கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வேடிக்கை 2007.11

Page 1

திராவளி
விவீதிதுஇேவீ0
உர்கசு = ட்ஆனந்தர். துரை.
5.
ஒன்றைத் துஆர் ஓம்சங்கள்.

Page 2
|- -=|-|- -|- 脱£的|-|- |-//://WWW)|-sae! | . |-,| |- ( )~|- 山33 ) -----------|- -A) |-步: 《心淘|-瞄。\, | s| ,羽部)~ | |· |
o ----'. 홍% : ||-|-'. 雅娴,\
கலி
பருமையுடன் வழங்கும் நம் இசைக்கலைஞர்
ெ
Naa Gaa Entertainment
 
 
 
 

(@gಔಟಾಟ வீள் §
ஒரt 56...
"मा
F( -
கண்ணின் ஈரம் தொட்டு 90ாற்றுத்ெ உலகைக் கலக்கும் 65QILADIIIT6QR9ILII6Ôi) போன்கள்
மூடநம்பிக்கைகள் சில குகவல்கள்
பேதைகளும் போதைகளும் .蠢
mm - ಕ್ಲಿಪ್
ཟླ་
■■ 電實 து: ## ஜ்
蠶零、s.
ఛీజ్రప్రదిస్ట్రీ
is 雷」 [ ] இழிேலுருஜிஜ் ফু","ঙ্ক্ষ", স্পঞ্ছ
அவள்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்
6、රුණි.ශික්‍ෂී. ,
==
s".
IGilli|| || 207 வேடிக்கை

Page 3
H'eli Wy W. Wetlik kali.coI entil: editoravedillaicon
வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு இடைவெளி. உங்களுக்கும் நமக்கும் இடையில். இடையில் எத்தனை எத்தனை சோதனைகள் வேதனைகள். இவற்றின் மத்தியிலும் வேடிக்கை மீண்டும் புதுப் பொளி வோடு புது வேகத் தோடு உங்கள் கரம் தேடி களமிறங்குகிறது.
யாழ் மண் ணிலிருந்து தொடர்ச்சியாக 9 இதழ்கள் வெற்றிகரமாக வெளிவந்த போதிலும் சில தவிர்க்கமுடியாத இடையூறுகளால் வேடிக்கை தன் பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத் தரிக் கொண்டது. இந்தக் காலப் பகுதியில் வேடிக்கையின் வாடிக்கையான அன்பு நெஞ்சங்கள் மீண்டும் வேடிக்கை எப்போது வருமென்ற ஆதங்கத்துடன் கேள்வி மேல் கேள்விகளால் எம்மை துளைத்தெடுத்து விட்டனர்.
இத்தகைய அன்பு நெஞ்சங்கள் தரும் ஆதரவுடன் முன் னிலும் அதிகமான உத்வேகத்துடன் வேடிக்கை தன் பயணத்தை மீள ஆரம்பிக்கிறது. எமது இந்தப் பயணத்தின் வெற்றி உங்கள் கைகளில் தான்.
அண்மைக்காலமாக நம்நாட்டில் மேலும் பல சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்களியுள்ள போதரிலும் அவற்றுடன் ஆரோக்கியமான போட்டியில் வேடிக்கையும் தன்னை இணைத்துக் கொள்கிறது.
சித்திரை புத்தாண்டு சிறப்பிதழுடன் தடைப்பட்ட நம் பயணம் இத் தீபாவளிச் சிறப்பிதழுடன் குதூகலமாக மீண்டும் நடைபோடத் தொடங்குகிறது உங்கள் ஆதரவுடன்..!
நன்றி.
(33lity is H, 2 நவம்பர் 2007
 

என்ன, மேலேயே பார்த்துக்கொண்டிருக்கிறீங்க? ரொக்கட் ஏதாவது போகுதா?
விலைவாசி போகுது
"வேடிக்கை மறுபடியும் வெளிவரத் தொடக்கிட்டுது பார்த்திரே?
தயவுசெய்து மேலுள்ள ஜோக்(???) குகளுக்கு கஷ்டப்பட்டெண்டாலும் சிரிச்சுப்போடுங்கோ, இல்லையெண்டால் அடுத்த புத்தகத்தில் எடிட்டர் சான்ஸ் தரமாட்டார்!
நவம்பர் 2007 3. வேடிக்கை

Page 4
தஞான்
ஒருவன் மனத்தை ஒருமுகப்படுத்த ஆரம்பிக்கும்போது ஒரு குண்டுசி கீழே விழுந்தாலும் அது அவனுக்கு இடி முழக்கம் போல் கேட்கும்,
உறுப்புகள் நுட்பமாய்ச் செயல் புரியும்போது காட்சிகளும் நுண்ணியதா கும். இவையெல்லாம் கடக்க வேண்டிய படிகள். விடாமுயற்சி உடையவர் வெற்றி AyISIL-6lIT.
வீண் விவாதங்களையும் மனதைக் குழப்புபவைகளையும் விட்டுவிடுங்கள், வீனன் வறட்டு அறிவினால் என்ன பயன்' அது மனதைக் கலக்கிவிடும், நுண்ணிய வளர்ச்சிகளைப் பெறவேண்டும். வெறும் பேச்சினால் இதனைச் சாதிக்கமுடியுமா?
ஆகவே பயனற்ற பேச்சை விட்டுவிடுங் கள், ஆன்ம ஞானத்தை அடைந்தவர்கள் எழுதிய நூல்களை மட்டும் படியுங்கள். முத்துச் சிப்பி போல் இருங்கள். சுவாதி நட்சத்திரம் உச்சியில் இருக்கும்போது, மழை பெய்து ஒரு துளி நீர் கடலில் உள்ள முத்துச் சிப்பியினுள் விழுந்தால், அது முத்தாகும் என்று ஒரு இந்தியக் கதை கூறுகிறது. முத்துச் சிப்பிகளுக்கு இது தெரியுமாதலால், அந்தச் சுவாதி நட்சத்திரம் பிரகாசிக்கும் போது நீரின் மேற்பரப்புக்கு வந்து, மழை நீரின் துளியைப் பெறுவதற்குக் காத்துக் கொண்டிருக்குமாம். இதைப் பெற்றவுடன் சிப்பிகள் ஒடுகளை முடிக் கொண்டு கடலின் அடித்தளத்திற்குச் சென்று, பொறுமையுடன் அந்தத் துளியை முத் தாக்கிக் கொண்டு இருக்குமாம்.
நாமும் முத்துச் சிப்பி போன்று
இருக்க வேண்டும்.
முதலில் விஷயங்களைக் கேட்டு, பிறகு சிந்தித்துத் தெளிந்து, குழப்பங் களை விட்டொழித்து, புறத்தூண்டுதல்கள் கலக்காத வண்ணம் மனத்தினை மூடி, உள்ளே உள்ள உண்மையை ஒளிரச் செய்வதில் ஈடுபடுங்கள்.
KO
(3rgio E
Eva JLA JřT 2007
 
 
 

է: Ամով
"போதை" இச்சொல்வினைக் கேட் டாலே பேதைகள் பேதலித்துப் போ:நிறார்
ThIT.
"போதை கொண்ட மனிதன் - போகார் போஸ் தற்குகந்த பார்க்கம்" என்பது உலக மனிதர் அனைவருக்கு மான பொதுக்குறளாகும். ஆயினும் இவர் கள் போதை போதை' என அதன்பின் அலைவது தான் ஏன்? இது எமக்குத் தேவைதானா? இதனை விடவேமுடியா தா? ஆம்; இதன் கொடுமைகள்தான் எத் தனை?
போதை என்பது உடலில் ஒரு சுறு கறுப்பு அல்லது ஒருவித உற்சாகத்தைக் கொடுப்பதாகும். இது மாறுபட்ட அளவு களிலும், தரங்களின் விலைகளிலும் கான ப்படுகிறது.
ஒரு வகையில் வெற்றிலை, பாக்கு, புகையிலை, தேநீர், கோப்பி என்பனவும் போதைப் பொருட்களே. மேலும் சோடாப் பானங்களிலும் சிறிதளவு அற்ககோல் காணப்படுகிறது. எனினும் இங்கு வினைத் திறன் குறைவாகவே போதை காணப்படு கிறது. இவற்றால் உடலிற்கு அவ்வளவு தாக்கம் ஏற்படுவதில்லை. மாறாக சிகரட், பிடி, சுருட்டு, கஞ்சா, கசிப்பு, மதுசாரம், ஹெரொயின், எல்.எஸ்டி, அபின் போன்றன எமது சமுதாயத்தையே அழிக்க வல்லன. இவற்றிற்கு நாம் அடிமையானாஸ் ஒருபோதும் எழமுடியாமல் ஆக்கிவிடுகின் [1:୩,
போதையை தொடும்வரையில்தான் உனது ஆட்சி போதையை தொட்டுனிட் டால் பின் அதன் ஆட்சி.
இழுக்க இழுக்கி இண்பர் முதலில் விேக்க விெக்க துண்பர் முரவிப்
பேதைகளும் போதைகளும்
துரக்கி இத்து ஒற்றர் மீண்திப்
திரங்கி துரகீத ரசிகர் ரோட் ரவி,
இது புகைப்போருக்கும் றோட்டில் குடிப்போருக்கும் ஆன வாக்கியங்களா கும். குடிப்பழக்கத்தினை தவறாக எண் இறும் பலர் கூட புகைப்பழக்கத்தினை
நவம்பர் 2007
5
வேடிக்கை

Page 5
நாகரீகமாக என்னுகிறார்கள். ஆனால் புகைப்பழக்கத்தின் பின் விளைவுகள் அத்தாக்கத்தினை அனுபவிக்கும் போதே உருைகிறார்கள். எனினும், இத்தாக்கங் கள் ஏற்படும் என இவர்கள் முன்பே அறிந் திருப்பர்.
காலங்கடந்த பின் சூரிய நமஸ்கா மா? தேநீரிலும் பார்க்க கள்ளு சிறந்த பானம், விடியும் வேளையில் தனிப்பனைக் கள்ளு உடலிற்கு உற்சாகத்தையும் பல நன்மைகளையும் தரும். ஆனால் நாம் என்ன செய்கிறோம். கள்ளு புளிப்படைய சில வேலைகளைச் செய்கிறோம். நேரம் தாழ்த்திப் பருகல், பல் பனைக்கள்ளை கலக்குதல் இவ்வாறாக கள்ளின் ஆற்ககோல் தன்மையைக் கூட்டி அதிக மாகப் பருகுவதால் போதை ஏறுகிறது. இதுபோலவே மதுசார வகைகளும், அவற நரின் போதையரின் அளவு மாறுபடுகிறது. சாராயம், கள்ளு இவற்றை விட கசிப்பு உள்ளுரில் தாயாரிக்கப்படுவ தால் தொழில் நுட்ப வசதிகள் இல்லாமை யினால் இது நஞ்சாகும் சந்தர்ப்பங்களும் 2டன்டு. இதனால் பரண் சம்பவங்களும் ஏற்படுகின்றன.
இவற்றை எல்லாம் விட வீரியம் கூடிய ஹெரோயின், அபின், கஞ்சா, எல்.எஸ்டி போன்றவற்றின் மிகவும் சொற்ப அளவே எம்மை செயற்பாடற்றவர்களாக்க போது மானது. இவை மேலைத்தேய நாடுகளில் பரவலாகப் பாவிக்கப்பட்டாலும் தற்போது எமது நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகின்றன.
போதைப் பொருட்கள் உடலின் சோர்வை நீக்கி இரத்த ஓட்டத்தை வேக மாக்கி, முளையின் செயற்பாட்டில் மாற் றத்தை உண்டாக்குகின்றன.
போதைப் பொருளை அருந்தியோர் சாதாரணமாக இருந்து, நேரம் ஆக ஆக அப்பொருளின் தரத்திற்கேற்ப தமது
கபநிலைப்பை, கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பிப்பர். இதன்போது அவர்களது செயற்பாடுகள் அவர்களின் முளையால் உணரமுடியாதிருக்கும். இந் நிலை உடனடி நிலையாகக் காணப்பட்டாலும் பின்விளைவான ஈரல் போன்ற உறுப்புக் கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன.
இப்போதைப்பொருட்களை உடலுக் குளிர் செலுத்த பல முறைகளை கையாள்கின்றனர். பிரதானமாக வாய், முக்கு என்பனவும் சிறிதளவாக ஊசி மூலம் இரத்தத்துடனும் உடலுக்கு இவை ஏற்றப்படுகின்றன.
"உதிரிஜதிச? கை துர் ஜிசி விழி ஏற்றுவதும் - சிப்ை
விர்ஜி ஒன்ேைத போதை" இந்தப் போதைப்பழக்கம் எவ்வாறு
(;|:);
நவம்பர் 2007
 

எம்மைத் தொற்றிக் கொள்கிறது எனப்
பார்ப்போ |.
. . போதைப்பழக்கம் என்றால் என்ன
வென்றே தெரியாத சிறுபிள்ளைகளாக வளர்பவர்கள் அதனை வெறுத்து அதன் அடிமைகளை உதாசீனப்படுத்தி ஏசி விலத்தி வைப்பர்.
பின் பெரி யவர்களாகி பல்கலைக்கழ கம் சென்றும் இப்பழக்கத்திற்கு 3, III+. மல் இருப்பர். ஆனாலும் சிறிது சிறிதாக நண்பர்களின் சேர் க்கை கெளரவப் பிரச் சினை என்று அதனை சிறிதளவு உட் கொள்ளவர். இதுவே பின்னர் விடமுடியாத அளவிற்கு அவர்களை ஆட்சி செய்யும், இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்வது இப்படித்தான்.
மற்றவர்கள் சொன்னாலும் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொள்ள முயற் சிப்பதுமில்லை. இவர்கள் தம்மை ஏமாற் றும் விதம் எவ்வாறு தெரியுமா? விழாக்க ளில் தாம் அதில் வாய் ബഴ്ച சிறிதளவு தன்னும் பருகாதுவிட்டால் தம்மை மதிக் கமாட்டார்களாம். இது இவர்கள் கூறும் நொண்டிச் சாட்டு
இவர்களிற்கு அதனைப் பருக உள்
ஞக்குள் விருப்பம். அதனை மறைத்து இவ்வாறு பல காரணங்கள் கூறி தம்மையும் மற்றவர் களையும் ஏமாற்றுகி றார்கள். நான் குடிப்பதில்லை என்று சொல்ல வெட்கமா? இவர்களது சிந்தனை ஏன்தான் இப்படிச் செல்கிறதோ தெரிய வில்லை.
கிறிஸ்தவர்கள் கோவிக்காதீர்கள். நடைமுறையில் நான் அனுபவப்பட்டதை இங்கு எழுதுகிறேன். சிலர் தேவா 5)ILLI IE, l-Eġifieri) வைன் பிரசாதம் எனப் பருகுவர். பின் பியர் உடலிற்கு நல்லம் என பருகுகின்றனர். பிறகு என்ன? அதுவே
- ص -. பழக்கமாகி போதைக்கு அடிமைப்படுகின்
நார்கள்,
t
-
* * *
T* ந்
ற்றவர் ຫຼັງ
էիT
*
1) ሽiEmኽክIÑ
D
hhlIILLIss
閭
Elgin.
நவம்பர் 2007
(3, Igloof,

Page 6
வெளிநாட்டு நண்பர்கள் இங்கு வந்து செல்வது சாதாரணமான நிகழ்வு இவர் கள் அங்கு சென்று கற்ற கலாசாரத்தை நாம் இங்கு கேட்டோமா? ஆனாலும் அவர் Egil ill வில்லை.
வரும்போது அங்கு விலையுயர்ந்த 1606,16)),5) போ தைப் போ ருட்களை கொண்டு வந்து தினமும் இரவு பகல் பாராது சிறியவன் பெரியவன் வேறுபாடி ன்றி "இது தான் நாம் கற்ற கலாசாரம் என்று திருவிழா நடத்துகிறார்கள்.
இதுவா எமது கலாசாரம்? என்ன, வேடிக்கையாக இருக்கிறதா? (இதே வெளிநாட்டவர்கள் வெளிநாடு திரும்பியபின் Jr. [3] GIFTE| - 'கடவுளே, தெரியுமா? நம்ம நாடு நல்லாக் கெட்டுப் பேச்சு சிறிய பிள்ளைகள் கூட என்ன மாதிரிக் குடிக்கிறார்கள்? ஊற்றி ஊற்றிப் பழக்கிவிட்டு இவ்வாறு கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?)
இவ்வாறாகப் பல வழிகளில் இப்பழக் கத்திற்கு அடிமைகளாகி வாழும் Līci அதன் விளைவுகளை இன்னும் விளங்கிக் கொள்வதாக இல்லை. இப்போதையால் பாதை விலகும் சில சந்தர்ப்பங்களைப் LIFT If I'I 3 III Iiiii.
அதிகாரத்தில் உள்ளவர்கள் சிலர் போதை மயக்கத்தினால் பாதை தவறு வதால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஏமாற்றுவேலை போன்றவற்றால் தம் பதவிகளை இழக்கின்றார்கள்.
இவற்றினை அருந்துவதாஸ் அச்சமற்ற 晏、鬣 தன்மை ஏற்படுகிறது. இதனால் மற்றவர் ILË. šolo; களை மதிக்கும் மனப்பாங்கு, கலாசாரத் LROLLISUUTTIGA தினைக் கடைப்பிடிக்கும் தன்மை என் பதிப் -
பன இல்லாது அழிகின்றன. அது தவிர கிெலேய்ேகின்ற
வீடுகளில் | கதில் ஏற்ப *、
Bellsvar பெற்றவன் ஏங்க PIPIT அவனைக் கட்டியவள் வாட
அவன் தெர்நதுகள் /07ур.
மவேடிக்கை OS நவம்பர் 2007
 

ஆண்ே மட்டும் ஆன்த்தரப் ாேதைக்கு போர்வையாக - ஆரிஜிதுே போதை போர்வையாக Wேகுமிடப் போதை' - ஆண் போதை பேதையோனான். இதுதான் ஒரு குடிகாரன் வீட்டு நிலை. அவன் குடிப்பதால் அவனுக்குமட்டுமா துன்பம்.? அவன் சுற்றமே அவனால் பாதிக்கப்படுகிறது. இதனால் அவன் சுற்றம் சமுகத்தில் மதிப்பிழக்கிறது. அவனால் வாழ்க்கை வெறுமையாகி வறுமையே வாழ்க்கை ஆகிறது.
குடும்பத்தில் ஒன்றாயிருந்த சந்தோசம் Eாண்மற் போகிறது. சகோதர பாசங்கள் அருகி வருகிறது. ஒருவர் இன்பம் அனு பவிக்க ஏனையோர் துன்பத்தையும் அவ மான்த்தேயும் அனுபவிக்கிறார்கள் இவை யெ லிப் லாபம் வா| கனகசு கு அவசியம்தானா?
போதை சிறுகச் சிறுக உயிரை குடிக் கிறது. இதை அறியாமல் பலர் போதை பபிலே குளிக்கிறார்கள். இன்றைய கிளர்ச் சிக்காகப் பலர் நாளை நரம்புத் தளர்ச் சிக்கு உள்ளாகிறார்கள்.
போதைப்பழக்கத்தால் முளை, இத யம், ஈரல், சுவாசட்டை, குருதி போன்ற ?? Looli LI LITTE: ILLIII பாதிப்படைந்து அணுஅனுவாக எம்மை கொலை செய்கின்றன. இப்பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை எம்மால் பட்டிய லிடவே முடியாது.
குறுகிய இன்பம், உற்சாகம், கவலை மறக்க, சந்தோசத்தைக் கொண்டாட, விளையாட்டாக, நாகரீகமாக, வேலைக் களைப்பு என பல காரணங்களைச் சாக் காகச் சொல்லி இப்பழக்கத்தினை ஆரம் பிக்கும் பலர் இதனைத் தவிர்க்க முடி யாது அவதிப்படுவது கண்கூடு.
இவர்களை இப்பழக்கத்தை விடும்படி
அறிவுரை கூற அல்லது விழிப்புணர்வுக் கருத்துக்களைச் சோல்லமட்டுமே எம்மால் (IբլգLL|r.
ஆனால் இப்பழக்கத்திலிருந்து விடு படுவதற்கு அவர்களே முயலவேண்டும். "திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டு நடந்து கொண்டே இருக்கும்!" அதே போல் இவர்களே மனம் மாற வேண்டும்.
பனம், பொருள் இன்றி வாழ்ந்தாலும் போதைப் பழக்கமின்றி வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் உயர்வு தேடி வரும் போதை அடிமைகள் தம் உயிரை அலட்சியம் செய்தாலும் தம்மை நம்பி உள்ள உறவுகளை, தம் சந்ததியை அவர்களின் ஆரோக்கியத்தைக் கருதி யாவது போதையைத் தவிர்க்க வேண்டும், இப்பழக்கத்தினால் ஏராளமாகப் பனம் விரயமாகிறது. ஆனாலும் இவ ற்றை எல்லாம் அறிந்த பலரும் இப்பழக் கத்தை விட்டுவிடுவதற்கு முயற்சி செய் யாமல், பழக்கத்தை விடமுடியவில் லையே என கவலைப்படமட்டுமே செய்கி நார்கள். அவர்கள் தம் மனதில் எம்பாலும்
இதனை விட முடியும் என உறுதி கொள்ள வேண்டும்.
மனிதனால் நினைத்து எதுவும்
முடியாதது என்று இல்லை. மேலும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் - நாம் சிறிதளவாவது குடிக்க வேண்டும் எனும் வரட்டுக் கெளரவம் பார்க்கவேசுடாது.
போதைப் பழக்கத்துக்கு அடிமையா காமல் இருப்பவர்களே போற்றத்தக்கவர் கள். நீங்களும் போதைப்பழக்கங்களுக்கு அடிமைபாகாமல் மற்றவர்களையும் விடாது வாழ்க்கையின் அற்புதமான கனங்களை அனுபவிபபுங்கள். புதிய சந்தோஷத்தைச் சங்கமிக்கச் செய்யுங்
T.
జ్ళీన్దేక్స్టికి
நவம்பர் 2007
வேடிக்கை

Page 7
த கதிரிவிதி
இறைவனி H TIÊIHü...?
கூந்தலும் பூவும் புடவையும் சுரிதாரும் அகன்ற தோளும் மீசையும் இடிபட விரும்பாத என் குணமும் சாமி முகம் மறைக்கும்.
பிரகாரச் சுவர்ப் பொழிவில் இருக்கிறது of ill50)ELIITILI கருணையும் காவலும்.
திடீரென ஊர்வம்பு நிறுத்தி அரோகரா ஆரவாரம்.! இடித்து விலக்கி வழிசெய்து நெற்றி நிலமிடிக்கக் கும்பிடுவர்பக்தி பெருக்கெடுக்கும்-அதில் நனைவதில்லை ஒருபோதும்!
என்றாலும் கோவிலுக்குப் போகாமல் இருப்பதில்லை.
புராதனத்துள் இழுத்தமிழ்த்தும் அகரத் துாண்கள். சடசடக்கும் வெளவால்கள். சந்தனம் ஊதுபத்தி இன்னபிற வாசனைகள் இவைதவிர. பட்டுச் சரசரக்க துாண்மறைவினின்று எட்டிச் சிரிக்கும் குழந்தையின் கண்களிலே இருக்கிறது தெய்வம்.!
வேடிக்கை billi Li Lufi 2007
 
 
 
 
 
 

[...] ፅሃ፡ É፫1 ጴዖ፡ ñù!
திட்டு:
சிக்குன்குனியாவை ஒழிக்க அரசாங் கம் ஏதேதோ முயற்சிகளைச் செய்து வருகிறதே தவிர என்னை அணுகி ஒரு வார்த்தை கேட்காதது எனக்கு ரொம்ப வருத்தமே.
நான் ஓர் விந்ஞானி. ஆனால் துரதி (Ejiil FIFLITE g(3J ép:IE. T. JGi)LIIILLESiil கூட எனக்கு இன்னும் தரப்படவில்லை. ஆகவே கோபம் கொண்டு எனது அரிய ஆராய்ச்சிகளையும் கண்டு பிடிப்புகளை யும் ரகசியமாகவே முட்டைகட்டி வைத் திருக்கிறேன். எங்கே என்று ஆவலோடு கேட்கிறீர்களா? டிெக்கே அதைச் சொல்ல நான் ஒன்றும் இளிச்சவாயால்ல)
ஆனாலும் இப்போது நானே முன்வந்து ஒரு தியாகி போல அதைச் சொல்கிறேன். மக்கள் சிக்குன்குனியா என்னும் நோயால் மிகவும் அவதிப்படுவதாகத் கேள்விப்படுகிறேன். கண்ணாலும் பார்க்கி றேன். பேப்பரில் படிக்கிறேன்.
முன்பு டெங்கு காய்ச்சல் வந்த சமயம் கூட இப்படித்தான். சட்டென்று என்னை அரசாங்கம் அணுகியிருந்தால் நான் டெங்குவை ஒழிக்க அற்புதமான மருந்து சொல்லியிருப்பேன். (இவ்வளவு நாளாகி
*
பும் கூடக் கேட்கவில்லை. மீண்டும் டெங்கு காய்ச்சல் வந்திருக்கிறது. பார்க் கலாம் - இப்போதாவது என்னை அணுகு
கிறார்களா என்று),
சிக்குன் குனியாவை மருந்துகளால் ஒழிக்க முடியாது என்பதை நிரவாகத் தினர் புரிந்து கொள்ளவேண்டும். (யாரப்பா அங்கே, வேறு ஒரு பேனா கொண்டுவா.) மருந்து மாத்திரையாலோ, புகை போடுதாப்ாலோ, தெளிப்பான் முலம் மருந்து பீய்ச்சுளாதாலோ இந்த சிக்கன் துனியா போகாது.
இதை ஒழிக்க ரேடியோவாஸ்தான் முடியும். ஆமாம் வானொலி மூலம்தான் (IPlyIIf.
நமது வானொலிகளில் P.M. என்று (பண்பலை) ஒரு வரிசை இருக்கிறதல் லவா?
அது மாதிரி சிக்கன்குனியா இனத் துக்கு ஓர் அலை வரிசை உண்டாக்கித் தரவேண்டும்.
சிக்குனியா என்னும் அலை) வரி சேவிய நான் கண்டுபிடித்திருத்திறேன்.
கான்ஸ் ஆறுமனியிலிருந்து ஃப்) மணிவரை மிகக் குறைந்த நேரமே அதை ஒலிபரப்பவேண்டும்.
IE15)||í:LIŤ 2007
வேடிக்கை

Page 8
ரேடியோ உள்ள அனைவரும் அது சமயம் ஆன் செய்துவிட்டு அந்த நொடி
நேரம் ஆனதும் ஆஃப் செய்து விட
பிறகு ஏழே கால் மணிக்கு ஒரு
வினாடி சிக்குனியா ஆன் செய்யப்படும், மதியம் 12 மணி, மாலை 4 மணி. அதற் கப்புறம் நாலு மணி மூன்று நிமிஷத்திலி ருந்து விடிய விடிய ரேடியோவில் அந்த அலைவரிசையைவிட்டு முள்ளை நகர்த் தக்கூடாது. இது மாதிரி செய்ய பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
ஒரு பெரிய ரகசியத்தைச் சொல்வி விடுகிறேன். சிக்கன்குனியா என்பது ஒரு வகைக் கொசுவால் வருகிறது என்பதே ஓர் அபத்தமான தியரி,
ஏதோ ஒரு வகை கலப்பு சாதிக் கொசுவைப் பார்த்து அது சிக்கன் குனியா என்று பழிகூறியிருக்கிறார்கள்.
உண்மையில் சிக்கன்குனியா என்பது ஒரு வகைக் காற்று. செவ்வாய் கிரகத்தி லுள்ளது. அதுதான் பூமியைத் தாக்கு கிறது என்பதே உண்மை, செவ்வாய் கிரகத்தில் காற்று இல்லை என்று ஒரு சாரார சொல்வது தவறு. செவ்வாய் கிர கத்துக்கு பூமியிலிருந்து சென்ற விண் வெளி ஓடம் சிக்கன்மலை என்று செவ் வாய் கிரகத்திலிருக்கும் மலை அருகே
தரை இறங்கியதால்தான் இத்தனை கெடுதலும்,
அந்த சிக்கன் மலைக்காற்று பூமிக் கிரக ஓடத்தில் இடம் பெற்றதும் குனியா என்றொரு ரசாயன மாறுதலை உண்டு பண்ணி கண்ணுக்குத் தெரியாத அல்ை களை உமிழ ஆரம்பித்துவிட்டது.
அந்த அலை வரிசை இப்போதுதான் பூமியை வந்து அடைந்திருக்கிறது.
அந்தக் காற்று பூமி கிரகத்தின் சுழற்சிக்குள் பிரவேசிக்கும்போது, பூமிப் பரப்பின் மேல் சுழன்று வட்டமிட்டுக் கொண்டிருக்கும் சில திட திரவப் பொருள் களுடன் கலந்து நுண் கிருமிகளாக அவை மாறிவிட்டன. பூமியை இரண்டு லட்சத்து அறுபத்தாறாயிரத்து முன்னுற் றொருதரம் அந்த வாயுவானது சுற்றினால் பதினாலு கோடியே முப்பத் தாறு லட்சத்து நானூற்று இரண்டு குனியாக் கிருமிகள் உற்பத்தியாகின்றன.
வட கிழக்கு ஆபிரிக்காப் பகுதியை யும் தென் ஆஸ்திரேலியாவின் வட மேற் குப் பகுதியையும் சிக்கன் குனியாக்கள் தாங்கள் வளரக்கூடிய பகுதிகளாகத் தேர்ந்தெடுத்துத் தங்கிவிட்டன.
அந்தப்பகுதிகளிலிருந்த ஒரு வகை ஒட்டுண்ணிகளின் உடலில் கலந்து சிக்கன்குனியாக்கள் தங்களது சுவாசக் காற்றின் முலம் இந்த வியாதியைப் பரப்பு கின்றன என்பதை நான் கண்டறிந்திருக் கிறேன்.
குனியாக்களின் நடமாட்டத்தைக் குறைக்கவும் ஒழிக்கவும் ஒரே வழி, அவற் றின் உற்பத்தி ஸ்தானத்தை ஒழிப்பது தான். அவை தோன்றிய செவ்வாய் கிரகத்
தின் சிக்கன் குன்றுகளிலிருந்துதான் அவை ஜீவிட்பதற்கான காற்றலை பூமிக்கு வருகிறது.
அவை என்று நான் குறிப்பிடுவது கொசுக்கள் ரகமல்ல. ஒரு வகை வைரஸ் கள். ஆனால் வைரஸ் வகை அல்ல.
வேடிக்கை
நவம்பர் 2007
 

ஒலியினால் மட்டுமே இத்தகைய ன்ேவரனே ஒழிக்க முடியும், அந்த ஒலியா ண்து - ஒலி அலை வரிசையானது பூமியி லிருந்து புறப்பட்டு சென்வாய் கிரகத்தின் சிக்கன் மலைப்பகுதியைத் தாக்கி எதி ரொலி அலைகளாக மாறி அந்த அலைவ ரிசை பூமிக்குத் திரும்பி, (யாரங்கே, ஒரு பென்சிலாவது குடுங்கய்யா, பேனாவில் மை திரந்துடுச்சு) மேற்படி குனியாக் காற்று பரவியுள்ள இடங்களில் கலந்து கவனிக்கவும் சிக்கன் துன்றுக் காற்று. குனியாக் காற்று ஒன்றுடன்தான் கலக்கும். அந்த அடர்த்தியும் நமது பிரான வாயுவின் அடர்த்தியும் கலக்குமானால் ஒரே வினாடியில் உலகம் அழிந்து விடும் - கடவுளுக்கு நன்றி!!
சிக்கன்குனியா நோயைத் தவிருங்கள் என்று டி.வி.யில் விளம்பரம் செய்வதால் பயனில்லை. சரியாக ஆராயாமல் வீண் செலவு எதற்கு?
சிக்கன் குனியாவால் தாக்கப்பட்டவர் களுக்கு முழங்கால் வலி, மூட்டுவலி கால் வலி, அரைவலி, முக்கால்வலி என்கிறார் கள். அதை நீக்கிக் கொள்ள முயலுகிறார் àT
அரசு உடனடியாக அதைத் தடை செய்யவேண்டும் குனியாக்கள் மனிதனின் கால்கள் வழியாகத்தான் பூமி மண்டலத் தில் இறங்க முடியும். அதைத் தடை செய்தால் அவை மனித உடம்பிலேயே தங்கிவிடும். ஆகவே சிக்கன் குனியாவால் தாக்கப்பட்டவர்கள் கால் வலி முட்டிவலிக் காக எந்த ஊசியும் போட்டுக் கொள்ளலா காது.
(இந்தTப்பா தம்பி ஒரு சின்ன பேப்பர் குடு, தீர்ந்துடுச்சு முக்கியமானதை இனிமேத்தான் எழுதணும்).
அதாவது மீண்டும் வேண்டுகோள் விடு கிறேன். என்னைக் கலந்து ஆலோசியுங்
அலை வரிசை உண்டு பண்ணி, அதன் மூலம் தனியா ஒழிப்பு இசையைக் கலப் ந்து தன்னக்குடி வைத்தியநாதன் போன்றோனோகிக்கொண்டு மெல்லிய நுண்மையான இசைபை ஒலி அலையில் கலந்து சிக்கன் குன்றுகளைத் தாக்க வேண்டும், மிக ஒல்லிய டிரீக்கிங் ஒலி, கன்னாடி டம்ளரைக்கூட உடைத்து விடும்.
மிகக் கர்மையான ஒலியை எந்த வயலினாலும், இசைக் கருவியாலும் கலைஞராலும் ஏற் படுத்த முடியவில்லையென்றால் நானே
அத்தகைய எந்த
அந்த ஒளியை இதோ இப் படி ஏற்படுத்தித் தருகிறேன்.
F...F.F...甲...年...@
(யோவ்! போன்! அந்தப் பைத்தியம் கேட்ட காகிதத்தையும் பேனாவையும் யாரும் தரலியா? கத்த ஆரம்பிச்சுட்டுது பாரு. குடுத்துத் தொலையுங்கய்யா!!!)
画町
"அமைச்சரே. rேயே எண் சப்பு"
"நேத்ரிஷ் தீங்கள் :றுவேடத்திப்
தrix போன்போது இ அடித்த கூத்துக்களை பாரோ Tேபைப் பேரண் கமரTETண் படம்
* பிடித்து, எல்லோருக்கும் அலுப்ரிக்கொண்டி
கள். சிக்கன் மலைக் குன்றுகளுக்கு துங்கrச்." நமது பண்பலை வரிசை போல ஒர
நவம்பர் 2007 13 (&, Liga,

Page 9
த ஆரிவிதி
அEண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்
நவீன பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஐன்ஸ் ான். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட "சார்பியற் தத் Filā Liv" (Theory of Relativity ) Lisy LLI கட்டுரைகள் பெளதீகவியலின் வரலாற் றில், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின. புரட்சியென்றால் சாதாரண புரட்சி யல்ல. பெளதிகத்தின் அடித்தளத்தையே அடியோடு மாற்றிவைத்த புரட்சி. இச்சார் பியற் தத்துவமும், சக்திச் சொட்டுப் பெள ĝĤla E“Lpli (C) L La Intui Im Physics ) 3) Eůrůů} [LLI நவீன பெளதிசத்தின் அடித் தளங்களாகக் கருதப்படுபவை. சார்பியற் தத்துவத்தைப் பொறுத்தவரையில் அது முழுக்க முழுக்க ஐன்ஸ்டீனின் கோட்பாடே.
சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆர ம்பகரத்தாவாகவும் ஐன்ஸ்:னயே கருத லாம். உண்மையில் ஐன்எப்டினிற்கு நோபல் பரிசு கிடைத்ததே ப்ரோட்டன்கள் பற்றிய கண்டு பிடிப்பிற்காகத்தான். இக் கண்டுபிடிப் பே சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப வளர்ச்சியாகும், உண்மையில் ஐன்ஸ்டீனிற்கு சார்பியற் தத்துவத்திற்காகவும் இன்னுமொருமுறை நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும். சரி. அப்படி இந்தச் சார்பியற் தத்துவம் அப்படி என்னதான் கூறிவிடுகின்றது?
iiili5a)Li fl-EEGI |Lir: GI-E Tibi-Fi GĦIEIĊI IL LI னதுதான். "நேரம்', 'வெளி பற்றிய கருது கோள்களை - அதாவது இதுவரை காலம் வெளி", "நேரம்' பற்றி நிலவி வந்த கோட்பாடுகளை, சார்பியற் தத்துவம் அடி போடு மாற்றியமைத்து விடுகின்றது. அதே சமயம் பொருள்" , "சக்தி', 'புவியீர்ப்பு',
EELG33) ILLIT5Tsi: - வ.ந.கிரிதரன்
பற்றியும் புதிய கருதுகோள்களை முன் வைக்கின்றது. இச்சார்பியற் தத்துவக் TuSL LL0CTBT S TT S OHBHTHH0JYBTLLLLL பிரிக்கலாம்.
| சிறப்புச் சார்பியற் தத்துவம் (Special Theory of Relativity
2. பொதுச் சார்பியற் தத்துவம் (Genera | Theory of Relativity)
இவற்றில் "சிறப்புச் சார்பியற் தத்துவம் இதுவரை நிலவி வந்த வெளி "நேரம் பற்றிய கோட்பாடுகளை அடி யோடு மாற்றியமைத்து விடுகின்றதென் நால், பொதுச் சார்பியற் தத்துவமோ புவி யிர்ப்பு பற்றிய கோட்பாட்டை மாற்றிய மைத்துவிடுகின்றது.
வேடிக்கை
நவம்பர் 2007
 
 
 

வெளி", "நேரம்' பற்றிய கோட்பாடுகள்:
ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலவிவந்த அரிஸ்டோட்டிலின் கோட் பாடுகளைப் பரிசீலனைக்குட்படுத்தியவர் கள் கலிலியோவும், சேரஐரக் நியூட்ட லுமே,
ஆனால் வெளி, நேரம் பற்றிய இவர் களது கோட்பாடுகள் ஒன்றாகவேயிருந் தன. வெளியையும். நேரத்தையும் - சுற் றிவர நிகழும் இயக்கங்களால் எவ்விதப் பாதிப்பும் அடையாத சுயாதீனமானவைக ளாகவே (absolute) இவர்கள் கருதினார் கள். சாதாரண மனித வாழ்வின் அனுப வங்களிலிருந்தே இவர்களும் வெளி. நேரம் பற்றிய கோட்பாடுகளை வகுத்தி ருந்தார்கள்.
எங்கும் எல்லையற்று, விரிந்து பரந்து கிடப்பதுதான் வெளி. "எல்லாத் திசையிலு மோர் எல்லையில்லா வெளி வானிலே, என்று பாரதி பாடியதைப்போல் எங்கும் வியாபித்துக் கிடக்கின்றது வெளி இந்த வெளியில்தான் ஆரியன், கிரகங்கள் மற்றும் பல்வேறுபட்ட பொருட்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய இயக்கங்கள் இந்த நவம்பர் 2007
15
வெளியைப் பாதிப்பதில்லை. அது தன்பாட்டில் வியாபித்துக்கிடக்கின்றது. இவ்வாறுதான் நியூட்டன் வரையிலான விஞ்ஞானிகள் கருதினார்கள், இது போன்றுதான் "நேரமும் சுற்றிவர நிகழும் இயக்கங்களால் எவ்விதப் பாதிப்புமற்று தன்பாட்டில் இயங்கிக் கொண்டிருப்பதாகப் பெளதீக விஞ்ஞானிகள் கருதினார்கள்.
சிறப்புச் சார்பியற் தத்துவமும், வெளியும், நேரமும். இவ்விதம் சுயாதீனமாகக் கருதப்பட்டு வந்த வெளியோ நேரமோ உண்மையில் சுயாதீனமானவையல்ல. அவையும் சுற்றி வர நிகழும் இயக்கங்களால் பாதிப்புறுப வையே சார்பானவையே என்பதை ஐன்ஸ்டின் சிறப்புச் சார்பியற் தத்துவம் மூலம் வெளிக்காட்டினார்.
உதாரணமாக நேரத்தை எடுத்துக் கொண்டால், வேகமானது நேரத்துடன் மாறுதல் அடைகின்றது. ஒளி வேகத்தில் செல்லும் ரொக்கட்டில் ஒரு மனிதனையும், பூமியில் நிற்கும் ஒருவனையும் கற்பனை செய்துகொள்ளுங்கள். இவர்கள் இருவ ருமே ஒரே வகையான ஒத்த கடிகாரங் களைக் கைகளிலே கட்டியிருக்கின்றார் கள். இவர்கள் இருவரது கடிகாரங்களும் நேரம் சுயாதீனமானதாகவிருந்தால் ஒரே நேரத்தைக் காட்டவேண்டும். ஆனால் நேரம் சார்பானதாகவிருப்பதால், இருவரது கடிகாரங்களும் இரு வேறு நேரங்க ளையே காட்டும்,
உண்மையில் வேகம் கூடக்கூட நேரம் மாறுவதும் குறையவே தொடங்கும்.
ஒளிவேகத்தில் செல்லும் ரொக்கட்டில் இருப்பவனுக்கு அவனுக்குச் சார்பாக ஒரு மணித்தியாலம் சென்றிருக்கும் அதே சம யம், பூமியிலிருப்பவனிற்கோ பல நூறு வருடங்கள் சென்றிருக்கும். இவ்விதம் நேரமானது வேகத்துடன் மாறுவது விஞ் ஞான பூர்வமாக நிருபிக் கப்பட்ட
(& JşåIXE,

Page 10
இதற்காக விஞ்ஞானிகள் இரும்பு அனுறுக்கருக்களுடன் காமாக் கதிர்களை இரு வேறு உயரங்களில் மோதவிட்டுப் பார்த்தார்கள்.
உயரத்தில் நேரம் வேகமாகச் செயற்படுகின்ற காரணத்தால் காமாக் கதிரகளை உறுஞ்பம் இரும்பு அணுக் கருக்களின் போக்கு வித்தியாசப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
வெளியும், பொருளும்.
இதுபோல் தான் சுயாதீனமாகக் கருதப்பட்டு வந்த வெளி (spacc}சுட நேரம்போல் பாதிப்படைகின்றது.
ஒரு பொருளை எடுத்துக்கொண்டால், அதன் பொருண்மை கூடக்கூட அப்பொரு
ளானது தன்னைச் சுற்றியிருக்கும் வெளியை வளைக்கத் தொடங்கிவிடு கின்றது.
வெளியையாவது வளைப்பதாவது. வளைப்பதற்கு வெளியென்ன ஒரு பொருளா?. என நீங்கள் கேட்கலாம், நியா பமான கேள்விதான். ஆனால் இவ்விதம் வெளியைப் பொருளின் பொருண்மை வளைப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
புதன் கிரகமானது ஆரியனைச் சுற்றி வரும் ஒழுக்கில் ஒரு சிறு வித்தியாசம் இருந்து வந்தது. இந்த வித்தியாசத்தின் காரணத்தை நியூட்டனின் கோட்பாடுகளி னால் விளக்க முடியவில்லை.
ஐன்ஸ்டீனின் சார்பியற் கணித ஆத்திரங்களோ இவ்வித ஒழுக்கில் காணப்படும் மாற்றத்திற்குக் காரணம் ஆரி பன் அதனைச் சுற்றியுள்ள வெளியினை வளைத்துவிடுவதே என்பதை எடுத்துக் EssL16.01.
இது பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த வானியல் அறிஞரான சேர்.ஆர்தர் எடிங்ட னால் ஆரிய கிரகனமொன்றை அவதா னித்தபொழுது நிருபிக்கப்பட்டது.
பொதுச் சார்பியற் தத்துவமும் புவியீர்ப்பும்.
புவியீர்ப்பைப் பொறுத்தவரையில் நியூட்டன் அதனை ஒரு விசையாகவே கருதினார்,
ஆனால் ஐன்ஸ்டீன் பொதுச் சார்பியற் தத்துவமோ ஆரியன் தன்னைச் சுற்றி புள்ள வெளியினை வளைத்து விடுகின் றதன் காரணமே பூமியினைச் சூரியனைச் சுற்றவைத்துவிடுகின்ற தென்பதை எடுத்துக் காட்டியது.
இவ்விதமாக அரிளிப்ட்டோடிலின் தத்துவங்களை ஆட்டங்கான வைத்த நியூட்டனின் கோட்பாடுகளையே தகர்த்து விட்டன ஐன்ஸ்டினின் சார்பியற் கோட் பாடுகள்,
சாதாரன மனித அனுபவங்களிற் கப்பாற்பட்டு சம்பவங்கள் நடைபெறும் போதே ஐன்ஸ்டீனின் சார்பியற் கோட் பாடுகளைப் பூரணமாக உணர முடியும். மிகப் பிரமாண்டமான வேகத்தில் செல்லும் போதே நேரம் மாறுவதை இல குவாக அவதானிக்க முடியும்.
அம்மாற்றத்தினை சாதாரண மனித சக்திக்குட்பட்ட வேகத்தில் அவதானிக்க முடியாது. ஏனென்றால், மாற்றம் அவ் வளவு சிறியதாக இருந்துவிடுகின்றது.
மேலும் வெளியையும் நேரத்தையும் தனித் தனியாகப் பிரித்துப் பார்ப்பதையும் சார்பியற் கோட்பாடுகள் எதிர்க்கின்றன. உண்மையில், 'வெளிநேரச்' (spacetime} சம்பவங்களின் தொகுப் பாகவே ஐன்ஸ்டினின் சார்பியற் கோட்பாடுகள் விளங்குகின்றன.
இவ் விதமாக, இப்பிரபஞ்சத்தை உண்மையில் தெளிவாக- துல்லியமாகசரியாக - ஐன்ஸ்டீனின் சார்பியற் கோட்பாடுகள் விளக்கி வைக்கின்றன.
stå st Wሻሻሃ" ዖም "ሥ - “! */ **)
வேடிக்கை
1 ዕ
நவம்பர் 2007

O L'ely: Fiť
ஒரு நினைவுப் பதிவு கவிஞர் ச.விஸ்வரத்தினம் (க.வி - 1950 - 2006) 1970 களிலே எழுத ஆரம்பித்து 1980 களில் முக்கிய மான எழுத்தாளராகப் பரினே மித்தவர். | "சுவி என்ற பெயரால் அறியப்ப
டுபவர்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்,
ஈழத்தின் இலக்கிய சிந்தனை யாளராகிய முதளையசிங்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டனர்.
இவருடைய கவிதைகள் ற தொகுதியாக 2001 இலே வெளியானது. மரணத்துள் வாழ்வோர் தொகுதியிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 1. Lilesong and Lament: Tariil Writing from Sri Lanka Gl, IgE ruf (EEC 36:IJ gll கவிதை ஒன்று ஆங்கில வடிவிலே வெளிவந்துள்ளது.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்ட கவிஞரான இவர் தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார்.
இவரது காற்றுவழிக் கிராமம் என்னும் கவிதைத் தொகுதி விபவி சுந்திர இலக்கிய அமைப்பின் 1995ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதி னைப் பெற்றுக்கொண்டது. கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை பொருந்தியவரும்கூட
கவிஞர் வில்வரத்தினம் அவர்கள் இடம்பெயர்ந்து 1991ஆம் ஆண்டு முதல் திரு கோணமலையில் வாழ்ந்துவந்தார். அங்குள்ள கல்வித்தினைக்களத்தில் பணியாற்றி னார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த வில்வரத்தினம் அவர்கள் கொழும்பில் டிசம்பர் 9, 2006 அன்று தனது 56ஆவது வயதில் காலமானார்.
அவரது தாள்கள் அகங்களும் முகங்களும் (கவிதைத் தொகுதி, 1985) காற்றுவெளிக் கிராமம் (கவிதைத் தொகுதி, 1995)
நவம்பர் 2007 17 வேடிக்கை

Page 11
காலத்துயர் (கவிதைத் தொகுதி) நேற்றிமணன் (கவிதைத் தொகுதி, 2000) உயிர்த்தெழும் காலத்துக்காக (கவிதைத் தொகுதி, 2001)
IIT fli, Li (2006)
உயிர்த்தெழு கிலத்துக்க
தைகளுள் ஒன்று
என்பிலிகளுக்கு?
என்பிலிகளுக்கு வாழ்தல் இலகு கூனஸ். குனிதல், நாலாய் வளைந்து நமஸ்கரித்தல் நோய் வாலாய்க் குழைதலென
எல்லா வகையிலும் இசைவாக்கம் சமரசங்கள், என்பிலிகளுக்கு வாழ்தல் இலகு
வேளையாமை உண்டா வாழ்புவியில்?
வானவில்லிற்கு வளைவழகு கூனல் பிறைக்கழகு கும்பிட்டு வாழ்தல் அழகிலையா?
வாளேந்திய வயல்காட்டுப் Éज्ञायां
வேடிக்கை
பொம்மைக்கும் உண்டே வடிவழகும் பொலிவும் ஆயின் அதன் பொய்யுருவுள்
晶芭
: வெளியான அவரது கவி
SLS S D SDS SLSSYSLSLSLSLSLSL S SLS
கைவிட்டிழுத்தால் தேய்ந்த தும்பை அதன் மீசைக்கு
வழங்கியது போசு தும்புத்தடிதான் மீதப்படும் பொய்ம்மைகளுள் முதுகெலும்பை தேடுதல் பிழையுடைத்து.
ஆதலால் நாலாய் வளைவோம் வளைவதனாலாகும் வல்ல புகழெனில்
வளைதல் நன்றே வளைதல் நன்றே கற்றுான் போல் பிளந்திறுவதற்கல்லுவே பெருவாழ்வு? ஆதலால் முதுகை வளைப்போம் ஏறி வலம் வருவதற்கு அதைப் பிரமுகர்க்கு ஈவோம்.
ஏந்திச் சுமந்த பென்னாம் பெரிய விழாக்களில் பொன்னாடை அவர் போர்த்த எம் முதுகெலும்பில் பூச்ச ஊர. மன்னிக்கவும், புரூகம் ஊர மெய்ம்மறக்க. அடடா என்ன சுகம் என்ன சுகம். இதுபோலெவருக்கு வாய்க்கும் என்பிலிகளாய் வாழும் இலகுக்கம் அம்புவியில் வாய்த்தல் அரிது மிக அரிது!
1-1-1}{.
18 நவம்பர் 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S SSD quDS SD Y S S S S S S
ΕΤ - Ι Η
TCTTT MECGTTTO STTeOOOSOOOLLLLLLL TTTT TTTTTTT SJTTTT LTSTTTS TCC0kLGT TTTTT JuTTTT
வெளியாரின் வருகையோடு வேர்கொண்ட வாழ்வையும் பிடுங்கிக் கொண்டு
மக்களெல்லாம் வெளியேறிய ஓரிரவிற்குப்பின் விடியப் பார்த்தால்
வாழ்வெனும் வெள்ளம் வற்றிக்கிடந்த திடலாய்
கிராமம்
முற்றத்து ஆரியன் முற்றத்து நிலா, முற்றத்துக்காற்றென வீட்டுமுற்றங்களுக்கே உரித்தான வாழ்வனுபவங்கள் விடைபெற்றுக்
வேலிகளை வெளியார் வெட்டிப்
போட்டார்கள். வாசல் கதவுகளை உடைத்துப் போட்டார்கள்.
உள்ளத்தையெல்லாம் கொள்ளையடித்தார்கள். வீடுகள் திறந்தபடியே கிடந்தன.
திறந்த வாசல்களூடே நுழைந்த காற்று கதவுகளை சாத்தியும், திறந்தும், தள்ளியும்
உள்ளோடியோடி எதையெதையோ முயன்று உறவின்மை சுண்டபின் தோற்றோடி வேற்றாகி நின்ற வெளியிடைத் தோய்கிறது.
வெளிகொண்ட காற்று வெளிகொண்ட flut
வெளியை வெறிக்கின்ற ஆரியன்,
வெளியிடை வெறித்த பார்வையோடு
ஏதோ மோப்பம் பிடிக்குமாப்போல் மெல்லனவந்த காற்று விலகிச் செல்கிறது ஒரு வேற்றானைப்
போல,
விழிகளைப் பெயர்க்கிறேன் வேற்றாம்பார்வை எண்ணிலும் தொற்றியதோ? விலகல் மெல்ல விலகல் மேலும் விலகல் விட்டு நீங்கும் கப்பற்துறை வரையும் விலகி வந்தாயிற்று கடைசியாய்,
காற்று மோப்பம் பிடித்தது சரிதான்.
இதோ கப்பல் நகர்கிறது
கனத்துக் கிடக்கும் இதயச்சுமையையும் தாங்கியவாறே.
விலகிச் செல்லும் துறைமுகம் வழியனுப்பவும் வாராதிருந்த முதியவரின் சோகத்தை
அப்பிக் கிடந்தது.
தூரத்தே புகார் மூட்டமெனத் தெரியும் பனைகளுக்கு அப்பால் வேற்றாகி விண்ணாகி நின்ற வெளியுள்
நிற்கிறேன் குமைகிறது காற்று
■ --— நவம்பர் 2007 19 |

Page 12
O ?5 g? நான் உன்கிட்ட ஒண்ணு கேக்கனுமே.
ஆே.
வந்து. எப்படிக் கேட்பது?.
தப்பா நினைக்க மாட்டியே? -— உடனே பதில் சொல்லணும்னு இல்ல. நீயும் அப்படிப் பண்ணியிருந்தா எனக்கு எனக்கு ரொம்ப சந்தோசம் என்கிட்ட நிறையப் பேர் கேட்டிருக்காங்க
ஆனா, எனக்கென்னமோ உன்கிட்ட மட்டும் தான் கேட்கத் தோணுது இந்தக் கேள்வியால நம்ம உறவு பாதிக்கப்படக் கூடாது! எப்பவும் போல என்கிட்ட பேசனும் என்ன? Promis &L?
கேட்கட்டா?.ம் வந்து,
நீ ஒவ்வொரு நாளும் குளிப்பாயா?. இல்லாட்டிக் இனியாவது குளிக்கணும், என்ன! 鬣
கோள்கள் ஒன்பது - திக்குகள் எட்டு ரிசிகள் ஏழு - ஆதாரங்கள் ஆறு கணிடங்கள் ஐந்து - குரவர் நான்கு உண்மைப் பொருட்கள் மூன்று - நாரின் பகுதி இரண்டு முட்டாள்! நீ மட்டும்தான்!
ஹா! ஹா! ஹா!
(36)||Jiaxi, நவம்பர் 2007
 
 
 
 
 
 

து சரித்திரத் தொடர்
படை கிளம்பல்
உறையூரில் அன்று அதிகாலை யிலிருந்து அல்லோலகல்லோஸ்மாயி ருந்தது. பார்த்திய மகாராஜாவின் பட்டா பிஷேகத்தின்போதும் பகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் விஜயத்தின் போதும் கூட, உறையூர விதிகள் இவ்வளவு அழகாக அலங்கரிக்கப்படவில்லை யேன்று ஜனங்கள் பேசிக் கொண்டார் „Eill.
வீட்டுக்கு விடு தென்னங்குருத்துக்க ஒளினாலும் மாவிலைகளினாலும் செய்த தோரணங்கள் தொங்கிக் கொண்டிருந் தன. வீடுகளின் திண்ணைப் புறங்களி லெல்லாம், புதிய சுண்ணாம்பும் சினட் புக் காவியும் மாறிமாறி அடித்திருந்
Tl.
ஸ்திரிகள் அதிகாலையிலேயே எழுந்திருந்து, தெருவாசலைச் சுத்தம் செய்து, அழகான கோலங்கள் போட்டு, வாசலில் குத்து விளக்கு ஏற்றி வைத் தாரகள், பிறகு, ஆடை ஆபரணங்களி னால் நன்கு அலங்கரித்துக் கொண்டு. போருக்குப் படை கிளம்பும் வேடிக்கை பார்ப்பதற்காக வாசல் திண்ணைக விலோ மேல் மாடிகளின் சாளரங்களின் அருகிலோ வந்து நின்று கொண்டார்
விடிய ஒரு சாமம் இருக்கும்போதே, அரண்மனையிலுள்ள பெரிய ரண் பேரிகை முழங்கத் தொடங்கியது. அதனுடன் வேறு சில் சத்தங்களும் கலந்து கேட்கத் தொடங்கின. குதிரை
கள் கனைக்கும் சத்தம், புத்த வீரர் கள் ஒருவரையொருவர் கூவி அழைக் கும் குரல், அவர்கள் இடையிடையே எழுப்பிய வீர முழக்கங்களின் ஒலி,
வேல்களும் வாள்களும் ஒன்றோ பொன்று உராயும்போது உண்டான் கன கன ஒலி, போருக்குப் புறப்படும் வீரரகளை அவர்களுடைய தாய்மார் கள் வாழ்த்தி அனுப்பும் குரல், காதலி கள் காதலர்களுக்கு விடை கொடுக் கும் குரல் - இன்வளவுடன், வழக்கத் துக்கு முன்னதாகவே துயில் நீங்கி
எழுந்த பறவைகளின் கல கல சத்த
மும் சேர்ந்து ஒலித்தது.
ஆரிய உதயத்துக்கு முன்னாலி ருந்தே அரண்மனை வாசலில் போர் வீரர்கள் வந்து குவியத் தொடங்கினார்
படைத் தலைவர்கள் அவர்களை அணிவகுத்து நிற்கச் செய்தார்கள். வரிசை வரிசையாகக் குதிரைப் படை களும், யானைப் படைகளும், காலாட் படைகளும் அணிவகுத்து நிறுத்தப்பட் டன. எல்லாப் படைகளுக்கும் முன் னால் சோழரகளின் புலிக்கொடி வான் ளாவிப் பறந்தது. சங்கு, கொம்பு, தாரை, தப்பட்டை முதலிய வாத்தியங் களை முழக்குகிறவர்கள் படைக ளுக்கு இடையிடையே நிறுத்தப்பட்டார் கள். பெரிய பேரிகைகளைச் சுமந்த
நவம்பர் 2007
(3īIL FJEL,

Page 13
ரிஷபங்களும் ஆங்காங்கு நின்றன. கையில் ஏந்தி வந்த ஆத்திமாலையை பட்டத்துப் போர் யானை அழகாக அவர் கழுத்தில் ஆட்டினாள். அருகில் அலங்கரிக்கப்பட்டு அரண்மனை வாச சேடி ஏந்திக் கொண்டு நின்ற மஞ்சள் லில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. நீரும் தீபமும் உள்ள தட்டை வாங்கி இந்த மாதிரி அணிவகுப்பு நடந்து மகாராஜாவுக்கு முன்னால் மூன்று சுற் கொண்டிருக்கையில் அடிக்கடி போர் றுச் சுற்றிவிட்டு, கையில் ஒரு துளி வீரர்கள் "வீரவேல் - வெற்றிவேல்' மஞ்சள் நீர் எடுத்து மகாராஜாவின் என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். நெற்றியில் திலகமிட்டாள். அப்போது சிறிது நேரத்திற்கெல்லாம் அரணின் மீண்டும் மீண்டும் "ஜய விஜயீ பவIII են1 էրll (!p ി வாசலில் கலக லப்பு ஏற்பட்டது. "மகாராஜா வரு கிறார்! - மகா ' ராஜா வருக றார்!’ என்று ஜனங்கள் பேசி : க்கொண்டார்கள், ! அவர்கள் பார்த் 醬 துக் கொண்டி" ருக்கும்போதே அரண்மனைக்குள் ளேயிருந்து கட் டியக் காரர்கள் இருவர், சோழ மண்டலாதிபதி பார்த்திய மகா ராஜா வருகிறார்! கி பராக் பராக்' என்று கூவிக் கொண்டு வெற்றி வேல்; விர வேல்' என்னும் வெளியே வந்தார்கள். விதியில் கூடியி முழக்கங்கள் ஆகாயத்தை அளாவி ருந்த அந்தணர்களும் முதியோர்களும் எழுந்தன. சங்கு, கொம்பு, தாரை, தப் "ஜய விஜயீபன' என்று கோஷித்தார் பட்டை முதலிய வாத்தியங்கள் காது
செவிடுபடும்படி அதிர்ந்தன. மகாராஜா அரையில் மஞ்சள் மகாராஜா வீதியில் நின்ற கூட் ஆடையும் மார்பில் போர்க்கவசமும், டத்தை ஒரு தடவை தம் கண்களால் இடையில் உடைவாளும் தரித்தவராய் அளந்தார். அப்போது ஒரு ஏவலாளன் வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து விரைந்து வந்து, மகாராஜாவின் காலில் ராணியும் இளவரசரும் வந்தார்கள். விழுந்து எழுந்து கைகட்டி வாய் அரண்மனை வாசலில் மகாராணி தன் பொத்தி நின்றான். 'என்ன சேதி" என்று வேடிக்கை 22 நவம்பர் 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகாராஜா கேட்கவும் மாரப்ப பூபதி இன்று காலை கிளம்பும்போது, குதிரை மீதிருந்து தவறிக் கீழே விழுந்து மூர்ச் சையானார். மாளிகைக் குள்ளே கொண்டு போய்ப்படுக்கவைத்தோம். இன்னும் முர்ச்சை தெளியவில்லை என்றான்.
இதைக் கேட்ட மகாராஜாவின் முகத்தில் லேசாகப் புன்னகை பர விற்று. அந்த ஏவலாளனைப் பார்த்து, நல்லது. நீ திரும்பிப் போ! பூபதிக்கு மூர்ச்சை தெளிந்ததும், உடம்பை ஜாக் கிரதையாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னேன் என்று தெரிவி!' என்றார். மேற்கண்ட சம்பாஷணை மகாராஜா புக்கு அருகிலிருந்த ஒரு சிலருடைய காதிலேதான் விழுந்தது. ஆனாலும் வெகு சீக்கிரத்தில் 'மாரப்ப பூபதிக்கு ஏதோ விபத்தாம்! அவர் போருக்கு வரவில்லையாம்' என்ற செய்தி பரவி விட்டது.
பிறகு, மகாராஜா அருகில் நின்ற விக்கிரமனை வாரி எடுத்து மார்போட னைத்துக் கொண்டு உச்சி மோந்தார். "குழந்தாய், நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா? மறவாமலிருப் பாயா? என்றார்.
நினைவில் இருக்கிறது. அப்பா ஒரு நாளும் மறக்கமாட்டேன்' என்றான் விக் கிரமன்,
பிறகு மகாராஜா மைந்தனின் கையைப் பிடித்து அருள்மொழியி விடம் கொடுத்து, "தேவி! நீ தைரியமா யிருக்கவேண்டும். சோழர் குலச் செல் வத்தையும் புகழையும் உன்னிடம் ஒப்புவிக்கிறேன். வீர பத்தினியாயிருந்து என் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். முகமலர்ச்சியுடன் இப்போது விடை கொடுக்கவேண்டும்' என்றார்.
அருள் மொழி, கண்களில் நீர் பெருக, நெஞ் சை அடைகி க "இறைவனுடைய அருளால் தங்கள் மனோரதம் நிறைவேறும் போப் வாருங்கள்' என்றார்.
மகாராஜா போர் யானைமீது ஏறிக் கொண்டார். மறுபடியும் போர் முரசு களும், தாரை தப்பட்டை எக்காளங் களும் ஏககாலத்தில் காது செவிடு படும்படி முழங்கின - உடனே அந்தச் சோழநாட்டு வீரர்களின் படை அங்கி ருந்து பிரயாணம் தொடங்கிற்று.
புரட்டாசி மாதத்துப் பெளர்ணமி இரவில் வெண்ணாற்றங்கரை மிகவும் கோரமான காட்சியை அளித்தது. வானத்தில் வெண்ணிலவைப் பொழிந்த வண்ணம் பவனி வந்து கொண்டிருந்த பூரணச் சந்திரனும், அந்தக் கொடுங் காட்சியைக் கானச் சகியாதவன் போல், அடிக்கடி வெள்ளி மேகத்
திரையிட்டுத் தன்னை மறைத்துக்
கொண்டான்.
பகலெல்லாம் அந்த நதிக்கரையில்
நடந்த பயங்கரமான யுத்தத்தில்
மடிந்தவர்களின் இரத்தம் வெள்ளத் துடன் கலந்தபடியால், ஆற்றில் அன்றி ரவு இரத்த வெள்ளம் ஓடுவதாகவே தோன்றியது. அந்த வெள்ளத்தில் பிரதிபலித்த பூரணச் சந்திரனின் பிம்ப மும் செக்கச் செவேலென்ற இரத்த நிறமடைந்து காணப்பட்டது.
நதியின் மேற்குக் கரையில் கன் னுக்கெட்டிய தூரம், கொடும்போர் நடந்த ரணகளத்தின் கோரமான காட்சி தான், விர சொர்க்கம் அடைந்த ஆயிரக் கணக்கான போர்வீரர்களின் உடல்கள் அந்த ரணகளமெங்கும் சிதறிக் கிடந் தன. சில இடங்களில் அவை கும்பல்
நவம்பர் 2007
வேடிக்கை

Page 14
கும்பலாகக் கிடந்தன. கால் வேறு, கை வேறாகச் சிதைவுண்டு கிடந்த உடல்கள் எத்தனையோ! மனிதர்க ளைப் போலவே போரில் மடிந்த குதிரை களும் ஆங்காங்கே காணப்பட்டன. வெகுதூரத்தில் குன்றுகளைப் போல் சில கறுத்த உருவங்கள் விழுந்து கிடந்தன. அவை போர் யானைகளாகத் தான் இருக்கவேண்டும்.
அந்த ரணகளத்தில் விருந்துண்ண ஆசைகொண்ட நூற்றுக்கணக்கான கழுகுகளும், பருந்துகளும் நாலா பக் கங்களிலிருந்தும் பறந்து வந்து வட்டமி ட்டுக்கொண்டிருந்தன. அவற்றின் விரிந்த சிறகுகளின் நிழல் பெரிதாகவும் சிறிதா கவும் ரணகளத்தின் மேல் ஆங்காங்கு விழுந்து, அதன் பயங்கரத்தை மிகுதிப் படுத்திக்கொண்டிருந்தன.
நதியின் இனிய மர்ம சத்தத்தைப் பருந்துகள், கழுகுகளின் கர்ண கடுர
மான குரல்கள் அடிக்கடி குலைத்துக்
கொண்டிருந்தன.
அந்தக் கோரமான ரணகளத்தில், மெல்லிய மேகத் திரைகளினாலும் வட்டமிட்ட பருந்துகளின் நிழலினாலும் மங்கிய நிலவொளியில், ஒரு மனித உருவம் மெல்ல மெல்ல நடந்து போய்க்கொண்டிருந்தது. அது சுற்றுமுற் றும் உற்றுப் பார்த்துக்கொண்டே போயிற்று.
சற்று நெருங்கிப் பார்த்தால், அது ஒரு சிவனடியாரின் உருவம் என்பது தெரியவரும்.
தலையில் சடை முடியும், நெற்றி
நிறையத் திருநீறும், அப்போதுதான் நரை தோன்றிய நீண்ட தாடியும், கழுத் தில் ருத்திராட்ச மாலையும், அரையில் காவி வஸ்திரமும், மார்பில் புலித்தோலு
வேடிக்கை
24
மாக அந்தச் சிவனடியார் விளங்கினார். அவர் கையில் கமண்டலம் இருந்தது. அவருடைய முகத்தில் அபூர்வமான தேஜஸ் திகழ்ந்தது. விசாலமான கண் களில் அறிவொளி வீசிற்று. தோற்றமோ வெகு கம்பீரமாயிருந்தது. நடையிலும் ஒரு பெருமிதம் காணப்பட்டது. இந்த மகான் சிவனடியார்தானோ, அல்லது சிவபெருமானே இத்தகைய உருவம் பூண்டு வந்தாரோ என்று திகைக்கும்படி யிருந்தது.
இந்தப் பயங்கர ரணகளத்தில் இந் தப் பெரியாருக்கு என்ன வேலை? யாரைத் தேடி அல்லது என்னத்தை தேடி இவர் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு போகிறார்?
சிவனடியார் எந்தத் திசையை நோக்கிப் போனாரோ, அதற்கு எதிர்த் திசையில் கொஞ்ச தூரத்தில் கருங் குன்று ஒன்று நகர்ந்து வருவது போல் ஒரு பிரம்மாண்டமான உருவம் அசை ந்து வருவது தெரிந்தது. அது சோழ மன்னர்களின் பட்டத்துப் போர் யானை தான்.
அதைக் கண்டதும் சிவனடியார் சிறிது தயங்கித் தாம் நின்ற இடத்தி லேயே நின்றார்.
யானையின் தேகத்தில் பல இடங் களில் காயம் பட்டு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. நடக்க முடியாமல் அது தள்ளாடி நடந்தது என்பது நன் றாய் தெரிந்தது. கீழே கிடந்த போர் வீரர்களின் உயிரற்ற உடல்களை மிதக் கக் கூடாதென்று அது ஜாக்கிரதையாக அடி எடுத்து வைத்து நடந்தது. துதிக்கையை அப்படியும் இப் படியும் நீட்டி அங்கே கிடந்த உடல் களைத் தடவிப் பார்த்துக் கொண்டே வந்ததைப் பார்த்தால், அந்த யானை
நவம்பர் 2007

எதையோ தேடி வருவதுபோல் தோன் றியது.
சற்று நேரத்துக்கெல்லாம், அந்தப் பட்டத்து யானையானது, உயிரற்ற குவி யலாக உடல்கள் ஒன்றன்மேல் ஒன்றா கக் கிடந்த ஓர் இடத்துக்கு வந்து நின்றது. அந்த உடல்களை ஒவ்வொன் றாக எடுத்து அப்பால் மெதுவாக வைக் கத் தொடங்கியது.
இதைக் கண்டதும் சிவனடியார் இன்னும் சற்று நெருங்கிச் சென்றார். சமீபத்தில் தனித்து நின்ற ஒரு கருவேல மரத்தின் மறைவில் நின்று யானையின் செய்கையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
யானை, அந்த உயிரற்ற உடல்களை ஒவ்வொன்றாய் எடுத்து அப்புறப்படுத்திற்று. எல்லாவற்றுக்கும் அடியில் இருந்த உடலை உற்று நோக்கிற்று. அதைத் துதிக்கையினால் மூன்று தடவை மெதுவாகத் தடவிக் கொடுத்தது.
பிறகு அங்கிருந்து நகர்ந்து, சற்றுத் தூரத்தில் வெறுமையாயிருந்த இடத் துக்குச் சென்றது. துதிக்கையை வானத்தை நோக்கி உயர்த்திற்று.
சொல்ல முடியாத சோகமும் தீனமும் உடைய ஒரு பெரிய பிரலாபக் குரல் அப்போது அந்த யானையின் தொண்டையிலிருந்து கிளம்பி, ரன களத்தைத் தாண்டி, நதியின் வெள் ளத்தைத் தாண்டி, நெல் வயல்களை யெல்லாம் தாண்டி, வான முகடு வரை யில் சென்று, எதிரொலி செய்து மறைந்தது.
அவ்விதம் பிரலாபித்து விட்டு அந்த யானை குன்று சாய்ந்தது போல் கீழே விழுந்தது. சில வினாடிக்கெல்லாம் பூகம்பத்தின்போது மலை அதிர்வது
நவம்பர் 2007
25
போல் அதன் பேருடல் இரண்டு தடவை அதிர்ந்தது. அப்புறம் ஒன்று மில்லை! எல்லையற்ற அமைதிதான். சிவனடியார் கருவேல மரத்தின் மறைவிலிருந்து வெளிவந்து, யானை தேடிக் கண்டுபிடித்த உடல் கிடந்த இடத்தை நோக்கி வந்தார். அதன் அருகில் வந்து சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். பார்த்திப மகாராஜாவின் உடல்தான் அது என்பதைக் கண்டார். உடனே அவ்விடத்தில் உட்கார்ந்து அவ்வுடலின் நெற்றியையும் மார்பையும் தொட்டுப் பார்த்தார். பிறகு, தலையை எடுத்து தம் மடிமீது வைத்துக் கொண்டார். கமண்டலத்திலிருந்து கொஞ்சம் ஐலம் எடுத்து முகத்தில் தெளித்தார்.
உயிரற்றுத் தோன்றிய அந்த முகத்தில் சிறிது நேரத்துக்கெல்லாம் ஜீவகளை தளிர்த்தது. மெதுவாகக் கண்கள் திறந்தன. பாதி திறந்த கண் களால் பார்த்திபன் சிவனடியாரை உற்றுப் பார்த்தான்.
“சுவாமி.தாங்கள் யார்?" என்ற தீனமான வார்த்தைகள் அவன் வாயி லிருந்து வந்தன.
'அம்பலத்தாடும் பெருமானின் அடியார்க்கு அடியவன் நான் அப்பா! இன்று நடந்த யுத்தத்தில் உன்னு டைய ஆச்சரியமான வீரச் செயல்க ளைப் பற்றிக்கேள்விப்பட்டேன். அப்பேர் ப்பட்ட மகாவீரனைத் தரிசிக்க வேண்டு மென்று வந்தேன். பார்த்திபா! உன்னு டைய மாசற்ற சுத்த வீரத்தின் புகழ் என்றென்றும் இவ்வுலகிலிருந்து மறை யாது!’ என்றார் அப்பெரியார்.
“யுத்தம் - என்னவாய் முடிந்தது, சுவாமி?” என்று பார்த்திபன் ஈனஸ்வரத் தில் கேட்டான். அவனுடைய ஒளி பவேடிக்கை

Page 15
மங்கிய கண்களில் அப்போது அளவி
1) ஆல் காண்ட் ட் த.
"அதை பற்றிச் சந்தேகம் உனக்கு, இருi:நோ, பார்த்தி ' :Tே1 :ேள் பiண் 1 ன்பத்தின் ஜ1 1ே1:11, tily:Iკ4:IXI,"′′
பார்த்திபன் முகம் ரிஆறுங்ற்ேறு. "அதை நான் கேட்கவில்லை, HI! சோபு | 1 || I || II **}.|. . " என்று மேலே சொல்ஸ்த், த பங்கினான். "இஸ் டைப் இஸ் 31) சே பு சைண்டத்தில் ஒருவன் கூடத் திரும்பிப !|]+ിട്
சைன்) த்திiே
*||1||' ನ್ತಿ।hiliಏlli:j '!
எதிரிபிடம் துரண்ாதி '|டைடவும் இல்லைப். அன்னைபு பேரும் பேர்,
சாத்திலே மடிந்து விர 1ொரர்ாம் அண்டர்தார்கள்!' என்றார் சிவனடியர். பாரத்திபனுடைய கண்கள் கிழ்ச்சிபி னோஸ் ஸ்ப்ர்ந்தன.
"ஆ" போழ நாட்டுக்கு நற்காலம் பிறந்துவிட்டது. சுனாமி இவ்வளவு ந்
தோஷமான செய்தியைச் ரொன்i) களே! உங்:Thir, ஃான்ன 01:ம்
மாறு செய்யப் போகிறேன்' என்றான். “எனக்கு ஒரு கைiபாறும் வேண் டாம். பார்த்திபா உன்னைப் போன்ற சுத்த வீரர்களுக்குத் தொண்டு :Fir Mதயே தர்மபாகக் கொண்டவன் நான, உன் மனத்தில் ஏதாவது ஆனற இருந் # 1 ນີ້ பு, த், பெI 1ாத மனோரதம் ஏதாவது இருந்தாஸ் தேரினி நன்ற ாேன நரி iனக்ேேறன்' என்றார சிவனடியார்,
"பெய்யாகவா? ஆகா என் அதிர்ஷ் டமே அதிர்டிடம், கண்ாமி ஜீன்: தான். என் பணத்தில் ஒரு :ற இருக், கிறது. டு தன் புராதனப் பெருமையை இழந்து இப்படிப் ராதி: மடைந்திருக்கிறதே என்பதுதான் சந்
(iiif || წio t}\!
நாண்
IE
88:}-tILg:Ii, II
தக் குறை. சோழநாடு முன்னைப்போஸ் ஈதந்திர நாடாக வேண்டும்
Imட வேண்டும். தார தூர தேசங்க 1i" ( புவிi:1ாடி பறக்க ைேண்டும் 1ன்று 1ண்பு கண்டுவந்தேன் என்னுடைய வாழ்க்கையில் அது கன ாகவே முடிந்தது. என்னுடைய மகன் #Iத்திலாவது அது நனாக வேண்டு பென்பதுதான் iன் மனோரதம், லிக்கி
பகோன்ன
வில்
|மன் வீரமகனாய் வளர வேண்டும். சோழ நாட்டின் போன்மையே அவன் வாழ்க்கையின் இலட்சியமாயிருக்க
வேண்டும். உயிர் பெரிதல்ல - சுகம் பெரிதல்ஸ் - மானமும் வீரமுமே பெரி போதிக்க, பணிந்து
11 கன்று அவற்றுக்குப் ைேண்டும். அன்னிபருக்குப்
fıl || || f :) FE, fığı | | 3 | ali fiili வேண்டும். சுனாமி! இந்த தங்களிடம் கேட்கிறேன். தருவீரகளா?’ என்றான் பார்த்தின்
சக்திபற்ற அனைது உடம்பில் இilன் ஆIேIIாக பேசும் வலிமை அட்போது எப்படித்தான் வந்ததோ, தெரி பாது. சிவனடியார் சாந்தமான குரலில் "பார்த்திபா உன்னுடைய மனோர தத்தை நிறைவேற்றுவேன் |tit ୋର୍ଚା உயிரோடிருந்தால்” என்றார்,
பார்த்திபன் "என் பாக்கிபமே பாக்கி பIம்! இனி எனக்கு ஒரு பக்குறைய மில்லை. ஆனால், ஆனால் - தாங்கள் பார், சுனாமி நான் அஸ்லும் பகலும் வழிபட்ட சிவபெருமான்தானோ? ஆகா! தங்கள் முகத்தில் அபூர்வ ஜொலிக்கிறதே! எங்கள் குல தெய்
ப்ரீரங்கநாதனே தான் ஒரு ஃோள இந்த உருவெடுத்து.' என்ப தற்குள், சிவனடியார், "இஸ்னாப், பார்த் நிபா ! தெய்வ நிந்தனை செய்யாதே' எனறு
Bol || J.L. Iỉ: Loliĥ]: {1}|ri, Ĥ.
*ரந்தார்
தேஜளப்
| | || 1 ||
37 Fifað) filho, JIČ I 1; Col. II, 1) "Fii.
பேடித்]],
2 fı
boiliari 2007

-ே 1i' கொடுங்கள். கோடுக்கும் மனப்பான்னதான் பெற்றியின் இரகசியம். உங்களிடமுள்ள 1றிவு, திறமை போன்றவற்றை !ട്ടിIT:; l:|'''I-l:11,
ON II
இறுகப்பற்றுட்கள் நம்பிக்:ை11,
- 11:( நம்பிக்கை 11: பிப்த்தனை செயபுகள் ஓடாதீர்கள்,
வளர :ேன்டுமாயின் ஏற்:வே நீங்கள் அங்கே சேர்த்து வைத்த குட்டைகளை வெளியே செட்டிருப்பு:ள். k-k}{{k விடுங்கள் ஓர துத்து உங்கள் சோர்வு மனப்பான்மைக்கு. நடக்காது. தயக்கம், திகில், சூழப்பம் என் வைற்றிற்கும் சேர்த்து,
அவனை நிறுத்தினார். பிற : அனர் "நா நறும் உன்னைப் போல் அற்ப 1니a)ilu니 [ኅil} | _ ! | | 1ரிை தன் தான் . IF II fði - - يتمي
யாரேன்று உண்ர்து அவரி யம் தெரிந்து கொள்ள
தம் தர்ஸ் மீதிருந்த ஐடT :ேமுடியையும் முகத்தை 10ரத்த தாடி மீளயையும் |லேசாகக் கையிலெடுத்தார்.
fill His rhy | (_| |_| | | | | | | | fjöl தேஜா'டன் விளங்கிய அவருடைய நின்ய முகத்
ாதுப் பார்த்திபன் :ன் :ொட்டாமல் பாரத்தான்
”ஆகா தாங்களா?' என்ற மொழிகள் அன்ை காயிலிருந்து குமுறிக் கொண்டுவந்தன
அ1:புக்கடங்1:1த. ஆபூங்கான முடியா, ஆச்சரியத்தினால் அவனுடைய ஒளியிழந்த கண்கள் விரிந்தன. சற்று நேரத்துக்கெஸ்லாம் அந்தக் கண்கள் முடிவிட்டன. பார்த்திடலுடைய ஆன்மா அந்தப் பூத உட ஃாகி சிறையிலிருந்து விடுதலைப்படைந்து சென்றது.
அடுத்த இதழிலிருந்து பாகம்-02 ஆரம்பமாகிறது.
நவம்பர் 2007 2 ל வேடிக்:

Page 16
எழுதுங்கள். வெல்லுங்கள்.
இடமிருந்து வலம்
| ந ம ன பt Liப் ப்ே I ட் டாடா ப்
படுத்திய காய்ப்ஸ் 5) தன்பையில் 'என்' என்பது போல்
முன்னிலையில், 13) t) தானியத்துள் ஒருவகை 8) சேரர், சோழன். பாண்டர் எயின
யில் அடுத்தவர். 10) தேர் என்பதன் ஒத்த பொருளை தரும். 11) இது இல்லாத வாழ்வைத்தான் எல்லோரும் விரும்புகிறோம். 13) நண்பனை இப்படியும் சொல்லலாம். 14) குட்டியின்ற ஆட்டினதோ மாட்டிண்தே முதல் பாலை 1ாய்ச்சினால் இது
கிடைக்ரூம் (துழம்பியுள்ளது) 15) இது இல்லாவிட்டாள் உலகம் சமாதானIக இருக்கும். மேலிருந்து கீழ் 1) நயன்தாராவின் உதட்டைக் கடித்து பரபரப்பு பாட்டிய சினிமா நடிகர். 2) பழைய கல்வி முறை3. 3) சொல்லும் விடயத்திற்கு விதண்டாவாதமாக பேசுவதை இப்படியும்
சொல்லப்ப்ோம். நடு எழுத்துக்கள் குழம்பியுள்ளன) 4) திருமணமாாத பெண் தலைப்ழோய் உள்ளாள். 7) துரோனருக்கு கட்டை விரலைப் கொடுத்துவிட்டு இன்றும் தலைப்
பூோயுள்ளான். ') இது வந்தால் இதை போல வாழ்க்கையும் தலை பூோகிவிடும்.
12) தளும்பு 14) நெருப்பில்லாமல் இது ப்ராது என்பது பழமொழி,
விடைகளிற்கான இறுதித் திகதி 20.11.2007 விடைகளை அனுப்ப வேண்டிய முகவரி;
வேடிக்கை 198, 1st Floor, Galle Road, Dehiwela, Colombo.
|{1)
வேடிக்கை 28 Ibn ILi 4 IfT 2(M37
 
 
 

C குறுக்கெழுத்துப் போட்டி 9 ற்கான விடைகள்
இடமிருந்து வலம்
:lii;īLII f' தின் 3IIT * மரை +F 1) அரியம் 11) கைம்மாறு 13) அப்பன் |- : | 5 | | |lչ հձ| | & I (იჯx};filt;YjT
மேலிருந்து கீழ் 11 ஜேன்மம் 21 கதிரை 3} களப்துரிபான் 4 rரே
3) பாயாசம் l' அம்பன் 11) கைப்பு 13) காவாளி 13) அடி 1 &ngs O குறுக்கெழுத்துப் போட்டி 9 இன் வெற்றியாளர்கள்
( 5. f6 3.6Ls
நீர்வேலி வடக்கு, நீர்வேலி I 10 äggfru GOTT
சில்லாலை தெற்கு,
தி.வேலாயுதம் குருநகர், பாழ்ப்பாணம்.
ங்களைக்கேண்டுபிடியுங்கள்!
மேலேயுள்ள இரண்டு படங்களுக்குண்டர்ஸ் ஆரைந்தபட்சம் ஏழு வித்தியாசங்கள் உள்1ன. அவற்றைக்கண்டுபிடியுங்கள். விடைகள் - இவ்விதழில் இன்னோரிடத்தில்!
நவம்பர் 2007 வேடிக்கை

Page 17
தோழரிவிப்'பர் ignifirit GDISL)
+ ||y|| :ിf||16||
அடுத்த நட: FFITIL. H.L. AILF2)| } |TF:531-Fil பிரதிநிதியிடம் பயன்படுத்துவதற்கக் கொடுப்பதற்கு முன் ஒருதடவையேனும் சிந்திக்கவேண்டும் என்று கூறுகிறது இந்தத் சம்பவம், அண்மையில் மும்பாII காவல்துறையினரால் வெளிTTததுக்கு கொண்டு வரப்பட்ட உயர்தோழில்நுட்ப காட் மோசடியானது எதிர்காலத்தில் இவ்வாறான மோசடிகள் பெரியளவில் இடம்பெறுவது சாத்தியமே என்பதை
| ||
या17:- நான்கு இளைஞர்கள் இந்தமோசடியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இவர்களில் இரு வர் சொப்ட்வெயார் நஞ்சினியர்கள். இவர் கள் நால்வரும் இணைந்து இப்துமுறை பயில் பணம்சம்பாதிக்க கிடுத்த முயற்சி ரூபா 4 லட்சம்(இந்திய பெறுமதி வரை யில் மோசடி செய்யப்பட்ட நிலைப்பில் காவல்துறையினரின் வலையில் சிக்கியுள் Ճ11:El.
இவர்களில் ஒருவர் அமெரிக்காவிற்கு மென்பொருள் நிறுவனத்தின் வேலைக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகிய நிலையில் கைதாகினார். இந்த இளைஞர் குழுவின் முக்கிய சூத்திரதாரி 19 வயதுடைய ஈவியோ பவுல். இவர் பண்ரா கல்லுரியில் 2ஆம் வருட பொறியியல் மாணவர்.
56GTLD 羲
இவள் மின்காந்த அட் 31 வாசித்தறியும்: சாதனம் பற்றி இண்ைபத்தில் வாசித் ரறிந்திருக்கிறTT இந்தசசாதனத்தில் காட் ஒன்றை இழுத நா ம்ெ அதனுடைய த:ல்கள் அ00த்தையும் தன்னகத்தே சேமித்து வைக் 11 கடியது என்றும் இதில் உள்விதமாக, 13 விதமான காட் களின் தால்களை ஒரே தடவையில் சேமிக்கமுடியும் என்றும் அறிந்திருக்கி
".
வாடிர் 1:1 பார்களின் காட்களில் இருந்து அனைத்து தகவல்களையும்
சேகரித்துக் கொள் 1ாப்ாம் என்பதை உறுதிப்படுத்திய பவுல், தன்னுடன் மற்ற மூவரையும் சுட்டு சேர்த்திருக்கின்றார்.
பின் அச்சாதனத்தை இனையத்தளத் தின் மூலம் அமெரிக்காவில் இருந்து வாங்கியிருக்கின்றார். ஏனேனில் இவ்வா றான சாதனங்கள் இந்தியாவில் இல்லை. இதன் விலை இலங்கை ரூபாவில் சுமார் 45.' இது ஒரு சைனா தயாரிப்பாதும்,
பின்னர் கிங்ஸ் இன்ரநஷனல் ஹோட்ட வில் உள்ள வெயிற்றர் ஒருவரை தமது மோசடிக்கு உடந்தையாக்கிருக்கின்றனர்.
குறித்த வெயிற்ற, அந்தக்ஹோட்ட லுக்கு ஒவ்வொருமுறை உணவருந்த வந்து கிரடிட்காட் மூலம் பணம் செலுத்து பவர்களிடம் பெறும் காட்டை, () அங்கு லத்துக்கும் குறைந்த நீளமானதும். 1ெ1க்கட்டில் கொண்டுசெல்லக்கூடியது மான - LIIல் கொடுத்துவைத்த சாதனத் தில் இழுத்துவிட்டுத்தான் கொடுப்பாள்.
பிறகென்' தகவல்கள் அனைத்தும் அதில் பதிவாகிவிடும். இதனை பின்னர் பவுலிடம் கொண்டுவந்து கொடுப்பாள். பவுல் சாதனத்தை தனது கணினியில் இணைத்து அதிவிருந்து தகவல்களை
பவேடிக்கை 3)
b6). LIT 2007
 
 
 
 
 
 

இறக்கிவிட்டு
கொடு I Iri, பிறகு, இறக்கடI பட்ட தகவல் LigLL
க1ை 1ள்ளச்சந்தையில்
மீன்டும் ப்ெபிட்டரி II
ASL LLSLa0au TTT S0 LLOL L TmmTkeSLL பும் வந்+Tமீல்ட்ாமல் காட்டிக்கொடுத்தி ருக்கிறான்.
வெற்று அட்டைகளில் மற்றைய இi சூர் ஏற்றுஃார். இப்போது பிரதிசெபII
பட்ட 1:டாட்சிTட பயன்படுத்துவதற்குத் 恶山TT、
இதனை உபயோகித்து தானியங்ே
இயந்திரங்களில் இருந்து பணமு:ம் எடுக்க முடியும். எந்த விேயாபார நிலையத்திலும் பயன்படுத்தவும் முடியும்
இவ்வாறு இEர்களின் அட்டைகளில் நடந்தேறிவிட்டது. எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்றுதானே கேட்கிறீர்கள்
HSBC வங்கி அதிகாரிகள் காவல்து விறக்கு அறிவித்ததன்பின்னர்தான் ராவல் துறையினர் உடிொரானார்கள். பிரதிசெப் LI IL Ill JILL EL 132II I;: L

Page 18
al 2Fe33:55, Čaş'r I. ii
இதன்றல் வருற் தெரு
அவ்வப்போது କ୍ଷନ୍ଦ தூரத்தில்
-raffi. Lliff, 1757 Mai
நான் தரிசிக்கும் கு.பா.த சலவன் *}|till:1I ՃllլIBնձltiմ:
அதே முழுநிலவு யாழ.பலகலைககழகம. உணர்ந்தேன்
பார்வைகள் மனதில் ஒரு பூரிப்பு தேடலில் ஓடியபின் .*Ꭸllg *Ꮨ5ᏐᎫYrᏍl கன்னோடு அழைத்துக் கொண்டு முற்றுப்பெற்று போகிறேன். உற்றுப் பார்த்து . :յվեյlhilfill Ց|allull:1յl பார்வைகளில் நெருங்க நெருங்க அரும்பிய மீசை நச்சினார்க்கினியர் சொன்னவை அகண்ட விழிகள் - F நடக்கிறது சுருண்ட (U19 அருகில் சென்று முறுகிய உடல் ப்.பி.ரி.யா என்று fiᎢᎦᏯIll . , . , முடிப்பதற்குள் அத்தனையும் , அவள் முகம் படமாக்கப்பட்டது. சோகத்தில் தோய்ந்திருந்தது. 5}|||ხმEfillნiT i في اليمان அழுதாற்போல வசந்தியிடம் " ^ வாடியிருந்தது கண்கள். ஏதோ வாங்கிவிட்டு புன்னாகன்! போகிறாள்; ைெறுத்திருந்தது உதடு என் இதயத்தை வாடிவிழுந்த மலர்போல் இருந்தது இடித்து திறந்து விட்டு. வேதனம். அன்றைக்கு. எதுவும் பேசாது காதலர் தினம்! போய்விட்டேன் ஏதாவது பேசினாலே அடுத்து வந்த போதும் வசந்தியிடம் கேட்டேன். என்ற ஒரு தவிப்பு அன்று அவளின் அன்று பள்ளிக்கு அண்ணாவின் நேரம்முந்திய விஜயம். விர மரண நினைவு நாள் அது ஒரு விசித்திரம் தான் .sg|III ITLIT நெடு நேரம் காத்திருந்தேன் பெருமூச்சுடன் நான் . III அப்போது. (இன்னும் போகலாம்.)
பவேடிக்கை 3. நவம்பர் 2007
 
 

எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்கா லமாப் இருந்துவந்தாலும் இன்னும் பெண்னை இரண்டாந்தரப் பிரஜையாக என்னும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லைப்.
பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைபோடும் நிலையும் மாறவில்லை, அவளின் அசைவுகள்கூட அலசப்படுகின் றன. உடைகள் பற்றிப் பேசப்படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப்படுகின்றன,
பெண்களை நாங்கள் வெளியில் போக
விடுகிறோம், விரும்பிய உடைகளை .JPEGI:"LIsif 13:GC3ğı]"TLİ), Lya:HE553) Fr:#3:F.[şJ.Lİ)
வரை படிக்கவிடுகிறோம், வேலை செய்ய விடுகிறோம், ஏன். கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள். என்ற ஆணாதிக் கம் தொனிக்கும் கேள்விகள்கூட சில ஆண்களிடம் இருந்து சினத்தோடு எழு கின்றன,
நவம்பர் 2007
பென்விடுதலை என்றால் என்ன? அதன் தார்ப்பரியம் என்ன? என்பனவே பற்றி சில ஆண்களுக்கு மட்டுமல்ல, பல பெண்களுக்குமே புரியவில்லை.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறிவிட்டார்கள்தான். அதை யாரும் இல்லையென்று சொல்ல ԼLPlցll lTitl.
தனது பதினோராவது வயதிலேயே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு தாய்மை என்னும் புனிதத்தையோ அன் நிப் புனகாங்கிதத்தையோ உணர முடி யாத குழந்தைப் பருவத்தில் ஒரு குழந் கதையை தான் சுமந்து தாயான லிபேரி யக் கறுப்பு இன இளம் பெண்போராளி ஒருத்தி சோல்கிறாள் 'ஒரு ஆனை விட ஒரு பெண்ணினால்தான் முழுமண் ஈடுபாட்டுடலும் வீரியத்துடனும் புத்தி சாதுரியத்துடனும் போராட முடியும்; ஒரு ஆனைவிட பேண்ணிடம்தான் வலிமை; அதிகம்!"
அது உண்மைதான், பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது.
அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடி IITE,
இருந்தும் பேனர் ஏன் அடக்கப்பட் டாள்.? ஏன் ஒடுக்கப்பட்டாள்.?
ஆதிகாலத்தில் வேட்டையாடுவதற்கா கவோ அல்லது வேறு காரணங்களுக்கா கவோ மனிதர்கள் காடு மேடு கடந்து பல தூரங்களுக்குப் போகவேண்டிய நிலையும், போனவர்கள் அன்றே திரும்ப &l?timL

Page 19
முடியாமல் போன இடத்திலேயே தங்க வேண்டிய நிலையும் இருந்தன. இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தம்மை விடப் பலமான விலங்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது.
இங்குதான் பெண்கள் மெதுமெதுவாக வீட்டுக்குள் ஒடுங்கவேண்டிய காரணி உருவாகத்தொடங்கியது.
குழந்தை பிறந்திருக்கும் சமயங் களில் பெண்களில் குருதி வாடையும், பால் வாடையும் இருக்கும். அதே போல மாதாமாதம் வெளியேறும் சூல்முட்டைக ளின் காரணமாகவும் பெண்களில் அந்த நாட்களில் குருதி வாடை இருக்கும். இந்த வாடையை முகர்ந்தறிந்து மனிதர்களின் இருப்பிடத்தையோ அல்லது வரவையோ அறிந்து கொள்ளும் திறன் விலங்குக ளுக்கு உண்டு.
ஆரம்பத்தில் பெண்கள் ஆண்கள் என்று எல்லோரும் ஒன்றாகச் சென்று வேட்டையாடி, ஒன்றாக உண்டு, போற
போற இடங்களிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்துத்தான் வாழ்ந்தார்கள்.
Бl:(860}ЈшII5пії: சந்திரவதனே' செல்வகுமாரன் (ஜேர்மனி)
ஆனால், எவ்வளவு பாதுகாப்பாக ஒழிந்திருந்தும் எப்படி விலங்குகள் தம் மைக் கண்டுபிடித்து அழிக்கின்றன என்ற ஆராய்ச்சியை அவர்கள் மேற்கொண்ட போதுதான் இந்தக் குருதி வாடையை வைத்து விலங்குகள் தம்மை மோப்பம் பிடிப்பதை அறிந்துகொண்டார்கள்,
அதன் பிறகுதான் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் பருவமெய்திய பெண்களையும், குழந்தை பெற்ற பெண்களையும் வீட்டிலே விட்டு மோப்பம் பிடித்துவரக்கூடிய விலங் குகளால் அவர்களுக்கு எந்த வித ஆபத் துக்களும் ஏற்படாவண்ணம் பிாவலும் வைத்துவிட்டு மற்றவர்கள் வேட்டைக்குச் சென்றார்கள்.
இது மனிதர்கள் மத்தியில் மட்டுமல்ல. விலங்குகளிடமும் இருந்தது. மிக மிக ஆதிகாலத்திலிருந்தே தம்மைவிடப் பல மான விலங்குகளிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள குட்டிபோட்ட பெண் விலங்குகளை தமது இருப்பிடங்களில் விட்டுப்போகவேண்டிய கட்டாயம் விலங் குகளுக்கும் இருந்தது.
இந்த விலங்குகளிடமிருந்தால பாது காப்புத் தேடல்தான் மெதுமெதுவாக பெண் கள் வீட்டுக்குள் முடங்க வேண்டியதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தத் தொடங்கி
l'El.
காலங்காலIக இந்த நடைமுறை தொடரந்தபோது - எப்படித் தோல், நாட் டின் சீதோசன நிலைக்கேற்ப இசைவாக்
வேடிக்கை
34
நவம்பர் 2007
 
 

கம் பெற்றதோ அதேபோல மூளையும் மெதுமெதுவாக இசைவாக்கம் பெறத் தொடங்கியது.
ஆண்களின் மூளை வேட்டைக்குப் போகும் பாதையை நினைவுபடுத்தி வைப்பதிலும் வேட்டையாடுவதிலும். என்று ஒரு விதமான ஒற்றைப் பாதையில் திடமாக கூர்மையான அவதானத்துடன் நின்றபோது பெண்களின் மூளையோ தமது குழந்தைகளைப் பாதுகாப்பதிலும், குடும்பத்தின் உள் விடயங்களைக் கவ னிப்பதிலும்.என்று சற்றுப் பரந்து விரிந்
Bl.
இங்கே பாதுகாக்கும் தன்மை என்பது ஆண்களால் வெறுமனே ஒருவரை காவ லுக்கு விடுவதுடன் நின்றுவிட்டது. ஆனால் பெண்களிடமோ தம்மைத்தாமே பாதுகாப்பது மட்டுமன்றி, மிக மிக அவதா னத்துடன் எந்த விலங்கிடமும் தமது குழந்தையும் பறிபோய்விடாதபடி தாமே பாதுகாக்கும் தன்மையும் தம்மை அண்டியுள்ள மற்றைய பெண்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படாதபடி பாதுகாப்புக் கொடுக்கும் தன் மையும் என்றிருந்தது. அதுவே அவர்க ளிடம் ஒரு குழுமமாகச் செயற்படும் தன் மையை ஏற்படுத்தியது.
இதுவே, மனிதன் விலங்குகளிலிருந்து தன்னை வேறுவழிகளில் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய நிலைவந்தபின்னும் தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக் கிறது.
மாதவிலக்கு என்று சொல்லி பெண் ணைத் தனியாக பாதுகாப்பாக விடுவதற் கும், மாதவிலக்கு நாட்களில் பெண் தனியே வெளியே போனால் பேய் பிடிக் கும் என்று சொன்னதற்குமான அடிப்ப டைக் காரணிகள் இவையே. அங்கே பிடிக்கப் போவது பேயல்ல, விலங்குகள். ஆதிகாலத்தில் - அந்த நேரத்தில்
விலங்குகளிடமிருந்து பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே பெண்க ளிடம் ஒரு பெரிய இரும்பைக் கொடுத்து வைத்தார்கள். இங்கே இரும்பு ஒரு தற்
பாதுகாப்பு ஆயுதமாகவே இருந்தது. சில
இடங்களில் உலக்கையையும் கொடுத் தார்கள்.
இன்று மாதவிலக்கான பெண்களைத் தேடிவரும் தொலைவில் விலங்குகளே இல்லை. மிருகக்காட்சிச்சாலையில் வில ங்குகளை அடைத்துக் காட்சிவைக்கும் அளவுக்கு அவைகளை எமது கட்டுப் பாட்டுக்குள் வைத்துவிட்டு வாழ்கிறோம். இந்த நிலையில் ஏன், எதற்கு என்ற சிந்தனைகள் எதுவுமின்றி இன்றும் இப்படியான அர்த்தமற்ற செயற்பாடுகள் தொடரவேண்டிய அவசியமில்லை.
ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினி யில் எழுதுகிறோம்.
புறாவைத் தூதுவிட்ட நாம் மின்னஞ் சலில் அசத்துகிறோம். பெண்ணை மட்டும் அடங்கு என்று சொல்ல இன்னும் என்ன நாம் காட்டிலா வாழ்கிறோம்? அல்லது எம்மைச் சுற்றி விலங்குகளா நடமாடுகின் றன?
காட்டு வாழ்க்கையைவிட்டு நாட்டில்
நவம்பர் 2007 35
இவேடிக்கை

Page 20
வீடுகட்டி பாதுகாப்பீாக வாழும் நிலைக்கு நாம் என்றைக்கோ வந்துவிட்டோம்.
இருந்தும் மூளையில் பதியப்பட்ட அடிப்படையான ஆதிகாலப் பிரச்ச னையை கருத்தில்கூடக் கொள்ளாமல் இன்னும் பெண்கள் வீட்டுக்குள் ஒடுங்க வேண்டியவர்கள்தான் என கண்மூடித்த னமாக் கருதுகிறோம்.
அன்று சூழல்நிலை கருதி - பாதுகாப் புக் கருதி குழந்தை பெற்ற பெண்கள் வீட்டினுள் தங்கினார்கள் என்றால், இன்று அந்த எந்தக் காரணங்களும் இல்லாமலே பெண்கள் வீட்டுக்குள் அடங்க வேண்டு மென நினைக்கிறோம்.
உண்மையில் ஒரு ஆணை விட ஒரு பெண்ணால்தான் ஒரு வியாபார ஸ்தலத் தையோ, அல்லது ஒரு பெரிய நிறுவனத் தையோ கூட்டாகக் கொண்டுநடத்தி கூடு தலாக வெற்றிபெற வைக்கமுடியும், ஒரு சொல்லை ஒரு ஆணிடம் சொன்னால் - அவனால் அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த் தம்தான் கண்டுபிடிக்க முடியும் என்றால் அதையே ஒரு பெண்ணிடம் சொன்னால் அவள் அது பற்றி நன்கு யோசித்து பல கோணத்தில் பல அர்த்தங்கள் கண்டு பிடிப்பாள்.
ஒரு விடயத்தைச் சொன்னால் அதைக் கிரகித்து அதற்குப் பதில் சொல் லும் தன்மை ஆண்களின் மூளையில் ஒரு பங்கு என்றால் அதைக் கிரகித்து பதில் சொல்லும் தன்மை பெண்களின் மூளையில் ஆறு பங்கு. இவைகள் ஆய் வாளர்களின் கண்டுபிடிப்புகள்.
ஒரு ஆணின் மூளை ஒரு பெண்ணின் மூளையை விட 130கிராம் நிறை அதிக மானது, ஆனால் இரு மூளைகளினதும் செயற்பாடுகள் ஆதிகாலத்திலிருந்து இன்றைக்கு வரைக்குமான ஆழ்நிலைக (ளுக்கும் வாழ்க்கை முறைகளுக்குமேற்ப இசைவாக்கம் பெற்று, வெவ்வேறு வழிக
ளில் செயற்படுகின்றன. இங்கு ஆண் உயர்வு என்றோ பெண் உயர்வு என்றோ எதுவும் இல்லை.
அன்றைய காலத்தில், தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத் தில் பெண்களை வெறும் சுகபோகப் பொருள்களாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்கள். சுயநலம் கருதி உளவியல் ரீதியான தாக்கத்தைக் கொடுத்து பெண் களை அடிமைப்படுத்தியும் விட்டார்கள்.
இதனால் வீட்டுக்குள்ளேயே இருந்து இருந்து இசைவாக்கம் பெற்ற மூளையிட மிருந்து விடுதலை பெற முடியாத பெண் கள் - தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டிய வர்கள்தான் என்று நினைத்துவிட்டார்கள். அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள் தான் என நினைத்து தமக்குத்தாமே விலங்கிட்டு அடங்கியும்விட்டார்கள்.
இதே நேரம் இவையெல்லாம் பிழை, முன்னர் நாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியதற்கு காரணங்கள் இருந்தன.
வேடிக்கை
36
நவம்பர் 2007
 

இன்று வெளியே சென்றாலும் எம்மால் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்று சில பெண்கள் சிந்திக்கவும் தவற வில்லை. சிந்திக்கத் தொடங்கிய இப் பெண்களின் விழிப்புநிலையே இன்று சில ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக் கிறது. பெண்களிடம் ஏற்பட்ட இந்த மாற்ற த்தை ஆண்களின் மூளை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.
இந்த உண்மைக் காரணங்களை ஆண் பெண் இருபாலாரும் உணர்ந்து செயற்படும் பட்சத்தில் இந்தப் பெண்ண டிமை, பெண்அடக்குமுறை, பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் தன்மை எல்லாமே அர்த்தமற்ற செயல்கள் என்பது நன்கு புலப்படும்.
இப்போதுகூட உங்கள் மனதில் எங்கே பெண்கள் அடிமையாக இருக்கி றார்கள் என்ற கேள்வி எழலாம். அவர்கள் சுதந்திரமாகத்தானே திரிகிறார்கள் என்ற சிந்தனை ஓடலாம். ஆயுதந் தூக்கிப் போரிடுகிறார்கள் என்ற பிரமிப்பு ஏற்பட லாம். இத்தனை சலுகைகள் கொடுத்து விட்டோமே. இன்னுமா திருப்தியில்லை என்ற எரிச்சல் எழலாம்.
உண்மையில் பெண்ணுக்கு இன்னும் முழுமையான விடுதலை கிடைக்க வில்லை. வெறும் சலுகை மட்டும் வாழ்க் கையில்லை. அவள் சுயம் பேணப்பட வேண்டும். அவள் சுயமாக இயங்கச் சுதந் திரம் கிடைக்கவேண்டும். பெண் இப்படித் தான் வாழ வேண்டுமென்று சமூகத்தின் அடிமனதில் எழுதிவைக்கப்பட்ட சில எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப் படவேண்டும். அவள் அவளாக வாழ அவள் மனதில் தைரியம் வரவேண்டும். இது பற்றியதான சிந்தனை சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரிடமும் எழ வேண்டும்.
கருப்பையில் மூன்று மாதக் கருவாக
லெனினுன்இடவிேஸ்டோவிலி ஏனிஇடுகிவிஸ்டோஸ்வி
இருக்கும்போதே ஒரு குழந்தை - தாயின் உணர்வுகள், தாயைச் சுற்றி ஒலிக்கும் குரல்கள். என்று எல்லாவற்றையும் கிரகிக்கத் தொடங்கிவிடும். வெளியில் கேட்கும் சினிமாப் பாடலைக்கூட மனப் பாடம் செய்யத்தொடங்கிவிடும். இது இன் றைய ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு
இதன் விளைவுகளை பெற்றோர்கள் சரியான முறையில் சிந்தித்து ஒரு பெண் தாயாகத் தொடங்கியதிலிருந்தே ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் இதை கருவுக்குள் உருவெடுத்திருக்கும் எமது பிள்ளையும் கேட்டுக்கொண்டுதான் இருக் கிறது என்ற எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.
பிறந்தபின்னும் குழந்தைகள் வளர் ந்துகொண்டிருக்கும்போதே ஒவ்வொரு விடயத்திலும் ஆண் குழந்தை பெண் குழந்தை என்ற பேதமின்றி பாரபட்ச மின்றி அவர்களை வளர்க்கவேண்டும். அவர்கள் முன் பேசுவதுகூட நான் ஆண் என்றோ, அல்லது நான் பெண் என்றோ எந்தவிதமான தாழ்வு மனப்பான்மை யையும் அவர்கள் மனதில் விதைக்கப் படாத விதமாக இருக்கவேண்டும்.
இப்படியான அவதானம் மிகுந்த செயற்பாடுகள், மனித மூளையில் ஆழப் பதிந்திருக்கும் பெண் அடங்க வேண்டிய வள்தான் என்ற உள்ளுணர்வை அழித் தொழிக்க ஏதுவாக அமையும்.
காலப்போக்கில் ஆண்களின் மூளை யும் இந்த நடைமுறையுடன் இசைவாக் கம் பெற்றுவிடும். அப்போதெல்லாம் விஞ் ஞானிகளின் ஆராய்ச்சிகளில் ஆண் பெண் மூளை பற்றியதான முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கும்.
நவம்பர் 2007

Page 21
OF&Jŷ'r af:3)
பெரியார் - இந்தப் பெயரைக் கேட்ட துமே பெரும்பான்மை இன்றைய இளைய தலைமுறையினரிடம் அவரைப் பற்றி அறியப்பட்டுள்ள சிந்தனை "பெரியார் ஒரு நாத்திகத் தலைவர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவர் கேவலமாகத் திட்டுவார கடவுள் சிலைகளைப் போட்டு உடைத்தவர்" இவ்வளவுதான். இதற்கு மேல் பெரியாரைப் பற்றி
இதற்குக் காரணம், பெரி யாரை ஒரு பரிமாணத்தில் குறுக்கி அதன் முலம் சுய தேடல் இல்லாத, வெகு ஜன பிரச்சாரங்களை மீறி எதையும் தெரிந்து கொள்ள ஆர்வமில்ப்ோத பெரும்பான்மை இளைய சமூகத்தினரிடையே பெரி பார் பற்றிய குறுகிய பிம்பத்தை பதிய வைத் து விடலாம் என்று சிலர்
மேற்கொண்ட முயற்சி
என்று மட்டும் சொல்வி
விட முடியாது. மாறாக பெரிபார் தோண்டர்கள்,
議 வழி வந்தவர்கள் கூட அவரின் ஒற்றைப் ܓܬ "ங் பரமான த  ைதத
தான் டி அவரை முன் னிறுத் தத் தவறியதும் காரண.ே
பெரியார் வழி வந்த தமிழ்நாட்டு அரசு கள் மாவட்ட தலைநகர்களில் நிறுவிய நினைவுத்தான்களிலும் சரி, சிலைகளி லும் சரி பெரும்பாலும் பொறிக்கப்பட்டது "கடவுளை நம்பியவன் முட்டாள் என்ற வாசகம்தான். இதைத்தாண்டி பேரி யாரின் சமூக நீதிக்கருத்துக்கள், ராதி ஒழிப்பு கருத்துக்கள், பெண்ணிய சிந்த னைகள் பொறிக்கப்படுவதில்லை. பெரி யாரின் பல முக்கிய பரிமானங்கள் இளைய தலை முறையினருக்கு சரியாக எடுத்துச்சொல்லப்படுவதில்லை.
அதிரஷ்ட வசமாக பெரியார் திரைப் படம் இந்த குறையை சற்று போக்கிபி ருக்கிறது என்றே சொல்லவேண்டும், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நகரும் இந்த திரைப்படத்தின் முதல் ஒரு மணி நேரம் மிகச்சாதாரனமாக சொல்லப்பட்டி ருக்கிறது. அடுத்த இரண்டு பண்ணி நேரத் தில் படிப்படியாக சத்தியராஜின் உடலுக் குள் பெரியார் ஆவி புகுந்துகொண்டது போல கனகச்சிதமாக பெரியாரை நம் கண் முன் நிறுத்துகிறார் சத்தியராஜ்.
பெரிபாரின் இளமைப்பருவத்திலிருந்து தொடங்கும் படத்தில் அவர் காசிக்கு செல்வதற்கு முன்வரை பெரிதாக தாக் கத்தை ஏற்படுத்தும் காட்சிகள் இல்லை. வணிக ரீதியாக திணிக்கப்பட்டதாக சொல்ல முடியாத வகையில் இருந்தா லும், கேளிக்கை விடுதி நடனத்திற்காக வீணடிக்கப்பட்ட நேரத்தில் பெரியாரின் சிறு வயது வாழ்வில் தண்ணீர் துடிப்பதில் ஜாதிப்பாகுபாடு அவர் உள்ளத்தில் ஏற்ப டுத்திய தாக்கத்தை காண்பித்திருக்க ԵlյTլի
முதல் மனைவியாக வரும் ஜோதிர் மயி, இரண்டாவது மனைவியாக வரும் துஷ்பு இருவரும் தத்தமது பாத்திரங்க
38
நவம்பர் 2007
 
 
 

பூக்குத் தேவையான நடிப்பை வழங்கி.பி ருக்கிறார்கள் ராஜாஜியின் கதாபாத்திரம் தேனீர்கு அதிகமான்ே வருகின்றபோதி லும், ராஜாஜியின் மறைவுக்கு, சென்று பெரியார் அழுதது சேர்க்கப்படவில்ல்ை,
வித்திபாசாகர் நன்றாகவே பின்னணி இசையைச் சேர்த்திருக்கிறார். வைர முத்துவின் ஆழமான வரிகள் சிந்திக்க வைக்கின்றன.
காட்சியில் வரும் ஒரு பாடப்பில் நீண்டாமை குறித்து
வைக்கம் போராட்டக்
"அவர்கள் மட்டும்தாரோ விந்திலிருந்து பிறந்தார்கள். நாங்கள் என்ன எச்சிலிலி ருந்தா பிறந்தோம்' போன்ற வரிகள் போசிக்கவைப்பன்ை.
தங்கர் பச்சானின் ஒளிப்பதியும். அந தக்காட் பழைய காற்றாடி போன்ற) வற்றை நனுக்கமாக பயன்படுத்திய கலை இயக்குநரின் தேதியும் பாராட் L盘、Eöü,
சத்தியராஜ் பற்றி சொல்ல வேண்டு மென்றால், முதல் பாதியில் அவர் தனது பாணி வார்த்தை உச்சரிப்பை தவிர்த்தி gld-EBIT f.
ஆனால், இரண்டாவது பாதியில் சததி பராஜ் சுத்தமாக மறைந்து பெரிய மட் டுமே நம்மை ஆட்கொள்ளுகிறார் ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்பான அண்ணாவின் விஜயம். மற்றும் இறுதிக்காட்சியில் சந்நியராஜ் பெரியாராகவே வாழ்ந்திரு. អវិជ្ជា
f)5 ta' Jill
வாழ்க்கையை 3 IE
நேரத்தில் குறுக்கும் கடினமான பணி இயக்குநருக்கு. காந்தியோடு சந்திப்பு, விதவை மறுமணம், தேவதாசி முறை ஒழிப்பு, கள்ளுக்கடை மறியல், வைக்கம் போராட்டம், கொங்கிரசில் சாதிப்பாகுபாடு, கொங்கிரசிலிருந்து வெளியேற்றம் ஆகி 1வை சிறப்பாகவே சொல்லப்பட்டிருக்கின் [1}୍].
ஆனால், பின்னர் தி.க உதயம், இரண்
டாம் திருமணம், தி.மு.க தொடக்கம், பெருந்தலைவர் காமராஜர் சந்திப்பு,
தி.மு.க ஆட்சி அமையும்போது அண்ணா சந்திப்பு, கலைஞர் சந்திப்பு, எம்.ஜி.ஆர் சந்திப்பு என்று துண்டு துண்டாக காட்சி கள் நகர்வதானது - அதுவரையில் எட்டிப் பார்க்காமலிருந்த விவரணப் பட சாயEைப் உள்ளே நுழையவிட்டுவிடுகிறது. காட்சிப் படுத்தல் ரீதியாக இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. 95 ஆவது வயதிலும் தன் இறுதி மூச்சு வரையிலும் சுயமரியாதை, ஒடுக்கப் பட்டோர் இழிவு நீக்கல், பகுத்தறிவு விழிப் புணர்வு போன்றவற்றுக்காகப் பாடுபட்ட Iபெரும் தலைவன் மறைகிறார். அரச பாரம்பரியத்தை மீறி கலைஞர் அரசு வழங்கிய அரசு மரியாதையோடுகூடிய இறுதி ஊர்வலத்தின் சில நிஜக் காட்சிப் பதிவுகளோடு படம் முடிகிறது.
பெரியார் படம் பெரியாரை ஏற்கனவே படித்தறிந்தவர்களுக்காகவோ, புரிந்து கொண்டவர்களுக்காகவோ உருவாக்கப் பட்டதல்ல. மாறாக, பெரியாரின் ஒரு பரிமானத்தை மட்டுமே அறிந்த இன்றைய நல்லமுறை "பெரியாருக்கு இத்தனை முTங்களா?" என்று ஆச்சரியப்பட்டு அவ 10ரப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தாண்டும் அறிமுகப் படல
பாக இந்த படம் அமைந்திருக்கிறது. அந்த வனT:பில் இந்தப்படம் அதன்
இலக்கை வென்றிருக்கிறது.
நவம்பர் 2007
H (35) Ijigae),

Page 22
O ás 6nf76øpø5
என்னடி - என் பெண் அழகே என்னுள்ளே எப்படி - நீ நுழைந்தாய்?
செப்படி வித்தைக்காரி செப்படி - என் செவியிரண்டில்!
கண்விழி கலைந்து என் உடல் கலந்தாயோ? உதிரமாய் மாறி இதயத்தில் நிறைந்தாயோ?
சொல்லடி - என் செல்லமே சொர்க்கத்தில் கிடைக்காத செல்வமே!
எவ்வழி நுழைந்தாலும் என்னுள்ளே நிறைந்துள்ளாய்!
வெட்கத்தை பூட்டி வைக்காதே முத்தச் சாவி கொண்டு திறந்து விடு கூந்தலை கட்டி வைக்காதே - என் மார்பில் கலையவிடு!
இதழ் மொட்டுக்களை
இறுக மூடாதே திறந்து விடு தேன் தின்னட்டும் வண்டினம்.!
விழிகளால் மண்ணைத் துளைக்காதே
எதிரில் இருக்கும் கு
என்னை துளை! மெளன அணையை
கரைத்து விடு இ வார்த்தை அருவி வழிந்தோடட்டும்! OG ‘크
பிதுங்கி வழியும் எழிலுக்கு அடக்கு முறை எதுக்கடி? விடுமுறை கொடு ஆடைக்கு
இருக்கு அல்லவா O
இரண்டு
கரங்கள இறுக அணைத்தென்னை நொருக்கி விடு உயிர் உலை கொதிக்கும் உஸ்ண மூச்சை மார்பிற்கு நடுவினில் O
இறக்கிவிடு!
இருக்கடி என் LDLọ - tî6ör எதற்கடி? நாற்காலியின் மடி உனக்கு!
காதல் கவிதைக்கு
(86.193,6035
40
நவம்பர் 2007
 

முற்றுப்புள்ளி வையடி!
முத்தப் புள்ளி
போதாதென்றால் கடித்தென்னை கொன்று விடடி!
குழந்தை தனமானவளே என்னையும் குழந்தை ஆக்கடி
எட்டி எட்டி நிற்காதே கிட்டவந்த கட்டிக் கொள்ளேன்! அட்டை என 6T6ór LDrifle) நீயும் வந்து ஒட்டிக் கொள்ளேன்!
பட்டுப் போன்ற உள்ளங்கையில்
LJT6) is)r படர்ந்திருக்கும் வதனமதில் பாதையிலே கூன் பிறை இரண்டடி எட்டு வைச்சு நான் வாறேன் - உன்
இமை சிறகை உசிரில் ஒழிந்து அசைத்துக் கொண்டு கொள்ள
பார்வை ஒத்த முடி நீ தாடி பறவை எங்கே? என் ஜீவன் முடிந்து வைக்க!
பறக்குதடி! கட்டையில முத்தக் நான் போற கிடங்குக்குள் காலம் வர உயிர்
முத்துக்கள் உலையில் - உன் ஜொலிக்குதடி நினைப்பு கொதிக்கும்படி சின்ன சின்ன விரல்களிலே பக்கத்தில இருவது பெளர்ணமிகள் நீயிருந்தா
இருக்குதடி! பசிதாகம் எடுக்காது
பத்தடி பொதிகையிலே தள்ளி நின்றா - என்
பிறந்த காற்று நெஞ்சு
6If 6T606).Th. பொறுக்காது! உலவுதடி முத்தழகு நீ விட்ட மூச்சாலே கழுத்துக்கு நுரையீரல் முட்டுதடி! முத்தாரம் நான்
தருவேன் உன் பாத செத்தாலும் கொலுசொலிக்கு சிதை நெருப்பில் எப்பாவலன் உன் பெயர் பாட்டெழுத எழுதி வைப்பேன். நவம்பர் 2007 41 (86.93605

Page 23
* திருத்துங்க்
மருந்தில்லா ஊசி மருத்தவம்
வாழைப்பழத்தில் ஊரி ஏற்றுவது போல் என்ற சொல்லாடEEப் நாம் கேட்டி bIJE I T II. EXIT 637|| LJLJLi: ; 33:5III lij33TE இருந்தாலும் ஊசி எளிதில் செலுத்தக்கூடி யதாக இருப்பதால், 11:13. குத்துது எளிது, அதிக சிரமம் எடுக்கவேண்டிய தில்Eைப்.
ஆக எளிதாக, நாஆக்காக சேப்பட்ட டுர் வேலைகளை வானழப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் என்று சொல்னார கள், ஆனால் அதே ஊசி நமது உடலில் செலுத்தின்ாஸ்.
சிறுவயது பிள்ளைகள் ஏதேனும் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவரிடம் ரென் றால், அவர் ஊசியை எடுத்தால் கண்கள் கலங்கி அழுவது நாம் அறிவோம். ஊசி என்றாலே பயந்து நடுங்கும் குழந்தைக ளோக நாமும்:Inட சிறுவயதில் இருந்திருப் போம். ஊசி குத்துவதை காயப்படுத்துவ தார தாக்துவதாக எண்ணுவதும், குத்தும் போது ஏற்படும் கருக்கென்ற வலியும் ஊசியைக் கண்டு குழந்தைகள் பயப்பட காரனம் எனலாம்,
அவ்வளவு நீரன், நமக்குமே கூட ரத்த பரிசோதனை செய்யச் சொன்னால், துளசி பைக் குத்தி ரத்தம் எடுப்பார்களே என்ற ஒரு எண்ணம் கொஞ்சம் நெருடலாக இருக்கவே செய்கிறது.
இப்படி, குழந்தைகளையும் ஒரு ரில பெரியவர்களையும் பயப்படவை:t.ஆர் ஊசிபோ, மருந்தை நேரடியTT ரத்தத்தில் செலுத்தி சீக்கிரம் குணமடைய வழி செய்கிறது என்பது வேறு கணித,
குத்தப்படும் ஊசியைப் போல் மருந்து இல்லாமலும் 1ளசி குத்து வது உண்டு. 4ாது குத்துவது, ஈழத்து சூத்துவது, பச்சை குத்துவது. வேண்டுத,
மருந்தோடு
லுக்காக, அப்து துத்துEபது இதெல்' ப் :படித்த Eே கான்று நீட்கள் நிகண்ட் து
ரரி1ே.
TTFTFTT
ஆனால், மருந்தும் இல்லாமல், இப்படி நகை போடபும், விரும்பிய நபரின் பேய: அல்லது வடிவத்தை உடம்பில் till:50J Jis 13'14.||col|51|53|If Ihličiti","ITILI 7. - 33 alref துத்துவதே பருந்து - ஐட்சியால் ஆத்தட்ப டுவதே மருத்துவம் என்பதாக அமைந்நது தான் 'க்குபஞ்சர.
சீன மொழியில் 'டின் சியு' என்று அறியப்படும் அக்குபஞ்சர் சீன பாரம்பரிய மருத்துEபத்தில் ஒரு முக்கிய அம்சமாக :Iந்துள்ளது.
நடப்பின் பழகப்பான், அதேஃே17:11 | III iiii iilo II F, l JI LI isir L IT | Ir ii: 7) iiitiiiiT i I Ilbi, துவ முறைகளில் ஒன்றாக அப்து ஆ4) 2 13து. மேலும், நாளுர்து நாள் இந்த
அர்:நடந்தூர் சிகிச்சை மு:Tr - அதன் fჭ1*31IIII IT}:#:#;fl: LiHil|]]|1*, o3.ji, 11 : I :Ex:ISIII |
பயன்கள் காரணமாக பிரபலமாகியும்.
பவேர்ச்சை
42
Eva HiLří 2007
 
 
 
 

LITE:IFoT:f. f. f:Iglyf13::I.
சீனாவில் ஆயிரக்கனர்:Tா: ஆண்டு களுக்கு முன்பே தோன்றி நடைமுறை பில் உள்ள இந்த அ4:பூபநhர் பருத்து ம்ை, பொதுவாக நோயாளிகள் வE நிரை னப் பெர8:11, 2று: கான மயக்கநிலை அண்டபம்தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அந்நிர்ை: மாறிவிட்டது என்றோ :ே1ங்காய் குவாங் மருத்துவமனையின் தலை:I மருத்துவரும், அக்குபஞ்சர சிகிச்iசபா' ருமான டின் ப்ேபட்டதுங்க்.
தற்போது அக்குபஞ்சரின் முக்கியத்து வம் வருமுன் காத்தல், தத்தல் என்ற அம்சத்தில் உள்ளது என்று சொல்லும் இவர், சீன பாரம்பரிய மருத்து:த்தில் அக்குபஞ்சள் ஒரு நபரே நீண்ட ஆபுரம், உடல்நலமும் பெறுவதற்ாாக பிர1ே1:t கப்பட்டது என்கிறார்.
fl.I. í öð!-Fi,
இன்றைக்கு அக்தLஞ்சரின் சிறிய ஊசிமுனைகள் மக்கள் பலரது வேறு பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் வழி
முறையாக நம்பிக்கையளித்து வருகின் றன. அதிலும் தாரி' LIE டேடல் இளைார், உடல் பருமன் துறைக்கவேண் அக்குபஞ்சர் சிகிச்சைடை நாடுப் பக்க குளும், முகப்பொலிவு பெறப்பும். புகை பிடிக்கும் பழக்கத்தை கையிட:ம், 2உ61 நல மற்றும் இதர உடல் #1 பிரச்சனை களை திரகசனம் ஆக்குபஞ்சர் ரிகிச் சையை நாடும் மக்களும் இன்றைக்: வெகுவாக காணமுடிகிறது என்கிறார் மருத்துவர் ஷன் வெய்துங்க்.
நம் உடலின் நோய் எதிரத்திறனை
தூண்டபும், காபமடைதல் பற்றும் தளரச்சி, மன அழுத்தம் ஆகியவை
ஏற்படும்போது சுரக்கும் ஹார்மோன்கள் à"ჯჯ]]|[ს Llisi2. இயக்குநீரகளை வெளிப்படுத்தவும் அச்:பஞ்சப் 2ட:ம்.
ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம், இதயத்
துடிப்பு. அமிலச் சுரப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள் தயாரிப்பு ஆகிய வற்றிலும் அக்குபஞ்ாரால் மாற்றங்கள் அல்லது பாதிப்புகள் ஏற்படுத்த முடியும். அக்குபஞ்ச ஊசிகள் குறிப்பிட்ட இடங்களில் குத்தப்படும்போது சாந்தப்ப டுத்தும், ஆசுவாசப்படுத்தும், லிெ தெரியா மல் இருக்கச்செய்யும், களைப்பாறச் செய யுi; தன்மை கொண்ட என்டரபின்கள் (EEப்படுநின்றன. இது மன அழுத்தம், சலிப்பு, எரிச்சல், பதட்டம் ஆகியவற்றை எதிரகொள்ள உதவும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் கிட்டப் பார்வை, ஆட்டிசம் எனப்படும் உளநிலைப் கோளாறு. போன்னறனவுகூட அக்குபஞ்ச ரால் நீர்க்கலாம் என்கிறார் இவர்,
அதுமட்டுமில்லாமல், அக்குபஞ்சருக்த 41 வகையான நோய்களை தனப்படுத் தும் ஆற்றல் இருக்கிறது என்கிறார் 43 வயது மருத்துனரான து யுவான் ஹாான். தனது குழுவினரோடு இணைந்து 4 ஆண் டுகால ஆய்வுகளின் மூலம் அக்குபஞ்சர் இத்தனை நோய்களுக்கு தீர்வு தரக்க டியது என்று கண்டுபிடித்துள்ளார் இவர், து யுவான் ஹாவின் ஆய்வு மு:புக எளின் வழி அறியப்பட்ட ஒரு முக்கியமான தகவல்நரம்பு மண்டலம்,ஜீரண அமைப்பு. தசைகள், எலும்பு, தோல், ஆகியவற்றி லான சிக்கல்களுக்கு அக்குபஞ்சரின் ஆற்றல் நல்ல பயனுள்ளதாக அமைந்து - குணமடைதல் அதிகமாக இருக்கிறது என்பதாகும்.
குறிப்பாT நினைவிழப்பு நோய், தோலில் ஏற்படும் சிரங்குகள் அல்ப்ேது புண்கள். நரம்பு மண்டலத்திலான தாக்கு தஸ், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்த அக்குபஞ்சர் நல்ல பலன் தரும் சிகிச்சை முறை என்று தனது 4 வருட ஆய்வில் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கிறா தா
II իillia31 5չ՞t]Thձl,
நவம்பர் 2007
43
வேடிக்கை

Page 24
கச்சு கரிச்சு சிறுகதை
స్ట్
பதினைந்து மாசத்துக்கான ஒரு மாதாந்திர சீட்டைக்கட்டச் சொல்லி எனக்குத் தெரிந்த கடைக்காரர் ஒருவர் என்னைத் தொந்தரவு செய்து கொண் டேயிருந்தார். நானும் பலவாறாக லாப நஷ்டத்தையெல்லாம் கணக்குப் போட் டுப்பார்த்து அந்தச் சீட்டைக் கட்ட விட் டில் இவளிடம் அனுமதிவாங்கிக் கொண்டு முதல் மாதத் தவணையாக 1000 ரூபாயைக் கட்டியதும், "உங்க |ளுக்காக எஸ்பெஷலா இந்த வெயிட் பார்த்துக்கிற மிஷினைக் கிப்டாகத் தரேன்!" என்று ஓர் எடைமிஷினை எடுத்துக் கையில் கொடுத்தார் கடைக் கார அண்ணாச்சி.
"எடை மிஷின் எதற்கு? இதை எடுத் துக்கொண்டு போய் பீச், திருவிழான்னு உட்கார்ந்து எடை பார்க்கச் சொல்லிப் பணமா வசூல் பண்ணப்போறேன்" என்று சிரித்தபடியே கேட்டபோதுதான் கடைக்கார அண்ணாச்சி ஒரு குண் டைத் தூக்கிப் போட்டார்.
"உங்க எடை கொஞ்சம் கொஞ்சமா கூடிட்டே போகுதே. கவணிச்சீங்களா? தினமும் இதிலே ஏறி நின்னு பார்த்து உங்க எடையைக் குறைக்க வழி செய்துக்கலாமே?
எனக்கும் அது சரியெனப்பட்டது. வீட்டுக்குள் நுழைந்ததும் முதல்
காரியமாகக் கால்களைக் கழுவிச் சுத் தமான டவலால் துடைத்துக் காய்ந்த என் பொற் பாதங்களை எடை மிஷின் மேல் ஏற்றிய போதுதான் சுரீர் என்றது. 'எடை கூடித் தான் போயிருக்கிறது"
என்னை நிமிர நிற்க வைத்துக் குனிந்துபார்த்த என் மனைவிதான் அலறினாள்.
"இப்படி வடை போண்டான்னு
வாயைக் கட்டாம எண்ணெய்ப் பண் Lமா தின்னா எடை சுLாம என்ன பண்ணும்" என்றும் அதிர்ந்தாள்.
எடை மிஷழினைக் கையில் எடுத் துக்கொண்டு கடையிலிருந்து நடந்து வந்தபோது என்னிடமிருந்த அந்த கம் பிரம் இப்போது திடீரெனக் காணாமஸ் போய்விட்டதைப் போல் ஒரு பிரமை. "இப்ப என்ன செய்யலாம்? இப்படிக் கூடிப் போச்சே" என்று வருத்தமாகக் கேட்டேன்.
"வாயைக் கட்டுங்க." 'ஒரு மிஷினுக்கு இன்னொரு மிழிைன் கொஞ்சம் வித்தியாசமாத்தான் காட்டும்.எதுக்கும் ரயிலடிக்குப் போய் பிளாட்பார மிஷின்ல ஒரு தடவை ஏறி நின்னு பார்த்துடலாமே" என்றுகூடச் சொல்லிப்பார்த்தேன்.
இவள் மசியவில்ல்ை. "அதெல்லாம் கிடையாது. இன் டைக்கு பின்னேரம் போட இருந்த
வேடிக்கை
நவம்பர் 2007
 
 
 
 

ஒனியன் பஜ்ஜி கான்சல்ட். அவ்வளவு தான்."
என்று ஒரு போடு போட்டாள். எடை மிஷினை கிட்டாக வாங்கிக் கொண்டு வந்ததற்காக இப்படி இன் னொரு தியாகத்தைச் செய்யவேண்டியி ருக்கிறதே என்று கவலைப்பட ஆரம் பித்த சமயத்தில் என் நண்பர் கோடா லன் வந்துசேர்ந்தார்.
அவர் முக்காலும் உணர்ந்தனர். நான் என்ன பேசினேன், என்ன பேசு கிறேன், என்ன பேசுவேன் என்று சுலபத் தில் அறிந்து கொண்டுவிடக்கூடிய அசாத்திய ஞானி அவர்.
"யாருக்கு எடை. எப்படி கூடிப் போச்சு?" என்று கேட்டபடியேதான் வாசல் படியேறினார்.
"இவருக்குத்தான்." என்றாள் இவள், "எப்படித் தெரியும்" "ஜஸ்ட் நெள எடை மிஷின்ல ஏறி நின்னு பார்த்தாரே?"
“எத்தனை இருந்தது?" என்று என்னைப்பார்த்தார்.
"முன்னே இருந்ததை விட முணு கிலோ அதிகம்."
"முன்னே எத்தனை?" "இப்ப இருக்கிறதை விட முனுறு lysis."
"சரி ரிaல் பண்ன இவர் டமில் லைன்னா வேண்டாம், குறைக்க என்ன பண்ணப்போநீங்க? அதைச் சொல்லுங்க முதலில்." என்று பயமுறுத்த ஆரம் பித்தார்.
"அதுபாட்டுக்குக் கிடக்கட்டுமே!" என்றேன்.
"வாக்கிங் போங்க, காலையில் அறுகம்புல் ஜுஸ் குடிச்சிட்டு நடங்க." - என்று ஆலோசனை நேரம் ஆரம்பமா
IEL நவம்பர் 2007
"அறுகம்புல்லை பிய்ச்சிட்டு வரவே நடந்தாகனுமே? பக்கத்திலே எங்கே இருக்கு அது? இல்லே தினமும் எனக் காகப் புல்லுக் கட்டைக் கொண்டு வந்து போடச்சொல்வி அதுக்கு ஒரு ஆளைத்தான் போடமுடியுமா?"என்று சொல்லினிட்டு. சில நொடிகள் அந்தக் காட்சியைக் கற்பனை பண்ணிப் பாரத்
தலையிலே புல்லுக்கட்டோடு நிற் கிற மனிதன்! விலை பேரம் பேசும் இவள் விலை படியாமல் முறுக்கிக் கொண்டு நடக்கிற அவன்! மறுபடியும் கையைத்தட்டி அவனை வரவழைத்து வாசல் ஓரமாக புல்லுக்கட்டை இரக் கும் நான்!.வேடிக்கையாகத்தான் இருந்தது.
"அறுகம்புல் ஜ"ஸ் எல்லாம் வேண் டாம். நல்ல அலோபதி டொக்டரிடம் காட்டிக் கொலஸ்ட்ரோல், ஷ"கர், ஆல்பமின் எல்லாம் செக் பன்ைனிட் பார்க்கணும்." என்று தனக்குத் தெரிந் ததைச் சொன்னாள் என் வீட்டுக்காரி,
"போட இருந்த பஜ்ஜியைக் கட் பண்ணிட்டு பேச்சைப்பார். பேச்சை' என்று மனசுக்குள் கறுவிக்கொண்டேன்,
TOGANITLIJKAGILISAN ANITÍ - BADIATÒLவேடிக்கை

Page 25
டும்மா. ஆயுர் வேதம் பாருங்க.எபர்ட் இருக்கும்." என்றார் கோபாலi,
"அதைவிட ஓமியோ தேவலையா" என்று கேட்டு வைத்தேன். அந்த சர்க் கரை மிட்டாய் மாத்திரைகள் என்றால் சிறு வயது முதலே எனக்குப் பிடிக்கும். “(35) JiiJiiILIT Li G35)Jisjir LIT Li ... 3:13r3'r பதி தான்." என்று அடித்துச் சொல்லி விட்டாள் இவள்,
"இப்படித்தான் என்னோட கசின் ஒருத்தன் குண்டாயிட்டே போறா னேன்னு கொண்டுபோய் ஒருத்தரிடம் காட்டினாங்க. அது இதுன்னு சொல்லி வைத்தியம் பார்த்துட்டுக் கடைசியிலே இப்ப தைராய்டுன்னு டிரீட்மெண்ட் நடக்குது."என்று குண்டு போட்டுப் பார்த்தார் கோபாலன்,
அயராமல் இவள் நின்ற போது நான் தான் குறுக்கால் புகுந்து "ஆகாரம்" என்று அப்பாவித்தனமாக ஒரு கேள்வி யைக் கேட்டுவைத்தேன்.
"தினமும் பத்து வடையும் எட்டு போண்டாவுமாம்!" என்ற இவளது குர லில் ஏளனமும் கோபமும் மிக்ளாகி ஒலித்தன.
என் ஆகார விஷயத்தில் ஏறத்தாழ இவள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது போல்தான் பேசும் தோரணையின்மூலம் தெரிந்தது.
ஒரு வழியாகக் கோபாலனை அனுப்பி வைத்தேன்.
போகும் போது அவரும் ஒரு முறை வெய்ட் மிஷினில் ஏறி நின்று எடை பார்த்துக் கொண்டார்.
எத்தனை கிலோ இருக்கிறார் என்பதை நான் எட்டிப்பார்த்துத் தெரிந்துகொள்வதற்குள் வெடுக்கென இறங்கி நழுவி விட்டார்.
சாயங்காலம் சின்னப் பிள்ளைகளை
அழைத்துக்கொண்டு அவரது மனைவி வந்தாள்.
"பேரறும் பேத்தியும் எடை பார்த் துக்கதுமாம்."
ஏற்றி இறக்கினேன். சின்ன துன் டால் அதன் மீது படிந்த தூசியைத் தடைத்தேன். சந்தேகத்துக்கு ஓரிரு மு:ந) வாயால் ஊதிச் சுத்தம் பன்னினேன்,
“பட்டுத்துண்டு இருந்தால் போட்டு மூடி வைங்க." என்று கிண்டலாக
ஆலோசனை சொல்லிவிட்டுப் போனாள் அந்தம்மாள்,
நான் எண்டபீதிைன் வாங்கின சேதி
காற்று மூலமும், இள்ை மூலமும் வெளியே பரவி, வேறு சிலரும் எடை பார்த்துக்கொள்ள வந்து போனார்கள், வரும்போதே அவர்கள் பார்வை கட்டி லுக்குக் கீழாகத்தான் போயிற்று.
அது அங்கேதான் இருக்கிறதென் கிற ரகசியமும் லீக் ஆகிவிட்டதென்றே நினைத்திறேன்.
குணிந்து நிமிர்ந்து கட்டிலுக்கு அடி பயிலிருந்து அதை வெளியே இழுத்துத் துடைத்து மறுபடியும் உள்ளே தள்ளி
(&sjidallas
46 நவம்பர் 2007
 

இரண்டு ந11111, இதே வேலை தான். திடீரென முதுகு வலிப்பது போலி ருந்தத
'ர டஃLபரான பிறகு குனியவே தனிபாம சேர்லப உட்சர்ந்துட்டுத் திட81று இட்டடிக் தனிந்து நிமிர்ந்து 113 மிஷினை கட்டிலுக்கு அடியிலி ருந்து வெளியே எடுத்து, உள்ளே தள்ளி வச்சுப் பண்ணினதால) முதுகு பிடிச் சீருக்குமோ "என்று இவளிடம் கேட்டுக்கொண்டிருந்த போது மறுபடி ʻ! | Ii: <334 yb ğF) { LJ") *J: :I. T gy"I li: olg3ifi jb#; கோபாலன் எப்படி1ோ காட்சியளித்து
விட்டார்.
"கென்னடத் தம்னு ஒரு ைேதலம். 11:ட்ெடு வந்து தரேன்.
அதை முதுகு இடுப்புன்னு தடவி ஆடா வெந்நீரை விட்டு."என்று ஆரம்பித்தார்.
நின்றிருந்த இவள் வேகமாகக் கிளப்பித் தெருமுனைவரை போய்விட் டுத் திரும்ப வரும்போது ஒரு ஒட்டோ வில் வந்தியங்:, "வாங்க போகலாம்"
ான்றாள்
கோபாலன் விடErim), "அலோபதி டோக்டரா? சித்தாவா"
என்று கேட்டார்.
'ரெண்டுமரிப் லே. சீட்டு கட்டற
1:டக்கு வரச் சொல்றேன். இந்த
நாட மிஷினைத் திருப்பிக் கொடுத்
துட்டு அன்னாச்சியிடமிருந்து ைேற நிபட் எதாவது வாங்கிட்டு வரப்போ 13 III.i...."
தவைப் பூட்டி ஆட்டோவில் ஏறும் முன் வாசல் படி அருகே அந்த எடை பின்னைக் கீழே இறக்கவைத்து அதில் ஒரு முறை ஏறி நிற்க ஆசை 1ாக இருந்தது. ஏறி நின்றேன்.
"அL1 என்னத்தைச் சொல்றது? பழைய இடைதான் இருக்கு? வெளிச் சத்தில் பார்த்தபிறகுதான் புரி.புது!" என்றாள் இவள்,
''i I'I ILU JIFTILLI lil JBIT fil Li GalsI IFI ġETILLI பஜ்ஜி போட்டுத் தரியா?" என்று குழந்தைத்தனமாகக் கேட்டேன்.
"ஃாசனை அடிச்சா நானும் வரேன்." என்று சொல்லிவிட்டுக் கோபாலன் நகர்ந்தபோது ஆட்டோவில் ஏறி உட் கார்ந்த எனக்கு என் மனைணியின் கிரக யால் அழுத்தமான ரகசியக் கிள்ளு ஒன்று கிட்ட்டாகக் கிடைத்தது.

Page 26
வாசகர் முகங்கள்
ஆசிரியருக்கு.
வேடிக்கை இதழில் இதழின் ஆக்கங்கள் நன்றாக
இருக்கின்றன. மேலும் தமிழில் எமது பிரதேச
(யாழ்ப்பாணம்) வாசம் வீசுவது அருமை. அடுத்த இதழ் ஜ்
இடத்துக்கு மட்டுமா அல்லது நீங்கள் வெளியிடவே :ST" இல்லையா? ? இதழ்கள்களும் வரிசையாக வாசித்துவரும் ஒரு வாசகி நான் பதில் தரவும்.
ம. சுகிர்தாயினி, ஏழாலை. " ஐயா வணக்கம்! *蕾
இலங்கையில் இருந்து வரும் சஞ்சிகைகளின் மரபை மீறாமல் நீங்களும் வேடிக்கை இதழ் வெளியிடுவதை இப்படி இடைநடுவில் நிறுத்திவிட்டீர்களே! இதற்கு இப்படி ஒரு இதழை ஆரம்பிக்காமலே விட்டிருக்கலாமே? இனிமேல் வருமா? வராதா? சந்தாதாரர்களான எங்களுக்கு பதில் சொல்லுங்கள்!
(அதுதான் திரும்ப விதிதிட்டமீன். சி.மதிவதனன், மானிப்பாபப்
வேடிக்கையில் பல நல்ல கட்டுரைகள் வெளியாகின்றன. ஆனால் பெண்களுக்கென்று சிறப்பான பக்கங்கள் எதையும் நீங்கள் ஒதுக்காதது வருத்தமளிக்கிறது. தயவு செய்து அதனையும் இணைத்துக் கொள்ளுங்கள். எஸ். தில்லையம்பலம், வட்டுக்கோட்டை வேடிக்கையில் வரும் கவிதைகள் நன்றாயிருக்கின்றன. வெது இதழில் பிரசுரமான "எங்கே எனது கிராமம்' கவிதை அற்புதம், எழுதிய வண்ணார் பண்ணை அனுராஜ்கிற்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். சஞ்சிகையில் எழுத்துப் பிழைகள் குறைவாக இருப்பது சந்தோசத்தைத் தருகிறது.
ஜே. கலிஎம்ரன், நாவாந்துறை சித்திரைப் புதவருட சிறப்பிதழ் வாசித்தேன், அருமையாக இருந்தது. அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணிகளின் கிரிக்கெட் போட்டி பற்றிய விவரண கட்டுரை அசத்தல், பந்துக்கு பந்து ரீவியல் பார்ப்பதுபோன்று எழுதியிருந்தற்கு நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டுப் போட்டிகள் பற்றியும் கொஞ்சம் தரலாமே?
எஸ். பிரபாயினி, சுண்டிக்குளி மறைந்த பிரபல எழுத்தாளர் கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு தொடரை தருவதற்கு நன்றிகள். அவரது அற்புதமான எழுத்து நடையை வாசித்து வாசித்து பிரமித்துப் போகிறோம், தொடர்நது தருவீர்கள் என்று நம்புகிறோம்.
மனோன்மணி சக்திவேல், தெல்லிப்பளை
வேடிக்கை 4 BFULiL"I 2007
 
 
 
 

FT LI JIJI . "
ہیE ஆசிய கிரிக்கெட் அணிகள் பர் நிய விமர்சனங்கள் எழுதப்படும்போது, சாந்த நாட்டில் அவை சிறப்பாகவும் வெளிநாடுகளில் சொதப்பலாகவும் fimள பாடுவதாக துறப் பிடுவது வழமை. ஆனால் மிக அண்மையில் நடந்து முடிந்த தொடர் 1:1 பார்க் கையில் ஆசிய நாட்டு அணி1:ள் தமது சொந்த நாடுகளிலேயே போட்டித் தொடர்களில் தோல்விகளைச் சந்திக் கும் பரிதாப நிலையை எதிர்கொன் டிருப்பதை காணமுடிகிறது.
செப்டெம்பர் 29ஆம் திகதியில் ஆரம் (ரித்து ஒக்டோ 11 17 இல் நிறைதண்டந்த இந்திய - அவுஸ்திரே விய அணிகளுக்கிடையிலான ? போட் டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடர்) இற்கு என்ற ரீதியில் இந்திய அணி பரிதாபமாகக் கோட்டை விட்டது.
ருவேன்ரி 20 போட்டிகளில் 2 ப்ேகா சம்பியனான இந்திய அணி ஒருநாள் போட்டிச் சம்பியனான அவுஸ்திரேலிய அணிக்கு பெரும் அழுத்தங்:1க் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது பொய்த்துப்போனது
அண்மைக்காலமாக வெளிநாட்டு ஆடுகளங்களிலும் சிறப்பாகப் பந்து வீசிவந்த இந்திய அணியின் பந்து விச் சாளர்கள் தமது சொந்தமண்ணில் பிர காசிக்கத் தவறினார்கள் அவுஸ்திரே
நவம்பர் 2007
- )
லிய அணியின் துடுப்பாட்ட விர்க ஆளுக்கு 50 ஓவர்களில் 300 ஓட்டங்: ளைப் பேறுவது என்பது 11:ன்பாதே
வே அமையவில்லை. :ெளிநாட்டு ஆடுதளங்களில் இந்திய அணியின் வேற்றிக்குப் பெரிதும் 01:கொடுத்த துடுப்பாட்டக்காரர்களால் இந்தியாவில் வைத்து பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.
7ஆவது போட்டியில் பின்வரினாத், துடுப்பாட்டக்காரர்.ளே தட்டுத்தடுமாறி அEர்ஆ வெற்றியைப் பெற்றுக்:ொடு த்தார்கள் என்பது நீங்கள் அறிந்தது தான்.
இந்திய அணி இவ்வாறு அவுஸ்தி {3 J 5:3] | | |-1 fizio | | ři fal : Eu ||| fi? > J Ŝ | gol ;fil கொண்டிருந்த அதே காட் பதியில் இலங்கை அணியும் இங்கிற்ேதிடம் தோல்விகளைச் சந்தித்துக்கொண்டி I l
ஒக்டோபர் முதல்ாம் ஆரம்பித்து 13ஆம் நிதி 1ரையான காலப்பகுதியில் இriங்: இங்கி லாந்து அணிகள் 5 ஒருநாள் போட்டி: ளைக்கோண்ட தொடரில் போதியிருந்
ჯHგill
முதலாவது போட்டியில் 1 19 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை ஆணி அடுத்தடுத்து தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியைச் சந் தித்து போட்டித்தொடரையும் இழந்தது. இங்கிலாந்து அணி ஒன்றும் மிகப் பல் மான அணி அல்ல. முக்கிய வீரர்க எளில் சிலர் காயம் காரணமாக அணி
திகதியில்
வேடிக்கை

Page 27
யில் இடம்பெறவில்லை. அத்தோடு இல தோல்வியைச் சந்தித்த இலங்கை ங்கை வந்து சேர்ந்த பல வீரர்களும் அணி, அவுஸ்திரேலியாவில் சாதிக்கட் சுகவீனம் - வயிற்றுபாதை காரணமாகப் போவதுதான் என்ன? பலவீனமடைந்து போயிருந்தார்கள்.
இப்படிப்பட்ட, பலம் குன்றியிருந்த இங்கிலாந்து அணியை - கடந்த உல கக்கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டிவரை முன்னேறிய இலங்கை அணியால் சமாளிக்க முடியாமல் போனதை என்னவென்று சொல்வது? இலங்கை அணியின் ஆரம்பத்துடுப் பாட்ட ஜோடி தொடர்ச்சியாகப் பிரகா சிக்கத் தவறியபோதும், அவர்களையே ဂျို့နှီး ́ ၊ ` '႔ `‘မွို႔?] . மீண்டும் மீண்டும் பயன்படுத்தியது ஏன் இந்திய, இலங்கை அணிகள் இவ் எனபதும், உள்ளுர் போட்டிகளிலும், வாறு தமது சொந்த மண்ணில் வைத்து முதற்தரப் போட்டிகளிலும் சிறப்பாக ஒரு நாள் போட்டித்தொடரை இழந்த விளையாடிவரும் இளம் வீரர்களுக்கு சோகக்கதை ஒருபுறம் நடந்தேறிக் வாய்ப்புக்களை வழங்காதது ஏன் கொண்டிருக்க, ஆசியாவின் மற்று என்பதும் விடைதெரியாமல் தொக்கி மொரு பலமான அவியான பகிஸ் நிற்கும் கேள்விகள் தான், தனது நாட்டில் வைத்து டெஸ்ட் ஒருவேளை, அவுஸ்திரேலியாவுக்கு தொடரை தென்னாபிரிக்காவிடம் பறி செல்லவிருக்கும் இலங்கை அணிக் கொடுத்த காட்சி மற்றொருபுறம் அரங் கான பயிற்சியாக இந்தத் தொடரைக் கேறியது. கருதியிருக்கலாம் என்று எண்ணினா பாகிஸ்தான். தென்னாபிரிக்க அணி லும், சொந்த மண்ணில் வைத்து - களுக்கிடையில் ஒக்டோபர் முதலாம் பலவீனமான இங்கிலாந்து அணியிடமே திகதி ஆரம்பமான முதலாவது வேடிக்கை 5 () நவம்பர் 2007
 
 
 
 
 
 
 

டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 160 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்தது. -
கராச்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென்னாபிரிக்க அணிவீரர் ஜக்கலிஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிகப் பிரமாதமாகத் துடுப்பெடுத்தாடி னார். அவரைக்கட்டுப்படுத்த பாகிஸ்தா னியப் பந்து வீச்சாளர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது. இவ்விரு அணிகளுக்குமிடையி லான இரண்டாவது டெஸ்ட்போட்டி ஒக்டோபர் 8ஆம் திகதி ஆரம்பித்தது. இப்போட்டி சமநிலையில் நிறைவுபெற, 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை கிரேம் ஸ்மித் தலைமையி லான தென்னாபிரிக்க அணி 1-0 என்ற ரீதியில் கைப்பற்றிக்கொண்டது. டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.
ஆசியாவின் பலமான மூன்று அணிகளுமே ஒரே காலப்பகுதியில் தமது சொந்தமண்ணில் வைத்து தோல்விகளைச் சந்தித்திருப்பது பரிதா பத்திற்குரியது மட்டுமல்ல இவ்வணிக ளின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை களையும் கேள்விக்குரியதாக்கியுள் விTது.
சொந்த மண்ணில், தமக்கு சாத கமாக அமைக்கப்படும் ஆடுகளங்களி லேயே வெற்றிகளைக் கோட்டைவிடும் அணிகள், புல் நிறைந்த பெளன்ஸர் பந்துகளுக்கு ஏற்புடையதான வெளி நாட்டு மைதானங்களில் இனிவரும் காலங்களில் வெற்றிகளைப்பெற முடி யுமா?
இந்திய அணியைப் பெறுத்தவரை யில் நீண்ட வெளிநாட்டுச் சுற்றுப் பய
நவம்பர் 2007
: ணத்தினால் வீரர்கள் களைப்படைந்தி ருப்பது ஒரு காரணமாகக் கூறப்பட்டா லும், அந்தக் காரணங்கள் மட்டுமே தோல்விகளை நியாயப்படுத்திவிடமுடி யாது.
வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களுக் காக - சிறப்பாக தமது அணிகளைத் தயார் செய்ய முயற்சிக்கும் ஆசிய அணிகள், தமது சொந்தமண்ணில் வெற்றிகளைத் தக்கவைக்கவும் தயா ராக வேண்டியிருப்பதையே இந்தத் தோல்விகள் சுட்டிக்காட்டுகின்றன!
- தீபன்
வேடிக்கை

Page 28
வேடிக்கை 52 நவம்பர் 2007
 

து "ரஸ்ர் கதை
அது ஒர அழகிய பனிக்காலம்.
ரவியும் சீதாவும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இருவரும் ஒரே வகுப்பு படிப்பில் கெட்டிக்காரர்கள். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி விவாதங்கள் வருவதுண்டு. காரணம், அவர்களில் LI JIJ பெரியவ நிரூபிக், இருவரும் போட்டி கொண்டு படிப்பதும் உண்டு
அன்றும் அப்படித்தான் ரவியும் சீதாவும் பேசிக்கொண்டிருந்தபோது, அவ களுக்கிடையே விவாதம் முற்றியது.
ரவி சொன்னான், "நான்தான் உன்னை
அறிவில் சிறந்தவன்” என்று. ஆனால் சிதாவோ அதை மறுத்தாள். "நிச்சயமா இல்லை. நாந்தான்' என்றாள் ஆணித்தரமாக,
அதற்குச் சான்றாக அவரவர் தங்கள் Lilje, IL FIF, FTF1 J Lly-E FIL ui (f. Gl:F-1 ண்டிருந்தனர். இதே ரீதியில் வாரந்து கொண்டிருந்தது. நவம்பர் 2007
f; flūl II, 3)||33) i
போட்டுக்
விட
(ÉI I'j !।
5
அப்போது திடீரென அவரகள் முன் தோன்றியது ஓர் அழகிய தேவதை. தேவதையைக் கண்ட இருவரும் செய்த றியாமல் திகைத்தனர். பின் இருவரும் சுதாரித்துர்கொண்டு, “நீங்கள் பார்" சின்றனர்.
தேவதை அவர்களிடம், "நான் தேவ லோகத்து மங்கை. இந்த வழியாகத்தான் தினமும் பறந்து உப்ா செல்வேன். இன்றும் அவ்வாறு போகும் போது TIT| FIJ ாக்குவாதம் கேட்டது. பொறுக்கமுடியாமல் இறங்கி வந்தேன்' என்றது.
பின், "உங்களுக்குள் என்ன பிரச் சினை' என்விடம் சொல்லுங்கள். முடிந் I;"| Fí நீர்த்து வைக்க முயற்சிக்கிரேன்” என்றது.
உடனே ரவி, "தேவதையே! இவளை விட நான்தான் அறிவில் சிறந்தவன் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டேங்கிறா" என்றான்.
ᎬᏗ13ᏍllydᏱilyᏐ,

Page 29
"ஒண்ணும் கெடயாது. நாந்தான் இவனை விட அறிவாளி.” என்று சீதா சொல்ல, ரவி மறுக்க, சூடான விவாதம் மீண்டும் தொடங்கியது.
இதைக் கண்ட தேவதை வருந்தியது. ஒரு கணம் யோசித்தது.
“சரி, சரி. உங்கள் சண்டையை சற்று நிறுத்துங்கள். இதற்கு நான் ஒரு வழி செய்கிறேன்” என்று கூறியது.
“உங்கள் இருவருக்கும் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதில் யார் வெற்றி பெறுகிறீர்களோ, அவர்தான் அறிவில் சிறந்தவர்” என்று கூறி, "உங்களுக்கு இதில் சம்மதமா?” என்று கேட்டது.
ரவியும் சீதாவும் 'சம்மதம்' எனத் 560)6OuJITL960T).
உடனே போட்டி என்ன என்பதை தேவதை அவர்களிடம் சொல்ல ஆரம்பித் தது. "நான் உங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒரு குடுவை தருகிறேன். இது பனிக்காலம் அல்லவா? அந்தக் குடுவை யில் இரவு முழுவதும் பனித்துளிகளைச் சேமிக்க வேண்டும். இருவரில் யார்
அதிகம் சேமிக்கிறீர்களோ அவர்தான்
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்" என்று கூறியது.
"ஆனால் ஒரு நிபந்தனை, இத் தரு ணத்திலிருந்து போட்டி முடியும்வரை நீங்கள் ஒருவருக்கொருவர். பார்த்துக் கொள்ளவோ பேசிக்கொள்ளவோ கூடாது. நான் நாளை மாலைதான் மீண்டும் வரு வேன். இதே மைதானத்தில் எனக்காகக் காத்திருங்கள்” என்று கூறி, மூடியில்லாத
இரு குடுவைகளை அவர்களிடம்
கொடுத்துவிட்டு மறைந்தது.
இருவரும் குடுவையுடன் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். செங்கதிர் ஆரியன் மறைந்து, பால் ஒளி வீசும் இரவு ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் பனியும் கொட்ட ஆரம்பித்தது. ரவி குடுவையை எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு
வேடிக்கை
S4
வந்தான். திறந்தவெளியில் வைத்தான். பின் உறங்கச் சென்றான். ஆனால் உறக்கமே வரவில்லை. அடிக்கடி சென்று குடுவையில் பனித்துளிகள் சேர்ந்துள் ளதா எனப் பார்த்துக்கொண்டே இருந் தான்.
சீதாவும் அவளது வீட்டின் முன்புறம் உள்ள புல்தரையில் குடுவையை வைத் தாள். இடையிடையே பனித்துளியின் அளவைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நாளை எப்படியாவது ரவியை ஜெயிக் கணும்' என்ற சிந்தனையிலேயே அவள் தூங்கிப்போனாள்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. சீதாவும் ரவியும் சென்று அவரவர் குடுவையைப் பார்த்தனர். ஓரளவுக்கு இருவரது குடுவையிலும் பணி நிறைந் திருந்தது.
ஆனால் ரவியின் குடுவையில் இதை விட அதிகம் இருக்குமோ என்று சீதாவும், சீதாவின் குடுவையில் அதிகம் இருந்தால் என்ன செய்வது என்று ரவியும் நினைத் தனர்.
மதியத்துக்கு மேல் இருவரும் மைதா னத்துக்கு தேவதையைப் பார்க்கக் கிளம்பினர். அப்போது மற்றவரது குடுவை யில் அதிகமாக இருந்தால் நாம் தோற்று விடுவோமே என்று இருவருமே நினைத்த தால், குடுவை நிறையத் தண்ணிரை ஊற்றி எடுத்துச்சென்றனர்.
மைதானத்தில் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல் குடுவையை மறைத் துவைத்தபடி காத்திருந்தனர். மாலை ஆனதும் தேவதை வந்தது.
“சரியாக வந்துவிட்டிர்களே! எங்கே உங்கள் குடுவையைக் காட்டுங்கள்" என்று குடுவைகளை வாங்கிப் பார்த்தது. பின்னர் வாய்விட்டுச் சிரிக்க ஆரம் பித்தது தேவதை. இதைக் கண்ட இருவ ரும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த் துக் கொண்டனர். பின்பு ரவி கேட்டான்,
நவம்பர் 2007

"ஏன் இப்படிச் சிரிக்கிறீங்க?" என்று. அதற்குப் பதில் சொல்லாமல் மீண்டும் சிரித்த தேவதை, 'சாதாரணமாக
பனித்துளி என்பது என்ன தெரியுமா?
மேலே உள்ள நீராவியின் மேல் குளிர்ந்த காற்றுப் படும்போது, அது பனித்துளியாக மாறுகிறது. அந்தப் பனித்துளி மீது நல்ல வெயில் படும்போது, அது மீண்டும் நீராவி uTub)(6b.
அப்படிப் பார்த்தால் நீங்கள் மதியத் திலிருந்து இங்கே காத்திருக்கிறீர்கள். என்னதான் குடுவையில் பனித்துளி சேர்ந் திருந்தாலும் இந்த வெயிலில் சிறிதளவா வது ஆவியாகியிருக்கும். மீதி கொஞ்சம் தான் குடுவையில் தங்கியிருக்கும்.
ஆனால் உங்கள் இருவரது குடுவை யும் நிரம்பி வழிகிறதே! இது எப்படி? இதைக் கண்டு சிரிக்காமல் என்ன செய்வது?" என்று கூறியது.
“இப்போது சொல்லுங்கள். உங்க ளில் அறிவில் சிறந்தவர் யார் என்று? என்று அவர்களைப் பார்த்துக் கேட்டது தேவதை,
இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தலைகவிழ்ந்து நின்றனர்.
“பார்த்தீர்களா? இது நம் வாழ்வில்
தினமும் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வு. இதைக் கூட நாம் தெரிந்துகொள்ள வில்லை,
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். இந்த உலகில் எல்லாமே தெரிந்தவர்கள், புத்திசாலிகள் என்று எவருமே இல்லை. இந்த உலகத்தில் உள்ளவர்கள் கற்றுக்கொண்டது வெறும் கையளவு மட்டுமே. கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன.
அவற் றைத் தெரிந்துகொள்ளத்தான் நீங்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர, இப்படி வீண் விவாதங்கள் செய்து நேரத்தை வீணடிப்பது எவ்வகையில் சிறந்ததாகும்?" என்று கேட்டது தேவதை.
நவம்பர் 2007 55
Mašto s g
அதைக கேட்ட இருவரும் 5Lめ
தவறை உணர்ந்து, "எங்களை மன்னித்து
விடுங்கள். நாங்கள் இனிமேல் இதுபோன்ற 56560p6TT 6T6d6M) Tub GFLJULJUDIT’ (BLTub” என்று கூறினர்.
பின் தேவதை அவர்களைப் பார்த்து, "உங்களுக்கு ஏதாவது பரிசு தர விரும்பு
கிறேன். என்ன வேண்டும்? கேளுங்கள்"
என்றது.
"நீங்கள் கொடுத்த இந்த அறிவுரையே எங்களுக்கு விலைமதிக்க முடியாத பரிசு” என்று ஒரே குரலில் கூறினர்.
"உங்களது இந்தப் பரிசை எங்களது மற்ற நண்பர்களுக்கும் கொடுத்து, அவர்க ளையும் நல்வழிப்படுத்துவோம்" என்றாள் சீதா.
"மாணவர்களாகிய நீங்கள்தான் இந்த பூலோகத்தின் தூண்கள். தன்னம்பிக் கையும் தன்னடக்கமும் கொண்டு வெற்றி
பெற் வாழ்த்துகள்” என்று கூறி மகிழ்ச்
சியுடன் மறைந்தது தேவதை.
ரவியும் சீதாவும் ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்டனர் உண்மையான
நட்புடன்.
Gangdos

Page 30
திடீரென்று ஒரு வெடி
அது ஆளை உலுக்கிவிடும்.
ஒருவன் நேர்முகத் தேர்வுக்குச் செல்கி றான். இன்னொருவன் வேலை கிடைத்து முதல் நாள் வேலைக்குச் செல்கிறான். இருவரது மனோபாவங்களிலும் வித்தி யாசம் இருக்கும். நேர்முகத் தேர்வுக்குச் செல் வன், டென்ஷனாகக் காணப்படு வான்.
"என்ன கேள்வி கேட்பார்களோ, அவற் றுக்கு எனக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டுமே, அப்படியே நன்றாகப் பதில் சொன்னாலும், வத்தனை பேர் நேர்முகத் தேர்வுக்கு வருவார்களோ, அத்தனை பேரில் நமக்கு வேலை கிடைக்குமா?" என்றெல்லாம் மனத்தில் ஒருவிதத் தவிப்பு இருக்கும்.
அதே நேரம் வேலையில் சேரட்போகிற வனுக்கு இதுபோன்ற தவிப்பு எதுவும் இருக்காது. வாழ்க்கையில் செட்டிலIகி விட்ட சந்தோஷத்தை அவன் முகத்தில் பார்க்கலாம்,
ஆன்மிகத்தை அறிந்து வாழ்பவர்க ளிேன் வாழ்க்கை, வேலையில் சேரப் போகிறவனின் மனநிலையைப் போன்றது தான். அவர்கள் வாழ்க்கையில் மன இறுக்கம் இருக்காது மனத்தவிப்பு இருக் காது.
ஒருவருக்கு அவசரமாகச் செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது. தன்னுடைய நண்பனிடம் சென்று உதவி கேட்கலாம்
என்று நினைக்கிறார். நண்பனைக் கேட் டால் பணம் கிடைக்கலாம். ஒரு வேளை கிடைக்காமலும் போகலாம். சில சமயம் நினைத்ததைவிட அதிகமாக உதவி கிடைக்கலாம். மறுபுறம் நண்பன் பணம் கொடுக்காமல் கடுமையாகப் பேசியும் அனுப்பிவிடலாம். அல்லது முன்பின் அறி முகம் இல்லாதவனைப் போலவும் நடந்து கொள்ளக்கூடும்.
இதில் எதுவும் நடக்கக்கூடும் என்று முன்கூட்டியே சிந்தித்துப் பார்க்கிறவ னுக்கு நண்பன் எப்படி நடந்து கொண்டா லும் வருத்தம் ஏற்படாது. காரணம், அவன் எதிர்பார்த்தவற்றுள் ஒன்றுதான் நடந்திருக்கிறது.
திடீரென்று ஒரு வெடி வெடித்தால், அது ஆளை உலுக்கிவிடும். அதே சமயம் வெடி வெடிக்கப்போகிறது என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால், அவ்வள வாகப் பயம் இருக்காது.உலகின் இயல்பு இதுதான் என்று அறிந்து கொண்டு வாழ்க்கை நடத்தினால், தேவையில்லாத விடயங்களால் மனம் சோர்ந்து போக அவசியமிருக்காது.
அடுத்த முறை வெடிச் சத்தம் உங் கள் காதுகளில் கேட்கிறபோது, அதில் வாழ்க்கைக்கு ஒரு செய்தி இருக்கிறது என்பதை நினைவு படுத்திக்கொள்ளுங் Fil. C
வேடிக்கை
நவம்பர் 2007
 

ஆ விழிப்புணர்வு கட்டுரை
த்துக் கொண்டிருந்த தன்னு
காரணம் அந்தக் குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததனால் அதற்கு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை அமையாது என்று மந்திரவாதி ஒருவர் கணித்துச் சொன்னதுதான்.
பதை பதைக்க வைக்கும் இந்த நிகழ்வு கலா சாரங்களிலும், இலக்கியத்திலும் செழித்து விளங்கும் நம் அண்டைநாடான தமிழகத்திலேயே நிகழ்ந்துள் ளது என்பது மூட நம்பிக்கை எந்த அளவுக்கு சமுதா யத்தின் வேர்களை அரித்திருக்கிறது என்பதற்கு சான்று. இது மட்டுமல்ல, தலைச்சன் பிள்ளையை நரபலியிடு தல், குழந்தையைக் கீறி இரத்தம் எடுத்தல் என்றெல் லாம் தினசரி ஏடுகளில் வரும் செய்திகள் மக்களுடைய விழிப்புணர்வையே கேள்விக்குள்ளாக்குகிறது.
மக்களை இயல்பாகச் சிந்திக்க விடாமல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலும் சில போலி யான Iதப் பிரசாரகர்களும் மந்திரவாதிகளும் இந்த மூடநம்பிக்கைகளைப் பெருமளவுக்கு வளர்த்து விடுகின்ற னர். எதேச்சையாய் நடக்கும் செயல்களுக்குக்கூட கார னங்களை இட்டுக்கட்டி பணம் கறக்கும் மனிதர்களால் M ந்த மூடப் பழக்கவழக்கங்கள் அழியாமல் நிலைபெறுகின்றன.
நவம்பர் 2007 57 வேடிக்கை

Page 31
சிலை பால் சூடிக்கிறது என்றோ, கடல் நீர் கடவுள் கருனையால் இனிக்கிறது
என்றோ ஏதேனும் ஒரு 11 || பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டு கொண்டே இருக்கிறார்' பதத்தின்
பெயரால் மக்களை ஏமாற்றும் சிலர். ர ணம், அவர்களுக்குத் தேவை f|நிக் காமல் தலையாட்டியபடியே ஆட்டுமந்தை களைப்போல பாடும் சட்டம், எல்லாம் வியாபார மயமாகிவிட்ட ஆலில் மதம் மட்டும் விதிவிலக்கா என்ன?
வIயிலிருந்து உருவங்களை எடுப்ப தும், கலன்களிலிருந்து பூக்களை எடுப்பு தும் என மூட நம்பிக்கைகளைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் மக்களுக் காகவே நடைபெறுகின்றன நாடகங்கள். நாடு இப்படி மூட நம்பிக்கைTவின் கூடாரமாகிக் கிடக்கிறதே என்னும் கவ லையில் உலகில் என்னென்ன மூட நம் பிக்கைகள் இருக்கின்றன என்று அலசி | தில் கிடைத்த செய்திகள் அதிர்ச்சிய டைய வைக்கின்றன.
தூணிலும் துரும்பிலும் இருப்பான் இறைவன் என்பதை துனிலும் துரும் பிலும் இருக்கும் மூட நம்பிக்கையென்று மாற்ற வேண்டிய அளவுக்கு இந்த முட நம்பிக்கைகள் உலகெங்கும் பரந்து கிடக் கின்றன. அவற்றில் சிலதினை பார்ட்டோம், பதின்மூன்று என்பது மேல்நாட்டின ருக்கு அலர்ஜிக்குரிய எண். தின்மூன்று என்னும் எலன் இயேசுவைக் VI, III', 19 i, கொடுத்த யூதாலைக் குறிப்பதாகவும் எனவே பதின்மூன்று என்பது கெட்ட எண் என்பதும் மேல் நாட்டினரின் கருத்து,
அதுவும் பதின் மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமையாகி விட்டல் அது படு பயங்கரமான மோசமான நாளாம். தார னம், இயேசு சிலுவையில் அறைLப்| டது ஒரு வெள்ளிக்கிழமை, நோவா காலத்தின் தண்ணீரப் பெருக்கு ஆரம்ப மானதும் ஒரு வெள்ளிக்கிழமை ஆதாம்,
1i இருவரும் ரன்ே தோட் திலிரு ந்து துரதத்ட்பட்டதும் ஒரு வெள்ளிக்கி பூமை என்று காரணங்கள் அடுக்கII) கின்றன.
எப்பெயின் நாட்டில் பதின்மூன்றார் தி, சென்Iைய்க்கிழமை வந்து விட்டால் அன்று எந்த நல்ல செயல்களையும் செப்பாட்டாரகள். இத்தாலியில் பதின் (LPGil. It if his slot)600TLCL.IIa. L. Scott (Lif கெட்ட எண்ணாகக் 'ருதப்படுகிறது. அது மரணத்தைக் குறிப்பதI, அவர்கள் கருதுகிறார்கள்.
அரிெக்கா உட்பட பல நாடுகளில் பெருt|லான கட்டிடங்கள் பதின்மூன்றா 6து III இல்லாலேயே கட்டப்படுகின் நன. ஏIIான குடியிருப்புகளில் பதின் மூன்றார் 100 வீடுகளே இருக்காது. பதின் மூன்றாவது எண்ணுள்ள Tெ' பல விமான IEIங்களில் இருப்பதில்லை. மரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் நம்பி, கையாக இருந்திருக்கிறது. மரங்களைத் தட்டினால் அதனுள் இருக்கும் பேட் வெளியே வராது என்பது மேல்நாட்டு நம் பிக்கையாக இன்றும் நிலவுகிறது.
இந்திIவில் பெரும்பாலான இடங்க வில் காடுகளிலிருந்து வெட்டி வரும் II (:F56?Y)654 I 6)‘7%B3F}5hifʼa\") 9) LLI (23! I_ITF "I„I"i (ô'YLIT {Tylʻ. "J, ளார்ருவதற்கு முன் பேய் விரட்டும் பூஜை நடக்கிறது!
அமெரிக்கர் 15 , அருகிலிருக்கும் யாராவது தம்பி விட்டால கடவுள் உங்ா) ஆசீரதிைப்பாராக என்பார்கள். தும்மும்போது ஆன்I வெளியேற முயல் வதாகவும், கடவுள் உன்னை ஆசீர்வதிப்
(3)|ņjGO),
58 நவம்பர் 2007
 
 
 
 
 

பாராக என்று சொல்லும்போது ஆன்மா |lண்டும் உடலுக்குள் செல்வதாகவும் அவர்கள் நம்பினர்கள்.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை தும் மும் போதெல்லாம் அசுத்த ஆவி வெளி யேறுவதாக ஆறாவது நூற்றாண்டு வரை நம்பப்பட்டது. பின், பிளேக் நோய் தாக் கிய கலத்தில் வலியுடன் தும்முபவர்கள் மரணத்தை நோக்கியிருப்பதாகக் கருதப் பட்டு அவர்களுக்காக 'கடவுள் உங் களை ஆசீர்வதிப்பாராக’ என்று வாழ்த்தத் துவங்கினர். இதன் மூலம் அவன் இறக்க நேரிட்டால் அவனுக்கு கடவுளின் ஆசீர் வாதம் கிடைத்து சுவர்க்கத்துக்குச் செல் வான் என்று நம்பப்பட்டது.
தும்மும்போது வாழ்த்தும் வழக்கம் எகிப்தில் திரிேயுளப் சீசரின் காலத் திலேயே வழக்கத்தில் இருந்ததாகவும் சில கதைகள் சொல்கின்றன.
என்னுடைய அமெரிக்க நண்பர் ஒருவ fLli) இதுகுறித்துக் கேட்டபோது தும்மும் போது இதயம் ஒரு வினாடி துடிப்பதை நிறுத்துவதாகவும், அது மீண்டும் துடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் 'கடவுள்
உங்களை ஆசீர்வதிப் IரII என்று கூறு
வதாகவும் சொன்னார்.
வீட்டுக்குள் குடையை விரித்தால் மர
அமெரிக்
நவம்பர் 2007
பல மேல்நாடுகளின் இன்றும் நிலவி வரும் ஒரு மூட நம்பிக்கை.
தொப்பியைப் படுக்கையில் வைத்தி ருப்பது நல்லதல்ல என்னும் பழக்கம் இன்னும் அமெரிக்கப் பூர்வீகத்தினரிடம் வழக்கத்தில் உள்ளது. அப்படி வைத் தால் மரணம் உட்பட ஏதேனும் தீயது நிகழும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.
கொட்டாவி விடும்போது கையால் வாயை மூடுவது நாகரீகம் கருதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் துவக்க காலத்தில் வாயைத் திறந்தால் பாத்தான் உள்ளே நுழைந்து விடுவான் என்று பயந்துதான் கொட்டாவி விடும்போது வாயை முடியிருக்கிறார்கள். நம்மூரில் இரவில் வேப்பமர அடியில் படுத்திருப்பவர்கள் மூச்சுத் திணறி இறக்க நேரிட்டால் முனி அடித்துக் கொன்றதாகச் சொல்வதைப் போல ஒரு நம்பிக்கை முன்பு அமெரிக்காவிலும் இருந்திருக்கிறது.
மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன் பெல்லாம் மின்னல் என்பதும் இடி என்ப தும் வானத்திலிருந்து சாத்தான் எறிபவை என்பவை என்பதுதான் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாய் இருந்தது. எனவே மழைக்காலங்களில் அவர்கள் சாத்தானைப் பயமுறுத்துவதற் காக ஆலயத்துக்கு ஓடிச்செ ன்று ஆலய மணியை அடித்துக் கொண்டே இருப்பது வழக்கம். ஆலயம் மற்ற கட்டிடங்க ளைவிட அதிக உயரமுடைய கோபுரத்தைக் கொண்டிருப்ப தால் அடிக்கடி ஆலயங்களில் மின்னல் தாக்கி மணி அடிப்பவர் களை மரணம் அடித்துச் செல் வதும் உண்டு. அதையெல்லாம் சாத்தான் அடித்துச் செத்ததா
வேடிக்கை

Page 32
கவே மக்கள் நம்பினார்கள்.
மின்னல் தாக்கி உயிர் பிழைப்பவர்கள் பிரபலமாவார்கள் என்னும் நம்பிக்கை சீனாவிற்குச் சொந்தமானது.
சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பது கெட்ட நிகழ் வுகளுக்கு வழிவகுக்கும் என்பது 81:கிப்தி யர்களின் நம்பிக்கை கவரில் ஏணி சாய் த்து வைக்கும்போது முக்கோணம் உரு வாகிறது. பிரமிடுகளையும், முக்கோணத் தையும் தங்கள் நம்பிக்கைப் பின்னணியா கக் கொண்டுள்ள எகிப்தியர்கள் ஏணியின் கீழே நடப்பது அந்த முக்கோணத்தின் புனிதத்துவத்தைப் பாழ்படுத்துவதாக நம்புகிறார்கள்.
கல்லறைத் தோட்டத்தைக் கடக்கும் போது மூச்சைப் பிடித்துக் கொண்டு வேக மாகக் கடக்கவேண்டும் என்பது அமெரிக் காவில் உலவி வந்த, இன்னும் கூட பல இடங்களில் உலவி வருகின்ற ஒரு நம்பிக்கை, சிரிக்காதீர்கள், செத்துப் போனவர்கள் நமக்கு மூச்சு இருக்கிறதே என்று பொறாமைப் படக்கூடாது என்ப தற்காக இந்த ஏற்பாடாம்!
சாப்பிடும்போது தும்மினால் யாரோ உங்களை நினைக்கிறார்கள் என்று நாம் சொல்வது போல, மூக்கு அரித்தால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்பது அமெரிக்கர்களின் வழக்கமாக இருக்கிறது. உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று நம்மவர்கள் சொல்வது போல அமெரிக்கர்களும் சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இடது உள்ளங்கை அரித்தால் பணம் வரும், வலது உள்ளங்கை அரித்தால் பணம் போகும்.
ஒரே தீக்குச்சியில் மூன்றுபேர் சிகரெட் பற்றவைப்பது கெடுதல் என்று நம்பப்படு கிறது. முதலாம் உலகப் போர் நிகழ்ந்த கால கட்டத்தில் மறைவிடங்களில் இருக் ேேவடிக்கை
கும் எதிரி வீரர்களின் கவனத்தைச் Tவர அந்த நேரம் போதுமானதாக இருiரும் என்பதற்காக சொல்லப்பட்ட இந்த வாச கம் உலகெங்கும் மூட நம்பிக்கையாய் இன்று உலவுகிறது.
காதலர்களைப் பொறுத்தவரையில், பேனா பரிசளித்தால் அந்தக் காதல் முறி ந்து போகும் என்று நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோல கத்தியைப் பரிசாகப் பெற்றால் நட்பு முறி ந்து விடும் என்பது மேல் நாட்டவரின் நம்பிக்கையாய் இருக்கிறது.
எதிரில்வரும் நபரைப் பொறுத்து நமது பயணத்தின் வெற்றியும் தோல்வியும் அமையும் என்று நமது பாட்டிகள் கதை சொல்வதுண்டு. அதிலும் பூனை குறுக்கே வந்தால் போன காரியம் விளங்காது என் றும் சொல்வார்கள். இது இங்குமட்டுமல்ல, அமெரிக்காவிலும் பூனை குறுக்கே வந் தால் வந்த காரியம் வெற்றியடையாது என்னும் நம்பிக்கை இருந்திருக்கிறது.
மேல் நாட்டுத் திரைப்படங்களைப் பாரத்தோமென்றால் சாத்தானைக் குறிப்பு தற்காக ஒரு கறுப்பு நிற பூனையைக் காட்டுவார்கள். ஆதிகால எகிப்திய கலா சாரத்தில் கறுப்பு நிற பெண் பூனை கடவுளாக வழிபடப்பட்டு வந்தது. பின் அது மற்ற மதத்தினரால் சாத்தானாக சித்தரிக்கப்பட்டது. சாத்தான் என்பவன் கெட்ட சகுனத்தின் சின்னம்தானே!
வீடுகளில் கதவருகே கத்தியை வைத்திருந்தால் கெட்ட ஆவியை வீட் டுக்குள் நுழைய விடாமல் தடுக்கலாம் என்பது ஸ்பெயின் நாட்டு மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று.
பணப்பையை பணம் ஏதுமில்லாமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றும், அப்படிக் கொடுத்தால் அந்த பையில் பணம் தங்காது என்பதும் ஹவாய் தீவு மக்களின் நம்பிக்கை.
60 நவம்பர் 2007

காலணிகளை வீட்டில் அணிந்து நடந்தால் விட்டிற்குள் பேய் உலவும் என்ப தும், கால்களை கதவுக்கு நேராக நீட்டி வைத்துப் படுத்தால் இரவில் உயிர்பிரியும் என்பதும் ஹவாய் தீவு மக்களிடமுள்ள நம்பிக்கைகளில் மேலும் சில.
கத்தியையோ, தாவரங்களையோ பெற்றுக் கொள்ளும்போது நன்றி சொல் லக்கூடாது. அப்படிச் சொன்னால் கத்தி யினால் ஏதேனும் காயம்படுதலும், தாவ ரம் பட்டுப்போவதும் தவிர்க்க முடியாது என்பதும் அமெரிக்கர்களின் நம்பிக்கைக ளில் ஒன்று. அப்படி கத்திக் காயத்திலி ருந்து தப்ப வேண்டுமானால் நீங்கள் கத்தி யைப் பெற்றுக் கொள்ளும்போது கொஞ் சம் பணத்தையும் கூடவே கொடுக்க வேண்டும்.
ஒரு மெழுகுவரத்தியின் வெளிச்சத்தில் கண்ணாடியை உற்றுப்பார்த்தால் இறந்து போனவர்களின் ஆவியை காணமுடியும் என்பதும், வலது கால் காலணியை முத லில் போடுவது நீண்ட ஆயுளைத் தரும் என்பதும் இங்கிலாந்து உட்பட பல மேல் நாடுகளில் உலவி வரும் மூட நம்பிக்கை களில் சில.
வலது என்பது எப்போதுமே நல்லது என்பது பல நம்பிக்கைகளில் பளிச்சிடுகி ன்றன. வலது புறமாக எழும்புதல், வலது காலை முதலில் வைத்தல் என்பன அவற் றில் சில. பைபிளிலும் இயேசு நல்லவர் களை வலப்பக்கமாகப் பிரிப்பதாக வரும் செய்தியால் கிறிஸ்தவர்களிடையேயும் வலது என்பது நன்மையின் சின்னமாக மதிக்கப்படுகிறது.
கழிவறைக்குச் செல்லும்போது இடது காலை முன்வைப்பதும், கழிவறையிலி ருந்து வெளியே வரும்போது வலதுகாலை முன்வைப்பதும் நன்மை பயக்கும் என் னும் நம்பிக்கை பல இஸ்லாமிய நாடுக ளில் நிலவுகின்றது.
Z00, SEALs. கதிரைக்கால் 3t ILIT35;El முன்பகுதி, பலுான், இடுப்புப்பட்டி, (3)63)L().
நவம்பர் 2007 61 வேடிக்கை

Page 33
சமையல் இரகசியம் சeபரிந்துப்ே கூடிவிட்டதா? கவலைப்பட்ாதீர்கள் அவித்த க்கிழங்கைதுண்டுகளாக்கி இவம்நிறமாக இருக்கவேண்டுமா யின்
ளை மிக்சியில் அரைத்து சேர்த்து கொள்ளவும் , 'மிளகாய்க்குமோர் இல்லையா? போரிக்காதீர்கள் பச்சை iலாக்கும் போது தனியிேடப்பு மட்டும் சேர்க்காது %ர்: பழப்புளியை வைத்து அவிக்கவும்: iாகவும்:மணமாகவும் இருக்கவேண்டுமா? தாள் கி வடித்து நீரைவேற்றிய பின் கொதிநீரை வற்றி தேநீர் தயாரிக்கவும்
வரிசி மணிமணியாகவும் இறுக் கமாகவும்
அடுமா?வுறுத்த சவ்வரிசி கண்டு கண்டு சீனி இறக்கியதும் 13k கபர்தி தேசிப்புளிச்சாறு சேர்க்கவும்' BANHATT H' தே' hon! 蠶
இரவில் தூங்குiபோது எந்தப் பக்க அவர்கள் எட்பyபேலும் எது பெதேனும் மாகப் படுத்தோமோ அந்தப் பக்கமாக:ே தங்i I Mததே, இபுக்கக் கூடாது என் எழும்புதல் நன்மை பயக்கும் என்பது பதற்காக அ19த்திற்கு தலைப்பாட்டு மேல் நாட்டவரின் நம்பிக்கை, படுத்தி சிறார்கள், ருக்கும் யாரையும் தாண்டிப் போகாதே சினிமாத்துறை பற்பி கேட்கவே அப்படித் தாண்டிப்போனால் அவர்களு வேண்டாம். அவர்களிடம் இருக்கும் ஒரே டைய வளர்ச்சி பாதிக்கும் என்பது பாட்டி நம்பிக் 00: மூட நம்பிக்கைதான்,
சொன்ன கதை மட்டுமல்ல, அமெரிக்கா அறிவியல் புகம் இன்று உப்கைக் வில் உலவும் கதையும் கூட சளினியில் சுருக்கிவிட்டது பறிவியலின்
ETEi நகத்தை வெட்டிட் IIFT's Lil -1 விஸ்வரூட EllեTI) 在门 மனிதனின் சிந்த போட்டு யாருக்கேனும் கொடுத்தால் அவர் பின்னிய முழுமையாக மாறவில்லை கள் உங்களோடு காதல் வயப்படுவாரகள் என்பது வருத்தத்துக்குரிய செய்தி.
என்பது திடுக்கிட வைக்கும் மேல் நாட்டு கணினிக்குள்ளும் ஜோசியம், ஜாத நம்பிக்கைகளில் ஒன்று. கம், திருமனைப் பொருத்தம், சிக்கல்
வியாபாரம் துவங்கி எல்லா விதமான நம்பிக்கைகளும் நுழைந்துவிட்டன.
பருத்து அறியும் தன்1ையை IEதன் வ|க்கை நெறியாக இன்னும் வதந்து, கொள்ளவில்லை என்றே கருதவேண்டியி ருகிறது.
பன்னால் காப்பதும் டெII, காதாஸ் சேட்டதும் பொய், தீர விசாரிந்து அறிவதே மெய்யென வாழ்தலே ஆறறிவுக்கு நாம் செய்யும் மரியாதையாக அமையும்,
அதிகாலையில் காணும் கனவு பலிக் சூப் என்று நம்மவர்கள் பல நம்புவதைப் போல, காணும் கனவை காலை உண் வுக்கு முன் சொல்லி விட்டால் அந்த கனவு பலிக்கும் என்பது மேல்நாட்டிEரின் நம்பிக்கை,
நிறையப் பணத்தை வைத்து முதலீடு செய்பவரகளிடம் இந்த மூட நம்பிக்கை கள் அளவுக்கு அதிகமாகவே இருக்கின் றன என்பது ஒரு வியப்பூட்டும் செய்தி.
வேடிக்கை [FIL:L I'r 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I
圈
*
புதைக்கத்
நானல்கிறது:
I, a Hii || 7 || 17 fi {Bīlī,

Page 34
ஒரு பார ஊர்தி நிறைய சுமையை ஏற்றிப் போகிறது. வழியில் ஒரு
ரயில் பாலம் பார ஊர்தி அந்தப் பாலத்தின் அடியில் உள்ள சாலையில்தான் போகவேண்டும். ஆனால் பாலத்தின் உயரத்தைவிட பார ஊர்தியின் உயரம் மேலேற்றப்பட்ட சுமையுடன் ஒரு அங்குலம் அதிகமாக உள்ளது. அங்கே, பார ஊர்தியில் இருக்கும் சுமையை இறக்க எந்த வசதியும் இல்லை. .. iຍ. எப்படியும் அந்த வழியாகத்தான் போயாகவேண்டும். ஒட்டுனரின் சாமர்த்தியத்தால் எந்த சிக்கலும் இன்றி, பாலத்தில் மோதாமல், பார ஊர்தி கடந்து போனது. ஒட்டுனர் என்ன செய்தார்?
(B) sis
பயணம் செய்து கொண்டிருந்தபோது அந்த இடத்திலேயே இறந்துபோகிறார். அடிபட்டு. மருத்துவமனைக்கு கொண்டு ன். அவனுக்கு உடனடியாக சிக்கலான சத்திர சிகிச்சை செய்யவேண்டிய நிலை, மருத்துவரை அவசரமாக அழைத்து அந்தப் பையனுக்கு சிகிச்சை செய்யும்படி கூறுகிறார் தலைமை மருத்துவர். ஆனால் மருத்துவரோ, அந்தப் பையனைப் பார்த்ததும், ஐயோ மகனே. என்று
து தன் னது மகனுக்கு சிகிச்சை செய்ய இயலாது என்றும், வேறு மருத்துவரை அழைக்கு
செல்லப்படுகிற1
புதிர் - 02 விடைகள் சப் போடுங்கள். இரண்டு நிமிடம் கழித்து, அந்த சுவிட்சை விட்டு, அடுத்த சுவிட்சைப் போடுங்கள். மேலே போகவும். இப்போது, எரிந்துகொண்டிருக்கும். அது இரண்டாவது சுவிட்சுக்குரிய பல்ப். பல்புகளில் எந்த பல்ப் சூடாக இருக்கிறது ଚୌର୍ୟ 1று தொட்டுப் பாருங்கள். சூடாக இருப்பது, முதலில் போட்ட சுவிட்சின் பல்ப் மற்றயது
Tୋ[
நிகேதீஸ்வரன் பிதாட்சாயணி - .# గా. : ஹறறன தேசிய வங்கி 7, அரசடி ஒழுங்கை,
ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்:
3: ...... سنس
யாழ்ப்பாணம்,
Tool (UP9 st-Floor; Galle
வேடிக்கை 64 நவம்பர் 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ அறிமுகம்
அறுபது வருடங்களுக்கும் மேலாக ஓவிய உலகில் புகழோடு விளங்கிக் கொண்டிருக்கும் ஓவிய கோபுலு அவர் களுக்கு 83வயது கடந்துவிட்டது.
இவரது பெயர் கோபாலன், ஓவிய மேதை மாலியால் கோபுலு என்று புனை பெயர் ஆட்டப்பட்டவர்.
இலங்கை வாசகர்கள் மத்தியிலும் தென்னிந்தியப் பத்திரிகைகளுடாக நன்கு அறியப்பட்ட ஓவியர் கோபுலு.
தில்லானா மோகனாம்பாளை தத்ரூப மாக கண்முன்னே ஆடவிட்டதில், வாஷி |ங்டனில் திருமணம் தொடருக்கு சித்திரங் களை உருவாக்கியதில் கோபுலு அவர்க ளின் உழைப்பு இன்றும் பேசப்படுகிறது. கோபுலுவின் துாரிகையிலிருந்து வெடித்துக்கிளம்பிய நகைச்சுவைப் பட் டாசுகளிலிருந்து ஒருசிலவற்றை இங்கே உங்களுக்காகத் தருகிறோம்.
இவை உங்களின் சிந்தனையைத் துாண்டிவிட்டு உங்கள் படைப்பாற்றலை யும் மெருகூட்டும் என்று நம்புகிறோம். நவம்பர் 2007 65 ேேவடிக்கை

Page 35
|kர்;ே $9 இை
SqzueM MTTMCeSLSLSLS SLTCCTSLGLCLLSLS
66
நவம்பர் 2007
 
 
 

மிருகக் காட்சிசா?)
కిg
நவம்பர் 2007
67 . Id(86) ||yi 6). F,

Page 36
இ தொழில்நுட்பர்
மொபைல் - இவ்வார்த்தை America figdisabib,
செல்போன் - இவ்வார்த்தை European Union வழக்கம்.
தற்போது உலகம் முழுவதும்
பொதுவாக மூன்று வகையான நெட்வொர்க்குகளை உபயோகப்படுத்துகி றார்கள்.
algool: GSM (Global Subscriber Mode), CDMA(Code Division Multiple Access), சட்லைட் போன் (இரிடியம், குளோபல் ஸ்டார்)
GSM (op Golirijafg,567 European Union, மற்ற இடங்களிலும் உபயோகப் படுத்துகிறார்கள்.
CDMA நெட்வொர்க்குகள் வட அமெ ரிக்காவில் அதிகம் உபயோகபடுத்துகிறார் கள்.
இதில், ஜப்பானில் மட்டும் Personal Digital Cellular network 3). LLI(3ų III 25ŮJ
ΦΑ. DT60) 60 GB GT6T
| JVJ JVJ Zona i II REGI VZRaz władz Wag Nam
faUjia
ய்கள்
படுத்துகிறார்கள்.
GSM, CDMA வேறுபாடு என்னவென்றால், GSM இல் நாம் ஒவ் வொரு முறையும் சட்லைட் வழியே தொடர்புபடுத்தப்படுகிறோம்.
CDMA இல் பொதுவாக சாட்டிலைட் உதவி இல்லாமல் தனி நெட்வொர்க்கில் இயங்கும் - ஒரு வாக்கிடோக்கி போல். மொபைல் போன் தயாரிக்கும் நிறுவ னங்கள் -
நொக்கியா, சோனி எரிக்ஸன், சாம்சங், மோட்டோரோலோ, எல்ஜி, சீமென்ஸ், பிலிப்ஸ், ஓ2, ஹெவ்லெட் பக்கார்ட், I-MATE, ஐ-போன் (அப்பிள்) நொக்கியா பின்லாந்தை சேர்ந்த கம்பெனி. சுமார் 1850 ல் ஆரம்பித்தது, முதல் பிஸினெஸ் தேக்கு வியாபாரம்.
சொனி எரிக்ஸன்- எரிக்ஸன்.
፵፫ኳ
நம் மன்னருக்கு கரப்பான் பூச்சியைக் கண்டால் Lம் என்பதைத் தெரிந்து கொண்டு ப்ளான்' பண்ணி அவரை தலை தெறிக்க ஓடவைத்துவிட்டான் எதிரி
LC660767's
வேடிக்கை 68
நவம்பர் 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெட்வொர்க் டெக்னோலஜியில் சிறந்த ஸ்வீடன் கம்பெனி மற்றும் வன்பொருள் துறையில் சிறந்த ஜப்பான் கம்பெனி.
சாம்கங், எல்ஜி - கொரியன் கம்பெனி.
மோட்டோரோலோ, ஹெவ்லெட் பக்கார்ட், 1-PHONE (அப்பிள்)- அமெரிக் கன் கம்பெனிகள்,
ஒ2- பிரிட்டன் கம்பெனி(A leading network provider in Europe)
|-PHONE – 53 (3LIII B 6)} &\IIIF, அமெரிக்காவில் மட்டுமே உபயோகப் படுத்தமுடியும் (Unlock செய்து உபயோ கப்படுத்தலாம்). ஆனால் இதுவும் l-POD போல் ஒரு வரலாற்றில் முக்கிய கண்டுபிடிப்பு என எதிர்பார்க்கப்பட்டு பொய்த்தது. முக்கியமாக Instant meSSenger, கட், கொப்பி, பேஸ்ட் வசதி கிடையாது. விலையும் அதிகம். அப்பிள் சொப்ட்வெயர்கள் மட்டுமே இன்ஸ்டால் GFll J|L| (1pl;}|1|s).
l-MATE நல்ல போன்தான். ஆனால் ஒரு மினி லப் - டொப் போல் உள்ளது. விலையும் அதிகம். ஆனால் டூயல் மோட் GSM + CDMA (3:5Tslsib | Js g) si ĝll JJ.
Black Berry- Research In Motion (RIM) 36år g563ö(BLillg|JL).
இதன் பிளஸ் - ஈ-மெயில் கிளையன்ட் உள்ளதால் மிக எளிதாக ஈ-மெயில் பார் க்கவும் ரிப்ளை அனுப்பவும் முடிகிறது.
நவம்பர் 2007
ஒ2-UK வில் முக்கிய நெட்வொர்க் ப்ரொவைடர். அதன் கிளை கம்பெனியே ஓ2 டோன்களைத் தயாரிக்கிறது. ஒ2 - ATOM Windows Media OS-5 g)6. இயங்குகிறது.
சோனி எரிக்ஸன்- இது டிசைன் அடிப் படையில் கல் குலேட்டர் போல் தோன்றினாலும் அனைவரும் விரும்பும் வகையில் இதன் புறத்தோற்றம் உள்ளது. இதன் மிக பெரிய சிறப்பு குறைந்த விலையில் நிறைய வசதிகள் உள்ள போன்.
பாட்டு கேட்க, கமரா மற்றும் Blue Tooth போன்ற பல வசதிகள் சிறப்பாக செயல்படுகின்றன.
ஆனாலும் சமீபகால சொனி எரிக்ஸன் போன்கள் எளிதில் பழுதடைகின்றன என்ற முறைப்பாடுகள் உள்ளன.
K- 750 அனைத்து வசதிகளும் கொண்ட சிறப்பான போன். இதற்கும் W-810 க்கும் வித்தியாசம் கிடையாது. K-750 66 Firm Ware 3)||13L. G.Fugisol) W-810 ஆக மாறிவிடும்.
இவற்றின் வசதிகள் 2 Mega Pixel Camera, TriBand, FM Radio, Blue Tooth, Infra Red, GPRS, USB.
W-850 சில எக்ஸ்ட்ரா வசதிகளுடன் அழகான டிசைன் கொண்டது.
-சுதன்.
"சோழ மன்னன், பாண்டிய
மன்னனைப் பார்த்து ஏன்
/ பின்வாங்கினான்?
“சோழ நாட்டில் பின்
இல்லை!"
"பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த 4 விலங்குகள்?" "அப்டாப் பூனை, அம்மாப் பூனை, ரெண்டு குட்டிப் பூனை!!”
ேைவடிக்கை

Page 37
ஓவியமும் காவியமும் 09
உங்கள் கவிதைக்கான முகவரி
198, 1st Floor, Galle Road, Dehiwela, Colombo.
முடிவுத்திகதி 20.11.2007
(ஓவிழும் காவியமும் - 03
61(6)||]] |ീ (്
}|}|}|}| L്ഞു). குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர். இவரின் நினைப்பும் அப்படித்தன். - சி.வாசுகி, கொக்குவில்
என்னை காணும் போது காணாத அச்சம்,
என் விம்பத்தை பார்த்தபோது ஏன் வந்தது.
@
எண்ணங்கள் அதிகமானால்
ஏற்றங்கள் இருக்கும் தான்
„“)],მზl:1gl}|II,
'இது றொம்ப ஓவர்
- த.தவரூபன், நல்லுர்
நிஜத்திறகு கிடையாத மரியாதை நிழலிற்கு கிடைக்கிறது! குழப்பமான உலகமடI.
எங்கே கிடைக்கும் இந்த கண்ணாடி..? என்னவளை முன்னிறுத்தி தரிசிக்கவேண்டும் நான்.
- ஜேனா
(G|:)!,
- க.கபிலன்,
காக்கைக்கும் தன் குஞ்சு பெ பூனையின் நினைப்பிலும் அது சிலிர்க்கும் சிங்கம் தான்..! ஆம்,
அது கண்ணாடியல்ல. பூனையின மனசு - கெஜனகன், சாவகச்சேரி
நம்மில் பலரும் இப்படித்தான்விம்பங்கள் தான் விஸ்பரூபம்.! நிஜமென்னவோ நீத்துப்போன புஸ்வானம்! - வே.ராதாலட்சுமி, யாழ்ப்பாணம்
7()
Bð FITu
ான்குஞ்சு!
நவம்பர் 2007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐ அறிவியலர் புனைகதை
5 நளினி சாஸ்திரி
விண்கலம் ஜூலா பரபரப்பானது. திடீரென்று தொடர்ந்து நியூட்ரினே அலை சிக்னல் வர ஆரம்பித்தது. அந்த திசை நோக்கி ஜூலா பயணம் பாதை மாறியது. அருகாமை கிரகம் சமீபத்தது. சிக்னல் அனுப்பும் கிரகம், உயிரினம் உள்ள கிரகம்,
இப்போது எச்சரிக்கையாக சிக்னல் மாறவே ஜூலா கொஞ்சம் யோசித்தது. தாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. புதிய கிரகத்திலிருந்த ஓர் உயிரினத்தை மட்டும் கவர்ந்து கொண்டு விரைந்து திரும்பிட உத்திரவு வந்தது. リ ஜூலாவின் ட்ரேப் அமைக்கப்பட்டது. புதிய கிரகத்து உயிரினம் சில நொடிகளில் இடம் பெயர்ந்து ஜூலாவின் ட்ரேப் கண்ணாடிக் கூண்டுக்குள் கண் விழித்தது.
本 来 米
"விண்கலம் ஜூலாவிலிருந்து செய்தி வந்துள்ளது. நமது திட்டம் ஏலியன் வெற்றி அடைந்து விட்டது. அதோடு இல்லாமல் அந்த கிரகத்து உயிரினம் ஒன்றினையும் ஜூலா கலம் சுமந்து வருகிறது. இன்னும் சில நாட்களிலே நாம் வேறு கிரக உயிரைப் பார்க்கலாம்." "திட்டம் ஏலியன் வெற்றி கொண்டாடப்பட வேண்டும். எல்லோருக்கும் செய்தி செல்லட்டும். வேறு கிரக விருந்தாளியை வரவேற்க தயாராகட்டும்"
”அந்தக் கிரகம் மிக முன்னேறியதாக இருக்க வேண்டும். நம் ஜூலாவை மடக்கி சமிக்ஞை செய்து இருக்கிறார்கள். அதன் பிறகே ஜூலா அந்தக் கிரகத்தைக் கண்டுள்ளது. ட்ரேப் உபயோகித்து ஓர் உயிரினம் மட்டும் ஜூலாவுக்குள் கொண்டு வரப்பட்டு கண்ணாடிக் கேப்ஸ்யூலில் பாதுகாப்பாக அழைத்து வருகிறார்கள். விருந்தாளியின் புத்திசாலினம் புரிந்து நடத்த வேன்டியது நம் கடமை. கோபத்துக்கு ஆளாகி அந்தக் கிரகத்தின் வலிமை தெரியாமல் சிக்கலில் மாட்டக் கூடாது.”
"வேறு கிரக அறிவுடைய மனிதர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்வது நமது அறிவைப் பெரிதும் விரிவடையச் செய்யும் என்பதில் கூட ஐயமில்லை." "நாம் தொடர்பு கொள்ளும் நாகரிகம் நமது நிலையில் கூட இருக்கலாம். அல்லது நமது இயல்பில் நிலைக்கு முற்றிலும் மாறுபட்டு விளங்கும், பிரபஞ்சத்தின் வேறு பகுதியில் வசிப்பவர்களாகவும் இருக்கலாம். அவர்களின் தொழில்நுட்பம் மாறுபட்ட வழிவகையில் வளர்ச்சியடைந்திருக்கலாம். தொடர்பு நவம்பர் 2007 7 ேேவடிக்கை

Page 38
முறைகளும் அபிவிருத்தியடைந்திருக்கலாம். எனில் அவர்களிடம் தகவல் நிச்சயம் நமது பிரபஞ்ச அறிவை விரிவடையச் செய்யும்.”
"எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் ஆணையிடுகிறேன்” தலைமையகம் தகவல் தந்தது.
"நமது அறிவின் வரம்புக்கு அப்பாற்பட்ட எந்த சிந்தனையும் வெறும் பூகம்தான். வரும் கிரகத்து உயிர் நம்மிலிருந்து பெரிதும் வேறுபட்டும் மாறுபட்ட தனிமங்களினால் ஆனதாகவும் இருக்கலாம்.”
"எப்படியும் வேறு நாகரிகத்தைக் குறிக்கும் அவர்கள் உயிரியல் வகையிலான பிராணியாகவே இருக்க முடியும். அவர்களும் நம்மைப் போன்ற தேற்றமுடையவர்களாக இருப்பார்களோ?”
"அந்தக் கிரகத்து நாகரிகம் நம்முடன் தொடர்பு கொள்ள விழைகிறதா இல்லையா என்பது முடிவாகாமல் அக்கிரக உயிரைக் கவர்ந்து வருவது சரியாகப் படவில்லை."
"நம்மைவிட அவர்கள் பலசாலிகளா என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல், அப்பிராணிகள் கவனம் கவர்ந்தது பைத்தியக்காரத் தனமான முடிவு."
"இது தவறான முடிவாக இருந்தால் நமது குலம் முழுவதற்கும் எத்தகைய விளைவுகள் வேண்டுமானாலும் உண்டாகும்.”
”நமது அறிவை விரிவடையச் செய்யும் பொருட்டு இதிலுள்ள அபாயத்தைப் புறக்கணிப்பதே புத்திசாலித்தனம் உலக நாகரிகங்கள் முன்னேறி வரும் நிலையில் நாம் மட்டும் தனிமைப் பட்டு விடக் கூடாது. விரைவாகவோ தாமதாகவே நமது பிரச்சனைகளை பிரபஞ்ச அளவில் தீர்க்க முயல வேண்டும். அதற்கு இது ஓர் ஆரம்பம்."
"பிரபஞ்ச அறிவிலிருந்து தப்ப முடியாது. மேம்பாடு அடைந்த அந்த உலக
விஷயம் தெரியுமா?
ஒளிந்து கொள்ள முயன்றாலும் அவை நம்மை மோப்பம் பிடித்து பழிவாங்க வரலாம்.”
"பழி வாங்குவார்கள் என ஏன் எதிர்பார்க்க வேண்டும்? அவர்கள் நாகரிகம்
விவேடிக்கை 72 நவம்பர் 2007
 
 
 
 
 
 
 

லட்சிய மாதிரி அமைப்பாக ஏன் இருக்கக் கூடாது. முதலாவதாக விலை மதிப்பற்ற சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி. இவற்றை நமக்கு அளிக்கலாம். சில விஷயங்களில் நம்மை எச்சரிக்கை கூட செய்யலாம். பிரபஞ்சத்தில் நமது வரலாறு இன்னும் முடிந்துவிடவில்லை. பரிணாம வளர்சியின் அனைத்து சாத்தியக் கூறுகளையும் நாம் பயன்படுத்துவதில்லை.”
"அவர்களுக்கு நம்மைப் பற்றி அக்கறை காட்ட வேண்டிய அவசியம்
உணவுக்காக அக்கறை காட்டலாம்"
"முதல் காரணம் சாத்தியம்தான். நம்மிடம் அக்கறை காட்டாவிடில் நாம் பத்திரமாக இருக்கலாம் ஆனால் அது நமக்கு அவமானமாக இருக்கும். கடைசிக் காரணம்தான் முக்கியமானது. அதில் அபாயம் அதிகம். சிக்கலும் அதிகம்"
விஞ்ஞானிகள் குழு விவாதத்தில் இறங்கியது.
:}; :: *k,
"நமது கிரகத்தின் அழிவின் ஆரம்பம் திட்டம் ஏலியன். அதனை நாம் எவ்வளவோ எதிர்த்தும் நிறுத்தாமல் தொடர்ந்தார்கள். விரைவாக வேறு கிரக உயிர் ஒன்று வருகிறது. நம்மை அழிக்கவே அது வருகிறது."
"மிகச் சரி. முன்னேறிய கிரகம் என்று வேறு கேள்வி. அந்த உயிர் மிகப்பெரிய அளவில் வேறு இருக்கிறதாம். பார்க்க வினோதமாகவும் உள்ளதாம். ஜ"லா சில தினங்களில் திரும்பி விடும். பார்த்தால் தெரிகிறது.”
"ஒரு வேளை நம்மைப் படைத்தவர்களே அந்தக் கிரகத்தினராக இருக்கலாம்." "படைத்தவர்களையே சிறை பிடித்து வந்தால் நம்மை அழிக்காமல் விடவா போகிறார்கள்?"
ஒரு பிரிவு பயத்தால் தூக்கம் தொலைத்தது.
来米 米
"உனக்குத் தெரியுமா” ஜூலா கலத்தில் வேறு கிரக உயிரினம் வருகிறது." "அதற்கு இன்னும் இரண்டு தினம் உள்ளதே! தெரியாமல் யாரேனும் நவம்பர் 2007 73 வேடிக்கை

Page 39
இருந்தால்தான் ஆச்சரியம்"
"ஒரு விஷயம் தெரியுமI? வருவது கடவுள். இது புரியாமல் எல்லாரும் இருகிறார்கள். கடவுள்தான், நம்மைப் போல பலமடங்கு உயரமாக இருப்பார்” "நீ சொல்லுவதும் சரிதான். அந்த உயிரினம் கூட நம்மை விட மூன்று மடங்கு பெரிதாக இருக்கிறதாமே!" "அந்த உயிரின் உடலில் ரோமம் கிடையாதாம்.”
"கடவுளேதான்! கடவுள் என்ன FIட்பிடுவார்? இவர்கள் அதெல்லாம் தயார் செய்து விட்டார்களா? கடவுள் மொழி என்'
"அதெல்லாம் கவலையில்லை. நமது மொழிமாற்றி நம் மொழிக்கு மாற்றிவிடும்." "இரண்டு நாளில் வரப்போகும் கடவுளிடம் என்ன கேட்கலாம்?" இப்படி ஒரு பிரிவு தர்க்கம் செய்தது.
: : :
"இதெல்லாம் ஏமாற்றுவேலை, வேறு கிரகமாவது உயிராவது ஐ"லா கலம் எங்கும் செல்லவில்லை. நமது கவனத்தைத் திருட்ட முயற்சிக்கிறார்கள்."
"எப்படியும் நாளைக்கு அவர்கள் சொன்ன நாள் ஜுலா வரும் போய்த்தான் பார்க்கலாமே!”
"ஐ"லா வரும் ஆனால் எந்த உயிரும் வராது. வேறு வேலை இல்லாவிட்டால் நீ போ. நான் நேரத்தை வீண் செய்ய விரும்பவில்லை."
ஒரு பிரிவு நம்ப மறுத்தது.
卡 米 米
அந்த தினம்! ஜூலா வரப் போகும் தினம்! வேறு கிரக உயிர் வரப் பேரும் மகத்தான தினம்! கூட்டம் எங்கு பார்த்தாலும் நிரம்பி வழிந்தது. நிற்க இடமில்லை. தொங்க இடமில்லை! எதிர்பார்ப்பு!
எதிர்பார்ப்பு பரபரப்பு பயம்! எல்லாம் கலந்த உணர்ச்சி காற்றில் பரவியிருந்தது. சரியாக 12 மணிக்கு தலைமை விஞ்ஞானி நகர அதிகாரிகளுடன் மற்ற
拂
ம் ஆவல் நிறைந்த ஆனால் பொறுமையுடன் கூடிய எதிர்பார்ப்புடன் நின்றிருந்தது.
பத்து நிமிடம் கழித்து உயர்ந்த சுருதியுடன் ஓர் ஒலி கிளம்பியது. சமாதான ஒலி.
தரைக்கு வரும் விண்கலம் உருவத்தில் விரைவாகப் பெரிதாக்கிக் கொண்டு கீழே இறங்கியது. அது மெதுவாக மெதுவாக குறிப்பிட்ட மேடையில் மெல்லத் தரை தொட்டு கம்பீரமாகக் காட்சியளித்தது.
ேேவடிக்கை 74 [55)||If IT 2007
 
 
 

நிசப்தம்!
விண்கலக் கதவுகள் விரிந்து, உள்வாங்கி திறந்து வழிவிட்டது. ஒரு கண்ணாடிக் கூண்டு நகர்ந்து வெளியே வந்தது. அனைத்துக் கண்களும் இமைக்), மறந்தன.
கூண்டு திறந்தது. கற்றிலும் பாதுகாப்பு ரவி இருந்தது. "இங்கு வருகை தரும் வேறு உலகின் முதல் உயிருக்கு எங்கள் சார்பில் வந்தனம், எங்கள் கிரகம் நட்புடன் உங்களை வரவேற்கிறது. பிரபஞ்ச சமாதானம் வளரட்டும். உங்கள் வரவு நல்வரவாகட்டும்!" மொழிமாற்றி தன் பணி செய்தது. மகிழ்ச்சி ஆரவாரமும் கைத்தட்டல்களும் பெருமளவில் இருந்தன. பல வண்ண வெடிகள் தலைக்கு மேல் வெடித்தன. தலைவர் தனது கைகளில் பட்டுத் துணியினால் சுற்றிய அடையாளப் பரிசு ஒன்றை வைத்திருந்தார். முதல் விண்வெளித் தொடர்பு ஸ்பரிசம் பெறப் போகும் அவர் கூண்டில் நுழைந்து அமர்திருந்த அந்த உயிரிடம் கை குலுக்கினார். "உங்களை வரவேற்பதில் குறைகள் ஏதேனும் இருந்தால் பொறுக்கவும். தங்கள் கிரகம் எது? தங்கள் LLITij?”
கூண்டிலிருந்து ஆறடி உயரத்திற்கு எழுந்து, கைகளை நீட்டி, சோம்பல் முறித்து,
"மூதாதையரே வலக்கம்' பூமிக் கிரகத்திலிருந்து வந்திருக்கும் நான் ஒரு மனிதன். என் பெயர் அசோகன்!” என்ற அவன் சுற்றிலும் லட்சக் கணக்கில் கூடியிருந்த ஒரடி உயரக் குரங்குகளை விநோதமாகப் பார்த்தான். இ
ADWertisemen
gag:An Aerfsemier Merky
இது ஒரு விளம்பரப்
பத்திரிகை
வாங்க/விற்க Ve- கல்வி t. சாரதி பயிற்சி வாடகைக்கு கணினி பழுது பார்த்தல் சேவை ('g6) ഖ ܛ< திருமணசேவை
96ôI60)|LĎ U6u).
வகைப்படுத்தப்பட்ட சிறு விளம்பரங்கள் இலவசமாக பிரசுரிக்கப்படும்.
குதிகளிற்கும் விளம்பர தேவை.
ஒவ்வொரு من 60 طلاب நாட்டிலுள்ள அனைத்துப் ப
நவம்பர் 2007 75 ேைவடிக்கை

Page 40
கும் ஆ வருமென்று
"டுவென்டி-20 போட்டிகள் - முழுக்க ழுக்க இளைய வீரர்களுக்கானவை என்பது என்னுடைய கருத்து. வேகம் -வேகம்-வேகம்! ஒரு கணம்கூட ஒயா மல் போராடவேண்டிய கள நிலமை கள் முத்த வீரர்களுக்கு (அதுதான் - பழசுகளுக்கு) சவாலானவை! எனவே டுவென்டி-20 போட்டிகளை இளையவிரர் களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு பழசு கள் கொஞ்சம் ஒதுங்கிக்கொள்ளவேண்டியது அவசியம்,
நடந்து முடிந்த தொடரைப் பொறுத்தவரையில் ஜாம்பவான்களையெல்லாம் பொடிப்பயல்கள் பந்தாடியது பாராட்டப்படவேண்டியது. இன்னுமொரு முக்கியமா கக் குறிப்பிட வேண்டியது - கண்ணுக்குக் கிடைத்த குளிர்ச்சி! (சிக்ஸர், பவுண்டறிகளோடு - இளைஞ - இளைஞகள் ஆடிய நடனத்தையும் தான் சொல்கிறேன்). மற்றப்படி, 20-20 ஓவர் போட்டிகளால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ஆபத்து வருமென்று எனக்குத் தோன்றவில்லை. 20-20 போட்டி கள் ஒரு சின்னத்திருவிழா!
வீட்டில் பேரப்பிள்ளை பிறந்துவிட்டால் அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் மவுசு குறைவது போல்தான் தோன்றும், ஆனால் அவர்களும் இருந்தால்தானே குடும்பம் முழுமை பெறும்!
- ;" களே ஏ. 貂 அடடா. கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆதங்கம் உங்கள் கேள்வியில் தெரிகிறது. தப்புத்தான்! ஆனால் உங்கள் காதல் புனிதமானதென்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? செருப்பைக் காட்டித் தம் வெறுப்பைக் காட்டினாலும் உங்கள் காதலின் சிறப்பை உணர்த்தி அவர்கள் மறுப்பை மாற்றவேண்டிய உங்கள் பொறுப்பை மறக்கலாமா..?
(36) 19:E60).T. 76 நவம்பர் 2007
 
 
 
 

யாழ்ப்பாணம்.
8.3: 筠、犯 தரிகிறதே 288888*** :::: ణ ஏறக்குறைய நூறு ஆண்டுகள்தான் ஆகின்றது.
ஆனால் அதற்கு முற்பட்ட காலங்களில் வன்முறைகள் இடம்பெறவில்லையா? சரி. அப்படியே இன்றைய சினிமா வன்முறையை தூண்டுவனவாக இருந்தாலும் இதைப் பார்த்துத்தான் மனிதர்கள் வன்முறையில் இறங்குகின்றார்கள் என்பது மனிதனுக்குப் பகுத்தறிவு உள்ளதென்ற கருத்தை கேலிக்கூத்தாக்கி விடாதா? ஒருபகுதி சமுதாயத்தால் உருவாக்கப்படும் சினிமாவை பார்த்து இன்னொரு சமுதாயம் வன்முறைக் கலாசாரத்தில் ஈடுபடுபான்ால், வரும் அந்த சமுதாயம் சுயபுத்தி இல்லாத முட்டாள்தனமான சமுதாயமாகத்தான் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட சமுதாயம் இருந்தென்ன அழிந்தென்ன.போகட்டும் விடுங்கள்.
懿
ஸ்ேைபு? နှီး :- XXXXXXXX8:8 : , 滚
காலை 8.00 மணிக்கு என்னுடைய சேர்ட் பொக்கட்டில் 4000 ரூபா வைச்சி ருந்தேன். இப்ப 10.30 தான் ஆகுது. இன்னுமொரு 100 ரூபா கடன் கிடைக்குமா?
tத்துறை புததுtர பெறு:/ 8802 , , , , " XᏱ:888888Ꭹ, * ,
'சிவாஜி' படம் ரசிகர்களிடம் அடித்தது - கொள்ளை!
பள்ளிக்கூடம் படம் பாழடைந்துபோன தமிழ் சினிமாக் கட்டிடத்துக்கு அடித்தது - வெள்ளை!
প্ত 缀
&'x ஒல: *:::: முட்டாளாய்ப் போனே
பழக்கம் எதுவும் கிடையாது!
உங்களது கேள்விகள் வந்துசேரவேண்டிய முகவரி:
இம்Uன் பதில்கள், 'வம்பன் பதில்கள் - வேடிக்கை’,
198, 1st Floor, Galle Road, Dehiwela, Colombo.
நவம்பர் 2007 77 வேடிக்கை

Page 41
இ தொழில்நுட்பம்
。
நீங்கள் அடிக்கடி கொம்ப்யூட்டர் பிரி ன்ட்டரை பயன்படுத்துபவரா? அப்படி 1ா
னால், இனி குறைத்துக் கொள்ளுங் ᏪᏂᎦii !
சிகரெட் புகையை சுவாசித்தல்
ஏற்படும் பாதிப்பு, பிரின்ட்டர் நெடியிலும் உள்ளது என்று, அவுஸ்திரேலிய மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ள னர். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ் லாந்து பல்கலைக்கழக நிபுணர்கள். இதுகுறித்து ஆராய்ச்சி நடத்தி சில தகவல்களை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் அறிக்கையில் கூறியிருப் பதாவது சிகரெட் பிடிப்பவர்களுக்கு, அவர்கள் சுவாசிக்கும் நிக்கோடின் புகையால், நுரையீரல் பாதிக்கிறது. புகைபிடிப்பவர்கள் விடும் புகையால், மற்றவர்களுக்கும் பாதிப்பு வருகிறது. சிகரெட் புகையால் ஏற்படும் பாதிப் புக்கு சமமான பாதிப்பு, பிரின்ட்டர் நெடியால் ஏற்படுகிறது. பிரின்ட்டர் இயங்கும்போது கிளம்பும், புற ஊதா கதிர்கள், மனிதர்களின் நுரையீரலில் போய்ச்சேருகின்றன.
பிரின்ட்டரில் உள்ள டோனர் சாத னத்தின் மூலம் கிளம்பும் நெடி, சுவா சக்குழாய் வழியாக நுரையீரலை எளி தில் போய்ச்சேருகிறது. சிகரெட் புகை துகள்கள் போல, பிரின்ட்டர் புகை, நுரையீரலில் பாதிப்பைத் தருகிறது. கான்சர் அளவுக்கு இது பாதிப்பை ஏற் படுத்தும், சுவாசக்குழாயில் எரிச்ச லையும் ஏற்படுத்தும். அலுவலகத்தில்
பிரிண்ட்டரை
வேலை செய்யும்போது, அடிக்கடி பயன்படுத்தினால், அந்த அறையில் உள்ளவருக்கும் இந்த
பதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சாதாரண அளவில் பயன்படுத்தப் படும் "டோனர் சாதனங்களால், பெரிய பாதிப்பு வராது. ஆனால், கிரபிக்ஸ் உட்பட பல தொழில்நுட்ப பணிக ளூக்கு சக்தி வாய்ந்த “டோனர் பயன் படுத்தப்படுவதால், ஆபத்து அதிகமா கிறது.
அதேவேளை போட்டோ பிரதி தொடர்ந்து எடுக்கும் போதோ அல்லது பிரின்டரை அருகில் வைத்து அதிக அளவில் தொடர்ச்சியாக பிரிண்ட் பண்ணும்போதோ தலையிடி ஏற்பட 6)IILs).
இந்த பிரின்டர் டோனரில் இருக்கும் பெளடரோ போட்டோ பிரதி எடுக் கையில் பயன்படுத்தும் பெளடரோ கண்ணில்பட்டால் பாதிப்பு ஏற்படும்.
4-5 பாவித்த டோனர்களைச் சேகரி த்து அதனுள் தேங்கியிருக்கும் மீதி துகள்களை ஒன்றினுள் ஒன்று திரட்டி அதை ஒரு டோனராக பாவிக்கும் பழக்கம் நம்மில் பலரிற்கு இருக்கும். இவ்வாறான செயற்பாடுகளின்போது கண் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
கனவே, பிரிண்டர்களைப் பயன் படுத்தும்போது - இனியாவது அவதா னத்துடன் நடந்துகொள்வது அவசியம்
வேடிக்கை
78
நவம்பர் 2007
 
 
 
 
 
 

| இண்று நாடு
புதிதாய்ப்
பிறந்தேன்; காதலும் எனக்குத்
தாtலது
ܝܨ
،،، ظL
ஞாபக

Page 42
வேடிக்கையில் உங்கள் வர்த்தக விளம்பரங்களை பிரசுரிப்பதற்கான கட்டண விபரம்.
4 Colour 2 Colour 1 Colour
பின் அட்டை OOOO
முன் அட்டை உள்புறம் 7000/= {}{}{}/=
பின் அட்டை உள்புறம் 5000/= 350 ()/ = 3000/=
முழுப் பக்கம் 2000/= 1500)=
அரைப் பக்கம் I5(OW- 850/=
கால் பக்கம் OOO/= 500/=
மாதிரி சந்தாப் படிவம்
வேடிக்கை சஞ்சிகையினை நான் தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ள விரும்பு கிறேன். அதற்கான கட்டணமாக
ஒரு வருடம் ( ) இரண்டு வருடம் ( )
(b. (OC) (b. 1200
இனை செலுத்துகிறேன்.
முகவரி uuS DS LL S D S S D DD DS DD D LLLLLLL LLTT DDuSu S S SSS S iiDi uuS
தொலைபேசி .
நான் இத்துடன் . இலக்க காசோலையை அல்லது காசுக்கட்டளையை வேடிக்கை என்ற பெயருக்கு அனுப்பி வைக்கிறேன்.
குறிப்பு: காசுக்கட்டளைகளை தெகிவளை தபாலகத்தில் மாற்றத்தக்கதாக அனுப்பி வைக்கவும்,
வேடிக்கை,
198, 1st Floor, Galle Road, Dehiwela, Colombo.
இச் சஞ்சிகை கொழும்பு நெகிளை, காபி விநியில் 198ம் இலக்கம் முதலாவது தளத்தில் அமைந்துள்ள வேடிக்கே பத்திரிகை நிறுவனத்தினரால் ப3-11-207 அன்று நாட்டு வெளியிடப்பட்டது.
வேடிக்கை 8) நவம்பர் 2007
 
 

ாய இதழ்களை
மிர்ரரிதழ்
■■』■ *또년험년여_
īs||
ALL)
sae『|sāls.《酒
լք:
எமது இணையத்தளத்தில்
[[T#T
GET
FNs siglafia
சஞ்சிகையிரள் முள்ள
பெற்றுக்
ഖ്യഭിജ്
ՃցIIլfլ
இE)
I II
W.S.
-· - |T* 혁/-/-/-/-/ | : // |( |- - ·| _|

Page 43
in Lions Club Of Kot தென்னிந்தி நட்
Dec 29 டு சுகததாச உள்ளக அ
SUR]*
|65250TC551 幽
GIpomUt5ITT
|AUGూడాTummah
குழந்திைருட்திரங்கள்
ആക്ടു ശ്രമജീ
 
 

ah908) (Circle 303(E31 சத்திரப் Uட்ட\மீெ ஆnள்ளும்
W திடுதாருபுகள்கள்
கர்கள்மற்றும்
Iණ්ඛශ්‍රීjණ්ඩෝසීඝ්‍රග්‍රියාශී
PrmLeh org Uummam :
oooსს. சுடர்ஒளி