கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1972.09

Page 1
リ。
)
BLE
TE
|,
*
 

、
議 崧

Page 2
區間
அழகிய பவுண் நகைகள் தங்கப் பவுண் வைரங்கள் 需
கே.என். எம். மீருன் சாஹிப்
தங்கப் பவுண் நகை மாளிகை நகை வீயாபாரம்
கன்னுதிட்டி, aJIġI LI GOOT iħ,
sssssss Lall
பு:இலங்கையில் இப்போது
كس
U
E|Leiffe
s ----
骗
J LJJLJJ
fers
s
e Lloje 异坚
ܒܝ̈
c
극
அனவரும் விரும்புவ பிரவுண்சன்
(3a5'll gou Su!
l
e
 

o Y) p (~A a) ஆடுதல் பாருதல்கித்திரம்-கவி யாதியிளேக3க்ளில்-2ள்ளம் FFcb6L6ổTY2JLĎ sbLL'úLJ6)ff-Sigri 器設器器
Gasnrig.: 8 Lo6uri: 53
Go)gFlü Libl, urf 1972
அட்டையில் நம் தமிழ் வளர்த்த சிங்கள தேரோ
வணக்கத்துக்குரிய ஹிஸ்ஸல்லே தர்மரத்ன தேரோ அவர்கள் சென்ற மாதம் நம்மைவிட்டு மறைந்து போய் விட்டார்.
பன் மொழிப் புலவரான- அறிஞரான- இவர், தமிழ் மீது பற்றும் பாசமும் கொண்டு இயங்கியதால் ‘சிங்களத் தமிழன்" எனப் பட்டப் பெயர் சூட்டி வகுப்புவாதிகளால் கிண்டலாக அழைக்கப் பட்டார். இதைச் சுவாமிகள் பொருட்படுத்தவில்லை.
பல தமிழ் நூற்களைச் சிங்களத்தில் மொழி பெயர்த்துள்ளார். சிங்கள - தமிழ் அகராதியை இயற்றியுள்ளார்.
1962-ம் ஆண்டு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் இவரைக் கெளரவித்துப் பாராட்டியதையும் இங்கு நாம் குறிப்பிட்டாக வேண் டியது முக்கியமானதாகும்.
மணக்கும் "மல்லிகை" கதை, பெயர், கவிதை, கட்டுரை,
கருத்து. . எல்லாம் ஆக்கியோர் அலுவலகம்: தனித்துவம்: 80, கஸ்தூரியார் வீதி,
பொறுப்பும் அவரே; urbůLuraverib (avrii GT75)

Page 3
ஒலிம்பிக் சோகம்
மியூனிக்கில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நடந்த துக்ககரமான சம்பவத்தையிட்டு நல்லெண்ணம் படைத்த சகல தேச மக்களுமே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளச் சென்ற 11 விரர்களின் உயிர், அரசியல் சதுரங்கப் போட்டியில் வீணே பறிக் கப்பட்டுள்ளது மிகப் பெரிய சோகமாகும்.
விஞ்ஞான, விளையாட்டு, இலக்கியத்துறைகள் உலகிற்குப் பொதுவானவையாகும். இதில் நஞ்சு கலக்க முனைபவர்கள் அனை வருமே மனுக்குலத்தின் சத்துராதிகள் ஆவார்கள்.
இன்று மியூனிக்கில் நடந்த படுகொலையை முந்தி விழுந்து கண்டி. முனைபவர்கள், முன்னர் நோபல் பரிசு விவகாரங்களில் எத்தனை கீழ்த்தரமாக அரசியல் தகுடுதத்தம் செய்தவர்கள் என் பதும் கவனத்தில் எடுக்கத்தக்கது. இந்த அரசியல் சதிராட்டத் தில் அமெரிக்கா முன்நின்றதையும் நாம் மறக்க முடியாது.
பாலஸ்தீன அராபியர் நாடற்ற அரசியல் அநாதைகளாக்கப் பட்டு தேசம் தேசமாக அலைவாய்ப்பட்டுத் திரியும் சம்பவத்தை யும் நாம் மறந்துவிடவில்லை. 24 ஆண்டுகளாக இழந்த தமது தாய்நாட்டை விடுவிக்க முனையும் அவர்களது உணர்வை நாம் மதிக்கிருேம், அதற்காக இப்படியான பலாத்கார வழிமுறைகளைப் பொது விழாக்களில் கையாண்டு தமது பிரச்சினைகளைத் தீர்த்து விடலாம் என நினைத்து நடவடிக்கை எடுப்பதும் ஏற்றுக்கொள் ளக் கூடியதல்ல. கண்டிக்கத்தக்கது. s
விளையாட்டுத்துறை இனம், நாடு, மொழி கடந்த ஒன்று. காலாதி காலமாக எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ந  ைட பெற்று வந்துள்ளன.
மனித சாதனைகளை - அவர்கள் எந்த நாட்டவர்களானுலும்நினைத்து நினைத்துப் பெருமைப்படக் கூடிய மனுக்குல வெற்றிகளை கழங்கப்படுத்த யாரையுமே அனுமதிக்க கூடாது.
நாடுகளுக்குள் பலப்பல பிரச்சினைகள் தலைதுாக்கலாம். அதற் குப் பொது விழாக்கள் பலியாகக் கூடாது. V,
கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் ஒலிம்பிக் சரித்திரத்தின் முகத்திலேயே நன்ருகக் கரியை அப்படியே பூசி விட்டதுடன், தமக்குள்ள அதோடத்தையும் உலக நாடுகளில் ஒட்டு மொத்த மாக க்க, செய்துள்ளனர். r
 

எழுத்தாளர்களும் தமிழும்
"கு. ப. ராவினுடைய மிக வும் Sexy யான சிறுகதையி லும் கூட இந்த அளவு வரை யிலும்தான் செல்லலாம் இதற் குமேல் செல்லக் கூடாது என்று அவர் வரம்பு கட்டிக்கொண்டி ருந்ததை உணர முடிகிறது." இப்போது கட்டிலை விட்டிறங் காத மனிதர்களைப் பற்றியும் Nymphos Satyrs Lib m5)6T(pg 5 கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. gig, Sophistication gyals யமா என்று கேட்பவர்கள் இருக் கலாம்.
-'தீபம், ஏப்ரல் 1969
"யூ ஆர் ரைட் ஆன் யூ ஸெ இந்த - என்ன சொன்னீர்கள்?" "எமோஷனல் கான்ஃப்னிட் Build up ஆகவில்லை"
ஆமாம், வாஸ்தவந்தான். (a)(i) Craftsman ship 1b Giro 5 இருந்தது.
-9յւնւյւգ, நீங்கள்.
நினைக்கிறீர்களா
“Superpo
-'தீபம்’ ஆகஸ்ட் 1970
சந்தேகமில்லாமல் புக ழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் தான் இங்ங்ணம் எழுதுவார்கள். ஆங்கிலத்தையும் தமிழையும் " இங்ங்ணம் கலந்து விரவி வரும் நடை உலகில் வேறெந்த மொழி
சு. மகாலிங்கம்
யிலும் காட்டிப் பெருமைப்படக் கிடைச்காத விடயம். தமிழில் நிறையக் கிடைக்கும். ஆங்கிலச் சொற்களை அப்படியே அம்மொழி எழுத்திலேயே எழுதித் தமிழ் வசனம் அமைக்கிருர்கள். இதை என்னவென்றுசொல்வது? மேலே யுள்ள முதலாவது பகுதி திரு. க. நா. சுப்பிரமணியம் அவர்க ளுடையது. இர ண் டா வ து, *ஆதவன்" அவர்களுடையது. இவர்கள் யாருக்காக எழுதுகி ருர்கள்? இதிலென்ன சந்தேகம்? தமிழ்விமர்சகர்களுக்காகத்தான் எழுது கிருர்கள். அப்படியானல் இந்த இடையிட்ட ஆங்கிலச் சொற்ருெடர்கள்....? அச் சொற்கள் புரியாதபோது கருத் துத்தொடர்பு அறுந்துவிடுகிறது. அவர்கள் எழுதியதின் பயனும் குறைந்து விடுகின்றது
ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர் மன், இத்தாலியம் போன்ற ஐரோப்பிய மொழிகள் ஒரே எழுத்து வடிவங்களையே பயன் படுத்துகின்றன. ஆதலினல் ஆங்கில வசன நடையில் ஏனைய மொழிச் சொற்களைச் சேர்க்கும் போது அது அசிங்கமாகப் படு வதில்லை. சமீபத்தில் ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த பயிற்சி யுள்ள நண்பரொருவருடன்பே யபோது ஆங்கிலத்தில் இப்படி அசிங்கமான முறையில் கலப் படம் செய்யப்படுவதில்லையெனக் குறிப்பிட்டார். நமது ஆங்கிலம் தெரிந்த தமிழ் மேதைகளுக்கு

Page 4
மல்லிகை வளர்ச்சி நிதி
திரு அ. சி. நல்லையா
364, நாவலர் வீதி யாழ்ப்பாணம்
ტუ-10.00
செல்வி.ராஜம் தேவராஜன் 4.00
அரசடி வீதி
யாழ்ப்பாணம்
தமிழில் தம் கருத்தை செம்மை யாகச் சொல்லத் தெரிவதில்லை. நுட்பமற்ற வெகு சாதாரண மான சொற்களைக்கூட மொழி பெயர்க்க முடியாமல் திணறி இந்த விசித்திர நடையில் இறங் கிவிடுகிருர்கள். இந்தக் கையா லாகாத மேதைகளை விட வேறு சிலருக்கு ஆங்கிலத்தில் சொன் ஞ ற் ரு ன் வலுவுள்ளதாகச் சொன்னதாக ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுவதுண்டு.
"ஐ டோன்ட் நோ வாட் ஐ காவ் அச்சீப்டு டு ஹாப் நைஸ் ரிஷப்ஷன்ஸ் லைக் திஸ்" என்ருன் முகுந்தன்.
"தி நியூஸ்மேன் இஸ் தி வோன்லி என்ட் ஆஃப் சொ ஸைட்டி. தி ஆப்பிள் இன் தி ஜர்னலிஸ்டிக்ஈடன். இட் இல் ஈளி டு ஈட், பட் ஹர்ர்ட் டு டைஜெஸ்ட். “திஸ் இன் தி ஏஜ் ஆஃப் இன்ஸ்டன்ட் கம்யூ னிகெஷன்ஸ். தி நியூஸ்மென் இஸ் தி ஒன்லி மாஸ்டர் ஆஃப் திஸ் கம்யூனிகெஷன்ஸ். ஜர்ன லிஸம் ரெக்குயர்ஸ் ஏ டிஸிப் ளின் ஆஃப் மைன்ட் அண்ட் ஆல்ஸோ ஏ விம்பதடிக் அட் டர்ஸ்டாண்டிங் ஆஃப் மென் கைண்ட்"
க‘தீபம்’ மே 1969
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தங்கப் பதக்கம் பெற்ற ஒரு
4
தமிழ்ப் பண்டிதரின் கைங்கரியம் ಶ್ದಿ: இதுவும் ஒருவகைத் தமிழ்த் தாண்டு போலும், *தீபம்" ஆசிரியர் நா. பாவின் "செய்தி கள்" என்ற தொடர் நாவலில் இவை இடம் பெறுகின்றன. மேலே குறித்த கருத்துக்கள் இவருக்கும் பொருந்தும். ‘தீபம்"
வாசகர் ஒருவர் ஆசிரியரிடமே
பின்வருமாறு கேட்டிருந்தார். "தங்களின் "செய்திகள்” நாவ லில் கதாபாத்திரங்கள் சில இடங்களில் ஆங்கிலத்தில் பேசிக் கொள்கிருர்களே: அவர்கள் தமிழிலேயே பேசிக்கொண்டால் வாசகர்களுக்கு வசதியாக இருக் காதா? இதற்கு ஆசிரியர் பதில் பின்வருமாறு. "உங்கள் குறை  ைய க் கதாபாத்திரங்களிடம் சொல்லிப் பார்க்கிறேன். அவர் கள் கேட்பார்களோ, மாட்டார் களோ? இந்தக் காலத்தில் யார் தான் புரியும்படி பேசுகிருர்கள்? யார்தான் புரிய வேண்டுமென்று வற்புறுத்துகிறர்கள்?’ எவ்வளவு பொறுப்புணர்ச்சியற்ற, தட்டிக் கழிக்கும் பதில் தமிழ் வாசகர் களுக்கு புரியாமலிருக்கும்படி செய்து கொண்டு, தங்களுக்கும் ஆங்கிலம் தெரியுமென்று காட்ட முனையும் ஒரு முயற்சி. தமிழறி ஞர்களின் ஒருவகைத் தாழ்மை யுணர்ச்சியின் விளைவு.
திரு. பார்த்தசாரதி போன்
ருேரின் போக்கிற்கு எவ்வகைச் சமாதானமும்
கூற முடியாது. அவருடைய பதிலிலுள்ள மழுப் பலின் மூலம் அது அவருக்கே புரிகிறதென்று உணரமுடிகிறது. மேலே முதலில் குறித்தவகைக்கு தமிழில் சொல்லமுடிவதில்லை என்று சமாதானம் கூறப்படுகி றது. சில நல்ல கருத்துக்களை, நுட்பமாக, நாம் உணர்கிற அளவு வலுவுள்ளதாக வாசகர்க
க்குத் தெரியப்படுத்த வலு ಅಲ್ಲ தமிழ்ச் சொல் இல்லை

யென்பது கருத்து. அதனை என் ஞல் புரிந்து கொள்ள முடிசி றது; ஒப்புக் கொள்கிறேன். ஆனல் அதற்காக அவர்கள் ஆங் கிலச் சொற்களை அப்படிப்பெய்து எழுதுவது பைத்தியக்காரத்தன பயனற்ற முயற்சி. ஏனெனில் தமிழ் வாசகளுக்கு அது புரிவ தில்லை. ஆதலினல் அவ்விடத் தில் எழுதியவர் கருத்தினை இட்டு நிரப்பவேண்டிய வெற்றி டம்தான் ஏற்படுகிறது; நினைப் பதுபோல் வலுவான தாக்கமெ துவுமில்லை. தவிர, தமிழி ல் சொல்லமுடியாவிடில், பழ ம் பெருமை பேசுவதை விட்டு வலி வும் வனப்புமுள்ள மொழியாக தமிழை ஆக்க எழுத்தாளர்கள் முயலவேண்டும். சொல்லநினைப் பதை வாசகன் உணரக்கூடிய வகையில் சொல்ல முடியாதிருப் பது உண்மையில் வேதனையான விடயந்தான். அது ஒரு பிரசவ வேதனைபோல! அதன் பயனுக சொல்வதற்குப் புதிய சொற் கள் பிறக்கவேண்டும். அவை பழக்கத்தில்வந்து மக்களிடையே வழங்கி உணர்த்த வேண்டும். அதனைச் செய்ய முடியாதிருந்
தால், அந்தப் பிரசவ வேதனை யைத் தவிர்க்க முயன்ருல், மலடி களாக இருந்து விடுவதே மேல்.
தமிழ்மொழி நம்முடையது. நமது நிறைவுகளையும், குறைவு களையும் தான் அது பிரதிபலிக் கும். ஆதலினுல்தான் சொல்ல முடிவதில்லை என்ருல் அது நமது ஏலாமையினுல்தான் வந்ததென் பதைப் புரிந்து கொள்ளவேண் டும். உண்மையில் அந்தக் குறை
பாட்டிற்கு நாமெல்லோரும் பொறுப்பாளிகள். குறிப்பாக வளம் மிக்கதான ஆங்கிலம்
போன்ற மொழிகளைக் கற்றறிந் தும் தமிழை அப்படி ஆக்க முயற் சிக்காதவர்களின் பொறுப்பு அதிகம். இவர்களில் பலர் இங் கிலாந்திலிருந்தோ அவ்லது ஐ. நா. சபையிலிருந்தோ நிபுணர் கள் குழுவொன்று வந்து தமிழை வளம்படுத்த வேண்டுமென்று நினைக்கிருர்கள் போலிருக்கிறது! வளமான பிற மொழி தெரிந்த வர்கள் த ம் கடனுணர்ந்து செயற்பட்டாலேயே மே ற் கு றித்த குறைபாடுகள் நீங்கி தமிழுக்கு விமோசனம் ஏற்படும்.
வருந்துகின்ருேம்
முற்போக்கு எழுத்தாள நண்பர் செ' கதிர்காமநாதன் திடீ ரென அகால மரணமடைந்தது ஈழத்து இலக்கிய உலகையே
திடுக்கிட வைத்த சம்பவம்.
புதிய தலைமுறையின் எழுத்துலகப் பிரதிநிதியாக விளங்கிய
கதிர்காமநாதனிடம் நாடு
நிறைய நிறைய எதிர்பார்த்திருந்த
சந்தர்ப்பத்தில் அன்னுரை இழந்தது மிகப் பெரிய துரதிர்ஷ்ட
LOrtes th:
அவரது பிரிவால் மனம் வருந்தும் குடும்பத்தினரதும் சகோ தர எழுத்தாளர்களினதும் ஆழ்ந்த துக்கத்தில் மல்லிகையும்
கலந்து கொள்கின்றது.
- sigârffurff

Page 5
எழுத்தாளன் நாகராஜன் சமீபத் தில் அகால மரணமடைந்தது இலக்கிய உலகிற்கு அதிர்ச்சிதரும் சம்பவமாகும். தமிழைத் தான் வளர்த்துத் தமிழா லே தான் வளர்ந்த மதுரகவியின் குடும்பத் தினர் நிர்க்கதியான நிலையில் உள் ளனர். இலக்கியகாரனை நேசிக் கும் அன்பு நெஞ்சங்களின் உதவி கோரப்பட்டுள்ளது. மாக உதவுங்கள்.
அன்ஞாது ஞாபகமாக இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது.
 ைஆசிரியர்
மனப்பூர்வ
மறைந்தும் மறையாத மதுரகவி
எழுத்தையே தொழிலாகக்
கொண்டு, பேணுவால் வாழ்ந்தே தீருவேன் என்று கங்கணங் கட் .
டிக்கொண்டு, இந்த ஈழநாட்டில் வாழ்க்கைத் தேரை ஓட்ட முடி யாது. சில பெரிய பத்திரிகைத் தாபனங்களில் இருப்பவர்களால் ஒருவேளை முடியலாம். சுயேச்சை எழுத்தாளனுக வீட்டில் இருந்து கொண்டு அப்படி எண்ணினல் அடுப்படியில் பூனை படுக்கும். ஆறேழு நாள்களுக்கு அன்னம் தண்ணீரைக் கண்ணுலே காண வும் முடியாது.
அப்படிப்பட்ட அருமைத் திருநாட்டிலேதான் மதுரகவி. இ. நாகராசன் 1955-ஆம் ஆண் டுதொடக்கம் - சென்ற பதி னேழு ஆண்டுகளாக, உணர் வோடு, உயிர்த் துடிப்போடு ஒய்வொழிவில்லாமல் எழுதி வறுமையை எதிர்த்துப் போராடி வாழ்ந்து கொண்டிருந்தார்.
கனக. செந்திநாதன்
பவராக,
அவர் வாழ்க்கை சுயேச் சையை நாடும் வாழ்க்கை. கட் டுப்பாட்டுக்குள் அவரால் நீண்ட காலம் வேலை செய்ய முடியாது. குடும்பப்பாரம், கஷ்டமான வாழ்க்கை என்பவற்றை அவர் அநுபவித்தாலும் சுயேச்சையை நாடும் இயல்புதான் நாகராச னுடையது.
மதுரகவி இ. நாகராசன் தேயிலைத் தோட்டத்துப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக, ஈழகேச ரிக் காரியாலயத்தில் ஊழிய ஞக, "தமிழன்’ பத்திரிகையில் ஒரளவு பொறுப்புள்ள எழுத்தா ளனக, பூஜீலங்கா அச்சகத்தில் கடமை செய்பவராக, ஈழநாடு காரியாலயத்தில் தொழில் செய் அநேகம் மாணவர்க ளுக்கு "டியூசன்" வாத்தியாராக சிலகாலம் நிருபராக - இப்படி எத்தனையோ தொழில் புரிபவ ராக இருந்தார் என்பது உண்

(oð)l D - í D 9G) nr I In GoTLD o த ன் னி ர் போல வேலையில் ஒன்ருமல் - சுயேச்சையையே நாடியது.எந்த இடத்திலும் தொழிலை விட நேர்ந்தபோதும் அவர் அதிகம் கலங்கியதே இல்லை.
நான் வாழ்ந்தே தீருவேன். என் பேணு, என் எழுத்து என் னைக் கைவிடாது என்றே எப் போதும் கூறிவந்தார். அவர் அப்படிக் கூறியதற்குக் காரணம்
இருக்கிறது. அது மற்றவர்களுக்
குப் புரியாத காரணம்.
அவருக்கு இலக்கியத்துறை யுள் "எல்லாம் கைவந்த சரக் காக இருந்தது. அவரைப் பலர் கவியரங்கங்களிலே கவிஞராகவே பார்த்தனர்.
றலுக்காகவே கொடுக்கப்பட் டது. சென்ன்ை மாநகரில் நடை பெற்ற உலகத் தமிழ் விழாவில் கவிதைக்கான சிறப் பை யும் அவர் பெற்ருர் . ஆணுலும் அவர் நல்ல சிறுகதை எழுத்தா ளர். உணவு உண்ணும் நேரத் தில்கூட “ஒரு சிறுகதைக்கு நல் ல"கரு" சொல் பார்க்கலாம்" என்று கேட்டால் தட்டுத் தடங் கலின்றி ஏதோ எழுதி வைத்தி ருப்பவரைப் போல அருமை யான சிறுகதை ஒன்றைக் கூறி விடுவார். கவிதையில், சிறு கதையில் பிறகு பின்னை என்று அவர் சொல்லி நான் பார்த் ததேயில்லை. அப்படியே சிறுவர்க் கான பாடல்களில் அவர் முயற் சிசெய்து பார்த்துள்ளார். நாவ லில், கவிதை நாடகங்களில் தன் கைவண்ணத்தைக் காட்டி யுமுள்ளார். இதற்கு அவர் வெளியிட்டுள்ள நிறை நிலா (சிறு க  ைத) வாழ்க்கை ஒரு வசந்தம் (நாவல்) சிறுவர்பாடல் (சிறுவருக்கான கவிதை கள்)
*மதுரகவி என்ற ' பட்டமும் அவரது கவிதை ஆற்
ஜர்கள்,
சிலம்பு சிரித்தது (கவிதை நாட கம்) குயில் வாழ்ந்த கூடு (காவி யம்) என்பவை சான்று.
எல்லாம் ஒரளவு கைவந்த எழுத்தாளரானபடியால் எழுத் தை நம்பி எப்படியும் வாழ்ந்து
விடலாம் என்று அவர் நம்பிக்
கைகொண்டிருந்தார்.
இன்னும் அவரிடம் ஒரு சிறந்த குணம் இருந்தது. அவர் பலதரத்திலுள்ள மக்களோடும் பழகுபவராக இருந்தார். வியா பாரிகள் அவர்மேல் அனுதாப மு  ைட ய வ ர் களாயிருந்தனர்.
தொழிலாளர்கள் அ வ ர து தோழர்கள். அவர் சாதி, மத பேதம் பார்ப்பதில்லை. அது
போல இலக்கியக் கொள்கை"ப் போர்களுக்கும் முகம் கொடுப் பதில்லை. அதற்கு அவருக்கு நேரமோ ஒய்வோ சிடையாது. தமது படைப்புகளைப் பற்றிக் குறை கூறுவோரைக்கூட அவர் * சட்டை" செய்வதில்லை.
இதஞல் அவர் தமது சில நூல்களைப் பல விளம்பரங்கள் சேர்த்து வெளியிட முடிந்தது.
எழுத்தாளர்கள், தொழி லாளர்கள் - பலதரப்பட்ட அர சியல் வாதிகள் - அச்சக மனே ஊழியர்கள் அவரது மறைவு தினத்தில் திரண்டிருந்த காட்சி பேசாத நாவில்லை. புக ழாத மனிதரில்லை. அதுதான் மதுரகவியின் எல்லா மனிதர்க ளையும் நேசித்த மனிதத்தன்மை யின் பிரதிபலிப்பு.
ஆம், அவர் மறைந்தும் மறையாத மக்கள் கவியாக - மதுரகவியாக விளங்குதிருர்,
அவரை நினைக்கும்போது
கவிஞர் கந்தவனம், காரை சுந்தரம்பிள்ளை, அரியாலையூர் ஐயாத்துரை, கல்வயல் குமார சாமி, மதுரகவி நாகராசன்

Page 6
என்னும் யாழ் - இலக்கிய வட் டக் கவிஞர்க்ள் சென்ற ஐந்து வருடங்களாக சென்ற இடமெல் லாம் சிறப்புப்பெற்று நடாத் திய கவியரங்கங்கள் மனத்திரை யில் மிதக்கின்றன. கவியரங்கங் களில் தொடக்கக் கவிஞராக இருந்த மதுரகவியின் களைக் கேட்பது எப்போது என்ற ஆதங்கம் மேலிடுகிறது.
என் வாழ்விலும் ஒரு நட் டம். மத்தாப்பு, மணிமகுடம், நீதிக்கரங்கள் என்ற படைப்பு களிலெல்லாம் அவரைத்தான் தொடங்கும் எழுத்தாளராக முன்னணியில் நிறுத்தினேன். அவ ரும் தகுந்த மதிப்பை எனக்குக் கொடுத்து "வாத்தியார்" என வாயூற மனங்குளிரப் பேசினர். ஆலோசனைகள் நல்கினர். இனி அந்தக் குரல்.
அவர் அன்ருட வாழ்க்கைத் தேரை ஓட்டினர் என்பதுண்மை
utrl 1.6i
ஆனல் அவர் குடும்பத்துக்கென ஒன்றையும் சேகரித்து வைக்க வில்லை.
அவருக்கு ஆறு குழந்தை கள். மனைவி தாயார் எனப் பெரிய குடும்பம் அது.
பதினைந்து நாட்களுக்கு முன் னர்தான் அவருடைய தம்பி யார் மட்டக்களப்பில் சடுதியாக ஒரு பஸ் விபத்தில் காலமானுர் . இது ஒரு பெரிய இழப்பு. அக் குடும்பத்தாருக்கு ஒன்றின்மே லொன்ருக, கஷ்டம். குடும்பம் ஆருப் பெருத்துயரில் ஆழ்ந்திருக் கிறது.
சாதாரண எழுத்தாளர்க ளாகிய எங்க ளா ல் என்ன செய்ய முடியும்?
ஏதோ எங்களால் செய்யக் கூடிய உதவியை - மனிதர்களை நேசித்த மதுரகவிக்குச் செய்ய வேண்டியது நமது கடமை.
osšTsun Luň
வேண்டுகின்ருேம்.
டன் வேண்டுகின்ருேம்.
நா. த. செல்லத்துரை தலைவர்.
மதுரகவி இ. நாகரஜன் குடும்ப நல நிதிச்சபை
காலஞ்சென்ற மதுரகவி இ. நாகராஜன் அவர்களின் குடும்ப நிலைமை தாங்கள் அறிந்ததே. மான நிலையிலுள்ள அவரது குடும்பத்துக்கு பொருட்டு நிதி திரட்டி வருகின்ருேம்.
தங்களையும் பண உதவி புரியும்வண்ணம் தயவுடன்
தங்கள் நன்கொடையைக் வி. கந்தவனம், குரும்பசிட்டி, தெல்லிப்பழை என்ற முக வரிக்கு இம்மாத முடிவுக்குள் அனுப்பியுதவுமாறு அன்பு
கவிஞர் காரை. செ. சுந்தரம்பிள்ளை
மிகவும் கஷ்ட உதவும்
கவிஞர்
Gos uuatrørrf.

திக்குவல்லை கமால்
சிேன்வாசலில் எ ரிந்து கொண்டிருந்த குப்பிலாம்பின் வெளிச்சம் கதவுக்கிடையால் புகுந்து, அடுத்த அறை எதிர்ச் சுவரில் கோ டு வரைந்தாற் போல் படிந்திருந்தது. கூரை யின் ஒருபக்கமாகப் பதித்தி ருந்த கண்ணுடிக்குள்ளால் ஓரி ரண்டு நட்சத்திரங்களும் மின் னிக்கொண்டிருந்தன.
இவை இரண்டையும் மாறி மாறிப் பார்த்தவண்ணம் பாயில் பு ர ண் டு கொண்டிருந்தாள் ஹிதாயா. ஏழெட்டு வருடங்க ளாக நாளாந்தம் இதே நேரத் - தில் விரிந்து பழகிப்போன அவ ளது கண் இமைகள் இன்றும் விரித்து கொண்டதில் தவறில் லைத்தான்.
இந்த ஒரு மாதத்தையும் மாத்திரம் தவிர்த்து, அதற்கு முன்பெல்லாம் அவள் இந்த நேரத்தில் நிச்சயமாகக் குசினிக் குள் குந் தி அடுப்பெரித்துக் கொண்டு அல்லது கோப்பி கலக் கிக்கொண்டு தானிருப்பாள்.
சிறுகதை
மாறுசாதி
அதிகாலையிலேயே பொட் டணியைச் சுமந்தபடி வெளிக் கிடும் ஜெமீல் நானுவிற்கு, அந் தக் கோப்பிக் கோப்பையில் எத்தனையோ நம்பிக்கைகளும் மனநிறைவுகளும்தான்!
ஆணுல் இந்த ஒரு மாத «55 f7 ́ 6) Abf7"é#5 , . . . . . எல்லாம் அடிதலை மாறிப்போயிருக்கிறதே!
அவள் இன்னும் கண்களைத் திறந்தபடி புரண்டுகொண்டிருந் தாள். வெளியே காகங்கள் கத்திப் பறக்கத் துவங்கியதைத் தொடர்ந்து, விடிந்துவிடமுன் தண்ணிர் எடுத்துவரக் கிளம்பும் கன்னியர்களின் க ல க ல ப் பு அவளை ஒன்றும் செய்துவிட வில்லை.
மாருக முன் வாசலிலிருந் தெழும்பும் அந்த நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் ஒலி.
"கஹ் . கஹ்.
தலையைக் கிளப்பி ஓய்ந்து விடுகிறதா என்ற எதிர் பார்ப் புடன் பார்த்துக் கொண்டிருந்
கஹ்கஹ்"

Page 7
தாள் அங்கே, அது தொடர் கதையாக நீண்டுகொண்டிருந்
م5i
"ச ட க் கென்றெழுந்து, நிலத்தில் உராய்ந்து இழுபட்டு வரும் பிடவையைக் கூடக் கவ னிக்காமல் முன்வாசலுக்குப் போய் கணவனின் நெஞ்சை மேலிருந்து கீழாக இடைவிடாது தடவியபோதுதான் ஒருவாறு இருமல் ஓய்ந்தது.
அதே கைப்பட மேசையில் வைத்திருந்த "சுடுதண்ணிர்ப் போத்த"லிலிருந்து வெந்நீரில் கொஞ்ச்ம் வார்த்தெடுத்துப் பருக்கினுள் .
நன்முக விடிந்துகொண்டு வருவதற்கத்தாட்சியாக வெளிச் சம் பலபுறமும் பரவிக்கொண் டிருந்தது.
கதவைத் திறந்துகொண்டு வெளிக்கிட்டவள் பின்பர் : கக் கட்டிவைத்திருந்த இ  ெ அடுகளையும் அவிழ்த்து ட்டு விட்டுக் காலைக் காரியங்களில் ஈடுபடலாஞள்.
அதிகாலைவேளையில் பணித் குளிரில் கணவனை அதுவும் நோயாளியாக இருக்கும் நிலை * யில் வெளிக்கனுப்ப விரும்பாத அவள், அதற்கேற்ற முன்னேற் பாடுகளைச் செய்துதான் வைத் திருந்தாள்.
அப்போது நேரம் ஏழுமணி யைத் தாண்டியிருக்குமென்பதை குர்ஆன் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுகொண்டிருந்த சி:ர், சிறுமியர் மூலம் தெரிந்துகொண் டதும் சீக்கிரம்போய் மருந்துக் குழுகைகளை எடுத்து அவருக்கு விழுங்கச் செய்துவிட்டு முற்றத் தைப் பெருக்கத் துவங்கினுள். உடற்கட்டுக் குலைந்து நோ யாளியாகக் கிடக்கும் ஜெமீல்
10
நா ஞ  ைவ, * பொட்டணி ஜெமீல்" என்று சொன்னல் தான் எவகும் ஒரேயடியா
கப் புரிந்துகொள்வார்கள்.
வசதியாக வாழும் பலர் அவருக்குச் சொந்தக்காரராக இருந்தபோதிலும் அவர்களுக் குப் பல்லேக் காட்டித் தலைசொ றியும் பழக்கம், வாழ்க்கை வச தியற்று இப்படி நோயாளியாக அவதிப்படும் நேரத்திலும்கூட அவரிடத்திலில்லை.
அவர் கல்யாணம் செய்து கொண்ட புதிதிலெல்லாம் உத விக்கு இன்னுெருவரையும் இருத் திக்கொண்டு பக்கத்து ஊர்க ளில் நடக்கும் சந்தைகளுக்குப் போய்ப் பி. வை வியாபாரம் செய்துகொண்டிருந்தார். நாட். பட நாட்பட இயற்கையான வாழ்க்கைச் சோதனைகளால் தாழ்த்தப்பட்டு, உ ஸ் ஞ ர் ப் G. Lu nr L. L 60i) auft Intifunts மாறிவிட்டார்.
ஒவ்வொருநாளும் அதிகாலை யில் பொட்டணியைத் தல்ையிற் சுமந்து முழக்கோலைக் கையி லெடுத்தாரென்ருல் இனி ஐந் தாறு மைல்கள் காற்தோல் தேய "நடடாராஜா" தான். பின்பு - மாலையில் விளக்கேற் றும் வேளையில்தான் சாப்ப்ாட் டுச் சாமான். காய்கறிகள் சகிதம் வீடுவந்து சேர்வார்.
வாரா வாரம் எப்படியோ கடைகளில் பிடவைத் தினுசு கள் வாங்கிச் சேகரித்துக் கொள்வார். அவளும் அப்பகு திப் பெண்களின் ஒய்வு நேரக் கைப்பின்னலான “ரேந்தை'களை வாங்கியும், சட்டைப் பிடவை சளுக்குப் பூவேலைகள் செய்து கொடுத்தும் க ன வ னு க்கு ஒத்துழைப்பாள் .
"முதலாளி இன்னவத?"

இக்குரலேக் கேட் ட தும் சரிந்து தோளில் விழுந்திருந்த பிடவையை இழுத்துத் தலையிற் போட்டபடி கழுத்தை உயர்த் திப் பார்த்தாள். அங்கே. வெற்றிலைக் காவியேறிய பற் களால் சிரித்தபடி ஒரு சிங்கள வர் நின்றுகொண்டிருந்தார்.
"ஒவ் எதுலட என்ன” என் றவாறு துடைப்பங்கட்டையை மூலையில் வைத்துவிட்டு, உள் ளேபோய் இரண்டாம் அறைக் கதவு இடையால் பார்த்தபோது அவர் உள்ளே வந்தமர்ந்து கணவனிடம் சுக ம் விசாரிப் பதை அவதானித்தாள்.
அப்போது அடுப்பில் தண் னிர் கொதித்துக் கொண்டிருந் தது அவளுக்கு வசதியாய்ப் போய்விட்டது. உடன் தேனீர் தயாரித்தவள் ஒரு கணம் தயங் கியபோது . . . வந்திருப்பவ ருக்கு அதனைக் கொண்டுபோய்க் கொடுக்க வேறுயாரும் இல் லேயே என்பதால் அவளாகவே கொண்டுபோய்க் கொடுத்து விட்டு உள்ளே வந்தாள்.
'உம்மா! ஆப்பா. உம்மா ஆப்பா விழித்தெழுந்துவிட்ட மகன் ஓடிவந்து அவளின் முந் தானையைப் பிடித்துக்கொண்டு சிறுநீர் கழிக்கவோ முகம் கழு கவோ போகாத நிலையில் அடம் பிடித்தபோது அ வ ளு க் கு ப் பலத்த கோபம்வந்து முட்டியது. பாவம்; அது சிறுபிள்ளைகளுக்கே 'உரித்தான இயல்புதானே?
அன்று ஞாயிற்றுக்கிழமை; நேற்றைய நாளும் எப்படியோ கழிந்துபோய்விட்டது. இன்ரு? வது அவனேக் கூட்டிக்கொண்டு போ ப் நீராட்டாவிட்டால் பின்பு பாடசாலை நாட்களில் அதை நினைத்துப் பார்க்கவே இயலாதல்லவா? அதே நேரத்
தில் வீ ட் டி ல் சேர்ந்திருந்த அழுக்குத் துணிகளும்கூட அவளை மேலும் உசார்ப்படுத்தியது.
அடுத்த கணம் "வா மகன் குளிக்கப்போக." சிறுவனையும் அழைத்தபடி துணிமணிகளை யும் சேர்த்துக் கட்டிக்கொண்டு 5uture) air.
"எனக்கேலும்மா. பெளத் துநோவு’ எங்கிருந்துதான் அவ னுக்கிந்த நோய் திடீரென்று வந்ததோ! குளிக்காமலிருக்க
அவன் போடும் போலிக் கார ணம்தான் அது என்பது அவ
ளுக்குத் தெரியாதா என்ன?
"கு ஸ் க் க ஆப்பதருவன்"
இந்த மந்திரத்தை அவள் சந்தர்ப்பம் பார்த்து உச்சரித் ததுதான் தாமதம். தன்னிச் சையாக அவன் பின்னல் வந்து கொண்டிருந்தான்.
*அம்ஜத்து. அம்ஜத்து. பாளியக் கொஞ்சம் எடுக்கவா? அடுத்த வீட்டை அண்மிக் குரல் கொடுத்தாள் ஹிதாயா.
“<毁,· நானும் குளிக் சப் டோகோணும், சொணக்காமல் கொணுவாங்கொ" உள்ளேயி ருந்து நிபந்தனையுடன் அனுமதி வந்தது,
இரவல் வாளியையும் சுமந் துகொண்டு நடக்கத்துவங்கி ஞள். பாவம், ஒரு பெண்ணுக இருந்தபோதிலும், அவளுக்குத் தான் எத்தனை பொறுப்புக்க ளும் வேலைகளும். விடிவுகாண முடியாத சிந்தனைகளும் ...
இன்னும் மூன்றே மூன்று நாட்கள்தான் இருக்கின்றன. ட ாக் ட ரின் உத்தரவுப்படி ஜெமீல் நாணுவை வீரவில’ கயரோக ஆஸ்பத்திரியில் கூட்
வந்தால்தான்

Page 8
டிக்கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். குறைந்த கணக்கில் அதற்கு இருபத்தைந்து ரூபா வாவது கையிலிருக்கவேண்டும்.
இந்த ஒரே மாதத்துக்குள் கையில் மடி ருந்ததெல் லாம் விற்றுச் சுட்டு முடிந்தாகி விட்டது. யாரிடமும் கேட்டுப் பெற்றுப் பழக்கப்படாத அவள் வேறெதுவுமே செய்யமுடியாத நிலையில் கடனுக்காவது கேட்டு வைப்போமென்றுதான் நேற் றுக் 'கண்ணுடி முதலாளி"யின் பெண்சாதியை நாடினுள்.
உம்மயா பகலக்கி மீன் வாங்கேம் சல்லில்ல" என்பது தான் அவளது பதில்.
வெட்கித்து வெட்கித்துக் கேட்டால் நிச்சமம் கிடைக்கு மென்ற நம்பிக்கையில் வாய் திறந்த முதல் முயற்சியே இப் படிப் படுதோல்வியை அரவ 2ணத்தபோது அதற்குப் பிறகு இ ன் னும் ஒருவரிடம் போய் வாய்திறக்கும் தைரியம் அவ ளுக்கு வரவில்லை.
"எனக்கேல உம்மா.. பெளத்து நோவுது கிணற்ற டியை அடைந்ததும் மீண்டும் சிறுவனின் போலிச்சாட்டு,
நிறைந்திருந்த பெண்களுக் கிடையே அவளும் நுழைந்து அவசர அவசரமாக துணிகளைத் திவைப்பதிலும் குளிப்பதிலும்
சடுபட்டுக் கொண்டிருந்தாள்.
நான்கு புறமும் மதில்கள் ாழுப்பிப் பெண்களுக்கென்றே
விஷேசமாக ஒழுங்கு செய்யப் பட்டுள்ளதுதான் அந்தப் பள் விக் கிணறு. இடைவிடாது பெண்கள் கூடிக்கொண்டிருக் கும் அங்கு, வழமைபோல் அன் றும் உள்ளூர்ச் சம்பவங்களின்
விமர்சனங்கள் இடம்பெற்ற போதிலும் அவற்றுக்குத் காது கொடுக்கும் நிலையில் அவுளில்லை.
அவளுக்குத்தான் எத்தனை யெத்தனை பிரச்சினைகள். முக்கால் மணிநேரத்துக்குள் துணிகளேத் துவைத்து, மகனைக்
குளிப்பாட்டி, தானும் குளித் துப் புறப்படத் தயாரான போதுதான் அந்த வேண்டு கோள்.
"பாளியக் கொஞ்சம்தா. நான் குளிச்சிட்டு அனுப்பியன்
எதிரே, காதிலும் கழுத்தி இலும் தங்க நகைகள் பளபளக்க மார்பு ரவிக்கையைக் கழற்றிய படி நின்று கொண்டிருந்தான் "கண்ணு டி முதலாளி யின் மனைவி. w
அவள் சிறிது யோசித்தாள். இரவல் கொடுத்தவள் உட்னே கொண்டுவந்து தரும்படி சொல் லியிருக்கிருளே!
அதே நேரத்தில் கொடுக் காமல் விட்டால் ‘நேற்றுக் காசு கொடுக்காததால் தான் தரவில்லை" என்று நினைக்கவும் கூடுமே - அவளது சிந்த இை
குழம்பி என்ன பதில் சொல்வ
தென்று புரியாமல் திகைத்து pcârgraît.
"புரியமில்லாட்டி எடுத்துக் கொணுபோடி ஒண்ட அருமச் &FMT o gr”
"இல்ல, இது ஏண்டயல்ல; அடுத்தூட்டு பாளி" அவள் காரணம் காட்ட முனைந்தாள்.
"போதும் போதும் சாட்டு. நீ இப்ப பெரிய மணிசிதானே" sgel l. G. lu sár அருவசியமான வார்த்தைகளைப் பொழிந்ததை

அவளால் பொறுக்க வில்லை.
"நாங்க பெருக்கேமில்ல. சிறுக்கேமில்ல. எப்போம் ஒரு மாதிரித்தான்"
"வாயப் பொத்து நாணயக் asnrf... ... நசக்கார மனிசனக் கட்டில்ல வெச்சிட்டு, to Tig) சாதிய ஊட்டுள்ளுக்குப் போட் டுக்கொண்டு கூத்தாடியவள் ... . g?sÄ7 l— ரசம்பட்டுத்தானே ஒத்தஞெத்தஞ வாரானியள்." அங்கு கிளர்ந்து வெடித்த சிரிப்பொலி அவளை இன்னும் அதிரச் செய்துவிட்டது. குனிந் தவர்களும் நிமிர்ந்தவர்களும் த ண் ணி ர் அள்ளுபவர்களும் முதுகு தேய்ப்பவர்களும். அடக்க முடியாமல் வாய்விட் டுச் சிரிக்கத் துவங்கியதைப் பார்த்ததும், அவர்களெல்லோ ரும் ‘கண்ணுடி முதலாளி யின்
மனைவியின் குரலே ஆமோதிப்
பதுபோலிருந்தது.
அவள் வேறு எதுவும் பேச முடியாதவளாக . . பேசியும்
பயனில்லையே என்பதால் மகனை யும் கையில் பிடித்துக்கொண்டு அமைதியாக வீட்னிடநோக்கி நடந்துகொண்டிருந்தாள்.
மாறு சாதி ஊட்டுக்குள்ள போட்டுக்கொண்டு
இந்தச் சொற்ருெடர் மீண் டும் மீண்டும் அவள் செவியில் எதிரொலித்து அவளது உள்ளத் தைத் துகள் துகளாக்கிக்கொண் டிருந்தது.
இருக்கின்ற துயரங்களும் வேதனைகளும் போ தா க்கு
றைக்கு இப்படியும் ஓர் அவ
மானமா?
இந்த ஏழுவருட காலமாக ஜெமீல்நாஞ அன்றையன்றைக் குப் பணம்தாள் சம்பாதித்து
Οιρις αυ
வந்தார் என்றுதான் அவள் நம் பியிருந்தாள். ஆனல் அவர் பணத்தை மாத்திரமல்ல பல மனித உள்ளங்களேக்கூடச் சம் பாதித்துள்ளார் என்பதை அவர் நோயாளியாக மாறிய இந்த ஒரே மாதத்துக்குள் அவள் நன்குணர்ந்துகொண்டாள்.
ஒவ்வொரு நாளும் அவர் பழகிய பகுதிகளான ஊராமம், ரதம்பல, பிடதெனி முதலிய பகுதிகளிலிருந்து வந்துபோயக் கொண்டிருக்கும் சிங்களச் சகோ தர சகோதரிகளே அதற்குச் éFir Görgy.
சொந்தக் காரர்களென்றும் ஊரவர் என்றும் இருப்பவர் களெல்லாம் புற க் கணித் து வைத்திருக்கும் இந்நிலையில், பழக்கப் பிணைப்பால் வந்து போய்க் கொண்டிருப்பவர்களைக் கூட விட்டுவைக்காது கெட்ட
கதைகளைத் தொடுக்கும் இவர்
களின் விகாரத்தனத்தை யாரி டம்தான் சொல்வது?
'உம்மா. ஆப்ப. உம்மா
ஆப்ப"
வீட்டை அடைவதற்கும் சிறுவன் மீண்டும் கோரிக்கை விடுவதற்கும் சரியாகஇருந்தது.
முதன் முதலில் அவனுக் குக் காலைச் சாப்பாடு ஒழுங்கு செய்து கொடுத்துவிட்டு, கண வனைப் பார்க்க முன்னே ஓடிச் சென்ருள் ஹிதாயா,
அப்பொழுதுதான் இருமி ஓய்ந்தாரோ என்னவோ தெஞ் சைத் தடவியபடி சுருண் டு கொண்டிருந்தான் அவள் கண வன். அவரைக் கண்டதும் கிணற்றடியில் நடைபெற்ற சம் பவம் அவள் நினைவில் கீறல் போட்டது.
"நசக்கார மனிசனக் கட் டில்ல வெச்சிட்டு. மாறுசாதிய

Page 9
பாட்டாளி
வண்டிகள்
மாலைகள்
ஓய்ந்த கடலலை ஒளி பெருச் சூரியன் பாயாப் பெரும் புலி - இன்றைய பாட்டாளி
ஓயாத ஒட்டம் அவஞேர் டாக்ஸி ஒழியாத சுமையால் அவனுேர் லொறியாம்! வாயின்றிப் பிரபுவின் அடிமையாய் உழைப்பதால் அவனுேர் குதிரை உழைத்துக் களைத்துப் பெருமூச்சு செறிவதால் அவன்--
புகைவண்டி!
பட்டம் பதவி புகழ்மொழி
கைலஞ்சம் உதறித் தள்ளி ஊருக்காய்
உழைக்கின்ற பொதுப் பணியாளனுக்கு சூட்டுகின்ற மாலைகள்...? வசைச் சொல்லும்
தாக்குதலும்!
எம். எச். எம். சம்ஸ்
4
ஊட்டுக்குள்ள போப் டு க் கொண்டு.
"சீ! எனது மான உணர்ச் சியைப் புண்படுத்திப் பேசின ளே. அவளை அவளை ஹிதாயா
பக்களை "நறநற வென்று கடித்
துக்கொண்டாள்.
சடுதியாக அவள் பார்வை கீழ்நோக்கிப் பதிந்தது. தோடம் பழங்கள் கீரைகறிகள் நிறைந்த கூடையொன்று அவள் கண்க ளிற் பட்டது. அது காலையில் வந்த சிங்களவர் கொண்டுவந் ததாகத்தானிருக்க வேண்டும். அவர் மாத்திரமா? ஒவ்வொரு நாளும் வரும் அத்தனபேருமே இப்படித்தான்!
'ஹிதாயா. என்னத்த பாக்கியர் அது வெள்ளனவந்த மாட்டின் மஹத்தய கொணு வந்தது. அவரு என்னேட உசி ருமாதிரி. நான் போன ஒரு மொழம் ரேந்தயாவது எடுக் காம அனுப்பமாட்டார். நல்ல வரும்படிகாரன்நான்வாளுண்டு செல்லச்செல்ல இதோ தந்திட் டுப் பெய்த்தார்" என்று சொல் லியவாறு தலையணைக்கடியிலி ருந்து அதன்னயெடுத்து நீட்டி ஞர். da
அவள் இதற்காகத்தானே நேற்று முயற்சித்து ஏமாற்றம டைந்தது. இனிமேல் அந்த முயற் சி யே வேண்டாமென வெறுத்து இன்னும் மூன்று நாட் களுக்குப்பின் கணவனை ஆஸ் பத்திரிக்குக் கூட்டிச் செல்ல என்ன வழியென்று தெரியாமல் தவித்துக் குழம்பிக் கொண்டி ருந்தாள்.
sjell GT gj Gp Gj6 Urprb சட்டென்று இளகியதுபோன்ற உணர்வு.
இப்பொழுது அவளுக்குள் புது நம்பிக்கையொன்று சுடர் விடுகிறது. "

சிறுகதை
என் நண்பன் பெயர்
. . . . .ாணயக்க TU 5ظ~مہینہ~مہیہ~مہیں~مسحمہ یہ~مہ سہ~مہینہ~مہ محم۔
கொட்டாஞ்சேனையிலி ருந்து, நாணய க் கா ரா வும் நானும் கோட்டைக்குவந்தோம் "யாழ்தேவி யில் ராஜநாயகம் வருவதாகக் கடிதம் போட்டி ருந்தான். வண்டி வருவதற்கு இன்னமும் ஒருமணி நேரத் திற்கு மேலிருந்தது.
"என்னடா செய்யலாம்?" என்ருன் நாணு, எனக்குப் புரி யவில்லை. இனி எங்கள் அறைக்கு - பம்பலப்பிட்டிக்குப் போய் விட்டுத் திரும்பி வருவது முடி யாத காரியம்.
"ஸ்ரேஷனடியிலை பே சிக் கொண்டிருக்கலாம்; வா, சாப் பிட்டு வருவோம்" என்றேன்.
2
சாப்பிட்டுவிட்டுத் திரும்பி "ஸ்ரேஷனின் முன்னுல் 'ஒல் கொ ட்” சிலையருகில் வந்த போது, நாணு மிக உற்சாக மாயிருந்தான். அவன் "எடுத்த" அந்த "ட்ரும் அதற்குக் கார ணமாய் இருந்திருக்கக் கூடும். அவன் எப்போதுமே இப்படித் தான் : அ ள வுக் கு மே ல் போகாது. அந்த ஆறடி உயர
(էքւb,
அதற்கேற்ற ஆகிருதியு மான உடம்புள்ள நாணுவின் கம்பீரத்திற்கு இந்த "மப்"பின் உசார் மேலும் பொலிவூட்டும் தீர்க்கமான மூக்கும், அதன் கீழ்க் "கரு கரு" மீசையுமாய்ஒரு சாயலில் ராவணனைக் கற் பனை செய்து கொள்ளலாம்.
‘ஏண்டா, ரா வணு. . . என்று செ ல் ல மா க நான் அழைக்கும்போதெல்லாம் "கட கட" வென்று அவன் சிரிக்குத் தொனியில், "மாத்தறை - யாழ்ப்பான மோ, அல் ல து "சீனு - தான" வோ தலைநீட்ட முடியாத அளவுக்கு எமக்கிடை யில் இறுகியிருந்த நட்பின் வைரந் தெரியும். கல்லூரியில் ஒரே வகுப்பு. ஒரே அலுவலகத்
தில் ஒரே வேலை. தவிர நாணு
இப்போது என் "ரூம் மேட்".
"நி ப்ப மா? உள்ளுக்குப் போவமா?" என்ருன்.
"இதிலையே நிப்பம்"
இன்னும் அரைமணி நேரம் இருந்தது,
3
ஒரே குளிர். பனி மூட்டங் களிடை வாகனங்களின் ஒளிக்
கொஞ் சம்
15

Page 10
கதி f கன் பீச்சப்படுகையில்
முப்பரிமானமுள்ள குவியமா கிற பரிணுமம். உடலைச் இலிர்க்க வைக்கிற காற்று. . அங்கொன்றும் இங்கொன்று
மான யந்திர ஒலிகள் இல்லா விட்டால் இன்னும் தன்ருக
இதழ் என்று நினைத்துக்
காண்டேன்.
"இவர்களையெல்லாம் பார்த் தாயா?" என்ருன் நாணு, கீழே படுத்து க் கிடந்தவர்களைக் காட்டி
ஆண் - பெண், குழந்தை s S6
- கிழவர் என்று ஒரு உலகமே அங்கு - "ஒல்கொட்" சிலையடியிலிருந்து "ஸ்ரேஷன் விருந்தை வரை வியாபித்திருந் தது. நாணு கேட்டதுந்தான் அதைக் கவனித்தேன். இவ்வ ளவு நாளும் வருகிற போகிற போதெல்லாம் கண்டு கண்டு அது ஒரு சாதாரண விஷய மாய்ப் போய்விட்ட காரணத் தால், நான் அதைக் கவனிக்க afleiðav.
"இவர்கள் இந்நாட்டு மக் களில்லையா?? - சிகரட்டை ஊ யபடி நாணு கேட்டான்:
நான் பேசவில்லை.
" . . . . . . டேய், வங்களுக்கு வேலைவேண்டாம், @: கருது பாடு கொடுக்க வேண்டாம். ரு சத்திரமாவது கட்டிப் ಕ್ಲಿಕ್ಕಿ: இந்தப் பணியிலை இப்படிக் கிடக்கத் தேவையில்
Gullrt... ......'
ஆங்காங்கே தூவப்பட்டி ருந்த அந்தக் கும்பலிடை, பலர் இன்னமுந் தூங்கவில்லை. நாணு வின் உரத்த பேச்சால் ஈர்க்கப் பட்டு, எங்களே அவதானித்த GOTIT.
6
கொண்டேன்.
*நீ சொல்றது சரிதான்; கொஞ்சம் மெதுவாகப் பேசு எல்லாரும் பார்க்கிருர்கள்" என் றேன்.
உண்மையில் நாளு வின் துடிப்பு எனக்குப் புரிந்துதான் இருந்ததென்ருலும், இத் த இரண்டு "மொட்டையன்களும் பேசி ஆகிற காரியமா இது?
நாணு பிறகு பூேசாமலிருந் தான். இருவருமாக நடந்து போய் ஸ்ரேஷன் விருந்தையில் நின்ருேம். திரும்புகையில் நுழை வாசலருகில் நின்றவர்களைக் கண் டதும் எனக்குத் திடுக்கிட்டது.
சிறில்!
இலேசான ஒரு குளிர் முள் ளந்தண்டில் ஒடுவதுபோல - ராஜநாயகத்தைப் பார்த்துக் G45 mračuvugprrruo6iy, G3 u zgr nt up dio அறைக்குப் போய் விட்டா லென்ன" என்று நினைத்தேன். "என்னைக் கண்டால் என்ன செய் வானே" என் கி ன் ற பயம் மேலோங்கிற்று. திரும்பி நாணு வை மெல்லத் தட்டுவதற்குள்சிறில் என்னைக் கண்டு கொண்
nrøT !
அந்தப் பார்வை - அதிற் பின்னியிருந்த கொடூரம். ,ש எனக்கு வியர்த்தது. நாணுவின் கரங்களை இறுக் கப் பற்றிக்
சிறில், நினைத்தானே, "விடுவிடென்று ஸ்ரேஷனுக்குள் Gurruus * டான். ஆஞல், எனக்கென்ன வோ, அவன் கம்மாயிருப்பா னென்று தோன்றவில்லை. நடுங் கிய கரங்களை உணர்ந்ததும், நாணு ' என்னடா?" என்ருள்
"சிறில்." எனக்கு மேலே பேச வரவில்லை.

"எங்கே?' என்றவனின் கண்டத்திலிருந்து "கட கட" வென்ற வெண்கலச் சிரிப்பொலி எழுந்தது. அந்தக் கம்பீரத்தில் - அதன் தைரியத்தில் - நான் சமநிலைக்கு வருகையில், "வீணு கப் பயப்படாதே நானிருக்கி றேன்’ என்முன் நாணு.
வெளியே உறைத்த குளிர், இப்போது அதிகரித்தது போ லொரு உணர்வு. சிறி லு க் கு நான் பயப்படுகிற காரணம்நாணுவும் அறிவான்
ஒர் அபலைப் பெண்ணைப் பழிவாங்க இந்த சிறில் முன் பொருதரம் முயன்றபோது, என் தலையீட்டால் அவன் திட் டங்கள் கவிழ்ந்தது
அதன் விளைவாய் இந்த "தெமலப்பய"லுக்கு ஒரு பாடங் கற்பிக்க மு ன ந்து அலையும் சிறில் . . .
எங்கள் சொந்தக் கொழு வ"லுக்கு ஒரு இனவாத முலாம் பூ சு ம் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிருன்!
நாளு உலுக்கினுன் , "என்னடா, இ ன் னு மா
நடுக்கம்?"
நான் தலையாட்டினே.
ராஜநாயகம் வந்தாயிற்று.
மூ வ ரு ம் பஸ்தரிப்புக்கு வந் தோம் . 134 அல்லது 137.
Lu 6y 6o 6m) பார்த்துக் கொண்டு நின்ற அலுப்பில் நேரம் ஊர்வது போலிருந்தது. பஸ்தரிப்பில் எங்களைவிட வேறெ வருமில்ல். இரைந்தபடி குறுக்
கும் நெடுக்கும் போய்க்கொண் டிருந்த "டாக்ஸி'களும் மறைந் துவிட்டன.
பின் புறத்திலிருந்து ஒரு செருமல் கேட்டது. திரும்பி ஞல்
Ssólóv ! g)sárgyð um Gorm'
இரண்டுபேருடன் நின்ருன்.
"நாணு . . . “ என்றேன். இதற்குள் சிறில் மிக அருகில் வந்துவிட்டான் - தமிழர்களைப் படுமோசமாகத் திட்டியபடி.
அவனுக்கு நல்ல வெறி. "இன் ,
டைக்கு நான் உண்னைக் கொன் ருலுஞ் சரி! ஆன நீ என்னைத் தொட்டியோ, "தமிழன் சிங்க ள வ ஃன அடித்தா னென்று நாளைக்கு கொழும்பே கலங்கும். கவனம்!" என்னைப் பார்த்துக் குழறிஞன்.
நாணயக் கார வாயிலிருந்த சிகரட்டை எறிந்த அடுத்த கணம் சிறிலின் சட்டை அவன் கையிலிருந்தது! "சி" யைத் "த" அடித்தால்தானே, பிழை? டேய் கா வாலி! "சி" யை "சி" யே அடிக்கிறேன் - நானும் "சி" நீயும் ‘சி’! இனி எப்படி இனக்கலவ ரம் வரும்? எளிய ராஸ்கள் . உன்ர அக்கிரமத்துக்கு அவன் துணை வரேல்லையெண்டு இந்த வேலையா செய்யிருய்?" நாணு
வின் வாய்ப்பேச்சு இவ்வளவு
தான்.
அம்மூவரும் 'நிறைவெறி' யில் நின்றதால் என் நண்பனின் வேலை இலகுவாயிற்று. திகைப் பில் கரைந்த நிமிடங்கள். "இனி, இந்த வேலையை நினை யாதே!' - விழுந்தவனுக்கு நாளு வின் குரல் அபயமளித்தது,
ராஜநாயகம் "டாக்ஸி" க்கு
கைதட்டினன்.
17

Page 11
அமரர் 9H . Jb. கந்தசாமி
1946-ம் ஆண் டெ ன் று நினைக்கிறேன். அப்பொழுது நான் இடதுசாரி அரசியல் கட் சியின் தீவிர தொண்டர்களில் ஒருவனுயிருந்த காரணத்தால் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தோரில் தானும் ஒருவன். யாழ்ப்பாணம் பெரிய கடையில் இருக்கும் பாரதி பாடசாலேயில் கடைச் சிப்பந்தி களின் கூட்டமொன்று நடை பெற்றது. அக்கூட்டத்தில் நான் சார்ந்திருந்த கட்சிப் பிரமுகர் கள் பலர் பேச்சாளர். அவர் களின் பேச்சுக்களை அடிக்கடி கேட்டு அலுப்பேற்பட்டிருந் தது. அக்கூட்டத்தில் புதிய ஒரு பேச்சாளர் பேசிய பேச்சு என் கட்சிக்குச் சவால் விடுவதாயும், புதிய மாதிரியாகவுேம் இருந் தது. பேச்சாளனும் மிக மெலிந் தவராயிருந்தாலும் தன் பேச் சாலும் வசீகரத்தாலும் மற்றை யோர் வாய்திறக்கத் துணிவற்ற நிக்லயை அவ்விடம் உருவாக்கி யிருந்தார்.
எனது கட்சியில் அப்படி யான ஒரு பேச்சாளனில்லையே என்று கருதினலும் அவரின் பேச்சின் வலிமையில் நானும் கட்டுண்டேன். எல்லோர்க்கும்
இலக்கிய நினைவு
த. இராஜகோபாலன்
R
யார் அந் த ப் பேச்சாளன் என்று ஆவல் தலைதூக்கியிருந் தது. அவர்தான் " கவிந்திரன்' என்ற புனைபெயரில் கவிதைக ளையும் சிறுகதைகளையும் எழுதிக் குவித்துச் சிறந்த நாடகாசிரி யன் என்று இறுதிக் காலத்தில் போற்றப்பட்ட அமரர் அ. ந. கந்தசாமி.
திரு. அ. ந. க. வின் அந்த நாள் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளை வீரகேசரியின் மூலம் சுவைத்தமையால் அவ ரைக் கண்ட பின் அவரிடம் நட்புக் கொள்ளவே விரும்பி னேன். அப்பொழுது பூபால சிங்கம் புத்தகக் கடையில் சந் திப்பு ஏற்பட, அன்பர் பூபால சிங்கத்தின் தொடர்பால் நட் புறவு ஏற்பட்டது.
இலக்கியம் இருவரையும் இணை த் த து. அக்காலத்தில் அவர் வீரகேசரிப் பத்திரிகை
யில் உதவி ஆசிரியணுயிருந்தார். லிவு நாட்களில் யாழ்ப்பாணம் வரும்போது இலக்கிய, அரசி யல் உரையாடலுடன் நகரத் தி ன் தென்கரை யோரமாய் அமைதி கொண்டிருக்கும் கட லேரிக் கரையில் பல கல் தொலை

வரை இருவரும் செல்வதுண்டு. மாலைப் பொழுதின் செவ்வனப் பையும் அக்கரையில் மோன நிலையில் ஆழ்ந்திருக்கும் தீவுக் கூட்டங்களின் இயற்கையெழி லையும் அவர் தனக்குரிய கவிதா வார்த்தைகளில் வர்ணித்துக் Gasnter G - Gurranti.
ஒருதடவை "தேசாபிமானி யில் வேலை செய்துகொண்டிருக் கும்போது சிரங்கிஞல் பீடிக்கப் பட்டு ஊருக்கு வந்திருந்தார். அவர் அப்பொழுது கே. கே. எஸ். வீ தி யில் மெத் தை வீடொன்றின்பக்கலில் அமைந்த சிறிய வீடொன்றில் தங்கியிருந் தார். அவரின் வேண்டுதலின் பேரில் நான் அங்கு அடிக்கடி சென்று பத்திரிகைகள், சிறு கதைகள், ஒவியம் சம்பந்தமான உரையாடலில் பொழுது போக் குவதுண்டு. அவ்வீட்டில் அவரு பாட்டியொருவரும், சகோதரியொருவரும் தமைய ளும் குடியிருந்தார்கள். அவரின் தமையனுர் ஏதோ உத்தியோ கத்திலிருந்தார்.
"சுதந்திரன்" பத்திரிகையில் அவர் ஆசிரியர் குழுவில் இருந் தகாலத்தில் ஆசிரியர் தலையங் கத்தில் இழுபறி ஏற்படுவதுண்டு
அப்போது சுதந்திரன் தினசரிப் பத்திரிகையாய் வெளிவந்த காலம். இன்று இனப்பற்றை
வளர்க்கும் தலையங்கமென்றை ஒர் ஆசிரியர் எழுதியிருந்தால் நாளை பொது வுட மை யை வாழ்த்தும் தலையங்கமொன்று வரும். இந் த த் தலையங்கம் திரு. அ ந. கவினுடையதாக வேயிருக்கும். அப்பொழுது திரு செ.இராசதுரையும் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்தார்.
1950-ம் ஆண்டு நான் நல் லூர் ஆசிரிய பயிற்சிக் கல்லூ
ரியில் மாணவனுயிருந்தபோது ஒரு சிறு க  ைத ‘சுதந்திரன்' வாரப் பதிப்பில் எழுதியிருந்
தேன். அக்கதை கல்லூரி வட் டாரத்திலும் வெளி யிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
என்னிடம் ஐயாயிரமும் பிரசுரிப்பாளரிடம் பத்தாயிர மும் நட்ட ஈடுகோரி எனது கதையில் (கற்பனைக்) கதாநா யகன் பிறக்ரர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். கதையில் வரும் கதாநாயகளின் குன விஷேடங்கள் நிரம்பிய ஒருவர் பனைம் சம்பாதிக்கலாமென்று எண்ணியோ என்னவோ இந்த வழியைக் கையாண்டார்போ ஆலும்,
இச்சம்பவத்தை நான் அன் பர் அ. ந. க. வுக்குக் கடித மூலம் விளக்கினேன். அவர் எனக்கு, இது பெரிய பிரச்சனை யல்ல என்றும் எதற்கும் முன் னேற்பாடாக கையெழுத்து மூலப்பிரதியைச் சரிபார்த்து எதுவும் வாரதிருக்கச் சில வழி களையும் எழுதிஞர். அதன் பிற் பாடு அக் கதாநாயகனும், அவ ரின் பிறக்ரரும் எந்தவித வம் புக்கும் வராமல் தம்மிலேயே அடங்கிவிட்டனர். இதன்பின் எனக்கு எழுத்தைப்பற்றிய ஆர் வம் குன்றிவரவும் குடும்பப் பிரச்சனைகள் அதிகரிக்கவும் எழுத்துலகிலிருந்து மெ ல் ல மெல்ல விலகிவிட்ட நிலையில் ஒதுங்கினேன். அன்பர் அ. ந. க. அந்தநேரத்தில் தந்த நம் பிக்கையான பதில்தான் இன்று அவரை நான் புதிய கோணத் தில் ஆராயும் ஆர் வத் தை
26 -- III •
நான் 1952-ம் ஆண்டிலி ருந்து கொழும்பில் கடமையாற்
ᏗᏪ

Page 12
றிய காலத்தில் நானும் அவரும் சில நூறுயார் தூர வீடுகளில் வசித்தோம். எப்பொழுதும் அவர் இருக்கும் வீட்டைக் கடந் துதான் என் வீட்டிற்குச் செல் லவேண்டும். அடிக்கடி அவர் அறையிலிருந்து உ  ைர யா டு வோம். நான் இருந்த வீட்டுக் காரருக்கும் அ. ந. க. வுக்கும் ரதோ ஒரு வழியில் ஒத்துப் போகும். அது எனக்கு முதலில் என்னவென்று தெரியாமலிருந்
ای
நான் இருந்த வீட்டுக்காரர் ஒருவகையில் கலியாணத் தரக ராயிருந்தார். இன்னெருவர் காலில் செருப்புத்தேய பிரமச் சாரிகளாயிருக்கும் வாலிபர்க
ளைத் தேடி அலைவதையே தொ
ழிலாகக் கொண்டவர். அவ ரைப்பார்த்து அ. ந. க. 'கலி யாண முருகர்’ என்று கேலி
செய்து கொண்டிருந்தார். சில பொழுதுகளில் கலியாணத் தர கர்களின் குண விஷேடங்களைத் தனக்கென வழிவந்த சிறப்பான வார்த்தைகளால் வர்ணிப்பார். அப்படி அவர்களில் வெறுப்புற் நிருந்தவர் திரும்ப அவர்களின் பிடியில் எப்படி அகப்பட்டா ரென்றே தெரியவில்லை. இரண்டு தரகர்களும் சேர்ந்து அவரை தம்பக்கமிழுத்தார்கள்.
ஒருநாள் திடீரென தனக் குக் கலியாணம் நடக்கப்போவ தாகக்கூறினர். பெண் கொழும் புப் பக்கத்தைச் சேர்ந்தவர். சொந்தக்காரர் யாருக்கும் தெரி யாமல் திருமணம் நடக்கவிருப் பதையும் ஒருவாறு அவர் கூறி யதிலிருந்து ஊ கித் தே ன். உடனே நான் "உங்கள் சகோ தரியிருக்கிருர். வயது மேலோங் கியிருந்த அண்ணரும் காத்துக் கொண்டிருக்க இப்படியேன்
இருந்த
போய்க் கொண்டிருக்கிறீர்கள்?? எனக் கேட்டேன். சகோதரிக் குரிய ஏற்பாடெல்லாம் முடிந்து விட்டதாயும் ஆகவே தனக்கு ஒரு நல்ல இடம் கிடைத்திருப் பதாகவும் ஏ தே தோ கூறி
மழுப்பினுர், அக்காலத்தில் அவர் சுதந்திரன் பத்திரிகை யில் பிரபல எழுத்தாளரான
எமிலி ஜோலார்வின் ogrt (GD)” என்ற பா லு ண ர் ச் சி மிக்க ந n வலை மொழிபெயர்த்துக்
கொண்டிருந்தார். 6CD5Gaiahrt அதன் தாக்கந்தானுே அவரை இப்படியெல்லாம் வழிநடத்து
கிறதென்று எண்ணினேன். அவ ரின் முடிவு எனக்கு மஐக் குழப் பத்தையும் சஞ்சலத்தையும் உண்டாக்கியது. அந்நாட்களில் விடுமுறை ஏற்பட்டதால் நான் யாழ்ப்பாணம் வந்தேன். வந்த தும் அ. ந. க. முடிவை அவரு டைய சகோதரருக்குக் கூறி வைக்கவேண்டுமென்ற ஆவலில் அவர் வீட்டுக்குச் சென்றேன். அங்கு எவரையும் சந்திக்க முடி யவில்லை. அதனுல் என் முயற் சியைக் கைவிட்டேன்,
திரும்ப அ. ந. க. வை நெடுநாட்களாகக் காணவில்லை.
அவருடன் நீண்ட நாள் நண்பர் சில்லையூர்ச் செல்வராசாவிடம் ஒருமுறை விசாரித்தபோது அ. ந. க. மிகச் செளகரியமான இடத்தில் வச தியாய் வாழ்கிருர் என்று கூறி ஞர்.
பின்பு நோயால் பாதிக்கப் பட்டு இந்தியாவிலிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அப்போது * தமிழ் நாடு” பத்திரிகையில் கம்பனைப்பற்றி ஓர் கட்டுரை எழுதியிருந்ததைக் கண்ணுற் றேன். அதற்கும் பல வருடங் களின் பின் கொட்டாஞ்சேனை

கஸ்பொத்தை வீதியில் உணவு விடுதியொன்றில் தனிமையாக வாழ்வதைக் கண்டேன். அவ ரின் நடத்தையிலும் போக்கி லும் மாறுதல்கள் ; பேச்சில் மழுப்பல், தடுமாற்றங்கள். நான் ஏதாவது கேட்டால் அவர் வேறு ஏதாவது பேசிப் பிடி கொடாமல் நழுவு கல் ஆகிய வற்றையே அவத கணித்தேன். கடைசியாக அவரைச் சந்தித் தது " கமலா மோடி" மண்ட பத்தில். அங்கு சுயமரியாதைக் கழகத்தை ஆரம்பித்துத் தலை மைதாங்கிஞர். ல, கே !! ர் அண்ணுத்துரையை த பேசியபோது கலகம் ஏற்பட்டுக்
கூட்டம் அல்லோல கல்லோலப் பட்டது. எங்கும் கண் டி களும்
ನ್ಹಿಲ್ಡ சிதறியதுபோல மக்களும் சிதறியோடினர். மீண் டும் தனது உணர்ச்சி மிக்கப் பேச்சினல் கூட்டத்தை மிகச் சிறப்பாக நடாத்திப் பெரிய சாதனையை நிலைநாட்டினர்.
தமிழ் நாட்டின் மணிக் கொடிகால எழுத்தாளர் புதிய
O 9- 384-08-3888-8&oeX 3888-888-8-8-8-8-4.80
யுகத்தை உருவாக்கியதுபோல ஈழத்தின் 'மறுமலர்ச்சி கால எழுத்தாளர் ஒரு புதிய தலைமு றையை உருவாக்கினர். அந்தத் தலைமுறையில் அ. ந. க. முற் போக்கான துடிப்புள்ள சிந்தனை யாளர். இலங்கையர்கோன், தாளையடி, அ. செ.மு, சம்மந் தன், இராஜ அரியரெத்தினம் போன்ருேர் பின்னல் ஓர் தலை முறையைச் சமைத்தவர்கள். அவர்களுடன் அ. ந. க. அத் தலைமுறையை நீடு வள ர ச் செய்தவர்.
அவர்தன் இறுதிக் காலத் தில் பிடிவாதமும் குழப்பமான மன நிலையும் உடையவராய் யாபேர்க்கும் புரியாத புதிராய் வாழ்ந்தார். அவரின் இறுதி நாட்களைப் பத்திரிகைகள் வாயி லாக அறிந்தேன். அவர் எல் லாவற்றிலும் தனித்தன்மையு டன் மிளிர்ந்ததுபோல் மரண த் திலும் தனித்தன்மையையே கொண்டிருந்ததும் வியப்பல்ல.
★
々やる**や●●●るる・る・2・ふふふふふふふ○○
உண்மை இலக்கிய ரசி
60கல்தூரிபார்வீர் ffസ്ത്രീ
٫ هم-سسسسه ، ، «»« سهیم
கர் க ரூ க்கு சில பொறுப்பான கடமை கள் உண்டு. ஈழத்து தேசிய இலக்கியம் தனக் குகந்த தகுந்த கெளர வத்தைப் பெற வேண் டும். இதைச் சாதனை யாக்க முனைந்து செய லாற்றி வெற்றி பெறும் நோக்கத்துடனேயே மல்லிகை ஆரம்பிக்கப் பட்டது. இதைச் சாதிக்க விருப்பமுள்ளவர்கள் தொடர்ந்து மல்லிகை
யைப் படிக்கவும்.
ஆண்டுச்சந்தா 7-25 தனிப்பிரதி 50 ச.
whewa

Page 13
சிங்கள நாடகங்கள் தொடர்பாகத்
;
நா. சுந்தரலிங்கம்
இலங்கையில் கலை, இலக் கிய மறுமலர்ச்சி 1950-ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்ததாக வரலாற்ருசிரியர் கூறுவர். இதற் குப் பல வருடங்களுக்கு முன் னரே எமது நாட்டிற்கு அரசியற் சுதந்திரம் கிடைத்தபோதும் அதுவரை காலமும் அன்னியர் ஆட்சியில் நடைபெற்றது போ லவே சுதேசியக் கலைகளும் இலக் கியங்களும் புறக்கணிக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டுமே வந்தன. எனி னும் இத்தகைய ஒரு போக்கு நெடுங்காலம் நீடிக்கவில்லை. காலஞ்சென்ற எமது பிரதமர் திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இப்போக் கிற்கு எதிராகத் தீவிரமான எதிர்ப்பையும் பிரசாரத்தையும் அரசியல் ரீதியாகச் செய்து ஒரு தேசிய விழிப்புணர்வை நாடெங் கிலும் ஏற்படுத்தினர். இவ் விழிப்புணர்வுக்குச் சிகரம் வைத் தாற்போல 1956-இல் நடை பெற்ற பொது த் தேர்தலில் அவர் தலைமை தாங்கிய கட் சியே பெரும் வெற்றியையும் ஈட்டியது. அதோடு நாடெங்கி லும் உருவான இவ் விழிப்பு ணர்வை ஆற்றுப்படுத்த வேண் டிய பொறுப்பும் அவரிடமே விடப்பட்டது. தேசிய்க் (சிங்கள தமிழ்க்) கலை இலக்கியங்கள் அரசாங்க மட்டத்தில் அங்கீக ரிக்கப்பட்ட நிலே இக் காலகட்
தமிழ் நாடகங்கள்
டத்தோடேயே ஆரம்பிக்கிறது. அன்று தொடங்கி இன்றுவரை இவ் விழிப்புணர்வின் வெளிக் காட்டலுக்கு ஒரு ஊடகமாக விளங்குகின்ற சிங்கள தமிழ் நாடகத்துறைகளை எடுத்து, சிங் கள நாடகங்கள் தொடர்பாக தமிழ் நாடகங்களிள் வளர்ச்சி நிலைபற்றிப் பொதுவாகச் சுட் டிக் காட்டுவதே இக் கட்டுரை யின் நோக்கமாகும்.
மே லே குறிப்பிடப்பட்ட காலகட்டம் சிங்கள மக்களி டையே மொழி உணர்வும் இன உணர்வும் பெருவாரியாக பொங் கிப் பிரவகித்திருந்த ஒரு கால மாகும். தன் காரணமாக கலை இலக்கியங்களிலே புதுமை களைச் செய்ய வேண்டும் என்ற அவாவும் முயற்சியும் சிங்கள கலை இலக்கிய கர்த்தாக்களி , டையே மிகுந்திருந்தது. அது மாத்திரமன்றி இந் த க் கலை இலக்கிய வெளிக்காட்டல் பற் றிப் படர்வதற்கு ஒரு கொழு கொம்பே அன்றைய ஒரு உட னடித்தேவையிாகவும் இருந்தது. மேலும் இவ் ழிப்புணர்வு மொ ழி இன அடிப்படையில் அமைந்திருந்ததால் அதுவரை காலமும் புறக்கணிக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் வந்த பண்டைய கலை கலாசாரங்கள் புத்துயிர் பெறுவதும், அவையே இப் புதிய உணர்வின் சின்னங்களா

கவும் கொழுகொம்புகளாகவும் அமைந்து விடுவதும் இயற் கையே. எனவே சிங்கள நாட கத்துறையின் வளர்ச்சிக்கான ஆரம்பம் கலாநிதி சரத்சந்திரா வின், சிங்கள பாரம்பரிய நாட் டு க் கூத்து மோடியிலமைக் ரு "மனமே" என்ற நாடகத்தி, பன மூலம் வித்திடப்பட்டதில் எது வித வியப்புமில்லை.
"மனமே" என்ற இந்த நாட் டுக் கூத்து முழுக்க முழுக்கப் பழைய பாணியிலே ஆடப்பட்ட தொன்றல்ல. இது கதை, ஆட் டம், இசை, வாத்தியக் கருவி கள், உடை அலங்காரம் ஆகிய வற்றிலேயே கூடிய மெருகும், புதிய சேர்க்கைகளும், சிக்கன மும் புகுத்தப்பட்டு நவீனப்படுத் தப்பட்ட ஒரு கூத்தாகும். ஆட்ட முறைகளிலும் நாடக அமைப் பிலும் பல பரிசோதனைகளை கலா நிதி சரத் சந்திரா மேற்கொண் டார். இந்த முயற்சி மிக முக் கியமான ஒரு அம்சத்துக்கு எம்மை இட்டுச் செல்கிறது. அதாவது, இங்கே, பழைய கலை
வடிவங்கள் பேணப்படுகின்ற அதே வேளையில் புதிய பரிசோ தனைகளும் செய்து பார்க்கப்
படுகின்ற ஒரு நிலையையும் நாம் காண்கிருேம். இது கலைகளின் வளர்ச்சிக்கு மிக அவசியமான தொன்று. எனவேதான் எல்லா வழிகளிலும் மிக உன்னதமான வளர்ச்சியை நோக்கி சிங்கள நாடகத்துறை வீறு நடைபோட அற்புதமான ஒரு ஆரம்பமாக "மனமே" அமைந்திருந்தது.
இந்தக் காலகட்டத்திலே இத்தகையதொரு ஆரம்ப கட் டம் தமிழ் நாடகத்துறைக்கு ஏற்பட்டதா? இல்லை என்றே கூறவேண்டும் சிங்கள மக்களி
மாறின.
டையே ஏ ற் பட்ட அரசியல் விழிப்புணர்வும் அதைத் தொ டர்ந்து ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் தமிழ் மக்களிடையே பீதியையும் நம் பி க் கை யி ன் மையையுமே வளர்த்தன, இதன் காரணமாக கலைகளும் கலாசாரமும் பேணி வளர்க்கப்படவேண்டிய பொருட் களாகவன்றி பாதுகாக்கப்பட வேண்டிய பொருட்களாகவே அதோடு கனதியான பழைய பாரம்பரியமும் மிகை யான பழமை போற்றும் பண் பும் எம்மவரிடையே இருந்ததால் இத்தகையதொரு வளர்ச்சிக் கட்டம் ஏற்படுவதற்கான சூழ் நிலை உருவாகவேயில்லை.
இந்தச் சந்தர்ப்பத்திலே இன்னுமொரு முக்கியமான அம் சத்தையும் நாம் ம ன தி ற்
கொள்ள வேண்டும். தமிழருக் கென ஒரு தனித்துவமான வர லாறும் பாரம்பரியமும் இருக்கி றது என நாம் எவ்வளவுதான் வாதித்தாலும், இரண்டு இனத் தவரும் இந்த நாட்டிலே இது வரை சீவித்தும் தொடர்ந்து சீவியஞ் செய்ய வேண்டியவர்க ளாகவும் இருப்பதால், இங்கே ஏற்படுகின்ற அரசியல், பொரு ளாதார, சமூக மாற்றங்கள் இரண்டு இனத்தவருக்கும் பொ துவானவையாக அமைவதோடு ஒரு இனத்தில் ஏற்படும் மாற் றம் மற்ற இனத்தை ஏதாவது
ஒரு வழியில் பாதிப்பதையும் நாம் தவிர்க்க முடியாது. அர சியல் பொருளாதார Fp
மாற்றங்களைக் கலைகளும் பிரதி பலிப்பதால் சிங்கள நாடகத் துறையில் ஏற்பட்ட மறுமலர்ச்சி தமிழ் நாடகத்துயையிலும் ஒரு புத்துணர்வை ஆங்காங்கே பிறப் பிப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு உதாரண மாக, சிங்கள நாட்டுக்கூத்தில்
2@

Page 14
ஏறபட்ட மறுமலர்ச்சி தமிழ் நாட்டுக் கூத்திலும் ம்றுமலர்ச் சியை ஏற்படுத்தியதைக் காட் டலாம். ஆயினும் சிங்கள நாட கத்துறையில் நடந்ததுபோல் இந்த மறுமலர்ச்சி தமிழ் நாட கத் துறையின் வளர்ச்சிக்கான மிதிகல்லாக அமையவில்லை.
கலாநிதி சரத் சந்திரா வால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சிங் கள நாடக மறுமலர்ச்சி இது வரை எவ்வாறு முன்னேறியுள் ளது என்பதை இனிப் பார்ப் போம். சிங்கள நாட்டுக்கூத் தைப் பொறுத்தவரை சரத் சந்திராவால் ஆரம்பிக்கப்பட்ட மறுமலர்ச்சி அவரோடேயே நின்றுவிட்டது எ ன் றே கூற வேண்டும். இதற்கு, சரத் சந்தி ராபோல் பண்டைய கலை வடி வங்களில் ஆழ்ந்த புலமையும் அவற்றைத் தற்காலத் தேவைக் கேற்றவாறு நவீனப்படுத்தும் ஆற்றலும் அறிவும் கொண்ட வேருெரு கலைஞன் சிங்கள நாட கக் கலைஞர்களிடையே தோன் ருததுதான் முக்கிய காரணமா கும். ஆயினும் இதனுல் சிங்கள நாடகத்துறை ஸ்தம்பித்கு நிற் கவில்லை. மாருகத் தொடர்ந்து முன்னேறியது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்களைக் கூறலாம் ஒன்று, சிங்கள மக்களிடையே ஏற்பட்டிருந்த மொழி இன சம் மந்தமான விழிப் புணர் வு படைப்பாற்றலைத் தொடர்ந்து தூண்டிக் கொண்டிருந்தமை; இரண்டாவது, சிங்களத் திரைப் படத் துறை ஆரம்ப நிலையில் இருந்தமையும் பெரும்பான்மை யான சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்தியத் திரைப்படங்க ளைப் பி ர தி செய்பவையாக இருந்தமையுமாகும். இத்தகைய ஒரு சூழல் சிங்கள நாடகங்க ளின் இயக்கத்திற்குச் சாதகமா கவே அமைந்தன.
24
இவ்வாறு இயக்கம் பெற்ற சிங்கள நாடகத்துறை தொ டர்ந்தும் இயங்க வேண்டுமாயின் இவ்விழிப்புணர்வை மேலும் வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நாடகக் கலைஞர்களைச் சார்ந்த தாக இருந்தது. இதைச் செய் வதற்குத் தரமான புதுப் புது நகரடகங்களை உடனடியாக எழு த க் கூ டி ய நாடகாசிரியர்கள் அவர்கள் மத்தியிலே அப்போது இருக்கவில்லை. ஆகவே இதற்கு மாற்று வழியாக உலகப் பிரசித் திபெற்ற நாடகாசிரியர்களின் நாடகங்கள் மொழிபெயர்க்கப் பட்டு மேடையேற்றப் பட்டன. இந்த நாடகங்களின் வடிவச் சிறப்புகளும், உத்திச் சிறப்புக ளும் - சில சமயங்களில் உள்ள டக்கச் சிறப்பும் - சிங்கள நாட கத் தயாரிப்பாளர் சிலர் மேனு டுகளில் பெற்று வந்த பயிற்சி யும் அனுபவமும் சேர்ந்து சிங் கள நாடகத்துறையை மேலும் வலுவடையச் செய்தன எனி னும் ஆரம்ப காலத்தில் இப் போக்கு அவசியமாயும் அனும திக்கத் தக்கதாயும் இருந்தது. ஆனல் காலப்போக்கிலே இதுவே சிங்கள நாடகத்துறையின் முக் கிய போக்காக மாறிவிட்டது. இந்தப் போக்கிலிருந்து சிங்கள நாடகத்துறையை மீட்பதே இப்போதைய பெரும் பிரச்சனை யாக உள்ளது.
வாழும் எந்தக் கலையும் அக்கலை தோன் ) ! தற்கு அடித் தளமாய் விள1, 10 மக்களை யும் அவர்கள் சீ கின்ற சூழ லின் பகைப்புலதிலே அவர் களுடைய வாழ்க்கை முறைகள்
சமூகப் பிரச்சனைகள் ஆகிய வற்றை நேர்மையாகப் பிரதி பலிக்க வேண்டும். எவ்வளவு
த பிறமொழி நாடகங்கள் 8) பானவையாக இருந்தா லும் அவையெல்லாம் அத்தந்த

டைக் கருத்துக்கள்,
நாட்டிலே ஒரு குறிப்பிட்ட சமூ கச் சூழலில் உருவானவை. அவற்றை நாம் மொழிபெயர்க் கும்போது அல்லது எமது சூழ லுக்கு ஏற்றவாறு தழுவலாக்கம் செய்யும்டோது அங்கு, அடிப்ப எண்ணம், பாத்திரங்கள், உணர்வு ஆகிய எல்லாமே இரவல் வாங்கப்படு கின்றன. அவற்றிலே எமது ழலுக்குப் பொருந்துகின்ற ஒரு ல பொதுத் தன்மைகளையும் பிரச்சனைகளையும் நாம் இனங் காணலாமே தவிர அவையே எமது சமூகச் சூழலில் எமது பிரச்சனைகளையும் உண்மையான வாழ்க்கைமுறைகளையும் எதார்த் தமாக வெளிக்காட்டும் ஊடகங்
'களாக அமையமாட்டா. இந்த
நிலை தோன்றும்போது நாடகத்
துறை - ஏன் கலைகள் எல்லாமே
தமது சமூகப் பணியை இழந்து விடுகின்றன. இப்போக்கு நாள
டைவில் ஒரு போலி ரசனையை
உருவாக்குவதோடு ஒரு குறிப் பிட்ட வரம்பை மீறும்போது ஒரு இனத்தின் சுய ஆக்க திறனை மட்டுப்படுத்தி மழுங்கச் செய்து விடுகிறது. இந்த உண்மை சிங் கள நாடகத் துறையில் இப் போது மிக வெளிப்படையாகத் தெரிகிறது.
உண்மையில் இன்றைய சிங் கள நாடகத்துறை ஒரு ஸ்தம் பிதநிலைக்கு வந்துவிட்டதென்றே கூறவேண்டும். இந் நிலையில் இருந்து விடுபட்டுச் செல்ல பல் வேறு வழிகளையும் தயாரிப்பா ளர்கள் கையாளுகிருர்கள். நிர் வாணக் காட்சிகள் நாடகங்க ளில் இடம்பெறலாம் எ ன வாதிப்போரும், "அறிவுமுதிர்ந்த பார்வையாளருக்காக" நாடகங் கள் தயாரிப்போரும் சிங்களக் கலைஞர்கள்மத்தியிலே இப்போது தோன்றியிருக்கிரு?ர்கள். எமது சூழலையும், தன்மைகளையும்,
நாடகங்களின் நிலை
மறந்து, மேல்நாடுகளில் கலைப் பிரதிபலிப்புக்களைச் சுடச் சுட"
இங்கே புகுத்திவிடுவதால் எமது
கலைகளையும் மக்களையும் உலக மட்டத்திற்கு உயர்த்திவிடலாம் என்ற போலி நம்பிக்கையின் விளைவே இது. சுருங்கக் கூறுவ தாயின் சிங்கள நாடகத்துறை
இப்போது ஒரு சிறுபான்மைக் கலாசாரமாகவே மாறி வருகி றது. கலைகள் யாருக்காகப்
படைக்கப்பட வேண்டும் என்ற தெளிவும், அவற்றிற்கு ஒரு சமூகப் பணி இருக்கிறது என்ற
உணர்வும் சிங்கள நாடகாசிரி
ய ர் க ள், தயாரிப்பாளர்களி டையே மிகக் குறைவாகவே இருக்கிறது.
சிங்கள நாடகங்களின் இன் றைய நிலை இதுவாயின் தமிழ் எ ன் ன? எமக்கு ஆரம்பமும் கிடையாது தொடர்ச்சியான வளர்ச்சியும் கிடையாது. எரி நட்சத்திரங் கள்போல ஆங்காங்கே ஒரு சில நல்ல நாடகங்கள் தோன்றி ஒளிவிட்டு மறைகின்றன. அவ் வளவுதான். என்ருலும் நாடக மேடையேற்றங்களுக்குக் குறை வேயில்லை. புதுப் புது நாடகங் கள் அடிக்கடி மேடையேறிக் கொண்டே இருக்கின்றன.ஆனல் வளர்ச்சி ஒன்றுதான் குறை வாக உள்ளது. சிங்கள நாட கத் துறையில் நடந்ததுபோலவே தமிழ் நாடகத்துறையிலும் நாட் டுக் கூத்து மறுமலர்ச்சியும் சில மொழிபெயர்ப்பு தழுவலாக்க நாடகங்களின் மேடையேற்ற மும் நடைபெற்றன. ஆ ஞ ல் இவை அத்துறையில் கனதியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டன.
தமிழ் நாடகங்களிலே மொ
ழிபெயர்ப்பு, தழுவலாக்க நாட கங்கள் மிக க் குறைவாகவே

Page 15
ஏகாந்தம்
எங்கே திரும்பிடிலும் மனிதப் பெருவெள்ளம் 6ான்றலும் நான் எந்தன் ஏகாந்தப் பெருவெளியில் நிற்கின்றேன்.
இயந்திரங்கள் இயங்குவதும் இதயங்கள் துடிப்பதுவும் என்னருகே மிக அருகே எனக்குத் தெரிகிறது. என்றலும் நான் எந்தன் எகாந்தப் பெருவெளியில் நிற்கின்றேன்.
எந்தன் உளம்படைக்கும் இன் கவிதைப் பண்ணதனை நானோ முணுமுணுத்தல் நன்றக நான் உணர்வேன். என்றலும் நான் எந்தன் ஏகாந்தப் பெருவெளியில் நிற்கின்றேன்.
என்முன்னே தோன்றுகிற எல்லா உருவனத்தும் நன்றகத் தெரிகிறது நான் அவற்றைப் பார்க்கின்றேன் என்றலும் நான் எந்தன் ஏகாந்தப் பெருவெளியில் நிற்கின்றேன்.
சிவம் - கோப்பாய்
26
உள்ளன. சுய ஆக்கமே தமிழ் நாடகத்துறையின் முக் கி ய போக்காக இருக்கிறது. பெரும் பாலான சுய ஆக்கங்கள் சமூ கப் பிரச்சனைகளையே மையமா கக் கொண்டுள்ளன. சமூக உயர்வு தாழ்வுகளும் வர்க்க பேதங்களும் மேடையிலே சித்த ரிக்கப் படுகின்றன. உண்மையில் தமிழ் நாடக எழுத்தாளர்களி டையேயும் தயாரிப்பாளர்களி டையேயும் சமூக உணர்வு கூடு தலாகவே இருக்கிறது. ஆனல் நாடக வடிவம், உத்தி முறை கள், இதர நாடக சாதனங்க ளைப் பயன்படுத்தும் முறை ஆகி யன பற்றிய அறிவும் தெளிவும் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதனுல் நாடகங்கள் பெரும் பாலும் தமது கலைத் தன்மையை இழந்து விடுகின்றன. இது தமிழ் நாடகத்துறையின் வளர்ச் சிக்குப் பெரும் இடராகவே உள்ளது. எனினும் உ ரு வம் உத்திமுறைகள் பற்றிய உணர்வு தமிழ் நாடகத் தயாரிப்பாளரி டையே பெருகி வருவதையே அண்மையில் மேடையேறிய சில நாடகங்கள் உணர்த்துகின்றன. இன்றைய தமிழ் நாடகத்துறை யின் பொதுவான நிலை இது வாக இருந்தபோதும், அது மலர்ந்து விரிவதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை என்றே கூறத் தோன்றுகிறது. அதோடு தென்னிந்தியத் தமிழ்ப் படங்க ளின் தாக்கமும் கூடுதலாகவே இருக்கிறது. இந்நிலையில் பார் வையாளர்களை நம்பிப் பணத் தைச் செலவு செய்து தரமான படைப்புக்களை மேடையேற்றத் பின்வாங்குகிருர்கள். இந் த நிலைமை மாறினல் நிச்சயமாகத் தமிழ் நாடகங்களுக்கு நல்ல எதிர்காலம் உண் டு எ ன த் தயங்காமற் கூறலாம். YA

கலகம்
சிறுகதை
சிங்கள மூலம்:
ஜி. பீ. சேஞநாயக்கா
தமிழாக்கம்:
தம்பிஐயா தேவதாஸ்
trirth வண்டி நிற்பாட் டப்பட்டது. * கைமன் கேற்" என்ற இடத்தில் என்பதை செய் தித்தாள்கள். விற்கின்ற பையன் களினதும் வாகனங்களினதும் சத்தத்தின் மூலம் உபனன்த அறிந்துகொண்டான், இரண்டு தோள்களையும் நிமிர்த்தியவாறு புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த அவன் சிறிது கோபத்துடன் டிராம்வண்டியின் வெளியே எட்டிப் பார்த்தான். வண்டி கைமன் கேற்றில் நிற் பாட்டப்பட்டது. அவன் வாசித் துக்கொண்டிருந்த புத்தகத்தில் புத்தியைக் கடுங்கோபமடையச் செய்யும் இடத்திற்கு வந்த பொழுதாகும். அந்த நேரத்தி லேயே வண்டியை விட்டு இறங் கவேண்டி வந்த்தே அவனது கோபத்திற்குக் காரணமாகும்.
அவன் தனது கோபத்தை வண்டியில் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்துவதுபோல புத்த கத்தைச் சத்தத்துடன் மூடி விட்டு இருந்த இடத்தினின்றும் எழுந்தான். புத்தகத்தைக் கக் கத்தில் வைத்துக்கொண்டு வண் டியிலிருந்து இறங்கி, கடைகள் வரிசையாக அமைந்திருக்கும் திசையை நோக்கிச் Fெ ன் முன்
கழுத்துப் பட்டியொன்றை விலக்கு வாங்குவதற்குமுன் தன் மனை விக் கு எடுக்கவேண்டிய சேலையை வாங்கிவிட வேண்டு மென்று எண்ணிஞன். கழுத் துப் பட்டியைத் தேர்ந்தெடுப் பது சேலை தேர்ந்தெடுப்பதைப் போன்ற கஷ்டமில்லை என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். அவன் வீட்டிலி ருந்து புறப்படும் பொழுது மனைவி அவனிடம் சேலைத்துண்டு ஒன்றைக் கொடுத்திருத்தாள். அவளுல் எடுக்கப்படவேண்டி யது அத்துண்டைப் போன்ற சேலையே. அவன் கடையொன் றைநோக்கிப் போய்க்கொண்டே பையினுட் கையைவிட்டு அந்தச் சேலைத்துண்டை எடுத்துப்பார்த் துவிட்டு மீண்டும் பையினுள்ளே செலுத்தினுள்
கண்களைக் கவரும் தன்மை யுள்ள சேலைகள் விரித்தவாறி ரு ப் பது கண்களினுாடாகத் தெரியும் புடைவைக் கடை யொன்றினுள் அவன் சென் முன். அவன் தன் பையினுள் வைத்திருக்கும் சேலைத்துண்டை எடுத்து அங்குள்ள விற்பனையா வானிடம் காட்டிஞன். விற்பனை யாளன் சில சேலைகளை நீண்ட மேசையொன்றின் மீது விரித்
7

Page 16
தான். உபனன்த காட்டிய அந்
தச் ச்ேலைத்துணியை நன்முகப்
பரீட்சித்துப் பார்த்தபின்பே அவன் அவ்வாறு விரித்துப் போட்டான். ல் அவன்
விரித்துப் போட்ட சேலைகளில் ன்றுமே உபனன் த காட்டிய சலைத்துண்டுக்கு ஒப்பாகவிருக்க வில்லை. மேசைமீது விரிக்கப் பட்ட சில துணிகளில் உள்ள பூக்கள் அவன் கொண்டுவந்த துண்டுத் துணியில் உள்ள பூக் களப் போன்றே இருந்தன. ஆணுல் அத்துணிகளின் நிறங்கள் மட்டும் வித்தியாசமாக இருந் தன.
கழுத்துப் பட்டி தே ர் நீ தெடுப்பது சேலையைத் தேர்ந் தெடுப்பது போன்ற கஷ்டமல்ல ar 6iv gpy எண்ணிக்கொண்டே உபனன்த புடைவைக் கடையி னின்றும் வெளியே வந்தான். புடைவைக்கடைக்கு அருகில் இருப்பது புத்தகக்கடையொன் ருகும். புத்தகக் கடையில் பெரிய கண்ணுடிச் சன்னலின் பின்னே பெரிதும் சிறிதுமான பல புத்தகங்கள் நிறை த் து வைக்கப்பட்டிருந்தன.
நகை தட்டுக்களை அணிவ தைப் போலவே அடுத்தவர்கள் அணிகின்ற நகைகளின் அழ கைப் பார்ப்பதும் பெண்களுக்கு விரு ப்ப மா ன தொன்ருகும். அதைப்போலவே உபனன்த விற்கும் புத்தகங்களை வாசிப்ப தைப் போலவே புத்தகங்களின் அமைப்பைப் பார்ப்பதும் விருப் பமானதொன்ருகும். கண்ணு டிச்சன்னல்களுக்குப் பின்னுள்ள புத்தகங்களுக்கிடையில் அவன் நீண்ட நாட்களாக வாசிப்பதற் குத்தேடித்திரிந்த புத்தகமொன் றும் இருந்தது. கண்களையும் மனத்தையும் கவரும் தன்மை புள்ள விளேயாட்டுப் பொரு ளைக்கண்ட சிறுவஞெருவனின்
உள்ளத்தில் எழும் மகிழ்ச்சியைப் போல் கண்ணுடிச் சன்னலின் பின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்தப் பெரிய புத்தகத்தைக் கண்ட உபனன் தவின் உள்ளத் திலும் உவகையுண்டாகியது. புத்தகத்தைக் கையிலெடுத்துத் தாள்களைப் புரட்டிப் பார்க்க எண்ணிஞன், க  ைட யி னு ட் சென்று புத்தகத்தைப் பார்ப்ப
தற்குக் கேட்டான். அது உல கிலுள்ள விவாக முறைகளை விபரித்துரைக்கும் ஜெர்மனிய அறிஞரொருவரால் எழு த ப் பட்ட புத்தகமாகும். அவன் அதை எடுத்துத் தாள்களைப் புரட்டிப்பார்த்தான்; புத்தகத்
தில் சில பக்கங்களை வாசித்துப் பார்த்தான். புத்தகத்தை முழு மையாக வாசிக்கும் ஆ  ைச முன்பைவிட அதிகமாகியது.
அவ ன் விலையைக் கேட் டான். அதன் விலை இருபது ரூபா என்று கூறினுன் புத்தக விற்பனையாளன். அவன் புத்த கத்தை விலைகொடுத்து வாங்கி விட எண்ணிஞன். அவனிடமி ருப்பது இருபத்தைத்து ரூபா மட்டுமே.
இருபது ரூபா வில்யுள்ள சேலையொன்று வாங்கிவரும் ஒப்பந்தத்துடனேயே அவ ன் வீட்டினின்றும் புறப்பட்டான். ஆகுல் புத்தகத்தை விலைகொ டுத்து வாங்கும் ஆ  ைச யே அவனுள்ளத்தில் அதிகமாகியது,
சேலைகொண்டு போகாவிட் டால் மனைவி துக்கமடைவாள் என்பதை அவ ன் நினைத்துப் பார்த்தான். சேலேயையே வாங் கவேண்டுமென்ற தீர்மானத்து டன் புத்தகதீதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு புத்த கக்கடை யினின்றும் வெளியேறிஞன்.
அவன் சேலே, துணிகள் விற்கும் கடைகளை நோக்கிச்

சென்றன். புத்தகத்தை வாங் கும் ஆசை மீண்டும் அவனுள் ளத்தில் படிப்படியாக அதிக மாகியது. சேலை, துணிகள் விற் கின்ற கடைகள் சிலவற்றைக் கடந்து சென்ருலும் அவன் நின்ருனில்லை. புத்தகம் வாங் கும் எண்ணமும் சேலைவாங்கும் எண்ணமும் அவனுள்ளத்தில் ஒன்றுடனென்று (3 t.J пт и"- ц}. போட்டன.
மடிப்பில் மெல்லிய பின்னல் போட்ட நீல நிறச் சேலையொன்று கடையொன் றின் கண்ணுடிச் சன்னலுக்குப் பின் மேலிருந்து கீழாக தொங்க விடப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் அவன் நின்றுகொண் டான் அவன் தேடிக்கொண் டிருப்பது சன்னலுக்குப் தொங் கவிடப்பட்டிருக்கும் சேலையைப் போன்றதே என்ருலும் அவன் அதனைப் புதுமையுடன் பார்த் துக்கொண்டு நின்ருன் சேலை யைவாங்க வேண்டுமென்ற எண் னமே மீண்டும் அவனுள்ளத் திற் பலமடைந்தது. A
உபனன்த கடைக்குட் சென் முன், விற்பனையாளன் சன்ன லிற் தொங்க விடப்பட்டுள்ள பட்டுள்ளதைப் போன்ற சேலை யொன்றை மேசைமீது விரித் துக் காட்டினன். உபணன்த பையினுள் உள்ள சேலைத்துண் டைக் கையில் எடுத்து அந்தச் சேலையுடன் ஒப்பிட்டுப் பார்த் தான்.
Աւն
"இந்த ச் சேலை என்ன விலை? மேசைமீது விரித்துள்ள (3F labout of praissantry di) துப் பார்த்தவாறு உபனன்த கேட்டான்.
இருபத்தொரு ரூபா ஐம் பது சதம்" என்று கூறிய விற்
நெரித்
பனயாளன், இன்னுமொரு சேலையைக் கொண்டுவருவதற் காகக் கடையின் கடைசியில் இருக்கும் அலுமாரியை நோக் கிச் சென்ருன் வாங்க வேண் டியது சேலையா? புத்தகமா? என்ற எண்ணம் மீண்டும் அவ னுள்ளத்திலுண்டாகியது. புத்த கக் கடையில் உள்ள அந்தப் புத்தகத்தைத் தவிர அதன் பிரதிகள் வேறு இருக்கமாட் டாது என்றும் , யுத்த கால unitólo sufrió இங்கிலாந்திலி ருந்து புத்தகங்களை வருவிப்பது சுலபமான காரியம் அல்ல என் றும் அவன் எண்ணினுன், புத்த கத்தை வாங்கும் எண்ணமே சேலை வாங்கும் எண்ணத்தை விட அதிகமாகியது. அவன்
புத்தகத்தை வாங்கவே தீர் மானித்தான்.
க  ைட யி ன் பின்பக்கம்
போன விற்பனையாளன் இன்னு மொரு சோலேயைக் கொண்டு வந்து மேசையில் வி ரித் துப்
போட்டான்.
"நான் பின்பு வருகின்றேன்" என்று கூறிய உபனன் த கடை யினின்றும் வெளியே திரும்பி ஞன். கடையினுள்ளே நின்ருல் சேலையை வாங்கவேண்டி வரும் என்று எண்ணிய அவன் விரை வாக வெளியே வந்தான்.
அவன் புத்தகக் கடையை நோக்கிச் சென்று அந்தப் புத்த கத்தையே வாங்கிக் கொண் டான். சேலைக்குப் பதிலாக புத்தகம் வாங்கியது மனைவிக் குத் தெரியக் கூடாது என்று வண்டியைவிட்டு இறங்கி வீடு வருங்பொழுது உபனன்த நினைத் துக்கொண்டன். புதிய புத்தகம் என்று மனைவி அறிந்துவிடுவாளே என்பதற்காக புத்தகத்தின் மேல் அட்டையைக் கி பூழித் து வீசி dá L-stav.

Page 17
எனச்குக் சேலை எடுக்க மு டி யா ம ல் போய்விட்டது" வீட் டி னு ஸ் நுழைந்தவாறே மனைவியை நோக்கிக் கூறினன் உபனன்த
"கடைக்குப் பக்க த் தி ல் பழைய கடன்காரன் ஒருவன் என்னைக் கண்டுவிட்டான். கட ரெக் கொடுக்காமல் அவனிட மிருந்து தப்பவே முடியவில்லை"
அவனுக்கு அந்த நேரத்தில் பயணமொன்றிற்காக வெளியே போகவேண்டியிருந்தது. ஆகை யால் புத்தகத்தை அலுமாரி யில் வைத்துவிட்டு வீட்டினின் றும் வெளியேறிஞன்.
இரவு ஏழு மணியளவிலேயே அவன் மீண்டும் வீட்டிற்கு வந் தான். தனது அறைக்குட் சென்ற அவள் மே  ைச மீது தொப்பியை வைத்துவிட்டு மின் விளக்கை ஒளிரச் செய்தான். கோட்டைக் கழற்றி கதிரை யொன்றின்மீது தொங்கவைத்து ofՈւՀ09 கழுத்துப் பட்டியைக் கழற்றி மேசைமீது வீசி எறிந் துவிட்டு புத்தக அலுமாரியை நோக்கித் திரும்பினுள். அவனு டைய அந்த அறையில் பெரிய புத்தக ருக்கையொன்று இருந் தது. அதற்குப் பக்கத்திலேயே
இந்தப் புத்தக அலுமாரியும் இருந்தது.
புத்தக அலு மா சி யை
நோக்கியவன் பிசாசைக் கண்ட வன்போல் அதிர்ச்சியடைந்து நின்முன்.
புத்தக அலுமாரியில் ஒரு புத்தகங்கூட இருக்கவில்லை. புத்த கருக்கையை நோக்கினன். அதிலும் ஒரு புத்தகமும் இருக் கவில்லை. அதற்குப் பக்கத்தில் நிலத்தில் பெரிய கடதாசிக் குவியல் ஒன்று கிடக்கக் கண்ட
தும் அங்கு சென்று பார்த்தான். அவன் இதுவரை அன்புடன் பேணிக்காத்து வந்த புத்தகங் கள் அத்தனையும் அந்தக் குவி யலில் கிழிக்கப்பட்டுக் கிடந் தன. நெற்றியில் மெல்லிய வியர்வைத் துளிகள் அரும்ப அந்தக் குவியலைப் புரட் டி ப் பார்க்க ஆரம்பித்தான். அவன் பகலிற் கொண்டுவந்து வைத்த புதிய புத்தகத்தின் சில துண்டு களும் அங்கு கிழிக்கப்பட்டுக் கிடந்தன. தான் பக்குவமாக வாங்கிவந்த அந்தப் புத்தகமும் வாசிக்க முன்பே கிழிக்கப்பட் டதையிட்டு அவனுக்குக் கோப மும் ஆத்திரமும் அதிகரித்தது. குணிந்தபடியே பக்கத்திலிருந்த கதிரையில் அமர்ந்து கொண் டான்.
மகனவி அறைக்கு வருகிருள்
என்பதை அவளின் செருப்புச்
சத்தத்தின் மூலம் தெரிந்து கொண்ட உபனன்த தைைய நிமிர்த்திஞன். மனைவி நின்ற வாறே தன்னை நோக்குவதை அறிந்தான். மின் விளக்கின் செந்நிறக் கதிர்களிஞலா அவ ளுடைய முகம் கொடுமையா கக் காட்சியளிக்கிறது? அவளது எந்த நேரமும் சிரிக்கின்ற கண் களிரண்டும் கோபத்தால் மின் னின.
"அந்தப் புத்தகங்களை நான்
தான் கிழித்தேன் அவள் கோபத்துடன் தொடர்ந்து. "எங்கள் வீட்டுக்கு எதிரிகள்
அந்தப் புத்தகங்கள்தான். இந்த வீட்டில அந்தப் புத்தகங்களி ஞல் வருகின்ற தொல்லைகளுக்கு முடிவேயில்லை. காலயில எழும் பினது துவங்கி கந்தோருக்குப் போகும்மட்டும் அடங்கட வேலை இந்தப் புத்தகங்களே வாசிப்பது தானே? கந்தோரால வந்தபி றகும் அந்தப் புத்தகங்களை

வாசிப்பதைதவிர வேறுவேலையே இல்லை. உங்கட போக்கைப் பார்த்தா இந்த வீட்டில புத்த கத்தைத் தவிர வேறு ஒருத்த ருமில்லை எண்ட எண்ணமா?*
இப்படிக் கூறிக்கொண்டே வந்த அவள் கோபத்தினுல் மே லும் கதைக்கமுடியாமல் நிறுத்திக்கொண்டாள்.
"ஏதாவது மாசத்தில காசு மிஞ்சிச்கதென்டால் வேற வேலை யேதும் செய்யிறதில்லை. எங்கி னேயோ கிடக்கிற பழைய புத் தகங்களைத் தூக்கியண்டு வாறது தான் வேலை. இண்டைக்கும் கடன் காறனுக்குக் காசு குடுத் திற்றன் எ ன் டு சொல்லிப் போட்டு பழைய புத்தகமொண் டைக் கொண்டந்திருக்கிருர் . உங்களுக்குப் புத்தகத்தைத்
தவிர வேறுஒருத்தருமே தேவை யில்லைப்போல. நீங்க கலியா, ணம் கட்டினது என்னையா?
அல்லது புத்தகத்தையா?"
Jayau Gasolu கண்களிலி ருந்து கண்ணிர் பெருகுவதை உபனன்த அவதானித்தாள். மேலும் அவள் எதுவுமே பேசா
மல் அறையைவிட்டு வெளியே
போனுள்.
அவள் கடைசியாகக் கேட் டகேள்வி இதற்கு முன்பு அவ னுள்ளத்தில் என்றைக்குமே உண்டானதில்லை. அவள் ஏன் அப்படிக் கேட்டாள் என்பதை அவஞல் புரிந்துகொள்ள முடிய வில்லை. அவன் ஆற்ருமையுடன் அறையில் அங்கும் இங்கும் உலாவ ஆரம்பித்தான். 女
LqLqMLALALALALMALALALALAALLLLLAA AA LLLAALLLLLALALAALLLLLAMAqLALA LALMALLqLALAAAAALLAAAALMAqLALMAALALALAqLLLAALLLLLAALLLLLAALLLLLLL LLLLLLLLMLM
மனிதத்துவம்
மண் புழுவிற்கும் உண்டே ஆசை விண்ணிலே பறக்க ஆணுலும் விண்ணிலே பறக்கும் பறவையின் விரிந்த - அழகிய - நீண்ட - ஆமாம் மிகவும் வெண்ணிற இறக்கைகளை வெட்டி வீழ்த்தும் மனிதத்துவம் மண்புழுவை பறக்க விடுமா?
பிரிவு
எங்கோ இருந்து இன்னிசை கேட்கிறது கண்ணுக்குத் தெரியாமல் கானம் இசைக்கிறது மெதுவாய் மிகமெதுவா தேய்ந்து மிகக்குறைந்து கேளா ஒலியாகி மறைந்தே போகிறது.
மரணம்
அன்பின் நெகிழ்ச்சியில் மனங்கள் இணைப்பினில் மலரும் அன்பெனும் மலர்களின்
அந்திப்பொழுது.
- செளமினி
Si

Page 18
மேடையிலே சில
2
பிரமுகர்கள்...!
ஊரில் ஒருமன்றம் எடுத்த விழாவிடையில் பேருரைக ளாற்றப் பெரிய மனிதர் சிலர் மேடை அமர்ந்திருந்தார். ...!
- I -
வெயில் அனலிடையில் கூதற் பணி நடுவில், கண்ணில் கரைதட்டா நீண்ட பெருந் தொலைவு போன தொழிலாளர் புதுமீன் கொண்டுவர 'வாடி' யிலே நின்றபடி பணம் வாரி மடிகட்டிச் சுரண்டிக் கொழுத்திருந்த "பெரிய சம்மாட்டி. . .
- 2 -
நாளெல்லாம் பொழு தெல்லாம் நொந்துழைத்தும் தொழிலாளர், சுகம் காணுர் துயர்ப்படுவார் அவர் முன்னுல் . . . . "ஏழைமையே சிறந்த தென’ எங்குமேயில்லா மோட்சம் நரகமென" பைபிள் கதை சொல்லி, அன்னவரைத் திசை திருப்பும்
"எங்களூர்க் கோயிற் பங்குச் சுவாமியார். .
p
- 3 -
உப்பும் புளியுமல்ல எம்முதற் பிரச்சினைகள் தமிழைப் பண்பாட்டைக்

காத்தல் தா னென்று, ஊர் வெளியில் மேடைகளில் குதலைத் தமி பூழினில் பெரிய முழக்கமிட்டு, நாளெல்லாம் பொழுதெல்லாம் வெள்ளையனர் தம் மொழியைப் பண் பாட்டைப் பரவி நிதம் கறுவாக் காடுகளில், உண்டு சுகித்திருக்கும் எங்கடை எம். பி.!
ஊரில் ஒருமன்றம் எடுத்த விழாவிடையில், பேருரைக ளாற்றப் பெரிய மனிதர் சிலர் மேடை அமர்ந்திருந்தார்.
Jawa BulusurmtFT
சேடம்
அன்னையின் மடியிலும் அயலவ ரன்பிலும் முன்னைய நினைவிலும் முதிச அழிவிலும் கண்ணிர்க் கறையிலும் காதலி அணைப்பிலும் கையிருப்புப் பணத்திலும் காணி உறுதியிலும் சகோதரன் படிப்பிலும் சகோதரி மணத்திலும் பிள்ளைக ளன்பிலும் பிதற்றும் அழகிலும் வங்கிப் பணத்திலும் பாக்கி வரவிலும் " சொர்க்கம் வேண்டும் தெய்வ பக்தியிலும் என்னுயி ரேனே இறுதி வேளையிலும் போக முடியாமற் சிக்கித் தவிக்கிறதே!
இரத்ன விக்னேஸ்வர மூர்த்தி

Page 19
சிங்களத் திரையின்
எம் எல். எம். மன்சூர்
வெள்ளி விழாவும்
இன்று நமது தமிழ்மொழி யில் தரமான எழுத்தாளர்க ளெல்லோரும் திரைப்படங்க ளைப்பற்றி எழுதவே கூச்சப்படு கிருர்கள். இலக்கிய ஏடுகள் படங்களை விமர்சனம் செய்வ தில்லை. பல்கலைக்கழகப் பேரா சிரியர்களும், மற்றும் பல்துறை அறிஞர்களும் தமிழின் ஏனைய கலை வடிவங்கள்பற்றி ஆராய்ச்சி நடத்துகிறர்கள்: விவாதிக்கி முர்கள்; விமர்சனம் செய்கிறர் கள் ஆணுல் இவர்களில் யாரும் தமிழ்த் திரைப்படங்கள் பற்றி எழுதுவதில்லை. பேசுவதில்லை. இதனுல் ச ர் வ தேச திரைப் படங்களைப் பற்றியோ, திரைப் படக் கலையின் புது நுணுங்கங் களைப்பற்றியோ நமது தமிழ் வாசகர்கட்கு அறிந்து கொள் ளும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. கடந்த சில வருடங்களில் உல கின் கலைவளர்ச்சிப் போக்குடன் தன்னை இணைத்துக் கொள்ளாது
தனக்கேயுரிய ஒரு குறுகிய வட்
டத்துக்குள் தமிழ்த்திரையுலகம் தேங்கி நின்றமையே இதற்குக் காரணமாகும்.
சிங்களத் திரைக்கு வெள்ளி விழாக் கொண்டாடும் அருகதை உண்டா? விழாவொன்று எடுக் கக்கூடிய முறையில் அது இது வரையில் சாதித்த சாதனைக
84
'நிதானய'வும்
ளென்ன? எ ன் பது போன்ற கேள்விகள் இவ்வே8ளயில் எழு வதுநியாயம். சர்வதேச திண்ரப் படவிழாவில் முதற்பரிசு பெற்ற படமொன்றைத் த யா ரித் த பெருமைக்காகவே அது விழா வொன்று கொண்டாடலாம் என்ற ஒரே காரணத்தைக் கூறி இதைச் சமாளித்து விடலாம். ஆனுல் வளர்ச்சியுற்று வரும் ஒரு மொழி என்ற முறையில் சிங்களம் தனது கலைப்படைப் புக்களை, காலத்தின் போக்கு டன் மாற்றங்களுக்குள்ளாகி வரும் ஏனைய தேசங்களின் கலை வெளியீடுகளுக்கு ஏற்ப மாற்றி யமைப்பதில் இதுவரை பெற்ற வெற்றி என்ன என்பதைச் சிந் தித்துப்பார்த்து, எதிர்காலத் தில் நிகழ்த் தவிருக்கும் சாதனை களைக் குறித்துக்கொள்ளும் ஒரு வேளையாக இவ்விழாக் கொண் டாடும் சந்தர்ப்பத்தைத் திரை யுலகம் கருதுகிறது.
மு த ல் சிங்களத்திரைப் u h l 947 - 6iv GoGAJ 6rfu Lu'Lu * டது. இதற்கு முன்னர் 1925-ல் ஓர் ஊமைப்படம் தயாரிக்கப் பட்டது. அப்போது ரோயல் கல்லூரி மாணவராக இருந்த என். எம். பேரேரா அப்படத்தில் நடித்தார். துரர்ெஷ்டவசமாக அப்படம் இலங்கையில் திரை யிடப்பட வில்லை. இந்தியாவி

லும், சிங்கப்பூரிலுமே காண்பிக்
கப்பட்டது.
1956-ல் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் தயாரித்த ரேகாவ" வெளியிடப்பட்டது. ஒருவகை யில் இதுவே முதலாவது சிங்க ளத் திரைப்படம் என்று விமர் சகர்கள் கருதுகிருர்கள். அதற் குப்பிறகுள்ள சிங்களத் திரைப் படக்கலையின் வளர்ச்சியுடன் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் என்ற கலைஞனின் பெயர் தவிர்க்க முடி யாத அளவில் பிணைக்கப்பட் டுள்ளது. சிங்களப் படங்களின் வழமையான போக்கை மாற்றி சர்வதேச அரங்கில் போட்டி போடக்கூடிய முறையில் அவற் றின் த ரத்  ைத உயர்த்திய பெ ரு  ைம அவருக்குரியது. 1956-ல் வெளியான, “ரே காவ" முதல் சமீபத்தில் திரையிடப் பட்ட "நி த ர ன ய* வரையில் அவர் தயாரித்த சகல படங்க ளிலும் திரையுலகுக்கு ஒரு புது மையை அறிமுகம் செய்து வைக்க அவர் எடுத்த முயற்சி களையே நாம் சினிமா என்ற கலைவடிவத்தை பல புது நுணுக்கங்களுடன் கையாண்டமையே அவர்பெற்ற வெற்றிக்குக் காரணம். எண் னிக்கையில் அவர் படங்கள் மிகக் குறைவு. ஜனரஞ்சக ரீதி பிலும் அவரது படங்கள் தோல் வியைத் தழுவியதில்லை. சத்ய ஜித்ரேயின் படங்களை வங்காளி
கள் எவ்வாறு ஒரு கடமையா கக் கருதிப் பார்க்கிருர்களோ, அதேபோன்று பல சிங்கள இர
சிகர்கள் லெஸ்டரின் படங்க க்ாப் பார்க்கிருர்கள். இன்று பல்கலைக்கழகப் பேராசிரியர்க ளும், நாவலாசிரியர்களும், பல்
துறை அறிஞர்களும் சிங்களச்
சிலரிமாவைப்பற்றிப் பேசுகிருர் கள் என்று கூறும்போது அதற்கு
காண்கிருேம்.
லெஸ்டர் ஜேம்ஸ்பீரிஸ் போன்ற கலைஞர்களின் திரையுலகப் பிர வேசமே காரணமென்று கூற ортtѣ
கம்பெரவிய மாட்டின் விக்கிரமசிங்காவின் பாராட்டுப் பெற்ற நாவல். நவீன சிங்கள இலக்கிய வரலாற்றில் அதற்கு ஒரு முக்கிய இடமுண்டு, காலத் தின் மாற்றத்துடன் மானிய முறையை அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ சமூ கம் சிதைவடைவதையும் அதன் வீழ்ச்சியையும் அவர் அதில் சித் தரித்துள்ளார். லெ ஸ் ட ர் அதைத் திரைப்படமாக்கினர். 1965-ல் டில்லியில் நிடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் * கம்பெரலிய முதற்பரிசு பெற் றதன் மூலம் சிங்களத் திரைப் படங்களின் வளர்ச்சி வரலாற் றில் ஒரு முக்கிய அத்தியாயம் தொடங்கப்பட்டது.
இன்று தனது வெள்ளி விழாவைக் கொண்டாடும் சிங் களத் திரையுலகம் லெஸ்டரின் படங்களையே தன் கடந்தகாலச் சாதனைகளாக எண்ணிப் பெரு மைப்பட்டுக் கொள்கிறது. "கம் பெரலியா' வுக்குப் பின் அவர் *சந்தேஸ்ய', 'ரன்சலு", "தொ
லொவக் அதர", "கொலு ஹத
வத்", "அக்கர பஹ" போன்ற படங்களை த் தயாரித்தார்: பின்னயவை இரண்டும் அதிக மான வாசகர்களைக் கவர்ந்த நாவல்கள். இவற்றுள் "தெலொ வக் அதர" அதிகமான விமர்ச கர்களால் பாராட்டப்பட்ட படம். கார் விபத்தொன்று காரணமாகவிருந்த இளைஞனெ ருவன், அதன் பின் அடையும் மனவேதனைகளையும், உணர்ச்சிப் போராட்டங்களையும் அதில் அவர் திறம்படச் சித்தரித்துள் ளார். இயற்கையான முறை
πό

Page 20
யில் படமாக்கப் பட்டுள்ள வெளிப்புறக் காட்சிகளே அதன் வெற்றிக்கு முக்கிய காரணமா கும். சமீபத்தில் வெளியான நிதானய (புதையல்) இன்று 56 follom இரசிகர்களதும், விமர் ச்கர்களதும் முக்கியமான பேச் சுப் பொருளாக இருக்கிறது.
கிரி குணசிங்காவின் சத் சமுத்திர மீ ன வ க் கிராம மொன்றின் வாழ்க்கையின் தெளிவு சுழிவுகளைத் திறமையா கப் படம்பிடித்து காட்டுகிறது. திரையுலகுக்கு முற்றிலும் புதிய Cuprnr657 சிரி குணசிங்காவை
இயக்குனராகக் கொண்ட அந்
தப்படம் கலாரீதியான பல துணுக்கங்களையும், சிறப்பம்சங் களையும் கொண்டதாக விளங் கியது. இவர் வேறு படங்கள் தயாரிக்கவில்லை. திரைப்படக் கலை பற்றி அவர் எழுதும் கட் டுரைகளைப் பல சஞ்சிகைகளில் கான முடிகிறது.
பல் கலை க் கழக வாழ்க் is அடிப்படையாகக் கொண்ட "ஹன்தானே கதாவ" பூரணமாக வெற்றியளிக்காத போதும் அதன் யக்குனரான சுகதபால செனரத்யாபா தயா ரித்த துண்டுப்படமான மனித றும் காகமும் சர் வ தேச திரைப்பட விழாவில் பொன் யில் பரிசு பெற்றது. சர்வ தச ரீதியில் பரிசும் பாராட் டும் பெற்ற இன்ஞெரு துண்டுப் ப்டம் நிஹால் சிங் கா வின் "பக்தி". டாடப்பிடிப்பில் இவர் கையாளும் உத்திகள் சிங்களத் திரைப்படத் துறைக்குப் புதி யவை. "சத் சமுத்திர" போன்ற ப்டங்கள் வெற்றிபெற முக்கிய காரணம் படப் பிடிப்பில் நிஹால் சிங்கா கையாண்டிருக் கும் நுணுக்கங்களாகும். இன்று பல இளங் கலைஞர்கள் பல துண்டுப் படங்களைத் தயாரிப்
பதில் ஈடுபட்டிருக்கிருர்கள். இவர்களெல்லோரும் ஏதாவது புதுமையொன்றை நிகழ்த்த வேண்டுமென்ற நோக்குடைய வர்கள். எனவே சிங் க ள த் திரையுலகின் எதிர்காலம் நம் பி க்  ைக மிகுந்ததொன்முக இருக்கிறது.
வழமையான தமிழ்ப்படப் பாணியிலான படங்களும் சிங் களத்தில் அதிகம் வெளிவரு கின்றன. தரக் குறைவான கலைப் படைப்புகளுக்கு எந்த மொழிகளும் விதிவிலக்கான வையல்ல. எனினும் இவ்வா முன படங்களைத் தயாரிக்கும் பல தயாரிப்பாளர்கள் இன்று விமர்சகர்களுக்குப் பயந்த நி3 யில் தம் போக்கினைப் படிப்படி
யாக மாற்றி வருகின்றனர்.
திரைப்படக் கலையின் ஒவ் வோரம்சத்திலும் நன்கு பயிற் ற்ப்பட்ட கலைஞர்களை சிங்களத் திரையுலகம் கொண்டிருக்கிறது. நிஹால் சிங்கா, சுமித்த அமர சிங்கா போன்ற படப்பிடிப்பா ளர்களையும், பேமசிரி கேமதாச,
சோமதாச அ ல் வி டி கலை போன்ற இசையமைப்பாளர்க ளையும், அமரதேவ, விக்டர்
ரத்னங்க போன்ற பாடகர்களே யும் குறிப்பாகக் கூறலாம்.
எனவே கடந்த கால் நூற்
முண்டுகால சிங்களத் திரைப்
பட ங்க ளின் வளர்ச்சியைப் பார்த்து ஓரளவு திருப்திப்பட் டுக்கொள்ள முடியும். குறைகள் ஏராளமுண்டு. அவற்றில் சில திருத்தப்பட்டு விட்டன. இன் னும் சில திருத்தப்படவேண்டி யன. எதிர்காலத்தில் அவை திருத்தப்படக்கூடும்.
'நிதாணய (புதையல்)
"பழைய நினைவுகளை மீட்டி வெள்ளிவிழாக் கொண்டாடும்

சிங்கனத் திரையுலகுக்கு எதிர் காலத்தில் னைத்து மகிழக் கூடிய அழியாத நினைவொன் றை வழங்கும் பொருட்டு நிதா னய திரையிடப்பட்ட இதுவரை வெளியான லெஸ்டரின் படங் களுக்கெல்லாம் சிகரம் வைத் தாற்போல இது அமைகிறது என்று விமர்சகர்கள் கூறுகிருர் கள். லெஸ்டரின் படங்களுள் இதுவே மிகச் சிறந்தது என்று றெஜி சிரிவர்தன குறிப்பிடு கின்ருர்,
200 பக்கங்களுக்கும் மேலா கச் செல்லும் * கம்பெரலிய" "கொலுஹதவத", "அக்கரபஹ' போன்ற நாவல்களைத் திரைப் படமாக்கிய லெஸ்டர் நாலே பக்கங்களில் முடித்துவிடும் சிறு கதையொன்றை இரண்டுமணித் தியாலங்களில் ஒடி மு டி யும் படமொன்ருகத் தயாரித்திருக் கிருர், லெஸ்டர் தானே கூறு வதுபோல அவருக்கு இது ஒரு பெரும் சவாலாக இருந்திருக் கிறது. ஆரம்பத்தில் தான்
எடுக்க எண்ணியிருந்ததாகவும் , அவ்வாறு எடுக்கப்பட்டிருந் தால் இக்கதையின் ஆழமான அம்சங்களை இரசிகர்கள் நன்கு புரிந்துகொண்டிருக்க மாட்டார் களென்றும் குறிப்பிடுகிருர். "நிதானய தனது பெயர்ப் பொருத்தத்துக்கேற்ப சிங்களத் திரையுலகுக்கு ஒரு 'நிதான ய" (புதையல்) ஆக அமைகிறது.
பிரபல சிங்கள எழுத்தா ளர் ஜி. பீ. சேநனயகா 1946-ல் வெளியிட்ட சிறுகதைத் தொ குப்பொன்றில் இக்கதை இடம் பெற்றது.
இந்தக்கதை குறிப்பாக எந்தக் கருத்தை வலியுறுத்து
இ ன் னு ம் இதை ஒரு துண்டுப்படமாக
கின்றது எனக் கூறமுடியாது: அதைப் பாரம்பரிய போலி தம் பிக்கைகளைச் சாடுவதாக எடுத் துக்கொள்ளலாம். சரிந்துவரும் நிலப்பிரபுத்துவத்துக்கும், கிராம இல்லத்துக்கும் வில்பிரட் அபே நாயகா என்ற பாத்திரத்தை ஓர் அடையாளமாக கூறுவதா கவும் கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனதும் உள்ளத்தின் ஆழம் அழுக்கு நிறைந்த து என்ற கருத்தை வலியுறுத்துவதாக இருக்கலாம். "தான் காதலிக் கும் பொருளே ஒவ்வொரு மனி தனும் கொலை செய்கிருன்" என்ற தாத்பரியத்தின் அடிப் ப  ைட யி ல் எழுந்ததாகவும் இருக்கலாம்.
ஒரு நூற்ருண்டுக்கு முன்ன ரிருந்த கிராம வாழ்க்கையை யும், சமூகத்தையும் படம்பிடித் துக் காட்டுவதில் லெஸ் டர் வெற்றி பெற்றுள்ளார். சிலந்தி வலைகளும், குருவிக் கூடுகளும் , உடைந்த தளவாடங்களும், சிதைவடைந்து கொண்டு வரும் கிராம இல்லத் தைக் காட்டுகின்றன. இக் காட்சிகளில் படப்பிடிப்பாள ரின் திறமையை நாம் வியக்கா மலிருக்க முடியாது.
மனுேதத்துவ ரீதியில் சிக் கல் மிகுந்த வில்பிரட் அபே நாயகாவின் பா த் தி ரத் தை
காமினி பொன்சேகா ஏற்றுள்
ளார். லெஸ்டரின் "சந்தேஸ்ய* * கம்பெரலிய" போன்ற படங் களில் நடித்து இவர் ஏற்கன்வே தனது நடிப்புத்திறமையை நிரூ பித்திருக்கிருர், நோயாளியாக வரும் கட்டங்களிலும், இறுதி யாகப் பலி நடைபெறும் வேளை களிலும் அவரது நடிப்பு பாராட் டக் கூடிய முறையில் அமைந் திருக்கிறது.
87

Page 21
பல உருவகக் காட்சிகள் மூலம் படத்தின் கடைசியில் நடைபெறவிருக்கும் கோர முடி வு க் கா ன முன்னெச்சரிக்கை தரப்படுகிறது. மயில் வாழும் கூட்டை முதலில் காட்டுகிருர் கள் தன் கணவன் வீட்டுக்கு வரும் ஐரின் மயில் கூட்டையே முதலாவது பார்க்கிருள்:
*அதன் அருகில் போக வேண்டாம். கொஞ்சமும் ஈவி ரக்கமில்லாத ஐந்து. தன்னுடன் இரண்டு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த பெட்டைத்துணையை நேற்று எவ்விதமான காரணங் களுமில்லாமல் t-gs'
அபேநாயகா கூறுகிருன். இதுபோன்ற பல காட்சிகள்.
தனது விதியைத் தானே வரவழைத்துக் கொ ள் வ து போல ஐ ரினின் பாத்திரம் அமைகிறது. நேர்த்திக் கடனை உடனடியாக நிறை வே ற் ற வேண்டுமென்பதை அவள் அடிக் கடி நிக்ளவு படுத்துகிருள். அபே நாயகா இந்தக் கொடூரமான முடிவுக்கு வர அவளும் ஒரு காரணமாக இருக்கிருள்.
சாந்தி லேகாவும், மற்றும் சமன் பொகலாவவ, பிரான்
பரகதி
கொன்றுவிட்
சிஸ் பேரேரா போன்ற துணை ந டி க ர்களும் எந்தவிதமான வெளிப்பகட்டுகளுமின்றித் தாம் ஏற்றுக்கொண்ட பாத்திரங்க ளுக்கு உயிரூட்டியிருக்கிருர்கள். அவர்களது நடிப்பு யதார்த்த வாழ்க்கையுடன் எவ்விதத்தி லும் மாறுபட்டதாக அமைய வில்லை.
பாடல்களோ, இரசிகர்க ளேக் குழப்பும் பயங்கர இசை யமைப்போ படத்தில் இடம் பெறவில்லை. இதுவே ஒருவகை யில் பட த் தி ன் நிறைவுக்குக் காரணமெனலாம்.
சினிமா என்ற கலைவடிவம்
சமீப காலத்தில் புதுப் புதுப் பார்வைகளுடன் கையாளப் பட்டு வருகிறது. தமது நாட்
டுக் கலைஞர்களும் அத்துறையில் கணிசமானளவு முயற்சிகளை எடுத்து வருகிருர்கள் என்பதற்கு 'நிதானய" போன்ற படைப்புக் கள் சr ன் று பகர்கின்றன. 'நிதானய" வுடன் வெள்ளி விழாக் கொண்டாடும் சிங்களத் திரையுலகிலிருந்து எதிர்காலத் தில் இன்னும் சில தரமான வற்றை எம்மால் எதிர்பார்க்க (Մ)tդ պւծծ
பிள்ளைக் கறிசமைத்து (ப்) பெருமாளுர்க் கமுதளித்த பெருந்தொண்டு புரியினின்று கையில் விலங்கணிந்து கொலைக்குற்றந் தனேச்சுமந்து மெய்யாகச் சேர்வார் பரகதிதான்.
- நிருத்தன்

நாடகக் கருத்தரங்கு
இலங்கைக்
பேரவையின் தமிழ் நாடகக் குழு, ஓகஸ்ட் மாதம் 20-ந் தேதியன்று, யாழ்ப்பாணம் பொதுசன நூலக மண்டபத்தில் நாடகக் கருத்தரங்கொன்றை நடாத்தியது. கலாநிதி சு. வித் தியானந்தன் அவர்கள் தலைமை யில் நடைபெற்ற இக் கருத்த ரங்கில், மூன்று உப தலைப்புக ளின் கீழ் பேச்சாளர்கள் பங்கு பற்றினர்.
"நாடகப் பார்வையாளர் கள், சில நாடக ங் களுக்குப் போகிருர்கள்; வேறு சிலவற் றிற்குப் போவதில்லை. இது ஏன்?"
"முன்பு இரவிரவாக நடந்த மரபுவழி நாடகங்கள், இன்னும் மக்கண்க் கவர்கின்றனவா, இல்லையா??
"இவற்றில் என்ன மாற்றங் களே ஏற்படுத்தினல், அவை மக்களைக் கவர்வனவாக ஆகும்" - இவை போன்ற கேள்விகளை எழுப்பி, அவற்றைப் பேச்சா ளர் ஆராய்வர் என்று தலைவர் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.
முதலில், "மரபுவழி நாட கம் - பார்வையாளர்" எ ன் ற தலைப்பில், திரு. சி. மெளனகுரு பேசிஞர்.
“arrigj”
O 'நாடக நெறியாளரோ, கலாசார தயாரிப்பாளரோ, பார்வையா
ளரை மனதில் இருத்தியே நாட கத்தை, உருவாக்க வேண்டும். காலத்துக்குக் காலம் மாறும் மக்கள் மனநிலையறிந்து நாட கங்களைத் தயாரித்தல் அவசியம். இன்றைய நாடகங்கள் பலவற் றின் தோல்விக்குக் காரணம், பார்வையாளரை மறத்தலேயா கும். இப்போ ஆடப்படும் மரபு வழி நாடகங்களைப் பார்வை யிடுவோர் இருவகையினர்.
1. நாட்டுக் கூத்துக்கள் பண் டையவை எ ன் ப த 7 ல் u umr riflʼüGèLu nr rif-.
2. நாட்டுக் கூத்தை மாற்றி
வளர்க்க வேண்டுமென் Gl rf.
முதலாம் வகையில் கிரா
மத்தவர்களும், gìg sốăĩ L-m th
வகையில் நகரவாசிகளும் அநே கமாக அடங்கிவிடுவர். கிராமப் புறப் பார்வையாளர்க்கும் , நகரப்புறப் பார்வையாளர்க் கும் அடிப்படையில் நிரம்பிய வேற்றுமைகள் உள. கிராமங் கண்ப் பொறுத்தளவில், அண் ணுவியாரே பெரியவர் என்பதா அலும், ஊரே ஒன்றுபட்டுக் கூத் துக்களைத் தயாரித்தாலும். மக் களுக்கு ஏலவே அறிமுகமான பாத்திரங்களே மேடைக்கு வந் ததாலும் நயப்புக்களிருந்தன

Page 22
வே யொழிய சுண்டனங்களிருக் கவில்லை.
பு தி ய சிந்தனைகளிலும், தே சீ ய உணர்விலும் ஊறிய நகரப்புற பார்வையாளர், கிரா மப்புற பார்வையாளரிலிருந்து வெகுவாக மாறுபடுகின்றனர். இவ்விடங்களில், தயாரிப்பாளர் அண்ணுவியாரிலும் பெரியவரா கக் கொள்ளப்படுகிருர், நகர்ப் புறப் பார்வையாளர், அறிவி ல் வளர்ச்சியுற்றவர்களாயும், னிமாத் தாக்கத்துக்குட்பட்ட வர்களாயுமிருத்தலால், கிரா மப்புறம்போல் வெறும் நயப்பு
மட்டுமல்ல - விமர்சனம்ேயிருந்
தது. சரியான பாத்திரவார்ப்பு, உடை, உத்திமுறைகள் இவற் றில் அதிக மெருகு எதிர்பார்க் கப்பட்டது.
இது பழைய பிரிவு.
96ërse pu i LJITrie:OGI urr arri களே, நகரப்புறம் கிராமப்புறம் என்று பிரிப்பது அசாத்தியம். கல்வியறிவு, மேற்கத்திய நாட கங்கள் பற்றிய அறிவு ம்,
பழைமை-புதுமை என்று பிரித்
தாய்கிற மனப்பாங்கு பொது,
女
சுமார் முக்கால் நூற்ருண் டுக்கு முன் யாழ் ப் பா ண ம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த குமாரவேலுப்பிள்ளை என்பவர் பாடிய "கண்ணப்பன்" என்கிற 'வாழைக்குற்றிக் கூ த் தி ன் அவையடக்கப் Lunt U-2 L-Gör, ரு. சண்முகசுந்தரம் தமது பேச்சினைத் தொடங்கினர். அக் காலகட்டத்தில் பெருவழக்காக இருந்த கூத்து மரபினைத் தெளி 6 ளக்கும் பல உண்மை கள் அதிற் தெரியவந்தன.
40
வட்ட வடிவமான களரி யில், வாழைக்குற்றிகளில் தேய் காய்ப்பாதி வைத்து மூட்டப்
பட்ட விளக்குகள் கள ரி க்கு
ஒளியாக அமைய, "வாழைக் குற்றிக் கூத்து" நடந்தது.
யாழ்ப்பான சமூக மாற்றங் களுடன் "மத்திய வகுப்பு" என் கிற புதியதொரு பிரிவு தோன் றிற்று. ஆங்கிலக் கல்வியும். ' அரசாங்க உத்தியோகமும் கார ணமாக இவர்கள் கிராமப்புறக் கலைகளையும் புறக்கணிக்க ஆரம் பித்தார்கள்.
பாக்கு நீரிணைக்கு அப்பா லிருந்து "கொட்டகைக் கூத்து"
இக்காலத்தில் வந்தது. மத்த ளத்துக்குப் ப தி ல் டோலக், ஆர்மோனியமும் பாய், தடுக்
குகளுக்குப் பதில் வாங்கு, கதி ரைகளும், கூத்து மெட்டுகளுக் குப் பதில் கர்நாடக ராகங்க ளும் வந்ததால், பார்வையா ளர் கவரப் பட்டனர். இக் கொட்டகைக் கூ த் து க் களை அவர்கள் பலமுறை பார்த்து அநுபவித்தனர்.
எ னி னு ம், தொடர்ந்த கால - சமூக மாற்றங்களுக்கும் கொட்டகைக் கூத்தும் தாக்குப் பிடிக்க முடியவில்லை!
女
"மன்னர், மாற்ருந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்
பட்டது" என்ற குற்ப்புடன் தொடங்கிய தம் பி ரா சா சொன்னர்.
மரபு வழி நாடகங்கள், நாட்டுக்கூத்து மரபு, அண்ணுவி மரபு என இருவகைப்படும். போர்த்துக்கேயர் வருகைக்கு முன்பு கூட மன்ஞரில் இந் நாட

இருந்திருக்கின்றன. இவ ற் றி ல், "வில்விஜயன் "அல்லி அரசாணி" ஆகிய நாட கங்களின் சில பகுதிகள் இன்று மிருக்கின்றன. மன்னர் மாவட் டத்தில் ஆடப்படுகிற நாடகங் கள், மாதோட்டப் பாங்கு, யாழ்ப்பாணப் பாங்கு - தென் மெட்டு, வடமெட்டு என இரு
வகைப்படும். ஆடப்படுகின்ற கூ த் து க் க ளி லே நாடகம், atraffir tül 1, வசன வாசாப்பு
எனப் பிரிக்கப்படுகிறது. இவற் றில் நாடகம் பொதுவாக ஒன் றுக்கு மேற்பட்ட இரவுகளில்ே நடிக்கப்படுகின்றது. ஆளுல் 'வாசாப்பு, வசனவாசாப்பு ஆகி யவை ஒரிரவே நடிக்கப்படுகின் றன. நாடகங்களின் சுருக்கமே "வாசகப் பா’க்கள். ஒரே கதை யையே நாடகமாகவும் வாச கப்பாவாகவும் பாடுத்ல் உண்டு.
Yr
இரண்டாவது தலைப்பாக, "நகர்ப்புற நாடகம் - பார்வையா
ளர்கள்" என் ப து எடுத்துக் கொள்ளப்பட்டது.
திரு. அரசு பேசும்போது
"நகர்களில் பெரும்பாலும் சமூக நாடகங்களே மேடையேற்றப் படுகின்றன. எனினும், றிற் பெரும்பகுதி பூரணத்துவம் பெருத படைப்புகளாகவே - கேலிக்கூத்தாகவே காட்சிதரு கின்றன. நாடகங்கள், சமூக சீர்திருத்த உணர்வோடு அணு கப்பட வேண்டும். ஆளுல் இப் போது, யதார்த்தம்" என்ற பெயரில் ஆபாசம் தலைகாட்டு கிறது; "கருத்து மோதல்" என்ற பெயரில் பிழையான கருத்துக் கன் த லை கா ட் டு கின்ற ன. குறைந்த கட்டணத்தில் கூடிய
இவற்’
இன்பத்தை விரும்புகின்ற கினி மாத் தாக்கம் தெரிகிறது.
*பெயர்போன" நடிகர்களை அப்படியே 'கொப்பி யடித்து நடிக்க முயல்வது, நகரில் உள்ள மற்ருெரு பலயினம். குறிப் பிட்ட பெரிய நடிகர்களின் "ஒரி ஜினல்" நடிப்பையே திரையில் பார்க்கக் கூடியதாக இருக்கை யில், இதைப் பார்வையாளர் கள் விரும்புவார்களா? என்ப தைச் சிந்திக்க வேண்டும். ஒவ் வொரு நடிகருந் தத்தம் தனித்
தன்மையை வெளிப்படுத்தல் வேண்டும்.
திரு. ஏ. ரி. பொன்னுத்
துரை:- "மட்டரகமான ரசிகர் கள் நாடக நுணுங்கங்களைய றிந்த அநுபவம் உள்ள ரசிகர் கள், இடைநிலையினர் என ரசி கர்களை வகைப்படுத்தலாம்: ரசிகர்கள் பற்றிய சிந்தனையின்றி தயாரிப்பிலீடுபடுவோர், நாட கம் தோல்வியுறுகையில் ரசிகர் களைக் குறைகூறித் தாம் தப்ப முயல்கின்றனர். ரசிகர்களைப் பல்வேறு உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்த நாடகத் தவறுகையி லும், ஒரு முக்கிய கருத்தை அவர்களுட் செலுத்தத் தவறும் போதும், நாடகம் வலுவிழந் ததாகிறது. இக் கண்ணுேட் டத்தில் சிந்திக்கும்போது நகர்ப் புற நாடகத் தயாரிப்பில் பல முக்கிய அம்சங்களை மனதில் கொள்ளல் அவசியம் என்பது புலஞகும்"
நவீன மாற்றங்களின் தாக் குதல்களுக்கு உடனுக்குடன் உட்படுதலாலும், பரந்துபட்ட கலை நிறுவனங்கள் மூலம் தம் கலையுணர்வை விரிவடையச்
41

Page 23
செய்திருப்பதாலும், கிராமப் புறத்தவரைவிட நகர்ப்புறத்த வர் கலாரசனையில் மேம்பட்டு விளங்க முடிகிறது.
女
"மாற்ருந்தாய் மனப்பான் மை, மன்னுருக்கு மட்டுமல்ல மலையகத்துக்குங் கூடத்தான்"- என்ற குறிப்புடன் தொடங்கிய
திரு. திருச்செந்தூரன் பேசிய தாவது:-
மலையகத்தில் கஸ்டியில்
மாத்திரமே, ஓரளவு ஒழுங்கான மேடைவசதி படைத்த பாட சாலை மண்டபங்களிருக்கின்றன. இதனல், அவ்வப்:ே 'து அங்கு நாடகங்க' அரங்.ே றப்பட்டு வருவதை, காணல, ம், மாத் தளை, அட்டன், பதுளை, இரா கலை போன்ற மற் நகரங்க ளில் - முக்கிய பிரசசினையாக அரங்கப் பிரச்சினை இருப்பினும் - உள்ள வசதிகளோடு அரங் கேற்றி வருகின்றனர்.
தமிழ்ப் படங்களின் தாக்
கத்தால், அடுக்கு மொழி வச னங்கள், நடனம், GFGðör Gð)L- , , "கிளப்டான்ஸ்"க்குப் பதிலாக "பைலா" இப்படிச் சேர்க்கிற
தயாரிப்பாளர், தோட்டப் பகு திகளில் பார்வையாளரை வசப் படுத்தினுலுங்கூட, நகர்ப்புறங் களில் முழுமையான சினிமா வோடு ஒப்புநோக்கும் பார்வை யாளர்கள் நிறைந்திருப்பதால் தோல்வியடைகின்றன. அன் மைக் காலங்களில் அரங்கேற் றப்பட்ட சில யதார்த்த நாட கங்கள் அளித்த வெற்றி, மலை யக நாடகங்களின் எதிர்காலத் தைப் புலப்படுத்துகிறது. அத் தோடு சமுதாயப் பிரச்சினைக ளோடு கூடிய நாடகங்களை வர
4器
எனலாம்.
வே ற் கும் பார்வையாளரின் விருப்பத்தையும் இது உணர்த் தியது.
கருத்தரங்கின் மூன்ருவது
விடயமாக, "பார்யைாளர் பிரச் சினைகள்’ எடுத்துக்கொள்ளப்
ult-gl.
‘விஞ்ஞானமுறையில்,புள்ளி யியல் ரீதியில், பார்வையாளர் களின் விருப்பு வெறுப்பு, பிரச் சினைகள் ஆராய்கிற - வரைய றுப்புக்கு அடங்கும் முறையி லேயே என் கருத்துக்கள் அமை கின்றன? என்று கூறிய கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவா
தொகுத்து தந்த பார்வையா
smrti u Grófőwдњеir: s
% பொருளாதாரப் பிரச்சினை இது, 'தமிழர்களின் உலோ பித்தனம்" என வருணிக்கப்பட் டாலுங்கூட, கலாசார ஈடுபாட். டளவில் எம்மவர் உலோபிக ளில்லை என்பதால், இதை ஒரு பிரச்சினையென்றும், இதனுல் நாடக வளர்ச்சி பாதிக்கப் படு கிறதென்றுங் கூறமுடியாது.
X நேரப்பிரச்சினை - ஈழத்துத் தமிழ்ப் பார்வையாளர்க ளில் ஏறத்தாழ ஐம்பது வீதத் தினர் படிக்கும் இளைஞர்கள் அடுத் த இருபத் தைந்து வீதத்தினர் கலை நிகழ்ச் சிகளில் ஈடுபட இயலாத முதி யோர் எனலாம். எஞ்சிய இரு பத்தைந்து வீதத்தினரிலும் கணிசமானவர்கள், Lח מr &ע நேரத்திலும் சொந்த வேலைக ளுடன் மல்லாடுபவர்கள். பகல், பின்னிரவு படக்காட்சிகள் இதை உணர்த்தும்,
x மண்டப வசதியீனங்கள் - செளகரியமற்ற, மூட்டைப்

பூச்சிகள் நிரம்பிய கரடுமுரடான இருக்கைகள், சுற்றுப்புற சூழ் நிலைகளாலும் பண்பாடற்ற சில பார்வையாளர்களாலும் உரு வாகும் அமைதியற்ற சூழ்நிலை, நவீன சாதனங்களின்மை ஆகிய குறைபாடுகள்.
YA
"தயாரிப்பாளர் வளர்ச்சி யின்மையும், Lfrfiebeau T6Tri வளர்ச்சியின்மையுமே இன்றைய பார்வையாளர் பிரச்சினைகள்" என்ற தளத்தில் நின்று பேசிய திரு. கே. எஸ். சிவகுமாரன்.
கொழும்பில் தமிழ் நாட கித்துறை வளர்ச்சியடைந்து வந்தாலுங்கூட, நல்ல நாடகங் asărsill - Giorre Lorrar Irrt-esă களே அதிகம் மேடையேறுகின்
றன. இவற்றை மேடையேற்று
வோர் பல்வகைக் காரணங்க ளுக்காகச் செயலில் இறங்கு கின்றனர். இதற்கேற்ப, அவர் கள் பாமர ரஞ்சகத்தன்மை மிகுந்து காணப்படுகிருர்கள். அடிப்படை அம்சங்களே இல் லாமல், புத்தி--ரசனைக்கூர்மை நிரம்பிய Luntrit6oo6uuurr 6Tri 35 Gir மத்தியில் இம்மாதிரி நாடகங் களை மேடையேற்றத் துணிவது புத்திசாலித்தனமல்ல. மேடை யில் அநுசரிக்கப்பட வேண்டிய சில வரன்முறைகளை மீறும் விதத்தில் நாடகங்கள் பல அமைவதால் பார்வையாளர் களால் அவற்றை அநுபவிக்க முடிவதில்லே. "நாங்கள் போடு வதைப் பார்’ எ ன் ற நிலை நல்லதல்ல.
பார்வையாளர்களுக்கும், தயா ரிப்பாளர்களுக்கும் இடையில் உள்ள நீண்ட இடைவெளியும் பார்வையாளர்களுக்குப் பிரச்சி
னையாக அமைகிறது. இதைத் தீர்ப்பதற்கு நாம் கலைபற்றிய சில கோட்பாடுகளைத் தெளி வாக்கிக் கொள்ளல் வேண்டும். பரிசோதனையாகவும், தற்கருத்
துள்ளவையாகவும் நாடகங்களை
மேடையேற்றப் பலர் முன்வரா ததற்கு முக்கிய காரணம், பாது மக்களின் ஆதரவின் மையே. தென்னிந்தியத் திரைப் படங்கள், காலத்தின்போக்கை உணரத்தவறுபவர்கள், பழை. மைவாதிகள் - போன்ற சில செல்வாக்கு மிகுந்த சக்திகள் தமிழ் மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தி; இலட்சியவாத, கற் பளுவயப் போக்குகளை தம்மி டையே புகுத்தி வருகின்றன. மேடையேற்றும் முறையில் முன்னேற்றமும், நாடக இயல்பு பற்றிய தெளிந்த அறிவு ம், தமிழ் நாடகத்துறையினருக்கு வேண்டியதாக உள்ளன என்ருர்,
女
திரு. ஆ. சிவனேசச் செல் வன் பேசியதாவது: இன்றைய பார்வையாளர்களை இருவகை யாகப் பகுத்து நோக்கலாம். பொழுதுபோக்கிற்காகப் பார்ப் பவரே பெரும்பான்மையினரா கவும், கலையம்சங்களுக்காகப் Lurrri uLu Gurit 556řir 5 sólů. S L L Golf வினராயும் இருக்கிருர்கள். திற ஞய்வு மனேநிலையுடனும், சமூக சிந்தனைகளுடனும் வளர்ந்து வ ரு கிற பார்வையாளரைப் புரிந்துகொள்ள முடியாத கலை ஞர்கள் தோல்வி போகிருரர்கள்.
காலை ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகி, ஏறத்தாழ ஒன் றரை மணிவரை நடைபெற்ற இக் கருத்தரங்கு, திரு. கல்யாண் சுந்தரேசன் அவர்களின் நன்றி யுரையுடன் முடிவுற்றது.

Page 24
செய்தி
பூஞ்சோலை எழுத்தாளர் மன்ற
ஈராண்டு
நிறைவு விழா
முல்லை வீரக்குட்டி
கடந்த 13-8-72 அன்று பாலமுனை அல் - ஹிதாயா வித் தியாலயத்தில் பூஞ்சேலை எழுத் தாளர் மன்றத்தின் ஈராண்டு நிறைவுவிழா நடைபெற்றது. மன்றத் தலைவர் கவிஞர். அன்பு டீன் அவர்களது வரவேற்புரை யுடன் விழா ஆரம்பமானது.
முதலில் இடம்பெற்ற கருத் தரங்கிற்கு அக்கரைப்பற்றுப் பிரிவுக் காரியாதிகாரி திரு. ஜெயரெத்தினம் தலைமை வகித் தார். கவிஞர். ஏ. இக்பால் அவர்கள் ‘இலக்கியம் யாருக் காக" என்ற பொருள்பற்றியும்; எழுத்தாளர் இளங்கீரன் அவர் கள் "சமூக வளர்ச்சியில் இலக் கியத்தின் பங்கு" என்ற பொருள் பற்றியும் உரை நிகழ்த்தினர்
GT.
அடுத்து இடம்பெற்ற கவி தை அரங்கிற்கு மருதூர்க்கனி அவர்கள் தலைமை வகித்தார். "எழடா, எழடா, எழு" என்ற தலைப்பில் கவிஞர்கள் கல்முனைப் பூபால், மு ல் லை வீரக்குட்டி, ஜெளபர் மெளளான, எஸ். குணம், புன்னகை வேந்தன்,
பாலமுனை ஆத ம் ஆகியோர் '
கவிதை வாசித்தனர்.
N உரை அரங்கிற்குத் தலைமை வகித்த திரு. ஜெய ரெத்தினம் அவர்கள் கருத்தரங்கத் தலைப்
44.
புக்களைப் பற்றியும்; அத் தலைப் புக்களில் அடங்கியுள்ள கருத் துக்கள் பற்றியும் சுருக்கமாக வும், தெளிவாகவும் எடுத்துக் கூறினர். இலக்கியம் மக்களுக் காகவே என்ற தீர் க் க ம | ன முடிவை அவரது தலைமையுரை வெளிப்படையாகவே உணர்த் தியது.
"இலக்கியம் யாருக்காக?" என்ற தலைப்பில் உரை வழங்கிய கவிஞர். ஏ. இக்பால் அவர்க ளது உரை மிக ஆழமான கருத் தோட்டங்களைக் கொண்டதாக இருந்தது. சமுதாயமும் - கலை இலக்கியமும் எப்பொழுதுதோன் றியதோ அப்போதிருந்தே இலக் கியம் யாருக்காக? என்ற சர்ச் சையும் பிறந்துள்ளது. அதன் முடிவாக ஆக்கும் கர்த்தாவி ஞல் எழுதாமல் இருக்க முடி யாது என்பது; ஆத்ம திருப்திக் காக: ச மூ க வளர்ச்சிக்காக; உண்மையைச் சுட்டிக்காட்டுவ தற்காக பொழுது போக்குக் காக மககளுககாக என்பன போன்ற பல காரணங்கள் கூறப் பட்டு வந்தன. ஆணுல், இது வரை இந்தச் சர்ச்சை முற்றுப் பெருமல் இருப்பதற்குக்காரணம் திருப்தியற்ற முடிவுகளே இது வரை பெறப்பட்டுள்ளன என் பதை இக்பால் தெளிவாக எடுத்
துக் கூறினர்

மனிதனுடைய அபிலாசை கள், விருப்பு வெறுப்புக்கள் என்பவற்றை எது எடுத்துக்கூறி கின்றதோ அதுதான் இலக்கியம் எனக்கூறி நூ ல் க ள்இலக்கியமா? என்ற கேள்வியைப் போட்டு திருக்குர்ரானும் இலக்
கியமே என்ற முடிவுக்கு வந்தார்
இக்பால், இலக்கியத்தின் முத லாவது ரசிகன் அந்த இலக்கி யத்தைப் ப  ைட த் த வ னே! எனவே இலக்கியம் முதலாவ தாக அதைப் படைத்தவனுக்கே என்று கூறிய இக்பால் ஈற்றில் இலட்சிய நோக்கு உள்ள புத்தி ஜீவிகளை உருவாக்குவதற்கே இலக்கியம் பணிபுரிகிறது என்று கூறிமுடித்தார்.
அடுத்து "சமூக வளர்ச்சி யில் இலக்கியத்தின் பங் கு" என்ற பொருள்பற்றி எழுத்தா
ளர் இளங்கீரன் உரை வழங்கி ஞர். இன்றைய எழுத்து சமூ கத்தின் உந்துசக்தி என்ற தெளி வான முடிவோடு அவர் தனது உரையை ஆரம்பித்தார். தனி மனிதன் - சமூகம் - மாறுதல் கள் ஆகிய மூன்று விஷயங்களை யும் இளங்கீரன் தெளிவாக எடுத்து விளக்கினர். மனிதனு டைய சிந்தனை ஒரு குறிப்பிட்ட அளவொடு நின்றுவிடுவதில்லை. அது வளர்கிறது! அதேபோல மனித வாழ் வு ம் மாற்றம் அடைந்து கொண்டே செல்கி றது. சமுதாயத்தினை உருவாக்
குகின்றவர்கள் மக்கள் என்று
பேசிக்கொண்டு சென்ற இளங் கீரன் எழுத்தாளனுக்கு எழுத வேண்டும் என்ற உறுத் த ல் உணர்ச்சி ஏற்படுவதை எடுத் துக்கூறி, அந்த உறு த் த ல் உணர்ச்சிக்கு யார் மூலப் பொ ருள் என்று கேட்டார்?
எழுத்தாளன் தன க் குத் தேவையான மூலப்ப்ொருளை
(கருவை) சமுதாயத்திடையே இருந்து பெறுகிருன். பின்பு அ த னை ச் சமுதாயத்திற்காக எழுதிக் கொடுக்கிருன், மக்களுக் காக எழுத்தாளன் எழுதும் போதும் அவனுக்கு ஒரு ஆத்ம
திருப்தி ஏற்படத்தான் செய்கி
றது. ஒவ்வொரு படைப்பிலும் உள்ள சமுதாயத் தன்மை ஒவ் வொருவரையும் பாதிக்கிறது. சமுதாய உணர்வு கலைப்படைப் பில் இருப்பதனல் அது சமுதா யத்தில் தாக்கத்தினை ஏற்படுத் துகின்றது. இவ்வாறு சமூக வளர்ச்சியில் இலக்கியம் ஆதி காலத்திலிருந்து இன்றுவரை தனதுபணியை ஆற்றிக்கொண்டு வந்திருக்கின்றது. இ வ் வா று தனது நீண்ட கருத்துரையை முடிவுக்குக் கொண்டுவந்த இளங் கீரன் "உலக மாற்றத்தில் ஈடு படாமல் எழுத்தாளன் கையை யும், காலையும் கட்டிக்கொண் டும்; தனக்குள்ளே ஒரு உலகத் தைச் சிருஷ்டித்துக் கொண்டும்; இருக்கமுடியாது! எழுத்தாளன் உணர்ச்சி பூர்வமான ஊது குழல்" என்று முடித்தார்.
அடுத்து இடம்பெற்ற கவி தை அரங்கில் எதிர்கால மாறு தல்களுக்கான வலுவான அடித் தளம் கவிஞர்களின் உணர்வில் விழுந்திருப்பதனை உணரக் கூடி யதாக இருந்தது. வக்கரித்துப் போன சமுதாய ஒட்டை ஒடி சல்களை கருவாக்கிப் படைக்கப் பட்ட கவிதைகள் பல வாசிக்கப் பட்டன. புதுயுகம் படைக்கப் புறப்பட்ட இளங் கவிஞர்களது
ஆழமான சமுதாயப் பார்வை
கவிதைகளில் பிரதிபலித்தன. தலைவர் மருதூர்க்கனி தனது கவிதைகள் சிலவற்றை வாசித்து இளங் குரல்களுக்கு வலுவூட்டி ஞர். பார்வையாளர்கள் கவிதை அரங்கினை மிக நன்ருகச் சுவைத் திருந்தமை மகிழ்ச்சியை தந்தது
d

Page 25
حسبرہے۔حیرمحمد حسبری حبسم ஜாலம்
ཕཛའགལ་ལ་》 aveys/voy
சிறுகதை
கவிதா
AqALLLAALLLLLAALMLLALALSLAMLLALASLLALALALAiMqALAMALAMAMALALMALALALMLALALAqLLLAALLLLLAL AMALLSLLLAqALLAAAAALLAAAALML
(UPரளி "விசுக்" என உள்ளே நுழைந்தான். வாசித்துக் கொண்டிருந்தாள். பார்க்கையில், "நவீன மாகளின் ஒன்றில் வந்த "மொடேர்ண் ஆர்ட்" அட்டைபோல இருக்கி றதே" ஹாலைக் கடந்தான்.
காலடி ஒ  ைசயி லி ரு ந் து அவன் வருகையைத் தெரிந்து கொண்ட பிரபா அறைக்குள் இருந்தபடியே கேட் டா ள். "அண்ணு! நேற்று என்ர பிள வுஸ் டெயிலரிடம் வாங்கிவந் தீங்களோ??
"ஓஹோ மறந்துபோய்விட் டது; இவளுக்குப் பதில்சொல்லி மாளாது"
நேரே சமையல் அறையை நோக்கி விரைந்து போனன். அம்மா அங்கே இல்லை; அப்ப டியே பின்புறக் கதவால் வெளி யேபோய், கராஜைச் சுற்றிக்
கொண்டு மறு படி முன்புறம்
வந்து, "கேட் டைத் தாண்டி வெளியேறினன்.
வாய்க்குள்ளே யாரையோ சபித்துக்கொண்டே போனன். பிரபாவை இல்லை; யாரை என்று அவனுக்கே தெரியவில்லை.
இன்று காரியாலயத்துக்கு இல்லை. ஆயினும்
தமயந்தி வீணை
என எண்ணிக்கொண்டு '
அதே வழி.
அதே நேரம்,
சந்தியைத் தாண்டி நேரே நடக்கையில், பிறிஸ்டல் சிக ரெட் 'வான்' அவனைத் தாண் டிச் சென்றது; இ  ைற ச் சி க் கடைக்கு கொன்ற உடலைச் சுமந்து செல்கிற "லாரி முன்னே போய்க்கொண்டிருக்கிறது; அதி லிருந்து சொட்டுச் சொட்டாய் இரத்தம் வீதியில் ஒழுகுகிறது. மூலையில் இருக்கிற "ஃபட்டரி" யில் வேலைசெய்கிற இளம் பெண் கள் இரைந்துகொண்டே விரைந் துநடக்கிருர்கள்
அவன் சலிப்புற்றன்.
பாதையை மாற்றிக் கொள் ளலாமா என்று நினைக்கையில், ஒரு பிரேத ஊர்வலம் எதிரே வந்துகொண்டிருப்பது தெரிகி д) 51
நேரே நடந்தான்.
போதை ஏறியவர் ஒருவர் "நாமார்க்கும் குடி ய ல் லே ம்" என்று உரக்கப் பிரகடனம் செய் துகொண்டு வந்தார். வேஷ்டி யின் கீழ்க்கரை நுனி வலது கையில் இடதுகை வீசி வருகி றது; நிமிர்ந்த நன்னடை!
அவர் பின்னே இன்னேரு வர். இவர் குரலுக்கிடையில்
அவரும் சில சமயம் சேர்ந்து
G காள்கிருர்,

*றேமன்ட்" கறுப்புக் கார் ஒன்று ஊ ர் ந் து வருகிறது.
காரின் பின்னுல் ஒருவர் உறி
மாதிரி சிறிய ஊஞ்ர்லில் ஒரு சட்டியில் எதையோ எடுத்துப் போனுர், அதை அவர் “ஹான்ட் பாக் மாதிரி ஆட்டிக்கொண்டே போளுர்,
"இறந்து போனவருக்குத் தருமக் கொள்ளி! முரளியின் வியப்புற்ற முகத்தைப் பார்த்து ஒருவர் தலையாட்டிக் கொண்டே சொல்லிப் போனர்.
உயிரை விட்ட அ நா  ைத ப் பினம்"
ஆணு? பெண்ணு? என்ன வருத்தம்? உற்ருர் உறவினர் யாருமே கிடையாதா?
அருகே வந்து கா  ைர க் கடக்கையில் உள்ளே பார்த் தான். மூடப்பட்ட பிரேதப் பெட்டி!
மனதில் அநுதாபம் எதுவும் சுரக்கிறமாதிரி இல்லை;
"பரவாயில்லை; வாழ்கிறதுக் குச் சாவது எவ்வளவோ மேல் தான்!” WM
திடீரென்று பெரிது பெரி தாய் மழைத்துாற்றல்விழ ஆரம் பிக்கிறது.
காசுக்குத் தேவாரம் பாடி யவர்கள் நடையைத் துரிதப் படுத்துகிருர்கள்.
கொஞ்ச நேரத்தில் மறுபடி
வெய்யில்,
‘என்ன மழை இது?*
டெய்லரின் க  ைட க் குப் போகிற உத்தேசம் எதுவும்
இல்லை. சேரும் இடம் குறிப் பாய் எது என்றும் இல்லை
நடை. தந்திக் கம்பத்தின் ஒடுங்கிய நீண்ட நிழலில் இரண்டு பறவை கள் ஒன்றன்பின் ஒன்ருய் உட் கார்ந்திருாகின்றன. என்ன பற வைகள் இ  ைவ, பிர வுண் நிறத்தில்?
முன்னே இருப்பது மற்ற தைத் திரும் பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எதற்கோ காத்திருக்கிறமாதிரி.
"நான் போனபிறகு அவை முத்தமிட்டுக்கொள்ளப் போகின் றன."
ஒ. அவைதான் பறவை கள் ஆச்சே!
i *ஃபிறீ லவ்" * காத்திருப்பானேன்? இப்
போ என் எதிரிலேகூட..
"த்சொ? இந்த மனிதர்கள் தான்...!"
சுஜி என் அருகே அவ்வளவு நெருக்கத்தில் இருந்தாள்.
படம் பார்க்க வேண்டும் என்று யாருக்கு இருந்தது?
சத்தியமாய் தி  ைர ஒரே வெள்ளை! ர ஒ
சுஜி கன்னத்தோடு கொஞ் சும் ரோஜாவும் அதுவுமாய்.) எனக்குக் கதைக்கிற "மூ"டோ, கதை கேட்கிற "மூ"டோ இல்லை. அவ தன்பாட்டுக்குச் சொல் லிக் கொண்டிருந்தா.
"இருவருமாக "நோ ர்த்? இன்டியாவுக்குப் போக வேண்டு
17

Page 26
மாம்; தாஜ்மகால் பார்க்க வேண் டுமாம்; குதுப்மினர் உச்சிக்கு ஏறவேண்டுமாம்; யமுனைக் கரை யில் உலாவவேண்டுமாம்; காஷ் மீர் ஏரியில் படகுவீட்டில்.
*ச்சை! நீ த னி யா ய் ப் போய்ப் பார்த்துக்கொள்" என்று எரிச்சலோடு சொன்னேன்.
அவள் அதன்பிறகு பேச்சை நிறுத்திவிட்டாள்.
மனம் நொந்துபோய் இருப் பாளாய் இருக்கும்.
ஆனல் காட்டிக் கொள்ள் I DTL Lur Gir.
கண்ணில் துளிநீர் தேங்கிப் பார்த்ததில்லை.
சரியான மண்டைக் கர்வம்.
பொம்மை போல இருந் தாள்.
கொஞ்சம் இருந்து விட்டு, கோபத்தின் சாயலே இல்லாமல் பேசுவாள் - ஏ தோ உல்கத் தையே உத்தாரணம் செய்யப் பிறந்தவ மாதிரித்தான்!
"இந்தக் கர்வம் என் கால டியில் கிடக்குமானல் எவ்வளவு இன்ரறஸ்டிங்?"
"காமெலா' வைப் பற்றி இவளுக்குத் தெரியாது. சில சம யங்களில் அவளைப்பற்றி இவ ளுக்குச் சொல்லி இவள் சரிந்து
விழுவதைப் பார்க்க வேண்டும்
என்றும் இருக்கும்.
தான்.
அவளை விட்டுவிட வேண் டும் என்று எனக்குத் தோன்றிப் போனதற்குக் காரணமே அவள் எனக்கு மிக நெருங்கி வந்து விட்டதுதான்,
48
சுஜிக்கு முன்னே அவள்
என் "பெர்சனலிட்டியே அப் படி "வெரி கலன்ற்
சு ஜியோ
எனக்கொரு சவால்.
சுஜியை இந்த அளவுக்குக் கொண்டுவர நான் நிறைய வாக் குறுதிகள் கொடுக்க வேண்டியி ருந்தது. நான் யாருக்கும் வாக் குறு தி க ள் கொடுத்ததில்லை. காமெலா. அவளுக்கு முன்னே ராணி, அவளுக்கு முன்னே..
வாக்குறுதி கொடுத்தால் கட்டாயம் காப்பாற்ற வேண் டும் வாக்குறுதி கொடுக்காமலே வெல்லத் தெரியாமைக்குத் தண் டனையாக
எத்தனையோ கெட்ட பழக் க ங் க ள் என்னிடமிருப்பதை இவள் அறிவாள்; ஆயினும் நான் பொய் சொல்ல மாட் டேன் என்பதை நம்பினுள்,
இது உண்மைதான்.
சில உண்மைகளைச் சொல் லாமல் - சொல்ல நேராமல் - பா ர் த் து க் கொண்டதுண்டு.
பொய் சொன்னதில்லை.
ஏன் சொல்ல வேண்டும்?
酸 சுஜி வெறுத்து விட்டால் பெண்களா இல்லை?.
புது டைப்பிஸ்ட் "விலானி" ஜோராய் இருக்கிருள். "இருக் கட்டுமே" என்கிறது ஒருமனம்
உண்மையில், இவளோடு பழகத் தொடங்கி மூன்று வரு டங்கள் ஆகின்றன. யா ரு ம் இவ்வளவு காலம் நிலைத்ததில்லை.
இன்னும், இவளைப் பெற முடியவில்லை என்பதால்தானே
என்னவோ, இழக்கவும் முடிய வில்லை!

சுஜி என்னைக் காதலிக்கிருள் தான என்று இருந்திருந்தாற் போல் சந்தேகம் எழும்.
ஒருநாள் சுஜி கேட்டாள்"பாரதியார் எழுதிய பாம்புக ளின் கதை தெரியுமோ” என்று.
பிறகு தானே சொன்னுள். "இரண்டு பாம்புகளும் சண்டை யிட்டுக்கொண்டன.
"நான் உன்னை வெறுக்கி றேன்.
நா ன் உன்னைப் பகைக்கி றேன்.
நான் உன்னைக் கொல்லப் போகிறேன்.
நான் உன்னைக் கொல்லப்
போகிறேன்?
இரண்டும் ஒன்றை ஒன்று கடித்துக் கொண்டு இறந்துவிட் டன.
"சரி; தெரிகிறது. விஷயத் துக்கு வா"
இரண்டு அறிவு ஜீவிகள்
தாம்பத்தியத்தில் ஒன்று சேர்ந்
தால் இவ ற்  ைற ப் போலத் தாஞே...?"
8 - 8 9 a U a
"ஒரு அனுபவத்துக்காகவே குடிப்பதாய் நீங்கள் சொல்லு கிறீர்கள். பிறகு விட்டுவிடுவீர் கள். ஒரு அனுபவத்துக்காகவே நானும் காதலிக்கிறேன்-விட்டு விடுவேன். உங்கள் வாக்குறுதி களைக் காப்பாற்றுங்கள் என்று நான் கேட்கவில்லை - மறந்து விடுங்கள். அதுவே உங்களுக்கும் செளகரியம்"
நான் நிமிர்ந்து பார்க்கை யில், கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சிரிக்கிருள்
பழிகாரி பகிடிபோல் சொல் வதெல்லாம் நிஜங்கள் தானே?
எனக்கு அவள் குரல்வளை யை நெரித்துக் கொன்று விட லாம் என்றிருந்தது.
பதிலாய் என் கைகளை அவள் தோளுக்கு மேலாய்ச் சேர்த்து அவளை என்னுடன் அணைத்துக் கொண்டேன்.
அவள் திணறினுள்
என் கைகளைத் தளர்த்தி விட்டு அவள் சொன்னுள் "எனக்
குள்ளே ஒரு தபஸ்வினி இருக் கிருள். எதன் மீதும் பற்றில்லை.
பொருட்கள் விஷயங்கள் எல்
லாம் விரைவாகச் சலித்து விடு கின்றன. எனக்கு என்மீதே பயமாய் இருக்கு - பைத்திய மாய்ப் போய்விடுவேனே என்று எதையாவது தீவிரமாக விரும்பி - ஆசைப்பட்டு, இந்த உலகத் தோடு ஒட்டிக் கொள்ள வேண் டும் போலத் த விக் கி றே ன். உங்களுக்கு விளங்குதா?
நான் சுஜியை உ ற் று ப் பார்த்தேன்.
இ  ைவ சுஜி சொல்கிற வார்த்தைகளா?--
எனக்குள்ளே இருப்பவை.
இவள் மந்திரக் காரியா?
எ ன் ன
இவள் எனக்குள்ளே புகுந் திருக்கிருளா? நேற்று ஒரு கால் வினடியிலும் பாதி விஞடியில், உணர்ச்சி வசமாய் நான் அந் தக் கேள்வியைக் கேட்டேன்
* சுஜி, நானேதான் நீயா? நீயே நாளுே?" என்னுடைய உணர்ச்சிப்போதை சிதற அவள் என்னிலிருந்து பிரிந்தாள்.
49

Page 27
சிரித்துக்கொண்டே ‘நீங்கள் நீங்கள்தான்-நான் நான்தான். இதோ, இந்தக் குறிப்பிட்ட பா ட் டை க் கேட்கிறபோது எனக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் மீட், கிறீன் கலர் மாஷ்மெலோஸ் , கைமுறிந்த பத்துவயசுப் பையன் எல்லாம் ஞாபகத்துக்கு வருகின் றன. உங்களுக்கும் அப்படியா? எவ்வளவுதான் காதலித்தாலும் இணைந்துவிட வேண் டு மா? தவியாய்த் தவித்தாலும், இந்த உலகில், தனியாய்ப் பிறப்பிக்கப் படுகிற ஜீவன் ஒன்று எப்பவும் தனியே தனிதான். இல்லையா?*
ஆமோதிப்பு Gპouლფ? எனக்குத் தாங்கவில்லை.
* சுஜீ; நீ என்னை நேசிக்க
வில்லை"
வெறியோடு கத்தினேன். *என்ன விரும்புகிறீர்கள்? நேசிக்கவேண்டுமா?"
*இது ஒரு பெண் கேட்கிற கேள்வியா?"
"ஒ என்ன கேட்பார்கள் 1656 கடைசிவரை கை விட்டு விடாதீர்கள் எ ன் று கேட்பார்கள். அதுவும் கடைசி யில்தான் கேட்பார்கள். கை
விட்டு விடுவீர்கள். நிஜமாய்ச் சொல்லுங்கள் மது, எல். எஸ். டி. மாத்திரை, மாரிஜுவான
பெண், எல்லாவற்றுக்குமே ஒரே அர்த்தம்தான உங்கள் அகரா தியில்??
"ஓ! திஸ் இஸ் டூ மச் சுஜி
விலகுகிருள்!" உணர்ச்சியில்
என் முழு மேனியும் ஆடுகிறது. "இவள். இவளை ...
அப்படியே..."
O
அவள் பட்டுேேபான்ற உச் சியில் என்அதரங்கள் அழுந்தின.
சுஜி உதறினுள்?
என்னையும் ஒருத்தி உதறு கிருள்...!"
எனக்கு ஆவேசம் உண்டா யிற்று.
அவள் உச்சியில் சற்றுந் பலமாகவே அடித்தேன்.
சுஜீ! என்னை நம்பு. அப்பா இறந்துபோய் இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. ஆனமறு நாளே நம் கல்யாணம் நடக்கும் இது சத்தியம்’
இதுவரை யாருக்கும் செய்
யாதது
சுஜிக்கும் கூட.
அவள் இமைகளை மலர்த்தி மெதுவாகப் புன்னகைத்தாள்
அதில், ஆயிரம் மலர்களின் விஹளிதம்.
நான்நடுங்கினேன்!
நிதர்சனம்
அவன் தந்தை உழைத்த உழைப்பெல்லாம்
அவன் படிப்பாய்க் கரைய படித்தபின் அவன் வேலையின்றி உயிரை மாய்த்தான்.
 ைதேவன் ரெங்கன்

பழைய நினைவுச் செய்திகள்
கிப்பல் ஏறித் தமிழ் நாட் டிற்குச் சென்ற நான், ராமேஸ் வரத்தில் ரயில் ஏறி மதுரைக் குச் சென்றடைந்த பொழுது நன்ருக விடிந்து விட்டது.
கப்பலில் ஒரு தாயும் அவ ரது மகளும் எனக்கு அறிமுக மானர்கள். அவர்கள் கொழும் புக் கொக்சிக் கடைப்பகுதியைச் சேர்ந்தவர்கள். அறிமுகமாகிய அவர்கள் தாங்கள் இருவரும் தான் ஊருக்குப் போவதாக வும் வேறு ஆண் துணை இல்லை எனவும், நீண்ட காலத்திற்கு முன்னர் தமிழ் நாடு போனதா கவும் அப்புறம் இப்போதுதான் போவதாகவும் சொன்னர்கள். முடிவில் முடியுமானல் தங்க ளுக்கு என்ஞல் உதவி செய்ய முடியுமா? எனவும் கேட்டார் கள். m
அவர்கள் கிராமம் மதுரைக் குச் சமீபமாகவுள்ள குயவர் பாளையம் எனக் கே ட் டு த் தெரிந்து கொண்டேன்:
மதுரை ரெயில் நிலையத்தை
விட்டு வெளியே வந்ததும் ஒரே கும்பல் எம்மை மொய்த்துவிட் டது. ‘சாமி. சாமி சார் . சார். கூலி வேணுங்களா? . ஜட்ஹா கொண்டாந்துடறேன் C2 arr Ganu frain sorrint?” 6 report's Lyeaucoub எம்மைச் சுற்றிப் பிடித்து விட் all-nrif as dlws
இருறித்தீவி
* G6nu eisiart - Pr un a'i llunr!” 6'r Gâr y அதட்டும் குரலில் அவர்களே மறுதலித்துதுவிட்டு, சிறி து
நேரம் நாங்கள் அங்கே தாம தித்து நின்று கொண்டிருந் தோம்.
நம்மைச் சுற்றிக் கூட்டம் போட்டவர்கள் ஒருவர் ஒருவ
ராக நழுவி, மற்றைய பிரயா கிைகன் "மொய்க்கப் போ ய் விட்டனர்.
ஒரு பையன் - சுமார் பன் னிரண்டு வயதிருக்கும். அவனது அந்தச் சுடர் விடும் கருவிழிகளே இப்போதும் நான் ஞாபகத்தில் வைத்திருக்கின்றேன் - அவன் சுழன்று சுழன்று என்னையே Gauf) - rresir. “IF Trif... &F nrrif... நான் சுமந்துகிட்டு வர்றேன் சார். ஏதோ குடுக்குறதைக் குடுங்க... . ” arrow L Luis nr Luforras என்னைப் பார்த்து இர த் து வேண்டினுன் ,
அவன் போகும் வழியாக வும் காணவில்லை.
நான் ஜட்ஹா ஒன்றைப் பேசி என்னுடன் வந்த சக பிர யாணிகள் இருவரையும் அனுப் பும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டேன்.
"Frrff. Frt fr., folkes ertis போகணும்? ஊருக்குப் புதுசா நீங்க? நல்ல ஹோட்டல் காட் qGpair arrit”
5.

Page 28
இல்லேப்பா, நான் தட ராஜ லாட்ஜில் ரூம் எடுத்திருச் கிறேன். அங்கேதான் தங்கி றேன்" என்று சொன்னேன்.
முன்னரே ஒரு நண்பரின் உதவியால் ரவுண் ஹால் ரோட் டிலுள்ள அந்த ஹோட்டலில் ரூம் ஏற்பாடு செய்து வைத் துள்ளதால் தா ன் அப்படிச் சொல்லி வைத்தேன்,
பின்னர் அப் பெண்கள் இரு
வரையும் ஐ ட் ஹா ஏற்றி அனுப்பிவிட்டு, ஒரு பெரிய
பாரம் நீங்கிய மனநிறைவுடன் திரும்பிப் பார்த்தேன்.
எனது சாமான்ள்ை ஒன்றை யுமே காணவில்லை!
அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா போன்ற அதிர்ச்சி கலந்த வெறுமை என்னை உலுப் பியது ஒரு கணம்.
கற்று முற்றும் ஒடித்திரிந்து UnrłASG3sir. 2GT mpÚDuh , !
எடுத்த கள்ளன் ‘என்னையே எதிரிபார்த்துக் காத்துக்கொண் டிருப்பானு என்ன?
L unreauGB mr fil ', G2 gf nr iib u ரூபாய்கள் மாத்திரம் நான் கையில் வைத்திருந்த கைப்
பையில் இருந்தனவே தவிர, மற்றச் சகலதும் பறிபோன நிலயில் ஒரு அந்நிய நாட்டின் ரெயில் நிலையத்தில் நான் தன் னர் தனியாக நின்றேன்.
அத்தனையும்- அத்தனையும்.
- இனி என்ன செய்வது? துதான் என்னை நிறைத்துள்ள assiraí.
ஹோட்டலுக்குப் போய் அமைதியாக இருத்து முடிவு செய்யலாம் என்ற நோக்கத் L-Giv g-prrrggrr Gavint 600g அடைத்தேன். படிகளில் கால் வைத்தேன். நிமிர்ந்தேன்.
5.
'இன்ன சார் இவ்வளவு தேரம்? நான் அப்போ இருத்து இங்னே காத்துக் கொண்டிருக் கிறேனே!"
எனது பெட்டிகளை வைத் துக்கொண்டு காத்து நின்முன் Jaydő5 69 Lu Luleår.
"அப்பா. அப்பா. அது வார்த்தைகளுக்கு அடங்கும் உணர்வல்ல, சொற்களால் சொல்வதற்கு
சேலத்திலிருந்து பஸ்ஸில் மதுரைக்குச்சென்றேன், அடுத்த தடவை தமிழ்நாடு சென்ற பொழுது,
பிற்பகல் மதுரை வ GFffshGasciv. ந்து
பஸ் நிலையத்தில் பையன் கள் நாலைந்து பேர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். சார்.
Fmrti... Fint Ló)... y nr ... ...
பஸ்டிக்கியிலிருந்து சாமான் களக் கண்டக்டர் T எடுத்துக் கொடுத்தான். நான் எனது குட்கேசைப் பெறும் நோக்கத் துடன் குனிந்து சாமான்களே
அவதானித்துக் கொண்டிருந் தேன்.
இத்தச் சமயம் பார்த்து
அந்தக் கூட்டத்திலிருந்த கூலிப் பையன்களில் ஒருவன் எனது
பார்க்கர் போல் பொயின்ட் பேணுவை அடித்துவிட்டான்.
நீண்ட காலமாக நான் ஆசை யாக வைத்திருந்த நல்ல எழுத் துப் பேணு அது.
நிச்சயமாகத் தெரியும், இந் தப் பையன்களில் ஒருவன்தாள் அதை எடுத்திருப்பான்.
ஆளுல் யாரைக் கேட்பது? upraunru divay! அநுபவத் திற்கும் சில சமயங்களில் விலை கொடுத்துத்தானே ஆகவேண் (Slip

* திருவிழாக்கள்! * திருமண வைபவங்கள்!! * மங்கள வைபவங்கள்!!!
மற்றும் " எல்லாக் கொண்டாட்டங்களுக்கும்
ஜெயம் சவுண்ட் சேவீஸ் வடமாகாணத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் குறைந்த செலவில் நிறைந்த 3605 96ör LjIDSL6) Í56íT O O O O ஜெயம் சவுண்ட் சேவீஸ் 211, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்.
“கபிறி காமன்ஸ்”
142 2/2, சென் செபஸ்தியன் வீதி, கொழும்பு-12.
JLLLLLLLLGLLLLLLLLkLLLLcLLLGLLLLLLLL0LkLLLkLLL சிறுவர் உடைகள், சேட், பிளவுஸ், சூட் தயாரிப்பாளர்கள்
eLkLLkLkLkLkLLkkLkLkLLkkLkLkLkLkLkLkkkLLkLkLkLkOkkkkLkkLkLkLkLLkLLkLkLLkLkLHkke
வடமாகாண ஏக விநியோகஸ்தர்கள்
w O ராணி ஸ்டோர் 121, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்

Page 29
MALLIKA I
F_F-F=#FFFFFFFF_FFFF
*
Registered As a N
(IF (fie Lann
for fra vel/Erzg
Air SMWOOTH
-K CONMAH"Y
SPEED EASY
PURSE - EASY
LSammat Ekiala, ja-ela. c
Sole Distributors: E. B. 55, 57, Quadr Also Available At: STE
116, STEUART
FF_F_FFFF
பிே, சுஸ்துரியார் வீதி, யாழ்ப்பா
வெளியிடுபவருமான் டொமினிக் ஜீவா ருடன் யாழ்ப்பானம் பூங்கார்ச்சகத்
 

SEPTEMBER 1972 cwspaper in Ceylon
പ്ലേ
罩事 ο βεία NᎩᏟᏞᏌ .
Detta NᏙCᏆᏓᎫ
SMOOTH, COMFY, SPEED - EASY 61, p. h.
PURSE-EASY (111 m.p.g.)
POWER PACKED
Լիբl L'E Լիլը: | 50 cc Special II (o del
(Rs. 6.490'/
retta 150 c.c. ཟཟཟ ĚŘřLoN LTD SPECIAL
CREASY & Co., Ltd. St. COLOMBO 1, Tel. 21311
ART CREASY LTD.
LACE, COLOMBO, Tel. 26651.
fേ
SeSMSeSeSeASeASeSeSeSMeASeSMSASASeSqSMSMSASASeSMMSeASAS Tம் முகவரியில் வசிபவரும், ஆசிரியரும்
அவர்களுக்காக மின்னிாக சாதனங்க்
திரச்சியற்றப்பெற்றது.