கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2007.02

Page 1
W
|-
\, |-
 

sae \\
|-|-|- \\ W W )
W\
)
|-
|
\
\\, ||- |-
·| |-
\
| s.|
No. W

Page 2
参 参见|\, 参见 )W|
அமரர். திரு. சித்தி அமரசிங்க
|-·W:|-|W
|-|- |- 参见 W
:
参见 |W}
 
 
 
 
 

W|-
W
|-
|-
|-
\\
\\ |-
|- \\
\, |-|-

Page 3
உங்கள் கைகளி
முதலாவது இதழும் வெளிவருகிறது.
திருமலைவாசியான கட்டுரைகளுடன் இம்மலர் சாதனையின் ஒரு உதார பு
அகில உலகரீதியில் மகத்தானது இரண்டு வரு 1963ல் அவரது வருத் கருதிபவர்களின் கூற்றை வாழ்ந்து கொணிழருக்கிறா பிரபஞ்ச அறிவு விரிவாக்க பெரியது.
பொருளாதாரதுறை சென்பற்றிய கட்டுரையும் இந் என நம்புகிறோம்.
65.3L. O.26-22222O7
 

of 3d. (Sushui.
லி தவழும் 2007ம் ஆணிழன் வழமை போலி சுணங்கியே
ர திரு. சித்தி அமரசிங்கத்தின் வெளிவருகிறது. அவர் தனிமனித ருசன்.
ஸ்டீபன் ஹோக்கிங்கின் சாதனை தடங்களே உயிர் வாழ்வார் என்று தத்தைக் கணிடு பிடித்தபோது பொய்பித்து 65வயதிலும் இன்னும் ர். அவர் பெளதீகத்திற்கும் ள்மது த்திற்கும் ஆற்றிய பங்கு மிகமிகப்
நோபல்பரிசு பெற்ற அமர்த்தியா த இதழின்மதிப்பை அதிகப்படுத்தும்
S.P. ராமச்சந்திரன்.
ஆசிரிய குழுவிற்காக) 57. பிரதான விதி, திருக்கோனமலை.
- 1 - els - 2007

Page 4
அறிவு “ARVU”- KNOWLEDGE சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு 41, கல்லுரி வீதி, திருக்கோணமலை. Sandrasegarampillai Gnanambigai Establishment 41, College Street, Trincomalee
லபாருளடக்கம்
பக்கம் 1. அமர்த்தியா சென் ஓர் அறிமுகம் 3 2. மார்க்ஸின் சித்தாந்தமும் விவேகானந்தரின் வேதாந்தமும் 7 3. பண்டைத் தமிழர் வரலாறு தேவை O 4. (நீ அரவிந்தர் பூரணயோக வினாவிடை 18 5. STEPHEN HAWKING, 24 6. அட்டைப்படக்கட்டுரை ஸ்டீபன் வுேறாக்கிங் 27 7. நீங்கள் அறிவயல கற்றவரா 3. 8. முக்கிய தினங்கள் 37 9. நான் வணங்கும் தெய்வம் 39 10. சித்தி அமரசிங்கத்தின் நாமம் நிலைத்திருக்கும் 45 1. அமரர் சித்தி அமரசிங்கத்தின் வெளியீடுகள் 48 12. திருகோணமலை மண்ணின் ஆவணக் காப்பாளன் 49 15. அன்சலிக்கவிதை 52
எமதுஸ்தாபிதகாரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை 6пелпђnot அவர்கட்கு அறிவு - 2007 - 1
இதழை சமர்ப்பிக்கிறோம்
அறிவு-2007 - 2 -
 
 

D, ரமேஷ் எழுதிய
அமர்த்தியா விசன் ஒர் அறிமுகம்
நூலின் பதிப்புரை - ஆர் பார்த்தசாரதி
அமர்த்தியாசென் நோபல் பிரிசுபெற்ற ஆறாவது இந்தியர். சிக்கல் நிரம்பிய துறை பொருளாதாரம். இத்துறையில் இந்தியர் ஒருவருக்கு இப்பரிசு கிடைத்திருப்பது பெருமை தருவது. இவரையும் இவரது பணியையும் ஆசிரியர் திரு.ரமேஷ் தமிழ் மக்களுக்கு
・3 - அறிவு - 2007

Page 5
அறிமுகப்படுத்தியுள்ளார். அவருடைய ஆங்கில மூலத்தைத் தமிழாக்கம் செய்து உதவிய அன்பர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மூல ஆசிரியரும் மொழியாக்கம் செய்தவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.
1943 - ம் ஆண்டு வங்கத்தில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் அமர்த்தியாசென் இளைஞர். அக்காலத்து நிகழ்ச்சிகள் - மக்கள் பட்ட துன்பதுயரங்கள் வேதனைகள் - அவருடைய மனத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தின. அவை அடித்தட்டு மக்கள் கோணத்திலிருந்து பொருளாதாரப் பிரச்சனையை அணுகும் நோக்கையும் போக்கையும் உருவாக்கின. கல்கத்தா பல்கலைக் கழகத்திலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பொருளாதாக் கல்வியை முடித்த பின் கல்கத்தாவிலும் கேம் பிரிட்ஜிலும் பணியாற்றினார்.
* கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நிகழ்த்தினார். இவருக்கு வழிகாட்டி உலகப் புகழ்பெற்ற மார்க்சியப் பொருளாதாரப் (3uJg56bří LDITflorů LTů ( Maurice Dobb) e6)JTři. LTů 1946 slib ஆண்டு மார்க்ஸ் நூலான மூலதனத்தை ஆதரித்தும் அதற்கு விளக்கமாகவும் * முதலாளித்துவ வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் “ (Studies in the development Capitalism) 6T6örgolub (DITG61)(upg560, Tit. Sg முதலாளித்துவம் பற்றிய உலகளாவிய விவாதத்தைத் தொடங்கி வைத்தது. பல ஆயப் வுகள் பல நாடுகளில மேற்கொள்ளப்பட்டன. மார்க்சிய ஆய்வாளர் பேராசியர் ஜார்ஜ் தாம்சன் அவர்கள் “பண்டைய கிரேக்க சமுதாயம் பற்றிய ஆய்வுகள்’ (Studies in Ancient Greek Society) 6T66. Ito Qg5T6b Feypassiu (Tsurf, மொழியியலாளருக்கு வழிகாட்டி நுலுாக அமைந்துள்ளதோ அவ்வாறாகவே மாரிஸ் டாப்பின் நூலும் ஆகும். மற்றொரு குறிப்பிடத்தக்க நூல் கிறிஸ்டபர் காட்வெல் (Christopher Caudwell) Nuu gögfulu “Illusion and Reality” 6T 6si ugi · @ 60 até afuugi திறனாய்வாளர்களுக்கு இன்றளவும் நின்று நிலை பெற்று வழிகாட்டியாக இலங்குவது இது.
மாரிஸ் டாப்பின் மாணவராக இருந்தபோதிலும் சென் மார்க்சியவாதியல்லர். மார்க்சியத்தை மறுக்காத அதே போது முற்றிலும் ஏற்காத ஒரு ஜனநாயகவாதி. மக்கள் பிரச்சனைகள் இன்றுள்ள ஜனநாயக அமைப்புக்களின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையும் அதற்காகப் போராட வேண்டும் என்னும்
eño - 2ooz - 4 -

ஆர்வமும் உடையவர், கார்ல்மார்க்ஸ் கருத்துகளுக்கு மூன்று ஆதாரங்கள் - இங்கிலாந்து செந்நெறிப் பொருளாதாரம், பிரெஞ்சு சோசலிசம், ஜெர்மன் மெய்யியல் என்பன. ஆங்கிலச் செந்நெறிப் பொருளாதாரத்தின் மூலவரான ஆடம்ஸ்மித் தேசங்களின் செல்வம் (Wealthy nations) என்னும் நூலில் அன்று துளிர்த்து வந்த முதலாளித்துவத்தின் ஊற்றாக அமைவது உழைப்பு என்றார். ஆடம்ஸ்மித் , பெட்டி, டேவிட்ட ரிக்கார்டோ ஆகியோருடைய கருத்துகளைக் கார்ல்மார்க்ஸ், நல்லனவற்றை ஏற்றும் அல்லனவற்றை மறுத்தும், பொருளாதாரக் கொள்கையை வகுத்தார்.
ஆடம்ஸ்மித்துக்குப் பின் வந்தவர்கள் சிலர் மக்கள் நலப் பொருளாதாரம் (Welfare economics) என்று பேசத் தலைப்பட்டனர். இதனையொட்டி சென் “சமூகத் தேர்வு” க் கொள்கையை உருவாக்கி வளர்த்தவர் எனலாம். கேன்னத் ஆரோ என்பார் சர்வாதிகாரத்தின் மூலமாகத்தான் சமூகத் தீர்வு காண முடியும் என்று கருதினார். ஆனால், அவர் கொள்கையைத் தலைகீழாக மாற்றி ஜனநாயகவழி மூலம் இது சாத்தியமாகும் என்று சென் நிறுவினார்.
ஏழு அத்தியாயங்களில் சென்னுடைய கருத்துகள் தொகுத்துத் தரப்படுகின்றன. அசமத்துவமும் வறுமையும் ஒன்றல் ல. தேவையுள்ளவர்களுக்கு உணவுப் பொருள்கள் கிடைக்காமல் போவதே பஞ்சம். ஏறத்தாழ ஒரே காலத்தில் இந்தியாவும் சீனாவும் விடுதலை அடைந்தன. இருப்பினும் சீனாவினுடைய முன்னேற்றம் வியக்கத்தக்கது. இந்தியா சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை பல உள்ளன என்று கூறும்போதே மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் ஆய்கிறார். ஆயுள் நீட்சி, கல்விப் பெருக்கம், கிராமப்புற வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் கூடுதல், பெண்கள் முன்னேற்றம், கருச்சிதைவு, அரசின் பாத்திரம் ஆகியவற்றில் சீனாவின் முன்னேற்றம் வியக்கத்தக்கது எனக் கருதுகிறார். பெரும் பாய்ச்சல் (Great Leap) விளைவித்த தீங்குகளையும் ஓரளவு சுட்டிக்காட்டுகிறார். வளர்ச்சியின் நோக்கம் மனித சுதந்திரத்தை விரிவாக்குவதாக இருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார். வளர்ச்சிக்கான உத்திகளைத் தேர்ந்தெடுக்கும்போது அனுசரிக்க வேண்டிய முறைகளையும் கூறுகிறார். தொழிலிலா, நிலத்திலா முதலீடு அதிகம் செய்ய வேண்டும் என்னும் வினாவுக்குப் பல பிரச்சனைகளை விரிவாக ஆராய்ந்து, நிலத்தில் முதலீடு செய்வது உகந்தது எனக் கூறுவதோடு விவசாயத்தை மேம்படுத்தக் கையாளவேண்டிய உத்திகளை - உழைப்பை மேம்படுத்தல், பாசன வசதிகள் செய்தல், அணைகள்
r ) r அறிவு - 2007

Page 6
கட்டுதல் போன்றவற்றையும் பரிந்துரைக்கிறார். சமூகப் பிரச்சனைகளான வறுமை ஒழிப்பு, சுகாதாரம், உடல் நலம் பேணுதல், நிலச்சீர்திருத்தம், பொது விநியோக முறை, கல்லாமை நீக்குதல் முதலானவற்றில் கவனம் செலுத்துவது மிகத் தேவை என்று வற்புறுத்துகிறார். எவை சமுதாய நோக்கங்கள் என்பது பற்றியும் ஆய்வு செய்கிறார். உள்நாட்டிலிருந்தும் - குறிப்பாகக் கேரளாவிலிருந்து கல்லாமை நீக்குதல் பற்றிய உத்திகளைக் கற்றுக்கொள்ள முடியும் என்று கூறுகிறார்.
மதச்சார்பின்மையைப் பல கோணங்களிலிருந்து ஆராய்ந்து இந்துத்துவம் ஆபத்தானது. இந்திய மக்கள் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிப்பது, பிற மதங்களைப் பின்பற்றுவோரும் நாட்டுக்காக உழைப்பவர்களே, மதவாதம் எத்தகையதாக, எந்த நிறமாக இருந்தாலும் ஒதுக்கத்தக்கதே என்பவற்றுக்குச் சான்றுகள் தந்து நிறுவுகிறார். பட்டினி, பஞ்சம், பொது விநியோகம் பற்றிய முழு ஆய்வை சென் மேற்கொண்டுள்ளார். பசி பட்டினி இல்லாத இந்தியா அமைய வேண்டுமானால் இன்றைய நிலையில் அவருடைய வழிகாட்டுதல் உகந்ததாக இருக்கும், என வாசகர் ஏற்பர். 1947 ஆகஸ்டு 14 அன்று இரவு நேரு நிகழ்த்திய சொற்பொழிவின் உட்கிடக்கையை அறியாமல் போனதனால் இந்திய அரசு முன்னேற்றம் பற்றிய அணுகுமுறை வகுப்பதிலும் உருவாக்குவதிலும் தவறிவிட்டது எனக் குறிப்பிடுகிறார். இதனாலேயே இந்தியா நிர்ணயித்த இலக்குகளை அடைய முடியவில்லை. பல்வேறு வகைப்பட்ட சுதந்திரங்களை ஆராய்ந்து சென் “மனிதன் வாழ்கின்ற சுதந்திரம்” தேவை, அதாவது வறுமை, கல்லாமை, வேலையின்மை இல்லாத நேர்மையான வாழ்வு வாழும் சுதந்திரம் மனிதனுக்குத் தேவையெனவும் இதனை அடைய ஜனநாயக முறை ஏற்றது, சிறந்தது எனவும் கருதுகிறார். மாற்றுத்திட்டமும் இவ்வாறு இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். உலகமயமாக்குதல் என்னும் போக்கு இந்தியாவுக்கும், தீங்கு விளைவிப்பது என்று சென் கருதுகிறார்.
சென் கருத்துக்களைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்திய ஆசிரியர் ரமேஷ், மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரையும் என்.சி.பி.எச். பாராட்டுகிறது.
நோபல் பரிசுபெற்ற பொருளாதார மேதையாகிய சென் பற்றிய
நுாலைத் தமிழ் மக்களுக்கு அளிப் பதில் என்.சி.பி.எச். பெருமைப்படுகிறது.
அறிவு. 2007 = 6 -

மார்க்ஸின் சித்தாந்தமும் விவேகானந்தரின் வேதாந்தமும்
விவேகானந்தர் மனிதனின் ஆன்மீகப் பரிணாமத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தார். மதத்தையும், அதன் மாறாத, பிரபஞ்சம் தழுவிய உண்மைகளையும் பிரித்தெடுத்து அவற்றை நவீனச் சிந்தனைகளுடன் சமரசப்படுத்தினார்.
மனிதனை ஒருவித போதையில் ஆழ்த்தக்கூடிய ஒன்றாக மதத்தைக் கண்டார் மார்க்ஸ் , விவேகானந்தரோ, மதத்தை மனிதனுக்குச் சுதந்திரம் தரக்கூடிய ஒன்றாகக் கொண்டார்.
தான் இன்னார் என்று தவறாகக் கருதியுள்ளவனுக்கு அவனது உணி மை இயல் பை உணர்த் தி, அவனை எலி லையற்ற பரம்பொருளுடனும், மனித குலம் முழுவதுடனும் ஒன்றுபடச் செய்வதற்கான ஒரு வழியே மதம். சுவாமிஜியின் இச்செய்தி இந்தப் புத்தாயிரமாண்டில் மனித குலத்தின் ஆன்மிகத் தேவைகளைத் பூர்த்தி செய்வதாக உள்ளது.
மனிதன் மற்றும் வேலை பற்றி கார்ல் மார்க்ஸ"ம் சுவாமி விவேகானந்தரும் வேறுபடும் இடங்கள்: 01. மனிதனின் ஆன்மிகப் பரிமாணத்தை ஏற்க மறுத்தும், சமுதாயத்தில் மதத்தின் ஆக்க பூர்வமான பங்கை ஏற்றுக்கொள்ளாததும் மார்க்ஸின் குறைபாடுகள்.
ஃப்யூவர்பேக்கின் கருத்துகளின் தாக்கமும், ஐரோப்பாவில் அவர் எதிர்கொள்ள நேர்ந்த பண்படாத, கொள்கைவெறி பிடித்த மதக் கோட்பாடுகளும் இதற்கு முக்கியக் காரணங்களாகக் அமைந்தன.
மேலும், பாதிரிகள் திரித்துக் காட்டிய இந்து மதத்தையே மார்க்ஸ் அறிந்திருந்ததால், இந்து மதம் பற்றியும் அவர் தவறான கருத்தையே கொண்டிருந்தார்.
02. மார்க்ஸும் சரி, விவேகான்ந்தரும் சரி ஒரு லட்சிய சமுதாயத்தைக் கனவு கண்டனர்.
Ay
| 77 ۔
அறிவு - 2007

Page 7
GG
உயர்ந்த உண்மைகளைச் செயல்பமுறைப்படுத்தும் சமுதாயமே மிகவும் உன்னத சமுதாயம். இதுதான் எனது கருத்து. மிக உயர்ந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்குச் சமுதாயம் தயாராக இல்லாவிட்டால், அதைத் தயார்ப்படுத்துங்கள். இதை எவ்வளவு சீக்கிரம் செய்கிறீர்களோ அவ்வளவிற்கு நல்லது' ( ஞான தீபம், 2007) என்றார் விவேகானந்தர்.
மக்கள் புரட்சியால் மட்டுமே அத்தகையதொரு லட்சிய சமுதாயத்தை உருவாக்க முடியம் என்று நம்பினார் மார்க்ஸ். மாறாக விவேகானந்தரோ, சாதாரணக் கல்வி, ஆன்மிகக் கல்வி இரண்டையும் உரிய முறையில் ஒருங்கிணைத்துப் பரப்புவதன் மூலம் அத்தகைய ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று நம்பினார்.
ஏழைகளைப் புறக்கணிப்பதும், அவர்களைச் சுரண்டுவதும் கூடவே கூடாது என்று விவேகானந்தர் கூறினாலும், உயர் வகுப்பு மற்றும் தாழ்ந்த வகுப்பு பிரிவினரிடையே மோதல்கள் கூடாது என்றும் வற்புறுத்தினார். (ஞான தீபம் 11:269)
வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் ஒருவன் ஏமாற்றப்படும் போது ஒருவனது திறமைகளும் ஆற்றல்களும் வெளிப்படாமலே போகின்றன். அவன் வேலையிலிருந்து விலகலுக்கு உள்ளாகிறான். இத்தகைய விலகலுக்கு உள் ளாகாமல் ஒருவனி வாழ வேண்டுமென்றால் முழு சமுதாயமும் மாற வேண்டும் என்று நம்பினார் மார்க்ஸ் - அதாவது, தனி மனிதன் தனது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தி ஒரு முழு மனிதனாக வாழ வேண்டுமானால் சமுதாயம் மாறியிருக்க வேண்டும்.
ஆனால் சமுதாயம் முழுமையும் மாறும் வரை ஒருவன் காத்திருக்க வேண்டியதில்லை. தனிநபர் நிலையிலே ஒருவன் தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்றார் சுவாமிஜி, வேலையைப் பற்றிய கண்ணோட்டம் மாற வேண்டும். அத்தகைய மாறிய கண்ணோட்டத்துடன் வேலை செய்தால் அதன் மூலம் தன்னை மாற்றிக் கொள்ள முடியும் என்பது விவேகானந்தரின் கருத்து.
04. மார்க்ஸின் கொள்கைகள் முதலாளித்துவ நாடுகளுக்காக எழுதப்பட்டவை அல்ல. ஏனெனில் முதலாளித்துவம் நீண்டகாலம் நிலைக்காது என்று நம்பினார் மார்க்ஸ் ஆனால் முதலாளித்துவம்
அறிவு - 2007 - 8 -

நிலைத்தது மட்டுமல்ல, முன்பு சோசலிசஷக்கருத்துக்களை ஏற்றிருந்த நாடுகளில் கூட அது எவ்வித எதிர்ப்பும் இன்றிப் பரவியது.
விவேகானந்தர் தமது செய்தியை இருவித நாடுகளுக்காக அளித்தார்.
01. பணக்கார, முதலாளித்துவ மேலை நாடுகள். 02. இந்தியா போன்ற வளர்ச்சி குன்றிய நாடுகள்
அவருக்கு எந்த நாட்டிடமோ தனிமனிதரிடமோ விருப்பு-வெறுப்பு கிடையாது. கிழக்கோ, மேற்கோ எந்த நாடானாலும் சரி, மனிதன் எல்லா இடங்களிலும் சங்கிலிகளால் கட்டுண்டு கிடப்பதை அவர் கண்டார். அதிலிருந்து அவனை விடுவிக்க வேண்டும். ஆன்மாவில் நிறைந்துள்ள ஆற்றல்களை அவன் வெளியே கொண்டு வருவதில் அவனுக்கு உதவ வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது.
எனவே அவரது செய்திக்குக் கால எல்லைகளோ, இட எல்லைகளோ இல்லை. அவரது செய்தி மேலை நாடுகளுக்கும், அது போலவே, இந்தியாவிற்கும் என்றும் பொருந்தும்.
அறிவு அடுத்த இதழில் இருந்து தாமரைத் தீவான் எழுதும் சுயசரிதை “நினைவில் நிற்பவை" என்ற தலைப்பில் தொடர்ந்து வெளிவர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறோம்.
- 9 -
அறிவு - 2007

Page 8
பண்டைத் தமிழர் வரலாறு தேவை
-நா.வானமாமலை
உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இன்று இந்திய வரலாறு கற்பிக்கப்படுகின்றது. இந்திய வரலாற்றுப் பாடப் புத்தகங்களை நீங்கள் படித்துப் பார்த்தால் பண்டைத் தமிழ் நாட்டின் வரலாற்றுக்கென, பத்துப் பதினைந்து பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அப்பக்கங்களை வரிவிடாமல் வாசித்தால் கீழ்க்கண்ட செய்திகள் காணப்படும்.
தமிழ்நாடு இந்திய நாட்டின் தென் பகுதியில் உள்ளதோர் பிரிவு பழமையான நாகரிகம் படைத்த நாடு. சங்க காலம் எனப்படும் பழமையான காலத்தில் பல நூல்கள் தோன்றின. அவற்றுள் திருக்குறளை இயற்றியவர் வள்ளுவர் என்பார். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் முடியுடை வேந்தர் மூவர் ஆண்டனர். சோழருள் கரிகாலனும் ராஜராஜனும், ராஜேந்திரனும் புகழ் பெற்றவர்கள். சேரருள் செங்குட்டுவன் சிறந்தவன். பாண்டியருள் குறிப்பிடத்தக்கவர் யாருமில்லை. சோழர் பெருவாழ்வு வாழ்ந்த காலத்தில் கம்பன் தோன்றினான். சமணத்தை முறியடித்து சைவ வைணவ மதங்கள் தோன்றின. தமிழ் நாட்டின் வடபிரிவில் பல நூற்றாண்டுகளாக பல்லவர் செங்கோல் செலுத்தினர்.
இதற்குமேல் தமிழ் நாட்டின் பழம்பெரும் பண்பாட்டைப் பற்றியோ, இலக்கிய வளத்தைப் பற்றியோ, இவ்விரண்டையும் உருவாக்கிய தமிழினத்தவரைப் பற்றியோ, அவர்களது சமூக வாழ்க்கயிைல் நூற்றாண்டு, நூற்றாண்டுகளாக ஏற்பட்டு வந்த மாறுதல்களைப் பற்றியோ, அம்மாறுதல்களுக்குரிய காரணங்கள் எவை என்பன பற்றியோ இந்நூல்கள் எதுவும் கூறுவதில்லை.
தமிழர் வரலறு இவ்வளவுதானா: சிற்சில அரசர்கள் கவிஞர்கள், போர்வீரர்கள், அமைச்சர்கள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகள்தான் தமிழ்நாட்டின் முழுமையான சரித்திரமா? தமிழ்நாட்டின் சமூக வாழ்க்கையையும், பண்பாட்டையும், இலக்கிய வளத்தையும் கலைச் செல்வத்தையும் உருவாக்கியவர்கள் குறிப்பிட்ட நூற்றுக்கணக்கான புகழ் பெற்ற மனிதர்கள்தானா என்ற கேள்விகள் தமிழர் வரலாறு பற்றி எழுந்துள்ள சில நூல்களைப் படிக்கும் போது நமக்குத் தோன்றுகின்றன.
அறிவு - 2007 - 10 ன

தமிழ் நாட்டின் வரலாறு பற்றி இந்திய வரலாற்றுப் பாடப்புத்தகங்களை, தவிர வேறு பல நூல்கள் சென்ற ஐம்பது ஆண்டுகளில் வெளியாகியுள்ளன என்பதை நான் மறுக்கவில்லை. சங்க காலத்தைப் பற்றி 1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர் என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கனகசபைப் பிள்ளையின் நூலும், சமணர்களது ஆதிக்கத்தைப் பற்றி சக்கரவர்த்தி நயினார் அவர்கள் எழுதிய நால்களும், சோழ வம்சத்தைப் பற்றி கே.ஏ.நீலகண்டசாஸ்திரியார் எழுதிய நூால்களும், பல்லவர் வரலாறு பற்றி பி.டி.யூரீனிவாச அயர் யங் கார் எழுதிய நுாலி களும் இனி னும் பலவும் தமிழாராய்ச்சியாளர்களுக்குப் பழக்கமானவையே. ஆயினும் இவையாவும் முழுமையான தமிழர் வரலாறு ஆகா. குறிப்பிட்ட சரித்திர காலங்களின் நிகழ்ச்சிகளை இவை விவரிக்கின்றன என்பது உண்மையே. ஆனால் தமிழர் சமூகம் மாறி வந்துள்ளது எவ்வாறு என்பதையும், அம்மாறுதல்களுக்கு அடிப்படையான காரணங்கள் யாவை என்பதையும் இந்நூல்கள் சுட்டிக்காட்டவில்லை.
ஆகவே முழுமையான தமிழர் வரலாறு ஒரு புதிய அடிப்படையில் எழுதப்படவேண்டும்.
இதுவரை பொதுவாக எந்த அடிப்படையில் வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன? 'பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை "மகா புருஷர்கள் தோன்றுகிறார்கள், அவர்களே நாட்டின் வரலாற்றை உருவாக்குபவர்கள்’ என்பர் ஒரு சாரார். இக்கொள்கையின்படி இரு மகா புருஷர்கள் தோன்றுவதற்கு இடைப்பட்ட பல நூற்றாண்டுகளில் வாழும் மக்கள் வாயில்லாப் பூச்சிகள் சொல்வதைச் செய்து வாழும் இயந்திரங்கள் ஆட்டி வைக்கிறபடி ஆடுகிறவர்கள், “சமூக மாறுதல்கள், சரித்திர மாறுதல்கள் நிகழ்வது தீடீர்ப் பிரளயம் போன்ற புரட்சிகளால்” என்பர் மற்றோர் சாரார். இப்பிரளயங்கள் யாராலும் உருவாக்க முடியாத எரிமலைகளைப் போல பழைமையைத் தகர்த்து புதுமையை நிறுவுகின்றன. என்று தங்கள் கொள்கைக்கு அவர்கள் விரிவுரை கூறுவார்கள்.
இவை செல்லரித்துப் போன கொள்கைகள். மார்க்ஸியவாதிகள் இக்கொள்கைகளை எதிர்த்துத் தாக்கி முறியடித்துவிட்டார்கள். மகா புருஷர்கள் சமூக உணர்வின் சிருஷ்டிகள். அவ்வக்காலச் சமூக
سد 11 سه
effe - 2007

Page 9
உணர்வின் சிறந்த பிரதிநிதிகள் என்ற உண்மையை அவர்கள் நிரூபித்து விட்டார்கள். இதே போல் நம் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் சூட்சுமமான கருவிகள் மூலம் அறியக்கூடிய பல மாறுதல்களின் கடைசி விளைவே பூகம்பமும், எரிமலையின் சீற்றமுமென விஞ்ஞானிகள் முடிவு கட்டியுள்ளார்கள். அதே போல்தான் சமூக விஞ்ஞானிகளும் முடிவு கட்டியுள்ளார்கள். சமூக விஞ்ஞானிகள் படிப்படியாக பல சமூக மாறுதல்களின் இறுதிக்கட்டமே புரட்சிகரமான மாறுதல் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஆகையால் மேற்சொன்ன அடிப்படைகளில் தமிழர் வரலாறு என்ற மாளிகையைக் கட்ட முடியாது.
பின் எந்த அடிப்படையில் தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டும்? வாழ்க்கை நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களே, சமூக மாறுதலாகப் பரிணமிக்கின்றன. வாழ்க்கை நிலைமைகள் என்றால் என்ன? மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் உணவு,உடை,உறைவிடம் முதலியன. இம்மூன்றும் இன்றி மனிதன் வாழ முடியாது. மனிதன் உலகில் தோன்றிய காலத்திலிருந்து உணவையும், உடையையும், இயற்கையினின்றும் பெற பல முறைகளில் முயன்றிருக்கிறான். அவ்வாறு மனிதன் இயற்கையோடு போராட்டம் நிகழ்த்தும் காலத்தில் இயற்கையின் இயக்க விதிகளை அறிந்து கொண்டு அதனைத் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்து கொள்ளப் பயன்படுத்துகின்றான். இவற்றை உற்பததி சக்திகள் என்று நாம் அழைக்கின்றோம். அவை வளர்ந்து கொண்டே செல்லுகின்றன. அவற்றின் வளர்ச்சியால் மனித சமூகம் மாறுகிறது. ஆகவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி சரித்திர மாறுதல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு பெறுகிறது. அவற்றின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் அவற்றைத் தமக்கு உடைமையாகக் கொண்ட ஒரு வர்க்கமும், அவற்றைப் பயன்படுத்தி வேலை செய்யும் மற்றொரு வர்க்கமும் தோன்றுகின்றன. இவ்விரு வர்க்கங்களுக்கிடையே இயற்கையில் இருக்கும் முரண்பாடுகள் காரணமாகப் போராட்டம் நிகழ்கிறது. அப்போராட்டங்களின் விளைவாக சமூக மாறுதல்கள் தோன்றுகின்றன.
இவ் அடிப்படையில் தமிழரது சமூக மாறுதல் களைக் கவனிப்போம்.
தமிழர் வாழ்க்கை முதன் முதலில் மலைச் சாரல்களிலே தோன்றிற்று. அப்பொழுது அவர்கள் வேட்டையாடி உணவைப் பெற்றனர்.
அறிவு-2007 - 12 r

வில், அம்பு, ஈட்டி, கவண்கற்கள் முதலியவற்றைக் கருவிகளாப் பயன்படுத்தினர். காய், கனி, கிழங்குகளைத் தேடி அலைந்தனர். மிகச்சிறிய அளவில் புன்செய் பயிர் செய்யவும் அறிந்திருந்தனர். புல் பூண்டுகள், இலைத் தழைகளால் வேயப்பட்ட குடிசைகளில் குடியிருந்தனர். இக்கூட்டத்தார் குறவர் எயினர் எனப்படுவர். அவர் கூட்டுண்டு வாழ்ந்தனர். வேலன் என்ற தெய்வத்தைப் போற்றினர். தம்மைப் போன்ற ஒரு கடவுளை மலைநாட்டு மக்கள் கற்பனையில் உருவாக்கினர். அவர்களுடைய வாழ்க்கையை மிகப் பழமை வாய்ந்த தமிழ் நூல்கள் குறிஞ்சித் திணையில் விவரிக்கின்றன. அவர்களுடைய மண வாழ்க்கையைப் பற்றியும், பொழுது போக்குகளைப் பற்றியும், சிற்சில செய்திகளை சங்க நால்கள் நமக்கு அறிவிக்கின்றன. புராதன தமிழ் மக்களின் வாழ்க்ககை நிலையை மேலும் ஆராய்வது அவசியம். அதற்குத் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, புறநானூறு போன்ற நூல்கள் துணை செய்வன.
இதன் பின்னர் இயற்கையின் கருணையை நம்பி வாழ்ந்த கூட்டத்தார் ஆடு மாடு வளர்க்கத் தொடங்கினர். ஆடு, மாடுகளுக்கு வேண்டிய தீனியையும் தங்களுக்கு வேண்டிய உணவையும் பயிர் செய்து பெற முயன்றனர். ஆட்டுத் தோலை உடையாகத் தைத்துக் கொண்டனர். செருப்புத் தைத்துக் கொண்டனர். குழல் என்னும் இன்னிசைக் கருவியைக் கண்டுபிடித்தனர். வேலை செய்த களைப்புத் தீரவும், மழை வளம் வேண்டியும், மால் என்னும் தெய்வத்தை வேண்டிக் கூத்தாடினார். மால் பசு நிலைகளைக் புரக்கும் கடவுள். இவ்வாழ்க்கையை முல்லை நில வாழ்க்கையென்று சங்க நூல்கள் கூறுகின்றன. இவர்களுக்கும் மலை நாட்டு மக்களுக்கும் சிறிதளவு பண்டமாற்று வாணிபம் நிகழ்ந்திருக்க வேண்டும். மலைநாட்டார் தேனும் தினையும் கொடுத்துத் தோலுடையும் தயிரும் பெற்றார்கள். மலைநாட்டினரும், காட்டுச் சாதியினரும், சேர்ந்து விழாக்கள் நடத்துவதுண்டு. அவற்றில் “சல் லிக் கட்டு” என்று இன்று அழைக்கப்படும். “கொல்லேறு தழுவுதல்’ என்ற விளையாட்டு நடத்தப்பெறும். பாணர் ஆகிய கலைஞர்களது பாட்டும் கூத்தும் நடைபெறும்.
நிலைத்த வாழ்க்கை காரணமாக உற்பத்திச் சக்திகள் வளர்ந்திருக்க வேண்டும். ஆடு மாடுகளுக்குச் தீனியும், தங்களுக்கு உணவும் பெறுவதற்கு முல்லை நில மக்களிலே ஒரு பகுதியார்
- 16 س
era - 2007

Page 10
ஆற்றங்கரைகளிலே குடியேறி நன்செய்ப் பயிர் செய்யக் கற்றுக்கொண்டார்கள். குளங்கள் தோண்டப்பட்டன. ஆறுகளை மறித்து அணைகள் கட்டப்பட்டன. அகன்ற நிலப்பரப்புக்கள் சாகுபடிக்கு வந்தன. இப்புதிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சிறிதளவு உணவுக்குப் போக தானியம் மிஞ்சியது. மேலும் நீண்ட வாய்க்கால்களைத் தோண்டினார்கள். மடைகளை அமைத்தார்கள். மேலும் விளைச்சல் பெருகியது. உழவுக்கு வேண்டிய கருவிகள் செய்யவும், ஆடு மாடுகளைப் பாதுகாக்கவும், ஆடை நெய்யவும், தோலிலே ஏற்றங்களுக்கு வேண்டிய பைகள் செய்யவும், விளைந்த நெல்லைப் பாதுகாக்கக் கட்டடங்கள் எழுப்பவும் தனித்தனிப் பிரிவினர் தோன்றினர். இவ்வாறு சிக்கலான வேலைப் பிரிவினை எழுந்தது. இவற்றை மேற்பார்க்க சிறுசிறு பிரதேசங்களில் குறுநில மன்னர்கள் தோன்றினர். பெரிய ஆறுகளின் நீரை முழுதும் பரந்த அளவு நிலத்தில் பாய்ச்சி விவசாயம் செய்யவும் பல பகுதியினரையும், ஒருங்கு விவசாயத் தொழிலிலே ஈடுபடுத்தவும் மத்திய ஆட்சி தேவையாயிற்று. பரந்த நிலப் பரப் பின் தலைவர்களாக இருந்தவர்கள் முடியுடை மன்னர்களானார்கள். எந்தப் பகுதியில் விளைச்சல் அதிகம் கண்டு தானியம் மிஞ்சியதோ அப்பகுதி விலிமையுடையதாயிற்று.
பக்கத்திலுள்ள வளர்ச்சியடையாத பகுதிகளைப் போரின் மூலம் தம் ஆட்சிக்குக் கீழ் கொணர்ந்தனர் முடியுடை மன்னர்கள் இவ்வாறு நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்கள் சேர, சோழ பாண்டியரது ஆட்சிக்குட்பட்டனர். தனித்தனியாக வாழ்ந்த மலை நாட்டினரும், காட்டுச் சாதியினரும் பயிர் செய்து உற்பத்திச் சக்திகளை வளர்த்துவிட்ட மருத நிலத்தவருடைய ஆதிக்கத்திற்குட்பட்டனர். இவர்களிடையெ பல போராட்டங்கள் நிகழ்ந்தன. பாரி, பேகன் போன்ற மலைநாட்டு குறுநில மன்னர்கள் முடியுடை மன்னர் மூவரால் தோற்கடிக்கப்பட்டனர். வாழ்க்கை முறை மாறிற்று. சமூக அமைப்பும் மாறிற்று. இம் மாறுதல்கள் பல நூற்நாண்டுகளாக நிகழ்நதிருக்க வேண்டும். பயிர்த்தொழிலை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பைப் பற்றிய செய்திகள் மருத நிலத்தைப் பற்றிய செய்யுட்களிலே காணப்படுகின்றன. முன்னிருந்த இரண்டு சமூக அமைப்புகளை விட இச்சமூக அமைப்பில் மனிதன் வளமாக வாழ்ந்த காரணத்தாலும், மிகுந்த ஒய்வு கிடைத்ததின் காரணமாகவும் கலைகள் வளர்ந்தன. கோயில்கள் தோன்றின. சிற்பங்கள் எழுந்தன. நீண்ட காவியங்கள் தோன்றின.
அறிவு-2007 - 14 -

இந்தச் சமூகத்தில் தமிழ் மக்கள் உற்பத்தி சக்திகளுக்கும், தங்களுக்குமுள்ள உறவு காரணமாக இரு பிரிவாகப் பிரிந்தனர். ஒன்று “நிலக்கிழார்” அல்லது நிலவுடைமையாளர். மற்றொரு பிரிவினர் அவற்றில் உழைத்துப் பிழைக்கும் “உழவர்கள்”. இச்சமூகத்தில் வர்க்கப்பிரிவினையும், முரண்பாடும் தோன்றிவிட்டன. அது எவ்வாறு தோன்றிற்று. எப்படி வளர்ச்சியுற்றது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். தங்களுடைய வாழ்க்கை நிலைமையில் தோன்றிய மகிழ்ச்சிகரமான, மாறுதலைச் சுட்டிக்காட்டும் முறையில் மருத நிலத்தவர் இந்திரனைத் தங்கள் தெய்வமாகக் கொண்டனர். இந்திரன் சுக வாழ்வின் பிரதிநிதி.
தமிழ்நாடு முப்பெரும் பிரிவுகளாக இணைக்கப்பட்ட காலத்தில் வாணிபமும் தலை தூக்கத் தொடங்கியது. சிறுசிறு கிராமங்களில் கைத்தொழில் செய்து கிராமத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் முடியரசு தோன்றிய பின் போதாது. ஆகவே தொழில் பிரிவு தோன்றி, தனித்தியாக தொழில் செய்து தங்கள் செயப் பொருட்களை நெல்லுக்குப் பரிவர்த்தனை செய்து கொண்ட முறை நிலைகுலைந்தது. பொன்னும் பொற்காசுகளும் பரிவர்த்தனைக்குப் பொதுப் பொருளாயின. பொருள்களைத் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் “வணிகச் சாத்துக்கள்” என்ற வணிகர் கூட்டம் தோன்றியது. இவர்கள் பொருள்களை உற்பத்தி செய்வதில்லை. ஆனால் ஒரு பகுதியில் இருந்து மற்றொர் பகுதிக்குக் காளைகள் மீதும், சகடங்கள் மீதும், பொருள்களை ஏற்றிச் சென்று விற்பர். உள்நாட்டு வாணிபம் பெருக, மன்னர்கள் சாலைகள் அமைத்தனர்.
இவ்வணிகச் சாத்தினர் பல பொருட்களை நாடெங்கும் பரப்பினர், ஆடைகள், அணிகலன்கள், தானிய வகைகள், மிளகு, பாக்கு, வாசனைத்திரவியங்கள் ஆகிய பொருட்களைத் தமிழ்நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றோர் பகுதிக்குக் கொண்டு சென்று விற்றனர். இவர்களுள் ஒரு பகுதியினர் பெரும் பொருள் திரட்டினர். அவர்கள் சமூகநிலை உயர்ந்தது. மூலப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிலங்கள் குறுநில மன்னர்களின் உடைமையாக இருந்தன. செய்பொருட்களை ஆக்குபவர்கள் தொழிலாளிகள். அவர்களை ஒரிடத்தில் சேகரித்து அவர்கள் செய்து தரும் பொருட்களுக்கு விலை கொடுத்து வணிகர்கள் வாங்கினார்கள். அக நிலத்தொடர்பு இல்லாத இரு வர்க்கங்கள் இப்பொழுது தோன்றத் தொடங்கின. வணிகர்களது சாதனமான நிலத்தின் சொந்தக்காரர்களது ஆதிக்கத்துக்கு எதிர்ப்புக்
۔ 15 سے
அறிவு ன 2007

Page 11
காட்ட வேண்டிய்தாயிற்று. அவர்களது நிலவுடையைப் பாதுகாக்கும் திட்டத்தையும் கொள்கையையும் காக்க வேண்டி வந்தது. அதற்காகக் கைத்தொழில் செய்யும் தொழிலாளரையும், விவசாயிகளையும் தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள முயன்றார்கள். இவ் வணிகர்கள் பெருங்குடி வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களுடைய ஆதிக்கம் ஓங்கியிருந்த காலத்தைச் சிலப்பதிகாரம் சித்தரிக்கின்றது. சமணமும், பெளத்தமும் இவர்கள் ஆதரித்த மதங்கள். அவை சமூக அடிமைத்தனத்தைத் தாக்குகின்றன. புத்த மதத்தையும் இவர்கள் ஆதரித்தார்கள். இவர்கள் காலத்தில் பெரு நகரங்கள் தோன்றின.
நகரங்கள் கைத்தொழில் உற்பத்திக் கேந்திரங்களாக இருந்தன. நகரங்களின் உள்ளமைப்பையும், வாணிப வளத்தையும், வாழ்வோர் நிலையையும் சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது. சேர, சோழ, பாண்டிய ராசதானி நகரங்களை அது வர்ணிக்கிறது. அப்பொழுது பெருங்குடி வணிகர்களுடைய செல்வாக்கு உச்ச நிலையிலிருந்தது என்பதையும், சுட்டிக் காட்டுகிறது. இது தவிர அயல்நாடுகளோடு மரக்கலங்கள் மூலம் வாணிபத் தொடர்பிருந்தமைக்கும், அதன் மூலம் பெருங்குடி வணிகர்கள் “பெரு நிதியம்’ திரட்டினார்கள், என்பதற்கும் சான்றுகளுள்ளன. இவர்களுடைய வளர்ச்சிக்காலத்திலேதான் கடற்கரையில் மீன் பிடித்தும், உப்புக் காய்ச்சியும் பிழைத்து வந்த பரதவரும், உமணரும், சங்கு குளித்தல், முத்துக் குளித்தல் போன்ற தொழில்களைக் கற்றிருக்க வேண்டும். அயல் நாட்டு வாணிபத்துக்காக, புகார், கொற்கை, தொண்டி, முசிறி போன்ற துறைமுகங்கள் தோன்றின. அங்கே யவனர்கலங்கள் வந்து தங்கிச் சென்றன. துறைமுகச் சாவடிகளில் பொதிகள் அடுக்கப்பட்டுச் சுங்கம் வசூலித்தற்கு அடையாளமாக மன்னனது முத்திரை பதிக்கப்பட்டன. இச் செய்தியைப் “பட்டினப் பாலை கூறுகிறது.
இவ்வாறு பெருங்குடி வணிகரின் செல்வாக்கு உயர்ந்தோங்கிய காலத்தில் அரசியல் வாழ்விலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். சோழ நாட்டின் வளப்பம் காரணமாக அங்குதான் பெருங்குடி வணிகர் வர்க்கமும் வளர்ந்து வாணிபத்தைப் பெருக்கியது. வாணிபத்துக்குச் சந்தையாக தமிழ்நாடு முழுதும் இருக்க வேண்டும் என்பது அவர்களது நலனுக்கு உகந்ததாக இருந்தது. ஆகையால் அவர்கள் தமிழ்நாட்டின் முப்பெரும் பிரிவுகளிலும் தங்குதடையற்ற சந்தைகளை உருவாக்கினர். மூன்று மன்னர்களும் போராடாமல்
அறிவு. 2007 - 16 -

வாழ்ந்தால் தங்கள் வாணிபம் பெருகுமல்லவா? ஆகவே சமாதானம் தமிழரின் பொதுவான கலை பண்பாட்டு ஒருமை இவற்றை அவர்கள் வலியுறுத்தினர். சேர வம்சத்தினர், இளங்கோவடிகள் தன் கால சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்டவராதால் சிலப்பதிகாரத்தில் இக் கொள்கைகளை வெளிப்படையாகவும், உட் பொருளாகவும் கூறுகிறார். தமது வாழ்த்துக் காதையில் சேர, சோழ, பாண்டிய நாட்டின் தலைநகரங்களுக்கும் மன்னரும் வாழ்த்துக் கூறுகிறார். இது தமிழ் நாட்டின் ஒருமையை வலியுறுத்துவதற்காகவே.
“வழியரோ வாழி
வருபுனல் நீர் வையை குழு மதுரையார் கொமான்
தன் தொல் குலமே ‘வாழியரோ வாழி
வருபுனல் நீர்த் தனை பொருண் சூழ்தரும் வஞ்சியர் கோமான்
தன் தொல்குலமே? “காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்
பூவிரி கூந்தல் புகார்
இம்முறையில் பொருளாதார வாழ்வையும் வர்க்க முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு மக்களின் வரலாறு முழுதும் எழுதப்பட வேண்டும். இவ்வரலாற்றைத் தனியொருவர் எழுதுவது இயலாது. நூற்றுக்கணக்கான வரலாற்று வல்லுநர்கள், தமிழ் அறிஞர்கள், மார்க்ஸியவாதிகளின் கூட்டு முயற்சியால் இவ்வரலாறு உருவாக வேண்டும். முதல் முதலில் பல கருத்து வேற்றுமைகள் தோன்றுவது இயற்கையே; பல கருத்து மோதல்களின் விளைவாக உண்மை வெளிப்படும். பண்டைத் தமிழர் சரித்திரத்தை ஆரம்ப முதல் மத்திய காலம் வரைக்கும் ஆராய்ந்து எழுதுவதற்குப் பரவலான சான்றுகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கிடக்கின்றன. அவற்றைச் சேகரித்துச் சமூக வளர்ச்சி தொழில் கண்ணோட்டத்தில் ஒரு வரலாறு உருவாக்கப்பட வெண்டும். அப்படிப்பட்ட தமிழர் வரலாறு நமக்கு அவசியம் தேவை.
நன்றி-தமிழர்வரலாறும் பண்பாடும்
- 17 a அறிவு என 2007

Page 12
முரீ அரவிந்தர்
பூரணயோக வினாவிடை
ஆர்வம்
கேள்வி அன்மீக ஆர்வம் என்றால் என்ன ?
பதில் ஆன்மீக விஷயங்கள், ஆன்மீக அனுபவம், ஆன்மீக சக்தி ஆகியவை மீதும், இறைவன் பாலும் ஆர்வமுறுதல் என்று பொருள்.
கேள்வி இச்சா சக்தியும் (Will) ஆர்வமும் ஒன்றா?
பதில் இல்லை, நிச்சயமாக இல்லை. ஆர்வம் என்பது
இறைவனை அழைத்தல் இச்சா சக்தி என்பது இயற்கை மீது உணர்வுள்ள ஒரு சக்தியைப் பிரயோகித்தல்.
கேள்வி பிரார்த்தனையும் ஆர்வமும் ஒன்றா?
பதில் 3 ஆர்வம் பிரார்த்தனையாக வெளிப்படும் அல்லது
வெளிப்படக்கூடும். ஏனெனில், ஒர் ஆசையை மட்டுமே வெளிப்படுத்தும் பிரார்த்தனைகளும் இருக்கின்றன. உதாரணமாக, செல்வம், லெளகீக வெற்றி இவற்றை வேண்டும் பிரார்த்தனைகளைக் கூறலாம்.
கேள்வி ஆர்வத்திற்கும் திறவிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
பதில் ஆர்வ்ம் திறவை கொணரும் என்பதைத் தவிர
இரண்டிற்கும் சம்பந்தமேஇல்லை. திறவு என்றால் இப்பொழுது உண்மைக்கும் அல்லதுஇறைவனுக்கும் மூடியிருக்கும் உணர்வு திறத்தல் என்று பொருள். உணர்வின் ஏற்கும் நிலையை அது குறிக்கிறது. ஆர்வம் ஜீவனின் அழைப்பு, திறவன்று.
கேள்வி பிராணனிலிருந்து எழும் ஆர்வமும், இதயத்திலிருந்து
எழும் ஆர்வமும் ஒரே தன்மை உடையனவா? பதில் இல்லை, பிராண ஆர்வம் செயல் சக்தி கொண்டது.
அது உயிர்த் தத்துவத்தின் அழைப்பு. இதய ஆர்வம் உணர்ச்சி வேகம் அல்லது சைத்தியத்தன்மை கொண்டது.
- அறிவு - 2007 a 18 Aur

பதில்
கேள்வி
uf56b
usisi
கேள்வி
பதில்
கேள்வி
ஆர்வ சக்தி சாதகருக்குச் சாதகர் அவரவர் இயற்கைக்கு ஏற்ப மாறுபடுமோ? இல்லை, ஆர்வம் எல்லோரிடையும் அதே சக்தி தான், தூய்மையிலும், தீவிரத்திலும், குறிக்கோளிலுமே மாறுபடுகிறது.
பலம் குறைந்த இச்சா சக்தியுடைய ஒருவன் ஆர்வத்தின் மூலமாகமட்டும் சாதனையில் முன்னேற (լpւգալOT? முடியும், இறைவனது இச்சா சக்தியைத் தன்னுள் வர அழைப்பதன் மூலம்.
ஆர்வம் சில வேளைகளில் மந்த கதியிலும் சில வேளைகளில் துரித கதியிலும் செல்வதேன்? எல்லார் விஷயத்திலும் அப்படியே. இயற்கை எப்பொழுதும் துரித கதியில் செல்ல முடியாது.
இயற்கை எப்பொழுதும் துரித கதியில் செல்ல முடியாதெனின் எங்களை இடைவிடாத ஆர்வத்தில் இருக்குமாறு கூறுவதேன்? நீ இடைவிடாத ஆர்வத்தில் இல்லாவிட்டால் இயற்கை பழைய கிழியல்பில் மூழ்கிவிடும்.
தீவிர ஆர்வத்தையோ தனது இயற்கையிலுள்ள தடையையோ உணராத சாதகன் ஒருவன் சாதனையில் முன்னேற முடியுமா? அப்படியானால் அவன் மெதுவாகத்தான் முன்னேற முடியுமென நினைக்கிறேன்.
ஆர்வமும் இல்லாமல், அனுபவங்களும் வராத நிலையில் சாதனையை விடாது பற்றிக்கொள்ள
சாதகன் என்ன செய்ய வேண்டும்?
ரீ அன்னையை நினை: அமைதியாக இருந்து அழை.
ஒரு சாதகனுக்கு அவனது ஆர்வத்தின் பலத்தால்
a 19 at
அறிவு - 2007

Page 13
பதில்
கேள்வி
பதில்
பதில்
8
தொடக்கத்திலிருந்தே முழுமையான இறையனுபவம்
கிடைக்குமா, முழுத் தூய்மையுடைய சைத்திய, ஆன்மீக ஆர்வம் இருந்தால் அவ்வாறு நடக்கலாம் - ஆனால், அது அரிது.
ரீ அன்னையின் சித்தத்தினாலும், திருவருளினாலும் ஆர்வமும் அதிகரிக்கின்றது என்று உணர்கின்றேன். அது சரிதானே? ஆம், ஆனால், நீ ஆர்வமுறாவிடில் அவ்வாறு நடக்காது.
இடைவிடாது ஆர்வமுறுமாறு கூறியுள்ளிர்கள். ஆனால், ரீ அன்னையின் சக்தியே எனது ஆர்வத்தைத் தூண்டவும், அதைப் பலப்படுத்தவும், வளரச்செய்யவும் செய்வதை நான் உணர்கின்றேன். இந்நிலையில் எத்தகைய சொந்த முயற்சி என்னிடம் தேவை? உன்னுள் ஆர்வமுறுவது பூரீ அன்னையின் சக்தியே என்பது உண்மை. ஆனால் உனது சொந்த உணர்வு தனது சம்மதத்தைத் தவறவிட்டால் சக்தி வேலை செய்யாது. சொந்த உணர்வு இடைவிடாது இறைவனை நோக்கித் திரும்பி, தெய்வ சக்தியின் வேலைக்கு அனுமதி தந்தால், ஆர்வமும் சக்தியின் வேலையும் இடைவிடாது நிகழும்.
ஆனால், சாதகனுடைய சொந்த உணர்வும் பூரி அன்னையால் இயக்கப்படுகின்றது. அவனுடைய செயல்களெல்லாம் அவளால் ஆளப்படுகின்றன என்பது உண்மையல்லவா? அப்படியானால், சாதகனுடைய சொந்த உணர்வு தவறு செய்யும் போது அந்தத்தவறுகளைச் செய்வதும் ரீ அன்னைதானா?
ஆனால், ஜீவனின் உயர் பகுதிகளில் ரீ அன்னை செயலாற்றுவதற்குச் சாதகன் திறவாயில்லாவிட்டால், ரீ அன்னை அவனுடைய கீழ்ப்பகுதிகளில் வேலை செய்து, அவனைப்பிழைகள் செய்யச்செய்து,
அறிவு. 2007 -20 -

பதில்
கேள்வி
பதில்
கேள்வி
uffisió
அவைகளால் வரும் துன்பத்தின் மூலம் அவன அறிவுபெற்று, தன் உயர்பகுதிகளில் அவரை நாடக செய்கின்றான் என்பது உண்மையல்லவா?
பூரீ அன்னை யாரையும் பிழைகள் செய்யச் செய்வதில்லை; பிரகிருதியே அவர்களைப் பிழைகள் செய்யச் செய்கிறது. புருஷன் தனது அனுமதியை மறுக்காதிருந்தால், இங்கு எழுந்தருளியிருக்கும் ரீ அன்னை இந்தக் கீழ்ப்பிரகிருதி அல்லள்: அவள் தெய்வ சக்தி ஆவாள். இக்கீழ் இயற்கை மாற்றம் அடையுமாறு வற்புறுத்துவதே அவர் வேலை. அந்த அழுத்தத்தைத் தாங்காது பிரகிருதி தடுமாறுகிறது. சரியானபடி இணங்கிநடக்கத் தெரியவில்லை, ஆகவே, பிழைகள் செய்கின்றது. எனக் கூறலாம். ஆனால், உன்னைத் தவறாக இயங்கச்செய்வதோ தவறான இயக்கங்களை உன்னுள் ஏற்படுத்துவதோ ரீ அன்னை அல்லள். அவ்வாறு கருதுவாயானால், நீ அவ்வியக்கங்களை அல்லது அவை தொடர்வதை ஆமோதிக்கும் அபாயம் ஏற்படும்.
பிரகிருதியும் இறைவனிடயிருந்துதானே தோன்றுகிறாள். அப்படியானால், அவள் தெய்வ அன்னையின் ஓர் அம்சமும் சக்தியும் ஆக மாட்டாளா?
எல்லாம் இறைவனிடமிருந்துதான் வருகின்றது. ஆனால், கீழ்ப்பிரகிருதி அஞ்ஞானத்தின் சக்தி ஆகவே அது உண்மையின் சக்தி அன்று: பொய்யும் மெய்யும் கலந்த சக்திதான். முறி அன்னை அஞ்ஞான சக்தி அல்லள்; அவள் உண்மையைக் கீழே கொணரவும். அஞ்ஞான நிலையில் உள்ளவைகளை உண்மைக்கு உயர்த்தவும் கீழே இறங்கி வந்துள்ள தெய்வ சக்தி.
ரீ அன்னை என்னுள்வேலை செய்யச் சம்மதம் அளிப்பதற்கு எவ்வகையில் என் சொந்த முயற்சி தேவைப்படுகிறது? உனது சம்மதத்தின் மூலம் சாந்தி, ஒளி, உண்மை,
2007 - அறிவு = 2211 س

Page 14
கேள்வி
uffisió
கேள்வி
கேள்வி
ஆனந்தம் ஆகிய உண்மைகளுக்கு உன்னை மென் மேலும் திறக்க வேண்டும். கோபம், பொய்மை, சிற்றின்ப இச்சை முதலியவற்றை உள்ளே அனுமதியா மலிருக்கவேண்டும்.
சாதகனுடைய இயற்கையில் ரீ அன்னையின் வேலை நடப்பதற்கு முழுச் சம்மதம் அளிக்கத் தடையாக உள்ளவை எவை? தவறான இயக்கங்கள் - பிடிவாதம், தன் முனைப்பு, பிராண வேகங்கள், இடம்பம், சொந்த ஆசைமுதலியன.
ஒருவனுக்கு உண்மையான ஆர்வம் இருந்தால் அவன் மனம் அஞ்ஞானம் நிரம்பியதாயும் குறையுள்ள தாயும் இருப்பினும் இறைவன் அவனைத் தனது இறக்கத்திற்குத் தகுதியுடைய பாத்திரமாகச்செய்கிறான் என்பது உண்மையா? ஆம், ஆனால் மனம் சிறுமையும் குறுமையும் உடைய தாகவும் - தனது குறுமையில் காதல் கொண்டதாயும் இருத்தல் கூடாது.
மனத்தின் குறுமையில் காதல் கொண்டிருத்தல் என்றால் என்ன? மக்கள் குறுகியிருப்பதை விரும்புகின்றனர். அவர்கள் தங்களுடைய குறுகிய கருத்துக்கள், உணர்ச்சிகள், அபிப்பிராயங்கள், மனச்சாய்வுகள் மீது பற்றுக் கொண்டு ள்ளனர். யாராவது அவர்களிடம் விரிவான சிந்தனையைத் தூண்ட முயன்றால், உடனே கலக்கமடையவும், கோபம் கொள்ளவும் அல்லது ஒரேயடியாய்ச் சந்தேகிக்கவும் செய்கிறார்கள். மனத்தின் குறுமையில் காதல் கொண்டிருத்தல் என்பது இதைத்தான்.
இருவருக்கும் ஆர்வத்தின் தீவிரம் ஒரே அளவாயிருப் பினும் கல்வியும் சிந்தனை வளர்ச்சியும் பெறாத ஒருவனை விட அவ்வளர்ச்சி பெற்ற கல்விமான்
gamma ΘηδωI - 2οο7 - 22 -

ug56
கேள்வி
பதில்
கேள்வி
ug5i
சாதனையில் அதிக துரிதமாக முன்னேறுகிறான். எனச் சிலர் கூறுகின்றனரே, அது சரியா?
அப்படி ஒரு விதியும் இல்லை. மனம் வலிமையும் வளர்ச்சியும் பெற்றிருப்பது அவ்வாறு இல்லா திருப்பதைவிட நல்லதே. ஆனால் புலமை மனத்திற்கு வலிமையும் வளர்ச்சியும் கட்டாயம் தரும் என்று சொல்ல முடியாது.
வலிமையும் வளர்ச்சியும் பெற்ற மனம் புலமையினால் உண்டாகாது என்கிறீர்களே, அப்படியானால் அதைத் தருவது எது? w சரியாகவும் விரிவாகவும் அறிய வேண்டும் என்னும் உறுதியினாலும், இளக்கமுடன் உண்மையை ஏற்பதனாலும் அது தானே உண்டாகிறது.
பலம் குறைந்த குறுகிய மனம் படைத்த ஒருவன் இறைவனது அருளை ஏற்கும் பொருட்டு தனது மனம் வலிமையும் வளர்ச்சியும் அடைய முயற்சி செய்ய வேண்டுமோ அல்லது அருள் இறங்குவதற்காக மனத்தை தயாரிப்பதையும் திருவருளிடமே விட்டு 6L6)TLDst? அது ஆளைப் பொறுத்தது. அவனுடைய பலம் குறைந்த அல்லது குறுகிய மனம் அவனுடைய சாதனைக்குத் தடையாக அமைந்தால் அதை விரிவாக்க அவன் முயலலாம். அவனுடைய இதயம் வலிமையுடனும் உண்மையாகவும் இருந்தால், அல்லது அவனுடைய சைத்திய புருஷன் தீவிரமாக செயல்பட்டால் யோக சாதனையின் போக்கில் தெய்வ சக்தியே அதைச் செய்யும்படி விட்டு விடலாம்.
*决决始钻火决火快杂共火火火杂
23 〜
அறிவு - 2007

Page 15
STEPHEN HAWKING
B. 1942
CHRONOLOGY
O1961 Hawking contracts the muscle-wasting motor neurone dis(ca.Se
o1971 Proposes the existence of mini blackholes
O1974 elected fellow of the Royal Society, one of the youngestever
O1977 Appointed Professor of Gravitational Physics at Cambridge
O1979 Appointed Lucasian Professor of Mathematics at Cambridge,
a post once held by Isaac Newton.
Stephen Hawking is one of the most notable, and certainly one of the most famous, theoretical physicists of the last fifty years. Acknowledged for his efforts in attempting to extend the General Theory of Relativity of Einstein(1879-1955), Hawking has sought to offerexplanations in all areas of cosmology, particular the nature and properties of black holes.
X BIG BANGS AND CRUNCHES After completing an undergraduate degree inmathematics and physics in 1962 and his phD at Cambridge in 1966, Hawking worked with Roger Penrose(b. 1931) on black hole theory and the origins of the universe. The outcome of their analysis of Einstein's General Theory of Relativity was that the implied big-bangstart to the universe should have begun with a gravitational “singularity, where matter was infinitely dense and space-time infinitely curved. Equally, it should end in singularities called blackholes, or evena'big-crunch' where the iniverse contracts back to its original state.
அறிவு-2007 -24

Hawking sought to unite quantum theory with gravitational theory, an ambitious undertaking
S ARELATIVE PROBLEM
The problem with these findings was that the existing General Theory of Relativity could not “Cope' with these singularities. So Hawking sought to extend it by uniting quantum theory as applied to atomicsized structures with the gravitational theory applied to the 'wider universe(as outlined in Einstein's General Theory). The need for this combination was highlighted even further when Hawking suggested in 1971 the idea of the formulation of mini blackholes immediately after the big-bang. These phenomena would have weighed up to a billion tons, and thus being susceptible to gravitational law, but only have been the size of a proton, thus having to obey quantum laws. This attempt to combine the two greatest physical theories has proved difficult, but did lead Hawking on to new developments in black hole theory.
In 1974 Hawking suggested that in line with his application of quantum theory, blackholes, out of which it was previously believed nothing could escape, including light, and whose properties could hever be known, could not actually be black'atall. Instead, they must effectively emit some energy where pairs of particles are separated, with negatively charged particles getting sucked intothohole and positively charged ones escaping as energy. This allowed the laws of thermodynamics also to be applied, uniting to Some extent the quantum and classical principles. Eventually, the blackhole would radiate away allofits energy and Vanish.
Furtherimplications of Hawking's 'quantum gravity suggested, indeed, there might be no singularities at all so the known laws of physics would therefore always apply, and always have applied. This would also imply no beginning or end to the universe, or any boundaries to it at all.
- 25 -
அறிவு - 2007

Page 16
Hawking's achievements inadvancing our understanding of black holes and extending debate on the scientific origins of the universe are all the more remarkable because he has continued work inspite of being diagnosed with the debilitating motor neurone disease since his student days. This has left him in a wheelchair and unable to talk, meaning he now communicates through a computer. In spite of only being able to convey a maximum fifteen words perminute via this method he has written and published numerous articles and books on his subject.
Hawking is almost certainly as famous for his ability to convey complex scientific ideas on the origins and physics of the universe to the general public as he is for his original scientific thought. He has achieved the rare combination of being talked of in academia in the same breath as some of the all-time greats of physics, whilst having many of his ideas, to some extent at least, understood by those outside his immediate field due to his popular presentation of them. Most notable amongst his books written in them. Most notable amongst his books written in this vein is the 1988 bestseller A Brief History of Time : From the Big Bang to Black Holes. Today, he continues to remain undaunted by such grand subjects, as demonstrated by the title of his 2002 publication, The Theory of Everything: The Origin and Fate of the Universe.
THE WORLD OF STEPHEN HAWKING
The combination of his writing for a popular audience, his radical ideas and his success over disability have made Hawking world famous. The scientist himself puts this down to people being, fascinated by the contrast between my very limited physical powers, and the vast nature of the universe I deal with.
அறிவு. 2007 - 26 சு

அட்டைப்படக்கட்டுரை
ஸ்டீபன் ஹோக்கிங்
சக்ர நாற்காலியில் கவிழும் தலையை யாராவது பிடித்து நிறுத்த வேண்டிய நிலையில், விரல்கள் மூலம் கணனியை இயக்கிப் பேசும் திறனை (நிமிடத்திற்கு 15 வார்த்தைகள்) உடைய பேராசிரியர் ஸ்டீபன் வேறாக்கிங்கின் வாழ்க்கை வரலாறு உலக சரித்திரத்தில் வாய் பேச இயலாத குருடு செவிடாக இருந்து சாதனைபடைத்த வுெறலன் கெல்லரையும் மிஞ்சிய அதிசயமே.
தசைநார் நலிவடையும் வருத்தம், கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் (1963ல்) இன்னும் இரண்டு ஆண்டுகளே உயிருடன் இருக்க முடியுமென எதிர்வுகூறப்பட்டது. 65 வருடங்களாகியும் மணம் முடித்து 3 குழந்தைகளுக்குத் தந்தையாகி, பல வருடங்களாக அதிக விற்பனையாகும் "காலத்தின் குறுகிய வரலாறு' (abriefhistory of time) 53553aba T GT95 956 epoof sofuji'il, ug55a5 PGILITES சாதனை படைத்து வறாலிவுட் சினிமாத்துறையிலும் தடம் பதித்து இன்றும் சீவித்து வரும் பேராசிரியர் ஸ்டீபன் வேறாக்கிங் வாழ்க்கை ஒரு அதிசயமே.
கடந்த ஐம்பது வருடங்களில் பெளதீகக் கொள்கைத்துறையில் தலை சிறந்த பிரபலமான வித்ளுானியாகக் கணிக்கப்படுபவர் ஸ்டீபன் வேறாக்கிங், பிரபல்மான விஞ்ளுானியான ஜன்ஸ்டீன் (1879 - 1955) வகுத்த சார்பு நிலைக் கொள்கையை மேலும் விரிவாக விளக்கிய இவர் பிரபல்சஇயலின் எத்துறையிலும்எதையும் விளக்க வல்லவரெனப்பெயர் பெற்றார்.இவரது ஆராய்ச்சிகளில் முக்கியமானது கருங்குளிகள் (Blackholes) utifu (8g.
ஸ்டீபன் வேறாக்கிங் 1942ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ந் திகதி ஒக்ஸ்ஃபோர்ட் நகரில் பிறந்தார்.தந்தை மருத்துவர். மருத்துவத்துறையில் ஆராய்ச்சியாளராகப் பணி புரிந்தார். 1942ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ந் திகதி 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபலமான அறிஞரான கலிலியோவின் 300வது இறந்த தினமாக அமைந்தது விசித்திரமான ஒற்றுமையே.
தந்தை விரும்பியபடி மருத்துவத்துறையில் சேருவதற்குத் தேவையான உயிரியல் படிப்பினை புறம்தள்ளி தனக்கு விருப்பமான பெளதீகப் பாடத்தினையே பாடசாலையில் தேர்ந்தெடுத்தப் படித்தார்.
2007 - ബ്രിഖ് سے 277 =

Page 17
பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே 1960ல் அவரது உடல் நிலையில் சில மாற்றங்கள் தென்பட்டன. ஒழுங்காக நடக்க இயலாமல் கவஷ்டப்பட்டார். பேசுவதிலும் சிரமம் ஏற்பட்டது. 1963ல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு சோதனைகளுக்குப்பின் தசைநார்கள் நலிவடையும் ஒரு அபூர்வமான ஆனால் மாற்ற இயலாத நோயால் பீடிக்கப்பட்டுள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்நோய் ALS என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமியோ ட்ரோஃபிக் லட்டரல் ஸ்கலரோசிஸ் (AMYO TROPHC LATERAL SCE LEROSIS) 6Tall' ch
முள்ளம் தண்டு நரம்பில் ஏற்படும் இந்நோய் சிறிது சிறிதாகப்பரவி உடம்பை நலிவடையச் செய்து இயங்க முடியாத நிலைக்குக் கொண்டு செல்லும், இது உடலிலுள்ள தசைகளை நலிவடையச் செய்யுமே ஒழிய மூளையில் எதுவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனால் பெளதீகத்தில் கொள்கைக் கருத்துத் துறையைத் தேர்ந்தெடுத்த ஸ்டீபன் வேறாக்கிங்கின் படிப்பிற்கு எதுவித தடையும் ஏற்படவில்லை. தனது துறையில் படிப்புகளைத் தொடர முடிந்தது. பலபல புதிய கணிடு பிடிப்புக்களையும் செய்ய முடிந்தது.
ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1962ல் தூயகணிதம் பெளதீகத் துறையில் இளநிலைப்பட்டப் படிப்பைப் முடித்துக் கொண்டு 1966ல் கலாநிதிப்பட்டப்படிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் செய்து முடித்தார்.
19746) grissoon b5at 9.Jgasps55at Fellow of Royal Society (FRS) உறுப்பினர் பட்டத்தைப் பெற்றார். அதிக இளம் வயதில் இந்தப்பட்டத்தைப் பெற்றவர் இவரே. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் புவி ஈர்ப்புப் பேராசிரியராக 1977ல் நியமிக்கப்பட்டார்.1979ல் பிரபல விஞ்நாணியான சர்ஜசாக் நியுட்டன் வகித்த பதவியான லூக்காசியன் தூயகணிதப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
றெஜர் பென்ரோஸ் என்பவருடன் சேர்ந்து நடத்திய ஆராய்ச்சியின் பயனாக ஜன்ஸ்டீனின் சார்புநிலைக் கொள்கைப் பிரகாரம் இப்பிரபஞ்சம் ஆரம்பத்தில் ஒரு புள்ளியாக (Singulury) இருந்து ஆரம்பித்திருக்க வேண்டுமென அறிவித்தார்கள். அதேபோல் பிரபல்சமுடிவும் ஆரம்ப நிலைக்கு சமமான ஒரு கருங்குளி (Blackhole) நிலையில் முடிவடையலாமெனவும் கூறினார்கள். தற்போது இருக்கும் ஜன்ஸ்டீனின் சார்புநிலைக் கொள்கை இதை முற்று முழுதாக விளங்கப்படுத்தாது என்பதனைக் கண்ட இவர் புவிஈர்ப்புக் கொள்கையுடன் அனுநிலையை விளக்கும் குவாண்டம்
өдоо - 2оо7 - 28 -

கொள்கையையும் இணைத்து இதை விளங்கப்படுத்த முயன்றார். இதை விளங்கப்படுத்த முற்பட்டபோது (1971ல்) புரோட்டன்கள் அளவு குட்டிகருங்குளிகள் (Mini black holes) பிரபல்ச உற்பத்தி ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கவேண்டும் என்று எதிர்வு கூறினார்.
1974ல் கருங்குளிகளிலிருந்த எந்தவிதமான ஒளியோ கதிரியாக்கங்களோ வெளிவராது என்று கூறப்பட்டது. எனினும் மின்ஓட்டமுள்ள துகள்களில் நேர் மின்ஓட்டமுள்ள நுகள்கள் வெளியேறும் எனவும் எதிர்மின்னோட்டமுள்ள துகள்கள் உள்ளே உறிஞ்சிஎடுக்கப்படும்எனவும் கூறினார்.அதோடு பிரபல்சஉற்பத்திநேரத்தில் ஒரு புள்ளிநிலை (Singularity) சில சமயங்களில் ஏற்படாமல் இருக்க வாய்ப்பு உண்டு என்பதனையும் கூறினார். இதனால் எந்த ஒரு நிலையிலும் எந்தப் பெளதீக விதிகளும் மீறப்படவில்லை என்பதனையும் கூறினார்.
எழுபதுகளில் பெரும் புகழ் வரத்தொடங்கியது. உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள பிரபந்சவியலாளர்களுடன் தொடர்புமேற்பட்டது. அமெரிக்காவிலும் உலகின் பலபாகங்களிலுமிருந்து வந்த அழைப்புக்களை ஏற்று பிரபல்சம் பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார். சிலசமயங்களில் நண்பர்களான சகவில்ாைனிகளும், இவரிடம் படிக்கும் கலாநிதிபடிப்பு மாணவர்களும் இவருக்காக இவரது சொற்பொழிவுகளை வாசிப்பார்கள் அதில் ஏற்படும் சந்தேகங்களுக்குத்தானே தனது கணனி மூலம் பேசிப் பதில் கூறுவார்.
புகழும் பட்டங்களும் வந்த குவித்தாலும் பேராசிரியர்களுக்கான ஊதியத்தில் வாழ்க்கை நடத்துவது கவர்டமான காரியமே. தனது இரண்டாவது மகளின் பிரேத்தியமாக டியூஷன் வைத்துப் படிப்பிப்பதற்கும், தனக்கு மருத்துவ பணிபுரியும் உதவியாளர்கள் செலவும் இவருக்கு பணமுடைஏற்படுத்தியது.
அடிமனதில் பிரபல்சம் பற்றிய ஒரு புத்தகத்தை பொதுமக்கள் விளங்குமாறு எழுத வேண்டுமென அவா கொண்டிருந்தார். சூழ்நிலைகளின் தூண்டுதலால் 1988ம் ஆண்டு பின்னர் பெரும் பணவகலையும், புகழையும் அள்ளிக்கொருத்த புத்தகமான காலத்தின் குறுகிய சரித்திரம் என்ற புத்தகத்தை "எழுதி வெளியிட்டார்”
பல ஆண்டுகளாக அதிகக்கூடிய விற்பனையாகும் புத்தகப்பட்டியலில் முதல் ஸ்தானம் பெற்ற இப்புத்தகம் இவருக்கு பணம், புகழ், ஒளிபரப்பு ஊடாகத் தொடர்பு,
வறாலிவூட் படத்துறை தொடர்புகளை ஏற்படுத்தியது.
~ 29 av
அறிவு2ை007

Page 18
25 வருடங்களாக கரிசனையுடன் தன் கணவனைப்பார்த்த வந்த ஜேனுக்கு இக்காலகட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முடிவில் விவாகரத்தும் செய்து கொண்டார்.
தனது பிரத்தியேக வாழ்வைப்பற்றி எவருடனும் அதிகம் பேச விரும்பாத பேராசிரியரும், அவரது மனைவியும் அவரது நண்பர்களும் இந்நிகழ்ச்சியினால் வேதனை அடைந்தாலும் சுதாகரித்துக் கொண்டனர்.
ஸ்டீபனி வுேறாக்கிங்கின் குரும்பவாழ்க்கை
சர்வகலாசாலையில் சக மாணவியான ஜென்வைல்ட் (Jamewilde) என்பவரைச் சந்தித்து நட்புப் பூண்டார். இவர்கள் அடிக்கடி சந்தித்து ஒருவரை ஒருவர் விளங்கிக் கொண்டனர். கலியாணம் நிச்சயமானது. அவரது வருத்தநிலையை அவர் வெற்றி கொள்வதற்கு உறுதுணையாகியது. 1965ல் ിത്രഥഞ്ഞൾ நடந்து 1967ல் அவர்களுக்கு ஒரு ஆணி குழந்தை பிறந்தது. றோபேர்ட்டின் வரவால்ஸ்டீபன் வேறாக்கிங்கின் மன நிலையில் ஒரு உற்சாகம் ஏற்பட்டது. நாலுவருடங்களுக்கு முன்னர் அவரது நோயைக் கண்டுபிடித்த மருத்துவர்கள் அவருக்கு இன்னும் இரண்டு வருடங்களே உயிருடன் இருக்க முடியும் என எதிர்வு கூறியிருந்தனர். ஆனால் இந்த நாலு வருடங்களின் நிகழ்ந்தவை அதைப் பொய்யாக்கியது. 1970ல் அவருக்கு இரண்டாவதாக லுசி என்னும் பெண் குழந்தை பிறந்தது 1979ல் அவருக்கு மூன்றாவதாக இன்னுமொரு மகன் - திமோதி- பிறந்தான். 25 வருடங்களாக தியாகத்தின் சின்னமாகக் கணவனுக்குத் தன்னையே அர்ப்பணித்த அவரது மனைவி பேரும் புகழும் பட்டங்களும் குவியத் தொடங்கிய போது தான் தனிமைப்படுத்துப்படுவதாக உணர்ந்தார். கணவனை பராமரிப்பதிலும் குழந்தைகளைப் பார்ப்பதிலும் வீட்டு வேலைகளைக் கவனிப்பதுடன் தனது படிப்பினையும் கவனித்துடாக்டர் பட்டம் பெற்ற மனைவி தனது கணவனுடன் வெளிநாடு செல்லுவதைக் குறைத்துக் கொணிடார். அதோடு தனது முன்னேற்றத்திலும் தனது வாழ்ககையைத்தானே அமைத்துக்கொள்ள எண்ணம் பூண்ட அவர் 1990ல் தனது கணவரை விவாகரத்துச் செய்து கொண்டார்.
வேறாக்கிங்கிற்கு பேசுவதற்கு வசதியுள்ள கனணியை அமைத்துக் கொடுத்த மேசன் என்பவரின் மனைவி ஏலையன் மேசன்ஸ்டீபன் வேறாக்கிங்கை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பின்னர் ஸ்டீபன் வறாக்கிங்கை மணந்து கொண்டார்.
... அறிவு. 2007 - 30 -

நீங்கள் அறிவியல் கற்றவரா?
கீழ்க்காணும் அறிவியல் கலைச் சொற்கள் உங்களுக்குத் தெரிகிறதா என்று பாருங்கள். குறைந்த பட்சம் உயர்நிலைப்பள்ளி மாணவர்களாவது இவற்றை அறிந்திருப்பது நல்லது.
96leo LDaop(Acid rain) : வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கந்தகம் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைட் போன்ற இரசாயனக் கழிவுப் பொருள்கள் வளி மண்டலத்தை மாசுபடுத்துகின்றன. இந்த மாசு, மழை பெய்யும்போது மழைத் தண்ணிரோடு கலந்து விடுவதால் இத்தகைய மழை நீர் அதிக அளவு அமிலத்தன்மை கொண்டதாக இருக்கும். வளர்ச்சியடைந்த நாடுகளில் இது ஒரு பிரச்சனையாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.
அமினோ அமிலம் (Amino acids) ; நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன், ஹைட்ரஜன் கலநீ த கலவை. இது ப்ரோட் டீன் என்றும் அழைக்கப்படுகின்றது.
eigfrEIOLf 6LITQasr (Elementary particle) : 6tsudsy (T6i, is6ursids போன்ற மேலும் பிரிக்கமுடியாத பொருட்கள்.
அறிவியல் முறை (Scientific Method) ; பிரச்சினையை அறிதல், விவரங்களைச் சேகரித்தல், விளக்கத்தை உருவாக்குதல் , சோதித்தறிதல், முடிவை விளக்குதல், முடிவை எட்டுதல், விளக்கதை மாற்றியமைத்தல், இந்த வரிசையில் ஒரு பிரச்சனையை அணுகுதல்.
அனு (Atom) : இரசாயன எதிர்வினையில் ஈடுபடுகின்ற மிகச்சிறிய துகள், ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட ப்ரோட்டான் அல்லது நியுட்ரோனை உடைய கருப்பகுதியும் இதைச் சுற்றிவருகின்ற எலெக்ட்ரான்களையும் கொண்டது.
அணுகுனிரு (Atomic bomb) :- அணுவின் கருப்பகுதியை இரண்டாகப் பிரிப்பதனாலோ அல்லது இன்னொன்றோடு சேர்ப்பதனாலோ உருவாகிற சக்தியைக் கொண்டுச் செயல்படுகிறது.
ஆக்கம்ஸ் ரேசா (Occam's razor) : பெ ரும பா ன  ைம யான உண்மைச் செயல்களுக்குக் காரணமான எளிய மதிப்பீடே (ஹைபோதிஸ்) சரியாக இருக்கும் என்ற கொள்கை.
۔ 351 ۔
அறிவு - 2007

Page 19
இன்ஃப்ராரெட் (Infrared) : கண்ணுக்குப் புலப்படாத மின்காந்த ஒளிப்பாகுபாட்டின் ஒரு பகுதி.
இரசாயனக்கட்டு (Chemical bond) : அணுக்களை மூலக்கூறோடு இணைக்கிற ஒரு வினை.
இஸட்-துகள் (Z-particle) : பலவீனமான அணுவிசையைச் சுமந்துசெல்கின்ற அணுத்துகளின் பகுதி.
ஈ-எம்ஸி’ (E=MC2) : ஒரு பொருள் வெளியிடுகிற சக்தியின் அளவு, அதன் எடையையும் ஒளியின் வேகத்தையும் பொறுத்து அமையும். ஈ - எனர்ஜி (சக்தி)
எம்-மாஸ் (எடை)
ஸி - ஸ்பீட் ஆப் வைட் (ஒளியின் வேகம்)
உயிரினத்தத்துவம் : ஒவ்வொரு உயிரினமும் தனக் கெனக் கொடுக்கப்பட்ட இடத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றல்.
e 6D 66ů u afleo6rso ( Green house effect) : G 6, j u Ló வெளியேறுவதைத் தடுத்து நிறுத்துகின்ற வாயு பெருமளவு பெருகுவதன் மூலம் இது நடைபெறுகிறது. இதனால் கோள்கள் மிகவெப்பமடைகின்றன. இதை க்ரீன் ஹௌஸ் இ.பெக்ட் என்பர். எக்ஸோபையாலகி ( Exobiology) ; வேற்று கிரக உயிரினங்கள் குறித்த ஆய்வு.
எதிர்ப்பு சக்தி (Antibody) மனித உடலில் நுழைகின்ற கிருமிகளை எதிர்த்து தானாகவே உருவாகிற ப்ரோட்டின், ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமிகளைச் செலுத்தி இப்படி ஒரு எதிர்வினையை உருவாக்குவதன் மூலம், அந்தக் குறிப்பிட்ட நோய்க்கு நம்உடலில் எதிர்ப்பு சக்தி கூடுவதற்கு ஏதுவாகிறது.
எதிர்மீப் வபாருளி (Antimoter) எதிர்மின் ஒட்டத்தை உடையதுகள்.
ளி கட்சத்திரம் (Come) உயர்ந்த நிலையிலுள்ள வாயுவும் தூசியும் ஒரு மிக நீண்ட பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன.
என்ட்ராபி (Entropy) ஒரு அமைப்பில் ஏற்படுகின்ற குளறுபடிகளின் அளவு
அறிவு-2007 - 32 -

என்சைம் (Enzyme) செல்களில் இரசாயன எதிர் வினைகளை உருவாக்குகிற ப்ரோட்டின்.
ஐயன் (lon) - மின்னூட்டப்பட்ட ஒரு அணு.
ஓசோன் மண்டலம் (Ozone layer) : ஒசோன் வாயு காணப்படுகின்ற, பூமியிலிருந்து 10-20 கி.மீ. உயரத்திலுள்ள ஒரு பகுதி. இந்த மண்டலம் அல்ட்ரா வயலட் கதிர்களை பூமியை அடைய முடியாமல் செய்வதன் மூலம் பல கொடிய நோய்களிலிருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது. குளிர்சாதனப்பெட்டியில் பயன்படுத்தப்படுகிற க்ளோரோ ஃப்ளோரோ கார்பன் இதை அழித்து வருகிறது.
கடத்தி (Conductor) : வெப்பமோ, ஒளியோ, மின்சக்தியோ ஊடுருவிப் பாய்கின்ற பொருட்கள்.
கறுப்புப் புள்ளி (Black hole) ; சில கோள்களில் காணப்படுகின்ற அதிகபட்ச புவியீர்ப்பு சக்தி, ஒளியைக்கூட தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளும். இதனால் இந்தக்கோள்கள் ஒரு கறுப்பு புள்ளியாகக் காட்சியளிக்கும்.
கார்பனி சுழற்சி (Carbon Cycle) : தாவரங்கள் கார்பனை உட்கொண்டு ஒளிச்சேர்க்கையினால் உணவு தயாரிக்கின்றன. அப்போது ஆக்ஸிஜன் வெளியிடப்படுகிறது. விலங்கினங்கள் தாவரங்களை உட்கொண்டு, ஆக்ஸிஜனை சுவாசித்து கார்பனை வெளியிடுகின்றன. மண்ணோடு மண்ணாக மாய்ந்தபின் மீண்டும் கார்பனை வாயு வடிவில் வெளியிடுகின்றன. இப்படி கார்பன் ஆக்ஸிஜனாகவும், மீண்டும் கார்பனாகவும் மாறுவதை கார்பன் சுழற்சி என்பர்.
குறைந்த பட்ச வெப்பநிலை (Absolute zero) : 273.15 செல்சியஸ் வெப்பநிலையை மிகக் குறைந்தபட்ச வெப்பநிலை என்பர். இந்த நிலையில் எல்லா அணுக்களின் மற்றும் மூலக்கூறுகளின் நகர்வும் நின்றுவிடும்.
கொழுப்புச் சத்து ( Cholesterol) : மனித உடலில் காணப்படுகிற
கொழுப்பு போன்ற ஒரு பொருள்.இரத்தக் குழாய்கள் இறுக்கமடைய இது காரணமாகிறது.
2007 - elsea ایست ه ش

Page 20
BrIDBarrib ( Chromosome) : G s 6ö 6ú6 aE(bů Luggluf6ð காணப்படுகின்றது. இது ஒருவருடைய அடிப்படைக் குணநலன்களைத் தன்னகத்தே கொண்டது.
đồsắb Drifbgplb samfaras (Crick and Woutson) : îJT6ð6móGmò, G&gb6mö, என்ற இரு ஆங்கில, அமெரிக்க அறிவியலறிஞர்கள் 'டீஎன்ஏ" இரட்டை ஹீலிக்ஸ் வடிவில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
க்வாசர் (uெdsor) : பேரண்டத்தின் முடிவிலுள்ள நட்சத்திரம் போல் மின்னுகின்ற நட்சத்திரங்கள். பேரண்டம் உருவானதைப்பற்றியும் அவற்றின் வயதையும் அறிந்து கொள்ள உதவுகின்றன.
சாப்ட்வேர் (Software) : கம்ப்யூட்டருக்கு கொடுக்கப்படுகின்ற கட்டளைகள்
சிறுமூளை ( Cerebellum) : தசைகளைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் ஒருபகுதி
சூப்படி கண்டக்டர் (Super conductor) ; எந்த தடையுமின்றிசக்தியைக் கடத்துதல்.
செரிப்ரல் கார்வடக்ஸ் (Cerebral Cortex) : உன்னத எண்ணங்களைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் பகுதி.
செல் (Cel) : உயிரின் அடிப்படை அலகு ஆகும். செல்லில் உள்ள மூலக்கூறு பரம்பரைக் குணநலன்களைத் தன்னகத்தே கொண்டது.
சென்டிக்ரேட்(Centigrade) : பனி உறை நிலையினைப் பூஜ்யமாகவும், நீரின் கொதிநிலையினை 100 பாகை என்கிற அளவிலும் வரையறுத்துக் கொண்டுள்ள வெப்ப அளவுகோல். செல்சியஸ் என்பவர் பெயரால் வழங்கப்படுகின்றது.
சோதிடம் (Astrology) : விண்வெளியில் உள்ள கோள்கள் மனிதன் மேல் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப்பற்றி ஆராய்கின்ற கலை.
டாப்ளர் விளைவு (Doppler effect) : அலைகளின் அலை வரிசை, அலைகளை வெளியிடும் பொருளோ அல்லது அவைகள்
அறிவு - 2007 - 34 -

சென்றடையும். பொருளோ நகர்கின்றபோது மாறுபடுகிறது. (எ.கா) தீயணைக்கும் படையினர் சங்கேத ஒலியின் அலைவரிசை நம்மை நோக்கி நெருங்குகையில் அதிகமாவதும் நம்மைத் தாண்டித் செல்கையில் குறைவதும். W
DLOrsarlf (dinosaur) : 65.220 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு இழையும் பிராணி. (மனிதன் தோன்றுவதற்கு 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்)
நட்சத்திரம் (stor) ; சூரியனைப் போன்ற விண்ணிலுள்ள வாயு நிறைந்த ஒரு கோள்.
நியுரான்(Neuron) நரம்பு மண்டலத்திலுள்ள 1000 கோடி செல்களில் ஒன்று.
பயோமாஸ் (Biomass) : ஒரு சதுப்புநிலம் போன்ற இடத்தில் மண்டிக்கிடக்கும் மக்கிய தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் மொத்த
6T6).
பரிணாமம் (Evolution) : உயிரினங்களின் அடிப்படைக் கூறுகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மாற்றப்படுகிறபோது, அவை அந்த உயிரினங்களை உன்னத நிலைக்கு வழிநடத்திச் செல்கிறது என்ற கொள்கை. '
ஃபாசில் எரிவபாருள் (Fossil fuel) : உயிரினங்கள் அழுகி உருவாகிற எரிபொருட்கள்.
பாக்டீரியா (Bacteria) : கண்ணுக்குப புலப்படா நுண் உயிரினங்கள்.
IIIIob IIăinîfo Gât demib (Sex-linked trait) : stă60 9606ogi ஒய் க்ரோமசோம்களால் ஏற்படுத்தப்படுகின்ற பண்பு நலன்கள்.
rib-LTTIf conf Tob (Big-bong theory) : D 6osib Dibb (35(T6 resoir
திடீரென்று ஏற்பட்ட வெடிப்பினால் உண்டானவை என்கிற கொள்கை.
பிளவு: புவியதிர்ச்சி ஏற்படுகின்ற இடங்களில் காணப்படுகின்ற பூமியின் மேலோட்டிலுள்ள பிளவு.
பைட் ( Byte) : கம்ப்யூட்டர் உபயோகத்தில் பயன்படுத்தப்படுகின்ற ஒரு அளவு "முறை.
-35 - அறிவு-2007

Page 21
Lai 6alf aris (Geothermol energy) : L6 hu's G6. Luisite) கிடைக்கின்ற சக்திவளங்கள் (எ.கா.) வெப்ப நீருற்று.
புவியீர்ப்பு விசை (Grovity) : எந்த ஒரு பொருளையும் தன்னை நோக்கி இழுக்கின்ற ஒரு விசை.
ப்ளஸ்மா (Plasma) திட, திரவ, வாயுப் பொருட்களில் சேராத நான்காம் வகைப்பொருள்.
IfigfromÍhöồ đ5ắ6ff6ĩỡời (Elecfromdgnetic Todidỉion) : 616ò8ự jmsởI விரைவு படுத்தப்படுவதால் உண்டாகிற சக்தியின் அலைவீச்சு.
flagf LnIfL Sifussib (Electric radiation) : D luig digs கொண்ட கதிரியக்கம், தான் ஊடுருவிச் செல்கிற பொருள்களின் மூலக்கூறுகளிலுள்ள எலெக்ட்ரான்களை அழித்து விடுகிறது.
IDsoflapdf an urosu Gonost of Lib (Genetic Engineering) மனிதக்கூறுகளில் மாற்றம் ஏற்படுத்த வல்ல தொழில் நுட்பம்.
மெண்டல் (Mendal) : பரம்பரைத் தத்துவங்களை கண்டறிந்த ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த தாவரவியல் அறிஞர்.
mabLr 9Iara dipop (Richter Scale) : usiugiaou sej6T6iGub முறை. இந்த அளவின்படி 6 என்பது பல அடிப்படைச் சேதங்களை உருவாக்கும். 8 என்பது மிகப்பெரிய அழிவை உருவாக்கும்.
BigSur 6 IsosDBöréfồ6 (Rodio Telescope) : " SÊ 56n 6opasë தொலைநோக்கி, ரேடியோ அலை வரிசைகளைச் சேகரிக்கிறது (ஒளி அலைவரிசைக்குப் பதில்).
வானவியல் ( Astronomy) : கோள்களின் சுழற்சி மற்றும் குணநலன்களைப் பற்றிய படிப்பு.
கினோம் (Genome) ஒரு உயிரினத்திலுள்ள எல்லா அடிப்படைக் கூறுகளும்.
ஹார்மோன் (Harmone) : என்டாக்கிரின் சுரப்பியிலிருந்து வெளியாகிற திரவம். உறுப்புகளின் வளர்ச்சிக்குக் காரணமாகிறது.
- DBOITIIDI SòfLđò 1992 -
அறிவு 2007 r 36 aw

முக்கிய தினங்கள்
NNjl
fluûyens
or 03
yûyd 07
ea
Sana
11 2 14 15 17 23 26
லால்பகதுார் சாஸ்திர் நினைவு தினம் விவேகானந்தர் பிறந்த தினம், தேசிய இளைஞர் தினம் சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று புதுப்பிறவி பெற்ற தினம் இராணுவ தினம்
எம்.ஜி.ஆர் பிறந்த தினம்
நேதாஜி பிறந்த தினம் இந்திய குடியரசு தினம், சர்வதேச கஸ்டம்ஜஸ் தினம்
30 காந்தி நினைவு தினம்-தியாகிகள் தினம்
O3
28
இராமலிங்க சுவாமிகள் நினைவு தினம்
அறிஞர் அண்ணா நினைவு தினம் தேசிய அறிவியல் தினம்
பங்காரு அடிகள் பிறந்த தினம்
08 15 2
உலக மகளிர் தினம் உலக ஊனமுற்றோர் தினம் உலக வன தினம்
ஜி.டி.நாயுடு நினைவு தினம்
量4 21 22 29
O1 O3
O8 5 7
21
24 27 3.
O3 O5 20
O4
15
உலக ஆரோக்கிய தினம் டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினம் பாரதிதாசன் நினைவு தினம் பூமி தினம் பாரதிதாசன் பிறந்த தினம்
தொழிலாளர் தினம்
பத்திரிகை சுதந்திர தினம் (இரண்டாம் ஞாயிறு)தாய் தினம் உலக செஞ்சிலுவை தினம் சர்வதேச குடும்ப தினம் உலக தகவல் தொடர்பு தினம் ராஜீவ் காந்தி நினைவு தினம் காமன்வெல்த் தினம், ஆதித்தனார் நினைவு தினம் பண்டிட் ஜவஹர்லால் நேரு நினைவு தினம் புகையிலை எதிர்ப்பு தினம்
மு.கருணாநிதி பிறந்த தினம் உலக சுற்றுச் சூழல் தினம் தந்தையர் தினம்
விவேகானந்தர் நினைவு தினம் உலக மக்கள் தொகை தினம் காமராஜர் பிறந்த தினம்
- 37 - - அறிவு ை2007

Page 22
Abdè 06 09
15 8 29 30
6ơủLêuỹ05
08
11
15
6 17 26 27
åLlmus 01 02
03 04 05 08 09 10 4 16 24 30 31
saibur, 09 14 18 19 23 30
Qribut 01 04 06 09 O 11 23 24 25
ஹிரோஷிமா தினம் வெள்ளையனே வெளியேறு தினம், நாகஸாகி தினம் சுதந்திர தினம் நேதாஜி நினைவு தினம்
தேசிய விளையாட்டு தினம் கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு தினம்
வ.உ.சி. பிறந்த தினம், ஆசிரியர் தினம் உலக எழுத்தறிவு தினம் பாரதியார் நினைவு தினம் அறிஞர் அண்ணா பிறந்த தினம் உலக ஓசோன் தினம்
பெரியார் பிறந்த தினம்
காது கேளாதோர் தினம் உலக சுற்றுலா தினம், ஆதித்தனார் பிறந்த தினம்
உலக முதியோர் தினம் காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினம், லால்பகதுார் சாஸ்திரி பிறந்த தினம் உலக குடியிருப்பு தினம் உலக விலங்கு நல தினம் வள்ளலார் பிறந்த தினம் இந்திய விமானப்படை தினம் உலக தபால் தினம் தேசிய தபால் தினம் உலக தர தினம் உலக உணவு தினம் ஐக்கிய நாடுகள் தினம் பசும்பொன் தேவர் ஜெயந்தி இந்திரா காந்தி நினைவு தினம்
வீரமாமுனிவர் பிறந்த தினம் நேரு பிறந்த தினம், குழந்தைகள் தினம் வ.உ.சி நினைவு தினம் இந்திரா காந்தி பிறந்த தினம் ரீ சாயிபாபா பிறந்த தினம் ஜெகதீஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்
உலக எய்ட்ஸ் தினம்
கடற்படை தினம்
அம்பேத்கார் நினைவு தினம்
இராஜாஜி பிறந்த தினம்
மனித உரிமை தினம்
பாரதியார் பிறந்த தினம்
விவசாயிகள் தினம்
எம்.ஜி.ஆர் நினைவு தினம், பெரியார் நினைவு தினம்
இராஜாஜி நினைவு தினம், வாஜ்பாய் பிறந்த தினம்
Sousan - 2oo7 - 38 -

நான் வணங்கும் விதய்வம் நாட்டினிலே
தம்பலகமம் இசைக்கலைஞர் க. சனிமுகலிங்கம்
திருமலைத்தாயின் நெற்றித்திலகம், கலாவினோதன், கலாபூஷணம், முதுகலைஞர்பல்துறைப்பணிழதன்,சித்தி அமரசிங்கம் அவர்களைப்பற்றி நாடகப்பணி, எழுத்துப்பணி, நூல் வெளியீட்டுப்பணிபோன்ற துறைகளை அவருடன் இணைந்து பணிசெய்த அன்பர்கள் பத்திரிகைகளில் எழுதி வெளிவந்தவணிணமுள்ளது. |மேலும் மேலும் வெளிக்கொணர வேண்டிய தகமையை
அவர் அடைந்து விட்டவர்.
ஆனால், அவருக்கிருந்த இசை ஆர்வத்தை, சங்கீதப்பித்தை நான் அறிந்த அளவு மற்றைய அன்பர்கள் அறிந்திருக்க முடியாது என்று உறுதியாகக்
p ഗ്രശ്നം
மூதறிஞர் சித்தி அமரசிங்கம் அவர்கள் எனது பள்ளித்தோழன். 1946லிருந்து அன்னார் மேற்பழப்பிற்காக 1953 வாக்கில் தமிழ்நாடு செல்லும் வரை திருகோணமலை இந்துக்கல்லூரியில் ஒரே இருக்கையில் நாங்கள் இருவரும் பக்கத்தில் இருந்து கல்விகற்றவர்கள். அத்தோடு எங்களது அருமை நண்பர்களான டாக்டர் ச. இராமச்சந்திரன், பத்திரிகையாளர் சி. குருநாதன் இப்பொது அமெரிக்காவில் வாழும் து. சண்முகநாதன், சிவசிதம்பரம் (பண்டா) ஆகியோரும் நெருக்கமான கூட்டாளிகள். அந்தச் சின்னப்பருவத்திலேயே எப்போதும் கலகலப்பாக இருக்கும் சூழலை உண்டாக்கிக் கொண்டே இருப்பார் சித்தி அமரசிங்கம்.
அப்போது ஒரு ஆசிரியர் இருந்தார் அவருக்கு ஒரு விசேட குணம் மாணவர்கள் யாரும் எக்காரணம் கொணர்கும் சிரித்தால் முதுகிலேயே பிரம்புகொண்டு விளாசுவார்.
இப்பழ ஒரு பிரம்பு நாயகரும், எப்போதும் சிரிப்பாலைகளை எழுப்பும் அமரசிங்கம் என்ற கோமாளியும் இருக்கும்போது அந்தப் பிரம்புக்கு போதிய வேலை கிடைத்திருக்கும் தானே?
39 அறிவு = 2007

Page 23
1951ல் வெளிவந்து பல மாதங்கள் வெலிங்டன் தியேட்டரில் (இப்போது அண்ட்று) ஒழய "பாதாள பைரவி” என்ற படம் பலரைப் பலதடவைகள் பார்க்கத்தூணிடிய ஒரு படம். அந்தப் படத்தை நானும் அமரசிங்கம் அவர்களும் பலப்பல தடவைகள் பார்த்து அதன் பாடல்களும், வசனங்களும் எங்களுக்கு அத்துபடியாயின. அவர் நகைச்சுவைப் பகுதி வசனங்களைப் பேசி அப்படியே நழத்துக் காட்ட, நான் பாடல்களைப்பாட, வகுப்பில் பாடம் இடம்பெறாத நேரமெல்லாம் பாதாள பைரவியின் கலகலப்பு, வெழச்சிரிப்பு.
சிரிப்பை வெறுக்கும் அந்த ஆசிரியரின் பிரம்பு “பாதாளபைரவி”க்கும் பலதடவை எங்கள் முதுகில் முத்திரை பதித்திருக்கின்றது. பிற்காலத்தில் அமரர் நாடகத்துறையில் பிரகாசிக்க அந்த நிகழ்ச்சிகள் முன்னோடியாக இருந்ததை இப்போது மீட்டுப் பார்ப்பது அவசியமாகிறது. அக்காலத்தில் இசைமேதை C.R. சுப்பராமன் அவர்களின் இசையமைப்பில் பல படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அவற்றில் பரணி “லைலா மஜ்னு” ஒன்று. பானுமதி, கணிடசாலா இருவரும் மாழயவை இப்போதுகேட்கும்போதும் மனதைப்பிழிந்து எடுப்பவை. நாங்கள் இருவரும் அந்தப் படப்பாடல்கள் எல்லாவற்றையும் பாடிப்பாழ உருகுவோம். பிற்காலத்தில் கூட என்னைப் பாடச்சொல்லிக் கேட்டு, தானும் கூடப்பாடி மகிழ்வார். அவை எல்லாம் பொற்காலத்தின் சுவடுகள்.
பின்னர் மற்றைய நர்ைபர்கள் மேற் கல்விகற்கவும், அமரர் அவர்கள் மேற்பழப்பிற்காக தமிழ்நாடு செல்லவும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. அந்தப்பிரிவு இசைப்பங்கீட்டுக்கு எனக்கு நேர்ந்து விட்ட ஒரு விபத்தாகவே உணர வைத்தது. நான் தனியனானேன்.
அவர் கலை விஸ்வரூபம் எருப்பதற்காகவே தமிழ்நாட்டுப்பயணம் பயனர்பட்டதே தவிர, உயர் கல்வி என்ற நோக்கம் சிலகாரனங்களால் நிறைவேறவில்லை. பின்னர் தமிழ்நாட்டிலிருந்து திரும்பியதும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நான் பலமுறை சந்திப்பதுண்டு. மற்றவர்களைப் போல் உழைக்க வேண்டும். பணம் தேட வேண்டும், வளமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணாமல் நாடகம், வில்லுப்பாட்டு, சங்கீதப் பயிற்சி என்று எந்நேரமும் அதே சிந்தையோடு செயற்பட்டுக் கொணிழருந்தார். சித்தி அம்மையாரைக் காதலித்துக் கரம் பிழத்த பின்னர் கூட, சிறு முயற்சிகளில் ஈடுபட்டு குறைந்த வருவாயோடு சிக்கனமாக வாழ்ந்துகொண்டு சமயத்துறையிலும் ஈடுபட்டு சுவாமிகெங்காதரானந்தா அவர்களின் ஆசியோரு வாழ்ந்தார். எண்ணையும் சுவாமிஜிக்கு அறிமுகப்படுத்தி சிவயோக சமாஜபஜனைகளில் ஈடுபட்டு சுவாமிஜியையே தனது குருவாகக் கொண்டு துணைவியாரும் அவரும் ஆத்மீக நெறியோடு வாழத் தொடங்கினார்கள்.
ණli)ශ1 - 2oo7 - 40 =

அதன் பின்னர் பலதுறைகளிலும் கால் பதித்து பல்கலைப் பரிணாமத்தை அடைந்தார்.
திருகோணமலை பட்டினச் சூழலிலும், அடுத்துள்ள கிராமங்களிலும் உள்ள கலைஞர்களைத் தேடிப்பிழத்து விபரங்களைச் சேகரித்து பிரபல பத்திரிகைகளில் வெளியிட்டார்.
எனது தந்தையார் கணபதிப்பிள்ளை அவர்கள் ஒரு சிறந்த ஹார்மோனிய வித்தகர், அண்ணாவியார். பல நாடகங்களைத் தயாரித்துப் புகழ் பெற்றவர்.
1977 வாக்கிலி அவரைத்தேடி தம்பலகமம் வந்து அன்னாரது அனுபவங்களை பத்திரிகை வாயிலாக வெளிக் கொணர்ந்தார்.
அவருடைய கலைத்தேடலை உதாரணப்படுத்த வேணர்ருமானால் தமிழ்த் தாத்தாடாக்டர் உ.வே.சாமிநாத ஐயரையே ஒப்பிட்டுக் கூறத்தோன்றுகிறது. இதுவரை சுமார் ஐம்பது பல்துறைக்கலைஞர்களைமேடையேற்றிக் கெளரவித்துள்ளார்என்றால் இனி யார் இதைச் செய்யப் போகிறார்கள்? அந்தப் பெருந்தன்மை யாருக்கு வரும்.
என்னையும் இசைநாடகங்களில் ஈடுபடுத்தி பாடி நடிக்க வைக்க பெருமுயற்சி எடுத்தார். ஆனால் எனது வாழ்க்கைப்போக்கு அதற்கு இடம் தரவில்லை. அதனால் நான் சிறந்த வளர்ச்சியை இழந்தமையை இன்று உணர்ந்து வருந்துகிறேன். ه
ஆனால் சில நாடகங்களுக்கும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளுக்கும் இசை அமைத்துப்பாடுவதற்கு எனக்கு வாய்ப் புத்தந்தமையை மறக்க இயலாது. யாரிடம் திறமை இருந்தாலும் தேழப்பிழத்து அதை வெளிக் கொணர்ந்து கெளரவிப்பது அவரது பரந்த செயற்பாடுகளுக்கு சான்று பகிர்ந்து கொண்டே இருக்கிறது.
கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்க வேண்டும் என்ற பேரார்வத்தில் இசைமேதை திரு. சங்கரலிங்கம் ஐயா அவர்களிடம் முறையாகப் பாடம் கேட்டு பத்து வர்ணங்களைப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். மிருதங்கம் பழக வேண்டும் என்று இன்று வெளி நாட்டில் வாழும் திரு சிவராசா அவர்களிடம் சிலகாலம் பயின்றார்.
அவருடைய இசை ஆர்வத்துக்குக் கட்ழயம் கூற வயலின், தம்புரா, ஹார்மோனியம், உடுக்கு போன்ற இசைக்கருவிகள் வீட்டில் இருக்கின்றன. இன்னொன்றும் அவரது துணைவியார் மூலம் அறிந்தேன். நூல் வெளியீட்டு முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கொம்பியூட்டர் பயிற்சியிலும் கால் பதித்திருக்கின்றார்.
இப்பழம் பல்துறையில் கவனம் இருக்கும்போது எப்போதும் ஒரு பழைய படப்பாடல் வாயில் முணுமுணுப்பாக வந்து கொண்டே இருக்கும். . .
= 41 = அறிவு ை2007

Page 24
பழைய படப்பாடல்களில் பெரும்பாலானவை சுத்தமாக இராகங்களை வெளிப்படுத்தும் அரிய படைப்புக்கள். நாங்கள் இருவரும் நேரம்போவது தெரியாமல் அவற்றைப்பாடி மெய்மறந்து இருந்த நேரங்கள் பலப்பல. அவரது பிரிவு பழைய படப்பாடல்களின் அருமை பெருமைகளை ஆழ்ந்து ரசித்து அனுபவிக்க எனக்கு இனியார் உணர்டு? என்று ஏங்கித் தவிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.
முறைப்பழசங்கீதம் கற்கத்தவறிய, அல்லது கற்கக் கொடுத்துவைக்காத ரசிகக் கலைஞர்களுக்கு ராகங்கள் பலவற்றை இனம் கண்டு அனுபவிக்க அந்தம் பழைய பாட்டுச் செல்வங்கள், முதுசங்கள் இப்போது கிடப்பில் போடப்பட"குத்திசை” என்ற பெயரில் சப்தஸ்வரங்களை மக்கள் விரும்புகிறார்கள் என்று காரணம் கூறி அந்தக் காரணமாகிய புதரில் மறைந்து கொணர்கு இசைக் கொலை செய்கிறார்கள் சினிமா மேதாவிகள். எல்லாம் ஏழு சுரங்கள்தான் என்று சில பெரிசுகளும் ஒத்து ஊதுகிறார்கள். ஆனால் காலத்தின் கோலத்தை வெல்வது எவ்வளவு சிரமமான விடயம். பாவம் "ஏழு சுரங்கள்”
முது கலைஞரும் நானும் சநீதிக்கும் பலநேரங்களில் இந்த வேதனைகளைப் பகிர்ந்து கொள்வோம். “திரை இசையில் இராகங்களைத் தேடல் மூலம் கற்ற ஒரு பகுதி கலைஞர்களுக்கு இந்த போக்குகள் சகிக்க முடியாத நரகவேதனை. ஆனால் இன்னொரு பக்கம் சுந்த கர்நாடக இசை இப்போதுவளர்ந்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திரை இசையும் அந்த வழிக்கு வரும்” என்று ஒரு சமயம் அமரர் கூறினார். அப்பழ ஒரு மாறுதல் வரவேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்தேன். கலைத்தாய்தான் காக்க வேண்கும்.
இப்பழ நேரம் போவது தெரியாமல் M.K.T. பாகவதர் தொடங்கி K.J.ஜேசுதாஸ் வரை எங்களை மறந்து அளவளாவும் போது சித்தி அம்மையார் குறுக்கிட்டு நேரத்தை நினைவூட்டி எங்களைப் பல நாட்கள் கட்டுப்படுத்திரசனைக்கு வரம்பு கட்டுவார். அதற்கு முக்கியகாரணம் அவரது உடல், நோய்க்கு இடமாகி இருந்ததுதான்.
அவரது துணைவியார்பெயரில்தான்“சித்தி". ஆனால் அவரைப்பேணலில் அன்னையின் இடத்தைக் கொணிழருந்தார். வேளா வேளைக்கு அவருக்கான பத்தியச் சாப்பாடு, மருந்து, ஓய்வு கொள்ள வேண்டிய அளவு என்று அவரது தாயாகவே பேணி வந்ததை இங்கு குறிப்பிடல் அவசியமான ஒன்று.
ஒருநாள் அமரர் இப்பழக்கூறினார். "இளமையில் நட்பு ஒரு சம்பிரதாயமாக இருந்தது. அக்காலங்களில் குடும்பக் கடமைகள், பொருளிட்டல் என்ற ஈடுபாட்டால்
snia- 2007 - 42 -

மனம் ஒன்றிக் கலந்துரையாட, இப்பழப் பழமையைப் பேணிக் கலந்துரையாட முழவதில்லை. நல்ல நட்பைக் கூட பிணிக்கும் அழப்படைகளும் உறைப்பதில்லை. முதுமைக் காலத்தில் தான் நட்பின் அருமையும், பெருமையும் தெரிகிறது. உன்னோடு எவ்வளவோபேசிப்பாழ அனுபவிக்க வேண்டிய விடயங்கள் உள்ளது. ஆனால், நான் மேற்கொண்டுள்ள பணிகளும், உடல்நிலையும் இடம் தருவதாக இல்லையே“என்று NP நான் கூறினேன்”. மறுபிறவியில் இருவருக்கும் நம்பிக்கை இருக்கிறது. இறைவனிடம் இன்னொரு பிறவியில் எங்களை நணர்பர்களாக்கும்பழ வேண்டுவோம்” என்று.
எங்கள் நட்புக்கே இத்தகைய வலிமை இருந்தால் அவரோடு உயிர் கலந்து தாய்ப் பாசம் பொழிந்த சித்தி அம்மையாருக்கு அவர் கடைசியாக கூறியிருக்கிறார். "நீ ஒன்றுக்கும் அஞ்சாமல் இரு நான் உன்னோடு எப்போதும் பிரியாமல் இருப்பேன்” என்பதாக. இப்போது அவர் இல்லத்துக்குச் செல்லும் போதெல்லாம் அவருடைய வரவேற்புச் சொல்லோசை எனது செவியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
முழவாக இக்கட்டுரைக்குத் தேர்ந்தெடுத்த தலைப்புக்குக் காரணம் கூறி முழக்க வேண்டுமே.
1949ல் வெளிவந்த அறிஞர் அண்ணாவின் படைப்பு "நல்லதம்பி” என்ற திரைப்படம். கலைவாணர் N.S. கிருஷ்ணனின் பங்களிப்பில் புதுமையும், புரட்சியும் பூத்த ஒரு ஓவியம். அந்தப்படத்திற்கு ஒரு பாடல் அமைக்கப்பட்டும் படத்தில் ஏனோ வெளிவரவில்லை. "நான் வணங்கும் தெய்வம் நாட்டினிலே” என்பது பாடலின் தொடக்கம். குயிலோசைக்கு நிகராக P. பானுமதி பழயிருந்தார். இசை மேதை S.V. வெங்கட்ராமன் இசையமைப்பு. யமன் கல்யாணி, ஆபேரி. மாண்ட என்னும் மூன்று கவர்ச்சி இராகங்களில் மெட்கு. சுர்ைடி இழுக்கும் சுவை. மூன்று நிமிடப்பாடல்.
இந்தப்பாடல் இசைத்தட்ழல் வெளியாகி, பிரபலம் பெற்றது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பாட்டின் நினைவு. நான் ஒரு நாள் நினைவுபூட்ழப் பாழக்காட்டினேன். மூதறிஞருக்கு ஒரே வியப்பு. என்னைப்பாட வைத்து ஒலிப்பதிவு செய்து அமெரிக்காவில் வாழும் எங்கள் ரசிக நண்பர் சனிமுகநாதனுக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பாடலை நினைவில் எப்போதும் நிறைத்து வைத்தக் கொண்டு பாடலின் இனிமை மட்டுமல்ல, கருத்தும் எனக்கு அறிவுரையாகவும், நான் மேற்கொண்டுள்ள பணிகளுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறது என்று அழக்கழ பாடச்சொலலிதானும் பாடம் பணிணிக் கொண்டார்.
இருவரும் யாராவது நண்பர்களைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் அதே பாடலைப் பாடச் சொல்லி அவர்களை மகிழ்விப்பார். சில மேடைகளிலும்
பாடச்சொல்லி எனக்குப் பாராட்டுக்கிடைக்க வைத்தார்.
-43 -
அறிவு - 2007

Page 25
"நான் வணங்கும் தெய்வம் நாட்டினிலே நன்றே எனில் அதை இன்றே செய்பவன்”
என்பது பாட்டின் முதல் இரண்டு வரிகள் வாழ்நாளெல்லாம் நன்றே எண்ணி, ஏணிணியதை அன்றே செய்தவரல்லாவா? இநீதக் கவிதை அவருக்கு பொருத்தமானது. எனது பள்ளித் தோழன், சமவயது ஆனால் அவர் மறுத்தும் நான் அவரை ஐயா என்றே விளித்து வந்தேன். மனிதன் உயர்ந்த நிலைக்கு வந்து நாட்டுக்கும் சமூகத்துக்கும் பொதுச் சொத்தாகும் போது தெய்வமாகிறான். அந்தப் பாடல் கூறுவதும் இதைத்தான். இதோ அந்தப் பால்:-
நான் வணங்கும் தெய்வம் நாட்டினிலே நன்றே எனில் அதை இன்றே செய்பவன்
(நான் வணங்கும்) காணிபவை யாவும் பொதுவுடமை எனக் கருத்தினில் நினைப்பதுதான் கடமை மானியுடனே தன்மானம், திறமை வாய்ந்த குணாகரன் எவனோ அவனே
(நான் வணங்கும்) வீசிடும் காற்று, மழை, விரிசுடர் மணல்போலே விளங்கிரும் இயல்புதான் மாறாமைே காசினி மீதே கைம்மாறு பெறாமலே கருணை காட்டுவான் எவனோ அவனே
(நான் வணங்கும்) கரையற்ற ஏரிக்கு கரை அமைத்தான் காட்டைக் கழனி செய்தான் நல்ல விளைவு செய்தான் நிலை பெறும் பலகலை நிலையமைத்தான் மக்கள் நீதியை வளப்பவன் எவனோ அவனே
(நான் வணங்கும்)
表》
vagoging அறிவு - 2007 - 44 AV

அதிசயப் பிறவியாக மற்றோரால் மதிக்கப்பட்ட பலதுறைகளிலுல் பங்குகொண்ட கலைஞன் சித்தி அமரசிங்கத்தின் நாமம் நிலைத்திருக்கும்
அமரத்துவம் அடைந்த சித்தி அமரசிங்கம் அமரர் அருமைநாயம் சச்சிதானந்த னுடன் சேர்ந்து ஐம்பது வருடங்களுக்கு முன் அமரன் - ஆனந்தன் இரட்டையர் குழுவாக இயற்கித் திருமலை மக்களை ஆனந்த வெள்ளத்தில் திளைக்கவைத்தவர். யாருக்கும் அஞ்சாத சூரப்புலி என்ற இசை நாடகத்தைப் பார்த்து ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. சிறுவயதுமுதலே கலையார்வம் கொணிட அமரன் சுவாமி கெங்காதரா னந்தாவின் சிறந்த பக்தன். அவரது வாழ்க்கையில் சுவாமிஜியின் பங்கு பெரிது.
இளவயதில் சுவாமிசச்சிதானந்தா திருகோணமலையில் சச்சிதானந்த மாதாவின் வேண்டுகோளை ஏற்று சுவாமி சிவானந்தரின் கட்டளைப் பழ திருமலையில் வந்து சிவானந்தபோவனத்தை ஸ்தாபித்து ஆத்மீக சமூகதொனிடுகளைச் செய்த வேளையில் சிவானந்த தபோவனத்தின் ஆரம்ப வேலைகளில் பங்குபற்றியவர்.
சுவாமி சச்சிதானந்தா திருமலை ராமகிருஷ்ணமிஷனால் நடத்தப்பட்ட இந்துக் கல்லூரியில் முதன் முதலாக யோகாசனப்பயிற்சி வகுப்புகளை நடத்தியபோது சித்தி அமரசிங்கமும் நானும் இவ்வகுப்புகளில் பங்கேற்று யோகாசனப் பயிற்சி பெற்றோம். அப்போதும் எப்போதும் சுறுசுறுப்பாகவும் நகைச்சுவையாகப் பேசுவதனால் அவரைச் சுற்றி எச்சமயமும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.
அறுபதுகளில் உயர்கல்வி பெறும் எண்ணத்துடன் அவரது இளையம்மா நா முத்து சிவமணியாரின் அனுமதி பெற்று இந்தியா சென்றார். இளவயதிலேயே தாயை இழந்த அமரசிங்கம் அக்குடும்பத்தின் மூத்தபிள்ளையான தம்பிமுத்துவின் மூத்தமகன் அவருடன் கூடப்பிறந்தவர் ஒரே தங்கை. தந்தை மறுமணம் செய்ய அவரது இளையம்மா (தம்பியின் மனைவி) வுடன் இருந்து வந்தார்.
அப்போது சிறிமா பணிடாரநாயக்காவின் ஆட்சிக்காலம். வெளிநாட்டுக்கு காசு அனுப்புவது மிகவும் கஷ்டம். திருச்சியில் ஒரு பாடசாலையில் சர்வகலாசாலைப் புகுமுக வகுப்பில் பழத்துக்கொண்டிருந்த அமரர் நேரத்துக்கு பணம் கிடைக்காமல் பலகஷ்டங்கை அனுபவித்தார்.
அங்கு அவருடன் பழத்த ரவிச்சநீதிரன் (காதலிக் நேரமில்லை படத்தில் நழத்தவர்) நட்பும் கிடைத்தது. அங்கே கலையார்வம் மிக்கவர்களுடன் பழகினார். திருச்சிக்கு தமிழ் நாட்டு முதலமைச்சராக இருந்த அணினாத்துரை முதலமைச்சராக வருமுன் விஜயம் செய்தபோது அவரைச் சந்தித்துப்பேசி அவருடன் சேர்ந்து படமும் எருத்துக்கொணர்டார். பல இன்னலிகளுக்கிடையிலி தனது இலட்சியத்தை நிறைவு செய்யாமலே இலங்கை திரும்பினார்.
திருமலை வந்து பலவேளைகள் பார்த்தார். கொழும்பிலும் வேலை பார்த்தார்.
~45~ elps no 2007

Page 26
அப்போது தினபதி பத்திரிகை நிரூபராக ஆசிரியர் எஸ்.டி.சிவநாயகத்தினால் எழுத்துறையில் மெருகூட்டப்பட்டார்.
திருமலையில் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கக்கடையில் முகாமையாளராக வேலை பார்த்தார். அப்போதுதான் மனைவியான சித்தியின் சந்திப்பு ஏற்பட்டது. சித்தி, அமரசிங்கத்தின் ரசிகை. தையல் நிலையம் சென்று தையல் பழகும்போது அமரரின் கடையைத்தானிறத்தான் செல்வார். அப்போது ஏற்பட்ட காதல் கல்யாணத்தில் முழயக் கைகொருத்தவர் சுவாமிஜி கொங்காதரானந்தா.
சித்தி தனக்கு வேறு இடத்தில் கல்யாணம் நிச்சயத்துவிட்டார்கள் என்றும், ஏதாவது செய்யுங்கள் என்றும் கேட்டபோது செய்வது ஏதுமறியாது சுவாமிஜி கெங்காதரானந்தாவின் காலில் விழுந்து எனக்கென்ன செய்வதென்று தெரியவில்லை என அழுதார் அமரசிங்கம். அவரைத்தேற்றி எல்லாம் சரிவருமெனத்தைரிய மூட்டினார் சுவாமிஜி.
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சித்தியின் உறவினர்கள் பலம் பொருந்தியவர்கள் அமரசிங்கத்தின் உறவினர்களோ அதைவிட இந்துமதவிசுவாசிகள் இவர்களிடமிருந்து அனுமதி கிடைக்கவும் மாட்டாது. பின்விளைவுகள் பெரும் விபரீதமாக இருக்குமென்று இருவருக்கும் நன்கு தெரிவும். அப்படி இருந்தும் சுவாமிஜின் ஆசியால் எதுவித பின்விளைவுகளுமின்றி இனிதே திருமணம் அநுராதபுரத்தில் நடைபெற்றது.
இப்போது மரணச்சடங்கை முன்னின்று நடத்திய பஞ்சாட்சரவேல்ஜயாதான். அவர்களது திருமணத்தை நடத்திவைத்தார் தற்போது அமெரிக்காவில் வாழும் துரைசாமி சணிமுகம் எண்ற பாலியநணபனி தானி அப்போது அவர்களோடு அநுராதபுரம் சென்றிருந்தார்.
கல்யாணம் இனிதே முழந்தாலும் இருபகுதி இனசனங்கள் இவர்களை ஆதரிக்கவில்லை. தனிமனிதனாக எவ்வித உதவிகளையும் எதிர் பாராது €9lgi pTL வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டு உழைத்துக்கொணர்கு திருமலை எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்ந்த சித்தி அமரசிங்கத்தினர் மனஉறுதியும் கலையார்வமும் அதிசயக்கத்தக்கவை.
திருமணமாகி குழந்தைகளின்றி இருந்த போது சுவாமிஜி ஒரு சிவராத்திரி தினத்தன்று சிவராத்திரி விழித்து சிவபூசையில் கலந்து கொணிட அனைவரையும் அவர்கள் விருப்பங்களைக் கேட்டறிந்து அதுபலிக்குமாறு ஆசிவழங்கினார். அப்போது அமரசிங்கம் சுவாமிஜியிடம் வேனிழயது. தான் கலைக்குசேவை செய்யவேண்டும் தமிழுக்கு சேவை செய்யவேண்டுமென்றும் என்பதே. அவரின் நிலைமை அறிந்த சுவாமிஜி அவரிடம் மட்டும் மீண்டும் ஏதாவது ஒன்றை உருப்பழமாகக் கேட்கச் சொன்ன போதும் மனம் மாறாது உறுதியுடன் தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
சுவாமிஜியின் ஆசியினால் அவர் தனது ஆசைகளைப் பெருமளவுபூர்த்திசெய்து வாழ்நாளிலேயே அதற்காகப் பலதடவை கெளரவிக்கப்பட்டும் உள்ளார்.
குழநீதைகள் எத்தனை என்று கேட்போருக்கு தனக்கு இருபத்தேழு குழந்தைகள் உணர்டு என்று நகைச்சுவை ததும்பப்பதில் கூறுவார். தனது இல்லத்தில் ஈழத்து
அறிவு. 2007 - 46 -

இலக்கியச் சோலையை ஸ்தாபித்து இருபத்துஎழு நூற்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஈந்துள்ள சித்தி அமரசிங்கத்தின் பெயர் சொல்ல அவரது 27 வெளியீடுகளும் அவரது குழநீதைகளே.
1954இல் வீணைவேந்தன் என்ற புனைபெயருடன் யாழ். கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்து அறுபதுவரை நடத்தியதன் மூலம் இலக்கியத் தொண்டை ஆரம்பித்த அவர் பலதுறைகளிலும் திறமையுள்ளவர்.
சிறுவயதில் சானர்டோ சங்கரதாஸின் சீடனான முத்தையாச் சுவாமிகளின் சீடராக மல்யுத்தம் பயின்றார். வாரம்தோறும் நடைபெறும் பாடசாலை இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றார். நாடகத்துறையில் நாட்டமுள்ள அவர் இலங்கையில் தயாரித்து வெளியான ‘தென்றலும் புயலும் படத்திலும் நழத்தார்.
திருமலையில் கானிவெல்லில் நடந்த சிங்கள நாடகங்களிலுமீ பங்கேற்றுள்ளார். முத்தமிழ் கலைமன்றம் கலைவாணி நாடகமன்றம் இவைகளில் முக்கியபங்கேற்று நாடகக்கலைக்கும் தமிழக்கும் பெரும் தொண்டாற்றியவர்
அமரசிங்கத்தினால் நடத்தப்பட்ட யாழ் கையெழுத்துப் பத்திரிகைக்கு எழுதியவர்களில் இலக்கியத்துக்கு பெரும் பங்காற்றிய தர்மசிவராமுவும் ஒருவர் அவரின் மறைவிற்குப்பின்னர் சில ஆண்டுகளாக அவரது இறந்த தினமான ஜனவரி 6ஆம் திகதி சட்டத்தரணி காசிநாதர் சிவபாலனுடனும் என்னுடனும் சேர்ந்து நினைவுதினம் நடத்தி வந்தார்.
அவரது தொகுப்பான கவிதாலயம் என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் திருமலை மாவட்டக் கவிஞர்கள் 50 பேரின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டு அவர்களுக்கு ஊக்கத்தையும் கெளரவத்தையும் கொடுத்துள்ளார்.
கவிதாலயம் ஈழத்து இலக்கியச் சோலையின் 4வது வெளியீடாக திருமலையில் புத்தாயிரமாம் ஆண்டின் முதலாவது நூலாக 01-01-2000 அன்று அதிகாலை 1.30 மணிக்கு திருகோணம்லை புனித மரியாள் தேவாலயத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தனது 56ஆவது பிறந்த தினமான 1992 ஜனவரி 5ஆம் திகதி யில் இறந்த தம்பலகாமம் தந்த தவப்புதல்வனான கலாநிதி புலவர் சிறிகாந்தன் சத்தியமூர்த்திக்கு இந்நூலை சமர்பித்துள்ளார்.
இவருடைய 27 வெளியீடுகளில் 6 கவிதைத்தொகுப்புகள், கவிதைகள், கவிதைநாடகம் இவரது 26 வெளியீடான " ஆத்மத்துளிகள் " எனது சகோதரி திருமதி முரீஸ்கந்தராஜா ஞானமனோகரியின் 108 கவிதைகள் கொண்ட ஆத்மீகக் கவிதைத் தொகுப்பு
இவர் தர்மசிவராமுவின் இது வரை வெளிவராத கதை, கவிதைகளுடன் அவரைப்பற்றிய பலரது கட்டுரைகளையும் சேர்த்து ஒருநூல் வெளியிட முயற்சிசெய்து கொணர்டிருந்தார். அத்தோடு இன்னும் ஓரிரு வெளியீடுகள் அச்சில் உள்ளன.
தனிமனிதனாகத் தனது தனி முயற்சி உழைப்பினால் 27 வெளியீடுகளை வெளிக்கொணர்ந்த ஈழத்து இலக்கியச்சோலையின் 6ů5ua5ň 69iogů é9iogadi(éfdá அமரசிங்கம்) உணர்மையிலேயே ஒரு அதிசயப் பிறவியே!
- 47 -
அறிவு-2007

Page 27
அமரர் சித்தி அமரசிங்கத்தின் வெளியீடுகள்
0) ஒற்றைப்பனை (சிறுகதைத்தொகுப்பு) 02) கோயிலும் சுனையும் (நாடகத்தொகுப்பு) 03) கயல்விழி (கவிதைநாடகம்) 04) சாரணர் புதிய செயற்றிட்டம் 05) 93இல் கலை இலக்கிய ஆய்வு (கட்டுரைத்தொகுதி) 06) இராவண தரிசனம் (இலக்கிய நாடகம்) 07) கங்கை காவியம் (காவியம்) 08) கழகப் புலவர் பெ.பொ.சி. கவிதைகள் 09) சிந்தித்தால் (நற்சிந்தனைக் கவிதைகள்) 10) இருநாடகங்கள் (நாடகம்) 1) கவிதாலயம் (கவிதைத் தொகுப்பு) 2) அச்சாக்குட்டி (குழந்தை இலக்கியம்) 8) நெஞ்சில் ஒரு நிறைவு (சிறுகதை) 14) மாலையில் ஓர் இதயம் (நாவல்) 15) ஸ்திரீ லட்சணம் (சிறுகதைத் தொகுப்பு) 16) திறனாய்வாளர் திருக்கோணமலை த.கனனசுந்தரம்பிள்ளை 17) இராவனேஸ்வரன் இந்திரஉாை (இராவணன் சரிதை) 18) எனின ஊர்வலம் (கவிதைத் தொகுதி) 19) திருக்கரைசைப் புராணம் விளக்கவுரை - அச்சில் 20) ரங்கநாயகியின் காதலன் (குறுநாவல்) 2) தம்பலகாமம் க.வேலாயுதம் 22) நெருப்பிடைநீந்தும் நிலாக்கள் (குறுங்காவியம்) 23) தீபிகாவின் தீர்ப்பு (நாவல்) 24) மலையாளப் பாவை (சிறுகதை) 25) புலவர் வே.அகிலேசப்பிள்ளை (வரலாறு) 26) ஆத்மதுளிகள் (ஆத்மீகக் கவிதைகள்) 27) நடையில் நாமூன்று நாட்கள்.
அமரர் தொகுத்த பவளவிழா மலர்களான
1. காந்தி மாஸ்டர் சிறப்புமலர்
2. கிழக்கில் பூத்த ஞானமலர்
3. இலக்கியப் பூந்துணர்
இந்தப் படைப்புகள் யாவும் அமரரின் எழுத்தாற்றலை விதைந்துரைக்கின்றன.
Traffibula (Sandraram)
Senos - 2oo7 - 48 -

திருகோணமலை மண்ணின் ஆவணக் காப்பாளன்
-சி. குருநாதனி
ஈழத்து முதுபொரும் கலைஞர் சித்தி அமரசிங்கம் தமிழ் நெஞ்சங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எவ்வாறு? திருகோணமலை மண்ணின் ஆவணக்காப்பாளனாக, இசைக் கலைஞனாக, கவிஞனாக, நகைச் சுவை நடிகனாக, பத்திரிக்கையாளனாக, ஆய்வாளனாக இன்னும் பல துறைகளில் நிலையான தடத்தைப் பதித்த சித்தி அமரசிங்கம் திருகோணமலையின் மாத்திரமல்ல ஈழத்தில் கடல் கடந்த தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அன்னாரது படைப்புக்கள், அன்னார் வெளியிட்ட தொகுப்புக்கள்தமிழ் நெஞ்சங்களில் உலகம் உள்ள வரை அன்னாரை வாழ வைத்துக் கொண்டேயிருக்கப் போகின்றது. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிறப்பாக திருகோணமலை மண்ணின் ஆவணக் காப்பாளன் என்ற பெருமைக்கு உரித்தானவர் சித்தி அமரசிங்கம். அன்னாரின் மறைவால் ஏற்பட்ட
இடைவெளியை நிரப்பபோவது யார்?
இக் கேள்வியின் பின்னணியில் அன்னாரது பணிகள் பற்றி ஒரு குறிப்பு இங்கு தரப்படுகின்றது. திருகோணமலை நகரில் உள்ள வீதி களில் ஒள்று ஒளவையார் வீதி. அங்கு தான் அவரது வீடு. ஈழத்து இலக்கியச்சோலை என்ற வெளியீட்டகம் அங்கு தான் அமைந்துள்ளது. தனி மனித நிறுவனமாக அது இயங்கி வந்துள்ளது. இவ்வெளியீடகத்தினால் அன்னார் மற்ையும் வரை 26 நூல்கள் வெளியிடப்பட்டன. இன்னும் பல நூல்களைப் பிரசுரிக்கும் ஏற்பாட்டில் அன்னார் ஈடுபட்டிருந்து போது அன்னார் எம் மத்தியிலிருந்து திடீரென்று சொல்லிக்கொள்ளாமல் நிரந்தரமாக பிரிந்து விட்டடார். ஒற்றைப்பனை (சிறுகதை தொகுப்பு), கோயிலும் சுனையும் (நாடகத்தொகுப்பு), கயல்விழி (கவிதை நாடகம்), சாரணர் புதிய செயற்திட்டம், 1993இன் கலை இலக்கிய ஆய்வு(கட்டுரை தொகுதி), இராவண தரிசனம் (இலக்கிய நாடகம்), கங்கைக் காவியம் (காவியம்), கழகப்புலவர் பெ.பொ.சி.கவிதைகள், சிந்தித்தால் (நற்சிந்தனைக் கவிதைகள்), இரு நாடகங்கள் (நாடகம்), கவிதாலயம் (கவிதை தொகுப்பு), அச்சாக்குட்டி (குழந்தை இலக்கியம்), நெஞ்சில் ஒரு நிறைவு (சிறுகதை), மாலையில் ஓர் உதயம் (நாவல்), ஸ்திரீலட்சணம் (சிறு கதை தொகுப்பு), திறனாய்வாளர் திருகோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை, இராவணோஸ்வரன் இந்திர உலா (இராவணனின் சரிதை), எண்ண ஊர்வலம் (கவிதை தொகுதி), தீபிகாவின் தீர்ப்பு (நாவல்). தம்பலகாமம் க.வேலாயுதம், ரங்கநாகயின் காதலி (குறுநாவல்), மலையாளப் பாவை (சிறுகதை), புலவர்.வே.அகிலேசப்பிள்ளை (வரலாறு), ஆத்ம துளிகள் ஆகியன வெளியிடப்பட்ட படைப்புக்கள். நெருப்பிடை நீந்தும் நிலாக்கள் (குறுங்காவியம்), திருக்கரசைப் புராணம் விளக்கவுரை ஆகியன அச்சில் உள்ளன. பிரசுரமானவற்றில் சில அன்னாரின் சொந்தப்படைப்புகளாகும். ஏனையவை ஏனைய படைப்புகளிலிருந்து பெற்று பிரசுரிக்கப்பட்டவையாகும். அமரர் சித்தி
- 49 - அறிவு-2007

Page 28
அமரசிங்கம் எழுத்து மற்றும் கலையுலக வாழ்வில் எப்போது, எவ்வாறு பிரவேசித்தர் என்பதை அவரே, மறைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு கட்டுரையாளரிடம் எழுத்துருவில் கையளித்தார். “எனது ஐந்து வயதில் பாடசாலை நாடகத்தில் முதன் முறையாக பாத்திரமேற்று நடித்தேன்’ - என்றார் அவர். 05.01.1937 இல் பிறந்த சித்தி அமர சிங்கம் பாடசாகை நாட்கள் பற்றி மேலும் கூறுகின்றார். “1952ஆம் ஆண்டில் இருந்து பாடசாலை நாடகங்களை நெறிப்படுத்தியும் அவற்றில் நடித்தும் வந்துள்ளேன். அவற்றுள் 1958ஆம் ஆண்டு திருகோணமலை பட்டின பாடசபாலைகள் பங்குபற்றிய சர்வதேச குழந்தைகள் தின நிகழ்ச்சியில் பூரீராமகிருஷ்ண சங்க இந்துக் கல்லூரியினால் நான் மேடையேற்றிய “The Man from China" என்ற படைப்பு கல்விசார் மற்றும் கல்வி சாரா சமூகத்தினரால் பாராட்டப்பட்டது”ழரீராமகிருஷ்ண சங்க இந்துக்கல்லூரியினால் பாடசாலைகள் மட்டத்தில் 1959ஆம் ஆண்டு நான் மேடையேற்றிய “தொழிலுக்கு தொழில்” , “கீக்கிரட்டிஸ்” ஆகிய நாடகங்கள் இலங்கை வானெலியால் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டன. இவை இலங்கையில் வானொலியில் புகழ் பெற்ற தயாரிப்பாளர் சானாவினால் (சண்முகநாதன்) பெரிதும் பாராட்டப்பட்டது. “1957 காலப் பகுதியில் பாடசாலை நாட்களில் நானும் சச்சிதானந்தமும் அமரன்.ஆனந்தன் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி ROnkNRolபாணியில் தமிழில் இசை நடன நசிகழ்ச்சியை முதன்முதலாக அறிமுகப்படுத்தினோம். கேகாலையில் எமது நிகழ்ச்சியை ரசித்த பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வேண்டுகோளின் படி மட்டக்களப்பில் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜதுரையின் தலைமையில் நடை பெற்ற முத்தமிழ் விழாவில் அத் தமிழிசை நடன நிகழ்வு மேடையேற்றப்பட்டது. திருகோணமலை திரு வள்ளுவர் கழகம் நடத்திய விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் நானும் பங்குபற்றினேன்”, “1960இல் அமரன் ஸ்கிறீன் என்ற சொந்த நாடக மன்றத்தை ஆரம்பித்து, நான் எழுதி இயக்கிய ‘குத்துவிளக்கு’ என்ற நாடகத்தை மேடையேற்றினேன். 1970இல் இம்மன்றத்தின் ஊடாக அமிர்தஞானம் எழதி நெறிப்படுத்திய “சொப்பன வாழ்வில்' என்ற நாடகத்தில் நடித்து மேடை ஏற்றினேன்’ *1958ஆம் ஆண்டு திருகோணமலை கலை வாணி நாடக மன்றம் ஆரம்பிக்கப்பட்ட போது நானும் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து கொண்டேன். இம்மன்றம் மேடையேற்றிய நாடகங்கள் எல்லாவற்றிலும் நான் நடித்துள்ளேன். நடிகனாக, நாடக ஆசிரியனாக, நெறியாளனாக, ஒப்பனையாளனாக, மேடை அமைப்பாளனாக, அணிகலன்கள் புனைபவனாக மன்றத் தில் பணியாற்றியுள்ளேன். அண்மையில் எமது மன்றம் மேடையேற்றிய “இராவண தரிசனம்’ நாடகத்தில் அனைத்தும் நானே என்று கூறிய அமரர் சித்தி அமர சிங்கம் தனது இலக்கியப் பணிபற்றியும் விபரித்திருக்கின்றார். பாடசாலைக் காலத்தில் சித்தி அமரசிங்கத்தின் இலக்கியப்பணி ஆரம்பித்தது. உலகத் தமிழ் இலக்கிய, விமர்சனத்துறையில் நிலையான தடத்தை பதித்துச்சென்றுள்ள திருகோணமலையில் பிறந்து தமிழ்நாடு சென்று வாழ்ந்த தரும, சிவராமு, தம்பலகாமத்தில் பிறந்து பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கேரள
Sólo - 2007 - 50 -

பல்கலைக்கழகம் சென்று பேராசிரியராகி கோவையில் பணிபுரிந்த பேராசியர் எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோர் அமரர் சித்தி அமரசிங்கத்தின் வகுப்புத் தோழர்களாவர்.
சித்தி அமரசிங்கம் கூறுகிறார்:
“எனது இலக்கியப் பணி 1954ஆம் ஆண்டு பாடசாலைக் காலத்தில் ஆரம்பித்தது. 1954ஆம் ஆண்டு “யாழ்” என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிக்கை ஒன்றை ஆரம்பித்தோன். 1959வரை இப்பத்திரிக்கை நீடித்தது. இளம்பிறை, சுடர், குங்குமம், உமா போன்ற பத்திரிகைகளின் வளர்ச்சியிலும் பங்குபற்றும் வாய்ப்புக்கிடைத்தது. “1974ஆம் ஆண்டு ஈழத்து இலக்கிய சோலை என்ற அமைப்பை உருவாக்கினேன். இவ்வமைப்பினால் பல நூல்கள் வெளியிடப்பட்டன. அத்துடன், இலங்கையில் வெளியாகும் சஞ்சிகைகள், நூல்கள் என்பவற்றில் பத்துப் பிரதிகளை வாங்கி சந்தைப்படுத்தி இலக்கிய வளர்ச்சிக்கு பார்வையாளனாக இல்லாமல் பங்காளனாக செயற்பட்டு வந்துள்ளேன்’ இவ்வாறு கூறியுள்ளார் சித்தி அமரசிங்கம். அமரர் சித்தி அமரசிங்கம் இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெளியான “தென்றலும் புயலும்” திரைப்படத்தில் வினோதன் என்ற நகைச்சுவைப் பாத்திரத்தில் சிறப்பாக நடிததவர். ஊடகத்துறையிலும் அவரின் பங்களிப்பு இருந்தது. தினபதிசிந்தாமணி பத்திரிகைகளின் கொழும்பு நிருபராகவும் அவர் பணி புரிந்தார். 1970 தொடக்கம் 1973 வரை வானொலி கலைஞராக பிரபல வயலின் வித்வான் இசைமணி. வே.சங்கரலிங்கத்திடம் முறையாக கர்நாடக சங்கீதம் பயின்றார். 1973இல் கலாயோக மன்றம் என்ற அமைப்பை உண்டாக்கி மாதமொரு இசைக்கச்சேரி, வருட இறுதியில் இரண்டு நாள் இசை விழாவையும் அன்னார் நடத்திவந்துள்ளார். சிறப்பாக வில்லுப்பாட்டுக் கலைஞனுமாக விளங்கிய அமரர் சித்தி அமரசிங்கம் கலாவினோதன் வில்லிசைக்குழு என்ற அமைப்பை தோற்றிவித்து வில்லிசை நிகழ்வுகளையும் நாடெங்கும் நடத்தியுமுள்ளார். 1999ஆம் ஆண்டு இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு அன்னாருக்கு கலாபூஷணம் விருது வழங்கி கெளரவித்தது. பின்னர் மத்திய கலாசார அமைச்சு அன்னாருக்கு முதுபெரும் கலைஞர் விருதை வழங்கிக் கெளரவித்தது. 2006ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மடாகாண கல்வி மற்றும் பண்பாட்டலுவகள் அமைச்சு, அன்னாருக்கு ஆளுநர் விருதையும் திருகோணமலை பட்டிணமும் ஆழலும் பிரதேச செயலகம் நடத்திய சாகித்ய விழாவில் மூத்த கலைஞர் விருதும் வழங்கிக் கெளரவித்தன. கலாபூஷணமாக, முதுபெரும் கலைஞராக, கலாவினோதனாக ஈழத்து தமிழ் உலகில் பிரபலம் பெற்ற அன்னார் மோகன், வீணைவேந்தன் மற்றும் சொந்தப் பெயர்களிலும் எழுதிவந்துள்ளார். அன்னார் விட்டுச் சென்ற பணி மேலும் தொடருவது. இளம் படைப்பாளிகள், ஆர்வலகளில் கைகளில் தான் தங்கியுள்ளது. அன்னாருக்கு நாம் செய்யும் கைமாறு அதுவே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நன்றி: - தின்க்குரல் 25. மாசி மாதம். 2007
~5卫~
அறிவு என 2007

Page 29
அறிவு-2007 - !
 

añTTSUTUDEUS) ார் சங்கம் தரும்
க் கவிகுை

Page 30
W W
W
W N
W
N WW W 黑
 

Ng
WWWAWATWWW WWF
Tin THİF Tip
W !

Page 31
N |
WWWN ANY INNNNNNNNNNNN
וידי
NNNNN N W R N N
un DANMANNINN
NNNNNNNNNNNNNN NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
T W
NNNNNNNNN
 

NNNNNNN
W N NNNNNNNN
NNNNNNNNNN
NNNNNNNNNNNNNNNNNNNNNNNN I N N N NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN
NNNNNNNNNNN W W N NNNNNNNNNN
NNNNNNNNNN