கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2006.08

Page 1


Page 2


Page 3
மனிதனுடைய வசதிக்காகக் ஆண்டு அவற்றில் ஒன்று. ஆண்டு எமத பிறந்ததினம், தீபாவளி, வருட நாளைக்குத் தீபாவளி அதை யாவரு கவிஞர் சொல்கிறார்.
ஆண்டின் கூறு மாதம். ம பெளர்ணமி போன்றவை. மாதமிருமுறை நிகழ்கின்றன. வாரம் ஏழு நாட்க6ை நாளை இருபத்திநாலு மணித்தியாலங்கி நிமிடங்களாகவும் அதைமேலும் அறுபது
நிமிடத்திற்கு பதினாறு முதல் வருகிறத. நிமிடத்திற்கு 72 தடவை விஞ்ஞான வளர்ச்சியில் செக்கண்டை ர நனோ செக்கண்டாக உபயோகப்படு: காலம் சுமார் பதினாலு கோடி வரு இந்தக் கால அளவு எமது தற்போதை தேவையானதெனக்.கணிக்கப்படுகிறத
எனினும் நாடித்துடிப்பும் மூச்ச நாளின் பிரயோகத்தகள். இங்கு ந அண்டத்தில் உள்ளத பிண்டத்தில்
87, பிரதானவீதி, திருக்கோணமலை. T.P. 026-2222207
 

காலம் கூறு போடப்பட்டுள்ளத. தோறும் மீண்டும் மீண்டும் வருபவை ப்பிறப்பு போன்றவை. ஆண்டிலோர் நம் கொண்டாட வேண்டும் என ஓர்
ாதா மாதம் நிகழ்பவை அமாவாசை ற ஏகாதசி அட்டமி நவமி போன்றவை ாக் கொண்டத. அதன் கூறுநாள். 5ளாகவும், மணித்தியாலத்தை அறுபத செக்கண்ட்டுகளாகவும் வகுத்துள்ளனர்.
பதினெட்டு முறை சுவாசம் போய்
இருதயம் தடிக்கிறத. தற்போதைய நூறு சோடியாகப் பிரித்து ஒரு பகுதியை த்தப்படுகிறது. பிரபஞ்ச உற்பத்தியின் டங்களாகக் கணக்கிடப்பட்டுள்ளத. ய மனவளர்ச்சியின் பரிமாணத்திற்குத்
மே எமத கவனத்தின் மையம். வாழ் ாம் நிலை கொண்டால் சாசுவதம். பிரதிபலிக்கும்.
ஆசிரிய குழுவிற்காக, S.P. JITLDëatiasjGi.

Page 4
அறிவு “ARVU”- KNOWLEDGE.
சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு 41, கல்லாரி வீதி, திருக்கோணமலை. Sandrasegarampillai Gnanambigai Establishment 41, College Street, Trincomalee
பொருளடக்கம்
LISS85UfD
1. குருமுகம் 3
2. தெரிந்தபெயர் தெரியாதவிபரம் 4
3. மிகமிக அழகானது - LDGEJTĝ 7
4. முதலாவது- ஒர்வாடிராதாகிருஷ்ணன் 10
5. இறைசிந்தனை - திருமதி. முரீஸ்கந்தராஜா 12
6. பராசக்தி மகாகாவியம் - தாமரைத்தீவான் 14
7. வேதம் சொல்லுது - பரிமனேகரி 19
8. மின்வெளிச்சமுதாயம் - எம் சிவலிங்கம் 20
9. தமிழ்த் திரைப்படங்கள் - 24
10. ரீஅரவிந்தரின் - சுந்தரராம் 30
11. பூரீ அரவிந்தரின் பூரண யோகம் - க. ராமச்சந்திரன் 36
12. பூரீஅரவிந்தர் பூரண யோக வினாவிடை 39
13. பிராணாயாமம் - சுவாமி சச்சிதானந்தர் 43
14. விவசாயியும் ஜோதிடரும் 51
எமத ஸ்தாபித காரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை அவர்கட்கு அறிவு - 2006 - 5° இதழை சமர்ப்பிக்கிறோம்
 
 

டுடு டுகம்
ஒரு காலைப் பொழுது சுவாமிஜியைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்து சிவயோக சமாஜ யோகாச்சிசிரமத்திற்குச் சென்றிருந்தேன். ஸ்நானம் செய்து, ஆகாரம் முடித்து, தெய்வப் பொலிவுடன் கூடிய ஞான மலராக மலர்ந்திருந்தது அத்திருவுருவம். எத்தனை தடவைகள் நம் குருதேவரை தரிசிக்கச் சென்றபோதிலும்,புதுப் பொலிவுடன் கூடிய நோக்குத் தான் அங்கு இருக்குமே தவிர ஏற்கனவே பார்த்த களை இருப்பதில்லை. ஆத்மா மற்றும் தைலதாரை போன்று இடையறாது பொங்கி வரும் பக்தியுணர்வு ஒரு போதும் திரட்டுவதற்கில்லை. சுவாமிஜியின் முன்னிலையில் உள்ளம் கசிந்து முழு உணர்வும் அவர் பக்கம் இருக்கும் பட்சத்தில், ஞானாக்கினியான அவ்வொளிப் பிழம்பின் வெப்பத்தில் எம் வினையை எரித்த புண்ணிய பலத்தைத்தான் பெறுவதாக உணர்கின்றோம்.
அன்றைய சந்தர்ப்பத்தில் குருஜியின் பிரசன்னத்தின் முன்னிலையில் அமர்ந்தேன். அந் நேரத்தில் நான்கே வயதான பச்சிளம் குழந்தை, ஆச்சிரம மண்டப வாயிலினுாடாக சுவாமிஜியின் அறையை நோக்கி ஓடி வந்தாள். கையில் ஒரு படமும் வைத்திருந்தாள். எவ்வித அச்சமுமின்றி சுவாமிஜியின் அருகில் நெருங்கிச் சென்று படத்தை காட்டி தன் மழலைச் சொற்களினால் புரிந்தும் புரியாமலும் ஏதோ பேசினாள். அந்தக் குழந்தையோடு குழந்தையாக சுவாமிஜியும் மாறிவிட்டார். மிகக் குழைவாக உரையாடலானார்.
அந்தப் பச்சிளம் குழந்தை சுவாமிஜியுடன் பேசுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. ஒவ்வொரு கணமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். நிலத்தில் விழுந்து புரண்டாள், எழுந்தாள், துள்ளிக்குதித்தாள், சுற்றினாள்,அங்குமிங்கும் ஒடினாள், தனக்குத் தானே சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திச் சிரித்துப் 'பேசி மகிழ்ந்தாள். இறுதியில் போயிற்று வாறன் சுவாமிஜி என்று மழலை பேசியுபடியே
குதித்தோடி மண்டபவாயிலால் ஓடி மறைந்தாள்.
ஒரு சிலநிமிட நேரம் அந்தப் பச்சிளம் குழந்தை ஓர் உயர்ந்த போதனையைத் தன் செயற்பாட்டினால் அள்ளித் தெளித்து விட்டுச் சென்று விட்டாள். ஆரோக்கியமான தோர் குழந்தை, உண்ணுகின்ற உறங்குகின்ற நேரம் தவிர, மற்றைய நேரங்க ளெல்லாம்-உற்சாகத்ததுடன் ஒய்வின்றியே செயற்படுகிறது. பெளதீக உலகில் லெளகீக வாழ்க்கையில் சுகதுக்கங்கள் வருவது தவிர்க்க முடியாதது. அவற்றுள் விழுந்து விடுகின்றோம். விழுந்த அக் குழியினின்றும் எழுந்து, சுகதுக்கங்களால் விகாரமடையாமல் எதிர்த்து நிற்கும் சமநிலையில் உள்ள சதசித்த பாவனையை, நாமாகவே சுயமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய பயிற்சியின் உட்கருத்துப் பொதிந்ததொரு போதனையை, இந்தக் குழந்தை காண்பித்துச் சென்றது, கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய சம்பவமாக அமைந்திருந்தது. எம்மேல் விழுவது மணலாகவோ, கல்லாகவோ எதுவாக இருந்தாலும், மலராகவே கருதி சந்தோசமாக இருக்க வேண்டியஅர்த்த புஷ்டி நிறைந்த தத்துவத்தை அச்சமயம் சுவாமியின் திருவாக்காகக் கிடைக்கப் பெற்றதில் மனம் நிறைந்து விடு திரும்பினேன்.
செல்வி தா. சியாமளாதேவி
ー3 -
அறிவு

Page 5
தெரிந்த பெயர் தெரியாத விபரம்
nam (கூட்டு சேரா இயக்கம்)
இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவின் தலைமையில் ஆசிய ஆபிரிக்க நாடுகள் இணைந்து பின்பற்றுகின்ற நடுநிலை இயக்கம். உலகப்பெரும் வல்லரசுகளோடு எக்காலத்திலும் இது நெருங்கிக் கொள்வதில்லை. இருப்பினும் உலகப்பிரச்சனை எதுவாயினும் அதனைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் இந்த இயக்கம் ஈடுபடுகிறது. பண்டிட் நேரு, மார்சல் டிட்டோ, அப்துல் நாஸர் போன்ற பெருந்தலைவர்கள் இந்த அமைப்பின் நிறுவனர்கள்
Napoleonic Code (GipsyGursué F. Lib)
பொது அறிவுச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலான 1804 இல் பிரெஞ்சுநாட்டின் சிவில் சட்டம் (1804). பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர் மாவீரன் நெப்போலியனால் இச்சட்டம் வரையறுக்கப்பட்டது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அந்த்ந்த நாட்டின் சட்டங்களுக்கும் பிரெஞ்சு நாட்டுச் சட்டம் ஒரு வகையில் ஆதாரமாக
அமைந்துள்ளது
Narcissism (நார்சிகக் கொள்கை)
ஒருவர் மீதே பாலுணர்ச்சியைக் காட்டுகின்ற பேராசைத் தன்மை. நார்சிஸ் என்பவன் மிகவும் எழில் வாய்ந்த இளைஞன். அவனுடைய நிழலை அவன் பார்க்காமல் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. இதனை மீறினால் அவன் இறந்து விடுவான். ஏராளமான பெண்டிர் அவனை விரும்பினர் அவனோ அவர்களை வெறுத்தானி. கடவுளர்கள் அவன் நிழலையே அவன் பார்க்குமாறு செய்துஅவனை இறக்கச் செய்தனர்
National Debt(35Auds sligh,
ஒரு நாட்டின் மக்களுக்ககும் வெளிநாட்டினருக்கும் ஒரு தேசிய அரசு திருப்பித் தர வேண்டிய சராசரிக் கடன் தொகை
Nationalism (G5dfluids Gablishops)
தன் நாட்டின் மீது ஒருவர் காட்டும் பாசம். கொள்கை ரீதயான பெருமை என்பதோடு அந்நாட்டின் தொல்லைகளைத்'தான் எற்றுக்கொள்ளும்அளவு கடந்த நாட்டுப்பற்று
அறிவு - 4 -

Natural Selection(தகுதிக்கேற்ற வளர்ச்சி)
செடி கொடிகள் வளங்கள் போன்றவற்றில் ஏற்படும் சீரான வளர்ச்சியும் முன்னேற்றமும், எல்லா உயிர்ப்பொருட்களும் தங்களை வாழ்வில் நிலைநிறுத்திக் கொள்ள போராடினாலும் தகுதியுடையவை மட்டுமே தப்பிப்பிழைக்கின்றன
Nazism(நாஜிசக் கொள்கை)
அடால்ப் ஹிட்லரால் பிரச்சாரம் செய்யப்பட்ட இனபேதக் கொள்கை. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட பின்னர் இட்பிரசாரம் நிகழ்ந்தது. இவர்களது கருத்துப்படி ஜெர்மனியரே துாய்மையான ஆரிய இனம். அவர்களே உலகை ஆளத்தகுதியுடையோர் யூதர்களை ஒழிக்கக் கூடியோர்.
Neocolonialism(Ligou 5T6b6ílu Ib)
தொழில் வளம் மிகுந்த நாடுகள் பெரும்பாலும் மறைமுகமாகவும் நேரடியாகவும் வளரும் நாடுகளைச் சுரண்டுவதாகும். வளரும் நாடுகளைத் தமது பொருளை விற்கக் கூடிய சந்தையாகப் பயன்படுத்திக் கொள்ளும் பழக்கம் வளர்ந்த நாடுகளிடையில் காணப்படுவது உலக வரலாறு
Neurolinguistics (5gbLFIT GLDToluluusò)
سمر
மனிதனுடைய நரம்பு மண்டலத்திற்கும் அவன் மொழியினை அறிந்து கொள்ளும் திறமைக்கும் உள்ள தொடர்பினைப் பற்றி ஆராய்வது
Neurosis(5jibLågsö6o66)
தேவையற்ற பரபரப்பு, கவலை, அச்சம் நிரம்பிய, ஒருவரது மனோநிலை சீர்குலைவு
New Deal(5u stra)
அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் கொண்டு வந்த சமூகப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள். 1930களில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவைச் சரிசெய்வதற்காக இச்சீர்திருத்தங்களை அவர் நடைமுறைப்படுத்தினார்
New Wave (Ligu 96o6o)
1958முதல் 60வரை பிரெஞ்சு நாட்டுத்திரைப்பட உலகில் அனைத்து வகையாலும் மரபுக்கு மீறிய திரைப்படங்கள் மிகுதியாக வெளிவந்தமையைக் குறிக்கும் ஒருசொற்றொடர். அப்போதைய திரைப்படத் தயாரிப்பாளர்கள் கையினால்
அறிவு سہ ق ۔

Page 6
இயக்கும் புகைப்படக் கருவியினை இயக்கினர். ஐரோப்பியத் திரைப்படத்தயாரிப்பில் அதுஒரு திருப்பு முனை என்றும் கூறலாம்
Nihilism(அழிவு மனப்போக்கு)
நன்னெறி ஒழுக்கம் மரபு நெறிமுறை ஆகிய இவற்றை மதிக்காமல் புறக்கணிக்கும்’ போக்கு வாழ்க்கை அற்பமானது எதனுள்ளும் தீயதையேகாணும் சீர்குலைந்த இயல்பு.
Nomadism (5r(3LT9g5g56ö60oLD)
கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை நாடியோ, சாகுபடி நிலங்களை எதிர் பார்த்தோ உரிய காலங்களில் இடம்விட்டு இடம் பெயரும் சுமூக வாழ்க்கை முறை
Non-Cooperation(69g556opuT6pLD)
அமைதி சார்ந்த அரசியல் நெறிமுறை. அடக்கு முறைக்கு ஆட்பட்டோர் தமக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து ஆளும் வர்க்கத்தினரோடு ஒத்துழைக்காமல் இருத்தல், அப்போதாவது ஆளுவோரது மனதில் மாற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை. காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது இந்நெறியினை உருவாக்கி 1920களில் இந்தியாவில் இதனை நடைமுறைப்படுத்தினார்.
Non -Prolitesation (egug5éb(5603LL)
அணு ஆயுதங்களும், போர்க்கருவிகளும் அணுசக்தி இல்லாத நாடுகளுக்குப் பரவாமல் இருப்பதற்கு அமெரிக்க நாட்டில் செய்யப்படும் பிரச்சாரம்.
Nuclear Reaction (sigl guigsLDIristib)
அணுவின் மூலக்கூறுகள் மாற்றம் செய்யப்படுவதைக் குறிக்கும் இரசாயனமுறை. அணுவின் கூறுகளைப் பிரித்துக் கொண்டே வரும் போது ஒரு கட்டத்தில் உச்சி நிலையில் அணுவின் வெடிப்பு நிகழும்.
Numerology ( 616óT60íluj6ö)
எண்களைப் பயன்படுத்தி எதிர்காலத்தைக் கணித்தல் எண்ணியலார் ஒருவரின் பிறந்ததேதி , பெயர் இவற்றை எண்களாக மாற்றிக்கொண்டபின் அவற்றை ஆராய்ந்து பார்த்து எதிர்காலத்தைக் கணித்துக்கூறுவர்.
அறிவு

மிக , மிக அழகானது
- மகராஜி
சாந்தி நமக்கு அழகைத்தருகிறது ஏனென்றால் அதுதான் எமது இயற்கைநிலை
எல்லோரும் அழகாக இருக்க விரும்புகிறார்கள். வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கண்ணாடி முன்னால் நின்று பார்ப்பதற்கு நன்றாக இருப்பதற்காக அழகுபடுத்திக்கொள்கிறோம். நமக்கு அழகுபடுத்திக் கொள்வது எப்படி என்று தெரியவில்லையென்றால் அதற்கான அறிவுரைகள் நிறைய இருக்கின்றன. பருமனைக் குறையுங்கள்,இந்த “மேக் அப்” போட்டுக் கொள்ளுங்கள், இந்த உடைகளை வாங்குங்கள், வழுக்கைத் தலைக்கு இப்படிச் செய்யுங்கள், இந்த உடற் பயிற்சி இயந்திரங்களை வாங்குங்கள், என்றெல்லாம்.
ஆனால் அழகு வெளிப்பூச்சில்தானா? அல்லது நாம் தேடும் அழகு உள்ளிருந்தும் வருகிறதா?
பிரேம் ராவத் என்றும் பெயர்கொண்ட மகராஜியைப் பொறுத்தவரையிலே அழகு என்பது வெளியிலிருந்து சேர்க்கட்டும் பொருளில்லை. உண்மையான, நிலைத்து நீடிக்கும் அழகு அகத்திலே சாந்தியோடு இருப்பதனாற் பெறப்படுவது.
“ நம் இதயத்தில் சாந்தி நிரம்பி இருக்கும்போது நாம் உண்மையிலேயே அழகாக இருக்கிறோம். இதயம் அன்பாலே நிரம்பி இருக்கும் போது நாம் நன்றாக இருக்கிறோம். இதயம் ஆனந்தத்தால் நிரம்பும்போது நாம் தெய்வீகத்தன்மையோடு தோற்றமளிக்கிறோம். ஏனென்றால் நாம் இவற்றை நன்றாக அணிந்து கொள்கிறோம். ‘நமக்கும் இவை பொருத்தமானவைகளாக இருக்கின்றன” என்று அவர் கூறுகிறார்.
மகராஜி இந்தியாவில் பிறந்தவள். சிறு வயது முதலே இதயத்தில் சாந்தியை உணர்வதற்கு ஊக்கம் அளித்து வந்துள்ளார். கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக அவர் தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை உலகத்தின் பல கண்டங்களிலும் வசிக்கும் மக்களுக்கு எவ்வாறு உள்ளத்தில் சாந்தியைப் பெற முடியும் என்று கூறுவதில் ஈடுபடுத்தியிருக்கிறார். “ சாந்தியை அடைவது சாத்தியமே. அது உள்ளே இருக்கிறது. நாம் உணர்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது’ என்று அவர் கூறுகிறார்.
தன்னுடைய சொற்பொழிவுகளால் பொருளாதார ஆதாயம் எதுவும் தேடாமல் ஏழையோ, பணக்காரரோ,படித்தவரோ, படிப்பறிவு இல்லாதவரோ எல்லோருக்கும் இந்த உதவியைச் செய்துவருகிறார். பல நாடுகளின் தலைவர்களும், பிரமுகர்களும் உட்பட ஐம்பது நாடுகளில் ஐம்பது லட்சம் நானாவித மக்கள் இவருடைய உரைகளைக் கேட்டிருக்கிறார்கள்.
95a سے 7 سے

Page 7
“நான் பல சமூக நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்கே மிகவும் அழகான ஆடை அணிந்தவர்களைப் பார்த்திருக்கிறேன் மேலும் மிகவும் அழகானவர்களையும் பார்த்திருக்கிறேன்.ஆனாலும் உள்ளச் சாந்தியை அணிந்தவர்கள் எல்லோரையும் விட அதிக அழகோடு இருக்கிறார்கள், என்று தான் நான் கூறமுடியும். சாந்தியை அணிந்திருக்கும் மனிதனைவிட அழகானது எதுவுமேயில்லை. அது எல்லாத் தடைகளையும் கடந்து விட்டது” என்கிறார் அவர்.
“சாந்தி நமக்கு அழகு தருகிறது. ஏனென்றால் அதுதான் நாம், அதுதான் நம்முடைய இயற்கை நிலை” என்கிறார்.
நாம் வெளி அழகிலேயே முழுவதும் லயித்திருக்கிறோம். ஏனென்றால் நம் இயற்கை நிலையை நாம் மறந்துவிட்டோம் என்று மகராஜி விளக்குகிறார். அண்மையிலே இதை அவர் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுக்கும் மண் சட்டிக்கு ஒப்பிட்டார். “ அந்தச் சட்டி ஏதோ ஒரு பொருளை வைத்திருப்பதற்காகச் செய்யப்பட்டிருந்தது. யாரோ ஒருவர் அதன் மீது வர்ணம் தீட்டியிருந்திருக்கலாம். ஆனால் அந்தச் சட்டியின் குறிக்கோள் வர்ணம் தீட்டப்படுவது அல்ல. மக்கள் அரிசியையோ,கோதுமையையோ, தண்ணிரையோ,எண்ணெயையோ அதில் வைக்கவேண்டியிருந்தது. அழகான வர்ண ஒவியத்துக்காக யாரும் அந்தச் சட்டியை வாங்கவில்லை.
“அந்தச் சமுதாயம் மறைந்த பிறகு யாரோ ஒருவர் அந்தப் பழைய சட்டியைக் கண்டுபிடித்து எடுத்து அதைப் பழம்பொருள் காட்சி சாலையில் வைக்கிறார் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அந்தச் சட்டி இந்தக் காரணத்துக்காகச் செய்யப்படவில்லை,” என்று அவர் கூறினார்.
“அதேபோற்தான் நம் விடயமும் நாம் வேறு எதற்காகவோ உண்டாக்கப் பட்டிருக்கிறோம். நாம் மலைமேல் ஏறலாம். சமுத்திரத்தின் அடிக்குச் செல்லலாம், செவ்வாய் கிரகத்துக்கோ சந்திர மண்டலத்துக்கோ போகலாம், அல்லது ஆழமான குகைக்குள் போகலாம். இப்படி வேறு விதமான செயல்கள் செய்யலாம். ஆனால் எதற்காக இந்தப் பாண்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது?
“இது சாந்திக்காக உண்டாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கலத்தில் gibgs அழகாக இருக்கிறது” என்று கூறினார்.
மகராஜி உதாரணங்கள் கொடுப்பது மட்டுமல்ல. மக்களுக்கு அவர்கள் உள்ளே ஏற்கனவே இருக்கும் சாந்தியை அடைவது எப்படி என்று காட்ட முடியும் என்றும் கூறுகிறார். இதற்கான வழியை ஞான வழிமுறை என்று அழைக்கிறார்.
“ஒவ்வொரு நாளும் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்ற எண்ணங்கள்
நமக்கு இருக்கின்றன. எது எனக்கு நல்லது, எது எனக்கு வேண்டும், என்றெல்லாம்.
ஆனால் நாம் உண்மையை உருவாக்க நம் எண்ணங்களைச் சிறகடித்துப் பறக்க
அறிவு - 8 -

விடவேண்டாம். ஏனென்றால் என்னவெல்லாம் கற்பனை செய்யமுடியுமோ அவை எல்லாவற்றையும் விட உண்மையானது மிகவும் இனிமையானது. இந்தப் பாண்டம். ஒரே ஒரு பொருளுக்காக - சாந்திக்காக - மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது. சாந்தி இருக்கும் போது இதனுடைய குறிக்கோள் நிறைவடைகிறது. இந்த உன்னதமான பயணத்திலே ஏதோ ஒன்று மிக அழகான ஒன்று மலர்ந்து விரிகிறது - மலர்போல, நாள்போல, இரவுபோல, நிலாபோல, மேகம்போல, ஒப்பிட முடியாத ஆனந்தத்தையும், விவேகம் என்ற பரிசையும் உயிரோடிருப்பது என்னும் வெகுமதியையும் இடைவிடாமல் கொடுத்துக்கொண்டு வருகிறது. உண்மையிலேயே இதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
“ஒவ்வொரு கணமும் ஒரு மூச்சு வருகிறது. இதுதான் எல்லாவற்றையும்விட மிகவும் விலையுயர்ந்த பரிசு. மிகவும் வியக்கத்தக்க பரிசு. நீங்கள் என்னும் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் நல்லவை கெட்டவை அல்ல. பரிசு உங்கள் அப்படியே இது ஆனால் நீங்கள் எப்படியிருகிகிறீர்களோ அப்படியே திரும்பவும் உங்களைத் தொட்டு வருகிறது திரும்பவும்
மகராஜி ஞான வழிமுறையை இலவசமாக அளிக்கிறார். ஆனால் விருப்பமுள்ளவர்கள் அவர் கூறுவதைப் போதிய காலம் கேட்டுத் தாங்கள் வேண்டுவது இதுதான் என்று உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். இதற்காகச் சிறிய பதிப்பீடுகள் புத்தகங்கள் சாட்டிலைட் ஒளிபரப்பு DVD இணையம் போன்ற பலவிதமான சாதனங்கள் 88 மொழிகளிலே உள்ளன
மேலதிக தகவல்களுக்கு:-
For more Information: நிலையத் தொடர்பாளர், www.ennullayana.org (Tamil) ஜீவசக்தி சொனசற்றி லிமிற்றட், www.tprs.org www.maharainet திருகோணமலைக்கிளை, www.contactinfo.net இல. 38, சிவன்வீதி,
திருகோணமலை,
9 - මIffශt

Page 8
GQg56)6).Jg
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் முதலாவது அனுபவம் மறக்கவியலாத அனுபவமாயிருக்கும். பள்ளிக்குச் சென்ற முதல்நாள், வேலைக்குச் சென்ற முதல் நாள் முதல், மாதச் சம்பளம், திருமணமான பிறகு முதல் இரவு, முதல் வாகனம், முதலாவது பயணம் முதல் முத்தம்.முதல் குழந்தை. இப்படி எத்தனையோ முதல் விடயங்கள்.தனியே அமர்ந்து யோசிக்கிறபோது நல்ல முதல் விஷயங்கள் நம்மை நாளும் மகிழ்விக்கின்றன. சில நேரங்களில் நெகிழவும் வைத்துவிடுகின்றன.
என்னுடைய நினைவில்கூட எத்தனையோ நல்ல முதல் விடயங்கள் உண்டு. எப்போதோ என்னுடைய நண்பர் ஒருவர் கேட்டார். உங்களுக்குத் கிடைத்த முதல் முத்தம் நினைவிருக்கிறதா?’ என்று ஆனால் அது 1947 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் ஞாயிற்றுக்கிழமை சூரியன் சுட்டெரித்த பகல்பொழுதில் சுகமாக ஒரு முத்தம் கிடைத்திருக்கும்.அன்று நான் பிறந்த நாள் முதன் முதலாக என் அன்னையைத் தவிரவேறெவர் என்னை முத்தமிட்டிருக்க முடியும்?” என்றேன். நம்மில் பலபேர்தாய்தரும் முத்தத்தை முதல் முத்தமாகவே கருதுவதில்லை. முதல் முத்தம் பற்றி யாரேனும் கேட்டால் அது யாராக இருக்கும்? கமலாவா. 35(TLDTófu ET மீனாவா. முத்துலெட்சுமியா. என்று தான் பலர் மூளையைக் கசக்கிக் கொண்டிருப்பார்கள். சிலபேர் மனைவியிடம் தான் முதல் முத்தம் பெற்றதாகக் கூறுவார்கள். தவறு. தாய் தரும் முத்தம் தான் முதல் முத்தம்.
எனக்கு எத்தனையோ பேர் பாடம் சொல்லித் தந்திருக்கிறார்கள் இருந்தாலும் என் பிஞ்சுக் கையைப் பிடித்து அந்த மண்ணில் அழுத்தி விரல் சிவக்க வைத்த அந்த அன்பு டீச்சரை முதல் இச்சரை என்னால் மறக்க முடியாது. நான் வேலைக்குச் சென்ற முதல் நாள் நினைவிலிருக்கிறது. என் முதற் சம்பளம் ஞாபமிருக்கிறது. வேலைக்குப் போகும் முன் நல்ல துணிமணிகள் வாங்கிக்கொள். ஜம்மென்று வேலைக்குப் போ என்று பணம் தந்த என்னைப் பெறாத தந்தை ஏர்வாடி ஹாஜி அப்பாஸ் அவர் அந்தத் தொகையைத் திருப்பித் தரக் கொண்டுபோகிறேன் “உனக்கு நான் கடனாகவா அந்தப் பணத்தைத் தந்தேன். எனக்கு ஆண் பிள்ளைகள் இல்லை நீ என் மகன் போல. அந்தப் பணம் உனக்கு இந்த சாச்சா வோட (சித்தப்பா) அன்பளிப்பு. உன் முதற் சம்பளத்தை உங்க அப்பாவிடம் கொண்டு போய்க்கொடு” என்ற அந்த அன்பான முதல் சம்பள நாள் இன்னமும் என் நினைவில் தொடர்ந்து ஓரிரு வருடங்களில் என்னுடைய முதல் நூல் வெளியீடு கவியரசர் கண்ணதாசன் வெளியிடுகிறார். “ உனக்காக ஒரு பாடல் சிறிய நுால். சின்னக்கூட்டம் என்றாலும் இப்போதும் அந்த நினைவு. பிறகு சொந்தமாக ஒரு வாகனம் என்னுடைய கிரேக்க நண்பர் டாக்டர் தியோடர் பிட்டோஸ் தன்னுடைய பழைய காருக்கு மாற்றாகக் பெற்ற லாம்ப்ரட்டா ஸ்கூட்டர் என் கல்லுாரி நண்பர் ஜி.வி ரெட்டி ( இன்வழியலைப் போடாவிட்டால் கோபித்துக் கொள்வார் ஜி. வி. ரெட்டி ) அவரிடமிருந்து ஒரு சலுகை விலையில் வாங்க பீட்டோஸ் அவர்களும்
ela - 10 -

ரெட்டியும் ஏதேன்ஸ் புறப்பட்டுப் போன பிறகு அடிமாட்டு விலையில் அதை நான் வாங்கி, ஒட்டத் தெரியாமலேயே மந்தவெளியிலிருந்து புரசவாக்கத்திற்கு நடு இரவில் ஒட்டிக்கொண்டு வந்த அந்த இரவு அனுபவம்.
பக்கத்திலிருக்கிற பம்பாய்க்குக் கூடப் போய் அறியாத நான் முதல் பயணமாய்ப் போய் இறங்குகிற ஊர் அமெரிக்காவின் அழகு நகரம் லாஸ் ஏஞ்சல்ஸ், உலகக் கவிஞர்கள் மாநாட்டில் கலந்துகொள்கிற அரியவாய்ப்பில் (கவியரசர் கண்ணதாசன், நீதியரசர் டாக்டர் மோகன், கிருஸ்ண சீனிவாஸ், பெருங்கவிக்கோவா. மு.சேஆகியோருடன்) சென்றபோது விமான நிலையத்தின் வனப்பு, வெளியே வந்து V பார்த்து வியந்த கம்பீரம் என்னை ஆனந்தக் கண்ணீர் வார்க்கச் செய்தது.
எத்தனையோ பரிசுகள் என்றாலும் முதன்முதலாக நான் ஆறாவது வகுப்பு படிக்கிறபோது இட்டமொழி ஏ.வி.ஜோசப் உயர்நிலைப் பள்ளிப் பிரதிநிதியாக அந்த வட்டாரத்துப் பள்ளிப் பிள்ளைகளுக்கான பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு முதற் பரிசு பெற்ற முதற்பரிசு, வளர்ந்து ஆளாகி வங்கி அதிகாரியாகி சிறந்த அதிகாரி என்பதற்காக தலைமைப்பொது மேலாளரிடமிருந்து பரிசு. பிறகு எழுத்துக்காக மாண்புமிகு முதல்வர் டரிக்டர்.எம்.ஜி.ஆர். அவர்களிடம் சிறந்தசிறுகதை நூலுக்காகப் பரிசு. முதல்முறையாக மாண்புமிகுடாக்டர் ஜெயலலிதா அவர்களிடமிருந்து இயற்றமிழ் திறத்துக்காக கலைமாமணி விருது. என்று முதன் முதலாய் என்று எத்தைனையோ நல்ல முதலாவது விஷயங்கள் நிரம்பவே நிறையவே உண்டு
மனதில் பதிந்த முதலாவது விஷயங்கள் பல இருக்கிற போது என்னைப் பெரிதும் பாதித்த ஒருமுதல் முதலாவது நிகழ்ச்சி. நான் எதையும் எரியூட்டியது கிடையாது. ஆனால் அண்மையில் காலமானளன் அன்னையை எரியூட்ட நேர்ந்தது அந்தப் பொன் மேனியை பூவை எரியூட்டியபோது நான் ஏன் மூத்த மகனாகப்பிறந்தேன்? இளையவனாக இருந்திருக்கக்கூடாதா என்று இதயம் இளகினேன்.
ஏர் வாடி. என் இராதாகிருஷ்ணன் நன்றி கவிதை உறவு.
இலட்சியங்கள் தெளிவுள்ளதாக இருக்கவேண்டும். தெளிவற்ற இலட்சியங்கள் வெற்றி பெறுவதில்லை. மன ஒருமைப்பாடுடன் தன்னால் இயன்ற ஒரு துறையில் மட்டும் முதலில் ஈடுபட்டு அதில் வெற்றி கானும் வரை இடைவிடாது போராடும் போது அது தெளிவான இலட்சியமாகிறது. ஒன்றில் ஈடுபடும் போது மற்றொன்றிற்குத் தாவக்கூடாது.
றரீ அரவிந்தர்
a 1.1 - &a

Page 9
திருமதி. யூனிஸ்கந்தராஜா
விடுகின்ற மூச்சில் உன் மலர்பாத நினைவுகள் தொடராக
வரவேண்டும். வருகின்ற எண்ணம் சுவையாகத் தேங்கி பக்தியின் கவியாக
வரவேண்டும். பருகின்ற சுவையில் கவியின்பம் என்றுமே தானது அநுபூதியாக
வரவேண்டும். சுடுகின்ற வினைபோக என்றுமே நான் தினமுமே கவிபாடி
வரவேண்டும். அரிதாக அரிதாக வரும் உன் நினைவுகள் பெரிதாகி
வரவேண்டும். இருக்கின்ற போதும் நடக்கின்ற போதும் உன் நினைவாய்
இருந்து வரவேண்டும்
அறிவு
- 12 -
 

துயில்கின்ற போதும் விழிக்கின்ற போதும் திருக்காட்சியே கண்டு வரவேண்டும். உன்சான்நித்தியம் எங்குமே நிறைந்திருக்க நீயும் வரம்தர வரவேண்டும். இனிதான நினைவில் இதமான அன்பில் என்னையே மறந்து
வரவேண்டும். விடுகின்ற மூச்சில் உன் மலர்பாத நினைவுகள் தொடராக
வரவேண்டும்.
நன்றி - ஆத்மதுளிகள்
= 15 = ത്ത ഭൂഖ

Page 10
பராசக்தி மகா காவியம்
தமிழகச் சாமிகளும் யோகிகளும் அடிகளும் பலப்பலர் நான் அறிந்தவரை நல்ல தமிழ்ச் சாமியாய் கவியோகியாய் வாழ்ந்து மறைந்தவர் சுத்தானந்த பாரதியாரே(1897-1992) இவர் விபுலானந்தரால் பாரதியாரால் பாராட்டப்பட்டவர் தமிழ்ப்பற்றாளர், சீர்திருத்தவாதி அண்ணாவின் தொண்டைப்பாராட்டியவர் பல நூல்களையும் (திருநூால், தமிழ்உணர்ச்சி, குழந்தைக்கவி, ஏழைபடும்பாடு, சமயவிளக்கம், இன்பத்திருப்புகழ், கணபதி பூஜை, கீதைப்பெயர்ப்பு இன்னும் பல எழுதியவள் இசைப்பாடல்களையும் (சிரிப்புத்தான், நித்திரையில், இல்லை என்பான், கண்ணெடு, பாமாலை, காலைத்துாக்கி இன்னும் பல, எழுதியவர். அம்மா நான் விளையாட, ஓடிவாடாகண்ணா, இலைக்குழல் ஊதி, தேகப்பயிற்சி, கள்ளுக்கடை .போன்றவை பிள்ளைகட்கு பாடம், 20 ஆண்டுகள் மெளனத்தவமிருந்து பல நாடுகட்கும் பயணம் செய்தவர் (இலங்கைக்கு 52 இலும் பின்பும்) இவர் ஒருபெரிய கவிதை நுாலும் 48ல் எழுதினார் அதுவே பாரசக்தி மகாகாவியம் (5 காண்டம் 136 படலம் 7686 பாடல் - 30746 வரிகள்)
ஆனால் அது புலவர்குழந்தையின் இராவணகாவியம் போல் தேடுவாரற்று - படிப்பாரற்றுக்கிடக்கின்றது காரணம் புரிந்திவது யோசிக்கையில் நூல்களை எழுதுவதால் யாது பயன்? எனும் வினாவும் பிறக்கிறது “ஆற்றில் கரைத்த புளி” ஆகியதே என மனம் வருந்தவும் செய்கிறது. பாரதநாட்டை முழுமையாகப் படம் பிடிக்கிறது இந்நூல். சீரழிவுகளைக் கண்டிக்கிறது. தேசியஒருமைப் பாட்டை வலியுறுத்துகிறது நல்லதொரு சமுதாயம் மலரக் கனவுகாண்கிறது அதைச் சுருக்கமாய்ப் பார்க்கையில் சுத்தானந்தரின் உள்ளம் புரிந்துவிடும். முதலில் சித்திகாண் மங்களவாழ்த்துப்படலத்தில்:-
1. வெற்றி கொட்டுக விம்முக பேரின்பம்! சுற்றி ஞானச் சுடரொளிவீசுக! முற்றறிவன் முதல்வன் அருளையே! பற்றி வாழப் பயின்றதிப் பாரெலாம்!' எனத்தொடங்கிப் பின்
2. அம்மையப்பன் அருட்பெரும் சோதியன்
எம்மை ஆளும் இறைவன் குருபரன் தம்மைத் தந்தவர் தாகம் தணிப்பவன் செம்மலரடியைத் தினம் சேவிப்போம் என வாழ்த்திப் பின்
அறிவு - 14 -

கணக்கு நுால் பல கற்றுத் தெளிந்தே மனக்கு நல்ல மகிழ்வினை நல்கி எனக்குக் கற்க இலக்கியம் செய்தேன்! உனக்கு மின்பம் உதவும் உலகே ! என்கின்றார்.
அவருக்கு அப்போதே தெரிந்திருந்தது போலும், எதிர்நாளில்
எமது நூலை யாரும் தேடார் என்பது? எனவே தான் எனக்குத் கற்க
இலக்கியம் செய்தேன்,என்றார் போலும்? அவரைப் பொறுத்தவரை
வெற்றியேதான். நமக்குத் கற்க நாம் இலக்கியம் செய்வதாகவே எனக்குப்படுகிறது. காட்சிப்படலத்தில் இயற்கையை இவ்வாறு காண்கிறார்.
4.
மயில்கள் ஆடின 1 மாங்கனிவாய் இளங்குயில்கள் பாடின ! கொஞ்சின கிள்ளைகள் ! பயிலும் பூவைகள் பாய்ந்தன பச்சிளம் வெயில் உகந்து விலங்கினம் துள்ளின! (இராவணப்படலத்தில் இவ்வாறு சொல்கிறார்)
செவ்விய கேள்வியாளன் : சிவனிடம் வரங்கள் பெற்றோன்!
அவ்வருந்தவத்தின் மிக்கான் ! உளர்மலை பெயர்க்க வல்லான் அவ்வியம் காமம் கோபம் அகந்தையின் வடிவமானான்! இவ்வுலக திரவைத்த இராவணன் இலங்கைக்கோமான் (இராமன் சீதையைத் தேடியதை இவ்விதம்)
கானின மரம் காய் செய்ய கனியுண்டு பாடும்புட்காள் மானினம் பிணைகாழ் மஞ்ஞை வளர்மலை அருவீயிரே வான்சுடர் மணிகாள் உங்கள் வனப்பிலும் வனப்புமிக்க தேன் மலர் திருவென் சீதை சேர்திசையறிகுவீரோ? கெளரிகாண்டத்தில் சுத்தன் காட்சிப் படலத்தில்திருமாவளவன் (கரிகாலன்) பற்றி இவ்வாறு
அஞ்சா வளவன் அனற்சிறைதப்பி பிடாள்த்தலை என்னும் பீடுடைமாமனால் படைத்திறல் கூட்டிப் பகைவரை ஒருங்கே போரில் வீழ்த்திப் புலிக்கொடிநாட்டி ஊரெலாம் போற்ற உறையூர் ஆண்டான் ! செங்குட்டுவன் கண்ணகிபற்றிக்கூறியது இராமகிருஷணப்படலம் விவேகானந்தப்படலம் சொல்லி / இல்லாள் பற்றி:
-直5~ அறிவு

Page 11
0.
1.
12.
அறிவு
வரவிற்கேற்ற வகைசெலவிட்டுப் பக்குவமான சிக்கனம் பேணி மந்திரிபோலத் தந்திரமுரைப்பாள்! இல்லறம் செழிக்க நல்லது செய்வாள்! (கொழுநனின் பின் பொது வாழ்வு பற்றி இவ்விதம்
தீயவர் உறவு நோயினும் கொடிதாம் அறிவுடையாரே திருவுடையாராம்! உழைத்துப்பிழைத்தே ஊருக்குதவு பயிரைப்பேணி உயிரைப்பேணுக! சோம்பலை விரட்டு சுறுசுறுப்பாயிரு மழையைப்போல மன்னுயிர்க்குதவு! (வாழ்க்கைப்படலம் - கண்ணன்படலம் - மகாபாரதம் படலம் - கலிப்படலம்கூறி / சாதனகாண்டத்தில் துறவுப்படலத்தில் போலிகளை இவ்வாறு:-
மனையெலாம் ஊடலாட்டம் மருங்கெலாம் கள்வனின்னாற்றம் முனையெலாம் காமக்கூற்று முகமெலாம் போலிச்சாயம் நினைவெலாம் சூது வாது ! நெறியெலாம் சாருவாகம் 4. தனையெலாம் புகழுமிந்தக் தரங்கெட்ட ஊரிலம்மா! (புத்தர்படலம் - கிறித்துபடலம் - நபிபடலம் - அல்லாபடலம் கூறி / வேதபடலத்தில் பிரிவினைபற்றி இவ்வாறு;-
வீதிக்கோர்மதம் வீட்டினுக்கொருவிதமான சாதி - சாதியுட்சாதிகள் - அவைசெயும்சலியா வாதம் வாதத்தால் வந்திடும் பிரிவினைவகையாம் தீதெலாம் பொதுநலத்தினைத் தேய்த்திடக்கண்டான் வேள்விபுரிபடலத்தில் இன்னும்
கட்டையும் கல்லும் களிம்புறு செம்பும் கொண்டுளியாலே கொத்தி அமைத்த உருவெலாம் மானிடர் உதவிய கற்பனை! உடுக்கும் குறியும் உளங்கை ரேகையும் சோதிடக்கூத்தும் சுயநலக்கூத்தே! தானவ காண்டத்தில் ஏமாற்றுக்களை எடுத்துக்கூறி வாழும் முறை பற்றி வடிவாகக்கூறுகிறார்
a 16 -

3.
14.
15.
16.
17.
கொல்லறம் ஒழிக ! ஞாலம் கோயிலில் அமைதியாகப் பல்லுயிர்க்கலமும் தெய்வப் பணிநலம்புரிந்து வாழ்க! அல்லல்கள் ஒழிக வெய்ய அதர்மங்கள் ஒழிக துாய நல்லறம் பொலிக! என்றே நாடொறும் தியானிப்போமே (தெய்வவாதப்படலம் குண்டலகேசிப்படலம் - வளையாபதிப்படலம் கூறி தற்காலப் போர்பற்றியும் கூறுகிறார்
மலையையும் தகர்க்கும் வலிமிகுகுண்டுகள் கூற்றினும் கொல்லும் கொடிய கண்ணிகள் காற்றினும் வேகமாம் கடுதிப்பொறிகள் கோட்டைபோற்செல்லும் வேட்டைவிமானம் ஒரு நொடிவீச்சால் ஊர்சுடுகாடாம்(26 இடிமுழு.பட ) சுத்த சக்தி காண்டத்தில் யோக சித்திபற்றிய 500 குறள்களில் ஒரு சில மட்டும்
இன்னா புரிவார் இரத்தக்கலப் பெனினும்
ஒன்னார் எனவே உணர் ( 5 சுற்றம்) தின்று படுத்தீன் றெமன்வாய்ச் சென்றுபடல் வாழ்வன்றே பன்றிக்கு உண்டபயன் ( 7 குலநலம் 4) நயத்தால் அரசாள நாடாத மன்னன் பயத்தாலே கொள்வான் படை ( 10 அரச 5 படை ) நாம் திருந்தி மேலோங்க நாடும் திருவோங்கும் தாம் தாம் திருந்தல்தலை (3 நாட்டன்பு43) (மக்கள் நிலைப்பாடுகளை இவ்வாறு
பேதபுத்தியின் பேதமைநீங்கிடின் சாதியில்லை சமயங்களில்லையே மேதினியில் விளங்குயர் மானிடர் நீதி யொன்று நெறியு மொன்றாவரே (11 தொ.பட ) (வெறும் தீனி உலகு பற்றி இவ்வாறு
நன்றியின்றி நடுநிலை இன்றி உள் ஒன்றலின்றி உயிர்க்கருள் இன்றியே. கொன்று கூடிக் குடித்து தரச்சுவை தின்று கெட்டதித் தீனி உலகமே(தொ.பட) விடுதலை எழுச்சிப்படலம்கூறி கலிபணிபடலத்தில் மக்கள் திருத்தம் பற்றி மகிழ்ந்து
அறிவு سے 17 سے

Page 12
18.
9.
திட்டுதீட்டேன் றொதுங்கிடச்செய்வதும், பூட்டி வைத்து பொருள் சிறை காப்பதும், வீட்டிலோர்மதழ் வீதியிலோமதம் காட்டும் வேடமும் கட்டுடன்விட்டனர் (16.பு.மல.பட) சுமங்களப்படலத்தில் இவ்வாறு அறிவுரை
வெற்றுரைகள் பேசாமல் வீண்பொழுது போக்காமல்
வீறு கொண்டு
கற்றறிவும் காணறிவும் கலையறிவும் தொழிலறிவும்
கருதித் தேர்மின்!
ஒற்றுமையும் உள்ளன்பும் உண்மையறிவின்பத்தில்
ஒன்றும் யோகப்
பற்றுதலும் பயின்றிடுமின் பாராலயத்தினிலே
./ பரவிவாழ்வீர்(21.வா.பட)
இக்காவியம் எழுந்தவிதம் பற்றி இவ்வாறு
இம்மையம்மை இருமைப் பயன்களும் செம்மையாகச் செழித்திட வாழ்விலே அம்மையப்பன் அருள்வழி காட்டிட இம்மகாகவி என்னுள் உதித்ததே (சுத் வாணிப்பட) தத்துவக்கதை இன்பமே சூழ்க அருளாட்சி துவக்குக! என்கிறார் ஈழத்தில் நிகழுமா?ஒருதரம்இந்நூல்கிடைத்தவர் தலைப்புக்களையாவது புரட்டிப் பார்ப்பாரா? நேரம் வருமா? தாமின்புறுவர் உலகின்புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தாா
(399குறள்)
39
- தாமரைத்திவான்.
- 18

வேகும் சொல்லுது
பூனி மனோகரி
சுவர்க்கடிகாரம் ஒன்பது அடித்து ஓய்ந்தது. செல்லையா தன் காலை நேரக் கடமைகளை முடித்து ஓய்வாக சாய்மனைக் கதிரையிற் சாய்ந்தூர் வெளி விராந்தையில் இருந்து கொண்டிருந்த மூவருள் ஒருவர் தன் தலையை நீட்டி 'உள்ளே பார்த்தார். ஐயா வரட்டுங்களா என்று அவர் குரல் வெளியால் வந்தது. ஓம் ஓம் வா என்றார் செல்லையா. வெளியால் குரல் கொடுத்தவர் வெகு அடக்கமாய் வந்து செல்லையா அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார். ஐயா, இரண்டு நாளைக்கு முன்னர் என் பிரச்சனை சொன்னேனே என்று மெல்லக் குரலை இழுத்தார். வந்தவரை செல்லையா நிமிர்ந்து பார்த்து ஓம் சின்னச்சாமி நீ சொன்னனிதான், ஆனால் வேதம் இது வில்லங்கமான விஷயமாம் என்கின்றது, எதுக்கும் உன் மூத்த சம்சாரத்தோட கோவிக்காமல் இதைச் செய்து முடி, நல்லது தானே செய்கிறாய், இரண்டாவதை ரோட்டிலயா விடுறாய். அவளுக்கு பிறந்ததை கட்டிக் கொடுக்க போறாய் செய்து முடி என்றார். ஐயா அப்படி எண்டால் காணியை நான் எழுதி கொடுக்கலாமோ, ஒம் செய், ஆனால் உன்ர மூத்த சம்சாரத்திடம் கையெழுத்து வேண்டும் கண்டியோ. சரி ஐயா பார்த்து செய்யிறன். அவன் சென்று விட்டான். இன்று மூன்று பேர் தான் செல்லையாவிடம் வேதம் சொல்வதை கேட்க வந்தவர்கள். அந்த கிராமத்தில் அவர் குடிவந்து ஒரு வருடம் தான் ஆகுது. அதற்குள் அவர் மிகப் பிரபலம் அடைந்து விட்டார். வாய்க்கு வாய் மூச்சக்கு மூச்சு நான் வேதம் சொல்வது போலதான் செய்வேன் என்று கூறுவார். அந்த ஊர்ச் சனங்கள் ஐயா வேதம் சொல்வதை எங்களுக்கும் கூறுங்கள், நாங்களும் எங்கள் பிரச்சனைகளை நல்ல விதமாய் தீர்ப்போம். வேதம் சொல்வது படி நடந்தால் பாவங்கள் தீண்டாது எனக் கூறி அவரிடம் தம் பிரச்சனைகளை சொல்லி வேதம் சொல்வது பேர்ல் தீர்வு கண்டு வந்தார்கள். இரண்டு மூன்று மாதமாய் அவரே அங்குள்ள நாட்டு நடப்புகளை பார்த்து வரலானார். இதனால் அவருக்கு பெரிய மவுசு யைா வேத வாக்கு தவறாமல் நடப்பவர். பெரிய மேதை என்று கிராம மக்கள் அவரை போற்றினர். g5LDg பிரச்சனைகளையும் சொல்லி வேதம் சொல்லவது போல் நடந்து வந்தார்.
* அன்று வந்தவர் மூவரும் அவரிடம் கேட்டு, தம் பிரச்சனை தீர்க்கச் சென்றனர். அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு இவரைத் தேடி இருவர் வந்தனர். அவர்கள் சாய்மான கதிரையில் செல்லையாவை காணாததினால் ஐயா எங்கே போயிருப்பார் என்று ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு மெல்லென “ஐயா” என்று கூப்பிட்டார் கந்தசாமி, பதிலைக் காணோம். திரும்பச் சற்று பலமாகவே கூப்பிட்டார். செல்லையா அறைக்குள் இருந்து வெளியே வந்தார். ஐயா என் பிரச்சனைக்கு பதில் என்றார். கந்தசாமி. ஓம் கந்தசாமி உன்ட பிரச்சனை இன்று தீர்க்க ஏலாது. வேதம் போட்டுது. இரண்டு நாள் கழித்துத் தான் அவவின் அம்மா வீட்டிலிருந்து வருவா. அது மட்டும் நானும் தனிதான் என்றார்.
கந்தசாமி ஒன்றும் பதில் பேசாமல் அவரைப் பார்த்தபடி நின்றார்.
- 19 - Sifa

Page 13
மின்வெளிச்சடுகுராயம்
எம் சிவலிங்கம் “ ک fair - JSFT6660)LD (e-Governance)
தொலைபேசி, மின்சாரக் கட்டணம். வீட்டு வரி இவற்றைச் செலுத்த நகரின் வெவ்வேறு மூலைக்கு ஒட வேண்டும். நீண்ட கியூவில் நெடுநேரம் நிற்க வேண்டும். ஒரு நிலத்திற்கு வில்லங்கச் சான்றிதழ் வாங்க வேண்டும். உங்கள் பையனுக்குச் சாதிச்சான்றிதழ் பெற தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பிறப்பு / இறப்புச் சான்றிதழுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வீட்டு வசதி வாரியம் கட்டியுள்ள புதிய வீட்டை வாங்க விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் பகுதிக்கு பேருந்துவிடக்கோரி அமைச்சருக்கு மனு அனுப்ப வேண்டும். இரவு நேரக் காவல் ரோந்துக்கு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். புறநகர் மேம்பாட்டுக் குழுமத்தின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி அறிய வேண்டும். உங்கள் வருமானவரிக்கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டின் கூறுகளை நுணுகி ஆராய வேண்டும். நேற்று வெளியிடப்பட்ட அரசு கெஸட்டைப் படிக்க வேண்டும். இதற்காக நீங்கள் அலுவலகத்திற்கு விடுப்பு போட்டு அலைய வேண்டும். என்றாலும் அந்த வேலை ஒரே நாளில் முடிந்து விடுமா என்பது ஐயமே.
வீட்டில் கணிப் பொறியின் இணைய இணைப்பையும் வைத் திருப்பவர்கள் மேற்கணி ட பணிகள் அனைத்தையும் வீட்டிலிருந்தபடியேயும், கணிப்பொறி இல்லாதவர்கள் வீட்டுக்கருகில் உள்ள ft (9600600TL 2 6)T 60LDugga5(55gjib (Internet Browsing Centre) அல்லது அரசு அமைத்துள்ள நடுநாயகமான ஒரு தகவல் மையத்திலிருந்தும் செய்து கொள்ள வசதி இருப்பின் எப்படி இருக்கும்? அரசு இயந்திரம் மிகச் சிறப்பாக செயல்பட முடியும். பொது மக்கள் பெரிதும் பயன் பெறுவர். பல பேருடைய பொன்னான நேரம் விரயமாவது தவிர்க்கப்படும். இடைத்தரகர்கள் ஒழிந்து போவார்கள். ஊழல் பெருமளவு குறைந்து போகும். உண்மையான மக்களாட்சி மலரும்.
அரசு ஆவணங்களை டிஜிட்டல் தகவலாய் மாற்றியமைப்பதும், அரசு அலுவலகச் செயற்பாடுகள் அனைத்தையும் கணிப்பொறி மயமாக்கலும், அரசுத் துறைகளுக்கிடையேயும், மேலிருந்து கீழ்வரையுள்ள அரசு அலுவலகங்களுக்கிடையேயும் ஒரு கணிப்பொறிப் இணையம் வழியாகத் தகவல்த் தொடர்பை ஏற்படுத்துவதும், பொதுமக்கள் அறிய
அறிவு
- 20 -

வேண்டிய அரசாங்கத் தகவல்கள் அனைத்தையும் இணையம் வழியாக அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும், அரசுக்குப் பொதுமக்கள் அளிக்கின்ற விண்ணப்பங்கள்/ மனுக்கள் இணையம் வழியாகப் பெற்றுக் கொள்வதும், அவற்றின் மீதான நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் உரியவர்களுக்கு இணையம் வழியாகவே கிடைக்கச் செய்வதும் மின்-அரசாண்மை (e-Governance) எனப்படுகிறது.
இது போன்ற மின்-அரசாண்மை எந்த நாட்டிலாவது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழும், வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றில் மேற் கூறியவை அனைத்தும் இல்லாவிட்டாலும் பெருமளவு செயற்பாடுகள் கணிப்பொறி/ இணையம் வழியாக மேற்கொள்ளப் படுகின்றன. கீழ்க்காணும் செய்தி அண்மையில் ஒரு பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்தத் திசை வழியில் இந்திய மாநிலங்ளிலும் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆந்திர மாநிலம் மின்-மாநிலம் (e-State) என்ற பெயரைப் பெற்றுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் தலைமைச் செயலகத்துடன் அதிவேகத் தகவல்த் தொடர்பு கேபில்கள் மூலம் இணைக்கப்பட உள்ளன. அரசின் முக்கிய அலுவல்கள் கணிப்பொறி மயமாக்கப்பட்டு வருகின்றன. வருவாய்த்துறைப் பத்திரப் பதிவுத் துறையில் கணிப்பொறி புகுத்தப்பட்டள்ளது. மாவட்டக் கருவூலங்கள் கணிப்பொறிப் பிணையத்தில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன. ஆந்திர முதலமைச்சர் தொலைநோக்குப் பார்வையுடன் தகவல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் தந்து பல்வேறு வழிவகைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
தமிழ்நாடும் போட்டி போட்டு முன்னேறிவருகிறது. திருவாரூர் மாவட்டம் “முன்மாதிரி’ மாவட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு. மாவட்ட அலுவல்கள் அனைத்தும் கணிப்பொறி மயமாக்கப்பட்டு வருகின்றன. வருவாய்த்துறை, பத்திரப் பதிவுத்துறை, மாவட்டக் கருவூலங்கள் கணிப்பொறி மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியாக ஒரு தகவல் தொழில் நுட்பச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசத்துறைகள் வலைத்தலங்களை அமைத்துள்ளன. தமிழ்நாடு முழுக்க ஒளியிழைக் கேபிள்கள் நிறுவப்படுகின்றன. அனைத்து நகரங்களும் கிராமங்களும் அதிவேக தகவல் தொடர்பில் இணைக்கப்பட உள்ளன,வட்டாட்சியர், மாவட்டத்திற்கு வேண்டிய மனுக்களை அங்கிருந்தே அனுப்பலாம். பொதுமக்கள் அறிந்து கொள்ள விரும்பும் அரசுத்
அறிவு سر 21 سه

Page 14
தகவல்களை அங்கு பெறலாம், பயிரிடுவதற்கான விதைகள், உரங்கள் , பூச்சி மருந்துகள், பயிர்ப்பாதுகாப்பு, வானிலை முன்னறிவிப்பு , விளைச்சலுக்கான கொள் முதல் விலை விபரங்கள் போன்ற பல தகவல்களை அங்கு பெறலாம். மின்னஞ்சல் வசதியும் உண்டு. ஆட்சி மாற்றத்தால் இத்திட்டங்களில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
பொதுவாக இந்தியாவில் கணிப்பொறியின் பயன்பாடும் இணையத்தின் வளர்ச்சியும் குறைவாகவே உள்ளது. பெருநகரங்கள். நடுத்தர நகரங்கள், ஒரளவு சிறிய நகரங்களில் மட்டுமே கணிப்பொறி ஊடுருவியுள் ளது. கிராமங்களில் இனி னும் கணிப் பொறி எட்டிப்பார்க்கவில்லை. கணிப்பொறி/ இணையத்தின் வளர்ச்சிக்கு தொலை இணையத்தின் வளர்ச்சிக்கு தொலை தொடர்புக் (Telecommunication) கட்டமைப்பு கிராம அளவில் இன்னும் அதிக அளவு ஊடுருவ வேண்டியது அவசியம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மக்கள் தொகை ஒரு தடைக்கல் அல்ல என்பதை சீனா நிரூபித்துள்ளது. தொலைபேசிகள், செல்பேசிகள், கணிப்பொறிகள், இணையப்பயனாளர்கள், இந்தியாவைவிடச் சீனாவில் பலமடங்கு அதிகம்.
தகவல் தொழிநுட்பப் புரட்சியை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது.கணிப்பொறி/இணைய வளர்ச்சியால் மக்களுக்கு. எப்படிப்பட்ட தகவலும் உடனடியாகச் சென்று சேர்கிறது. எனவே மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகிறது.அதனால் அவர்களிடமிருந்து புதுப்புது கோரிக்கைகள் எழுகின்றன. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைக்க, அரசு, மேலும் விரைவாக செயற்படவேண்டியுள்ளது. பழைய முறைகள் பயனளிக்காது. மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க அரசு மின்-அரசாண்மைக்கு மாறியே ஆக வேண்டும். w
இவை மட்டுமல்ல. கணிப்பொறி/இணையம் திறந்து விட்டுள்ள வாசல்கள் இன்னும் எத்தனையோ, மக்களின் பொழுது போக்குத் தேவைகளையும் கணிப்பொறி இணையம் நிறைவேற்றி வைக்கமுடியும். கணிப்பொறியில் பொழுது போக்கு விளையாட்டுகள் ஏராளமாக உள்ளன. அருமையான இசைப்பாடல்கள், கார்ட்டுன் படங்கள், திரைப்படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றை மின் பொழுது போக்கு (e- Entertainment) 660Tais gnB6oTib. GLUT(ggb (3U TÈ (B5/6î60)GITUUTTU (B வழியாகவே கல்வி புகட்டும் கல்வி விளையாட்டு (Edutainment) என்கிற புதிய துறையே உருவாகியுள்ளது.
அறிவு - 22 -

கேபிள் தொலைக்காட்சி மூலமாக இணையத்தில் உலாவரும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கணிப்பொறி வழியாகக் கேபிள் தொலைக்காட்சி காணவும் வழியுள்ளது. தொலைபேசி வழியாக இணையத் தொடர்பு முறைக்குப் பதிலாக, இணையத்தொடர்பு மூலம் தொலைபேசி கொள்ளும் முறை வந்து விட்டது. நடந்து போகும் போதே, வாகனத்தில் பயணம் செய்யும் போதே தொலைபேசித் தொடர்பு கொள்ள செல்போன் இருக்கிறது. இப்போது செல்பேசி மூலமாகவே இணையத்தில் உலாவரவும் மின்னஞ்சல்களைப் பார்வையிடவும் முடிகிறது. காரில் சென்று கொண்டிருக்கும் போது அதில் பொருத்தப்பட்டுள்ள ஆட்டோ பீசியில் (Auto PC) மின்னஞ்கலைப் பார்வையிட முடியும். பங்குச் சந்தை விபரங்களை அறிய முடியும். தொழில் முதலீடுகள் தொடர்பான சில முக்கிய முடிவுகளை உடனுக்குடன் அலுவலகத்திற்கு தெரிவிக்க முடியும். பயணத்தின் போது எடுக்கப்படும் வணிக நடவடிக்கை எம்abTubss6ö (M-Commerce – Mobile Commerce) 6I60ILIL16&Bghl. S616)}{IP கணிப்பொறி..இணைய விந்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒரு புதிய சமுதாயம்
நாடு, மொழி, இனம், மதம், இவற்றின் எல்லைகளைக் கடந்து ஒரு புதிய சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமுதாய மக்கள் மின்-தகவல்களைப் பெறுகின்றனர். மின்-கல்வி பெறுகின்றனர். மின் வெளியீடுகளைப் படித்தப் பயன் பெறுகின்றனர். மின்-வணிகத்தில் ஈடுபடுகின்றனர். மின் வங்கிகளில் மின் பணத்தைக் கையாளுகின்றனர். மின் மருத்துவர்களினால் நல வாழ்வு பெறுகின்றனர். மின் சமூகக் குழுக்கள் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குகின்றனர். மின் சட்டங்கள் இவர்களை கட்டுப்படுத்துகின்றன. மின் அரசாங்கம் இவர்களை ஆள்கின்றது. இப்படிப்பட்ட சமூதாயத்தை மின் சமூதாயம் அல்லது மின் வெளிச் சமுதாயம் என்பது பொருத்தமே.
மின் வெளிச் சமுதாயத்தில் மக்களின் வாழ்க்கை மின் வாழ்க்கையாக (e-Life) மாறிப்போகும். வாழ்க்கை முறையில் மாற்றும் போதே மனிதனின் சிந்தனை ஓட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படும். இதனால் விரிந்து பரந்த இந்த உலகம் முழுவதையும் ஒரே நாடாக்கி, மனித நேயமிக்க ஒரு புதியதோர் உலக சமுதாயம் உருவாவது வெறும் கனவல்ல. அது வரவிருக்கும் நிஜம்.
سه 2235 مير
அறிவு

Page 15
தமிழ்த் திரைப்படங்கள்
(1948 - 1968) நிழல் ப. திருநாவுக்கரசு
1948 ஞானசெளந்தரி திரைப்படத்தை சிட்டாடல் எடுத்தனர். டி.ஆர்.மகாலிங்கம் நடித்த இப்படம் வெற்றி பெற்றது. ‘அருள் தாரும் தேவ மாதாவே' என்ற பாடல் புகழடைந்தது. ஜெமினியின் சந்திரலேகா வசூலை வாரிக் குவித்தது.எம்.கே.ராதா, ரஞ்சன், டி.ஆர்.ராஜகுமாரி, கலைவாணர் முதலியோர் நடித்தனர். அந்தக் காலத்தில் அதிக செலவுடன் எடுக்கப்பட்ட படம் இது தான். ரூ. முப்பது லட்சம். தமிழ், இந்தியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஆங்கிலத் துணைத் தலைப்புக்களுடன் காட்டப்பட்டது. டி.ஆர் ராஜகுமாரியின் முரசு நடன செட்டும், பிரமாண்டமான அரண்மனைக் காட்சிகளும் கூட வட இந்திய படத் தயாரிப்பாளர்களைக் கூட ஆச்சரியப்பட வைத்த படம், 600 - மேற்பட்ட பிரதிகள் எடுக்கப்பட்ட படம்.
ஏ.வி.எம்.மின் வேதாள உலகம் கர்ணபரம்பரைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சம்பந்த முதலியாரின் நாடகமாக வெளிவந்ததை திரைப்படமாக்கி தயாரித்தனர். வெற்றியடைந்தது.
1949இவ்வாண்டு வெளிவந்த படங்களில் ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் என்ற படம் கார்சிகன் பிரதர்ஸ் என்ற ஆங்கிலப் படத்தை தழுவி, தமிழில் வெளிவந்தது. எம்.கே.ராதா இரு வேடங்களிலும், நாகேந்திரராவ் வில்லனாகவும், பானுமதி கதாநாயகியாகவும் நடித்தனர். தமிழ், தெலுங்கு, மொழிகளிலும் வெளியானது. பெரிய வெற்றியைத் தேடித்தந்தது.
ஓரளவு பேசப்பட்ட படங்கள்: இன்பவள்ளி, கிருஷ்ணபக்தி, மங்கையற்கரசி, பவளக்கொடி, ரத்னகுமாரி, கிருஷ்ண விஜயம் போன்றவை.ஏ.வி.எம்.மின் வாழ்க்கை படம் மும்மொழிகளில் வந்து வெற்றி பெற்றது. இப் படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனும் வைஜந்திமாலாவும் நடித்தனர்.
இதே ஆண்டு சி.என். அண்ணாத்துரையின் கதை வசனத்தில் கலைவாணர் நடித்த நல்லதம்பியும், வேலைக்காரியும் பெரு வெற்றி பெற்றன. நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமிக்கு புகழ் கிடைத்தது. வேலைக்காரியை ஜூபிடர் நிறுவனம் மும்மொழிகளில் எடுத்து வெற்றி கண்டது.
பொன்முடி திரைப்படம், பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் காவியத்தை தழுவியது. இப்படத்தில் சிறப்பான முறையில் ஒளிப்பதிவு செய்ததற்காக ஜே.ஜி விஜயம் அவர்கட்கு பிரெஞ்சு நாட்டு ஒளிப்படக் கழகம் விருது வழங்கிச் சிறப்பித்தது. இவர் மறைந்த நடிகர் சேகரின் தந்தையாவார். இயக்கம்: டி.ஆர்.சுந்தரம்.
1950 இவ்வாண்டு வெளிவந்த ஏழைபடும் பாடு படத்தை பட்சிராஜா நிறுவனம் எடுத்தது. பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹிகோவின் கதையைத் தமிழ்,
அறிவு - 24 -

தெலுங்கில் தயாரித்தனர். நாகையா, ஜாவர் சீதாராமன் சிறப்பாக நடித்தனர். லலிதா பத்மினிக்கு வரவேற்புத் தந்த படம்.
மார்டன் தியேட்டர்ஸின் திகம்பர சாமியார் வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இப் படத்தில் என்.எம்.நம்பியார் பல்வேறு வேடங்களில் தோன்றி சிறப்பாக நடித்தார்.
1951 சி.என் அண்ணாத்துரையின் திரைக்கதை வசனத்தில் ஓர் இரவு படத்தை ஏ.வி.எம் தயாரித்தனர். மாலை 6க்கு தொடங்கும் கதை காலை 6மணிக்கு முடிவதுபோல எழுதப்பட்டது இது. இதை கே.ஆர். ராமசாமி நாடமாக நடித்து வந்தார். இவருடன் பாலையா, நாகேஸ்வரராவ் முதலியோர் நடித்தனர்.
டி.ஆர். சுந்தரத்தின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த சர்வாதிகாரி வெளிவந்தது. இருவருக்கும் வெற்றியைக் கொடுத்த படம்.
விஜயா புரொடக்ஷனின் பாதாள பைரவி மும்மொழிகளில் வெளிவந்து வெற்றியடைந்தது. என்.டி.ராமராவும். மந்திரவாதியாக நடித்த ரங்கராவும் மக்கள் மனதில் இடம் பிடித்தனர்.
எம்.ஜி.ஆருக்கு ஜூபிடர் நிறுவனம் மூலம் தொடர்ந்து கதாப்பாத்திரம் கிடைக்க உதவிய படம் மர்ம யோகி. கதாநாயகனாக எம்.ஜி.ஆர். நடித்தார். தமிழ்த் திரையுலகில் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் கிடைத்த படம்.
1952. இவ்வாண்டு ஓரளவு வெற்றி பெற்ற படங்கள்: கல்யாணம் பண்ணிப்பார், வளையாபதி, என் தங்கை போன்றவை. பெரு வெற்றி பெற்ற படம் பராசக்தி. சிவாஜிகணேசன் நடிப்புக்கும் மு.கருணாநிதியின் வசனத்திற்கும் கிடைத்த வெற்றி. எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கும் நுழைவாயிலாக அமைந்த படம். படத்தின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டது.
1953 இவ்வாண்டு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படம் ஒளவையார் ஜெமினிவாசனின் வெற்றிப்படம். மட்டுமல்ல. கே.பி.சுந்தராம்பாளின் பக்திப் LUFTLëbsTab036 Ọtņuu Ulid. Gg5ĖJG5, 56öIGOTU, மலையாள மொழிகளில் கதைச்சுருக்கத்துடன் வெளியானது. இதே ஆண்டு வெளியான சண்டிராணி, * நாம், திரும்பிப்பார், மனம் போல் மாங்கல்யம், மனிதன் (மலைக்கள்ளன்) போன்ற படங்கள் ஓரளவு ஓடின.
1954 இவ்வாண்டில் நான்கு படங்கள் பெரு வெற்றி பெற்றன. மலைக்கள்ளன் தமிழ்த் திரைப்பட உலகில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் படம் அந்த நாள். இதனை இயக்கியவர் எஸ்.பாலச்சந்தர். ஏ.வி.எம் இன் முத்திரைப்படம். நடனம், சண்டைக் காட்சிகள் கூட இதில் கிடையாது.
~25~ அறிவு

Page 16
பட்சிராஜா நிறுவனத்தின் மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதியும் நடித்தனர். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் புதினக் காவியத்தை பூரீராமுலு நாயுடு இயக்கினார். படம் ஆறு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. ‘எத்தன்ை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற டி.எம்.எஸ்ஸின் பாடல் புகழடைந்தது. சிறந்த மாநில மொழி படத்திற்கான குடியரசு தலைவரின் வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.
பம்மல் சம்பந்த முதலியாரின் புகழ் பெற்ற நாடகமான மனோகரா திரைப்படமானது. மு.கருணாநிதியின் வசனம், சிவாஜியின் நடிப்பால் வெற்றி ப்ெற்றது. திருவாரூர் தங்கராசுவின் வசனம்: ரத்தக்கண்ணிர் எம்.ஆர்.ராதாவின் நடிப்பில் பெருவெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் எம்.ஆர்.ராதாவிற்கு திரைப்பட மீள் பிரவேசம் கிடைத்தது.
1955 இவ்வாண்டு வெளிவந்த படங்கள் அனைத்தும் சுமாரான வெற்றி பெற்றன. ஜெமினிகணேசன், அஞ்சலிதேவி நடித்த கணவனே கண்கண்ட தெய்வம். சாவித்திரி - ஜெமினிகணேசனின் மிஸியம்மா என்ற இரு படங்கள் மட்டுமே பெரு வெற்றி பெற்றன. எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி,சிவாஜி கணேசன் நடித்த காவேரி, மங்கையர் திலகம் ,கள்வனின் காதலி, ஏ.வி. எம். மின் செல்லப்பிள்ளை, மாமன் மகள் முதலிய படங்கள் சுமாரான வெற்றிப் படங்கள்.
1956 இவ்வாண்டு எம்.ஜி. ஆருக்கு வெற்றிப் படங்களைத் தந்தது. மார்டன் தியேட்டர்ஸின் அலிபாபாவும் 40 திருடர்களும் பெருவெற்றி பெற்றது. தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ண (கேவா) படம். தேவரின் தாய்க்குப் பின் தாரம், மேனா செட்டியாரின் மதுரை வீரன் என்ற மூன்று படங்களும் வெற்றி பெற்றன.மேராஜலு மாராயி என்ற தெலுங்குப் படத்தை தமிழில் காலம் மாறிப் போச்சு என்ற தலைப்பில் எல்.வி. பிரசாத் தயாரித்தார்.
எஸ்.எஸ்.ஆர். நடித்த குலதெய்வம் படத்திற்கு மாறன் வசனமெழுதினார். ராஜகோபாலுக்கு வழி சமைத்த படம், மர்மவீரன் என்ற படத்தை நடிகர் பூரீராம் தயாரித்தார். இப்படத்தில் சிவாஜிகணேசனும், ஜெமினிகணேசனும் கெளரவ வேடத்தில் நடித்தனர் அண்ணாவின் ரங்கூன் ராதா நாவல் திரைப்படமானது. இதில் சிவாஜியும்பானு மதியும் சிறப்பாக நடித்தனர்.
1957 இவ்வாண்டுப் படங்களில் எஸ். எஸ். ஆர். நடித்த முதலாளி படத்தை எம்.ஏ. வேணு தயாரித்தார். குறைந்த செலவில் எடுக்கப் பட்ட இப்படம் பெருவெற்றிபெற்று நுாறு நாள் ஓடியது. ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே என்ற பாடல் புகழ் பெற்றது. சிறந்த மாநில மொழிப் படங்களுக்கான சான்றிதழ் பெற்றது. இதுபோலவே சிவாஜிகணேசன் நடித்த வணங்காமுடி, மக்களைப் பெற்ற மகராசி படத்தில் முதன் முதல் கொங்கு வட்டார வழக்குப் பயன்படுத்தப்பட்டது. சிவாஜி கணேசன் நடித்த கற்புக் கரசி,மாயாபஜார் படங்களும் நுாறுநாள் ஒடின.
அறிவு - 26

1958 சிவாஜிகணேசன் நடித்த பதிபக்தி, உத்தம புத்திரன், அன்னையின் ஆணை, சபாஷ் மீனா ஆகிய நான்கு படங்களும் நுாறு நாள் ஓடிய வெற்றிப் படங்கள். எம்.ஜி.ஆரே இயக்கி நடித்த நாடோடி மன்னன் பெருவெற்றி பெற்றது. இதில் அவர் இரண்டு வேடங்களில் நடித்தார். படத்தின் இரண்டாம் பகுதி மட்டும் வண்ணத்தில் காண்பிக்கப்பட்டது.
உத்தமபுத்திரன்)
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் இப்படம் வெற்றியடைய ஒரு பெரும் காரணமாக இருந்தது. ஏ.கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த எஸ்.எஸ்.ஆர். நடித்த தை பிறந்தால் வழி பிறக்கும் படம் பெரு வெற்றி பெற்று,இயக்குனரே ஸ்டுடியோ உருவாக்க வழி சமைத்த படம். கே. சோமு இயக்கத்தில் சம்பூர்ண ராமாயணம் 22,953 அடியில் , சிவாஜி, என்.டி.ராமாராவ் நடித்த படம் 200 நாட்கள் ஒடிய வெற்றிப்படம். -
1959 இவ்வாண்டு55 படங்கள் வெளிவந்தன இதில் பட்சிராஜாவின் மரகதம் படமும், ஐபிடரின் தங்கமலை ரகசியமும் நூறுநாள் ஓடிய படங்கள் . பீம்சிங் இயக்கத்தில் வெளியான பாகப்பிரிவினை 200 நாளை கொண்டாடிய படம். நான்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டது. பி.ஆர். பந்துலுவின் வீரபாண்டிய கட்டப்பொம்மன் நாடகமாக நடிக்கப்பட்டு வந்த தேசபக்தனின் வரலாறு சிவாஜி கணேசனின் பாத்திர சித்திரிப்பால் பொலிவு பெற்றது. 25 வாரம் ஒடியது. மத்திய அரசு, மாநில மொழிப் படங்களுக்கான சான்றிதழை வழங்கியது.இந்தப் படத்தின் பிலிமை இலண்டனில் டெக்னிக் கலர் பிரிண்ட்டாக எடுத்தனர். எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த ஆசிய - ஆபிரிக்க படவிழாவில் இப்படம் கலந்து கொண்டது. சிறந்த நடிகருக்கான பரிசை சிவாஜிகணேசனும், சிறந்த , இசையமைப்பாளருக்கான விருதை ஜி. ராமனாதனும் பெற்றனர்.
ழரீதரின் இயக்கத்தில் வெளிவந்த கல்யாணப் பரிசு படம் 175 நாளை கொண்டாடியது. ஜெமினி,சரோஜாதேவி, விஜயகுமாரி நடித்த முக்கோணக் காதல் படம். கே. ஏ. தங்கவேலுவின் நகைச்சுவை தனி இசைத்தட்டாக வெளியிடும் அளவுக்கு புகழ்பெற்றிருந்தது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் எல்லாப் பாடல்களும் புகழப்பட்டது. இவை தவிர வண்ணக்கிளி,நாலுவேலிநிலம், சிவகங்கைச் சீமை போன்ற படங்கள் சுமாரான வெற்றி பெற்றன.
ఫిజి 1960 இவ்வாண்டு வெளிவந்த படங்களில் சிவாஜி கணேசன் நடித்து 100 நாள் ஓடிய வெற்றிப்படங்கள் தெய்வப்பிறவி, படிக்காத மேதை,பார்த்தீபன்கனவு அஞ்சலிதேவி தயாரித்த அடுத்த வீட்டுப் பெண் நகைச்சுவை நடிகர்கள் பட்டாளம் நடித்து வெற்றி பெற வைத்த படம். ஏ.வி எம். * மின் களத்துர் கண்ணம்மா காதல் சோகம் (பார்த்தீபன் கனவு) நிரம்பிய படம் ஜெமினிகணேசன் சாவித்திரி
அறிவு ۔ 277 ۔
8.

Page 17
நடித்தனர். கமலஹாசன் சிறுவனாக அறிமுகமான வெற்றிப்படம். மார்டன் தியேட்டர்ஸின் கைதி கண்ணாயிரம் ஆர்.எஸ் மனோகர் நடித்த இப்படத்தை வெற்றிப்படமாக்கினார் டி.ஆர். சுந்தரம், கே. சங்கர் இயக்கத்தில் ஜெமினிகணேசன் நடித்த படம் கைராசி. குடும்பக் கதையான இப்படம் வெற்றியடைந்தது. இது போலவே றிதள் இயக்கத்தில் வெளிவந்த நீண்ட சொர்க்கமும் ஜெமினிகணேசனுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. ஜெமினி நடித்த பார்த்திபன் கனவு படம் சிறந்த மாநிலமொழிப்படங்களுக்கான வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றது.சிட்டாடலின் விஜயபுரி வீரன் சி.எல். ஆனந்தனின் கத்திச் சண்டைப்படம்வெற்றிப்படமாக அமைந்தது.
1961 இவ்வாண்டு படங்களில் சிவாஜிகணேசன் நடித்த பாசமலர் அண்ணன் தங்கை பாசத்தைப் பேசிய படம். இரும்புத்திரை தொழிலாளி - முதலாளி மகள் காதல், பாவ மன்னிப்பு மத ஒற்றுமைக்கான படம். மூன்று படங்களும் 175 நாட்கள் ஒடிச் சாதனை படைத்தது. பாலும் பழமும் என்ற படம் 100 நாள் ஓடி வெற்றியடைந்தது. பூரீதர், சித்ராலயா என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி தயாரித்த படம் தேன்நிலவு முழுப்படமும், காஷ்மீரில் படமாக்கப்பட்டது. ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளியான எம்.ஜி.ஆரின் திருடாதே, மாடர்ன் தியேட்டர்ஸின் குமுதம் போன்றவை வெற்றிகரமாக ஓடிய படங்கள். பாவமன்னிப்பு நற்சான்றிதழைப் பெற்ற இரண்டாவது படமாக தேர்வு பெற்றது. சிறந்த மாநில மொழிகளுக்கான படங்களில் கப்பலோட்டிய தமிழன், வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.
1962 இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் ழரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், தேவரின் தாயைக் காத்த தனையன், ஜெமினியின் கொஞ்சும் சலங்கை.கே.எஸ். கோபால கிருஷ்ணனின் சாரதா போன்ற படங்களும் 100 நாட்கள் ஓடிய படங்களாகும். இது தவிர ஆலயமணி,பொலிஸ்காரன் மகள் முதலிய படங்களும் சுமாராக ஓடின. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்கு சிறந்த மாநிலப்படத்திற்கான வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
1963 இவ்வாண்டின் இருவர் உள்ளம் படத்தை நாவலாசிரியர் லட்சுமியின் பெண்மனம் நாவலைத் தழுவி எல்.வி பிரசாத் இயக்கினார். சிவாஜி - சரோஜாதேவி நடித்த படம், ஆலயமணி, பி. எஸ். விரப்பா தயாரித்த படம். சங்கள் இயக்கத்தில் மும்மொழிகளில் வெளிவந்தது. தேவர் பிலிம்ஸ் நீதிக்குப் பின் பாசம், ராமண்ணா இயக்கத்தில் பெரிய இடத்துப் பெண், இரு படங்களிலும் எம்.ஜி. ஆர். சரோஜாதேவி நடித்து 100 நாள் ஒடிய படங்கள். இப்படங்கள் போலவே, ஜெமினி நடித்த பாதகாணிக்கை,தாய்ப்பாசத்தை விளக்கும் அன்னை வெளிவந்தது. இரண்டாவது சிறந்த மாநில மொழிகளுக்கான சான்றிதழைப் பெற்றது. ஏ.வி. எம்.மின் நானும் ஒரு பெண், கருப்புப் பெண்படும் அவஸ்தைகளை விளக்கியது. சிறந்த மாநில மொழிப் படத்திற்கான வெள்ளிப்பதக்கம் பெற்றது.
1964 இந்த ஆண்டு சிவாஜிகணேசன் நடித்த அன்னை இல்லம் , கர்ணன் பச்சை விளக்கு , புதிய பறவை, கை கொடுத்த தெய்வம் ஆகிய ஐந்து படங்களும் 100 நாள் ஓடிய படங்கள். எம்ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன், தெய்வத்தாய், பணக்காரக் குடும்பமும் நூறுநாட்களைக் கண்டன. கே. எஸ். கோபால கிருஷ்ணன்
அறிவு ۔- 28 سے

எடுத்த கற்பகம் படத்தின் மூலம் கே.ஆர். விஜயாவுக்கு அறிமுகம் வாய்ந்தது. படமும் ஓடி வாரிக் குவித்தது. பூரீதரின் காதலிக்க நேரமில்லை, பாலையா,நாகேஷ் நகைச்சுவை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் சிறந்த பொழுது போக்கு படம். முதல் ஈஸ்ட்மென் கலர் படம் மற்றும் சிவாஜி கணேசனின் நுாறாவது படம் நவராத்திரி. இதில் ஒன்பது மாறுபட்ட வேடங்களில் தோன்றினார். சிறந்த பொழுதுபோக்குப்படம். இயக்கம் ஏ.பி.நாகராஜன்.
1965 ஜெகாந்தனின் உன்னைப் போல் ஒருவன். தமிழில் எடுக்கப்பட்ட முதல் யதார்த்த வாதப் படமாகும். இது அகில இந்திய அளவில் மூன்றாவது படமாகத்தேர்வு பெற்றது. பூரீதரின் வெண்ணிற ஆடைப்படத்தின் மூலம் ஜெயலலிதா அறிமுகமானார். மார்டன் தியேட்டர்ஸின் வல்லவனுக்கு வல்லவன், பந்தலுவின் ஆயிரத்தில் ஒருவன், எல்.வி.பிரசாத்தின் இதயகமலம், ஏ.எல்.எஸ்ஸின் சாந்தி முதலிய படங்கள் நூறு நாளைக்கொண்டாடின. நாகிரெட்டியின் எங்க வீட்டுப்பிள்ளை வெள்ளிவிழாக் கொண்டாடியது. ஏ.பி.என்னின் திருவிளையாடல் படித்தில் நக்கீரர்தருமிகாட்சி என்றென்றும் மறக்கப்பட முடியாத சித்தரிப்பு வெள்ளிவிழாக் கொண்டாடிய i it-lp.
1966 எம்.ஜி.ஆர் நடித்த முகராசி, அன்பே வா நூறு நாள் ஒடிய படங்கள். எம்.ஆர்.ராதா நடித்த சித்தி, ஜெமினி நடித்த ராமு, சிவாஜி நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை, சரஸ்வதி சபதம், முதலியவை குறிப்பிட வேண்டிய படங்கள். பாலாஜியின் சுஜாதா சினி ஆட்ஸின் முதற் படம் அண்ணாவின் ஆசை. இதில் இந்தி நடிகர் அசோக்குமார், நீதிபதி வேடத்தில் தோன்றினார். பேலட் ஆப் த சோல்ஜர் என்ற ருஷ்யப் படத்தை கண்ணதாசன் தாயே உனக்காக என்ற படமாகத் தந்தார். இதில் சிவாஜி பத்மினி போன்றோர் கெளரவ வேடத்தில் நடித்தனர். ராமு படத்திற்கு சிறந்த மாநிலப் படத்திற்கான வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
1967 இவ்வாண்டின் வெற்றிப் படங்கள் கந்தன் கருணை, பாமா விஜயம், பெற்றால் தான் பிள்ளையா, அதே கண்கள், முதலியன. தமிழக அரசின் சிறந்த தமிழ்ப்படத்திற்கான விருதை காவல்காரன் பெற்றது. திருமலை-மகாலிங்கம் இயக்கிய ஆலயம் சிறந்த மொழிப்படத்திற்கான வெள்ளிப்பதக்கத்தையும் தமிழகத்தின் சிறந்த தமிழ் படத்திற்கான இரண்டாவது பரிசையும் பெற்றது. கலைவாணர் மறைவை ஒட்டி டி.எஸ். துரைராஜ் 1967ல் என்.எஸ். கிருஷ்ணன் என்ற படத்தை அவர் நடித்த படங்களிலிருந்து தொகுத்தளித்தார்.
1968 கலாட்பா கல்யாணம், ஊட்டிவரை உறவு, இருமலர்கள், ஒளி விளக்கு, பணமா பாசமா, குழந்தைக்காக, குடியிருந்த கோயில், எங்க ஊர் ராஜா, தாமரை நெஞ்சம் முதலிய படங்கள் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றன. ட்' தில்லானா மோகனம்பாள் (175) வெள்ளி விழா (தில்லான மோகனாம்பாள்) கொண்டாடியது. தில்லானா மோகனம்பாள் கதை, கொத்தமங்கலம் சுப்பு எழுதிய நாவல். இதனை ஏ.பி.என். திரைப்படமாக்கினார். தமிழகத்தின் நாட்டியத்தையும், நாதசுரத்தின் பெருமையையும் ஒரு சேர பிற மொழியினருக்கு எடுத்துக் காட்டிய படம். மத்திய அரசின் சிறந்த மாநில மொழிகளுக்கான வெள்ளிப்பதக்கத்தை இப்படம் பெற்றது.
- 29 -
அறிவு

Page 18
9|L60)LL JUL855L(660)
Lлiti CP, а уобиђе љут
இந்தியாவில் மக்களுக்கு வழிகாட்டத் தோன்றிய மகான்களுள் ஒருவர் பூரீஅரவிந்தர்/அவர் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசிய வாதியாகவும் திகழ்ந்தவர். தன்னலங்கருதாமல் மக்கள் நலனுக்காக வாழ்ந்து காட்டியவர். அவரது இலட்சியம் குறுகிய வட்டத்திற்குள் அடங்காது உலகளாவிய மிகப் பெரிய அளவில் விரிந்திருந்தது. அவர் ஆன்மிகத் துறையில் ஈடுபட்டு மற்றவர்களையும் அப்பாதையையே பின்பற்றுமாறு வேண்டினார். ஆயுதம் ஏந்தியோ மாற்றுவழிகளிலோ தன் இலட்சியத்தை அடையாது யோக மார்கத்தின் மூலம் தன் இலட்சியத்தை அடைந்தார்.
கல்கத்தாவில் பிரபலடாக்டராக விளங்கிய கிருஷ்ண தன் கோஷ்ஷிற்கும் அவர் மனைவி சுவர்ணலதாதேவிக்கும் மகனாக அரவிந்தகோஷ் 1872 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதி பிறந்தார் அவருக்கு முன் இரண்டு புதல்வர்களும் ஒரு பெண்ணும் பிறந்திருந்தனர் பின்னர் ஐரோப்பாவில் அவரது பெற்றோர் சீவித்த போது இன்னோரு ஆண் குழந்தை பிறந்தது.
மேல்நாட்டுநாகரிகத்தில் மோகங் கொண்ட அவரது தந்தை அரவிந்தரை கலக்டராகவோ நீதிபதியாகவோ ஆக்க வேண்டுமென எண்ணங்கொண்டு அரவிந்தரையும் சகோதரரையும் டர்ஜிலிங்கில்ல் உள்ள ஆங்கிலேயரின் குழந்தைகள் மட்டுமே படித்து வந்த செயின்ட் போல்பள்ளியில் சேர்த்தார்.
ஐந்து வயது நிரம்பிய அரவிந்தகோஷ் அப்பள்ளியில் இரண்டு வருடங்கள் படித்தார். ஆங்கிலேயக் குழந்தைகளுடன் படித்து வந்ததால் அவர்களுடைய பழக்கவழக்கங்களை அரவிந்தகோஷ் பின்பற்றினார் தாய் மொழிக்கல்வியைப் படிக்கும் வாய்ப்பும் கிட்டாமல் போயிற்று.
குடும்பத்தோடு ஐரோப்பிய யாத்திரை சென்ற டொக்டர் கோஷ் மான் செஸ்டரில் எக்ரோய்டு என்ற பாதிரி நண்பரிடம் தன் அன்புக்கு பாத்திரமான அரவிந்தை கல்விகற்க ஒப்படைத்தார். அரவிந்தர் ஆங்கிலேயே நாகரிகம் பதிய வில்லை.
1884 ல் தந்தை அரவிந்தரை லண்டனுக்கு அழைத்துச் சென்று செயிலாட் போல் பள்ளியில் சேர்த்தார். அங்கு மூன்றாண்டு காலம் பயின்றார். ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மனி, இத்தாலி போன்ற மொழிகளை கற்றார். அத்துடன் ஆங்கிலக் கவிதை புனைவதில் ஆற்றலும் பெற்றிருந்தார்.
1890 அக்டோபரில் அரவிந்தர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். நுழைவுத்தேர்வில் அதிகமான மதிப்பெண் வாங்கியதால் அவருக்கு உபகாரச் சம்பளம்
ടിഖ 35 ۔O سے
 

வழங்கப்பட்டது. அதன் பிறகு ஐ.சி எளில் தேர்வு எழுதி வெற்றியும் பெற்றார். ஆனால் குதிரைச் சவாரி பயிற்சி செய்ய மறுத்துவிட்டார். குதிரை சவாரி பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் தான் கலக்டராகவோ, நீதிபதியாகவோ நியமனம் கிடைக்கும். தந்தைக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது இதனால் தந்தை அவரை இந்தியா திரும்பச் சொன்னார். தந்தையின் சொற்படி தான் இந்தியா வரும் தேதியையும் பயணம் செய்யப்போகும் கப்பலைப்பற்றியும் தெரிவித்தார். அரவிந்தர் பயணித்த கப்பல் நீரில் மூழ்கிய செய்தி கேட்டு தந்தை பதறினார். நான்கு நாட்கள் புத்திர பாசத்தால் துடித்து இறந்துவிட்டார்.
அரவிந்தர் குறித்த கப்பலில் பிரயாணம் செய்யவில்லை என்றும் பின்னர் புறப்படும் ஒரு கப்பலில் வருவதைத் தெரிவிக்கும் தகவல் பின்னர் தான் கிடைத்தது.
லண்டனில் இருக்கும் போதே இந்தியாவில் மக்கள்படும் அவதியை அறிந்திருந்தார். அங்கிருந்த தீவிரவாதக் குழுஒன்றில் உறுப்பினராகி நாட்டு விடுதலைக்குப்பாடுபடத்தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டார். அரவிந்தர் லண்டனில் இருக்கும் போதே பரோடா மன்னர் கெய்கவாரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரின் அறிவாற்றலைக் கண்டு மகிழ்ந்த மன்னர் தன் சமஸ்தானத்தில் வேலை கொடுக்க இணங்கினார்.
1893 இந்தியா திரும்பிய அரவிந்தர் அன்னை சுவர்ணலதாவை தனது சகோதரருடன் சென்று அவரது தந்தையின் கிராமத்தில் சந்தித்தார். தந்தையின் மறைவிற்குப் பின் சில சமயங்களில் சித்தப்பிரமை பிடித்தவள் போல் காணப்படும் அவரது தாயார் அரவிந்தரை அடையாளம் காணாதது அவருக்கு பெரும் வேதனையை அளித்தது.
பரோடா மன்னர் அரண்மனையில் பணியாளராகச் சேர்ந்த அரவிந்தள் மன்னரின் அந்தரங்கக் காரியதரசியாகப் பணி புரிந்தார். அதிலும் நிலைத்து நிற்காது பரோடா கல்லூரியில் பேராசிரியராகி அதன் உதவி அதிபராக உயர்வு பெற்றார்.
அதுவரை அனுபவப் பூர்வமாக இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் அறியாத அரவிந்தர் அந்த அனுபவத்தைப் பரோடாவில் பெற்றார். அக் காலத்தில் பிரபல வங்காளி எழுத்தாளராக இருந்த திவேந்திரகுமார் ராயிடம் தாய் மொழியைக் கற்றுக் கொண்டார். பின்பு இந்திய இலக்கியம் தத்துவம் பற்றி பெருமளவில் அறிந்து கொண்டார்.
இந்திய விடுதலை உணர்ச்சி கொண்ட அரவிந்தர் அச்சமயத்தில் இரண்டு பிரிவாகச் செயல்பட்ட இந்திய காங்கிரசில் தீவிரவாதிகளின் கொள்கையை ஆதரித்தார்.
பரோடாவில் இருந்த போதே ஆன்மிகத்துறையிலும் ஈடுபாடு கொண்டார் நர்மதை ஆற்றங்கரையில் பெயர் பெற்ற 250 வயதுடைய சாதுவைச் சந்திக்கச் சென்றார் எவரையும் ஏறெடுத்தும் பார்க்காத அச்சாது அரவிந்தரை மிகவும் அக்கறையுடன் பார்த்தார்.
- 35 as
& Sea

Page 19
பரோடாவில் இருக்கும் போது குடுப்பத்தினர் அவரது திருமண முயற்சியில் ஈடுபட்டும் அரவிந்தர் மறுத்துவிட்டார். எனினும் கல்கத்தாவில் நண்பரொருவர் வீட்டில் சந்தித்த தனது வருங்கால மனைவி மிருணாளினியை விரும்பி 1901 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மணந்துகொண்டார். பரோடாவில் சில காலம் குடும்பம் நடத்தினார்.
அரவிந்தர் தன் மனைவியையும் ஆன்மிகத் துறையில் ஈடுபடுத்தப் பெரிதும் முயன்றார் ஆனால் அவளோ ஆன்மிகநாட்டம் கொள்ளவில்லை. வாழ்க்கையில் இன்பமோ பற்றோ இல்லாமல் இறுதிக்காலத்தை விரக்தியுடனேயே கழித்தர் அரவிந்தர் பாண்டிச்சேரிக்குப் போன பிறகும் கல்கத்தாவிலேயே இருந்து சிறிது காலத்திற்குப் பின் காலமானார்.
கிளர்ச்சியைத்துாண்டுவதில் மட்டும் நாட்டம் கொண்டிராத அரவிந்தர் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட கல்வி அறிவு பெறவேண்டியது முக்கியம் எனக்கருதினார்.
r அதனால் பரோடாவில் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் சம்பளம் பெற்று வந்த வேலையை விட்டு வந்து சுதேசி இயக்கத்தினரால் நிறுவப்பட்ட தேசியக்கல்லூரியில் நுாற்றைம்பது ரூபாய்க்கு பணி புரிந்தார் எனினும் தேசியக் கல்லுாரியிலும் அரச கல்லுாரிகளில் உள்ள கல்வி முறையே போதிக்க வேண்டுமென நிர்வாகத்தினர் வற்புறுத்தியதினால் அவர் தன் பதவியைவிட்டு வெளியேறினார்.
கல்லுாரியிலிருந்து விலகிய பிறகு அரவிந்தள் தம்மை முழுமையாக அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார்.
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பத்திரிகை வலிமை மிக்கது என எண்ணி ராஜோ சுபோத் சந்திர மல்லிக் என்றதேசிய உணர்வு கொண்ட ஒருவரின் பொருளுதவியுடன் வந்தே மாதரம் என்ற தினசரி வெளியிடப்பட்டது அதன் ஆசிரியராக வியின் சந்திர பாலர் இருந்தார் அவருக்குப்பின் அரவிந்தர் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அவரது தலையங்கங்கள் மக்களிடையே பரபரப்பையும் தன்னம்பிக்கை யையும் துணிச்சலையும் ஏற்படுத்தின அவருடைய கோரிக்கைளை லோக மான்ய பாலகங்காதரதிலகரும் லாலாலஜபதிராயும் ஆதரவளித்துப்பாராட்டினர்.
வந்தேமாதரத்தில் வெளியான ஒரு கட்டுரைக்காக அதன் ஆசிரியர் மீது ராஜத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டது ஆனால் அதன் ஆசிரியர் அரவிந்தர் தான் என்பதை நிருபிக்க முடியாது போனதால் அரவிந்தர் தண்டனையிலிருந்து தப்பினர்.
காங்கிரசில் மிதவாதிகள் தீவிரவாதிகள் சச்சரவைத் தொடர்ந்து காங்கிரசின் தலைவர் தேர்தலை நடத்தும் போது மிதவாதிகள் அட்டகாசத்தால் கூட்டம் குழப்பத்தில் முடிந்தது. இது அரவிந்தருக்கு மிக மனவருத்ததை அளித்தது.
அறிவு - 52 =

அரவிந்தரின் நிலைப்பாட்டால் வங்க இளைஞர்கள் மிகவும் கவரப்பட்டனர் வங்கப்பிரிவினையை எதிர்த்து, பழிவாங்கும் நோக்கில் ரகசியச் சங்கங்கள் நிறுவி புரட்சி செய்யத்திட்டமிட்டனர். இந்தப் புரட்சிக்காரர்கள் அரவிந்தரின் தம்பியான பரிந்திரகுமாரை ஆசிரியராகக் கொண்டு (யுகாந்தர்) என்ற பத்திரிகை ஒன்றை நடத்தினர்.
புரட்சியாளர் கொடுரகுணம் கொண்ட கல்கத்தா முகப்பூரின் மாவட்ட நீதிபதி சிங்ள போட் என்பவரை கொன்றுவிடத்திட்டமிட்டனர். தவறுதலாக இந்தியர்கள் அன்புக்குப் பாத்திரமான பிரிங்கல் கென்னடியின் மனைவியும் மகளும் கொல்லப்பட்டனர்.
இதை அடுத்து 36 இளைஞர்களை சிறைப்பிடித்தனர் பரீந்திர குமாரையும் கைது செய்தனர் இதற்கு அரவிந்தரே துாண்டிவிட்டவர் என எண்ணி அவரையும் கைது செய்தனர்.
சிறையில் வெடி குண்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை துன்புறுத்தினர். இவ்வழக்கு நடைபெற்ற ஒரு ஆண்டுகாலத்தில் அரவிந்தர் உட்பட அனைவரிடமும் வேலை வாங்கினர். அவர்கள் துன்புறுத்தல் தாங்க இயலாமல் சில இளைஞர்கள் அப்பூருவர்களாக மாறினர். இதன் தலைவரை யாரோ சிறையிலேயே கொன்றுவிட்டார் அதன் பிறகு அரவிந்தரைத்தனி அறையில் அடைத்து வைத்தனர் இங்கு ஒரு நாள் தியானத்தில் அமர்ந்த அரவிந்தருக்கு அனைவரும் வாததேவர் என்ற அனுபம் கிட்டியது.
அரவிந்தருடன் ஐ.சி.என் பரீட்சை ஒன்றாக எழுதி அரவிந்தர் முதலாவதாகவும் நீதிபதியாக இருந்தவர் இரண்டாவதாகவும் வந்தனர். அந்த நீதிபதி முன் சித்திர ரஞ்சன்தாஸின் குறுக்கு விசாரணைத் திரையால் அரவிந்தர் குற்றமற்றவர் என்று விடுதலையானார் . ' A
1909 ம் ஆண்டு மே 5 திகதி சிறையிலிருந்து அரவிந்தர் புது மனிதனாக மகானாக வெளிவந்தார் அவருக்கு அளித்த வரவேற்புபசாரத்தில் சிறையில் தான் இறைவனைக் கண்ட அனுபவத்தை எடுத்துரைத்தார்
சிறையிலிருந்து வெளிவந்த அரவிந்தர் தன் கொள்கையில் ஒரு மாற்றத்தை வெளிப்படுத்தினார். தேசியத்தில் தர்மத்தைக் கலந்து அறப்பிரசாரம், செய்தார். கர்ம யோகின் என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் “தர்ம’ என்ற வங்காளிப் பத்திரிகையும் தொடங்கினார்
அரசுடன் நேருக்கு நேர் போரிடுவதை விட்டு தேசிய நிறுவனங்களை
ஏற்படுத்தி மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். அயல் நாட்டுப்
பொருட்களைவிட்டு சுதேசிப் பொருட்களையே உபயோகிக்கவேண்டுமென்று ஓயாது
பிரசாரம் செய்தார், இக் கொள்கையை மகாத்மா காந்தியும் பிற்காலத்தில் ஏற்றார்.
- 33 - அறிவு

Page 20
அப்போது ஒரு நாள் கடவுளின் குரல் ஒலித்தது இவை பயனற்றவை மற்றவர்கள் இதனைச் செய்வார்கள் நீ ஆழ்ந்து சாதனையில் ஈடுபடு என்றுகட்டளை பிறந்தது. அதன் படி அரசியலைத்துறந்து தனிமையில் சாதனைபுரிய 1910 ம் ஆண்டு பாண்டிச்சேரிக்குப் பயணமானார்.
பாண்டிச்சேரியில் தனிமையில் இருந்து யோகத்தில் ஆழ்ந்தார். 1914 ம் ஆண்டு ஆரிய என்ற பத்திரிகையை ஆரம்பித்து அதில் வேதங்கள் உபநிடதங்கள் யோகம் பற்றி விரிவாக எழுதினார்.
இளமையிலேயே ஆன்மிக நாட்டம் கொண்ட பிரஞ்சு மாதரசி தனது கணவருடன் யோகிகளைப்பற்றி ஆராயும் நோக்குடனே இந்தியா வந்திருந்தார். பாண்டிச்சேரியில் அரவிந்தரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அரவிந்தரைத்தான் வழிபடும் கிருஷ்ணராகக் கண்டார். கணவரின் வேலை நிமித்தம் பிரஞ்சு திரும்பினார்.
1920 ல் இந்தியா திரும்பிய பிரஞ்சு மாதரசி நிரந்தரமாக அங்கேயே தங்கி தன்பெயரை மீரா அன்னை என மாற்றி அரவிந்தருக்கு உதவிகள் புரிந்தார். அரவிந்தரின் ஆன்மிகப் பணி தடையின்றி நடந்தது.
1926 ம் ஆண்டு நவம்பர் 24 ந் திகதி அரவிந்தர் சித்தி பெற்றார். அன்று
முதல் ஆச்சிரமவாழ்க்கையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. . . b
? அன்னையிடம் ஆசிரமத்தின் ' * * * * ';گ .* * ';
முழுப்பொறுப்பையும் ஒப்படைத்த அரவிந்தர் அன்னையிடம் அளப்பரிய சக்தி இருக்கிறது. உங்களுக்குத்துணையாக அவள் இருப்பார் என்னிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறீர்களோ அதை அவரிடமிருந்தும் பெறலாம் என்று கூறினார். இருப்பினும் ஒவ்வோர் ஆண்டும் நான்கு நாட்கள் தரிசனம் கொடுத்து வந்தார். பிப்ரவரி 21 ந் திகதி ತಿಣ್ಣ ஐந்தநாள் ஆறு *. ஏப்பிரல் 24ந்திகதி அன்னை ஆசிரமம் வந்து தங்கியநாள். Ա5ib திகதி அரவிந்தர் பிறந்த நாள் நவம்பர் 24 ம் திகதி அவர் சித்தி பெற்ற நாள்
அரவிந்தர் 1910 ம் ஆண்டு பாண்டிச்சேரிக்குச் சில அரசியல் நண்பர்களுடன் வந்த போது அனைவரும் ஒருகுடும்பமாக வாழ்ந்தனர். பின்னர் வேறு சில சாதகள்களும் வந்து சேர்ந்தனர் இருப்பினும் 1926 நவம்பர் 24ந் திகதி தமது பொறுப்பை அன்னையிடம் விட்ட பின்னர் தான் உண்மையான ஆசிரமம் ஏற்பட்டது.
வாழ்க்கையைத் துறந்து உலக பந்தங்களிலிருந்து விடுபடுவதற்காக ஏற்படுத்தபட்ட ஆசிரமமாக இல்லாமல் புது வேகமும் தன்மையும் உருவும் கொண்ட ஒரு புது வாழ்வின் வளர்ச்சிக்கு உகந்த இடமாக அமைந்தது.
இந்த ஆசிரமத்தில் பலதேசத்தின் பல மொழி பேசுவோர், பல இனத்தினர், பல்வேறு பண்பாட்டினர் சீடர்களாக வந்து சேர்ந்தனர். பலரும்
அறிவு -34 -

சந்நியாசிகளாக இல்லாமல் திட சிந்தனையுள்ள சங்களாகவும் தெய்வீக வாழ்க்கையை இவ்வுலகிலேயே வாழ்ந்து காட்டும் இலட்சியம் உடையவர்களாக இருந்தனர். சாதகர்கள் வாழும் ஒவ்வொருவிடும் ஆசிரமமே என்பது அரவிந்தரின் கொள்கையாகும்.
* ஏற்றமிக்கதோர் எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு சோதனைக் கூடமே பூரீ அரவிந்தா ஆச்சிரமம்” என்று ரீ அரவிந்தர் அடிக்கடி கூறுவார்.
- - - - - - - - - - - சந்ரராம். ஆதாரம் :a
ரிஷபானநீதர் எழுதிய பூரீ அரவிந்தர்
ஒரு செயல் புரிந்துவரும் போது அதைப்பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். அச்செயலுக்கு முந்தியது பற்றியோ பிந்தையது பற்றியோ நினைக்கக்கூடாது. முந்தையப் பற்றி நினைத்தால் சக்தி விரயமாகின்றது. பிந்தையதைப் பற்றி முன்கூட்டியே நினைப்பதால் கவலை மட்டுமின்றி காலவிரயமும் ஏற்படுகிறது. ஏனென்றால் நாம் நினைப்பது போல் நடப்பதில்லை. 米 来 米 米 米 米 来
தவறு செய்வது என்பது மனித இயல்பாகும். ஆனால் அது தவறு என்று தெரிந்து கொண்டவுடன் திருத்திக் கொள்ள வேண்டும். அதற்காகத் தனியாகப் பிராயச்சித்தம் தேடவேண்டிய தில்லை. தவறு என்பதை அறிந்து ஒப்புக் கொள்வதே உண்மையான பிராயச்சித்தமாகும்.
முநீ அரவிந்தர்
~ 35 〜
அறிவு

Page 21
பரீ அரவிந்தரின் பூரண யோகம்
க. இராமச்சந்திரன்
“கடவுள் பொய்” என்னும் நாஸ்திக வாதத்தை எவ்விதம் கண்டித்தாரோ. அதேவிதம் உலகம் பொய்’ என்னும் மாயா வாதத்தையும் அரவிந்தர் கண்டித்தார். இறைவன் - உயிர் - உலகம் இம்மூன்றிற்குமிடையே உள்ள இணைபிரியாத தொடர்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது அவர் கொள்கை. எனவே, இறைவன் எப்போது உண்மையோ அப்போதே அவன் படைத்த உலகும் உண்மையாகின்றது. உயிர்வாழ்வாகப் பொலியும் அந்த இறைவனைக் கண்டு கலப்பதே உயிரின் இலட்சியம் மானிட வாழ்க்கையின் இலட்சியம், தெய்வ நிறைவும், தேவ ஜீவனமும் பெறுதலேயாம். இந்த முறையில் மனிதனைத் தெய்வ - சிகரத்துக்கு உயர்த்துவதே அரவிந்தரின் பூரணயோக இலட்சியம்.
அரவிந்தரின் பூரணயோகம் கழனமானது.
அதன் நோக்கமும் கடினமானது. வாழ்வு முழுவதையுமே யோகமாக்கும் அவரது புது நெறியில், உலகில், இதுவரை தோன்றிய மகான்கள் வகுத்த சாதனைகளின் நன்மைகளெல்லாம் ஒருங்கே அமைந்திருப்பதோடு, நவீன பெளதிக சாஸ்திரமுறையில் ஆத்மீக வளர்ச்சியை விளக்கும் சில புத்தம் புதிய, தத்துவங்களும் நுட்பமான சாதனா விதிகளும் தரப்பட்டுள்ளன. ஆகையால், அது பூரணயோகமென அழைக்கப்படுகின்றது. மனத்தைப் புத்தியில் அடங்கச்செய்து, புத்தியை ஆத்மாவில் ஒடுங்கப்பண்ணிச் சமாதியில் லயித்துப்போய் தனிமுறையில் தப்பித்துக் கொள்ளும் முத்திமட்டும் போதாது என்கிறார் அரவிந்தர். சடத்தில் உருக்கொண்ட மனிதன் உணர்வு முற்றிலும் உயர்ந்து, பரவுணர்வைக் கூடவேண்டும். அப்பரவுணர்வு, பின் கீழியல்புகள் அனைத்தையும் விஞ்ஞான சக்தியான சக்தியால் மாற்றி உயர்த்தவேண்டும். இவ்வண்ணம் ஆக்கும் சக்தியையடைய முடியுமென்கிறார் அரவிந்தர்.
உண்மை - அறிவு - இன்பம் ஆகிய மூன்றும் பொருந்திய பொருளான பரமாத்மாவில் இம்மூன்றும் ஒன்றாயிருக்குமேயன்றிப் பிரியமாட்டா. வேறுபாடே தெரியாமல் ஒன்றியிருக்கும் உச்சநிலையை அடைவதற்குச் சாதகன் விஞ்ஞானப் படியைத் தாண்ட வேண்டும், சச்சிதானந்தத்திற்கும் மனம் பிராணன் உடலான மூன்று கீழ்த்த பூமிகட்கும் இடையே இருப்பது விஞ்ஞானம் கடவுளறிவுடன் கூடியதான அவித்தையினின்றும் விடுபட்டிருக்கும் இந்த விஞ்ஞான சக்தி இறங்கினாலன்றி மனம் உயிர் உடலின் கீழியல்புகள் மாறவேமாட்டாது. தெய்வத்தினின்றும் சதா
அறிவு
= 36 =

பிரிவுணர்ச்சி கொண்டு இயங்குவது மனம். அதை ஒரே வீச்சில் விஞ்ஞானத்திற்கு உயர்த்துவது கஷ்டமான சாதனை. ஆகையால், மனத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் இடையே அதிமனம் என்னும் தத்துவத்தை அரவிந்தர் விளக்குகின்றார். அதிமனமே ஒருவன் மனத்தினின்று. விஞ்ஞானத்திற்குப் போகும் வழியாகும் என்கிறார். உன்னதமான புத்திக்கு அப்பால் உயர்ந்த ஒள்ளிய மனத்தை ஆளும் இந்த அதிமனந்தான் அந்தள்ஞானத்திற்கு வழிதிறக்கிறது. அதன் இருப்பிடம் உச்சியிலுள்ள சகஸ்ராரச் சக்கரமாகும். அரவிந்தர் அருளிய “தேவ ஜீவனம்" (Life Divine) என்னும் அற்புத நூலில், இவையெல்லாம் மணிமணியாக அருமையாக விளக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் மனேமய கோசத்திற்ப்பால், செல்லமுடியாமல் வாழும் நிலையிலுள்ள நமக்கு.அவரின் சித்தாந்தம் முதற்கண் மயக்கத்தையே தரும். அடுத்தபடியாக அவரதுகணவு,உலகில் எப்போதாவது நனவாக முடியவுங்கூடுமா, என்ற கேள்வியே உதிக்கும். இவையெல்லாம் அவர் கோரிய பூரணவாழ்வின் இலட்சியத்தைக் குறைக்கவோ தடுக்கவோ முடியாது. மனோமயகோசத்தினின்று மனம் இறங்கிஎப்படிமனிதனை உண்டாக்குகின்றதோ, அப்படியே ஒருநாள், விஞ்ஞானமும் இறங்கி ஒரு விஞ்ஞான சழுதாயத்தை உண்டாக்கியே தீரும், என்பது அரவிந்தரின் அசைவற்ற நம்பிக்கை. மனித பரிணாமப்படியில் இது ஒர் தவிர்க்க முடியாத நியதியென்பதே அவரது கொள்கை. நானுாறு கோடி மக்கள் வாழும் இப்பூவுலகில், ஆர்வம் நம்பிக்கை அடைக்கல உறுதியுள்ள ஒரு நுாறு அதிமனிதர்கள் கிடைத்தால் அவர்கோரிய பூரணயோகம் மனித சமுதாயத்திற்கு அன்பு ஒற்றுமை அமைதி சாந்தி சுதந்திரம் , சுகம் அளிப்பது திண்ணம் என்கிறார். மனித மூளையின் அவலச் செருக்கால் நேரும் வேற்றுமைகளும் வித்தியாசங்களும் மறையவும்,பேராசை பிடித்த அகம் பாவத்தால் வரும் போட்டியும் பொறாமையும் போரும் நீங்கவும் வேண்டின், அதிமன உண்மைகளை வென்ற விஞ்ஞானிகள் உலகில் பரவவேண்டும். மேலும், அரவிந்தரையே பூரீ சுத்தானந்த பாரதியாரின் இனிய தமிழில் பேசவைப்போம்.
“நமது முன்னோர் கருணையால் நம்மிடம் ஆத்ம உணர்ச்சியுள்ளது. அது எத்தகைய பலத்தையும் ஊதியெறியவல்லது, ஆத்மசக்தி பெறுவதென்றால், சத்தி சாதனம் வேண்டும். சக்தி வழிபாட்டைக் கைவிடுத்தோம். சக்தியும் நம்மைக் கைவிடுத்தாள். உள்ளக்கிளர்ச்சியால்,கூத்தாடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. விரிந்த அமைதியே நமது யோகத்திற்கு ஆதாரமாக வேண்டும். சக்திக் கடலில் ஞானச்சுடர் கதிர்விடவேண்டும். இந்தச் சுடர்விரிவில், எல்லையற்ற அன்பும், ஆனந்தமும், நிலைத்த ஒற்றுமையின்பமும் விளையாட வேண்டும்இலட்சக்கணக்கான சீடர்கள் வேண்டுவதில்லை. சிறுமை அகந்தையின்றி, கடவுட் கருவிகளாக நுாறு முழு மனிதர்கள் கிடைத்தாற் போதும். உள் விழி திறந்த தெய்வ சைதன்யர்களே நாட்டை உயர்த்த வல்லவர்கள். தெய்வ வாழ்வை விரும்புவோர் தேவ சங்கம்,
= 37 = හිමෝගt

Page 22
வாழ்வில் கடவுளை நாட்ட வேண்டும், விஞ்ஞான நிலைக்கு உயர்ந்தாலே ஜீவ ரகசியம் தெரியும். அப்போது உலகு நித்திய தெய்வலீலைஆன்மா அந்த ஆடல் விளக்கம் என்றறிவோம். அனைத்திலும், ஜடத்திலும், பிரம்மத்தைக் காண்போம். விஞ்ஞானத்தைப் பெற்றால் நிலையான ஆனந்தம் எளிதில் பெறலாம். உடல் உயிர் மனம் உலகு அனைத்திலும் அப்போது ஆனந்தத்தை நாட்டலாம். அப்போது பூரண சச்சிதானந்தம் வாழ்வில் உருவாகும். இதுவே, எனது யோகத்தின் கருத்து” ( “அரவிந்தப் பிரகாசம்” -54 - ம்பாடம்)
1920 - ம் ஆண்டில் அரவிந்தர் விடுத்த ஒரு கடிதத்தின் சாரம் இது. அதிலடங்கிய அழைப்புக்கிசைந்து உலகின் நாற்றிசைகளிலுமிருந்து சாதி மத நிற வித்தியாசம் ஏதுமின்றி வந்து கூடிய அன்பர்களின் சங்கமே பின்னாளில் பூரீ அரவிந்த ஆச்சிரமமாக விளங்கியதாகும்.
( 'ஆத்மஜோதி” யிலிருந்து தொகுக்கப்பட்டது)
நன்றி சமரசஞானக்கோவை - க. இராமச்சந்திரன்
20ம் நூற்றாண்டின் சிறந்த நான்கு நூல்கள்
கென்வில்பர் எழுதிய பாலுணர்வு, சூழல், ஆன்மீகம் (Sex, Ecology, Spintuality) என்ற புத்தகத்திணை விமர்சித்த ஆய்வாளர் மைக்கேல் மேர்ஃபி 20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த புத்தகங்களாக பூனி அரவிந்தர் எழுதிய தெய்வீக ஜீவனம், (Life Divine) ஹெய்டெக்கள் எழுதிய இருப்பும் காலமும், (Being and time) வைட் ஹெட் எழுதிய செய்முறையும் யதார்த்தமும் (Process and Reality) என்ற புத்தகங்களுடன் சேர்த்து 4 தலை சிறந்த புத்தகங்களாக குறிப்பிட்டுள்ளார்.
அறிவு
- 358 -

பூரீ அரவிந்தர்
பூரண யோக 65.6016.560)
1. அழைப்பும் தகுதியும்
கேள்வி
பதில் -
கேள்வி:-
பதில்:-
கேள்வி.
பதில் :-
- ஒருவன் யோகம் தொடங்கும் முன் தனக்கு ஆன்மீக வாழ்க்கைக்கான
தகுதியுள்ளதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
பாதையில் அடியெடுத்து வைக்கும் முன் யார்தான் அறியமுடியும்? தனக்கு ஆர்வமுள்ளதா இல்லையா அழைப்பு உள்ளதா இல்லையா என்பதை மட்டுமே ஒருவன் அறியமுடியும்.
யோக வழியில் இறங்குவதற்கு “ஒருவனுக்கு தெரிந்து இருக்க வேண்டிய தெல்லாம் தனது அந்த ராத்மாவில் யோகம் செய்வதற்கு துாண்டுதல் இருக்கிறதா இல்லையா என்பதே’ என்று அருளியுள்ளிகள் ஆனால் பாதையில் இறங்கும் முன் இதைத் தெளிவாக அறிந்து கொள்வது எவ்வாறு?
உணர்கிறாயா இல்லையா என்பதே கேள்வி எப்படி அறிவது”என்பது அன்று, தெரிகிறது அல்லது தெரியவில்லை, உணர்கிறாய்அல்லது உணரவில்லை, அவ்வளவுதான். ஒருவன் தான் சந்தோஷமாய் இருப்பதையும், கோபமாய் இருப்பதையும், வருத்தமாய் இருப்பதையும் எப்படித் தெரிந்து கொள்வது எனக் கேட்பதில்லை , அது உடனே தெரியும்,
தனக்கு ஆன்மீக வாழ்விற்கான சாத்யம் இருக்கிறதா என ஒருவன் அறிவது எங்ங்னம்?
யாருக்கும் தெரிவதில்லை. அந்தராத்மா உந்தித்தள்ளும் போது அவர்கள்
இறைவன் பால் திரும்புகின்றனர் அவ்வளவே.
கேள்வி:ஆன்ம சித்தி அடைவதற்கான சாத்தியம் என்னிடம் உள்ளதா எனக்
பதில்:-
கேள்வி:
பதில் :-
கூறியருள்க. இத்தகைய கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது வீண் கால விரயம், ஆன்மீகப் பாதையில் இறங்கிய பின் உனது சாத்தியக்கூறையன்று அன்னையின் சக்தியையே தொடர்ந்து சார்ந்திருக்க வேண்டும். தங்களுடைய இயற்கையைப்பற்றியும் சாத்யக் கூறுகளைப்பற்றியும் முற்றிலும் அறிந்து கொள்ளாமல் யோகபாதையில் இறங்கியவர்கள் கஷ்டங்களில் மாட்டிக் கொள்கிறார்கள் என்பது உண்மைதான் அல்லவா?
முழுதும் தெரிந்துகொண்டோ, அல்லது கொஞ்சம் தெரிந்துகொண்டோகூட யாரும் யோக பாதைக்கு வருவதில்லை, எல்லோரும் அறியாதவர்களே, யோகத்தின் மூலமாகத்தான் அவர்கள் ஞானத்தைப் பெறுகிறார்கள்.
- 359 -
அறிவு

Page 23
கேள்வி- சில சமயங்களில் ஆர்வத்தையும் அழைப்பையும் உணர்ந்து யோக பாதையில் இறங்குகிறவன் பின்னால் அதிலிருந்து விலகிவிடுகிறானே அது எதனால்? பாதையில் புகுமுன் தனது இயற்கையின் சாத்யக் கூறுகளைச் சரியாகக் மதிப்பிட முடியாததனாற் தானே?
பதில்:- அவனது ஆர்வக்கனல் மங்கிவிடுவதனால் அல்லது அழைப்பிற்கு
உண்மையுள்ளவனாக இல்லாது போவதனால், மதிப்பிடுவது பற்றிய தன்று இது. யாரும் இதையெல்லாம் முன் கூட்டியே அறியவோ மதிப்பிடவோ முடியாது என்று நான் கூறியுள்ளேன்.
கேள்வி. இயற்கை முழுவதும் துாய்மையடைந்தாலன்றி உண்மையாக யோகம் தொடங்க முடியாது எனச் சிலர் சொல்கின்றனர்,இது சரியா?
பதில் - அவ்வாறு கூறுவது மடமை,
கேள்வி - சாதனையில் ஒரளவு அனுபவங்களையும் சித்திகளையும் பெற்றவனையே
ழறி அன்னை ஏற்றுக்கொள்கிறார், அவ்வித அனுபவமின்றி சாதாரண உணர்வில் வாழ்பவனை ஏற்றுக் கொள்வதில்லை என்பது உண்மையா?
பதில் - ஏன் பூரீ அன்னை அவனை ஏற்றுக்கொள்ளக்கூடாது?
ஏற்றுக்கொள்ளுதல் என்பதற்கு நீ என்ன பொருள் கொள்கிறாய்
கேள்வி- அவன் இயற்கையிலுள்ள சில தடைகள் காரணமாக ஒரு சாதகனால்
தன்னை முழுமையாக பூரீ அன்னைக்குத் திறக்க முடியாவிடின் அவனை பூரீ அன்னை ஏற்றுக்கொள்ள மாட்டாரா?
பதில்- இந்த மாதிரிக் கேள்வியில் பொருளே கிடையாது. இங்கு யோக சாதனை செய்கிறவர்கள் பூரீ அன்னையால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். “ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள்’“சீடர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் என்று தான் பொருள். ஆனால், யோகத்தில் முன்னேற்றமும், சித்தியும்,எந்த அளவுக்குத் திறவு உள்ளது என்பதைப் பொறுத்தது.
கேள்வி- ஒரு சாகனுக்குச் சாதனையில் மீண்டும் மீண்டும் பெரிய கஷ்டங்கள்
எதிர்ப்பட்டு, தனது கீழியற்கையை விலக்கவும் முடியவில்லையென்றால் அவன் நம்பிக்கையை இழந்து விடாமலும் பாதையைவிட்டு விலகாமலும்
இருக்க உதவுவது எது?
பதில்:- கிழியற்கையை முழுவதும் விலக்கியவர் யார்? ஒருவன் செய்யக்
கூடியதெல்லாம் ஆர்வமுற்று, சீழியற்கையின் துாண்டுதல்களை விலக்கி, மீதியைச் செய்ய இறைவனை அழைக்க வேண்டியதே.
கேள்வி:ஆயிரக்கணக்கானவர்களில் ஒரு சிலரே இறைவனை நாடுகிறார்கள்.
அவர்களுள்ளும் ஒருவர், இருவரே அவனை அடைகின்றனர் எனக் கீதை கூறுகிறது. இது உண்மையா?
பதில்:- தனது சுயபலத்தையே நம்பியிருந்தால் வெகு சிலரே அடையமுடியும்,
ஆனால், இறைவன் மீதுள்ள நம்பிக்கை மூலமும் இறைவனது அருளாலும் அது சாத்தியமாகும்.
அறிவு - 40 -

கேள்வி:-
பதில்:-
சாதகனது இறுதி இலட்சியம் எதாக இருக்க வேண்டும்.ஒரு யோகியாதல் அவனது இலட்சியமாக இருக்க வேண்டாமா?
இறுதி லட்சியம் இறைவனுடன் முழுமையானா ஐக்கியம் அடைதலே. ஒருவனுக்கு இடைவிடாத ஏதோ ஒருவகை ஐக்கியம் ஏற்பட்டிருந்தால் அவனை ஒரு யோகி என்று சொல்லலாம். ஆனால், ஐக்கியம் பூர்த்தியாக வேண்டும்.ஆன்மீக தளத்தில் மட்டும் ஐக்கியம் ஏற்பட்ட யோகிகள் உள்ளனர். சிலர் மனத்திலும் இதயத்திலும் ஐக்கியமடைந்துள்ளர்.
இன்னும் சிலர் பிராணனிலும் அடைந்துள்ளனர். நமது யோகத்தில் நமது
இலட்சியம் இவற்றுடன் உடலுணர்விலும், மேலே அதிமன தளத்திலும் (Supramental plane) gisilu LD60-36Ds (g5tb. メ
சாதனையின் அடித்தளம்
கேள்வி:-
பதில்:-
கேள்வி:-
ஒரு சாதகன் அவனது சாதனையில் அடித்தளம் அமைத்துக் கொண்டான் என்று எப்பொழுது சொல்லலாம்?
அவனுக்கு நிலையான அமைதி,சமதை, பக்தி,தொடர்ந்த ஆன்ம அனுபவம் உள்ளபோது.
இயற்கையில் சாந்தியையும் சமதையையும் நிலைநாட்டச் சரியான வழி என்ன?
பதில் :- சாந்தியும் சமதையும் உனக்கு மேலே உள்ளன. நீ அவற்றை மனம்,
கேள்வி :-
பதில் :-
கேள்வி :
பிராணன், உடல் இவற்றுள் இறங்கி வரும் படி அழைக்க வேண்டும் , அத்தோடு, எதாவது உன்னை அமைதியிழக்கச் செய்தால், அதையும், அமைதியின்மையையும் விலக்க வேண்டும்.
அமைதியும் சமதையும் பூரீ அன்னையின் அருளால் மேலிருந்து இறங்கி வருகின்றனவா?
அவை இறங்கினால் அது அந்தராத்மாவின் அழைப்பினாலும் பூரீ அன்னையின் அருளினாலுமாகும்.
இயற்கையில் சமதை நாட்டப்பட்டுள்ளது என்பதை காட்டும் உண்மையான அடையாளம் யாது? உள்ளிருந்தோ வெளியிலிருந்தோ வரும் குழப்பங்களை யெல்லாம் பூரண அமைதியுடன் ஏற்றுக் கொண்டு, அவற்றைச் சீராக்க எந்த முயற்சியும் செய்யாதிருத்தலா? ar
பதில் - சீராக்க முயன்றாலும் முயலாவிடினும் கலங்காது அவற்றை எதிர்த்து
நின்று அமைதியாக அவற்றை விலக்க வேண்டும். எதிர்த்துச் செயல் படுவதானால் அமைதியாக, கோபம், கிளர்ச்சி, துக்கம் அல்லது வேறு கலங்கச்செய்யும் இயக்கம் எதுவும் இன்றிச் செய்ய வேண்டும்.
- 41 -
அறிவு

Page 24
கேள்வி :- ஒருவன் சமதை பெற்றுவிட்டால் அவனுக்கு அகங்காரம் இல்லை என்று
கேள்வ்
பதில்
கேள்வி
பதில் w
சொல்லலாமா?
b - சமதை என்றால் அகங்காரம் இல்லையெனப் பொருளன்று. ஆசையும்
பற்றும் இல்லை என்றுதான் பொருள். அகங்கார உணர்வு மறைந்து போகவும் கூடும். அல்லது நுட்பமான அல்லது தடித்த வடிவில் இருக்கவும் கூடும் - அது ஆளைப் பொறுத்தது.
இறைவனின் இறக்கம் என்றால் சாந்தி, துாய்மை, மோனம் இவற்றின் இறக்கமா?
அது இறக்கத்தின் பகுதியாகும். அதுவே முழு இறக்கமும் அன்று.
-எனது ஜீவனில் சாந்தி இறங்கிய பிறகு அதில் ஓர் உயர் சக்தியின் வேலையைக் காண்கிறேன். இந்த சக்தி சாந்தியின் சக்தியிலிருந்து வேறானதா?
சாந்தி தெய்வ சக்தி சரியா வேலை செய்வதற்குரிய நிலைக்களன், சக்தியும் சாந்தியும் இறைவனது இரு வேறு ஆற்றல்கள்.
:- இறைவனது சக்தியை ஏற்பதற்குரிய திறனை வளர்ப்பது எங்ங்னம்?
* முதல்தேவை மனதில் அமைதி அதன்மேல் ஆர்வத்தையும்
அப்பியாசத்தையும் பொறுத்தது.
- அமைதியானமனம் என்பதின் சரியான பொருள் என்ன?
மனத்தில் எண்ணங்களே இராது என்பதா?
இல்லை எண்ணங்களே இருக்கக்கூடாது என்பது அவசியமில்லை. எண்ணங்களே இல்லாத நிலை மோனம். மனத்தினுாடு எண்ணங்கள், உணர்ச்சிகள் முதலியன செல்லும்போது கலங்காதிருந்தால் அதற்கு அமைதியான மனம் என்று பெயர். மனம் எண்ணங்கள் தன்னுடையவை அல்ல என உணர்கிறது. அது அவைகளைக் கவனிக்கலாம், ஆனால்,
எதனாலும் கலங்குவதில்லை.
கேள்வி:-
சாதனையில் செயல்படுநிலை, செயல்படாநிலை என்பதன் உண்மையான
பொருள் என்ன?
பதில் ;a
ஆர்வம், தவம் , தவறான சக்திகளை விலக்குதல் ஆகியவற்றில் செயல்படுதல் பூரீ அன்னையின் சக்தி வேலை செய்வது சம்பந்தமாக செயலற்றிருத்தல் - இவையே சரியான சாதனை முறை.
(திரு.ச.மகாலிங்கம் அவர்களால் செய்யப்பட்ட Elements ofyoga என்னும் ஆங்கில மூல நூலின் மொழி பெயர்ப்பு )
அறிவு
தொடரும்
سے 42 ۔

பிராணயாமம்
சுவாமி சச்சிதானந்தா 34. ப்ரச்சர்தன விதாரணாப்யாம் வர ப்ரானஸ்ய: பதஞ்சலி யோகம் 34வது சூத்திரம்
மூச்சை வெளியே விடுவதாலும், நிறுத்துவதாலும் ஒருவர் மனஅமைதியுடன் இருக்கலாம்.
பதஞ்சலி முனிவர் நாம் சாதாரணமாக விடும் மூச்சிை பற்றித் தான் அதாவது பிராணனைப்பற்றித் தான் இங்கே பேசுகிறார்.
இதற்கு அட்டாங்க யோகம், நாலாவது அங்கத்தில் பிராணயாமம் என்று பெயர், பிராணயாமம் என்பது ஒருவர் தம் மூச்சை அடக்கி ஆழ்வதை குறிப்பது இதன் மூலம் மனம் அமைதி பெறலாம் மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.
பிராணன் என்கிற நாம் ‘விடும் மூச்சின் இயக்கம் மூன்று வகைப்படும்.
1. மூச்சை உள்ளே இழுப்பது 2. உள்ளே இழுத்த மூச்சை வெளியே விடுவது 3. உள்ளேயோ வெளியோ மூச்சை நிறுத்தி வைப்பது
மூச்சை உள்ளே இழுத்தலை “ ஏறுதல்’ அல்லது “பூரகம்” என்று சொல்வாார்கள் மூச்சை வெளியே விடுதலை “ ரேசகம்” “ ஆறுதல்’ என்று சொல்வார்கள் மூச்சை உள்ளேயோ வெளியேயோ நிறுத்தலை “கும்பகம்” அல்லது “ஊறுதல்” என்று சொல்வார்கள்.
இந்த இரண்டு வகையான கும்பகங்களில் பிராணாயாம நிபுணர்களில் சிலர் மூச்சை வெளியே நிறுத்துவதைத்தான் பதஞ்சலி முனிவர் கும்பகம் என்று சொல்கிறார் என்கிறார்கள்.
மூச்சை உள்ளே இழுத்து அங்கேயே நிறுத்துவதை விட, மூச்சை வெளியே விட்டு வெளியே நிறுத்துவதைப் பற்றியே பதஞ்சலி பேசுகிறார்
காரணம் மூச்சு உள்ளே இருக்கும் போது அங்கு அதனுடைய வேலை நடைபெறுகிறது. அதனால் மனம் அமைதியைப்பெறுவதில்லை.
பிராணாயாமத்திலும் பல வகைகள் இருக்கின்றன பதஞ்சலி முனிவர்
அவற்றைப் பற்றி இங்கே பேசவில்லை பதஞ்சலி முனிவர் மூச்சை வெளியே
விடும் போது அதன் ஒவ்வொரு பகுதியையும் உற்றுநோக்குவதைப்பற்றியே பேசுகிறார்.
அறிவு ۔ 443 ۔

Page 25
மூச்சை ஒழுங்குபடுத்துவதற்கு அதை முதலில் வெளியே விட வேண்டும் பிறகு படிப்படியாக உள்ளே இழுக்க வேண்டும்
இப்படி உள்ளும் புறமும் மூச்சு இயங்கிக் கொண்டு இருப்பதைக் கூர்ந்து கவனிப்பது தான் பிராணயாமத்தின் முக்கிய நோக்கமாகும்
அப்படி மூச்சின் இயக்கத்தை கூர்ந்து கவனிக்கும் போது மனம் எவ்வாறு மூச்சுடன் சேர்ந்து அமைதியடைகிறது என்பதை புரிந்து கொள்வது தான் பிராணயாமத்தின் நோக்கம்,
பிராணன் என்பது உயிர்ச்சக்தியின் இயக்கம். யாமம் என்றால் அதை மன அமைதிக்காகவே அடக்கி தன் ஆட்சிக்குள் வைத்துக் கொள்ளுதல்
“மன்மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு மன் மனம் எங்கு இல்லையோ வாயுவும் அங்கு இல்லை”என்கிறார் ’ சித்தர்களில் தலைசிறந்த சித்தரான திருமூலர்
அமைதியடையும் மன்மனம் எங்கே நிலை பெறுகிறதோ அங்கே தான்வாயுவும் அதன் மூச்சுக் காற்றும் நிலை பெறுகிறது. ܚܖ
ஏதாவது வேலையில் ஆழ்ந்து ஈடுபடுகிறோம் அந்த வேலையில் திடீர் என்று சிக்கல் ஏற்படுகிறது அப்போது மூச்சின் இயக்கமும் நின்று விடுவதைக் கூர்ந்து கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.
இப்படி மூச்சு இயற்கையாக நிற்பதுதான் ஆற்றல் ஊறுகின்ற கும்பகம், எனவே செயற்கையான கும்பகம் தேவையில்லை என்பதுதான் பதஞ்சலிமுனிவரின் யோக நோக்கம்.
யோகப் பயிற்சியின் போது பிராணனின் உயிர்ச் சக்தியைச் சேமிப்பதற்காக புன்னிரண்டு அங்குலம் அல்லது பன்னிரண்டு “ ஒம்” அளவு மூச்சுக் காற்றை உள்ள்ே இழுக்க வேண்டும் அதை எட்டு அங்குலம் அல்லது எட்டு “ஓம்’ அளவு வெளியே விட வேண்டும். இந்த முறையினால் நாலு அங்குலம் அல்லது நாலு “ஓம் பிராணனின் உயிர்ச் சக்தியைச் சேமிக்கலாம் என்பார்கள். இப்படிச் சொல்பவர்கள் சாதாரண ஹதயோகிகள். யோக ஆசார புத்த சமய யோக நூல்களில் ஒன்று ‘அன - பானகதி’ என்பது. பிராணன் -அபாணன் என்ற இரண்டு வகையான மூச்சுக்காற்றைப் பற்றி இந்த நுால் விளக்குகிறது இவற்றைப் பற்றியே ஹத யோகிகளும் விவரமாகப் பேசுகின்றனர். இப்படிப் பேசும் போது பிராணாயாமத்தில் பலவகைகள் இருப்பதைப் பற்றியும் சொல்கிறார்கள்
மேல் நோக்கிச் செல்லும் மூச்சுக் காற்றுக்குப்பிராணன்’ என்று பெயர். கீழ் நோக்கிச் செல்லும் மூச்சுக் காற்றுக்கு ‘அபாணன்’ என்று பெயர்.
9ga ം 44 =

மேல் நோக்கிச் செல்லும் பிராணன் என்ற மூச்சக் காற்றையும், கீழ் நோக்கிச் செல்லும் அபாணன் என்ற மூச்சுக் காற்றையும் சமப்படுத்துவது தான்
îFTGROTTU JITLD.b.
பிராணன் என்ற மூச்சுக் காற்று, உடல் செம்மையாக இயங்குவதற்கு வேண்டிய ஆற்றலைக் கொடுப்பது.
அப்படி பிராணன் என்ற மூச்சக் காற்றின் ஆற்றலால் உடலில் ஏற்படும் அசுத்தப் பொருளை வெளியே தள்ளும் காற்றுத் தான் அபாணன் என்பது.
இந்த பிராணன், அபாணன் என்ற இரண்டு காற்றுகளும் உடலுக்குள் சம நிலையில் இருக்க வேண்டும்.
அப்போது தான் மனம் அமைதியுடன் செயற்படும்.
ஹதயோகம் பிராணன் - அபாணன் இரண்டையும் சமநிலைப்படுத்தி சமாதி நிலைக்கு உயர்த்தும் யோகம் தான்.
ஹத என்ற வார்த்தையில் ஹ - த என்ற இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ‘ஹ’ என்றால் சூரியன். 'த' என்றால் சந்திரன்.
சூரியனும் சந்திரனும் ஒன்றுக்கு ஒன்று எதிரான குணங்களை உடையவை. சூரியன் உஷ்ணமானது. சந்திரன் குளிர்ச்சியானது.
இந்த இரண்டையும் சமநிலைக்கு கொண்டு வருவதுதான் ஹதயோகப் பயிற்சியினால் ஏற்படும் பலனாகும்.
மனதுக்கு அமைதியை எற்படுத்துவதற்காகவே மூச்சை ஒழுங்கு படுத்துகிறோம்
இதைத்தான் பதஞ்சலி யோகத்தின் முதல் செய்யுள், “ஹத யோக அனுசானை’ என்று சொல்லுகிறது.
இவ்வாறு மூச்சுக் காற்றை ஒழங்குபடுத்துவது தான் ஞானயோகத்தின் அடிப்படையாகும்.
காரணம் மூச்சு ஒழுங்குபடும் போது தான் சிந்தனையும் ஒழுங்குபடும். மன அமைதியும் உருவாகும்.
இதைத் தான் “சிந்தனை உனக்குத் தந்தேன். திருவருள் எனக்குத் தந்தாய்” என்று சித்த புருஷர்கள் சொல்லகிறார்கள்.
é9ĵa سہ 45 ۔

Page 26
மூச்சு இப்படி இயற்கையாக சமநிலையை அடைவதையே, திருவருட்பா அருட்பிரகாச வள்ளலார் ‘சகசநிஷ்டை' என்கிறார். சகசநிஷ்டை என்றால் இயற்கையான தியானம் என்று பொருள்.
பிராணனும் மனமும் நாம் மூச்சவிடும்போது நெருங்கிய தொடர்பு உடையனவாகவே இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
ஞான சித்தரான திருமூலர் இதைக்குறிப்பிடும் போது “எங்கே மனம் செல்கிறதோ அங்கே பிராணனும் செல்கிறது” என்கிறார்.
இந்த உண்மையை யோகப் பயிற்சியில் போதுமான அனுபவம் உள்ளவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையிலும் உணர்ந்து அனுபவிக்கலாம்.
இதை யோகப் பயிற்சி இல்லாத சாதாரண மனிதர்கள் கூடப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு வேலையில் ஈடுபட்ட மனம் இயங்கும் போது அதனுடன் சேர்ந்து பிராணனும் இயங்குகிறது.
மனம் அதிர்ச்சிக்கு உள்ளாகும் போது பிராணனும் சட்டென்று இயங்காமல் நின்று விடுவதை 92 60OT9J6)ITLib.
மனத்தை அதிர்ச்சிக்கு ஆளாக்காமல் அமைதியுடன் இயங்கச் செய்வதற்கு மந்திர யோகம் துணை புரியும்.
இதைத் தான் ‘மணமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம்’ என்று சொல்வார்கள்.
மனம் அதிர்ச்சிக்கு உள்ளாகாமல் செம்மையாக இயங்குவதற்கு மந்திர ஜபம் துணை புரிகிறது.
ஏதாவது புத்தகத்தை ஆழ்ந்து படிக்கிறபோதோ,ஏதாவது சிந்தனையில் தீவிரமாக ஈடுபடும்போதோ சற்று நேரம் படிப்பதையும், சிந்திப்பதையும் நிறுத்த வேண்டும். அப்போது நம்முடைய பிராண இயக்கத்தை உற்று நோக்க வேண்டும். அப்படி நோக்கும் போது மனமும் பிராணனும் இணைந்து செயற்படுகின்றன என்பதை யோகப் பயிற்சியில்லாத சாதாரண மனிதர்கள் கூடப் புரிந்து கொள்ளலாம்.
மூச்சின் இயக்கம் என்று ஒன்று இருப்பதே நம் உண்ர்வுக்கு எட்டுவதில்லை.
பிராணன் - மனம் என்ற இரண்டில் ஏதாவது ஒன்றின் இயக்கத்துக்குத் தடை ஏற்பட்டாலும் மற்றதின் இயக்கத்திலும் தடை ஏற்பட்டு விடும்.
இதைத்தான் அன்றாட வாழ்விலும் யோகம் உண்டு என்று சொல்வார்கள்.
அறிவு 446 س -

நமது மூச்சு இயக்கத்தை மீண்டும் முன்போல் இயங்கச் செய்வதற்கு முதலில் பெருமூச்சு விடுகிறோம். பிறகுதான் முன்போலவே மூச்சு இயக்கம் தொடங்குகிறது. இதை அனுபவத்தில் எல்லாருமே உணரலாம்.
இதற்கு என்ன காரணம் ? மனத்தின் இயக்கம் ஏன் தடைபட்டது ? அது இயங்குவதற்கு வேண்டிய அளவு அதற்குப் பிராண வாயு கிடைக்காமல் போனதுதான்.
பெருமூச்சு விடும்போது ஏராளமான பிராணவாயு உள்ளே செல்கிறது. மனம் இயங்குவதற்கு வேண்டிய அளவு பிராணவாயு அதற்குக் கிடைத்து விடுகிறது. இப்போது மனமும் சிந்தனையும் பிராணனின் உதவியால் சமநிலையில் செயற்படத் தொடங்கி விடுகின்றன.
மனம் அமைதியுடன் நிற்கும்போது பிராணனும் அதனுடன் சேர்ந்து நிற்கிறது.
நாம் முயன்று மூச்சை நிறுத்தாமலே மூச்சுக் காற்று தானே நின்று விடுவதும் உண்டு. எதிர்பாராத அதிர்ச்சியின் விளைவால் இவ்வாறு பிராணன் தடைப்பட்டு விடுகிறது. இப்படித் தடைப்பட்டு நிற்கும் மூச்சுக் காற்றுக்கு, கேவல கும்பகம் என்று பெயர்.
இப்படி நாம் இழந்த மூச்சை மீண்டும் கொண்டு வருவதற்கு பிராண வாயு தேவைப்படுகிறது. அதனால் தான் பெருமூச்சு விடுகிறோம். அப்போது பிராணவாயு உள்ளே செல்கிறது.
பிராணவாயு உள்ளே சென்றவுடன் அது உணர்ச்சியைத் துாண்டி எழுப்பி விடுகிறது.
மனமும் - பிராணனும் ஒன்றுபட்டு இயங்கத்தொடங்கி விடுகின்றன.
é.á
மூச்சு நின்று உணர்வும் அடங்கி நிற்கும் நிலைக்குத்தான் துரிய
அதீதம்” என்று பெயர்.
பெருமூச்சு விட்டதும் மூச்சும் உணர்வும் திரும்புவது தான் "துரியம்” என்ற நான்காவது யோக அனுபவமாகும்.
இதற்கு முன்னே உள்ள மூன்றும் துாக்கம்,கனவு,நனவு என்பவை.
ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது இந்த உண்மையை யோகப் பயிற்சியாளர்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.
பிராணனை ஒழுங்குபடுத்தினால் மனத்தையும் ஒழுங்குபடுத்தி விடலாம். இதில் வெறும் பிராணன் மட்டும் சம்பந்தப்படுகிறது என்று எண்ணிவிடக் கூடாது.
மனமும் பிராணனும் சேர்ந்தே செயற்படுகின்றன.
- 47 anv அறிவு

Page 27
மனதை அடக்கினால் பிராணனையும் அடக்கியதாகும். ஆனால் பிராணனை அடக்கினால் மட்டும் மனமும் அடங்கிவிடும் என்று ஹத யோகிகள் எண்ணுகிறார்கள். இதனால் அவர்கள் பிராணனின் வெவ்வேறு இயக்கங்களைப் பற்றி விரிவாக ஆராய்கின்றனர்.
அதில் தாங்கள் கண்ட முடிவுகளைத் தங்கள் ஹதயோக சாதனத்திலும் மேற் கொள்கின்றனர்.
பதஞ்சலி முனிவர் இப்படிச் செய்வது தவறு என்கிறார். காரணம் மனதுடன் சேர்ந்துதான் பிராணனும் இயங்க முடியும்.
இதை நம் வாழ்க்கையில் மேற்கொள்ளும்போது அதனால் ஏற்படும் அனுபவத்தையும் பெறலாம்.
ஒரு மாணவன் தேர்வு எழுதிக் கொண்டு இருக்கிறான். தேர்வில் அவன் எழுத வேண்டிய கேள்விக்கு உரிய பதில் திடீர் என்று மறந்து விடுகிறது.
அப்போது ஆழ்ந்த பெருமூச்சு விட்டு பிராண வாயுவை எவ்வளவு உள்ளே செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு மூளையில் உள்ள உயிர் அணுக்கள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். மறந்துபோன விஷயம் நினைவுக்கு வந்துவிடும் கேள்விக்கு உற்சாகமாக மாணவன் பதில் எழுதலாம்.
இந்தச் சமயத்தில் அதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட மனம் விடுதலைப் பெற்றுபிராணனுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்து விடுகிறது.
இது நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் கண்டு அனுபவிக்கும் உண்மையாகும்.
திடீர் என்று கோபம் வந்து விடுகிறது. இதற்கு என்ன செய்வது?
பலமுறை மூச்சை உள்ளுக்கு இழுக்க வேண்டும். மூச்சின் இயக்கத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் மூச்சை உள்ளே இழுக்கும்போது
அதை எண்ணிக் கொண்டே இருக்க வேண்டும். V−
அப்போது மனம் பிராணனுடன் இணைந்து செயல்படும். இந்த நிலையில் நம்மிடம் ஏற்பட்ட கோபம் சொல்லாமற் கொள்ளாமலே வெளியேறி விடும்.
கோபம் மட்டும் இல்லாமல், வேறு எதனாலும் மனதிற்கு அதிர்ச்சி ஏற்பட்டாலும் இதே மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
அப்போது மனமும் மூச்சும் இணைந்து செயற்பட்டு மனதில் சமநிலையை ஏற்படுத்தும். இதனால் மனம் அமைதியையும் இன்பத்தையும் அடையும்.
அறிவு
سے 4483 ۔

நமது உடல் ஏழு அடுக்கு மாளிகையால் ஆனது. அவற்றுள் முதல் மூன்று அடுக்குகளைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
முதல் அடுக்கு ‘அன்னமய கோசம்’ -அதாவது உணவினால் ஆன உடம்பு என்று பெயர்.
இரண்டாவது அடுக்குக்குப் ‘பிராணமய கோசம்' - அதாவது மூச்சுக் காற்றினால் ஆன உடம்பு என்று பெயர்.
இவற்றுள் அன்னமய கோசத்தைவிட, பிராணமய கோசம் நுட்பமானது. அதிக ஆற்றல் உடையது.
இதனால் பிராணமய கோசம் தான் அன்னமயகோசத்தை இயக்குகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
‘மனோமய கோசம்’ நமது உடம்பின் மூன்றாவது அடுக்கு. இது சூட்சும உடலின் முதல் பகுதி.
மனோமயகோசம் பிராணமய கோசத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே பிராணமய கோசத்தைக் கொண்டு மனோமயகோசத்தை அடக்கி விட முடியாது.
இதைத்தான் “மன்மயம் எங்கு உண்டு, வாயுவும் அங்கு உண்டு’ என்கிறார் திருமூலர். பிரானனை நிலைபெறச் செய்வது மனம் தான்.
இவ்வாறு மனத்தின் ஆட்சிக்கு உட்பட்டு பிராணன் இயங்குகிறத.
இதை நம் ஆட்சிக்குள் கொண்டு வருவதுதான் பிராணாயாமப் பயிற்சியின் அடிப்படைக் குறிக்கோளாகும்.
நன்றி. பதஞ்சலியோகம் விளக்கவுரை சுவாமி சச்சிதானந்தா
سہ 449 سے
அறிவு

Page 28
பதஞ்சலி யோக சூத்திரத்தில் 34 வது சூத்திரத்திற்கு சி. சுப்பிரமணிய பாரதியார் எழுதியுள்ள சுருக்கமான வியாக்கியா னத்தையும் இங்கே தருகிறோம் - ஆசிரியர்.
34 விதிப்பிடி மூச்சை வெளியே விடுவதாலும் உள்ளே அடக்குவதனாலும் (சித்தம்) அமைதிபெறும்.
இங்ங்ணம் சித்த சாந்திக்காக மூச்சை ஆளும் முறமை ப்ராணாயாமம் என்று சொல்லப்படும். மூச்சை உள்ளே இழுத்தல் “பூரகம்” என்றும் கட்டி வைத்தல். “கும்பகம்’ என்றும் வெளியே விடுதல் ரேசகமென்றும் கூறப்படும். ப்ராணாயத்தின் பல வகைகளையும் அவற்றிற்குரிய விதிகளையும் ஹட யோக நூல்களிலே கண்டு கொள்க. மனதை யாதொரு சிரமம்மில்லாமல் மூச்சுப் போக்குவரவிலே செலுத்தி மூச்சை இயற்கைப்படி நடைபெறவிடுதல் ப்ராணாயாங்களில் சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.
“ப்ராணன்” என்ற பதம் மூலத்திலுள்ளது. அதற்கு ‘மூச்சு என்பது சரியான மொழி பெயர்ப்பன்று மூச்சுக்கு ஆதாரமான ஜிவசக்திக்குப் பிராணன் என்று பெயர்.
மனதை எங்கே நிறுத்துகிறோமோ அந்த இடத்தில் உயிர் நிற்கிறது. உயிர் நிற்குமிடத்தில் மூச்சு நிற்கும்.
அறிவு = 50 -

விவசாயியும் ஜோதிடடும்
நல்ல செயல்கள் நல்ல பலனை விளைவிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதுமட்டுமின்றி,நல்ல சிந்தனைகளே கூட நல்ல பலனை விளைவிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இந்த விவசாயி கதையைப் படிக்கும்போது, அறுபத்துமூன்று நாயன்மாரின் நினைவு வருகிறது. அத்தோடு நம் முன்னோர்கள் மானசபூஜையை நமக்கு வகுத்து அளித்திருப்பதற்கான காரணமும் புரிகிறது.
அது ஒரு சிற்றுார் அந்த ஊரிலே புகழ்பெற்ற ஒரு ஜோதிடர் இருந்தார். ஒரு நாள் மாலை நேரத்தில் அவரிடம் தம் ஜாதகத்தைப் பார்க்க ஒர் ஏழை விவசாயி வந்தார். அவர் தமது ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுத்தார்.
W. W. ஜாதகத்தைச் சோதித்துப் பார்த்ததும் ஜோதிடருக்குத் தயக்கம் ஏற்பட்டது.
காரணம்,அந்த விவசாயிக்கு அன்றைய இரவே எட்டு மணிக்கு மரணம் நேரக்கூடிய ஒரு கண்டம் இருந்தது. ஜோதிடர் விவசாயிடம் நேரிடையாக எதுவும் சொல்ல விரும்பாமல், “ ஐயா, இன்றைய தினம் எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கிறது. ஏதோ வேலைகளுக்கு இடையில் அதை நான் மறந்தே போய் விட்டேன். தாங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும் நாளைக் காலையில் தாங்கள் என்னை வந்து பாருங்கள்” என்று சொல்லி மழுப்பி விட்டார். ஜோதிடர் சொன்னதை உண்மை என்றே நம்பிய விவசாயி, மறுநாள் காலையில் வந்து பார்ப்பதாகச் சொல்லிச் சென்றார்.
விவசாயி சென்றதும் ஜோதிடர் தம் மனைவியை அழைத்து, “இப்போது என்னைப் பார்ப்பதற்கு ஒருவர் வந்தாரே, அவருடைய ஆயுள் இன்று இரவோடு முடியப்போகிறது. அதை அவரிடம் தெரிவிக்காமல், “நாளைக்கு வந்து பாருங்கள்” என்று சொல்லி அனுப்பிவிட்டேன். அவர் உயிருடன் இருந்தால்தானே நாளைக்கு என்னை வந்து பார்க்க முடியும்?’ என்று சொன்னார்.
ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி,பக்கத்திலிருந்த தமது கிராமத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார். வழியிலேயே மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது. அது மழைக்காலமாக இருந்ததினால் மழைத் தூறல் வேறு போட ஆரம்பித்துவிட்டது. விரைவில் இடியுடன் கூடிய பெருமழை கொட்ட ஆரம்பித்தது.
அப்போது விவசாயி ஒரு காட்டுவழியாகச் சென்று கொண்டிருந்ததார். மழைக்கு ஒதுங்குவதற்குச் சுற்றும் முற்றும் பார்த்த அவர் கண்களுக்குச் சற்றுத் தொலைவில் பாழடைந்த சிவன் கோயில் ஒன்று தட்டுப்பட்டது. விவசாயி ஒடோடிச் சென்று சிவன் கோயிலின் முன்னால் இருந்த மண்டபத்தில் ஒதுங்கிக் கொண்டார். மண்டபத்தில் நின்று கொண்டிருந்த அவர், கோயிலின் பாழடைந்த நிலையைக்கண்டு
51 - அறிவு

Page 29
பெரிதும் மனம் வருந்தினார். “ஹ! கோu அளவுக்குக் கேட்டாரற்றுப் பாழ்பட்டுப் போ அரசமரமும் அல்லவா முளைக்க ஆரம் பணம் இருந்தால் இந்தக்கோயிலைப் ட செய்வேன்’ என்று நினைத்துக்கொண்ட
அத்தோடு அவர் சிந்தனை மே புதுப்பிப்பதாக மானசிகமாக நினைத்து உட்பிரகாரங்கள், மண்டபங்கள் ஆகிய6 வேதியர் புடைசூழத் திருக்குடம் பவனி வ கோயிலில் நின்ற படியே மானசிகமாகக் ( கர்ப்பக் கிரகத்தில் எழுந்தருளியிருக்கும்
இத்தகைய சிந்தனைகளில் தப் நின்றுகொண்டிருந்த மண்டபத்தைத் தற் கரியாக அவரது தலைக்கு மேலே பாழை மழையின் குமுறலைக்கேட்டு வெளிவந் அவரைக் கொத்தத் தயாராக இருந்த “ஐயையோ’ என்று விவசாயி அலறிப்ட வெளியே ஒடி வந்துவிட்டார். அதே சமய பாழடைந்த மண்டபம் திடுதிடுவென்று இt மணி எட்டு, மழையும் ஒய்ந்தது.
விவசாயி தம் விடு திரும்பினார். ஜோதிடர் திகைத்தார். அவர்,நாம் ஜோதி கருதி, ஜோதிட நூல்களை எடுத்துத் துல்லி இருந்தது. இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒரு சிவன் கோவிலைக் கட்டி முடித்து இருக்க வேண்டும், என்று ஜோதிட நுாலி விவசாயியால் கோயிலைக் கட்டிக் கு நினைத்தபடியே, ஜோதிடம் அறிவித்த தெரிவித்தார். விவசாயி முதல் நாளிரவு தம விளக்கமாக எடுத்துச் சொன்னார். பிறகு சொல்லவேண்டிய ஜோதிடத்தைக் கூறி
தெய்வப்பணி பற்றிய கற்பனைகூட, 6 என்பதை இந்தக் கதை அறிவிக்கிற
நன்றி - ஆன்மிகக் கதைகள், தொ
அறிவு F.

பிலின் கர்ப்பக்கிரகமும் மண்டபமும் இந்த பிருக்கின்றனவே ! ஆங்காங்கே ஆலமரமும் பித்திருக்கின்றன! என்னிடம் போதுமான துப்பிக்கும் வேலையைத் தான் முதலில்
.
லும் விரிந்தது அந்தச் சிவன் கோயிலைப் |க் கொண்டார். கோபுரம், ராஜகோபுரம், பற்றை அமைத்தார். கும்பாபிஷேகத்துக்கு Iருவதாகக் கற்பனை செய்தார். பாழடைந்த கும்பாபிஷேகத்தை விமரிசையாக நடத்திக்
சிவபெருமானை வணங்கினார்.
bமை மறந்து ஈடுபட்டிருந்த விவசாயி,தாம் }செயலாக ஏறிட்டு நோக்கினார். அங்கே டைந்த மண்டபத்தின் ஒரு பகுதியிலிருந்து த ஒரு கருநாகம் படமெடுத்த நிலையில் து! அதைக் கண்டாரோ இல்லையோ, புடைத்துக்கொண்டு மண்டபத்தை விட்டு பத்தில் மழையால் மிகவும் தளர்ந்திருந்த டிந்து தரைமட்டமாயிற்று. அப்போது இரவு
மறுநாள் சென்று ஜோதிடரைச் சந்தித்தார். டக் கணக்கில் தவறிவிட்டோமோ? என்று யமாக ஆராய்ந்தார். கணக்குச் சரியாகவே ஒருவன் தப்ப வேண்டுமானால் அவனுக்கு துக் கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் ல் குறிப்பிடப்பட்டிருந்தது, “ பாவம் ஏழை தம்பாபிஷேகமா நடத்தமுடியும்? என்று ST6)6.T விவரங்களையும் விவசாயியிடம் }க்கு நேர்ந்த அனுபவங்களை ஜோதிடரிடம் 5 ஜோதிடர் விவசாயிக்கு மேற்கெரிண்டு அனுப்பினார்.
ாவ்வாறு இடை யூறுகளை நீக்குகிறது
5l.
குத்தவர் சுவாமி கமலாத் மானந்தர்.
52 z

Page 30


Page 31