கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறகுகள் 2002.07

Page 1
వ్లో
@_భi_%రిషా_కెల్ని
பிறந்தநாளின் புனிதமறி நண்பர!
மண்ணில் மனிதனாகப் பிறந்து மனிதனாக மடிவது வாழ்க்கை அல்ல, சாதாரணமாகப் பிறந்து சாதனையாளனாக சாவதும் சாமன்யமானதல்ல.
வருடத்தில் உன் தினம் ஓர் நாள் வரும் போகும் வருடம் உன் வயதை வளர்த்து பின் தேய்ந்து போகும்.!
பிறந்த நாளின் புனிதத்தை "புரிந்து கொண்டாயா? - நண்பா
மனிதப் பிறவியின் பெரும் மகத்துவத்தை உணர்ந்துகொண்டாயா? ..!
கவலைப் புயலில் சிக்கி கண்ணிர்ப் பெரு மழையில் நனைந்து வேரற்ற மரம்போல் வீழ்ந்து வேதனையில் உழல்வது வாழ்க்கையல்ல.!
வேதனைக் களையை உழுதெறிந்து சோதனை விதையை விதைத்து சாதனையை அறுவடை செய்து வெற்றியைக் களஞ்சியப்படுத்து .
வாழ்த்து அட்டையைப் பார் வாசமலர்கள்ை வாஞ்சையுடன் முகரும் அந்த சிறுவனின் ...! முகமும் மலர்கிறது.!
நீயும் முகர வேண்டும் நல்ல கொள்கை மலர்களை அதனால் மலர வேண்டும் - உன் அன்புள்ளத்தின் வெற்றி வாசம் ...!
இலட்சியங்களைப் புதுப்பித்து - உன் இழந்த உறுதியை மீட்டெடுக்கத்தான் வருடம் ஒரு முறை அந்த .ܗܸ வசந்த நாள் வருகிறது மறந்து விடாதே..!
திருமலை வாசன்.
- - - - - - ಫ್ಲಿಪ್ಟ್ಸ್:-"F*.
ཚོ་
 
 
 
 
 
 
 
 
 
 
 

亭 pro - இரழ்சிE E. : :
...-H.

Page 2
象
சிறகுகள் சிந்தையில் அடக்கி வைத்த - நல்லுணர்வுகள்
சிறகடிக்கத் தொடங்கிவிட்டால் : :
உலகத்து மாந்தரெல்லாம் ཆ་
அஞ்ஞான இருள் அகன்று
மெய்ஞான ஒளி பெற்று
மேன்மை நிலை அடைந்திடுவர்
வாசக நெஞ்சங்களே . வணக்கம்,
மீண்டும் இன்னொரு சிறகுகள் மூலம் வாசகர்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி,
கட்டடம் ஒன்றைக் கட்ட வேண்டுமானால் அத்திவாரம பலமானதாக அமைய வேண்டும் "சிறகுகள்' சஞ்சிகைக்கு பலமான அத்திவாரம் அமைந்துவிட்டது என்பதில் எமக்கு எது வித ஐயமும் இல்லை. ஏனென்றால்? இலைமறை காய் ஆர்வலர்களின் ஆக்கங்களைத் தொகுத்து வடிவமைக்கப்பட்ட சிறகுகள் சஞ்சிகையை பெற்று, எமது நோக்கமறிந்து தாராள நிதி அன்பளிப்புச் செய்த தர்மவான்கள், ஆக்கங்கள் அனுப்பிய, இன்னும் அனுப்பிக்கொண்டிருக்கின்ற படைப்பாளிகள் அனைவரும் சிறகின் அத்திவாரமாக அமைந்து விட்டதுதான் அதற்குக் காரணம்.
அனைவருடைய பேராதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் எமது நன்றிகள். சிறகின் நோக்கமும் கடமையும் செவ்வனே நிறைவேற தங்களது பேராதரவு தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்பதே சிறகின் பேரவா.
“இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்” படைப்பாளிகள் மாணவர்களின் உள்வாங்கலை கருத்திற் கொண்டு தங்கள் ஆககங்கள் மூலம் இந்த அறிவுப் பூமியின் நீள அகலங்களை அளந்து வரவேண்டும் என்பது சிறகின் சின்ன விண்ணப்பம்.
நாம் முதல் சஞ்சிகையில் குறிப்பிட்டது போன்று "வாசக நோக்குடன்" “எனது பார்வையில்” போன்ற புதிய அம்சங்களையும் இணைத்துள்ளோம்.
அத்துடன் வாசகர்களின் மேலான விமர்சனங்களையும் , ஆலோசனைகளையும் கருத்திற் கொண்டு சஞ்சிகையிலும், ஆக்கங்களிலும் அவசியம் எனக் கருதி பல மாற்றங்களையும் மெருகூட்டல்களையும் செய்துள்ளோம். இன்னும். இன்னும். படிப்படியான வளர்ச்சியோடு அடுத்த சிறகில் சந்திப்போம்.
உங்கள் ஆக்கங்களுக்கு நீங்களே பொறுப்பாளிகள். அன்புடன ஆசிரியர் குழு.
“சிறகுகள்' சஞ்சிகை விற்பனை மூலம் பெறப்படும் “நிதி" வறிய மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் | என்பதையும் பேருவகையுடன் தெரியப்படுத்துகிறோம்.
O -02
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

êss - 02.
தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு
ஆசிரியர் குழு
க. ஜீவா
அ. ஜனனி பொ. கோணேஸ்வரன் செ. செல்வக்குமார் க. விக்னேஸ்வரானந்தன் க. வாசுதேவன் மா.பிரபாகரன்
ஓவிய ஒப்பனை க. ஜீவானந்தன்
absoofsaf SJsoloing ரெயின்போ மினிலாப்
தொடர்புகளுக்கு. சிறகுகள் ஆசிரியர் குழு,
514, மின்சார நிலைய வீதி,
திருக்கோணமலை.
கலை, இலக்கியச் சஞ்சிதை
వ్లో ::::::........... :::: 涧$$$ شاشة நீரளவே ஆகுமாம் நீராம்பல்
e གྱི་ உள்ளே. P
டெங்கு
ஓர் கண்ணோட்டம் 04
கவிதைகள் 07
நாளைய உலகின்
பிரம்மாக்கள் 08
முதலுதவி பற்றி O
பிறழ்வு நடத்தைகள் ஒர் உளவியல் விளக்கம் 12
கதாசிரியன் (சிறுகதை) 5
சிறுகதை ஆக்கம்
ஓர் ஆய்வு 18
வாசகர் நோக்கு 22
சிறகின் தேடல் 24
குறுக்கெழுத்துப் போட்டி 26
எனது பார்வையில் - 27 می
த?ரு க" கோணமலை ஐக் கபிய மருத்துவர் சிகையலங்கரிப்பாளர்
சங்கத்தின் ஆதரவுடன் சரிறகுகள் சஞ ச?கை வெளியிடப்படுகிறது.
(T | ܬ݁ܰ2 g
பாடசாலை மாணவ மாணவிகளுக்
கான பொது அறிவு போட்டித்தொடர் அடுத்த இதழிலிருந்து ஆரம்பமாகும்
-03

Page 3
சிறகுகள் S= . . . . . . க.நந்தகுமார் qSA .
டெங்கு நோய் இலங்கையில்
is 600i G if தவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. பத்திரிகைகள், வானொலி, தொலைக் காட்சி அனைத்திலும் செய்திகளாக மட்டுமல்லாது விளம்பரங்களாகவும் கூட டெங்கு நோயைப் பற்றிக் கூறி Ls) d5 3. 60) 6TT விழிப் படையச் செய்வதுடன் பீதியடையவும் செய்கிறார்கள். அண்மையில்
பாடசாலைகள் இழுத் து மூடப் பட்டன. S9 J 3F (T 5) 85 fò வெளியிட்டுள்ள தகவல்களின் படி இதுவரை 2002 ஆம் ஆண்டில் 29 பேர் டெங்கு நோயினால் மரணத்தை தழுவியுள்ளதுடன் 4,415 பேரிற்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது.
2002ல் மாவட்ட ரீதியாக இனங் காணப்பட்ட டெங்கு நோயாளி களின் எண்ணிக்கையும் அந்த மாவட்டத் தில் டெங் கிற்கு இரையானவர்களின் எண்ணிக்
கொழும் பில் இரு பிரபல கையும் வருமாறு.
DII6Hi L-Lb நோயாளிகள் இறப்புக்கள்
கொழும்பு 19 3
(BDLJabi 779 04
களுத்துறை 285 ---
கண்டி 445 Y− Ali oko
LDHậĐặ565)6ĩI 30 "י
நுவரெலியா 2
காலி 87
அம்பாந்தோட்டை 228 O
மாத்தறை 214 ----
யாழ்ப்பானம் 06 O3
கிளிநொச்சி OO
மன்னார் 00 s
ഖഖങ്ങിut 19
முல்லைத்தீவு 00
LDL:Läbdb6T üL! 84 03
அம்பாறை/கல்முை 07 O2
திருக்கோணமலை 2 இவ்வாறு அழுக்குகளையும்,
குருநாகல் 347 O2 குப்பைகளையும் சேர
புத்தளம் 88 விடாதீர்கள்.
பொலநறுவை w 44
 
 
 
 
 
 
 

So கலை, இலக்கியச் சஞ்சிை
91g0lly Tg5LUD 32 பதுளை 49 மொனராகலை 1 - இரத்தினபுரி 165 O 88ᏏéᏐiᎢ60Ꭷ6Ꭰ 81 மொத்தம் 445 29
இலங்கையில் 2000ம் ஆண்டில் 34 பேரும் 2001ம் ஆண்டில் 47 பேரும்
டெங்கிற்கு பலியாகியுள்ளனர்.
டெங்கு நோய்
டெங்கு நோய் ஒருவகை வைரசுகளினால் உண்டாகின்றது. இவ் வைரசுகளைப் பரப்புவதில் ஒரு வகை நுளம்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏடிஸ் எயிப்ரி, ஏடிஸ் அல்போபிக்ரஸ் (Aedes aegypti) (Aedes albopictus) 24Éluu நுளம்புகள் பெரும்பாலான பங்கு வகிக்கின்றன.
இந்நுளம்புகள் மற்றைய நுளம் புகளை விட சற்று துணிச்சலானவை என்றே கூற வேண்டும். ஏனெனில் மலேரியா, யானைக் கால் நோய் போன்ற வற்றை பரப்பும் நுளம்புகள் நித்திரை கொள்ளும் பொழுதே மனிதரைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சுகின்றது. ஆனால் மேற் கூறிய நுளம்புகள் பகல் நேரத்தில் மனிதர்கள் விழிப்புடன் இருக்கை யிலேயே தமது தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வல்லமை படைத்தவை. இவை உருவத்தில் மிகச் சிறியவை (2m தொடக்கம் 4mm நீளமுடையவை) கால்களில்
ஏடிஸ் அல்போபிக்ரஸ் - நுளம்பு
கறுப்பு, வெள்ளை நிற வளையங்களைக் கொண்டவை, உடம்பிலும் கறுப்பு, வெள்ளை கலந்த அடையாளங்கள் இருக்கும். நன்றாக யோசித்துப் பார்த்தீர் களானால் இந் நுளம் புகள் உங்களையும் பதம் பார்த்தது ஞாபகத்திற்கு வரும்.
டெங்கு வைரசுகளிற்கு எதிரான மருந்துகளோ, நிள்பீடன முறைகளோ இல்லாததால் எமது முழுக் கவனத்தையும் இந நுளம்பிற்கு எதிராகவே திருபப வேண் டியுள் ளது. ଶ ଗଠୀ (36] இநீ நுளம் புகளைப் பற்றியும் இந்நுளம்புகள் பெருகும் இடங் களை பற்றியுமான அறிவு இன்றியமையாதது. வீடுகள், பாடசாலைகள், அலுவலகங்கள், இவற்றின் உள்ளேயோ, வெளி யேயோ, எங்கெல்லாம் ஓரளவு தூய நீர் தேங்கி நிற்கின்றதோ
அங்கெல்லாம் இந் நுளம்புகள் முட்டைகளை இடுகின்றன. உதாரணமாக கழித்துவிடப்பட்ட ரயர்கள், வீசப்பட்ட சிரட்டைகள், தகரப் பேணிகள், பிளாஸ்ரிக்

Page 4
சிறகுகள்
கொள்கலன்கள். போத்தல்கள், பூச் சாடிகள். நாய் பூனை போன்ற வற்றிற்கு நீர் வைக்கும் பாத்தி ரங்கள். எறும்புகள் மேசைக்கு ஏறாமலிருக்க கால்களிற்கு கீழ் வைக்கப்படும் நீர்ப்பாத்திரங்கள், நீரைச்சேமித்து வைக்கும் பாத்தி ரங்கள் கூரையில் வழிந்தோட முடியாமல் நிற்கும் நீர் இவ்வாறாக முக்கியமாக எம்மாலேயே இவை முட்டையிடுவதற்கு சிறப்பான இடங் கள் அமைத்துக் கொடுக்கப்படுகின்
றன.
மேலும் தோட்டங்களில் காணப்படும் மரப் பொந்துகள், சுருண்டு காணப்படும் இலைகள், (உ+ம் வாழைக் குருத்து) இவற்றி னுள்ளும் நீர் தேங்கி நிற்குமானால் அங்கேயும் முட்டையிடுகின்றன.
இப்பொழுது ஏன் இந் நுளம்புகள் நகரங்களில் வாழும் மனிதர்களை அதிகம் தாக்குகின் றன என புரிந்து கொண்டிருப்பீர்கள். இம்முட்டைகள் சாதாரண மாக இருநாட்களில் பொரிக் கின்றன. நீர் வற்றிவிடுமேயானால் இம் முட்டைகள் வறட்சிக் குத் தாக்குப்பிடித்து மீண்டும் நீரைக் காணும் போது பொரிக்கின்றன. இதனாலேயே பருவப் பெயர்ச்சி மழைகளின் பின்னர் அதாவது யூன், யூலை மாதங்களிலும், ஒக்டோபர்டிசம்பர் மாதங்களிலும் டெங்கு தலை விரித்தாடுகின்றது.
முட் டைகளிலTரு நீ து வெளிவரும் குடம் பிகள், “S”
அசைந்து செல்வதை வெற்றுக் கண்களால் காணமுடியும். இவை ஆறு கிழமைகளினுள் நிறைவுடலி களாக மாறுகின்றன.
இந்நுளம்புகள் டெங்கு நோயாளி ஒருவரை கடிக்குமானால் அவற்றின் வாழ்நாள் முழுவதும் (4 கிழமைகள் ) இந்நோயைப் பரப்பும் ஆற்றலுடையவையா கின்றன.
மற்றைய இன பெண் நுளம்புகளைப் போலவே இவையும் தமது உமிழ் நீரை மனிதரினுள் செலுத்துவதன் மூலம் வைரசுக் களை பரப்புகின்றன. நுளம்பு கடித்து 4-5 நாட்களில் குணம் குறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. சிலருக்கு எதுவித பாதிப்பும் தெரியாது. டெங்கு நோயானது மனிதரை வெவ்வேறு வடிவங்களில் தாக்குகின்றது அவையாவன
இதன் தொடர்ச்சி அடுத்த சிறகில்
மருத்துவக்குறிப்பு கண் நோவிற்கு:- கற்கண்டைப் பொடி செய்து துணியில முடிந்து புளி மாதுளம் பழச் ở II mở [j]6ủ தோய்த்து கண்ணில் பிழியவும்.
திற்கும்:-
கண் சிவப்பிற்கும், அடி காயத்
ஊமத்தம் இலையைப் பிழிந்த சாற்றில் மூன்று துளி வீதம்
அந்தி, சந்தி மூன்று நாள் விடவும்.
வளைவுகள் போல் நீரினுள்
 

கலை, இலக்கியச் சஞ்சிை
. . . . . . . . . . . . . abefooga5 of -
இறைவா ஏன் இந்த நிலை?
கதிரவன் தான் கண்விழிக்க விடிந்தது காலைப் பொழுது விடியாத தன் வாழ்வை எண்ணி விம்முகின்றான் ஓர் சிறுவன்.
பள்ளிப் பருவ வயதில் படிப்பதற்கு வசதியில்லை பெற்றவளும் கூட இல்லை பேதையெனை அணைப்பாரில்லை.
மனிதமில்லா இவ்வுலகில் மனிதனாய் பிறந்துவிட்டேன் மறையும் முன்னரேனும் மற்றவர் போல் சாதிக்க விரும்புகிறேன்.
உண்டிட உணவும் இல்லை உடுத்திட நல்லுடையும் இல்லை இத்தரையில் ஏன் படைத்தாய் இறைவா உனைக் கேட்கின்றேன்.
கை நாட்டு என்ற சொல்லு - மனதில் பாரமாய் அழுத்துதையா! கையெழுத்து இடவேணும் - கல்விக் d5(560600 85 TL LDTL-Tu T................
கி.சஜீவ்
சுதந்திரம்
சுட்டெரிக்கும் யுத்தத்தால் விட்டெறியப் பட்டதே
- எமது ಆಸ್ತಿಹರು பட்டறிந்த பின்னரும் பாவிகளுக்கு
- யுத்தத்தை.
விட்டெறியத் தெரியாததினால் தொலைந்ததே - எமது சுதந்திரம் யுத்தத்தால் வெடிச் சத்தத்தால் பலர் ரத்தத்தால் அழிந்ததே
எமது சுதந்திரம்.
கண்டனர் மக்களின் ஒலத்தை கொண்டனர் புதுக் கீதத்தை வென்றனர் ஒரு சமாதானத்தை தந்தனர் புது வழிப்பாதையை கொண்டதே மக்கள் மகிழ்ச்சி கண்டதே இது ஒரு புது எழுச்சி.
திருமலை மைந்தன், வளராதோ - நம் பொருளாதாரம் இறக்காதே - இனி யுத்தத்தால் ஒர் மனிதம் பறக்காதோ
வவுனியா
எதிர்பார்ப்புகள்
பிறக்காதோ - சமாதானம் பிடிக்காதோ - ஒரு சிலருக்கு திறக்காதோ - அரசு மனக் கதவு தீராதோ - பசி பட்டினி
கிடைக்காதோ - ஓர் சுதந்திரம்
மாறாதோ - வேலையில்லாத் திண்டாட்டம்
நடக்காதோ - தாய்லாந்தில் பேச்சுவார்த்தை
மறக்காதோ - மனம் கடந்தகால யுத்தத்தை
- நம் நாட்டில் வெண்புறா. பதறாதே - நிலைக்காது இவ் யுத்தம் நினைக்காதே - இன்னும் ஒரு யுத்தம் நீட்டுவேன் என எண்ணாதே - இன்னும் சில வரியை எதிர்பார்ப்புகள் ஏமாறும் போது முடிவுகள் சோகம்தான்! ஆனால் இவ் எதிர்பார்ப்புகள் "ஏமாறாதவை"
திருமலை பிரபா

Page 5
நாளைய உலகின் பிரம்மாக்கள்?
க. சறோப்பிரியன்
அன்று ஞாயிற்றுக் கிழமை நான் மனைவியையும் அழைத்துக் கொண்டு மாலைப் பொழுதை மகிழ்ச்சி யாகக் கழிப்பதற்கு கடற்கரைக்குச் சென்றிருந்தேன். வழக்கமாகவே ஒய்வு கிடைக்கும் பொழுதுகளில் இயற்கை அழகுகளை அள்ளிப் பருகுவதில் எனக்கு அலாதிப் பிரியம். அத்தோடு எம் நகரப் பகுதியில் குடியிருப்புக்கள் நெருக்கமாகி விட்டதால் சுத்தமான சுவாசத்திற்காக நேரம் கிடைக்கும்போது கடற்கரைக்குச் சென்று வரவேண்டிய கட்டாயமும் இருந்தது.
நாங்கள் கடற்கரையை அண்மித்தபோது . வானமும் கடலும் சங்கமிக்கும் அந்த தொடுவானப் பகுதியில் இரத்தத்தில் தோய்ந்த ஆதவனின் இறுதி ஊர் வலம் நடந்துகொண்டிருந்தது. எனி மனைவிக்கும் இயற்கையை ரசிப்பதில் ஈடுபாடு உண்டு.
"அத்தான் அங்க பாருங்க எவ்வளவு அழகான காட்சி” என்ற என் மனைவியைப் பார்த்து "சூரியனின் உதயம் மட்டுமல்ல, மறைவும் எம் மனதுக்கு மகிழ்ச்சியைத்தான் தருகிறது. ஆனால் மனித வாழ்வு மட்டும் ஜனனம் முதல் மரணம் வரை சோகத்தில் அமிழ்ந்து கிடக்கிறது.” என்றேன் அத்தான் கொஞ்சத் தூரம் மணலில் காலாற நடப்போமா?" என்று கேட்க அவள் கையைப் பற்றியபடி கடற்கரை மணலில் கால் புதையப் புதைய நடந்தேன். கால்களைத் தழுவிச் சென்ற
}=ー"牟ニ ܒܢ>ܙܸ
-amer
அலைகளின் ஸ்பரிசம் மனதுக்கு நிறைந்த மகிழ்ச்சிைையத் தந்தது.
"அத்தான் அந்த மணலில் போய் இருந்து கதைப்பம் நீங்க கடலை வாங்கி வாறிங்களா?" என்ற மனைவியின் குரலுக்கு செவிசாய்த்து கடலை வாங்க
சற்று தூரத்தில் உள்ள கடையை அண்மிக்கும்போது .
‘அடேய் நீ சரியான
ஆம்பிளையா இருந்தா தனித்தனியே வாடா அடிபட்டுப் பாப்பம்” என்ற குரல் தடுத்து நிறுத்தியது. என்ன பிரச்சனை என்று அறியும் ஆவலில் நானும் அந்தப்பக்கம் சென்றேன்.
இப்போது அவர்கள் முகங்கள் எல்லாம் எனக்கு நன்றாகத் தெரிந்தது. அநேகமான பாடசாலை மாணவர்களும் அங்கு கலந்திருந்தார்கள். எல்லோரும் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். எனக்கு நன்கு பரிச்சயமான மாணவர்கள் சிலரும் அங்கு நின்றார்கள்.
"அடேய் எங்கட நண்பனுக்கு அடித்தால் நாங்கள் எல்லோரும் சேர்ந்துதான் அடிப்பம்" என்று கூட்டத்தில்
இருந்து பதிலுக்குக் கத்தினான் ஒருவன்.
இப்போது முதல் அறைகூவல் விடுத்தவன் பின்னால் சில இளைஞர்கள் அணி திரண்டனர். இரு பகுதியினரும் தகாத சொற்களைப் பகலிர்ந்து
 
 
 
 
 
 

கலை, இலக்கியச் சஞ்சிை
半─二司
கொண்டனர். வார்த்தைப் போர் மாறி ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினாள்.
கைகலப்புத் தொடங்கியது. இடுப்புப்
பட்டி, கல் , வெற்றுப் போத்தல் போன்றவற்றை ஆயுதமாகப் பாவித்தார்கள்.
பொழுது போக்கும் பொது இடத்தை அநாகரீகப்படுத்துகிறோம் என்ற உணர்வே இல்லாமல் செயல்ப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தங்களுடைய எதிரணியைத் தாக்குவதில் தான் கவனமாக இருந்தார்கள்.
சற்று தொலைவில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல் உத்தியோகத்தர்கள் வந்து சமாதானம் ஏற்படுத்தும்வரை அவர்கள் சண்டை ஒயவில்லை. இறுதியில் அவர்கள் “எங்கட ஏரியா பக்கம் வாங்கடா உங்களைக் கவனிக்கிறம்’ என்ற கூச்சலோடு கலைந்து சென்றார்கள். “இத்தனைக்கும் தவறுதலாக ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டதுதான் அந்த பெரிய சண்டைக்குக் காரணமாம்' என்று அந்த காவல் உத்தியோகத் தர் சொன்னதைக் கேட்டு எனக்கு எந்தப் பதிலும் சொல்லத் தோன்றவில்லை. “கடலை வாங்கப் போன அத்தானைக் கன நேரமாகக் காணவில்லையே என்று மனைவி தேடுவாள்' என்ற ஞாபகம் வரவே கடலையை வாங்கிக்கொண்டு விரைந்து சென்றேன்.
"ஏன் அத்தான் சுணங்கினிங்க” என்று கேட்ட மனைவியிடம் நடந்த பிரச்சனையைச் சொல்லிக்கொண்டே கடலைப் பொட்டலத்தைக் கொடுத்தேன். “ஓம் அத்தான் இப் பெடியன்கள் சரியான மோசம் நானும் கோயில், சந்தை என்று போய் வரேக்குள்ள கவனிக்கிறனான் இவங்கள் பெட்டையளோட விடுற
பகிடிகளையும் , சேட் டைகளையும் சகிக்கமுடியாமல் இருக்கு." கடலை கொறித்துக் கொணி டே
தன்
இயற்கையின் எழிலை அள்ளிப் பருகி நிறைந்திருந்த என் மனதில் இப்போது பல கேள்விகள். அற்ப விடையங்களையும் பெரிதுபடுத்தி அடிதடியில் இறங்கும் இவர்கள் மாணவர்களா? அல்லது ரெளடிக் கும் பலா? பொழுது போக்கும் இடங்களில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்யும் இவர்கள் காற்று வாங்க வந்து கவலையை விதைத்துச் செல்கி றார்களே? இவர்களின் எதிர்காலம் இருண்டு விடாதா? ரெளடிசத்தில் ஆர்வம் கொண்டவர்கள் கல்வியில் ஆர்வம் கொள்வார்களா? கோயில், தீர்த்தக்கரை, uL LDT6f60p 6T6őTC) இவர்களின் அநாகரீகப் போக்கு விரிந்து கொண்டுதானே செல்கிறது. “என்ன அத்தான் கடலை சாப்பிடாம பெரிய யோசனை?” என்ற மனைவியின் கேள்வியை இடைமறித்து .
'ஒன்றுமில் லை இந்த இளைஞர் சமுதாயத்தை நினைக்கேக்க பெரிய கவலையா இருக்கு. "இளைஞர் கையில் தான் நாளைய உலகம் இருக்கு” இதை எப்ப இவர்கள் புரிந்து கொள்வார்களோ?” என்று சலித்துக் கொண்டு.
“சரி நல்லா நேரம் போயிற்றுது வீட்டுக்குப் போவம்" என்று மனைவியை அழைக்க "அத்தான் இன்னும் கொஞ்சம் இருந்திட்டுப் போவமா” என்று ஆவலுடன் கேட்டவளிடம் "எனக்கு வீட்டில கொஞ்சம் எழுத்து வேலை இருக்கு. அதுதான் போக கொஞ்சம் அவசரப்படுறன்” என்று நான் முடிக்கு முன்னரே . "எதைப்பற்றி அத்தான் எழுதப் போறிங்க”? என்று கேட்டாள்.
"இன்று கடற்கரையில் நடந்த சண்டை என்மனதில் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கு. அதைப்

Page 6
சிறகுக
பற்றித்தான் எழுத வேணும். "அப்ப சரி
வாங்க போவம்" என்று மனைவி எழுந்து நடக்க நானும் பின்னால் நடந்தேன்.
வீடு வந்து சேர்ந்ததும் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பித்தேன். "என்ன தலையங்கம்.”
என்று கேட்ட மனைவிக்கு "நாளைய உலகின் பிரம்மாக்கள்' என்று சொல்ல.
"நல்ல தலைப்பு” என்று பாராட்டி முடிக்குமுன்பே தாளின் பாதியை நிரப்பியிருந்தது எனது பேனா.
முற்றும்.
|ற்றி. தொடர் 02
தொகுப்பு: முதலுதவியாளன் ஜீவா 4ރުލި2ވޭޒޓz2zޒލޭށދޫތޭރޭއްތް
09. காயப்பட்டவரை உலர்ந்த நிலையில் வைத்திருக்கவும். அவர் ஈரமாக இருந்தால் ஏதேனும் கொண்டு மூடி விடவும். சுடுநீரையோ, கூடுதல் சூடான வேறு எதையுமோ கொடுக்கக் கூடாது.
10. தொற்று ஏற்படாதவாறு காயத்தை மூடி விடவும். உடல் அசைவுகளை கூடுமானவரை குறைக்கவும்.
11. நோயாளியையும, பார்த்திருப்போரையும், ஏன் உங்களையும் கூட, நம்பிக்கையை இழக்காதிருக்க மிக ஆறுதலாகவும் மெதுவாகவும் பேசுங்கள். அன்பாக இருங்கள் ஆனாலும் உறுதியாக இருங்கள். சகலவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். | 12. அங்கம் ஒன்று பலமாக அடிபட்டால் குறிப்பிட்ட நேரம் வரை அவ்விடம் உணர்வற்று இருக்கும். படுகாயம் அடைந்தாலும் அந்நபருக்கு உடனடியாக வேதனை தெரியாது. உட்காயங்கள் ஆபத்தானவை, இக் காயங்களைப் பார்க்க முடியாது.
13. நடந்த விபத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவரிடமோ, முடியுமானால் பாதிக்கப்பட்டவரிடமோ விபரத்தை கேட்டு அறியவும்.
14. நிலைமையைப் பார்த்திருப்போரின் உதவியைக் கொண்டு தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும். உ+ம்:- காயத்தை அழுத்தவும்
முறிவைச் சேர்த்துக் கட்டி நபரைத் துக்கிச் செல்ல ஏதுவான மரப் பலகைத் துண்டுகளைத் தேடிக் கண்டுபிடித்தல், முதலியன
15.ஒரு வாகன விபத்து நிகழ்ந்தால் அதிலிருந்து 200 மீற்றர் வரை தெருவின் இரு பக்கத்திற்கும் இருவரை அனுப்பி வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி மெதுவாகச் செல்லப் பணித்தல்.
16.காயப்பட்டவருடன் வைத்திய சாலைக்கு முதலுதவியாளர் ஒருவர் கூடவே செல்லல் வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 

கலை, இலக்கியச் சஞ்சிை
இரத்தப் பெருக்கு
தகவல் :-01
இரத்தம் சிந்துவோருக்கு முதலுதவி அளிப்பதனால் பின்வரும் பிரச்சனைக ளைத் தவிர்த்து அவர்கள் துரிதமாக குணம் பெற உதவும். - குருதி இழப்பு - தொற்றுகள் பிடித்தல் - கடும் நோவு - அதிர்ச்சி.
கடும் குருதி இழப்பு, தொற்று மற்றும் அதிர்ச்சி என்பன மரணத்திற்கு வழிவகுக்கலாம்.
முதலுதவி பாகம் -அ- புற இரத்தப் பெருக்கு சருமத்தில் ஏற்படும் காயத்தில் இருந்து வெளியேறும் குருதி புற இரத்தப் பெருக்கு எனப்படும்.
முதலுதவி அளிக்கும் ஒவ் வொரு முறையும், முதலுதவிக்கு முன்பும், பின்பும், உங்கள் கைகளைக் கழுவுதல் வேண்டும். மேலும் தொற்றுகள் பீடிக்கா வண்ணம் உங்களையும், பிறரையும் காத்துக் கொள்ள மறவாதீர்கள்.
ஒருவருக்கு சிறு வெட்டுக்
02.சிறிய சிராய்வு என்றால் காயம் காயும்படி திறந்திருக்க வேண்டும். சிறிய பிளாஸ்ரர் கொண்டு மூடவும்.
03.இரத்தப் பெருக்கு நின்றுள்ளதா எனப்
பார்க்கவும். BTULO க் கண்டால் நீங்கள் செய்ய -
2 ஏறபட செ 04.வேறு காயங்கள் உண்டா எனக் ഖങ്ങQu്വങ്ങഖ. -
கவனிக்கவும்.
01.காயத்தைக் கழுவவும். அழுக்கு ஏதும் இருந்தால் சுத்தமான நீர், சவர்க்காரம்
ഖി ன்ம்ை ஆகியவற்றால் மெதுவாகக் கழுவவும். (P53) is இன்னும்
தொடரும்
- - - - - -۔ ۔ ۔ • • • • • • • • •
மாநக்க/வக் ւն
ண் கட்டிக்கு:-
சஞ்சந்தனத்தை முலைப்பாலில் உரைத்துப் பூசவும்.
ருந்தேமலுக்கு:- ருதோன்றி இலையுடன் நவச்சாரம், வெண்காரம் கூட்டி அரைத்துப் பூசவும். ாதுக் குத்துக்கு:- யிர் வேளை இலையைப் பிழிந்து நான்கு அல்லது ஐந்து துளி காதில் பிழியவும் தாண்டை நோவிற்கு:- வச் சாரத்தை முட்டை வெண்கருவில் அரைத்து நோ உள்ள இடத்தில் பூச MTmBILD.

Page 7
ஊட-s பிறழ்வு நடத்தை
ஓர் உளவியல் விளக்கம்
திரு. அன்ரன் டயஸ் விரிவுரையாளர், யாழ்.பல்கலைக்கழகம் அறிமுகம்
நாளாந்த வாழ்வில் பல்வேறு உளப்பிறழ்வுடையோரைச் சந்திக்கின்றோம். அவர்களுள் சிலர் யதார்த்தத்துடன் தொடர்புடையோராயும், தொடர்பற்றோராயும் இருப்பதை காண்கிறோம். புராதன காலங்களில் இவை தீய ஆவிகளின் வேலையெனவும், சாத்தானின் கைங்கரியத்தின் குறியீடுகளெனவும் கருதப்பட்டன. இதன் விளைவாய் பேயோட்டுதல் எனும் பெயரில் மூடத்தனம் சார்ந்த சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன. பட்டினி, இருட்டறையில் அடைத்தல், சிறையிலிடுதல், வதைத்தல், சூடுபோடுதல் (Scalding), சவுக்கால் அடித்தல், விளக்குமாற்றால் அடித்தல்(Whiping), போன்றன குறிப்பிடத்தக்கன. இவற்றின் மூலம் தீய ஆவிகள் பாதிக்கப்பட்டவரது உடலிலிருந்து வெளியேறும் என நம்பப்பட்டது. மத்திய காலத்தில் பிறழ்வுநடத்தைகள் நன்மைக்கும் தீமைக்கும், கடவுளுக்கும் பேய்களுக்கும்மிடையிலான போரென வியாக்கியானம் செய்யப்பட்டமை சுட்டத்தக்கது. உளப்பிறழ்வுடையோரை இனங்கன்டு உரிய முயற்சிகளை மேற்கொண்டு மீண்டும் அவர்களைச் சமூக வாழ்வில் இணைந்து அவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் இன்றியமையாததாகும்.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியும், அதனோடிணைந்த உளவியலின் வளர்ச்சியும் பிறழ்வுநடத்தைகள் குறித்து பாரம்பரிய சிந்தனைகளுக்கு மாறுபட்ட வகையில் புதிய விளக்கங்களை முன்வைத்தன. உளவியலானது பிறழ்வு நடத்தைகள் குறித்த பல்வேறு மாதிரி சார் விளக்கங்களை முன்வைத்தது. ஒவ்வொரு மாதிரியும் மனித நடத்தை பற்றியும் பிறழ்வு நடத்தை பற்றியும் பல்வேறு பரிமாணங்களில் வியாக்கியானம் செய்கின்றது. அவற்றுள் உயிரியல் சார் மாதிரி (Biologicalmodel) bLi6O)56ITg5 LDT.gif ( Behaviouristic Model) sidió053 stir LDT.gif (Cognitive Model) LD6ñg5Tu gobLigfrir LDTg5ñ(Humanistic Existential Model), gelpas d56uoTégTy மாதிரி (Socio Cultural Model), என்பன குறிப்பிடத்தக்கவையாகும். இங்கு நாம் உளவியக்கவியல் மாதிரி காட்டுரு குறித்து நோக்குவோம்.
மிகவும் தொன்மை வாய்ந்ததாகிய உளவியக்கவியல் மாதிரி உயிரியல் மாதிரியைப்போன்று ஒரு மருத்துவ நோக்கைக் கொண்டுள்ளது. உயிரியல்
மாதிரியாளர்கள் பிறழ்வு நடத்தை ஒரு நோயெனவும், உயிரினது உறுப்புக்களின் தொழிற்பாட்டு குறைபாட்டினால் விளைவனவெனவும் கருதுகின்றனர். ஆனால் உளவியக்கவியல் மாதிரியினரோ உளவியல் சார் அம்சங்கள்தான் பிறழ்வுநடத்தைக்குக் காரணமென வலியுறுத்துகின்றனர். ஒரு நபரின் நடத்தை - அது இயல்பானதாயினும் அல்லது பிறழ்வாயினும் குறிப்பிட்ட நபர் அறியாத நிலையில், அவரிற் செயற்படும் உளவியல் விசைகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. என்பது இவர்களது கருத்தாகும். சுருங்கக் கூறின் மனித நடத்தைகள் யாவும் "நனவிலி” உளச்செயற்பாடுகளாலேயே தீர்மானிக்கபடுகின்றதென்பதுவே இவர்களது அபிப்பிராயமாகும். நனவிலியில் செயற்படும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலை, இலக்கியச் சஞ்சிை
விசைகள் இயக்கவியல் சார்ந்தது (Dynamic) எனக் கருதுகின்றனர். அதாவது இவ்விசைகள் ஒன்றுடனொன்று ஊடாட்டம் கொள்கின்றன. ஒரு நபரின் நடத்தைகளை, சிந்தனைகளை, இவ்வூடாட்டமே வடிவமைக்கின்றது. பிறழ்வு நடத்தை உளவியல் சார் முரண்பாடுகளால் (Conflicts) ஏற்படுகின்றன வென்பதும் இக்குழப்பங்கள், பெற்றோருடனான சிறுபராயத் தொடர்புகளினாலும், உணர்வதிர்ச்சி அனுபவங்களினாலும் ஏற்படுகின்றனவென்பதும் இவர்களது அபிப்பிராயமாகும். இதனால் நோயாளியின் கடந்த காலத்தில் அக்கறை கொள்கின்றனர். பல உளவியலாளர்கள் உளவியக்கவியல் மாதிரியைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றாகள் எனினும் சிக்மண்ட் புரொய்டே ஆரம்ப கர்த்தாவாவார்.
புரொய்டின் விளக்கம்
நோயாளியின் வாழ்க்கையையும் பிரச்சனைகளையும் ஆராய்ந்ததன் விளைவாக, இயல்பூக்கத்தேவைகள் (Instincture Needs) அறிவார்ந்த ábg5606JI(Rational Thinking), EÐ(ugáæ, Éu JLO6VIIÉE6Í(Moral Standards) SRéu! eyp6öPl பிரதான விசைகள் மனிதனின் ஆளுமையை வடிவமைப்பதாகக் கண்டார். இவ்விசைகள் நனவிலி நிலையரிற் செயற்படுகின்றனவெனவும் , இயக் கவியல் தன்மையுடையனவெனவும் கருதினார். இவ்விசைகளின் இயக்கவியற் செயற்பாடே மனிதனின் நடத்தைகளைச் சிந்தனைகளை, உணர்வுகளை நிர்ணயிக்கின்றன | என்கின்றார் புரொயிட் இவ்விசைகளை இட்(ld) ஈகோ(Ego) சுப்பர் ஈகோ(Super
Ego) என அழைத்தார்.
gQ (d)
இயல்பூக்கத்தேவைகளைக் குறிப்பிடுவதற்கு புரொயிட் இட் என்ற பதத்தைப் பாவித்தார். ஏற்றுக்கொள்ள முடியாத விருப்புக்கள், ஆசைகள், மனமுடுக்குகளின் இருப்பிடம் அதுவாகும். புரொயிட் அதனை "கொதித்துக் குமுறிக்கொண்டிருக்கும் பரபரப்பின் கடாரம்' என விபரிக்கின்றார் "இட்' மகிழ்வுக் கோட்பாட்டினடிப்படையில் இயங்குகின்றது அதாவது இட்டின் இயல்பு எப்போதும் மகிழ்வுநாட்டமே மகிழ்வுக்கோட்பாட்டினை நிறைவு செய்வதே இட்டின் தொழிற்பாடாகும். மகிழ்வை அடைந்து கொள்வதற்கான ஒரு மூலம் தெறிவினைச் செயற்பாடாகும். குழந்தைக்கு பசியெடுக்கும் போது தாயின் முலையைத் தேடுவதும் பாலைப் பெறுவதும் இதற்குரிய எடுத்துக்காட்டாகலாம். மகிழ்வை அடைந்து கொள்வதற்கான இரண்டாவது ep6)ib (gpg56.f606) db560601& GeFusiLTLT(35lb. (Primary Process of Thiking) விருப்புடைய பொருள் பற்றிய ஞாபகத்தை ஏற்படுத்திச்செயற்படுதலை இது குறிக்கிறது. உதாரணமாக பசியுடைய குழந்தை தாயின் முலையை கற்பனை பண்ணலாம். இக்கற்பனை ஒருபகுதியளவாவது திருப்தியைத் தரலாம். ஏனெனில் புறப்பொருள் உண்மைக்கும் அகப்பொருள் உண்மைக்குமிடையில் வேறுபாட்டை ஏற்படுத்த "இட் இனால் முடிவதில்லை. முதனிலைச் சிந்தித்தல் செயற்பாட்டால் இட் பெறும் மகிழ்வு, விருப்பு நிறைவேற்றம் (Wish Fulfilment) எனப்படுகின்றது.
இட் இயல்பூக்கங்கள் அனைத்தும் பாலியல் சார்ந்ததெனவும், குழந்தையின் மகிழ்ச்சி விருத்தியின் மிக ஆரம்பகால படிமுறைகளிலிருந்தே பாலியலின்
கொண்டுள்ளதெனவும். மகிழ்வின் பெரும்பகுதி பராமரித்தல் ,

Page 8
சிறகுகள்
தூய்மைப்படுத்தல் , சுய இன்பம் பெறுதல் ஆகியவற்றின் மூலம் செயற்படுகிறதெனவும் புராயிட் நம்பினார். இட் உட்பட ஆளுமையின் அனைத்து விசைகளுக்கும் உந்தலாயிருக்கும் பாலியற்சக்தியை "லிபிடோ” என அழைக்கின்றாள்
அடுத்த இதழில் தொடரும் . தொலைபேசி உரையாடல் (படித்ததும் சுவைத்ததும் ஒருவர் - ஹலோ நான் சம்பந்தம் பேசுகிறேன். மற்றவர்: “சம்பந்தம்” எல்லாம் நேரில்தான் பேசனும், போனில் பேசமுடியாது.
டாக்டர். உங்க பல்ஸ் பார்க்கணும் கொஞ்சம் கையை நீட்டுங்க நோயாளி:- "பல்” ஸை பார்க்க வாயைத்தானே காட்டனும், கையை ஏன்
காட்டச் சொல்றீங்க டாக்டர். l, L663F
/ー KM )
அறிவியல் தகவல்கள் ༽
01. E.C.G:-ElectricalCardio Graphy.
தமிழில்:- இதய மின்னலை வரைப்படம்
02 அன்னாசி பிறப்பிடம்: மேற்கிந்தியத் தீவுகள் கண்டு பிடித்தவர்: கொலம்பஸ் இதன் பயன்பாடு:- விட்டமின் C சத்து அதிக அளவு உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். இதய நோய், தொண்டைப் புண், உடல் வலியைக்குறைப்பதற்கும், சிறு நீரகக் கல்லைக் கரைக்கவும், வயிற்றுப் பூச்சியை ஒழிக்கவும், அன்னாசி அருமருந்தாகும்.
O3. ரோட்டரிச் சங்கம்
1905 ஆம் ஆண்டு மாசி மாதம் 23ம் திகதி சிகாகோ நகரில் பரல்ஹாரிஸ் என்ற வழக்கறிஞர் வீட்டில் நான்கு பேரைக் கொண்ட ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. அவர்கள் சுற்றாக ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு கூட்டத்தை நடத்தியதால் ரோட்டரிச் சங்கம் எனப்பட்டது. அதுதான் உலகம் முழுவதும் இன்று பரவியுள்ளது.
தகவல் பு, சந்திரன் ノ
(படித்ததும் சுவைத்ததும்) கம்பியூட்டருக்கும் விநாயகருக்கும் இடையில் உள்ள ஒற்றுமை என்ன? இருவருக்கும் இடையில் "மெளஸ்” இருக்கும்.
ஒருவர்:- உன்கிட்ட 92 ரூபாயை கடனாககொடுத்தால் 29 ரூபாயை திரும்ப தர்றியே
மற்றவர்- நீங்கதானே 92 ரூபாயை திருப்பி தரச்சொன்னிங்க
பு. பூரணச்சந்திரன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

So கலை, இலக்கியச் சஞ்சிை
கதாசிரியன் (சிறுகதை) ச.சதீஸ்காந்தன்
கதை எழுத வேண்டும்! அதுவும் تقدم பலரால் விரும்பிப் படிக்கப்படும் அந்த முன்னணிப் பத்திரிகையில் அது பிரசுரமாகIV வேண்டும்!
அந்த எனது வெறி உணர்வுதான் இன்று இந்த போலிஸ் நிலைய சிறைக் கூண்டில் அடைபட்டுக் கிடப்பதற்கு காரணமாகப் போய்விட்டது.
இந்த நெருக்கமான அறையில் வீசுகின்ற மனித வியர்வையின் நெடியும் ஏனைய கைதிகளின் பொறுப் பற்ற நடத்தையும் எனக்கு குமட்டலை உண்டு பண்ண சிறை கம்பிகளின் இடுக்கு ஒன்றில் முகத்தை செருகி ஆறுதல் தேட முயற்சிக்கின்றேன். இப்போது எண்ண அலைகள் பின்நோக்கிப் பாய்கின்றன.
எனது சக ஆசிரியர் ஒருவரின் ஆலோசனையில் நான் அந்த சட்ட விரோத மதுபான சாலையை தேடிக் கண்டுபிடிக்கிறேன் ஒதுக்குப் புறமாக அமைந்திருந்த அந்த ஒலைக் குடிசையின் குப்பி விளக்கு ஒளியில் ஒரு வயோதிபர் அமர்ந்திருக்க. மணல் பரவிய முற்றத்தில் நிலா ஒளியில் சில வாடிக்கையாளர்கள் தம்மை மறந்து பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் அங்கு சென்றிருந்தது குடிசையைத் தேடி அல்ல: ஒரு கதைக்கான கருவைத் தேடி! அந்த முதியவரை நெருங்குகின்றேன்.
"மாஸ்டர் நீங்களா?” என்று அவர் கேட்கவும் குப்பி விளக்கு ஒளிக்கு பழக்கப்படாத நான் அவரது முகத்தை நெருங்கிச் சென்று பார்த்து அடையாளம் கண்டு கொள்கின்றேன்.
"ஐயா நீங்களா?”
நான் எனது திகைப்பினை வெளிப்படுத்துகின்றேன்.
"ஓம் மாஸ்டர் நான்தான். இந்த முடவனை நீங்கள் இந்த சூழ்நிலையில்
காணநேர்ந்ததால் உங்களுக்கு ஒரு மலைப்பு ஏற்பட்டதென்றால் உங்களை இங்கு
பார்த்ததில் எனக்கு தீரப்போகாத ஒரு கவலை ஏற்பட்டிருப்பதை நீங்களும் உணர
வேண்டும்.
கலங்கிய கண்களை அவர் துடைத்துக்கொள்ளவும்.
நான் அவரை முந்தி . அவரிடம் சரணடைகிறேன். "இல்லை ஐயா. நான் இங்கு குடிப்பதற்காக வரவில்லை. உங்களுக்குத் தெரியும் . நான் ஒரு ஆசிரியன். ஒரு கதைக்கான கருவைத் தேடித்தான் நான்
இங்கு வந்தனான். ஆனால் உங்களை இந்த இடத்தில் பார்த்தது ஏமாற்றம்தான்.”

Page 9
>--Lசிறகுகள்ட ܒܢ>ܙܸ இப்போது அவரது முகம் ஆச்சரியத்தால் மலர்ந்தது, “தம்பி முடவனான | நான் எனது இயலாமையுடன் பகலில் அந்த ஆலமரத்தடி இடிந்த கட்டிடத்தில் அமர்ந்து . உங்களைப் போன்ற பொறுமைசாலிகளின் வாடிக்கையை வைத்து . சைக்கிள் வண்டிகளுக்கு காற்று அடித்தும் . அவற்றுக்கு ஒட்டுக்கள் போட்டும்
பிழைத்துக் கொள்கின்றேன். எனது மனச்சாட்சிக்கு ஒவ்வும் தொழில் நிச்சயமாக அதுதான். ஆனால் வன்செயல் காரணமாக ஒரு கால் இழந்து மறு கால் காயமுற்ற நிலைக்கும் தள்ளப்பட்ட எனக்கு பொறுப்புக்கள் காரணமாக இந்த வருவாய் | போதவில்லை.” t
தோளிலிருந்த துவாயை எடுத்து கலங்கிய கண்களை ஒற்றிக் கொள்கிறார். |
"ஐயா, உங்களுக்கு பொறுப்பு.?"
"ஓம் மாஸ்ரர் எனக்கு வயதுக்கு வந்த ஒரு பெண்பிள்ளை இருக்கின்றா. பாடசாலைக்கு போகின்றா.”
“உங்கள் மனைவி” . நான் வினவுகிறேன். “மாஸ்ரர் உங்களுக்கு மிக இள வயது, அனுபவம் போதாது. கால்களை இழந்த ஒருவனை ஒரு பெண் கணவனாக வைத்திருப்பாள். அனால் வருவாயை இழந்த ஒருவனை எவளும் உறவு பாராட்டமாட்டாள்.”
அவரது விரக்தி நிலை எனக்கு விளங்கியது. ஆனால் ஒரு கண நேரத்தில் அந்த குடிசை “பூட்ஸ்' கால்களின்| அட்டகாசத்தால் மிதித்தெறியப்பட்டபோது . ஒரு கதாசிரியருக்கு இருக்க வேண்டிய கருணை உணர்வு என்னுள் கிளர்ந்தெழுந்தது!
அந்த பொலிஸ் அதிகாரியின் அதட்டலுக்கு நானே விடை கூறினேன் "ஓம் ஐயா நான்தான் இங்கு சாராயம் விக்கிறது”
அந்த குடிசையின் ஓரமாக ஒலித்த ஈனமான பெண்குரல் எனது கவனத்தைத் திசை திருப்ப அங்கு எனது மாணவி ஒருத்தி நிலத்தில் வீசப்பட்டிருந்த தனது ஊனமற்ற தந்தையை அணைத்தபடி அழுதுகொண்டிருந்தாள்.
எல்லாம்தான் ஒரு கனவு போல் நடந்துமுடிந்து போய்விட்டது! மனச் சாட்சிக்கு விரோதமில்லாமல் நான் நடந்து கொண்டதில் எனக்கு சந்தோசம்தான்.
"பொலிஸ்காரன் ஒருவன் சிறைக்கூட கம்பியை தடியால் தட்டிச் செல்லவும் நான் நிமிர்ந்து பார்க்கின்றேன்.
என்னைப் பார்ப்பதற்காக அந்த சக ஆசிரியர் வந்தமை எனக்கு ஆறுதலாக இருந்தது.
"இந்தாருங்கோ மாஸ்ரர் கடித உறை. உங்களுடைய கதைக்குரிய கருவைக் கண்டுபிடித்து கதையும் எழுதியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்: அவரது கோபம் எனக்குப் புரிந்தது. நான் கூறினேன்.
இல்லை மாஸ்ரர், எனது மனச் சாட்சிக்கு விரோதமாக நான் நடப்பவனல்ல அந்த வயோதிபரால் இந்த துன்பங்களை அனுபவிக்க முடியாது.
அந்த ஆசிரியர் கேலிப் புன்னகையை உதிர்த்தபடி மீண்டும் பேசினார். ‘அதுசரி, ஆனால் துன்பங்களை அனுபவிக்க அவர் உயிரோடு இல்லை. நேற்றே அவர் இறந்துவிட்டார். நீர் தேவையில்லாமல் வீண் பொறுப்பேற்று உமக்கு சிரமத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலை, இலக்கியச் சஞ்சிை
தேடியதுதான் மிச்சம். நீர் இப்ப கதையத் தாரும் நான் தபால் செய்ய!”
ஒருகணம் விழிகளை இறுக மூடி எனது மனத்தைத் திடப்படுத்திக் கொண்டேன். இப்போ கடித உறையைப் பெற்றுக்கொண்டேன். கதை அனுப்புவதற்காக அல்ல அந்த மாணவிக்கு அனுதாபச் செய்தி அனுப்புவதற்காக,
முற்றும்
உலக நாடுகளின் இருளெனும் வில்லனை
g e இல்லாதொழிக்க தேசியச் சின்னங்கள். வந்த கதா நாயகன்
செல்வி. ஐ . வினோஜா, தரம் 03, சூரியன் முறி சண்முகா இந்து மகளிர் கல்லுாரி, க. ஆனந்தி
திருக்கோணமலை. ~~~~ இலங்கை வாள் ஏந்திய சிங்கம் சடடததை
ഖിങ്ങ്ബ (Läb இந்தியா அசோகச் சக்கரம் w
ஏழைகளின் ULUT60 - கோழி
எதிரி - L6/TO. அவுஸ்திரேலியா - &hl:ՖT(5 விக் அமெரிக்க d5(gG5 -- 666 ஜேர்மனி வெள்ளைக் கொக்கு உலகத்தை நம் கனடா - -عد -سست உள்ளங்கையில் ದಿ... ۔۔۔۔۔۔۔ : ( ராஸ்) உள்ளடக்கும்
தனனட் lar ۔۔۔۔ நீல காககு உளவாளி. கணினி வட அயர்லாந்து முத்து சென்னிப் பறவை டென்மார்ச் க. ஆனந்தி
L6)TTT85 85-133560)y | எகிப்து -- தாமரை
இத்தாலி t வெள்ளை அல்லி குடிகாரன் ரஷயா 59 குடியில் வீழ்பவன் மெக்சிக்கோ நாகதாளி
சீகம் சிவங்க ே குடிகாரன பாரசகம - சவநத ரோசாபபு விமாமல் குடிப்பவன் சுவிட்சர்லாந்து - செல்பிளஸ் -கெட்டிக்காரன்ஸ்பெயின் மாதுளம்பழம் -சித்தி || ஸ்கொத்லாந்து - (ypÜGFọ.
மருத்துவக் குறிப்பு பல் நோய்க்கு:- சுக்கு, கடுக்காய், நாயுருவி, வேர்ப்பட்டை இவை சமன் கூட்டி வறுத்து பொடித்து பல்லில் தேய்க்க பல் நோய், பல் அசைவு நீங்கி பல் உறுதி பெறும்.
குதிக்கால் வேதனைக்கு:- கற்பூரம் ஐந்து கிராம், நல்லெண்ணைய் கால் போத்தல், சாராயம் கால் போத்தல் ஒன்று சேர்த்து அரைத்து பூசவும்.

Page 10
á リーョ
சிறுகதை ஆக்கம்
9Q) ஆய்வு திருமலை வி. என். சந்திரகாந்தி இலக்கிய படைப்புகளில் இன்று சிறுகதைக்கு பிரதான இடம் ஒன்று உண்டு. பத்திரிகைகள் சஞ்சிகைகளில் பிரசுரமாகும் சிறுகதைகள் அவ்வப் பத்திரிகைகள் சஞ்சிகைகளின் தரத்தை நிர்ணயிப்பதில் பிரதான பங்காற்ற முடியும். அதே சமயம் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகும் சிறுகதைகள் எல்லாமே தரமுடையனவாக இருக்குமென்றோ ஒரு குறிப்பிட்ட எழுத்தாளன் எழுதும் அனைத்து சிறுகதைகளுமே சிறந்தவையாக இருக்குமென்றோ கருதவியலாது. தவிர, ஒரு படைப்பாளி உருவாகின்றானே தவிர அவனை எவராலும் உருவாக்க முடியாது. ஒரு படைப்பாளிக்கு அவசியமானது பட்டப் படிப்பு அல்ல. அது வேண்டுமாயின் மேலதிக தகைமையாக இருக்கலாம். ஆனால் அடிப்படை தகைமையானது அவனது இரசிக்கும் தன்மையாகும்.
வாழ்க்கையின் நுணுக்கங்களை, நடைமுறைகளை, மனித இயல்புகளை துல்லியமாகவும் இதய பூர்வமாகவும் கிரகித்துக் கொள்ள எவன் ஒருவனால் முடிகிறதோ அவனே உண்மையான படைப்பாளியாக பிரகாசிக்க முடியும். அவனது படைப்புக்கள் வாசிப்பவர்களின் உறங்கிக்கிடக்கும் உணர்வுகளை நிச்சயம் விழிப்புக்கு கொண்டு வரும். மரத்துப் போன மன உணர்வுகளுடன் வாழ்பவர்கள் கூட தமது நாளாந்த வாழ்க்கையில் பற்றுக் கொண்டு மற்றவர்களுடன் இணைந்து வாழ தலைப்படுவர்.
மனித வாழ்வு துரிதமடைந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் சிறுகதை இலக்கியம் தான் வாசிப்பு உலகில் நீடித்திருக்கும் இயல்பினை பெற்றிருக்கிறது.
தரமான சிறுகதைகள் எவ்வாறு உருவாகின்றன? சிறுகதைகளை படைப்பதற்கு இலக்கணம் அல்லது வரம்பு முறைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனவா? இக் கேள்விகள் பலரது மனதிலும் தொக்கி நிற்கின்றன.
ஒரு சிறந்த படைப்பாளி கூட தான் என்ன விதிமுறைகளைப் பின் பற்றி எழுதுகின்றேன். என்பதை பாதி புரிந்தும் மீதி தெரியாமலுமே தனது ஆக்கங்களைப் படைக்கின்றான், அவன் தனக்குள் சில நியதிகளை ஏற்படுத்திக்கொண்டு சிறுகதைகளைப் படைக்கும் போது சில கதைகள் நன்கு அமைவதையும் சில இலக்கினை எட்டாமல் போவதனையும் அவதானிக்கின்றான். ஈற்றில் அவனது அனுபவமே அவனுக்கு கைகொடுக்கின்றது.
இரகசியத் தன்மை ஒரு படைப்பாளிக்கு எங்ங்ணம் அவசியமோ அதே அளவுக்கு கற்பனை ஆற்றலும் அவசியமாகிறது.
உலகில் நடைபெறுகின்ற சம்பவங்களை உள்வாங்கும் படைப்பாளி அதனை கற்பனை என்ற மெருகூட்டி கலைத்துவத்துடன் வெளியிடும்போதுதான் அது இலக்கியமாகின்றது; இலக்கிய கலைஞர்களுக்கு விருந்தாகிறது.
கரு:-
சிறுகதையின் பிரதான அம்சம் மையப்பொருள் அல்லது கரு
Theme) எனப்படும். கருவாக அமைகின்ற விடயங்களை பொது நோக்கில் மூன்று
 

கலை, இலக்கியச் சஞ்சிை
பிரிவுகளாக குறிப்பிடலாம் அவையாவன, "வாழ்க்கையின் ஒரு நிகழ்வு. "கதாபாத்திரத்தின் இயல்பு' 'வாழ்க்கையின் சிக்கல். ஒரு படைப்பாளி இயன்றவரையில் பொதுப் பிரச்சனைகளையே கருவாக எடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆக்கம் மாறுபட்ட வாசகர்களின் கவனத்திற்கும் சுவைக்கும் ஏற்றதாக அமைய முடியும்.
கதாபாத்திரங்கள்
சிறுகதை ஒன்றின் மையப் பொருளை நடாத்திச் செல்வதற்கு ஆகக்கூடிய அளவு எத்தனை கதாபாத்திரங்கள் தேவையோ அதற்கு மேற்படலாகாது. கதாபாத்திரங்களை வர்ணிக்கக் கூடாது. அவ்வப் பாத்திரங்களின் இயல்புகளை ஓரிரு வசனங்கள் வாயிலாக தொட்டுக்காட்ட வேண்டும். பின்னர் அந்த குணாம்சத்திற்கு ஏற்ப அவ்வக் கதை மாந்தர்கள் கதையில் உலாவ வேண்டும் இயல்புக்கு அன்னியமாக புறம்பாக பாத்திரம் ஒன்று பேசுமாயின் அது கதையின் சுவாரசியத்தை பாதித்துவிடும்.
நிலைக் களன்
கதை சம்பவிக்கும் நிலைக் களன் பலவாக இருக்கக்கூடாது. ஒரே நிலைக்களனில் கதை சம்பவிக்கும் போது வாசகர்களின் கவனம் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும் பல நிலைக்களன்களுக்கு கதை மாறும் போது கதையைச் சுவைப்பதில் வாசகருக்கு இடையூறு உண்டாகின்றது. எடுத்துக் கொண்ட கருப் பொருள் எந்தக் நிலைக்களனில் நடைபெறுதல் வேண்டும் என்பதை படைப்பாளி முதலிலேயே தீர்மானித்துக் கொள்ளல் வேண்டும்.
காலம்
சிறுகதை இலக்கியத்தில் மிகவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படவேண்டிய ஒரு விடயம் சம்பவம் நடந்தேறும் காலம் மிகவும் குறுகியதொரு காலகட்டத்தில் சம்பவம் நடந்து முடிய வேண்டும். ஓரிரு மணித்தியாலத்தில் அல்லது ஒரே நாளில் சம்பவிப்பதாக கதை சித்தரிக்கப்பட்டால் அது சிறுகதையின் ஏனைய அமசங்களில் காட்டப்படும் சிக்கனத் தன்மையுடன் ஒத்துப் போகின்றது ஒரு கால் நூற்றான்டு சம்பவங்களை கூட கதை அசை போடலாம். ஆனால் சுருக்கமான ஒரு காலப்பகுதியில் அதனை வாசகன் கிரகிக்க கூடியதாக தொட்டுக் காட்ட வேண்டும் கதையை ஒரு காலகட்டத்தில் நகள்த்திச் சென்ற பின்னர் மற்றொரு காலகட்டத்திற்கு நகர்த்தும் உத்தி சிறுகதைக்கு அழகு சேர்க்காது. "சுமார் பத்து வருடங்களுக்கு பின்னர்” என்றவாறெல்லாம் வசனங்கள் அமையலாகாது.
கதைகூறும் முறை
கதாசிரியன் தானே சம்பவத்தை கூறுவதாக கதையை நகர்த்துவது ஒரு முறை. இதில் உள்ள பிரதானமான அசெளகரியம் என்னவென்றால் கதைக்காக எடுத்துக்கொண்ட கரு சம்பந்தமாக ஒரு கதாசிரியனுக்கு இருக்கக்கூடிய அறிவுப்பற்றாக்குறை எங்காவது வெளிப்பட்டுவிடக்கூடிய ஆபத்துத்தான். சில சிக்கலான
So -19

Page 11
சிறகுகள்
மையப் பொருளை வைத்து பின்னப்படும் சிறுகதைகள் இந்த உத்தியாலன்றி வேறு வழிகளால் கூறுதலும் இயலாது. அதே போன்று கதாசிரியனுக்கு புகழ் சேர்க்கக்கூடிய தரமான சிறுகதைகள் உருவாகுவதும் இந்த உத்தியாலேயாகும்.
அடுத்து தன்மை ஒருமையில் கதை கூறும் முறைமை, ஒரு கதாபாத்திரம் தானே கதை கூறுவது போல கதையை நகர்த்தும் முறைமை கதாபாத்திரத்தின் பலம் பலவீனம் இயல்புகளுக்கு அமைய சம்பவங்கள் நோக்கப்படும். கதாசிரியன் பல தவறுகளிலிருந்து தான் நழுவிக் கொள்ள இந்த உத்தியானது வழி அமைக்கும். தவிர, தன்மை பன்மையிலும் கதை கூறல் முடியும். அதே போன்று ஒவ்வொரு பாத்திரமும் தனது பங்கிற்கு கதை கூறுவதாகவும் அமைக்க முடியும். இவை அதிக சாத்திய மற்ற பாணிகள்.
உத்திகள்
மிகவும் வியந்து பேசப்படும் உத்தி ‘நனவோடை உத்தி’ என அழைக்கப்படும். மனித இனம் எப்போதும் காலம் பற்றிய சிந்தனையில் இருப்பதில்லை. நிகழ்காலம் பற்றிச் சிந்திக்கும். பின்னர் இறந்த காலத்திற்கு பாயும். உடனேயே எதிர்காலம் பற்றி எண்ணி ஏங்கும். சிறுகதையொன்றினை இலகுவாகவும் அனைத்து வரையறைகளுக்கும் உட்பட்டதாக அமைத்துக் கொள்வதற்கு இந்த உத்தி கை கொடுக்கின்றது.
நம்பகத் தன்மை
சிறுகதையொன்று சிறப்பு பெறுவது அல்லது கனதி பெறுவது பெரும்பாலும் அதனது நம்பகத் தன்மையிலேயே தங்கியிருக்கின்றது. வெறுமனே கற்பனைகள் மூலமோ விரக்தி செயல்கள் மூலமோ எதிர்பாராத முடிவுகளை திணித்தோ கதையை வளப்படுத்த முடியாது. கதையின் சம்பவங்கள, உரையாடல்கள், முடிவு அனைத்திலும் ஐயத்திற்கு இடமற்ற நம்பகத் தன்மை இருக்கவேண்டும்.
(pg. 6)
சிறுகதை தான் எடுத்துக் கொண்ட விடயத்தைத் தொட்டுக்காட்டி செல்வதாகவே இருத்தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் முடிவும் உறுதியிட்டு கூறப்படாமல் வாசகனின் சிந்தனைக்கு இடம் கொடுப்பதாக சிந்தனையை துாண்டுவதாக இருக்க வேண்டும் என்றே கருதப்படுகின்றது.
மேற்கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் ஒரு சிறுகதையின் ஆக்கத்திற்கு முற்று முழுதான வரையறைகள் அல்ல என்பதை கூறவேண்டியதில்லை. ஆயினும் சில புதிய படைப்பாளிகள் பரிணமிக்க இவை வழிகோலக்கூடும். அந்த வகையில் அவர்களுக்கு மேலும் சில ஆலோசனைகள் வழங்க முடியும்.
ஆக்கங்கள் ஆரம்பத்தில் சிறியனவாக அமைவது நன்று. காதலை வைத்து கதை கூற முற்படக்கூடாது. வாழ்க்கையில் அவதானிக்கக்கூடிய ஏனைய சுவாரசியமான அம்சங்களை கதைப் பொருளாக எடுத்து கதை கூற பழக வேண்டும். அதுவே உண்மையான பயிற்சிக்கு வழிவகுத்து திறமையை வெளிக்கொணரும்
 

Se கலை, இலக்கியச் சஞ்சிை
காதலை வைத்து எவரால்தான் கதை புனையமுடியாது?
கதையை திரும்பத் திரும்ப படித்து தவறுகளை அகற்றுங்கள் | எழுதிய உடனேயே பத்திரிகைகளுக்கு உங்கள் ஆக்கங்களை அனுப்பாதீர்க்ள் கால அவகாசம் சிறுகதையை மேலும் மேலும் மெருகூட்ட சந்தர்ப்பம் வழங்கும். கதைகளில் உங்கள் விவேகம் துலங்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இதுவரை வாசித்த கதைகளிலிருந்து உங்கள் கதை மாறுபட்டு இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அவசியமற்ற முறையில் ஏனைய மொழிச் சொற்களை பிரயோகிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நிச்சயம் ஒரு நாள் உங்கள் ஆக்கத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
பெரிய நாடுகள்
நிலப்பரப்பில்
பரபL நாடு (ச.கி.மீ) அமைவிடம்
ரஷ்யா 170 75 000 ஐரோப்பா - ஆசியா
E60 99 76 139 வட அமெரிக்கா சீனா 95 61 000 ஆசியா அமெரிக்கா 93 72 614 வட அமெரிக்கா பிரேசில் 85 11 965 தென் அமெரிக்கா அவுஸ்திரேலியா 76 82 300 | தென்பசுபிக் இந்தியா 32 87 263 ஆசியா ஆர்ஜென்டினா 27 76 654 தென் அமெரிக்கா கஸகஸ்தான் 27 17 300 | ஐரோப்பா - ஆசியா சூடான் 25 05 813 ஆபிரிக்கா مهمی
(படித்ததும் சுவைத்ததும்) மாணவன்:- விதியை என்னால் வெல்ல முடியும் சார் ஆசிரியர்:- எப்படி? மாணவன்:- என் பேர் தான் மதியாச்சே விதியை மதியால் வெல்லலாம்னு நீங்க தானே சொன்னிங்க சார்!
மேகநாதனைப் பார்த்ததில் இருந்து ஆட்டம் போடுறானே யார் இவன்? அவன் "மயில்” வாகனம்
J600, 8 சந்திரன்

Page 12
So− சிறகுகள்
வாசகர் நோக்கு.
சிறகுகள் சஞ்சிகையின் இறகு 01 கிடைக்கப் பெற்றேன். நல்ல முயற்சி, நல்ல ஆரம்பம் பரந்து பட்ட அளவில் படைப்பாளிகளை உள் வாங்கிக் கொள்வதிலும் வாசகர்வட்டத்தை உருவாக்கிக் கொள்வதிலும் ஒரு சஞ்சிகை வெற்றி பெறுமாயின் அதன் சிரஞ்சீவித்துவத்திற்கும் தடைகள் ஏற்படாது! இதில் சிறகுகள் சஞ்சிகை வெற்றி பெறும் என நம்புகிறேன்.
அடக்கமான, கனதியான ஆசிரிய தலையங்கம், சுய ஆக்கங்களாக அமைந்த கவிதைகள், சிறு கதைகள் ஆகியன சஞ்சிகையை வளப்படுத்தியுள்ளன. முற்று முழுதாக புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்கள் மட்டுமே சஞ்சிகையில் இடம் பெற்றிருந்தமையை ஆரம்பத்தில் ஒரு குறையாக சுட்டிக்காட்ட முடியாதாயினும் சஞ்சிகையின் வளர்ச்சிக் கிரமத்தில் இத் தவறு நீக்கப்படும் என நம்புகிறேன்.
சஞ்சிகையின் பின் அட்டையில அனாவசியமான படங்களைத் தவிர்த்து நல்லதொரு கவிதைக்கு அந்த இடத்தை ஒதுக்கலாம் அல்லவா? மேலும் இலக்கியம் சார்நத கட்டுரைகள், ஆக்க இலக்கிய கர்த்தாக்களுடனான நேர்காணல் ஆகியவற்றை இணைத்துக்கொள்ளலாம்.
ஆசிரியத் தலையங்கத்தில் எவ்வித முன் அனுபவமும் இன்றி ஆர்வத்தை மூலதனமாகக் கொண்டு எமது சுய முயற்சியில் (சஞ்சிகையை) சிறகடிக்க விட்டிருக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது நெஞ்சைத் தொட்டது! | சிறகுகள் சிறந்தோங்க வாழ்த்துகிறேன்.
செல்வி ச. ஜெயந்தி, கிழக்குப் பல்கலைக்கழகம், செங்கலடி.
சிறகுகள் ஆசிரியர் குழுவினருக்கு,
சிறகுகள் சஞ்சிகையை வாசித்தேன். ஆக்கங்கள் அனைத்தும் சிறப்பாக
இருந்தது. குறிப்பாக கதைகள், கவிதைகள் எனக்குப் பிடித்து இருந்தது. உங்கள்
அடுத்த வெளியீடு எப்போது வரும் என்று காத்திருக்கிறேன்.
இப்படிக்கு
சிறகுகள் வாசகன், எடென்சியஸ் (விஜே), அலஸ்தோட்டம், திருக்கோணமலை,
அன்பான சிறகுகள் ஆசிரியர்களுக்கு, எழுத்தாற்றலுள்ள எத்தனையோ மாணவ மாணவிகளுக்கு சிறகுகள் களமமைத்துக் கொடுத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த முயற்சி மூலம் இலைமறை காய் மாணவ மாணவிகள் வெளிவந்து சிறகடித்திருக்கிறார்கள். அத்துடன் சிறகுகள் பற்றிய குறை நிறைகளை எழுதும் உரிமையும் எமக்கு கிடைத்திருக்கிறது. எனவே இந்த சிறகுகள் சஞ்சிகை என்றும் எம் மத்தியில் சிறகடிக்க நான் விரும்புகிறேன். சிறகுகள் தொடர்ந்து சிறகடிக்க எனது வாழ்த்துக்கள்.
என்றும் சிறகின் வாசகி ஆஷா மகாலிங்கம், பாலையூற்று, தி/புனித மரியாள் கல்லூரி, திருக்கோணமலை,
ala 35 asse ................ ‘சிறகுகள்” பற்றிய உங்கள் விமர்சனங்களையும், ஆலோசனை
களையும் வாசகர் நோக்கு பகுதியினுடாக வரவேற்கின்றோம்.
 
 

So கலை, இலக்கியச் சஞ்சில்ை
01.
02.
03.
04.
O5.
06.
08.
09.
O () தததுவமுத:துககள நல்ல எண்ணங்களைத் தூவினால்தான் நல்ல பலனைப் பெறலாம் (அண்ணா) எந்த வேலையும் இழிவு இல்லை சோம்பல்தான் இழிவு. (கிரீஸ்)
எழுதப்படும் சொல்லை விட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.
(ஹிட்லர்) நாணயமாக இருப்பவரிடம் எப்பொழுதும் குழந்தைத்தனம் காணப்படும்
(வள்ளலார்) சோதனைகள்தான் ஒரு மனிதனை அவனுக்கு அறிமுகப்படுத்துகிறது. (6)6ire 16) rif) ஆட்சி முறைகள் அனைத்துமே சுதந்திரத்திற்கு எதிரானதுதான்.
(ஹென்றி எப் மெங்கன்) அன்பளிப்பு பொருளைவிட அதை அளிக்கும் முறைதான் மதிப்பு மிக்கது
(பியோர் கொர்ளேயங்) அழகு இயற்கையின் புகழ் மிக்க அன்பளிப்பு
(ஹோமர்) வறியவரின் குழந்தைகள் வளமான செல்வங்கள்
(தமாஸ்.புல்லர்) விழிப்பதற்கே உறக்கம், வெல்லுவதற்கே தோல்வி, வாழ்வதற்கே வீழ்ச்சி
(ராபர்ட் பிரவுனிங்)
தொகுப்பு கோ. மிலோஜினி są68ó6 7 C விவேகானந்தா கல்லூரி, உவர் மலை.
நெஞ்சு நோவிற்கு:-
கலக்கி காலையில் மாத்திரம் குடிக்கவும். சளியுடன் கூடிய இருமலுக்கு:-
வேப்பிலை சமணடை எடுத்து சூறணித்து காலை, மாலை தேனில் அருந்தவும். பற்புழுவுக்கு:- வேர்க்கொம்பு, வெள்ளுள்ளி, வேப்பம் நெட்டு, கண்டங்கத்தரிக்காய், பழம், வேர், வேப்பம்பட்டை, பூவரசம் பட்டை சமன் கூட்டி கசாயித்து நன்கு வற்றியபின் வாய் கொப்பளிக்கவும்.
மருத்துவக் குறிப்புகள்
ぶ*
கோழி முட்டை, சாராயம், எலுமிச்சம் புளி, வெந்நீர், கற்கண்டு சேர்த்துக்
சுக்கு, மிளகு, திட்பிலி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், நற்சீரகம்,

Page 13
ஊ-s சிறகின் தேடல்.
வாசகர்கள் நல்ல விடயங்கள் எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும் என்பதே சிறகின் விருப்பம். பறந்து திரிந்து படித்து நல்லதெனக் கண்டவற்றை வாசகர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலிலே இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் உடன்பட்டால் உவகை கொள்ளுங்கள் முரண்பட்டால் எடுத்துக் கூறுங்கள். wn
is is sssssssss ஒப்புக்கொண்டார் என ஒரு வாதமும் - இல்லவே இல்லை என ஒரு வாதமும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. வள்ளுவர் குறள் எழுதிய காலத்தில் கடவுள் நம்பிக்கை உள்ள மக்களே தமிழ் நிலத்தில் வாழ்ந்தார்கள் என்பதை தொன்மை வாய்ந்த இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது.
எல்லையற்றது வான்வெளி விண்வெளியின் விளிம்பு எதுவென்று இயற்கை கோடு போட்டு வைக்கவில்லை. விரிந்து பரந்து கிடக்கும் இந்தப் பெரு வெளியில் அக்காலத்து "வானசாஸ்திரிகள்” முதல் இக் காலத்து விஞ்ஞான மேதைகள் | வரையில் கண்டறிந்து கூறும் கோள்கள் மட்டுமே நமது எண்ணிக்கை கணக்கிற்கு
2 LUL606):
அந்தக் கோள்களை விடப் பல் மடங்கு பெரிதான விண் மீன்கள் இலட்சோப இலட்சம் மைல் தொலைவுகளுக்கு அப்பால் சுழன்று கொண்டு கண் சிமிட்டுகின்றன என்பதையும் நாம் அறிகின்றோம். அந்த விண் மீன்கள் எத்தனை எத்தனையோ?
வெப்பமிகு கோள்களின் ஒன்றான சூரியனிலிருந்து சிதறிய ஒரு துண்டுதான் இந்த பூமி எவ்வளவோ கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு நெருப்புப் பந்தாக இருந்த இந்த புவி குளிர்ச்சியடைந்து நீர்வளம், நில வளம், மலைவளம். மரம் செடி கொடி வளம் என்றெல்லாம் வளங்களைப் பெற்று புழு, பூச்சி, கிருமிகள் போன்ற உயிரினங்கள் தோன்றக்கூடிய பக்குவத்தையும் பெற்றது.
உயிரினங்களிடையே தோன்றிய உடலுறவில் விலங்கினம் பறவையினம் மனித இனம் முதலிய இனங்கள் தோன்றின.
வானிலிருந்து மழை பொழிந்தது - காற்று வீசியது - இயற்கையின் அற்புதங்களை யெல்லாம் கண்டு வியப்படைகிற அளவுக்கு மூளை வளர்ச்சி இருந்தது - இந்த வளர்ச்சி மற்ற உயிரினங்களிலிருந்து மாறுபட்ட ஒன்றாகும். ஏதோ ஒரு சக்தி இல்லாமல் இத்தனை மாற்றங்களும் புவியிலும் சரி, விண்வெளியிலும் சரி, நடைபெற முடியாது எனத் தீர்மானித்த மனிதன் அந்த சக்தியை கடவுள் என வர்ணித்தான்.
அதற்கு கை, கால்கள் உண்டா? அது பேசுமா? வரம் அருளுமா? இந்தக் கேள்விக்கு இடம் தராதவர்கள் அந்த சக்தியை ஒப்புக்கொண்டனர்.
எங்கோ ஒரு இடத்தில் ஒரு ஆள் அமர்ந்துகொண்டு விண்ணிலும் மண்ணிலும் இத்தனை அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நம்பமுடியாவிட்டாலும், அண்ட பகிரண்டமும் அடங்கவொரு நிறைவாகிய ஒரு சக்தியின் இயக்கத்தால்தான் | எல்லாமே அசைகின்றது என்பதில்; கடவுளை அறவே எதிர்ப்பவர்களும் எதிர்க்
S.துக் கொண்டிருக்க முடியாது.!
 
 
 

கலை, இலக்கியச் சஞ்சிை
அந்த சக்தியை “இறைவன்” என்றனர்! “இறை” என்று se கூறினர்! ஆனா? பெண்ணா என்று தெரியாத அளவுக்கு "கடவுள்" என்றனர். தெய்வம் என்றனர்.!
மதங்கள் தோன்றிய பிறகு அவரவருக்கு ஏற்றவாறு பெயர்களையும் சூட்டினர். - வள்ளுவர் தான் வாழ்ந்த காலத்து நிலையை தன் குறளில் வடிக்கத் தவறவில்லை. இறை அல்லது இறைவன் அல்லது தெய்வம் இவற்றுக்குச் சொல்லப்படும் இலக்கணங்களைப் புறக்கணிக்காது மட்டுமல்ல; அந்த இலக்கணங்களின் வடிவமாக மாந்தர் திகழ வேண்டும் என விரும்பினார் "கடவுள் வாழ்த்து” என்ற அதிகாரத்தில் எழுத்துகளுக்கு "அகரம்" முதல் என்பது போல, உலகிற்கு ஆதி பகவன் அடிப்படை என்றார். "வாலறிவன்" என்றால் தூய்மையான அறிவு வடிவமாக விளங்கக் கூடியவன் எனக் கூறி, அவன் திருவடிகளை தொழாவிட்டால் கற்றும் பயனில்லை என்று சுட்டிக் காட்டினார்.
“வேண்டுதல் வேண்டாமை இலான்” - அதாவது விருப்பு வெறுப்பு இல்லாதவனுடைய நிழலை நாடுபவர்க்கு துன்பம் இல்லை என்று குறிப்பிட்டார் "தனக்குவமை இல்லாதான்", "அறவழி அந்தணன்" இவ்வாறெல்லாம் கடவுள் எனப்படும் சொல்லுக்கு இலக்கணம் வகுத்தார். இறைவனுக்குரிய இத்தனை பெருமையும் கொண்டு ஒருவன் வையத்தில் வாழவேண்டும் என்று வள்ளுவர் | கருதினார்.
அதனால்தான் அவர், திட்டவட்டமான ஒரு கருத்தை உலகிற்கு அறிவித்தார்" தெய்வத்திற்கென எத்தனையோ அருங் குணங்கள் சொல்லப்பட்டுள்ளன. உலகில் வாழ வேண்டிய அற நெறியில் நின்று வாழ்பவன் வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்திற்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்”
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’
நன்றி : குறளோவியம்
தேவதாஸ் யதார்த்தம்
தெரிந்துதான் எதிர்பார்ப்புகள்
சொன்னாயா? பெண்ணே எதிர்மாறாகும்போது
தாடி எனக்கு ஏமாற்றம்
அழகென்று! தவிர்க்கமுடியாதது
க.ஜீவா - க.தேவன்.
உயர்ந்த ரக பிச்சைக்காரர் பெண்வீட்டாரிடம் கேட்கும் கெளரவ பிச்சை!
சீதனம் -கணேசமூர்த்தி

Page 14
சிறகுகள்
சிறகுகள் குறுக்கெழுத்துப் போட்டி
- O2
இடமிருந்து வலம் 1. இவரும் ஒரு திரைப்பட கதாநயகன் 6. நுாலை இதன் இணை எனலாம் 8. வேதனை 11. இதைமீட்கத்தான் இன்றைய
போராட்டம். 19. ஆணுக்கு தாய்க்குபின் தக்க துணை
இவள் தான் (குழம்பியிருக்கிறது). 24. பனிக்காலத்தில் இது இருக்கும் 29. குருதியை கொண்டு செல்வது. 40. கால் நடைகளின் உணவு. 43. நீர் நிலைகளில் ஒன்று.
. c. i. 47. வீம்புஎன்று சொல்லலாம் & s a Y\ o (குழம்பியுள்ளது) | சிறகுகள் குறுக்கெழுத்துப் போட்டியில் பங்கு மேலிருந்து கீழ்
பற்றும் வாசகர்கள் விடையை மாத்திரம் 1. ଶ୍ଵେତ (b மாதம்
தபாலட்டையில் எழுதி கீழ்காணும் எமது முகவரியை கத்தரித்து ஒட்டி அனுப்புங்கள். எமது முகவரி ஒட்டப்படாத தபாலட்டைகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. 10 பேர் கொண்ட தெரிவில் ஒருவருக்கு ரூபா 100/= பரிசாக வழங்கப்படும். பாராட்டை
2. இலங்கையில் துறைமுகங்கள் உள்ள
நகரங்களில் ஒன்று. 6. கணிப்பு என்று சொல்லலாம். 7. ஒரு திரைப்பட நடிகை 12. நடைமுறை உண்மை
24. 明 பரிசாகப் பெறும் 09 அதிஸ்ட சாலிகளின் 29 ஃ"ேயதாக இது பெயர் விபரங்கள் சிறகில் சிறகடிக்கும் வர்ணிக்கப்படுகிறது.
விடைகள். (25/08/2002) திகதிக்கு முன் எமக்கு வந்து சேர வேண்டும். ஆசிரியர்
o 42. DL. லை கீழாகவுள்ளது) குழுவின் முடிவே இறுதியானது گھر L」 (5 ழாகவுளளது
குறுக்கெழுத்துப் போட்டி 01 இற்கான வாழ்க்கையா? N
விடைகளும் பரிசுபெற்றவர்கள் விபரமும் பிறந்தோம், வளர்ந்தோம், குறுக்கெழுத்து போட்டி 03 இல் (அதாவது சந்தோசப்பட்டோம், துன்பப்பட்டோம் மூன்றாவது சிறகில் வெளியாகும்).
41. பூமி. (தலை கீழாகவுள்ளது)
இறப்போம் இது ஒரு
வாழ்க்கையா? எம் மண்ணுக்காய் சிறகுகள் மக்களுக்காய்
க்கெழுத்துப் போட் என்ன செய்தோம்? குறு O2 ཨཱ་ ws எம்மால் குடும்பமும், சமுதாயமும் இல-02, சறகுகள சஞசகை பயன்பெற வேண்டும் அதுவே 514, மின்சார நிலைய வீதி, எம் பிறப்பின் பயன் திருக்கோணமலை. \ பூ. புவனா )
*ーミ。
எமது முகவரி
 
 
 
 
 
 
 

கலை, இலக்கியச் சஞ்சிை
எனது பார்வையில்.
இன்று எம்மிடையே இரண்டறக் கலந்து போயிருக்கும் கலாச்சார சர்கேடுகளை நாம் கண்டும் கண்மூடிக் கொண்டிருக்க முடியாது. இவற்றை சுட்டிக்காட்டும் உரிமை உங்களுக்கும் உண்டு. “எனது பார்வையில்” என்ற இப்பகுதியினுாடாக நீங்கள் உங்கள் கருத்துக்களை எடுத்துக்கூறலாம். காத்திரமான கருத்துக்களை எடுத்தியம்புவது உங்கள் பொறுப்பு. இந்த வாசகியின் கருத்தை எதிர்த்தோ, ஆதரித்தோ அல்லது வேறு கலாச்சார f(-)ം. ില്ക്ക് (1-(
சினிமாவும் சின்னத்திரையும்
21ம் நூற்றாண்டில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைத்து மனிதர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது இந்த சினிமாவும் சின்னத்திரையும்.
இவற்றால் மனிதர்களுக்கு நன்மையை விட தீமையே அதிகமாக ஏற்படுகின்றது. மனிதர்களின் ஆற்றல்களையும் அறிவுத் திறனையும் வளர்க்கக்கூடிய விதமாக முன்னைய சினிமா அமைந்திருந்தாலும் தற்போதைய சினிமாக்கள் அவ்வாறு அமைவதில்லையென்பது பெரும் குறையாகத் தான் இருக்கின்றது. (ஒரு சில சினிமாக்கள் இதற்கு விதிவிலக்காக அமைவதுண்டு) தற்போது கால இடைவெளியின்றி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, விதம் விதமாக எடுக்கப்பட்டு, விரும்பிய காலங்களில் வெளியீடு செய்யப்படும் போது பொழுது போக்கிற்காக சினிமா பார்ப்பவர்கள் கூட சினிமாவிற்காக முழுப் பொழுதையும் பிரயோசனம் இல்லாமல் செலவழிக்கின்றனர். தம் கடமைகளையும், காரியங்களையும் மறந்து சினிமாவுக்கே அடிமையாகி விடுகின்றனர் என்பது கசப்பான உண்மையாகும்.
தொலைக்காட்சியில் காட்டப்படும் (சின்னத்திரை) நாடகங்கள் பார்க்கும் குடும்பப் பெண்கள் தங்கள் வீட்டுக் கடமைகளை சரிவர செய்வதில்லை. நாடகங்கள் பார்ப்பதற்காக வேலைகளை அவசர அவசரமாக செய்யும் போது ஆபத்தும் ஏற்பட்டு விடுகின்றது. வீட்டு வேலைகளை பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு சின்னத்திரைக்கு முன்னே பழிகிடக்கும் எத்தனையோ குடும்பப் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். பிள்ளைகளும் அரைகுறையாக தங்கள் வேலைகளை முடித்து விட்டு அவர்களும் சின்னத்திரையில் கவனம் செலுத்தும் போது பெற்றோர்களால் அதை கண்டிக்க முடியாது போய்விடுகின்றது. பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோருக்கும் பெரும் பங்கு உண்டு. பாடசாலைக்கும் பிரத்தியேக வகுப்பகளுக்கும் தவறாது அனுப்பி வைப்பதும், வீட்டில் தொடர்ந்து பள்ளிப்பாடங்களை படிக்க துாண்டுவதும் வீட்டில் இருக்கும் குடும்பப் பெண்களின் கடமையாகும் “அறைக்குள் இருந்து ஒழுங்காக படிக்க வேண்டும்” என்று பிள்ளைகளுக்கு அறிவுறுத்தி விட்டு தாய்மார்கள் சின்னத்திரைக்கு முன்னால் அமர்ந்து விடுவதால் அந்த பிள்ளைகளின் கவனமும் பாடத்தில் செல்லாது சின்னத்திரையின் பால் ஈர்க்கப்படுவதனால, மாணவ சமுதாயம் கூட சீரழிந்து விடுகின்றது. குடும்பப் பெண்களும் இதைப்பற்றி அக்கறை கொள்ளாமல் விடுவதால் மாணவ சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது. “எனது பார்வையில்” இந்த சினிமாவும் சின்னத்திரையும் எம்மையும் எமது சமூகத்தையும், கலாச்சாரத்தையும் பாதித்து வரும் கொடிய நோயாகும்.
செல்வி க. ஆனந்தி, தரம் 11 உவர்மலை விவேகானந்தா கல்லுரரி திருகோணமலை
22 டக