கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2007.03

Page 1


Page 2
·
| ||
| –
s.|-|-
|-
-
Ալ:ԱյԱյ T
சுவாமி
 

----
|||×
| | - |:||

Page 3
50 வருடங்களுக்கு மே பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ஈர்த்த சுவாமி கெங்காதரானந்தா திருக்கோணமலையிலும், கொழு கொண்டாருகின்றனர். அண்ணாரை பிறந்து திருக்கோணமலை, யாழ்ப்பா மனித நேயர், மேதை சிவமாலன் மா
"கோடிப் பிரதிகளுக்கு மே பழக்கங்கள்” என்ற புத்தகத்தின் ஆ வழிகள் பற்றிக் கூறுகிறார். நீங்கள் கற்கிறோம் என்ற மனநிலையை வ என்கிறார். நீங்கள் கற்றவற்றை 48 முயற்சி எடுத்தால் உங்கள் கற்கும் தி
இதைவிட திருவள்ளுவர் கற்கக் கசடறக் கற்றப் நிற்க அதற்குத்தக
என்று கற்பதன் பயனைய சொல்லி உள்ளார். இவைகள் கற்ற 2007ம் ஆண்டின் 2வது அறிவு இதழ் சிறிது விரைவாகவே வெளிவந்திருக்க பொலிவுடன் இனிமேலும் ஆதரவும் எமது முழுமுயற்சியும் இரு
6lbs. BI. O26m-22222O7
2007
 

லாகத் திருக்கோணமலையில் வசித்து இன்னல்களைப் போக்கி ஆன்மீக நெறிக்கு சமாதியடைந்த பெப்ரவரி 16ந் திகதியை ழம்பிலும், லணிடனிலும் பல பக்தர்கள் நினைவுபடுத்தும் இம்மலரில் பெப்ரவரி 17ல் ணம், கொழும்பு மக்களுக்கும் தொண்டாற்றிய ஸ்டர் பற்றிய கட்டுரையும் இடம் பெறுகிறது.
ஸ் விற்பனையான" திறமையானோரின் ஏழு சிரியர் ஸ்டீபன் கொவைய் கற்பதற்கு சிறந்த கற்கும் போது பிறருக்குக் கற்பிப்பதற்காகக் |ளர்த்தால் ஆழமாக, சந்தேகமறக் கற்பீர்கள் மணித்தியாலங்களுக்குள் பிறருக்கு கற்பிக்க றன் விரிவடையும் எனச் சுட்டிக் காட்டுகிறார்.
(39)
பும் கற்கும் முறையையும் எமக்கு எடுத்துச் லைச்சிறப்புறச் செய்யும் வழிவகைகளிற்சில. தாமதித்து வெளிவந்தாலும் போன இதழைவிட கிறது.
அறிவு தாமதிக்காமல் வெளிவர உங்கள் 5க பிரார்த்திக்கிறோம்.
S.P. Transferships
ஆசிரிய குழுவிற்காக) 57, பிரதான விதி, திருக்கோணமைை.
அறிவு

Page 4
அறிவு “ARIVU”. KNOWLEDGE. சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை ஸ்தாபித வெளியீடு 41,கல்லூரிவிதி,திருக்கோணமலை,
Sandrasegarampillai Gnanambigai Establishment 41, College Street, Trincomalee
லபாருளடக்கம்
855D
1 (நீ அரவிந்தர் - பூரணயோக வினாவிடை 3
2. வாழ்நலம்பெற வாழும் வழி 6
3. தெரிந்தபெயர் தெரியாத விபரம் 3 4. 960LÜUL கட்டுரை சுவாமி கெங்காதரானந்தா 24 5. ஞான மண்டலம் 3 6. உலகில் மிகப்பெரிய தீவுகள் 34 7. தமிழ் இலக்கியம் 35 8. அருளும் நன்றியுரையும் 38 9. அப்பா ஒரு மதிப்பீடு 39 1O. GALILEO GiALLEI AO 1. நினைவில் நிற்பனை 43 12. எண்பத்தாறு வயதிலும் 46 13. இலங்கை ஆட்சியாளர்கள் 49 14. ஆசியாவின் எதிர்காலமாகிறது தமிழர்கள் 5O 15. (நீராமகிருஷ்ணரே நீங்கள் மீண்டும் வரவேண்டும். 5
Yoჯ38., N-- - - - எமதுஸ்தாபித காரணகர்த்தாக்கள்
திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை அவர்கட்கு அறிவு - 2007 - 2
இதழை சறப்பிக்கிறோம்
= 2 =
ela
 
 

நேர்மை
கேள்வி
ufi
கேள்வி
பதில்
2007 with سد 35 سه
முரீ அரவிந்தர்
பூரணயோக வினாவிடை
ஒரு சாதகன் தனது நேர்மையில் வளர்கிறானா இல்லையா என்பதை அறிவது எவ்வாறு?
அவன் தெய்வ சக்திகளுக்குமட்டும் இணங்குகிறானா அல்லது இன்னும் அகங்கார சக்திகளுக்கும் ஆசைகளுக்கும் இணங்கி அவற்றை ஏற்று, அவற்றிற்குத் தன்னுள் இடமளிக்கிறானா என்று பார்ப்பதனால்,
ஒரு சாதகனுக்கு முழு நேர்மை இருந்தால், அவனுடைய பக்தி குறையுடையதாக இருப்பினும் அவன் வேகமாக முன்னேற முடியும் என்பது
60.60)LDuT2
அவனிடம் நேர்மையிருந்தால் பக்தி கட்டாயம் இருந்தாகும். யோகத்தில் நேர்மை என்பதற்கு இறைவனுக்கு மட்டுமே இணங்குதல் என்று பொருள் பக்தியில்லாமல் அது முடியாது.
அதிமன உண்மையை அடையும்வரை இப்பாதையை விடாமல் பற்றிக்கொள்வதற்கு ஒருவனுக்கு இருக்க வேண்டிய சரியான உளப்பாங்கு எது? சைத்திய உணர்வுடனிருத்தல், நேர்மை, பூறி அன்னை பேரில் பக்தி, இவையே.
தனது பலவீனங்களை இறைவனிடமும், பிறரிடமும் ஒப்புக்கொள்ளுதல் நேர்மையின் அடையாளமா? பிறரிடம் எதற்கு? இறைவனிடம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
elsea

Page 5
கேள்வி ஆனால், ஒருவன் இன்னொருவனுக்கு ஏதேனும்
தீங்கு செய்துவிட்டால் அவனிடம் அதை ஒப்புக்கொள்ளுதல் அவசியமில்லையா? இறைவனிடம் மட்டும் ஒப்புக்கொண்டால் போதுமா?
பதில் பிறர் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தால்
GG&GFuuu6oT Lb.
கேள்வி பொய்மையின் சக்திகளால் தவறான வழிகளில்
இட்டுச் செல்லப்படாமலிருக்க சாதகர்கள் என்ன செய்ய வேண்டும்? uffs அவர்கள் எப்பொழுதும் நேர்மையுடனிருக்க வேண்டும்.
அதைப் பொறுத்ததுதான்.
கேள்வி : சாதகர்கள் எவ்வளவு காலம் கட்டுப்பாட்டுடன் வாழ
வேண்டும்?
பதில் சித்தியடையும் வரையிலாவது.
கேள்வி அவர்கள் முழு சித்தியடையும் வரை கட்டுப்பாடுடன்
வாழவேண்டும் என்பது இதன் பொருள்?
பதில் மனம்போன போக்கின்படியோ பிராண அகங்காரத்தின் படியோ நடக்க முயலாதிருக்கும் அளவிற்கு அடிப்படை சித்தி ஏற்படும்வரையாவது கட்டுப்பாடு தேவை.
கேள்வி அடிப்படைச் சித்தி என்றால் என்ன? இறைவனிடம்
முழுவதுமாகச் சரணடைந்து திவ்விய மாற்றம்
W (transformation) பூர்த்தியாகிவிட்டவர்களின் நிலையா? பதில் அது பூரண சித்தி. முற்றிலும் திவ்வியமாற்றம்
அடைந்துவிட்டால் பிறகு சாதனையே இல்லை.
நம்பிக்கை
கேள்வி “செயல் சக்தி கொண்ட நம்பிக்கை” என்றால் என்ன? எல்லா நம்பிக்கைளுமே செயல் சக்தி கொண்டவை அல்லவா?
2007 gi - . - 4 - அறிவு

us
கேள்வி
பதில்
சரணம்
கேள்வி
பதில்
கேள்வி
ufi
கேள்வி
பதில்
2007
SLS SSLLSSLGLLLSLLLSSSSLLLLSSSS S - 5 -
நம்பிக்கை தமோகுணம் கூடியதாயும் பயன்தராததாயும் இருக்கக்கூடும். உதாரணமாக “பூரி அன்னையே எல்லாவற்றையும் செய்வார் என நான் நம்புகிறேன். ஆகவே, நான் ஒன்றும் செய்யமாட்டேன். அவர் விரும்பியபோது என்னைத் திவ்விய மாற்றம் செய்வார்” இது செயல் சக்தி கொண்ட நம்பிக்கை அன்று செயலற்ற மந்த நம்பிக்கை.
சாதகர்களுக்கு முழு நம்பிக்கையும் சரணமும் ஏற்பட்ட பின்னரும், இறையருளால் உயர் அனுபவங்கள் ஏற்பட நீண்டகாலம் காத்திருக்க வேண்டுமோ?
நம்பிக்கையும் சரணமும் எல்லாப் பகுதிகளிலும் முழுமை பெற்றிருந்தால் அனுபவம் இல்லாதிருக்க (Մ5լգա III5].
சரணமின்றி ஜீவனைத் திவ்வியமாற்றம் செய்ய முடியுமா? சரணமின்றி ஜீவனின் முழுத் திவ்விய மாற்றம் இல்லை.
ஒரு சாதகனிடம் உண்மையான சரணம்எப்பொழுது தொடங்குகிறது? உண்மையான ஆத்ம சமர்ப்பணம் ஏற்படும் போது தொடங்குகிறது.
உண்மையான ஆத்மசமர்ப்பணம் செய்வது எங்கனம்? அகங்காரத்தையும் ஆசையையும் பின்பற்றாதிருப்பதால்: அகங்காரமும் ஆசையுமே சரணத்திற்குத் தடையாக உள்ளன.
theftgtggs
ea

Page 6
வாழ்வு நலம்லபற வாழும் வழி
குமாரசாமிசோமசுந்தரம்
நம் வாழ்வு சிறப்பதற்கு என்ன வழி என்று சிந்தித்த நம் ஆன்றோர்கள், எளிமையான வாழ்வு, உயர்வான நோக்கு,பரந்த மனப்பான்மை, அன்பு உள்ளம் என்னும் நான்கினையும் வாழ்க்கையில் பேணி வருபவர்கள் வாழ்வில் எல்லாவிதச் சிறப்புக்களையும் பெறுவர் என்று கூறியுள்ளார்கள்.
எளிய வாழ்வு
எளிய வாழ்வு என்பது ஆடம்பரமற்றதும், பிறருக்கு இடையூறுகளை விளைவிக்காததுமான வாழ்வு ஆகும். எளிமையான வாழ்க்கையை வாழ உறுதி பூண்டவர்கள் ஆசைகளுக்கு இடம் கொடுக்கமாட்டார்கள். எளிமையான வாழ்வு என்னும் போது தேவைகளைச் சுருக்கிக் கொள்வதோ அல்லது தம்மைப் பலவற்றாலும் ஒறுத்துக் கொள்ளுதலோ அல்ல. தேவைகள் வேறு; ஆசைகள் வேறு என்பதை இச்சந்தர்ப்பத்தில் அறிந்து கொள்ளுதல் நன்று. தேவைகள் மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை. தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியவை. தேவைகளைக் கட்டுப்படுத்துதலோ, ஒறுத்தலோ என்பது கஞ்சத்தனமாகும். கஞ்சத்தனம் அல்லது உலோபித்தனம் வாழ்க்கையின் நிம்மதியைக் கெடுத்துவிடும்.
ஆசைக் கோர் அளவில்லை எண் பார்கள். ஒவ்வொரு ஆசையையும் பூர்த்தி செய்யச் செய்ய, வேறு பல ஆசைகள் தோன்றிய வண்ணமே இருக்கும். எனவே தான், எளிமையான நல்வாழ்விற்கு ஆசைகள் குந்தகம் விளைவிக்கின்றன என்பர். ஆசைகளுக்கு ஆட்பட்டால், நம்மை அலைக்கழித்தே தீரும். அமைதி போய் விடும். ஆசையைக் கட்டுப்படுத்துவது கஞ்சத்தனம் ஆகாது. எளிய வாழ்வு என்று கூறப்படும்போது அங்கு தேவைகள் கட்டுப்படுத்தப்படுவதில்லை ஆசைகளே கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியம். எமது இன்பம், பிறரைத் துன்புறுத்தாமல் இருப்பதிலேயே தங்கியுள்ளது. ஒருவன் தம்முடைய ஆசைகள் யாவற்றையும் பூர்த்தி செய்ய முயற்சிக்கும்போது, திருடனாகவும், குற்றங்கள் புரிபவனாகவும், முறையற்ற வழியில் பணத்தைச் சம்பாதிக்க
2007 = 6 =
ela

நிர்ப்பந்திக்கப்படுபவனாகவும் விளங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றான். ஆந்த வகையில், அவன் பிறரைத் துன்புறுத்த வேண்டியவனாகின்றான். "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்" என்பார்கள். குற்றம் புரிந்தவன் அரசதண்டனையிலிருந்து தப்பினாலும் கூட, அவனின் மனசாட்சி உள்நின்று அவனை உறுத்திக் கொண்டே இருக்கும்.
வெளித்தோற்றத்திற்குப் பகட்டான வாழ்க்கை வாழ்பவனாகக் காட்சியளிக்கலாம். அரண்மனை போன்ற பங்களா, பெரிய கார், எடுபிடி ஆட்கள், அரச மரியாதை, சமூக அந்தஸ்து யாவும் இருக்கலாம். ஆனால், அவை யாவும் மன நிம்மதி தருவனவாக இல்லை. இவற்றை பாதுகாக்க வேண்டுமே என்ற ஏக்கம் ஒரு புறம்- மறுபுறத்தில் அவை கிடைத்த வழிமுறைகளை யோசிக்கும்போது நெஞ்சில் குத்துவது போன்ற ஒரு நெருடல். இந்நிலையில் அவை யாவும் எந்நேரத்திலம் தம்மை விட்டு அகலலாம் என்ற பீதியும் சேர்ந்து கொள்கின்றது. மேலும் மேலும் அவற்றைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற அங்கலாய்ப்பும் விட்டபாடில்லை. குற்ற உணர்வு வேறு மனத்தை வாட்டுகின்றது. பகட்டான ஆடம்பர வாழ்வு நிம்மதியையோ அமைதி, சாந்தி, சமாதானத்தையோ வழங்கியதாகச் சரித்திரமில்லை. சுதந்திரமும் போய்விடும். பயந்து வாழும் வாழ்க்கைக்குத் தான் நரகம் என்று பெயர்.
எளிமையான வாழ்வு எத்துணை சுதந்திரத்தையும், மன அமைதியையும், அச்சமின்மையையும் தருகின்றது என்பது அவ் வாழ்வினை அனுபவித்த அநுபூதிமான்களுக்குத்தான் தெரியும்.
எளிய வாழ்வு வறிய வாழ்வு அல்ல என்பதையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத வாழ்வு, வறிய வாழ்வு. அது துன்பம் நிறைந்தது; அங்கு நிம்மதி இல்லை. வறுமை, சுபிட்ச வாழ்வைத் தராது. எளிய வாழ்வு சுபிட்சமான வாழ்வாகும்.
பணம் இல்லாதவன் ஏழ்மையில் கஷ்டப்படுகிறான். பணம் உள்ள பலர், சிக்கனம், எளிமை என்னும் பெயரால் தம் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் ஏழ்மையில் துன்பப்படுகின்றனர். சிக்கனம், எளிமை என்றால் என்ன என்று விளங்கிக் கொள்ளாதவர்கள் இவர்கள்.
007 | 7 =
அறிவு

Page 7
உலோபிகள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர். "உலோபிக்கு இரட்டைச் செலவு" என்று கூறுவர். "உலக்கை போகிற இடத்தைப் பார்க்க மாட்டார்கள். ஊசி போகிற இடத்தைப் பார்ப்பார்கள். என்றொரு பழமொழி உண்டு. எளிய வாழ்வு என்பது உலோபித்தனமான வாழ்வும் அன்று. உலோபித்தனம் சுபிட்சத்தைத் தராது.
எளிய வாழ்வில் , ஊதாரித்தனம் இல்லை; இடாம்பீகம் இருக்காது; வறுமை இல்லை, உலோபித்தனம் இருக்காது. அப்படியானால், எளிய வாழ்வில் இருப்பதெல்லாம் சுபிட்சம், அமைதி, சாந்தி, சமாதானம், திருப்தி என்பவையாகும். சிறப்பான மனித வாழ்விற்கு இவற்றைவிட வேறு என்ன வேண்டும். ஆதனாலேயே எளிய வாழ்வைச் சீர்மை நிறைந்த வாழ்வு என்று ஆன்றோர்கள் கூறினர்.
இன்றைய உலகில் எளிமையான வாழ்வினை வாழ்பவர்களைக் காணுதல் அரிதாகவே உள்ளது. சமூகப் பிரச்சினைகள் உருவாவதற்குக் காரணம் தெரிகின்றது அல்லவா.
உயர்ந்த நோக்கு
அடுத்து மனித வாழ்வு சுபிட்சம் பெறுவதற்கு மனிதர்களிடம் உயர்ந்த நோக்கு இருத்தல் வேண்டும். ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்கிறது வள்ளுவம்.
ஒவ்வொருவரும் உயர்வான, உத்தமமான வாழ்க்கை இலட்சியங்களையும், குறிக்கோள்களையும் கொண்டிருத்தல் அவசியம். 'குறிக்கோள் இலாது கெட்டேன்’ என்கிறார் ஓர் அருளாளர். உயர்ந்த வாழ்கைக் குறிக்கோள்களை அமைத்து அவற்றை அடைவதற்கு அவற்றைச் சாதனை செய்ய வேண்டும்.அன்பு வழயிலும், சத்திய மார்க்கத்திலும், தர்ம நெறியிலும் நிலைத்து நிற்பனவே உயர்வான நோக்குகள் ஆகும்.
உயர் வான நோக்கங்களை அடைய முயலுதலே நல்லொழுக்கமாகும்.
அறிவு
2007 Mistiiiiiii - 8 ar

பொறை, கொடை, கருணை, தானம் , வாயப் மை,
அழுக் காறிணி மை, ஐம் புலன் களையும் மனம் முதலிய உட்கரணங்களையும் காத்தல், கோள் சொல்லாமை, எந் நாளும் சினம் கொள்ளாமை, இனியவை பேசல், மாறுபடா உண்மை பேசுதல் என்பன நல்லொழுக்கமாம்.
கொலை , களவு, கள்ளுண்ணல், காமம், பொய் என்பனவற்றைத் தவிர்த்துக் கொள்ளுதல் நல்லொழுக்கமாகும்.
பழந்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் கூறும் உயர் இலட்சியங்கள் பின்வருமாறு அமைகின்றன;
2007
“பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின் தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின் பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின் ஊனுண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின் தானஞ் செய்மின் தவம் பல தாங்குமின் செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட்பு இகழ்மின் பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின் அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின் பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின் பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஒம்புமின் அறமனை காமின் அல்லவை கடிமின் கள்ளுங் களவும் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகில் ஒழிமின் இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது செல்லுந் தேகத்துக் குறுதுணை தேடுமின் மல்லண்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென”
சிலப்பதிகாரம்
அறிவு

Page 8
இதன் பொருள்
ஆசையையும், ஆசையினால் ஏற்படும் துன்பத்தையும் விட்டொழியுங்கள்; தெய்வம் உண்டு என்று அறிந்து கொள்ளுங்கள்; அறிவுள்ளவர்களை ஆதரியுங்கள்; பொய் கூறுவதற்குப் பயப்படுங்கள்; புறங்கூறலில் ஈடுபடாது உண்மையைப் போற்றுங்கள்; புலால் உண்ணலை விலக்குங்கள்; உயிர்க் கொலைகளைப் புரியாதீர்கள்; தானம் செய்யுங்கள்; தவம் பல செய்யுங்கள், செய்ந்நன்றி மறவாதீர்கள்; தீய நட்பினரை இகழ்ந்து நீக்குங்கள்; பொய்ச் சாட்சி சொல்லாதீர்கள்; பயனற்ற சொற்களைப் பேசாதீர்கள்; நல்லோருடன் சேருங்கள்; கெட்டவர்களுடன் சேராதீர்கள், பிறன்மனை விழைவதற்கு அஞ்சுங்கள்; உயிர்கள் யாவையும் ஒம்புங்கள்; பாவம் செய்யாதிருங்கள்; பொய்,களவு,காமம், அறிவிலார் சேர்க்கை என்பவற்றை விவேகமாக ஒழியுங்கள்; இளமை,செல்வம்,யாக்கை நிலையாதன என்னும் உண்மையை நினைவிற் கொள்ளுங்கள்; நாம் வாழ்கின்ற நாட்களை எவ்வழியிலும் வீண் நாட்களாக்கி விடாமல் முடிந்தளவில் அறம் புரியுங்கள்; மேலோர் ஆகுங்கள்; இவ்வாறு வளங்கள் பொருந்திய இப்பூவுலகில் வாழ்வாங்கு வாழ்வீர்காள்!
வாழ்வில் உயர் நோக்கு வேண்டும்; அப்பொழுதுதான் நல்லொழுக்கம் மேற்கொள்ளப்படும். நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்க வேண்டும் என்பதே வாழ்வில் உயர்நோக்காகக் கொண்டு ஒழுகும்போது இவ் உலகம் வாழ்வதற்கு எத்துணை இதமாகவும் இன்பம் ஆகவும் இருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்; யாதும் ஊரே யாவரும் கேளிர்; என்னும் பழந்தமிழ் மக்களின் மகுடவாசகம், நாம் கைக்கொள்ள வேண்டிய உயர் நோக்கினை உணர்த்துகின்றது. இத்தகைய உயர்ந்த நோக்கங்களை உலகத்திற்கு அளித்தவர்கள் மூத்த தமிழர்கள் என்று பெருமை பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் உயர் இலட்சியங்களை வாழ்வில் மேற்கொண்டு ஒழுகிக் காட்டவும் வேண்டும். அப்போதுதான் அந்தப் பெருமைக்கு உரிமை கோரும் உரித்து உடையரும் ஆவோம்.
பரந்த மனப்பான்மை
உயர்ந்த நோக்கு, எம்மைப் பரந்த மனத்தவர் ஆக்குகின்றது.
சுயநலம் அற்ற மனமே, பரந்த மனம், விசாலமான மனம், விரிந்த
மனம் ஆகும். அழுக்காறு,அவா,கோபம்,செருக்கு, அகந்தை, இன்னாத
tk - i. ܚ- • ܀ܙܐ܀܀
2007 = 10 -
அறிவு

எண்ணங்கள், பகைமை என்பன இல்லாத மனமே, பரந்த மனம் ஆகும். உயர்ந்த நோக்கு நம்மைப் பரந்த மனத்தவர் ஆக்குவது போன்றே, பரந்த மனத்தில் உயர்ந்த நோக்கு உருவாகின்றது. ஒன்றிற்கொன்று ஆதாரம் ஆக உள்ளன. உலகம் சுருங்கி வருகிறது; விஞ்ஞானம்,தொழில் நுட்பம் காரணமாக, அதே வேளை, இன்றைய உலகில் மனித மனங்களும் சுருங்கி வருகின்றன. மனத்தைச் சுருக்குவதாலி , மாசுகள் பெருகுகின்றன; தொல் லைகள் அதிகரிக்கின்றன; துன்பங்கள் முடிவில்லாமல் தொடருகின்றன. மனம் இருப்பதால்தான் மனிதன் எனப்படுகிறான். பெருமனம் உடையவன் பெருமனிதன். மனம் சுருங்கி அழிந்தால், மனிதன் தன் நிலையிற் தாழ்ந்து விடுகிறான். அதன்பின் அவன் மனிதன் இல்லை; எப்படி வேண்டுமானாலும் அவனை அழைத்துக் கொள்ளலாம்.
பரந்த மனத்தினாலேயே செல்வம் உண்டாகும்; உலகத்தவர் அனைவரும் நண்பர்களாகி விடுவர். குறுகிய மனத்தினாலேயே பகைமை உண்டாகிறது; அழிவும் அனர்த்தமும் சம்பவிக்கின்றன.
தேளுக்குக் கொடுக்கில் விஷம் தேனிக்குத் தலையில் விஷம் பாம்புக்குப் பல்லில் விஷம் துர்ச்சனருக்கு மனத்தில் விஷம் - அதனால் சர்வ அங்கங்களிலும் விஷம் செறிகின்றது
மனம் விஷமானால், மனிதனின் சிந்தனை,பேச்சு, செயல் அனைத்திலும் விஷம் கலந்து விடுகிறது. மனம் அமிர்தமானால், அவனின் சிந்தனை, பேச்சு, செயல் அத்தனையும் அமிர்தமாகி விடும். அமிர்தம் வாழ்விக்கும் சஞ்சீவி, நஞ்சு கொல்லும் கொடும்பாவி. பரந்த மனம் அமிர்த ஊற்று ஆகின்றமையினால், பரந்த மனம், வாழ்வைச் சிறப்பிக்கின்றது, செழிப்பூட்டுகின்றது.
அறிவு வாசகர்களுக்கு:- அறிவுசஞ்சிகை பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை எழுதி அனுப்புங்கள். உங்கள் ஆக்கங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். அறிவு 57. பிரதான வீதி, திருக்கோணமலை
2007 - 11 -
அறிவு

Page 9
அன்புள்ளம்
‘அன்பு இதயங்கள் அழகுத் தோட்டம்’அன்பு எண்ணங்கள் அடிவேர்கள்; அன்பு மொழிகள் மொட்டுக்கள் ‘அன்புச் செயல்கள் கனிகள்’ என்கிறார் ஜோன் ரஷ்யன் என்ற பேரறிஞர்.
"அன்பினும் ஆர்வமுடைமை அதுவினும் நண்பென்னும் நாடாச் சிறப்பு
என்பது வள்ளுவம்
ஆர்வமுடைமை என்பது கரிசனை. பிறர்மீது கரிசனை கொள்ளச் செய்வது அவர்மீது நாம் கொண்ட அன்பின் மேலீட்டினால் ஆகும். கரிசனை , நட்பினை ஏற்படுத்துகின்றது. பகைமையை அகற்றுகின்றது. அன்பு செயலாகும்போது மானுட சேவையாகின்றது. எல்லாருக்கும் உதவ வேண்டும், சேவை செய்ய வேண்டும் என்னும் மேலான எண்ணம் அன்பிலிருந்து பிறக்கின்றது. அன்பு நீர் என்றால், காதல், கருணை என்பன ஆவியாகும். நீர், நீராவியாகின்றது; அன்பு, கருணையாகின்றது.
இன்றைய உலகில், பிறரில் கரிசனை கொள்ளுகின்ற மனப்பாங்கு அற்று வருகின்றது.மனிதநேயம் இல்லாமையே காரணம். எனவேதான் அன்பு எல்லோர் உள்ளங்களிலும் பொங்கிப் பிரவாகிக்க பிரார்த்திக்கிறோம். சாந்தி, சமாதானம் இவ்வுலகில் நிலை பெறுவதற்கு அடிப்படையில் அன்பு, மனித உள்ளங்களில் வீற்றிருக்க வேண்டும். அன்பினால் ஆகாதது ஒன்றில்லை. அதனால், அன்பு ஆனது உலக மகா சக்தியாக விளங்குகின்றது. உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பினாலேயே. அன்புடையர் என்பும் உடையர் பிறர்க்கு என்பதால் அன்பு மேலான விழுமியம் ஆகின்றது.
எளிமையான வாழ்வு, உயர்வான நோக்கு, பரந்த மனப்பான்மை, அன்பு உள்ளம் என்பவற்றை வாழ்வில் நன்கு பேணி வருபவர்கள் எல்லாவிதச் சிறப்புக்களையும், உயர்வினையும் எய்துவர்.
நன்றி - வாழ்வு நலம்பெற நற்சிந்தனைகள்
2007 is: = 12 = அறிவு

தெரிந்தபெயர் தெரியாத விபரம்
Occultism (Drué6massiapas):- VA
இனம்புரியாதவற்றை புரிந்து கொண்டு, அவற்றைக் கட்டுப்படுத்தும் தனியான ஆற்றல். மேலைநாட்டார் இதனை மந்திர ஜாலத்தோடு இணைத்துப் பேசுவர்.
Oceanography (asLieuthaeusis):-
அறிவியல் ரீதியாகச் சமுத்திரங்களை குறித்து செய்யப்படும் ஆய்வு
October Revolution (ediCururugif):-
1917 அக்டோபரில் நடந்த ருஷ்யப்புரட்சியில் விஜ.லெனின் தலைமையில் ஒன்று திரண்ட போல்ஷவிக்குகள் ஜார் மன்னனின் ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு சோவியத் ஆளுமையைத் தொடங்கினர்.
Oligarchy (அதிகாரிகளின் அரசியல்):-
ஆட்சிதற்சார்பு உணர்வுமிகுந்த அதிகாரிகளிடம் சிக்கிவிடுவது.
Oligopoly (sai (Băsboi, opop):-
சிறுவணிகக் குழுவினர் தங்களுக்குள்ளே போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் செய்தாலும், தங்கள் பொது நன்மைக்காக ஒத்துழைத்துக்கொள்ளும் கூட்டுச்சந்தைமுறை.
Ombudsman (BGBssapoo eig5a5(f):-
அரசிடமோ, தனியார் நிறுவனங்களிடமோ நமக்குள்ள குறைகளைத் தீர்த்துக் கொடுக்கும் அதிகாரி
Onclolgy (afaog5e2eudö):-
உடம்பில்சதைவளர்ச்சி அல்லது தேவையற்ற தடிப்பு போன்றவற்றை ஆராய்ந்து பார்க்கும் மருத்துவ அறிவியல், புற்றுநோய் பற்றிய இந்த ஆய்வு1809இல் சுவீடன் நாட்டில்
Opera (இசைநாடகம்):-
இசை, உரையாடல், நடனம், வண்ண உடை, காட்சி ஜோடனை கலந்த மேடை
2007
r 15 -
அறிவ

Page 10
Opinion Poll (sosigli disastupi
குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனை பற்றி பொதுமக்களின் கருத்தை
அறிந்துகொள்ள நேரடியாக அவர்களைப்பார்த்துக்கேட்கும்முறை. 1930ம் ஆண்டில்ஜார்ஜ்
கால்லப் என்பவரே இதனைத் தோற்றுவித்தார்.
Orphism (irűeFilib)--
கீயூபிசத்தின் ஒரு பிரிவாகிய இது வண்ணத்துக்கு முக்கியம் கொடுக்கிறது.
Ostracism (egyé,6 арбијајф):-
தனி ஒருவரையோ, குழுவினரையோ சமூகத்திலிருந்து வேண்டுமென்றே ஒதுக்கி 6061556),
Pacifism (OBIGODDf5 eGuuẩbaHb):-
அனைத்துவிதமான சண்டைகளையும் நியாயம் அற்றதென ஒதுக்கி எல்லாப் பிரச்சனைகளையும் அமைதியாகத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்கிற ஒரு இயக்கம்.
Palaentology (upa eudö):-
இறந்து புதையுண்ட விலங்குகளின் படிவங்களை ஆய்வுசெய்தல். பாலியோ எனும் கிரேக்கச் சொல்லுக்குத் தொண்மை என்பது பொருள்.
Panchatantra (unigsbergbisffSigmb):-
விஷ்ணு சர்மா எனும் வட மொழியாளர் கி.மு. 200க்கும் கி.பி. 200க்கும். இடைப்பட்ட காலத்தில் எழுதியதாகச் சொல்லப்படும் சிறுகதைத் தொகுப்பு.
Papal Infallibility (5agigs eturfbut LGurtural arb):-
போப் அதிகார பூர்வமாக எந்தத் தவறும் செய்யமாட்டார் எனும் ரோமன் கத்தோலிக்கரின் அசையாத நம்பிக்கை.
Paradox (GSUDGapefþÜGumešGDID):-
い எதிர்மறையாகத் தோன்றினாலும், ஓரளவு உண்மை பொதிந்துள்ள கூற்று.
Paranoia (e5Sofijušas iš 5dGMDD):-
தவற்றை உண்மையென நம்பும் உள ரீதியான சீர்குலைவு, சந்தேகம், மற்றும் தன்னையே நொந்து கொள்ளுதலுக்கு ஆட்பட்டுத் துன்புறுதல் அல்லது தற்பெருமை, பரபரப்பு இவற்றுக்கு ஆட்பட்டுத் தன்னை மிகப் பெரிய மனிதனாகக் கருதிக்கொள்ளுதல் 2007 - 14 - அறிவு

Parity (சமச்சீர்க் கணக்கு):-
அடக்கவில்லை, பண்டமாற்று விலை, சம்பளமவாங்கும் சக்தி ஆகிய இவற்றைக் குறிக்கும் சொல். வெவ்வேறு விதமான தொழிலாளருக்கு உரிய கூலியை நிர்ணயிக்க இந்த விவரங்கள் பெரிதும் துணை புரியும்.
Parkinson's Law (unlessage offs):-
இருக்கின்ற நேரத்துக்கு ஏற்ப வேலை நீடிக்கப்படும் என்கிற மேலாண்மைக் கொள்கை, வருமானத்துக்குத்தக்கவாறு செலவும் நீட்டித்துக்கொண்டுபோகும் என்பது இக் கொள்கையின் மற்றொரு கோணம்.
Patriarchy (siogs oup IDuu):-
ஆடவன் தலைவனாக இருந்து குரும்பத்தை நிர்வகிக்கும் சமூக அமைப்பு.
Penology (gsanilapax eu6):-
குற்றவாளியைத் தண்டித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்துகின்ற சிந்தனையை ஆய்வு செய்தல்.
Personality Cult (தனிமனிதப்புகழ்ச்சி):-
பரவலான விளம்பர உத்தியினால் மக்களின் தலைவராகவும், புகழ் மிக்க பெரிய
மனிதனாகவும் ஒருவரை உயர்த்திப் பேசும் பழக்கம், பெரும்பாலும் முடியாட்சியில் தான்
இது நிகழும். சான்று ருஷ்யாவில் ஸ்டாலின், சீனாவின் மாசே துங்.
Petrology (umramomo eÐuusió):-
பாறைகள், அவற்றின் அமைப்பு உட்பொருள் பற்றிய ஆய்வு, இது மணி இயல் (ஜியாலஜி) படிப்பின் ஒரு பிரிவு.
Pharmacology (Dosid5udio):-
மருந்துகள், பயன்கள், மூலப்பொருள், மருந்து தயாரிக்கும் முறை பற்றிய ஆய்வு.
Phenomenology (sssa 6usb):-
சந்தர்ப்பங்கள், காட்சிகள், ஒலிகள் பற்றியும், அவற்றைத் தனியொரு மனிதன் எப்படிப் பார்க்கிறான் என்பதைப் பற்றியும் பேசுகின்ற ஒரு பிரிவு
2007 tub = 15 =
அறிவு

Page 11
Ping - Pong Diplomacy (ữn-urrrıf5mpb):-
பிங்-பாங் என்பது மேஜையில் விளையாரும் சிறிய டென்னிஸ் ஆட்டம். அமெரிக்காவோரு அரசியல் உறவு வைத்துக் கொள்ள விரும்பிய சீனா இந்த விளையாட்டை புத்திசாலித்தனமாக அறிமுகப்படுத்திக்கொண்டது.1972ம்ஆண்டில் சீனா இந்த விளையாட்டுப் போட்டிக்கென அமெரிக்காவை அழைத்தது. 1949க்குப் பின்னர் தொடர்பே இல்லாத இரு நாடுகளும் இந்த விளையாட்டின் போதுதான் நெருங்கிப்பழகின.
Plebiscite (ஸ்பாதுவாக்கெடுப்பு):-
குறிப்பிட்ட ஒர பிரச்சனை பற்றி ஒரு நாட்டின் வாக்காளர்களிடம் நேரடி வோட்டெடுப்பின் மூலம் தீர்வு காணுதல்.
Plutocracy (செல்வந்தர்கள் ஆட்சி):-
புளுட்டோஸ் எனும் கிரேக்கச் சொல்லுக்குச் செல்வம் என்பது பொருள். எனவே இச்சொல் பணக்காரர்களின் ஆட்சியைக் குறிக்கும்.
Politburo (9ựớfuuỏ (góqp):-
பொது உடமைக் கட்சியின் அரசியல் கொள்கைகளை வகுத்துக் கொடுக்கும் தலைமைக்குழு.
Polyandry (பல கணவரைமனத்தல்):-
ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட கணவரை மணக்கும் ஒரு சமூகப்பழக்கம்.
Polygamy (uGosaru LDGUrib):-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்டிரை மணந்து கொள்ளுதல்.
Pornography (epaforfeoidsub):-
விரசமான இலக்கியம், படம், திரைப்படம் இவற்றைக் கலை உணர்வுக்காக இல்லாமல், வெறும் பாலுணர்வுக்காக மட்டுமே பயன்படுத்துதல்,
Psychokinesis (9 6hops euä65b):-
மன உறுதியினால் எந்தப் பொருளையும் இயக்குகின்ற ஆற்றல்.
Psychopathy (d5upidiufigeraDID):-
உள்ளம் சரியாக இருந்தாலும், யாருடனும் கலந்து பழகாமல் ஒதுங்கியிருக்கும் கிறுக்குத்தனம்.
2007 = 16 =
அறிவு

Psychosis (upGotnsfjeD6oð ér GeDso6));-
சிந்திப்பது,உணர்வதுபோன்ற செயல்களில் சீர்குலைவு ஏற்பட்டுள்ள மனோநிலை.
Puritanism (guidoolDb5ešGDID):-
பொதுவாக வாழ்க்கையின் எந்த நிலையிலும் கட்டுப்பாடு, நியதி ஒழுங்கு
போன்றவற்றைக் கருமையாகப் பின்பற்றுதல். எனினும் 16ம் நூற்றாண்டு ஐரோப்பாவில்
இது ஒரு சீர்திருத்த இயக்கமாகவே நிலவியது.
Quartz (goniifoli):-
சிலிகான் டைஆக்ஸைடுகலந்த பளிங்கு போன்ற ஒரு தாதுப்பொருள். பாறைப்படி வங்களில் இது தூய்மையாக இருக்கும்.இத்தாது தூய்மையற்றதாயின் பல வண்ணங்களில் இருக்கும். அழகுப் பொருளாகவும், இயந்திரங்களில் ஒரு உறுப்பாகவும் இது பயன்படுத்தப் படுகிறது.
Quisling (g503pmref5):-
எதிரிகளுடன் சேர்ந்து கொள்ளும் துரோகியைக் குறிக்கும் சொல். இது போன்ற துரோகத்தன்மை செய்த ஒரு நார்வே நாட்டு இராணுவ அதிகாரியின் பெயர் ஜான் சன் குவிஸ்லிங்க் இப்பெயரே ஆங்கிலத்தில் துரோகத் தன்மையைக் குறிக்கும் ஒரு சொல்லாகி விட்டது.
Rabindra Sangeet (gesíībf5g Fridfg5b):-
கேட்போரின் செவிச்சுவைக்கும்,சிந்தனைக்கும் விருந்தாகப் பயன்படும் குறிப்பிட்ட இசைக்கலை. தாகூர் எழுதிய ஏறத்தாழ 2000 பாடல்கள் இவ்வகையைச் சார்ந்தவை.
Racism (6D6hangibischassrorDes):-
அறிவு கலாச்சாரம்,ஒழுக்கம், தோற்றம்,நிறம் இவற்றின் அடிப்படையில் பல்வேறு இனத்தினரைப்பிரித்து அவர்களை வேறுபாடாக நடத்துதல்.
Radio Carbon Dating (essfisassifidisaffusia autogids asafissi):-
மரம், காகிதம், துணி இவற்றால் செய்யப்பட்ட பொருள்களின் காலத்தையும் வயதையும் தீர்மானிக்க உதவும் அறிவுக்கலை இப்பொருள்களின் மீதுள்ள ஒளிக்கதிர் கரிப்பொருள் குறைந்து கொண்டு வருவதைக் கணக்கிட்டு பொருள்களின் வயது நிர்ணயிக்கப்படுகிறது.
- 17 - அறிவு
2007

Page 12
Raman Effect (gTLD 6hasmsirapas):-
ஒளியானது ஒரு பொருளின் மீது பரும்பொழுது, ஊடுருவியோ அல்லது அதனுள் ஈர்க்கப்பட்டோ அல்லது சிதறியோ போகும் எண்பது பற்றிய அறிவுச் சிந்தனை.
Random Sample (LD5ft Ghungsoi):-
ஒட்டுமொத்தமான ஒரு குவியலில் இருக்கும் பல பொருள்களிலும் ஒன்றை மட்டும் எருத்து ஒவ்வொன்றின் தரத்தையும் அனுமானித்தல்,
Renaissance (LDplupoidf):-
ஐரோப்பியக் கலாச்சார வளர்ச்சியில் அறிவார்ந்த சிந்தனைக்கும், மனித
நேயத்துக்கும் இடம் கொருத்த தன்மை, கால வரலாற்றில் இம்மறுமலர்ச்சி இடைக்காலம்
முடிந்து தற்காலப்பிரிவின் தொடக்கத்தில் ஏற்றபட்டது.
Reynolds Number (வரனால்டஸ் நம்பர்):-
இயந்திரத்திரவ இயலில் திரவத்தின் ஒருநிலை சீராக உள்ளதா அல்லது குழம்பிய நிலையில் வருகிறதா என்பதைக் கண்டறியப் பயன்படுத்தும் எண்.
Richter Scale (fil 616mo):-
பூகம்பங்களின் வேகம் மற்றும் அழுத்தத்தைக் கண்டறிய உதவும் அளவுகோல், 1935 இல் சார்லஸ் ரிக்டர் இதனை உருவாக்கினார்.
Role Theory (5Liu Sapooi, Ghaismsirapas):-
சமூகத்தில் ஒருவன் ஆற்றுகின்ற பணி அவனது சொந்த இயல்புக்குத்தொடர்பில் லாமலேயே அவனது நடத்தைக்குக் காரணம் ஆகிறது என்னும் கொள்கை.
Sacred Cow (uadgilpnar usic/afirgi):-
பிறருடைய விமரிசனத்துக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும் ஒரு தனி மனிதனையோ, நிறுவனத்தையோ, பழக்கத்தினையோ குறிக்கும் சொல். இந்துக்களின் நம்பிக்கையில் பசு தூய்மையும், புனிதமும் படைத்த ஒரு விலங்கு. எனவே அதனைக் கொல்லக்கூடாது என்னும் மரபினையொட்டி இச் சொற்றொடர் பிறந்தது.
Sadism (துன்புறு மகிழ்ச்சி):-
மற்றவர்களை உடலாலோ உள்ளத்தாலோ துன்புறுத்தி மகிழ்தல். குரூரமான
பாலியல் உணர்ச்சியும் இதில் அடங்கும். இத்தகைய நிகழ்ச்சிகளைச் சித்தரித்துநாவலும்
2007 = 18 - அறிவு

சிறுகதைகளும் எழுதிய பிரெஞ்சு எழுத்தாளர் மார்க்விஸ் சேரு என்பவரின் பெயரிலிருந்து இந்த ஆங்கிலச்சொல் பிறந்தது.
Samurai (orqpprli):-
12-ஆம் நூற்றாண்டு முதல் 19-இன் இடைக்காலம் வரை வாழ்ந்த ஒரு இராணுவப் பரம்பரையைச் சேர்ந்த வீரர்கள். ஆயுதம் தாங்கிய நிலையில் தனது பிரபு வைக் காப்பாற்றுவதைக் கடமையாகக் கொண்ட இவர்கள் கடமையும், பொறுப்பும், கண்ணியமும் மிக்கவராக இருந்தனர்.
Sanctions (Ghurgoranging is sol)-
ஒரு நாடு பொருளாதாரத் தடை என்னும் தண்டனையை விதித்து மற்றொரு நாட்டைத் தனது போக்கிற்கு ஏற்பக் கொள்கை மாற்றம் செய்ய வற்புறுத்தல்,
Schizophrenia (Doricasfromgop
மனக்கோளறும் கிறுக்குத்தனமான போக்கும்கொண்ட ஒருவனின் சீர்குன்றிய இயல்பு.
Seato (ëuni (BLIT):-
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பு. கம்யூனிசத் தடுப்பிற்காக அமெரிக்கா செய்த இந்த ஏற்பாரு மணிலாவில் 1954-இல் பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாக்கிஸ்தான் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளின் ஒப்புதலோடு உருவானது.
Semolitics (g55ữuűuusió):-
செய்தியை அறிவிக்கும் முயற்சியில் மொழி, குறியீடு, அடையாளம் ஆகிய
இவற்றின் பங்கு பற்றிப் பேசும் அறிவியல் துறை. தொடுதல், பார்த்தல், உச்சரித்தல் ஆகிய
இவற்றின் பங்கு குறித்தும் குறிப்பியல் விளக்கம் கொடுக்கும்.
Shintoism (sagairoBLur shairsitadas):-
ஜப்பானிய நாட்டைச் சார்ந்த மதம். இதன் கொள்கைப்படி சூரியக்கடவுள்
அவளுடைய பேரனைக் கூப்பிட்டு இந்த உலகை ஆண்டு வருமாறு ஆணையிட்டாள்.
அவனுடைய மரபில் வந்தோரே மிக் காடோ எனும் இன்றைய ராஜகுரும்பத்தினர்.
2007 iigi سه 119 ۔ அறிவு

Page 13
Sinn Fein (áFair&6nuuïed):-
பிரிட்டிஷ் ஆதிக்கத்தை அமைதியாகவே எதிர்த்துவருகின்ற8ஐரிஷ்நாட்டுத்தேசிய இயக்கம் 1902இல் ஆர்தல் கிரிபித் எனும் பத்திரிகையாளரே இதை உருவாக்கியவர்.
S0ap Opera (உணர்ச்சி நாடகம்):-
குழப்பம் மலிந்த குடும்ப சூழ்நிலைகளை மையமாக வைத்து நீண்ட தொடராக ஒலிபரப்பப்பரும் உணர்ச்சிகரமான நாடகங்கள்.
Sociometry (சமூக இணக்கம்):-
ஒருவன் மற்றவர்களோடு இணக்கமாகப் பழகுவதை அளவிடுகின்ற உளவியல்
உத்தி
Suburbanisation (upbesiri, GhassitatDais):-
ஒரு பெரிய நகரத்தை ஒட்டிக் குடியிருப்புகளை உண்டு பணிறுைதல். நெருக்கடி
மிகுந்த நகர வாழ்க்கையை ஒதுக்கி சிறந்த தூய்மையான புதிய குடியிருப்புக்களைப்
பயன்படுத்துவதே இதன் நோக்கம்.
Symbiosis (9luissa 9 pop
வெவ்வேறு குரும்பங்களைச் சார்ந்த இரண்டு உயிரினங்களுக்கு இடையே நிலவுகின்ற உறவு. இதனால் இரண்டு பொருள்களுமே நன்மை அடைகின்றன.
Taoism (LGB6nImruïestib):-
கி.மு. 6ம் நூற்றாண்டில் டாவோ சே என்பவரால் உருவாக்கப்பட்ட கொள்கை. இக் கொள்கையின்படி, பெண்ணைக் குறிக்கின்ற 'யின் என்னும் திரவப்பொருளும், ஆணைக்குறிக்கின்ற யாங் என்னும் திடப்பொருளும் தம்முள் முரண்பட்டாலும், அவையிரண்டுமே இந்தப் பிரபல்சத்தைத் தாங்கிக் கொண்டுள்ளன என்பதாகும்.
Tarot Card (urgåLGassi):-
சோதிடம் சார்ந்த குறியீட்டுப்படங்கள் அச்சிடப்பட்டுள்ள 78 சீட்டுகளை வைத்து ஒருவனது அதிஷடத்தைக் கூறும் முறை,
Technocracy (epí5siusů eláF):-
அறிவியலார், பொறி இயலார் நடத்தும் ஆட்சிமுறை.
Telepathy (உள்ளுணர்வுத் தொடர்பு):-
அனைவருக்கும் தெரிந்த வகையாலின்றி, உள்ளுணர்வால் ஒருவருக்கு ஒருவரோ,
ஒருவர் பலருடனோ தொடர்புகொள்வது.
2007 - 20 r
அறிவு

Theocracy (e5L6aqsi essef):-
தர்க்க ரீதியாகக் கடவுளே ஆளும் ஆட்சி முறை என்றாலும், ஆளுவது மத போதகர்களே. ஆட்சிக்குரிய அதிகாரம் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவதே எனும் அடிப்படைக் கொள்கையே இதன் ஆதாரம்,
ThinkTank (disaparisoni):-
தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களுக்குப் பொதுவாகப் பழக்கத்தில் உள்ள பெயர். கொள்கைரீதியான ஆய்வு செய்து பரிந்துரைகளைத் தருவதே இச்சிந்தனைக் களங்களின் நோக்கமாகும்.
Third World (eparaprise os prosasoi):-
இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியப் பகுதிகளைச் சார்ந்த நாடுகளைக் குறிக்கும் சொற்றொடர் தொழில்வளம் மிகுந்த கம்யூனிச நாடுகளை விடவும், தாராள வணிகமும் வளமும் கொண்ட மேற்கத்திய நாடுகளை விடவும் மூன்றாம் உலக நாடுகள் வளமானவை அல்ல. பிரெஞ்சுப் பொருளாதார நிபுனர் ஆல் பிரட் சாவியே 1952இல் இச்சொற்றொடரை உருவாக்கினார்.
Tort (தவறு):-
சிவில் கோர்ட்டில் நவஷ்டஈடு கோரி வழக்குப் போடுவதற்கு ஏற்ப ஒருவர் செய்த
தவறினைக்குறிக்கும் சட்டச்சொல். மானநஷட ஆக்கிரமிப்பு ஒருவருக்கு இழைக்கும் அநீதி
போன்றவற்ரற இதற்குச் சான்றாகக் கூறலாம்.
Transcendental Meditation (elbissapso furroub):-
மேற்கத்தியநாடுகளில் பரவியுள்ள இந்திய ஆன்மீகக்கொள்கை.மகரிஷி மகே6 யோகியால் 1958இல் இது நிறுவப்பட்டது. அறிவியலே அடிப்படையானது என்றும், மனதை உள்ளுக்குள் ஈர்க்கும் ஆற்றல் வாய்ந்தது எனவும், கூடுதலான அறிவையும், ஆற்றலையும் தர வல்லது என்றும் இத்தியானத்தைப்பற்றிக் கூறுவர்.
Trauma (e.g5idf):-
வருத்தம்தோய்ந்த அனுபவம் அல்லது மனோநிலையில் எக்காலத்தும் நிலைத்து நிற்கும் அதிர்ச்சி
Utopianism (66uboé assbuotDaDO
ஒரு இலட்சிய சமுதாயத்தை நிறுவ முடியுய என்று நம்புகின்ற கொள்கை. இச்சொல் 1916இல் தாமஸ் மோர் எழுதிய "உடோப்பியா" எனும் ஆங்கில நூலின் தலைப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
2007
t بسم 221 سے
அறிவு

Page 14
Vampire (ussoorib):-
வறங்கேரிய,ஸ்லேவேனியா நாட்டுப்புறக்கதைகளில் இறந்துபடாத நடைப்பினம்.
பகலில் உறங்கி இரவில் உயிர்ப்பொருள்களின் இரத்தத்தை உறிஞ்சுவன.
Venture Capital (graffigaorra dupg5656):-
நிதிநிலைக்காரர்கள் ஆபத்தான தொழில்களில் முதலீடு செய்வதைக் குறிப்பிரும்
சொற்றொடர்.
Vikings (oad5rig566)-
கி.பி. 9ம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை வடக்கு ஐரோப்பியப்
பகுதிகளில் குடியேறியிருந்த ஸ்காண்டினேவியக் கடல் திருடர்கள். கப்பல் கட்டுவதிலும்,
கடற்பயணத்திலும் அபாரத்திறம் கொண்ட இவர்கள் பிரிட்டன், பிரான்சு, அயர்லாந்து ஆகிய
நாடுகளிலும் குடியேறினர்.
Virology (e555 Suudiò)::-
நோய்க்கிருமிகளைப் பற்றிய நுணுக்கப்படிப்பு
Virtual Reality (GurroupsLiu Sogo):-
உண்மையான பொருளிலிருந்து வேறுபாடு காணமுடியாத அளவிற்கு கணினியால் உருவாக்கப்பட்ட நம்பத்தகும் நிலைமை.
Wahabis (GAMESTúī66):-
、X கருமையான தூய்மையினைப் பின்பற்றும் முஸ்லிம் துணைப்பிரிவு பொதவான இஸ்லாத்தை எதிர்த்து ஒரு சீர்திருத்த இயக்கமாக முகமது பின் அப்துல் வகாப் இதனைத் தொடங்கினார். துறவியரையும் அவரது அற்புதச்செயல்களையும் இந்த இயக்கம் ஆதரித்தது.
Waqf (Sardubit
இஸ்லாமியப் பாரம்பரியத்தில் பெறப்பட்ட பரிசுப்பொருள்களையும்
செல்வத்தையும் ஒரு அறக்கட்டளையின் சார்பில் பாதுகாப்பது, அதிலிருந்த கிடைக்கும்
வருமானம் கல்வி, பொது நன்மை ஆகியவற்றுக்குச் செலவிடப்படும்.
Warsaw Pact (Garrior fruisib):-
ஐரோப்பாவில் உள்ள கம்யூனிச நாடுகள் 1955மேமாதத்தில் அமெரிக்க நேட்டோ நாடுகளுக்கு எதிராகத் தமக்குள் போட்டுக் கொண்ட ஒப்பந்தம்.
2007 - 22 -
அறிவு

Watergate (auri LGBai):-
அமெரிக்கத்தலைநகரான வாஷிங்டனில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக்கட்டிடம்
1972இல் நிகழ்ந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் இக்கட்டிடத்தில் இருந்த ஜனநாயகக்
கட்சியின் தலைமையகத்தை குடியரசுக் கட்சியினர் உடைத்து நொறுக்கிவிட்டனர்.
West Minister (shoots fafoibl ulgigs):-
இலண்டனின் நகர்ப்புறப்பகுதி இங்குதான் இங்கிலாந்தின் பாராளுமன்ற அவைகள் இரண்டும் உள்ளன. எனவே இச்சொல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தை நினைவூட்டுவதாகவே இருக்கிறது.
Work to Rule (LDisguptar uais):-
பணி செய்வது பற்றிய சட்ட திட்டத்தின் படி மிகக்குறைந்த அளவில் வேண்டுமென்றே மந்தமாக வேலை செய்வது பணியாளர் காட்டுகின்ற எதிர்ப்புகளில் இதுவும் ஒன்று.
Xenophobia (Susos 660ünD:-
எந்தப் புதிய பொருளையும், புதியவர்களையும் வெறுத்து ஒதுக்குதலி. பிறநாட்டவரைக் காட்டு மிராண்டிகள் என்று கருதும் சீனர்களின் சிந்தனை இதற்கு ஒரு
GD
Yakshangana (uuiar esmGorib):-
கர்நாடகத்தின் புகழ்பெற்ற ஒருவகை உயர்ந்த பாடலும் நடனமும.
Young Turks (eborigids&dsui):-
துருக்கிநாட்டில் சுல்தான் அப்துல் அமீது அவர்களின் ஆட்சியை எதிர்த்த அவரது ஆட்டோமான் அரசைக் கவிழ்த்தவர்கள். பிற்காலத்தில் பிறகு இவர்கள் அங்கு ஜனநாயக ஆட்சியைக் கொண்ட வந்தனர்.
Yuppies (uửúīassi):-
இளைய நகர்ப்புறப் பணியாளர்கள் எனும் பொருள்படுகின்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கச் சொல். அவர்களின் சுறுசுறுப்பான வசதியான வாழ்க்கை முறையினையும் இச்சொல் குறிப்பிரும்.
Zionism (u05&6essrsiapas):-
யூதர்களால் பத்தொண்பதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட தேசீய இயக்கம். ாலஸ்தீனத்தில் யூதநாடு ஒன்றை உருவாக்க வேண்டும் எண்பது இதன் மையக்கருத்து.
2007 mamlin' ' ' " or 23 - அறிவு

Page 15
அட்டைப்படக்கட்டுரை
சுவாமி கெங்காதரானந்தா
பாரதநாட்டிலிருந்து காலத்திற்குக் காலம் பல ஏநானிகளும் யோகிகளும் எங்கள் நாட்டிற்கு வருகைதந்து எங்கள் நாட்டையும் மக்களையும் ஏநான வாழ்க்கையில் ஈடுபடுத்தி, இந்த நாட்டில் தெய்வீக ஒளியை ஏற்றி வைத்திருக்கிறார்கள்.
புத்த பகவானே இந்த நாட்டிற்கு விஜயம் செய்து களனி நாகதீபம் போன்ற இடங்களில் உபதேசம் செய்ததாகப் புத்த ஏடுகள் பெருமைப்படுகின்றன. கோரக்கர் முதலாம் மகாமுனிவர்கள் இங்கு வருகை தந்து திருமலையில் தவம் இயற்றியதாக வறிந்து ஏடுகள்
ഇിമ്ന,
சமீப காலத்தில் முத்துலிங்க சுவாமிகள், நவநாதசித்தர், கடையிற் சுவாமிகள், சித்தானைக் குட்டிச் சுவாமிகள் போன்றவர்கள் இங்கு வருகை தந்து இந்த நாட்டு மக்கள் பலரையும் ஆத்மீக வாழ்க்கையில் ஈடுபடச்செய்தார்கள். தெற்கில் முத்துலிங்க சுவாமிகளும், கிழக்கில் சித்தானைக் குட்டிச் சுவாமிகளும், வடக்கில் கடையிற் சுவாமிகளும், மேற்கில் பெரியானைக் குட்டிச் சுவாமிகளும், தாளையான் பாவாவும், நாட்டின் மத்தியிலே நவநாத சித்தரும் வாழ்ந்து அருள் சுரந்ததனாலும், அவர்களுடைய சமாதிக் கோயில்கள் இன்றும் அந்த ஆத்ம சக்தியின் பொக்கிஷங்களாகத் திகழ்வதாலுந்தானி இந்த நாடு பல இன்னல்களின் மத்தியிலுங்கூட நிலை குலையாமல் தெய்வீக அருளுடன் திகழ்ந்து
இத்தகைய நாணிகளின் ஏதானப் பரம்பரையில் உதித்தவர்தான் இன்று ஏநான ஒளிபெருக்கிய வண்ணம் வாழ்ந்து வருகின்ற அருள்வள்ளல் சுவாமி கெங்காதரானந்தாஜி அவர்கள்
1940ம் ஆண்டளவில் இந்த நாட்டிற்கு வருகை தந்த, திருமலையிலே 12
வருடங்களாகத் தவமியற்றி பரிபூரணநிலை அடைந்து ஆானதிபமாகத் திகழும் சுவாமிகள் பலதிசைகளிலும் தமதருளைப்பரப்பிய வண்ணமிருக்கின்றார்.
“வித்திலிருந்து மரமும், மரத்திலிரந்து காய், கனியும் உண்டானாலும், மரத்தில் காய்த்துக் கனிந்த கனியானது மரத்திற்கு உரியதன்று. இது மரத்தின் நியதி. அதே போன்று தவத்திலிருந்து ஏநானமும், ஏநானத்திலிருந்து சுகமும் பிறந்தாலும் ஒதானத்தின் சுகமானது
سے 24 ۔
2007
அறிவு

ஞானிக்கு மட்டும்உரியதன்று என்று சுவாமிகள்"வஜனாம்ருதம்" என்கின்றநூலிலே அழகாக எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள். அதே கூற்றிற்கிணங்கச் சுவாமிகள் தம் ஞானத்தின் பயனைப் பக்திகொடிகளில் ஆத்மிக முன்னேற்றத்திற்காக வழங்கிய வண்ணமிருக்கின்றார்.
ரீமத் சுவாமிகள் தனது பக்தர்களுக்குச் செய்யும் உபதேசங்கள் பல வகைப்படும் ஒவ்வொரு பக்தனின் பரிபக்குவத்திகேற்பக் கொடுக்கப்படம் உபதேசம் ஒருவகை. அத்தகைய உபதேசம் அந்தப் பக்தனுக்கு மட்டுமே உரியது. பயன் கொடுக்கக்கூடியது. மற்றையோர் அந்த உபதேசத்திற்கு உரிய பலனை அடைவர் என்று கூறமுடியாது. அவ்வுபதேசத்தை அறிய வேண்டிய அவசியமுமில்லை இந்த உபதேசமானது ஒரு வைத்தியர் நோயாளியின் நிலைக்கு ஏற்ப எழுதிக் கொடுக்கும் மருந்தபட்டியல் போன்றது.
இன்னும், சுவாமிகள் ஆச்சிரமமான “சிவயோக சமாஜத்தில்" சுவாமிஜி அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட பாங்குளம்நடேசர்கோவிலில் ஏகாதசி சிவராத்திரிபோன்ற புனித நாட்களில் அல்லது சனிக்கிழமைகளில் நடாத்தப்படும் கூட்டுப்பிரார்த்தனைகளின் போது சில சமயங்களில், சுவாமிகள் உபந்நியாசம் செய்வது வழக்கம். இத்தகைய உபந்நியாசங்கள் பொதுவாக ஆத்மீக வாழ்க்கைக்கு உறுதுணையானவை. இந்த உபந்நியாசங்களைப் பல பக்தர்கள் குறிப்பேடுகளில் பதிவுசெய்து வைத்திருக்கின்றார்கள். இவை இன்னும் அச்சேறவில்லை. அதற்கான அனுமதியுங் கிடைக்கவில்லை.
இவற்றைத் தவிர சுவாமிஜி அவர்கள் சில துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும், இந்நாட்டின் தின ஏடுகளில் வெளியிட்ட கட்டுரைகள் வாயிலாகவும், பலவிதமான அரிய கருத்துக்களை மக்களுக்குத் தெரிவிக்கின்றார்கள்."தினபதி ஏட்டில் "வெள்ளிவிருந்திலும்" அதற்கு முன்பு தினகரன்", "வீரகேசரி" போன்ற தின ஏடுகளிலும் இந்தக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இந்தக்கட்டுரைகளின் மூலப்பிரதிகளில் சிலவற்றைத் தேடிஎடுத்து ஒரு சிறு நூலாக வெளியிடுவதற்குத் திருவுளம் அருள் பாலித்திருக்கின்றது.
இந்த நூலிலும் இதர கட்டுரைகளிலும், உபந்நியாசங்களிலும் சுவாமிஜி மூன்றே அடிப்படை உபதேசங்களைப் பல பல கோணங்களிலிருந்து எருத்துரைக்கின்றார்.
முதலாவது உபதேசம் கடமையைப் பற்றியது.தனக்குள்ள கடமைகளை ஒருவன் சரிவரச் செய்யவேண்டும். ஒருவன் குடும்பஸ்தனாகவிருக்கில் தன் தாய், தந்தை, மனைவி, மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் பலவுண்டு. அவன் செய்யுந் தொழிலில், தொழில் துறையில் சேர்ந்தவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு. இனசனத்திற்குச் செய்யவேண்டிய கடமைகளும் உண்டு, துறவிகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் 2007 22 سE5 - éia

Page 16
உண்டு. இந்தக் கடமைகள் யாவும் சித்தகத்தியுடனும், நிறை மனதுடனும், அன்புடனும், ஆர்வத்துடனும் செய்யப்பட வேண்டியவைகளாகும்.
சுவாமிஜியின் இரண்டாவது அருளுரை "பரிசுத்தமான இருதயத்தோரு ஒருவன் வாழவேண்டுமென்பதேயாகும்" இருதய சுத்திமிகமுக்கியமானது, கறள் நீக்கிய இரும்பைக் காந்தம் கவர்ந்திழுப்பதைப் போன்று பரிசுத்தமான மனதைத் தெய்வ சக்தி ஆகர்ஷிக்கும். தெய்வகிருபையும், கடாட்சமும் என்றும் உண்டு. அவன் அருளைப்பெறச்சுத்தமான இருதயம் முக்கியமானது.
சுவாமிஜியின் மூன்றாவது அருளுரை "தெய்வ சரணாகதி" பற்றியது. தெய்வ சரணாகதி நினைப்பதைப் போல் அவ்வளவு சுலபமல்ல. மேலே கூறப்பட்டுளள இரண்டு முறைகளையும் நன்றாகக் கடைப்பிடித்தொழுபவர்களுக்குத்தான் தெய்வ சரணாகதி சாத்தியமாகும்.
இந்த மூன்று மார்க்க முறைகளையும், வாழ்க்கை நெறிகளையுந்தான் சுவாமிஜி அவர்களது கட்டுரைகள் எடுத்துக் கூறுகின்றன.
"ஞான மண்டலம்" என்னும் இந்தந் சிறுநூல் மக்களின் ஆத்மீக வாழ்விற்கு உறுதுணையாக விளங்கும் என்ற நம்பிக்கையினால் இதனைப் பிரசுரிப்பதில் பேரானந்தம் அடைகின்றோம்.
கைத்தொழில் விஞ்ஞான éਸੇਕléLDaਹੀé5568. அலுவல்கள் அமைச்சு (O,O7.1984) v கொழும்பு - 2 - நன்றி ஞானமண்டலம்
உனது இதயத்தை தூய்மைப்படுத்துக:அய்பொழுது சிந்தனா சக்தியும் செயலாற்றும் திறமையும் அற்புதகரமான ரீதியில் வருகும்.
கண்கள் உலகத்தைப் பார்க்கும் சக்தி இழந்தாலும் தெய்வத்தைய்மார்க்கும் சக்தியை இழப்பதில்லை
-சுவாமி கெங்காதரானந்தா
2007 u"TI - 26 -
ea

ஆன்ம ஒளியாக, ஆத்மீக நாதமாக அருள் பரப்பிய சுவாமி கெங்காதரானந்தா
aéUtDaó aðöMT usbóuDrasuaði B.A., B.Sc,PGD சமுகவியல் வீட்டுத்துறை ஆய்வு
இலண்டன் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய சிவயோகத்தினராலி நடாத்தப்படும் முத்தமிழ் விழா மலரில் சிவயாக சமாஜ யோகாச்சிரமத்தை 1959ல் திருகோணமலை மண்ணில் நிறுவியசுவாமிகெங்காதரானந்தா அவர்களைக்குறித்த பார்வை ஒன்றை உங்கள் முன் வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
திருகோணமலை தமிழீழ மக்களின் ஆட்சியின் ஆளுமையின் ஆன்மீகத்தின் மூலஸ்தானம் திருக்கோணேஸ்வரம் என்னும்மாதுமை அம்பாள் சமேதராக கோணேஸ்வரப் பெருமான் எழுந்தருளியிருக்கும் தட்சணகைலாயம் என ஆண்மீக நூல்கள் சிறப்பிக்கும் அந்தக் கோயிலுடன் பின்னிப்பிணைந்த வரலாறாக அந்தப் பாபநாச சுனையிலே இருந்து ஊற்றெடுக்கும் தேசிய நீரோட்டமாக தமிழீழ மக்களின் வாழ்வ எண்றுமே தொட்ர்கிறது. இதனால் தான் தமிழர்களின் இதயதாகமாம் தமிழீழத் திருநாட்டின் தலைநகராக இன்றும் திருகோணமலையே பேசப்படுகின்றது. இந்தத் தன்மையை இந்த உள்ள உறுதியைத் தமிழர் தமிழர்களுக்கு அளிக்கும்திருகோணமலையின் ஆன்மீக வலிமை எங்கோ கேரளத்தில் திருப்புரியூரில் 1921ஆனித்திங்கள் 12ம்நாளில் சிவசங்கரன் தம்பதியரின் ஒரே புதல்வனாகப் பிறந்த கெங்காதரனை 1940ம் ஆண்டு குரைகடல் ஒதம் நித்திலங் கொழிக்கும் கோணமாமலை மணினுக்கு இழுத்து வந்தது. இழுத்து வந்தது என்று எதற்காக கூறுகின்றேன் என்றால் - உன் அருளாலே உன் தாள் பணிந்து - என்று அப்பர் சொன்ன அனுபவ மொழி ஒவ்வொருவரினழு வாழ்வின் ஓர் அங்கம். கெங்காதரனைப் பொறுத்த மட்டிலும் அவரின் சிறுவயது முதலே அவன் அருள் அவரை நடாத்திச் சென்று சாந்தகிரி பாபா என்னும் தபசி மூலம் தமிழ்நாடும் கேரளமும் இணையும் கற்கோட்டம் மலையடி வாரத்தில் வைத்து கெங்காதரனுக்கு திருகோணமலைக்கு போ என்ற உணர்வைத் தூண்ட வைத்ததை அவரைக் குறித்த வரலாற்றுக் குறிப்புக்களை எழுதிய தா. சியாமளாதேவி அவர்கள் கூறிச் செல்வதைக் காணலாம்.
சியாமளாதேவி அவர்களின் குறிப்பின்படிகெங்காதரன் அவர்கள் பிறந்தபொழுது கெங்காதரன் என்ற பெயரே ஒரு மகா தபசியினால் வைக்கப்பட்டது எனவும் பின்னர் அவர் குழந்தையாக உள்ள பொழுது வெள்ளை நாகம் அவர் கழுத்தைச் சுற்றி இறங்காது ஓரிரவு இருந்து, பின்னரே இறங்கிச் சென்றது எனவும் இதனால் அவரின் கழுத்தில் அந்த பாம்பு
2007 ۔ 27 سے அறிவு

Page 17
சுற்றியிருந்த அடையாளம் இருந்ததாகவும் தெரியவருகின்றது. அவ்வாறே அவரின் நெற்றியில் தெய்வீகப் பிறைவடிவு ஒன்று காணப்பட்டதாகவும் மற்றொரு இடத்தில் சியாமளாதேவி குறிப்பிடுகின்றார். இந்த இரண்டு அடையாளங்களும் கெங்காதரன் கோணமாமலை மண்ணில் கால்வைத்ததும் அவரை விட்டு நீங்கியது எனக் குறிப்பிடும் சியாமளாதேவி இதன் மூலம் கெங்காதரன் சிவப்பணியாற்ற வேண்டிய தளமாக திருகோணமலை இறைவனாலேயே கொடுக்கப்பட்டது என்ற உர்ைமையை
உணர்த்துகின்றார்.
இதனை இங்கு நான் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் நாம் எங்கோபிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் இன்று எங்கோ வாழ்கின்றோம். இந்நேரத்தில் இந்த வாழ்க்கை மாற்றங்களை நாம் தெய்வசித்தம் ஒன்றின் நெறிப்படுத்தல் என்ற உறுதியுடலர் ஏற்றுநாம் எங்கு வாழ்ந்தாலும் எப்படி வாழ்ந்தாலும் நாம் என்ன நோக்கங்களை நமது இளவயதில் நிறைவேற்றதுடித்தோமோ அதனை நிறைவேற்றும் பணியில் நாம் நமது புதியதளங்களை வடிவமைத்துக்கொள்ளவேண்டுமென்பதற்காகவே இந்த நோக்குடன் பொருத்திப்பார்க்கும் பொழுது அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயமும், சிவயோகமும்திருகோணமலைப்பக்திச் 5pయతిజీవిp இலண்டன் ரூட்டிங்கில் உருவாக்கியுள்ளது என்பது பாராட்டப்புடவேண்டிய ஒரு சாதனை.
இந்நேரத்தில் அந்தச்சூழல் உருவாகினால் மட்டும்போதாது. அந்தச் sாயல், அந்த வாழ்க்கை முறை, அந்த வலிமை, இந்த அமைப்பினாலும் முன்னெடுக்கப்படல் வேண்டும். முன்னெடுக்கப்படுகின்றது. இன்னும் வேகமாக முன்னெடுக்கப்படல் 8ഖങ്ങൾ எண்று மகானாக மாறிவிட்டகெங்காதரானந்தா சுவாமிகளின் சிவயோக சமாஜ ஆச்சிரமத்தையும் சிவயோக புரத்தையும் இலண்டன் சிவயோகத்தையும் முத்துமாரிஅம்மன் ஆலயத்தையும் இணைத்துப் பார்க்கும் இந்த சிந்தனைகளைப் புலம்பெயர் தமிழர் வாழ்வினதும் தாயக விருதலைப் போராட்ட வாழ்வினதும் பண்புகள் சில வகையில் உங்கள் முன் எழுதிச் செல்கின்றன.
சுவாமி கெங்காதரானந்த அனுபவத்தால், யோகத்தால், தவவலிமையால், தன்னிலை தியானத்தால் மக்கள் பணியால் பெருங்கடலைக் கடந்து ஆன்ம ஒsரியாக அடி நாதமாக சாயுச்சியம் என்கின்ற மகா சமாதி நிலையினை அடைந்த நம்மோரு வாழ்ந்த தவசிரேஷ்டராகத் திகழ்கின்றார். இவருடைய வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் எடுத்து நோக்குவது இந்தக்கட்டுரையின் நோக்கம் இதனால் இவர் இயற்றிய பெருவாழ்வின் பொதுப் பணிபுகளைத் தொட்டுக்காட்டி புனித ஆத்மா இப்படி வாழ்ந்து உன்னுடைய பலவீனங்களை துன்பங்கள், துயரங்களைத் தாங்க வழிகாட்டுகின்றது. இத் துன்பங்கள் துயரங்கள் பலவீனங்களுக்குள் நடந்து சென்றுதான் சரித்திரசாதனை சந்ததிப்பெருமைகளும் அதனுடாக 2007 - 28 - அறிவு

மோட்சநிலைகளும் எய்தப்படல் வேண்டும் என்ற உண்மையை, நம்பிக்கையை, வலிமை செயலாற்றல் திறனை அளிக்கிறது என எடுத்துக்காட்டவே இச்சிறு முயற்சியில் ஓடவிடகிறேன்.
கெங்காதரானந்தா மூதூர் வெருகலம்பதியில் அகத்தியர் ஸ்தாபனம் நிலையத்திலேயே தனது ஆரம்பகால திருவாழ்வினை தொடங்கி, பின்னர்திருகோணமலை நகரின் மையமாகிய வடகரை வீதியில் 1953 வாழ்ந்தார் எனத் தெரிகின்றது.இங்கு முன்னர் பெற்ற அனுபவங்கள் யோகத் தன்மைக்கு அவரை இட்டுச் சென்றதைக் காணக் கூடியதாக உள்ளது. அந்தரத்தில் பருத்தல், நீரின் மேல் மிதத்தல், பாம்பைக் கைப்பிடித்தல் போன்ற பல சித்து தன்மை சித்திக்க வரம்பெற்ற அவருக்கு அதனை கடக்க வைக்கும் பெரும்சக்தியாக கோணநாதர் மாறினார். இராவணன் வெட்டு என்ற கண்டவர் அந்கம் கோணமலைக் குகைகளிலே தவமியற்ற அழைத்தது சிவம் அழைப்பானை தலைகொண்டு தன்னை மறந்து ஊன் மறந்து உடல் மறந்து சித்தம் எல்லாம் சிவமய - கெங்காதரனாந்தா அந்தக் கரும் குகைகளில் தவமியற்றினார். யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் இவர் பெருமை உணர்ந்து பாலயோகி அங்கே உள்ளான் என்று இவர் - குறிப்பிடும் காலம் தோன்றியது. இந்த சிவமயமாதலின் முடிவில் அவர் மக்கள் பணியே மகேசன் பூசை என்ற மூன்றாம் கட்டத் தவநிலையினை அடைவதைக்காணலாம். ஆம் கேரளமுதல் வெருகல் வரை அனுபவங்கள் அவரை நெறிப்படுத்திட, வெருகல் முதல் கோணேஸ்வரத் தவம் வரையோகம் அவரை வழிப்படுத்த கோணேஸ்வரரே அவரை உன் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற தத்துவத்திற்கு இட்டுச் செல்கின்றார். இது ஒவ்வொரு மனிதரினதும் வாழும் நாளில் சாதாரணமான விடயம். அனுபவங்கள், சில செய்தி தரும் ஆற்றல்கள், யோகங்கள் சில சக்தி தரும்.இவைகளை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து இந்த அனுபவங்கள் யோகங்களை aigDugšīs கொள்ளாது நான் என்ற கூட்டை உடைத்து நாங்கள் நமது நம் மக்கள் என்றஉணர்வுக்கு உயரும் பொழுது அங்கே மானிடத்தன்மை மறைந்து தெய்வீகத்தன்மை தோன்றுகிறது. இதனை உணர்ந்து ஏற்று வாழ்பவன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்ற தெய்வமாகின்றான். இதுதான் கெங்காதரானந்த சுவாமியின் தெய்வீகத் தன்மை எமக்குத் தரும்செய்தியம்கூட சுவாமி மக்கள் பணியினைத்தொடங்கியதன் பின்னர் இரு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒன்று, அவர் சிவயோக சமாஜ ஆசிரமத்தை நிறுவி மக்களுடன் தன்னை இணைத்தமை. அடுத்தது 1972ல் சிவயோக புரமென்ற பெயரில் நடராஜர் அலயம் ஒன்றை அமைத்தது திருவெம்பாவை மார்கழி பத்து தினங்களிலும் திருகோணமலையில் பக்திப்பவசம்பரவவைத்து ஆருத்ராதரிசனத்தன்று அதனைப்பெருவிழாவாக்கி காவடிகளும் கற்பூரச் சட்டிகளும் புடைசூழத்திருவிழாக்கான வைத்து வாழ்வியலையும் ஆன்மீகத்தையும் 2007 - 29 - அறிவு

Page 18
இணைத்தார். கோயிலும் வீடும் இணைந்து வாழ்வின் மூலம் வீடுபெறும் நிலையைத் தோற்றுவித்தல் எண்பது தமிழர் கலாசார மரபு. இதனைச் சாதித்து அறம்பொருள் இன்பம் என்பவற்றை உரியமுறையில் பயன்படுத்தி மோட்ச வீட்டினை அடைய வழி காட்டுதலே உண்மை ஆன்மீகம் என்பதை வெளிப்படுத்தியவர் சுவாமி கெங்காதரானந்தா. இவர் ஆன்மீகத்தை வெறுமனே வழிபாடாகப் பார்க்கவில்லை. வாழ்ந்து, இறைத்தன்மை அடையும் வழியாகப் பார்த்தார். இதனால்தான் இவர் பன்மதவாச்சி பகுதியிலே நெல்மணிக் கழகம் என்ற பெயரில் விவசாயக் கழகங்களைத் தோற்றுவித்தார். சத் சங்கம் என்ற பெயரில் மாதத்தில் வரும் ஏகாதசி நாட்களில் மக்கள் கூடி ஆன்மீகப் பகைப்புலத்தில் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்குச் சங்க அமைப்பினை ஏற்படுத்தினார்.
இவ்வாறாக மக்கள் பணியேற்ற கெங்காதரானந்தா சுவாமிகள் அனைத்து மக்களையும் மத இன மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைக்கின்ற உளப்பாங்கினையும் கொண்டிருந்தார். சுவாமிக்கு மிக இளவயதில் ஒரு கிறிஸ்தவ ஆசிரியை லில்லியே அன்பான ஆதரவான வழிகாட்டியாக இருந்துள்ளார். ஒரு முஸ்லீம் ஞானியே நீ 32வயதில் கடல்கடந்துசென்று ஒானியாவாய் என அருள்வாக்குரைத்துள்ளார். அவ்வாறே சுவாமியும் சாதி பற்றி கேட்கப்பட்ட பொழுது கண்முன்னால் உள்ளவற்றையே சரியாக சொல்லமுடியாத நான் என் பிறப்பை குறித்துகூறலாமா என்ற எதிர்க்கேள்வியைப் போட்டு சாதிய உணர்வுக்கு உள்ளானவர்களின் அறியாமை, மனோநிலையினை வெளிப்படுத்தியதைக் காணக்கூடியதாக உள்ளது.
சுருக்கமாக கூறுவதானால் சாதிசமய மொழிபேதங்களைக் கடந்த பெரும்பணி மானிடசேவை. ஆனால் அதே அம்சங்கள் எண்னை எண் இனத்தை ஒதுக்க அழிக்க மற்றவர்களால் பிரயோகிக்கப்படும் பொழுது அதனை எதிர்த்து நிற்றல், சத்தியம், தர்மம் இந்நிலையிர் தான் எண் தேசியத்தை நான் எனக்கு அடையாளமாக கொண்டு சத்தியத்தை தர்மத்தை நிலைநாட்டவேண்டிய கடமைக்கு ஆளாகின்றேன்.இதனைத் தான் கீதையிலே கண்ணன் மிக அழகாக கூறினான். மகாஞானிகள் இதனை உணர்ந்தவர்கள் தங்களையும் நிலைநிறுத்தி மற்றவர்களையும் சமமாக பேனும் உயர் பண்பினர். இதற்கு உதாரணமாக அமைந்தது சிவயோக சமாஜ ஆசிரமம்.
இங்கும் சிவயோகபள்ளிக்கூடம் இந்த உயர்பண்புகளுடன்தண்மானம்இனமானம் மனிதநேயம் உள்ள தமிழர்களை உருவாக்கவும் அந்தநாம்யார்க்கும்குடியல்லோம் நமனை அந்சோம் என்னும் உறுதியான தளத்தில் நின்றவண்ைணம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் பெரும்பண்புடன் உலகினை உலக மானிடத்தைப் போற்றவும் வல்ல மாணவர்களை உருவாக்க - கெங்காதரானந்தசுவாமிகள் அருளும் ஆசியும் அனைவருக்கும் கிடைப்பதாக
நனறி-சிவயோகம் 2001
2007 umumamgmumu -350 - * Sða

ஞான மண்டலம்
மனிதன் என்ற சொல்லுக்கு அர்த்தமென்ன? எதை ஆதாரமாக வைத்து இச்சொல் வழங்கி வருகின்றது? கை, கால், கண் என்பவற்றுடன் ஒன்பது துவாரங்களுடன் கூடிய உயிர்த்துடிப்பிருக்கும் வெறும் ஒரு மாமிச பிண்ைடத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு தானா இப் பெயர் வழங்கி வருகின்றது? அல்லது அதை விட ஆழமும் விசாலமுமான பொருள் வேறேதுமிருக்கின்றதா? ஒரு யந்திரத்தைச் சரியான முறையில் இயக்குவதற்கு அதைப் பற்றிய தக்க அறிவிருந்தாற்றாண்முறையாக அதனை இயக்கமுடியும், அதேபோன்றுமனிதன் தன்னைப்பற்றிய தெளிந்தஏநானமுடையவனாயிருந்தாற்றான் வாழ்க்கை என்ற யந்திரத்தை நெறிதவறாமல் இயக்க முடியும். தற்சமயம் கல்வி முறைகள் உலகாயதப் பொருள்களை அறிவதற்கும் அதைச் சம்பாத்தியம் பண்ணுவதற்கும் உபயோகப்படுமே தவிர மனிதன் தன்னையும்தன் வாழ்க்கையைப் பற்றியும் அறிவதற்குச்சிறிதளவேனும் பயன் பெறக்கூடிய வகையிலில்லை.ஜீவிதத்தைப்பற்றிய யதார்த்தஏநானக் குறைவுதான் தனிமனிதனிலிருந்து சமுதாயம் முழுவதிலும் தோன்றிக்கொண்டிருக்கும் சகல சங்கடங்களுக்கும் மூலகாரணம். மனிதன் தெளிந்த தன்னறிவின் ஒளியைக் கொண்டு வாழ்க்கையைப் பார்க்க வேண்டும். அதன் வெளிச்சத்தில் தேட வேண்டியதைப் தேடியெடுத்து அனுபவிக்க வேண்டும். மனிதன் இவ்வழியில் வாழ்ந்தால் ஜீவிதம் சம்பூரண சுகமுடையதாய் அமையும்,
மனதைக் கொண்டு வாழ்கின்றவன் மனிதன் ஆகையால் “மணம் போல மாங்கல்யம்" என்றதோர் பழமொழியும் இருக்கின்றது. மனம் மனிதனை ஆளாமல் மனிதன் மனத்தை ஆளுகின்ற திறமையும் சக்தியும் பெற்றால் வண்டரிக்காமல் பூத்து மலரும் நறு மலர் போன்று வாழ்வும் ஆனந்தப் பொண்மலராய் மலர்ந்து மணம் கமழும். மனம் என்ற வஸ்துவை உண்ணிப் பார்க்குக, அதில் சந்தோஷம், திருப்தி, அன்பு, ஐக்கியம் போன்ற பசுமையான சுகவுணர்வுகளும், பகை, பொறாமை சினம், கோபம், வத்சனை முதலிய புன்னெறி உணர்வுகளும் நீர்க குமிழி போன்று மறைவதும் தோன்றுவதுமாயிருப்பதை அவதானிக்கலாம். இத்தகைய நல்லதும் கெட்டதுமாகிய எண்ணரிய எண்ணங்களின் பிரதிபலிப்பால் மனதின் சமநிலை அல்லது ஏகாக்கிருகை கலைந்து இயல்பான சாந்தியும் சுகமும் இழக்கப்படுகின்றது. மனிதனுடைய அறிவாற்றலும் திறமையும் சுகமும் மனதின் சமநிலையில் தான் தங்கியிருக்கின்றது. மனம் குழம்பினால் ஜீவிதம் குழம்பும் சாசுவதமான இன்பத்தையும் அறிவாற்றலையும் செல்லரித்து விடுகின்ற உணர்வுகளைகளின் தாக்கம்,
திசைதிருப்பிவிடுகின்றது.
r 31 ജ
2007
அறிவு

Page 19
துலாப்பிரான சக்திமனதைத் தாக்கும்பொழுது வெடித்துச் சிதறிப்பறந்து திரியும் பத்சுத் துகள்கள் போன்று மனமும் சிதறி விடுகின்றது. சிதறிய மனம் தொட்டடுத்து நிற்கும் விஷயாதிகளில் கலந்து அதனதன் குணரூப வடிவங்கொண்டு அதற்கேற்ற சுகதுக்கங்களை அனுபவித்து நிற்கும். புல்லுருவி போன்ற மனம் எதில் கலந்து நிற்கின்றதோ அதன் வடிவங் கொள்வதுதான் மனதின் இயல்பு. இப்படி விஷய வாசனைகளில் சென்று விழுந்த மனம் வாசனா குணங்களாகிய எண்ணச்சுழிகளில் சுழன்று சுழன்று சமுத்திர அலைகளிலகப்பட்ட றப்பர் பந்து போன்று அங்குமிங்கும் இல்லாத நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும். இதுதான் பெருபாலும் மனிதருடைய மானசீக அனுபவம். சகாராப்பாலைவனங்களில் ஒரு வகையான நீண்டமுள்ளுடைய முட்செட்டிகள் இடையிடையே முளைத்து வளருகின்றன. அங்கு வாழும் ஒட்டகங்கள் அச் செடியின் நீண்ட முட்களுக்கிடையிலிருக்கும் பொடியிலைகளைத்தின்ன முயற்சிக்கும் பொழுதுமுகத்தில் முட்கள் குத்தி இரத்தம் வழிய வழிய ஒட்டகம் அதைத் தான் திண்ன முயற்சிக்குமே தவிர தின்னும் ஆசையை விட்டுவிட மனமில்லாமல் அங்கேயே மாண்டு மடிகின்றது. இதைப் போன்றதுதான். சிற்றின்பப் பற்றுடைய மனிதனுடைய நிலையும். ஆயினும் மனிதன் பகுத்தறிவற்ற மிருகமல்ல. பகுத்தறியும் விவேகமுடையவன். நிலையற்ற அற்ப சுகங்களில் மயங்கிக் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமலும், வாய்க்கெட்டியதை உட்செலுத்த முடியாமலும் வேதனைப்படும் பாரிசவாத நோயாளிகளைப் போன்றுதானா பெரும் பேறுகளையுடைய மனிதன் வாழ்ந்து மடிய வேண்டும்?
எண்ணங்களை வைத்துக்கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கும் மனதை அவ் விளையாட்டரங்கினின் றெருத்து ஆத்மாவின் பிரசுந்த மதுரமயமான வெளியரங்கில் வைத்து வாழ்கின்ற மனிதன்தான் மனிதன்.இதற்குரியசக்திமனிதனுக்கில்லையெனினும் மனிதனில் அது இருக்கின்றது. நீரில் கலந்திருக்கும் பால் போன்று மனதில் கலந்திருக்கும் அந்த மகா சக்திக்குக் கீழ்ப்பணிந்து அதன் வழிநடத்தலுக்கு நம்மை ஆளாக்கிக் கொண்ட்ால் மார்க்க தரிசனம்சுகமாயிருக்கும். அப்பெருஞ்சக்தியின் அருளாசியால்மனதைமாயாமயக்கஉணர்வு மண்டலத்திலிருந்து ஆனந்தமயமான ஏநானப்பேருணர்வு மண்டலத்தில் நுழைய விட்டால் அம்மண்டலத்தில் ஈர்ப்புச் சக்தியால் ஈர்க்கப்பட்டு அது அங்கேயே சஞ்சாரஞ் செய்து கொண்டிருக்கும் கரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும் பூமியும் இடையிடையே கரியனை அண்டிவருவது போன்று இறையழகொழுகும் ஏநானமய மண்டலத்தையடைந்த மனமும் அங்கேயே சுற்றிச் சுற்றி இறுதியில் அம்மண்டல மத்தியில் ஆான பிந்துவாயொளிரும் சர்வேஸ்வரனில், நீரில் கலந்த உப்பும் போன்று இரண்டறக் கலந்து விடுகின்றது. இதுவேயோகமென்பது. இதற்குப்பின் மனம் ஒரு பொழுதும் இந்தக்கர்மபூமியை நோக்கித் திரும்பி வருவதில்லை, ஜீவன் எண்ணற்ற ஜடங்கள் வழி பிரயாணம் செய்து தனது பாத்திரையை இனிது முடிக்கின்றது. சாயுச்சிய மென்ற இந்நிலையை ஜீவன் அடையும் 2007 32 = அறிவு

பொழுது ஜீவனின் வளர்ச்சிபரிபூரணமடைகின்றது.உயிர்கள் இயற்கையாகவே ஒருநாள் இந்நிலையை அடைந்துதானாக வேண்டும். ஆயினும் விவேகமுடைய மனிதன் சம்சாரசாகரத்திலிருந்து விரைவில் கரையேறுவதற்கு முயற்சியென்பதொன்று அவசிய மிருந்து தானாகவேண்டும்.இயற்கை நியதிகளுடன் தன்முயற்சியும் சேரும் பொழுது நீரும் உரமும் போட்ட செடியின் வளர்ச்சி துரிதப்படுவது போன்று ஜீவனுடைய வளர்ச்சியும் துரிதமடைகின்றது.இதற்காககத்தான் ஆத்மீக சாதனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
ஆத்மீக சாதனைகளென்றால் யோக ஏதான மார்க்கங்களென்று மாத்திரம் கருதக்கூடாது. சமயாசார அனுஷ்டானங்களும் ஏனைய வழிபாட்டு முறைகளெல்லாம் இதனை ஆதாரமாகக் கொண்டவை. ஆகையால் இதுதான் சரி, மற்றவையெல்லாம் பிழை யென்று கூறுவதற்கில்லை. அவரவர்களுடைய பக்குவத்திற்கும் ருஜிக்கும் ஜீரண சக்திக்கும் ஏற்றவாறு எந்தவொரு மார்க்கத்தை வேண்டுமானாலும் கடைப்பிடித்தொழுகலாம். செய்யும் சாதனைகள் உயிரணுக்களைத் தொடும் வண்ணம் செய்யப்பட்டால் எந்தவொரு சாதனையிலும் நிச்சயம் சித்திகிடைக்கும் கண்ணப்பர், சபரி வறணுமார், குகன் போன்றவர்கள் இதற்கு உதாரணமாயிருக்கின்றனர்.
எனினங்களாகிய சித்த விருத்திகளால் ஜீவன் சம்சாரதுக்கத்தை அனுபவிக்க வேண்டியிருக்கின்றது. சித்த விருத்திகளைத் தடை செய்தால் கிரகண பீடை நீங்கிய சந்திரனைப் போன்று மனம் ஒரு நிலைப்பட்டு ஒன்றாகப் பிரகாசிக்கும். தெளிந்து அசைவற்றிருக்கும் மனதில் பிரம்மப் பிரகாசம் தானாகவே ஒளிரும். இந்த ஒளியின் மகிமையால் கவரப்பட்டமனம் காலக்கிரமத்தில் அதனில் கலந்து அது மயமாய் விடுகின்றது. இதுதான் பிறவிப் பேறென்று சாஸ்திரங்கள் புகழும் சாயுச்சியம் அல்லது முக்தி பதம். நமக்கு அரிய மனித ஜென்மம் கிடைத்திருப்பது எதற்காகவென்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் பல்சமா பாதகங்களால் ஐம்பொறிகளையும் கெருத்து ஜெண்மத்தையும் பாழாக்கிவிடுவதற்காகவா? அல்லது கிடைத்த ஜெண்மத்தைக்கடைத்தேற்றுவதற்காகவா? இதனைப்பகுத்தறியமுடியாத ஜெண்மம் பாபக் கறைபடிந்ததேயாகும். சிந்தித்துத் தெளிவடைந்து கடைத்தேற முயற்சிக்க ഖേറ്റ്ലേ, ഖഞു. வானத்தில் பறந்து திரியும் பறவையாயினும் பூமியில் இறங்கித்தான் இரைதேடுகின்றது. மனிதனும் தனது மனதை இறை மண்டலத்தில் சஞ்சாரம் செய்யவிட்டு இந்தக் கர்ம பூமியில் வாழும் வரை தனிதன் கருமங்களைச் செவ்வனே செய்ய வேண்டும். முயற்சிக்கு முன்னுக்கும், முயற்சியின்மைக்குப்பின்னுக்கும் கடவுள் நிற்கின்றார் என்பதை உணருவாயாக! பேசுவதிலும் கேட்பதிலும் வாசிப்பதிலும் மாத்திரம் நிற்காமல் சிறிதேனும் சாதனை செய்து பயனடைவாயாக!
- சுவாமி கெங்காதரானந்தா
அறிவு
2007 33 a?

Page 20
உலகின் மிகப்பெரும் தீவுகள்
கிரீன்லாந்து நியூகினியா (8шпјаћGuЈП மலகாசிக்குடியரசு பே.பின் தீவு சுமத்ரா வேறாண்ஷ? கிரேட்பிரிட்டன் எலியஸ்மியர்தீவு விக்டோரியாதீவு செலிபஸ் தென்தீவு,
26lis
லூசான்
வடதீவு நியூசிலாந்து நியூஃபெளண்ட கியூபா ஐஸ்லாந்து மிண்டனோ
அயர்லாந்து (வட வுெறாக்கைடோ வறிஸ்பானி
சக்காலின்
தாஸ்மானியா ളബ്ബ്
2007
பரப்பளவு
ச.கிமீ
275,600
82,031
7,44,37Ο
5,90,000
476,07O
4,73,600
22797O
28,040
2,12,600
2,12,200
,89,040
50,460
26,290
20,790
1,4,690
1,10,690
107,83Ο
02,820
1,01,500
82,460
77,720
76,480
74,070
67,900
65,600
இருப்பிடம்
ஆர்க்டிக்கடல்
மேற்குப்பசிபிக்
இந்துமாக்கடல்
இந்துமாக்கடல்
ஆர்டிக்கடல்
இந்துமாக்கடல் வடமேற்குபசிபிக் வடஅட்லாண்டிக்
ஆர்டிக்கடல்
ஆர்டிக்கடல்
இந்துமாக்கடல் தென்மேற்குபசிபிக் நியூசிலாந்து இந்துமாக்கடல்
மேற்பசுபிக்
தெற்மேற்கு
UBitish
வடஅட்லாண்டிக்லாந்து கரீபியன்கடல்
வடஅட்லாண்டிக்
வடபசுபிக் வட அட்லாண்டிக் அயர்லாந்தும் குடியரசும்) வடமேற்கு பசுபிக் கரீபியன்கடல் யோலோ (சுதந்திர குடியரசும் வுைறத்தியும்)
வடமேற்கு பசுபிக் தென்மேற்கு பசுபிக் இந்துமாக்கடல்.
- 34 -
ela

தமிழ் இலக்கியம்
தமிழ் இலக்கியம் மிக நீண்ட வரலாறுடையது. தமிழின் முதல் படைப்பாகத் தொல்காப்பியம் (கி.மு. 500) கருதப்படுகிறது. இது தமிழ் இலக்கியம், மொழி மற்றும் பழந்தமிழர் வாழ்வு குறித்த பலகட்டமைப்புகளைத் தரும் இலக்கண நூலாகும். துவக்ககாலத்தமிழ் இலக்கியங்களின் அடிப்படையாக நாட்டுப்புறப்பாடல்கள் இருந்தன.
காலத்தால் தொண்மையான தமிழ் இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும். இதன் காலம் கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை எனக் குறிப்பிருவர் காலத்தால் அழிக்கப்பட்டது போக எஞ்சியவை தொகுக்கப்பட்டு "சங்க இலக்கியங்கள்” ஆக்கப்பட்டன. இவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும் இரு அமைப்பில் தொகுக்கப்பட்டது. தனித்தனிப் பாடல்களின் தொகையாகிய எட்டுத்தொகையில் நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அசுநானூறு, புறநானூறு எனும் எட்டு நூல்கள் அடங்கும். நீண்ட பாடல்களின் தொகுதியான பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபானற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெருல்வாடை, மலைபடுகடாம், குறித்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை எனும் பத்து நூல்கள் அடங்கியுள்ளன. 473 புலவர்களால் பாடப்பட்ட இத்தொகை நூல்கள் அகம், புறம் என்ற அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டுள்ளன.
இக்காலகட்டத்தில் தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தக்க கட்டுக்கோப்புக்குள் இருந்தது. புலவர்கள் மரபு நிலையைக் காப்பாற்றி வந்தனர். நிலப்பகுதி, குறித்சி (மலை), முல்லை (காடு, மருதம் (வயல்), நெய்தல் (கடல்), பாலை (பாலைவனம்) என ஐந்தாகப்பகுக்கப்பட்டன. அவற்றிற்கு முறையே புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்பன உரிப்பொருளாக அமைந்தது.ஒரு குறிப்பிட்ட அகவாழ்வைப்பாடுகின்ற புலவன் இடம், காலம் பொழுது, கருப்பொருள் போன்றவற்றை உட்படுத்தியே பாடுவான்.
கி.பி. ஒன்று முதல் கிபி ஐந்து வரை உள்ள காலத்தில் தோன்றிய பதினெட்டு இலக்கியங்கள் நீதி இலக்கியங்கள் எனப்படுகின்றன.இவற்றில் அனைத்தும் நீதிநூல்கள் அல்ல. திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, சிறுபத்சமூலம், திரிகருகம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, பழமொழி, இன்னிலை, ஆசாரக்கோவை, முதுமொழிக்கால்சி போன்ற பன்னிரெண்டும் நீதியை வலியுறுத்துபவை. களவழி நாற்பது போர்பற்றியது.கார் நாற்பது, திணைமொழிஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்தினை எழுபது, கைந்நிலை எனும் ஐந்தும் அகம் சார்ந்து நிற்கின்றன. வாழ்க்கைக்கான நீதிகள் பலவற்றைக் கூறுவது இவ்விலக்கியங்களின் சிறப்பு.
ー35 =
2007 அறிவு

Page 21
மூன்றாம் நூற்றாண்டுகால கட்டத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை எனும் இரட்டைக் காப்பியங்கள் உருவாயின. தமிழ்நாட்டு மூவேந்தர்களையும், மூன்று நகரங்களையும் கொண்ட முதல் படைப்பான சிலப்பாதிகாரம் 30 படலங்கள் கொண்டது. இதன் வழிநூல்தான் மணிமேகலை. இதைத்தவிர சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் காப்பியங்களும் உள்ளன. ஐத் சிறுங்காப்பியங்கள் எனும் ஒரு வகையும் உள்ளது.
பக்தி இலக்கியத்தால் மொழியும், இசையும் வளம் பெற்றன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனும் சைவ சமய அருளாளர்கள் நால்வரும் தேவாரம்,திருவாசகம் எனும் தெய்வப்பனுவல்களைப் படைத்தனர். இவை நாட்டின் இசை மரபுகளைக் காத்துவரும் இசைச் செல்வமாகவும் உள்ளன. ஆண்டாள், பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார, தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்ற பன்னிரெண்டு ஆழ்வார்கள் வைணவ பக்தி இலக்கியங்கள் பலவற்றைத் தந்தனர்.இவற்றின் தொகுப்பு நாலாயிர திவ்யப்பிரபந்தம் எனப்படும். திருப்பாவை இன்றும் மார்கழி மாத பாவை நோண்பில் பாடப்பட்டு வருகின்றது.
நந்திக்கலம்பகம், கலிங்கத்துப்பரணி, பாண்டிக்கோவை, திருக்கைலாய ஞான உலா, அழகர்கிள்ளைவிடுதூது போன்ற சிற்றிலக்கியங்களும் குறிப்பிடத்தக்கவை. காலத்தால் அழிக்கப்படாத தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான கம்பராமாயணம், வால்மீகிராமாயணத்தின் தழுவல் என்றாலும் களம், பாத்திரப்படைப்பு போன்றவற்றில் மூலத்தை விடவும் சிறப்பாக அமைந்துள்ளது. 14368 பாக்களால் ஆன இக்காவியம், இலக்கிய ரசனையாளர்களுக்குப் பெரிதும் சுவையூட்டி வருகின்றது.
கி.பி.12ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டுகாலத்தில் பல புராணங்களும் உரைநூல்களும் எழுந்தன. உய்யவந்த தேவநாயனார் முதலானவர்களால் இயற்றப்பட்ட பதினான்கு நூல்கள் சைவ சாத்திரங்கள் எனப்படுகின்றன. வடமொழியில் உள்ள புராணங்களைத் தமிழில் எழுதும் முயற்சியின் அடிப்படையில் கந்தபுராணம், நளபுராணம், கூர்மபுராணம், மச்சபுராணம் போன்ற நூல்கள் உருவாயின. தலபுராணங்களில் சிறந்ததாகப் பரஞ்சோதியார் இயற்றிய திருவிளையாடல் புராணம் கருதப்படுகின்றது. 3360 பாடல்கள் கொண்ட விரிவான நூல் இது.
13 - 18ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டக் காலத்தில் இஸ்லாமிய, கிரஸ்தவர்களின் தமிழ்த்தொண்டு குறிப்பிடத் தகுந்தது. முகம்மது நபியின் வாழ்க்கையை 5000 பாடல்களில் சீறாப்புராணமாகத்தேம்பாவணி, சதுரகராதி பரமார்த்தகுருவும் சீடர்களும் 2007 = 66 = அறிவு

போன்றவை தமிழ் இலக்கியத்திற்கு வளமூட்டின. கால்டுவெல்லின் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், வேதநாயகம்பிள்ளைகளின் சர்வசமய சமரசக் கீர்த்தனை போன்றவையும் குறிப்பிடத்தகுந்தன.
19-20ஆம் நூற்றாண்டு உரைநடை, கவிதை, நாடகம், புதினம் போன்ற வகைகளுக்கக் களனாய் அமைந்தது.பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் "மனோன்மணியம்" நாடகம் சிறந்த ஒரு செய்யுள் நாடகம் சங்கரதாஸ் சுவாமிகள், சம்பந்த முதலியார், வி.கொ. சூரியநாராயணசாஸ்திரிபோன்றோர் பலசிறந்தநாடகங்களையும் எழுதியும், தாமே நடித்தும் வந்தனர்.
1876இல் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் முதல் நாவல் "பிரதாப முதலியார் சரித்திரம்" எழுதப்பட்டது. இவரைத் தொடர்ந்து ராஜம் ஐயரின் "கமலாம்பாள் சரித்திரம்" எழுதப்பட்டது.இவரைத்தொடர்ந்து ராஜம் ஐயரின் "கமலாம்பாள் சரித்திரம்", மாதவையாவின் "பத்மாவதி சரித்திரம்" போன்றவை புது பரிணாமங்களுடன் வெளிவந்தன. வரலாற்று நாவல்களுக்குச் சிறப்புத் தந்தவர் கல்கி. இவரது பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் அழியாக் காவியங்கள். விடுதலை இயக்கத்தைப் பின்னணியாக வைத்த எழுதிய அகிலனின் படைப்புகள் குறிப்பிடத் தகுந்தவை. கோவி, மணிசேகரன், நா. பார்த்தசாரதி, சிவசங்கரி,இந்துமதி,ராஜம்கிருஷ்ணன் போன்றோர் படைப்புகள் உணர்ச்சிபூர்வமானவை. அறிவியல் கலந்த படைப்றுைபுகளை சுஜாதா போன்றோர் எழுதிவருகின்றனர்.
புரட்சிக்கவி எனும் பாரதியாரின் கனல் பறக்கும் கவிதைகள், விடுதலை வேட்கையைத் தூண்டின. பாரதிதாசன் கவிதைகள் சமுதாய சீர்திருத்த வேகம் கொண்டவை. கவிமணி தேசிய வினாயகம்பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம், சுத்தானந்த பாரதியார் போன்றோர் பலவகைக் கவிதைகளைப் படைத்தனர். கண்ணதாசன் திரைப்படப்பாடல்கள் மூலம் கவிதைகளுக்கு புது அழகு செய்தார்.
தற்காலப்படைப்பிலக்கியங்களில் பல புதிய உத்திகளும், வடிவங்களும் புகுத்தப் பட்டு வருகின்றன. வுைறக்கூக்கவிதைகள், அளவில் சுருங்கிய புதுக்கவிதைகள், ஒரு பக்கக் கதைகள், மாதம் ஒரு நாவல்கள் எனப்பல கோணங்களிலும் தமிழிலக்கியம் பரந்து வருகின்றது. இவற்றின் போக்கில் சில வரையறைகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது ஏற்பட்டுள்ளது.
நன்றி மனோரமா இயர்புக்
2007 | - - o - 37 -
அறிவு

Page 22
அருளும் நன்றியுணர்வும்
-ழுநீழுநீ ரவிசங்கர்
ஒரு சூடான தட்டில் விழும் ஒரு சொட்டுநீர், மறைவதற்குச் சிறிது நேரமே எடுத்துக்கொள்கிறது. அது சிறிது சப்தம் போட்டுவிட்டு ஆவியாகிவிடுகிறது.
நமது வாழ்கையில் நன்றியுணர்வு இதைவிட வேகமாக மறைந்துவிடுகிறது. நாம் எவ்வளவு வளர்ந்து இருக்றோம், எவ்வளவுபெற்றிருக்கின்றோம்என்பதை மறந்துவிகிறோம். இந்த மனமானது இன்னும் மேலும் மேலும் தேடுகிறது. நமது ஒவ்வொரு வேட்கையும் மேலும் மேலும் அதிகரித்ததும், அது கடந்தவற்றை மிகச்சுலபமாக மறந்துவிடுகிறது.
ஆக, நன்றியுணர்வு எல்லோரிடமும் எழுகிறது. அனால், அது வெகுசீக்கிரமாகவே மறைந்துவிடுகிறது.இன்று யாருமே நன்றியுடையவர்களாக இல்லை என்று நாம் சொல்ல முடியாது. எல்லோரும் அந்தக் கணத்தில் மாத்திரம் நன்றியுடன் இருக்கிறார்கள். அத்தோரு முடிந்த விட்டது.
எப்போதும் இருக்கின்ற நன்றி உணர்வே, அருள் என்பது என்றும் நினைவில் பசுமையாக இருக்கும் நன்றியுணர்வே அருளாகும். அதுதான் அருள். அது இமயமலையில் வருடம் முழுவதும் படர்ந்திருக்கும் பணியைப்போன்றது. பணி விழுந்து மறைவதில்லை உயரமான சிகரத்தில் எது விழுந்தாலும் அது அப்படியே இருக்கும்.
நன்றி உணர்வே இருக்கும்போது, குறைகூறுவது மறைந்துவிடுகிறது. குற்றங்குறைகள் எழும்போது நன்றி உணர்வு மறைந்துவிடுகிறது. மனதில் ஒருகுறை இருந்தாலும் நிறைவில்லாமை, ஏக்கம், உற்சாகமில்லாமை, மனச்சோர்வு எல்லாம் தொடர்கின்றன. நன்றி இல்லாமலோ, நன்றியுணர்வு இல்லாமலோ இருந்தால் நீகுறைகூற ஆரம்பித்துவிடுவாய். குறை கண்டுபிடிப்பாய். குறை ஒன்றும் இல்லாவிட்டாலும் அதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வாய். அதைக் கண்டுபிடிப்பாய். உனக்காக உன் மனது அதைச் செய்யும். நீ நிரம்ப முயற்சி செய்யவேண்டிய அவசியமும் இல்லை. உன் மனம் அதைச் சுலபமாகக் கண்டுபிடித்துவிரும், அவர் என்னைப்பார்த்து சிரிக்கவில்லை அல்லது சிரித்தார். ஆனால், பல் முழுவதும் காண்பிக்கவில்லை. அது முழுச்சிரிப்பு அல்ல.
இது கீழ்நோக்கிய பயணம். நன்றியுணர்வு இடையிலிருப்பது. நீ அதற்கும் மேற்செல்லும்போது இருப்பது அருள். உன்னிடம் நன்றி இருக்கும்போது, அந்த நன்றியே உன்னிடமிருந்து அருளாகப் பொழிகிறது. எங்கெல்லாம் நீ இந்தத் தெய்வீக அருள் பொழிவதைப் பார்க்கிறாயோ, அங்கெல்லாம் நீநன்றியுணர்வைப் பார்க்கலாம்.
- 38 =
2007 அறிவு

அப்பா - ஒரு மதிப்பீடு
அப்பாவைப்பற்றி, வயது ஏற ஏறப் பிள்ளைகளின் மதிப்பீடு
4 வயதில் என் அப்பாவால் எதையும் செய்யமுடியும்
7வயதில் என் அப்பாவுக்கு எல்லாம் தெரியும்,
முழுக்க முழுக்கத் தெரியும்
8 வயதில் எண் அப்பாவுக்கு எல்லாமே முழுமையாகத் தெரிந்திராது.
12 வயதில் ஒ எல்லாவற்றையும் எண் அப்பா தெரிந்து வைத்திருக்க
வேண்டும் என்பதில்லை.
14 வயதில் அப்பாவா அவர் பத்தாம் பசலி
21 வயதில் அந்த ஆள் இந்தக் காலத்துக்கு ஏற்றவர் அல்ல,
அவரிடமிருந்து என்ன எதிர் பார்க்கமுடியும்?
25 வயதில் அவருக்கு ஏதோ கொஞ்சம் தெரியும்.
அதிகமாக ஒன்றும் இல்லை.
30 வயதில் அப்பா இது பற்றி என்ன நினைக்கிறார் என்று பார்க்க வேண்டும்.
35 வயதில் அப்பாவின் கருத்தை முதலில் அறிந்து கொள்ளக் கொஞ்சம்
பொறுமை காட்ட வேண்டும். 50 வயதில் அப்பா இதுபற்றி என்ன எண்ணியிருப்பார்?
60 வயதில் உண்மையிலேயே அப்பாவுக்கு எல்லாமே தெரிந்திருந்தது.
65 வயதில் அப்பா இப்போது இருந்தால், அவரிடம் இதுபற்றி இன்னொருமுறை
கேட்க முடியும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் வே. சபாநாயகம்.
நன்றி: மஞ்சரி தீபாவளி மலர் 1993
2007 ummummi- - 359 - அறிவு

Page 23
GALILEo GiALILEI 1564-1642
Chronology
1564 Galileo Born in Pisa, Italy 1581 Studies Medicine at Pisa, but fails to complete the Course 1583 Observes swinging lamps in Pisa Cathedral and notes that the time for the swing is the same no matter what the amplitude. 1586 Invents a hydrostatic balance for the determination of rela tive densities. 1610 Designs and constructs a refracting telecope. Publishes obeservations in Sidereus nuncius (Starry Messenger) 1632 “Dialogue Concerning the Two Chief World Systems' published. This leads to Galileo being forced by the Church to recant his Copernican views. He is put under house arrest.
In both his life and through the imprisonment which he was forced
to endure in the years leading up to his death, Galileo more than any otherfigure personified theoptimismandstruggle of the scientific revolution. He was responsible for a series of discoveries which would change our understanding of the world, while struggling against a society dominated by religious dogma, benton suppressinghis radical ideas.
A Mathematician
Although he was initially encouraged to study medicine, Galileo's passion was mathematics, and it was his belief in this subject which underpinned all of his work. One of his most significant contributions was not least his application of mathematics to the science of mechanics, forging the modern approach to experimental and mathematical physics. He would take a problem, break it down into a series.
of simple parts, experiment on those parts, and then analyse the results until he could describe them in a series of mathematical expresSOS,

One of the areas in which Galieo had most success with this method wasin explaining the rules of motion. In Particular, the Italian rejected many of the Aristotelian explanations ofplysics which had largely endured to his day. One example was Aristotle's view that heavy objects fall towards earth faster than light ones.Through repeated experiments rolling different weighted balls down a slope (and, legend has it, dropping them from the top of the leaning tower of Pisa), he found that they actually fell at the same rate. This led to his uniform theory of acceleration for falling bodies, which contended that in a vacuum all objects would accelerate at exactly the same rate towards earth, later proved to be true. Galileo also contradicted Aristotle in another area of motion by contending that a thrown stone had two forces acting upon it at the same time; one which we now know as 'momentum pushing it horizonatally, and another pushing downwards upon it, which we now know as gravity'. Galileo's work in these areas would prove vital to Isaac Newton's later discoveries.
D THE PENDULUM
Galileo's earliest work involved the study of the pendulum, inspired by observing a lamp swinging in Pisa cathedral. Following further experiments, he concluded that a pendulum would take the same time to swing back and forth regardless of the amplitude of the swing. This would prove vital in the development of the pendulum clock, which Galileo designed and was constructed after his death by his son.
D THROUGH THE TELESCOPE
One of the inventions Galileo is often mistakenly credited with today is the invention of the telescope. This is not true; there had been a numerous early prototypes mostly developed in Holland before him, and a Dutch optician called Hans Lippershey applied for a patent on his version in 1608. Galileo did, however, develop his own far superior astronomical telescope from justa description of Lippersheyos invention, and quickly employed it to make numerous discoveries. A strong supporter of the Copernican view of planetary motion, Galileo's initial findings published in the Sidereal Messenger (1610) provided the first real physical
2007 ۔ 441 ۔ہ
அறிவு

Page 24
evidence to back up this interpretation. As well as discovering craters and mountains in the moon, sunspots and the moonlike phases of Venus for the first time, he also noted faint, distant stars which supported the Copernican view of a much larger universe than ptolemy had ever considered. More importantly, he discovered Jupiter had four moons which rotated around it, directly contradicting the still commonly held view, including that of the Church, that all celestial bodies orbited earth, the centre of the universe.”
> GALILEO AND COPERNICUS
Galileos Dialogue Concerning the Two Chief World Systems - Ptolemaic and Copernican in which the ptolemaic view was ridiculed, attracted the attention of the Catholic Inquisition when it was published in 1632. Threatened with torture, Galileo renounced the Copernican System, His work was placed on the banned Index by the Church where it remained until 1835, and he wwas subject to house arrest for life. But the tide of scientific revolution Galileo had helped instigate proved too powerful to hold back.
「一
கலிலீயோ (1564 - 1642)
பீசாலைத் தனது பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு பெளதீகவியல் விஞ்ஞானியும் மெய்யியலாளருமாவார். விஞ்ஞான வளர்ச்சி சார்பான இவரது பங்களிப்புகளை பின்வருமாறு நிலைப்படுத்தலாம். 1. விஞ்ஞானத்தில்அளவீடுகளை நுணுக்கமாக மேற்கொள்ள சில செயல்முறைக்கருவிகளைக் கணிடு பிழத்தார். தொலைகாட்டி, உடல்வெப்பமானி போன்றவற்றின் தத்துவம் ஏற்கனவே தெரிந்திருந்தானும் இவரே இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். பென்ரும்ைமனிக்கூட்டைக் கண்டுபிழத்தார். நுணுக்குக்காட்டி, கேத்திரகணித கணனிபோன்றவற்றின் தரத்தினை உயர்வித்தார். இவரது மாணவன் தொரிசெல்லி பாரமானியைக் கண்டுபிழப்பதற்கு ஏதுவாக இக்கண்டுபிடிப்பின் ஆரம்பவேலையை ஓரளவிற்கு நிறைவுசெய்திருந்தார். 2. வானியல் முன்னேற்றத்திற்கு இவர் வழிகோலினார், தெரலமியின் புவியைக் கொள்கையை ஏற்க முழயாதென்பதை எணர்பித்தார். 3. பொருட்களின் நிறைக்கும் விசைக்குமிடையே நேர் விகிதத் தொடர்பு உண்டு என்ற அரிஸ்ரோட்டலின் கருதுகோளைப் பொய்ப்பித்தார். 4. இயற்கை விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிகோலினார். தடை இல்ாைதுபோகும்மொழுது உந்துதல் மாறாநிலைக்குவரமொருள் தொடர்ந்து அசைந்துகொண்டேயிருக்கும் என்றார். இதுஅரிளிரேட்டலின் விளக்கத்திலிருந்து பிரிவுபட்டு நியூட்டனின் வது இயக்கவிதியைச் சார்ந்து செல்வதாய் கார்ைப்பட்டது.
bal محــــــــــــــــــــــــــــــــــ
2007 - 42 - அறிவு
is

நினைவில் நிற்பவை
தாமரைத்தீவான்
I)தாமரைவில்:-(1) கடற்கரை=
எங்கிருந்தோ (யாழ்) எவ்வாண்டோ (1914ன் முன்) திருமலை நகர் தாண்டி - சின்னக்கிணினியா (நீரோட்டுமுனை-ஊற்றடி) வந்தனர், (தொழில்நாடி) சி.சோமநாதர் (சிவன்/அப்பர்) குழுவினர். (கந்தையர்
வேலுப்பிள்ளையர்-சின்னையர்-அம்பலவாணர்) ஊற்றடியில் சிலர்தங்கினர். சிலர் தாமரைவில் வந்தனர். தாமரைக்குளத்தோரமாக (வில்வளைவு) அப்பர் இடம் பிடித்தார். மனை அமைத்தார்.(கழிமண்) வேலிஇட்டார்-காயான்-விராலி) தென்னை நட்டார்- கதிர்காமரின் மகளான முத்துப்பிள்ளையை (14 பிள்ளைகளில் ஒருவர்) மணந்தார். பகவதிப்பிள்ளை, அம்பியவாகு, தாமோதரம்பிள்ளை, பாக்கியம், இராசேந்திரம் (தாமரைத்தீவான்) - ஒப்பிலாமணி என அறுவரைப் பெற்றார். மூத்த மருகராகச் சனிமுகம்பிள்ளை வந்தினைந்தார். (சீனன்வாடி நெய்க்குத மைப்பூச்சுவேலை) கிணறும் உருவானது. பட்டறையும் எழுந்தது. அப்பர் பிற்சாமம் நாலரைக்கு எழுந்து தேநீர் வைத்துக் குடித்து (எமக்கும் வைத்து) 1/2 கல் தொலைவிலுள்ள - அழகான - கிண்னியா தொடக்கம் உப்பாறுவரை நீண்டுள்ள - வாடைப்பெருக்கில் வண்டலுடன் கொள்ளியும் சிப்பியும் அடையும் - அடம்பும்,மீசையும் மணலுடன் மண்டிய கொட்டியா புரக்குடாக்கடற்கரைக்குச் (நெய்தல்) சென்று சேகரித்த கொள்ளிக்கட்டுடன்வந்தபின்னரேயாம்பாயைவிட்டு எழுவோம்.
(2) வெம்பு = எமது காலைக்கடன் வெம்பிலும் குளத்திலுமே. பாலை-வீரை-தவிட்டை -துவரை-களா-கறுக்கா-விண்ணாங்கு-காயான் - விராலி-ஈச்சை-முந்திரி-பனை(கிழங்கு பழமெல்லாம் தரும் வெள்ளைமணல் வெம்பு முல்லை தழுவிய பாலையேதான். தைபிறந்தால் அல்லை, கவலைக்கிழங்குகள் கிண்டுப்படும். தும்பங்கா, கானாந்திக் கீரைக்கறிகளில் முயல்-உரும்பு இறைச்சி இணையும்போது சொல்வானேன்? நீலநிறக்காயாம்பூகண்ணுள்நிற்கும். சுரபுன்னையில் ஒட்டிய மரக்கத்தாழைப்பூவின் மணம் மூக்கைத்துளைக்கும். கோடை வெயிலில் வெம்பினாலும் மாரிமழைக்கு மகிழ்ந்து சிரிக்கும்
தூய மனல் வெம்பு.
(3) குளம்-3 கல்தூரம் வில்லாய் வளைந்து கோடையில் தீய்ந்துமாரியில் முட்டிஒரு பக்கம் தோணாக் கடலிலும் மறுபக்கம் உப்பாற்றுத்துறைக்கடலிலும் நீர் கலக்கும் நீண்ட
2007 ー43 -
அறிவு

Page 25
வாணையைக் கொண்ட குளம். ஒரமெல்லாம் தாழை, வம்மி, வெல்லை, தில்லை, நாவல்மரங்கள் பின்னாளில் தாமரை மாந்திவிட்டது. நிரம்ப பாய்ப்பன் விளையும். விரால், குறத்தை, சுங்கான், பனையான், முறாக்கை, வாளை, குறளி, இறால் மீன் வகை உண்டு. துாண்டிலில் பனையான், கொட்டிலில் சுங்கான்-ஈச்சங்கூட்டில்(வாணையில்) இறால் பிடிப்பதுண்டு. வம்மிப்பூக்கள் கச்சானில் தம் மனத்தைப்பரவலாக்கி எங்கும் வீசிவிரும். கோடையில் திராய்க் கீரைக்குப் பத்சமில்லை. கவறை யானும் கிடந்துகொள்வான். േഴ്സു'ക്രൾ ക്രമനൃേട്ര ഭ്രൂ'Lൾ ഉ_്.
(4) பள்ளி-பள்ளி என்றால் பருக்கை.இளங்கோவடிகள் காலத்தில் சமணப்பள்ளிகள் தமிழகத்தில், (ஒதுவர்-மெளனிப்பர்) ஒதுவதால் பாடசாலையும் பள்ளியாச்சு. தாமரைவில் லில் (ஆலங்கேணி-உப்பாறுபோல்) றோகதகபாடசாலை, வீட்டிலிருந்து கோலாட்டக்கம்பு - நீர்ப்புட்டில் -4உணவுத்தட்டு-புத்தகம் - கற்பலகையுடன் வெளிக்கிட்டு-விளையாடிவேப்பம்பழம் + நாவற்பழம் திண்று பள்ளிசென்று - பூக்கம் பாளையால் குப்பை கூட்டி முடிக்க ஐயா வந்து விடுவார். வேலுப்பிள்ளை-தம்பி ராசா சட்டம்பிமார் நினைவில் உளர். பூசனிக்காய் + பருப்புக்கறியுடன் சோறு முண்டு கொழுக்கிப்புழு மருந்துமுண்டு. உடல்நலப் பேசாப்படமும் காட்டப்படுவதுண்டு. படியாட்டால்-குழப்படி செய்தால் சட்டம்பிப்யூமரக்கிளை (பட்டிப்பூ காலைப்பதம்பார்க்கும். மேசைக்குனிகை -வாங்கேற்றம்-வளைத்தொங்கல் - நெற்றிக்கல்-சுற்றோட்டம் - தோப்புக்கரணம் தண்டனைகளும் உண்ருதான். 32ல் பிறந்த யான் 36ல் L.D, பின் U.D என4 வரை கண்டலடியூற்றுத் தாவூதுடன் கற்றதுநினைவில் உண்டு. தங்கராசா -சித்திரவேல் - இராசலிங்கம் -மயில்வாகனம்-செல்லத்துரைபேச்சிமுத்து-இராசதுரை-பாக்கியம்-தாமோதரம்பிள்ளை-சம்பந்தர் தமிழ்ப்பிள்ளைகளுடன் டினார்உம்மா-செயினம்பு-உமுசல்உம்மா - காசிம்வாவ-முகம்மது கரீம் - அப்துல்சலாம்லுக்குமான்-ஆப்தீன் முஸ்லிம் பிள்ளைகளும் கற்றதுண்டு. மாலையில் கோட்டுமறிச்சாண், கிளித்தட்டு-யாடி-சலாவரிசை-பட்டம்-பாண்டி-ககை-கீக்கம் போன்ற விளையாட்டுக்கள். பழங்கூத்துக்களும் நடக்கும் (இராசகுமாரன் 1928ல்) வெம்பு வயிரவர் கோயில் சாமியாட்டப்பூசையும் இடையிடை நிகழும். அருகில் கண்டலடியூற்று பாத்தும்மா தேங்காய் பிழிய வரவா. குஞ்சல் தேங்காய் பிருங்கவருவார். மீரா லெப்பை மீண்கொண்டு வருவார். செத்தா கருவாரு கொண்டு வருவார். முகம்மது காசிம் சுண்டுவில்லுடன் வருவார். அவுக்காசினார்உப்பாற்றுப்பாதையை ஒழுங்காய் இயக்குவார். இப்படிப்பிட்டும்பூவும் கலந்த வாழ்க்கை இப்போதில்லையே? சாக்கடை அரசியலல்லவா காரணம், தேங்காய்ப்பத்சமும், அரிசிப்பத்சமும் கிடையா. எண்ணெய்ப்பிட்டும், உழுத்தங்கழியும் கிழமைதவறா. 42ல் யப்பான் குண்டு வீழ்ச்சி (சீனக்குடா நெய்க்குதம்). பின்னர் ஈச்சந்தீவே.
(5) வயல் = குடியிப்புநிலத்தோடு சேனைப்பயிர்நிலமும், ஈச்சந்தீவு) வயல் நிலமும் 2007 = 44 - அறிவு

தேடிப்பிடித்துள்ளர்(கணிடல்காடு அப்பர். 2கல் தொலைவிலுள்ள ஊர்த்தீவில் 4 ஏக்கர் வயலும் அருகில் 3 ஏக்கர் பயிர்த்திடலும் உண்டு. சோளன், கச்சாண், கொச்சி, கத்தரி, புகையிலை, வெங்காயம், சுரை, பூசணி, மரவள்ளி, வெண்டி இராசவள்ளி, வற்றாளை, வெள்ளரி, பயறு, உழுந்து, குரக்கண், அவரை, பயற்றை, கற்பூசணி, வத்தகை எல்லாப் பயிரும் நிறைந்திருக்கும். கோடையில் காலைபோட்டு மாடு அடைத்து எருக்கட்டுவதனால் இளைய அணினர்) பயிரும் வளரும்-பால் தயிர் நெய்யும் கிடைக்கும், 4கல் தொலைவில் 1 1/2 கல்லைக்குல்லாக்கட்டில் சவளல் வலித்துச் செல்லவேண்டும். இல்லையென்றால் உப்பாற்றுத்துறைமயிலப்பான்சேனை வழியால், அல்லது கொய்யாம்புளித்துறை வெல்லந் தாங்கிவழியால் நடந்து செல்ல 6 கல் தொலைவுக்குமேலாகும்- நேரமும் போம். ஒரு பிணையல் மாட்டால்-ஒருகலப்பையால் 4 ஏக்கர்வயலை அப்பர் தனியே உழது விதைத்து வெட்டிய காலமும் உண்டு. இதனால் மூலநோய் கூடி வருந்திக்காலமானது (1945) கவலையானதே. பின்னர் அம்மாவின் முயற்சியால்-சேகரிப்பால் மூத்த அண்ணர் உழவுப் பொறி வாங்கி, பொட்டல்குளம் வயல்வாங்கி வேளாண்மை செய்ததுமுண்டு அலித்தம்பியார் - ஜயார்(கொச்சிக்காய் வியாபாரம் 1 இறா 8-12சதம்) அலியார்- வெள்ளை-வயுறுதீன்அவுதக்காதர்-முஸ்தவாயர்-சீனித்தம்பியர் எல்லோரும் வந்து அப்பருடன் கலந்துரையாடிச் செல்வர். அப்பர் சொல்லிய மகாபாரதக்கதைகளைக் கேட்டோர் மறந்திரார். கடடித்தபின் வண்ணான்வயல் ஆத்திமரத்தடிப்பிள்ளையார்கோயிலுக்கும், ஊர்க்குளத்துநறுவிலிமரத்தடி அம்பாள் கோயிலுக்கும் (அப்பர்-அத்தார்) பூசைகள் (தெய்வம் + நாகதம்பிரான்) வைப்பதுமுண்டு. அம்மாவும் புற்றுநோயால் அவதியுற்றே காலமானார் (1972). இன்று பெற்றோரும் இல்லை. பெற்றோர்தேடிய தேட்டமும்இல்லை. நினைத்தால்.?
(தொடரும்).
r
உனது வாழ்வில் நிரந்தரமான சுகத்துடன் நிம்மதியாக வாழ முடியுமா என்றி
விஷயத்தில் எளிளளவும் சந்தேகப்படாதே. கருகிய கரி கெருப்புடனிர் சம்பந்தப்படும்வபாழுது அதன் இயற்கையான கறுப்புமாறி ஒளிர்கின்றது. அதே போன்று உனது மனம் தெய்வீக ஒளியில் கலந்திருந்தால் கிவசுகம் நிறைந்த ஒரு சம்பூரண மனிதனை உன்னிடம் காணலாம்.
- சுவாமி கெங்காதரானந்தா
اکس -—
உனது சிறு செயலிலும் சிற்றறிவிலும் கடபேராற்றலும் பேரறிவும் மறைந்திருக்கிறது
அதை உணரக் கவழய அளவிற்கு இதயத்தைப் புனிதப்படுத்துக.
கறள்பிடித்தஇரும்பைகாந்தம்ஈர்க்காதுபோன்றுஅமுக்குநிறைந்தமனதை
தெய்வீக ஒளி கவர்ந்தெடுப்பதில்லை.
لم சுவாமி தெங்காதரானந்தா ܥܠ
2007 ー45~
ea

Page 26
எண்பத்தாறு வயதிலும் மாணவருக்கு ஆங்கிலம் போதிக்க ஆசைப்படும் மேதை sfalurosař LDraůLj
-சி.குருநாதன்
பிபிசி, தொலைக்காட்சி ஒரு 45 நிமிட நேர விவரணப் படத்தை 1984 ஜூன் மாதத்தில் தயாரித்து வெளியிட்டது. 24ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அப்படம் அக்கால கட்டத்தில இலங்கையில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
வெளிநாடுகளில் வசித்தவர்கள் அப்படத்தை சுதந்திரமாகப் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால், இலங்கையில் இருந்தவர்கள் அக்காலத்தில் அப்படத்தை அச்சமின்றிப் பார்க்க முடியாது இருந்தது. கதவுகள், யன்னல்களை இறுகச்சாத்தி விட்டு இரகசியமாக அப்படத்தின் வீடியோப் பிரதியை வாங்கிப் பார்த்தார்கள். காரணம், அவ்விவரணப்படம் 1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை மையமாக வைத்துத் தயாரிக்கப்ப்ட்டிருந்தது.
படத்தின் பெயர் சிவாவின் மக்கள் ஆங்கிலத்தில் SIVA"SPEOPLEஎன்பதாகும் அப்படத்தின் ஊடாக இலங்கை இனநெருக்கடி பற்றிய நிலைவரத்தை பியிசி உலகுக்கு அன்று எடுத்துக்காட்டியது.
இனப்படுகொலையின் போது தனது இரண்டு புதல்வர்களைப் பறி கொருத்த தந்தை ஒருவரே அப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். சிவாவின் மக்கள் படத்தில் நடித்த அந்தச் சிவா வேறு யாருமல்லர்.
எங்களின் சிவபாலன் மாஸ்டர் என்று அன்றும் இன்றும் திகோணமலையில் மட்டுமல்ல, இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள அவரதுமானாக்கர்களால் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றில் வாழும்மாணாக்கர்களாலும் பாசத்துடன் அழைக்கப்படும்மேதை கந்தரட்னம் சிவபாலன் ஆவார்.
திருகோணமலையின் வரலாற்று நாயகர்களில் எனறுமே மறக்க முடியாதவர். 86 வயதில் காலடி எடுத்து வைத்துள்ள சிவபாலனி அவர்கள் 1986முதல் லண்டனில் வாழ்ந்து வருகின்றார். 17 பெப்ரவரி 1921ஆம் ஆண்டு பிறந்தவர்.
அண்மையில் இலங்கை வந்தார். அவரது வீடு திருகோணமலை நகரில் பிரதான வீதியில் உள்ளது. அவரிடம் படித்தவர்கள் எல்லோரும் எந்த உயர்ந்த பதவிகளில்இருப்பினும் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர் திருகோணமலையில் தங்கியிருக்கின்றார் என்று அறிந்த மாத்திரத்தில் அவரைத் தவறாது சந்திக்கப்படையெடுத்து விடுவர். அக்காலத்தில் அவர் முன்னாலே நிற்கும் போது வகுப்பறையில் பயபக்தி தானாக
2007 سے 46 ہے
அறிவு
 

ஆம், பாடசாலைக் காலங்களில் மாணவர்களுக்கு சிம்ம சொப்பனமாகக் காட்சியளித்தவர்.அதோசிவபாலன்மாஸ்டர் வருகின்றார் என்றால்போதும் வகுப்பறையில் ஊசி விழுந்தால் கேட்கும் அளவிற்கு நிசப்தம் நிலவும்.
வகுப்பறையில் மாணவர்கள்கத்திக்கொண்டிருப்பார்கள்.திடீரென்று தோன்றுவார். எங்கிருந்துவந்தார் என்று மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு முன் அவர் நகைச்சுவையாக கூறுவார் "தூணிலும் இருப்பான் சிவபாலன் துரும்பிலும் இருப்பான் சிவபாலன்” என்று மாணவரிடையே ஒழுக்க நெறிகளை நிலைநிறுத்துவதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். திருகோணமலையின் கல்வி வளர்ச்சிக்கு உழைத்தவர். ஆங்கிலக்கல்வி போதனைக்கு முதன்மை கொருத்துச் செயற்பட்டவர். எல்லாவற்றிற்கும் மேலாக மனிதத்துவத்திற்கு முதலிடம் அளித்து வந்தவர், Educator and Humanist என்று அவர் இன்று உலகநாடுகளில் மதிக்கப்படுகின்றார்.
ஆங்கிலத்திலே ஆழ்ந்த புலமைமிக்கவர். மேடையில் ஆங்கிலத்தில் பேசினால் அதிலே ஒர் அழகு, வகுப்பில் மாணவர்களை ஆங்கிலத்தில் ஏசினாலும் அதிலும் ஒரு தனி அழகு தெரிந்தது.
ஆங்கிலம் அவரின் நாவில் இன்றும் தவழ்ந்து விளையாடுகின்றது. அந்த ஆங்கிலப் புலமைதான் அவரை இன்று ஐரோப்பிய நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகள் அழைத்து வரவேற்று கருத்தரங்குகளில் பேசவைக்கின்றன.
"இரண்டாம் உலகமகா யுத்தம் பிரிட்டிவர் ஆட்சியின் கீழ் நாடு இருந்தது. அக்காலத்திவ் நான் திருகோணமலையில் தீயணைப்புப் படைப்பிரிவில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றினேன். 1947ஆம் ஆண்டு லண்டண்பல்கலைக்கழகப் பட்டதாரியானேன். திருகோணமலை இந்துக் கல்லூரியில் தற்போது நீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி) 1947இல் ஆசிரியராக, உப அதிபராகச் சேர்ந்தேன். என்று கூறுகின்றார்சிவபாலன் மாஸ்டர். திருகோணமலை இந்துக்கல்லூரியின் அதிபராக சேவையாற்றிய பின்னர் கொழும்பு இந்துக்கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றினார். பலாலி கனிஷ்ட பலகலைக்கழகத்தின் அதிபராகவும் சிலகாலம் சேவையாற்றினார். அதன் பின்னர் கொழும்பில் கல்வி அமைச்சின் ஆங்கிலப் பிரிவின் பிரதம கல்வி அதிகாரிப் பதவியையும் வகித்தார்.
1964ஆம் ஆண்டு வீசிய சூறாவளி திருகோணமலை மாவட்டத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்றது. நகர வீதிகள் எங்கும் பிருங்கி எறியப்பட்ட மரங்கள், மலைபோன்ற குப்பைகள். தனிமனிதனாக நின்று தனது மாணவர்களின் துணையுடன் வீதி வீதியாக் சாறனுடன் திரிந்து நகரைச் சுத்தமாக்கிய சிவபாலன் மாஸ்டர் அவர்களை திருகோணமலை மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு பேரிடியாகியது. தனது இரு புதல்வர்களைப் பறிகொடுத்தார். அத்துயரத்தின் மத்தியிலும் அவர் தனது மனிதாபிமான
2097 - 447 یہ அறிவு

Page 27
சேவைகளைத் தொடர்ந்தார்.
திருகோணமலை பிரஜைகள் குழுவின் தலைவராக அவர் 1984 தொடக்கம் 1986வரை பணிபுரிந்தார். நெருக்கடியான அக்காலகட்டத்தில் சிவபாலன் அவர்களின் சேவை திருகோணமலை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது என்று கூறலாம்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் நடத்தப்பட்ட முதலாவது பொதுத்தேர்தலில் சிவபாலன் மாஸ்டர் போட்டியிட்டார். அவரை ஆதரித்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பீற்றர்கெனமண், வவுனியாபாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிசுந்தரலிங்கம் ஆகியோர் திருகோணமலை வந்து பிரசாரக் கூட்டங்களில் பேசினார்கள்.
தேர்தல் முடிவு, கல்வித்துறைக்கு முக்கியமாக அவரின் ஆங்கிலக்கல்விப் போதனைக்கு மாணவர்களுக்கு இலாபமாக அமைந்தது. அதன் பின்னர் சிவபாலன் மாஸ்டர் பாராளுமன்ற அரசியலை நாடவில்லை.
எனினும், திருகோணமலை நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவானார்.திருகோணமலை சிறந்த கல்விமான், மனிதாபிமானி ஒருவரின் சேவையைத் தொடர்ந்து பெற்று வந்தது.
அவர் கூறுகின்றார்:- தற்போதைய இளம் சந்ததி ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவதை உணர்ந்து கொள்ளவேண்டும்.ஆங்கில மொழி அறிவு இன்று அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது. ஆங்கில மொழி அறிவு இன்றேல் உலகில் படித்த ஆநாதையாகி விடுவோம் என்பதை இன்றைய சமுதாயம் அறிய வேண்டும்.
அரசியல்வாதிகள்தாய்மொழிக்கல்வியை வலியுறுத்திவந்தாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொள்ள வைக்கிறார்கள் என்றும் கூறுகின்றார்.
நான் அடுத்த தடவை வரும் போது திருகோணமலை மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுக்க வேண்டும் என்பது எண் ஆசையாகும் என்று இச்சந்திப்பில் தனது விருப்பத்தையும் வெளியிட்டார்.
ஆங்கில மொழி மூல எஸ்.எஸ்.சி. வகுப்பில் தமிழ், சிங்கள, முஸ்லிம் இன மாணவர்கள் ஒரு கூரையின் கீழ் ஒரேவாங்கிலில் அமர்ந்து இருந்து படித்து வந்த அந்த நாட்களை மேதை சிவபாலன் மாஸ்டர் இச்சந்திப்பில் நினைவுபடுத்தினார்.
அன்னார் அதிபராகப் பணியாற்றிய காலத்தில் திருகோணமலை இந்துக் கல்லூரியில் மும்மொழிக் கல்விப் போதனைகள் இடம்பெற்று வந்தன.
நன்றி தினக்குரல்
2007 · 48 AF
,፤ሇ‛

இலங்கை ஆட்சியாளர்கள்
பிரதமர்கள்
1 டொன் ஸ்டீபன் சேனநாயகே O4O2.1948 226 --سہ.O6.1952 2. டட்லி ஷெல்டன் சேனநாயகே 26,03,952 - 12.O.1953 3. ஜான் லியோனெல் கொத்தலாவெலா 2,10,953 - 12,04,956 4. சோலோமன் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயகே 12.04.1956 - 26.09.1959 5. விஜயானந்தா தவறநாயகே 26,09.1959 - 26,03,1960 6. டட்லி ஷெல்டன் சேனநாயகே OO3,960 - 2,07.1960 7. சிரிமாவோரத்வத்தே டயஸ் பண்டாரநாயகே 21.07.1960 - 27.03.1965 8. டட்லி ஷெல்டன் சேனநாயகே 27,036,965 970}.05, 29 حس۔ 9. சிரிமாவோரத்வாதே டயஸ் பண்டாரநாயகே 29.05.1970 - 23.07.1977 10. ஜூனிஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே 23,07,1977 - O602.1978 1. ரணசிங்கே பிரேமதாசா 06.02.1978 - O3,O3,989 12. டிங்கிரிபண்டா விஜயதுங்கே O3.03.1989 - O7.O.5.1993 13. ரணில் விக்கிரமசிங்கே 07.05.1993 - 19.O8、1994 14. சந்திரிகா பண்டாரநாயகே குமாரதுங்கா 1908.1994 - 14.09.1994 15. சிரிமாவோரத்வதே டயஸ் பண்டாரநாயகே 14.09.1994 سے O.O83.2OOO 16, ரத்னசிரிவிக்ரமதுங்கே 10,082OOO - 09.12.2OO 17. ரணில் விக்ரமசிங்கே O9.2.200 - 06.04.2004
18. மவுறிந்தாராஜபக்ஷ O6,042004 - 21.1.2OO5 19. ரத்னசிரிவிக்ரமநாயகே .il.2005 (p56).
அதிபர்கள் 1. வில்லியம் கோபாலவ்வா 22.05.1972 - 04.02.1978 2 ஜூனிஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே O4O2,978 - O2.01,989 3. ரணசிங்கே பிரேமதாசா O2.O. 989 - O.O.5.1993 4 டிங்கிரிபண்டா விஜய்துங்கே Oi.05.1993 - 2,994 5. சந்திரிகா குமாரதுங்கா 2.1.1994 - 9,2OOS 6. மஹிந்தாராஜபக்ஷே 19.11.2005 முதல்.
2007 - 49 - அறிவு

Page 28
ஆசியாவின் எதிர்காலமாகிறது தமிழகம்
அந்நிய நேரடி முதலீடுகளை உலகில் எந்தெந்த இடங்களில் போடலாம் என்பது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவரும், முதலீட்டுப்பத்திரிகையான FDI என்ற பத்திரிகை, இலண்டனிலிருந்து வெளிவரும் உலகப் புகழ்பெற்ற ஃபைனான்ஷியல் டைம்ஸ் இதழுக்குச் சொந்தமான ஒரு வெளியீடு. இந்த பத்திரிகை 2005 - 2006ஆம் அனிர்ருக்கான Asian Cities & Regions of the Future 2005/06 6Tai D 56060).5a)rray 695 &Japa) Blbs ஆண்டு நடத்தியது. ஆசியா முழுவதிலும் உள்ள சுமார் 60 நகரங்கள் மற்றும் பிராந்தியங்களை, முதலீட்டுக்கு சாதகமான 34 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் மதிப்பிட்டது. இதனுடைய மதிப்பீட்டு நடுவர்களில் ஒருவர் கூட இந்தியர் அல்ல. அனைவருமே தென்கிழக்காசியர்கள்.
இந்த மதிப்பீட்டின்படி ஆசியாவின் எதிர்காலநகரம் என்ற பெருமையைத் தட்டிச் சென்றதுவுறாங்காங் நகரம், இரண்டாம் இடத்தில் சிட்னி இதில்உங்களுக்கு ஆச்சரியமிருக்க முடியாது. ஆனால், ஆசியாவின் எதிர்கால பிராந்தியம் என்றத் தலைப்பிலான போட்டியில் நடுவர்கள் தேர்வு செய்த பிராந்தியம் - தமிழ்நாடு இது தனக்கு பின்னால் வந்த ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ்மாகாணத்தை புறந்தள்ளிவிட்டுமேலே வந்திருக்கிறது. தமிழ்நாட்டின் மனித வளத்தையும் அரசின் தொழில் ஆதரவு நடவடிக்கைகளையும் நடுவர்கள் புகழ்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இதே மதிப்பீட்டு ஆய்வில், அந்நிய நேரடிமுதலீட்டுக்கான அதிக வாய்ப்புக்களை தன்வசம் வைத்திருக்கிற பிராந்தியமாகவும் தமிழகமே ஆசியாவில் முதல் இடத்தில் வந்திருக்கிறது. FDIPotential என்ற தலைப்பிலான இந்த மதிப்பீட்டில் இரண்பாம் இடத்தைப் பிடித்திருப்பது தாய்லாந்து
இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக்கொண்ட வேறுபல இந்தியநகரங்கள் எந்தப் பிரிவிலும் முதல் இரு இடங்களில் வரவில்லை என்பதோடு, ஆசியாவின் புதிய முகமாக வளர்ந்துவரும்தமிழகத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதையும் வலியுறுத்திச்சொல்ல வேண்டும். எனவே தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் பெருகும் என்கிற நம்பிக்கை வீண்போகாது என்றே தோன்றுகிறது.

றிராமகிருஷ்ணரே நீங்கள் மீண்டும் வரவேண்டும்.
-prenes
தற்போது நமக்குத் தேவைப்படுபவர் யார்? இயக்கங்களை நடத்திவைக்கும் தலைவர்களா? மக்களுக்கு வழிகாட்டும் ஆசாரியர்களா? இயக்கங்களை நடத்தும் தலைவர்களைக்காட்டிலும்ஆசாரியர்களே அவசியம் என்பதுஎண் கருத்து
பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள் போலின்றி, தர்மத்தை வாழ்ந்து காட்டும் ஆசாரியர்களே நமக்குத்தேவை.
மக்கள் ஒவ்வொருவரும் நன்னடத்தையுடன் இருக்க வேண்டும். ஆண், பெண் அனைவரும் இன்றிருப்பதைவிட சுயநல எண்ணம் குறைந்து வாழவேண்டும். ஒவ்வொருவரும் பிறர் நலனையும் கஷ்டங்களையும் அதிகம் கவனித்து அனுதாபம் கொள்ள வேண்டும். எல்லோரும் நேர்மையாக வாழவேண்டும். பணத்தை விட சத்தியத்தையும்,நல்ல குணத்தையும் வரிதாக மதிக்க வேண்டும். இவ்வளவுமாறுதல்கள் நிகழவேண்டுமென்றால், தலைவர்களைவிட ஆசாரியார்களே தேவை.
இவ்வாறு மக்களை நல்வழிப்படுத்துவது ஓர் இயக்கத்தின் தலைவனிால் முடியாது.திட்டம் வகுத்துக் கொண்டு ஓராண்டிலோ இரண்டாண்டிலோ அல்லது நமது ஆயுட் காலத்துக்குள்ளோ திட்ட நோக்கத்தை அடையவேண்டுவமன்று ஆசைப்பட்டால் அதற்கு ஓர் இயக்கமும் தலைவனும் SófíED.
ஆனால் மக்கள் அனைவரையும் சீர்திருத்தும்பணி, காலக்கெடுவுக்குள் முடிக்கக்கூடிய கரியமாகாது. எல்லோருடையஉள்ளத்திலும்தர்மங்கள் நன்றாக ஊறி அவர்கள்நன்னடத்தையைக் கக்கொள்ளவேண்டுமானால் இந்தய்வாரியமாற்றம் நிகழ்வதற்கு அவசரம் காட்டக்கூடாது.
சோர்வு அடையாமல், சத்தியங்களைச் சிறுகச் சிறுக, மெல்ல வமல்லப் புகட்டிக் கொண்டேயிருந்தால்த்தான்மக்களின் மனோபாவமும்நடத்தையும் மாறும். இதற்குக்கால வரம்பு நிர்ணயிக்க முடியாது. மிகவும் நிதானமாகவே நடைபெற வேண்டிய பணி, தலைவனாலும் இயக்கத்தாலும் மட்டுமே செய்யக்கூடிய பணிஅல்ல இது இயக்கத்தலைவனிலிருந்துமாறுபட்ட
LTTTTLTTTLLsTLSuLLMLSLTTMMLLL ssLLS
ஆசாரிய புருஷர்களின் பணியில் பகட்டுக்கும் டாம்பீகத்துக்கும் இடமில்லை. தன்
Odia)6).
இயக்கத்தக்குத் தலைமை தாங்குபவன் தன் பெயர் பிரபலமடைவதற்குப்பாடுபட வேண்டியது அவசியம், மக்கள் கவனத்தைக் கவருவதற்காக முரட்டுத்தனமாகவோ, சாதுர்யமாகவோ முயலவும் வேண்டும். இல்லாவிடில் இயக்கம் வளராது.
ஆசாரியனுடைய பணி இம்முறையில் சேராது. அவனுக்கு இந்த வழி தேவையும் இல்லை. தான் உலகின் கவனத்துக்கு ஆளகாமலிருக்க வேண்டும் என்றே அவன் விரும்புவான்.
வமளனமாக அவன்பணிபுரியவேண்டும். சீடர்களின் ஆன்மாக்களைத் தனது உள்ளார்ந்த 2007 ۔ 511 سے அறிவு

Page 29
காந்தசக்தியால் கவரவேண்டிய அவனுக்கு வெளி புகழைத் தேடத்தொடங்கினால் பணி கெட்டுப் ே உலகம்தன்னை அறிந்துகொள்வதில்அவன் அடைந்து சுய விளம்பரத்தை ஒரு GEDIGDUIT ஆசாரியத்தகுதி அழிந்து போகும். புகழ்பெறும் அடைவான்.
வெற்றி அடைந்தாலும் சரி, தோல்வி அ6 ஆசாரியனுக்கு உரியவை அல்ல.
ஆசாரியன், பெருமைகளைத் தேடிபாடுபடுக அவன் பாடுபடுகிறான். தருமத்தை உண்மையாக இருக்க முடியும்,
*ஒவ்வொரு தலைமுறையிலும் யாரும் அறி விதிநிர்ணயிக்கப்படுகிறது" என்று யூதர்களின்
&BilgilL 69,3Fmpfyujü86ap6IT Bırıb asetarı கருண்ையினால் அவ்வப்போது அனுப்பிவைத்திரு சாக்ரடீஸ் இவ்வாறுதான் அனுப்பப்பட்டா) வந்தவர்களே.
ருந்ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர்கள் ருராமகிருஷ்ணரும் ஆண்டவன் அனுப்பிவைத்து எல்லோரும் உணர்ந்திருக்கிறோம்.
மகாகவிமில்டனைஎண்ணிவேர்ட்ஸ்வி மீண்டும் வரவேண்டும் என அடியில் வருமாறுவே
ராமகிருஷ்ணா! நீ இந்த நிமிஷத்தில் தற்போதைய இந்தியாவுக்கு நீமிகவும் தேவைய்டு இழந்துநிற்கிறோம். சுயநலக்காரர்களாகிவிட்ே அய்யனே,நீtண்டும் இங்கு வந்து எங்களை சீலத்தைக்கொடு, சுதந்திரத்தைக் கொடு, சக்திை நம் வேண்டுகோளை ஆண்டவன் கேட்டருள்வான்

புறக்கவர்ச்சியால் ஆவதொன்றுமில்லை. அவன் ாகும்.
DoppiLDITBG6LT 66ers OLLIF566MIT ID6tf ப் பயின்றானேயாகில் அப்போதே அவனுடைய முயற்சியில் அவன் வரும்பாலும் தோல்வியே
டந்தாலும் சரி இந்த வெற்றியும் தோல்வியும்
தில்லை. தருமத்தை நோக்கி,தருமத்துக்காகவே பின்பற்றுபவன், யாரும் அறியாதவனாகத்தான்
பாதமுப்பத்தாறுஉத்தமர்களால்தான் உலகத்தின் Fாஸ்திரநூலாகியதால்முத்கூறுகிறது.
துண்டா? கண்டிருக்கிறோம். ஆண்டவன் தன் க்கிறான். ர். இயேசுநாதரும், கெளதமபத்தரும் இவ்வாறு
ர் தொகுத்துள்ள உபதேசக் குறிப்புகளிலிருந்து உத்தம ஆசாரியபுருஷனே என இப்போது நாம்
த்மாடியதுபோல்ருநிராமகிருஷ்ணர் நம்மிடையில்
rBG6).IIIDIras. இங்கு எங்களுடன் வாழ்ந்திருக்க வேண்டும். கிறாய், ஆத்மசாந்தி என்றபரம்பரைச் செல்வத்தை LITib. உயர்த்து,எங்களுக்கு நன்னடத்தையைக் கொடு, பக்கொடு இவ்வாறு நாம் கதறி பிரார்த்தித்தால்
* முரீ இராமகிருஷ்ண விஜயம்
வபப்ரவரி - மாசி - 2007
அறிவு

Page 30
ܕܒ̣ܐܼ
 


Page 31
| 환 || T. |? 一心
心 {
 

ܒ - T HIDTBALİ
தரவற்றாகுமதி