கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2007.01
Page 1
ம்ய்ப்பொருள் காண்பதறிவு
بیسی
ங் �) Aಳಿ *՝ Fe.'
கவிதை
* சிறுகதை
தாலியின் சரித்திரம்
* அறியாதவற்றை நோக்கி நகருதல்
தை 2007
முன்னோடி : மா. கிருஷ்ணன்
4 பொங்கல் பண்டிகையின் குறியீடு
து நில அமைவும் இலக்கியமும்
4 பண்பாடும் நாட்டார் வழக்காற்றியலும்
Page 2
இலங்கையில் நூல்கள் வ ஏற்றுமதி, இறக்குமதி
புதியதோர்
அன்புடன் அழைக்கின்றது
CHEMAMADU BOO
Telephone: 011-2472362 FOX : Ol 1-2448624 E-moil : chemomoduQyoh
UG 49.50, People's Pork, C
தமிழ் நாட்டில் ப விற்பனைத்தறை
எமது முக
க.சச்சிதானந்தன் - காந்தளகம் சென்னை - 02. தொ.பே: 044-28414505 E-mail : tamilnool(a)dataone.in
அனைத்து வெளிரிடுகளும்
பிநியோகம், விற்பனை,
பதிப்புத்துறையில் சகாப்தம்
சேமமரு ததகசாலை
)K CENTRE
DOCO
Colombo - 11, Sri LonkO.
திப்புத்தறை, முன்னோடிகள், வர்கள்
கோ.இளவழகன் - தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 17. தொ.பே: 044-24339030 E-mail : tn-pathippagam (dyahoo.co.in
ம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்
Page 3
முன்னோடி : 8
பொங்கல் பண்டில்
நில அமைவும் இ
பண்பாடும் நாட்ட
கவிதை
சிறுகதை
அறியாதவற்றை (
தாலியின் சரித்தி
( ஒலை 40 )
இயற்கையியலாளர் மா. கிருஷ்ணன்
ார் வழக்காற்றியலும்
நோக்கி நகருதல்
- --O σοΣ : 2007
Page 4
ஆசிரியர் பக்கம்
பன்னெடுங்காலமாகத் தமிழர்களின் வாழ்மு: மனித சிந்தனையிலும் வாழ்முறையிலும் மற் செல்வாக்குச் செலுத்திவந்தன. மனிதர்கள் மேம்பாட்டுக்கும் சடங்குகள், பண்டிகைகள், தி சமூக வாழ்வியல் இருப்பின் உறுதிக்கும் தொ
கிராமத்துக்குக் கிராமம் வாழ்வியல் சார்ந்த வித்தியாசங்களையும் கொண்டிருந்தன. இை மேலும் இவை பண்பாட்டு அடையாளங்களா பாரம்பரியமாக இவை கையளிக்கப்பட்டுவருகி
பொதுவாகப் பண்டிகைகள் திருவிழாக்கள் பிரி மையங்களாகவும் உள்ளன. வாழ்க்கை ஒ பெருங்களங்களாகவும் உள்ளன. இதுவரை இதனைத்தான்.
தை பிறந்துவிட்டால் நமக்குக் கொண்டாட்ட கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக தமிழக இனத்துக்குரிய அடையாளமாக இனங்கா தைப்பொங்கல் மீளுருவாக்கம் செய்யப்படுகி கருத்துநிலைத் தேடல் அங்கு வலுவாக உள்ள திருவிழாவாகவும் கொண்டாடப்படுகின்றது. பிற திருவிழா.
நாம் முன்பு வீட்டுமுற்றத்தில் பெங்கல் செய் போய்விட்டது. விருத்தியுறும் நகரமயமாக்கலின தொடர்மாடி வீடுகளின் பெருக்கம் எமது கொண் வைத்துப் பொங்கும் அவலம். வழமைபோல் சா சுருங்கிவிட்டது. மகிழ்ச்சிக்குரிய கொண்டாட்ட பு பொங்கல் பண்டிகை அதன் அடிப்படைப் பணி
அதேநேரம் இன்று ஈழத்து வாழ்புலத்தில்
அகதிகளாகவும் வாழ நிற்பந்திக்கப்படுகிறா பூர்த்திசெய்ய முடியாமல் தவிக்கின்றார்கள். எம தரிசுநிலங்களாக மாறிவருகின்றன. பிறக்கும் ை எமக்குத் தருவதாக இல்லை. இந்நிலையில்தான்
கொண்டாட்டம் மனித வாழ்வுக்குத் தேவையான எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கெ அவசியமானவை.
( ஒலை 40 D
-C2)
றை கிராமத்தை மையமிட்டிருந்தது. கிராமியம் றும் மனித நடத்தைக் கோலங்களிலும் பெரும் ரின் கூட்டுறவுக்கும் மகிழ்ச்சிக்கும் அறிகை ருவிழாக்கள், மற்றும் கொண்டாட்டங்கள் யாவும் டர்ச்சிக்கும் அடிப்படைகளாக அமைந்தன.
கொண்டாட்டங்கள் தனித்தன்மைகளையும் வ பண்பாட்டின் பன்முகத்தை வெளிப்படுத்தின. குறியீடுகளாக மலர்ச்சிபெற்றுள்ளன. நமக்கு ன்றன.
ந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் ன்றிணைந்த உயிர்ப்புடன் இயங்குவதற்கான பான சமூக அனுபவம் எமக்கு மெய்ப்பிப்பது
ம்தான். தைப்பொங்கல் ஒரு திருவிழாவாகவே ச் சூழலில் “தைப்பொங்கல்” தமிழ்த்தேசிய ணப்படுகின்றது. தமிழரது அடையாளமாகத் கின்றது. இதற்குரிய சமூக அரசியல் மற்றும் ாது. தைப்பொங்கல் சமய எல்லைகளைக் கடந்த ]ப்பு, இறப்பு ஆகிய தீட்டுக்களால் பாதிக்கப்படாத
து படையல் செய்த மரபு இன்று காணாமல் ால் இது பெறும்மாற்றத்திற்குள்ளாகி வருகின்றது. டாட்டங்களுக்குத் தடைபோடுகின்றன. குக்களில் ப்பாடு செய்யும் நடைமுறையாகத் தைப்பொங்கல் Dனநிலையை வளர்க்கும் பண்பாக மலர்ச்சிபெற்ற புகளை இழந்துவருகின்றது.
தமிழர்கள் சிதறிவாழ்வதுடன் மட்டுமல்லாமல் ர்கள். அன்றாட உணவுத் தேவைகளையே து விவசாய நிலங்கள் பயிர்ச்செய்கை எதுவுமின்றி தமாதம் புதிய ஆண்டின் நம்பிக்கைக் கீற்றுகளை நாம் தைப்பொங்கலை கொண்டாடவேண்டியுள்ளது.
ாது. ஒவ்வொரு கணமும் நாம் புத்துணர்ச்சிபெற்று ாள்வதற்கும் எமக்குக் கொண்டாட்டங்கள்
—{ தை : 2007 D
Page 5
"வெளி, காலம், சமுகம், உழைப்பு, பருவநிை பெளதீக சக்திகள் முதலிய அனைத்துமே நமக்தி பாடங்களைத் தந்தபடியே உள்ளன. நமது பு சமயம் அவை வலுப்படுத்துகின்றன. இயற்கை ஒரு பள்ளியாதம்.”
கொழும்புத் த திருவள்ளுவர் ஆ
மாத இதழ்
இலுத்தி இரா.சுந்தரலிங்கம் பெவிஜயரத்தினம் காவைத்திஸ்வரன்
சி.இராஜசிங்கம் டாக்டர்சி அனுஷ்யந்தன்
நிர்வாக ஆசிரியர் : சி.பாஸ்க்கரர்
ஆசிரிய கலாநிதி:கேரப்ரன்
துெ.ீது
வெளியீடு :
கொழும்புத் தமிழ்ச்சங்கம் 7.57 வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை) கொழும்பு - 06. இலங்கை. TYuSeTT S LLL 000L0 LLLKS TTTMTTe S LL 0O0LLuLLLa S57. FluggslILf ; WWW.Colombotamilsangam.or L'aftsbëri : tami Isa nga mgs triet, k
படைத்தவர்களே படைப்புக்கு
ஒலை 4Ù
C3)
வே, உணவு, போக்குவரத்து காட்டுயிர்கள், }த் தினந்தோறும் எல்லையற்ற அர்த்தம் விகாண்ட ரிந்து கொள்ளுதலையும் தருக்கத்தையும் ஒரே பிலுள்ள ஒவ்வொரு பொருளும் புரியவைக்தம்
- தத்துவவாதி எமர்சன் -
மிழ்ச் i ------ ண்டு : திபி2037
w இதழ்:40 திே: 2007
பக்குழு
ஆஇரகுபதி பாலசிறிதரன் கலாநிதி.செல்வி.திருச்சந்திரன் சற்சொரூபவதி நாதன் சி.எழில்வேந்தன் தா.சண்முகநாதன் (சோக்கல்லோ) டபிள்யூ.எஸ். செந்தில்நாதன்
பதிப்பாசிரியர் : தக.உதயகுமார் Tag:
டாக்டர் ஏஜின்னர் இசுரீதின்ே சூதனன்"
அட்டைப்படம் :
LIL ċ IJIET
அச்சுய்பதிப்பு
ஹரே பிரிEன்டர்ஸ் g El5ngbu - 06
3555
நம் கருத்தக்கும் பொறுப்பு.
— { தை 2007
Page 6
இயற்கையியலாளர் மா. கிருஷ்ணன்
- தெ. மதுசூதனன் -
*தினமும் விளக்கேற்றினதும் கணக்கற்ற சிறுபிராணிகள் என் வீட்டினுட் பிரவேசிக்கின்றன. பட்டாம்பூச்சிகளும் மெல்லிய தும்பிகளும் மின்சார விளக்குகளைச் சுற்றி மொய்க்கின்றன; சுவர்களில் களைப் பற்ற எறும்புகளும் தத்துக்கிளிகளும் ஊருகின்றன; வண்டுகள் சுழன்று சுழன்று எங்கும் பறந்து பின் "பிங்" என்று விளக்குக் குடைகளில் மோதிக் கீழ் விழுகின்றன. இவையெல்லாம் மழைக்காலத்தின் அறிகுறிகள். சிலவேளைகளில், புதுமழையில் வீசும் மண்வாசனை படியுமுன், வீடெங்கும் ஈசற்படைகள் வந்து கூடிவிடும். அப்பொழுதுகளில் நாங்கள் எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு இருட்டில் குடியிருப்போம். என் வீட்டைத் தேடிவரும் ஐந்துகள் அனைத்தும் சிறிதாகவும் பெரிதாகவுமிருப்பதில்லை. நேற்றிரவு சுமார் அரையடி நீளமுள்ள ஒரு தத்துக்கிளியை என் படுக்கையறையினின்றும் அப்புறப்படுத்தினேன்.” (1940)
ஒலை 40 )
N S. Q 翌 Kaş
“காகங்கள் நமது தேசத்தில் மிகவும் சாதராணமாக இருப்பதால் தான் நாம் அவைகளைக் கவனிப்பதில்லை என்று சொல்ல முடியாது - சற்று அசாதாரணமாகவுள்ள பறவைகளையும் நாம் கவனிப்பதில்லை. ஆனால் நம்மூர்க் காகங்களின் வாழ்க்கையை ஆராய்ந்து “சாதாரணக்காக்கை அதன் சரித்திரம்’ என்ற ஒரு புத்தகத்தையே எழுதியுள்ளார் ஒர் அயல்நாட்டு இயற்கை நிபுணர். இந்தப் புத்தகத்தை நான் படித்ததில்லை. டாம்ஸன் ஸிடன் என்ற வடஅமெரிக்க இயற்கை ஆராய்ச்சி நிபுணர் நமது தேசத்துக் காகங்களைப் பற்றி வெகு சுவாரஸ்யமானவித்தில் எழுதியிருக்கிறார். அவரைப் போல் இயற்கைஞானமுள்ளவர் அநேகர் இருந்ததில்லை. காகங்களிடும் பல சத்தங்களையும் கூர்ந்து அவைகளின் பாஷையையே ஒருவாறாக அறிந்து அதை மேல்நாட்டு சங்கீத முறைப்படி ஸ்வரப்படுத்தியும் தந் திருக் கறார். நான் இது போல அதிசித்தையுடன் காகங்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அறிந்து கொள்ளவில்லை. அவைகளின இருப்பும் போக்கும் அரைகுறையாகவே எனக்குத் தெரியும்.”
(1940)
"அணிலின் ஆங்கிலப்பெயர் "நிழல்வால்” என்ற கிரிக் பதங்களிலிருந்து வந்தது என்று என் அகராதி சொல்லுகிறது. நிழல் போல் உருத் தெளிவில்லாத இந்த வால், அணிலின் வாழ்க்கைக்கு மிக அவசியமானது. எலி வாலுடன் இருந்தால் கிளைகள் மேல் தாவிப் பாய்ந்து வாயுவேகத்துடன் செல்ல முடியாது. அப்படிச் செல்லுகையில் மயிர் செறிந்த வால் அதன் உடல் கனத் திற்கு ஒருவாறு எதிர்ப்பாரமாக இருப்பதால் அணில் இலக்குப் பிசகிக் கீழே விழுவதில்லை. குழை மீதும், கிளைகள் வழியாகவும் காற்றுப் போல் சுழன்று செல்வதிலும், செங்குத்தான இடங்களில்
--O தை : 2007
Page 7
விரைந்து தொத்தி ஏறுவதிலும் அணிற் பிள்ளைக்குள்ள திறமை மற்ற பிராணிகளுக்குக் கிடையாது. சிறிய அணிற்குஞ்சு கூட ஆபத்து நெருங்கினால் மரத்தையோ சுவரையோதான் நாடும்."
(1951)
“நிலக்கடலைப் பிண்ணாக்கு, கொள்ளு, கம்பு இவைகளை ஊறவைத்தும், கடலைப் பொட்டு வையும், உலர்ந்த அவரைக் கொடி, கருவேலங் காயப் முதலியவைகளையும் ஆடுகளுக்குக் கொடுக்கலாம். வடித்த கஞ்சி, பழத்தோல், காய்கறித்தோல் இவைகளையும் தீனியுடன் சேர்க்கலாம். நானிருந்த ஊரில் அரிசித்தவிடு கிடையாது. கிடைத்த பொழுது வெந்நீருடன் கலந்து ஒரு தொட்டியில் கொட்டிக் காட்டினால் ஆடுகள் ஆவலுடன் குடிக்கும். தீனியுடன் சிறிது உப்பும் கலக்க வேண்டும். கறக்கும் ஆடுகளுக்கு மேற்கண்ட தீனியைப் போது மட்டும் கொடுக்காவிட்டால் பால்குன்றி விடும். இவையாகாரம் எல்லா ஆடுகளுக்கும் அவசியம். சுத்தமான ஆகாரத்தைக் கண்டிப்பாக வேளாவேளைக்கு உதவுவதே ஆட்டுவளர்ப்புக்கு மிகவும் முக்கியமானது.”
(1951)
இவ்வாறு தமிழில் புதிய உரைநடை மரபொன்று தோற்றம் பெற்றது. குறிப்பாக இயற்கை மற்றும் காட்டுயிர் பற்றி யாருமே அக்கறைப்படாத, சுற்றுச்சுழல் பேணல் பற்றி விழிப்புணர்வு எதுவும்
○ இல்லாத ஒரு காலத்தில் "இயற்கையியல்” பற்றிய கட்டுரைகளைத் தமிழில் எழுதி தமிழியலில் புதிய தடம் உருவாகக் காரணமாக இருந்தவர் மாதவையா கிருஷ்ணன். (1912-1996)
இவர் தமிழின் முன்னோடிப் புனைகதை ஆசிரியர்களுள் ஒருவரான அ.மாதவையா (19121925) தம்பதிகளின் எட்டுக் குழந்தைகளில் கடைசியாக 30.06.1912 இல் கிருஷ்ணன் பிறந்தார். 1931இல் இவர் சென்னை மாகாணக் கல்லூரியில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தாவரவியலில் பி.ஏ.பட்டம் பெற்றார். தொடர்ந்து எம்.ஏ.பட்டம் பெற்ற பின் 1936 இல் சட்டப் படிப்பையும் முடித்தார். இவர் சிறுவயது முதல் எழுத்து, ஒவியம் , புகைப் படக் கலை, வனவிலங்குகள் தாவரங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தந்தையுடனும் மிகுந்த நட்புறவு கொண்டிருந்தார். இருவருக்கும் இடையே நிறைய கருத்துப் பரிமாற்றம் இடம்பெறும. கிருஷ்ணன் ஆளுமைமிக்க ஒருவராவே வளர்ந்து வந்தார்.
கிருஷ்ணன் 1937-1942 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சென்னையில் வசித்தார். அப்பொழுது முதலில் ஒரு பதிப்பகத்திலும் பின்னர் சென்னை கலைப்பள்ளியிலும், அகில இந்திய வானொலியிலும் (மக்கள் தொடர்பு அலுவலர்) பணிபுரிந்தார். மேலும் சண்டுர் சமஸ் தானத்திலும் வேலை பார்த்தார். இக்காலங்களில்
-( தை : 2007
Page 8
கதைகளும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார். குறிப்பாக 1930களில் இவரது எழுத்துக்கள் தமிழிலேயே இருந்தன. கலைமகள், கல்கி உள்ளிட்ட இதழ்களில் இவரது கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. 1937 இல் “மெட்ராஸ் மெயில்” பத்திரிகையிலும் எழுத ஆரம்பித்தார்.
1942 இல் கர்நாடகாவில் குல்பர்காவிற்கு அருகேயுள்ள சண்டுர் சமஸ்தானத்தில் வேலை கிடைத்தது. அங்கு எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். பாறைக் குன்றுகளால் சூழப்பட்ட சண்டுர் பள்ளத்தாக்கின் நடுவே துங்கபத்திரை எனும் அருவி ஓடியது. சுற்றியிருந்த காடுகளில் காட்டுயிர்களை அவதானிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வீட்டிலிருக்கும் வேளையில் ஆடு வளர்த்தார். பந்தயப் புறாக்களை வைத்திருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் சண்டுர் சமஸ்தானம் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. தொடர்ந்து இவருக்கு அரசுப் பணியில் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் கிருஷ்ணன் அதை ஏற்கவில்லை. எழுதுவது, புகைப்படமெடுப்பது போன்ற தொழில்களைச் செய்து அவற்றின் மூலமே தனது வாழ்க்கையை நடத்த விருப்பம் கொண்டார். அவரது கலைத் தேடல் சுதந்திரமாகச் செயற்படவே விரும்பியது. இயற்கை சார்ந்த தேடல் ஆத்மார்த்தத் துடிப்பாக மாற்றம் கண்டது. இயற்கையியல் பற்றிய தத்துவார்த்தமான
( ஒலை 40 トー
C6)
பிணைப்பு கிருஷ்ணனை உயிர்ப்புடன் இயங்க வைத்தது.
"இயற்கையின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆராயும் போது நாம் ஒரு புது உண்மையினைக் கண்டடைகிறோம். இயற்கை என்பது ஒரு கட்டுப்பாடு. இச்சொல் எல்லா அர்த்ததிலும் எல்லாவித முழுமையுடனும் பயன்படுத்தப் படுகிறது."
"வெளி, காலம், சமுகம், உழைப்பு பருவநிலை, உணவு, போக்குவரத்து, காட்டுயிர்கள், பெளதீக சக்திகள் முதலிய அனைத்துமே நமக்குத் தினந்தோறும் எல்லையற்ற அர்த்தம் கொண்ட பாடங்களைத் தந்தபடியே உள்ளன. நமது புரிந்து கொள்ளுதலையும் தருக்கத்தையும் ஒரே சமயம் அவை வலுப் படுத்துகின்றன. இயற்கையிலுள்ள ஒவ்வொரு பொருளும் புரியவைக்கும் ஒரு பள்ளியாகும். அவற்றின் பருண்மை அல்லது தாக்குப் பிடிக்கும் தன்மை, அசைவின்மையில் முடிவின்றி நீடிக்கும் தன்மை, விரிவாக்கம், வடிவம், பகுபடும் இயல்பு முதலியவை பற்றி புரிய வைக்கும். இந்த அறிவானது இச்சூழலில் செயல்படத் தேவையான வசதியையும் ஊக்கத்தையும் அளிக்கின்றது. கூட்டுவது, வகுப்பது, பெருக்குவது, அளவிடுவது, இணைத்துப் பார்ப்பது ஆகியவற்றின் மூலம் அது இதைச் சாதிக்கிறது. அதே சமயம் தருக்கமானது இந்தப் பாடங்களையெல்லாம் தனது சிந்தனையுலகுக்கு மாற்றிக் கொண்டு, பொருட்களையும் மனதையும் இணைத்து உலகக் காட்சியை உருவாக்கிக் கொள்கிறது”
இவ்வாறு எமர்சன் (1803-1882) என்ற தத்துவவாதி குறிப்பிடுவதன் தாற்பரியத்தை கிருஷ்ணன் உள்வாங்கிச் செயல்பட்டார் என்றே கூற வேண்டும். இயற்கையை அறிதல், புரிந்து வாழுதல் இயற்கையை நேசித்தல் என்னும் தொடருறு செயற்பாட்டின் இயங்கு தளமாக நாம் எப்படிச் செயற்பட வேண்டும் என்பதற்கு கிருஷ்ணனின் "இயற்கையியல் வாசிப்பு",
-C தை : 2007 )
Page 9
சிந்தனை, கருத்தாக்கம் செய்யும் திறன் யாவும் தமிழுக்குப் புதிது. ஆனால் சமுகமயப்பட்ட இயற்கை சார் வாழ்வுக்கு இவை வெளிச்சம் பாய்ச்சுபவை.
"த ஹிந்து,” “டைம்ஸ் ஆப் இந்தியா," இல்லஸ்டிரேடட்வீக்லி ஆப் இந்தியா” போன்ற பல்வேறு பத்திரிகைகளிலும் இதழ்களிலும் இவரது கட்டுரைகளும் குறிப்புகளும் இடம் பெற்றன. அவை கிருஷ்ணன் எடுத்த புகைப்படங்களோடு இடம் பெற்றன. கிருஷ்ணன் கோட்டோவியம் வரைபவராகவும் இருந்தார். இதனால் இவரது கட்டுரையுடன் அவர் வரைந்த கோட்டோவியம் ஒன்றும் இடம் பெற்றது.
இவர் இந்திய வனவிலங்கு வாரியத்தில் பல்லாண்டுகளுக்கு மேலாக அங்கம் வகித்தார். 1968 இல் இந்திய நாட்டுப் பாலூட்டிகளை பற்றி ஆய்வு மேற்கொள்ள கிருஷ்ணனுக்கு ஜவாகர்லால் நேரு ஆய்வு நல்கை வழங்கப் பட்டது. 1954 - 1961 வரை வெளியிடப்பட்ட கலைக் களஞ்சியத்தில் இவரது காட்டுயிர் சார்ந்த கட்டுரைகள் பல இடம் பெற்றன. கிருஷ்ணனுக்கு இருந்த கலைப் பணி அவர் எழுதிய கட்டுரைகளில் ஆழமாக வெளியிடப் பட்டது. குறிப்பாக சரியான தமிழ்ப் பெயர்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் பாங்கு அவரது தனிச்சிறப்பு எனலாம்.
குறிப்பாக "மறக்கப்பட்டு வரும் காட்டுயிர் சார்ந்த தமிழ்ப் பெயர்களை - உழவராக் குருவி (Swift) போன்ற - தனது கட்டுரைகளில் பதிவு செய்தார் ஒரு நாட்டின் பல்லுயிரியத்துடன் சார்ந்தது அதன் மொழிவளம் என்பார். பருவகாலங்களைப் பற்றி எழுதும் போது தமிழ்ப்பாரம்பரியப் பெயர்களை பயன்படுத்துவார்; கார்காலம், கூதிர்காலம் என. அது மட்டுமல்லாமல், அன்று காட்டுயிர் பற்றி எழுதிக் கொண்டிருந்தவர்களில் துப்பாக்கி தூக்கி வேட்டையாடத இயற்கைவாதியாகக் கிருஷ்ணன் தனித்து நின்றார். ஜிம்கார்பெட் போன்றவர்களின்
( ஒலை 40 )
○ எழுத்துக்கள் கோலோச்சிக் கொண்டிருந்த ஆண்டுகளில், வேட்டை இலக்கியம் என்ற பெயரில் பலர் விட்டுக்கொண்டிருந்த சரடுகளை மக்கள் உண்மையென படித்து மகிழ்ந்திருந்த காலத்தில் கிருஷ்ணன் வேட்டையாடலை எதிர்த்தார். காட்டுயிர் மனிதரின் பொழுது போக்கிற்கானவை அல்ல என்பது அவரது வாதம் (சு. தியடோர் பாஸ்கரன், 2004)
கல்கத்தாவிலிருந்து வெளியாகும் ஸ்டேட்ஸ்மென g556) "my country note book" (d5g TLD535J35 குறிப்பேடு) என்ற மாதமிருமுறைத் தொடரை 1950 முதல் எழுதலானார். இத் தொடரின் கடைசிக் கட்டுரை அவர் இறந்த பெப்ரவரி 18, 1996 அன்று அதே இதழில் "பிரத்யேகமாக இந்தியன்” என்ற தலைப்பில் வெளியானது. மிக அதிக காலம் வெளியான இந்தியப் பத்தி என்ற பெருமை இத்தொடருக்கு உண்டு. இது சுமார் 46 ஆண்டுகள் வெளிவந்த பத்தி. கிருஷ்ணன் என்ற இயற்பெயரிலும் கண்ணன் என்ற புனைபெயரிலும் கதைகள் எழுதி வந்துள்ளார்.
கதைகள் பெரும்பாலும் இயற்கையியல் சார்ந்த பின்புலத்தில் எழுதப்பட்டவை. மேலும் கிருஷ்ணனுக்கு தமிழ் செவ்விலக்கத்தில் நல்ல பயிற்சி உண்டு. இதனால் இலக்கியக் கட்டுரைகளும் பல எழுதி வந்துள்ளார். கிருஷ்ணனின் கதைகளைப் படித்த கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள்தான் காட்டுயிர்கள் பற்றி தமிழில் எழுத வேண்டுமென்று இவரை ஊக்குவித்து வந்தவர்.
-Ο தை : 2007 )
Page 10
கலைமகள், கல்கி, மற்றும் கலைக்களஞ்சியம், விஞ்ஞானி, மஞ்சரி போன்றவற்றில் கிஷ்ணன் எழுதிய கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட்டு “மழைக்காலமும் குயிலோசையும் எனும் தலைப்பில் நூலொன்று காலச்சுவடு வெளியீடாக 2002 இல் வெளிவந்தது. இத் தொகுப்பு தியடோர் பாஸ்கரன் முயற்சியினால் தமிழுக்குக் கிடைத்துள்ளது.
கிருஷ்ணன் காட்டுயிர்கள் தாவரங்கள் பற்றி இடையறாது மக்களிடையே அறிமுகப்படுத்திய வகையிலும் அவர்கள் அவற்றின் மீது நாட்டம் கொள்ளும் வகையிலும் இடையறாது இவர் மேற்கொண்ட பணிகள் பெரிது. இருப்பினும் கிருஷ்ணன் தமிழ்நாட்டில் அதிகம் அறியப் பட்டதை விட தமிழகத்துக்கு வெளியேதான் அதிகம் அறியப்பட்டார். அவரது மதிப்பு எத்தகையது என்பதை அப்பொழுது பலர் அறிந்து கொண்டனர். இதனால்தான் இந்திய மத்திய அரசு 1970 களில் இவருக்கு “பத்மழரீ” விருது வழங்கி கெளரவித்தது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் கழகம் தேர்ந்தெடுத்த "உலக ஐந்நூற்றுவர்” என்ற தொகுப்பிற்கு நியமிக்கப்பட்டு கெளரவிக்கப் UÚ LTŤ.
இதுவரை கதிரேசன் செட்டியாரின் காதல் (1995), The Vedanthangal Sanctuary for water-Birds, 1960; Government of madras, Jungle and Backyard, Publications Division 1961; India's Wildlife, 1959-1970; Bombay Natural History Society Bombay, 1975; Nights and Days: My C966 40)
C8) Book of Indian Wildlife, Viks, Delhi, 1985; Nature's Spokesman, Oxford University Press
2000 ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.
"கிருஷ்ணன் ஒரு உண்மையான இயற்கைவாதி இப்பிரபஞ்சமும் அதிலுள்ள இப்பூவுலகும் எல்லா உயிரினங்களும் இயற்கையின் நெறிமுறைக்குக் கட்டுப்பட்டே இயங்குகின்றன என்று நம்பினார். கடவுள், மதம், சடங்குகள் இவற்றில் இவருக்கு சிறிதளவு ஈடுபாடு கிடையாது. ஜோசியம், ஜாதகம் சம்பிரதாயம் போன்றவற்றுக்கு தன் வாழ்வில் அவர் இடமளிக்கவில்லை. ஒலியின் வேகத்தை மிஞ்சிப் பறக்கும் ஜெட் விமானம் எனக்கு மலைப்பைத் தருவதில்லை. ஆனால் சிறு கிளைகள் மீது துள்ளி ஓடும் அணிலும் பரந்த நிலத்தில் பஞ்சாப் பறக்கும் வெளி மானையும் நான் வியந்து பார்ப்பதுண்டு என்று ஒரு கடிதத்தில் எனக்கு (தியடோர் பாஸ்கரனுக்கு) எழுதியிருந்தார்.
கிருஷ்ணன் ஒரு தனிமை விரும்பி கல்யாணம் காட்சி இவற்றுக்குப் போகமாட்டார். நெருங்கிய நண்பர்களின் குடும்பத் திருமணம் என்றால் பரிசொன்றைக் கொடுத்தனுப்புவார். மற்ற இயற்கையியலாளர்கள் இவரை "love wolf” என்று வர்ணிப்பார்கள். ஒருமுறை குஷ்வந்சிங் சென்னைக்கு வந்து ராஜ்பவனில் தங்கியிருந்த பொழுது கிருஷ்ணனைச் சந்திக்க முயற்சி செய்தார். அப்போது ‘இல்லஸ் ட்ரேட்டட் 6556 Suisi)' feb6600T66, "The Southern Diary" என்ற பத்தி எழுதிக் கொண்டிருந்தாலும் அதன் ஆசிரியரான குஷ்வந்கிங்கை சந்திப்பதில் அவள் ஆர்வம் காட்டவில்லை. மும்பாய் திரும்பிய சிங் தனது பத்திரிகையில் "A rare bird" என்ற தலைப்பில் கிருஷ்ணனைப் பற்றி ஒரு குறிப்பு எழுதினார். அரிய எழில்லார்த்த வேதிவால் (5(56.60)u (Paradise flycatcher) JIT2gu666, அருகே உள்ள காட்டில் பார்க்க முடிந்தாலும் தான் சந்திக்க விரும்பிய கிருஷ்ணனைப் பார்க்க முடியவில்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
—( தை : 2007 )
Page 11
இவ்வாறு தியடோர் பாஸ்கரன் குறிப்பிடுவதில் இருந்து கிருஷ்ணன் எத்தகைய குணாதிசயங்கள் கொண்டிருந்தார் என்பது புலனாகிறது. பாஸ்கரனுக்கும் கிருஷ்ணனுக்கும் நெருங்கிய உறவு இருந்தது. இன்று தமிழில் காட்டுயிர் ‘சூழியல் பற்றி எழுதும் எழுத்தாளர்களில் தியடோர் பாஸ்கரனும் முக்கியமானவர்.
ஒரு நாடு அதன் மக்களால் கட்டிடங்களால் தொழிற்சாலைகளால் மட்டும் ஆனதல்ல. அதன் ஆறுகள், குடிகள், மலைகள், பாலைவனங்கள் இவற்றாலும் ஆனது. இவை தான் ஒரு நாட்டின் அடையாளம் என்பார் கிருஷ்ணன். சூழலியல் என்று ஒரு துறை உருவாகி அது சார்ந்த பிச்சினைகளைப் பற்றிய சொல்லாடல்கள் உருவாவதற்கு வெகு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தீர்க்கதரிசி போல் இவர் எச்சரித்தார். துங்கபத்ரா அணையால் ஏற்படக் கூடிய தீய விளைவுகளைச் சுட்டிக் காட்டினார். அணைகள் கட்டுவதாலும் காகிதம் மற்றும் செயற்கைத் துணி தொழில் களுக்காகவும் காடுகள் சகட்டுமேனிக்கு அழிக்கப்பட்டுக கொண்டிருந்த வருடங்களில் கிருஷ்ணன் அவற்றை எதிர்த்தார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதைப் பற்றிப் பேசினார்.
C9)
1940 களிலும் 1950 களிலும் எளிய தமிழில் கானுயிர் பற்றியும் இயற்கை பற்றியும் கட்டுரைகள் எழுதி சூழலியல் சார்ந்த கருதுகோள்களை அவர் விளக்க முற்பட்டார். அவர் எழுதிய காலகட்டத்தில் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு நம்நாட்டிலோ அல்லது உலகளவிலோ கூடத்தோன்றியிருக்கவில்லை. வேட்டை இலக்கியங்களைப் படித்து மகிழ்ந்து கொண்டிருந்த காலமது. கிருஷ்ணனுடைய கட்டுரைகளின் சிறப்பை அறிவுலகம் அடையாளம கண்டு கொள்ளாததற்கு இதுவும் ஒரு காரணம் மழைக்காடுகளைப் பாதுகாப்பது பற்றியும், புலி அழிவின் விளிம்பிலிருப்பது பற்றியும் , இந்தியாவில் பல உயிரினங்கள் அற்றுப் போகும் ஆபத்து பற்றியும் ஒரு தீர்க்க தரிசி போல் எழுதிக்கொண்டிருந்தார்” என்று தியடோர் பாஸ்கரன் குறிப்பிடுவதன் உண்மையை நாம் மறுக்க முடியாது. அவை முற்றிலும் சரியான கணிப்பு.
அறிவியல் நோக்கில் காட்டுயிர்களைப் பற்றி முதன் முதலாக தமிழில் எழுதியவர் மா.கிருஷ்ணன்தான். இந்த மரபு தொடரப்பட வேண் டும் . இயற்கையியல் பற்றிய கண்ணோட்டம் பிரக்ஞை மேலும் மேலும் ஆழப்படுத்தப்பட வேண்டும்.
—( தை : 2007
Page 12
ܐܸܠܠܼ
SN iš NNN
பொங்கல் பண்டிகை
பொங்குதல் என்ற வினைச் சொல்லை அடிப்படையாகக்) கொண்டு பொங்கல் என்ற பெயர்ச்சொல் தோற்றம்கொண்டது.2ள்து’ பொங்குதல்? பாலும் தண்ணீரும் சேர்ந்து பொங்கி வழியும். இதன் தாற்ரி ம் செல்வம், உணவு, சந்தோசம் போன்ற வாழ்வியலுக்கு ஆத்ா இருப்பவை. பொங்கிப் பெருகவேண்டும் الايي பொங்க வேண்டும் என்பது: மக்களது பேர்வ்ா.\
-ー :38888 3۔ مج? °8 :8عممبر இப்பணி டிகை தற்போது இந்துக் களின் பண்டிகையாகக் கருதப்படுகிறது. ஆனாலும் இது
( ஒலை 40 )
பின் குறியீடுகள்
- செல்வி திருச்சந்திரன் -
தமிழர்களினால் மதவேறுபாடு இன்றி ஒழுகப்பட்ட ஒரு திருநாளாகவே முதலில் இருந்திருக்க “வேண்டும். இவ்விழா பல குறியீடுகளைக் கொண்டதாக இருக்கிறது. இது பல குறிகளையும த்தப்பாடுகளையும் கொண்டிருக்கிறது என்பது
భళ
வாரஸ்யமான செய்தி.
புதிர்கஇருக்கும் பொழுது கதிர்காமள் ஒரு பாதிரியார் தைப் பொங்கல் தவர்கள் எல்லோரும் தமிழர்களாய்
கொண்டாடவேண்டும் என்று தன் வீட்டில் பொங்கி பலகாரம் செய்து ஏனையோருக்கும்
கொடுக்கும் ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தாக கேள்விப்பட்டதுண்டு வேறு சில மக்கள் இன்றும்
—( தை : 2007 )
Page 13
அதைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வருவதாகவும் அறிகிறேன்.
நிலத்தை, வயலை, பொருள் ஆதாரமாகக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் விளைபயிரை-நெல்லை அரிசியை, உணவாகக் கொண்ட காலத்தில் இந்தப் பொங்கல் தோன்றியிருக்கலாம. புதுநெல்லைத் தெரிந்
செதுக்கப்பட்ட மூன்று கல் av "gyl Lutul II பால் ஊற்றிப் பொங்கி, சர்க்கரை கலந்த ஒரு இனிப்பு உணவாக பொங்க பெறுகிறது. இந்நிகழ்விற்கு உபரிகரணங்கள் சில அடுக்கப்படுகின்றன. சூரிய வெளிச்சமும் விளை பயிரை வளர்ப்பதற்கு நீருடன் அதன் மகிமையும் விஞ்ஞான ரீதியில் விளக்கம் பெறுகிறது. கோடிட்ட பொங்கல் பானை தாங்கும் அடுப்பின்= இடத்தின்மூலையில் சூரியனும் வரைய வயலை உழுத ஏருதுகளும், கலப்பையில்" பூட்டப்பட்டதும் வண்டில் இழுக்க உதவியதுமான மாடுகளும், பசும் பால் தயிர் வெண்ணெய் தந்த பசுக்களும் பூசைக்குரியனவாக LIDITL (BLI பொங்கலும் தோற்றும் பெறுகின்றது. வயலை விளைவித்த தொழிலாளர் வர்த்தக்தினருடன் ஒன்றிணைந்து வயல் வெளியில் வைத்துப் பொங்கி பொங்கல் பரிமாற்றப்பட்டது. ,EITטםHb கிரமத்தில் இப்பண்டிகை தனிமனித வீடுகளுக்கு செல்லத்தொடங்கிற்று.நிலச் சொந்தக்காரர் நிலத்தைப் பயிரிட்டவர்களுக்கு ஒரு அந்தஸ்த்தும் மதிப்பும் வழங்கிய காலத்தில் இது ஒன்றாக ஒருமித்துக் கொண்டாடப்பட்டது. நிலத்திலிருந்து அவர்கள் அந்நியப்படுத்தப்பட்ட பொழுது நிலச்சொந்தக்காரர் அதைத் தங்கள் தங்கள் தனி மனித வீடுகளுக்கும் வளவிற்கும் பொங்கலைக் கொண்டு சென்றுவிட்டனர்.
தற்போது தொடர் மாடிவீடுகளில் plastic மாவிலைத் தோரணத்துடனும் plastic ஒட்டுக் கோலங்களுடனும் மின் அடுப்புக்களிலும், gas
ஒலை 마
-C1 O
அடுப்புக்களிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. விவசாயத் தொழிலாளருடன பகிரப்பட்ட பொங்கல் தற்போது அதே வர்க்க நிலையிலுள்ள sistin பக்கங்களில் தமிழர் அல்லாத இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பகிரப்படுகிறது. ஒரு இன மத ஒருங்கிணைப்பின் குறியீடாக இப்போது நகர்ப்புறங்களில் மாற்றம் பெற்றுவிட்டது. .ே '
A ..." இதன் ஆதிகாலக் குறியீடுகளாக நாம் நன்றி சொல்லல் என்பதாகக் கொள்ளலாம். சூரியனுக்கும் விவசாயத் தொழிலாளர்களுகக்கும் உதவிய மாடு பசுக்களுக்கும் விளை பொருளைப் கொடுத்து பகிரங்கமாக நன்றி நவிலப்படுகிறது. இதை Thanks giving என்ற கிறித்தவ மத முறையுடன் ஒப்பிடலாம், -Thanksgiving 6165us EPublic Celebration of Divine Goodness 516inggi 5Š 5TŠÆGNITÚD. SISI GY5 இறைவணக்கமுறை. Thanksgiving (5 தேசிய விடுதலைத் தினமாக அமெரிக்காவில் நவம்பர் மாத்தின் நாலாவது வியாழக்கிழமையும் கனடாவில் அக்டோபர் மாதத்து இரண்டாம் ம் அனுட்டிக்கப்படுகிறது. இறைவனுக்கு நன்றி நவிலல் என்பது தான் இதன் அர்த்தமாகும். ஆரிய பண்பாட்டு கலப்பினாலும் பிராமண பூசாரிகளின் ஆதிக்கத் தாலும் கிரிகைகளுடன் கூடிய கற்பூரம், ஆலாத்தி, குத்துவிளக்கு, சாம்பிராணிப்புகை போன்ற கிரிகைப் பூசைப் பொருட்கள் புகுத்தப்பட்டன. பின்னர் இது இந்து சமயக் கிரிகைகளுடன் கூடிய ஒரு பண்டிகையாக பரிணமிக்கத் தொடங்கியது.
Page 14
நில அமைவும் இலக்கி
என் பேராசிரியர் மு. அண்ணாமலை விரும்பிச் சொல்லும் வாக்கியங்களில் ஒன்று - தண்டமிழ் தந்த பொருள் இலக கனம் இன் று நமக் குத் தாத்தாவின் சட்டையாகிவிட்டது. இவ்வாறு அவர் விதந்து கூறியதற்குக் காரணம் "அகனைந்தினை" என்று வரையறுக்கப்பட்ட காதல் இலக்கண ங்களை மீறி வகை வகையான வாழ்வியல் சிக்கல்கள் காதல் உலகில் வலம்வரத் தொடங்கி விட்டது என்பதுதான். அதாவது, தொல்காப்பியர் சொன்ன உரிப்பொருள எல்லைகள் உடைந்து தகர்ந்து போய்விட்டன என்பது கருத்து.
சமுதாய அமைப்பு எளிமையாக இருந்த பண்டைக் கால மரபு. நூற்றாண்டுகளின் பாப் ச்ச விஸ் வெகுவான மாறுதல் களுக்கு இரையாகிவிட்டது. அரசியல் , ஆட்சிமுறை, தெய்வ வழிபாடு, குடும்ப உறவு, கல்வி, வெளிநாட்டுத் தொடர்பு, உலகியல் கண்ணோட்டம் எல்லாம்
LLTa OOO S aS 0 S OT OY திருப்பங்களைச் சந்தித் திருக் கின்றன. எனவே, 'உரிப்பொருள்
g) 571 L ILLI IT f'TT Lif * II hոմI Աք լg LL I tb மாறுபாடுகளைச் சந்தித்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தொல்காப்பியரும் இந்தவியத்தகு மாற்றங்களை, "கடி சொல் இல்லை காலத் துப் படினே' என்ற கண்ணோட்டத்தில் ஏற்றிருப்பார் என்றே கருதலாம்.
( ஓலை 40 )
m
கனன்னே தனிநா
Chelli
எடுத்து 'ஒடிசி
lLT 5)
சுட்டிக்க
தமிழ் இல்
தொல்கா
L60LLÜL
கூறுவதை திறனறிந்:
அகத்தின அணுகல்ே
○
சிற்பி பாலசுப்பிரமணியம்
Triā
pதலாகத் தமிழ் இலக்கியத்தை நில அமைவுக ஈனாட்டத்தில் ஆராய முற்பட்டவர் சேவியர் ша, 5lipasti. (Landscape and Poetry, ITS, ai 1997) தமிழரின் நிலம் சார் மனப்பாங்கை க்காட்ட வந்த அடிகள் கிரேக்கக் காவியமான
யில் ஒரு வேளாண்மையாளனின் பார்வை 'ந்த இயற்கைக் காட்சி தருவதைச் நாட்டுகின்றார்.
七、安芸、芷
ஸ்க்கிய உலகின் மூதாதையருக்கு முதாதையான ப்பியர் செய்துதந்த இலக்கணம் இலக்கியப் க்கான அடித் தளங்களை வரையறுத்துக் நயே இலட்சியமாகக் கொண்டது. எழுத்தின் து, சொல்லின் நுட்பமறிந்து, செய்யுள் வகையறிந்து,
மரபு, மெய்ப்பாடுகளின் கூறுகளறிந்து 1ணயும் புறத்தினையுமான படைப்புக் களங்களை 1ண்டும் என்பது இப்பெருமகனின் நோக்கு வகை,
( தை : 2007 D
Page 15
தொகை, விரி என்னும் முப்பெரும் பண்புகளுக்கும் உறைவிடமான தொல்காப்பியம் நம்காலப் படைப்பிலக்கியத்தின் மையங்களையும் தொடத் தவறவில்லை என்பதுதான் அதன் உயிர்ப்பு மிக்க சிறப்பாகும்.
இலக்கியம் படைப்போன், குறிப்பாகக் காதல் இலக்கியம் படைப்போன் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்றியமையாப் பொருள்கள் என மூன்றினை அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
முதல், கரு, உரிப்பொருள் என்றே முன்றே
நுவலும் காலை முறை சிறந் தனவே
பாடலுள் பயின்றவை நாடுங் காலை'
(தொல்பொரு.அக3)
என்னும் கருத்து தொல்காப்பியர் இலக்கிய உலகுக்கு அளித்த மூலதனம், தொல்காப்பியர் காலத்தின் வரையறைகளைக் கடந்து இன்னும் இம்முப்பொருள் படைப்புக்களின் மூலப்பொரு ளோவது கண்கூடு.
இவ்வாறு காண்பதுதான் நம் தமிழ் முன்னோர் கண்ட இலக்கியக் கோட்பாடுகளைச் செழுமை யுறச் செய்யும் என்ற கருத்து இன்று வலிவுற்று வருகின்றது. மலையாளக் கவிஞரும் திறனாய் வாளரும் ஆங்கிலப் பேராசிரியருமான அய்யப்பப் பணிக்கர் மிகத் தெளிவாக இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
-C13)
மேற்கத்தைய மொழி, இலக்கியம், அரசியல் மதம் அனைத்தும் அன்னிய ஆட்சிக்காலத்தில் மேலுயர்த்திப் பேசப்பட்டன. அது ஒருவகையில் நம்மை அடிமைப்படுத்தும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டது. கூர்ந்து நோக்கினால் மேலை இலக்கியக் கோட்பாடுகளின் மூலவர் அரிளிப் டாட்டில் உண்மையில் இந்திய இலக்கியங்களையோ, அவற்றின் வேர்களையோ முற்றிலும் அறியாதவர் அரிஸ்டாட்டில், நம் காப்பியங்களை அறியாத அவர் தம் கொள்கை களை மாறுபட்ட அடிப்படைகள் கொண்ட இந்தியக் காப்பியங்களோடு எப்படிப்பொருத்திப் பார்க்க முடியும்? எனவே இந்திய இலக்கிய ங்களை அறியவும் உணரவும் இந்தியக் கோட்பாடுகளை உருவாக்குவது அவசியம் - இவ்வாறு அய்யப்பப் பணிக்கரின் சிந்தனை அமைகிறது. (29.0 194இல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை)
ஓர் இலக்கியக் கோட்பாட்டை உருவாக்க மூன்று வழிகள் உண்டு. அவை முறையே மீட்டுரு all Ti5L (recovery), 1,503 Labs) (discover), புத்தாக்கம் (invention) என அறிஞர் கூறுவர். இந்நெறி நின்று காணும்போது மீட்டுருவாக்கம் செய்தல் தொல்காப்பியர் கோட்பாட்டை காலத்துக்கேற்றவாறு செழுமைப்படுத்திக் கொள்ளும் வழியாக அமைகிறது. அதாவது நவீனபடுத்திப் பொருள் காண முற்படுகிறோம்.
இந்தப் புதிய பார்வையில் தொல்காப்பியர் கூறும் முப்பொருள்களில் (முதல், கரு, உரி) முதற்பொருளைக் குறித்துச் சிந்தித்துப் L IT fil-EiħYPT Lib.
முதல் எனப்படுவது நிலம்பொழு - திரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே
-( தை 2007
Page 16
என்பது தொல்காப்பியம் (அக.4), இது தமிழ் மரபில் உருவான கருத்தா அல்லது தொல்காப் பியரின் ஆய்வில் எழுந்த சிந்தனையா என்பது நமக்குத் தெரியாது. ஏனெனில் நமக்குக் கிடைக்கும் மிகப் பழஞ்சுவடியே இது தான். மனிதனின் வாழ்வியலுக்கு ஆதாரமான ஒரு பேருண்மை இச்சூத்திரத்தால் முன்வைக்கப் படுகின்றது.
நிலம், காலம் ஆகிய இரண்டினையும் முதற் பொருள் என்ற கலைச்சொல்லால் இப்பெரும் பேராசிரியர் குறிக்கின்றார். வியப்புக்குரிய கலைச்சொல் இது. எல்லா உயிரினங்களுக்கும் நிலைத்த தாய்மடி நிலம் அல்லவா? அனைத் துயிர்க்கும் முன்தோன்றி முத்த பொருளும் நிலம் அல்லவா? உயிரைத் தருவது, காப்பது, தன்னுள் கரைத்துக் கொள்வது நிலம் அல்லவா? எனவே அதனை முதற் பொருள் என்று அழைத்தார். உயிர்கள் நிலத்தில் வாழ்கின்றன. அதேசமயம் காலத்திற்கு உள்ளடங்கி வாழ் கின்றன. தோற்றமும் முடிவும் கூறமுடியாதபடி கடவுளைப் போல் நிற்பது காலம், எனவே அதனையும் முதற்பொருள் என்று அழைத்தார் தொல்காப்பியர்.
இன்றைய அறிவியல் g) G35 Time and Space என்று ஆர்ப்பரிக்கும் அடிப்படை உண்மையை வாழ்வியல் ஆய்வுக்கு வடித்துக் கொடுத்தவர் தொல்காப்பியர் என்பது வியப்பின் வியப்பு அல்லவா?
நிலத்தின் அடிப்படையினை ஆராய்ந்தார் தொல்காப்பியர். அவருடைய பார்வையில் தமிழ் நிலமே காட்சி தந்தது. மலைகள் செறிந்த குறிஞ்சி, காடுகள் நெருங்கிய முல்லை, வயல்கள் உருவான மருதம், அலைகடற் புறமான நெய்தல் என்ற நானிலங்கள் தென் பட்டன. சகாராகி கள் இல் லாத
( ஒலை 4ம் H
தென்னிந்தியாவில் பாலைவனங்கள் இல்லை. ஆயினும் 'முல்லையும் குறிஞ்சியும் மழைவளம் குன்றும்போது சோர்ந்து போன தற்காலிக நிலையையே பாலை என்று வகுத்தார்.
இந்த ஐந்து நிலங்களுக்கும் இயற்கைவளம் மணக்க மலர்களின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். புறத்தே காட்சி தந்த நிலங்களுக்கு 5Jpii ludi, HEĐLoĵ5 [55] [ĤId560) 6iT (Imaginary Landscape) இலக்கியப் படைப்புக்கு அளித்துக் குறிப்பிட்ட உணர்ச்சி நிலைகளுக்கு உரியவை ஆக்கினார். குன்றுகளின் மகத்தான தனிமையில் காதலர் கூடி மகிழும் இனிமையையும், அடர்ந்த காடுகளில் கொழுகொம்பைப் பற்றவும் சுற்றவும் தவிக்கும் கொடி போல், "வருவார் தலைவர் என்று காத்திருக்கும் தலைவியின் தவிப்பையும், நண்டுகள் கொழுத்தால் வளையில் தங்காது என்ற உண்மையை நாளும் பார்த்திருக்கும் வயலி வெளிகளில் மனையை மறந்த கணவர்களிடம் தலைவியர் கொள்ளும் ஊடலையும், வெட்டவெளி வெம்பரப்பான பாலையில் பிரிவின் கொடுமையையும், அலையோசை மட்டுமே கேட்கும் விரிந்த வானும் மணற்பரப்புமான கடலோரத்தில் இரங்கலையும் உணர்ச்சி மையங்களாக்கி இலக்கியம் படைக்குமாறு விதிகளை வகுத்தார் தொல்காப்பியர்,
—( தை 2007
Page 17
ஒவ்வொரு உணர்ச்சியையும் சித்தரிக்க ஏற்ற காலங் களையும் பெரும் பொழுதாகவும் (பருவங்கள்), சிறுபொழுதாகவும் அமைத்து வைத்தார். இந்த உணர்ச்சிக் களங்களுக்குத் திணைகள் என்று பெயர் கொடுத்து (குறிஞ்சி, முல்லை, மருதம் , நெய்தல், பாலை, கைக்கிளை. பெருந்திணை) அவற்றுக்கேற்பக் கருப்பொருள்களையும் அமைத்தார். ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய தெய்வம், உணவு, பறவை, மரம், இசைக் கருவி, தொழில், மக்கள் ஆகியவர்களையே கருப்பொருள்கள் என வகுத்துரைத்தார்.
தொல்காப்பியர் காலத்திலிருந்து நெடும்பயணம் செய்துவிட்டது சமுதாயம். தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை இலக்கிய வளர்ச்சி நிலைக்கு ஏற்பவும் மக்களின் மாறிவரும் பண்பாட்டு நிலைக்கு ஏற்பவும் பொருத்திப்பார்க்க அவசியம் நேர்ந்திருக்கிறது. உரிப்பொருள் அளவில் இன்று பெருந்திணை உறவுகளும் , கைக் கிளை உறவுகளும் இலக்கியங்களில் முதன்மை பெற்றுள்ளன. ஆண்-பெண் உறவில் புதிய பரிமாணங்கள் ஏற்பட்டுள்ளன.
தொழில் பெருக்கம், மதமாற்றங்கள், ஆட்சி அவலங்கள், இயற்கைச் சூழலின் அழிவு காரணமாகவும், அறிவியல் வளர்ச்சியால் புதுப்பயிர்கள் கண்டுபிடிப்புக் காரணமாகவும், பெரும் போர்களின் விளைவாகக் காடுகள். விளைநிலங்கள், அழிவு காரணமாவும் கருப்பொருள்களாகிய மரம், செடி கொடி, பறவைகளின் இருப்பிடங்கள் மாறியுள்ளன. அல்லது அழிவெய்தி உள்ளன. தொல்காப்பியர் காலத்தில் இருந்த தெய்வங்கள் சில இப்போது இல்லை, புதிதாக கிறித்தவ, இஸ்லாமிய சமயங்கள் பிறந்திருக்கின்றன.
( ஒலை 40 )
○
ஓரளவு முதற்பொருள் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று கூறலாம். நிலம் பெரிதும் மாறுதலடைய வில்லை. கடல், மலை, ஆறு, காடு சார்ந்த நில அமைப்பு பல்வேறு சிதைவுகளுக்கு இடையேயும் தொடர்ந்து வாழந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த அடிப்படைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தொல் காப்பியர் கோட்பாட்டை விரிவுபடுத்தலாம்.
நாவலும் சிறுகதையும் இலக்கியத்தின் பெரும் பகுதியாக இன்று வடிவெடுத்திருக்கின்றன. இந்த இலக்கிய வகைமைக்குள் தொல்காப்பியரை எடுத்துச் சென்று நாவல், சிறுகதை இலக்கியத் துக்கான தொல்காப்பியரின் மாதிரித் திணைக் கோட்பாடு ஒன்றினைப் பொருத்திக் காணும் முயற்சி பயனளிப்பதாக இருக்கும்.
இந்த முயற்சியில் கேரளம் முன்னணியில் இருக்கிறது. முன்னர் குறித்தது போன்று, கே. அய்யப்பப்பணிக்கர் தொல்காப்பியரின் திணைக் கோட்பாட்டை நவீன பார்வையில் அணுகுவது குறித்துக் கட்டுரைகள் எழுதி இருக்கின்றார். மற்றொரு மலையாளக் கவிஞர் டிவிநயச்சந்திரன் (கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்) மேற்பார்வையில் இரண்டு ஆய்வேடுகள் இந்த அடிப்படையில் வெளிவந்துள்ளன. 1. Tinai Comcept and Thomas Hardy's Woodlanders
M.Phil Thesis-E John Mathew 1993.
2. ஆதுணிக கவிதையும் திண சங்கல்பவும் எம்.ட்பில் ஆய்வேடு - வி.ஜெ. செபாஸ்டியன்,
1993.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் செல்வி சா. சிவமணி, ‘சங்க அகத்தினைக் கோட்பாட்டு நோக்கில் தமிழ் - மலையாள நெல்தல் நில நாவல்கள்’ என்னும் முனைவர் பட்ட ஆய்வை என் மேற்பார்வையில் செய்து சமர்ப்பித்துள்ளார்.
-C தை : 2007 D
Page 18
செல்வி. சிவமணியின் ஆய்வில் கண்டறிந்த உண்மைகளைச் சுருக்கமாக இங்கு கூறலாம். கடலும் கடல் சார்ந்த நிலமுமாகிய நெய்தல் நிலத்தின் பெரும் பகுதி இன்னும் பண்டைய கூறுகளைக் காத்து வருகின்றது. தெய்வம், உணவு போன்ற கருப்பொருள்களில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இரங்கல் என்ற உரிப்பொருளுக்கு மாறாகப் பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் சமூகத்தின் பொதுச்சிக்கல்கள் முன்னுக்கு வந்துவிட்டன. தோப்பில் மீரானின் "ஒரு கடலோர கிராமத்தின் கதை', 'துறை முகம்' நாவல்களில் இஸ்லாமிய நம்பிக்கைளும், முதலாளித்துவச் சுரண்டலும் புதிய உரிப்பொருளாகி உள்ளன. ராஜம் கிருஷ்ணனின் 'அலைவாய்க் கரையில், வண்ணநிலவனின் "கடல்புரத்தில்' நாவல்களில் பாரம் பரியத்துக்கும் நவீனத்துக்கும் இடையே நடைபெறும் மெளப் போரும், சுரண்டலின் கொடுமையும் வெளிப்படுத்தப்படுகின்றன. தகழியின் "செம்மீனி"ல் கறுத்தம்மாவின் காதல் குடும்ப எல்லையைத் தாண்டும்போது கடற்கரை மக்களின் பூர்வீக நம்பிக்கையான 'கடல் அம்மா தண்டிப்பாள்' என்ற கோட்பாடு மையப்படுத்தப்
படுகிறது. இவ்வாறு உரிப்பொருள் மாறிவிடுகின்றது.
இன்று நில அமைவு சார்ந்த இலக்கியப் படைப்புகள் குறித்துப் பெரிதும் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறோம். தோமஸ் ஹார்டியின் "வெஸெக்ஸ் (Wessex) நால்களில் ஒரு கற்பித நிலவடிவம் முன்வைக்கப்படுகிறது. சதுப்பு நிலமும், அது சார்ந்த வேளாண் வாழ்வும் எடுத்துரைக்கப்பட்டு ஒரு தவிர்க்க முடியாத விதி தம் வாழ்வைச் சிதைப்பதை ஹார்டி நாவலின் பொருண்மையாகச் சித்தரிக்கின்றார். அந்நிலத்தின வீழ்ச்சி, மனித உறவுகளின் வீழ்ச்சியாக அமைகிறது.
C16)
இவ்வாறே தகழியை "குட்டநாட்டின் வரலாற்று நாயகன்' என்று சிறப்பிக்கின்றனர். நில அமைவோடு இலக் கரியம் கொள்ளும் நெருக்கமும் நேசமும் இதனால் புலனாகின்றன.
முதன்முதலாகத் தமிழ் இலக்கியத்தை நில அமைவுக் கண்னோட்டத்தில் ஆராய முற்பட்டவர் சேவியர் தனிநாயக அடிகள் (Landscape and Poetry, IITS, Chennai 1997), தமிழரின் நிலம்சார் மனப்பாங்கை எடுத்துக்காட்ட வந்த அடிகள் கிரேக்கக் காவியமான 'ஒடிசியில் ஒரு வேளாண்மையாளரின் பார்வை பொலிந்த இயற்கைக் காட்சி தருவதைச் சுட்டிக்காட்டு கின்றார். பல்லாளப் என்பவன் உலிசிஸிடம் சொல்கிறான்.
“எங்கள் இதாகா கொஞ்சம் கரடுமுரடான பூமிதான். பயணத்துக்குச் சிரமானதும் கூட. ஆனால் இங்கு நிறைய தானியமும் நல்ல மதுவும் இருக்கிறது. மழையும், மென்மைமிக்க வளமான பனியும் இருக்கிறது. ஆடு மாடுகளுக்கு ஏற்ற திணி இருக்கிறது. நிறையக் காடுகள் இருக்கிறது. வருடம் முழுவதும் குடித்து மகிழ ஊற்ற நீர் இருக்கிறது."
(ஒடிசி XIII)
இந்தப் பயன்மிக்க இயற்கைப் பரிமாணம் சங்க இலக்கியத்திலும் இருக்கிறது என்கிறார் அடிகள்,
சிந்தனையாளர் ஞானி, பழைய நோக்கை விரிவுபடுத்தி அமைக்கலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறார். இன்றைய நகர வாழ்க்கை, ஆட்சிமுறை, தொழில், மதம், சாதி, கல்வி, மருத்துவம், வாணிகம், தமிழகத்தில் பிற குடியேறிகளின் வரவு, தாக்கம், அரசியல் கட்சிகள் , பிற இலக் கசியங்கள் என
- தை 2007
Page 19
கருப்பொருள், உரிப்பொருள்களை வளம் செய்யலாம் எனக் கருதுகின்றார்.
பண்டைய நில அமைவுசார் இலக்கியக் கோட்பாட்டைச் செழுமை செய்ய வேண்டிய அவசியம் உருவாகி இருப்பதற்கு வேறுபல காரணங்களும் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது புலம்பெயர்ந்து வாழ்கிற மக்களின் நிலை,
1. தொழில், பொருளாதாரக் காரணங்களுக்காக
வெளிநாடுகளில் வசித்தல்
2. சொந்த நாட்டில் வாழ முடியாமல் அரசியல்
காரணங்களால் வெளிநாடுகளில் வசித்தல்
என்ற இருநிலைப்பட்ட மாந்தரை இன்று நாம் கானன்கிறோம். ஈழத்தமிழர், இந்தியத் தமிழர் என்னும் இருவகைத் தமிழரும் இவ்வகை மையுள் அடங்குவர். இவர்களில் இந்தியத் தமிழர் முதல் வகையினர் s। ଗର୍ରା uମୁଣ୍ଡା மட்டுமல்லாமல் தங்கள் தாயகத்துக்கு எப்போது விரும்பினாலும் திரும்பிவரும் உரிமை பெற்றவர் களும் கூட ஆனால் ஈழத்தமிழர்கள் நிலை LCTILIL-gl.
ஓங்கி உயர்ந்த பனைமரங்களும், கிடுகுவேலியும், வயல்வெளிகளும், கடற்கரைக் கானலும் நிரம்பிய சொந்த மண்ணிலிருந்து விலக்கப்பட்ட வர்களாய் மீண்டும் எப்போதும் காண்போம் என்ற நம்பிக்கை தளர்ந்து போன மக்கள் இந்தப் புலம்பெயர் தமிழர்கள். நில அமைவுசார் இலக்கியத்துக்குக் கிடைத்திருக்கும் புதிய பரிமானம் இது. இதனை ஒருவாறு யமுனா ராஜேந்திரன் தன் கட்டுரை ஒன்றில் (கிழக்கு மேற்கும் - 1997) கோடிட்டுக் காட்டியுள்ளார். வியத்நாமியக் கவி வியென்லின் (Landscape and Exile) கவிதைகளும், ஏ.சிவானந்தனின் When Memory Dies BT55] LÈ, F5ůLIDIT GIŠI
ஓலை I}
○
ருவர் டியரின் கட்டுரைகளும் , எண் ணற்ற புலம் பெயர் த பரிழ்ப் படை பாளிகளின் கவிதைகளும், கதைகளும் மன ஓவியங்களாக, நினைவிண் நிழல் களாக, நிலவியல் fifyil-East TL (Mental Landscape) 2 (55). TA இருக்கின்றன.
நிலத்தையும் காலத்தையும் முதற்பொருளாகச் சொன்ன தொல் காப்பியரின் மேதைமை பேருருக்கொள்கிறது. இழந்த நிலம், இழந்த வாழ்க்கை, இழந்த நிகழ்காலம், நிச்சயமற்ற எதிர்காலம் என்கிற புதிய பரிமாணங்களின் ஊடாகவும் சஞ்சரிக்கிறது தொல்காப்பியம்.
+ + +-
Page 20
பண்பாட்டு ஆய்வுகள் : பண்பாட்டை அறிவியல் பூர்வமாக விளக்கு வதற்கு முயற்சி செய்யும் ஆய்வுகள் பண்பாட்டு ஆய்வுகள் என்று அழைக்கப்படுகின்றன. பண்பாடு என்ற சொல்லை பல்வேறு விதங்களில் வரையறுத்து வந்துள்ளனர். இப் படியான வரையறைகளின் பொதுவான கூறுகள் என்று சிலவற்றை நாம் அடையாளப்படுத்த முடியும், இதனடிப்படையில் 'பண் பாடு' என்பது அடிப்படையில் ஒரு கருத்தாக்கம், சிந்தனையில் உருவான ஒரு பிம்பம்.
பண்பாடு என்ற பெயருடன், ஐம்பொறிகளால் உணரக் கூடிய வகை பரிஸ் எந்தவொரு பொருளும், உலகின் எந்த மூலையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. பண்பாடு, உணர மட்டுமே முடிகிற ஒரு உருவாக்கம். பண்பாட்டை புலன்களால் அறிந்து கொள்ள முடியாவிட்டாலும், அதன் வெளிப்பாட்டு வடிவங்களை நம்மால் தெளிவாக அவதானிக்க முடிகிறது. அதாவது, பண்பாடு பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது. இத்தகைய வெளிப்பாடுகளை பண்பாட்டுச் செயல்பாடுகள் என்ற பெயரில் பலரும் அழைக்கின்றனர்.
ஓலை 40 }
G18)
காற்றியஆம்
-முனைவர் டி.தருமராஜ்
"பண்பாட்டுச் செயல்பாடுகள் என்ற தொடர் மிரட்டும் தொளியை வழங்கக்கூடும். ஆனால், இத்தொடர் சட்டக்கூடிய விஷயங்கள் நமக்குப் பரிச்சயமானவை. நாம் அன்றாடம் ஒட்டி உறவாடக்கூடியவை
வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் பல்வேறு செயல்பாடுகளை உடையவர்களாய் இருக்கிறோம். வாழ்க்கை' என்ற பதம் தொடர்ச் சியான இயக்கத்தை ஊடாட்டத்தையே பட்டுகிறது. தினசரி அலுவல்கள் பழக்க வழக்கங்கள். நடையுடை பாவனைகள் நம்பிக்கைகள், சடங்குகள் வழிபாடுகள். திருவிழாக்கள் இவற்றிற்கா சொல்லப்படும் கதைகள், விளக்கங்கள். உணவுமுறைகள், பயன்படுத்தும் பொருட்கள், கலைகள், சக மனிதர்களுடான உறவுகள் குடும்பம், அது தரக்கூடிய பாதுகாப்புணர்வு. அதற்கு விலையாகத் தரவேண்டிய கட்டுப்பாடுகள், ஒழுக்கம், சமயம் என இன்னும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகக்கூடிய ஏராளமான காரியங்களை நாம் செய்து கொண்டிருக்கிறோம். இவை போன்ற செயல்களைச் செய்வதன் மூலமே, நாம் ஒரு சமுகத்தின் அங்கத்தினரா கவும் மாறுகிறோம். இத்தகைய செயல்பாடு களையெல்லாம் ஒட்டு மொத்தமாகப் "பண்பாட்டுச் செயல்பாடுகள்' என்ற பெயரில் அழைக்கலாம்.
இனி நாம் அடுத்த கேள்வியைக் கேட்க முடியும்; ஏன் இவையெல்லாம் பண்பாடு என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றன?
மேலே வரிசைப்படுத்தப்பட்ட செயல்கள் அனைத்தும் வெவ்வேறு கோணங்களில், வேறு வேறு காரணங்களுக்காக, மாறுபட்ட சூழல்களில
- east : 2007
Page 21
நடைபெறுபவை என்றாலும், இவையனைத்தும் ஒரே ஒரே சமூகத்தினுள் வாழக்கூடிய பல்வேறு நட மாதிரியான நம்பிக்கைகளை வெளிப்படுத்துகின்றனர். சடங்குகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றிலி தன்மைகள் காணப்படுகின்றன; அவர்களுக்குள் 6 கதைகள், புராணங்கள், விளக்கங்கள் ஒன்றாய் இப்படியே இன்னும் பல. அதே சமயத்தில் செயல்பாடுகளையெல்லாம் நெறிப்படுத்துகிற, கண்காணிக்கிற வெளிப்படையான அமைப்புக சமூகங்களுள் இருக்கவில்லை.
இப்படியான சூழலில், இச்செயலபாடுகள் அை ஒருமைப்படுத்துகிற காரணி எது? அல்லது இன நடவடிக்கைகளை இணைக்கக்கூடிய கூறு எது?, அ6 செயல்படக்கூடிய ஒற்றைத் தளம் எது என்ப கேள்விகளுக்கு விடையாக பண்பாடு' என்ற கருத்த வைக்கப்படுகிறது. ஒவ்வொரு சமூகமும் 'பண் காரணியின் மூலம் ஒருமைப்படுத்தப்பட்டுள்ளது. வெளித் தெரியும்படியாக செயல்படுவதில்லை எல்லாவித சமூகச் செயல்பாடுகளையும் பினை சாரமாக இருந்து கொண்டிருக்கிறது. இதன் க சமூகச் செயல்பாடுகளனைத்தும் பண்பாட்டுச்செயல்ப அழைக்கப்படுகின்றன.
பண்பாடு என்பது ஒரு கருத்தாக்கம்; சாரம். ச நிகழக்கூடிய பலதரப்பட்ட செயல்பாடுகளின் ஒருமித் சமூக வாழ்வைக் கறறுக்கொள்ளுதல் என்பது இந் அறிந்து கொள்ளுதல் ஆகும். ஒரு சமூகத்தினு நுழையக்கூடிய நபர் இப்பண்பாட்டைக் கற்று முறையில் ஏராளமான அறிஞர்கள் கவனம் செலுத் ஒரு குழந்தையாய் சமூகத்தினுள் அடியெடுத்து உறுப்பினர், துவக்க நிலையில் பிறரது செயலி கவனித்து பின்போலச்செய்யத் துவங்குகிறார். இது
அவருக்குப் பழக்கமாகி, பழக்கதோஷமாக மாறுகி பழக்க தோஷத்தை, போலச் செய்தலை, இயந்தி யோசிக்கத்துவங்குகையில், வழக்கமாய் செ செயல்களுக்கிடையேயான தர்க்க உறவு அவருக்கு துவங்குகிறது. இதுவுமல்லாமல், அச்சமூகத்தினுள் ெ தற்க உறவு பற்றிய விளக்கத்தையும் ஒரு நப உள்வாங்கி தனது சிந்தனையே போல் பாதுகாக்க இதன் மூலமும் ஒரு நபர் பண்பாடு' என்ற பி பெற்றுக்கொள்ள முடிகிறது.
( ஒலை 40 )
நபர்களால் பண்பாடு' என்ற சொல்லின் வரை ர்கள் ஒரே யறையினை விளக்க முனைந்த அவர்களது நாம் அதனை ஒரு 'கருத்தாக்கம் ) ஒற்றுமை என்று அழைப்பதில் துவங்கி வழங்கப்படும் பண்பாட்டுச் செயல்பாடுகளின் உள்ளன. 'சாரம்' என்ற நிலைமையையும், இத்தகைய அது செயல்பாடுகளுக்கிடை போதிக்கிற, யிலான தர்க்கவுறவு என்றும், ள் எதுவும் சமூக உறுப்பினரின் பிரக்ஞை யில் செயல்படுகிறது என்றும் விளக்கியுள்ளோம். ]னத்தையும் வை போன்ற கருத்துருவ நிலையில், சமூக ல்லது இவை மனிதர்களின் பிரக்ஞையினுள், து போன்ற அவர்களது தினசரி செயல்பாடு 5ாக்கம் முன் களின் தர்க்க ரீதியான பாடு' என்ற உறவாகச் செயல்படும் பண்பாடு இக்காரணி என்ற காரணி கடந்த இரண்டு என்றாலும், நூற்றாண்டுகளாக அய்வாளர்கள் னக்கக்கூடிய மத்தியல் தீவிரமான சிக்கலாக ாரணமாகவே அடையாளப்படுத்தப்பட்டது. ாடுகள் என்று பண் பாட்டின் இயக்கத்தை அறிந்து கொள்வதன் மூலம் மனித சமூகங்களின் சிந்தனையை மூகத்தினுள் தெளிவுபடுத்த முடியும், பண்பாடு தத் தன்மை. இயங்கக் ಆqu தளங்களைக த சாரத்தை கண்டறிவதன் மூலம மனிதர் 1ள் புதிதாய் களைப புரிந்து கொள்ள (Մ9պք க்கொள்ளும் என்பவை போன்ற நம்பிக்கைகள் சமூக அறிவியலாளர்களைப் ந்தியுள்ளனர். பண்பாட்டு ஆய்வுகளின் பக்கம் ஃைேளக் திசை திருப்பின. இக்காலகட் நாளடைவில் டத்தில், இதே போன்ற கருது றெது. இந்தப் கோள்களுடன் நடத்தப்படும்
• దరి ஆய்வுகளின் ஒரு வகையை ர குணததை நாட்டார் வழக்காற்றியல் என்ற யது வரும் பெயரில் அழைக்கின்றனர். 5LI L46\)UILIt -ğ5 "ఐపి _u: bTL Li TIT 6) pë5 ġbfT ABB u 6) 69(5 ' சமூக அறிவியலசமூகத தையும். பண்பாட்டுச் செயல்பாடு
—( தை : 2007 D
○
Page 22
களையும் ஆய்வுப் பொருளாகக் கொண்டுள்ளது. இதே நோக்கோடு வேறு பல அறிவியல்களும் (மானிடவியல், சமூகவியல்) செயல்படுகின்றன. ஆனால் நாட்டார் வழக்காற்றியல் என்ற துறை பண்பாட்டின் குறிப்பிட்டவொரு பகுதியைத் தனது ஆய்வுப் பொருளாகக் கொண்டிருப்பதன் மூலம் பிற இணையான சமூக அறிவியல்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது.
நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறுகள் என்ற பண்பாட்டுச் செயல்பாடுகளில் தனது கவனத்தைக் குவிக்கிறது. நாட்டார் வழக்காறுகள என்ற தொடர் ஆங்கிலத்தில் Folklore என்று வழங்கப்படுவதற்கு இணையாகப் பயன்படுத்தப் படுகிறது. நாட்டார் வழக்காறுகளைப் பற்றிய அறிவியல் , நாட்டார் வழக் காற்றியல் (Folkloristics) என்றழைக்கப்படுகிறது.
நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்கள் வழக்காறு களை நான்கு பெரும் பிரிவுகளுக்கள் வரிசைப் படுத்துகின்றனர். அவை, வாயப் மொழி வழக்காறுகள், நிகழ்த்துக் கலைகள், சமயம் மற்றும் நம்பிக்கைகள், பயன்பாட்டு பொருட்கள்.
ஒரு சமூகத்தில் பயிலக்கூடிய கதைகள், பழங் கதைகள், புராணங்கள், பாடல்கள், கதைப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறுகள் போன்றவை அனைத்தும் 'பேச்சு' என்ற வெளிப்பாட்டு வடிவத்தைக் கொண்டிருப்பதால் இவையனைத்தும் வாய்மொழி வழக்காறுகள் என்று அழைக்கப்படுகின்றன.
நிகழ்த்துக் கலைகள் என்ற இரண்டாவது வகை வழக்காறுகள் ‘ஆட்டக் கலைகள்’ என்ற மையச்சரடைக் கொண்டுள்ளன. உதாரணமாக தமிழகத்தில் வழங்கப்படும் வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, கணியான்கூத்து, உடுக்கைப் பாட்டு, கரகாட்டம், ஒயிலாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், தேவராட்டம், களியலாட்டம் போன்ற பல்வேறு ஆட்டக்கலைகளும் நிகழ்த்துக் கலைகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
மூன்றாவது வகை வழக்காறுகள் நாட்டார்
6 40
C20)
சமயம் மற்றும் அது தொடர்பான நம்பிக்கை அமைப்புகள் என்றழைக் கப்படுகின்றன. நிறுவனமயமாகிய, ஒற்றை ஒழுங்கிற்கு உட்படுத்தப்பட்ட சமயங்களைக் கடந்து மக்கள் மத்தியில் ஏராளமான வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றன. இத்தகைய வழிபாடுகள் அனைத்தும் அந்தந்த வட்டார அல்லது ஊரின் குணங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாகச் சொல்வதானால், தமிழகத்தில் காணப்படும் அம்மன், சுடலை, சாஸ்தா, மாடன், கருப்பு போன்ற பிற தெய்வ வழிபாடுகள் எந்தவொரு நிறுவனமயமாக்கலுக்கும் அப்பாற்பட்டவை. கிராம தெய்வங்கள் அல்லது நாட்டார் தெய்வங்கள் என்ற பெயரில் வழங்கப்படும் இக்கடவுள்களும், அவை பற்றி கதைகளும், நம்பிக்கைகளும், வழிபாடுகளும் நாட்டார் சமயம்’ என்ற வழக்காற்று வடிவங்களாக கருதப்படுகின்றன.
நாட்டார் கைவினைப் பொருட்களும் (மட்பாண்டம், கூடை, பாய்) அவற்றை செய்யக் கூடிய முறைகளும், பயன்படுத்தும் முறைகளும், நாட்டார் ஓவியங்களும், சிற்பங்களும், நாட்டார் அறிவியல் முறைகளும் நான்காவது வகையென அழைக்கப்படுகின்றன.
நாட்டார் வழக்காற்றியலின் வரலாறு: நாட்டார் வழக்காறுகளின் பொதுத்தன்மைகளை அறிவதற்குமுன் நாட்டார் வழக்காற்றியல்’ உருவான வரலாறை தெரிந்து கொள்வது அவசியம். வேறெந்தவொரு அறிவியலையும் போல் நாட்டார் வழக்காற்றியலும் ஐரோப்பிய நாடுகளிலேயே முதலில் தோன்றியது. வழக்காறுகள் பற்றிய பிரக்ஞையும், அவற்றின் பயன்பாடும், தேவையும் பல்வேறு நாடுகளில் வெகுகாலத்திற்கு முன்பே இருந்து வருகிறது என்றாலும், வழக்காறுகளைப் பற்றிய அறிவியல் பார்வை மேற்கத்திய நாடுகளிலேயே முதலில் தோன்றியது.
நாட்டார் வழக்காற்றியல் என்ற புலத்தின் தோற்றம் 'கிரிம் சகோதரர்கள்’ என்றழைக்கப் படும் ஜேக்கப் கிரிம் மற்றும் வில்ஹெம் —( தை : 2007
Page 23
கிரிம்மிலிருந்து துவங்குகிறது. பத்தொன்பதாம் நுாற்றாண் டு ஜெர்மனியில் வாழ்ந்த இச்சகோதரர்கள ஜெர்மானிய மக்களிடையே வழங்கி வந்த பழமரபுக்கதைகள், நாட்டார் கதைகள் மற்றும் பிற வழக்காறுகளை தொகுப்பத்தில் முதன் முறையாய் பரந்துபட்ட ஆர்வத்தை ஏற்படுத்தினர். 1812 மற்றும் 1815இல் g6Jffa56T G6l6ńsul “Kinder-Und Hansmarchen” என்ற கதைகளின் தொகுப்பும், 1816 மற்றும் 1818 96) 06.j6sful German legends' 616örms பழமரபுக் கதைகளின் தொகுப்பும் முக்கியமா னவை. இதையொட்டி இச் சகோதரர்கள் ஜெர்மனிய தேசமெங்கும் வழக்காறுகளை சேகரிக்கும் ஆர்வத்தைத் தோற்றுவித்தனர். தங்களது தொகுப்புப் பணியில் மற்றவர்களும் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டனர். அவ்வறிக்கை வழக்காறுகள் பற்றிய இச்சகோதரர்களின் நோக்கத்தினை வெளிப்படுத்துகிறது.
“கரிராமப் புறங்களில் வசிக்கக் கூடிய ஜெர்மானிய பொதுஜனங்களிடமிருந்து பாடல்களையும், கதைகளையும் சேகரிப் பதன் மூலம் இவ்வழக்காறுகளை நாம் காப்பாற்ற முடியும் என்று பேசுகின்ற இந்த அறிக்கை தொடர்ந்து, “இந்த வழக்காறு களைத் துல்லியமாக ஆராயாமல், நமது கவிதைகளையோ அல்லது வரலாற்றையோ அல்லது மொழியையோ முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. கவிதையின், வரலாற்றின், மொழியின் மரபும், மூலமும் இத்தகைய வழக்காறுகளிலேயே பொதிந்தி ருக்கிறது” என்பதாகச் செல்கிறது.
நாட்டார் வழக்காறுகள்’ என்ற சொல்லுக்கு இணையான "folklore' என்ற ஆங்கில வார்த்தை 1846லேயே பயன்பாட்டிற்கு வந்தது. அது நாள் 660).juis) 6}lpdisablT01356ir 'Popular antiquities' 6T6ð (8BIT, Popular literature 66 8BIT 51T6ố அழைக்கப்பட்டன. இவற்றிற்குப் பதிலாக Folkiore' என்ற பதத்தை வில்லியம் தாம்ஸ் என்பவர் 1846ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதியிட்டு "Athenaeu என்ற இதழுக்கு எழுதிய
( ஒலை 40 D
○
கடிதத்தில் முதன் முறையாகப் பயன்படுத்தினார். Popular antiquities SÐ6d6dg5] Popular literature என்ற பதங்கள் வழக்காறுகளின் தன்மையை வெளிப்படுத்தவில்லை. வழக்காறுகள மக்களின் படைப்புக்களாகக் காணப்படுகின்றன என்ற தொனியை வெளிப்படுத்தும் folklore என்ற சொல்லே சரியானதாக இருக்க முடியுமென்ற வில்லியம் தாம்ஸின் கருத்து பொதுவாக எல்லோ ராலும் ஏற்றக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
இதே காலகட்டத்தில், வில்ஹெம் மான்ஹர்ட் (1831-1880) என்பவர் வழக் காறுகளைச் சேகரிக்கும் முயற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். வழக்காறுகளை சேகரிப்பதும், ஆவணப்படுத்துவதும் அறிவியல் பூர்வமாய் செய்யப்படவேண்டும் என்ற முயற்சியில் மான்ஹர்ட் முதன்முறையாக ஒரு மாதிரி வினாப்படிவத்தை உருவாக்கினார். இப்படிவத்தில் முப்பத்து நான்கு கேள்விகள் இருந்தன. இந்தக் கேள்விகள் வழக்காறு பற்றிய தகவல்களையும், சூழலையும், அதன் பொருத்தப்பாடுகளையும் வெளிக்கொணர்வதாக அமைந்திருந்தன. இதன் மூலம் வழக்காறுகள் என்பவை இலக்கியப் பனுவல்களைப் போலின்றி, பண்பாபட்டினுள் நேரடியாய் செயல்படக்கூடியவை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. எனவே வழக்காறுகளைச் சேகரித்தல் என்பது வழக் காறுகளின் வெளிப்பாட்டு வடிவங்களைச் சேகரிப்பது மட்டுமல்ல, வழக்காறின் பண்பாட்டு பின்னணியும் சேகரிக்கப்படவேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.
நாட்டார் வழக்காறுகள் மீதான கவனமும். அக்கறையும் வெகுகாலம் வரையில் அவற்றை சேகரிக்கும் அளவிலேயே அமைந்திருந்தன. இதனால் மரபைப் பேணுவதும், பழமையைக் காப்பாற்றவதும், பண்பாட்டை ஒழுங்குபடுத்து வதுமே நாட்டார் வழக்காற்று ஆய்வுகளாக இருந்தன.
இவைதவிர, எழுத்து இலக்கியங்களை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு வழக்காறுகள் பயன்படும் என்ற எண்ணமும்
-C தை 2007 )
Page 24
மேலோங்கி இருந்தது. வழக்காறுகளை மக்களோடும், பண்பாட்டோடும் தொடர்புபடுத்தி ஆராயும் போக்கு ஆரம்ப காலங்களில் இருக்கவில்லை.
வழக்காறுகளை அறிவியல் நோக்கில் அணுகும் முயற்சி முதன் முறையாகப் பின்லாந்து நாட்டில் நடைபெற்றது. ஜூலியஸ் க்ரேலன் (1835-1888), கார்லே க்ரோன் (1863-1933) என்ற இருவரின் பங்கு இதில் முக்கியமானது. வழக்காறுகளை கோட்பாட்டு ரீதியாய் அணுகும் முறையை இவர்களே துவங்கி வைத்தனர். 'காலேவாலா’ என்ற பின்லாந்தின் தேசியக் காப்பியத்தை வழக் காறுகளிலிருந்து கட்டமைக் கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். துண்டு துண்டாய் சேகரிக்கப்பட்ட கதைப்பாடலொன்றின் பல்வேறு வடிவங்களிலிருந்து ஒரு முழுமையான கதைப்பாடலை உருவாக்கும் இவர்களது முறை ‘வரலாற்று நிலவியல் முறை’ என்று அழைக்கப்பட்டது. காலே வாலா என்ற காப்பியத்தை அவர்கள் இம்முறையிலேயே கட்டமைக்கவும் செய்தனர்.
இவ்வாறு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தன்னிச்சையாய் உருவான இத்தகைய முயற்சிகள் நாளடைவில் சுயமான சமூக அறிவியிலாக உருவாகத் துவங்கியது. இந்த சூழலில் நாட்டார் வழக்காறுகள் என்றால் என்ன என்று வரையறை செய்வதில் பல்வேறு கருத்து முரணி பாடுகள் எழுந்தன. ஒவ்வொரு தேசத்தவரும் தங்களது சூழல் சார்ந்தோ, கொள்கைகள் சார்ந்தோ வெவ்வேறு விதமான விளக்கங்களை முன் வைத்தனர். இதில் குறிப்பாக "folk என்ற சொல்லுக்கு அளிக்கப் பட்ட விளக்கங்கள் அதிக முரண்களைக் கொண்டிருந்தன. folk என்றால் கிராமத்தவர் அல்லது கல்வியறிவற்றவர் அல்லது வேளாண் தொழில் புரிபவர் அல்லது சேரி வாழ் மக்கள் அல்லது தொழிலாள வர்த்தகத்தினர் அல்லது பழமை விரும்பிகள் போன்ற விளக்கங்கள் வெவ்வேறு கால கட்டங்களில் சொல்லப்பட்டன. இத்தகைய விளக்கங்க ைஅனைத்தும் ஏதாவதொரு கொள்கை அல்லது கருத்துருவச்
( ஒலை 40 )
-C22) சார்புடனேயே அமைந்துள்ளன என்பது வெளிப்படை.
இதற்கு மாறாக, அரசியலற்ற, சார்புகளற்ற, திறந்த மனதுடன் கூடிய வரையறை தேவை என்ற அறிவிப்புடன் ஆலன் டண்டிஸ் என்ற அமெரிக்க நாட்டார் வழக்காற்றியலர் வேறு விதமாக வரையறை செய்ய முன் வந்தார். அவரது வரையறையின் படி "folk என்ற பதம் ஏதாவதொரு ஒற்றுமைக் கூறினைக் கொண்ட இரண்டு பேருக்கு மேற்பட்ட எவரும்' என்பதாக வரையறுக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டார்’ என்ற பதத்தோடு இணைந்திருந்த அரசியல் சார்புகள் அழிக்கப்பட்டு. எல்லோருக்கும் பொதுவான வரையறை உருவாக்கப்பட்டதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தமிழில் நாட்டார் வழக்காற்றியல்: தமிழகத்தில் நாட்டார் வழக்காறுகள் மீதான ஆர்வம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கியதாய் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆர்வம் வழக்காறு களைச் சேகரித்து வெளியிடும் அளவிலேயே வெகுகாலம் வரையில் இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக நாட்டார் பாடல்கள் மட்டுமே எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது. 1871ம் வருடம் சார்லஸ் ஈ கோவர் மொழி Guuiggi 'The folksongs of Southern India' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இதுவே முதலில் வெளிவந்த தொகுப்பு நூல். இதனைத் தொடர்ந்து வேறு U6) ஆங்கிலேயர்களும் இத்தகைய தொகுக்கும் பணியைச் செய்துள்ளனர். நாட்டார் கதைகளைப் பொறுத்த வரையில் பண்டித நடேச சாஸ்திரி தொகுத்து வெளியிட்டவைகளே முதல் தொகுப்புகளாகும்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் நாட்டார் வழக்காறுகள் குறித்த அக்கறை, அன்றைய இந்திய விடுதலை இயக்கம் சார்ந்து அமைந்திருந்தது. நாட்டார் பாடல்கள், நாடகங்கள் மூலமாக விடுதலை உணர்வை ஊட்டும் முயற்சிகள் இக்காலத்தில் பல்வேறு
- Ο συνε : 2007 D
Page 25
தளங்களில் நடைபெற்றன. காலனிய ஆட்சியை எதிர்த்து மக்களே கட்டிய வழக்காறுகளும், வழக் காறுகளின் வடிவத்தல் தேசிய உணர்வுமிக்க கலைஞர்கள் கட்டிய பாடல்களும் பிரபலமாய் வழங்கி வந்தன.
சுதந்திரத்திற்குப் பிந்தைய வருடங்களில் மறுபடியும் வழக்காறுககளைச் சேகரித்து வெளியிடும் பணி துவங்கியது. இக்கால கட்டத்தில் தமிழறிஞர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் வழக்காறுகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களது கவனமும் அதிகமாக நாட்டார் பாடல்களைச் சேகரிப் பதிலேயே குவிந்திருந்தது. பாடல்களைத் தொகுப்புகளாக வெளியிடும் பணி நடைபெற்ற அதே சூழலில் கலைமகள், மஞ்சரி, தாமரை போன்ற இதழ்களில் அவ்வப்போது பல்வேறு நாட்டார் வழக்காறுகள் வெளியிடப்பட்டு வந்தன. இதுபோன்ற முயற்சிகள் அனைத்தும் வழக்காறு களை வாய்மொழி இலக்கியங்களாகப் பாவித்து மேற்கொள்ளப்பட்டவை. ‘இலக்கியங்கள்’ என்று அணுகிய முறை, அவ் வழக் காறுகளில் காணப்படும் கற்பனைத் திறன், சொல்லாட்சி, இசை நயம், உருவக மொழி போன்ற மொழி வழியான அழகியல் தன் மைகளை அடையாளப்படுத்தும் பணியைச் செய்தன. இதன் காரணமாக, வழக்காறுகள் ரசிக்கத் தகுந்த பொருட்களாக பாவிக்கப் பட்டனவே தவிர, பண்பாட்டின் கூறுகளாக அணுகப்பட வில்லை.
நாட்டார் வழக்காறுகளைப் பற்றிய அக்கறை இவ்வாறு ரசனைத் தளத்திலேயே தேங்கி நின்றது. வழக் காறுகள் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்புடையவை என்ற சிந்தனை ஆரம்ப காலங்களில் பரவலாக இல்லை. பண்பாட்டு நோக்கில் வழக்காறுகளை ஆராயும் முறை தமிழகத்தில் மிகத் தாமதமாகவே நடைமுறைக்கு வந்தது.
1960 களிலேயே நாட்டார் வழக்காறுகளை ஆய்வுப் பொருளாய் மேற்கொண்டு, ஆய்வுகள் செய்யும் போக்கு தமிழகப் பல்கலைக்கழகங்
( ஒலை 40 )
-Ꮸ3←
களில் தோன்றியது. குறிப்பாக சென்னைப் பல கலைக் கழகம் , அணி ணாமலைப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம் போன்றவைகளில் வழக்காறுகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டார் பாடல்கள், நடனங்கள், இசை மற்றும் பொதுவாக வழக்காறுகள் என்ற தலைப்புகளில் ஆய்வுகள் செய்யப்பட்டன. இதே காலகட்டத்தில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனமும், பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றமும் நாட்டார் வழக்காறுகள் குறித்த ஆய்வுகளை உற்சாகப்படுத்தும் வகையில் ஏராளமான கட்டுரைகளை வெளிக்கொண்டுவந்தன.
அறுபதுகளின் பல்கலைக்கழகங்களிலும், ஆய்வு மன்றங்களிலும் மேற்கொள்ளப்பட்ட நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் பெரும்பாலும் வழக்காறுகளை இலக்கிய வடிவங்களாகப் பாவித்து, இலக்கியக் கோட்பாடுகள் மற்றும் கொள் கையின் துணையுடன் ஆராயும் வகையிலேயே அமைந்திருந்தன. வழக்காறுகளில வெளிப்படும் அழகியலைக் கொண்டாடும் தன்மையையே இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தின.
இத்தகைய சூழலில், பல்கலைக்கழகங்களுக்கு வெளியிருந்து நா. வானமாமலையின் முயற்சியால் தோன்றிய நாட்டார் வழக்காற்றியல் போக்கு. வழக்காறுகளை முதன் முறையாகப் பண்பாட்டுடன் இணைத்து நோக்கும் பார்வையை முன் வைத்தது. இதனை முன்னிட்டு 1967ல் நெல்லை ஆய்வுக் குழு என்ற அமைப்பை வானமாமலை தோற்றுவித்தார். தொடர்ச்சியாக 1969இல் அவர் துவங்கிய ஆராய்ச்சி' என்ற காலாண்டிதழ், உண்மையாகவே வழக்காறுகளை ஆய்வு செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தியது.
நா.வானமாமலை தோற்றுவித்த வழக்காறுகளை ஆராயும் முறை, தமிழகத்தில் அறிஞர்கள். ஆய்வாளர்கள் மத்தியில் ஏராளமான தாக்கங்களை ஏற்படுத்தியது. மார்க்சிய சித் தாந்தத்தில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டுவந்த நா.வானமாமலையின் மூலம் வழக்காறுகளை மார்க்சிய பார்வையில் ஆராயும்
-C தை : 2007 D
Page 26
երեցոր սա ավելին - Եվ եմ նոմ: -
போக்கு வலுப்பட்டது. இதன் மூலம்
"என்பவை இலக்கியங்கள் மட்டுமல்ல, சமுகத்தோடும். பண்பாட்டோடும், ಙ್ಞ್ಞ. எனவே வழக்காறுகளை ராய்வதன் மூலம், சமுகம் இயங்கும் ဖွံဖြိုးနှီးမျိုးမိုးနှစ့် ဖြိုးပွါး கருத்து பலப்பட்டது.இதனையொட்டி வழக்காறுகளைப் பற்றிய ஆய்வுகள். சமூகவியல், மானுடவியல், மொழியில்,வரலாறு போன்ற அறிவுத் துறைகளின் துணையுடன் உருவாக்கப்பட வேண்டுமென்ற சிந்தனையும். முன்வைக்கப்பட்டது.அரு 고 நா.வானம் மலையின் ஆய்வுகளில் tuoturi.(6ʻ என்ற கருத்தாக்கம் முதன்மையாக அமைந்த தற்குக் காரணங்கள் உள்ளன. துவக்க காலங்களில், வழக்காறுகளின் பனுவல்களை ஆராயும் போக்கையே நா.வானமாமலையும், மேற்கொண்டிருந்தார். இதையொட்டியே அவரது கட்டுர்ைகளும் அமைந்திருந்தன. ஆனால் நாளடைவில், வழக்காற்றுப் பனுவல்களைப் புரிந்து கொள்வதற்கு நாட்டார் கலைஞர்களையும் புரிந்து கொள்ள வேண்டுமென்ற யோசனை தோன்றியதும், நா.வானமாமலை சமூகத்திற்கும். வழக்காறுகளுக்குமான தொடர்புகளைக் கவனிக்கத் துவங்கினார். இதன் மூலம் வழக்காறு:சமூகம் என்ற பிணைப்பு ஆய்வுகளில
முன்வைக்கப்பட்டது.
நா.வானமாமலையின் ஆய்வுகளும், அவர் நடத்திய ஆராய்ச்சி என்ற இதழும் ஏராளமான நாட்டார்'வழக்காற்றியல் ஆய்வாளர்களை உருவாக்கியது. கல்லூரிகளிலும், பல்கலைக் #Ïi பேராசிரியர்கள் வழக்கறுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளத துவங்கினர். டி.
。リ БTELTTT வழக்காற்றியல் பற்றிய அககறை தமிழகத்தில் இவ்வாறு பரவலாக வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டிருக்கின்றன. அக்கறை இருந்தது; அதனால் சேகரிப்புகள் நடைபெற்றன; அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆய்வுகள்
ஓலை åC) )
LITAT "raft. Eritra ー@ செய்யப்பட்டன:தமிழ்த்துறைகளில் வழக்கிாறு பற்றிய மோகம் ஏற்படத்துவங்கின் இருந்தாலும் நாட்டார் வழக் காற்றியல் தனியொரு கல்விப்புலமாக மாறுவதற்கு 1987 வரையில் காத்திருக்க வேண்டியிருந்தது '
is stralia 1987ல் முதன்முறையாக பாளையங்கோட்டை யிலுள்ளதுய சவெரியார்கல்லூரியில் நாட்iர் வழக்காற்றியல் என்ற கல்விப்புலம்பிதுவங்கப் பெற்றது. நாப்மார் வழக்காற்றியலில் முதுகள்ல்ப் பட்டப்படிப்புடமேற்ககொள்ளும் வாய்ப்பை இத்துறை ஏற்படுத்தித்தந்ததுTஇவ்வாறு, நாட்பார் வழக்காற்றியல் தனித்த கல்விப் புலமாக மாறுவதற்கு அதிலும் குறிப்ப்ாக பாளையங்கோட்டிைக்கெல்லூரியொன்றில் உருவாகுவதற்கு நாவானமாமலை ஏற்படுத்திய விழிப்புணர்வு முக்கியக் காரண்ம். இதனோடு கல்விப்பணி ஆற்றிவரும்--இயேசு சபை நிறுவனங்களில் பண்பாடு பற்றிய புரிதலும், தேடலும் அக்காலகட்டத்தில் முக்கியக் காரணியாகவிளங்கியது. இதனாலேயே முதல் நாட்டார் வழக்காற்றியல் துறை இயேசு சபைக் கல்லூரியொன்றில் துவங்கப்பட்டது.1
இதன் தொடர்ச்சியாக தூய சவேரியார் கல்லூரியில் 1988ம் வருடம் நாட்டார் வழக்காற் līLIJ5) LI JG|| 50 LDL Juli) (Folklore Resources and Research Centre) 6Tim Bus 6Tupi தோற்றுவிக்கப்பட்டது. பாளையங்கோட்Lைண்ய மையப்படுத்தி நடைபெற்ற இவ்விருசெயல்பாடு களும்அேடுத்து வந்த ஆண்டுகளில், தமிழக அளவில் நாட்பார்வைழக்காறுகளைப் பற்றிய ஆய்வுமுறையியலைத்தீர்மானிக்கும் சக்திகளாகவிளங்கின் பிங்கி பிப
। ஆரம்ப காலங்களில் ரசனை அடிப்படையிலும் பின்பு மார்க்சிய கண்ணோட்டத்தோடும். அதனைத்தொடர்ந்து கோட்பாடுத்தள்த்திலும் நடைபெற்று வந்தவெழக்காறுகள் பற்றிய ஆய்வுகள் தொண்ணுாறுகளில் பண்பாட்டை மையப்படுத்திய ஆய்வுகளாக மாறின. இதனால், தமிழ்த் துறையின் ஓர் அங்கமெனக் கொண்டாடப்பட்டு வந்த வழக்காறுகள்,
ー(二 g, ' 2007
Page 27
լյիչեւ: பண்பாட்டைப் புரிந்து கொள்வதற்கான முக்கியக் காரணியென ஆறிவிக்கும் மாற்றம் நிகழ்ந்தது. இலக்கியப் பிரதிகளில் மூழ்கிக் கிடந்த தமிழியல் ஆய்வுகளிலிருந்து தன்னை அறுத்துக் கொள்ளும் முயற்சியில் நாட்டார் வழக்கற்றியல் ஈடுபட்டது.இதனைத் தொடர்ந்து மானிடவியலர், :Ñ எனபு la வறுதுை னரும ଚିରା *ā
உன்னிப்பாகக் கவ க்கத்து °′′′॥॥॥ð Այդ fբ էլ-Էնվեր- մոսկոյե Լիլլի-բերյալ եմբրե நாட்டாரும் சாதியும் ஒரு ஆடி தமிழகத்தில் நாட்டார் வழக்காற்றியலும், தலித்தியமும் ஒரே காலகட்டத்தில் பரவலாகப் பேசப்பட்டன. தலித்தியம் பொதுத்தளத்திலும், நாட்டார் வழக்காற்றியல் அறிவுத்தளத்திலும் விவாதிக்கப்பட்டன. இவ்விரண்டு போக்குகளும் சில ஒருமித்த மனப்பாங்குகளைத் தோற்றுவித்தன. தலித்தியம், சாதிய ரீதியாய் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை நோக்கி முன்வைக: கப்பட்டகோட்பாடு. இக்கோட்பாட்டின் அறிமுகம் அது நாள் வரையிலான தமிழகச் சூழலை மறு விசாரணை செய்யும் பணியை வலிமையுடன் செய்யத் துவங்கியது. இதன் மூலம் சாதிய மனப்பான்மையானது எந்தெந்த மாற்று வேடங்களிலெல்லாம் தமிழ்ப் பண்பாட்டில் செயல்பட்டு வருகிறது என்ற உண்மை பட்டவர்த் தனமாயிற்று. சாதியத்திற்கு எதிரான வாதங்கள் என்று நம்பப்பட்ட பல செய்திகள் உள்ளுர சாதிய ஆதரவுக் குரலை ஒலிக்கின்றன என்பது நிறுவப் பட்டது. இதனை முன்னிட்டு "சாதிபத்திலிருந்து விடுபடுதல்' என்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட மாதிரி-குலைவுற்றது. தலித்தியூம் முன்வைத்த மறு வாசிப்புகள் போராட்ட முறையாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. என்றாலும், இது குறித்த தலித் அல்லாதவர் களின் மனநிலை சாதிய நம்பிக்கைகளை மேலும் மேலும் வலுப்படுத்தும் திசையை நோக்கி நகரத்துவங்கியது:ய கருங்
Tl எந்தவொரு புனுவலென்றாலும், அது தலித்தாலோ-தலித்-அல்லாதவராலோ எழுதப்பட்டிருந்தாலும் கூட அதனுள் சாதியக் குரல் இருப்பதாய்க் கண்டுபிடிக்க முடியுமென்ற
( 56 unosu 140
ーエ --(25) சூழல், சாதியம்' என்பது யாராலும் தவிர்க்க முடியாத ஒன்று என்ற முடிவினை பலருக்கும் தந்தது;அது நாள் வரையில்'மனிதர்களால் உருவாக்கப்பட்டது; ஆஎனவே மாறுதலுக்கு உட்பட்டது' என்று சொல்லப்பட்ட நம்பிக்கை தகர்ந்து, சாதி இயற்கையானது மறுக்க முடியாதது மாற்ற முடியாதது: அதிலிருந்து விடுபடுதல் என்பதுதாத்தியமில்லை என்பவை போன்ற புதிய நம்பிக்கைகளை தமிழகம் பெறத் துவங்கியது. இதனால், ஒவ்வொரு நபரும் தனது சாதிய அடையாளத்தை அங்கீகரித்தலும், அதனைப் பற்றி பேசுவதும் எளிதான செயலாக மாறியது: சொல்லப்போனால் தனது சாதி அடையாளத்தை அது நாள் வரையில் பேசத் தயங்கி, கூச்சபட்டுவந்த பலரும் (தலித்துகளும் தலித் அல்லாதவர்களும்). இனி தைரியமாய் அது இபற்றி பேசுவதற்கான சொல்லாடலை தலித்தியம் உருவாக்கித்தந்ததுருபூ
| L ஏறக்குறைய இதே போன்றதொரு சாதிப் பிரஸ்தாபத்திற்கான சொல்லாடலை நாட்டார் வழுக்காந்நரியல் அறிவுத் துறைகளில் உருவாக்கித் தந்தது. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளை மேற்கொள்ளு முனைபவர்கள் தத்தமது சாதிய மக்களையே முதன்மை நாட்டார்களாக மேற்கொள்ளத்துவங்கினர். இதற்கென சில காரணங்களும் சொல்லப்பட்டன. 1. தனது சாதியின் வழக்காறுகளை ஆய்வு செய்வதன் மூலம் தகவல்களை சேகரிக்க முடிகிறது. களப்பணி எளிதாகிறது. 2. பண்பாடு என்பது பன்முகத் தன்மை
ܘ ܨ ܐ
உடையது. ஆனால் இது நாள் வரையிலான LISol ITG, 5013 ്ഥயையே வெளிப்படுத் துகிறது.இச்சூழலில், எனது சாதியின் பண்பாடு "தமிழ்ப் பண்பாட்டில் இடம் பெறவில்ல்ை மாறிவரும் சூழலில் பண்பாட்டை பன்முகத்தன்ம்ை கொண்டதாய் யோசிக்கும் சூழலில் எனது சந்தியின் பண்பாட்டை நான் ஆய்வு செய்யாமல் வேறு யார், செய்வார்கள்? tէ Արն է: Ա. -- : 3. ஒரு சாதியின் வழக்கறுகளை ஆச்சாதியின் உறுப்பினரே உளப்பூர்வமாய் உணர முடியும். உள்ளிருந்து அணுகுவதன் மூலம்ே"ஒரு பண்பாட்டை முழுமையாய் புரிந்து கொள்ள முடியும்
- րոնք - :ՈՐ17
Page 28
இது போல் இன்னும் தொடர்ந்து பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், எல்லாவற்றின் அடிப்படையும் இவை தாம். இந்த காரணங்களைத் தொடர்ந்து பல்வேறு இளம் ஆய்வாளர்களும் நாட்டார் வழக்காற்றியல் என்ற பெயரில் தத்தமது சாதி அடையாளங்களை வாய்மொழிப் பண்பாடுகளின் துணையுடன் கட்டமைக்கத் துவங்கினர். சாதியப் பெயர்களை உபயோகித்தல், சாதிகுறித்த பெருமைகளை சேகரித்தல், காழ்ப்பை வெளிப்படுத்துதல் என அனைத்தையும் கூச்சமின்றி பேசக்கூடிய எழுதக்கூடிய சொல்லா டலை நாட்டார் வழக்காற்றியல் உருவாக்கித் தந்தது.
அடுத்த நிலையில், தலித்தியம் செய்தது போன்றே நாட்டார் வழக்காற்றியலும் சாதி பற்றிய புதிய கற்பனைகளை உருவாக்கியது. பண்பாடு முக்கியமானது; அதுவும் பன்முகத் தன்மை கொண்ட பண்பாடு முக்கியமானது என்ற கொள்கை, பலரையும் சாதிகளே இந்த பன்முகத்தன்மைகள் என்ற முடிவிற்குக் கொண்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு பண்பாடு உள்ளதென கோட்பாடுகள் முன் வைக்கப்பட்டன. எல்லா சாதிகளின் பண்பாடுகளும் சேர்ந்தே தமிழ்ப் பண்பாடு உருவாகிறனெ பலரும் நம்பத் தலைப்பட்டனர். இதனால், ஒரு கட்டத்தில் நாட்டார்’ என்பது சாதி மக்கள்’ என்ற அர்த்தத்தில் எழுதப்படாத வரையறையொன்று செயல்படத்துவங்கியது.
இனி வரும் நாட்களில்:
bT LIt if வழக்காற்றியல் என்ற அறிவுப்புலம். இன்றைக் கு தமிழகத் தரில் பரவலாக அறியப்பட்ட துறையாகக் காட்சி தருகின்றது பல்வேறு துறையைச் சார்ந்த ஆய்வாளர்களும் நாட்டார் வழக்காறுகளை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யும் போக்கு அதிகரித்திருக்கிறது. அவ்வாறு செய்யப்பட்ட ஆய்வுகள் புத்தகங்களாகவும் வெளியிடப்படு கின்றன. இதன் மூலம், பேச்சு வழக்கின் மீதும் மக்கள் கலைகளின் மீதும் பொதுவான விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது தெரிய வருகிறது
ஒலை 40 )
G26>
ஆனால், பிற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் நாட்டார் வழக்காறுகள் பற்றிய அக்கறை தமிழகத்தில் குறைவே.
முக்கியமாக, நாட்டார் வழக்காறுகள் பற்றிய
புரிதல்கள் அறிவு சார்ந்த நிலையிலேயே
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதாவது, கல்லூரிகளிலும். பல்கலைக்கழகங்களிலும், ஆயப் வு நிறுவனங்களிலுமே நாட்டார் வழக்காறுகள் கவனம் பெறுகின்றன. இந்தத் தளங்களிலும் வழக்காறுகளை ஆய்வுப் பொருளாய் பாவிக்கும் தன்மையே மேலோங்கிக் காணப்படுகின்றது. ஆனால், வழக்காறுகள் ஒரு சமூகத்தின் முதன்மையான கலை வெளிப்பாடு. இன்னும் சொல்வதானால், வழக்காறுகளே சமூகத்தின் இயங்குதலை வெளிக்காட்டும் ഖഖb.
காலத்திற்குக் காலம் மாற்றங்களுக்கு உட்பட்டு, ஒவ்வொரு முறையும் புதிய புதிய வடிவங்களில் வெளி வருபவையே வழக்காறுகள். எனவே, வழக்காறுகள் பழமையின் வடிவங்களோ, எச்சங்களோ அல்ல; அவை, இன்றைய தினத்தின் படைப்பாக்கம், வாழ்க்கை முறை கல்வி நிலையங்களின் கவனத்திற்கு வருவதற்கு முன்பாக வழக்காறுகள் பற்றிய அக்கறை சமூகப் பொதுத் தளத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். அதாவது தமிழக மக்கள் அளவிலேயே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். முயற்சிகள் நடைபெற்று, வழக்காறு களை சேகரிப்பதும், செழுமைப்படுத்துவதும், விமர்சிப்பதும், உருவாக்குவதும் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால துரதிஷ்டவசமாக, எழுத்து இலக்கியங்களை, பண்பாட்டை கொண்டாடும் குணம் மட்டுமே நம்மிடம் இயக்கமாக மலர்ந்தது. இதனால், மக்கள் கலையான வழக்காறுகளை கேலி பேசும், ஒதுக்கித் தள்ளும், புறக்கணிக்கும் அறிவாளிகளே நம்மிடம் உருவாகியிருக்கிறார்கள்.
வழக்காறுகள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் இயக்கமாக மாறவேண்டும் என்று சொல்லு கையில், வழக்காறுகளைப் பாதுகாப்பதற்கென
-C * தை : 2007
Page 29
இயக்கம் வேண்டுமென்பது அர்த்தமில்லை. நாட்டார் வழக்காறுகளில் ஆர்வம் கொள்ளும் பலர் வழக் காறுகளைப் பாதுகாக் கும் முயற்சியை மேற்கொள்கிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், வழக்காறுகள் தொடர்பான மக்கள் இயக்கம் மக்கள் கலையை பாதுகாப்ப தற்காக அல்ல, மாறாக வழக்காறுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காகவே செயல்பட வேண்டும். ஏனெனில், வழக்காறுகள் நிரந்தரமானவையல்ல; மேலும் போற்றிப் பாதுகாக்கும் அளவிற்கு புனிதமானவையும் அல்ல. ஆனால் அதே சமயம் ஒரு கட்டத்தி லிருந்து மறு கட்டத்திற்கு சமூகம் மாறுகையில், வழக்காறுகளைப் புறக்கணித்தல் என்பது அறியாமையையே கொண்டு வந்து சேர்க்கும்.
உதாரணமாக எழுத்தும் படைப்புலகமும் அறிமுகமான சூழலில், தமிழகப் படைப்பாளிகள் பெரும்பாலோர் மேற்கத்திய படைப்பு மனதை பிரதி செய்ததன் கோளாறுகளை நாம் இன்று பூரணமாகவே அனுபவிக்கிறோம். மரபாக, நமது பண்பாட்டில் செயல்பட்டு வந்த, பேச்சு வழக்கில மைந்த படைப்புலகை, நுட்பங்களை நாம் இழந்து நிற்கிறோம் என்பதை இன்று நாம் உணர முடிகிறது. இழந்துபோன அல்லது மறந்து போன படைப்புலகை திரும்ப ஞாபகப்படுத்தும் முயற்சி களில் தனிநபர்களாய் பலரும் ஈடுபட்டிருப்பதும் இதன் காரணமாகவே.
நாட்டார் வழக்காறுகள் பற்றிய பிரக்ஞை பொதுத் தளத்தில் ஏற்படுகையில் இது போன்ற தவறுகளைக் குறைக்க முடியலாம். இதற்கான முயற்சியாகவே வழக்காறுகள் குறித்த மக்கள் இயக்கம் தேவை என்று சொல்லுகிறோம்.
இரண்டாவதாக, சாதிய அடையாளங்களைக் கட்டமைக்கும் முயற்சியே நாட்டார் வழக்காற் றியல் என்ற போக்கு கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும். பன்முகத் தன்மையிலான பண்பாடு என்பது பல சாதிகளைக் கொண்ட பண்பாடு என்ற எளிமைப்படுத்துதலிலிருந்து வேறு வகையாக விளக்கப்படவேண்டும். நாட்டார் என்பதை அமெரிக்க வழக்காற்றியலர் போல்
( ஒலை 40 )
C27)
நெகிழ்வான தொனியரில் வரையறை செய்வதாலேயே, 'நாட்டார்’ என்பது சாதியைக் குறிக்கிறது என்ற வாதம் எற்படுகிறது. இச்சூழலில் நாட்டார்’ என்ற சொல்லை வெளிப் படையாய் தெரியும் குழு என்று வரையறுக்காது, சில பொதுப்பண்புகளைக் கொண்ட நபர்கள் என்று வரையறுக்க முயற்சிக்கலாம். இந்தப் பொதுப் பண்புகள் எவை என்ற கேள்விக்குத் தீவிரமான அலசலுக்குப் பின்பே விடை காணப்பட முடியும்.
பார்வை நூல்கள்: Dundes, Alan (ed.), l999. International Folkloristics. Classic contributions by the Founders of Folklore, Rowman & Littlefield Publishers, Oxford. இராமநாதன். ஆறு (பதிப்பு) 1991, நாட்டுப் புறவியல் ஆய்வுமுறைகள், தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
Mangai, Copper & Brass cast, 1989-90 (Collection NGMA. Neuw Delhi)
- Ο தை : 2007
Page 30
முட்களில்லாத கி
ஒரு புறம் வேடுவம் மறுபுறம் விெ
அரச விழாக்களின் போத புறாப் ஒரு புண்ணிய நிகழ்வாகப் போச் பண்ணுவதெல்லாம் பண்ணி கே நிரப்புவத போல.
வெண்புறா சமாதானத்தைக் குறிக் என்றால்
புறாப் பறக்க விடுதல் சமாதானழு எல்லாம் குறியீடுகளாய்ப் போச்சு புறாக்களை வேட்டையாடுதல்கள்
ஒரு புறம் சமாதானம் கலாசாரம மறுபுறம் வெண்புறா இறைச்சிப் ெ வேடுவம் அரசாளும், மறுபுறம் அ சமாதான விழாவும் நடத்தம். வாழ்க சமாதானம்.
(2) சமாதான நிகழ்ச்சித் திட்டத் தய வருகிறார், வருகிறார் ஊடகங்கள் படம் பிடிக்கக் கா6 சமாதான நிகழ்ச்சித் தயாரிப்பாள போர்க் கருவி, தளபாடங்கள், ட பத்திரங்களோடும் வருகிறார். இப்போது சமாதான நிகழ்ச்சி நிர இதயங்களின் இனிய நகர்வுக்கு பாருங்கள் புனைவுப் பொருளாயி புனைவுப் பொருளுக்கான நிதியுத ஏற்கனவே நிறுவப்பட்டாயிற்று.
ஏனிந்தச் சமாதானப் புனைவாள சமாதானப் பூங்கொத்தோடு வந்த ஏணிப்படி எம்மிடம் மட்டும் வரு
ஒலை 40 )
பழி
பண்புறா
பறக்க விடுதல்
r ாயில் உண்டியல்
கிறத
மயற்சியைக் குறிக்கும்.
ர் நாளாந்த நிகழ்வாச்சு.
55: பாருளாக அதவே
ாரிப்பாளர் வருகிறார்
ல் பதிக்கிறார். ர் ஒலிவ் இலையோடு வருகிறார். யிற்சித் திட்டக் கொந்திராத்தப்
ல் அவர்கையில். ரிய சமாதானம் ற்று. வி நிறுவனங்கள்
இங்கு வருகை தருகிறார்?
வீட்டுக் கதவைத் தட்டுகிறார்? கிறார்?
6)
C28)
- 605
: 2007
)
Page 31
சமாதானத்தின் எதிரி ஒடுக்குபவனா? ஒடு ஒடுக்குபவனின் நிலபுலம் விட்டு, ஒடுக்கு சித்தாந்தங்களை புதித புதிதாய் கண்டு பேரினவாதக் குழுமம் விட்டு, ஏனெம்மிட
அதன் பொருள் பயங்கரவாதத்திற்கு இன நாமென்ற பரிதாபமா அல்லது பாக்கு நீரி தாண்டிலிட்டு மீன் பிடிக்கும் காரியமா? உத்திகளின் பரிசோதனைக் கூடமாய் ப
ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் இவனே புலன் விசாரணையின் பேரால் இரகசிய வதை முகாம்களின் சொந்தக்க மனித நிர்வாணம் புரிந்து குறி வைத்தத் இங்கு எந்தக்கைகளால் சமாதானப் புங் இதன் பொருள் சமாதானம் எம்மைவிட அநகடலமாயிருக்கிறது என்பததான்:
சமாதானம் என்பது மிகவும் தேவைதான்: ஆனால் அது ஒடுக்கப்படுபவர்க்கான உரிமைகளோடு வந்தாக வேண்டும்: அதை விடுத்த சண்டை பிடியாமலிருவெ ஒதுகிறானென்றால் சந்தேகம் தான் மே6ெ ஆனாலும் பாருங்கள், சாத்தான் சமாதா எல்லா மொழிகளிலும், எல்லா வேதங்க3 தனக்கு மட்டும் நீங்கலாக தனக்கெதற்கு உபதேசம்? ஊரே நீ சாத்வீக உணவையே உட்கெ இது ஊருக்கு உபதேசம்: இடும்பைகடர் என் வயிறே நீ ஊர்க் கோழியைத் தலையறுத்து உண்ப
தகுதியின் மேம் பட்டசனநாயகனுக்கு எ தர்மோபதேசம் ஊரையே அடித்து அவ6 உலையில் இடலாம் தனது நலனுக்குக அத போரின் பேராலும் நிகழலாம் உதவி நலன்களின் பேராலும் நிகழலாம் சமாதானத்தின் பேராலும் நிகழலாம் இவையெல்லாம் அவனது உத்தி முறை
( ஒலை 40 )
க்கப்படுபவனா?
முறைகளின்
பிடிக்கும்
ம் மட்டும் வருகிறார்.
ரையாகும் வெள்ளாடுகள்
ணையில்
அல்லது தனது புதிய ாவிக்கும் நோக்கமா?
யுத்தகாரகன்;
ாரன் ந தாக்கும் கொள்கைக்காரன் கொத்தக்கள் தருகிறான்? அவனுக்கு இங்கு மிகவும்
ன்று சாத்தான் சமாதான வேதம்
og[0 ன வேதம் ஒதுகிறான் ளையும் ஒதுகிறான்,
ாள்வாயாக
W፻፲ቧ[፲በ፲ó•
தறகு
Ið ந்தவாறு.
கள் அவ்வளவுதான்.
—( தை : 2007
Page 32
( ஒலை 40 D
அம்புறாத்தாளி அவன் கையில் ஆளம்பு, படையணிப் பயிற்சியும் அவ: அவனத நலன்களுக்கான படையணிய உள்ளூர் அரசுகளின் செலவில் அவன இவன் உள்நழைவு உரு மறைப்புச் ெ நிறுவனங்களுடாக நிகழும்: நிதிதருவோம்; நிகழ்ச்சித் திட்டங்களும் வில்லம்பு, சொல்லம்பு, இரண்டும் தருே வில்லம்பிற்கு விலையுண்டு சொல்லம்ட வில்லேருழவிற்கும் பயிற்சி உண்டு: சொல்லேருழவிற்கும் அவனத கருத்திய ஐ.நா.சபை வரை அரங்கேறம்: ஆண்டி சொல் அம்பலம் ஏறமா? ஆண்டிகள் நடுவில் அவன் சொல் ஏ ஆண்டி வில் தாக்கினால் பயங்கரவா, அரசு தாக்கினால் சமாதானத்திற்கான அதை அமுலாக்கம் செய்ய, ஏந்தித்திரி
(3) பும் பும் மாட்டுக்காரன் தெருவில் வார டும் டும் மேளங்கொட்டி தேரில் வாரா
மேளங் கொட்டுகிறான் அசுரன் ஆயுத தேரில் ஏறி வருபவன் யார்? தெளிவா முருகனா? சூரனா?
பாவம் முருகன் பழைய கோவணாண் ஆறு முகங்கள் அவையும் பழைய மு
தேரில் வருபவன் அசுரன்: பழம் பழுத்தின் புதத்தோற்றம் பத்மாசூரன் என்பத பழம்பெயர் பக்காகரன் புதுப்பெயர்: எல்லாச் சூரன்களும் தலை மாற்றுவத் என்றால் இக்காலத்துக்கேற்ற தலை : திக்குக் கொன்றாக பத்துத்தலை:
ர் தருவான்
ாய் வன் இயங்குவான். ய்து உதவி
நாம் தருவோம்: வாம்.
சும்மா.
ல் பயிற்சியுண்டு.
றும்:
தம் யுத்தம்.
ய இடைத்தரகும் விலையாகும்.
ாண்டி 50ώίρι
முனை கொண்டு கப் பார் யாரத?
கங்கள்.
ல் வல்லவர்கள் ன் தரிக்கமாட்டான்?
தை : 2007
Page 33
ஆனைத்தலை சிங்கத்தலை அவை பணி m அண்டபகிரண்டமெலாம் தாண்டிய கழு இரை கெளவுந்தலை புதித: மனித ஈரற்குலையெடுத்து மாலை சுற்றி கழுகுக் கழுத்திலோர் வட்டம்: எவ்வளவு தாரத்தம் எழும்பிப் பறக்கும் எவ்வளவு கீழ்மைக்கும் இறங்கி இரை இரை கெளவும் என்பதும் நாகரீகச்சொ பிணம் கெளவும் வேடுவம் என்பதே உ வேடுவத்திற்கு இந்த உலகமேயொரு ே வேட்டையாடு விளையாடு விருப்பம் ே விடுதலை கோரும் நாடுகளை விழுங்கி ஏப்பம் விடும் கழுகிற்கு இணை கூட்டு இனக்குழுமம் தான். இவற்றின் குறி இன்று ஆபிரிக்கம், ஆ
ஆபிரிக்கத்தை பட்டினியாலும், உட்கு அழிய விடு, பின்னாலவற்றின் வீழ் படி தொல்லியலாய்வுகளிற்கு மட்டும் உதவட்டும்.
- ஆசியம்தான் இன்று எதிர்நிலை எழுச்சி அறிவெழுச்சி, தொழில்நட்பம், மனிதத்தி உடன்நிற்க இந்துசமுத்திரத்தின் பாற்க ஒப்பிலாத் தலைமைபெற வாய்ப்புள்ள இதைப் பிளவுபடுத்தித் தாக்கப் பின்புல தென்புலப் பின்புல வாயிலாய் இந்தத் இதன் வாயில் காப்பாளனாகவொரு வ போர் நிலவும் சூழலுக்குள், புகுந்து கெ
இது நிகழுமெனின் - நிகழ்வதை யதார் ஒருபக்கம் ஆயுத தளபாட விநியோக மறுபக்கம் சமாதான முயற்சியின் மழுங் இந்த சமுத்திரத்தின் கண்காணிப்பு வலி இவன் கைக்கு மாறிவிடும். புட்டும் திறப்பும் இவன் கைக்கு ஆகி தென்புலத்த ஆசியத்தின் திறவு கோல் இவன் வசமாக பிறகென் கீழான பிரசைகள் நாம் ஆவோம். உலகையே தன் மயமாக்கலின் இன்ன்ெ
( ஒலை 40 )
ழையவை. ஐகுத்தலை
னால் போலக்
கெளவும். b: கந்தசொல் வட்டைக் காடு பாலப் பசியாறு. ஏப்பம் விடு: வல்லூறு, பருந்து என எல்லாமே கழுகு
អ៊ិub. •
ழமச் சண்டைகளாலும் டமம்
நிலம்.
நிறன் அனைத்தும் -
டல் வளம் செறிந்ததாய்
பிராந்தியம். வாயில் வேண்டும்.
தீவிலங்குகிறது
ாய்ப்பு,
ாள்வத.
த்தமாக்குவததான்
, படைப்பயிற்சி
கடிப்பு )யம் ஒன்றாய் இலங்கை
பிடத்
ன, பேராதிக்கவல்லரசின்
எாரு பெயர்தான்
ཡ──────────────་མཁས་མང་ཁ───────────────-0 தை : 2007
)
Page 34
( ஒலை 40 )
உலகமயமாக்கல்: கலகத்தரக்கன்
அவன் நமக்குத் தருகின்ற காற்றை முக்குத்தவாரங்கள் மட்டும்தான் ந இததான் நீண்ட மூக்குகள், சப்பை வளிமண்டலத்தக்குள் மூக்கை நை
பாவம் இந்தசமுத்திரத்தின் முத்த: பாற்கடலின் முத்தாயொளிர்ந்தத மு பிறகு எமது கண்ணிர் முத்தாய் மிதழ் இன்றது குருதித் தளி முத்து: தன்னிற வெண்மை அழிந்த இரத்த
பன்றிகளின் முன்னால் வீசப்பட்ட 8 உன்னைக் கண்டுகொள்ளாததால் ர இன்று எம் கண்ணெதிரில் அத இர மூழ்கிக் கொண்டிருக்கிறது. முத்தெடுக்கப் போவதாய்ச் சொல்பவ கொண்டிருக்கிறார்கள். முத்தோ தத்தளித்துக் கொண்டிருக்கி
கத்தி, கோடரி, ஈட்டி, வாள் எனும் நாணும் வகையில் பல்குழல் பீரங்கிகளால் முத்தனைய எல்லாப் பக்கங்களிலும் தொளையி உயிர்களைப் பிடுங்க அவரவர் உரி வெறிகொண்டலைகின்ற வேடுவத்த பிணங்கள் உருள பேய்களின் வான நெடிலோடு கைகோர்த்தது.
நீட்டிய சமாதானப் பாத்திரங்களில் பிச்சைப் பாத்திரத்தை வீசிவிட்டு கட பதங்கெட்ட உயிர்ப்பருக்கைகள் வ பார்த்திரு சமாதானப்பதியிற்கான உ கூட்டியள்ளிப் பிணங்களைக் குவி சமாதானக் கொடி நாட்டலாம் குவி
பாவம் சமாதான நடுவர்; சட்டைப் அவரவர்க்குள் இல்லாத சமாதானம் அந்நியன் வீட்டுக்கோடியிலிருந்தா
ாமத கருத்தியலுள் நழைந்துவிட
சுவாசிக்கின்ற
தொகும்.
முக்குகள் யாவும் நமத
ழக்கின்ற பரகசியம்
ண்னொருகாலம் திதி
சாட்சியம் மட்டும்.
ண்ணிர் முத்தே,
குருதித் தளியாக மாறினாய்: த்தச் சகதிக்கடலில்
பர்கள் சண்டையிட்டுக்
கிறத.
சண்டைக்கருவிகள்
தேசம் டப்படுகிறத. மம் எடுத்தாற்போல் ால் நாள்தோறும் வீதிகளில் ட திணிகின்றத கந்தக
வந்து விழுகின்றன கபாலங்கள், ால ஒடு ஏந்தக மனிதா ந்த விழும். மாக அவை உதவக் கூடும்.
பலில்,
பையிலிருந்தா அதை இடுவார்?
உதயமாகும்?
-C
தை : 2007
Page 35
மனித மனங்களை மேம்படுத்த வந்த ம கீழைத்தேயம் என்பர். பெருங்கருணையி பேரிறக்கம் இங்குதான் நிகழ்ந்தன இம்மகான்களின் வடிவில் என்பர். எங்கே அந்த நற்கருணை நம்மிடம் வர் வற்றல் போட்டு உண்டுவிட்டோமா? ம வறுமையில் உழல்பவர் ஆனோமேயூ
சிற்றினம் என்றும் பேரினம் என்றும் சிறு முற்றிய ஞான முழுமையின் ஒளியில் ய முழுமை வாய்ந்த கருத்தியல் செழுமை பேரியல்பு பெற்றால் சிறுபான்மை பெரும் பேரியல்புடையவன் தேசம் எக் கேடும் சிந்தனையில் வறுமை கொள்வானா? தேசம் எனும் கோயிலின் பேரியல்பின் கொடியேற்றம் காண நிற்பானா?
பேரியல்பே நீ எழுக: பெருங்கருத்தே நீ வருக! பெரு வெள்ளமாகித் தனித்தனிச் சிறிய அடித்தள்ளிச் செல்க. மனிதம் பேர் மனிதம் ஆகுக! பேர் மனிதம் இவ் வுலகாளுக: போரினால் தேச விழிகள் குருடாகிப் டே
காப்பதற்கான ஒளிவருகையாக நிகழட்(
சமாதானத்தின் நல் வருகை:
இதோ எனதகத்தில் அதற்கான ஒளியை எனதிரு கண்விழிகளில் ஏற்றினேன். நீயும் உன் திரு விழிகளில் ஒளியேற்று இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச்செல்லும் எமக்கு இடையில் மலரட்டும்: முட்களில்லாத வழியாய் அத அமைக
( ஒலை 40 )
கான்களின் தொட்டில் ன் அல்லது பேரறிவின்
றியா போயிற்ற? பெரும் கருத்தியல்
மையுள் வீழ்ந்தோம்: ார் சிறியர்? யார் பெரியர்? பால் சிற்றியல்பு ஒழிந்த பானமையாகும. கெடட்டும் என்று
இயல்புகளை
வழி
எனப் பிரார்த்திப்போமாக.
31-10-2006
To: 2007
Page 36
“முக்காருகள் tნწLსხub முகாரி ராகங்கள்”
- எம்.எல்.எம்.மன்சூர்
இதோ இன்னொரு புதுநாள் விடிந்துவிட்டது. இதற்கு முன்னர் இருந்ததுமில்லை. இனிமேல் வரப்போவதும் இல்லை சரித்திரத்தில் ஒரே ஒரு முறை இன்று மட்டும்தான் இது வருகின்றது.
பாயிஸ் நானா தந்த புத்தகத்தில் இருந்த வரிகள் என் நினைவில் ஒலிக்கின்றன. என்னை பொறுத்த வரையில் இந்த வாசகத்துக்கு எந்த முக்கியத்துவமுமில்லை. நேற்றிலிருந்து இன்றையையும், இன்றிலிருந்து நாளையும் பிரிந்துணர்ந்து. வித்தியாசம் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு என்னுடைய நாட்கள் ஒரே மாதிரியாக ஐனித்து, ஒரேவழியில் பயணித்து இரவின் இருட்டில் சுவடுகள் இன்றி மரணித்து விடுகின்றன. "ராகிலா; வாப்பாட சட்டயேம் சராத்தேம் நீலம் போட்டு கழிகி வை. ராவக்கி கலியாணத்துக்குட் போரதுக்கு” உம்மாவுக்கு மெதுவாக பேசத்தெரியாது. நாலு வீடு கேட்கவே பேசிப்பழகிவிட்டது. 'உம்மா கொஞ்சம் மொள்ளப்பேசுங்கோ’ என்று சொல்லிவிட்டால் போதும் அவவுக்கு பொல்லாத கோபம் வந்துவிடும். "என்ன மட்டுப்படுத்தலுமோடி ஒனக்கு" என்று வந்த ஆவேசத்துடன் கத்தத் தொடங்கிவிடுவார். கேட்டுக்கொண்டிருப்பவர்கள் என்ன நினைப்பார்கள். வெட்கம் என்னைட் பிடுங்கித்தின்னும். வாப்பாவும் சரியான பயம் உம்மாவிற்கு. எனக்கு உம்மாவின் மீது அப்படியொன்றும் ஆசையில்லை Ogade 40D
C34)
வாப்பாவை நினைக்கும் போது தான் கவலையாக இருக்கின்றது. வாய்பாவுக்கும் என் மீது சரியான பிரியம். எனக்கு இன்னும் கலியாணம் ஆகாதது பற்றி உம்மாவை விட அவருக்குத் தான் கவலை அதிகம்.
எப்போதாவது இரவுகளில் தூங்கப்போகும் போது உம்மாவிடம் அவர் சொல்லுவது எனக்குக் கேட்கும்.
"ராகிலாட விஷயத்தச் சுருக்க முடிச்சிடோணும்" உம்மா குரலை உயர்த்திப் பதில் சொல்வார்.
"நீங்க ஒப்பிடிச் செல்லி செல்லி அவள் கெழவியகங்காட்டீம் இfங்கோ, பீடியைக் குடிச்சி குடிச்சி."
இதைக் கேட்கும் போது எனக்கு அழுகைதான வரும். அதன் பிறகு அவர் ஒன்றும் பேச மாட்டார். தூக்கம் வராமல் நான நீண்ட நேரம் புரண்டு கொண்டிருப்பேன். தூக்கத்திலும் எனக்கு பயங்கரமான கனவுகள் வரும். எத்தனை இரவுகளில் என்னை பென்னம் பெரியதொரு யானை துரத்தி வந்திருக்கின்றது கூக்குரலி வதற்கு நான் வாயைத் திறக்கின்றேன். ஆனால் சத்தம் வராமலே இருக்கின்றது. இந்தக்
Page 37
கனவுகளால் நான் எவ்வளவு அவஸ்தைப்பட்டி ருக்கிறேன். பயத்தில் எத்தனை முறை எனது இரத்தம் உறைந்து போயிருக்கின்றது.
எட்டு மணி. கம்பளை பஸ்வந்து சங்கங்கடை யருகில் நின்று செல்கின்றது. புறக்கடைப் பக்கம் போய் விளக்குமாற்றை எடுத்து வந்து முற்றத்தை பெருக்கத் தொடங்குகிறேன். வேலையில் மனசு லயிக்கவில்லை. வேடிக்கை பார்க்கும் ஆசையில் கண்கள் வெகுதூரம் அலைபாய்கின்றன. ஒரே இடத்தில் நின்று உலகத்தை வேடிக்கை யார்ப்பது எனக்கு இப்போது பழக்கமாகிவிட்டது.
பீலியடிப் பன்சலையிலிருந்து ஓடைக்கரை வழியாக விழுந்திருக்கும் நீண்ட வரம்பில் கையிலே குடையை எடுத்துக்கொண்டு ஹாமுதுரு வருவது தெரிகின்றது. வரம்பில் நின்று மேய்ந்து கொண்டிருந்த மாட்டை குடையைத் தூக்கி விரட்டி விட்டு வேகமாக அவர் நடந்து கொண்டிருக்கிறார்.
தம்பியும் ஹாமுதுருவும் நல்ல சிநேகிதர்கள். நாளின் பெரும்பகுதியை அவன் பன்சலையில் தான் கழிக்கிறார். அதில் அவனுக்கு இலாபங்களும் உண்டு.
பன்சலைக்குச் சொந்தமான கோப்பி மரங்களை குத்தகையில் விற்கும் போது தரகர் வேலை செய்வதும் அவன்தான். பன்சலையில் தேங்காய் பறித்த நாளன்றைக்கு எங்கள் வீட்டுக்கும் தேங்காய்கள் வரும்.
ஒடையில் நீர் வற்றிவிடும் காலத்தில் நாங்கள் பன்சலை பீலியில் தான் போய்க் குளிப்போம். வந்து குளித்து விட்டுப் போகுமாறு ஹாமுதுருவே தம்பியிடம் சொல்லி அனுப்புவார்.
“சாமி நல்லமனிசன் வாப்பா சொல்வார்.
வரம்பில் ஏறி ரோட்டுக்குப் போய் ஹாமுதுரு மறைந்து செல்லும் வரையில் எனது பார்வை அவர் பின்னாலேயே அலைந்தது. வயல் வெளியின் பசுமையில் கண்கள் மீண்டும் நிலைகுத்தி நிற்கின்றன.
ஒலை 40 )
G35) வீட்டுக்கு முன்னால் பாய் விரித்தாற் போல் பரந்திருக்கும் இந்த வயல் வெளியை, வகிடு பிரித்து ஓடும் ஓடையை நெளித்து சென்று கூட்டுறவுக் கடையுடன் மறைந்து விடும் கம்பளை ரோட்டை, பொட்டுப் பொட்டாக வயல வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேய்ந்துகொண் டிருக்கும் மாடுகளை, தனது கஷடங்களை யெல்லாம யாரிடமோ முறையீடு செய்வது போன்ற தொனியில் வினோதமான சத்தங்களை எழுப்பிக் கோண்டு உழுது கொண்டிருக்கும் புஞ்சி பண்டாவை, அறுவடைக்குப்பின் மாலை நேரங்களில் வயலில் கிரிக்கேட் விளையாடும் பையன்களை எத்தனை வருடங்கள் தான் இவற்றையெல்லாம் பார்த்து கொண்டிருப்பது! அலுத்துப் போய்விட்டது ஆனால் ஒரு நாளைக்கு இவற்றை பிரிந்து செல்லவேண்டும என்பதை நினைக்கும் போது கவலையாகவும் இருக்கின்றது.
பச்சைக்கம்பளம் போன்ற வயல் வெளி; உயிரோட்டத்தின் சாசுவதத்தை இசை மீட்டிப்பாடுவது போல் சதா காலமும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஓடை
யுகயகாந்திரங்களாக மோனத்தில் தவங் கிடக்கும் சிறிதும் பெரிதுமான அந்த மலைகள் இயற்கை எவ்வளவோ அழகாகததானிரு க்கிறது!
"ஆனால், அழகைக் சாப்பிட முடியாது”
பாயிஸ் நானா சொன்னார் நிசந்தான், மிக ஆழமாக யோசித்துத்தான் அவர் பேசுவார். உலகத்தைப்பறிற நிறைய விஷயங்களை நான் அவரிடமிருந்து தெரிந்து கொண்டேன் அவரிடம் கல்வி கற்கும் பிள்ளைகள்; அதிர்ஷ்டசாலிகள் என்று நினைத்துக் கொள்வேன். பாயிஸ் நானா தரும் புத்தகங்களின் உதவியால்தான் நான் இப்பொழுது ஒரு மாதிரியாக நாட்களைப் பிடித் துத்தள்ளிக் கொண்டிருக்கிறேன்.
ஸ்கூலுக்குப் போவதை நிறுத்திப் பத்து வருடங்க ளுக்கு மேலிருக்கும். பள்ளி நாட்கள் மிக
—( தை : 2007 D
Page 38
மங்கலாக நினை விலே தரித்திருச் கின்றன. முன்னி வில் கண்ட கனவி கள் மாதிரி.
பாதை நெடுகிலும் பாடசாலைப் பிள்ளை கள் போவதும் வரு வதும் தெரிகிறது சிங்கள ஸ்கூலில்
நடை பெறுகிற கா லம். சந்தோஷமான நாட்கள் இவை பாடசாலை நாட்கள் மீண்டும் என் நினைவில் வருகின்றன. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இல்ல விளையாட்டுப்போட்டிகளில் நாங்கள் எவ்வளவு உற்சாகத்துடன் பங்குபற்றினோம். நான் சேர்ந்திருக்க இல்லங்களுக்கு எத்தனை வெற்றிகளை, பெருமைகளை நான் சேர்த்துக் கொடுத்திருக்கிறேன்!
"இந்த முறை ராகிலா எந்த ஹவுஸ்" என்று எல்லோரும் கேட்குமளவுக்கு என்னுடைய மதிட்ட உயர்ந்திருந்தது. தவணைப் பரீட்சைகளில் முதலாவது இடத்தைப் பெறுவதற்கு என்னுடன் போட்டி போட யாரும் இருக்கவில்லை.
கண்டியில் நடந்த மாவட்டப்பாடசாலைகளின் கலைவிழாவை என்னால் மறக்கவே முடியாது பதின்மூன்று வருடங்கள் கரைந்துவிட்டபோதிலும் நேற்று நடந்த ஒரு சம்பவம் போல அது மனக்கண்ணில் பதிந்திருக்கின்றது. எங்கள் பாடசாலையின் சார்பில் இடம்பெற்ற அபிநயட் பாடலை நான், அனிஸா, பாத்துமா, ஹம்சியா ஜெஸிமா எல்லோரும் சேர்ந்துபாடினோம் மேடையிலிருந்து பார்த்தபோது வண்ணபல்ட களின் மெல்லிய ஒளியில் ஜனங்கள் நிரம்பி வழிந்து உயிர்ப்புடன் காணப்பட்ட அந்த மண்டபம் ஒரு கனவுலகம் போல் எனக்குத் தோன்றியது
( ஒலை 40)-
G36১ நாங்கள் ஐந்து பேரும் வெள்ளையும், சிவப்பும் கலந்த ஒரேவிதமான ஆடைகளை அணிந் திருந்தோம். பூமியிலிருந்து ஆயிரக் கணக்காண அடிகளுக்கு மேலே சிறகடித்துப் பறப்பது போன்ற பிரமையும் பூரிப்பும் எனக்கு.
மெல்லிய இருட்டில் பின்னணி இசையுடன் சேர்ந்து நாங்கள் பாடினோம்.
"நாளைய தினம் நமக்காக விடிகிறது. நல்ல செய்தி சொல்ல வந்தோம் நல்ல செய்தி சொல்ல வந்தோம் ஏழை எளியவர்கள் இல்லையினி உலகினிலே என்ற செய்தி சொல்ல வந்தோம் இந்த உலகினியே வெல்ல வந்தோம்." எவ்வளவு பலமான கைதட்டல், பாராட்டுக்கள்! ஓ.! வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்று நான் பூரித்துப்போனேன்!
கடைசியில் எல்லாமே பொய்யாய், பழங் கதையாய். இறந்த காலங்கள் விட்டுச்சென்ற வெறும் நினைவுக் குவியல்களாக எஞ்சி விட்டன!
கனவுகளைச் சுமந்து கொண்டு ஓடைக்கரை வழியே ஸ்கூலுக்கு போன நாட்கள். இடைவேளை நேரங்களில் தோழிகளுடன் சேர்ந்து ஆய்வு கூடத்துக்கு முன்னாலிருக்கும் மாமர நிழலில் அமர்ந்து 'பெரலிக்காய் சுவைத்த கணங்கள். 'ராகிலா நான் உன்னைத்தான் கலியாணம் முடிப்பேன்’ என்று வேடிக்கையாகச் சொல்லி பாரூக் மாஸ்டர் என்னைத்திக்குமுக்காட வைத்த சந்தர்ப்பங்கள். அந்தக் கனவுகள், இனிமைகள், ஒலிகள், சுவாரஸ்யங்கள் எல்லாமே முடிந்து போய் விட்டன. வேகமாக குலுக்கலுடன சென்று கொண்டிருந்த ஒரு ரெயில்வண்டி திடீரென்று நின்று விட்டது போன்ற பிரமை எனக்கு.
நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டி ருக்கும் போது உம்மாவுக்குச் சுகமில்லாமல் வந்தது. கண்டி ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் -C தை : 2007
Page 39
இருந்தார். இந்நாட்களில் நான் ஸ்கூலுக்குப் போவில்லை. உம்மாவுக்கு உணவு சமைத்துத் தம்பியிடம் அல்லது வாட்பாவிடம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் வேலையை நான்தான் செய்தேன். குணமாகி வீட்டுக்கு வந்த பின்னரும் கூட உம்மாவால் நன்கு ஒடியாடி வேலை செய்ய முடியவில்லை. ஸ்கூலுக்குப் போவதைப் பற்றி நினைக்கவும்கூட எனக்கு நேரம் கிடைக்க வில்லை.
"கொமருபுள்ள இதமட்டும் படிச்சது போதும். என்னத்தென் படிச்சி. ஏஜேந்து வேல எடுக்கவென. இனி ஊட்ல இரி.” வாப்பா சொன்னார்.
எனக்கென்றால் ஸ்கூலுக்குப் போக உள்ளுர விருப்பந்தான். இருந்தாலும் வாப்பாவின் சொல்லை மீற முடியவில்லை. அப்படி நான் போக ஆயத்தமானாலும் உம்மா நிச்சியமாகச் சொல்லியிருப்பார்.
"படிச்சவல்ல ஒவள்போர மாப்பிள் தேட” ஒரு கரச்சலும் வாணம்’ என்று நான் பேசாமல் விட்டு விட்டேன்.
யசவதி துணி மூட்டையுடன் ஒடக்கரைக்கு வருவது தெரிகிறது. இந்தத் துணிகையெல்லாம் அவள் துவைத்து முடியும்போது பொழுது உச்சிக்கு வந்துவிடும். ஊரார் அழுக்குகளைக் கழுவும் வேலையைக்கூட அவள் எவ்வளவு உற்சாகமாகச் செய்கிறாள்! யசவதியுடன் கதைத்துக் கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. நான் கத்திரி போல சிங்களம் பேசப் பழகிப்கொண்டது அவளிடந்தான். அவள் எனக்கு இப்பொழுது அந்தரங்கமான சிநேகிதியாகி விட்டாள். நான் நல்ல அழகாம். அவள் சொல்கிறாள். ஸ்கூலுக்குப் போகும்போது அப்படித்தான் எல்லோரும் சொன்னார்கள்.
அன்று பாயிஸ் நானாவின் வீட்டுக்கு வந்து விட்டுப் போன அவருடைய கூட்டாளிமார் என்னுடைய
( ஒலை 40 ):
C37)
அழகில் கிறங்கிப் போனார்களாம். அவர்கள் போனபிறகு பாயிஸ் நானா என்னிடம் சொன்னார்.
எனக்கென்றால் இதையெல்லாம் கேட்கும் போது ஒரே நேரத்தில் சிரிப்பும், அழுகையும் வரும். நான் இப்பொழுது கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பதே இல்லை. எங்கள் வீட்டுக் கண்ணாடியும் உடைந்துபோய்விட்டது. ஒரு துண்டுதான் மிஞ்சியிருக்கிறது. அந்தத் துண்டில் ஒரே நேரத்தில் முகம் முழுவதையும் பார்க்க முடியாது. மேலே பிடித்துப் பார்த்தால் மூக்கும், கண்களும் தெரியும். கொஞ்சம் கீழே திருப்பினால் உதடுகளும், கழுத்தும் சிவப்பாகத் தென்படும்.
வாப்பாவின் சட்டையையும், சாரத்தையும் கழுவிப் போடவேண்டும். மத்திசம் வீட்டில் இன்றைக்குக் கல்யாணம். ஒரு கிழமையாக உம்மாவுக்கு கலியான வீட்டில் தான் வேலை. வாப்பாவும் மாத்தளையிலிருந்து இரவுக்கு முந்தி வந்துவிடுவார். மத்திசம் மாமா மாத்தளையில் வாங்கியிருக்கும் மிளகுத் தோட்டத்தில் வாப்பா காவல் வேலை.
எட்டாம் வகுப்பில் நான் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்த போது வெறும் ஐங்கியுடன் மட்டும் முற்றத்தில் நின்று விரலை வாய்குள் போட்டுச் சூப்பிக் கொண்டே ‘இச்சி கூலுக்கு போலோ’ என்று மழலையில் கேட்ட சின்னோனா - அதுதான் மத்திசம் மாமாவின் மகள். - இன்று புதுமணப் பெண்ணாக நாணிக்கோணி உட்கார்ந்திருக்கப் போவதை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியாதிருக்கிறது.
“சிரிக்கிக்கு வயசே இல்லே. ஈந்தாலும் கொமருகள ஊட்டுக்குள்ள வெச்சிரது பகுத்தில் நெருப்பைக் கட்டிக்கொண்டீரது போலல்லன. அஹோலுக்குப பணமீக்கு குடுக்கிறஹ."
உம்மா சொன்னார். உம்மாவின் குரலில் தொனித்த ஆதங்கத்தையும், இயலாமையையும் என்னால் இனங்கண்டு கொள்ள முடிந்தது.
- Ο Guns : 2007 )
Page 40
யசவதியிடம் கதை கொடுத்துக்கொண்டே, துவைக்கக் கொண்டு போயிருந்த உடுப்புக் களை நான் நனைக்கத் தொடங்கினேன். அவளுடன் கதைத்துக் கொண்டிருப்பது இன்பமான ஒரு அனுபவமாக இருக்கிறது. எனக்குத் தெரியாத எத்தனை விஷயங்களை யெல்லாம் இவள் தெரிந்து வைத்திருக்கிறாள், அவள் பிறந்தது ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்து எட்டாம் ஆண்டிலாம். நம்பவே முடியாமலிருக்கின்றது. என்னைவிட எட்டுவயது இளமை.
"வண்ணச் சிரிக்கியோட ஒனக்கென்னத்தென்டி கூட்டாளித்தனம்? இதனுகளை ஊட்டுக் குள்ளுக்கு எடுத்துக் கொண்டு.”
ஆரம்ப நாட்களில் உம்மா இப்படித்தான் எனக்கு ஏசிக்கொண்டிருந்தார். ஆனால் கொஞ்ச நாட்களில் "ஆச்சி ஆச்சி! என்று வாஞ்சையுடன் அழைத்து அவள் உம்மாவையும் மயக்கிக் கொண்டாள்.
யசவதி அடிக்கடி பயணங்கள் போவாள். தனியாகக் கண்டிக்குப் போய் வருவது அவளுக்குச் சின்ன விஷயம். ஆஸ்பத்திரிக்கு, பெரஹரா பார்க்க, படம் பார்க்க என்று சொல்லிக்கொண்டு தொடை தெரிய கவுன் அணிந்து, லேடீஸ் குடையை எடுத்துக் கொண்டு அவள் போவதைப் பார்க்க எனக் குப் பொறாமையாக இருக்கும். நான் கண்டிக்குப் போய் வந்து எத்தனை வருடங்களாகி விட்டன! உம்மா ஆஸ்பத்திரியில் இருக்கும் போது போய் வந்ததுதான் கடைசியாகப் போனது. பத்து வருஷங்களுக்கு மேலிருக்கும். மெளத்தாவற்கும் முந்தி ஒருமுறை போய், கொழும்பு நகரத் தையும், கடலையும் பார்த்துவிட்டு வரவேண்டு மென்று எனக்கு சரியான ஆசை.
"இன்னும் நான் கடலப் பாத்தில்ல" என்று சொன்னபோது பாயிஸ் நானாவின் மனைவிக்கு
( ஒலை 40 ) q
C38)
ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. எனக்கு வெட்டமாயும் போய்விட்டது.!
யசவதி பெரஹர பார்த்த அனுபவங்கள் ரொம்பச் சுவையாக இருக்கும். பொடியன்கள் தன் இடையைக் கிள்ளியதை, காலை மிதித்ததை, கூட்டத்தில் நசுங்கியதை அவள் மிகச் சாதாரணமாக வர்ணிப்பாள். இச்செய்திகளை அவள் சொல்லும் தொனி. ‘இதெல்லாம் நடக்கவேண்டிய சர்வசாதாரண விஷயங்கள் என்று சொல்வது போலிருக்கும். எனக்கென்றால் மேல் கூசும் நான் இந்த விஷயங்களையெல்லாம் யசவதியுடம் கதைப்பதை அறிந்தால் உம்மா என்னைக்கொன்று போட்டு விடுவார்.
"குட்டிகளும், பொடியன்களும் பெரஹரா பார்க்க மட்டும் வருவதில்லை."
யசவதி சொல்கிறாள். சரியாக இருக்கலாம். அதைப் பற்றி எனக் கெதுக்கு கவலை!
கண்டி பெரஹராவைப் பார்க்க முடியா விட்டாலும் நானும் ஒவ்வொரு வருடமும் பெரஹரா பார்த்தக்கொண்டுதான் இருக்கிறேன். எங்கள் பக்கத்து ஊர்த் தேவாலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஏழுநாள் பெரஹரா இருக்கும். நீர் வெட்டிக் கொண்டு வரும் எட்டாவது நாள் கடைசிப் பெரஹரா. எங்கள் வீட்டுக்கு முன்னாலிருக்கும் ரோட்டல் தான் வந்துபோகும்.
சிறுமியாக இருந்த காலத்தில் கடைசிப் பெரஹரா வரும் அந்ந ஞாயிற்றுக்கிழமைகளை நாங்கள் எவ்வளவு ஆலுடன் எதிர்பார்த்துக் கொண்டி ருப்போம்! பலூன், சீனிக்கடலை, கரும்பு, பம்பாய் முட்டாய். இப்படியெல்லாம் விற்பவர்கள் பெரஹரா வருவதற்கு முன்னால் கூவிக்கொண்டு வருவார்கள். சீனிக்கடலையில் தான் எனக்கு விருப்பம்.
இப்பொழுதெல்லாம் ஒதுங்கியிருந்தது இந்தப் -C தை : 2007 )
Page 41
பெரஹராவைப் பார்க்கும் போது, 'தெரியாமலே இன்னொரு வருடமும் கழிந்து விட்டது' என்று பெருமூச்சு விடத்தான் தோன்றுகிறது.
வண்ண வண்ண ஆடைகளால் அலங்கரிக்கப் பட்டு மெதுவாக ராஜ நடைநடந்து வரும் யானைகளைப் பார்க்கும் போது, சாதுவான இந்த யானைகள் கனவில் என்னை எவ்வளவு வேகமாகத் துரத்தி வருகின்றன என்று எண்ணி நான் வியப்படைந்து போகிறேன்.
பெரஹர என்கிறபோது மெளத்தாகிப் போன வாப்பும்மாவின் ஞாபகம் வருகின்றது. வாப்பும்மா ஒரு நாளும் பெரஹரா பார்ப்பதில்லை. தூரத்தில் 'பெர” அடிக்கும் சத்தம் கேட்கும் போதே அவகுசினியில் போய் நுழைந்துகொண்டு விடுவா. "பெரஹர பாக்கிற முஸ்லிம் ஆளுக்களுக்கு மறுமேல் நாயங்கள்ட திருக்கல்யாணம் பார்க்க கெடச்சிர இல்லயம்."
வாப்பும்மா மெளத்தாகியும் ஐந்து வருடங்க ளுக்கு மேலாகி விட்டன. நேற்று மாதிரி இருக்கிறது.
லீவு நாட்களென்றால் மாலை ஐந்து மணியா னவுடன் பாலத்தில் உட்கார்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டு அரட்டை அடிப்பதற்கு ஒரு கூட்டம் வந்து விடும். படித்து உத்தியோகம் பார்க்கும் நண்பர்கள் இவர்கள். பாலத்துக் கட்டில் அமர்ந்து ஒடையில் சிறு கற்களை வீசிக் கொண்டே இவர்கள் உரத்த குரலில் ஏதாவது விவாதித்துக் கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் தூரத்தே தெரியும் மலைகளை மெளனமாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருப் பார்கள். பாதையில் போகும் யாருடனாவது ஏதாவது "ஜோக்' சொல்லிச் சிரிப்பார்கள். சில வேளைகளில் நான் முற்றத்தில் நின்றிருந்தால் யாராவது எங்கள் வீட்டுப் பக்கமும் பார்வையை வீசுவார்கள். எப்போதாவது சிகரெட் பற்ற வைக்க நெருப்புப் பெட்டி கேட்டுக் கொண்டு யாராவது ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருவார்.
( ஒலை 40 )
C39)
இவர்களில் ஒருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு வேளை திருமணம் செய்து கொண்டபின்னர் மாலை நேரங்களில் பாலத்துக்கு வரமாட்டார்களோ என்னவோ!
“என்னதான் பொழுது போக்கு என்று சொல்லிக் கொண்டாலும் கல்யாணம் செய்யும்வரை பீடிக்கிற ஒருவகை நோய்தான் இது."
பாயிஸ்நானா சொன்னார்.
எனக்கும் கொஞ்சம் வெட்கமாகிப் போய் விட்டது. என்னையும் இந்த நோய் பீடித்திருக்கிறதோ? தெரியாது!
அடுத்த மாதம் யசவதியும் போய் விடுவாள். அவளுக்குக் கல்யாணம். காதல் கல்யாணம் என்று சொல்கிறாள். அவள்தான் சுதந்திரமான வளாச்சே, எனக்கு இதையெல்லாம் நினைத்துப பார்க்கவும் முடியாது! யசவதியை நினைக்கும போது கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமான சிநேகிதியை இழக்கப்போகின்றோம் என்பதை எண்ணிப்பார்க்க மனசுக்குக் கஷ்டமாகத் தான் இருக்கிறது. அவள் சந்தோஷமாக இருக்கட்டும்! நானும் ஒரு நாளைக்குப் போகத்தானே வேண்டும்.
இந்த வயல்வெளியை, ஓடையை, பாலத்தை, வித விதமான இந்த மனிதர்களை, ரம்மிய மான இந்தச் சூழலை எல்லாம் விட்டு விட்டு முன்பின் தெரியாத ஒர் ஆடவனின் பின்னால் முக்காட்டை இழுத்து மூடிக்கொண்டு போகத்தான் வேண்டும். அவனது பிள்ளையை வயிற்றில் சுமக்க வேண்டும். இல்லாமையைச் சகித்துக்கொண்டு. துயரங்களை நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டு, அடக்கமான மனைவி யாக, தாயாக. வாழ்ந்து முடிக்கத்தான் வேண்டும்.
திருமணத்தின் மூலம் தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை மலர்ச்சியடைகின்றதாம். அனிஸா வைப் பார்த்த பிறக இந்த மலர்ச்சியிலும் எனக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.
—( தை : 2007
Page 42
நான்கு வருடங்களுக்கு முன் அனிஸாவுக்குக் கல்யாணம் நடந்தது. எத்தனையாயிரம் கனவுகளைச் சுமந்து கொண்டு அவள் கணவன் வீட்டுக்குப் போனாள்! நான்கு வருடங்களில் எல்லாக் கனவுகளும் சிதைந்து, இரண்டு குழந்தைகளுடன் வறுமை சுதந்திரமாக விளையாடிச் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிற மெலிந்து, கறுத்துப்போன உடம்புடன் மீண்டும் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறாள்! சீதனம் கேட்டு கணவன் அவளை அனுப்பியிருக்கிறானாம்;
அனிஸாவைக் கண்டவுடன் அடையாளம் கண்டு கொள்வதே எனக்குச் சிரமமாக இருந்தது. பரிதாபமாக மெலிந்து போயிருந்தாள். முன்பு இவள் எவ்வளவு அழகாக இருந்தாள்! முன் பற்கள் விழுந்து, முகம் விகாரமாகி. ஓ ! அனிஸ் என்னையும் நீ பயமுறுத்துகிறாயா! கணவன் வீட்டில் நிறையக் கொடுமைகள் நடந்திருக்க வேண்டும். நன்கு மெளனம் சாதிக்கப் பழகியிருக்கிறாள். ஓரிரு வார்த்தைகள் தான் பேசினாள்.
-G10) உனக்கு நினைவிருக்கிறதா அனிஸா! மெல்லிய சிவப்பு வெளிச்சத்தில் தேவதைக் குஞ்சுகள் போல் மேடையில் நின்றுகைகளைக கம்பீரத்துடன் மேலேயுயர்த்தி,
'இந்த உலகினையே வெல்ல வந்தோம்’ என்று பாட்டிசைத்தோமே; அந்த நாள் உனக்கு நினைவிருக்கிறதா? இல்லை; நீ மறந்திருப்பாய். சின்னத்தனங்கள் மலிந்துபோன இந்த மனிதர்களின் உலகத்தில் இதையெல்லாம் நினைத்துப் பார்க்க உனக்கு எங்கே நேரமிரு க்கிறது ஆனால் நாளைய தினம் நமக்காக விடிகிறது என்று நாமெல்லோரும் கைகோர்த்துக் கொண்டு நம்பிக்கைக் கீத மிசைத்த அந்த நாள் எனக்கு நினைவிருக்கிறது அனிஸ். யாரை வஞ்சித்ததற்காக, யாருடைய பொருளை அபகரித்த குற்றத்துக்காக நாமெல்லோரும் இப்படிச் செத்துக் கொண்டிருக்கிறோம்!
அனிஸாவைக் கட்டியணைத்துக் கொண்டு கதற வேண்டும் போன்ற வெறி என்னுள் கிளந் தெழுந்தது!
யசவதி என்னிடம் பியாவிடை பெற்றுக் கொண்டு போக வந்திந்தாள். அவள் சாரி அணிந்திருப்பதை இன்று தான் நான் முதலில் பார்த்தேன். சாரியில் அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள்! மாலை கணவனுடன் தெல்தெனியாவுக்குப் போகப்போகி றாளாம்.
"ராகிலா! உங்கள் கல்யாணத்துக்கு எனக்குக் கடிதம் போடுங்கள். நிச்சயம் வருகிறேன்.”
அவளது இளமை ததும்பும் கைகளைப் பிடித்து மெதுவாக வருடிக்கொண்டே மெளனமாக நான் தலை குனிந்து நின்றேன். துக்கத்தின் வடிகால் மெளனம் தானோ! “ஒரு நாளும் உங்களை மறக்க மாட்டேன் ராகிலா” என்று தளர்ந்த குரலில் சிங்களத்தில் கூறிக்கொண்டே குனிந்து அவள் என்னை முத்தமிட்டபோது, அவள் கண்களில்
-( தை : 2007 D
Page 43
விளிம்பு கட்டி நின்ற கண்ணிர்த் துளிகள் என் கன்னங்களில் விழுந்து தெறித்தன.
வெறுமையும், சூனியமும், ஊழி ஊழிக்கால நிசப்தமும் ஆட்சி செலுத்தும் அகண்டதோர் பாலை வெளி என் கண்ணெதிரே விரிக்கின்றது. கொடிய அந்தப் பாலை நிலத்தின் சுடுமணலில் என்னுடைய துயரம் தோய்ந்த நாளைய தினங்கள் புதையுண்டு தெரிகின்றன!
இந்த வருடமும் பெரஹரா வரும்.
அடுத்த வருடமும், அதற்கடுத்த வருடமும், அதற்கடுத்த வருடமும். இன்னும் இன்னும் அலை அலையாக அவை வந்துகொண்டே இருக்கும்.
C ஒலை 40 )
‘ஓலை’ கொழும்புத் தமிழ் சாதாரண சந்தா விபர
இலங்கை : தனிப்பிரதி ரூபா
இந்தியா : ஒரு வருட
‘ஓலை’ க்கு உதவ விரும்புவோர் தங்க அல்லது வைப்பாக Colombo Tamil Sangam Society கணக்கு இல. 1100014906 Commercial Bank G6.6irénégs605é
காசுக் கட்டளையாயின் “செயலாளர் ெ வெள்ளவத்தை தபால் அலுவலகத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்க அலுவலகத்தி
-GO
பெருநாள், நோன்பு பள்ளிக் கந்தூரி, பெரஹரா என்று. சிறுமியாக இருந்த நாட்களில் எல்லையில்லாத சந்தோஷத்தையும், குதூகலத் தையும் சுமந்து வந்த இந்த வருடாந்த நிகழ்வுகளை, துக்கத்துடன், "காலம் ஓடிக் கொண்டே இருக்கின்றது” என்ற பிரக்ஞையுடன் இனி மேலும் நான் சந்தித்துத்தான் ஆகவேண்டும்!
என்னுடைய பிரியமான சிநேகிதியை அணைத்துக கொண்டு நான் குலுங்கிக் குலுங்கி அழுகின்றேன்!
(வீரகேசரி - 1980)
ருடம் (2007)
30/=, ஒரு வருடம் ரூபா 500/= ம் இந்திய ரூபா.6008 Blib 20 அமெரிக்க டொலர்
-Y ள் நிதி அன்பளிப்புக்களை காசோலை
Ltd.
க்கு அனுப்பலாம்.
காழும்புத் தமிழ்ச் சங்கம்” என்ற பெயரில்
மாற்றப்படக்கூடியவாறு அனுப்பமுடியும். ல் நேரடியாகவும் செலுத்த முடியும்.
-( தை : 2007
Page 44
S SS \, A
அறியாதவற்றை நோ என்ற அழகியற் பரிப
கலை இலக்கிய ஆக்கங்களின் கருத்தியற் பரிமாணங்களை ஆழ்ந்து வலியுறுத்திய மார்க்சிய வழித்திறனாய்வாளர்களின் இரண்டாம் கட்ட படிமுறை வளர்ச்சியில் அழகியற் பரிமாணங்களில் அதீத வலியுறுத்தல் இடம் பெற்றமை உளவியல் ஆயப் வுகளில் ஏறிக் புறோமுக்கு (Erichfromm) பின்னர் நிகழ்ந்த நிலைமாற்றம்' எனலாம்.
முதலாம் தலைமுறை மார்க்சிய திறனாய் வாளர்களின் கண்ணோட்டத்தில் உளப்பகுப்பு ஆய்வு பிற்போக்குத்தனமாகவே புலப்பட்டது. முறையியலைப் பொறுத்தவரை உளப்பகுப் பாளர்கள் பயன்படுத்திய கனவுகளின் வியாக்கியான முறையும் கருத்தேற்ற நித்திரை முறையும், நனவிலி மனம் பற்றிய கருது கோளாக்கமும் விஞ்ஞான முறைக்கு ஒத்து வராமையினால் மார்க்சிய திறனாய்வாளர்களின் நோக்கில் அது பிற்போக்குத் தனமாகவோ புலப்பட்டது.
உளப்பகுப்புச் சிந்தனா கூடத்தின் முறையியலை நிராகரித்த ரஷ்சிய உளவியலாளராகிய பவ்லோவ் ஆய்வுகூடப் பரிசோதனை முறையி யலைப் பயன்படுத்தி உளப்பகுப்பு ஆய்வின் தளங்களை வலிமை குன்றச் செய்தார். பவ்லோவினால் வலுவூட்டப்பட்ட நடத்தைவாதம் மனித இயக்கங்களை இயந்திரப் பாங்காக நோக்குவதற்குத் தளமிட்டது. கலை இலக்கியங்களின் அழகியற் பரிமாணங்களை முதலாம் தலைமுறை மார்க்சிய திறனாய் வாளர்கள் அணுக முடியாமற் போனமைக்கு பல்லோவின் நடத்தை வாதத்தின் செல்வாக்கும் ஒரு வலுவான காரணியாக அமைந்ததென்று கூறுதல் தவறாகாது.
Cgos 40 D
க்கி நகருதல் )π6υστίο
- கலாநிதி சபா ஜெயராசா -
உளப்பகுப்புவாதம் பாலியல் சார்ந்த தனிமனித அவலங்களை நோக்குகின்றது என்ற ஒடுங்கிய ஒற்றைப் பரிமாணத்தை வலியுறுத்தியமைக்கு மேலும் அழுத் தங் கொடுத்து, அந்த அவலங்களை உருவாக்கும் அகன்ற சமுகத் தளத்தை அணுகத் தவறியமை திறனாய்வில் மேலும் வரையறைகளை ஏற்படுத்தியது. இத்தகைய கவிநிலையில் உளப்பகுப்புவாதத்துக்கும் மார்க்சியத்துக்கு மிடையே ஒப்புமைகளைத் தரிசிக்க முயன்ற எரிக் புறோமின் ஆய்வுகள் ஒரு புது வழிப் பாய்ச்சலை ஏற்படுத்தியது.
திறனாய்வில் எல்லோராலும் 'ஏகமனதாக' வலியுறுத்தப்படும் பரிமாணமாக அழகியற் கூறு அமைந்தாலும் சமகால அறிகை வளர்ச்சித் தளத்தில் அழகியற் பரிமாணம் என்பது தெளிவாகவும் திட்ட வட்டமாகவும் விளக்கப் படாது திணறும் பதகளிப்பு நிலை காணப்படு கின்றது. பாரம்பரியமான அறிகை முறை மையில் அணிகள், அலங்காரம், ரஸங்கள், தைவனி என்றவாறு அழகியற் பரிமாணங்கள் விளக்கப்பட்டன. பழைமையிலும், புதுமையிலும் விரவிநிற்கும் ஓர் அழகியற் பரிமாணமாக அமையும் ‘கண்டறியாதது (Unknown) அதிகம் விளக்கப்படாததும், அதிகம் ஆய்வுக்கு உட்படாததுமான எண் ணக் கருவாகவே உள்ளது.
தமிழ்மரபில் ‘கண்டறியாதன கண்டேன்’ “மரத்தில் மறைந்தது மாமத யானை' 'தோள் கண்டார் தோளேகண்டார் மயில் குயிலாச்சுதடி, ‘போபோ என்னால் வருணிக்க முடியாது’
—( தை : 2007 )
Page 45
முதலாம் சில எடுத்துக்காட்டுகள் அழகியல் பரிமாணமாக 'அறியாததும் தெரியாததும் அமைதலை ஏதோ ஒரு விதத்திலே சுட்டிக் காட்டின.
அறியாதவற்றை உந்தும் அழகியற் பரிமாணம் தொல் குடியினரது சடங்குகளிலும், மாயவித்தை களிலும், வழிபாட்டு முறைகளிலும் வளமாக இடம் பெற்றது. அறியாத நிலையிலே தோன்றும் மனஇறுக்கமும், அறிதலை நோக்கி நகரும் பொழுது தோன்றும் பளிச்சிடும், நெகிழ்வும், அறிகை வழியாக அழகைக் கொடுக்கின்றன.
அறியாதவற்றை நோக்கிய தேடலின் அறிகை வடிவமாகத் தொன்மங்கள் (Myths) உருவாக்கம பெற்றன.
காவியங்களுக்கும் புராணங்களுக்கும் அழகு வழங்கிய அறிகை விசைகளாகத் தொன்மங்கள் அமைந்தன. தொன்மங்களுக்கு சமகால மனிதப் பொருள் வழங்கும் செயற்பாட்டினால் நவீன எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களுக்கு அழகு சேர்தனர். புதுமைப்பித்தனுடைய சாபவிமோசனம், ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், புதிய நந்தனார்’ முதலியவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தொன் மங்களின் அழகியற் பெறுமானங்களின் அழகியற் பெறுமானங்களை தமிழகத் துப் பொதுவுடைமையாளர்கள் ஜீவானந்தம், இராமகிருஷ்ணன் போன்றோர் அறிந்து தெளிந்து கொண்டனர். ஆனால் தமிழகத்துப் பகுத்தறிவாளர்கள் அவற்றை மூடநம்பிக்கைகள்' என்று ஒதுக்கித் தள்ளிய மையும் அவர்களது கலையாக் கங்கள் வரண்டமைக்குரிய ஒரு காரணியாகும்.
சமகால இலக்கிய ஆய்வுளிலும் அனுபவக் கையளிப்பிலும் 'இனக் குழும ஆசிரியம்’ (Ethnopediagogy) என்ற எண்ணக்கரு எடுத்தா ளப்படுகின்றது. கால நீட்சியில் மக்கள் மனத்தில் ஆழ்ந்து ஊறிய நம்பிக்கைகளிலும், ஊடாட்டங் களிலும் நிரற்படுத்தப்பட்டுள்ள பதிவுகள் அழகியற் பரிமாணங்களைக் கொண்டவை.
( ஒலை 40 )
-G3) இனக்குழும வழிவந்த நம்பிக்கைகளும், ஊடாட்டங்களும் பல்வேறு மறைபொருட்களின் தேடல்களுடன் இணைந்தவை. அந்தமறை பொருட்களுக்கு வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையிலும் விளக்கம் கொடுக்க முடியும்.
இனக்குழும வழிவந்த நம்பிக்கைகளையும், ஊடாட்டங்களையும் கலை இலக்கியங்களிலே பயன்படுத்துதல் வாயிலாக அழகுப்பரிமாணம் பதிக்கப்படுகின்றது. கலையாக்கங்களைப் பொறுத்த வரை இந்த உபாயத்தைக் கையாளுதல் ஒரு பொதுவான தோற்றப்படாகும்.
கண்டறியாதன கண்டறிதல் உருவ நிலையிலும், நிகழ்த்தப்படும் அருவநிலையிலும் நிகழ்த்தப் படும். இசையிலே சுரவரிசையின் கண்டுபிடிப்பு அருவநிலைத்தேடலின் கருவியாயிற்று. இராகக் கட்டமைபின் தளத்தில் நின்று கற்பனாசுரம் பாடுதல் இசையில் நிகழ்த்தப்படும் அருவ நிலைத் தேடலாகும். ஒவியர்கள் நிரலிக்கப் பட்ட உருவக்கட்டமைப்புக்களை உடைத்து அருவநிலைத் தேடலை மேற்கொள்வர்.
அறியாப்பரிமாணங்களை உள்ளடக்கியிருத்தல் கவிதைக்குரிய சிறப்பான அழகியற் கட்டுமான மாகின்றது. இந்நிலை வாசகர் தாம் விரும்பிய கருத்துக் கோடலுக்கும் எதிர்வு கூறலுக்கும் இடந் தரப்படுகின்றது. இதன் அடிப்படையாகவே படைப் பாளியின் மறைவும், வாசகனின் மேலாண்மையும் விளக்கப்படுகின்றது. நூலியம் (Text) உடைப்புக்கும், மீள் உடைப்புக்கும், உள்ளாக்கப்படுகின்றது. வாசகர் நிலைப்பட்ட துலங்கல் முன்னெடுக்கப்படுகின்றது.
அறியாதெனவற்றை நோக்கிய பயணிப்பில் இப்படித்தான் கற்கவேண்டும் இப்படித்தான் அறிய வேண்டும் என்ற பொது விதி இல்லை. அவ்வாறு கறாரான ஒரு பொதுவிதியை உருவாக்குதல் கல்வியியல் நோக்கிலே பயனற்ற நடவடிக்கையாகும். சிக்கலான பிரச்சினைக்கு எளிமையான தீர்வுகளை முன்வைக்கலாம். ஆனால் அவை தவறாகவே இருக்கும்.
-C தை : 2007
Page 46
அறியாதனவற்றை அறிய முயலுதல் என்பது சிக்கலான ஒரு செயல் முறை. மனித மூளை சிக்கலான செயலமைப்பைக் கொண்ட ஒரு தொகுதியாகும். ஒவ்வொருவரதும் தனித்துவமான இயல்புகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொருவிதமாக அறியாதனவற்றை நோக்கிய பயணிப்பை மேற்கொள்ளல் வேண்டும். கற்றல் என்பது சமூக இருப்போடு இணைந்த தனியாள் மயப்பட்ட செயல்முறை. ஒருவருக்காக இன்னொருவர் கற்க முடியாது. ஒவ்வொருவருக்குமுரிய அறிகை 960)LDL (Cognitive Structure) 560fgsg56) முடையதாக இருக்கும் நிலையில் அவரவர்க ளுக்கு ஏற்றவாறு கற்பித்தல் முறைகளைத் தனித்துவப்படுத்தல் வேண்டும்.
மனித உள்ளத்தின் ஆழ்ந்த அறியாப் பொருள் களைத் தமது ஆய்வுத் தளத்தில் நின்று தேடியவர்களுள் உளப்பகுப்பு உளவியலாளர்கள குறிப்பிடத்தக்கவர்கள். இருளிலே புதைந்து ஆழ்ந்து ஒடுங்கியிருக்கும் நனவிலி உள்ளம் அவர்களின் மிகப் பெரும் கண்டுபிடிப்பு. மார்க்சியம் மனிதனைத் தேட உளப்பகுப்பு உளவியல் மனிதனின் மறை பொருளாய் உள்ள ஆழ்ந்த உள்ளத்தைத் தேடியது. ஆனால் மனித உள்ளத்தை உருவாக்கும் சமூக இருப்பையும், இருப்பை மாற்றியமைக்கும் வழிகளையும் உளப்பகுப்பு உளவியலின் தந்தை சிக்மன் பிராய்ட் அவர்கள் தரிசிக்காமிலிருந்தமை ஒரு மட்டுப்பாடுதான்.
மனித உள்ளத்தின் அறியப்படாத ஆழங்கள் கலையாக்கங்களுக்கு அழகு சேர்க்கும் கண்டறியாதனவாக இருக்கின்றன. மேலும் ஆழ்மனத்தின் இன்னொரு சிறப்புப் பரிமாணம் என்ன வென்றால் குறிப்பிட்ட மனிதனுக்கே தனது ஆழ்மன இருப்புக்களைச் சாதாரண நிலையில் அறியப்படாதிருக்கும் அவலம் தான்.
ஆழ்மனத்தை அரவணைத்து அறிவைக் கையளிக்கும் உபாயங்களாக 'கருத்தேற்றக் 53lgbg6ü' (Suggestopedia) LDigib '(pgBTu மொழி கற்றல் முதலாம் நுட்ப முறைகள் மேலைப் புலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
( ஓலை 40 )
-G4)
உளப்பகுப்பு உளவியல் மற்றும் அதன் சமகால வளர்ச்சிநிலைகள் ஆகியவற்றை மாத்திரம் அடிப்படையாக வைத்து கலை இலக்கியங்களை அணுகுதல் அபத்தமாகிவிடும். ஏனெனில் அவற்றின் இயல்பு வாசகரையும் சுவைஞரையும் வெறும் துய்ப்போர் நிலைக்கு (Passive) மாற்றிவிடும். வாசகரை செயலூக்கமுள்ள நிலைக்கு (Active) மாற்றும் விசையை மார்க்சியம் கொண்டுள்ளமையை மறுக்க (ԼplգԱյTՖl.
-C 60 g5 : 2007 D
Page 47
கலையை உருவாக்குபவர், கலையை நுகர்வோர் அல்லது இரசிப்போர் என்ற இருமைப்பாடு தொல் குடியினரிடத்துக் காணப்படவில்லை. எடுத்துக் காட்டாக தொல்குடியினரது ஆடல், பாடல்களை எடுத்துக் கொண்டால், ஆண்கள், பெண்கள், இளைஞர், முதியோர் அனைவரும் சேர்ந்து ஒன்றென ஆடினர் ஒன்றெனப் பாடினர். கலையை ஆக்குனர்களாகவும் இரசிப்பவர்களாகவும் ஒரே நேரத்தில் அவர்கள் விளங்கினர்.
பொருளுற்பத்தி வளர்ச்சியோடும் சமூக வளர்ச்சி யோடும், ஒருவரது உழைப்பை இன்னொருவர் பறித்தலோடும் கலையாக்குனர், நுகருனர் என்ற இருமைப்பாடு வளர்ச்சியடைந்தது. அரசுகளின் வளர்ச்சியோடு அரசர், பிரதானிகள், உயர்மட்ட த்தினர் இரசிப்போராகவும், கலையாக்குனர் வழங்குனர்களாகவும் அமைந்தனர். தமிழகத்தில் வளர்ச்சி பெற்ற சதிராட்டக்கலை இந்த இயல்புகளை நன்கு வெளிப்படுத்தும்,
‘ஏழுவகைக் கூத்து மிழிகுலத்தோரை ஆடவகு த்தனன் அகத்தியன் தானே' என்று அடியார்க்கு நல்லார் உரையில் விளக்கப்படுத்துதல்
G15)
குறிப்பிடத்தக்கது. சோழராட்சிக் காலத்தில் கோயிலில் ஆடிய தேவரடியார்கள் இராதாசிகள், அலங்காரதாசிகள், தேவதாசிகள், சுவதாசிகள்' என்றவாறு வகைப்படுத்தப்பட்டனர். அறியாப் பொருளாம் இறைவனைத்தேடுதல் இவர்களின் ஆடல்களுக்குரிய உள்ளார்ந்த அழகுப் பரிமானமாக அமைந்தது.
அழகு என்பது ஒவ்வொருவரதும் உள்ளத்திலே நிகழும் கட்டுமை (Construct) செயலுடன் இணைந்தது. இந்தக் கட்டுமையில் தருக்க நிலைக்கு அப்பாற்பட்ட அகவயமான சிந்தனைகள பிரான விசைகளாகின்றன. அகவயவிசைகளை அருட்டிவிடாது கலைப்படைப்புக்களை உருவாக்க முடியாது. இநநிலையில் அகவயப் பாங்குகளை ஆழ்ந்து ஊடுருவி நோக்க முயலும் உளவியற் சிந்தனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.
சமுக இருப்பே அகவயப் பாங்கின் அடிப்படை பாகின்றது. அழகியல் பற்றிய உளவியல் நோக்கு சிதறலின்றி எழுச்சி பெறுதல் முக்கிய மானதாகும்,
Page 48
སྲིང་སྲིད་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
தாலியின்
தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவதை குறிக்கின்றன. தாலிகட்டும் நிகழ்ச்சி நடக்கும் போது மணமக்க ளுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரிமுறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்கு தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.
மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்று கொண்டு தாலிகட்டும் வழக்கமுடைய சாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்கு தாலி கட்ட துணை செய்கிறாள். தமிழ் நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு சாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமக ளுக்கு தாலிகட்டுவது சில ஆண்டுகளுக்கு முன் வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.
ஒரு நூற்றாண்டு முன் வரை சில சாதியாரி டத்தில் மணமகன் திருமண நிகழ்ச்சிக்கு வரமுடியாத போது மணமகனை அடையாளப் படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றை கொண்டு வந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலிகட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.
மதுரை மாவட்டடம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பகாரர்களிடத்தில் மணமகனுக்கு பதிலாக அவனுடைய வலதடியை (வளரியை) கொண்டு போய் அனுடைய சகோதரி மணப்பெண்ணுக்கு தாலிகட்டுகிற வழக்கம் இருந்துள்ளது.
மணமகன் இல்லாமலேயே மணமகளுக்கு தாலிகட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது. என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும். தாலி என்ற சொல்லின் வேர்ச் சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால் தாலி தாலாட்டு ஆகிய சொற்களை கொண்டு தாலி
( ஒலை 40 )
G6) * சரித்திரம்
- முனைவர் தொ. பரமசிவன் -
என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம்.
நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்று களிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்கு தாலிகட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தை தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளந்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச செல்வர் ம.பொ.சி. மட்டுமே.
கி.பி 10 ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலிப் பேச் சே கிடையாது என்கிறார் கா.அப்பாத்துரையார், பெரும்புலவர் மதுரை முதலியாரும் தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினார்.
தொல்பழங்குடி மக்கள் பிள்ளைகளை தீயவை அணுகாமல் காப்பதற்கு பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண்கயிற்றில் சில பொருட்களை கட்டும் வழக்கம் இருந்துது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம் வரை கூட நீடித்தது. இவ்வாறு ஐந்து பொருள்களை பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள்
-C தை : 2007 )
Page 49
ஐம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன. மிக அண்மைக் காலம் வரையிலும் கூட கிராமப்புற ங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது.
நந்தனின் சேரிக் குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு உள்ளது. எனவே தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களின் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக்கொண்டால் அதை புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர்.
புலிப்பல் கோத்த புலம்பி மனித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்திலைச் சிறார் (புறநானூறு)" இரும்புலி எயிற்றுத் தாலி குடையிடை மனவு கோத்து (திருத்தொண்டர் புராணம்)
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உட்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட் களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறு தாலி, பெருந்தாலி, பஞ்சார (கூடு)த்தாலி, மண்டைத் தாலி, நாணல்தாலி (ஞாழல் தாலி) பார்ப்பராத் தாலி, பொட்டுத்ாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன் படுத்தப்படுபவை ஆகும்.
ஒரு சாதிக்குள்ளேயே அதன் உட்பிரிவுகள் சிறுதாலி பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப் படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில சாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாக 'காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப்பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒருவகை பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு
( ஒலை 40 )
C47)
உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனிதகுல வரலாற்றில் ஏதோ ஒரு தொல்பழங் குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம். அதன் பின்னரே கோவில்களிலும் பெண் தெய்வங்க ளுக்கத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமை கோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சிலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள் நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறு த்தான் சந்தை என்று வழங்கப்படுகின்றது.
இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார் தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத்தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர் 1968ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரி யாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தை சட்ட பூர்வமாக அங்கீகரித்தது.
கடைசிய்ாக ஒரு செய்தி-சங்க இலக்கியங்களில தாலி மட்டுமல்ல பெண்ணுக்குரிய மங்கலப் பொருட்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும் கூட பேசப்படவே இல்லை.
பெண்பூசாரிகளும் தாய்த்தெய்வ வழிபாடுகளும் இன்று பூசாரித் தொழில் பெருந்தெய்வக் கோவில்களிலும் நாட்டார் தெய்வக் கோவில களிலும் ஆண்களுடையதாகவே இருக்கிறது. பெருந்தெய்வ (அரச ஆதரவு) கோவில்களில் ஒரு காலத்தில் நெல்குற்றுதல், பெருக்குதல், மெழுதல் ஆகிய தொழில்களுக்கு மட்டுமே பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
-C தை : 2007 )
Page 50
இவையன்றி தேவரடியார் எனப்படும் பெண்கள் கோயில்களில் குடவிளக்கு ஏந்தி சுற்றி வரவும் நடனமாடவும் நியமிக்கப்பட்டிருந்தனர். நாட்டார் தெய்வக் கோவில்களிலும் பெண்களைப் பூசாரிகளாக அனுமதிப்பதில்லை. ஆனால் சாமியாட மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பழங்குடி மக்கள் இயற்கைத் தீட்டாக கண்ட பெண்ணின் உடலியல் மாற்றங்களை பார்ப் பனியமும் ஆணாதிக்கத்துக்கான முதற்படியாக ஆக்கிக்கொண்டது. கிறிஸ்தவத்திலும் இல்லாத் திலும்கூட பெண்கள் பூசாரிகளாக் மெளல்விகளாக அனுமதிக்கப்படுவதில்லை. \,
ஆனால் கடவுள் வழிபாட்டின் தொடக்க் ଔଷ୍ଟ୍ରିଣ୍ଣ பெண்களே பூசாரிகளாக இருந்துள்ளானர். இந்த மறைந்த வரலாற்று நிகழ்வைக் காட்டும்? விதிவிலக்குகள் உலகில் அங்கங்கே, இன்றும் காணப்படுகின்றன. % 。
தமிழ்நாட்டிலும் ‘காமக்கோட்டம் என அழைக்கப் பட்ட பெண் தெய்வக் கோயில்களில் பெண் பூசாரிகளே இருந்திருக்க வேண்டு ன்று திருச் சிக்கு அருகே திருவானைக் கா அகிலாண்டேஸ்வரி கோவிலில் ಛೀ"೪. ஒரு முறை ஆண் பூசாரி புட்னி 8 மீது சுற்றிக் கொண்டு பெண் ே பூசனை செய்யும் வழக்கம் உள்ளது
భ% {}ఖ్య நெல்லை காந்திமதி, காஞ்சிகாமாட்சி, மீனாட்சி, திருக்கருவாவூர் கர்ப்புரட்சாம்பிகை, கரூர் ஆநிரை நாயகி போன்ற கோவில்கள் ஒரு காலத்தில் காரைக் கோட்டங்களாகவே இருந்திருக்க வேண்டும். பின்னர் அரசுகள் நிலைபெற்றபின்னர் இவை ஆண் துணையோடு சேர்க்கப்பட்டு இவற்றின் கோவில்கள் சாமி கோவில்களாக மாற்றப்பட்டன.
தமிழ்நாட்டின் பழைய தாய்த்தெய்வங்களில் ஒன்றான மதுரை மீனாட் சரி இன்றும் திருமணத்துக்கு முன்பே அரசியாக முடி சூட்டி செங்கோல்தாங்கி அரசியல் கடமைகளை நிறைவேற்றுவதைப் பார்க்கிறோம். அவள் கணவன் அரசன் ஆகாமல் கோமகனாகவே (Duke) அமைகின்றான். இந்தத் திருவிழாவின் பொருளைச் சகிக்க முடியாத ஆணாதிக்கம்
( ஒலை 40
-G18) கொண்ட பார்ப்பனியம் மீனாட்சியிடமிருந்து அரசையும் செங்கோலையும் பறித்து சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் செய்வதாக ஒரு திருவிழாவை ஆவணி மாதத்தில் நடத்துகிறது. ஆனால் அந்த திருவிழாவை மீனாட்சி பட்டாபிஷேகத் திருவிழாவைப் போல மக்கள் பெரிதாக கருதுவதும் இல்லை. ஏற்றுக் கொள்வதுமில்லை.
శజ్ఞ్క' } } } . . a
- தாய்த்தெய்வ வழிபாட்டின் எச்சமாகக் காணப்படுவது ம்மனின் பட்டாபிஷேகத்
ళ భశళ్ల
* நோக்கி யாசோை கண்ணனை நீர
,
9
ஜ்
ஆகும். விறல் என்ற
ால் முகம். விறலி என்றால் முகபாவங்கள் மாற்றி நடிக்கிற நடனமாடுகிற பெண்ணைக் குறிக்கும். அன்று கூத்தாடிய பெண்கள் அன்றைய விளக் கொளியில் நாட்டியமாடினர். அவர்களது முகம் துணியாகத் தெரிய மஞ்சள் அரைத்து முகத்தில் பூசிக் கொண்டனர். விறலியர் மட்டும் பூசிய மஞ்சளை காலப்போக்கில் குடும்பப் பெண்களும் பூசத் தொடங்கினர். விறலியரை மதியாத நம் சமூகம் விறலி மஞ்சளை மட்டும் கொண்டாடத் துவங்கியது. இன்றும் கொண்டாடி வருகிறது. விறலிமலை என்பது தான் இன்று விராலிமலை என்று ஆனது என்பது கூடுதல் செய்தியாகும்.
-C தை : 2007
Page 51
கொழும்புத் தமிழ் ‘ஓலை எமது நல்வா
தரமான ஆய்வுக் கட்டுரைகள் சிறு தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் டெ என்பவற்றைத் தாங்கி இலக்கிய
வெற்றிநடைபோடும் ‘ஓலை’க்
தரமான தங்கநகைகை நாடவேண்டிய
No: 10, Station Road, JA-ELA Tel:(11223)6O1
ܢ
ழ்ச் சங்க ஏடான
’க்கு ழ்த்துக்கள்!
கதைகள், கவிதைகள் உள்பட ரியார்களைப் பற்றிய விளக்கங்கள் பத்தின் அறிவுக் களஞ்சியமாக
கு எமது நல்வாழ்த்துக்கள்
$可剧A
Jewellery
ளப் பெற்றுக்கொள்ள
ஒரே இடம்
Page 52
իրիիիիիիի
N NIN
s41, Galle Road, colombe, R36339
ting..... how to se jevellery ?