கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2008 (5.4)

Page 1


Page 2
அலெக்சாண்ட க்ரஹம்பெல்
 


Page 3
உங்களுடன்
இம்முறை இதழ் ராமதாஸரின் ஆண்டின் 4வது இதழ். இனிமேல் 200 இதழாகவே வெளிவரும்.
6)igGOLDuUT5 QiqblĎ 5TLDGDU; மூன்றாவது பகுதியும் லக்ஷ்மணன இரண்டாவது பகுதியும் வெளியாகிய
அரசியல் கட்டுரை "எப்போ நிலவரம் பற்றி மனோரமா இயர் வந்துள்ளது. இனிமேல் அரசியல் கட்
அருத்த இதழில் 'அறிவின் விபரங்களடங்கிய ஒரு கட்டுரை வர அபிப்பிராயங்களையும் சேர்த்து ெ அதற்கு உங்கள் ஒத்துழைப்பை எதி
57. பிரதான வீதி, திருக்கோணமலை.
6bTI. BLI. O 26-2222207
2008

ஒரு நிமிடம்.
விசேடமலராக வருகிறது. 2007ம் 3ம் ஆண்டு முதல் அறிவு காலாண்டு
த்தீவானின் சுயசரிதைத் தொடரின் ரின் சைவசித்தாந்த கட்டுரையின் |ள்ளன.
து ஒயும் இந்த." இலங்கை புக் 2007 வெளியான கட்டுரை ருரைகளும் அறிவில் வெளிவரும்.
வெளிவந்த இதழ்கள் பற்றிய இருக்கிறது அறிவு பற்றிநேயர்கள் வளியிட ஆவலாயிருக்கின்றோம். ர்பார்க்கிறோம்.
S. P. JIDĠrafiħ5Jgdr
ஆசிரிய குழுவிற்காக)
அறிவு

Page 4
அறிவு “ARVU”-KNOWLEDGE சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு 41, கல்லூரி வீதி, திருக்கோணமலை. Sandrasegarampillai Gnanambigai Establishment 41, College Street, Trincomalee
பொருளடக்கம் 1. உங்களுடன் ஒரு நிமிடம் O
பொருளடக்கம் O2 அலக்சாந்தர் கிரவுறம் பெல் (அட்டைப்படக்கட்டுரை) O3 ALEXANDERGRAHAMBELL O5 சைவசித்தாந்தம் - 1 O8 ஒயுமா இந்த அலைகள்? 13 நீ யாரென்பதை நீ அறிவாயா? 23 ஒரு போதும் அதிகம் வயதாகிவிடுவதில்லை 28 இளைய தலைமுறையினருக்கு சுவாமி விவேகானந்தரின் அருளுரைகள் 31 10. நினைவில் நிற்பவை 32 1. மொழி ஏநாயிறு. ஏநா.தேவநேயப் பாவாணர் 34 12. விரதங்களின் மகத்துவம் 37 13. சற்குரு (நீ சுவாமி ராமதாஸ் A1 14. ஆனந்தாஸ்ரமம் 49 15. தியானம் 52
எமது ஸ்தாபித காரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை அவர்கட்கு அறிவு - 2008 -4* இதழை சமர்ப்பிக்கிறோம்
2008 ···· 2
அறிவு
 

உள் அட்டைப்படக்கட்டுரை
அலக்சாந்தர் கிரளும் பெல் (1847-1922)
இங்கிலாந்தில் சகோதரர்களை ஷயரோகத்தினால் இழந்த அலைக்சாந்தர் கிரவுறம் பெல் அவரது தந்தையின் நல்ல முடிவினால் கனடாவிற்கு குடிபெயர்ந்தார். 1870ம் ஆண்டு ஷயரோகம் தொற்றிய நியிைலேயே இவர் கனடாவிற்கு வந்தார். முப்பது வயதுக்கு முன்பே கம்பி மூலம் கதைப்பது என்னும் கற்பனைக் கடலில் மூழ்கியிருந்த அலக்சாண்டர் கிரகம் பெல் தனது கற்பனையை நனவாக்க வெகுநாட்களாகின. ஸ்கொட்லாந்தில் பிறந்த பெல் எடின்பேர்க்சர்வகலாசாலையிலும் லண்டன் சர்வகலாசாலைக்கல்லூரியிலும் சிலகாலங்கள் பயின்றார். தொலைபேசிக் கணிருபிடிப்பு 1876ல் அமெரிக்காவிலுள்ள பொஸ்டனில் நிகழ்ந்தது. அதற்கு முன் ஸ்கொட்லாந்தில் படிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் தனது கண்டுபிடிப்பிற்கு ஆதாரமான ஒலிஅலைகள் பற்றிக் கற்க ஆரம்பித்தார்.
தேவையான ஒய்வு எடுத்ததினால் உடல் தேறினார். 1871ல் அமெரிக்காவில் பொஸ்டன் நகரிற்குச் சென்றார். அங்கு தந்தையின் ன்சகை முறை மொழிப்பயிற்சியை புலனற்றவர்களுக்கு கற்பித்தார். செவிப்புலனற் றோருக்கு தேவையானவற்றைச் செய்து கொண்டிருந்தபொழுது 1873ல் பொஸ்டன் சர்வகலாசாலையில் குரல் உடலியல் துறை பேராசிரியரானார்.
ஒலி அலைகளைப் பற்றிய அறிவுபூர்வமாக அதிகம் அறிந்து இருந்தும் அதை நடைமுறைப்படுத்தும் கலை குறைநிலையில்தான் இருந்தது. அதிஷ்டவசமாக கைவினைத்திறனுடைய தோமஸ் வட்சன் என்பவரைச் சந்தித்தது அவரது கற்பனையில் உதித்த தொலைபேசிக் கருவியை ஸ்தூல உண்மையாக மாற்ற பெரிதும் உதவியது. அதுவுமல்லாமல் அவரது கருவியை ஆக்குவதற்கு வேண்டிய பணத்தையும் செவிப்புலனற்ற மாணவர்களின் பெற்றோரிடமிருந்து வசூலிக்கவும் உதவினார்.
2008 3 அறிவு

Page 5
ஒலி அலைகளை மின்சார அலைகளாக அமைக்க முடியுமெனும் கருத்தினை கொண்டிருந்த பெல்லுக்கு அக்காரியம் வெற்றி பெற்ற பின்னர் ஒலி அலைகளை கம்பி மூலம் மின்சார அலைகளாக அனுப்புவது சுலபமாக இருந்தது. மறுமுனையில் மீணிரும் மின்சார அலைகளை ஒலி அலைகளாக்குவதற்குத் தேவையான கருவியையும் அமைக்க வேண்டி இருந்தது. இதற்காக பல வருடங்கள் வாட்சனுடன் சேர்ந்து மிகவும் கஷடப்பட்டு கடைசியில் ஒரு கருவியை உண்டாக்கினார். இதனால் உலகில் மிகவும் புரட்சிகரமான ஒரு கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்து 1876 மார்ச் மாதத்தில் தனது பெயரில் உரிமையைப் பதிவு செய்து கொண்டார்.
இன்னும் இளமையாக இருந்த பெல் தனது கண்டுபிடிப்பால் வந்த பன்னத்தை பெல்நிறுவனத்தின் ஆராய்ச்சிக்காக செலவு செய்தார். அல்வா எடிசன் (1847 - 1931) பெல்லின் தொலைபேசிக்கு கரியினாலான சாதனத்தின் மூலம் தொலைபேசியின் உபயோகத்தை வலுப்பருத்தினார். அதே போன்று பெல்லும் எடிசனின் கண்டுபிடிப்பின் ஒலிவரிக்கருவிக்கு (Photo copy) வலுவூட்டினார்.
அதைவிட பெலி புதுக்கண்டுபிடிப்புகளிலும் ஈடுபட்டு வெற்றி 65arrList, €965, 31556) (Sonarrecognition) upd(5ub gaugb$Juf (Flying Machine) ஒளித்தொலைபேசி தொடர்பு ஏற்படுத்தல் போன்றவையே அவை, செவிடர்களுக்கு கல்விபுகட்டுவதிலும் புது வழிமுறைகளைக் கையாண்டார். அதோடு அப்போது பிரபலமான குருரு செவிடான வெறலன் கெல்லர் அம்மையாருக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதிலும் சில காலத்தைச் செலவிட்டார். சர்வதேச சஞ்சிகையான “விஷ்வநானம்" வெளியிடுவதற்குக் காரணமாக இருந்தார்.
புலன்களால் நுகரப்படும் நூதனக் காட்சிகளில் ஈடுபாடும் நாட்டமும் கொண்டு வாழும் வாழ்க்கை நமது பலவித துன்பங்களுக்குக் காரணமாகிறது. -சுவாமி ராமதாஸ்
2008 அறிவு

ALEXANDERGRAHAM BELL *爵、、” 1847-1922
CHRONOLOGY
O 1870 Following the death of Bell's two brothers from tuberculosis,
the Bell family emigrates to Canada o 1873 Bell becomes Professor of Vocal Physiology at Boston
University 1875 His multiple telegraph is patented 1876 Bell Patents the telephone.
Although Alexander Graham Bell had put into practice the previously fanciful notion of voice communication using a wire before he was even thirty, his path towards the invention on the telephone was, physically at least, a long one, A Scotsman, born and brought up in Edinburgh, Bell was mostly taught at home with Some limited education at the University of Edinbrgh and University College, London. Hiss development of the telephone, however, took place inboston, in the United States in 1876. Between times, he had taken up a teaching post in Elgin, Scotland. It was here that he began to study the sound waves which would prove so important in the creation of his revolutionary device.
EMGRATION
After this worked with his father in London-like his son, Bell senior was a trained speech therapist. Tragedy struck shortly afterwards with the successive deaths of his two brothers from tuberculosis. This acted as the spurfor the remaining members of the Bell family to emigrate to Canada in 1870. But by this time Alexander had also contracted the disease. He successfully convalesced on arrival in Canada and in 1871 was well enough to move to the US city of Boston
2008 5 - அறிவு

Page 6
which provided the setting, cast and finance for his master creation. He began first, however, by giving a series of lectures on his father's Visible speech language, a system of phonetic symbols which enabled the deaf to converse. Further work with the deaf continued and in 1873 he took up a professorship in vocal physiology at Boston University.
DEAS INTO PRACTICE
Bell's studies on sound waves were by now at an advanced stage, but his practical experiments were not. It was perhaps most important at thisjuncture then that he met the dexterous handyman, Thomas Watson, who would help Bell's theoretical ideas become physical reality with the building of the Scotsman's designs. Watson also raised money to fund the work from the enthused parents of two of his deaf students, one of whom would eventually become his wife, Mabel Hubbard.
SOUND WAVES
Bell's plans for voice communication were based around a single, simple concept. He believed that sound waves from the mouth could be converted into electrical current if the appropriate device could be created to make the conversion. Once this had been done, sending the current along a wire would be a relatively simple job, before positioning another device at the opposite end to reconvert the current into Sound. After several taxing years working with Wastson on perfecting the conversion device, he finally succeeded in producing a piece of equipment which would change the world at least as much as any other single creation before or since. Bell's telephone was patented in March 1876 and, although many disuptes would follow concerning priority and copyritht, the Scotsman took his place in history.
Still young, however, Bell used the money brought in by his
6
2008 அறிவு

invention, associated award, and his company AT&T, to fund the building of laboratories for further research. Just as Thomas Alva Edison (1847-1931) later improved the viability of Bell's phone through his carbon transmitter button, so Bellenhanced Edison's phonograph.
In addition, the Scottish inventor also worked on, among other things, Sonar recognition, flying machines and the photophone, another Sound transmitting device, this time employing light as its medium of transmission. Bell's work with the deaf continued too, including the development and inprovement of teaching methods, as well as a period spent educting the now famous deaf and blind student, Helen Keller. Bell was also instrumental in the establishment of the international journal Science.”
BES LEGACY
For the man who is best remembered for an invention that allowed people to communicate over long distances usingjust the human vioce, it is perhaps a little ironic that Alexander Graham Bell dedicated much of his life to working with the deaf.
When Bell was not teaching people who couldn't hear, he was inventing or dreaming up ideas for inventions. While the telephone was. far and away the most successful of these, his passion meant that he became involved in a wide range of projects, many of them nothing to do with his principle invention, the telephone.
决火火决六六六六六六女★女女决火火
அறிவு வாசகர்களுக்கு. . . . . . . . அறிவு சஞ்சிகை பற்றிய உங்கள் அபிப்பிராயங்களையும், ஆக்கங்களையும் எழுதி அனுப்புங்கள். அன்புடனும் ஆவலுடனும் எதிர்பார்க்கிறோம்.
அறிவு 57. பிரதான வீதி, திருக்கோணமலை,
2008 7
அறிவு

Page 7
சைவசித்தாந்தம் - 1
சென்ற மாதக் கட்டுரையின் சுருக்கம்
தமிழ்நாட்டிலேயே சிறப்பாக வழங்கும் சைவசித்தாந்தக் கருத்துக்களைக் கூறும் ஆதிநூல்கள் தமிழ்மொழியில் எழுதப்பெறாதது வடமொழியில் எழுதப்பெற்றமைக்குக் கொடுக்கப்படும் காரணங்கள், இவற்றிலுள்ள கருத்துக்களைத் தழுவி முதன்முதல் தமிழிலே முறையாக எழுதப்பட்ட சித்தாந்த நூலாகிய சிவஞான போதத்தைப் பற்றிய விவரங்கள். சிவஞான போதத்திற்கு முற்பட்ட தமிழ் நூல்களுக்குள்ளே சைவ சித்தாந்தக் கருத்துக்களைக் குறிப்பிடும் நூல்கள் ஆகியவை அக்கட்டுரையிலே தரப்பட்டுள்ளன.
சைவசித்தாந்தம் - 2
சிவன் எனும் சொல்:-
சைவ சித்தாந்தம் பேசும் தத்துவங்களை இங்கு ஆராய்வோம். அத்தத் துவங்களுள்ளே மிக முக்கியமானது கடவுள். எனவே, சைவசித்தாந்தத்தினது கடவுட் கொள்கையை முதலில் எடுத்துக் கொள்வோம். சிவன் என்னும் சொல்லிலிருந்து வந்ததே சைவம். சித்தாந்தம் என்று மட்டும் குறிப்பிடாது சைவசித்தாந்தம் எனச் சிவ சம்பந்தத்தையும் சேர்த்து வழங்குவதிலிருந்தே சிவனுக்கு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் முதன்மை நன்கு தெரிகிறது.
சிவன் என்னும் பெயரையும் தொடர்புபடுத்திச் சைவசித்தாந்தம் பெயரிடப்பட்டமையைக் கொண்டு சைவசித்தாந்தத்தின் வரலாற்றை ஆராய்வதுமுண்டு. சிவன் என்ற சொல் முதன்முதல் எந்த நூலில் எந்த மொழியில் காணப்படுகின்றது என்பது ஆராயத்தக்கது. புறநானூறு போன்ற மிகப்பழைய தமிழ் நூல்களிலே சிவன் என்ற சொல் காணப்படவில்லை. ஆனால், சிவன் என்ற சொல் இல்லாதபோதும், சிவபெருமானைக் குறிக்கும் நீல மணி மிடற்றொருவன், கறைமிண்டற்றண்ணல் போன்ற அநேக சொற்பிரயோகங்களை அங்கே காணலாம்.
கடவுள் என்ற சொல்:
இனி, கடவுள் என்ற தனித்தமிழ் சொல்லின் பொருளிலேயே சைவசித்தாந்தக் கருத்து பெரிதும் அடங்கியுள்ளது எனக் காட்டுவதுமுண்டு.
2008 8 அறிவு

கடவுள் என்பது தனித் தமிழ்ச்சொல், அது புறநானூறு, தொலகாப்பியம் போன்ற மிகப்பழைய தமிழ் நூல்களிலே காணப்படுகின்றது. கடவுள் என்ற சொல்லுக்குப் பொதுவாக மூன்று விதமாகப்பொருள் கூறலாம். கடவுதல் என்றால் இயக்குதல்; எனவே கடவுள் என்பதற்கு உலகை இயக்குபவர் என்பது கருத்து. கடவுள் என்பதற்கு உள்ளத்தைக் கடந்தவர் எனப்பொருள் கூறுவதுமுண்டு. மூன்றாவது விதம், கடவுள் உலகைக் கடந்தவர், அதே சமயம் உலகுள்ளும் உள்ளவர் எனக்கொள்வது. உலகினுள்ளும் உயிர்களுள்ளும் வியாபித்து நிற்கும் நிலையை உள் என்ற சொல்லும், அவற்றைக் கடந்து நிற்பவனுமாவான். கடவுள் என்ற சொல்லிலே அடங்கியிருக்கும் இக்கருத்துக்கள் சைவ சித்தாந்தக் கருத்துக்கள். மிகப்பழைய நூல்களாகிய தொல்காப்பியம், புறநானூறு ஆகியவற்றிலே இச்சொல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
சிவன், கடவுள் ஆகிய சொற்களைப் பற்றிய ஆராய்ச்சியை இம்மட்டோடு நிறுத்தி, சைவ சித்தாந்தம் கடவுளைப்பற்றி நேரடியாகக் கூறுவனவற்றை எடுப்போம். கடவுளைப்பற்றிய சைவ சித்தாந்தக் கருத்துக்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று கடவுள் உண்டு என்பதை நிரூபிப்பது. மற்றது, கடவுளுக்குரிய குணங்களையும் இயல்புகளையும் கூறுவது. கடவுள் உண்டென்பதை நிரூபிக்கும் முதற்பிரிவை மேலும் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவற்றைச் சுபக்கம், பரபக்கம் என்ற சொற்களாற் குறிப்பர். கடவுள் உண்டு என்பதைக் காரணங்கள் காட்டி நிரூபிப்பது சுபக்கம். கடவுள் இல்லை என வாதிப்போரது வாதங்கள் பொருந்தா என்பதை மறுப்பது பரபக்கம்.
சுருதி:-
ஒருபொருள் உண்டென்பதை நிரூபிக்கப் பொதுவாக மூன்று வழிகள் உண்டு. வழிகளைப் பிரமாணங்கள் எனக்குறிப்பிடுவது வழக்கம். பிரத்தியட்சம், அநுமானம், ஆப்த வாக்கியம் ஆகிய மூன்றுமே பிரமாணங்கள். இவைகளை முன்பு விளக்கியுள்ளோம். இவற்றுள் மூன்றாவதாகிய ஆய்த வாக்கியம், ஒரு பொருளை அனுபவத்தால் அறிந்த மகான்களின் வாய்மொழி மூலம் அறிதலாகும், அவர்களது வாக்கைக் கேட்பதன் மூலம் அறிவதால் இதைச் சுருதிப்பிரமாணம் எனவும் குறிப்பிடுவதுண்டு. 'ஸ்ரு என்ற வடமொழிச் சொல்லினடியாகப் பிறந்த சொல் சுருதி. ஸ்ரு என்பதற்குக் கேட்டல் என்று பொருள். இம்மூன்றினுள்ளே கடவுளுண்டு என்பதற்கு முக்கிய ஆதாரமாகச் சைவசித்தாந்திகள் கைக்கொள்ளுவது சுருதியையே. கடவுள்
9
2008 அறிவு

Page 8
உண்டென்பதை ஒப்புக் கொள்ளுவோர் எல்லோரும் சுருதிப் பிரமாணத்துக்கே முதன்மை கொடுக்கின்றனர். ஏனைய பிரமாணங்களைக் கொண்டு கடவுளுண்டு என்பதைப் பரிபூரணமாக நிரூபிப்பது கடினம். இக்காரணத்தால்தான் கடவுள் உண்டென்பதை ஒப்புக் கொள்ளுவோர் அனைவரும் சுருதியையே முக்கிய பிரமாணமாகக் கொள்ளுகின்றனர். இறையருள் பெற்ற அனுபூதிமான்களுடைய வாக்குகளே இன்று சுருதிஎன்றும வேதம் என்றும், ஆகமம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. ஆகவேதான். கடவுளுண்மைக்கு இவ்வேதாகம வாக்குகள் முக்கிய ஆதாரமாகின்றன.
அநுமானம் பயன்படும் விதம்
சைவ சித்தாந்தத்தின்படி கடவுளுண்டு என்பதற்கு முக்கிய ஆதாரம் வேதாகமங்களில் அங்ங்ணம் கூறப்பட்டடிருப்பதே என மேலே குறிப்பிட்டோம். அங்ங்னமாயின் அநுமானப் பிரமாணத்துக்குச் சைவ சித்தாந்தத்தில் இடமில்லை என்பது கருத்தல்ல. வேதத்திலே கூறப்பட்ட உண்மையை அநுமான மூலமும் நிலைநாட்டச் சிததாந்திகள் முயன்றிருக்கின்றனர். இதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, வேதத்திலே கூறப்பட்டவற்றை மேலும் வலியுறுத்த அநுமானப் பிரமாணம் பயன்படும். மற்றது, வேதவாக்கை ஒரு பிரமாணமாக ஒப்புக் கொள்ளாதவர்களுக்குக் கட்வுள் உண்டென்பதை நிரூபிக்க அநுமானம் மட்டுமே ஓரளவு பயன்படும். இந்த இரு காரணங்களாலும் சித்தாந்திகள் கடவுள் உண்மையை அநுமான மூலமான காரணங்கள் காட்டியும் நிரூபிக்கின்றனர்.
அநுமானத்தைக்கொண்டு கடவுளுண்டு என்பதை மூன்று விதமாக நிரூபிக்கலாம். இவற்றுள் முதலாவது, உலகியலுண்மையைக்கொண்டு அதனைப் படைத்தவனும் உளன் என நிரூபிப்பது. இரண்டாவது, இப்படைப்பின் நோக்கத்தை ஆராய்வதன் மூலம் படைத்தவனும் உளன் என நிரூபிப்பது. மூன்றாவது பொருள்களிலுள்ள குறைபாடுகளைக்கொண்ட குறைவில்லாத பரிபூரணமான பொருளும் உண்டென நிரூபிப்பது. இவற்றுள் மூன்றாவதை யோகமதத்தினர் கைக்கொள்கின்றனர் என்பதை யோகம் பற்றிய கட்டுரையிலே குறிப்பிட்டுள்ளோம். கான்ற் போன்ற பிரபல மேல்நாட்டுத் தத்துவஞானிகளாற் கைக்கொள்ளப்படுவதும் இதுவே. ஆனால், சைவசித்தாந்திகள் இதனைக் கையாளவில்லை. அவர்கள் முதலாவது காரணத்தையே அதிகமாகக் கைக்கொள்கின்றனர்.
2008 unw 10 அறிவு

உலகைக்கொண்டு கடவுளுண்டு என்பதை நிரூபிக்கும் விதம்
சைவசித்தாந்திகள் கடவுளுண்டு என்பதை உலகைக்கொண்டு நிரூபிக்கும் விதத்தை மிகச் சுருக்கமாக ஓர் உதாரணமூலம் கூறுவதாயின் பின்வருமாறு கூறலாம். பானையைக் கொண்டு அதனை வனைந்த குயவன் ஒருவன் உளன் என்பதை அறிகின்றோம். அதைப்போலவே உலகத்தைக் கொண்டு அதைப்படைத்தவன் ஒருவன் இருந்தேயாகவேண்டும் என்பது உறுதியாகின்றது. பானை தன்னைத் தானே ஆக்கிக்கொண்டது என்ற பதில் கூறுதல் பொருந்தாது. “அது என்றைக்கோ ஒருநாள் ஆக்கப்பட்டது அல்ல; அநாதி தொட்டே ஆக்கப்பட்டிருந்தபடியே உள்ளது” என்றும் வாதிக்க முடியாது. இதைப்போலவே உலகம் தன்னைத்தானே படைத்துக்கொண்டது என்றோ, அல்லது குறிப்பிட்ட ஒரு காலத்தில் படைக்கப்பட்டது என்றோ, வாதாடல் பொருந்தாது. "பானை தானாகவே உற்பத்தியாகியது என்பது பொருந்தாது. ஆனால் உலகம் தானாகவே உற்பத்தியானது என்பது ஏன் பொருந்தாது” என வினவலாம். உலகம் பகுதிகளையுடையது. பகுதிகளையுடைய பொருள் எதிலும் அப்பகுதிகள் தாமாகவே வந்து சேர்ந்துகொள்வதை நாம் ஓரிடத்தும் கண்டதில்லை. . அப்பகுதிகளை ஏற்றமாதிரி யாராவது ஒருவர் ஒன்றுசேர்ந்தால்தான் அவை ஒன்றுசேர்ந்து. ஒரு பொருளாகும். உதாரணத்துக்கு ஒரு குடையை எடுத்துக்கொள்வோம். அதில் துணி, இரும்புக்கம்பி, நடுக்கம்பி ஆகிய பல பகுதிகள் உள. இவை யாவும் தாமாகவே ஒன்றுசேர்ந்து குடையாவதில்லை. அறிவுடைய ஒரு மனிதனாலேயே இவற்றை எவ்வாறு பொருத்தி ஒரு குடையை உற்பத்திசெய்ய முடியும். உலக உற்பத்தியும் இத்தகைய ஒன்றுதான். "பானை என்றைக்கோ ஒரு நாள் வனையப்பட்டது அல்ல; அது என்றுமே உள்ளது என்பது பொருந்தாது என்பதை ஒப்புக்கொள்வோம். ஆனால் உலகம் தோற்றமும், அழிவும் இல்லாமல் என்றுமே இந்த நிலையிலே உள்ளது என ஏன் கொள்ளக்கூடாது' என வினவலாம். உலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு காலத்தில் தோன்றி இன்னொரு காலத்தில் அழியக் காண்கின்றோம். இதிலிருந்து உலகம் முழுவதற்கும் இக் கதியுண்டென்பது தெளிவாகின்றது என்பதே சைவசித்தாந்திகளின் கொள்கை.
உலகம் படைக்கப்பட்ட பொருள் எனக்கொண்டு அதனைப் படைத்தவன் உளன் எனச் சைவசித்தாந்திகள் நிரூபிக்கும் விதத்தை இதுவரை குறிப்பிட்டோம். கடவுள் உண்மையை இன்னுமொரு விதமாகவும் நிரூபிக்கலாம். ஆன்மாக்கள் பிறப்பதற்கும், இன்பதுன்பங்களை அனுபவிப்பதற்கும் அவற்றின் கன்மமே காரணம் என்பதை எல்லா இந்துக்களும் ஒப்புக்கொள்வர். இந்துக்கள் மட்டுமன்றிப் பெளத்தர் 2008 11 அறிவு

Page 9
சமணர்கூட இதனை ஒப்புக்கொள்ளுவர். அறிவில்லாத கன்மம் தன்னைச் செய்தோனைச் சென்று சேரவல்லது அல்ல. தான் முற்பிறப்பிலே செய்த கன்மங்களைத் தேடியறிந்து. அவற்றின் பலன்களைப் புசிக்கும் வல்லமை ஆன்மாவுக்கும் கிடையாது. எனவே, ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அதன் கன்ம பலனைப் புசிப்பதற்கு ஏற்ற உடலைக் கொடுக்கவும், அதன் மூலம் அந்த ஆத்மா தனது கன்ம பலன்களைப் புசிக்கச் செய்யவும் ஓர் இறைவன் வேண்டும் என்பதும், அவன் முற்றுணர்வுடையவனாயும், தான் கன்மத்தால் பாதிக்கப்படாதவனாயுமிருத்தல் வேண்டும் என்பதும் புலனாகின்றன. இதுவே, இறைவன் உளன் என்பதை நிரூபிக்கச் சைவ சித்தாந்திகள் கையாளும் இரண்டாவது காரணம்.
சுருக்கம்:
சைவ என்னும் அடைமொழி சோககப்படுவதால் புலப்படும் உண்மை; கடவுள் என்ற சொல்லில் அடங்கியிருக்கும் சைவசித்தாந்தக் கருத்துக்கள்; கடவுள் உண்டெனக் கொள்வதற்குச் சைவசித்தாந்திகள் சுருதிப் பிரமாணத்தையே முக்கியமானதாகக் கொண்ட போதிலும் அநுமானத்தையும் அவர்கள் பயன்படுத்தாமல் விடவில்லை என்பது; உலகைக் கொண்டு கடவுள் உண்டு என்பதை நிரூபிக்கும் விதம்; அதையொட்டிய தடை விடைகள்; கன்மத்தைக் கொண்டு கடவுளுண்டு என்பதை நிரூபிக்கும் விதம் ஆகியவை இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
r 8. O
உர்ைமைக்கு அழிவில்லை, பொய்யானது சாஸ்வதமில்லை. ஆகவே நிலைக்காமல் அழியக்கூடியதைப் பற்றித் துணி பப்படுவது அஞ்ஞானமே. சுவாமி ராமதாஸ்
துன்பங்கள் வெளிப்புறச் சூழ்நிலைகளால் வருவதில்லை. மனதிலுள்ள அஞ்ஞானத்தினால் இந்தத் துன்பங்கள் கட்டுப்பட்டு உள்ளுறைகிறது. சுவாமி ராமதாஸ்

ஒயுமா இந்த அலைகள்?
டி.அருள் எழிலன், சென்னை
இலங்கை ஜனாநாயக சோஷலிசக் குடியரசு' 1948, பெப்ரவரி நான்காம் தேதி சுதந்திரம் பெற்று செங்குத்தாக வாளை ஏந்திப் பிடித்திருக்கும் சிங்ககொடி தேசியக் கொடியாக கொடிக்கம்பத்தில் ஏறியபோது, தம்மதத்தை கொள்கையாக கொண்ட சிங்கள பெளத்த மேலாண்மை மக்களும், கர்மத்ததை அடிப்படையாகக் கொண்ட இந்து மற்றும் சைவகுல மரபைப் பேணும் தமிழர்களும், இலங்கைத் தமிழ் சிங்கள தேசிய இனங்களும் முரண்பட்டு நிற்பதற்கான அறிகுறிகள் தென்படத்ததான் செய்தன. ஆனாலும் வெள்ளையர்கள் குறிப்பிட்ட எந்த ஒரு இனத்துக்கும் இந்த அடிமை தேசத்தின் அதிகாரத்தை கொடுத்துவிட்டு போகவில்லை. என்றாலும் சுயநல அரசியல்வாதிகள் நிகழ்த்திய ஆரம்பகட்ட விளையாட்டில் பலியானதென்னவோ தமிழ் மக்கள்தான்.
இன்று தங்களை அறியாமலேயே சிங்கள மக்கள் தங்கள் தலைமை ஆயுதங்களின்பால் தான் தங்களையும் நிறுத்திவிட்டிருக்கிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அறுபதாயிரம் பேர் வரை களப்பலி கொடுத்துள்ள யுத்தம். சுமார் பத்து இலட்சம் பேர் அகதிகளாக உலகெங்கிலும் அலைந்து திரிகிறார்கள். இத்தீவின் இன்றைய நிலைக்கு கடந்த காலத்தில் தவறுகளை விதைத்தவர்கள் யார்? தவறுகள் என்பது வரலாற்று அனுபவம். அதனால்தான் மீண்டும் மீண்டும் தவறுகளை மட்டுமே நினைவுபடுத்தியாக வேண்டும். ஏனென்றால் 'தவறுகளை மறப்பவன் மீண்டும் அதையே செய்கிறான்'
இனத்துவேஷ ஆதரவுச் சட்டங்கள்
இலங்கையிலிருந்து பிரிட்டிஷார் வெளியேறிய இரண்டாவது நாளான 1948 பெப்ரவரி நான்காம் தேதி டான் ஸ்டீபன் சேனநாயகே தீவின் முதல் பிரதமராக பதவியேற்றார்.பதவியேற்று ஒருவருடம்கூட பூர்த்தியாகியிருக்காத நிலையில், கொண்டுவரப்பட்ட குடியுரிமைச்சட்டம் மலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையைப் பறித்தது. பிரிட்டிஷாரால் கண்டி ராஜ்யம் தோற்கடிக்கப்பட்டு அங்கு காலனி ஆட்சி நடைமுறைக்கு வந்தபோது ஆங்கிலேயர் மலையகத்தில் காப்பியும், தேயிலையும் பயிரிட்டனர். பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட - அதாவது
2008 13 அறிவு

Page 10
மேடு பள்ளங்கள் நிறைந்த அடர்ந்த காட்டுப் பகுதியை காப்பியும், தேயிலையும் பயிரிடுவதற்குத் தோதான நிலமாக்கி அதைச் செழுமையாக்கி பயிரிட கண்டி விவசாயிகள் மறுத்துவிட்டனர். அப்போது அவர்களுக்குக் கிடைத்தவர்கள்தான் தென்னிந்திய கூலி அடிமைகள். ஒரு பக்கம் வறுமை, இன்னொரு பக்கம் காலனி ஆதிக்க அடக்கு முறை என்று 1840 இலிருந்து 1850 வரை கிட்டத்தட்ட பத்து இலட்சம் கூலி அடிமைகள் தமிழகத்தின் தென்னாற்காடு வட ஆற்காடு, திருச்சி, மதுரை, மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து இங்கே இறக்குமதி செய்யப்பட்டனர்.
சேனநாயகாவின் இந்தக் குடியுரிமைச் சட்டம் பத்து இலட்சத்துக்கும் மேலான பெருந்தோட்டத் தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பறித்தது. தமிழர் ஒடுக்குமுறைச் சட்டத்தின் முதல் பலி இவர்கள்தான். நாடாளுமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டு, வாக்கு ரிமையும் பறிக்கப்பட்டு, தேச வரைபடத்தின் எல்லைக்குள்ளேயே இவர்கள் நாடற்றவர்களானார்கள். பின்னர் 1949இல் கொண்டுவரப்பட்ட ‘இந்திய பாகிஸ்தான் பிரஜா உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் தமிழரின் பங்களிப்பை முற்றிலுமாக இல்லாதொழிக்கும் திட்டத்தின் பொருட்டு சிறுபான்மை தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கையை புறந்தள்ளியது.
வலதுசாரிகளின் அடக்குமுறை ஒரு பக்கம். இடதுசாரிகளின் முரட்டுத்தனமான தத்துவ அணுகுமுறை ஒருபக்கம் என்று மலையகத் தமிழர்களை தொடர்ந்து பாரம்பரியத்தமிழர்களும் அடுத்தடுத்த சட்டங்களுக்கு பலியாகி விழுந்தார்கள். ஒரு பக்கம் சைவ இந்து மரபினர் சாதிக்கு வெளியே தள்ளப்பட, மலையகத் தமழர்களுக்கு சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டது. இன்னொரு பக்கம் குடியுரிமை பறிக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டு காலம் இத்தீவின் வளமைக்கென உழைத்த கூட்டம் தங்களின் உரிமையை இழந்தது. ஒரே குடையில் இரண்டாம் தர குடிமக்களாக தாங்கள் நடத்தப்படுவதாக தமிழ் மக்கள் கருதத் தொடங்கினார்கள்.
குதிரையிலிருந்து விழுந்து ஸ்டீபன் சேனநாயகா இறந்து போனபின் 1952 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மலையக மக்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் கூட கிடைக்காமல் போனது. பின்னர் 1956இல் சாலமன் பண்டாரநாயகா பதவிக்கு வந்ததும் துல்லியமான இனத்துவேஷம் துவங்கியது. பதவிக்கு வந்த ஜூன் மாதத்திலேயே தனிச்சிங்களச் சட்டம்' நிறைவேற்றப்பட்டது. இது தமிழ் மொழியின் அரசு பூர்வமான, உத்தியோகபூர்வமான உரிமையைப் பறித்தது. நாட்டின் சகல துறையிலும்
1 4
2008 அறிவு

சிங்களம் தெரிந்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்னும் நிலை வந்தது. 1959இல் ஒரு பெளத்த பிக்குவால் ஆர்.டிபண்டாரநாயகா துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
பின்னர் 1970இல் சிரிமாவோ பண்டாரநாயகாவின் ஐக்கிய முன்னணி ஆட்சியில் தரப்படுத்தல் சட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல்கலைக்கழகங்களுக்கு போகும் தகுதியிருக்கும் தமிழ் மாணவர்கள்கூட சிங்கள மாணவர்களை விட அதிகமான மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று கட்டாயப் படுத்தியது. இந்த நான்கு சட்டங்களும் தமிழரின் வாழ்வுரிமை, கல்வி, கலாச்சாரத்துறையின் மீது நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலாக இருந்தது. ஒரு பக்கம் அடுக்கடுக்கான சட்டங்கள் வர வர தமிழ் மக்களும் இளைஞர்களும் தாங்கள் இத்தீவில் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தனர். மூத்த அரசியல் தலைமையின் கீழ் அஹிம்சா வழியில் போராடிய அறவழி போராட்டங்கள் இயல்பாகவே ஆயுதங்களின்பால் நகள்ந்துபோனது. இந்த நான்கு சட்டங்களைத்தவிர பின்னர் கொண்டுவரப்பட்ட "புதிய குடியரசுச் சட்டமும் "பயங்கரவாத தடுப்புச்சட்டமும் நிலைமையை அணுகத்தெரியாமல், அணுக முடியாமல் மீண்டும் மீண்டும் சூழலைக்கெடுத்தது. சட்டம் என்பது உலகின் எந்தப்பிராந்தியத்தில் செயல்படுத்தப்பட்டாலும் அது நெகிழ்ச்சித் தன்மையுடன் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் சொந்தக் குடிகளின் மீதாவது கரிசனமும் அனுசரணையும் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இத்தீவில் சட்டத்தை செயல்படுத்தியவர்களின்பால் இருந்த இறுக்கமும் துவேஷமும்தான் இன்றைய இனபூசலுக்குக் காரணம்.
தமிழ் போராட்டத்தின் தொடக்கம்
இன்றைக்கு யூத இனத்தை போல உலகம் முழுக்க சிதறி அரசியல் தஞ்சமடையும் ஈழத்தமிழருக்கு என்றாவது ஒருநாள் தமக்கென ஒரு தாயகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் இருக்கத்தான் செய்கிறது. தாயகம் பற்றிய இந்தக் கனவை முதன்முதலாக அந்த மக்களுக்கு விதைத்தது தந்தை செல்வா என்ற ஈழ மக்களால் அன்போடு அழைக்கப்படும் செல்வநாயகம்தான். இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்தவர் இவர். மாணவப் பருவத்திலேயே சுதந்திர இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். இந்தியாவின் சிருஷ்டியாக காந்தியடிகளின் அரசியல் கோட்பாடான அஹிம்சையை தன் வாழ்நாளின் கடைசிவரை பின்பற்றியவர்.
பெரியவர் நாயகம் அவர்கள் போட்ட பாதையில் தமிழ் மக்கள்
2008 15 அறிவு

Page 11
தங்களின் அரசியலை வரித்துக்கொண்டனர். அதற்கு முன்பும் பின்பும் தமிழருக்கு அதுபோல ஒரு ஜனநாயகத் தலைமை கிடைத்ததில்லை என்றே சொல்ல வேண்டும். பாராளுமன்றத்தில் முதல் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டபோது அதை எதிர்த்த இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் இரண்டாவது இந்திய பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்தார். அன்றைய பிரதமரான சேனநாயகவோடு நெருக்கம் அேணி அரசியலும் பங்குபெற்றபோது, இலங்கைத் தமிழ் காங்கிரஸ் பெரும் பிளவை சந்திக்க நேர்ந்தது. செல்வா அந்தக் கட்சியிலிருந்த வெளியேறி தமிழ் அரசு கட்சியைத் துவக்கினார். 1949 டிசம்பர் 18 ஆம் தேதி உதயமான தமிழ்க்கட்சியில் கு. வன்னியசிங்கம், டாக். நாகநாதனும் முக்கியமானவர்கள். பாராளுமன்ற ஜனநாயகத்திலிருந்து விலகாமல் அதனை ஒரு எதிர்ப்பரசியலின் தமிழ் வடிவமாக மாற்றிக் காட்டினார்கள். ஆனால் இலங்கை பாராளுமன்ற அடக்குமுறையாலும், இனவாதிகளின் பயங்கரவாதத்தாலும் விழலுக்கு இறைத் த நீராக போனது செல்வநாயகத்தின் அரசியல் போராட்டங்கள்.
அவர் துவக்கிய 'தமிழரசுக் கட்சி' 1952ல் ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு திருகோணமலை மற்றும் கோப்பாய் தொகுதியில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. தமிழரசுக்கட்சி சந்தித்த முதல் தேர்தலிலேயே செல்வநாயகம் தோற்றுப்போனார். ஆனால் 1956 தேர்தலில் பத்து இடங்களிலும், 1960 தேர்தலில் பத்தொன்பது இடங்களில் போட்டியிட்டு பதினைந்தில் வெற்றி பெற்றது. 1956 முதல் 1970 வரை நடைபெற்ற நான்கு தேர்தல்களில் கணிசமான அளவு வெற்றி பெற்றது தமிழரசுக்கட்சி, 1970 இல் கடைசியாக பங்குபெற்ற தேர்தலில் பதின்மூன்று தொகுதிகளில் ஜெயிக்க முடிந்தது. ஆனால் அதன் பின் இலங்கை பாரளுமன்ற ஜனநாயகத்தின் மீது அது நம்பிக்கை இழந்தது. போராட்டம் இளைஞர்களின் கைக்கு மாறியது. தேர்தல் கால் ஜனநாயக அனுபவங்கள் ஆயுதங்களின் பக்கம் இளைஞர்களை திசை திருப்ப அது இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ்த் தலைவர்களும் அற வழி போராட்டமும்
1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து காலிமுகத்திடலில் தமிழரசுக்கட்சியால் நடத்தப்பட்ட பெருந்திரளான சத்தியாக்கிரக போராட்டம் கலவரத்தில் முடிந்தது. திருகோணமலையில் தமிழரசுக் கட்சியால் நடத்தப்பட்ட மாநாடு தமிழுக்கு சம உரிமை, மலைநாட்டு தமிழருக்கு குடியுரிமை, சமஷ்டி அரசு என்கிற
2008
16 அறிவு

கோரிக்கைகளோடு தமிழருக்கான இணை அரசு என்பதையும் கோரி நின்றது. 1957ல் நடந்த சிங்கள எழுத்துக்கள் அழிப்பு போராட்டம் முழு வீச்சில் பற்றி எரிந்தது. தொடர்ந்து சுதந்திர தினத்தை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கும்படியும், அரசுப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்படியும் வேண்டுகோள் விடப்பட இலங்கை அரசுக்கு தமிழர்கள் ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்தனர். இதில் திருகோணமலை நடராஜன், ஐயாவு, பிரான்சிஸ் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். போராட்டம் ஈழப்பகுதி முழுக்கப் பரவியது. ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழ் அரசு தபால்சேவை 1961 ஏப்ரல் 14 ஆம் நாள் தபால்தலை வெளியிடப்பட்டபோது இலங்கை அரசு கொதித்துப்போனது. ஒரு பக்கம் தமிழ் மக்களின் பெருங்கோபம், இன்னொருபக்கம் போராட்டத்தை தீ போலப்பரப்பிவிடும் தமிழரசுக்கட்சியின் தீவிரம் என எல்லாவற்றையும் யோசித்த அரசு, இந்த தபால் தலை வெளியிட்ட மூன்று நாளில் 'அவசர நிலை யைப் பிரகடனம் செய்தது. கிட்டத்தட்ட இரண்டுமாதகாலம் வடக்கு கிழக்கில் அனைத்து இலங்கை அரசுப் பணிகளும் முடக்கப்பட்டன.
நீடித்த தலைமையும் அரசுக்கு ஈடுகொடுத்து போராடும் வலிவும், அடுத்தகட்ட தலைமையும் இல்லாது போனதால் தமிழரசுக்கட்சி காலத்தால் பின்தங்கிப்போனது. ஆனால் அதன் தலைவர் செல்வநாயகம் விதைத்த நம்பிக்கைகளோ ஏராளம். 1957, ஜீலை 26 இல் பண்டார நாயகாவுடன் செல்வா உடன்படிக்கை ஒன்று செய்துகொண்டார். அதேபோல் டட்லி ஷெல்டன் சேனநாயகே என்றழைக்கப்படும் சேனநாயகவுக்கும் செல்வாவுக்கும் இடையே 1965 மார்ச் 24இல் செய்யப்பட்ட இரண்டாவது ஒப்பந்தமும் மிகவும் முக்கியமானது. (இதை டட்லி - செல்வா உடன்படிக்கை என்கின்றோம்) 1965இல் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதமராக ஆட்சிக்கு வந்த சேனநாயகவுக்கு தமிழரசுக்கட்சி தங்கள் ஆதரவை வழங்கியது. அமைச்சரவையின் இரட்டை மனதோடு ஒரு உறுப்பினரை பங்கெடுக்கச் செய்தது. சுமுகமாக அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து தமிழ் மக்களுக்கு சில சலுகைகளை பெற்றுவிடலாம் என்று நினைத்து டட்லி சேனநாயகவோடு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார் செல்வநாயகம், “பண்டாரநாகயாவோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் சிங்களம் ஆட்சிமொழியாக இலங்கை முழுக்க தொடரும். வடக்கு, கிழக்கில் நிர்வாக மொழியாக தமிழ் இருக்கும் என்றும் பிரதேச மன்றங்கள் ஊக்குவிக்கப்பட்டு தமிழருக்கு சில அதிகாரங்கள் வழங்கப்படும் என்கிற மாதிரியான அந்த ஒப்பந்தத்தை பெளத்த துறவிகள் கடுமையாக எதிர்த்தனா. பிற்பாடு இத்தீவின் அதிபராக வந்த ஜெயவர்த்தனா தலைமையில் 1957 அக்டோபர் 2,3 தேதிகளில் ஒப்பந்தத்திற்கு எதிராக
2008
17 அறிவு

Page 12
மிகப்பெரும் பாத யாத்திரை துவங்கப்பட்டது. சிங்கள மக்களிடம் பெரும் துவேஷம் கட்டவிழ்த்துவிடப்பட ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக பண்டார நாயகா கைவிட்டார். இரண்டாவது டட்லி ஒப்பந்தமும் இதேபோல சிங்கள தீவிரத் தன்மையுள்ள கட்சிகளின் எதிர்ப்பால் ஒருதலைப்பட்சமாக கைவிடப்பட்டது.
இன்று ஈழத்தில் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தைப் பார்க்கும்போது மிகக் குறைவான அதிகாரங்களையே அன்றைய ஜனநாயகத் தலைவர்கள் கோரினர். பிராந்திய அளவிலான அதிகாரத்தையும் மொழி அந்தஸ்தையும் கோரி நின்ற அந்தத் தலைவர்களின் அடுத்த தலைமுறையோ இப்போது தனி தமிழ் அரசுகோரி ஆயுதம் தாங்கி போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய போராளிகளால் இலங்கை அரசு அதிக விலைகொடுக்க நேர்ந்ததற்கு காரணம் இலங்கை அரசு அதிகார மையத் தரின் தவறான வழிகாட்டுதல்கள்தான் இலங்கை ஆட்சிப்பீடத்திடம் அஹிம்சா வழியில் போராடி தமது கோரிக்கைகளைப்பெற்றிடலாம் என்கிற தமிழ் அரசுக் கட்சியின் கனவு ஒரு கட்டத்தில் தகர்ந்துபோனது. இலங்கை என்கிற ஒரு குடையின்கீழ் சிங்கள - தமிழ் தேசிய இனங்கள் சமத்துவத்துடன் வாழலாம் என்கிற கனவு வரலாற்றின் பக்கங்களில் கானல் நீராகிப்போனது. 1972 இல் புதிய குடியரசு சட்டம் தீவில் இயற்றப்பட்டபோது தனது பாராளுமன்ற பதவியை உதறினார் செல்வா. ஆனாலும் சூழலும் தேவையும்கூட சில தவறான வழிகளைக் காட்டிவிடுவதை போன்றதுதான் பிரதமர் டட்லியோடு அவர் கைகோர்த்தது. ஆனால் அதுவே சாத்வீகத்துக்கான இறுதி முயற்சியாகவும் இருந்தது.
எழுபதுகளின் துவக்கத்திலேயே அஹிம்சா போராட்டம் ஆயுதப் போராட்டமாக கைமாறிப்போனது. இலங்கை சுதந்திரக்கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கா சமாஜக் கட்சி மூன்றும் இணைந்து 'மக்கள் முன்னணி அரசு' என்னும் பெயருடன் 1970 இல் பூரீ லங்கா சுதந்திர கட்சி ஆட்சிக்கு வந்தது. "ஜனநாயகம் சோஷலிசம்' எனும் கவர்ச்சிகரமான கோஷத்துடன் பதவிக்கு வந்த போது ஆயுதம் தாங்கிய தீவிர கம்யூனிஸ்டுகளான ஜே.வி.பி. தென் இலங்கையில் பெரும்கிளர்ச்சியை நடத்தியது. ஒரு எதிர்ப்புரட்சி போல தென் இலங்கை முழுக்கப் பற்றி எரிந்த இந்தப் போராட்டத்திலும், வட இலங்கையில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தினாலும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். ஜே.வி.பி. இளைஞர்கள் காவல் நிலையங்களுக்குத் தீ வைத்தனர், ஆயுதங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒழுங்கான
2008 18 அறிவு

திட்டமிடலும் அறிவார்ந்த தலைமையும் இல்லாத காரணத்தால் சில மாதங்களிலேயே இந்தப்புரட்சி ஒடுக்கப்பட்டது. சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தியதாக வேண்டியும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட ஆட்சியாளர்களுக்கு பலிகடாவாக கிடைத்தவர்கள்தான் இலங்கைத் தீவின் தமிழ் மக்கள்.
1972 இல் இலங்கைத் தமிழரசுக்கட்சி, இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து அமிர்தலிங்கத்தின் தலைமையில் துவக்கப்பட்டதுதான். “தமிழர் கூட்டணி” பின்னர் இதுவே தமிழர் விடுதலைக்கூட்டணியானது. 1978 யூலையில் வலதுசாரி ஐக்கியதேசியக் கட்சி 140 இடங்களைக் கைப்பற்றி ஜெயவர்த்தன பிரதமர் ஆனதும் சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு 18 இடங்களை கைப்பற்றி தமிழர் விடுதலைக்கூட்டணி எதிர்க்கட்சியானது. அதுவே சிங்களத் தலைமையை யோசிக்கவும் வைக்க மீண்டும் இனத்துவேஷம். ஆகஸ்டில் தமிழருக்கு எதிரான பெரும் கலவரம் திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்டது.
தமிழ் ஆயுத போராட்டத்தின் துவக்கம்
சுதந்திர காலத்தில் தொடங்கி எழுபதுகள் ഖങ്ങj தொடர்ந்து கொண்டுவரப்பட்ட சட்டங்கள் வாயிலாகவும் ஒடுக்குதல் காரணமாகவும் இளைஞர்களின் கோபம் ஆயுதங்களின் பக்கம் திரும்பியது. சிறு சிறு அமைப்புகள் மூலம் அவர்கள் ஒன்று திரண்டனர். துவக்கத்தில் அது "ஈழத் தமிழ் இளைஞள் பேரவை’ யாக இருந்து, பிற்பாடு 'ஈழ விடுதலை முன்னணி”யாக பெயர்மாற்றம் பெற்றது. இதன் இறுதிக் காலகட்டத்தில் தமிழ் மாணவர்களிடம் தோன்றிய 'தமிழ் மாணவர் பேரவையும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் அரசியல் ஆர்வமும் தீவிரப்போக்கு எண்ணமும் கொண்டிருந்த இந்த இயக்கங்களில் இருந்துதான் ஆயுதப்போராட்டம் வளர்ச்சி பெற்றதாக கருதலாம். ஒரு ஆவேசமான ஊர்வலம் அல்லது கொடும்பாவி எரிப்பிற்கு அடுத்து என்னவென்று இளைஞர்களிடம் திட்டமிருக்கவில்லை. தத்துவச் செறிவுள்ள தலைமை கிடைக்கவில்லை. இதன்காரணமாக இந்த அமைப்புகளெல்லாம் தேய்ந்து அழிந்து போயின. பலர் இந்த எழுச்சியைப் பயன்படுத்தி வழிப்பறி கொள்ளை எனத் தனிப்பட்ட கொலைகளையும் நடத்திக்கொண்டனர். தீர்க்கமான கொள்கையும், ஆவேசமும், விடுதலை வேட்கையும் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் கோபத்தைச் சரியான வழியில் கொண்டு செல்லும் தலைமையோ அமைப்போ இல்லை. காரணம் ஏற்கனவே இருந்த தமிழ்த் தலைமையினால் அவர் கள்
2008 19
அறிவு

Page 13
விரக்தியுற்றிருந்தனர். 1970 ஜூலை 13ஆம் தேதி இலங்கை அரசின் துணை அமைச்சர் சோமவீர சந்திர சிறி உரும்பிராய் இந்துக்கல்லூரிக்கு வந்தபோது அவருடைய காருக்கு குண்டு வைக்கப்பட்டது. அதில் அவர் தப்பித்தபோதிலும், தமிழ்த் தலைவர்கள் நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்தனர். அந்தக்குண்டுதான் முதல் முதலாக ஆயுதத்தின் மூலம் போராட வேண்டும் என்று தமிழ் இளைஞர்களுக்கு வழிகாட்டியது.
இதைத்தொடர்ந்து முதன்முதலாக ஆயுதங்களின்பால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களை வரவேற்கத் தயாரானார்கள். மக்கள், வடக்கு கிழக்கில் வாழும் இளைஞர்கள் கல்வியின்மீது தீரா மோகம் கொண்டிருந்தனர். வறுமை வாழ்வு வாழ்ந்தாலும் யாழ்ப்பாண மத்தியதரவர்க்கம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. ஆனால் தரப்படுத்தல்' மற்றும் புதிய அரசியலமைப்புச் சட்டம்’ என்னும் இரண்டும் அவர் களை பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில், ஏன் பள்ளிக்கூடங்களில் கூட ஒரு போராட்டத்திற்கு அவர்களைத் துரத்தியது. இந்தக்காலகட்டத்தில் தர்ன் ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, பிளாட், எல்.டி.டி.ஈ போன்ற இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள்கூடி "தமிழ் இளைஞர் பேரவை' துவக்கப்பட்டது. ஆனால் இதுவும் சில காலத்திலேயே அழிந்துபோனது. இச்சூழ்நிலையில் 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்கள போலீசாரால் தாக்கப்பட்டு ஒன்பதுபேர் மரணமடைய நிலைமை விபரீதமானது.
20.05.1978 தேதியிட்ட சிலோன் டெய்லி மிரர் (Ceylon Daily Mirror) எனும் ஆங்கில நாளிதழில் இலங்கை போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகளாக 38 இளைஞர்களின் பெயர்கள் அறிவிக்கபட்டிருந்தன. அவர்கள் அத்தனைபேரும் மாணவர்கள். அதில் முதல் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஆல்பிரட் துரையப்பா (யாழ்பாண மேயர்) 1975 யூலை மாதம் 27ஆம் திகதி வட்டுக்கோட்டையில் உள்ள பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து இரு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். அதை மிகத் துல்லியமாக திட்டமிட்டு வெற்றிகரமாக செய்தது இன்றைய புலிகள் அமைப்புதான். 1972இல் தமிழ் புதிய புலிகள் என்ற பெயரில் இயங்கிய புலிகள், அமைப்பு 1976இல் மே மாதம் தமிழீழ விடுதலைப்புலிகள் என பெயர்மாற்றம் பெற்றது.
ஆல்பிரட் துரையப்பாவை கொல்வதற்கு முன்பு புலிகள் அமைப்பை யாருக்கும் அவ்வளவாகத் தெரியாது. காரணம் சில அமைப்புகள் ஏற்கனவே சில ஆயுதக் குழுக்களாக செயல் பட்டு வந்தது.
2008 அறிவு
20

ஈழத்தாய்மார்களைப் பொறுத்தவரையில் அனைவருமே பொடியன்கள் தான். அப்படித்தான் ஆயுதங்களின்பால் ஈர்க்கப்பட்ட அந்த இளைஞர்களை அன்போடு அழைத்தனர். பிளாட் அமைப்பு, உமா மகேஸ்வரனாலும், ஈ.பி.ஆர்.எல்.எப் வரதராஜப்பெருமாளாலும், ஈரோஸ் - பாலகுமாரனாலும், எல்.டி.டி.ஈ பிரபாகரனாலும் நடத்தப்பட்ட முக்கிய அமைப்புக்களாகும். அனைவருமே சுதந்திர தனி ஈழ கோரிக்கையை முன்வைத்த சோஷலிச போராளி அமைப்புகளாகத்தான் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டவர்கள். இந்த எல்லா அமைப்புகளுக்குள்ளும் யார் விடுதலைப்போரை முன்னெடுப்பது என்ற போட்டி இருந்தது. இந்த அமைப்புக்கள் போட்டிபோட்டுக்கொண்டு பல்வேறு இன எதிரிகள் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. தாங்கள் நம்பும் தமிழ்க் கொள்கைக்கு எதிரானவர்கள், அதைக்காட்டிக்கொடுத்தவர்கள், தங்களுக்கு எதிரான வழக்குகளில் சாட்சி சொன்னவர்கள், எதிரிகள் என்று பலரையும் கொன்றனர். சிலர் ஆயுதப்பயிற்சிக்காக வெளிநாடு சென்றனர். பாலஸ்தீனிலும், நிகராகுவாவிலும் ஆயுதப் பயிற்சி பெற்றனர்.
புலிகள் பிற அமைப்புக்களை விட தனித்துவம் மிக்கதாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. 1978இல் இரத்மலானையில் ஆம்ரோ விமானம் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. நிலைமை விபரீதமாக, 1979இல் போராளிக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்களை வேட்டையாட பயங்கரவாத தடுப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயுதம் தரித்தவர் நிராயுதபாணிகளுமாக நூற்றுக் கணக்கான இளைஞர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்கள், கொலை செய்யப் பட்டோர், காணாமல் போனோர் என்று இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க, இந்த இளைஞர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர். ஏறத்தாழ அனைத்து அமைப்புகளுமே தமிழகத்திலிருந்து செயல்படப் போனார்கள். 70களின் இறுதில் இருந்து 90கள் வரை இந்தப் போராளிகளுக்கு வலுவான தளமாக தமிழகம் இருந்தது.
1977இல் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து இளைஞர்கள் கொதித்து போனார்கள். அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனாவோ போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்றார். 1981இல் ஆசியாவில் புகழ்பெற்ற தமிழர்களின் கலாச்சார பொக்கிஷமான யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அங்கிருந்த 90,000 நூல்கள் எரிந்து சாம்பலாயின. இக்காலத்தில் ஏராளமான தமிழ் இளைஞர்கள் வெலிக்கடை சிறையில் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். 1983ஜூலை 25ஆம் தேதி சிங்கள கைதிகள் அரசின் ஆதரவோடு மிகப் பெரிய வன்முறையில் இறங்கினர்.
25 தமிழ் இளைஞர்கள் கொடுரமாக கொலை செய்யப்பட்டனர். மீண்டும் 2008 . . அறிவு

Page 14
இரண்டு நாள் கழித்து 18பேர் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான கலவரம் பற்றிப் படர்ந்தது கிட்டத்தட்ட 3,000 தமிழர்கள் கோரமாக கொல்லப்பட்டனர். உலகின் கறுப்பு வரலாற்றில் இது ஜூலைக் கலவரம் என்று குறிப்பிடப்படுகிறது.
பல்வேறு அமைப்புக்களுக்கிடையிலும் ஐக்கியம் பேணப்பட வேண்டியதன் அவசியத்தைப் பலரும் உணர்ந்தனர். ஆனால் நீண்ட காலத்திற்கு ஐக்கியமாகவோ ஒன்றுபட்டோ அவர்களால் இருக்க முடியவில்லை. ஈழ விடுதலை என்ற கொள்கைக்காக துவக்கப்பட்ட பல அமைப்புக்கள் திசைமாறி எடுப்பார் கைப்பிள்ளையானது. 1985 இல் ஈரோஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப் விடுதலைப் புலிகள் இணைந்து ஈழ தேசிய விடுதலை முன்னணி உதயமானது. திம்பு பேச்சுவார்த்தைக்குப்பின் இந்த அமைப்பு சிதறி முரண்பட்டு நிற்க சகோதரப் படுகொலைகள் நடந்தது. தனது சொந்த சமூகமான தமிழ் மக்களின் விடுதலைக்கு யார் உரிமை கோருவது என்கிற மோதல் ஆயுதக் குழுக்களிடையே மோதலாக உருவெடுக்க ஒன்றை ஒன்று தாக்கி அழித்தது. திம்பு பேச்சுவார்த்தை தோல்வியடைய "ஈழத்தேசிய விடுதலை முன்னணி” பிளவுப்பட்டது. 1986 ஏப்ரல், மே காலப்பகுதிகளில் டெலோ தலைவர் சிறி சபாரத்தினம் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார். அடுத்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் போராளிகளும் அழித்தொழிக்கப்பட பிளாட் இயக்கம் தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது. ஈரோஸ் அமைப்பு விடுதலைப் புலிகளோடு இணைத்துக் கொள்ளப்பட்டது. இன்றைக்கு ஈரோஸின் தலைவர் பாலகுமார் விடுதலைப் புலிகளின் அமைப்யில் மூத்த உறுப்பினராக இருக்கிறார். ஈபி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபாவுடன் சேர்ந்து பன்னிரண்டு போராளிகள் 1990இல் ஜூன் மாதம் 19ஆம் திகதி புலிகளால் சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனைத்து ஆயுதக் குழுக்களும் பரஸ்பரம் சகோதரன் கொலையில் ஈடுபட்டன. எண்பதுகளின் இறுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு ஒன்றுதான் இன்றுவரை ஆயுதம் தாங்கி தங்களின் ஈழ விடுதலை. கைக்காக போராடி வருகிறது. சர்வதேச அளிவில் பல்வேறு தடைகளைச் சந்தி. லும், மேற்கு உலகம் ஏதோ ஒரு வகை ஒரு போராளி அமைப்பாக விடுதலைப் புலிகளை அங்கீகரித்திருக்கின்றது.
நன்றி மனோரமா ஒயர்புக் (தொடரும்
2008 mummmmmmmmmulumaumo , , 22
அறிவு

நீ யாரென்பதை நீ அறிவாயா?
முநீ முநீ ரவிசங்கர் நீ எப்படி உன்னை அறிமுகம் செய்துகொள்கிறாய் நீ யாரென்று உனக்குத் தெரியுமா?
உன்னை யாராவது "நீ யார்” என்று கேட்டால், பெரும்பாலும், நீ செய்யும் தொழிலையோ மற்றும் யாரோ ஒருவருக்கு நான் இவ்விதமான உறவு என்றேதான் சொல்கிறாய் அல்லவா? “நான் இன்னாருடைய மகன்” அல்லது "நான் ஒரு மருத்துவன்' அல்லது "நான் இந்த இடத்தில் இந்த வேலை செய்கிறேன்” என்கிறாய். நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொண்டிருக்கலாம். ஆனால், நீ யார்?
செய்யும் தொழிலா நீ? அவ்வளவுதானா இன்றைக்கு நீ ஒரு தையல்காரனாக இருக்கலாம். நாளை நீ சமையல்காரனாக இருக்கக்கூடும். நீ ஒரு ஆசிரியராகவும் இருக்கக்கூடும். நீ ஒரு தாயாகவோ அல்லது ஒரு தந்தையாகவோ இருக்கிறாய். நீ குழந்தையாக இருக்கிறாய். நீ ஒரு மாணவன். நீ படுக்கையில் உள்ள ஒரு நோயாளி. வாழ்க்கையில் நீ பலவிதமான பாத்திரங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் உன்னுடைய எல்லாப் பாத்திரங்களின் ஒட்டுமொத்தமும் உனக்கு ஈடாகாது. வாழ்க்கையில் எல்லா பாத்திரங்களையும்விட நீதான் மிக மேலானவன்.
ஒருவன் தான் ஏற்கும் ஒரு பாத்திரமாகத் தன்னை அடையாளங் காட்டிக்கொண்டால், அவனுடைய தனித்தன்மையின் பல பகுதிகளும் ஒன்று சேர்ந்திருக்காது. அவன் பல பகுதிகளாக இருக்கிறான். இது தன்னுடைய முழு உள்ளார்ந்த திறன்களை உணராமல், தனித்தனி பிரிவிற்குள் வாழ்வதைப் போன்றிருக்கிறது.
முக்கியமாக இந்த வேட்கைதான் நாம் யார்? நம் இயல்பு என்ன? ஆன்மாவை நோக்கிய (ஆன்மீகப்) பயணத்தின் ஆரம்பம் மனித நரம்பு மண்டலம் தன்னைப்பற்றியும், வாழும் இயல்பு பற்றியும், தன் இருப்பு நிலை பற்றியும் விசாரணைதான் மனிதத்தன்மையின் ஆரம்பம்.
நான் இன்னான், நான் ஒரு அமெரிக்க நாட்டவன், அல்லது நான் மெக்சிக்கோவைச் சேர்ந்தவன், நான் கனடா நாட்டவன். நான் ஆங்கிலேயன், நான் ஜெர்மனியன் எனத் தன்னை அடையாளங்காண்பது ஓரளவுக்குப் பலன் தருகிறது. அதுவே முடிவான உண்மை அல்ல அது பூரணத்துவம் அல்ல.
ஆன்மீகப் பயணம் என்பது நம் மூலத்தைத் (தோற்றுவாயைத்)
23 அறிவு
2008

Page 15
தேடுவதே ஆகும். நான் எங்கிருந்து வந்திருக்கிறேன்? இந்த வாழ்கையின் தோற்றுவாய் எது? உலகின் எல்லாப் பெருமதங்களும் மூலத்தைத் தேடித்தான் செல்கின்றன. ஆனால், அந்த முயற்சியில் மக்கள் தங்கள் அடையாளங்களிலேயே சிக்கிவிட்டிருக்கின்றனர்.
இன்று உலகம் முழுவதும் நடக்கும்.போர்களும், போராட்டங்களும் மதத்தின் பெயராலேயே நடக்கின்றன. ஒருவன் நான் ஒரு முகம்மதியன், நான் ஒரு கிறிஸ்துவன், நான் இந்து அல்லது நான் சீக்கியன், நான் பெளத்தன் என்னும் நிலையிலேயே நின்றுகொண்டு, அப்படி இல்லாதவர்கள் என்னுடையவர்கள் அல்ல. என்னைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று எண்ணுகிறான். ஒரு கிறிஸ்துவனாக, முகம்மதியனாக அல்லது இந்துவாகத் தன்னை அடையாளங்காட்டும் முயற்சியில், தன் உயிரை இழப்பதைக்கூடப் பொருட்படுத்தவில்லை. ஆனால், நான் ஒரு முகம்மதியன் அல்லது ஒரு இந்து அல்லது ஒரு கிறிஸ்துவன், இப்படித்தான் நான் இருக்கவேண்டும் இதுதான் நடக்கிறது இல்லையா? இது சுத்த பைத்தியக்காரத்தனம் ജേ?
எந்த தேசத்தவன் என்ற கேள்வி எழுகையில் கனடா நாடடைச்சேர்ந்தவன், அமெரிக்க நாட்டவன். அதை நாம் நாட்டுப்பற்று (தேசபக்தி) என்கிறோம். கனடாவிற்கும், அமெரிக்காவிற்கம் இடையே எந்த வித்தியாசயமும் இல்லை நாடுகளின் வரைபடத்திலுள்ள ஒரு க்ோடுதான் எந்த எல்லைக்கோடும் இல்லை. பூமியின் மேல் எதுவும் வரையப்பட்டு இல்லை. நிலம் பேசுவதில்லை. அது, "நான் கனடா", "கான் அமெரிக்கன்” என்று சொல்வதில்லை.
இறைவனின் படைப்பில் இந்த உலகம் முழுவதும் ஒன்று சேர்ந்திருக்கிறது. இந்தப் பூமி ஒன்றுசேர்ந்திருக்கிறது. எல்லாம் ஒன்றாயிருக்கிறது. முழு மனித இனத்தில் ஒற்றுமை இருக்கிறது. இந்த ஒற்றுமையை, இந்த ஒன்றுபடுவதற்குக் காரணமாயிருப்பதைத் தேடி அறிவதே உண்மையான ஆன்மீகப் பயணம். துரதிஷ்டவசமாகத் தனித்தனியாகப் பிரித்துவிட்டது.
மதத்திற்கும், ஆன்மீகத்திற்கும் உள்ள வேற்றுமை முதலில் நம் மனதில் தெளிவாக வேண்டும். நான் பொதுவாக வாழைப்பழத்தையும், அதன் தோலையும் உதாரணமாகக்கொடுப்பதுண்டு. மதம் என்பது வாழைப்பழத்தோல் போன்றது. ஆன்மீகம் என்பது வாழைப்பழம். மனிதர்கள் வாழைப்பழத்தை எறிந்துவிட்டு தோலைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்
மதம் என்பது வெளிச்சடங்குகளும், பழக்கங்களும், ஒரு
2008
24 அறிவு

வாழ்க்கைமுறையும் ஆகும். ஆன்மீகம் என்பது வாழ்க்கையின் மூலத்தை அறியும் வேட்கை, மூலத்திற்குத் திரும்புவது நம் உள்ளத்தின் ஆழந்தநிலையில் நாம் தெய்வத்தின் ஒரு பகுதி என்பதை அறிந்துகொள்வது.
இந்த வேறுபாடு நம் மனதில் தெளிவாகத்தெரியும்போது, நமது மூலத்தை நோக்கிய நம் பயணம் தொடங்குகிறது. அப்போதுதான் நாம் மனிதர்களாகிறோம். அப்போதுதான் நாம் பேரறிவும், ஒழுங்கமைப்புமுள்ள, தோற்றமெடுத்தவையனைத்திற்கும், ஆதாரமாயும், ஒவ்வொரு நிகழ்விற்கும் ஆதாரமாயுமுள்ள, அந்தத் தத்துவத்துடன் ஒருங்கிணைகிறோம்.
இந்தப்பாதையில் ஒவ்வொருவரும் தனித்தனியாகத்தான் நடக்கவேண்டும். ஒருவருக்காக இன்னொருவர் நடக்க முடியாது. மற்றொருவர் நடையை நீ பகிர்ந்துகொண்டு, “ஓ, நான் நடந்துவிட்டேன்', என்று சொல்ல முடியாது. உனக்காக மற்றொருவர் சாப்பிடவோ, தேநீர் பருகவோ முடியாது. "உனக்காக நான் தேநீர் குடித்துவிட்டேன், நீ ஓய்வெடுத்துக்கொள்” இது நடக்காது. இந்த வேட்கை, இந்தத் தேடுதல் ஆன்மாவின் தேவை, ஆன்மீகத்தில் வள(கம் வ்ைவொக ஆன்மாவின் தேவை.
ஒரு எண்ணம் நமக்கு வரும்போது, அது எங்கிருந்து வருகிறது என்று நமக்குத் தெரிவதில்லை. நமக்குத் தெரியாத ஏதோவொரு மூலையிலிருந்து, நமக்குத் தெரியாத நம்முடைய ஏதோவொரு இடத்திலிருந்து எண்ணம் வருகிறது. நமது நரம்புமண்டலம் அதிக அழுத்தத் திற்கு உட்பட்டிருக்கும் போது, துன் பத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும்போது வரும் எண்ணத்தை நாம் தீய எண்ணம் என்கிறோம். அது உருச்சிதைந்திருக்கிறது. நரம்புமண்டலம் தெளிவாக, ஆனந்தமாக, சுத்தமாக, மிருதுவாக, ஆரோக்கியமாக இருக்கும்போது வரும் எண்ணத்தை நல்ல, ஆக்கபூர்வமான வாம்க்கைக்கு ஆதரவு தரும் எண்ணம் என்று சொல்கிறோம்.
எண்ணம் என்பது அந்த இடத்திலிருந்து சுயமாகவே எழும். “இதைச் செய், இதைச்செய், இதைச்செய்” என்று சிலருக்கு உள்ளிருந்து உந்தும் எண்ணம் எழுகிறது. விஞ்ஞானக் கண்டுபிடிப்பு ஒவ்வொன்றும் அந்த இடத்திலிருந்துதான் வந்திருக்கிறது. ஒவ்வொருகலைப் படைப்பும் அங்கிருந்துதான் வெளிப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கவிதையும் அங்கிருந்துதான் வந்திருக்கிறது. அந்த குறிப்பிட்ட ஒரு இடம் அல்லது சோலை நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. அதுதான் நாம், அதுவே உண்மையான அறிமுகம். . . . . .
2008
25 හිංiffග!

Page 16
இருக்கும் அனைத்தும் மாறுதலடையும் தன்மைவாய்ந்தவை. நமது உடல் பலவிதமான மாற்றங்களை அடைந்திருக்கிறது. நீ உனது குழந்தைப் பருவத்துப் புகைப்படங்களைப் பார்த்தால், “இதுதான் நான்’ என்று பலமுறை சொல்லவேண்டியிருக்கும். நீதான் அது என்று உனது நண்பர்கள் அடையாளம் கண்டுகொள்ளமாட்டார்கள். உனது இளமைப்பருவத்தில் நீ முற்றிலும் வேறுமாதிரியாகக் காணப்படுகிறாய். உனது தோற்றம் மாறியிருக்கிறது. உனது உடலானது அளவிலும், வடிவத்திலும் மாறியிருக்கிறது. உன் எண்ணங்கள் பலப்பல மாற்றங்களை அடைந்துவிட்டிருக்கின்றன. உணரும் விதமும் மாறிவிட்டிருக்கிறது. இல்லையா? சில நாட்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி மிக நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தாய். பிறகு அதைப்பற்றி அவ்வளவு நல்ல அபிப்பிராயம் உனக்கு இல்லை. பிறகு மறுபடியும் உனக்கு நல்ல அபிப்பிராயம் வந்துவிட்டது. உன் அபிப்பிராயங்கள், உன் எண்ணங்கள், உன் உணர்ச்சிகள், உன் உண்ர்வுகள் எல்லாமே மாறியிருக்கின்றன. மாறிக்கொண்டிருப்பவைகளைக் கொண்டு உன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறாய்.
இதைத் தாண்டி இன்னும் சற்று ஆராய்வோம். “ஓ நான் மிகவும் கோபக்காரன்” என்று நாம் சொல்லும்போது, நாம் சாதாரணமாக, கோபத்தோடு இருப்பதை நியாயப்படுத்திக் கொள்கிறோம். அவ்விதம் செய்யும் போது கடந்த காலத்தை அடையாளம் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
அது வெறும் ஒரு நொடி, பறந்துகொண்டிருக்கும் ஒரு நொடி, நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு நொடி. ஒரு மனோநிலை வருகிறது போகிறது. OOOLOLLTTO TTT TOTTLS TLLLLLT LLTTTLSS OLLLa தொழில்கள் மாறுகின்றன. உறவுகள் மாறுகின்றன, நண்பர்கள் மாறுகின்றனர். நம்மைச் சுற்றியுள்ளவையெல்லாம் மாறுகின்றன. நாம் விரும்புகின்றோமோ - இல்லையோ, நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன.
இருப்பினும், உனக்குள் மாறுதலே அடையாமல் இருக்கும் அந்த ஒன்றை நீ இறுகப் பற்றிக்கொள்ளமுடியும். அதனுடனேயே இரு அதுதான் நீ. சரீரம் மாறுதலடைந்திருக்கிறது. நீ மாறவே இல்லை, அந்தத் தத்துவம்தான் அனைத்து இருப்பிற்கும், இந்தப் பூவின் சீரான அமைப்பிற்கும் ஆதாரமாயிருக்கிறது. அதே தத்துவம்தான் இந்தப்பூவில் உள்ள நிறங்களுக்கும், இந்த இலைகளின் வடிவங்களுக்கும் காரணம். படைப்பு அனைத்திலும் அதே அறிவுதான் இருக்கிறது.
2008 அறிவு
26

இதை நாம் அறிந்துணர்கையில், நமது மெய்யுணர்வில் ஒரு மகத்தான ஐக்கியபாவம் ஏற்படுகிறது. நமதுநோக்கு மாறுகிறது. நாம் எதைப்பார்த்தாலும், அதைக் கூர்ந்து கவனிக்கிறோம். எதைக்கேட்டாலும் உன்னிப்பாகக் கேட்கிறோம். நாம் பார்ப்பவற்றுடனும், கேட்பவற்றுடனும் ஒன்றிவிடுகிறோம்.
ஒரு குழந்தை தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கும், நாம் பார்ப்பதற்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. நீ இதைக் கவனித்திருக்கிறாயா? ஒரு கதையில் யாராவது அழுதுகொண்டிருந்தால், குழந்தையும் கூடவே அழும். மூன்றாவது உலகம் எனச்சொல்லப்படும், அதிகம் படிக்காத கிராமவாசிகள் வாழும் தேசங்களில் நாம் அதைப் பார்க்கலாம். கதாநாயகன் அல்லது கதாநாயகிமேல் அவர்களுக்குக் கோபம் வந்தால், அந்தத் தொலைக் காட்சிப்பெட்டியையே உடைத்துவிடுவார்கள். அந்த அளவிற்கு அவர்கள் ஈடுபாட்டுடன் அத்தொலைக்காட்சியோடு ஒன்றிப்போய் அதில் நடப்பதெல்லாம் தங்களுக்கு நடப்பதாகவே எண்ணிவிடுகிறார்கள். பாகிஸ்தானுக்கும், மற்றொரு நாட்டிற்கும் இடையே கிரிக்கட் போட்டி நடந்துகொண்டிருந்தது. அந்த ஒளிபரப்பிற்குப் பிறகு தொலைக்காட்சி நிறுவனத்தின் வியாபாரம் மிகவும் பெருகியதாக செய்தித்தாள்கள் அறிவித்தன. ஏனெனில், தங்கள் நாடு தோற்றவுடன் மக்கள் தொலைக் காட்சிப் பெட்டியை உடைத்துவிட்டனராம்.
காணும் பொருளுடன் ஐக்கியபாவத்தை ஏற்படுத்தும், அந்தக் கண்டுணரும் தரத்தல் திட்டவட்டமான வித்தியாசம் உண்டு. அதனால்தான் ஞWலிகள், கலம் கலமwக முழுப்படைப்பிற்கே ஆதாரமனதுடன் (இறைவனுடன்) ஐக்கியமாவது, மூலத்தோடு, இணைவது, லயத்துடன் ஒன்றியிருப்பது குறித்துப் பேசியிருக்கின்றனர்.
இரண்டு வெற்றிகள் இருக்கின்றன. வாழ்க் கையில் வெற்றியடைவது ஒன்று. உலகில் வெற்றியடைவது மற்றொன்று. ஒருவர் வாழ்க்கையில் வெற்றியடையாமலேயே, உலகில் வெற்றிகரமாக இருக்கலாம். வாழ்க்கையில் வெற்றியென்பது, இந்த மூலத்தைக் கவனிப்பது, அதைப்பற்றி விசாரணை செய்வது, அந்த ஆனந்தத்திலும், அந்த நிபந்தனையற்ற அன்பிலும் வாழ்வது ஆகியவைதான்.

Page 17
ஒருபோதும் அதிகம்
வயதாகிவிடுவதில்லை
QLDiréfeti. g.g. Frfig (65), MD. Dr.P.H.D
முதுமை தட்டிவிட்ட மனிதர்கள் என்று நீங்கள் நினைக்கும் பலர், இளமையாகவும் உற்சாகமாகவும் இருப்பவர்கள் என்று நீங்கள் எண்ணும் வேறு பலரைவிட அதிக 'இளமையாகவே உண்மையில் இருந்து வருகிறார்கள்.
இளமையாக இருப்பதோ முதுமையாக இருப்பதோ, எதுவும் ஆண்டுக்கணக்காக எண்ணப்படும் உங்கள் மொத்த வயதில் இல்லை என்பதை நினைவுகூருங்கள். அது மிக மாறுபட்ட ஒன்று!
இருப்பினும் வளர்ச்சி செயற்பாட்டினின்று முதுமையடையும் செயல்பாடுகளைப் பிரிக்க நினைத்தால், அம்முயற்சி அதிக பலன் தராத பெருமுயற்சியாகவே இருக்கும். பின்வரும் விஷயங்களில் அதிக அக்கறை கொள்ள ஆயத்தமாக இருங்கள்.
உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடுங்கள்
முதியோரிடம் உயர் இரத்த அழுத்தம் முந்தைய ஆண்டுகளின் அளவீடுகளையொட்டியே கணக்கிடப்படுவது வழக்கம். உங்கள் வயதையும் ப்ொது உடல்நலத்தையும் வைத்து, உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்தல், உடல் எடையைக் குறைத்தல், புகைத்தலுக்கு விடைகொடுத்தல் (புகைத்தல் இரத்தநாள - தமனி இறுக்க நோயை மிகுதிப்படுத்துவதாகத் தெரிகிறது) போன்ற செயல்பாடுகளால் உங்களால் இச் சிக்கலை ஓரளவு தடுத்து நிறுத்தலாம். மேலும் நீங்கள் ஓர் அசையாத வாழ்வு நடத்துபவராக இருந்தால், உரிய உடற்பயிற்சித் திட்டத்தைப் பின்பற்ற உங்கள் மருத்துவரைக் கண்டு ஆலோசியுங்கள்.
உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உங்கள் வயது ஒரு பொருட்டே அல்ல. எனவே வயதாகிறது என்ன செய்ய முடியும். என்று வாளாவிருக்கக்கூடாது. ஏனெனில் இரத்தநாளத் தடை (ஸ்ரோக் -Stroke) இதய நோய், சிறுநீரகப் பழுது போன்ற கேடான
அறிவு

சிக்கல்கெளுக்கெல்லாம் இரத்த அழுத்தம்தான் முதல் படியாக இருக்கிறது. -
இருந்த போதிலும், வயது சென்ற மனிதர் தம்முடைய இரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்துகிறார் அல்லது குறைக்கின்றார் என்பதில் அதிக எச்சரிக்கை தேவை. ஒரு மனிதர் 65 வயதை எட்டுகையில் மூளை, இதயம், சிறுநீரகம், போன்ற உடலின் உயர்நிலையான உறுப்புகளுக்கு வழங்கப்படும் இரத்த அளவு இளமை ஆண்டுகளில் நடைபெற்றதைப் போன்றிராது. ஆனால் கொஞ்சம் உயர்ந்திருக்கும் இரத்த அழுத்தம். இவ்வுறுப்புகளுக்கு ஓரளவு இரத்தத்தை அடித்து வழங்கும் இதனால் அவற்றின் இயக் கம் நன்றாகவே இருக் குமாறு வைத்துக்கொள்ளும். இதற்கு மாறாக இரத்த அழுத்தக்குறைவு போதுமான இரத்தத்தை வழங்குவதற்கு வழிசெய்யாது.
உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உங்கள் மருத்துவர் அழுத்தம் வெகுவாகக் குறைவதைத் தவிர்க்க முயற்சிகள் எடுப்பார். ஆனால் அதேவேளையில், ஸ்ரோக், இதயநோய் அல்லது சிறுநீரகப் பழுது போன்வற்றிலிருந்து தக்க பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் முயலுவார். இவற்றிற்கான மருந்துகள் கிடைக்கின்றன. அவள் உயர் இரத்த அழுத்தத்தைப் படிப்படியாகக் குறைத்து உங்களது உடம்பில் நிகழும் மாற்றங்களைக் கவனித்து வருவார். அதன்பின் எந்த அளவில் குறைந்து இருக்கலாம் என்று அறிவார்.
இதயம் தொடர்பான சிக்கல்கள் ஏதும் உண்டா?
இரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவு உயர்ந்திருப்பது இரத்த அழுத்த உயர்விற்குக் காரணமான பிற காரணிகளுடன் இன்னொரு அதிகப்படி காரணியாகிறது. இதனால் ஓர் இதயத்தாக்கு அல்லது மாரடைப்பு Coronary heart attack) வருவதற்கு வாய்ப்பு மிகவும் அதிகரிக்கிறது.
நோயாளியின் தேவைகளுக்கு ஏற்ப சரியான உடற்பயிற்சித் திட்டத்தைப் பின்பற்றுவது ஏற்ற ஒழுங்குபடுத்தப்பட்ட நல்லுணவு (கொலஸ் ரால் மிகுந்துள்ள நிலையில்) ஆகியவை மீதியுள்ள காரணிகளைக் குறிக்கும் நடைமுறைகளாகும். இதன் மூலம் இதயத்தாக்கைத் தள்ளிப்போடவும் தடுக்கவும் நீண்டநாள் முயன்றுவர வேண்டும். இதயத்தமனிகளில் நாள (தமனி) இறுக்கம் ஏற்பட்டவருக்கு ஒழுங்கான உடற்பயிற்சி இதயத்தின் சுவர்களிலேயே புதிய நுண்ணிய
2008 29 அறிவு

Page 18
இரத்தக் குழாய்கள் தோன்றி இரத்தம் வழங்குவதை அதிகம் ஊக்குவிக்கின்றது. இதனால், இதயத் தமனிக்கிளைகள் ஏதேனும் அடைபட்டாலும், புதிதாகத் தோன்றியவை மூலம் இரத்தம் கொண்டு செல்லப்பட்டு இதயத்திற்கு வழங்க வழியுண்டாகிறது. முதிய நோயாளிகளிடையே துயரங்கள் நிகழ்வது தவிர்க்கப்படுகிறது. இக்காரணத்தால் முதியோருக்கு இதயத்தாக்கு வந்தாலும் திடீர் இறப்புகள் குறைவாகவே நிகழ்கிறது. ஆனால் 40 அல்லது 50 வயதினரிடம் இம்மாதிரி திடீர் இறப்புகள் நிகழ்வது மிகுதியான உள்ளது.
இதயப்பழுது இதயத்தசை படிப்படியாக பலவீனமடைவதால் உண்டாகிறது. தொடர்ந்து அதிக வேலைச்சுமை மிகுவதால் இதயம் மேற்கொண்டு உடலின் பல்வேறு திக்குகளுக்கு வேண்டிய அளவில் இரத்தத்தை அடித்து அனுப்ப இயலாததாகிறது. மூச்சுத்திணறல், சோர்வு, கணுக்கால்களில் வீக்கம், பொதுவான உடல் பலவீனம், உதடுகளும் விரல் நகங்களும் நீல நிறமாக மாறுதல் போன்றவை இதன் அறிகுறிகளாக உள்ளன. மருத்துவர் ஏற்ற மருத்தும் அளித்து இதயத்தை பலப்படுத்துவார். உடல்நலம் தேறும். வாழ்நாளும் நீடிக்கும்.
நீரிழிவு
இரண்டு வகை நீரிழிவுகள் உள்ளன.
வகை 1 நீரிழிவு (இளையோர் நீரிழிவு வகை) குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது.
வகை 2 நீரிழிவு பெரியோர்களுக்கு வருவது)
இந்த இரண் டினிடையே, இரண் டாம் வகை நீரிழிவு முதியோர்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. நல்லகாலமாக இது முதல்வகை (இளையோர்) நீரிழிவைப் போல் கடுமையான வகையல்ல. பெரியவர்களுக்கு வரும் நீரிழிவை இன்சுலினைக் கொண்டோ அது இல்லாமலோ நார்ப்பொருள் மிகுந்த சர்க்கரை குறைந்த உணவுகளை உண்டுவருவதன் மூலம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும்,
நன்றி நல்வழி
2008 awa 30 மாமா அறிவு

இளைய தலைமுறையினருக்கு சுவாமி விவேகானந்தரினி அருளுரைகள்
எப்போதும் இல்லை' என்றோ, 'என்னால் முடியாது' என்றோ சொல்லாதே. நம்முடைய முயற்சிக்கு எப்போதும், துணை உண்டு. அதை இயல்பாக நீ பெறும்வரை உன் நெஞ்சில் உரம் குறைய வேண்டியதே இல்லை. -
உபநிடதங்கள் நம்முடைய மனவலிமையைப் பற்றித்தான் சொல்லுகின்றன. அதனால்தான் நான், எப்போதும் உபநிடதங்களிலிருந்தே மேற்கோள் காட்டிப் பேசுகிறேன். வேதம், வேதாந்தம் எல்லாமே நாம் வலிமை பெறும் வழியைத்தான் கற்றுக் கொடுக்கின்றன.
எப்போதுமே திருப்பிப் பாராதீர்கள். உங்கள் பார்வை முன்னோக்கியே இருக்கட்டும். எந்த சமயத்திலும் பயந்து ஓடாதீர்கள். திரும்பி எதிர்த்து நில்லுங்கள். உங்களைத் துரத்திவரும் சக்திகள் ஓடிவிடும். நன்மையை நாடிச்செல்லும் பாதை எப்போதும் உலகத்தில் கரடுமுரடானதாகவும் செங்குத்தாகவும் தான் இருக்கும். அதில் செல்வது எளிதல்ல. அதில் செல்லும்பலர் சறுக்கி விழுவது அதிசயமே இல்லை. ஒருசிலர் வெற்றி பெறுவதுதான் ஆச்சரியம். நல்ல பண்பாளராக உங்களை அமைத்துக்கொள்ளுங்கள். அதற்காக நூறு தடவை தடுக்கி விழுந்தாலும்
ரவாயில்லை.
நமது உடம்புக்குள் சக்திவாய்ந்த எஃகுச்சுருள் ஒன்று அடங்கி இருக்கிறது. ஆன்மீக உணர்வு அந்தச் சுருளை விரியச் செய்து சக்தியை வெளிப்படுத்துகிறது. அப்போது அவன் சக்தி வாய்ந்த மனிதனாகிறான். அப்படிப்பட்ட மனிதனால் சமுதாயமே முன்னேறுகிறது.
ஏழைகள், அப்பாவிகள் அவர்கள் முரட்டுத்தனத்தை அறியாதவர்கள் அதனால் தான் சொல்லுகிறேன். ஒரு ஏழைக் குடும்பத்தையாவது முன்னேறச் செய்வது ஒவ்வொரு இளைஞனின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அவர்களை முன்னுக்குக் கொண்டுவருவது சுலபம். அதுவே இறைவனுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த சேவை.
என்னுடைய நம்பிக்கை நவீனமான, எதிர்காலத்துக்குரிய இளைய தலைமுறையினரிடம்தான் இருக்கிறது. அவர்கள் தமது இன்னுயிரைக் கொடுத்தாவது ஆன்ம சக்தி பெறுவார்கள். பிறந்த பொன்னாட்டின் வளர்சியையே தமது முன்னேற்றமாக நினைப்பார்கள். உலகம் ஒருநாள் அவர்களுடைய முயற்சியால் முழு முன்னேற்றம் அடையும்.
சுவாமி விவேகானந்தர்.
2008 31
அறிவு

Page 19
நினைவில் நிற்பவை
தாமரைத்தீவானின் சுயசரிதைத்தொடர்
3. கண்டற்காடு :- 1. நாலாறு = உப்பாற்றுத் துறையால் வரும் ஆறு மூன்றாய்ப் பிரிந்து பூவரசந்தீவுவரை (ஈச்சந்தீவைக்கடந்து) ஒன்றுசெல்லும் பால்துறை . கொய்யாம்புளித்துறைமூலம் ஒன்றுசெல்லும், சிறயால் ஓடைதாண்டி பொன்னாவரங் குடா வெல்லந்தாங்கி தாண்டி ஒன்றுசெல்லும். அதை நாலாற்றுப்பிரிவு என்பர். கச்சான் காலம் அலை அடிக்கும். அருகில் களப்பிருக்கும். குல்லா (சிறுவள்ளம்) வில்செல்வோர்களப்பில் இறங்கிக் குல்லாவை இழுத்துச் செல்வர். குல்லாவில் கண்டற்காடு செல்லும் ஈச்சந்தீவார் நீர்போய் வரும் நாலாற்றுப் பிரிவைச் சந்திக்காமல் செல்ல முடியாது. சுற்றி நடந்து செல்ல வேண்டிவரலாம்.
2. களப்பு மட்டக்களப்பல்ல சரிவான களப்பு. களப்பில் இறங்கிக்குல்லாவை இழுத்துச் சவளைக்குத்திவிட்டு எட்டியவரை மெதுவாய்க் கால் வைத்து நண்டு (மெதுக்கால்) திருக்கை, கல்வெட்டி, உழுவை, கருவண்டன், மட்டி, கவாட்டி என்பன பார்த்து முடிந்தால் பிடித்துப் பையில் இட்டு மீண்டும் ஏறி வலித்துச் செல்வதுண்டு. இப்படி வற்றுநேரம் ஆறேழு களப்புகள் தெரிபடும். கிழவி ஒடையில் குல்லாவை வெட்கண்ணா மரத்தில் சங்கிலி இட்டுப்பூட்டி சவளை ஈச்சம் பற்றையுள் மறைத்துவிட்டு வரம்புகளால் தூக்குடன் நடைபோட்டுக் கண்டற்காட்டு ஊர்த்திடல்மால் அடைந்தால் வயல் - பயிர் வேலையுமாச்சு, கறிப்பாடுமாச்சு. அம்மா F60)L(UIT. மற்றையோர் வேலையில் ஈடுபடுவர். காற்றில்லா வேளை இரவில் வெல்லஞ்சூள் (நார் உரித்த கம்பு) தென்னம் பாளைச்சூள் (கிழித்து) தென்னோலைச்சூள், முதிரஞ்சிராய்ச்சட்டிச்சூள் (முள்ளம்பெறிதல்) பெற்றோல்மெக்ஸ், மின்சூள் (லைற்) என்பனவற்றில் பொருத்தமானது தொண்டு களப்பிலிறங்கி மீன் - நண்டு - இறால் பார்த்துப் பிடிப்பதுமுண்டு சைவம் பாராமல் வயிற்றைப் பார்ப்பதாகவே சிற்றுார் மக்கள் வாழ்வ அமைந்து விடுகின்றது. நகரமக்கள் வாழ்வுந்தான் என்னவாம்? காளிக்காப்ட கந்தசட்டி நவராத்திரிகள் முடிந்தால் ஒருசிலர் தவிர மச்சம்
மாமிசம் - வெந்த சட்டிகள் தானே? இதென்ன வகையான சைவமோ, அறியோம் பராபரமே?
3. குல்லா = மாமரத்தில் மருது (மதுரை) மரத்தில் - காட்டாமணக்கு மரத்தில் சிறுகுல்லாவைக் குடைந்து (இருவர் - மூவர்- நால்வர் ஏறக்கூடிய) வள்ளம், தோணி (தலையிடும் தொப்பியும் குல்லா எனப்படும்) இரண்டு
2008 32 • . . . . . .3 அறிவு
 

வlசாள் கம்பில் பிள்ளைக் குல்லாவும் கட்டி அரிசி, தேங்காய், சாமான்பையுடன் ஈச்சந்தீவிலிருந்து கண்டற்காடு செல்வது வழக்கம். குல்லா இல்லாதோர் நடைமூலம் கொய்யாம்புளி துறைமூலம் சென்றுமீள்வர். அறுவடையின்பின் வண்டிலால் நெல்லும் வரும். சிலவேளை பெரிய வள்ளம் தேடிப்பிடித்து ஏற்றிவரலும் உண்டு. குல் லாதொலைதுாரத்தைச் சுருக்குவதுடன் பலபயன்களையும் தரவல்லது.
4. ஊர்த்திடல் - ஒருகாலம் பெரும் ஊராயிருந்த திடல் ஆதலால், இப்பெயர்பெற்றுள்ளது. வயலெல்லாம் மூடிய 57ன் வெள்ளம் கூடத்திடலை மூடவில்லை. திடல் பார்த்து வயல் எடுத்த அப்பரைப் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் இப்போதுதான் எதும் இல்லையே? யாரைப்பிழை சொல்லலாம்? மக்களையா - காலச்சூழ்நிலையையா? இறையிலார் புவியில் முழித்திருக்க முழிதோண்டுபவர்களை முறியடிக்க என்னதான் வழியோ? விழிப்புணர்வா - ஒற்றுமையா? ஊர்த்திடல் முழுவதும் ஈழத்தின் ஆச்சரியச் செடிக்கொடியான சிங்கிலிக்காடுகள், சிங்கிலிக்காடெல்லாம் தும்பக்காடு. காய்கள் சுவைக்கறியல்லவா? கொப்பெல்லாம் தூக்கணங்கூடுகளின் கச்சான் ஆட்டம். பயிருக்கேற்ற திடல், திடலுக்கேற்ற பயிர். மாரியில் கண்கொள்ளாக் காட்சியே. பயிர்தின்னப் பன்றி வரும் முட்பன்றி (எய்ப்பன்றி) வரும். பாழி கிண்ட அழுங்குவரும். முயல்வரும். எலிவரும். கிளிவரும். அணில் வரும். வெளவால் வரும். இரவும் பகலும் காவல்தான், காத்தெடுத்தால் பயன்தான். மெய்வருத்தக்கூலிதரும். முயற்றின்மை இன்மைபுகுத்திவிடும். (619-616) வள்ளுவரும் ஊர்த்திடலுக்கு வந்து போனாரோ? ஊர்த்திடல் இருக்கையில் 'இலமென்று அசை, இருப்பாரைக்காணின் நிலமென்னும் நல்லாள் நகும் (1040)’ எனச் சொல்லி ஊக்கமூட்டியதுடன், குல்லாக்கட்டில் செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து இல்லாளின் ஊடிவிடும் (1039) என்றும் சொல்லியல்லவா? உசார்படுத்தியுள்ளார். எவ்வளவு பயிர்ச்செய்கைபட்டறிவு? செய்துதிறன் திடல் எங்கே? (போனகமென்பது தானுழுந்துண்டல்) இன்று எதிரியிடம் வாங்கித்தின்னும் அகதிகள் எங்கே?
5. கோயில் - ஆரியத் தமிழர் வாழ்விடமெல்லாம் ஆலயங்கட்கும், தெய்வங்கட்கும் குறை ஏது? திராவிடரைச் சுரண்டி வாழவந்தவன் தானே ஆரியன்? அதனால்தானே சிறு தெய்வவழிபாடுகள். கண்டற்காட்டிலும் இரு கோயில் கள் வணி னான் வயலருகல் ஆத்தி மரநிழலில் பிள்ளையார் கோயில் ஊர்க்குளத்தருகில் நறுவிலி மரநிழலில் அம்மாள்கோயில் அறுவடையின் பின் இரண்டிலும் பொங்கல் பூசைகள் நடக்கும். (அப்பரும் செய்வார்) இஸ்லாமியரும் வருவர். இன்று இரண்டு மில்லை. வயலுமில்லை. இரண்டிற்கும் பாடல்கள் (1952) உண்டு. மக்கள் இருந்தால் தானே தெய்வமிருக்கும். தெய்வங்களைப் படைத்தவனே மனிதன் தானே? அவன் குடியெழும்பினால் தெய்வம் ஏது?
2008 33
அறிவு

Page 20
மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர். (அழகளார்-மறைமலையே , பெரியார்-ஈ.வே.ரா.வே, பாவேந்தர் பாரதிதாசனே, பாவாணர், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரே)
நெல்லை சங்கரநயினார் கோவிலில் தி.பி.1933 சுறவம், 2607.02.1902) வெள்ளி கணக்காயர் ஞானமுத்து - பரிபூரணம் அம்மையார் மகனாகப்பிறந்தார். (தமையன் 3-தமக்கை 2) 6ம் வயதில் தந்தையை இழந்தார். தமக்கை வீட்டில் வளர்ந்தார். பாளையங் கோட்டையில் கல்வி கற்றார். 1924ல் 22ம் அகவையில் ம.த.ச.பண்டிதர் ஆனார். பின் வித்துவான். புலவர் ஆனார். 1942ல் B.O.L. பண்டிதர் பட்டம் பெற்றார். 1944ல் செ.ப. கழகக் கலைமுதுவர் (M.A) பட்டம் பெற்றார். 1934ல் இயற்றமிழ் இலக்கணம் நூல் யாத்தார். (4-5-6) திருச்சிப் புத்துார் உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் ஆனார். 1937ல் செந்தமிழ்க்காஞ்சிப் பாடநூல் யாத்தார் இந்தியை எதிர்த்தார். வேர்ச்சொல் ஆய்வில் ர்டுபட்டார். ஆங்கில கிரேக்க -லத்தின் அகரமுதலிகள் ஆய்ந்தார். கால்ட்டுவெல் - குண்டர்ட்-எக்கேல் கருத்தால் ஆய்வாளரானார். 1938ல் கீற்றின் நூல் I கற்றார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் நெறிமுறைக் கட்டுரை செல்லரிப்பானது.
மொழி நூல் உண்மைகளை குமரிவரலாறு- உலக தென்மொழி என எழுதினார். ஒப்பியன் மொழிநூல் பின்னர் திராவிடத்தாய் எழுதினார். (பொருள் உதவி இல்லை) செந்தமிழ்ச் செல்வி- தமிழ்ப் பொழிலில் கட்டுரை தீட்டினார். 22 ஆண்டு கண்ணன் உயர் நிலைப்பள்ளிப்பணி 1944ல் சேலம் கல்லூரிப் பணி (2 ஆண்டு) சொல் ஆய்வுக்கட்டுரை -உயர்கட்டுரை இலக்கணம் II பழந்தமிழ் ஆட்சி- முதல் தாய் மொழி 11 தமிழ் நாட்டு விளையாட்டு - தமிழர் திருமணம் - இசைப்பாடல்கள் எழுதினார். 1949ல் மறைமலையார் தொடர்பு (Further Services) சான்றிதழ் நேசம் = நேயம் / கவி = பா) எசுதர் (Esther) திருமணம் பிள்ளை - மணவாளதாசன். மனை மறைய= நேசமணி அம்மையார். (4M.w) (நச்சினார்க்கினிய நம்பி - சிலுவையை வென்ற செல்வராயன் - அருங்கலை வல்லான்-அடியார்க்கு நல்லான்-மடம் தவிர்ந்த மங்கையர் கரசி -மணி மன்றவாணன்) 1929ல் அ.பல்.கழகம் 1956ல் திராவிட மொழி ஆய்வில் சொற்பிறப்பியல் அகரமுதலிஇந்தியநாகரிகம் சமக்கிருத இலக்கியத்தில் ஆரியரதே சட்டர்சி / பாவாணர் மறுப்பு (த.வெறிநேயர்) கருத்து மோதல். சார்க என்றனர். மீட்பதே என்பணி என்றார். பகைவளர்ந்தது. நீக்க ஒலை வந்தது. 1961ல் விலகினார். இழப்பு என்றனர். " மானமும் உண்டு என்றார். 1963ல் துணைவி இழப்பு துயர்-வடக்கிருக்க - வீணையால்? (இந்தி-சமற்கிருதம்-கிரேக்கம்-லத்தின்2008 34 அறிவு

உருது-எபிரேயம்-சப் தெரிந்தவர்) பணிமுடக்கம் 1959ல் நின்ற தென்மொழிமீள் வருகை வாணர் கருத்துடன். (பெருஞ்சித்திரன்) நிதி திரட்டி 221 வானரிடம்.
1965ல் இந்தி எதிர்ப்பு (வறுமையில்) 1966ல் இசைத்தமிழ்க் கலம்பகம் 1 1966ல் ஆங்கில மாக்ஸ் முல்லர் மறுப்பு நூல் 1967ல் நிதி திரட்டி (4000/=) தமிழ் வரலாறு 1967ல் வடமொழி வரலாறு. 1966ல் கோலாலம்பூர் உத.மா.ல. வாணர்க்கு அழைப்பில்லை. 1967ல் அண்ணா ஆட்சி. 1968ல் சென்னை 11 ம் உத.மா.ல் வாணர்க்கு அழைப்பில்லை. விழாவில் அண்ணா பொன்னாடை போர்த்தார். 1968ல் மொழிநூல் வழுவியல் 1968ல் திருச்சி உத.கழகம் வாணர் தலைமையில் 1969 ல் பெரியார் தென்மொழிக்கல்லூரி நிறுவல் பிழை 1969ல் தமிழ் கடனால் தழைக்குமா? நூல் உ.த.க.மாநாட்டில் திருக்குறள். த.மஉரை IV (2000/= கையில்) 1971ல் 11ம் மாநாடு மதுரையில் பேரகரமுதலித்திட்டம் நிதி 10/= படி 2000 உறுப்பினர். 1971ல் பறம்பு பாரி விழாவில் 'செஞ்ஞாயிறு பட்டம் 1972ல் மணிவிழா. 1978ல் தமிழர் வரலாறு 11 1972ல் சிங்கை அன்பர் நிதியில் தமிழர் மதம்-தமிழியக்கம் -வேர்ச் சொல் கட்டுரை (கழகவெளியீடு) திருவாரூர் வி.க.விழாவில் வாணர் சிறப்பு. 1974ல் அகரமுதலி இயக்குநர். 1976ல் தி.மு.க.அரசு நீக்கம் (உதவி இல்லை) 1978ல் வள்ளுவர் கூட்டுடைமை 1979ல் சென்னை உ.த.க.மாநாடு. (கழகம் 3 ஆனது ஆனது/140கிளை) 1979ல் கோ.கிட்ணர் நிதியில் தமிழ் இலக்கிய வரலாறு நூல்)
1980ல் வள்ளுவர் விழாவில் M.G.R. செந்தமிழ்ச் செல்வர்பட்டம். 1970ல் பரீசில் 1974ல் யாழில் வாணர்க்கு அழைப்பில்லை 1981ல் மதுரை மாநாட்டில் மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் பேச்சு- மணி - உணர்ச்சி- மாரடைப்பு (79 அகவை) 15.08.1981ல் மறைவு 1984ல் அகரம்-ஆசை மொழி. முதலி நூல் (3 மடலங்களில்) மீதி முடியவில்லை. தமிழ்ச்சிறப்பு = 16 தொண்மை - முன்மை ஒண்மை - எண்மை - இளமை- வளமை-தாய்மை - தூய்மைசெம்மை மும். மும்மை - இனிமை - தனிமை - பெருமை - திருமை - இயன்மை - வியன்மை / முன்னேற - 13 1. ஆங்கிலம் 2. தனித்தமிழ் 3. ஆய்வார் போற்றல் (கல்வி - நுட்பம் - நடுமை - அஞ்சாமை - தன்னலமின்மை - மெய்யறியவா) 4. தமிழ்ப்பகை நீக்கல் 5. கட்டாயக் கல்வி 6. தொழில் மதிப்பு 7. குலப்பட்ட நீக்கல் 8. மக்கள் தொகை குறைப்பு 9. முன் - பின் நோக்கு 10. தமிழர் - அல்லார் பிரிப்பு 1. பரிசுச்சீட்டு நிறுத்தம் 12. பொறுப்பாட்சி 13. மாணவர் elgélus,SoC&spITGOLD (Gipso D(OILANDTUTHGETUPPERMOSTATLAST) நாட்டாதாரம் = 7 தொல்பொருள் - இலக்கியம் - செவிச்செய்தி - பழக்கவழக்கம் - மொழிச்சான்று - கடல் சான்று-நிலச்சான்று (தமிழயரத்தானயர்ந்தான் தமிழன், அவனே / தமிழுயரத் தானுயர்வான் தான்) (பெருமையெனப் புன் செருக்கில் பிரிந்து வாழ்ந்து - பிறருக்கொன்றியாத புல்லரேனும், எருமையொடு குரங்கரவம் தவளைதின்பார் - இரப்பெடுப்பார் தீய தொழு நோயரேனும், கருமைமிகும்
2008
35 அறிவு

Page 21
ஆபிரிக்கர் முண்டமெய்யர் - காடுறையும் விலங்காண்டி மாந்தரேனும், அருமையுறும் தனித்தமிழை விரும்புவாரேல் - அவரன்றோ தலையாய 5 (Sphase00TLeft)
LII6)III600ISOIÚ LisbsÓl :- 1. தமிழ் நூல்கள் தமிழரால் கற்று உணரப்பட்டு தமிழ்நெறியில் தமிழர் நின்று வென்றிட வேண்டும் என்பதில் தளராத விருப்புள்ளோர்க் கெல்லாம் பாவாணர் புலமை நம்பிக்கை தருகிறது - (eigjlgift 96oor 6oorn) 2. பாவாணர் தமிழின உயர்வு உணர்ந்தவர் - பற்றுள்ளவர். மொழி நூல்
கற்றவள் மட்டுமல்ல - கற்பிப்பவர். இயற்றுபவர் மட்டுமல்ல -
ஆக்கும் அறிஞர் - (கா அப்பாத்துரை) 3. வாணர் வெட்ட வெட்டக்கிடைக்கும் தங்கச்சுரங்கம். செய்திறன்- உறுதி
வினையாண்மை கொண்டவர். அவர் என்போல் ஆசிரியனுக்கும். ஆய்வார்க்கும் வழிகாட்டி - (மா அரச மாணிக்கம்) 4. மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் ஒர் ஊழி அறிஞர் - தனித்தமிழ் ஊற்று - இலக்கணச் செம்மல் - இலக்கியப்பெட்டகம் - தமிழ் மானம் காத்தவர் - (கா. காளிமுத்து) 5. காப்பியர் - வள்ளுவரின் பின் இருள் அகற்றிய கதிர் - செம்புலச் செம்மல் -
தீந்தமிழ்ப் பேரொளிக் கோளம் - (பெருஞ்சித்திரனார்) 6. பாவாணர் பாவலர் - நாவலர் இலக்கிய இலக்கண வித்தகள். நுண்மாண்
நுழைபுல எழிலர் - (இரா இளங்குமரன்) 7. பிறமானிலங்களில் தமிழர் ஏதிலிகள். பிறர் இங்கேகொட்டம் -
(பழநெடுமாறன்) கி.பி 8ம் நூற்றாண்டில் வந்த மகமதியர் தனிநாடு கண்டுளர். நூறாயிரத்தின் முன் தோன்றிய தமிழர்க்கு இல்லை. கரணியம், அவரின் ஒற்றுமை. மறம். மானம் இற்றைத்தமிழர்க்கு இல்லை. 1929ல் சீனிவாச HISTORY OF TAMILS ஐயங்கார் : எழுதியது ஆங்கிலம் ஆதாரமும் குறைவு அதனால் தமிழர் வரலாறு எழுதினேன் - (பாவாணர்) (உணர்வொலி. 2. விழியொலி, 3. ஒப்பொலி, 4. குறிப்பொலி, 5. வாய்ச்செய்கை ஒலி. 6. குழவிவளர்ப்பொலி, 7. சுட்டொலி) (கற்காலம்=500000-50000/பழங்கற்காலம்=500000-100000/புதுக்கற்காலம்= (10000-50000/Gurpassigo b = 50000-30000 / 6s, basassigol b = 30000 - 15000 / உறைக் (வெண்கல) காலம் = 15000 - 10000/இரும்புக்காலம் = 10000 கி.மு.) (1ம் கடற்கோள் கி.மு. 5000/ 2ம் கடற்கோள் - கி.மு. 2500 (1200 கல்) (இராமாணய காலம் = 13000 - 12000/மகாபாரதகாலம் = 11000 - 10000) (கி.மு. 15OO ஆரியர் வருகை/ பாவாணர் நூல்கள் படிப்போம்)
தாமரைத் தீவான்'
2008
36 அறிவு

விரதங்களின் மகத்துவம்
(21 - 12 - 77 இல் சிவயோக சமாஜமண்டபத்தில் நடைபெற்ற ருநீவைகுண்ட ஏகாதசியின் போது அருள்மிகு சுவாமிஜி அவர்கள் வழங்கிய அருளுரை)
எங்களுக்குப் பார்வைக்கென இரண்டு கண்கள் இருக்கின்றன. இரண்டு கண்களும் வேறுபடாமல் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே எங்களால் பார்க்க முடிகிறது. அதே போன்று எங்களுடைய வாழ்க்கை பூரணத்துவம் அடைய இரண்டு மார்க்கங்கள் வாழ்க்கைத் தர்டத்திற்கு அடிப்படைத் தேவைகளாக இருக்கின்றன.
ஒன்று பிரயஸ் ; மற்றது சிரேயஸ். பிரேயஸ் உலகியல் சுகங்களோடு சம்பந்தப்பட்ட வாழ்க்கை. சிரேயஸ், உயிரின் தொன்று தொட்டு இருந்து வரும் பாவங்கள்-கஷ்டங்கள். தீவினைகள் இவற்றை நீக்கும் முறை. லெளகீக வாழ்க்கையில் ஆத்மீக வாழ்க்கையும் அவசியமானது.
மனம், சரீரம் இவற்றை சுகமாக வைத்திருக்க பிரேயஸ் அவசியமானது போன்று, ஆத்மாவின் விடுதலைக்கு - சுதந்திரத்திற்கு - ஜீவன் இனிப் பிறவி எடுக்காத நிலைக்கு ஆத்ம பயிற்சிகள் முக்கியமானவை. யோகம், தபசு போன்ற உள்முகப்பயிற்சிகள் உங்களைப் போன்றவர்களுக்குக் கடினமானவை.
சாதாரணமா இன்றைய காலகட்டத்தில் மனத்தை ஒரு முகப்படுத்துவதற்கு சந்தர்ப்பங்கள் இல்லை. அத்துடன் மனஸ்திரமும் இல்லை. ஆகையினால்தான் விரதம் போன்ற மார்க்கங்கள் அனுஷ்டிக்க வேண்டி இருக்கிறது.
நிலையில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஒன்றை மேல் நிலைக்கு உயர்த்தி, ஸ்திரப்படுத்துகின்ற எளிமையான நிலைதான் இந்த விரதமாகும். இத்தகைய விரதம், இம்மையிலும் மறுமையிலும் சுகத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு தவ வாழ்க்கையாகவே இருக்க வேண்டும்.

Page 22
விரதத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று பிரேயஸைக் தொடுக்கும் மார்க்கம் : இரண்டாவது சிரேயஸைக் கொடுக்கும் மார்க்கம். பிரேயஸ்-காரிய லாபத்திற்காக அனுஷ்டிப்பது. சிரேயஸ்- ஆத்ம லாபத்திற்காக அனுஷ்டிப்பது.
கெளரி விரதம், சோமவாரம் மற்றுள்ள விரதங்கள் பிரேயஸைக் குறிக்கும். வைகுண்ட ஏகாதசி-மகா சிவராத்திரி ஆகிய இரண்டு விரதங்களும் சிரேயஸைக் குறிப்பன. ஆகையால் இந்த இரு விரதங்களையும் மகா விரதங்கள் என்று கூறப்படுகின்றன. ஒன்று உலக இன் பங்களுக்காகவும், மற்றையது ஆத்மலாபத்திற்காகவும் அனுஷ்டிக்கப்படுகின்றன.
வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி இவை உபவாசத்துடன் கூடிய விரதம். அன்றைய தினம் காகம், பூனை, நாய், பிச்சைக்காரன் இவர்களுக்குக்கூட சாதம் கொடுத்தால் பாவம் என சித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு உபவாசத்தின் புனிதத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள், வயோதிபர் ஒரு வேளை உண்டு அனுஷ்டிக்க வேண்டும். இவர்கள் உபவாசமிருந்து அனுஷ்டித்தால் பாவமாகும். விரதத்தை அனுஷ்டிக்கும் பொழுது மனம், புத்தி, சரீரம் மாயாமயக்கத்திலிருந்து தெளிவடைய வேண்டும். இந்த பிரத்திகூடிமான அனுபவம் இல்லை என்றால், எத்தனை வருடங்கள் தொடர்ந்து விரதங்களை அனுஷ்டித்தாலும் அதனால் பலன் ஏற்படப் போவதில்லை.
ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் : இருபத்தேழு நட்சத்திரங்கள்: முப்பது திதிகள் வருகின்றன. இவற்றுடன் Universe - God - Man அதாவது பிரபஞ்சம் - இறைவன் - உயிர் இவை மூன்றிற்கும் இடையே தொடர்புண்டு. பசுவிலிருந்து பாலினை அதன் முலையிலிருந்து எந்த நேரத்தில் கறந்தெடுத்தாலும் வருவதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் பசுவின் முலைக்காம்பிலிருந்து பால் சுரந்து வரும் பொழுதான் பாலைப் பெறமுடியும்.
2008
38 அறிவு

அதேபோன்று இந்தப் பிரபஞ்சத்தில் தெய்வ சக்தி சுரந்து வரும் விஷேச நேரத்தில், அதனைப் பிழிந்து எடுத்தால் நிச்சயமாக இறையருளைப் பெறலாம். இதற்கான சந்தர்ப்பம் வருடத்தில் இரண்டு முறைகள் மட்டுமே கிடைக்கின்றன. ஒன்று மகா சிவராத்திரி - மற்றது வைகுண்ட ஏகாதசி.
அதிகாலை மூன்று மணியிலிருந்து நான்கு மணிவரையிலான பிரம்ம முகூர்த்த வேளையில் இறைசக்தி கூடுதலாகப் பொழியும் அந்நேரத்தில் சுரந்துவரும் துளிகளை, தியானம்-ஜெபம்-பிரார்த்தனை போன்ற அப்பியாசங்களால் பெற்ற, இருதயத்தில் உள் வாங்கிக் கொண்டால், எத்தகைய பாவியானாலும் விமோசனம் அடைந்து இறையருள் கிடைக்கும் என்ற சாஸ்திரங்கள் கூறுகின்றன. சுசுக்தி என்ற அவஸ்தையும் அதனால் ஏற்படும்.
இந்த அப்பியாசங்களில் லிகித ஜெபமும் ஒன்று. நாமத்தை லிகித ஜெபமாக எழுதும் பொழுது, அந்த எழுத்தும், அதன் பொருளும் எழுதிக் கொண்டிருப்பவனுடன் சம்பந்தப்படும் பொழுது தான் அதன் பலனை அடையலாம். ஜெபமும் இதே முறையில்தான் அமைய வேண்டும்.
முறையான விரதம் யாருக்குப் பலன் கொடுக்கும் யாருக்குப் பலன் கொடுக்காது என்று இருக்கின்றது.
சிலமும் நோன்பும் இல்லாதவர்க்கிந்தது காலம் கடந்த பயிரது ஆகுமே.
வெள்ளாமை இருக்கிறது. சரியான காலத்துக்கு நெல் விதைக்காவிட்டால் பலன் தராது. மற்றுள்ள பயிர்களும் அத்தகையதே அதுபோன்று இந்த ஆத்ம பயிற்சிகளுக்கும் சீலமும் நோன்பும் தேவை.
சீலம் என்பது நல்ல குணம் - நல்ல சுபாவம். யோகம்- ஞானம் இவற்றின் நோக்கமே நல்ல குணம்தான். ஆத்ம பயிற்சிகளின் ஏழுபடிகளும் நல்ல சுபாவமாக மாற்றப்படுகிறது. நல்ல குணம் இல்லாவிடில் என்ன அப்பியாசங்களைச் செய்தாலும் நீரில் கிழித்த கோடு போல் பலனளிக்காது.
நல்ல குணமுடையவர்களுக்கும், கெட்ட புத்திரனுக்கும் தனம் தேவையில்லை என்றொரு பழமொழி இருக்கின்றது. எல்லாச் செல்வத்தையும் விட நல்ல குணம் மேலானது. சாக்கடை நீரில் சூரிய விம்பம் தெரிவது கஷ்டம். இதே போன்று கறள் பிடித்த இரும்பைக் காந்தம்
2008
39 956

Page 23
ஒரு பொழுதும் கவர்ந்து இழுக்காது. இரும்பு கறள் நீக்கி இருக்கவேண்டும்.
மனமும் இதேபோன்று பரிசுத்தமாக இருக்கவேண்டும். கருடன் பாம்பைக் கொத்துவது போல் பரிசுத்தமான இதயத்தை இலகுவாக இறைசக்தி பற்றிக் கொள்ளும். மனதில் எப்பொழுது சுபாவ தோஷமாகிய கறள் படிகிறதோ, அப்பொழுது மாயை உண்டாகிறது.
ஒருவனுக்கு நல்ல சுபாவம் மட்டும் இருந்தால் போதாது. அது பாம்புப் புற்றில் இருக்கும் தேன் போன்றுதான் இருக்கும். அதனைப் பிரயோசனப்படுத்தி, நமக்கும் மற்றைய இறை சிருஷ்டிகளுக்கும் பயன்படுத்தும் பொழுதுதான் அதனால் பலன் உண்டாகிறது.
ஜெபம், தியானம் போன்ற மார்க்கங்களைக் கடைப்பிடிக்குமுன் எங்களுடைய சுபாவங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். உள்ளங்கை நெல்லிக்கனி என்பது போன்று - அதாவது உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனியை தெளிவாக பார்க்கக்கூடியது போன்று அதனுடைய பலன் கண்கூடர்கத் தெரியும்.
ஆத்ம பயிற்சிகளில் தியானம் ஆறாம் இடத்தில் இருக்கின்றது. சுபாவ சுத்தியில்லாத பயிற்சிகளெல்லாம். சேற்றில் இருக்கும் அட்டையை எடுத்து பாலில் கழுவி பஞ்சணை மெத்தையில் படுக்க வைத்தாலும், அது திரும்ப சேற்றை நாடுவது போலாகிவிடும்.
இந்தக் காலத்தில் கூடுதலான ஜனங்கள் ஆலயத்துக்குச் சென்று வருகிறார்கள். ஆனால் அவர்கள் பலனடைகிறார்களா என்பது தான் இல்லை. இதயசுத்தி இல்லாமைதான் காரணமாகும். ஆகையால் இத்தகைய விரத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கு எங்களிடம் உள்ள சுபாவ தோஷங்களை நீக்கி நல்ல சுபாவங்களை வளர்த்து வரவேண்டும். அப்பொழுது மாத்திரம்தான் இந்த விரதங்களுடைய பூரண பலனை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
நாம் செய்யும் செயல்களில் பாவமோ, புண்ைணியமோ ஒல்லை. அவைகள் தெய்வீக சக்தியின் எளிய செயல்களே. நாம் நமது அஞ்ஞானத்தினால் ஒரு யெரிட்டு அவதிப்படுகிறோம்.
—ðanu) pitognað
2008 ggs 40 அறிவு

ஓம் ஹீ ராம் ஜெயராம் ஜெய்ஜெய்ராம்
சற்குரு நீ örlams pningnbif.
ழரீ சுவாமி ராமதாஸ் அவர்கள 1884ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி, ஒரு பூரணை தினத்தன்று, வையகமெங்கும் பூரி ராம பிரானின் அதிசிறந்த பக்தனான பூரீ ஹனுமார் ஜெயந்தியை அனுஷ்டித்து கொண்டிருக்கும் வேளையில் தென் இந்தியாவின் வடக்கு கேரளாவின் காஞ்சன்
காட்டிலுள்ள கொஸ்டாக் என்ற கிராமத்தில் பூரீமதி லலிதாபாய் அவர்கட்கும் றி பால கிருஷ்ணராவ் அவர்களுக்கும் விட்டலராவ் என்ற பெயருடன் அவதரித்தார். அந்த நேரத்தில் தோன்றிய மகிழ்ச்சிகரமான அறிகுறிகள் அந்த குழந்தை எதிர்காலத்தில் உலகம் போற்றும் ஒரு மகானாவான் என்பதை காட்டி நிற்க அப்பாலகனின் கண்களில் வீசிய பிரகாசத்தை கண்டு கூடியிருந்தவர்கள் அதிசயித்தார்கள்.
விட்டலராவ் சிறு பிராயத்தில் பாடசாலை கல்வியில் குறிபிடத்தக்களவு ஆர்வம் காட்டாததனால் அவரது ஆசிரியர்களது கடும் கோபத்துக்காளானார். பாடசாலைக்கும் அடிக்கடி மட்டம் போட்டார். அவர் உயர் கல்வியையும் அவ்வளவு ஈடுபாட்டுடன் கற்கவில்லை. பாட நுால்களைவிட பொது விடயங்களையே அக்கறையுடன் கற்றார். அவருக்கு இலக்கியங்களிலுள்ள நாட்டம் அவரை ஆங்கிலத்தில் பாண்டித்தியம் உள்ளவராக்கியது. இளவயதிலேயே அவரது புத்திக்கூர்மை வியக்க வைத்தது. அவரது குடும்பத்துக்கேயுரிய முறையில் அவரது சாமாத்தியமும் நகைச்சுவை உணர்வும் அவரது சம்பாஷணைகளை கேட்போர்களை கவர்ந்தது. எதிர்பார்த்தபடியே அவரால் பாடசாலைக் கல்வியை மேலே தொடர முடியாமல் போக கலைக்கல்லூரியில் சேர்ந்து ஓவியம் பயின்றபின் பம்பாய் விக்டோரியா யுபிலி தொழில்நுட்ப நிறுவனத்தில் புடவை தொழிநுட்பத்தை பயின்றபின் விட்டலராவ் அதில் தகமை சான்றிதழிதனை பெற்று கும்பார்காலில் உள்ள புடவை தொழிற்சாலையில் தொழில் பார்த்த வேளையில் 1908ம் ஆண்டு ருக்மாபாயினை மணந்து 1913ல் ராமாபாய என்ற புத்திரியினையும் பெற்றெடுத்தார்.

Page 24
அதன் பின் 1917ல் மங்களுரில் அவரது மாமனாரின் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருக்கும்போது அவ்வியாபாரத்தின் தந்திரோபாயங்கள் விட்டலராவுக்கு ஒத்துவராதலால் சுயமாகவே புடவைகளுக்கு சாயமிட்டு அச்சிடும் தொழிலை ஆரம்பித்தார். விட்டலராவ் இயல்பாகவே எதிலும் அதிக நேர்மையினை கடைப்பிடித்ததனால் அதில் அதிகளவில் முன்னேற முடியவில்லை. ஆதலால் அவரது குடும்ப வாழ்வும் அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கவில்லை. அவரது வாழ்வில் தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்த காலத்தைவிட ஈடுபடாதிருந்த காலமே அதிகம் எனலாம். ஒருகாலத்தில் அவருக்கு கிடைத்த தொழிலில் அவர் நன்றாக நிலைபெறுவதற்கு முன்பாகவே அவர் செய்யாத தவறுக்காக வேலையிலிருந்தும் நீக்கப்பட்டார். இவ்வாறே இயல்பான குடும்ப சுகமும் மகிழ்ச்சியும் விட்டலராவுக்கு மறுக்கப்பட அவர் அதற்கு அப்பாற்பட்ட உணர்வின் மீதான தாகத்தினால் ஈர்க்கப்பட்டார்
புற உலக சூழ்நிலைகள் மெதுவாக அவரை ஆத்மார்த்த அமைதியினை தேடி நாடச் செய்தன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் விட்டலராவ் தனது சகோதரர் சீதாராம் ராவின் வீட்டில் நிகழும் பஜனைகளிலும் கலந்து கொல்வார். அப்போதெல்லாம் தன்னை மறந்த நிலையில் ஆத்மார்ந்த உணர்வில் லயித்துவிடுவார். இச்சந்தர்பத்தில் தான் அவர் பகவான் பூர் ராமபிரானின் நாமத்தை ஜெபிக்க ஆரம்பித்தார். அது அவருக்கு நிறைந்த மன அமைதியினையும் மகிழ்ச்சியினையும் அளித்தது. நாவில் எந்நேரமும் "ராம" நாமத்தை முணுமுணுத்தபடியே இருந்தார். வேலை செய்யும் போதும் நடக்கும் போதும் "ராம' நாமத்தையே ஜெபித்தார். இரவு உணவினை தவித்தார். அத்துடன் சிறு சிறு உடல் சுகங்களையும் தவித்தார். இவற்றை எல்லாம் அவதானித்த அவரது மனைவியார் மிகவும் பயந்தார். அவரது 10னைவியினதும் மகளதும் வேண்டுகோள்களாலும் எதிர்ப்புகளாலும் அவரை அவரது ஆன்மீக பாதையில் முன்னேறுவதில் நின்றும் தடுக்க முடியவில்லை. ஏனெனில் அறிவும் உணர்வும் உரிய வேளையில் ஏதோ ஒரு மகா சக்தியே அவரை அப்பாதையில் இட்டுச்செல்கிறது என்பதை உறுதியாக உணர்ந்தார். இந்த வேளையில் தான் அவரது தந்தையார் ஒரு நாள் அவரிடம் வந்து 'ழரீ ராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்' என்ற தாரக மந்திரத்னை உபதேசித்தார். அம் மந்திரத்தை தொடர்ச்சியாக உச்சரித்துவந்தால் இறைவனின் அருளையும் நிலையான ஆனந்தத்தையும் அடைய முடியுமென உறுதி உரைத்தார். இது திரு விட்டலராவின் வாழ்வின் ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது.
இதிலிருந்து அவரது ஆத்மீக பயணம் துரிதமடைந்தது. உலோகாதயத்திலிருந்து சிறிது சிறிதாக விடுபட ஆரம்பித்தார், ராம நாமம் அவரை முழுதாக ஆட்கொண்டு அவரை இறைவனிடம் பைத்தியமாக்கியது. அவரது உறவினரும் நண்பர்களும் அவர் ஆரோக்கியமற்றிருப்பதாக
2008
42 அறிவு

தப்புக்கணக்கு போட்டனர். ஆனால் விட்டலராவோ இரவும் பகலும் ராம நாமத்தையே ஜெபித்தார். துாக்கம் ஜெபத்திற்கு இடையூறு செய்யும், உணவு துாக்கத்தை அதிகரிக்கும் என்பதனால் உணவினையும் துர்க்கத்தையும் கூட தவிர்த்தார். உலோகாதய உரையாடல்கள் தொடர்சியான ஜெபத்திற்கு தடையாக அமையும் என்பதனால் அதனையும் கைவிட்டார். இந்த நேரத்தில் தான் அவர் வழிபாடு செய்யும் பகவான் கிருஷ்ணபரமாத்வாவின் காட்சியினையும் பெறறார். அவரிடமும் அவரது விஸ்வரூப தரிசனத்தை தந்தருள வேண்டும் என்றே பிரார்த்தித்தார்.
அதன் பின் மிக குறுகிய காலத்தில் 1922ல் அவரது தொழில், குடும்பம், வீடு, வாசல் அனைத்தையும் முற்று முழுதாக துறந்தார். தெய்வீக சக்தியின் பரமரகசியத்தை அறியும் வேட்கை அவரை முற்றாக ஆக்கிரமித்துவிட மங்களுரை விட்டு அகன்றார். இரண்டு நாட்களின் பின் தமிழ் நாட்டிலுள்ள பூரீ ரங்கத்தை அடைந்தார். அங்கு புனித காவேரியில் நீராடி காவி உடை தரித்து சந்நியாச விரதத்தை மேற்கோண்டு தனது பெயரையும் யூரீ ராமரின் சேவகன் எனும் பொருள்பட "ராமதாஸ்" என மாற்றிக்கொண்டார்.
அதன் பின் மிக சொற்ப வேளையில் அவள் திருவண்ணாமலையில் பகவான் ழரீ ரமண மகரிஷியின் முன்னால் அவர் கருணைக்காக வேண்டிய வண்ணம் காணப்பட்டார். பகவான் தலையை மெதுவாக அசைத்து அவரது இதயபூர்வமான வேண்டுதலை ஏற்றுக் கொண்டதாக காட்டிக் கொண்டார். அப்போது சுவாமி ராம்தாசின் உடல் உணர்ச்சி மேலீட்டால் நடுங்கியது. அதன் பின் சுவாமி ராம்தாஸ் அருணாசல மலையில் உள்ள குகையில் 20 நாட்கள் இடைவிடாது ராம நாமத்தினை ஜெபித்தார். அக்காலத்தில் அவராலேயே ஆக்கப்பட்ட சிறிதளவு சாதத்தினை மட்டுமே உணவாக கொண்டார். 20 நாட்களின் முடிவில் அவர் மிகவும் புதுமையானதோர்" காட்சியினை கண்டார். எல்லா இடத்திலும் அவரால் மிகவும் பக்தி செலுத்தப்பட்ட பூரீ ராமனைக் கண்டதால் தான் காண்பன எல்லாவற்றையுமே பூரி ராமனை அணைப்பது போல் கட்டிஅனைத்துக' கொண்டார்.
இடைவிடாத ராம நாம ஜெபத்திற்கு குறுக்கே எதுவரினும் துணிந்து ஒரம்கட்டி, காவிஉடையில் இந்தியா எங்கும் எதுவித முன் ஏற்பாடுகளோ திட்டங்களோ இன்றி, எதைப் பற்றியுமே சிந்திக்காமலும், கவலைப்படாமலும், காற்றில் பறக்கின்ற ஒரு சருகு போல முறி ராமனின் கருணையையும் சக்தியையும் நம்பி அலைந்து திரிந்தார். அக்காலத்தில் தான் ஒரு தாயின் கைகளில் தவழும் சிறு மழலையைப்போன்று பாதுகாப்பான உணர்வினை பெற்றிருந்ததாக அடிக்கடி கூறுவார். இவ்வாறு இந்தியாவிலுள்ள புனித தலங்களுக்கெல்லாம் சென்றும் உயர்ந்த மகான்களை தரிசித்தும் ஆத்ம விசாரத்தில் ஈடுப்ட்டார். அவள் கடவுளிடம் சரணடைந்தது எதனுடனுமோ ஒப்பிட முடியாதொன்றாகும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சந்தோசமாக
2008
43 அறிவு

Page 25
ஏற்றுக்கொண்டார். அதிகமான வேளைகளில் உணவுகூட கிடைக்காது, தாங்க முடியாத குளிரில் கங்கா நதிக்கரையில் பனிக்கட்டிபோல சில்லிடும் பாறைகளின்மேல் ஒற்றை துணியை மட்டுமே விரித்து படுத்து தூங்கும் போதும், அவரை ஒர் உயர்ந்த மகான் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் போற்றி உபசரிக்கப்படும் போதும் அவருக்கு எதுவித மாறுபாடான உணர்ச்சிகளும் இல்லாமல், எல்லாவற்றையும் சந்தோசமாகவும், சமரசமாகவும் ஏற்றுக்கொண்டார்.
சுவாமி ராம்தாஸ் உலகின் எல்லா வடிவங்களையும் பகவான் பூரீ ராமரின் வடிவமாகவே கண்டார். தன் முன்னாலே நிற்பவன் எத்தகைய கொடியவனாயினும் அவனையும் மரீ ராமரின் வடிவமாகக் கண்டு தனது மாறாத புன்னகை மூலம் அன்பை சொரிந்து எத்தகைய கல்நெஞ்சத்தையும் இளகச் செய்தார். பயம் என்றால் என்ன என்பதே அவருக்கு தெரியாமல் போயிற்று. காண்பவை எல்லாமே ரீ ராமனின் வடிவமாக தெரியும் போது அச்சம் எவ்வாறு தோன்றும்? ஹி ராமர் தன்னை எல்லா அபாயங்களில் இருந்தும் காப்பாற்றுவார் என்ற அசையாத நம்பிக்கை அவருக்கு இருந்தது. சில வேளைகளில் ஹி ராம பிரானின் கருணையினை சோதிப்பது போல கூட நட்ந்து கொண்டார். ஒரு முறை மலைகளின் அடர்ந்த காடுகட்கு நடுவே அமைந்துள்ள குகைகளில் வாழும் பயங்கர புலிகளில் கூட பூரீ ராம பிரானின் திரு உருவத்தை தரிசிக்கும் ஆசையில் அக்குகைகளுக்குள் சென்று "ஹரி ஓம்" என உரத்து அழைப்பார். ஆனால் அப்போது ஒரு புலி கூட அவருக்கு தரிசனம் கொடுக்கவில்லை.
சில காலத்தின் பின் மங்களுரிலுள்ள பஞ்ச பாண்டவ குகையில் மூன்று மாதங்களுக்கு மேலாக எதுவித இடையூறுகளுமின்றி தங்கியிருந்து தியானத்திலும் ஜெபத்திலும் ஈடுபட்டார் இது அவருக்கு மிக உயர்ந்த ஓர் அனுபவத்தை கொடுத்தது. இங்கு தான் அவருக்கு முதன்முதலில் "நிர்விகல்பசமாதி நிலை" கிடைக்கப்பெற்றது.
இதன்பின் அவர் இந்தியாவெங்கும் யாத்திரை சென்று பெருமளவு அடியார்களையும், சீடர்களையும் உருவாக்கிக்கொண்டார். அவள் தனது அற்புத அனுபவங்களையும் தெய்வீக சிந்தனைகளையும் "The Quest of God" Diboltb "The Vision of GOC" Gigib brig (5616) u60)Lg)5th
சுவாமி ராமதாசினை அவரது சீடர்களும் அன்பர்களும் மிகவும் அன்புடன் "பப்பா" என்றே அழைப்பார்கள். கடவுளை உணர்ந்ததன் தன்மையால் சதா ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார். அணை திறந்தது போல் அவரது உள்ளத்திலிருந்து அன்பு பிரவாகித்து ஓடியது. அவர் இத்தகைய மகா உன்னத நிலையை வெறுமனே "ஓம் ழரீ ராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்" என்ற தாரக மந்திரத்தினை ஜெயிப்பதன் மூலம் மட்டுமே பெற்றிருந்தார். (இங்கு ஓம் என்பது அவர் தனது தந்தையிடமிருந்து உபதேசத்தினை பெற்றுக்கொண்ட பின் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகும்.)
2008
44 uguper- ෆි!îග!

உண்மையிலேயே சுவாமி ராம் தாசரின் வாழ்கையை உற்றுநோக்கினால் உலகமெனும் பரிசோதனை கூடத்தில் ஆத்மீக பாதையின் பல்வேறு கட்டங்களும் எவை எவை என்பதும், ஒரு மனிதன் ராம நாமத்தின் மகாசக்தியினால் குறிப்பிடத்தக்க ஒரு குறுகிய காலத்தில் அடையக்கூடிய ஆத்மீகத்தின் உச்சநிலை எது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
சில காலத்தின் பின் 1930ல் சுவாமி ராமதாஸ் காஞ்சன் காட்டுக்கு வந்து ஒரு சிறிய ஆச்சிரமத்தினை அமைத்துக் கொண்டார். இங்கு தான் அவரது முதன்மையானதும் முதலாவதுமான சீடரான அன்னை கிருஷ்ணாபாயின் சந்திப்பு ஏற்பட்டது. சுவாமி ராம்தாஸ் ஆங்கிலத்தில் பல அரிய நூல்களை எழுதியுள்ளார். 1933ல் இருந்து "The Vision' எனும் மாதாந்த சஞ்சிகையை தமது ஆத்மீக செய்திகளை பரப்புவதற்கான சாதனமாக வெளியிட்டார். அவர் தனது செய்திகளான சர்வ லோக அன்பு பிரபஞ்ச நோக்கு ஆகியவைகளை எல்லோர் மனதிலும் பதியும்படி பிரசுரம் செய்தார். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பிரயாணம் செய்து பக்தி தொண்டாற்றினார். 1954ல் ஓர் அரிய உலக சுற்றுலாவினை மேற்கொண்டார். அச்சுற்றுலாவின் இறுதியில் இலங்கைக்கும் விஜயம் செய்தார். 1954 மார்கழி 31 ம் திகதி இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு பயணமாகும் போது தமது நீண்ட உலகசுற்றுலாவின் நோக்கம் பற்றிய செய்தியினை தெரிவித்திருந்தார்.
சுவாமி ராம்தாஸரின் பிரபஞ்சநோக்கானது அவர் அடிக்கடி உதிர்க்கும் பின்வரும் வாக்கியங்களில் இருந்து புலாைகும்.
"ராம்தாஸ் எந்தவொரு தனிப்பட்ட சமூகத்திற்கும் சொந்தமானவள் அல்ல, எல்லா மதங்களினதும் இறுதியான இலக்கு ஒரே இடத்தை சென்றடைதலேயாகும். இஸ்லாமியர்கள் முகமது நபிகளாகவும், கிறிஸ்தவர்கள் யேசுவாகவும், பெளத்தர்கள் கெளதம புத்தர்களாகவும், இந்துக்கள் கிருஷ்ணர், ராமர் அல்லது சிவன் ஆகவும் பிரமத்தை பார்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஞாலத்தை உய்விக்கவந்த மாபெரும் ஆசான்கள் ஆவர். பூரீமத் பகவத் கீதையாக இருந்தாலென்ன பைபிளாக இருந்தாலென்ன, புனித குரானாக இருந்தாலென்ன அவையெல்லாம் இறுதியாக கூறுவது பரம்பொருளை முற்றாக சரணடை என்பதே ஆகும். சரணடைவது முழுமையான விடுதலைக்கான ஒரே வழியாகும்.
எத்தனையோ ஆண் டாணி டு காலமாக செய்யப் பட்ட புண்ணியத்தினால்தான் மிகமிக அருமையான இந்த மானிடப் பிறவி கிடைக்கப்பெற்றுள்ளது. மானிடப்பிறவியின் போதுதான் பிறப்பின் சுழற்சி வட்டம் முற்றுப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இப் பிறவியரில் தான் பரிபூரண விடுதலையின் உயர் நிலையை அடைக்கூடியதாகவுள்ளது. எல்லா உயிரினங்களினதும் முக்கிய குறிக்கோளும் இதுவேதான். மிருக வாழ்கையைவிட மேலாகவும் அதற்கும்மேல் மனிதவாழ்வின் அதியுயர் நிலையையும் அடையும்போதுதான் தெய்வீக ஒளியையும்
2008
45 அறிவு

Page 26
அமைதியையும் அடைய முடிகிறது. உலகம் முழுவதையும் ஒரே நோக்கில் காணமுடிகிறது. மனிதனினால் மட்டும்தான் கடவுள்நிலையை அடைய முடிகிறது."
சுவாமிகள் பின்வரும் நான்கு விடயங்களை மிகவும் வலியுறுத்திக் கூறுகிறாள். 1. இடைவிடாத சிந்தனை, தொடர்சியான மகா சக்தி வாய்ந்த புனித
நாம ஜெபம் ஆகியவற்றின் மூலம் எல்லாம் வல்ல பரப்பிரமத்தை O சரணடைதல்.
எல்லாவற்றிலும் எல்லோரிடத்திலும் கடவுளைக் காணல். எல்லோரையும் கடவுளின் உருவமாகக்கண்டு அவர்களிடத்தில் அன்பு செலுத்துதல் ஆகும். 4. எல்லாவற்றிற்கும் அதியுயர் பிரமத்தையே நாடி நிற்றல்.
༣
சுவாமிஜி திரு.இராமச்சந்திராவின் அழைப்பை ஏற்று, அன்னை கிருஷ்ணாபாய், சுவாமி சச்சிதானந்தாஜி ஆகியோருடன் 1954ம் ஆண்டு மார்கழி மாதம் இலங்கை வந்தார்கள். இலங்கையில் ஒரு மாதகாலம் தங்கிய அவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கல்முனை, போன்ற வடகிழக்கிலுள்ள இடங்களுக்கும் கண்டி, நாவலப்பிட்டி போன்ற இடங்களுக்கும் வருகை தந்தார்கள். இவ்விஜயம் 3.12.54ல் கொழும்பில் ஆரம்பமாகி அங்கு 31.12.54ல் முற்றுப் பெற்றது. சுவாமிகள் தமது பேச்சுக்களில் மதம், வாழ்கையின்பெருமை, கடவுள், இறைநாமத்தின் மகிமை, குருவும் சத்சங்கமும் , அன்பு, அமைதி, சரணாகதி, சேவை போன்ற பல விடயங்களைப்பற்றி தமது கருத்துகளை மிக இலகுவாக கூறியுள்ளார்.
கடவுள் தரிசனத்தில் என்ற நூலின் அறிமுகக்குறிப்பு எழுதிய டாக்டர்.எஸ்.ஆர்.யூ.சவூர் எம்.ஏ(கேம்பிரிட்ஜ்) எ.எஸ்ஸி.(லண்டன்) பார்-அட்லாஐ.இ.எஸ் அக் குறிப்பில் கூறியவை í
/
அவருடன் சந்தோஷமாகக் கழித்த ஒவ்வொரு நாளும் நான் கேம்பிரிட்ஜில் கழித்த பல மாதங்களை விட பெரும் பொருள் பொதிந்ததாக விளங்குகின்றது. நூல்கள் நமக்கு அறிவைத் தரவல்லன. பிரபல பேராசிரியர்களின் பரிச்சயம், அறிவியில் ஆய்வில் நமக்கு உற்சாகமான ஈடுபாட்டைத் தரவ ல்லது. ஆனால் இவ்விரண்டுமே மகாத்மா ராமதாசரின் முகத்தில் எப்போதும் ஆனந்தத்தின் நறுமணம் இழையும் மோகனப் புன்னகையின் ரகசியத்தை நமக்கு தர முடியாது. அப்புன்னகை இறைவனிடம் ஒரு குழந்தையைப் போன்று சரணடைவதன் மூலமே சித்திக்க வல்லது.

தெய்வீக தரிசனங்கள் என்ற நுாலிலிருந்து Glimpses of Divine Vision
85L66s
நீ எத்தகைய சூழ்நிலையில் இருந்தாலும் மேலான கருணையே வடிவான இறைவனை மறக்காதே. கடவுள் சிந்தனையைப் பறிகொடுத்த வாழ்க்கை நிச்சயமாக வாழ்வதற்கு தகுதியற்றது. இறைவன் நமக்குத் தாயாகவும், வழிகாட்டியாகவும், பாதுகாப்பாளராகவும் இருக்கின்றார். இறைவன் ஆற்றல், அறிவு, ஆனந்தமயமாக இருப்பதால் இடைவிடாது தொடர்ந்து இறை உணர்வில் இருப்பது என்பது தூய்மை, பலம், தைரியம், அமைதி ஆகியவற்றில் இருப்பதாகும்.
நீ அவனாகவே இருக்கிறாய். மனித இனத்தின் உண்மையான எல்லையாகிய இதனை அறிந்து கொள்வதே உங்கள் எல்லோருக்குமுரிய பொதுவான இலட்சியமாகும். நீ கடவுளை கட்டாயமாக நினைப்பதற்கும், அவனது திருவடிகளில் உன்னைச் சேர்த்துக்கொள்வதற்கும் நீ ஊக்கத்தோடு பிராத்தனை செய்வதற்கும் , உரிய சூழ்நிலைகளை இறைவன் உனக்களிக்கும்போது அவன் கருணாமூர்த்தியாகத் தென்படவில்லையா? துன்பத்தையும், துயரத்தையும் தரும் நீர்க்குமிழி போன்ற நிலையற்ற உலகப் பொருட்களை உனக்களிக்கும் போதுதான் அவன் கருணை உள்ளவனா? அந்தப் பொருட்களுக்காக நீ பிராத்தனை செய்தால் அவற்றையும் அவன் அளிக்கின்றான். ஆனால் அதே நேரத்தில் அவன் எச்சரிக்கை செய்கின்றான். அதாவது `நீ அழியும் பொருட்களைக் கேட்கின்றாய். அவைகளின் மூலம் நிலையான ஆனந்தத்தை நீ பெற முடியாது எப்பொழுதும் துன்பமும், துயரமும் மற்றும் கவலையும் இவைகளுடன் சேர்ந்தேயிருக்கும். நிலையானதைத் தேடு. நிலையான என்னை மட்டும் தேடு, நான் சச்சிதானந்தம், நிலையானவன். பேருணர்வாகவும், பேரானந்தமாகவும் இருக்கின்றேன். எனவே அவனுடைய அருளையும், தரிசனத்தையும் நாடிப் பிரார்த்தனை செய் நீ ஏற்கனவே சுதந்தரமான அழியாத் தன்மையுள்வனாக இருக்கின்றாய். இந்த ஞானத்தை, இந்த உணர்வைத் தருமாறு அவனிடம் பிரார்த்தனை செய்வாயாக!
வாழ்க்கையின் பெருமை
உலகம் உலகமாகவே எப்பொழுதும் இருக்கின்றது. இந்த உலகமாகிய விளையாட்டில், ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எவ்வாறு இருக்க வேண்டுமோ அவ்வாறே இருக்கின்றது. தேவைப்படுவதெல்லாம் உன்னிடம் மாற்றமே. அதாவது உலகை இறைவனின் லீலையாகப் பார்க்கும் உண்மையான பார்வையைப் பெறுவதிலேயாகும். நீ அந்த நிலையான பரம் பொருளிடத்து ஒன்றுபடும் போதுதான் இந்த நிலையை அடையலாம். இடைவிடாத இற்ை சிந்தனையே இதற்கு உற்ற வழியாகும்.
2008 47
அறிவு

Page 27
இறைவனின் நாமம்
உண்மையில் பூரீராம் என்ற நாமம் மகத்தானது. அந்த நாமே பிரம்மமாகும் எனவே தான் பிரம்மத்தை அறிவதற்கு இந்தப் புனித நாமத்ை நிரந்தரமாக மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டுமென்று வேதங்கள் உறுதியாகக் கூறுகின்றன. பிரம்மம் என்பது நிலையானதும், அறிவானதும் ஆனந்தமானதும் ஆகும். அதுவே எல்லா ,நன்மைக்கும், தூய்மைக்குட சக்திக்கும் இருப்பிடமாகும். அதுவே குறையாத அன்பின் மூலாதாரமாகும் இந்த சக்தி வாய்ந்த நாமமாகிய பூரீராம் இதை எல்லாம் குறிக்கின்றது எல்லா மகிமையும் அதுக்கே உரியதாகும்.
பூரீராமனின் மிகச் சக்திவாய்ந்த மந்திரத்தை ஜபம் செய்வதே நிச்சயமாக அவனை அடைவதற்கு அல்லது உணர்வதற்குரிய மிக எளிய வழியாகும். ஸ்மரண்' என்பது மறந்ததை ஞாபகப்படுத்திக் கொள்வதாகும். நீ அவனுடைய சொரூபம் என்பதை மறந்து விட்டாய். நீ எப்பொழுதும் அவனாகவே இருக்கின்றாய். ஆனால், உன்னுடைய அறியாமை, உனது உண்மையான இயல்பை மறக்கச் செய்துள்ளது. இடைவிடாது தொடர்ச்சியான ழரீராம் ஸ்மரணை உனது அறியாமையை அகற்றி, நீங்கள் எல்லாம் அவனே அவன் மட்டுமே என்பதை இறுதியில் உன்னை உணரச் செய்யும். அங்கே அவனைத் தவிர வேறொன்றுமே யில்லை. இந்நிலையை அடைவதற்கு உன்னுடைய மனம் மாசற்று மிகத் தூய்மையாக இருக்க வேண்டும். அதற்கு மீண்டும் அவனுடைய மிக உயர்ந்த நாமத்தை ஜபிப்பதே ஒரே வழி அல்லது சாதனையாகும். பூரீராமனிடம் நீ சரணடைவதற்குரிய, தூய்மையான மனம் ஆரம்பநிலையாகும். பூரீராமனிடம் அசையாத ஆழ்ந்த அன்பைக் கொண்டிரு. அந்த அன்பின் ஆழத்திற்கேற்ப, தானாகவே தொடர்ந்து இடைவிடாது அவன் சிந்தனை இருக்கும். ஏனெனில் நீ எதை அதிகமாக நேசிக்கின்றாயோ அதை
நினைப்பதே உனது இயல்பாகும்.
தொகுப்பு:- க.சிவலிங்கம்
நன்றி:- ஆனந்தசாகரம் அங்குரார்ப்பன சிறப்பு மலர் 13.02.2001. மற்றும் தெய்வீக தரிசனங்கள் ஆனந்தாஸ்ரம வெளியீடு.
பல சமயங்களில் நாம் நம்மைப் பற்றி நல்லவர், உயர்ந்தவர் போன்ற தகுதியற்ற போலியான மதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறோம். இறைவன் ஒருவரே உயர்ந்தவர், நல்லவர்.
2008
48 அறிவு

ஓம் (நீ ராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்
O O O 9,bDTநதாஸ்ரமம ஓர் தெய்வீக நிலையம்
"இப்புனித ஆஸ்ரமம் 1931ம் வருடம் சுவாமி ராமதாஸ்
(1884 - 1963) ട്രൂ ക്രട്ടെത്സുന്ധ (1903 - 1989) இருவராலும் நிறுவப்பட்டது. இம் மகாத்மாக்களை
பக்தர்கள் முறையே "பப்பா" என்றும் "மாதாஜீ என்றும் அன்புடன் அழைக்கின்றார்கள். இவர்கள் அதியுயர்ந்த ஆத்மானுபூதியை அடைந்த மகாண்கள். இவ்வனுபூதி நிலையை வேறு சாதனைகள் இன்றி இறைநாம ஜபத்தின் மூலமே அடைந்தார்கள் பிறகும் இந்நிலையை இறைநாம ஜபம் ஒன்றையே சாதனையாகக் கொண்டு இலகுவில் அடைய முடியும் என்பதை தங்கள் அனுபவத்தின் மூலம் உறுதிசெய்கிறார்கள். இதனாலேயே இறைநாம மகிமையை மக்களிடையே பரப்புவதையும் மக்களை இறைநாம ஜபத்தில் ஈடுபடுத்துவதையுமே இவ்வாசிரமம் குறிக்கோளாக கொண்டுள்ளது. ஆனந்தாஸ்ரமத்தில் அதிகாலையிலிருந்து இரவுவரை தொடர்ச்சியாக மறைந்து விட்ட இம்மகான்களின் சமாதியை சுற்றி அடியவர்கள் ஓம் (நீ ராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம் என்னும் மந்திரத்தை உச்சரித்தவண்ணம் வலம் வருகிறார்கள். ஆஸ்ரமம் வரும் ஆத்மீக நேயர்கள் இந்த இடம் முழுவதுமே ராம நாம அதிர்வலைகளால் நிர்ம்பி வழிவதை உணர்கிறார்கள். இந்த ஆஸ்ரமத்தில் பக்தர்களின் கையால் எழுதப்பட்ட பலகோடி ராம நாம லிகித ஜபம் ராம நாம கருவூலத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. ஆஸ்ரமத்தின் நிகழ்ச்சிகளில் பிரதானமானவை ராம நாம ஜபமும் பஜனைகளும்தான்.
ஒறை நாமமும் அதன் மகிமையும்
- சுவாமி ராமதாஸ் -
இறைவனும் அவரின் நாமமும் ஒன்றே. அவையொன்றிலிருந்து ஒன்று வேறுபட்டனவல்ல. நாமமே இறைவன். இறைவனே நாமம். நாமத்தை நினைத்த மாத்திரத்திலே இறைவனுடைய தோற்றத்தினால் எமது மனம் நிறைந்து விடுகிறது. இறைவன் மீது நமது சிந்தனையை ஒருமுகப்படுத்துவதற்கு இடைவிடாது
2008
49 அறிவு

Page 28
இறைவனின் நாமத்தை உச்சரிப்பதை விட இலகுவான ஆத்மீக சாதனை வேறு எதுவும் இல்லை. இறைநாமத்தை மீண்டும் மீண்டும் உரக்க உச்சரிக்கும் போது அன்பெனும் இன்பப்பெருக்கு நமது உள்ளத்தில் ஊற்றெடுப்பதை உணர்வோம். ஏனெனில் தெய்வீக நாமத்தின் ஒலியானது இதயத்தை விழித்தெழச் செய்து இறைவன்பால் பேரன்பினை தோற்றுவிக்கின்றது. வாயினால் இறைவனின் நாமத்தை சொல்வதைவிட மனதால் நினைப்பது பெரிதும் சக்திவாய்ந்ததாக கருதப்பட்டாலும் இறைவனின் நாமத்தை உரக்க உச்சரிப்பதனால் ஏற்படும் ஆனந்த அனுபவம் வேறு எதனுடனும் ஒப்பிட முடியாததொன்றாகும். நாம் சங்கீர்த்தனத்தில் பக்தனின் இதயம் தீவிரமாக ஆழ்ந்திருக்கும் போது அந்த நாமமே "பிரமம்" என்பதை அவன் உணர்கிறான்.
இறைவன் உருவமாகவும் அருவமாகவும் இருக்கின்றான். இறை இரண்டினையும் நாமம் உள்ளடக்குகின்றது. எங்கும் நிறைந்து, அனாதியாகி மாறுபாடில்லாது அமைதியும் நிலையான தன்மையுடையவனே அருவ இறைவன் நாம, ரூப அசைவு கொண்ட உயிர்கள், பொருட்கள் அத்தனையும் இறைவனின் உருவத்திருமேனி இறைநாமம் ஆனது அருவம், உருவம் அதற்கும் அப்பாலும் எல்லைகடந்த யாவற்றையும் உள்ளடக்கிய ஓர் முழுமையான உண்மைப் பொருளை குறிப்பதாகும். எனவே இறைநாமம் அனாதியானதும், படைப்புக்கட்கு காரணமானதும் ஆகும்.
இறைநாமம் சகல பந்தங்களில் இருந்தும் மனிதனை விடுவிக்கவல்லது. அதியுயர்ந்த பூரணமான ஆத்மீக நிலைக்கு அழைத்துச்செல்லும் ஆற்றல் கொண்டது. அறியாமை என்னும் இருளை அகற்றி உலகம் யாவற்றையும் தெய்வீகமாகக் கானும் அதி உன்னத காட்சியை அருளவல்லது. அதியுயர்ந்த எநான நிலைக்கு, ஒருவனை உயர்த்தவல்லது.
இறைநாமத்தின் சக்தி தோல்வியைக் காணாத ஒன்றாகும். அடக்க முடியாததெனக் கருதப்படும் மனத்தை அடக்கி நெகிழவைத்து இறைவனின் மகமே கட்வுளாக மாற்றம் பெற்று விடுகிறது. நாமத்திடம் சரணடைந்தவன் அற்புதங்களை நிகழ்த்தும் வல்லமை பெறுகிறான். இயமன்கூட அவனை அணுக அச்சம் கொள்வான். இயற்கையின் சக்திகள் மேலாதிக்கம் செலுத்தி மகித இதயங்களில் ஆத்மீக விழிப்புணர்வை ஏற்படுத்த அவற்றை பயன்படுத்துவான். எல்லையற்ற அன்பும் ஆனந்தமும் உருவெடுத்தது போன்ற தோற்றத்தை நாமம் ஒருவன் பால் ஏற்படுத்த முடியும். இறைநாமம் ஒருவனது அறியாமையை அகற்றி அவனின் தெய்வீகத் தன்மையை வெளிக்கொணர்ந்து அவனை இறைவனாகவே மாற்றி விருகிறது.
50
2008 அறிவு

எங்கு இறைநாமம் செல்லப்படுகிறதோ அங்கு தூய்மை, அமைதி ஆனந்தம் நிறைந்து அண்பெனும் ஊற்று பெருக்கெடுக்கும்.
இறைநாமமே பூரணத்துவமானது. அதை உச்சரிப்பதே தியானமாகும். இந்த நிலையில் கிடைக்கும் பேரானந்தமே சமாதியாகும். நாமமே ஆற்றல், ஆனந்தம், ஞானஒளி எல்லாமாகவும் மிளிர்கிறது. ஒருவன் வேறு சாதனைகள் இன்றி இறைநாமத்தை இடைவிடாது உச்சரிப்பதனால் மட்டுமே இறைமயமான காட்சியை எங்கும் கானும் பேற்றையடைந்து முடிவில்லா அன்புமயமான பேரானந்தக்கடலில் மூழ்கித்திளைக்க முடியுமென்பதை எனது சொந்த அனுபவத்தின் மூலம் உறுதிப்படுத்த முடியும்.
கடவுளை அடைய எல்லா மக்களயாலும் இலகுவாக கடைப்பிடிக்கக்கூடிய சாதனை இறைநாமம் ஆகும். எவனொருவனின் நாவில் எந்நேரமும் இறைநாமம் குடிகொண்டு விட்டதோ அவனேஜீவன்முக்தன் ஆவான். அவனே வீடுபேறடைந்தவன் என ஓர் சாது கூறியவார்த்தை முற்றிலும் உண்மையாகும்.
அன்பான நண்பர்களே! நீங்கள் எந்த இனம், எந்த ஜாதி, எந்த நிறத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் இறைநாமத்தை உச்சரியுங்கள். அதன் இனிமையில் மூழ்கித்திளையுங்கள். நாமத்தின் இனிமையில் சதா நீராடி புனிதமடைந்து விடுவதோடல்லாது இறைவன்பால் அண்பையும் எநானஒளியையும் நீங்கள் பெறுவீர்கள் என்பது நிச்சயம். இறைநாமத்தை ஜெபிப்பதன் மூலம் எல்லாம் வல்ல இறைவனிடம் பூரண சரணாகதியடைந்துவிடமுடியும், இறைநாமத்தை இடைவிடாது உற்சாகத்தோரும், நம்பிக்கையோரும், மனவடக்கத்தோரும் பயிலும் சாதகனுடைய ஆரம்ப நிலையில் அவன் முகமும் உடலும் பிரகாசமடைந்து புதுப்பொலிவு பெறும். அவன் மனம் ஞானத்தாலும் இதயம் அன்பினாலும் நிறைந்து காணப்படும். இந்நிலை சாத்வீக குணத்தின் ஆதிக்கத்தினால் ஏற்படுகிறது. இவ்வாறு அதே உற்சாகத்துடனும் நாமத்தை இடையறாது தொடரும் போது அச்சாதகன் உலகம் முழுவதைனையும் இறைவனின் சொரூபமாக கானுவான். உண்மை என்னவெனில் இறைவனும் நாமம் ஒன்றே. .
Z ళీభ#2_{** Puya Mataj Krishnabal Beloved Papa Swami Ramdas swami Saatchliduranda TL L0TTTTTMLLLT LLM TTL MTTLLL S SSSSztLLt tLTTLLTTLT ܐ
51
2008
அறிவு

Page 29
தியான
ராம நாமத்தை மனதில் ஜபித்துக் கொ இறைவனின் சிறந்த பண்புகளாகிய எங்கும் நீ உருவமற்ற, நிலையான உண்மை, பிரபஞ்சத்தின் சிந்திக்க வேண்டும். அந்த மேலான பேருண்மை உ பேண்மையும் நீயும் ஒன்று என்பதையும் முதலில்
தியானம் செய்யும் போதுராம மந்திரத்ை இறைவனின் மேலான குணங்களைப் பற்றி சிந் பிறகு மந்திரத்தை உச்சரிப்பதும் நின்று விடவேண் எதுவும் எழுற்சி பெறாமல் பேரமைதியைப் பெறு இந்நிலையில் நீ உன்னுள் ஒளியைக் காண்பாu அடுத்து இவற்றைக் கடந்து சென்றால் உடல் உன பாதையில் நிலையாக முன்னேறு. இறைவனது உன்னை எல்லா வீழ்ச்சிகளிலிருந்தும், ஆசைகளி
வாழ்க்கையின் பெ
யாரிடம் உனக்கு அவ்வப்போது தொ நியமிக்கின்றாரோ அவர்களுக்காகத் தான் நீ வ மற்றவர்களுக்கு அமைதியும் ஆனந்தத்தையும் அளி குறிக்கோளாகும். இதை நீ வாழ்க்கையின் ஒவ்ெ செய்யலாம். வாழ்க்கை என்பது சேவை செய்? நிலையாம் ஊற்றிலிருந்து தன்னிச்சையாக வெளி செய்யும் போது தான் நீ சேவையின் உண்மையா அழிவற்ற இயல்பை உணர்வதற்கும் அதன் 6 ஈடுபடுவதற்கும் பூரண சரணாகதியே முதல் காரணி
ஏழைகளுக்குச் செய்யும் சேவையே
உண்மையான யக்ளும். இதனால் உனது வாழ் உண்மையான மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையு எல்லாச் செயல்களும், சுயமாகவும், ஆனந்தமாகல
இயல்பான நிலையாகிய அழிவற்ற தன்மையை
2008
52

suð
ண்டிருக்கும் காலத்தில் இடை இடையே ைெறந்த, எல்லையற்ற, மாற்றங்களற்ற * தோற்ற நிலை ஆகியவற்றை மனத்தில் ன்னுள் இருக்கிறது என்பதையும், அந்தப் ல் நீ அறிந்து கொள்ள வேண்டும். தை மனதிற்குள் சொல்லவும். அப்பொழுது திக்கவும் வேண்டும். சிறிது பயிற்சிக்குப் டும். அதனால் மனதில் எண்ண அலைகள் ம். இவ்வாறு சில நிமிஷம் நீ மூழ்கியிரு. ப் அல்லது இனிய ஓசையைக் கேட்பாய். ார்வு அற்ற நிலையை அடைவாய். இந்தப் நாமத்தை உறுதியாக சார்ந்திரு அது னின்றும் காப்பாற்றும்.
|bഥ 886ഖ
டர்பு இருக்க வேண்டுமென்று கடவுள் ழ வேண்டுமேயன்றி உனக்காக அண்று ப்பதில் மகிழ்ச்சியடைவதே வாழ்க்கையின் வாரு சந்தர்ப்பத்திலும், சூழ்நிலையிலும் வதற்கே ஆகும். உனது அழியாப் பெரு ப்படும் நீரோட்டம் போன்று சேவையைச் ன ஆனந்தத்தை உணர முடியும். உனது விளைவாக ஆனந்தமாக செயல்களில் மைாக அமைகின்றது.
U இறை வழிஜபாடாகும். இது தான் க்கையின் நோக்கம் விசாலமானதாகி, b அடைகின்றாய். உனது வாழ்க்கையில் பும் செய்யும் பொதுதான் நீஉன்னுடைய பும் ஆனந்தத்தையும் அனுபவிப்பாய்.
அறிவு

Page 30


Page 31
|(: - ¤' “No Noniidae. Istegaeidae