஏரியைக்காத்த, மக்களுக்குப் பாசன வசதி செய்தனர். குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகளைத் தீர்க்கவும் செய்தனர். தனினை விட்டுவிட்டு மற்றொருத்தியுடன் வாழ்ந்த தன் கணவனை அவை முன் இழுத்தவர முயன்ற பெண் பற்றி பரிபாடல் கூறுகின்றது. இவ்வூரவைகள் தங்கள் தலைவரைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொண்டன. இத்தலைவர் கிழார் எனப்பட்டார். இவரைத் தேர்ந்தெடுத்த முறை தெரியவில்லை.
மக்களின் அன்றாட வாழ்வில் எந்த அரசு அதிக தலையீடு செய்யாதிருக்கின்றதோ அதவே நல்லரசு என்ற தத்தவப்படி பார்த்தால் பண்டைத் தமிழக அரசுமுறை உண்மையில் போற்றத்தக்கதாகவே இருந்தது. அரசுப் பணியானது அறங்காவல் பணி என்றே கருதப்பட்டது செங்கோன்மை சீரான ஆட்சிக்கு வழி வகுத்தது. மக்களும் மன்னனை இறைவன் என்றே கருதினர். இறைவனது காத்தல் தொழிலை குறைவறச் செய்த சங்க மன்னர்கள் ஆட்சி, நிறைகள் பல கொண்டது என்பதில் ஐயமில்லை.
1. அகநானூறு 256.
பண்பாட்டு தலை வரலாறு (ஜே.ஜே. பப்லிகேசன், மதுரை.

Page 42
புறநானூறு உயர்வநறிக்
முனைவர்
G&SITGOL
அறங்கள் பலவற்றுள்ளும் ஈகையாகிய அற தலையாயதெனலாம். ஈகையாவத பொருளற்றவர்களுக்கு பொருள் தந்த உதவுவதாகும்.
வறியார்க் கொன்று ஈவதே ஈகை'
எனத் திருவள்ளுவர் ஈகைக்கு விளக்கம் தருகிறார் பொருளுடையவர் வறுமையால் தண்புறுவோர்க்குப் பொரு வழங்கி அவர்களின் வறுமைத் தண்பத்தைப் போக்குவ உண்மையில் இணையற்ற அறமாகும். இத்தகை அறத்தைச் செய்வோர் உலகில் பெரும்புகழ் எய்தவ ஈதலால் வரும் புகழே கல்வி, வீரம், முதலியவற்றா வரும் புகழினும் சிறந்ததென்பதை,
'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு”*
என்ற குறளால் திருவள்ளுவர் உணர்த்துகிறர்.
சங்க காலத்தில் வறுமையுற்றோர்க்கு வரையா பொருளை வழங்கி அவர்களை வாழ வைத் வள்ளல்களையே புலவர்கள் சிறப்பித்தப் பாடின புலவர்களால் பாடப்பெறும் இச்சிறப்பினைப் பெறுவோ( பாகனால் செலுத்தப் பெறாத வானவூர்தியை எய் விண்ணுலக இன்பத்தைத் தய்ப்பர் என்று புறநானூற்ற பாட்டுக் கூறுகிறது. அப்பாடலடிகளாவன:
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவ னேவா வான வுர்தி எய்தய வெண்பதஞ் செய்வினை முடித்தென’’ குறள். 221
குறள். 231. 3. (gDfb. 27 : 7-9.

புலப்படுத்தும் விகாள்கைகள்
செ. பழனிச்சாமி
32
ஈகை கொடையெனவும் படும். இல்லாதவர்களுக்குப் பொருளைக் கொடுத்ததஷவதால் கொடை எனப்பட்டது எனலாம்.
சங்க காலத்தில் கொடையில் மேம்பட்டு விளங்குவது தலை சிறந்த பண்பாடாகப் போற்றப் பெற்றது. கொடையிற் சிறந்த பல வள்ளல்களைப் புறநானுாற்றுப் பாட்டுக்கள் பாடி இப் பண்பாட்டின் மேன்மையினை உணர்த்துகின்றன.
பல மன்னர்களும் குறுநில மன்னர்களும் தலைவர்களும் புலவர்கள், பாணர்கள், பொருநர், விறலியர் போன்றோர்க்குப் பரிசில்கள் நல்கி அவர்களுடைய வறுமையைப் போக்கிய கொடைத்திறனைப் புறநானூற்றுப் பாட்டுக்கள் பலபடப் பாடுகின்றன.
அதியமான் நெடுமானஞ்சி
என்றும் கையகத்தள்ள பரிசில்: அதியமான் நெடுமானஞ்சியிடம் செல்லும் பரிசிலர் உறுதியாகப் பொருளைப் பெறுவர் என்பதை ஒளவையார் சுவைபடப் பாடுகிறார். ‘அதியமான் நெடுமானஞ்சி, நாம் ஒரு நாள், இரு நாள் மட்டுமின்றிப் பல நாளும் நாள்தோறும் பலரோடு கூடச் செல்லினும் முதல் நாள் சென்ற போத அதியமான் எத்தணை விருப்பத்தோடு வரவேற்றானோ அத்தணை விருப்பத்தோடு வரவேற்பான். பரிசில் பெறங்காலம் நீட்டிப்பினும் நீட்டியாதொழியினும் யானை தனது கொம்பினிடையே வைக்கப்பட்ட கவளம் போல அவன் பரிசில் நம் கையில் இருப்பதைப் போன்றதாகும். எனவே நெஞ்சே! நீ பரிசிற்கு வருந்த வேண்டா., அவன் தாள் வாழ்க’ என்று ஒளவையார் தம் நெஞ்சிற்கு உரைப்பத போல் அவன் கைவண்மையைப் போற்றுகிறார்.
1. புறம். 101.

Page 43
யானை கொம்பினிடையே வைக்கப்பட்ட கவளம் அதற்குத் தப்பாதத போல அதியமானிடம் சென்ற பரிசீலர், கொடைப் பொருளைப் பெறுவத தவறாது என ஒளவையார் அவனுடைய கொடை மேம்பாட்டை உணர்த்துகிறார்.
இரவலரைய் புரக்கும் பாங்கு
"அதியமான நெடுமான ஞ் சி, பொருள் மிக உடையனாயின் பரிசிலர்க்கு கொடுத்து எஞ்சியதைத் தான் உண்ணுவான்; தான் படைவீரர்களுக்குத் தரும் பொருள்களைவிட மிகுதியாகத் தன்னை அடையும் இரப்பவர்களுக்குக் கொடுப்பான்" என்று ஒளவையாரால் அவன்தன் வள்ளண்மை பாராட்டப்படுகிறது.
இரவலர்களுக்குக் கொடுத்த எஞ்சியதை உண்ணும் அதியமானினர் அருட்பெருக்கு ஒளவையாரின் இவ்வுரையால் இனிது விளங்குகிறது.
மாலை கழிந்த இரவு நேரத்தில் நெடுமனை முற்றத்தின் கண் அதியமானின் பொருநன் சென்று தடாரிப்பறையை இசைத்தவுடன் பொருநன் இரங்கத்தக்கவன் என்று கருதி, அவன் இடையிலிருந்த பழமையான ஆடையை நீக்கி மலர் போன்ற புத்தாடையை அணியுமாறு செய்த மதவோடு ஊன்தவையலையும் சோற்றையும் வெள்ளிக் கலத்தில் இட்டு அதனை உண்பித்ததோடு அவன் சுற்றத்தாரத வறுமைத் துயரத்தையும் போக்க, நெற்குவியலையும் கொடுத்தான் என ஒளவையார் பாடுகின்றார்.
* அதியமான், வறுமையால் வாடிய பொருநனுக்குப் பரிவோடு உணவும் உடையும் அளித்து வறுமை தீரப் பொருளும் வழங்கிய திறம் ஒளவையாரின் இப்பாடலில் நன்கு தெளிவாகிறது.
அதியமான் நெருமானஞ்சியின் மகன் பொகுட்டெழினி
பொகுட்டெழினியும் பெருமனையின்கண் நெடிய முற்றத்திலே நின்று இள நிலவு திகழும் பனிசொரியும் oog-Lu 6M 6Nogi Ggb • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • ... . . . .365 கையிலிருந்த மாக்கிணையை யறைந்த பொருநன்
1. புறம், 315, 2 புறம், 390.

பொகுட்டெழினி நீடு வாழுமாறு பாட உடனே அவன் பொருநனின் கிழிந்த உடையைக்களைந்து நண்ணிய நாலினா லியன்ற உடையைத் தந்த உடுக்குமாறு செய்த கள்ளைப் பொற்காலத்தில் பெய்து முறைப்படி அவனை இருத்தி உண்ணுமாறு செய்த சிறப்பித்தான்'என்று ஒளவையார் பாடுகின்றார்.
அம்பய்கிழான் அருவந்தை
நன்கு புலராத விடியற்காலையில் பொருநர்கள் வள்ளல்களின் பெருமனை முற்றத்தை அடைந்து தாம் கொட்டும் பறை ஓசை கேட்டு, வள்ளல்கள் பொருநர்களின் வறுமைத்துன்பம் நீங்குமாறு உண்பித்து உடை அணிவித்து மகிழ்வித்த வள்ளண்மையைப் புறநானூற்றுப் பாட்டுக்கள் சுவைபட விளக்குகின்றன. இப்பாட்டுக்களைப் புலவர்கள் பொருநர் கூற்றுக்களாகவே பாடி உள்ளனர்.
அம்பர் கிழான் அருவந்தை என்ற வள்ளல் பொருநர் வறுமை நீங்கும் வண்ணம் வழங்கிய பாண்மையைக் கல்லாடனார் உரைக்கிறர். விடியற்காலையில், பொருநன் எருதகளாகிய செல்வத்தைஉடைய அம்பர்கிழான் அருவந்தையின் பெருமனைக்குச் செல்லாமல் பிறன் மனை முற்றத்தில் நின்ற கொட்டிய தடாரிப்பறை ஓசையைக் கேட்டு அவன் வறுமை நீங்கும் வண்ணம் அவன் இடுப்பில் அணிந்திருந்த கந்தையை நீக்கி, வெள்ளாடை உடுக்கும்படி செய்த அவன் பசித்தன்பத்தைப் போக்கியதாகக் கல்லாடனார் பாடுகிறார்.
தன் பெருமனைக்கண் போகாமலிருந்தும், வேறொரு மனை முற்றத்திலிருந்து எழுந்த பொருநனின் பறை ஒலியைக் கேட்டு அவன் வறுமைத் துன்பத்தை அம்பர்கிழான் அருவந்தை நீக்கியத அவனது கொடைப் பெருமையைப் புலப்படுத்துகிறது.
அவியன்
பொருநன் ஒருவன், அவியன் என்ற வள்ளலின் பெருமனையை அடைந்து நன்கு புலராத விடியற்காலத்தே தடாரிப்பறையைக் கொட்டி அவன்தன் உழுவெருதகளை வாழ்த்தி அவன் புகழ்களைச் சொல்லிப் பாடப் பொருநனின் வறுமைத்தயர் நீங்குமாறு. a e e II a கட்டெளிவை
1 புறம். 392 2. புறம்.385.

Page 44
உண்ணச் செய்ததோடு , பாம்பின் தோல் போன்ற மெல்லிய ஆடையை உடுக்குமாறு செய்து மகிழ்வித்தான் என்று பாடுகின்றார்.
சோழிய ஏனாதிதிருக்குட்டுவன்
சோழிய ஏனாதி திருக்குட்டுவனின் பெருமனையின்கண் விடியற்காலத்தக் கிணைப் பொருநன் தடாரிப் பறையை இசைத்த அவன் தந்தையது வஞ்சித்தறைப் பாட்டொன்றைப் பாட அம்மன்னன் ஒரு யானையை பரிசிலாகத் தந்ததாகவும் பொருநன் அச்சமுற்று அந்த யானையை அவனிடம் திருப்பிவிட, மன்னன் தான் தந்த பரிசில் சிறியதெனப் பொருநன் கருதிவிட்டான் என நினைத்து மற்றொரு பெரிய யானையைப் பரிசிலாகத் தந்ததாகவும் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் எடுத்தரைக்கின்றார்.
சேரமான் வஞ்சன்
சேரமான் வஞ்சனைப் பொருநன் விடியற் காலத்தில் அணுகித் தடாரிப் பறையை இசைத்தத் தம் வரவைத் தெரிவித்ததம் மன்னன் பெரிதும் மகிழ்ந்து பொருநனின் கிழிந்திருந்த உடையை நீக்கி உயர்ந்த உடையைத் தந்த அணியுமாறு செய்த உண்கலத்தில் தெளிந்த கட்டெளிவையும் மானிறைச்சியாகிய வறுத்த பொரிக் கறியையும் சிறந்த நெல்லரிசிச் சோற்றையும் உணவாக அளித்ததோடன்றித் தன் மார்பிலனிந்திருந்த மிக விலையுயர்ந்த மாலையையும் பரிசிலாகத் தந்த கைவண்மையைத் திருத்தாமனார் என்ற புலவர் புகழ்ந்து பாடியுள்ளார்.
తUI
ஏணிச்சேரி முடமோசியார் ஆய் என்ற வள்ளலின் ஈகைப்பெருமையைப் பாடுங்கால் அவனையும் அவன் மலையையும் பாடிவரும் பரிசிலருக்கு அவன் மிக்க விருப்பத்தோடு கொடுத்த யானையின் எண்ணிக்கை கடற்போரில் அவனால் தோற்கடிக்கப்பட்ட கொங்கள்கள் விட்டுச் சென்று வேலினும் பலவாகும்" என்று சிறப்புற விளக்குகிறார்.
I. (gpfb 383. 2. புறம், 394 3. புறம். 398
4.
புறம். 130

அறவிலை வாணிகம்
மறமைப் பயன் கருதி இப்பிறப்பில், இல்லாதவருக்குக் கொடுத்துதவுவது அறவிலை வாணிகம் என்பர். இம்மைப் பயன் மறுமைப் பயன்களைக் கருதாத பிறருக்குதவுவதே சிறந்த கைவண்ணம்.
இப்பிறப்பில் செய்ததொன்று மறு பிறப்பிற்கு உதவும் என்று கருதிப் பொருளைக் கொடுத்த அதற்கு அறத்தைத் தேடிக் கொள்ளும் வணிகன் ஆய் அல்லன் என்றும் அவன் சான்றோர் சென்ற நெறி எனக் கருதி அவன் கொடைத் திறத்திலேயே சிறப்புற்றான் என்றும் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரனின் கைவண்மையைப் போற்றுகிறார். இதனால் எவ்வகையிலும் தம் நலங்கருதி கொடை வழங்குவது சீரிய பண்பாடாகாத என்பது உணர்த்தப்படுகிறது.
ஓய்மான் நல்லியக்கோடன்
வைகறையில் மட்டுமின்றி, மாலையிலும் பாணர் வள்ளல்களின் பெருமனையை அடைந்த தடாரிப் பறையை இசைத்து வள்ளல்களின் புகழைப் பாடிப் பரிசில் பெறுவர் என்பது புறநானூற்றுப் பாடல்களிலிருந்த தெரிகிறது.
நன்னாகனர் தம் பாடலொன்றில், ஓய்மான் நல்லியக்கோடனின் வள்ளண்மையைப் புகழ்ந்து பாடுகின்றார். கதிரவன் மேற்றிசையில் மறையும் அந்தி நேரத்தில் நல்லியக்கோடனின் பெருமனைக்கண் பாணர்கள் உணவு உண்ணும் அளவில் பொருநன் தடாரிப்பறையைத் தழுவிய வண்ணம் நின்றதை அவன் கண்டதும் இமைப்பொழுதில் விரைந்த சென்று அவன் பாடாதவாறு அவன் கையிலிருந்த தாளத்தை வாங்கிக் கொண்டு, கள்ளும் சூட்டிறைச்சியும் தந்த மேலும் வேண்டுவன கொடுத்து அவன் வறுமையை நீக்கினான் எனப் பாடுகின்றார்.’
மேலும் அவர் இவ்வரசன் காலை நேரத்தில் தன்னை அடைந்த கிணைப் பொருநருக்கு நெய்யில் பொரித்த பன்றியின் கொழுவிய ஊன் தண்டங்களைச்
1. புறம் . 134. 2. புறம், 376

Page 45
சோற்றுணவோடு கொடுத்து, அவர்களுடைய பசியைப் போக்கும் பரிவுள்ளத்தை நன்னாகனார் போற்றுகின்றார்.
கண்டீரக்கோய் பெருநள்ளி
பாணருக்கு வரையாது கொடுக்கும் கண்டீரக்கோப் பெருநள்ளியின் கைவண்மையால் மாலைப் பொழுதின் கண் மருதம் என்கிற பண்ணை வாசித்தலையும் காலைப் பொழுதினி கணி செவி வழி எனினும் பணிணை வாசித்தலையும் மரபாகக் கொண்ட பாணர்கள் அவற்றை மறந்தனர் என்று வன்பரணர் அம்மன்னனின் கொடைப் பெருமையை உணர்த்துகிறார்.
அரசர்கள் கொடை வழங்குவதையே கடமையாகக் கொணி டிருந்தனர் எண் பதம் , அக்கொடையை வேண்டுமளவுக்கும் மிகுதியாகக் கொடுத்தனர் என்பதம் அவற்றைப் பெற்ற கூத்தரும் பாணரும் எல்லை மீறிய
மகிழ்ச்சியால் ஆடிப்பாடுதலையும், யாழில் பணி இசைப்பதையும் மறந்தனர் என்பதும் தெளிவாகின்றன. இது, கணி டீரக்கோப் பெருநள்ளி போன்ற பெருவள்ளல்களின் வரையாத வழங்கும் அரிய பண்பாட்டினைப் புலப்படுத்தகிறத.
உயர்ந்த கொடைத் திறன்
வள்ளல் தன் ஊரும் பேரும் தெரிவிக்காமல் இரவலர்கள்
பசியைப் போக்கிப் பொருளுதவி செய்தல் உண்மையில்
போற்றற்குரிய கொடைத் திறனாகும்.
இரவலன் ஒருவனி ஓய்ந்த நடையினை உடையவனாய் வருத்தத்துடன் பலா மரத்தினடியில் தன் சுற்றத்தடன் தங்கியிருந்த போது அங்கு வந்த வில்லையுடைய வேட்டுவன் ஒருவன் விலங்கின் ஊனைத் தீயில் சுட்டு அவர்களை உண்ணச் செய்ததோடு, தான் காட்டு வழியில் இருப்பதால் அவர்களுக்கு, கொடுப்பதற்கு அணிகலன்கள் வேறொன்றும் இல்லை என்று கூறித் தனத மார்பில் அணிந்திருந்த முத்து வடங்களையுடைய ஆரத்தையும், முன் கைக்கணிந்த கடகத்தையும் கொடுத்தான் என்றும் அவனது பெயரையும் நாட்டையும் கேட்டபோத கூறாமல் போய் விட்டான் என்றும் வழியில் பிறரைக் கேட்ட போது அவன் கண்டீரக்கோ பெருநள்ளி
I. புறம், 379. 2. புறம். 149.

என்பதை இரவலன் அறிந்தான் என்றும் வன்பரணர் கண்டீரக்கோ பெருநள்ளியின் உயர்ந்த வள்ளண்மையை உரைக்கின்றார்.
மார்பிற் பூண்ட வயங்குகா ழாரம் மடைசெறி முன்கைக் கடகமோ டீத்தனன் எந்நா டோவென நாடுஞ் சொல்லான் யாரீ ரோவெனப் பேருஞ் சொல்லான் பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே'
கண்டீரக்கோப் பெருநள்ளி அவ் விரவலர்களுக்கு உண்ண உணவும் பரிசும் கொடுத்தாலும் தன்னுடைய பெயரையும் நாட்டையும் அவர்கள் கேட்டும் சொல்லாத சென்றது, அக் கொடை தனது பெயருக் காகவும், புகழுக்காகவும் செய்யாமல் பசியாலும் வறுமையாலும் தன்பமுற்று வரும் இரவலர்களின் இன்னல் நீங்கக் கொடுத்துதவும் உயர்ந்த பண்பாட்டினைச் சுட்டுவதாகும். வலது கை செய்யும் உதவி இடது கைக்குத் தெரியக் கூடாத' என்பதும் இதற்குப் பொருந்தம்.
சிறுகுடிகிழான் பண்ணன்
சிறுகுடிகிழான் பணிணனை நீர் நிலைகளும் விளைநிலங்களும் வற்றிய வற்கட காலத்திலும் தடாரியை இசைக்கும் பொருநன் அணுகித் தன் வறுமை நிலையை அறிவித்த போது, அப்பொழுதே அவனுடைய தன்பம் நீங்குமாறு தன் பொருள்களைக் கொடுத்து உதவினான் என்று மதரை அளக்கர் ஞாழர் மகனர் மள்ளனார் பாடுகின்றார்.
தன் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டிருந்த காலத்திலும் தன்னலம் கருதாது தன்னிடம் உள்ள பொருளைப் பொருநனுக்குக் கொடுத்துதவிய சிறுகுடிகிழான் பண்ணனின் அரும் பெரும் ஈகைத் திறம் மள்ளனாரினர் இப்புறப்பாட்டிலிருந்த புலனாகிறது.
சேரமான் சிக்கற் பள்ளித்துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன்
குன்றுகட்பாலியாதனார், தம் சிறுமை கண்டு தம்மை இழித்த நோக்காத தன் பெருமையும் தகுதியும் நோக்கி
1 புறம். 20-24

Page 46
மலை போன்ற களிறகளும் , கொயர் யப்பட்ட தலையாட்டமணிந்த குதிரைகளும், மன்றிடம் நிறைந்த ஆனிரைகளும் நெற்போர்க் களங்களுமாகிய இவற்றைத் தாம் கனவென்று மயங்குமாறு நல்கினன்' என்று சேரமான் சிக்கற் பள்ளித் தஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் தன் தகுதியைக் கருதி அதற்கேற்ப வழங்கும் அவன் தன் கொடைப் பண்பைப் புலப்படுத்துகிறார்.
சேரமான் யானைக்கட் சேஎப் மாந்தரஞ்
சேரலிரும்பொறை
மன்னர்கள் பகையரசர்களை வென்று அவர்கள் தரும் திறைப் பொருள்களைத் தம்மைப் பாடி வரும் புலவர்களுக்குப் பரிசிலாக அளிக்கும் மரபு புறநானூற்றிலிருந்து விளங்குகிறத.
இவ்வாறே சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ்சேரலிரும்பொறை மாற்றரசர்கள் பணிந்த தந்த திறையை தன்னை அடைந்தவருடைய சுற்றத்திற்கு நிரம்ப அளிக்கும் வள்ளண்மை வாய்ந்தவன்’ என்பதை குறுங் கோழியூர்க்கிழார் தம் பாட்டில் சிறப்பித்துரைக்கின்றார்.
தேர்வண் மலையன்
இம்மன்னனை, "நீ உன்னுடைய வலிமையால் பகைவர்களை வென்று கிடைத்த பொருள்களை யாவருக்கும் அளித்துப் பின் நீ விரும்பியுண்ணும் கள் நல்ல அமிழ்தாவதாக’ என்று வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் பாடுகின்றார்.
அரசர்கள், பகைவரிடமிருந்து பெற்ற பொருள்களைத் தாம் அனுபவிக்காத அவற்றுள் சிறந்தனவற்றைத் தம்மை நாடி வரும் இரவலருக்குப் பரிசாகக் கொடுப்பதை, நிலத்தை உழுத எருது சத்துள்ளவற்றை உண்ணாமல் எஞ்சியுள்ள வைக்கோலைத்தின்பது போன்றது என்ற உவமை மூலம் மேற்குறித்த பொருளுடைய பாட்டில் பெருஞ்சாத்தனார் சிறப்பிக்கின்றார்.
உழுத நோன்பக தழிதின் றாங்கு"
புறம் 387. புறம் 22. புறம் 125. புறம் 1257.

சேரமான் பாலை பாடிய பெருங்கருங்கோ
சேரமான் பெருங்கடுங்கோ பகைவர்களை எதிர்த்து அவர் தம் பொருள்களைப் புறக் கொடையாகப் பெற்றாண். அவன் புறக்கொடையைப் பெற்ற வீரத்தைப் பாடிய பாடினி அவனிடமிருந்து அணிகலன்களையும் பரிசீலாகப் பெற்றாள். இப்பாடினியின் குரலுக்கேற்ப அமைத்துப்பாடும் பாணனும் வெள்ளி நாரால் தொடுத்த பொற்றாமரைப் பூவைப் பெற்றான். இவ்வாறு பேய்மகள் இளவெயினி இச் சேரமன்னனின் கொடைத் தன்மையைப் பாராட்டிப் புகழ்கின்றார்.
சோழ நாட்டுப் பீடவுநர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
இருள் பரவிய மாலைப் போதில் சோழ நாட்டுப் பீடவுள் கிழான் மகன் பெருஞ்சாத்தனின் மனை முன்றிலில் நின்று தடாரிப் பறையை இசைத்த பொருநனைக் கண்டு சிறிதும் காலம் தாழ்த்தாமல் அணுகி அவனுக்கு அரிய அணிகலன்களை நல்கியதோடு நெல்லரிசியாலான சோற்றோடு பொரிக்கறியும் சூட்டிறைச்சியும் உண்ணுமாறு செய்தான் என அவன் தன் வரையாத வழங்கும் வள்ளண்மையை’ நக்கீரர் போற்றி வாழ்த்துகின்றார்.
நக்கீரரின் இப் பாடல் பெருஞ்சாத்தனின் கொடைப் பெருமையை உணர்த்தகிறது.
சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
பொருநன் தன் வறுமையைப் போக்கக் கருதிச் சோழன் இராயகுயம் வேட்ட பெருநற்கிள்ளியின் இனிதறங்கும் செல்வமனையை எய்தித் தடாரிப் பறையைக் கொட்டி, வேள்வியில் தரும் அவியுணவை உண்ணும் தேவர்கள் பாதகாக்க அறஞ்செய்யும் நெஞ்சமுடைய அவன் பன்னாள் வாழ்வானாக என வாழ்த்த அவன் பொருநனை நோக்கிப், புரவலரை நாடிச் செல்லும் கிணைப் பொருநனே! நீ எம்மாற் புரக்கப்படுதலையுடைய" என்று சொல்லி, மலையிடைப் பெற்ற மணியினையும், காட்டிற் பெறப்பட்ட பொன்னையும், கடலிடத்தே பெறப்பட்ட ஒளியையுடைய முத்தக்களையும் வேறு வேறு வகையாலான உடைகளையும் கள் நிறைந்த குடங்களையும் நல்கிப் பொருநன் இனி வறுமையுற்று வருந்தாமல் செல்வ
I. Díb II 2. புறம் , 395

Page 47
நிலையிலே நிலைத்து நிற்குமாறு பொருள்களை வழங்கிய திறம் தமக்குக் கனவு போலத் தோன்றுவதாக உலோச்சனார் என்ற புலவர் கூறுகிறார்.
நீ புரவலை யெமக்கென்ன மலைபயந்த மணியுங் கடறபயந்த பொன்னும் கடல்பயந்த கதிர்முத்தமும் வேறுபட்ட வுடையுஞ் சேறுபட்ட தசும்பும் கனவிற் கண்டாங்கு வருந்தாத நிற்ப நனவி னல்கியோ னசைசா றோன்றல்'
அவன் பொருநனுக்கு உண்மையாக வழங்கிய பொருள்கள் தமக்குக் கனவு போலத் தோன்றியத எனப் புலவர் கூறுவத அவர் எதிர்பாராத அளவு பெரும் பொருள் வழங்கிய பெருநற்கிள்ளியின் இணையற்ற வள்ளன் மையைக் குறிப்பதாகும்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
நீங்காத செல்வம் வழங்குதலி: சோழன் குளமுற்றத்தத் தஞ்சிய கிள்ளிவளவன் பாணர்க்கருளிய கொடைச் சிறப்பை ஆலத்தார் கிழார் விளக்குகிறார்.
காலையிலும் மாலையிலும் பாலில் இட்டுத் தேனோடு சமைத்த வரகுச் சோற்றோடு முயலினத சூட்டிறைச் சியையும் தானும் தன் சுற்றமும் உண்ணும்படி செய்த பரந்த உள்ளத்தோடு பலகாலும் அன்பு மொழிகளைக் கூறித் தனக்கு நீங்காத செல்வமனைத்தையும் வழங்கியவன் சோழன் குளமுற்றத்தத் தஞ்சிய கிள்ளிவளவன் என்று பாணன் கூறி அவனை வாழ்த்தி அவன் செய்த நன்றி என்றும் மறக்கற்பாலதன்று’ என்றும் பாணன் உரைப்பதாக ஆலத்தார்கிழார் இயம்புகிறார்.
பிறருக்கு நீங்காத செல்வம் வழங்கும் கிள்ளிவளவனின் ஈகைப் பண்பு இதன் கண் புலப்படுகிறது.
தாயங்கண்ணனார் என்ற புலவரும் இம்மன்னனின் கொடைத் திறத்தைப் புகழ்கிறார்.
இம்மன்னனின் மனையை வைகறையில் அணுகித் தடாரிப்பறை கொட்டிய கிணைப் பொருநனைத் தன்னை
1. புறம், 377 15-20 2. புறம் . 34.
37

மறவாது வந்த பரிசீலனாகக் கருதி அவனுக்கு நெய்யிட்டுச் சமைத்த சூட்டிறைச்சியையும் கட்டெளிவையும் உண்ணுமாறு அளித்தப், பூவேலைப்பாடுகளமைந்த உடையை நல்கிப் பொருநனின் வறுமைத் தனபம் நீங்கும் வண்ணம் பெறற்கரிய அணிகலன்களையும் வழங்கினன்' எனத் தாயங்கண்ணனார் இவன் வள்ளண்மையைப் போற்றுகிறார்.
எந்த நேரத்திலும் வள்ளல்களை அடையலாம்
புறநானூற்றுப் பாட்டுக்களில் பாணர் அல்லத பொருநர், வள்ளல்களின் பெருமனை முற்றத்தை அடைந்த கிணைப்பறை இசைத்த நேரம் குறிப்பிடப்படவில்லை. இதனால் பாணரோ பொருநரோ எந்த நேரத்திலும் வள்ளல்களை எய்தினால் தம் வறுமை தீரப் பரிசில் பெறுவர் எனலாம்.
சோழன் செருப்பாழியெறிந்த இளஞ் சேட்சென்னி
சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட் சென்னியின் அரண்மனையின் கண்ணுள்ள நெடிய பெருமனையின் முன்னே பொருநன் நின்ற தன் தடாரிப்பறையைக் கொட்டி அம்மன்னன் பகைமேற்செல்லுதலாகிய வஞ்சித்துறைப் பாட்டுக்களை இசைத்தப் பாடப் பெறற்கரிய அணிகலங்களும் பிற பொருள்களுமாகிய செல்வத்தை அவனால் தாங்க இயலாத அளவில் வழங்கினான்’ என்றும் ஊன்பொதிபசுங்குடையார் என்ற புலவரால் இச்சோழ மன்னனினர் கொடைப் பெருமை விளக்கப்படுகிறது.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெருஞ்
செழியன்
இம் மன்னனிடம், கிணைப்பொருநன் சென்று பரிசில் கேட்டதைக் கல்லாடனார் பாடுகின்றார். சோற்றுக்குரிய அரிசி இல்லாமையாலே செய்தற்குரிய இன்றியமையாத செயலில் மனம் செல்லாது பொருள் ஒன்றையே விரும்பி அரிய பல வழிகள் கடந்த, பாசறைக்கணிணே தங்கிப் போராகிய உழவினைச் செய்யும்
(. புறம் . 397. 2. புறம். 378,

Page 48
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் புகழை நினைத்த களிறாகிய பரிசில் பெறும் பொருட்டு அம்மன்னனிடம் வந்ததாகக் கிணைப்பொருநன் கூறுவதைக் கல்லாடனார் பாடுகின்றார்.
மாங்குடி கிழார் என்ற புலவரும் கிணைப்பொருநன் ஒருவன் தன் பறையை இசைத்துத் தான் பாசைறைக்கண் மறக்கள வேள்வி செய்த தலையாலங்கானத்தச் செருவென்ற நெடுஞ்செழியனை அடைந்ததன் காரணம் ஒளி திகழும் அவன் மாலையைப் பெறுவதேயாம் என்று அப்பொருநன் கூறவதாக உரைக்கிறார்.
மறக்கள வேள்வி என்ற நிகழ்ச்சியினைத் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. ஏர்க்களம் பாடும் இரவலர்க்கு ஏரோர் கொடை புரிவது போலப் போர்க்களம் பாடும் இரவலர்க்குத் தேரோர் கொடை புரிவத போர்க்கள வேள்வியெனக் கொள்ளலாம்.
ஊரையும் நகரையும் வழங்குதல்
புலவர்களுக்கும், பாணர், விறலியர் போன்ற கலைஞர்களுக்கும் ஊரையும் நகரையும் கொடைப் பொருளாக மன்னர் வழங்கும் அவர்தம் அருள் தன்மையைப் புறநானூறு புகழ்கிறத.
சோழன் நலங்கிள்ளி
கோவூர் கிழார், 'நமது சுற்றத்தின் அடுகளத்தை நிறைக்கும் பொருட்டு விலையாக வஞ்சியையும், மதரையையும் தருவான். ஆதலால் பரிசின் மாக்களே வாருங்கள்! அவனைப் பாடுவோம்’ என்று சோழன்
நலங்கிள்ளியின் கொடைச் சிறப்பைப் பாடுகின்றார்.
இதனின்றம் புலவர்கள், பாணர், விறலியர் ஆகியோர் என்றும் வயிறார உண்டு வளம்பட வாழும் பொருட்டு மன்னர் வஞ்சி, மதுரை போன்ற பெருநகரங்களைக் கூடப் பரிசிலாகக் கொடுப்பர் என்பதனால் மன்னர் தம் கொடைப் பெருமை புலனாகிறது.
இந் நலங்கிள்ளி முன்னர் குறிப்பிட்ட வள்ளல்களைப் போல பொருநன் தன்னை, வைகறையில் அணுகித் தன்
1. புறம் , 371. 2. புறம், 372. 3. புறம். 32.

கிணைப்பறையை இசைத்த அவனைப் புகழ்ந்த பாடுவதைக் கேட்டதம், பொருநன்பால் அருள் மிகுந்து அவனுடைய கிழிந்த உடையை நீக்கி புத்தாடை தந்து உடுக்கும்படி செய்து, சிறப்பு மிக்க அணிகலன்களையும் பொருநனுக்குக் கொடுத்து மகிழ்விக்கும் பண்புடையவன் என்று கோவூர்க் கிழார் உரைக்கின்றார்.
தந்துமாறன்
தந்தமாறன், பார்ப்பவர்க்கு நீர் வளம் மிகுந்த மருத நிலத்தார்களைக் கொடுத்தும், பசித்து வரும் இரவலர்க்கு மிகுதியாகச் சோறளித்தும் பரிசிலர்க்குச் சிறப்பமைந்த நல்ல அணிகலன்களை மிகுதியாகக் கொடுத்தும் ஆதரிப்பவன் ஆவண்’ எனச் சிறுவெண் டேரையார் அவன் கைவண்மையை விளக்குகிறார்.
இத அவரவர் தரத்திற்கேற்ப வழங்கும் இயல்பினைக் குறிப்பதாகும்.
தம் மேம்பாட்டிற்கேற்ப வள்ளல்கள் வழங்குதல்: ஒளவையார் புலவரை விளித்து நாஞ்சில் வள்ளுவனின் கொடைப் பெருமையை நாவாரப் புகழ்கின்றார்.
விறலியர் மனைப்பக்கத்தின்கண் பறித்த இலைக்கு மேல் தாவுவதற்குத் தாம் நாஞ்சில் வள்ளுவனைச் சிறிது அரிசிகொடுக்குமாறு வேண்ட அவன் பரிசீலர்களின் தரத்தை அறிதலோடு தனது மேம்பாட்டையும் சீர்தாக்கிப் பெரிய மலைபோல்வதொரு பெரிய யானையை அளித்தான்’ என அவன் வள்ளண்மையைச் சிறப்பித்தரைக்கின்றர்.
இதிலிருந்து வள்ளல்கள் பரிசிலரின் தரத்தை அறிந்து
கொடுப்பத மட்டுமின்றித் தம் மேம்பாட்டைக் கருதி வழங்குபவர் என்பத நன்கு பெறப்படுகிறாது.
நல்லேர் முதியன்
இரவலர்கள் சில வள்ளல்களை அணுகி அவர்தம்
முன்னோரின் கொடைப் பெருமையை விளக்கித் தமக்குப் பரிசு தருமாறு கேட்பதுண்டு.
1. prib . 400. 2. புறம், 362. 3. புறம். 140.

Page 49
நீர்நிலை வற்றிப் பிளவுற்றுக் கிடக்கும் கோடைக் காலமாயினும் வெள்ளியாகிய மீன் தெற்கின்கண் சென்று பஞ்சம் ஏற்படும் காலமாயினும் தம்மை நினைக்குமாறு வேண்டிப் பொருள்களை அவனுடைய முன்னோனாகிய ஆதனுங் கனி வழங்கியத போல பசித்த தம் சுற்றத்தாருடைய தன்பம் கெடச் சிறப்பமைந்த நல்ல கலன்களை நல்குமாறு நல்லேர் முதியனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடுகின்றார்.
கொடை மடம்: புல்லிய எருக்கம் பூவாயினும் தெய்வங்கள் அதை விரும்புவத போல அறிவில்லாதவரும் புல்லிய குணங்கள் உடையவரும் தன்னிடம் வரின் பாரி அவர்களுக்கு விருப்பத்தோடு பொருள் வழங்கி மகிழ்விப்பான்’ என்று பாரியின் கைவண்மையின் திறத்தைக் கபிலர் புகழ்கிறார்.
வந்த பரிசீலர் தரம் பார்க்காது வந்தவர்க்கெல்லாம் பொருள் வழங்கும் பாரியின் கொடைத்திறம் வியந்து போற்றற்குரியத. இத கொடை மடம் எனப்படும்.
வையாவிக் கோப்பெரும்பேகனின் கொடைத் திறத்தையும் படை வீரத்தையும் புகழும் பரணர்,
"கொடைமடம் படுத லல்லத படைமடம் படான்பிறர் படைமயக் குறினே’
என்றுரைக்கின்றார். பேகனும் பாரியைப் போலக் கொடை மடம் உடையவன் என்பத தெரிகிறது.
பிட்டங்கொற்றன்
பிட்டங் கொற்றணிடம் பரிசீலர் பல நாட்கள் தொடர்ந்து செல்லினும் பொருளைப் பெறவர் எனக் காரிக்கண்ணனார் அவன் கொடைப் பெருமையைச் சிறப்பிக்கின்றார்.
"இன்று போனாலும் தருவான்; சிறிது நாட்கள் கழித்துச் சென்றாலும் தருவான்; முன்னேயும் பின்னேயும் தந்தான் என்று எண்ணாத பல நாட்கள் தொடர்ந்து சென்றாலும் யாம் வேண்டியபடியே எம்முடைய வறிய கலத்தை நிரப்புவான். இவன் தான் விரும்பியவாறு செய்தற்கரிய
1. புறம். 389. 2. புறம். 106. 3. புறம். 142 : 5-6.
39

போர்த் தொழில்களை முடிப்பானாக' என்று காவிரி ப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பிட்டங் கொற்றணின் வள்ளண்மையை வாயாரப் போற்றி வாழ்த்தகின்றார்.
பிட்டங் கொற்றணும் அதியமான் போலத் தன்னிடம் தொடர்ந்து வருவோர்க்குத் தவறாமல் பொருள் வழங்கி உதவுபவன் ஆவன்.
பேகன்
பரிசில் பெற்று வரும் இரவலன் வழியில் வறுமை மிக்க மற்றொரு இரவலனை நோக்கி, ‘அண்ணலாகிய பேகனைக் காண்பதன் முன் யாம் உங்களைவிட வறியவர்களாக இருந்தோம். இப்பொழுது வறுமை நீங்கி இத்தன்மையேமாயினோம்’ என்றும் எவ்வளவு ஆயினும் ஈதல் நன்றெனக் கருதம் பண்புடையவன் பேகன் என்றும் மறுபிறப்பின் பயனை நோக்காமல் பிறரது வறுமையைக் கருதி வழங்கும் வள்ளண்மை உடையவன் என்றும் புலவரை ஆற்றுப்படுத்தும் முறையில் பரணர் பேகனின் கைவண்மையைப் புகழ்கிறார்.
பேகனிடமிருந்து பரிசில் பெற்று வரும் இரவலன், தன் சுற்றத்தோடு வறுமையால் வாடும் மற்றொரு இரவலனைப் பேகனிடம் ஆற்றுப்படுத்தும் பாண்மை பேகனும் மறுமை இன்பம் நோக்கிக் கொடுக்கும் பெற்றியன் அல்லன் என்பதைக் குறிக்கின்றது.
மலையமான் திருமுழக்காரி
இம் மன்னன் தம்மினும் வலிமையுடையவன் எனக் கருதி மூவேந்தர்கள் தனித்தனியாக அவனுக்குத் தந்த பொருள் அவனது குடியை வாழ்த்தும் பரிசிலருடையது என்று கபிலர் உரைக்கின்றர்.
வீயாத் திருவின் விறல்கெழு தானை மூவரு ளொருவன் றட்பா கியரென ஏத்தினர் தருஉங் கூழே நாங்குடி வாழ்த்தினர் வருஉ மிரவல ரதுவே"
பண்டைத் தமிழ் மக்கள் தம் தாளாற்றலால் ஈட்டிய பொருளை இரவலர்க்கீத்தப் பெறும் புகழையே புகழாகக்
1. புறம். 171. 2. புறம். 141. 5. புறம். 122 : 4~7.

Page 50
கருதினர்; தாய்த்தாற் பெற்ற செல்வத்தை வழங்கிப் பெறும் புகழை விரும்புவதிலர்’ என்பத இதனால் உணர முடிகின்றத.
மலையமான், மதவை உண்டு மகிழ்ந்திருக்கும் நேரத்தில் அல்லாமல் தான் மதவை உண்டு மகிழாத நிலையில் புலவருக்கு வழங்கிய பொற்படைகளால் அணியப்பட்ட தேர்கள் முள்ளுர் மலை யுச்சியின்கண் உண்டாகிய மழையினது தளியினும் பலவாகும் எனக் கபிலர் பாட்டுக் கூறுகிறது. இதனால் மன்னர்கள் புலவர்களுக்கு விலையுயர்ந்த தேர்களை வழங்கும் கொடைச் சிறப்பு தெளிவாகிறத.
இப்புறப்பாட்டின் உரையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் "மதவை உணர்ட மகிழ்ச்சியால் கொடுக்கப்படும் கொடை, "செயற்கைக் கொடை என்றும் மதவை உண்ணாமல் இருந்து கொடை கொடுப்பது "இயற்கைக் கொடை என்றும் கூறுவர்.
செயற்கையாவது, மதவுண்ட மகிழ்ச்சியால் தன்னால் நல்கப்படும் பொருள்களின் அருமை நோக்கம் இயற்கையறிவிழந்த ஏற்குநர் ஏற்க வழங்குவத. இயற்கை, மத முதலியவற்றால் அறிவு நலங் குன்றாத ஏற்போர் வரிசையறிந்து நல்குவது
கொடையை இயற்கை, செயற்கை என இருவகைப் படுத்தலாம் என்பத இதனால் அறிய முடிகிறத.
வல்வில் ஓரி
ഥങ്ങഗ്ഗ போன்ற கொடைத் தன்மை கொண்ட வல்வில் ஓரியைக் காணச் சென்று கூத்தர் சுற்றத்திற்கு வெள்ளி நாராற் தொடுக்கப்பட்ட பொன்னரி மாலையினையும் பிற அணிகலன்களையும் யானையணிகளுடனே அவன் வழங்க மிகுதியான பரிசு பெற்ற மகிழ்ச்சியால் அக்கூத்தர் ஆடுவதையும் பாடுவதையும் மறந்து சென்றனர் என வன்பரணர் பாடுகின்றார்.
கொடை வேண்டுமளவுக்கும் மிகுதியாக ஓரி கொடுத்ததால் அவற்றைப் பெற்ற கூத்தரும் பாணரும் எல்லை மீறிய மகிழ்ச்சியால் ஆடிப் பாடுதலையும் யாழில் பண் இசைப்பதையும் மறந்தனர் என்பது தெளிவாகின்றது
I. (gDfb. 123.
2. புறம். 123. (ஒளவை சு. தரைசாமிப்பிள்ளை உரை) 3. புறம். 153.

இத வல்வில்லோரி போன்ற பெருவள்ளல்களின் வரையாது வழங்கும் அரிய பண்பாட்டினைப் புலப்படுத்துகிறது.
வாட்டாற்றெழினியாதன்
இம் மன்னன், கிணைப் பொருநருக்குச் சுவைமிக்க உணவு அளித்துச் செல்வமும் வழங்கிய திறத்தை மாங்குடி கிழார் புகழ்ந்த பாடுகின்றார்.
‘யாம் எழினியாதனுடைய கிணைப் பொருநராவோம்; பெருமானே என்றதும் அவன் எமக்களித்த கொழுவிய தண்டமாகிய சூட்டிறைச்சியைச் சொல்வேனோ, வளவிய பூந்தேறாகிய கள்ளைச் சொல்வேனோ, குறுமுயலின் தசை விரவித் தந்த நறிய நெய்யையுடைய சோற்றைச் சொல்வேனோ, நெற்றரிசையிடத்தத் தாந் தாம் வேண்டுமளவும் முகந்த கொள்ளப்படும் உணவுப் பொருளைச் சொல்வேனோ. வறுமையுற்று வருந்திய என் பெரிய சுற்றத்தார் உண்டு கழிந்தவற்றை உவக்குமாறு தலையளித்து மீள மீளக் கொடுத்தான் எங்கள் தலைவன், எம்மனேராகிய இரவலர் அவண்பாற் பெற்ற செல்வத்துக்கு எல்லையில்லையாம்' என்று பொருநன் கூற்றாக மாங்குடிகிழார் பாடுவதினின்றம் வாட்டாற்றெழினியாதனின் வரையாத வழங்கும் கொடைத்திறம் புலனாகிறது.
தலைவன்
சில பாட்டுக்களில் பாடப்பட்டுள்ள தலைவனின் பெயர்
சுட்டப்படவில்லை. அப்பாட்டுக்களில் தலைவன் என்றே
40
விளக்கப் பட்டுள்ளது. அவ்வாறு அமைந்த பாட்டுக்களில் காணப் பெறும் கொடைத் தனிமை இதன் கீழ் விளக்கப்படுகிறது.
வள்ளண்மையுடைய தலைவர் தம்மிடம் பொருள் மிக இல்லாமற் போயினும் தம்பால் வந்த பரிசிலருக்கு இல்லை என்று கூறாமல் தம்மிடத்தள்ள சிறு பொருளை வந்தவருக்குப் பகுத்துக் கொடுக்கும் பண்பாடு நிறைந்தவர் என்பதைப் புறம் உணர்த்தகிறத.
தலைவன் மிக்க வறுமையுற்றானாயினும் மனையில் இல்லாததைக் குறிப்பாலறிந்து அதனை விரைந்த படைத்தக் கொள்ளும் வல்லமையுடையவன் என்றும் தண்பால் உள்ளது மிகவும் சிறிதாக இருப்பினும் பரிசிலர்
1. புறம், 396

Page 51
மிகப்பலராக உள்ளனரே எனக் கருதி மயங்காமல் உணவை முறை முறையாகத் தந்த உண்பிக்கும் இல்வாழ்க்கையில் சிறந்த மகளைப்போல சில சிலவாக அவரவர் வரிசையறிந்து கொடுக்க வல்லவனாவான்' என்றும் உறையூர் முதகடத்தனார் ஈகை உணர்வு மிக்க பெருந்தகையாளரின் கொடைத் திறத்தை விளக்குகிறார். இத.
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள”*
என்ற திருக்குறள் கருத்துக்கு ஒத்தள்ளமை உணரற்பாலத.
வேந்தராகிய செல்வர்கட்குண்டான தன்பத்தைப் பாராமல் இரவலரத வறுமைத் தண்பத்தை உணர்ந்து அத நீங்க அவர்களுக்குக் குறைவறக் கொடுக்கும் வள்ளண்மையுடைவன்’ என்று ஒரு தலைவனின் கொடைத் திறத்தை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் சிறப்பிக்கின்றார்.
புலவர்களினும் இரவலர்களை ஓம்பும் தலைவனின் சீரிய பண்பினை இத குறிக்கிறது. புரவலர்க்குண்டாகும் தண்பம் தன் ஆண்மையால் நீங்குமாதலின் அதனை ஒரு பொருளாக நோக்காது இரவலர் இன்மை தீர்ப்பதையே அவன் பெரிதாகக் கருதினான் எனலாம்.
வள்ளண்மை பொருந்திய தலைவன், வேள்வி செய்தலையுடைய அந்தணர்களுக்குப் பெறற்கரிய பொற்கலங்களை நீர் வார்த்துக் கொடுத்துத் தாயினும் மிக்க அன்புடையவனாய் இரவலர் பலருக்கும் வேண்டுவன கொடுத்தான்" என்று கயமனார் உரைக்கின்றார்.
இதனின்றும் வேள்வி செய்யும் அந்தணர்களுக்குக் கொடையாக அரிய பொற்கலங்களை நீர் வார்த்துக் கொடுத் தலுண்டு என்பது தெரிகிறது. இத்தகைய கொடை முறை ஆரியர் பண்பாட்டின் தாக்கத்தால் ஏற்பட்டதெனக் கொள்ளலாம்.
காவற்காடு சூழ்ந்த இடத்தில் உள்ள மலையில் மறக்குடித்தலைவனின் மனைக் கிழத்தியும் உடும்பினத
புறம். 331.
குறள,ஈகை , 3. புறம். 329, புறம், 361.

தசையைப் பெய்த சமைக்கப்பட்ட தயிரோடு கூடிய கூழையும் பாணருக்கும் அவரொடுவந்த மற்ற விருந்தினருக்கும் ஒரு சேரக் கொடுத்த உண்பிப்பவள் என்றும் அவள் கணவனும் கடத்தற்கரிய பெரும் போரில் தாக்கிப் போரிட வல்ல யானைகள் அணிந்த பொன்னாற் செய்யப்பட்ட பட்டம் முதலியவற்றைப் பரிசிலாக வழங்குவான்'என்றும் தங்காற் பொற்கொல்லனார் என்ற புலவர் உரைக்கிறார்.
வேந்தன் ஊரில் வாழும் தலைவன் ஒருவனின் மனைவி பாணர்களை உண்பிக்கவும், பரிசீலரை வரவேற்று ஓம்பவும் அவர்கள் உண்பதனாலுண்டாகும் ஆரவாரத்திடையே அவ்வண்புச் செயலில் கையொழியாளாயினாள் என்றும், உயர்ந்த கொம்பினையுடைய யானைகளின் முகத்தில் அணியப்படும் பொன்னாலாகிய பட்டம் முதலியவற்றைப் பரிசிற் பொருளாகப் பரிசிலர்க்கு வழங்குதலில் வலி பொருந்திய வேலையுடைய காளையாகிய அவள் கணவனும் கையொழியான்' என்றும் தலைவனும் அவன் மனைவியும் ஆற்றும் கொடைச் சிறப்பை மதரைத் தமிழக்கூத்தனார் பாடுகின்றார்.
இவற்றால் அரசர்களே மட்டுமன்றி மறக்குடித் தலைவர்களும் பாணர்களுக்கும் அவரது சுற்றத்தார்க்கும் பரிசு கொடுப்பவர்களாக விளங்கினர் என்பதம் அவர்தம் மனைவியர் அவர்களுக்குச் சுவையான உணவளித்து விருந்தோம்புவர் என்பதும் பெறப்படுகின்றன.
தன் கையிலே பொருள் யாதுமில்லாதபோது பொருளை விரும்பித் தன்னைக் காண்பதற்கு வரும் இரவலர், யானையும், தேரும் வேண்டினாலும் அவற்றைக் கொடுக்கக் கூடியவன் என்று வலிமை மிக்க ஒரு தலைவனின் கொடைத் தனிமையை’ மாங் குடி மருதனார் சிறப்பிக்கின்றார். தன்னிடம் பொருளில்லாத போது அத் தலைவன் யானையும் தேரும் வழங்கக்கூடியவன் என்பது அவன் பகை நாட்டவரோடு போரிட்டுப் பொருள்களைக் கொண்டு வந்த இரவலருக்கு அளிப்பான் என்பதைக் குறிக்கும்.
ஓர் ஊரின் தலைவன், "குறையாது தனக்குப் பகை வேந்தர் திறையாகத் தந்தனவும், தன் வேந்தன் சிறப்பாகத்
1. புறம். 326 2. புறம், 334 3. புறம். 313.

Page 52
தந்தனவுமாகிய பெருஞ் செல்வத்தைத் தன்பால் வரும் பரிசிலருக்குக் குறையாமல் எந்நாளும் கொடுக்கும் கொடைத்தன்மை உடையவன்' என்று வீரைவெளியனார் உரைக்கின்றார்.
போர் வீரருக்கு மன்னர் நிலம் வழங்குவத உண்டு என்பத ஒரு புறப்பாட்டால் விளங்குகின்றத.
மடல் நிறைந்த ஒரு பனை மரம்போல் மார்பில் வேல் தைக்கப்பெற்ற வீரர்கள் சிறிய ஊர்களைப் புரவாகக் கொள்வதை விரும்பாமல் மருதநிலத்தார்களைப் பெறுவத தமக்குரித்த என்ற பொருள்பட ஒரு புறப்பாடல் கூறுகிறது.
இப்பாடலில் வரும்,
'......................... ·. fDTáá
கோளிவணர் வேண்டேம் புரவே"
என்ற மொழிகளால் விளைநிலங்களையுடைய சிற்றார்களைக் கொடையாக அளிப்பதண்டு எண்பத புலனாகிறது. புரவாவது விளைநிலம், இதற்குப் புரவுவரி கிடையாத,
ஈகைவழிப்பட்ட பண்பு
காட்டில் வாழும் குமணனிடம் புலவருக்குப் பரிசில் தரப்பொருள் ஒன்றும் இல்லை எனினும் புலவர் தன்னிடம் பரிசில் பெறாமல் போவதை அவன் மனம் விரும்பவில்லை. “பரிசிலர், பரிசுபெறாத செல்வத எனது நாட்டை இழந்ததனினும் மிகவும் தன்பமுடையத' என்று நினைத்துக் குமணன் தன்னுடைய வாளைப் புலவரிடம் தந்த தண் தலையை வெட்டி எடுத்தச் சென்று இளங்குமணனிடம் பொருள் பெறுமாற கூறினான்.
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்
நாடிழந் ததனினு நனியின்னாதென வாடந் தனனே தலையெனக் கீயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்’
என்ற பெருந்தலைச்சாத்தனாரின் சொற்கள் குமணனின் வள்ளல் தன்மையையும், அவனைப் போன்ற பெரு
I. Eggplib. 320. 2. புறம், 297. 3. ggplib. III.65: I0-13.

வள்ளல்கள் தம்மிடமுள்ள மிகச் சிறந்த பொருள்களையே புலவருக்குப் பரிசிலாகத் தருவர் என்பதையும் புலப்படுத்த கின்றன.
மேற்கூறியவற்றிலிருந்து போரில் புறப்புண்படாத விழுப் புண்படுதலும் புலவர்கள் மன்னர்களிடமிருந்து தரமறிந்து தரும் பரிசில்களை ஏற்பதம், மன்னர்கள் முகமலர்ந்த காலந்தாழ்த்தாது பரிசுப் பொருட்களைத் தருதலும், தம்மிடம் இருக்கும் சிறந்த பொருளையே பரிசாகத் தருதலும் கொடைக்குரிய பண்பாடுகளாகப் போற்றப் பட்டுள்ளமை புறநானூற்றுப் பாடல்களிலிருந்து அறியப்படுகிறது.
மானம்
பண்டைத் தமிழரிடம் சிறந்த நின்ற பண்புகளில் மானம் போற்றும் பண்பு தலைமையிடம் வகிக்கின்றது. எத்தகைய சூழலிலும் தன்னிலையில் தாழாமையும், தாழின் உயிர் வாழாமையும் மானமென்பது தமிழர் கோட்பாடாகும். திருவள்ளுவர் இதற்கு ஓரதிகாரமே வகுத்திருப்பத அதன் சிறப்பினை உணர்த்தம். மானத்திற்குக் குறைவின்றி வாழ்வதே வாழ்வு என்பது அவர் கொள்கை. 'தன் மயிர்த் திரளின் ஒரு மயிர் நீங்கினும் கவரிமான் உயிர் வாழாது. இக் கவரிமானுக்கு ஒப்பாக மானத்தைப் போற்றுபவர் தம் மானத்திற்கு இழுக்கு வரின் தம் உயிரை விடுவர்" என்றும் ஒருவன் பகைவர் பின்னால் சென்று பொருள் பெற்று வாழ்தலைக் காட்டிலும் அத செய்யாது இறந்தான்
எனப்படுதல் நன்று’ என்றும் கூறுவர் திருவள்ளுவர்.
மேலும் குன்றுபோல் உயர்ந்தவர்களும், தம் மானம் குன்றுதற்கேதவான செயல் சிறிதளவே செய்யினும் குன்றவர் என்றம், மானத்தை விட்டுத் தம்மை இகழ்வார்பின் சென்று ஒருவன் வாழு நிற்பவர் இம்மையில் புகழையும் மறுமைப்பயனையும் இழப்பர்’ எனவும் திருவள்ளுவர் மானத்தின் இன்றியமையாமையை வலிறுத்துகின்றார்.
சங்க கால நன் மக்கள் தம் வாழ்வு, உயிர் இரண்டைக் காட்டிலும் தம் மானத்தையே மேற்கூறிய திருக்குறள் கருத்துக்களுக்கு ஏற்பப் போற்றி வந்தனர்.
1. குறள். 969. 2. குறள். 967. 3. குறள். 965,966

Page 53
புறநானூற்றில் மானப்பண்பு
சேரமான் பெருஞ்சேரலாதன், சோழன் கரிகாற் பெருவளத்தானோடு போரிட்ட போது, கரிகால் வளவன் சேரலாதன் மார்பிலே எறிந்த வேல் அவன் உடலுக்குள் ஊடுருவி முதகு வழியாகச் சென்றது. சேர மன்னன் நேர் நின்று போர் செய்த சோழன் எறிந்த வேலை மார்பிலே தாங்கினும் அத ஊடுருவிச் சென்று முதகில் புண்ணை ஏற்படுத்தியதனால், மானமிக்க சேரலாதன் அதவும் புறப்புண்ணுக்கு ஒப்பாகும் என்று கருதி, உயிர் வாழ விரும்பாமல் வடக்கிருந்து உயிர் நீத்தான். இத்தகைய மானமுடைய பெருவேந்தனர் இல்லாமையால் ஞாயிற்றையுடைய பகல் இனித் தமக்கு முன்பு போல ஆகாது எனக் கழாத்தலையார் என்ற புலவர் பாடுகின்றார்.
புறப்புண் ணாணி மறத்தகை மன்னன் வாள்வடக் கிருந்தன னீங்கு நாள்போற் கழியல ஞாயிற்றுப் பலவே'
என்ற அடிகளால் புறப்புண்ணுக்கு நாணி உயிர் நீத்த சேரலாதனின் மானமிக்க பெருத்தன்மையைப் புலவர் பாராட்டுகின்றார்.
தனக்கு நேர்ந்த புறப்புண்ணுக்காக நாணி, மானங் கருதி உயிர் நீத்த சேரலாதனை வெண்ணிக்குயத்தியார் என்ற புலவரும் புகழ்ந்தரைக்கிறார்.
பெருஞ்சேரலாதன் தோல்வியுறினும் போரில் தனக்குற்ற புறப்புண்ணிற்காக வெட்கி வடக்கிருந்தமையால் வெற்றி பெற்ற கரிகால் வளவனைக் காட்டிலும் அவன் நல்லவன் என்று வெண்ணிக்குயத்தியார் பெருஞ்சேரலாதனைப் புகழ்கிறார்.
வென்றோய் நின்னினும் நல்ல னன்றே”*
என்பது பெருஞ்சேரலாதனுக்கு வெண்ணிக்குயத்தியார் கூறும் புகழுரை. V
இதனின்றம் உயிரினும் மானம் போற்றிய பெருமை நன்கு புலனாகிறத.
சேரமான் கணைக்காலிரும்பொறை, சோழன்
II. yapıb. 6,5:: IO- III2. 2. புறம். 565.

செங்கணானோடு போர் செய்த தோல்வியுற்றுச் சிறையிலிடப் பெறுகிறான்; தனக்கு ஏற்பட்ட நீர் வேட்கை மிகுதியால் சிறைக் காவலரை நீர் தரும்படி கேட்கிறான். அவர்கள் முதலில் தராமல் பின்பு காலந் தாழ்த்தித் தருகின்றனர். மான உணர்வு மிக்க கணைக்காலிரும்பொறை அந் நீரை ஏற்க மறுத்து உயிர் விடுகிறான்.
குழந்தை இறந்து பிறப்பினும் தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் வீரங் கருதி வாளால் பீளத்தலைத் as6 upstas -9066,............ . சங்கிலியால் பிணித்தத் தண்பம் செய்து சிறையினாற்றி சிறை காவலரின் வந்த தண்ணீரை வயிற்றின்கணி தீயைத் தணிக்க இரந்துண்ணு வார்களோ'
என்று கணைக்காலிரும் பொறை கூறி இறந்தபடுகின்றன்.
அரசர்கள், தோல்வியுற்றுப் பகைவர்பால் தண்பமுற்று வாழ்வதையும் போர்க்களத்தில் புறப்புண் ஏற்படுவதையும் தண்ணிரேயாயினும் பகைவரிடமிருந்து அதை இரந்து பெறுதலையும் தம் மானத்திற்குப் பெரும் இழுக்காகக் கருதினர் என்பது மேற்கண்டவற்றிலிருந்து தெளிவாகிறது.
பெருந்தலைச் சாத்தனர் என்ற புலவர் கடிய நெடுவேட்டுவனிடம் பரிசில் பெறுவதற்காகச் சென்ற போது அவன் பரிசில் தரக் காலம் நீட்டித்ததைப் பொறுக்கலாற்றாத கூறும் மொழிகள் அவர் தம் மான உணர்ச்சியைப் புலப்படுத்தகின்றன. 'நிறைந்த செல்வத்தையுடைய மூவேந்தர்களால் விருப்பமின்றிக் கொடுக்கும் பொருளை நாங்கள் விரும்பமாட்டோம். கோடை என்னும் மலைக்குத்தலைவனே! நீ நோயின்றி இருப்பாயாக' என்கிறார்.
தாம் பரிசில் பெறாமல் போவதால் கடிய நெடுவேட்டுவனுக்கு எத்தகைய தீமையும் நேரக் கூடாது என்ற நல்லுள்ளத்தோடு "நீ நோயின்றி இருப்பாயாக' என்றும் புலவர் வாழ்த்திச் செல்கிறார். ஈகை அறத்தைச் செய்யாதவற்குத் தீமை நேரும் என்பதை இத குறிப்பாக உணர்த்துகிறது. V
அதியமான் நெடுமானஞ்சி தமக்குப் பரிசில் தர ஒரு சமயம் காலந் தாழ்த்திய போது ஒளவையார் வாயில்
1. புறம். 74 2. புறம். 205.

Page 54
காவலனை நோக்கிக் கூறிய சொற்களிலிருந்த அவர் எத்தணை அளவு மானத்தைப் போற்றும் பண்புடையவர் என்பது புலனாகிறத. அதியமான் நெடுமானஞ்சியின் அரண்மனை வாயில் எப்போதும் பரிசிலர்க்கு அடையாத, வாயில் என்பதைக் குறிக்க ‘பரிசிலர்க்கு அடையா வாயிலோயே" என்று வாயிற் காவலனை ஒளவையார் விளித்துக் கூறுகிறார் ‘அறிவும் புகழுமுடையார் மாய்ந்து போயினும், இவ்வுலகம் வற்றிய உலகமாகி விடாது. எனவே யான் இங்கிருந்து செல்லுதற்கு என் கலங்களைக் கட்டி விட்டேன். முட்டுக்களை உடைய பையையும் சுருக்கி விட்டேன். கைத்தொழிலில் வல்ல மரத்தை வெட்டும் தச்சனுடைய மக்கள் கையில் மழுவையேந்திக் காட்டிடத்தச் சென்றால் எவ்வாறு அவர்கள் தொழிலுக்கேற்ற மரம் கிடைக்குமோ அவ்வாறே யான் எத்திசைச் சென்றாலும் அத்திசையில் உணவு கிடைக்கும் என்றுரைக்கின்றார். ஒளவையாரின் அச்சொற்களில் மான உணர்வு பொங்கி வழிவதை உணரலாம்.
அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென வறந்தலை யுலகமு மன்றே யதனாற் காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை மரங்கொ: றச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத் தற்றே எத்திசைச் செல்லினு மத்திசைச் சோறே"
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதரைக் குமரனார் சோழன் குராப்பள்ளித் தஞ்சிய பெருந்திருமாவளவனிடம் சென்ற போது அவன் அவருக்குப் பரிசில் தருவதில் காலந் தாழ்த்தியதால் புலவர் மானவுணர்வு மேலிட்டு, "யாம் மிகப் பெரிய தனி பமுற்றாலும் சிறிதம் அறிவில்லாதவருடைய செல்வம் பயன்பாடமையின் அதனை நினைக்க மாட்டோம்", என்றும் 'நல்லறிவு வாய்ந்தோரத வறுமை பயன்படுதலின் அதனை யாம் மகிழ்ச்சியோடு மிகப் பெரிதாக நினைப்போம்" என்றும் உரைக்கின்றார்.
சங்க காலப் புலவர்கள் வறுமையினால் தன்பமுறினும் விருப்பமின்றியோ காலந் தாழத்தியோ கொடுக்கும்
I. (gDfb. 206: 8-13.
2. "மிகப்பே ரெவ்வ முறினு மெனைதடதம் உணர்ச்சி யில்லோருடைமை யுள்ளேம் நல்லறிவுடையோர் நல்குர வுள்ளுதம் பெருமயா முவந்தநனி பெரிதே' - புறம். 197:15-18.

பொருளை ஏற்பத தம் மானத்திற்கு இழுக்கெனக் கருதி அதை ஏற்க மாட்டார்கள் என்பது மேற்கூறிய சான்றுகளிலிருந்த தெரிகிறது.
அதியமான் நெடுமானஞ்சியிடம் பெருஞ்சித்திரனார் என்ற புலவர், பரிசு பெறச் சென்ற போது, மன்னன் அவரை நேரில் காணாமல் அவருக்குப் பரிசிலைக் கொடுத்தனுப் பியதைப் பெருஞ்சித்திரனார் கொள்ளாமல் கூறும் சொற்கள் அவர்தம் மான உணர்வை வெளிப்படுத்துகின்றன. 'பல குன்றுகளும் மலைகளும் கடந்து வந்த யான் பரிசில் பெற்றுக் கொண்டு போவதற்கென வந்தவன் என்று நயந்து என்னைக் காணாமலேயே, "இப் பொருளைப் பெற்றுக் கொண்டு இவ்வாறு செல்க' என்று சொல்ல வேந்தன் என்னை எவ்வாறு அறிந்து கொண்டான் என்னைக் காணாமல் தந்த இப்பொருளுக்கு நான் ஓர் ஊதியம் கருதம் பரிசிலனல்லேன். பரிசிலரது கல்வி முதலாகிய எல்லையை அறிந்த விரும்பித் தினையளவு பரிசு கொடுத்தாலும் அதவே நன்ற என்று கூறுகின்றார்.
காணா தீத்த விப்பொருட் கியானோர் வாணிகப் பரிசில னல்லேன் பேணித் தினையனைத் தாயினு மினிதவர் தணையள வறிந்து நல்கினர் விடினே"
புலவர்களை அன்புடன் வரவேற்றுப் பரிசு கொடுத்த அனுப்புதலே ஈகைப் பண்புக்கேற்ற தென்பதும் அவர்களைக் காணாது பரிசுப் பொருட்களைக் கொடுத்தனுப்புவதைச் சங்க காலப் புலவர்கள் தம் மானத்திற்கு நேர்ந்த இழுக்கு என்றும் கருதினர் என்பது இவற்றால் பெறப்படுகின்றது.
வெளிமான் என்ற மன்னன் இறந்த பிறகு அவன் தம்பி இளவெளிமானிடம் பரிசிலை விரும்பி சென்ற பெருஞ்சித்திரனாருக்கு வெளிமான் சிறிது பொருள் கொடுப்பத் தம் தரமறியாது அச்சிறு பொருளைக் கொடுத்ததைக் குறித்தம் தம் நெஞ்சை விளித்து அவர் பாடிய சொற்கள் மான உணர்ச்சியைக் குறிப்பிடுகின்றன.
'நெஞ்சமே புறப்படுவாயாக! நாம் போவோம். நம்மை அறிந்தும் அறியாதவர் போல் விருப்பமில்லாமல் முகம் மாறித் தரப்பட்ட பரிசிலை முயற்சியில்லாதவரே விரும்புவர். தரமுடையோர்க்கு இவ்வுலகம் பெரிதாகும். பேணுபவரும் பலராவர் என்று பாடி அவ்விடத்தை விட்டு நீங்குகிறார்.
1. 14.Db. 208: 6-9.
4.

Page 55
இதிலிருந்து, தரமறியாது முகம் மாறிப் பரிசில் கொடுப்பதைச் சங்ககாலப் புலவர்கள் மானத்திற்கு இழுக்கெனக் கருதினார்கள் என்பதை உணரலாம்.
இதுகாறும் கண்டவற்றால், புலவர்கள் இரந்துண்டு வாழ்ந்தாலும், தம்மை மதியாதாரை மதிக்காத சென்றனர் என்பதும் தகுதியறிந்து இன்முகத்தோடு சிறிது கொடுத்தாலும் மகிழ்ந்தனர் என்பதும் முறைமையோடு~ தகுதியை அறியாது நடக்கும் குணத்தினையுடையாரைப் புலவர்கள் மதிக்க வில்லை என்பதும் புலனாகின்றன. நம்மை முழுமையும் செம்மைப்படுத்திக் கொள்வத பண்பாடு என்ற மேத்யூ ஆர்னால்டு கருத்திற் கேற்ப மானத்தோடொழுகுதல் சீரிய பண்பாடாகும்.
மேலே கூறிய கொடை, மானம் ஆகியவை மட்டுமின்றி அவைபோல உயிர்க்கு உறுதி பயக்கும் பின்வரும் பல அறநெறிகளைப் புறநானுற்றப் பாட்டுக்கள் உணர்த்தகின்றன.
செய்நன்றிஅறிதல்
ஆணினத மடியினை அறுத்த தீவினையாளரும் பெண்டிரத கருப்பத்தை அழித்தோரும் பார்ப்பாரைப் பிழைத்த கொடுந் தொழிலையுடையோரும் தாம் செய்த பாவத்தினைப் போக்குதற்கு வழிகள் உள்ளன. ஆனால் நிலம் கீழ் மேலாகப்புடை பெயரும் காலமாயினும் ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தோர்க்கு நரகத்தினின்று தப்ப முடியாத என்று ஆலத்தார்கிழார் உரைக்கின்றார்.
செய்நன்றி மறத்தல் மிகக் கொடிய பாவம் என்பதை இப்பாடல் உணர்த்துகின்றது.
தீமை செய்தலை நீக்குதல்
கூற்றுவன் தன் பாசக் கயிற்றால் கட்டிக் கொண்டு போகும் பொழுது நாம் வருந்த நேரிடும். ஆதலால் நல்வினையைச் செய்யாமற் போனாலும் தீவினையைச் செய்தலை ஒழிக்க வேண்டும் என்றும் அதுவே நல்ல நெறியின் கண்ணே செலுத்தம் வழியும் ஆகும்’ என்றும் நரிவெரூஉத்தலையார் கூறுகிறார். இதனால் நன்மை செய்யாவிடினும் தீமை செய்தலை ஒழித்தல் ஒருவருக்கு நன்மை பயக்கும் என்பத உணர்த்தப்படுகிறத.
1. புறம். 34. 2. புறம். 195
4.

பொருளைய்பகிர்ந்தளித்துதவுதல்
பெருஞ்சித்தரனார், குமணனைப் பாடிப் பரிசில் பெற்றுத் நம் மனைக்கு வந்தார். அதைத் தன் மனைவியிடம் கொடுத்த, 'நின்னைக் காதலித்துறையும் நின்சார்வாய மகளிர்க்கும், நீ அன்பு செலுத்தம் மகளிர்க்கும் மாட்சிமைப்பட்ட கற்பினையுடைய நினது சுற்றத்த மூத்த மகளிர்க்கும் நமது சுற்றத்தினது மிக்க பசி நீங்க நீண்ட நாட்கள் வேண்டியளவு கொடுத்தோர்க்கும் இன்ன தனிமையாரென்று கருதாமல் எண் இசைவை எதிர்பார்க்காமலும் நீண்ட நாட்கள் இப்பொருளைக் கொண்டு வாழலாம் என்று நினைக்காமலும் யாவர்க்கும் வழங்குவாயாக’ என்று கூறுகின்றார்.
இண்னோர்க் கெண்ணா தென்னொடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும் எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே"
தாம் பெற்ற செல்வத்தைத் தாமே அனுபவிக்கக் கூடாது என்றும் பலருக்கும் பகிர்ந்தளித்து உதவ வேண்டும் என்றும் இப் பெருஞ்சித்தரனார் கூற்று வலியுறுத்துகிறது.
தமக்கென வாழாமல் பிறர்க்கென முயலுதல்
தமக்கென வாழாமல் பிறருக்கு உதவி செய்யும் பண்பு உள்ளம் கொண்டவர், இந்திரர் அமிழ்தம் கிடைப்பதாயினும் அதனைத் தாம் மட்டும் உண்ணாமல் பிறருக்கும் அளிப்பர். அவர்கள் யாரையும் வெறுக்க மாட்டார்கள் அஞ்சத் தகுவனவற்றிற்கு அஞ்சுவார்கள்: புகழுக்குரிய செயலெனின் அதற்காகத்தம் உயிரையுங் கொடுப்பர். பழியாயின் உலக முழுவதையும் பெறுவதாயினும் அதை விரும்ப மாட்டார்கள்: மனக் கவலையுங் கொள்ள மாட்டார்கள்: இத்தகைய பிறர்நலம் பேணும் இயல்பு உடையவர்களால்தான் இவ்வுலகம் உள்ளது என்று கடலுணி மாய்ந்த இளம்பெருவழுதி எடுத்துரைக்கின்றார்.
தமக்கென வாழாமல் பிறருக்கு உதவி செய்து வா! வேண்டும் என்ற அறம் இதன்கண் அறிவுறுத்தும் திறம் உளங்கொளத்தக்கத.
நல்ல நாடு
நாடும் காடும் மேடும் பள்ளமும் நிலத்தின் கண்
I. ggplib. I63: 5-7 2. புறம். 182.

Page 56
காணப்படும் இயல்பாகும். நிலங்கள் எப்படி இருப்பினும் அங்கு வாழும் மக்கள் நல்லவராக இருப்பின் அது நல்ல நாடாகும் என்று ஒளவையார் உரைக்கின்றார். இதனால் நாட்டில் வாழும் மக்களை யொட்டி அந்நாட்டில் நன்மைகள் தீமைகள் விளைகின்றன என்றும் நாடு செழிக்க மக்கள் நல்லவராதல் வேண்டும் என்றும் ஒளவையார் அறிவுறுத்துகின்றார்.
யாதுமூரே யாவரும் கேளிர்
கேடும் ஆக்கமும் தாமே வரினல்லது பிறரால் வருவதில்லை: தன்பமும் அத தீர்தலும் வினைப்பயனால் விளைவன: சாதலும் புதிதனர் று: வாழ்க்கை இனிமையுடையதென்று மகிழ்ச்சியடைதல் கூடாது: வாழ்க்கை தன்பமுடையதென்று கொள்ளுதலும் கூடாது: வாழ்க்கை எல்லாம் ஊழ்வினைப்பயன் என்று கொள்ளுதல் வேண்டும். பெரியோரைப் புகழ்தலும் சிறியோரை இகழ்தலும் கூடாத: உலகிலுள்ள ஊர்கள் யாவும் நம்முடைய ஊர்களாகவும், உலக மக்கள் எல்லோரையும் நம் சுற்றத்தவராகவும் கருதுதல் வேண்டும்’ எனக் கணியன் பூங்குன்றனார் கூறுகிறார். இப்பாட்டின் வழி புலவர் உலக 663,155 ió6).jsb (Universal Brotherhood) 9600) is 6 gy உன்னற்பாலத.
இழிவும் பெருமிதமும்
ஒருவர் மற்றொருவரிடம் சென்று பொருள் கொடுக்குமாறு இரந்து கேட்பது இழிவானத: அவர் பொருள் கொடுக்க மறுப்பத பொருள் கொடுக்குமாறு கேட்டதை விட இழிவானது ஆகும். பொருளை ‘பெற்றுக் கொள்க' என்று விரும்பித் தானே கொடுப்பத உயர்ந்தது. அங்ங்ணம் கொடுத்த பொருளை வேண்டாம் எனக் கூறுவத அதனினும் உயர்ந்தது ஆகும்.
இவ்வாறு கழைதின்யானையார் உரைக்கும் கூற்றில் இரத்தலின் இழிவையும் கொடுத்தலின் உயர்வையும் கொடுத்த பொருளை ஏற்க விரும்பாத பெருமிதத்தையும் உணரலாம்.
II. yapıb. I87. 2. புறம். 192. 3. புறம். 204.

அறமே இறுதித்துணை
அறமே வீட்டுலகம் பெறுவதற்குத் துணையாகும் என்பதைப் பிரமனார் அழகுபட உரைக்கின்றார்.
உறவினர்கள் தம்மில் கூடி அழ உயிரானது உடலிலிருந்து பிரிந்த காலத்தில் இவ்வுலகினின்றம் உயர்ந்து வீட்டுலகைப் பெறுவதற்கு அறவினையாகிய தணையே தெப்பமாகும். அத்துணையைக் கைவிட்டவர்க்கு மேலுலகப்பேறு இல்லையாம்' என அவர் கூறுகின்றார்.
ஒருவருக்குத் தான் சேர்த்து வைத்த செல்வம் தணையாகாத; அவரவர் செய்யும் அறவினையே மறுமைக்குத் தணையாய் இருந்து இன்பம் தரும்: மேலுலகப் பேற்றிற்கும் அதவே தெப்பமுமாகும். ஆதலால் அறத்தைச் செய்தல் சிறந்தது என்பது இதனால் புலனாகிறத.
தவத்தின் பெருமை
സെക வாழ்வாகிய இல்லறத்தையும் தவமாகிய தறவறத்தையும் சீர்த்தாக்கி நோக்கின், தவத்துக்கு உலகம் சிறு கடுகளவும் நிகராகாது; இவ்வுண்மையினை அறிந்தோர் தவத்தைக் காதலித்து வையகத்திற் பற்றுவிடுவர். திருமகள், பற்றவிட்டோரை நீங்காள்; ஆதலால் தவம் செய்வதற்குரியதாகும். இவ்வாறு தவத்தின் பெருமையை ஒரு புலவர் வற்புறுத்துகிறார்.
அறநெறியே தவநெறி
இவ்வுலகத்தின் இயற்கை, இன்பம் தரக்கூடியதன்று ஒரு மனையின்கண் சாவுப்பறை முழங்க, மற்றொரு மனையில் மணப்பறை முழங்குகிறது. ஒருத்தி பூவணியால் பொலிவுற்று விளங்க, மற்றொருத்தி கணவனைப் பிரிந்து கண் கலங்கி நிற்கிறாள். இத்தகைய இன்பமும் துன்பமும் கலந்தது இவ்வுலகம். இவ்வுலகில் இத் தன்மையை அறிந்தவர் இதனிடையே கிடந்த உழல வேண்டுமென்பதில்லை; வீட்டின்பத்தைத் தரும் நல்ல செய்கைகளை அறிந்து அவற்றை மேற் கொள்ள வேண்டும் என்று பக்குடுக்கை நன்கணியார் அறிவுறுத்தும் அறநெறி தவநெறி ஆகும். இதனை,
1. புறம். 357. 2. lgbib. 358.

Page 57
ஓரி னெய்தல் கறங்க வோரில் ஈர்ந்தணி முழுவின் பாணி ததம்பப் புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர் பைத லுணர்கணர் பணிவார் புறைப்பப்
இன்னா தம்மவிவி வுலகம் இனிய காண்கித னியல்புணர்ந் தோரே'
என்ற அடிகளால் உணரமுடிகின்றத.
நட்பு
நல்ல நட்பைப் பெறுவத பெறுதற்கரிய பேறாகும்.
பெறுதற்குரியவற்றுள் நட்பினும் சிறந்தத என்ன இருக்கிறத
என்றும் சீரிய நட்பைப் பெற்றுவிடின் அதைவிட
உறுதியான காப்பு வேறொன்று இல்லை என நட்பின்று
சிறப்பினைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.
செயற்கரிய யாவுள நட்பி னதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு'
என்பத குறள்.
நட்பிடை வஞ்சித்தவன் இம்மையில் குட்ட நோயிலும்
மறுமையில் நரகத்திலும் அழுந்தவான் என்று
திருத்தக்கதேவர் கூறுகிறார்.
இது நட்பின் அளப்பரும் பெருமையைக் குறிப்பதாகும்.
ஒருவரோடு ஒருவர் நட்பாவதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை. இருவருக்கும் ஒத்த உணர்ச் சியே நட்புக்கு உரிமையைக் கொடுக்கும். இவ்வுண்மையைப்,
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்"
என்ற அடிகளால் திருவள்ளுவர் விளக்குகின்றார்.
முகமும் அகமும் மலர விரும்பி நட்புக் கொள்வதே நட்பாகும். நல்லோருடைய நட்பு சந்திரனைப் போன்று
1. புறம். 194:1-7.
2. குறள். நட்பு 1 3. சிந், 253.
4. குறள். 785. 5. குறள். 786.
47

நாள்தோறும் வளர்வதம், அறிவிலார் நட்பு வளர்ந்த சந்திரன் நாள் தோறும் குறைவதம் ஆகிய தனிமையை உடையதென்பர் திருவள்ளுவர்.
மேலும் அவர் அணிந்துள்ள ஆடை குலைந்த போது அதை உடுத்தற்கு உடனே கை விரைந்து சென்று உதவி செய்வத போல நட்புக் கொண்டவனுக்குத் தண்பம் வந்தபொழுத அப்பொழுது சென்று அத்தன்பத்தை நீக்குவதே நட்பாகும். என்றும் கூறுகிறார்.
இவற்றால் உணர்ச்சியே நட்புக்கு உரிமையைக் கொடுக்கும் என்பதும், முகமும் அகமும் மலர விரும்பி, நட்புக் கொள்ள வேண்டும் என்பதம் , நட்புக் கொண்டவனுக்கு அப்பொழுதே சென்று உதவி செய்தல் வேண்டும் எண்பதம் பெறப்படுகின்றன.
மன்னர்களின் உணர்ச்சிக்கொத்த நல்ல நண்பர்களாகப் புலவர்கள் விளங்கினர் என்பது புறநானூற்றுப் பாட்டுக்களிலிருந்து புலனாகிறத. கபிலர், ஒளவையார், பிசிராந்தையார், பொத்தியார் ஆகியோர் இத்தகைய புகழுக்குரியோர் ஆவர்.
கபிலர் - வேள்பாரி
வேள்பாரியினுடைய உயிர் நண்பராகவும் அவனுடைய அவைக்களத்தப் புலவருமாக கபிலர் விளங்கினார். வேள்பாரியும் கபிலரைத் தன் உயிரினும் இனிய நண்பராகப் போற்றினன்.
கபிலர் வேள்பாரியைப் பற்றிப் பதினாறு பாட்டுக்கள்’ பாடியுள்ளமை அவர் அவன்பால் கொண்டிருந்த அன்பின் பெற்றிமையைப் புலப்படுத்துவதாகும்.
தமிழ்நாட்டு மூவேந்தரும் பாரியை எதிரத்து நால்வகைச் சேனைகளோடும் அவன் மலையை முற்றுகையிட்ட போத கபிலர் மூவேந்தரை நோக்கி, முயற்சியால் பாரியை வெல்ல இயலாது; நம் வாள் வலிமைக்கு அஞ்சி அவன் தரமாட்டான் : நீங்கள் அவன் மலையைப் பெறுவதற்குரிய வழியை யான் அறிவேன்; நம் விறலியர் பின்வர சிறிய
I. d5D6s. 782. 2. குறள், 782. 3. Dib 105-III: 113-120:236.

Page 58
யாழை வாசித்து ஆடியும் பாடியும் செல்லின் அவன் நமக்கு நாட்டையும் மலையையும் ஒருசேரத் தருவான்' என்று கூறும் மொழியிலிருந்த கபிலர் பாரியிடம் கொண்டிருந்த அன்பின் பெருக்கும் பற்றும் புலனாகின்றன.
வேள்பாரி இறந்த பின்பு, அவன் புதல்வியரை விச்சிக்கோ, இருங்கோவேள் ஆகியோரிடம் அழைத்துச் சென்று மணஞ் செய்து கொள்ளும்படி கபிலர் வேண்டினார்’ அம்மகளிரை இருங்கோவேளிடம் கொண்டு சென்ற 6 seggs.'............................ இவர்கள்: பறம்பிற்குத் தலைவனாகிய பாரியினுடைய மகளிர்: யான் இவர்கள் தந்தையின் தோழனாதலால் இவர் என்னுடைய மகளிர். அந்தணனாகிய புலவன் யான் கொண்டு வந்தேன்’ என்று உரைக்கின்றார்.
இவர், தந்தைக்குத் தோழன்; ஆதலால் நானும் இவர்களுக்குத் தந்தை என்று இருங்கோவேளிடம் கூறும் கபிலர் பண்பு அவரது நட்பின் பெருமையினை விளக்கு கின்றத.
விச்சிக்கோவும், இருங்கோவேளும், பாரிமகளிரை மணந்து கொள்ள மறுத்தனர். இதனால் கபிலர் இவர்களை வெறுத்துப் பின்பு அம்மகளிரை, மலையமான் மக்களுக்குத் திருமணம் செய்த கொடுத்தார்.
பாரி இறந்தபட்டதனால் தமக்கு நேர்ந்த தயரத்தைத் தாங்க இயலாமல் கபிலர் புலம்பியுரைக்கும் சொற்கள் அவரது நட்பின் மேன்மையைத் தெளிவுறுத்துகின்றன.
பாரி தம்மைவிட்டுப் பிரிந்தது அவனுடைய நட்பொழுக்கத்திற்குப் பொருந்தாத என்றும் இப்பிறப்பில் அவர்கள் இருவரும் கூடி இன்புற்றிருந்தத போல மறுபிறப்பிலும் அவனோடு கூடி வாழ உயர்ந்த விதி கூட்டுவதாக என்றும் கபிலர் பாடிஇருப்பது அவர்தம் இணையற்ற நட்பின் திறத்தைக் குறிப்பதாகும்.
பாரியின் மகளிருக்குத் திருமணம் முடித்து வைத்தவுடன் கபிலர் வடக்கிருக்க விரும்பினார். இதுவும் அவருடைய அளப்பரிய நட்பின் திறத்தைப் புலப்படுத்துகிறத.
ggplib. I09. yDb. 200,20I. μDώ. 2ο Ι. புறம். 202.
:

48
கபிலர் அந்தணர் குடும்பத்தைச் சேர்ந்தவர். தன் நணி பண் பாரியின் நாட்டை மூவேந்தர்களும் முற்றுகையிட்டபோது அவனத அரிய பணி பை எடுத்துரைத்த திறமும் அவன் இறந்த பின்பு, அவன் மகளிருக்குத் திருமணம் செய்து வைத்ததும், இறுதியாக வடக்கிருந்து, மறுபிறப்பில் பாரியோடு வாழு விரும்பிய பேரார்வமும் நட்பின் வளர்ச்சியினைப் படிப்படியாகக் குறிக்கின்றன.
பிசிராந்தையார் - கோய்பெருஞ்சோழன்
சோழ நாட்டின் உறையூரை ஆண்ட கோப்பெருஞ் சோழன்பால் பாண்டிய நாட்டுப் பிசிராந்தையார் அவனை நேரில் காணாமலேயே நட்புக் கொண்டார். சோழனும் அவ்வாறே அவர்பால் அன்பு கொண்டான். கோப்பெருஞ் சோழன் வாழ்க்கையில் வெறுப்புற்று வடக்கிருக்கத் தணிந்தான். அப்பொழுது பொத்தியார் முதலிய நண்பர்கள் உடனிருந்தனர். கோப்பெருஞ்சோழன் அவர்களை நோக்கி, ‘ என்னுயிரினினிய நண்பர், பாண்டிய நாட்டிலுள்ள பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்று செல்லுவர். அவர் என்னுயிரைப் பாதுகாப்பவர். அவர் நான் செல்வமுற்றிருந்த போது வராமற் போயினும், யான் தன்புறும் இக்காலத்து உறுதியாக வருவார்’ என்று கூறுகின்றான். இதனை,
பிசிரோ னெண்ப வெண் யிைரோம் புநனே செல்வக் காலை நிற்பினும்
A. 2 அல்லற் காலை நில்லன் மண்னே"
"ஆதலால் அவர் என்னுடன் வடக்கிருக்க அவருக்கு ஓர் இடம் ஒதக்கி வைப்பீராக’ என்று கூறுகின்றான்.
"இன்னே வருகுவன் ஒழிக்கவற் கிடமே
சோழன் கூறியபடியே பிசிராந்தையார் அவனுடன் வடக்கிருக்க வந்தார்.
ஒருவரையொருவர் காணாமலேயே இவ்விருவரும் கொண்ட நட்பின் திறத்தைப் பொத்தியார் வியந்து போற்றுகிறார்.
“வேற்று வேந்தனத நாட்டின் கண் விளங்கும்
I. pab. I 26 : 2oo : 2o I 2. புறம். 215 : 7-9 3. புறம். 216 12.

Page 59
சான்றோன் நட்பே பற்றுக் கோடாகத் தன்பக்காலத்த இவ்விடத்து வருதல் வியக்குந் தன்மையுடையத: இவ்வாறு வருவானென்று தணிந்து சொல்லிய வேந்தனத மிகுதியும் அவன் சொல்லிய சொல் பழுதில்லாமல் வந்தவனத அறிவும் வியக்குந்தோறம் வியக்குந்தோறும் வியப்புப் பெருகுகிறது. தன் செங்கோல் செல்லாத நாட்டில் அமைந்தவனத நெஞ்சைத் தன்னிடத்த உரித்தாகப் பெற்றான் சோழன் என்று விதந்த போற்றும் பொத்தியாரின் சொற்களால், உணர்ச்சியால் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் உளமொன்றிக் கொண்ட நட்பின் உயரிய தன்மை புலனாகிறத.
புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்”*
என்ற குறளுக்கு உற்ற சான்றாக இவ்விருவரின் நட்பு விளங்குகிறத.
பொத்தியாய் - கோய்பெருஞ்சோழன்
இவர் கோப்பெருஞ்சோழனுடைய உயிர்த் தோழர் சோழன் வடக்கிருக்கச் சென்ற பொழுது தானும் வடக்கிருந்து உடனிறக்க விரும்பினார். அப்பொழுது சோழன் தமக்குப் பிள்ளை பிறந்த பிறகு வருமாறு சொல்லித் தம்மை அனுப்பி விட்டதாகவும் அதற்குத் தாம் மிகவும் வருந்துவதாகவும் தாம் பின்பு வடக்கிருக்கத் தமக்குக் குறித்த இடம் யாது என்று கூறுமாறும் பாடுகின்றார்.
சோழன் கூறியபடியே சில நாள் கழித்துப் புதல்வன் பிறந்த பின் சென்று அவன் நடுகற் கண்டு வருந்தித் தமக்கே இடந்தருமாறு கேட்கின்றார்."
அவர் வேண்டுகோட்கு இணங்கி நடுகல்லாக நிற்கும் கோப்பெருஞ்சோழன் அவர் வடக்கிருக்க இடமளித்தான். இதனைப் பொத்தியார்,
நிலைபெறு நடுக லாகியக் கண்ணும் இடம் கொடுத்தளிப்ப மன்ற வுடம்பொ டிண்ணுயிர் விரும்புங் கிழமைத் தொண்னட் புடையார் தம்முழைச் செலினே”*
புறம். 217. குறள், 8785. புறம். 222. . புறம் 222. . புறம். 221:3-6.
4.

என்று வியந்த பாடுகின்றார்.
"யாக்கைக் குயிரியைந் தன்ன நட்பு"
என்றும்,
உடம்போ டுயிரிடை யென்ன மற்றண்ன மடந்தையொ டெம்மிடை நட்பு"
என்றும் கூறப்பெற்றிருப்பதால் சிறந்த நட்புக்கு உடம்பும் உயிரும் இயைந்த நிற்கும் இயைபு உவமமாகக் கூறியிருப்பது உணமை நட்பினி திறத்தை புலப்படுத்தவதாகும். கோப்பெருஞ்சோழன், பொத்தியார் இருவர் நட்பும் இத்தகையது எனலாம்.
ஒளவையார் - அதியமான்
புறநானூற்றில் ஒளவையார் பாடிய 33 பாடல்களில் 22 பாடல்கள் அதியமான் நெடுமானஞ்சியைப் பற்றிப் பாடியிருத்தல் ஒளவையார் அதியமானிடம் கொண்டிருந்த நட்பிற்குச் சிறந்த சான்றாகும்.
மலையின் விடரின்கண் உச்சியில் பழுத்திருந்த பெறுதற்கரிய நெல்லிக்கனியை அதியமான் கொண்டு வந்தான்; அதை உண்பவர் நெடுங்காலம் வாழ்வர், அந் நெல்லிக்கனியை அதன் சிறப்பினைக் கூறாமலேயே அதியமான் ஒளவையாருக்குக் கொடுத்து உண்ணுமாறு செய்தான். நெடுங்காலம் வாழச்செய்யும் நெல்லிக்கனியைத் தானி உணி டு பயனர் பெறாமல் அதியமானர் ஒளவையாருக்குக் கொடுத்தது அவன் அவர் பால் கொண்டிருந்த நட்பின் சிறப்பைக் குறிக்கிறது.
அதியமான் இறந்த பொழுது, 'அவனையின்றிக் கழிகின்ற காலையும் மாலையும் இனி இல்லையாகுக. யான் உயிர் வாழுநாளும் எனக்குப் பயன்படாமையின் அவையல்லவாக, எம்முடைய தலைவன் மலை பொருந்திய நாடு முழுவதும் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இத்தகையவன்; அவன் இறந்த பிறகு நடப்பட்ட கல்லின்கணி பீலியைச் சூட்டி, நாரால் அரிக்கப்பட்ட தேறலைச்சிறிய கலத்தில் கொடுத்தாலும் கொள்வானோ? என்று ஒளவையார் வருந்திப் பாடும் பாடல், அவர் அதியமான் பால் கொண்டிருந்த உண்மையான அன்பின் பெருக்கைப் புலப்படுத்துவதாகும்.
1. 95th. 339.
2. குறள், 1122. 3. புறம். 232.

Page 60
மேற்கூறிய சான்றுகள் வாயிலாகப் புறநானூறு, மக்கள் மேற்கொண்டொழுக வேண்டிய நட்பின் திறத்தையும் அத்தகைய நட்பினால் மக்கள் சீரிய பண்பாடெய்துவர் என்பதையும் தெளிவுபட உணர்த்ததலை உணரலாம்.
உண்மை நட்பு தனிமனிதனின் உள்ளத் தாய்மையைக் குறிப்பதாகும். இரண்டாவத இயலில் குறிப்பிட்டபடி மனத்தைப் பற்றிய தாய்மைநிலை பண்பாட்டில் அடங்கும் என்று தெ. பொ. மீ. கூறுவத இதற்குப் பொருந்தம்.
GúbGDID - IDgISOID
இந்நிலவுலக வாழ்வை "இம்மை என்றும், உயிர்கள் மறுபடியும் பிறக்கும் மறுபிறப்பு "மறுமை" எனவும் கொள்ளப்படுகின்றன. மனித உயிர்கள் நிலவுலகில் வாழுங்காலத்தில் ஆற்றும் நல்வினை தீவினைகளுக்கேற்ப அவ்வுயிர்களின் மறமை அமையும் என்ற நம்பிக்கை பழந்தமிழரிடையே இருந்தது. இம்மையில் நல்வினையாகிய அறச்செயல்களையே செய்பவர் தறக்கம் எய்தவர் என்று நப்பசலையாரின் புறப்பாடல் அறிவுறுத்தகிறது.
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனை மாறோகத்து நப்பசலையார் புகழ்ந்த பாடும் புறப்பாட்டில் நின்னுடைய தந்தை இப்பிறவியில் செய்த நல்வினையை நகரும் பொருட்டு விண்ணோர் உலகத்தக்குப் போயினன் 29b56,565.............................. 26ü67 öğSa)6ü67 தன்பம் தீர நீ அரசனாகத் தோன்றினாய்’ எனக் குறிப்பிடுகிறார்.
"ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென் றுணிஇயர் உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தன னாகலின் ஆறுகொணி மருங்கின் மாதிரந் தழுவும் கவலை நெஞ்சத் தவலந் தீர நீதோன் றினையே நிரைத்தா ரண்ணல்"
இம்மையில் நல்வினை செய்தவர் விண்ணுலகம் எய்தவர் என்பதை இப்பாடல் நன்கு உணர்த்தகிறத. ஊழின் வலிமையையும் அதன் பயனையும் விளக்கும் புறநானூற்றுப் பாடல்கள் இம்மையில் தீவினையை அறவே அகற்றி நல்வினைகளைப் புரிதற்கேற்ற நல்லுணர்வுகளை ஊட்டுவனவாய் உள்ளன. இந் நல்லுணர்வுகள் உள்ளத்தைத் தாய்மைப்படுத்தி மக்களைப் பண்பாடுடைய வர்களாக விளங்கச் செய்யும் திறத்தனவாகும்.
1. புறம். 174; 19~23

50
வினை, தலைவிதி, விதி, என்று இன்று சுட்டப் படுவதையே பண்டைத் தமிழர் பால், முறை, ஊழ் எனக் குறிப்பிடப்டுள்ளனர். திருவள்ளுவர் விதியை ஊழ் என்றே குறிப்பிட்டுள்ளார்.
ஊழிற் பெருவலி யாவுள"
என்பது வள்ளுவர் வாக்கு.
ஒன்றி யுயர்ந்த பால தாணையின்
ந்க கி ம் கிமக் تقوم من ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
என்ற தொல்காப்பிய நாற்பா அடிகளுக்கு "ஊழினத ஆணையாலே ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்பர் என இளம் பூரணர் உரை கூறுகிறார்.
எனவே பால் என்பதற்குப் பொருள் ஊழ்வினை என்பது தெளிவாகிறது.
சங்க இலக்கியத்தில் ஊழ்வினையைக் குறிக்கப் 'பால் என்ற சொல்லே மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீர் வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் gpOGOMD6NugộÚ L162 só 676õíuØSf................ 4ھو
நீரின் வழியே போகும் தெப்பம் போல அரிய உயிர் ஊழின்வழியே செல்லும் என்ற பொருளமைந்த இப் புறநானூற்று அடிகளில் அமைந்தள்ள முறை" என்ற சொல் ஊழ்வினையைக் குறிப்பதாகும்.
"தண் குடியின் மூத்தோர்கள் இறந்தபட்டதன் விளைவாகத் தனக்கு ஊழ்வினைப் பயனாக வந்த அரசுரிமையைச் சிறிய உள்ளம் வாய்ந்த ஒருவன் பெறின், அவ்வரசு அவனுக்குப் பெருஞ்சுமையாக அமையும். பெரும் போர்களை எதிர்க்கும் பேராற்றலும் பெருமுயற்சியுமுடைய ஒருவன் அவ்வரசுரிமையைப் பெறின், அரசாட்சி அவனுக்கு மிகவும் எளிதாக அமையும் எனும் பொருளமையச் சோழன் நலங்கிள்ளி பாடுகிறார் இப்பாட்டில்,
1. குறள் ஊழ் 10. 2. தொல் களவு. 22-3. 3. தொல். களவு 2:2-3 (இளம். உரை) 4. gpib. 192: 9-10

Page 61
'பாறா வந்த பழவிறற் றாயம்"
என்ற அடி "ஊழ்வினையால் தன்பால் வந்த பழைய அரசுரிமை' என்னும் பொருளுடையதாகும் .
உருகெழு தாயம் ஊழின் எய்தி
என்ற பட்டினப்பாலை அடியும் இப் பொருள்பட அமைந்தள்ளத குறிப்பிடுதற்குரியத.
வேள்பாரி இறந்தபட்ட பிறகு தாமும் வடக்கிருந்து உயிர் தறக்க எண்ணிய கபிலர், இப்பிறவியின்கண் நீயும் யானும் கூடி இன்புற்றிருந்தவாறு போல மறுப்பினும் இடைவிடாத காட்சியினையுடைய உன்னோடு கூடி வாழ்தலை உயர்ந்த விதி கூட்டுவதாக’ என்கிறார்.
இம்மை போலக் காட்டி யும்மை யிடையில் காட்சி நின்னோடு உடனுறை வாகுக உயர்ந்த பாலே"
என்ற இவ்வடிகளில் நலங்கிள்ளி பாடலில் ஊழ்வினை பற்றிய செய்தி அமைந்திருத்தலைக் காணலாம்.
இப்புறநானூற்றுச் சான்றுகள் பழந்தமிழர்கள் ஊழ் வினைபால் கொணி டிருந்த உறுதியான நம்பிக்கையினைப் புலப்படுத்தகின்றன.
நிலையாமை
இந்நிலவுலக வாழ்க்கை நிலைத்திருப்பதன்று. இவ்வுலகில் பிறந்த மக்கள் முடிவில் இறப்பத உறுதி. அவர்கள் இல்வாழ்க்கையில் ஈட்டும் பொருளும் அவர்கள் இளமையும் தய்க்கும் இன்பமும் நிலையற்றவை என்பதில் சிறிதம் ஐயமில்லை . தொல்காப்பியர் நிலையாமையைக் காஞ்சி என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.
'பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே"
என்ற நாற்பாவால் காஞ்சித் திணையை அவர் விளக்குகிறார். "ஒருவனுக்கு ஒரு தணையுமாகாமல் உயிரும் யாக்கையும் 1. புறம். 75:2.
2. பட்டினப். 227.
3. gpib. 236; 10-13.
4. தொல், புறத். நா. 23.

செல்வமும் இளமையும் முதலிய பல்லாற்றானும் நிலையில்லாத உலகியற்கையைப் பொருந்திய நெறியையுடையது காஞ்சி என்பத இந்நூற்பாவின் பொருள். நிலையாமையாகிய இவ்வுண்மையை உணர்ந்து மக்கள் பிறர் நலம் பேணி நல்லறங்களைச் செய்வாராயின் அவர்கள் புகழ் பெறுவர். அவர்கள் பெற்ற இப்புகழ், மறைந்த பின்பும் இந்நிலவுலகில் நிலைத்த நிற்கும். இவ்வுண்மையை,
மன்னா வுலகத்து மண்ணுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்தனரே"
எனப் பெருந்தலைச்சாத்தனார் பாடுகிறார்.
உண்மையில் நிலையாமை உணர்வு மக்கள் உள்ளத்தில் நிலை பெறுமானால் அவ்வுணர்வு அவர்களை நல்லனவே செய்யத் தாண்டும் என்பத உறுதி. எனவே நிலையாமையைப் புறநானூற்றுப் பாடல்கள் பலவாறு எடுத்துரைக்கின்றன.
சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதகண்ணன் சாத்தனார் பாடும் புறப்பாடலில் நிலவினைச் சான்றாகக் காட்டி நிலையாமையை உணர்த்தம் திறம் உள்ளத்தைக் கவர்வதாகும். 'வளர்ந்த ஒன்று பின் குறைதலும் குறைந்த ஒன்று பின் வளர்தலும், பிறந்த ஒன்று பின் இறத்தலும் இறந்த ஒன்று பின் பிறத்தலும் ஆகிய இவ்வுண்மைகளைக் கல்வியறிவில்லாதவரையும் அறியுமாறு செய்த நிலவாகிய தெய்வம் இயங்குகிறது’ இவ்வாறு அப்புலவர் நிலையாமை உணர்வைச் சுட்டுகிறார்.
வருவோர்க்கு உதவி செய்யுமாறு சோழனி நலங்கிள்ளிக்கு அறிவுறுத்தம் முதகண்ணன் சாத்தனார் இவ்வுலக நிலையாமையைப் பொருத்தமான மற்றும் ஒர் உவமை வாயிலாக உணர்த்துகிறார். "விழாவின்கண் ஆடும் கூத்தரத வெவ்வேறான கோலங்கள் முறையே தோன்றி இயங்கி மறைவது போல இவ்வுலக வாழ்க்கையும் தோன்றி நடைபெற்று மறைந்த விடுகிறது என நிலையாமைத்
1. புறம் 165: 1-2. 2. தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்
மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும் அறியா தோரையு மறியக் காட்டித் திங்கட் புத்தே டிரீதரு முலகத்த
புறம், 27: 11-14.

Page 62
தன்மையை உரைக்கிறார். கூத்தர் பல கோலம் பூண்டு ஆடுவர். ஒரு சமயத்தில் தோன்றும் கூத்தரின் குறிப்பிட்ட கோலம் அடுத்த மறைந்த வேறெரு கோலமாகக் காட்சி தரும். எனவே கூத்தரின் கோலம் தோன்றி இயங்கி மறைவத போல உலக வாழ்க்கையும் தோன்றி மறையும் தன்மையத என்பதை இப்புறப்பாடல் தெளிவுபடுத்துகிறது.
பக் குடுக்கை நண் கணிணியார் இவி வுலக நிலையாமையை எடுத் தரைக்கும் பாங்கு உளங்கொளத்தக்கத. ‘ஒரு வீட்டில் சாப்பறை ஒலிக்க, இன்னொரு வீட்டில் திருமண முழுவின் இன்னிசை ஒலிக்கிறத, தம் காதலரோடு கூடின மகளிர் தம்மைப் பூவினால் அணி செய்த கொள்ள, தம் காதலரைப் பிரிந்த மகளிர் வருத்தமிகுதியால் கண்ணீர் பெருக்குகின்றனர். இங்ங்ணம் இவ்வுலகை முரண்படப் படைத்த நான்முகன் பண்பில்லாதவனாவன். உண்மையில் இவ்வுலகத்தியற்கை கொடியத. இவ்வுலகினது இத்தன்மையை அறிந்தோர் இவ்வுண்மையை இனியவாகக் காண்பார்களாக" என அப்புலவர் அறிவுறுத்தகிறார்.
இனிய இன்பத்திலும் கொடிய தன்பமே இவ்வுலகில் மிகுதியாக உள்ளது. இன்பம் நிலையாதது என்பதை உணர்ந்து தன்பங்களை இனியவாகக் கொண்டு அமைதி பெறுதலே அறிவுடைமை என்பதை இப்பாடல் வழி பக்குடுக்கை நண்கணியார் உணர்த்துகிறார். உலக நிலையாமையை உணர்ந்த நன்மை புரிய வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்தாகக் கொள்ளலாம்.
தாயங்கண்ணனார் என்னும் புலவர் நம் மனக்கண்முன் நிறுத்தும் ஒரு நாட்டின் காட்சி, நிலையாமை உணர்வை மேலோங்கச் செய்வதைப் பின் வரும் செய்தி உணர்த்தும்,
வளர்ந்த கள்ளிச் செடிகளையுடையதும் பகலிலே கூவும் பேராந்தையுடையதம் பிணம் எரிக்கும் தீயொளியில் தோன்றும் பேய்களையுடையதமாகிய சுடுகாடு அச்சம் தருவதாகும். அச்சுடுகாட்டில் காதலையுடைய மகளிர் அழுத கண்ணீர், பிணம் எரிந்த எலும்புடன் கூடிய வெப்பமிக்க சாம்பலை அவிக்கும். எல்லோருடைய
1. இவழிற் றாக நின் செய்கை விழவிற்
கோடியர் நீர்மை போல முறை முறை ஆடுநர் கழியுமிவ் வுலகத்த. ~ புறம், 29 22-24. 2. புறம் 194.

இறுதிக்காலத்தையும் காணும் அச்சுடுகாடு மக்கட்கெல்லாம் இருப்பிடமாகித் தன் இறுதிக்காலத்தைப் பிறர் காண்பதை அறியாததாகும். இது அப்புலவர் பாடலின் திரண்ட பொருள்.
பிறந்த மக்களெல்லாம் முடிவில் இறந்து நெருப்புக்கு இரையாகும் இடம் சுடுகாடு என்றும், எல்லாரது இறுதிக்கும் இடமாகிய அத இறுதி இல்லாதத என்றும் இப்பாட்டில் கூறுவதன் மூலமாகத் தாயங்கண்ணனார் நிலையாமையின் உண்மையைத் திறம்பட உறுதிப்படுத்துகிறார்.
சேர, சோழ, பாண்டிய நாடுகள் பொதுவானவை என்று போற்றாமல் அவை தமக்கே உரியவை எனக் கொண்டு ஆண்ட மூவேந்தர்களின் வாழ்நாட்களும் அழிந்தன. தமக்குத் தணையாகும் எனக் கருதி சேமித்து வைத்த பொற்குவியலும் அவர்களுக்குத் தணையாகாமல் அழியுந் தன்மைத்தாகும் என்று பிரமணர் என்ற புலவர் தம் பாடலில் நிலையாமையைக் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு புறநானூற்றுப் பாடல்கள் நிலையாமை உணர்வை மக்களுக்கு ஊட்டி நல்லன செய்தற்குரிய பண்பாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பனவாய் உள்ளன.
புறநானூற்றுப் பாடல்களிலிருந்த அறியலாகும் பல வள்ளல்களின் கொடைத்திறங்களைப் பின்வருமாறு தொகுத்தக் கூறலாம்.
தம்மை நாடும் பரிசிலருக்கு அவர்களுடைய வறுமை தீர வள்ளல்கள் பொருளைக் கொடுத்துதவினர். வைகறையிலும் மாலை நேரங்களிலும் மட்டுமின்றி மற்ற எந்த நேரத்திலும் தம் பெருமனை முற்றத்தை அடைந்து கிணைப்பறை முழங்கும் பொருநர், பாணர் ஆகியோருக்குக் கைவண்மை வாய்ந்த மன்னர்களும், குறுநில மன்னர்களும், தலைவர்களும். பரிசிலர்களின் கிழிந்த பழைய உடைகளுக்குப் பதிலாகச் சிறந்த புதிய ஆடைகளை அணியும்படி செய்த, சுவை மிக்க உணவளித்த அவர்களும் அவர்தம் சுற்றமும் வாழ விலையுயர்ந்த அணிகலங்களைப் பரிசிலாக வழங்கினர். இப்பெரு வள்ளல்கள் இம்மைப் பயனோ மறுமைப் பயனோ வேறு எந்த பயனோ கருதிப் புலவர்களுக்கும் இரவலர்களுக்கும்
I. ggplib. 356. 2. புறம். 357:2-5.

Page 63
பொருள் வழங்கவில்லை. இல்லாதவர்களுக்குப் பொருள் கொடுத்த அவர்களை வாழவைப்பதையே தம் கடமையாகக் கொண்டனர். இவர்கள் சிறப்பாகப் புலவர்கள், பாணர்கள், பொருநர்கள் போன்ற கலைஞர்களின் வறுமை நீங்கப் பொருள் வழங்கித் தத்தம் நாட்டில் கல்வியையும் கலைகளையும் வளரச் செய்தனர்.
சில வள்ளல்கள் தம் ஊரும் பேரும் தெரிவிக்காமல் கொடை வழங்கிய திறம் உண்மையில் வறுமையால் வாடுவோரின் இன்னல்களைப் போக்குவதில் அவர்கள் எத்தணை நாட்டமுடையவராய் இருந்தனர் என்பதைக் குறிக்கிறத.
பெரும்பாலும் வள்ளல்கள் தம் பெரு முயற்சியால் பகையரசர்களை வென்ற தாம் திறையாகப் பெற்ற பொருள்களையே இரவலர்களுக்குப் பரிசிலாக வழங்கினர்.
மன்னர் சிலர் விளைநிலங்களையும், ஊரையும்,
புறநானூற்றில் தமிழர் பண்பாடு என்னும் நூலிலுள்ள உயர் நெறி தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.
4.

நகரையும் கொடையாகத் தந்தது அவர்களின் இணையற்ற வள்ளண்மையைப் புலப்படுத்தகிறது. பாரி போன்ற வள்ளல்கள் புலவர், கலைஞர் ஆகியோர் மட்டுமின்றி, அறிவில்லாத சிறுமைப் பண்புடையோரும் தம்மிடம் பொருள் விரும்பி வரின் அவர்களுக்கும் இல்லையென்னாது பொருள் வழங்கி கொடை மடம் உடையோராய் விளங்கினர். பல நாட்கள் தொடர்ந்து செல்லினும், முதல் நாள் போலவே முகமலர்ச்சியுடன் பொருள் வழங்கும் பண்பினராய் வள்ளல்கள் திகழ்ந்தனர்.
இவற்றல் சங்க கால மன்னர்களும், தலைவர்களும் தம் கைவண்மையால் எய்தி இருந்த ஒப்புயர்வற்ற பண்பாடு இனிது விளங்குகிறது.
"நாம் பெற்றிருக்கும் பொருள்களின் அடிப்படையில் எவ்வாறு ஒழுகினோம் என்பது பண்பாடு என்று ஜி. எஸ். கூர்யே பண்பாட்டிற்குக்கூறும் விளக்கம் சங்ககால வள்ளல்களின் கொடைத் திறத்திற்குப் பொருந்துவதாகும்.
க் கொள்கைகள்' என்ற தலைப்பிலான இயல் இங்கு தரப்பட்டுள்ளது.

Page 64
பழந்தமிழறி
படைக்க
முனைவர் கதி
வீரநிலைக் காலத்தில் படைகளை வகுத்து, அவற்றைக் காத்தப் பயிற்றுவித்த அமர் நடத்திய முறை அறிதற்குரியத. அரசு, சமுதாயம், சமயம் ஆகிய முப்பெரு நிலைகளும் படைகளிலும் படைகலன்களிலும் நிலையான கவனத்தைச் செலுத்தின என்றால், வீர உணர்வு அற்றைக் காலச் சமுதாயத்தில் ~ பண்பாட்டில் ~ இரண்டறக் கலந்து காணப்பட்டிருத்தல் உறுதி. எனவே, வீரம் அன்று புகழ் நல்கும் பாடுபொருளாயிற்று.
குமரி முதல் இமயம் வரை தம் ஆட்சியின் நீட்சியைப் பழந் தமிழ்ப் படையெடுப்புக் களில் உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.
சுருஞ்சினத்த கொல் களிறு
பழந்தமிழர் வீரநிலைக் காலத்தில் நால்வகைப் படைகள் இருந்தன. சேரநாட்டில் வினைநவில் யானைப் படை அப்படைகளில் முதலிடம் பெறுகின்றது எனலாம். சேரநாட்டுத் தானைக்குப் பெருமை அவர்கள் வைத்திருந்த யானைப் படையே ஆகும். யானைப் படையின் சிறப்பால் பெயர் பெற்ற சேர மன்னன், பல்யானைச் செல்கெழு குட்டுவனைக் காண்கிறோம். 'வேழ நோக்கின் விறல் வெஞ்சேய்' என்று போற்றப்படும் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் பெயரும் இதற்குச் சான்று ஆகும். வேழம் நிறைந்த நாடு சேர நாடு , யானைப்படை கொண்டு தாக்கி மாபெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள் சேரர்கள் எனலாம். அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் என்று வடவாரிய மன்னர்களை முறியடிக்கச் சென்ற சேரன் செங்குட்டுவன் யானை இவர்ந்து சென்ற நிலையை இளங்கோவடிகள் தமது காப்பியத்துள் காட்டுகின்றார்.
தானைகளில் யானைகளுக்குக் கொடுக்கப்
பட்டிருக்கின்ற அடைமொழிகள் அவற்றின் இன்றியமையாச்

படைகளும்
ன்ைகளும்
திர் மகாதேவன்
சிறப்பினை நன்கு புலப்படுத்தும். "மரங்கொல் மழுகளிறு வழங்கும் பாசறை என்றும், "போர்வல் யானை' என்றும் "கடுங்கண் யானை" என்றும் இருங்களிற்று யானை இலங்குவால் மருப்பொடு" என்றும், "செல் சமம் தொலைத்த வினைநவில் யானை' என்றும், "தொழில்நவில் யானை' என்றும் ‘செரு நவில் வேழம் என்றும், 'பொன் அணி யானை' என்றும், "கொல்களிற என்றும், 'களம் கொள் யானை' என்றும் சுட்டப்படும் சிறப்பு, களத்தொழிலில் யானைகளைப் பயன்படுத்திய வகையை உய்த்துணர வழி செய்கின்றது.
"கடுஞ்சீனத்த கொல்களிறு என்றும், "அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறை என்றும், "நெடுநல் யானை' என்றும், ‘அண்ணல் யானை" என்றும், "கடாஅ யானை" என்றும், காட்டப்படும் சிறப்பு, களத்தொழிலில் யானைகளை ஈடுபடுத்திய வகையை அறிய வழி செய்கின்றது. உம்பற் காடு, வேழக்காடு ஆகிய இடங்களில் யானைகள் இயற்கைச் செல்வமாய் இருந்தன. எனவே, இவ் இடங்களுக்கு இப்பெயர்கள் கொடுக்கப்பட்டன போலும். சேர நாட்டில் யானைகள் யாடுகள் போலவும் மாடுகள் போலவும் ஏராளமாகக் காணப்பட்டதைப் பதிற்றுப்பத்த உணர்த்தகின்றத. முகபடாஅம் அணிந்த யானையின் வலிமைமிக்க எருத்தின் மீது அமர்ந்த கலன் ஏந்திப் பகைவரை எதிர்த்தனர். பட்டத்த யானை பாங்காக அணி செய்யப்பட்டிருந்தத.
அரிசில்கிழார், யானைகளைப் பிடித்துக் கட்டுத்தறியில் கட்ட, அவை கந்த நிலையை முறித்து, மேலே பறக்கும் கழுகுகளின் நிழலைப் பிற களிறு எனக் கருதி, நதி கொண்டு நிழலைக் குத்தம் பெற்றியன என்கின்றார். மேலும், கொங்கர்தம் ஆநிரைகளைப் போலத் தகடூர் எறிந்த பெருஞ் சேரலாதன் யானைப்படை, அளவால் பரந்தத என வருணிப்பதைக் காணலாம்.

Page 65
சேரர்தம் வினைநவில் யானைகள், செறநர் செருக்கு அறுத்து, அவர்களை நிலத்தில் தேய்த்து ஆழ்த்தம் இயல்பின என்பதை,
பகை பெருமையின், தெய்வம் செப்ப ஆர்இறை அஞ்சா வெருவரு கட்டூர்ப் பல்கொடி நடங்கும் முன்பின் செறநர் செல்சமம் தொலைத்த வினைநவில் யானை கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி”
என்றும், தொழில்நவில் யானைகள் கெருக்களங் காணும் செம்மாந்த இயல்பின என்பதை,
“எடுத்தேறு ஏய கடிப்புடை அதிரும் போர்ப்பு உறமுரசம் கண்அதிர்ந் தாங்குக் கார்மழை முழக்கினும், வெளில்பிணி நீவி நதல் அணந்த எழுதரும் தொழில்நவில் யானை”
என்றும் பெருங்குன்றார்கிழார் சித்திரித்துக் காட்டுவர். இதனால் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை தானையின் வலிமை தெற்றெனப் புலனாகும்.
‘போர்வல் யானைச் சேரலாத" என்றும் போற்றப்படும் இமயவரம்பன் நெடுங்சேரலாதன் யானைமீது வருங் காட்சியைக் கண்டு,
"போர் அடு தானைச் சேரலாத மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும் வலண்உயர் மருப்பின் பழிதீர் யானைப் பொலன்அணி எருத்தமேல் கொண்டு பொலிந்தநின் பலர்புகழ் செல்வம் இனிது கண்டிகுமே”
என்று குமட்டூர் கண்ணனார் கூறுவதினால், பல சேரமன்னர்கள் யானைமீத ஏறிக் களங்கண்ட அமர்புரிந்தனர் என அறியலாம்.
சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி சேரநாட்டின் மீது படையெடுத்துச் சென்றபோது அவன் யானை கட்டுக்கடங்காமல் ஓடியதை ஏணிச்சேரி முடமோசியார் பாடுகிறர்.
பாண்டியன் பல்யாகசாலை முதகுடுமிப் பெருவழுதி பகைவர் நாட்டு ஊருணிகளைத் தன் யானைப் படையால் அழித்தான் என நெட்டிமையார் கூறுவர். அம்பு சென்று

தைத்ததினால் ஏற்பட்ட பெரும்புண்ணை உடைய யானையின் தாம்புடைத் தடக்கையை வெட்ட அத கலப்பையை ஒப்ப நிலத்தில் புரளத் தோன்றும் அவலக்காட்சியைக் குடபுலவியனார் காட்டுவர்.
யானை தன் கவுளில் கல்லை அடக்கிப் பகைவர்மீது எறியும் என்பதை அறிகிறோம். யானை மலையைப் போலத் தோன்றும் என்று உவமை கூறுவதைக் காணலாம் 5fé (JSOLuís) (Infantry), 5first 60L ( Point Platoon) முன்னணியில் செல்லும் என்றாலும், எதிர்ப்படும் தடைகளைத் தகர்த்தெறிய யானைப் படையை gp6.j60160fuss) (Forward Area) 68-guidoosh, Dépétéfuss) மைந்துறம் போதும் வலிமையில் செம்மாந்து தோன்றும் போதம் யானை அரசனுக்கு ஒப்பிடப்படுகிறத. யானை பகைவரை நிலத்தில் தேய்க்கும் என்பதைக் கழைதின் யானைக்கால் அகப்பட்ட வண்திணி நீள் முளை போல என்ற கூறும் உவமையால் அறியலாம். கோட்டைக் கதவுகளை உடைக்க யானைகளைப் பயன்படுத்தினர். பகைநாட்டுக் களிறுகளைக் கொன்ற அதன் தந்ததை அறுத்து எடுத்த வந்த வீரர்கள் கள் குடிப்பதற்குப் பண்டமாற்றாகக் கொடுக்கின்றனர். மூவேந்தர்கள் படையிலும் யானைப்படை சிறப்புடைய பகுதியாய் இருந்ததை அறியலாம்.
யானை தமிழ்கத்துக் கருப்பொருள்களில் ஒன்று. யானை அமர் புரிவதற்குப் பயன்படுமே தவிர வெற்றியை நிலைநாட்ட வீரர்களே தேவைப்பட்டனர். எனவே, நாற்படையுள்ளும் தாசிப்படை அக்காலத்தப் பிற படையிலும் பெரிதாக மதிக்கப்பட்ட நிலையைக் காணலாம். இன்று வரை தரைப் படையினர் நிலை பெருமைக்குரியதாகவே உள்ளத.
நெஞ்சுடைய புகல் மறவர்
இக்காலச் சூழலில், பிற படைகளைத் தணைப்படை (Suppor Arms) 676ösLiñaĝ560)JÛL J60)Li ĝ56òîìåäáŝuJNĚkó5ab 9bjbp6ö பெற்றது எந்த வகையான நிலத்திலும் (Mobility) செல்லுமி, இடத்திற்கு ஏற்பத் தன் சூழலை மாற்றி (Adaptability) அமைக்கும்; ஆற்றலைப் பெருக்கும் (Ability) வழிவகைகளைத் தேடும்; முக்காலத்திற்கும் இவ்வுண்மை பொருந்தம். எனவே, நாற்படையும் வேற்படையும் விற்படையும் வாளும் தாங்கும் தரைப்படை, பழந்தமிழர் படைகளில் எங்ங்ணம் இயங்கியத எனக் காணல்

Page 66
பழந்தமிழ்ப் பண்பாட்டை அறியத் தணையாகும் என்பதில் ஐயமில்லை.
படைவீரர்கள் தொகை பெருகியத என்பதைப் பெருங்குன்றும் கிழார் விளங்கும் போது எங்ங்ணம் சேரனத செல்வம் கொடுக்கக் கொடுக்க அதிகமாகியதோ அதே போல அவனது படையும் பகைவரால் கொல்லப்படக் கொல்லப்பட அதிகமாகியது என்கின்றார். இதனால், பழந்தமிழர் படையைப் பெருக்குவதில் அதிகக் கவனம் செலுத்தினார் என்பதை அறியலாம் மறவர், மழவர், மள்ளர், பொருநர் எனப் பல்வகைத் திணைநிலை வீரர்களை ஒன்று சேர்த்துப் பயிற்சி அளித்தனர், பெரிய நிலைப்படை (Stationary Army) 606) lifelisab60th 676 D, 6 D6), albé6)606) ஆயினும், படை நடத்திக் களங்கண்டு தறைநோக்கி அணுக்க முறைகளால் பகைவரை வீழ்த்தி வெற்றி கொள்ளும் கலையில் தேறிய, நேரிய பயிற்சி பெற்றிருந்தனர் என அறிகிறோம் படை முன்னேறப் பாலை வழியில் சாலை அமைக்கும் (Pioneer Platoon) பணியும் செய்யப் பட்டத. இயவர்கள், முரசு அறைந்த பல்லியக் கருவிகளை இயக்கினர். தார்ப்படை எனப்படும் முன்னணி தரைப் படையின் இன்றியமையாத பிரிவாகும். அது வலிமை வாய்ந்தத. எனவே, ஒளவையார், பகைப்புலத்தப் பகைவரை நோக்கித் "தார் தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு ஒடல் மரீஇய மன்னர் எனக் கூறுவர்.
படையெடுப்புக்கள் நிகழுங்காலத்த வீட்டுக்கு ஒருவர் நாட்டைக் காக்க அல்லத பகைவரைத் தாக்க அனுப்பப்படும் நிலையைக் காண்கின்றோம். செருப்பறை கேட்டதும், விருப்புற்று வேல் கைக் கொடுத்து, வெளித விரித்து உடுத்தும் மயிர்க்குடுமி எண்ணெய் நீவி, "ஒரு மகன் அல்லது இல்லோள், செரு முகம் நோக்கிச் செல்க என விடுக்கும் நிலையால், இதனை நன்கு தெளியலாம்
"உறைசால் பாசறை
போர் முரசு அறையப்படும் போது விழுப் புண்பட்ட வீரர்கள் பெரிதும் விரைந்து எழுந்து கூடுவர். பாசறை அமைப்பு, பாதகாப்பு உடையத. படைபலத்தினி செருக்கால், பாசறை வாயிலைக் காக்காமல் விடுத்தனன் என்பதை, "வாய் காவாத பரந்தபட்ட வியன்பாசறைக் காப்பாள' என்று சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர்க்கிழார் பாடுகின்றார் ‘ஏமப் பாசறை" என்றும் அழைக்கப்படும். "வெல்போர்

56
பாசறை" என்ற தொடரில் உள்ள அடையால் பாசறை அமைப்பே வெற்றிக்கு வழி வகுத்தது எனலாம். அகன்று காணப்படும் பாசறைகள் அமைக்கப்பட்டன. அடுகளிறுகள் பாசறைக்கண் உலவப், பாசறையில் கொடியைக் கட்டிப் பறக்க விட்டனர் என அறிந்தோம் உழவினை வென்றியுற முடித்தற்கு உழவன் நல்லெருது தேர்ந்து கோடல் போல, வேந்தனும் வினைக்குரிய முதகுடி வீரரைத் தேர்ந்து, தனக்காக முகந்த எடுத்துத் தந்த பசும் பொன்னாலாகிய வள்ளத்தில் கள்ளைத் தன் அருகே உள்ளவனைக் காட்டி இவ்வீரனுக்கு நல்குவாய் எனக் கூறினான். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவனுக்குப் பாசறையில் போர்ப்பூவை மன்னன் வழங்கினான் எனக் கழாத்தலையார் கூறுவர். இரவு நேரத்தில் நிலவு பொழியும் சூழலில் பாசறை கடல்போல அழகிய தோற்றமுள்ளதாய்க் காட்சி அளித்தது என்று பெருந்தலைச் சாத்தனார் வருணிப்பர். பாசறையில் முரசு ஒலி கேட்கும். அச்சத்தைத் தருமாறு காற்றோடு கணை பறக்கும். இத்தகைய பாசறை சில சமயங்களில் வயல் வெளிகளிலும் சில இடங்களில் பகை வேந்தனின் எயிலின் அருகிலும் காணப்படுகின்றது. பாசறையின் இருக்கையில் குளிரைப் போக்க மரக்கட்டைகளைத் தீயிட்டுக் (Camp Frie) கொளுத்தினர். பாசறையைக் காட்டின் அருகில், கான்யாற்றுக் கரையில், அங்குள்ள புதர்களை அழித்து வேட்டுவர் இருக்கையை நீக்கி இடுமுள்ளினைச் சுற்றிலும் இட்டு நடுவிலே அமைத்தனர் 66 நப்பூதனார் கூறுகிறார்.
இசை பாசறையில் இசைக்கப்படும். பாணர்கள் வீரப்பாடலைப் பாடி வீரர்கள் சோர்வைப் போக்கி வீர உணர்ச்சியை ஊட்டுவர். பாசறையில் புலால் நாற்றம் வீசும். பல நாள் பாசறை இருக்கையில் தங்கியோர் பகை வெம்மையின் காரணமாகத் தயிலாத சோர்ந்தனர். அத்தகைய வீரர்கள் இசை கேட்டு மகிழ்வர். இராப் பொழுதினைப் பகற் பொழுதாக்கும் ஆசினை உடைய ஒள்ளிய வாளை விரவின நிறத்தினை உடைய கச்சினாலே பூண்ட மகளிர் நெய்யைக் காலுகின்ற திரிக்குழாயைக் கொண்டு விளக்குகள் அவியுந் தோறும் தம் கையாற் பந்தத்தைக் கொளுத்தினர் என்று முல்லைப் பாட்டு வருணிப்பதைக் காணலாம். பாசறையில் இரவு நேரங்களில் விழுப்புண் பட்டோருக்கு மருத்துவப் பணியும் உதவியும் கொடுக்கப்பட்டதை அகநானூறு குறிப்பின் சுட்டும். பாண்டியன் நெடுஞ் செழியன் பாசறையில் இரவு நேரங்களில் விழுப்புண்பட்ட வீரர்கள் நலங்கண்டு வருதல் நக்கீரனாரால் குறிக்கப் படுகின்றது.

Page 67
வீரச்செயல் புரிந்த வீரரைப் பாராட்டிப் பொலம்பூ நல்கலும் தோற்றோரைச் சிறைப் பிடித்தலும் உண்டென அறியலாம்.?
LaDL&sooi Lu’iourd (Weapon Training) Liuglid
6 gig5 si b si di 5ò (Offensive Weapon) படைக்கலன்களில் பல வகைகள் காணப்படுகின்றன. buiébésb (8606007 - Topographical features), isságib வகைக்கும் ஏற்றவாறு படைக்கலன்களின் வகையும் பயன்படுத்தம் முறையும் வேறுபட்டிருத்தலைக் காண முடிகின்றத.
காட்டாகச் சேரநாட்டில் மலைப்பகுதிகள் மிகுதி. அந்நிலத்தில் பிறவகைப் படைக்கலன்களிலும் வில்லும் அம்பும் மிகுதியாகப் பயன்படுத்தல் இயற்கை ஆதலின், சேரர்கள் வில்லையும் அம்பையுமே தங்கள் அடையாளச் சின்னமாகக் கொண்டனர். சேரர்களை அகநானுாறு, "வில்கெழுதடக்கை வெல்போர் வானவன்" என்றும், பதிற்றுப்பத்து, 'வில்லோர் மெய்ம்மறை என்றும் பாராட்டும். அம்பகள் அழகிய அம்பறாத்தாணியில் (பொறிகிளர் தாணி) அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எயில் காத்தவர்கள் வில் அம்பைப் பயன்படுத்தவதைக் காண்கிறோம். பகைவரும் பாராட்டத்தக்க வகையில் அம்பினை உடையோர் எய்வர் என அறிகிறோம். அகன்ற இலைகளை உடைய முருக்க மரத்தால் ஆகிய இலக்கை (target) பயிற்சிக்காக அம்பு எய்யப் பயன்படுத்தினர். தோல் போன்ற இலக்கும் பயன்படுத்தப்பட்டது. பாலை நிலத்த வாழ்வோர் "வில் உழுது உண்மார் எனப்பட்டனர். "வடி நவில் அம்பின் வில்லோர் பெரும" என்று பிட்டன் கொற்றனை அழைத்தலும் புகழ் சால் சிறப்பின் அன்புமிகத் திளைக்கும் வல்வில் ஓரி என்ற சிறப்புப் பெயர் பெற்ற குறுநில மன்னனையும் காண்கிறோம்
வீரர்கள் வில்லும் அம்பும் தாளியும் வேலும் வாளும் கேடயமும் பயன்படுத்தினர். மெய்ம்மறை (Armour), தோல் அல்லத பலகை (Shield) ஆகியவை பாதகாப்பிற்கும் (Defensive) பயனபடுத்தப்பட்டன. மெய்ம்மறை என்பது உடல் மழுவதும் மறைக்கப்பட்டதாய் இருத்தல் வேண்டும். தோல் என்பது கைப்பிடி தோலால் அமைக்கப்பட்டு, பிறபகுதிகள் உலோகத்தால் ஆக்கப்பட்டிருத்தல் கூடும். “பலகை என்பத மரத்தால் ஆயத போலும்!

மள்ளர் ஒளிவாள் அமலை எனும் நடனம் ஆடி வெற்றியைக் கொண்டாடினர். படையின் முன்னணியில் (Point attack) bis(3Drch 6JT. "JSOLLíof 6760T 9,583DTib. 'கூர்வேல் பிட்டன், குறுகல் ஒம்புமின், தெவ்வீர்" என்றதனால், தானைத் தலைவர் சிலரும் வேலினைப் பயன்படுத்தினர் எனத் தெளியலாம்.
எயில் அழிக்கும் அமரில் ஈடுபட்ட வீரர்கள் வேலைப் பயன்படுத்தினர். கடற்படையிலும் வேலைப் பயன்படுத்தல் காண்கிறோம். எயில்மீது ஏணி வைத்து ஏறினர். வாளைத் தோளிலே கோத்த அணிதலை அறிகிறோம்.
எறிந்து கொல்லும் ஆற்றல் உடைய ஈட்டி போன்ற படைக் கலன்களை வைத்திருந்தனர். எஃகம் எறிந்து புண் ஏற்படுமாயின், குருதி கொப்பளிக்கும் அதன் விளைவைக் குமட்டூர் கண்ணனார் கூறும் போது, "செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப, அருநிறம் திறந்த புண் உமிழ் குருதி என்று குறிப்பிடுகின்றார்.
இவ் எஃகம் மின்னல் போல ஒளியும் கூர்மையும் உடையத பகைவர் உடலைப் பல காலம் பதம் பார்த்ததினால் புலித்தோல் உறையில் இக்கருவியைப் பாதுகாப்பாக வைத்திருந்தனர். நீண்ட மரப்பிடியில் எஃ கம் அமையுமாறு வைத்திருந்தனர்.
படையின் முன் செல்லும் கூளியர் சரிநெறி துருவிச் செல்ல, முன்னணியினர் (Pioneers) இ வழி அனுப்ப கழற்கால் வயவர் நெறிப்பட்ட படைஞர் முன்னேறினர் என அறிகிறோம். இவர்களே (கூளியர்) பகைநாட்டில் ஊடுருவல்கள் செய்த கொள்ளை சாற்றி அல்லல் பல பகைவர்க்குத் தந்தனர்.
கதழ் பரிய கலிமா
சிவந்த பிடரி மயிர் உடைய குதிரைகள் பழந்தமிழர் படையில் ஓர் இன்றியமையாத பகுதியாய் இருந்தன குறுநில மன்னர்கள் சிலர் தங்கள் பெயரைத் தம்முடைய குதிரைகளுக்கும் கொடுத்தனர் என அறிகிறோம். திருமுடிக்காரியூர்ந்த குதிரைக்குக் 'காரி என்றும், ஓரியின் குதிரைக்கு 'ஓரி என்றும் பெயர். “காரிக் குதிரைக் காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை யோரியும்” என்பதனால் குதிரைப்படையின் சிறப்புப் புலனாகும். விரைந்து அடும் தொழிலில் குதிரைகள் பயன்பட்டன. அவைகளின் பிடரி

Page 68
மயிர் அழகாக வெட்டிவிடப்பட்டிருந்தன. குதிரைகளும் அணிகலன்களால் அழகு செய்விக்கப்பட்டுச் சதங்கை மணிகள் கட்டப்பட்டன.
நெருங்கொழயநிமிர்தேர்
பழந்தமிழர் வீரநிலைக் காலத்தில் மாபெரும் வீரர்கள், தானைத் தலைமை ஏற்ற மன்னர்கள், வீரம் குன்றா வேளிர்கள் ஆகியோர் படை நடத்திக் களங்கண்டு அமர்புரியப் பெரும்பாலும் இயல் நெடுந்தேரிலே சென்றனர். கொல் களிறகளுக்கு இடையே மணி கட்டிய நெடுந்தேர்கள் பகைக் களத்திற்கு மன்னனை ஏற்றிச் சென்றன. தேரைச் சுற்றிப் படைஞர்கள் காணப்பட்டனர்.
சோழன் நலங்கிள்ளிக்குத் தேர்வண் மலையன் கிள்ளி என்றும், மலையமான் திருமுடிக்காரி-க்குத் தேர்வண் மலையன்" என்றும் சிறப்புப் பெயர்கள் காணப்படுவதால் இம்மன்னர்கள் களங்களில் தேர் ஒட்டிப் பகைவரைப் புறங் காணுதலில் சிறப்புடையவர் எனத் தெளியலாம்.
பருகடல் ஒட்டிய வெல்புகழ்
சேரர்களின் கடற்படை, பழந்தமிழர் வீரநிலைக் காலத்தில் பெரிதம் போற்றப்படுகிறத. சேரன் செங்குட்டுவன், கடல் பிறக்கு ஒட்டிய செங்குட்டுவன் என்று சிறப்புப் பெயர் பெற்றத இதனை நன்கு வலியுறுத்தம் மறப்போர்க் குட்டுவன்' என்று பரணரால் அகநானூற்றில் பாராட்டப்படும் சேரன் செங்குட்டுவன் கடல் குறம்பர்களைத் (Pirates) தன் கடற்படையால் ஒட்டியவன். இவன் கடற்படையின் வலிமையைப் பதிற்றுப்பத்த நன்கு காட்டும். சேர மன்னர் பலர் கடல் கடம்பு (கடம்பர்) எறிந்த செய்தியைப் பதிற்றுப்பத்துச் சுட்டும்
களம் காணல் - காளைக்குக் கடனே
பழந்தமிழர் வீரநிலைக் காலத்தத் தானையில் சேர்ந்தோர் ஊதியம் பெற்றுச் செருக்களம் செல்லும் முறை இல்லை; அற்றைக் காலத்தில் "வீரம் வீரத்திற்காகவே என்ற கொள்கை உடையவர். நல்லமர் புரியும் வீரர்களுக்குப் பரிசில் நல்கினர்.? விளைநிலம் பரிசிலாகத் தரப்பட்டத. "ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கி, களிறு' எறிந்த பெயர்தல் காளைக்குக் கடனே" என்று

பொன்முடியார் கூறும் கவிதை அக்கால மக்கள் அமரைப் பற்றிய எண்ணத்தைத் தெற்றெனப் புலப்படுத்தம். யானையைக் கொல்லுதல் காளையின் கடன் எனவும், அதற்கு யார் யார் என்னென்ன செய்ய வேண்டும் எனவும் கூறுவது இப்பாட்டு. ஒவ்வொருவர் தணையும் வீரக் குறிப்பு உடையதாக இருத்தல் வேண்டும் என்பர் டாக்டர் வ. சுப. மாணிக்கம் அவர்கள். வீரநிலைக் காலப் பெரு வீரர்களாகக் கருதப்பட்ட மன்னர்களும் வீரர்களும் களநிலைக்கு ஏற்றவாறு மலர் அணிந்து அமரிட்டனர். கழல் அணிவதும் மலர் அணிவதும் காணலாம்.
பாடு துறை முற்றிய கொற்றம்
‘போர் அடு தானை" என்றும், செருமிகு தானை' என்றும், "கடல் போல் தானை' என்றும், "கொலக் குறையாத தானை' என்றும், உரவுக் கடல் அன்ன தாங்கு அருந்தானை, என்றம், 'தானையும் கடல் என முழங்கும் என்றும் கூறப்படும் சிறப்புப் பழந்தமிழ்த் தானையின் வீரத் திருத்தகைமையை விளக்கும்.
பழந்தமிழ் வீரத் திருத்தகைமை உடையோரை "அமர்க்கு எதிர்ந்த புகல் மறவர்’ என்றும், "செருப்புகல் மறவர்’ என்றும் 'ஆய்ந்து தெரிந்த புகல் மறவர்’ என்றும், அரசர்களைக் “காலன் அணைய, கடுஞ்சின முன்ப" என்றும் 'தார்மிகு மைந்த என்றும், போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ" என்றும், "தப்புத்தறை போகிய கொற்ற வேந்தே" என்றும், "பாடுதறை முற்றிய கொற்ற வேந்தே" என்றும், "கால முன்ப" என்றம் "வாய் வாள் வேந்தே என்றும், ‘வியன் தானை விறல் வேந்தே என்றும், சினங்கெழு தானைச் செம்பியன் மருக" என்றும், ‘வெல்போர் வேந்தே" என்றும், "கொடுமர மறவர் பெரும" என்றும், வயமான் தோன்றல்' என்றும், “வலம்படுகுரிசில்' என்றும், ‘இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி என்றும், களங்கொள் யானைக் கடுமான் பொறைய' என்றும், "வேந்த மேம்பட்ட பூந்தார் மார்ப" என்றும் காணப்படுகின்ற விளிச் சொற்களையும் அடைமொழிகளையும் காணுங்கால் அக்கால மன்னர் படைகளையும் படைக்கலன்களையும் பயன்படுத்தி அமர் மேம்பட்டு அமர் மேம்படும் போதெல்லாம் புகழ் மேம்பட்டு, அமரில் கிடைக்கும் களிறுகளையும் பொருள்களையும் பரிசிலருக்குத் தந்து வாழ்ந்தனர் என்பதை நன்கு உணரலாம்.

Page 69
அருதலும் தொலைதலும் - காரணங்கள்
பழந்தமிழர் வீரநிலைக் காலத்தில் அமர்புரிதல் உலகத்து இயற்கையாகக் கருதப்பட்டது. எனினும், போர் தொடுப் பதற்குச் சிற்சில காரணங்கள் இருக்கவே செய்தன. மண்ணாசை காரணமாய் அடல் குறித்து எழுந்தனர். இடம் சிறித என்ற எண்ணத்தால் ஊக்கம் கொண்டு படை எடுத்ததாகச் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியதால் அறியலாம்.
புகழ் மீது ஏற்பட்ட காதலாலும், அப்புகழை அமர்வழி அடைதல் பல்லாற்றானும் சிறப்புடையத எனக் கருதியதாலும் பொருவதில் ஈடுபாடு கொண்டார். போர்க்களம் காணும் நிலை கொண்டிப் பொருளுக்கு வழி செய்தது. பகைக்களத்தில் பெற்ற பொருளைப் பரிசிலருக்குக்
கொடையாக நல்கிச் சிறப்படைவதில் மகிழ்ச்சி அடைந்தனர்.
சில நேரங்களில் இல்லாமை என்னும் குறை நீக்கக் கருதிய மன்னன் படையெடுத்தத உண்டு என அறிகின்றோம்.
புறநானூற்றில், "மகட்பாற் காஞ்சித் தறையில் வரும் 20 பாடல்கள் "மகண் மறத்தல்" அமருக்குக் காரணமானதைச் சான்று காட்டி நிற்கின்றன. கபிலர் பாரிமகளிரை அழைத்துக் கொண்டு பல மன்னரிடைச் சென்று திருமணம் முடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுத் தோல்வியுற்றதை அறிகிறோம். இதனால், பறம்புமலை மீது மூவேந்தரும் படையெடுத்தற்கு "மகண் மறுத்தல்" காரணமாவதை உய்த்தணர வழியுண்டு. மேலும் குன்றார்க் கிழார் மகனார் பாடிய பாடலில், மகளைப் பெற்ற மன்னன், "கொற்ற வேந்தர் வரினும், தண்தக வணங்கார்க்கு ஈகுவண் அல்லணி" என்கிறார். அக்காலக் குறுநில மன்னரின் மகளை வேட்டோர், வேந்தராயினும் வணங்கிக் கேட்க வேண்டும் என எதிர்பார்த்தனர் என்ற எண்ண வேண்டியுள்ளத. பாரியின் மறமாண்பினை “மகண் மறுத்தல்" தறையில் பாடிய கபிலர், "தாளித் கொள்ளலிர் வாளிற் றாரலன’ என்ற மொழியால், மேலும், இத்தறைக் கருத்த வண்மையுடையதாகிறது. இழந்த நாட்டை மீண்டும் பெறுவதற்காகச் சில நேரங்களில் அமர் புரிந்தனர் என்பதை அகநானூறு,

"இரும்பொன் வாகை பொருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதகளத்து ஒழிய வரம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் இழந்த நாடு தந்தன்ன"
எனக் கூறும்
இவை போன்ற காரணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஆயின், இவையே அனைத்த அமர்க்களங்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் என்று கூறுதல் இயலாது. வீரநிலைக் காலத்தில் உலகின் பிற பல இடங்களிலும் அமர் நடைபெற்றிருக்கின்றன. அப்படி நடைபெற்ற அமர்க்களங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டு நடைபெற்றிருக்கின்றன என ஆய்தல் நலம் பயக்கும். வெளிப்படையாகக் கூறப்படும் காரணம் ஒன்றும் குறிப்பால் புலப்படும் காரணம் வேறொன்றுமாக இருக்கலாம். தணைக் காரணங்களும் உண்டு. குறிப்பின் புலப்படும் காரணமே செம்மையானதாய் அமையும்.
சேரன் செங் குட்டுவண் வடநாட்டினி மீத படையெடுத்துச் சென்றான். காப்பிய நோக்காம் பத்தினி வழிபாட்டிற்குக் கல் எடுக்கச் சென்றான் என்பத வெளிப்படையான காரணம். காவா நாவின் கனகனும் விசயனும் தென்தமிழ் ஆற்றல் அறிந்திலர். எனவே, அவர்கள் தமிழ் ஆற்றல் அறியுமாறு சென்றான் என்பது தணைக் காரணம்.
சேரன் செங்குட்டுவனை ஐந்தாம் பத்தில் பாடிய பரணர், ஆரியரை வென்றமை குறிக்கவில்லை. அப்போர் நிகழ்ச்சி சேரன் செங்குட்டுவன் காலத்தின் இறதி அமர்க்களம் எனலாம். இதனைப் பரணர், அகநானூற்றில் அவர் பாடிய பாடல்களில் இறுதியாகக் காணப்படும் பாடலில்,
“ஆரியர் அலறத் தாக்கிப் பேர்இசைத்
தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோண்”
என்று குறிப்பிடுவர். சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவன் வடநாட்டுப் படையொடுப்பிற்குக் காரணம் வங்சினமும் வெஞ்சினமுமே என்பது குறிப்பின் புலப்படும் என்பதை,

Page 70
"வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதம் வெங்சினம் விளியோர் வேந்தர் எண்பதை வடதிசை மருங்கின் மன்னவர் அறிய குடதிசை வாழும் கொற்றவற்கு அளித்த"
என்று கூறும். தமிழர் வீரம் வடவரால் பழிக்கப்பட்டத. ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றப்படவில்லை. வெஞ்சினம், வஞ்சினம், வாகை அல்லது வாரா உலகம் புகுதல் என்பவை அக்கால அமர்களுக்கு வித்தம் விளைவுமாய் இருந்தன.
"வீர நிலைக் கவிதை காட்டும் வீரருடைய குணச்சித்திரங்கள் அகில உலக நாடுகளிடையே அமைதியை அவாவும் இக்காலத்த, ஒழுங்குமுறையைப் பேணும் சமுதாயச் சூழலில் சீரும் சிறப்பும் பெற்று இன்று திகழ முடியும் என்று, என்னால் நம்பமுடியவில்லை. இத்தகைய சூழலில் பெரும்பாலான வீரர்கள், சிறிது கால வேறுபாட்டில், சிறையில் அடைபட்டிருப்பர்” என்பர் மன்றோ சாடுவிக்.
பழந்தமிழில் வீரநிலைக் காலத்தில் பெரும்பாலும் எல்லா வீரத் தலைவர்களின் பெயரோடும் வாழ்க்கையோடும் அமர்க்களம் அல்லது வீரநிகழ்ச்சியின் குறிப்பு இருக்கக் காண்கிறோம்.
உலக வீரநிலைக் காலத்தில் நாட்டுப்பற்று என விதந்து, அமரில் ஈடுபடும் பாங்கு பெருமதிப்புப் பெறவில்லை. எனவே, பழந்தமிழர் வீரநிலைக் காலமாகிய சங்க காலத்தில் மன்னர்கள் பெரும்பாலும் தமிழகத்தினுள்ளேயே சண்டை இட்டுக் கொண்டனர் என்பது வெளிப்படை.
தேசிய அளவில் நடைபெறும் அமர்க்களம் என்றாலும், வீரநிலைக் கவிதைகளில் தனிப்பட்ட வீரர்தம் குணநலனும் பேராண்மையும் கொண்டாடப்படுவதைக் காணலாம் வீரநிலைக் காலத்தில் பொருள்திரட்ட வேண்டும் என்ற ஆசை, களங்காணும் அக்கால வாழ்விற்குக் காரணமாய் இல்லை என்பது தெளிவு; வளம் எனப்படுவது வசதியான வாழ்வை அமைப்பதற்கோ செல்வாக்கை நிலை நாட்டவோ தேவைப்படவில்லை. ஆயின், வீரர் தாம் பெற்ற பெருவளத்தைப் பிறருக்குக் காட்டவும், மாற்றாரினும் தாம் பெற்ற ஏற்றத்தை உணர்த்தவும் பயன்படுத்தினர். 'தண்தமிழ் பொத பொறாஅன், போர் எதிர்த்து நின்றவன். என்றதனால், நாட்டுப்பற்று என்பதைவிட தன் தலைமைத் தன்மை

நாட்டலும், காட்டலும் அமருக்குக் காரணங்கள் ஆயின. மேலும், "செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி’ என்ற மனப்பான்மையையும் அன்று காணலாம். தன் புகழ்மீது ஏற்பட்ட காதல் வீரச்செயல்களை விழையும் நாட்டத்தைத் தாணி டியது. இக் கருத்த எல்லா வீர நிலைக் கவிதைகளிலும் பெருநோக்கமாய் அமைகின்றத எனலாம்.
"மண் நாணப் புகழ்வேட்டு" எனவும், "ஒரு தாம் ஆகிய பெருமையோடும் தம்புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே என்றும், "பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின் ஆடுகொள் வியன்மார்பு என்றும் பலபடப் புகழினைப் போற்றுதல் காணலாம். அமர்க்களத்தில் ஏற்பட்ட சில விளைவுகள், களவேள்வியில் ஏற்பட்ட சில கொடுமைகள், பகைவரை வென்று வாகை கொண்ட்ாட மேற்கொண்ட செயல்கள் ஆகியவை வீரநிலைக் காலத்தில் வாழ்ந்தோரை உயர்நிலைக்குக் கொண்டு செல்லவில்லை. இதனால், அன்று அறிவிற் சிறந்தவர்கள் வாழவில்லை என்பத பொருளன்று.
பழந்தமிழர் வீரநிலைக் காலத்தில் மன்னர்கள் மாபெரும் வீரர்களாய் இருந்தனர். ஏனெனில், "படைச்செருக்கு அங்கு அரசியலின் அங்கமாயும் பங்காயும் இருந்தது. எனவே, மன்னர்கள் தானைத் தலைவராயும் இருந்தனர். இந்நிலை மேலைநாட்டிலும் காணப்படுகின்றத. ஐரோப்பிய வரலாற்றில், படை எனும் கூறு செயல்பட்ட சூழலில் வீரநிலைக் காலப்பண்பாடு உருவாகியது எனலாம். படைவைத்துக் குடிகாக்கும் வாழ்வில் திளைத்த மன்னர்கள் தங்களைத் தானைத் தலைவராக்கிக் கொண்டனர்.
வீரநிலைக் காலத்தில் போராட்டங்கள் அடிக்கடி நிகழ்வதற்குக் காரணம் சூறையாடுதலில் உள்ள நாட்டம் ஆகும். இக்கொள்கையில் கொண்டி மகளிரையும், ஆனிரைகளையும் கவர்ந்து செல்லுதல் குறிப்பிடத் தக்கது.
பழந்தமிழில், கொண்டிப்பொருள், கொண்டி மகளிர் என்ற சொற்களால், அச்செயல்களைப் பழந்தமிழரும் நிகழ்த்தினர் என்பது போதரும்,
வீரம் ~ பெரிதும் அக்காலக் கருத்தாய், அமர்க்களங்கள் அக்கருத்தக்கள் கருக்கொள்ளும் களமாய், அக்களங்கள் பெரிதும் கவிதைக்குக் கதையாய் - விதையாய்க் - காணப்பட்டது. எனவே, அமர்க்களத்தில் வீரம் வெறி ஆனதில் வியப்பில்லை. பண்பட்ட தமிழகத்திலும்

Page 71
படுகளத்தில் பண்பு வீரத்தின் பெயரால் கொன்று புதைக்கப்பட்டது. இலியாதின் தலைமை சான்ற வீரனான எக்கிலிசு தன் பகைவனின் சடலம் கிடைத்த போது காட்டுமிராண்டியாய் மாறுகின்றான்.
அமரின் இறுதிநிலை
பழந்தமிழர் வீரநிலைக் காலத்தில் களம் புகும் வீரன் வெற்றி அல்லது வீர மரணம் என்று இறுதி வரை அமர் புரிவான். இத்தகைய நிலையை, "தாவாத வஞ்சினம் முடித்த ஒன்று மொழி மறவர்’ என்று பரணர் மொழிவார். இயவர் குருதியுடன் கலந்த தினையை முரசுக்குப் படையல் செய்து முரசை முழக்குவர். முரசு அதிர, பகைவர் அஞ்ச, வீரர் வெறி கொண்டு தாக்குவர். பகைவரை நோக்கிப் படையெடுத்தச் சென்ற போது அவர்தம் கோட்டைகளையும் சிற்றாரைச் சுற்றியுள்ள கடி மிளையையும் அழித்து விளை நிலங்களைப் பாழாக்கிக் கொண்டிப் பொருள் கிடைப்பின் கொள்ளை அடித்தனர்.
பகை அரசின் பல்லினைப் பிடுங்கித் தன் எயில் கதவில் பொருத்தும் பழக்கம் உண்டு என்று அறிகிறோம்.
பகை நாட்டு மகளிர் முடி தறித்துக் களிறு பிணித்தல் கூறப்படுகின்றத. மேலும், வென்ற மன்னன் தோற்ற மன்னனின் முடியை அணி செய்வது காண்கிறோம்.
தோல்வி அடைந்தோன் தோல்வியை ஒப்புக்கொண்டு திறை செலுத்துவதைப் பார்க்கிறோம். திறை பொதுவாக விலை உயர்ந்த அணிகலன்கள், வினைநவில் யானைகள், நன்செய் நிலங்கள், தேறல், நெய் முதலியவைகளாகும்.
உண்டாட்டும் களியாட்டமும் வெற்றி கொண்டபின் ஆடும் வாள் அமலை ஆட்டத்தில் உண்டு. வெற்றியைப் பெற்ற மன்னன் கொண்டிப்பொருளை வீரர்களுக்கும் பரிசி லர்க்கும் தருவதைக் காணலாம்.
வெற்றி, முரசு முழங்குவதன் மூலம் அறிவிக்கப்பட்டது. காவல் மரத்தை வெட்டி முரசு செய்தல் வெற்றியின் நினைவாக மேற்கொள்ளப்பட்ட செயலாகும்.
போரின் இறுதியில் கள வேள்வி நடந்தத. இக்களவேள்வி முறைகள் போரின் கொடுமைகளுக்கு எல்லாம் கொடுமுடியாய்க் காணப் படுகின்றது.
61

களவேள்வி போன்ற செயல்கள் மேலை நாட்டிலும் காணப்படுகின்றத.
வீரநிலைக் காலத்தின் வீழ்ச்சி
வீரநிலைக் காலத்தின் வீழ்ச்சிக்கும், வீரநிலைக் கவிதைகளின் மாற்றத்திற்கும் மறைவிற்கும் பல காரணங்கள் உண்டு. சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு அடிப்படையான காரணமாகும். இம்மாற்றம் வரலாற்று அடிப்படையிலே அமையும். பல நாற்றாண்டுகளின் விளைவால் தோற்றுவிக்கப்பட்ட வீரநிலைக் காலம், அன்னியர் ஆக்கிரமிப்பு, புறச்சமய இடிையீடு, பிற பண் பாட்டுச் செல்வாக்கு என ஏற்படும் காரணங்களால் சில ஆண்டுகளில் மாறுதல் அடைவதனைக் காணலாம்.
மேலை நாட்டில் காணப்படுகின்ற இந்நிலையும் காரணங்களும் தமிழ் நாட்டிற்கும் பொதுவாகவே உள்ளன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர்ப் பழந்தமிழர் பண்பாட்டில் அடிப்படையான மாற்றம் ஏற்பட்டி ருக்கின்றது. வரலாற்றில் வகையாகப் பிடிபடாமல் காட்சியளிக்கும் களப்பிரர் ஆட்சி இம்மாற்றத்திற்கும் வீரநிலைக் கால வீழ்ச்சிக்கும் அடிப்படைக் காரணமாக அமைகின்றது.
ஒரு சமுதாயம் தனக்கே உரிய சுவைகளை மாற்றுகின்றது. அங்கு எளிய நிலைகள் மாறுகின்றன. கூட்டு வாழ்வை ஒதக்கித் தனிப்பட்ட வாழ்வை விரிவாக்க முயல்வதைக் காணலாம். அச்சமுதாயம் தமக்கே உரிய மரபையும், வழிவழி வந்த கலையையும் நீத்துப் புதியவற்றையும் வேறுபாடான கலைகளையும் காண விழைகின்றது.
பழந்தமிழர் வீரநிலைக் காலத்திலும் இம்மாற்றம் உண்டு. சமுதாயத்தின் எதிரொளியாய்ச் சான்றோர்களால் கூறப்பட்ட அறங்கள் மாறித் தனிமனிதனின் உய்விற்கு உரிய நீதி நெறிமுறைகள் கவிதைகளில் உருவாயின. அகவற்பாவும், பரிபாடலும் கலியும் மாறுதலடைந்த நெகிழ்ச்சி அற்ற வெண்பா, இலக்கிய வடிவத்தில் இடம் பெற்றது. இம்மைக்கு ஏற்ற சிந்தனைகள் மாறி மறுமைக்கும் வழி காட்டும் சித்தாந்தங்கள் தமிழ் நாட்டில் நீதிநூல் கால 5 Lisso (Period of Ethics) (8576i560).
வீரநிலைக் காலக் கவிதைகளில் கவிஞர்கள் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய கருத்துக்களையும் முடிவுகளையும்

Page 72
தங்கள் தங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு தணிவுடன் உரைத்தனர். இனவாழ்வின் எதிரொளி, பெருமித வாழ்வின் போக்கு அக்கவிதைகளில் காணப்பட்டன. கபிலர் ஒளவையார், முரஞ்சியுர் முடிநாகராயர் : இரும்பிடர்த்தலையார், பரணர், காரிகிழார் போன்ற அனைத்துச் சங்கப் புலவர்களும் வீரநிலைக் கால இனத்தின் காப்பாளர்கள் எனலாம். வீரநிலைக் காலம் மாறிய காலத்து உயர் தத்தவ அறிவுரையாளர்களும் தனிப்பட்ட வேதாந்தக் கருத்தக்களுக்கு இடம் அளிப்பவர்களும் சமய நம்பிக்கைகளுக்கு ஆளாகிறவர்களும் தோன்றினர். எனவே பதினெண்கீழ்க் கணக்கில் காணப்படுகின்ற பதினெட்டு நால்களில் பதினொரு நரல்கள் நீதி நால்கள் ஆயின. நால் வகையாலும் கருத்துத் தொகையாலும் இந்நூல்கள் பழந்தமிழர் வீரநிலைக் காலத்திலிருந்த மாறுபட்டவைகளாகும்.
வீரநிலைக் காலத்தில் சாவைப் பற்றிய எண்ணங்கள் பாவபுண்ணியத்தைப் பெரிதம் அடிப்படையாகக் கொண்டவை அல்ல. மறவாழ்வைக் கந்தாக உடையவை.
இக்கட்டுரை முனைவர் கதிர் மகாதேவன் எழுதிய பழந்தமிழர்

ஆயின், நீதி நிலைக்காலத்தில் சாவு பற்றிய எண்ணங்கள் பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டவை எனலாம்.
பழந்தமிழர் வீரநிலைக் காலத்தில் இல்லது புனைதல் மிகக் குறைவு. எனவே, தமிழர் இனப்பணி பாடு கவிதைகளில் நன்கு புலனாகின்றது. நீதிநிலைக் காலத்தில்
தத்துவக் கருத்தினையும் இக வாழ்வின் நிலையைக்
காட்டிலும் பர வாழ்வின் அனுபவம், இன்பத்தைக் காட்டிலும் பேரின்பத்தைச் சுட்டும் வழி ஆகியவைகளைக் காட்டத் தலைப்பட்ட காரணத்தால் மனிதன் உயிர் வாழ்வின் நிலையாமை பெரிதும் போற்றப்பட்டத. பின்னர், இலக்கியம் சமுதாயத்தின் நிழலாக இல்லாமல், புனைந்துரைகளுக்கு இடம் தந்து இல்லது புனைதலில் ஈடுபட்ட காப்பிய நிலைகளைக் காண்கிறோம்.
எனவே, பழந்தமிழர் வீரநிலைக் கால வீழ்ச்சி, வரலாற்றின் அடிப்படையிலும் பண்பாட்டின் மாற்றத்தாலும் ஏற்பட்டது என்று எண்ண வேண்டியுள்ளது.
வீரப் பண்பாடு எனும் நூலில் இருந்து பெறபபட்டது.
62

Page 73
சங்க காலக்
முனைவர் இரா.
சங்க காலம் தமிழர்களின் பொற்காலம். சங்க கால மன்னர்களின் பெருமைகளைச் சங்க இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ஒரு நாட்டின் வரலாற்றை எழுத இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, காசு ஆகியவை பெரிதும் உதவுகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் - பிராமிக் கல்வெட்டுக்கள் பல, தென் மாவட்டங்களில் கிடைத் தள்ளன. இவை பெரும்பாலும் குகைத் தளங்களிலேதான் காணப்படுகின்றன. சங்ககாலப் பாண்டிய, சேர மன்னர்கள் சிலரைப் பற்றிய குறிப்புக்கள் இவற்றால் கிடைக்கின்றன. ஆனால் தொண்மையான சங்ககாலச் செப்பேடுகள் எதவும் இதவரை கிடைக்கவில்லை.
காசு இயல், ஒரு முக்கியமான ஆய்வுத்தறை. வரலாற்றை அறிந்த கொள்ளப் பெரிதம் உதவுகின்ற தறை. தமிழக க்காசுகளை முறையாக ஆய்வு செய்யும் பணி பத்தொன்பதாம் நாற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியத என்று பொதவாகக் கருதப்படுகிறது. சர் வால்டர் எலியட், 1886-இல் தென்னிந்தியக் காசுகள் என்ற நூலை வெளியிட்டுக் காசு இயல் ஆய்வை முறையாகத் தொடக்கி வைத்தார். அவர் வெளியிட்ட நாலில் தொண்மையான பாண்டியர் காலச் சதரக் காசுகள் குறித்த ஏதம் கூறவில்லை. பல்லவர் நாணயங்கள் சிலவற்றின் படங்களும், பிற்காலச் சோழர், பாண்டியர் காசுகளின் படங்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன.
அடுத்து, 1888 ஆம் ஆண்டு லோவன்தாள் பாதிரியார் வெளியிட்ட ‘திருநெல்வேலி காசுகள்" என்ற நால் குறிப்பிடத்தக்கது. இந்நூலில் தொன்மையான பாண்டியரின் செப்புச் சதுர நாணயங்களின் வரைபடங்களை முதன் முதலாக அவர் வெளியிட்டுள்ளார்.
d
63

காசுகள்
ருஷ்ணமூர்த்தி
தமிழக காசு இயலில் அடுத்த சகாப்தத்தை உருவாக்கியவர்களில் திருச்சியைச் சார்ந்த சர். டி. தேசிகாச்சாரி குறிப்பிடத்தக்கவர். அவர் "தென் இந்தியக் காசுகள் என்ற நரலை 1933 ஆம் ஆண்டு வெளியிட்டார். பனிரெண்டு பாண்டியர்களின் சதரக் காசுகள் குறித்த அவர் அதில் எழுதியுள்ளார். அக்காசுகளை அவர் சங்ககாலக் காசுகள் என்று குறிப்பிடாமல் அவை பாண்டியரின் தொண்மையான காசுகள் என்று மட்டும் குறிப்பீட்டுள்ளார்.
தொன்மையான பாண்டியர் காசுகள் குறித்து நன்கு ஆய்வு செய்த நால் வெளியிட்டவர் திரு. புதெல்பு என்ற ஆங்கிலேயராவார். அவரது 'பாண்டியரது காசுகள் என்ற நால் 1966ஆம் ஆண்டு காசியிலுள்ள காசு இயல் சங்கத்தினரால் வெளியிடப்பட்டது. இந்த நூல் ஓர் அருமையான படைப்பு. அவர் சுமார் முப்பத்தைந்த செப்புச் சதுர நாணயங்கள் குறித்துப் படங்களுடன் விளக்கம் கொடுத்தள்ளார்.
1894 ஆம் ஆண்டு டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நால்களில் ஒன்றான 'புறநானூறு நாலை முதன் முதலில் பதிப்பித்தார். புறநானூற்றில் பல வரலாற்றுச் செய்திகள் இருப்பதைக் கண்ட வரலாற்று ஆசிரியர்கள் சங்ககால மன்னர்களைப் பற்றியும் அவர்கள் ஆண்ட பகுதிகளையும் அவர்கள் ஆண்ட காலம் குறித்தம் ஆய்வு செய்யத் தொடங்கினர். சங்ககால அரசர்கள் காசுகளை வெளியிட்டனரா என்ற கேள்வி எழுந்தது. பல வரலாற்று ஆசிரியர்கள், சங்ககால மன்னர்கள் குறுநில மன்னர்களாகவே இருந்தனர் என்றும், அவர்கள் காசு வெளியிடும் அளவிற்கு வலுப்பெற்றிருக்க வில்லை யென்றும், அக்காலக் கட்டத்தில் வடநாட்டில் சல்வாக்குடன் ஆட்சி செய்த மவுரியப் பேரரசு வளியிட்ட வெள்ளி முத்திரைக் காசுகளையே தமிழ் ]க்களும் பயன்படுத்தினர் என்றும் எழுதி வந்தனர்.

Page 74
தொன்மையான பாண்டிய காசுகளில் பெயர் எதுவும் பொறிக்கப்படாததால் அக்காசுகளை சங்ககாலப் பாண்டியர் காசுகள் என்று வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
இந்தக் குழப்பமான நிலை 1984 ஆம் ஆண்டு மாறியத. மதுரையில் ஒரு வணிகரிடமிருந்து நான் வாங்கிய பழைய செப்புக் காசுகளில், ஒரு காசு தனித் தன்மையுடையதாக இருப்பதைப் பார்த்தேன். அதில் தமிழ் ~ பிராமி எழுத்து முறையில், "பெருவழுதி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். 'பெருவழுதி என்ற பெயர் சங்ககாலப் பாண்டியனின் பெயர். புறநானூற்றிற் காணப்படுகிறது. இந்தக்காசு குறித்து அதே ஆண்டு காசி மாநகரில் நடந்த அகில இந்திய காசு இயல் மாநாட்டில் கட்டுரை ஒன்று படித்தேன். அக்கட்டுரை அவர்களது 1985 ஆம் வருட இதழில் வெளியாகியுள்ளது.
'பெருவழுதி என்ற பெயர் பொறிக்கப்பட்ட காசு பற்றிய கட்டுரை வெளியானபின்தான் சங்ககாலத்தில் மன்னர் பெயர் பொறிக்கப்பட்ட காசு வெளிவந்திருக்கிறது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர். வரலாற்று ஆசிரியர்கள், சங்ககாலத்தை கி.மு. 3ஆம் நூற்றாண்டி லிருந்து, கி. பி. 2ஆம் நாற்றாண்டு வரை இருக்கலாம் என்று கருதகின்றனர். பெருவழுதி காசின் படம் கீழே கொடுக்கப் பட்டுள்ளத.
வரைபடம்
காசின் முன்பகுதியில், இடப்புறம் நோக்கி ஒரு குதிரை நின்ற கொண்டிருக்கின்றது. அக்குதிரையின் முகத்திற்குக் கீழாக இரண்டு தொட்டிகள் உள்ளன. அத்தொட்டிகளில் இரண்டு ஆமைகள் உள்ளன. குதிரையின் முகத்தின் அருகில் இருந்த பெருவழுதி என்ற பெயர் தொடங்குகிறது.
 

அப்பெயர் தொன்மையான தமிழ்ப் பிராமி எழுத்து வடிவத்தில் இருமுறை பொறிக்கப்பட்டுள்ளது.
பின்புறம் கோட்டு வடிவில் இரண்டு மீன் சின்னங்களைக் காண்கிறோம். இது ஒரு செப்புக்காசு. பின்புறம் உள்ள கோட்டு வடிவத்தை வைத்தக் கொண்டு எழுத்துப் பொறிப்பில்லாத சங்க காலப் பிற பாண்டிய காசுகளை வரிசைப்படுத்தினேன்.
இலங்கையிலும் பெருவழுதிப் பெயர் பொறிப்புள்ள காசு கிடைத்தள்ளத. கொழும்பிலுள்ள, அரசு தேசிய அருங்காட்சியகத்தில் சுமார் 60 ஆண்டுகள் கவனிக்கப் படாமல் இருந்த காகிதப் பொட்டலத்தை என்னிடம் பிரித்துக் காண்பித்த போது, அத்தொகுப்பில் சங்க கால பாண்டியர் காசுகளும், சங்க கால சோழர் காசுகளும் இருப்பதைக் கண்டு வியந்தேன். அக்காசுகள் குறித்து இலங்கை அருங்காட்சியகம் ஒரு நூல் வெளியிட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் இருக்கும் பெருவழுதி காசின் படம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
வரைபடம்
தமிழகத்தில் கிடைத்தள்ள மற்றொரு முக்கியமான சங்ககால பாணி டியர் காசினி படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மதரை வைகையாற்றில் கிடைத்த செப்புக்காசு அத.
காசின் முன்புறம் மேல் வரிசையில் இடப்புறம், மூன்று வளைவுள்ள முகடு, நடுப்பகுதியில் கவிழ்ந்த பிறை வடிவுள்ள கூரைக் கோயில். அதன் கூரையை ஐந்து தாண்கள் தாங்கி நிற்கின்றன. அதற்கு அடுத்து வலப்புறம், மூன்று முகடுள்ள மலையும், அதன் மேல் வேலியிட்ட மரமும் உள்ளன.

Page 75
கீழ் வரிசையில், கொடி மரமும், நடுப் பகுதியில் யானைச் சின்னமும் உள்ளன. வலக் கோடியிலுள்ள சின்னம் அம்புகளை வைக்கும் அம்புக் கூடு போல் உள்ளது. பின்புறத்தில், கோட்டுவடிவில் மீன் சின்னம் உள்ளத.
வரைபடம்
இலங்கை தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள இதே போன்ற சங்ககாலப் பாண்டியர் காசின் படமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வரைபடம்
சங்க காலப் பாண்டியர் வெளியிட்ட காசுகளில் மற்றொரு அழகான காசைப் பற்றி இங்கு கூற விரும்புகிறேன். இக்காசு மதுரை வைகை ஆற்றில் கிடைத்தது. இத ஒரு செப்புக்காசு.
65
 
 

A
வரைபடம்
காசின் முன்புறத்தில் வலப்பக்கம் நோக்கி யானை நின்று கொண்டிருக்கிறது. அதன் முன் ஒரு திரிசூலமும், அதன் அருகில் ஒரு மனிதன் நின்று கொண்டிருப்பது போன்றும் உள்ளது. யானையின் மேல் பகுதியிலிருந்து இடமிருந்த வலமாக, வேலியிட்ட மரம், உடுக்கை, நான்கு இலைகளைக் கொண்ட கும்பம், பிறைச் சந்திரன், திருவஸ்தம், சங்கு, சக்கரம் என்று வரிசையாக உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
பின்புறம் கோட்டுவடிவில் மீன் சின்னம் உள்ளது. சங்ககாலப் பாண்டியர்கள் வெளியிட்ட செப்புக் காசுகள் பல. அவைகளில் ஒரு சிலவற்றை மட்டும் இதுவரை விளக்கியுள்ளேன்.
சங்க காலப் பாண்டியரின் வெள்ளி முத்திரைக்காசுகள்
கி.மு., ஆறாம் நூற்றாண்டில் இந்திய மக்கள் வாழ்க்கை முறையிலும், பண்பாட்டிலும் புதிய திருப்பம் ஏற்பட்டத. சமய, அரசியல் தறைகளில் மட்டுமன்றிப் பொருளியல் நோக்கிலும் இப்புதிய திருப்பம் மாறுதலைச் செய்தத. -
அதுவரை நிலவிய குறுநில மன்னர்களின் ஆட்சி முறைகள் மாறி பெரும் நிலப்பரப்பை உள்ளடக்கிய பேரரசு முறை தோன்றியத. இந்தக் காலக் கட்டத்தில் பல புதிய சமயக் கோட்பாடுகளும் புதிய பல வணிக மையங்களும் தோன்றின. வணிகமும், தொழில் வளமும் பெருகின. இதனால் உலோகக் காசுகளின் தேவை ஏற்பட்டத. இத்தேவையை நிரப்ப வந்தனவே முத்திரைக் காசுகள்.

Page 76
இருப்பினும் முத்திரைக் காசுகள் தோற்றம் பற்றி ஒருமித்த கருத்த இல்லை. கி. மு., ஆறாம் நாற்றாண்டுக்கு முன்பே அவை தோன்றியிருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருத கின்றனர்.
முத்திரைக் காசுகளில் பல்வகைக் குறியீடுகள் உள்ளன. அவற்றுள் கதிரவன், மலை, மரங்கள், கிளைகள், மனித வடிவங்கள், முயல், நாய், தேள், பாம்பு முதலியன குறிப்பிடத்தக்கவை.
நந்தப் பேரரசின் காலத்தில் இக்காசுகள் இந்திய நாடு முழுவதம் பரவியிருந்தன. நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் அவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தென் கோடியிலுள்ள திருநெல்வேலி மாவட்டம் வரை முத்திரை காசுகள் புதையல்கள் கிடைத்தள்ளன. அப்புதையல்கள் கிடைத்த பகுதிகளில் அக்காசுகள் புழக்கத்திலிருந்தன என்பதை உணர முடிகிறத. அக்காசுகளைப் "புராணாஸ்" என்ற அழைக்கின்றனர். புராண" என்றால் “பழைய' எனப் பொருள்படும். வடநாட்டு அரசர்கள் வெளியிட்ட வெள்ளி முத்திரை காசுகளைப் போல் சங்ககாலப் பாண்டியர்களும் வெள்ளி முத்திரை காசுகளை வெளியிட்டுள்ளனர். பாண்டியர் வெளியிட்ட வெள்ளி முத்திரைக் காசுகளைப் போல், சங்ககாலச் சேரர்களோ, சோழர்களோ வெளியிட்டதாகத் தெரியவில்லை. பாண்டியர்கள், வெள்ளியில் மட்டுமல்லாமல், செம்பிலும் இதுபோன்று முத்திரைக் காசுகளை வெளியிட்டுள்ளனர்.
伦
வரைபடம்
சங்ககாலச் சேரர் காசுகள்
சங்க காலச் சேரர் காசுகள் 1987 ஆம் ஆண்டு
தான் முதன் முதலாக கருரில் இருந்து கண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் வெளியிட்ட பல செப்புக் காசுகளில்
 

பெயர் பொறிக்கப்படாத இரண்டு காசுகளின் படங்களை இங்கு வெளியிட்டுள்ளேன்.
வரைபடம்
காசின் முன்புறத்தில், யானை ஒன்று வலப்புறம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. தென் மேல் இடப்பக்கத்திலிருந்து, முதலில் பிறைச்சந்திரனுடைய மூன்று வளைவு கொண்ட முகடும், இரண்டாவது, முக்கோணவடிவிலுள்ள கொடி, அதனை அடுத்து கைப்பிடியுடன் கூடிய கோடாலியும், அதனை அடுத்து சங்குச் சின்னத்தையும் பார்க்கிறோம்.
யானையின் பின்புறத்தில் வேலியிட்ட மரம், இவைகளைத் தவிர, ஏர் சின்னம் ஒன்றும், ஆறு இதழ்களையுடைய பூ சின்னத்தையும் காண முடிகிறது.
காசின் பின்புறத்தில் வில் அம்புச் சின்னமும், அதன் அருகில் அங்குசச் சின்னமும், அம்பின் இரண்டு பக்கங்களிலும், டவுரின் (Taurine) சின்னங்கள் உள்ளன.
எண் 22
வரைபடம்

Page 77
சதுர வடிவில் உள்ள இந்தக் காசின் முன்புறத்தில் யானை ஒன்று வலப்பக்கம் நோக்கி நின்று கொண்டிருக்கிறது. யானையின் முன்னே, சைவ சமயச் சின்னமான திருகலம் ஒன்று உள்ளது. யானையின் பின்பறம் வேலியிட்ட மரச் சின்னம் காணப்படுகிறது. யானையின் மேல் ஆறு முகடுகளைக் கொண்ட மலைச் சின்னத்தையும் அதன் அடுத்தாற் போல் முக்கோண வடிவுடைய கொடிச் சின்னத்தையும் காண முடிகிறத.
காசின் பின்புறம் வில் அம்புச் சின்னத்தையும், வில்லின் மேல் அங்குசச் சின்னத்தையும் காணலாம்.
பெயர் பொறிப்புள்ள சங்ககாலச் சேரர் செய்புக்காககள்
வட்ட வடிவிலான இந்த இரண்டு காசுகளும் கருர் அமராவதியாற்றில் கிடைத்தவை.
எண் : 1 கொல் இப்புறை காசு
வரைபடம்
காசின் முன்புறத்தில் ஒரு தோரணவாயில் உள்ளது. தோரணவாயிலின் நடுவே ஒரு போர் வீரன் நின்று கொண்டிருக்கிறான். போர் வீரன் தன் இடக்கையில் வாள் ஒன்றும், வலக்கை கேடயத்தின் மேல் கை வைத்திருப்பது போல் உள்ளத. அவன் தலையில் கவசம் ஒன்று அணிந்திருக்கிறான். அவனது உடை உரோமானியப் போர் வீரர்கள் உடுத்தம் உடை போல் உள்ளது. தோரணவாயிலின் வலப் பக்கத்தில் வேலியிட்ட மரம் இருக்கிறது. காசின் விளிம்பில் கொல் இப்புறை என்ற பெயர் , தமிழ் ~ பிராமி எழுத்த முறையில் பொறிக்கப்பட்டுள்ளத.
67
 

இக்காசின் பின்புறத்தில், வில், அம்புச் சின்னமும், ஆறு வளைவு கொண்ட முகட்டுச் சின்னமும், ஆமை, ன்ே போன்ற சின்னங்களும் உள்ளன.
எண்: 2 கொல் இரும்புறப்
வரைபடம்
காசு எண். 1 போல் முன்புறம் உள்ளத. முன்புறத்தில் நின்று கொண்டிருக்கும் போர் வீரனையும், வேலியிட்ட மரச் சின்னத்தையும் காண்கிறோம். காசின் விளிம்பில் கொல் இப்புறப்" என்ற பெயர் பொறிக்கப் பட்டுள்ளது.
காசின் பின்புறத்தில், வில், அம்புச்சின்னம், ஆறுவளைவு கொண்ட முகடு, தொட்டியில் இரண்டு மீன்கள், அதற்கு மேல் உள்ள ஆற்றுச் சின்னத்தில் ஐந்து மீன்கள் பொறிக்கப் பட்டுள்ளன.
மேலே கூறப்பட்டுள்ள இரண்டு காசுகளும் கி.பி., முதல் நாற்றாண்டைச் சார்ந்தனவாக இருக்கலாம்.
மாக்கோதை, குட்ருவன் கோதை காசுகள்
சங்ககாலச் சேரர் காசுகளில் இரண்டு முக்கிய வெள்ளிக் காசுகளைப் பற்றிக் கூற வேண்டும். முதலாவத மாக்கோதை என்ற பெயர் பொறிக்கப்பட்டது, இரண்டாவது குட்டுவன் கோதை" என்ற பெயர் பொறிக்கப்பட்டத.

Page 78
எண்: 1 /
'மாக்கோதை காசு
முன்புறம் பின்புறம்
இக்காசு வட்ட வடிவில் உள்ளத. முன்புறத்திலி வலப்பக்கம் பார்த்த நிலையில் மன்னரின் உருவம் உள்ளது மன்னின் தலையில் உரோமானியப் போர் வீரர்கள் அணியும் கவசத்தை அணிந்துள்ளார். தெளிவான நீண்ட முக்கு உள்ளது. மன்னரின் தலையின்மேல் தமிழ் பிராமி எழுத்த முறையில் "மாக்கோதை" என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளத
உரோமானிய பேரரசர் ‘அகஸ்டஸ் வெளியிட்ட வெள்ளி நாணயத்தினை உருக்கி, 'மாக்கோதை காசுகளை அச்சடித்திருக்கிறார்கள் என்பது ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. ஆகையால் இக்காசின் காலம் கி.மு. முதல் நாற்றாண்டின் இறுதிக்காலமாகவோ அல்லத கி.பி. முதல் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகவோ இருக்கலாய என்று கணிக்கப்பட்டுள்ளத.
இக்காசின் பின்புறத்தில் எந்தச் சின்னமும் இல்லை உரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட வெள்ள நாணயங்கள் போல் தலைச்சின்னம் போட்( வடிவமைக்கப்பட்டுள்ளத.
 
 

இக்காசும் வட்ட வடிவில் உள்ளது. முன்புறத்தில் வலப்பக்கம் பார்த்த நிலையில் மன்னரின் உருவம் உள்ளது. மாக்கோதைக் காசைப் போல் மன்னரின் தலையில் உரோமானியப் போர் வீரர்கள் அணியும் கவசத்தை அணிந்துள்ளது போல் உள்ளது. நீண்ட மூக்கும், அழகிய காதம், கழுத்தில் ஒரு பட்டை போன்ற அணிகலன் அணிந்திருப்பதையும் காண்கிறோம். மன்னரின் தலையில் மேற்பகுதியில் தமிழ் -பிராமி எழுத்து முறையில் "குட்டுவன் கோதை" என்று பொறிக்கப் பட்டுள்ளது. இதில் ‘ன்’ என்ற எழுத்து தலைகீழாக உள்ளது. இந்தக் காசில் தான் முதன் முதலாக எழுத்தில் புள்ளியிடும் முறையைக் காண்கிறோம். இந்தக் காசின் காலம் கி.பி. முதல் அல்லது இரண்டாவத நூற்றாண்டாக இருக்கலாம்.
சங்க காலச் சோழர் காசுகள்
வரைபடம்
காசின் முன்புறத்தில், அடிப்பகுதியில் மீன்களைக் கொண்ட ஆற்றுச்சின்னம் உள்ளத. அதற்கு மேல் தட்டில் இடது ஒரம் யானை ஒன்று வலப்பக்கம் நோக்கி நின்ற கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்து வேலியிட்ட மரச்சின்னம் உள்ளது. கடைசியாக ஆறு வளைவுள்ள முகடைக் காணலாம். இந்த மூன்று சின்னங்களுக்கு மேல் பகுதியில் மூன்று வகையான சின்னங்கள் உள்ளன.
காசின் பின்புறத்தில் வாலை உயர்த்தி நிற்கும் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. புலிச்சின்னத்தைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் டவுரின் சின்னத்தைக் காண்கிறோம்.

Page 79
stariji 2
முன்புறம் பின்புறம்
வரைபடம்
காசின் முன்புறத்தில், யானை ஒன்று வலப்பக்கம் நோக்கி நின்ற கொண்டிருக்கிறத. யானையின் முன் குதிரை பூட்டிய தேர் இருக்கிறத. யானையின் மேல் அலங்களிக்கப்பட்ட குடை உள்ளத.
காசின் பின்புறத்தில், வாலை உயர்த்திய நிலையில் இடப்பக்கம் நோக்கி நின்ற கொண்டிருக்கும் புலிச் சின்னத்தைக் காண்கிறோம்.
மேலே கூறப்பட்டுள்ள காசுகளின் காலம் , கி.மு. முதல் அல்லது இரண்டாம் நாற்றா ண்டாக இருக்கலாம்.
சங்க கால மலையமான் காசுகள்
சங்க காலத் தமிழகத்தின் சில பகுதிகளைச் சிற்றரசர்கள் ஆண்டனர். அவர்களில் மலையமான்கள் திருக்கோவிலூர் பகுதியை ஆண்டனர். இவர்கள் வெளியிட்ட செப்புக் காசுகள் திருக்கோவிலூருக்கு அருகே ஓடும் தென் பெண்ணை ஆற்றுப் படுகையில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அவர்கள் எழுத்தள்ள காசுகள் வெளியிட்டுள்ளனர். தொல்லியல் அறிஞர்களிடையே அக்காசுகளிற் காணப்படும் எழுத்தகள் குறித்த கருத்து வேற்றுமை இருப்பதால், எழுத்தில்லாத இரண்டு காசுகள் குறித்து கீழே கொடுத்துள்ளேன்.
 
 

வரைபடம்
காசின் முன்புறத்தின், இடத பக்கம் நோக்கி நின்ற நிலையில் குதிரை இருக்கிறது. அதன் முன் அங்குசமும், அதன் மேல் நந்திபாதச் சின்னமும் உள்ளன.
பின்புறத்தில், மூன்று முகடுள்ள குன்றும், குன்றிலிருந்து ஆறு ஒன்று ஓடி வருவத போலும் உள்ளத. ஆற்றில் மீன்கள் ஓடிக் கொண்டிருப்பத போல் பொறிக்கப்பட்டுள்ளது. காசின் கீழ்ப்புறம் மையப் பகுதியில் குன்று ஒன்று உள்ளத.
வரைபடம்
காசின் முன்புறம், வலப்புறம் நோக்கி குதிரை ஒன்று நின்ற கொண்டிருக்கிறது. குதிரையின் எதிரே, அங்குசமும், அதன் அருகே ஒரு கொடி மரமும் இருப்பதைக் காணலாம்.

Page 80
காசின் பின்புறத்தில், மூன்று முகடுள்ள குன்றம், மீன்களுள்ள ஆறு, ஆற்றின் கீழே குன்றையும் காணலாம். இக்காசுகள் கி.மு. முதல் நாற்றாண்டு முதல் கி.பி. முதல் நாற்றாண்டு வரையுள்ள காலப் பகுதிக்குள் இருக்கலாம்.
米米米米米米
இக்கட்டுரை இவ் ஆய்வரங்குக்காகவே ஆசிரியரால் எழுதப்பட்ட
7C

(சங்க காலக் காசுகள் குறித்த மேலும் தெரிய வேண்டுமானால் என்னுடைய நாலான SANGAMAGE TAMIL COINS 6760 p is 60soft Tró856, b)
:米米米米米

Page 81
சங்ககாலக்
முன்னுரை
இந்திய நாட்டில் பழமையான கல்வெட்டுகள் என்று கூறப்படுபவை அசோகன் கல்வெட்டுக்களாகும்.
பாறைகளிலும் கல் தாணி களிலும் புத்தமதக்
கொள்கைகளைப் பரப்பும் நோக்கத்தடன் அவை அசோக அரசனால் பொறிக்கப்பட்டவையாகும்.
தமிழ் நாட்டிலுள்ள பழமையான கல்வெட்டுகள் சமணக்குகைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சமணமதக் கொள்கைகள் பொறிக்கப்படவில்லை. மாறாகத் தமிழ்நாட்டுப் பிற்காலக் கல்வெட்டுகளில் காணப்படுவத போன்ற செய்திகள் அக்கல்வெட்டுகளில் உள்ளன.
சங்காலக் கல்வெட்டுகளில், கல்வெட்டுக்கள் உள்ள குகையில் தங்கியிருந்த முனிவர்களின் பெயர்களும் , அவர்களுக்கு உதவியவர்களின் பெயர்களும் எந்த வகையில் உதவி செய்தார்கள் என்ற விளக்கமும் , சில கல்வெட்டுகளில் கல்வெட்டுக்களைப் பொறித்தவர் இன்னார் என்பதும் குறிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பானது தமிழ் நாட்டிலுள்ள பிற்காலக் கோயில் கல்வெட்டுகளில் கோயிலுக்குக் கொடையளித்தவர்கள் பெயர்களும், அவர்கள் அளித்த கொடைப் பொருள்களும் குறிப்பிடப்படுவதைப் போன்றதாகும். இந்தக் கல்வெட்டுத் தொடர்பாங்கானது முற்றிலும் தமிழ்நாட்டிற்கே உரிய பாணியாகும்.
சங்ககாலக் கல்வெட்டுக்கள் அசோகன் பயன்படுத்திய அதே பிராமி (தாமிழி, தமிழி) எழுத்துக்களில் உள்ளன. எனவே, இதன் காலமானது அசோகன் கல்வெட்டுகள் தோன்றிய காலத்தவை என்றும் , சற்று முன்னும் பின்னும் தோன்றிய கல்வெட்டுகளும் உள்ளன என்றும் அறிஞர்கள் கணித்துக் கூறியுள்ளனர்.
71

கல்லிவட்டுகள்
திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ்நாட்டில் காணப்படும் சங்ககாலக் கல்வெட்டுகள் அனைத்தையும் திரட்டி அக் கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்களின் பருமன், எழுத்தகளின் உருமாற்றம் முதலானவற்றின் அடிப்படையில் ஒருவாறு அவற்றைக் காலநிரல் செய்துள்ளார். அதனைப் பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, அவர் கண்ட முறைப்படி கல்வெட்டுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
சங்ககாலக் கல்வெட்டுகள் சங்ககால வரலாற்றை அறிய உதவும் வகையும் கல்வெட்டுக்களில் உள்ள பொதுச் செய்தியும் முதலில் முறையே இங்குத் தரப்படுகின்றன. பின்பு கல்வெட்டுக்களை இதவரை படித்தறிந்தவர்களின் பாடங்களில் சிறந்தவை செய்தியில் தரப்பட்டு விளக்கமும் கூறப்பட்டுள்ளத. ஆங்காங்கே கருத்துக்கு மாறுபடுவோரின் பாடங்களும் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இவற்றின் விரிவைப் பிற்சேர்க்கைப் பகுதியிலும் காணலாம்.
கல்வெட்டுக்கள் பல சிதைந்த நிலையில் உள்ளன. அன்றியும் அவற்றைப் பொறித்தவர்களின் மொழியறிவு செம்மையானதாக இல்லாமல் சிற்சில பிழைகளும், அக்கால முறைமைகளும் உடையனவாக உள்ளன. சில குறியீடுகள் குறிப்பாக அழகர்மலைக் கல்வெட்டுகளில் உள்ளவை, இதவரை யாராலும் தெளிவாக்கப்படவில்லை. இந்த நிலையில் கிடைத் துள்ள பாடங்களையும் விளக்கங்களையும், சிலர் நேரில் படித்தறிந்து தந்தள்ள கருத்து விளக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப்பகுதி அமைந்துள்ளது. டாக்டர் கே. வி. இராமன், டாக்டர் ஏ. சுப்பராயலு, தொல்பொருள் தறையைச் சேர்ந்த திரு.சி. சிவராமமூர்த்தி, திரு. மயிலை சீனி. வேங்கடசாமி ஆகியோர் நேரில் படித்தறிந்து தந்த கருத்தக்களும் ஒப்புக்கொள்ளத்தக்க வகையில் அதில்

Page 82
சேர்க்கப்பட்டுள்ளன. பிற அறிஞர்கள் இக் கல்வெட்டுத் தொடர்பாக எழுதி வெளியிட்டுள்ள செய்திகளும் இதில் இடம்பெற்றுள்ளன. எதிர்காலத்தில் இக்கல்வெட்டுக்களைப் படிக்கும் பாடம் மாறபடுமாயின், செய்திகளும் மாற இடமுண்டு. இன்றைய நிலையில் இக்கல்வெட்டுக்களால் தெரியவரும் வரலாற்றுச் செய்திகள் இவை என்ற நோக்கிலேயே, இந்த வரலாற்றுப் பகுதியை நாம் அணுக வேண்டும்.
சங்க கால வரலாற்றை அறிவதற்குப் பெரிதம் உதவிபுரிவன இலக்கியங்களே. அவ்விலக்கியங்களில் காணப்படும் வரலாற்றுத் தொடர்புடையோரின் பெயர்களைக் காலத்தால் மேலும் உறுதி செய்வதற்குத் தணையாகச் சங்ககாலக் கல்வெட்டுகள் பல தமிழ்நாட்டில் ஆங்காங்கே கிடைத்தள்ளன. அந்தக் கல்வெட்டுக்கள் இயற்கையாக அமைந்ததுள்ள மலைக்குகைகளில் செயற்கையாய் இருப்பிட வாய்ப்புச் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ளன.
இந்த குகைகளிலெல்லாம் சமண முனிவர்கள் தங்கியிருந்தனர். பெளத்தத் தறவிகள் தங்கியிருந்ததாகக் கருதுவோருமுண்டு. தங்கியிருந்தவர் பெயர்களும், தங்கியிருந்தவர்களுக்கு உதவியவர்களின் பெயர்களும், உதவிய வகையும் பிறவும் ஆங்காங் குளிர் ள கல்வெட்டுகளில் அக்கால எழுத்தக்களால் பொறிக்கப்பட்டுள்ளன."
குகையின் அமைப்பும் வெட்டெழுத்துகளும்
குகையின் மேற்பாறையில் மழைநீர் வழிந்த தங்கியிருப்பவர்களுக்கு இடையூறு செய்யாவண்ணம் கூரையில் இறைவான அமைப்புடைய சிறு வடிம் புத் தவணை எல்லாக் குகைகளிலும்
I. Nilakanta Sastri, K. A., Op . cit., p. 90
2. இந்த எழுத்தைப் பிராமி எழுத்தகள் என்று வழங்கி வந்தனர். எனினும் அசோகன் கல்வெட்டில் காணப்படும் பிராமி எழுத்துக்களில் வடமொழியிலுள்ள வல்லின எழுத்தகளுக்கான வர்க்க எழுத்தக் குறியீடுகள் உள்ளதாலும், தமிழ்நாட்டிலுள்ள இந்தக் கல்வெட்டுகளில் அந்த வர்க்க எழுத்துக் குறியீடுகள் யாண்டும் காணப்படாததாலும், மேலும், சிறப்பாக தமிழ்மொழிக்கே உரிய ற ன, ழ, ஆகிய எழுத்தகள் காணப்படுவதாலும், இதனைத் தமிழி என்று பெயரிட்டு வழங்கி வருகின்றனர். இந்த தமிழி எழுத்து நிலையிலும், காலத்தால் முந்தியவை தாமிழி என்றும், பிற்கால எழுத்தைத் தமிழி என்றும் வழங்கி வருகின்றனர். திராவிடி என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் எழுத்து இதுவே என்றும் கருதப்படுகிறது.

அமைக்கப்பட்டுள்ளத. குகை உட்குழிவுள்ளதாய் இருக்குமிடங்களில் மேற்கூறிய வடிம்பிலிருந்து விழும் நீரும், சாரல் மழைநீரும் உட்குழிவுகளுக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் குகையின் அடிப்பாறையிலும் சிறு வடிகால் அமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. குகைக்குள்ளும், குகையின் முற்றத்திலும் ஆங்காங்கே பல படுக்கைகளும், சிற்சில இடங்களில் அமரும் இடங்களும் கல் உளி கொண்டு வெட்டிச் செப்பம் செய்யப்பட்டுள்ளன. ஆறுநாட்டார்மலை முதலான இடங்களில் படுக்கைக் கல்லின் மீது பூசப்பெற்றுள்ள வழவழப்பான ஒருவகைக் களிம்பு, ஈராயிரம் ஆண்டுகளுக்குமேல் ஆகியும் இன்றும் நிலைகுலையாமல் இருப்பத ஒரு விந்தையே. குகைக்கு ஏறிச்செல்லும் வழியில்
காலின் அடிகள் மட்டும் வைக்கும் அளவுள்ளதாகச் சில
படிக்கட்டுகள் செதுக்கப்பெற்றுள்ளன.
இத்தகைய குகைகளில் பொதவாக, குகையைச் செயற்கை முறையில் வாய்ப்புள்ளதாகச் செய்த
தந்தவர்களின் பெயர்கள் மேற்பாறையில் நீர்த்தாரை
72
வடிம்பிற்குக் கீழே பொறிக்கப்பட்டுள்ளன. குகையில் தங்கியிருந்தவர்களின் பெயர்கள் படுக்கைக் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள சிறு மேடைப் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளன. வேறு வகையில் உதவியவர்களின் பெயர்களும் பிறவும் சிற் சில இடங்களில் குறிக்கப்பட்டுள்ளன.
காலம்
இந்தக் கல்வெட்டுக்களின் காலத்தைப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவிவருகின்றன. திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் இதன் தொண்மையைக் கி.மு. இரண்டாம் நாற்றாண்டுவரை கொண்டு செல்கிறார். தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் தறையினரும் இவரது கருத்தினை ஏற்றுக் கல்வெட்டுக்கள் உள்ள இடங்களில் ஆங்காங்கே குறிப்புப் பலகைகளை வைத்துள்ளனர். ஆந்திர மாநிலத்திலுள்ள பட்டிப்புரோலு என்னுமிடத்தில் காணப்படும் பெளத்தக் கோயில் கல்வெட்டை ஆராய்ந்த இந்தியத் தொல் பொருள் தறையினர், அக் கல்வெட்டை அசோகனுக்கு முந்திய எழுத்தாக இருக்கலாம் என்று கணித்துள்ளனர். இவ்வெழுத்து அசோகன் காலத்திற்கு முந்தியதாக இருக்குமாயின், படிக்கும் மொழிநெறிப்பாங்கில், மேலும் முந்திய படிநிலை ஒன்றனைக் கொண்டுள்ள தமிழ்நாட்டு மீனாட்சிபுரம் கல்வெட்டு போன்றவற்றையும்

Page 83
அவ்வாறே அசோகர் காலத்திற்கு முந்தியவை என்று நாம் கருதலாம். இந்தக் கருத்தை அடியில் காட்டப்படும் விளக்கம் மேலும் உறுதி செய்யும்.
'க' என்னும் எழுத்து அசோகன் கல்வெட்டிலும் தமிழ்நாட்டிலுள்ள புகழுர்க் கல்வெட்டிலும் சிலுவைக்குறி அல்லத கூட்டல் குறி வடிவில் செதுக்கப்பட்டிருக்கும். மீனாட்சிபுரம் கல்வெட்டு இந்தப் புகழுர்க் கல்வெட்டைவிடக் காலத்தால் முந்தியத என்னும் உண்மை எழுத்தக்களின் வடிவம், உருப்பெருக்கம் முதலானவற்றை நோக்கி எல்லா அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளத. இந்த மீனாட்சிபுரம் கல்வெட்டில் மேலே கண்ட கூட்டல் அல்லத சிலுவைக்குறி காணப்படுமேயானால், அதனைக் 'க' என்று படிக்காமல் 'க்' என்று படிக்க வேண்டிய நிலை உள்ளது. 'க' என்று படிப்பதற்கு மீனாட்சிபுரம் கல்வெட்டு அமைப்பில் சிலுவைக்குறியின் உச்சிப் பகுதியை ஒட்டி வலப்புறமாகச் சிறுகோடு போட்ட அமைப்புடைய எழுத்து வேண்டும். இந்த எழுத்து வடிவம் அசோகன் கல்வெட்டிலோ, புகழுர்க் கல்வெட்டிலோ காணப்படுமேயானால் 'கா' என்று நெடிலாகப் படிக்கவேண்டும். இந்த வேறுபாடு நோக்கியும் அதனை அசோகனுக்கு முந்திய எழுத்து எனக் கருத (урц ціђ.
தமிழ் நாட்டில் கி. பி. மூன்றாம் நாற்றாண்டிற்குப் பின்னர் இத்தகைய தமிழ் எழுத்தக்கள் யாண்டும் காணப்படவில்லை. வட்டெழுத்தகளும், அவற்றோடு கலந்தனவும், பிறவுமே காணப்படுகின்றன. எனவே, சங்ககாலத்தைச் சேர்ந்த இந்த எழுத்துக்கள் கி.பி. இரண்டாம் நாற்றாண்டு வரையிலான காலத்தைப் பின் எல்லையாகக் கொண்டவை எனலாம்.
இந்த கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டு வரலாற்றுக்கு எந்த வகையில் அடிப்படைச் சான்றுகளாய் உதவுகின்றன என்பத நோக்கத்தக்கத. சங்ககால அரசர்களின் பெயர்களும், சிர அரசர்களின் உறவுமுறைகளும், சில வாணிகர்களின் பெயர்களும், சிலரத வாணிகப் பொருள்களும், சில சங்ககால ஊர்ப்பெயர்களும், அக் காலப் பட்டங்கள் சிலவும் அக் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. மற்றும் சில பழக்கவழக்கங்களையும் நாம் அக்கல்வெட்டுகளிலிருந்த உய்த்தணரும் விளக்கமாகப் பெற முடிகிறத. அவற்றுள் சில வருமாறு:
7.

சங்ககால அரசர் பெயர்கள்
இத்தகைய கல்வெட்டுக்களில் நெடுஞ்செழியன், வழுதி என்னும் பாண்டிய அரசர்களின் பெயர்கள் உள்ளன. கோ ஆதன் செல்லிரும்பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ ஆகிய சேர அரசர்களின் பெயர்கள் அவர்களத உறவுமுறையுடன் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தவன் என்னும் சேர அரசன் பெயரும் உள்ளது. சேந்தண் என்னும் சோழ அரசன் பெயர் இந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துகளால் நாணயம் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றும் பிட்டன் கொற்றன், பேகன், கோயமான், கோக்கீழ்மாற நாடன், திரைநாடன், கடலன் முதலான குறநிலத் தலைவர்களின் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன.
வாணிகள் பெயர்கள்
நந்தி, ஆதன், ஆந்தை முதலான வாணிகர் பெயர்களும், பொன், சுண்ணம், உப்பு, வெற்றிலை, பணிணியம் முதலான பொருள்களை வாணிகம் செய்தவந்தவர்களைப் பற்றிய செய்திகளும் இக்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
ஊள்ப் பெயர்கள்
கீழ்மாற நாடு, திரை நாடு ஆகிய உள்நாட்டுப் பெயர்களும், ஈழம் என்னும் வெளிநாட்டுப் பெயரும் சங்ககாலக் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. மதிரை ( மதரை), கோழியூர் (உறையூர்), கருவூர், நல்லாவியூர், எருக்காட்ரூர், எருமையூர், தொண்டி முதலான ஊர்ப் பெயர்களும் அவற்றில் உள்ளன.
பட்டப் பெயர்கள்
காவிதி, எட்டி (செட்டி), ஆரிதி, பணயன் முதலான
பட்டப் பெயர்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
மற்றும் பெண் தறவு, பெண் அளித்த கொடை கொடைப்பொருள்கள் (பொன், காணம், உணவு). எச்சரிக்கை, சிலரது வாழ்க்கை நிகழ்ச்சிகள் முதலியவைபற்றிய குறிப்புகளும் உள்ளன.
இந்த வகையில் அரசியல், வாழ்வியல் என்ற இரு வரலாற்றுப் பகுதிகளுக்கும் உதவும் வகையில் பல

Page 84
குறிப்புக்களைக் கால வரையறை உறுதிப்பாட்டுடன் உணர்த்தம் அடிப்படைச் சான்றுகளாக இந்தக் கல்வெட்டுப் பகுதிகள் உள்ளன.
இந்த சங்ககால எழுத்தகளைக் கொண்ட கல்வெட்டுகள் மதரையை அடுத்தள்ள சிறுசிறு குன்றுப்பகுதிகளில் மிகுதியாகவும், பிற மாவட்டப் பகுதிகளில் ஆங்காங்கே பரவலாகவும் இருப்பத கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றை வரலாற்று நோக்கில் காலத்தின் தொன்மைக்கு முதலிடம் கொடுத்த வரிசைப் படுத்திக் கொண்டு (திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் பின்பற்றிய வரிசை) நோக்குவோம். ஊரும், அவ்வூரில் உள்ள சங்க காலக் கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திச் சுருக்கமும் முதலில் தொகுத்து நோக்கப்படு கின்றன. பின், கல்வெட்டில் உள்ள எழுத்துகள் இக்கால எழுத்துகளில் எழுத்துப்பெயர்ச்சி முறையில் ஆங்காங்கே தொகுத்துச் சுட்டப்படுகின்றன. சிலவற்றிற்குப் படங்களும் அடுத்தப் பொருள் தோன்றும்படி படிக்கப்பட்டிருக்கும் பாங்கும் தரப்பட்டுள்ளன. இதற்கு ஆங்காங்சே கொடுக்கப்பட்டுள்ள தொடர் எண்ணைக் குறிப்பிட்டுப் பிற்சேர்க்கையில் விளக்கங்களும் பிறர் படித்துக் கண்ட முடிபுகளும் ஆய்வு நோக்கில் தரப்பட்டுள்ளன.
1. மீனாட்சிபுரம் கல்வெட்டு
மதுரை மாவட்டத்தில் மீனாட்சிபுரத்தை அடுத்துள்ள கழுகு மலைப் பாறைகளில் அமைந்தள்ள இந்தக் கல்வெட்டுகளை மாங்குளம் கல்வெட்டெண்றம் அரிட்டாபட்டிக் கல்வெட்டென்றும் அழைப்பர். இதில் காணப்படும் செய்திகள் வருமாறு:
நந்தி என்னும் பெயர்கொண்ட சமணத் தறவி இங்குள்ள மலைக் குகைகளில் தங்கியிருந்தான். அவனத தலைமாணாக்கன் ஆதன். வெள்ளறை என்னும் ஊர்வாழ் மக்களின் வழிவந்தவர் தறவு பூண்டு நந்தியோடு தங்கியிருந்தனர்.
இவர்கள் பாதுகாப்புடன் வாழ நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய அரசன் உதவி புரிந்தான். தன் செயலாளுநன் கடலன் வழுதி என்பான் வழியாக அறையிறை வாரமும் பள்ளியும் வெட்டி உதவினான். தன் சகலை சடிகன்
I. Annual Report of South India Epigraphy (SIF) 460 to 465 of
1906.

)
)
(செழியன்) வழியாகவும் சில படுக்கைகள் அமைத்துக் கொடுத்தான்.
தனர் ஊர் மக்களில் பலர் அங்குத் தறவு மேற்கொண்டிருந்ததால், அச்சுதன் என்னும் சிறந்த வேளாண் பெருமகன் அவர்களுக்கு உணவளித்துக் காப்பாற்றி வந்தான். இந்தச் செய்திகளை இங்குள்ள ஆறு கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அவற்றின் பாடத்தை இக்கால எழுத்துகளில் அடியிற் காணலாம். அதனையடுத்துப் பொருள் கொள்ளும்படி சொற்களை சேர்த்தும் பிரித்தும் படித்திருக்கும் பாங்கைக் காணலாம். ( இவ்விளக்கத்தைப் பிற கல்வெட்டுகளுக்கும் கொள்க.)
(1) கணிய் நந்தி அளிரிய் ஈ வ் ஆன் கே ஏம்
மம் ஈத் த அ நெடுஞ்சழியன் பண அன் க ட ல் அன் வழுத் திய் கொட்டு பித்த அப ளி ஈ ய்
キ工u上山K状 Puしャt&社ripv U-91 k KijLC, \ldo CEHs+6
い別f& "人パLギてGもAKHじu片sし
(வரைபடம் 1)
கணி நந்தி ஆசிரியற்கு ஆங்கே ஏமம் ஈத்த
நெடுஞ்செழியன் பணவன் கடலன் வழுதி கொட்டுபித்த பள்ளி
(2) கணிய நநீ த ஸிரிய கு அன ஏ ம மீ ஈ
த நெடுஞசழியன ஸ லகன இளஞ ச டி கன த ந  ைதய சடிகன செ இ
U tu 6Mfui
கணி நந்த ஆசிரியற்கு ஆண் ஏமம் ஈத்த நெடுஞ்செழியன் சகலன் இளஞ்சடிகன் தந்தை சடிகன் செய்யி பள்ளி.
(3) கணிஈத் தளிரியர் குவி வெனர் அறைய நி
கமதகா விதிஈய் கழிதிக அந் தை அ ஸ9தனர் பிண ஊகொடுபிதொனி
I. Reading through the estampages of Mahadevan. I.

Page 85
கணி நந்த ஆசிரியற்கு வெள் அறை நிகமத்த காவிதி கழிதிகன் தந்தை அச்சுதன் பிண ஊ கொடுப்பித்தான்.
(4) கணிய நதிறிய கொடிய ஆதனி
கணிநநீ தி அறிகொடி ஆதனி
(5) சநீ திரிதர்ை கொடு பரிதோனி
சந்திரிதன் கொடுப்பித்தோன்
(6) வெளி அறைநிகமதொர் கொடி ஓர்
வெளர் அறைநிகமத் தோர் கொடியோர்
வெள் அறை நியமத்தோராகிய கொடியோர் என்பது இந்த தொடரின் பொருள் . இப் பள்ளிகளில் தங்கியிருத்தவர்களில் சிலர் வெள்ளறை என்னும் ஊர்வாழ் மக்களின் வழிவந்தவர்கள் என்பதை இதனால் உணரலாம். வெள்ளரிப்பட்டி என்னும் ஊர் இம் மலைக்கு அருகில் இப்போதம் உள்ளது கவனிக்கத்தக்கத.
2. திருவாதவூர்க் கல்வெட்டு
மதுரை மாவட்டம் மேலுார் வட்டத்திலுள்ள திருவாதவூரை அடுத்துள்ள குன்றுப்பொடவில் இரண்டு கல்வெட்டுத் தொடர்கள் உள்ளன. இக் குன்றிலுள்ள குகையின் சீரமைப்புப் பணிகளைச் செய்தவன் வங்க நாட்டு அரிதன் ( ஆரிதன்) ஆவான். இந்தக் குகைகளில் தங்கித் தவம் செய்தவர்களுக்கு உணவளித்த அவர்களின் தண்பத்தைப் போக்கியவன் “பாசன் பரசு" என்னும் பெயர் கொண்ட உழவன் ஆவான் என்னும் செய்திகள் இக்கல்வெட்டுத் தொடர்களால் தெரியவருகின்றன.
(1) . பங்காட அரி இதனி கொட் டூபிதோனி
பங்காட்டு அரிதன் இதனைக் கொடுத்தான்
(2) ஊ பாசனர் பர அ கு உறை கொட்டுபிதோன்
1. 1966 ல் திரு. ஐராவதம் மகாதேவனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2. Reading and Interpretation by:
Mahavevan, I., Corpus of the Tamil Brahmi Inscriptions,
Reprint of the Seminar on inscriptions, Madras, 1966.

பரகு என்னும் உபாசன் இந்தப் படுக்கையைக் கொடுத்தான்.
3. கீழவளவுக் கல்வெட்டு
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூருக்கும் கீழுருக்கும் இடையில் உள்ள கீழவளவுக் குன்றுப் பொடவில் ஒரு கல்வெட்டுத் தொடர் உள்ளது. இதில் சில எழுத்துகள் தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
வெற்றிலை வாணிகன் ஒருவன் இங்கிருந்த தறவிகளுக்கு உணவு வழங்கும் தொண்டைச் செய்ததோடு குகை சீரமைப்புப் பணியையும் செய்து உதவினான் என்னும் செய்தி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுப் பாடம் பின்வருமாறு:
ஊ பாச அணி தொனி டு லாவான கோடு
ஊபாசவன் தொண்டு உலாவான் கொட்டு பள்ளி
ஊ = உணவு, பாசவன் = வெற்றிலை வாணிகன், உலாவான் = கெடாதவனாய் வெற்றிலை வாணிகன் ஒருவன் தறவிகளுக்கு உணவு வழங்கும் தொண்டில் பிழைபாடு நேராமல் ஒழுகி வந்தான். அவன் பள்ளி அமைத்தக் கொடுத்தும் உதவினான்.
4. கொங்கள் புளியங்குளம் கல்வெட்டு"
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் கொங்கள் புளியங்குளத்தை அடுத்து நாகமலைக்குத் தெற்கிலுள்ள குன்றப்பொடவில் மூன்று கல்வெட்டுத் தொடர்கள் உள்ளன. அவற்றில் காணப்படும் வரலாற்றுச் செய்திகள்
வருமாறு:
உப்பாறு என்னும் ஊரைச் சேர்ந்த வெற்றிலை வாணிகன் ஒருவன், மேல்பாறையில் மழைநீர் வழியாமல் வாரம் அமைத்துக் கொடுத்தான். இங்கிருந்த தறவிகளுக்குச் சோறளித்த ஆதன் என்பவன் படுக்கைகளைக் கூறுபடுத்தி அமைத்ததோடு ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள பொன்னும் கொடுத்தான் என அறிகிறோம்.
S.I.E. 35 of 1903. W 2. வேங்கடசாமி, மயிலை சீனி. மு.கு.நா. 3. வேங்கடசாமி, மயிலை சீனி நேரிலும் பிறர் பதிவுகளைக் கொண்டும்
படித்தவை. 4. S.I.E. 55 to 57 of 1910, New Indian Antiquary, Vol. I. .

Page 86
பாகனூரில் வாழ்ந்த போத்தான் மகன் பிட்டன் என்பவனும் இங்கிருந்த சமணத் தறவிகளுக்கு உதவியாக அமையும்படி ஒரு குறிப்பிட்ட நிறையளவுள்ள பொன் கொடுத்தான். இவ்வாறு சோறும், பொன்னும், இருக்கை வசதியும் செய்த கொடுத்தத பற்றிய செய்திகளை இக்கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. கல்வெட்டுத் தொடர்களுக்கு இறுதியில் பொன்னின் மதிப்பு ஒருவகைக் குறியீட்டால் செதுக்கப்பட்டுள்ளது.
(1) GO 665 m (6 Lf856) 60 Pm
பாச அணி 2ள பாறுவ . . . . . . . . .
ち9 「省t R応以t もd H Pじら% 6
(வரைபடம் 2)
(2) கூறு கோடலகு ஈத் தவ ன சோற ஆதன பொன
È % } e v/t f A k sr d ネガ kムび』 %田
(வரைபடம் 3)
"கூறையோடு உலகு ஈத்தவன் சேர ஆதன் மண்' என்று பொருள் கொள்ளத் தோன்றகிறது.
(3) பாகனர் ஊர் போதி தனி பி
டனர் ஈத் தவே பொன
C F C E I trf st e s h K K Lt C &
(வரைபடம் 4)
பாகனூர் போத்தன் பிட்டன் ஈத்தவை பொன்
1. வேங்கடசாமி, மயிலை சீனி, மு.கு. நா.

5. விக்கிரமங்கலம் கல்வெட்டு
மதரை மாவட்டத் திருமங்கலம் வட்டம் விக்கிரமங்கலத்தை அடுத்து உண்டான்கல் என வழங்கும் குன்று உள்ளத. அங்குள்ள பொடவில் ஐந்த கல்வெட்டுத் தொடர்கள் இருப்பத கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக் கல்வெட்டுத் தொடர்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் ஆளின் பெயர் குறிக்கப்பட்டுள்ளத.
அந்தை பேகன் மகன் வேண் ஆதன், ஏமூர்ச் சாத்தன் மகன் ஆதன், குவிரன். குவிரண் மகன் ஆதன், செங்குவிரன் ஆகியவை அந்தப் பெயர்கள்.
அவர்கள் இந்தக் குகைகளில் தங்கித் தவம் மேற்கொண்டவர்களாகவோ, குகையில் தங்கியிருந்த தறவிகளுக்கு உதவியவர்களாகவோ இருந்திருக்கலாம்.
(1) அந் தைய பிகனர் மகனி வே ய அதனி அந்தை பிகண் மகன் வேய் அதன்
(2) பொ தலை குவிர னி
பொதலை என்னும் ஊரைச் சேர்ந்த குவிரன்
(3) செங் குவ* ர ன
இத ஒருவன் பெயர்*
(4) கு (வீ) ராதணி
குவிராதணி என்பத ஒருவன் பெயர்*
(5) ஏம் ஊர் ச அதனி அதனர்
ஏமூர் சாத்தனி ஆதன்"
6. மேட்டுப்பட்டிக் கல்வெட்டு
மதரை மாவட்டம் நிலக் கோட்டை வட்டம் மேட்டுப்பட்டி என்னும் ஊரை அடுத்தச் சித்தர்மலை உள்ளது. அம் மலையிலுள்ள குகைப் பகுதியில் எட்டுக் கல்வெட்டுத் தொடர்கள் உள்ளன. விக்கிரமங்கலக் கல்வெட்டில் காணப்படுவது போலவே இங்குள்ள
I. S.I.E. 621 to 623 of 1926, Annual Report on Indian Epigra
phy (I.E) 225 & 286 of 1963 - 64 வேங்கடசாமி, மயிலை சீனி , மு.கு. நூ. Mahadevan, I., Op. cit. வேங்கடசாமி, மயிலை சீனி , மு.கு.நா. S.I.E. 45 (a) to (1) of 1908.
:

Page 87
ஒவ்வொரு கல்வெட்டிலும் ஒவ்வோர் ஆளின் பெயராக மொத்தம் எட்டுப் பேர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.
ஆந்தை மகன் ஆரிதி, ஆந்தை தத்த மகன் ஆதன், மதுரை ஆந்தை மகன் விசுவன், ஆந்தை மகன் வேந்த ஆதன், சந்தந்தை மகன் சந்தன், திரட்டி இள ஆதன், பதனூர் ஆந்தை, குவிரந்தை மகன் வேண் ஆதன் ஆகியவையே அந்தப் பெயர்கள், இவர்கள் இந்தக் குகைகளில் தங்கித் தவம் செய்த சமண முனிவர்கள் என்று கொள்வத மிகவும் பொருத்தமானத. அன்றியும் குகையில் தங்கி வாழ்ந்த தறவிகளுக்கு இவர்கள் உதவியவர்களாக இருக்க முடியுமா என்றும் எண்ணிப்
8 ... I 65656)0.
(1) அந தை அரித (2) அந தை ஈர்வ தன (3) மதிர் அநீ தை வரிசு வன (4) அந் தைவே நீ த அதன (5) சநீத நீ தை சந தனி (6) தி டி ஈள அதன (7) பதின ஊர் அதை (8) குவிர அந் தை வே ய அதன
7. சித்தன்னவாசல் கல்வெட்டு*
புதக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் என்னும் ஊரை அடுத்த ஏழடிப்பாக்கம் என்று வழங்கப்பெறும் குன்றுப்பொடவு ஒன்று உள்ளது. இங்கு காணப்படும் ஒரே ஒரு கல்வெட்டுத் தொடரில் எருமை நாட்டுக் குமுழுரில் பிறந்த கவுடிஞன் குமணன் என்பவன் குறிக்கப்பட்டுள்ளான். இவனிடம் போர்ப்பயிற்சி பெற்ற வீரர்கள் இங்கிருந்த தறவிகளுக்குப் படுக்கைகள் அமைத்துக்கொடுத்தனர்.”
எரும நாடு குமுழு ஊர் பரிற நீத கவுடி ஈ ஞ ண குமண ன மல ஈள யர் செய த அதிட அன மீ
1. வேங்கடசாமி, மயிலை சீனி , மு.கு. நா.
2. S.I.E. 388A of 1914 Madras Epigraphy Report (M.E.R.) of 1914 - 15 Part II Para 1 & 2 and Inscription of Pudukottai State, Plate No. 1.
3 வேங்கடசாமி, மயிலை சீனி , மு.கு. நா.

எருமை நாடு குமுழுர் பிறந்த கவுடிஞன் குமணன் மல் மனையர் செய்த அதிட்டானம்.
8. கருங்காலக்குடிக் கல்வெட்டு *
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்
குடியை அடுத்துள்ள குன்றுப்பொடவில் ஒரே ஒரு கல்வெட்டுத் தொடர் காணப்படுகிறது.
ஏழைய ஊர் அரிதன பளி
ஏழையூர் அரிதில பள எரி
9. மருகல்தலைக் கல்வெட்டு’
திருநெல்வேலியை அடுத்துள்ள மருகல் தலை என்னும் ஊரை ஒட்டிப் பூவுடையார் மலை என்னும் குன்று ஒன்று உள்ளது. இம் மலையிலுள்ள குகையில் ஒரு கல்வெட்டுத்
தொடர் காணப்படுகிறது. இதனைச் சீவலப்பேரிக் கல்வெட்டு என்றும் வழங்குகின்றனர்.
வெண்காசிபன் என்பவன் கஞ்சணம் தந்தான் என்ற செய்தி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது."
வெண் காஸியண் கொடுபிதகல் கஞ்சணம்
வெண் காசிபன் கொடுப்பித்த கல் கஞ்சணம்
10. அழகர்மலைக் கல்வெட்டு
மதரை மாவட்டம் அழகர்கோயிலுக்குக் கிழக்கில் சுந்தராசனர் பட்டி என்னும் ஊருக்கு வடபால் அழகர் மலையில் உள்ள ஒரு கற்குகையில் 12 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
இங்குள்ள குகைகளில் வாழ்ந்தவர்களுக்கு உதவும் வகையில் பலர், காணம் என்று வழங்கப்பட்ட நாணயத்தினைப் பொருளுதவியாகக் கொடுத்தனர். அவர்களில் பதினொருவர் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. பெயர்கள் வருமாறு:
S.I.E. 561 of 191 S. I. E. of 1912 Plate on page 57. வேங்கடசாமி, மயிலை சீனி , மு.கு. நூ. S.I.E. 407 of 1906 and M. E. R. of 1907, p. 60. வேங்கடசாமி, மயிலை சீனி , மு.கு. நா. S.I.E. 334 of 1908 and S.E.I. 70-7 of 1910, I.E. 244 & 245
of 1963-64.

Page 88
மதரை பொற்கொல்லன் ஆதன் மகன் ஆதன், மதரை கோ உப்பு வாணிகன் ஆய்கோன் கோனான், கோழி வாணிகன் இளவல் நாகன், அறுவை வாணிகன் எளாடன், வாணிக ஆதன் மகன் ஆதனாதன், பணித வணிகன் நெடுமாலன், ஆவியன், சொம்மிதீன் வழுதி , கோக் கீழ்மாறநாடன் திரைநாடன், அரையன். கலபன் ஈழ வாவிரயன், தீண்சேர்நாதன்.
இப் பதினொருவருள் முதல் எழுவர் வாணிகள், அடுத்த மூவர் அரசர். இறுதியில் உள்ளவர் யார் எனத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் கொடுத்த காணத்தின் மதிப்பளவும் குறிக்கப்பட்டுள்ளது.
1. மதிரயர் பொனர் கொல் வானர் ஆதனர் ஆதனர் b R RU Up s-v ;以** eH は rも
(வரைபடம் 5) மதிரய் பொன் கொல்வான் ஆதன் ஆதன
2. அணிகனி த.
| Ր -Ի ( ),
அணிகன் த.
3. மத்திரைகோஊபுவாணிகன்திய் கோன்கோனகன்
H Á k A F t ; 5 1 + IF 5 UVF. If if I + f 6
மத்திரை கோ உப்பு வாணிகன் ஆய் கோன் கோணான்
வரைபடம் 7
1. வேங்கடசாமி, மயிலை சீனி , மு.கு. நா.

4. (வா) ணிகஅதன்மகன்அதன்அதன்
I+H Ms dis ; (HPR
(வரைபடம் 8) வாணிக ஆதன் மகன் ஆதனாதன்
5. சொம் மிதஈனி வழுத் தி 忒七Uk+C瓦炉人总节
(வரைபடம் 9) செம்மிதின் வழுதி
6. பணிதவ ணிகனி நெடுமலனி C1 rg1+r 19, U-Ur:
(வரைபடம் 10) பணித வணிகன் நெடுமலன்
7. கோழிவாணிகன்எளவநாகன் * ?/5 . في مه علم L #f8
வரைபடம் 11
8. கோகிக்ழ்மாறநாடன்திரைநாடன்
p f+9u 3lgrkaicc 6
வரைபடம் 12

Page 89
9. 960) J. A. . . . . கலபனிடிவாவிரயனி H+uy... fUCs`9 s 51u C&
வரைபடம் 13
அரைய(ன்) கலபன் ஈழவாவிரயன்
10. காணம் குடுபிதோ
-F工ヒナセ C、ピ下、
(வரைபடம் 14) காணம் கொடுப்பித்தோர்ே)
11. வெண் குளிருஅறவை வணிகன் எளஅஅடன்
T 巧tU官HH& も& 『 +c >UHHccも
(6)j 60)JULíô I5) வெண் குளிர் அறுவை வணிகன் எளாடன்
12. தீய்னசேநாதன
R U『J「メ以
(வரைபடம் 16)
தீன் சேர்ே) நாதன்
11. வரிச்சியூர்க் கல்வெட்டு
மதுரை வட்டம், வரிச்சியூரை அடுத்தள்ள குன்றுப்பொடவில் மூன்று கல்வெட்டுத் தொடர்கள் காணப்படுகின்றன. அந்தக் கல்வெட்டுக்களைக் குண்னத்தார்க் கல்வெட்டுகள் என்று குறிப்பிடுவதம் உண்டு. I. S.I.E. 38 of 1908
79

இக்கல்வெட்டுகள் பெரிதும் சிதைந்த போய்விட்டன. தெளிவாகத் தெரியும் பகுதிகளில் உள்ள செய்திகள் இவை:
நடண் என்பவன் நான்கு படுக்கைகள் செய்த கொடுத்தான். மற்றொருவன் நாற படுக்கைகள் செய்து கொடுத்தான். பிறரும் செய்து கொடுத்துள்ளனர்.
(I) * * * * * * பளிய கொடு பி
பள்ளி கொட்டுபித்தான்
(2) . டா. இடாவே.
ந த சுசனு
100 காஞ்சணம் (படுக்கை) கொடுத்தான்
(3) . . . . . நடண் ஆக இய நால்
இருகை
நடன் என்பவனால் செய்யப்பட்ட நான்கு இருக்கை
12. திருப்பரங்குன்றம் கல்வெட்டு’
மதரையை அடுத்தள்ள திருப்பரங்குன்றத்தில் இயற்கையாய் அமைந்த குகை ஒன்று உள்ளது. அக் குகைப் பகுதியில் மூன்று கல்வெட்டுத் தொடர்கள் உள்ளன. இங்குள்ள படுக்கைகளில் தங்கியிருந்தவர்களில் முதன்மை பெற்று விளங்கியவர் நெடுஞ்சாத்தன் என்னும் சமணத்துறவி என்பதும், இங்குள்ள படுக்கைகளை அமைத்தக் கொடுத்தவர்களில் அந்தவன், கோயமான், எருக்காட்டூர் ஈழக் கடும்பிகன் பொலாலயன் என்னும் மூவர் என்பதும் இக் கல்வெட்டுகளிலிருந்து தெரிய வருகின்றன.”
(1) எருகா டுர் ஈழ குடும பி கன பொலா
லயனர் செயத ஆயசாயன நெடு
சாதன
I. Mahade van I., Op, cit.
2. S.I.E. 333 of 1908 and S.I.E. 140 to 142 of 1951 - 52
3. வேங்கடசாமி, மயிலை சீனி, முகுநர். இங்குள்ள கல்வெட்டுகளில் மூன்றாம் எண்ணிட்ட கல்வெட்டில் முதல் இரண்டு எழுத்துகள் படுக்கையின் கால் மாட்டிலிருந்த தலைமாட்டை நோக்கியவண்ணம் இருந்தகொண்டு படிக்க வேண்டுவனவாயும், பிற அதற்கு எதிர்த்திசையில் அமர்ந்துகொண்டு படிக்க வேண்டுவனவாயும் 2_0.

Page 90
(2) அநீதவன் கொடு பரித வன
H lX 5ff 60/Xg C
(வரைபடம் 17)
(3) கோ ய தய செனட் மா
FV KUd Ct
(வரைபடம் 18)
13. முத்தப்பட்டிக் கல்வெட்டு
மதரையை அடுத்துள்ள முத்தப்பட்டிக்கு அருகிலி அம்மணாமலைப் பொடவு என்னும் பகுதியில் மூன்ற கல்வெட்டுத் தொடர்கள் உள்ளன.
இவற்றில் காவி, அந்தை சாத்த்ன், காத்தான் (கோடாமன்) என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. இப் பெயர்கள் இக் குகைகளில் தங்கி வாழ்ந்த சமண முனிவர்களைக் குறிக்கலாம் அல்லத குகையில் இருந்தவர்களுக்கு ஏதோ ஒருவகையில் உதவியவர்களைச் குறிக்கலாம்.
(1) சையஅலனி விந்தை2ளர் காவிய
ו-ch f 61 h Eר = ש3
F 3 (U
(வரைபடம் 19)
(2) நாக பேரூர் அதை சாத தன மகன
I. S.I.E. 58-60 of 1910; I.E. 243 of 1963-64 2. Mahadevan, I., Op. cit.

80
(3) கொடாம அ. . . . . . . . . லக யதா அறுர
子 e a H”・サ+ u/「Hく
(வரைபடம் 20) கோடாம அ. . . லக யதா அறர
14. ஆனைமலைக் கல்வெட்டு
மதரையை அடுத்துள்ள ஒத்தக்கடை என்னும் ஊரைச் சார்ந்து ஆனைமலை உள்ளது.
சமணத் தறவியின் படுக்கையைப் பிறர் மிதிக்கக்கூடாது. மிதித்தால் எரிந்துவிடுவர் என்னும் செய்திகள் இங்குள்ள கல்வெட்டில் காணப்படுகின்றன."
(1) இவகுனி றத உறையுள பாத நதான ஏரி ஆரிதன அததவாயி அரிட் டகாயிபன
:$ € £१ ! -> ५ -१८ | 1 k ՐPK Si l’ K Ր
닝 AA J PCC-FUTC D
(வரைபடம் 21) இவ(ன்)குன்றது உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்து வாய் அரிட்ட காய் (கு) பன்
15. புகழுர்க் கல்வெட்டு’
திருச்சிராப்பள்ளி மாவட்டம், கரூர் வட்டம், வேலாயுதம் பாளையம் என்னும் ஊரின் நடுவே ஆறு நாட்டார் மலை என்னும் குன்று ஒன்று உள்ளது. அதன் உச்சியில் அருணகிரிநாதரால் புகழ்ந்த பாடப்பெற்ற முருகன் கோயிலும், குன்றின் இடைப்பகுதியில் வடக்குப் பக்கத்தில் சூடாமணி குன்று என்னும் குகையும், தெற்குப் பக்கத்தில் மற்றொரு குகையும் உள்ளன. இந்த குகையில் உள்ள படுக்கைகளின் தலைமாட்டுப் பகுதியிலும் பக்க மேடைகளிலும் அக் குகைகளில் தங்கியிருந்த
S.E. 457 of 1906
2. Reading and Interpetation by Dr. K. V. Raman. Department
of an Archaeology and Ancient History, Universoty of Ma
dras.
3. S.I.E. 341 to 347 and 349 of 1927-28: I.E. 297 of 1963-64

Page 91
முனிவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இந்தப் படுக்கைகளுக்கு மேலே உள்ள பாறையில் இந்தப் படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர்களின் பெயர்கள்
குறிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றிய விளக்கமான செய்திகள் வருமாறு:
இக்கல்வெட்டில், குகைகளில் தவம் மேற்கொண்ட சமணத் தறவிகளான யாற்றார்ச் செங்காயபன், பிட்டந்தை மகள் கீரன் கொற்றி, சுண்ண வாணிகன் வேள் ஆதன், கருவூர்ப் பொன் வாணிகன் நத்தி, கொற்றந்தை இள ஏய், நாகன் மகன் பெருங்கீரன் ஆகியோர் பெயர்களும் படுக்கைகளை அமைத்தக் கொடுத்த இளங்கடுங்கோ, கீரனேறி ஆகிய இருவரின் பெயர்களும் பொறிக்கப் பட்டுள்ளன. இந்த அரசுகளின் பெயர்கள் உறவு முறையோடு குறிக்கப்பட்டுத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பெயர்களோடு ஒப்புமை உடையனவாய் உள்ளன . இதனால் வரலாற்றுச் சிறப்புடையவை இவை என்பது கருதத்தக்கத.
இங்குள்ள கல்வெட்டுகளில் சமண முனிவர்களுக்குப் படுக்கை அமைத்தக் கொடுத்தவர்களின் பெயர்களும், இங்குள்ள பள்ளிகளில் தங்கியிருந்த சமணத் தறவிகளின் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன.
குகைகளில் தவம் மேற்கொண்ட சமணத் தறவிகள்
1. யாற்றார்ச் செங்காயபன் : யாற்றாரில் (ஆத்தாரில்) பிறந்தவன் செங்காயபன், இவன் சமணத்துறவியாக மாறித் தவம் செய்தான். மூத்த அமணன் என்று இவன் சிறப்பித்துக் கூறப்படுவதால் இங்கிருந்த சமணத் தறவிகளுக்கெல்லாம்
தலைவனாக விளங்கினான் என்று கொள்ளலாம்.
2. பிட்டந்தை மகள் கீரன் கொற்றி : இவள் பெண் தறவி. இவள் தந்தை பிட்டந்தை. பிட்டந்தை என்னும் பெயர் பிட்டன் என்பவன் இந்த பெண் தறவி கொற்றியின் அண்ணனாகவோ, தம்பியாகவோ இருந்திருக்க வேண்டும். இவளது பெயருக்கு முன் கீரன் என்னும் சொல் உள்ளது. இந்தக் கீரன் என்னும் சொல் அவள் தந்தையின் இயற்பெயராகவோ, கணவனின் பெயராகவோ இருக்கலாம். தந்தையின் பெயர் பிட்டந்தை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டோம். அந்தப் பெயர் பிட்டன் தந்தை என்று பொருள் படுவதால் அவனது இயற்பெயர் வேறொன்று இருந்திருக்கமுடியும். அது கீரன் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
81

அல்லது கீரன் என்பது கணவன் பெயர் ஆயின், அக்காலத்திலும் இக்காலத்தைப்போலப் பெண்கள் கணவன் பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்டனர் என்று முடியும்.
3. சுண்ண வாணிகன் வேள் ஆதன் : சுண்ணம் என்பது மணப் பொடி, அதனை வாணிகம் செய்தவந்தவன் ஆதன். அவன் வேள் என்னும் அடைமொழி பெற்றுள்ளான். இந்த அடைமொழி அவன் பிறந்த குடியைக் குறிப்பதாக இருக்கலாம் அல்லத இவன் வேள் (உதவி) நோக்குடன் வாணிகம் செய்ததைக் குறிப்பதாக இருக்கலாம். அன்றியும் வேள் (முருகன்) என்னும் தெய்வப் பெயர் அடைமொழியாகவும் இருக்கலாம்.
இவன் தன் வாழ்க்கையைத் தறந்து சமண முனிவன் செங்காயபன் மாணாக்கனாய்ச் சேர்ந்துவிட்டான்.
4. கருவூர்ப் பொன் வாணிகன் நத்தி : இந்த நத்தி என்பவன் கருவூரில் பொன் வாணிகம் செய்து வந்தான். இவனும் தறவு பூண்டு செங்காயபனின் மாணாக்கன் ஆனான்.
5. கொற்றந்தை இள ஏய்: ஏய் என்பது இவனது பெயர். சங்ககாலத்துப் பெயரான எயினன் என்பதனோடும், பிற்காலத்தப் பெயரான ஏயர்கோன் (கலிக்காம நாயனார்) என்பதனோடும் இந்த பெயர் சொல்லால் தொடர்புடையத. இவன் இள ஏய் என்று குறிப்பிடப்படுகிறான். இது அமைப்பு முறையில் இளங்கோ என்னும் பெயரைப் போன்றத.
இவனது பெயருக்கு முன் உள்ள "கொற்றந்தை' இவனது பெயருக்குள்ள அடைமொழி ஆயின், இவன் கொற்றவன் என்பவனின் தந்தை என்று முடியும்.
கொற்றந்தை இள ஏய் என்பதைக் கொற்றந்தை மகன் இள ஏய் என்று கொள்வோமாயின் கொற்றணும் இள ஏயும் அண்ணன் தம்பியர் ஆவர்.
இந்த இளஏயும் சமண மதத்தைத் தழுவி தவம் மேற்கொண்ட செங்காயபனோடு சேர்ந்து கொண்டான்.
6. நாகன் மகன் பெருங்கீரன் : இவன் சமணத் தறவியாகிய இந்த மலையின் வடபுறமுள்ள குகையில் (சூடாமணிப் பொந்த) தவம் மேற்கொண்டிருந்தான்.
1. Talcum powder

Page 92
மற்றவர்கள் எல்லாரும் மலையின் தென்புறத்திலுள்ள குகையில் இருந்தனர்.
இங்குள்ள படுக்கைகளை அமைத்தக் கொடுத்தவர் இருவர். ஒருவர் சேர அரசன் இளங்கடுங்கோ, மற்றொருவர் கீரனேறி என்ற பெண்.
இளங் கடுங்கோ : இவன் தந்தை பெயர் பெருங்கடுங்கோ, பாட்டன் பெயர் கோ ஆதன் செல்லிரும்பொறை. இங்கு குறிக்கப்பட்டவர் முறையே மருதம் பாடிய இளங்கடுங்கோ, பாலை பாடிய பெருங்கடுங்கோ, செல்வக்கடுங்கோ வாழியாதன் ஆகியோர் என்பதை அவர்களது வரலாற்றுப் பகுதியில் காணலாம்.
கல்வெட்டு 51-ல் இவன் இளங்கோ ஆவதற்காக இந்தக் கற்படுக்கைகளை அமைத்தான் என்றும், கல்வெட்டு 52 -ல் இவன் இளங்கோ ஆகி அமைத்தான் என்றும் குறிப்பிடப்படுகிறது. இஃத இரண்டு முறை இந்தப் பணியைச் செய்ததைக் குறிக்கிறத.
கீரனேறி : பிட்டன் குறுமகள் என்னும் இப் பெயர் தெளிவாகக் குறிப்பிடுவதால் இப் பெயர் பெண்ணைத்தான் குறிக்கிறத என்பது உறுதியாகிறது. குறுமகள் - இளையமகள். எனவே, இவள் பிட்டனின் இளையமகள். இந்தப் பிட்டன் நம்பியூரில் வாழ்ந்தவன். கீரன் ஏறி என்பது கீரன் மனைவி எயிற்றி என்பதாகலாம். ஏறி என்னும் பெயர் எயிற்றி என்னும் பெயரில் நேர்ந்த பழிபட்ட வடிவமாயிருக்கலாம். எயிற்றி என்பது சங்ககாலப் பெயர்.
இந்தக் கீரன் எயிற்றி பள்ளி செய்து கொடுத்தது கீரன் கொற்றிக்குத்தான், மற்றவர்களுக்கு அன்று என்பது கொற்றி அதிட்டானமும் (இருக்கையும்) இவளது பெயரைக் குறிப்பிடும் கல்வெட்டும் உள்ள பகுதியை நோக்கி உணரலாம்.
தறவு பூண்டவள் பிட்டனின் தங்கை (அல்லது அக்காள்) கொற்றி . அவளுக்குப் படுக்கை அமைத்தக் கொடுத்தவள் பிட்டனின் இளைய மகள் எயிற்றி. எனவே, எயிற்றி தன் அத்தை கொற்றிக்குப் படுக்கை அமைத்தக் கொடுத்தாள் என்பத தெரிகிறத.
1. கழாக் கீரன்எயிற்றியார் புலவர் - அகம், 163,217 முதலான
பாடல்களைப் பாடியவர்

32
கொற்றியும் எயிற்றியும் கீரன் மனைவியர் என்று கொள்ளப்படுவராயின், கீரனின் முதல் மனைவி கொற்றி என்றும், இரண்டாம் மனைவி எயிற்றி என்றும் முடியும். எயிற்றிக்குக் கீரன் மாமன் ஆதலின் மணக்கும் முறை உடையவனே ஆவான்.
கொற்றியை மணந்து வாழ்ந்த கீரன், எயிற்றியையும் மணந்ததால் கொற்றி தன் வாழ்க்கையை வெறுத்துத் தறவு பூண்டாள் போலும். இந்தத் தறவு கண்டு மனம் வருந்திய எயிற்றி தன் கணவனின் முதல் மனைவிக்கு (அத்தைக்கு) உதவும் வகையில் படுக்கையை அமைத்துக் கொடுத்தாள் போலும்.
பிட்டன் தந்தை நல்லாவியூரில் வாழ்ந்தவன்; பிட்டன் நம்பியூரில் வாழ்ந்தவன்.
(1) முதாமண (ணன)யாறறாாசெங்காயப2.
கோ ஆ. .. லலிருமபுறை மகன பெருங் கடுங்கோன மகன கடுங்கோனள ங் கடுங் கோன ங் கோஆக அறிமிதகல
(2) . . . . . . தாஅமணணனயாறறாா செங்கா
ku U 60 2 - 60) p u கோ ஆதன செலலிருமபொறை மகன பெருங்கடுங்கோன மகனனங் கடுங்கோளங்கோ ஆசி அறித தகல
(3) நமயிஊர அபிடன குறுமமகள கரனனேறி செயரிமிதபளி
(4) நலலாவி ஊர அபிடநதை மகள கீ
ரன கொறறி அதிட டானர்
(5) யாறறாா செங்காய பன ..... ...றறிட
L 600
(6) . . . . . . . . தத அதிட டான ம
(7) (சு)ணண வாணணிகன
வே ள ஆதன அதிட டான ம
1. வேங்கடசாமி, மயிலை சீனி, மு.கு. நா.

Page 93
85 605 . . . . . . . . . . . . . . . . o. oo e o o
0 6h • • • • • • • • • • • • • • • • • • • oos o • • • • • • •
(9) கொற ற ந  ைதள ஏ ய
மு ன ற
(10) கரு ஊவா பொன வாணிகன
நத தரி அதரி ட டான ம
(11) ணாகனமகன பெருங் கரணி
16. திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டு
திருச்சியிலுள்ள மலைக்கோட்டையில் இயற்கையாக அமைந்தள்ள குகைப் பகுதிகளில் உள்ள கல்வெட்டில் செயங்காயபன் என்னும் பெயர் பொறிக்கப்பெற்றுள்ளது.*
செனகாயரிபங் கே (?)
17. குன்றக்குடிக் கல்வெட்டு’
இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தார் வட்டம், குன்றக்குடி மலையில் ஞானிகள் மடத்தை அடுத்துள்ள
குகையின்கண் இரண்டு கல்வெட்டுத் தொடர்கள் காணப்படுகின்றன.
இவற்றில் ஆதன், சாத்தன் என்னும் பெயர்கள் பொறிக்கப் பெற்றுள்ளன."
(1).பி ஊர ஆதன சாதன
ஆதன் மகன் சாத்தன். இவன் ஊரின் பெயர் சிதைந்தள்ளத.
கொடுத்தான்.
S.I.E, 139 of 1937-38 Mahadevan, I., Op. cit. S.I. E. 46 of 1909
Mahadevan, I., Op cit.
:

18. மாமண்டூர்க் கல்வெட்டு
வடார்க்காடு மாவட்டம், செய்யாறு வட்டம்,
மாமணி டூரிலுள்ள பல்லவர் குகைக்கு மேற்கில்
இயற்கையாக அமைந்துள்ள குகை ஒன்று உள்ளத.
கணிமான் தேனூர் தந்த கோன் இங்குத் தவமிருந்தா னென்று இங்குள்ள கல்வெட்டுக் கூறுகிறது.
கணிமானி தேனுTரத நத கோன குன ற செயிதான தசன சிறு 8 வணி
19. அரசலூர்க் கல்வெட்டு’
பெரியார் மாவட்டம், ஈரோடு வட்டம், அரசலூரிலுள்ள நாகமலைக் குன்றுப் பொடவில் முன்று கல்வெட்டுகள் உள்ளன. இரண்டு கல்வெட்டுகள் அக்கால ஜந்திசைப்பண் இசையினைத் தெரிவிப்பனவாய் உள்ளன. மணி வண்ணக்கண் தேவன் சாத்தன் என்பவன் படுக்கை வெட்டிக் கொடுத்ததோடு இசைக் குறிப்பு என்று கருதத்தக்க குறியீட்டு எழுத்தையும் இதில் பொறித்து வைத்தான் என்பது மற்றொரு கல்வெட்டிலிருந்து தெரியவருகிறது."
(1) எழுத தம புனருததான மணிய வ ண ன க கன தேவ ன சாத தன
(2) தா தீ தா தீ தா
đổ தா தே தா தீ தா தே தீ தே தா தீ தா (தே) தா தீ
த் (அ) தீ ፵ff (ф) я дѣл
(3) di 列 தீ 纽 để
፴ (தீ த த) தீ த கீ த (5) த தீ (த) தீ (த) đổ த் (அ)த் (ஈ)த (க்) ஈ
S. I.E 17 of 1939-40. Mahadevan, I., Op. cit. S.I.E, 8 TO 282 OF 1961-62 வேங்கடசாமி, மயிலை சீனி, மு.கு. நா.

Page 94
20. பிள்ளையார் பட்டிக் கல்வெட்டு
இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தார் வட்டம் பிள்ளையார்பட்டியை அடுத்த குன்றுப் பொடவில் உள்ள கல்வெட்டில் எருக்காட்டுர்க் கோன் பெரும்பரணன் என்ற பெயர் பொறிக்கப்பெற்றுள்ளது.
பெரும்பரணன் என்பவன் எருக்காட்டுர் அரசன் என்பதும், அவன் இந்தக் குகையில் தங்கித் தவம் செய்தான் அல்லது தங்கித் தவம் செய்தவர்களுக்கு உதவினான் என்பதம் இக்கல்வெட்டிலிருந்த தெரியவரும் செய்தியாகும்.
எரு காடடு குக் கோன பெகு பர ண ர்ை
21. திருநாதர்குன்றம் கல்வெட்டு’
தென்னார்க்காடு மாவட்டம், செஞ்சி வட்டம், திருநாதர் குன்றத்திலுள்ள குகையில் காணப்படும் கல்வெட்டி லுள்ளத. சமணத் தறவி சந்திர நந்தி இக் குகையில் 57 நாள் உண்ணா நோன்பிருந்தாரென்னும் செய்தி காணப்படுகிறது."
ஜம ப த தே மான சன ன னோ றி ற சந தர ந தி தரி ஆ சிரி கா நரி ச*தரிகை
22. கழிஞ்சமலைக் கல்வெட்டு
மதரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டிக்கு வடமேற்கிலுள்ள கழிஞ்சமலைக் குகையில் உள்ள கல்வெட்டுத் தொடரைக் கி.பி. 1971 ஆம் ஆண்டில் டாக்டர் ஏ. சுப்பராயலு, டாக்டர் கே. வி. இராமன் ஆகியோர் கண்டுபிடித்தனர்.
நெல்வேலிச் செழியன் அதனன் மகன் ஒளியன், பள்ளி வெட்டி உதவினான் எனினும் செய்தி இதில் காணப்படுகிறது.
S.I.E, 136 of 1936 - 37
Mahadevan, I., Op. cit.
S.I.E, 239 of 1904.
Mahadevan, I., Op. cit.

நெல வெளி ஈய சழி வன அதன ன வொளியன முஸ்கைகொடு வன
'நெல்வெளி சழிவன் அதனன் ஒளியன் முககை கொடுவண் என்று இது சரி செய்து படிக்கப்படுகிறது.
23. ஐயர்மலைக் கல்வெட்டு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், குளித்தலை வட்டம், ஐயர் (ஐவர்) மலையிலுள்ள குகையில் காணப்படும் சங்ககால எழுத்து கல்வெட்டுகளை 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்பொருள் தறையினர் கண்டுபிடித்தனர்.
பணை தறை வே ஸ ன அதட அனம
பணைத் தறை வே சனி அதிட்டானம்
24. சங்கர மலைக் கல்வெட்டு’
திருச்சிராப்பள்ளி மாவட்டம் கருரை அடுத்துள்ள சங்கர மலைத் தொடரில் பழங்கால எழுத்துக்கள் காணப்படுவதாகத் தமிழ்நாடு அரசு தொல் பொருள் தறையினர் குறிப்பிட்டுள்ளனர். வே. ஏ. ஆகிய இரண்டு எழுத்தக்களைத் தவிர வேறு எதனையும் அதில் தெளிவாகப் படிக்க முடியவில்லை.
25. மாலகொண்டாக் கல்வெட்டு’
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கண்டுகடர் வட்டம் மாலகொண்டா என்னும் ஊரை அடுத்துள்ள மலைக்குகையில் உள்ள எழுத்துகளில் அருவாள குலம் என்னும் தொடரும், "வீரிசெட்டி என்னும் பெயரும் காணப்படுகின்றன.
அரவாள குலஸ் நதஸெ டி பதஸ ஸ ரிவரி செட் டி நோதான
மேற்கூறிய கல்வெட்டு எழுத்தக்களோடு ஒப்பு நோக்கத்தக்க வேறு பல சான்றகளும் நமக்குக் கிடைத்தள்ளன. வடார்க்காடு மாவட்டம், செய்யாறு வட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி என்னும் சிற்றாரில்
1. "Indian Express' dated 6-2-73 ás011060:få ørLí Sli)|| ||shöfb.,
நாள் 15-7-73 கொங்குநாள் 15-8-74
2 South Indian Palacography
4. S.H.E, Part II Para II of 1937-38

Page 95
கண்டெடுக்கப்பட்ட ஈயக்காசுகளில் சேந்தன், ஆதி எனினும் சங்ககால மன்னர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வெழுத்துக்கள் பண்டைய
தமிழி எழுத்தக்களாகும்.
அடுத்துப் புதுச்சேரிக்கு அண்மையிலுள்ள அரிக்கமேடு என்னும் இடத்தில் தொல்பொருள் தறையினரால் அகழ்ந்தாய்ந்த கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் விளக்கொன்றில் முதகுழுரன் என்ற பெரும்பானை ஓடுகளில் சாத்தன், ஆவி, ஆந்தை, பணிகன், மிகோதி, ஈசன் முதலான பெயர்களும் காணப்படுகின்றன.இவையும் தமிழி எழுத்தக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
மேலே கண்ட கல்வெட்டுக்களில் காணப்பெறும் எழுத்தக்களும், ஆணி டிப்பட்டி ஈயக் காசுகள், அரிக்கமேட்டு விளக்கு, பானை ஓடுகள் ஆகியவற்றில் காணப்பெறும் எழுத்துக்களும் தமிழி என்னும் ஒரே வகை எழுத்தகளால் ஆனவை எனி பத ஈணி டுக் குறிப்பிடத்தக்கதாகும்.
e ஆணர்டிப்பட்டி - ஈயக்காசுகள்
(I) 66,556.5 &b$....... (3) 6TÉlyss................. (2) எதிரான்சே. (4) எதினன்.
(ஒளிப்படம் 1)
I. "First finds of Sangam Age Coins", The Sunday Standers, dated
16-7-1967.
85
 

(ஒளிப்படம் 2) (நன்றி, அரும்பொருட் காட்சியகம், சென்னை)
அரிக்கமேடு - அகல் விளக்கு (1) முதி குழுர அன அகல
அரிக்கமேடு - மண் ஓடு’ (2) சாத்தன ஆவிஈநிகதிஈசன ஆதி
தைபணிக
முடிவுரை
இது வரையில் ஆராய்ந்த கல்வெட்டுக்களை எண்ணும் போது சில வரலாற்றுச் செய்திகள் உண்மை என உறுதி செய்யப்படுகின்றன. சங்க நால்களில் கூறப்பட்டுள்ள சேர, சோழ, பாண்டியர்களின் காலம் கி. பி. இரண்டாம் நாற்றாண்டிற்கு முந்தியதே என்பதும், அக்காலம் முதலே சமணமதம் தமிழ்நாட்டின் மக்களாலும், மன்னராலும் மதித்தப் பேணப்பட்டு வந்தத என்பதும் அவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்க செய்திகள் ஆகும் .
மற்றும் மதரையைச் சுற்றிலுமுள்ள குன்றுப் பகுதிகளில் வாழ்ந்த சமண முனிவர்கள் சில நூற்றாண்டுகளுக்குப் பின் கி. பி. 470- ல் மதரையில் வச்சிரநந்தி தலைமையில் திரமிள சங்கம் எனினும் கூட்டமைப்பினை உருவாக்கினார்கள். ஆதலால், பதினெண்கீழ்க்கணக்கு நநூல்களில் பல, சங்ககாலத்தை அடுத்த காலத்தில் தோன்றக் காரணமாயிருந்த இவர்களின் முன்னோரே சங்ககாலக் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர் என்பதம் தெளிவாகிறது.
பெண்களும் தறவுபூண்டு சமணத் தறவிகளோடு நோன்பிருந்த செய்தியும், அவர்களுக்கு உணவு, உறையுள்
1. தமிழ் முரசு, நாள் 13-9-1973 2. öng

Page 96
முதலான அடிப்படைத் தேவைகளைப் பொதமக்கள் முன்வந்த உதவி வந்த பாங்கும், நேரில் இருந்த உதவி முடியாதவர்கள் பொருள் முதலீடாகக் கொடையளித்த அதன் உதவியால் தறவிகளைப் பேணி வரும்படி செய்தனர் என்பதும், இக்கல்வெட்டுச் செய்திகளிலிருந்த உய்த்தணரப்படுகின்றன. கொல்லாமை, புலாலி உண்ணாமை முதலான கோட்பாடுகள் தமிழகத்தில் வேரூன்ற இந்தத் தறவிகள் காரணமாயிருந்திருக்கவும் கூடும். தமிழ்நாட்டுச் சமணத்தில் வடநாட்டு: சமணத்தைப்போலப் பெண்ணைத் தாழ்வாகக் கருதம் மனப்போக்கு காணப்படவில்லை என்பதும் இச் கல்வெட்டுகளால் அறியப்படுகின்றன.
மொழியியல் நிலையில் இந்தக் கல்வெட்டுகள் கிறித்தவுக்கு முற்பட்ட இலக்கண நாலாகிய தொல்காப்பியத்தில் காணப்படும் சில விதிகளுக்கு இலக்கியங்களாகத் திகழ்கின்றன, தமிழ் மொழிக்கே உரிய சிறப்பெழுத்தகளான ழ, ற, ன, ஆகியவற்றிக்குத் தனிச் குறியீடுகளைப் பெற்றுத் தமிழ்மொழிக்கென்று தனி எழுத்தக்கள் இருந்ததைக் காட்டும் சான்றுகளாகத் திகழ்கின்றன. இவ்வாறு சங்ககாலக் கல்வெட்டுக்கள் மக்கள் வரலாற்றையும், மக்கள் பேசிய மொழியின் வரலாற்றையும் அறிய உதவும் பதிவுகளாய் உள்ளன.
பிற் சேர்க்கை
1. மீனாட்சிபுரம் கல்வெட்டு - 1
கணி நந்தி ஆசிரியன் என்பவன் இங்குள்ள குகைகளில் தங்கியிருந்த சமணத் தறவிகளுக்கு ஆசிரியனாக விளங்கியவன். நந்தி என்பது இவனத இயற்பெயர். கி. பி. 470 - ல் மதரையில் சமண சங்கத்தை ஏற்படுத்தியவன் பெயர் வச்சிரநந்தி என்பது ஈண்டு நோக்கத்தக்கத. சோதிடத்தில் வல்லவனாய் இவன் விளங்கியதால் கணி என்னும் அடைமொழி பெற்றான் “ஆங்கே என்னும் சொல், கல்வெட்டில் "ஆன்கே' என்ற பொறிக்கப்பட்டுள்ளத. நந்தி தங்கியிருந்த அந்த இடத்தில் என்பது அதற்குப் பொருள். ஏமமாம் என்னும் சொல்லுக்கு ஏமம் ஆகும்படி அதாவத, பாதகாவலாய் அமையும்படி என்பது பொருள். தறவிகள் மழையில் நனையாமல் அறையிறையில் (பாறைத் தாழ்வாரத்தில்) வாரம் வெட்டிச் கொடுத்துள்ளமை போன்ற செயல்கள் ஏமமாம் செயல்கள் என்று கொள்ளத்தக்கவை. நெடுஞ்செழியன் என்று இங்கு

குறிக்கப்பட்டுள்ளவன் பாண்டிய அரசன். பணவன் என்பது (பணயன்) பணி மேற்கொண்டவனைக் குறிக்கும். கடலன் வழுதி என்பவனி பாணி டியன் நெடுஞ்செழியன் செயலாளுநன் (பணயன்) ஆவான். கடலன் என்பது இவனது பெயர். வழுதி என்பது குடிப்பெயர். இத பாண்டியரின் ஐந்து குடிகளில் ஒன்று நந்திக்குப் பாதுகாவல் செய்த தரும்படியும் நெடுஞ்செழியன் ஆணையிட்டான். அவனத செயலாளனான கடலன் வழுதி வாரம் கொட்டும்படி செய்த பள்ளி அமைத்தக் கொடுத்தான். ஏமமாம் என்னும் சொல்லைத் தர்மம் என்றும் படிக்கின்றனர். "ஏ" என்னும் உயிர் எழுத்தை வடமொழியிலுள்ள த வர்க்கத்தின் 4 ஆவத எழுத்தாக அவர்கள் படித்தள்ளமையே இதற்குக் காரணம். ஐராவதம் மகாதேவன் படிக்கும் "தர்மம் " என்னும் இச்சொல்லைப் பாலிமொழிச் சொல் என்று அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி கருதகிறார். ‘பணயன் என்னும் சொல்லுக்குப் பணயக்காரன் என்னும் விளக்கம் தந்த அரசனுடைய கல்தச்சன் என்று அவனைக் கருதகிறார்.
மீனாட்சிபுரம் கல்வெட்டு ~2
"அங்கு' என்னும் பொருள் கொள்ளும்படியும் 'அன்' என்னும் சொல் இங்குப் பொறிக்கப்பட்டுள்ளது. "பெலகண்' என்னும் சொல்லைச் “சகலன் அதாவத சகலை என்று எடுத்துக் கொண்டு நெடுஞ்செழியன் மனைவியின் தங்கை அல்லது அக்காள் கணவன் அந்தச் சகலன் என்று விளக்கம் காண்கின்றனர். இவன் பெயர் "சடிகன்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. இளஞ்சடிகன் தந்தை பெயர் சடிகன். அசோகன் கல்வெட்டுக்களில் சோழன் “சோட' என்று குறிக்கப்படுவதை எண்ணும் போது சடிகன் என்பது சழியன் (செழியன்) என்பதன் வேற்றுமொழி வடிவமோ என்று எண்ண வேண்டியுள்ளது. புகழுர்த் தமிழ்க் கல்வெட்டில் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ என்று வருவதைக் காண்கிறோம். நன்னன் சேய் (மகன்) நன்னன் என்று சங்க நால்களில் வருவதைக் காண்கிறோம். தந்தை பெயரும் மகன் பெயரும் சில சமயங்களில் ஒரே பெயராய் அமைவதை இந்தச் சான்றுகள் காட்டுகின்றன. இந்தக் கல்வெட்டிலும் "ஏமம் என்னும் சொல்லைத் திரு ஐராவதம் மகாதேவன் ‘தமம் என்று படித்து, தர்மம் என்று விளக்கம் கூறுகிறார். பெவகன் என்னும் சொல்லுக்குச் சேவகன் (சேனைத் தலைவன்) என்றும் பொருள் கொள்ளலாம் என்பது அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமியின்

Page 97
கருத்தாகும். சுப்பிரமணிய ஐயர் பின் காணுமாறு படித்த விளக்கம் காணுகிறார்.
"காணியன் நதாளவிரியகு அணி தமாம் இதா நடிஞ் சாறியனர் ஸ்ாலாகானர் இளஞ்சாறிகானர் தாந்தைப் சாறிகானர் செஇய பாளியர்"
காணியன் என்பது கரணியன். கரணியன் என்பத அநலோம (கலப்பு) சாதியைக் குறிக்கிறத. நதா என்பத நாத (தலைவன்) என்னும் பொருள் உள்ள சொல். யகுஅன் என்பத யகஷன் என்னும் சமஸ்கிருதச் சொல். பாளிய் என்பது பாழி.
"கரணிய குலத்தில் பிறந்த புகழ்பெற்ற தலைவனான நீயஷன் இந்த தர்மத்தைச் செய்தான். பாறையைக் குடைந்த இந்தச் சயித்தியத்தை அமைத்தவன் நெடுஞ்சாறியனின் மைத்தனனும் (சட்டகனி) இளஞ்சாறிகனின் தந்தையுமான சாறிகன். திருச்சி நாராயணராவ்’ இந்தக் கல்வெட்டெழுத்தைப் பிராகிருத மொழி என்று தவறாகக் கருதிக் கொண்டு முதலில் பிராகிருதமாகப் படிக்கிறார். பிறகு அந்தப் பிராகிருதத்தைச் சமஸ்கிருதமாக அமைக்கிறார்.
காணியநா நதா விரியகு அநா தமாம
இத நடிஞா சாட்டிய ந ஸாயாகாநா இளாந
சாடிகாநா தாநதைங் சாடிகாநாசே இய பாளிய"
(பிராகிருதம்)
கணகாநாம் நாதா (நாம்) நீயகஷாணாம் தர்மம், இதரநர்திநாம் ஸார்தவாஹகாநரம் எவிம் ஹளாநாம் எப்ரேவுத்டிகாநாம் தணதேயம் ஸ்ரேஸ்டிகாநாம் சைத்ய பாலிகா (சமஸ்கிருதம்)
காணிய ந(ா) ந தாளவிரியகுஅனாதமாஇதாநடிஞ சாட்டியனா
ஸால(ா)கானா ஈலாஞ்சாட்டிகானாதாநதைய சாட்கானசே இயாபாளிய"
I. Subramania lyer, K. V., Historical sketches of ancient dekkan,
Vol. pp. 18-20
2. Narayan Rao, C., The Brahmi Inscriptions of South India,
New Indian Antiguary, Vol, I, pp. 362-376.
87

என்பது கிருட்டிண சாஸ்திரியின் பாடமாகும்.
மீனாட்சிபுரம் கல்வெட்டு - 3
வெள்ளைப் பாறையால் (பளிங்குக் கல்லால்) ஆன மாடி வீடுகளைக் கொண்ட ஊர் வெள் அறை நியமம். இவ்வாறு அமையப் பெற்றிருந்த ஊர் "வெள்ளறை நியமம் என்று வழங்கப்பட்டது. நியமம் என்னும் சொல் சங்ககாலத்தில் வழங்கப்பட்டிருப்பதை ஒப்புநோக்கலாம்.
அச்சுதன் ; இத சமணர் பெயர் என்பதைப் பிற்கால நன்னூலால் உணரலாம். இவன் இந்த வெள்ளறை நியமத்தில் வாழ்ந்தவன். இவன் வேளாண்மையில் சிறந்த விளங்கியதற்காக அரசனால் "காவிதி" என்னும் பட்டம் அளிக்கப்பெற்றவன். இவன் "கழிதிகண்‘ என்பவனின் தந்தை. (அழிசி என்பது போன்ற அமைப்பினை உடைய பெயர் கழிதி, அதிகன் என்னும் பெயர் "கண்" என்று முடிவத போலக் கழிதிகன் என்னும் பெயரும் முடிகிறது.) அச்சுதன் என்னும் தொடரைவேற வகையாகப்பிரித்து, சுதன் என்னும் சொல்லாகப் பிரித்து மகன் என்னும் பொருள் கொள்வாரும் உண்டு. பிண ஊ என்பது பிணைந்த உணவு ஆகும். இந்த அச்சுதன் தறவிகளுக்கு உணவு கொடுப்பித்தான். வேளாளன் ஆனதால் இப்பணியை இவன் செய்தான். சோற்றுடன் தக்கவற்றைச் சேர்த்துப் பிணைந்த உணவைக் கொடுத்தான்.
வெள(அ)(டை)ய நி கா மா த (ா) கொ (போ )
திர(ய)காஸரீதி காஅ(ரிதெ)அஸா தானா பிநாக கொடுபிதோனா
என்று திரு. கிருஷ்ணசாஸ்திரி படிக்கிறார்.
வெளர் அடைய நிகாமதா கொ பொதிர் ய காஸ்திகா அரிதா வ ஸா தானி பினாக கொடு பிதோனி
I. Krishna Sastri, H., Cavern and Brahmi Inscriptions of South lndia, Proceedings and Transactions of the First Orientai Conference, Poona. 1919. pp. 327-348.
2. இருபெரு நியமம் - மதரைக் 355 நியமமூதார்- நற் 45:4: பொன்னுடை நியமம் - பதிற். 15:19, 30:12, கள்ளுடை நியமம் *பதிற் 75:10, கொடி நடங்கு நியமமூதார் - அகம், 83:7: செல்லூர்க்குணாதது. கோசர் நியமம் - அகம் , 90:12 3. நன்இ 258

Page 98
வெள்ளடையில் வசிக்கிறவரின் மகளான யட்சாஸ்தி (இந்தக் குகையை) செய்வித்தாள். சாத்தன் பிணக்கன் இதைச் செய்தான் என்பத சுப்பிரமணிய ஐயரின் பாடமும் விளக்கமும் ஆகும்.
வெளி அடைய நிகமத கொபிதிர் யக ஸிதிக அரிதெ அசதனர் பிணக கொடு பிதோணி
இதன் பொருள்:
வெள்ளடையில் வசிப்பவரின் மகளான யகஸிதி என்பவள் (இந்தக் குகையை) செய்வித்தாள். சாத்தன் பிணக்கன் இதைக் கொடுப்பித்தான் என்பது டாக்டர் டி. வி. மகாலிங்கம் அவர்களின் விளக்கமாகும்.
மீனாட்சிபுரம் கல்வெட்டு - 4
"அறி” என்னும் சொல்லால் அறிவன் குறிப்பிடப் பட்டுள்ளான். அறிவன் முக்காலமும் உணர்ந்தவன் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். நந்தி என்னும் துறவி கணியனாய் விளங்கினான் எனர் பத மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவன் என்னும் சொல் இதனை மேலும் உறுதி செய்கின்றது. கொடிவழி (மரபுவழி) வந்த ஆதன், கொடிஆதன் என்று குறிப்பிடப்பட்டுள்ளான். நந்தியின் மரபுவழியில் வந்த ஆதனும் தறவுபூண்டு அந்தக் குகைகளில் இருந்தவர்களில் ஒருவன்.
கணியர் நதனி கொடிய அவனி
கணி நதன் (இதைக்) கொடுத்தான் என்னும் பாடமும் விளக்கமும் திரு. ஐ. மகாதேவன் தருவனவாகும்.
1. மீனாட்சிபுரம் கல்வெட்டு ~5
இந்தப் பள்ளிகளில் தங்கியிருந்தவர்களில் சிலர் 'வெள்ளறை என்னும் ஊர்வாழ் மக்களின் வழிவந்தவர். ஆகையால், வெள் அறை நிகமத்தோர் என்பதற்கு வாணிகக் குழுவினர் என்று பொருள் கூறுகின்றனர். ஊ என்பது பாசவன் என்று வெற்றிலை வாணிகன் இங்கு குறிக்கப்பட்டுள்ளானர். உலவாணி என்பதற்குக் கேடில்லாதவன் என்று பொருள். வெற்றிலை வாணிகன் ஒருவன் தறவிகளுக்கு உணவு வழங்கும் தொண்டில் பிழைபாடு நேராமல் ஒழுகிவந்தான்; அவன் பள்ளி
1. தொல் பொருள். புறத் . 16 V»

அமைத்துக் கொடுத்தும் உதவினான் என்னும் செய்திகள் இதில் குறிக்கப்பட்டுள்ளன.
2. கீழவளவுக் கல்வெட்டு
உபாசஅணி கொண்டிளவன் கொடிபாளிஈ
என்று திரு. ஐராவதம் மகாதேவன் இதனைப் படித்து,
‘தொண்டி உபாசகன் இளவான் கொடுத்த பள்ளி என்னும் விளக்கத்தைத் தருகிறார்.
உபாச அணி தணி டு லாவணி கொடு பளிர
என்னும் பாடமும், உபாசகனான (சாவகனான) தண்டுலாவன் கொடுத்த பள்ளி என்னும் விளக்கமும் கூடத் தர இயலும் என்பது அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி கருத்தாகும்.
டாக்டர் டி. வி. மகாலிங்கம்
உபாசா அ பொ தெ ணெடுள வோசோ கொடுபளிஈ
என்று பாடம் கொண்டு உபாஸ்கன் ஆபுத்திரன் நெடுவேள் எனினும் விளக்கத்தையும், நெடுவேள் என்பது முருகப்பெருமானையும் திருமாலையும் குறிக்கும் சொல் என்றும், “வத்ஸன்" என்பத மகனைக் குறிக்கும் சொல் என்றும் விளக்கம் தருகிறார்.
திரு. சுப்பிரமணிய ஐயர்,
உபாசா அ போ த நெட்டு ல வோ ச் சோ கொடுபளிா
என்னும் பாடத்தையும், உபாசகன் மகன் நெடுலலோச்சன் அமைத்த குகை என்னும் விளக்கத்தையும் தருகிறார்.
திரு. நாராயணராவ்,
உபாசா அ போ தா நாட்டலாஞச் சோ கொடுபளிஈ
என்னும் முறையில் பிராகிருத மொழியென்று படித்து
அதற்கு,
"உபாத்யாய் -புத்ரஹி நாட்யகர் ஓபாத்யாயயஹற் குட்டபிதா பாணிகா'

Page 99
என்னும் சமஸ்கிருத விளக்கம் கண்டு, உபாத்தியாயரின் மகனான நாட்டியர் கற்பிக்கிற நட்டுவண் வெட்டி உண்டாகிய ஆசிரமம் என்று தமிழில் செய்தியைக் கூறுகிறார்.
3. கொங்கள் புளியங்குளம் கல்வெட்டு ~1
இங்குள்ள கல்வெட்டில் பாறையை வெட்டிக் குறைத்து வசதி செய்த கொடுக்கும் பணியானது " குறை என்னும் சொல்லால் குறிக்கப்பட்டுள்ளத. " உப்பாசவன்' என்பது இங்குள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளவனது பெயராகும். இந்தப் பெயரைப் பற்றிய விளக்கத்தைத் திருவாதவூர்க் கல்வெட்டில் காணலாம். இவன் உப்பாறு என்னும் ஊரைச் சேர்ந்தவன் என்பது உப்பாறுவன்" என்னும் சொல்லால் குறிக்கப்பட்டுள்ளதிலிருந்த தெரிகிறது. "குறை' என்று படிக்கப்பட்டுள்ள பகுதியைக் 'கூற' என்று படித்து அதற்குக் குன்று என்று விளக்கம் கண்டு இவனது பெயரை உப்பாசகன், உப்பாறுவன் என்று படித்து அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி விளக்கம் காண்கிறார். "குறை என்று படிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதியைத் திரு. ஐராவதம் மகாதேவன் 'கூற' என்ற படித்தக் "கூரை" என்று விளக்கம் காண்கிறார். டாக்டர் டி.வி. மகாலிங்கம் உபாசகனான உப்பாறவன் உறையும் இடம் என்னும் விளக்கத்தையும்,
திரு. கிருஷ்ணசாமி,
குட்டுகொட்டுபிதாவானா 2ளயாசாஅனா (ஊ) பா (ட்டு) வ"
என்னும் விளக்கத்தையும்,
திரு. நாராயணராவ்,
குட்டுகொட்டு பிதாவானா உபாசா அவுவாஇயாட்டுவ"
என்னும் பிராகிருத பாடத்தையும்,
இக்கட்டுரை தமிழ்நாட்டுப் படநூல் நிறுவனத்தின் வெளியீடான 'தமி
8.

உபாட்டு அகுட்டு கொட்டா பிதவான உபாத்யா
யானாம்"
என்னும் அதற்கான சமஸ்கிருத விளக்கத்தையும், ஊபாட்டு அ என்பவன் பொக்கிஷத்துக்காக இதை வெட்டினான் என்னும் தமிழ் மொழிபெயர்ப்பையும் காண்கிறார்.
கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு ~2
"சோறா அதன் என்பது ஒருவன் பெயர். சோறு அளித்த்வன் ஆதலால், சோறா அதன் என்று இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான். உணவு அளித்த பாசவன் "ஊபாசஅண்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது போல், சோறு அளித்த ஆதன் 'சோறா அதன்"(சோறாதன்) என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இந்த ஆதன் சமணர் படுக்கைகளைக் கூறுபடுத்திக் கொடுத்தான். அதனுடன் இவன் பொன் முதலீடும் செய்திருக்கலாம். அல்லது இந்தத் தொகையை இவன் படுக்கைகளைக் கூறுகோடலகு செய்வதற்காகவும் செலவிடப்பட்டிருக்கலாம். இதன் இறுதியில் குறிக்கப்பட்டுள்ள குறியீடு பொன்னின் மதிப்பைக் குறிப்பதாகும்.(இத ஏனையவற்றுக்கும் பொருந்தும்) கோடலகு என்பதற்குக் குன்றின் பொடவு என்னும் விளக்கத்தைத் தந்த கொடையாளியின் பேரைக் சோறாஆதன் என்று அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி படிக்கிறார்.
திரு. ஐராவதம் மகாதேவன், 'குடு கொடலகு ஈத்தவன கெற அதன என
என்னும் பாடத்தைத் தந்த ‘செறா அதண்'என்று இங்குக் குறிக்கப்பட்டுள்ள ஆளின் பெயரைப் படிக்கின்றார்.
டாக்டர் டி. வி. மகாலிங்கம்,
'குறகொபலகு சித்தவர்ை செற அதனர் எனர்
என்னும் பாடத்தையும், "சிறு ஆதன் என்பவன் உறைவிடம் செதக்கியளித்தான்"என்னும் அதற்கான விளக்கத்தையும் தருகிறார்.
ழ்நாட்டு வரலாறு' எனும் நூலில் இருந்து பெறப்பட்டது.

Page 100
AR
AY
必
院妲
S
Ramakrishna Mission
Ministry of Religious A Department of Hindu R
 

制
குத் 2OO6 「
ஒருறிமூறுைறி
லுவல்கள் திணைக்களம்
ଥ୍ରି 2006, குஇைS360இதில்
ದಬಾಡಿಬಿಐಗಿಲ್ಲ දෙපාර්තමේන්තුව
*
3)
fail, Colombo 6 禦
fairs eligious & Cultural Affairs
1 : 2000-11- ܙܶ

Page 101
தொடக்க வைபவம்
தலைமை பேராசிரியர் சி. பத்மநாதன் தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர்
பிரதம விருந்தினர் மாண்புமிகு தில்ல கரலியத்த சுதேச வைத்தியத்துறை அமைச்சர் மற்றும் சமய விவகாரப் பிரதி அமைச்சர்
சிறப்பு விருத்தினர்கள் திரு பி, என். ஜினசேன
செயலாளர். சமய விவகார அமைச்சு
கலாநிதி ஜி. கிருஷ்ணமூர்த்தி பிரதம ஆசிரியர், தினமலர், சென்னை.
பேராசிரியர் கா. சிவத்தம்பி தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர்
பேராசிரியர் த. குமாரவடிவேல் உபவேந்தர், யாழ் பல்கலைக்கழகம்
பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத் உபவேந்தர் கிழக்குப் பல்கலைக்கழகம்
நிகழ்ச்சிநிரல் p. II. 1.00 - . p.. 1 i.30
9.00 - மங்கள விளக்கேற்றல்
9.10 - தேவாரம்
செல்வி பவானி சுந்தரராஜா அபிவிருத்தி உத்தியோகத்தர்
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கணம்
9.20 - வரவேற்புரை
திரு.எஸ். தெய்வநாயகம் உதவிப் பணிப்பாளர். இந்துசமய, கலாசார அலுவல்கள் தினைக்களம்
9.30 - sessi W
சுவாமி ஆத்மகனாநந்தா தலைவர், இராமகிருஷ்ணமிஷன் கொழும்பு
9.40 - தொடக்கவுரை
திருமதி சாந்திநாவுக்கரசன் பணிப்பாளர், இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்
10.00- தலைமையுரை
பேராசிரியர் சி. பத்மநாதன்
10.20 - சிறப்புரை
பேராசிரியர் கா.சிவத்தம்பி
10.50 - சிறப்புரை
பேராசிரியர் ஆர். கிருஷ்ணமுர்த்தி
பி.ப. 1.30. 4.30 - அமர்வுகள் 1, 1
 
 

VM
கலை நிகழ்ச்சிகள்
பி.ப.30 - மங்கள விளக்கேற்றல்
1. Só
1.0
500
5.20
5.0
00
20
6.50
7.2
7。愿0
- தேவாரம்
திரு கனகசபாபதி நாகேஸ்வரன், சிரேஷ்ட விரிவுரையாளர் சப்ரகமுவ பல்கலைக்கழகம்
- வரவேற்புரை
திருமதி சாந்தி நாவுக்கரசன், பணிப்பாளர், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
- சிறப்புரைகள்
பேராசிரியர் த. குமாரவடிவேல் துணைவேந்தர், யாழ். பல்கலைக்கழகம்
- பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத்
துணைவேந்தர். கிழக்குப் பல்கலைக்கழகம்
- திரு. பி. என். ஜினசேன
செயலாளர், சமய விவகார அமைச்சு
- பிரதம விருத்தினர் உரை
மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த சுதேச வைத்தியத்துறை அமைச்சர் மற்றும்
சமய விவகாரப் பிரதி அமைச்சர்
- திணைக்கள நூல் வெளியீடு
த இந்துக்கலைக்களஞ்சியம் - தொகுதி 8 e இலங்கைத் தமிழ்ச்சாசனங்கள்  ைஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்
கலாநிதி இரா.கிருஷ்ணமுர்த்தி
பேராசிரியர் கே. நாச்சிமுத்து தமிழ்த்துறை, கேரள பல்கலைக்கழகம் பேராசிரியர் வி. அரசு தமிழ் இலக்கியத்துறை. சென்னைப் பல்கலைக்கழகம்
- நடனம் - நாட்டியக் கலாமந்திர் மாணவிகள் தயாரிப்பு - திருமதி வாசுகி ஜெகதீஸ்வரன்
- நன்றியுரை
இல் வைபவத்திற் கலந்து சிறப்பிக்குழறு தங்களை
அன்புடன் அழைக்கின்றோம் !
இந்துசமய கலiசார அலுவல்கள் திணைக்கம் சாந்தி நாவுக்கரசன் இல 248 1\1 காலி வீதி, exfiri
ક્રિgiા-.િ

Page 102
· ආරම්භක උත්සවය
器。 එස්. පද්මනාදන් ඕෆිජිර්‍ර්ය එමීරීරිස්
ප්‍රධාන ආරාධිත : စိဝိဒိမိိမိဝိဒ္ဓိဆေး දේශීය ෂෙච්දන් අමානන් සහ ආගමික කටයුතු පීළිබඳ නීශයjජන් අමාතෘ
විශේෂ ආරාධිත ඩී.එන්. පීනසේන මයා ලේකම්, ආගමික කටයුතු අමාතෘකාංශය
ආචාර්ය ආර්. ක්‍රිෂ්ණමූර්ති
පුධාන කතෘ, “බීනමලර්", ඓන්නයී
මහාචාර්ය කේ. සිවතමිබී මීභාඩ්බෝර්ය. එමීරීරිස්
මහාචාර්ය ටි. කුමාරවඩිවේල් උපකුලපතී, යාපනය චීහ්ව වීදනාලය
මහාචාර්ය එස්. රවීන්දුනාත් උප කුලපති ශ්‍රී ලංකා නැගෙනහිර ඊශේෂ වීදනාලය
වැඩසටහන
මීප.ව. 9.00 - පෙ.ව. 11.30
| 910 - භක්ති ගීත
ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව 920 - පිලිගැනීමේ දේශනය
එස්. ෂිතයිවනායගම් මයා.
930 - ආශියසනය
940 - සමාරම්භක දේශනය
1000- සභාපතිගේ දේශනය
· මහාචාර්ය එස්. පද්මනාදන්
1020- විශේෂ කථාව
මහාචාර්ය කොකී, සිවතමීබි
ī I050. විශේෂ කථාව
ආචාර්ය ආර්. බ්‍රිෂ්ණමූර්ති ක්‍රි : ප. ව 1
30 - 430 - සැසියි 1, II
 
 
 

සංස්කෘතික වැඩසටහන ප.ව. 430 -: පොල් තෙල් පහන දැල්වීම
435 - තේවාරම් (භක්ති ගීත)
440 - පිලිගැනීමේ දේශනය
ශාන්ති නාවුක්කරසන් මිය.
ಜ හින්දු ආගමික හා සංස්කෘතීක කටයුතු දෙපාර්තෙමින්තුළු
500 - විශේෂ ආරාධිත අමුත්තාගේ කථාව
මහාචාර්ය කේ. කුමාරවඩිවේල් උප කුලපති, යාපනය වීශේෂ විද2ල්ය
520 - මහාචාර්ය එස්. රවින්දුනාත්
උප කුලපතී, නයි‍ෙගනහිර විශේෂ වීදනාලය
5.40 - බී.එන්. පීනසේන මයා
ලේකම්, ආගමික කටයුතු අමාතෘකාංගය
- ප්‍රධාන ආරාධිත අමුත්තාගේ කථාව
ගරු තිස්ස කරලියද්ද
sāk ieva iera c) (pēc digrācošo ir
620 - පොත් එලිදැක්වීමේ උත්සවය
(දෙපාර්ථමේන්තු ප්‍රකාශකයෝ)
650 - හැදින්වීම
ආචාර්ය ආර්. ක්‍රිෂ්ණමූර්ති
මහාචාර්ය කේ. නාවිචිමුත්තු
දෙමළ අංගය, ශික්රලේ විග්ව් වීදඊලය
මහාචාර්ය. වී, අරසු දෙමළ ඝාභීතාන්‍ය අංගය වෙන්නයී විශේෂී විදහාලීය
720 - නර්ථනය - නාට්‍ය කලා මන්දිර් සිසු පිරිස
නඍතාන්‍ය නීර්මාණය - වාසුගී ජෙගරීස්වරන් මිය
750 - ස්තූති කථාව
මෙම උත්සවයට සහභාගි වන ලෙස ගෞරවයෙන් ආරාධනා කරමු.
| 66 epok E) séksaấes 8g 8çeöðščio),
248 : 1)!, ගනු ඝර ශාන්තිනාවුක්කරාසන් ඝාභී -04 අධිඝෂික)

Page 103
Prof. S. Ravindranath
INAUGURAL CEREMONY
Chairman Prof. S. Pathmanathan, Professor Enerius
Chief Guest Hon. Tissa Karaliyadda Minister of Indigenous Medicine & Deputy Minister of Religious Affairs
Guests of Honour
Mr. B. N. Jinasena . Secretary, Ministry of Religious Affairs
Dr. R. Krishnamoorthy Chief Editor, Thinamalar, Chennai
Prof. K. Sivathamby Professor Emerius
Prof. T. Kumaravadive Vice Chancellor, University of Jaffna
Vice Chancellor, Eastern University of Srilanka
PROGRAMME 900 AM - 11:30AM 9:00 - Lighting the Oil Lamp
9.10 - Recital of Devaram
Miss Bavani Sumthararajah, Development Assistant Department of Hindu Religious & Cultural Affairs
3. 9.20 - Welcome Address
Mr. S. Theivanayagam,
ASSt. Director Department of Hindu Religious & Cultural Affairs
9.30
Benediction Srimath Swami Athmaghanananda Head, Ramakrishna Mission, Colombo.
940 - Inaugural Address
Mrs. Shanthi Navukarasan, Director, Department of Hindu Religious & Cultural Affairs
, 10.00- Address by Chairman
Prof.S. Pathmanathan
10.20 - Address
Prof K. Sivathamby
10.50 - Address
Dr. R. Krishnamoorthy
g 1.30 - 4.30 - Session 1, li
 
 
 
 

CULTURAL PROGRAMME
4.30 P.M. - Lighting the Oil Lamp
4.35PM - Recita of Devara
4.40 P.M.
5.00 P.M.
5.20 P.M.
5.40 P.M.
6.00 PM.
6.20 PM,
6.50 P.M.
ar
Mr. Kanagasabapathy Nageshwaran, Senior Lecture, University of Sabragamuwa
J
Mrs. Shanthi Navukarasan, Director, Department of Hindu Religious & Cultural Affaifs
Address by Guests of Honour
Prof. K. Kumaravadivel Vice Chancellor, University of Jaffna
Prof. S. Ravindranath Vice Chancellor, Eastern University
Mr. B. N. Jinasena Secretary, Ministry of Religious Affairs
Address by Chief Guest
Hon. Tissa Karatiyadda Minister of indigenous Medicine & Deputy Minister of Religious Affairs
Book Launching Ceremony (Departmental Publications)
Introduction
Dr.R.Krishnamoorthy Prof. K. Naachchimuthu, Department of Tamil, University of Kerala Prof. V. Arasu
حه پس
ویر
` उट्रे
( в E.
ޤު;"
WM
*R.
r
r
-
s
صر
בי
-هٔ
Department of Tamil Literature, University of Chennai
7.20 P.M. - Dance - Students of Natya Kala Mandir
Choreography: Mrs. Vasugi Jegatheeswaran
7.50 P.M. - Vote of Thanks
You are cordially invited to attend the ceremony.
Department of Hindu Religious Shanthi Navukkarasan & Cultural Affairs Director 248 11 Galle Road, Colombo 4

Page 104
*
நிகழ்ச்சி நிரல்
03.11.2008 வெள்ளிக்கிழமை
s
s
i
i 9tuDñro I. I
"தொல்லியலும் வரலாறும்"
பேராசிரியர் சி.பத்மநாதன் தகைசார் ஒய்வு நிலைப் பேராசிரியர்
it. 1.30 சங்ககால உரோம நாணயங்கள்
கலாநிதி இரா.கிருஷ்ணமுர்த்தி
பிரதம ஆசிரியர். தினமலர், சென்னை
2.00 இலங்கையில் பெருங்கற்பண்பாடு
பேராசிரியர் சுதர்ஷன் செனவிரத்ன தொல்லியற்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்
2.30 பெருங் கற்பண்பாடு
பேராசிரியர் க. இராஜன் தொல்லியல் மற்றும் கல்வெட்டியற்றுறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
அமர்வு II
"தொல்லியலும் வரலாறும்"
தலைக) பேராசிரியர் சுதர்ஷன் செனவிரத்ன தொல்லியற்துறை. பேராதனைப் பல்கலைக்கழகம்
..
3.00 இலங்கையில் பெருங்கற்பன்ைபாட்டுச்
சின்னங்கள் பேராசிரியர் சி. க. சிற்றம்பலம் வரலாற்றுத்துறை, யாழ் பல்கலைக்கழகம்
3.30 சங்ககால நாணயங்கள்
கலாநிதி இரா. கிருஷ்ணமுர்த்தி பிரதம ஆசிரியர், தினமலர், சென்னை
4.00 இலங்கையில் சங்க கால நாணயங்கள்
கலாநிதி ப.புஷ்பரட்ணம் வரலாற்றுத்துறை யாழ். பல்கலைக்கழகம்
 
 
 
 
 
 
 
 
 

s
s
:
8
雛
鄒
04.11.2008 சனிக்கிழமை
அமர்வு II "சங்ககாலச் சமுகம்"
ప్రణాఫ}} கலாநிதி துரை மனோகரன் தலைவர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
Pe de %0}{#រួk
9.10 சங்ககாலச் சமுகப் பிரிவுகள்
பேராசிரியர் பெ. மாதையன் தலைவர். தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம்
9.40 சங்ககால மகளிர்
கலாநிதி எஸ். யோகராஜா முதுநிலை விரிவுரையாளர். தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்
10.10 சங்ககாலத் திருமண நடைமுறைகள்
கலாநிதி மனோான்மணி சண்முகதாஸ் முன்னைநாள் ஆய்வாளர். கக்கயின் பல்கலைக்கழகம். டோக்கியோ
10.40 தேநீர் இடைவேளை
10.50 சங்ககாலப் பென் புலவர்கள்
வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்
GODra IV
šš (k 等 s
சங்ககாலச் சமுகம்
蔥@欲y@後 பேராசிரியர் பெ. மாதையன்
poldo
11.20 சங்ககாலப் போர் முறைகள்
GJIT effuur s. 69ryas தலைவர். தமிழ்த்துறை.சென்னைப் பல்கலைக்கழகம்
11.50 சங்ககாலச் சமுதாயம்
கலாநிதி ந. ரவீந்திரன் உபபீடாதிபதி கல்வியியற் கல்லூரி, வவுனியா
கலாநிதி வ. மகேஸ்வரன் முதுநிலை விரிவுரையாளர். தமிழ்த்துறை:
பேராதனைப் பல்கலைக்கழகம்
12.50 சங்ககால அரசர்களும் புலவர்களும்
கலாநிதி சி. விசாகரூபன் முதுநிலை விரிவுரையாளர். தமிழ்த்துறை,
யாழ் பல்கலைக்கழகம்

Page 105
அமர்வு V "மொழி, இலக்கியம், கலை"
seederal
f. Lu 2.00 சங்க நூல்களில் அறிவியற் சிந்தனைகள்
பேராசிரியர் வி. அரசு, தமிழ்த்துறை
சென்னைப்பல்கலைக்கழகம்
2.30 பட்டினப்பாலை
பேராசிரியர் பெ. மாதையன்
3.00 சங்க இலக்கியங்களில்
சமஸ்கிருத மொழிச் செல்வாக்கு பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர் முன்னைநாள் பேராசிரியர் : இந்துநாகரிகத்துறை,
பாழ். பல்கலைக்கழகம்
3.30 பதிற்றுப் பத்து கூறும் அரசியல் அறங்கள்
பேராசிரியர் கே. நாச்சிமுத்து தலைவர். தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம்
4.00 மதுரைக் காஞ்சி புலப்படுத்தும் வாழ்வியல்
Gug Taifu Gas. elgoor safa)b, தமிழ்த்துறை, : பேராதனைப் பல்கலைக்கழகம்
4.30 ஆற்றுப்படை இலக்கியங்களில்
சமுக உறவுகள் கலாநிதி துரை மனோகரன் தலைவர். தமிழ்த்துறை,
பேராதனைப்பல்கலைக்கழகம்
8.00 சங்க காலத்தில் களவொழுக்கம் திரு. ரூபவதனன் vn விரிவுரையாளர். தமிழ்த்துறை. ஊவா பல்கலைக்கழகம்
 
 
 
 
 
 

08.11.2008 ஞாயிற்றுக்கிழமை
Supra VI "சமயமும், பண்பாடும்"
தலைமை பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர்
(p. 8.00 தேவாரம்
9.10 சங்ககால தத்துவச் சிந்தனைகள்'
பேராசிரியர் எஸ்.கிருஷ்ணராஜா தலைவர். மெய்யியல்துறை யாழ் பல்கலைக்கழகம்.
9.40 சங்ககால வைணவம்
பேராசிரியர் அ.சண்முகதாஸ் தகைசார் ஒய்வு நிலைப் பேராசிரியர்
10.10 சங்ககாலச் சமயமும், நம்பிக்கைகளும்
திருமதி சோதிமலர் ரவீந்திரன் முதுநிலை விரிவுரையாளர். தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
10.40 தேநீர் இடைவேளை
Sudira VIII
兹 ● 数 3 சமயமும், பண்பாடும்
தலைமை பேராசிரியர். கே. நாச்சிமுத்து
type
11.00 சங்க இலக்கியத்தில் வைதீக சிந்தனைகள்
பேராசிரியர் வி. சிவசாமி தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர்
11.30 சங்க காலத்தில் சைவநெறி
கலாநிதி மா.வேதநாதன் தலைவர். இந்து நாகரிகத்துறை. யாழ். பல்கலைக்கழகம்
12.00 பரிபாடலிற் சமய வழிபாடுகள்
திருமதி நாச்சியார் செல்வநாயகம் முதுநிலை விரிவுரையாளர், இந்து நாகரீகத்துறை. யாழ். பல்கலைக்கழகம்

Page 106
அமர்வு VIII  ̈ :,,,& ·:•;::,,,,,ኛ•-•ነ, , • • •(‹‹‹' , 8 ·:::::, • • •:❖•፥ ,:,፥ "நுண்கலைகளும், வாழ்வியலும்"
தலைமை : பேராசிரியர் சி. மெளனகுரு, தலைவர். நுண்கலைத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்
t L
12.30 சங்ககாலக் கட்டடக்கலை
திரு. க. இரகுபரன் முதுநிலை விரிவுரையாளர். மொழித்துறை. தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
2.00 சங்ககாலக் கலைகள்
திருமதி கிருஷ்ணவேணி நோபேட் தலைவர். நுண்கலைத்துறை. யாழ். பல்கலைக்கழகம்,
2.30 சங்ககாலத்தில் ஆடைகளும்,:
அணிகலன்களும் திரு.கனகசபாபதி நாகேஸ்வரன் முதுநிலை விரிவுரையாளர், மொழித்துறை, சப்ரகமுவ பல்கலைக்கழகம்
8.00:சங்ககாலத்தில் வாசனைத்
திரவியங்களின் பயன்பாடு கலாநிதி செ.சிவசுப்பிரமணியம் முதுநிலை விரிவுரையாளர். தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்
3.30 சங்ககாலத்தில் கூத்துக்கலை
பேராசிரியர் சி. மெளனகுரு, தலைவர், நுண்கலைத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்
69LDİran IX
சங்ககாலமும் கல்வியும்
தலைமை பேராசிரியர் சபா. ஜெயராஜா முன்னைநாட் பேராசிரியர் கல்வியியற்றுறை, யாழ் பல்கலைக்கழகம்
4.00 பல்கலைக்கழகங்களில்
சங்க இலக்கியப் பயில்வு பேராசிரியர் எம். ஏ. நுஃமான் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
4.30 சங்ககாலத்துக் கல்விச் சிந்தனைகள்
திரு உ. நவரத்தினம் பணிப்பாளர், தமிழ்த்துறை, தேசிய கல்வி நிறுவகம்
 

இ ▲ර් 2වැසී)', 'Unoෙ% ඝණ්,
திசும் டுன்றும் பிறர் ஆவw டுேதலும் தணிதலும் அவற்றுேwன்ன
ல் சிற்றும் புரவa அன்றே, வாழ்தல்
இனி என மகிழ்ந்தன்றும் இல8ம முனிவின், இன்னன் என்றலும் இலமே, மீன்னொரு വത്തി) ൽ ടീ കൃത്ള, മൃത് கல்பெடுன் இங்கும் மல்லல் பேர் பற்று நீர்வழிப்படுஉம் புணைபோல், ஆர் உயிர் முறை வழிப்படுஉம்" என்UaதருவேM 2Acசியின் தெளிந்தனம் ஆகலின், மne3யின் பெரிசிே0ை வித்தலும் இலமே, சீரியோரை இகழ்தல் அதனினும் இலமே.
- கணிபன் பூங்குன்றனர்.

Page 107


Page 108
தமிழின் பெருமை
இப்போது கிடைக்கும் பழைய தமிழ்ச் செய்யுட்களில் சில கிறிஸ்து அப்தத்தின் தொடக்கத்தில் இயற்றப்பட்டவை ஆதலால் தமிழ் இலக்கிய சரிதம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னமேயே தொடங்கியுள்ளது. இப் பெருமை எல்லா மொழிகளுக்கும் உரியதன்று மலையாள மொழியில் கிபி பதினாலும் நூற்றாண்டிலும், தெலுங்கு மொழியில் பதினோரம் நூற்றாண்டிலும், கன்னட மொழியில் ஒன்பதாம் நூற்றாண்டிலும் ஆதி இலக்கியங்கள் தோன்றின் இப்பொழுது பல தேசங்களிற் பயிலப்பட்டு பெருஞ் சிறப்புடன் விளங்கும் ஆங்கில் மொழிகளிலேகூட இலக்கியம் முதன்முதலில் தோன்றியது கிபி ஒன்பதாம் நூற்றண்டில்தான். ஆரியம், சீனம்'லத்தீன், கிரேக்கு எபிரேயம் முதலிய ஒரு சில மொழிகளில் உள்ள ஆதி இலக்கியங்களே தமிழ் இலக்கியங்களின் அளவு பழைமை வாய்ந்தவை.
III
I
சங்கக் கவிஞர்கள்
இங்கே காட்டிய செய்யுட்
சித்திரங்களிலெல்லாம் கருத்தின் II
எளிமையும் நேர்மையும் உண்மையும்
i) L2öfERTILIX2TMLLIä சித்திரிப்பதில் ஆர்வமுடையவர்கள்
ஆத்ம குணங்களாக " ། விளங்குகின்றன. சங்க காலத்துக் : கவிஞர்கள் gag: fl. Mae hi'n ffili
தெளிந்த அறிவுக்கு எட்டாத மயக்கப் பொருள்களில் மனத்தைச் செல்லவிட்டு அவர்கள் குருட்டாட்டம் ஆடவில்லை. Illinuli கடநுதல்ே அவர்கள் பெரும்பாலும் மேற்கொள்ளவில்லை மக்கள் |(.| opl5 Califficial:Dilla IITL ରାuଭାliquit | ୬hଣୀଣୀ । எல்லாவற்றின் மீதும் பேரார்வம் கொண்டிருந்தனர். அவர்கள் கையாண்ட ' தமிழ் அவர்களது கருத்துக்களை F வெளியிடுவதற்கு ஏற்ற இனிய அழகிய கருவியாக வாய்ந்திருந்தது சுவைத்துச் சுவைத்துத் தேர்ந்தெடுத்த சொற்கள் பொருள் ததும்பும் தொடர்கள் கருத்தோடு பிணைந்து இயலும் இனிய இசை அழகு நிரம்பிய வடிவங்கள் உணர்ச்சி ததும்பும் செய்யுட்கள் இவை யாவும் செறிந்தவை சங்க இலக்கியங்கள். நவில் தொறும் நூல் நயம்போலும் எனத் திருவள்ளுவர் கூறியுள்ளது இந்த இலக்கியங்களைக் கருதியே போலும்
-Rப் வையாபுரிப்பிள்ளை
 
 
 
 
 
 
 
 
 
 

அச்சுப்பதிப்பு:கௌரி அச்சகம், கொழும்பு 3