கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆரோக்கியவாழ்வு அல்லது நோயணுகா நெறி

Page 1


Page 2


Page 3

ஆரே
ா க் கி ய
வாழ் அல்ல து வு
G
sh IT
யன கா ெ
ந றி

Page 4

ஆரோக் கி ய வாழ் வு
அல்ல து
நோய னு கா நெறி.
(யாழ்ப்பாணம்) சங்குவேலி வி . சக்தி வே ல்
இயற்றியது.
1936
உரிமை
ஆக்கியோருடையது. விலை வெள்ளி 1.

Page 5

நூன்முகம்
மக்கள் இகபரசுகங்களை இனிது பெறுதற்குக் கேகாரோக்கியம் இன்றியமையாததா யிருத்தலினல், இதுவரை பல புத்தகங்கள் ஆரோக்கியம் என்னும் விஷயமாய் வெளிவந்திருப்பினும், இன்னும் எத்தனை நற்பயன் தாத்தக்க புத்தகங்கள் இவ்விஷயமாய் வெளி வரினும் அவை எல்லாம் அவசியம் வேண்டப்படுவன வென்பது எமது நம்பிக்கை,
தாமின்புறுவதுலகின்புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந்தார்.”
(திருக்குறள்)
ஆகவே யாம் அறிந்தவை எமதுமட்டிற் பயன் படுவதோடு கின்றுவிடாமல், ஏனையோரும் அவை களின் பயனை அடைய வேண்டுமென்னும் ஆசையு ளேமாய், எமது சிற்றறிவிற்றேர்ந்தனவும், வறியோ ரும் செல்வரும் கைக்கொள்ளத்தக்கனவுமான சிலவ ற்றை, எல்லோரும் விரும்பத்தக்க முறையில், வாச கர்களின் மனம் சலிக்காதவிதம் இயன்ற அளவு சுரு க்கமாய் ஆரோக்கியவாழ்வு அல்லது நோயனுகா நெறி' என்னும் பெயரினல் இங்கு தருகின்றனம்,
“என்னிலாரு மெனக்கினியாரில்லை’ எனத் திரு நாவுக்கரசு நாயனுர் கூறியவாறு தம்மில் அபிமான மில்லார் அரியராகலின் இதனேக்காணும் அன்பர்கள் அன்னவரும் தாம் வாசித்தும் தம் நண்பர்கட்கு அறிமு கம் செய்து ம் எ ம்  ைம ஊக்கப்படுத்துவதோடு

Page 6
“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு”
என்னுந் திருக்குறளின் படி தம் அறிவுக்குப்பொ ருத்தமானவைகளை அனுஷ்டானத்திற்கொண்டு அவற் முல் வரும் பயனப் பெற்று இன்புறுமாறு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்க்கிக்கின்றேம்.
எமது வேண்டுகோளுக்கிசைந்து க ம து பல வேலைகளுக்கிடையிலும் இப்புக்ககத்தைப் படித்தப் பார்க் தி இதற்கு ம கி ப் பு  ைர க ள் எழுதிய Dr. ஆ. விஸ்வலிங்கம் அவர்களுக்கும், Dr. அ. துரைச் சாமி அவர்களுக்கும், தம் சிரமத்தைப் பொருட்படுத் தாது எமது கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட்டு தவிய கிரு. அ. சிவகுருநாதன வர்சளுக்கும், என்பூம் எமக்கு முகமலர்ச்சியுடன் உதவி புரிந்து வந்6வரும் இப்பொழுது இகன்ன வெளியிடுவிக்கவருமான எமது சகோதரர் கிரு. வி. பீதாம்பரம் அவர்களுக்கும் எமது நன்றி உரியதாகும். இவைபோன்ற கைங் சரியங்கள் பல இவர்கள் இன்னும் இயற்றி வருதற்குவேண்டும அறி வும், ஆற்றலும், திருவும், ஆயுளும் மே ன் மே லும் பெருக ஆண்டவன் அருள்புரிவாராக.
இப்பதிப்பிற் காணப்படும் ஆகாரங்களைப்பற்றிய புள்ளி விவரங்கள் பல வைத்தியப் புத்தகங்கள், சுகா காரப் புத்தகங்கள் முதலியவைகளினின்றும், பேராசி ரியர் யோன் லூயிஸ் ருெ?செடேல், PH. D., DSC., F.1.C.அவர்களின் வெளியீட்டினின்றும், பேராசிரியர் S. P. su IIT G M. B., M. S. L. முதலியவர்களின் ஆராய்ச்சியைத் தழுவி P. S. பார்த்தசாரதி &யங்கார் B.A., B.L. அவர்கள் எழுதிய கட்டுரைகளினின்றும் எடுத்துத் தொகுக்கப்பட்டன. ஆதலால் அவர்களுக்கு
என்றும் நாம் கடமைப்பட்டுள்ளேம்.
வி. சக்திவேல்.

Dr. ஆ. விவிலவலிங்கம் அவர்கள் எழுகிய மதிப்புரை.
சாயமே கோயிலாக ' என்றும், 'உடம்பெனு பனையகத்து’ என்றும், எங்கள் சமயகுரவர் தேவார க்தில் உடம் பின் மகத்துவத்தை எடுக்கக்கFட்டிய ருளினர் ஆன்மாவின் கோயிலாகிய இந்தச் சரீர ததை நோய்வாய்ப்படாது பாதுகாத்தல் நாம் செய் யும் அறங்களுள் ஒன் முகும், ஆன்மா அடையவேண் டிய பெ ரும் பே அறு முக்தியின்பமாக வின், பெற கில்' என்றும், அதனைப் பெறுதற்குரிய கருவி யாகிய ச ரீ ர ம் சுகமாயிருக்குமாறு "நோய்க்கிடங் கொடேல், என்றும், ஒளவைப் பிராட்டியார் கூறியுள் விரு ர். பண்டை நாளில் ஆன்றேர் கண்டு கூறிய இவ் விநிதி மொழிகள் பிற்காலத்திற் பெரும்பாலும் அனு ட்டானச் தில் தமிழ்மக்சளுள் இல்லையாகவே, நம் முன்னேர் ஆரோக்கியத்தில் எவ்வளவு மேன்மை பெற்று இருந்தனரோ அவ்வளவு கீழ் நிலையை இன்று எம்மக்கள் அடைந்துள்ளனர். கீழ் நாட்டிலும், மேல் நாட்டிலுமுள ள மக்கள் பவுரும் இக்காலத்தில் சரீரத் தேர்ச்சியின் அவசியத்தை உணர்ந்து அதற்குரிய முயற்சிகள் பல புரிந்து முன்னேற்றமடைந்து வருகி ன்றனர். ஆனல் தமிழ் என்னும் தெய்வமொழி யுடைய நடநாட்டு மச்களிடத்தில் மாத்திரம் சரீர வளர்ச்சி குன்றியிருக்கல் வருக்கத் தக்கது.
இது சமயத்தில் திரு. வி. சக்திவேல் அவர்கள் எழுதிய ‘ஆரோக்கியவாழவு என்னும் இப்புத்தகம் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நமது மக்களைத் தூண்டி

Page 7
எழுப்பி இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஊக்கம் உண் டாக்கக் கூடியதாயிருக்கிறது. ஆதலால் இவர் எடுத் துக்கொண்ட விஷயம் நாம் எல்லோரும் பாராட்டத் தக்கது. ஆன்ருேர் கருத்துக்கும் ஆராய்ச்சியாளர் துணிபுக்கும் ஒப்ப எழுதப்பெற்றது இப்புத்தகம். இதில் சுகாதார விதிகளும், அவைகளை அனுஷ்டித்து வருவதால் எய்தும் நன்மைகளும், உணவுப் பொருட் களின் டாகுபாடும், உயிர்ச்சத்து, குணம் முதலியவை களும், அவைகளை உபயோகிக்கும் விதமும், காலத்துக் கும் வாழ்வுக்கும் தக்கபடி ஒவ்வொருவரும் உணவு
காள்ளக்கூடிய மு  ைற யும், உடல்வளர்ச்சிக்குரிய இன்னும் பல சாதனங்களும், இலகுவாக எல்லோ ரும் விளங்கத்தக்கதாய் சுருக்கமாய் எழுதப் பெற்
றுள்ளன.
இவர் வயசினல் இளைஞராயிருந்தும் இவ்விஷய மாகத் தக்க ஆராய்ச்சியுடன் எழுதியிருப்பது வியப் புச்குரிய காரியம்! இதனை வாசிப்போர் இதல்ை நன்மை பெறுவாரென்பது எனது நம் பி க்  ைக திரு. சக்திவேல் அவர்கள் காலத்தில் இந் நூலைப்பெரு ப்பித்து எழுதித் தமிழகத்துக்கு இன்னுந்தொண் புரிவாராக. இவரைப்போலும் இளைஞர் பலர் எம்மக் கள் அவசியமாக அறியவேண்டிய பல விஷயங்களில் மனதைச் செலுத்தித் தேறி, அக்கேறலின் பயனுய் நாமெல்லோரும் முன்னேற்றமடைதற்குத் தொண்டு
செய்வாராக.
'உமை வாசம்,
கோலாலம்பூர், ஆ. விஸ்வலிங்கம்.
தா.த -ஞ) சித்திரை-மீ 1-ம்உ

Dr. அ. துரைச்சாமி அவர்கள் எழுதிய
மதிப்புரை.
"ஆரோக்கிய வாழ்வு அல்லது நோயனுகா நெறி என்னும் இப்புத்தகம் எனது பார்வைக்கு அளிக்கப் பட்டது. இதன் ஆக்கியோர் திரு. சக்திவேலாவர். இவர் பத்து வருடங்களாக எனக்குத் தெரியப்பட் டவர் கல்வி கேள்விகளிற் சிறந்தவர். சமூகசேவை செய்வதில் மிக்க ஆர்வங்கொண்டவர். இங்கு சில காலமாக நிலவிய 'தமிழ்ச் செல்வன்’ என்னும் பத்திரி கையில் மருத்துவப் பகுதியின் கீழ் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதிப் பலராலும் நன்குமதிக்கப்பட் டவர். ஆதலால் இவரைப்பற்றி இன்னும் அதிகமாகச் சொல்லவேண்டியதில்லை.
இப்புக்ககத்தை முழு தும் படித்துப்பார்க் தேன். இதில் மக்கட் பிறவியின் மாண்பும், மக்கள் ாேய்வாய்ப்படுவதற்குர் காரணங்களும், அவற்றை நிவர்த்திக்கும் மார்க்கமும், உணவுப் பொருட்களின் தன்மையும், ஆகார முறைகளும், உடற்பயிற்சியின் அவசியமும், அதற்குரிய சில வழிகளும், இன்னும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய பல அரிய விஷயங்

Page 8
களும் துணுகிய ஆராய்ச்சியோடு பெய்யப்பட்டிருக் கின்றன. ஆகவே இதை ஓர் 'ஆலோசனைக்குரிய வீட்டு வைத்தியன்’ எனக் கூறலாம்.
விடுகளில் ஆரோக்கியம் பெருகுதற்குப் பெரி தும் பொறுப்பாளிகளாயுள்ள நமது பெண்மணிகள் ஒவ்வொருவரும் விசேஷமாக அறிந்து நாடோறும் அனுஷ்டித்து வரவேண்டிய சீரிய விஷயங்கள் பல இப்புத்தகத்தில் பொதிந்திருத்தலால் இ த ன் பிரதி ஒன்று இல்லங்கள்தோறும் இருப்பின் மிக்க நன்மை பயக்கு மென்பது எனது அபிப்பிராயம்.
கோலாலம்பூர்,
துரைச்சாமி. li5-4-36. அ

Φ ள்ளுை ற
LJä 3.h.
ஆரோக்கியத்தின் இன்றியமையாமை
காற்று 影 金 ● A 6
சூரிய வெளிச்சம் . 20
தண்ணிர் e a Ad & 28
உணவு 8 - 8 36
நல்லொழுக்கம் . 8 8 80
உடலோம்பல் 8 d. d 87
പ്രl.ഖുഞ്ഞ് 8 d. ... 107

Page 9

கடவுள் அதி
மண்ணுலகத்தினிற் பிறவி மாசற எண்ணிய ப்ொருளெலா மெளிதின் முற்றுறக் கண் ணுகலுடைய தோர்களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.
பொன்போல மிளிர்வதோர் மேனியினிர்
புரிபுன் சடையீர் மெலியும் பிறையிர் துன்பே கவலை பிணியென்றிவற்றை
நணுகாமற்றுரந்து கரந்துமிடீ ரென்போலிக ஞம்மை யினித்தெளியா
ாடியார் படுவதிதுவேயாகி லன்பேயமையும் மதிகைக் கெடில
வீரட்டானத்துறை யம்மானே.

Page 10

ஆரோக்கிய வாழ்வு
அல்லது
நோயனுகா நெறி.
ஆரோக்கியத்தின் இன்றியமையாமை.
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன்கோயில்கொண்டானென்று உடம்பினை யானிருந்தோம்புகின்றேனே.
(திருமந்திரம்.)
6Tண்ணரிய பிறவிகளுள்ளுஞ் சிறந்த மானிடப்
பிற வியெடுத்த சீவர்கள் அறம், பொருள், இன்பம்,
வீடாகிய நால்வகைப் புருஷார்த்தங்களை
ஆரோக்கி யும் பெற்றுய்ய வேண்டுமாதலால் அவற்
யத்தின் றிக்னயடைதற்கு அனுகூலமான இந்தச்
அவசியம். சரீரத்தை என்றும் ஆரோக்கிய நிலையில்
வைத்திருத்தல் மக்கள் கடனுகும்.

Page 11
2 ஆரோக்கிய வாழ்வு
நாம் நமது தேக சுகத்தில் சிரத்தையற்றிருப்பின் நம்முடற்கூறுகளின் கிரமமான தொழில்களுக்குஇடை யூறுகள் உண்டாகும். கேசதிடம் கெடும். கமது கவ?ல இன ப வாழ்வுக்குச் சஞ்சலம் ஏற்படும். யீனத்தால் ஈற்றில் உயிரையே உடலினின்றும் பிரி வரும் கேடு, த்து எமன் வசம் ஒப்பு விக்கத் த க்க அனேக சொடிய நோய்கள் அணுகத்தக்க தாயிருக்கும். மேலான பிறவி எடுத்த நாம் நமக்கு வாய்த்திருக்கும் அருந்தருணத்தை உரிய வழியில் உபயோகிக்க இயலாதவராய் இப்பிற வியினல் அடை யச்கூடிய பெரும்பேறுகளை இயன்ற வரையிலாகுதல் பெருமல் நம் சென்ம விரோதிகளாக்கிக் கவலைப்படு வோம்; ஆதலினல் தேகாரோக்கியத்தின் அவசியத் தை யுணர்ந்து சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து நோய் நம்மைச் சாராமல் தடுப்பதே எளிது. 35ர்ய் இம்மை அணிகிய பின் அதிலிருந்து விலகுதல் பெரும் கஷ்டமாயும் அரிதாயுமிருக்கும். ஆகையால் எமது தேகசுகத்தில் என்றும் எச்சரிக்கையோடிருத்தல் வேண்டும். v
நோயைப் பற்றிய பொறுப்பு வைத்தியன் கையி லுள்ளதென நம்மவருள் அநேகர் அபிப்பிராயங் கொள் கின்றனர். இது எம் அறியாமையால் நமது சுகத் விண்யும் தவருPன எண்ணம். நோய் நம் திற்குப் மை வந்த னுகாமற்றடுப்பதும், அணுகிய பொறுப்பா பொழுது அதிலிருந்து நம்மைச் சுகப் 6tfast uni? படுத்தவதும் நம்மைப்பொறுத்துள்ளன. வைத்தியன் நோயாளனுக்கு வழிகாட்டி

ஆரோக்கியத்தின் இன்றியமையாமை 3
உதவி செய்வதேயன்றி, வைத்தியனையே முழுப் பொ றுப்புடையணுக எண்ணி சம து சுகத்தை அலட்சியம் செய்து வைத்தியனைக் குறை கூறுவது புத்தி பல்ல. அது பற்றியே தெய்வப் புலமைத் திருவள்ளுவரும்
"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான் றப்ப நாற்கூற்றே மருந்து.” என்னுந் திருக்குறளில் நோயாளி பின் பொறுப்பே நோய் தீர்வதற்கு முதல்தரமான கெனத் தெரிவிப் பான் கருகி “உற்றவன்' என முதலிற் கூறியிருப்பது கவனிக்கற்பாலது.
உடல் சீவாத்ம மந்திரமானதாகையால் இதை நோய் நுடக்கின்றி இயற்கை வழியில் ஊட்டி ஆட்டி உறக்கி உயிர்க்கும் அழகுச்சிலையாக்கல்வேண்டும், தூய சிந்தையும், உயரிய நோக்கமும், நல்லொ ஆரோக்கி ழுக்சமும், கடவுள் பக்தியும், அன்பும், யததற்கு அடக்கமும், ஆண்மையுமுடையராயிருக் 6 தலும் முக்கியமான சில சுசாதார விதிகளை நாள்தோறும் நாம் அனுஷ் டானக்கிற் கொண்டுவருசலும், வியாகிகளினின்றும் விலகுகற்குத் த ஃணயாய் நிற்பன. பொற் சாப்புக் கா சைப்பட்டுச் சேற்றிலிறங்கிப் புலிக்கிரையான மூடப் பிராமணனைப் போல முன் பின் யோசனையின்றி நாகரீக மயச்கத்தி ணுல் அனுசாரங்களுக்கு அடிமைப்படின் பின் துன்பப் பட நேருமாதலால் டாம் பீக வாழ்க்கையில் அகப்படா மல் கூடியவரை இயற்கை யன்னேயுடனிசைந்து சிக்கன மாகவும். இலட்சணமாகவும் சிவிக்கப் பழகுதல் வேண்
ம்ெ

Page 12
4 ஆரோக்கிய வாழ்வு
இன்று மேலைத் தேசங்களிளெல்லாம் ஆரோக்கி யம் பெருகி வருகிறதென்பதும் நமது தேசங்களில் அவ்விதமின்றி ஆரோக்கியம் பெரும்பாலும் குறைந்த நிலையிற் காணப்படுகிற தென்பதும் நம் நாடுகளின் அறிஞர் கூற்று. நமது தேசங்கள் ஆரோக்கிய கொள்ளை நோய் தொற்று நோய்களுக் fმბouა. கெல்லாம் விளை நிலமாயிருக்கின்றன. இதற்குக் காரணம் நமக்குள் சிறந்த வைத்தியர்களும் தக்க மருந்துகளும் இல்லாகிருத்த வல்ல. இவை ஓரளவிற் பாதித்தல் கூடும். ஆனல் போதியளவு சத்துள்ள ஆகாரங்களும் சுகாதார வசதி களும் பிறநாடுகளில் பொது ஜனங் நாம் செய் களுக்கு அகப்படுதல் போல நம் நாடு யத் தக்கது களில் இல்லாதிருத்தலும் இவைகளைச் எது? சீர்ப்படுத்தப் போதியபடி நம்மவ:விக் கமெடுக்காமையுமே நம் நாடுக ளில் ஆரோக்கியம் பெருகாமைக்கு முக்கிய குறைகளாகும்.
மகாத்மா காந்தியடிசள் தமது கிராம யாத்தினர யைப்பற்றி அறிக்கையிட்டபோது கிராம வாசிகள் நாட்டுக் கைத்தொழில், கமத்தொழில்
மகாத்மா முதலியவற்றில் வேண்டியளவு ஊச்கப் காந்தியின் படுவதற்குச் சக்தி யற்றவர்களா யிருக் அறிக்கை. கின்றனரென்றும் அவர்கள் உடல் உரம் அவர்கள்உட்கொள்ளும்சத்தற்ற ஆகாரங். களினலும் சுகாதாரவசதிக் குறைவுகளினலும் குன்றி யிருக்கிறதென்றும் முதலில் அவர்களின் தேகாரோக்

ஆரோக்கியத்தின் இன்றியமையாமை 5
கியத்தைத் திடப்படுத்தும் முயற்சி செய்யத் தக்க தென்றும் அம்முயற்சியில் தாம் ஈடுபட்டிருப்ப்தாயும் கூறியிருக்கின்றனர். இதை விட மேல் நிலையில் இதர நம் நாட்டுக் கிராமங்கள் இருப்பதாய்த் தெரியவில்ஃல. உதாரணமாக இலங்கையை எடுப்போமாயின் இலங் கையிற் சில மாசங்களுக்கு முன் மலைச்சுரம் மிகவுந் தீவிரமாய்ப் பரவிப் பெரும் சீவ மோசம் செய்திருப்
பதைப் பார்க்கலாம்.
மக்கள் தேகவலு நல்ல நிலையில் இருந்திருக்கு மேல் இக் நோய் இவ்வளவதிகம் பரவுவதற்கிடமிருந் கிராது. உடல்நிலை நன்முயிருக்கும்
நோய் போது இரத்தத்திற் காணப்படும் அணுகுவதன் வெள்ளைக் கிருமிகள் (White Corpகாரணம். uscles) போதியளவு பலமாயிருக்
கும். இவை நோய்க் கிருமிகள் உடம் பை அணுகும் போதி அவற்றுடன் எதிர் கின்று பொருது, அவை தேகத்திலிடம் பெருமற்றடுத் து விடுகின்றன. உடம்பு பலவீனப்பட்டிருக்கும் Quum ழுது இரத்தத்திலுள்ள வெள்ளைக் கிருமிகள் நோய்க் கிருமிகளை வெல்லச்கூடிய ஆற்றலில்லாதிருத்தலால் நோய்க்கிருமிகள் சரீரத்திற் புகுந்து குடி கொள்கின் றன. ஆதலால் வருத்தம் வந்தபின் பரிகாரம் தேடி அலைவதிலும் வருத்தம் வருகற்குக் காரணமாயிருப் பனவற்றை விலக்கி நோயனுகாமற் பாது காத்திக் கொள்வது அறிவுடையார் செயலாம்.

Page 13
* காற்று.
நாம் உயிர் வாழ்வதற்குக் காற்றே முக்கியமாய் வேண்டப்படும். நமது சரீபத்தின் அவயவங்களின் தொழில்சளெல்லாம் காற்றினுல் நடை
கமது சுவாசத் பெறுகின்றன. செருப்பு எரியும் துக்கு உப பொழுது காற்று உட்செல்லாமல் யோகமாகும் அதை மூடி விடுவோமானல் அது காற்று. உடனே அவிந்து விடுவதைக் காண் கிருேம். அது போலவே சீவர்களும் சுவாசிக்காதிருப்பசேல் இறந்து விடுகின்றனர். நாம் சுவாசிக்கும் காற்றும் நெருப்பு எரிகிறதற்கு உதவியா யிருக்குங் காற்றும் ஒன்முகவே இருக்கிறது. இக் காற்றுப் பிராண வாயு என்று சொல்லப்படும் பிாரண வாயு ஆகாயத்தில் சிறிது பாகமாக இருக்கின்றமையி னல் நாம் சஞ்சரிக்கு மிடங்களில் சாற்றுக் கெடாதபடி
பார்த்துக் கொள்ளல் வேண்டும்.
ஆகாயத்தில் நூற்றுக்கு 20.81 பிராணவாயுவும் 79.15 உப்பு வாயுவும் .04 கரிமல வாயுவும் மிகுதியா யிருக்கும்பாகம் சோவியுமாகும். நமது
ஆகாயத்தில் சுவாசத்தில் 16.06 பிராண வாயுவும் பிராண வாயு 79.55 உப்பு வாயுவும் 4.04 கரிமல இருக்கின்ற வாயுவும் மிகுதி நீராவியும் பிற கழிவு l-Jf} 35LO. களுமாயிருக்கின்றன. ஆகவே நாம் சுவாசிக்கு மொவ்வொரு சுவாசத்தி

ஆரோக்கியத்தின் இன்றியமையாமை 7
ழம் எறக்குறைப நூற்றுக்கு ந்ேது பங்கு பிராணவாயு இக்கத்துடன் கலக்கின்றது. அதற்குப்பதில் நாலு பங்கு கரிமலவாயுவும் பிறபொருட்க சரீரத்தில் 2 - L ளும் சரீரத்தினின்றும் வெளிப்படு யோகப்படும் கின்றன. பிராணவாயு நமது தேகத் LJП86LO. திற்குச் சூட்டைக் கொடுப்பதுமன்றி அவயவங்கள் செய்யும் தொழில்களி குல் அவைக்கேற்படும் சோர்வை நீக்கி அவைகளைப் போஷிக்கும் இரத்தத்தைச் சுத்தி பண்ணிச் சரீரம் முழுவதும் பரவச் செய்கின்றது.
சுத்தமான காற்றைச் சுவாசிப்பதைவிட நரம் புக்குக் கிளர்ச்சி கொடுக்கக் கூடியதும் மனவுற்சாகக் ལེར་མཆོངས་ கரத்தக்கதுமான பிறிதொரு சஞ்சீவி சுத்தமான கிடைக்காது. சிலர் குடி வகையை காற்றின் (லாகிரி வஸ்துக்களை) உபயோகிப்பதி b60T66) O. னல் நரம்புக்குக் கிளர்ச்சியும் உற்சாக மும் வருவனவாக எண்ணலாம். உண் மையிலப்படியல்ல. மது தேகத்திலுளள பிராண வாயுவைக் கிரகித்துக் கொள்ளக் கூடுமாதலால் மது வருந்திய சிறிது நேரத்தின் பின் சரீ குடியின்கேடு சக்கில்சோர்வையே உண்டுபண்ணும். ஆதலால் லாகிரி வஸ்துக்களினுபயோ கம் சரீரத்தில் பிராண வாயுவைக் குறைத் துவிடுமென்
பத்ை நாம் கவனித்தல் நன்மை.

Page 14
ஆரோக்கிய வாழ்வு
காற்றுச் சஞ்சரியாத ஒரு அறையில் அல்லது அசுத்தமான காற்றுள்ள விடத்தில் சிறிது நேரம் நாமி * ருப்பின் உடனே சுவாசக் கஷ்டம் அசுத்தக் காற் தலையிடி, சித்தப் பிரமை, தேசத்திற் றினல் விளை க%ள முதலியன உண்டாவதை நாம் պib தீங்கு உணரக்கூடும். இதனுல் சுக்கமான காற்றே சுகத்துக் கேற்ற கென்பது அறியக்கக்கது. கெட்ட காற்றினல் தேகமெலிவும் சுவாசத்தோகூேடிய பலவித நோய்களும் ஏற்படும். சில சமயங்களில் சடுதிமாணங்களும் சம்பவிக்கும். ஆகவே காற்றுக் கெடாமலிருப்பதற் குரியவைகளை நாம் தேடிக்கொள்ளல் வேண்டும்.
நாம் வசிக்கும் வீடுகள் தொழிற்சாலைகள் முதலி யவை காற்று நன்கு சஞ்சரிக்கத் தக்கதாய் அமைக்கப் படல் வேண்டும். அவற்றின்”சன் இp; ல்ைகள், கதவுகள் காற்றேட்டத்திற் காற்றுக்கெடா குக் தடையாயிராதபடி அவைகளைத் மலிருப்பதற்கு திறந்து வைத்தல் நல்லது. கெடக் வழி. தக்க பதார்க்தங்களை வீட்டுக்குவெகு தூரத்தில் குழி தோண்டிப்புகைத்து விடல் வேண்டும். குப்பை முதலியவைகளுக்கு நெருப்பு வைக்கும் போதும் அாரத்திற் போட்டு நெருப்பிடுவது நல்லது. வீட்டிற்குள் அனவசியமான பொருட்களைச் சேமித் து வைப்பதனல் காற்றுக், குறையுமாதலால் அவைகளை வீட்டிற்குவெளியே
வைப்பது நலம்.

காற்ற
விடு பள்ள கிலத்திற் கட்டப்படினும் வீட்டுக் கருகிலிருக்கும் கிலத்தில் குழிகளிருப்பினும் மழை ரேவற்றில் தங்கிச் சேறண்டாகும். வீட்டுத்தர்னம் அதனினின்றும்கெட்ட நாற்றம்வீசும்; -கெர்க்க்கள் கொசு முதலிய விஷ செந்துக்களும் உற்பத்தியைக் பத்தியாகி மலைச்சுரம் முதலிய கோய் குறைக்கவழி. asár விளைவிக்கும். ஆகவே மழை நீர் தங்கா திருக்கும்படி சமமான உய ர்ந்த கிலமே வீடு கட்டுதற்குச் சிறந்தது. மாடுகள் முதலியன கட்டுந்தானங்கள் வீட்டிற்குச் சமீபத்தி லிருத்தலாகாது. மாட்டுத்தானங்களைச் சேறு பட் டழுக்கடையாமற் பார்த்துக் கொள்ளல் வேண்டும். இவ்விதம் செய்யின் கொசுக்களும்பத்தி குறையும்,
பூழலசலம் பிரத்தியேகமான விடத்திலே கழிக்கப் படல் வேண்டும். மலசலம் கெட்டுத்துர்க் கந்தம் வீசு வதால் சில வகை நோய்களும், நமது மலசலங் பாவிப்புக்கு எடுக்கப்படும் சில பொரு
களினுல் விளையும் தீங்கு.
ட்களில் இவற்றின் சாரம் ஊறுவதால் நெருப்புக் காய்ச்சல் முதலிய நோய் களும் , அவற்றிலுள்ள கிருமிகள் (Book Worm) முதலியன பரவுவதால் பாண்டு, காமாலை, வயிற்றுளைவு முதலிய ரோசங்களுமுண்டா கும். ஆகவே மல சலங்களினலிவை நேராமற் பார்த்
றக் கொள்ளல் வேண்டும்.
ஒரு கெட்டபழக்க: . எச்சில் காய்ந்ததும் தூசாகிக்

Page 15
10 ஆரோக்கிய வாழ்வு
காற்றுடன் கலக்கின்றது. இக்காற்றுப் u9,0 J (t,ib 3raQu r ʼ சிக்கப்படும்போது நோய்க்கிடமாகிறது. கூடிபரோகம் பரவுதற்கு இது காரணமா யிருக்கும். கோழை (சளி) மாத்திரமே உமிழத்தக்கது. அதுவும் எச்சிற் படிக்கக் தில் உமிழப்பட்டு Phenol முதலிய எச்சில்உமிழ் விஷக்கிருமிகளைக் கொல்லும் திராவகங் வதால் வரும் களிலொன்முயினும், கொதிக்கிற நீரா கே.ே யினும் ஊற்றி, அதனல் பிறருக்குத் தீங்கு விளையாவண்ணம் பார்த்துக்கொ ள்ள வேண்டும். எச்சில் உமிழ்வதினுல் வருந்தீங்கைப் பலகாலங்களுக்கு முன் கமது முன்னேர் அறிந்திருக் கின்றனர். உதாரணமாகப் பற்றுலக்கும் நேரத்தைச்
கொண்டு பற்றுலக்கினுல் அங்குமிங்கும் எச்சில் உமிழ நேரிடுமெனக்கருதி கடந்துகொண்டு பற்றுலக்கு தல் பாவமென்றுங் கூறியிருத்தல் கவனிக்கற் பாலது
தமது நாட்டில் வீடு, முற்றம் முதலிய விடங்களைச் சுத்தி செய்தவுடன் சாண நீர் தெளித்தலும், சாம் பிரு ணி,குங்கிலியம் முதலியநறுமணப் புகைகளிடுவதும் வழக்கமாயிருக்கிறது. இவை மூடச் செயல்களல்ல. அலகிட்டவுடன் தண்ணீர் தெளிக்கப்படின், தூசு
மேலெழாமல் அடங்கி விடுகின்றது.
பெருக்குதல் கா சு எ க் து கா ய க் ை ':Ñ ೫ மு 5 தி ஆ த  ைத uSão GJ6ë Ga d ய்யத்தக்கது. இம் நோக்கம் பற்றியே நமது நாட டில் அலகிடுதல் காலை மாலையாகிய
அழுக்கடையச் செய்யப்படா தென்

காற்று
குளிர்ச்சியான நேரங்களிற் செய்யத்தக்க தென்றும் வெய்யில் எறி நிலத்திற் சூடுண் டான பின் செய்தல் பாவம் என்றும் சொல்லப்பட்டது. குளிர்ச்சியான வே%ாயில் தூசு மேலெழாம விருப்பதம், சூடான வேளையில் தூசு மேலே எழுவதும் சிந்திக்கத்தக்கது.
துர் நாற்றத்தை அகற்றி விஷக்கிருமி நளைக் கொல் லும் குணம் சாண நீரிற்கு உண்டு. இது இக்காலத் தில் மேனட்டினராலும் ஒப்புக்கொள்ளப் படுகிறது. மேலே சொன்ன புகைகள் மட்டாய் உபயோகிக்கப்படின் கெட்ட நாற்றம் சாண நீர் விசாது. விஷக்கிருமிகளைக் கொல்வ -லிஷக்கிருமி தற்கும், செட்ட நாற்றத்தைப் போ
3,613, G35T6 .
digala bgth, Jeys fluid, Phenol
દv|b திராவ
முதலிய கிராவகங்களை உபயோகிக்க *Ma visio
லாம். அளவுக்கதிகப்படின் இத்திசா
வகங்களின் மணமே தலையிடி முதலிய வற்றைக் கொடுக்கு மாதலால் மட் டாய் உபயோகித்தல் வேண்டும். சாண நீரில் இவ்விதமான குற்றம் இல்லை. சாணத்தைக்கரைத்துக் தெளிந்த நீரே உபயோகிக் கத்தக்கது.
விஷக்காற்றைச் சுத்தம் செய்யத்தக்க ஒரு வகைப் புகை :-
1. கற்பூசம் 4. தம்பராஷ்டி சம் 2. சாம்பிமுணி 5. வெள்ளைக் குங்கிலியம் 3. சந்தனம் 6. கிச் சிலிக் கிழக்கு

Page 16
12 ஆரோக்கிய வாழ்வு
7. கார்போகவித்த 11. ஒமம்
8. லவுங்கபத்திரி 12. கஸ்தூரி மஞ்சள்
9. சடாமஞ்சில் 13. முத்தற்காசு 10. தேவதாரம் 14. அகில்
மேற் குறித்த சரக்குகளைச் சம இடை சேகரிக் துப் பொடி பண்ணித் தணலில் சிறிது சிறிதாய்ப் போட்டுத் தேவையான வேளைகளில் உபயோகிக்கில் அசுத்த வாயு அணுசாது. எந்த நறுமண கந்தங்களே யும் புகைகளையும் மிதமிஞ்சி உபயோகித்தலாகாது.
மரம் செடி முதலிய தாவரங்கள் காற்றைச் சுக்கி செய்யத்தக்கதாயிருக்கின்றன. அவை குரியவெளிச் சத்தில், நாம் சுவாசிப்பதிலுைம் வேறு வழிகளி ன லும் உண்டாகும் கரிமலவாயு மரம் செடி விலுள்ள கரிச்சத்தைக் கிரகித்துக் களின் உப கொண்டு பிராணவாயுவை விடுகின் யோகம்-வே றன. வேம்பு, துளசி, விபூதிப்பச்சை ம்பு, துளசி. முதலிய மரம் செடிகளுக்கு இயல் பாகத் தாவரங்களுக் கமைந்திருக்குங்
குணத்துடன் வேறு நல்ல குணங்களும், கல்லமணமும் பொருந்தியிருத்தலால் நமது மூதாதையர்கள் இவை களை அதிகமாய்க்குடியிருக்கும் வீடுகளிலும் மனுஷசஞ் சாரம் அதிகமாயிருக்கு மிடங்களிலும் (கோயில்-சந்தி) வைத்து வளர்த்து வந்திருக்கின்றனர். இக்கா பணம் பற்றியே வேப்பிலை அதிகமாய்க் கொண்டாடப்பட்டு வருவதும், அளசி யணிவதும், இன்னும் இவைபோல் வனவும் நடைபெறுகின்றன. தளசி, விபூதிப் பச்சை

காற்று 13
முகலிய செடிகள் கிற்கு மிடங்களில் கொசுக்கள் குடி கொள்வதில்லை யென்று சில அறிஞர் கருதுகின்றனர்.
பட்டணங்களிலும் பார்க்கக் கிராமங்களே சுக வாழ்வுக்கு விசேடமானவை. பட்டணங்களில் சன நெருக்கத்தினுலும், தொழிற்சாலைகளி
ஜீவிப்ப விருந்து வரும் தூசு, செட்ட காற்று, தற்குச் துர்க்கங்கம், புகை முதலியவற்றின சிறந்த லும் ஆகாயத்திலுள்ள காற்றுக் கெட் டுவிடுகிறது. ஆதலினல் பட்டணங் .ظامات களில் வசிப்பவர்கள் இடைக்கிடையா யினும் கிராமங்களிற் சென்று வாழ்தல் நன்று. கடற் ஆரையடுத்த விடங்களில் சுத்தமான காற்று விசுவ தால் சாச நோயுடையவர்கள் கடற்கரை யடுத்த விடக்
களிறசீல் காலம் வசிப்பசேல் நோய் குணமடையும்.
விடியற் காலத்தில் வெளியான விடங்களில் திறக் தமேலுடன் உலாவுதல் நல்ல காற்று மூழ்காகும். கமது சரீரம் முழுவதிலும் நன்முய்க் காற்று விழ வேண்டுமாதலால் நாம் அணியும் ஆடைகள் லேசான வையாயும், சுத்தமானவையாயும், உடம் போ @ ஒட்டி யிராமலுமிருத்தல் என்று.
ஆடைகள் சிதள தேசங்சளாகிய மேலைத் தேசங்
• அணியவேண்
உணர்ந்து லேசான ஆடைகள் அணிய
ல் வசிக்கும் மாங்கர்கள் இதை
பகட்டும். முன்வந்திருக்கும் இக்காட் களிலும்

Page 17
14 ஆரோக்கிய வாழ்வு
சூடான தேசத்தில்'வசிப்பவர்களாகிய நாம் ஆடைக ளேச் சுமையாக அணிவது பெருந் தவறு. நமது நாட் டிற் படித்தவரென்றுள்ளோர் பகட்டு (Fashion) என்னும் மயக்கத்தால் இப்பழக்த்துக் சடிமையாகின் றனர். இனிமேலாயினும் இதைப்பற்றிச் சிந்தித்து நீம் காட்டுச்கும் எமது சு சத்துக்கும் பொருத்தமான ஆடைகளை அணிவாராக.
இடை சிறுத்து உடுக்கை போலிருச்தல் பெண் களுக்கு அழகு என்னும் எண்ணச்தினல் நம் நாட்டுப் பெண் மணிகள் ஆடைகளை அரையில் இடையில் அதிகமாய் இறுகக் கட்டுகின்றனர்.
ஆ?-? இசனல் இரத்சோட்டம் தடைபட் இறுகக்கட்டு டுத் தீங்கு விளையுமாதலால் இவ்வி) வதால வரும
(0 தமான சில பொருத்த மில்லாத வழக்கங்களை நம் நாட்டினின்ரம்களை ந்து விடுதல் வேண்டும்"
நாம் அணியும் ஆடைகள் சுத்தபடானவைகளா யிருத்தல் வேண்டும். அழுக்காடைசளை அணிவதனுல் சீலையிலுள்ள அழுக்குத் சோலிற் படி ந்து வியர்வை சரீரத்தினின்றும் வெ
அழுக்கா ளிப்படுதற்குக் தடை செய்வது மன் டையிஞல் றித் தோலில் கமைச்சல், சொறி முத வருக் தீமை. லியனவும் உண்டாவதற்கேதுவாகும். கட்டாடி வெளுத்தக் கொண்டு வந்த துணிகள் வெண்மையா யிருப்பினும்
சுத்தமான ன வ யல்ல. அவற்றில் கஞ்சிப் பசை முத

காற்று 15
Lu அழுக்குகள் உண்டு. ஆதலால் தோலிற் படும் படி அணியப்படும் அங்கிகளைத் தோய்த்து அணிதல்
„No ამI „[0]}.
படுக்சையறையில் சன நெருக்கம் நல்லதல்ல. ஒரு அறை பில் ஒருவர் படுத்தல் உத்தமம். இசண்டு பேர் படுப்பது மத்திபம், இதற்கு மேல் நோய்க்கிடமாகும். படுக்கை படுக்கை A. அறையில் தீடம் எரித்தல் கூடாது. ':* இரு மெழுகுவர்க்கித் தீபம் ஒரு ஆள் தீமை. சுவாசிக்கக் கூடிய காற்றைக் கெடுக்க வல்லது. மண்ணெண்ணெய்த் தீப மெனிலோ இன்னும் அதிகமான தீமை யைச் செய்யும். அதன் புகை Q15 T - Lu Jirault IF நோய்களை உண்டு பண்ணும் மின்சார தீபம் காற்றைக் கெடுக்க மாட்டாது. குளிர் முதலியன சரீரத்தைத் தாக்காமல் போர்வை முதலிய வற்றினல் தம்மைத் தாமே காத்துக் கொள்வ தன் றிக் காற்று உள்ளே நுழையாவண்ணம் படுக்கையறையை அடை த்து வைத்தல் கூடாது.
நாம் எப்பொழுதும் மூக்கினலேதான் சுவாசிக் கின்முேமா வென்பது முக்கியமாய்க் கவனிக்கப்படல் வேண்டும். மூக்கே நாம் சுவாசிப்ப மூக்கிற்ை தற்காக அமைந்த கருவி. மூக்கி னுற் சுவாசிப்பதினல் காசித் துவா நன்மை. ரத்துக் கூடாகக் காற்றுச் செல்லும் பொழுதி அதில் சூடுண்டாகி விடுகி

Page 18
6 ஆரோக்கிய வாழ்வு
றது. அசுக்கமான காற்றுச் சூடாயிருக்கும் வேளையி லும் குளிர்ச்சியா யிருக்கும் பொழுதே அதிசதீங்கு விளைக்கு மாதலால், மூக்கிற்ை சுவாசிக்கும் பொழுது அசுத்தக் காற்றினல் விளையும் தீங்கு குறைவாகவே பிருக்கும். மூக்கினிலுள்ள மயிர் பெருத்த தூசுக ளேக் தடுக்கின்றது. முக்கினலே சுவாசிப்பசனல் பல ஈன்மைகள் உண்டாயினும், அநேகர் வாயினுலே சுவாசிக்கின்றனர். இது பெரும் பாலும் படுக்கை பிலே கிகழுகிறது. ・
வாயினுற் சுவாசிப்பதனல் வரும் கேடுகள் பல. கித்திரையிற் குறட்டை, தடிமன், தொண்டை, காக்கு முதலிய வுறுப்புக்களில் வறட்சி, மூக்கடைப்பன், பல வகைச் சுவாச நோய்கள் முதலியன வாயினுற் சுவாசிப்
வாயினுற் கவசிப் ரணமாக, வாயினுற் சுவாசிக்கும் ஒரு பதின் வரைப் பார்க்கும் போது மேற் குறி GSC. த்த நோய்களிற் சில அவரில் காண லாம். ஆதலினல் இத் தீய பழக்கம் இல்லாதிருத்தல் வேண்டும்.
குழந்தைகள் மூக்கினல் சுவாசிக்கின்றன ரா அல் லது வாயினுல் சுவாசிக்கின்றனரா வென்பதைத் தாய்
பகன் பயனுய் ஏற்படுகின்றன. உதா
மார் கவனித்தல் வேண்டும். குழந் தசிந்தை தையின் வாய் திறந்திருப்பதைக் கண் * ??' டால் உடனே குழந்தையின் வாயை சத்தில் விடல் வேண்டும். கலயணையில் தாயின் முடிவிடல வேணடும. தலையண கவனம். தலை பிற்பக்கமாய்ச் சரிந்திருக்குமா
யின் வாய் தானே திறந்து விகிமாத

காற்று 17
லால் வாய் திறவா வண்ணம் மோவாய் நெஞ்சில் பொ
ருக்த முன்பக்கம் சரித்து விடுதல் நன்று.
சயன காலத்தில் காம் கிரமமானசுவாசஞ் செய் தல் வேண்டும். மூக்கினவே சுவாசித்தலும் நமது சுவாசம் உந்தி வரையிற் பரவி வருக சயனம். லும் நன்று. ஆதலால் இவற்றிற் கனுகூல முள்ளதும், படுக்கைக்குச் சென்றதும் கூடிய விரைவில் கித்திரை வருவதற்கு வசதியானதுமான ஒரு நிலையமைத்துச் சயனித்தல் வேண்டும். அநேகர் இதுபற்றிய சிந்தனை சிறிது மிலமாய்த் தம் மனப் போக்கேபோல் நிமிர்ந்தும், குப் புறக் கவிழ்ந்தும், வில்லுப் போல் வளைந்தும், எல்லா விதமாயும் படுக்கின்றனர். கிமிர்ந்த நிலையே அநேக மாய் நாம் வாயினுல் சுவாசிப்பதற்கிடமாகிறது . மற் றைய் நிலைகளில் சில கிரமமான சுவாசத்திற்கு இடர் விளேக்கின்றன. ஆகவே நாம் படுக்குங்கால், சம உய பமான ஒரு தலையணையில் தலைவைத்து, இடப்பக்கம் சரிந்தி, இடக்கையை முற்பக்கமாய் நீட்டி, முற்பக்கம் சிறிது கவிழ்ந்து, இடக்சாலை நீட்டி, வலக்காலைச் சிறிது (/ க்கி, வலக்கையைத் தலையணைக்கு மேலும் முகத் * 'க் கீழும் வைத்து, மோவாய் மார்பிற் பொருந்தக் த பாக, சரிசலுக்கும் கவிழ்தலுக்கு மிடையேயுள்ள கிலேயில், சயனிக்தல் தகும். கித்திரைக் காலம் ( 'தம் இவ்வித மிருத்தல் அசாக்கியமாகத் தோன் , மெதுவாய் வலப்பக்கம் திரும்பி மறுபடியும் து லெயை யமைத்துச் சயனித்தல் வேண்டும். இந்

Page 19
18 ஆரோக்கிய வாழ்வு
கிலை உந்தி வரையிற் சுவாசம் பரவி வருதற்கு உதவி புரியும், வாயினுல் சுவாசம் செய்தற்கு இடமிராது; படுக்கிறதற்கு வசதியாயு மிருக்கும்.
சுவாசமே நாம் உயிர் வாழ்வதற்காதாரமா யிருக் கிறதென்றும், சுவாசத்தின் உதவி கொண்டே நமது சரீரத்தின் அவயவங்களின் தொழில்
f5ԼԸՑ} கள் நடைபெறுகின்றன வென்றும் சுவாசம். முன்னரே கூறியுள்ளோம். ஆகை யால் சுவாசத்தின் பலமே நமது உயிர்ப் பலமென்பது பெற க் கிடக் கி ன் ற து. இதை யுணர்ந்த நம் நாட்டு இருடிகள் சுவாசத்தை வழிப்படுத்துவதே சுக வாழ்வுக்கும், தீர்க்காயுளுக்கும், தேக சக்தி, மனே சக்தி,ஆன்ம சக்கி முதலியனஅடை தற்கும் உரியமார்க்கமெனக்கண்டு சுவாசத்தை வழிப் படுத்துவதற்குப் பிராணுயாமத்தை முதற்பீடியாய்க் கொண்ட யோக சாதனங்களை வகுத்திருக்கின்றனர். பிராணுயாமத்தைப் பற்றிய சில குறிப்புகள் உட
லோம்பலிற்காண்க.
செய்யும் தொழிலுக்குத் தக்கபடி நமது மூச்சுச் செலவாகிறது. அது முறையான சுவாசப் பழக்கத்தி னல் மறுபடியும் சேகரிக்கப்படுகின்
5ԼԸ Ց) றது. நாம் பேசும் பொழுது செலவா மூச்சின் கும் சுவாசத்திலும் நடக்கும் பொ 6.8606). ழுது அதிசமாயும், வேலை செய்யும் போது அதிலும் அதிகமாயும், கோபிக்

காற்று 9
கும் வேளையில் அதிலும் அதிகமாயும், கித்திரை செய் யுங் காலத்தில் அதிலும் அதிகமாயும், ஒடும் போது அதிலும் அதிகமாயும், சம்போககாலத்தில் எல்லாவற் றினுமதிகமாயும் சுவாசம் செலவிடப்படுகின்றது. ஆதலால் சுவாசம் அதிகம் செலவாகும் தொழில் களைக் குறைத்துக் கொள்ளல் வேண்டும்.

Page 20
குரிய வெளிச்சம்
நமது சரீரத்தின் முக்கியமான அவயவங்களுள் தோலுமொன்று, இதன் கொழில் மற்றையவைகளின் தொழில் போல இலகுவில் உணரத் தோலின் தக்கதா யில்லாமையினுல் இதைப் தொழில். பற்றிப் பலர் சிந்திக்கின்றிலர். கோ லில் எண்ணில்லாத நுண்ணிய துவா ாங்களிருக்கின்றன. இவைகளின் வழியாய்த் தேகத் துக்கு அன்னியமான நச்சுப் பொருட்கள் வெளிப்படு கின்றன. அதுவுமன்றி ஒரளவில் சுவாசமும் நடை பெறுதலால் தோல் முன்முவது சுவாசக்கருவி என் றும் சொல்லப் படுகிறது. தோலுக்கு இன்னுமொரு சக்தியுமுண்டு. சூரிய ஒளியிற் காணப்படும் ஊதாக் கிரணங்கள் கோலிற் படும்பொழுது அவை உயிர்ச் சத்து “டீ’ (Vitamin D) யாகத் தோலினல் மாற்றப் பட்டுச் சரீரத்திற்குக் கொடுக்கப்படுகினறது. உயிர்ச் 7 iš BI “LO.” யின் உபயோகத்தை உணவு அத்தியாயத் கிற் காண்க.
தோலில் அழுக்குப் படித்து வியாதி ஏற்படுமா யின் அதன் தொழில் நன்முகச் செய்யப்படுதற்குரிய சக்கி குறையும். இதனல் சரீரம் அழுக்குப் முழு கிலும் பல கோளாறுகள் ஏற்ப படிவதின் டக்கூடும். ஆதலால் தோல் எப் தீமை, பொழுதும் நல்ல நிலையில் வைத்திருக்
கப்படல் வேண்டும்.

சூரிய வெளிச்சம் 2
குரிய வெளிச்சம் நமது ஆரோக்கியத்துக்கு எவ் வளவு அனுகூலமான தென்பதைப் பண்டைக் காலத் தில் ஈம் முன்னுேர்கள் நன்கறிந்திருக் நம்முன் கின்றனர். குரிய நமஸ்காரம் இதற் னேரின் கோர் உதாரணமாகும். சூரிய வெளிச் அறிவு. சத்தினல் விளையும் பிரயோசனத்தை மேனுட்டவர் இக்நாளில்தான் தெரி ந்து கொண்டனரேனும் அதனை உலகிற்கு உணர்த் தும் பொருட்டு அவர்கள் ஆற்றிவரும் மேனுட் முயற்சிகள் uo. அவர்கள் குரியஸ் 5ா டவரின் னத்தினல் உண்டாகும் குணங்களை முயற்சி. விளக்கக் கழகங்களமைத்தும், பிரசா ரங்கள் செய்தும், சட்டுரைகள் எழுதி யும் வருவது நம்மவர்களையும் ஒருவாறு விழிக்கச் செய் கிறது.
குரிய ஸ்நானத்தில் முக்கியமாய் காடப்படுவது சூரியனின் வெளிச்சக் கிரணங்களிலிருக்கும் ஊதா fip goriurgh (Ultra Violet Rays சூரிய ஸ்கா of the Sun), ஆகையால் சூரியனின் னத்திற்கு வெப்பம் அதிகரித்திருக்கும் பொழுது உரிய காலம். ஒளிக் கிரணங்களின் இயல்பு வெப்புக் கிரணங்களினுற் குறைக்கப் படுகின்ற மையால் சூரிய ஸ்நானத்திற்குச் சிறந்தகாலம் வெய் யிற் சூடு குறைந்திருக்கும் விடியற்காலமும், சாயங்கா லமுமாகும். இது பற்றியே குரிய நமஸ்காரம் நம் நாட்டில் அதிகாலையில் செய்யப்பட்டு வருகிறது

Page 21
22 ஆரோக்கிய வாழ்வு
தேரையரும், ' இளவெய்யிலும் விரும்போம்” எனக் கூறியிருப்பதால் மாலையிலும் காலையில் வெய்யிலின் சூடு டிகிகமென்றும், சூரிய ஒளியினுற் சுகத்தை அனு பவித் சற்குரிய காலம் அதிகாலை, அல்லது மாலை என் றும் சொல்வது பொருந்தும்.
சூரிய ஸ்நானம் செய்யும் பொழுது வெறும் மேனியுடனிருத்தல் வேண்டும். ஆனல் கழுத்தை யும், கண்களையும், தலையின் உச்சியை சூரியஸ்நா யும் வெய்யில் வெப்பம் அதிகம்படாமல் னஞ்சேய் வெள்ளைத் துணியினுல் அல்லது பச் பும் முறை. சிலையினல் காத்துக் கொள்ளல்வேண் ம்ெ. வெய்யிலில் நின்று வாசித்தல் கூடாது. வெய்யிலில் படுத்துப் பச்கம் பக்கமாய் வேகவைப்பதிலும் ஏதும் இலகுவான தேச்ாப்பியா சம் செய்து கொண்டிருத்தலினுல் சரீரத்தின் எல் லாப் பகுதிகளிலும் சூரிய ஒளி சரிவரப் படத்தக்க தாயிருக்கும்.
சூரிய ஸ்நானம் இவ்வளவு நேரம் தான் செய்ய வேண்டுமென வரையறை செய்யவியலாது. சிலர் நாள் முழுதும் வெய்யிலில் சிற்பினும்
சூரிய விக்கின மில்லா திருப்பர். ஆனல் மூழ்கின் இாத்தக் கொதிப்புள்ள சிலர் சில கிபி கால அளவு. ஷங்கள் வெய்யிலில் கிற்பின் மூர்ச்சை யடைகின்றனர். ஆதலால் சூரியஸ் கான ஞ் செய்வோர் தம் சரீர சுபாவத்திற் சேற்றபடி

சூரிய வெளிச்சம் 23
நேரத்தைக் குறிக்க வேண்டிய வராவர். தத்தம் சரீர சுபாவத்துக்கு மிஞ்சி வெய்யிலில் நிற்பதால் தேகத் கிற் கொதிப்புண்டாகும். இதனுல் தண்ணீர்த் தாகம், பசி மந்தம், தலைவலி, கித்திசையின்மை முதலியன நேரும். சில சமயங்களில் மூர்ச்சையும் ஏற்படும். இதற்குப் பயந்து வெய்யிலிலிருந்து ங்ேகி யிருத்த லாகாது. அளவறியாமல் நல்லதென்று அதிக நேரம் கிற்றலும் கூடாது.
குரிய ஸ்நானஞ் செய்யுமுன் சிறிதளவில் எண் ணெய்தேய்த்துக் கொள்வது நல்லது. இவ்விதம் செய்வ தால், சூரியனின் வெப்பம் அதிகமா எண்ணெய் யிருக்கும் வேளையில் மேலின் தோல் தேய்பதின் இலகுவில் எரிக்கப்பட்டுத் தொப்ப குண்ம். ழங்கள் உண்டுபடா. எனினும் எண்
ணெய் ஸ்கானக் காலங்களைப் போல் அதிகம் தேய்க்கப் பெறின் சூரியனின் ஊதாக் கிர ணங்கள் தோலில் நன்கு படுதற்குத் தடையுண்டா கும். ஆதலால், ஒரு போதும் அவ்விதம் செய்தல் விடட Tது. மேனுட்டார் ஒலிவ் எண்ணெய் அல்லது அதற்கெனச் செய்யப்பட்ட வேறு சில எண்ணெய் குரிய ஸ்நான காலங்களிற் பாவிக்கப்படுவது நல்ல தெனக் கூறுவர். நாம் எமது வழக்கப்படி நல்லெண் ணெயை உபயோகித்தால் போதும். எள்ளில் சூரி * யனுடை சில குணங்கள் உண்டென்றும், அதனல் அது பிதுர் கருமங்களிற் பாவிக்கப்படுகிறதென்றும், எள் நெய் புத்திக்குத் தெளிவு, விழிக்குக்குளிர்ச்சி, 67

Page 22
24 ஆரோக்கிய வாழ்வு
மகிழ்ச்சி, தேக புஷ்டி, தேஜசு, வாலிபத்தன்மை முத லியவைகளைக் கொடுப்பதோடு நேக்கிர நோய், கான ரோகம், உஷ்ணம், காசம், இரணம் முதலியவைகளே யும் தீர்க்குமென்றும் மிேஆ நூல்கள் கூறும். இவை கள் எல்லாவற்றையும் சிந்தித்தே எம்மவர் எள்நெய் யை நல்லெண்ணெய் எனக்கூறி யிருப்பதால் நல்லெ ண்ணெய் மாற்றப்பட வேண்டிய அவசியமிருக்குமென் பதற்கிட மில்லை. .
நம் ஊர்களில் குழந்தைகளுக்கு அதிசாலையில் எண்ணெய் கேய்த்துக் கழுக்கின் கீழ்ப்பாகங் 1ளில்மாக் கிரம் சூரிய ஒளி படும்படி விட்டுக்
குழந்தைக திண்ணைகளிற் சிறிது நேரம் கிடத்தி ளும் சூரிய வைத்தல் தொன்றுகொட்ட வழக்சம். னின் ஊதா ஆனல் தற்கால நாகரீகத்திலெடுபடு ஒளியும். வோர் சிலரிடம் இந்த நல்ல, முறை அருகி வ ரு வது வருக்கத்தக்சது. இன்று குழந்தைகளாயுள்ளவர்கள் நாளேக்கு உலக மாத் தர்களாவராச் லின் அவர்கள் தேகாரோக்கியத்துக்கு நன்மை தரும் முறைகளை நம் முன்னேர் தன் காாம்: தறிக் தனுஷ்டித்து வந்திருக்கின்றனரென்பதற்கு இது வுமோர் சான்ருகும். சூரியனின் வெளிச்சக் கிரணங் சளிற் காணப்படும் ஊதா கிற ஒளி குழந்தைகளில் உண்டாகும் சணம், கோஷம், காப்பன் முதலிய கோய்சளுக்கு நல்லமருந்தெனச் சில காலக்கிற்குமுன் மேனுட்டவர் செய்த ஆராய்ச்சியின் பயனுய்த் தெரிய வருகிறது. அதுவுமல்லாமல் இதே ஒளி கூடிய்க்கிருமி

சூரிய வெளிச்சம் 25
க%ள நாசம் பண்ணி கூடிய ரோகிகளைக் குணப்படுத்து வதற்கும் உபயோகமாகிறதென்று கண்டுபிடிக்கப்பட் டிருக்கிறது. ஆகையால் பழைய பழக்கங்கள் ஒவ் வொன்றினையும் சிங்கிக்காமல் தள்ளிவிடக்கூடாது.
சூரிய வெளிச்சம் தேகத்துக்குப் பலத்தையும், அழகையும் கொடுக்கும். அது பிணி சூரிய ஒளி வராமற்காப்பர்ற்றுவதோடு அணுகிய யின்குணம். பிணியைத் தீர்க்கும் மருந்துமாகும் உதாரணமாகச் சூரிய வெளிச்சம் இல் லாதவிடத்தில் உள்ள செடிகள் செழிப்பற்றிருப் பதைக காணலாம.
ஒளியின் உதவியினல் தேசமும், இரத்தமும் "சாதாரண குட்டுடன் இருக்கும்பொழுது நோயாளி யின் இரத்தத்திலுள்ள நோய்க்கிருமி ஒளியும்-விஞ் களைக்கொதிக்கச்செய்து கொல்லும் ஞான சாஸ் வழிகளையும் சிரங்கு, நமைச்சல், கட்டி திரிகளும். கள் முதலியவைகளைச் சத்திர வைத்தி யம் செய்யாமல் (ஆப்ரேஷன் இல்லா மல்) குணமாகச்செய்யும் முறைகளையும் விஞ்ஞான சாஸ்திரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இருமல், கசம், நரம்புத்தளர்ச்சி, தேகமெலிவு, காப்பன், நமைச்சல், குழந்தைகளின் கணம், கண்ணுெ ளிச்குறைவு முதலியவற்றினல் வருந்து சூரிய ஒளியி வோர்க்கு சூரிய ஒளி (Ultra Violet 60si 505th Rays of the Sun) Spiá, LDOias irgin. நோய்கள். சூரிய வெளிச்சத்தில் குறைவாகச்

Page 23
26 ஆரோக்கிய வாழ்வு
சஞ்சரிப்பதால் தேகம் வெளுத்தல், சிற்றிளைப்பு, பலவீனம் முதலியன ஏற்படும்.
குரியவெளிச்சத்திற் காணப்படும் (Ultra Violet Rays of the Sun) ஊதா நிற ஒளி தரைமட்டக்கிலிரு t ந்து 4000 அடிக்கு மேலுள்ள விடங் ஊதா ஒளியை களில் அதிகம் பெறமுடியும். புகை அனுபவிப்பதற் நிறைந்த பட்டணங்களில் இந்த ஒளில் குரிய இடம். யைப் போதியபடி பெற முடியாது. ஆனல் சுத்தமான ஆகாயமுடைய கடற்கரை ஓரங்களில் நமது தேவைக்குத் தக்க அளவு பெற @Pւգ-պմ,
சூரியவெளிச்சம் விஷக்கிருமிகளைப் போக்கவல்லி தாதலால், குடியிருக்கும் வீடுகளும், விஷக் கிருமிக தொழிற்சாலைகளும்,சூரியவெளிச்சம் &ளபோக்கவழி. நன்கு செல்லத்தக்கதாய் அமைக்கப் படல் வேண்டும். படுக்கையைத் தினங்
தோறும் வெய்யிலில் காயவைத்தல் நல்லது.
சூரிய வெளிச்சத்திற் பழுத்த பழங்களும் உலர் ந்த வற்றல்சளும் உயிர்ச்சத்து அதிகம் உடையனவாயி ருத்தலால் அவைகளை விரும்பிச்சாப்பிடுதல் வேண்டும். வித்துக்களின் நெய் (Vegetable oil) பாவிக்கப்படுமுன் சூரிய ஒளியும் 4 மணித்தியாலம் வெய்யிலில் வைக் தாவரப்பொரு கப்படில் உயிர்ச்சத்தைக் கிரகித்துக் ட்களும் கொள்ளும். இது மேனட்டார் ஆராய் ச்சியினுல் இப்பொழுது கண்டுபிடிக்கப்

சூரிய வெளிச்சம் 27
பட்டிருப்பினும் நம்முன்னோால் இம்முறை கைக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. உறைந்துபோன இலுப்பை நெய், தெங்கு நெய் முதலியவைகளைச் சுலப மாய் நெருப்பில் உருக்கிக் கொள்ளக் கூடுமாயினும் வெய்யிலில் உருக வைத்தெடுப்பது இதற்கு உதாரண மாகும்,
இவ்வுலகத்தில் முதன் முதல் உயிர் எங்கிருந்து வந்திருக்குமென்று ஆராய்ச்சி பண்ணும் தற்கால கிபு ணர் சிலர் அது சூரியனிடமிருந்து வந்திருக்கலாமெனக் கருதுகின்றனர். இப்பூவுலகுக்கும் மற்
சூரியனின் றும் கிரகங்களுக்கும் குரியனே பிர பெருமை. காசங் கொடுக்கிறதென்றும் சூரிய மண்டலத்தில் ஈசுர சக்தி விளங்குவத னல் சூரிய வழிபாடு செய்யப்படல் வேண்டுமென் மறும் இந்து சமய சாஸ்திரங்கள் கூறும். ஆகையால் சூரிய ஒளியின் அபார சக்தியை யுணர்ந்து அதைத் தக்க வழிகளில் உபயோகித்துப் பயன் பெறல்
வேண்டும்.

Page 24
தண்ணீர்,
தண்ணீர் நமது சரீரத்தில் அதிக டாகமாயமைந் திருத்தலின் அது நமது அவசிய தேவைசளுள் ஒன்ரு o யிருக்கிறது. சுத்தமான தண்ணீர் அசுத்த நீரி சுகம் செய்யும், அசுத்தமான தண் னுல் விளை ணிரினல் கெருப்புக் காய்ச்சல், வயிற் ዶ யும் கேடு. றுளைவு, காட்டுக்காய்ச்சல்,வாந்திபேதி முதலிய பல நோய்கள் உண்டாகும், தண்ணீரில் இருவகை அழுக்குகள் சேரக்கூடும். ஒன்று தண்ணிரில் மிதந்து கண்ணுக்குக் தெரியச்கூடியதா யும், மற்றது தண்ணீருடன் கலந்து சாதாரணமாய்க் கண்டு கொள்ளக் கூடாததாயுமிருக்கும்.
இலை முதலானவை தண்ணிரில் விழுந்து கிடப் பின், அவை அழுகிக் கெடுவதினுல் ஒருவகைக' கிருமி கள் உண்டாகும். அவற்றின் சாரமும் தண்ணீர் தண்ணீரைக் கெடுக்கும். இவை மாத் அழுக்கடை திாமன்றித் தண்ணீர் எடுக்கப்படும்
வதன் இடத்திற்குத்தக்க குணத்தையும் அது காரணம். கொடுக்கும். சுத்த சலம் லேசாயும், கிற மில்லாததாயும், உருசி யற்றதாயு
மிருக்கும்.
தண்ணிரில் மலையிலிருந்து ஊற்றெடுத்து வரும் சுத்தமான அருவி நீரே உபயோகத்
மலை யருவி திற்குச் சிறந்தது. நமது நாட்டில் ẩi. பெரும்பாலும் பாவிக்கப்படுவது கிண

ಆ6TGOff 29
ற்று சோதலால் மற்றவையை விடுத்துக் கிணற்று நீரைப் பற்றிக் கவனிப்பாம்.
கிணற்றுத்தண்ணீர் அடிக்கடி இறைக்கப்படாம லிருத்தல், கிணற்றுக்கு அதிசமீபத்தில் மரங்கள் கிற்ற லால் அவற்றின் இலைகள் கிணற்றில் விழுந்து (A35 தல், மாவேர் தண்ணீரில் ஊறுதல், தண்ணீரில் பாசி பிடித்தல், கிணற்றுள் சேறுண்டாதல், நல்ல வெய்யி அலும், காற்றும் தண்ணீரில் படாமலிருத்தல், கிணற் முேரங்களில் மலசலங்கழித்தல், அழுக்கு முதலிய வற்றைக்கழுவுதல், வெள்ளம் பிடிக்கத்
கிணற்று நீர். தக்க பள்ளப்பூமியில் கிணறு தோண் டப்படுதல், கிணற்றுக்கு மேற்கட்டில் லாதிருப்பின் வெள்ளம் உட்புகுதல் முதலிய காரணங் களினல் கிணற்றுத்தண்ணீர் கெடத்தக்கதாயிருக்கும். அவ்வாே தண்ணீர் கெடாமல் பாதுகாப்புச் செய்து
கொள்வது அவசியம்.
எப்பொழுதும் தண்ணீர் வடிகட்டிப் பாவிக்கப் படுதல் விசேஷம். நாகரீக முறையில் வடிகட்டியினுல் சுத்தம் செய்ய இயலாதவர்கள் சுத்தமான துணி கொண்டு வடிகட்டிக்கொள்ளலாம்.
கீர் பாவிக்க நீரைக் காய்ச்சிச் சாப் பி டு த ல் விதி. வேண்டும். “உண்ணுங்கா, னிர் சுருக்கி மோர் பெருக்கி நெய்புருக்கி உண் பவர்தம், பேருரைக்கிற்போமே பிணி', என்றவாறு நீர் கொதிக்க வைக்கப்படுதலினுல் அகிலுள்ள சில

Page 25
30 ஆரோக்கிய வாழ்வு
வகை அழுக்கும், கிருமிகளும் அற்றுப்போகின்றன. கொகித்துள்ள வெந்நீரை ஆறவைத்துச் சாப்பிடுதல் நன்று. கொட்டி ஆற்றியும் சாப்பிடலாகும். தண் ணிரோடு கலந்து சாப்பிடுதல் கூடாது.
கொதித்து ஆறிய நீரினல் பித்தமும், இள வெந் சோல் சிலேஷ்மமும், வெந்நீரினல் வாதமும் சாந்தி யாகும். தண்ணீரை ஆசமனஞ்செய் நீரின் குணம். வதால் உஷ்ண நோய், தண்ணீர்த் தாகம், நீர்க்கடுப்பு முதலியவை தீரும். ஆசமனமென்பது உளுந்தளவு தண்ணீர் உள்ளங்கை
யில் எடுத்து உறிஞ்சுகல்.
தண்ணீரில் ஸ்நானஞ் செய்வதினுல் சரீரத்தின்
உறுப்புகள் எல்லாம் கிளர்ச்சி யடைகின்றன. சித்தப்
பிரமை நீங்கும். இருதயத்தின் தொ
தண்ணிர் ପୈort it ழில் துரிதப்பட்டு இரத்தம் தேக
னத்தின்பயன். பெங்கும் நன்கு பரவும். உஷ்ணம்
தணியும். தேகத்தில் ஏற்படும் சிதை வைக் குறைக்கும். ஆரோக்கியமுண்டாகும்.
நெருப்புக்காய்ச்சல் முதலிய சிலவகைக் காய்ச்சல் உள்ள நோயாளிசள் அனுபவமுள்ள காய்ச்சலுக்கு. வரின் உதவி கொண்டு தண்ணீரில் ஸ்நானஞ் செய்வதினுல் நோய் தணிய ப்பெறுவர். அனுபவ மில்லாதவர் இதில் தலையிட
லாகாது

தண்ணீர் 3
தண்ணீர்ச் சி&யினுல் தலையில் ஒற்றணம் பிடிப் பின் காய்ச்சல் ஏறிக்காய்வது குறையும். இது இலகு வில் எல்லோராலும் செய்யக்கக்கது. தண்ணீர்ச் தண்ணீர்ச்சீலை ஒற்றணம் செய்வதற் சீலை ஒற்றணம். குப் பனிக்கட்டி உருகிய நீர் அல்லது பனிக்கட்டி போலக் குளிர்ந்த சீர் பாவிக்கப் படுதல் நன்று.
தண்ணீரில் ஸ்தானஞ் செ ய்யவியலாத காலங் களில் மேருதண்ட ஸ்கான மேனுஞ் மேருதண்ட செய்தல் வேண்டும். ஒரு முரட்டுத் ஸ்நானம். துவாலையை நன்முய்க் குளிர்ந்த கண் ணிரில் அடிக்கடி நனைத்துப் பத்து நிமிஷம் வரை முதுகெலும்பை உரஞ்சிக்கொண்டிருத் நல் ஒரு சிறந்த மேருதண்ட ஸ்தானமாகும். வேறு வகை மேருதண்ட ஸ்தானங்களும் உள.
வயிற்றுவலி, நோவு, கட்டி, உழுக்குச் சுழுக்கு முதலியவற்றிற்குத் தண்ணீர்ச் சீலை சுற்றிவைக்கப் படின் நல்ல பலன் கொடுக்கும்.
வெந்நீர் ஸ்கானத்தினுல் சரீரத்தின் உள்ளுறுப்பு க்களிலும், தசை முதலிய விடங்களிலுமுள்ள இரத்தம் தோற்புறம் செல்லப் புது இரத்தம் அவ்வுறுப்புக்களே கிரப்புகின்றது. அதனல் அவயவங்களின் தொழிலில் ஒருவித சுறுசுறுப்புண்டாகிச் சிரம் உற்சாகமடைகின்றது. உடம்பில் வேர்வையை உண் Geiff டு பண்ணுவதால் குண்டிக்காய்களின் ஸ்நானத்தின் தொழில் இலகுவாகிறது. குண்டிக் குணம். காய் நோய், உடம்புத்திமிர், உடம்பு

Page 26
32 ஆரோக்கிய வாழ்வு
நோவு, நிக்கிரையின்மை முதலிய குணங்களுக்கு வெந்நீர் ஸ்நானம் நல்லது. வெந்நீர் ஸ்நானம் செய்த பின் உடம்பில் காற்று, வெய்யில் படும்படி உடம்பைத் திறந்து வைத்திருத்தலும், கடினமான வேலை செய் தலும் கூடாது. ஆகையால் மாலைக்காலமே வெங்ர்ே
ஸ்நானத்துக்குச் சிறந்த காலம்.
குழந்தைகளில் காணப்படும் வலிக்கு ஒரு வாயக ன்ற பெரிய பாத்திரத்தில் (Basin) குழந்தைகளி பொறுக்கத்தக்க சூடுள்ள வெந்நீரைப் ன் வலிக்கு பெய்து அதில் குழந்தையைக் கழுத் தளவில் அமிழ்த்தி வைத்துத் தலைக்கு த்தண்ணீர்ச்சிலையால் ஒற்றணங் கொடுக்கப்படின் வலி
குணமாகும்.
வெங்சீரில்' பாதஸ்தானஞ் செய்வதனல் தடிமன் நோயைத் தொடக்கத்தில் தடுக்க முடியும். மு ன் போல ஒரு பாத்திரத்தில் பொறுக்கத்தக்க குடுள்ள வெந்நீரைப்பெய்து அதில் கால்ப்பாத தடிமனுக்குப் ங்களிரண்டும் அமிழ்ந்திருக்கத் தக்க பாதஸ்நானம். தாய்ச்சிறிது நேரம் வைத்திருத்தல் வேண்டும். பின் பாதங்களை ஈரந் துவட்டிக் குளிர் பிடிக்காவண்ணம் காப்பாற்றிக்கொ ள்ளவேண்டும். இது ஒரு முறை மாத்திரம் செய் தல் போதாது. நோயில்லை யென்று காணும்வரை அடிக்கடி செய்தல் வேண்டும்.

தண்ணீர் 33
நீரிறங்காமைக்கு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் (ଲ । ாறுச்கக்கூடிய குடுள்ள வெந்நீரிலிருந்து நாபிஸ்கா கணம் செய்து (தொப்புளிற்குச்கீழ் குளித்து) உள்ளுக் குத் தண்ணீர் பருகினல் நீரிறங்கும்.
மூளையில் இரத்தப்பெருக்கால் கித்திரையின்மை முதலியவைகளுக்குக் கழுத்தளவில் வெந்நீர் ஸ்நானம் செய்து, அதே சமயத்தில் தலையில் 'மூ?ளயில் இர தண்ணீர்ச் சீலை சுற்றி வைப்பின் த்தப் பெருக் மூளைக்குச்செல்லும் அதிகமான இாத் கிற்கு. தம் மேலின் தோற்புறம் செல்லுமாத லால் நோய் சாந்தியாகும். இது மா இலக் காலங்களிற் செய்யப்படுவது நல்லது.
வேது விடுகிறதினுல் நெஞ்சுத் தடிமனைக் (Bron(litis) குணப்படுத்தலாம். ஒடுங்கிய வாயுள்ள ஓர் பாத்திரத்தில் நன்முய்க் கொதிக்கிற 1ஞ்சுத்தடிம ர்ே வாய் மூடப்பட்டபடி கொண்டு (fற்கு வேது வந்து கோயாளியை அப்பாத்திரத்திற் விடுதல். குமுன் குந்தியிருக்கச்செய்தல் வேண் டும். பின்பு கம்பளித் துணிகளினல் நோயாளியையும் அப்பாத்திரத்தையும் சேர்த்துக் காற்று உட்செல்லாமல் மூடிக்கொண்டு, நீராவி நோயா எளியின் தோலை அவிக்காவிதம் பாத்திரத்தின் மூடி யை மெதுவாக எடுத்கல் வேண்டும். இவ்விதம் சரீ சத்திலிருந்து வேர்வை நன்முய் வெளிப்படும்வரை யிருக்தல் வேண்டும். அவசியமாயின் நீரும் பாத்திர மும் மாற்றப்படல் வேண்டும். பின்பு எழுந்திருந்து

Page 27
34 ஆரோக்கிய வாழ்வு
வேர்வையை ஒற்றி, உடம்பிற் குளிர்பிடிக் சாமல் சாப்
ாற்றிக் கொள்ளல் வேண்டும். வேது விடும் வேளை களில் நீர் கவிழ்ந்து கோலை அவிக்காமலும் நீராவி தோலை அவிக்காமலும் எச்சரிக்கையாயிருத்தல் வேண் டும்.
வெந்நீர்ச் சீலை ஒற்றணங் கொடுத்தலால் வாய்வுக் குத்து, வலி, நோவு, கட்டி முதலியன குணமாகும். ஒரு முரட்டுத் துணியை நான்காய் மடிக் து வெந்நீர்ச் சீலை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து தோலை' ஒற்றணம், அவிக்காத விதம் பொறக்கக் தக்க சூட்டில், நோய்கண்ட விடங்களில் ஒற் றணங் கொடுத்தல் வேண்டும். பின்பு அவ்விடங்களில் குளிர்பிடிக்காமல் பாதுகாத்துக் கொள்வதவசியம்.
சரீரம் களத்திருக்குமாகில் முதல் வெங்கீரிலும் பின் தண்ணீரிலும் ஸ்நானம் செய்யில் களை தீரும்.
கீர் அதிகம் பருகுவதால் உள்ளுறுப்புகளைச் சுத் தம் செய்யலாம். ஆனல் சாப்பிடும் பொழுது பருகு தலும் ஒரே சமயத்தில் அதிகம் பருகு நீர் பருகுவ தலும் கூடாது. போசன காலங்களிற் தன் பயன். கிடையில் பருகுவது நல்லது. காலை யில் கித்திரை விட்டெழுந்தவுடன் ஒரு குவளை தண்ணீர் பருகுவதனல் படலச் சிக்கல் சாங் தியாகும்.

தண்ணீர் 35
அபான வாசலினுல் குடலில் இரத்தத்தின் சூட ளவுள்ள வெந்நீரை உட்செலுத்துதலால் (Enema) மலச்சிக்கல், மாந்த வலி, சுரம் முதலி
எனிமா. யன குணமாகும். சுரத்திற்கு வெங் நீர் எனிமாக் சொடுத்த சிறிது நேரத் திற்குப்பிண் சண்ணிர் எனிமாக் கொடுத்தல் நல்லது.
நீரின் உட்பிரயோகச்கினலும், ஸ்கான வகைகளி ஞலும், நீராவியின் உதவியாலும் (வேது விடல் முதலி யன), வெந்நீர்ச் சீலை ஒற்றணம், தண்ணீர்ச் சீலை சுற்றி வைத்தல் முதலிய உபாயங்களினலும் பலவித நோய் சளையும் தீர்க்கத்தக்க முறைகள் உள. விரிவஞ்சி விடு த்தனம், உடலோம்பலில் தலையிடியின் கீழ் நீரின் 'உபயோகத்தினுல் நோய்களைக் குணப்படுத்தக் கூடிய
இன்னும் சில விதிகளைக் காண்க.

Page 28
உணவு.
உயிர்க்குறுதி உடல். உடலுக்குறுதி உணவு. அதனுலன்றே, 'ஊண் கொடுத்தாரே உயிர்கொடுத் தார்’, என்றும் 'உடம்பை வளர்த் உயிருக்கும் தேன் உயிர் வளர்த்தேன்’, என்றும் உடலுக்கும் மேலோர் கூறியிருக்கின்றனர். நாம் உள்ள தொ உண்ணும் உணவின் சாரமே நம் வாழ் டர்பு விற்காதாரமாயுள்ளது. மேலும், 'அ ன்ன மயமே மனேமயம்”, என்பது ஆன்ருேர் கருத்துமாகும். ஆதலால் நாம் உண்ணும் உணவின் குணங்களைப்பற்றியே நமது குணம், தேக புஷ்டி, பலம், ஆரோக்கியம், மனேசக்தி முதலியவை கள் இருக்குமாதலால் உணவு விஷயததில் நாம் மெத்
தக் கவனம் எடுத்தல் வேண்டும்.
நமது உணவில் உற்சாகம் கொடுக்கும் குடுள்ள Luad flour(Ilair (Starches or Carbohydrates), a 603 யுண்டாக்கும் பொருள் (Protein), கொ
உணவின் ழுப்புண்டாக்கும் பொருள் (Fat) (pas பாகுபாடு. லியன தேகத்தைப் போஷிக்கப் போ தியளவு கிரம்பியிருத்தல் வேண்டும். அவைகள் தேக வளர்ச்சிக் கேற்றவாறு கலக்கப்படல் வேண்டும். நோய் வராமல் பாதுகாக்கத் தக்கதும், உடல் வளர்ச்சி, பலம், கிறை என்னும் இவைகளைக்
கொடுப்பதுமான உப்புச்சத்து (Organic Salts), உயிர்ச்

உணவு 37
சத்து (Vitamins), தண்ணீர் (Water), தேசத்திலுள்ள கழிவுப் பதார்த்தங்களை வெளியே போக்கக் கூடிய பொருள் (Roughages) முதலியவைகள் வேண்டியளவு
உணவிற் சேர்க்கப்படல் வேண்டும்.
பசைப் பொருட் பதார்த்தங்கள்:-ஆல் அரிசி, வெள்ளைக் கோதுமைமா, மரவள்ளிக்கிழங்கு, சவ் வரிசி, உருளைக்கிழங்கு, சீனிவசைகள், பாளியரிசி, வாழைப்பழம் முதலியன. இவற்றுள் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் ஒழிந்த மற்றவைகளில் உயிர்ச்சத் தில்லை.
தசைப்பொருள்: இறைச்சி, மீன், முட்டை, பால் தயிர், வெண்ணெய்க்கட்டி (Cheese), வேர்ச்கடலை, எள் ளு, பருப்புவகை முதலியவைகளில் தசைப்பொரு அதிகம் இருக்கிறது. தசைப்பொரு ட்களின் உய ஞக்கு மாமிசமே சிறந்ததென்று ர்வு தாழ்வு. கூறப்படினும், பால், தயிர், வெண் ணெய்க் கட்டி, வேர்க்கடலை முதலியன எவ்வகையிலும் குறைந்தவையல்ல வெனச் சில கால த்துக்குமுன் ஆராய்ச்சியினுல் கண்டிருக்கின்றனர். பருப்புவகைகள் நன்முய்க் குத்தப் பட்டபின் நூறு பங்கு எடையில், ஏறக்குறைய 25 பங்கு தசைப்டொ ருள் உடையன. எனினும் அது முழுதும் மனுஷ ஆகா ாத்துக்கேற்றதாயிருக்கவில்லை; சில பாகம் மாக்கிரமே மனுஷ ஆகாரத்துக்குரியது. அதிலும் சில பாகமே சிசணமாகக்கூடியது.

Page 29
38 ஆரோக்கிய வாழ்வு
w O பருப்பு வகைகளில் சீரணமாகக்கூடிய
பாகத்தின் விவரம்:-
பங்கு சீர
ணிக்கக் சடலைப்பருப்பு 00 பங்கு எடையில் 16.68 தக்கது. பச் ைசப்பயறு y 13.92 , உளுந்து タヌ 18.8l , அது வரம்பருப்பு タカ l3.47 மைசூர்ப்பருப்பு 12.86 , பட்டாணிக்கடலை 11.1 , சாராமணி yo 10.86 , மொச்சைக்கொட்டை , 10.6 , கொள்ளு 3ፖ l0.43 , பனிப்பயறு s 9.04 ,
ஆதலால், பருப்பு வகைகள் குணத்தில் முதல் கட ஆயும், அதன் பின் முறையே பயறு, உளுந்து, தவாம் பருப்பு முதலியனவுமாகும். சடலையில் உயிர்ச்சத்து '6J.S. சி’யும், நூற்றுச்கு 4 பாகம் திறமான மீன் எண் னெய்க்குச் சமமான கொழுப்பும் இருத்தலால், தாவர ப்பொருட்களில் வேர்க்கடலைக்கு அடுத்தபடியாகக் கட லையைத் தசைப்பொருளுக்காக உபயோகித்தல் நன்று.
கொழுப்புண்டாக்கும் பொருட்கள் :- வெண் ணெய், மீன் எண்ணெய், எண்ணெய்வகை முதலியன சரீரத்தின் கழிவுப் பொருட்களை வெளிப்படுத் தும் பதார்த்தங்கள் :-தவிடு, கீரை வகை, பனங்கிழ

ge 656T6) 39)
ங்கு, வாழைக் சண்டு, கீரைக்கண்டு, பழத்தோல்,
நிதிக்காக கோதுமைமா முசலிடன.
உப்புச்சத்து எல்லாப் பொருட்களிலும் உண் டெனினும் தாவரப் பொருட்களே அதன் குணக் தில் விசேடமுடையன. அவற்றிலும் பழங்கள் சிறந் விவரம் பொருட்களின் பாகுபாடுகளைக் காட் الدر (80 E ம்ெ விஷய சங்கிரகத்கிற் காண்க.
சில சாலமாக மேனட்டார் உணவைக் கலோஹி orfni) (Calories-G35a” l- கிதானிக்கும் ஒருவகை அளவை) அதாவது உணவு தேகக்கில் உயிர்ச்சத்தின் உண்டாக்கக் கூடிய குட்டின் அளவி മൃഖിub. னல் நிதானித்து வந்தனர். இதனல் சீவ மோசமும், நிறைக் குறைவும், பு:போக்கியமின்மையும் அதிகரிப்பதைக் கண்டு ஆராய் iயின் பயனுய் உயிர்ச்சத்தின் அவசியத்தை உணர்
ந்து சொண்டனர்.
67 ԼՐ9յl சீவியத்துக்கு அவசியம் வேண்டப்படும் உயிர்ச்சத்துக்களும், உப்புச்சச்தும் நிரம்பப் பெற் ற தம், 1.5 கிமும் பசைப் பொருளும், .ாரத்திட்ட ஒரு கிரும் தசைப்பொருளும், ஒரு ம் ஏன் கலோ கிரும் சொழுப்புப் பொருளும், மற் ரில் மாத் றது நீருமாய்ச் சரீர வளர்ச்சிக்குரிய பொருட்களும் அமைந்திருக்கும் (6 لL لاہ9ے \ U { காது? ஒரு அவுன்ஸ் பால், 20. கலோஹிகள் மதிப்பிடக்கூடி யதாயும், g_u9而牛于卢g,

Page 30
40 ஆரோக்கிய வாழ்வு
கசைப்பொருள், முதலியவைகள் சிறித மில்லாத தம், பசைப்பொருள் மாத்திரம் கொண்டுள்ளதுமான சீனி, கலோஹிகள் மதிப்புள்ளதாயு மிருப்பின், கலோரி 120 *ږه களின் மதிப்பில் மாத்திரம் நிதானிக்கப்படும் ஆகாரத் திட்டம் எங்ஙனம் நற்பயன் கரும் 1 ஆதலால், நமது உணவு கலோஹிகளின் நிதானத்தில் மாத்திரம் நில் லாமல் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பலவகைப் பொருட்களும் சேர்ந்ததாயும், உயிர்ச்சத்துக்கள் நிரம் பியதாயுமிருத்தல் வேண்டும்.
உயிர்ச்சத்தைப்பற்றிய சில குறிப்புகள்:-
Vitamin A. “GJ ’’ plagijatë gj ஆகாரத்தில் குறை வதில்ை பலக்குறைவும், நோயனுகாமல் காப்பாற்றிக் கொள்ளும் சக்திக் குறைவும், சரீாக்கிலேற்படும். இச்சத்து பால், தவிடு, பச்சிலைகள், ஈரல், மீன் எண்ணெய், முட் டையின் சிவத்தக்கரு, மிருகக் கொழுப்பு முதலியவைகளில் உண்டு.
Vitamin B. “ US ” e lui FSF is ஆகாரத்திற் குறை யுமெனில் கிறைக்குறைவு, வள ர் ச் சி க் குறைவு, குடலிற் கோளாறு, விக்கம் முதி லிய வருத்தங்கள் உண்ட ாகும். இச்சத்து வித்துக்கள், பச்சிஜல, மரக்கறி, தக்காளிப் பழம், தோடம்பழம், ஈரல், முட்டை (As வியவைகளில் இருக்கின்றது.

2-6666) 41
வித்துக்களில் உள்ள "பி" சத்தின் புள்ளி விவரம்:-
பயறு, பருப்பு உளுந்த, கட
100-க்கு 26.5 பாகம் பிே’ சத்து
ரிசித் தவிடு
リ , 20.0 . ,
பட்டாணிக்கடலை
வேறு பருப்புகள் - *労 13.0 9 கோத மை உமி 12-13 ፆም
முழுக்கோதுமை s 8-10 9. கேழ்வரகு ፵፵ 8.0
சோளம், பார்ளி 7-8 39
ஒற் மீல் (Oat Meal) , . 4-5
ஆலை அரிசி 0.0
வெள்ளை பா 9 9
ஆல அரிசியிலும் வெள்ளை மாவிலும் 8 பி’ உயிர்ச் சத்து இல்லை. இச்சத்து நூற்றுக்கு நான்கு பாகத் திற்குக்குறையாமல் ஆகாரத்தில் சேர வேண்டும்.
Vitamin C. “á' உயிர்ச்சத்து ஆகாரத்திற் குறை
வதினுல் குழந்தைசளுக்குக் கணம், தோஷம்) சரப்பன் முதலிய நோய்கள் உண்டாகும். இச்சத்த பழம், மரக்கறி, ஒலவகை வித்தக் கள் முதலியவைகளில் உண்டு. முந்திரிசைப் பழம், அப்பிள் பழம், முந்திரிகை வற்றல் முதலியவைசளில் (* சத்துக் குறைவா யும் நெல்லிக்காய், கொய்யாப்பழம்) தோடம் பழம், எலுமிச்சம் பழம் முதலிடவைகளில்
அதிசமாயும் இருக்கிறது.

Page 31
42 ஆரோக்கிய வாழ்வு
பழங்களில் ‘சி’ சத்துக் காணப்படும் விவரம் - முந்திரிகைப்பழம் 1000 கிருமில் * இ? சத்து 蒂 மில்லிகிரும்,
முந்திரிகை வற்றல் , y sy அப்பிள் (நல்லசாதி) , 92 2, , , அத்திப்பழம் 99 yy 24. y வாழைப்பழம் (நல்லசாகி) y 8. , C:} yo y 2-12; タ2 வத்தகைபபழம மாம்பழம் y 15 y மாதுளம்பழம் y g 6 99 தக்சாளிப்பழம் 9 y 32 அன்னசிப்பழம் y 63 9 தாடம்பழம் 39 罗繁 103 sy சொய்யாப்பழம் s 299 y நெல்லிக்காய் s 9 4, 13 '
Vitamin D. 'டி' இச்சத்து சரீரத்திலுள்ள பொஸ் பசஸ் (Phosphorous) என்னும் உப்புப் பொருளையும் கல்சியம் (Calcium) என்னும் சுண்ணும்புப் பொருளையும் சமன் செய் கிறது. குழந்தைகளில் காணப்படும் கோஷம், கணம் முகலிய வருத்தங்களைக் தீர்ச்கும். இது பால், வெண்ணெய், மீன் எண்ணெய்,முட்டையின் சிவத்தக்கரு, ஈரல் முதலியவற்றில் இருக்கிறது.
Vitamin E. 'ஈ' உயிர்ச்சக்து மேற்குறித்த “ ஏ
‘பி’, ‘சி’ சத்துக்கள் உள்ள பொருட் களில் இருக்கிறது. ஆனல் பாலில் மாத்தி
ரம் குறைவாகக் காணப்படுகிறது.

a 600T6) Ꮞ8
பிரயாசப்பட்டுப் போதியளவு வேலை செய்யும் மனிதன் நாளொன்றுக்கு உயிர்ச்சத்துக்குக் குறைவில்லாமலும், தேக வளர்ச்சிக் குரிய மற்றப்பொருட்களின் கலப்பிற்குப் பழுதில்லா மலும், சிதைவுபோக 3000 கலோவிகள் சூடு கொடுக் கக்கூடிய ஆகாரம் சாப்பிட வேண்டி ஆகாரத்தின் யிருக்கும். இது காலம், இடம், வயது,
அளவு.
றுமை பற்றி வித் தியா சப்பு டும். எனெனில் பெண்களுக்கும் சரீரப் பிரயாசையற்ற வருக்கும், நோயாளருக்கும், குறைவாயும் வளரும் பிள்ளைசளுக்கு அதிகமாயும் உணவு வேண்டப்படும். ஒருநோயாளி 1800 கலோஹி குடுள்ள உணவில் கிறைக் குறைவு அதிகம் ஏற்படாமல் சீவிக்கலாம்.
பலவிதப் பொருட்சஞம் ஆகாரத்தில் கலக்கப் படவேண்டிய முறையைப்பற்றிப் பலவித அபிப்பிரா யங்கள் உள்ளன. ஆதலால் ஆகாரங்கள் இன்னவிதம் தான் கலச்கப்படல் வேண்டுமென்று கட்டாய விதி கூறமுடியாது. பின்வரும் இருமுறைகளையும் ق) فهs gF
மாகக் கொள்ளலா ம்,
(1) பசைப்பொருள் i4 அடிகள்) 3324.
தசைப்பொருள் 4.5 கலோஹிகள்.
y y
இதில் 324 கலோஹிகளும் சிதைவிற்காகக் கழிக்
கப்படலாம்.
கொழுப்பு 4.5

Page 32
44 ஆரோக்கிய வாழ்வு
(2) aિv ஆராய்ச்சிக்காரர் ஒருவருக்கு வேண்டிய ஆகாரத்தின் கலோ றிகளின் மதிப்பில் ஆறில் ஒரு பாகம் தசைப்பொருளும், ஆறில் ஒரு பாகம் கொழுப்பும், மீதி மூன்றில் இரண்டு பாகமும் பசைப் பொருளுமாயிருத்தல் வேண்டுமென்று கருதுகின்றனர். இவை பின்வரும்" முறையிற் கலக்கப்படலாம் :- பசைப்பொருள் 17 ೨॥ ன்ஸ், தசைப்பொருள் 4 அவுன்ஸ், கொழுப்பு
134 அவுன்ஸ். ஆதலால் இவைகளை நியாபகத்தில் வைத்தச் கொண்டு, ஒருவித ஆகாரத்தையே சாப்பிடாமல், பல வித ஆசாரங்களையும் போசனத்தில் சேர்த்துக்கொள் வோமாயின் இயற்கையே அவற்றின் உணவில் கலப்பைச் சரியாயிருக்கச் செய்யும், பழம் முதலிய நமது ஆகாரத்தின் கலோறிசளின் பொருட் மதிப்பில் நூற்றுக்கு இருபது பாகம் களின் பாகம். பழங்சளும், மாக்கறிகளும், கீாைசளு மாயிருத்தல் வேண்டும். குழந்தைகள் ஒரு போத்தல் பாலும், வளர்ந்தவர்கள் அரைப்போத் தல் பாலும், மாமிச போசனிகள் இரண்டு முட்டை யும் நாள் தோறும் ஆகாரத்திற் சேர்த்துக் கொள்ளல்
வேண்டும்.

鲍agem電場EsseuコQ
8g8L | 30# | 2*`` | 80 ̇8 | 6 ኽ8 , 8 ̇ኽ | 6‛g8-61-Ioşņi iece@logenoe) 938 - || 32 || 86's | T | 06’8 || 68'8 || 8 0 || 29'98og uri |--| 119?flo1999-ā 199ọ91In 61.8I | †08 || —T || ' gogg || 6' 2 T | 8°0I '99ɛ faswe@ @ toeri 92 g23 I-~ | 0’s | 0‘az | 0° I0° I 2 || .ɛpa’we #1-7177 682 | 39 I || — | — || 0:2 || I 'Ig | I’I | 8’02goa'œ-6-f* 후 %% || **" || 「 || 니 || 8% || 8%g || &T || O%45 #a’œ@ §fi llog) 额I88 | 82----– į I’0 | gozi ' g'I | 9'03 || (ownego 5īņđùllog)) isegi 一架148g !T || 4:'63 | 0'8a || $'I || &##(ueise Hıris), og)) 1çeşi 682 || 89 I || —T | 30'Ø I || 29'4 I || 20’ I || 19'82—ius-Zīdī) 1,9±191999-a egiljon Hosťou s Hogwi |,米(eo-snin?
•9-OOL | 69-001 | 69-001 || 69-001 || o-001****特use@une)|(9%) urīg) Hırı望蚁起•ơi si usos, 点• •塔岛•«» • ș ș4@ T | ©3 00Tsoceri | sāļus | fðușe) |sipoeg|*:
|
·역sug道a n왕정 역6니nu的地ugas)urn的ur geuss道mus南部 m아니a道的地1cag g th니nu臣 國의臣
ɛ

Page 33
ஆரோக்கிய வாழ்வு
©, 才争
2,89l 1999 i &#çT 6I 6 I 849 I 6 I 9 I 279 I
688 3Ꭽ9 l 40098
Hņgai
golheg)? loss ș ș40) I
3!? 9ᎭᏋ 0ቐ8 88's, () 18 298 898
g81 398 gỡ” [82
Hņggi souseş)so 1995,
os 001||
8.8に f.04 ぬ、0に 68’IŤ 6’ 22 8’08 8:08
g0’s. I ! I'Zog
09-00I 19Øurie)
si poseri
g’0 0, & !” I 8 ̇ጥ . 68’0 'ኽ” ̇0 g’0
69-00I Me@urie)
ņņus.
69-00I Hņi f) woso)
I’6 6°0 { 0'8 I ĝ’83 I 3'6 . 6°9' 8’9
I I's †9'8 8’() ,
69-00I 19%) uns)
习电月9岭
| |
|O’I9’6In ne@LE為 Z'I8’8 Inoe sology#ffù,5) Ꮾ Ꭽ | 0"Ꮛ Ꮮ .Ø 19đỉog) g8°9 : i gI ‘8 09) 89° 0 || 39'0I5y) 8′0 || 3’3 I(总审)ég可曲e冲D g’0 | 9” I I低g可忍耐 | | |poło 1099-3 * 0.919€@$ 59 ) 96'I | I*9 (souosoɛɛırīgo@) “ 36' [gogg || (HogeĞ) og uriņuoso qosser| 0:9 || spissee) içertog)' 62-00I· Asooș****起quae ușo pHsi-æ
·영sm황道em法e정 역6니u田道u的地Sun的urn &eue田道mus都, mith:北地中海189cm & 아니nu臣 國연보

47
உணவு
9003 T89
6I 61 639 [] 469 I 888 I Ꭽ9Ꭽ1 ᎭᏃ9;L 289 I † 3g I
Hņsson
&suseg)? A&중9
戈冷4DT
ᏣᎭᎭ Å I I ᏋᏣᎭ 488 I gs? g04: B38 988 I98 988
Hņga Ķs voeș,o
1çesy �& 00I
†” 28 | 8,8 || No’64 | 889:99’6 I &‘培因一9:T4:0 || 9’gĝ’I() '69 8’83 | 8'3{:'6 I || 9'98 | 3'sᏋ"Ꭽ 1 8°39 | 9’Ig’03'8 I ' ',';的“ZT ኗኽ ̇ኽ9 | ኗ Z ̇0['00" | Z | O’ą į „“I I 6’89 | 8° { { | }'I{;' ], { | 3'8寻3T 96989Z:08’6 I || 6'88’I I 689 f83’I†”() s | sog!” I 8 i 1.° 2,8 | 10' 0 | 30’0& ’0['0 | 6" I I 9"32 | †” IᏃ"Ꭽ6’t;Ꭽ* I9’0|| tuo ~(9 •(œ •运-69-00Í 配器配器�培望唱点* ņogeri | siyus į đì) use) | soooo^*因****
|
pHņ* |
ņuog og) --Two-Tusoe, o pagrī 名的丁&港月%) 总了因
Hņ@rı
toggiò-a
fosformsi &ų kao ye uri €g forso? que llog)
‘quae uxo
·편sm南道a n왕e정 편6년u田道도義的Surn的ur,上海(493道mue홍해 n약 5道的용「los해 g아5니nu운 間石T臣

Page 34
89GI9'3 - || 6'0I’08’0I’I || googņuoạ’œur & AI888°92° 0I ’03’3g’0!'68171 g șų o so so ()9 I8893"%|I’g | Ig’0 | g | og N | 9'a9 ̇'ን8ņus pɛ wɛ ŋgʊơi)
1,9±hologotā Ģ* #001
*ą †03gț¢9’6I’II’0go I6°00°28@ņāfisos sgille qe&f\\ 法院3游Ꮾ2 Ꮮ ' | 0"0Ꮴ | 8"0 | 8Ꭽ"03'8 | 89’0sogg@ to físes genyerto ā 299 || 271 || 0-ie | goo || 8 | | Ğ ğ | ss | @ņđi sự neuș și o -eg Ꭽ0Ꭽ689’6 I | 8’0 i 80’0I ogᎭ* II'92@g đi sự uỷ, gù-a 289 I || I 98 | y2'28 | 10’0 | go’0 | zoo | I ’0 | 6 || ||@tgofis og elsefe doT 创|Isossfeldoo-a școortg@ņối? 행)~-------------------- -
HH|- 射卧69-001 || 69-00Ț | 09-001 || 69-00I%l(9- ős)49@liris) ise Qune) HQ|| |1,2%) uns) ?-岷 4ဗၦ(ဗ|lçeyiņogon | sıyısıđi) usos)ரசிற98 增匈增出追諡949| ( I sɔɛ 001| ????|
qi suo?
3 :명學J都道a n장용영 역6니u南道兵營的Su그的urn &&s田道mu中國都, n아51%道的相1ce용해 확아니nus 國의臣

49
sl Ꭽ
I8I 对f 8 I I ደ6
g8
001 349 †g I
Hņigon
&74%增 49 se **4)T
|
|
|
(6
| 63 I8 gz IZ 8 | 38 Z8 88 ᏤᏋ
suaeg) o Ioon
Hņgai
z'i
gzog 6I og g’s 20'8 ?‛፪ ! 6 ! に g 808'9
69-00I 占DunO
i n-o zoo on
4Q3 00I o
ĝ’s) i
69° 0 68’0 g.0 go()
89,0 s
8′0 8°0 go I ጥነ0 ̇I
eo-00.[| /* @ uras)
rı yus| Đwoooooo !
3°0 gỹ'0 ĝ0’0
I - 0
ሯ `በ .
33’0 g’0 go I 1,90’0
so-00T Hņi
9°0
88‘Z 8`፭ *: I 8’I 88° 0 6°0 叙:0 88'3 |62’s \
+-00I *gミコG
唱的 |增喻资电
|pH sı-ā
|
9'98qifîrırıderı 1,9ęsto 1999-æ sæcoorlođin go'zg | usert go ofi) ugif)qi o ormr | (; I “ I 62.6%행&행&57 9`ሯ6열49%)행「os니99 8 ሯ(}nsoreș 8’ fo 6quoș roeso ፲ን`ተ (5fpu.orge-IH g6にquosogne of !’0 #3* spuspegi oạormri 0'06rn poș fi læree) 记长qui ușo
·역sm황편en義e정 역s)나nus相uggsour子高urn gge原道uus 후 그 당?* 源田城・「9cm g아니u운 흑연을

Page 35
ஆரோக்கிய வாழ்வு
<> à so
·g-1·ırısı-ışękse? apoluosoggț¢s
gI + || 16 | 9’OI || 9:0 || I’0 || 9°0 | *'0 || 8'28 oorse@ssor II 91 || — | 5'8) | ? || || 8'3 || I’o | ĝ’I || ... sogl | oogste og yrg) Oz's || — | 0'81 |}3’0 || 6'0 - || 9’0 | ()’s 1. gea’qortofir, ggg | | | − − | g'8$ | 3:0 || 1:0 || 9:0 || 0'98opa'ợre şeyşgdì)
· g18 | – | 0 ̇6 | F | W`0 | ሂ'0 | W0 | 0:88 qīfiri yra 5i 062 || — || 0:1 | | | g, | o'0 || 8:0 || 8:0, || 0’58qđfiri wesifiko ggg || — || O'g1 || 2. || o'0 || 8:0 || g’0 || 0:48qđầriņosesys'gofi) ኗኗን— || 0:2 || || ? || z’I || gst | goo | O'z'84|bs-1es#sp groforigiusto un 181 || 0+ | W | I || 1:0 || 8:0 || 7:0 || 9°0 || 0 28 | qđĩa qi-Irog) £97 | 801 || 26% || 270 || 89’0 | 18. I | g6'0 | 32:12qđfinţifio are 0țg | g4 || 29'gs | zo’O | 66:0 || gs.'8 | 68'0 || 80°38qđfirīgi un Hņsťon | H7$g1 || ... :)-„ant į sos-(\^T || ~ ç’voeg)o |&wooɓo3%韶器遠:謂詞法.62-00s•ơna woso
.gengsen%형qi@oluşçugosun@un長eue守道mus都, mith「正宮城高城,「icag & th니u운 間on臣

S1
2-6୪୪Tଵର ।
9292319'93|| 8’01:0 || 8 y gțI38A'8 || Z." I98’0 || I’3 #g Iጝነ86’91 || I’09°0 || Z." I ነ0õኗኽ”ኗM ̇6 | W8‛94,0’0 || 96°0 ----._%997。う う L*、。 071-88 || — || 1-8 g | Ģe,370, 19'0-9'0 669†g I || 9 I '83 6°00'8 | Zog 69 s98Zgog | I og0’I | 9’0 003ᎭᎭ83'8 | 83°060’0 | Þ8'3 |{ Hrison | Hņgai || ...,| ,象9-001 || 69-00 L | 69-001 || 69-001 ?guepo,lesò unoj ses) urie) _H7 |se@ute) 491çesiп | ș$4) I sɔɛ OOI년 969|ņyug:| đì) woso) |ņ?ge?
|
}
い、8ぬ I’I6.
8’08 99° 18 0'86 ' ፭ ̇ቫ”9 9°/8 0’68
→
6e-OOI 49恩戈
gə19-a é9戰
QQ「G&sgua日 qđầrīņ@s@goko gyfriņ urmņusoe) qi firāfīgue sertoe) qđînţiowe oore qđfiri se urnou-Te) qđfira国4战皆99日 qđầrısı urııırı
quae uos?
·역sig道e n왕e용령역6니u原道長德高sun的u그şeụ9æņu uosè m'ti-seșteș-loog& 약*nu을 國의世

Page 36
#I ZI | 319 | gl '07 || 0:0 I || 8’gs | g2'g + 2's | 9"83 || ||Hņurs og; I | g18 | 52' 29 | 8° II | sg | Ig'8 | 3'3 . || I 8 I | - IJtt9stī`q? 630 I | Offa | 8’Oss | I’33 || 780:0 I || 8’g - || 6's. Iquae so †g II | Ogg |- 6'28 | 9'93 | 9’s.3'8 I || 0'93:'목 : || .quollegi 2021 || 992 || 6:09 | 1,8 | +7,0 || 98,3 || 9’I | 3,93geH 卿oig i | zog | g I'6g | g’OI I I’W |ggogg | I’9 | 679 Iqiriognog) § 372 | g9 I | gogg | g2'68 i gg'0 | 29’01 || 8 || || 831qion 3 Ģ ģggr | 67 g | I gogg | I’gi | † 6 || 89°0 I || 9’s | 90’01 ||@uega ą 993 I || 223 | 12 og· ĝ’ą I | 88’0I o II | g2'O I || 79’6}596977 să şi « | 87 |logi | - || 1:083’I90838qasmuo lęgoriog) 创—·:·— 행___---------- - 69-00T
| :| “5%;"|『여城”|| *-mot || *-pom冯r這499 (9-00T
suoeg)o souse.g)19@ un@)H@•喻 い·ශ්‍ර) #99Dur"ෆිg ssミコGquae uso 4ဖၦ(ဗoß" | Hạosri | siyug | fÐwoso)|?အဖ#增屬湖出y gogo ogoo s’ș40) I |4)3 00T|'� ~«»#Hsi-a
||{
城 :명sm都道en法e왕열6니nus道兵營的Su그的u그后u9田追与巨由前m나 보병e황1cag Q 약니nu世 國의臣

53
읽적 额 a
oooooooo 86 — HOE fuseo sự I || op oặuropę – ry podnoseon gŵŷ |
osoɛɖiɖɔɔ o io = pŵunoņegosဗုါÚ)၉ၾ I
‘ą9139f9ko I = qi@ş ggogg 998 I || — || '00 I|geɛ %ls L || 「 || 3:18 || 1 || — || P, 3:|Z81çosog) | '';||oogosto Hisīļ99$ 4 Io_ | s | I || 8's I | g'O I | Z | | 2,6 || 8 g | gros,&5 sog)?) • 89 I 3 | 82† | 2,0 * | / Io 85 || 783 · 8,8 || 851(#)၅☎ Hņsson | Hņgai· · ·: „|o-001 || 69-001 || 69-001 || 69-001 || %| ao*****gミ」g1,9 %) unɛ| Hışı9447bŹ.韩嫣• si suo?
•*坛。»• 戈演DT Dé00T7 octori | 74 us | ff.) use) i si pesso|%r하여|
*
***學理* n후 형 36니는國通도義高8u그的ur 용운95道mus홍 크약中學5%1ge후 활약에nu트 페on트

Page 37
54 ஆரோக்கிய வாழ்வு
நாம் செய்யும் தொழில் கட்கேற்ப நமது உறுப் புக்கள் உபயோசப்பட்டு அவைகளின் சக்தி சேதப் படுகின்றது. அது நாம் உண்ணும் உணவின சத்தினல் மறு படி யும் நிரப்பப்படுகின்றது. உணவும் ஆகையால் தொழில் வேறுபாட்டுக் தொழிலும். குத்தச்கபடி உணவும் வேறுபட்டிருக் தல் அவசியமாகின்றது. நாம் செய் யும் தொழில்களை மூன்று பிரதான வகுப்புகளாகப் பிரிக்கலாம்.
(1) சரீசப்பிரயாசையான வேலைகள் மாத்திரம்
செய்தல்.
(2) Cup%rז வேலை மாத்திரம் செய்தல்.
(3) சரீரப்பிரயாசை மூளை வேலை இரண்டும்
சம்பந்தப்பட்ட தொழில்கள்.
சரீரப்பிரயாசையான வேலை க ள மாத்திரம், செய்யும் தொழிலாளர்க்குத் தசை நாரின் (Muscles) சிதைவே அதிகம் உண்டாதலால், இச்சிகை வை கிரப் பிவைக்கத் தக்க உப்புச் சத்துக்கள் நிரம்பப்பெற்ற பொருட்களே இவர்களின் பிரதான உணவாக விருத் தல் வேண்டும். இவர்கள் இலகுவில் சரீரப் பிரயா சீரணிச்காத தசைப்பொருள்
665 பிய வித்து வகைகளும், கொழுப்புப் வேலைக்கு பொருட்களும், உருளைக்கிழங்கு முங் , உண்ெ திரிகை வற்றல் போன்ற வற்றல்களும், அப்பிள் தக்காளிமுதலிய பழங்களும்,

உணவு 55,
முள்ளங்கி பயத்தங்காய் வெண்காயம் முதலிய மாக்சறி களும் கீரை வகைசளும் சாப்பிடல் என்று. முதி லிய பானங்களும் குடி வகைகளும் விலக்கப்படல் வேண்டும். இவைகளுக்குப் பதிலாகக் கஞ்சிவகை
குடிக்கலாம்.
மூளை வேலை மாத்திரம் செய்யும் கணக்கர் முதலி பவர்களுக்கு மாமிச கோளங்களின் (Gland) வேல் யே அதிகமாக விருக்கின்றது. ஆகையால் இவர்களின் d உணவு மாமிச கோளங்களில் ஏற்படுங் மூளை வேலை குறைவை கிவர்த்தி செய்யக்கூடிய க்கு உணவு. உப்புச்சத்தக்கள் உள்ளனவாக விருத் *) தல் வேண்டும். இவர்கள் இலகுவில் சீாணிக்கத்தக்க மெல்லிய ஆகாரங்களையே அதிகமாய் உட்கொள்ளல் வேண்டும். பாலும் பழங்களுமே இவர் சளின் பிரதான உணவாயிருத்தல் நன்று. வேறுவகை உணவுகள் ஒரு வேளை சாப்பிடுதல் போதுமானது சோடம் பழம் முந்திரிகைப்பழம் அன்னசிப்பழம். முதலிய பழங்களும், இ லகு வில் சீசணிக்கத்தக்க மரக்கறி, கீரை வகைகளும் சாப்பிடலாம். பானமாகப்
பழச்சாறுகளை உபயோகித்தல் நல்லது.
சரீரப்பிரயாசை முளை வேலை முதலிய இரண் டும் சம்பந்தப்பட்ட வியாபாரத்தொழிலாளர் போன்ற வர்களுக்கு காம்பின் (Nerves) தொழிலே அதிகமாயி ருத்தலால், இவர்களின் உணவில் நரம்பைப் பலப்படுத்

Page 38
ஆரோக்கிய வாழ்வு
சரீரப்பிர தத்திக்க உப்புச்சத்துக்கள் அதிகமா யாசையும் யிருக்தல் வேண்டும். மரக்கறிகள் முக் மூ%ளயும் சம் கியமாய் இவர்களின் உணவில் சேர்க் பந்தப்பட்ட கப்படுவதோடு, கேழ்வரகு, த விட்டுப் வேலைக்கு. பற்றுள்ள அரிசி, பால், வெண்ணெய், பழங்க ள் கூடியனவுமா யிருத்தல் நன்று. எல்லாவிதத் தெ ாழிலாளர்களும்பாலும் பழங் களும் தம் ஆகாரத்தில் சேர்த்தல் மிசவும் நன்று,
இக்காலத்தில் நம்மவருள் பெரும்பாலார் உண வில் கிஞ்சிற்றேனும் சிரக்கை எடுக்கின்முரில்லை. பசிவரும் பொழுது வயிற்றை கிரப்பினுல் போது
மென்றளவில் கி ன் று கொள்வதும், கம்மவரும் உருசி பார்த்து உண்பதும் என்ன உணவும். அறியாமை! நாம் உண்டது உயிர்வாழ் வதற்கென்று நினைந்து உணவை நிறை யினலும் அளவீனலும் மதியாமல் தேகத்தைப் போஷி க்கும் சக்தியினளவினுல் உணவு கொள்ளப்படல் வேண் ம்ெ. சத்தான உணவை விரும்பி நன்முக மென்று தின்னல் வேண்டும்.
அரிசிச்சோறு நமது பிரதானமான ஆசாரமாகி றது. அரிசியோ போஷத சக்தியில் குறைவானது. அதிலும் மில்லில் குத்தப்பட்ட அரிசியில் உயிர்ச்சத் தாயுள்ள தவிட்டுப்பற்றும் போய் விடு அரிசிச் சோறு. மாதலால், மில் அசிரியின் பிரயோச னத்தைப்பற்றிக் கூறவேண்டியதில்லை.

உணவு 57 ஆகவே மில்லில் நெல் குத்தப்படும் கெட்ட வழக்கம் ஒழிகல் வேண்டும். அரிசியிலுள்ள உயிர்ச்சத்தாகிய தவிடு சேதப்படாமல் உரலில் நெல் குத்தப்படும் பழைய முறையைக் கைக்கொள்வது கன்று.
நம் முன்னேர் சத்துள்ள உணவின் பயனப் பூர ணமாய் அறிந்திருந்தனர். பால், பழம், நெய் முதலி யன அவர்கள் போற்றிவந்த உணவாகும். "நெய்யில்லா வுண்டி பாழ்,' என ஒளவையாரும், நம் முன்னுே “பாலுண்டோம்,'எனத் தேரையரும் ரின் உணவு கூறியிருப்பது கவனிக்சத்தக்கது. மரு ந்கினல் இலகுவாகத் தீராதநோயாளர் சளும், இங்கிரியப் பலக்குறைவினல் மக்கட் பேறில் லாகவர்களும், விரதங்காத்துப் பிற உணவுகளை விடு த்து, வீரியம் நிறைந்த பால், பழம், இளநீர் முதலியன உண்சி, நோய் தீரப்பெற்றும் பிள்ளைப்பேறு கிடைக் கப்பெற்று மிருக்கின்றனர். பாலின் மகிமையை அறி ந்து rി போதியபடி கொடுக்கும் பசுவைத் தெய் வத்திற்கொப்பாக மதித் தி, இல்லங்கள் தோறும் பசுக் களை வைத்திருத்தல் இலட்ச்மீகரமான வாழ்வுக்கு அவசியமெனக் கொண்டு, பசுவிருத்தியில் ஊக்கமெடுத் திருக்கின்றனர். ஆதலால் கால வெல்லை கணக்கிட விய லாத கற்பழக்சங்களை அநாகரீகமென்று தள்ளிவிடா மில் ஆய்ந்து தெளிந்து அவசியமானவற்றைக் கொள் ளல் நன்று.
நாம் சோற்றையே உணவாகக் கொள்ளும்போது, சோற்றில் தசை உண்டாக்கும் பொருள் சொற்பமா

Page 39
58 ஆரோக்கிய வாழ்வு
யும், கொழுப்பும் உப்புச்சத்தும் மிகவுங் குறைவாயும்,
உயிர்ச்சத்தில்லாமலும் இருத்தலால், சோற்றுணவு. தசை உண்டாக்கும் பருப்பு முதலிய
பதார்த்தங்களும், உயிர்ச்சத்தும், உப் புச்சத்தும். சரீரத்தின் கழிவுகளை வெளிப்படுத்தும் பொருட்களும் நிறைந்த மரக்கறி கீசைவகைகளும், கொழுப்புப் பொருட்களாகிய நெய், எண்ணெய் முதலி யவைகளும் போதியவளவு சேர்க் த க்கொள்வதோடு, பால் பழம் முதலியனவும் சாப்பிடல் வேண்டும். இன் றேல் சோற்றுணவு உடம்பின் வளர்ச்சிக்குரியதாக மாட்டாது.
கவிட்டுப்பற்றில்லாத ஆலை அரிசி, வெள்ளைக் சீனி முதலியவைகளைப் பிரதானமான
நீரழிவுக்குக் உணவாகக் கொள்வதனுலும் கொழுப் காரணம். புப்பொருள் ஆகாரத்தில் குறைவதின லும் நீரழிவு ரோகம் உண்டாகிறது.
தேர்ே, கோப்பி, கொக்கோ இம்மூன்றும் ஏறக் குறைய ஒரே குணமுடைய பொருட்கள். இவைகளில் முக்கியமாய் இருப்பன முறையே தீயின் (Theine) sGaius air (Caffeine) தீயோபுருேமயின் (Theobromine) ஆகும். இப்பொருட்கள் சமயோசிதமாய்ச் சிறிய அளவில் உபயோகிக்கப்படின் நரம்புக்குக் கி ள ர் ச் சி தக்து தலையிடியையும் போக்குகின்றன வேனும் அளவுக்கு அதிகமாக உபயோகிக்கப்படினும், சிறிய அளவிற்முனும் நீடித்து உபயோகிக்கப்படினும்,

22 6δότΘ). 59
தேநீர் முதலிய கேகக் கில் நச்சுத்தன்மையை யுண்டு வற்றின் தீங்கு பண்ணி நரம்புப் பலவீனம், சீரணக் கருவிகளில் கோளாறு, இருதயத் து? ப்பு, குண்டி க்காய் நோய் முத லியவைகளை விளைவிக்கின் றன. தேநீரில் ரானின் (Tannin) அதிகமாயிருத்த லால் சீரணக்கோளாறுகளையும், கோப்பி நித்திரையின் மையையும் கொடுக்கின்றன. சொக்கோவில் மாத்திரமே சிறிதளவு ஆகாரத்தன்மை உண்டெனினும் மற்றைய வைகளில் ஆகாரத்தன்மை இருக்கவில்லை. ஆசையால் இம்மூவகைப்பானங்களையும் பாவியாகிருத்தல் 5ன்று. வேண்டுமாயின் சிறிதளவில் வபோதிபர் சமயம்போல் உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கு இவைகளின் பழக் கம் உதவாது. தேநீர்க் கடைசளில் இவைகள் பாகம் பண்ணப்படும் முறைகேடுகளால் இவற்றிலுள்ள நச்சுத் தன்மை அதிக அளவில் சேருகின்றமையால் தேநீர்க்
கடைகளை நடுதலாகாது.
வெண்ணெய் எடுத்தமோர் எண்ணெய் எடுத்த புண்ணுக்கு முதலியவைசளில் ஆசாரத்தன்மையில்லை. ஆகையால் அை வகளை ஆசாரமாக உப ஆகார யோகிக்கப்படுவதிற் பயனில்லை. மோரி மாகாதவை. ற்குச் ஒல நோய்களைக் குணஞ்செய்யும் சக்தி உண்டு. எனவே மோரை மருந்
தாசப் பாவிக் கலாம்.
கேழ்வரகு, உமியுடன் பண்படுத்தப்பட்ட கோ துமைமா அல்லது அரிசித்த விடு கலக்கப்பட்ட வெள் ளைக்கோதுமைமா இவைகளைக் கீரைகளுடன் கலந்து

Page 40
60 ஆரோக்கிய வாழ்வு
சில உணவுப் வெண்ணெய் அல்லது எண்ணெய்யில் பொருட்களைப் பாகம் செய்து புசித்தால் நல்ல குணந் பாகஞ் செய் தரும். பயறு, உளுந்துபோன்ற தானி யும் முறை. யங்களைக் சோது நீக்காமல் பாகம் செய்வதே நன்று. இக்கானியவகை கள் வறு க்சப்படுவதனல் அவைகளிலுள்ள மிகச் சொ ற் ப ம |ா ன  ைதலம் சேதமாகுமாதலால் அவைகளை வறுக்காது உபயோகித்தல் வேண்டும். கல் யாண்ப் பூசனிக்காய், தச்காளிப்பு ழம், சக்சரிக்காய் முதலியவைகளை வேகவைப்பின் அவைகளின் குணங் கெடுமாதலால் எப்பொழுதும் பச்சையாய் பாகம் செய் தலும், உருளைக்கிழங்கைக் தோல் சீவாமல் சமைத்த ஆலும நில லது.
பால் நோயாளருக்கும், குழந்தைகளுக்கும் விசே ஷ் குணஞ்செய்யும். இராப்போசனம் பண்ணியபின் பால் சாப்பிட்டுவரின கண்ணுேய் அணுகாது, வியாதி இல்லாத புசுவில் சுத்தமாய்க் கறக்கப்பட்டவுடன் பச்சைப்பாலாய்ச் சாப்பிடுதல் மிகவும் நல்லது. பாலி ஞல் நெருப்புக்காய்ச்சல் முதலான பல நோய்கள் தொத்தக்கூடுமாதலால் சந்தேசப்பட L് ഉിഞ്ഞ് ഖ. க் தக்க பாலைச் சிறிதளவு கண்ணிர் கலந்து மெல்லிய கெருப்பில் காய்ச்சிச் சாப்பிடுதல் வேண்டும். வெண்ணெய் பிறக்கக் காய்ச்சு வதும், காய்ந்தாறிய பாலை மறுதரம் காய்ச்சுவஅம் இல்லதல்ல. பால் உண்ணும்பொழுது புளிப்பில்லாத பழவகைகளுடன் கலந்து உமிழ்நீர் (Saiva) சேரக்
தக்கதாய் ஆறுதலாக உண்பது நன்று.

உணவு 61
இளநீர் மிகவும் சத்துள்ள உணவாதலால் அதை மட்டாய் உபயோகிக்கல் வேண்டும். பால் கிடை யாத விடங்களில் அகற்குப் பதிலாக இ ள மீ  ைர க்
கொள்ளலாம்.
எந்த உணவுப்பொருளையும் மிதமிஞ்சி வேக வைக் கால் அதன் இயல்பான குணங்குறையும். ஆத லால் வெந்து கெடாத விதம் பக்குவப்படுத்தல் வேண் ம்ெ. மரக்கறி முதலானவைகளுக்கு உணலின் மசாலைச்சரக்குகள் அதிகம் சேர்ப்ப குணத்தைக் கால் அவைகளின் குணக்கள் குறை குறைப்பவை. யும். ஆகையால் மசாலைச் சரக்குகளோ குறைவாக உபயோகித்தல் வேண்டும். முடியுமானல் அவைகளை முற்முய் உபயோகியாது விடுதல் நல்லது.
பெரித்ததும் வறுத்ததுமான ஆகாரங்கள் சமி பாக்குணம் மலச்சிக்கல் முதலியவைகளை உண்டுபண் அணுவதால் அவைகளை உண்ணுதல் நல்லதல்ல; சீராகக் ாம் (இரவில் அன்னத்தில் தண்ணீர் சிலவகை இட்டுவைக் கல்) தயிர், வெண்காயம் ஆகாரங் முதலியவை சேர்த்துச் சாப்பிடலாம். களின் குணம். இகனல் வெட்டை முதலிய நோய்கள் குணமாகும். ஆனல் முதல் நாள் சமைத்க கறி, புளித்த கறி சாப்பிடுதல் கூடாது. * முதனட் சமைக்த கறி அமிர்தமெனினு மருந்
^の W தோம்' என்பர் தேரையர்.

Page 41
62 ஆரோக்கிய வாழ்வு
எப்பொழுதும் நமது போசனம் பலாகார முடை த்தாயிருத்தல் நன்று. பலாகாரமென்பது மா சீனி எண்ணெய் மூன்றுங்கொண்டு பலவித வடிவின சாய்ச் செய்யப்படும் பகடிணங்களன்று.--பால், பலாகாரம் பழம், வித்துவகை, கீரை வசை, கிழ என்ன? ங்குவகை என் பனவே. இவை முன் னரே பலவிடங்களில் சொல்லப்பட் டிருந்தும் பின்னரும் பன்னிப் பன்னிப் பேசப்படு வது பலாகாரத்தின் அ வ சி ய த்  ைத வற்புறுத்தற் பொருட்டாம்.
இரவிலே சயிரும், கீரை வகைசளும், கிழங்கு வகைகளும் சாப்பிடுதல் கூடாது, எண்ணெய் ஸ்நானம் செய்த அன்டி புளி, தயிர், பாசற்காய், அகத்திக்கீரை,
இளநீர், வாழைப்பழம் மு த லிய ன இன்ன 356) புசித்தலாகாது. அதிசம் சூடான த்தில் இன்ன சாப்பாடும், ஆறிக் குளிர்ந்துபோன உணவு ஆகா சாப்பாடும், உமி கல் முதலியன உள்ள தென்பது. அம், ஈமொய்த்ததுமான பகஷணங்
களும் போசனத்துக்குதவா. ஈக்கள் அநேகமாய்க் கெட்டு நாறுகிற பொருட் களிலும் வேறு அழுக்குகளிலும் மொய்க்கின்றன. -ቇኔዻ லினுல் அவைகளில் உள்ள விஷக்கிருமிகள் ஈக்களில் ஒட்டிக்கொண்டு அவைகள் சாப்பாட் ஈக்களால் டில் மொய்க்கும் வேளைகளில் அகிற் விளையுந்தீங்கு. சேர்ந்து கொள்கின்றன. இவ்விதம் சாப்பாட்டுடன் விஷக்கிருமிகளை உட்

உணவு 63
சொள்ளுவதால் அநேக நோய்கள் பரவுகின்றன. ஆக லால் சாப்பாட்டை ஈமொய்க்காமல் மூடி வைத்தல்
வேண்டும்.
நாட்சென்ற உணவுப்பொருட்கள் செட்டு விஷத் தன்மை அடைகின்றன. இதன் பயனுய் வயிற்றுக் குளப்படிகளும், சரீரத்தில் கோளாறுசஞம், நெருப் புக்காய்ச்சல், பேதி முதலிய நோ ய் ஆகாரத்துக்கு களும் நேருகின்றன. ஆதலால் உளுத் உதவாத துப்போன பருப்பு வகை, புழுப்பிடித் பொருட்கள். தமா, பழுத்துப்போன கீரை, அழுகி ப்போன பழம், மரக்கறி, கிழங்கு, காறிப்போன இறைச்சி, மீன் முகலியவை, பழைய முட்டை, சக்குமணமுள்ள எண்ணெய், நெய், புழுக்க வெண்ணெய், ஆடை திரைந்துபோன பால், ஊதிப் போன பால்டின் (Condensed Milk), டின் னில் அடை க்கப்பட்ட மற்றும் செட்டுப்போன சாப்பாட்டுச் சமா ன்சள் உணவுக்குதவா.
'மருக்கென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி யுணின்'
(திருக்குறள்) 'ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணுேம்'
(தேரையர்)
'நொறுங்கத்தின்முல் நூறினுஞ்சாவில்லை’
(முது மொழி)

Page 42
64 ஆரோக்கிய"வாழ்வு
ஆகவே போசனஞ் செய்யுங்கர்ல், முன் சாப் பிட்ட ஆகாரம் சீரணமானதை நன்கறிந்து, சீரண சக் திக்கேற்றவாறு, சரீர சுபாவத்துக்கும் காலத் தக்கும் r ^ பொருத்தமான உணவுகளை நன்றப் ۔۔۔۔۔۔۔ ۔ உணவருந்தும் மென்று தின்னல் வேண்டும். இவ்வ cp60)p. ண்ணம் செய்வதால் சீரண சக்கிச்கு அலுசுலமாயுள்ள உ மி ழ் நீர் உண வோடு கன்முய்க் கலப்பதுமன்றிச் சீரணத்துக்கு உரிய கருவிகளின் தொழில் நடத்தற்கு இலகுவாயும் இருக் கும்.
உண்ட போசனம் சீரணமாகுமுன் அடிக்கடி
சாப்பிடுவதால் சீரணமானபோசனத் }
பசியாமல் திடன் சீரணமாகாத போசனம் கலக் புசிப்பதால் கும். அதன் பயனுய் நோயுண்டாகும். வரும் கேடு. ஆதலால் பசியுண்டாகுமுன் ச்ாப்பிடும்
பழக்க த் தை அறவே ஒழித்தல் வேண்டும்.
உட்கொண்ட ஆகாரங்களின் சீரணகால விவரம். கெய், பருப்பு, மரக்கறி முதலியவை 8 மணித்தியாலம்
கூடிய அன்னம் மாவினுல் செய்யப்பட்ட பக்ஷணங்கள் 8 yo தேன், பால் 8 yy பசுப்பால் கூடிய் கஞ்சி 7 y39 மாக்காைத்த ஆகாரம் 8 , , பழ இரசம் 3
99

ෂ-65ක්rඛ!
மாச்கறிச் சூப்பு 3 மணித்தியாலம். இளநீர் 3 as gorf 2 மோர் l தண்ணீர் yy
நாளொன்றுக்கு இரண்டு வேளை போசனஞ் செய் தலே உத்தமம். மூன்று வேளை புசித்தல் மத்திமம். அதற்குமேல் நோய்க்டெமாகும்,
மீதாண் விரும்பல் எப்பொழுதும் கேட்டையே Ay
விளைவிக்கும்.
*தீயளவின்றித் தெரியான் பெரிதுண்ணி
நோயளவின்றிப்படும்.’
என் ருர் தெய்வப்புலவரும். உணவை அளவுக்குமிஞ்சிச் சாப்பிடுவுதல்ை நபது சிவசக்கி ( Energy) அக்கூடிய பாகமான உணவைச் சீரணிப்பதில் (Digestion) மேல திகமாய்ச் செலவாகின்றது. ஆகலினுல்
மீதானின் உணவைக் கிரகிப்பசற்கும் (AssimilaGઠs(B. tion ) கழிவுப்பொருட்களைச் சரீபத் தி னி ன் றும் வெளிப்படுத்துதற்கும் (Elimination) போதியவளவு சக்தி இல்லாமற் போவ கால் நோய்க்கிடமாகின்றது. மலச்சிக்கலும், அதன் பயனுய் வரும் பல நோ ய்களும் பலச்குறைவு, கண் General Tiredness) (LAE a6 uLu 365ST L5 o ffuri Fải GJ,ió படக்கூடும். 'பெருக்சத்தின்று வெடுக்கடைகிறது? என்ற சாமானியப் பேச்சும் இங்கு கவனிக்கந்தக்கது.

Page 43
ஆரோக்கிய-வாழ்வு
"மிகினுங் குறையினுநோய் செய்யு நூலோர்
வளிமுத லெண் ணிய மூன்று.”
என்னுந் திருவாக்குக்கொப்ப மீதூண் எவ்விதம் கோய்
க்கிடமாகின்றதோ, அவ்விதமே சரீரத்தைப் போஷிக்
கத்தக்க அளவு போசனம் உட்கொள்ளாமல் விடுவ
தேவைக்குத் தக்க உண வருந்தாமை
யின் தீங்கு.
தாலும் நோய் சாரும். உணவுக்குறை வினுல் முகலில் கொழுப்புக்குறையும், பின் தேக பலம் குறையும்; வயிற்
முேட்டமும், சருமரோகங்களும் Ф. адат
டாகும், கண் ஒளி குறையும்; பெரும் களை கொள்ளும், உடல் கிறையில்
நூற்றுக்கு அறு து குறையுமேல் மரணம் சம்பவிக்
கும். ஆகலால் இயன்றவரை தேகக்கின் போஷணைக்
கேற்க உணவு உட்கொள்ளல் வேண்டும்.
தண்ணீர் அத்தியாயத்தில் கூறியபடி போசனஞ்
செய்யுங் காலத்தில் தண்ணீர் அருந்தலாகாது. “பெருக்
சாக மெடுத்திடினும் பெயர்த்து நீரருந்தோம்’ எனத்
GLT360T site) த்தில் ஏன்
நீரருந்த
6) T85 T5.
தேரையர் கூறி இருப்பது சிந்திக்கக் தக்கது. போசனத்துடன் தண்ணீர் கலந்து சாப்பிடுவதால், சீரணக்கிற் குரிய ஆமாசயத்தின்று வெளிப்படும் திராவகம் தண்ணிருடன் கலந்து இயல் பாயுள்ள அதன் குணங் குறைகின்ற
மையால் (Dilutes) சீரணசக்தி குறைகின்றது, தண்
னிரின் மு க்கியகுணம் குடலுறுப்புக்களைச் சுத்தி செய்

உணவு 67
தலாயிருத்தலின், உணவைச் சரீரத்திற் கிரகிக்கும் சக்தியும் குறையும். ஆதலால் தண்ணிர் போசனத் துடன் பருகப்படும் வழக்கம் ஒழிதல் வேண்டும்.
மிளகாய் முதலிய மசாலை ச்சாக்குகளை அதிகமாய் உபயோகிப்பதால் சீரண சக்தி பலப்படுமென்று பலர் கருதுகின்றனர். அவைகள் ஒருபோதும் சீரணசக்தி ச்கு உதவி புரிகின்றதில்லை. போசனம் மசாலை,புகை குடலிற் தங்காமல் வெளிப்படும்படி யிலை, குடிவ குடலுறுப்புக்களைக் கிளர்ச்சி செய்யும் 'கை சீரணத் குணமே அவைகளுக்கு அதிகமா திற்கு உதவி யுண்டு. ஆதலினல் அவைகளை அதிக செய்கின் மாய் உபயோகிப்பதால் சீரண சக்தி றனவா? க்கு மாமுக அசீரணக்தையே உண்டு பண்ணுகின்றன. புகையிலை உண்ட போசனம் கன்ருய்ச் சீரணமாகுமுன் அதை வெளிப் படுத்துவதாலும், குடி சீரண சக்தியை முற்ருய்க்குறை க்கின்றமைபாலும் இவைகளை ஒருபோதும் உபயோ கிக்கச்கூடாது. குடியைப்பற்றி இன்னும் விவரமாய் ஒழுக்கம் என்னும் அத்தியாயத்திற் காண்க.
காரம், ஊறுகாய், இனிப்பு, லாகிரி வஸ்துக்கள் முதலியவைகளை அதிகம் உபயோகிப் காரம், இனி பதனல் சரிரமெலிவும், காரம், மாமி ப்பு, மாமிசம், சம், லா கிரி உணவுகளால் கோபம், GuTäf. மதம் முதலிய தீய குணங்களும் உண் டாகின்றன. புளி வீரியத்தைக் குறை
ப்பதால் மட்டாய் உபயோகித்தல் வேண்டும்.

Page 44
68 W ஆரோக்கிய வாழ்வு
உணவில் இனிப்பைச்சேர்க்க விரும்பினுல் தேனை ச்சேர்த்தல் நன்று. தேன் சலந்து உண்டால் தேகம் புஷ்டிக்கும்; வாகம், கபம் தீரும், பசி தேன். தீபனமும் மலசுக்தியு முண்டாகும். பிக்க கேகக் கிற்குப் பொருங்கா த. வெல்லம், பனை வெல்லம் இவைகளை மட்டாய் உபயோ
கிக்கலாம். வெள்ளைச் சீனி உதவாது.
குறைந்அளவு உணவுபெண்களுக்குப்போதுமென் பது கற்கால ஆராய்ச்சியாளர் துணிபு. 'உண்டிசுருங் கல் பெண்டிற்கழகு’ என்று பிராட்டியார் கூறுவத னுல் நம்முன்னுேர் ஆராய்ச்சியின் பெண்கள் தி ற ன் புலனுகும். பெண்களுக்குக் உணவின் குறைங்களவு உணவு போதுமென்பக அளவு. னல் அவர்களுடைய சுக வாழ்வின்
h தேவைக்குக் குறைக் களவு உணவென் பது கருக்கல்ல. இயற்கையில் ஆண்களிலும் பெண் கள் குறைந் அளவான ஆகாரத்தில் சீவிக்கக்கூடியவர்
கள் என்பதாம்.
நோய்க்காலக்கிலும், அதன்பின் சிறிது காலம் வரையும் சீரணக்கருவிகளின் பலம் குறைந்திருக்கலால் அக்காலங்களில் நாம் உணவு விஷயத்தில் விசேட கவ னம் செலுத்தல் வேண்டும். மெல்லிய கோய்க் கால ஆகாரமாய் அடிக்கடி சிறிய அளவில் த்தில் உணவு. கொடுத்தல் நன்று. பொதுவாகப்பால், சூப்பு, தண்ணிருடன் நன்கு கலக்கப்

உணவு 69
பட்ட முட்டையின் வெள்ளைச் தரு, நெற்பொரி அவித்த நீர், சோடா முதலியவற்றை ஆகாரமாகக்கொள்ளலாம். எனினும் ஒரு கைதேர்ந்த வைத்தியரின் உதவியை நாடி அவர் சொற்படி நடத்தல் நன்று.
எல்லாவித காய்ச்சலுக்கும் முகல் மூன்று நாளும் உபவாசமிருத்தல் நன்று. வேண்டுமாயின் நெற்பொரி அவித்த நீரும் சோடா ருேம் பருகலாம். மூன்று நாளின் மேல் பால்,முட்டையின் வெள் காயச்சலுக்கு ளைக்சரு, குப்பு முதலியவைகளை ஆகா உணவு. ரமாகக் கொள்ளலாம். பின்பு நோயின் s கணிவையும், மலசலக்கிரமத்தையும், கவனித்து வறுத்த முெட்டி (Rusk) புனர்பாகக் கஞ்சி முதலியன கொடுத்தல் வேண்டும். நோய் குணமாகுல் நல்ல ஆகாரம் கொடுக்கலாம். நெருப்புக்காய்ச்சலிலும் இம்முறையைப் பின்பற்றலாம்.
சுவாச (Pneumonia) நோயாளருக்குச் சூப்பு, சூடான பால் முதலியன கொடுக்கலாம். சூடான பால் இருமலைத்தணிக்கும். தாகமெடுப்பின் சுவாசத்திற்கு, சோடா, நெற்பொரியவித்த நீர் முத லியவைகளைக் கொடுக்கலாம். நோயின் தணிவைப்பார்த்துக் காய்ச்சலுக்குச் சொல்லப்பட்ட முறையைப் பின்பற்றலாம்.
தொய்வு நோயாளர் இரவில் மிகப்புசித்தலாகாது. இளநீர், தயிர், ஊறுகாய், வாழைப் தொய்விலும் பழம் முதலியவைகளை விலக்கல் வேண்
கசத்திலும், டும். கசச்திற்கு நல்ல சத்துள்ள உணவு

Page 45
70 ஆரோக்கிய வாழ்வு
களைச் சிறிய அளவில் அடிக் 5டி சீரணக்கிற்குப் ப
கில்லாமல் சாப்பிட வேண்டும்.
குக்கலில் சக்கிகாணப்படுமாதலால் சாப்பாடு கிரம மாயிருத்தல் நன்று. குளிர்ந்த சாப் குக்கலுக்கு. பாடு சள் இருமலை அதிகரிக்கச் செய்யு மாகையால் அவைகளை விலக்கல் வேண் டும். மீன் எண்ணெய் கிரமமாய்க் கொடுக்கப்படின்
ஈல்ல பலன் செய்யும்.
கண்ணுேய்களுக்குக் காரம், மாமிசம், புகையிலை, வெற்றிலை, குடி வகை முதலியவைகளை கண்ணுே விலக்கலும் வாழைப்பழம், நல்லெண் ய்க்கு. ணெய், நெய், பொன்னங்காணிக்கீரை பயறு முதலியவைகளை உண்ணலும்
நோயைத் கணிக்கும்.
இருதய எரிவுக்குத் தண்ணீர் அதிகமாய் குடிக் தல் வேண்டும். தேர்ே முதலிய பானங்களையும், புகை யிலை, குடி வகை, சீனி என்பவைகளையும் முற்முய் வில w க்சல் வேண்டும். பசைப்பொருட்பதார் இரு தய த்ங்களைக் குறைவாகவே சாப்பிட எரிவுக்கு. வேண்டும். நெல்லிக்காய், எலுமிச்சம் பழ இசச்ம், தோடம்பழ இரசம், வில்வப்பழம், விளம்பழம் முதலியவைகள் நல்லகுணம் செய்யத்தக்கனவாதலால் அவைகளை அதிகமாய்ச் சாப்
பிடுவது நல்லது.

உணவு 71.
வாலிபத்தில் காண்ப்படும் இரத்த விர்த்திக்கு (Blood Pressure) unit Lisa Guit Faori இரத்த விர்த் தை விலக்கி மற்றும் தசைப் பொருட் திக்கு. பதார்க் தங்களைக் குறைத்து மரக்கறி
களை அதிகம் புசித்தல் வேண்டும். குண்டிக்காய் நோயுள்ளவர்கள் பாளியரிசிக் சஞ்சி யில் எலுமிச்சம் புளியைச்சேர்த்துச் குண்டிக்காய் சாப்பிட்டுவரின் நோய் சாந்தியாகும் நோய்க்கு. கோப்பி, தேநீர் முகலிய பானங்களும் குடிவகைகளும் பாவிக்கப்படின் நோய் விர்த்தியடையும். ஆகையால் இவைகளை உபயோகித் தல கூடாது.
வயிற்றுளைவுக்குக் காரம், சோறு முதலியவை ஆகா. அமுேட்டுமா, மரவள்ளிமா முத ഖ്, നൃt வியவைகளினுல் கூழ் சமைத்து ச்சாப் வுக்கு. பிடுவது நல்லது. சுடுபாலில் எலுமிச் சம் புளியை விடில் ஆடைதிரையும். அந்த ஆடையை வடித்து வீசியபின் நீரைப்பருகினல் வயிற்றுவலி நீங்கும்.
அசீரணத்துக்குப் பொரிக்க பக்ஷணங்களும் வறு க்க பக்ஷணங்களும், மசாலைச் சரக்கு அசீரணத்துக் வகைகளும், கீரைகளும், பழக்கோல் குஆகாதவை. களும், முந்திரிகை பேரிந்து முதலிய வற்றல்களும், தேநீர், கோப்பி, குடி வகை முதலிய பானங்களும் சீனி சேர்த்துச் செய்த பொருட்களும் உதவா.

Page 46
72 ஆரோக்கிய வாழ்வு
அதிசம் கொழுப்புள்ளவர்கள் உருளைக்கிழங்கு, வெண்காயம், மாஉணவு, எண்ணெய்வகை முகலியவை சளை விலக்குதல் நல்லது. இரண்டு கொழுத்தவர் வேளைக்குமேல் போசனம் செய்தல்
களுக்கு d-L-gal. மரக்கறிகளையும், கீரை கஃள உணவு, யும் அதிகமாய் உணவில் சேர்க்கல்
வேண்டும். ' ஆள் மதத்தால்கீரை’ என்னும் பழமொழி சிந்திக்கத்தக்சது.
மலச்சிக்கலுக்கு முன்னரே சரீரத்தின் சழிவுப் பொருட்களை வெளிப்படுத்தும் பகார்த்தங்களுட் சொல்லப்பட்டிருச்கும் பொருட்களை அதிசமாய் உ.ப. யோகித்தல் வேண்டும், ச விட்டுப்பற்றுள்ள பாவினுற் சமைச்கப்பட்ட கூழ், ரொட்டி முதலி மலச்சிக்கலு யன சாப்பிடுவதும் பழங்களைச் சக்கை க்கு உணவு. யுடன் சாப்பிடுவதும் நல்லது, வாழை க் கண்டேனும், கீரைக்கண்டேனும் இடைக்கிடை சாப்பிட்டுவரின் குடலுறுப்புக்கள் நன் முகச் சுத்தியடையும். கறிகளுக்குச் சிறிதளவில் மசா ச்ேசாச்குகள் சேர்க்கப்படின் குடலுறப்புக்களக்கு மலத்தை வெளிப்படுத்துதற்குக் கிளர்ச்சி சொடுச்கும். கருணைக்கிழங்கின் உபயோகத்தினல் மூல நோய் சாந்தியாகும்.
வயிற்ற ப்புண் உள்ளவர்கள் பாலுணவு மாத் கிரம் சில காலம் உண்டது நல்லது. பின்பு வயிற்றுப்புண் காரமில்லாமல் சீரணத்திற்சேற்றவாறு னக்கு. ஆகாரம் உட்கொள்ளலாம். அசீரணக்

'உண்வு 78
கிற்கு விலக்கப்பட்ட பொருட்கள் இங்கும் விலக்கப்
பட்ல் வேண்டும்.
நீரழிவுக்குப் பசைப்பொருள் கிறைந்த பதார்த் தங்கள், சீனி என்பனவற்றை முற்முய் உபயோகிக்கா திருத்தல் நன்று. h
சூலைப்பிடிப்புக்கு மாமி சம், உருளைக்கிழங்கு பயத்தங்காய், வெண்காயம், கோப்பி, தேர்ே, கொக்
கோ, சிற்றுண்டிகள் முதலியன -ቆሄጫff•
கர்ப்பினிகள் 8ந்து தோடம்பழம் அல்லது நான்கு அப்பிள் பழம், அரை அவுன்ஸ் QS వాr,
கர்ப்பினி ணெய் நாள் வீதம் சாப்பிட்டுவருவ களுக்கு. ரேல் அவர்களிற காணப்படும் சிறு
நீருடன் சுண்ணும்பு போவது குறை யும், பிறக்கும் குழந்தையில் தோஷக்குணங்கள் காணப்
ld -.
நமது குடலமைப்பானது தாவரபட்சணிகளான ஆடு, மாடு முதலியவைகளின் குடலமைப்பைப் போல் பளுவாயமைந்திருத்தலால் மக்களாகிய நாமும் இயற் கையில் தாவரபட்சணிகளே. உடலு தாவரபோச க்கு அவசியம் வேண்டப்படும் உப்புச் னத்தின் சத்துக்கள் மண்ணில் ஏராளமாகக் உயர்வு. கலந்திருக்கின்றன. இந்த உப்புச்சத் துக்களைத் தாவரவர்க்கம் நன்கு கிரகி க்திக்கொள்வதால் தாவரபோசனம் சத்துள்ள போச

Page 47
74 ஆரோக்கிய வாழ்வு
னமாகின்றது. இன்னும் தாவர உணவானது சாந்த மும் சீவகாருண்யமும் சுரக்கவும் மருள் தேய்ந்து அருள் பாலிக்கவும் செய்யும்.
உள்ளி செம்முருங்கைக்காய் போலும் சில பொரு ட்கள் தாவர வர்க்கத்தின வாக இருப் உள்ளி முதலி பினும் மாமிசத்தின் குணமுடையன யன ஏன்வில வாய் மன அமைகியின்மையையும் க்கப்பட்டன. உடற் கொதிப்பையும் உண்டுபண்ணு வனவாதலால் பதார்த்த குணம் நாடி உணவுண்ட நம்முன்னுேர் இவைகளை விலக்கி உள்ளார். குழந்தைகளுக்குத் தாய்ப்பாலே சிறந்த உணவு. இது கடைசி எட்டு மாதம் வரையுமாயினும் கொடுக்கப் படல்வேண்டும்.ஆராய்ச்சியின் பயனுய்த் தாய்ப்பா லில் வளர்க்கப்படும் பிள்ளைகள் ஏனையோரிலும் ஆரோக் கியத்திலும், புத்தி நுட்பத்திலும் சிறந்தவர்களென்று துணியப்பட்டிருக்கிறது. தாய்ப்பா பிள்ளைகளுக் லில் வளர்க்கப்படும் குழந்தைகளிலும் குத்தாய்ப் எட்டு மாகம் வரையும் காய்ப்பால் பால். குடித்து வளர்ந்தவர்களே புக்கி நுட் பத்திலும் ஆரோக்கியத்திலும் விசே டமுடையவரென்றும், எட்டு மாதத்துக்குக் குறைவாக க்தாய்ப்பால் கொடுக்கப்பட்ட குழந்தைகள் இவை களில் குறைவாகக் காணப்படுகின்றனரென்றும், நீடித் துத் தாய்ப்பாலில் வளர்ந்தவர்கள் ஆரோக்கியக்கில சிறந்திருப்பினும் புத்தி நுட்பத்தில் அவ்வளவு அதிக மாக விருக்கவில்லை யென்றும் கூறுகின்றனர்.

உணவு 75
நமது நாட்டில் குழந்கைகளுக்கு எட்டு, ஒன்பது மாசங்சளில் அன்னப் பிராசனம் செய்தல்வேண்டு மென்னும் வழக்சம் இருந்து வருதல் எல்லோருமறி வர். இதன் சருத்துத்தான் என்ன எமது பழக்க வாகும்! எட்டு, ஒன்பது மாதங்களுக்கு வழக்கங்களு மேல் குழந்தைகளின் உணவு மாற்றப் ம் மேனட்டா பட்டு வரல் வேண்டு மென்பதைக் ராய்ச்சியும். குறிக்கவில்லையா ? என்னே நம்முன் னேரின் அறிவு! நமது பழைய பழக்க வழக்சங்களின் நுட்பங்களை நாம் உணர்த்து கொள்ள முடியாமலிருக்கும் இருள் நிலையிலிருந்து மேனுட்ட வரின் ஆராய்ச்சி என்னும் ஒளி எமது கண்களைத் திறந்து வைப்பதற்காக நாம் அவர்களுக்கு நன்றிபுடை யவர்களா யிருப்பதோடு இவ்வித கிலைமைக்கு வந்து விட்டமைக்காக எம்மையும் நொந்து கொள்ளல் வேண் டும்.
குழந்தைகளுக்குப் போதியபடி தாயிடம் பால் இல்லா கிருக்குமேல் தாய்ப்பாலுக்கடுத்தபடியாய் பசப் பாலே கொடுக்கத்தக்கது.
பசுப்பால் முலைப்பால் என்பவைகளில் உள்ள பொருட்களின் விவரம்.
னிே தசைப் கொழு உப்புச்
பொருள் ப்பு சத்து பசுப்பால் 86.62 4.93 3.89 8.9 0.8 முலைப்பால் 87 6.5 2.2 Ꮞ.0 0.8
தண்ணீர்

Page 48
6 ஆே ராக்கிய வாழ்வு
முலைப்பாலிலும் பார்ச்சப் பசுப்பாலில் தசைப்பொரு ளும் உப்புச்சத்தும் அதிகமாயும், சீனி குழந்தை குறைவாகவும் காணப்படுவகால் குழங் களுக்குப் கைகளுக்குப் பசுப்பாலில் கண்ணிர் பசுப்பால், கலந்து சிறிதளவில் சீனியும் சேர்க் துக் கொடுக்கப்படல் வேண்டும். குழந்கை யின் வயதும் பால் எடுக்கப்படும் பசுவின் கன்றின் வயதும் ஒக்கிருப்பின் மிக நன்று:
பால் மூலமாய்ப் பல நோய்கள் பரவுகின்றன வென்று முன்னரே பலவிடங்களிற் கூறப்பட்டிருப் பினும், இன்னும் அதைப்பற்றிச் சில கூறுவது நலம். க்ஷய நோயுள்ள ஒரு பசுவின் பால் ஒரு குழந்தைச்குக் கொடுக்கப்படின் அந்நோய் அக் ழங்கைக்கு ஏற்படக் கூடும். இன்னும் பால் சுறக்கப்பட்டுக் கொண்டுவரும் இடங்களுக்கும் முறைசளுக்கும் ஏற்பத்தொண்டைக் கரப்பன்,சிலவகைச்சுரம், வேறு கொற்றுநோய்களெல் லாம் பாவுகின்றன. ஆகையால் பால் நோயில்லாத பசுவில் சுத்தமாய்க் கறக்கப்பட்டுச் சுக்தமான டாக் திரங்களில் பாவிக்கப்படல் வேண்டும். பால்ப் பாக் திரங்களை உடனுக்குடன் கழுவிவிடல் வேண்டும். இன்றேல் நோயின் பிரதிநிதியாகிய ஈ அதில் வந்து (తాగ్రా56,
குழந்தை சஞக்கு நான்கு மணிக்கியாலத் தக்கு ஒரு முறை பால் கொடுத்தல் வேண்டும். காய்ச்சிய பால் இலகுவாகச் சீாணிக்கின்றமையாலும், நோய்க்
கிருமிகள் கொல்லப்படுதற்கு ஏதுவாயிருக்கின்றமை

உணவு 77
யாலும், வெண்ணெய் பிறக்காமல் காய்ச்சிக் குழந்தை களுக்குக் கொடுத்தல் வேண்டும். காய்ச்சியபால் கொடுக் கப்பட்டுவரும் குழந்தைகளுக்குத் தோடம்பழச்சாறு கொடுத்தல் நல்லது. இதனுல் உயிர்ச்சத்து ‘சி’ குழந்தையின் உணவில் வேண்டியவளவு சேரும்.
தாய்ப்பால், நல்ல பசுப்பால் இவை கிடைக்கா விடில், குழந்தைகளுக்குக் தகாப்பால் கொடுக்கலாம். ஆனல் பெயர் பெற்ற கம்பனியாரால் குழந்தைகளுக் தயாரிக்கப் பட்டவையாயும், புதியன குத்தகரப்பால். வாயுமிருத்தல் வேண்டும். தகரப்பா வில் உயிர்ச்சத்தில்லை யாதலால் பழங் களின் இரசம் இடையிற் கொடுக்கப்படல் வேண்டும்.
இதுவரை ஆகாரங்களுக்கும் உடலுக்குமுள்ள தொடர்பையும், பலவித ஆகாரங்களிலுமுள்ள வெவ் வேறு பொருட்களின் விவரங்களையும், அவற்றின் ஏற் றத்தாழ்வு, குணம் முதலியவற்றையும், எந்த எந்தக் காலங்களில் எந்த எந்த ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும், எவ்வெவர் என்னென்ன ஆகாரங்களைச் சாப் பிட வேண்டும் என்பனபற்றியும், அ  ைவ கிளைச் சாப்பிட வேண்டிய முறையும் சுருக்கமாயும் இயன்றவரை விளக்கமாயும் கூறினுேம், இனிமேல் நாம் உட்கொள்ளும் ஆகாரம் எவ்விதம் நமது சரீரத் திற்கு உணவாகின்றது என்றும் சிலர் அறிய விரும்பு வராதலால், அவைபற்றிச் சில இங்கே சொல்வாம்.

Page 49
78 − ஆரோக்கிய வாழ்வு
நாம் உட்கொள்ளும் உணவு முதலில் பல்லினுல் மெல்லப்பட்டு வாயிலிருந்து ஊறும் உமிழ் நீருடன் கலக்கின்றது. இகனல் ஆகாரக்கிலு ள்ள பசைப்பொரு ளில் ஒரு பாகம் சீனியாகி உமிழ் நீருடன் சேருவது மல்லாமல் ஆகாரத்திலுள்ள உப்புச் அன்னம்பாகா சத் தம் உமிழ் சீருடன் கலந்து கொள் க்கப்படும் கின்ற தி. சாப்பாட்டைப் பல்லினல்
விதம். நன்முய் மெல்லமெல்ல உருசிகொடுத்
லினல் இகை உணர்ந்து கொள்ளலாம் பின்பு அது வாயிலிருந்து விழுங்கப்பட்டு ஆமாசயத் தை வந்து சேருகிறது. அங்கு அது நன்கு அரைக்கப்ப ட்டு ஆமாசபத்கினின்றும் வெளிப்படும் திராவகத்தி ணுல் தசைப் பொருளும் பக்குவம் செய்யப்பட்டு கைம் (Chyme) என்று சொல்லப்படும் அன்னப்பா காக்கப் படுகிறது. அந்த அன்னப்பாகு நான்கு மணித்தியாலக் தில் ஆமாசயத்திலிருந்து சிறு குடலுக்குச் செல்கிறது:
சிறு குடலில் அதனிடமிருக்கு வரும் ஒருவகை பித்த நீரும், கணையத்திலி ருக் து (Pancreas) வரும் அன்னப்பாகுடன் கலந்து கைல் (Chyle) என்று சொல்லப்படும் அன்ன இரசமாக்கப்படுகிறது. இங்கே கணையத்திலிருந்து வரும் நீரால், உமிழ் நீரி னலும் ஆமா சயத்தினின்றும் வெளிப் அன்னப்பாகு படும் நீரினுலும் பக்குவப்படாது 5ழு அன்ன இரச விவந்த பசைப் பொருளும் தசைப் ԼԸTպth, பின் பொருளும் பண்படுத்தப்படுவதுடன், இரத்தமாயும் கொழுப்பும் பித்த நீரின் உதவியைக் மாறும் விதம், கொண்டு பக்குவப்படுத்தப்படுகிறது. அன்ன இரசம் சிறு குடலில் வில்லி

உணவு 79
(Vi) என்னும் இடத்தை யடைந்த தும் இரக்கக் குழாய்களால் சரீரத்தின் போஷ2ணக்கேற்ற பொருட் களெல்லாம் கிரகிக்கப்படுகின்றன. எஞ்சிப் தேவை யற்ற பாகம் பெருங்கு-விற் போய்ச் சேருகிறது. இதற்கு நான்கு மணித்தியாலமாகிறது. பெருங்குடி லில் வந்து சேர்ந்த பொருட்கள் நான்கு மணிக்கியாலக் தில் மலமாய் வெளிப்படுகின்றன. ஆகையால் இரத்த மே நமது சரீரத்தைப் போஷிக்கின்றது.  ݂ܕ݁ܝܢ ܪܶ

Page 50
நல்லொழுக்கம்.
சரீராசோக்கியத்திற்கு நல்லொழுக்கமும் இன்றி யமையாததொன்மும், வாய்மை, தூய்மை, பொறுமை, அன்பு, அறம், முதலியவைகளினுல் மனச்சமாதான மும் அதனல் சந்தோஷம், தேகம் ஒழுக்கத்தின் பூரித்தல், ஊ க் கம் முதலியனவும் பயன். உண்டாகின்றன. அழுக்காறு, அவா, வெகுளி, இன்னுச்சொல், இவைக் ளால் தேகத்தில் கொதிப்பும், உஷ்ணமிகுதியும், திருப் தியில்லா மனமும், விசனமும், இவைகளின பேருய் நோயும் உண்டாகும். ஆதலால் நாம் என்றும் நல்ல சிந்தை யுடையாாய் நற்கருமங்களையே செ ய் த ல் வேண்டும்.
அதிகாலையில் கித்திரை விட்டெழுதல் உத்தமம்; அதனுல் தேக உஷ்ணம் நீங்கும்; வாதபித்தங்கள் கத் தம் நிலையடையும், புலரிக்காலத்தில் அபான சமான வாயுக்கள் தத்தம் தொழில்களைக் கிர அதிகாலையில் மமாகச் செய்யுமியல்புடையன வாத நித்திரை விட் லால் மலசல பந்தங்கள் உளவாகா; டெழுவதின் சீரணக் குழப்பமும் மலச்சிக்கலால்
நன்மை. உண்டாகும் பிற நோய்சளும் நேரா; ,
புத்தி கூர்மையாகும். கித்திரைவிட்டெழுந்து மலசல மோசனஞ் செய் ததும், சரிசம் தளைக்கும்வரையும் தேசாப்பியாசஞ் செய்தல்வேண்டும். பின் தந்தசுத்தி செய்து வேர்வை

நல்லொழுக்கம். 81
ஆறியதும் தண்ணீரில் ஸ்நானஞ் செய் த ல் கன்று. நாகரீகமுறையில் செய்யப்பட்ட நல்ல தந்தகத்தி. பற்பசை, ப ற் பொ டி மு த லி ய வைகளில் ஒன்று லாயினும், ஆல், வேல், வேம்பு, மகிழ், மா முதலியவற்றின் குச்சியின லாயினும் அல்லது கறிஉப்பினலாயினும் பல் துலக்குவ
தால் பல்நோயுண்டாகாது.
காலையில் குளிர்ந்த நீரில் ஸ்நானஞ் செய்வதால் சரீாக்குளிர்ச்சியும் நரம்பிற்கு வலுவும் உடலுக்கு உறு தியு முண்டாம். தண்ணீர் அத்தியாயத்தில் இதைப்ப ற்றி விவரமாய்க் காணலாம். தோலும் ஸ்நானம். குண்டிக்காயைப் போலவே தேகத்தி
லுள்ள கழிவுப்பொருட்களை வெளிப்ப
டுத்துங் கருவியா யிருத்தலால், ரோமத் துவாரங்கள் வழியாக வேர்வை வெளியாவதற்குத் தடையாய் அழு க்குப்படிந்திராமல் உடம்பை நன்முய்த் தேய்த்துக் குளித்தல் வேண்டும். அழுக்கைப் போக்குதற்கு நல்ல சோப்பையாவது பாசிப்பயறையாவது உபயோகிக் சலாம்; பாசிப்பயறு பாவிக்சப்படுவதால் அழுக்குப்
போவதுடன் மே ககாங்கையுங் தீரும்.
ஸ்கானஞ் செய்யும் போது பெண்கள் மஞ்சள் தேய்த்துக்கொள்ளும் வழக்கமுண்டு. மஞ்சளுக்கு விஷ க்கிருமிகளைக் கொல்லும் குணமிருத்தலால் மஞ்சள் பூ சி க் குளி க் கும் மு  ைற அனு சரி க்க ப்

Page 51
82 ஆரோக்கிய வாழ்வு
மஞ்சளின் படுதல் 6ல்லது. மஞ்சளுக்கு “மஞ்சள குணம். ழகும்’ என்று நாலடியாரிற் கூறியிருக் கிறபடி அழகைக் கொடுக்கும் குண மு முண்டு. மஞ்சளின் மணம் து ர் க் கந் த த்  ைத யும் போக்கும்.
போசனஞ் செய்து இரண்டு மணித்தியாலக்கிற் குள்ளும், உடம்புகளைத் திருக்கும்போதும், வேர்த் திருக்கும்போதும், குளிரினல் சரீரத்தின் உறுப்புகள் விறைத்திருக்கும்பொழுதும், குளித்தலாகாது. குளிக் கும்போது உடம்பு குளிர்ந்து விறை க்கத்தக்கதாய்த் தண்ணீரில் நிற்றலா ஸ்நான விதி. காது. பலவீனர் அதிகாலையில் ஸ்தா னம் செய்தல் கூடாது. குளித்தவுடன் ஈஞ்சு வருமல் தோய்த்துலர்ந்த வஸ்திரத்தினல் ஈரம் துடைத்துக்கொண்டு சுத்தமான அங்கிகளை அணிதல் வேண்டும்,
அதன் மேல் சிறிது நேரமாயினும் கடவுளைக் தியானித்தல் வேண்டும். இதனல் மன அமைதி, பழி பாவங்களுக்கு அஞ்சுதல், தேற்றம், கடவுள் முயற்சியில் ஊக்கம, புண் ணிய கருமங் வழிபாடு. களைச் செய்வதில் பிரியம், சந்தோஷம்
முதலியன உண்டாம். போசனஞ் செய்யுங்கால் உணவு அத்தியாக்கித் சொல்லப்பட்ட கிரமங்களைக் கவனித்துத் தமது இய
ற்  ைக க்கு மா று பட ச த தும் காலத்துக்

நல்லொழுக்கம் 83
போசனம். சுேற்றதும், உயிர்ச்சத்து கிரம்பப் பெற்றதும், ಲೂರ್ಪಹಸ, உமி முதலிய அழுக்குகள் இல்லாததுமான சுத்தமான ஆகாரங்களை
உண்ணல் வேண்டும்.
போசனத்திற்குப் பின் தமக்குரிய முயற்சிகளைச் செய்தல் வேண்டும். முயற்சி செய்யுங் காலத்தில் இயன் றவளவு ஊக்கத்தோடும் நேர்மையோடும் செய்தல் வேண்டும். வேலை முடிந்து வீட்டுக்கு முயற்ச்சி. வந்ததும் மனதிற்கு உற்சாகங் கொடுக் கக்கூடிய வழியில் சிறிது பொழுது போக்கல் நன்று. சங்கீதம் பாடுதல், கேட்டல், தமக்
ற்கை வனப்புகளைப் பார்த்தானந்தித்தல் முதலியன நல்ல பொழுது போக்குக்குரிய வழிகளாகும்.
உர்க்கப்பாடுவதனல் மார்பு விசாலிக்கும் சுவாசா சயம், மிடறு முதலியன பலப்படும்; மிதமாக வார் த்தை யாடுவதனல் அறிவு பெருகும்; சுகத்துக் கேது வாகும். அதிகமாய் வசனிப்பதால் இரத்த தாதுவும் இரசதாதுவும் சுண்டும், பித்தம் அகி பலஞன கரிக்கும்; இவைகளின் பயனகச் சல பொழுது ரோகம், கபரோகம் முதலியன உண் போக்குகள். டாகவுங்கூடும். இயற்கை வனப்பைப் பார்த்தானந்தித்தலால் ஒரே கட வுளின் ஒப்புயர்வில்லாத செயல்கள் கினை விற்குவரும். அதனுல் நல்ல வாழ்வு வாழ மனமுண்டாகும்.

Page 52
84 ஆரோக்கிய வாழ்வு
மாலைக்காலத்தில் கடவுட் தியானஞ் செய்து கட வுள் பக்கி, அடியார் பக்தி, தேச பக்கி புகட்டத்தக்க நல்ல புத்தகங்களிையும் அறிவுக்குரிய ஞான நூல்களை யும் வாசித்து அல்லது வ ச சிக் க க் அறிவை கேட்டு, அவற்றின் பொருளை உணர் ஈட்டுதற்கு ந்து தேறுதல் நன்று. தீயவழியிற் வழி. செலுத்தும் நாவல்களும் பிற புத்தகங்
சளும் விரும்பத்தகாதன. இரவு எட்டு மணிக்குமேல் போசனஞ் செய்து, உண்ட உணவு கொஞ்சம் சீரணமானதும் கித்திரை செய்தல் வேண்டும். நித்திரைக் காலத்தில் சீரணக் கருவிகளின் உற்சாகங் குறைந்திருத் நித்திரை. தலால் போசனமானவுடன் நித்திரை செய்தல் சீரணக் கோளாறுகளை விளை விக்கும். ஆ த லா ல் இப்பழக்கம் இல்லாதிருத்தல் வேண்டும். பின்சாம நிச் திரையிலும் முன்சாம கித் திரையே சுகத்துக்குரியது. ஆதலால் இரவில் நெடு நேரம் கண் விழித்திருத்தலாகாது. இன்னும் கித் திரை யைப் பற்றிய விவரம் உடலோம்பலிற் காண்க.
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து ஸ்கா னஞ் செய்வதாலும் நாலு மாதத்துக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிடுவதாலும் ஆரோக்கியம் பெரு கும்.' விறுசதுர் நாட்கொருக்கால் நெய் முழுக்கைத் தவிரோம்,? “அடர் நான்கு மா த க் சுகத்துக்குரிய கிற் கோர் கால் பேதியுரை நுகர் செயல்கள். வோம்”, என்பன வற் ரு ல் அவை களின் அவசியம் உணரற்பாலது. கிழ

நல்லொழுக்கம் 85
மைக்கு இரண்டொருமுறை வெந்நீரிஸ்நானஞ் செய்வது நல்லதென மே ன Q ஆராய்ச்சிக்காரர் கூறப. ‘எண்ணெய் பெறின் வெந்நீரிற் குளிப்போம்,' என்டகனலும் வாரம் இருமுறை வெங்கீர் ஸ்நானம் வேண்டப்படுகிறகெனத் துணியலாம்.
கடல்சீர் களையை க்ேசிச் சரீரத்திற்கு உற்சாகத் கைக் சொடுக்கக் கூடுமாதலால் சுகதே சமுத்திர கிகள் கடல்நீரிற் குளிப்பது நல்லது. ஸ்நானம். நீ ந் த த்  ெக ரி யா த வர் க ள் பக் த கி மி ஷ த் தி ற்கு மே ல் தண்ணிரில் கி ற் ற லா கா து .
மாதத்தில் இரண்டு நாள் உபவாசமிருத்தல் நன்று. உபவாசத்தினுல் உண்ணும் உணவைச் சிரணிச்கச் செய்யும் சிவசக்தியானது சரீரத்தில் நோய் செய்யும் தேகத்திற்கண்ணியமான சரக்குகளை உபவாசம். நாசஞ் செய்வதில் உபயோகமாகும். அதனல் உடல் சுத்தியடையும்; நோ
பணுகா.ஆ); இளமை என்றுந் தாண்டவஞ்செய்யும்,
நம் நாட்டில் வெற்றிலை போடும் வழக்கம் உண்டு. இது சிறிதளவில் பாவிக்கப்படின் பசி வெற்றிலை தீபனம், ! லசுத்தி, வாய் க் கு நல்ல போடுதல். மணம் முதலியவைகளைக் கொடுக்கும். அதிகமாய்ப் பாவிப்பதால் பாண்டு
பல்லறளை முதலிய நோய்களையுண்டாக்கும். ஆசையால்

Page 53
86 ஆரோக்கிய வாழ்வு
வெற்றிலை போடுவது ஒரு நாளில் காலை, உச்சி, மாலை என்னும் மூன்று வேளைகளுக்குமேல் போடுவதும் உளுத்த பாக்கு, அழுகிய வெற்றிலை முதலியவைகளை உபயோகித்தலும் உதவா. இளைஞர் வெற் றி லை போடலாகாது.
கள், சாராயம், கஞ்சா, அபின், புகையிலை முத லிய லாகிரி வஸ்துக்களே உபயோகிப்பதனல், பகுத் தறிவு மயக்கம், கோபம், காமம், அகங்காரம் முதலிய துர்க்குணங்கள் உண்டாகும். அன்றியும் சரீரத்தில் நச்சுத்தன்மையை உ ண் டு பண் ணி மதிமயக்கும் நோய்செய்யும். ஆதலால் இவைகளை வஸ்துக்கள். அறவே பழகாது விட்டு விடுதல் மிக வும் நன்று. இவைகளைப்பற்றிய சில குறிப்புகளைக் காற்று அத்தியாயத்திலும் உணவு அத் நியாயத்திலும் காணலாம். தீயோர் சேர்க்கையும்
வெறுக்கப்படல் வேண்டும்.

உடலோம்பல்
உடலுக்கும் மனதுக்கும் நெருங்கிய சம்பந்த முண்டு. உடலுறுதி பெற்ருல்த்தான் மனத்தை ஒரு வழிப்படுத்த முடியும். மனவுறுதியே வீடுபெறும் மார் க்கம். ஆதலால் மனவுறுதி யடைதற்கு உடலுக்கும் உடலுறுதியும், உடலுறுதியெய்தற்கு மனதுக்கும் உடலோம்பலும் அவசியமாகின்றன. உள்ள இதலைன்ருே சுவாமி விவேகானக் தொடர்பு தரும் "வேதாந்த சிங்கம் ஊறு மட் டும் நாம் வேண்டுவது வலிமையே,’ *கீதை படிப்பதைவிடக் காற் பந்துதைப்பது மேல்,” வானக் கூறியிருக்கின்றனர். விளையாட்டினுல் உள்ளம் உளம் பெறும்; உணர்ச்சி வீறு கொண் விளையாட்டின் டெழும்; எல்லாத் துறையிலும் முன் பயன். னேற்றம் ஏற்படும்; அடிமை உணர் ச்சி நீங்கும். ஆதலால் உடலுறுதிக் கனுகூலமான தேகப் பயிற்சி செய்தல் வேண்டும். காலையில் கால் நடை, குதிரை ஏற்றம், ஒற்றைச் சுவட்டு வண்டியில் ஓடுதல் முதலிய தேகப் பயிற்சி பயிற்சிகள் செய்துகொண்டு வருவதால் யின்நன்மை. தேகம் இறகும்; பசியுண்டாகும்; வாத மும், சிலேற்பனமும், சூலைப்பிடிப்பும், மலபந்தமும் நீங்கும்.
பலவித சே காப்பியாசங்களுள்ளும் கால் நடையே
நோயாளர், விருத்தர் உட்பட எல்லோருக்கும் சிறந்த

Page 54
88 ஆரோக்கிய வாழ்வு
இயற்கையான தேகப் பயிற்சியாகும். இதனுல் சுவாசக் கருவிகள் விரிவட்ையும், அடிவயிற்றுத் தசைநார் கெட்டிப்படும்; கைகால்களும் முதுகுப் பக்கத்துத்தசை நாரும் பலக்கும். நடக்கும் பொழுது கால் நடை. இடுப்பிற் கை வைத்துக்கொண்டா யினும் கை கட்டிக்கொண்டாயினும் "-க்கல் கூடாது. கைகளை நன்முய் வீசிக் கால் எட் டியவரையில் சீட்டி வைத்து கடத்தல் வேண்டும். இடையிடையே விலா எலும்புகளைப் பின்புறமர்க நெரித்துப் பின் சாமானியமாக விடுதல் வேண்டும். நட க்கும் பொழுது களே ஏற்படின் சிறிது கேசம் கின்று ஆறிப் பின்பு நடத்தல் வேண்டும். மூன்று மைலுக்குக் குறையாமல் கட த்கல் நன்று.
சரீரத்தின் அவயவங்கள் நன்கு தொழிற்படுதற் கும், அழகிற்கும் கிமிர்ந்த நிலை அனுகூலம் செய்வதால் சிற்கும் பொழுதும், வேலை செய்யும் பொழுதும், நடக் கும்பொழுதும், இருக்கும்பொழுதும், நிமிர்ந்த நிலை. எப்பொழுதும் கிமிர்ந்தமைதல் வேண் ம்ெ. குனிந்த நிலையில் சுவாசக் கருவி களின் தொழில் தடைபடுமாதலால் காலஞ் செல்லச் செல்ல நோய் ஏற்படும்; கிழத்தன்மை விரைவில் உண் டாகும். குனிந்த நிலையினும் கிமிர்த்த நிலையில் அதிக் வேலை செய்யத்தக்கதாயிருக்கும்.

உடலோம்பல் 89
இருக்கும்பொழுது இடையிடையே கைகளிாண் ,
டையும் இருக்குமிடத்திற் கேற்பக் கதிரையிலாயினும், கரையிலாயினும் ஊன்றித் தேகத்தின் இருந்து செய் பாரம் முழுசையும் சைகளில் பொறுக் யும் வேலையிற் கும்படி சிறிது நேரம் இருத்தல் வேண் சோம்பல் டும். இப்படிச் செய்வதால் இருந்து நீங்க வழி, செய்யும் வேலையினுல் ஏற்படும் சோம் பல் தீர்ந்து நல்ல ஊக்க முண்டாகும்
கைகள் விலா முதலிய அவயவங்கள் பலக்கும்,
கமத்தொழில் செய்தல் தேகத்துக்கு நல்ல அப் பியாசமும் வருமானத்திற்கு ஒர் வழியு விவசாயம். மாகும். ஆதலால் எல்லோரும் வீட்டுக் கொல்லை வைத்து அதில் வேலை செய் கல் நன்று. நீந்துதல் குளிக்கிறதோடு சிறந்த தேகாப் பியாசமுமாகும். ஆனல் தண்ணீரில் அதிக நேரம் கிற்ற லும், சுழிநீர், சேற்றுநீர், விரைவாய்ப் நீந்தற் பயிற்சி பாயும் நீர், அதிக ஆழமுள்ள நீர் முத விய நிலையங்களில் ந்ேதுதலுமாகாது. காற் பந்தடித்தல், ரெனிஸ் அடித்தல் முதலியனவும் நல்ல தேகாப்பியாசங்களாகும்.
பெண்கள் வீட்டு வேலையைத்தாமே செய்து வரு வரேல் அது அவர்களுக்குப் போதிய தேகாப்பியாச
மாகும், நமது நாட்டில் ஏழைக்குடும்பங்களில் மாத்

Page 55
90 ஆரோக்கிய வாழ்வு
கிரமே பெண்கள் வேலை செய்கிரு?ர்கள். ஏனையோர் வீட்டு வேலைகளைச் செய்வது மில்லை;
பெண்களும் வேறு வகைத் தேகாப்பியா சங்கள் e-L-6) 6J6Tiff எடுப்பதுமில்லை; த ம து நேரத்தை ச்சியும். கித்திரைசெய்வதிலும், வீண் வார்த்
தை ஆடுவதிலுமே அநேகமாய்க் கழிக்
கின்றனர். இதல்ை இவர்கள் பல்வகை நோய்க் காளா கின்றனர். வீரப்புதல்வர்களைப் பெறவேண்டிய இவர்கள் நோய்க்காளாவரேல் பின் நாட்டு கிலேதான்
எப்படி இருக்கும்!
மேனுட்டு மாதர்கள் இவ்வித மின்றித் தம் உடல் வளர்ச்சியில் மிகவும் கவனமெடுத்து வருகின்றனர். அவர்கள் ந்ேதுதல், ரெனிஸ் முதலிய மேனுட்டு பந்தாட்டங்கள் போன்ற தேகாப்பியா மாதர்களின் சங்கள் செய்து வருகின்றனர். நம் நாடு ஊக்கம். களிலும் பண்டைக்காலத்தில் பந்தாடு தல் (ரெனிஸ் அல்ல) முதலிய தேகப் பயிற்சிகள் பெண்கள் செய்து வந்திருக்கின்றனராக லால் கம்சாட்டு ஐஸ்வரிய குடும்பப் பெண்மணிகள்
இம்முறைகளைப் பின்பற்றல் நல்லது.
பரத நாட்டியம் முற்காலத்து இந்தியப்பெண்கள் அநேகரால் செய்யப்பட்டு வந்தது. இது இக்காலத்தில்
சா சி க ள் எ ன் னும் ஒரு வ குப் பின ர | ல்

உடலோம்பல் 91
LJU 5 மாத்திரம் கைக்கொள்ளப்பட்டு நளின நாட்டியம். மாக மாறிவிட்டது. ஆகையால் பாத நாட்டியத்தின் உட்பொருளை உண ர்ந்து பெண்கள் அகில் ஈடுபட்டு அதை மறுபடியும்
உயிர் பெறச்செய்யலாம்.
சுவாசமே நமது உயிர். ஆதலால் நாள்தோறும் சிறிது நேரமாயினும் சுவாசப்பயிற்சி செய்து வருதல் மிகவும் நல்லது. இதனுல் பழய கரிமல வாயுவும் சுவா சப்பையிலுள்ள மற்றும் அசுத்தங்க சுவாசப் பயி ஞம் வெளியே செல்லும்; சுவாசப்பை ற்சியின் விரிவடையும். நெஞ்சு ஒடுங்கி யிருத் [6ର୍ଦtତOld. தல், சுவாசகாசநோய்கள், தலையிடி, தடிமன் முதலிய எல்லா நோய்களும் தீரும். இாத்தம் சரீரம் முழுதும் நன்றுய்ப்பாவும்; go ாம் சுத்தியாகும்; சோம்பலும் மபக்கமும் போகும்; சுறுசுறுப்புண்டாகும்; ஆயுள் விர்த்தியாகும்.
சுவாசாப்பியாசம் செய்யுங்கால் வெளியான இட த்தில் சென்று சுவாசம் உந்திவரை பரவத்தக்கதாய் கிமிர்ந்து கின்று வேண்டியவளவு சுவாசம் மூக்கினலே உட்கொண்டு சிறிதுநேரம் வைத்திருந்து மெல்லமெல்ல விடுதல் வேண்டும். இவ்வண்ணம் பத்து சுவாசப் பயி முறை செய்தால் போதுமானது. மூச் ற்சி செய்யும் சை அளவுக்கு அதிகம் அடக்குதல் முறை. கூடாது, அதனல் சுவாசப்பையிலு ள்ள நுண் ணி ய இா த் த க் குழாய்கள்

Page 56
92 ஆரோக்கிய வாழ்வு
சேதப்பட்டுச் J† 6)!ዘf Šዎ። நோய்களுண்டாகும்; கண்விழி பிதுங்கி வரும், கீல் வாயு உண்டாகும். ஆகையால் சுவாசாப்பியாசஞ் செய்வதில் எச்சரிக்கையாயிருத்தல்
வேண்டும்.
தியான காலங்களில் சைவ சமயிகளால் செய்யப் படும பிராணுயாமமும் சிறந்த சுவாசப்பயிற்சியாகும். இக்காலத்தில் அநேகர் அதன் குணக்கை அறியாமல் மூக்கை மாத்திரம் கையில்ை பிடித் துக் சொள்கின்ற னர். பிராணுயாமம் செய்யும் வேளை பிராணயாமம். யில் பத்மாசனமிட் டிருந்துகொண்டு இடது மூக்கினல் காற்றை நாலு மாக் திரையில் உறுஞ்சிப் பதினறு மாத்திரைக்கு அடக்கி எட்டு மாத்திரையில் வெளிவிடவேண்டும். மறுபடி வலது மூக்கினலும் இவ்விதமே செய்தல்வேண்டும். இப்படி ந்ேது முறை மனத்தை ஒருவழிப்படுத்திச் செய்தாற் போதும்.
படுக்கையில் கைகால்களைக் கூடியவரை நீட்டிச் சிறிது புரளுவது நல்லது. இதுவும் ஒரு நல்ல கேகாப் பியாசமாகும். இதுவே மிருகங்களால் இயற்கையான இயற்கையாகச் செய்யப்படுவது. சய ஓர் தேகாப் னத்துக்குச் செல்லும்போது இப்படி பியாசம். ச்செய்வதால் சரீரம் சிறிது கஃ/ கொள்ளும். கித்திரை வருவதற்கு இது அனுகூலமாயிருக்கும். காலையில் இப்படிச் செய்வதால் சோம்பல் நீங்கும். தேகத்திற் சுறுசுறுப்புண்டாகும்.

உடலோம்பல் 93
தேகாப்பியாசக் குறைவினல் சரீரத்திலுள்ள கசை நரம்பு முதலிய உறுப்புகள் கடினமாகின்றன. அதுவே கிழத் தன்மைக்குக் காரணமாகின்றது. ஆகையால் அனுதினமும் தேகாப்பியாசம் செய்தல் வேண்டும்.
உடல் வளர்ச்சிக்கு உணவு, தேகாப்பியாசம் முத லியன எங்எனம் அவசியமாகின்றதோ அங்ங்னமே உழைப்பாலிளைத்த உடலுக்கும் மனதுக்கும் ஆறுதலை க்கொடுத்துப் புத்துயிர் அளிப்பதற்கு நித்திசையும் அவசியமாகின்றமையால் கித்திரைக் இளைப்பாறு குப் பங்கம் வராமல் பாதுகாத்தல் தலின் வேண்டும். ஒருவர் நாளொன்றுக்கு அவசியம். ஆறு மணிக்கியாலத்திற்குக் குறையா மலும், எட்டு மணி நேரத்துக்கு அதி கப்படாமலும் கித்திரை செய்தல் வேண்டும். இந்த விதி பாலர், நோயாளர், விருத்தர் முதலியவர்களுக்கு உரிய தல்ல.
மிருகம் பட்சி முதலியன இராக்காலங்களில் இளை ப்பாறுகின்றனவே யொழிய கித்திரை செய்யவில்லை யென்றும், ஆதலால் நாமும் கித்திரை கித்திரையைப் செய்யத் தேவையில்லை, உடம்பின் பற்றிய கருத் களைதீா இளைப்பாறினற் போதும் துக்கள். என்று சிலரும், நான்கு மணித்தியால கிக்கிரையே போதுமெனச் சிலரும், கருதுகின்றனர். இவை நமது அனுபவத்தில் தேர்ந்த னவல்ல வாசலால் இவைப்பற்றிச் சொல்வதற்கொன்று ιδουάου.

Page 57
94. w ஆரோக்கிய வாழ்வு
நில மட்டத்தில் அசுத்தக்சாற்று வீசுவதால் கட் டி லின் மீது தம் கழுக்தளவு உயரமான இலவம் பஞ் சாலாய தலையணையில் வடக்கொழிந்த சயனத்திற் திக்குகளொன்றில் தலைவைத்து இலகு கவனிக்கத் வில் கிக்கிரை வரத்தக்க நிலையில் ஒரு தக்கவை. மனத்துடன் கடவுளைக் தியானித்த வண்ணம் சயனித்தல் 5ன்று. காற்று அத்தியாயத்தில் சொல்லப்பட்ட சயன கிலேயும் கவனி க்கத்தக்கது. இங்ஙனம் செய்வதால் நித்திரை இலகு வாய வரும.
இரவில் கித்திரை குழம்பினுல் சித்த மயக்கம், மக் தம் முதலிய வியாதிகள் உண்டாகும். பகல் கித்திரை யினல் தேகத்தில் உஷ்ண நோய்கள் உண்டாகும்; உடம்பு மெலியும்; இன்னும் பதினெட்
நித்திரை டுவகையான வாத ரோசங்களும் வரத் குழம்புவதால் தக்கதாயுமிருக்கும். கிக்கிரை வருமுன் நேரும் தீங்கு. சயனத்துக்குப் போவதால் மனம் ஒரு கிலையில் கில்லாமல் துர் யோசனை சளிற்
செல்லும், அதனல் கித்திரை பங்கப்படும். ஆகையால் கித்திரை வந்த பின் சயனத்துக்குச் செல்லுதல்
வேண்டும்.
சரீரத்தில் உண்டாகும் மாறுபாடுகளினல் பின் னல் ஏற்படக்கூடிய நோய்களை முன்னரே எமக்கறி விக்கும் இயற்கையின் தூதுவனுய்த் தலையிடியிருத்த

உடலோம்பல் 95
லினுல், தலையிடியைப்பற்றி இங்கு சில கூறுவது அவ சியமாகும். தலையிடி ஒரு தனிப்பட்ட தலையிடி வருத்தமன்று. ஆதலால் அதை ஒரு இயற்கையின் போதும் அசட்டை செய்யலாகாது. தூதுவன். நம்மிலநேசர் அடிக்கடி தலையிடியால் வருந்துகின்றனரெனினும் அதைப் பற்றிப் போதியபடி கவனிக்கின்ற7ரில்லை. தலையிடி யுண்டாகும்போது அஸ்பெறின் (Asperin) முதலிய நஞ்சு மருந்துகளினல் அவ்வேளை மாத்திரம் அதன் உபாதியினின்றும் விலகிக்கொள்ள முயல்கின்றனரே யொழிய அதன் காரணத்தை யூகித்து அதைத் தடுப்பதற்கு எத்தனிக்கின்றிலர்.
தலையிடிக்கு முக்கிய காரணங்களாயிருப்பன:- அசீரணம், மலச்சிக்கல், தேகாப்பியாசக்குறைவ, நல்ல பொழுதுபோக்கின்றி ஒரிடத்திலையே அடைபட்டி ருத்தல், மூளைக்கும் கண்களுக்கும் அதிகமான வேலை, வெய்யிலின் தாக்கம், கெட்டுப்போன பக்ஷணங்களை உட்கொள்ளுதல், கோப்பி, தேநீர், புகையிலை, குடி வகை முதலியவைகளின் உபயோகத்தினுல் தேகத்தில் நச்சுத்தன்மை உண்டு பட்டிருத்தல், மிதமிஞ்சிச் சம் போகஞ் செய்தல், வேகங்கொள்ளுதல் (Emotions) நரம்புப் பலவீனம், ஈரல், குண்டிக்காய், குடல், enabt முதலிய உறுப்புக்களைப்பற்றியும், சலத்தைப்பற்றியும், வாதத்தைப்பற்றியுமுள்ள டிேத்த நோய்கள், சின்னம் மை, நெருப்புக்காய்ச்சல் முதலிய தொத்து நோய்கள்,

Page 58
96 ஆரோக்கிய வாழ்வு
தடிமன், காய்ச்சல், 'வயிற்றுப்போக்கு முதலியனவா கும். ஆதலால் தலையிடி யுண்டாகுமாகில் அஅது எசணு லேற்பட்டிருக்கலா பென்பதை யூகித்து அதற்கடுத் பரிகாரங் தேடல் வேண்டும்.
தேகாப்பியா சக் குறைவினலும், நல்ல பொழுது போக்கின்றி ஒரிடத்திலேயே அடைபட்டிருத்தலின அறும் அசுத்தக் காற்றினுலும் உண்டாகுக் கலையிடி வெளி யான இடங்களிற் சென்று உலாவி
• தலையிடிக்குப் நல்ல காற்றைச் சுவாசிப்பதனல் தீரும். பரிகாரம். மூளையை யும், கண்களையும் பற்றிய, தலையிடிக்கு அதிகமான வெளிச்சமில் லாத அறையில் மன அமைதியுடன் கண்களை முடிக்" கொண்டு ஆறி இருப்பதோடு நெற்றியிலாயினும் கழு த்தைச்சுற்றியாயினும் தண்ணீர்ச்சீலை சுற்றி வைக்கப் படின் அஅ குணமடையும்.
குண்டிக்காய் கோயினலும், தடிமனுலும், சலத் தைப்பற்றியும் உண்டாகும் தலையிடி தண்ணீர் அத்தி யாயத்திற் சொல்லப்பட்டிருக்கும் வெங்ர்ே ஸ்நானம், பாதஸ்நானம், நா பிஸ் நானம் முதலியவைகளினுல்
குறையும்.
கல்லீரலைப்பற்றிய தலையிடிச்கு அதிகநேரம் வெங் நீரிலும் தண்ணீரில் சொற்பநேரமுமாக மாறிமாறிப்
பாதஸ்நானஞ் செய்வது நல்லது.

உடலோம்பல் 97
தலையில் வெந்நீர்ச்சீலை சுற்றிவைக்குங் காலங்க களில் கண்களின் மேல் தண்ணீர்ச்சீலையிட்டு ஈரங் காயாமற் பார்த்துக்கொள்ளல்வேண்டும். கண்ணீர்ச் சீலையின் ஈரம் சாய்ந்துபோகாம லிருப்பதற்சாகக் தண் ணிர் தெளித்தலும் வெந்நீர்ச்சீலையின் குடாறிப்போ காமல் வெந்நீர்ப் பேர்த்தல்களை உபயோகிப்பதும்
நல்லது.
கோப்பி, தேநீர், புகையிலை குடிவகை முதலிய , வைசளினுபயோகத்தினலும், சம்போகமிகுகியினு லும், வேகங்கொள்வதினுலும் உண்டாகுக் கலையிடிக்கு அச்செயல்களிலிருந்து மு ற் ரு ய் விடுபட்டிருத்தல்
நன்று.
பொதுவாக எல்லாத்தலையிடிக்கும் மு த லில் மலத்தை வெளிப்படுத்தல்வேண்டும். இதற்காகக் கடுமையான பேதிமருந்துகளை உப யே 7 கித் த ல் கூடாது. தேகத்துக்கும் மனதுக்கும் நல்ல ஆறுதலைக் கொடுத்தல்வேண்டும். நோய்க்குத் தக்கபடி மூன்று நாட்கள் தொடக்கம் ஏழு காட்கள்வரையில் உபவாச மிருத்தல்வேண்டும். உபவாசமிருக் தலையிடியில் குங்காலத்தில் பழங்களின் இரசத்தில் பொதுவாகச் தண்ணீர் கலந்து சாப்பிடலாம். நாட் செய்யத் பட்ட நோயாளர்களுக்கு ஒருமுறை தக்கவை. உபவாசத்தினல்மாத்திசம் கே ய் தீராது. ஆதலால் அப்படிப்பட்டவர் கள் மீண்டும் மீண்டும் உபவாசமிருந்து பின் கவனமாய்

Page 59
98 ஆரோக்கியவாழ்வு
நடத்தல்வேண்டும் தலையிடி உண்டாகிய மூன்று நாட்களுக்குள் அக குணமடைந்து வராகிருப்பின் ஒரு சிறந்த வைத்தியனின் உதவியைத் தேடுகல் வேண்டும்.
கேகாப்பியாச மின்மையால் அடிவயிற்றுக் கசை
கார்ப்பலம் குறைவதினுலும் ஆகாரக் கிாமங் எளின் மை
யினலும், வேறு பலகாரணங்களினுலும் இந்நாளில்
பலர் மலச்சிக்கலால் வருந் திகின்றனர்
மலச்சிக்கலுக் உடலோம்பலுக்கு மலச்சிக்கல் பெரும்
குக் காரணம் இடர் விளக்கின்றமையால் அதைப்
பற்றிச்சிறிது கவனிப்பாம்.
மலச்சிக்கல் பலநோய்களை உண்டுபண்ணு சற்குக் காரணமாயிருத்தலால் அதனுலேற்படும் தீ மை யை உணராமல் அசட்டைபண்ணிவருகல் தமக்குத் தாமே
பாதகள் செய்வதாகும். நாப் உண்ணும். Loadảifiseomốio “"**o தாகு
வரும் தீங்கு ೬೧೫ಅ go IT ணமா g த் தேசத்துக்கு வேண்டியனவற்றை எல்லாம் தேக வு று ப் புக் கள் கிா கித் துக் கொண்ட தும் எஞ்சியபாகம் தேகத்திற் கன்னியமானதா சையால் அது குறித்தகாலத்தில் மலசலமாக வெளிப்பட ல் வேண்டும். அங்ஙனம் வெளிப்படாவிடில் அது வயிற் றில் சிக்கியிருந்து கெடுதலினுல் விஷத்தன்மையான சிலசரச்குண்டாகித் தேகத்தை நச்சுப்பண்ணிவிடும். ஆகலால் மலசலம் கிரமமாய் வெளிப்படுகின்றனவா
வென்பது அவசியம் கவனிக்கப்படல்வேண்டும்.

உடலோம்பல் 99
மலச்சிக்கலின் குணங்களாவன :- காலை அல்லது காலை, மாலையாகிய இருவேளைக்குமேல் சிறுகச்சிறுக மலங்கழிதல், ஒரே தடவையில் நன்முய் மலங்கழியாது சிறிது பாகம் மலக்குடலில் தங்கி மலச்சிக்கலி யிருந்து உபாதிகொடுத்தல், சிறுகுடலி ன்குணங்கள். லிருந்து மலம் தாமதத்தில் வெளிப் படுதல், மலம்கழிக்கும்பொழுது தாமத மும் உபாதியுங்காணல் முதலியனவாம்.
இதற்குப் பரிகாசமாக அடிக்கடி பேதிமருந்து சாப்பிடுவதும் பின் கவனமில்லாமல் நடப்பதும் புத்தி யல்ல. கண்ணிரத்தியாயத்திற் சொல் லப் பட்ட த ன் ணி ர் ப் பிரயோகங்களினுலும் மலச்சிக்கலுக் உ ண வு அத்தியாயத்தில் சொல்லப் குப்பரிகாரம். பட்ட உணவு முறைகளினலும் மலச் சிக்கலை விலக்கல்வேண்டும். அக்துடன் அடிவயிற்றுத் தசைநாரைக் கெட்டிப்படுத்தக் கக்க தேகப்பயிற்சிகளும் செய்தல்வேண்டும். ம ல க்  ைத வேண்டியகாலத்தில் கழிக்காமல் ஒருபோதும் அடக்க லாகாது. ‘இரண்டடக்கேல,” “திண்ண மிரண்டுள்ளே சிக்க வடக்காமல்,” என்பனவும் கவனிக்கத்தக்கன. மல ங்கழிக்குங் காலத்தில் மூச்சைப்பிடித்துக்கொண்டிருப் பின் மலம் நன்முய் கழிவதற்குத் தடையுண்டாகும். ஆதலினல் சாமானியமாக மு ச் சு விட்டுக்கொண் டிருத்தல்வேண்டும். ம ல ங் கழியப்போவதுபோல் உபாதி செய்துகொண்டிருந்தால், அவ்வுபாதி தீரும்

Page 60
100 ஆரோக்கியவாழ்வு
வரையும் பொறுமையுட னிருத்தல் நலம். ஒருநாளில் எப்படியும் இருமுறை அல்லது ஒருமுறையாயினும் மலங்கழிப்பதற்குத் தெண்டித்தல்வேண்டும்.
அடிவயிற்றுத் தசைநாரைக் கெட்டிசெய்து மலச் சிக்கலை நிவர்த்தி செய்யத் தக்க சில தேகப் பயிற்சிகள்:-
(1) காற் பெருவிரல்களில் நிதானமாய் நின்று கொண்டு கைகளிாண்டையும் மேலே நன்முய் உயர்த் தல்வேண்டும். பின்பு முழங்கால்களை முன் னுக்கு மடிக்காமல், அடிவயிற்றுத் தசைநாரை நெரித்தவண் ணமாய்ச் சரீரத்தை முற்பக்கம் வளைத்துக் கைகளிாண் டினலும் தாையத் தொடக் தெண்டித்தல் வேண்டும். அதன்மேல் காற் பெருவிரலில் கின்றபடியே மேலே எழுதல்வேண்டும். இவ்விதம் சரீரம் களைக்கும்வரை
செய்யலாம்.
(2) இடுப்பிற் கைகளிரண்டையும் வைத்துக் கொண்டு கால்களே இரண்டடிதூரத்தில் அகலவைத்து நிமிர்ந்து கிற்றல்வேண்டும். அதன்மேல் வலக்கையை மேலே வீசிக்கொண்டு முற்பக்கம் வளைந்து இடக் காற் பெருவியலைத் தொடத் தெண்டித்தல்வேண்டும். பின்பு கையைப் பிற்புறமாய் வீசிக்கொண்டு மேலே எழுந்து இடக்கையால் வலக்காற் பெருவிரலைத் தொடத் தெண்டித்தல் வேண்டும். இவ் விதம் மாறிமாறிச்
சரீரம் களைக்கும்வரை செய்தல்வேண்டும்.

உடலோம்பல் 101
(3) கிமிர்ந்து நின்று கொண்டு உள்ளங்கையி னல் அடிவயிற்றுக் தசை5ாரைப் பலமாய் அழுத்தல் வேண்டும். இவ்விதம் செய்யுங் காலத்தில் கையை
இடம் பெயராமற் பார்த்துக்கொள்வதவசியம்.
(4) குந்தியிருந்து இடுப்பிற் கைகளை வைத்துக் கொண்டு இடப்பக்கமும் வலப்பக்கமும் மாறி மாறிக் சுடடிய வரை சரிதல் வேண்டும். சரீரம் களைக்கும் ea.
இவ்விதஞ் செய்தல் நன்று.
(5) குந்தியிருந்து முழங்கால்களையும் முழங்கை களையும் தரையில் ஊன்றி மார்பு முழங்கால்களிற் பொருந்தத்தக்கதாய்ப் பதுங்கியிருத்தல் வேண்டும். இவ்விதம் செய்யும் பொழுது அடிவயிற்றுத் தசை is a கேரித்துக்கொண்டிருத்தல்வேண்டும். பின்பு நெரித்துக் கொண்டிருப்பதைத் தளர்த்தி கிமிர்ந்திருத் த ல் வேண் டு ம். இப்படிப் பலமுறை செய்தல் வேண்டும்.
(6) மல்லாந்து முதுகிற் படுத்துக்கொண்டு கை களை மடித்து விரல்களைப் பிடரியில் அணைத்துக்கொள் ளல் வேண்டும். பின்பு, கால்களை மேலெழுப்பாமல் அரைக்குமேல் சரீரத்தை எழுப்பி முற்பக்கம் வளை ந்து மோவாயால் முழங்கால்களைத் தொடத் தெண்டித் தல்வேண்டும். இவ்விதம் சரீரம் களைக்கும்வரை
செய்யலாம்.

Page 61
102 ஆரோக்கிய வாழ்வு
இப்பயிற்சிகள் ஒன்றே பலவோ நாள்தோறும் செய்யப்படலாம். தொடக்கத்திற் தேகப் பயிற்சி குறைவாகவும், காலத்தில் அவை கூடு கள் செய்ய தலாகவும் செய்யப்பட்டு வரல் வேண் வேண்டிய டும். எந்தப் பயிற்சியையும் சரீரத் முறை. திற்கு வருத்தத்தைக் கொடுக்கத்தக்க தாய் அதிக பலமாயாயினும் தேவை க்கு மிஞ்சிய அளவிலாயினும் செய்தல் கூடாது.
நாம் செய்யும் எல்லாத் தொழில்களைப் மூர்க்கி னும் சம்போகஞ் செய்கையிலேயே நமது சீவ சக்தி அதிகமாகச் செலவழிகின்றது. இது பற்றியே, 'ஒன்றை விடேல்’, ‘பெண்ணின் பால் ஒன்றைப் பெருக்காமல்’, ‘விந்து விட்டார் சம்போகத்தைப் நொந்து கெட்டார்”, “பெண்கடமை பற்றிக் கவனி திங்களிற் கோர் காலன்றி மருவோம்’ க்க வேண்டி எனப் பெரியாரும் கூறியிருக்கின்ற யவை. னர். ஆதலால் மேலே சொல்லப்பட்ட அமிர்த வாக்கியங்களைச் சிந்தித்துப் புத்திரோற்பத்தி ஒழிந்த காமநுகர்ச்சிகளில் நமது வீரியத்தைச் செலவிடலாகாது. இவ்விதம் செய்யாமல் மனம்போன போக்கில் நடந்தால் இயற்கை தண்டிக் கக் காத்திருக்கின்றது. அற்ப சுகம் பின்னல் பெருங் கவலைக்கிடமாகக்கூடும். ஆகையால் நமது ந  ைட ப் பிழையினல் நம்மை நோய் சாராமல் மனதைக் கட்டுப்
படுத்திப் ‘புலனைந்தும் வென்முன்றன் வீரமே வீரம்’

உடலோம்பல் 103
என்னும் ஒளவை சொற்கேற்ப வீரராய்த் திகழல் வேண்டும். V
உடல் வளர்ச்சிக்குத் தொற்று நோய்களும் இடர் புரிவன வாதலால் அவைகளைப்பற்றி எச்சரிக் கையாயிருத்தல் ம்ே வண்டும். தொற்று நோய்களைப் பற்றித் தனித்தனியே இங்கு கூறப்புகின் ஒவ்வொ ன்றுக்கே பல பக்கங்கள் வேண்டுமாதலால் அவைகளை ப்பற்றி இங்கே விவரமாய்க் கூறவில்லை. தொற்று நோய்கள் நோய்க்கிருமிகளின் மூலம் காற்றுடனும், கண் மீைருடனும், உணவுகளுடனும் சேர்ந்து ம் , தெள்ளு, கொசு, மற்றும் விஷ செந்துக்கள் மூலமும் நம்மை அணுகுவதால், காற்றுக் கெடாமல் பார்த்துக் கொள்வதும், சுத்தமான த ன் னி ர் தொற்று பாவிப்பதும், யேப்படத்தக்க உணவு நோய்ைத் களை விலக்குவதும், விஷக்கிருமிகளும், தொலைக் கொசுக்களும் வசிப்பதற்கு இடமில் கவழி. லாமல் நம்மையும், நாமிருக்கு மிடங் களையும் சுத்தமாய் வைத்திருத்தலும் தொற்று நோய்களினின்றும் விலகுவதற்குரிய மார்க்சங் களாகும். தொற்று நோயுள்ளவர்களை நோய் தீரும் வரை பிரத்தியேகமான விடத்தில் வைத்துப் பார்ப் பதால் நோய் பரவுவதைக் குறைக்கலாம்.
தெள்ளுகள் எலிகளில் அதிகமாயிருக்கின்றன.
தெள்ளின் மூலமே கட்டி நோய் பரவுகின்றது. எலி கள் வீட்டில் குடி கொள்ளாமல் பார்த்துக்கொள்வதால்

Page 62
(4. ஆரோக்கிய வாழ்வு
தெள்ள வீட்டில் வசிப்பதைக் குறை கட்டி நோய் க்கலாம். நம்முன்னேர் எலிகள் வீட் பரவும் டில் குடிகொள்ளாமல் தடுப்பதற்கே மார்க்கம். பூனைகளை வள ர் த் து வந்திருக்கின் M றனர். “பூனைக்குச் சோறு போடுவது புண்ணியம்”, என்று கூறு வது ம் இந்நோக்கம் பற்றியே யாகும்.
எப்பொழுதும் தலையைக் குளிர்மையாயும், கால் களைச் சூடாயும், மனதைத் திருப்தியாயும் சந்தோஷ, மாயும் வைத்திருத்தல் நன்று. தலையிலும் கால்ரிேலும் வேறு எந்த உறுப்புக்களிலும்பார்க்க அதிகமான நுண்ணிய துவாரங்களிருத்தலால் அவைகளை அழுக் கடையாமல் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். கால்களை அடிக்கடி ஈரமாக்கி ஈரஞ்சு தலை கால்களை வறவிடில் தடிமன் உண்டாகும். தடி
கவனிப்பு. சம் உண்டாகும். தலையிற் சூடுண்டா வதால் மூளைக்கொதிப்பும் சித்தட பிரமையும் கித்திரை யின்மையும் வேறு பலநோய் களுமுண்டாகும்,
விசனம் (Wory), அற்பகாரணத்துக்காக வேகங் கொண்டு முகஞ் சிவப்பது (Flush), கால், கை முதலிய உறுப்புகளைப் படுக்கை முதலிய விடங்களில் தேவ்ை யில்லாமல் ஆட்டுதல் போலுஞ் செயல்களினல் நமது சீவசக்தி (Energy) விணில் செலவழியும். ஆகையால்

உடலோம்பல் 105
ell-á) வளாச்சிகுன்றும். இது ப்ற்றியே பெருமூச்சு (Sigh), படுக்கையிற் காலாட்டுதல்,
விசனம் சிந்திய முகம் என்பவை தரித்திரக் முதலியவை குறிகள் என்று நம் முன்னேர் கூறி களினுல் விளை யிருக்கின்றனர். இவைகள் தற்காலத்து யும் கேடு. உடல் வளர்ச்சி அறிஞர்களாலும் ஒத்
துக் கொள்ளப்படுகின்றன. ஆகையால் உடல் வளர்ச்சியை நாடுபவர் இவ்வித துர்ப்பழக்கங்
கள் இல்லாதவராயிருத்தல் வேண்டும்.

Page 63

முடிவுரை
தவம் இயற்றுதற்கும் தேகபலம் வேண்டும். சரீரசுகம் இல்லையேயாயின் இவ்வுல ஆரோக்கிய கத்தில் எதையும் சரியான முறை வாழ்வினுல் யில் அனுபவிக்க இயலாது. சுகமில் அடையும் லாத ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நன்மை, சுமையாயிருக்க நே ரி டு ம். ஆகை யால் ஆரோக்கிய வாழ்வில் எல்லோ
ரும் கண்ணும் கருத்துமாய் இருத்தல் வேண்டும்.
சரீர சுகத்தினல் சந்தோஷமும், அதனல் நன் முயற்சிக்குரிய ஊ க்க மு ம், அதன் நோயனுகா ப யன ய் ப் பொருட்பேறும் உண் GIBS நின்றெ டாம். பொருள், கல்விகற்று அறிவு ழுகுவதன் பெறுதற்கு ஏதுவாயிருக்கும். அறிவி Lju6ir. ணுல் ஆன்மலாபம் கை கூடும்; ஆன்ம லாபமே காம் எடுத்த பிற வி யி ன் பெரும் பாக்கியம். கியமமில்லா வாழ்வினுல் இவை களில் எதையும் நன்கனுபவிக்க வியலாதாகையால், நோயனுகா நெறியில் நின்முெழுகி இவைகளை இயன்ற
மட்டுமனுபவிப்போமாக.
சுபம்! சுபம்! சுபம் !!
முற்றிற்று.
pm

Page 64
rmue o wɛ ɖorm moeso3 I001 se uolooga'œ@se ueko ga'œ@2. I \} 889 sa go gregoriae uofffa, ‹egorijas ugi soI899 Iso so gewon Jo退99947的9 I89 q7 m. Jo 11 ĝi 971旧将与如A I[9 pluggo@#ff o1 logo@ș tr-oIII 9 909I &虎戈9001呎99贞839 9’0 ise@url.077 s, ug– 1997) urag) 7 y sg)†39 1çe 5 Urmuog)鼠了的滑运e)8!fss §fino pourīgs uigog@gsforespolirīg)uogo.giog93 1çes'rısısnog)1çostýrismog)33 „osoofiaf)1çeşiff)38 p o gospođỉriņ&și foșđỉrīņố球*T qui loĝaeos@onqī 14@aezesēơiZ gI quaeqoqe&georgiosog)quaesone@georg oog)I† Ing sēkrmɛ goɖokpo9 Ia. ș5 Jugog 11 gC59șës Juegos urgesso& I创 冯战舰与喻ofice și“гэ"gs田地rn
oqoqo@g đfice şi


Page 65


Page 66