கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறகுகள் 2002.09

Page 1
அனுபவம் புதுமை
உறவுக்கு பகை கடன் கடன் அன்பை முறிக்கும் கடனாவது அன்பை முறிப்பதாவது வேண்டாத பழமொழிகள் வெற்று வார்த்தைகள் படித்த போது பரிகசித்தேன் ! இருந்த போதெல்லாம் இல்லையென்றாமல் கடன் கேட்டோருக்கு உடன் கொடுத்தேன் ஒருவருக் கொருவர் உதவுவதுதானே மனிதப்பண்பு அப்போதுதானே. அன்பும் நேயமும் வளரும் எனக்குள் நானே
வார்த்தைகளை வரிந்து கொண்டேன் ! அப்போது !!
அவசரம் எனக்குவர நண்பனை நாடிச்சென்று கொடுத்த கடனை திருப்பிக் கேட்க. நீயேல்லாம் நண்பனா? - என்றெண்ண் திருப்பிக் கேட்டான் - என் சந்தர்ப்பவாத நண்பனொருவன் ! கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று பாடிய கவிஞர் இன்று இருந்திருந்தால். கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் என்று பாடியிருப்பார்.
படித்த பழமொழிகளை பரிகசித்தேன் அப்போது பட்டறிந்ததால் தெளிவு கொண்டேன் இப்போது.
திருமல்ை வாசகன்
 
 

들.
를
季

Page 2
வாசக நெஞ்சங்களே.
6assoo) did, fb.......
உங்கள் ஆதரவாலும், அரவணைப்பினாலும் சிறகுகள் சிறகடித்து காலாண்டை நிறைவு செய்தாயிற்று என்ற மகிழ்வான செய்தியை அரையாண்டின் ஆரம்ப இதழாக வெளியாகும் நான்காவது சிறகுகள் மூலம் உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றோம். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை அது அதன் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதன் வேகத்துக்கு ஈடு கொடுத்து சிறகின் நியாயமான கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கும், உங்களுக்கும் உண்டு.
ஒரு சஞ்சிகையோ அல்லது பத்திரிகையோ முழு அளவிலான வெற்றிபெற வேண்டுமாயின் வாசகர்களினதும், படைப்பாளிகளினதும் பூரண ஒத்துழைப்பும் அவசியம் என்பதை எம்மை விட நீங்கள் நன்கறிவீர்கள்.
வாசகள்கள் சிறகை பெற்றோம், படித்தோம் என்று ஒதுங்கி விடாமல் கருத்து செறிவுள்ள சுய ஆக்கங்களையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் எழுதுங்கள். ஐரோப்பிய தேசத்திற்கும் சிறகு விரித்திருக்கும் சிறகை உங்கள் ஆக்கங்களும் அலங்கரிக்கட்டும். அப்போதுதான் சிறகின் நோக்கங்களும் வெற்றிபெறும்
சிறகுகள் என்றும் புதுமைகளை சுமக்க வேண்டும் என்பதே எமது பேரவா இந்த இதழ் முலம் "இளம் ஓவியர் அறிமுகம்” பகுதி அறிமுக மாகிறது. இன்னுமின்னும் படிப்படியான வளர்ச்சியுடன் அடுத்த சிறகினில் சந்திப்போம். R அன்புடன்
ஆசிரியர் குழு
“சிறகுகள்' சஞ்சிகை விற்பனை மூலம் பெறப்படும் ‘நிதி வறிய மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் என்பதையும் பேருவகை யுடன் அறியத்தருகிறோம்.
உங்கள் ஆக்கங்களுக்கு நீங்களே பொறுப்பாளிகள்.
 

ars N d 666......
VV 猴薇滋滚 திருக்கோணமலை நீரளவே ஆகுமாம் நீராம்பல் தி.த.கனகசுந்தரம் பிள்ளை -04 தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு ஆயுதம் (உருவகக் கதை) -05 ஆசிரியர் குழு முதலுதவி பற்றி -07 க. ஜீவா ஈமெயில் சேவையின் வளர்ச்சி -10 அ. ஜனனி பொ. கோணேஸ்வரன் அழகு (சிறுகதை) - 12 செ. செல்வக்குமார் கவிதைகள் -14 க. விக்னேஸ்வரானந்தன் இளம் ஓவியர் அறிமுகம் -15 க. வாசுதேவன் மா.பிரபாகரன் சிரித்தவை, சிந்தித்தவை - 17 ஓவிய ஒப்பை ன நியாயப்படுத்தப்படாத
கொலைகள் - 18 க. ஜீவானந்தன் * கணினி அமைப்பு மனிதனும் விஞ்ஞானமும் -20 ரெயின்போ மினிலாப் வாசகர் நோக்கு -22 தொடர்புகளுக்கு. மாணவர் பொது அறிவுப்போட்டி -23 சிறகுகள் ஆசிரியர் குழு, சமைப்போம் சுவைப்போம் -24 514, மின்சார நிலைய வீதி, திருக்கோணமலை. எதிர்கால சமுதாயமும்
போதைவஸ்த்தும் -27
திருக்கோணமலை "'s 600 si வலைகள்") ஐக் கரிய LD (j5 ğ5 ğj56)I T என்னும் பகுதியினுடாக உள்மனதை சிகையலங் கரிப்பாளர் உரசும் சமுதாய வருத்தங்களை சங்கத்தின் ஆதரவுடன் அம்பலப்படுத்தவிருக்கிறார் திருமலை சிறகுகள் சஞ்சிகை | சுந்தா அவர்கள் அடுத்த இதழிலிருந்து அவள் படைப்பை சிறகின் வாசகள்கள் வெளியிடப்படுகிறது. பகிர்ந்து கொள்ளலாம்.
久"
لر
3

Page 3
திருக்கோணமலை
தி.த. கனகசுந்தரம்பிள்ளை
தமிழ் மணி. ந. பாலேஸ்வரி
ஈழத்தின் ஏனைய தமிழ்ப் பிரதேசங்களைப் போல் திருக்கோணமலையும் தமிழுக்கு அளப்பரிய சேவையாற்றிய அறிஞர் பெருமக்களை தன் மண்ணின் மைந்தர்களாக பெற்றுள்ளது. ஆயினும்: மணி னுள் மாணிக் கம் போல திருக் கோணமலையின் தமிழ் வரலாறும் புதைந்து போயுள்ளது. ஏனைய பிரதேசங்களில் பல தமிழ் அறிஞர்கள் வெளிக் கொணரப்படுகிறாள்கள். கெளரவிக்கப் படுகின்றார்கள். மாறாக எமது பிரதேசத்தில் புதைக்கப்படுகின்றார்கள். எமது பிரதேசத்தில் வரலாறு பற்றி அறிய வேண்டும். எழுத வேண்டும். என்று அவா ஒரு சிலருக்கே உள்ளது. ஏனையோர் யார் ஆண்டால் என்ன? என்று அசமந்த போக்கிலேயே உள்ளனர். நாம் சிறு நேர அர்ப்பணிப்புச் செய்து எம்மிடையே வாழ்பவர்களைக் கூட அறிய முனைவதில்லை. இதனால் அறிஞர்கள், வல்லுனர்கள் அவரவர் காலத்துடன் மறைந்து போவது சாதாரண விடயமாகி விட்டது.
புதையுண்டு போனவர்களில் ஒருவராகவும், சிறந்த இலக்கிய வாதியாகவும், வரலாற்று ஆசிரியராகவும் திரு. தி.த. கனகசுந்தரம் பிள்ளை விளங்குகின்றார். இவர் 14 வயதிலேயே தனது சகோதரர் திரு. தி.த. சரவணமுத்துப்பிள்ளையுடன் இந்தியா சென்று இறுதிவரை அங்கேயே தங்கி விட்டார். திரு.தி.த. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் எழுதிய "மோகனாங்கி’ என்ற நாவல் ஈழத்தின் முதல் நாவல் என்றும், திரு எஸ். இன்னாசி முத்து அவர்கள் எழுதிய ‘ஊசோன் பாலந்தை' தான் முதல் நாவல் என்றும் கருத்து முறைகள் இருந்தாலும் ஈழத்தின் முதல் நாவல் திருக்கோணமலையில் தான் தோன்றியது என்பதில் எதிர்க்கருத்துக்கள் இருக்கமுடியாது
தி.த. கனகசுந்தரம் பிள்ளை பிறமொழிப் புலமையும், தமிழறிவும் மிகுந்த பி. ஏ. பட்டதாரி சென்னை பச்சையப்பன் கல்லுாரியின் தமிழ்ப் பேராசிரியராகவும், சென்னை பல்கலைக்கழகத் தமிழ் தமிழ்த்துறை தலைவராகவும், மதுரை தமிழ்ச் சங்க போதனாசிரியராகவும் திகழ்ந்தவள்.
4
 

கம்பராமாயணம் பாலகண்டத்துக்கு அரும்பத உரை செய்ததோடு குமாரசாமிப் புலவருடன் கூடி நம்பியகப் பெருளுக்கு உரையெழுதி வெளியிட்டவள். மோகனாங்கி என்ற நாவலை சுருக்க பதிப்பாக்கி சொர்க்க நாத நாயக்கர் என வெளியிட்டார். தமிழ் நாட்டில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகா நாட்டில் இவர் கெளரவிக்கப்பட்டதும், மலரில் இடம் பெற்றதும் எம்மில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் இருந்தும் திருக்கோணமலை இந்து இளைஞர் பேரவையின் தலைவர் செ. சிவபாதசுந்தரம் அவர்களால் தி.த.க. வின் பெயரில் ஒரு வாசிகசாலை அமைக்கப்பட்டு அவரது நினைவு நாளை கொண்டாடுவதோடு 6) இலக்கியப் பணிகளையும் செய்து வருகின்றது திருக்கோணமலையில் வருடா வருடம் நடைபெறும் சாகித்திய விழாவில் பல தமிழ் இலக்கிய கலை அறிஞர்கள் பாராட்டி கெளரவிக்கப்படுவதுடன் தமிழ் அறிஞர்களின் பெயர் கொண்ட அரங்குகள் அமைக்கப்ட்டு அவர்களின் நினைவு பகிரப்படுகிறது ஆயினும் இதுவரை தி.த.க.வின் அரங்கு இடம் பெறவில்லை. இனிவரும் காலங்களிலாவது தமிழுக்கு அரும்பணியாற்றிய எம் சான்றோர்களை நினைவு கூறுதல் சாலப் பொருத்தமுடையதாகும்.
ED ED D ED D
ஆயுதம் (உருவகக்கதை)
-கனகசபை தேவகடாட்சம்.
" ിഖ என்பதையே அறியாமல் எத்தனை வருடங்கள் ஒன்றாக வாழ்ந்திருந்தோம். எங்களின் பிறப்பின் போது எத்தனை உவகை அந்த மகிழ்வினை வெளிக்காட் சுற்றம் கூடி எப்படியெல்லாம் கொண்டாடினார்கள். இப்போது, ஒரே நேரத்தில் இரு சகோதரர்களையும் இழந்து தவிக்க வேண்டியுள்ளது. இதே போல் இன்னும் எத்தனை சகோதரர்களை இழக்க நேரிடுமோ?" நற, நறவென ஒன்றோடு ஒன்று உராய்ந்து தமது ஆத்திரத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்தன.
முளைத்த காலம் தொடக்கம் இத்தனை வருடங்களாக பிரிவையே அறியாது ஒன்றாக வாழ்ந்திருந்து தற்போது சடுதியான பிரிவினால் தாங்கொணாத் துயர் கொண்டு விசனித்தவாறு இருந்தன.
"இவைகளுக்கு எல்லாம் யார் காரணம்?"
அவை ஆய்வு நடத்தத் தொடங்கின.
தீர்வும் கண்டு பிடித்தாயிற்று.

Page 4
கோபத்தின் கனல், அந்த எல்லையே சூடாகிக் கொண்டிருந்தது. இப்போ நியாயம் கேட்கத் தலைப்பட்டாயிற்று. எதுவுமே அறியாத பதுமையாக, அமைதியாக உணர்வற்று படுத்திருந்தது, அந்த
gllb.
"உன்னால் தானே எமது சகோதரர்களை இழக்கநேரிட்டது. செய்வதையும் செய்து குழப்பி விட்டு
அமைதியாக உறங்குகிறாயா?
உனக்கு நாம் என்ன தீங்கு செய்தோம? ஏன் இப்படியெல்லாம் பழி வாங்குகிறாய்? உனக்கு இரக்கமே இல்லையா? நீ சும்மா இருந்திருக்கலாம் தானே?
ஏகோபித்து மாறி மாறி நியாயம் கேட்க ஆரம்பித்தது, அந்த பரிதாபத்திற்குரிய ஜீவன்கள். எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாத ஜடம் மிக பாதுகாப்பு வலயத்தினுள் படுத்திருந்தது. இந்த அமைதிப் படுக்கை அவர்களுக்கு மேலும் ஆத்திரத்தைக் கிளறியது.
“என்ன! ஒன்றுமே அறியாதவன் போல் இருக்கிறாய்? தேவையற்ற உன் தூண்டுதலால் தானே, இந்த மனிதன் மற்றவரினால் அடிவாங்க நேரிட்டது. அதனால் தானே எமது சகோதரர்களையும் பறிகொடுக்க வேண்டியதாயிற்று நீ அடக்கமாக இருந்திருந்தால் இந்தக் கோரம் நடந்திருக்காதே! உன்னால் தான் எத்தனை தொல்லை இந்த மனிதனுக்கு உருசியை தூண்டி விட்டு, உணவுக்காக அந்த மனிதனை நாயாக அலைய வைக்கிறாய் அதனால் நிரந்தர நோயாளியுமாக்கி விட்டாய்! நரம்பில்லாமல் நீ நடத்தும் நாடகம் சொல்லில் அடங்காது! இனி உன்னை நாம் விட மாட்டோம்! நீ செய்யும் குற்றத்திற்கு உடைபடுவது நாங்களா? ஒன்றும் தெரியாத எமக்கேன் இத்தனை தண்டனை?"
பற்கள் எல்லாம் பாய்ந்து பாய்ந்து தாக்கத் தொடங்கின. எந்தத் தாக்குதலும் கைகூடவில்லை. பற்களின் முயற்சியில் பயனெதுவும் இல்லை. எந்தவித தாக்குதலிலும் நாக்கு அகப்பட்டுக் கொள்ளவில்லை. அந்தப் பற்களாலே சுற்றிவர அமைக்கப்பட்ட, வலிமை மிகு பாதுகாப்பு வலையத்தினுள்ளே, புன்னகைத்த படி எவ்வித சலனமுமின்றி, மற்றுமொரு யுத்தத்திற்காய் வியூகம் அமைத்தவாறு அமைதியாகப் படுத்திருந்தது, அந்தப் பயங்கர ஆயுதம்:

(upg5galg56 lbs.............
முதலுதவியாளன் ஜீவா
பாகம் ஆ. உள் இரத்தப் பெருக்கு
குருதிப் பெருக்கு உடம்பினுள்ளே நிகழ்வதும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் உடம்பின் இயற்கை வாசல்கள் வழியாக குருதி ஒழுகுவதும் உண்டு. வேறு சமயங்களில் இரத்தம் உடம்பின் உள்ளேயே தேங்கி நின்று நோவும் அதிர்ச்சியும் ஏற்படுவதுண்டு. இதனால் உண்டாகும் இழப்பை நீங்கள் காணாமல் இருக்கலாம்.
கீழ் வருவனவற்றில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால் ஒருவரின் உடம்பின் உள்ளே குருதி இழப்பு நடைபெறலாம்.
மூக்கினால் இரத்தம் வெளியேறுதல்.
காதினால் இரத்தம் வெளியேறுதல்.
phy மலத்தில் இரத்தம் காணப்படல்.
M சிறுநீரில் இரத்தம் காணப்படல்.
M வாந்தியில் செங்குருதி அல்லது
கருங்குருதி காணப்படுதல்.
Na ஒரு காயத்தின் பின்னர் அல்லது
கள்ப்பகாலத்தில் பெண்ணின் யோனி வழியாக குருதி தோன்றுதல்.
எனினும் உங்கள் கண்ணுக்குப் புலப்படாமலே ஒருவருக்கு உடம்பின் உள்ளே
குருதிப்பெருக்கு ஏற்படலாம், காயம் ஏதும் இல்லாமல் அதிர்ச்சிக்கான அறிகுறிகள்
காணப்பட்டால் உடம்பின் உட்புறத்தில் இரத்தப்பெருக்கு நடைபெறுகின்றதெனச்
சந்தேகித்தல் வேண்டும். ...:
ஒருவருக்கு மூக்கினால் இரத்தம் வடிந்தால் நீங்கள் செய்யக் கூடியவை.
O. அந்த நபரை உட்கார வைத்து, நிமிர்ந்து இருக்கச் செய்து இரத்தத்தை
விழுங்க வேண்டாமென்று கூறுங்கள். ஏனெனில் அந்த இரத்தத்தை விழுங்கினால் அந்த நபருக்கு வருத்தம் உண்டாகும்.
02. விரல்கள், பெருவிரல்கள் என்பவற்றால் மூக்கின் மென்மையான பாகத்தை நெரித்தவாறு குனிந்து வாய்வழியாக மூச்சு விடச் செய்யவும். இவ்வாறு 10 நிமிடம் செய்வதற்கு அவருக்கு உதவுக.
O3. தும்மவோ, மூக்கினைச் சீறவோ வேண்டாமென அவரைச் சொல்லவும்.
04. குருதிப்போக்கு நின்றதும் சிலமணி நேரத்திற்கு மூக்கைத் தொட வேண்டாம்
என அறிவிக்கவும்.
.7

Page 5
O5. 30 நிமிடத்துக்குப் பின்னரும் குருதிப்போக்கு நிற்காவிட்டால் அவரை
வைத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கவும்.
ஒருவருக்கு காதினால் குருதி வெளியேறினால் நீங்கள் செய்யக் கூடியவை.
01. அவரை உட்கார்ந்து அல்லது படுத்திருந்து இரத்தம் ஒழுகும் காது
கீழ்ப்புறமாக இருக்கத் தக்கவாறு தலையைச் சரிக்கும் படி செய்யவும்.
02. உங்கள் கைகளைக் கழுவவும்.
03. காதின் மேல் துணிப்
பட்டை ஒன்றை வைத்து துப்பரவான துணியினால் மெதுவாகச் சுற்றிக் கட்டி விடவும்.துணிப்பட்டையை காதுக்குள் தள்ளிவிட வேண்டும்.
04. காதின் வெளிப்புறத்தில் ஒரு
சிறாய்ப்பு வழியாக சிறிதளவு குருதி வடிந்தால் அந்த ஆளை வைத்திய நிலையத்துக்கு அனுப்ப வேண்டியதில்லை.
05. காதின் “உட்புறத்திலிருந்து" குருதி வடிந்து கொண்டிருந்தால் அவரை
உடனேயே வைத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கவும்.
ஒருவரின் மலம், சிறுநீர், வாந்தி அல்லது இருமலில் குருதி காணப்பட்டால் அவரை வைத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கவும்.
ஒரு கள்ப்பிணிப் பெண்ணாயிருப்பின் குருதி வடியக் கண்டால் மருத்துவத் தாதியுடன் தொடர்பு கொண்டு உடனடியாக கர்ப்பிணியை வைத்திய நிலையத்திற்கு அனுப்பி ഞഖ6ഖു.
மறவாதீர்கள் உங்கள் கைகளைக் கழுவுங்கள் உங்களையும் பிறரையும் காப்பாற்றுங்கள்.
 

மலர்கள் நறுமணம் பெறுவது எப்படி?
ஒரு செடியைப் பார்க்கின்றோம். அதன் "மலர்களை'ப் பார்க்கின்றோம். "அந்த மலர்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன" என்று வியக்கிறோம். ஆனால், உண்மையில் மலர்களைக் கண்டோமா? அல்லது மலர்களைப் போன்று தோற்றம் உள்ள செடியின் வேறு ஏதேனும் பாகங்களைப் பார்த்தோமா? நமக்குத் தெரியாது. மலர் என்பது செடியில் தோன்றும் ஒரு கவர்ச்சியான பொருள் என்று எண்ணுகின்றோம். உண்மையில் அப்படி இல்லாமல் இருக்கலாம்.
மலர்களின் மாயம்
சில செடிகளில் நாம் காணும் "மலர்கள்" உண்மையில் மலர்களாக இருக்கமாட்டா, மற்றும்கில செடிகளில் வெண்ணிற உறைகளுக்குள்ளிருந்து சில "மலர்கள்" தலையை நீட்டிக் கொண்டிருக்கும். அவை மலர்கள் அல்ல. போலிச் சாமியார்களே! வேறு சில செடிகளின் வண்ண இலைகளே மலர்களைப் போலக் காட்சி அளிக்கும்.
மலர்களாக இல்லாதவற்றை மலர்கள் என்று எண்ணி ஏமாறுகின்றோம். மற்றும் சில சமயங்களில் உண்மையான மலர்களை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. உதாரணமாகப் புற்களின் நுனியில் "தாடிக் குடுமிகளை"ப் பார்க்கிறோம். அவை மலர்களே. சில தானியங்களின் முதிர்ச்சியடையாத கதிர்களே மலர்களாகும்.
மலர்களுக்குத் தாவர இயல் வல்லுனர்கள் எவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள் என்று பார்ப்போம். பூந்தாதையாவது, விதைகளாவது அல்லது இரண்டையும் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு தாவரத்தின் பெரும் தொகுதியே மலர்கள் என்று அவர்கள் கூறுகின்றார்கள். விதைகளை உற்பத்தி செய்யும் தாவரங்களுக்கே மலர்கள் உள்ளன. விதைகள் உருவாவதற்கும், உற்பத்தியாவதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ள தாவரத்தின் பாகங்களே மல்ர்களின் பாகங்களாகும்.
நறுமணம் பெறுவது எப்படி?
மலர்களுக்கு நறுமணம் எப்படிக் கிடைக்கின்றது? சில இன்றியமையாத எண்ணெய்கள் மலர்களின் இதழ்களில் இருக்க வேண்டும். அப்படியானால் தான் மலர்களுக்கு நறுமணம் ஏற்படுகின்றது. இந்த எண்ணெய்களைத் தாவரங்கள் தமது வளர்ச்சியின் நடைமுறையில் உற்பத்தி செய்கின்றது.
இந்த இன்றியமையாத எண்ணெய்கள் மிகவும் சிக்கலான பொருள்கள். சில சூழ்நிலைகளில் இந்தச் சிக்கலான பொருள்கள் உருக்குலைந்து அல்லது சிதைந்து ஆவியாகப் பறக்கக் கூடிய எண்ணெயாக மாறுகிறது. அந்த எண்ணெய் ஆவியாகப் பறந்து செல்லும் நடைமுறையில் நறுமணத்தை வெளியிடுகிறது.
9

Page 6
எல்லா மலர்களும் ஒரே விதமான நறுமணத்தைத் தருவதில்லை. நறுமணங்கள் மாறுபடுகின்றன. ஆவியாக மாறக்கூடிய எண்ணெயில் அடங்கியுள்ள வேதியல் பொருள்களையும் மற்றும் பலவிதமான சேர்க்கைகளையும் பொறுத்து வெவ்வேறு விதமான நறுமணங்களை மலர்கள் தருகின்றன.
மேற்கூறிய இன்றியமையாத எண்ணெய்கள் தாவரங்களின் மலர்களில் மட்டுமே உள்ளன என்று எண்ண வேண்டாம். பெரும்பாலும் இவைகள் பட்டைகள், வேர்கள், கனிகள் ஆகியவற்றிலும் அந்த எண்ணெய்கள் உள்ளன. உதாரணமாக ஆரஞ்சுகள் எலுமிச்சைகள் முதலியவற்றின் கனிகளில் எண்ணெய்கள் உள்ளன. வாதுமைக் கொட்டைகளின் விதைகளிலும், இலவங்கப் பட்டைகளிலும் எண்ணெய்கள்
9666.
நிறம் எப்படி ஏற்படுகிறது.
மலர்களுக்கு நீலம், ஆழ்ந்த ஊதா, சிவப்பு ஆகிய நிறங்களைத் தரும் சாயத்திற்கு "அன்தோசியனின்" என்று பெயர். இந்தச் சாயங்கள் மலர்களில் உள்ள கண்ணறைகளின் சாற்றில் கரைகின்றன. மஞ்சள்,ஆரஞ்சு,பச்சை முதலிய நிறங்களைத் தருவது வேறு சாயங்கள். இந்தச் சாயங்களுக்கிடையே வேதியல் தொடர்பு கிடையாது.
நன்றி மக்கள் விஞ்ஞானம்
V V V V
ஈமெயில் சேவையின் வளர்ச்சி
ஈமெயில் (Email) தொடர்பாடல் தேவையானவர்களுக்கு உள்ளுள் சந்தையில் புதிய வகையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கணனிகளின் அதியுயர் பெறுமதி அவற்றை செயல்படுத்தும் முறை பற்றிய கல்வி போன்ற காரணிகளால் இவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது ஒவ்வொரு குடும்பங்களும் உள்ளுர் சந்தையில் ரூபா 5000/= க்கும் ரூபா 7000/= இற்கும் இடையிலான சிறிய இயந்திரமொன்றை பயன்படுத்தி ஈமெயில் சேவையை பெற்றுக் கொள்ள முடியும். ஈமெயில்ஐப் பாவிப்பதற்கு ஆங்கிலத்தில் வாசிக்க எழுத தேவையான பயிற்சி இருத்தல் வேண்டும்.
மெற்றோபோலியன் (metropolitan) தொலைத் தொடர்பு சேவைகள் சன்ரெல்(Suntel) ஆகிய இரண்டு நிறுவனங்கள் இவ் உபகரணங்களை இலங்கையில் சந்தைப்படுத்த தொடங்கியுள்ளன. இவ்விரு இயந்திரங்களும் ஒரே வழங்குனரினால் பிரதான நிலையம் (main station), சன்ரெல் வோவி(Suntel Wowee)என்ற பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
10

இவ் எடை குறைந்த உள்ளடக்க இயந்திரமானது குறுக்காக 16.5em அளவுள்ள LCD. திரையைக் கொண்டுள்ளது.
HTML-ஈமெயிலின் மகிமை, இணைப்புக்கள், நிறங்கள் மற்றும் விசேட அம்சங்களை பெரிதாக விரும்பும் பழக்கப்பட்ட ஈமெயில் பாவனையாளர்களை இவ்வியந்திரங்கள் கவரப்படா விட்டாலும் இது கணனி அறிவு குறைந்தவர்களுக்கும் குறைந்த செலவில் ஈமெயில் வசதியை பயன்படுத்த எதிர்பார்ப்பவர்களுக்கும் பொருத்தமானதாக அமைகிறது.
கைத்தொழில் ஆய்வின் பிரகாரம் இது இலங்கையில் உள்ள குடியிருப்பாளர்களின் பல தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது. கணனிகளின் பெறுமதி அதிகமாக இருப்பதனால் இலங்கையின் ஈமெயில், இன்ரநெட்களில் பாவனை குறைவாக உள்ளது. அத்துடன் கணனி சம்மந்தமாக அவற்றை செயற்படுத்தும் தொழில் நுட்பம் மற்றும் அறிவும் மக்களிடம் குறைவாக உள்ளது. மேலும் இவ்வாய்வின் பிரகாரம் ஈமெயில், இன்ரநெட் ஐ பாவிப்பதன் மூலம் அதிக செலவு ஏற்படுவதனால் அவற்றை பயன்படுத்துவதிலிருந்து குடியிருப்பாளர்கள் தடுக்கப்படுகின்றனர். V இச்சிறிய இயந்திரத்தைக் கவரக்கூடிய முக்கிய அம்சமென்ன வெனில் இவ்வியந்திரத்திலிருந்து நேரடியாக தொலைநகல் (Fax) பண்ண முடியும். விற்பனையாளர்களின் அபிப்பிராயப்படி IDD வசதிகள் இன்றியும் ஈமெயில் விலாசமின்றியும் பக்ஸ் இலக்கத்தை கொண்டு IDD தொலைநகல் அனுப்ப முடியும்.
வழங்குநர்களின் கட்டமைப்பின் பிரகாரம் இவ்வியந்திரமானது 1000 ஈமெயில் விலாசங்கள் வரை களஞ்சியப்படுத்தி வைக்கக் கூடியதோடு அதிக காலத்திற்கு பயன்படுத்தக் கூடிய மின்கலங்களின் உதவியுடன் இயங்கக் கூடியதொன்றாகும். அத்துடன் இவ்வுபகரணத்தை ஒரு பதிகருவியுடன் (Printer) இணைத்து உள்ளிருந்து வெளிச் செல்லுகின்ற ஈமெயில்களை பதிவெடுத்து(Printout) கொள்ள முடியும். .
வேறு அம்சங்கள் என்னவெனில் இதில் நாட்காட்டி(Calender) கணிப்பொறி (Calculator) மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட சொற்களின் அகராதியும் உண்டு. ஒரு வருட கால உத்தரவாதத்துடன் இலவச ஈமெயில் தொடர்பையும் இவ்விரு ஸ்தாபனங்கள் வழங்குகின்றன. Suntel ஆனது சன்டெல் வோவ்(Suntel Wow) விலாசங்களை வழங்கும் அதே வேளையில் மெற்றோபோலியன் பாவனையாளர்களை தங்களது சொந்த இன்ரநெற் சேவை வழங்குநரை (Internet Server) தெரிவு செய்யவும் இணக்கம் தெரிவிக்கின்றன.
ச. சஜந்தன்
11

Page 7
&Rö... சிறுகதை
சுந்தா
முத்துக் குமாரசுவாமி திருமண மண்டபத்தில் எனது இரண்டு விழிகளும் எதற்காக அலை ;அலையென று அலைந்து கொண்டிருக் கின்றன?
பாவம் விழிகள். . . . . . . . . . . . . . கொணி டா ட * உடலுக்குத்தான் பேசும் துணிவில்லையே!!. துணி
నీళ్ల r
வில்லாத அந்த உடலின் முகம் ஏன் அந்த விழிகளைக் காயப்படுத்தி; காயப்படுத்திக் கொண்டிருக்கிறது? விழிகளுக்கு கோபம். தன்னை சிகப்பாக்கி. சிகப்பாக்கி முடியாதென்ற நிலையில்.
அந்த உடலுக்கு எப்படித்தான் இப்படியொரு பலம்
வந்தது? அந்த உடலுக்கு சொந்தக் காரனான நான்
அந்த பதினெட்டைத் தாண்டாத அழகியின் முன்பாக
போயே விட்டேன்.
என் விழகள் சிரித்தன. தன் நிறத்தைக்கூட
மாற்றி விட்டன.
முன் அழகு, பின் அழகு; முக, உடம்பு வெட்டழகு; நிற அழகு; பேச்சழகு நூல் அளவு பிழைத்தாலும் - பிழைக்காத என் கணிப்பளவு.
அவள் அழகிதான். அவள் தான் என் மகனின்
மனைவி. என் மருமகள் - என் எதிர்பார்ப்புகள்
என் முகத்தில் தேம்பி, தேம்பி என் அழகான
பல் வரிசையை அவளுக்கு காட்ட வைத்தது.
"பெண் பார்க்கும் படலம் முடிந்து விட்டதா?
அந்த அழகி.அந்த அழகிதான்.என் பல் வரிசைக்கு பதிலாக வாய் திறந்த போது.
என் பல் வரிசை இன்னும் நீண்டு இன்னும் நீண்டு ‘ஆமென்ற மெளன பதிலைச் சொன்னது.
அவள் அந்த அழகி வாய் விட்டுச் சிரித்தாள். நானும் சிரித்தேன். "அங்கிள் என் சிரிப்பு கூட உங்களுக்கு அழகாக இருக்கலாம் தானே.என்ன அங்கிள்.?
2
 

தலையசைத்தேன் கண்களால் சிரித்தேன். என் பிடரி மயிரை விராண்டி விட்டேன்.
நான் நன்றாகப் பேசுகிறேன். என் குரலில் கூட அழகை கண்டிருப்பீர்கள் தானே..?
'ஓம். என் சொண்டுகள் அசைந்தன முதல் தடவையாக, நான் பேசுகின்ற மொழி நடைகூட அழகாகத் தானே இருக்கிறது.? ಇib.®ಹ. இரண்டு தடவைகள் என் சொண்டுகள் என் கட்டுப்பாட்டை மீறி அசைந்தன.
‘என்னை உங்களுக்கு நான்றாகப் பிடித்துவிட்டது தானே . உங்கள் மகனுக்கு நான் பொருத்தமானவள் தானே. என் சொண்டுகள் அசையவில்லை. அவளின் சொண்டுகளையே அவதானித்தது. அவள் சொண்டுகள்.
இப்போது.இப்போது.கன நேரம் தான். அவள் முகம். அவள் முகம் . தக்காளிப்பழம் போல சிவந்திருந்த அந்த அவளின் முகம் ஏன் கறுக்க வேண்டும்? கண்கள் ஏன் சிறுக்க வேண்டும்? அவளின் அழகு என்னிடம் இருந்து ஏன் உடன் விடைபெற வேண்டும்?
என் கால்களுக்கு இப்போது உயிர் இல்லை. திருமண சந்தடியில் தெரிந்தவர்களோடு விளாசிக் கொண்டிருந்த எனது துணைவி என்னிடம் வந்தாள். "என்னவாம் உங்கட வருங்கால மருமகள் எந்த நல்லது கெட்டதுக்குப் போனாலும் உங்கட மகனுக்குப் பெண் பார்க்கிற வேலைதான்." என் சொண்டுகள் அசைய மறுத்தன. நாவில் வார்த்தைகள் ஊறவில்லை. "என்னப்பா பேசாமல் இருக்கிறியள். உங்கள பிழையாக நினைச்சு ஏதும் (Sufi (8LIT LIT6TT"
என்னையறியாமலேயே என் தலை அசைந்தது. . என் விழிகள் சொண்டுகளைப் பார்க்க முடியாது தவித்தன. சொண்டுகள் வார்த்தைகளால் அழத் தொடங்கின.
"அந்த அழகிக்கு இரத்தப் புற்று நோயாம். - இரத்தப் புற்று நோயாம்."
பணக்காரனினதும் . கள்வர்களை டையபெற்றிக் திருடனினதும் காப்பாற்றும் தேன் தொட்டவன் பாதுகாப்புக் கவசம் 85L66ir நக்குவான் நியதி
சட்டம் வக்கில் ஆனால் எனக்கு
சக்கரைவியாதி
க. விக்னா ஆனந்தி -சித்தி.
13

Page 8
இவிை கள் சமாதானம்
சிந்தித்துப் பார்
கவிதை ந. அருன்ரூபன்,கிளிவெட்டி -2
மனிதா
மதுவை மணந்து மரணிக்கப் போகும் முன் சிந்தித்துப் பார் சில வினாடிகள்
நாளைய பொழுதுகளில் உன்னுடைய குழந்தைகளின் எதிர்பார்ப்புக்கள் எத்தனையோ?
மலராத பூக்களாய் உதிர்ந்து கொள்கின்றது எதிர் கால கனவுகள்
இளமையிலே வறுமை வட்டமிட வந்து விட்டால் விடிவே இல்லா வானமாய் விம்மி அழத் தொடங்கும் உனது இளம் பிஞ்சுகள்
சிந்தித்துப் பார் சில வினாடிகள் மனிதா.
(p55E6i முளைக்கும் காலமிது முகமில்லாத முதேவிகளாய் வாழ்ந்தது போதும்
BTLD.
ܗ gg ܚ
அமெரிக்க அரசே!
கவிதை
பு:பூரணச்சந்திரன். உலக பயங்கரவாதத்தை அழிப்பதாயின் உலக நாடுகள் உன்னை, அழிக்க வேண்டும். உலகில் ஜனநாயகம் தோன்ற, வேண்டுமாயின், உனது நாசகார ஆயுதங்களும் உன் வியாபார புத்தியும் ஒழிய வேண்டும். உலகின் வறுமை நிலைதிர வேண்டுமாயின், நீ, வீணாக அழிக்கும் தானியங்களால் வறுமையை போக்க முடியும். இது முடியுமா? உலகம் உய்யுமா?.
புது விடியல்
母。JT製町
சாதிகளும் மதங்களும் அறிந்திராத வார்த்தைகளாகி சாத்திரங்களும், சடங்குகளும் தெரிந்திராத வாழ்க்கையாகி
பட்டினியும் பஞ்சமும்
பாரினில் இல்லாதொழிந்து “
பதவிகளும் உதவிகளும் மனிதகுலப் பண்பாகி
ஏழை என்பவர்
எப்படி இருப்பர் - என்ற
வினா பிறக்கும்படி
விடியட்டும் புது விடியல் 14
 

"பாவம் அவள்” என்ற தலைப்பில் அமைந்த இந்த கதை கூறும் ஓவியத்தை வரைந்தனுப்பியர் உவர்மலை விவேகானந்தா கல்லூரியை சேர்ந்த செல்வி. டயானா தேனுகா மரியதாஸ் அவர்கள்!
சிறுகதைப் படைப்பாளிகள் இவ் ஓவியத்திற்கேற்ற சிறுகதையினை இரண்டு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதியனுப்புங்கள். தரமானவை சிறகுகளில் பிரசுரமாகும். அத்துடன், "இளம் ஓவியர் அறிமுகம்” பகுதியில் அறிமுகமாக விரும்பும் இளம் ஓவியர்கள் இது போன்ற கதை கூறும் ஓவியங்களை வரைந்தனுப்பலாம்.
15

Page 9
an an 4M தெரிந்து கொள்வோம்
தி. பிரியந்தி துக்கம் - கறுப்பு.
இலங்கையில் துக்கமென்றவுடன் கறுப்பு நிறத்தில் கொடியேற்றி விடுகிறார்கள் தமிழ் மக்கள் முன்னர் கறுப்பு கொடியேற்றியதைத் தான் குறிப்பிடுகின்றேன். ஆனால் சிங்கள மக்களோ வெள்ளைக் கொடியையே பறக்க விட்டார்கள்.
காலப்போக்கில் தமிழ்மக்களும் இந்த துக்கத்திற்கு வெள்ளைக் கொடியையே நாடத் தொடங்கி விட்டனர். பெரும் பான்மை எப்படி சிறுபான்மையை விழுங்கியது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் ஆனால
1861ம் ஆண்டளவில் லண்டனில் பிரசித்தி பெற்ற பிரமுகரான 'பிரின்ஸ் ஆல்பர்ட் நோய்ப்பட்டுக்கிடப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்த போது, இது பற்றி ஆழமாக ஒரு லண்டன் வாசி யோசித்தாராம். இவர் பெயர் 'ஜார்ஜ் கிராண்ட்' இவரின் ஆழமான யோசனை இவரை ஒரே வாரத்தில் லட்சாதிபதியாக்கி விட்டதாம். எப்படி. அவர் செய்தது என்ன?
லண்டனில் உள்ள எல்லா கறுப்புத் துணிகளையும் வாங்கி பதுக்கிக் கொண்டார். பிரின்ஸ் இறந்ததும் துக்கம் அனுஷ்டிக்க மக்கள் கறுப்புத்துணி தேடினார்கள் லண்டனில் எங்குமே கறுப்புத் துணி கிடைக்கவில்லை 'ஜார்ஜ் தன் பதுக்கல் துணிகளை சந்தைப் படுத்தினார்.நாலு மடங்கு இலாபம் கிடைத்தது. பிறகென்ன. 'ஜார்ஜ் லட்சாதிபதி தானே .
துக்கம் என்றவுடன் 1261ம் ஆண்டில் லண்டனில் கறுப்புத் துணியே தேவைப்பட்டது. ஆனால் இன்று இலங்கையில்.ஏன் இந்த மாற்றம்? இதை யார் ஏற்படுத்தியது.??
அமெரிக்க டொலர் $ என்றால் என்ன?
ஒவ்வொரு நாட்டின் நாணயத்திற்கும் தனித்தனியான பெயர் உண்டு. அமெரிக்க நாணயத்திற்கு டொலர் என்று பெயர். இந்த அமெரிக்க டொலரை எழுதும் போது ஒரு S ஐப் போட்டு அதன் மேல் குறுக்காக இரு கோடுகளைப் போடுவார்கள். “அமெரிக்கா" ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியிலிருந்து விடுதலை பெற்றபோது தமக்கென தனியான நாணயம் ஒன்றை அச்சடிக்கவில்லை. பீசோ என்னும் ஸ்பானிய நாணயத்தையே பயன்படுத்தி வந்தது. அதன் மீது 8 என்ற எண் அச்சிடப்பட்டிருந்தது. "எட்டு" ரியால் என்பது இதன் பொருள். அந்த எட்டின் வடிவத்தையே எஸ் (S)ஆக்கி இரு கோடுகளை இட்டு தங்கள் நாணயமாக ஏற்று அதற்கு டொலர் என்றும் பெயரிட்டுக் கொண்டனர்.
. ரசிகன் -
16

சிரித்தவை சிந்தித்தவை
/ மனைவி. என்னங்க, கணனியரின் జ్క ༤ மூளையைப்பற்றி என்னங்க நினைக்கிறீங்க
கணவன். அதுல ஒரு விசயம் உங்ககிட்ட இருக்கு
கணவன்- அப்படியா! நன்றி, என்ன விசயம்
கணவன்- அது தான் சொந்தமா சிந்திக்கத் தெரியாது.
மதி: குமரன் ஈமெயில் அனுப்புவதற்கு
எனது விலாசத்தைக் கேட்டான்.
துசா:- அப்படியா! நீ எந்த விலாசத்தை
கொடுத்தாய்
மதி: 258, விநாயகன் வீதி,திருக்கோணமலை. என்ற விலாசத்தை தான் கொடுத்தேன்.
சதீஸ்- மச்சான் மதர்போட்டுக்கு
இன்னொரு பெயர் சொல்லு
சுரேஸ்: ஒன்று இல்ல மச்சான்
இரண்டு சொல்லுறன். நோட்ணணு மம்மி போட், மாம் போட் "
பேரன். கணனி, வைரசிலிருந்து தப்ப என்ன வழி தாத்தா
தாத்தா:- நான் நினைக்கிறன் கணனிக்கு வைரசு எதிர்ப்பு ஊசி அடித்தால் சரியாகிடும் என்று.
தொகுப்பு:- சி. சுஜீவன்

Page 10
நியாயப் படுத்தப்படாத கொலைகள்
-நல்லையா சித்திரவேல்
குசினிக்குள் படார்., படார் என்ற சத்தங்கள், அதைத்தொடர்ந்து கண்ணாடிப் பாத்திரம் உடைந்து சிதறுகின்றது. பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த நான், ! விழுந்தடித்துக் கொண்டு குசினியை நோக்கி ஓடுகின்றேன்.
ஒரு கையில் தும்புத் தடி, மறுகையில் விளக்குமாறு, தலைவிரி கோலம்இதென்ன புது அவதாரம்.? வியர்த்துப் போய், மூச்சு வாங்க நிற்கும் மனைவியை நான் ஆச்சரியமாகப் பார்க்கின்றேன். என்னைக் கண்டதும் அவளது கண்கள் தீப்பிளம்பாகின்றன.
“என்ன நடந்தது விமலா? நான் தயக்கத்துடன் வினவுகிறேன்.
“என்ன நடந்ததோ..? பாழாய்ப்போன எலிச்சனியனைக் கொல்லுறதுக்கு எலிப்பொறி வாங்கிவாங்க எண்டு எத்தனை தரம் சொல்லியிருப்பன். ஒரு நாளாவது அத நெனச்சுப் பார்த்தனிங்களா? இப்ப பாருங்க, எக்சிபிசனில் ஆசயா வாங்கி வந்த கப் அன்ட்சோசர் செற் அவ்வளவும் துாள்.”
"ஏன்.எலி உடைச்சுப் போட்டுதா?” தீப்பொறி பறந்த கண்கள், இப்போது மேலும் அகோரமாகின்றன.
“என்ன பகிடியா..? இந்தச் சனியன் பிடித்த எலியால நான் படுறபாடு உங்களுக்கு எங்க தெரியப்போவுது? விடிஞ்சால், உங்களுக்கு கந்தோர், பத்திரிகை, ரீவீ, படுக்கை முந்தா நாள் வாங்கி வச்ச உருளைக்கிழங்கு ஒன்றைக் கூடக் காணல்ல. ஒவ்வொரு நாளும் எதையாவது வெட்டித் தொலைத்துக்கொண்டு போகுதுகள், குசினிக்க ஒரு சாமானையும் பாதுகாக்க முடியவில்லை. போதாக்குறைக்கு அத அடிக்கப்போய் என்ட கப் அண்ட் சோசர் செற்ற. நானே அடிச்சி நொறுக்க வேண்டி வந்திற்று. இண்டைக்கு என்ட கையில அந்த எலி அகப்பட்டிருந்தா, பிச்சுக் குதறியிருப்பன். இண்டைக்காவது போய் ஒரு எலிப்பொறி வாங்கி வாங்க."
ஏற்கனவே கையில் வைத்திருந்த ஆயுதங்களை வெறுப்பாக வீசியெறிந்து விட்டு, அப்படியாக பரிதாபமாக அமர்ந்துவிட்ட என் மனைவியைச் சமாதானப்படுத்த முனைகிறேன் நான்.
“இப்ப வாற எலிப் பொறிகளில் எலி ஒன்றும் பிடிபடுவதில்லையாமே விமலா. அதனால் தான் நான் அதுல மினக்கடல்ல."
"பொறியில பிடிபடாவிட்டா என்ன, எலிப்பாசாணம் வாங்கி வந்திருக்கலாம் தானே. இதற்கும் ஏதாவது சமாதானம் சொல்லியாக வேண்டுமே.
“எலிப்பாசாணமோ. அதுவும் இப்ப எலிகளுக்கு நல்ல சாப்பாடுதான்.
18

சாப்பாட்டுச் சாமான்கள் இருக்கிற இடத்தில் நச்சுப் பொருளை வைக்கிறதெண்டால், அதால எங்களுக்கும் ஆபத்து தானே.”
இந்தச் சாட்டெல்லாம் விட்டுப் போட்டு எலியைக் கொல்லுறதுக்கு வழியைப் பாருங்க.” சிதறிக் கிடந்த சாமான்களை அவள் ஒழுங்குபடுத்தத் தொடங்கியதும், நான் மெல்ல நழுவிக் கொண்டேன்.
அன்று ஓய்வு நாள், மனைவி விமலா, பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்தாள். குசினிக்குள் எலிகள் நடமாடும் சத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. நான் உசாராகிவிட்டேன். மெல்ல குசினிக்குள் நுழைந்து வெளிச்சத்தைப் போட்டுவிட்டு ஜன்னல் கதவு எல்லாவற்றையும் இறுகச் சாத்திவிட்டேன். கதவுக்குப் பாதுகாப்பாக போடும் மரத்தடியைக் கையிலெடுத்துக் கொண்டேன். தடி நல்ல பாரம். எலி ஒளிந்து கொண்டிருந்த இடத்தைக் கண்டு பிடித்தாயிற்று. கொஞ்ச நேரம் சடுகுடு, ஒடிப்பிடித்தல் போன்ற எல்லா விளையாட்டுக்களும் நடந்தன. வியர்வையால் குளித்து விட்ட நான், நன்றாக களைத்து விட்டேன். மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியது. ஒரு படியாக எலியும் ஓடிக் களைத்து விட்டது. எனக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. ஒரே அடி குறி தவறவில்லை. பெரிய எலி குடல் சிதறி அந்த இடத்திலேயே இறந்து விட்டது. பார்க்க நெஞ்சை பிளந்தெடுத்தது. எனினும், என்னைத் தினமும் திட்டிக் கொண்டிருக்கும் என் மனைவி, எலி இறந்து விட்டதைப் பார்த்து சந்தோசப்படப் போகிறாளே என நினைத்த போது மனதுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது.
இந்த அல்லோலகல்லோலம் எல்லாம் காதில் விழுந்ததோ என்னவோ, பக்கத்து வீட்டிலிருந்து ஓடிவந்த மனைவி விமலா குசினிக்குள் வந்ததும், தலையில் கை வைத்து அலறினாள்.
"ஐயோ! இதென்ன அநியாயமப்பா. குடல் சிதறிப்போய். உங்களுக்கு இரக்கமேயில்லையா?”
தண்டாயுதத்துடன், ஆஜானுபாகுவாக நிற்கும் வீமனாக, அவளை எதிர்பார்த்து நின்ற நான், திகைத்து விட்டேன். என்மனம் குறுகுறுக்கத்தான் செய்தது.
"என்ன, அநியாயமோ..? அப்படியென்றால், எலிப்பொறி, எலிப்பாசாணம், பிச்சிக்குதறல் இப்போதும் அது குதறப்ப்ட்டுத்தானே கிடக்கின்றது. விமலாவின் முகத்தை நான் எதுவும் புரியாமல் பார்த்தேன்.
"பின்ன இப்படியா அடிக்கிறது. குடலெல்லாம் சிதறிப்போய். பார்க்கப் பரிதாபமாக இருக்குது"
"பிறகு, எப்படி அடிக்கிறது எண்டு சொல்லேன்" எனக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. M
"ஒரு சின்னத் தட்டுத் தட்டிக் கொன்றிருக்கலாமே---
9..... அவள் பாசையில் இது நியாயப்படுத்தப் பட்ட கொலையல்ல. ஜீவகாருண்ணியம் என்பதும் இதற்குத் தானோ.
எனக்குத் தலை சுற்றியது.
sy
19

Page 11
மனிதனும் வித்தூானமும்
திருமதி-ஹீற்றா ஜேஸ்வரன்
இன்றைய மனித சமுதாயத்தில் மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று விஞ்ஞானமே. உணவும், உடையும் உறைவிடமும் மனிதனுக்கு எப்படி தேவைப் படுகின்றதோ அப்படியே விஞ்ஞானத்தின் பயன்களும் தேவைப்படுகின்றது. விஞ்ஞானம் இன்றேல் மனித வாழ்வில் பயனேதும் இல்லை8 என்ற நிலைக்கு மனித சமுதாயம் தள்ளப்பட்டிருக்கின்றது. நாம் உண்ணும்? அரிசி முதல் பேசும் அரசியல் வரை விஞ்ஞானக் கலப்பே பரவிக் கிடக்கிறது. விஞ்ஞானத்தின் முழுப் பயனையும் இந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே மனிதன் பூரணமாக அனுபவிக்கத் தொடங்கினான். அன்று காடு மேடுகளில் எல்லாம் காட்டு மிராண்டியாக மனிதன் சுற்றித் திரிந்த அவனை மிக நாகரீகமானி வாழ்வுக்கும் அறிவுத்திறன் மிக்க பாதைக்கும் திசை திருப்பிய பெருமீை விஞ்ஞானத்திற்கே உரியதாகும்.
நாம் இன்று உற்றுநோக்கும் ஒவ்வொரு முனையிலும் விஞ்ஞான சாதனைகளே வேர் விட்டு நிற்பதைக் காண முடிகிறது. இருதய மாற்றுச் சிகிச்சை முதல் சந்திர மண்டல முற்றுகை வரை விஞ்ஞானத்தின் சிகரம் வைத்த சாதனைகள் என்றால் அது மிகையாகாது. மதம் எப்படி மனிதனின் அகத்தை தூய்மைப்படுத்தி ஆன்மீக உணர்வுகளை 6)l6ĩÎ 85 85L] பயன்படுகிறதோ அப்படியே அவனது புற வாழ்வைத் தூய்மைப்படுத்தவும் திறமைத் தாக்கத்தைத் தூண்டவும் விஞ்ஞானம் பயன்படுகின்றது. அன்று மாட்டு வண்டியில் மாதக் கணக்கில் பயணம் செய்து மடுவுக்கு யாத்திரை போன மனிதன் இன்று சில மணித்தியாலங்களில் மடுக் கோயிலை அடைந்து தரிசிக்கின்றான். பக்கத்து ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளை எத்தனை மாதங்கள் சென்றாலும் அறிய முடியாதிருந்த மனிதன் இன்று உலகின் மறு பகுதியில் நடக்கும் புதினங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதோடு மட்டும் நின்று விடாமல் நேரடியாகவே கண்கூடாகவே கண்டு மகிழ்கின்றான். இவை அனைத்தும் விஞ்ஞானம் மனித சமூகத்திற்கு செய்த அளப்பரிய சேவைகளே. மழை வேண்டி மகேஸ்வரனுக்கு பட்டு கட்டிய மனிதன் தன் மனம் விரும்பிய போதெல்லாம் மழையைப் பொழிய வைக்கின்றான். விஞ்ஞானத்தின் உதவியுடன், காலத்தை சுருங்கச் செய்தது விஞ்ஞானம். நேரத்தை விரயமாக்காமல் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக்கியது விஞ்ஞானம். ஏன் இந்த உலகத்தையே நான்கு சுவர்களுக்குள் அடக்கி நமது அறிவை வளர்த்தது விஞ்ஞானம். கிடைத்தற்கரிய பல அற்புதப் பொருட்களை நமது அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் கண்டுபிடித்து நமக்களித்த விஞ்ஞான மேதைகளை நாம் என்றும் மறந்து விடக்கூடாது. ஆகாய விமானம், அணுசக்திக் கப்பல்கள்,
20

வானொலிப் பெட்டிகள், தொலைக்காட்சிக் கருவிகள், தொலைபேசிகள், அதிசயிக்கும் மருந்து வகைகள், கணனிகள் இவை அனைத்தும் இன்று மனித வாழ்வோடு இணைந்தே கிடக்கின்றன.
விஞ்ஞானம் தந்த அணுசக்தி இன்றைய உலகில் பல பிரமாண்டமான ஆக்கங்களை நமக்குத் தந்திருக்கிறது. பாறைகள் நிறைந்த பூமிகளை தகர்த்து மட்டமாக்கி பசுமை நிறைந்த காணிகளாக மாற்றியது அணுசக்தியே. அணுக்கதிர்களின் உதவியால் மனிதனின் தீராத வியாதிகள் பல தீர்க்கும் மருந்து வகைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. உலகில் ஒவ்வொரு மூலையிலும், வாழும் இதயம் படைத்த நன்றி உணர்வுள்ள சமுதாயம் விஞ்ஞானத்திற்கு என்றும் கடமைப் பட்டுள்ளது.
இப்படிப் பல விஞ்ஞானப் பெருமைகளை எடுத்துச் சொல்லும் போது சில வேதனைக்குரிய விடயங்களையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. மனித வாழ்வின் நன்மையே நோக்காகக் கொண்டு கண்டு பிடிக்கப்பட்ட விஞ்ஞான சாதனைகளை அந்த இனத்தின் அழிவுக்காகவும் சில வல்லரசுகள் பயன்படுத்துகின்றன. அதிகார வெறியும், நாடு பிடிக்கும் ஆசையும் கொண்ட பொருட்செல்வம் படைத்த ஆட்சியாளர்கள் அணுகுண்டு, ஜனவாயுக் குண்டு, ஏவுகணைகள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கண்டுபிடிக்க விஞ்ஞானத்தை தமக்கு சாதகமாக்கி உள்ளனர். இது மிகவும் துர்ப்பாக்கிய நிலையாகும். உணவு சமைக்க உதவும் நெருப்பினால் வீட்டையும் கொளுத்துவது போல ஆக்க சக்திக்கு பயன் தரக் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞானத்தை அழிவு சக்திக்கும் பயன்படுத்துவது ஒரு விரும்பத்தகாத செயலாகும். என்றும் சமாதானத்தை விரும்பும் மனித குலத்திற்கு இது ஒரு சாபக்கேடாகும்.
இந்த அவல நிலையை மாற்றுவதற்கு மனித இனம் ஒன்றுபட்டு போராட வேண்டும். கிடைத்தற்கரிய விஞ்ஞான சாதனைகளை நமக்களித்த அறிஞர் பெரு மக்களுக்கும் இரவு பகல் ஊண் உறக்கமின்றி துன்பப்பட்ட அரும் பெரும் விஞ்ஞானிகளுக்கும் மனித சமுதாயம் செய்யும் நன்றிக் கடன் இதுவே ஆகும். இன்று மனித சமுதாயத்தோடு இரண்டறக்கலந்து மனிதன் விடும் மூச்சோடு மூச்சாக மிதந்து அவனது வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் அணு அணுவாக நிறைந்து மனித இனத்தை வல்லவர்களாகவும் நல்லவர்களாகவும் மாற்றி நமது வாழ்வை மிக இலகுவாக்கி விட்டிருக்கின்றது விஞ்ஞானம். மனிதனையும் விஞ்ஞானத்தையும், எதிர்காலத்திலும் எந்தக் காலத்திலும் எவராலும் பிரிக்க முடியாது.
-முற்றும்
21

Page 12
வாசகர் நோக்கு.
ஆசிரியர் சிறகுகள்
சிறகுகள் - 2 இதழ் படித்தேன். சிறகு கண்ணைக் கவர்ந்தது. கருத்துக்கள் என்னைக் கவரவில்லை. இனி வரும் இதழ்களில் மாற்றங்கள் ஏற்படும் என முழுமையாக நம்புகின்றேன். தொடர்ந்தும் 'சிறகுகள் வெளிவர நல் வாழ்த்துக்கள்.
சுந்தரலிங்கம் திருக்கோணமலை அன்புடன் ஆசிரியருக்கு
'சிறகுகள் பரந்த வானில் அறிவுத் தேடலுடன் சிறகு விரித்து பறப்பது மிகுந்த மகிழ்ச்சி. விளையும் பயிரை முளையில் தெரியும் சிறகுகள் பயிரிலீே காய்த்தும்,கனிந்தும் தொங்குகிறது. ஆக்கங்கள் கனதியாக உள்ளது இது எதிர்கால அடைவுகளை எதிர்வுகூறி நிற்கிறது. விரிவுரையாளர் அன்டன் டயஸ் அவர்களின் பிறழ்வு நடத்தை(ஆடி மாத இதழ்) மனதில் பதிந்து வைக்க வேண்டிய கல்வி. இலகு தமிழ் அதனை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். குறிப்பாக மாணவர்களுக்குரிய வழிகாட்டி கட்டுரை - பலமுறை படித்தேன் வாழ்க்கைக்குரிய கல்வியல்லவா! தொடர்ந்து விரிவுரையாளர் எழுத வேண்டும். ஆவலுடன் காவலிருப்பேன். சிறகுகளின் தேடலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
தே. துருபதன் திருக்கோணமலை. சிறகுகள் ஆசிரியர் குழுவிற்கு என் வந்தனம் M > சிறகுகள் சஞ்சிகையை அலங்கரிக்கும் ஒவியங்களும் ஆக்கங்களும் நன்றாக உள்ளது. பல இளைஞர் யுவதிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் சிறகின் முயற்சியை அவசியம் பாராட்டியாக வேண்டும். தொடர்கதைகள் போன்ற அம்சங்களை பிரசுரித்தால் வாசகள்களுக்கு தொடர்ச்சியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தலாம். இந்த சஞ்சிகை எட்டுத்திக்கையும் எட்டுமளவிற்கு உங்கள் விரிவாக்கல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறகுகள் வளர்ந்து வானளாவ என் வாழ்த்துக்கள்.
சிறகின் வாசகி, S. ai assiT.
ன ஆலோசனைகளையும் ர் கருத்துக்கள் வாசகர்
சிறகுகள் சஞ்சிகை பற்றிய ஆக்க பூர்வமா விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். உங்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறகின் தேடல்
வாசகர்கள் நல்ல விடயங்கள் எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும் என்பதே சிறகின் விருப்பம். பரந்து திரிந்து நல்லதெனக் கண்டவற்றை வாசகர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவ்லில் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். உடன்பட்டால் உவகை கொள்ளுங்கள். முரண்பட்டால் எடுத்துக் கூறுங்கள்.
பழந்தமிழ் போர் திறன்:-
தமிழர்கள், அந்த நாட்களிலேயே நால்வகைப் படைகளைக் கொண்டிருந்தது மட்டும் அல்ல, கடலரண், காட்டரண், மலையரண், மதிலரண் எனும் பாதுகாப்புகளையும் பெற்றிருந்தனர். போர் முறைகளிலெயும் புதுக்கருத்துக்கள் கொண்டதனால், அற்றை நாளில் தமிழர் பெற்ற வெற்றிகள், இன்றும் எண்ணி வியக்கத்தக்கனவாக உள்ளன. நெடுந்தொலைவு படையுடன் சென்று போரிட்டு வெற்றி பெற்ற வீரக்கதைகள் பலப்பல, போரிலே வெற்றி காண வீரம், அடிப்படை எனடபது மறுக்கொணாத உண்மை என்றாலும், போர்க்கருவிகளின் தன்மையும் மிகவும் முக்கியமானது என்பதை ஆய்ந்தறிந்து உணர்ந்திருந்தால், பிறநாட்டரிடம் இல்லாத பல்வேறு வகையான போர்க்கருவிகளைக் கொண்டிருந்தனர்.
வளைவிற் பொறி, தள்ளி வெட்டி, கருவிரலூகம், களிற்றுப் பொறி, கல்லுமிழ் கவண், வீழுங்கும் பாம்பு, கல்லிடு கூடை, கழுகுப் பொறி, இடங்னணி, புலிப்பொறி, நுாண்டில், குடபபாம்பு, ஆண்டலையடுப்பு, சகடப்பொறி, கவை, தகர்ப்பொறி, கழு, அரிநுாற்பொறி, புதை, குருவித்தலை, ஐயவித்துலாம், பிண்டிபாலம், கைப்பெயர் ஊசி, தோமரம், எரிசிரல், நாராசம், பன்றி, சுழல்படை, பனை, சிறுசவளம், எழு, பெருஞ்சவலம், மழு, தாமணி, சீப்பு, முசுண்டி, கணையம், முசலம், சதக்களி, போன்ற விதமான, புதுமுறைப் போர்க்கருவிகள் இருந்தன, இத்துடன் தமிழரிடம் தனியாக வீரர்தமதாற்றலை விளக்கப் போர்வாளும் கெடயமும் ஈட்டியும் உண்டு. தமிழரை எதிர்த்த மாற்றங்களிடமும் பிற நாட்டவரிடமும் வேல், வில், அம்பு, சிறுவாள், கொடுவாள், அரிவாள், ஈர்வாள், உடைவாள், கைவாள், கோடரி, ஈட்டி, குறுந்தபடி என்பன மட்டுமே இருந்த நாட்களில். ܚ
இன்று விஞ்ஞான அறிவுப் பெருக்கத்தின் காரணமாகக் கிடைக்கப் பெற்றுள்ளன போர்க் கருவிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழர் பெற்றிருந்தவை, மிகமிகச் சாதாரணம்: இப்போதைக்குப் பயன் தருவன அல்ல. இவை தமிழரிடம் இருந்த நாட்களில் மற்ற நாட்டவரிடம் இருந்தன யாவை என்பதனை ஒப்பிடும் போதுதாள் சிறப்பு விளங்கும்.
நன்றி
பேரரிஞர் அண்ணாவின் இலக்கியச்சோலை

Page 13
குறுக்கெழுத்துப் போட்டி இல - 04
2 3 4. 67 V f ༣ ’ ހ s २५|9 11 12 13 14
6 : Y? له نم :
22 4, 25, 26.27 28 .
4 p.
29 30 3. 35
38. 39 40 41.
s معہ محمد 43, 44 45 47 48, 49. 、 |ぶ" | (。
குறுக்கெழுத்துப் போட்டி - 02 இற்கான விடைகள்
இடமிருந்து வலம் 1) ஆகாஷ் 6) ஊசி 8) வலி 11)தாயகம் 19) தாரம் 24) குளிர் 29) நாளம் 40) தவிடு 43) குளம் 47) வம்பு
மேலிருந்து கீழ் 1) ஆவணி 2) காலி 6) ஊகம் 7) சிம்ரன் 12) யதார்த்தம் 24) கும்பம் 29) நாக்கு 41) புவி 42) வடு
இடமிருந்து வலம் 1) சன்மானம் 6) கொடைவள்ளல் ஒருவர் (திரும்பியுள்ளது) 8) மனிதன் ஆடியடங்கும் இடம் (திரும்பியுள்ளது) 11) கிறிஸ்தவ பண்டிகையொன்று(குழம்பியுள்ளது) 15) uses 24) நெற்றிக்கண்ணுக்கும் அஞ்சாதவர்
(குழம்பியுள்ளார்) இது நிரம்பியிருந்தால் தளம்uாது
(திரும்பியுள்ளது) இராம புத்திரர்களின் கதை கூறும்
பழந்திரைப்படம்
29)
38)
43) 47)
இவனும் ஒரு பலசாலி உதயம் (குழம்பியுள்ளது)
மேலிருந்து கீழ் 1) ஒரு உலோகம் 2) பெண்ணின் ஒரு பருவம் 4) மூர்த்தி சிறிது-இதுபெரிது(தலைகிழ்) 6) தந்திர மிருகம் (தலைகிழ்) 7) புவி 24) பஞ்சபாண்டவர்களில் ஒருவன் 28) இதை ஒழுங்கு என்று சொல்லலாம்
(தலைகிழ்) 40) இது குடியை கெடுக்கும் 41) திறப்பு
பங்கு பற்றும் வாசகள்கள் விடைகளை மாத்திரம் தபாலட்டையில் எழுதி எமது முகவரியை வெட்டி ஒட்டி அனுப்பி வையுங்கள் முகவரி ஒட்டப்படாத தபாலட் டைகள் போட்டியரில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது போட்டி பற்றி ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது.
பணப்பரிசு பெறுபவர் G.அல்பேட் வேளாங்கன்னி வீதி,
பாலையூற்று திருக்கோணமலை.
BIFIJT_6oLû Luf3ffrais QUIQIL 16hiffé6îT
K. நித்தியா, நீதிமன்ற வீதி, திருமலை. S. மலர், பேராலய வீதி, திருமலை. S. வதனி, மேன்காமம், கிளிவெட்டி,
திருமலை
S. யோகன்,
K.Gas6,
T. ugi,
மாவடிவேம்பு, மட்டக்களப்பு பண்டாரிகுளம், வவுனியா மத்திய வீதி, நிலாவெளி,
திருக்கோணமலை. T ஈசன், ம்ெ, கொலனி, கந்தள்ாய் Tசஜீவன்,
நி. பிரேம்,
கோவிலடி, தம்பலகமம்
பாடசாலை வீதி, நெல்லியடி, யாழ்ப்பாணம்
சிறகுகள் குறுக்கெழுத்து போட்டி - இல.04 சிறகுகள் சஞ்சிகை 514, மின்சார நிலைய வீதி, திருக்கோணமலை,

எனது பார்வையில்.
இன்று எம்மிடையே இரண்டறக் கலந்து போயிருக்கும் கலாச்சார சீர்கேடுகளை நாம் கண்டும் கண்மூடிக் கொண்டிருக்க முடியாது. இவற்றைச் சுட்டிக் காட்டும் உரிமை உங்களுக்கும் உண்டு. எனது பார்வையில் என்ற இப் பகுதியினுடாக நீங்கள் உங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறலாம். காத்திரம்ான கருத்துக்களை எடுத்தியம்புவது உங்கள் பொறுப்பு. இந்த வாசகனின் கருத்தை எதிர்த்தோ ஆதரித்தோ அல்லது வேறு கலாச்சார சீர்கேடுகள் பற்றியோ விரும்பியவர்கள் எழுதலாம். எதிர்பார்க்கிறோம்.
எதிர்கால சமுதாயமும் போதைவஸ்த்தும்
எதிர்கால தூண்களாக விளங்க வேண்டிய, இன்றைய இனம் சமுதாயம் மதுபானம், புகைத்தல், இதர போதை வஸ்துக்கள், பாலியல் சீர்கேடுகள் என்பவற்றிற்கு அடிமையாகி வருவதால் எதிர்காலத்தில் எம் நாட்டின் கலை, கலாச்சாரம், பண்பாடுகள் சிதைந்து சீரழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்காலச் சந்ததி இப்படிக் கீழ்த்தரமான போக்கிற்கு அடிமையாகும் நிகழ்கால செயற்பாட்டினால் நாடு எதிர்காலத்தில் எதிர் நோக்கப் போகும் அவலங்களை நாம் சிந்தித்துப் பார்த்தாக வேண்டும்.
எதிர்காலச் சமுதாயத் தூண்கள் இளம் பருவத்திலே போதை வஸ்துகளுக்கு அடிமையாகி விடுவதால் கல்வியில் ஆர்வம் குறைந்து அறிவு மழுங்கி, சுயமாக சிந்திக்க முடியாது, சிந்திக்க முயற்சிக்காது போதைப் பழக்கங்களிலிருந்து விடுபட முடியாத ஆரோக்கியமற்ற, அறிவற்ற ஒரு மூட சமுதாயமாக உருவாகி விடும். உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இத்தீய பழக்கங்களினால் நாட்டில் வன்முறைகள், களவு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு, மேலும் பல சமூக விரோத செயல்கள் நிகழ்ந்து வருவதையும் மேலும் பெருகிக் கொண்டு போவதையும் கண்டும், கேட்டும், படித்தும் அறிந்து கொண்டு இருக்கின்றோம். ܫ
நல்லொழுக்கம் எனும் புனித கங்கையை மறந்து போதைச் சாக்கடைக்குள் முழகிப் போயிருக்கும் இளம் சமுதாயத்தை மீட்டெடுப்பதற்கும், முற்போக்கு சமுதாயத்தை உருவாக்குவதற்கும் ஆசிரியர் முதல் பெற்றோர் வரை நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். போதைப் பொருள் விற்பனைக் கெதிராகப் போர்க் கொடியைத் தூக்க வேண்டும்.
போதை பழக்கத்தை முளையிலேயே கிள்ளியெறிந்து ஆரோக்கியமும், அறிவும் நிறைந்த எதிர்கால சமுதாயம் உருவாக நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
எனது பார்வையில் போதைவஸ்து இளையோரை மட்டுமல்லாது சகலரையும் சர்வநாசம் செய்து எதிர்கால சமுதாய வேர்களை இன்றே அழித்துவிடும் கறையான்களாகும்.
தே. மீனலோஜினி திருக்கோணமலை