கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2006.04

Page 1

இவிலை:30/8

Page 2
Best Compl
(
"So %
“Dosa
No. 91, Rajapaksha Broad Wa Negombo. Tel: 031-2238792
 
 
 
 
 

ith
2merm f (From:
%/%;"
i King'
y, Properiter Mr.Jeyarajah Mobile : O777-301.4210

Page 3
கொழும்புத் தமிழ்ச்ச திருவள்ளுவர் ஆண்டு : தி
மெய்ப்பொருள் காண்பதறிவு
ஒலை 31
ஆசிரியர் குழு : பெ. விஜயரெத்தினம் வ. சிவஜோதி
தெ. மதுசூதனன் கலாநிதி வ. மகேஸ்வரன் தா. சண்முகநாதன் எஸ். எழில்வேந்தன் ந. கணேசலிங்கம் க. உதயகுமார் சி. அமிர்தலிங்கம்
தொகுப்பாசிரியர் : த. கோபாலகிருஸ்ணன்
அச்சுப்பதிவு : கீதா பதிப்பகம் கொழும்பு-13 தொலைபேசி 0777 350088
அட்டைப்படம் : ஞான குருபரன்
வெளியீடு : கொழும்புத் தமிழ்ச்சங்கம் 7/57 வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை) கொழும்பு - 06, இலங்கை. தொலைபேசி: 011-2363759 தொலைநகல்: 011-2363759 இணையத் தள முகவரி : www.colombotamilsangam.org மின்னஞ்சல் முகவரி : tamilsangam (asltnet.lk
(ஒை
ஒலிை
இலக
வெளி
ઠીક {
ήτότε
போதி
28)
வடிவ
ഖ6
31
6p6
என்ற நிதிய
நிதி
ஆல
2D 0
வாய்
வெ6

GD
ங்க மாதாந்த இதழ் , பி. 2037lமேழம் (ஏய்ரல்) - சித்திரை 2006
லை" யின் கன்னி இதழ் (ஓலை - 1) 22.03.2001 து விரிந்தது. இருபத்தியோராவது (ஓலை 21) வரை எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடக ாளர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், ழும்புத்தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்கும் களிடமிருந்து இயன்ற அன்பளிப்புக்களைப் றுக்கொண்டு இலவசமாகவே அனுப்பிவந்தோம். 2004 ஜனவரி மாத இதழிலிருந்து (ஓலை 22) லகுறித்து விநியோகித்தோம். யூன் 2004 வரை ல 27) இருபத்தேழு இதழ்களை விரித்த Uயின் வரவில் தடங்கல் ஏற்பட்டது. ஈழத்தில் க்கியச் சிற்றிதழ் ஒன்றினைக் கிரமமாக ரியிடுவதில் ஏற்படக்கூடிய பொருளாதாரச் கல்கள் உட்பட பொதுவான ஏனைய சினைகளுக்கு ‘ஓலை’ யும் உட்பட்டது. இருந்த நிலும் கூட 2006 ஜனவரியிலிருந்து (ஒலை மீண்டும் , மிடுக்குடன் ‘ஓலை’ புதிய பமைப்புடனும் புதிய ஆசிரியர் குழவினருடனும் ரிவரத் தொடங்கியதன் விளைவுதான் ஒலை இன் வரவும் ஆகும். ‘ஓலை’ இனியும் மைபோல் மாதாந்தம் கிரமமாக இதழ்விரிக்கும் நம்பிக்கையும் பிறக்கிறது. அதை நிறைவேற்ற குெந்தவர் பொற்குவை (அன்பளிப்புக்கள்) தாரீர்! குறைந்தவர் காசுகள் (சந்தா) தாரீர்! ன்மையாளர் (கொழும்புத் தமிழ்ச் சங்க ப்பினர்கள்) உழைப்பினை நல்கி அதுவுமற்றவர் ச் சொல் அருளி இப்பெருந்தொழில் (ஓலை’ ரியீடு) நாட்டுவம் வாரீர்!
த் 2006

Page 4
G.)
() விளைச்சல் (குறுங்காவியம்)
0 களஞ்சியம்
0 சொல்வழக்குக் கையே
0 விமர்சனம் காணாமல்
U g56ory 0 தமிழில் வரிசை நூல்க
V for(6b....
முன்னோடி - திருக்கோணம6ை
வார்த்தைச் சிறகினிலே.
ஆழத்தை அறியும் பயணம்
நூல் மதிப்பீடு
ய வியக்க வைக்கும் தப
()
கவிதைகள் - மாணிக்கவாசக
முதுர் கலை மேகம்
சுறாவசிய மந்திரவாதிகள் தமிழ் இலக்கியத்தினூடு இஸ்ல
சங்கப்பலகை (நிகழ்ச்சித் தொ
:
மறுவோலை
ஒலையில் இடம் பெறும் ஆக்கங் பொறுப்பாவார்கள். கருத்தக்
(சித்திரை 2006)

(GEGT.
ல த. கனகசுந்தரம்பிள்ளை
Sழர் அறிவியல்
ர் கார்த்திகா, தாமரைத்தீவான்,
ாமியத் தமிழ் இலக்கியம்
குப்பு)
களுக்கு அவற்றைப் படைத்தவர்களே களும் அவர்களையே சாரும்.

Page 5
குறுங்காவியம்
Sgiliams
(கவிஞர் நீலாவணனின் “வேளான
அறிமுகம்
கவிஞர் நீலாவணன் மட்டக்களப்பு மண்ணின் வாழ்க்கையை இலக்கியமாக்க எத்தனித்தார். அதன் விளைவே அன்னாரின் வேளாண்மை’க் காவியம். ஈழத்தமிழ் பிரதேசங்களில் தனித்துவம் வாய்ந்ததான மட்டக்களப்பின் பாரம்பரியங்களையும், சடங்குகளையும். அம்மக்களின் வஞ்சகமில்லா வாழ்க்கை முறைகளையும் வைத்துக் காவியம் ஒன்றினை வடிப்பதற்காகவே நீலாவணன் “வேளாண்மை'யை விதைத்தார். ஆனால் வேளாண்மைக் காவியத்தை நிறைவு செய்து அதன் முற்றிய முழு விளைச்சலையும் காணுமுன்பே கதிர்’ப் பருவத்திலேயே அவரின் உயிரைக் காலன் கவர்ந்து சென்று விட்டான். 'வேளாண்மைக் காவியத்தின் 'குடலை 'கதிர் ஆகிய இரு பகுதிகளையே அவர் எழுதி முடித்திருந்தார். அவையும்கூட கையெழுத்துப் பிரதியாகவே அவர் வீட்டில் கிடந்தது. கவிஞர் நீலாவணன் 11.01.1975 இல் காலமானார். 1980 களின் காலப்பகுதியில் ஈழத்தின் முதுபெரும் பிரபல எழுத்தாளர் காலஞ்சென்ற வ. அ. இராசரத்தினம் அவர்கள் கல்முனைப் பிரதேசத்திற்குச் சென்றிருந்தபோது கவிஞர் மு.சடாட்சரன் அவர்கள் கவிஞர் நீலாவணன் எழுதி முற்றுப் பெறாத * வேளாண்மை’ எனும் காவியத்தை நீலாவணனின் மனைவியிடமிருந்து பெற்று அவரிடம் படிக்கக் கொடுத்தார். அப்போது வ.அ. அவர்கள் மூதூரிலே சிறு அச்சுக்கூடம் ஒன்றிற்குச் சொந்தக்காரனாக இருந்தார். அதனால் 'வேளாண்மை' (குறுங்காவியம்) எனும் நூலின் முதற்பதிப்பு 1982 செப்டம்பரில்
(ஒலை3)

G)
MFFF)
- செங்கதிரோன்
ன்மைக் காவியத்தின் தொடர்ச்சி)
தங்கம் வெளியீடாக (தங்கம் வெளியீடு. திரிகூடம், மூதூர்) வெளிவந்தது. நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள வ.அ.இராசரத்தினம் அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்.
‘இக்காவியத்தின் மூலம் இயந்திர நாகரீகத் தாற் கற்பழிந்து விடாத மட்டக் களப் பின் குமரியழகையும் மட்டக்களப்பாரின் விருந்திருக்க உண்ணாத வேளாண்மைத் தனத்தையும் வெளியுலகிற்குக் காட்டத் தான் நீலாவணன் ஆசைப் பட்டிருக்கின்றார் எனத் துலாம்பரமாகிறது.”
“தான் ஆசை பற்றி அறைய வந்ததை நீலாவணன் கம்பகாம் பீர்யத் தோடு விருத்தப்பாற்களாற் பாடியிருக்கிறார். மட்டக்களப்பின் பழகு தமிழ்ச் சொற்கள் அவரின் கவிதா காம்பீர்யத்திற்குக் கைகட்டிச் சேவகம் புரிந்து இலக்கிய அந்தஸ்ததைப் பெற்றிருக்கின்றன. ஏடறியாப் பெண்களும் கவி இசைக்கும் தெற்கு மட்டக்களப்பின் கவிவளம் இக்காவியத்தின் இலக்கணக் கரைகளுக் குளடங்கிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியாகப் பாய்கிறது.”
“நூறு நூறு ஆண்டுகளுக்கும் பின்னால் வரும் நம் சந்ததியினர் மட்டக்களப்பைத் தரிசிக்குமாறும் அழகான காவியத்தைத் தந்திருக்கிறார் கவிஞர் நீலாவணன்.”
U VU U
06.07.1998 முதல் 12.07.1998 வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்திய ஈழத்துக் கவிஞர் வாரம் நிகழ்ச்சியின் கீழ் நாளொரு கவிஞரைப் பாராட்டி நிகழ்வுகள் இடம் பெற்றன. முதல் நாள் நவாலியூர்

Page 6
GO சோமசுந்தரப்புலவர், இரண்டாம் நாள் கவிஞர் சோ. நடராசா, மூன்றாம் நாள் ஆ.மு.ஷரிபுத்தீன், நான்காம் நாள் கவிஞர் மஹாகவி, ஐந்தாம் நாள் கவிஞர் சில்லையூர் செல்வராசன், ஆறாம் நாளன்று (11.07.1998) கவிஞர் நீலாவணன் ஆகியோரின் உருவப்படங்கள் திரைநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் பற்றிய சிறப்புச் சொற்பொழிவுகளும் இடம் பெற்றன. கவிஞர் நீலாவணன் பற்றிய சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தும் வாய்ப்பைக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனக்கு வழங்கியிருந்தது. அதனால் ஏற்கனவே பல முறை படித்துச் சுவைத்த நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தை மீண்டுமொரு முறை நான் படிக்க நேர்ந்தது. அன்று நான் நீலாவணன் பற்றி நிகழ்த்திய சுமார் ஒன்றேகால் மணிநேரச் சொற் பொழிவு அனைவராலும் பாராட்டப் பெற்றதுடன், நீலாவணன் பற்றிய முழுவாசிப்புக்கான அருட்டுணர்வையும் அவையில் ஏற்படுத்தி யிருந்தது என்பது மிகைப்பட்ட கூற்றல்ல. மேலும், 05.05.2000 இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பி.ப.5.30க்கு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நடை பெற்றுவரும் நூல் நயம் காண்போம். நிகழ்ச்சித் தொடரின் 34வது நிகழ்வில் (24.01.2001) நீலாவணனின் “வேளாண்மைக் காவியத்தை நான் நயம் கண்டேன். என்னுடைய நூலி நயத்தால் மிகவும் கவரப்பெற்ற எனது நண்பரும் கொழும்புத் தமிழச்சங்கத்தின் முன்னாள் தலைவர்
செயலாளரும் தேசியகலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்தவருமான சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்கள் நூல்நயம் காண்போம் நிகழ்ச்சியின் பின்பு என்னைச் சந்தித்து நீலாவணனின் “வேளான்மைக் காவியத்தைத் தொடர்ந்து எழுதும்படி அன்போடு கேட்டுக்கொண்டார். நீலாவணனின்
சித்திரை 2006

கவிதையோட்டத்தோடு இயைந்து எப்படி அக்காவியத்தைத் தொடர்ந்து எழுதுவது என்று சற்று உள்மனம் உறுத்திய போதிலும் நீலாவணன் மீது எனக்கிருந்த பிடிப்பின் காரணமாக அவரது வேண்டுகோளுக்கு இசைந்தேன். இதனைப் பின் நான் நீலாவணனின் மகன் எழில்வேந்தனிடம் தெரிவித்தபோது அவரும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கெண்டது மட்டுமல்லாமல் நீலாவணன் அவர்கள் மனம் கொண்டிருந்த காவியத்தின் இறுதிப் பகுதியின் கதைச் சம்பவங்களையும் சுருக்கமாக எனக்குச் சொல்லி என்னை எழுதும்படி உற்சாகப் படுத்தினார். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் இலக்கியச் செயலாளர் - துணைத் தலைவர் - செயலாளருமான நண்பர் கவிஞர் ஜின்னாஹம் ஷரிபுத்தீனும் என்னை எழுதும்படி அடிக்கடி தூண்டிக் கொண்டிருந்தார்.
இத்தகையதோர் பின்புலத்திலேயே கவிஞர் நீலாவணனின் “வேளாண்மைக் காவியத்தின் மீதிப்பகுதியை விளைச்சல் என்ற பெயரில் எழுதத் துணிந்தேன்.
U U U
வேளாணி மைக் காவியம் கூறும் முன்கதை
வேளாண்மைக் காவியம் ‘குடலை *கதிர்’ என இருபகுதிகளைக் கொண்டது.
குடலை
வயலுக்குச் செல்ல ஆயத்தமாகும் கந்தப்போடிக்கு மனைவி பொன்னம்மா உணவு பரிமாறும் சம்பவத்துடன் காவியம் (முதற்பகுதி - குடலை) தொடங்குகிறது.
ஆரங்கே? பொன்னம்மா உன் அடுப்படி அலுவல் ஆச்சா? நேரமும் கடந்து போச்சே! நீ என்ன செய்கின்றாய்? போய்
(ஒலை3)

Page 7
சோறெடு. சிவ சிவா. ஏய் சுரைக்காயை என்ன செய்தாய்? நீறினை நெற்றியிட்டு நெஞ்சினை வயலில் விட்டு சோறொடும் மீனைப்பிட்டுச் சுவைக்கின்றார் கந்தப்போடி
மகன் செல்லன் வயலிலே நிற்கிறான். பொன்னம்மா கணவன் கந்தப்போடிக்கு உணவு பரிமாறுகிறாள். பொன்னம்மாவின் அணி ணன் அழகிப் போடி. மனைவி கனகம்மா, கந்தப்போடியின் தங்கை. அழகிப் போடி - கனகம்மா தம்பதிகளின் மகள்தான் அன்னம்மா. அன்னம்மா சமைந்த சேதியை உணவு பரிமாறும் போது பொன்னம்மா கந்தப்போடிக்குச் சொல்லுகிறாள்.
அண்ணனின் இளையபெட்டை அன்னம்மா சமைந்ததாக வண்ணார வயிரன் பெண்டில் வழியிலே சொன்னாள் என்று பொன்னம்மா சொல்ல கந்தப் போடியார் விசள மேதம் கொண்ணன் வீட்டார் களிங்கு கொண்டு வந்தாரோ? என்றார். வயல்வழக் காடித்தோற்ற வயிரம்போல் அவர்க்கு நம்மேல் அயலெல்லாம் சொல்லிப் போனார். ஆயினும் இங்கேயொன்றும் வியளங்கள் இல்லை - என்றாள் வேறென்ன செய்வார் நம்மை? பயறிலே கல்லாய்ப் போனோம் பதறினார் கந்தப் போடி
கந்தப்போடி குடும்பத்துக்கும் அழகிப் போடிக் குடும்பத்துக்குமிடையே வயல் தகராறு வழக்கு ஒன்றின் காரணமாக உறவு விரிசல் கண்டிருந்தது. அண்ணன் அழகிப்போடியின் மகள் அன்னம்மா சமைந்த சேதியை பொன்னம்மா கேள்விப்பட்டிருந்தாள்.
ஒலை 31 RETI

£5Ꭷ ஆனாலும் உரித்துக்காரர் எவரும் வந்த விசளம் சொல்லவில்லையே என்று விசனமடைந் திருந்தாள். இந்தநிலையில் ‘விசளமேதும் கொண்ணன் வீட்டார்களிங்கு கொண்டு வந்தாரோ” என்ற கந்தப்போடியின் கேள்விக்கு “இல்லை” என்று பொன்னம்மா கூறக் கந்தப்போடி கோபம் கொள்கின்றார்.
அன்னம்மா அழகிதான் இங் கார்வந்த முடிப்பான் பார்ப்போம்! பொன்னம்மா மறகால் கொண்ணன் பொடியனைக் கேட்டுக் கீட்டு என்வீட்டுப் படியில் வந்த ஏறட்டும்! எளிய நாய்கள்! சன்னதம் எழுந்தாற் போல கறுவினார் கந்தப்போடி
கணவன் கந்தப்போடியைச் சமாதானப் படுத்தி வயலுக்கு வழியனுப்பி வைக்கிறாள் பொன்னம்மா. வயலிலே காத்திருக்கும் மகன் செல்லனுக்குச் சாப்பாடும் எடுத்துக் கொணி டு இரவு சூடடிப்பதற்கான ஆயத்தங்களுடனும் வயலை நோக்கி வண்டியில் புறப்பட்டுச் செல்கிறார் கந்தப் போடி. சண்டியன் சாமித்தம்பி வண்டியை ஒட்டிச்செல்கின்றான். வண்டி புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தால் கனகம்மா நீண்ட நாட்களுக்குப் பின் கூடப் பிறந்த அண்ணன் கந்தப்போடியின் வீட்டிற்கு வந்து மச்சாள் பொன்னம்மாவிடம் தனது மகள் அன்னம்மா சமைந்த சேதியை முறைப்படி சொல்லிச் செல்கிறாள். வண்டியும் வயலை அடைகின்றது.
மாட்டினை உருவிக் கொண்டு மடுவில் நீர்காட்டி வைக்கோல் போட்டபின் கணுவில் கட்டி புகையிலை கிள்ளி பல்லைத் தீட்டிஉள் திணித்த சாமி செல்லனைப் பார்த்தத் தம்பி
த்திரை 2006

Page 8
G6)
கேட்டியா சேதி உந்தன் கிளியல்லோ சமைந்த தென்றான்.
வயலுக்குப் புறப்பட்டு வந்த பின் ஊரில் நடந்தது கந்தப்போடிக்குத் தெரியாது. அதாவது கனகம்மா கந்தப்போடி வீட்டுக்கு வந்து மனைவி பொன்னம் மாவிடம் அன்னம்மா சமைந்த சேதியை முறைப்படி சொல்லிச் சென்றது தெரியாது. அதனால் அவரது கோபம் ஆறவாய்ப்பில்லை.
ஆரைடா சாமி நீ போய் அவனத கிளியாள் என்றாய் பேரையே மாற்றி வைப்பேன் பெருங்கொலை நடக்கும், இந்த ஊரெல்லாம் சொன்னார். நானும் ஒருவனிங்கிருந்தேன். என்று பீரங்கிக் கந்தப்போடி பெருங்குரலெடுத்தச் சொன்னார். வலிய வந்தெனக்கு மாறாய் வழக்காடித் தோற்ற கோபம் அழகிப் போடிக்கும் பெண்டில் அவளுக்கும்! பழி யார் மேலே? எழியவன் எனக்கும் சொன்னால் என்னவாம்! செல்லனுக்கு கலியாணம் பாண்டியூரில் கணபதிப் போடி வீட்டில் செய்யாத போனால் என்னைச் செருப்படித்தடிடாசாமி பொய்யில்லை.
என்று கந்தப் போடி செருமுகிறார். இத்தகைய ஒரு சூழ்நிலையிலேதான் செல்லன், வீட்டிலிருந்து வந்த சாப்பாட்டை உண்ண ஆயத்தமாகிறான்.
அப்பனின் கோபம் வீட்டில் அம்மைக்கும் அடியோ செல்லன் இப்படி நினைத்துக் கொண்டு எழுந்த போய் குடிலுக்குள்ளே
(சித்திரை 2006

செப்புச் சட்டிக்குட் சோற்றைத் திறந்ததம் தயிர்ச் சட்டிக்குள் எப்படி மச்சான் என்றே இளித்தனள் அன்னம் நின்று
அன்னத்தின் பழைய நினைவுகளை மீட் டியபடி செல் லண் Ջ - 600 60) 6): உண்ணுகிறான். காவியத்தின் அடுத்த நிகழ்வுகளாக சூடடிக்கப்பட்டு களம் பொலிகிறது. மொத்தம் எண்பத்தைந்து அவணம். கணக்குத் தீர்த்தல் - களவெட்டிப் பொங்கல் எல்லாம் முடித்து நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சண்டியன் சாமியும் செல் லனும் ஊருக்குப் புறப்படுகின்றனர். வழியில் சண்டியன் சாமி தன் மனைவி கற்பகத்தை வசியம் பண்ணிக் கலியாணம் முடித்த கதையைச் செல்லனிடம்
கூறி,
அப்பனை விடு செல்லா நீ ஆண்பிள்ளை அன்னம் மட்டும் ஒப்புதல் தந்தாப் போதும் இண்ரெல்லாம் எதிர்த்தது வந்தது தப்புத்தண்டா செய்தாலும் தகர்த்திந்தக் கலியாணத்தைச் செப்பமாய் முடிப்பேன். என்கிறான்.
வண்டி ஊரை அடைகிறது. தாய் பொன்னம்மா மகன் செல்லனுக்கு உணவு பரிமாறிக் கொண்டே,
அன்னம்மா சமைந்த சேதி அப்பன் சொன்னாரா தம்பி
என்று கேட்கிறாள். கந்தப்போடி வயலில் ஏசிய கதையைச் செல்லன் சொல்ல, மாமி கனகம் நேரில் வந்து செய்தி சொன்னதைப் பொன்னம்மா சொல்கிறாள். செல்லன் சந்தோஷப்படுகிறான். செல்லன் சாப்பிட்ட பின் வடிவேலைப் பார்க்கும் சாட்டில் அன்னத்தைப் பார்ப்பதற்காகச் செல்கிறான்.

Page 9
ஆனால் அங்கு அன்னத்தைச் சந்திக்க முடியவில்லை.
அன்னத்தின் பெத்தா பார் வதி * வைக் கலிலி விளைந்த நெல்லை வைக்கலில் வைத்துக் கட்டி இக்குலம் தழைக்க வைத்தல் எல்லோர்க்கும் கடமை' என்றெண்ணி தனது மகளின் மகளான அன்னத்தை முறை மச்சான் செல்லனுக்கு (மகனின் மகன்) கட்டி வைக்கவே எண்ணிச் செயல்படுகிறாள்.
வடிவேலின் சாட்டில் அன்னம் வடிவினை மறைந்த காண முடியாது போன தெண்ணி முணுமுணுக்கின்ற செல்லன் அடிமணம் போலக் கூத்த மத்தளம் அலறக் கோயி லடியிலே சிறிது குந்திக் கூத்துப் பார்த்திருந்தான் செல்லன்.
இந்த நிகழ்வுடன் காவியத்தின் முதல் அத்தியாயமான 'குடலை முடிந்து அடுத்த பகுதியான கதிர் ஆரம்பமாகிறது.
கதிர்
அன்னத்திற்குச் சமைந்த தண்ணிர் வார்க்கும் நிகழ்வுடன் இரண்டாவது அத்தியாயமான கதிர் தொடங்குகிறது.
பங்குனிக்குப் பதினேழு புதன்கிழமை பகல்நேரம் பரணிசேர்ந்த மங்கல சீர் முகஉர்த்தத்தில் மகள் அன்னம் சமைந்த தண்ணீர் வார்ப்பதாக எங்களது பெரியோர் செய் தீர்மானம் என்றாரின் எல்லாவீடும் சங்கை செய்த கனகம்மா வெளியிட்ட தாம்பூல வட்டா தந்தாள்.
பின் ஊரில் அன்னம் சமைந்த தண்ணிர் வார்ப்பு - பெண்களின் குரவை -

○ வெடிக்கொளுத்து - ஆராத்தி - மஞ்சள் குளிப்பு இத்தனை அலங்காரங்களுடன் நடைபெற்று முடிகிறது.
பிரிந்திருந்த கந்தப்போடி - பொன்னம்மா குடும்பமும், அழகிப்போடி - கனகம்மா குடும்பமும் மீண்டும் உறவாடும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
ஊரில் சித்திரை வருடப் பிறப்புக் கொண்டாட்டம் - தொடர்ந்து கோயில் தேர்
கோயில் முற்றத்தலே கூத்து எனத் தொடர்கிறது.
அன்னம் செல்லனின் நினைவுகளுடன் வீட்டிலிருந்து கூத்துப் பாடல்களை இரவு விழித்திருந்து கேட்டவாறே உறங்கிப் போகிறாள். செல்லன் அன்னத்தின் நினைவுகளுடன் வடிவேல், சாமித்தம்பி சகிதம் வந்திருந்து கூத்துப் பார்க்கிறான். கந்தப்போடி, அழகப்போடி ஆகியோரும் அருகிலிருந்து கூத்து பார்க்கிறார்கள்.
* களரியின் அருகில் செல்லன் கலியாணப் பேச்சுவார்த்தை கிழவனைப் பாரேன்! என்று கிள்ளினான் வடிவேல் சாமி களவாக எட்டிப் பாத்தான்! கந்தப்பர் - அழகப்போடி தலையினை அசைத்த தாளம் தகர்ப்பதம் கண்டான் செல்லன்
இத் துடன் கதிர்ப் பகுதியும் நிறைவுறுகிறது. ஆனால் காவியம் முற்றுப் பெறவில்லை. (நீலாவணனின் மறைவு அதற்குக் காரணம்)
U U U
செங்கதிரோன் எழுதும் “வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சியான விளைச்சல்
இன் ஒருபகுதி 'ஒலையின் 22வது இதழ்வரை வெளிவந்தது. ‘ஓலையின் மீள்வருகையின்
(சித்திரை 2006)

Page 10
Ꮹ8Ꭰ பின்பு அது இவ்விதழிலிருந்து தொடர்கிறது. வாசகர்களின் வசதி கருதி “வேளாண்மைக் காவியத்தின் அறிமுகத்தையும், அது கூறும் முன் கதையையும் மீண்டுமொருமுறை அறியத் தந்தோம்.
* விளைச்சலி " காவியம் கூறும் பின்கதை (இதுவரை)
செங்கதிரோன் எழுதும் “விளைச்சல்” (வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி) *காயப்" என்ற முன்றாவது பகுதியுடன் ஆரம்பமாகிறது.
3. காய்
அன்னம்மா சமைந்து ஆண்டுகள் சில கழிந்துவிட்டன.
அன்னம்மா சமைந்த நாட்கள் ஆண்டுகள் ஆகியோட எண்ணமே செல்லன் ஆகி ஏங்கினாள். ஒர்நாள் பெத்தா ‘என்னடீ. கனகம் மாவுன் இளையவள் கலியாணத்தை(க்) கண்ணைநான் மூடு முன்னம் காணத்தான் ஆசை” என்றாள்.
பார்வதிப் பெத்தா தன் ஆசையை வெளியிட நல்லதொரு நாள் பார்த்து அழகிப்போடி - கனகம்மா தம்பதிகள் செல்லனை மாப்பிள்ளை கேட்டு கந்தப்போடி - பொன்னம்மா வீட்டிற்குப் போகிறார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடிகிறது. சாராயத்தோடு சாப்பாட்டுப் பந்தியும் நடக்கிறது. மகிழ்ச்சியோடு வீடு திரும்பிய அன்னம்மாவின் பெற்றோர் அழகிப்போடியும், கனகம்மாவும் கல்யாண ஏற்பாடுகளை ஒடியோடிக் கவனிக்கின்றனர்.
சித்திரை 2006

ஆடியும் கழிந்த போக ஆவணி அடுத்த மாதம் சோடியைச் சேர்த்துக் கன்னி(ச்) சுமையொன்றை இறக்கிவைக்க ஒடித்தான் உருள நாட்கள் இவனின்றி உறக்கமின்றி ஒடித்தான் கனகம் சேர்த்தாள்! உதவினாள் பொன்னும் கூட.
வெள்ளையும் அடித்த வீட்டை வேலியும் பிரித்தக்கட்டி குள்ளமாய் இருந்த கொட்டுக் கினற்றையும் உயர்த்திச் சற்று வெள்ளைவார் மணலும் ஏற்றி வீட்டுமுற் றத்தில் கொட்டி அள்ளியே இறைத்தக் காசை அழகரும் அலுவல் பார்த்தார்.
கல்முனைக் கடைக்குச் சென்று கல்யான வேட்டி, கூறை இல்லாத சாமான் வீட்டில் எவையென்று எண்ணிப்பார்த்து சொல்லாத படிக்கு இளரார் சொட்டைகள் ஏதம்பின்னால் எல்லாமே வாங்கி வந்தார்! எடுத்துள்ளே கனகம் வைத்தாள்.
அன்னம்மா - செல்லையா கல்யாண ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகிவிட்டன. இனி வாசகர்கள் விளைச்சல் காவியத்தின் தொடர்ச்சியை அடுத்த ஒலை - 32 (மே 2006) இலிருந்து மீண்டும் சுவைக்கலாம். ஆம் ‘ஓலை’ யின் வரவில் ஏற்பட்ட தடங்கலால் தடைப்பட்டிருந்த ‘விளைச்சல் அடுத்த இதழிலிருந்து இன்னும் விளையும்.
(ஒலை3)

Page 11
களஞ்
சொல்வழக்கு
‘தற்காலத் தமிழுக்கு வேண்டிய ஆதார வ நோக்கத்தில் மொழி அறக்கட்டளையின் செ
மொழி அறக்கட்டளை இதுவரை மூன்று தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதி கையேடு 2001; மறு வெளியீடு 2004) ஆகிய வழக்குக் கையேடு” எனும் நூல் தற்போது எழுதுவதற்கான நெறிமுறைகள் உரைநடை தகவல்களில் மிக அடிப்படையானவை என்று நூலில் இடம் பெற்றன.
தற்காலத் தமிழில் வழங்கும் ஆயிரக்கணக் சிக்கல்களும் அறிய வேண்டிய சிக்கல்களும் சொற்களின் பயன்பாட்டு முறைகள் குறித்த தொகுத்துத் தருகிறது. இந்தக் கையேடு ஒ நூல்களுள் ஒன்று.
நாம் கையாளும் சொற்களின் கூர்மை
வெளிப்படுத்த கூர்மையான சொற்களைக் ை துணை புரியும்.
விமர்சனம் காண
தற்போது நிறையவே நூல் வெளியீட்டு வ
இவை விழா சார்ந்த மனோபாவத்தின் அடி மாற்றப்பட்டுவிட்டன.
நூல் விமர்சன அரங்கு' என்பதற்கான பண படைப்பாளிகளிடம் தொற்றிவிட்டது. சிறப்புப் ஆய்வுரை என்ற பெயரில் "ஆள்நயப்புரை
மொத்தத்தில் படைப்புச் சூழல் வெளியீ விமர்சனச் சூழல் மட்டும் காணாமல் போu விரும்புகிறார்கள் போலும்.
 

சியம்
தொகுப்பு - மூர்
தக் கையேடு)
1ளங்களைப் பெருக்குதல்' என்னும் உயர்ந்த யற்பாடுகள் அமைந்துள்ளன.
வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளன. 1997; மறு வெளியீடு 2004; தமிழ்நடைக் இரு வெளியீடுகளைத் தொடர்ந்து ‘சொல் வெளிவந்துள்ளது. ஒழுங்கான அமைப்பில் எழுதுவதில் மேற்கொள்ளும் ஒழுங்கு குறித்த று கணிக்கப்பட்டவை தமிழ்நடைக் கையேடு
கான சொற்களில் பயன்படுத்துவோர் அறிந்த இருக்கின்றன. நூற்றுக்குச் சற்றே கூடுதலான 5 தகவல்களை ‘சொல்வழக்குக் கையேடு ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய
யை உணர்ந்து கையாளவும் கருத்தைத் கயாளவும் பழகிக் கொள்ள இந்தக் கையேடு
ாமல் போகிநது.
விழாக்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஒப்படைகளை உள்வாங்கிய நிகழ்ச்சிகளாக
*புகள் எதுவும் வேண்டாம் என்ற மனோபாவம் பிரதிகள், புகழ் மாலைகள், வெளியீட்டுரை, என்றெல்லாம் நிலைமைகள் வளர்ந்துள்ளன.
ட்டுச் சூழல் ஆரோக்கியமாகவே உள்ளன. ப்க் கொண்டிருக்கிறது. இதைத்தான் பலரும்
(சித்திரை 2006)

Page 12
GO
(தி
தமிழில் மாத இதழாக தற்போது ‘திரை இந்த இதழ் உலக சினிமாவின் முகமாக
திரை இதழின் ஆசிரியர் லீனா மன இயக்கியுள்ளார். அதைவிட கவிஞரும் கூட
திரை இதழ் வடிமைப்பு, உள்ளடக்க இயங்குபவர்களுக்கு நிறையவே உண்டு. கலந்து விட்ட நிலையில் சினிமாவின் அபு மேலும் தெளிவாகவும் அறிவு பூர்வமாகவு உதவும். சினிமாசார்ந்த உரையாடலுக்கா தனத்துடன் வெளிப்படுத்த வேண்டிய கட்ட
(தமிழில் வரி
ஒக்ஸ்போட் பல்கலைக்கழக அச்சகத்தி நூல்கள் தற்போது தமிழில் அடையாளம்
கலைக்கோட்பாடு, இலக்கியக் கோட்பா வரலாறு, அரசியல், உளவியல், இறையியல், என பல்வேறு தலைப்புகளில் நூல்கள் உ6
தேர்ந்த வாசகர்கள் பல்துறை அறிவுப்புல இந்த நூல்களை நிச்சயம் படித்தேயாக ே வாய்ப்புக் கிடைத்தமைக்காக நாம் சந்தே
நமது தமிழ் மரபு அறிவுத்தமிழ் மரபா மலர்ச்சி பெற்று வளர்ச்சியடைய நாம் நிை
மூன்றாண்டு கால இடைவெளியின் பின் ‘ 2006 இதழ் வெளிவந்துள்ளது. 104 பக்கங் விடயங்கள்.
வாசிப்புத் தீவிரம் உள்ளவர்களுக்கு இந் இதழ் வெளிவரவேண்டும். நவீன தமிழ் இ மலர்ச்சி பெற வேண்டும். தீவிர இலக்கியத்து மனிதன் தடம் அமைத்துச் செல்ல வேண்டு
(சித்திரை 2006)

என்னும் இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழ்த்தளத்தில் வெளிவருகிறது.
ரிமேகலை. இவர் சிறந்த குறும்படங்களை
ம் யாவும் சினிமா குறித்த தேடல் சார்ந்து தமிழர் வாழ்க்கையும் சினிமாவும் இரண்டறக் டிப்படைகளை, அதன் மொழியை, வீரியத்தை ம் ஆழ்ந்து கற்றுக் கொள்ள திரை நிச்சயம் ன மொழியை சொல்வளத்தை நாம் தமிழ்த் ாயமும் நமக்கு உண்டு.
சை நூல்கள்
lனால் வெளியிடப்பட்ட புகழ் பெற்ற வரிசை
வெளியீடாக வெளிவந்துள்ளன.
டு, சமூக பண்பாட்டு மானிடவியல், தத்துவம், ஜனநாயகம், தொல்லியல், உலகமயமாக்கல். ஸ்ளன.
ங்களுடன் ஊடாட்டம் கொள்ள வேண்டுமானால் வண்டும். தமிழில் இவற்றைப் படிக்கக் கூடிய ாசப்பட வேண்டும்.
க பல்துறைப் புலங்களுடனான தமிழ்மரபாக றைய உழைக்க வேண்டும்.
ரும்.
மூன்றாவது மனிதன்” இதழ் 17 மார்ச் - ஏப்பிரல் களில் கனதியாக வெளிவந்துள்ளது. பல்வேறு
த இதழ் இன்னொரு வேட்டை தான். தொடர்ந்து லக்கியத்தின் புதிய வளங்களுக்கான இதழாக க்கான கலாசார இயக்கம் முகிழ்க்க மூன்றாவது
டும். کے (ஒலை3)

Page 13
திறனாய்வாளர் திருக்கோணம
தமிழுக்கு ஆர்
24.08.1863 - 22.06.1922
கல்வி கேள்விகளும் மனிதப்பண்புங் கனிந்து, உணர்ச்சியும் உள்ள நெகிழ்ச்சியும் சிறந்து வாழும் மக்கள் இறந்தும் இறவாதவரே; அன்னார்தம் வரலாறுகளும் இறவாத புகழுடையனவே; அவ்வரலாறுகளைப் படித்தலும் படிப்பதும் படிக்கக் கேட்பதும் பெரிதும் இன்பம் பயப்பனவே. பண்பாடும் இரக்கமும் ஒருங்கே அமைந்துள்ள நன்மக்களின் அருமை பெருமைகளைப் பாராட்டுகின்ற நாட்டிலே தான் பணி பாடு வளர்ச்சியடையும் ; பண்புடையார் பலர் தோன்றுவர். பேணாத செல்வம் அழிந்தொழியு மன்றோ. ஆதலின், நம்நாட்டுப் பெருந்தகையோரை நாமும் பாராட்டி, அன்னார் சென்ற வழிவழியே நாமும் சென்று வாழ்தல் நமக்குக் கடமையாகின்றது.
(ஓலை 3)
 
 

லை த.கனகசுந்தரம்பிள்ளை
றிய தொண்டு
- புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
செழுங்கலை விளக்கம் :
கி. பி. 19ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியிலே, சென்னை மாநகரப் பல்கலைக் கழகத்திலே, செழுங்கலை விளக்கம் போன்று திகழ்ந்த பேராசிரியரொருவர் இன்றும் எமது மனத்தகத்தே இனிது காட்சியளிக்கின்றார். திறந்த மனம்; நிறைந்த குணம்; தெளிந்த மொழி; சிறந்த நடை முதலிய நல்லியல்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உரு வெடுத்தாற் போன்று தோன்றிய அப் பெருமானார் தென்னிந்தியத் தமிழரோ என்று நான் ஒருகால் எண்ணியதுண்டு. அவ்வாறு எண்ணும் வண்ணம் அவர் வாழ்ந்து வந்தார். நல்ல நிலத்திலே பாய்ச்சிய நன்னீர் அந் நிலத் தோடு நன்கு கலந்து பயன்படுதல்போல், அன்பு கலந்த தூய நெஞ்சுடைய அன்னார் தென்னிந்தியப் போறிஞர்களோடும், மாணவர்களோடும் பிரித்தற்கரிய அன்பின் தொடர்பிலே ஒன்று பட்டு நிலைத்துநின்றார். பாலொடு பால்கலந்தாற் போலவும். நீரொடு நீர் சேர்ந்தாற் போலவும் தென் தமிழ் நன்னாடும் ஈழப் பொன்னாடும் ஒன்றுபட்டு வாழ்தற்கு உறுதுணை புரிந்த அப்பெருந் தகையார், அறிவும் ஆற்றலும் அன்பும் வாய்த்து கற்றோர் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பண்புடையாளர். சென்னை மாநகரப் பல்கலைக்கழகத்துப் பரீட்சகர்களுள் ஒருவராகவும், பரீட்சைச் சங்கத்தின் தலைவராகவும் கலைத்தொண்டு புரிந்து
இத்திரை 2006)

Page 14
G2)
புகழொளி பரப்பிய இந்தத் தமிழர் திலகம், ஈழநன்னாட்டிலே திருக்கோணமலைத் திருப்பதியிலே தோன்றியவர்: நம்குடிப் பிறந்த நம்பி என்பதை நாமறியும் போது நமக்குப் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் உண்டா கின்ற்ன; உயர்ந்த எண்ணங்களும் உதிக்கின்றன. நமது வாழ்க்கையைத் திருத்தியமைக்கும் புதியதோர் மனவெழுச்சியும் நமக்குப் பிறக்கின்றது.
தமிழ்ப் பெருங்குடி :
தமிழர்தம் பிறப்புரிமைக்கு நிலைக்களனா யமைந்துள்ளது தேவாரத்திருமணங் கமழுந் திருக்கோணமலை. இங்கே வாழையடி வாழையாக வாழ்ந்து நிலைபெற்ற தமிழ்ப் பெருங்குடியொன்று உண்டு. அச்செழுங்குடி புண்ணியத்திற் புண்ணியமாகிய விருந்தோம் பலிற் பெயர் பெற்றது; தமிழ்ப் புலவர்களின் புகலிடமாயமைந்துள்ளது; சைவ மணமும் தமிழ் மணமும் கலந்து வீசும் வாசத்தாற்புனிதம் வாய்ந்தது. இத்தகைய சீரிய குடியிலே கல்வி அறிவு ஒழுக்கங்களிற் சிறந்த தம் பிமுத்துப் பிள்ளையென் பவர் பல நலன்களும் பெற்று இல்வாழ்க்கை நடத்தி வந்தார். இலங்கைப் பகிரங்க வேலைப் பகுதியிலே பிரதிம லிகிதாரயிருந்து சேவை செய்த இவருக்குக் கி. பி. 1863ம் ஆண்டு ஆவணி (August) மாதம் 24ந் தேதியன்று நாளுங்கோளும் நலனுற நிற்ப நல்லதோர் ஆண்பிள்ளை பிறக்கலாயிற்று. உருவுந் திருவுமுடைய பாலகனுக்குக் கனக சுந்தரம்பிள்ளையெனப் பெயரிட்டு வளர்த்து வருவாராயினர். பிள்ளையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரலாயிற்று.
(சித்திரை 2006)

கனகசுந்தரம்பிள்ளை உடன் பிறப்பாளர் மூவர்; அவருள் இருவர் தம்பியர்; ஒருவர் தங்கையார், இவர்களுள் இவருக்கு நேரே இளைய தம்பியும், பல்கலைக் கழகத்துக் கலா குமார (பீ.ஏ)ப் பட்டதாரியும் தமிழ்ப்புலவரும், ‘தத்தை விடு தூது, ‘மோகனாங்கி, தமிழ் வரலாறு முதலிய நூல்களின் ஆக்கியோனும் நல்லாசிரியரு மாகிய சரவணமுத்துப்பிள்ளை இவ்வுலக வாழ்வை விட்டகன்றது தமிழ்த்தாயின் தவக்குறைவே போலும்! தத்தை விடு தூதில் ஒரு செய்யுளைக் கீழே தருகின்றேன்.
“தீம்பலவின் நீழலின் கீழ்த்
தெரிவையவட் கியானறியேன்
ஆம்பல் மலர்மாலை
அணிந்தேன் மகிழ்ந்தனனால்;
சாம்பொழுதும் யான்மறவேன்;
தையலவ னிக்காலம்
வீம்பாய் மறந்தனனோ
sfaribunű Lustrid:sf'8u!
வினே புலம்புவதென்
663aur last disf8u;'
கனகசுந்தரம்பிள்ளையின் தங்கையார் தையல்நாயகி அம்மையார் திருக்கோண மலைக் கச்சேரிச் சிறாப்பராயிருந்த சுப்பிரமணிய மென்பார் இவரது நாயகராவார். “திருக்கோணமலை மாதர் சங்கம்” என்னும் ஒரு தாபனத்தை நிறுவிப் பெண்களின் முன்னேற்றத்துக்கு அருந்தொண்டு புரிந்த அம்மையார் தமிழறிஞர்களோடு நெருங்கிய தொடர்புபூண்டு அவர்களை மதித்து உபசரிப்பதில் மனநிறைவு கொள்பவர்.
Gedeo 3D

Page 15
திருக்கோணமலை இந்துக் கல்லூரியின் ஒரு பகுதியைப் பெரும் பொருள் நன்கொடை வழங்கிக் கட்டுவித்து உதவிய பேருபகாரி. இவ்வம்மையாரும் இப்போதில்லை.
பிள்ளையவர்களின் இளைய தம்பியார் முகாந்திரம் பாலசுப்பிரமணிய மென்பவர். இவர் பொதுசன சேவையிற் புகழ் பெற்றவர்; திருக்கோணமலை நகர சங்கத்தின் அங்கத்தவராகவம் தலைவராகவும் நன்கு பிரபலம் பெற்றவர். பல பொதுத் தாபனங்களில் அங்கத்தவராயிருந்து இன்றும் புகழ் படைத்து வாழும் இவர் விருந்தோம்பலில் மனஞ்சலியாதவர்.
கல்வியில் ஆர்வம் :
இது இவ்வளவில் நிற்க; கனகசுந்தரம் பிள்ளைக்கு ஐந்து வயதாயிற்று. மையோனை பிடித்தற்கரிய இப்பருவம் வந்தெய்தியதும் ஒரு மங்கள நன்னாளிலே பிள்ளையவர்கள் ஏடு தொடக்கி எழுந்தறிவிக்கப் பெற்றார். அந்நாளிலே திருக்கோணமலையிலிருந்த நல்லாசிரியர்களாகிய கணேசபண்டிதர், கதிரவேற்பிள்ளை என்போரிடம் தமிழும்
இது நிகழ்ந்தது. நுண்மதியும், கட்டுப்பாடும், கல்வியிலே பேரார்வமுள்ள பிள்ளையவர்கள் தமது பதினான்கு வயதிலேயே மறைசை யந்தாதி, திருவாதவூரடிகள் புராணம் போன்ற நூல்களுக்குப் பொருள் கூறும் அறிவுடையவரானார். நிகண்டு, நன்னூல் முதலிய ஆரம்ப நூல்களைக் கற்றற்குரிய தகுதியும் இவருக்கு உண்டாயிற்று. தமிழிலும் ஆங்கிலத்திலும் படிமுறையான நல்ல அடிப்படைக் கல்வி பெற்ற பிள்ளைய வர்களுக்கு உயர்தரக் கல்விகற்பது மிகவும் இலேசாயிற்று. இந்த அடிப்படைகல்வியே இன்று மிகவும் கவனித்தற்குரியது.
(ஒலை3)

-G3)
அந்நாளில் இந்நாட்டில் உயர் தரக்கல்வி கற்கும் வசதிகள் அமைந்திருக்கவில்லை. அதன் பொருட்டு இந்தியநாட்டையே நாடவேண்டியிருந்தது. பிள்ளையவர்கள் 1880ஆம் ஆண்டு சென்னை மாநகரையடைந்து செங்கல்வராய நாயகர் கல்லூரியிற் சேர்ந்தார். அங்கு பயின்று பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சையிற் சித்திபெற்றுப் பச்சையப்ப வள்ளலார் கலாசாலையிற் புகுந்தார்; எவ். ஏ. வகுப்பிற் பயின்றார். பரீட்சையிற் சிறந்த பேறும் பெற்றார். பின்னர் சென்னை மாகாணக் கல்லூரியில் (பீ. ஏ.) கலாகுமார வகுப்பிற் சேர்ந்து கற்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கலாயிற்று, பி. ஏப் பரீட்சையின் விசேட சித்தியும் பெற்றார்; தத்துவ சாத்திரத்திலும். தமிழிலும் சிறந்த திறமை காட்டியமைக்காகப் பரிசும் பதக்கமும் பெற்றுப் பலரின் பாராட்டுக்கும் உரியவரானார். தன் பிள்ளையைச் சான்றோனெனக் கேட்ட தாயும் பிள்ளையைப் பெற்ற அன்றடைந்த மகிழ்ச்சியினும் பெருமகிழ்ச்சி படைந்தாள்; சான்றோனாக்கிய தந்தையும் கழிபேருவகை கொண்டார்.
உயர்ந்த பதவி :
கலாகுமாரனான கனகசுந்தரம்பிள்ளைக்குக் கல்வியோடு தொடர்பு பெற்ற நல்லதோர் பதவியும் காலத்தாழ்வின்றிக் கிடைத்தது. சென்னை மாகாண வித்தியாவிருத்தி நிலையத்தின் ஓர் உயர்தர அதிகாரியானார். செயலாற்றுத் திறமையால் உடனேயே உத்தியோக உயர்வும் பெற்றார். வித்தியா விருத்தி நிலையத்தின் மேலதிகாரியாக உயர்வுபெற்ற பிள்ளையவர்கள் தம்மை ஒரு மாணவனாகவே கருதிவந்தார். “யாது மூரே யாவருங் கேளிர்” என்னும் உரிமைப் பாட்டுக்குத் தம்மைத் தகுதிசெய்து கொண்டார்.
த்திரை 2006

Page 16
G1)-
“யாதானும் நாடாமால்
இராமால்; எண்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு”
என்னுத் திருக்குறளை மறவாது
வாழ்க்கை நடத்தலானார். இது யாவர்க்கும் இனியதோர் நல் முன்மாதிரியாகும்.
தனது உத்தியோகக் கடமைகள் ஒழிந்த மற்றைய நேரங்களையெல்லாம் பழந்தமிழ் நூல்களையும். வடமொழி நூல்களையும் தேடித் தேடிப்படிப்பதிலே பயன்படுத்தி வரலானார்; ஆங்கில நூல் நுட்பங்களையும் பாங்குறப் பயின்று சுவைத்துச் சுவைத்து இனி புறுவார். செந் தேனை நாடும் தேன்வண்டுகளைப் போல மாணவர் கூட்டம் இவரை நாடலாயிற்று, சென்னையிலிருந்த அறிஞர் பலரின் கூட்டுறவும், ஈழநாட்டறிஞர் பலரின் நணி புரிமையும் இவர்க்குக் கிடைக்கலாயின. இதற்குள்ளே இரண்டு இடையூறுகள் வந்தெய்தின.
கல்வியுலகின் கற்பகம் போன்று திகழ்ந்த பிள்ளையவர்களுக்குத் தமது அருமைத் தம்பி சரவணமுத்துப்பிள்ளையை இழந்த துயரம் ஒன்று போதாமல் தமது அன்பின் வடிவான இல்லக்கிழத்தியாரைத் தமது இருபத்தெட்டாவது வயதிலே இழந்து துக்க சாகரத்தில் மூழ்க நேர்ந்ததும் மன மடிவுக்குக் காரணமான பெரியதோர் அதிர்ச்சியாயிற்று.
“கந்தைத் தணியைக் கழற்றி
யெறிந்திங்கோர்
மைந்தண்புத் தாடை
வனை தன்போல் - இந்தவுயிர்
நைந்தவுடல் நீத்தருளால்
சித்திரை 2006

நண்ணும் புதுவுடல்கள்
முந்தவடைந் தெய்தம்
முனைந்த 9
என்னும் உண்மையினை நன்கு தெளிந்த பிள்ளையவர்கள் கலக்கத்தின் நின்றும் நீங்கித் தெளிவு பெற்று வாழ்ந்து வரலாயினர். தமிழின்பம் ஒரு தனியின்பம். அதற்குத் தொண்டு செய்தலும் ஒரு தனியின்பமாகும். பிள்ளையவர்கள் தமிழ்த் தொண்டு, மனைவியையிழந்த துன்ப நோய்க்கு மருந்தாயிற்று. தமிழ்த் தொண்டு :
தமிழ்த் தொண்டு செய்தற்காக வித்தியா விருத்தி தொழிலிலிருந்து விடுதலை பெற்ற பிள்ளையவர்கள் ஏகமாக மேவியிருந்து தனித்து வசமாக மெளனத்தை அடக்கித் தமிழினிமையிலே ஈடுபட்டு இன்புறுவாராயினர். அக்காலத்தில் இராமாயணப் பொருளுணர் ச்சியில் இணையற்று விளங்கியோர் இருவர் உளர். ஒருவர் யாழப்பாணம் நாவலரின் மருகர் வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை யென்பார்; மற்றவர் தென்னிந்திய வித்துவான் இராசகோபாலபிள்ளையாவர். இராசகோபால பிள்ளையிடம் இராமாயணத்தை இனிது கற்றார்; நுண்பொருளுணந்தார்; இன்சுவை சேர்த்தார்; இன்பமுமடைந்தார். இராமாயணத்தில் இவருக்குப் பெரியதோர் பற்றுதலும் உண்டாயிற்று. இக்காலத்திலும் தென்னாட்டில் ஒரு சிலரிடம் இராமாயண (த்தி) ப் பற்றுதல் உண்டாயிருப்பதையும் காணுதல் கூடும்.
பாரதம், கந்தபுராணம், இராமாயணம் முதலியவற்றைப் படித்த பின்னர் சங்க நூலாராய்ச்சியிற் பொழுது போக்கலானார். தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களையும் ஐயம் திரிபறக் கற்றுத் தெளிந்தார். பெயரளவில் முன் அறிந்துள்ள
-Qఐణ 3D

Page 17
நூல்களையும் உரையினையும் தேடிக் தேடிப் படித்து மகிழ்ந்தார். ஒப்பு நோக்கி ஆராய்ந்தார். பாடபேதங்களையும் , இடைச்செருகல்களையும் கண்டு இது சரி; இதுபிழை என வரையறை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்; வெற்றியும் கண்டார். ஆராயப் க்சியாகிய பொன் னுக்கு ஓர் உரைகல்லாய் விளங்கினார். இவரது கூரிய மதியினையும், சீரிய ஆராய்ச்சியினையும், தேசிய போக்கினையும் அறிந்த அறிஞர் பலர் இவர்க்கு நண்பராயினர். தாம் இயற்றிய நூல்களையும், உரைகளையும் ஆராய்ச்சிப் பிரதிகளையும் இவரிடம் காட்டி ஐயப்பாடுகளை அவ்வப்போது தீர்த்துக்கொள்வாராயினர். தமிழிலும், வடமொழியிலும் ஆங்கிலத்திலும் நிரம்பியபுலமை படைத்த பிள்ளையவர்கள் தமது அறிவைக்கொண்டு மற்றவர்களை வெருட்டி விடுவதில்லை; நயப்பும் வியப்பும் அடையச் செய்து தமக்கு இனிய நண்பராக்கிவிடுவார். இட்து இவரிடத்தமைந் துள்ள குறிப்பிடத்தக்க நல்லியல்பாகும். இதுவன்றோ அறிவுடையவனுக்கு அழகாவது
அரிய நண்பர்கள் :
ஆறுமுகநாவலரை யாவருமறிவர். அவர் சென்னை மாநகரிலே நிறுவிய அச்சகத்தையும் மறிவர். அவரது வித்தியாநுபாலன அச்சியந்திரசாலையிலிருந்து வெளிவரும் பதிப்புகள் சுத்தமான பதிப்புகளாகும். பிள்ளையவர்கள் காலத்திலே அப்பதிப்புகள் மிகவும் மதிப்புப் பெறலாயின. அவற்றை வழுவறப் பரிசோதித்து வெளியிடுவதில் அவர் அவ்வளவு புலன் செலுத்தி வந்தார்.
பிள்ளைவர்களின் காலத்தில் வாழ்ந்திருந்த நல்லிசைப் புலவர்களுள்ளே குறிப்பிடத்தக்க தொடர்புடைய சிலரை இங்கே நினைவூட்டுதல் Gedeo 3D

15
பொருத்தமாகும். கண்ணிர் சொரிந்து చే பயிர் வளர்த்த கருணையாளர் சி. வை. தாமோதரம்பிள்ளை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பின்னத்துர் நாராயணசாமி ஐயர், டாக்டர் உ.வே. சாமிநாதையர், சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் ஆகியோரைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். இவர்க ளெல்லாரும் பிள்ளையவர்களின் அன்பு கெழுமிய நண்பர்களாவார். இவர்களுள்ளும் குமாரசுவாமிப்புலவர் பிள்ளையவர்களின் உயிர்த் தோழரும், உசாத்துணைவருமானவர் பிள்ளையவர்கள். தமது ஆருயிர் போன்ற மனைவியாரைப் பிரிந்த துயரம் புலவரின் இனிய கூட்டுறவால் மறைந்து விட்டதை இருவருமறிவர்; யாமுமறிவோம்.
“நவில்தொறம் நால்நயம்
போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு”
என்னும் அருமைத் திருக்குறளுக்கு பிள்ளையும் புலவரும் ஓர் உதாரணமா யமைவர். இது யாம் மெய்யாகக் கண்டது. இதுவன்றோ புலவரியல்பு
கவிபாடும் ஆற்றல் :
பிள்ளைவர்கள் இயல்பாகவே கவிபாடும் ஆற்றலுடையவர். தமது கலாசாலைத் தலைவர் ஒருகால் நோய்வாய்ப்பட்டுப் படுக்ககையிற் கிடந்தபோது இவர் மனமுருகிப் பாடிய குயிற்பத்து என்னும் பாடல்கள் உணர்ச்சியும், தெளிவும், இனிமையும், பொருளாழமும் உடையன வாகும். ஆயினும், இவரது உள்ளம் கவிபாடும் வழியிற் செல்லவில்லை. காலத்துக் கேற்ப நூல்கள் அமைதல் வேண்டுமென்பது அவரது கொள்கை. அன்றியும் வசன நூல்கள் பல வெளிவருதல் வேண்டும் என்பதும் அவரது
த்திரை 2006

Page 18
எண்ணமாகும். பிறமொழி நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தலும். தமிழிலுள்ள பழைய நூல்கள் இக்காலத்துக்குரிய முறையில் உரைவகுத்து வெளியிடுதலும் வேண்டும் என்பதும் அவரது நோக்கமாகும். கூட்டாக நூல் வெளியிடுதலிலும் இவர் பேரார்வமுள்ளவர். குமாரசுவாமிப் புலவர் இதற்கு ஆதரவளிக் கலானார். பல நுால் களை இருவரும் சேர்ந்து வெளியிட்டார்கள். அவற்றுள் அகப்பொருள் விளக்கமென்னும் நம்பியகப் பொருளுரையும் இங்கே குறிப்பிடுதற்குரியன. பாலகாண்ட அரும்பத விளக் கவுரையும் இங்கே குறிப்பிடுதற்குரியன. பாலகாண்ட அரும்பத விளக்கம் சுத்தமான பாடமுடையது: வேண்டிய இடங்கள்தோறும் உண்மைக் கருத்துகளைத் தெளிவு பெற உரைப்பது; ஐயமறுப்பது. இராமாயணம் முழுவதையும் இவ்வாறே பதித்து வெளியிட வேண்டுமென்று இவர்களிருவரும் கொண்டிருந்த பேரவா நிறைவேறவில்லை. ஒருவர்பின் ஒருவராய் இருவரும் போயினர். இது தமிழன்பர்களின் தவக்குறைவே போலும்!.
பின்னர்த்துார் நாராயணசாமி ஐயரும் பிள்ளையவர்களும் நெருங்கிய நண்பர்களென்பது நமக்குத் தெரியும். சங்கச்சான்றோர் செய்யுள்களுக்கு உரை சொல்வதில் ஐயர் பேர்பெற்றவர். நற்றிணை என்னும் சங்க நூலுக்கு உரைசெய்த பெருமை அவருக்குரியது. ஐயருக்கு அவ்வப்போது ஐயந் தெளிவித்து அவ்வுரையைத் திருத்திப்பதிப்பித்து வெளியிட்ட உபகாரம் நமது கனகசுந்தரம் பிள்ளையவர்களுக்கே உரியது.
சென்னை மாநகரிலே பேரும் புகழும் பெற்று விளங்கிய பணி டித நடேச
சித்திரை 2006

சாத்திரியாரை வடமொழியுலகம் நன்கறியும். வடமொழி வால்மீகி ராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட நல்லுபகாரி அவர். சாத்திரியாருக்கு மொழியெர்ப்பில் உறுதுணையாயிருந்தவர் நமது பிள்ளையவர்களே. எனினும் , கிஷ்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம் என்னும் இருபகுதிகளையும் சாத்திரியார் மொழி பெயர்க்கவில்லை. அதற்கிடையில் அவர் போய் விட்டார். அவ்விரண்டு பகுதிகளையும் தெளிவும் இனிமையும் வாய்ப்பத்தமிழில் மொழி பெயர்ந்து வெளியிட்டு நிறைவு செய்த பிள்ளைய வர்களின் வடமொழியாற்றல் பெரிதென் போமோ? தமிழ் மொழியுணர்ச்சி பெரிதென்போமோ? யாது சொல்கேம்!
வெளியிட்ட நூல்கள் :
இனி. பிள்ளையவர்கள் தாமே தனித்து வெளியிட்ட நூல்களை நோக்குவோம். தமிழ் நாவலர் சரிதை, ஈழ மண்டலத் தேவாரம், திருப்புகழ். சிவஞானமாபாடியம், திருமந்திரம் என்பன குறிப்பிடத்தக்க வெளியீடுகளாம். இவற்றுள்ளே சிவஞானமாபாடியம் வெளியீடும், திருமந்திர வெளியீடும் பிள்ளையவர்களின் சைவசமய உணர்ச்சிக்கு உதாரணமாக திகழ்வனவாகும். ஈழமண்டலத் தேவாரத் திருப்புகழ் வெளியீடு சமயப்பற்றுக்கும் நாட்டுப் பற்றுக்கும் சான்றாகின்றது. இங்கே A. ஒரு சம்பவத்தை நினைவு கூருதல் நலமளிக்கும். பிள்ளையவர்கள் பீ. ஏ. பரீட்சையிலே தத்துவசாத்திரத் திறமைக்குப் பரிசு பெற்றவரல்லவா? பலபேர் தமது பாடத் திறமையை வாழ்க்கையிலே ஒழுக்கத்திற் பயன்படுத்துவதில்லை. பிழைப்புக் கேற்றவற்றைக் கைக்கொண்டு மற்றவை களைக் கைவிட்டுவிடுவது பெரு
@వాsం 3D

Page 19
வழக்காகும். கருவிநூல் கற்பது அறிவுநூல் கற்பதற்கே என்னும் உணி மையை நன்குணர்ந்த பிள்ளையவர்கள் சமயப் பற்றிலே நிலைத்து நின்று, சமயநூலாராய்ச்சியிலே திளைத் துக் கிடந்து இம் மைக் கும் மறுமைக்குமுரிய முறையிலே தாம் கற்ற கல்வியைப் பயன்படுத்தி வாழ்ந்த உத்தம வாழ்க்கை ள்ல் லாராலும் நினைவில் வைத்துக்கொள்ளத் தக்கதாகும்.
1922ம் ஆண்டு ஆனி (June) மாதம் 14ந் தேதியன்று தனது பூதவுடம்பை விடுத்துப் புகழுடம்பை நிலைநாட்டிய இப்பேரறிஞரது வரலாறு பலவழிகளிற் சிறப்புடையதாகும். அச்சிறப்புகளெல்லாம் மக்களுக்கு நல்ல முன்மாதிரியாயமைந்து உணர்ச்சினுாற்றாக விளங்குவன. ஈழநாட்டிலும், பிறநாடுகளிலும் தமிழ் பேசும் மக்கள் எங்கெங்கு வாழ்கின்றனரோ அவர்களுக்கெல்லாம் இனியதோர் நல்விருந்தாயமையுமாறு அவர் தம் வரலாற்றினைக் கூறுகின்ற இக்கட்டுரை யினைப் பின்வருஞ் சுருக்கவுரையினைச் சார்த்தி நிறைவாக்கிக் கொள்கின்றேன்.
தவப்புதல்வர் :
தமிழிலும், வடமொழியிலும் வ்கிலத்திலும் தெளிந்த புலமை படைத்த பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்துப் பரீட்சகர் களுள் ஒருவராய்ப் பல்லாண்டு தொண்டு பூண்டவர். பரீட்சைச் சங்கத்தின் தலைவராக நான்கு நல்லாண்டுகள் கடமை புரிந்தவர்; மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பரீட்சகர்களுள் இவரும் ஒருவர்; சென்ைைனக் கிறிஸ்தவ கல்லூரியிலும். பச்சையப்பன் கலா சாலையிலும் தலைமைத் தமிழ்ப் புலமை நடாத்தியவர். சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் பல லட்ச ரூபா செலவில்
Gedeo 3D

GD வெளியிடப்பட்ட மிகப்பெரிய தமிழ் அகராதியின் உதவிப் பதிப்பாசிரியராய் உழைத்தவர்; இத்தகைய சிறந்த சேவைகளால் ஈழநாட்டுக்குச் சிறப்பாகவும் இந்திய நாட்டுக்குப் பொதுவாகவும் நற்பெயரை ஈட்டித்தந்த தமது பிறந்த குடியையும் விளக்கிய பேராண்மையாளர்.
“செய்வன திருந்தச் செய்” என்னும் வாக்குக்கு இலக்கணமாகத் திகழ்ந்த இவர் மனநிறைவும். அடக்கமும், தெளிவும் 2 60Luj6hiff; பணிவுடைமையும் இன்சொல்லும் வாய்ந்தவர்; ஆடம்பர வாழ்வை வெறுத்தவர்; தமது பெயரை விளம்பரப் படுத்திக்கொள்ள விரும்பாதவர்; தன்னலங் கருதாதவர்; கல்விச் செருக்கு இல்லாதவர்; தெளிவுபெற உணர்ந்து, தெளிவுபெற மொழிந்து, தெளிவு கண்டு மகிழும் செம்மையாளர்.
இத்தகைய புதல்வனைப் பெற்ற இலங்கை மாதா எல்லாரது மதிப்பிற்கும் உரியவளா கின்றாள். இதனால், இலங்கை மக்கள் யாவரும் பெரு மதிப்பைப் பெறுதற்கு அருகராகின்றனர். கனகசுந்தரம்பிள்ளைய வர்களின் வாழ்க்கை வரலாற்றினைத் தமிழர் ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம். நம் நாட்டுப் புலவர் பெருமக்களின் வரலாறுகளைத் தேடித் தேடிப் படித்து நாம் பழைமையிற் தழைத்துப் புதுமையில் மலருதல் வேண்டும். நீடுவாழ் கனகசுந்தரம் பிள்ளையை நினைவு கூர்வோமாக.
நன்றி
27.11.1955 தினகரன் வாரமஞ்சரி
இS
p 2006

Page 20
೨ಿಡ್ತಶಕ
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்து ( தொடர்ச்சியாக, இந்த நூற்றாண்டில் மறை சு.ரா. தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்து இடத்தை அழுத்தமாகப் பதித்துவிட்டுச் செ அவரை எவ்வளவு தூரம் இனங்கண்டு கெ பற்றிய அறிமுகம் உள்ள வாசகர்கள் மத்தி பிறகு அவரளவுக்கு பரவலாக அறியப்பட்ட இதற்குக் காரணம் ஜெயகாந்தனது ஜனரஞ் வெளியிட்ட நூல்களின் தொகையும் என்று ெ எழுதிய ஜானகிராமன் அவ்வளவுக்கு அறி வென்றால் பெருமளவுக்கு கவனயீர்ப்பை போயிருக்கிறார். புதுமைப்பித்தன், மெளனி பே கூட இங்கு சுந்தரராமசாமி அறியப்பட்டவர்
. எஸ். கே. விக்கினே
எழுத்துச் செயல்
‘நாம் தமிழ்ச் சூழலில் எந்தவொரு வாக் இருக்கிறோம்”. இதனைப் புரிந்துகொள்ள டே யார்? “தமிழ்ச்சூழல்' என்பது எதனைக் ( பதிலற்றுப் போகும் போது, இவ்வாக்கியமா வரையறைகளின் அர்த்தங்களால் உருவாகு சொற்களை இதன் அர்த்தங்களிலிருந்து மீட்ெ மேற்கண்ட இரு கேள்விகளுக்கும் பதில் கூற என்பதுவே தயங்கித் தயங்கி தன்னையே செல்லும் தேவை எழுகிறது. அந்நிலை வாக் இதனைவிடுத்து பொதுப்போக்கில் இவ பருண்மைத்தன்மை சிதைந்து போய் அரூப பெண்ணிய எழுத்தைப் பெண்களும் ஒடு எழுதமுடியும் என்கிற குரல்களாக எழுத்துச்
சித்திரை 2006 namumunuma
 

: மூர்
போன தமிழின் முக்கியமான படைப்பாளிகளின் ந்து போன முதலாவது முக்கிய படைப்பாளி நுவனம் வாய்ந்த ஒருவராக தனக்கென ஒரு ன்றிருக்கிறார். இலங்கையின் தமிழ்ச் சூழல் ாண்டிருக்கிறது? காத்திரமான படைப்பாளிகள் தியில் கூட இலங்கையில் ஜெயகாந்தனுக்குப் வர்கள் குறைவு என்றே சொல்ல வேண்டும். சகப் பத்திரிகை மூலமான பிரபல்யமும் அவர் சால்லலாமாயினும். ஏறக்குறைய அவரளவுக்கு யப்பட்டவராக இல்லை. சுந்தரராமசாமியோ ப் பெறாத ஒருவராகவே இருந்து விட்டுப் ான்றோர்கள் பற்றித் தெரிந்திருக்கும் அளவுக்குக்
என்று கூறிவிட முடியாது.
ஸ்வரன் ‘மூன்றாவது மனிதன்' இதழ் 17 இல்
5கியத்தையும் முழுமையாக எழுத முடியாமல் மற்கண்ட வாக்கியத்தில் உள்ள ‘நாம் என்பது குறிக்கிறது? என்கிற இரு கேள்விகளுக்கும் னது செயலற்றதாகிவிடுகிறது. இவை பழகிய ம் அடையாளங்களுடன் நின்றுவிடுகிறது. இச் டெடுப்பதற்கான வாசிப்பு முறையை உருவாக்க வேண்டிய நிலை உருவாகும் போது, எழுதுதல் மீண்டும் மீண்டும் வரையறுத்துக் கொண்டு கியங்களை நகர்த்த இயலாததாகி விடுகிறது. ற்றை எழுதிச் செல்லும் போது இதன் நிலையில் தேங்கி விடுகிறது. இதன் நீட்சியே க்கப்பட்டோர் எழுத்தை ஒடுக்கப்பட்டோரும்
செயல் ஒலிக்கத்துவங்கியிருக்கிறது.
ஜமாலன், மொழியும் நிலமும், பக் 76, 2003
ஒலை 31

Page 21
கேட்டல், பகர்த்தல்
கேட்கவும் பேசவும் மட்டுமே உரியது திரைப்படம். திரைப்படங்களுக்குக் காட்சிகளே ஆகும். ஒரு காலத்தில் அதாவது 1927க்கு மு கலை வடிவமாகத்தானிருந்தது. பேசும்படம கேட்கவும் முடிகிற சிறப்பைப் பெற்றது.
எது கவிதை
கவிதைகளின் வரிகளிடையே வெடிகுண்ெ நூறாகச் சிதறட்டும். பின்னர்
மேலும் உண்மையானதொரு கவிதை6 அனைத்தும் கிடைக்கும் இடிபாடுகளிலிருந்ே
எதிர்ப்பைப் பற்றிய கவிதை எதிர்ப்பைக் வேண்டும். ஒவ்வொரு பாலஸ்தீனியனின் போராட்டத்தைப் பற்றி இருப்பதால் மட்டும் - க இடையே ஒரு உறவு உண்டு. ஆனால் சமத் தூண்டியது எங்கள் சூழ்நிலைமையே. ஆனா அவலத்தை வெளிப்படுத்த அல்ல.
கவிதை இயக்கம்
கவிதையில் விளக்க வைத்த பிறகு அது உண்மையாகிவிடும். எல்லாவற்றையும் விள வருவதல்ல. தன்னகங்காரத்தால் வருவது கொள்வதும் மீண்டும் தேடுவதும் தான் இய இயக்கத்தோடு இரண்டு வித இயக்கங்க படைப்பியக்கமும் வாசிப்பு இயக்கமுமாகும் கவிதை வாசிப்பாளனும் பெறுவது வெவ்வே சலனமற்ற பார்வையாளன் மட்டுமே. பின்னத்
(ஒலை3)

வானொலி. பார்க்கவும் கேட்கவும் மட்டுமே அடிப்படையென்றால் வானொலிக்குக் கேட்பதே pன், திரைப்படம் காண மட்டுமே முடிகிற ஒரு ாக அது வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து
- மலையாள சினிமா இயக்குநர், அடுர் கோபால கிருஷ்ணன், சினிமாவின் உலகம் பக் 25, 2004
டான்றை வையுங்கள். வரிகளனைத்தும் சுக்கு
யை எழுப்புங்கள். அதற்குத் தேவையான த
- காஸ்லோஸ் காஸரெங்
காட்டிலும் ஒருபடி மேலோங்கியதாக இருக்க பேச்சும் - அது பாலஸ்தீனத்தைப் பற்றி, விதையாகிவிடாது. எதிர்ப்புக்கும் கவிதைக்கும் துவம் இல்லை. கவிதை படைக்க எங்களைத் ல் நாங்கள் கவிதைகளைப் படைப்பது எங்கள்
- மஹற்மூத் தார்விஷ் மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள் பக் 21
கவிதையாய் இருக்க முடியாது. அது வெறும் ங்க வைக்க முனைவது தன்னம்பிக்கையால் தேடுவதும், தெளிவதும், அவநம்பிக்கை க்கம். கவிதை இயக்கம் உள்ளது. கவிதை 5ள் நெருங்கிய தொடர்புடையது. அவை ஒரு தொலைக்காட்சிப் பார்வையாளனும் று வகை அனுபவங்கள். முன்னதில் அவன் தில் அவன் பங்கேற்பாளன், வினைபுரிபவன்.
- கரிகாலன், நவீன தமிழ்க் கவிதையின் போக்குகள், பக் 84, 2005
த்திரை 2006

Page 22
Ꮳ0Ꭷ O
ஆழததை அ
மலையக மண்ணின் மைந்த
சுதந்திரத்தின் பின் மலையகத் தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த இலக்கியட் பிரம்மாக்கள் மலையக மண்ணின் மைந்தர்களான தொழிலாளர் வர்க்க வழித்தோன்றல்கள் மலையகத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் தமிழாற்றல் உள்ள முஸ்லிம்கள், பல்வேறு காரணங்களுக்காக மலையகத்தில் வாழும் எழுத்தாற்றல் உள்ள வடபுல குணபுலத் தமிழர்கள் என மூவகைப்படுவர்.
இவர்களிலே முதல்வகை எழுத்தாளர்களில் வழிகோலிகள் எனக் குறிப்பிடத்தக்கவர்கள் சி. வி. வேலுப்பிள்ளை, என். எஸ். எம். இராமையா ஆகிய இருவர். முன்னவரான சி. வி. வேலுப்பிள்ளை அவர்கள் தொடக்கத்தில் ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் நாட்டாரியல் தொடக்கம் நாவல் வரை பல துறைகளிலும் எழுதிய முற்போக்குச் சிந்தனையாளர். பின்னவரான என்.எஸ்.எம். இராமையா அவர்கள் அறுபதுகளில் தமிழிலே சிறுகதைகள் படைத்து தனிச்சிறப்புப் பெற்ற இலக்கிய கர்த்தா ஆவர். கைலாசபதி அவர்கள் தினகரனில் பணிபுரிந்த காலத்தில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமான “என். எஸ். எம்.” இலங்கையில் மட்டும் அல்லாமல் தமிழ் வாசகர்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் புகழ் ஈட்டினார். அவர் படைத்த சிறுகதைகளில் பன்னிரண்டு அடங்கிய தொகுதி ‘ஒரு கூடைக் கொழுந்து” என்ற தலைப்பில் முதலில் 1980 இல் இது வெளிவந்தது.
மலையகத்தமிழ் மக்களின் தினசரி வாழ்க்கை காலங்காலமாக அரசியல், சமூக, பொருளாதாரட் பிரச்சினைகளைத் தீர்க்க எதிர்நீச்சல் அடிக்கும் போக்கிலே தொடர்ந்து செல்கின்றது. சுதந்திரத்திற்கு முன்னர் மலையகத் தமிழரிடம் காணப்பட்ட * விழிப்புணர்வு மழுங்கல் நிலை’ மாறி உரிமையுணர்வு துலங்கல் நிலை முன்னேற 1956 1960/61, 1970/71, 1977/78 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த அரசியல் மைய கல்வித்துறை மாற்றங்கள் காரணமாயின. ஆயினும், வாக்குரிமைப் பறிப்பு குடியுரிமைப் பாதிப்பு, புலம்பெயர் நிர்ப்பந்தம் பெருந்தோட்ட முகாமை தேசியமயமாதல் என்பன காரணமாகத் தோன்றிய அவலங்கள்
சித்திரை 2006

றியும் பயணம்
ர் என். எஸ். எம். இராமையா
- வை. கா. சிவப்பிரகாசம்
தொடர்கதையாயின. இவ்வாறு அவர்களின் உரிமையுணர்வுக்கு அப்பாலும் செல்லும் அவலவுணர்வுகளின் தாக்கங்களே மலையகத் தமிழிலக்கியப் படைப்புக்களின் கருப்பொருளாக அமைந்துள்ளமை வியப்பைத் தரவில்லை.
1948க்கு முன்னர் மலையத் தமிழர் ஏனைய மக்கள் பிரிவினர் பெற்ற கல்விக்கு இணையான கல்வி பயிலும் உரிமையைப் பெற்றிருக்க வில்லை. இச்சந்தர்ப்பத்தில் பிளேட்டோவின் கல்விச் சிந்தனைகளில் இலைமறைகாயாகக் காணப்படும் ஒரு குறைபாடு நினைவுக்கு வருகின்றது. பிளேட்டோ கிரேக்க மக்களை இரும்பு, வெள்ளி, பொன் போன்றவர்கள் எனவகுத்துக் கூறிய கல்விக் கருத்துக்கள் குடிமக்கள் என அலங்கரிக்கப்பட்ட பிரிவினர்களுக்காகவே வரையறுக்கப்பட்டன. ஆனால் பண்டைக் கிரேக்கத்தில் வாழ்ந்த மற்றொரு பிரிவினரை ‘‘அடிமைகள்’ என அடையாளப் படுத்திய பிளேட்டோ அவர்களுக்குரிய கல்வியுரிமையைப் புறக்கணித்தார். மலையகத் தமிழர்களை ஏனைய மக்கள் பிரிவினர்க்கு நிகரானவர்கள் என ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு 1948க்கு முன் இலங்கையின் கல்வித்துறைக்குப் பொறுப்பானவர்களிடம் காணப்படவில்லை. ஆயினும் பண்டைக் கிரேக்கத்திற் புறக்கணிக்கப்பட்ட மக்கள் பிரிவினர் போல் அல்லாமல் இங்கு புறக்கணிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களிலே கல்வியுரிமை அற்றவர்கள் தமது அவலங்களை நாட்டார் பாடல்களாக வெளிப்படுத்தினர். மேலும் அம்மக்களில் தமிழறிவுள்ள நடேசய்யர் பத்திரிகைத்துறையிலும் தமிழறிவும் ஆங்கில அறிவும் ஒருங்கே வாய்த்த சி. வி. வேலுப்பிள்ளை இரு மொழி எழுத்துத் துறையிலும் தமது ஆக்கங்களை இலக்கிய உலகிற்கு வழங்கினர்.
என். எஸ். எம். இராமையா எழுத்துத் துறையில் புகுந்த அறுபதுகளில் ஆட்சிமொழி மாற்றம் (1956) தனியார் துறைப் பாடசாலைகள் அரசுடைமையாதல் (1960/61) என்பன நடைமுறைப் படுத்தப்பட்டன. மேலும், அவர் சிறுகதைத்துறையிற் கணிப்புப் பெற்ற ஒரு தசாப்த காலப்பகுதியில் ‘கல்வியிற் புதிய பாதை வகுக்கும் சீர்திருத்தங்கள் (1971/72) அறிமுகமாயின.

Page 23
எனினும் மலையகத் தமிழருக்காக உருவாக்கப்பட்ட ‘தோட்டப் பாடசாலைகள்’ அரசுடைமையாகும் நிலை 1978 இன் பின்னரே தோன்றியது. எனவே 1956, 1960/61, 1971/72 என்னும் ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்கள் மலையகத் தமிழ் இலக்கியப் படைப்புத்துறையிலோ மலையகத் தமிழிலக்கிய வாசகர் தொகையிலோ எதிர்பார்க்க வேண்டிய இயல்பான அதிகரிப்பை மட்டுப்படுத்தி விட்டன. இந்தகைய மட்டுப்பாடு காணப்பட்ட நிலையிலும் சிறுகதைகள் படைத்த என். எஸ். எம். இராமையா அவர்களின் இலக்கியப் பணி உண்மையிலே ஒரு சாதனை என்றே கூறவேண்டும்.
என். எஸ். எம். மின் சாதனையில் மூன்று பரிமாணங்கள் உள்ளன. ஒன்று மலையகத் தமிழிலயக்கியப் படைப்புத்துறை வளர்ச்சி; இரண்டு மலையகத் தமிழிலக்கிய விமர்சனத்துறையின் மலர்ச்சி; மூன்று மலையகத் தமிழ் இலக்கிய வெளியீட்டுத் துறையின் எழுச்சி, இவற்றிலே மலையகத் தமிழிலக்கிய வளர்ச்சியில் என். எஸ்.எம் மின் சிறுகதைகள் வகிக்கும் இடம் பற்றிய சில குறிப்புக்கள் இப்போது முன்வைக்கப்படுகின்றன.
மனிதகுல வாழ்க் கை வட்டத்திலே மலையகத்தமிழ் மக்களின் தினசரி வாழ்வில் வெளிப்படும் பண்புகள் பழக்கங்கள், வறுமைக் கோலங்கள் வழக்கங்கள், நம்பிக்கைகள் நம்பிக்கைத் துரோகங்கள் என்பவற்றின் யதார்த்தங்கள் என். எஸ். எம் மின் சிறுகதைகளின் கருப்பொருளாக அமைந்துள்ளன. அவரின் கதாபாத்திரங்களிலே அஞ்சலை, ரஞ்சிதம், கர்ப்பிணித் தொழிலாளி ஆகிய பெண்களும் மாணிக்கம், முனுசாமி, ரங்கையா ஆகிய ஆணி களும் மூத்த தலைமுறையினரின் பிரதிநிதிகளாகப் படைக்கப் பட்டுள்ளனர். கமலம், இளங்காதலர்கள் ('கோயில்') ஆகியோர் இளந் தலைமுறையினரின் பிரதிநிதிகளாக வித்தியாசமான பாணியில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். டிரைவர் (“எங்கோ ஒரு தவறு") இளங்காதலரை விரட்டும் மூத்த தலைமுறையினர் என்போர் மலையகத் தமிழ்ச் சமுதாயத்தின் எழுச்சிக்குத் தடையாக உள்ளதீயசக்திகளின் பிரதிநிதிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
‘ஒரு கூடைக் கொழுந்து பறிக்க இரத்தம் கசியக்கசிய நேர்மையோடு உழைக்கும் அஞ்சலை ‘எர்ணெஸ்ட் ஹெமிங்வே யின் “கடலும் கிழவனும்"
Geroako 3D

-ᏣlᎠ
என்ற அமெரிக்க நாவலில் வரும் மீனவக் கிழவனுக்கு நிகரான உழைப்பாற்றல் மிக்க கதாபாத்திரம் எனக் கூறுதல் தவறாகாது. மழை, புயல் ஆகிய இயற்கைச் சக்திகளுக்கு எதிராகப் போராடிய மீனவக்கிழவன் தனது வலையிற் சிக்கிய பாரிய மீனின் சதைப்பாகங்களிற் பெரும் பகுதி கடலில் வாழும் உயிரினங்களின் பசிக்கு இரையான பின் சிதறல்கள் ஒட்டிய எலும்புக் கூட்டைக் கடற்கரையில் துணிச்சலோடு இறக்கிவிடுகின்றான். ஒரு கூடைக் கொழுந்தைக் கணக்குப் பிள்ளையின் முன் இறக்கி வைக்கும் அஞ்சலையின் சொல்லில் காணப்படும் விநயத்தை விஞ்சி விடுகின்றது அவளின் எண்ணத்திலும் செயலிலும் காணப்படும் துணிச்சல். அவளின் செயலிற் காணப்படும் துணிவு மீனவக்கிழவனின் செயலில் வெளிப்படும் துணிவுக்குச் சளைத்து அல்ல!
குடும்பத்தைக் காப்பாற்றத் தன் சொந்த ஆசைகளை அவித்துவிடும் ரஞ்சிதத்தின் தியாக உணர்வு ஒரு தனி மனிதத்துணிவின் வெளிப்பாடு என மட்டுப்படுத்தல் பொருந்தாது. இளந்தலை முறையின் எதிர்கால நலன்களுக்காக மூத்த தலைமுறையைச் சேர்ந்த பொறுப்புணர்ச்சி மிக்க மலையகப் பெண்ணினத்தின் பிரதிநிதியாகவே ரஞ்சிதத்தைக் கணிக்கவும் மதிக்கவும் வேண்டும்.
தேயிலைக் கொழுந்து பறிக் கையில் பிள்ளையைப் பிரசவித்ததாய் உழைக்கும் சக்தியின் உருவான மலையகத்தமிழ்ப் பெண் மட்டும் அல்ல. அப்பிரசவத்தாயின் அவலம் பிரசவ லிவு பெறும் உரிமையற்ற பெண் தொழிலாளர் வர்க்கத்தினர் காலங்காலமாக அநுபவிக்கும் துயரத்தின் ஒரு சிறுதுளி என்றே கணிக்கவேண்டும்.
மலையகத் தமிழ்ச் சமுதாயத்தில் வாழும் ஆண்களில் மாணிக்கம் ஒரு விசித்திரப் பிறவி. அவன் காட்டை எரித்தால் மழைவரும் என்னும் தவறான நம்பிக்கையின் தூண்டுதலால் உந்தப்பட்டு வாழ்வுக்கு ஆதாரமான விளைச்சல் தரும் சேனையையே அழித்து விடுகின்றான். மழை வீழ்ச்சிக்கு மரவளர்ச்சி அவசியம் என்னும் உண்மையை உணராத மாணிக்கம் படிப்பறிவு இல்லாத நிலை மூடநம்பிக்கைகள் மலையகத் தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படுத்திய பாதிப்பை உணர்த்துகின்றது.
த் 2006

Page 24
G2)
நெஞ்சுறுதி குறைந்த முனுசாமி நயவஞ்சக டிரைவரின் சூழ்ச்சிக்கு இணங்கி மதுபோதையில் தன் சுயநிலையையே இழந்து விடுகின்றான். மதுப் பழக்கம் மூத்த தலைமுறைக்கு மட்டும் அல்ல, இளந்தலைமுறையைச் சேர்ந்த கமலத்துக்குமே ஆபத்தை விளைத்து விடுகின்றது. தனிநபர், குடும்பம், சமுதாயம் ஆகிய வாழக்கைக் கட்டங்களின் எதிர்கால நலன்களைக் காக்க மது விலக்கு அவசியம் என்னும் காந்தியச் சிந்தனையின் செல்வாக்கு முனுசாமி என்ற பாத்திரப்படைப்பில் மறைமுகமாகக் காணப்படுகின்றது. ‘ரகுபதிராகவ என்னும் சிறுகதையும் என்.எஸ்.எம் அவர்களுக்குக் காந்தியச் சிந்தனைகளில் இருந்த ஈடுபாட்டை வெளிப்படையாகக் குறிப்பிடுகின்றது.
பெற்றோமாக்ஸ் வாங்குவதற்காக மண்ணோடு போராடும் ரங்கையா மலையகத்தமிழ் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகள் பெறாத அவலத்தைச் சாடுகின்றது.
மலையகத்தில் வாழும் மூத்த தலைமுறையினரிற் பெரும்பாலோர் உழைப்புத்திறன் மிக்கவராக வாழ, அவர்களின் வழித்தோன்றல்களான இளந்தலை முறையினர் ரஞ் சிதம் போன்றவர்களின் தியாகங்களின் பயன்களை அநுபவிக்கும் படிப்பறிவு உள்ளவர்களாக வளர்ந்தனர். அவர்களின் சிந்தனைகளில் உரிமை நாட்டம் வளர்ந்தது. இத்தகைய இளந்தலை முறையினர்களில் “கோயில் என்ற சிறுகதையில் வரும் இளங்காதலர்கள் குறிப்பிடத்தக் கவர்கள். அவர்கள் மூத்த தலைமுறையின் எதிர்ப்புக்கு இரையாகிவிடாமல். கையில் தமது காதல் வாழ்வைத் தொடர்கின்றனர். வாழ்க்கைப் பிரச்சினையிலிருந்து தப்பிச்செல்லும் மனப் பங்கே அவர்களிடம் காணப்படுகின்றது. மாறாக, நயவஞ்சக டிரைவரின் அத்துமீறல்களைச் சகிக்காத கமலம் மானங்காக்க அந்த டிரைவரை அறைந்து விடுகின்றாள். அவள் மலையக இளந் தலைமுறையினரிடம் காணப்படும் நெஞ்சுறுதியின் உருவமாக படைக்கப்படுள்ளாள்.
தொகுத்து நோக்கின் என்.எஸ்.எம். இராமையா அவர்கள் தாம் வாழ்ந்த கால மலையகத் தமிழ்ச் சமுதாயத்தின் மூத்த தலைமுறையினரான உழைக்கும் வர்க்கத்தின் அவலங்களையும், துணிச்சல் மிக்க இளந் தலைமுறையினரின் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் சித்தரிக்கும் சிறுகதைகள் மூலம் மலையகத்தமிழிலக்கிய வளர்ச்சியில் தமக்கெனத் தனியிடத்தை வகுத்துக் கொணி ட மலையக மணி னின் மதிப்பிற்குரிய மைந்தர் என விதந்து கூறலாம்.
U U U
சித்திரை 2006

rreoIDuraisossor LIbô.
- மு. நித்தியானந்தன் ஒரு கலைஞனின் தேடல் வெறும் புறத்தோற்ற அவதானிப்புகளோடு மாத்திரம் முடிவுபெற்று விடுவதில்லை. இப்பிரபஞ்சத்தில் மனிதன் மாத்திரமல்ல, மானுட அனுபவம் கருக்கொள்கின்ற யதார்த்த இயக்கங்கள் அனைத்தும் கலைஞனின் தேடலுக்கு இலக்காகின்றன. வரலாற்றின் வீச்சில், சமூகங்களின் வளர்ச்சிப்போக்கில் பெளதிக உலகின் சிக்கலான பல்வேறு அம்சங்கள் மானுட யதார்த்தத்தினுள் சிறைப்பிடிக்கப் படுகின்றன. இதற்கேற்ப கலைஞனது தேடல் இலக்கின் பரிமாணங்கள் அகலிக்கின்றன. இத்தேடல் சித்திக்க கலைஞனின் பார்வையும் விசாலித்தல் காலத்தின் நிர்ப்பந்தமாகிறது. அவ்வக் காலகட்டத்தில் யதார்த்தத்தின் வெவ்வேறு அம்சங்களின் தனிப்பட்ட அழுத்தம், அகலிப்பு, அர்த்தம், பெறுமானம் போன்றவற்றிற்கு சவாலாக கலைஞனின் தேடலில் ஆழமும் வீச்சும் உருக்கொள்வதே விரும்பத்தக்கது. வர்க்க பேதங்கொண்ட சமுதாயத்தில் மானுட யதார்த்தத்தின் வளர்ச்சிக்கும் கலைஞனின் பார்வை அகலிப்பிற்கும் ஒத்தியைபு இருப்பதில்லை. சமூக இழைகளிலிருந்து, உற்பத்தி உறவுகளிலிருந்து கலைஞனும் அந்நியமாக்கப்பட்டுவிடுகிறான். அவன் அந்நியமாகிப் போய் விடுவதினால் சமூகத்தின் மொத்த இயக்கத்தை சீராகப் பார்க்க இயலாமல் சிதைந்த உருவங்களையோ உருத்திரிந்த பிம்பங்களையோ தான் தரிசிக்கிறான்.
இந்த மானுட யதார்த்தத்தின் முழுமையை உணர்பவன் அதன் ஒரு விளைவேயான மனித துயரத்துக்கு பரிகாரம் தேடுகிறான். இந்த யதார்த்தத்தின் பூரணம் புரிபடாத வேளையில் ஒரு கலைஞன் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் கற்பிக்கிறான்?
அவலத்தின் மத்தியிலும் சமூகப் புன்மையால் சூழப்பட்டும் சீரழியும் மனிதனைக்கூட அச்சத்திலிருந்து மீட்டெடுத்து அவனுக்கு ஒரு பெறுமானத்தை அளித்து அவனை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறான். அதாவது யதார்த்தத்தின் இயக்கத்துக்கு முழு விளக்கத்தையும் ‘மனிதன்' என்ற எண்ணக்கருவின் தளத்திலிருந்தே பெறமுயல்கிறான். இதன் விளைவாக தினசரி வாழ்க்கை வட்டத்தினுள் உழன்று கொண்டிருக்கும் அந்நியமாக்கப் பட்ட, ஒடுக்கப்பட்ட சராசரி மக்களிடையேயும் நம்பிக்கை
(ஒலை3)

Page 25
ஒளிர்விடுகின்ற ஒருயர்ந்த மனுக்குலத்தைக் காணமுற்படுகிறான்.
இப்படியான கதாபாத்திரங்களை சிருஷ்டிக்கும் ஒரு கலைஞன் குறைந்த பட்சம் ஒரு மனிதாபிமானியாகவாவது இருந்தாலே இத்தரிசனம் சாத்தியமாகும்.
என்.எஸ்.எம். ராமையாவின் சிறு கதைகளிலே நாம் காணுகின்ற கதாபாத்திரங்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித் துயருறும் தனிநபர்களாவர். ஆனால் இப்பாத்திரங்கள் பெயரற்ற உதிரிகளல்லர்; ஆளுமை நசித்துப் போனவருமல்ல. வாழ்க்கையின் பிரச்சினைகளுக்குத் தங்கள் தனிப்பட்ட சொந்த ஆளுமையின் பலத்தினால் சவால் விடுகின்றனர்.
தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன் சொந்த ஆசைகளை அவித்து விடுகிறாள், ‘தீக்குளிப்பில் வரும் ரஞ்சிதம்; எப்பாடு பட்டேனும் தங்களுக்கும் ஒரு பெற்றோமாக்ஸ் லைட் வாங்கிவிட வேண்டுமென்று முடியாத வயதிலும் மண்ணோடு போராடுகிறான் ‘வேட்கை” யின் ரங்கையாக் கிழவன்; காடு எரிந்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கைக்காக தான் பாடுபட்ட சேனையையே நள்ளிரவில் எரித்து விடுகிறான் ‘மழையில் வரும் மாணிக்கம்; கையில் இரத்தம் கசியக் கசிய தன்னுழைப்பின் நேர்மையை கணக்கப்பிள்ளைக்கும் ஊராருக்கும் வைராக்கியத் துடன் நிறுவுகிறாள் ‘ஒரு கூடைக் கொழுந்தின்’ அஞ்சலை; முழு ஊரையும் எதிர்த்து குகையின் மத்தியில் தங்கள் காதலி பயணத்தை துணிச்சலோடு ஆரம்பிக்கிறார்கள் கோயிலில் வரும் இளம் காதலர்கள்.
ஆனால் வர்க்கபேத சமுதாயத்தில் தனிநபர்களாக, அந்நியமாக்கப்பட்ட உதிரிகளாக ஜிவிப்போரின் ஆளுமை நசித்துப் போவதே நியதி. மாறாக ராமையாவின் கதைகளில் வரும் பாத்திரங்கள் முழு யதார்த்த இயக்கத்துக்கும் சவால் விடுவோராகக் காணப்படுகின்றனர். அதில் தோல்வியுற்றாலும் அத்தோல்வி கூட ஆராதிக்கப்படுகிறது; லட்சியமயப் படுத்தப்படுகிறது. ராமையாவின் கதைகளில் நாம் காணும் இத்தகைய போக்கு ஒரு மனிதாபிமானப் பார்வையின் முழு அர்த்தத்திலில்லாவிட்டாலும் அதன் ஒரு எளிமையான வடிவத்தின் வெளிப்பாடு எனக்கொள்ளலாம்.
மானுட யதார்த்தத்தை அதன் சரியான பரிமாணங்களில் இனங்கண்டு கொள்ளமுடியாத

-(23)
நிலையில் தனிமனிதனுக்கும் அவனைச் சார்ந்திருக்கும் சூழல் யதார்த்தத்துக்குமிடையில் உண்மையான முரண்பாடுகள் - முரண்பாடுகள் அற்றவை போன்று மங்கலாக தெரிவதனால் புறமொதுக்கப்பட்டும் வேறு சக்திகள் பூதாகார மானவையாயும் மனித ஆளுமையை மீறியவையாயும் மனிதனின் விரோத சக்திகளாயும் சித்தரிக்கப்படுதல் இயல்பு.
இத்தகைய போக்கு ராமையாவின் கதைகளில் சற்றுத் தூக்கலாகவே தெரிகின்றது. ரங்கையாக் கிழவனின் ஆசைகள் நிராசையாகிப் போவதற்கு அவன் பொருளாதாரம் அல்ல அவன் தோட்டத்தை அழித்த மழையும் மலைச்சரிவுமே காரணங்களக அமைகின்றன. மழை இல்லாமல் போனதால் வந்த வரட்சியைச் சமாளிக்கத்தோட்டத்து நிர்வாகம் வேறொரு தீர்வைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்ற யோசனையே இல்லாமல் தாம் பாடுபட்டு வளம்படுத்திய மண்ணின் சேனையையே மழைக்காக எரிக்க முற்படுகிறான் மாணிக்கம்.
இந்தப் பின்னணியில் இயற்கை, விதி, மனித ஜீவிதத்தின் சுழல் வட்டம் போன்ற மனித ஆளுமைக்கப்பாற்பட்ட சக்திகள் என்று கூறப் படுவற்றைச் சமாளிப்பதற்காக சாதாரண மக்கள் திரளிலும் மேம்பட்ட லட்சியக் கதாபாத்திரங்களாக ரஞ்சிதத்தையும், அஞ்சலையையும், ரங்கையாவையும் மாணிக்கத்தையும் படைக்கவேண்டிய தேவை ராமையாவுக்கு ஏற்படுகிறது. இருந்தும் ராமையாவின் கதைகளில் வரும் கதாபத்திரங்களின் இயக்கப்பாடுகள் அனைத்தும் உழைப்பு என்பதனையே தாரகமந்திரமாகக் கொண்டிருப்பது சிறப்பியல்பு என்று கூறலாம். மலையக மக்களின் வாழ்க்கையில் பிறப்பில் இருந்து சாவுவரையுள்ள சகல அம்சங்களும், நேர்மை, கண்ணியம், சமூகதர்மம் பற்றிய உணர்வு வகை அனைத்தையும் இந்த மக்களின் உழைப்பு என்னும் உரை கல்லுக்கூடாகவே நிறுவுகிறார். கொழுந்து பறிக்கையிலேயே பிள்ளையைப் பிரசவிக்கும் தாயின் கதை மூலம் உழைப்பு இந்த மக்களின் வாழ்க்கையில் எப்படி பின்னிப் பிணைந்து போய் கிடக்கிறது என்பதை நன்கு உணர வைக்கிறார்.
1960களில் எழுத்துத் துறைக்குள் நுழைந்த என். எஸ். எம். ராமையா தன் எழுத்தின் வளத்தால் கடல் கடந்த இடங்களிலும் கெளரவத்தைப் பெற்றிருக்கிறார். குறைவாக எழுதி, கணிசமான வாசகர்களின் கவனத்தை ஈர்ந்திருக்கிறார். மலையகம் என்ற பிராந்தியத்திற்கேயுரிய
-சித்திரை 2009

Page 26
GO
விஷேசமான தன்மைகளைக் கொண்டெழுந்த மலையகச் சிறுகதை இலக்கியத்திற்கு உருவம் சமைத்தவர் என்ற வகையில் ராமையா வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறார்.
மலையக மக்களின் துயரார்ந்த வாழ்வினை இலக்கியத்தின் ஒளியிலே தரிசிக்க முயன்ற முன்னோடிகளின் தொகுப்புக்கள் என்ற முறையில் என். எஸ்.எம். ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து” தெளிவத்தை ஜோசப்பின் “நாமிருக்கும் நாடே.’’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளுமே தனி ஒரு எழுத்தாளரின் தொகுப்பாக நம் கைகளில் கிடைத்திருக்கின்றன. மலையக இலக்கியப் பங்கினை மதிப்பிட இவை போன்ற பல தொகுப்பு நூல்கள் வெளிவருவது அவசியம்.
Uy! Vy y
என். எஸ். எம். ராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து ஐயமும் ஆவேசமும்
- பாவண்ணன்
கீரைக்கட்டுகள் நிறைந்த கூடையுடன் ஒவ்வொரு காலையிலும் எங்கள் வீட்டுக்கு வருகை தருவாள் ஒரு பெண். முப்பதுகளை யொட்டிய வயதிலிருந்தாள். அவள் படபடவென்று கலகலப்பாகப் பேசுவாள். ஒவ்வொரு கீரைக்கும் இருக்கிற மருத்துவக் குணங்களை அழகாக அடுக்கிச் சொல்வாள். அதிகமாக விற்பனையாகிற கீரைக்கட்டுகள் மட்டுமே அவளிடம் இருக்கும். மணத்தக்காளி இருக்காது. பொன்னாங்கண்ணி இருக்காது. இவை வேண்டுமே என்று எப்போதோ பேச்சுவாக்கில் சொன்னதை நினைவில் வைத்திருந்து கொண்டுவந்து தந்து ஒருமுறை நெகிழச்செய்தாள். பிறகு வாரத்துக்கு ஒரு முறையாவது எங்கிருந்தாவது கொண்டுவந்து தரத்தொடங்கினாள். அவளும் என் மனைவி அமுதாவும் சேர்ந்துவிட்டால் கீரைகளைப் பற்றிப் பெரிய ஆராய்ச்சியே நிகழும்.
ஒரு நாள் இடைவிடாமல் இருமிக்கொண்டி ருந்தேன். அதிகாலையில் அது இன்னும் அதிகமாக இருந்தது. அமுதா கீரை வாங்கும்போதும் இருமிக் கொண்டிருந்தேன். ‘‘ என்ன வீட் டையே தூக்கிட்டுப்போற மாதிரி இருமறாரு சாரு. மருந்து எதுவும் சாப்பிடலயா?” என்று விசாரித்தாள். மறுநாள் காலையில் ஒரு கைநிறைய தூதுவளைக் கீரையைத்
(சித்திரை 2006

தந்து ஊறுகாய் செய்து சாப்பிடுமாறு சொன்னாள். மேலும் “சித்திரத்தை, அதிமதுரம் சேத்து கஷாயம் வச்சிக் குடிங்க, சரியா போயிடும்’ என்றும் சொன்னாள். தற்செயலாக ஊரிலிருந்து வந்து மஞ்சள் காமாலை நோயால் தாக்கப்பட்டு படுத்த படுக்கையான என் மனைவியின் தங்கைக்காக தினந்தோறும் கீழாநெல் லிக் கீரையைக் கொண்டுவந்து அரைத்துச் சாறெடுத்துப் பருகுமாறு சொன்னாள்.
அவள் தன் கதையை விவரிக்கும் வகையில் ஒருநாள் சூழல் அமைந்துவிட்டது. சின்ன வயதிலேயே அவர்கள் வீட்டில் அவளுக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். மண்டியில் மூட்டை தூக்குவது, விறகு பிளப்பது எனப் பலவிதமான தொழில்களைச் செய்பவன் அவள் கணவன். இரண்டு குழந்தைகள். வேலை செய்கிற இடத்தில் பழக்கமான ஒரு பெண்ணையும் மணந்துகொள்கிற ஆசை அவனுக்கு. அவள் அதைக் கடுமையாகத் தடுத்தாள். மாமியாரும் அவளுக்கு ஆதரவாக இருந்தாள். ‘என் புள்ளையா இருந்துட்டு நீ இப்படிச் செய்யறதவிட உயிர உட்டுடலாம்” என்று வயிறெரிந்து திட்டினாள். வாரக்கணக்கில் சண்டை நடந்ததே தவிர அவன் நடத்தையில் மாற்றமெதுவும் உருவாகவில்லை. ஒருநாள் அவன் வாசலிலேயே தடுக்கப்பட்டான். அவனோ வெகுண்டெழுந்து அவர்கள் உண்பதும் உடுப்பதும் அவனுடைய சம்பாத்தியத்தில் தான் என்பதை நினைவூட்டிப் பேசிவிட்டு 'முடிந்தால் நீங்களே சம்பாதிச்சி ஒங்களால தனியா பொழைக்க முடியும்னு செஞ்சி காட்டுங்க, அதுக்கப்புறம் இந்த வீட்டு வாசல்படிய மிதிச்சா ஏண்டா நாயேனு கேளுங்க” என்று சவால்விட்டான்.
இரண்டு பெண்களும் அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டார்கள். அப்போதுதான் இந்தக் கீரை வியாபாரம் அவர்கள் மனத்தில் உதித்திருக்கிறது. தொடக்க முதலீட்டுக் குத் தேவையான பணத்தைக்காதிலிருந்த கம்மலைக் கழற்றி அடகு வைத்துப் புரட்டியிருக்கிறார்கள். பக்கத்துச் சிறுநகரச் சந்தைக்கு அதிகாலையிலேயே பேருந்தில் சென்று கீரைகளை வாங்கிவரும் வேலையை மாமியார் செய்தார். அவற்றைக் கட்டுகளாக்கிக் கூடையில் நிரப்பி விற்றுவருவது மருமகளுடைய கடமையானது. பிள்ளைகள் இருவரும் பள்ளிக்குத் தொடர்ந்து சென்றார்கள். இரண்டு மூன்று வாரங்கள் கழித்துப் பார்க்க வந்த கணவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். ஏற்றுக்கொண்ட சவாலில் அவர்கள்
ஒலை 31

Page 27
வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கியிருப்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் உறுதியைக் குலைக்க எண்ணி ‘இதெல்லாம் சும்மா ரெண்டு மூணு வாரந்தான் நடக்கும். இப்படியே காலத்த தள்ளிடலாம்ன்னு கனவு காணாதீங்க. ஆம்பள நான் சம்பாதிக்கலன்னா ஒரு கதயும் நடக்காது. பேசாம தோத்துட்டம்னு ஒத்துக்குங்க நா பாத்துக்கறேன்” என்றான். பெண்கள் இருவரும் அப்படி ஒரு நிலையை அவன் தன் கனவில் கூட நினைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டனர்.
தம் உறுதியில் சற்றும் குலையாத பெண்கள் திடமான மனத்துடன் தொடர்ந்து தம் தொழிலை நடத்துவதில் உறுதியைக் காட்டினர். அதுவே அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தது. சவாலில் தோற்ற கணவன் தன் மற்றொரு மனைவியுடன் நகரின் மற்றொரு பகுதியில் வாழத் தொடங்கினான். அடிக்கடி வந்து சத்தம்போட்டுவிட்டுச் சென்றாலும் அவனால் பெரிய அளவில் தொல்லைகள் இல்லை. “பொம்பளைங்களால முடியாதுன்னு நெனைச்சி பந்தயம் கட்டனாரு. ஒனக்கு கையையும் காலயும் படைச்ச கடவுள் தான் எனக்கும் கையையும் காலயும் படச்சிருக்கான். பொம்பளைன்னா அவ்வளவு எளக்காரமா? மனசு வச்சா எதயும் செய்ய முடியுன்னு காட்டறதுக்குத்தான் வைராக்கியமா இந்தத் தொழில செய்றம்.”
கபடில்லாமல் சிரித்தபடி கூடையைத் தலையில் சுமந்தபடி அவள் சென்றுவிட்டாள். அன்று முழுக்க எங்கள் பேச்சில் அவள் இடம்பெற்றாள். அவள் வைராக்கியத்தில் நாம் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் இருப்பதாகத் தோன்றியது. சவாலை எதிர்கொண்டு போராடி வென்று தன் சுயத்தை நிறுவுகிற பெண்கள் பலரை எங்கள் கிராமத்தில் பார்த்தவன் தான் நான். நகரத்திலும் அவர்களின் தொடர்ச்சியைக் காண நேர்ந்தது. ஆறுதலாக இருந்தது. இத்தரு பெண்கள் வரிசையில் இடம்பெறத் தக்கவள் தான் ‘ஒரு கூடைக் கொழுந்து' சிறுகதையின் பாத்திரமான லட்சுமி.
தேயிலைக் கொழுந்து பறிக்கும் இடத்துக்குச் சற்றே தாமதமாக வந்து சேர்கிற லட்சுமியிடம் தோழிப்பெண்கள் பேச மறுக்கிற தருணத்திலிருந்து கதை தொடங்குகிறது. அவள் கேட்கிற கேள்விக்குக் கூட யாரிடமிருந்தும் பதில் வரவில்லை கங்காணிக் கிழவனின் பேச்சும் கடுகடுப்பாகவே இருக்கிறது. தாமதமாக வந்ததற்காகக் குத்திக்காட்டுகிறான்.
Gedeo 3D

Gs) வேண்டாவெறுப்பாகக் கடைசித் தொங்கலுக்குப் போய்க் கொழுந்து பறிக்குமாறு உத்தரவிடுகிறான்.
வழக்கமாகக் கூடுதலாகக் கொழுந்து பறிக்க விரும்புகிறவர்கள் முதல் தொங்கலுக்கும் கடைசித் தொங்கலுக்கும் போக மாட்டார்கள். முதல் தொங்கலென்றால் ஒழுங்காக நிரை கிடைக்காது. ஆயிரம் தடவை ஏறி இறங்க வேண்டும். கடைசித் தொங்கலென்றால் பிள்ளைக்காரிகளோடு மாரடிக்க முடியாது. அன்று வேறு வழியில்லாமல் கிடைத்த கடைசித் தொங்கலில் கொழுந்து பறிக்கத் தொடங்குகிறாள் லட்சுமி. முதல் பிடிக் கொழுந்தைக் கூடைக்குள் போடும் முன்னர் அருகிலிருந்த கிழவியிடம் பொலி சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறாள். அப்பனே சண்முகா என்று அவள் பொலி போட்டதும் பிடிக்கொழுந்து கூடைக்குள் விழுகிறது. பிறகு கைகள் வேகவேகமாக இயங்கத் தொடங்குகின்றன.
சாயங்காலமாக கொழுந்துகள் நிறைந்த கூடைகளோடு எல்லாப் பெண்களும் எடைபோடும் இடத்தில் கூடுகிறார்கள். கணக்குப்பிள்ளையின் பார்வையில் லட்சுமி விழுகிறாள். அவள் அழைக்கப் படுகிறாள். உடனே நாலைந்து நாட்களுக்கு முன்பு இருபத்தைந்தாம் நம்பர் மலையில் கொழுந்து எடுத்தபோது அவள் எடுத்த ஐம்பத்தியேழுராத்தல் கொழுந்தைப் பற்றி விசாரிக்கப்படுகிறாள். உண்மை யிலேயே அக்கொழுந்துகளைப் பறித்தது அவள் தானா என்கிற சந்தேகத்தை முன்வைத்துக் கேள்விகள் கேட்கிறான். அந்த வட்டாரத்தில் அதுவரை யாருமே அவ்வளவு கொழுந்து பறித்ததில்லை என்பதால் அச்சம்பவம் எல்லாருடைய மனத்திலும் சந்தேகத்தைக் கிளப்பியிருப்பதாகச் சொல்கிறான். பல ஆண்டுகள் பழக்கமுள்ள பெண்கள்கூட அந்த அளவு எடுத்ததில்லை என்பதால் மேலிடத்தில் அப்படிச் சந்தேகம் உருவாகி யிருக்கிறது. அதைப் போக்குவதற்கு ஒரே வழி மீண்டும் ஒருமுறை ஐம்பத்தியேழு ராத்தல் கொழுந்தை அவள் பறித்துக்காட்ட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. லட்சுமி தூரத்துச் சொந்தக்காரப் பெண் என்பதால் வேண்டுமென்றே கணக்கை மாற்றி எழுதியிருப்பதாக மற்றவர்கள் தன்மீது கொண்டி ருக்கும் சந்தேகத்தை நீக்குவதற்கும் இதைத் தவிர வேறு வழியே இல்லை என்றும் சொல்கிறான் கணக்குப்பிள்ளை.
லட்சுமியின் புருவங்கள் கேள்விக்குறியாக வளைகின்றன. காலையிலிருந்து பெண்களும்
-(சித்திரை 2006)

Page 28
(2)
கங்காணியும் காட்டிய பாராமுகத்துக்கான காரணத்தைப் புரிந்துகொள்கிறாள் அவள். பொங்கிவந்த வேகத்துடன் மீண்டும் அதேபோலக் கொழுந்துகளைப் பறித்துக் காட்டுவதாகச் சொல்கிறாள். அந்த விஷயத்தில் அவள் தோல்வியுற்றால் தான் பொல்லாதவனாக மாற வேண்டியிருக்கும் என்று அச்சுறுத்துகிறான் கணக்குப்பிள்ளை.
அன்று இரவு வீட்டுக்குள்ளும் அந்த விவாதம் நடக்கிறது. தாய்க்காரியும் திருமணம் செய்து கொள்ளப்போகிறவனும் கணக்குப் பிள்ளையிடம் உண்மையைச் சொல்லி மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்குகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முன் வராத லட்சுமி தன்னால் பந்தயத்தில் வெற்றிபெற முடியும். என்று விடாப்பிடியாகச் சொல்கிறாள். ‘முடிஞ்சமட்டும் எடுப்பேன். முடிய லைன்னா மத்த மலையிலே போயி பொழைச் சிக்கறேன், அதுவும் இல் லன்னா ஸ்டோருக்கு எல பொறுக்கப் போறேன்” என்கிறாள்.
அடுத்த நாள் காலை, பந்தயப்படி பறித்துக்காட்ட வேண்டிய நாள். தலை நிமிராமல் ஒருமணிவரை கொழுந்து பறிக்கிறாள் லட்சுமி. கணக்குப்பிள்ளையின் முன்னிலையில் நிறுவை நடக்கிறது. மொத்தத்தில் அறுபத்தியோரு ராத்தல்கள். ஒப்புக்கொண்டதை விட நான்கு ராத்தல் கூடுதலாகவே பறிக்கப்பட்டிருக்கிறது. தன் உழைக்கும் ஆற்றல் நிரூபிக்கப்பட்டிருப்பதை நினைத்து அவள் மகிழ்ச்சியடைகிறாள். ஆனால் கணக்குப்பிள்ளையின் மனம் அந்த வெற்றியை ஏற்க மறுக்கிறது. "கொழுந்துல நெறய பழுது இருக்கு இருபது ராத்தல் வெட்டப்போறேன்’ என்று சொல்கிறான். அதைக் கேட்டு கங்காணியே வெலவெலத்துப் போகிறான். கணக்குப்பிள்ளையின் வார்த்தைக்கு மதிப்புக்கொடுத்து நான்குபேரை சாட்சியாக நிற்க வைத்துப் பறித்தவன் அவன். அவளுடைய உழைப்பை உதாசீனப் படுத்துவதைக் காண அவனாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை. விடுவிடென்று லட்சுமியின் அருகில் சென்று அவளது வலதுகையைப் பிடித்து கணக்குப்பிள்ளையின் முன் நீட்டுகிறான். ஆள்காட்டி விரலின் ஒரப்பகுதிகள் தோல்கிழிந்து ரத்தம் கசிந்து உறைந்திருக்கிறது.
‘இதைப் பார்த்துவிட்டுப் பேசுங்க ஐயா, இவ்வளமையும் எடுத்தது இந்தக் கையி. இந்த ராத்தலையா தரமாட்டேன்னு சொல்றீங்க?” என்று கேட்கிறான். லட்சுமியின் கையைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்கிறான் கணக்குப்பிள்ளை.
(சித்திரை 2006)

அவன் கை தானாகவே அறுபத்தியோரு ராத்தலைப் பதிவு செய்துகொள்கிறது.
சபதம் நிறைவேறாவிட்டால் மற்ற மலைக்குப் போய் பிழைத்துக்கொள்வதாகச் சொல்லிக் கொண்டிருந்தவள் சபதம் நிறைவேறிய பின்னரும் நிற்க விரும்பாமல் வேறிடம் தேடிப் போய்விடுகிறாள்.
முதல் வாசிப்பில் கணக்குப்பிள்ளையின் மீது கோபம் வருவதைப் போல இருந்தாலும் பிறகு அது தணிந்துவிடுகிறது. லட்சுமியும் தேயிலை பறிக்கும் மற்ற பெண்களும் கங்காணிக்குக் கட்டுப்பட்டவர்கள். கங் காணியோ கணக் குப் பிள்ளைக் குக் கட்டுப்பட்டவன். கணக்குப் பிள்ளையோ தோட்ட முதலாளிக்குக் கட்டுப்பட்டவன். அறுபத்தியோரு ராத்தல் கொழுந்து பறித்துத் தன் திறமையை நிரூபித்துக்காட்ட நிர்ப்பந்திக்கும் கணக்குப் பிள்ளைக்கும் ஒரு மறைமுக நெருக்கடி உண்டு. ஒரு பெண் என்பதால் சலுகை காட்டிக் கணக்கெழுதியதாக தன்மீது எந்தப் பழியும் வந்துவிடக் கூடாது என்பதிலும் முதலாளியின் நம்பிக்கைக்கு மாறாக ஏதாவது நடந்து தன் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாது என்பதிலும் இருக்கிற கூடுதல் எச்சரிக்கையுணர்வே அந்த நெருக்கடியைக் கணக்குப் பிள்ளைக் கு உருவாக்குகிறது. ஒருவகையில் அவரும் கூடுதல் உழைப்பை வெளிப்படுத்தியே தன் நிலையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியவராக இருக்கிறார். தேயிலைத் தோட்ட வாழ்வில் கொழுந்து பறிப்பவர்கள் முதல் கணக்குப் பிள்ளைகள் வரை ஒவ்வொருவருமே ஏதோ ஒருவகையில் கூடுதலாக உழைத்துத் தம் நிலையைத் தக்க வைத்துக்கொள்கிறவர்களே. ஒவ்வொரு தோள்மீதும் நெருக்கடி என்னும் கலப்பை அழுத்தியபடியே உள்ளது. எதார்த்தத்தில் இவர்களிடையே உறவுச் சிக் கல்கள் பல இருந்தாலும் மோதல்கள் உருவானாலும் இந்த நிலையில் மாற்றம் எதுவுமில்லை.
சக்திக்கும் சிவனுக்கும் நடந்த போட்டியைப் பற்றிய புராணக் கதையை நாம் எல்லாரும் அறிவோம். காலம் காலமாகப் பெண்களைச் சாதாரணமாக எடைபோட்டுச் சவாலுக்கு இழுக்கும் ஆண்மணத்தின் நவீன வடிவம் தான் கணக்குப் பிள்ளை. ஆற்றல் என்பதை உடலிலிருந்து வெளிப்படும் ஒன்று என்கிற எண்ணத்தின் அடிப்படையில் பேசுகிறான் அவன். கட்டான உடலமைப்பு மட்டுமே ஆற்றலை வெளிப்படுத்தி விடாது. அதை வழங்குவது மனம் அங்கிருந்து சுரப்பதே
Geboo 3D

Page 29
ஆற்றல். பார்வைக்கு நளினமாக இருந்தாலும் மன ஆற்றலின் வலிமையால் குறிப்பிட்ட நேரத்தில் அறுபத்தியொரு ராத்தல் கொழுந்தைப் பறித்துக் காட்டுகிறது லட்சுமியின் கை சவாலில் வென்ற பிறகு மலையை விட்டு அவள் வெளியேறுவது கதைக்கு உள்ளார்ந்த ஒரு அழகைக் கொடுக்கிறது. இதற்குப் பிறகுதான் கணக்குப்பிள்ளைக்கு அவள் மீது காதல் பிறந்தது என்று எழுதப்பட்டிக்கிற கடைசிவரி கதைக்கு எந்த வகையிலும் அழகு சேர்க்கவில்லை. காரணம் கதையின் முரண் அவன் காதல் அல்ல. வலிமை இருக்குமா என்று எழுகிற ஆண் மனத்தின் ஐயமும் நிறுவிக்காட்ட முனையும் இளம்பெண்ணின் ஆவேசமும் சந்திக்கும் புள்ளிதான்.
U U U
ஒரு கூடைக்கொழுந்து "அக்கா எனக்கு எது நெறை?”
கொழுந்து இல்லாத கூடையின் தலைக்கயிறு தோள் வழியாக இடதுகைக்குள் அடங்கியிருக்க, வெற்றுக்கூடை முதுகில் அசைந்து கொண்டிருந்தது. லட்சுமியின் கேள்வி யார் காதில் விழுந்ததோ என்னவோ? பதிலே இல்லை. மற்ற நாட்களாக இருந்தால் அந்த ‘வயசுப் பெண்கள்’ குழுவினர் அவளை ஆளுக்கொரு பக்கமாக இழுப்பார்கள்.
“இங்கே வாடி லெட்சுமி என்கிட்டே நிறைதாரேன்”
“ஐயோ! லெட்சுமிக்குட்டி! என்கிட்டே நிற்கட்டுண்டி
நாலாபக்கத்திலிருந்தும் வரும் அழைப்பைக் கண்டு அவள் அரிசிப்பல் தெரியச் சிரிப்பாள். அவளுக்குச் சற்றுக் கர்வமாகக்கூட இவ்ளளவு கிராக்கியா என்று
அப்படிப் பட்டவங்கள் இன்று ஒரே மெளனம் அனுட்டித்தனர். எதற்கு இந்த மெளனம் என்று புரியாமல் அவர்கள் முகத்தைப் பார்த்தாள் லெட்சுமி. நிறை பிடித்துக்கொண்டு நின்ற அவளுடைய 'செட்டுகள் எல்லாம் சொல்லி வைத்தாற்போல முகத்தை ஒரு மாதிரியாகத் தூக்கி வைத்துக் கொண்டு - கொந்தரப்பு காகம் கொழுந்து காசுமாக ‘முதல் நம்பர் சம்பளம் வாங்குபவளை எரிச்சலொடு பார்க்கும் பிள்ளைக்காரி மாதிரி - ஒரப் பார்வை பார்ப்பதைக் கண்டதும் அவளுக்கு எரிச்சலாக்கூட வந்தது.

GD
“என்னடி ஆத்தா உங்களுக்கு வந்த வாழ்வு?” என்று ஒரு வெட்டு வெட்டிவிட்டுக் கடைசித் தொங்கலில் நிறை போட்டுக 'கொண்டிருந்த கங்காணிக் கிழவனிடம் போனான்.
99
“கங்காணி அப்பச்சி எனக்.
வழக்கமாக அவளைக் கண்டதும், இருக்கும் இரண்டு முன்பற்களும் தெரியச் சிரித்தவாறு ‘என்ன ஆயி! இப்பத்தான் வாறியா? போ போ. முப்பத்திரண்டாவது நிறை ஒனக்கு. அய்யா வர்றத்துக்குள்ளே ஒடு” என்று கனியும் கிழவன் கூட இன்றைக்கென்று சடசடத்தான். ‘வாறாக, தொரைச்சாணி அம்மா! வாங்க இப்பத்தான் விடிஞ்சுதோ? மொகறையைப் பாரு நேரம் என்ன ஆவுது? சுணங்கி வாற ஆளுக்கு ஏன் வேலை கொடுத்தேன்னு ‘ங்ொப்பன்’ குதிப்பதே! நீயா ‘வதிலு சொல்லுவே?”
விடியற்காலை வேளையிலே இப்படி வாங்கிக்கட்ட வேண்டி இருக்கின்றதே என்று அவளுக்கு அங்கலாயப்ப்பாக இருந்தது தான். ஆனால் கணக்கப்பிள்ளை ஐயாவிடமும் கங்காணியிடமும் அதைக் காட்டிக்கொள்ள முடியுமா? அப்புறம் தப்புவதாவது
‘சரி. சரி அப்பச்சி! காலங்காத்தாலே பேசாதீங்க என்னமோ, என்னைக்கும் போல மத்தக் குட்டிக நெறை புடிச்சிருப்பாளுகன்னு நெனச்சேன். அவுகளுக்கெல்லாம் இன்னைக்கு என்னமோ வந்திருச்சி!.
“நீங்க பண்ணுற காரியங்களுக்கு நெறைவேறே புடிச்சித் தருவாகளோ' கங்காணிக் கிழவன் எரிந்துவிழுந்தான். “தொலைஞ்சுப்போ! கடேசித் தொங்கலுக்கு!”
கீழே இறக்கி வைக்கப்பட்ட வெற்றுக் கூடை மீண்டும் முதுகுக்குத் தாவியது. கடைசி நிறைக்குப் போய்க்கொண்டிருந்த லெட்சுமியின் பருவத்துப் பின்னழகை அந்தக் கூடையோ, சேலைமேல் கட்டியிருந்த முரட்டுப் படங்குச் சாக்கோ மறைக்கவில்லை.
வழக்கமாகக் கொஞ்சம் அதிகமாகவே றாத்தல் போட விரும்பும் எடுவைக்காரிகள் முதல்தொங்கல், கடைசித் தொங்கலுக்குப் போவதே இல்லை.
முதல் தொங்லென்றால் ஒழுங்கான நிறை கிடையாது. எல்லாம் குறை நிறைகளாக ஆயிரம் தடவை ஏறி இறங்க வேண்டும். கடைசித்
(சித்திரை 2006)

Page 30
(28)
தொங்கலென்றால் பிள்ளைக் காரிகளோடை மாரடிக்க முடியாது. ஆடி அசைந்து அம்மன் பவனி வருவதுபோல் எட்டுமணிக்குத்தான் வருவார்கள். ஒரு மணிநேரம் ஏதோ பெயருக்கு நாலைந்து றாத்தலை எடுத்துவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் ‘அடியே ஏங்கொழுந்தையும் நிறுத்துர்றி.’ என்று பல்லைக் காட்டிவிட்டு லயத்துக்கோ பிள்ளைக் காம்பிராவுக்கோ போய்விடுவார்கள். அவர்களுடைய கொழுந்தையும் நிறுத்துக்கொள்ள வேண்டும், கூடையையும் பார்த்துக்கொள்ள வேண்டும். போதாத குறைக்கு அவர்களுடைய நிறையையும் சேர்த்து எடுத்துப்போக வேண்டும். இந்த தொல்லைகளுக்காகத்தான் அவள் அங்குமிங்கும் போவதில்லை. அவளுடைய கலகலத்த சுபாவமும் எளிமையான அழகும் மற்றப் பெண்களுக்கு மத்தியில் ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தி இருந்தன. ஆகவே அவளை மற்றப் பெண்களும் போகவிடுவதில்லை. ஆனால் இன்றோ?
‘ஆமா! இந்தப் பொட்டைச்சி” களுக்கு இன்னைக்கு என்ன வந்தது?” கடைசி நிறைக்கு வந்துநின்றாள். அந்த மலையிலேயே கடைசி நிறை. எல்லோரும் சேர்ந்து ஏதோ அவளை மட்டும் ஒதுக்கிவிட்டது போன்ற தனிமை உணர்வு மனதைப பிழிய, கூடையை இறக்கி வைத்து இடையில் கட்டியிருந்த படங்குச் சாக்கை அவிழ்த்து, சேலையைச் சற்று முழங்காலுக்குமேலே தூக்கி - இல்லா விடில் தேயிலைச்செடி கிழித்துவிடுமே! மீண்டும் படங்கைச் சுற்றிக் கட்டினாள். கறுப்புநிறக் கயிறு அரைஞாண் மாதிரி இடுப்பைச் சுற்றி வளைத்தது. கூடைக்குள்ளிருந்த தலைத்துண்டை உதறி, நெற்றியில் பூசிய இரட்டைக் கோடு விபூதி அழியாமல் தலையில் மாட்டிக்கொண்டாள். கடைசியாகப் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த தலைத் துணி டின் பகுதிகளைக் கயிற்றை மறைப் பதுபோல மடித்துக் கயிற்றுமே லி போட்டுக்கொண்டாள். ஆயிற்று நிறைக்குத்த தயார்!
அப்போது தான் அவளைக் கவனித்த பக்கத்து நிறைக் கிழவி தன் பொக்கை வாயைப் பிளந்தாள்,
“என்னடி ஆயா அதிசயமா இருக்கு என்ன இந்தப் பக்கமா காத்து வீசுது?”
கிழவியை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, சூழ்கொட்டிக் கொண்டாள்.
சித்திரை 2006)

“என்னடி குட்டி கேக்குறேன் ச்சுங்குறே?”
“ஒண்ணுமில்லே அம்மாயி! சும்மா தான் வந்தேன்”
“ஆயாயே! பொல்லாதவதான். சும்மா கூடவர்ற ஆளு இல்லே நீ, என்னதான் நடந்தது?”
லெட்சுமிக்குக் கோபம் வந்துவிட்டது.
“ஒப்புராணை ஒண்ணுமில்லேங்கிறேன்”
“சரி. சரி. காலங்காத்தாலே ஆணையிடாதே"
மெளனமாகத் தேயிலைச் செடியைத் தொட்டுக் கும் பிட்டுவிட்டு, பனியில் நனைந்துநின்ற கொழுந்துகளைக் கிள்ளத் துவங்கினாள் லெட்சுமி. இரண்டு வீச்சிலே இரண்டு கையும் நிறைந்துவிட்டது. காம்புப் பகுதியைத் திருப்பிப் பார்த்தாள். பரவாயில்லை. எல்லாம் பிஞ்சுக் காம்புதான்! ‘நார்க்குச்சி ஒன்றுகூட இல்லை. கிழவியைத் திரும்பிப் பார்த்தாள். அப்போது தான் கிழவி ஒவ்வொன்றாக மெல்லமெல் லக் கிள்ளிக் கொண்டிருந்தாள். காலைப் பனிக்கும், குளிருக்கும் அவள் கரங்கள் நடுநடுங்கிக்கொண்டிருந்தது.
‘அம்மாயி! பொலி சொல்றியா, கொழுந்தைப் போட்டுக்கிர்றேன்.” முதல்பிடிக் கொழுந்தைக் கூடைக்குள் போடும்போது ‘பொலி சொல்வது ஒரு மரபு. சகுனம் பார்ப்பது மாதிரி கிழவி ‘பொலி சொன்னாள்.
“போடு அப்பனே, சம்முகா! பொலியே. பொலி. பொலி. பொலி’
லெட்சுமிக்குக் கை வேகமாக விழத்துவங்கியது. பங்குனி மாதப் பச்சை பார்ப்பதற்கே ஓர் அழகு. எடுத்து வெறிகண்டவர்களுக்கோ. அது ஒர் இன்பப் போதைதரும் விளையாட்டு. இளந் தளிர்கள் 'சடசட' வென ஒடிந்து கொண்டிருந்தன. ஆனால் இன்பப் போதையோடு அல்ல! மனதுக்குள்ளே சிநேகிதிகளின் பாராமுகம் வணி டிாக அரித்துக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம் அவளுக்கு அந்திக் கொழுந்து நிறுக்கும் போதுதான் தெரிந்தது.
மாலை நாலு மணி சங்கு ஊதியதும் நிறையிலிருந்து இறங்கி அந்திவெயிலில் உடல் வியர்வையால் புழுங்க எல்லா ஆட்களும் ஸ்டோருக்கு முன்னால் வந்து குழுமினார்கள். கூடையை இறக்கி வைத்துவிட்டுத் தலைத்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள் லெட்சுமி.
Gedeo 3D

Page 31
கூடையில் பொங்கி எழும்பி நின்ற கொழுந்தை ஐந்து விரல்களும் விரிய உள்ளங்கையால் அமுக்கிவிட்டுக் கொண்டாள். பெரும்பாலும் எல்லா ஆட்களும் வந்தாயிற்று என்று தெரிந்தவுடன் கங்காணி பணிவாக முதுகு கூன கணக்கப்பிள்ளை ஐயாவிடம் போய் “ஆளுக எல்லாம் வந்துருச்சி நிறுக் கலாந் தானுகளே?’ என்று மென்று விழுங்கிக்கொண்டு கேட்டான்.
செக்ரோல் புத்தகத்தில் ஏதோ கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த கணக்கப்பிள்ளை ஐயா நிமிர்ந்து “லேபர் கூட்டத்தைப் பார்த்தார். எல்லோரும் வரிசையாக கூடையை வைத்துக்கொண்டு நின்றார்கள். விரிக்கப்பட்டுக்கிடந்த படங்குச் சாக்குக்கு முன்னால் போய் நின்று கொண்டார். தராசுமரம் வந்தது. தட்டுக்கூடை வந்தது. நாலு பெண்களும் வந்தார்கள். தராசுமரம் பிடிக்கவும் தட்டுக் கொட்டவும் ஆயிற்று. நிறுக்க வேண்டியது தான் அப்போது தான் ஏதோ ஞாபகம் வந்ததுபோல 'ஐயா ஒதுங்கி ஆட்களுக்கு முன்னால் வந்து நின்றார். அவர் அசைந்து வந்துநின்ற தோரணையும், ஆட்களைப் பார்த்தவிதமும், ஏதோ தவறுதலாகக் கறுப்பாகப் பிறந்துவிட்ட வெள்ளைக்காரனைப் போலிருந்தது. பேச்சும் கூடச் சுத்தத் தமிழாக இருக்காது. வெள்ளைத் துரை ஒருவன் சிரமப்பட்டு “டமில் பேசுவது போலிருக்கும். நாமாக இருந்தால் சிரித்திருப்போம். 'அது' கள் “லேபர்’ கூட்டந்தானே? என்ன தெரியும் அந்தக் கண்ட்றி களுக்கு? அது களுக்கு முன்னால் இப்படி ஐபர் தஸ்து பண்ணுவதில் ஒருசில விடலைப் பிள்ளைகளுக்கு என்னமோ ஒர் ‘இது'!
ஆட்கள் எல்லோரையும் அலட்சியத்துடன் ஒருமுறை பார்த்தார் ஐயா. வலதுபுறத்திலிருந்து நேராக ஓடிவந்து கொண்டிருந்த பார்வை லெட்சுமியிடம் வந்ததும் சற்று நின்று மேலும் கீழுமாக ஏறி இறங்கிவிட்டு மீண்டும் இடது கோடிவரை ஓடியது. பிறகு கங்காணி பக்கம் திரும்பி ‘கங்காணி’ என்று கூப்பிட்டார். அதுவரை அவரின் செயல்களைக் கவனித்துக்கொண்டு என்னவோ ஏதோ வென்று நின்ற கங்காணி ஓடிவந்து “ஐயா" என்றான். இந்த ஐயாப்பட்டம் போடும்போது ஏன்தான் முதுகு கூனுகிறதோ?
“லெட்சுமியை வரச்சொல்லுங்க”
கிழவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது லெட்சுமியை அனுதாபத்தோடு பார்த்துவிட்டு உரத்துச் சத்தமிட்டான்.
(660 31)

-G9)
“இந்தா ஆயி! இப்பிடி வா. ஐயா கூப்பிடுறாரு.” லெட்சுமிக்கு குடல் மார்புவரை ஏறி இறங்கியது பயத்தால்.
‘நானா அப்பச்சி”
‘ஆமாங்கிறேன்’
லெட்சுமி வாய்க்குள்ளே பயத்தால் முனகிக் கொண்டாள்.
‘ஐயோ! என்னா எழவு இது!” - ஏற்கெனவே வெயிலில் கன்றிப் போயிருந்த அவள் முகம் இப்போது பயத்தால் கூம்பியது. அந்தப் பெரிய கூட்டத்துக்கு முன்னால் உடம்பெல்லாம் கூசிக் குறுக வந்து நின்றாள். கைகளைப் பின்புறமாகக் கட்டி, வலது குதிக்காலை ஊன்றி கட்டை விரலினால் தரையில் அரைவட்டம் வரைந்து கொண்டிருந்த கணக்கப் பிள்ளை ஏறிட்டு லெட்சுமியைப் பார்த்தார். லெட்சுமி தலைகுனிந்து கொண்டாள்.
‘லெட்சுமி”
“ஏனங்க” - அவள் பார்வை சற்று மேலேறி இறங்கியது.
‘‘நா ைலஞ்சு நாளைக் கு முந் தி இருபத்தைஞ்சாம் நம்பர் மலையிலே கொழுந்து எடுத்தேயே, அன்னைக்கு நீ ஒருமணிக்கு எத்தனை றாத்தல் எடுத்தே...? தனக்குள் இருந்த நினைவு மெல்ல வெளிவந்தது. ஆம், ஐம்பத்தி ஏழு
‘அம்பத்தி ஏழுங்க”
‘அம்பத்தி ஏழா? நான் கூட மறந்துட்டேன். ஆனா ஆளுக மறக்க மாட்டாக போலே இருக்கு.” வெறுப்புக் கலந்த ஒரு பார்வை ஆட்கள் மீது ஓடியது. லெச்சுமி இன்னொரு முறை, அதேமாதிரி, ஒன்பது மணிக்கும் ஒரு மணிக்கும் ஊடே அம்பத்தி ஏழு றாத்தல் எடுத்துக்காட்ட முடியுமா?”
லெட்சுமியின் புருவங்கள் கேள்விக்குறியாக வளைந்தன. மீண்டும் அதேமாதிரி ஐம்பத்தி ஏழு றாத்தலா? ஏன். எதற்காக...? கங்காணி பக்கம் திரும்பினாள்.
‘அப்பச்சி! ஐயா என்ன இப்பிடி கேட்கிறாரு..?”
“என்னெக் கேட்டா? ஐயாவையே கேளு.”
(சித்திரை 2006)

Page 32
GO
‘ஐயா' வைக் கேட்கமுடியுமா? ஆனால் தன்னைக் கேட்பதாக நினைத்துக்கொண்டு பேசத் துவங்கினார். அவர் முகம் சொல்லக்கூடாத விஷயத்தைச் சொல்லச் சங்கடப்படுவது போல் சுருங்கியது.
‘லெச்சுமி! உங்க எல்லாருக்கும் நல்லாத் தெரியும். கணக்கப்பிள்ளைகளுக்கு ‘பொம்புளை கேஸ் எவ்வளவு ஆபத்தானதுன்னு. அதிலேயும் நான் கல்யாணம் கட்டாதவன். விட்டாக்கூட நெசம்னு எங்கள் மேலிடம் நம்பும். இது உனக்கு நல் லா தெரியும் . உண்னைவிட நல் லா எடுக்கக்கூடிய ஆளுக உனக்கு முந்தியே பேரு பதிஞ்சு எத்தனையோ வருஷம் ‘சர்வீசு உள்ள ஆளுக இங்கே இருக்கு. அவுகளை எல்லாம்விட போனவருஷம் வேலைக்கு வந்த நீ ஐம்பத்தி ஏழு றாத்தல் எடுத்தது எல்லோருக்கும் ரொம்ப சந்தேகத்தைக் குடுத்திருக்கு. ஆனா இன்னும் யாராவது என் கிட் டே நேரே கேட் கலை. அவுங்களுக்குள்ளே பேச்சு நடக்குதாம்.” கங்காணி, பேச்சு விரசமாய்ப் போவதைக் கவனித்துவிட்டு ஊடே புகுந்தான்.
“இப்ப. அது கிடந்துட்டு போகுதுங்க.”
‘இல்லை கங்காணி! நான் இந்த மாதிரி பப்ளிக் காவிசாரிக்கப்படாது தான். ஆனா விஷயம் என் சம்பந்தப்பட்டது. அதனாலேதான் 'ஒடச்சு பேச விரும்புகிறேன். அத்தோட லெச்சுமி எங்களுக்கு சொந்தக்காரச்சுன்னு ஒரு பிரச்சனை இருக்கு. அதனாலே தான் ஒடச்சிப்பேச நினைக்கிறேன்.” லெட்சுமி பக்கம் திரும்பினார். “லெட்சுமி என் நிலைமை புரியும்னு நினைக்கிறேன். உன்னாலே மறுபடி எடுத்துக்காட்ட முடியுந்தானே?”
குனிந்திருந்த தலை சட்டென்று நிமிர்ந்தது. ஐயாவை, கங்காணியை அப்புறம் ஆட்களை ஒருமுறை சிலிர்த்துப் பார்த்தது. தூங்கிக் கொண்டிருக்கும் புலியை விலாவில் குத்தினால் இப்படித்தான் துள்ளி எழுந்து முறைத்திருக்கும்.
‘' என்னபுள்ளே மொறைக் கிறே! ஐயா கேட்டதுக்குவதிலு சொல்லு?”
‘எதைச் சொல்வது? ‘ஐயா’ பூடகமாகப் பேசிவிட்டு சும்மா இருந்துவிட்டால், அந்தக் கறை நீங்கிவிடுமா? ஐயா முகத்தை ஏறிட்டு வெறித்துப் பார்த்துச் சொன்னாள் லெட்சுமி.
“யாரு முடியாதுன்னா? என்னாலே எடுக்க முடியும். எடுத்துக் காட்றேன்.” பொங்கி வந்த
சித்திரை 2006

கணிணிரை மறைப் பதறி காகத் தலை குனிந்துகொண்டாள். மேட்டிலிருந்து பள்ளத்துக்கு சரேலென இறங்கும் சாரைப் பாம்புமாதிரிக் கண்ணிர் வழிந்தது. குழுமிநின்ற ஆட்கள் மெளனமாக நடப்பைக் கவனித்துக் கொணி டிருந்தார்கள் . உள் ளுக்குள்ளே ‘என்னதான் நடக்கிறது பார்ப்போம்’ என்கிற மனநிலை இருந்தாலும், வெளிக்குப் ‘பசு' வாக நின்று கொண்டிருந்தார்கள்.
பொதுவாக தோட்டத்துப் பெண்களுக்கு இது ஒரு விதமான மனநிலை. நேரடியாக ஐயாவை, கங்காணியை பகைத்துக்கொள்ளவோ வாதாடவோ முடியாது, பயம். ஆனால் தங்கள் புகைச்சலைச் சுற்றிவளைத்து அவர்கள் காதுக்கு எட்டும்படி செய்துவிடுவார்கள். விஷயம் உடை படும்போது எல்லோரும் நல்ல பிள்ளைகள் மாதிரி காட்சியளிப்பார்கள். "ஐயோ கடவுளே! எவளோ பொடசக் காரி இப் பிடி அநியாயமாய் ச் சொல்லியிருக்கிறாளே!’ என்று அவர்கள் அங்கலாய்க்கும் போது பார்க்கவேண்டுமே! இந்தப் பூனையும் பால் குடிக்குமா? கதைதான்.
எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு ஐயா கூறினார்: “ரொம்பச் சந்தோஷம் லெட்சுமி. அதேமாதிரி மறுபடியும் எடுக்கமுடியுங்கிறே. முடியுமோ முடியாதோ எனக்குத் தெரியாது” அவளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டு கூறினார். “நீ கட்டாயம் எடுத்துக்காட்டத் தான் வேணும். இல்லையோ.” அவர்முகம் கடுகடுத்தது. ‘அப்புறம் நான் பொல்லாதவனா இருப்பேன்’ தலைத்துண்டை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டாள் லெட்சுமி, அமைதியாக அவர் பேச்சை ஏற்றுக்கொண்டாள். அவளைப் பயமுறுத்தும் கட்டளையோ பழிவாங்கலோ அல்ல! அவள் கண்ணியத்துக்கு விட்ட சவால்!
சின்னதொரு தகரலாம்பு மினுக் மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தது. அடுப்பில் சாம்பல் பூத்துக்கிடந்த நெருப்பைக் குனிந்து ஊதிவிட்டான் ஆறுமுகம். நெருப்பு இலேசாகக் கனன்றது. பக்கத்தில் கட்டிக்கிடந்த தேயிலை மிலாருக் குவியலில் இரண்டொரு குச்சியை இழுத்து ‘படக் படக் கென்று ஓடித்து. அடுப்பில் வைத்து ஊதினான். குப்பென்று தீப்பிடித்து. குளிருக்கு அடக்கமாக கைகளை நெருப்பருகே காட்டியவாறு ஏறிட்டு லெட்சுமியைப் பார்த்தான். அவளும். அவன் என்ன சொல்லப்போகிறான் என்பதைத்தான்
-Gecoso 3D

Page 33
எதிர்பார்ப்பதுபோல அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள். அடுப்பருகே சற்றுநெருங்கி உட்கார்ந்தவாறு ஆறுமுகம் கேட்டான். "ஆமா! அப்ப என்னதான் செய்யப்போறே?” கனன்று எரிந்த தீயின் மஞ்சளும் சிவப்பும் கலந்த ஜுவாலை ஒளி அவன்மீது வர்ணப் பூச்சு செய்து கொண்டிருந்தது. “பெரிசா அத்தனை கூட்டத்துக்கும் மத்தியிலே வீறாப்பு பேசிடாப்புலே பத்தாது. சொன்ன மாதிரி செய்யனும், முடியுமா உன்னாலே?”
வலது காலை மடக்கிப் பாதத்தை சுவர்மீது பதித்து, சுவரில் சாய்ந்தவாறு அவனைப் பார்த்துச் சிரித்தாள் லெட்சுமி.
“முடியாதுன்னு தெரிஞ்சா சபதம் போடுவேனா?”
'ஆ கிழிச்சீங்க. அன்னைக்கு என்னமோ நான் சோத்துக்கு வாறப்போ ரெண்டு மூணு ‘ரப்பு எடுத்துக் குடுக்காட்டி எடுக்கிறவுக இல்லே.?”
லெட்சுமியின் எதிர்காலக் கணவன் அவன். சாயந்தர வேளைகளில அவன் அவள் வீட்டுக்கு வந்தால் கொஞ்ச நேரம் எல்லாருடனும் பொதுவாகப் பேசிவிட்டு லெட்சுமியுடன் தனியாகக் கொஞ்சம் பேசுவான். அம்மாதிரிச் சமயங்களில் லெட்சுமியின் ‘ஆயாளும் அப்பனும் கெளரவமாக ஒதுங்கி விடுவார்கள். அவனும் வரட்டுக் கெளரவத்துடன் திண்ணையிலிருந்தவாறு இரண்டு பேச்சுப் பேசிவிட்டு ஓடிவிடமாட்டான். குடும்பப் பிரச்சினை, வேலைப் பிரச்சினை எல்லாம் அவன் காதுக்கும் சற்று ஈயப்படும். இரவு ஏழரை எட்டு மணிவரைக்கும் பேசிக்கொண்டிருந்து விட்டுத் தன்லயத்துக்குப் போய்விடுவான். அப்படிப்பட்ட காதலனோடு உலகையே மறந்து போதையிலே ஏதேதோ உளறிக் கொட்டிச் சிரிக்கவேண்டிய வேளையிலே.
வயிற்றுப் பிரச்சினை தான் காதல் பேச்சாக இருந்தது. ஐம்பத்தி ஏழுறாத்தல் பிரச்சினைகூட அவனால் வந்து விடிந்தது தான். ஆண்களுக்கு வேலை ஒருமணியோடு முடிந்துவிடும். ஆனால் பன்னிரண்டு மணிக்கே கங்காணியிடம் பல்லைக் காட்டிவிட்டு நழுவிவிடும் துணிச்சல் பேர்வழிகளில் அவனும் ஒருவன், அப்படி ஒருநாள் பகல் ‘சோத் துக்குப் போய்க்கொண்டிருக்கும் போது தான் அவள்லெட்சுமி மலையின் வாங்கி ஓரத்தில் தனியாக நின்று கொழுந்து எடுத்துக் கொணர் டிருநீ தாளர் . அவளோடு சற்றுப் பேசப்போனவன், பேசிக்கொண்டே கொழுந்து
(ஒலை3)

—GD
கிள்ளிக் கொண்டிருந்தான். உழைக்கும் கையல்லவா? வாய். பேச்சை மறக்காத போது கையும் உழைப்பை மறக்கவில்லை. சாகும் வரை அது மறப்பதில்லை! அந்தக் கொழுந்து தான் ஐம்பத்தி ஏழு றாத்தலாக இருந்து ஐம்பத்தேழு பிரச்சினைகளையும் கிண்டிவிட்டிருக்கிறது!
“ஆமா, இப்பிடிச் செஞ்சா என்ன?” அவனுக்கு ஒரு யோசனை.
“அன்னைக்கு மாதிரி பன்னெண்டு மணிக்கு வந்து எடுத்துத் தரவா?”
‘ஐயய்யோ’
‘இனி எல்லோருக்கும் என்மேலே தான் கண்ணிருக்கும். இன்னொருத்தர் எடுத்துக் குடுக்கிறதே குத்தம். அதுவும் இப்பவோ?’ இரண்டு கரங்களாலும் கன்னத்தைப் பொத்திக் கொண்டு தோள்களைக் குலுக்கினாள். "வேறேவெனை வேண்டியதில்லை’
‘அப்ப என்னதான் செய்யிறது?”
**நானே எடுக் கிறேன். முடிஞ் சமட்டும் எடுக்கிறது. முடியாட்டி துண்டு வாங்கிக்கிட்டு மத்த மலைக்குப் போறேன். இல்லே இஸ்டோருக்கு எல பொறக்கப் போறேன். மலையில இருந்தாத்தானே ஐயாமேல சந்தேகப்படுவாங்க?"
பெருமூச்சோடு ஆறுமுகம் எழும்பினான். ‘என்னமாச்சம் பண்ணு' என்று சொல்லிக்கொண்டு தோளில் கிடந்தமப்ளரைத் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு புறப்பட்டான். லெட்சுமியின் தாய் திண்ணையிலிருந்தவள் மருமகனைக் கண்டதும் பவ்வியமாக எழும்பி ஒதுங்கி நின்று விட்டு உள்ளே ஒடிவந்தாள். 'ஆயி, அத்தானுக்கு தேத்தண்ணி ஊத்திக் கொடுத்தியா” என்றாள்.
‘குடிச்சிட்டுத்தான் போறாக” வாயிற்புறம் அரைத்தூக்கம் தூங்கிக் கொண்டிருந்த நாய் ஒன்று ஆறுமுகத்தைக் கண்டதும் இரண்டு தரம் குலைத்து விட்டு வழக்கமாக வருகிற ஆசாமி என்று தெரிந்ததும் மீண்டும் சுருண்டு படுத்தது.
V9 . VU VU
ஒரு மணிக் கொழுந்து நிறுவையாகிக் கொண்டு இருந்தது. அது நல்ல கொழுந்து உள்ள மலை; ஆகவே எல்லோரும் சாப்பிடப் போகாமல் நின்று எடுத்திருந்தார்கள். நாற்பது ஐம்பது என்று றாத்தல் விஷமாக ஏறிக்கொண்டிருந்து. படங்குச் சாக்கில்
(சித்திரை 2006)

Page 34
G2)
ஓர் ஆள் உயரத்துக்குக் கொழுந்து எழும்பி நின்றது. சாக் கிலே கொழுந்து அடுக்கும் பெண்களும் சாக்குப்பிடிக்கும் பெண்களும் நின்று கொண்டிருந்தனர். நிறுப்பதற்காக காத்து நின்ற வரிசை மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. லெட்சுமியின் முறை வந்தது. சாக்குக்காரன் லெட்சுமியின் கூடையைத் தூக்கினான். அது கல்லாகக் கனத்தது. அடியிற் கையைக் கொடுத்துத் தூக்கித் தட்டில் கொட்டப்பார்த்தான். முடியவில்லை. காலால் மிதித்து அமுக்கப்பட்ட கொழுந்து சிமெந்து மாதிரி இறுகிப்போய் இருந்தது. மாமுல்படி தனது முழங்காலால் கூடையின் வாயிற் புறத்தை இரண்டு மோது மோதி நாலைந்து தரம் உலுப்பினான். கொழுந்து பிரிந்து கொட்டத் துவங்கியது. கட்டி மண்ணாக பொல பொலவென்று உதிர்ந்து கொட்டிய கொழுந்து தட்டைக் கூடையில் நிரம்பி தராசு அடிதொட்டி எழும்பி, கோபுரம் கட்டியதைப் பார்த்ததும் கணக்கப்பிள்ளையை திரும்பிப் பார்த்தாள் லெட்சுமி
ஐயா குவிந்து நின்ற கொழுந்தைப் பார்த்தார். கொழுந்தா அது? நார் பிடித்த வெறும் முற்றல் இலையும் மொட்டைப் புடுங்குமாக இதையெல்லாம் எடுத்திட்டா சரியா? கங்காணியைக் கூப்பிடு என்றார்.
“என்ன கங்காணி கொழுந்தா இது. லெட்சுமி கிட்ட கொழுந்து இன் னைக்கு எடுக் கவா சொன்னிங்க?
"ஆமாங்க! ஒம்பது மணி நிறுவைக்குப் பொறகு வந்து இன் னைக்கு எடுத்துக் காட்டறேன்னு சொல்லிச்சுங்க. சாச்சிக்கு நாலு ஆளைவச்சு எடுக்கச் சொன்னேங்க”
‘' சரி, ஆனா இப் பிடியா எடுக்கிறது? நாருக்குச்சியும் முத்த எலையுமா இதா கங்காணி கொழுந்து?”
‘துப்பரவுபண்ணி தரச்சொல்றேன். றாத்தலைப் பாருங்க”
தராசுமரம் பிடிக்கும் பெண்களைப் பார்த்தார். அந்தப் பெண்கள் தராசில் கயிற்றைமாட்டித் தூக்கினார்கள்.
தூக்கிய கைகள் நடுங்கின. தராசில் றாத்தல் காட்டும் கம்பி ‘ஜம்' மென்று மேலே ஏறி கீழே இறங்கி ஆடி நின்றது. அறுபத்தி ஒன்று!
(சித்திரை 2009

சொன்னதுக்கு மேலாக நான்கு றாத்தல் கூடவே இருந்தது.
'அறுவத்தியோர் றாத்தல் இருக்குது கங்காணி. யாரு வேணும் னாலும் வந்து பார்த்துக் கொள்ளலாம்”
ஐயா ஒதுங்கி நின்றார். ஆனால் யாரும் போய்ப்பார்க்க வில்லை. அவ்வளவுக்குத் துணிந்து யார் போவார்கள்?
தராக மரம் பிடிக்கும் பெண்களின் கரங்கள் வேகமாக நடுங் கதி துவங்கின. தட்டை இறக்கிவைக்கும் படி கையை அமர்த்திவிட்டுக் கங்காணியைப் பார்த்து 'ஐயா கூறினார்.
'ஆனா கங்காணி இந்த அறுவத்தியோர் றாத்தலையும் தரமுடியாது. இருவது றாத்தல் வெட்டப்போறேன். கொழுந்திலே அவ்வளவு பழுது இருக்கு” லெட்சுமிக்கு தூக்கிவாரிப்போட்டது. கங்காணிக்கும் கூடத்தான்.
"ஐயா!' கங்காணிக் கிழவன் வெறித்துப் பார்த்தான். விடுவிடென்று லெட்சுமி அருகில் போய் அவளது வலதுகையின் ஆள்காட்டி விரலைப் பிரித்து அவர் முன் காட்டினான். அந்த விரலின் ஒரப்பகுதிகள் இரண்டும் தோல் கிழிந்து இரத்தம் கசித்து உறைந்துபோயிருந்தன!
“இதைப் பார்த்துவிட்டுப் பேசுங்க ஐயா, இது நல்ல கொழுந்தோ, கெட்ட கொழுந்தோ, இவ்வளவையும் எடுத்தது இந்தக் கையி! இந்த றாத்தலைத் தரமாட்டேன்னு சொல்றீங்க?"
லெட்சுமியின் கைகளைப் பார்த்துவிட்டு
முகத்தைத் திருப்பிக்கொண்டார். அவர் கை
தானாகவே துணி டை வாங்கிக் காலைக்
கொழுந்தின் றாத்தலோடு அறுபத்தி ஒரு
றாத்தலையும் கூட்டிப்போட்டுத் திருப்பிக்கொடுத்தது. Uy! Vy y
சபதம் நிறைவேறாவிட்டால் மற்ற மலைக்கு மாறிப் போகிறேன் என்று சொன்னவள் சபதம் நிறைவேறிய பின்பும் அந்த மலையில் நிற்க விரும்பவில்லை. அவன் போன பிறகுதான் "ஐயா வுக்கு அவள்மீது உண்மையில் காதல் பிறக்கத்
துவங்கியது!. ള്
@జాణం 3)

Page 35
நூல் வியக்க வைக்கும்
தமிழர் அறிவியல்
ஆசிரியர் : மாத்தளை சோமு
வெளியீடு: “உதகம் திருச்சி, சிட்னி,
பக்கங்கள்: 275
விலை : இந்திய ரூபாய் எண்பது (80/=)
காட்டுமிராணி டியாக வாழ்ந்த மனிதர் நாளடைவில் நாகரிகம் அடைந்த மனிதராக மாறினர். இந்த நாகரிக நிலையை அடைவதற்கு அவர்கள் எவ்வளவோ காலம் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது. எவ்வளவோ தியாகங்களைச் செய்ய வேண்டி ஏற்பட்டது. எத்தனையோ கண்டு பிடிப்புகளை நிகழ்த்த வேண்டி ஏற்பட்டது. நடை, உடை, பாவனை எனப் பல மாற்றங்கள் அவருள் நிகழ்ந்தன. இன்றைய நவீன நாகரிக உலகில்
 

G3)
வளர்ச்சி அடைந்த அனைத்து மனித சமூகங் களுமே இவ்வாறான பாதைகளைக் கடந்து வந்தவையோ, இந்த வளர்ச்சியை, இவ்வாறன நாகரிகத்தை அவர்களுக்கான அறிவியல் என்கிறார் நூலாசிரியர் மாத்தளை சோமு ‘வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்' என்ற அவரது நூலில் தமிழர் சமூகத்தினது பணி பாட்டுக் கோலங்கள் யாவற்றையும் அவர்களது அறிவியல் கோலங்களாகக் கட்டமைக்கின்றார். தமிழர் நிலம், மொழி, வாழ்வு, உழவு, உடை, உணவு, மருத்துவம், இலக்கியம், நுண் கலைகள், தாவரவியல், வானவியல், விளையாட்டு எனப் பலவாறு இருபது தலைப்புகளில் தமிழருக்கான அறிவியல் பற்றி நூலில் பேசப்படுகின்றது. இவற்றுக்கான ஆதாரங்களாக இலக்கியங்கள், தொல் பொருட் சன்றுகள், பிறநாட்டார் குறிப்புகள் எனத் தரமுயன்றுள்ளார். இவ்வாறான பண்பாட்டுக் கோலங்கள் தொடர்பாகப் பலர் முன்பே எழுதியிருந்தனர். குறிப்பாக மயிலை சீனி வேங்கடசாமி ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்ற தலைப்பிலும், போராசிரியர் வானமாமலை “தமிழர் வரலாறும் பண்பாடும்” என்ற தலைப்பிலும் நூல்களை எழுதியுள்ளனர். மேலும் தமிழர் ஓவியம் பற்றி இராசு, பவுன்துரை, கட்டடவியல் பற்றி கோ. தெய்வநாயகம் முதலியோர் விரிவாக எழுதியுள்ளனர். பேர்ஸி பிறவுண், துப்ரயேல் முதலிய வெளிநாட்டவர்களும் இதனுள் அடங்குவர். ஆயின் அவர்கள் யாவரும் இவற்றை அறிவியலாகக் குறிப்பிடவில்லை. அழகுக் கலைகளாகவும், பண்பாட்டு நிலைகளாகவுமே அவற்றைக் கட்டமைத்தனர். ஆயின் மாத்தளை சோமு இவற்றை அறிவியலாகக் காண முயல்கின்றார். சமூகவிஞ்ஞானம், பிரயோக விஞ்ஞானங்களும் நூலாசிரியர் பார்வையில் ஒருமுகப் படுகின்றன. அறிவியல், அல்லது விஞ்ஞானம் என்ற பதத்தை அதற்கான அர்த்தத்துடன் நோக்கும் நிலை மாறி, ஒரு சமூகம் தனது அடையாளமாக உருவாக்கிய அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளும் இங்கே அறிவியல் என்று அர்த்தப்படுத்தப்படுகின்றன. இது தொடர்பாக ஆழ்ந்த விவாதங்கள் அவசியமானவை.
இதற்காக ஆசிரியரது முயற்சிகள் அர்த்த மற்றவை என்றாகிவிடாது. உண்மையில் நமக்கான
(சித்திரை 2006)

Page 36
GO
பண்பாட்டு நிலைகளை உலகமயமாதல் சூழல் எ தொடங்கிவிட்டோம். காலனிய ஆதிக்கம் இதன் அ நமது மனோ நிலையும் தான் காரணமாக அமைந்தன மேன்மையாவை என்ற மனோபாவம் நம்முள் வளரத் ( நமது பண்பாட்டுச் சூழல் கேலிக்குள்ளாகியது. எா விடுவோமோ, அவை அழிந்து விடுமோ என்ற மே கூறவேண்டும் என்ற உந்துதலினால் இந்நூல் எ( உந்துதல் அல்லது உணர்ச்சி வேகத்தை நூல் முழு என்ற கருதுகோள், அல்லது தன்முனைப்புக் கொள் அபாயமும் உண்டு என்பதை மனங்கொளல் அவசிய மாறாத பற்றுக் காரணமாக விபரிக்கும் தற்குறி பலவீனப்படுத்துவனவே தவிர பலப்படுத்துவனவலி (உதாரணமாக தமிழ் என்பதற்கும் அம்மா, அப்பா என்
ஒரு விடயத்தை நிரூபிக்கமுனைபவர் தமது அவசியமானதாகும். மொத்தம் பொதுவாக இலக்கியா இயலாது. சங்க நூல்களான சிலம்பும், மேகலைய நூல், எது இடைக்கால நூல் என்பது தொடர்பான முர6 ஆய்வு நிலையில் இது பெருங் குறைபாடுமாகும். ே சிற்பம், கோலம் ஆகியவற்றை மட்டும் பேச வந்த கட்டடக் கலைகள் என்பவற்றைத் தனித்தனியே பேச பற்றிய தெளிவின்மையையே இது சுட்டுகின்றது.
இவ்வாறாகப் பல விடயங்கள் பற்றி இந்நூல் பேசிய இதனை, இதன் நோக்கத்தை, இது எழுந்த தேவை6 முனைகளில் விவாதங்களைத் தோற்றுவிக்கும் போது தொடர்வதற்காகவேனும் இந்நூலின் வருகை வரவேற் தகவல்களை இந்நூல் கொண்டுள்ளது என்பதும் குறி
2 -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
४** ملتان ମୁଁ · Sã
அவரை ‘ஓலை
S ----------------
சித்திரை 2006)
 

ன இன்று பேசப்படுவதற்கு முன்பே நாம் இழக்கத் டிப்படை என்ற போதும் ஐரோப்பாவை நோக்கிய ா. மேற்கு நாடுகளது பண்பாடும், கண்டு பிடிப்புகளும் தொடங்கியதால் நமது பண்பாடுகள் அநாகரிகமாயின. ங்கே நாம் நமது பண்பாட்டு நிலைகளை மறந்து னோநிலையின் வெளிப்பாடாக, அவற்றை எடுத்துக் ழுதப்பட்டதாகத்தான் தெரிய வருகின்றது. அந்த மையும் காணலாம். ‘நம்மிடையே என்ன இல்லை” கை உருவாகும் போது சமநிலை இழந்துவிடுகின்ற மானதாகும். நாம் நமது பண்பாட்டின் மீது கொண்ட
வியாக்கியானங்கள் யாவும் நமது நோக்கைப் ஸ்ல என்பதையும் கருத்திற்கொள்ளல் அவசியம். பவற்றுக்குமான வியாக்கியானங்களைக் குறிப்பிடலாம்)
து ஆதாரங்களில் மிகுந்த தெளிவுடனிருத்தல் ங்களையோ இலக்கிய காலங்களையோ குறிப்பிடுதல் ம், கம்பராமாயணமும் என்கின்றபோது, எது சங்க ண்பாட்டை வாசகரிடம் விட்டுவிடுவது நியாயமானதல்ல. மலும் நுண்கலைகள் என்ற தலைப்புகளிள் சித்திரம், வர், பின்னர் இசை, ஆடல்கலை, அணிகலன்கள், |கின்றார். 'நுண்கலைகள் என்பவை யாவை என்பது
து பற்றிய நீண்ட விவாதங்கள் நிகழ்த்தலாம். எனினும் யைக் குறைத்தது மதிப்பிட இயலாது. ஒரு நூல் பல அந்நூலும் தொடர்ந்து பேசப்படும். எனவே விவாதங்கள் கத் தக்கதே. அத்துடன் பொது வாசகர்களுக்கான பல ப்பிடக் கூடிய அம்சமாகும்.
- சேயோன் .
ܢ - -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- --
ËngTim!
கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு/ இலக்கியக்குழு மற்றும் ‘ஓலை’ ஆசிரியர்குழு உறுப்பினரான
திரு. நடராஜா கணேசலிங்கம் (அதிபர், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி நீர் கொழும்பு)
அவர்கள் மேல்மாகாணக் கல்வி அமைச்சினால் “வித்தியா நிகேத கீர்த்தி” எனும் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
வாழ்த்துகின்றது.
-@ఐణ 3D

Page 37
<கவிை
நீதிதேவதைக்கோர் 6 தேடித்தேடி ஓய்ந்தவிட்டன என் கைகள் இப்படியும் ஒரு தேடல் வேண்டு என் இதயம் கேட்கிறது?
வேண்டும் நிச்சயமாக வேண்டும். அன்றிருந்த எம் உறவுகள்
கருகிச் சாம்பலாய் போனதற்கு விடை கூற நிச்சயமாக ஒருவர் வேண்டும
பகடைக் காய்களாய் பலியான விடை கூற நிச்சயமாக ஒருவர் வேண்டும
எனக்கு விளங்குகிறத. நான் எதைத் தேடுகின்றேன் என்று நீங்கள் நான் தேடுவத இன்னும் உங்களு புரியும்! நிச்சயமாக புரியும்!
நான் தேடுவது நீதிதேவதையின் இலக்கங்களை.
புரிந்திருக்கும் இப்போது! என் உறவுகளைத் தேடும் கடைசி முயற்சி
தொலைபேசி இலக்கம் கிடைத்தவ இணைப்புத் தான் இன்னும் கிடைக்வில்லை
இருந்திருர்
1. அரசுக்கோல் செங்கோலாக
அன்றைக்கே இருந்திருந்தால்..?
தரமான நாடு - மக்கள்
சமாதானம் வந்திருக்கும்!
வரலாற்றை மறைக்கப் போக
வந்ததே தீராச் சிக்கல்!
விரலாலே கிள்ளொணாத
வெட்டுமா மரமாயிற்றே!

தாலைபேசி அழைப்பு?
፲?
bலவா? உயிர்களுக்கு ல்லவா?
குழம்புவத. நக்குப் புரியவில்லையா?
தொலைபேசி
இத. பிட்டது - ஆனால்
மாணிக்கவாசகர் கார்த்திகா
தால்.
2. கொடுங்கோலின் வரவாலன்றோ
கொடும்புலி வந்ததிங்கே? கடும்போக்கில் போனதாலே
கலவரம் வந்தாயிற்று! விடுதலை மறுத்த தாலே
வேட்டுக்கள் முழங்கலாச்சு
நடுநிலை அற்ற தாலே
நாடெலாம் கலக்கமாச்சு!
(சித்திரை 2006)

Page 38
டு)
3. புலிவந்ததெதனால்? குண்டுப்
போர்வந்ததெதனால்? நெஞ்சக்
கிலி வந்ததெதனால்? மக்கள்
கிளம்பிய தெதனால்? வீரர்
பலியான தெதனால்? நாடு
பாழான தெதனால்? எல்லாம்
நலிவான கொடுங்கோல் என்றே
நடுநிலை யாளர் சொல்வார்!
ஒற்றுமை துலா
சித்திரை 20
O
6
“மண்ணிலே வாழும் உயிரிடத்தே மனிதன் என்போன் மேலாவான் கண்ணை இமைகள் காப்பதுபோல் காலம் முழுதும் காத்திடுவோம் எண்ணில் அடங்காத் தத்துவங்க எத்தனை யெத்தனை சாதனைகள் விண்ணைக் கூடக் கடந்துவிட்ட வாழ்த்தியவனை வளர்த்திடுவோம்
மனித வாழ்வு உயரு மெனில் மக்களிடையே தாழ்வில்லை புனித முடனே இதையுணர்ந்த புத்துயிரளிக்க முயன்றிடுவோம் இனிக்கும் வாழ்வில் இடர் காணி எல்லோரு மிணைந்து கரம் கொடு மனித நேயம் இதுவன்றோ மகிழ்ந்தே இன்பம் அடைந்திடுவே
வீணா யழிந்து உயிர் மாய்க்கும் விதியின் போக்கை மாற்றிடுவோம் ஆணவம் கொண்டு அடக்கியாளு அகந்தையை விரட்டி யடித்திடுே மணக்கும் பூவின் வாசம் போல்
மனதில் அன்பைப் பரப்பிடுவோம் குணமுள்ள மனிதனாய் விளங்க குடும்பத்தி லொற்றுமை தலங்கச்

4. நல் மனம் இருந்திருந்தால்
நல்லவை நினைத்திருந்தால்.
நல்லவை கதைத்திருந்தால்
நல்லவை செய்திருந்தால்.
அல்லவை வளர்ந்திராதே!
அறநெறி பிழைத்திராதே!
இல்லையே செங்கோல் இங்கே
இதுவரை? இனிமேல் உண்டோ?
- தாமரைத்தீவான்
她 做 * 兹 N 858 GlsiuGaiirin!
ப்போம்!
Tib!
வாம்
ச்செய்து
செய்வோம்!
- மூதூர் “கலைமேகம்"
ള്

Page 39
சுறா வசியம ந. அதியமா
சங்ககாலத்திற்கு முன்பிருந்து இந்நூற்றாண்டு வரை மன்னார் வளைகுடாவில் தமிழக, இலங்கை கடற் பகுதியில் முத்து மற்றும் சங்கு குளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதை சங்க இலக்கியங்கள், தமிழக கடற்கரையோர பண்டைய நகரப் பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள், இடைக்கால பயணியர் குறிப்புக்கள், பின்னர் 16ஆம் நூற்றாண்டு தொடங்கி கிடைக்கின்ற போர்த்துக் கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களது ஆவணங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். முத்துக்குளிக்கும் நேரங்களில் கடல் வாழ் விலங்குகளால், குறிப்பாக சுறாமீன்களால்,? முத்துக் குளிப்போருக்கு ஆபத்து நேராவண்ணம் சுறா வசிய மந்திரவாதிகள் (கடல்கட்டுவோர்) எனப்படுவோர் சில மந்திரங்களை உச்சரித்து மீன்களின் வாயைக் கட்டிவிடுவதாகச் சான்றுகள் உள்ளன. தமிழகக் கடற் கரையோரங்களில் களஆய்வு செய்தபோது இவ்வழக்கம் தற்பொழுது நடைமுறையில் இல்லை என அறியப்பட்டுள்ளது. அக்காலங்களில் வசிய மந்திரங்களால் சுறாமீன்கள் கட்டுப்படுத்தப்பட்டனவா அல்லது வெறும் நம்பிக்கையா என்பதை நோக்குவது அவசியமானது.
முத்துக்குளிக்கும் தொழில் பெரும்பாலும் மார்ச்சு, ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். முத்துக்குளிப்போர் தங்கள் பாய்மரப் படகுகளில் நடு இரவிலோ அல்லது அதிகாலையிலோ முத்துச் சிப்பி கிடைக்கும் கடற்பகுதி நோக்கிச் செல்வர். இப்படகுகளில் 10 நீர்மூழ்குபவர் உள்பட சுமார் 20 பேர் இருப்பர். படகுகள் முத்துச்சிப்பி கிடைக்கும் இடத்திற்குப் பொதுவாக காலை நேரங்களில் சென்றடையும். முத்துக்குளிக்கும் இக்கடற் பகுதிகளில் 6 இலிருந்து 12 ஆள் ஆழம் இருக்கும். படகு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டபின் சுமார் 20 பவுண்டு எடையுள்ள 5 கற்கள், ஒரு பக்கத்தில் மூன்றும் மறுபக்கத்தில் இரணி டுமாக தொங்கவிடப்படும். முதலில் 5 நீர்மூழ்குநர்கள் கடலில் குதித்து கல் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை கால் விரல்களால் பற்றிக்கொள்வர். மற்றொரு கயிறு, மூழ்குநர் இடுப்பில் சுற்றப்பட்டு ஒரு முனை படகில் உள்ளவரிடம் இருக்கும். வலை அல்லது

-GD
ந்திரவாதிகள் ன், தஞ்சாவூர்.
கூடை ஒன்று நீர்மூழ்குநர் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கயிற்றினால் இணைக்கப்பட்டிருக்கும்.
நீர் மூழ்குநர் நன்றாக மூச்சை இழுத்து கடலில் மூழ்கும் பொழுது கல் கட்டப்பட்டுள்ள கயிறு பிரித்துவிடப்படும். கல்லின் எடையினால் அவர் வேகமாக தரைக்குச் செல்வார். கல்கட்டப்பட்ட கயிற்றில் வைத்த காலை விடுவித்து தரையில் கிடைக்கும் முத்துச்சிப்பிகளையோ, சங்குகளையோ வலையில் சேகரிப்பார். தாமதமின்றி தன் இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை இழுத்து சமிக்ஞை தெரிவிப்பார். உடனே படகில் உள்ளவர்கள் அவரையும் சேகரித்த சிப்பிகளையும் மேலே இழுப்பர். கடல் மட்டத்திற்கு வந்தபின் வலையில் உள்ள முத்துச் சிப்பிகள் படகில் சேர்க்கப்படும். ஒரு முறை தரைக்குச் சென்று இப்பணியைச் செய்துகடல் மட்டத்திற்கு வர சுமார் ஒரு நிமிடம் ஆகும். சில நிமிட ஓய்விற்குப் பின் மறுபடியும் முத்துக்குளிப்போர் தம் பணியைத் தொடர்வர். சற்று நேரம் கழித்து படகில் காத்திருக்கும் மற்ற ஐந்து நீர் மூழ்குநர்கள் இப்பணியைத் தொடர முன்பு பணிபுரிந்தவர்கள் படகில் ஒய்வெடுப்பர். இப்பணி பெரும்பாலும் மதிய வேளை வரை நடைபெறும், படகுகள் மாலை வேளையில் கரைவந்து சேரும்.
முத்துக் குளிக்கும் நேரங்களில் சுறாமீன் மற்றும் பிற அச்சம் மிகுந்த உயிரினங்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உணர்டு. இவ்வாபத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள மீனவர் கற்றிருந்தனர் என்பதைச் சங்க இலக்கியமான அகநானூறு குறிப்பிடுகிறது.
இலங்கு இரும்பரப்பின் எறி சுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான் திமிற பரதவர்
அகநானூறு (350:10-11)
பெரிய கடற்பரப்பில் எறியும் சுறாமீனை ஒதுக்கி வலம்புரிச் சங்கினை மூழ்கி எடுத்த பெரிய படகினை உடைய பரதவர் எனும் பொருளாகும்.
முத்துக்குளிக்கும் நேரங்களில் சுறாமீன்கள் தாக்காவண்ணம் ‘ஆப்ரியமென் (பிராமணர்) எனும்
த்திரை 2006

Page 40
கடல் கட்டுவார் தமது வசிய மந்திரத்தால் பகல் பொழுதில் அவைகளின் வாயைக் கட்டிவிடுவர் எனவும் இரவு நேரங்களில் அவைகளின் கட்டு அவிழ்த்துவிடப்படும் எனவும் மார்க்கோபோலோ குறிப்பிடுகிறார். இச்செயலுக்காக முத்துக் குளிப்போர் தனது சேகரிப்பில் ஒரு பங்கை கடல்கட்டுவார்களுக்கு இனாமாக அளிப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் வந்த சீனப்பயணி வாங் - த - யுவான், இத்தொழில் ஆரம்பிப்பதற்கு முன்னர் அம்மக்களின் தலைவன் ஒரு மனிதன் மற்றும் சில மிருகங்களை பலி கொடுப்பதாகக் குறிப்பிடினும் கடல் கட்டுபவர்களைப் பற்றி எவ்வித செய்தியும் குறிப்பிடவில்லை. பின்னர் வந்த பயணியர் குறிப்புக்களிலோ, போர்த்துக்கீசிய, டச்சு ஆவணங்களிலோ கடல் கட்டுபவர்களைப் பற்றி எவ்வித செய்தியும் இல் லை. ஆனாலி ஆங்கிலேயரது ஆவணங்களில் இது பற்றி நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன. 1797இல் முத்துக்குளிப்பின் கண்காணிப்பாளராய் இருந்த லெபக் என்பார் இவர்களை சுறா மந்திரவாதி (Shark Cojurer) எனக் குறிப்பிடுகிறார். இவர்களின் உதவியின்றி திறமையாக முத்துக் குளிப்பவரும் கடலில் இறங்க மறுத்ததையும், இலங்கையில் இப்பணிபுரிய 13 பேர் இருந்தனரெனவும் அவர்களில் இருவரை அரசாங்கம் கூலிகொடுத்து பணியில் அமர்த்தியது எனவும் குறிப்பிடுகிறார்.
இக்கடல்கட்டுவார் கடற்கரையில் நின்று காலை முதல் உணவின்றி (தண்ணிர் தவிர), தூக்கமின்றி படகுகள் கரை சேரும் வரை மனப் பாடம் செய்யப்பட்ட மந்திரத்தை உரக்க உச்சரிப்பார் எனவும் அம்மந்திரத்தின் பொருள் அவருக்கே தெரியாமல் இருக்கலாம் எனவும் லெபக் குறிப்பிடுகிறார். சில சமயங்களில் இவர்கள் முத்துக்குளிப்போரின் படகுகளில் செல்வர் எனவும் தெரிகிறது. சில ஆணி டுகளுக்கு முன் முத்துக்குளிப்பவர் ஒருவரின் காலை சுறாமீன் கடித்ததாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில் கடல் கட்டுவோரின் தலைவனை விசாரித்ததற்கு. சூன்ய கிழவி ஒன்று மாற்று வசியம் மூலம் இச்செயலைச் செய்தது தனக்கு தாமதமாகத் தெரியவந்ததெனவும், தற்பொழுது அவ்வசியத்தை முடக்கிவெற்றி கண்டுவிட்டதாகவும், அதன்பின் முத்துக்குளிப்பேரின் மத்தியில் சுறாமீன்கள் தென்படினும் அவை கடிக்கவில்லையெனவும் பதிலளித்தாராம். 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப
சித்திரை 2006

காலக்கட்டங்களில் கண்காணிப்பாளராய் இருந்த ஸ்டுவர்ட், சுறாமீன்களை வசியப்படுத்துவோருக்கு நாள் ஒன்றுக்கு 9 பென்சு (Pence) கூலியாக ஆங்கிலேய அரசாங்கம் கொடுத்ததாகவும், சில காலம் கழித்து முத்துக் குளிப்போருக்கு தலைக்கு ஒரு சிப்பியும், படகு ஒன்றிற்கு பத்துச் சிப்பிகளும் தினமும் இனாமாகப் பெற்றனர் என்பதையும் குறிப்பிடுகிறார். மேலும் இச்செயலை மூடநம்பிக்கை என ஆங்கிலேயர்கள் முத்துக்குளிப்போரிடம் வலியுறுத்தியும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த எவரும் கடல் கட்டுவாரின் துணையின்றி பணிபுரிய மறுத்தனர். சிலர் தங்களது புரோகிதர் எழுதிக் கொடுத்த மந்திரங்களை எண்ணெய்த் துணியில் சுற்றி தன்னுடன் நீர்மூழ்கும் போது எடுத்துச் சென்றனர் எனவும் குறிப்பிடுகிறார்.
ஒருமுறை கடல் கட்டுவார் ஒருவரை அழைத்து அவரது மந்திர சக்தியைப் பயன்படுத்தி படகின் அருகில் சுறாமீன் களை வரவழைக்க கோரியதாகவும் அதற்கு அவர் நாசூக்காக முன்னோர் வழியாக வந்த இம்மந்திரத்தை விளையாட்டிற்காக பயன்படுத்தக் கூடாது' என்று பதிலளித்தாராம். சில காலத்திற்குப் பின்பு சுறாமீன் ஒன்று முத்துக் குளிக்கும் துறையில் தென்பட்டதாக அறிந்து, கடல் கட்டுவார் அழைக்கப்பட்டு, விளக்கம் போரியபோது ‘தாங்கள் நீண்ட நாட்களாக என்னிடம் சுறாமீன்களை வரவழைக் கக் கேட்டிருந்தீர்கள். துரையவர்களைத் திருப்திபடுத்தவே அச் சுறாமீனை வரவழைத் தேனி ' என பதிலளித்தாராம்.
இதன்பின்னர் இத்தொழிலில் கண்காணிப் பாளர்களாய் இருந்த தரஸ்டன், டெனன்ட் ஆகியோரும். இக்கடல் கட்டுவார்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் பணிபுரிந்த ஹார்னல் என்பார் கீழ்க்கரையில் வசித்த அப்துல் ஜலாலுதீன் மரக்காயர் என்பவர் சுறாமீனை வசியப்படுத்துபவர் எனக் குறிப்பிடுகிறார்.
முத்துச் சிப்பி அதிக அளவில் மன்னார் வளைகுடாவில் கிட்டாத காரணத்தினால் 1961ஆம் ஆண்டிற்குப் பிறகு முத்துக் குளித்தல் இந்தியாவில் நடைபெறவில்லை. எனினும் சங்கு குளித்தல் நடைபெற்று வருகிறது.
எனவே இது குறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் கடல் கட்டுவார் அல்லது
(ஒலை3)

Page 41
சுறாமீனை வசியப்படுத்துபவர் என்போர் தற்பொழுது இல்லை எனத் தெரிய வருகிறது. மேலும் அவர்கள் பணிக்காகக் கடலில் இறங்கும் பொழுது அவ்வச் சமயத்தைச் சார்ந்த பிரார்த்தனையை ஓரிரு நிமிடங்கள் செய்கின்றனர். இத் தொழில் புரியும் போது சுறாமீன்கள் தென் பட்டால் அனைவருக்கும் உடனடியாகத் தெரிவிக்கப்பட்டு கரையை அடைவர். கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த பின்னரே மறுபடியும் கடலுக்குச் செல்வர்.
இக்கடல்கட்டுவோர் எம்மதத்தைச் சார்ந்தவர் என்றோ எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்றோ கிடைக்கும் சான்றுகளைக் கொண்டு உறுதியாகக் கூற இயலவில்லை. மார்க்கோபோலோ குறிப்பிட்ட கடல் கட்டுவார் பிராமண இனத்தைச் சேர்ந்தவரா என்பதை அறிய முடியவில்லை. போர்த்துக்கீசியர் காலங்களில் இந்துக்களாய் இருந்த பல பரதவர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறினார்கள். ஆங்கிலேயரது ஆவணங்களில் இக்கடல் கட்டுவார் ரோமன் கத்தோலிக்கர்கள் எனக் குறிப்பிடுகின்றனர். ஹார்னல் கீழக்கரையைச் சார்ந்த இஸ்லாமிய கடல் கட்டுபவரைக் குறிப்பிடுகிறார். எனவே இத் தொழிலில் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் இருந்துள்ளனர் எனலாம். மேலும் இவர்களது வசிய மந்திரத்தைப் பற்றி சான்றுகளும் கிட்டவில்லை.
முத்துக் குளித்தல் நடைபெறும் நாட்களில் எவ்வொரு சுறாமீன் தாக்குதலும் நடைபெறவில்லை என தர்ஸ்டன், டெனல்ட் வியந்து குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கது. ஆயினும் இடைக்கால பயணியர்களான செளஜ"குவா மற்றும் வாங்தயுவான் ஆகியோர் இவ்விபத்துக்களை குறிப்பிடுகின்றனர். மேலும் லெபக், ஸ்ரூடுவர்ட் ஆகியோர் சுறாமீன்களால் ஆபத்து ஏற்பட்டதைக் குறிக்கின்றனர்.
முத்துக்குளிக்கும் முறைகளையும் சுறாமீன்கள் குணங்களையும் பொருந்திப் பார்த்தால் அவைகளின் தாக்குதல் உண்மையிலேயே கடல் கட்டுவார்களால் கட்டுப்படுத்தப்பட்டனவா அல்லது இயற்கையிலேயே அமைந்து இத்தொழிலை அவர்கள் தங்களது இலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டனரா என்பதை அறிய இயலும்.
(ஒலை3)

G9)
சுறாமீன்கள் தாக்குதல் பெரும்பாலும் மாலை 2 முதல் 6 மணிக்குள்ளேயே நடைபெறுகின்றன. முத்து மற்றும் சங்குக் குளித்தல் பெரும்பாலும் மதியவேளையில் முடிவுபெற்றுவிடும்.
சுறாமீன்கள் ஒளிமிகுந்த அசைகின்ற பொருட்களை இரையெனக் கருதி தாக்குகின்றன. முத்துக்குளிப்போர் பெரும்பாலும் கறுப்பு நிறத்தவர். சுறாமீன்கள் இரையைத் தாக்கும் முன் சில நிமிடங்கள் சுற்றிவரும், ஆனால் முத்துக்குளிப்பவர் கடல்மட்டத்திலிருந்து கீழே சென்று பணியை முடித்துவர ஏறக் குறைய ஒரு நிமிடமே எடுத்துக்கொள்வர்.
மேற்கூறிய காரணங்கள் மட்டுமன்றி அதிக எண்ணிக்கையுள்ள படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீழ்மூழ்குநர்கள் முத்துக் குளிக்கும் போது கடலில் ஏற்படும் இரைச்சலால் அவை தொலைவிற்கு சென்றுவிடக்கூடும்.
மேலும் இன்று உலகில் காணப்படும் ஏறத்தாழ முந்நூற்றுக்கும் மேற்பட்ட சுறாமீன்களில் 40 இனங்களே மனிதர்களைத் தாக்குகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
இவையன்றி மாலை வேளையில் தொடர்ந்து முத்துக்குளித்தல் நடைபெற்று இருந்தாலோ, முத்துக் குளிப்போருக்குக் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்திருந்தாலோ சுறாமீன்களால் தாக்கப் பட்டிருப்பதற்கு வாய்ப்புண்டு. இதைச் சூன்யக் கிழவி வந்தது எனவும் அல்லது முத்துக் குளிப்போர் ஏதேனும் பாவம் செய்தவர் எனவும் அக்காலங்களில் அவர்கள் காரணம் காட்டியிருக்கலாம். மேற்சுட்டப்பட்ட சான்றுகளிலிருந்து கடல் கட்டுதல் வெறும் மூடநம்பிக்கையாக இருந்தது என்றும் முத்துக் குளித்தல் தொழிலின் முறைகள், அது நடைபெற்ற நேரம் முதலியன சுறாமீன்கள் தாக்காவண்ணம் அமைந்ததை கடல் கட்டுவார் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறலாம். ஆயினும் இம் மூடநம்பிக் கையே முத்துக் குளிப்போர்க்கு மனவலிமையை அளித்து இத்தொழில் புரிய உதவியதை மறுப்பதற்கில்லை.
(நன்றி. ஆவணம், இதழ் 8, 1997)
ള്

Page 42
ᏩᎧ
தமிழ் இலக்கியத்தினூடுஇ
(கொழும்புத் தமிழ்ச் சங்க ஏற்பா பேராசிரியர் ம. முகம்மது
இலங்கையின் வரலாற்றில் இருவர் இ பேராசிரியர்களாகச் சென்றுள்ளனர். முதலாமவர் பல்கலைக்கழகத்துக்கு தமிழ்ப் பேராசானாய்க் பிறகு, அவரது மாணவன் அல்ஹாஜ் ம. மு. கழகத்தின் இஸ்லாமியத் தமிழிலக்கியப் பேரா
அதற்குப் பின்னர் அவ்வாறு எவரேனும் இங் இடத்தில் வைத்து இந்தியர்களால் மதிக்கப்படுவ திகழ்கிறார். கார்த்திகேசு அவர்கள் உவைஸின் உவைஸின் மாணவன்.
ம. மு. உவைஸ் 1922 ஜனவரி 15 இல் பாண பிறந்தார். இப்பிரதேசம் அக்காலத்தில் 'ஊர்மனி திகதி காலமானார். தந்தையார் பெயர் மஹற்மு
1885 இல் பிறந்த மஹற்மூத் லெப்பையின் இறப்புப் பதிவு அலுவலகத்தில் தமிழில் பதிய வசதி நாடளாவிய ரீதியில் அன்றிருந்திருக்கிற
பிற்காலத்தில் தமிழ்மொழியில் மகா பாண்டித் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் வ6 பாடமாகக் கற்கவில்லை என்பது வியப்புக்கு ஹேனமுல்லை அரசினர் முஸ்லிம் தமிழ்ப் பா சிவத்தம்பியின் தந்தையாரான கார்த்திகேசு பை பெறுவதற்காக சரிக்காமுல்லை தக்ஸிலா வித்தி சித்தியடைந்தார். அங்கு அவர் கற்ற மொழிகt அதன் பின்னர் பாணந்துறை சென்ற் ஜோன் பரீட்சையிற் சித்தியடைந்தார். அப்பாடசாலையில் கற்று, அப்பாடத்திற்கும் தோற்றிச் சித்தி பெற்ற ஜோன்ஸ் கல்லூரியிற் சேர்ந்து (H.S.C.) பரீட்ை ஆட்சியியல், இலங்கை வரலாறு என்பனவற் இப்பரீட்சையிற் தேறினார். எனவே முற்று முழு தமிழ் மொழியைத் தந்தையாரதும், அவ்வூரில் கொண்டு கற்றுத் தேறியமை பெரும் முயற்சி(

ஸ்லாமியத்தமிழ் இலக்கியம் ாட்டில் 25.03.2006 அன்று நடைபெற்ற உவைஸ் நினைவுப் பேருரை)
- எஸ். எச். எம். ஜெமீல்
(ஓய்வு பெற்ற மேலதிகச் செயலாளர்,
கலாசார, சமய அலுவல்கள் அமைச்சு)
ந்தியப் பல்கலைக்கழகங்களுக்குத் தமிழ்ப் சுவாமி விபுலானந்தர் ஆவார். அண்ணாமலைப் F சென்றார். அதற்கு அரை நூற்றாண்டுக்குப் உவைஸ் அவர்கள் மதுரை காமராஜ் பல்கலைக் "சானாகச் சென்றார்.
கிருந்து செல்லாவிடினும், அத்தகைய உயர்ந்த பராக இன்று பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஆசிரியர்; அவரது மகன் சிவத்தம்பி அவர்கள்
ந்துறையைச் சேர்ந்த ஹேனமுல்லை எனுமிடத்திற் னை' என வழங்கப்பட்டது. 1996 மார்ச் 25 ஆம் )த் லெப்பை.
பிறப்புச் சான்றிதழ், களுத்துறை மாவட்ட பிறப்பு பப்பட்டுள்ளது விசேட அம்சமாகும். இத்தகைய
ğ5l.
தியம் பெற்றவராக விளங்கிய உவைஸ், ஐந்தாம் ரை எந்த வொரு பாடசாலையிலும் தமிழை ஒரு குரிய அம்சமாகும். தனது ஆரம்பக்கல்வியை டசாலையிற் பெற்றார். இங்கு தான் பேராசிரியர் னியாற்றினார். ஆங்கில மொழி மூலக்கல்வியைப் யாலயத்திற் சேர்ந்து ஜே. எஸ். ஸி. பரீட்சையில் ள் ஆங்கிலம், சிங்களம், பாளி என்பவனவாகும். ஸ் ஆண்கள் பாடசாலையிற் சேர்ந்து S. S. C. தமிழ் ஒரு பாடமாக இல்லாவிட்டாலும், தானாகவே ார். இதனைத் தொடர்ந்து பாணந்துறை சென்ற். Fயிற் தேறி பல்கலைக்கழகம் சென்றார். சிங்களம், றோடு, தானாகவே கற்ற தமிழ்ப் பாடத்திலும் தான சிங்களப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்து, சேவையாற்றிய தமிழ் ஆசிரியர்களதும் துணை யேயாகும்.

Page 43
இலங்கைப் பல்கலைக்கழகம் சென்றவுட பாடங்களையும் கற்க விரும்பினார். ஆனால் அறபு ஒரு பாடமாயில்லாத காரணத்தினால், எனவே அதற்குப் பதிலாக பொருளியலைத் (
தமிழ், சிங்களம் இரண்டையும் படித்தலிலும் அட்டவணைப்படி தமிழ் சிங்களம் இரண்டும் ஏதாவதொரு பாடத்தையே மாணவர் கற்க வே பேராசிரியர் விபுலானந்த அடிகளாவார். உவை மாற்று ஏற்பாட்டினைச் செய்து கொடுத்தார். உவைஸ், தொடர்ந்து தமிழைப் பிரதான பாடமா கற்றார். அவ்வாறு கற்ற முதலாவது மாணவன் தமிழை விசேட பாடமாகக் கற்ற ஒரேயொரு
இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வின் முகி
மஹற்மூத் முஹம்மது உவைஸ் அவர்களது முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்பதனோடு ஆரம்பித்ததெனலாம். சுவாமி விபுலானந்தர், ே வித்தியானந்தன், இலங்கையின் முதல் முஸ் ஸாஹிறாக் கல்லூரியின் அதிபரான எ. எம். எ. ஆற்றுப்படுத்தியோராவர்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை எ.எம்.எ ‘முஸ்லிம்கள் தமக்கென உள்ள கலாசார தனி இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாகும். அது இள அமையவேண்டும்.”
பேராசிரியர் சிவத்தம்பி அதனை மேலும் ெ என்பதற்காக ஓர் ஆக்கம் இஸ்லாமிய இலக்கி
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் அம்மத சார்ந்த பண்பாட்டின் செழுமை போன்றவற்றைக் வடிவம், வரலாற்று நிகழ்ச்சிகள், கதாபத்திரங்க ஆனிலிருந்து எடுகோள்கள் என்பன இவற்றில்
தமிழ் நாட்டுடனும், இலங்கையுடனுமான அ வாய்ந்தனவாகும்.
“யவனர் தந்த வினைமா ணன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”
- அகநூனுறு
“யோனகர் களுக்கான தனியிடமொன்றிை

GD
ன் தமிழ், சிங்களம், அரபு ஆகிய மூன்று அவரது எச். எஸ். ஸி. பரீட்சைப் பெறுபேற்றில் அப்பாடத்திற்கான அனுமதி வழங்கப்படவில்லை. தேர்ந்தெடுத்தார்.
சிக்கலொன்று ஏற்பட்டது. பல்கலைக்கழகப்பாட ஒரே நேரத்திலிருந்ததினால், இவ்விரண்டில் ண்டியிருந்தது. இச்சிக்கலைத் தீர்த்து வைத்தவர் ஸ் தமிழை ஒரு பாடமாகப் பின்பற்றுவதற்கான முதலாம் ஆண்டுப் பரீட்சையில் சித்தியடைந்த கவும், சிங்களத்தை உப பாடமாகவும் தொடர்ந்து என்பதோடு; 1948, 49, 50 ஆம் ஆண்டுகளில் மாணவனும் இவரேயாவார்.
lլֆմւկ
எம். ஏ. பட்ட ஆய்வான 'தமிழ் இலக்கியத்துக்கு தான், இத்துறையிலான திட்டமிட்ட ஆய்வு பராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் சு. ஸ்லிம் சிவில் அதிகாரியும், பின்னர் கொழும்பு ஆஸிஸ் ஆகியோரே இத்துறையில் உவைஸை
1. அஸிஸ் பின்வருமாறு வரையறை செய்கிறார்; த்துவத்தைப் பிரதிபலித்துக் காட்டும் இலக்கியமே ஸ்லாமிய வாழ்க்கை நெறிவை அடியொற்றியதாக
தளிவாக்குகிறார் : “முஸ்லிம் ஒருவர் எழுதியது
யம் ஆகிவிடாது" என்பார் சிவத்தம்பி அவர்கள்.
த்தின் செல்வாக்கு, அரபுமொழித் தாக்கம், அது
காணலாம். இவற்றோடு தொடர்புடைய இலக்கிய
sள், தலைப்புகள், இலக்கிய உத்திகள், அல்குர்
விரவியுள்ளன.
அரபு, பாரசீக நாட்டுத் தொடர்புகள் மிகப்பழமை
49

Page 44
G2)
(பாண்டுக அபய மன்னன் - கி. மு. 437-407
அநுரதபுர நகரின்) மேற்கு வாசலருகே
விசேடமாக அமைத்திருந்தான்’
- மகாவம்சம் X
இத்தகைய பாரம்பரியத் தொடர்பின் மூலம் தமது மொழியாகவும் கொண்டோர் தமக்கேய படைப்புக்களை இயற்றினர். அரபு இலக்கியக் க நாட்டு வரலாறு, அவற்றின் கதாபாத்திரங்கள் இப்படைப்புக்கள் தமிழ்க்காப்பிய, யாப்பிலக்கண இவற்றை ஆக்கியோர் அரபு, பாரசீக, உருது தமிழிலும் அறிவு பெற்றோராயிருந்துள்ளனர்.
இவ்வாறு தோன்றிய இலக்கியங்களுள், மு பல்சந்த மாலை என்பதாகும். இதனைத் தொடர் இஸ்லாமிய இலக்கியங்களாக வகைப்படுத்தப்ட
ஆய்வுகள் : முஸ்லிம் புலவர்களைப் பற் வெளிவந்தது. நெல்லை மாவட்டத்தைச் ே பூரணலிங்கம்பிள்ளையின் "நபிநாயகமும் கல் புலவர்களைப் பற்றி இதிற் கூறியுள்ளார்.
சு. வித்தியானந்தன் அவர்களது ‘இலக்கிய பற்றிய தனியானவொரு அத்தியாயத்தைக் கெ கலை, கலாசாரம், இலக்கியம் என்பன பற்றிய பெயரில் வெளியிட்டார். 'பிறையன்பன்' என்பது
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தைத் திட்டமி உவைஸின் எம். ஏ. பட்டத்துக்கான ஆய்வோடு விபுலானந்த அடிகளாவார். தமிழறிவியலில் மி மேற்கொண்டு, இந்தியாவிலும் இலங்கையிலு விளங்கிய அடிகளார் ஆங்கில மொழி மூலம் கல் பாடசாலைக் காலத்தில் தமிழ் படிக்காத ஆற்றுப்படுத்தியவர் அடிகளேயாவார்.
உவைஸின் ஆய்வினை பேராசிரியர் க. கணபதி
நெறிப்படுத்தினர். இந்தியாவுக்குச் சென்று ஆய்வு முஸ்லிம் கல்விச் சகாய நிதிமூலம் எ. எம். எ.
உவைஸின் ஆய்வுக் கட்டுரையான ‘தமிழ் 200 இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல்களை ஆரா
(சித்திரை 2006)

90
இஸ்லாத்தைத் தமது மதமாகவும், தமிழைத் ரித்தான, தனித்தன்மை வாய்ந்த இலக்கியப் கருத்துக்கள், இஸ்லாமிய சமய வரலாறு, அரபு , நிகழ்ச்சிகள் என்பனவற்றை உள்ளடக்கிய மரபுகளை அனுசரித்து எழுந்துள்ளன. அதனால் மொழிப் புலமையுடையோராய் மட்டுமல்லாது,
தலாவதானது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ந்து இன்று வரை ஈராயிரத்துக்கு மேற்பட்டவை பட்டுள்ளன.
ற்றிய முதலாவது நூல் 1939ஆம் ஆண்டில் சர்ந்த ஆங்கிலப் பேராசிரியர் எம். எஸ். விவாணர்களும்’ என்பதே அந்நூலாகும், 29
த் தென்றல்’ (1953) இஸ்லாமிய இலக்கியம்
காண்டுள்ளது. இவர் 1961 இல் இஸ்லாமியக்
ப நூலொன்றினை கலையும் பண்பும்' எனும்
அவரது புனை பெயராகும்.
ட்டு ஆழமாக ஆய்வு செய்யும் சகாப்தம் ம.மு. தான் ஆரம்பமாகிறது. இதற்கான வித்திட்டவர் கெ ஆழமானதும் அகன்றதுமான ஆய்வுகளை ம் பல்கலைக்கழகத் தமிழ்துறைத் தலைவரா ]விகற்ற விஞ்ஞானப் பட்டதாரியாவார். அவ்வாறே உவைஸைத் தமிழறிஞராக வருவதற்கு
நிப் பிள்ளையும், பேராசிரியர் சு. வித்தியானந்தனும் புகளை மேற்கொள்ளுவதற்கான நிதியுதவியினை
அஸிஸ் செய்தார்.
இலக்கியத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு ய்ந்துள்ளது. இது 1953 இல் நூலாகவெளிவந்தது.
Gedeo 3D

Page 45
1975 இல் நூலாக வெளிவந்த, அவரது கல முஸ்லிம் காப்பியங்கள்’ எனும் நூல் 15 காப்பி இல், இவராலும், பீ. மு. அஜ்மல்கான் அவர் பல்கலைக்கழத்தினால் வெளியிடப்பட்ட 'இஸ் ஈராயிரத்துக்கு மேற்பட்ட நூல்களின் விபரங்க
இத்தகைய ஆய்வுகளின் எழுச்சிக்காலம் கி ஆரம்பிக்கின்றது. எஸ். ஏ. ஆர். எம். செய்யி இஸ் லாமியத் தமிழிலக்கிய மகாநாடு பெரியதம்பிப்பிள்ளையினால் 'இருதயத்தின் ஈரித அப்பிரதேச முஸ்லிம், தமிழ் அறிஞர்களும், கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இது நூலுருப்
இதனைத் தொடர்ந்து “இஸ்லாம் எங்கள் இலட்சியத்துடன் தமிழ் நாட்டில். ஆரம்பித்த அறிஞர்களைத் தன்னகத்தே கொண்டு நட ஆய்வினையும், வளர்ச்சியையும் மிகவும் உ
நடைபெற்றுள்ளன.
1. 1973 - திருச்சி 2. 197,
3. 1978 - காயல் பட்டினம் 4. 197
5. 1990 - கீழக்கரை 6. 199
7. 2002 - இலங்கை
இம்மகாநாடுகளில் மிகப் பெருந்தொகைய தொகுப்புக்களாக வெளியிடப்பட்டுள்ளதோடு, நு பிரதிகள் நூலாயின; அரிய பழம் நூல்கள் மீள
இம் மகாநாடொன்றில் விடுக்கப்பட்ட வேண்( காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தய பேராசிரியராக உவைஸையும் நியமித்தது. இத்து ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளது.
1. இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல் விபர
2. தமிழிலக்கியத்தில் அரபுச் சொற்களுக்
3. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு
1. ஆரம்பம் முதல் கி. பி. 1700 வரை
11. காப்பியங்கள்
III. சிற்றிலக்கியம்
(ஓலை 3)

-G3) ாநிதிப்பட்ட ஆய்வான “தமிழ் இலக்கியத்தில்” யங்களை ஆராய்ந்துள்ளது. பிற்காலத்தில், 1991 களாலும் தொகுக்கப் பெற்று, மதுரைகாமராசர் லாமியத் தமிழிலக்கிய நூல் விபரக்கோவை' ளைத் தருகின்றது.
pக்கு மாகாணத்தின் மருதமுனையில் 1966 இல் 5 ஹஸன் மெளலானாவின் பெருமுயற்சியினால் அங்கு நடைபெற்றது. புலவர் மணி ழ் போல் வாழ்கிறார்கள் என வருணிக்கப்பட்ட ஏனைய பிரதேச அறிஞர்களும் 17 ஆய்வுக் பெற்றது.
வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி” எனும் இஸ்லாமிய இலக்கியக் கழகம், பன்னாட்டு த்திய மகாநாடுகள் இஸ்லாமிய இலக்கிய உத்வேகப்படுத்தின 7 மகாநாடுகள் இதுவரை
4 - சென்னை
9 - இலங்கை
9 - சென்னை
ான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுத் நூல்களும் வெளியிடப் பட்டுள்ளன. பல ஏட்டுப்
பிரசுரம் செய்யப்பட்டன.
டுகோளின் பேரிலேயே, தமிழ்நாடு அரசு மதுரை லிழிலக்கியத் துறையை நிறுவி, அதன் முதலாவது றை பெருஞ்சேவையாற்றி வருவதோடு, பின்வரும்
க் கோவை
கான அகராதி
- 6 பாகங்கள்

Page 46
G44D
IV. (6bT60Tb
V. அரபுத் தமிழ்
V1. பழங்கால வசனநடை, தற்காலக் கவிை
இலக்கிய வகைகள் : தமிழ் மொழியில் என அத்தனையையும் கையாண்டு முஸ்லிம் புலவர் 1990 இல் நடைபெற்ற கீழக்கரை மகாநாட்டிற் சமர் தரும். அன்று வரை கிடைக்கப் பெற்ற இஸ்லா
அந்தாதி - 20; அம்மானை - 10 ; ஆற்றுப்பன உலா - 1 ; ஊஞ்சல் பாட்டு - 03; ஏசல் - 7; ஒ கலம்பகம் - 12; காப்பியம் - 26; கிஸ்ஸா - சதகம் - 26 ; சித்திரக் கவி - 06 , சிந்து - திருப்புகழ் - 18; திருமண வாழ்த்து - 03; நாட! - 07; பவனி - 02, பள்ளு - 02; பிள்ளைத் தமிழ் - 188; முனாஜாத்து 40; மெளலிது - 03; வண்ண பல்வகை - 91
இவற்றுள் புதிய இலக்கிய வடிவங்கள் சிலவ மஸ்அலா, படைப்போர், நாமா என்பனவே அவை வந்ததாகும். சரித்திர நிகழ்வுகள், பெரியோர் 6 இதுவாகும். ஆண்டவனின் நல்லடியார்களைப் மஸ்அலாவானது வினா - விடைப் பாடல்களாகு பாரசீகச் செல்வாக்கின் விளைவாகத் தோன்றிய ந இத்தகைய வடிவங்கள், தமிழ் இலக்கியத்துக்கு
ஞான இலக்கியம் : சித்தர் பாடல்களுக் காணமுடியும். சித்தர் பாடல்கள் பற்றித் திருமூ என்பது பண்பட்ட சிந்தனையின் இறுதி நிலை வினோதங்களையும் அதிசயங்களையும் நிக நிலையிலுள்ளவர். 18 சித்தர் பாடல்களில், அப்பா, குணங்குடியார், மச்சரேகைச் சித்தர் (ஐ மெய்ஞ்ஞானியர் மூவர் ஞானப் பாடல்களைப் பாடி ஹஜ்ஜிப் பிள்ளையம்மாள், கீழக்கரை செய்யது
அரபுத் தமிழ் : இஸ்லாமிய சமய, அரபு தோன்றிய புதியதொரு எழுத்து வடிவம் அ எழுத்துக்களினால் எழுதுவதே இம் முறையா ஆய்வு செய்துள்ளார். ‘அரபுத் தமிழ் எங்கள்
(சித்திரை 2006)

தை
ர்னென்ன வகை இலக்கியங்கள் உள்ளனவோ, கள் இஸ்லாமிய இலக்கியம் படைத்துள்ளனர். ாப்பிக்கப்பட்ட தொகுப்புப் பின்வரும் விபரங்களைத் ாமிய இலக்கிய வகைகள் வருமாறு.
ட - 1; இசைப்பாடல்கள் - 59 , இலாவணி - 3; ப்பாரி - 2; கதைப்பாட்டு - 8; கப்பல் பாட்டு - 02 23; கும்மி - 43; குறவஞ்சி - 15; கோவை - 9; 49; ஞானப் பாடல்கள் - 77; தாலாட்டு - 07; கம் - 12; நாமா - 26; படைப்போர் - 19; பதிகம் p - 32; புராணம் - 03; மஸ்அலா - 05; மாலை ாம் . 10; விடுகதைக் கவி - 02; வெண்பா - 07;
ற்றையும் காண்கிறோம். ‘கிஸ்ஸா, முனாஜாத்து, யாகும். கிஸ்ஸா என்பது ‘கஸஸ்' என்பதிலிருந்து வரலாறுகள் என்பனவற்றைக் கதையாயுரைத்தல் புகழ்ந்து பாடுதல் முனாஜாத்து என்பதாகும். ம். படைப்போர், வீரயுக வரலாற்றைக் கூறுவது. நாமா என்பது தொடர் வரலாற்றைக் கூறுவதாகும். நச் செழுமை சேர்ந்தன.
கும்; சூபி இலக்கியத்துக்கும் சில ஒப்புமை முலர் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்: சித்தம் ; சித்து என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ழ்த்தும் திறன்; சித்தர் என்பவர் அத்தகைய மூன்று பேர் முஸ்லிம்களாவர். பீர் முஹம்மது துரூசுப் புலவர்) என்போராவர். ‘முஸ்லிம் பெண் டியுள்ளனர். தென்காசி ரஸல் பீவி, இளையான்குடி
ஆசியா உம்மா என்போரே அவர்களாவர்.
மொழிச் செல்வாக்கினால், தமிழ் மொழியிற் ரபுத் தமிழாகும். தமிழ்ச் சொற்களை அரபு கும். இதனைப்பற்றி அறிஞர் எ.எம்.எ. அஸிஸ் அன்புத் தமிழ்’ என்பது அவரது சுலோகமாகும்.
@ఐణ 3D

Page 47
கலாநிதி தைக்கா சுஜப் ஆலிம் அவர்கள் தனது பாரசீகமொழி’ எனும் நூலில் இவ்விடயத்தினை சிந்து, வங்காள, மலையாள மொழிகளும் இவ்வா மொழியான சுவாஹிலி (கிஸ்வாஹிலி) இத்தகை இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் 11 அரபுத்
இலங்கையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கி
'இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல் விபர கணிசமானவை இலங்கையைச் சேர்ந்தவைகளா மூன்று முக்கிய பண்புகளைக் காணலாம். அநே ஏறக்குறைய எல்லாமே சமய அடிப்படையில் அ அவை செய்யுள் நடையில் அமைந்திருந்தன. எ6 நல்லறிவு நிரம்பிய சமயப் பெரியோராயிருந்தன
இலங்கையில் முதன் முதலாக அச்சில் 6ெ பேருவளையைச் சேர்ந்த ஷெய்கு முஸ்தபா என தமிழிலான இந்நூல் 149 பாடல்களைக் கொன
இதனைத் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டி முற்பகுதியிலும் நாட்டின் எல்லாப் பாகங்களிலி தமிழிலும், தமிழிலும் வெகு சில சிங்களத்திலு சில வருமாறு:
கொழும்பு - இபுலீசு படைப்போர் - ஆமீது; யா புலவர்; காலி - முஹம்மதிய தமிழ்க் கீர்த்த6ை மஹீசிக்கு மாலை - செய்யத் முஹம்மத் மெஸ் சின்ன ஆலிம் அப்பா; அக்கரைப்பற்று - முஹ நபியுல்லாஹற் பேரில் கீர்த்தனை - சின்ன இப்றா - கசாவத்தை ஆயிரம் அப்பா; தெல்தோட்டை -
இலக்கியம், கல்வி, வெளியீட்டுத்துறை என்பலி ஏற்பட்ட விழிப்பில் முகம்மதுகாசிம் சித்திலெப் தமிழில் தோன்றிய முதலாவது நாவல் அவர 1885 இல் வெளிவந்தது. 1890 இல் வெளிவந்த இ சரித்திரம்' என மாற்றப்பட்டது
இந்நாட்டு முஸ்லிம்கள் 1868 இலிருந்து 2000 (எல்லா விதமானவையும்) ‘சுவடி ஆற்றுப்படை தமிழ், சிங்களம், ஆங்கிலம், மலாய் ஆகிய மெ நான்கு பாகங்களாகப் பட்டியலிட்டுள்ளது.

-Gs) ‘செரன்தீபிலும் தமிழ் நாட்டிலும் அரபு, ஆர்வி, மிக விரிவாக ஆராய்ந்து, விளக்கியுள்ளார். ாறு எழுதப்பட்டன. தன்சானிய நாட்டு உத்தியோக யதே. பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியிலும், தமிழ் நூல்கள் இலங்கையில் அச்சிடப்பட்டுள்ளன.
lալb
க் கோவை'யிற் பதியப்பட்டுள்ள நூல்களிற் கும். இந்நாட்டின் ஆரம்பகால இலக்கியங்களில் கமானவை அரபுத் தமிழில் இயற்றப் பட்டுள்ளன. மைந்துள்ளன. அக்காலத்து நடைமுறைக்கேற்ப னவே இவற்றை இயற்றியோருள் அநேகமானோர் ார். அவை ஏட்டுருவிலேயேயிருந்தன.
வளிவந்த நூல் "மீஸான் மாலை' என்பதாகும். பவர் 1868 இல் இதனை வெளியிட்டார். அரபுத் ன்டிருந்தது.
ன் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் ருந்தும் இஸ்லாமிய இலக்கிய நூல்கள் அரபுத் ம் பிரசுரமாயின. அவற்றுள் உதாரணத்துக்குச்
ழ்ப்பாணம் - புகழ்ப்பாவணி - அசனாலெப்பைப் னகள் - ஷேகு அப்துல் காதிர்; மட்டக்களப்பு - ாலானா; மருதமுனை - ஞானரை வென்றான் - ம்மதிய மாலை - யூசுப் லெப்பை; மன்னார் . ஹிம் மரைக்காயர், அக்குறைணை - தீன்மாலை சந்தத் திருப்புகழ் - அருள்வாக்கி அப்துல்காதிர்.
பவற்றில் 19ஆம் நூற்றாண்டு முஸ்லீம்களிடையே பையின் பங்கு மிகப் பாரியது. இலங்கையில் து ‘அசன்பேயுடைய கதை' என்பதாகும். இது ரண்டாம் பதிப்பில் அதன் பெயர் ‘அசன்பேயுடைய
ஆம் ஆண்டுவரை வெளியிட்டுள்ள நூல்களை தொகுத்துள்ளது. இதன்படி தமிழ், அரபு, அரபுத் ாழிகளில் 1977 நூல்களைச் சுவடி ஆற்றுப்படை
(சித்திரை 2006)

Page 48
FL
சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவுப் பே
06.01.2006 வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக் கொழும்பத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் ெ நடைபெற்றது. நினைவுப் பேருரையை தென்கிழக் “சி. வை. தாமோதரம்பிள்ளை - சில சிந்தனைக
உழவர் திருநாள்
15.01.2006 ஞாயிறு மாலை 5.15 மணிக்கு சங்கத் தலைவர் குமாரசாமி சோமசுந்தரம் தலை தமிழ் வாழ்த்துப் பாடினார். வரவேற்புரையை இலக்கி *உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” உறுப்பினர் பி. எஸ். சூசைதாசன் சிறப்புச் செr “புதிதாய்ப் பொங்குவோம்” கவியரங்கு நடைபெற் சுந்தரலிங்கம், சடாகோபன், விமலாதித்தன், மான ‘ஓலை’ வெளியீடு நடைபெற்றது. வெளயிட்டுரை: முதற் பிரதியை கே.வி. தொழிலதிபர், கே.வி. சர
பேராசிரியர் சு. வித்தியானந்தன் நினைவுப்
28.01.2006 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் குமாரசாமி சே இரா. வை. கனகரத்தினம் ‘தமிழியல் வளர்ச்சி சொற்பொழிவு ஆற்றினார்.
சிறப்புச் சொற்பொழிவு
01.02.2006 புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு சங்கத் தலைவர் குமாரசாமி சோமசுந்தரம் தலை6 குழு உறுப்பினர் தெ. மதுசூதனன் நிகழ்த்தினா கொண்ட வரலாறு” என்ற தலைப்பில் சென்னை பேராசிரியர் வீ. அரசு அவர்கள் சிறப்புச் சொ காப்பாளர் பேராசிரியர் கா. சிவத்தம்பி கருத்து
இலங்கை நூல்க் கண்காட்சி - விற்பனை ர
11.02.2006 சனி மாலை 4.30 மணிக்கு சங்க தலைவர் குமாரசாமி சோமசுந்தரம் தலைமையி அமைச்சின் மேலதிகச் செயலாளர் சி. தில்லை விற்பனைக் கூடத்தைத் திறந்து வைத்தார். ஊடகவி சிறப்புரை ஆற்றினார். கொழும்பு ஒட்டோ அச்ச சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார். இலங் பெற்றுக்கொள்ள முடியும்.
‘ஓலை’ - 29 வெளியீடு
04.03.2006 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கத் தலைவர் குமாரசாமி சோமசுந்தரம் த6ை
(சித்திரை 2006

།།
6)6)
ருரை
கு குமாரசாமி விநோதன் கருத்தரங்கு மண்டபத்தில் பரியதம்பிப்பிள்ளை விஜயரெத்தினம் தலைமையில் குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் க. இரகுபரன் ள்” என்ற தலைப்பில் நிகழ்த்தினார்.
சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கொழும்புத் தமிழ்ச் >மையில் நடைபெற்றது. திருமதி பூமணி நடராஜா கியக்குழு உறுப்பினர் தெ. மகுசூதனன் நிகழ்த்தினார். என்ற தலைப்பில் முன்னாள் மன்னார் பாராளுமன்ற ாற்பொழிவாற்றினார். செங்கதிரோன் தலைமையில் ]றது. அதில் சோக்கல்லோ சண்முகநாதன் ருக்ஷா வை வரோதயன் ஆகியோர் பங்குபற்றினர். 28வது யை கலாநிதி திரு. வ. மகேஸ்வரன் நடத்தினார். ற்குணம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
பேருரை
5 குமாரசாமி விநோதன் கருத்தரங்கு மண்டபத்தில் ாமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர் பில் ஆறுமுகநாவலர்” என்ற தலைப்பில் சிறப்புச்
சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கொழும்புத் தமிழ்ச் மையில் நடைபெற்றது. வரவேற்புரையை இலக்கியக் ர். ‘சங்க இலக்கியத்தைத் தமிழ் சமூகம் எதிர்
பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறைத் தலைவர் ற்பொழிவு ஆற்றினார். கொழும்புத் தமிழ்ச் சங்க ரை வழங்கினார்.
நிலையத் திறப்பு விழா ரப்பிள்ளை மண்டபத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்கத் ல் நடைபெற்றது. பிரதம விருந்தினராகக் கல்வி நடராஜா கலந்து கொண்டு இலங்கை நூல்கள் யல் கல்லூரி விரிவுரையாளர் ஆ. சிவநேசச்செல்வன்
க நிர்வாக இயக்குநர் திரு. தியாகராசா தயாநிதி கைத் தமிழ் நூல்களை இவ்விற்பனை நிலையத்தில்
த சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கொழும்புத் தமிழ்ச் Uமையில் நடைபெற்றது. திருமதி. பூமணி நடராசா

Page 49
சங்ககீதம் இசைத்தார். வரவேற்புரையை இலக்கி வெளியீட்டுரையை இலக்கியக் குழு உறுப்பினர் தெ. ஆட்சிக் குழு உறுப்பினர் கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத் உறுப்பினர் எஸ் சூசைதாசன் உரையாற்றினார். ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை ஆசிரியர்) பெற்றுக் “நகைச்சுவைக் கதம்பம்” இடம் பெற்றது.
"சேது பந்தனம்" நூல் அறிமுகம்
பன்மொழிப்புலவர் த. கனகரத்தினம் அவர்களி மொழி பெயர்ப்புத் தொகுதி) அறிமுகம் 11.03.2006 & மண்டபத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் கு திருமதி. பூமணி நடராஜா சங்ககீதம் இசைத்தார் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி வரவேற்ட (முன்னாள் அரசகரும மொழித்திணைக்கள ஆரா சங்கம் கல்வி நிலையம்) அவர்களால் வழங்கப்பட்டது அவர்களும், ஆய்வுரைகளை எழுத்தாளர் பத்மா (முகாமையாளர், இலங்கை வங்கி - லேக்ஹவுஸ் கிே சமூக சேவையாளர் திரு. ச. இலகுப்பிள்ளை பெ
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை நினைவுப்
12.03.2006 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.30 மணி சங்கத் துணைத் தலைவர் திரு. பெ. விஜயரெத்தின
செ. யோகராசா (முதுநிலை விரிவுரையாளர், கிழக் காலமும் கருத்தும் - இலக்கிய வழி ஆய்வு” எனு
வாராந்த, மாதாந்த நிகழ்வுகள்
திகதி நிகழ்வு
04.01.2006 அறிவோர் கூடல் திருக்கோ வழிப்படுத்
18.01.2006 அறிவோர் கூடல் திருக்கோ ஒம்படுத்து
25.01.2006 புலவர் வரிசை அதி வீர
வரதுங்க
08.02.2006 அறிவோர் கூடல் திருகோல செவிலிே
15.02.2006 அறிவோர் கூடல் திருக்கோ
நற்றாய்
22.02.2006 புலவர் வரிசை துரைமங் சுவாமிகள்
01.03.2006 அறிவோர் கூடல் திருக்கோ − சுவடு கe 15.03.2006 அறிவோர் கூடல் திருக்கோ குன்றத்தி
@ఐణ 3D

«G42O
|யக் குழு உறுப்பினர் வ. சிவஜோதி நிகழ்த்தினார். மதுசூதனன் நிகழ்த்தினார். சிறப்புச் சொற்பொழிவை தின் நிகழ்த்தினார். முன்னாள் மன்னார் பாராளுமன்ற ஒலையின் முதற் பிரதியை வைத்திய கலாநிதி கொண்டார். சோக்கல்லோ சண்முகம் குழுவினரின்
lன் "சேது பந்தனம்" (சிங்களச் சிறுகதைகளின் :னிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கரப்பிள்ளை மாரசாமி சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றுது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைப் பொதுச் ரை நிகழ்த்தினார். ஆசியுரை திரு. டி. பேமதாச ப்ச்சி அலுவலர் - சிங்களமொழி விரிவுரையாளர், 1. வெளியீட்டுரையை பேராசிரியர் சோ. சந்திரசேகரம் சோமகாந்தன், கலாநிதி மடுளுகிரியே விஜேரத்ன ளை) ஆகியோரும் ஆற்றினர். நூலின் முதற்பிரதியை ற்றுக்கொண்டார்.
பேருரை
க்கு விநோதன் மண்டபத்தில் கொழும்புத் தமிழ்ச் ாம் அவர்களின் தலையில் நடைபெற்றது. கலாநிதி
5குப் பல்கலைக்கழகம்) அவர்கள் ‘பண்டித மணி: ம் தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.
தலைப்பு நிகழ்த்தியார்
வையார் புராணவித்தகர் துரைத்தல் மு. தியாகராசா வையார் புராணவித்தர்
ரைத்தல் மு. தியாகராசா பாண்டியனும் பண்டிதர்
பாண்டியனும் சி. அப்புத்துரை b6JuuT புராணவித்தகர் தடல் மு. தியாகராசா வையார் - செவிலி புராணவித்தகர் பிரிவாற்றாமை மு. தியாகராசா கலம் சிவப்பிரகாச பண்டிதர்
சி. அப்புத்துரை 6026)յաITit புராணவித்தகர் ண்டிரங்கல் மு. தியாகராசா வையார் புராணவித்தகர் டை கண்டனம் மு. தியாகராசா
தொகுப்பு
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி

Page 50
துள்ளது:
ஈழத்தில் வெளிவந்த இலக்கிய கடந்த காலங்களில் ஈழத்தில் வெளிவந்து நீ பற்றிய விபரங்களை ‘ஓலை’ இதழ்களில் தர எண் தொடங்கிய காலம், வெளியீட்டாளர். அதன் ஆசிரி இதழ்கள் வெளிவந்தன, எப்போது நிறுத்தப்பட்டது எழுத்தாளர்கள், அவ்விதழ்களில் வெளிவந்த பற்றிய விபரம் மற்றும் ஈழத்து இலக்கிய உலகில் 4 முதலிய விபரங்களை உள்ளடக்கியதான கட்டுை ஒவ்வொரு இதழிலும் அவ்வாறான சிற்றிதழ்கள் ஒலி எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உங்களு அத்துடன் அவ்வாறான சிற்றிதழ்களின் பழைய பிர வாங்கவும் தயாராயுள்ளோம். அவ்வாறான பிரதி கொள்ளுங்கள்.
 
 

茜 புதிய வடிவ ல் ' உள்ளன. மொத்தத்தில்
ச் சிற்றிதழ்களின் வரிசையில்.
ன்று போய்விட்ட ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்கள் னியுள்ளோம். அவ்வாறான சிற்றிதழ்கள் வெளிவரத் யர், எப்பிரதேசத்திலிருந்து வெளிவந்தது. எத்தனை து, நின்றுபோன காரணம், அவ்விதழ்களில் எழுதிய ஆக்கங்கள், அவ்விதழ்களின் அளவு, பக்கங்கள் ஒவ்விதழ்கள் ஏற்படுத்திய தாக்கங்கள், பங்களிப்புகள் ர ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். ‘ஓலையின் ப்வொன்றின் விபரமும் தனித்தனியே வெளியிடப்படும், க்குத் தெரிந்த சிற்றிதழ் பற்றி எழுதி அனுப்புங்கள். திகளை ஆவணப்படுத்து முகமாக விலைகொடுத்து கள் கைவசமுள்ளவர்கள் ‘ஓலை’ யுடன் தொடர்பு

Page 51
JAV Best Comple
ーラ
○
کسے _
ASIAN COMPU MEGASTAR CON
No:8, St, Seb Nego
 
 
 
 
 
 
 
 

th
ment Fron.
一。
TER SYSTEMS MPUTER SYSTEMS
lastian Road, mbo

Page 52
With Best Com
துர்க்கா பு
தரமான உடைகளுக்
Durga
Deal Sarees, Salwar Ka Wedding Suits c.
No. 125, Main Street, Neg
இல125; பிரதான வீதி, நீள்கொ
 
 

plement From:
டவையகம்
கு இன்றே நாடுங்கள்
Textile
ers in ameez, Baby Suits, Ready Made Items
ாழும்பு தொ.இல031-2224638