கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புத்தபகவான் அருளிய போதனை

Page 1


Page 2
էէէէէ
կ ֆի 激 ֆ
S.
பைசஜ்ய குரு-ட நோய்கள் எல்ல
வைத்திய கலாநி
 

|த்தர் மன்பதையின் ாவற்றையும் தீர்க்கும் தியாக-யப்பான் நாடு
1

Page 3
(i) புத்தர் சிலையின் மார்ப்பு
 

چA
பகுதி-தாய்லாந்து நாட்டுச் சிற்பம்.

Page 4
Գ
S.
岛
 

ֆի
வ-மதுரா, இந்தியா.

Page 5
(ii) களனி இரர்சமகா வி
 

காரையின் உட்தோற்றம்.

Page 6
(iv) புத்தரின் சிலை-சீன நாடு.
6
 

ପୂର୍ଣ୍ଣ
F క్రిక్ பு
HS,
క్రేక్టిక్ ន៍
(v) புத்தரின் சிலை-தீபெத் நாட்டிலிருந்து.

Page 7
ֆֆֆֆֆ
ֆֆֆֆֆ
էֆֆ
չիկիֆի
կ
క్తి ଜ୍ଞା ֆֆֆ ֆ ֆէ
փ
կֆ ֆ
|S ֆեի ֆի
புத் தருடைய தலை-ஆப்கானிஸ்தான் நாடு.
 

(vii) புத்தரின் சிலை-காப்போதியா நாட்டில்.
9

Page 8
コ
சஜாதா, என்பவள் புத் தருக்குப் பால்சோறு
 

அன்னதானம். பொரோ பதூர் ஜாவா நாடு.

Page 9
ֆ
 

R
ֆֆ
է
կի
游 էիփ
ଜ୍ଞା ֆֆ క్
փ
ֆֆ
ଜ୍ଞା
ֆ
փ է Էֆֆ
ՀՏՏՏՏՏ 4 இக்
சக்கரம்-தீபெத் நாடு.
10

Page 10
புத்தர் சிலை-ெ
(xi)
 

է ֆ ܵ ܵ
է:
ֆ
ֆ
ֆ
ֆ
பொரோபதுார், சாவக நாடு.

Page 11
效
(x) புத் தருடைய ப
 

ரிநிர்வாணம்

Page 12
வல்பொல
திரியிடக வாகீஸ்
புத்த பகவான்
(தமிழ்ப்
 

சிறி இராகுலர்
வராசார்யர் இயற்றிய
அருளிய போதனை
பதிப்பு-1989)
15

Page 13
போல் தெமிவியர்
அளித்த தொடக்கவுரையுடன்
பாளி மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பெற்ற
விளக்கப் பாடங்களின் தொகுப்பும் கொண்டது.
தமிழாக்கம் :
நவாலியூர் சோ. நடராசன்
பதிப்பாசிரியர் :
விசுவநாத் வச்சிரசேன
Pinted forfeedistribution by The Corporate Body of the Buddha Bducational Foundation 11F,55Hang Chow South Road Sec1, Taipei, Taiwan, R.O.C. Tel:886-2-2395.1198, Fax886-2-23913415 Email: overseasabudaedu.org.tw Website:http://www.budaedu.org.tw This book is strictly for free distribution, it is not for sale.
பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் வெளியீடு
அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
16

பொருளடக்கம்
Lydiastie
படங்களின் பட்டியல் & O (ν) தொடக்கவுரை (ix) முன்னுரை e. (Χii) புத்த பகவான் . . '0 (xvii)
அத்தியாயம் 1
பெளத்த எண்ணப் போக்கு
மனிதன் அதிமேன்மையுள்ளவன்-தானே தனக்குச் சரண்பொறுப்பு-ஐயம்-சிந்தனைச் சுதந்திரம்-சகிப்புத் தன்மைபுத்தசமயம் மதமா அல்லது தத்துவமா-வாய்மைக்கு அடையாள அட்டை இல்லை-குருட்டுத்தனமான நம்பிக்கை அல்லது விசுவாசம் அல்ல. ஆனல் காணுதலும் புரிந்து கொள்ளுதலும்-வாய்மைக் கும் அடிமையாகக்கூடாது-புணையின் உவமைக் கதைகற்பனைக் கருத்தோட்டங்கள் பயனற்றவை-செய்முறை எண்ணப் போக்கு-புண் உண்ட மனிதனின் உவமைக் கதை.
நான்கு உயர் வாய்மைகள்
அத்தியாயம் II
முதலாவது உயர் வாய்மை : துக்கம்
புத்த சமயத்தில் எதிலும் நலமே காண்கிற தன்மையோ தீமை காண்கிற தன்மையோ கிடையாது. அது யதார்த்தமான மாட்சியுடையது-துக்க என்பதன் பொருள்-அனுபவத்தின் மூன்று அமிசங்கள்-துக்கத்தின் மூன்று அமிசங்கள்- “உயிர்” என்ருல் யாது ? - ஐந்து கந்தங்கள்-சடப் பொருளுக்கு நேரெதிரான ஆன்மா இருப்பதில்லை-இடையருவோட்டம்சிந்திப்பருவம் சிந்தனையும்-வாழ்வுக்குத் தொடக்கம் உண்டா.
அத்தியாயம் II
இரண்டாவது உயர் வாய்மை சமுதய : துக்க உற்பத்தி :
துக்கத்தின் தோற்றம்-வரைவிலக்கணம்-நான்கு ஊட்டங் கள்-துக்கத்தினதும் இடையருமையினதும் மூலவேர்-தோற்றத் தினதும் ஒடுக்கத்தினதும் இயல்பு-கன்மமும் மறுபிறப்பும்மரணம் என்றல் யாது ?-மறுபிறப்பு என்றல் யாது ?
17
9
34

Page 14
அத்தியாயம் IV
மூன்ருவது உயர்வாய்மை : நிரோதம் : துக்க நிவாரணம்
நிவாரணம் - நிர்வாணமென்றல் யாது ? - பாரிபாடையும் பரமார்த்த வாய்மையும்-நிர்வாணம் பற்றிய வரைவிலக்கணங் கள்-நிர்வாணம் எதிர்மறையானது அல்ல-நிர்வாணமும் சம்சாரமும்-நிருவாணம் ஒரு விளைவுப் பொருள் அல்ல-நிரு வாணத்திற்கு அப்பால் என்ன இருக்கிறது ?-பிழையான கூற்றுக்கள்-மரணத்தின் பின்னர் அருகததிலை அடைந்தவர் கதி என்ன ?-ஆன்மா இல்லையாயின் நிருவாணத்தை எய்தப் பெறுபவர் யார் ?-இம்மையிலேயே நிருவாண சுகம் பெறுதல்.
அத்தியாயம் W
நான்காவது உயர் வாய்மை : மக்க : மார்க்கம்
மத்திய வழி அல்லது ஆரிய அட்டாங்கிக மார்க்கம்-கருணையும் ஞானமும்-ஒழுக்க சீலம்-மனக் கட்டுப்பாடு-ஞானம்--இரு வகைப்பட்ட அறிவு-நான்கு உயர் வாய்மைகள் பற்றிய நான்கு தொழிற்பாடுகள்.
அத்தியாயம் W
அணுத்மக் கோட்பாடு : அனத்த
ஆன்மா அல்லது தான் என்பது யாது?--கடவுளும் ஆன்மா
வும் : தற்பாதுகாப்பும் தன்னை அழிவின்றிப் பேணலும்எதிரோட்டமான போதனை-பகுத்து ஆராயும் முறையும் தொகுத்து ஆராயும் முறையும்-எதுத் தோற்றம்-துணிபாற்றல் கட்டுப்பாடற்றதா ?-இருவகையான உண்மைகள்-சில பிழை யான நோக்கங்கள்-புத்த பகவான் உறுதியாக ஆன்மா இல்லை
யெனக் கூறியுள்ளார்-புத்தருடைய மெளனம்-ஆன்மா என்ற
எண்ணம் போலியான வெளிப்பாடே-சரியான எண்ணப் போக்கு-ஆன்மா இல்லையெனில் கன்மத்தின்பலனை அனுபவிப் பவர் யார்-அணுதமக் கோட்பாடு எதிர்மறையானது அன்று.
18
4.
52
59፡

அத்தியாயம் W11
தியானம்-மனப் பயிற்சி : பாவனை Llé5th
தவருண நோக்குகள்-தியானம் என்பது வாழ்விலிருந்து தப்பியோடுதல் அல்ல-தியானத்தின் இரண்டு வகைகள்-மன விழிப்பை நிலைநாட்டுதல்-மூச்சு விடுதல் எடுத்தல் மீதான தியானம்-செய்யும் கருமங்களில் விழிப்பாய் இருத்தல்-இக் கணத்தில் வாழுதல்-உணர்ச்சிகள் பற்றியது தியானம்-மனம் பற்றியது-ஒழுக்க, ஆன்மீக, பகுத்தறிவார்ந்த விடயங்கள் பற்றியது.
அத்தியாயம் WIII
புத்த பகவான் அருளிய போதனையும் இன்றைய உலகமும் :
தவருண நோக்குகள்-யாவருக்கும் பொருத்தமான பெளத் தம்-அன்ருட வாழ்வில்-குடும்ப வாழ்வும் சமுதாய வாழ்வும்உயர்வாக மதிக்கப்பட்ட இல்லற வாழ்வு-பெளத்தர் ஆவது எங்ங்னம்-சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள்-வறுமை : குற்றச் செயலுக்கான காரணம்-லெளகீக மற்றும் ஆன்மீக முன் னேற்றம்-இல்லறத்தாருக்குரிய நான்கு வகை இன்பங்கள்அரசியல், யுத்தம், சமாதானம் ஆகியவைபற்றி-அகிம்சை-ஆள் பவர் ஆற்றவேண்டிய பத்துக் கடமைகள்-புத்தருடைய நற்செய்தி -அது நடைமுறைக்கு ஒத்ததா ?-அசோகனின் முன்மாதிரிபெளத்தத்தின் குறிக்கோள். 8
தெரிந்தெடுக்கப் பெற்ற சில சூத்திரங்கள்
தம்ம சக்கப் பவத்தன சுத்த-அறவாழி ஒச்சுதல்புத்த பகவானின் முதல் உபதேசம் எரி அனல் அறவுரை (ஆதித்த பரியாய சுத்த) எல்லையற்ற கருணை (மெத்த சுத்த) மங்களம் (மங்கள சுத்த) is சகல கவலைகளையும் துன்பங்களையும் ஒழித்தல்
(சப்பாசவ சுத்த) வஸ்திரம் பற்றிய கதை (வத்தூபம சுத்த) விழிப்பு நிலையில் இருத்தல் (சதிபட்டானம்) சிகாலனுக்கு அறவுரை (சிகாலோவாத சுத்த) அறவுரை (தம்மபதம்) புத்த பகவானின் இmகி வார்த்தைகள்
19
79
9.
108
O 14 117 18 19
126 130 14 1.59 62

Page 15
பைசஜ்ய
விளக்கப் படங்கள்
முகப்புப் படம்
குருவாக காட்சியளிக்கும் புத்த பகவான் (கொழும்பில்
பதிப்பிக்கப்பெற்ற அங்குத்தர நிகாயத்தில் “ பைசக்கு ’ எனக் குறிப் பிடப் பெற்றுள்ளது. பக்கம் 822) மன்பதையின் நோய்கள் எல்லா வற்றையும் தீர்க்கும் வைத்திய கலாநிதியாக அவர் இடது கையில்
மருந்துப்
பேழையைத் தாங்குகிறர். உயர்த்தப் பெற்ற வலது
கையில் அபய முத்திரை உள்ளது. அபய முத்திரை பாதுகாப்பினையும் அமைதியையும் அளிக்கும் சின்னமாகும். யசுகி நியோருய் என்னும் சிற்பியால் மரத்தால் செதுக்கப்பட்டது. 9 ஆம் நூற்றண்டுக்குரியது. கங்கோஜி ஆலயம், யப்பான் நாடு. நிழற்படம் புல்லோஸ், பாரிசு
மாநகரம்.
28 ஆம், 29 ஆம் பக்கங்களுக்கிடையில்
(i) புத்தருடைய மார்புப் பகுதி வெண்கலத்தாலானது. தாய்
லாந்து நாட்டில் சுகோதைய் என்னுமிடத்தைச் சேர்ந்தது. 14 ஆம் நூற்ருண்டுக்குரியது. பாரிசு நகரத்து குய்மே நூதனசாலை பிரெஞ்சு நாட்டு தேசிய நூதனசாலையின் அனுசரணையுடன்.
45, 46 ஆகிய பக்கங்களுக்கிடையில்
(i) இலங்கையின் களனியா இராசமகா விகாரையின் உள்
(iii)
(iv)
தோற்றம். இந்த ஒவியங்கள் 18 ஆம் 19 ஆம் நூற்றண்டு களுக்குரியன. கர்ப்பக் கிருகத்தில் உள்ள பிரதிமை புதி தாகக் கட்டப்பெற்றது. இந்த விகாரையின் வரலாறு கி. மு. 1 ஆம் நூற்றண்டு வரை நீண்டது.
புத்தர், மதுரா, இந்தியா-5 ஆம் நூற்றண்டுக்குரியது. மதுரா நூதனசாலை. கே. டீ. மிஸ்ராவின் படப்பிடிப்பு. மதுரா அரச நூதனசாலையின் அனுசரணையுடன்.
புத்தர்-யுன் காங் பாணியில் அமைந்தது. 5 ஆம் நூற் ருண்டின் இறுதிக்காலம். பாரிஸ் மாநகரத்து குய்மே நூதனசாலை. பிரான்சில் தேசிய நூதனசாலைகள் நிறுவ னத்தின் அநுசரணையுடன்.
20

73, 74 ஆகிய பக்கங்களுக்கிடையில்
(v) தமது வலது உள்ளங்கையில் நெல்லிக் கனியை (அல்லது
(νi)
(vii)
(viii)
(ix)
(x)
மாணிக்கத்தை) காட்டும் புத்தர், “ வந்து பாருங்கள் ” (எஹிபஸ்விக) என்னும் சொற்ருெடரின் சிறப்பினைக் காட்டுவதாய் உள்ளது. புத்தரின் இந்த போதனை பற்றி 19 ஆம் பக்கத்தைப் பார்க்கவும். திபெத் நாட்டு வெண் கலச் சிற்பம். பாரிஸ் மாநகரத்து குய்மே நூதனசாலை, பிரான்சில் தேசீய நூதனசாலைகள் நிறுவனத்தின் அனு சரணையுடன்.
புத்தருடைய தலை, ஹத்தா, ஆப்கானிஸ்தான். குழிை காரையால் செய்யப்பெற்றது. கிரேக்க-இந்தியப் பாணி, 3 ஆம் நூற்றண்டு முதல் 4 ஆம் நூற்றண்டு வரை. பாரிஸ் மாநகரத்தின் குய்மே நூதனசாலை, பிரான்சின் தேசீய நூதனசாலைகள் நிறுவனத்தின் அனுசரணை யுடன.
புத்தர், பிரகான், காம்போதியா, கேமேர் கவின் கலை மரபு. பேயொன் பாணியில் அமைந்தது. 12 ஆம் நூற் ருண்டுக்குரியது. பாரிஸ் மாநகரத்து குய்மே நூதன சாலை. பிரான்சின் தேசீய நூதனசாலைகள் நிறுவனத் தின் அனுசரணையுடன்.
சம்சார சக்கரம் அல்லது பவ சக்கரம். பிறவி தோறும் பிறவி எடுக்கும் சக்கரம். இலண்டன் மாநகரத்து விக் டோரியா, அல்பேட் நூதனசாலையின் அனுசரணையுடன்.
87, 88 ஆகிய பக்கங்களுக்கிடையில்
புத்த பகவான் ஞான ஒளி பெற்ற ஞான்று சுயாதை என்னும் குலமகள் பாற்சோறு அன்னதானம் செய்தல். பொரோபுதுர், சாவகம், 8 ஆம் நூற்றண்டுக்குரியது. பிரான்சின் தேசிய நூதனசாலைகள் நிறுவனத்தின் அனுசரணையுடன்.
புத்தருடைய பரி நிர்வாணம். அஜந்தா, இந்தியா 26 ஆம் குகை. 8 ஆம் நூற்ருண்டுக்குரியது. பிரான்சின் தேசிய நூதனசாலைகள் நிறுவனத்தின் அனுசரணையுடன்.
21

Page 16
108, 109 ஆகிய பக்கங்களுக்கிடையில்
(Xi) புத்தர். பொரோபுதூர், சாவகம், 8 ஆம் நூற்றண்டுக் (3flug.J. GSuS)L667 Lost||565|Jég) Rijksmuseum Voor Wokenkunde என்னும் நூதனசாலையின் அனுசர னையுடன்.
உறை வேலைப்பாடு
இலங்கையின் பெளத்த மடாலயமொன்றைச் சேர்ந்த பழைய
மரபு வழிக்கேற்ப எழுதித் தீட்டப் பெற்ற േഖ புத்தகத்தின் மரத்தாலான உறையிலிருந்து இந்த மாதிரி உரு பிரதி பண்ணப் பட்டுள்ளது. எச். எஸ். பரோவின் ஒவிய வேலைப்பாடு
22

தொடக்கவுரை
போல் தெமிவியர் (பிரான்ஸ் கல்விக் கழக அங்கத்தவர்)
பிரான்ஸ் கல்லூரிப் பேராசிரியர்.
பாரிஸ் உயர் ஆராய்ச்சிக் கல்லூரியில் பெளத்த ஆராய்ச்சி இயக்குநர்
புத்த சமயத்தில் மிக உயர்ந்த தகைமையும், சிறந்த ஞானமும் உள்ளவரும், அதன் பிரதிநிதிகளில் ஒருவருமான, இந்த ஆசிரிய ரால் இக்காலப் போக்குக்கு ஏற்ற முறையில் திடமாகத் திட்டமிடப் பட்ட ஒரு விளக்கத்தை இந்த நூலிலே காணலாம். வணக்கத்துக் குரிய கலாநிதி வல்பொல ராஹுலர், பெளத்த பிக்குவுக்குரிய சம்பிரதாய முறையான பயிற்சியையும், கல்வியையும் இலங்கையில் பெற்று, அந்நாட்டிலுள்ள சிறந்த பிரிவேணுக்களுள் முதன்மை வாய்ந்த ஒன்றில் பல உயர் பதவிகளை வகித்தார். இந்த வித்தியா பீடத்தில் அசோகன் காலந்துவங்கி புத்த தருமம் சிறப்போடு வளர்ந்து இன்றுவரை அத்தர்மத்தின் உயர் ஒட்டம் குன்ருது விளங்கி வருகிறது. புராதன கல்வி மரபில் வளர்ந்த அவர், மரபுகளெல்லாம் ஆட்சேபிக்கப்பட்டுவரும் இக்காலத்தில், சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி முறையில் பயிற்சி பெற வேண்டுமென்று தீர்மானித்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்து கலை மாணி விசேட பட்டத்தை லண்டன் சர்வகலாசாலைப் பரீட்சையில் பெற்ருர். பின்னர் இலங்கையில் புத்த சமயம் வளர்ந்த வரலாற் றைப் பற்றி மிகச் சிறப்பான ஆராய்ச்சி நூலை எழுதி, இலங்கை சர்வகலாசாலை வழங்கிய கலாநிதிப் பட்டத்தைப் பெற்றர். பின்னர் கல்கத்தா சர்வகலாசாலையில் சேர்ந்து, அங்குள்ள பிரசித்த பெற்ற பேராசிரியர்களோடு ஒருமித்து ஆராய்ச்சி நடத்திய காலத்தில், மகா யான பெளத்தத்தில் விசேட அறிவு பெற்ற அறிஞர்களின் தொடர் பைப் பெற்றர். திபேத்திலிருந்து தூரகிழக்கு நாடுகள் வரை பரந் துள்ளது இந்த மகாயான பெளத்தமே. இதன் பயனக அவர் தமது அறிவை விரிவுபடுத்துவதற்காக திபேத்திய மொழியிலும், சீன மொழியிலுமுள்ள பெளத்த நூல்களை ஆராய்ந்தார். பின்னர் பாரிஸ் சர்வகலாசாலை (சோபோண்) யில் சேர்வதன் மூலம் எங்களைக் கெளரவப்படுத்தினர். அங்கே பிரசித்திபெற்ற புராதன மகாயானத் தத்துவ அறிஞரான அசங்க ஆசாரியரின் சிந்தனைகளை ஆராய்ந்தார். அசங்காசாரியர் சமஸ்கிருதத்தில் எழுதிய நூல்கள் இன்று மறைந்து
23

Page 17
விட்டன. அவை இன்று திபேத்திய மொழியிலும் சீன மொழி மிலுமே மொழிபெயர்ப்பு வடிவத்தில் விளங்குகின்றன. கடந்த எட்டு வருடமாக அவர் சீவர ஆடை அணிந்து துறவியாக எம்முடன் வாழ்ந்து, மேல்நாட்டு வாடையைச் சுவாசித்து, நமது பழைய மங்க லான கண்ணுடியில், தமது சமயத்தின் சர்வவியாபகமானதோர் பிரதி பிம்பத்தைக் காணலாமென்ற நாட்டமுடையவராயிருக்கிருர்.
மேனுட்டவர்க்கு அறிமுகஞ் செய்யுமாறு அவர் என்னை அன்போடு கேட்டுக் கொண்ட இந்நூல் பெளத்த தர்மத்தின் மூலாதாரமான கொள்கைகளை எல்லாரும் அறிந்து கொள்ளக்கூடியவாறு விளக்க மாக எழுதப்பட்டுள்ளது. வடமொழியில் " ஆகமங்கள் ” என வழங் கப்படுவதும், பாளியில் “ நிகாயங்கள் ” என வழங்கப்படுவதுமான, பழைய பெளத்த கிரந்தங்களில் காணப்பட்ட கருத்துக்கள் இக் கிரந்தங்களிலே உண்டு. கலாநிதி ராகுல தேரருக்குரிய அறிவு ஒப்புயர் வற்றது. அவற்றை அவர் அடிக்கடி பிரத்தியேகமாக மேற்கோள் காட்டிச் செல்வர். பெளத்த சமயத்திலே பல கிளைகளுண்டு. அவை முன்னுமிருந்தன. இப்பொழுதுமிருந்து வருகின்றன. இக்கிளைகளெல் லாம் இங்கு கூறிய பெளத்த கிரந்தங்களையே தம் பிரமான நூலாகக் கொள்ளுகின்றன. தருமத்தை நன்கனம் விளக்குவதற்கன்றி வேறெக் காரணங் கொண்டும் இக்கிளேகள் இப்பிரமாண நூல்களிலிருந்து விலகுவது கிடையாது. பெளத்த சமயம் பல நூற்றண்டாகப் பல தேசங்களில் பரவிய காரணத்தால் இந்த விளக்கம் இயல்பாகவே பலபட விரிந்து செல்ல வேண்டியதாயிற்று. அதனல் அத்தர்மம் பல தோற்றங்களை காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனல் கலாநிதி இராகுலர் இங்கு மேற்கொள்ளும் போக்கு மனிதாபிமானமுடையது. பகுத்தறிவு வாதம் சார்ந்தது. சில அமிசங்களில் சோக்கிரதரின் ஆராய்ச்சிப் போக்குடையது. வேறு சில அமிசங்களில் பிரசாரப் போக்குடையது. அல்லது பெரும்பாலும் விஞ்ஞான ஆராய்ச்சி போக் குடையது. தமது கருத்துக்களுக்கெல்லாம், பிரமான நூல்கள் பல வற்றை ஆதாரமாகக் கொள்ளுகிறர். அவர் அவ்வாதாரங்களை எடுத்துக் காட்டி அவற்றையே டேசவிடுகிறர்.
மேற்கோளாக எடுத்துக்காட்டும் சூத்திரங்களை நுட்பமாகவும், அச் சொட்டாகவும், தெளிவாகவும், இலேசாகவும், நேரடியாகவும், பகட்டுப் புலமை ஆரவாரம் சிறிது மின்றி மொழிபெயர்த்திருக்கிறர். அவற்றுள் சில, மகாயானக் கோட்பாடுகளின் ஊற்று எல்லாம் பாளியிலேயுண்டு என்பதைத் தெருட்டும் நோக்கமுடையனவாயிருக் கும் பட்சத்தில், சர்ச்சைக்குரியனவாக அமையலாம். ஆனல் அவற். றில் அவருக்குரிய பரிச்சயத்தின் காரணமாக அவற்றைப் பற்றிப் புதிய விளக்கத்தைக் கொடுக்கிறர். அவர் தற்கால மனிதனைக் கருத்தில் கொண்டு எழுதினனும், பொதுவுடைமை, நிரீச்சுரவாதம்,
24

அர்த்தமற்ற விசுவத்திலுள்ள மனிதன் தன் தருக்க ரீதிக்கு மாறன நிலையை முற்ருக உணர்வதன் மூலமே விடுதலைபெற முடியுமென்ற தத்துவக் கோட்பாடு (எக்விஸ்டென்சியலிஸம்) உளவியல் ஆராய்ச்சி, என்ற சில இக்காலச் சிந்தனை ஓட்டங்களை ஆங்காங்கு சுட்டிக்காட்டிய போதிலும் அவற்றேடு பெளத்தத்தை ஒப்பிட்டுப் பார்க்குமாறு வலி யுறுத்தவில்லை. இங்கே பெளத்தம் அதன் ஆதிவளம் பொலிய உண்மையான புலமையுடன் விளக்கப்பட்டிருப்பதால், அதில் தொக்கு நிற்கும் தற்காலச் சிந்தனைச் செறிவையும் அதற்கேற்றவாறு அத் தருமத்தை விளக்கும் தகைமைப்பாட்டையும் வாசகரே உணர்ந்து கவைக்க வேண்டும்.
25

Page 18
முன்னுரை
இன்று உலகெங்கும், புத்தசமயத்தை அறிந்து கொள்ள வேண்டு மென்ற விருப்பம் வளர்ந்து வருகிறது. பல சங்கங்களும், ஆராய்ச் சிக்கழகங்களும் தோன்றியுள்ளன. புத்த பகவானுடைய போதனையை விளக்கும் எராளமான நூல்கள் வெளியாகியுள்ளன. ஆனல் இவற் றுள் பெரும்பாலானவை தகைமையற்றவர்களால் எழுதப்பட்டுள்ளன. அல்லது வேறு சமயங்களிற் காணப்படும் கருதுகோள்களைப் புகுத்தி பெளத்தத்தைத் தவறக விளக்குகின்றன. சமயங்களைப் பற்றி ஒபபியல் முறையில் ஆராய்ந்த ஒரு பேராசிரியர், புத்தபகவானின் அணுக்கத் தொண்டரான ஆனந்தர் பிக்கு என்பதைக் கூட அறியாது அவர் உபாசகர் என சமீபத்தில் எழுதிய தம் நூலில் குறிப்பிட்டார். இத்தகைய நூல்கள் எவ்வாறிருக்குமென்பதை வாசகர்களே கற்பனை செய்து கொள்ள வேண்டும்.
புத்தர் உண்மையில் போதித்தது என்னைன்பதை அறியவிரும்பு வோரும் அதைப்பற்றி இதுவரை அறிந்திராதவரும் கல்வி அறிவும் விவேகமும் உள்ளவர்களுமான சாதாரண வாசகரின் நன்மையை முதலிற் கருத்திற் கொண்டே இச் சிறு நூலை எழுத முற்படுகிறேன். பகவான் திருவாய் மலர்ந்தருளிய போதனைகளில் மிகப் பழையவை யும் இப்போது கிடைக்கக்கூடியவையுமென ஆராய்ச்சியாளரால் எங்கும் ஒப்புக்கொள்ளப்பட்டவையுமான திரிபிடகப் பாளிக்கிரந்தங் களில் காணப்படும் வாக்கியங்களையே மாற்றமின்றி அப்படியே ஒல்லும் வகையால் இலேசாகவும் நேரடியாகவும், எடுத்தாள முயல்கிறேன். இங்கு பயன்படுத்தப்படும் விடயங்களும் மேற்கோளாகக் காட்டப்பட்டவையும் மூலக்கிரந்தங்களிலிருந்து நேராக எடுக்கப்பட் டுள்ளன. சில இடங்களில் பிந்திய காலத்து நூல்களையும் குறிப்பிட் டுள்ளேன்.
எற்கனவே புத்தருடைய போதனைகளைப் பற்றிச் சிறிது அறிந்துள்ள வாசகர் இருப்பார்கள். மேலும் தம்மறிவை விசாலமாக்க விரும்பும் அத்தகைய வாசகரின் தேவைகளையும் கருத்தில் கொண்டுள்ளேன். அதனல் முக்கியமான அரும்பதங்கள் பெரும்பாலானவை குறிக்கும் பாளிச்சொற்களைக் குறிப்பிடுவதோடு அவைவரும் மூலகிரந்தங்களை அடிக் குறிப்பாகக் கொடுத்திருக்கிறேன். அதனேடு தெரிந்து எடுத்த பெளத்த சம்பந்தமான உசாத்துணை நூல் அட்டவணையும் சேர்த்துள்ளேன்.
நாம் மேற்கொண்ட இப்பணி இலேசானதன்று. சாதாரணமாகப் பழக்கமில்லாத கருத்துக்களுண்டு : மிகப்பழக்கமான சனரஞ்சகமான
26

கருத்துக்களுமுண்டு. நான் இவற்றிடையே நடுவழியைப் பின் பற்றி இக்காலத்து ஆங்கில மொழி வாசிப்போர் புத்த பகவானுடைய பிரசங்கங்களின் கருத்தையோ அவை பொதிந்த வடிவத்தையோ நன்கு புரிந்து, குறைவின்றி விளங்கிக் கொள்ளும் முறையில் முயன்றுள்ன்ேன். இந்நூலை எழுதும்போது பழைய பாளிப் பனுவல்களின் ஞ்ாபகம் வந்து கொண்டேயிருக்கும். அதனல் பகவான் அவற்றில் பயன்படுத்தும் ஒரு பொருட் பன்மொழிகளையும் கூறியது கூறல்களையும் கர்ண பரம்பரையாக அவை வந்தபடி அப் படியே பாதுகாத்துள்ளேன். பகவான் அனுசரித்த போதனை, முறையை அறிந்து கொள்வதற்கு இது உதவியாக இருக்கும் மூல கிரந்தங்களில் உள்ளவற்றைப் பெரிதும் அனுசரித்து மொழி பெயர்ப்புக்களே இலேசாகவும் சிரமமின்றி வாசிக்கக் கூடியதாகவும் செய்துள்ளேன்.
ஆனல் இதற்கு ஒரு எல்லையுண்டு. இலேசாக்கும் வேளையில் ஒரு கருத்தை பகவான் என்ன வகையில் வளர்க்க விரும்புகிறரோ அதனை எல்லை கடந்து இலோசக்க முயன்ருல் அதன் விசேடக் கருத்து மாறுபடலாம். கருத்து இலேசாகப் புரிய வேண்டுமென்பதற்காக, அதை விகாரப்படுத்த நாம் விரும்பவில்லை. அதனுல் “புத்தர் போதனை” என்ற இந்நூலின் பெயருக்கு ஏற்றவாறே அவர் கூறிய வார்த்தைகளையும், அவர் பயன்படுத்திய உருவகங்களையும் அப்படியே பயன்படுத்தியுள்ளேன்.
பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவரும் புத்தருடைய போதனை யின் அடிப்படைக் கொள்கைகளையும், சாரத்தையும் எல்லாம் இந் நூலில் ஆராய்த்துள்ளேன். இவை நான்கு மேலான சத்தியங்கள், எட்டு உயர் நெறிகள் (ஆரிய அட்டாங்கமார்க்கம்) பஞ்சக்கந்தங்கள், கன்மம், மறுபிறப்பு, படிச்ச சமுப்பாதம், அனத்மவாதம், சதிபட்டானம் என்ற நல்லகடைப்பிடி என்பனவாகும். இந்த ஆராய்ச் சியில் மேல்நாட்டவர்க்குப் பழக்கமில்லாத சொற்பிரயோகங்களிலி ருக்கலாம். எனவே முதல்முறை நூலை வாசிக்கும் போது முதல் அத்தியாயத்தை வாசித்தபின், ஐந்தாம், எழாம், எட்டாம், அத்தி யாயங்களை வாசிக்குமாறும் பின்னர் இரண்டாம், மூன்றம், நாலாம் ஆறம் அத்தியாயங்களை பொதுவாகக் கருத்துக்கள் தெளிவானதும் வாசிக்குமாறும் கேட்டுக் கொள்ளுகிறேன்.
புத்தரின் போதனைகளைப் பற்றி எழுதும் போது மூலக்கருத்துக்க ளாக எற்றுக்கொள்ளப்பட்ட தேரவாதம் மகாயானம் என்ற கருத்துக் களை ஆராயாமலிருக்க முடியாது. - Ar
தேரவாதம், ஹீனயானம்-“சிறியபுனை” எனவும் வழங்கப்பட்ட போதிலும் அறிஞரிடையே ஹரீனயானம் என்ற வழக்கு அருகி
27

Page 19
விட்டது. தேரவாதம் என்ருல் தேரர்-முதியவரின் கோட்பாடு என்று பொருள்படும்-பெளத்தத்தின் மற்றப்பிரிவு மகாயானம். மகாயான மென்றல் பெரிய புணை, இன்று உலகில் பெருவழக்காயுள்ள பெளத்தப்பெரும்பிரிவுகள் இவையே. ஆதியில் நிலவி வந்த பெளத் தம் தேரவாதம். அது இன்று இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், கிழக்குப் பாகிஸ்தானிலுள்ள சிட்ட கோங் ஆகிய நாடுகளில் நிலவி வருகிறது. முக்கியமாகச் சில கோட்பாடுகள், ஆசாரங்கள், அனுட்டானங்கள் என்பவற்றில் இவ்விரு பிரிவுகளி டையே சில வேறுபாடுகளுண்டு. ஆனல் மிக முக்கியமான போதனை களில் வேற்றுமை கிடையாது. அவை இங்கே ஆராயப்படுகின்றன.
பேராசிரியர் ஈ. எவ். சி. லுடோவைக் அவர்களுக்கு என் நன்றியறி தலைத் தெரிவிக்கிறேன். இந்நூலை எழுதுமாறு கேட்டுக் கொண்டவர் அவரே. அவர் பல வகையில் செய்த உதவிகளுக்காகவும், இந்நூல் பற்றிக் கூறிய ஆலோசனைகளுக்காகவும், இதன் கையெழுத்துப் பிரதியை வாசித்துக் கூறியயோசனைகளுக்காகவும் நன்றி தெரிவிக் கிறேன். இதன் கையெழுத்துப் பிரதியை வாசித்துப்பயனுள்ள ஆலோசனைகளைக் கூறிய செல்வி மரியானே மொன் அவர்களுக்கும் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். பாரிசில் என் ஆசிரியரா யிருந்த பேராசிரியர் தெeவியர் அவர்கள் அன்புடன் இந்நூலுக்கு முகவுரை வழங்கியதற்காகப் பெரிதும் கடப்பாடுடையேன்.
டப்ளியூ. ராகுல
பாரிஸ்,
ත්‍රිෂ්ෂීබා 1958.
பதிப்பாசிரியரின் குறிப்பு
இவ்வரிய நூலைத் தமிழில் யாத்த பன்மொழிப் புலவர் நவாலியூர் சோ. நடராசன்
1988 யூன் மாதம் 20 ஆந் திகதி இவ்வுலகத்தை விட்டுப் பிரிந்தார்.
-விசுவநாத் வச்சிரசேன
28

மணிக்கு
சமர்ப்பணம்
சப்பதானம் தம்மதானம் ஜினதி
எல்லாத் தானங்களிலும் சிறந்தது தர்மதானம்
29

Page 20
புத்தப
புத்தரின் இயற்பெயர் சித்த அவருடைய கோத்திரப்பெயர் அவர் கி.மு. ஆரும் நூற்றண் அவருடைய தந்தை சுத்தோ: இஃது இன்று நேபாளராச்சிய மாயா என்ற பெருடைய ராண தருக்கு பதினறு வயதான கற்புடைய அரசகுமாரியை ம6 தார்த்தர் சகல சுகபோகங் வந்தார். ஆனல் வாழ்வின் அனுபவித்துவரும் துன்பங்களை குத் தீர்வுகாண வேண்டுமென லைத் தீர்க்க வழிகாண கொண்டார். தமது 29 ஆவது குழந்தைக்குத் தந்தையான பே யின் துன்பத்தை நீக்கும் ம யாஞர்.
இவ்வாறு கோதமர் பரிவிரா தாக்கில் அலைந்து திரிந்தார். களைச் சந்தித்தார். அவர்களுை பயின்று அவற்றைப் பின்பற்றி ஆனல் அவருக்குத் திருப்தி கிை சமயங்களையும் வைதீக முறைக எற்ற வழியில் சென்றர். இவ் விலுள்ள (இந்நகர் இன்று சமீபத்திலுள்ளது) நிரஞ்ஜரா ந மரம் அந்நாளிலிருந்து, “போ என வழங்கப்படுகின்றது) இருந் அவருக்கு வயது மூப்பத்தை பின்னர் அவர் “ புத்தர் ” (ஞா பெற்றர்.
இவ்வாறு ஞானம் பெற்ற ெ
களான ஐந்து சந்நியாசிகளுக்கு என்ற நகரில் உள்ள மான்தே

கவான்
த்த. வடமொழியில் சித்தார்த்தர் :
கோதமர். (வடமொழி கெளதமர்) , டிலே வட இந்தியாவில் வாழ்ந்தார். தனர் சாக்கியர் அரசை ஆண்டார். பத்திலுள்ளது. அவருடைய தாயார் ரி. அக்கால வழக்கப்படி சித்தார்த் தும் யசோதரா என்ற அழகிய ணந்தார். அரசிளங்குமாரனன சித் களையும் அனுபவித்து வாழ்ந்து உண்மை நிலையையும் மனிதகுலம் பும் அவர் திடீரென உணர்ந்து அதற் நிச்சயித்தார். மன்பதைபடும் அல்ல வேண்டுமெனத் திட சங்கற்பங் வயதில், அவர் ராகுலர் என்ற ஒரு து, ராச்சியத்தைத் துறந்து, மன்பதை ார்க்கத்தைக் காண்பதற்காகத் துறவி
ஜகராக ஆறுவருடம் கங்கைப்பள்ளத் பிரசித்தி பெற்றபல சமய ஆசாரியர் டய சமயமுறைகளையும், பயிற்சிகளையும் னர். கொடிய தவங்களைச் செய்தார். ]டக்க வில்லை. எனவே பரம்பரையான ஃளயும், கைவிட்டுத் தன் மனதுக்கு பவாறு ஒரு நாள் மாலை புத்தகாயா பீகாரைச் சேர்ந்த கயா நகருக்குச் திக்கரையில் ஒரு மரத்தினடியில் (இம் தி மரம் ” அதாவது ஞான விருட்சம் து ஞான ஒளி பெற்றர். அப்போது ந்து. இந்த ஞானதரிசனம் பெற்ற ன ஒளி) பெற்றவர் என்ற பெயரைப்
களதமயுத்தர் தமது பழைய நண்பர் க் காசிக்குச் சமீபத்திலுள்ள இசிபதன ாப்பில், முதலாவது தருமோபதேசத்
31

Page 21
தைச் செய்தார். இசிபதன நகரம் இன்று சாரநாத் என வழங்கும். அன்று தொட்டு நாற்பத்தைந்து வருடமாக அவர் சகல வகுப்பையும் சேர்ந்த ஆண் பெண் இருபாலார்க்கும் புத்ததருமத்தைப் போதித் தார். அரசரும் பாமரரும் பிராமணரும், ஈனசாதியினரும், செல் வரும் பிச்சைக்காரரும், துறவிகளும் கொள்ளைக்காரரும் என்ற எத் திறத்தவரிக்கும் எவ்வித பேதமுமின்றிப் போதித்தார். அவர் சாதி பேதமோ, சமூக அந்தஸ்தோ பார்க்கவில்லை. எவர் தமது தர்மத் தைப் புரிந்து கொண்டு அதை அனுட்டிக்கவிரும்பினரோ அவர்களுக் கெல்லாம் அவர் தருமத்தைப் போதித்தார். ஆண்பெண் வித் தியாசமின்றி எல்லார்க்கும் தருமத்தின் வழி திறக்கப்பட்டிருந்தது.
இன்று உத்தரப் பிரதேசம் என்று வழங்கப்படும் வட இந்தியா விலுள்ள பகுதியில் அக்காலத்தில் குசிநாரா என்று பெயர் பெற்ற நகரிலே புத்தர் தமது எண்பதாவது வயதில் பரிநிர்வாணமடைந்தார்.
இன்று பெளத்தம் இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போஜியா, லாவோஸ், வியட்நாம், திபேத்து, சீன, ஜப்பான், மொங்கோலியா, கோரியா, போர்மோசா, ஆகிய தேசங்களிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலும் சோவியத் ராச்சியத்திலும் காணப்படுகிறது. உலகில் இன்று 50 கோடிக்கு அதிகமானேர் பெளத்த சமயத்தை அனுட்டிக்கிறர்கள்.
32

பெளத்த எண்ணப் போக்கு
1 ஆம் அத்தியாயம்
உலகத்துச் சமயத்தாபகர்களுள் புத்தபகவான் ஒருவர் தாம் தம் மை ஒரு சாதாரண மனிதன் என ஒப்புக் கொண்டவர். சமயத்தாபகர் என்று அவரைக் கூறுவதானல் பொது வழக்கிலுள்ள சாதாரண அர்த்தத்திலே தான் அவ்வாறு கூறலாம். ஏனைய சமயத் தாபகர்கள் தம்மைக் கடவுளாகவோ, கடவுளின் பல வடிவு கொண்ட அவதாரமாகவோ, கடவுளின் அருள் பெற்றவராகவோ கருதினர். புத்தர் தாம் சாதாரண மனிதப் பிறவியென ஒப்புக் கொண்டது மாத்திரமன்றி, எந்தத் தெய்வத்தின் அருளோ, எந்த விதமான புறச்சக்தியின் ஆற்றலோ தமக்கிருந்ததாகக் கூறிக் கொள்ளவில்லை. மனிதமுயற்சியையும் மனித விவேகத்தையும் கொண்டே தாம் சாதித்த சாதனைகளும் பெற்ற பேறுகளும் தமக்கு வாய்த்தன வென்று கூறினர். மனித நிலையில் உள்ள ஒருவனே புத்தப் பேற்றை அடைய முடியும். திடசங்கற்பத்தோடு முயலும் எந்த மனிதனும் புத்தநிலையை அடையக் கூடிய திறமை உடையவன யிருக்கிறன். அதனல் புத்தர் மனிதருள் மிகச் சிறந்தவர் என்று கூறலாம். அவரிடத்து பூரணமான மனிதப் பண்பு நிறைந்ததிருந்த படியால் பிற்காலத்தில் சமயபக்தியுடையவர்கள் அவரை * அதி மனிதன் ” எனக் கொண்டாடினர்.
பெளத்தக் கோட்பாட்டின் படி மனிதனே மிக உயர்ந்தபடியில் உள்ளவன். தனக்குத்தானே தலைவனுயிருப்பவன் மனிதன். அவ னுடைய விதியை நிர்ணயிக்க அவனைவிட மேலான சக்தி எங்கு மில்லை.
" தானே தனக்குச் சரண். வேறுயார்தனக்குச் சரணுயிருக்க முடி யும் ?” என்று பகவான் கூறியிருக்கிறர். "நீங்களே உங்களுக்குச் சரணுயிருங்கள் ” வேறு எந்த் இடத்திலும் சரண்புக வேண்டியது மில்லை, வேறு எவரிடமும் உதவிதேட வேண்டியதுமில்லை- என அவர் தமது சீடர்க்கு அறிவுரை கூறினர்?
மனிதன் தன் முயற்சியாலும் விவேகத்தினலும் தன்னைப் பந்தி த்ததழைகளை யெல்லாம் அறுக்கும் திறமுடையவனென்பதால் அவன் தன்னை வளர்த்துக் கொள்ளுமாறு பகவான் மனிதனுக்கு அறிவுரை
1. Dhp, XIII 4. 2. DI (கொழும்பு 1929 பக் 62 மகாபரிநிப்பாண சுத்த).

Page 22
வழங்கி உற்சாகமூட்டித் தூண்டினர். "நீங்கள் உங்கள் கருமங்களை நீங்களே செய்ய வேண்டும். ததாகதர்கள் உங்களுக்கு வழியை மாத்திரம் காட்டுவார்கள்?’ என்று புத்தபகவான் கூறியுள்ளார்.
புத்தரை"ரட்சகர்” என்று குறிப்பிடுவதானல் இந்த அர்த்தத்தி லேதான் குறிப்பிடலாம். அதாவது நிர்வாணமென்ற விடுதலைக்கு வழியைக் கண்டு காட்டியவர் என்ற வகையில். ஆனல் அந்த வழியில் நாங்களே நடந்து விடுதலை பெற வேண்டுமேயன்றி எங்களுக் காக இன்னெருவர் விடுதலையைப் பெற்றுத் தரமுடியாது.
இது தனிப்பட்டவர்களுடைய பொறுப்பு. இக் கோட்பாட்டின்படி தான் புத்தர் தம் சீடர்க்குச் சுதந்திரம் வழங்கியுள்ளார். சங்கத்தை? "நான் கட்டுப்படுத்திப் பரிபாலிக்க எக்காலத்திலும் நினைத்ததில்லை, அல்லது சங்கம் என்னில் தங்கியிருக்க வேண்டுமென எண்ணவில்லை” என “மஹா பரி நிப்பாணசுத்தத்தில்” பகவான் கூறியுள்ளார். தமது போதனையில், சிலருக்கு மாத்திரம் சொல்லிக் கொடுக்கக் கூடிய மறைபொருள் ஒன்றுமில்லை யென்றும், தான் எதையும் மற்றவர்க்குக் காட்டாது கையில் பொத்தி வைத்திருக்கவில்லை என்றும் கூறினர்.4
இதனை பெளத்தத்தில் ஆசாரிய முஷடி (அதாவது கையில் பிறர் காணுது பொத்தி வைத்திருத்தல்) என்பர்.
புத்தர் வழங்கிய இத்தகைய சமய சுதந்திரம் சமய வரலாறுகளில் யாண்டும் காணப்படாததொன்று.
புத்தருடைய கொள்கைப்படி மனிதன் தானகவே தன் விடுதலை யைத் தேடிக் கொள்ள வேண்டும். அதற்குத் தானகவே உண்மை யை உணர்ந்து கொள்ள வேண்டும். எந்தத் தெய்வத்தின் அருளி ஞலும் அது கிடைக்கக் கூடியதன்று. எந்தப் புறச்சக்தியும் நல்ல பிள்ளையாயிருப்பதற்கு பிரதி உபகாரமாக இதனை வழங்கமாட்டாது.
ஒரு முறை புத்தர் கோசலிராச்சியத்திலுள்ள கேசபுத்த என்ற ஒரு சிறு பட்டணத்துக்குப் போயிருந்தார். இந்நகரவாசிகள் காலாமர்
1. ததாகதர் என்றல் உண்மையை உணர்ந்தவர் (உண்மையைவந்தடைந்தவர்) அதாவது உண்மையைக் கண்டறிந்தவர். தம்மைப் பற்றியும் எனைய புத்தர் களைப் பற்றியும் குறிப்பிடும்போது புத்தர் " ததாகதர்” என்ற சொல்லால் குறிப்பிடுவர்.
2. IDhp. XX 4.
3. சங்கமென்றல் சமூகம். பெளத்தத்தில் இது பெளத்த பிக்குகள் கூட்டத்தை யே குறிக்கும். புத்தம், தருமம், சங்கம் என்ற மூன்றும் பெளத்தத்தில் * திரிசரணம் ” அல்லது “திரதன” (சமஸ்கிருதம் திரிரத்னம்) என வழங்கப்
Ch.
4. D II (GlasmtpibL , 1929), Lusitasub 62

என்றனழைக்கப்பட்டனர். புத்தர் தம் நகருக்கு வந்திருக்கிருர் என்று கேள்விப்பட்டதும் அவர்கள் அவரைத் தரிசிக்கச் சென்று பின்வருமாறு கூறினர்:-
“கேசபுத்த நகருக்குச் சில பரிவிராசகரும், தாபசரும் பிராமணரும வருகிறர்கள். அவர்கள் தங்கள் மதங்களையே விளக்கி மற்ற மதங்களைக் கண்டித்து எளனம் செய்கிறர்கள். பின்னர் அவர்களைத் தொடர்ந்து வேறு தாபசரும் பிராமணரும் வருகிறர்கள். அவர் களும் தம் மதத்தையே விளக்கி மற்ற மதத்தவரைக் கண்டித்து எளனஞ் செய்கிருர்கள். அதனல் எங்களுக்கு ஐயமும் மயக்கமும் உண்டாகிறது. இவர்களுள் யார் உண்மையைக் கூறுகிறர்கள் யார் பொய் சொல்லுகிறர்கள் எனத் தெரியவில்லை”.
அப்போது புத்தபகவான் சமயங்களின் வரலாற்றிலேயே இணையற்ற இந்த அறிவுரையைக் கூறினர் :-
“ ஆம் காலாமர்களே இவ்வாறு சந்தேகமும், மயக்கமும் உண்டாவது இயல்பே. ஐயத்துக்குரிய விஷயத்தில், ஐயமுண்டாகி யிருக்கிறது. காலாமர்களே கேளுங்கள், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டோ, மரபுபற்றி வந்ததென்பதாலோ, சனங்கள் சொல்லு கிருர்கள் என்பதாலோ ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டாம். சமய நூல்கள் கூறுகின்றன என்பதாலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். தர்க்கத்துக்கோ அனுமானத்துக்கோ பொருத்த மாயிருப்பதாலும் எற்றுக்கொள்ள வேண்டாம். தோற்றத்தைக் கொண்டு சரியெனக் கொள்ள வேண்டாம். கற்பனைக்கு விருந்தா யிருக்கிறதென்பதற்காகவோ, உயர்ந்த கருத்துக்கு இடமளிக்கு மென்ற எண்ணத்தினலோ, எமது குரு கூறிவிட்டார் என்பதாலோ ஏற்றுக்கொள்ள வேண்டாம். காலாமரே ! சில விஷயங்கள் தீமை தருவன (அகுசலங்கள்) என்றும் அவை தவருனவை, கெட்ட வை என்றும் நீங்களே உணர்ந்தால் அவற்றைக் கை விட்டுவிடுங் கள் . . . . . . . . . . . . சில விஷயங்கள் நன்மை பயப்பன (குசலங்கள்) என்று நீங்களாகவே உணர்ந்தால் அவற்றை எற்று அவற்றைக் கடைப்பிடியுங்கள் *
1. A (கொழும்பு 1929) பக்கம் 115.

Page 23
புத்தர் இவ்வளவோடு நிற்கவில்லை. நாம் பின்பற்றும் ஆசாரியர் உண்மையானவரா என்பதை அறியவும் அவரின் தகைமையை மதிப் பிட்டுக் கொள்ளவும் ததாகத்தரைக் கூடப் (புத்தரைக்கூட) பரீட்சித்துப் பார்க்குமாறு பிக்குகளுக்குக் கூறுகிருர்,
உண்மையைத் தெளிவாக அறிந்து கொள்வதற்கும், ஆன்மீக முன்னேற்றத்துக்கும் தடையாயிருக்கும் ஐந்து நீவரணங்களுள்? அவற் றின் சந்தேகமும் (விசிகிச்சா) ஒன்றென பெளத்தம் கூறுகிறது. எந்தவிதமான முன்னேற்றத்துக்கும் ஐயம் ஒரு தடை எனலாம். அது ஒரு பாபமன்று. எனெனில் சமயத்தினரால் வகுத்துக் கொள் ளப்பட்ட கொள்கைக் கூறுகள் பெளத்தத்தில் கிடையா. வேறு சில சமயங்கள் பாபம் என்ற சொல்லுக்குக் கொடுக்கும் கருத்தைப் போல பெளத்தத்தில் பாவமென ஒன்றில்லை. சகல தீமைகளுக்கும் மூலகாரணமாயுள்ளது அறியாமை (அவித்தை) யும் தவறன காட்சி (மிச்சாதிட்டி) யுமே. சந்தேகம், மயக்கம், சஞ்சலபுத்தி என்பன இருக்கும்வரை முன்னேற்றத்துக்கு இடமில்லை. இது மறுக்க முடியாத உண்மை. ஆனல் ஒருவரின் அறிவு தெளிவுபெறும் வரை ஐயப்படும் குணம் இருக்கவே வேண்டும். ஐயங்களை நீக்கினல் தான் முன்னேறலாம். காட்சி தெளிவடைந்தால் தான் ஐயம் நீங்கும்.
ஒருவர் ஐயப்படக்கூடாது, அவர் நம்பிக்கை உடையவராயிருக்க வேண்டும் என்று கூறுவதில் அர்த்தமில்லை. நான் நம்புகிறேன் என்று சொல்வதானல் எனக்கு விளக்கமுண்டு ; அறிவுண்டு என்பது அர்த்தமன்று. மாணுக்கன் ஒருவன் கணக்கொன்றைச் செய்யும் போது புரியாத ஒரு கட்டம் வரும். ஐயமும் மேலே போகமுடியாத ஒரு கஷ்டமும் உண்டாகும். இந்த மயக்க நிலையில் அவன் மேலே செல்லமுடியாதிருக்கிருன். இதைக் கடந்து செல்வதானல் அவனுக் குண்டான ஐயத்தை மாற்ற வேண்டும். அதற்கும் பல வழி களுண்டு. “நான் நம்புகிறேன், எனக்கு ஐயமில்லை ” என்று, சொல்லுவதால் பிரச்சினை தீரமாட்டாது. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல் பலாத்காரமாக ஏற்றுக்கொள்ள வைத்தல் அரசியல் போக்குடையதன்றி ஆத்மீகப் போக்குடையதன்று. விவேகப் போக்குடையதன்று.
புத்தபகவான் ஐயத்தைப் போக்குவதில் எப்பொழுதும் ஆர்வ முடையவராயிருந்தார். அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் னர் கூட, ஐயங்களைத் தீர்க்காது விட்டுவிடுவோமே எனப் பின்னர் பச்சாத்தாபப்படாதிருக்கும் வகையில் தாம் போதித்தவற்றில்
1. வீமம்சக சுத்த-மஜ்ஜிம நிகாயத்தின் 47 ஆம் சூத்திரம். 2. ஐந்து நீவாரணங்களாவன : காம இச்சை, துவேசம் கழிமடம் சேர்வு
சஞ்சலம் கவலை, ஐயம்.

எதாவது ஐயங்களிருந்தால் அவற்றை இப்பொழுதாவது தீர்த்துச் கொள்ளுமாறு சீடர்களைக் கேட்டார். சீடரெல்லாம் பேசாதிருந்தார் கள். அப்போது அவர் மனத்தைத் தொடக்கூடியமுறையில் “குருவுக்கு மரியாதை செலுத்தவேண்டுமென்ற நோக்கத்தால் நீங் கள் நேரே சொல்ல விரும்பாவிட்டால் நண்பர்களிடம் கேட்கச் சொல்லுங்கள், என்று கூறினர்.
பகவான் சிந்தனைச் சுதந்திரம் அளித்த தோடல்லாமல் சகிப்புத்தன் மையுடையவராயுமிருந்தமை சமயங்களின் வரலாற்றை ஆராயும், மாணவர்க்கு இறும்பூது அளிக்கக் கூடியதாகும்.
ஒரு முற்ை நாலந்தையில் நிகண்ட நாத புத்த என்னும் ஜைன மகாவீரர் தமது உபாசகரும், செல்வமும் சிற்ப்பும் மிக்கவருமான உபாலி என்னும் இல்லற்த்தவரை புத்தரிடம் அனுப்பினர். கன்மம் பற்றி மகாவீரர்? கொண்ட கொள்கை புத்தருடைய கொள்கையி லிருந்து வேறுபட்டிருந்தபடியால் புத்தரோடு விவாதம் நடத்தி அவரை வென்று வருமாறு மகாவீரர் அவரை அனுப்பினர்.?
உபாலி வாதம் நடத்தினர். ஈற்றில் பகவான் கூறியவை சரி என்றும் தன்னுடைய குருவின் வாதம் தவருெைதன்றும் உணர்ந் தார். எனவே தம்மை உபாசகராக எற்றுக் கொள்ளுமாறு பகவானை உபாலி இரந்து கேட்டார். உங்கள் தீர்மானத்தைப் புனராலோசனை செய்து பாருங்கள். அவசரப்பட வேண்டாம்” என்று கூறி “உங்களைப் போன்ற பிரசித்தமானவர்கள் இதனை நன்றக ஆராய்ந்து பார்ப்பது நல்லது” எனச் சொன்னர். உபாலி மறு படியும் தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது அவருடைய பழைய மதாசாரியர்களைக் கெளரவித்து வழக்கம் போல அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு பணித்தார்.
கிறிஸ்து பிறப்பதற்கு முந்நூறு ஆண்டுகட்கு முன்னர் இந்தியாவை ஆண்ட பெளத்தப் பேர் அரசரான அசோகன் பகவானுடைய இந்த உயர்ந்த சகிப்புத் தன்மையையும் நல்லிணக்கத்தையும் பின் பற்றித் தனது பரந்து விரிந்த இராச்சியத்திலுள்ள சகலமதத்தவரையும் கெளரவித்து ஆதரித்தான். கற்பாறையில் செதுக்கப்பட்ட அவனு டைய கற்சாசனமொன்றிலே அசோகசக்கரவர்த்தி பின் வருமாறு கூறி யுள்ளார்: இக்கற் சாசனத்தை அதன் மூல வடிவில் இன்றும் காணலாம். “ஒருவன் மற்றவர்களுடைய மதத்தை நிந்தித்து தன்னுடைய மதத்தை மாத்திரம் போற்றக் கூடாது. எதோ ஒரு காரணம் பற்றி அவன் மற்றைச் சமயங்களையும் கெளரவிக்க வேண்டும்.
1. D 11 (கொழும்பு 1929) பக். 95 ச (கொழும்பு 1929) பக்கம் 239. 2. ஜைன மதத்தாபகரான மகாவீரர் புத்தர் காலத்தினர். புத்தரில் சில வயது
மூத்தவராயிருக்கலா.ம் 3. உபாலி சுத்த இல. 66-மஜ்ஜிம.

Page 24
இதனல் அவன் தன் மதத்தின் வளர்ச்சிக்கே துணைபுரிவதோடு மற்றைச் சமயங்களையும் வளர்க்கிருன். இதற்கு மாறக நடப்பானனல் அவன் தன் மதத்துக்கே குழிதோண்டுவதோடு மற்றைச் சமயங் களுக்கும் அழிவுதேடுகிறன். தன் மதத்தைப் போற்றி மற்றை மதங்களை இழிவுபடுத்துபவன் “நான் என் மதத்துக்கு மகிமை தேடுகிறேன்” என்ற ஆர்வத்தினுல் அவ்வாறு செய்கிறன். ஆனல் உண்மையில் அவன் தன் மதத்துக்கே பெருந்தீங்குவிளைக்கிருன். எனவே இணக்கமே நன்று; மற்ற மதத்தவர்கூறும் கோட்பாடுகளைக் கேட்க விருப்பமுடையவராயிருப்பதோடு அவற்றைக் கேட்யாராக;
இத்தகைய நல்லிணக்கமும் சகிப்புத் தன்மையும் சமய விஷயங் களில் மாத்திரமன்றி வேறு துறைகளிலும் அனுசரிக்கப்பட வேண்டிய தொன்றகும்.
இந்த நல்லெண்ணமும் சகிப்புத்தன்மையும் ஆரம்பத்திலிருந்தே பெளத்த பண்பாடும் நாகரிகமும் உவந்து ஏற்றுக் கொண்ட இலட் சியங்களுள் ஒன்ருகும். 2500 வருடமாக பெளத்தம் மக்களை இம்சை செய்யமாலும் ஒரு துளி இரத்தங் கூடச் சிந்தாமலும் சமயமாற்றஞ் செய்து வ்ந்தது. ஆசியாக்கண்டம் முழுவதிலும் அது சமாதான மாகப் பரவி இன்று ஐம்பது கோடி மக்களைத் தன்னகத்துக் கொண்டிருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த வகை யிலும் பலாத்காரத்தை மேற்கொள்ளக் கூடாதென்பதே பெளத்த மதத்தின் போதனையாகும்.
பெளத்தம் ஒரு சமயமா? தத்துவமா என்று அடிக்கடி கேட்கப் படுகிறது. அது எது வாயிருந்தாலும் பரவாயில்லை. என்ன பெயர் அதற்குக் கொடுத்தாலும் அது பெளத்தமாகவே இருந்து வருகிறது. புத்தர் போதித்த நெறிக்கு பெளத்தம் என்ற பெயரைக் கொடுத் திருக்கிருேம். அதுவும் அத்துணை முக்கிய மன்று. கொடுக்கப்பட்ட பெயர் முக்கியமன்று.
பெயரில் என்ன இருக்கிறது. ருேசாமலருக்கு வேறு பெயரைக் கொடுத்தாலும் அது தன் நறுமணம் மாறுமா ? அவ்வாறே சத்தியத் துக்கு அடைமொழிப் பெயர் தேவையில்லை-சத்தியம் பெளத்தச் சார்புடையதுமன்று கிறிஸ்தவச் சார்போ, இஸ்லாமியச் சார்போ இந்து சமயச் சார்போ உடையதுமன்று. அது எவருக்கும் எகபோக உரிமை உடையதன்று. சத்தியத்தைத் தனிப்பட்ட முறையில் அறி வதானல் பக்கச் சார்பான அடைமொழிப் பெயர்கள் தடையாயிருக்கும் அதனல் மக்கள் மனத்திலே பாதகமான மனக்காழ்ப்பு உண்டாகும்.
1. Sandmotorb 12.

விவேகமயமான விஷயங்களிலும், ஆன்மார்த்த விஷயம்களிலும் மாத்திரமன்றி மனிதத் தொடர்புகள் பற்றிய விஷயங்களைப் பொறுத்த வரையிலும் கூட இது பொருந்தும். உதாரணமாக நாம் ஒருவரைச் சந்திக்கும்போது அவர் மனிதர் என்ற முறையில் பார்ப்பதில்லை. அவர் ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், ஜெர்மானியர், அமெரிக்கர், யூதர் என்ற அடைமொழி அட்டைப் பெயரை அவர் மீது மாட்டி அந்த அட்டைப்பெயர் எம்மனதில் முன்னரே உண்டாக்கிய தப் பெண்ணத்தைக் கொண்டு அவரைப் பார்க்கிறேம். இருந்தும் நம் மனத்தில் படிந்த தப்பெண்ணம் அவரிடத்துச் சிறிது மில்லா திருக்கலாம்.
இத்தகைய பாகுபாட்டின் பயனக அடைமொழிப்பெயர்களைச் சார்த் திப் பார்ப்பது மனிதர்க்கு மிகப் பரிச்சயமான தொரு பண்பான படியால், மனிதரிடம் பொதுப்படையாகக் காணும் பண்புகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இந்த அடைமொழிப் பெயரைச் சூட்டுகிறேம். எனவே “பெருந்தன்மை” என்ற பொதுப் பண்பைக்கூட பெளத்தப் பெருந்தன்மை, கிறிஸ்தவப் பெருந்தன்மையென்றெல்லாம் பாகு படுத்துகிறேம். மற்றை வகையான பெருந்தன்மைகளை இழிந்தவை யெனக் கருதுகிறேம்.
ஆனல் பெருந்தன்மையில் விதம்விதமான பெருந்தன்மை உண்டா ? அது கிறிஸ்தவமுமன்று, பெளத்தமுமன்று, இந்துவுமன்று இஸ்லாமுமன்று. குழந்தையிடத்துத் தாய்க்கிருக்கும் அன்பு எங்கும் ஒரே பண்பையுடையது. அது பெளத்தத்தாயன்புமன்று, கிறிஸ்தவத் தாயன்புமன்று. அது தாயன்பே. அன்பு, பெருந்தன்மை, கருணை, சகிப்புத்தன்மை, பொறுமை, நட்பு, விருப்பு, வெறுப்பு, இணக்கம் அறியாமை, அகங்காரம், முதலிய மனிதப் பண்புகளும் உணர்ச்சி களும் எல்லாரிடத்தும் ஒரே வகையானவை. அவற்றில் வித்தியாசம் கிடையாது. அவை சமயச்சார்பாக வேறுபட்டவையல்ல. எந்த ஒரு சமயத்துக்கும் சொந்தமானவையல்ல.
சத்திய நாட்டமுள்ளவர்க்கு ஒரு கருத்து எங்கிருந்து வருகிற தென்பதில் அக்கறையில்லை. ஆராய்ச்சியிலிடுபட்டவர்க்கு ஒரு கருத்து எங்கே தோன்றி எவ்வாறு வளர்ந்தது என்பது முக்கியமான தாயி ருக்கலாம். சத்தியத்தை உணர்ந்து கொள்வதானல் அது புத்தர் கூறியதா வேறு ஒருவர் அருளியதா என்பதை அறிந்துகொள்வதே அவசியமில்லை. எது அவசியமென்றல் உண்மையைக் காணுதல், அதைப்புரிந்து கொள்ளுதல் ; மஜ்ஜிமநிகாயம் 140 ஆவது சூத்திரத் தில் இதனை நிதரிசனப்படுத்தும் ஒரு முக்கியமான கதை உண்டு.
7

Page 25
புத்தபகவான் ஒருமுறை ஒரு குயவனுயை சாலையில் இரவைக்க, ழித்தார். அதே சாலையில் ஏற்கனவே அங்குவந்து சேர்ந்த ஒரு இளஞ் சந்நியாசியுமிருந்தார்- ஆனல் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள வில்லை. அந்தச் சந்நியாசியின் போக்கை அவதானித்த புத்தர் தம்முள் நினைக்கலானர். “இந்த இளவலின் நடத்தை நன்றயிருக்கிறது. இவரைக் கேட்டறிந்துகொள்வது நல்லது” புத்தர் அவனை “ஓ பிக்குவே2 யாருடைய உபதேசத்தைக் கேட்டுச் சந்நியாசங்கொண்டீர்?" *உங்களுடைய ஆசிரியரின் பெயரென்ன ? எவருடைய கொள்கை யை நீர் மேற்கொள்ளுகிறீர்”? வாலிபன் கூறினன் “நண்பரே!. கோதமர் என்ற சாக்கியச் செம்ம்ல் துறவியாயிருக்கிறர், அவர் சாக்கியக்குடும்பத்தைத் துறந்து பிக்குவானுர். அவர் பூரண ஞானம் பெற்ற அருகதர் என எங்கும் புகழ் பெற்றிருக்கிறர். அந்தப் பகவானுடைய பெயராலேயே நான் துறவு பூண்டேன். அவரே என் குரு. அவருடைய தருமத்தை நான் எற்றுக் கொண்டேன்.”
"இப்போது பூரண ஞானம் பெற்ற பகவானன; அந்த அருகதர் எங்கே இருக்கிறர் ?”
* நண்பரே வடக்கேயுள்ள நாட்டில் சிராவத்தி என்ற ஒரு நகரம் உண்டு. அங்கேதான் பூரணஞானம் பெற்ற அருகதரான பகவான் இப்போது வசிக்கிறர்.
* அந்த பகவானை எப்போதாவது கண்டிருக்கிறீரா? நீர் அவ ரைக் கண்டால் இனங் கண்டு கொள்வீரா ?
“நான் அந்த பகவானைப் பார்த்ததில்லை. கண்டால் இவர்தான் என்று அறிந்து கொள்ளவும் மாட்டேன்.
1. இந்தியாவிலே குயவருடைய கொட்டகை மிக விசாலமானதாகவும் அமைதியான தாகவும் காணப்படும். அலைந்து திரியும் சமணர்களும் சந்நியாசிகளும் புத்தரும் கூட இத்தகைய கொட்டகைகளில் இரவைக்கழித்ததாக பாளியிடங்" களில் காண்ப்படுகிறது.
2. புத்தர் இந்தத் துறவியை * பிக்கு ’ என்று விழித்துக் கூறுவது கவனிக்கத் தக்கது. பிக்கு என்ற அடைமொழி புத்தசாவகரையே குறிக்கும். ஆனல் இவர் பிக்கு வல்லர் என்பதும் சங்கத்தைச் சேர்ந்த அடிகளல்லர் என்பதும் இந்த உரையாடலிலிருந்து தெரியவரும். தம்மை புத்த சங்கத்திலே சேர்த்துக் கொள்ளுமாறு பகவானைக் கேட்கிருர், ஒரு வேளை புத்தர் காலத்திலே "பிக்கு” என்ற வழக்கு எனைய மதத்தைச் சேர்ந்த துறவிகளுக்கும் வழங்கப்பட்டதாயிருக்க லாம். அல்லது பிக்கு என்ற சொற்பிரயோகத்தை அவர் பாகுபாடின்றி வழங்கியிருக்கலாம். பிக்கு என்றல் பிச்சை ஏற்று உண்பவர். அதனுல் அவ்வார்த்தை அதன் ஆரம்பக் கருத்தில் வழங்கப்பட்டிருக்கலாம். இன்று பிக்கு என்ற சொல் பெளத்த சாவகரையே குறிக்கும். இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போஜியா, சிட்டகொங் போன்ற நாடுகளில் விசேடமாக இந்தக் கருத்திலேயே பயன்படுத்தப்படுகிறது.

இந்த வாலிபன் இல்லறத்தைத் துறந்து சந்நியாசங் கொண்டது தம்முடைய தருமத்தைப் பின்பற்றியே என்பதை புத்தர் உணர்ந்தார். தான் இன்னர் என்பதைக் காட்டிக் கொள்ளாமலே புத்தர், “ ஒ பிக்குவே 1 நான் தருமத்தைப் போதிக்கிறேன். நான் கூறுவதைக் கவனமாகக் கேட்பீராக. ”
* நல்லது நண்பரே ! ” என வாலிபன் ஒப்புக்கொண்டான்.
பகவான் பின்னர் சத்தியம் என்ருல் என்ன என்பதைப் பற்றி மிகச் சிறந்த உபதேசத்தைச் செய்தார். (இதன் சுருக்கம் பின்னல் கூறப்பட்டுள்ளது.)
புக்குசாதி என்ற இந்தத் துறவி பகவானுடைய அறிவுரையை கேட்டு முடியுந்தறுவாயிலேதான் தனக்குத் தருமோபதேசஞ் செய்த வர் புத்தர் என்பதை உணர்ந்து, எழுந்து, புத்தர் முன் சென்று அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கி, தெரியாமல் தான் அவரை நண்பன்" என்று மரியாதையின்றிக் கூறியதை மன்னிக் குமாறுவேண்டிக்கொண்டார். பின்னர் சங்கத்தில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு இரந்து வேண்டினன்.
பிண்டபாத்திரமும் சீவர உடையும் (காஷாய) ஆயத்தமாயிருக் கின்றனவா என்று புத்தர் அவனைக் கேட்டார். (பிக்குவிடம் மூன்று சீவர உடையும், பிச்சை எடுப்பதற்கு பிச்சா பாத்திரமும் இருக்க வேண்டியது அவசியம்) இல்லையென்று அவன் கூறியதும், பிண்ட பாத்திரமும் சீவர ஆடையும் இல்லாதபோது அவர்களுக்குத் ததாகதர் கள் பிக்குவாக அபிஷேகம் செய்ய மாட்டார்கள் என்று கூறினர். உடனே புக்குசாதி பிண்டபாத்திரமும் சீவரமும் தேடச் சென்றன். ஆனல் வழியில் ஒரு பசுவினல் கொல்லப்பட்டு இறந்தான். *
1. மூன்ருவது உயர் வாய்மை பற்றிய அத்தியாயம் பார்க்க.
2. இங்கே கூறப்பட்ட பாளிச் சொல் “ஆவுசோ” சமநிலையிலுள்ளவர்களை விழிக்கும் போது கெளரவமாகக் கூறப்படுவது. புத்தரை விழிக்கும்போது சீடர் இச் சொல்லை வழங்குவதில்லை. அதற்குப் பதிலாக “பந்தே” என்ற சொல்லை வழங்குவர். “பந்தே” என்ருல் ஐயா, அல்லது "பிரபு” எனப் பொருள்படும். புத்தர் காலத்திலே சங்கத்து அடிகள் ஒருவரை ஒருவர் "ஆவுசோ" நண்ப என்று விழிப்பர். புத்தர் இறப்பதற்குமுன்னர், இளைய பிக்குகள் முதியவர்களை * பந்தே ” என்றே (ஐயா) " அயஸ்மா ” பிரபோ என்றே விழித்துக் கூற வேண்டுமெனப் பணித்தார். மூத்தவர்கள் இளையவர்களைப் பெயர் சொல்லியோ அல்லது " ஆவுசோ" நண்ப என்றே விழிக்கலாம் (D11 கொழும்பு 1929 பக்கம் 95) இந்த வழக்கம் இன்றுவரை சங்கத்தில் நிலவி வருகிறது.
3. இந்தியாவிலே பசுக்கள் வீதிகளில் அலைந்துதிரிவதைச் சாதாரணமாகக் காண லாம். இது பழையதொரு வழக்கம் என்பது இக்குறிப்பிலிருந்து தெரிகிறது. ஆனல் இப்பசுக்கள் ஆபத்தானவையல்ல. அவை சாதுவான மிருகங்கள்.

Page 26
இத்துக்கரமான சம்பவம் புத்தர் காதுக்கு எட்டியபோது புக்குசாதி ஞானியென்றும் அவர் சத்தியத்தை அறிந்து விட்டார் என்றும் நிர்வாணமடையும் மார்க்கத்தில் மூன்றவது நிலையை அடைந்து விட்டார் என்றும் அருகத நிலை அடையக்கூடிய ஒர் உலகில் அவர் பிறந்துள்ளார் என்றும் ஈற்றில் அவர் மீண்டும் வாரா நெறியை அடைவாரென்றும் கூறினர்.
புத்தர் கூறிய அறிவுரையைக் கேட்டு அதைப்புரிந்து கொண்ட போது புக்குசாதி தான் புத்தர் போதனையைக் கேட்டுக் கொண்டி ருப்பதாகவோ புத்தர் தன்முன் இருப்பதாகவோ உணர்ந்து கொள்ள வில்லை. அவர் உண்மையை மாத்திரம் கண்டார் என்பது இக்கதை யிலிருந்து தெளிவாகிறது--மருந்து நல்ல மருந்தானல் வியாதியை நீக்கும். மருந்தை யார் தயார் செய்தார், அது எங்கிருந்து வந்த தென்று தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
சமயங்களெல்லாம் பெரும்பாலும் நம்பிக்கையில் (மூட நம்பிக்கை யில் என்று கூறலாம்.) கட்டி எழுப்பப்பட்டுள்ளன. ஆனல் பெளத்தம் காணுதல், அறிதல், புரிந்து கொள்ளல் என்பவற்றை வற்புறுத்து கிறதேயன்றி நம்பிக்கையை வலியுறுத்தவில்லை. பெளத்தபிடகங் களிலே “சத்தா” என்ற வார்த்தை காணப்படுகிறது. இது சிரத்தை என்ற வடமொழியின் திரிபு. இது நம்பிக்கை, என வழக்கமாக மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. ஆனல் சிரத்தை என்பது மன உறுதியினல் பிறந்த பற்றுக்கோடு எனலாம். வெறும் நம்பிக்கை யன்று. பொது மக்களிடையே வழங்குகிற பெளத்தத்திலும், சாதா ரண வழக்கிலும் சிரத்தை என்பது புத்தம், தன்மம், சங்கமென்ற மும் மணிகளிடத்தும் பக்தி செய்தலைக் குறிக்கும்.
கி. பி. நாலாம் நூற்றண்டைச் சேர்ந்த பெளத்த தத்துவப் பேரறிஞரான அசங்கர் சிரத்தை மூன்று அமிசங்களைக் கொண்ட தென்பர். முதலாவது ஒரு பொருள் உண்டு என்ற பூரணமான உறுதி. இரண்டாவது நற்குணங்களைக் கண்டு ஆனந்தமடைதல். மூன்றவது ஒரு இலட்சியத்தை நிறைவேற்றும் ஆர்வம்3.
1. அருகதர் எனப்படுபவர் ஆசை, பகைமை, தீயனண்ணம், அறியாமை, அகங் காரம், முதலிய மாசுகள் அற்றவர். நிர்வாண சுகம் பெறுவதற்கான நாலாவது படியான உயர்நிலையை அடைந்தவர். அவரிடம் ஞானம் கருணை போன்ற உயர் குணங்கள் நிறைந்திருக்கும். புக்குசாதி அடைந்த நிலை மூன்றவது நிலையான “அணுகாமி” நிலை. அதாவது இனிமேல் வந்து பிறவாதவர். இரண்டாவது படி "சகதாகாமி” நிலை. அதாவது இன்னும் ஒரு முறையே பிறவி எடுப்பவர். முதலாவது படி ஆற்றில் (தருமத்தில்) இறங்கியவர் எனப் பொருள்படும். “சோதாபன்னர் ” நிலை.
2. அபிசமுச் பக்கம்6.
O

எனைய சமயத்தவர் கூறும் அர்த்தம் சிரத்தை என்ற வார்த்தைக்கு புத்த சமயத்தில் கிடையாது. அறிந்து கொள்ள முடியாத அதாவது கண்டு கொள்ள முடியாத விஷயம் சம்பந்தமாகத்தான் நம்பிக்கை என்ற பிரச்சினை எழுகிறது. எப்பொழுது ஒரு விஷயத்தைக் காண முற்படுகிறேமோ அப்போது நம்பிக்கை என்ற பிரச்சினைக்கு இடமில் லாமற்போகிறது. பொத்திய கைக்குள் ஒரு மாணிக்கமுண்டு என்று நான் உமக்குச் சொன்னல் நீங்கள் அதைக் கண்ணுல் காணுத வரை நம்பிக்கை என்ற பிரச்சினை எழுகிறது-ஆளுனல் கையை விரித்து அந்த இரத்தினத்தைக் காட்டியதும் நீங்கள் அதைப் பிரத்தியட்சமாகக் காணுகிறீர்கள். அப்போது நம்பிக்கை என்ற பிரச்சினைக்கு இடமில் லாமற் போகிறது. எனவே பெளத்த நூல்களில் “ உள்ளங்கை நெல்லிக்கனி போல அல்லது மாணிக்கம் போலத் தெளிவாகிறது.” என்ற சொற்தொடர் காணப்படுகிறது.
புத்தரின் சீடரான முசீல என்பவர் மற்றெரு பிக்குவுக்குப் பின்வருமாறு கூறுகிறர் ; “நண்ப சவிட்ட, பக்தி சிரத்தையின்றி: விருப்புச் சார்பின்றி, பரம்பரைக் கேள்வி ஞானத்தினுலன்றி பெரும் போக்கான காரணகாரிய ஆராய்ச்சியின்றி, கற்பனை வாதிகளின் பேச்சில் மயங்காமல் பவம் அற்றுப் போவதே நிர்வாணம் என்பதை நான் அறிந்து கொண்டேன், கண்டு கொண்டேன் ”.
புத்தர் சொல்லுகிறர் “ஒ1 பிக்குகளே 1 அகுசலங்களையும் களங் கங்களையும் நீக்குவது அறிவும் காட்சியுமுடையவர்க்கேயன்றி அறிவில் லாதவர்க்கும் காட்சியில்லாதவர்க்குமன்று *.
விஷயங்களை அறிந்து காணவேண்டுமேயன்றி அவற்றில் நம்பிக்கை வைப்பதன்று ஞானத்துக்கு வழி. புத்த தர்மத்துக்கு “ எஹிபஸ் வலிகோ” என்று ஒரு பெயர். அதாவது வந்து பாருங்கள். வந்து நம்பிக்கை கொள்ளுங்கள் என்று பெளத்தம் எவரையும் அழைப்
பதில்லை.
உண்மையை உணர்ந்தவர்கள் பற்றி புத்த பிடகங்கள் குறிப்பிடும் போது தூசியற்ற கண், களங்கமற்ற கண், “தம்மசக்கு” எழுந்தது எனக்
1. 6719-36Glroad gourth(opti. Role of the Miracle in Earth
என ஒரு நூல் எழுதியுள்ளார். அது இன்னும் அச்சாகவில்லை. இவ்விஷ uppolgá) said (spici S.68cost. University of Ceylon Review - Pali literature முதல் தொகுதி இல. ஏப்ரல் 1943 பக்கம் 74 பார்க்க. அதுவும் இவர் எழுதிய கட்டுரையாகும்.
2. சிரத்தை என்ற வார்த்தை சாதாரண பத்தி சிரத்தை நம்பிக்கை என்ற
அர்த்தத்தில் இங்கே காணப்படுகிறது.
3. S III (PTS) Ludi. 117.
4. அதேருரல் 111 பக்கம் 152.

Page 27
கூறப்படுகிறது. “அவர் உண்மையைக் கண்டார். உண்மையை அடை ந்தார், உண்மையை உணர்ந்தார், உண்மையை ஊடுருவிப்பார்த்தாா, ஐயங்களில் நீங்கி அசைவற்றிருக்கிருர், “சரியான ஞானத்தைக் கொ ண்டு அவர் யதாபூதஞானத்தைப் பெற்று விட்டார். எனக்காண லாம். தாம் ஞான விளக்கம் பெற்றதைப் பற்றி புத்தர் “கண்பிற ந்தது, ஞானம் பிறந்தது, அறிவு பிறந்தது, விஞ்ஞானம் பிறந்தது. ஒளி பிறந்தது." என்பர்-எப்பொழுதும் ஞானதர்சனம் குறிப்பிடப் படுகிறதேயன்றி நம்பிக்கை மூலம் சிரத்தை பெறுவதாகக் கூறப் படுவதில்லை.
வைதீகப் பிராமணர் தமது சம்பிரதாயத்தையும் பிரமாணத்தை யும் ஆட்சேபமின்றி ஒரே உண்மையாக நம்பி எற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்திய காலத்திலே இக்கருத்தை மக்கள் நன்கு புரிந்து கொண்டனர்.
ஒரு முறை அறிவிற் சிறந்த பிரசித்தி பெற்ற ஓர் அந்தணர் கூட்டம் புத்தரைக் கண்டு வெகுநேரம் உரையாடிற்று. அக் கூட்டத்தைச் சேர்ந்த 16 வயதுள்ள காபடிக என்ற பெயருள்ளவனும், மிக்க விவேகி யென எல்லாராலும் மதிக்கப்பட்டவனுமான இளவல் புத்த ரிடம் பின்வருமாறு கேட்டான்? “ வணக்கத்துக்குரிய கோதமரே ! பரம்பரையாக வந்த வேத சுருதிகளிருக்கின்றனவே. அவற்றின் பிரகாரம் “ இதுவே சத்தியம், மற்றவையெல்லாம் பொய்” என்ற ஒரே முடிபுக்கு பிராமணர் வந்துள்ளனர். இதைப்பற்றி வணக்கத் துக்குரிய கோதமர் என்ன சொல்லுகிறர் ? ”
புத்தர் கேட்டார். பிராமணருள்ளே “ இதுவே சத்தியம், மற்றவை யெல்லாம் பொய் என்று தனிப்பட்ட முறையில் கண்டு அறிந்த பிராமணர் ஒருவரேனும் இருக்கிருரா? அந்த இளவல் மனந்தி றந்து பேசியவரானபடியால் “இல்லை” என்றர்.
" இதுவே சத்தியம். மற்றவையெல்லாம் பொய்” என்று கண்டு அறிந்த ஓர் ஆசிரியர் இருக்கிருரா? எழுதலை முறையில் ஆசிரியர்க்கு ஆசிரியரான ஒருவர் இருக்கிருரா ? “இதுவே உண்மை மற்றவை யெல்லாம் பொய்” என்று கண்டறிந்த அந்த வேதங்களின் ஆசிரியர்களில் ஒருவர் இருக்கிறாா ?”
இல்லை 99. * அப்போது இது குருடர் குருடருக்கு வழிகாட்டுவது போன்றது" ஒவ்வொருவரும் மற்றவரைப் பிடித்துக் கொண்டு போகிருர்கள் முதலில் போகிறவர் காணவில்லை. மத்தியில் போகிறவரும் காண
1. E.g. s. v. (P.T.s.) u. 423 111 u. 103. M. III P.T.s. u. 19. 2. SW "P.T.S.: Luášt. 422. 3. சங்கீ சுத்த மஜ். இல. 95.
2.

வில்லை. கடைசியில் போகிறவரும் காணவில்லை. அப்போ பார்க்கப் போனல் இந்தப் பிரமாணரின் நிலை குருடர் வரிசையில் போகிறவர் நிலைபோலத்தான்.”
பின்னர் பகவான் அந்தப் பிராமணர் கூட்டத்தவர்க்கு மிக உயர்ந்த அறிவுரை வழங்கினர். உண்மையின் காவலனயுள்ள அறிவாளி “இது தான் உண்மை, மற்றவை யெல்லாம் பொய் என்ற முடிபுக்கு வரக்கூடாது ? அதாவது ஒருவன் தான் விரும்புவதை நம்பலாம். *நான் இதை நம்புகிறேன் ” என்று சொல்லாம். அந்த அளவில் உண்மையை மதிக்கிருன் எனலாம். ஆனல் தான் நம்புவதால் அதுவே சத்தியம், மற்றவையெல்லாம் பொய் என்று கூறக் கூடாது.
* ஒரு கொள்கையில் பற்றுவைத்து மற்றைக் கொள்கைகள் தாழ் ந்தவை என அவமதித்தல் நீவரணம் (கட்டு, தடை) என அறி ஞர் கூறுவர். ” என்று புத்தர் சொல்லுகிறர்.
படிச்சசம்முபபாதம் என்ற காரண காரியத்தொடர்புக் கோட் பாட்டை தமது சீடர்களுக்கு பகவான் ஒருமுறை விளக்கினர். தாம் கண்டு தெளிவாக அறிந்து கொண்டதாக அவர்கள் கூறினர். அப் போது புத்தர் சொன்னர் : “ தூயதும், தெளிவானதுமான இந்தக் கோட்பாட்டில் பிக்குகளே நீங்கள் பற்றுள்ளவராயிருந்தால், அதனேடு பரிச்சயமுற்று அதை மேலானதாகக் கருதி ஈடுபாடு கொள்வீரானல், தருமம் ஆற்றைக் கடக்கும் புணை போன்றது ; கடந்ததும் அதைத் தோளிலே துக்கிக் கொண்டு போகக் கூடாது, என்ற போதனையை அறியாதவராகிறீர்.* வேறேரிடத்தில் பகவான் போதனை ஆற்றைக் கடக்கப் புணை போன்ற தென்றும் கடந்த பின் அதை தோளில் துர்க்கிச் செல்லக் கூடாதென்றும் உவமையை விளக்கியுள்ளார்.
“ஒ பிக்குகளே ! ஒருவன் பிரயாணஞ் செய்து கொண்டிருக்கிருன். அவன் ஆற்றைக்கடக்க வேண்டியிருக்கிறது. இக்கரை ஆபத்து நிறைந்த தாயிருக்கிறது. அக்கரை பாதுகாப்புள்ளதாகவும் ஆபத் தில்லாததாகவுமிருக்கிறது. அக்கரையை அடையவள்ளமில்லை. ஆற் றைக் கடக்க பாலமுமில்லை. அவன் தனக்குள் நினைக்கிறன். * ஆற்று நீர் விச்ாலமானதாயிருக்கிறது. இக்கரை ஆபத்துள்ளதாயி ருக்கிறது. அக்கரை ஆபத்தின்றிப் பாதுகாப்புள்ளாதாயிருக்கிறது. அக்கரை போவதற்கு ஒடமில்லை. ஆற்றைக்கடக்க பாலமுமில்லை. ஆனபடியால் புல்லும், மரமும், கிளையும், இலையும் சேகரித்து ஓர் ஒடம் கட்டினல் நல்லது. கையையும் காலையும் பயன்படுத்தி அந்த ஒடத்தின் மூலம் சுகமாக அக்கரை சேர்ந்து விடலாம்.” பின்னர்
1. Sn (P.T.S.) u46. 151 (V. 798).
2. மகாதன்ஹாசங்கய சுத்த மஜ்ஜிம இல. 38
3. M. (P.T.S.) Ltd. 260.

Page 28
அம்மனிதன், ஓ ! பிக்குகளே! புல்லும், மரமும், கிளையும், இலையும் சேகரித்து ஒடம் செய்கிறன், அந்த ஒடத்தின் துணை கொண்டு பாதுகாப்பாக கைகாலைப் பயன் படுத்தி அக்கரை செல்லுகிருன். அக்கரை அடைந்ததும் அவன் “ இந்த ஒடம் எனக்குப் பெருந்துணை யாயிருந்தது. என் கைகால்களைப் பயன்படுத்தி இதன் துணை கொண்டு சுகமாக இக்கரைவந்து சேர்ந்தேன். இந்த ஒடத்தை நான் போகுமிடமெங்கும் தலையிலோ தோளிலோ சுமந்து செல்வது நல் லது ” என்று நினைக்கிறன்.
* இவ்வாறு செய்வது பொருத்தமா ? பிக்குகளே ! என்ன நினை க்கிறீர்கள் ? " இல்லை பிரபோ ?
அப்போது அவன் ஒடத்தை என்ன செய்யவேண்டும் ? அக்கரை சென்ற பின்னர் அந்தமனிதன் “ இந்த ஒடம் எனக்குப் பெருந் துணையாயிருந்தது. இதன் துணையால் என் கைகால்களைப்பயன் படுத்திச் சுகமாக இக்கரைவந்து சேர்ந்தேன். இந்த ஒடத்தைக் கரையில் விட்டுவிட வேண்டும். அல்லது நீரில் மிதந்து கொண்டி ருக்கும் படி கட்டிவிட வேண்டும். அவ்வாறு செய்து விட்டு நான் போகுமிடத்திற்குப் போக வேண்டும்.” என்று எண்ணினன். இவ் வாறு செய்வதே அந்த ஓடத்தைப் பொறுத்த வரையில் பொருத்த மான செயலாகும்.
“இவ்வாறே ஒ1 பிக்குகளே நானும் அந்த ஒடத்துக்கு உவமை யான ஒரு கோட்பாட்டைப் போதித்துள்ளேன். இது ஆற்றைக் கடப் பதற்கு அன்றி, தோளில் எடுத்துச் செல்வதற்கன்று. இந்த தம்மம் ஒடம் போன்றது. ஒ பிக்குகளே ! நீங்கள் நல்ல கருமங்களைக் கூட (தம்ம) கைவிடவேண்டும். அப்போது தீயகருமங்களை எத்துணை தூரம் கைவிடவேண்டும் (அதம்மம்).
புத்தருடைய போதனையின் நோக்கம் மனிதன் சுகம், சாந்தி, ஆனந்தம், சமாதானம், என்னும் நிர்வாண பதத்துக்கு இட்டுச் செல்வதே. புத்ததர்மத்தின் குறிக்கோள் நிர்வாணமே. விவேகத் தின் விடுப்பூக்கத்தைத் திருப்திப்படுத்துவதற்காக அவர் எதையும் கூறவில்லை. அவருடைய போதனை காரிய பூர்வமானது. மனிதனுக்கு சாந்தியும் சமாதானமும் கொடுக்கக் கூடியவற்றை மாத்திரமே அவர் போதித்தார்.
அலகாபாத்துக்குச் சமீபத்திலுள்ள கோசாம்பி என்ற இடத்திலே ஒரு அசோகமரக் காட்டில் பகவான் வசித்துவந்தார். ஒரு சில
*. MI (PT.S.)பக் 134-135 பாஷியத்தின்படி இங்கே தம்மம் என்பது உயர்ந்த ஆன்மீகப் பேற்றையும் தூயதரிசன்ங்களையும் கருத்துக்களையும் குறிக்கும். இவை எத்துணை உயர்ந்தனவானுலும் அவற்றில் பற்றுவைக்கக்கூடாது. எனவே தீயவற்றை எத்துணை தூரம் துறந்துவிட வேண்டும்.MAI (P.T.S.) பக். 109
4.

அசோக இலைகளைக் கையிலே எடுத்து அவர் சீடர்களைப் பார்த்து “என்ன நினைக்கிறீர்கள். பிக்குகளே! என் கையிலுள்ள இலைகளா காட்டி லுள்ள இலைகளா அதிகம் என்று கேட்டார். “பகவான் கையிலுள்ள இலைகள் அற்பம். அசோக்க காட்டிலுள்ள இலைகள் எம்மடங்கு அதிகம்”.
“அதேபோல நான் அறிந்தவற்றுள் ஒரு சொற்பத்தையே உங்க ரூக்குக் கூறியுள்ளேன். நான் சொல்லாதது மிக அதிகம். என் நான் அவற்றை உங்களுக்குக் கூறவில்லை. எனேனில் அவற்றல் உங்களுக்குப் பயனில்லை. அவை நிர்வாண சுகத்தைத் தரமாட்டா. அதனல் தான் நான் அவற்றைக் கூற வில்லை.”
புத்தர் அறிந்திருந்தும் எமக்குச் சொல்லாதவையென்ன என்பதை யிட்டுச் சில அறிஞர் வீண் ஆராய்ச்சியில் ஈடுபடுவர். அவசியமற்ற அத்யாத்மவித்தை சம்பந்தமான தனிக் கற்பனையிலெழும் விஷயங் யங்களைப் பற்றி புத்தர் அக்கறை கொள்ளவில்லை. இவை சிந்தனைக் காடு என அவர் வருணித்தார். இத்தகைய மனுேபாவம் அவருடைய சீடர்களிற் சிலருக்கே வெறுப்பையுண்டாக்கிற்று. இவர்களுள் மாலுங் கிய புத்திரர் என்பவர் ஒருவர். அவர் அத்தியாத்ம வித்தை சம்பந்தமான பத்துப் பிரசித்தமான கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கு விடை கூறுமாறு புத்தரை வேண்டினர்."
ஒரு நாள் மாலுங்கிய புத்திரர் என்பவர் மா?லத் தியானத்தை முடித்துக் கொண்டு பகவானை அணுகி வணங்கி ஒரு புறத்தில் இருந்து கூறினர். “பிரபோ, நான் தனியாயிருந்து தியானஞ் செய்த போது இந்த எண்ணம் என்மனத்தில் உண்டானது. பகவான் இந்தப் பிரச்சினைகளுக்கு விளக்கம் கொடுக்காமல் ஒரு புறத்தே ஒதுக்கித் தள்ளி விட்டீர்கள் :
இந்த உலகம் சாஸ்வதமானதா? சாஸ்வதமற்றதா? இது அநித்தியமானதா? நித்தியமானதா? உடல் தான் ஆன்மாவா? அல்லது உடல் வேறு ஆன்மா வேற? மரணத்தின் பின்னர் ததாகதர் நிலைத்திருப்பாரா? அழிந்து விடுவாரா? இறந்த பின் ஒரே நேரத்தில் இருந்தும் இல்லாமலுமிருக
கிருரா? ஒரே நேரத்தில் இல்லாமலும், இல்லாமல் அல்லாமலும் இருக்கிறரா?
1. SV (P.T.S.)uáš. 437. 2. சூளமாலுங்கக்ய சுத்த இல. 63 மஜிமஜ்
0.
5

Page 29
இவற்றை பகவான் எனக்கு விளக்கவில்லை. அத்தகைய மனுே பாவம் எனக்குப்பிடிக்கவில்லை. இதை என்னல் புரிந்து கொள்ள முடியவில்லை. பகவானிடம் போய் இவ்விஷயத்தைக் கேட்பேன். பகவான் இவற்றை எனக்கு விளக்குவாரானல் அவரின் சீடனயிருந்து என் துறவுவாழ்வைத் தொடர்ந்து நடத்துவேன். பகவான் விளக்கா லிட்டால் சங்கத்தை விட்டு விலகுவேன். உலகம் சாசுவத மானதென பகவான் அறிந்திருந்தால் அதை அவ்வாறே எனக்கு அவர் விளக்க வேண்டும். உலகம் சாசுவதமற்றதென்று பகவான் அறிந்திருந்தால் அவ்வாறே எனக்குச் சொல்ல வேண்டும். உலகம் சாசுவதமா இல்லையா என்பதை பகவான் அறிந்திராவிட்டால் அவ்வாறு அறியாத வர் நேரே “எனக்குத் தெரியாது, நான் அதைக் காணவில்லை என்று நேரடியாகச் சொல்ல வேண்டும்”.
இத்தகைய அத்தியாத்ம ஆராய்ச்சிகளில் தமது அருமையான காலத்தை வீணுக்கி மனச் சாந்தியைக் குலைத்துக் கொண்டிருக்கும் இன்றைய உலகின் கோடிக்கணக்கான மக்களுக்கு புத்தர் மாலுங்கிய புத்திரருக்குக் கூறிய விடை நன்மை பயக்கும்.
“வாருங்கள் மாலுங்கிய புத்திரனே, உங்கள் துறவு வாழ்க்கையை என் கீழ் நடத்துங்கள் ; நான் இப்பிரச்சினைகளை விளக்கி வைக்கி றேன்” என்று எப்போதாவது உங்களுக்குக் கூறினேன?”
“இல்லை, பிரபோ” “சுவாமீ" பகவானிடத்திருந்தே துறவு வாழ்வை நடத்துவேன்" பகவான் இந்தப் பிரச்சினைகளை எனக்கு விளக்க வேண்டு’ மென்றும் nாலுங்கிய புத்திரனே நீங்களாவது எனக்குச் சொன்னீர்களா?
"இல்?ல சுவாமீ" “வந்து என் கீழ் துறவு வாழ்வை நடத்துவீராக, மாலுங்கிய புத்திரனே இக்கேள்விகளுக்கு விடைதகுகிறேன்” என்று இப்பொ ழுது கூட நான் உங்களுக்குக் கூறவில்லையே. “சுவாமீ, நான் துறவு நெறியை பகவான் கீழிருந்து நடத்தப் போகிறேன், அவர் கேள்விகளுக்கு விளக்கம் தருவார்” என்று நீங்கள் &ag)at தில்லையே. இப்போது அறிவில்லாதவரே! யார் யாருக்கு விளக்கம்
தர மறுக்கிறர்! * இந்தக் கேள்விகளுக்கு விடைதரும்வரை பகவான் உபதேசப் படி நான் துறவு வாழ்வை நடத்துவதில்லை” என்று மாலுங்கிய புத்திரனே எவராவது சொல்வாரானல் ததாகதரின் பதில் இன்றி அவர் இறக்க வேண்டியதே. ஒரு மனிதன் நஞ்சூட்டிய் அம்பினல் காய மடைந்துவிட்டான் என்று வைத்துக் கொள்வாய், மாலுங்கிய 1. இருவரும் சுயாதீனவர்கள், இருவரில் எவரும் மற்றவருக்கு கடப்பாடுடையவ
playoff.
6

புத்திர, அவருடைய நண்பர்களும், சுற்றத்தவரும் அவனிே ஒரு சத்திர வைத்தியரிடம் கொண்டு போகிறர்கள். அப்போது அம்மனி தன் “ யார் என் மீது அம்பு எய்தார்கள், அவன் சத்திரியணு, பிராமணன, வைசியணு, சூத்திரன, அவனுடைய பெயரென்ன ? கோத்திரமென்ன ? அவன் நெட்டையணு, கட்டையன, நடுத்தர மானவன ? அவனுடைய நிறம் கறுப்பா, கபிலமா, பொன்னிறமா? அவன் எந்தக் கிராமம், நகரம், பட்டினம் ? இவற்றை அறியும்வரை என் உடலிற் பாய்ந்த அம்பை எடுக்கவிடமாட்டேன். மேலும் எத்த கைய வில்லினல் அவன் என்னை எய்தான், வில்லின் நாண் எத்த கையது? எத்தகைய அம்பை எய்தான், அம்பிலே சேர்க்கப்பட்ட சிறகு எத்தகையது, அம்பின் அலகு என்ன? உலோகத்தினல் செய்யப் பட்டது? இவற்றை அறியும்வரை அம்பை எடுக்க விடமாட்டேன்” என்று கூறுகிறன். இக் கேள்விகளுக்குப் பதில் பெருமலே அந்த மனிதன் இறந்து விடுவான் மாலுங்கிய புத்திர, அவ்வாறே மாலும் கிய புத்தர, இந்த உலகம் சாசுவதமானதா முதலிய கேள்விகளுக்கு பகவான் விடை தரும்வரை பகவானுடைய சீடனுய்த் துறவு வாழ்வை நடத்தமாட்டேன் என்று ஒருவன் கூறுவானனல், ததாகதரின் பதில் கிடைக்காமலே அவன் இறந்து விடுவான்.
துறவு வாழ்க்கை இந்த அபிப்பிராயங்களில் தங்கியிருக்கவில்லை. என்ருலும் இக் கேள்விகளுக்கு எவ்வித பதிலை ஒருவர் கூறினலும் எவ்வித கருத்தை உடையவராயிருந்தாலும் உலகில் பிறப்பு, மூப்பு பிணி, சாக்காடு, அவலக் கவலைக் கையாறு என்பன உண்டு: ഷഖ്യ றிலிருந்து இப்பிறவியிலேயே நீங்குவதற்கு வழியையே நிர்வாணத் தையே நான் போதிக்கிறேன்.
ஆனபடியால் மாலுங்கிய புத்திரனே, நான் விளக்கியவற்றை விளக்கியவையாகவும், விளக்காதவற்றை விளக்காதவையாகவும் கொள்வாயாக. நான் விளக்காதவை எவை ? உலகம் சாகசுவத் மானதா அல்லவா முதலிய 10 கருத்துக்களை நான் விளக்கவில்லை. என் மாலுங்கிய புத்திர அவற்றை நான் விளக்கவில்லை. ஏனென் றல் அவை பயனற்ற ஆராய்ச்சிகள். துறவு வாழ்வோடு அவை அடிப் படைத் தொடர்புடையவையல்ல, வைராக்கியம், பற்றற்றநிலை, ஆசை யற்றநிலை, சாந்தம், ஆழ்ந்த காட்சி, பூரண அனுபவம், நிர்வாணம் என்பவற்றுக்குத் துணை புரிவனவல்ல. அதனல் தான் அவற்றைன் பற்றி நான் உங்களுக்கு கூறவில்லை.
அப்போது மாலுங்கிய புத்திரரே, நான் விளக்கியது என்ன ? துக்கம் உண்டென் விளக்கினேன். துக்க உற்பத்தியை விளக்கினேன்,
y

Page 30
துக்க நிவாரணத்தை விளக்கினேன், துக்க நிவாரண மார்க்கத்தை விளக்கினேன்.
எதற்காக இவற்றை நான் விளக்கினேன். இது பயனுடையதென் பதால், துறவு நெறிக்கு அவசியமானபடியால், வைராக்கியம் பற்றற்ற நிலை, ஆசையறுத்தல், சாந்தம், ஆழமான காட்சி, பூரண அனுபவம் நிர்வாணம் என்பவற்றுக்குத் துணை புரிவதால், அதனல் நான் அவற்றை விளக்கினேன்.”
புத்தர் மாலுங்கிய புத்திரருக்குக் கூறிய நான்கு உயர் வாய்மைகளை ஆராய்வோம்.
1. இந்த நான்கு உயர் வாய்மைகளும் அடுத்த நாலு அத்தியாயங்களில் விளக்கம்
է 1&ւն. 2. புத்தருடைய இந்த அறிவுரை விரும்பிய பலனை மாலுங்கிய புத்திரனிடம் உண்டாக்கிறது. அவன் மறுபடியும் அறிவுரை பெறுவதற்காக புத்தரிடம் சென்றதாகவும் அதன் பலனுக அருகததிலை அடைந்ததாகவும் வேறு Liisaid) streatuu(Sps. A(Qasrepal, 1929) Lid. 345-346. SIV (PTS)
பக். 72.
8

11 ஆம் அத்தியாயம்
நான்கு உயர் வாய்மைகள் முதலாவது உயர் வாய்மை மதுக்கம்
காசிக்குச் சமீபத்திலுள்ளது சாரநாத் என்ற நகரம். அது முற் காலத்திலே இசிபத்தான என்று வழங்கப்பட்டது. இங்கே தான் புத்த பகவான் தமது முதல் தருமோபதேசத்தைத் தமது பழைய கூட்டாளிகளான ஐந்து தாபசர் முன்னிலையில் நிகழ்த்தினர். அதி லே நான்கு உயர் வாய்மைகள் (சத்தாரி அரிய சச்சானி) விளக்கப் பட்டன. பெளத்தத்தின் இருதயம் போன்றவை இந்த உண்மைகள். இந்தத் தருமோபதேசத்திலே நான்கு வாய்மைகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. மூலகிரந்தங்களில் அவ்வாறே காணப்படுகிறது. ஆனல் ஆதி பெளத்த பிடகங்களிலே பல இடங்களில் அவை மீண்டும் மீண்டும் விரிவாகவும் பல படியாகவும் விளக்கப்படுகின்றன. இந்தக் குறிப்புக்களினதும் உதவியோடு நான்கு வாய்மைகளை ஆராய்ந்தால் புத்தர் கூறிய தருமத்தின் முக்கியமான கோட்பாடுகளைத் தவறின்றி நன்ருக மூல கிரந்தங்களில் உள்ளபடுடி அறிந்து கொள்ளலாம்.
அந்த நான்கு வாய்மைகளாவன : : 1. துக்கம்
2. சமுதயம், அதாவது துக்க உற்பத்தி 3. நிரோதம் அதாவது துக்க நிவாரணம்
4.
மக்க-துக்க நிவாரணமார்க்கம்.
முதலாவது உயர் வாய்மை-துக்கம்
முதலாவது உயர்வாய்மை (துக்க அரியசச்ச-ஆரிய சத்தியம்உயர்வாய்மை) “துன்பம் என்ற உயர் வாய்மை’ என மொழி பெயர்க் கப்படுகிறது. அதன்படி பெளத்தத்தில் வாழ்வு துன்பமும் இன்னலு மன்றி வேறென்றுமன்றென விளக்கப்படுகிறது. இந்த மொழிபெ யர்படம் விளக்கமும் பொருத்தமற்றவை. தவறனவை. இம்மொழி
1. தம்ம சக்கப் பவத்தன சுத்த (தர்ம சக்ரப்பரிவர்த்தன குத்திரம்) தர்மசக்கரத் தைச் சுழற்றிய குத்திரம். MHVG(அலுத்கம 1922) பக். 9. SW)PTS) பக். 429
2. இச் சொல்லுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பின்னல் காட்டும் காரணங்
களுக்காக கொடுக்கவில்லை.
9

Page 31
பெயர்ப்பு வரையறையுடையது. பொருத்தமற்றது, இலேசாக்கப்பட்டது. விளக்கம் மேலெழுந்தவாரியானது. இதனல் பெளத்தம் வாழ்வில் தன்மைகாணுத ஒரு சமயமென மக்கள் சாதாரணமாகக் கருத ഞഖൿäg.
எதிலும் நலமே காண்கிற தன்மையோ எதிலும் தீமையே காண் இற தன்மையோ பெளத்தத்தில் கிடையாது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். பெளத்தம் எத்தன்மையுடையதென் ருல் வாழ்வைப் பற்றியும் உலகைப் பற்றியும் யதார்த்தமான ஒரு காட்சியுடையது. அது உள்ளதை உள்ள வாறே பார்க்கும் “யதாபூத” த் தன்மையுடையது. அது உங்களைப் போலிக் கற்பனையில் இருக்கச் செய்வதில்லை. அல்லது கற்பனையிற் பிறந்த பல வகையான பயத் திலும் பாவ எண்ணங்களிலும் இருக்கச் செய்வதில்லை. உங்கள் உண்மைநிலை என்ன என்பதையும் உங்களைச் சுற்றியுள்ள உலகம் எத்தகைய தென்பதையும் பிரத்தியட்சமாக கண்டு காட்டி நீங்கள் பூரணமான விடுதலைபெறவும் சமாதானமும் சாந்தியும் சுகமும் பெறவும் வழியைத் தெரிவிக்கிறது.
நோய்மிகக் கொடியது, இதற்குப் பரிகாரமே இல்லையெனச்சில வைத்தியர்கள் மிகைப்படுத்திக் கூறுவர். வேறு சிலர் அப்படி நோ யொன்றுமில்லை, வைத்தியம் அவசியமில்லை என்று அறியாமையால் கூறி நோயாளிக்குப் போலி ஆறுதல் கூறி எமாற்றுவர். முதல் வைத்தியர் தீமை காணும் தன்மையுடையவர் என்று கூறலாம். இரண்டாமவர் நன்மையே காணும் தன்மையுடையவர் எனலாம். ஆனல் இரண்டு பேரும் ஆபத்தான பேர்வழிகளே. மூன்றவது வகையான ஒரு வைத்தியர் இருக்கிறர். அவர் நோய்க் குணங்களைச் சரியாக அறிந்து நோக்குரிய காரணத்தையும் தன்மையையும் உணர்ந்து, அதைக் குணப்படுத்தலாமெனத் தெளிவாகக் கண்டு, தைரியத்தோடு மருந்து கொடுக்கிறர். அதன் பயனக நோயாளி தப்பிப் பிழைக்கிருன். புத்தபகவான் மூன்றவது வைத்தியரைப் போன்றவர். இவரே ஞானமும் விஞ்ஞானப் பான்மையுமுடையவர். உலகத்துப் பிணிக்கு ஏற்றவைத்தியர். பிசக்க குரு அல்லது பைஷ ஜ்யகுரு.
துக்க என்ற பாளிச் சொல் (சம்ஸ்கிருதத்தில் துஃக) சாதாரணமாக துன்பம், இன்னல், துயர், அல்லல் என்ற கருத்துடையது. இதன் எதிர்ப் பதம் சுகம், மகிழ்ச்சி, செளகரியம், சொகுசு என்ற பொருள் களையுடையது. முதலாவது உயர் வாய்மையாய் புத்தர் உலகைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும் கொண்ட காட்சியைக் குறிக்கும் அக்கம் என்ற சொல் ஆழ்ந்த தத்துவக் கருத்துடையது. பலபட விரிந்த பொருளைச் சுட்டுவது. சாதாரணமான பொருளில் கொள்ளும்
20

துன்பம் என்ற கருத்தை துக்கமென்ற முதல்வரய்மை அடக்கிய போதிலும், அது “பூரணமின்மை,” “நிறைவற்றதன்மை", “அநித்தியம், உள்ளிடில்லாதது”, போலி” “என்ற ஆழமான கருத் துக்களையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆகவே ஆங்கிலத்தில் இக்கருத்துக் களைச் சுட்டக் கூடிய சொல் இல்லாதபடியால் அதற்கு ஆங்கில வார்த்தையைக் கொடாமல் விட்டு விடுவதே நல்லது. துயர் துன்பம் என்று மாத்திரம் மொழி பெயர்த்துத் தவறனதும் பொருத்த மில்லாததுமான கருத்தைக் கொடுப்பதிலும் பார்க்க ‘துக்கம்’ என்று விட்டு விடுவதே நல்லது.
உலகில் துன்பமுண்டு என்று புத்தர் கூறும் போது வாழ்வில் இன்பம் இல்லையென அவர் முற்ருக மறுக்கவில்லை. துறவிகளுக்கும் இல்லறத்தார்க்கும் பல விதமான லெளகீக இன்பங்களும் ஆன்மார்த் தமான இன்பங்களுமுண்டென்பதை அவர் ஒப்புக் கொள்ளுகிறர். புத்தருடைய உரைகள் அடங்கிய ஐந்து மூலப்பாளித் தொகை அநூல்களில் ஒன்றன “அங்குத்தர நிகாயத்" திலே இன்பங்கள் (சுகானி) பற்றிய அட்டவணை ஒன்றுண்டு. இல்லற இன்பம், துறவற இன்பம்; புலன் வருமின்பங்கள், துறவினல் வரும் இன்பங்கள், பற்றினல் வரும் இன்பங்கள், பற்றில்லாமையால் வரும் இன்பங்கள், உடல் வருமின்பங்கள் மனத்திலுண்டாகும் இன்பங்கள் எனப் பலவகை இன்பங்கள் கூறப்படுகின்றன. ஆனல் இவை யெல் லாம் துக்கத்தின் கீழ்ச் சேர்க்கப்பட்டுள்ளன.
இவை மாத்திரமல்ல “தியானம்’ என்ற உயர்ந்தபோக ஆனந்த நிலை கூட துக்க அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலை துன்ப மெனச் சாதாரணமாகக் கூறப்படும் துயர் சிறிதுமற்றதும், தூய ஆனந்தவிெனக் கூறப்படுவதுமான நிலை. அத்துடன் இன்பமும் துன்பமுமற்ற உணர்ச்சிகளிலிருந்து நீங்கிய பற்றற்ற சமாதி நிலைகள் கூட துக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஐந்து பாளிக்கிரந்த தொகுப்பு களில் வேறென்றன மஜ்ஜிம தியாகத்தில் உள்ள மற்ருெரு சூத்திரத்தில் இங்கு குறிப்பிட்ட தியான நிலைகளில் உண்டாகும் இன்பத்தை விதந்து கூறியபின் பகவான் அவையும் அநித்திய மானவை, அவையும் துக்கமே, அவை மாற்றத்துக்குட்பட்டவை (அநிச்சாதுக்கா விபரிணும தம்மா) என்று குறிப்பிடுகிறர். இங்கே துக்கமென்ற சொல் விளக்கிக் கூறப்படுகிறது. இது துன்பத்தைத் தருவதால் துக்கமன்று. "எது அநித்தியமோ அது துக்கம்” என்ற பொருளில் (யத்அநிச்சம் தம்துக்கம்) கூறப்படுகிறது.
புத்தர் விஷயங்களை யதார்த்தமாகவும் பிரத்தியட்சமாகவும் காண் பவர். வாழ்வு பற்றியும், புலன் வரும் இன்பங்கள் பற்றியும்
1. A (கொழும்பு) 1929 பக். 49.
2, osasšsát spiss Fš 3, Ml (PTS) L& 90.
2

Page 32
ஒருவர் மூன்று விஷயங்களைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டு
மென அவர் கூறுகிருர்.
(1) கவர்ச்சி அல்லது இன்ப அனுபவம் (அஸ்ஸாத). (2) தீமை விளைதல், ஆபத்து அல்லது அதிருப்தி (ஆதீனவ). (3) சுதந்திரம் அல்லது விடுதலை (நிஸ்ஸரண).
மகிழ்வளிக்கும் அழகான கவர்ச்சியுள்ள ஒருவரைக் காணும் போது அவரிடம் விருப்பங்கொள்ளுகிறீர். அவரிடம் நீங்கள் கவர்ச்சி கொள்ளுகிறீர். மேலும் மேலும் அவரைக் காண விரும்புகிறீர். அவரைக் காண்பதால் மகிழ்ச்சியும் திருப்தியுமடை கிறீர். இது இன்ப நுகர்வு (அஸ்ஸாத) அனுபவ பூர்வமான ஒரு விஷயம். ஆனல் இந்த இன்ப அனுபவம் நித்தியமானதன்று. அவ்வாறே அந்த ஆளின் அழகும் கவர்ச்சியும் நித்தியமல்ல. நிலைமை மாறினல், அந்த ஆளைக் காணமுடியாமற் போனல், இந்த இன்ப அனுபவத்தைப் பெறமுடியாது போனல், நீங்கள் துயரமடைவீர்கள். அதனுல் மதிமயங்கி மாறட்டம் அடைய லாம். முட்டாள்தனமாக நடந்து கொள்ளவும் முற்படுவீர். இதனுல் உண்டாகும் தீமை இதுவே. இந்த ஆதீனவத்தால் உண்டாகும் அதிருப்தியும் ஆபத்தான தன்மையும் இதுவே. இதுவும் ஒரு அனுபவமே. ஆனல் அந்த ஆளிடம் பற்றில்லா விட்டால், முற்றக பற்றுக் கோடு ஒழிந்தால் அதுவே சுதந் தரம், விடுதலை (நிஸ்ஸரண). உலகத்து இன்ப அனுபவங்கள் எல்லாம் இம் மூன்று தன்மைகளை உடையன. வாழ்வைப் பற்றிப் பூரணமாகவும் பிரத்தியட்சமாகவும் அறிந்து கொள்ள வாழ்வில் அனுபவிக்கும் இன்பதுன்பங்களையும், அவற்றி லிருந்து விடுதலை பெறுவதையும் கணக்கில் எடுக்க வேண்டுமே யன்றி இங்கே எதிலும் நலமே காண்கிற தன்மையோ எதிலும் தீமையே காண்கிற தன்மையோ ஆராய்ச்சிக்குரிய விஷயங்களல்ல வென்பது இதிலிருந்து தெரியவரும். அப்போதுதான், உண்மை யான விடுதலை சாத்தியமாகும். இவ்விஷயம் பற்றி புத்தர் பிரான் பின்வருமாறு கூறுகருர் :
ஓ ! பிக்குகளே ! புலன் வருமின்பங்களை அனுபவித்தல் இன்ப அனுபவமே, அவற்றல் எற்படும் அதிருப்தி அதிருப்தியே, அவற்றி லிருந்து விடுதலை பெறுதல் விடுதலையே என்பதைப் பிரத்தியட்ச மாக அறிந்து கொள்ளாத துறவிகளும் பிராமணர்களும், புலன் வருமின்பத்தில் உண்டாகும் ஆசையை முற்றக அறிந்துகொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயம். ஆனல் ஓ ! பிக்குகளே 1 புலன்
1. Mol (P.T.S.) Lušasib 85, S III (P.T.S.) Lust 27
22

வருமின்ப அனுபவம், இன்ப அனுபவமே, அவற்றல் வரும் துன்பம், துன்பமே, அவற்றிலிருந்து விடுதலை பெறுவது விடுதலையே என்பதை இவ்வாறு புறநோக்காக துறவிகளும் பிராமணரும் அறிந்து கொள்வரானல், அவர்கள் நிச்சயமாக அவற்றை உண்டாக்கும் ஆசையை முற்றய அறிந்து கொள்வர். அதனல் மற்றெருவருக்கும் அதைப் போதிக்கும் திறமைபெறுவர். அந்தப் போதனையை அனு சரிப்பவர், புலன்வருமின்பங்களை உண்டாக்கும் ஆசையை பூரண மாகப் புரிந்து கொள்வர்."
துக்கம் பற்றிய கருத்தை மூன்று அமிசங்களுடையதாக அறிந்து கொள்ளவே வேண்டும் :
(1) சாதாரணமான துக்கம். இது துக்க துக்கம் எனப்படும். (2) மாற்றங்கள் மூலம் உண்டாகும் துக்கம் (விபரிணும துக்கம்). (3) எதுக்களால் உண்டாகும் துக்கநிலைகள் (சங்கார துக்கம்).?
பிறப்பு, மூப்பு, பிணி, சாக்காடு, பிரியமற்றவர்களோடு சேர்தல் பிரியந்தராத நிலைமைகள், அன்புள்ளவரை விட்டுப் பிரிதல், பிரிய மான நிலைகளைவிட்டு நீங்குதல், விரும்பியதைப் பெருதிருத்தல், துயர், கவலை, அவலம், கையாறு என இத்தகைய உடல் வேதனை யையும் மனவேதனையையும் தரும் துன்பங்கள் எல்லாம், அதாவது துன்பமெனச் சாதாரணமாக ஒப்புப் கொள்ளப்படுவனவெல்லாம், துக்க துக்கம் என்ற பிரிவில் அடங்கும்.
இன்ப உணர்ச்சியும் வாழ்வில் உண்டாகும் இன்பநிலையும் நித்தி யமாய் என்றும் நிலைக்கக்கூடியவை அல்ல. அவை இன்றே நாளையோ மாற்றத்துக்குள்ளானவை. அவ்வாறு மாறும்போது துன்பம், துயர், நோக்காடு என்பவற்றை உண்டாக்கும். இந்த மாற்றங்களுக்குட்பட்ட துக்கம் விபரிணும துக்கம் எனப்படும்.
மேலே கூறிய இரண்டு வகையான துக்கத்தையும் புரிந்து கொள் வது இலேசு. இவற்றை எவரும் ஆட்சேபிக்கமாட்டார். முதலாவது உயர்வாய்மையின் இந்த அமிசம் புரிந்து கொள்வதற்கு இலேசா யிருப்பதால் சாதாரணமாக எல்லாராலும் அறியப்பட்டதொன்றகும். இஃது எம் தினசரி வாழ்வில் காணப்படும் சாதாரண அனுபவ ԼԸnՓւհ.
மூன்றவது பிரிவைச் சேர்ந்த துக்கமே இந்த முதல்வாய்மையில் மிக முக்கியமான தத்துவஞான அமிசமாகும். இதைப் புரிந்து கொள்வதற்கு “நான்” என்ற பொருள் எது ? தனிபபட்ட ஒரு
I. MI (P.T.S) uš 87. 2. விசுத்திம்க்க (PTS) பக். 499, அபிதம்ம சமுச்சல பக்கம் 38.
23

Page 33
வரென்றல் என்ன, புட்கலன் என்பது என்ன என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். உயிர் என்று சொல்லப்படுவது என்ன ?
"உயிர்”, “புட்கலன்”, “நான்”, “அகம் பிரத்யய” என்று சொல்லப் படுவதெல்லாம் பெளத்த கொள்கைப்படி “ பஞ்சக்கந்தம் ” எனப் படும். இப் பஞ்சக்கந்தங்கள் மாறும் இயல்புடையவை. இவை உடல் உளம் என்பவை சம்பந்தமான சக்திகள் அல்லது வலுக்களின் சேர்க்கையாலுண்டானவை. இவை ஐந்து பதார்த்தங்களின் சேர்க்கை, “ இந்த உபாதான பஞ்சக்கந்தங்கள் துக்கமே ’ என இருர் புத்தர். “ துக்கமென்பது பஞ்சக்கந்தமே ” என அவர் வேறே ரிடத்தில் குறிப்பிடுகிறர். “ஓ ! பிக்குகளே ! துக்கம் என்றல் என்ன உபாதான பஞ்சக்கந்தமே அது. எனக்கூற வேண்டும் ”.* துக்கம் பஞ்சக்கந்தமும் இரு வேறு பொருள்களல்ல என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பஞ்சக்கந்தமே துக்கம். உயிர் என்று சோல்லப்படும் பொருளே ஆக்கியுள்ள ஐந்து கந்தங்களைப்பற்றி அறிந்த ததும் இந்த விஷயத்தை நன்கு புரிந்து கொள்ளலாம். பஞ்சக் கந்தங்கள் என்பவை என்ன. பஞ்சக்கந்தங்கள்
முதலாவது சடப் பொருளின் சேர்க்கையான ரூபக்கந்தம். ரூபக்கந்த மென்பதில் நான்கு மகாபூதங்கள் (சத்தாரி மஹாபூதானி) அடங்கும். இவை மண்,நீர், அனல்,காற்று என்பன. திண்மை,நீர்மை,வெம்மை, புடைபெயர்ச்சியென இவை அறியப்படும். இவற்றிலிருந்து பிறந்த தன் மாத்திரைகளான சப்த, ஸ்பரிசு, ரூப, ரச, கந்தமென்பவையும் அவற்றை அறியும் பஞ்சேந்திரியங்களான காது, மெய், கண், நாக்கு, மூக்கு என்பனவும், மனமும் மன்த்தில் பிறக்கும் எண்ணங்கள், கற்பனைகள், கருத்துக்கள் ஆகிய தரிமாயதனங்களும் இதில் சேரும். இவ்வாறு சடம் என்று சொல்லப்படும் உலகம் அனைத்தும் அந்தக் கரணங்களும் புறக் கரணங்களுமெல்லாம் இந்தப் பஞ்சக்கந்தமே. (இங்கே அந்தக்கரணமென்பது மேலே விளக்கிய தர்மாயதனங்கள்)
இரண்டாவது வேதஞக்கந்தம் எனப்படும். வேதனை என்பது நுகர்ச்சி. புற உலகத்தோடு நமது உடலும், மனமும் தொட்டுக் கொள் குரும்போது உண்டாகும் நுகர்ச்சிகள் இன்பமாகவோ, துன்பமாகவோ, நொதுமலாகவோ இருக்கும். இவை ஆறுவகை உருவங்களைக் கண் காணும்போது உண்டாகும் காட்சி நுகர்வு. அவ்வாறே காதினுல் கேட்பது, மூக்கினல் மணப்பது, நாக்கினல் சுவைப்பது, மெய்யினல்
சம்கித்தேன பஞ்சுபாதானக்கந்தா துக்கா SV (PTS) பக்கம் 421. எஸ் 111 (TTS) பக்கம் 158.
staro 111 (PS) ušas 59. அபிதம்ம சமு-பக்கம 4, வியங்க-பக்கம் T2, தம்ம சங்கனி பக்கம் 138, 39க்
:
24

பரிசித்துணர்வது, மனத்தினல் (பெளத்தத்தில் மனம் ஆருவது இந்திரியமாகக் கருதப்படும்) எண்ணங்கள், சித்தவிருத்திகள் கருத் துக்கள் உண்டாவது என புலனுகர்வுகள் ஆறு. உடலினலும் மனத்தினலும் பெறும் உணர்வுகள் எல்லாம் இதில் அடங்கும். பெளத்தத்தில் மனம் என்ருல் எவ்வாறு விளக்கப்படுகிறதென் பதை இங்கு குறிப்பிடுவது நன்று. சடப் பொருள் இதற்கு எதிரான ஆன்மா என இரு எதிர்ப் பொருள்களை பெளத்தம் எற்றுக் கொள்வதில்லை. ஏனைய மதங்களிற் பெரும்பாலானவை இத்தகைய இருமையைப் போற்றும். மனம், கண் காது போன்றதொரு இந்திரியம். எனைய இந்திரியங்களை அடக்கி ஆள்வதுபோல மனத் தையும் அடக்கி ஆளலாம். ஆறு புலன்களையும் அடக்கி ஆள் வதைப் பற்றி புத்தர் அடிக்கடி குறிப்பிடுவார். இந்திரியங்கள் என்ற முறையில் கண் உருவங்களையும் வண்ணங்களையும் கண்டு உணரும். மனமோ எண்ணங்கள் கருத்துக்கள், சைதசிக வடிவங் கள் என்பவற்றையே உணரும். ஒவ்வொரு புலன்களும் அவை யவை உணரக்கூடிய விஷயங்களிலேதான் ஆட்சி நடத்தும். வண்ணங் களை நாம் பார்க்கலாமேயன்றி கேட்க முடியாது. அவ்வாறே சத்தத் தைக் கேட்கலாமேயன்றிக் காணமுடியாது. பஞ்சப்புலன்களாகிய கண் காது, மூக்கு, நாக்கு, உடல் என்பவற்றல் உருவம், சத்தம், கந்தம், சசம், பரிசம் என்பவற்றை உணர்கிறேம். ஆனல் உலகம் முழுவதும் இந்த ஐம்புல நுகர்ச்சிகளில் அடங்கவில்லை. அவை உலகின் ஒரு பகுதியே. எண்ணங்கள், கருத்துக்கள் என்பன இவற்றில் அடங்க வில்லையல்லவா ? அவையும் உலகின் ஒரு பகுதிதானே. ஆனல் எண்ணங்களை கண், காது, மூக்கு, நாக்கு, உடல் போன்ற புலன்களால் உணரமுடியாதல்லவா ? மனம் என்ற இந்திரியம் இவற்றை அறி கிறது. இந்த ஐந்து இந்திரியங்களால் உணரப்படும் உலகுக்கு கரு துக்களும் எண்ணங்களும் புறம்பானவையல்ல. அவை சட அனு பவங்களில் தங்கியுள்ளன. சட அனுபவங்களால் பாதிக்கப்படுகின் றன. குருடனுய்ப் பிறந்த ஒருவன் வண்ணங்கள் பற்றி கண்ணல்லாத வேறு இந்திரியங்கள் மூலம் பெற்ற உணர்ச்சிகளோடு ஒப்பிட்டு ஒரு கருத்தை உணர்கிறன். உலகின் ஒரு பகுதியாயுள்ள கருத் துக்களும் எண்ணங்களும் சட அனுபவங்கள் மூலம் உருவாகி அவற்றல் பாதிக்கப்பட்டு மனத்தில் உருவாக்கப்படுகின்றன. இதனல் மனம், கண் காது என்பன போல இந்திரியமாகவே கொள்ளப்படு கிறது.
மூன்றவது சஞ்ஞாக்கந்தம் எனப்படும். சஞ்ஞா என்றல் குறிப்பு. குறிப்புக்கள் புலன்வருசாட்சிகள். புலனுணர்ச்சியான வேதனக் கந்தம் போலவே சஞ்ஞாக்கந்தமும் அறுவகை. மனமுட்பட்ட ஆறு
1. Greio 111 (PTS) tais a 59.
5

Page 34
புலன்களின் தன்மாத்திரைகளும் அவற்றேடியைந்த வெளிப் பொருள்களும் இந்த ஆறு வகைகளாகின்றன. புலனுணர்ச்சிகள் போலவே ஆறு இந்திரியங்களும் வெளியுலகப் பொருள்களோடு தொடர்பு கொள்வதால் உண்டாவது, சடப்பொருள்களையும் மான சிகப் பொருள்களையும் இனங்கண்டு கொள்வன இந்தக் குறிப்புக் களென்னும் சாட்சிகளே.
நாலாவது சங்காரக் கந்தம் எனப்படும். இந்தத் தொகுதியில் நல்லனவும் தீயனவுமான சங்கற்பங்கள், விருப்பத் துணிவாற்றவி லிருந்து தோன்றிய தொழிற்பாடுகள் எல்லாம் அடங்கும். சாதாரண மாக கன்மம் (கம்ம) என்று வழங்கப்படுவனவெல்லாம் இந்தப் பகுதியில் சேர்ந்தவையே. கன்மத்துக்கு புத்தர் கொடுத்த வரை விலக்கணம் இங்கே கருத்திற் கொள்ளப்படல் வேண்டும். “ஒ பிக்கு களே சேதனம் என்ற விருப்பத்துணிவாற்றலையே நான் கன்மம் என்று கூறுகிறேன். சங்கற்பஞ் செய்து கொண்டபின் ஒருவர் மனம் வாக்குக் கரணங்களினல் செயற்படுகிறர். விருப்பத் துணிவாற்றல் என்பது மன ஆக்கப்பாடு,மனச் சேட்டிதம் ஆகும். அது மனத்தை நல்லது, தீயது, நொதுமலானது என்ற செயல்களில் உய்க்கிறது.4 வேதனையும் சஞ்ஞையும் அதாவது புலனுணர்வும், குறிப்பும் (σΠι β) போலவே, விருப்பத் துணிவாற்றல் LOGOTub என்னும் சங்கற்பமும் ஆறு அந்தக் கரணங்கள் அவற்றுக்கு ஏற்ற புற உலகத்துப் பொருள்களோடு சடப்பொருளும் கருத்துப் பொருளும் தொடர்புபடும் முறையால் ஆறு வகைப்படும். புல னுணர்வும் குறிப்பும் விருப்பத்துணிவாற்றலால் (சங்கற்பத்தால்) உண்டான செயல்களல்ல. அவை கர்மபலனை உண்டாக்கமாட்டா. விருப்பத்துணிவாற்றல் கொண்ட செயல்களே கர்ம பலனை உண்டாக்கு கின்றன. மனசிகார என்னும் கருத்துன்றுதல், சந்த என்னும் விருப்பத்துணிவு, அதிமொக்க என்னும் தீர்மானம், சத்தா என்னும் சிரத்தை, சமாதி என்னும் எகாக்கிரநிலை, பஞ்ஞா என்னும் ஞானம், வீரிய என்னும் பலம், ராக என்னும் விருப்பு, படிக என்னும் வெறுப்பு, அவித்தை என்னும் அறியாமை, மானம் என்னும்
1. S 111 (PTS) Ludash 60.
2. மனக்கற்பிதங்கள் (Menta) formations என்ற சொல்லை பஞ்சக்கந்த அட்டவணையில் வரும் சங்காரா என்ற பதத்தின் பலபட விரிந்த பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். வேறு சந்தர்ப்பங்களில் சங்காரா என்ற சொல் உலகில் உபாதைக்குட்பட்ட எல்லாவற்றையும் கருதும். இந்த அர்த்தத்தில் பஞ்சக்கந்தங்களும் சங்காரமென்றே கொள்ளப்படும்.
3. A (கொழும்பு 1929) பக்கம் 590 சேதனுஹம் பிக்கவே கம்மம்வதாமி. சேதயித்
வாகம்மம் கரோதி காயேன வாசா மனசா.
4. Abhisamuc udah 6.
5. S 111 (PTS) usash 60.

தன்மதிப்பு, ஆன்மா என ஒன்று உண்டென்னும் சக்காயதிட்டி முதலி னைவே கர்மபலனை உண்டாக்கக் கூடியன. சங்காரக் கந்தத்திலே 52 வகையான சித்தத் தொழிற்பாடுகளுண்டு. (விஞ்ஞானக்கந்த)
ஐந்தாவது விஞ்ஞானக்கந்தம் எனப்படும். விஞ்ஞானமென்பது கண், காது, மூக்கு, நாக்கு, உடல், மனம் என்ற ஆறு இந்திரியங்களில் ஒன்றை ஆதாரமாகக் கொண்டு உண்டாகும் மறுவினையாகும். அதற்கு விஷயமாயுள்ளது புற உலகத்தோற்றங்களுள் பொருத்தமாயுள்ள உருவம், சத்தம், கந்தம், சுவை, ஸ்பரிசம், என்பவற்றில் ஒன்றகும். உதாரணமாகக் காட்சி விஞ்ஞானம் (சக்கு விஞ்ஞானம்) கண்ணை ஆதாரமாகவும் காணும் உருவை காட்சிக்கு விஷயமாகவும் கொண்டது. மனே விஞ்ஞானம் கண்ணை ஆதாரமாகக் கொண்டு ஒரு கருத்தை யோ, எண்ணத்தையோ (தம்மம்) விஷயமாகக் கொண்டது. எனவே விஞ்ஞானம் எனைய இந்திரியங்களோடு தொடர்புடையது. அதனல் புலனுணர்ச்சி, குறிப்பு, சங்காரம் என்பவற்றைப்போல விஞ்ஞானமும் ஆறு அந்தக் காரணங்களோடும் அவற்றுக்கு இசைவான ஆறு புற விஷயங்களோடும் தொடர்புடையதாகிறது.*
விஞ்ஞானம் ஒரு விஷயத்தை இனங்கண்டு கொள்வதில்லையென் பதைத் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும். விஞ்ஞானம் என்பது ஒரு விழிப்பு நிலை. ஒரு விஷயம் முன்னுல் உண்டு என்ற தெரியும் நிலை. ஒரு நிறத்தோடு (நீல நிறமென்று வைத்துக் கொள்வோம்) சக்கு விஞ்ஞானம் உண்டாகிறது. இது ஒரு நிறம் உண்டு என்பதன் தெரிநிலை. அது நீல நிறம் என்பதை சக்கு விஞ்ஞானம் இனங் கண்டு கொள்வதில்லை. இந்தத் தெரிநிலையில் அந்தச் சவிகற்ப உணர்வு உண்டாவதில்லை. மூன்றவது கந்தமான சஞ்ஞாக் கந்தமே இவ்வாறு விகற்பித்து அறிவது. சக்கு விஞ்ஞானம் என்பது காட்சி என்று சொல்லப்படும் கருத்தே. காணுதல் ஒரு விஷயம் இது இன்னதென்று பிரித்துக் காணுதல் வேறு விஷயம். மற்ற விஞ்ஞானக் கந்தங்களையும் இவ்வோறே பொருள் செய்து கொள்ள வேண்டும்.
1. மஹாயானக் கோட்பாட்டின்படி விஞ்ஞானக் கந்தம், சித்தம், மனம், விஞ் ஞானம் என மூன்று அமிசங்களை உடையது. ஆலய விஞ்ஞானம் என்ற விஞ்ஞானக் கூட்டம் இந்தக் கந்தத்தில் இடம்பெறுகிறது. இந்நூலாசிரியர் இவ் விஷயம் பற்றி விரிவானதும், ஒப்பியல் முறையிலமைந்ததுமான பெளத்த தத்துவதரிசனம் என ஒரு நூல் விரைவில் வெளியிட இருக்கிறர்.
2. S III (PTS) u š. 61.
27

Page 35
பெளத்த தருமத்தில் மாற்றமும் அழிவுமில்லாத ஆன்மா என ஒரு பொருள் இல்லை என்பதை இங்கு மறுபடியும் ஞாபகப்படுத்து கிருேம், சடப்பொருளுக்கு எதிராக “அகங்காரம் ’ “ ஆன்மா” * புட்கலன்” என்று ஒரு பொருள் கிடையாது. இந்த விஞ்ஞானமே ஆன்மா என்று நினைப்பது தவறு. விஞ்ஞானம் தான் ஆன்மா என்றும் அது நித்தியமான வஸ்து என்றும் ஒரு தவருன கருத்து மிகப் பழங்காலத்திலிருந்து இன்று வரை நிலவிவருவதால் இதனை வலியுறுத்தி மறுக்க வேண்டியிருக்கிறது.
புத்தருடைய சீடருள் ஒருவரான சாதி என்பவர், ‘விஞ்ஞானம் தான் சம்சாரத்தில் உழன்று பிறப்பு எடுக்கிறது” என்றே பகவான் போதித் தார் என எண்ணினர். “ விஞ்ஞானம் என்றல் என்ன ?” என்று பகவான் அவரைக் கேட்டார். “ பேசுவதும் அதுதான் உணர்வதும் அதுதான், இம்மையிலும் மறுமையிலும் வினைப்பயனை அனுபவிப்பதும் அதுதான் ” என அவர் சன சம்மதமான சிறப்புடையது பதிலொன்றைக் கொடுத்தார்.
“மந்த புத்தியுள்ளவனே! இப்படி யாருக்கு நான் போதித் தேன்?’ என்று பகவான் ஆட்சேபித்தார். விஞ்ஞானம் எதுக்கவி லிருந்து உண்டாகியதென்று பலவகையில் நான் விளக்கங்கொடுக்க வில்லையா? ஏதுக்களின்றி விஞ்ஞானம் உண்டாவதில்லை ” என்று பதில்கூறி விஞ்ஞானத்தைப் பற்றி விரிவாக விளக்கினர். எதைப் பற்றுக் கோடாகக் கொண்டு விஞ்ஞானம் உண்டாகிறதோ அதைக் கொண்டு அதற்குப் பெயர் கொடுக்கப்படுகிறது. கண்ணையும் காணும் பொருள்களேயும் எதுவாகக்கொண்டு ஒரு விஞ்ஞானம் உண்டாகிறதோ அதற்குச் சக்கு விஞ்ஞானம் என்று பெயர். காதினலும் சத்தத்தினலும் உண்டாகும் விஞ்ஞானம் கேள்வி விஞ்ஞானம். மூக்கினலும் மனத்தினுலும் உண்டாகும் விஞ் ஞானத்துக்கு முகர்வு விஞ்ஞானம் என்று பெயர். நாக்கினலும் சுவையினலும் உண்டாகும் விஞ்ஞானத்துக்கு சுவை விஞ்ஞானம் என்று பெயர். உடலினலும் பரிசத்தினுலும் உண்டாகும் விஞ் ஞானத்துக்கு பரிச விஞ்ஞானம் என்று பெயர். மனத்தினுலும் மானசிக விஷயங்களான எண்ணம் கருத்து என்பவற்றலும் உண்டாகும் விஞ்ஞானத்துக்கு மனேவிஞ்ஞானம் என்று பெயர் ”.
பின்னர் பகவான் ஒர் உதாரணத்தினல் விளக்கினர்.
எதனல் நெருப்பு எரிகிறதோ அதைக் கொண்டு அந்த நெருப்புக் குப் பெயர் கொடுக்கப்படுகிறது. நெருப்பு விறகினல் எரிந்தால்
28

அதை விறகு நெருப்பு என்பர். வைக்கோலினுல் எரிந்தால் வைக் கோல் நெருப்பு என்பர். என்ன எதுவினல் விஞ்ஞானம் உண்டா கிறதோ அந்த எதுவினல் அது பெயர் பெறுகிறது.
புத்த கோஷர் என்ற புகழ் பெற்ற பாஷியகாரர் இவ்விஷயம் பற்றிக் குறிப்பிடும்போது பின்வருமாறு விளக்குகிருர் -விறகில் எரியும் தீ, விறகு இருக்கும் வரை தான் எரியும். விறகு இல்லா விட்டால் அந்த இடத்திலேயே அணைந்துவிடும். ஏனெனில் நிலைமை மாறிவிட்டது. விறகு இல்லாத பட்சம் தீயானது சிராய்த்துணுக்கு களைத் தேடிப்பிடித்து சிராய்த்துணுக்குத் தீயாக மாறமாட்டது. இவ்வாறே கண்ணையும் கண்ணிற்படும் உருவங்களையும் எதுவாகக் கொண்டு எழுந்த விஞ்ஞானம் கண்வழியாகப் பிறக்கும் விஞ்ஞானமே. அது கண்ணும், காட்சிக்குரிய வடிவங்களும், ஒளியும், கவனமும் என்ற உபாதிகள் இருக்கும் வரை தான் உண்டாகும் ; இந்த உபாதிகள் இல்லா தொழிந்தால் அதிலேயே மறைந்துவிடும். ஏனெனில் நிலைமை மாறிவிட்டது. அந்த விஞ்ஞானம் காது முதலிது இந்திரியங்களைப் பற்றிக் கொண்டு காது விஞ்ஞான முதலியனவாக மாறுவதில்லை.”
விஞ்ஞானம் என்பது சடப் பொருள், வேதனை, குறிப்பு, சங்காரம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டதென்றும் அதற்கு அவற்றை விடத் தனிப்பட்ட வாழ்வு இல்லையென்றும் ஐயத்துக்கிடமின்றி புத்தர் கூறியுள்ளார். மேலும் அவ்ர் கூறுவதாவது :
ரூபத்தை உபாயமாகக் கொண்டு அதை விஷயமாகக் கொண்டு
(ரூபாரம்மணம்) ரூபத்தை ஆதாரமாகக் கொண்டு (ரூபதிட்டம்) விஞ்ஞானம் நிலவலாம். இன்பத்தை நோக்கமாகக் கொண்டு அது வாகலாம் ; விருத்தியடைந்து விரியலாம். அல்லது வேதனையை, உபாயமாகக்கொண்டு. அல்லது சஞ்ஞா (குறிப்பை) உபாயமாகக் கொண்டு. . . .அல்லது சங்காரத்தை (சங்கற்பம்) உபாயமாகக் கொண்டு சங்காரத்தை விஷயமாகக் கொண்டு, சங்காரத்தை ஆதாரமாகக் கொண்டு இன்பத்தை நாடி அது வளர்ந்து பெருகி அபிவிருத்தி யடையலாம். ரூபம், வேதனை, சஞ்ஞா, சங்காரம் என்பவையின்றி விஞ்ஞானத்தின் தோற்றத்தையும் மறைவையும் போக்கையும் வர வையும் உற்பத்தியையும் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் நான் காட்டுகிறேன் என்று ஒருவன் சொல்வானனல், அவன் இல்லாத ஒன்றைப் பற்றிப் பேசுகிருன் “.8
1 மகா தண்ஹக்கய-சுத்த ருரு (PTS) பக்கம் 266,
2. MA 1 (PTS), Lukasun 306-307.
3. S 111 (PTS) ussin 58.
29

Page 36
பஞ்சக்கந்தங்கள் என்பவை மிகச் சுருக்கமாக இவ்வாறு விளக்கப் படுகின்றன. * உயிர் ” என்றும் "புட்கலன்” என்றும் " நான்" என்றும் கூறுவதெல்லாம் இந்தப் பஞ்சக்கந்தங்களுக்கு வசதியாக இட்டதொரு பெயர். ஒரு அடையாளப் பெயர். இப்பஞ்சக்கந்தங்கள் சதா மாறிக் கொண்டிருக்கும் அநித்தியப் பொருள்கள், ” “ எது அநித்தியமோ அது துக்கம் ” (“யத் அநிச்சம் தம் துக்கம்") புத்தர் அருளியவாக்கியங்களின் உண்மையான பொருள் இதுவே. * உபாதானப் பஞ்சங்கந்தம் துக்கமே. (உபாதானம் என்பது பற்று.) இந்தக் கந்தங்கள் கணத்துக்குக் கணம் பங்கமடைவன. இங்கே “ எ” என்ற பதார்த்தம் * ஏ ’ அன்று. பஞ்சக்கந்தங்கள் கணந் தோறும் தோன்றி மறைகின்றன. “ஓ! பிராமணனே! இது மலை அருவிபோல் விரைந்து வெகுதூரம் பாய்வது, எல்லாவற்றையும் வாரி அடித்துக் கொண்டு செல்லுகின்றது. பாயாமல் அது ஒரு கணமாவது, தற்பரையாவது, பொழுதாவது நிற்பதில்லை. சதா வாய்ந்து கொண்டேயிருக்கிறது. மனித வாழ்வும் ஒ, பிராமணனே அத்தகையது தான். மலையருவி போன்றது. புத்த பெருமான், சட்டபாலன் என்பவனுக்கு “உலகம் தொடர்ந்து மாறிக் கொண்டே யிருக்கிறது அது அநித்தியம்’ என்று சொன்னர்.
உலகம் காரண காரியத் தொடர்புள்ள சங்கிலித் தொடர் போன்றது, ஒரு பொருளுக்கேதுவானது மற்றைய அதன் காரியமாக இன்னென்று தோன்றுகிறது. மாற்றமில்லாத ஒன்று இந்தத் தொடரில் இல்லை. இவற்றுக்குப் பின்னல் நித்தியமானதென்று கூறக்கூடியதொரு வஸ்து இல்லை. நித்தியமான ஆன்மா என்பது ஒன்றில்லை. தனிப் பட்ட புட்கலன் என்று கூறக்கூடியதில்லை. “நான் ” என்று சொல் லக்கூடிய தொன்றில்லை. உருவத்தையோ, வேதனை, குறிப்பு, சங் காரம் என்ற மனச் செயற்பாடுகளில் எதாவது ஒன்றையோ விஞ் ஞானத்தையோ, “நான் ” என்று கூறமுடியாது என்பதை எவ ரும் மறுக்கமாட்டார். ஆனல் ஒன்றிலொன்று தங்கியிருக்கும் நாம ரூபங்களான இந்தப் பஞ்சக்கந்தங்கள் சட்டமும் உளமும் சேர்ந்து வந்திரம் போலத் தொழிற்படும் போது “நான் ” என்ற உணர்ச்சி
1. A (கொழும்பு 1929) பக்கம் 700. இவ்வார்த்தைகள் மிகப் புராதன காலத்தில் வாழ்ந்தவரும், ஆசைகளைத் துறந்தவருமான அரக என்ற ஆசிரியர் (சத்தா) கூறியதாக புத்தர் சொல்லுகிறர். கி.மு. 500 இல் வாழ்ந்த ஹெராக் கிளிட்டஸ் என்பவர் “எல்லாம் தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டிருக்கின்றன என்றும், ஒரே ஆற்றில் ஒரு முறைதான இறங்கலாம். மறு முறை அந்த ஆறு வேறு நீரைக் கொண்ட வேறு ஆருயிருக்கிறது” என்றும் கூறியமிை கருத்திற் கொள்ளத்தக்கது. 2. ஆன்மா இல்லை என்ற அன்த்தக் கோட்பாடு ஆளும் அத்தியாயத்தில் ஆராயப்படும். 3. சத்து என்பது மரத்தால் செய்த யந்திரம் போய்றது (தாருயந்த) என்பர்
புத்தகோஷர். விசுத்திமார்க்கம் பக். 694-595)

உண்டாகிறது, ஆனல் இஃது ஒரு போலி உணர்ச்சி. ஒரு சங்கற்பம் 52 சங்காரங்களென்ற சங்காரக் கந்தத்தைச் சேர்ந்தது. மனே கல்பிதம். இதை நான் என்று எண்ணும் குற்றம் சக்காய திட்டி என்பர்.
உயிர் எனக் கொண்டாடப்படும் பஞ்சக்கந்தங்களான இந்த துக்கம் சங்காரதுக்கம். இந்தப் பஞ்சக்கந்தங்களுக்குப் பின்னல் நின்று கொண்டு துக்கத்தை அனுபவிக்கும் ஆன்மா, அல்லது நான் என்ற ஒரு பொருள் இல்லை.”
"துக்கமே நிலவுகிறது, துக்கத்தை அனுபவிப்பவன் இல்லை. செய் கைகள் உண்டு, ஆனல் செய்யபவன் என்று ஒன்று இல்லை." என்கிறர் புத்த கோஷ ஆசாரியார்.
புடை பெயர்ச்சிக்குப பின்னல் அசையாது நிற்கும் ஒருவன் இல்லை. காண்பது அசைவு மாத்திரமே. வாழ்வு அசைகிறது என்று கூறுவது தவறு. வாழ்வே ஓர் அசைவுதான். வாழ்வுவேறு அசைவு வேறன்று. அவை இரு பொருள்களல்ல. எண்ணத்துக்குப் பின்னல் எண்ணுவோன் என ஒருவன் இல்லை. எண்ணமே எண்ணு வோன். எண்ணத்தை அகற்றி விட்டால் எண்ணுவோன் என ஒரு வனைக் கள்ன முடியாது. கார்ட்டே எனற தத்துவ அறிஞர், “நான் எண்ணுகிறபடியால் நான் உள்பொருளே’ என்றர். பெளத்த தக் கோட்பாடு இதற்கு நேர்மாறனது.
வாழ்வுக்குத் துவக்க முண்டா என்று ஒரு கேள்வியை எழுப்பலாம். புத்தருடைய போதனைப்படி உயிர்களின் வாழ்வு ஒட்டத்தின் ஆரம் பத்தைப் பற்றி நினைக்க முடியாது. கடவுளே உயிர்களைப் படைத்தார் என்று நம்புவோர்க்கு இது ஆச்சிரியத்தைக் கொடுக்கலாம். “கடவுளை யார் படைத்தார்?’ என்று கேட்டால் அவர் உடனே “கடவுளுக்குப் பிறப்பில்லை” என்பார். அவர் கூறிய விடை அவருக்கு ஆச்சரிய மளிப்பதில்லை. புத்தர் கூறுகிருர், ஒ பிக்குகளே! இந்தச் சம்சார சக்கரத்துக்கு முடிவு காண முடியாது. அவ்வித்தையில் மூழ்கி வேட்கை (தன்ஹா) என்னும் தளையாற் கட்டுண்டு சுற்றி அலையும் உயிர்களின் தொடக்கத்தைக் கண்டு கொள்ள முடியாது. 1 சம்சாரம் தொடர்ந்து நிகழ்வதற்குக் காரணமான அவித்தை பற்றி பகவான் கூறுகிருர், "அவித்தைக்கு ஆரம்பம் எங்கே? இதற்கு முன் அவித்
1 - 65é85 Loisess (P.T. S.) u disas ta 5t 3.
3.

Page 37
தை இல்லாதிருந்தது என்று கூறக்கூடிய வகையில் அவித்தையின ஆரம்பத்தைக் காண முடியாது . ’ எனவே இதற்கு முன் உயிர்கள் வாழவில்லை. என்று கூறுவது சாத்தியமில்லை.
துக்கம் என்ற உயர்வாய்மையின் பொருள் இது தான். இந்த முதலாவது உயர்வாய்மையை நன்கு புரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம். ஏனெனில் “துக்கத்தைக் காண்பவன் அதற்குரிய காரணத்தைக் காண்பான். அதனேடு அது நீங்குவதையும் துக்கம் நீங்குவதற்கு வழியையும் காண்பான்? ?
இதனல் பெளத்தர்களுடைய வாழ்வு துன்பம் நிறைந்தது, சோகம யமானது எனச் சிலர் தவருகக் கருதுவர். ஆனல் உண்மையான பெளத்தணுயிருப்பவனே மிகச் சந்தோஷமான வாழ்க்கையுடையவன். அவனிடம் பயமோ கவலைகளோ கிடையா. எப்பொழுதும் சாந்தமும் உலைவற்ற மன அமைதியு முடையவன். ஆபத்துக்களும், மாற்றங் களும் அவனைக் கலங்கச் செய்யா. ஏனெனில் உலகின் நிலையை உள்ளபடியே அவன் அறிந்தவன். புத்தர் எக்காலத்திலும் சோக மோ மனச் சோர்வோ உடையவராயிருந்ததில்லை. அவர் எப்பொழு தும் புன்சிரிப்புடன் விளங்கினர். (மிஹிதபுப்பங்கம) பெளத்த சிற்பங் களிலும் ஒவியங்களிலும் அவர் மகிழ்ச்சி நிரம்பிய வீறமைதியுடைய, திருப்தியும் கருனையும் நிறைந்த முகமுடையவராய்க் காணப்படுகிருர். துன்பம், கவலை, துயர் என்பன சிறிதும் அவர் வதனத்தில் காணப்படுவதில்லை. 3
பெளத்த சிற்பங்களும் கட்டிடக்கலைகளும், பெளத்த கோயில்களும் உற்சாகத்தையே) துயரையோ பிரதிபலிப்பதில்லை. சாந்தமும் வீறமைதியும் ஆனந்தமுமே அவற்றில் காணப்படுகின்ற்ன.
வாழ்வில் துன்பம் காணப்பட்டால் பெளத்தர்கள் அமைதியற்ற வராய் கோபமுள்ளரவாயிருக்கக் கூடாது. வாழ்வில் காணப்படும் முக்கியமான தீமைகளில் ஒன்று வெறுப்பு. வெறுப்பு (பிரதிகா) என்பது உயிர்களிடத்து வெறுப்பு. இது துன்பத்தினலும், துன்
1. SII (PTS) uá. 178-79, 111 y 4. 149, 151. 2. . AV (PTS) ud;. t 13. 3. SV (PTS) பக். 437 நான்கு ஓய்மைகளில் ஒன்றை அறிபவன் மற்தை மூன்றையும் அறிவான் என புத்தர் கூறியுள்ளார். நான்கு வாய்மைகளும் ஒன்றேடென்று தொடர்புடையன. 4. கந்தாரத்திலும் சீரூலிலே பவுன்ே என்ற இடத்திலும் மெனிந்து வாடி விலாவெலுபெல்லாம் தெரியக்கூடிய வகையான புத்தரின் சிலை இரண்டுண்டு ஆனல் இவை அவர் ஞான ஒளிபெறமுன்னுள்ள நிலையைக் காட்டுவன. கொடிய 3. லங்களைச் செய்க காலத்து நிலையைக் கட்டுவன.
32.

பத்துககேதுவானவற்றினலும் உண்டாவது. இதனல் தீய நடத்தை களும் கவலைக்குரிய நிலைகளும் உண்டாகின்ற்ன. எனவே துமர் பத தைக் கண்டு பொறுமையை இழக்கக் கூடாது. குழப்பதி ணு,லும், கோபங்கொள்வதினுலும் துன்பம் நீங்கமாட்டது. அதற்குப் பதிலாக மேலும் தொல்லைகளுண்டாகின்றன. அல்லல் தரும் ஒரு நிலையை மேலும் அதிகரித்து அவஸ்தைக்குள்ளாக்கு கிறது. அப்போது துன்பத்தைக் கண்டு கோபமும், ஆத்திரமும் அடையாமல், துன்பம் என் உண்டானது எப்படி உண்டானது அதை எவ்வாறு நீக்கலாம் என ஆராய்ந்து பொறுமையோடும் விவேகத் தோடும் மன உறுதியோடும் வீரத்தோடும் நீக்கும் வழியைப் பின்பற்ற வேண்டும்.
புத்தரின் ஆண் சீடரும் பெண் சீடருமான தேரர்களும் தேரீகளும் அவருடைய போதனைப்படி ஒழுகி ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைந்து பாடிய தேரகாதா, தேரீகாதா, என்ற இரு பழைய பாசுரத் தொகு களுண்டு. " மற்றச் சமயத்தைக் சேர்ந்த சீடர்களில் பலர் မုိင္ငံန္ဟစ္ထိ၊ வாடி, வெளிறி, உருக்குலைந்து உருநயமற்று கவர்ச்சியின்றியிருக் கிருர்கள் ” என்று கோசல, மன்னன் ஒரு முற்ை புத்தரிடம் கூறினர். ஆனல் பகவானுடைய சீடர் ஆனந்தமும் கிளர்ச்சியும் (ஹட்டபகட்ட) உடையவராய் மகிழ்ச்சியாரவாரமும் களிப்பும் (உதக்கு தக்க) உடைய வராய், ஆன்ம வாழ்வில் சந்தோஷங்கண்டவராய் (அபிரதரூப), புலன்கள் மகிழ்ச்சியுடையவராய் (பீணிதீந்திரிய) ஆவலற்ற்வராய் (அப்பொசுக்க) வீருளியுடையவராய் (பன்னலோம) சாந்தியுடையவராய் (பரதவுத்த) மான் போன்ற மனமுடையவராய் (மிகபூதேனசேத்ஸர்) அதாவது உயர் சிந்தனையுடையவராய் இருக்கிறர்கள் என அரசன் மேலும் தெரிவித்தான். இதற்குக் காரணம் இச்சாவகர் பகவானு டைய போதனையின் முழுப் பயனையும் நிச்சயமாகப் பெற்று விட்டார் கள் என்பது இந்தச் சுகநிலையிலிருந்து தெளிவாகின்ற்தெனவும் கூறினன்.
பெளத்தத்தில் மன மடிவுக்கோ துயரடைவதற்கோ, கழிவிரக்கம் கொள்வதற்கோ கையறவுக்கோ இடமில்லை. இத்தகைய மனே பாவம் தர்மத்தை அனுபவமாக்குவதற்குத் தடையாயுள்ளது. நிர்வாண சுகம் பெறுவதானல் ஞானக் காட்சிக்கு உபாயமாயுள்ள வழு வகை உபாயங்களு (பொஜ்ஜங்க) ஸ் பிரீதியும் ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது.
1. அபிதம்ம சமுச்சய பக்கம் 1. 2. M. III (1PTS) . udiaslib , 121. 3. ஞானக் காட்சிக்குரிய எழு உபாயங்கள் பற்ஜி தியானம் பற்றிக்கூறும் அத்திய
யம் பார்க்க. பக்கம் 76.
33

Page 38
11 ஆம் அத்தியாயம் இரண்டாவது உயர் வாய்மை
சமுதய-துக்க உற்பத்தி
இரண்டாவது உயர்வாய்மை துக்க உற்பத்தி, அதாவது தக்கம் எவ்வாறு உண்டாகிறது (துக்க சமுதய அரிய சச்ச) என்பது பற்றியது. மூலக்கிரந்தங்கலே பல இடங்களில் காணப்படும் மிகச் சன0ஞ்சகமானதும் பிரசித்தமானதுமான வரைவிலக்கணம் பின்வரு
மாறு.
இந்த “விடாய்” (வேட்கை, தண்ஹா) தான் பிறவியை, புனர்ப் பவத்தை (பொனேபவிகா) உண்டாக்குகிறது. இது இடையருத விருப் டோடு சேர்ந்தது. (நந்திராகசக கதா) இப்போது இங்கேயும் பின்னர் அங்கேயும் புதுப்புது இன்பங்களைக் காண்பது. (தத்ர தத்ராபிநந்தநீ) உதாரணமாக (1) புலன்வரும் இன்பவேட்கை (காமதன்ஹா) (2) உயிரோடிருக்க வேண்டும். மேலும் மேலும் பிறக்கவேண்டும் 11வதன்ஹா) (3) உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டும் என்னும் வேட்கை (விபவதன்ஹா).
இந்த விடாய், ஆசை, விருப்பம், வேட்கை தான் பல வடிவங்கள்ல் தோன்றிப் பல வகையான துன்பங்களுக்கும் ஏதுவாயிருக்கிறதுபிறவி நீடிப்பதற்கு இதுவே காாணம். இதனை முதற் காரணமாகக் கொள்ளக் கூடாது. பெளத்தத்தில் எல்லாம் சார்புடையனவாய் பரஸ்பரம் ஒன்றிலொன்று தங்கி இருப்பதால் முதல் காரணமென்று ஒன்று சாத்தியமில்லை. துக்கத்துக்குக் காரணமான இந்த வேட்கை யும் (தன்ஹா) வேதனையென? வேறென்றிலிருந்து உண்டாகிறது. இந்தத் தோற்றம் சமுதயம் எனப்படும் (சமுதய) வேதனை பரிசத்தால் (பஸ்ஸ) உண்டாகிறது. இவ்வாறு இக்காரணகாரியத் தொடர் செல் கிறது. இதற்கு “படிச்ச சமுப்பாதம்” என்று பெயர். இது பின்னர் விளக்கப்படும்.
எனவே துக்க உற்பத்திக்கு வேட்கை முதற் காரணமுமன்று. ஒரேயொரு காரணமுமன்று. ஆனல் அதுவே எளிதில் அறியக்கூடிய அண்மையிலுள்ள காரணம் : அதுவே “ பிரதானமான பொருள் "
Mhvg (2EPå Æin 1922) Lå. 9 SV (PTS) Lé. 421 la Gaosylo. வேதஞ சமுதயாதன்ஹா சமுதயோ mi (PTS) பக். 51. ஆறும் அத்தியாயத்தைப் 1 Jriá56yh.
3.
34

எங்கும் வியாபகமான பொருள். அதனல் மூலப்பாளிக் கிரந்தங் களில் துக்க சமுதயத்துக்கு வரைவிலக்கணம் கூறும்போது கிலே சங்கள், களங்கங்கள் என (கிலேசா, சாசவாதம்மா) என்ற வேறு மாசுகளும் வேட்கையோடு சேர்த்துக் கூறப்படுகின்றன. ஆனல் வேட்கைக்கே முதலிடம் கொடுக்கப்படுகிறது : இங்கே இவற்றை ஆராய முடியாவிட்டாலும் வேட்கைக்கு இருப்பிடமாயுள்ளது அவித்தையினல் பிறந்த “தான் ஆன்மா” என்ற போலிக்கோட்பாடாகும்.
இங்கே “வேட்கை” என்பது புலன் வருமின்பங்கள், செல்வம், அதிகாரம் என்பவற்றிலுள்ள பற்றைமாத்திரமன்றி கருத்துக்கள், இலட்சியங்கள், அபிப்பிராயங்கள், கோட்பாடுகள், கருதுகோள்கள் நம்பிக்கைகள் (தம்ம தன்ஹா)? என்பவற்றிலுள்ள பற்றையும் குறிக்கும். புத்தருடைய ஆராய்ச்சியின் படி உலகிலுள்ள எல்லாத் தொல்லைகளுக்கும் பிணக்குகளுக்கும் காரணம் இத் தன்னலம் கொண்ட வேட்கையே. குடும்பத்தில் தோன்றும் தனிப்பட்டவர் சண்டைகளிலிருந்து தேசங்களிடையே உண்டாகும் பெரிய யுத்தங் களுக்குக் கூட மூல காரணம் இத் தன்னல வேட்கையே. இந்த நோக்கத்தைக் கொண்டு ஆராயும் போது சகல பொருளாதாச அரசியல் பிரச்சினைகளுக்கும் சமூகப் பிரச்சினைகளுக்கும் காரணம் இந்தத் தன்னல வேட்கையே என்பதுதெளிவாகும். சர்வதேசப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயன்று கொண்டு யுத்தத்தைப் பற்றி யும் சமாதானத்தைப் பற்றியும் பேசும் பெரிய அரசியல் மேதைகள் பொருளாதாரத்தையும் அரசியலையும் பற்றி மாத்திரமே பேசுவார் கள். பிரச்சினையின் அடிப்படைத் தன்மையை ஆராயாமல் மேலெ ழுந்தவாரியாக ஆராய்வார்கள். “உலகம் குறைபாடுடையது ; வேணவாக்கொள்ளுகிறது. "வேட்கைக்கு’ அடிமையாகிவிட்டது” (தண்ஹாதாசோ) என்று பகவான் ரட்டபாலருக்குக் கூறினர்.
உலகிலுள்ள தீமைகளுக்கெல்லாம் காரணம் தன்னலங்கொண்ட ஆசையே. இதை யாரும் ஒப்புக்கொள்வர். இதைப்புரிந்துகொள் வது கஷ்டமன்று. ஆனல் இந்த வேட்கை எவ்வாறு மறுபிறப்பை புனர் உற்பத்தியை, ("போனுேபவிகா) உண்டாக்குகிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இரண்டாவது உயர் வாய்மை யின் ஆழ்ந்த தத்துவார்த்தமான கருத்தை, முதல் உயர்வாய்மை
பொனுேபவிகா-புனர் பவம், மறுபடி பிறத்தல். மொழி பெயர்ப்பு ஆசிரியர்
குறிப்பு. இது இனி.மொ.கு. எனக் குறிக்கப்படும்.
}. அபிதம்ம சமுச்சய பக்கம் 45, ப்ராதான்யார்த்த, சர்வத்தாகார்த் த.
2. (PTS) Vid uš. 106 Lптša.
3. MI (PTS) udi. 51. S II udi. 72 VIBH uáš. 380,
4, MI ша. 86.

Page 39
யின் தத்துவார்த்தத்துடன் பொருத்தமான கருத்தை ஒட்டி ஆராய வேண்டியிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் நாம் கன்மக கோட்பாட்ட்ைப் பற்றியும் மறுபிறப்பைப் பற்றியும் அறிந்து கொளள வேண்டும்.
உயிர்கள் நிலை பெறுவதற்கும் தொடர்ந்து நிலவுவதற்கும் காரண மாய் நான்கு ஊட்டங்கள் (ஆகார) பேசப்படுகின்றன. (1) சாதாரண பதார்த்த உணவு (கடலங்காகா), (2) மனம் உட்பட்ட ஆறு புலன்களும் வெளியுலகோடு கொண்டுள்ள தொடர்பு பஸ்ஸாகார, (3) விஞ்ஞானம் (விஞ்ஞானகார) (4) சங்கற்பத்தினுல் (விருப்பத் துணிவினல்) ஆனது. (மனே சஞ்சேதனஹார)
இவை நான்கினுள் கடைசியாகக் கூறப்பட்ட சங்கற்பம் (மனுேசஞ் சேதஞஹார) என்பது உயிர் வாழ வேண்டும், பவம் வேண்டும், மறுபடியும் பவம் வேண்டும், தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்க வேண்டும், விருத்தியடைந்து பெருக வேண்டும்? என்று துணிவுறுதி கொள்ளுதல். இதுவே பவத்துக்கும், தொடர்ந்து இருக்க வேண்டு மென்ற எண்ணத்துக்கும் மூலவேர். நன்மை தீமை யென்ற வினைகளில் ஈடுபட்டு முன்னேறும் முயற்சி இதுவே. (குசலாகுசல கம்ம நன்மை தீமையென்னும் குசல அகுசல கன்மங்கள்) இதுவே சேதனு" என்னும் சங்கற்பம். சங்கற்பமே கன்மம் என பகவான் வரைவிலக்கணம் கூறினரென்று முன்னர் குறிப்பிட்டாம். இங்கே குறிப்பிட்ட மனே சஞ்சேதனகாரத்தைப் பற்றி பகவான் பின்வரு மாறு கூறுகிறர். மனேசஞ்சேதனஹாரத்தைப் புரிந்து கொள்வோர் வேட்கையின் மூன்று தன்மைகளை அறிவார். எனவே வேட்கை சங்கற்பம், மனேசஞ்சேதனுஹார, கன்மம் என்பனவெல்லாம் ஒரேபொருளுடையன. இவை ஆசையை, பவசங்கற்பம், இருக்க வேண்டும் மறுபடியும் பிறவி எடுக்க வேண்டும், மேலும் மேலும் விருத்தியடைய வேண்டும், பெருக வேண்டும் மேலும் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்பதையே கருதும். துக்கோற்பத்திக்கு இவையே காரணம். இது சங்காரக்கந்தத்தில், அதாவது ஒர் உயிரின் அங்கங்களான பஞ்சக்கந்தங்களில் ஒன்று.?
1. MJI Uašas un 48. 2. இந்த மனுேசேகளுகாரத்தை நவீன உளவியலில் பேசப்படும் லிபிடோவுடன்
ஒப்பிடலாம் (லிபிடோ-பாலுணர்ச்சியிண் உந்துதல், உயிர் வாழ் சக்தி). 3. MI (PTS) uit. 48. 4. மனே சஞ்சேதனதி சேதன எவ வுச்சதி. MAI (PTS) பக். 209, 5. ša, b 26 urricas. 6. SI (PTS) பக். 100 பேட்கையில் மூன்ருவன (5) காமதன்ஹா (2) பவு
தன்ஹா (3) விபவத6:ஹா. இவை துக்ச சமுதயத்தில் மேலே கூறப்பட்டன. 7. பக்கம் 26 பார்க்க.
36

புத்தருடைய போதனையில் மிக முக்கியமான அம்சத்தை இங்கே காணுகிருேம். துக்கத்தின் தோற்றத்துக்குக் காரணம் துக்கத்தினுள் ளே தான் அடங்கியிருக்கிறது. அதற்கு வெளியே இல்லை என் பதைத் தெளிவாக அறிந்து ஞாபகத்தில் வைத்துக் கொள் ளுதலை துக்கத்தின் அழிவும், துக்க நிவாரணமும் துக்கத் தின் அகத்திலே தான் அடங்கியிருக்கிறதென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பாளி மூலகிரந்தங்களிலே அடிக்கடி காணப் படும் “தோற்றத்தன்மையுடையவையெல்லாம் அழிவுத்தன்மையைக் கொண்டுள்ளன” என்ற பிரசித்தி பெற்ற வாய்பாட்டின் (“யம்கிஞ்சி சமுதயதம்மம் சப்பம் தம் நிரோத தம்மம்’) அர்த்தம் இதுதான். ஒர் உயிரோ பொருளோ, அமைப்போ தோற்றத் தன்மையைத் தன்னுள் கொண்டிருக்குமானல் அதன் அழிவுத்தன்மையும்முடிவும் அதில் அடங்கியுள்ளது. எனவேதுக்கமென்ற பஞ்சக் கந்தம் தோன்றும் தன்மையைத் தன்னகத்துக் கொண்டிருப்பது போலவே அழியுந்தன் மையையும் கொண்டிருக்கிறது. துக்க நிரோதம் என்ற மூன்ருவது உயர் வாய்மையை ஆராயும் போது இதனை மேலும் விளக்குவாம்.
கம்மம் என்ற பாளிச் சொல் வட மொழியில் கர்ம என வழங்கும் இதன் வினை அடி “செய்” என்ற பொருளைத் தரும். “சிறு” கம்மம் என்றல் கன்மம், வினை அல்லது செயல்; ஆனல் பெளத்த கன்மக் கோட்பாட்டில் கன்மம் என்றல் எல்லா வினையையும் குறிக்காது விரும்பித் துணியும் சங்கற்ப பூர்வமான செயலையே குறிக்கும். கன்மம் என்பதற்குப் பலர் தவருகக் கருதுவதுபோல வினைப்பயன் எனப் பொருள் கொள்ளக் கூடாது. பெளத்த பரி பாஷையில் கர்மம் என்ற சொல் கர்ம பலனைக் குறிப்பதில்ல்ை. வினைப்பயன் கர்ம பலன் என்றும் கர்ம விபாகம் என்றும் வழங்கும்.
சங்கற்பம் சார்புவகையில் நல்ல சங்கற்பமாகவோ தீய சங்கற்ப மாகவோ இருக்கலாம். ஒரு விருப்பம் சார்புவகையில் நல்லதாகவோ தீயதாகவோ இருக்கலாம். நல்வினை (குசலம்) நல்ல பயனைக் கொடுக்கும். தீவினை (அகுசலம்) தீயபயனைக் கொடுக்ககும். வேட்கை கள், சங்கற்பம்; கர்மம் என்பன நல்லதாயிருந்தாலென்ன, தீயதாயி ருந்தாலென்ன பயனளலில் ஒரு சக்தியையே உடையதாயிருக்கும். அதாவது நல்ல திசையிலோ திய திசையிலோ செல்லும் சக்தியை உடையதாயிருக்கும். அது நல்வினையானலென்ன தீவினையான லென்ன சார்பியலானதாகவேயிருககும். அதற்குத் தனி நிலையில்லை. அது சம்சார வட்டத்தில் சேர்ந்ததே. அருகத் நிலையிலுள்ளவர் வ:பர்நகாலும் அவருடைய கர்மம் சஞ்சிதமாவதில்லை. ஏனெனில்
"1. м Ш (PTS) Léa La 280, s Ivučala 47, sro, v. ušala 428
தொடர்ந்தவை.
37

Page 40
அருகதரநிலையிலுள்ளவர் நான செய்கிறேன் என்ற போலிக்கருத்தைத் துறந்தவராய், வேட்கை ஒழிந்தவுராய் இருக்கிறா. தான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். விருத்தி அடைந்து கொண்டி ருக்க வேண்டும், என்ற ஆசையிலலாதவராயிருக்கிருர், ஏனைய களங்கங்களும், மாசுகளும் (கிலேசா, சாசவா தம்மா) இல்லாதவரா யிருக்கிறர். அவருக்கு மேலும் பிறப்பில்லை.
நற்செயலுக்கு வெகுமானம், பாவத்துக்குத் தண்டனை என்ற கோடபாடன்று கன்மக்கோட்பாடு ; அது ஒருவனுடைய நடத்தையை மதிப்பிட்டுத்தீர்ப்பு வழங்கும் முறை. இதற்கு ஒரு கடவுள் வேண்டும். அவரே சட்டங்களைச் செய்து தண்டனையும் வெகுமதியும் வழங்கு பவராயிருக்க வேண்டும். சரி எது பிழை எது என்பதைத் தீர்மானிப் பவர் அந்த உயர் கடவுளாயிருக்க வேண்டும். இது ஒழுக்க நீதி முறை. இத்தகைய நீதி எப்பொழுதும் ஐயப்பாட்டுக்கு இடந்தருவது. ஆபத்து நிறைந்தது. நீதியின் பெயரால் மனித இனம் நன்மையை விடத் தீமையையே அதிகம் பெறுகிறது. கன்மக் கோட்பாடு காரண காரியத் தொடர்புடையது. செயலெல்லாம் எதிர்ச்செயலுடையன என்ற முறையிலமைந்தது. இது இயற்கை விதி ; இதற்கும் நீதி என்ற கருத்துக்கும் சம்பந்தமில்லை. வெகுமானம், தண்டனை என்ற விவகாரத்துக்கு இடமில்லை. துணிந்து சங்கற்பித்துச் செய்யும் செயல் எல்லாம் பிரதிபலனைக் கொண்டன. நல்ல செயல் நல்ல பயனையும் தீய செயல் தீய பலனையும் தந்தால் அங்கே நீதிக்கு எங்கே இடம். இங்கே வெகுமானத்துக்கும் தண்டணைக்கும் இடமில்லை. எவரும் உங்கள் செயலை ஆராய்ந்து மதிப்பிடுவதில்லை. எந்தச் சக்தியும் தீர்ப்பு வழங்குவதில்லை. செயல் பிரதிச் செயலை உண்டாக்குவது இயற்கையின் நியதி. இதைப் புரிவது சிரமமன்று. ஆனல் ஒரு பிறப்பில் செய்த சேதனபூர்வமான கன்மம் மறுபிறப்பில் பலனை அளிக்கிறதென்ற கருத்துத் தான் புரிந்து கொள்ளக் கஷ்டமாயி ருக்கும். மரணத்தின் பின்னர் அந்தக் கன்ம பலன் பயனைக் கொடுக்கலாம். எனவே மரணம் என்றல் என்ன? பெளத்தம் அதை எவ்வாறு விளக்குகிறதென்பதைத் தெளிய வேண்டும். உயிர் என்பது சடமயமான சக்திகளும், மனேமயமான் சக்திகளும் சேர்ந்த கூட்டுறவேயன்றி வேறல்ல என்பதை எற்கனவே கண்டோம். மரண மென்பது சடமயமான உடல் தொழிற்படாதிருத்தலே. உடல் தொழிற்படாது நின்று விட்டால் இந்தச் சக்திகளெல்லாம் நின்று விடுமா?." இல்லை ” என்கிறது பெளத்தம். சங்கற்பம் (சேதன-சங். காரா) ஆசை, வாழவேண்டுமென்ற வேட்கை, தொடர்ந்து இவ்வாழ்வு நிலைக்க வேண்டும், அது பல்கிப் பெருக வேண்டுமென்ற வேணவா ; சீவராசிகளையம், பவசமூகங்களையும், அசைக்கும் மகத்தான சக்தி
38

உலகம் முழுவதையுமே செயற்படச் செய்யும் வேகம். இதுவே மிகப் பெரிய ஆற்றல். உலகில் உள்ள பெரிய சக்தி, உடம்பு அழிந்தாலும் இந்தப் பேராற்றல் ஒய்வதில்லை. மரணம் இந்த ஆற்றலை நிறுத்த மாட்டாது. இது வேறெரு வடிவில் தோற்றமளித்துப் புதிய பவத்தை, புதிய பிறப்பை உண்டாக்குகிறது என்பதே பெளத்தக் கொள்கை,
அப்போது மற்றெரு கேள்வி உண்டாகிறது. ஆன்மா என்ற மாடு பாடில்லாத அழிவற்ற நித்திய வஸ்து இல்லாவிட்டால் பிறப்பெடுப் பது எது என்ற பிரச்சினை. மரணத்தின் பின் மறுபிறப்பெடுப்பது எது? மரணத்தின் பின் இவ்வுயிர் என்ன ஆகிறது என்ற ஆராய்ச் சியில் இறங்கு முனனர் இது எத்தகையது? எப்படி நிலவுகிறது? என்பதை ஆராய்வோம். சீவன் என்பது பஞ்சக்கந்தத்தின் சேர்க்கை அதாவது சட ஆற்றல்களும் மனச் சக்திகளும் சேர்ந்த கூட்டுறவு. இவை சதா மாறிக் கொண்டிருக்கின்றன. ஒரு கணம் ஒரே மாதிரி மாருமலிருப்பதில்லை. ஒவ்வொரு கணமும் தோன்றி மறைகின்றன. * பஞ்சக்கந்தங்கள் தோன்றி சிதைந்து மடியும் போது ஒ1 பிக்குவே ஒவ்வொரு கணமும் நீ தோன்றிச் சிதைந்து மடிகிருய். இவ்வாறு இப்பொழுதே இந்த வாழ்வில் ஒவ்வொரு கணமும் நாம் தோன்றி மரித்துக் கொண்டிருக்கிறேம். ஆனல் நமது வாழ்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்த வாழ்விலே நித்தியமான மாற்றமில்லாத ஒர் ஆன்மா என்ற பதார்த்தமின்றியே நீடித்து நிற்கிறேமென்பதைப் புரியக்கூடியதாயிருக்கும்போது, அந்த ஆற்றல்கள், இந்த உடல் செயலற்ற பின் ஆன்மா என்ற ஆதாரமில்லாமலே நிலைத்திருக்கு மென்பதை நாம் என் புரிந்து கொள்ள முடியாது.
இந்தச் சடமான உடல் செயலற்ற பின்னர், அதிலுள்ள ஆற்றல்கள் வேறு வடிவத்தை எடுக்கின்றன ; இதுவே மறுபிறப்பு எனப்படும். ஒரு குழந்தையிடம் உள்ள உடற்பலமும், மன விவேக ஆற்றல்களும் மிருதுவாகவும் பலமற்றனவாகவுமிருக்கின்றன. ஆளுல்ை பூரண மனிதனுய் வளருதற்குரிய ஆற்றல் அவர்களிடத்து மலராது இருக்கின்றது. சீவன் என்றுசொல்லும் பொருளுக்கு சாதகமாயுள்ள சட ஆற்றலும் மன ஆற்றலும் புதிய உருவத்தை எடுத்துப் படிப்படி யாய் வளர்ந்து பூரண சக்தி பெறும் தன்மையை தன்னகத்துக் கொண்டிருக்கின்றது.
- 1. PRIMJ I (PTS) பக்க 78 “கந்தேசு ஜாயமானேசு ஜியமானேசு மீயமானேசு
னேகனே த்வம் பிக்கு ஐாயசேச ஜியஸேச மீயஸேச " இவ்வாக்கியம் பரமத்த
ஜோதிர பாடியக் தில் புத்தர் வாக்கியமாகவே மேற்கோள் காட்டப்படுகிறது. இதுவரை தாம் இதன் முலத்தைத் தேடிக் காணமுடியவில்லை.
39

Page 41
நித்தியமான மாற்றமில்லாத ஒரு பொருள் இல்லாதபடியால் கணந்தோறும் மாறும் பொருளுமில்லை. எனவே ஒரு பிறவியிலி ருந்து மறுபிறவிக்கு மாறும் நித்தியமான மாற்றமில்லாத பொருள் இல்லையென்பது சொல்லாமலே போதரும். இந்தத் தொடர் முறி வின்றித் தொடர்கின்றது, ஆனல் கணமும் பங்கமடைகிறது. இத் தொடர் உண்மையில் ஒரு சலனமே. இஃது இரவு முழுவதும் எரியும் விளக்குச்சுடர் போன்றது. அச்சுடர் ஒரே சுடருமன்று, வேறனது மன்று. குழந்தையொன்று அறுபது வயதுள்ள வயோதிபனுக வளருகிறது. அறுபது வயதுள்ள கிழவன் அறுபது வருடத் துக்கு முந்தியிருந்த குழந்தையுமல்லன். வேருெரு ஆளுமல்லன். அவ்வாறே இங்கே மரித்த பின் வேறெரிடத்தில் புதிய பிறப் பெடுப்பவன், மரித்த அதே மனிதனுமல்லன். அவனில் வேருன வனுமல்லன். (நச சோ நச அஞ்ஞோ) ஒரே தொடரின் தொடர்ச் சியே அவன் பிறப்பு, இறப்பு பிறப்பு என்பவற்றிடையேயுள்ள வித்தியாச்ம் நினை ைமாத்திரையானது. இவ்வாழ்வினுள்ள கடைசி சிஜனவுக் கணப்பொழுது அடுத்த பிறவியின் முதல் நினைவுக்கணப் பொழுதைப் பாதிக்கிறது. இது அதே தொடரின் தொடர்ச்சியே. இந்த வாழ்விலும் ஒரு நினைவுக் கணப்பொழுது அடுத்து நினைவுக் கலப்பொழுதைப் பாதிக்கிறது. எனவே பெளத்த கோட்பாட்டின்படி மரணத்தின் பின் உண்டாகும் வாழ்வு பெரிய மர்மமன்று. அதனல் மரணம் பெளத்தர்க்கு? ஒரு பிரச்சினையன்று.புலன்வருமின்பவேட்கை பும், இருக்க வேண்டுமென்ற வேட்கையும் இருக்கும் வரை சம்சாரச் சக்கரம் இருந்துகொண்டேயிருக்கும். பரமார்த்தத்தையும் சத்திய தரிசனத்தையும் நிர்வாணத்தையும் புலனுகின்ற அறிவு என்னும் கருவியால் சம்சாரத்தொடர்ச்சி வேகம், அஃதாவது இந்த வேட்கை, அறுக்கப்பட்ட பின்னரே பிறப்பிறப்பு ஒழியும்.
மொழிபெயர்ப்பாளரின் குழிப்பு " உறங்குவது போலும் சால்கிாடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு (திருக்குறள் 339).

1W ஆம் அத்தியாயம்
மூன்றுவது உயர்வாய்மை நிரோதம்-துக்க நிவாரணம்
துக்கத்திலிருந்து விடுதலை பெறலாம் என்பதே மூன்றவது உயர் வ:ய்மை. இது துக்க நிரோத அரிய சச்ச, அதாவது துக்க நிரோதம் என்னும் ஆரியசத்தியம் (உயர்வாய்மை) எனப்படும். இதுவே வடமொழியில் நிர்வாணம் (நிப்பாண) எனப்படும்.
துக்கத்தை முற்றக நீக்குவதானல் வேட்கை (தன்ஹா) என்ற மூலகாரணத்தை வேரோடு நீக்கி விட வேண்டும். அதனல், நிர் வாணமென்பது வேட்கை அழிதல் (தண்ஹக்கய) எனவும் கூறப் է 1(9th.
* நிர்வாணமென்ருல் என்ன ?’ என்று நீங்கள் கேட்கலாம். இது இயல்பான இலேசான கேள்வி. இதைப் பற்றி எராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவை விஷயத்தைத் தெளிவுபடுத் துவதற்குப் பதிலாக மேலும் மேலும் சிக்கலாக்கிவிட்டன. ஆளுல் சொற்களால் இக் கேள்விக்குப் பதில் கூறமுடியாது. பூரணமாகவும் திருப்திகரமாகவும் இவ்வாறு பதில் தர முடியாது. நிர்வாணமென் பது தான் முடிவான உண்மை. பரமார்த்த சத்தியம். அதன் உண்மையான தன்மையைச் சொற்களால் விளக்க முடியாது. மனிதனுடைய பாஷை அதற்குப் போதுமானதன்று. மனத் தினுலும் இந்திரியங்களாலும் மனிதர் அனுபவிக்கும் அனுபவங் களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்கே மனித இனம் மொழியை உண்டாக்கி அதைப் பயன்படுத்தி வருகிறது. ஆனல் பாமர்த்த சத்தியம் லோகோத்தரமான உண்மை. அதை மனிதருடைய ஏனைய புலன், அனுபவங்களைப் போலக் கொள்ளக் கூடாது. அது புலன்களுக்கு அப்பாற்பட்ட அனுபவம். இதனைச் சொல்லுவதற்குச் சொற்களில்லை. தரையைப் பற்றி விளக்குவதற்கு மீன்களுடைய பாஷையில் சொற்களில்லை. “நான் நிலத்தில் சற்றே உலாவிவிட்டுத் தான் இந்தக் குளத்துக்கு வந்துள்ளேன்” என்று ஆமை தன்னுடைய நண்பனன மீனுக்குச் சொன்னது. “அதாவது நிலத்திலே நீங்கள் நீந்தியிருக்க வேணடும் ” என்றது மீன். தரையிலே நீந்த முடியாதென்றும் அது திண்மையான தென்றும், தரையிலே நடக்கத் தான் முடியும் எனறும் ஆமை மிகவும் சிரமப் பட்டு மீனுக்கு விளக்கப் பார்த்தது. மீனுக்குப் புரியவில்லை. நிலமா
4.

Page 42
வது தரையாவது, அது குளம் போல் நீராகவேயிருக்கும். அவை களிருக்கும், அதிலே சுழியோடலாம், நீந்தலாம், அவ்வளவுதான்.” என்றது மீன். நமக்குத் தெரிந்த பொருள்களையும், கருத்துக்களையும் குறிக்கும் அடையாளங்களே சொற்கள். இந்தக் குறியீடுகள் சாதார ணப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் கூடப் புரிய வைக்க மாட்டா. அவற்றுக்கு அத்தகைய ஆற்றல் இல்லை. சத்தியத்தை பாஷை புரியவைக்கமாட்டாது. அது அந்த வகையில் தவருக விளக் கங் கொடுத்து எமாற்றும் எனக் கூறுவர். " சேற்றிலே அமிழ்ந்தும் un260760)ull போல அறிவற்றவர்கள் சிக்கிக் G.Sigific fr’ என்று “ லங்காவதார சூத்திரம்” என்ற நூல் குறிப்பிடுகிறது. * இருந்தும் பாஷையில்லாமல் நாம் ஒன்றுஞ் செய்ய முடியாது. நேர்ப்படியான திட்டமான சொற்களால் நிர்வாணத்தை விளக்கிச் சொல்வதானல் அச் சொற்கள் சார்ந்த கருத்துக்களை உடனே கிரகிப் போம். அது சரியான பொருளாயிராது. நேர்மாறன பொருளைக் கொடுக்கக்கூடியதாயிருக்கும். அதனல் எதிர்படியான சொற்களைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறர்கள். இது ஒருவேளை ஆபத்தற்றதா யிருக்கலாம்.
எனவே நிர்வாணத்தைக் குறிக்க “தண்ஹக்கய’ வேட்கை ஒழிதல், *அசம்கத” உபாதியில்லாதது கூறில்லாதது “விராக” வைராக்கியம், "நிரோத” ஒடுக்கம், “நிர்வான” அணைதல் என்ற எதிர்மறை வாக்கியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மூலப்பாளி கிரந்தங்களில் நிர்வாணம் பற்றிக் காணப்படும் சில வரைவிலக்கணங்களையும் விவரணங்களையும் இனி குறிப்பிடுவாம்.
"(நிர்வாணமென்பது) அந்த வேட்கையை முற்றக ஒழித்தல்,
அதைக்கைவிடல், துறத்தல், அதிலிவிந்து விடுதலை பெறுதல், அதி லிருந்து விலகிவிடல்?
1. லங்கா பக்கம் 113.
2. சில சமயம் மங்களம், நன்மை என்பவற்றைக் குறிக்கும் " சிவம்" என்ற சொல்லும் பாதுகாப்பைக் குறிக்கும் “ கேல ” என்ற சொல்லும், துய் மையைக் குறிக்கும் " சுத்தி ” என்ற சொல்லும், தீவு என்ற அர்த்தமுள்ள * தீப" என்ற சொல்லும் “சரண் ” என்ற பொருள் உள்ள “ சரண” என்ற சொல்லும் காப்பு என்ற அர்த்தமுள்ள “ தாண" என்ற சொல்லும் அக்கரை என்ற அர்த்தமுள்ள “ பார" என்பதும் அமைதியைக் குறிக்கும் “ சாந்தி " என்ற சொல்லும் நிர்வாணத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சம்யுக்த நிகாயத்தைச் சேர்ந்த “அசங்கத சம்யுத்தத் ” தில் நிர்வாணத்துக் குச் சமமான 32 சொற்களுண்டு. இவை பெரும்பாலும் உருவகச் சொற்கள்"
3. Mhwg (அலுத்கம 1922) பக். 10 SV பக். 421 துக்க நிவிருத்தி நிரோதம் எனவே சாமநாதில் பகவான் நிகழ்த்திய முதல் தருமோப தேசத்தில் குறிப்பிடப்படுகிறதேயன்றி “ நிப்பாண" என்ற சொல் காணப்படவில்லுை. நிரோதமென்பது நிர்வாணத்தையே குறிக்கிறது.
ss
42

* சங்கார (சங்கற்ப) ங்களை ஒடுக்குதல், கிலேசங்களைக் கைவிடுதல்,
வேட்கையை ஒழித்தல், பற்றற்றநிலை, நிவிருத்தி, நிப்பான “ஓ ! பிக்குகளே ! பரமார்த்தம் எது (அசங்கத, உபாதியற்றது) ஓ ! பிக்குகளே ! எதுக்களற்ற (அசம்கத) பரம்பொருள்ளது
ஓ பிக்குகளே, அதுதான் வேட்கை ஒழித்தல் (ாாகக்கயோ-ராகத்தை அழித்தல்) துவேஷத்தை ஒழித்தல் (தோஷக்கயோ-துவேஷத்தை ஒழித்தல்) மோகத்தை ஒழித்தல் (மோகக்கயோ) பிக்குகளே, இதுவே பரமார்த்தம்.*
ஓ ! ராத, வேட்கை ஒழிதலே (தண்ஹக்கயோ) நிப்பாணம் * ஒ பிக்குகளே ! உபாதிக்குட்பட்டவையும் உபாதிக்குட்படாதவையுமான எல்லாப் பொருள்களையும் விட விராகமே (பற்றற்றநிலையே) உயர்ந் தது. அதாவது மானந்துறத்தல், விடாய் (வேட்கை) ஒழித்தல், பற்றை வேரோடுகளைதல், சம்சாரத் தோடரை வெட்டுதல், வேட்கை (தண்ஹா) ஒழித்தல், பற்றின்மை, ஒழுக்கம் நிர்வாணம்" எனப் படும்.
புத்த பகவான் நிர்வாலணம் என்ருல் “அசங்கத” என்று விரைவிலக்கணம் கூறினர். ஆsருடைய பிரதம சீடரான சாரீபுத் திரரை “ நிர்வாxைமென்றல் 65ல’ என்று ஒரு பரிவிராஜகர் கேட்ட கேள்விக்குக் கொடுத்த விடையோடு இது ஒத்திருக்கிறது. அதா வது “காமம், வெகுளி, மயக்கம் என்பவற்றை ஒழித்தல் ” “உபா தான பஞ்சஸ்கந்தங்க்ளில் உள்ள வேட்கையை யும் ஆசையையும் ஒழித்தல் தான் துக்கத்தின் முடிவு”, சம்சாரத்தையும் பவத்தையும் ஒழித்தல் (பவதிரோதம்) நிர்வாணம்.8
நிர்வாணம் பற்றி பகவான் மேலும் கூறுகிறர் :
* ஒ பிக்குகளே ! பிறப்பற்றதும், வளர்ச்சியற்றதும், உபாதியில் லாததுமானதொன்றுள்ளது. இவ்வாறு பிறப்பற்றதும், வளர்ச் சியில்லாததும் உபாதியற்றது மானதொன்றில்லாவிட்டால் பிறப்புள் ளதும் வளர்ச்சிபுள்ளதும் உபாதிக்குட்பட்டதுமானதற்குச் சரண்
1. SI Ludato 136
2. மேற்படி TV பக்கம் 359.
3. (3inputs). III uš5ž 190. 4. இங்கே " பிபாச ” (விடாய்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. is. A (PTS) ll uti. 54.
6. S (PTS) IV: Luả, 251. 7. சார்புத்திரருடைய சொற்கள் MI (PTS) பக். 191. 8. புத்தரின் மற்ருெரு சீடரான முடிசீலரின் வார்த்தைகள் SI (PS) பக். 117
43

Page 43
எங்கே ? பிறப்பற்றதும் வளர்ச்சியற்றதும் உபாதியற்றதுமான தொன்று இருப்பதால் தான் பிறப்புள்ளதும், வளர்ச்சியுள்ளதும், உபாதியுள்ளதுமானதற்குச் சரண் உண்டு."
இங்கே மண், நீர், அனல், வாயு என்ற நான்கு பூதங்களுக்கு இடமில்லை. நீட்சி, அகலம், நுண்மை திண்மை, நன்மை தீமை நாம ரூபம் என்பன முற்றக இல்லாது போகின்றன. இவ்வுலகமோ மறு உலகமோ போக்கோ, வரவோ ஸ்திதியோ, பிறப்போ இறப்போ, புலனறிபொருள்களோ இங்கு இல்லை.*
இவ்வாறு எதிர்மறை வாக்கியங்களால் நிர்வாணம் வருணிக்க படுவதால், உயிர் அழிதல் என்ற தவறன அபிப்பிராயத்தை கொள்ளுகின்றனர். பெளத்தத்தில் ஆன்மா என்ற ஒரு பொருள் இல்லாதபடியால் ஆன்மா எவ்வாறு அழியும். ஆன்மா என்ற போலி எண்ணம் அழிகிறதென்று கூறுவதானல் ஒருவாறு பொருந் தும். நிர்வாணம் எதிர்மறையான தென்றே நேர்படியானதென்றே கூறுவதற்கில்லை. எதிர்மறை, உடன்பாடு என்பன சார்புப் பொருள் கள். அதனல் அவை துவித உலகைச் சார்ந்தவை. சார்பு உண் மைக்கும் துவைதத்துக்கும் அப்பாற்பட்ட பரமார்த்தமான நிர்வாணத் துக்கு இந்த இரட்டைப் பதங்கள் பொருத்த முடையனவல்ல.
எதிர்மறைச் சொல் எதிர்ம்றை நிலையைச் சுட்ட வேண்டிய அவசிய மில்லை. சுகநிலையைக் குறிக்கும் வடமொழியின் பாளி வடிவம் ஆரோக்யம். இது எதிர்மறைச் சொல்லு. அதாவது ரோகம் (நோய்) இன்மையைக்குறிக்கிறது. ஆரோக்கியம் என்பது எதிர்மறை நிலை யைக் காட்டவில்லை. அமிர்த என்ற வடமொழி “அழியாநிலையைக் குறிக்கும். பாளியில் இது “அமத” எனவழங்கும். நிர்வாணத் துக்கு இது ஒரு பரியாயப் பெயர். இதுவும் எதிர்மறைப்பதமானலும் எதிர்மறை நிலையைக் குறிக்காது நேர்படியான நித்தியத்துவத்தைக் குறிக்கும். எதிர்மறையில் அமைந்த மதிப்பீடுகளின் இன்மை அபா வமன்று. நிர்வாணம் என்ற பதத்துக்குப் பிரசித்தமாக வழங் கப்படும் பரியாயப் பெயர் வீடு. (பாளியில் முத்தி, வடமொழியில் முக்தி) வீடு எதிாமறையான விஷயமென எவரும் கூறம்ாட்டார். ஆனல் வீட்டுக்கும் எதிர்மறைத்தன்மையுண்டு. வீடு என்றல் தடை யாயிருக்கும் தீமையிலிருந்து விலகுதல். இது எதிர்மறையானதே. ஆனல் வீடு எதிர்மறையன்று. அவ்வாறே நிர்வாணம் என்னும் முத்தி அல்லது விமுத்தி, பூரணவிடுதலை ; எல்லாத்தீமைகளிலிருந் தும், எல்லா ஆசைகளிலிருந்தும், துவேஷம், அறியாமை என்
1. உதான (கொழும்பு 1929) பக். 129. 2. உதான பக்கம் 128 DI (கொழம்பு 1929) பக் 172
44۔

பவற்றிலிருந்தும், எல்லா விதமான துவைதத்திலிருந்தும், சார் புகளிலிருந்தும், காலம் இடம் என்பவற்றிலிருந்தும் விடுதலை பெறுதல், நிர்வாணமென்பது சார்பற்றது, பரமார்த்தம் என்ற கருத்தை மஜ்ஜிம நிகாயத்திலுள்ள 140 ஆவது இலக்க தாது விபங்க சூத்திரத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். விவேகமும் ஆர்வமும் நிறைந்த புக்குசாதி என்பவரை பகவான் ஒரு நாள் இரவின் அமைதியில் குயவன் ஒருவனுடைய சாலையில் கண்டு இம்மிக முக்கியமான உபதேசத்தை வழங்கினர். இச்சூத்திரத்தின் முக்கிய மான பகுதிகள் பின்வருமாறு :-
மனிதன் ஐந்து பூதங்களான மண், நீர், அனல், வாயு, ஆகாயம்,
விஞ்ஞானம் என்பவற்றின் சேர்க்கை. இவற்றில் எவையேனும் என் னுடையவையல்ல. இவை நான் என்றும் கூறமுடியாது. என் உயிர், என்றும் கூற முடியாது என்பதை ஆராய்ந்து அறிகிறன். விஞ்ஞா னம் எவ்வாறு தோன்றி மறைகிறதென்பதையும், இன்பமும் துன் பமும் இரண்டுமல்லாதனவுமான வேதனைகள் தோன்றி மறைகின் றன என்பதையும் அறிகிறன். இந்த அறிவினல் அவனுடைய
மனம் பற்றற்றதாகிறது. அப்போது அவனுள்ளத்தில் உபேக்கா என்ற பற்றற்ற நடுநிலை, சார்பற்ற நிலை உண்டாகிறது. இந்த
நிலையை அவன் எந்த ஒரு யோக நிலைக்கும் பயன்படுத்தக்கூடிய
வனகிறன். அவ்வாறு இந்தச் சார்பற்ற தூய நிலை நீடித்து
நிற்கும் என்பதை உணர்கிறன். ஆனல் அவன் நினைக்கிறன்.
“எல்லையற்ற ஆகாயத்தில் நான் இந்தத்துய களங்கமற்ற உபேக்கையை மையப்படுத்தி அதற்கமைய மனத்தைச் ச்ெப்பஞ் செய்வேனனல் அது மனச் சங்கற்பமாகும். (சம்கதம்) நான் இந்தத் தூய்மையான சுத்தப்படுத்தப்பட்ட உபேக்கையை எல்லை யற்ற விஞ்ஞானத்தளத்தில் மையப்படுத்தி. . . . . . சூனியத்தளத் தில் மையப்படுத்தி குறிப்பு உண்டு இல்லையெனப் புலனகாத்தளத் தில் மையப்படுத்தி அதற்கமைந்த மனே நிலையைச் சங்கற்பித்துக் கொள்வேனனல் அது மானசிக சங்கற்பமாகும்." அப்போது அவன் சம்சாரத்தையும் பவத்தையும் விபவத்தையும் (தன்னை அழித்தல்) சங்கற்பஞ் செய்யமாட்டான். இவ்வாறு காமதன்ஹா, பவதன்ஹா, விபவதன்ஹா அற்றவனுயிருப்பதால் உலகில் அவனுக்கு எதிலும்
1. மிகப் புனிதம்ான உயர் யோக நிட்டைகள் யாவும் மனச் சங்கற்பங்களாகவும் மனதாலானவைகளாகவும் உபாதிக்குட்பட்டனவாகவும் கூறுகளுடையனவாகவும் இருப்பதைக் கூர்ந்து நோக்குக. இவை மெய்ப்பொருள் அல்ல. வாய்மையும் (சச்ச) அல்ல.
2. வேட்கை, வேதனை (விருப்பத் துணிவற்றல்) ஆகியவற்றினின்று விடுவதலே யடைந்துள்ளபடியால் அவன் இனி புதிய கன்மங்களை உற்பத்தி செய்யமாட்டான் என்பது இதன் கருத்து.
4S

Page 44
பற்றில்லை. பற்றில்லாதபடியால் எதிலும் அவலம் இல்லா தவனுமா கிருன். அப்போது உள்ளம் ஒடுங்குகிறது. உள்ளே ஆசைகள் முற்றக அணைந்து (பச்சத்தம் யேவ பரிநிப்பாயதி) விடுகின்றன. “பிறப்பு ஒழிந்தது, தூய வாழ்வு வாழப்பட்டது, செய்யவேண்டியது செய்யப் பட்டது, இனிச் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை .
இனி அவனிடம் இன்ப துண்ட வேதனையோ, மத்தியஸ்த வேதனையோ, உண்டானல் அது அநித்தியம், தன்னை அது பந்தப் படுத்தமாட்டாதென உணருகிறன். பற்றேடு அது அனுபவிக்கப் படவில்லை என்று உணருகிறன். என் வேதனை உண்டாஞலும் அதில் பற்றின்றி (விசம்யுத்தோ) அனுபுவிக்கிருன். இந்த நுகர்ச்சி களெல்லாம் உடல் அழிந்ததும், எண்ணெயும் திரியும் அற்ற விளக்கின் சுடர்போல, ஒடுங்கிவிடும் என உணர்கிறன்.
“ஆனபடியால் ஒ1 பிக்குவே, இவ்வாறு இத்தகைய பேறு பெற்ற வனிடம் சார்பற்ற ஞானம் உதயமாகிறது. ஏனெனில் எல்லாத் துக்கமும் ஒழிந்தது என்ற ஞானமே உயர்ந்த சார்பற்ற பரம ஞானம். சத்தியத்தில் நிலைபெற்ற இந்த விடுதலை அசைவற்றது. ஒ பிக்கு போலிநிலை (மோசதம்மம்) பொய். உண்மையான அமோசதம்ம நிர்வாணமே சத்தியம் (சச்ச). இந்தப் பரமார்த்தத்தைப் பெற்றவன் உண்மையான பேறுபெற்றவனே. இந்தப் பரமார்த்தமே (பரமம் அரிய சச்சம்) நிர்வாணம். இதுவே மெய்ப்பொருள்.
வேறிடத்தில் பகவான் நிர்வாணம் என்ற சொல்லுக்குப் பதிலாக சத்தியபி" என்ற சொல்லைச் சந்தேக விபரீதமின்றிப் பயன்படுத்து கிருர், “நான் உனக்கு சத்தியத்தையும் அதை அடையும் வழியையும் போதிக்கிறேன்” இங்கே சத்தியமென்பது நிர்வாணம் என உறுதியா கக் கூறலாம்.
சார்பற்ற சத்தியம் என்பது என்ன?டத்த தர்மத்தின்படி பரமார்த் மென்பது உலகில் சார்பற்ற பொருள் ஒன்றுமில்லை, எல்லாம் சார் புடையவை. உபாதிக்குட்பட்டவை, அநித்தியமானவை; மாறுபாடற்ற நித்தியமான சார்பற்ற ஆன்மா என்ருெரு பொருள் உள்ளேயு மில்லை, வெளியேயுமில்லை. இதுவே பரமார்த்தம் என்பதே, சத்தியத் தில் எதிர்மறை என்பதொன்றில்லை. சாதாரணமாக "எதிர்மறை உண்மை” யென்று சொல்வது பொருந்தாது. இந்த உண்மையை உணர்தல் என்பது விஷயங்களை இருந்த இருந்தபடி (யதாபூதம்) அறிதல் மோகமோ அஞ்ஞானமோ இன்றி அறிதல். இதுவே
1. இதன் பொருள் அவன் இப்போது அருகததிலையை அடைந்துஆட்டான் என்பதே"
2. GBG (PTS) usa, th 369.
3. ஒப்புநோக்குக. Lanka பக்கம் 200 ஒ. மகா:0தி, நிருவாண மென்பது
உள்ளதை உள்ளபடி அறிதல்.

வேட்கை ஒழிதல் (தண்ஹக்கய) துக்க நிரோதம் என்று சொல்லப் படும் நிர்வாணம். நிர்வாணம் என்பது சம்சாரம். என்பர் மஹா யான மதத்தவர். இது ஒருவருடைய காட்சியைப் பொறுத்தது. அதாவது ஒருவருடைய அகநோக்கு புறநோக்கு என்பவற்றைப் பொறுத்தது. மூலதேரவாத பாளிகிரந்தங்களில் உள்ள கருத்துக் களிலிருந்தே இந்த மகாயானக்கருத்து வளர்ச்சியடைந்திருக்கலாம். இதையே சுருக்கமான இந்த ஆராய்ச்சியில் நாம் மேலே குறிப்பிட் போம்.
ஆசை ஒழிந்ததும் அதன் பயனுக இயற்கையாகவே உண்டாவது நிர்வாணமென்று கருதுவது தவறு. நிர்வாணம் ஒரு காரியமன்று. அது எந்தக் காரணத்திலிருந்தும் உண்டாவதில்லை. அப்படியானல் அது ஆக்கப்பொருளாய் உபாதிக்குட்பட்டதாகும். நிர்வாணம் காரண முமன்று, காரியமுமன்று. அது காரணகாரியத் தொடர்புக்கு அப்பாற்பட்டது. சத்தியம் ஒரு காரியமன்று, பயனன்று. அது தியானத்தினலோ சமாதியினலோ உண்டானதன்று. அனுபூதி நிலை, யில், அத்தியாத்மிக நிலையில் சைதிசிகமாக உண்டாவதன்று. உண்மை உண்டு, நிர்வாணம் உண்டு. நீங்கள் செய்ய வேண்டியது அதைக் கண்டு உணர்தலே. நிர்வாணத்தை அடைய வழி உண்டு. ஆனல் நிர்வாணமென்பது இவ்வழியின் பயணுக உண்டாகும் காரிய மன்று.* ஒரு பாதை வழியாக ஒரு uலையை அடையலாம். ஆனல் பாதையின் பலன் அந்த மலையன்று. பாதையென்ற காரணத்தின் காரியமன்று. நீங்கள் கண்ணுல் ஒளியைக் காணலாம். ஆனல் கண்ணின் காரியமன்று அந்த ஒளி. 领
நிர்வாணத்தின் பின்னர் என்ன உண்டு? என மக்கள் கேட் பதுண்டு. நிர்வாணமே முடிந்த உண்மையானபடியால் இந்தக் கேள்விக்கு இடமில்லை.இதுவே கடைசி முடிவானல் அதற்கு மேலே ஒன்றுமில்லை. நிர்வாணத்துக்கு அப்பால் எதாவது இருக்குமானல் அதுவே முடிவான உண்மையேயன்றி நிர்வாணம் முடிவான உண் மையன்று. ராத என்ற பிக்கு இந்தக் கேள்வியை வேருெருவனகயில் பகவானிடம் கேட்டார். “நிர்வாணத்தின் நோக்கமென்ன? நோக்கம் என்ன என்று கேட்கும்போது நிர்வாணத்திற்கு அப்பால் எதோ ஒன்று இருக்கிறது என்பது தொக்கு நிற்கிறது. எனவே பகவான்,
1. சம்சாரமே நிர்வாணம், நிர்வாணமே சம்சாரம், இவற்றிடையே எதுவில
வித்தியாசமுமில்லை என்பர் நாகர்சுனர்.
2. உலகம் கடந்த ஒன்பது நிலைகளுள் (நவலோகுத்தர தர்மங்களுள்) நிருவாணம்
மார்க்கத்துக்கும் பலனுக்கும் அப்பாற்பட்டதென்பதை இங்கு நினைவிற் கொள்ளல் வேண்டும்.
47

Page 45
ஒ; ராத இது அர்த்தமற்ற கேள்வி; நிர்வாணத்தை நோக்கமாக, சார்பற்ற பரம்பொருளாகக் கொண்டே துறவு வாழ்க்கையில் மூழ்கு கிறர்கள். அதுவே அதன் இலட்சியம் முடிவான நோக்கம்”.*
மரணத்தின் பின்னர் புத்தபகவான் நிர்வாணத்தில் பிரவேசித் தார். பரிநிர்வாணத்தில் பிரவேசித்தார் என்ற சாதாரணமான கூற்றுக்கள் தவருனவை. அதனல் அவை பொதுமக்கள் மனத்தில் நிர்வுாணத்தைப் பற்றிப் பலவிதமான கற்பனைகளுக்கு இடமளித்தன. புத்தர் பரிநிர்வாணத்தில் அல்லது நிர்வாணத்தில் புகுந்தார் என்று பேசப்படும்போது நிர்வாணம் ஒரு நிலையென்றே ஒரு ராச்சிய ம்ென்ருே, உயிர் வாழும் ஒரு நிலையென்றே எண்ணுகிறர்கள். “நிர்வாணத்தில் பிரவேசித்தார்’ என்ற வழக்கு மூல பாடங்களில் இல்லை. இறந்த பின் நிர்வாணத்தில் புகுதல் என்பது ஒன்றில்லை. நிர்வாண அனுபூதி பெற்று இறந்துபோன புத்தரைப் பற்றியோ, அருகதர் பற்றியோ குறிப்பதற்கு “பரிநிப்புதோ’ என்ற சொல் வழங் கப்படுகிறது.
இது நிர்வாணத்தில் பிரவேசித்தார், என்ற பொருள்படுவதில்லை. “பரிநிப்புதோ’ என்ருல் முற்ருகப் போனவர், முற்றக வீசப்பட் டவர், முற்றக ஒழிந்தவர்” எனப் பொருள்; ஏனெனில் புத்தரோ, அருகதரோ மீண்டும் பிறவி எடுப்பதில்லை.
பரிநிர்வாணமடைந்த புத்தர் அல்லது அருகதருக்கு மரணத்தின் பின் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இக்கேள்விக்குப் பதில் இல்லை. இத்தகைய கேள்விகள் பதில் கூறப்படாத கேள்விகள் எனப்படும். இது பாளியில் (அவ்யாகத) எனப்படும்."
இதைப் பற்றி புத்தர் பேசியபோது அருகதன் இறந்த பின் அவன் எய்தும் நிலையைப் பற்றிக் கூறுவதற்கு நமது மொழியில் வார்த்தை கள் இல்லையெனக் கூறினர். வச்சன் என்ற பரிவ்ராஜகன் கேட்ட கேள்விக்கு பகவான் “பிறத்தல்”, “பிறவாமை” என்ற பதங்களே அருகதர் விஷயத்தில் கூற முடியாது. ஏனெனில், உருவம், வேதனை, குறிப்பு, சங்கற்பம், விஞ்ஞானம் என்ற நிலைகள் அவர்கள் விஷயத்தில் முற்ருய் வேரோடு அழிந்துவிடுகின்றன. மரணத்தின்
1. S 111 (PTS) usiasta 189.
2. புத்தரின் நிருவாணத்துக்குப் பின் எனச் சிலர் எழுதுவதுண்டு. இதற்கு அர்த்தமில்லை. புத்தரின் பரிநிருவானத்துக்குப் பின் என்றே எழுத வேண்டும் பெளத்த இலக்கியங்களில் நிருவாணத்துக்குப் பின் என்ற வழக்கு கிடையாது பரி நிருவாணத்க்குகுப் பின் என்றே வழக்கு.
3. STV (PTS) ušasúa 375.
4. MI (PTS) is a 486.
48

பின் அவை அவர்கள் விஷயத்தில் மறுபடி உண்டாவதில்லை.இந்தப் பஞ்சக் கந்தங்களே பிறப்பு, பிறவாமை என்பவற்றேடு தொடர் புடையவை.
எரியும் விறகுக் கட்டை ஒழிந்த பின் அணைந்து போகும் நெருப்புப் போலவும், எண்ணெயும் திரியும் முடிந்த பின் அணைந்து போகும் விளக்குச் சுடர் போலவும் இருப்பது அருகதரின் மறைவு என உவமிக்கப்படுகிறது. இங்கே உவமிக்கப்பட்டது நிர்வாணத்துக்கன்று. நெருப்பும், விளக்குச் சுடரும் நிர்வாணத்துக்கு உவமிக்கப்படவில்லை. பஞ்சக்கந்தங்களினலான பொருளுக்கே உவமிக்கப்பட்டுள்ளன. இதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இப்பஞ்சக்கந்தங் களான பொருளே நிர்வாண அனுபூதியைப் பெற்றன. இந்த உவமை நிர்வாணத்தையே குறிக்குமெனச் சிறந்த அறிஞர் உட்படப் பலர் தவருக எண்ணிப் பிழைபட விளக்கங் கொடுத்திருப்பதால் இவ் விஷயத்தை இங்கு வலியுறுத்த விரும்புகிறேம். அணைந்துபோன தீயுக்கோ, விளக்குச் சுடருக்கோ நிர்வாணம் உவமிக்கப்படவில்லை.
ஆன்மா என ஒன்று இல்லாவிட்டால் நிர்வாண அனுபவத்தைப் பெறுபவர் யார் என்ற கேள்வி பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது. நிர்வாணம் ஒரு புறமிருக்க ஆன்மா இல்லாவிட்டால் இப்போது நினைப்பது யார் என்ற கேள்வியைக் கேட்க விரும்புகிருேம். நினைவே நினைக்கிறது என்பதை மேலே எடுத்துக் காட்டினுேம், நினைவுக்குப் பின்னல் நினைப்பவர் என ஒருவர் இல்லை என்பதை விளக்கினுேம். அவ்வாறே ஞானமே (பஞ்ஞா) அனு பூதியே அனுபவிக்கிறது. அனுபூதிக்குப் பின்னல் ஆன்மா என்று ஒன்றில்லை. துக்கத்தின் உற்பத்தி பற்றி ஆராய்ந்த பொழுது, அது உயிராயிருந்தாலென்ன பொருளாயிருந்தாலென்ன, சிந்தனை அமைப்பாயிருந்தாலென்ன, அது தோற்றத் தன்மையுடையதாயிருந்தால் அதன் அகத்திலே அதன் ஒடுக்க அழிவும் உண்டென்பதைக் காட்டினுேம். துக்கம் என்னும் சம்சார வட்டத்தில் தோற்ற மிருக்கும் போது அதில் அழியுந்தன்மையுமுண்டு. துக்கம் வேட்கையினல் (தண்ஹா) தோன்றுகிறது. பிரக்ஞை என்ற ஞானத்தினல் அது அழிகிறது. வேட்கையும், ஞானமும் பஞ்சக்கந்தங்களில் அடங்கியுள்ளன என் பதை முன்னர் கண்டாம்."
இவ்வாறு தோற்றத்துக்கும் அழிவுக்குமேதுவான வித்து பஞ்சக் கந்தங்களிலுண்டு. " இந்த ஆறு அடி நீளமான உணர்வுள்ள உடலகத்திலேயே உலகமும் அதன் தோற்றமும், அழிவும், அழிவுக்
l. MI (PTS) us. 487, lll us. 245.
Sn (PTS)) V 232 (us. 41)
2. பஞ்சக் கந்த உபாதானம் பற்றி பக்கம் 26, 36 இல் பார்க்க.
49

Page 46
s
கான மார்க்கமும் உண்டு எனக் கூறுகிறேன். ” என புத்தர் கூறிய பிரசித்தி பெற்ற கூற்றின் அர்த்தம் இதுதான். எனவே இந்தப் பஞ்சக் கந்தத்திலே தான் நான்கு உயர்வாய்மைகளுமுண்டு. அதா வது எம்முள்ளேதானுண்டு. (இங்கே துக்கம் என்ற சொல்லுக்குப் பதிலாக உலகம் (லோகம்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது துக்கத்தைத் தோற்றுவிக்கவும் ஒடுக்கவும் வெளியேயிருந்து எவ்வித சக்தியும் வரவில்லை என்று பொருள் தரும்.
நாலாவது உயர் வாய்மைப்படி ஞானத்தை வளர்த்தால் அது வாழ் வின் இரகசியத்தைக் காணும் யதா பூதஞானம், உள்ளதை உள்ள படி உணரும் பான்மையை உண்டாக்கும். இந்த இரகசியத்தைக் கண்டால் சத்திய தரிசனமுண்டாகும்; சம்சார மோகத்தை உண்டாக் கும் சக்திகளெல்லாம் ஒயும், புதிய கன்மங்கள் உண்டாகமாட்டா. மோகமும் வேட்கையும் ஒழிகின்றன. சம்சார வேட்கை அற்றுப் போகிறது. தன்னை வருத்திய மனநோயின் காரணத்தை, அதன் இரகசியத்தை, ஒருவன் கண்டதும் நோய் நீங்குவதுபோல இந்த மோகம் நீங்குகிறது.
எறக்குறைய எல்லா மதங்களிலும் பரம சுகமானது மரணத்தின் பின்னரே பெறப்படுகிறது. ஆனல் நிர்வாணம் இம்மையிலேயே அனுபவிக்கக் கூடியது. அதை அடைவதற்கு மரணம் வரை காத் திருக்க வேண்டியதில்லை.
உண்மையை உணர்ந்தவன், நிர்வாண சுகத்தைப் பெற்றவனே. உலகில் மற்றையோரெல்லாரையும் விட மகிழ்ச்சியுள்ள மனிதன் அவனிடத்து எவ்வித மனச்சிக்கல்களும் பிறழ்வுணர்ச்சிகளும் கிடையா. மற்றவர்களை வாட்டி வதைக்கும் கவலைகளும் அவலங்களும் அவனிட மில்லை. அவனுடைய மனம் பூரண ஆரோக்கிய நிலையுடையது. பழையவற்றை நினைந்து அவன் பச்சாத்தாபப்படுவதில்லை. எதிர் காலத்தை நினைந்து அங்கலாய்ப்பதில்லை. அவன் நிகழ்கால வாழ் வையே பூரணமாக நடத்துகிறன். அதனல் பொருள்களை நன்கு நயந்து மகிழ்ச்சியோடு பற்றின்றி வாழ்கிறன். எக்களிப்பும் ஆனந்த மும் உடையவனுய் இந்திரியங்களெல்லாம் மகிழக் கவலையின்றிச் சாந்தமாய் வீறன ஒளியுடன் தூய வாழ்வை ஆனந்தமாகக் கழிக் கிருன்° தன்னலமான ஆசைகள், துவேஷம், அறியாமை, இறு மாப்பு, தற்பெருமை முதலிய ஆசவங்களற்றவனுய் தூய்மையும் மென்மையும் உடையவனுய் பரந்த அன்பும், கருணையும், பரிவும்,
1. A (கொழும்பு 1929) பக்கம் 218. 2. SI (PTS) Lisb 5. 3. MI II (PTS) Ludiassub 121.
50

அனுதாபமும், நல்லெண்ணமும் சகிப்புத் தன்மையும் உடையவஞய் வாழ்கிறன். மற்றவர்க்கு அவன் செய்யும் சேவை மிகத் துய்மை யுடையது. அவனிடம் தன்னலம் கிடையாது. அவன் சம்பாதிப்ப தில்லை. ஈட்ட வேண்டுமென்று ஆசைப்படுவதில்லை. ஆன்மிகச் செல் வத்தைக் கூட அவன் விரும்புவதில்லை. இன்ன நிலையை அடைய வேண்டு மென்ற ஆசை அவனிடமில்லை. ஆன்மா உண்டென்ற மோகம் அவனிடமில்லை.
நிர்வாணமென்பது துவைதங்களைக் கடந்தது. சார்புத் தன்மை யற்றது. எனவே அது நன்மை தீமை, சரிபிழை, உள்ளது இல்லது, என்று நாம் கொள்ளும் கருத்துக்களுக்கு அப்பாற்பட்டது. நிர்வாணத் தைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு நாம் பயன்படுத்தும் * சுகம் ” என்ற சொல்லுக்கூட இச்சந்தர்ப்பத்தில் முற்றும் வேறன பொருளுடைய தாகிறது. சாரீபுத்திரர் ஒரு முறை “நண்பரே” நிர்வாண மென்பது “சுகம்” நிர்வாணம் என்பது “ சுகம் ” என்ருர். அப்போது உதாயி * ஆனல் நண்ப சார் புத்திர, உணர்ச்சி இல்லாவிட்டால் க்கமேது ? என்றர். அதற்கு சார் புத்திரர் கூறிய விடை ஆழ்ந்த தத்துவக் கருத்துடையது. சாதாரண அறிவாளிகளால் புரிந்து கொள்ள முடியாதது. * உணர்ச்சி இல்லாதிருப்பதே சுகந்தான் ” என்பதே அவருடைய விடை. ܀
நிர்வாணம் அதர்க்கியமானது. அதாவது தர்க்க சாத்திரத்துக்கு அப்பாற்பட்டது. தர்க்க முறைப்படி விவேகத்தைத் திருப்திப்படுத்தி வினேதார்த்தமாக விசாரணை நடத்தினுலும் பரமார்த்தமான நிர் வாணத்தை அவ்வகையில் புரிந்து கொள்ள முடியாது. பாலர் வகுப்பிலுள்ள சிறு குழந்தை “ சார்பியல் கோட்பாட்டைப் ” பற்றி சண்டை போடக்கூடாது. ஆனல் அதன் பாடங்களை முறைப்படி படித்து முன்னேறுமானல் ஒரு காலத்தில் அக்கோட்பாட்டைப் புரிந்து கொள்ளும். நிர்வாணத்தை ஒவ்வொருவரும் தத்தம் அனுபவத்தி ஞல் அறிந்து கொள்ள வேண்டும் (பச்சத்தம் வேதிதப்போ விஞ்ஞாஹி) ஆர்வத்துடனும் பொறுமையுடனும் மார்க்கத்தில் செல்வோமானல் நேர்மையோடு நம்மைப் பயிற்றித் தூய்மைப்படுத்துவோமானல், ஆன்மீக அபிவிருத்தியை அடைவோமானல் அதை நம்முள் ஒரு நாள் அனுபவிக்க முடியும். மயக்கத்தைத் தரும் சொற்களையும் பெரிய வாதங்களையுஞ் செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை.
இனி நிர்வாணத்துக்கு இட்டுச் செல்லும் மார்க்கத்தைப் பற்றி ஆராய்வாம்.
Տ]

Page 47
Vesúo o$Surub
நாலாவது உயர் வாய்மை : மார்க்கம்
துக்கத்தை ஒழிக்கும் மார்க்கமே நாலாவது உயர்வாய்மை. இது "துக்க நிரோத காமினி படியதா ஆரியசச்ச” என பாளியில் கூறப்படும். இதுவே மத்திய வழி (மஜ்ஜிமா படியதா) எனெனில் இது இரு தீவிரமான கொள்கைகளை விலக்கி நடுவழியைப் பின் பற்றுகிறது. இதன் ஒரு முனை புலன்வருமின்பங்களில் சுகத்தைக் காண்டது. இவ்வழி "கீழானது, சாதாரண மானது, பயனற்றது, பொது மக்களால் பின்பற்றப்படுவது”. மற்ற முனை தன்னை ஒறுத்துப் பலவகையான கடுந்தவங்களில் ஈடுபட்டுச் சுகம் தேடுவது. இது “துன்பமுண்டாக்குவது, தகைமையற்றது, பயன்தராதது”. இவ்விரு வழிகளிலும் ஈடுபட்டு இவை பயனற்றவை என்று கண்ட பகவான் தன் அனுபவத்தின் மூலம் இந்த மத்திய வழியைக் கண்டார். இது * காட்சி உதவி அறிவைக் கொடுக்கும். இதன் பயணுக உள்ளத்த மைதியும், அகக்காட்சியும், ஞான ஒளியும், நிர்வாணமும் கிட்டும்,” இந்த நடுவழியே உயர்ந்த எட்டுக் கூறுகளையுடைய மார்க்கம் (அரிய அட்டாங்கித மக்க) என வழங்கப்படும்.
இது எட்டுப் பிரிவுகளை உடையது. இவை :-
1. நற்காட்சி (சம்மாதிட்டி).
நல்லூற்றம் (சம்மாசங்கப்ப) நல்வாய்மை (சம்மாவாசா) நற்செயல் (சம்மாகம்மந்த) நற்சீவனுேபாயம் (சம்மா ஆஜீவ) நல்லுக்கம் (சம்மாவாயாம) நற்கடைப்பிடி (சம்மாசதி) நல்லமைதி (சம்மாசமாதி)
நாற்பத்தைந்து வருடமாக புத்த பகவான் செய்த போதனை முழுவதும் இந்த மார்க்கத்தோடு எதோ ஒரு வகையில் தொடர்புடைய தாயிருக்கிறது. அவர் இம்மார்க்கத்தைப் பலவகையில், பல வார்த் தைகளால், பலபேருக்கு அவ்வவர் தகமைக்கும், திறமைக்கும் அறிவுக்கும் ஏற்றவாறு விளக்கினர். ஆயிரக்கணக்கான உபதேசங் களை அவர் செய்தார். அவை பிடக நூல்களெங்கும் பரவலாகக்
52

க்ாங்கு சிதறிக் கிடக்கின்றன.
இந்த அட்டாங்கங்கள் ஒன்றன்பின் ஒன்ருக அனுசரிக்கப்பட வேன்டியவையல்ல. ஒரு சேர ஒரேசமயத்தில் பலபட அனுட்டிக்கப்பட வேண்டியவை. ஒவ்வொருவருடைய தகைமைப்படி இவை ஒமே நேரத்தில் பின்பற்றப்பட வேண்டியவை. ஒன்றேடோன்று தொடர் புடையவை. ஒன்று, மற்றதை அனுசரிப்பதற்கு உதவியாயிருக்கும். பெளத்தர்களுடைய பயிற்சி, விநயம் என்பவற்றில் மிக முக்கிய மானவை (அ) (சீலம்) (ஒழுக்கம்) (ஆ) சித்தத்தை ஒருமுகப்படுத் துதல்) (சமாதி) (இ) ஞானம் (பஞ்ஞா-பிரக்ஞா)" என்பனவாகும்.
இவற்றை வளர்ப்பதற்கும் பூரணப்படுத்துவதற்கும் இந்த எட்டு
மார்க்கங்களும் உதவுகின்றன. அட்டாங்க மார்க்கத்தை நன்கு புரிந்து கொள்வதற்கு அவற்றை சீலம், சமாதி, பிரக்ஞை என்ற மூன்று பிரிவின் கீழ் அடககுவது உதவியாயிருக்கும். இவ்வாறு பிரித்து விளக்குவதும் பொருத்தமாகும்.
உயிர்வாழும் எல்லாப் பிராணிகளிடத்தும் அன்பும் கருணையும் உடையவராயிருக்க வேண்டுமென்ற சீலம் அடிப்படையிலே தான் புத்தருடைய போதனை தாபிக்கப்பட்டுள்ளது. மகா கருணையே பகவா னுடைய போதனையின் பேரிலட்சியம். ஆனல் அறிஞர் பலர் இதனை மறந்து புத்த தர்மத்தைப் பற்றிப் பேசும் போதும் எழுதும் போதும் வெறும் அத்யாத்மக் கோட்பாடுகளையும் சாரமற்ற தத்துவ விரிவுரை களையும் செய்துவருவது வருந்துவதற்குரிய விஷயமாகும். பெரும்பா லான மக்களின் நன்மைக்காகவும், பெரும் பாலானவர்களின் சுகத் துக்காகவும் உலகத்தவர் மீதுள்ள பெருங் கருணையினுல் (பகுஜன ஹிதாய பகுஜன சுகாயலோகானுகம்பாய) பகவான் இத் தருமத்தைக் கூறினர்.
மனிதன் பூரணமடைய வேண்டுமானல் அவனிடம் கருணை, ஞானம் என்ற, இரு பண்புகள் மலர வேண்டும். இங்கே கருணை என்னுல் அன்பு ஒப்புரவு, தயை, சகிப்புத் தன்மை, என்பவற் றையும் உள்ளத்தில் உண்ர்ச்சியினுல் உண்டாகும் நற்பண்புகளையும் குறிக்கும். பிரக்ஞா என்ற ஞானம் மனத்தில் தோன்றும் விவே கம் சார்பான பண்புகளைக் குறிக்கும். உணர்ச்சி சம்பந்தமான பண் புகளே ஒருவர் விருத்தி செய்து புத்தியை அலட்சியஞ் செய்வாரானல் அவர் நல்மனமுள்ள ஒரு முட்டாளாகி விடுவார். புத்தியை வளர்த்து உணர்ச்சிகளை அலட்சியஞ் செய்தால் ஒருவர் கருணையில்லாத விவேகி யாக வளர்ச்சியடைவார். எனவே பூரண வளர்ச்சி பெறுவதற்கு உணர்ச்சியையும் வளர்க்க வேண்டும். விவேகத்தையுகம் வளர்க்க
1. MI (PTS) ut. 301.
S3

Page 48
வேண்டும். பெளத்த வாழ்வு நெறி இதுவே. இதில் கருணையும் ஞானமும் பிரிவின்றிச் சேர்ந்திருக்கின்றன. இதை மேலே காண் tuntun. ر
அன்பையும் கருணையையும் அத்திவாரமாகக் கொண்ட சீலம் அட்டாங்க மார்கத்தில் காணப்படும் நல்லாய்மை, நற்செயல், நற்சி வனுேபாயம் (இல. 3, 4, 5 என் அட்டவணையிலுள்ள படி) என்பவற்றைத் தன்னுள்ளடக்கியிருக்கிறது.
நல்லாய்மை என்பது (1) பொய் பேசாதிருத்தல் (2) புறங் கூறதிருதல், துவேஷத்தையும் பகையையும், வேற்றுமையையும் பிணக்கையும் மக்களிடையே உண்டு பண்ணும் பேச்சையும், பழி கூறு வதையும் விலக்குதல் (3) இன்னச் சொல்லாமை, கொடிய மரியாதை யற்ற சொற்களைப் பேசாதிருத்தல், குரோதமும் அவமானமும் உண் டாக்கும் சொற்களைப் பேசாதிருத்தல், (4) பயனில் சொல் பேசாமை, வீண்வார்த்தை பேசாதிருத்தல், வதந்தி பரப்பாதிருத்தல், இத்த கைய பேச்சுக்களைக் கைவிட்டால் மனிதன் உண்மையையே பேச நேரிடும். இனிமையும், பயனுள்ளவையுமான பேச்சைப் பேசுவான். ஒருவன் சொற் சோர்வுபடப் பேசக்கூடாது. கருத்தின்றிப் பேசக்கூடாது. சரியான நேரத்திலே சரியான இடத்தில் பேசவேண்டும். பயனுள்ளவற்றைப் பேசமுடியாவிட்டால், பெருந்தன்மையோடு பேசா திருந்து விட வேண்டும்.
நற்செயல் நல்லொழுக்கத்தையும், நல்லாசாரத்தையும் வளர்க்கும். கெளரவமாய்ப் பழகச் செய்யும். உயிர்களைக் கொல்லாதிருக்கவும், களவு செய்யாதிருக்கவும், நேர்மையற்ற விவகாரங்களில் ஈடுபடாம லும், தவறன முறையில் இணைவிழைச்சிலீடு படாமலிருக்கவும் துணை செய்யும். மற்றவர்களையும் சமாதானமான நல்வழியில் நடக்கத் தூண்டும்.
நற் சீவனுேபாயம் என்பது மற்றவர்க்குத் துன்பத்தை உண்டாக் கும் தொழில்களில் ஒருவன் ஈடுபடாது தன் சீவனுேபாயத்துக்கான ஊதியத்தைச் சம்பாதித்தல். ஆயுதங்களில் வியாபாரஞ் செய்தல், மரணத்தை உண்டாக்கக் கூடிய ஆயுகங்களை விற்றல், போதைக்குரிய பொருள் ளையும் விஷப் பொருள்களையும் வியாபாரஞ் செய்தல், மிருகங்களைக் கொறுை அவற்றை விற்றல் என்பன விலக்கப்பட வேண்டியவை. மற்றவர்களை வஞ்சித்தல்போன்ற தொழில்களில் ஈடுபடாதிருத்தில், மதிப்புக்குரியதும், மற்றவரால் பழிக்கப்படாததும், மற்றவர்க்கு இன்ன செய்யாததுமான தொழில்களால் சீவனே பாயத்தைத் தேடிக் கொள்ள வேண்டும். ஆயுதங்களில் வியாபாரம் நடத்தக்கூடாதெனவும், மரணத்தை விளைவிக்கக் கூடிய ஆயுத வியாபாரத்தில் ஈடுபடக் கூடாதெனவும் அது தீமை நிறைந்த
54

சிவனேபாய மென்றும் கூறுவதால் பெளத்தம் எந்தவிதமான யுத்தத்தையும் வெறுக்கிறதென்பதைத் தெளிவாகக் காணலாம்.
அட்டாங்கமார்க்கத்தில் நல்வாய்மையும், நற்செயலும் நற்சிவனே பாயமும் ஆகிய மூன்றும் சீலத்தில் அடங்கும். தனிப்பட்டவர்களும், சமூகத்திலுள்ளவர்களும் சுகமாகவும், பிணக்கின்றியும் நல்வாழ்வு வாழ்வதையே பெளத்த சீலம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. உயர்ந்த ஆத்மீகப் பேறுகளைப் பெறுவதானல் இவை இன்றியமையா அடிப்படையாக மதிக்கப்படுகின்றன. இந்தச் சில மென்ற அத்தி வாரமில்லாவிட்டால் எந்தவிதமான ஆன்மீக வளர்ச்சிக்கும் இடமில்லை.
அடுத்ததாக மனத்தை வழிப்படுத்தும் மூன்று அமிசங்கள் அட்டாங்க மார்க்கத்தில் உண்டு. அவை நல்லுக்கம், நற்கடைப்பிடி, நல்லமைதி என்பன. அட்டாங்க நிரலில் இவை 6, 7, 8 ஆகக் காணலாம் (நல்லமைதி என்பது நற்சமாதி).
நல்லுக்கம் என்பது மனத்திலே தீய எண்ணங்களும், மன ஆரோக்கியத்துக்கு ஒவ்வாத எண்ணங்களும் தோன்றது தடுக்கும் ஊக்கமான மன உறுதி (2) அவ்வாறு எழுந்த தீய எண்ணங்களை நீக்கும் ஊக்கமான மனவுறுதி (3) மனத்திலே நல்ல எண்ணங் களையும் தூய எண்ணங்களையும் எழச் செய்யும் மன உறுதி (4) ஏற் கனவே மனத்தில் உண்டான நல்ல துய எண்ணங்களை விருத்தி செய்து நிறைவாக்கும் மன உறுதி.
நற்கடைப்பிடி என்பது எப்பொழுதும் விழிப்பாயிருத்தல், கருத்தோ டிருத்தல், கவனமாய் இருத்தல் (1) அதாவது காயத்தின் தொழிற் பாடுகள் (2) உணர்ச்சிகள், நுகர்வுகள் (3) சித்தத்தின் செயல்கள் (4) எண்ணங்கள், கற்பனைகள், கருத்துக்கள், பொருள்கள் (தம்ம) என்பவற்றை விழிப்புடன் கருத்தில் கடைப்பிடித்தல், நினைத்தல்.
மூச்சை உள்ளே வாங்கும்போதும் வெளியே விடும்போதும் அதைத் தியானித்துக் கொண்டிருத்தல் ஆனபான சதி எனப்படும். மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு இந்தத் தியானமுறை பெளத்தத்தில் மிகப் பிரசித்தமானது. இது உடம்பு சம்பந்தப்பட்ட தியானம். உடம்பின் தொழிற்பாட்டைப் பற்றி விழிப்பாயிருப்பதற்கு வேறு பல தியான முறைகளுமுண்டு.
மனத்தில் உண்டாகும் வேதனை (நுகர்வு)கள், உணர்ச்சிகள் என்பவற்றைப் பொறுத்தவரையில் இன்பமானவையோ, துன்ப
SS

Page 49
மானவையோ, நொதுமலானவையோ எவையாயிருந்தாலும் அவற்றை விழிப்போடு கருத்திற் கொள்வதோடு அவை எவ்வாறு தம்முன்தோன்றி மறைகின்றன என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
சித்தத்தின் தொழிற்பாடுகள் சம்பந்தமாக மனம் காம விருப்பு டையதாயிருக்கிறதா இல்லையா, துவேஷப் பான்மையுடையதாயிருக் கிறதா இல்லையா, ஒன்றை வேருென்ருக மயங்கி மோக முற்றி ருக்கிறதா இல்லையா, அலைகின்றதா, ஒரு நிலைப்பட்டிருக்கின்றதா என இவ்வாறு மனத்தின் நிலைகளைப் பற்றி விழிப்பாயிருக்க வேண்டும். இவற்றின் பலவகையான இயக்கங்களையும் கவனித்து அவை எவ்வாறு எழுகின்றன, மறைகின்றன என்பதை விழிப்போடு ஆராய வேண்டும்.
எண்ணங்கள், கருத்துக்கள், கற்பிதங்கள், பொருள்கள் என்பன பற்றி அவற்றின் தன்மையையும், அவை எவ்வாறு தோன்றி மறைகின்றன என்பனபற்றியும் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன, எவ்வாறு ஒடுக்கப்படுகின்றன, அழிக்கப்படுகின்றன, என்பனபோன்ற வற்றைப்பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த நான்கு வகையான தியானங்களைப் பற்றி சதிபட்டான சூத்திரம் என்ற நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. (சதிபட்டான என்றல் தியான நிலை).
சமாதியின் மூன்றவது அமிசம் நல்லமைதி. இது நான்குவகை யான தியானங்களுக்கு இட்டுச் செல்லும். இது பொதுவாக சுழுத்தி நிலை எனப்படும். முதலாவது தியான நிலையில் காம இச்சைகளும், புலன்வரும் இன்ப வேட்கை களும், குரோத நினைவுகளும், மடி மையும், கவலையும், சஞ்சலமும், சந்தேகங்களும் இவை போன்ற அசுபநினைவுகளும் மனத்தைவிட்டு நீங்கும். மகிழ்ச்சியும் ஆனந்த மும் சித்தத்தில் நிரம்பியிருக்கும், சித்த விருத்திகள் சில நிலவும். இரண்டாவது தியான நிலையில் புத்தி சார்ந்த செயற்பாடுகளெல்லாம் ஒடுக்கப்படும். அமைதியும் ஏகாக்கிரசித்தமும் வளரும் ; மனத்தில் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நீங்காதிருக்கும். மூன்ருவது தியான நிலையில் ஆனந்தம் நீங்க மகிழ்ச்சியும் உபேக்கா என்ற பற்றற்ற நிலையும் நிலவும். நாலாவது தியான நிலையில் எல்லா உணர்வு களும், இன்ப துன்பம், சுகதுக்கம் என்ற வேதனைகளும் மறைந் துவிடும். தூய உபேக்கையும், விழிப்புணர்ச்சியும் மாத்திரம் மிஞ்சி யிருக்கும்.
இவ்வாறு நல்லூக்கம் நற்கடைப்பிடி, நற்சமாதி என்பவற்ருல் மனம் பயிற்சி பெற்று அடங்கி உயர் நிலையடையும்.
1. தியானம் பற்றிய எழாம் அத்தியாயம் பார்க்க.
S6

எஞ்சிய இரண்டு அங்கங்களான நற்காட்சியும், நல்லுற்றமும், ஞானத்தை உண்டாக்கும்.
நல்லூற்றம் என்பது தன்னலமற்ற வைராக்கியம் அல்லது பற்றற்ற நிலை. எல்லா உயிர்களிடத்தும் இந்நிலையில் கருணையும், அஹிம் சையும் மனத்திலே நிலவும். இப்பண்புகள் ஞானத்தைச் சேர்ந்த வையாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. உண்மையான ஞானம் இப்பண் புகளைக் கொண்டன என்பது தெளிவாகிறது. ஞானமில்லாதவரிட மே தன்னலமும், குரோதமும், துவேஷமும், இம்சையும் காணப் படும். தனிப்பட்டவரிடமோ, சமூகத்திலோ, அரசியல் துறையிலோ இந்த அமைப்பைக் காணலாம். ஞானமில்லாத இடத்தில் பலாத். காரமும், துவேஷமும், தன்னலமும் பகைமையும் காணப்படும்.
நற்காட்சி என்பது உள்ளதை உள்ளபடி அறிதல். நான்கு உயர் வாய்மைகளே இந்த ஞானத்தைக் கொடுக்கும். எனவே நற்காட்சியென் பது நான்கு உயர்வாய்மைகளை உணர்தல். இந்த ஞானமே பரமார்த்த தரிசனத்தைக் கொடுக்கக்கூடியது. இதுவே மிக உயர்ந்த ஞானம். புத்த சமயத்தின்படி இருவகைக் காட்சிகளுண்டு. சாதாரணமாக நாம் காட்சி என்று கூறுவது அறிவு. கொடுக்கப்பட்ட தரவுகளின்படி ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுதல். இது ஞாபகங்களின் திரட்சி. இதனை “ வான்முறை அறிவு ” என்பர் (அனுபோதம்). இது ஆழ்ந்த காட்சியன்று. உண்மயான ஆழமுள்ள காட்சி உள்ளார்ந்த காட்சி (படிவேதம்) அதாவது ஒரு பொருளின் உண்மையான தன்மையை உள்ளபடி அறிதல். பெயர் சொல்லியோ, அடையாள அட்டையின்றியோ அறிதல். மனம் சகல களங்கங்களுமின்றித் தியானத்தில் பக்குவமடைந்த போது தான் இந்தக் காட்சிகைவரும்.
இவ்வாறு சுருக்கமாகக் கூறப்பட்ட இந்த அட்டாங்க மார்க்க வர லாற்றிலிருந்து இது ஒவ்வொருவரும் அனுசரிக்க வேண்டிய வாழ் க்கை முறை என்பதை அறியலாம். மனம் வாக்குக் காயங்களினல் இதை அப்பியாசிக்க வேண்டும். அதன் பயனக ஒருவர் தன்னை மேனிலைக்குக் கொண்டு வரலாம். மனத்தைத் தூய்மைப் படுத்த லாம். இதற்கு நம்பிக்கையோ, பிரார்த்தனையோ, வழிபாடோ, கிரியைகளோ அவசியமில்லை. பொதுவாகச்"சமயவாழ்வு” என்று சொல்லப்படும் எதுவும் இதில் இல்லை. இது ஒருவழி. பரமார்த் தத்தைக் காணும் வழி : இங்கே ஒழுக்கம், ஆன்மார்த்தம், விவேகம் என்பவற்றின் நிறைவு உண்டாகிறது. அவற்ருல் பூரண விடுதலையும் சுகமும், சாந்தியும் கிட்டுகிறது.
4. யதாபூதஞானம். 2. விசுத்திமக்க (PTS) பக்கம் 510.
57

Page 50
சமய விழாக்களின் போது பெளத்த நாடுகளிலே எளிமையும் அழகும் வாய்ந்த கிரியைகளையும் வழக்கங்களையும் காணுகிறேம். அவற்றுக்கும் பெளத்தக் கோட்பாட்டுக்கும் சம்பந்தமில்லை. சில சமய உணர்ச்சிகளைத் திருப்திப்படுத்தவும், அறிவு குறைந்தவர்களை தர்ம வழியில் திருப்பவும் அவை பயனுடையனவே.
நாலு உயர்வாய்மைகள் சம்பந்தமாக நாம் செய்ய வேண்டிய நான்கு கடமைகளுண்டு.
முதலாவது உயர்வாய்மை துக்கம். அதாவது இல்வாழ்வின் தன்மை, அதில் உண்டாகும் துன்பம், கவலை, மகிழ்ச்சி, குறைகள், அதிருப்திகள், அதன் நிலையாமை, அனத்மத் தன்மை என்பன. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டியது நம் கடமை. தெளி வாகவும், முற்ருகவும் உணர்ந்து கொள்ள வேண்டும். (பரிஞ்ஞெய்ய)
இரண்டாவது உயர்வாய்மை துக்கத்தின் தோற்றம். அதற்குரிய காரணம் வேட்கையே துக்கத்துக்குக் காரணம். வேட்கை, பற்றுக் கள், ஆசவங்கள், களங்கங்கள் என்பவற்றேடு சேர்ந்து வரும். இதை ப்புரிந்து கொண்டால் மாத்திரம் போதாது. அவ்வேட்கையைக் களைந்து விட வேண்டும். தூரத்துறந்து விட வேண்டும். அழித்து விட வேண்டும். ஒழித்து விட வேண்டும் (பஹாதப்ப)
மூன்றவது உயர்வாய்மை துக்க நிவாரணம். இது நிர்வான மென்னும் பரமார்த்தத்தை உணர்த்தும். இதுவே பரம்.ொருள். இவ்விஷயத்தில் நாம் அதை அடைய வேண்டும். சாட்சாத்காரப் படுத்த வேண்டும். (சச்சிகாதப்ப)
நாலாவது உயர்வாய்மை நிர்வாணத்தை அடையும் வழி. இந்த வழியைப் பூரணமாக அறிந்து கொண்டால் மாத்திரம் போதாது
நமது கடமை அவ்வழியில் செல்வது. அதைவிட்டு விலகாதிருப்பது. (பாவேதப்ப}
1. Mhvg asisiotb 1923) Lat. 10.
58

VI gib 9j58urub
அணுத்ம கேர்ட்பாடு
அனதத
வட மொழியில் ஆத்மன் என்று கூறப்படும் ஆன்மா என்பது மனிதனகத்துள்ள நித்தியமான அழிவற்ற சார்பில்லாத தனிப் பொருள் ; மாற்றத்துக்குட்பட்ட இந்த உலகின் பின்னல் மாரு திருக்கும் ஒரு பொருள் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மனிதனிடத்தும் தனிப்பட்டதொரு ஆன்மா உண்டென் றும், அது கடவுளால் சிருட்டிக்கப்பட்டதென்றும், அது மரணத் தின் பின்னர் அதன் சிருட்டி கர்த்தாவின் கடைசி நாள் தீர்ப்பின்படி நரகத்துக்கோ சுவர்க்கத்துக்கோ செல்லுமென்றும் சில சமயத்தவர் கூறுவர். வேறு சிலர் அது பல பிறவிகளை எடுத்து முற்ருய் துய்மையடைந்த பின்னர் ஈற்றில் எந்தப் பிரமத்திலிருந்து அது தோன்றிற்றே அந்தப் பரமாத்மனேடு கலந்துவிடும். மனிதனிடத் தில் எண்ணங்களை எண்ணுவதும், வேதனைகளை உணர்வதும், நல் வினை தீவினைக்கேற்ற பிரதிபலன்களைப் பெறுவதும் இந்த ஆன்மாவே என்பர். இத்தகைய கோட்பாடே ஆன்மா எனப்படும்.
இத்தகைய ஆன்மா என ஒன்றில்லை என்று மறுப்பதில் பெளத்தம் மனித சிந்தனை வரலாற்றிலேயே ஒப்புயர்வற்ற இடத்தை வகிக்கிறது. “இது கற்பனையிற் பிறந்த போலிக் கொள்கை. உண்மையில் ஆன்மா என்ற பொருள் இல்லை. இது “நான் ” “எனது” என்ற இச்சை யுண்டாக்கும் எண்ணங்களை உண்டாக்குகிறது. தன்னலம் வாய்ந்த ஆசைகளையும், வேட்கை, பற்று, துவேஷம், பகைமை, மானம், இறுமாப்பு, அகங்காரம் முதலிய ஆசவங்களையும் உண் டாக்குகிறது. இதுவே களங்கங்களையும் பல பிரச்சினைகளையும் உண்” பாக்குகிறதென புத்த தர்மம் கூறுகிறது. தனிப்பட்ட பிணக்குகள் தொட்டு தேசங்களிடையே யுத்தங்கள் வரை எல்லாவற்றுக்கும் ஆன் மாவே காரணம். சுருங்கக் கூறுவதானல் இந்தப் போலிக் கொள் கையே உலகிலுள்ள தீமைகளெல்லாவற்றுக்கும் காரணம் எனலாம்.
மனிதனிடத்து உளவியல் சார்பாக ஆழப்பதிந்துள்ள இரு எண் ணங்கள் தற்பாதுகாப்பும், தன்னை அழியாமல் பாதுகாத்துக் கொள் வதுமாகும். தற்பாதுகாப்புக்காக மனிதன் கடவுள் என்ற வஸ் துவை உண்டாக்கினன். குழந்தை தன்னைப் பாதுகாப்பதற்கும், தான் தீதின்றியிருய்பதற்கும் தன் பெற்றேரில் தங்கியிருப்பது போல,
59.

Page 51
மனிதன் கடவுளில் தங்கியிருக்கிறன். தான் அழிவின்றி இருப்பதற் காக ஆத்மா என்ற நித்திய வஸ்துவைக் கற்பனை பண்ணினன். இந்த ஆத்மா அழிவில்லாதது என விதித்துக் கொண்டான். அறி யாமை, பலவீனம், பயம், ஆசை என்பவற்றின் பயனக தனக்கு ஆறுதலுக்காக இவ்விரு பொருள்களும் அவனுக்கு அவசியமாயின. அதனல் அவன் இவற்றைப் பைத்தியகாரத்தனமாக இறுகப்பற்றிக் கொண்டான். மனிதனுடைய இந்த அறியாமை பலவீனம், பயம், ஆசை என்பவற்றை புத்த தர்மம் ஆதரிக்கவில்லை. இவற்றை வேரோடு களைந்து மனிதனுக்கு ஞான ஒளி கொடுப்பதே அதன் நோக்கம். கடவுள், ஆன்மா என்பனவெல்லாம் போலிக் கருத் துக்கள். உள்ளிடற்றவை என்கிறது பெளத்தம். கொள்கை அளவில் இவை நன்கு வளர்ச்சியடைந்தவையானுலும் அவை நுட்பமான கற்பனைகளே. சிக்கலான அத்தியாத்மிக, தத்துவ ஞானமயமான பரிபாஷையில் போர்க்கப்பட்டுள்ளன. இக்கருத்துக்கள் மனிதனிடத்து ஆழமாகப் பதிந்திருப்பதால் இவை அவனுக்கு இன்றியமையாதன வாகிவிட்டன. அதனல் அவற்றுக்கெதிரான போதனைகளைக் கேட் கவோ புரிந்து கொள்ளவோ அவன் விரும்புவதில்லை.
பகவான் இதனை நன்கு உணர்ந்திருந்தார். தமது போதனை எதிரோட்டமா (படிசோதகாமி) னதென்றும் மனிதனுடைய தன்னல இச்சைகளுக்கு மாறனதென்றும் கூறினர். பகவான் ஞான ஒளி பெற்ற நாலு வாரங்களானதும் போதி மரத்தின் கீழிருந்து கொண்டு தம்முள் பின்வருமாறு யோசித்தார். "ஆழமானதும், காட்சிக்கு அரியதும், புரிந்து கொள்ளக் கஷ்டமானதும். . . . . . அறிஞர்க்கே அறிவதற்கு ஏற்றதுமான இந்த உண்மையை உணர்ந்து கொண் டேன். காமம் வெகுளி முதலியவற்ருல் நிறைந்தவரும் அந்த காரத்தில் மூழ்கியிருப்பவரும் இதனை அறிந்து கொள்ளமாட்டார். இது எதிரோட்டமான, உயர்ந்த, ஆழமான, நுண்ணிய, புரிந்து
கொள்ளக் கஷ்டமான கருத்துக்களை உடையது. ”
இவ்வாறு எண்ணிய புத்தர் தான் கண்ட உண்மையை உலகுக்கு எடுத்தியம்புவது பயனுடையதா எனச் சற்றே, தயங்கினர். பின்னர் இந்த உலகம் தாமரைக் குளம் போன்றதெனக் கருதினர். தாமரைக் குளத்திலே சில பூக்கள் மொட்டாகத் தண்ணீரில் மறைந்திருக்கும். சில பூக்கள் நீர் மட்டத்துக்கு உயர்ந்திருக்கும். சில நீருக்கு மேலே நீரில் தொடாமல் நிற்கும். அவ்வாறே மக்களும் பலவேறு அறிவு நிலையில் வளர்ச்சிப்படியில் இருக்கிறர்கள். சிலராவது இத்தர்மத் தைப் புரிந்து கொள்வார்களென எண்ணி அதைப் போதிக்கத் தீர்மானித்தார்.
1 Mhvg (pessob 1922)ud.4 MI (PTS) udash 167.

அனத்மவாதம் (அனத்த) பஞ்சக்கந்தங்களிலிருந்து பெறப் படுவது. பெறப்பட்ட முடிவிலிருந்து துணை முடிவாகப் பெறப்பபடுவது. படிச்ச சமுப்பாதத்துக்கும் துணை முடிவாயுள்ளது. (படிச்ச சமுப் பாதம் காரண காரியத்தொடர்பு) இதை எதுத்தோற்றம் அல்லது னதுத்தொடர்பு எனலாம்.
முதலாவது உயர்வாய்மையைப் பற்றி அதாவது துக்கத்தைப் பற்றி ஆராய்ந்த போது பஞ்சக்கந்தமே சீவன் எனக் கண்டோம். தனிப் பட்ட ஒருவன் இப்பஞ்சக்கந்தங்களின் சேர்க்கையே. இப்பஞ்சக்கந்தங் களை ஆராய்ந்தால், அவற்றின் ஊடே “ நான் ” எனக் கொள்ளக் கூடிய, மாறுபாடற்ற நித்தியமாய் நிற்கும், ஆன்மா என்ற ஒரு பொருள் இல்லை என்பதையும் கண்டோம். இவ்வாறு ஆராயும் முறையே பிரித்து ஆராய்தல் (விபஜ்ஜ வாதம்) எனப்படும். இவ் வாராய்ச்சியால் பெறும் முடிபை படிச்ச சமுப்டாதம் என்ற தொகுப்பு முறையினலும் பெறலாம். இம்முறைப்படி பார்க்குமிடத்து உலகிலே சார்பற்ற பொருள் ஒன்றுமில்லை என்பதைக் காணலாம். எல்லாம் சார்புடையவை. உபாதிக்குட்பட்டவை, பரஸ்பரம் தங்கியிருப்பவை. பெளத்தம் கூறும் சார்புக் கொள்கை இதுவே.
அனத்த என்ற ஆன்மா இல்லை என்னும் கொள்கையை முற்றக ஆராயுமுன் படிச்ச சமுப்பாதம் பற்றி அறிந்து கொள்வது பய னுடையது. இக்கோட்பாட்டின் தத்துவம் நான்கு வரியைக் கொண்ட வாய்பாட்டில் உண்டு.
இது இருந்தால் அது இருக்கிறது.
(இமஸ்மிம் சதி இதம் ஹோதி) : இது உண்டானல் அது உண்டாகிறது.
(இமஸ்ஸுப்பாதா இதம் உப்பஜ்ஜதி) : இது இல்லையானல் அது இல்லை.
(இமஸ்மிம் அசதி இதம் நஹோதி) : இது ஒழிய அது ஒழிகிறது.
(இமஸ்ஸநிரோதா இதம் நிருஜ்ஜதி).
பின்னல் விளக்கப்படும். 2. MTI (PTS) us 63 S 11 (PTS) ut 28, 95
இதை இக்காலத்துக்கேற்ற் முற்ைபில் கூறுவதானுல் A இருந்தால் B இருக்கிற்து. A உண்டானல் B உண்டாகிற்து. A gథుడిపోun@6 B gడి. A ஒழிந்தால் B ஒழியும்.
6

Page 52
இந்த சார்பு முறையில், ஒன்றிலொன்று தங்கியிருக்கும் முறையில், சம்சாரத் தொடரும் அதன் மறைவும் விளக்கப்படுகிறது. இது விபர மான வாய்ப்பாடுடையது. இதற்குப் பெயர் படிச்சசமுப்பாத. இது 12 நிதானங்களையுடையது. (நிதானம் என்பது காரணம் அல்லது எது).
(1) அவித்தையிலிருந்து சங்கற்பங்கள் உண்டாகின்றன (அவிச்சா
பச்சயா சங்காரா) (2) சங்கற்பங்களிலிருந்து விஞ்ஞானம் உண்டாகிறது. (சங்காரபச்
சயாவிஞ்ஞானம்). (3) விஞ்ஞானத்திலிருந்து நாமரூபங்களுண்டாகின்றன. (விஞ்
ஞான பச்சயா நாமரூபம்). 4) நாம ரூபங்களிலிருந்து அறுபுலன்களுண்டாகின்றன. (பஞ்
சப்புலன்களும் மனமும்). (நாமரூபபச்சயா சளாயதனம்) (5) ஆறுபுலன்களிலிருந்து பரிசம் உண்டாகும் (சளாயதனபச்சயா
பஸ்ஸோ). (6) பரிசத்திலிருந்து வேதனை உண்டாகிறது. (பஸ்ஸபச்சயா
வேதஞ). (7) வேதனையிலிருந்து வேட்கை (அவா)" உண்டாகிறது (வேதஞ
பச்சயாதண்ஹா). (8) வேட்கையிலிருந்து பற்று உண்டாகிறது (தண்ஹாபச்சயா உபா
தானம்).
(9) பற்றினல் பவம் உண்டாகிறது. (உபாதானபச்சயா பவ).
(10) பவத்திலிருந்து பிறப்பு உண்டாகிறது. (பவம் என்பது
உண்டாகும் தன்மை) (பவபச்சயா ஜாதி).
(11) பிறப்பிலிருந்து (12) மூப்பு, பிணி, சாக்காடு, அவலக்கவலைக்
கையாறு உண்டாகிறது. (ஜாதிபச்சயா ஜராமணம்). ) வாழ்வு தோன்றி நிலைத்து மறைகிறது. இந்தத் தொடரைப் பின் னேக்கிப் பார்த்தால், அவித்தை ஒழிந்தால் சங்கற்பங்கள் ஒழிகின் றன. சங்கற்பங்கள் ஒழிந்தால் விஞ்ஞானம் ஒழிகிறது. . . . . . பிறவி ஒழிந்தால் மூப்புப் பிணி சாக்காடு அவலக்கவலை முதலியன ஒழியும்.
இந்த நிதானங்கள் ஒவ்வொன்றும் உபாதிக்கப்பட்டனவாகவும் (படிச்ச சமுப்பன்ன) எதிர்வருவதை உபாதிப்பனவுமாயிருக்கின்றன. (படிச்சசமுப்பாத) அதனுல் இவையெல்லாம் சார்புடையவை. பரஸ் பரத் தொடர்புடையவை. ஒன்றிலொன்று தங்கியிருப் வை. எவை
1. விசுத்திமக்க) (PTS) பக் 517
மொ.ஆ.கு. அவா என்ப வெல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும்.
தவா அப் பிறப்பீனும் வித்து (திருக்குறள் 61)
62

யேனும் சார்பற்றனவாகவும் தனிப் பட்டனவாகவுமில்லை. அதனல் மூலகாரணம் என ஒன்றை பெளத்தம் எற்றுக் கொள்வதில்லை." இந்தத் தொடர்பு சங்கிலித் தொடர்பன்று. வட்ட வடிவம்.
ஊழ்க் கட்டுப்பாடற்ற தன் துணிபாற்றல் (அதாவது விதி, தலை விதி என்பதை ஒப்புக் கொள்ளாத தானே துணிந்து செய்யும் ஆற்றல்) என்ற கோட்பாடு மேனுட்டுத் தத்துவதரிசனங்களில் முக்கிய மான இடம் வகிக்கிறது. படிச்ச சமுப்பாதக் கோட்பாட்டின்படி பெளத்தத்தில் இதற்கு இடமில்லை. வாழ்வு முழுவதும் சார் புள்ளதாயும், உபாதிக்குட்பட்டதாயும், பரஸ்பரம் தங்கியுள்ளதாயு மிருக்கும்போது சங்கற்பம் மாத்திரம் எவ்வாறு தனித்து நிற்க முடி யும். சங்கற்பம் என்பது பஞ்சக்கந்தங்களில் சங்காரக் கந்தம். அது எனைய எண்ணங்களைப் போலவே சார்புள்ளது. (படிச்சசமுப்பன்ன) வேருென்றின் ஆதாரமுடையது. இவ்வுலகிலே சுதந்திரம் என்று கூறப்படுவனவெல்லாம் சார்பற்ற சுதந்தரமன்று. அதுவும் உபாதிக் குட்பட்டுச் சார்புடையதாகவேயிருக்கிறது. உபாதிக்குட்பட்ட சார்புள்ள * சுதந்திர சங்கற்பம் " ஒன்று உண்டெனலாம். ஆனல் அது தனிப்பொருளன்று. முற்றகச் சார்பின்றியிருக்கும் சுதந் திரம் உலகிலே இல்லை. சட சம்பந்தமாகவோ, மனம் சம்பந்தமா கவோ சார்பற்ற ஒரு சுதந்திரப் பொருள் இல்லை. எல்லாம் உபாதிக் குட்பட்ட சார்புப்பொருள்களே. சுதந்தரமான சங்கற்பம் நிருபாதி யானது. காரணகாரியத் தொடர்பற்றது என்போமானல் அப்படி ஒரு பொருள் இல்லை. சார்பின்றி சங்கற்பமோ வேறு எப்பொரு ளுமோ எவ்வாறு உண்டாகும் ? வாழ்வு முழுவதும், சீவராசி களெல்லாம் காரண காரியத் தொடர்புடையனவாய், சார்புள்ளனவா யிருக்கின்றன. தடையற்ற சங்கற்பம் என்ற கருத்து கடவுள், ஆன்மா, நீதி, தண்டனை வெகுமானம் என்பவற்றேடு மூலாதார மாகச் சம்பந்தப்பட்டிருக்கிறது. சுதந்திர சங்கற்பம் சுதந்திரமற்றது. சுதந்திர சங்கற்பமென்ற கோட்பாடே உயாதிகட்குட்பட்டது.
படிச்ச சமுப்பாதக் கோட்பாட்டின்படியும் பஞ்சக்கந்த ஆராய்ச்சி பின்படியும் மனிதனகத்தோ, புறத்தோ நித்தியமான அழிவற்ற பொருள் கிடையாது. “நான் ஆத்மா, உயிர், அகம்பிசத்யய என்பனவெல்லாம் கற்பனையிலுள்ள போலிநம்பிக்கை. அனத்த என்ற பெளத்தக் கோட்பாடு இதுவே.
1. பக்கம் 35 டார்க்க.
இம்மிக முக்கியமான கோட்பாட்டை விரிவாக ஆராய இங்கு இடமில்லை. இவ்வாசிரியர் எழுதிவரும் புத்த தத்துவம் என்ற் நூலில் ஒப்பியல் முற்ைபில் இது ஆராயப்படும்.
63

Page 53
உண்மை இரண்டு வடிவில் உண்டு. ஒனறு விவகார உண்மை. மற்றது பரமார்த்த உண்மை. விவகார உண்மை சம்முதிசச்ச (வடமொழியில் சம்விருதி சத்யம்) எனவும் பரமசத்தியம் பரமத்தசச்ச (வடமொழி பரமார்த்த சத்யம் எனவும் பேசப்படும்" தினசரிப் பேச்சிலே ‘நர்ன், “நீ”, “உயிர்” “புட்கலன் (தனிப்பட்டவன்) முதலிய பதங்களை உபயோகிக்கும் போது நாங்கள் இல்லாததைச் சொல்லவில்லை. உலக விவகாரம் பற்றிய சம்பிரதாயப்படிபேசுகிருேம். உண்மையில் இவ்வழக்கு ஆன்மாவையோ உயிரையோ குறிப்பதில்லை. இது லெளகீக சம்பிரதாயம். பரமார்த்தத்தில் நான் என்றும் ஆன்மாவென்றும் உண்மையில் ஒரு பொருள் இல்லை. மஹாயான சூத்திராலங்காரத்திலே பிரக்ஞப்திமாத்திரையாகவே புட்கலன் இருப்ப தாகக் கொள்கிறேம். இது விவகாரார்த்தம். பரமார்த்தத்தில் அப்படி ஒரு (திரவியம்) பொருள் இல்லை”.*
அழிவற்ற ஆத்மா என்பதொன்றில்லை என்பது மகாயானத்துக்கும் ஹீனயானத்துக்கும் ஒப்பமுடிந்த கோட்பாடாகும். பெளத்த சம்பிர தாயமும் அதுவே. புத்தருடைய மூலப் போதனையிலிருந்து பெளத்த சம்பிரதாயம் விலகிவிட்டதென்று கூறுவதற்கு நியாயமில்லை.*
புத்த தர்மத்தின் போக்குக்கு முற்றும் மாறக சில ஆராய்ச்சி யாளர்கள் ஆன்மா என்ற கொள்கையை புத்தர் போதனை யுள் களவாகப் புகுத்தச் சமீபகாலத்தில் வீண் முயற்சி செய்தமை நூதனமாக இருக்கிறது. இவ்வாராய்ச்சியாளர் புத்த பகவானையும் அவர் போதித்த தர்மத்தையும் போற்றி மதித்துப் பாராட்டுகின்றனர். புத்த தர்மத்தைப் பெரிதும் மதிப்பவர் புத்த பெருமான் தெளிவும் ஆழமுமுடைய சிந்தணையாளர் என்பதை அவர் ஒப்புக் கொள்ளுகின்றனர். அப்படிப்டட்டவர் தமக்குப் பெரிதும் தேவைப்படும் ஆத்மா இல்லையெனக் கூறுவாரா என்பதை அவர் களால் கற்பனை செய்து கொள்ளக் கூட முடியவில்லை. தாம் நித்தியப் பொருளாயிருக்க வேண்டுமென்ற இந்தத் தேவைக்குத் தம்மையறியாமலே அவர்கள் புத்தரின் ஆதரவைத் தேடுகின்றனர். ஆன்மா என்ற கீழான தனிப்பட்ட ஒரு சீவாத்மனை அவர்கள் தேடவில்லை. பரமாத்மனையே அவர்கள் தேடினர்.
1. சாரத்த (PTS) பல் 77
2. Mh. குத் திராலங்கார 18-92
3. H. Von Glasenapp என்பவர் 1957 பெப்ரவரியில் வெளியான, The middleway என்ற சஞ்சிகையில் வேதாந்தமும் பெளத்தமும் என்ற கட்டுரை யில் "அனத்த" பற்றி எழுதியது பார்க்க.
4. காலஞ்சென்ற் பரீமதி ரீஸ்டேவிட்சும் வேறுசிலரும். ரீமதி டேவிட்ஸ் எழுதிய Gotama the man, Sakya or Buddhist Origins, A mannual of Buddism, What was the Original Buddism, etc. unfraidsepta.

பரமாத்மனில் நாம் நம்புகிருேம் என்று நேரடியாகச் சொல்வது சிறந்தது. ஆத்மா இல்லையென்று புத்தர் சொன்னது முற்றும் தவறு" எனக் கூறிவிடலாம். ஆனல் புத்தர் ஒப்புக்கொள்ளாத ஆன்மக் கோட்பாட்டைப் பெளத்தத்தில் புகுத்த முயல்வது பொருந் தாது. மூலப் பிடகங்களில் ஆன்மா உண்டு என்று கூறப்பட்டதாக நாம் அறியவில்லை.
இறைவன், ஆன்மா என்பவற்றில் நம்பிக்கையுள்ள சமயங்கள் இவ்விரு கோட்பாடுகளையும் மறைப்பதில்லை. அவை அடிக்கடி திருப் பித்திருப்பி வாயார வெளிப்படையாய்க் கூறுகின்றன. சகல மதங் களும் போற்றும் இவ்விரு கோட்பாடுகளும் புத்தருக்குச் சம்மத மானவையாயிருந்தால் அதை வெளிப்படையாக அவர் விளம்பரப் படுத்தியிருப்பார். வேறு விஷயங்களைப் பற்றி அவர் பேசவில்லையா? இவற்றை தாம் இறந்து இருபத்தைந்து நூற்றண்டுகட்குப் பின்னர் மக்கள் கண்டறியட்டுமென மறைத்து வைத்திருக்கமாட்டார்.
ஆன்மா என ஒன்றில்லையென்று புத்தர் போதித்தபடியால் தம்மி டம் நிலவுவதாக மக்கள் கற்பனை செய்து கொண்டிருக்கும் ஆன்மா அழிந்துவிடப் போகிறதென அவர்கள் அஞ்சினர். புத்தர் இதை அறிந்திருந்தார்.
பிக்கு ஒருவர் பகவானை ஒருமுறை கேட்டார். “தன்னுள்ளே நித்திய மான தொரு பொருளைக் காணுவிட்டால் அதற்காக ஒருவன் துன்ப மடைந்த சந்தர்ப்பம் உண்டா? பிரபோ”
“ஆம் பிக்குவே 1 அத்தகைய சந்தர்ப்பம் உண்டு. மனிதன் ஒருவன் “விஸ்வமே அந்த ஆத்மா, நான் இறந்த பின்னர் மாற்றமில்லாத நித்தியமான நிலையுள்ள, சாஸ்வதமான அந்தப் பொருளாவேன். அவ்வாறு நான் என்றும் நிலைத்திருப்பேன்” என்ற கொள்கையுடையவனுயிருந்தான். பின்னர் ததாகதரோ அவருடைய அடியார்களோ கற்பனை வாதங்களை முற்றக நிர்மூல மாக்கும் முறையில் தர்மத்தைப் போதிக்கிறர்கள். வேட்கை ஒழிய வேண்டுமெனவும் பற்றற்ற நிலை உண்டாக வேண்டுமெனவும் வேட்கை ஒழிந்து நிர்வாணமடைய வேண்டுமெனவும் போதிக்கின்ற னர். அதைக் கேட்ட அவன் “நான் இல்லாமற் போய்விடுவேன், அழிந்து போவேன், மறைந்துவிடுவேன” என்று எண்ணுகிருன்.” எனவே அவன் பிரலாபிக்கிருன், கவலைப்படுகிறன், துன்பமடைகிறன் மார்பிலடித்துக் கொண்டு அழுகிறன். அவனுக்கு மனக் குழப்ப முண்டாகிறது. இவ்வாறு ஒ1 பிக்குவே நித்தியமானதொரு வஸ்து
65

Page 54
தன்னுள் இல்லையெனக் கண்டு துன்பப்பட்ட சந்தர்ப்பம் உண்டு.” வேறேரிடத்தில் பகவான் கூறுகிறர் "ஓ பிக்குகளே! நான் இல்லாமற் போவேன், என்னுடையதென ஒன்று இல்லாமற் போகும் என்ற எண்ணம் அறிவில்லாத பொது மக்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக் கூடியது.*
பெளத்தத்தில் ஆன்மா உண்டெனக்காண முற்படுவோர் பின்வருமாறு வாதிப்பர் - புட்கலனை ரூபம், வேதனை, குறிப்பு, சங்கற்பம், விஞ்ஞானம் என்ற பஞ்சக்கந்தங்களாக புத்தர் பிரித்து ஆராய்ந்து இவை ஆன்மா அன்று என்று மாத்திரம் கூறுகிறர். ஆனல் மனிதனிடத்தோ வேறிடத்திலோ ஆன்மா இல்லையென்று கூறவில்லை. இந்தப் பஞ்சக்கந்தங்களில் இல்லை யென்று மாத்திரமே கூறுகிறர். இந்த வாதம் இரண்டு காரணங்களுக்காக எற்றுக் கொள்ளப்படத்தக்கதன்று.
ஒன்று ஒர் உயிர் பஞ்சக்கந்தங்கள் மாத்திரமே. அதில் வேறு ஒன்றும் இல்லை என்பது இப்பஞ்சக்கந்தங்களுக்குப் புறம்பாக வதும் உண்டென்று அவர் யாண்டும் கூறவில்லை. இரண்டாவது காரணம் மனிதனகத்தோ, புறத்தோ, விசுவத்தில் வேறெந்த இடத்திலோ ஆத்மா என்ற வஸ்து இல்லையெனத் திட்டமாகப் பல இடங்களில் சந்தேகமின்றிக் கூறியிருக்கிறர். சில உதாரணங்களை ஆராய்வோம். தம்மபதத்திலே புத்தருடைய போதனைக்கு மிக அத்தியாவசியமான மூனறு பாசுரங்களுண்டு. அவை இருபதாம் அத்தியாயத்தில் காணும் 5 ம் 6 ம் 7 ம் பாசுரங்களாகும். இவை 277, 278,279 ஆம் பாசுரங்களெனவும் கொள்ளலாம். முதலிரண்டு பாசுரங்களும் காரணத்தில் தோன்றியவை எல்லாம் அநித்தியாமானவை. (சப்பே சங்காரா அநிச்சா) காரணத்தில் தோன்றியவையெல்லாம் துக்க மயமானவை (சப்பேசங்காராதுக்கா) என்கின்றன. மூன்றவது டாசுரம் தம்மங்கள் எல்லாம் தான் அற்றவை (சப்பேதம்மா அனத்தா) இங்கே முதல் இருபாசுரங்களில் காரணத்திலிருந்து தோன்றியவை எனப்பொருள்படும் சங்காரா என்ற சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. மூன்ருவது பாசுரத்தில் சங்காரா வருமிடத்தில் தம்மா உபயோகிக்கப் பட்டுள்ளது. இங்கேயும் சங்காரா என்ற சொல் என் உபயோகிக்கப் படவில்லை. தம்மா என்ற சொல் எதற்காக உபயோகிக்கப்பட்டுள்ளது. இங்கே தான் தீர்வுத்திருப்பத்துக்குரிய காரணமுண்டு.
1. M1 (PTs) uas. 36—137)
2. MA 11 (PTS) பக். 12 இல் மேற்கோள் காட்டப்பட்டது.
3. எப். எல். ஆட்வாட் தம்ம என்பதற்கு கூட்டமாய்ச் சேர்ந்த நிலைகள்- என்று மொழி பெயர்த்திருப்பது முற்றும் தவறு. கூட்டமாய்ச் சேர்ந்த, நிலைகள் என்றல் சங்காரா என்பதைக் குறிக்குமே யன்றி தம்மா என்பதைக்குறியாது. (The Buddhas Path of Virtue, Adyar Madyas, India 1929 uá 69)

சங்காரா என்ற சொல் பஞ்சக்கந்தம் காரணத்திலிருந்து தோன்றிய, பரஸ்பரம் தங்கியுள்ள, சார்புப் பொருளையும் சம்பந்தப்பட்ட உடல் மன நிலையையும் குறிக்கும். மூன்றவது பாசுரம் (காரணத்திலிருந்து தோன்றியவை) எல்லாம் அனத்த என்று சொல்லியிருந்தால், காரணத்திலிருந்து தோன்றதவற்றில் ஆன்மா உண்டெனவும், பஞ்சக் கந்தங்களுக்கு வெளியே ஆன்மா உண்டெனவும் யூகிக்க இடம ளிக்கும். இந்த மயக்கத்தைத் தீர்க்கவே மூன்றவது பாசுரத்தில் தம்மா என்ற சொல் உபயோகிக்கப்பட்டது.
தம்மா என்ற சொல் சங்காரா என்ற சொல்லைவிட விரிவான பொருள் உடையது. பெளத்தபரிபாஷையில் தம்ம என்ற சொல்லைப் போலவிரிந்த பொருளுடைய சொல் வேறில்லை. இது உபாதிக் குட்பட்ட காரணத்திலிருந்து தோன்றிய பொருள்களையும் நிலைகளையும் உயாதியற்ற பரம்பொருளான நிர்வாணத்தையும் குறிக்கும். இந்த விஸ்வத்திலும் அதற்கு வெளியிலும் இச்சொல்லில் அடங்காதது ஒன்றுமில்லை; நல்லதும் கெட்டதும், காரணத்துக்குட்பட்டதும் அப்பாற் பட்டதும், சார்புள்ளதும் சார்பற்றதும் எல்லாம் இதில் அடங்கியதே. எனவே இக்கூற்றின் படி எல்லா தர்மங்களும் அணுத்மா என்பது தெளிவாகிறது. பஞ்சக்கந்தங்களில் மாத்திரமன்றி அவற்றுக்குப் புறம்பானவற்றிலும் ஆத்மா என்பதில்லை.*
தேரவாதக் கோட்பாட்டின்படி புட்கலனிடத்தோ (ஆளிடத்தோ) தம் மத்திலோ ஆத்மா என்பதில்லை. மகாயான பெளத்தமும் இதே கொள்கையையேயுடையது. எவ்வித வித்தியாசமுமில்லை. அது தர்ம நைராத்மியம் தர்மம் ஆத்மாவற்றது புட்கலநைராத்மியம், புட்கலன் ஆன்மா அற்றவன் என்று வலியுறுத்துகிறது.
மஜ்ஜிமநிகாயம் அலகத்தூபம குத்திரத்தில், புத்தர் தமது சீடர்களை விழித்து ஆன்மா உண்டென்ற அத்தவாதத்தை ஏற் கிறீர்களா? அப்படியானல் அவலக்கவலைக் கையாறு உண்டாக மாட்டாதா? பிக்குகளே இத்தகைய அத்த (ஆத்ம) வாதத்தில் துக்கம், விலாபம், துயர், கவலை, கையாறு எற்படமாட்டாவா? “நிச்சயமாக வற்படும் பிரபோ”
1. பஞ்சக்கந்தங்களின் பட்டியலில் சங்காரா என்ற சொல் சங்கற்பத்ைதக் குவிக்கும். மனச்சங்கற்பங்களையும், மனச்சேட்டிதங்களையும் குறிக்கும், இங்கே காரணத்திலி ருந்து தோன்றிய பஞ்சக்கந்தம் உட்பட்ட சேர்க்கைகளைக் குறிக்கும். சந்தர்ப்பத் துக்கேற்றபடி இச் சொல்லுக்குப் பொருள் கொள்ளவேண்டும்.
2. " சப்பேசங்காரா அநிச்சா', காரணத்திலிருந்து தோன்றியவை எல்லாம் அநித்தியம், “சப்பே தம்மா அன்த்தா” எல்லா தருமங்களும் அணுத்மா. Ml (PTS) uš. 228 S 111 uš, 182, 133.
67

Page 55
நல்லது ஒ பிக்குகளே துக்கம், அவலம், கவலை, கையாறு உடையதே இந்த ஆத்மவாதம் என நானும் எண்ணுகிறேன், புத்தர் ஆத்மவாதத்தை எற்றிருப்பாராஞல் அதை அவர் நிச்சயமாக இங்கே விளக்கியிருப்பார். எனெனில் துக்கம் உண்டாக் காத ஆத்மவாதத்தையே எற்றுக் கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டார். ஆணுல் புத்தருடைய கொள்கைப்படி அத்தகைய துக்கத்தை உண்டாக் காத ஆத்ம வாதம் இல்லை. எவ்வளவு நுட்ப மானதும் மேதகு சிறப்புவாய்ந்ததுமான ஆத்மவாதமானலும் அது போலியாகவும் கற்பனையிலுள்ளதாகவும் துயரம் அவலம் கவலை கையாறுகளை உண்டாக்கும் பிரச்சினைகள் நிரம்பியதாகவுமேயிருக்கும்.
இதே சூத்திரத்தில் இந்தத் தருமோபதேசத்தைத் தொடர்ந்து மேலும் புத்தர் கூறினர் :-
ஆன்மாவையோ, ஆன்மா சம்பந்தப்பட்ட ஒன்றையோ யதார்த்தமாக உண்மையிற் கண்டு கொள்ள முடியாவிட்டால் “இந்த விசுவமே ஆத்மா, நிலையானதும் நித்தியமானதும், மாறுபாடற்றதும் சாஸ்வத ம்ானதுமான அந்த ஆத்மாவாக மரணத்தின் பின்னர் நான் மாறி விடுவேன், அவ்வாறு நான் நிரந்தரமாக நிலைத் திருப்டேன்” என்ற கற்பனைக் கோட்பாடு முற்றக முழுவதும் முட்டாள்தன மானதல்லவா?
ஆன்மா என்ற ஒரு பொருளை உண்மையில் யாண்டும் காணக் கிடையாது. அவ்வாறு ஒரு பொருள் உண்டென நம்புவது முட்டாள் தனமென புத்தர் தெளிவாக இங்கே கூறியிருக்கிருர்.
புத்தர் போதனையில் ஆத்மாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதென அபிப்பிராயப்படுவோர் சில உதாரணங்களை எடுத்துக் காட்டி அவற் றைத் தவருக மொழி பெயர்த்துத் தவறகவிளக்குவர். அவற்: றில் ஒன்று “தம்ம பதத்தில்” 160 ம் பாசுரமாயுள்ள (X11-4) அத்தாஹி அத்தனே நாதோ’ என்பது. (இது 12ஆம் அத்தியாயத்தில் நாலாம் பாசுரம்) இது “சீவாத்மனுக்குத் தலைவன் பரமாத்மன்” என மொழி பெயர்க்கப்பட்டு சிறிய ஆத்மனுக்கு நாயகன் பெரிய ஆத்மன் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
1. M1 (PTs) usiastb. 137. 2. மேலே குறிப்பிட்ட நூல் பக்கம் 138. இந்த பந்தியியைக் குறித்து எஸ். ராதா கிருஷ்ணன் “இந்திய தத்துவ ஞானம் ” என்ற அநாலின் முதற்பகுதியில் * புத்தர் போலிக் கோட்பாடு எனக் கண்டிப்பது சிறிய ஆத்மாவையே. இச்சிறிய ஆத்மா தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனக்கூறும் கோட்பாடே இந்தப் போலிக் கோட்பாடாகும்”. இது தவருன அபிப்பிராயம். புத்தர் இங்கே கண்டிப்பது சர்வகதமான பரமாத்மனையே. புத்தர் எந்தவிதமான ஆன்மா வையும் சிறிய ஆத்மாவையோ பெரிய ஆத்மாவையோ காற்றுக்கொள்ளவில்லை
என்பதை முன்னர் காட்டிய பந்தியினுல் நிதர்சனப்படுத்தினுேம், புத்தருடைய கொள்கைபடி ஆத்மா பற்றிய எல்லாக் கொள்கைகளும் போலியே. கற்பனையே.

முதலில் இந்த மொழி பெயர்ப்புத் தவறு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இங்கே அத்த என்ற சொல் ஆத்மாவைக் குறிக்கவில்லை. பாளியில் அத்தா என்ற சொல் தற்சுட்டான மறு பெயா. அல்லது வரையறை செய்யா மறுபெயர். சில இடங்களில் மாத்திரம் நாம் முன் சுட்டிக் காட்டிய வாறு விசேடமாக, ஆத்மா வைக் குறிக்கும். ஆனல் பொதுப்படையாக தம்மபதம் 12 அத்தியா யத்திலே இந்த வரியிலும் வேறு பல இடங்களிலும் அது தற்சுட்டான மறு பெயராகவோ, வரையறை செய்யாமறுபெயராகவோ, உபயோகிக் கப்படுகிறது. இதன் பொருள் நானகவே, நீயாகவே அவனுகவே, தானுகவே, முதலியனவாகும். அடுத்ததாக “நாதோ’, என்ற சொல் தலைவன் எனப் பொருள்படாது, சரணம், ஆதாரம், துணை, பாதுகாப்பு எனவே பொருள்படும்.*
ஆனபடியால் "அத்தாஹி அத்தனே நாதோ’ என்றல் “தாமே தமக்குச் சரண்’ தாமே தமக்கு ஆதாரம்”, “தாமே தமக்குத் துணை” எனப் பொருள்படும். அத்த என்பதற்கு அத்யாத்மிக விளக்கமான ஆத்மா எனப்பொருள் கூறுவது பொருத்தமில்லை. நீ உன்னிலேயே தங்கியிருக்க வேண்டுமேயன்றி மற்றவர்களில் தங்கியிருக்கக் கூடாது என்பதே நேரடியான செம்பொருள்.
புத்தருடைய போதனைகளூடே ஆத்மா என்ற கருத்தைப் புகுத்த முயலும் முயற்சிக்கு மற்றெரு உதாரணம் “அத்த தீபாவிஹாத, அத்தசரணு அனஞ்ஞ்சரணு” என்ற பிரசித்தமான கூற்று. ‘இது “மஹா பரிநிப்பான சூத்திரத்திலுண்டு. இதனைச் சந்தர்ப்பத்தை நோக்காது பிரித்தெடுத்து மொழிபெயர்த்துள்ளனர். இச்சொற்ருெடர்
1. "வேதாந்தமும் பெளத்தமும்’ என்ற கட்டுரையில் H.Von Glasenapp என்பவர் geosai (0.5aileina cotti (58cost (The Middle Way, February 1957)
2. தம்மபதத்துக்கு எழுதப்பட். விளக்க உரையில் “நாதோ தி பதிட்டா " "நாத ” வீன்பது ஆதாரம் (சரண், துணை, பாதுகாப்பு) என விளக்கப்பட்டுள்ளது. Dhp A III (PTS) பகி 148) தம்மபதம் பழைய சிங்கள உரை ஒன்று “நாத" என்பதற்கு பொழிப்புரை கூறுமிடத்து “நாதோ’ என்பதற்கு “ பிஹிட்டவன் னேய " ஆதாரமாயிருக்கிறது (சரண், துணை) எனக் கூறுகிறது. (தம்மபத புராணசந்நய கொழும்பு 1926 பக். 77 “ நாதோ’ என்பதன் எதிர்மறைச் சொல்லை ஆராய்ந்தால் இப்பொருள் மேலும் உறுதியாகிறது. " அநாத" என்ருல் தலைவனின்றி, தலைவனற்ற எனப் பொருள் தருவதில்லை. அது துணையற்ற, ஆதாரமற்ற, பாதுகாப்பற்ற, வறிய என்றே பொருள்தரும். லோக நாத என்ற சொல்லை (S.V.) "உலகரட்சகர்" என மொழிபெயர்ப்பது பொருத்த மில்லை. இது கிறிஸ்தவ பரிபாஷை, புத்தர் ரட்சகரல்லர். லோக நாத என்ருல் * உலகுக்குச் சரண் ” என்று பொருள்.
3. D II (Gamgpub- 1929) L14. 62.

Page 56
உன்னையே உனக்கு ஆதாரமாக (தீவாக) க் கொண்டு வாழ், உன்னையே உனக்குச் சரணுக்கு, வேறெவரையும் உனக்குச்சரணுக் காதே”. எனப்பொருள்படும். பெளத்தத்தில் ஆத்மவாதத்தைக் காண விரும்புவோர் “அத்ததியா” என்பதற்கு “ஆன்மாவே தீபமாகவும்” என்றும் “அத்த சரணு" என்பதற்கு “ஆன்மாவைச் சரணுகவும்” எனப் பொருள் கொள்வர்.
இது ஆனந்த தேரருக்கு புத்தபகவான் கூறிய அருளுரை. இது எந்தச் சந்தரிப்பத்தில், என்ன பின்னணியில் கூறப்பட்டதென்பதை அறியா விட்டால் இதன் முழுக்கருத்தையும், உட்பொருளையும் அறிய GՔւգաո Ց].
பகவான் அப்போது பேலுவ என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அவர் பரிநிர்வாணமடைவதற்கு மூன்று மாதம்வரை இருந்தது. அப்போது அவருக்கு 80 வயது. மிகக் கொடிய நோயினல் பீடிக்கப் பட்டு மரணத்தறுவாயிலிருந்தார். (மரணந்திக) ஆனல் தன்னு டைய அணுக்கத் தொண்டர்க்கு அறிவியாமல் இறந்து போவது நன்றல்லவென அவர் நினைத்தார். நிரம்பிய தைரியத்தோடும் மன உறுதியோடும் பிணியினலுண்டான நோக்காடுகளைத் தாங்கிக் கொண்டு நோயைப் புறங் கண்டு சுகமடைந்தார். ஆனல் அவர் உடல்நிலை தளர்ச்சியடைந்தேயிருந்தது. சுகமானதும் அவர் ஒருநாள் தமது குடீரத்துக்கு வெளியே மர நிழலில் இருந்தார். அவருடைய நெரு ங்கிய தொண்டனன ஆனந்தர் அவரை அணுகி ஒரு புறத்தே யிருந்து கூறினர். " பிரபோ, பகவானுடைய உடல் நலத்தைக் கவனித்து வந்தேன், நோயாயிருக்கும் காலத்தில், கவனித்து வந் தேன், பகவான் நோயாயிருப்பதைக் கண்டபோது பார்வை கலங்கிற்று. புலன்கள் மயங்கின. ஆனல் சங்கத்தைப் பற்றி அறிவுரைகள் கூரு மல் பகவான் மறைந்து போகமாட்டார் என்ற ஆறுதல் மனத்தில் உண்டானது".
1. ரீஸ் டேவிட்ஸ் (தீக நிகாய. மொழிபெயர்ப்பு 11 பக். 108. " உங்களுக்கு நீங்களே தீபமாயிருங்கள். நீங்களே உங்களுக்கு சரணுயிருங்கள். புறத்தேயிரு ந்து எவ்வித சரணையும் தேட வேண்டாம்.
2. தீய என்பதற்கு இங்கே விளக்கு (தீபம்) என்ற பொருள் பொருந்தாது. துளி பம், தீவு என்ற பொருளே பொருந்தும். தீக் நிகாயத்துக்கெழுதிய பாஷியத்தில் (DA கொழும்பு பக். 380) தீப என்ற சொல்லை விளக்கும்போது "மஹா சமுத்தகதம் தீபம் விய அத்தானம் தீபம் பதிட்டம் கத்வா விஹாத" உன்னை ஒரு தீவாக, ஆதாரமாக (தங்குமிடமாக) பெரிய சமுத்வுரத்தில் தீவு போலச் செய்து கொண்டு இருப்பாயாக" சம்சாரம் சாதாரணமாக ஒரு பெருங் கடலுக்கே உவமிக்கப்படுகிறது. சம்சாரசாகரம், சமுத்திரத்தின் மத்தியில் பாது காப்பாயிருப்பதற்குத் தேவைப்படுவது திண்ணிய நிலத்தையுடைய தீவேயன்றி, dades esö.

அப்போது பெருங் கருணையும் அனுதாபமுங் கொண்டயகவான் தம் அன்புக்குரிய அணுக்கத் தொண்டரை நோக்கி இனிமையான வார்த்தைகளால் கூறினர்,” ஆனந்த, சங்கத்தவர் என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கின்றனர். சாதாரணக் கோட்பாடு விசேடக் கோட் பாடு என்ற வித்தியாசமின்றித் தருமத்தைப் போதித்தேன். தர்மத் தைப் பொறுத்த வரையில் என்னிடம் மறைபொருள் ஒன்றுமில்லை. மறைவாகக் கையிலே பொத்தி (ஆசார்யமுட்டி) எதையும் வைத்தி ருக்கவில்லை. எவராவது சங்கத்தை தான் நடத்த முடியு மென்று நினைத்தால், சங்கம் தன்னில் தங்கியிருக்க வேண்டுமென்று நினைத் தால் அவர் அறிவுரைகளைப் பொறித்து வைக்கட்டும். ததாகதருக்கு அத்தகைய எண்ணமில்லை. அப்போது சங்கம் பற்றி என் அறிவுரை களை அவர் வழங்க வேண்டும்? எனக்கு வயதாகிவிட்டது. ஆனந்த ; எனக்கு இப்போது 80 வயது. உடைந்து போனவண்டியைத் திருத் தியே ஒடவிடவேண்டும். ததாகதருடைய உடலையும் திருத்தஞ் செய்து தான் இயங்கவிட வேண்டும் என என்ணுகிறேன். ஆனபடி யால் ஆனந்த உன்னையே உனக்குத் தீவாக்கிக் கொண்டு வாழ்வாயாக. நீயே உனக்குச் சரண். வேறு எவரும் சரணில்லை. தர்மத்தையே உனக்கு ஆதாரமாக்கிக் கொள், தீவாக்கிக் கொள். தர்மமே உனக்குச் சரண் வேறென்றுஞ் சரணில்லை."
புத்தர் ஆனந்தருக்குக் கூறவிரும்பியது தெளிவாயிருக்கிறது. ஆனந்தர் துக்கத்தினல் மனமடிவுற்றிருந்தார். குரு தேவர் இறந்த பின்னர் எல்லாரும் தனித்துத் துணையின்றி சரணின்றி தலைவரின்றி இருக்க நேரிடுமென்று ஆனந்தர் எண்ணினர். அதனல் புத்தர் அவருக்கு ஆறுதலும் தைரியமும் கூறி நம்பிக்கை பெறச் செய்தார். ஒவ்வொருவரும் தங்கள்தங்களில் நம்பியிருக்க வேண்டுமென்றும் தாம் போதித்த தர்மத்தையே சரணுகக் கொள்ளவேண்டுமென்றும், வேறு எவரையோ, எந்தப் பொருளையோ சரணுகக் கொள்ள வேண்டியதில்லை யென்றும் உற்சாகப்படுத்தினர். இந்த இடத்தில் ஆத்மா பற்றிய விவகாரத்துக்கோ அத்யாத்ம விசாரணைக்கோ இடமில்லை.
ஒருவன் தனக்குத் தானே ஆதாரமாகவும், தீவாகவும், சரணுகவும். எவ்வாறு இருப்பது; தர்மத்தை எவ்வாறு தன் தீவாகவும் சரணுகவும் கொள்வான் என்பதை பகவான் ஆனந்தருக்கு விளக்கினர். காயம், வேதனை, மனம் மனவிஷயங்கள் என்பவற்றை விழிப்போடு கவனித் தல் என்னும் சதிபட்டான மென்னும் கடைப்பிடி மூலம் இதனை
1. D 11 (கொழும்பு 1929) பக். 61-62 கடைசி வசனம் மாத்திரமே நேராக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் எனைய பகுதி மகா பரிநிப்பான குத்திரத்திலுள்ளபடி சுருக்கிக் கூறப்பட்டுள்ளது.
7

Page 57
வளர்க்கலாம் என்பதை (நான்கு சதி ULI டானங்கள்) பகவான் விளக்கினர். இந்த விளக்கத்தில் ஆத்மாவைப் பற்றிய பேச்சு வதுமில்லை.
புத்த தர்மத்தில் ஆத்மனைப்பற்றிய விவகாரம் உண்டெனக் கூறு வோர் அடிக்கடி சுட்டிக் காட்டும் மற்றெரு சந்தர்ப்பம் உண்டு.
வாராணுசியிலிருந்து ஊருவெலைக்குப் போகும் சமயம் பகவான் ஒரு காட்டிலே ஒரு மரத்தடியில் இருந்தார். அன்று முப்பது ராஜகுமாரர்கள் தம் மனைவியரோடு வினேதகாலப்போக்கை உத்தே சித்து இதே காட்டில் பிரவேசித்தனர். திருமணமாகாத ஒரு ராஜகுமாரன் ஒரு விலைமாதைக் கூட்டி வந்தான். மற்றவர்கள் களியாட்டில் ஈடுபட்டிருக்கும் சமயம் மதிப்புள்ள சில பொருள்களைக் களவாடிக் கொண்டு அவள் மறைந்துவிட்டாள். அவளைத் தேடிப் போகும் போது புத்தர் மரநிழலில் இருப்டதை அரசகுமாரர் கண்ட னர். ஒரு பெண் அந்த வழியால் போனதைக் கண்டீர்களா என்று அவர்கள் பகவானைக் கேட்டனர். என்ன சமாச்சாரம் என்று
பகவான் விசாரித்தார். அவர்கள் விஷயத்தைச் சொன்னதும் பகவான் “வாலிபர்களே ஒரு பெண்ணைத் தேடிப்போவதா உங்களையே தேடுவதா எது சிலாக்கியமானது” என்று கேட்டார். இதுவும்:
எளிதான இயற்கையாக எழக்கூடிய கேள்வி. இதில் ஆன்மா சம்பந்தமான நேரடித் தொடர்பில்லாத விவகாரத்தைப் புகுத்த வேண்டிய அவசியமில்லை. தம்மைப் பற்றியே தேடுவது உசிதமான தென அவர்கள் விடைகூறினர். “உட்காருங்கள்” என்று சொல்லி பகவான் தர்மத்தை உபதேசித்தார். மூலபிடகத்திலே இந்த தருமோபதேசத்தில் ஆத்மனைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் காணப்படவில்லை.
வச்சகொத்த என்ற பரிவிராஜகன் ஆத்மா என ஒன்று உண்டா என்று புத்தரைக் கேட்டான். புத்தர் பதில் கூருது மெளனம் சாதித்தார். இதைப் பற்றி எவ்வளவோ ஆராய்ச்சிகள் எழுதப்பட்டு ள்ளன. இதைப்பற்றிய வரலாறு பின்வருமாறு :-
வச்சகொத்த புத்தரை அணுகி கேட்கிருன். " வணக்கத்துக்குரிய
கோதமரே ; ஆத்மா என்று ஒன்று உண்டா ? *
புத்தர் மெளனமாயிருந்தார். " அப்படியானல் வணக்கத்துக்
குரிய கோதமரே ஆத்மா என்பது இல்லையா ? “ புத்தர் மறுபடியும்
மெளனம் சாதித்தார்.
1. D 11 பக். 61-62. சதிபட்டானம் பற்றி பாவனை என்ற எழாம் அத்தியாயத்
தில் ஆராயப்படும். 2. Mhvg ( Jesušas un 1929) Ut. 21-228.
72

வச்சகொத்த எழுந்து போகிருன்.
வச்சகொத்த பரிவிராஜகன் போனபின்னர், வச்சகொத்தனுடைய கேள்விக்கு என் பதில் கொடுக்கப்படவில்லை என்று ஆனந்தர் பகவா னைக் கேட்கிறர் . புத்தர் விளக்கம் கொடுக்கிருர்.
* ஆனந்த, பரிவிராஜகன் வச்சகொத்தன்” ஆன்மா உண்டா ?” என்று கேட்டதற்கு "ஆன்மா உண்டு” என பதில் கூறியிருப்பேனு னல், நான் சாஸ்வதவாதிகளான (அழியாப்பொருள் உண்டு என் னும்) தாபசர்களும் பிராமணர்களும் அடங்கியவர்களின் கட்சியை ஆதரிப்பவனுவேன். (சஸ்ஸதவாத).
* ஆனந்த மேலும் பரிவிராஜகனனவச்சகொத்தன் ஆன்மா என் பது இல்லையா” என்று கேட்டதற்கு நான் ' ஆன்மா என்பது இல்லை எனப் பதில் கூறினல் ஆன்மா உடலோடு அழியும் ” என்று சொல் லும் தாபசர் பிராமணர் ஆகியோர் கட்சியை ஆதரிப்பவனுவேன். (உச்சேதவாதம்) “ மேலும் ஆனந்த ' ஆன்மா உண்டா என்று” வச்சகொத்தன் கேட்டதற்கு நான் “ஆன்மா உண்டு என்று கூறு வேணுஞல் எல்லா தம்மங்களும் ஆன்மா அற்றவை என்ற என் அறிவுக்குப் பொருத்தமுடையதாயிருக்குமா ?
1. மற்றெரு சந்தர்ப்பத்தில் புத்தபகவான் இதே வச்சகொத்தனுக்கு "ததாகதர் எந்தத் தரிசனங்களையுஞ் சார்ந்தவரல்லர். அவர் பதார்த்தங்களின் தன்மைகளே உணர்ந்தபடியால் அவருக்கு எவ்வித தரிசனத்திலும் சார்பு கிடையாது. என்று கூறினர். Mt PTS பக். 488. இங்கேயும் அவர் எந்தத் தரிசனத்தையும் சாராத நிலை காணப்படுகிறது.
2. சப்பே தம்மா அனத்தா. தம்மபதம் 20, 7 இல் உள்ள பாசுரத்தின் முதலடியில் காணப்படும் அதேவாக்கியங்கள். இதை முன்னர் ஆராய்ந்தோம். வூட்வேட் இதற்கு “ எல்லாப் பொருள்களும் அநித்தியம்” என மொழி பெயர்த்திருக்கிருர் பக்கம் 282, இம்மொழிபெயர்ப்பு முற்றும் தவறு. அது கவலையினத் தாலானதாய் இருக்கலாம். ஆனல் இது மிகப் பாரதூரமான தவறு. புத்தரின் மெளனம் பற்றி அவசியமற்ற பெரும்பாலான பேச்சுக்களுக்கு இதுவே ஒரு காரணமாயிருக்கலாம். இங்கே வரும் மிக முக்கியமான அனத்த என்ற அனத்மன் எனப் பொருள்படும் சொல் அநித்தியமானது என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பாளி மூலக்கிரந்தங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புக்களில் இத்தகைய பெரும் பிழைகளும் சிறிய பிழைகளும் காணப் படுகின்றன. சில கருத்தின்மையாலும் கவலையீனத்தாலும் உண்டானவை. சில பாளி பாஷையில் திறமையின்மையால் எற்பட்டவை. எவ்வாருயிருப்பினும் இத்துறையில் முன்னுேடிகளாய் விளங்கிய நல்லறிஞர்க்கு மரியாதை செலுத்திக் கொண்டு அவர்கள் இழைத்த இத்தவறுகளே, க்கிசந்தங்களைப் படிக்க வசதியற்றவர்களிடையே நிலவும் பெளத்தம் பற்றிய தவறன கருத்துக்களுக்கும் பொறுப்பாயிருந்தன என ஈண்டு குறிப்பிடுவது பொருத்தமுடையதாகும். பாளிக்கிரந்தச் சங்கத்தின் காரியதரிசியான சிறீமதி ஐ. பி. ஹோர்னர் புதிய திருத்திய மொழிபெயர்ப்புக்களை வெளியிட உத்தேசித்திருக்கிருர் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயுமாகும்.
73

Page 58
* நிச்சயம் பொருத்தமற்றது பிரபோ”
* மேலும் ஆனந்த பரிவிராஜகன்” ஆன்மா இல்லையா என்று கேட்டபோது நான்” ஆன்மா இல்லை என்று சொல்லியிருப்பேனனல் எற்கனவே குழப்பமடைந் திருந்த வச்சகொத்தனுக்கு இது மேலும் பெரிய குழப்பத்தைக் கொடுத்திருக்கும்.* முன்னர் எனக்கு ஆன்மா இருந்தது, இப்போது, ஆன்மா இல்லை” என்று எண்ணி யிருப்பான்.
புத்தர் மெளனம் சாதித்தது என் என்பது இப்போது தெளிவாகிற தென எண்ணுகிறேம், வினக்களைக் கிளப்புவோரையும் எவ்வாறு மதித்தார், அவற்றின் முழுப் பின்னணி எத்தகையது என்பதை ஆராய்ந்தால் விஷயம் மேலும் தெளிவுபெறும். இப்பிரச்சினையை ஆராய்ந்தோர் இதனைச் சிறிதும் கருத்திற்கொள்ள வில்லை.
புத்தர் கணக்குப் போடும் இயந்திரமென்று நினைக்கக் கூடாது. அவர் யார் என்ன கேள்வி கேட்டாலும், பிறர்நிலையைக் கருதாது பதில் கூறுபவரல்லர். அவர் காரியபூர்வமான ஓர் ஆசிரியர். நிறைந்த கருண்ையும் ஞானமும் உடையவர். தன் அறிவையும் விவேகத் தையும் காட்டுவதற்காகப் பதில்களைப் பக்குவப்படுத்தவில்லை. வின வெழுப்புவர் உண்மையை உணர வேண்டுமென்ற ஆர்வமுடையவர். மக்களின் தகைமை, போக்கு, மன வளர்ச்சி, பண்பு குறித்த ஒரு பிரச்சினையைப் புரிந்து கொள்ளும் திறம் என்பவற்றையெல்லாம் மனத்திற் கொண்டே பேச்சை எடுப்பார்.
ஒரு வினவுக்கு நாலுவகையாக விடை கூறலாம் என்கிறர் பகவான். (1) சில வினக்களுக்கு நேரான விடை கூறலாம், (2) வேறு சில வினக்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம் விடை பிறக்கும். (3) வேறு சில எதிர் வினக்கள் மூலம் விடை
1. மற்றெரு சந்தர்ப்பத்திலே இச் சம்பவம் நடப்பதற்கு முன்னரென்றே கருத வேண்டும். மாணத்தின் பின்னர் அருகதரானேர் எந்நிலை அடைவார் என்ற வச்சகொத்தனுடைய கேள்விக்கு புத்தர் விளக்கம் கொடுத்தபோது இக் கேள்வி நுட்பமும் ஆழமும் வாய்ந்தது) வச்சகொத்தன் "வணக்கத்துக்குரிய கோதமரே இங்கே எனக்கு விளக்கமுண்டாகவில்லை, மனக்குழப்பமடைந்துள் ளேன். வணக்கத்துக்குரிய கோதமரோடு நடத்திய இந்த உரையாடலின் ஆரம் பத்தில்இருந்த நம்பிக்கையும் இப்போது மறைந்துவிட்டது” என்று கூறினன். MI (PTS ) பக். 487. அதனல் பகவான் வச்சகொத்தனை மேலும் குழப்ப விரும்பவில்லை.
3. S IV (PTS) uá. 400-401.
புத்தரின் இந்தப்பண்பு இந்திரிய பரோபரியத்த ஞானம் எனப்படும். AMI (PTS), Lukasuh. 70: Vibh (PTS) utas 340.
74.

கூறலாம். கடைசியாக சில விணக்களுக்கு விடை கூருமலே விட்டுவிடலாம்."
விடை கூருமல் ஒதுக்கிவிடும் முறைகள் பல உண்டு. ஒன்று இவ்வினவுக்கு விடையில்லையென்று கூறிவிடுதல். இந்த உலகம் சாஸ்வதமானதா அல்லவா என்பது போன்ற பல கேள்விகளை வச்சகொத்தன் கேட்டபோது புத்தபகவான் பல முறை இவ்வாறு விடையிறுத்தா?. இவ்வாறே மாலுங்கிய புத்திரர்க்கும் வேறு பலர்க்கும் விடையிறுத்தார். ஆனல் ஆத்மா உண்டா இல்லையா என்ற கேள்விக்கு இவ்வாறு புத்தர் விடை கூறமுடியவில்லை. இப்பிரச்சினைக்கு அவர் எற்னெவே விளக்கமளித்துப் பதில் கூறியுள் ளார். எல்லாத் தர்மங்களும் ஆத்மா இல்லாதவை என்ற அவரு டைய கொள்கைக்கு மாறனபடியால் ஆத்மா உண்டென அவரால் கூறமுடியவில்லை. ஆத்மா இல்லையென அவரால் கூறமுடியவில்லை. ஏனெனில் அது வச்சகொத்தனைக் குழப்பமடையச் செய்யும். அவ்வாறு முன்னெரு முறை மனக்குழப்பமடைந்ததாக அவனே ஒப்புக் கொண்டுள்ளான். அனத்த கோட்பாட்டைப் புரியும் பக்குவம் வச்சகொத்தனுக்கு இன்னும் உண்டாக வில்லை. எனவே அவனு டைய கேள்விக்கு விடைகூருதிருப்பதே புத்தியுள்ள செயலாகும்.
வச்சகொத்தன் நெடுங்காலமாக புத்தருக்குப் பழக்கமானவ்ர்.இந்: தப் பரிவிராஜகன் பகவானைக் காணவந்தது இது தான் முதல் முறையன்று. பெருங்கருணையும் சாதுரியமுமுள்ள ஆசிரியரான பகவான் இவனுடைய குழம்பிய மனநிலையையும் பக்குவத்தையும் நன்கு மதித்து அதற்கேற்றவாறு போதனை நடத்தினர். பாளி பிடகங்களில் பரிவிராஜகனன இந்த வச்சகொத்தனைப் பற்றி பல இடங்களில் பேசப்படுகிறது. இவன் அடிக்கடி பகவானையும் அவரு டைய சீடர்களையும் கண்டு தன் மனத்தை குழப்பி கொண்டிருந்த இந்தக் கேள்விகளை மேலும் கேட்டு வந்தான்.
1. A C (GosTpib, 1929) ušais b 216 .
E.G.S. IV (PTS) luéasb 393, 395 MII (PTS) Luaiasuh 484.
2
பக்கம் 64 குறிப்பு 2 பார்க்க. S III (PTS) uš. 257-263 IV uč. 391, 395, 398, 400, MI uá. 481o 488, 489, AV tuj. 193.
75

Page 59
புத்தருடைய மெளனம் அவருடைய போதனையிலும் நாவன் மைமிக்க உரையாடலிலும் பார்க்கப் பெரியதாக்குதலை அவன் மன திலுண்டாக்கிற்று எனத் தெரிகிறது. ஆன்மா என்பது மனம் அல்லது விஞ்ஞானம் எனச் சிலர் கருதுவர். மனம், சித்தம், விஞ்ஞானம் என்பன அடிக்கடி அல்லும் பகலும் உடலேக் காட் டிலும் (காயம்) வேகமாக மாறுவதால் உடலையே ஆத்மாவாக நினைத்துக் கொள்வது நல்லதென்றும், மனம் சித்தம் விஞ்ஞானத் திலும் பார்க்க காயம் தூலமானதால் வசதியென்றும் புத்த கூறு கிருர்,? “நான்”என்ற மங்கலானதொரு உணர்ச்சியே ஆன்மா என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. ஆனல் உண்மையில் அந்த எண் ணம் கற்பனையே. இந்த உண்மையை அனுபூதியாக்கினல் நிர் வாண சுகம் உண்டாகும். இது இலேசாகக் கைவரக் கூடியதன்று. சம்யுத்த நிகாயத்தில் இதைப்பற்றி விளக்கந்தரக் கூடியதொரு உரையாடல் உண்டு. கேமக என்ற பிக்குவுக்கும் வேறு சில பிக் குகளுக்குமிடையில் இந்த உரையாடல் நிகழ்கிறது.
இந்த பிக்குகள் கேமகரை “நீர் இந்தப் பஞ்சக்கந்தங்களிலே ஆன்மாவையோ, ஆன்மா சம்பந்தமான ஒன்றையோ காணுகிறீரா?” என்று கேட்கின்றனர். கேமகர் “இல்லை ” என்று கூறுகிருர், * அப்படியானல் சகல கிலேசங்களும் நீங்கிய அருகத நிலையை அடைந்தீர்” என்று அவர்கள் கூறுகின்றனர். பஞ்சக்கந்தங்களிலே ஆன்மாவையோ அது சம்பந்தமான எதையுமோ தான் காண வில்லை என்று கேமகர் கூறுகிறர். “நான் களங்கங்களிலிருந்து விடுதலை பெற்ற அருகதனல்லன். நண்பர்களே, உபாதானக்கந்தம் பற்றிக் கூறுமிடத்து " நான் இருக்கிறேன்” என்ற உணர்ச்சியுண்டு. ஆனல் “ இது நான் ” என்பதைத் தெளிவாகக் காணமுடியவில்லை” பின்னர், கேமகர், " நான் என்பது உருவமன்று, வேதனையன்று,
1. சிலகாலத்துக்குப் பின் வச்சகொத்தன் பகவானை மறுபடியும் காண வந்தான்.
இம்முறை வழக்கம்போல அவன் கேள்வி கேளாமல் “நான் வணக்கத்துக்குரிய கோதமரைக் கண்டு உரையாடிப்பல நாளாகிறது. குசலாகுசலங்கள், நன்மை தீமைகளைப் பற்றி கோதம முனிவர் எனக்குச் சுருக்கமாக அறிவுரை வழங்க வேண்டும்” என்று கேட்டான். பகவான் நன்மை தீமைகளைப்பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் விளக்கப் போவதாகக் கூறி அவ்வாற்ே, செய்தார். ஈற்றில் புத்தருடைய சீடனுகிவச்சகொத்தன் அறவழிநின்று அருகத நிலையடைந்து நிர்வாண சுகம் பெற்றன். ஆத்மன் அனத்மன் விவகாரங்களும் எனைய பிரச்சினைகளும் அவனைப் பின்னர் குழப்பவில்லை. (MIPTS பக். 48)
2. 811 (PTS) பக். 94.அமகாயானிகள் கூறும் ஆலய விஞ்ஞானம், ததாகத கர்ப்பம் என்பன ஆன்மாவுக்குச் சமமானவையென்று சிலர் நினைப்பர். ஆனல் இலங்காவதார குத்திரம் அவை ஆன்மாவல்லவென்று திட்டமாகக் கூறுகின்றது
அலங்கா பக். 78ணு79). 3. S 111 (PTS) us. 126.
76

குறிப்பன்று, சங்கற்பமன்று, விஞ்ஞானமன்று, அவையற்ற ஒன்று மன்று, பஞ்சக்கந்தங்கள் நானே என்ற உணர்ச்சியுண்டாகிறது. ஆனல் “ இதுவே நான் ” என்பதை தெளிவாகக் காணமுடியவில்லை” என்று விளக்குகிறர்.
அது பூவின் மணம் போன்றது. இதழின் மணமோ, நிறத்தின் மணமோ, மகரந்தத்தின் மணமோ அல்ல, ஆனல் பூவின் மணமே என்கிறர்.
நிர்வாண சுகத்தின் ஆரம்பநிலைகளை அடைந்த ஒருவரிடம் கூட *நான்” என்ற உணர்ச்சியுண்டு. ஆனல் மேல் நிலைக்குப் போகும் போது இந்த உணர்ச்சி மறைந்துவிடுகிறது. புதிதாக வெளுக்கப்பட்ட துணியில் அழுக்கு அகற்றப்பயன்படுத்தப்பட்ட ரசாயன திரவியங்களின் கந்தம், துணியைப் பெட்டியில் வைத்தபின் சிறிது காலத்தில் இல்லாமற்போவது போல, இவ்வுணர்ச்சி மறைந்து விடுகிறதென கேமகர் மேலும் விளக்குகிறர்.
இந்த விவாதம் அந்த பிக்குகளுக்குப் பெரிதும் பயன்பட்டதென வும் ஈற்றில் அவர்களெல்லாரும் கேமகரும் ஆசவங்கள் நீங்கி அருகத நிலையடைந்தனர் என்றும், “நான் ” என்ற உணர்ச்சி அற்றுப் போய்விட்ட தென்றும் சூத்திரத்தின் இறுதியில் கூறப் பட்டுள்ளது.
புத்தருடைய போதனையின்படி என்னில் ஆன்மா இல்லையென்று கூறிக்கொள்வது உச்சேதவாதம். அதுவும் தவறு. “ என்னில் ஆன்மா உண்டு” என்று கூறிக் கொள்வதும் (சஸ்ஸதவாதம்) தவறு. இரண்டும் பந்தங்களே. “நான் ” என்ற உணர்ச்சியிலி ருந்தே இரண்டும் உண்டாகின்றன. ஆத்மா இல்லை (அனத்த) என்ற கோட்பாடு சம்பந்தமாக ஒருவர் மேற்கொள்ளக் கூடிய சரியான மனேநிலை எந்த விதமான அபிப்பிராயத்தையும் கைக்கொள்ளா திருப்பதே. மனச்சார்பின்றி உள்ளதை உள்ளபடி புறநோக்காகப் பார்க்கவேண்டும். “நான் ” என்றும், சீவன் என்றும் கூறப் படுவனவெல்லாம் பஞ்சக்கந்தங்களின் சேர்க்கை. இவை நாமரூபங் கள். இவை பரஸ்பரம் ஒன்றிலொன்று தங்கிச் செயற்படுகின்றன. அப்போது கணபங்கமாகின்றன. இந்த மாற்றம் காரணகாரிய விதிக் கடங்கி நடக்கின்றன. நித்தியமான அழியாத, மாற்றமில்லாத சாஸ், வதமன வஸ்து இந்தச் சீவராசிகளிடையே எதுவுமில்லை.
2. ஆத்மாவைப் பற்றி இன்றும் பெரும்பாலோர் இவ்வாற்ே கூறுவர்.

Page 60
இவ்விடத்தில் ஒரு வின இயல்பாக உண்டாகும். ஆன்மா என்று ஒன்று இல்லாவிட்டால் கர்மபலனை அனுபவிப்பது யார் ? இக்கேள் விக்குப் புத்தரே மிகப் பொருத்தமான விடையைக் கொடுப்பார். பிக்கு ஒருவர் இக்கேள்வியை எழுப்பியபோது பகவான் “ காரண காரிய எதுக்களைக் கருத்தில் கொள்ள வேண்டுமென்று, ஒ பிக்குகளே நான் போதித்துள்ளேன். எங்கும் எல்லாப் பொருள் களிலும் இந்த எதுவை அறிய வேண்டும்.” என்று சொன்னர்."
புத்தருடைய அனத்மக் கோட்பாடு உச்சேத வாதம் எனக் கருதக் கூடாது. அது எதிர் மறைக்கருத்தன்று. நிர்வாணம் என்பது போல அது உண்மை. பரமார்த்தம். பரமார்த்தம் எதிர் மறையா யிருக்க முடியாது. இல்லாத கற்பனை மயமான ஆத்மாவில் கொள் ளும் போலி நம்பிக்கையே எதிர்மறையானது. அனத்தக் கோட்பாடு போலி நம்பிக்கைகள் என்னும் இருளைப் போக்கடிக்கிறது. ஞான ஒளியை உண்டாக்குகிறது. அது எதிர்மறையானதன்று ; நைராத் மியம் என்னும் காரணி இருக்கிறது (நைராத்மியாஸ்திதா) என அரசங்கர் சரியாகக் கூறியுள்ளார்.
1. M. 111 (PTS) us. 19, S 111 us. 103.
2. அபிதம்ம சமுச்சயம் பக்கம் 31.
78

WI ஆம் அத்தியாயம் தியானம் - மனப்பயிற்சி: பாவனை
புத்தர் கூறினர். ஓ, பிக்குகளே! இரண்டுவிதமான பிணிகள் உண்டு. ஒன்று உடற்பிணி, மற்றது மனப்பிணி. இரண்டொருவரு டம் உடற்பிணி இன்றி இருப்பவர் உண்டு. நாறு வருடத்துக்கும் அதற்கு மேலும் உடற்பிணி இல்லாதவர் இருக்கலாம். ஆனல் ஒரு கணமேனும் மனப்பிணியில்லாதிருப்பவரைக் காண்பது அருமை. மனப்பிணி இல்லாதவர்கள் அருகதர்கள் மாத்திரமே.
புத்தருடைய போதனை, லிசேஷமாக அவர் போதித்த தியான முறை மனப்பிணிகளை முற்ருய் அகற்றி சித்தசமாதானமும் அமைதி யும் உண்டாக்கக் கூடியது. பெளத்தரும், புத்தசமயத்தைச் சேரா தவர்களும், புத்தர் போதித்த இந்த தியானமுறையைச் சரிவர அறிந்து கொள்ளாதிருப்பது வருத்தத்துக்குரிய விஷயம். ஏனைய அமிசங்களைவிட பாவனை சம்பந்தமான இந்தப் போதனையே பெரிதும் தவருகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. பாவனை என்று சொன்ன தும் தினசரி வாழ்விலிருந்து அகன்றுவிட வேண்டுமென்ற எண்ணம் மக்கள் மனத்தில் உண்டாகிறது. குறிப்பிட்டதொரு ஆசன முறையை அனுசரிக்க வேண்டும் என எண்ணுகின்றனர். விஹாரங்களிலோ, குகைகளிலோ காணப்படும் சிலைகளைப்போல, சமூகத்தோடு தொடர்பில் லாத ஒரு எகாந்தமான இடத்துக்குப் போய் யோக சாதனையில், நூதனமான பாவனையில் அல்லது அனுபூதிசமாதியில் ஆழ்ந் திருத்தல் என்று நினைக்கிறர்கள். உண்மையான பெளத்த பாவனை இத்தகைய தப்பியோடும் முறையன்று. இவ்விஷயமாக புத்தர் போதித்த நெறி, தவருகப் புரிந்துகொள்ளப்பட்டு, பின்னர் தவருக விளக்கப்பட்டது. பிற்காலத்தில் அது உருமாறி இழிந்து ஒரு கிரியை யாகவும், தொழில் நுட்பம் சார்ந்த சடங்காகவும் மாறிற்று.*
* மூன்றவது கண்” என்று கூறப்படும் திவ்விய கண்களைப் பெறுவதற்காக யோக நெறியைப் பின்பற்ற வேண்டுமென்பதே
1. A (கொழும்பு 1929) பக். 276.
2. யோகாசாரர் கைந்நூல்
(YOGACARA MANUAL edited by T. W. RHYS DAVIDS, LONDON அ1896) பெரும்பாலும் 18 ஆம் நூற்றண்டில் இலங்கையில் எழுதப்பட்ட தியா னம் சம்பந்தமான நூல். தியானம் என்பது மந்திரங்களைச் செபித்து மெழுகு வர்த்திகளைக் கொழுத்திச் செய்யும் கிரியையாக இருந்திருந்ததென்பதைக் காட்டும். HISTORY OF BUDDHISM in Ceylon by Walpola Rahula orgip நூலில் (கொழும்பு 1956) பக். 199. துற்வு இலட்சியம். அத்தியாயம் 12. பார்க்க.
79

Page 61
பலருடைய அபிலாஷை, மற்றவர்க்கில்லாத இந்தச் சக்தியைத் தியா னத்தின் மூலம் தாம் பெறவிரும்புகின்றனர். சில காலத்துக்கு முன் இந்தியாவிலே காதின் மூலம் பார்க்கும் சக்தியைப் பெறமுயன்ற பெளத்த பிக்குணி ஒருவர் இருந்தார். அவருக்கு கண் நன்ருகத் தெரியக்கூடியதாயிருந்தது. இது தவறன ஆன்மிகப் போக்கென்றே கூற வேண்டும். இது சக்தி பெறவேண்டுமென்ற ஆசையன்றி வேறன்று.
தியானம் என்ற சொல் ஆதியில் பாவனை என வழங்கப்பட்டது. பாவனை என்றல் பயிற்சி, வளர்த்தல், அபிவிருத்தி செய்தல், அதாவது மனத்தைப் பயிற்றுதல் அல்லது மனத்தை அபிவிருத்தி செய்தல் எனப்பொருள்படும். பெளத்தத்தில் பாவனை என்பது மனத் தைப்பயிற்றுதல், பல்லாற்ருனும் அதை அபிவிருத்தி செய்தல் என்பதையே கருதும். இதன் நோக்கம் மனத்தைக் களங்கங்களி லிருந்து தூய்மைப் படுத்துதல், மனத்தைக் கலக்கும் தன்மை களைப் போக்குதல். இவை காமம், துவேஷம், சோம்பல், கவலைகள், சஞ்சலங்கள், ஐயங்கள் என்பவற்றல் உண்டானவை. இவற்றைக் களேந்து மனத்திலே மன ஒடுக்கம், விழிப்பு, விவேகம், உறுதி, ஊக்கம், விசாரணை, நம்பிக்கை, ஆனந்தம், சாந்தி, என்பவற்றை ஊன்றி, யதாபூத ஞானத்தை, அதாவது உள்ளதை உள்ளபடியறியும் பக்குவத்தைத் தரும் உயர்ஞானத்தை அடையவேண்டும். அதன் பயணுகப் பரமார்த்தமான நிர்வாணத்தை அடைய வேண்டும்.
இதில் இரண்டு வகையான தியானம் உண்டு. ஒன்று சமத எனப்படும் சமாதி: இது எகாக்கிர சித்தம் எனப்படும். அதாவது மனதை ஒரு நிலைப்படுத்தல். இது பாளியில் சித்தேகக்கதா என்றும் சமஸ்கிருதத்தில் சித்தைகாக்கிரதா என்றும் வழங்கும். இதனை அடைவதற்குப் பல வழிகள் பிடகங்களில் கூறப்பட்டுள்ளன. இவற் றின் பயணுக “ சூனியமண்டலம் ”, “ காணல் காணுதிருத்தல் ” (நேவ சஞ்ஞா நா சஞ்ஞா) என்ற மண்டலம் என்னும் மிக உயர்ந்த சமாதி நிலைகளை அடையலாம். இந்க அனுபூதிநிலைகளெல் லாம் மனத்திலுண்டானவை. மனத்தினல் ஆக்கப்பட்டவை, உபா திக்குட்பட்டவை- (சங்கத) என்கிறர் புத்தர்.
இவை பரமார்த்தமன்று, சத்திய தரிசனமன்று, நிர்வாணமன்று, இத்தகைய யோகமுறைகள் புத்தர் காலத்துக்கு முந்தியே நிலவி வந்தன. எனவே இவை தூய பெளத்த முறைகளல்ல ஆனல் பெளத்த தியான முறைகளில் பேசப்படுகின்றன. நிர்வாணமடை வதற்கு இவை அவசியமில்லை. புத்தர் ஞான ஒளி பெறுவதற்கு முன்னர் பல ஆசிரியர்களிடம் இந்த யோக முறைகளைப் பயின்று,
1. (8tago) 46 ih udatb итitakas.
80

மிக உயர்ந்த சமாதிநிலைகளையடைந்தார். ஆனல் அவை நிர்வாண முத்தியை அருளவில்லை; பூரணவிடுதலை கொடுக்கவில்லை. பரமார்த்த தரிசனத்தை அருளவில்லை. இச்சமாதிநிலைகள் இப்பிறப்பில் சுகத் தைத் தந்தன (திட்ட தம்ம சுகவிஹாரா). சாந்த வாழ்வை அருளின. (சந்தவிஹாரா) என்று புத்தர் கூறுகிறர். அதற்கு மேல் அவை ஒன்றையும் தரவில்லை எனக் குறிப்பிட்டார்."
எனவே நிர்வாணமென்னும் பூரணலிடுதலையை மனத்துக்களித் துப் பரமார்த்தத்தைக் காட்டக்கூடியதும் பொருள்களின் உண்மை யான தன்மையைக் காட்டக்கூடியதுமான விபஸ்ஸன (சமஸ்கிருதம் விபஸ்யன அல்லது விதர்சஞ) என்ற தியானத்தைக் கண்டு பிடித் தார். இதுவே பூரணமான பெளத்த தியானம். இதுவே பெளத்த முறையைச் சார்ந்த மனப்பயிற்சி ; இது கடைப்பிடி, சதி, விழிப்பு, மடியின்மை, கூர்ந்து கவனித்தல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆராய்வு முறை.
இது பெரிய விஷயம். ஒரு சில பக்கங்களில் விளக்க இயலாது. ஆனல் இந்த பெளத்த யோக நெறியை இங்கே மிகச் சுருக்கமாக, பருந்துப்பார்வையாக ஆராய முற்படுகிருேம். காரிய பூர்வமான வகை யில் இந்த மனப்பயிற்சி எடுத்துக்காட்டப்படுகிறது.
பாவனை பற்றி புத்தர் அருளிய மிக முக்கியமான அருளுரை சதிபட்டான சூத்திரம் எனப்படும். சதி என்பது கடைப்பிடி, மன நினைவு. அதை ஊர்ஜிதப்படுத்தல், நிலைப்படுத்தல் என்பது இதன் பொருள். இது தீக நிகாயத்தில் 22 ஆம் இலக்கச் சூத்திரமாகவும் மஜஜிம நிகாயத்தில் 10 ஆம் இலக்கச் சூத்திரமாகவும் அமை கின்றது. இச் சூத்திரம் சம்பிரதாயப்படி பெரிதும் போற்றப்பட்டு வரும் ஒன்றகும். அதனல் பெளத்த மடங்களில் வழக்கமாக ஒதப்படுகிறது. இல்லங்களில் குடும்பத்தவர் பயபக்தியோடு சூழ்ந் திருந்து இதனைப் பாராயணஞ் செய்வர். மரணப்படுக்கையில் இருப் பவருடைய கட்டிலருகேயிருந்து, அவருடைய கடைசி எண்ணங்களைத் துய்மைப்படுத்துவதற்காக பிக்குமார் இதனை ஓதுவது வழக்கம்.
இங்கே கூறப்படும் தியான முறை வாழ்வோடு சம்பந்தப்பட்டது. அதாவது நமது தினசரி வாழ்வோடும், நாளாந்த நடவடிக்கை களோடும் ; நமது இன்பதுன்பங்களோடும், நமது பேச்சு, சிந்தனை, ஒழுக்கம், விவேகம் சார்ந்த விவகாரங்கள் என்பவற்றேடும் தொடர் புடையது.
1. M இல. 8, சல்லேக சுத்தம் பார்க்க.
8

Page 62
இந்த அருளுரை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்பிரிவு நமது காயத்தோடு தொடர்புடையது. இரண்டாவது நமது உணர்ச்சி, புலனுகர்வு (வேதனை) என்பவற்றேடு சம்பந்தப் பட்டது. மூன்றவது மனத்தோடு (சித்தம்) தொடர்புடையது. நாலாவது ஒழுக்கம், விவேக விடயங்கள் என்பவற்றேடு சம்பந்த முடையது. (தம்மா)
தியானம் என்ன முறையில் அமைந்திருந்தாலும் இங்கே முக்கிய மாகக் கவனிக்கப்பட வேண்டியது கடைப்பிடி அதாவது விழிப்பு, நினைவு (சதி) கவனமும் கூர்ந்து அவதானித்தலும். (அனுபஸ்ஸன) ஆகும்.
காயம் சம்பந்தமான தியானத்தில் மிகப் பிரசித்தமானதும் காரிய பூர்வமானதும் "ஆணுபானசதி எனப்படும். அதாவது உள்வாங்கும் மூச்சையும் வெளியே செலுத்தும் மூச்சையும் கவனித்தல். இந்த ஆனபான சதி செய்யும் போது தான் விசேடமான, குறிப்பிட்ட, ஆசனம் பிடகத்தில் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூத்திரத்தில் கூறப்பட்ட ஏனைய தியானங்களுக்கு ஆசனநியதி இல்லை. இவற்றைச் செய்யும்போது நீங்கள் இருக்கலாம், நிற்கலாம், நடக்கலாம், படுத் திருக்கலாம். அது உங்கள் விருப்பம். ஆனல் ஆனபானதியானத் தின் போது சூத்திரத்தில் கூறப்பட்ட படி " அட்டணைக்காலிட்டு, உடலை நேராக வைத்துக் கொண்டு, மனத்தை அலையவிடாது, விழிப்பாயிருக்க வேண்டும்.” பத்மாசனமாய் காலை மடக்கிக் கொண்டி ருப்பது எல்லா நாட்டவர்க்கும் இலேசானதன்று. விசேடமாக மேனட்டவர்க்குச் சிரமமானதாயிருக்கும். எனவே காலை மடக்கியிருக்கக் கஷ்டப்படுவோர் கதிரையிலேயே இருக்கலாம். ஆனல் உடலை நேராக வைத்திருக்க வேண்டும். மனத்தை விழிப்போடு வைத்திருக்கவேண்டும். இந்தப்பயிற்சிக்கு உடலை நேராக வைத்திருப் பது மிக அவசியம். ஆனல் விறைப்பாக வைத்திருக்க வேண்டிய தில்லை. கையை லாகவமாக மடியில் வைத்திருக்கலாம். இவ்வாறி ருந்து கொண்டு கண்ணை மூடிக் கொள்ளலாம் ; அல்லது மூக்கு நுனியைப் பார்த்துக் கொள்ளலாம். எது வசதியோ அதைச் செய்ய லாம்.
நீங்கள் அல்லும் பகலும் ரேசகம், பூரகம் என்ற அப்பியாசத்தை உங்களை அறியாமலே செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனல் ஒரு விநாடியாவது மனத்தால் அதைக்கவனிப்பதில்லை. இந்தத் தியா
*(மொ.ஆ.கு.) ஆணுபான என்பவை பிராணுயாமத்தில் பூரகம் உள்ளே இழுத்தல் ரேசகம் வெளியே செலுத்தல் என யோக நெறியில் வழங்கப்படும்.
பூாகம்-உள்மூச்சு, சேசகம்-வெளிமூச்சு.
82

னத்தில் மனத்தைக் கவனிக்கச் செய்தலே விஷயம். மூச்சை சிரம மின்றி உள்ளே வாங்கி வெளியே விடுங்கள். இதை மனத்தால் விழிப்புடன் கவனியுங்கள். பூரகம் ரேசகம் என்பவற்றை மனம் விழிப்புடன் கவனிக்க வேண்டும். நீங்கள் மூச்சு விடும்போது சில சமயம் நீண்ட நேரம் மூச்சை உள்ளுக்கு இழுக்கலாம். சில சமயம் குறுகிய காலம் அவ்வாறு செய்யலாம். இதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டாம். சாதாரணமாக இயற்கையாய் மூச்சுவிடுங்கள். நீண்ட மூச்சு விடுங்கள். நீண்ட மூச்சு உண்டாகும் போது அதை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் மூச்சில் மனமானது லயித்திருக்க வேண்டும். முற்ருக மூச்சில் எகாக்கிரசித்தம் ஈடுபட வேண்டும். மூச்சின் சலனங்கள், மாற்றங்கள் என்பவற்றை விழிப் புடன் கவனிக்க வேண்டும். மற்றைய விஷயங்களையெல்லாம் மறந்து விடுங்கள். சுற்றியுள்ளவற்றையும், சூழலையும் மறந்து விடுங்கள். பார்வையை எதிலும் செலுத்தாதீர்கள். இவ்வாறு ஐந்து அல்லது பத்து நிமிடம் பாவனை செய்யுங்கள்.
ஆரம்பத்தில் மனத்தை மூச்சில் லயிக்கச் செய்வது மிகக் கடின மாயிருக்கும். உங்கள் மனம் அலையும் விதத்தைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படலாம். மனம் ஓர் இடத்தில் நிற்கமாட்டாது. பல வேறு விஷயங்களை அது சிந்திக்கும். வெளியே சத்தம் கேட்கும். மனம் குழப்பமடையும், ஆதலால் மனத்தளர்ச்சியடைவீர்கள் ; மனக் குழப்பம் அடைவீர்கள். ஆனல் இந்தப் பயிற்சியைத் தின மும் காலை மாலை ஐந்து பத்து நிமிடத்துக்குப் பயிற்சி செய்தால் படிப்படியாக மனம் மூச்சுவிடுவதில் கவனம் செலுத்தவும் அலையா திருக்கவும் பழகிக் கொள்ளும். சில காலம் சென்றபின்னர் ஒரு விநாடியில் உங்கள் மனம் ஆனபான சதியில் ஈடுபடப் பழகி விடும். பக்கத்திலிருந்து வரும் சத்தங்கூடக் கேளாது. புற உலகமே இல் லாமல் மறைந்துவிடும். இந்த வினடி நேரம் உங்களுக்கு அற்புத மான அனுபவத்தை உண்டாக்கும். ஆனந்தமும் சுகமும் சாந்தமும் உண்டாகும். அதனல் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்ய ஆசைப்படுவீர்கள். இருந்தும் இது சிரமமாயிருக்கும். ஆனல் இப்பயிற்சியை ஒழுங்காகச் செய்து வந்தால் இந்த அனுபவம் நீண்ட நேரத்துக்கு அடிக்கடி எற்படச் செய்யலாம். அப்போது மனமானது முற்ருக ஆணுபான சதியில் லயித்து விடும். உங்களைப் பற்றிய எண்ணம் உண்டாகுமானல் எவ்வித பாவனையும் செய்ய முடியாது.
தியான சமாதிக்கு உங்களை இட்டுச் செல்ல இச்சாதாரணமான இலேசான “ஆனபானசதி” அவசியமாகும். பொருள்களின் தன் மையை ஆழ்ந்து அறியவும் புரிந்து கொள்ளவும் இத்தகைய “எகாக்கிரசித்தம்” அவசியம். நிர்வாண சுகம் பெறவும் இத்தகைய தியானம் வேண்டும்.
83

Page 63
இவற்றைவிட ஆணுபான சதி கைம்மேற்பலன் கொடுக்கக் கூடியது. உடல் நலத்துக்கு உகந்தது. சிறந்த ஓய்வுமுறை. நன்றகத் துங்க லாம். தினசரி வேலைகளைத் திறமையாகச் செய்யத் துணைபுரிவது. மனத்துக்குச் சாந்தியையும் நிம்மதியையும் தருவது. பரபரப்பும் கிளர்ச்சியுமடைகிற நேரங்களில் இரண்டொரு நிமிடம் ஆனபான சதியை அனுசரித்தால் உடனே மன அமைதியும் சித்த சமாதானமும் உண்டாவதைக் காணலாம். நன்றகத் துங்கி விழித்தவர் போன்ற நிலையை அடைவீர்கள்.
மற்ருெரு மிக முக்கியமான தியானமுறை நீங்கள் நாளந்தம் ஈடுபடும் தனிப்பட்ட கடமைகளையோ, பொது வேலைகளையோ, தொழில் துறைக்கடமைகளையோ செய்யும்போது உடலாலும், வாக்காலும் நிகழ்த்துவன ஒவ்வொன்றையும் விழிப்புடன் மனத்தில் கருதிக் கொள்ளுதல். நீங்கள் நடந்து கொண்டிருந்தாலென்ன, நின்று கொண்டிருந்தாலென்ன, இருந்தாலென்ன, கிடந்தாலென்ன, துங் "கினலென்ன, உடலுறுப்புக்களை மடக்கினலென்ன நீட்டினலென்ன, சுற்றிப் பார்த்தாலென்ன, உடையணிந்தாலென்ன, பேசினலென்ன, பேசாதிருந்தாலென்ன, உணவருந்தினலென்ன, பானம்பருகினளி லென்ன, மலசலவிமோசனஞ் செய்து கொண்டிருந்தாலென்ன இக்கருமங்களின் போதும், இது போன்ற வேறு கருமங்களின் போதும், நீங்கள் அவ்வப்போது செய்து கொண்டிருக்கும் காரியங் களை விழிப்புடனும் மனப்பூர்வமாகவும் கருத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். அவற்றையே தியானிக்க வேண்டும். அதாவது அந்தக் கணம், செய்யும் தொழிலைப் பற்றியே நினைத்து, அதிலேயே ஈடுபட்டி ருக்க வேண்டும். இறந்த காலத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்கக் கூடாதென்பதன்று. அவற்றை நிகழ் காலக் கருமங்களுக்கும் தொழில்களுக்கும் தொடர்பு உண்டாகும் போதே நினைக்க வேண்டும். இறப்பும் எதிர்வும், கழிந்தவையும் எதிர்வருப வையும், நிகழ் கருமத்துக்கு உசிதமானவரையில் தான் அவற்றை நினைக்க வேண்டும். w
மக்கள் சாதாரணமாக நிகழ் கருமங்களில் லயித்திருப்பதில்லை. அந்தக்கணத்துத் தொழிற்பாடுகளையே சிந்திப்பதில்லை. இறந்தகால நினைவுகளிலும் வருங்கால நினைவுகளிலும் லயித்திருக்கிறர்கள். அவர்கள் இங்கே இப்போழுதே எதோ கருமஞ் செய்து கொண்டி ருந்தாலும், நினைவெல்லாம் இறந்த காலத்திலும் எதிர் காலத் திலும் உலாவிக் கொண்டிருக்கும். கற்பனையில் எற்படும் பிரச்சினைகள், கவலைகள், சாதாரணமாகச் சென்று கழிந்து போன விஷயங்களில் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் என்பவற்றிலே தான், ஊசலா லாடிக் கொண்டிருப்பார்கள். அதனுல் கையிலே உள்ள கருமங்
84

களில் முற்ருய் ஈடுபடாமல், அதில் இன்பமடையாமலிருக்கிறர்கள் அதனல் நிகழ்காலத்தில், கையிலே உள்ள வேலையில் திருப்தி காணுது, மனச் சந்தோஷமடையாதிருக்கிருர்கள். எனவே செய் வதைத் திருத்தமாக, ஆர்வமாக, முழு மனத்தோடு செய்ய முடியா திருக்கிருர்கள். எதோ செய்து கொண்டிருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், அதில் அவர்கள் முழுமனத்தையும் பறிகொடுப் பதில்லை.
போசன சாலையில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டே எதாவது வாசித் துக் கொண்டிருப்பதைச் சில சமயம் நீங்கள் கவனித்திருக்கலாம். சாப்பிடக் கூட நேரமில்லாத, விடா முயற்சியுடையவர்போல் அவர் உங்களுக்குத் தென்படலாம். இது சாதாரணமாக நிகழும் ஒரு சம்பவம். இவர் வாசிக்கிருரா அல்லது சாப்பிடுகிறரா என்று நீங்கள் அதிசயப்படலாம். அவர் இரண்டு கருமங்களையுமே செய்கிருர் என ஒருவர் சொல்லலாம். உண்மையில் அவர் எதையுஞ் செய்யவில்லை. அவர் சாப்பாட்டையும் ரசிக்கவில்லை. வாசிப்பையும் ரசிக்கவில்லை. மனம் குழம்பியவராய், தன்னியல்பற்றவராய், கையில் மேற்கொண்ட கருமத்தில் ரசனையற்றவராயிருக்கிருர். அவர், அந்தக் கணம், தாம் மேற்கொண்ட வாழ்வில் ஈடுபடாதவராயிருக்கிருர். தன்னையறியா மலே முட்டாள் தனமாக வாழ்விலிருந்து தப்பிக் கொள்ள முயல் கிருர். (அப்படியானல் சாப்பிடும் போது உடனிருக்கும் நண்பரோடு சல்லாபஞ் செய்யக்கூடான்ெபது கருத்தன்று).
எவ்வளவு முயன்றலும் நீங்கள் வாழ்விலிருந்து தப்பிவிட்முடி யாது. நகரத்திலிருந்தாலென்ன, குகையிலிருந்தாலென்ன, வாழ்வு நடத்தும்போது அதிலிருந்து விலகியிருக்க முடியாது. எப்படியும் வாழ்வைப் புறக்கணித்து ஒதுங்கி நிற்க முடியாது. உண்மையான வாழ்வென்பது இந்தக் கணமே கடந்து போன காலங்களின் நினை வன்று. எதிர்வரும் காலத்தைப் பற்றிய கற்பனைகளல்ல. கழிந்தவை கழிந்தவையே. எதிர்வரவிருப்பவை இன்னும் தோன்றதவையே. இந்தக் கணத்து வாழ்வில் ஈடுபடுபவரே உண்மையான வாழ்வை வாழ்பவர். அவரே மற்றவர்களை விட மனச்சந்தோஷ முடையவர்.
ஒரு நாளைக்கு ஒரு தரம் சாப்பிட்டுச் சாந்தமான எளிய வாழ்வு வாழும் புத்த சிராவகர்கள், மிக்க ஒளியுடையவராய்க் காணப்படு வதற்குக் காரணம் என்ன என்று கேட்ட போது புத்த பகவான பதில் கூறினர். “அவர்கள் கழிந்து போன காலத்தைப் பற்றிப் பச்சாத்தாபப்படுவதில்லை; எதிர் காலத்தைப் பற்றிக் கணுக்காண்ப தில்லை. அவர்கள் நிகழ்காலத்தோடே வாழ்கிறர்கள். அதனல் பிரகாசமுடையவராயிருக்கின்றனர். எதிர் காலத்தைப் பற்றிச் சிந்திப்
85

Page 64
பதாலும், கழிந்து போனவற்றைப் பற்றிப் பச்சாத்தாபப்படுவதினு லும், முட்டாள்கள், வெட்டி வீழ்த்தப்பட்ட பச்சை நெட்டிகள் வெய்யிலில் காய்வது போலக் காய்ந்து விடுகின்றனர்.
சதி என்று சொல்லப்படும் விழிப்பு, நிலை (கடைப்பிடி), உணர்விலே
“நான் இதைச் செய்கிறேன், நான் அதைச் செய்கிறேன்” என்ற தன்முனைப்பு உடையதாய் இருக்கக்கூடாது. நான் செய்கிறேன் என்ற அபிமானம், உண்டாகுமானல், தன்னுணர்வு உண்டாகி விடுகிறது. தன்னுணர்வு உண்டானல் நீங்கள் செய்யும் கருமத்தில் வயித்திராது, நான் என்ற முனைப்புடையவராகிறீர்கள். அதனல் கருமத்தைத் திருத்தமாகச் செய்ய முடியாது போகிறது. தன்னை முற்ருய் மறந்து கருமத்தை மாத்திரம் செய்வதில் ஈடுபட்டு அதில் மூழ்கிவிட வேண்டும். ஒரு பேச்சாளர் “நான் சபையோருக்கு அறிவுரை புகட்டுகிறேன்” என்று தன்னுணர்வுடையவராவரானல் அவர் பேச்சுக் குழம்பி, சிந்தனைப் போக்கு இடையறுந்துபோகும். ஆனல் அவர் தாம் எடுத்துக் கொண்ட விஷயத்தில் மூழ்கித் தன்னை மறந்து பேசத்துவங்கினல், அவருடைய பேச்சுச் சிறக்கும்; எடுத்த விஷயத்தை தெளிவாக விளக்குவார். அவருடைய திறமை உச்ச நிலையை அடையும். கலைத் துறையிலும் காவியத்துறையிலும், அறிவுத்துறை யிலும் ஆன்மீகத்துறையிலும் சிறந்து விளங்கும் ஆக்கங்களெல்லாம் தன்னை மறந்த நிலையில் உண்டான விளைவுகளே. இவற்றின் சிருட்டி கர்த்தாக்கள், தம்மை மறந்து, தம் ஆக்கங்களில் ஈடுபட்ட நேரங்களில் பிறந்தவையே அவை. அந்நேரங்களில் அவர்கள் தம்முணர்வற்ற வர்களாய் பரவசநிலையில் காணப்படுவர்.
இந்தச் சதி என்னும் விழிப்புநிலை, நமது கருமங்களைத் தன்னுணர் வினறிப் புரியும் கடைப்பிடி, நிகழ் காலத்தில் நிலைத்துக் கை மேலுள்ள கருமத்தைச் செய்யும்படி அறிவுறுத்த, புத்தபகவானல் போதிக்கப்பட்டது. ஸென் பெளத்தமும் இதனையே போதிக்கும். இங்கே விழிப்பு நிலையை உண்டாக்குவதற்கு இந்தத் தியான முறை யில் குறிப்பிட்ட கருமங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டிய தில்லை. நீங்கள் செய்யுங் கருமங்மளைப் பற்றி மாத்திரம் விழிப்பாக தியானமாய் இருக்கவேண்டும். இந்தத் தியானத்துக்காக உங்கள் விலையுயர்ந்த அருமையான நேரத்தில் ஒருவிநாடியைக் கூடச் செலவு செய்ய வேண்டியதில்லை.நாளாந்த வாழ்வில் உண்டாகும் கடமை களைப் பற்றி அல்லும் பகலும் விழிப்புடையவராய், முன்னுணர் வுடையவராயிருக்க வேண்டும். மேலே ஆராய்ந்த இவ்விரு தியான முறைகளும் நமது உடல் சம்பந்தமானவை.
1. S 1. (P. T. S.) uš. 5.
86

இனி எமது உணர்ச்சிகள் (வேதனைகள்) சம்பந்தமாக மேற கொள்ளப்படும் தியானம் ஒன்று உண்டு. நமது உணர்ச்சிகள் இன்ப உணர்ச்சி யாகவோ துன்ப உணர்ச்சியாகவோ, நொதுமல் உணர்ச்சி யாகவோ இருக்கலாம். இங்கே ஓர் உதாரணத்தை மாத்திரம் எடுப் போம். நீங்கள் துன்ப உணர்ச்சியை அடைகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில் உங்கள் மனம் கலக்கமுற்றதாய், தெளிவின்றி, மடிவுற்றிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் நீங்கள் கவலைப்படுவதற்குக் காரணமே தெனபடுவதில்லை. இந்தத் துன்ப வுணர்ச்சி பற்றி நீங்கள் கவலைப்படாதிருக்கப்பழகிக்கொள்ள வேண்டும். துன்பம், கவலை, துயர் என்ற உணர்ச்சிகள் வரவேண்டிய தற்கு என்ன காரணமென்று தெளிவாக அறிய முயல வேண்டும். காரணத்தை ஆராய முயலுங்கள், அது எவ்வாறு தோன்றுகிறது, எவ்வாறு மறைகிறது என்பதை ஆராய முயல வேண்டும். விஞ்ஞானி, ஒரு பொருளை ஆராய்வது போல ஆராய வேண்டும். தன்னை அந்த ஆராய்ச்சியில் சம்பந்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. அதாவது பற்றின்றிப் புறநோக்காக ஆராய வேண்டும். என்னுடைய உணர்ச்சி, என்னுடைய வேதனை என்று சொல்லி அதை ஆராயக் கூடாது. இஃது ஒர் உணர்ச்சி, ஒரு வேதனை என்று புற நோக்காக ஆராய வேண்டும். “நான்” என்ற போலி எண்ணத்தை மறந்துடவிட வேண்டும். அந்த உணர்ச்சியின் தன்மையை உணரும் போது, அது எவ்வாறு தோன்றி மறைகிறதென்பதை அறியும்போது, உங்கள் மனம், அந்த உணர்ச்சி விஷயத்தில் சொந்தம் பாராட்டாது பற்றற்று நிற்கிறது. இதனல் பற்றின்மையும் விடுதலையும் உண்டாகிறது. எல்லா வேதனைகளும் இதே முறையில் ஆராய்ந்து பார்க்கப்படலாம்.
இப்போது நம்மனம் சம்பந்தமான தியானம் பற்றி ஆராய்வோம். உங்கள் மனம் பற்றுடையதாயிருந்தால் அல்லது பற்றற்ற நிலையிலிருந் தால் அதை முற்றக உணர்ந்து கொள்ள வேண்டும். துவேஷம், பகை, பொருமை என்பவற்றின் வசப்பட்டிருந்தால் அதை முற்றக உணர்ந்து கொள்ள வேண்டும். கருணை, மைத்திரி என்பன நிரம்பியிருந்தால் அல்லது தெளிவற்றிருந்தால், அல்லது தெளிவாக விஷயங்களைப் புரியக்கூடியதாயிருந்தால் அல்லது இன்னேரன்ன குணங்களைக் கொண்டிருந்தால் அதை நன்கு அறிந்து கொள்ளக் கூடியதாயிருக்க வெண்டும். எமது மனத்தில் நிகழ்பவற்றை உள்ள படி அறிவதில் நாம் விருப்புக்கொள்வதில்லை. எங்களுக்குப் பயமும் வெட்கமும் உண்டாகிறது. அதனல் அவ்வாறு செய்ய விரும்பு வதில்லை. ஒருவன் தைரியமாக நேர்மையுடன் தன் மனத்தைத் திறந்து பார்க்க வேண்டும். கண்ணுடியில் முகத்தைப் பார்ப்பது போல மனத்தைப் பார்க்க வேண்டும்."
1. M1 (P.T.8) udé. l00.
87

Page 65
இவ்வாறு பார்ப்பதன் நோக்கம் தீர்ப்புக் கூறுவதற்கண்று, கண்டிப் பதற் கன்று, சரி எது பிழை எது, நல்லது எது தீயது எது என்று பகுத்தறி வதற்கன்று. வெறுமனே என்ன நடக்கிறது மனத்தில் என்று பார்ப்பதற்கு, ஆராய்வதற்கு, கவனிப்பதற்கு. நீங்கள் நீதிபதி யல்லவே. நீங்கள் பற்றற்று விஷயங்களை ஆராயும் விஞ்ஞானி உங்கள் மனப்பண்புகளைக் கவனித்து அதன் தன்மையைத் தெளிவா கக் கண்டு கொண்டால் அதில் தோன்றும் உணர்ச்சிகள், நிலைகள் விருப்பார்வங்கள் சம்பந்தமாகப் பற்றின்மையுண்டாகும். இந்தப் பற்றின்மையால் சுதந்தர நிலை உண்டாகிறது. அப்போது உள்ளதை உள்ளபடி காணும் பக்குவம் உண்டாகும்.
ஒர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். உங்களுக்குக் கோபம் வந்துவிட்டதென்று வைத்துக் கொள்வோம். அடக்கமுடியாத கோப மும் துவேஷமும், பகைமையும். கோபம் நிறைந்தவனுக்குத் தான் கோபமுற்றிருக்கும் நிலை தெரியாது. அந்தக் கோபநிலையை அறிந்த தும், தன் கோபத்தன்மையை அறிந்ததும், அது வெட்கமுற்றது போலத் தணியத்துவங்குகிறது. அது எவ்வாறு எழுகிறது. மறை கிறது என்று அதன் இயல்பை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இச்சந் தர்ப்பத்திலேயும் "நான்” என்ற உணர்ச்சி உண்டாகக் கூடாது “என்னுடைய கோபம்’ எனக்குக் கோபம் வந்துவிட்டதென்று நினைக்கக் கூடாது. மனத்தின் கோபத்தன்மையை ஒரு பொருளாகப் புறம்பாக அப்புறப்படுத்தி வைத்து ஆராய வேண்டும். சகல விதமான உணர்ச்சிகள், விருப்பார்வங்கள், சித்தவிருத்திகள் எல்லாவற்றையும் இவ்வாறே நோக்க வேண்டும்.
ஒழுக்கம் ‘ஆன்மீக விஷயம் அறிவு விஷயங்கள் என்பன சம்பந்த மான ஒருவகை தியானமுண்டு. நமது ஆராய்ச்சிகள், கல்விகள், கேள்விகள், உரையாடல்கள், அவற்றைப் பற்றிய விவாதங்கள் எல்லாம் இந்த வகையான தியானத்தில் அடங்கும். இந்த நூலை வாசித்தல், இதிற் கூறப்பட்ட விஷயங்களை ஆழ்ந்து சிந்தித்தல், என்பன ஒரு வகை தியானமே. கேமக தேரருக்கும் ஏனைய சிராவக அடிகளுக்கு மிடையே நடந்த உரையாடல்" என்பனவெல்லாம் ஒருவகைத் தியான மென்பதை அறிந்தோம். இந்தத் தியானத்தின் பயனக நிர்வாணம் கைவந்தது.
1. மேலே 77 ஆம் பக்கம் பார்க்கவும்.
88

இந்தத் தியானமுறைப்படி பஞ்சநீவரணங்களைப் படித்துச் சிந்தித்து ஆராயலாம். அவை :
1. காம இச்சை (காமச் சந்தம்)
துவேஷம், பகைமை, குரோதம் (வியாபாத) கழிமடம், சோர்வு, (தீன-மித்த) சஞ்சலம், கவலை (உத்தச்ச, குக்குச்ச) ஐயம் (விசிகிச்சா)
இந்த ஐந்தும் எந்தவகையான முன்னேற்றத்துக்கும், விஷய விளக்கங்களுக்கும் தடையாயுள்ளன. (பஞ்சநீவரணம் என்ருல் ஐம் பெரும் தடைகள்) இந்தத் தடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவன், நல் லது எது தீயது எது என்பதைப் பகுத்தறிய முடியாதிருப்பான்.
பொஜ்ஜங்க என்று சொல்லப்படும் ஞான அங்கங்கள் எழு குறிப் பிடப்படுகின்றன. இவற்றையும் தியானப் பொருளாகக் கொள்ள oотuо.*
ஞான அங்கம் ஏழு. அவை : 1. கடைப்பிடி. (சதி) காயத்தினுலும் மனத்தினுலும் செய்யும்
கருமங்களில் விழிப்பாயிருந்து அவற்றைத் தியானித்தல். 2. தர்மத்தைப்பற்றிய பல வித பிரச்சினைகளையும் நுணுகி ஆராய் தல் (தம்மவிசய) இதிலே நமது சமயம், ஒழுக்கம், தத்துவ ஞானம் என்பனபற்றிய கேள்விகள், கல்விகள், ஆராய்ச்சிகள், விவாதங்கள், உரையாடல்கள், இவை சம்பந்தமான உபந் நியாசங்களுக்குச் செல்லல் என்பன எல்லாம் அடங்கும். 3. கடைசிவரை உறுதியோடு உழைக்கும் சக்தி. (வீரிய)
4. பிரீதி (பீதி) விஷயங்களை மகிழ்ச்சியோடு படித்தல். மனமடிவு, அழுகுணி வேதாந்த மனுேபாவம், முதலியன தவிர்க்கப்படுதல்,
6. ஒய்வு (பஸ்ஸத்தி) உடல் மனம் இரண்டையும் ஓய்வுநிலையில் வைத்துக் கொள்ளல். உடலையோ மனத்தையோ விறைக்கவை
IJslóð)).
சமாதி அதாவது அமைதி. இதைமேலே ஆராய்ந்தோம். நடுநிலை (உபேக்கா) அலையாது நிற்கும் மத்தியஸ்தநிலை. வாழ் வின் மாற்றங்களைக் கண்டு மனங்கலங்காது அமைதியாயிருக்கும்
*மொ.ஆ.கு. பொஜ்ஜங்க-போதி அங்கம்-ஞானம் பெறுவதற்குரிய அங்கங்கள். போதி என்பது ஞானம்.
89

Page 66
இப்பண்புகளை வளர்க்க விரும்பினுல் ஒருவர் உள்ளார்ந்த விருப்ப மும், திடசங்கற்பமும், மனச்சார்பும் உடையவராயிருக்க வேண்டும். இங்கே கூறிய பண்புகளை வளர்க்க உதவும் லெளகீக காரணங்களும் ஆன்மீக காரணங்களும் பிடகநூலில் கூறப்பட்டுள்ளன.
பஞ்சக்கந்தங்களைப் பற்றியும் பாவனை செய்யலாம். சீலம் என்ருல் என்ன ? “நான் ” என்பது என்ன என்ற விஷயங்களையும் தியானிக்க லாம். மேலே ஆராயப்பட்ட நான்கு உயர்வாய்மைகளையும் தியானிக்க லாம். இவற்றை ஆராய்வதும், விமரிசித்தலும் மேலே கூறிய நாலாவது தியான முறையாகும். இவ்ற்றின் பயனக நிர்வாண சுகம் பெறலாம்.
இவற்றை விட, சம்பிரதாய பூர்வமாக, 40 விஷயங்கள் தியானப் பொருளாகக் கூறப்படுகின்றன. இவற்றுள் பிரம்மநிலை (பிரம்ம விஹாரம்) என்ற நான்கை இங்கு குறிப்பிடலாம்.
(1) எல்லையற்ற கருணையையும் நல்லெண்ணத்தையும் எங்கும் எல்லா உயிர்களிடத்தும் வேற்றுமையின்றிப் பரப்புதல் (மெத் தா) தாயானவள் தன் எக புத்திரனிடம் அன்பு செலுத்துவது போல என இது வருணிக்கப்படுகிறது. (2) துன்பமும் துயரும் அடைந்து அல்லற்படும் உயிர்கள் எல்லா
வற்றுக்கும் காட்டும் அன்பு (கருணை) (3) மற்றவர்களடையும் நன்மை, வெற்றி, மகிழ்ச்சி என்பவற்றில்
மகிழ்ச்சியடைதல் (முதிதா) (4) உபேக்கா அதாவது பற்றற்ற கலங்காத சாந்த நிலை

WI ஆம் அத்தியாயம்
புத்தபகவான் அருளிய போதனையும்
இன்றைய உலகமும்
பெளத்தம் மிக உன்னதமான விழுமிய மதம். சாதாரண லெளகீக மக்களால் அனுசரிக்கக்கூடிய தொன்றன்று. உலகைத் துறந்து, மடங்களிலோ, அமைதியான இடங்களிலோ, தனித்திருந்து தான் அதைப் பின்பற்ற முடியும். அப்போது தான் உண்மையான பெளத்தராக வாழ்ந்து நடத்தலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
புத்தருடைய போதனையைச் சரிவர அறிந்து கொள்ளாத படியால் தான், இத்தகைய தவறன கருத்து ஏற்படுகிறது. புத்த சமயத்தின் பலமுகப்பட்ட தன்மைகளைப் புரிந்து கொள்ளாது அதைப்பற்றி அரை குறையாகவும், எறுமாருகவும், யாரோ ஒருவர் எழுதிய ஏதோ விஷயங்களை வந்த வாக்கிலே வாசித்தோ, கேள்விப்பட்டோ இத்த கைய அவசரமான பிழையான முடிபுகளை மக்கள் செய்து கொள் கின்றனர். மடங்களில் உள்ள பிக்குகள் மாத்திரமன்றி, இல்லங் களில் குடும்பங்களோடு வாழ்பவருக்கும் ஏற்றதே புத்தர் போதனை. அட்டாங்க மார்க்கம் பெளத்த வாழ்வு நெறி. அது எவ்வித வேறு பாடுமின்றி எல்லார்க்கும் எற்புடையது.
உலகிலுள்ள மக்களிற் பெரும்பாலோர் துறவிகளாகிவிட முடியாது. காடுகளுக்கும் குகைகளுக்கும் சென்று வாழ்க்கை நடத்த முடியாது. இன்றைய உலகில் மக்களில் பெரும்பாலோர் தமது நாளாந்த வாழ்வில் பெளத்த சமயத்தை அது எத்துணை உயர்ந்ததானலும், துயதானுலும், அதை அனுசரிக்க முடியாவிட்டால் அது மன் பதைக்குப் பயனற்றதாயிருக்கும். புத்த தருமத்தின் நேர்க்கூட்டுப் பொருளை மாத்திரம் அன்றி உள்ளார்ந்த போக்கைச் சரியாக உணர்ந்து கொண்டால் சாதாரண மனிதனய் வாழ்ந்து கொண்டே அதைப் பின்பற்றலாம். மனித சமூகத்திலிருந்து ஒதுங்கி துராந்தர மான இடத்தில் வாழும் சிலர்க்கு பெளத்தத்தை மேற்கொள்வது இலேசாகவும் வசதியாகவுமிருக்கலாம். வேறு சிலர்க்கு இவ்வாறு ஒதுங்கி வாழ்வது அவர்களுடைய உடலுக்கும் மனத்துக்கும் மடிவை யும் மந்தத்தையும் கொடுக்கலாம். அத்தகையோரின் ஆன்மீக வாழ்வுக்கும் விவேக விரிவுக்கும் அது பொருத்தமற்றதாயிருக்க 6) ITLh.
உண்மையான துறவு, உலகைவிட்டு ஒடுலதன்று. புத்தருடைய பிரதம சீடரான சாரீபுத்திரர், ஒருவன் காட்டிலே தவ வாழ்வு
9.

Page 67
நடத்தினலும் அவனுடைய மனம் அழுக்கு நிறைந்ததாய் ஆசவங் களின் உறைவிடமாய் இருக்கலாம். வேருெருவன் கிராமத்திலோ பட்டினத்திலோ தவ வாழ்க்கை நடத்தாமலே ஆசவங்களில்லாத துரிய உள்ளமுடையவனுயிருக்கலாம். இவர்களுள் கிராமத்திலோ நகரிலோ தூய வாழ்வு வாழ்பவனே காட்டில் தவஞ் செய்பவனை விட மிக உயர்ந்தவன் என்று கூறினர்.
புத்தருடைய போதனையைப் பின்பற்றவேண்டுமானல் துறவை மேற்கொள்ள வேண்டுமென்று கூறுவது தவறன கருத்து. அப் போதனையை அனுசரிக்க விருப்பமில்லாதவர் மனத்தில் அவரை அறியாமலே உண்டாகும் ஒருவித எதிர்ப்பு. இல்லறத்திலிருந்து கொண்டே புத்த தர்மத்தை அனுசரித்து நிர்வாணமடைந்த சாதாரண வாழ்வு நடத்திய ஆண்களைப் பற்றியும் பெண்களைப் பற்றியும், பெளத்த இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அனத்த என்ற விஷ யத்தை விளக்கும் அத்தியாயத்திலே வச்சகொத்தன் என்ற பரி விராஜகரைப் பற்றிக் கூறினேம். அவன் ஒருமுறை புத்த பகவா னிடம், இல்லறத்திலுள்ள ஆண் பெண் பாலார் புத்தருடைய தர்மத்தை அனுசரித்து உயர்ந்த ஆன்மீக நிலையடைந்துள்ளனரா என்று நேரடியாகக் கேட்டான். இரண்டொருவரல்ல, நூறு இரு அநூறல்ல ஐந்நூறல்ல தருமத்தை நன்கு அனுசரித்துப் பெருந் தொகையானேர் யோகசித்தியடைந்தனர்? என்று புத்த பகவான் வற்புறுத்திக் கூறினர்.
சத்தமும் சந்தடியுமற்ற அமைதியான இடத்தில் ஒதுங்கியிருப்பது சிலர்க்கு ஏற்புடையதொரு வாழ்க்கையாகும். ஆனல் மக்கள் மத் யில் வாழ்ந்து கொண்டு அவர்களுக்கு உதவிபுரிந்து, சேவை செய்து கொண்டு, புத்த தர்மத்தையும் அனுசரித்து வருதல் நிச்சயமாகத் தைரியமானதும் பாராட்டுக்குரியதுமான காரியமாகும். ஒழுக்கம், ஆன்மீகம், விவேகம் என்ற துறைகளில் பூர்வாங்கப் பயிற்சி பெறு வதன் மூலம் சில சமயம் ஒருவன் தன் மனத்தையும், குணத்தை யும் பண்படுத்துவதற்காகச் சிறிது காலம் ஒதுங்கியிருந்து பலம் பெற்ற பின்னர் மற்றவர்க்குச் சேவை செய்வதற்காக வெளியே வருவது பயனுள்ளதாகும். ஆனல் தன்னுடைய சுகத்தையும் விமுத்தியையும் மாத்திரம் கருத்தில் கொண்டு வாழ் நாளைத்தனிம்ை யில் கழிப்பதும், தன் சகாக்களின் நன்மையைக் கருதாதிருப்பதும், மைத்திரி, கருணை பிறர்க்கென வாழ்தல், என்ற அடிப்படையில் கட்டப்பட்ட புத்தருடைய போதனைக்கு ஒவ்வாததாகும்.
1. MI (PTS.) ust. 30-31. a. MI (P.T.S.) ud. 490.
92

சாதாரண மனிதனக வாழ்ந்து கொண்டே, புத்த தர்மத்தை அனுசரிக்க முடியுமானல், சாவகசங்கத்தை புத்தர் எதற்காகத் தாபித் தார் என்று ஒருவர் கேட்கலாம். தம்முடைய சொந்த ஆன்ம விருத்தியையும், அறிவு வளர்ச்சியையும் மாத்திரம் கருதாமல், பிறர்க்குச் சேவை செய்வதையும் கடமையாகக் கொள்ள விரும்பு வோருக்குச் சந்தர்ப்பம் அளிப்பதற்காகவே சங்கம் நிறுவப்பட்டது. குடும்பத்தனய் இல்லறம் நடத்தும் சாதாரண மனிதன் மற்றவர் களுக்குச் சேவை செய்யத் தன் முழு நேரத்தையும் செலவு செய்ய முடியாதிருப்பான். சங்கத்துப் பிக்குவானவர், குடும்பக் கவலையோ வேறு லெளகீக பந்தங்களோ இல்லாதவர். அவர் புத்தருடைய அறிவுரைப்படி “ பஹஅஜஹிைதாய ”, “பஹஅஜனசுகாய ” பெரும் பாலானவர் நன்மைக்காகவும், சுகத்துக்காகவும் தம் வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணஞ் செய்யக்கூடியவராயிருக்கிருர், வரலாற் றுப்போக்கிலே பெளத்த மடங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு மாத்திர மன்றிக் கல்வி கேள்விக்கும் கலைக்கும் மத்தியத்தானமாய் இவ்வாறே விளங்கலாயின.
இல்லற வாழ்வையும், குடும்ப வாழ்க்கையையும் தொடர்புகளையும் பகவான் எவ்வளவு கெளரவித்தார் என்பது சிகால சூத்திரத்தி லிருந்து அறியக்கூடியதாயிருக்கிறது. இந்தச் சூத்திரம் தீக நிகா யத்தில் 31 ஆவது சூத்திரமாகும்.
தன் தந்தை இறக்கும் தறுவாயில் சிகாலன் என்ற தன் மக னுக்கு கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு மேல் கீழ் என்ற திசைகளை வணங்குமாறு உபதேசஞ் செய்து இறந்தான். தந்தையின் உப தேசத்தைப் பின்பற்றிய சிகாலன் அவ்வாறே செய்து வந்தான். புத்தர் அவனுக்கு அறிவுரை வழங்கியபோது பெளத்த தர்மத்திலே " (அரியஸ்ஸ விநய-ஆரியருடைய விநயத்தில்) இந்த ஆறு திசை களும் வேறு பொருளுடையன என்று கூறினர். இந்த ஆரிய விநயத்தின்படி கிழக்கு பெற்றேரையும், தெற்கு ஆசிரியரையும் மேற்கு மனைவி குழந்தைகளையும், வடக்கு பந்து மித்திரர் சுற்றத்த வர் அயலவர் என்போரையும் கீழ் திசை பணியாட்கள், தொழி லாளர், வேலைக்காரர் என்போரையும், மேல்திசை துறவறத்தாரையும் குறிக்குமென்று கூறினர்.
“இந்த ஆறு திசைகளைத்தான் வணங்க வேண்டும். என்று கூறினர் புத்தர். இங்கேவணங்கவேண்டுமென்ற் சொல் நிறைந்த பொருளுடையதாகும். (நமஸ்ஸெய்ய) பரிசுத்தமும், கெளரவிக் தக்கதும், போற்ற்க்கூடியதுமான ஒன்ற்ையே ஒருவர் வணங்குவார். இங்கே கூறப்பட்ட ஆறுகுடும்ப சமூகத்தொடர்புள்ளவர்கள் பரிசுத்தமானவர்கள், போற்றி வழிபடத்தக்கவர்கள் என்கிறது புத்த
93

Page 68
சமயம். ஆனல் அவர்களை வழிபடுவது எப்படி ? அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதே வழிபாடு செய்வதா கும் என்கிறர் புத்தர். சிகாலனுக்கு அருளிய உபதேசத்திலே, இக்கடமைகள் விளக்கப்படுகின்றன. முதலாவது பெற்ருேர், குழந்தைகட்குத் தெய்வம் போன்ற்வர்கள், புனிதமானவர்கள் பெற்றேரை பிரமம் என்று கூறுவர் (பிரம்மாதி மாதாபிதரோ), பிரம்மா என்பவர் இந்திய சம்பிரதாயத்தில் மிக உயர்ந்த மிகப்புனி தமான இடத்தை வகிக்கிறர்கள். புத்தர் பெற்றேரை பிரம்மத்தின் நிலையில் வைத்திருக்கிறர். இன்று பெளத்த குடும்பங்களிலே மக்கள் தம் பெற்றேரைக் காலையும் மாலையும் வணங்குவது வழக்கம். ஆரிய விநயத்தின்படி அவர்கள் பெற்றேருக்குச் சில கடமைகளைச் செய்யவேண்டும். வயது முதிர்ந்தகாலத்திலே அவர்கள் பெற் ருேர்ைப் பாதுகாக்கவேண்டும் ; அவர்கள் ஆற்ற வேண்டிய தொண்டு களைச் செய்ய வேண்டும். குடும்பத்தின் கெளரவத்தைப் பாதுகக்கா வேண்டும், குடும்ப சம்பிரதாயத்தை இடையறுந்து போகாமற் காக்க வேண்டும். பெற்றேர் தேடி வைத்த பொருளைக் காப்பாற்ற வேண்டும். இறந்தபின் அவர்களுடைய அந்திமக் கிரியைகளை நிறை வேற்ற வேண்டும். பெற்றேர் தம்பிள்ளைகளுக்குச் சில கடமைகளைச் செய்ய வேண்டும். தீமையிலிருந்து அவர்களை விலக்கவேண்டும். நன்மையும் பயனுந்தரக்கூடிய தொழில்களில் அவர்களை உய்க்க வேண்டும். அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கவேண்டும். நல்ல குடும்பங்களில் அவர்களுக்கு விவாகம் செய்து வைக்கவேண்டும். நாளடைவில் தம் உடைமைகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
இரண்டாவது, மாணுக்கனுக்கும் ஆசிரியருக்குமுள்ள தொடர்பு : சீடன் குருவுக்கு மரியாதை செய்து அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவருடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும். மிக்க ஊக்கத்தோடு கல்வி பயில வேண்டும். ஆசிரியர் தம்மாணக்களுக்கு நல்ல பயிற்சி யளித்து அவர்களை நல்லவராக உருவாக்க வேண்டும். நன்றகக் கல்வி பயிற்ற வேண்டும். தன் நண்பர்க்கு அறிமுகஞ் செய்து வைக்கவேண்டும். கல்வி முடிந்த பின் அவர்களுக்குப் பாது காப்பான நிலையை உண்டாக்க வேண்டும். அல்லது தொழில் தேடிக் கொடுக்க வேண்டும்.
மூன்ருவது கணவன் மனைவிக்கிடையே உள்ள தொடர்பு. தாம் பத்தியத்தொடர்பு மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இது (சதார பிரம்மச்சரிய) என்று கூறப்படும். அதாவது புனிதமான குடும்ப வாழ்வு. இங்கேயும் பிரம்ம என்ற் சொல்லின் பொருள் கவனிக்கப்படத்தக்கது. இந்தத்தொடர்பு பெரிதும் கெளரவிக்கப்பட வேண்டியது. கணவன் மனைவி ஒருவர்க்கொருவர் உண்மையுள்ள
94

வராயிருக்க வேண்டும். மரியாதையுடையவராயிருக்க வேண்டும், அன்புடையவராயிருக்க வேண்டும். கணவன், மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கடமைகள் செய்யவேண்டியவராயிருக்கின்ற்னர். கண வன் மனைவியைக் கெளரவிக்கவேண்டும், அவள் விஷயத்தில் ஒரு போதும் அகெளரவமாய் நடந்து கொள்ளக்கூடாது. அவளிடத்தில் அன்புடையவனயும் உண்மையுடையவனயுமிருக்க வேண்டும். அவளுடைய அந்தஸ்துக்குப் பங்கம் விளைவிக்கக் கூடாது. அவளுடைய செளகரியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். உடை, ஆபரணம் முதலியவற்ற்ை அவளுக்குப் பரிசாக அளித்து அவளைப் பிரீதிப்படுத்த வேண்டும். (மனேவிக்குக்கண்வன் கொடுக்க வேண்டிய பரிசைப் பற்றி பகவான் எடுத்துக்காட்டுவதால் சாதாரண மனித உணர்ச்சிகள் விஷயத்தில் கூட, அவர் எத்துணை அனுதாபமும் நல்லெண்ணமும் உடையவராயிருந்தாரென்பது தெரிகிறது) மனைவி குடும்பவிஷயங்களை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். விருந் தினர், நண்பர், சுற்றத்தவர் பணியாட்கள், முதலியோரை உபசரிக்க வேண்டும். கணவன் மாட்டு அன்பும் உண்மையுமுடையவளாயிருக்க வேண்டும். கணவனுடைய செல்லத்தைப் பாதுகாக்க வேண்டும். எல்லா கருமங்களிலும் உற்சாகமும் திற்மையுமுடையவளாயிருக்கவேண்டும்.
நாலாவது சுற்ற்மித்திரர் அயலவர் ஆகியோரிடையில் உள்ள தொடர்பு, ஒருவர் அன்பும் பெருந்தன்மையுமுடையவராயிருக்க வேண்டும். இனிய வார்த்தைகளைப் பேசவேண்டும். பரஸ்பரம் நன்மையை உத்தேசித்துக் கருமம் புரியவேண்டும். உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது. தம்முள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. தேவையேற் படுங் காலங்களில் ஒருவர்க் கொருவர் உதவி புரிய வேண்டும். கஷ்ட காலங்களிலே கைவிடக்கூடாது.
ஐந்தாவதாக எசமான் பணியாள் தொடர்பு. பணியாள் விஷயத் தில் எசமான் பல கடமையுடையவராயிருக்கிருர், பலனியாவின் அல்லது தொழில் செய்பவரின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றவாறு வேலையை எசமான் ஏற்பாடு செய்ய வேண்டும். வேலைக் கேற்ற கூலி கொடுக்க வேண்டும். வைத்திய வசதிகள் செய்ய வேண்டும். இடையிடையே அவர்களுக்கு நன்கொடைகளும் பரிசுகளும் வழங்க வேண்டும். வேலைக்கிருட்ட6ர் சுறுசுறுப்பாகவும், ஊக்கந்தனசாத வராகவும் இருக்க வேண்டும். நேர்மையும் கீழ்ப்படிவுமுடையவரா யிருக்க வேண்டும். எசமான வஞ்சிக்கக் கூடாது. ஆர்வத்தோடு வேலை செய்ய வேண்டும்.
ஆருவது, இல்லறத்தவர்க்கும் துறவிகளுக்குமுள்ள தொடர்பு. துற்விகளின் தேவையை இல்லறத்தவர் அன்டோடும் மரியாதை
95

Page 69
யோடும் கவனித்து வரவேண்டும். "துறவறத்திலுள்ளவர் இல்லறத் தார்க்குக் கல்வி கேள்விகளை வழங்கித் தீயநெறியிற் செல்லாது அவர்களை விலக்க வேண்டும்.
இல்லறத்தைப் பற்றியும் சுற்ற மித்திரர் குடும்பம் என்பவற்றேடும் கிருகஸ்தன் கொள்ள வேண்டிய தொடர்புகளைப் பற்றியும், புத்தர், தமது ஆரிய விநயத்தில் கூறியுள்ளார். அது பெளத்த வாழ்வுத் திட்டத்தில் அடங்கிய தென்பதை அறிந்து கொள்ளலாம்.
எனவே மிகப் பழைய பிடகங்களில் ஒன்றன “சம்யுத்த நிகாயத் திலே’ தேவராஜனன சக்கரன், “புனிதமான தூய வாழ்வு நடத்தும் சீலமுள்ள பிக்குகளை வழிபடுவதுபோலவே தான் புண்ணியங்களைச் செய்யவரும், சீலமுடைய வரும், இல்லறத்தில் வாழ்வாங்கு வாழ்ப வருமான உபாசகரையும் வழிபடுகிறேன்’ என்று கூறுகிறன்."
ஒருவர் புத்த சமயத்தில் சேரவிரும்பினுல் ஞானஸ்நானம் போன்ற ஆரம்ப சடங்குகள் புத்த சமயத்தில் இல்லை. ஆனல் பிக்கு சங்கத்தில் சேர்வதானல் நெடுங்காலம் விநயபயிற்சியோடு கல்வியும் பெற வேண்டும். புத்தருடைய போதனையை விளங்கி, அதுவே சரியான வழியென நம்பி, அதைப்பின்பற்ற முயலுவாரா னல், அவர் பெளத்த சமயத்தவரெனக் கொள்ளப்படுவர். ஆனல் பரம்பரையாக பெளத்த நாடுகளில் இருந்துவரும் ஒரு சம்பிரதாய முண்டு. புத்தம், தர்மம், சங்கமென்ற மும்மணியைச் சரணடைந்து, உபாசகரால் மேற்கொள்ளப்பட வேண்டிய குணறந்த டட்சமான பஞ்ச சீலங்களைக் காத்து வந்தால், அவர் பெளத்தர் எனக் கொள்ளப்படு .-goQ j fTf .
பஞ்ச சீலங்களென்பன :
*(1) கொல்லாமை
(2) கள்ளாமை (நினைவிலும் செயலிலும் களவெடாதிருத்தல்) (3) பிறர் மனைநயவாமை (4) பொய்யாமை (5) கள்ளுண்ணுமை, இப் பஞ்சசீலங்களை பெளத்தராய் வரவிருப்பவர் எற்றுக் கொள்ள வேண்டும்.
al. 1. S 1. (PTS) Já45ub 234.
*மொ.ஆ.கு. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் ቂ ፤6ዚh. திருக்குறள் 50
மொ. அ. கு. இநதப் பஞ்ச சீலங்கள் பற்றித் திருக்குறள், கொல்லாமை, கள் ளொமை, பிறர் மனைநயவாமை, பொய்யாமை, கள்ளுண்ணுமை என ஐநது அதிகாரங்சளாற் கூறுகிறது.
96

இவை பிடகநூலிற் காணபபடும். சமய விழாக்களில், பெளத்தர் கள் கூடியிருந்து புத்த பிக்குவின் தலைமையில் இச்சீலங்களையும், மூச்சரணங்களையும் ஒதுவர். இதைவிட புறக்கிரியைகளோ சடங்கு களோ கிடையா. பெளத்தம், வாழ்வாங்கு வாழும் முறை. ஆரிய அட்டாங்க மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதே முக்கியமான கடமை. பெளத்த நாடுகளில் எல்லாம் சமய விழாக் காலங்களில் எளிமை யான அழகான பூசைகள் செய்யப்படுகின்றன. பெளத்த விஹாரை களிலே புத்தருடைய பிரதிமைகள் உண்டு. தாதுகோபங்கள் என்னும் துபங்களும் போதி மரங்களும் உண்டு. அங்கே விளக்கேற்றி, மலர் தூவி, தூபமிட்டு அடியார்கள் வணங்குவர். கடவுட் கொள்கையுடைய கோவில்களில் செய்யப்படும் பிரார்த்தனை போன்றதன்று இந்த வழிபாடு. அறங்கூறிய குரு தேவருக்குச் செய்யும் வணக்கமே இது. இவை சம்பிரதாய முறைப்படி வந்து கொண்டிருக்கும் வழிபாடுகள். ஆன்மீகத்துறையிலும் அறிவுத்துறையிலும் குறைந்த நிலையிலுள்ள வர்களின் சமய உணர்ச்சிகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் முறையில் இவை பயனுடையனவேயன்றி இப்பூசைகள் அத்தியாவ சியமென்று கூற முடியாது. இவை குறைந்த நிலையில் உள்ளவர்க்கு வழிகாட்டிகளாகவே அமையும்.
பெளத்தம் உயர்ந்த கருத்துக்களிலும் உன்னதமான ஒழுக்கத் திலும் தத்துவ ஞானத்திலுமே அக்கறை காட்டுகிறது. மக்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி அது அக்கறை கொள் வதில்லையென்று சிலர் நினைப்பதுண்டு. அது தவறு. மனிதருடைய சுபீட்சத்திலே தான் புத்த பகவான் கருத்துடைய வராயிருந்தார். தார்மீகக் கொள்கைகளையும் ஆன்மீகக் கோட்பாடுகளையும் அடிப்படை யாகக் கொள்ளாது துரிய வாழ்வு வாழ முடியாது, துரிய வாழ் வில்லாவிட்டால் மனிதன் சுகமடைய முடியாது என்று பகவான் கருதினர். ஆனல் வாய்ப்பான சமூகச் சூழலும் பொருள் வளமும் இல்லாமல் தூய வாழ்க்கை நடத்துவதும் சிரமம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
லெளகீக சுபீட்சம் தான் வாழ்வின் இலட்சியம் என பெளத்தம் கொள்ளவில்லை. அது இலட்சியத்துக்கு ஒரு சாதனமாயுள்ளது. உண்மையான இலட்சியம் சிறப்பும் உயர்வுமுடையது. ஆனல் மனிதன் மேலான சுகத்தைப் பெறுவதானல் பொருள் இன்றியமையாத சாதனமே. அதனல் ஆன்ம ஈடேற்றம் பெறுவதற்குக் குறைந்த பட்சம் லெளகீக வளம் அவசியமென்பதை பெளத்தம் எற்றுக்
97

Page 70
கொள்ளுகிறது. தனிமையான இடத்திலிருந்து தியான நிட்டைகளில் ஈடுபடும் துறவிக்கும் இந்தக் குறைந்த பட்சத் தேவைகள் அவசியமே. உயிர்வாழ்தல் என்பது சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையிலே தான் நிகழும். புத்த பகவான் இதைப் பிரித்து விட விரும்பவில்லை. சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில் தான் அவர் வாழ்வை வைத்து முழுநோக்காகக் கண்டார். தார்மீக, ஆன்மீக, தத்துவப் பிரச்சினைகள் சம்பந்தமாக அவர் செய்த போதனை பிரசித்த மானது. ஆளுல் சமூக பொருளாதார அரசியல் சம்பந்தமாக அவர் செய்தி போதனையைப் பற்றிய அறிவு விசேஷமாக மேனுட்டில் குறைவு. பன பூ ய பிடகநூல்களிலே ஆங்காங்கு இ ை:ெ சம்பந்தமான உரையாடல் கள் பல காணப்படுகின்றன. அவற்றுள் சில வற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேம். :
தீக நிகாயம் 26 ஆம் இலக்கமான “சக்கவத்தி சீஹநாத தத்தத்தில்” வறுமை (தாளித்தியமே) ஒழுக்கக் கேட்டுக்கும் களவு, பொய், இம்சை, துவேஷம், கொடுமை முதலிய குற்றங்களுக்கும் காரணமெனக் கூறப்படுகிறது. இன்றைய அரசாங்கங்களைப் போலவே புராதன்காலத்தில், ராஜாக்கள் தண்டனையால் குற்றங்களைத் தடுக்க முயன்றனர். இதே நிகாயத்தைச் சேர்ந்த “கூட தந்த சுத்தம்” இந்த உபாயம் பயனற்றதெனக் கூறுகிறது. இந்த முறை ஒரு போதும் கருதிய பலனைக் கொடுக்கமாட்டாதென்று கூறுகிறது.
குற்றத்தைத் தடுப்பதானல் மக்களின் பொருளாதார நிலையை அபிவிருத்தி செய்ய வேண்டுமென பகவான் கூறுகிறர். விவசாயி களுக்கு விதை நெல்லும் எனைய சகாயங்களுஞ் செய்து கொடுக்க வேண்டுமென்றும், வியாபாரத்திலீடுபட்டவர்க்கும் வணிகர்க்கும் முதல் வழங்க வேண்டுமென்றும், தொழில் செய்வோருக்குத் தகுந்த ஊதியம் வழங்கப்படவேண்டுமென்றும் கூறுகிறர். போதிய வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு மக்களுக்கு வசதிகளை உண்டாக்கிக் கொடுத்தால் அவர்கள் திருப்தியடைவார்கள். பயமோ கவலையோ இன்றிவாழ்வார். நாட்டிலே குற்றச் செயல்கள் அருகிச், சமாதானம் நிலவும் என எடுத்துக் காட்டியுள்ளார்.*
1. MA (PIS) பக். 290 புத்த சங்கத்து பிக்குகள் தனிப்பட்ட முறையில் உடைமை வைத்திருக்கக் கூடாது. ஆனல் சங்கத்துக்குரிய பொது சொத்தாக் வைத்திருக்கலாம். மொ. ஆ. கு. அருள் என்னும் அன்பு ஈன்குழலி பொருள் என்னும் செல்வச் செவிலியாலுண்டு. (குறள் 757) 3. DI (Qasrepubl 1929) ut. 101.
98

இதனல் பகவான் இல்லறத்தாருக்கு உபதேசம் செய்த போது பொருளாதாரநிலைமையை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்தை வலியுறுத்தினர்.ஆசையினலும் பற்றினலும் பணத்தைப் பதுக்கி வைக்க வேண்டுமென அவர் கூறவில்லை. அது அவருடைய அடிப் படைப் போதனைக்கு மாறன தாகும். அன்றியும் எந்த முறையிலும் ஒருவர் தமது சீவனுேபாயத்துக்குப் பணத்தைத் தேடுமாறும் கூற வில்லை. ஆயுதங்களை உற்பத்தி செய்வதும் அவற்றை விற்பதும் தீய சீவனுேபாய மார்க்கமெனக் கண்டித்தார் என்பதை நாம் மேலே கண்டாம்.
தீகஜானு என்ற பெயருடைய ஒரு மனிதன் பகவானை ஒரு முறை அணுகிச் சொன்னன்:
“சுவாமீ நாம் சாதாரண உபாசகர்கள், பிள்ளை குட்டிகளோடு இல்லற தருமம் நடத்துவோர். இம்மையிலும் மறுமையிலும் எமக்குச் சுகந்தரக் கூடிய அறத்தைப் போதிக்கவேண்டும்”.
இம்மையில் சுகம் பெறுவதற்கு நாலு காரியங்களுண்டு எனப் பகவான் கூறி, முதலாவது, ஒருவன் தன் தொழிலில் திறமையும் அறிவும், ஊக்கமும், ஆர்வமும் உடையவனயிருக்க வேண்டும். தொழிலை நன்கு அறிந்திருக்க வேண்டும். (உட்டான சம்பதா) என்றர். இரண்டாவதாக வியர்வை சிந்தி நல்லழியில் சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்க வேண்டும். (ஆரக்க சம்பதா) (இது அக்காலத் துப் பின்னணியை வைத்துப் புரிந்து கொள்வதானுல் கள்ளர் முதலிய எதுக்களால் இழப்புண்டாகாமல் பாதுகாக்க வேண்டுமெனக் கொள்ள வேண்டும்) மூன்றவது உண்பையும், கல்வி ஒழுக்கங்களும் கண்ணிய மும் விவேகமுள்ள நண்பர்கள் (கல்யாணமித்த) வேண்டும். அவர்கள் அவனை நல்வழியில் இட்டுச் செல்லக் கூடியவராயிருக்க வேண்டும். நாலாவது வரவுக் கேற்ற வகையில் செலவு செய்ய வேண்டும். மிக அதிகமாகவோ மிகக் குறைவாகவோ செலவு செய்யக்கூடாது. அதாவது செல்வத்தைப் பேராசையால் சேர்த்து வைக்கவுங் கூடாது. வீணுகச் செலவு செய்யவுங் கூடாது. சுருக்கமாகச் சொல்வதானல் வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும். (சமஜிலிகதா).
மறுமைக்குச் சுகந்தரக் கூடிய நான்கு சீலங்களை பகவான் அதன் பின்னர் உபதேசித்தார். (1) சிரத்தை அதாவது ஒழுக்கம், ஆன் மீகம், விவேகம் என்றதுறைகளால் வரும் பயனில் நம்பிக்கையிருக்க வேண்டும் (2) சீலம்: பஞ்சசீலங்களான கொல்லாமை, கள்ளாமை, பிறர்மனை நயவாமை, பொய்யாமை, கள்ளுண்ணுமை ஆகிய சிஸ்க்
S. பக்கம் 58 பார்க்க
99

Page 71
களை மேற்கொள்ளவேண்டும். (3) சாக: கண்ணியம், வள்ளன்மை, செல்வத்தில் பற்றும் ஆசையுமில்லாதிருத்தல் என்பன. (4) பஞ்ஞா துக்கத்தை வேரோடுகளைந்து நிர்வாண சுகத்தைத் தரும் ஞானத்தை வளர்க்க வேண்டும்."
பணத்தைச் சேமிக்கும் முறையைப் பற்றியும், செலவு செய்யும் முறையைப் பற்றியும் கூட பகவான் விரிவாகக் கூறுகிறர். உதாரண மாக சிகாலன் என்ற வாலிபனுக்கு வருமானத்தில் காற்பகுதியைத் தன் தினசரிச் செலவுக்கு வைத்துக் கொள்ள வேண்டுமென்றும், அரைவாசியைத் தொழிலில் முதலீடு செய்ய வேண்டு மென்றும், அவசர காலச் செலவுக்காக காற்பங்கைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறர்.*
புத்தர் ஒருமுறை தம்மீது சிறந்த பக்தியுடையவனும் சாவத்
தியில் பகவானுக்கு பிரசித்தி பெற்ற ஜேதவனராமம் என்ற விஹாரத்தை அமைத்துக் கொடுத்தவனுமான, அதை பிண்டிகன் என்ற தனவைசியனுக்கு, சாதாரண குடும்பத்தனய் இல்லறம் நடத்தும் ஒருவனுக்கு நாலு வகையான சுகமுண்டென விளக்கினர். முதலாவது சுகம் அத்திசுகம். அதாவது நல் வழியில் தேடிய செல்வ்ம். இது பொருளாதாரப் பாதுகாப்பு. இரண்டாவது போகசுகம் அதாவது அந்தப் பணத்தைத் தானும். சுற்றமித்திரரும், குடும் பத்தவரும், அனுபவிப்பதோடு புண்ணியங்களைச் செய்வதிலும் செலவு செய்தல். மூன்ருவது சுகம் அனணசுகம். அதாவது கடனில்லாது வாழ்தல். நாலாவது குற்றமற்ற பழியில்லாத தூய வாழ்க்கை வாழ்தல். இது அனவஜ்ஜ சுகம். மனம் வாக்குக் காயங்களினல் தீமை செய்யாமை. இங்கே மூன்று சுகங்கள் பொருளாதார அடிப் படையில் உண்டானவை என்றும் பொருளாதாரச் செம்மையும், லெளகிக சுகங்களும் பழிப்பில்லாசதுரய வாழ்வுக்கு பதினறில் ஒரு பங்கு கூட ஈடாகமாட்டாவென்றும் பகவான் அனதமிண்டிகனுக்கு அறிவுறித்தினர். ܫ
பொருளாதார அபிவிருத்தி மனிதனுடைய சுகத்துக்கு அவசியம். ஆனல் ஆன்மீகமில்லாத அறத்தில் நிலை கொள்ளாத முன்னேற்றம் உண்மையான முன்னேற்றமன்று என அவர் எடுத்துக் காட்டத் தவறவில்லை. சுகமும் சமாதானமும் திருப்தியுமுள்ள ஒரு சமூகத்தை அமைப்பதானல் ஒழுக்கமும், ஆன்மீகமும், அபிவிருத்தியடைய வேண்டுமென்பதை பெளத்தம் எப்போழுதும் வலியுறுத்தி வந்திருக் கிறது. அது லெளகீக அபிவிருத்தியை ஊக்கப்படுத்துவதில் தயங் கவில்லை.
2. A (Qa, Tepubl 1929) Lidi. 786.
2. D III (Gastripub 1929) Lu&. 115 3. A (6)sit(pol || 1929) uă. 232 233
00

அரசியல், யுத்தம், சமாதானம் என்பவற்றைப் பற்றி புத்தர் தெளி வான கருத்துடையவராயிருந்தார். அஹிம்சையும் சமாதானமுமே பெளத்தம் உலகுக்கு விடுக்கும் செய்தி. இது எல்லாராலும் நன்கு அறியப்பட்டதொரு விஷயம். எந்தவிதமான பலாத்காரத்தையும் அது எற்றுக்கொள்வதில்லை. கொல்லாமையே அதன் மூலாதார மான கொள்கை. “நீதியான யுத்தம்” என்று சொல்லக் கூடியது ஒன்றுமில்லை. இது ஒரு போலிப் பெயர். துவேஷம், கொடுமை, இம்சை கொலை என்பலை நேர்மையானவையெனக் காட்டும் நோக்க மாக ஆக்கப்பட்டதொரு அர்த்தமற்ற வார்த்தை. பெளத்த மதத்தின் படி “நீதியான யுத்தம்” என்று ஒன்றுமில்லை. ‘இது நீதி, இது அநீதி’ என்று தீர்மானிப்பது யார்? நாங்கள் துவங்கும் யுத்தம் எப்பொழுதும் நீதியானது. மற்றவர்கள் துவங்கும் யுத்தம் அநீதி யானது. பெளத்தம் இந்தக் கொள்கையை எற்றுக் கொள்வதில்லை. ரோஹினி ஆற்று நீர்ப் பிரச்சினை சம்பந்தமாக சாக்கியரும் கோலியரும் பிணங்கிக் கொண்டு சண்டை செய்ய முற்பட்டபோது பகவான் யுத்த களத்துக்குப் போய் பினக்கைத் தீர்த்துச் சண்டையை நிறுத்தி ஞர். அஹிம்சையை அவர் போதித்து மாத்திரமன்றி, சமாதானத் தானத்தை நிலை நாட்டக் காரிய பூர்வமான நடவடிக்கையை எடுத் தார். பகவானுடைய அறிவுரையைக் கேட்டு அஜாதசத்து என்ற மன்னன் வஜ்ஜிராச்சியத்தோடு உண்டான சண்டையை நிறுத்தினன்.
இன்று .ோலவே புத்தர் காலத்திலும் அநீதியாகத் தமது ராச்சி யத்தை ஆண்ட அரசர்களிருந்தார்கள். மக்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாக் கப்பட்டனர். சூறையாடப்பட்டனர். சித்திரதவதை செய்து துன்புறுத்தப் பட்டனர். அநீதியான வரிகள் விதிக்கப்பட்டுக் கொடிய தண்டனைக் குள்ளானர்கள். இக்கொடுமைகளைக் கண்டு புத்த பகவான் மன வேதனை அடைந்தார். அதனுல் நல்லாட்சி எப்படியிருக்க வேண்டு மென்டதைப் பற்றி ஆராய்ந்தார். தம்ம பத அட்டகதா என்ற நூலிலே இச்சம்பவம் கூறப்பட்டுள்ளது. அவருடைய கருத்துக்கள் அக்காலத்துச் சமூகப் பொருளாதார அரசியியல் பின்னணியை வைத்து மதிக்கப்பட வேண்டும். ஆட்சித்தலைவனன அரசனும் மந்திரி களும் நிர்வாக உத்தியோகத்தரும் ஊழல் நிறைந்தவராய், நீதியற்ற வராயிருந்தால் நாடு முழுவதுமே ஊழல் நிறைந்து, வளர்ச்சிகுன்றி, துன்பப்படும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். நாடு மகிழ்ச்சி மிக்கதாயிருக்க வேண்டுமானல் நீதி நிலவ வேண்டும். இவ்வாறு நீதியான அரசாட்சியை எவ்வாறு நிறுவலாமென்பதை “தசராஜ தம்ம’ என்ற தலைப்பில் அரசனின் !!த்துக் கடமைகள் என ஜாதக சதைகளில் கூறியுள்ளார்.
1. grisasib II 260 399 II 400 III 274 320 v 119, 378
O

Page 72
பழங்காலத்திலே அரசன் என்று வழங்கப்பட்ட வார்த்தையை
இன்று அரசு என மாற்றிக் கொள்ள வேண்டும். அரசனுடைய வத்துக் கடமை என்பதை இன்று அரசின் தலைவர் மந்திரிகள், அரசியல் தலைவர்கள், சட்டஞ் செய்யும் உத்தியோகத்தர், அதனை நிர்வாகஞ் செய்வோர் ஆகியோருக்குப் பொருத்தமுடையதாகக் கொள்ளவேண்டும்.
தசராஜதர்மங்களில் முதலாவது தானம், அதாவது கொடை, செல்வம், பொருள், பண்டம் என்பவற்றில் அரசன் பற்றுடையவனு மிருக்கக் கூடாது. மக்களின் நன்மைக்காக அவற்றை அவன் தானம் செய்ய வேண்டும். இரண்டாவது : சீலம். கொல்லாமை, கள்ளாமை, பிறரை வஞ்சியாமை, பிறரைச் சூறையாடாமை, பிறர் மனை நயவாமை பொய்யாமை, கள்ளுண்ணுமை, என்பன இச்சீலங்களாகும். இவை பஞ்ச சீலங்கள். இவற்றையாவது அரசன் மேற்கொள்ளவேண்டும்.
மூன்ருவது மக்கள் நன்மை குறித்து எல்லாவற்றையும் தியாகஞ் செய்தல் இது பரிச்சாகம் எனப்படும். மக்கள் நன்மையை உத்தே கித்து அரசன் தன் செளகரியங்களைத் தியாகஞ் செய்யத் தயாராயி ருக்க வேண்டும். டெயர் புகழ் என்டவற்றையும் தன் உயிரையுமே தியாகஞ் செய்ய வேண்டும். -
நாலாவது : நேர்மை (அஜ்ஜவ) தன் கடமையைக் செய்யும் விஷ வத்தில் அவன் டயமின்றிப் பக்கஞ்சாராது இருக்க வேண்டும், நோக்கத்தில் உண்மையுடையவனயிருக்க வேண்டும். பொது மக்களை விமாற்றக் கூடாது. ஐந்தாவது : கருணையும் மென்மையுமுடைய வணுயிருக்க வேண்டும். நல்லிசைவான சுபாவமுடையவனுயிருக்க வேண்டும்.
ஆளுவது. தன்னை ஒறுக்கும் சுபாவமுடையவனுயிருக்க வேண்டும். இது தபஸ் (த1) 6 னக் குறிப்பிடப்படுகிறது. டாம்பீகமான வாழ்வு வாழாது எளிய வாழ்வு வாழ வேண்டும். தன்னடக்கமுடைய வாஞயிருக்க வேண்டும்.
ஏழாவது துவேஷமற்றவணுய் குரோதமில்லாதவனய (அக்கோத) பகைமை எண்ணமற்றவனயிருக்க வேண்டும். எவரிடத்தும் வன் Δομή இல்லாதவனுயிருக்க வேண்டும்.
எட்டாவது : அஹிம்சை அதாவது மற்றவர்க்கு இம்சை செய்யாத வஞயிருப்பது மாத்திரமன்று யுத்தங்களைத் தவிர்த்து சமாதானத்தை நிலவச் செய்ய வேண்டும். கொலை, பலாத்காரம் என்பவற்றை எங்கே கண்டாலும் தவிர்க்க வேண்டும்.
ஒன்பதாவது : பொறு மயைக் கடைப்பிடிக்க வேண்டும் (கந்தி) கி. 'புத் தன்மை, நல்லெண்ணம் என்பவற்றைக் கொண்டவனுயி
O2.

ருக்க வேண்டும். இடுக்கண், கஷ்டம், அவமானம் என்பவற்றைப" பொறுத்துக் கொள்ள வேண்டும். கோபத்தைத் த விர்க்க வேண்டும்
பத்தாவது : எதிர்ப்பில்லாதிருத்தல் (அவிரோத). மக்களுடைய விருப்புத்துக்கு மாறக நிற்கக் கூடாது. மக்கள் நன்மைக்கு உகந்த நடவடிக்கைகளே எதிர்க்கக் கூடாது. அதாவது மக்கள் விருப்பத் துக்கு இணங்க ஆட்சி நடத்த வேண்டும்.
இத்தகைய தசராஜகர்மம் நிரம்பியவர்களால் ஆளப்படும் நாடு சுபீட்ச முடையதாயிருக்குமெனபதில் ஐயமில்லை. ஆனல் இது ஒரு கற்பனை ராச்சியமன்று. வாய் வேதாந்தமன்று. இந்தியாவிலே அசோகச் சக்கரவர்த்தி போன்ற பேரரசர்கள் இந்த தசராஜ தர்மத் துக்கமைய ராச்சியமமைத்து ஆண்டு வந்ததை நாம் அறிவோம்
இன்று உலகம் இடையருத பயமும், சம்சயமும், அமைதியின்மை யுமுடைய தாயிருக்கிறது. மனத்தால் கற்பனை செய்ய முடியாத அழிவை உண்டாக்கக் கூடிய ஆயுதங்களை விஞ்ஞானம் இன்று உற் பத்தி செய்து வருகிறது. இப்புதிய மாரக ஆயுதங்களை எடுத்துச் சுழற்றிக் கொண்டு, வல்லாரசுகள் ஒன்றை யொன்று போருக்கழைக் கின்றன. எதிரியை விடத் தாமே உலகுக்கு அதிக அழிவையும் இன்னலையும் விழைக்கும் திறமையுடையவரென வீம்புபேசிக் கொண்டி ருக்கின்றன. இந்தப் பைத்தியகாரத் தனத்தின் எல்லையை அவர்கள் அடைந்து விட்டார்கள். இத்திசையில் மேலும் ஓரடி எடுத்து வைப் பார்களானல் ஒருவரை ஒருவர் அழித்து விடுவது மாத்திரடின்றி மனித இனமே அழிந்து விடும்.
தாமே உருவாக்கிய இந்த நிலையிலிருந்து தப்புவதற்காக மன்பதை ஒருவழியைக் காண விரும்புகிறது. இதற்கு ஒரு பரிகாரந்தேட முய கிறது. இதற்கு ஒரே ஒருவழி புத்த பகவான் காட்டிய வழிதான். அவர் கூறிய வழி அஹீம்சைவழி. சமாதானம், அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, நல் லெண்ணம், சத்தியம், ஞானம், எல்லா உயிர் களையும் மதித்து போற்றுதல், தன்னலத்தைத் துறத்தல், துவே ஷம், பலாத்காரம் என்பவற்றைக் கைவிடுதல் என்ற வழி. “ இவ் வுலகில் எக்காலத்தும் பகைைம பகைமையால் தணிவதில்லை. அன் பினலே தான் அது தணியும். இதுவே காலங் கடந்த கோட்பாடு ; சனதன தர்மம்” என்று புத்தபகவான் கூறியிருக்கிறர்.
1. கி.மு. மூன்றவது நூற்றண்டிலே இந்தியப் பேரரசனுய் விளங்கிய அசோகன் தன்னுடைய நிர்வாகத்தை எந்தப் பஞ்சசீலத்துக்கிணங்க நடத்தினுனே அதே பெளத்த பஞ்சசீலமே இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் அனுசரிக்கப் பட்டு வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது. பஸ்சசீலம் என்னும் சொற்ருெடர் பெளத்த சமயத்திலிருந்து பெறப்பட்டதாகும்.
2 தம்ம பதம்- 5.
O3

Page 73
* வெகுளியை அன்பால் வெல்லுக. தீமையை நன்மையால் வெல்க, கோபத்தைக் கொடையால் வெல்க : பொய்யைச் சத்தியத் தால் செல்லுக *.
ஒருவன் அயல்நாட்டை வென்று அடிமையாக்க ஆசையும் வேட்கை யும் கொள்லானனல் அவனுக்குச் சமாதானமோ சுகமோ கிடையாது.
பகவான் கூறுகிருர் “ வெற்றி துவேஷத்தை வளர்க்கிறது. தோல்வி யடைந்தோர் துயரமடைகின்றனர். சமாதானத்தை விரும்புவோர் வெற்றி தோல்வியிரண்டையும் விட்டுச் சுகமாக வாழ்கின்றனர்.?
தன்னை வென்றவனே சமாதானமும் சுகமும் அடைகிறன். " போர்க் களத்தில் ஆயிரமாயிரம் மக்களை வெற்றி கொள்ப வனிலும் பார்க்கத் தன்னைத் தானே அடக்கி ஆள்பவன் மேலான வெற்றி வீரனவான்."
இவையெல்லாம் ரொட்ப அழகாகத்தானிருக்கின்றன. உயர்ந்தவை மாண்பு மிக்கவை. ஆனல் யார் இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரப்போகிறர்கள். இவை திண்ணை வேதாந்தம் என்றுநீங்கள் சொல்லக்கூடும். அப்படியானல் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள் ளுதல் காரிய பூர்வமான செயலா ? ஒருவரை ஒருவர் கொல்வது பயனுடையதா ? சதா பயமும் சம்சயமும் கொண்டு காட்டு மிருகங் கள் போல வாழ்வது பயனுள்ள செயலா ? செளகரியமானதா காரிய பூர்வமானதா ? பகையை எப்போதாவது பகையினல் வென் றிருக்கிறீர்களா ? கெடுமையைக் கொடுமையில்ை வென்றிருக்கி நீர்களா ? ஆனல் தனிப்டட்ட முறையிலே பகையை அன்பினல் வென்ற வரலாறுகள் உண்டு. தீமையை நன்மையால் வென்ற சந்தர்ப்பங்களுண்டு. தனிப்பட்டவர் விஷயத்தில் இது சாத்தியமாக லாம், தேசங்களைப் பொறுத்தவரையில் சர்வதேசப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் இது சாத்தியமில்லையென்று கூறுவீர்கள். * தேசம் ” “நாடு” “சர்வதேசம்’ என்ற பிரசாரப் போக்குடைய அரசியல் மயான சொற்களேக் கேட்டு மக்கள் உள்ளம் மயக்கமடை கிறது. தன்வச Lழிகிறது : குருடாகிறது. ஏமாற்றமடைகிறது. தேச மென்ருலென்ன ? மக்களின் கூட்டமல்லது தேசமோ, நாடோ செயல்புரிகிறதா ? தனிப்பட்டவர் தான் செயல்புரிகிறர்கள். தனிப் பட்டவர் நினைப்பதையும் செய்வதையுமே தேசம் நினைக்கிறது, செய்
1. Asubun usib.-XVIII 3. 2. தம்ம பதம் XV-5. 3. தம்மபதம் VII 4
04

கிறது. தனிப்பட்டவர்க்குப் பொருத்தமானதே நாட்டுக்கும் பொருத் தமாகிறது, பகையை அன்பினலும் கருணையினலும் தனிப்பட்ட முறையில் தணிக்க முடியுமானல் தேசரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தணிப்பதற்கு என் முடியாது? தனிப்பட்டவர் கூட பகையை அன்பினல் தணிப்பதானல் ஒருவரிடம் எல்லையற்ற தைரியமும், வீரமும், சிரத் தையும், ஆன்மபலத்தில் நம்பிக்கையும் வேண்டும். அப்படியானல் சர்வதேச விஷயங்களில் இப்பண்புகள் எவ்வளவு அதிகம் தேவைப் படுகின்றன. காரியபூர்வமானதன்றெனக் கூறும்போது அது சுல பமான தன்றெனப் பொருள் கொள்வீரானல் நீர் சொல்வது சரி. அது உண்மையில் அத்துணைச்சுலபமானதன்று தான். ஆனல் அதை முயன்று பார்க்கவேண்டும். அது அபாயம் மிக்க தானுல்
அணு ஆயுத யுத்தத்தை விட ஆபத்துள்ளதா ?
சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு பேர் அரசன் இந்தியாவில் இருந்தான். அவன் டெளத்த சக்கரவர்த்தியாக கி. மு. மூன்றம் றுற்றண்டிலே அஹிம்சை, சமாதானம், கருணை என்பவற்றை அடிப் படையாகக் கொண்டு ஒரு பெரிய ராச்சியத்தை ஆண்டான். அசோகன் உள்நாட்டு விவகாரங்களிலும் வெளிநாட்டு விவகாரங்களிலும் இக் கொள்கைகளையே மேற்கொண்டான். அவனிடம் அவ்வாறு செய்ய தைரியமும், சிரத்தையும் காட்சியும் இருந்தன. அவனுக்கு “தேவர் களுக்குப் பிரியமானவன்” என்ற பெயர் வழங்கப்பட்டது. இன்று இவற்றை நினைக்கும் போது பெரிய ஆறுதலும் மனத்திலே எத்துணை அருட் சிளர்ச்சியும் உண்டாகிறது.
முதலிலே அப்பேரரசன் தன் கந்தையான பிந்துசாரனும், பேர னன சந்திரகுப்தனும் காட்டிய வழியிற் சென்று இந்தியத்துணைக் கண்டம் முழுவதையும் வென்று வெற்றிவாகை சூட எண்ணினன். கலிங்கத்தின் மீது படையெடுத்து அதை வென்று தன்ராச்சியத் தோடு சேர்த்துக்கொண்டான். இலட்சக்கணக்கானவர் இந்த யுத்தத் தில் கொல்லப்பட்டும், காயமுற்றும், சிறைப்படுத்தப்பட்டும் சித்திர வதை செய்யப்பட்டு மிருந்தனர். பின்னர் அவன் புத்த மதத்தைத் தழுவியதும் புத்தரின் அறநெறி அவனை முற்ருக மாற்றிவிட்டது. கற்பாறையில் அவன் செதுக்கு வித்த பிரசித்தி பெற்ற சிலாசாசன மொன்றிலே (இது 13 ஆவது சிலாசாசனம் எனப்படும். இதனை இன்றும் காணலாம்.) இதிலே கலிங்க வெற்றியைப்பற்றி அவன் பகிரங்கமாகத் தன் பச்சாத்தாபத்தைத் தெரிவிக்கிருன். அந்த உயிர்க் கொலையை நினைக்கும் போது "தன்னெஞ்சம் வெடிக் கிறதெனக் கூறி இனிமேல் போருக்கென்று வாள் வீசுவதில்லை யெனவும் எல்லா உயிர்சளும் இம்சையடையாது தன்னடக்கமும்,
05

Page 74
அமைதியும், மெனமையுமுடையனவாய் வாழ வேண்டுமென்றும் பகிரங்கமாகப் பிரசித்தப்படுத்தினன். ஈேவானம் பிரியனுன அசோகன் இதையே மேலான வெற்றியாகக் கருதுகிறன் ; அதாவது தர்மத் தினல் பெற்ற வெற்றி (தம்மவிஜய). அவன் போரைத் துறந்ததுமட்டு மன்றி, “என் புத்திரரும் பெளத்திரரும் புதியதொரு வெற்றியை ஒரு பொருளாகக் கொள்ளமாட்டார்” எனத்தன் விருப்பத்தையும் தெரிவித்தான். தர்ம விஜயத்தையே பெரிய வெற்றியாக அவர்கள் கருதுவாராக. அது இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கு மெனக் கருதினன்.
உலக சரித்திரத்திலே தன் அதிகாரத்தின் உச்சநிலையிலேயிருந்த ஒர் வெற்றி வேந்தன் மேலும் நாடுகளைக் கைப்பற்றும் வல்லமை பெற்றிருந்த ஒருவன், போர் வேண்டாம் இம்சை வேண்டாம் சமா தானமும் அஹிம்சையுமே வேண்டுமென்று கூறி யுத்தத்தை கைவிட்ட ஒரே ஒரு சந்தர்ப்பம் இதுவே.
உலகம் மேற்கொள்ள ஒரு போதனை இங்கே உண்டு. ஒரு சக்கர டிர்த்தி போரையும் பலாத்காரத்தையும் வெறுத்து, அஹிம்சையையும் சமாதானத்தையும் மேற்கொள்ளுகிறர். அசோகனுடைய தர்மிஷ்டப் போக்கை வாய்ப்பாகக் கொண்டு அயல்நாட்டு மன்னர் அவன் மீது படையெடுத்ததாகச் சரித்திரத்தில் சான்றில்லை. அவன் உயிரோடிருந்த காலத்தில் அவனுடைய ராச்சியத்தில் உள்நாட்டுப் புரட்சிகளேற் பட்டதாகச் செய்தி இல்லை. நாடெங்கிலும் சமாதானமே நிலவிற்று. அவனுடைய ராச்சியத்துக்குப் புறம்பேயுள்ள ந:ட்டவரும் அவனுடைய கருணை மிக்க தலைமையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. வல்லரசுகளின் பலத்தைச் சமன்படுத்துவதாலோ, அணு ஆயுதங்களைக் கொண்டு வெருட்டுவதாலோ, சமாதானத்தை எற் படுத்தலாமென்று பேசுவது மடைமை. ஆயுதப் பெருக்கம் பயத்தை உண்டாக்குமேயன்றி சமாதானத்தை உண்டாக்காது. பயத்தினுல் உண்மையான சமாதானத்தை நிலைநாட்டலாம் என்று நினைப்பது முடியாத காரியம். பயத்தினல் துவேஷமும், பகைமையும், குரோத முமே யுண்டாகும். தற்காலிகமாக அவை அடங்கியிருக்கும். ஆனல் தருணம் எற்பட்டதும் எந்நேரமும் வெடித்துச் சீறி வெளிவரும். மைத்திரி நல்லெண்ணம் நிலவவேண்டும். பயம், சம்சயம், ஆபத்து என்பன் அற்ற சூழ்நிலையில் தான் உண்மையான சமாதானம் நிலவும்.
அதிகாரப் போட்டியில்லாத, வெற்றி தோல்விகளில்லாத சாந்தியும் சமாதானமுமுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே பெளத்தத்
தின் நோக்கம். இங்கே பாவம் 1ழி அறியாதவ இம்சிக்கப்பட
106

மாட்டார்கள். ராணுவ பலத்தாலும் பொருளாதார யுத்ததினலும் கோடிக்கணக்கான மக்களை வெற்றி கொள்பவனை விட தன்னைத்தான் அடக்கி வென்றவனையே மக்கள் மதிப்பர். பகையை அன்பினுல் வெல்வார்கள். நன்மையினல் தீமையை வெல்வார்கள்; அழுக்காறு, குரோதம், பகை எண்ணம் பேராசை என்பன மனிதனுடைய மன தைக் களங்கப் படுத்தமாட்டா. மக்கள் கருணையினுல் தம் தொழி லெல்லாவற்றையும் செய்வர்,சிறிய செந்துக்கள் உட்பட எல்லோரும் நீதியோடும், மதிப்போடும் அன்போடும் நடத்தப்படுவர். வாழ்வு லெளகீக சுபீட்சம் நிறைந்ததாய் சமாதானமும் நல்லிணக்கமும் உடையதாய், உயர்வற உயர்ந்த நிர்வாண சுகத்தை நோக்கிச் செல்லும். அதுவே பரமார்த்தம்.
07

Page 75
தெரிந்தெடுக்கப்பட்ட சில சூத்திரங்கள்
மொழிபெயர்க்க இங்கே தெரிந்தெடுக்கப்பட்ட பாளிச்சூத்திரங்களின் நடைபற்றிச் சில விளக்கம் கூறவிரும்புகிறேம். இக்கால வாசகர் அவற்றைப் புரிந்து நயந்து கொள்வதற்கு அது அனுகூலமாயிருக்கும்.
புத்த பகவான் பரிநிர்வாணமெய்தி மூன்று மாதங்களுக்குப் பின்னர், அவரோடு நெருங்கிப் பழகிய சீடர்களின் கூட்டமொன்று கூடிற்று. அந்தக் கூட்டத்திலே அவர்கள் ஞாபகத்தில் வைத்திருந்த போதனைகள், உரையாடல்கள், விநய விதிகள் என்பன அனைத்தும் ஒதப்பட்டு அவை நிசமானவை என எற்றுக் கொள்ளப்பட்டு, அவை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. இப்பிரிவுகள் நிகாயங்கள் எனப் பட்டன. இந்த நிகாயங்கள் திரிபிடகம் என வழங்கப்பட்டன. இத் தொகுதிகள் வெவ்வேறு தேரர்களிடமும் (ஸ்தவிரர்-முதியவர்) அவர் களுடைய சீடர் பரம்பரையிடமும் பிற்காலச் சந்ததியினரின் நன்மைக் காகக் கர்ண பரம்பரையாக வழங்குமாறு ஒப்படைக்கப்பட்டன.
இக்கேள்வி வழக்கு இடையற்றுப்போகாமலும், உண்மையான நிலை மாருதிருப்பதற்காகவும், இவற்றைத் திட்டப்படி ஒழுங்காகப் பாரா யாணஞ் செய்தல் அவசியமாயிற்று. இத்தகைய பாராயணம் தனிப் பட்ட ஒருவரால் ஒப்புவிக்கப்படவில்லை. தொகுதியாகக் கூடிப்பாரா யணஞ் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூட் டாகப் பாராயணம் செய்வதன் நோக்கம் மூலபாடங்களில் மாற்றஞ் செய்யாமலும், அவற்றை உருமாற்றமலும், இடையில் எவற்றை யாவது புகுத்தாமலும் இருப்பதற்காகவே. கூட்டாகப் பாராயணஞ் செய்யும்போது ஒருவர் சொல்லை மறந்து போனல் மற்றெருவர் தம்முடைய ஞாபகத்திலிருந்து அதை நிரப்புவார். அல்லது ஒருவர் மூல பாடத்தை மாற்றி ஒரு சொல்லையோ சொற்ருெடரையோ கூட்டியோ குறைத்தோ விட்டால் வேருெருவர் அதைத் திருத்தி விடுவார். இவ்வாறு மூலத்தில் மாற்றமோ, திரிபோ, கூட்டல் குறைத் தலோ இல்லாதிருக்குமென நம்பப்பட்டது. இங்ங்ணம் இடையற்றுப் போகாது வந்த கேள்வி வழக்கு அந்தப் பாடத்தின் மூல ஆசிரியர் இறந்து பல ஆண்டுகளான பின்னர் தனிப்பட்ட ஒருவரால் பாடஞ் செய் யப்பட்டதைவிட நம்பத்தக்கதாகவும், உண்மைப் பாடமாகவுமிருக்கு மென நம்பப்பட்டது. பகவானுடைய போதனைகள் முதன்முதலாக கி.மு. முதலாம் நூற்றண்டில் பகவான் இறந்து பல நூற்றண்டுகள் கழிந்த பின்னர் இலங்கையில் ஒரு சங்கம் கூடி அதில் எழுதப் பட்டன, அதுவரை திரிபிடகம் முழுவதும் தலைமுறை தலைமுறையாக காண பரம்பரையாகவே வழங்கி வந்தது.
08

மூலபாடம் பாளி ாெழியில் உள்ளது. இம்மொழி மென்மையும்ம இனிமையும் ஆற்றெழுக்குப்போன்ற லாகவமும் உடையது.
கூறியதை அடிக்கடி திருப்பிக் கூறுவதும், உளங்கொளத்தக்க மெய்ம்மை முழுவதையும் ஒன்று விடாமல் உளப்படுத்தி வகுத்து ரைத்த பொருள்களின் இனவகைக் கூறுகளும், கேள்வி முறை இடை யற்றுப்போகாதிருப்பதற்கு அவசியமான ஞாபக சக்தியை வளர்ப்ப தோடு, கவிதைப் பண்பையும் அழகையும் அவற்றுக்கு உதவுகின்றன. அவை கவிதைக்குரிய சந்தத்தைப் பயன்படுத்துவதால் கவிதை நயம் உடையனவாயிருக்கின்றன. வெப்ப மண்டலத்தைச் சேர்ந்த மரச் சோலைகளிலோ, பெளத்த மடங்களில் நிலவும் அமைதியான சூழ்நிலையிலிருந்து கொண்டோ பாளியிலுள்ள இந்தச் சூத்திரங்களை ஒதும்போது அழகிய அமைதிமிக்க சாந்த நிலை இன்றும் உண்டாகி றது. கம்பீரமான பாளிச் சொற்களின், பெருமிதமும், திருப்பித் திருப்பிக் கூறப்படுவதால் உண்டாகும் பிரசித்தி பெற்ற ஒலிவண்ண மும் பொருள் தெரியாதவர் மனத்திலும் அந்நிய பாஷையில் ஒதப் படும் பயபக்தியுள்ள பண்ணிசை என்ற உணர்ச்சியை உள்ளத்தில் உண் டாக்கும். இத்தகைய பாராயணம் சம்பிரதாய முறையான இசைசார்ந்த ஒலிகள் உணர்ச்சியைக் கிளரச்செய்து சாந்தத்தையுண்டாக்குகின்றன. அதனல் சிலசமயம் வனதேவதைகள் கூட கவரப்பட்டதாக கதைகள் சில குறிப்பிடுகின்றன. இங்கே தெரிந்து தரப்படும் சூத்திரங்களிலே சில இடங்களில் மாத்திரம் மூல நூலிலுள்ள நடையை உணர்த்து வதற்காக புனருத்திகள் முற்றய மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் அவை புள்ளியிட்டுக் காட்டப்படுகின்றன. இங்குள்ள மொழிபெயர்ப்பு மூலப்பாளிச் சூத்திரங்களை அதர்ப்படயாத்து, பொரு ளுக்கும் "தமிழ் மரபுக்கும் குறைவேற்படாதவாறு புத்தபகவானு: டைய சொற்களின் தொனி சிதையாமல் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.
"மொ.ஆ.கு. இந்நூல் ஆங்கிலத்தில் ஆசிரியரால் எழுதப்பட்டபடியால் “இக்கால ஆங்கில மரபு” சிதையாமல் என ஆங்கிலப் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மொழி பெயர்ப்பாசிரியர் தமிழிலும் அவ்வாற்ே மூலத்தில் உள்ளபடி, ஒல்லும் வகையால் மொழி பெயர்த்துள்ளார்.
09

Page 76
புத்த பகவானின் முதல் உபதேசம்
தம்ம சக்கப் பவத்தன சுத்தம்
அறிவாழி ஒச்சுதல்"
இவ்வாறு நான் கேள்விப்பட்டேன். பகவான் ஒருமுறை வாரா ணசிக்கு (காசி) ச் சமீபத்திலுள்ள இசிபத்தானத்திலுள்ள (ரிஷிகள் வசிப்பிடம்) மான் தோப்பிலே வசித்தருளிய காலத்தில் ஐந்து பிக்குக்கூட்டத்தவர்க்கு உபதேசம் செய்தார்: பிக்குகளே! இல்லறத்தைத் துறந்து பரிவிராஜகனகச் சென்ற துறவி, இந்த இரு தீவிர மார்க்கங்களையும் பின்பற்றக்கூடாது. இவ்விருமார்க்கங்கள் எவை ? புலன்வருமின்பங்களில் ஈடுபட்டு அதில் மூழ்கி இருக்கிருர் கள். இது கீழானது, சாதாரணமானது, பொதுமக்கள் அனுசரிப்பது, தகுதியற்றது, பயனற்றது ; மற்றது தன்லே ஒறுத்து கொடுந்தவஞ் செய்வது; இது துன்பிந் தருவது, தி குதியற்றது, பயனில்லாதது.
இந்த இரு தீவிர மார்க்கங்களையும் கைவிட்டு ததாகதர் மத்திய வழியை உணர்ந்துகொண்டார். இது காட்சி தருவது ; அறிவைக் கொடுப்பது, சாந்தியும் அகக்காட்சியும் உதவி, ஞானஒளி தந்து, நிர்வாணத்துக்கு இட்டுச் செல்வது. இந்த நடுவழி என்ன . . . . . . 2 இதுவே ஆரிய அட்டாங்க மார்க்கம். அதாவது நற்காட்சி, நல்லூற்றம் நல்வாய்மை, நற்செயல், நல்ல ஜீவைேபாயம், நல்லூக்கம், நற்கடை ப்பிடி, நல்லமைதி. ததாகதர் கண்ட மத்திய வழி இதுவே. இது காட்சிதருவது, அறிவைக் கொடுப்பது : சாந்தியும் அகக் காட்சியும் உதவி ஞானஒளி தந்து நிர்வாணத்துக்கு இட்டுச்செல்வது.
துக்கம் என்ற உயர் வாய்மை இதுவே. பிறப்பு துக்கம், மூப்புதுக் கம், பிணி துக்கம், சாக்காடு துக்கம், அவலக்கவலைக் கையாறு எல்லாம் துக்கமே. வேண்டாதாரோடு சேர்வது துக்கம், வேண்டிய வரை விட்டுப் பிரிதல் துக்கம். விரும்பியதைப் பெருவிட்டால் துக்கம் சுருக்கமாகக் கூறுவதானுல் உபாதானப் பஞ்சக்கந்தமும் துக்கமே.
*மொ.ஆ.கு.
அறவாழி அந்தணன்ருள் சேர்ந்தார்க் கல்லால் பிற்வாழி நீந்தல் அரிது (திருக்குறள்) அறவாழி அந்தணன்-புத்தபகவான் என்று கொள்வது ஆராயத்தக்கது.
O

துக்க உற்பத்தி (துக்க சமுதய) என்ற உயர் வாய்மை இதுவே: இந்த வேட்கையே (திருஷ்ணு) புனர் சென்மத்தையும், புனர்பவத்தை யும் உண்டுபண்ணுவது. அது காம ஆசையோடு பிணைந்திருக்கிறது. இங்கேயும் அங்கேயுமாகப் புதுப்புது இன்பங்களைக் காணுகிறது. இவை புலன் இன்பங்களில் வேட்கை, பவத்திலும், உயிர்வாழ வேண்டுமென் பதிலும் வேட்கை, தான் அழிந்துவிடவேண்டு மென்ற வேட்கை
துக்க நிரோதம் (துக்கத்தை ஒழித்தல்) என்ற உயர் வாய்மை இதுவே. அந்த வேட்கையை முற்றக ஒழித்தல். அதைக் கைவிடு தல், துறத்தல், அதிலிருந்து விடுதலை பெறுதல், அதனுடைய தொடர்பை விடுதல்.
துக்க நிரோத மார்க்கம் (துக்கத்தை ஒழிக்கும் மார்க்கம்) என்ற உயர் வாய்மை இதுவே. அதாவது ஆரிய அட்டாங்க மாரிக்கமே. அது நற்காட்சி நல்லூற்றம் நல்வாய்மை நற்செயல் நல்ல சீவனே பாயம் நல்லூக்கம் நற்கடைப்பிடி நல்லமைதி என எட்டு.
(1) “இது தான் துக்கமென்னும் உயர்வாய்மை” என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி (கண்) உதயமானது ஞானம் (அறிவு) உதயமானது பஞ்ஞா (விசேட அறிவு) உதயமானது வித்தியா (பகுத்தறிவு) உதயமானது ஆலோகம் (ஒளி) உதயமானது.
(2) “ இந்த துக்கமென்னும் உயர்வாய்மை முற்ற முழுதாக அறியப் படல் வேண்டும் ” என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி (கண்) உதயமானது ஞானம் (அறிவு) உதயமானது பஞ்ஞா (விசேட அறிவு) உதய மானது வித்தியா (பகுத்தறிவு) உதயமானது. ஆலோகம் (ஒளி) உதயமானது.
(3) “ இந்த துக்கமென்னும் உயர்வாய்மை முற்ற முழுதாக அறிந்து கொள்ளப்பட்டது” என்பது பற்றிய முன்னர் கேள்விப் படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி (கண்) உதய மானது ஞானம் (அறிவு) உதயமானது பஞ்ஞா (விசேட அறிருவு) உதயமானது வித்தியா (பகுத்தறிவு) உதயமானது ஆலோகம் (ஒளி) உதயமானது.
(4) " இது தான் துக்க சமுதயம் என்னும் உயர்வாய்மை’ என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தலாக என்னகத்தில் காட்சி -ஞானம் -பஞ்ஞா -வித்தியா -ஆலேகம் உதயமானது. w

Page 77
(5) “ இந்த துக்க சமுதயமென்னும் உயர்வாய்மை முற்றக நீக்கப் படல் வேண்டும் ’ என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங் கள் சமபநதமாக என்னகத்தில் காட்சி-ஞானம்-பஞ்ஞா-வித்தியா -ஆலோகம, உதயமானது.
(6) "இந்த துக்க சமுதயமென்னும் உயர்வாய்மை முற்றக நீக்கப்பட்டது” என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி-ஞானம்-பஞ்ஞா-வித்தியாஆலோகம் உதயமானது.
(7) “ இது தான் துக்க நிரோதமென்னும் உயர்வாய்மை ’ என்பது பற்றிய முன்னர் கேள்விப்படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி-ஞானம்-பஞ்ஞா-வித்தியா-ஆலோகம் உதயமானது.
(8) " இந்த துக்க நிரோதமென்னும் உயர்வாய்மை முற்றக அனுபூதிவாக்கப்பட வேண்டும் ’ என்பது பற்றிய முன்னர் கேள்விப் படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி-ஞானம்பஞ்ஞா-வித்தியா-ஆலோகம் உதயமானது.
(9) " இந்த துக்க நிரோதமென்னும் உயர்வாய்மை முற்றக அனுபூதியாக்கப்பெற்றது” என்பது பற்றிய . . . . . . . . . . உதயமானது.
(10) “ இது தான் துக்க நிரோத மார்க்கம் என்னும் உயர் வாய்மை ’ என்பது பற்றிய . . . . . . . . . . உதயமானது.
(11) “ இந்த துக்க நிரோத மார்க்கமென்னும் உயர்வாய்மை முன்ருகப் பின்பற்றப்படல் வேண்டும் ” என்பது பற்றிய . . . . . . . . . . உதயமானது.
(12) “ இந்த துக்க நிரோத மார்க்கம் என்னும் உயர்வாய்மை முற்றகப் பின்பட்டப்பெற்றது” என்பது பற்றிய முன்னர் கேள்விப் படாத விடயங்கள் சம்பந்தமாக என்னகத்தில் காட்சி-ஞானம்பஞ்ஞா-வித்தியா-ஆலோகம் உதயமானது.
இந்த மூன்று பண்புகள் பற்றியும் இந்தப் பன்னிரண்டு வழியிலும் நான்கு உயர் வாய்மைகள் பற்றி உண்மையான அறிவு தெளி வாயில்லாத வரை, பல தெய்வங்களையும் மாரர்களையும். பிரம்மாக் களையும், துறவிகளையும், அந்தணர்களையும், அரச குமாரரிகளையும்,
2.

மனிதரையும் கொண்டுள்ள உலகில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் பூரண ஞான ஒளியை நான் பெற்றுவிட்டதாக உரிமை பாராட்ட வில்லை :
நான்கு வாய்மைகள் சம்பந்தமான இந்த மூன்று பண்புகள் பற்றியும் 12 வழிகள் பற்றியும் உள்ளி உண்மை அறிவின் காட்சி முற்றகத் தெளிவானதும், பல தெய்வங்களையும், மாரர்களையும், பிரம்மாக்களையும், துறவிகளையும், அந்தணர்களையும், அரசகுமாரர் களையும், மனிதரையும் கொண்டுள்ள உலகில், மிக உயர்ந்ததுமாகக் கருதப்படும் பூரணஞான ஒளியை நான் பெற்றுவிட்டதாக உரிமை பாராட்டினேன். அப்போது உண்மையான அறிவின் காட்சி இவ்வாறு என்னகத்து எழுந்தது: என் உள்ளத்தில் உண்டான விடுதலை அசைக்கமுடியாதது. இதுவே கடைசிப் பிறப்பு. எனக்கு இனி புனர் ப்பவம் இல்லை.
இதை பகவான் கூறினர். ஐந்து பிக்குக் கூட்டத்த வரும் மகிழ்ந்து அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தமன டந்தனர்.
(சம்யுக்த நிகாய V1, 11)
1. நான்கு உயர்வாய்மைகள ஒவ்வொன்றும் சம்பந்தமான அறிவு பற்றி * மூன்று பண்புகள் உண்டென்பதை மேலேயுள்ள நான்கு பந்திகளி லிருந்து அறியலாம். முதலாவது இதுவே உண்மை என்ற் அறிவு ; இது சத்யஞானம் (சச்சஞான) இரண்டாவது இந்த சத்தியம் பற்றி ஒழுகவேண்டிய அறிவு. இது கிருத்திய ஞானம் (கிச்சஞானம்) எனப்படும். மூன்றவது அந்த ஒழுக்கம் மேற்கொள்ளப்பட்டது. கிருத ஞானம் (கதஞான) என்று அறிக. இந்த மூவகைப் பண்புகளும் நால்வகை வாய்மைகளுக்கும் பொருத்தப்பட்டால் பன்னிரண்டு வழிகள் உண்டாகின்ற்ன.
3

Page 78
எரி அனல் அறவுரை
ஆதித்த பரியாய சுத்தம் (எரியும் அனல் பற்றிய குத்திரம்)
நான் இவ்வாறு கேள்வியுற்றேன்.
பகவான் ஒருமுறை கயாவிலுள்ள காயசீஷ என்ற இடத்தில் ஆயிரம் பிக்குகளோடு வாழ்ந்துவந்தார். இவ்வாறு பிக்குகளுக்கு அறவுரை புகன்ருர்:
பிக்குகளே, எல்லாம் எரிகிறது. என்ன எல்லாம் எரிகிறது ? பிக்குகளே கண் எரிகிறது, கண்ணுல் காணும் உருவங்களெல்லாம் எரிகின்றன. காட்சி உணர்வு எரிகிறது, காட்சிக்குறிப்பு எல்லாம் எரிகிறது. குறிப்பினல் எழும் இன்பமும் துன்பமும் நொதுமலுமான காட்சி வேதனைகள் எல்லாம் எரிகின்றன. எதனுல் எப்படி எரிகின் றன. காமம் வெகுளி மயக்க்ம் என்ற அனல் பற்றி எரிகின்றது. பிறப்பு, மூப்பு, சாக்க்ாடு, அவலக்க்வலைக்க்ையாறு என்பவற்றல் எரிகிறது. காது எரிகிறது. சத்தங்கள் எரிகின்றன. புலன் எரிகிறது. காதினல் வரும் குறிப்பு எரிகிறது. காதினல் வரும் குறிப்பிலிருந்து வரும் இன்பம் துன்பம் நொதுமல் என்ற வேதனைகள் எரிகின்றன. அதுவும் எரிகிறது. எதனுல் எரிகிறது ? காமத் தீயால். . . . . . . . . . எரிகிறது.
1. டி. எஸ். எலியட் எழுதியச் The Waste Land என்ற கவிதையின் மூன்ரும் பகுதி "எரிஅனல் அறவுரை” என்ற தலையங்கத்தைக் கொண்டுள்ளது, 308 வது வரி “எரிகிறது, எரிகிற்து, எரிகிறது, எரிகிறது” என்பது. அதன் குறிப்பில் எலியட் பின்வருமாறு, எழுதுகிருர் “புத்தருடைய “எரி அனல் அறவுரை” யில் பாடம் முழுவதும் அதன் சிறப்பு நோக்கி,(மலைப்பிரசங்கத்தோடு ஒப்பிடத்தக்கது) அதிலிருந்தே இந்தச் சொற்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவை காலஞ் சென்ற QẹpGörồì 6onnữđeuữ6ởi Greörưoidỹent-tu Havard . Oriental Servies (Buddism in Translation) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. மேனுட்டில் புத்தசமய ஆராய்ச்சிை மேற்கொண்டவர்களில் திரு. வரனும் ஒரு முன்னேடி. இங்கே தரப்படும் (ஆங்கில நூல் 113 ஆம் பக்கத்தில் காணப்படும் மொழி பெயர்ப்பு) சுத்த பிடகத்தின் சம்யுத்த நிகாயம் மூல கிரந்தத்திலிருந்து இந் நூலாசிரியரால் புதிதாகமொழிபெயர்க்கப்பட்டது. வாறன் மொழி பெயர்த்தது விநய பிடகத்தைச் சேர்ந்த மஹாவக்கத்திலுள்ளகதையை சேர்ந்தது.
4

மூக்கு எரிகிறது. கந்தம் எரிகிறது. கந்தப்புலன் (உணர்ச்சி) எரிகிறது. கந்தக் குறிப்பு எரிகிறது. கந்தக் குறிப்புக் காரணமாக எழும் இன்பமும் துன்பமும் நொதுமலுமான கந்த வேதனை எரிகிறது. எதனல் எரிகிறது ? காமத்தினல். . . . . . . . . . எரிகிறது.
நாக்கு எரிகிறது. சுவை எரிகிறது. சுவைப்புலன் எரிகிறது. சுவைக் குறிப்பு எரிகிறது. சுவைக் குறிப்பினல் எழும் இன்பம், துன்பம், நொதுமல் ஆன வேதனை எரிகிறது. எதனுல் எரிகிறது. காமத் தீயால். . . . . . . . . . எரிகிறது.
உடல் எரிகிறது. பரிசப் பொருள் எரிகிறது. பரிசப்புலன் எரிகிறது, பரிசக் குறிப்பு எரிகிறது. பரிசக் குறிப்பிலிருந்து தோன்றிய இன்பம். இன்டம் நொதுமல் ஆன வேதனை எரிகிறது. எதனுல் எரிகிறது காமத்தினல். . . . . . . . . . எரிகிறது.
மனம் எரிகிறது. மனக்கருத்துக்கள் எரிகின்றன. மனப்புலன் எரி கிறது. மனக் குறிப்பு எரிகிறது. மனக் குறிப்பிலிருந்து எழும் இன்பம், துன்பம் நொதுமல் ஆன வேதனை எரிகிறது. எதனுல் எரிகிறது ? காமம். குரோதம் மோகம் என்பவற்றல் எரிகிறது. பிறப்பு, மூப்பு, சாக்காடு, அவலக்கவலைக் கையாறு என்பவற்றல் எரிகிறது.
பிக்குகளே, கல்வியறிவுள்ள உயர் சீடன் இவ்விஷயங்களை இவ் வாறு காணும்போது கண் விஷயத்தில் நிராசை கொள்கிறன். காணும் பொருள்கள் விஷயத்தில் நிராசை கொள்ளுகிறன். காணும் புலன் விஷயத்தில் நிராசை கொள்ளுகிறன். காட்சிக்குறிப்பு விஷ யத்தில் நிராசை கொள்ளுகிறன். இக்குறிப்பினல் எழும் இன்பம் துன்பம் நொதுமல் என்ற வேதனைகள் விஷயத்தில் நிராசை கொள் ளுகிறன் ; காது விஷயத்தில், சத்த விஷயத்தில் நிராசை கொள்ளு கிருன். . . . . . . . மூக்கு விஷயத்தில் நிராசை கொள்ளுகிறன். . . . . . . . கந்தம் விஷயத்தில் நிராசை கொள்ளுகிறன். . . . . ...நாக்கு விஷ யத்தில் நிராசை கொள்ளுகிருன்.. . . . . . . . சுவை விஷயத்தில் நிராசை கொள்ளுகிறன். . . . . . . உடல் விஷயத்தில் நிராசை கொள்ளுகிறன். . . . . பரிசிக்கும் பொருள் விஷயத்தில் நிராசை
5

Page 79
கொள்ளுகிருன்.. . . . . . . . மனம் விஷயத்தில் நிராசை ாள்ளு கிருன்.. . . . . . . . மனக் கருத்துகள் (கற்பனை முதலியன) விஷயத் தில் நிராசை கொள்ளுகிறன். மனப்புலன் விஷயத்தில் நிராசை கொள்ளுகிறன். மனக் குறிப்பு விஷயத்தில் நிராசை கொள்ளு கிருன். மனக் குறிப்பிலிருந்து எழும் இன்பம், துன்பம், நொதுமல் என்பன விஷயமாக நிராசை கொள்ளுகிறன்.
நிராசை காரணமாகப் பற்றற்றவனுகிறன். பற்றின்மை காரண மாக விடுதலை பெறுகிறன். விடுதலை பெற்றதும் விடுதவை பெற்றேன் என்ற அறிவைப் பெறுகிறன். அப்போது பிறப்பு ஒழிந்தது. துய வாழ்வு வாழ்ந்தேன். செய்ய வேண்டியது செய்து விட்டேன், இவ் விஷயமாக மேலும் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை என்று உணருகிறன்.
பகவான் இதைக் கூறிஞர். பிக்குகள் மகிழ்ந்து அவர் கூறிய சொற்களைக் கேட்டு ஆனந்தமடைந்தனர்.
இந்த உபதேசத்தைக் கேட்ட போதே ஆயிரம் பிக்குகளின் மனம் ஆசவங்களிலிருந்து விடுபட்டுப் பற்று நீங்கின.
(5FLrouéé5 Éia:SITuu XXXV, 28)

எல்லையற்ற கருணை
(மெத்த சுத்தம்)
செம்மையில் திறமை பெற்றவன் அந்த சாந்தியை அடைய விரும்பினல் இவ்வாறு செயல்புரிவாகை.
செயல் திறனும், நேர்மையும், பூரண நேர்மையும், அடக்கமும், செம்மையும், பணிவும் கொண்டிருக்க வேண்டும்.
போதுமென்ற மனம், எளிய வாழ்க்கை, அற்ப கடமைகன், அற்ப தேவைகள், புலனடக்கம், டகுத்தறியும் திறம், அமைவடக்கம், உடையவனய் கூடிப் பிறந்தோரை பெரிதும் பின்தொடராதவன யிருக்க வேண்டும்.
உயர்ந்த அறிவுள்ள மேலோர் பழிக்கும் இழிந்த செயல்களைக் கொஞ்சமும் செய்யாதிருப்பர். " உயிர்களெல்லாம் ᏪᏥᏪᎸᎥ0ᎧᏈ0Ꮣ .ᎧᎫᎱᎢ ராக. ஷேமமாயிருப்பாராக, அவர்கள் உள்ளம் இன்பமடைவதாக ” எனப் பின்வருமாறு நினைப்பாராக, “ பலமற்றவையும், பலமுள்ள வையும், உயர்ந்தனவும், பருத்தனவும், நடுத்தரமானவும், குறு கினவும், சிறியவும், பெரியவும், கண்ணுக்குத் தெரிவனவும் தெரி யாதனவும், அண்மையில் உள்ளனவும் சேய்மையில் உள்ளனவும் பிறந்தவுைம், பிறப்பனவும் ஆகிய எல்லா உயிர்களும் இன்பமான உள்ளம் உடையனவாக.
எவரும் எவரையும் வஞ்சிக்க வேண்டாம. எவரையும் எவ்வகை யிலும் அவமதிக்க வேண்டாம். கோபத்தினலோ மனக்கசப்பினலோ எவரும் எவர்க்கும் தீமை நினைக்கவேண்டாம்.
தன்னுயிரைக் கொடுத்தேனும் ஒரு தாய் எவ்வாறு தன் எக புத்திரனைக் காப்பாற்றுவாளோ அவ்வாறே ஒருவன் மற்ற உயிர் களிடம் எல்லாம் எல்லையற்ற அன்பை வளர்ப்பானக.
உலகம் முழுவதும் மேலேயும் கீழேயும் திசையெங்கும் தடை யற்ற பகையற்ற, குரோதமில்லாத எல்லையற்ற கருணையை வ்ளாப் பானக.
நிற்கும்போதும் நடக்கும்போதும் இருக்கும்போதும் கிடக்கும் போதும் ஒருவன் விழிப்பாயிருக்குங் காலத்தில் இந்த சதிட்டான மென்ற கடைப்பிடியிருக்க வேண்டும். இதைப் பிரம்மவிஹாரநிலை “எனக் கூறுவர்.
தவருண தரிசனங்களைப் பின்பற்றது, சீலமும் ஞானக் காட்சியு முடையவராய், புலன்வரும் இன்பங்களைத் துறந்தவர் உண்மையில் கர்ப்பத்தில் மேலும் பிறவாநிலை அடைவார்.
(சுத்த நிபாத 1-8)
7

Page 80
மங்களம்
மங்கள சுத்தம்
இவ்வாறு நான் கேள்வியுற்றேன். ஒரு சமயம் புத்தபகவான்
சாவத்தியிலுள்ள ஜேதவனத்தில், அநாத பிண்டிகன் ஆச்சிர மத்தில் எழுந்தருளியிருந்தபோது, இரவு வெகு நாளிகை சென்ற பின்னர், அந்த ஜேதவனம் முழுவதையும் தன் ஒளியினல் பிரகாச மடையச செய்த ஒரு தேவகுமரன், புத்தபகவானை அணுகி அவரை வணங்கி ஒருபுறம் நின்றன். அவ்வாறு நின்று அத்தேவகுமாரன் பாச் செய்யுளால் பின்வருமாறு கேட்டான்.
டெருத் தொகையான தேவரும், மனிதரும், தமது சிறப்பை (அபிவிருத்தியை) விரும்பி, மங்களந்தருபவை எவை என எண்ணி, வந்தார்கள். உத்தமமான மங்களம் எது எனக் கூறியருள்வீராக.
அறிவில்லாதவரோடு பழகாதிருத்தல்; அறிவாளிகளோடு பழகுதல், போற்றத்தக்கோரைப் போற்றதல், என்னும் இவை உத்தமமான மங்களங்கள்.
உகந்த பிரதேசத்தில் வாசஞ் செய்தல், முன்னே புண்ணிய கன் மங்களைச் செய்தவராயிருத்தல், தன்னை, நல்வழியில் உய்த்துக் கொள்ளுதல், இவை உத்தமமான மங்களங்கள், நிறைந்த கேள்வி (அறிவு) உடையவராயிருத்தல், கலைகளில் திறமையுடையவராயி ருத்தல், நன்கு பயிற்றப்பட்ட விநயமுடையவராயிருத்தல், இனிய பேச்சுடையவராயிருத்தல், இவை உத்தமமான மங்களங்கள்.
தாய் தந்தையரை ஆதரித்தல், மனைவி மக்களைப்பேணுதல், வியா கூல மில்லாத தொழில், இவை உத்தமமான மங்களங்கள்.
தானம், அறவழியில் ஒழுகுதல், சுற்றந்தழுவுதல், பிறர் பழியாத செயல்களைச் செய்தல் இவை உத்தமமான மங்களம்.
பாவங்களை மேற்கொள்ளாதிருத்தல், மேற்கொண்ட பாவச் செயல் களை மேலும் செய்யாது விலக்குதல், மது பானத்தை விலக்குதல், அறத்தில் அவர் வின்றியிருத்தல், இவை உத்தமமான மங்களம்.
கெளரவம், பணிவு, திருப்தி, நன்றியறிதல், சரியான நேரத்தில் அறவுரை கேட்டல் இவை உத்தமமான மங்களம்.
பொறுமை, இனியி சுபாவம், சமணர்களைத் தரிசித்தல், உசிதமான காலத்தில் அறநெறிபற்றி உரையாடல், இவை உத்தமமான பங்களம்.
8

தவம், பிரமச்சரியம், ஆரிய சத்தியங்களை உணர்தல், நிர்வாணத்தை அனுபூதியாக்கிக் கொள்ளுதல் (மெய்யுணர்வாக்கிக் கொள்ளல்) இவை உத்தமமான மங்களம்.
உலகத்தொடர்பினுல் கலங்காத உள்ளம், துயரின்மை, களங் கமின்மை, சேஷமம் இவை உத்தமமான மங்களம்.
எங்கும் இவ்வாறு நடந்து கொள்பவர், எவ்வாற்றணும் தோல்வி யின்றி யாண்டும் சுகம் அடைவார். அவர்களுடையதே இந்த உத்தமமான மங்களம்.
(சுத்தநிபாத 11-4 )
சகல கவலைகளையும் துன்பங்களையும் ஒழித்தல்
சப்பாசவ சுத்தம்
நான் இவ்வாறு கேள்வியுற்றேன். பகவான் ஒருமுறை சாவத்தியில் உள்ள ஜேதவனத்தில், அனதமிண்டிகனுடைய ஆச்சிரமத்தில், எழுந்தருளியிருந்த பொழுது, பிக்குகளை நோக்கி “பிக்குகளே” என்றர். அவர்கள் "சுவாமீ" என்றர்கள். பகவான், பின்வருமாறு கூறினர். சகல கவலைகளையும் துன்பங்களையும் ஒழிக்கும் மார்க்கத்தை உங்களுக்கு விளக்குவேன். நன்கு கேட்டுச் சிந்தியுங்கள். உங்களுக்குச் சொல்லுகிறேன். “ஆம் சுவாமீ" என்று பகவானுக்கு அவர்கள் வின்ட கூறினர்.
அவர் பின்வருமாறு மேலும் கூறினர் :- அறிந்து உணர்ந்து கொள்பவனுக்கே கவலைகளையும் துன்பங்களையும் ஒழிக்க முடியும்" அறியாதவனுக்கும் உணராதவனுக்கும் அது முடியாது. கவலை களையும் துன்பங்களையும் நீக்குவதற்கு எதை அறியவேண்டும். எதை உணர வேண்டும். இவை சாதுரியமான சிந்தனையும், சாதுரியமற்ற சிந்தனையுமாகும். சாதுரியமின்றிச் சிந்திப்பவனிடம், இதுவரை உண்டாகாத கவலையும் துன்பங்களுமுண்டாகும். அத்துடன் விற் கனவே உண்டானவை மேலும் அதிகரிக்கும். சாதுரியமாகச் சிந்திப்பவனுக்கு இதுவரை உண்டாகாத கவலையும் துன்பங்களும் உண்டாகமாட்டா. மேலும் எற்கனவே உண்டானவை மறைந்துவிடும்.
1. ஆசவம் என இச்சூத்திரத்தில் வழங்கும் சொல், தேக்கம், வெளியே ஒழுகுதல், களங்கம், அழுக்கு என்ற சாதாரணமான பொருள்களே கடந்து நிற்க்கும். இங்கே உருவகமாக உளஞ்சார்ந்த கவலைகளையும், உடல் சார்ந்த தொல்லைகளையும் குறிக்கும். அது வந்தாங்கு காண்க.
9

Page 81
பிக்குகளே (1) அகக்காட்சியால் ஒழிக்க வேண்டிய கவலைகளும் துன்பங்களுமுன்டு. (2) தன்னடகத்தால் ஒழிக்கவேண்டிய கவலை களும் துன்பண்களுமுண்டு. (3) பழக்கத்தினல் ஒழிக்கவேண்டிய கவலைகளும் துன்பங்களுமமுண்டு. (4) பொறுமையினல் ஒழிக்க வேண்டிய கவலைகளும் துன்பங்களுமுண்டு (5) தவிர்ப்பதால் ஒழிக்கவேண்டிய கவலைகளும் துன்பங்களுமுண்டு (6) கலையச் செய்வ தால் ஒழிக்கவேண்டிய கவலைகளும் துன்பங்களுமுண்டு (T) பயிற்சி யினல் ஒழிக்கப்பட வேண்டிய கவலைகளும் துன்பங்களுமுண்டு.
(1) பிக்குகளே, அகக்காட்சியால் ஒழிக்கப்படவேண்டிய கவலைகளும் துன்பங்களும் எவை? கல்வியில்லாத பொது ஜனங்கள், அருகத ரைத் தரிசிக்காதவர்கள் அருகதருடைய உபதேசங்களைக் கேளாத வர்கள், அருகதருடைய உபதேசங்களில் பயிற்சியில்லாதவர்கள், நல்ல வர்களைக் காணுதவர்கள், நல்லவர்களின் உபதேசங்களைக் கேளாதா வர்கள், நல்லவர்களின் உபதேசங்களில் பயிற்சியில்லாதரவர்கள், சிந்தனை செய்யவேண்டிய விஷயங்களெவை, சிந்தனை செய்ய வேண் டாத விஷயங்களெவை, என்பதைப் புரிந்து கொள்ளமாட்டார்கள்.
இனி பிக்குகளே, அவன் சிந்தனை செய்து கொண்டிருக்கும் சிந் தனை செய்யவேண்டாத விஷயங்களெவை? சில விஷயங்களைச் சிந்தித் துக் கொண்டிருக்கும் ஒருவனிடம் எற்கனவே உண்டாகாத காம ஆசவங்கள் எழுமானல், அதனேடு அவனிடம் ஏற்கனவே எழுந்த காம ஆசவங்கள் விருத்தியாகுமானல், உயிர் வாழும் ஆசவமும், பவ ஆசவமும் . . . . . . . . . . ஏற்கனவே உண்டாகாத அவித்தை என்ற ஆசவம் உண்டாவததோடு ஏற்கனவே உண்டான அவித்தை ஆசவம் விருத்தியடையுமானல், அவன் சிந்தனை செய்யக்கூடாத விஷயங்கள் இவையே. இவற்றை அவன் சிந்திப்பான்.
பிக்குகளே, அவன் சிந்தனை செய்யாதவையும், சிந்தனை செய்ய வேண்டியவையுமான விஷயங்கள் எவை? ஒருவன் சில விஷயங்: களைச் சிந்தனை செய்யும்போது அவனிடத்து உண்டாகாத காம ஆசவங் கள் உண்டாகாது விட்டால், அதனேடு அவனிடத்து ஏற்கனவே உண்டான காம ஆசிவம் மறைந்தால், பவ ஆசவங்களும், உயிரோடி ருக்க வேண்டுமென்ற விருப்ப ஆசவங்களும். . . . . . எற்கனவே உண்டாகாத ஆசவங்கள் உண்டாகா. எற்கனவே உண்டான ஆசவங் கள் மறையுமானல், இவ்விஷயங்களே சிந்திக்கப்பட வேண்டும். இவற்றை அவன் சிந்திப்பதில்லை.
சிந்திக்க வேண்டாத விஷயங்களைச் சிந்திப்பதாலும், சிந்திக்க வேண்டிய விஷயங்களைச் சிந்தியாது விடுதலாலும், அவனிடத்துண்
20

டாகாத ஆசவங்கள் உண்டாகும். ஏற்கனவே அவனிடத்துண்டான ஆசவங்கள் பெருகும்; அப்போது அவன் சாதுரியமின்றி அவசிய மின்றி) சிந்திக்கிறன். அது பின்வருமாறு:
நான் முன்னே இருந்தேன? நான் முன்னே இருக்கவில்லையா? நான் முன்னே என்னவாயிருந்தேன்? நான் முன்னே எப்படியிருந்தேன்? என்னவாயிருந்து முன்னே என்னவாக மாறினேன்? நான் எதிர்காலத்தில் இருப்பேன? நான் எதிர்காலத்தில் இருக்கமாட்டேன? நான் எதிர்காலத்தில் என்னவாயிருப்பேன்? நான் எதிர்காலத்தில் எவ்வாறிருப்பேன்? என்னவாயிருந்து நான் எதிர்காலத்தில் என்னவாவேன் அல்லது நிகழ் காலத்தில் தன்னைப் பற்றிச் சந்தேகப்படுகிறன்: 11. நான் இருக்கிறேன?
12. நான் இல்லையா?
13. நான் யார்?
14. நான் எவ்வாறிருக்கிறேன்? 15. இவன் எங்கிருந்து வந்தான்? 16. இவன் எங்கே போவான்?
இவ்வாறு சாதுரியமின்றிச் சிந்திக்கும் போது ஆறுதவறன காட்சி களில், ஒன்று அவனிடத்துண்டாகும்.
1. எனக்கு ஆன்மா உண்டு. இக்காட்சி உண்மையானதாகவும் யதார்த்தமானதாகவும் அவனுக்குப் படும்.
2. எனக்கு ஆன்மா இல்லை. இக்காட்சி உண்மையானதாகவும் யதார்த்தமானத்ாகவும் அவனுக்குப் படும்.
3. ஆத்மாவினுல் ஆத்மாவைக் காண்கிறேன். இந்தத் தரிசனம் அவனுக்கு யதார்த்த மாகவும் உண்மையாகவும் படுகிறது.
4. ஆத்மாவினல் அனத்மாவைக் காண்கிறேன். இத்தரிசனம் அவனுக்கு யதார்த்தமாகவும் உண்மையாகவும் படுகிறது.
5. அனத்மாவினல் ஆன்மாவைக் காண்கிறேன். இத்தரிசனம் அவனுக்கு யதார்த்தமாகவும் உண்மையாகவும் படுகிறது.
6. அல்லது சக்காயதிட்டி அவனிடம் பின்வருமாறு உண்டாகிறது. இந்த என் ஆத்மாவே பேசுகிறது உணர்கிறது. இப்போதும் பின்பும் நன்மை தீமைகளின் பயனை அனுபவிக்கிறது. இந்த ஆத்மா நிரந்தர மானது, நிலையானது. சாஸ்வதமானது, மாறுபாடற்றது, எப்போழுதும் எக்காலமும் ஒரேமாதிரி இருக்கிறது.
2

Page 82
பிக்குகளே, இது தான் தரிசனங்கள் என்ற வலையில் சிக்கிக்
ாள்ளுதல் எனப்படுவது. தரிசனக்காடுகள், தரிசனங்கள் என்ற ஆரணியம், தரிசனங்களில் திக்குமுக்காடல், தரிசனங்களில் கலவர மடைதல், தரிசனபந்தங்கள். பிக்குகளே, கல்வியில்லாத சாதாரண மனிதன், தரிசனபந்தங்களில் சிக்குண்டு, பிறப்பு, மூப்பு, சாக்காடு, அவலக்கவலைக் கையாறுகளிலிருந்து, விடுதலை பெறுவதில்லை. துக் கத்திலிருந்து விடுதலை பெறுவதில்லையென்று கூறுகிறேன்.
மேலும் பிக்குகளே, உயர்ந்தவர்களின் தரிசனம் பெற்றவர், உயர்ந் தவர்களின் போதனையில் பயிற்சியுடையவர், உயர்ந்தவர்களின் போதனைகளில் நன்கு பயிற்சி பெற்றவர். நல்லவர்களின் அறிவுரை களைக் கேட்டவர், நல்லவர்களின் அறவுரைகளில் நன்கு பயிற்சி பெற்றவர், கல்வியறிவு பெற்றவரான உயர் சீடர் எதனைச் சிந்திக்க வேண்டும், எதனைச் சிந்திக்கக்கூடாது என அறிவர். எந்த விஷயங் களைச் சிந்திக்க வேண்டும், எதனைச் சிந்திக்கக்கூடாது என உணர்ந்து, சிந்திக்க வேண்டாவிஷயங்களைச் சிந்திக்க மாட்டார். சிந்திக்க வேண் டிய விஷயங்களைச் சிந்திப்பர்.
இனி, பிக்குகளே, அவன் சிந்திக்காத, சிந்திக்க வேண்டா, விஷயங் கள் எவை ? ஒருவன் சில விஷயங்களைச் சிந்திக்கும்போது அவ னிடம் இதுவரை உண்டாகாத காம ஆசவங்களுண்டாகுமானல் அத னேடு அவனிடம் எற்கனவேயுள்ள காம ஆசவங்கள் பெருகுமானல், பவ ஆசவங்களும், உயிரோடிருக்க வேண்டுமென்ற ஆசவங்களும். இதுவரை அவனிடமுண்டாகாத அவித்யா ஆசவமும் உண்டாகு மானுல் அவனிடம் எற்கனவேயுள்ள அவித்தை ஆசவம் பெருகு மானல், இவ்விஷயங்கள் சிந்திக்கப்படத் தக்கனவல்ல, இவற்றில் அவன் சிந்தனை செலுத்துவதில்லை.
பிக்குகளே அவன் சிந்தனையைச் செலுத்தும் விஷயங்களென்ன ? சிந்திக்கப்படவேண்டிய விஷயங்களென்ன ? ஒருவன் சில விஷயங் களைச் சிந்திக்கும் போது இதுவரை உண்டாகாத காம ஆசவங்கள் எழாது விட்டால் அத்துடன் அதுவரை உண்டான காம ஆசவங்கள் மறைந்து போனுல், பவ ஆசவமும் உயிரோடிருக்க வேண்டுமென்ற ஆசவமும். . . . . . . . அதுவரை அவனிடம் உண்டாகாத அவித்தியா ஆசவமும் உண்டாகா. அத்துடன் அவனிடம் எற்கனவே உண்டான அவித்தியா ஆசவமும் மறைந்துவிடும். இவ்விஷயங்களே சிந்திக் கப்படவேண்டியவை. இவற்றிலே தான் அவன் பிந்தனை செலுத்து வான்.
பிக்குகளே, சிந்திக்க வேண்டாத விஷயங்களில் சிந்தனையைச் செலுத்தாதிருப்பதாலும், சிந்திக்க வேண்டிய விஷயங்களில் சிந்தனை யைச் செலுத்துவதாலும், இதுவரை உண்டாகாத ஆசவங்கள் உண்டா
22

கமாட்டா, அத்துடன், அவனிடத்து ஏற்கனவே உண்டான ஆசவங்கள் மறைந்துவிடும். அப்போது அவன் சாதுரியமாக இது துக்கம் என்று சிந்திக்கிருன். இது துக்க சமுதயம் என்று சாதுரியமாகச் சிந்திக்கிறன். இது துக்க நிரோதம் என்று சாதுரியமாகச் சிந்திக் கிருன். இது துக்க நிவாரணமார்க்கம் என்று சாதுரியமாகச் சிந் திக்கிறன். இவ்வாறு சாதுரியமாகச் சிந்திக்கும்போது மூன்று தளை களான (சம்யோஜனங்கள்) ஆன்மா உண்டென்ற எண்ணம் (ச்க்காயதிட்டி) சந்தேகம் (விசிகிச்சா) கிரியைகள் விரதங்களில் பற்று (சிலப் பதபராமாச) என்பன அகன்றுவிடுகின்றன. பிக்குகளே இவை ஆசவங்கள், (தளைகள்) இவற்றை அகக்காட்சியால் (விபஸ்ஸனையால்) நீக்க வேண்டும்.
(2) பிக்குகளே, அடக்கத்தினல் தவிர்க்கப்படவேண்டிய கவலைகளும் ஆசவங்களும் எவை ?
பிக்குகளே, சாதுரியமாகச் சிந்திக்கும் பிக்கு, கண்களை அடக்கிக் கொண்டு சீவிப்பான். கட்புலனை அடக்காமல் வாழும்போது அவனு க்கு ஆசவங்களும், துயரும் சங்கடங்களும் உண்டானல் கட்புலனை இவ்வாறு அடக்கினல் அவை அவனுக்கு உண்டாகா.
சாதுரியமாகச் சிந்தனை செய்து அவன் செவிப்புலனை அடக்கி. . . . சுவைப்புலனை அடக்கி. . . . . . . . உடலை அடக்கி. . . . . . . . மனத்தை அடக்கி வாழ்வான். மனத்தை அடக்காமல் வாழ்வதால் ஆசவங் கள், துயர்கள், சங்கடங்கள் உண்டானல் இவ்வாறு மனத்தை அடக்கினல் அவை நீங்கும். பிக்குகளே, இவை தாம் அடக்கத் தினல் நீக்கப்படும் கவலைகளும் ஆசவங்களுமாகும்.
(3) பிக்குகளே, பயன்படுத்துவதால் விலக்கப்படவேண்டிய கவலை களும் ஆசவங்களும் எவை ?
பிக்குகளே, பிக்கு ஒருவர் சாதுரியமாகச் சிந்தனை செய்து தன் சீவர ஆடையை குளிர், வெப்பம், இலையான், கொசு, காற்று, வெய்யில் ஊர்வன என்பவற்றிலிருந்து தன்னைக் காப்பாற் றவே பயன்படுத்துவார். சாதுரியமாகவே சிந்தனை செய்து உணவை, இன்பத்துக்காகவோ, பேரூணுக்காகவோ (வெறி கொள்வதற்காகவோ) அழகுக்காகவோ அலங்காரத்துக்ககாவோ பயன்படுத்தாமல் இந்த உடலைப் போஷிப்பதற்காகவும், இளைப்பின்றியிருப்பதற்காகவும், துறவி வாழ்வை நடத்துவதற்காகவும், பயன்படுத்தி உடலில் முன்னயே இருந்து வருகிற துன்பம் பசி என்பவற்றைப் போக்கிப், புதிய வேதனைகளை உண்டாக்காமல், என் வாழ்வைப் பழியின்றி (இடை யூறின்றி) செளகரியமாக வைத்துக் கொள்வேன் என்று நினைப் பான். சாதுரியமாகச் சிந்தனைசெய்து, குளிரை விலக்குவதற்காகவும், வெப்பத்திலிருந்து ஒதுங்குவதற்காகவும், உண்ணி, கொசு காற்று,
23

Page 83
சூரியன், ஊர்வன என்பவற்றிலிருந்து பாதுகாப்புப்பெறுவதற்காக வும், பருவ கால இடையூறுகளிலிருந்து நீங்குவதற்காகவும், தனித்து ஒதுங்கியிருப்பதற்காகவுமே உறைவிடத்தைப் பயன்படுத்துகிறன். சாதுரியமாகச் சிந்தனைசெய்து, தனக்குள்ள தோக்காடு, பிணி, என் பவற்றைப் போக்குவதற்காகவும் தன் உடல் நலத்தைப் பேணுவதற் காகவுமே மருந்து, மருத்துவ வசதிகள் என்பவற்றைப் பயன் படுத்துகிறன். பிக்குகளே ! இத்தகைய ஆசவங்கள், சங்கடங்கள், துயர்கள் அவனுக்குண்டாஞல், இங்கே கூறியவாறு விஷயங்களைப் பயன்படுத்துவானனல் அவை நீங்கிவிடும். பிக்குகளே, பயன்படுத் தும் முறையினல் நீக்கக்கூடிய ஆசவங்கள், துயர்கள் இவைதாம்.
(4) பிக்குகளே, சகித்துக் கொள்வதால் நீக்கக்கூடிய துயரும், சங்கடங்களும் என்ன ?
பிக்குகளே, பிக்கு ஒருவர் சாதுரியமாகச் சிந்தனை, செய்து குளிர் வெப்பம், பசி, தாகம், உண்ணி, கொசு, காற்று. சூரியன், ஊர்வன என்பவற்றினல் வரும் உபத்திரவங் களையும், அவபனமான வேதனை தரும் பேச்சு என்பவற்றையும் தாங்கிக் கொள்வாரானல், நோவுண்டாக்கும் கொடிய, கடு கடுப்பான, இனிமையற்ற, மனதுக்கொவ்வாத, கொல்வது போன்ற உடல் உணர்ச் சிகளைத் தாங்கிக்கொள்வதில் பழக்கமுண்டாகும். இவற்றைத் தாங்க முடியாது போகுமானல், இவ்வாறு தாங்குபவர்க்கு அவற்றல் வரும் கவலை, நோக்காடு, சங்கடம் என்பன இல்லாமற் போகும்.
(5) பிக்குகளே, தவிர்ப்பதனல்நீக்கப்பட வேண்டிய கவலைகளும் சங்கடங்களும் எவை ?
பிக்குகளே, சாதுரியமாகச் சிந்தனை செய்யும் ஒரு பிக்கு வானவர் மதங் கொண்ட யானை, கொடிய குதிரை, கொடிய எருது, வெறி கொண்ட நாய், என்பவற்றைத் தவிர்ப்பான். சர்ப்பம், மரக் குற்றி, முள்ளு வேலி, குழி, செங்குத்தான பாறை, மலக்குழி என்பவற்றைத் தவிர்ப்பான். சாதுரியமாகச் சிந்தனை செய்து துறவு வாழ்வில் ஈடுபட்டிருக்கும் விவேகிகள் இவன் தவறன. வழியிற் செல்லுகிறன் என்று சொல்லக்கூடிய தகுதியற்ற இடங்களில் இருக் கக்கூடாது. தகுதியற்ற இடங்களை நாடக்கூடாது ; கூடா நண்பரோடு சேரக்கூடாது. இத்தகைய விஷயங்களைத் தவிர்ப்பானஞல் அவனுக்கு இந்தத் தொல்லைகளும், கவலைகளும், தொந்தரவுகளுமுண்டாக மாட்டா. இவை தவிர்ப்பதனல் நீக்கப்பட வேண்டிய கவலைகள் /தொந்தரவுகள் என வழங்கப்படும்.
(6) புறத்தே ஒதுக்கி விடவேண்டிய கவலைகளும் தொந்தரவுகளும் என்ன ?
24

பிக்குகளே, சாதுரியமாகச் சிந்தனை செய்து ஒரு பிக்கு வானவர் அவரிடத்தெழும் காம ஆசவங்கள் பற்றிய நினைவுகளை அணுகவிடாமல், விலக்கி விடவேண்டும். ஒதுக்கி அழித்துத் தனித்து விடவேண்டும். பகை உணர்ச்சியை மனதில் அணுகவிடக்கூடாது. பலாத்காரத்தை அணுகவிடக்கூடாது, உள்ளத்தில் எழும் அசுப எண்ணங்களை அணுகவிடாது தவிர்த்து, ஒதுக்கி, கழித்து, அழித்துத் தணித்துவிட வேண்டும். இத்தகைய தொந்தரவுகளையும், கவலைகளை யும், தொல்லைகளையும் இவ்வாறு தவிர்த்தால் அவை அவரை அணுகமாட்டா. புறத்தே ஒதுக்கிவிடவேண்டிய கவலைகளும் தொந் தரவுகளும் இவையாகும்.
(7) பிக்குகளே, பாவனையினுல் போக்கக்கூடிய துயரும் தொந் தரவுகளும் எவை ? பிக்குகளே, சாதுரியத்தோடு ஒரு பிக்குவானவர் பற்றின்மை, நிராசை, நிரோதம், துறவு என்பவற்றேடு தொடர் புடைய போதியங்கமான (அறிவொளி தரும் அங்கம்) கடைப்பிடி என்னும் சதியைப் பழகிக் கொள்ள வேண்டும். சாதுரியமாகச் சிந்தனை செய்து போதியங்கமான (தம்மவிசய) தர்ம ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். (வீரியம்) உற்சாகமென்ற போதி அங்
கத்தை மேற்கொள்ள வேண்டும். . . . . . (பிரீதி) மகிழ்ச்சி என்ற போதியங்கத்தை மேற் கொள்ளவேண்டும். . . . . . . . சாந்தி (பஸ் ஸத்தி) என்ற போதியங்கத்தை . . . . . . . . (சமாதி) சமாதி என்ற போதியங்கத்தை . . . . . . . . பற்றின்மை, நிராசை, நிரோதம், துறவு
என்பவற்றேடு தொடர்புடைய (உபேக்கா) என்ற நடுநிலை என்னும் போதியங்கத்தை மேற்கொள்ள வேண்டும். பிக்குகளே, இவற்றில் ஒன்றையேனும் பாவனை செய்யாத பிக்குவுக்கு அந்த ஆசவங் களும், சங்கடங்களும், தொந்தரவுகளு மிருக்குமானல் அவற்றைப் பாவனை செய்வதால் அவை நீங்கும். தியானத்தினுல் போக்கக்கூடிய துயரும் தொந்தரவுகளும் இவையாகும்.
பிக்குகளே, அகக்காட்சியால் (விபஸ்ஸினை) அகற்றவேண்டிய கவலைகளையும் ஆசவங்களையும் அகற்றியவர், அடக்கத்தினுல் அகற்ற வேண்டிய ஆசவங்களையும் கவலைகளையும் அகற்றியவர், பயன்படுத் துவதால் அகற்றவேண்டிய கவலைகளையும் ஆசவங்களையும் அகற்றியவர் சகிப்பினல் அகற்ற வேண்டிய கவலைகளையும் ஆசவங்களை யும் அகற்றியவர், தவிர்ப்பதால் அகற்ற வேண்டிய கவலை களையும் ஆசவங்களையும் அகற்றியவர், ஒதுக்கிவிடுவதால் அகற்ற வேண்டிய கவலைகளையும் ஆசவங்களையும் ஒதுக்கியவர், பாவனையினல் ஒதுக்கவேண்டிய கவலைகளையும் ஆசவங்களையும் பாவனையினல் ஒதுக்கியவர். இத்தகைய பிக்குவே எல்லாக் கவலைகளையும் ஆசவங் களையும் அடக்கத்தினல் ஒதுக்கியவர் ஆவர். அவர் வேட்கையை
2S

Page 84
ஒழித்தவர், தளைகளை (நீவரணங்களை) ஒழித்வதர், போலி மானத்தை (அகங்காரத்தை) அளந்தறிந்தவர். அவர் துக்கத்துக்கு முடிவு கண்டவர்.
இவ்வாறு பகவான் கூறியருள அங்குள்ள பிக்குகள் அவருடைய அருளுரை கேட்டு மகிழ்ந்து களிப்பெய்தினர்.
(மஜ்ஜிம நிகாய இல. 2)
வஸ்திரம் பற்றிய கதை
வஸ்துாபம சுத்தம் (சுருக்கம்)
ஆவ்வாறு நான் கேள்வியுற்றேன். சாவத்தியிலுள்ள ஜேதவனத் தில் அநாத பிண்டிகனுடைய ஆராமத்தில் ஒருமுறை பகவான் எழுந்தருளியிருந்தபோது * பிக்குகளே " என பிக்குகளை விழித்தார். அவர்கள் " சுவாமீ" என விடை பகர்ந்தனர். பகவான் அவர்க ளுக்குப் பின்வருமாறு கூறினர்.
" அழுக்கடைந்த கறை கொண்ட துணியை, வண்ஞன், நீலம், மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு ஆன எந்த நிறத்தில் தோய்த் தாலும் அதன் நிறம் தூய்மையற்றதாய் மங்கலாகவே இருக்கும். என் ? துணி சுத்தமாயில்லை. அவ்வாறே மனமும் அழுக்குடைய தாயிருந்தால் எதிர்கால வாழ்வு கெட்டதாகவேயிருக்கும் என எதிர் பார்க்கலாம்.
தூய வெள்ளைத் துணியை நீலம், மஞ்சள், சிவப்பு இளஞ்சிவப்பு ஆன எந்த நிறத்தில் தோய்த்தாலும் அது அழகிய தெளிவான நிறத்தைக் காட்டும். என் ? துணி தூய்மையாயிருப்பதால். அவ் வாறே மனமும் தூய்மையாயிருந்தால் எதிர்கால வாழ்வும் நல்லதா யிருக்குமென எதிர்பார்க்கலாம்.
மனத்தின் களங்கங்கள் எவை ? காமம்-அளவிறந்த ஆசை-இவை மனக் களங்கங்கள். அவ்வாறே
է 1602 56ծ)ԼԸ» • • • • • w is a கோபம் . . . . . . . . . . மனக்காழ்ப்பு. . . . . . . . பாசாங்கு . . . . . . . . . . குரோதம் . . . . . . . . . . அழுக்காறு. . . . . . . . . பேராசை . . . . . . . . . . தந்திரம் . . . . . . . . . வஞ்சனை . . . . . . . . . முரட்டுத்தனம் . . . . . . . . . . தற்பெருமை . . . . . . . . . . அகங்காரம் இறுமாப்பு . . . . . . . . வீம்பு, சோம்பல் இவை மனக் களங்கங்கள்.
126

பிக்குகளே, பிக்கு ஒருவர் காமத்தையும் அளவு கடந்த ஆசையை யையும் மனத்திலுள்ள ஒரு களங்கமாக அறிந்தால் அதைக் கைவிடு
கிருர், அவ்வாறே பகைமை. . . . . . . . . . கோபம். . . . . . . . LOGOTES காழ்ப்பு. . . . . . . . U Tag TIEGe. . . . . . . . குரோதம். . . . . . . . அழுக் 5ft D. . . . . . . . பேராசை. . . . . . . . தந்திரம் . . . . . . . . வஞ்சனை. . . . . . முரட்டுத்தனம். . . . . . . . தற்பெருமை. . . . . . . . அகங்காரம். . . . . . . . இறுமாப்பு. . . . . . . . வீம்பு. . . . . . . . சோம்பல். . . . . . . , 676öTL
வற்றை மனக் களங்கமாக அறிந்தால் அவற்றைக் கைவிடுகிறன்.
அந்த பிக்கு காமத்தை-அளவுகடந்த ஆசையை மனக்களங்கமென
உணர்ந்து கைவிட்டால் பகைமை, . . . . . . கோபம். . . . . . மனக்காழ்ப்பு 8 பாசாங்கு. . . . . . குரோதம். . . . . . அழுக்காறு. . . . . .பேராசை. . . . . தந்திரம். . . . . . வஞ்சனை. . . . . . முரட்டுத்தனம் . . . . . . தற்பெருமை « 0 tib Y v » அகங்காரம். . . . . . இறுமாப்பு. . . . . . வீம்பு. . . . . .சோம்பல். . . .
என்பவற்றை மனக்களங்கமாக அறிந்தால் அவற்றைக் கைவிட்டதும் பகவானிடம் பிரீதி அடைகிறன்:
அவர் பகவான், அருகதர், சம்மாசம்புத்தர், கல்வியும் ஞானமும் உடையவர், சுகதர், உலகங்களை அறிந்தவர், மக்களை நல்வழிப்படுத்து வதில் இணையற்றவர், தேவர், மனிதர் ஆகியோரின் குரு, புத்தர், பகவான், என்பதை உணர்வார். தருமத்தில் பெரும் பிரீதி அடை கிறர். இத்தர்மம் பகவானல் நன்ருகக் கூறப்பட்டது, இந்த வாழ் விலேயே அதன் பயனைப் பெறலாம். அது உடனடியாகப் பலன் தருவது, மக்களை வந்து பரீட்சித்துப் பாருங்கள் என்று அழைப்பது, அது நிர்வாணமென்ற இலட்சியத்தைத் தருவது. அறிஞர் அதைத் தாமாகவே அறிந்து அனுபவிக்க வேண்டியது ' என உணர்வான். அன்றியும் சங்கத்தில் பெரும் பிரீதி கொள்ளுகிறர். அச்சங்கத் தவர் நல்லொழுக்கமுடையவர், நேர்மையுடையவர், ஞானமுடையவர் கடமையைச் செய்பவர், மேலும் பகவானுடைய சங்கத்தவர் நாலு சோடியானவர், எட்டுப்பிரிவுடையவர், இவர்கள் கொடை பெறு வதற்குத் தகுதி உடையவர், அதிதிசத்காரம் பெறத் தகுதி உடைய வர், தானம் பெறத் தகுதி உடையவர், வணக்கம் பெறத் தகுதி யுடையவர், உலகுக்கு ஒப்புயர்வற்ற புண்ணியத்தின் நாற்றுக்களம் போன்றவர் என்பதை உணர்வர்.
1 நான்கு சோடிகள் என்ருல் சோதாபத்தி, சகதாகாமி, அநாகாமி, அருகத என்ற நான்கு நிலையின் மார்க்கத்தையும், அதனல் வரும் பலனையும் குறிக்கும். இவ்வாறு சோதாபத்தி நிலையில் மார்க்கம் பலம் எனவும் சகதாகாமி நிலையில் மார்க்கம் பலம் என்றும், அநாகாமி நிலையில் மார்க்கம் பலம் என்றும் அருகதநிலையில் மார்கம் பலம் என்றும் நாலு ஜோடியும் அதன்படி எட்டு பேரும் காணப்படுகின்றனர்.
27

Page 85
ஈற்றில் களங்கங்கள் முற்றய் அகற்றப்பட்டதும், வெளியே உமிழப் பட்டதும், அப்புறப்படுத்தப்பட்டதும், கைவிடப்பட்டதும், பகவானிடத் துப் பிரீதியுடையவனென்ற எண்ணத்தோடு, அவர் போதித்த தர்மத் தில் பிரீதியுடையவர், அவருடைய சங்கத்தில் பிரீதி உடையவர் என்ற எண்ணத்திஞல் உண்மையின் பொருள், உண்மை என் பவற்றில் உணர்ச்சி உண்டாகிறது. சத்தியத்தோடு சம்பந்தப்பட்ட மகிழ்ச்சி அவரிடம் உண்டாகிறது. மகிழ்ச்சி உண்டானதும் பிரீதி உண்டாகிறது. பிரீதி உண்டானதும் உடல் ஒய்வடைகிறது. ஒய்வுண் டானதும், திருப்தி உண்டாகிறது. திருப்தியுடையவனுடைய மனம் சமாதியடைகிறது.
சீலத்திலேயும், சித்த விநயத்திலேயும், ஞானத்திலேயும் இத் தகைய நிலையை அடைந்த பிக்கு, ஆன்மீக வாழ்வுக்கு இடையூறின்றி திறமாகப் பாகம் 11ண்ணப்பட்ட அன்னம் கறி முதலியவற்றை உண்ணலாம். அழுக்கேறிய துணியைத் தெளிந்த நீரில் தோய்த்தால் அது தூயதாகவும் அழுக்கற்றதாகவும் மாறுவது போல, தங்க மானது உருக்கில்ை மாசிலாதங்கமாவது போல, சீலம், விநயம், ஞானம் என்பவற்றல் இந்நிலை அடைந்த பிக்குவானவர், தமது ஆன்மிக வாழ்வுக்குப் பங்கமின்றி அறுசுவை உண்டி சாப்பிடலாம்.
* மைத்திரீ, கருனே, முதிதா, உடேக்கா என்ற எண்ணங்களோடு உலகின் ஒரு திசையையும் இரண்டாவது திசையைபும், மூன்ருவது திசையையும் நாலாவது திசையையும், மேற்றிசையையும், கீழ்த் திசையையும், எங்கும் இப்பரந்த உலகின் குறுக்கேயும் நெடுக்கேயும் பகையற்ற, துவேஷமில்லாத எல்லையில்லாத எல்லாவற்றையு மடக்கிய பரந்த மனத்தின் பிரகாசமான சிந்தனை பரவியிருக்கிறன்.
பின்னர், அவன் அறிகிறன் ; இது இருக்கிறது. கீழான ஒரு நிலையும் இருக்கிறது. இந்: க்காட்சிக்கு அப்பாலேதான் விமுக்தி உண்டு. இதை அறிந்து உணர்ந்து கொண்டால் காம ஆசவங்கள், பவ ஆசவங்கள், அறியாமை என்ற களங்கங்களிலிருந்து விடுபடு கிருன். விடுதலை பெற்றதும் அவல விடுத?லபெற்றன; என்ற அறிவு உண்டாகிறது. அப்போது அவனுக்கு அறிவுண்டாகிறது. பிறப்பு ஒழிந்தது, துறவு வாழ்வு வாழப்பட்டது, செய்ய வேண்டியது செய் யப்பட்டது. இதன்படி இனிச் செய்யவேண்டியது ஒன்றுமில்லை. பிக்கு களே! அத்தகைய பிக்கு உள்ளே தூய்மை அடைந்துள்ளான்.
அப்போது பக்கத்திலே சுந்தரிக பாரத்துவாஜன் என்ற அந்தணன இருந்தான். அவன் பகவானை “ பகவான் பாஹ"க ஆற்றில் வணக் கத்துக்குரிய கோதமர் நீராடப் போகிருரா ? என்று கேட்டான். * பாஹக் ஆற்றில் குளிப்பதால் என்ன டயல் ? அந்தணனே ; அது என்ன நன்மையைச் செய்கிறது ?"
28

* வணக்கத்துகுரிய கோதமரே, பாஹுக ஆறு பரிசுத்தஞ் செய் வதென்றும், புனிதமானதென்றும் பலர் கூறுகிறர்கள். பல மக் கள் அதிலே குளித்துத் தமது பாவங்களைப் போக்குகிறர்கள்.
அப்போது பகவான் சுந்தரிக பாரத்வாஜ ரென்ற அந்தணனுக்கு பின்வருமாறு கூறினர். பாஹுக ஆற்றிலும் ஆதிகக்கா ஆற்றிலும், காயாவிலும், சுந்தரீகா விலும், சரஸ்ஸதியிலும், பயாகையிலும், பாஹுமதியிலும், பாவஞ் செய்த முட்டாள், தினமும் நீராடினுலும் அவன் மனத்திலுள்ள துவேஷமும் தீமையும் கழுவப்படமாட்டா. உள்ளத்தில் தூய்மையுள்ள வனுக்கு எல்லா நாளும் நல்ல நாளே, எல்லா நாளும் புனிதமானதே. அவன் தூய்மையுடைவனய் தூய கருமங்களைச்செய்து எப்பொழுதும் விரதங்களைக் காப்பாற்றுகிருன். ஆனபடியால் பிராமணனே, இங்கே வந்து நீராடு, உயிர்களெல்லாவற்றுக்கும் அன்பு செய், பொய் சொல்லாதே, பிராணிகளைக் கொல்லாதே, களவெடாதே, பேராசை யுள்ள லோபியாக இராதே, நம்பிக்கையோடு இரு. காயாவுக்கு என் போகிருய், உன்வீட்டிலுள்ள கிணறே காயாவுக்குச் சரி '.
இவ்வாறு கூறியதும் சுந்தரிக பாரத்வாஜர் பகவானுக்குக் கூறினன்: * சாது, (நன்று நன்று) வணக்கத்துக்குரிய கோதமரே சாது தலைகீழாக்கப்பட்டதை நேராக நிமிர்த்தி வைத்தது போலிருக்கிறது. மறைத்து வைக்கப்பட்டதை வெளிப்படுத்தியது போலிருக்கிறது. வழி தவறிப் போனவருக்குவழி காட்டியது போலிருக்கிறது. இருட்டறையில் இருப்பவற்றைக் கண்ணுள்ளவர் பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைக் கொண்டு வந்தது போலிருக்கிறது. இவ்வாறு பல வகையில் வணக் கத்துக்குரிய கோதமர் தருமத்தை விளக்கியுள்ளார். நான் பகவான் புத்தரைச் சரணடைகிறேன். தர்மத்தைச் சரணடைகிறேன். சங்கத்தைச் சரனடைகிறேன். என்னைச் சங்கத்திலே சேர்த்து வணக்கத்துக்குரிய கோதமர் கையால் உயர் தீக்கை (உபசம்பதா) பெறுவேனக.
சுந்தரிக பாரத்வாஜர் என்ற பிராமணர் சங்கத்திலே சேர்க்கப்பட்டு உயசம்பதை அபிடேகம் பெற்றர். உயசம்பதை பெற்ற சிலகாலத்தில் ஆயுஸ்மான் பாரத்வாஜர் தனித்து ஒதுங்கி வாழ்ந்தார். மிக்க ஊக்க மும், ஆர்வமும் திடசித்தமும் பூண்டவராய் உயர்வற உயர்ந்த பெரு நிலை அடைந்தார். உயர்குடி பிறந்த புத்திரர்கள் வீட்டு நிலயிலிருந்து வீடில்லா பரிவிராஜ நிலையை எதற்காக Nஅடைகிறரோ அந்த உயர்நிலையை அடைந்தார். " பிறப்பு ஒழிந்தது, துறவுவாழ்வு வாழப் பட்டது, செய்யவேண்டியது செய்யப்பட்டது, மேலுஞ் செய்ய வேண்டிய யது ஒன்றுமில்லை, என்ற உண்மையை உயர்ஞானத்தினுல் அறிந்தார். இவ்வாறு ஆயுஸமான் பாரத்வாஜரும் அருகதரில் ஒருவரானர்.
(மஜ்ஜிம நிகாய சுத்த) (இல. T)
29

Page 86
சதிபட்டா னம்
விழிப்பு நிலையில் (கடைப்பிடி) இருத்தல் (சதிபட்டான சுத்த) (சுருக்கம்)
இவ்வாறு கேள்வியுற்றேன். குரு மக்களின் சந்தைப்பட்டினமான கம்மாஸ்ஸதம்ம என்ற இடத்தில் பகவான் ஒருமுறை குரு மக்களி டையே வாழ்ந்தார். அங்கே பகவான் பிக்குகளை விழித்துப் பின்வரு மாறு கூறினர். பிக்குகளே, மக்கள் தூய்மை பெறவும், அவலக் கவலைகளை ஒழிப்பதற்கும், துக்கத்தையும், துனபத்தையும், அழிப் பதற்கும், சரியான வழியை அடைவதற்கும், நிர்வான சுகத்தை அடைவதற்கும் இதுவே ஒரே ஒருவழி; அதாவது சதிபட்டானம் நான்கு. இந்த நான்கு எவை ? இங்கே பிக்கு ஒருவர், ஆர்வத்துடன் பொருள் களைத் தெளிவாக அறிந்து, கடைப்பிடியோடு, உடலின் சேட்டைகளை, உடல்மீது விருப்போ வெறுப்போ இன்றி அவதானித்துக் கொண்டி ருக்கவேண்டும். வேதனை (உணர்ச்சி) உலகத்தில் விருப்போ வெறுப்போ இன்றி அவற்றை அவதானித்துக் கொண்டிருத்தல். . . . மன உலகத் தில் விருப்போ வெறுப்போ இன்றி, சித்தவிருத்திகளை அவதானித்துக் கெர்ண்டிருத்தல், மானசிகப் பொருள்கள் மீது விருப்போ வெறுப்போ இன்றி அவற்றை அவதானித்துக்கொண்டிருத்தல்.
(1-உடல்) உடலின் சேட்டைகளை அவதானித்துக் கொண்டு பிக்கு எவ்வாறி ருக்க வேண்டும் ?
(1. மூச்சுவிடுதல்)
பிக்குகளே, பிக்கு ஒருவன் காட்டிலே அல்லது விருட்சமூலத்திலே அல்லது சூனியமான இடத்திலே கால்களே மடக்கி இருந்து கொண்( (அட்டணைக்கால் இட்டு) உடலை நேராகவும் மனத்தை அலைய விடாமலும் வைத்திருக்கிருன்.
எப்பொழுதும் விழிப்பாயிருந்துகொண்டு அவன் மூச்சை உள்ளே வாங்கி (பூரகம்) அவ்வாறே விழிப்பாயிருந்து கொண்டு (அதாவது அந்த மூச்சையே அவதானித்துக் கொண்டு) மூச்சை வெளியே விட வேண்டும் (ரேசகம்). நீண்ட மூச்சு எடுக்கும்போது அவன் "நான் நீண்ட மூச்சு எடுக்கிறேன’ என்று அறிந்துகொள்கிருoன். மூச்சை வெளியே விடும்போது “நான் நீண்ட மூச்சை வெளியேவிடுகிறேன்” என்று உணர்ந்துகொள்கிறன். “குறுகிய மூச்சை உள்ளே எடுக்கும்போது “நான் குறுகிய மூச்சை உள்ளே இழுக்கிறேன்” என்று அறிந்து கொள் கிருன். குறுகிய மூச்சை வெளியே விடும்போது "நான் குறுகிய மூச்சை வெளியே விடுகிறேன் ” என்று உணர்ந்துகொள்கிறன்.
30

" சுவாசகாயம் முழுவதையும் உணர்ந்து கொண்டு நான் உள் மூச்சு வாங்குகிறேன் ” என்று ஒருவன் தன்னைப் பழக்கிக் கொள்ளு கீறன் ’. சுவாசகாயம் முழுவதையும் உணர்ந்து கொண்டு நான் வெளிமூச்சு விடுவேன்” எனப் பழகிக் கொள்வான், “ சுவாசகாயம் முழுவதன் சேட்டிதங்களையும் அமைதிப்படுத்திக் கொண்டு நான் உள்மூச்சு வாங்குகிறேன் ” என அவன் பழகிக் கொள்ளுகிறன். * சுவாசகாயம் முழுவதன் சேட்டிதங்களையும் அமைதிப்படுத்திக் கொண்டு நான் வெளிமூச்சு விடுகிறேன்” என்று பழகிக் கொள்வான்.
இவ்வாறு காயத்தின் அகச் சேட்டிதங்களையும், புறச்சேட்டி தங்களையும், இரண்டையும் இவ்வாறு அவதானித்துக் கொண்டு வாழ்கிறன். காயத்திலுள்ள சிருட்டிக் காரணங்களையும் அழிவுக் காரணங்களையும் இரண்டையும் அவதானித்துக்கொண்டு வாழ்கிருன். அல்லது இந்த உடல் இருக்கிறது. நான் அதில் தொடர்பற்று இருக்கிறேன், உலகில் எதிலும் எனக்குப் பற்றில்லை என்பதை அறியவும், உணர்ந்து கொள்ளவும், போதியஅளவு அவனுடைய விழிப்பு ஸ்தாபிக்கப்படுகிறது. இவ்வாறு பிக்குகளே பிக்கு ஒருவர் உடலின் சேட்டிதங்களை அவதானித்துக் கொண்டு வாழ்கிறன்.
{2. உடலின் நிலைகோடல்கள்)
மேலும் பிக்குகளே, ஒரு பிக்கு போகும்போது “நான் போகிறேன்” என்பதை அறிகிறன். அவன் நிற்கும்போது “நான் நிற்கிறேன்” என அறிகிறன். அவன் இருக்கும்போது "நான் இருக்கிறேன்” என அறிகிறன். கிடக்கும் போது ‘நான் கிடக்கிறேன்’ என அறிகிறன். இவ்வாறு அவனுடைய உடலின் நிலையை அறிந்து கொள்கிருன்.
இவ்வாறு உள்ளும் புறமும் உடலின் நடவடிக்கைகளை அவதானித் துக்கொண்டு வாழ்கிறன்.
(3. முழு அவதானம்}
மேலும் பிக்குகளே, பிக்குவனவன் முன்னே செல்லும்போதும் பின்னே செல்லும்போதும், நேராகப் பார்க்கும்போதும், பக்கத்துக்குப் பார்க்கும் போதும், குனியும்போதும், நிமிரும் போதும், சிவரம் அணியும்போதும், பாத்திரம் எடுத்துச் செல்லும்போதும், உண்ணும் போதும், குடிக்கும்போதும், சப்பும்போதும் சுவைக்கும்போதும், மலசலவிமோசனஞ் செய்யும்போதும், நடக்கும் போதும், இருக்கும் போதும், நிற்கும்யோதும் நித்திரை செய்யும்போதும், விழித்திருக்கும் போதும், பேசும்போதும், பேசாதிருக்கும்போதும், இவை எல்லா விஷயங்களிலும் அவன் முழு அவதானமுடையவனயிருக்கிறன். இவ்வாறு அவன் உடலின் நடவடிக்கைகளே அவதானித்துக் கொண்டு வாழ்கிருன்.
3.

Page 87
4. (உடலின் இழிதகைமை)
மேலும் பிக்குகளே, தோலினல் போர்த்துப் பலவகையான அழுக்கை உள்ளடக்கிய இந்தக் காயத்தைப் பற்றிச் சிந்திக்கிருன். உள்ளங்காலிலிருந்து மேலே, மயிரிலிருந்து கீழே உள்ளவற்றை பின்வருமாறு எண்ணுகிருரன். இந்த உடலிலே தலைமயிர் உண்டு, உரோமமுண்டு, நகம், பல், தோல், மாமிசம், நரம்பு, எலும்பு, எலும்புமச்சை, குண்டிக்காய், இருதயம், ஈரல், உந்து சவ்வு, மண்ணிரல், சுவாசப்பை, குடல், குடல்தாங்கி, வயிறு, மலம், பித்தம், சளி, சீழ், இரத்தம், வியர்வை, கொழுப்பு, கண்ணிர் நெய், எச்சில், மூக்குச்சளி, உயவுநீர்மம், மூத்திரம் என்பன உண்டு.
இரட்டைவாயுடைய சாக்கு நிறைய மலை நெல்லு, நெல்லு, பயறு அவரை, எள்ளு, அரிசி இருக்கிறது. நல்ல கண்பார்வையுடைய ஒருவன் அந்தச் சாக்கைத் திறந்து பின்வருமாறு நினைக்கிருன். இது பலைநெல்லு, இது நெல்லு, இது பயறு, இது அவரை, இது எள்ளு, இது அரிசி, என்று. அவ்வாறே பிக்கு, ஒருவன் பலவகையான அழுக்குள் நிறைந்த தோலினல் மூடிய இந்தக் காயத்தைப் பற்றி உள்ளங்காலஸிருந்து மேலேயும் தலை மயிரிலிருந்து கீழேயும், “இந்த உடலில் தலைமயிரும் உடல் ரோமமும் . . . . . நகமும் மூத்திரமும் உண்டு என நினைக்கிருன்.
இவ்வாறு உலே அவதானித்துக்கொண்டு வாழ்கிறன்.
5. (பூதங்கள்)
மேலும் பிக்குகளே, ஒரு பிக்குவானவர் இந்த உடல் பூதங்களினல்
அமைந்த முறையை “இந்தக்காயம் மண், நீர், அனல், காற்று
என்ற பூதங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது” என எண்ணுகிறர்.
சாதுரியமான இறைச்சிக் கடைக்காரனே அவனுடைய உதவியாளோ பசுவை லெட்டி அதை வெவ்வேறு அங்கமாகப் பிரித்து, பெருந் தெருவின் சந்தியில் வைத்துக் கொண்டிருப்பது போல, பிக்கு வானர் இந்த உடலின் அங்கங்களைப் பிரித்துப் பிரித்துச் சிந்திக்கிறர். அது எவ்வாறு பூங்சளால் ஆக்கப்பட்ட தென்பதைச் சிந்திக்கிருர், "இந்த உடலிலே மண், நீர், அனல், காற்று என்ற பூதங்களுண்டு”.
இவ்வாறு உடலை அவதானித்துக் கொண்டு அவர் வாழ்கிறர் . . . .
6. (ஒன்பது சுடுகாட்டு விஷயங்கள்) -
1. மேலும் பிக்குகளே, இடுகாட்டிலே இரண்டு மூன்று நாளுக்கு முன் இறந்த பிணம் பொருமி, நீலம்பாய்ந்து அழுகிக் கொண்டி ருப்பதைக் காணும் பிக்கு, தன்னுடைய உடலோடு இதனை ஒப்பிட்டு
32

“உண்மையில் என்னுடைய உடலும் இத்தகையதே, அதுவும் இந்த நிலையை அடையும், இதிலிருந்து தப்பமாட்டாது’ என்று நினைப்பான்.
இவ்வாறு உடலை அவதானித்துக் கொண்டு வாழ்வான். 2. மேலும் பிக்குகளே, பிக்கு ஒருவன், இடுகாட்டில் எறியப்பட்ட பிணத்தை காகம், கழுகு, பருந்து, நாய், நரி என்பன தின்பதையும், புழுக்கள் தின்பதையும் கண்டு தன் உடலோடு ஒப்பிட்டு “உண்மையில் என்னுடலும் இத்தன்மையதே, இந்த நிலையையே அடையும், இதி லிருந்து தப்ப முடியாது” என்று நினைப்பான்.
இவ்வாறு இந்த உடலை அவதானித்துக் கொண்டே இருப்டான். 3. மேலும் பிக்குகளே, பிக்கு ஒருவன் இடுகாட்டில் வீசப்பட்ட பிணம் சிறிது மாமிசமும் இரத்தமும் சேர்ந்த எலும்புக்கூடாகத் தசை நாண் இணைந்து காணப்படுவதைப் பார்ப்பான். . . . .
4. மேலும் பிக்குகளே, பிக்கு ஒருவன் இடுகாட்டில் வீசப்பட்ட பிணம் எலும்புக்கூடாய், இரத்தம் சேர்ந்ததாய், மாமிசமின்றித், தசை நாண் இணைந்து கிடப்பதைக் காண்பான். . . . . .
5. மேலும் பிக்குகளே, பிக்கு ஒருவன் இடுகாட்டில் வீசப்பட்ட பிணம் மாமிசமும் இரத்தமுமின்றி தசை நாண் இணைந்த எலும்புக் கூடாயிருப்பதைக் காண்பான் ;
6. மேலும் பிக்குகளே, பிக்கு ஒருவன் இடுகாட்டில் வீசப்பட்ட பிணம் பல திசையிலும் எலும்புகாளாய் இங்கே கை எலும்பு, இங்கே கால் எழும்பு, இங்கே மோவாய் எலும்பு, இங்கே தொடை எலும்பு, இடுப்பு எலும்பு, முதுகெலும்பு, மண்டையோட்டெலும்பாகச் சிதறிக் கிடப்பதைக் காண்பான். . . . . . . .
7. மேலும் பிக்குகளே, பிக்கு ஒருவன் இடுகாட்டில் வீசப்பட்ட பிணம் சங்கு போன்ற வெண்ணிறமுள்ள எலும்புகளாக மாறியி ருப்பதைக் காண்பது போல . . . . . . . .
8. மேலும் பிக்குகளே, பிக்கு ஒருவன் இடுகாட்டில் வீசப்பட்ட பிணம் ஒருவருடத்தின் பின் எலும்புக்குவியலாகக் கிடப்பதைக் காண்பது போல . . . . . . . .
9. மேலும் பிக்குகளே, இடுகாட்டில் வீசப்பட்ட பிணம் எலும்பாக மாறிப் பின்னர் தூசாகக் கிடப்பது போல . . . . . . பிக்குவானவன் தன் உடலோடு அதை ஒப்பிட்டு “உண்மையில் என் உடலும் அத்த கையதே, அவ்வாறே இதுவும் மாறும், இதிலிருந்து தப்ப முடியாது” என்று எண்ணுவான். இவ்வாறு உ?ல அவதானித்துக் கொண்டு வாழ்வான்.
33

Page 88
(11 வேதனைகள்)
வேதனைகஃா அவதானித்துக்கொண்டு ஒரு பிக்கு எவ்வாறு வாழ் கிருண். இங்கே மிக்குகளே, ஒரு பிக்குவானவன் இன்ப உணர்ச்சிகளை அநுபவிக்கும்போது " நான் இன்ப உணர்ச்சியை அனுபவிக்கிறேன்" என அறிகிறன். துன்பமான உணர்ச்சியை அனுபவிக்கிற போது
s
* நான் துன்ப வேதனை அனுபவிக்கிறேன் என உணர்கிறன். இன்மோ துன்பமோ அற்ற நொதுமலான உணர்ச்சியை அனுப விக்கும்போது நான் இன்டமோ துன்டமோ அற்ற நொதுமலான உணர்ச்சியை அனுபவிக்கிறேன் ’ என அறிகிறன். இன்பமான
லெளகீக உணர்ச்சியை நான் இஷ்டமான லெளகீகஉணர்ச்சியை அனுபவிக்கிறேன்” என அறிகிறன். இன்பமான அத்யாத்மிக உணர்ச் சியை அனுபவிக்கும்போது " நான் இன்பமான அத்யாத்மிக உணர்ச் சியை அனுபவிக்கிறேன் லெ6:கீக உணர்ச்சினய அனுபவிக்கிறபோது
’ என அவன் அறிகிறன். துன்பமான * நான் துன்பமான
லெளகீக உணர்ச்சியை அனுபவிக்கிறேன் ” என அறிகிறன். துன்ப
மான அத்யாத்மிக உணர்ச்சியை அனுபவிக்கும்போது நான் துன்பமான அத்யாத்மிக உணர்ச்சியை அனுபவிக்கிறேன் ” என அறிகிறன். இன்பமுமல்லாத துன்பமுமல்லாத லெளகீக உணர்ச்சி யை அனுபவிக்கும்போது " நான் இன்பமுமில்லாத துன்பமுமல்லாத லெளகீக உணர்ச்சியை அனுபவிக்கிறேன் ” இன்பமுமல்லாத துன்பமுமல்லாத அத்தியாத்மிக உணர்ச்சியை அனுபவிக்கும்போது அத்யா மிக உணர்ச்சியை அனுபவிக்கிறேன்"
என அவன் அறிகிறன் ;
நான் இன்பமுமல்லாத துன்பமுமல்லாத
’ என அறிகிறன்.
இவ்வாறு அவன் அகத்தேயோ. . . . .புறத்தேயோ. . . .அகத்திலும் புறத்திலுமோ உணர்ச்சிகளை அவதானித்துக் கொண்டு வாழ்கிறன். உணர்ச்சியில் உற்பத்தி அங்கங்களையும், அழிவின் அங்கங்களையும் அல்லது உணர்ச்சி உற்பத்தி அழிவு அங்கங்களையும் அவதானித்துக்கொண்டு வாழ்சிருன். உணர்ச்சிகள் உண்டாகின்றன என்பதை அறிவதற்கும் அவற்றைப் பற்றி விழிப்பாயிருப்பதற் கும் போதுமான அளவு அவனுடைய சதிபட்டானம் அமைந்தி ருக்கிறது எனலாம். அதனுல் உலகில் பற்றின்றி, அதில் உள்ள எந்தப் பொருளிலும் தொடர்பின்றி இருக்கிறன். இவ்வாறு பிக்கு களே, ஒரு பிக்கு உணர்ச்சிகளே (வேதனை) அவதானித்துக்கொண்டு வாழ்கிறன்.
34

(III Lossi ib)
பிக்குகளே, எவ்வாறு, மனத்தை அவதானித்தபடி பிக்குவானவன் வாழ்கிறன் ? இங்கே பிக்குகளே, காமத்தோடு சேர்ந்துள்ள மனத் தை காமஞ் சேர்ந்த மனமாக அறிகிறன். காமத்தோடு சேராத மனத்தைக் காமஞ் சேராத மனமாக அறிகிறன். துவேஷத்தோடு (வெகுளி) சேர்ந்த மனத்தை துவேஷஞ் சேர்ந்த மனமாக அறிகிறன். துவேஷஞ்சேராத மனத்தைத் துவேஷஞ் சேராத மனமாக அறிகிறன். அவித்தையோடு சேர்ந்த மனத்தை அவித்தை சேர்ந்த மனமாக அறிகிறன். அவித்தை சேராத மனத்தை அவித்தை சேராத மன மாக அறிகிறன். ஒடுங்கிய மனத்தை ஒடுங்கிய மனமாக அறிகிறன். குழம்பிய மனத்தை குழம்பிய மனமாக அறிகிறன். அபிவிருத்தி யடைந்த மனத்தை அபிவிருத்தியடைந்த மனமாக அறிகிருன். அபிவிருத்தியடையாத மனத்தை அபிவிருத்தியடையாத மனமாக அறிகிறன். உயர்நிலை அடைந்த மனத்தை உயர்நிலையடைந்த மனமாக அறிகிறன். உயர்நிலை அடையாத மனத்தை உயர்நிலை அடையாத மனமாக அறிகிறன். சமாதிநிலையிலுள்ள மனத்தை சமாதிநிலையிலுள்ள மனமாக அறிகிறன். சமாதிநிலை அடையாத மனத்தை சமாதி நிலையடையாத மனமாக அறிகிறன். விடுதலை பெற்ற மனத்தை விடுதலையடைந்த மனமாக அறிகிறன். விடுதலை அடையாத நிலையிலுள்ள் மனத்தை விடுதலை அடையாத நிலையிலுள்ள மனமாக அறிகிறன்.
இவ்வாறு அவன் அகத்திலும் புறத்திலும் ஈரிடத்திலும் அவதானி த்து வாழ்கிறன். இவ்வாறு தோற்றம் மறைவு என்ற நிலைகளை (சமுதயவய தம்மானுபஸ்வி) அல்லது தோற்றத்தையும் மறைவை யும் பற்றிய நிலைகளை மனத்தில் சிந்தனை செய்து அல்லது மனம் இருக்கிறது, உலகில் பற்றின்றி தொடர்பின்றி இருக்கிறேன் என்பதை அறியவும், அதைப்பற்றி விழிப்பாயிருக்கவும் போதுமான அளவுக்கு சதி பட்டானம் தாபிக்கப்படுகிறது. இவ்வாறு பிக்குகளே, பிக்கு வானவன் மனத்தை அவதானித்து வாழ்கிருன்.
(IV சைதசிக (தம்மங்கள்) விஷயங்கள்) பிக்குகளே, பிக்கு ஒருவன் சித்தத்தில் உண்டாகும் விஷயங்களை (தம்மம்) எவ்வாறு அவதானித்துக் கொண்டு வாழ்கிறன் ? (ஐந்து நீவரணங்கள்) இங்கே பிக்குகளே, ஒரு பிக்குவானவன் ஐந்து நீவரணங்களை சித்த விஷயங்களாக அவதானித்து வாழ்கிறன்.
பிக்குகளே எவ்வாறு ஒரு பிக்கு சித்த விஷயங்களாக ஐந்து நீவரணங்களை அவதானித்து வாழ்கிறன்.
35

Page 89
(1) இங்கே, பிக்குகளே, (காமச் சந்தம்) காமவிருப்பங்கள் இருக் கும் போது , " என்னிடம் காம விருப்பங்கள் இருக்கின்றன * என்று அறிகிறன. காம விருப்பம் இல்லாத போது “ என்னிடம் காம விருப்பம் இல்லை ” என அறிகிருன். மனத்தில் உண்டாகாத காம விருப்டம் எவ்வாறு எழுகிறதென்பதையும், எழுந்த காம விருப்பம் எவ்வாறு மறைகிறது என்பதையும், கைவிடப்பட்ட காமவிருப்பம் எவ்வாறு, வருங்காலத்தில் தோற்ருது விடுகிறதென் பகையும் அறிகிறன்.
(2) கோபம், (வியாபாத) இருக்கும்போது “கோபம் என்னிடமிருக் கிறது” என்பதை அறிகிருன்.
(3) கழிமடிமை, சோர்வு (தீன-மித்த) இருக்கும்போது "கழிமடி மையும் சோர்வும் என்னிடமுண்டு” என்பதை அறிகிறன்.
(4) சஞ்சலமும் கவலையும் (உத்தச்சகுக்குச்ச) இருக்கும்போது “சஞ்சலமும் கவலையும் என்னிடம் உண்டு” என்று அறிகிருன்.
(5) சந்தேகம் (விசிகிச்சா) இருக்கும்போது “சந்தேகம் என்னிடம் உண்டு” என அறிகிறன். சந்தேகம் இல்லாத போது “என்னிடம் சந்தேகம் இல்லை” என்பதை அறிகிறன். மனத்திலே இதுவரை எழாத சந்தேகம் எப்படி எழுகிறதென்பதை அறிகிறன். உண்டான சந்தேகம் எவ்வாறு மறைகிறது எனபதை அறிகிறன். கைவிடப்பட்ட சந்தேகம் வருங்காலத்திலே எவ்வாறு எழாமலிருக்கும் என்பதை அறிவான்.
இவ்வாறு அகத்தும் புறத்தும், இரு பேரிடையிலும் சித்த நிவாணங்களை அவதானித்து வாழ்வான். நீவாணங்களில் சமுதயவய தம்மங்களை அதாவது உற்பத்தி அழிவு என்பவற்றின் நிலைகளை அவதானித்துக் கொண்டு வாழ்வான். சித்தப் பொருள்கள் (நீவரணங் கள்) உண்டு, உலகில் பற்றின்றி தொடர்பின்றி இருக்கிறேன் என்பதை அறியவும் அதை ப்பற்றி விழிப்பாயிருக்கவும் போதுமான அளவுக்கு சதிபட்டானம் தாபிக்கப்படுகிறது. இவ்வாறு பிக்குகளே ஒரு பிக்கு வானவர் ஐந்து நீவரணங்களைச் சித்தப் பொருள்களாக அவதானித்து வாழ்கிறன்.
(பஞசக்கந்தங்கள்)
மேலும் பிக்குளே, பிக்குவானவன் சித்தப் பொருள்களாக பஞ்ச உபாதானக்கந்தங்களை அவதானித்துக் கொண்டு வாழ்கிறன்.
பிக்குகளே, பிக்கு ஒருவன் எவ்வாறு பஞ்சஉபாதானக் கந்தங்களைச் சித்தப்பொருள்களாக அவதானித்து வாழ்கிருன்.?
36

இங்கே பிக்குகளே, ஒரு பிக்குவானவன் "இது ரூபம், அது இவ்வாறு உண்டாகிறது. அது இவ்வாறு மறைகிறது. இது வேதனை; அது இவ்வாறு உண்டாகிறது; அது இவ்வாறு மறைகிறது; இது குறிப்பு; அது இவ்வாறு உண்டாகிறது. அது இவ்வாறு மறைகிறது. இவை சங்கற்பங்கள், அவை இவ்வாறு உண்டாகின்றன. இவ்வாறு மறைகின்றன. இவ்வாறு விஞ்ஞானம் இருக்கிறது; அது இவ்வாறு உண்டாகிறது; இவ்வாறு மறைகிறது.
இவ்வாறு மனவிஷயங்களைத் அகத்தும் . . . . . . இவ்வாறு பிக்கு களே, பிக்குவானவன் பஞ்சஉபாதானங்களை மனவிஷயங்களாக அவதானித்துக்கொண்டு வாழ்கிறன்.
(ஆறு இந்திரியங்கள்) (ஷடாயதன)
மேலும், பிக்குகளே, ஒரு பிக்குவானவன் ஆறு இந்திரியங்களையும், அகத்தும் புறத்தும் மனவிஷயங்களாக அவதானித்து வாழ்கிருன்.
பிக்குகளே, ஆறு உள் இந்திரியங்களையும் (தன் மாத்திரை) ஆறு வெளியிந்திரியங்களையும் (புலன்கள்) மனவிஷயங்களாக எவ்வாறு அவதானித்து வாழ்கிருன்?
இங்கே, பிக்குகளே ஒரு பிக்கு ஆனவன் கண்ணை அறிகிறன். கட்புலனுகும் உருவத்தை அறிகிறன், கண்ணினலும் உருவினலும் உண்டாகும் தளையை அறிகிறன். உதயமாகாத தளை உதயமாகிறது, உதயமான தளை எவ்வாறு மறைகிறது? கைவிடப்பட்டது வருங் காலத்தில் எழாமல் போகிறதென்பதை அறிவான்.
அவன் காதையும், சப்தத்தையும். . . . . . . . மூக்கையும் கந்தத்தை Այւն . . . . . . . . நாக்கையும் சுவையையும். . . . . . உடலையும் பரிசத்தை ԱվԼԻ. . . . . . மனத்தையும் மனவிஷயங்களையும் இவையிரண்டினலும்
உண்டாகும் தளையையும் அறிகிறன். உதய மாகாத தளை எவ்வாறு எழுகிறதென்று அறிவான். உதயாமாகும் தளை எவ்வாறு மறை கிறதென்பதை அறிவான், கைவிடப்பட்டதளை எவ்வாறு எழாது விடுகிறதென்பதையும் அறிவான்.
இவ்வாறு பிக்குகளே, பிக்குவானவன் தன்னில் மனவிஷயங்களை அவதானித்துக்கொண்டு. . . . வாழ்கிருன். இவ்வாறு பிக்குகளே, ஒரு பிக்குவானவன் உள்ளிந்திரியம் ஆறையும் வெளியிந்திரியம் ஆறையும் மனவிஷயங்களாக அவதானித்துக் கொண்டு வாழ்கிறன்.
37

Page 90
(ஞான அங்கங்கள் ஏழு)
(போதி அங்கம் 7)
பிக்குகளே, ஞான அங்கம் எழையும் மனவிஷயங்களாக அவதா னித்துக் கொண்டு பிக்குவானவன் வாழுகிறன்.
பிக்குகளே; எவ்வாறு பிக்குவானவன் போதி அங்கம் எழையும் மன விஷயங்களாக அவதானித்துக்கொண்டு வாழ்கிறன்?
(1) இங்கே, பிக்குகளே, போதி அங்கமான சதி கடைப்பிடி) இருக்கும் போது சதி என்னும் போதி அங்கம் என்னில் உண்டு” என அறிகிறன். போதி அங்கமான சதி இல்லாதபோது சதி என்னும் போதி அங்கம் என்னிடம் இல்லை” என அறிகிறன். அதுவரை உண்டாகாத சதி (போதி அங்கம்) எவ்வாறு உண்டாகிறது என்பதையும் அறிவான். உண்டான சதி போதி அங்கம் வளர்ந்து பூரணமடைவது எவ்வாறு என்பதையும் அறிவான்.
(2) தம்மவிசயம் (மனவிஷயங்களை (விஷயம்-தம்மம்) ஆராய்ச்சி செய்தல் என்ற போதி அங்கம் இருக்கும்போது “தம்மவிசயம் என்னிடம் உண்டு என்பதை பிக்கு அறிவான். தம்மவிசயம் என்ற போதி அங்கம் இல்லாதபோது தம்மவிசயம் என்ற போதி அங்கம் என்னிடம் இல்லை” என்பதை அறிகிருன். உதய மாகாத போதி அங்கமான தம்மவிசயம் எவ்வாறு எழுகிறது, 

Page 91
பிக்குகளே, எழு வருடம் வேண்டாம், இந்த நான்கு சதிபட்டானங்
களையும் இவ்வாறு ஆறுவருடமோ . . . . . ஐந்து வருடமோ . . . . . . நாலு வருடமோ. . . . . . . . மூன்று வருடமோ . . . . . . . . இரண்டு வருடமோ . . . . . . . . ஒரு வருடமோ பயிற்சி செய்வானஞல் பின்வரும்
இரண்டில் ஒரு பயனை அவன் எதிர்பார்க்கலாம். ஒன்று உயர் ஞானம் (அருகதறிலை). மேலும் அவனிடம் அற்ப சொற்ப பற்றுக்களிருக்கு மானல் அணுகாமிநிலை அடைவான். (அணுகாமி மேலும் பிறவி எடுக்காத நிலை)
பிக்குகளே, ஒருவருடம் வேண்டாம். இந்த நான்கு சதிபட்டானத்தை அங்கு கூறியவாறு எவராவது எழு மாதத்துக்கு . . . . . . . . ஆறுமா தத்துக்கு. . . . . . . . ஐந்து மாதத்துக்கு. . . . . . நாலு மாதத்துக்கு . . . . மூன்று மாதத்துக்கு . . . .இரண்டு மாதத்துக்கு . . . . . . ஒரு மாதத் துக்கு அரைமாதத்துக்கு . . . . . . பயிற்சி செய்தால் பின்வரும்பலன் களில் ஒன்றை அவர் எதிர்பார்க்கலாம். இப்பொழுதே இங்கேயே உயர்ஞானம். அற்ப சொற்பம் ம்ேலும் பற்றுக்கள் மிஞ்சியிருக்கு மானுல் அணுகாமி நிலை அடைவான்.
பிக்குகளே, அரைமாதத்தை விட்டுத் தள்ளுங்கள். இந்த நான்கு சதி சதிபட்டானத்தை இவ்வாறு ஒரு வாரத்துக்குப் பயிற்சி செய்தால், இங்கேயே, இப்பொழுதே உயர் ஞானம் (அருகதறிலை) கிடைக்கும். அல்லது அற்ப சொற்ப பற்றுக்கள் மேலும் இருக்குமானல், அனகாமி நிலை உண்டாகும்.
இதனுல்தான் இவ்வாறு கூறுப்பட்டது. பிக்குகளே, உயிர்கள் தூய்மை யடைவதற்கும், சோகம், பரிதவிப்பு என்பவற்றைக் கடப் பதற்கும், துக்கம், கவலை என்பவற்றிலிருந்து நீங்குவதற்கும்? நல்லழியை அடைவதற்கும், நிர்வாண அனுபூதியைப் பெறுவதற்கும் இதுவே ஒரேயொரு வழி. அதாவது நாலு சதிபட்டானம்.
இவ்வாறு பகவான் கூறிஞர். திருப்தியடைந்த பிக்குகள் அவர் வார்த்தைகளைக் கேட்டும் பிரீதியடைந்தனர். (மஜ்ஜிம நிகாயம் சுத்த இல, 10)
40

சிகாலனுக்கு அறவுரை
இல்லறக் கடமைகளும் சமூகக் கடமைகளும் (சிகாலோ வாத சுத்தம்) (சுருக்கம்)
நான் இவ்வாறு கேள்வியுற்றேன். பகவான் ஒரு முறை ராஜகிரு கத்திலே வேலுவனத்திலுள்ள கலந்தக நிவாபத்தில் இருந்தார். இந்தச்சமயம் சிகாலன் என்ற இல்லத்தலைவனின் மகன், நேரத் தோடு எழுந்து, ராஜகிருகத்தை விட்டுவெளியே சென்றன். நனைந்த வஸ்திரமும் நனைந்த தலைமயிரும், கூப்பிய கையுமுடையவனுய் ஒவ் வொரு திசையையும் நோக்கி வணங்கினன். கிழக்கு, தெற்கு, மேற்கு வடக்கு திசைகளையும், கீழ் மேல் திசைகளையும் நோக்கி வழிபாடியற்றினன். அதேகாலை பகவான் சீவர ஆடை அணிந்து பிண்ட பாத்திரந்தாங்கி, பிச்சை எற்பதற்காக ராஜகிருகத்தில் பிர வேசித்தார். அப்போது சிகாலன், வழிபாட்டில் ஈடுபட்டிருப்டதைக் கண்டு பின்வருமாறு கூறிஞர்.
கிருகபதி புத்திரனே! நேரத்தோடு எழுந்து ராஜகிருகத்தை விட்டுப் புறப்பட்டு நனேந்த தலைமயிரும் ஆடையும் உடையவனய் பூமியிலும் வானத்திலுமுள்ள பலதிசையையும் என் வணங்குகிறய ? “ சுவாமீ, என் தந்தை இறக்கும்போது “ அன்புள்ள மகனே, வானத்திலும் பூமியிலுமுள்ள திசைகளை நீ வணங்க வேண்டும் ” என்று எனக்குச் சொன்னர். அதனுல் சுவாமீ நான் என் தந்தையின் வார்த்தை யைக் கெளரவித்து போற்றி, பாராட்டி அவற்றைப் புனிதமாகக் கொண்டு அதிகாலையில் எழுந்து, ராஜகிருகத்தை விட்டு வெளிவந்து, இவ்வாறு வழிபாடு செய்கிறேன். * ஆனல் ஆரியர் விநயப்படி ஓ கிருகபதி புத்திரனே ஆறுதிசைகளை இவ்வாறு வழிபடக்கூடாது.”
" அப்படியானல் சுவாமீ, ஆரியவிநயப்படி ஆறுதிசைகளை எவ்வாறு வழிபடவேண்டுமென்பலத பகவான் உபதேசித்தருளினல் நன்ற யிருக்கும். “நல்லது கிருகபதி புத்திரனே கேட்பாயாக, மனங் கொண்டு கேட்யாயாக. நான் சொல்லுகிறேன்.”
1. புற உலகின் பல திசைகளுக்கும் வழிபாடு செய்து அவ்வத் திசையிலுள்ள திக்கு பாலகரின் பாதுகாப்பை வேண்டி வணக்கஞ் செலுத்துவது வேத சம்பிரதாயப்படியுள்ள தொரு பழைய பழக்கமாகும். புத்தபகவான் இத் தகைய கண்மூடி வழக்கங்களைக் கண்டித்து, எவரோடு இவை பற்றி உரையாடு கிருரோ அவருக்கேற்றவாறு புதிய விளக்கங்களையும், கருத்துக்களையும் வழங்கு கிருர், வஸ்திரம் பற்றிய கதை சிந்திக்கத்தக்கது. அதில் பகவான் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதை விடுத்து, அந்தரங்க சுத்தி செய்ய வேண்டியதைப் பற்றி ஒரு பிராமணனுககு உபதேசஞ் செய்கிருர். (பக். 120).
14

Page 92
" ஆம் பிரபேர்,” என்று கிருகபதி புத்திரன் கூற பகவான் சொல்லியருளினர். " கிருகபதி புத்திரனே, எவ்வளவுக்கு ஆரிய சிராவகன் கர்மக்கிலேசங்கள் நான்கையும் கைவிடுகிறனே, நாலு காரணங்களை உத்தேசித்து பாவ கர்மங்களைச் செய்யாது விடுகிறனே, சம்பத்து அழிந்து போகும் ஆறு வாசல்களில் செல்லாதிருக்கிருனே, இவ்வாறு இந்த 14 தீய கருமங்களைக் கைவிட்டுவிடுவானனல், அவன் ஆறு திசைகளின் பாலகன் (திக்குப்பாலகன்) ஆவான். இரு உலகையும் வெற்றிகொள்ளும்பாதையில் அவன் செல்லுகிறன். இம்மையிலும் மறுமையிலும் அவன் சித்தியெய்துகிறன். உடல் அழிந்ததும் மரணத்தின்பின்னர், சுவர்க்கத்தில் நற்கதி அடைவான்.
அவன் கைவிட்ட நான்கு காமக்கிலேசங்கள் எவை ? உயிர்களைக் கொல்லல், களவெடுத்தல், பிறர் மனை நயத்தல், பொய் டேசுதல் இந்த நான்கு கர்மக்கிலேசங்களை அவன் கைவிட்டு விட்டான்.
எந்த நாலு காரணங்களால் அவன் பாவகர்மங்களைச் செய்யாது விடுகிறன் ?
விருப்பு, வெறுப்பு, மோகம், பயம் என்ற காரணங்களினலே பாவங்கள் செய்யப்படுகின்றன. ஆனல் ஆரிய சாவகன் (பிக்கு) இந்த நாலுகாரணங்கள் அவனைத் தவறன வழியில் செலுத்த முடியாதபடியால் இவை காரணமாக அவன் பாவ கர்மங்கள் செய்வதில்லை.
செல்வம் கரைந்து போவதற்கு ஆறு வாயிலாய் அமைந்தவை எவை ?
மதுபானம் அருந்துதல், அகாலத்தில் வீதிகளில் திரிதல், நாட்டி யம் விழா என்பன பார்க்கச் செல்லுதல், சூதாட்டம், தீய நண்பரோடு சேருதல், சோம்பல் என்பன.
கிருகபதி புத்திரனே, மதுபானத்தினுல் உண்டாகும் ஆறு ஆபத்துக் களிவை. தனம் நாசமாதல், சண்டை சச்சரவு அதிகரித்தல், நோய் பிணி உண்டாதல், கெட்ட பெயரெடுத்தல், நாணமற்ற செயலில் ஈடுபடுதல். (மறைக்கப்படவேண்டிய உறுப்புக்களை மறையாதுவிடுதல்) புத்திஞானக்கெடுதல்.
* அகால நேரத்தில் வீதிகளில் அலைந்து திரிவதால் கிருபகதி புத்திரனே, ஆறுவகையான அபாயங்கள் உண்டாகும். ஒருவனுக்குப் பாதுகாப்பில்லாமற்போகிறது. அவனுடைய மனைவி மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாமற் போகிறது.” அவனுடைய சொத்து தனம் என்பவற்றுக்கும் பாதுகாப்பில்லாது போகிறது. கண்டுபிடிக்கப்படாத குற்றங்களுக்கு இவனே பாத்திரமானவனென்று சந்தேகிக்கப்படு
42

வஈன. வீண் பழியை மக்கள இவன் மீது ஏற்றுவார்கள். தொந்தரவுகளுககு உள்ளாக வேண்டியிருக்கும் ”.
* விழாக்கள் பார்க்கச் செல்வதால் ஆறுவகையான ஆபத்துக்களே எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. நாட்டியம், பாட்டுக்கச்சேரி, சங் கீதம், கதாப்பிரசங்கம், தாளவாத்தியக்கச்சேரி, கடவாத்தியம் என் பன எங்கே உண்டு என ஒருவன் தேடித்திரிவான். சூதாட்டத்தினல் ஆறுவகையான தீமைகள் உண்டாகின்றன. சூதாட்டத்தில் ஒருவன் வெற்றி பெற்றல் அவனை வெறுப்பார்கள், அவன் தோல்வியடைந் தால், பணத்தை இழந்துவிட்டேன் என்று பிரலாபிப்பான். பொருள் வீணுகிறது, சபையில் அல்லது நீதி மன்றத்தில் அவன் பேச்சுக்கு மதிப்பில்லை. நண்பரும் சகாக்களும் அவனை அவமதிப்பார்கள். அவனுக்கு எவரும் பெண் கொடுக்க மாட்டார்கள் ; ஏனெனில் சூதாடுபவன் நல்ல கணவனுக மாட்டான் என மக்கள் கூறுவர். தீய நண்பரோடு சேருவதால் ஆறுவகையான தீமைகள் உண்டு. ஏனெனில் சூதாட்டக்காரரும், காமுகரும், குடிகாரரும், கபடிகளும், மோசடிகாரரும், தடியடி மீண்டர்களும் அவனேடு கூட்டாளிகளா யிருப்பர்.
சோம்பலினல் ஆறுவகையான தீமைகள் உண்டாகின்றன. மிகக் குளிராயிருக்கிறதென்று சொல்லி வேலை செய்யாதிருத்தல், மிக வெப்பமாயிருக்கிறதென்று சொல்லி வேலை செய்யாதிருத்தல், மிக நேரத்தோடு வந்துவிட்டோம். . . .மிக நேரமாகிவிட்டது என்று சொல்லி வேலை செய்யாதிருக்கிருன். எனக்கு மிகப் பசியாயிருக்கிறது என்று சொல்லி வேலை செய்யாதிருக்கிறன். நன்றகச் சாப்பிட்டுவிட்டேன் என்று சொல்லி வேலை செய்யாதிருக்கிறன். இவ்வாறு அவன் செய்ய வேண்டிய வேலைகள் செய்யப்படாதிருக்கின்றன. அதனல் அவனுடைய வருமானம் குன்றி இருக்கிற செல்வமும் தேய்ந்து போகிறது.
Yr kr 女
நண்பர் வடிவத்தில் பகைவராயிருப்போர் நாலு வகையினர்: கொள்ளையடிக்கும் பாங்குடையவன், நண்பன் போலப் பாசாங்கு செய்பவன், இச்சகம் பேசுவோன் ; ஊதாரி.
இவர்களுள், முதலாவது வகையைச் சேர்ந்தவன, நாலு காரணத் தினல் நண்பன் வடிவிலுள்ள பகைவனவான். அவன் கொள்ளை படிக்கும் சுபாவமுள்ளவன், கொஞ்சம் கொடுத்து அதிகம் எதிர்பார்ப்பவன், செய்ய வேண்டிய கடமையைப் பயத்தினல் செய் வான். தன்னலத்தையே கவனிப்பான்.
43

Page 93
வாயால் மாத்திரம் பேசிக்கொண்டு செயலில் ஒன்றுஞ் செய்யாத ஒரு நண்பனை நண்பன் வடிவிலுள்ள பகைவனகக் கவனிக்க வேண்டும். அதற்கு நான்கு காரணங்களுண்டு. இறந்த காலத்தைப் பற்றிச் பேசி தான் நண்பனயிருந்தால் செய்திருப்பேன் எனப் பாசாங்கு செய்வான். எதிர்காலத்தில் என்ன வெல்லாமோ செய்யப் போவதாக ஆசை காட்டுவான். அவனுடைய பேச்செல்லாம் வெட்டிப் பேச்சாயிருக்கும். உண்மையில் உதவி செய்ய வேண்டிய காலம் வந்ததும் கைவிட்டு விடுவான்.
இச்சகம் பேசுவோர் நண்பர் வடிவில் உள்ள பகைவரே. அதற்கு நாலு காரணமுண்டு. நீங்கள் செய்யும் பாவச் செயல்களையும் அவர் கள் ஆமோதிப்பர். நற்செயல்களையும் ஆமோதிப்பர். முகத்துக்கு முன்னல் உங்களைப் புகழ்ந்து பேசுவர். போகவிட்டுப் புறங் கூறித்திரிவர்.
ஊதாரியாயிருப்பவனை நாலு காரணங்களைக் கொண்டு நண்பர் வடிவில் உள்ள பகைவராகக் கொள்ள வேண்டும்.
நீங்கள் மது அருந்தச் செல்லும்போதும், அகாலவேளையில் வீதியில் சுற்றித்திரியும்போதும், விழாக்களுக்கும் நாட்டியக் கச்சேரிகளுக்கும் போகும்போதும் சூதாடும் போதும் இவன் உங்கள் கூட்டாளியாக இருப்பான்.
★ k
நல்ல உள்ளம் படைத்த நண்பர்கள் நாலு வகைப்படுவர் உபகாரம் செய்யும் நண்பன், இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே நிலையில் இருக்கும் நண்பன், நல்லதைச் சொல்லும் நண்பன், அனுதாபம் காட்டும் நண்பன், உபகாரம் செய்யும் நண்பன், நாலு காரணத்தினல் நல்ல நண்பனுகக் கொள்ளப்படுவான். தேவையான காலத்தில் உதவிபுரிவான், நீங்கள் இல்லாத காலத்தில் உங்கள் உடைமைகளைப் பாதுகாக்கிருன். பயந்த வேளையில் உங்களுக்கு அபயம் அளிக்கிருன். நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளில், உங்களுக்கு இரண்டு மடங்கு உதவி புரிகிறன். இன்பத்திலும் துன் பத்திலும் ஒரே நிலையில் நிற்கும் நண்பன் நாலு காரணங்களால் கல்யாணமித்திரனுகிருன். அவன் தன்னுடைய இரகசியங்களை உங் களுக்குச் சொல்லுகிறன். உங்கள் இரகசியங்களை அம்பலப்படுத்த மாட்டான், துன்பம் வருங்காலத்தில் கைவிட மாட்டான், உங்களுக் காகத் தன் உயிரையும் தியாகம் செய்வான். உள்ளதைச் சொல்லும் நண்பன். நாலுகாரணங்களுக்காக நல்ல நண்பனுகிருன். நீங்கள் தவறு செய்வதைத் தடுப்பான். சரியானதைச் செய்யவே துண்டு
44

வான், அவனிடமிருந்து நீங்கள் முன் அறிந்திராத நல்விஷயங்களை அறியக்கூடியதாயிருக்கும், அவன் சுவர்க்கத்துக்கு வழி காட்டுவான்.
அனுதாபமுள்ள நண்பன் நாலு காரணங்களால் நல்ல நண் பணுகக் கணிக்கப்படத்தக்கவன். உங்களுக்குண்டாகும் துர்ப்பாக்கியத் தைக் கண்டு அவன் சந்தோஷப்பட மாட்டான். உங்கள் அபிவிருத்தி யைக் கண்டு மகிழ்ச்சியடைவான். உங்களைப் பற்றி இழிவாகப் பேசு வோரைத் தடுப்பான். உங்களைப்பற்றிப் புகழ்வோரை ஆதரிப்பான்.
A A
கிருகபதி புத்திரனே; ஆரிய சாவகர் எவ்வாறு ஆறு திசைகளையும் காவல் செய்கின்றனர்?
திக்குகளுக்குரியலர் என்போர் : கிழக்கிலே பெற்றேர்-தெற்கிலே ஆசிரியன்மார்-வடக்கிலே நண்பரும் கூட்டாளிகளும், மேற்கிலே மனை விமக்கள், கீழ் திசையிலே வேலைக்காரரும் பணியாட்களும், உச்சித்தி சையிலே துறவிகளும் பிராமணரும்.
கிழக்குத் திசைக்குரியவரான பெற்றேரை மக்கள் ஐந்து வகையில் வழிபடவேண்டும். "என்னை ஒருகாலத்தில் பெற்றேர் ஆதரித்தார்கள். இப்போது நான் அவர்களுக்கு ஆதாரமாயிருப்பேன். அவர்கள் செய்த கடமைகளை நான் அவர்களுக்குச் செய்வேன். என் குடும்பத்தின் சந்ததியையும் மரபையும் நான் காப்பாற்றுவேன். எனக்குரிய பிதிரார்ச்சிதங்களை நான் பரிபாலிப்பேன். அவர்கள் இறந்தால் பிதிர்க்கடமைகளை நான் செய்வேன்.
இவ்வாறு மக்களால் பரிபாலிக்கப்பட்ட பெற்றேர் கிழக்குத்திக் குரியவராக பாலகராக தம்மக்களுக்கு ஐந்து வகையில் அன்பு காட்டுவர். தீய வழியில் பிள்ளைகள் செல்ல விடாது காப்பாற்றுவர் நல்ல வழியில் அவர்களைச் செலுத்துவர். தொழில்துறையில் அவர் களுக்குப் பயிற்சியளிப்பர். அவர்களுக்கு நல்லவிவாகங்களை ஒழுங்கு செய்வர். காலப்போக்கில் தம் சொத்துக்களை வழங்குவர்.
அ. இங்கே பகவான் சிகாலனுக்கு ஆரிய விநயத்தின்படி ஆறுதிசைகள் எவை என்பதையும், அவற்றை எவ்வாறு வழிபடவேண்டுமென்பதையும், அவற்றுக் குச் செய்ய வேண்டிய கடமைகளையும் கடப்பாடுகளையும் குறிப்பிடுகிறர். பழைய பிராமண சம்பிரதாயப்படி, திசைகளுக்குச் செய்யும் வழிபாடுகள் ஆரிய விநயத்துக்குப் பொருந்தாதவை என்பதையும் விளக்குகிறர். ஆரிய விநயம் என்பது பகவான் காட்டிய பயிற்சிமுறை. இம்முறைப்படி ஆறுதிசைகளையும் பாதுகாத்தால் அவற்றிலிருந்து எவ்வித தீமையும் அணுகாது. பிராமணரும் திசைகளை அதாவது புற உலகத்துத் திக்குப்பாலகரை அவர்களால் தீங்கு விற்படாதவாறு வழிபட்டனர்.
45

Page 94
இவ்வாறு கிழக்குத்திசையிலிருந்து ஆபத்து வராமல் பாதுகாப்பிளிக் கப்படுகிறது.
தெற்குத் திசைக்குரியவரானவர் ஆசிரியர், குருமார். இவர்களை ஐந்து வகையாகப் போற்றலாம். இருக்கைவிட்டெழுந்து அவர்களை வணங்க வேண்டும். அவர்களுக்ருப் பணிவிடை செய்ய வேண்டும். அவர் களிடம் கற்க ஆவலுடையவராயிருக்க வேண்டும். அவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். அவர்கள் கூறும் பாடங்களை மரியாதை யோடு எற்றுக் கொள்ளவேண்டும்.
தெற்குத் திசைக்குரியவராய் மாணக்கரால் ஆராதிக்கப்பட்ட ஆசிரியர் மார், மாணக்கர் மீதுள்ள அன்பை ஐந்து வகையில் காட்டுவர். மாணுக்கனுக்கு நல்ல பயிற்சி அளிப்பர், படித்ததை நன்கு கிரகிக்கச் செய்வர், சகல கலைகளிலும் நல்ல பயிற்சி அளிப்பர். தம்முடைய நண்பருக்கும் கூட்டாளிகளுக்கும் மாணுக்கனை அறிமுகம் செய்து வைப்பர். அவனுடைய பாதுகாப்புக்கு எல்லா இடங்களிலும் வகை செய்வர்.
இவ்வாறு தெற்குத் திசையிலிருந்து ஆபத்து வராமல் பாது காக்கப்படுகிறது.
மேற்குத் திசைக்கு உரியவரான மனைவியை ஐந்து வகையாகக் கணவன் போற்றலாம். அவளுக்கு கெளரவம் அளிக்க வேண்டும், நயமாக அவளோடு பழகவேண்டும். அவளுக்கு விசுவாசமாயிருக்க வேண்டும். அவளுக்கு அதிகாரமளிக்க வேண்டும். நகை நட்டுக்களை வழங்கவேண்டும்.
மேற்குத் திசையின் பாலகராக கணவனுல் போற்றப்பட்ட மனைவி ஐந்து வகையில் தன் அன்பைக் காட்ட வேண்டும். தன் கடமையை நன்ருகச் செய்ய வேண்டும். பணியாட்கள் முதலியோரை உபசரிக்க வேண்டும் ; விசுவாசமுடையவளாயிருக்க வேண்டும், கணவனுடைய சம்பாத்தியத்தைப் பாதுகாக்க வேண்டும். சகலவிதமான, விவகாரங் களிலும் அவள் திறமையும் முயற்சியுமுடையவளாயிருக்க வேண்டும்.
இவ்வாறு மேற்குத் திசையிலிருந்து எவ்வித ஆபத்தும் வராமல் நன்கு பாதுகாப்புச் செய்யப்படுகிறது.
\,
உத்தர திசைக்குரியவரான நண்பர்க்கும் கூட்டாளிகட்கும் குடும் பத்திலுள்ளவர், ஐந்து வகையில் சத்காரஞ் செய்யலாம். வள் ளன்மை, மரியாதை, கொடை, சம அந்தஸ்து வழங்கல், தன்னைப் போல அவர்களையும் மதித்தல்) வாக்குறுதி தவறதிருத்தல்.
46

வடதிசைக்குரியவராகப் போற்றப்பட்ட நண்பரும் கூட்டாளிகளும் ஐந்து வகையில் தம் அன்பைக் காட்டுவர். பாதுகாப்பு அவசிய மான காலத்திலேயே அவர்கள் அவனுக்கு பாதுகாப்பளிப்பரி. முடி யாத காலத்தில் அவனுடைய சொத்துக்களைப் பரிபாலிப்பர் ஆபத் துக் காலத்தில் அவனுக்குச் சரணுயிருப்பர், கஷ்டம் வந்த காலத்தில் அவனைக் கைவிடமாட்டார். அவனுடைய சுற்றத்தவரிடம் கூட மரி யாதை காட்டுவர்.
இவ்வாறு வடதிசையிலிருந்து ஆபத்துவராமல் அவன் நன்கு பாதுகாக்கப்படுகிறன்.
கீழ்த்திசைக்குரியவராகப் பணியாட்களும் வேலைக்காரரும் எஜமானுல் ஐந்து வகையில் போற்றப்படுகின்றனர். அவர்களின் தகுதிக்கும் சக்திக்கும் ஏற்றவாறு வேலை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உணவும் சம்பளமும் கொடுக்க வேண்டும். நோயுற்ற காலத்தில் அவர்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். விசேஷமான உணவை எஜமான் உண்டால் அதை அவர்களுக்கும் கொடுக்க வேண்டும். பொருத்தமான காலங்களில் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதோடு பரிசுகளும் வழங்கவேண்டும்.
இவ்வாறு போற்றப்படும் வேலைக்காரரும் பணியாட்களும் ஐந்து வகையில் தம் எஜமானருக்கு அன்பைத் தெரிவிக்கிரு.ர்கள். எஜ மான் துயில் விட்டெழுவதற்கு முன் எழுந்து விடுவார்கள். எஜமான் நித்திரைக்குச் சென்ற பின்னரே அவர்கள் நித்திரைச் செல்லுகி ருர்கள், கொடுத்ததை அவர்கள் எற்றுக் கொள்வர், வேலைகளைத் திறம்படச் செய்கிறர்கள். எஜமானைப் பற்றி நன்ருகப் புகழ்ந்து பேசி அவனுக்கு நல்ல பெயர் உண்டாக்குகிறர்கள்.
கீழ்த்திசையிலிருந்து எவ்வித ஆபத்தும் வராமல் இவ்வாறு பாது காப்பும், காவலும் உண்டாக்கப்படுகின்றன.
A
உச்ச திசைக்குரியவரான துறவிகளுக்கும் பிராமணர்க்கும் இல் லறத்திலுள்ளவன் ஐந்து வகையில் துணை செய்கிறன். அன்பான வகையில் உடலால் சேவை செய்தல் (மைத்திரி காயகர்ம).
அன்பான வகையில் வாக்கினல் சேவை செய்தல் (மைத்திரி வாக்கர்ம).
அன்பான வகையில் மனத்தினல் சேவை செய்தல் (மைத்திரி மனேகர்ம). அவர்களை வரவேற்பதற்காக வாசலை எப்பொழுதும் திறந்தபடி வைத்திருத்தல்.
47.

Page 95
அவர்களுடைய லெளகீக தேவைகளைப் பூர்த்தி செய்தல். (அதாவது உணவு பானம் முதலியவற்றை வழங்குதல்.)
இவ்வாறு மேல் திசைக்குரியரென ஆராதிக்கப்பட்ட துறவிகளும் பிரமனரும் தம் அன்பை ஆறு வகையில் இவ்வாழ்வானுக்குக் காட்டுகின்றனர். பாவச் செயல்களிலிருந்து அவனை விலக்குகிறர்கள், நல்வழியிற் செல்லுமாறு தூண்டுகிறர்கள். நல்ல மனத்தோடு அவனை ஆசீர்வதிக்கிருர்கள். தெரியாத விஷயங்களை அவர்கள் அவ னுக்குப் படித்துக் கொடுக்கின்றனர். தெரிந்த விஷயங்களை மேலும் விளங்கப்படுத்தி கல்வியை வளர்க்கிறர்கள். சுவர்க்கத்துக்குச் செல் லும் வழியைச் சொல்லிக் கொடுக்கிறர்கள்.
இவ்வாறு மேல் திசையிலிருந்து எவ்வித ஆபத்தும் வராமல் பாதுகாப்புக் காவலும் உண்டாக்கப்படுகிறது.
平
பகவான் இவ்வாறு கூறியருள்யதும் கிருகபதி புத்திரனன சிகாலன் கூறினன். " நன்று சுவாமீ நன்று, தலைகீழாக்கப்பட்டதை, நேராக நிறுத்தி விட்டீர்கள். மறைத்து வைக்கப்பட்டதை வெளிப் படுத்தி விட்டீர்கள். தவறன வழியிற் செல்பவனுக்கு நல்ல வழி யைக் காட்டி விட்டீர்கள். இருட்டறையில் இருந்த பொருள்களைக் கணணுள்ளவர் காண்பதற்கு விளக்கைக் கொண்டு வந்தீர்கள். இவ் வாறு பலவகையாகத் தர்மத்தைப் பகவான் போதித்தருளினிர். நான் புத்த பகவானைச் சரண் அடைகிறேன், தருமத்தைச் சரண் அடைகிறேன், சங்கத்தைச் சரணடைகிறேன். என்னை இன்று தொட்டு சீவியகால பரியந்தம் பகவானுடைய உபாசகனக ஏற்றுக் கொள்ளு மாறு வேண்டுகிறேன். ”
(தீக-நிகாய இல. 31)
48

அறவுரை
தம்ம பதம்
(தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
சித்தத்தின் நிலைகளுக்கெல்லாம் மனமே முன்னேடி. அவை மனத்திலிருந்து உண்டானவை. மனமே எல்லாவற்றுக்கும் மே லாக நிற்கிறது. தீய எண்ணித்தோடு ஒருவன் பேசினலென்ன செயல்புரிந்தாலென்ன வண்டிச் சக்கரம் மாட்டின் அடியைத் தொடர் நீது செல்வது போல துன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும்.
2
சித்தத்தின் நிலைகளுக்கெல்லாம் மனமே முன்னேடி. அவை மனத்திலிருந்து உண்டானவை. மனமே எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கிறது. தூய எண்ணத்தோடு ஒருவன் பேசினலென்ன; செயல் புரிந்தாலென்ன, நிழல் தன்னைத் தொடர்வது போல சுகம் அவனைத் தொடரும்.
3
அவன் என்னை நிந்தித்தான், அவன் என்னை அடித்தான், அவன் என்னை ஜெயித்தான், அவன் என்னைக் கொள்ளையிட்டான்”, என்று எவன் எண்ணுகிறனே அவனிடத்துள்ள துவேஷம் தணிவ தில்லை.
இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்லை. அன்பினலேதான் தணியும். இதுவே காலங்கடந்த கோட்பாடு.
24
உற்சாகமும் சாவதானமும் நற்கருமங்களில் நாட்டமும் உடையவு வணுய்த் தெரிந்த செயலில் ஈடுபடுபவனுய், புலனடக்கமுள்ளவனுய் அறவாழ்வில் ஈடுபடுபவனுடைய புகழ் உயர்ந்து வளரும்.
25
ஓயாத ஊக்கத்தினுலும் விழிப்பினுலும் ஆர்வத்தினலும், புலனடக் கத்தினுலும் அறிஞன் வெள்ளத்தில் மூழ்கிவிடாத ஒரு தீவைத் தனக்கு ஆக்கிக் கொள்வானுக.
· ዘ49

Page 96
26
அறிவில்லாத மூடசனங்கள் சோம்பலில் காலங் கழிக்கின்றனர். அறி வாளிகள் விழிப்பாயிருத்தலையே பெரியதனமாகப் பாதுகாப்பர்.
27
சோம்பலை மேற்கொள்ள வேண்ட tib. காம சுகங்களிலே ஈடுபட வேண்டாம். விழிப்பாயிருந்து தியானத்தில் மகிழ்பவன் எல்லையற்ற சகத்தை அடைவான்.
S3
எப்பொழுதும் துடிதுடித்தபடி இருக்கும் கொடிய சித்தத்தை அடக்குவது கஷ்டம். காப்பது கஷ்டம். அம்பு செய்வோன் அம்பை நேராக்குவது போல அறிவாளி சித்தத்தை நேராக்குவான்"
85
அடக்குவதற்கு அரிதானதும் அலைந்து கொண்டு தன்போக்கில் திரிவதுமான சித்தத்தை அடக்குவது நல்லது. அடங்கிய சித்தம் சுகத்தைத் தரும்.
38
நிலையில்லாத சித்தமுடிையவனும் நல்லறத்தை அறியாதவனும் உறுதியற்ற சிரத்தையுடையவனுமான ஒருவனுடய அறிவு ஒருபோதும் பூரணமடையாது.
42
பகைவன் பகைவனுக்குச் செய்யக்கூடிய கெடுதியைக் காட்டிலும், வைரி வைரிக்குச் செய்யக்கூடிய தீமையைக் காட்டிலும், அதிகமான தீமையை தவருன வழியிற் செல்லும் சித்தம் ஒருவனுக்குச் செய்யக் கூடும்.
43
தாயோ, தந்தையோ, வேறு சுற்றத்தவரோ, செய்ய முடியாத நன்மையை, நல்லவழியிற் செலுத்தப்படும் மனம் ஒருவனுக்குச் செய் Այն.
47
புல்ன் இன்பங்களென்ற மலர்களைச் சேகரித்து அவற்றில் மயங்சிக் கிடக்கும் மனத்தினனை, உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் கிராமத்தைப் பெரு வெள்ளம் அடித்துக்கொண்டு போவது போல மரணம் அடித்து க்கொண்டு போய் விடுகிறது.
SO

SO ஒருவன் மற்றவருடைய குற்றங்களையும் அவர் செய்த கருமங்கள், செய்யாத கருமங்கள் என்பவற்றையும் ஆராயவேண்டியதில்லை. தான் செய்ததையும் செய்யத்தவறியவற்றையும் நாடவேண்டும்.
5. செயலிற் காட்டாமல் அழகிய பேச்சளவில் நிற்கும் ஒருவனுடைய பேச்சு அழகும் நிறமும் வாய்ந்த வாசனையற்ற மலர் போன்றதே.
6. வாழ்க்கைப் பிரயாணத்தில் ஒருவன் தனக்குச் சமமான துணை வனையோ, தன்னில் மேலான துணைவனையோ காணுவிட்ட பல் திடமாகத் தனிவழி செல்வானுக ; பேதை அவனுக்குத் துணையாக இருப்பது நன்றன்று.
62
பேதை, எனக்கு மக்களுன்டு செல்வமுண்டு என்று சொல்லி மனக்கிளர்ச்சியடிைகிருன். ஆனல் அவனே அவனுக்குச் சொந்த மில்லாதபோது மக்கள் எங்கே செல்வமெங்கே ?
64 பேதை வாழ்நாள் முழுவதும் அறிவாளியோடு பழகினலும் ரசத் தின் சுவையை அகப்பை அறியாதவாறு போல தருமத்தின் அறிவை அவன் பெறமாட்ட டன். ጳ
67 எந்தக் கருமத்தைச் செய்தபின் பச்சாத்தாப்பட வேண்டுமோ எதன் பலனை அழுதவண்ணம் அனுபவிக்க வேண்டுமோ அக்கருமம் நல்ல கருமம் அன்று.
69 தான் செய்த பாவம் பயன் கொடுத்காதவரை அது தேனைப் போல இனியது என்று எண்ணுகிறன் பேதை, ஆனல் அது பழுத்துப் பயன் தரும்போது துயரடைகிறன்.
8.
பெரும்பாறையைக் காற்றனது எவ்வாறு அசைப்பதில்லையோ அவ்வாறே இகழும் புகழும் நல்லறிஞனை அசைக்கமாட்டா.
82 ஆழமான எரி தெளிவாகவும் அமைதியாகவும் இருப்பது போல தருமத்தைக் கேட்டறிந்ந அறிஞ்ஞர்கள் அமைதியாயிருப்பர்.
5

Page 97
85 மக்களுள் சிலரே அந்தக்கரை அடைவோர். மற்றவரெல்லாம் இந்தக்கரையில் அங்குமிங்கும் அலைந்து திரிவோரே.
90
சம்சார யாத்திரையை முடித்துக்கொண்டவன் சோகத்தைத் துறந்தவன், சகல பொருள்களிலும் பற்று நீங்கியவன். எல்லாப் பந்தங்களையும் அறுத்தவன். அத்தகைய அருகதனுக்கு அவாவினல் வரும் துயர் எது?
94.
சாரதியினுல் நன்கு அடக்கி ஆளப்பட்ட குதிரைகளைப் போல. யார் தன் புலன்களை அடக்கிக்கொள்கிறனே மானத்தைத் துறந்து ஆசைகளைக் கைவிட்டு எவன் உறுதியுடன் இருக்கிகுருனே அவனைத் தேவர்கள் தானும் விரும்புவர்.
96
அவனுடைய மனம் அமைதியானது, அவனுடையவாக்கும் செயலு லும் சாந்தமுடையவை. நல்ல ஞானமுடைய அவன் முற்றக விடுதலை பெற்றவன். உய சாந்தநிலையுடையவன், அவனே பற்றற்ற வன்.
9ሽ
அனுபவ ஞானத்தைப் பெற்றமையால் கேள்வி ஞானத்தில் நம் பிக்கை அற்றவனுய் (எவராலும்) ஆக்கப்படாத நிர்வாணமோட்சத் சத்தைப் பற்றி அறிவுடையவனுய், பந்தங்களையெல்லாம் அறுத்த வணுய், நன்மை தீமைகளுக்கு அவகாசமளியாதவனப், ஆசை களொன்றும் இல்லாதனுயுள்ளவனே உத்தமன்.
103
போர்க்களத்தில் ஆயிரம் மக்களே ஆயிரம்முறை வெற்றி கொள்பவ னிலும் பார்க்கத் தன்னைத்தான் அடக்கி ஆள்பவன் மேலான வெற்றி வீரணுவான்.
1085سسسس104
தன்னைத்தான் வெல்லுதலே மற்றவர்களை வெற்றி கொள்வதிலும் றேந்தது. தன்னை வென்று தன்னடக்கம் பெற்றவனின் வெற்றியை சிதவனே, கந்தருவனே, மாரனே, பிரமனே கூட மறுபடி எடுத்துக் கொள்ள முடியாது. (அந்தவெற்றியைத் தோல்வியாக்க முடியாது.);
S).

ஞானமில்லாதவனுய் புலனடக்கமில்லாதவனுய் நூறு வருடம் வாழ்வதிலும் அறிவுள்ளவனப் தியான சீலனய் ஒருநாள் வாழ்வதே மேலானது.
116 − நல்லதைச் செய்வதில் தாமதிக்க வேண்டாம். தீவினையிலிருந்து சித்தத்தை விலக்குக. நல்வினை செய்வதில் தாமதித்தால் மனம் தீலினே செய்வதில் களிப்படையும்.
19 தீவினை பயன்தராதவரை தீவினையாளன் தனக்கு நன்மையே வரும் என நினைக்கிருன். ஆனல் அது பக்குவம் அடைந்ததும் தீவினையின் தீமையைக் காண்பான்.
120 நல்வினை பயன்கொடுக்காதவரை புண்ணியஞ் செய்தவன் தனக்குத் தீமை கிடைக்குமெனவே எண்ணுகிருன். ஆனல் புண்ணியம் பயன் கொடுத்ததும் நல்வினை செய்தவன் நற்பயனைக் காண்பான்.
12 “என்னை இது அணுகமாட்டாது” என்று சொல்லித் தீவினையை, அலட்சியம் செய்ய வேண்டாம். சொட்டுச்சொட்டாக விழுந்தாலும் நீர் குடத்தை நிரப்புகிறது. அவ்வாறே பேதை சிறிது சிறிதாகத் தீவினையை நிறைத்துக் கொள்ளுகிறன்.
22 “என்னை இது அணுகமாட்டாது என்று சொல்லி நல்வினையை அலட்சியம் செய்ய வேண்டாம். சொட்டுச் சொட்டாக விழுந்தாலும் நீர் குடத்தை நிரப்புகிறது. அவ்வாறே தீரன் சிறிது சிறிதாக நல்வினையை நிறைத்துக் கொள்ளுகிறன்.
25 தனக்குத் தீமை செய்யாத ஒருவனும் தூயவனும், குற்றமற்ற வனுமான ஒருவனுக்கு எந்தப் பேதை துன்பம் செய்கிருனே அவனைக் காற்றுக்கெதிராக வீசிய தூசு திரும்பிவந்து சூழ்வது போலத் தீவினையானது சூழும்.
129 ஆயுதத்துக்கு எல்லாரும் பயப்படுகின்றனர். மரணத்துக்கு எல்லா ரும் பயந்து நடுங்குகிருர்கள். தன்னை மற்றவனகப் பாவித்து ஒருவர் மற்ற உயிர்களைக் கொல்லவும் கூடாது. கொல்லுவிக்கவும் கூடாது.
53

Page 98
13 சுகத்தில் நாட்டமுள்ளவ உயிரினங்களுக்குத் தன் சுகத்தை நாடும் ஒருவர் தண்டத்தினுல் இம்சை புரிவானனல் மறுமையில் அவன் சகத்தைப் பெறமாட்டாம்ன்.
52
சொற்ப கேள்வியுடையவன் (அறிவில்லாதவன்) மாட்டைப் போல வளர்வான். அவனுடைய ஊன்தான் வளர்கிறது. அறிவு வளர் வதில்லை.
55 பிரமசரியத்தை மேற்கொள்ளாதவர் இளமையில் செல்வத்தைத் தேடாதவர், மீனில்லாத குளத்திலே வாடி நிற்கும் கிழக் கொள்கைப் போலத்தவிப்பர்.
59 மற்றவர்க்குப் போதிப்பதைத்தான் முதலிற் செய்து காட்டவேண்டும். பின்னரே பிறர்க்குப் போதிக்க வேண்டும். தன்னை அடக்கிய பின்னரே மற்றவர்களை அபங்கச் செய்ய வேண்டும். தன்னை அடக்குவதே பெரிய காரியமாகும்.
60 தானே தனக்குப் புரவலன் (சரண்)- வேறு யார் புரவலனுயிருக்க (சரணுயிருக்க) முடியும். தன்னை நன்கு அடக்கியவன் பெறமுடியாத சரணைங் பெற்றவனவான்.
165 தானகவே ஒருவன் பாவம் செய்கிருன். தானவே கேட்டை அடை கிறன். தானகவே தீவினையை விலக்குகிறன். தானகவே களங் கத்தை நீக்குகிறன். தூய்மையும் களங்கமும் தன்னிலேயே தங்கி யுள்ளன. ஒருவன் மற்றவனைத் தூய்மைப்படுத்த முடியாது.
167 இழிவான காரியங்களில் ஈடுபடாதே, எப்பொழுதும் விழிப்பாயிரு, தப்பான கொள்கைகளைக் கடைப்பிடியாதே, அப்போது சம்சாரம் நீடிக்காது.
7. வா இந்த உலகைப் பார் ; இஃது அலங்கரிக்கப்பட்ட அரசத் தேருக்கு ஒப்பானது. இதில் பேதைகள் மூழ்கித்தடுமாறுவர் அறிவாளிகள் பற்றின்றி வாழ்வர்.
54

உலகில் எக சக்கரவர்த்தியாயிருப்பதைக் காட்டிலும், சுவர்க்கத் துக்குப் போவதைக் காட்டிலும், எல்லா உலகங்களையும் ஆள்வதைக் காட்டிலும் சோதா பத்தி நெறியால் வரும் பயன் மேலானது.
183 எவ்வித பாவங்களையும் செய்யாது விடுதல், நல்வினைகளைச் செய்தல் சித்தத்தைத் தூய்மைப்படுக்கல் இவை தாம் புத்தர்களின் அறிவுரைகள்
184 அடக்கமும் பொறுமையுமே மேலான தவம், நிர்வாணமே மேலானதென்பர் புத்தர்கள். மற்றவர்க்கும் துன்பம் செய்வோன் துறவியல்லன். மற்றவர்க்கு இன்னல் இழைப்போன் சமணன் அல்லன்.
85 புறங்கூருமை, பிறர்க்குத் துன்பஞ் செய்யாமை, பிராதி மோட்சம் என்ற அறவழியில் அடங்கிநடத்தல், மிதமான உணவு, எகாந்தம், உயர்ந்த சிந்தனையில் லயித்தல் இவைதாம் புத்தர்களுடைய போதனை.
197
பகைவரிடையே நாம் பகையின்றி இன்பமாக வாழ்வோம். துவேஷ முடையவர் மத்தியில் நாம் துவேஷமின்றி வாழ்வோம்.
20 வெற்றிதுவேஷத்தை வளர்க்கிறது. தோல்வியடைந்தோர் துயர மடைகின்றனர். சமாதானத்தை விரும்புவோர் வெற்றி தோல்வி இரண்டையும்விட்டுச் சுகமாக வாழ்கின்றனர்.
204
ஆரோக்கியமே மேலான லாபம். போதுமென்ற மனமே பெரும் செல்வம், விசுவாசமுள்ள நண்பனே சிறந்த சுற்றம், நிர்வாணமே மேலான சுகம்.
205
னகாந்தமென்னும் சுவையைப் பருகி அமைதியின் இன்பரசத்தை நுகர்ந்தபின் ஒருவன் களங்கமற்றவனுய் பாவமற்றவணுய் தருமத்தின் சுவையைப் பருகுவான்.
25
காமத்தினுல் சோகமுண்டாகிறது; காமத்தினுல் பயமுண்டாகிறது காமம் இல்லாதவனுக்கு சோகமில்லை; அப்போது பயமெங்கே?
i55

Page 99
222
வேகமாக ஒடிச்செல்லும் தேர் போலப் பொங்கிவரும் கோபத்தை அடிக்குபவனையே சாரதி என நான் கூறுவேன். மற்றவர்களெல்லாம் கடிவாளத்தைக் கையிற் பிடிப்பவர்களே.
223 வெகுளியை அன்பால் வெல்லுக. தீமையை நன்மையால் வெல்க லோபத்தைக் கொடையால் வெல்க. பொய்யைச் சத்தியத்தால்
வெல்க.
231 காயத்தினல் தீமை செய்யாது காக்க வேண்டும். காயத்தை அடக்க வேண்டும், காயத்தினல் செய்யும் கெட்ட கருமங்களைவிட்டு, காயத் தினுல் நற்கருமங்களைச் செய்ய வேண்டும்.
232
வாக்கினுல் தீமை செய்யாது காக்க வேண்டும். நாவை அடக்க வேண்டும். வாக்கினல் தீமை செய்யாது நன்மையைச் செய்ய வேண்டும்.
233 மனத்தினல் தீவினை செய்யாது காக்க வேண்டும். மனத்தை அடக்க வேண்டும். மனத்தினுல் தீமை செய்யாது மனத்தால் நல்வினை செய்யவேண்டும்.
234
காயத்தினல் அடக்கமுடையவர் தீரர். வாக்கினலும், மனத்தினலும் அடக்கமுடையவர் தீரர். அவர்களே முழுமையான அடக்கமுடையவர்
239 மேதாவி படிப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக கணத்துக்குக்கணம் களங்கங்களை அகற்ற வேண்டும். தட்டான் வெள்ளியைப் புடம் போடுவது போல.
240 இரும்பில் பிறந்த துரு இரும்பையே கெடுத்துவிடுவது போல நெறிதவறியவன் செய்யும் சொந்தக் கருமங்களே அவனைத் துக்க துக்கு இட்டுச் செல்லும்.
248 மானுடனே; இதை அறிவாயாக. பாவங்களைக் கைவிடுதல் கஷ்டம்,
லோபமும் துவேஷமும் உன்னை நீண்ட துக்கநிலைக்கு இழுத்துச் செல்லா திருப்பதாக.
S6

25 காமத்தைப் போலக் கொடிய நெருப்பு வேறில்லை, துவேஷத்தைப் போன்ற கொடிறு" வேறில்லைமோகம் போன்ற வலை வேறில்லை. வேட்கையைப் போன்ற நதி வேறில்லை.
252 பிறருடைய குற்றத்தைக் காண்பது சுலபம். தன்னுடைய குற்றத் தைக் காண்பது கஷ்டம். பிறர் குற்றங்களை ஒருவன் உமியைப் போலத் துற்றி விடுகிறன். ஆனல் தந்திரமுள்ள வேடன் தன்னைப் புதரில் மறைப்பது போல, தன் குற்றத்தை ஒருவன் மூடி மறைக் கிருன்.
267 புண்ணிய, பாவம் இரண்டையும் கடந்து பிரமசரியத்தை மேற் கொண்டு எல்லாவற்றையும் அதனதன் நிலையிற் கண்டுணர்ந்து உலகில் நடமாடுபவனே பிக்கு என்று அழைக்கப்படுவான்.
268- 259 மூடனும் அறிவில்லாதவனுமாயுள்ளவன் மெனனமாயிருப்பதால் மாத்திரம் முனியாகிவிட முடியாது. எவன் தராசுக் கோலைத் தாங்கி நடுநின்று நல்லதை எற்றுக் கெட்டதைத் தவிர்க்கிறனே அவனே முனி, நல்லதைக் கொண்டு கெட்டதைத் தள்ளுவதால் அவன் முனி; இவ்வுலகில் இரு பக்கத்தையும் அறிந்தவனே முனி என்று சொல்லப் படுகிறன.
273 மார்க்கங்களுள் அட்டாங்க மார்க்கமே சிறந்தது. வாய்மைகளுட் சிறந்தது நால் வாய்மையே. நிலைகளுள் சிறந்தது பற்றற்ற நிலை. (வைராக்கியம்) மனிதருள் (இருகால் விலங்குகளுள்) சிறந்தவன் ஞானக் கண்ணுடையவனே.
274
ஒரே ஒரு வழி இதுவே. தூய காட்சி பெறுவதற்கு வேறு வழி இல்லை. இவ்வழியை நீங்கள் பின்பற்றுங்கள். மாரனை மயங்க வைப்பது இஃது ஒன்றே.
275 இந்த வழியைப் பின்பற்றினல் துக்கத்துக்கு முடிவு காண்பீர். துக்க மென்ற கணையைக் களைவதற்கு அறிந்து கொண்டபின் நான் இதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
*கொடிறு - குறடு
57

Page 100
t நீயே முயற்சி செய்ய வேண்டும். ததாகதர்கள் மாாககத்தை மாத்திரம் உபதேசிப்பர். இந்த வழியிற் செல்லும் தியான சீலர்கள் மாரனுடைய பந்தங்களிலிருந்து விடுதலை அடைவர்.
277 காரணத்தில் தோன்றியவை எல்லாம் அநித்தியமானவை. இதை ஞானத்தால் உணர்ந்தவன் துக்கத்தில் அழுங்குவதில்லை. இதுவே தூய்மையைக் கொடுக்கும் நெறி.
278 காரணத்தில் தோன்றியவை எல்லாம் துக்க மயமானவை. இதை ஞானத்தால் ஒருவன் உணர்ந்தால் துக்கத்தில் அழுந்தமாட்டான். இதுவே விசுத்தி மார்க்கம். (தூய்மைக்கு வழி).
279 காரணத்தில் தோன்றியவை எல்லாம் அனத்மா. இதை அறிவால் உணர்ந்தவன் துக்கத்தில் அழுந்த மாட்டார். இதுவே தூய்மைக்கு வழி.
280
இளமையும் பலமும் இருந்தும் முயல வேண்டிய காலத்தில் முயலாமல் எவன் சோம்பலாயிருக்கிருனே அவன் ஞானத்துக்கு வழியை அறிந்து கொள்ள மாட்டான்.
281 நாவைக் காத்து மனத்தை அடக்கிக் காயத்தினல் தூய கருமங் களைச் செய்க. கருமஞ் செய்யும் இம்மூன்று வழிகளையும் துய் மைப்படுத்தி முனிவர்கள் கண்ட வழியை அறிவானக
334 விழிப்பின்றி வாழ்வு நடத்தும் மனிதனுடைய அவா மாலுவக் கொடி போல எதேஷ்டமாக வளரும். வனத்திலுள்ள வானரம் பழத்தை விரும்பி இங்கு மங்கும் தாவுவது போல அவனும் பிறவி பிறவியாகத் தாவிப்பாய்கிறன்.
335 இவ்வுலகில் அடங்காத கீழான அவா எவனை ஆட்கொள்ளு கிறதோ அவனுடைய துக்கம் பீரணப்புல்போல எதேஷ்டமாக வளர்ந் துகொண்டே வரும்.
336 அடங்காத கீழான அவாவை எவன் இவ்வுலகில் அடக்கி ஆள் கிறனே, தாமரை இலையில் நீர்த்துளிபோல அவனுடைய துக்க மெல்லாம் விழுந்து விடும்.
58

S8 வேருக்குச் சேதமில்லாதிருந்தால் மரத்தை வெட்டினலும் அது தழைக்கும். அவ்வாறே அபங்கிக் கிடக்கும் அவாவை நிர்மூலமாக் காவிட்டால் துக்கம் திரும்பத் திரும்ப உண்டாகும்.
343 வலையில் அகப்பட்ட முயல்போல மக்கள் ஆசையில் சிக்கி அலை கிருர்கள். ஆதலால் விடுதலையை விரும்பும் பிக்கு ஆசையை விட வேண்டும்.
348 போனதை மறந்து விடு, வருவதைப் பற்றி அக்கறை கொள்ளாதே,
நிகழ்காலத்தையும் மறந்துவிடு, ஒன்Uலும் பற்றில்லாத சித்தத் தோடு பிறவியின் அக்கரைக்குச் சென்று விடு. இனி உனக்குப்
பிறப்பு இறப்பு இல்லை.
360 கண்ணை அடக்குதல் இனிது. காதை அடக்குதல் இனிது ; மூக்கை அடக்குதல் இனிது. நாக்கை அடக்குதல் இனிது.
361. காயத்தைஅடக்குதல் இனிது வாக்கை அடக்குதல் இனிது : எல்லா இடத்திலும் அடக்கம் இனிது ; எங்கும் அடிக்கம் உள்ள பிக்கு துக்கத்திலிருந்து விடுபடுகிறன்.
362
கை அடக்கமுள்ளவன், கால் அடக்கமுள்ளவன், நாவடக்கமுள்ள வன், சித்தத்தை அடக்கியவன் தியானசீலன், நிலை கலங்காதவன், எகாந்தத்தை விரும்புகிறவன், போதுமென்ற மனமுடையவன்; அவ னே பிக்கு என அழைக்கப்படுவான்.
S65 பிக்குவானவன் தனக்குக் கிடைத்ததை இகழாதிருப்பாளுக. மற்றவர் களுடைய ஆஸ்தியைக் கண்டு அழுக்காறு அடையாதிருப்பானக. மற்றவர் அடைந்த நலத்தையிட்டு அழுக்காறு கொள்ளும் பிக்கு சமாதிநிலை அடைய மாட்டான்.
367
மனம் உடல் (நாமரூப) என்பவை சம்பந்தமாகப் பற்றில்லாதிருப் பவன், தன்னிடம் இல்லையே என்று துயர் அடையாதிருப்பவன், அவனே பிக்கு
159

Page 101
S68 கருணை நிறைந்தவனாய், புத்த தர்மத்தில் களிப்படைபவனப் இருக்கும் பிக்கு கந்தங்களின் சேர்க்கை முடிவடையும்போது சாந்த மான நிர்வாண சுகத்தை அடைவான்.
385
எவனுக்கு இக்கரையுமில்லை அக்கரையுமில்லையோ, எவனுக்கு இக் கரை அக்கரை இரண்டுமில்லையோ, எவனுக்குத் தொல்லையும் பந்தமு மில்லையோ அவனையே அந்தணன் என்று கூறுவேன்.
387
பகலில் சூரியன் பிரகாசிக்கிருன்; இரவில் சந்திரன் பிரகாசிக்கிருன் யுத்தசந்நத்தனய் கூடித்திரியன் பிரகாசிக்கிருன். பிராமணன் தியானத்தில் பிரகாசிக்கிருன். ஆனல் புத்தன் இரவும், பகலும் ஒளியுடன் பிரகாசிக்கிருன்.
420
எவனுடைய கதியைத் தேவரும்; கந்தருவரும், மனிதரும் அறிய மாட்டாரோ, எவன் ஆசவங்களைக் களைந்து அருகதறிலையுடையவனே அவனே அந்தணன் எனக் கூறுவேன்.
423
முற்பிறப்பை அறிந்தவன், சுவர்க்க நரகங்களை அறிந்தவன், பிறவியை அறுத்தவன், உயர் அறிவால் மெயஞ்ஞானம் பெற்றவன், முனிவன், செய்ய வேண்டியவற்றையெல்லாம் செய்து முடித்தவன், அவனே அந்தணன் என்பேன்.
60

புத்தபகவானின் இறுதிவார்த்தைகள்
பின்னர் பகவான் ஆனந்ததேரருக்குக் கூறினர். “உங்களில் சிவா எங்கள் ஆசிரியர் இப்போது எங்களோடு இல்லை. மறைந்த அவர் கூறிய பிரவசனம் இருக்கிறது” என்று நினைக்கலாம். ஆனல் ஆனந்த இந்த மாதிரி நினைக்கக்கூடாது. நான் மறைந்த பின்னர் என்னல் உபதேசிக்கப்பட்ட தம்மமும் விதிக்கப்பட்ட விநய மும் ஆனந்த உங்கள் ஆசிரியராய் இருக்கக்கடவது.
ஆனந்த இப்போது பிக்குகள் ஒருவரை ஒருவர் நண்பரே (ஆவுலோ) என்று அழைக்கின்றனர். நான் போனபின்னர் அவ்வாறு செய்யக் கூடாது. முதியி பிக்குவானவர், ஆனந்த இளைய பிக்குவை அவரு டைய பெயரையும், கோத்திரப் பெயரை அல்லது நண்பன் என்ற சொல்லைச் சேர்த்து அழைக்கலாம். இளைய பிக்கு முதிய பிக்குவை * சுவாமி” (பந்தே) என்றே * ஆயுஸ்மான்” (ஆயஸ்மா) என்றே அழைக்கலாம்.
சங்கத்துக்கு விருப்பமானல் ஆனந்த நான் மறைந்தபின்னர் விநயத்திலே சிறியவையான முக்கியமல்லாத விதிகளை நீக்கி விடலாம். நான் மறைந்த பின்னர் ஆனந்த சன்ன என்ற பிக்குவுக்கு பிரம்மதண்டம் (அதாவது மிக கடுமையான தண்டம்)விதிக்கவேண்டும்?
“ சுவாமீ, என்னவிதமான கடுந்தண்டனையை விதிப்போம்”. * ஆனந்த, பிக்கு என்னதான் விரும்பியதைச் சொல்லட்டும். மற்றப் பிக்குகள் அவரோடு பேசவுங்கூடாது, அவருக்கு ஆலோசனை கூறவுங் கூடாது, அவருக்காகப் பரிந்து பேசவுங்கூடாது.
பின்னர் பகவான் பிக்குகளை விழித்து "பிக்குகளே, புத்தரைப் பற்றியோ தர்மத்தைப் பற்றியோ சங்கத்தைப் பற்றியோ மார்க்கத்
1. "அதீத சத்துகம்பாவசனம்" என்பதற்கு ரீஸ்டேவிட்ஸ்," ஆசிரியருடைய வசனங்கள் முடிந்துவிட்டன " என்று மொழிபெயர்த்தார். ஆளுல் இம் மொழிபெயர்ப்பு மூலபாடத்துக்கு எற்றதன்று. 2. பிரம்மதண்டம் என்ப்து தெய்வங்கள் விதிக்கக்கூடிய மிகக்கடுமையான தண்டனை
என்பதே சொல்லொடு பொருளான அர்த்தம். 3. சித்தார்த்தர் புத்தர்நிலை அடைவதற்கு முன்னர் சன்ன அவருடைய நெருங்கிய நண்பராகவும் தேரோட்டியாகவுமிருந்தார். பின்னர் சங்கத்தில் சேர்நது பிக்கு வானர். தான் புத்தருடைய நெருங்கிய நண்பன் என்று அகங்காரல் கொண்டார். தான் நினைத்தபடி நடக்க முற்பட்டார். நற் குழுப் பண்பு அற்றவரானர். அடிக்கடி தவருன வழியில் நடக்க முற்பட்டார். புத்தர் பரிநிர்வாணமடைந்த பின்னர் ஆனந்ததேரர் அவரிடம் சென்று அவர் சமூகத்திலிருந்து முற்ருகப் பகிஷ்கரிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். அவ ருடைய அகங்காரம் மறைந்தது. அவர் விநயமுடையவரானர். கண்கள்
திறந்துவிட்டன். பின்னர் நல்வழியிற் சென்று அருகததிய்ைடைந்தார். அவர் மீது விதிக்கப்பட்ட தண்டனை தானுகவே செயலற்றுப் போயிற்
6

Page 102
தைப் பற்றியோ விநயத்தைப்பற்றியோ ஒரு பிக்கு விடமாவது ஐயமோ, மயக்கமோ இருக்கக்கூடும். பிக்குகளே, இப்பொழுதே கேளுங்கள். “ எங்கள் ஆசிரியருக்கு முன்னல் இருந்தோம், பகவான் முன்னிலையில் நேருக்கு நேர் இருந்தபோதும் அவரைக் கேளாமல் விட்டோம்” என்று பின்னர் எண்ணி உங்களை நொந்து கொள்ளக் கூடாது" என்று சொன்னர்.
இவ்வாறு பகவான் சொன்னபோது பிக்குகள் ஒன்றும் பேசாது இருந்தனர்.
இரண்டாம் முறையும் மூன்றம் முறையும் பகவான் இவ்வாறு கேட்டார்.
மூன்றம் முறையும் பிக்குகள் மெளனமாகவேயிருந்தனர். பின்னர் பகவான் அவர்களை விழித்து “உங்கள் ஆசிரியர் என்ற மரியாதையினுல் கேள்வி கேட்க மறுக்கிறீர்கள் போலும். அப்படி யானுல் பிக்குகளே நண்பர் நண்பரோடு பேசலாம் பிக்குகளே என்றர். அப்பொழுதும் அப்பிக்குகள் ஒன்றும் பேசாதிருந்தனர்.
பின்னர் ஆயுஸ்மான் ஆனந்தர் பகவானிடம் கூறினர் “ சுவாமி இது அற்புத்b, இஃது ஆச்சரியம், சுவாமீ, இங்கே கூடியுள்ள பிக்குகளில் ஒருவருக்காவது, புத்தம், தர்மம், சிங்கம், மார்க்கம் விநயம் என்பனபற்றி எவ்வித சந்தேகமோ விபரீதமோ கீடையாது, என்பது என் நம்பிக்கை. “நீங்கள் நம்பிக்கையின் பேரில் @Lلia( கிறீர்கள். ஆனந்த, ஆனல் இந்த விஷயத்தில ததாகதர் (புத்த அறிவார்; நிச்சயமாக அறிந்துள்ளார், இங்குள்ள பிக்குகள் ಆರಿಹಟ್ಝ್ திலே புத்தம், தர்மம், சங்கம், மார்க்கம், விநயம் பற்றி சந்தே விபரீதம் உள்ள ஒரு பிக்குவைக் கூடக்காணமுடியாது. இந்த ஐந் நூறு பிக்குகளுள் குறைந்த ஆன்மீகநிலையில் உள்ளவர்கூட சோதா பன்ன நிலையை அடைந்துள்ளனர். அவர் கீழ் நிலையில் விழக் கூடியவரல்லர். மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு அருகதையுடையவர், அது நிச்சயம்".
இவ்வாறு கூறிய பின் பகவான் பிக்குகளை விழித்து “ இப்போது பிக்குகளே, உங்களுக்குக் கூறுகிறேன். காரணத்தில் தோற்றியவை எல்லாம் அழியும். உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற விழிப்புடன் இருங்கள்"
ததாகதரின் கடைசிவர்த்தைகள் இவை. (தீகநிகாய 16 வது சூத்திரமான, மஹா பரி நிப்பாண சுத்தம்.)
1. மரியாதையின் காரணமாக புத்தபகவானிடம் கேள்விகளைக் கேட்கமுடியா நிலை யிருப்பின் தமது நண்பரிடம் கேட்கலாம். நண்பர் அக்கேள்வியை புத்தபகவா னிடம் கேட்பார்.

Joka A m
sufisqр-Abhifamue
gas-D ---
gasol-DA
5ib-Dhp eam
5ibo-Dhpa an
5f-Dhs 一
லங்கா-Lanka e-d
LD-M ar
Loe–MA --sat
tDrTa5mT Madhyakari —
LD. (sis - Mh. ~
Sutralankara
uDa- MHVG
LIrGgir-PTS
uj-FGa
சம்- S
stry-Saratha യ
85ğ5— Sh
a 5ir-UD
விப- WTBH.
- VISM qw
சுருக்க வடிவங்கள்
அங்குத்தர நிகாய-பதிப்பாசிரியர் தேவமித்ததோர்
(கொழும்பு 1929) பாளி டெக்ஸ் சொசயிடி, பதிப்பும்
அபிதர்ம-சமுச்சய-அசங்கர் இயற்றியது- பதிப்பாசிரியர்
பிரதான் (விஸ்வபாரதி-சாந்தி நிகேதன் 1960)
தீக நிகாய-பதிப்பாசிரியர்-ஞானவாசதோ (கொழும்பு
1929)
தீக நிகாயட்டகதா-சுமங்கள விலாசினி-(சைமன் ஹேவா
விதாரண சொத்துரிமைத் தொடர், கொழும்பு)
தம்மயத-பதிப்பாசிரியர்-கே. தம்மாதஞ தேரர்
(கொழும்பு 1926).
தம்மபதட்டகதா- (பாளி புெக்ஸ் சொசயிட்டி பதிப்பு)
தம்மசங்கனி (பாளி டெக்ஸ் சொசயிடி பதிப்பு)
லங்காவதார குத்திரம்-பதிப்பாசிரியர் நன்ஜியோ
(இயோதோ 1923)
மஜ்ஜிம நிகாய (பாளி டெக்ஸ் சொசயிடி பதிப்பு)
மஜ்ஜிம நிகாய அட்டகதா-பபஞ்சரூதனி- (பாளி புெக்ஸ்
சொசயிடி பதிப்பு)
மாத்தியம் மிக கரிகை- நாகர்சுனர் இயற்றியது. பதிப் பாசிரியர் எல். டி. லா வய்யே பூசின் (பெளத்த நூல்கள் 1) மகாயன குத்திசாலங்கார அசங்கர் இயற்றியது. பதிப்
பாசிரியர் சில்வேன் லெவி (பாரிஸ் 1907)
மகாவக்க விநய நூல்-பதிப்பாசிரியர் சத்தா திஸ்ஸ்
தோர்- (அலுத்கமை 1922)
பாளி டெக்ஸ் சொசயிடி, (பாளி நூல் வெளியீட்டுச் சங்கம்
பரமத்த ஜோதிகா (பாளி டெக்ஸ் சொசயிட்டி பதிப்பு)
சம்யுக்த நிகாய (பாளி டெக்ஸ் சொசயிட்டி பதிப்பு)
சாரத்தப்பகாசினி (பாளி டெக்ஸ் சொசயிட்டி, பதிப்பு) சுத்தநியாத (பாளி புெக்ஸ் சொசயிட்டி பதிப்பு)
உதான (கொழும்பு, 1929)
விபங்க (பாளி புெக்ஸ் சொசயிட்டி பதிப்பு)
விசுத்திமக்க (பாளி டெக்ஸ் சொசயிட்டி பதிப்பு)

Page 103
அகுசலி அக்கோத அல்லாத delliga
5ts.Tanay
asbro அதிமொக்க
Sarganir அத்ததிய
அநாகாமி
ditos
அரிய அட்டங்கிகமக்க அரிய கச்ச அருகதர் (அகந்தர்)
oadbæn (senbøg) aestigm அவிரோத odammsg5
elansas Joañéa


Page 104
சங்கார-சங்கத
தத்ர
சதி
சதிபட்டான
சத்தா சத்தா (சிர்த்தை)
சந்த
சமத
சமஜிவிகதா
சமாதி
சமுதய
சம்சாரம்
சம்மா ஆஜீவ
சம்மா கம்மந்த
இம்மா சிங்கப்பா
சம்மா சதி
sibuon sotDTS) சம்மா திட்டி
agoboT aTasT
дећиот алтшпио
சம்முதி சம்முதி சச்ச
கலாதன
சஸ்ஸதவாத
s Mad
166
புத்த பகவானுடைய சீடர் குழாத்தைச் சேர்ந்த பிக்கு
சங்கத்தார்.
நிபந்தனைகளுக்கு (உபாதிகளுக்கு) உட்பட்டவைகளும்
நிலைகளும்.
(சத்தியம்) வாய்மை, உண்மை, மெய்ம்மை. கடைப்பிடி, விழிப்பாயிருத்தல், ஜாக்கிரதை.
விழிப்புநிலையில் இருத்தல், சதா அவதானத்துடன்
இருத்தல், ஜாக்கிரதை நிலைபெறச் செய்தல்.
ஆசிரியர், போதிப்பவர், உபதேசிப்பவர், உபாத்தியாயர்.
நம்பிக்கை, விசுவாசம், பக்தி, அன்பு,
விருப்பம். மனத்தின் ஒரு நிலைப்பாடு, நீண்டமைதி, சாந்தி. ஆதாயத்துக்கேற்ப வாழுதல்.
மனத்தின் நீண்டமைதி, ஒரு நிலைப்பாடு, எகக்கிரதா, தியானநெறிமூலம் மனதைப் பக்குவப்படுத்துவதனல் எற்படும் மனேசாந்த நிலை. (சமதமும் சமாதியும் ஒரு பொருட் சொற்கள்).
தோற்றம், உற்பவம், துக்கத்தின் தோற்றம் (இரண்டாவது
உயர் வாய்மை).
பிறவிச் சக்கரம், ஊழிமுறை.
நற் சீவனுேபாயம், நல்வாழ்க்கை, தவருன வழியில்
வாழாதொழிதல்.
நற்தொழில், நற்செயல்.
நல்லூற்றம் (நல்ல எண்ணங்கள், நற்கிந்தனை)
நற்கடைப்பிடி, விழிப்பாய் இருத்தல், கருத்தோடிருத்தல்.
நல்லமைதி.
நற்காட்சி, இனியவை காணல்.
நல் வாய்மை, இனியவை கூறல்.
நல்லூக்கம், இனிய முயற்சிகள்.
உலகியல் சார்ந்தவை, மரபு வழி எற்றுக்கொள்ளப்பட்டவை.
உலகியல் வாய்மை, மரபுவழி ஏற்றுக்கொள்ளப்பட்ட
வாய்டைப்கள்,
அறுவகை ஆயதனங்கள், (அஃதாவது ஜம்புலனும்
மனமும்), "ஆயதன” என்பதன் கீழ் காண்க.
சாசுவதவாதம் உலகம் நிலைபேறுடையது என்னும்
Goasmoutr6.
šgub, Rathaith, a6Tb
ado vanágan, pq ne" Ayasov,

இல
配乐
சுத்த சூத்ர-சூத்ரர் சேதளு சோதாபன்ன ஜாதி
ஜரா மரண
ஞான தஸ்ஸன
தச ராஜ தம்ம
தண்ஹக்கய
தண்ஹா
தகாகத
தய
தம்ம
தம்ம சக்க தம்மசக்கு தம்ம விசய தம்ம விஜய
தாகப
தான
திசரன
திபிகட
àydiun தியான
தீன-மித்த
சீலம், ஒழுக்கம் (விலக்கியன ஒழித்து விதித்தன செய்தல்
மணிமேகலை). சுகம், இன்பம், வசதி, நலம். பேருரை, சமயவுரை, சுத்திரம் (நூல்). நான்காவது வருணத்தைச் சேர்ந்தவர். சேதனை, விருப்பத்துணிவாற்றல். ஒட்டத்தில் புக்கவர் நிலை, நிருவான வழியில் முதற்படி, பிறப்பு, பிறவி, சென்மம், சனனம்.
மூப்பும் சாவும்.
அகக் கண், அறிவுக் கண்ணுல் காணும் காட்சி. அரசன் செய்யக்கடவாய பத்து வகைக் கடமைகள். பற்றற்ற நிலை, நிருவாணத்தைக் குறிக்கும் ஒரு சொல். வேட்கை, பற்று ஆசை. வாய்மையைக் கண்டவர்-புத்தர் என்பதற்கு ஒரு பொருட் சொல்-புத்தபகவான் தம்மைச் சுட்டும்போது பயன் படுத்தப்பட்ட ஒரு பெயர்.
தவம், தபசு தவம்புரிதல். (தர்ம) வாய்மை, போதனை, தருமம், நேர்மை, பண்பு
சீர், இயல்பு, பான்மை, பாங்கு, நிபந்தனைக்கு உட், பட்டதும் உட்படாததுமான அனைத்தும்-தன்மைகள் erőGT Lh.
வாய்மைச் சக்கரம், அறவாழி. வாய்மைக் கண், வாய்மை ஆகிய கண்.
வாய்மையை நாடுதல். அறநெறியால் வெற்றிவாகை குடுதல். (தாதுகப்ப}-தாதுகோபுரம், துரபி, தாதுகருப்பம் . தானம், கொடை அளிப்பு.
மூவகை அடைக்கலம்-புத்த-தம்ம-சங்கம்.
ஆகிய மூன்று சரணங்கள்.
(திரிபிடகம்) மூன்று பிடகங்கள். புத்தர் அருளிய போதனை
கள் அடங்கப் பெற்ற மூன்று திருமுறைகள். அடையாவன: (1) விநயபிடகம், (ஒழுக்கத்திருமுறை).
(2) சுத்த பிடகம் (பேருரைத்திருமுறை). (3) அபிதம்மபிடகம் (மீயுயர்தம்மத்
திருமுறை).
திரவியம், பொருள்.
தியானம், பாவனை, உயரிய மன வளர்ச்சியால் எய்தப்
பெறுகின்ற மனேநிலை.
கழிமடம், சோர்வு (மனதில் எற்படும் சோம்பேறித்தனமும்
ஊக்கமின்மையும்).
67

Page 105
துவம்
தேரவாத
@s町辱
தாமரும
podoamerawT நிர்வான
நிரோத நிவரண நைராத்மிய
hear
Abras půurs
unaPurgs astrus படிவேத பந்தே பரமத்த பரிச்சாக
uffar
aldono
வஸ்னத்தி
Andhyanyunta Gary
துக்கம், துன்பம், முரண்பாடு, திருப்தியற்ற தன்மை,
நிலையற்ற தன்மை, வெறுமை.
தாதுகோபுரம் தூபி.
* முதியோர் மதப்பிரிவு”-இலங்கை, பர்மா, தாய்லாந்து, லாவோஸ், சித்தகோன் ஆகிய நாடுகளில் நிலவும்
புத்த மதத்தின் மூலப் பிரிவு. மகாயான, ஹீனயான பிரிவுகளையும் காண்க.
தெய்வம், தேவர்.
கோபம், பகைமை, தீய எண்ணம்.
பெயரும் உருவும், (மனதையும் உடலையும் சார்ந்துள்ள
இயல்புகள்).
லிட்டேகுதல், சுதந்திரம், விடுதலை,
(நிப்பாண)--பெளத்த சமயத்தின் படி வீடுபேறு, பச
மார்த்த சத்தியம் (அணைவு-தொடர்பறவு).
ஒழிவு, ஓய்வு.
தடை, பாதிப்பு, மறைப்பு.
(நிர்-ஆன்மியம்) ஆன்மா இல்லையென்ற வாய்மை.
ஐவகைக் கந்தங்கள். (உரு, உணர்ச்சி, குறிப்பு, மனச்
சேட்டிதம், விஞரஞானம் ஆகியவை).
பிரக்ஞை, பகுத்தறிவு.
வெகுளி, கோபம், முட்டிக்கொள்ளும் தன்மை.
காரணகாரியத் தொடர்பு. (சார்பிற் தோன்றித் தத்தமின் மீட்டும் இலக்கணத் தொடர்பு. மணிமேகலை 30 ஆம் காதை)
எதிரோட்டமான, இயல்புக்கு எதிரான. உள்ளார்ந்த காட்சி, முற்றக அறிந்து கொள்ளுதல். ஐயா, வந்தனைக்குரிய ஐயா. (பரமார்த்தம்)வரம்பற்றவாய்மை,இறுதிமெய்ம்மை. கொடை,துறத்தல்,கைவிடுதல்,உரிமையை முற்ருகக்
கைவிடல்).
(பரிநிப்பான)--முற்றுமுழுதானஅணைவு, புத்தரின்
அல்லது அருகதரின் இறுதி யாத்திரை தோற்றம், உற்பவம், இடையருமை. பரிசம், ஊறுணர்வு. மன இறுக்கத் தளர்வு, மன நெகிழ்வு. பரிசம் உணவாக அமையும் நிலை.
(புலன்கள் வெளி உலகத்துடன் கொள்ளும் ஊறுணர்வு ஊட்டமாக அமையும் நிவை).
தியானம் செய்தல், மனதை அபிவிருத்தி செய்தல்,
பாவனை, விருத்தி செய்தல்.

பிரம்ம
பிரம்மவிகார
Synopudeur
பீதி
εμέδου
பைசக்க
வசந்ா குரு
Guntghs
போதி
taksa
மனகோர
ografi
மஜ்ஜிமாமடியதா
diff
மிச்சய திட்டி
முதிதா
மெத்தா
புத்த பிக்கு, பிட்சை எற்று வாழும் துறவி.
மிரம்மா, உலகைப் படைப்பவன்.
மீ உயர் வாழ்க்கை, எல்லையற்ற அன்பு-அஃதாவது அன்பு (மெத்தா) கருணை, முதிதா, உபேக்கா ஆகிய நான்கு மீ உயர் பண்புகளுடன் வாழுதல்.
பிராமணன், அந்தணன்.
(பிரிதி) மகிழ்ச்சி, களிப்பு. புட்கலன், ஆள், தனிநபர். புத்தபகவான், ஞான ஒளி பெற்றவன்.
மருத்துவர், வைத்தியர். மருத்துவ விற்பன்னர், மருத்துவ கலாநிதி.
ஞான ஒளி பெறுதற்குத் துணை நிற்கும் அங்கங்கள்
(உபாயங்கள்).
போதிமரம்-அரச மரம், புத்தபகவான் ஞான ஒளி பெற்ற
மர நிழல்.
மார்க்கம், வழி, பாதை, நெறி.
மகா பூதங்கள்-நால் வகைப் பூதங்கள் (திண்மம்,
நீர்மம், வெப்பம், இயக்கம்).
* பெரிய வாகனம்” சீன, யப்பான், கொறியா, திபெத்து, ஆகிய நாடுகளில் நிலவும் புத்தசமயப் பிரிவு. தனயான, தேரவாத ஆகியனவற்றையும் காண்க.
மென்மை, மிருதுவான தன்ம்ை, தண்ணளி.
மனத்தால் உள்ளுதல், சிந்தனை செய்தல், கூர்ந்து
கவனித்தல்.
மனம் என்னும் புலன், மணம், சித்தம்.
நடுவழி, மத்தியவழி. எண்ணங்களே உணவாக அமையும் நிலை, எண்ண வட்டம். அளந்து பார்க்கும் இயல்பு. ஒப்ப அளத்தல்.
தவருண காட்சி, தவருண நோக்கு. முதிதை-மற்றவர்களின் இன்பத்தில் தானும் இன்புறல், வரம்பில் அன்பு (நட்பு) துன்புறுவோர்களின் மாட்டு
கழிவிரக்கம் கொள்ளுதல்.
橘9

Page 106
CorraG
5T5
ரத்தினத்தய
JENG
ரூப
afskim
விஞ்ஞான
விஞ்ஞாளுஹார
விபஸ்ஸளு
cầumātrư)
afâuan
விபவதண்ஹா
arfau unras
விராக
வியாபாத வேதஞ
anal Su
jarrurrah
70
அறியாமை, மோகம், மாயை.
உள்ளது உள்ளவாறு, தோன்றியவாறு, உள்ளது உள்ள
வாருன பொருள்.
(இரத்தினத்திரயம்) மும்மணிகள். புத்த-தம்ம-சங்கம்
என்பவை
ஆசை, இச்சை, கழிகாமம், சிற்றின்ப வேட்கை, அவா
உரு, உருவம், பொருள், வடிவம்.
ஐயம், ஆசங்கை.
அறிநிலை, அறிவுறுநிலை, உணர்வுநிலை.
உணர்வே ஊட்டமாக அமையும் நிலை.
அகக்காட்சி, நுண்காட்சி, பகுத்தறிவுக்காட்சி.
மாற்றம், உருமாற்றம், பரிணுமம்.
இன்மை, அழிவு, ஒழிவு, தோன்ருதொழிதல், தோன்ற
ഞഥം
தோன்ருமை விரும்புதல், தோன்றமையின் மீது எற்படும்
ஆசை.
பெறுபேறு, பயன், விளைவு, முதிர்வு. ஆசையின்மை, பற்றற்ற தன்மை.
கோபம், வெகுளி, குரோதம், இம்சிக்கும் எண்ணம், உணர்வு, உணர்ச்சி, வேதனை.
கமம், வணிகம் போன்ற தொழில்களைச் செய்யும் வைசிய
வருணத்தைச் சேர்ந்தவர். இந்திய வருணுசிரமங்களின் மூன்ரும் நிலையில் உள்ளவர். سمبر
g
* சிறு வாகனம் ', மகாயான பெளத்தர்களின் வழக்கு. பெளத்த மதத்தைச் சேர்ந்த ஆரம்பகால மடப் பிரிவு களைக் குறிக்கின்றது. தேரவாதப் பிரிவு எனினுமாம். மகாயான, தேரவாத ஆகியவற்றின் குறிப்புகளையும் நோக்குக.

அகுசல
Jagos μια
அசோக
அசம்கத அசம்கத சம்யுத்த ை
அஜாதசத்து
அதம்ம
அநாகாமி =
அமத re அமோசதம்ம
அரிய அட்டங்கிக மக்க -
அருகதர் (அரகந்தர்) -
அலகத்துபம சுத்த -
அலகாபாத் мы»
அவிஜ்ஜா aa.
அவ்யாகித as
அறிநிலை •••••ame
அறியாமை аква அறிவு
அன்பு
o6.525 assing
அளுதபிண்டிகன் -
அனுயஸ்ஸளு
அனுபோத
ஆகாரம், நால்வகை -
ஆசாரிய முட்டி = ஆசிரியர் -
ஆத்மா
ஆலய விஞ்ஞான m)
കൃrr sa
பொருளகராதி (சுட்டி)
37
10, 75
5, 102, 104, 105; அசோகனின் 11 ஆம் சிலாசானம், 102
42, 43
42 (கு 2)
O
14
10 (G5. 1)
(Joófish)--44
(மெய்ப்பொருள்)-45
30 (g. 1)
52, 53, 54, 91, 97
7, 8, 10 (@• 1), 37, 45 (@छ- 2)
48, 76, 77
s
14
4, 46
48
விஞ்ஞானத்தின் கீழ் காண்க.
அவிஜ்ஜையின் கீழ் காண்க.
57 ; பஞ்ஞா என்பதையும் காண்க.
கருணையின் கீழ் காண்க.
80 (கு. 2), 60, 61, 83, 85, 68, 73 (கு 1) 77) 92.
அனுதிமாவின் தோதற்ற நிலை, 77
OO
8.
8.
35
3, 70
38, 4.5, 59, 63, 64, 66, 67, 68, 70, 72, 73, 75,
76, 77, ஆன்மாவின் கீழும் காண்க.
21 (கு 1), 76 (கு 1)
48
7

Page 107
struo an
ஆனந்த
ஆளுபானசதி ബ്
இகியத்தன Shawo
இந்தியா Wawe
இந்து br
இலங்கை w
38, 45, 49, 83, 66, 67, 68, 70, 72, 73, 75 ஆன்மா என்ற கருத்து 26 ; "நான்” என்பதையும் காண்க.
, 69, 70, 7, 72
56, 81
9.
79, 80 (கு. 1)
6, 7
(i) (хvii)
இலங்கையின் பெளத்தமத வரலாறு (ஆங்கில நூல்) 17 (கு. 2)
உத்தர பிரதேஸ் -
உதாயி armad s مس۔
s ursó) exas
உயேக்கா awa
R-05Gau sur o உயிர் (சத்தா) ·
உயிர்மத்தின ஆரம்பம்உவமக்கதை, புணையி
உறவு
உவட்டங்கள் gogo ஏதி, தோற்றம் ஒழிவு - ஏறி பஸ்விக area
ஐயம் e-s-9 ·
ஒழுக்கநெறி m
கங்கை •gagna
கடமைகள், ஆள்பவர் -ன
கடவுள்
கத்தியர் awa
கந்தம், ஐவகை --
கருணை piya
கர்ம (கம்ம) -
72ו
(xvii)
50
5, 95, 96
44, 89
O
24, 29, 30
8
13 ; புண் உண்ட மனிதன்-16
பெற்றேருக்கும் சிறர்களுக்குமிடையில்-93 ; ஆசிரியரியனுக்கும் மாணுக்கனுக்குமிடையில்-94 கணவன் மனைவிகளுக்கிடையில்-79 ; சமய குரவர்களுக்கும் இல்வாழ்வோருக்குமிடையில்-95 ஆகாரம் என்பதன் கீழ் காண்க.
36, 45.
(வந்து பாருங்கள்) 11 விசிகிச்சா என்பதன் கீழ் காண்க. 53, 55 ; சீலம் என்பதையும் காண்க.
(xvii)
O
31, 37, 59, 62, 65.
6
24, 29, 66, 68, 76; விஞ்ஞானக் கந்தம்-27 ; ரூபக்கந்தம்-24 சங்காரக்கந்தம்-26 ; சஞ்ஞாகந்தம்-26 வேதனக்கந்தம்-26
53, 89
5, 35, 37; கர்மபல-37; கர்மவியாக-37, நற்செயலுக்கு வெகுமானம், பாவத்துக்குத் தண்டனை, நடத்தைக்கு எற்பத் தீர்ப்பு-37

«
காத்தாரம் as
காபாடிகன் sus
காம்போசம் &om
asırgar sırfluğ5 Gğ5r
ւմուլ
கார்தேசியன் ' ~
Grantor
காலிங்கம் 8. вина
கிளர்செளும் 6سمجھ
வொன்
கிறித்துவ ങ്ങ
குசல espwa குசிளுரா கூட தந்த சுத்தம் - கேசபுத்தர் .مست
கேமகர்
கேள்விகள், நால்வகை
கொறியா --9
Casurabເຕົ east
கோசல-2 s
கோதம (கவுத்மர்) -
கோளியர் a0
சகதாகாமி sko
சக்க வத்தி சிகநாத -
சுத்தம் Na
agesiasko س- و
சங்கற்பம் erra
சதி skrid திபட்டானம்
கத்தா (சிரத்தை) சத்திமம் (வாய்மை) -
சந்திர குப்தன் 4ho &ons
(xvi)
27 (கு. 4)
g
(χναι)
34, 60, 61, 63 ;
படிச்ச சமுபாதத்தையும் காண்க.
36
2, 4
104.
64 (கு. 3) 68 (கு. 2)
6, 7
32
(ανi)
8
3.
76, 77
75
(Xνii)
14
கோசல அரசன்-28
12, 31 (જી. 4), 72, 78 (જી. 2.), 76
O
10 (5. 7)
97
2, 8, 10, 10, 95 ; சொற் பொருள் விளக்கம்-2 (கு
சங்கத்தின் நோக்கம்-92
36, 49; சேதன என்பதையும் காண்க.
8.
70 உம் குறிப்பு 2 உம்; சதிபட்டான சுத்த-91,83
10, 11 (5. 1), l00
6, 11, 45 ; பரமார்த்தம்-41, 44, 45; உயர்பரமார்த்தம்45 ; கடைசியான, 46, 50 இரண்டு வகை-க் பேணல்-10 எதிர்மறையன்று-46 பயன்விளவும்
stairg-46
104.
173

Page 108
சமத சமாதி
சமுதய சம்கத
சம்கார
சம்கார
சம்மா திட்டி
சம்மாசங்கப்ப
சம்மா சமாதி
சம்மா வாசா
சம்யுக்த நிகாய சவித்த
Brsto
arraku,
சாதி
சாராநாத் சாரிபுத்த சார்புக்கோட்பாடு சாவத்தி
சிகால
சிகாலசுத்த சித்தகோன் சித்தத்தன்
(சித்தார்த்தன்) சிக்கேக்கதா (சித்கை
காக்கிரதை)
சித்தத்தை ஒருமுகப்
படுத்தல்
சிந்தனைச் சுதந்திரம்
சிம்சபா
இலம்
சிணு
ககங்கள், நால்வகை சுதந்திர சங்கற்பம்
கத்திரன்
74
ሽ9
53, 79
19, 34
。44,46,79
25 ஆம் பக்கமும் 2 ஆம் குறிப்பும்; சொற் பொருள்
விளக்கம்-86 ஆம் பக்கமும் 2 ஆம் குறிப்பும்.
31, 37, 40, 49, 14 (கு. 2) ; சம்சாரமும் நிர்வாணமும்-48
ஆம் பக்கமும் 2 ஆம் குறிப்பும்.
57
57
õ4, 66, bT
54
42 (5. 1), 76, 105
OO
0.
28
19
43, 50, 91, 92
பெளத்த நெறி-81
8, 100
93, 100
93
(xiv)
(хv)
77
53, 54
2
14
53, 100 31 (Θ. 4), (λ ν )
OO
62
- 16

கத்தோதனன் சென் (தியானம்) சேதனை சைனமகாவீர
சோதாபன்ன சோவியத் யூனியன்
ஜாதக்
سست
ஜேதவன (ஆராமம்) -
தடைகள்
தண்ஹக்கய (வேட்கை -
ஒழிதல்) தண்ஹா (வேட்கை)
ததாகதர்
ததாகத கர்ப்பம்
தம்ம
தம்மபத
தம்மசக்கப்பவத்தன
சுத்தம்
தம்மபத புராண
சன்னய
தம்ம விஜய தனிநபர் என்ற
கருத்து
தாகப தாதுவியங்க சுத்தம் தாய்லாந்து திசரண
திரிபிடகம் தியான
தியானம் செய்தல்
தீகஜாணு ' தீக நிகாய
Dh
gesser
(xvii)
83
36, விருப்பத் துணிவாற்றலையும் காண்க. நிகண்ட நாத புத்தன் கீழ் காண்க. 10 (குழி 1)
(xvii)
10.
00
நீவரணங்களின் கீழ் காண்க,
41, 42, 46
34, 53, 49 மூவகை-29, 31 ஆம் பக்கமும் 5-eşib (ծք9ւնւրն.
1, 3, 7, 13, 14, 56, 81, 82 (கு. 2) , சொற் பொருள்
விளக்கம்-1 (கு. 3).
76 (கு. 1)
10, 14, 66, 10, 72,75, தம்மசக்கு (வாய்மைக்கண்)-9;
சொற் பொருள் விளக்கம்-58.
66, 68
9
(கிங்களம்)--110 (கு. 3) (அறஞ்சார்ந்த வெற்றிவாகை)-88
24,29
(n)-9l
44
(Xνiii) 2 (கு. 2)
56, 57, 84
79 : செயல்கலைனப் பொருளாகக் கொண்டு-84"ஒழுக்கம், ஆன்மீகம், பகுதியறிவார்ந்த விடயங்களைப் பொருளாகக் கொண்டு-88 : மனதைப் பொருளாகக் கொண்டு 6 மனச்செட்டிதங்களைப் பொருளாகக் கொண்டு-88.
98
89 (கு. 2.3) 8, 93, 97
75

Page 109
திபெத்து
துக்கம்
தூபம் தேறிவியர், போல் தேரகாதா தேரவாத தேரீகாதா தேவ நடுவழி (மத்திம
படியதா) நம்பிக்கை நற்கடைப்பிடி நற்வேனுேபாயம் நற்செயல் நன்முவற்சி நாகர்ச்சுளு
*நான்” என்னும்
கருத்து
நான்
நாலந்தா
esa
(xviii) 18, 19, 29, 33, 45, 49; மூவகை-22; தத்துவம்-24
ஏது-36 : சொற்பொருள் விளக்கம்-20.
- தாகபா என்பதைக் காண்க.
tmsd
аяк
so
நீகண்ட நாத புத்தரர்"
நிப்பாண நிரோத
நிர்வாணம்
நீவரன நேரஞ்சாரா நோய், இருவகை படிக (பிரதிக) படிசோதாகாமி
s படிக்க சமுப்பாதம்
**aa
e
sex
(xi), (xiii)
32
ᏎᏮ, ᏮᎢ
32
95
52
10, 11
54, 56, 57
赛
5.
54
54, 56, 57
46 (5. 2)
24, 29, 30
63, 64, ஆன்மா, ஆத்மா என்பவற்றையும் காண்க.
5 ஆம் பக்கமும் 2 ஆம் குறிப்பும்
நிர்வானத்தின் கீழ் காண்க.
19, 41, 46 நிர்வாணத்தையும் காண்க.
14, 18, 39, 52, 70-79; நிருவாணமும் பரிபாடையும்-3
ஒரு பொருட் சொற்கள்-42 (கு. 2); அழிவு அன்று-43, நேரும் எதிரும் அன்று 43 ; பரமார்த்த மெய்ம்மை யாக-44, வாய்மைக்குச் சமம்-45 : நிருவானத்தின் பின் எது உளது--46 ; பயன் விளைவு மன்று-48 பலர் கூறும் பிழையான விளக்கங்கள்-48 ; அணைந்த திச் சுவாலைக்கு ஒப்பு நோக்கப்பட்டதன்று-49 அனு பூதிமான்கள்-49 இன்பம் ஆமாறு-50,
4,88
(xvii)
g
32
60
34, 60, '61, 62

படிவேத صميم *
பஞ்சசீலம் (ஐவகைச் - 95 ; இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையின்படி-102
சிலங்கள்) (கு. 1).
பஞ்ஞா - 49, 53, 100
பத்தி - 10, சத்தா (சிரத்தை) என்பதன் கீழ் காண்க.
பரிநிரபுதோ n-e A8
பரிநிர்வாணம் - 48, 69 ; புத்தருக்கு அல்லது அருகதருக்கு பரிநிர்வாணத்
தின் பின் என்ன ஆகிறது-48.
is for - (xviii)
வ 623 45 ‘ سب سے
பவதிரோத 43 ص۔--سے
பாகிஸ்தான் - (Χνiii)
Tasi -4 --س
Lursa var - 79 : சொற் பொருள்-80.
9harñir ar
பிக்கு - சொற் பொருள் விளக்கம் -7 (கு. 2).
பிந்துசாரன் - 04
பிரம்மவிகார -- 849
Jobar - 59
புக்குசாதி " 44 8-سے
issistant سسسس )xvi(
புத்தகோசர் - 28, 30 (கு. 5)
புத்தர் - மருத்துவராக-20 : சதாமுறுவலுடைய (மிகித புப்பங்கம)-
31 ; கற்பனை வாதங்கள்-15 : அன்னருடைய நற் செய்தி-103 ; ஒவிய சிற்ப வடிவங்களில்-31 : அன்ஞ. ரின் அரசியல், போர், சமாதானக் கருத்துக்கள்-101 * அன்ஞருடைய வாதம் செய்தவர்கள்-75 புலன்வரு மின்பங்களைச் சேர்ந்த மூன்று விடயங்கள்-21
பூகியன் - 3 (கு. 4) பூதங்கள், நால்வகை - 24 ; அறுவகை-44
பெரிய வாகனம் - 63
பெருந்தன்மை u- 6, 7
பேலுவ 63 -س
பொஜ்ஜங்க - (ஞான ஒளி பெறத் துணை நிற்கும் உபாயங்கள்) 32, 88
Gusmrduorsffr r- xviii
பொறுமை - (சகிப்புத்தன்மை)-6
போதனை - புனைக்குச் சமமானது, உவமைக் கதையின் கீழ் காண்க.
77

Page 110
போதி அல்லது போதி
uob
போதி மரம்
பெளத்த கோவில்கள் -
பெளத்த சிற்பக்
கலைகள்
பெளத்த
திருவிழாக்கள்
பெளத்த பயிற்சியும்
ஒழுக்கமும்
பெளத்தம்
பெளத்தர் ஆகும்
ഴഞ്ഞു
மக்க
988
மகாபரிநிப்பான கத்த
DaScriboதி
DET ITT
மகாயான சூத்திர
லங்கார
மகாவீர
மகிழ்ச்சி மண்டலம் (தளம்)
மஜ்ஜிம நிகா
மரணம் மறு பிறவி மனம் ஒருமைப்
படுத்தல்
மனம் மனஸ் (மஞே)
Di
மாலுங்கிய புத்திரர் மான்தோப்பு
மிடல்வே
Buquanåt guðsdir
78
97
போதி என்பதன் கீழ் காண்க.
3.
05
97፬
(மூன்று தேவைகள்)-53 அதன் குறிக்கோள்-105 ; சமூகப் பொருளாதார நலன்97 மதமாதத்துவமா-5 ; யதார்த்த பூர்வமானது-20
98
6, 19 2, 69, 70 (கு. 1) 40 (கு. 1) 46, 67, 76 (கு. 1)
68
நிகண்ட நாத புத்தரின் கீழ் காண்க.
பீதியின் கீழ் காண்க.
எல்லையில் ஆகாயம்-44 ; எல்லையில் விஞ்ஞானம்-44 : கிஞ்சித்தும் இன்மை-45, 73 ; காணலும் காணுததும் (பட்டும் படாமலும் புலனுதல் நிலை 46, 79 7, 44, 67, 8.
38
38
சித்தத்தை ஒருமைப்படுத்தலின் கீழ் காண்க.
மனஸ் என்பதன் கீழ் காண்க. 25, 27 (கு. 1), 76
(புத்தரின் தாய்)
அலிஜ்ஜாவின் கீழ் காண்க 15, 16, 18 (கு. 2), 75
(Σνίi) (ஆங்கில பருவ வெளியீடு) 83 (கு 3), 8ே (கு. 2) நால்வகை பிரம்மவிகார என்பதன் கீழ் காண்க.

முக்தி (முத்தி) 44
முதிதா = 0 மும்மணிகள் =2 ܘ )G. 2(, 9:5 முஸ்லிம் - 6, 7 மூசில - 11, 43 (c. 5) மூவகை அடைக்கலம் - திசரண என்பதன் கீழ் காண்க. மெத்தா - 89, 105 மெய்ப்பொருள் - (சத்தியம்) 39 : பரமார்த்தம்-41, 50 மெய் இல் பொருள் - (மோசதம்ம)-45 மொங்கோலியா — (хviii) மொழியும்
நிருவாணமும் --41 و س மோசதம்ம - (மெய்இல் பொருள்)-45 மோன், செல்வி
மாறியன் - (хvi) யசோதரை - (xvii)
[IửLIIsẵr - (xviii) யுனிவர்சிடி ஒப் சிலோன்
ரிவிவு -4 ۰نع) 10 س(
யோக - 79
யோகாவசர மனுவல்
(ஆங்கில நூல்) - 79 (கு. 2)
வச்ச - 48
வச்சகொத்தன் - 72, 73, 76 ஆம் பக்கவூம் 5 ஆம் குறிப்பும் 92
வஜ்ஜி 101 سم வாராணசி (காசி
நகரம்) 70 ,19 ܝ
sufrtismpăsir,
நால்வகை - 19, 20 (கு. 3), 57 ; ஐவகைக் கந்தங்களுக்குள்-49 அவற்றுடன் தொடர்பு கொண்ட நான்கு செயற்பா தள்-8 af583ğastır - 4, 88 ; விஞ்ஞான-27, 61, 76; விக்குன-21 (கு 1) விபஸ்ஸளு (விதர்களுர - 79
விபவ - 45 வியத்ளும் كة) : مسجدwiii(
விராக - 42 விட் வார்ட், எப். எல். - 66 (கு. 1), 73 (கு. 1) வேட்அக - தண்ஹாவின் கீழ் காண்க.
7.

Page 111
வேட்கையின் ஒழிவு -
-anarass seas
yLurras ut
ராகுலர் ensa
ராதா ~~ ராதாகிருஷ்ணன், எஸ்.--
awa
லங்காவதார சூத்திரம்
லிபிடோ
லுடொவயிக்
MF. rů. R. o
லுடொவயிக்
ærmtror al
ஹெராக்கிலிடஸ் ாக ஹோர்னர், செல்வி
ം 'tി. al திஸ் டேவிட்ஸ், திருமதி
do Glafiafo, á. LReiru.
தண்ஹக்கய என்பதன் கீழ் காண்க.
6
30, 35
(புத்தரின் அருமை மகன) 42, 46
88 (கு. 1}
O
42, 76. (கு. 1) 36 (G5. 1)
(xiv) கியோம் ருேம் எடித்-8 (கு. ‘4) (xiii)
30 (கு. 1)
73 (கு. 1)
41 (கு 4)
69 (Gኝ• 2)፡ ገ9 (em• ጓ)

A Path to True Happiness
TRUE SINCERTY
towards others
PURITY OF MIND within
EQUALITY in everything we see PROPER UNDERSTANDING
of ourselves and our environment
COMPASSION
by helping others in a wise, unemotional and unconditional way
SEE THROUGH to the truth of impermanence
LET GO of all wandering thoughts and attachments
ATTAIN FREEDOM of mind and spirit ACCORD WITH CONDITIONS
to go along with the environment
BE MINDFUL OF AMTA BHA BUDDHA following his teachings and vowing to reach the Pure Land
- From The Teachings of
Ven. Master Chin Kung ~

Page 112
LVING INA GRATEFUL WORLD
Begrateful to those who have hurt or harmed you, for they have reinforced your determination.
Begrateful to those who have deceived you, for they have deepened your insight.
Begrateful to those who have hit you, for they have reduced your karmic obstacles.
Begrateful to those who have abandoned you, for they have taught you to be independent.
Begrateful to those who have
made you stumble, for they have strengthened your ability.
Begrateful to those who have denounced you, for they have increased your wisdom and concentration.
Begrateful to those who have made you
Firm & Resolute
and Helped in your Achievement.
~From the Teachings of Ven. Master Chin Kung-~

TAKING REFUGE IN THE TRIPLE JEWELS
To the Buddha I return and rely, returning from delusions and
relying upon Awareness and Understanding.
To the Dharma I return and rely, returning from erroneous views and relying upon Proper Views and Understanding.
To the Sangha I return and rely, returning from pollutions and disharmony and relying upon Purity of Mind and the Six Principles of Living in Harmony.
Bemindful of Amitabha Namo Amitabha! Homage to Amita Buddha
May every living being, drowning and adrift, Soon return to the Pure Land of Limitless Light

Page 113
The Teachings Of Great Master Yin Guang
Whether one is a layperson or has left the home-life, one should respect elders and be harmonious to those surrounding him. One should endure what others cannot, and practice what others cannot achieve. One should take others' difficulties unto oneself and help them succeed in their undertakings. While sitting quietly, one should often reflect upon one's own faults, and when chatting with friends, one should not discuss the rights and wrongs of others. In every action one makes, whether dressing or eating, from dawn to dusk and dusk till dawn, One should not cease to recite the AMITABHA Buddha's name. Aside from Buddha recitation, whether reciting quietly or silently, one should not give rise to other improper thoughts. If wandering thoughts appear, one should immediately dismiss them. Constantly maintain a humble and repentful heart; even if one has upheld true cultivation, one should still feel one's practice is shallow and never boast. One should mind one's own business and not the business of others. Only look after the good examples of others instead of bad ones. One should see oneself as mundane and everyone else as Bodhisattvas. If one can cultivate according to these teachings, one is sure to reach the Western Pure Land of Ultimate Bliss.
Homage to Amitabha Amitabha

“Wherever the Buddha's teachings have
flourished, either in cities or countrysides, people would gain inconceivable benefits. The land and pepole would be enveloped in peace. The sun and moon will shine clear and bright. Wind and rain would appear accordingly,
and there will be no disasters. Nations would be prosperous and there would be no use for soldiers or weapons. People would abide by morality and accord with laws. They would be courteous and humble, and everyone would be content without injustices. There would be no thefts or Violence. The strong would not dominate the weak and everyone would get their fair share.'
M THE BUDDHASPEAKS OF THE INFINITE LIFE SUTRA OF ADORNMENT, PURITY, EQUALITY AND ENLIGHTENMENT OF THE MAHAYANA SCHOOL M

Page 114
With bad advisors forever left behind, From paths of evil he departs for eternity, Soon to see the Buddha of Limitless Light And perfect Samantabhadra's Supreme Vows.
The supreme and endless blessings of Samantabhadra's deeds, I now universally transfer. May every living being, drowning and adrift, Soon return to the Pure Land of Limitless Light
~The Vows of Samantabhadrar
I vow that when my life approaches its end, All obstructions will be swept away; I will see Amitabha Buddha, And be born in His Western Pure Land of Ultimate Bliss and Peace.
When reborn in the Western Pure Land, I will perfect and completely fulfill Without exception these Great Vows, To delight and benefit all beings.
NThe Vows of Samantabhadra Avatamsaka Sutra

| DECDICATION OF MIERIT
May the merit and virtue accrued from this work adorn Amitabha Buddha's Pure Land, repay the four great kindnesses above, and relieve the suffering of those on the three paths below.
May those who see or hear of these efforts generate Bodhi-mind, spend their lives devoted to the Buddha Dharma. and finally be reborn together in the Land of Ultimate Bliss. Homage to Amita Buddhal
NAMO AMITABHA 南黑阿痛陀佛 《印度TAMIL文:佛陀的整示》 財團法人佛陀教育基金會 印贈 台北方杭州南路一段五十五號十一特襲 Printed and donated for free distribution by The Corporate Body of the Buddha Educational Foundation 11F, 55 Hang Chow South Road Sec 1, Taipei, Taiwan, R.O.C. Tel: 886-2-23951198, Fax: 886-2-23913415 Email: overseas(a)budaedu.org Website:http://www.budaedu.org This book is strictly for free distribution, it is not for sale. Printed in Taiwan 5,000 copies; Sep 2003 IN022-3419

Page 115
datin
| 黔 弗阿
Hilir:
گی۔
 

T
-------
e