கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீ முன்னேஸ்வர வரலாறு

Page 1


Page 2

அன்னைக்குச் சமர்ப்பணம்

Page 3

பூநீ
முன்னேஸ்வர வரலாறு
ஆக்கியோன்
uT. GRaugruDS(566OOT GFfLDT. B. Sc. (cey)
உரிமைப் பதிவு ஆடி, 1968.

Page 4
Tamil First Edition - 2000 copies
THE
HISTORY OF
SRI MUNNESWARAM TEMPLly (SRI MUNNESWARA VARALARU)
AUTHOR
B. Sivaramakrishna Sarma, B.sc. (cey.)
Copy Right. 8th August, 1968.
Printed at
& The Colombo Co-operative Printers' Society Ltd.
COMMERCIAL BUILDINGS, COLOMBO 2.

அணிந்து  ைர
உலகில் நமது இந்து மதம், தனது உற்பத்தியை நிர்ணயிக்க இயலாத மிகப் புராதனமானதும், மற்ற மதங்களுக்கெல்லாம் வழி காட்டியாயமைந்ததும், அதன் தோட்பாடுகளை ஆராய ஆரம் பிக்கும் பொழுதெல்லாம் புதுப்புது விஷயங்களை உணர்த்துவதும், அதன் நியதிப்படி ஒழுகுவோர்க்குப் பேரானந்தப் பெருவாழ் வளிப்பதும்ாக அமைந்த பழம் பெரும் புனித மதமாகும்.
அக்கோட்பாடுகளைப் பின்பற்ற அஸ்திவாரமாக அநேக அற்புத கேஷத்திரங்களில் பற்பல நாமங்களுடன் ஆண்டவன் எழுந்தருளி ஆன்மகோடிகளுக்கு காட்சி தந்து திருவருள் பாலித்து வருவது யாவருமறிந்த உண்மை.
அவற்றில் சுயம்புவாகவும், அவை தோன்றிய நாட்களறிய இயலாதவையாயும், பல, பேரரசர்களால் பிரதிஷ டை செய்த புண்ணிய கூேடித்திரங்களாகவும் உள.
அங்ங்ணமமைந்த ஸ்தலங்களில், தகதிண கைலாச புராணத்தில் விரிவாய் வியந்து கூறப் பெறுவதும், சிவபுராணத்து சனத் குமார சம்ஹிதையில் அலகேஸ்வரமெனவும், அறுபத்துநான்கு சக்தி பீடங் களுள் ஒன்றெனப்படுவதும், வியா சாதி முனியுங்கவர்களால் அர்ச்சிக்கப் பெற்றதும், பல இலங்காதிபர், மற்றும் பல நாட்டுப் பேரரசர்கள் வழிபாடு செய்து பெரும் பேறு பெற்றதும், ஆலயத்தின் பொறுப்பில் நாணயம் (“குறட்டுக்கா சு) வெளியிட்ட பெருமைகளை யெல்லாம் தன்னகத்தே கொண்ட (குபேரப் பட்டணமான இலங்கையில்) பூரீ வடிவாம்பிகா சமேத முன்னநாத சுவாமியின் கூேடித்திர வரலாற்றினை பல அறிஞர்கள் தனித்தனியாக வெளியிட்டவைகளை ஆராய்ந்தும், கர்ணபரம்பரையாக வழங்கி வருவனவற்றை யெல்லாம் ஒன்று சேர்த் தும், நூல் நிலையங்கள், தொல் பொருட்காட்சிசாலை போன்ற இடங் களுக்குச் சென்று பொருட்செலவு, தேகப் பிரயாசை போன்றவற்றை யெல்லாம் பொருட்படுத்தாது, இக் கோயிலின் சரித்திரப் பின்னணி, புராண இதிகாசத் தொடர்புகள், ஆகமச் சிறு விளக்கங்கள், நித்திய, நைமித்திய விசேஷ உற்சவாதிகள் மற்றும் விழாக்கள் ஆகியவற்றை யெல்லாம் சிறப்புறச் சேர்த்து ‘பூரீ முன்னேஸ்வர வரலாறு' என்னும் இந்நுலை அன்பர் பா. சிவராமகிருஷ்ண சர்மா, B. Sc. (Cey) அவர்கள் வெளியிடுகின்றர்.
அவரை ஆஸ்த்திகப் பொதுமக்கள் அன்புடன் ஆதரிக்கவும் மென் மேலும் இத்திருப்பணியில் ஈடுபாடு கொள்ள ஆயுரா ரோக்கிய திடகாத்திரமருள எல்லாம் வல்ல பூரீ வடிவாம்பிகா சமேத முன்னநாத ஸ்வாமியைப் பிரார்த்திக்கிருேம்.
- சி. பாலசுப்பிரமண்யக் குருக்கள், தேவஸ்தான ஆதீன பரிபாலனகர்த்தா.
பூரீ முன்னேஸ்வர கார்ய கலாமந்த்ரம்
முன்னேஸ்வரம் கீலக வருஷம் ஆனி மாதம் 26 ந் திகதி.

Page 5
சிறப்புப் பாயிரம்
கி. வா. ஜகந்நாதன் கல்யாண நகர் ''காந்த மலை’’ சென்னை-28,
66968
நலங்கொளும் வளஞ்சால் இலங்கையில்
சைவம் நண்ணிய நிலை மிகப் பெரிதாம், தலங்களும் பல வாம் அன்பர்கள் பூசை
சார்தரு விழாவெடுத் தேத்தி வலங்கொளும் மரபும் உண்டிங்கே
அங்ஙன் மாட்சிசால் தலமென விளங்கும் கலங்கலில் தானம் திருமுன் னிச்சரமாம் கவின் பெய ருறுபதி யன்ருே? ப்ன்னெடு நாளா மன்னரும் தெய்வப்
பாங்குடைப் பெரியரும் போற்ற உன்னிய அன்பர் தம் குறை போக்கி உயரகுள் செய்முன்னை நாதன் எந்நிலை யவரும் கண்டபின் மறவா எழிலுடை வடிவுடை யன்னை மன்னிய கோயில் பெருமையிற் சிறந்து
மாட்சி பெற் றுயர்வது வியப்போ?
அத்தகு தலத்தின் பெருமையை யறிந்தே
அதற் குறு சரித்திரம் ஆய்ந்து வித்தகர் சொல்லும் செய்தியைத் தேர்ந்து
விளங்குறு பூசையும் விழாவும் ஒத்தியல் கின்ற முறைகளை யறிந்திங்
கொருங்கிய அன்பினுல் இந்தப் புத்தகம் முன்னேச் சுரவர லாரும்
பொற்புறு பெயருடன் அளித்தான்
பண்புடை இளைஞன் தமிழ் வட மொழியும்
பரங்குறு மாங்கில மொழியும் நண்புறத் தேர்ந்தான் பலபல நூலும்
நாடிநன் குணர்ந்து தே டியபின் எண் பெறத் தொகுத்திந் நூலினைச் செய்தான்
இயல்புறு சிவராம கிருஷ்ணன் தண் பெறு மருளால் இந்த நூல்
நன்கு சமைத்தனன் யாவரும் புகழ ஆலயச்சிறப்பும் பூசையின் நலனும்
அமைவிழாக் களிலுறை கருத்தும் சீலமும் சைவ சமயத்தின் திறமும்
செவ்வனே புலப்பட எழுதிக் கோலமுற் றிடுமித்தலத்தினைக் குறுகிக்
கும்பிட வேண்டு மென் முவல் சாலவுற் றிடவே செய்தனன் நீடு
தழைத்துளம் ஓங்க வாழியவே!
கி. வா. ஜகந்நாதன்,

சிறப்பு  ைர
SRI. K. RAMACHANDRA
(Managing Editor) RELIGIOUS DIGEST" Jayanthipura, (An Internationn Spiritual Journal) TALANGAMA.
சரித்திரப் பிரசித் திபெற்ற பூஞரீ வடிவாம்பிகா சமேத முன்னேச்சுவர நாதரின் ஆலயத்தைப் பற்றி, பூரீ பா. சிவராம கிருஷ்ண சர்மா அவர்களால், அண்மையில் வரையப் பெற்ற வரலாற்று நூலின் கை யெழுத்துப் பிரதியைப் பார்வையிடும் பாக்கியத்தை தேவியின் திரு வருள் எதிர்பாராத முறையில் எமக்கு அளித்துள்ளது.
இது மிகவும் அருமையான நூல்: படிப்போர் உள்ளத்தில் பக்தி ததும்பும் விதத்தில் வரையப்பட்ட நூல்: வடிவில் சிறிதாய் இருந்த போதிலும், அரும் பெரும் சமய உண்மைகளையும், எவரும் மறுக்க முடியாத நுட்பமான வரலாற்றுக் கருத்துக்களையும், போதிய ஆதாரங் களையும் (Documentary Proots) உள்ளடக்கிய ஆராய்ச்சி நூல். ஒவ்வொரு தமிழனின் இல் லத்திலும் இருக்க வேண்டிய பொக்கிஷம்: அவனது மனைவி மக்கள் படித்துப் பக்தியில் முதிர்ச்சி பெற உதவும்
Bift G). &
இதில் பழைய வரலாற்றுக்களுடன், புதிய சம்பவங்களும், விரிவாய் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக பிலவ ஆண்டில் இந்த ஆலயத்தில் பக்தி சிரத்தையுடன் செய்யப்பட்ட கோடி அர்ச்சனையையும், குரோதி ஆண்டில் நடைபெற்ற மிருத்தியுஞ்ச மகா யாகத்தையும் இங்கு குறிப்பிடலாம்.
திருவிழாக் காலங்களில் ஆலயத்தின் வெளிவீதிகளிலும், சுற்றுப் புறங்களிலும் நடைபெறும், நாட்டுக் கூத்துக்கள், களியாட்டங்கள் பற்றியும், அப்போது பாடப்பெறும் பாடல்களைப் பற்றியும், வைதீக சைவர்களின் மனதில் சிறிது மயக்கமும், வெறுப்புணர்ச்சியும் இருந்து வருவதை யாம் நன்கு அறிவோம். நூலின் இறுதியில், ஆசிரியர் இவைகள் தோன்றிய விதத்தைப் பற்றித் தந்துள்ள விளக்கம் பொருத் த மாய் அமைந்துள்ளது. இந்தப் புராதன ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அம்பாளுக்கு சுவர்ணபூமி, மரகதத் தீவு எனப் புகழப்படும் இந்த நாட்டின் மக்கள் சகலரும், சாதி மத வித்தியாசம் எதுவுமின்றி, குழந்தைகள் என்ற உண்மையை யாம் ஒருபோதும் மறக்கவே கூடாது. அது மாத்திர மின்றி, பதினரும் நூற்ருண்டில் போர்த்துக்கீசர் செய்த நாசவேலைகளை இந்துக்களாகிய நாம் மறக்கக் கூடிய முறையில், இந்த ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்த கீர்த்தி யூரீ ராஜசிங்க மன்னனின் ( Kotte: 1747 - 1782) திருப் பணிப் புண்ணியத்தையும் நாம் சதா நினைவில் வைத்திருக்க வேண்டு மல்லவோ? “ “ G335 TG) Gav SF fi G35 SF uu ”” ( Message Through Cookoo ) என்ற சிங்கள இலக்கியத்தையும் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச் சிக் குரிய விஷயம்.
இந் நூலாசிரியர் சின்னஞ்சிறு வயதிலிருந்தே அம்பாள் பக்தியில் திழைத்தவர். 'கருவிலேயே திருவுடையார்' எனக் கூறுதல் கூட
iii

Page 6
மிகையாகாது. பத்து வருஷங்களுக்கு மேலாக, அவர் ‘வீரகேசரி', 'தினகரன்'', 'பூஞரீ லங்கா’ முதலாய பத்திரிகைகளில் வெளியிட்ட கட்டுரைகள் மூலம், தமிழ் பேசும், சைவம் பேணும், நல்லுகம், அவரை நன்கு அறிந்துள்ளது. தேவியின் சுடாட்சம் முன் னின்று, அவர் மேலும், மேலும், இதுபோன்ற உயர்ந்த சமயத் தொண்டில் சிறப் புற்று வாழுமாறு பிரார்த்திக்கின் ருேம். -
- க. இராமச்சந்திரன்
''பூரீ ரமண மந்திரம்'
ஜயந்திபுரம் தலங்கமா. கீலக ளு வைகாசி மீ" 26-ந் தேதி, கார்த்திகை நட்சத்திரம்
iv

ஆசியு ரை
K. KAILASANATHA KURUKKAL
M.A. (Cey), PH. D. (Poona) No. 3, North End, Lecturer in Sanskrit University Park, University of Ceylon. Peradeniya.
* பூரீ முன்னேஸ்வர வரலாறு’ என்று பெயர் கொண்டு பூரீ முன் னேஸ்வரத் திருத்தலத்தின் பெருமை கூறும் இந்நூல் வெளிவருவது கண்டு பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
எல்லாம் வல்ல இறைவன், எங்கும் நிறைந்திருப்பினும், திருக் கோயிலில் விசேட சாந்நித்தியம் பெற்று, எழுந்தருளி, எமக்குப் பேரருள் புரிகிறன். அவ்வாறு எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் தாய் நாட்டிலும், சேய் நாட்டிலும் பலப்பல உள. அவைப்பற்றித் தனித்தனி வரலாற்று நூல்கள் உள. தென் பாரத்தின் திருக்கோயில் கள் சிறப்புக் கூறும் தல புராணங்கள், தமிழ் இலக்கியத்தை வளம் படுத்துகின்றன. இந்நூல்கள் அவ்வத்தலத்தில் கோயில் கொண்ட ருளும் பெருமானின் பல்வகைப் பெருமைகளை எடுத்துரைப்பன.
ஈழவளநாட்டில் எல்லாத் திருத்தலங்களுக்கும் முன்னரே தோன்றி, விளங்கி வருதல் பற்றிச் சிறப்புப்பெயர் பெற்ற, முன்னையம்பதியில், வடிவழகியம்பிகையுடன் முன்னைநாதர் விசேட சாந்நித்தியம் பெற்று, ஆன்மகோடிகளுக்கு அருள்பாலித்து, வருவதை எடுத்துக் கூறுவதைப் பொருளாகக் கொண்டு, இந்நூல் உருவாகியுள்ளது. முன்னே சுரத் திருத்தலத்தைப் பற்றிய விவரங்களையெல்லாம் தொகுத்து, வகுத்துச் சீராக அமைத்து விளங்கத் தருகின்றது, இந் நூல். இறைவன் மீதுள்ள பக்தியை வளர்க்க, இது பெரிதும் உதவ வல்லது. இதிகாச புராணங்கள், வேதாகமங்கள், பாரம்பரிய வர லாறுகள் முதலியவற்றை ஆதாரமாகக் கொண்டு, செவ்விதாக உரு வாக்கப்பட்டது. ஏனைய தலங்களைக் காட்டிலும் வேறுபடும் சிறப்பான அம்சங்களைக் கொண்டு விளங்கும் இத் திருத்தலம் பற்றிய, பல்வேறு விவரங்களையும் திரட்டித் தருவதனல், சைவ மக்கள் இதைப் படித்துப் பெரும் பயனடைவர்.
இந்நூலை ஆக்கிய, திரு. பா. சிவராமகிருஷ்ண சர்மா முன்னையம் பதியை உறைவிடமாகக் கொண்டு, திருக்கோவிற் சூழலிலேயே வாழ் ந்து வருபவர். பல்கலைக் கழகம் புகுந்து விஞ்ஞானத்துறையில் படித்து B. Sc. பட்டம் பெற்றவர். எனினும் தமிழ்க் கல்வியில் தனிப் பட்ட ஈடுபாடுடையவர். ஆரம்பக் கல்வி பயிலுங் காலம் முதல் தமிழில் கட்டுரைகளும் பேச்சுக்களும் நிகழ்த்துவதில் ஆற்றல் பெருக் கியவர். அதில் இன்பங் கண்டவர். தமிழோடு தொடர்புபடாத, அக் கால விஞ்ஞானக் கல்வி கற்ற இவ்விஞ்ஞானப் பட்டதாரி, தமிழ்க் கல்வியை வளர்க்கும் சூழ்நிலை ஏனைய இடங்களில் போலமையாத, சிங்கள மொழி பயிலும் சிலாபப் பகுதியில், தமிழறிவு பெருக்கி, சமயம், இலக்கியம் ஆகியவை பற்றிய கட்டுரைகள், அம்மொழியில் எழுதி வந்தமை பெரும் பாராட்டுக்குரியது. கட்டுரைகள் எழுதும் ஆற்றல், தனி நூலாக்கும் வன்மையை அவருக்கு ஆக்கித் தந்துள்ளது.
V

Page 7
இறையருளையடிப்படையாகக் கொண்ட மொழியை, முறையாகக் கையாளின், திறமை பெருகுவதில் வியப்பு யாது தான் உளது? இத் திறமையின் விளைவே இந்நூல்.
இந்நூலைச் சைவ உலகிற்கு அறிமுகஞ் செய்து வைப்பதில் பெருமை கொள்ளுகின்றேன். இந்நூலை முதல் நூலாகக் கொண்டு இன்னும் பல நூல்கள் எழுதியுதவுவதற்குத் தமிழ்ப் புலமையும், ஆராய்ச்சி வன்மையும், அயராத ஊக்கமும், நோயற்ற நீண்ட ஆயுளும் மென் மேலும் பெருகும் வண்ணம் எம்மன்னை வடிவழகியின் திருவருளைத் துணைகொண்டு ஆசி கூறுகிறேன்.
- கா. கைலாசநாதக் குருக்கள்
சமஸ்கிருதத் துறை இலங்கைப் பல்கலைக் கழகம்,
பேராதனை. 30 - 6, 1 9 6 8.
V1

மு ன் னு  ைர
பண்டைய மக்கள் ஆரம்பத்தில் இயற்கையை வழிபட்டும், புறக் கண்களுக்குப் புலப்படாத அருவங்களை வழிபட்டும் வந்தார்கள். இதனையடுத்துத் தம் குறிக்கோளை அடைவதற்கும், மனதை ஒரு முகப்படுத்துவதற்கும் உருவங்களை உருவாக்கி வழிபட்டார்கள். இயற் கையின் அழிவுகளிலிருந்து காப்பாற்ற, இவ்வுருவங்களை மரநிழலில் வைத்தும், மேடை கட்டியும், மரக்கொட்டில் அமைத்தும், பெரிய பாறைகள், மலைகள் போன்றவற்றைக் குடைந்து கோயில்கள் அமைத் தும், சுட்ட களிமண் எனப்படும் செங்கற்களைக் கொண்டு கோயில்கள் அமைத்தும், கருங்கற்களால் வானளாவிய கோபுரங்களைக் கொண்ட கோயில்களைக் கட்டியும் நெடுங்காலம் நிலையாக நிற்கவல்ல கோயில் களைக் கட்டினர் என்பது, கோயில் கட்டும் கலை தோன்றி, வளர்ந்த வரலாறு கூறும் உண்மை.
மரநிழலைத் தஞ்சமாகக் கொண்டு இறைவனின் திருவுரு இருந்த தன, கோயில்களில் உள்ள தொன்மையான "ஸ்தல விருட்சங்கள்’
நினைவூட்டி நிற்கின்றன.
முன்னேஸ்வரத்தில் முதன்முதலாக எப்போது கோயில் தோன்றி யது? என்ற கேள்விக்கு எவருமே விடை கூற முடியாது, முன்பு முன்னேஸ்வரத்தில் மிகப் பெரியதொரு கோயில் இருந்த தென்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இன்று இருக்கும் கோயிலை விட மிகப் பெரி தாகவும், ஈழநாட்டு மன்னர்களும், பிறநாட்டு மன்னர்களும் வந்து, வழிபட்ட ஆலயமாகவும், அவர்களுடைய ஆதரவு பெற்ற கோயி லாகவும் விளங்கியிருந்தது.
பழம் பெருமைகள் மண்டிக் கிடக்கும் இப்புனித கூேடித்திரத்தைப் பற்றி, "இதுவரை ஆதாரபூர்வமானதொரு நூலாவது எழுதப்பட வில்லையே' என்ற குறையை நீக்கும்படி, நண்பர்கள் பலர், அவ்வப் போது என்னைக் கட்டாயப் படுத்தி வந்தனர். அவர்களுடைய வேண்டுகோளின் பிரதிபலிப்பே இந்நூல்,
இந்நூலுக்குத் தேவையான புகைப்படங்களை வெளியிட அனுமதி தந்து, அறுபதுக்கும் அதிகமான ஒலைச்சுவடிகளையும், மற்றும் ஏட்டுப் பிரதிகளையும், ஆதாரங்களையும், நல்கி அவற்றையும் வெளியிட ஊக்கப் படுத்திய தேவஸ்தானத்தாருக்கு எனது நன்றி.
இந்நூலில், தேவையான மூலப் பகுதிகளையும், அவற்றின் மொழிப் பெயர்ப்ன் பயும் வெளியிட அனுமதி தந்த , ரோயல் ஏசியாடிக் சபை' us 6T (o, ö (g, Li ( Royal Asiatic Socity, Ceylon Branch ) Frii. போல் பீரிஸ் ( Sir. Paul. E. Pieris ) எழு தி ய வ ற்  ைற ப் பிரசுரிக்க அனுமதி தந்த டி. ஈ. பி. தெரணியகல (D. E. P. Deraniyagala ) அவர்களுக்கும், * கத்தோலிக்க Sfô6v)nT l_u ub ʼ ( Catholic Chilaw) என்ற ஆங்கில நூலில் இருந்து தேவையானவற்றை பிர சுரிக்கும் உரிமையை நல்கிய ஈ. ஏ. பர்னந்தோ ( B, A, Fernando) அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
wii

Page 8
இந்நூலுக்கு பூரீமுகம் தந்தருளிய பூரீ பூரீ பூரீருங்கேரி ஜகத்குரு மகா சன்னிதானம், சிருங்கேரி மாத் சாரதா பீடாதிபதி அவர்களுக்கு உளங்கனிந்த நன்றி.
இந்நூலின் பிரதியைப் பார்வையிட்டு, அணிந்துரை வரைந்த பூரீ முன்னேஸ்வரம் தேவஸ்தான ஆதீன பரிபாலன தர்மகர்த்தா, பிரம்ம பூg பாலசுப்பிரமணியக் குருக்களுக்கும், சிறப்புப் பாயிரம் பாடிப் பெருமைப் படுத்திய "கலைமகள்' ஆசிரியர் வித்துவான் கி. வா. ஜகந்நாதன், M. A. அவர்களுக்கும், சிறப்புரை எழுதிக் கெளரவப்படுத்திய ‘Religions Digest ஆசிரியர் கே. இராமச் சந்திரா அவர்களுக்கும், ஆசியுரை கூறி வாழ்த்திய இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கா. கைலாசநாதக் குருக்கள், M. A. Ph. D, அவர்களுக்கும் எனது நன்றி.
இந்நூல் உருவாகும் வேளை, எனது தகப்பனுர் பிரம்ம பூரீ கி. பால சுப்பிரமணிய ஐயர் எனக்குத் தோன்றிய சந்தேகங்களைத் தெளிய வைத்து உதவினர். மணி ஐயர் கோயிலில் உள்ள ஏட்டுப் பிரதிகளைத் தந்து உதவினுர்,
மிகக் குறுகிய கால எல்லைக்குள் இந்நூல் உருவாக்கப்பட்டதால் பல நிகழ்ச்சிகள் விடுபட்டிருக்கக் கூடும். அவற்றை யாராவது எடுத்து உதவினல், அடுத்த பதிப்பில் அவற்றையும் சேர்த்து வெளியிட லாம்.
இந்நூலில் உள்ள நவராத்திரி என்ற கட்டுரை 'தினகரனிலும் (6-10-64), "முன்னேஸ்வரத்தில் நவராத்திரி என்ற கட்டுரை "பூரீ லங்காவிலும் (10-10-64), "மகா யாகம்’ என்ற கட்டுரை "ஈழ நாட்டிலும் (8-4-65), தீபாவளி’ என்ற கட்டுரை ‘வீரகேசரி’யிலும் (1-11-67)வெளிவந்தவை.
இந்நூல் சிங்கள மொழியிலும் வெளியிடப்பட வேண்டுமென்று பலர் வேண்டுவதால், அம் மொழியிலும் இந்நூல் விரைவில் வெளி வரவிருக்கின்றது.
- பா. சிவராமகிருஷ்ண சர்மா
144, முன்னேஸ்வரம்,
சிலாபம். 22-7-1968
viii

2
I 0.
1.
பொருளடக் கம்
பூg முகம்
அணிந்துரை
சிறப்புப்பாயிரம்
சிறப்புரை
ஆசியுரை
முன்னுரை கோயிலின் சூழலும் எல்லைகளும்
இதிகாச, புராண வரலாறுகளும் கர்ணபரம்பரைக் கதை
களும்
சரித்திரப் பின்னணி
முன்னேஸ்வரக் கோயிலின் சிறப்பு அம்சங்கள்
பூஜைகளும் விழாக்களும்
உற்சவங்கள் முன்னேஸ்வரம் கோயிலில் நடைபெற்ற முக்கிய விழாக்
SST மகா கும்பாபிஷேகம் கோயிலும் சமூகமும்
கோயிலும் இசையும் அனுபந்தங்கள்
iii
viii
12
15
2O
2.
24.
43
43
56

Page 9
श्री श्री श्रृंगेरी जगद्गुरु महासंस्थानम, श्रृंगेरी मठ शारदापीठम पो. श्रृंगेरी - कडूर्; (मैसूर् स्टेट् ) Sri Sri Sringeri Jagadguru Micahcasca msthcarncam, sringeri Math Sharada peetham P. O. : SRINGERI - KADUR (Mysore State
office of the private secretar to ! col ress of it E JA GAYOG U RUM 5 r | S H A N K A RA C H A R Y A of srt s R I N G E R I M u T T
м: Lickshrwirwcraucana Sastrų Prvote Secretoru
Campo : Sringeri,
Ref. No,..., , , , , ... . . . . . . . . P' 27th May, 1968.
Blee sings of His Holiness Jagadguru Senkracharya Mahaswandigal of Sri Sringeri Sarada Peetha, Srirgeri, Mysore State. Maa desirea for peace. To attain that peace, he has
to have faith in God and worship Hia regularly. Ordinarily, a naa requires a Marthi (sa Idol) to be borore him to enable hin
to concentrate and worship God. Teaples serve this purpose to
a very great extent.
His Moliness was glad ho know that a book oa one such
Teaple titled A Study of Sri Munswara Tople", with tea Chapters containing all research articles has been written and is in prat.
His Holiness is pleased to convey His Blessince that
this book may receive the prostinence it deserves and that it reaches the home of overy Asthika for his benefit.
Asir Mantrakabaatan and Sri Sarada Chandremouliswara
Pra sadans are herewith sert
By Order of His holines,
N ሥ \چانس -e-A- چہرہ علی سحا (N.Lakshmrdinaraya na Sastry)
Private Secretary.

அத்தியாயம் ஒன்று
கோயிலின் சூழலும், எல்லைகளும்
சுவர்ணபூமி, புண்ணிய பூமி, மரகதத் தீவு, சிங்களத் தீவு எனப் பலவாறு அழைக்கப்படும் ஈழநாட்டின் கண்ணே, இறைவன் எழுந் தருளியுள்ள பழம் பெருமைகள் மண்டிக் கிடக்கும் சிவஸ்தலங் களுள், முதன்மை வகிப்பது முன்னேஸ்வர கேஷத்திரமாகும்.
எங்கும் நிறைந்த பரம்பொருளை ஆன்மகோடிகள் வழிபட்டு உய்வதன் பொருட்டு, விசேட சான்னித்தியம் பெற்று விளங்கும், இஷ்ட சித்திப்பிரசாத அனுக்கிரக, பூரீ வடிவாம்பிகா சமேத முன்னை நாதப் பெருமான், திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் இம் முன்னேஸ்வர கூேடித்திரம், தென் இலங்கையில், சிலாப நகருக்குக் கிழக்குத் திசையில் ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ளது.
கற்பக விருட்ச மெனப்படும், தென்னை மரங்கள் ஏராளமாக வளரும் இப்பகுதியில், நெல் வயல்களும், தம் இரு போக விளைச்சலை, உவந்தளித்து, இம் மாவட்டத்தின் செழுமையை எல்லோருக்கும் பறை சாற்றுகின்றன. தண்ணீரைத் தேக்கி, தேவையான வேளை களில், நீரை நல்கும் வண்ணம், கோயிலின் முன்னுல் பல மைல்கள் பரந்து கிடக்கும் குளங்கள், அமைக்கப்பட்டுள்ளன.
இயற்கைக் காட்சிகளையும், பல் வண்ணப் புள்ளினங்களையும், பல் வேறு விலங்கினங்களையும் கொண்ட இப்பகுதி, பரவலான பருவ மழையையும் பெற்று வருகின்றது. அதிக மாற்றமில்லாத, ஒரே சீரான சீதோஷ்ணம், காற்ருேட்டம், செழுமையான மண்வளம் அடர்த்தியான காடு போன்ற பண்புகளைக் கொண்டும் விளங்கு கின்றது, இப்பகுதி.
முன்னேஸ்வரம் கோயிலை மையமாகக் கொண்டே இத்துணைச் சிறப்புக் கொண்ட இச்சிற்றுார், அமையப் பெற்றுள்ளது.

Page 10
பூரீ சிவபுராணத்தில் சனத்குமார சம்ஹிதையில் அலகேஸ்வரம் என்ற பெயரில் குறிப்பிடப்படுகின்றதும், அறுபத்து நான்கு பூரீ தேவி பீடங்களில் ஒன்ருக விளங்குவதும், இம் முன்னேஸ்வர கூேடித்திர மேயாகும். 1, 2, 3
ஈழநாட்டின் முக்கியமான கோயில்களைப் பற்றிய விளக்கங் களைக் கூறும், 'கோகில சந்தே சய’ (குயில் விடு தூது) என்னும் சிங்கள இலக்கிய நூல், இலங்கையின் தென் பகுதியாகிய மாத்தறையில் இருந்து, மேற்குக் கரையோரப் பகுதியினூடாக யாழ்ப்பாணத்தில் உள்ள கோயில்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், முன்னேஸ்வரம் கோயில், மிகவும் முக்கியமான தொன்றென விளம்புகின்றது. 4
முன்னேஸ்வரம் என்னும் பெயர் மற்றைய ஈஸ்வரங்களுக்கு முன்பே, இக்கோயில் தோன்றிய தென்பதைத் தெரிவிக்கின்றது. 5
பெரிய கோயிலெனப்படும் முன்னை நாதர் கோயிலைச் சுற்றிப் பல சிறிய கோயில்கள், அமையப் பெற்றுள்ளன. கோயிலின் தென் கிழக்குத் திசையில், வேட்டைத் திருமடமெனப்படும் விநாயகர் ஆலயமும், கோயிலின் மூன்ரும் வீதியின் வடமேற்கு மூலையில், ஐயனுர் கோயிலும், தேரோடும் வீதியின் வடக்குத் திசையில், காளி கோயிலும், கோயிலின் புறத்தே, தென் திசையில் களத்துப் பிள்ளை யார்’ என்று அழைக்கப்படும் விநாயகர் ஆலயமும், இச் சிற்றுாரின் ஆத்மீக வாழ்வுக்கு எழில் ஊட்டி விளங்குகின்றன.
இங்கு கூறப்பட்டுள்ள, சிறிய கோயில்களுள், வேட்டைத் திருமடமெனப்படும் விநாயகர் ஆலயத்தில், முன்னைநாதர் கோயி லில் பூஜைகள் நடாத்தும் பிராமணக் குருமாரே, ஒரு கால நித்தியப் பூஜையினை நடாத்தி வருகின்றனர். காளி கோயிலில், பரம்பரையாகப் பணியாற்றி வரும் பூசாரிகளும், ஐயனர் கோயிலில், சிங்களக் கப்பு ராளையும், பூஜைகளை நடாத்தி வருகின்றனர். ஊரின் புறத்தேயுள்ள, விநாயகர் ஆலயத்தில் நித்தியப் பூஜைகள் நடைபெறுவதில்லை. ஆனல் இங்கு, விரும்பிய யாவரும், பூஜைகள் செய்வதற்குத் தடையொன்று மில்லை. ஊரில், களம் பிரித்த பின், புது நெல்லைக் கொண்டு தயாரித்த உணவுப் பண்டங்களை நிவேதித்து, கிராமத்தவர்கள் பூஜை நடாத்து வார்கள்."
அறுபத்து நான்கு கிராமங்களைக் கொண்ட முன்னேஸ்வரக் கோயிலுக்குச் சொந்தமான காணிகளின் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் கிழக்குத்திக்கில் செஞனம் (Xenanam) என்ற கிராமமும், மேற்குப்
1. முன்னேஸ்வரம் மகா கும்பாபிஷேக மலர் (1963) முகவுரை 2. பூg வடிவாம்பிகா சமேத முன்னநாத சுவாமி கோடியர்ச்சனை விஞ்ஞா
* பனம் (1961) பக்கம் 4, 3. சைவத் திருக்கோயிற் கிரியை நெறி - கா. கைலாசநாதக் குருக்கள்
பக்கம் X. 4. கோகில சந்தேசய. 5. The Ancient Pagoda of Munucarao - de Queyros, page 427.
2

புறத்தில் பிரசித்தி பெற்றதோர் ஆல மரமும், வட திசையில் குசலை என்ற கிராமமும், தென் திசையில் சைரதலோ ( Syratalo) வாவியுமாக, அமைவு பெற்றிருந்தன. 6
'கலிகால சர்வக்ஞ பண்டிதன்" என்ற பட்டத்தைக் கொண்ட ஒன்பதாம் பராக்கிரமபாகு (கி.பி. 1509-1528) என்ற மன்னன் இக்கோயிலுக்கு மானியமாகச் சில கிராமங்களை அளித்து, அதனை உறுதிப்படுத்தும் வகையில் செப்புப் பட்டயமும், எழுதிக் கொடுத் தான். 30 அதில் கூறியுள்ளதற்கிணங்க, இக் கோயிலுக்குரிய நிலப் பரப்பு, வடதிசையில் முன்னேஸ்வரத்துள் பாயும் நீரோட்டத்தையும், தென் புறத்தில் மாதம் பை என்னும் ஊரில் நாட்டப்பட்டுள்ள எல்லைக் கற்களையும், மேற்குத் திக்கில் ‘மான மான் தொட்ட’ என்ற நீர்த் துறையையும் எல்லையாகக் கொண்டிருந்தது. 31
அறுபத்திரண்டு கிராமங்களையும், 7,7A அதன் பின் அறுபத்தி ஆறு கிராமங்களையும், கொண்டிருந்த இக் கோயில், போர்த்துக்கேயர் காலத்தில், நூற்றி ஆறு கிராமங்களைக் கொண்டிருந்தது. 8 ஆனல் இன்று இந்நிலப்பரப்பு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.
6. The Ceylon Littoral 1593 - P. E. Pieris Litt.D. (Cantab) page 4. 30. The Cullayamsa - II Wilhelm Geiger (1930) page XXIV. 31. செப்புப் பட்டயம் - முன்னேஸ்வரம் கோயில் கோடியர்ச்சனை மலர்
பக்கம் 12. 7. Ceylon - The Portuguese Era Vol I. P. E. Pieris, Chapter IX, page 99ff 7 A. bid Vol. II page 37.
8. Catholic Chilaw - E. A. Fernando page 10 (see Appendix)

Page 11
அத்தியாயம் இரண்டு
இதிகாச புராண வரலாறுகளும், கர்ணபரம்பரைக்
கதைகளும்
முன்னேஸ்வரம் கோயில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களுடன் தொடர்புடைய தென்பதை தகழிண கைலாச மகாத்மியம் கூறுவதிலிருந்து அறியலாம்.
இராமாயணம் என்ற இதிகாசத்தின் நாயகனன இராமபிரான், இலங்கைக்கு வந்து இராவணனைச் சம்ஹாரம் செய்தபோது, அவரை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. அவர் பாரத நாட்டிற்குத் தன் பரிவாரங்களுடன் திரும்பிச் சென்ற பொழுது, முன்னேஸ்வரத்தைக் கடக்க நேர்ந்தது. அப்பொழுது, அவரைப் பீடித்திருந்த பிரம்ம ஹத்தி தோஷம், அகன்று விட்டதை உணர்ந்து, இந்தப் புண்ணிய ஸ்தலத்தின் மகிமையை வியந்து, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடாத்தினர் என தகூFண கைலாச மகாத்மியம் கூறு கின்றது. 9
இராமபிரான் இராவணனை சம்ஹாரம் செய்யச் சென்ற பொழுது, இந்த ஸ்தலத்தில் வழிபட்டார் எனச் சிலர் கூறுகின்றனர். 10, 11, 12, 13 بر
பாரதக் கதையோடு முன்னேஸ்வரத்திற்கு எவ்விதத் தொடர்பு மில்லா? விட்டாலும், பாரதம் கூறிய வியாசர், முன்னேஸ்வரர் ஆலயத்தில் வழிபட்டதாக தட்சிண கைலாச மாகத்மியம் விரிவாகக் கூறுகின்றது. 14
9. பூரீ தகதிண கைலாச மகாத்மியம். பதினைந்தாம் அத்தியாயம். 10. Sketches of Ceylon History - Sir. P. Arunachalam, page 7. 11. Report on the Census 1901, Vol. I - by Sir. P. Arunachalam, page 7. 12. Ancient Jafna - Mudaliyar C. Rasanayagam C.C.S. (1926) page 83. 13. Ibid. page 185. 14. பூரீ தகSண கைலாச மகாத்மியம் பதினரும் அத்தியாயம்.

கர்ணபரம்பரைக் கதைகள்
முன்னுெருகாலத்தில் செம்படவன் ஒருவன், முன்னேஸ்வரம் கோயிலுக்குச் சில மைல் தொலைவில் மீன் பிடிக்கச் சென்றபொழுது, சிறுவனுெருவன், அழகான சிறுமியொருத்தியுடன் விளையாடிக் கொண் டிருந்தான். செம்படவனைக் கண்ட சிறுவர்கள், உடனே மாயமாக மறைந்து போனுர்கள். - இதைக் கண்ட செம்படவன், வியப்புற்று, மறுநாள், பற்றை மறைவில் ஒளிந்திருந்து, மாயமாக மறைந்து போகும் சிறுவர்களைப் பிடிக்க முயன்ருன். மறுநாள், சிறுமியை மட்டுமே ஒளிந்திருந்து, பிடிப்பதில் வெற்றியடைந்தான், செம்பட வன், சிறுவனே தண்ணிரில் மாயமாக மறைந்து விட்டான். செம்பட வணுல் கைப்பற்றப்பட்ட சிறுமியோ, அதிசயிக்கத்தக்கவாறு, தங்க மயமானதொரு சிறு விக்கிரகமாக மாறிவிட்டாள். இச்செய்தி காட்டுத் தீயைப் போல நாடெங்கினும் உடனே பரவியது.
ஈழநாட்டை அரசாண்ட மன்னன், உண்மையை அறியும் பொருட்டு, குறிப்பிட்ட விக்கிரகத்தைப் போன்ற பல விக்கிரகங் களைச் செய்வித்து, இதனுடன் வைத்து, செம்படவன் கைப்பற்றிய மாய விக்கிரத்தை, அடையாளம் காட்டுமாறு அவனையே பணித்தான். செய்வதறியாது திகைத்த செம்படவன், துயில் கொண்டிருந்த வேளை யில், அவனுடைய கனவில் அம்மன் உருவம் தோன்றி, ‘'நீ அடை யாளம் காட்டும் பொழுது எந்த விக்கிரகத்தின் வலதுகால் சிறிது அசைந்து கொடுக்கின்றதோ, அதுவே அடையாளம் காட்டப்பட வேண்டிய விக்கிரகம்,’’ எனக் கூறியது. மறுநாள் செம்படவன் துல்லியமாகத்தான் கண்டுபிடித்த, மாய விக்கிரகத்தை அடையாளம் காட்டி, முதல் நாளிரவு கண்ட கனவைப் பற்றியும், மன்னனிடம் கூறினுன். இதன் பிறகு, அவ்விக்கிரகத்தை சகல ராஜோ பசாரத் துடன், முன்னேஸ்வரம் கோயிலுக்குக் கொண்டு வந்து வைத்து வழிப் பட்டான், மன்னன்.
அந்த அம்மன் விக்கிரகத்தை இன்னும் கர்ப்பக் கிருகத்தில் வைத்துப் பூஜை செய்வதைக் காணலாம். 15, 16
முன்னேஸ்வரம் கோயிலுக்கு இலங்கையின் அரசர்களில் பலர் நிலபுலன்களை, சர்வமானியமாக அளித்தபோது, யானைகளையும், காலத் துக் காலம் அளித்து வந்தனர். இவை, கோயில் வயல்களில், மாடு கட்டிப் போரடித்தால், மாளாது, யானை கட்டிப் போரடிக்கவும். கோயிலில் இருந்து பல மைல் தொலைவில் விளைந்திருக்கும், பளுவான நெல் மூடைகளைக் களங்களில் இருந்து நெற் களஞ்சியத்திற்கு, யானை பூட்டிய வண்டிகளில் ஏற்றி வரவும், திருவிழாக் காலங்களில், சுவாமி திருவுலாக் காட்சியருளும்போது ஊர்வலமாக வரவும் பயன்
15. The Calcutta Review, Volume XLVII, Number 3. June 1933.
16. முன்னேஸ்வர வந்தாதி அ. வைத்தியலிங்கம் (1924) பக்கம் 3,4,

Page 12
பட்டன. காலப் போக்கில், முக்கியமாக அன்னிய நாட்டாருடைய தாக்குதல் காரணமாக, இக்கோவிலோடு சம்பந்தப்பட்ட யானைகள் பலவிடங்களுக்கும் கவனிப்பாரற்றுப் போயினவாம். 17
அல்லி மகாராணி முத்துச் சலாபத்தில் முத்துக் குளிக்குங் காலங் களில் பூரீ மதுரை மீனுட்சியம்பாளுக்கும், முன்னேஸ்வரம் பூரீ வடி வாம்பிகைக்கும், தனக்குமாக மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொடுத் ததாகவும், "முத்துப் பந்தர்’, ‘முத்துக் கொண்டு’ போன்ற ஊர்ப் பெயர்கள் இவற்றையே உணர்த்துகின்றதென்பர் 18
17. ஈழநாடு முன்னேஸ்வர ஆலய கும்பாபிஷேக மலர். 1-7-63 மல்ர்.
18. பூரீ முன்னேஸ்வர மகா கும்பாபிஷேக மலர். முகவுரை (1963)
6

அத்தியாயம் மூன்று சரித்திரப் பின்னணி குளக்கோட்டரசன் ஆற்றிய பணி
மனு நீதி கண்ட சோழன் வம்சத்தில் சூரிய குலோத்துங்க பூரீ வர ராமதேவ ராசனின் மைந்தனன, குளக்கோட்டு மன்னன், பூg கோணேசர் ஆலயத்தையும், பூரீ முன்னேஸ்வரத்தில் பழம் பெருமை களை இழந்து, அழிவுற்றுச் சிதைந்த நிலையில் இருந்த திருக்கோவிலை யும் சீர்திருத்தித் திருப்பணிகளையெல்லாம் குறைவறச் செய்வித்து மகா கும்பாபிஷேகத்தையும் செய்து முடித்தான். 19, 20
இம்மன்னனுடைய அரிய முயற்சியினுல், இவ்வாலயம் மீண்டும்" பெருங்கீர்த்தியுடனும், மங்காப் புகழுடனும் விளங்கலாயிற்று.
இதற்காக இம் மன்னன் சோழ நாட்டிலிருந்து இக்கோயிலில் பணி புரிவதற்கென பிராமணர், சைவர், செட்டி, வேளாளர், வீர முட்டி சங்கமர்நாதர், கொல்லர், கன்னர், தட்டார், சிற்பர், தச்சர், யாழ்ப்பாடி, எண்ணை வாணிபர், அகம்படியார், முல்லை மடப்பளியார், சங்கு மடப்பளியார், சருகுமடப்பளியார், கைக்கோளர், சேணியர், விறகு வெட்டி, தூதர், நாவிதர், வண்ணுர், திமிலர், வலைஞர், குயவர், மறவர், சாணர், கத்திக்காரர் போன்ற இன்றியமையாத தொழி லாளர்களைத் திறமையுள்ள நிபுணர்களின் உதவியுடன் தேர்ந்தெடுத்து அவர்களை முன்னேஸ்வர நகரின் சுற்றுப் புறங்களில் குடியேற்றிக் கோயிலின் நித்திய நைமித்தியக் கிரியைகள், எவ்வித குறைவுகளு மின்றி நடைபெற வழிவகைகளைச் செய்தான். இதற்காக தனியுண் ணுப் பூபாலன் என்பவன் அதிகாரியாக நியமிக்கப்பட்டான். இவ னுடைய ஏவலின் கீழ் முன்னேஸ்வர ஆலயத்தின் உள் மண்டபத்தில்,
19. முன்னேஸ்வரமான்மியம் - மு. சோமாஸ்கந்தக் குருக்கள் - 1927
பதிப்பு. (பக்கம் 10). 20. கோயிலில் உள்ள ஏட்டுப் பிரதிகள். '

Page 13
ஆயிரம் நெய் விளக்குகள் ஏற்றி, தசாங்க தூப கலசங்களை வைத்து பன்னீரில், புனுகு போன்ற வாசனைத் திரவியங்களைக் கலந்து தெளித்து நவரத்தின கசித தங்கத் தாம்பாளங்களிலும், கிண்ணங்களிலும் செஞ்சம் பாவமுது, அறுசுவை கறிவகைகள், பசும்பால், பணிகார வகைகள், கற்கண்டு, வெல்லம், சர்க்கரை, கிழங்கு வகைகள், தேன், பழவகைகள், புத்துருக்கு நெய், செவ்விளநீர், தாம்பூலம் போன்ற வற்றை நிவேதனமாக அர்ப்பணித்து, அர்த்த மண்டபத்தில் அலங் கார தீபாராதனை யாவும் குற்றமறச் செய்து வந்தனர்.
குளக்கோட்டு மன்னனுடைய கட்டளையினுல், இம்முன்னேஸ்வர தேவாலயத்தைச் சேர்ந்த பூமி, அறுபத்து நான்கு கிராமங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே இடுகுறி காரணப் பெயர்கள் அவ்விடத்தில் வாழும் தொழிலாளர்களின் தொழில்களுக் கேற்ப இடப்பட்டன. உதாரணமாக, பிராமணர்கள் வாழும் இடம் ‘பிராஹ்மணயாகமம்" எனப்பட்டது. கோவிலுக்குத் தேவையான தேர், சகடை, வாகனம், கதவு போன்ற மர வேலைகளைச் செய்யும் தச்சர் அனைவரையும் "வங்காதணி என்னும் கிராமத்திலும், கோவிலுக்குத் தேவையான இரும்பு வேலைகளைச் செய்யும் கொல்லரை கரவெட்டி’ என்னும் கிராமத்திலும், வீரமுட்டிப் பண்டாரங்களை “பண்டாரியா முலை' என்னும் கிராமத்திலும், மற்றும் கோவில் வேலைகளைச் செய்யும் தொழிலாளர்கள் அனைவரையும் தனிதத்தனிக் கிராமத்திலும், குடியேற்றுவித்தார். 21
காலப்போக்கில் இக்கிராமங்களின் பெயர்களில் பல உருமாற லாயின. உதாரணமாக “தீர்த்தக்கரை' என்னும் கிராமம் 'தித் தக்கட' எனவும், 'மூங்கில் வெட்டுவன்’ என்னும் கிராமம் “முக்குனு வட்டவன’ எனவும் மாறின. ஆயினும் சில கிராமங்களின் பெயர் கள் உருக்குலையாமல் இன்றும் தோம்புகளில் குறிக்கப்பட்டவாறே அழைக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாகப் பிராமணர் வசித்த இடம் இன்றும் பிராஹ்மணயாகம் எனவும், திமிலர் வசித்த இடம் திமிலை எனவும் அழைக்கப்பட்டு வருகின்றது.
சுருங்கக் கூறின் குளக்கோட்டு மன்னனது அயராத உழைப்பினுல் இக்கோவில் புனருத்தாரணம் பெற்று புதுப் பொலிவுடனும், பெருங் கீர்த்தியுடனும் விளங்கலாயிற்று. عبر
குளக்கோட்டு மன்னன் கோணேசர் ஆலயத்தை சீர்திருத்தியது கி. பி. ஐந்தாம் நூற்ருண்டு எனவும், 22 கி. பி. 436 எனவும் 23 கி. பி. 434 லிருந்து 479 வரை 24 எனவும் கூறுவர்.
ஆறவது பராக்கிரம மன்னனது திருப்பணி (கி.பி. 1410-1462)
இலங்கைத் தீவின் மாமன்னர்களில் ஒருவனன பூணூரீ சங்கபோதி
21. கோவில் தோம்புகளில் விபரங்களைப் பார்க்கலாம். 22. Yalpana Vaipava Malai - Mailvagana Pulavar translated by C. Brito, page 6. 23. Ibid. page 4. 24. The Mahavansa, Mudir. Wijesinghe's translation, chap. XXXVIII.
8

மகாராஜாவின் வழித்தோன்றலிலே உதித்த, பூரீ பராக்கிரமபாகு எனப்படும் ஆரு வது பராக்கிரமபாகு மன்னன், (கி. பி. 1410-1462) இம்முன்னேஸ்வர தேவாலயத்திற்கு கி. பி. 1448-ம் வருடம் ஒரு யாத்திரை மேற்கொண்டான். 25
இம்முன்னேஸ்வர தேவாலயத்தின் இடிந்து பழுதுபட்ட பகுதி ளைத் திருத்தித் திருப்பணிகள் யாவற்றையும் குற்றமறச் செய்வித்து பல கிராமங்களை மானியமாக அளித்து, இச்செய்தியைக் கல்வெட்டுச் சாசனமாகத் தெரிவித்தான். இன்றும் இக்கோயில் கர்ப்பக் கிருகச் சுவரில் இதனைக் காணலாம். 26,27,28
இக்கல்வெட்டுச் சாசனத்தை ஆரும் பராக்கிரமபாகு இம்முன்
னேஸ்வரர் ஆலயத்திற்குக் கையளித்தபோது, நீலகண்டர் என்பவர்
இவ்வாலயத்தின் பிரதான குருவாகவும், அவருடைய சகோதரர் இவ்வாலய பரிபாலன் கர்த்தாவாகவும் விளங்கினர் என்று, கோயிலில் உள்ள பழைய ஏடு ஒன்று சான்று பகருகின்றது.
இக்கல்வெட்டுச் சாசனம் நிலமட்டத்திலிருந்து சுமார் நான்கு அடி உயரத்தில், நான்கு வரிகளாக கிட்டத்தட்ட நாற்பது அடி நீளத் திற்குச் செதுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளவற்றை வாசித்தறிவது மிகவும் சிரமமான காரியம். இதன் மொழி பெயர்ப்பை பெளலர் என்பவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். 29
சமீபத்தில் நடைபெற்ற திருப்பணிகள் காரணமாக இக்கல் வெட்டின் வாசகத்தை, வாசித்தறிவது இன்னும் கடினமாகி விட்டது.
ஒன்பதாவது பராக்கிரமபாகுவின் (கி.பி. 1509-1528) திருப்பணி
கலிகால சர்வக்ஞ பண்டிதன் என்ற பட்டத்தையுடைய ஒன்ப தாம் பராக்கிரமபாகு (கி. பி. 1509-1528) என்ற மன்னன் முன்னேஸ் வர க்ஷேத்திரத்திற்கு வந்து பூரீ மகா விஷ்ணுவை வழிபட்டு கோயிலுக் குப் பல கிராமங்களை கி. பி. 1517-ம் வருடம் (புத்த வருடம் 2060 சர்வமானியமாகத் தாமிர சாசனம் செய்தான். 30 இந்நிலப் பரப்பு கிழக்கில் மல் எல என்னும் நீரோட்டத்தையும், தென் புறத்தில் மாதம்பை என்னும் ஊரில் நிறுத்தப்பட்ட எல்லைக் கற்களையும், மேற் குத் திக்கில் மான மான் தொட்ட என்ற நீர்த்துறையையும், வடதிசை யில் முன்னேஸ்வரத்துள் பாயும் நீரோட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. 31
25, The Calcutta Review - Volume XLVII, Number 3, June 1933. 26. bid . 27. Ceylon Gazetteer - Simon Casie Chetty, page 164. 28. Ceylon Calling. The Govt. Tourist Bureau (1952) page 87. 29. Journal of the Ceylon branch of the Royal Asiatic Society, 1887, Volume X
No. 35, page 118-119. 30. The Cullavamsa II - Wilhelm Geiger (1930) page XXIV 31. செப்புப் பட்டயம் - முன்னேஸ்வரம் கோயில் கோடியர்ச்சனை மலர்.
Ludi 35 tiib l 2.

Page 14
கீர்த்தி மரீ ராஜசிங்க மன்னன் (கி.பி. 1747-1782) திருப்பணி
பதினரும் நூற்ருண்டில் போர்த்துக்கேயர் (கி. பி. 1505-1656) இலங்கையின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றி ஆதிக்கம் கொண்டு தமது அரசாட்சியைப் பலப்படுத்தி வந்தனர். போர்த்துக்கேயர் தம் மதத்தை இந்நாட்டில் பரப்புவதை மிகவும் முக்கியமான குறிக் கோள்களில் ஒன்ருகக் கொண்டிருந்தனர்.
இதற்காகப் போர்த்துக்கேயர் மிகவும் உன்னதமான நிலையில் இருந்த முன்னேஸ்வரம் கோயிலை, அடிக்கடி சின்னபின்னப் படுத்தி, அதற்குச் சொந்தமான செல்வத்தையெல்லாம் கொள்ளையடித்தனர். 32
போர்த்துக்கேயரின் அட்டூழியத்தின் காரணமாக கி. பி. 1578-ம் ஆண்டு, மகோன்னத நிலையில் இருந்த முன்னேஸ்வரத் தேவாலயம், தரைமட்டமாக்கப்பட்டது. 33, 34,35,36, 37,37A, 38
கீர்த்தியூரீ ராஜசிங்க மன்னர் (கி. பி. 1747-1782) போர்த்துக் கேயரால் சின்னபின்னப்பட்டிருந்த முன்னேஸ்வரக் கோயிலை, இந்தி யாவில் இருந்து சிற்பா சாரிகளை அழைப்பித்துத் திருப்பணிகளைக் குறை வற நிறைவேற்றி, 1753-ம் ஆண்டு, மகா கும்பாபிஷேகத்தையும் சிறப்பாக நடாத்தி வைத்தார். 39
கோயிலின் நித்திய நைமித்தியக் கடமைகள் குறைவின்றி செவ் வனே நடைபெற ஏற்பாடுகளைச் செய்து கோயில் குருமாருக்கு (நம்பிமாருக்கு), முப்பத்திரண்டு அவன நெல் விளை நிலங்களை சாலி வாகன சகாப்தம் ஆயிரத்தறுநூற்றெழுபத்தைந்து செல்லா நின்ற பூரீ முக வருடம் ஆவணி மாதம் பதின்னுகாம் திகதி, கி. பி. 1753ல் செப்புப் பட்டயம் எழுதிக் கொடுத்தார். 40
மலையாள தேசத்தை அரசாண்ட பழைய மன்னர் ஒருவர், ஆறுமுகக் கடவுளின் சிலையொன்றினை, முன்னேஸ்வரம் கோயிலுக்கு அளித்துப் பிரதிஷ்டை செய்வித்தார். 41,42,43
w
32. The Calcutta Review - Volume XLVII, Number 3, June 1933. 33. The Ceylon Littoral 1593 - P. E. Pieris Litt.D. (Cantab) (1949). 34. Catholic Chilaw, E. A. Fernando, page 10, 14 (See Appendix) 35. Lt. of Fr. H. Gomez S.J. dated 29.12.1606 Ceylon Ant. I page 21. 36. History of Catholic Churches - Fr. S. Gnanaprakasar, page 255. 37. Ceylon Portuguese Era, Volume I, P. E. Pieris, chapter IX page 199. 37A bid chapter XVI page 348 (see Appendix) 38. A Short History of Ceylon - H. W. Codrington (1947) page 130. 39. The Calcutta Review - Volume XLVII, No. 3, June 1933. 40. முன்னேஸ்வர மான்மியம் - சோமா ஸ்கந்தக் குருக்கள் பக்கம் 20 (1927) 41. The Calcutta Review - Volume XLVII, Number 3, June 1933. 42. The Ceylon Calling - The Govt. Tourist Bureau page 87 (1952) 43. Ceylon Gazetteer - Simon Casie Chetty
()

முன்பு ஒரு தடவை கோயிலின் அருகாமையில் இருந்த குளம் ஒன்றினை சீர் திருத்தியபொழுது, நந்தியின் தலையைக் கொண்ட சிலை யொன்றும், சுப்பிரமணியக் கடவுளின் சிலையொன்றும் கிடைத்தன. 44
முன்னேஸ்வரம் கோயிலிலிலுள்ள பழைய லிங்கம் அதன் உரிய பீடம் இன்றி காட்சி தருகின்றது. 45
குமாரஸ்வாமிக் குருக்களின் (கி.பி. 1816-1912) திருப்பணி
சோழவள நாட்டிலேயுள்ள காஞ்சிபுரத்தில் பிரம்மபூரீ நாகேந் திரக் குருக்கள் என்பவரின் புதல்வரான, பிரம்மபூரீ குமார ஸ்வாமிக் குருக்கள் இக்கோயிலின் கர்ப்பக் கிருகம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் முதலானவற்றைச் சீர்திருத்தி சாலிவாகன சகாப்தம் 1798 ல் (கி. பி. 1875-ம் ஆண்டு) மகா கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடாத்தி வைத்தார். 46
குமாரஸ்வாமிக் குருக்கள் காலத்திற்கு முன், இக்கோயிற் குருக் கள் மார் முன்பிருந்ததைப் போன்று நில வருவாய் கிடைக்காகததால் கி. பி. 1804ல் இலங்கைத் தேசாதிபதிக்கு விண்ணப்பிக்க, அவர்கள் கோயிலுக்கருகில் சில காணிகளையே கொடுத்தனர். 45A
முன்னேஸ்வரர் ஆலயத்தின் பிரதான பிராமணக் குருக்கள் சிலாபம், புத்தளம் போன்ற மாவட்டங்களின் தலைவராக விளங்கி, அரசாட்சி நடைபெற்ற காலத்தில், முன்னேஸ்வரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும், அம்பிகையின் பெயரால் நாணயங்கள் அச்சிட்டு உயயோகித்து வந்தார்கள், என்று கூறப்படுகின்றது. நீண்டு வளைந்த உருவத்தினைக் கொண்ட இந்த நாணயத்தைத் தமிழில் 'g, spli(55 hit J, ('Pincers Coin': Tamil-Kuraddukasu : Sinhalease - Andu Massa) என அழைத்தனர். இந்த நாணயத்தின் நீண்டு வளைந்த பகுதி யின் வெளிப்புறத்தில் "பரஸ்ரா ம' என்ற சோழ கிரந்த எழுத்துக்க காணப்படுகின்றன. 46B
உன்னதமான நிலையிலிருந்த முன்னேஸ்வரம் கோயில், பிற நாட் டவரின் அட்டூழியங்களுக்கு இலக்காகியது என்பதனை நிரூபிக்கும் வகையில் கொழும்பு தொல்பொருட்காட்சி சாலையில், சிதைந்த நிலை யிலுள்ள கோயில் பொருட்கள், சான்று பகர்கின்றன. 460
44. Journal of the Ceylon branch of the Royal Asiatic Society 1887, Volume X
No. 35, page 1 18.
45. The Short History of Hindusium in Ceylon, C. S. Navaratnam (1964) page 66 46. முன்னேஸ்வர மான்மியம் - சோமாஸ்கந்தக் குருக்கள் (1927) பக்கம் 20. 46A. முன்னேஸ்வர மான்மியம். பக்கம் 1. அனுபந்டம் 8.
46B Journal of the Ceylon branch of the Royal Asiatic Society (1915-1916)
Volume XXIV. No. 68, page 186, (see Appendix).
46C. அனுபந்தம் 12 பார்க்க.

Page 15
அத்தியாயம் நான்கு
முன்னேஸ்வரக் கோயிலின் சிறப்பு அம்சங்கள்
முன்னேஸ்வரத்திலுள்ள கோயிலின் பிரதான கோபுரங்கள், பூர்த்தி செய்யப்படாத நிலையிலேயே இன்று காட்சியளிக்கின்றன.
மூன்று வீதிகளைக் கொண்ட கோயிலின் முன்புறமாக உள்ள திருக்குளத்தின் கரையில் இருக்கும், அரச மரம், ஸ்தல விருட்சமாகப் போற்றப்பட்டு வருகின்றது.
கோயில் கர்ப்பக் கிருகமும், ஸ்தூபியும், இலங்கையிலே எங்கு மில்லாதவாறு பிரமாண்டமான வகையில், உருவாக்கப்பட்ட நிலையில் உள்ளன.
கோயில் கர்ப்பக்கிருகச் சுவரின் மேற்குப் புறக் கோஷ்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இலிங்கோற்பவமூர்த்தியின் பின்புறம் உடைந்த நிலையிலேயே, இன்று இருப்பதைக் காணலாம். இலிங்கோற்பவ மூர்த்தி யின் முன்புறமாக உள்ள, ஆறு அடி உயரமான கற்குத்து விளக்கும் உடைந்த நிலையில் இருந்தாலும், சிவராத்திரி விழா போன்ற தினங் களில் நெய்யூற்றி விளக்கேற்றுவதைக் காணலாம்.
பிள்ளையார், சுப்பிரமணியர் சுவாமி சன்னிதா னங்களில், இன் றும் பழைய கற்குத்து விளக்குகள் ஒவ்வொரு நாளும் ஏற்றப்படுவதைக் காணலாம்.
இக்கோயிலில் பூஜிக்கப்பட்டு வரும் விநாயகர், சுப்பிரமணியர், ஆறுமுகர், நடராஜர் போன்ற கலையழகு மிக்க விக்கிரகங்கள் இங்கி ருந்ததொரு பழைய தூர்ந்து போயிருந்த கிணற்றிலிருந்து, பன்னெ னெடுங் காலத்துக்கு முன், கண்டெடுக்கப்பெற்றவை என்பர். இவ் விக்கிரகங்களைக் கூர்ந்து கவனித்தால், இவற்றின் தொன்மையையும், கலையழகையும், சிற்பசாஸ்திரத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கு வதை அறியலாம். ۔۔۔۔۔۔
12

அத்தியாயம் ஐந்து
பூஜைகளும் விழக்களும்
நித்திய பூஜைகள்:
முன்னேஸ்வர ஆலயத்தில் ஆறு கால நித்தியப் பூஜைகள் ஆகம முறைப்படி நடைபெற்று வருகின்றது.
உஷத்கால பூஜை:
திருவனந்தல் என்ற பெயரால் சூரியோதயத்தின் முன் ஐந்தரை மணிக்கு நடைபெறும் பூஜை இதுவாகும். முதலில் பைரவருக்கு கர்ப்பக்கிருக கதவுகளின் திறவுகோலை முன்வைத்து, பூஜை நடை பெறும். திறவுகோலை அங்குச முத்திரையோடு கூடிய விரல்களினுல் எடுத்து, பின் அம்பாள் சன்னிதானத்திலும் கடைசியாக மூலவருக் கும் பசும்பால், நெற்பொரி நிவேதனத்துடன், பூஜை நடைபெறும். இது இரவில் நடைபெறும் கடைசிப் பூஜை யாகிய அர்த்த சாமப் பூஜையின் பின்னுேக்கி நடைபெறும் பூஜையாகும்.
காலை சந்திப் பூஜை: சூரியோதயத்தின் பின் ஏழரை மணிக்கு நடை பெறும் பூஜையாகும். இப்பூஜையின்போது, கோவிலிலுள்ள சிலா விக்கிரகங்கள் அனைத்திற்கும் அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும். காலை சந்திப் பூஜையில், சூரிய பூஜையே முதலில் நடாத்தப்படும் பூஜையாகும். பின் மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் செஞ் சம்பாவமுதினை நிவேதனம் செய்து, விரிவான பூஜைகள் நடைபெறும். இப்பூஜையின் இறுதியில் கோயிலின் அருகே அமையப் பெற்றிருக்கும் *வேட்டைத் திருமடமெனப்படும் விநாயகர் ஆலயத்திற்கும் அர்ச்சகர் சென்று, அங்கும் அபிஷேக ஆராதனைகளை நடாத்துவதுடன் காலைசந் திப் பூஜை முடிவுறும்.
உச்சிக்காலப் பூஜை நடுப்பகலில் நடைபெறும் பூஜையின்போது; ஆதார சக்தி தொடக்கம், மானசாபிஷேகம் வரை, அருச்சித்து மூல
வருக்கும், அம்பாளுக்கும், ஆராதனைகள் நடைபெறும். இதன் முடிவில் கதவுகள் மூடப்படும்.
3

Page 16
சாயரட்சைப் பூஜை மாலை வேலையில், சூரிய அஸ்தமனத்தின் முன் நடைபெறுவது இப்பூஜை, இப்பூஜையின் முன் ஆவாஹனம், அபி ஷேகம், அலங்காரம், தீப ஆராதனை, தோத்திரம், நிருத்தியம் போன்ற அம்சங்கள், சுவாமி சன்னிதானத்திலும், அம்பாள் சன்னி தானத்திலும் விரிவாக நடைபெறுவது வழக்கம்.
இரண்டாங் காலப் பூஜை: இரவு ஏழரை மணியளவில் இப்பூஜை நடைபெறும். இப்பூஜையின் முன், சிலாவிக்கிரகங்கள் அனைத்திற்கும் அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெறும். இதன் பின் மூல வருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் செஞ்சம்பாவ முதினை நிவேதன மாகக் கொண்ட பூஜை நடைபெறும்.
அர்த்தசாமப் பூஜை: இரவு எட்டரை மணிக்கு இப்பூஜை நடை பெறும். சுவாமி, அம்பாள், பைரவர் ஆகிய மூர்த்தங்களுக்கு, பாய சத்தை நிவேதித்து நடைபெறும் பூஜை இதுவாகும். இப்பூஜையின் முடிவில் கதவுகள் பூட்டப்படுவதுடன், ஒரு நாளையப் பூஜை முடிவுறும்.
உஷத் காலப் பூஜை, சூரியன் உதயமாவதற்கு, மூன்றே முக்கால் நாழிகைகளுக்கு முன்பாகவும், காலை சந்திப் பூஜை சூரியோதயத்தின் பின் ஏழரை நாழிகைகளுக்கு முன்னும், உச்சிக்காலப் பூஜை நடுப் பகலிலும், சாயரட்டைப் பூஜை சூரியன் அஸ்தமிப்பதற்கு மூன்றே முக்கால் நாழிகைகளுக்கு முன்னும், இரண்டாங்காலப் பூஜை சாய ரட்சைப் பூஜை நடைபெற்ற பொழுதிலிருந்து மூன்றே முக்கால் நாழிகைக்குள்ளும், அர்த்தஜாமப் பூஜை இரண்டாங்காலப் பூஜைப் காலப் பூஜைப் பொழுதிலிருந்து மூன்றே முக்கால் நாழிகை வரையில் நடைபெறலாம் என்பது விதி. 47 இவ்விதிப்படி இங்கு இக்கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
நைமித்தியக் கிரியைகள்:
பிரதோஷம்: கிருஷ்ண, சுக்ல பட்சங்கள் (வளர்பிறை, தேய்பிறை) எனப்படுகின்ற இரு பட்சங்களின் பதின் மூன்ரும் நாளின் மாலைப் பொழுதைப் பொதுவாக பிரதோஷ காலமென்டர்.
வானவர்களும், தானவர்களும் ஒன்று சேர்ந்து, மந்தர மலையை மத்தாகவும், சந்திரனை அடை தூளுகவும் வாசு கியென்னும் பாம்பை நாணுகவும் கொண்டு திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது திருமால் ஆமை ரூபமாக வந்து, மந்தர மலை, சரிந்தும் ஆழ்ந்தும் போகாமல் நிலை நிறுத்திக் கொண்டார். அப்பொழுது பாம்பின் வாயிலிருந்து வெளிவந்த ஆலகால விஷத்தை, எல்லாம் வல்ல இறைவன் பிரதோஷ காலத்தில் உண்டு, ஆன்ம கோடிகளைக் காத்தருளினர் என்பது புரா ணக்கதை.
எனவே, பிரதோஷ காலங்களில் பக்தர்கள், தம் நன்றியுணர்ச்சி யைத் தெரிவிக்கு முகமாக இறைவனை வழிபடுவதை ஆகமங்கள் விதித்துள்ளன.
47. சைவத் திருக்கோயிற் கிரியை நெறி. கலாநிதி கா. கைலாசநாதக் குருக்
கள் பக்கம் 170.
l4

முன்னேஸ்வரம் கோயிலில் பிரதோஷ பூஜை கிரமமாக நடை பெறுவது வழக்கம், விநாயகர், சுப்பிரமணியர், நந்திகேசுவரர், சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய விக்கிரகங்களுக்கு அபி ஷேக, ஆராதனை பூஜைகள் யாவும் நடைபெற்று. ஆலிங்கன மூர்த்த நிலையிலுள்ள சந்திரசேகருக்கு விசேட பூஜைகள் நடை பெற்று இறுதி யாக திருவிழா நடைபெறும்.
பர்வ யந்திர பூஜை:
ஒவ்வொரு பெளர்ணமி தினத்தன்றும் , அந்திப் பொழுதில் நடைபெறும் விசேட பூரீ சக்ர பூஜை, பர்வ யந்திர பூஜை எனப் பெயர் பெறும். சிவ சக்தி ஐக்கிய ரூபமாக உள்ள, பூஜீ சக்ரத்தினை (மேரு யந்திரத்தின) ஈழநாட்டில் முன்னேஸ்வரம் கோவிலில் மட்டுமே காணலாம். சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட பூரீ சக்ரத்தின் திருவுருவினுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று, மாலையில் சந்திரோத யத் தின் பொழுது பூரீ சக்ர பூஜை நடைபெறும்,
இவ்விசேட பூஜை பூத சுத்தி, அந்தர்யாஜன, பஞ்சாயதன பூஜை, குரு பாதுகா பூஜை, ஆவாகன பூஜை, சதுஷ்ஷஷ்டி உபசார பூஜை, நவமா வரண பூஜை, லலிதா திரிசதி குங்கும நாமார்ச்சனை, ஸ்தோத்திரார்ச்சனை போன்றவற்றினை விசேட அம்சங்களாகக் கொண் - l مسا

Page 17
3ä55u Tuf ep
உற்சவங்கள்
உற்சவம் என்பது இறைவனின் ஐந்தொழில்களில் ஒன்ரு ன படைத்தலை (சிருஷ்டியை)க் குறிக்கின்றதென்பதைக் கிரியை விளக்க நூல்கள் கூறுகின்றன. இவை பைதிருகம், செளக்கியம், பூரீகரம், பார்த்திவம், சாத்துவிகம் என அறுவகைப்படுவன. பைதிருகம் பன்னிரண்டு தினங்களும், செளக்கியம் ஒன்பது தினங்களும் பூரீகரம் ஏழு தினங்களும், பார்த்திவம் ஐந்து தினங்களும், சாத்துவிகம் மூன்று நாட்களும், சைவம் ஒரு நாளும் கொண்டாடப்படுவன. 48
ஆகமங்கள் நான்கு வகையான உற்சவங்களைப் பற்றிக் குறிப்பிடு கின்றன. மாங்கலியம், சாந்திகம், பாவனம், சாகல்யம் என்பவையே அவை.
மங்களகரமான காரியங்களின் நிமித்தம் ஒரே நாளில் செய்து முடிக்கப்பெறும் உற்சவத்தினை மாங்கலிய விழா என்றும், நாட்டில் அமைதி, சமாதானம், போன்றவை நிலவும் பொருட்டு பலி, யாகம் போன்றவை இன்றி நடாத்தப்படும் உற்சவத்தினை சாந்திகவிழா (அலங்கா ரோத்சவம்) எனவும், நல்லெண்ணம், தூய சிந்தனை போன்ற வற்றை, மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்காக பலி, ஓமம் போன்ற வற்றுடன் நடாத்தப்படுவன பாவன உற்சவம் எனவும், ஐயனின் ஐந் தொழிலை விளக்க வேள்வி, பலி போன்றவற்றுடனும் கொடியேற்ற வைபவங்களுடனும் நடைபெறும் விழாவினை மகோற்சவம் எனவும் குறிப்பிடுவர். மகோற்சவம்:
ஆண்டுக்கொரு முறை நடைபெறும் பெருந்திருவிழாவாகும்.
பிரும் மோத்சவத்தைப் பற்றிய கிரியை நூல்கள், திருவிழாவின் முக்கிய அம்சங்களைப் பின்வருமாறு கூறுகின்றது:
48. சைவத் திருக்கோயிற் கிரியை நெறி. கைலாசநாதக் குருக்கள் பக்கம் 249,
6

விருஷயாகம், துவஜாரோஹணம், பிருகத்தானம், அங்குரம், மகாயா கம், அஸ்திர யாகம், பலிதானம், யானக்கிரமம், பரிவேஷம் , விராஜனம், கெளதுகம், தீர்த்த சங்கிரகம், சூர்ணுேத்சவம், தீர்த்தம் அவரோஹணம், ஸ்நபனம், விவாகம், பக்தோத்சவம் என்பவையே அவை,
அங்குரார்ப்பணம், துவஜாரோஹனம், ரட்சா பந்தனம் போன்ற கிரியைகள் படைத்தல் (சிருஷ்டி) தொழிலையும், திரு உலா, யாகம், பலி போன்றவை காத்தலையும் (திதியையும்) சூர்ணுேத்சவம், தேர்த் திருவிழா போன்றவை சம்ஹாரத்தை (அழித்தலை) யும், மெளணுேத் சவம் திரோபவத்தினை (மறைத்தலை) யும், ஊடல் திருவிழா அநுக்கிர கத்தையும் (அருளலையும்) விளக்குகின்றது.
முன்னேஸ்வரம் தேவாலயத்தில் நடைபெறும் திருவிழா, இருபத் தேழு தினங்கள் நடைபெற்று, ஆவணி மாதப் பெளர்ணமியிலன்று, தீர்த்தோற்சவத்தை இறுதியாகக் கொண்டதாக அமையப் பெற்றுள் ளது.
இத்திருவிழா தொடக்கத்திலன்று, துவஜாரோஹணம் என் னும் கொடியேற்றத் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
கர்ப்புக்கிருகத்துக்கு எதிரா கவுள்ள, நந்திக்குப் பின்புறமுள்ள, கொடிமரத்தில் (துவஜ ஸ்தம்பத்தில்) ஏற்றுவதற்காக நீண்டதொரு வெண் துகிலில், விருஷப வாகனத்தில் சூலாயுதத்தையும், மற்றும் மங்கலப் பொருட்களையும் ஓவியமாகத் தீட்டி அதற்கு விசேட பூஜைகள் நடாத்தப்படும்.
இதன் பின் யாகங்கள், பிரதிஷ்டை போன்ற கிரியைகள் . நடாத்தப்படும். பின் உற்சவ விக்கிரகத்தையும் கொடிச் சீலையையும் வாத்திய கோஷங்களுடன் வீதி வலம் வரச் செய்து, சமஸ்த தேவதா வாகனம் என்னும் கிரியையினை முடித்து, கொடிச் சீலையை சகலவித மான மங்கல ஓசைகளும் முழங்க, கொடி மரத்தில் ஏற்றும் வைபவமும், இதன்பின் தர்ப்பைப் புல்லினலும் பட்டு வஸ்திரத்தினுலும் கொடி மரத்தினடியை அலங்கரித்து, அபிஷேக ஆராதனை, பலி முதலிய கிரி யைகளை நடாத்தி, பணி மாலை, சூர்ணிகை, உரிய தாளங்கள், மகா சீர்வாதம், பிரம்ம சந்தி, சந்தியாவாகனம் போன்ற கிரியைகள் நடை பெறும்.
கோயில் பிராகாரத்தின் உள்ளும், கோயில் வீதியின் திக்குகள் எட்டிலும், திக்தேவதைகளைத் தியானித்து, குறிப்பிட்ட வேத மந் திரம், ராகம், பண், தாளம், வாத்தியம், நிருத்தம் முதலியவற்றுடன் பூஜையும் பலியும் நடாத்தப்படும்.
இவ்வாறே கொடியிறக்கிய பின்னும் கிரியைகள் நடாத்தப் பெறும்.
திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும், காலையில் விநாயகர், சுப்பிரமணியர், ஆறுமுகர், சோமஸ்கந்தர், அம்மன் ஆகியோருடைய திருவுருவங்களைக் கொண்ட திருவுலாக் காட்சியும் நடைபெறும்.

Page 18
மற்றைய கோயில்களில், சோமா ஸ்கந்த மூர்த்தத்தினை, தேர்த்திரு விழா போன்ற, அதி உன்னத திருவிழாக்களில் மாத்திரமே எழுந்தருளப் பண்ணுவர். ஆனல் இங்கு திருவுலாக் காட்சியருளுகையில், இருபத்தி யெட்டுத் தினங்களிலும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் திரு வுலாக் காட்சி கொடுப்பது குறிப்பிடத்தக்கதொன்ற கும்.
முன்னேஸ்வர திருவிழாவில் நடைபெறும் விசேட உற்சவங்கள்
முன்னே ஸ்வரத்தில் நடைபெறும் திருவிழாவில் கடைசி ஆறு தினங்களுமே, மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை பக்தோத்சவம், பிக்ஷா டனேத்சவம், நடராஜ உற்சவம், வேட்டைத் திருவிழா, தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பன
தீ மிதிப்பு வைபவம்:
சிவனடியார் திருவிழாவன்று, மாலையில், சூரியன் மறையும் வேலையில், தீ மிதிப்பு வைபவம் நடைபெறுவது வழக்கம். காலையில் மூலஸ்தானத்திலிருந்து விசேட பூஜையின் பின், செந்தணல் கொண்டு வரப்பட்டுக் கோவிலின் முன் அமைந்துள்ள மைதானத்தில், பிர தான குருக்களால், தீ மூட்டப்பட்டு, பெரிய மரக்கட்டைகள் எரிக்கப்படும். மாலையில் பக்தர்கள் எல்லோரும் சாதி, சமய வேறு பாடுகளின்றி, குளித்துவிட்டுக் கோயிலுக்குச் சென்று, சாயரட்சைப் பூஜையின் போது பிரார்த்தனை நடாத்தி, மேள தாள தம்பட்ட வாத் தியங்களின் இன்னிசை வானைப் பிளக்க, வீதியை வலம் வந்து, அனல் கக்கும் செந்தணலின் மீது நடந்து கோயிலுக்குள் சென்று தம் பிரார்த் தனையை நிவர்த்தி செய்வார்கள்.
பக்தோத்சவம் (சிவனடியார் திருவிழா):
இலங்கையிலே அறுபத்து மூன்று சிவனடியார்களின் எழுந் தருளி விக்கிரகங்கள், முன்னேஸ்வரத்தில் மட்டுமே, கலையழகு ததும்ப காண்போர் கருத்தைக் கவரும் வண்ணம், காட்சியளிக்கின்றன. உற் சவத்திலன்று, விசேட அபிஷேகங்களும், ஆராதனைகளும், மாலையில் சுவாமி திருவுலாக் காட்சியளிக்கும் போது சுவாமியை எதிர்நோக்கிய வாறே அறுபத்தி மூன்று நாயன்மார்களின் திருவுருவங்களைக் கொண்ட அழகிய இரதம் பின்னுேக்கிப் பவனி வருவது, பார்த்து மகிழ வேண் டியதொரு காட்சியாகும்.
பிக்ஷாடனுேத்சவம்:
எல்லாம் வல்ல இறைவன் திகம் பரனசு, பிச்சைக்காரக் கோலம் பூண்டு தாருகாவனத்திற்குள் புகுந்தான். அங்கிருந்த தவமு னிவர் கள், யாகத்தினையே மேலான தென்று கருதி, ஈசனை மதிக்காமல் அகம்பாவத்துடனிருந்தார்கள். முனிவர்களுடைய அகங்காரத்தை அடக்கி, அறியாமையை அகற்ற, இறைவன் எடுத்த கோலமே, பிக்ஷா டன மூர்த்தம், முனிவர்கள் யாகத்தினின்று தோற்றுவித்து ஏவிய ஆயுதங்களை, ஆயுதங்களாக அணிந்த இறைவன் ஈற்றில் இருவி களுக்கு நல்லறிவு புகட்டினன்.
se P
8

முன்னேஸ்வரம் கோயிலிலுள்ள பிக்ஷ டனமூர்த்தி, சுமார் ஐந் தரை அடி உயரமும், இலங்கையிலும், இந்தியா விலுமுள்ள கோயில் களில் எங்குமேயில்லாத பரிபூரண கலையழகும் சிற்ப சாஸ்திரத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் அங்க அமைப்புகளும் கொண்ட தோர், அபூர்வ விக்கிரகமாகும். பிக்ஷா டன மூர்த்திக்குக் காலையில் விசேட அபிஷேக ஆராதனைகள், அலங்காரங்கள் யாவும் நடைபெற்று அந்தி மங்கும் வேளையிலே, கபாலமேந்தி, அவிழ்த்துவிட்ட நீண்ட சடை கொண்ட சடாமுடியுடன், அதியற் புத அலங்கா ர வைபவங்க ளுடன் திருவுலாக் காட்சி நடைபெறும். இக்காட்சி உண்மையிலேயே இறைவன் பிச்சை ஏந்தும் கோலம் கொண்டு விட்டானேவென்று, ஐயுறும் வண்ணம் அமைந்திருக்கும். சாதாரண உயர்ம் கொண்ட மனிதனின் உருவத்தையொத்த இவ்விக்கிரகத்தை, அதியற்புதமாக அலங்காரம் செய்து விடுவார்கள், சாத்துப்படி”யில் நிபுணத்துவம் பெற்ற இக்கோயிலில் பணி புரியும் அந்தணர்கள்.
நடராச உற்சவம்
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போன்ற மேனியிற் பால் வெண்ணிறும், துலங்க இனித்தமுடன் எடுத்த பொற்பாதத்துடன் காட்சிதரும், கூத்தப் பெருமானுக்குக் காலைப் பொழுதில் ஆனந்த சபையிலே அபி ஷேகங்கள், ஆராதனைகள், யாவும் குறைவின்றி நடாத்தப்படும். கலை பழகு பொலியும், இந்நடராஜ விக்கிரகம் சில நூறு வருடங்களுக்கு முன், இக்கோயிலின் உள் வீதியிலிருந்த கிணற்றை ஆழமாக்கிய பொழுது கிடைத்ததென்பது ஐதீகம். சர்வாலங்கார, சுவர்ண மஞ் சத்தில், அந்தி வானத்தின் செங்கதிரோனின் பொற்கிரணங்கள் பட் டொளிவீச, வீதிவலம் வரும் காட்சி, பக்தர்களுக்கு ஒரு கண் கொள் ளாக்காட்சியாக அமைவுறும்.
வேட்டைத்திருவிழா
சூரியோதயத்தின் பின் உற்சவ மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் அலங்காரங்கள் யாவும் நடைபெறும். மாலையில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, கோவிலுக்கு வடமேற்கு மூலையில் உள்ள, ஐயனுர் ஆலயத்துக்கு முன்புறமுள்ள மைதானத்தில், வேட்டை யாடும் வைபவம் நடைபெறும்.
தேர்த் திருவிழா
காலையில் வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று, பத்து ம்ணியளவில் வடிவாம்பிகாதேவியையும், சோமாஸ்கந்த மூர்த்தி யையும், கோயிலின் வடகிழக்கு மூலையில் அலங்கரிக்கப்பட்டி ருக்கும், தேர்களுக்கு எழுந்தருளச் செய்வர். அங்கு பக்தர்கள் பல்லா யிரக்கணக்கான தேங்காய்களை உடைத்துத் தங்கள் நேர்த்திக் கடன் களை செலுத்துவதும், மாலை வேளையில் தேரோடும் பெரிய வீதியைச் சுற்றிய தேர் நிலைக்கு வந்த பின், ஆலயத்திற்கு சுவாமி எழுந்தருளிச் செல்லும் காட்சிகளும் பார்த்துப் பரவசப்பட வேண்டியதொரு காட்சியாகும்.
19

Page 19
பிற்பகல் மேளக்கச்சேரி, பாட்டுக் கச்சேரி போன்ற இன்னிசை வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். மாலையில் சர்வா லங்கிருத இரதத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து வாணவேடிக்கை, கரக ஆட்டம், தீப்பந்த ஆட்டம், காவடியாட்டம் போன்ற களியாட்ட வைபவங்களுடனும், மறுநாள் வைகறைப் பொழுதில் கோயிலை அடைந்த பின், துவஜாவரோஹணம் நடைபெறுவதுடன் வருடாந்த உற்சவம் இனிது முடிவுறும்.
திருவிழாவின்போது தம்பட்டமென்ற விசேட மேள வாத்திய இசையை இசைக்கும், கலைஞர்களுக்கு, நில புலன்கள் மானியமாகக் கொடுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் குறிக்கப்பட்ட காலங்களில், கோயிலுக்கு வந்து, விதிக்கப்பட்டுள்ள முறைப்படி தம் கடமையைச் செவ்வனே பரம்பரை பரம்பரையாக நடாத்தி வருகின்றனர். இவர் கள் கொடிமரத்துக்கு அப்பால் தம்பட்டமென்னும் மேளவாத்தி யத்தை இசைக்கக் கூடாது. 49 என்ற விதிக்கமைய இன்றும் பணி புரிந்து வருகின்றனர்.
தீர்த்தத்திருவிழா
காலையில் எழுத்தருளி விக்கிரகத்துக்கு விசேட பூஜைகள் நடை பெற்ற பின், கோயிலுக்கு ஐந்து மைலுக்கப்பால் உள்ள மாயவணுற் றிற்கு (தெதுறு ஒயாவிற்கு) எழுந்தருளிச் செல்வதும் பகல் மாயவணுற் றில் தீர்த்தங் கொடுப்பதும், பின் மாயவணற்றங் கரையில் அமைந் திருக்கும் வடிவழகியம்மன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, தீர்த்தத் திருமடத்துக்கு எழுந்தருழுவதும், அம் மடாதிபதிகளால் நடாத்தப்படும் பூஜைகள், ஆராதனைகள், அன்னதானம் முதலியவை நடைபெறும் அம்சங்களாகும்.
பிரும்மோத்சவம்
முன்னேஸ்வரம் கோயிலில் நடைபெறும் மகோற்சவம் பன்னெ டுங்காலமாக ஆகம முறைகளுக்கமையாது, ஆங்காங்கே சிறிது மாறு பட்டு, இந்த சுேஷத்திரத்திற்கே உரித்தான, பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகின்றது. நித்திய பலி பூஜை, ஸ்தம்ப அபிஷேக பூஜை முதலானவை மகோற்சவத்தின் போது தினமும் நடைபெற lfill... li.
ஆனல் மாசிமகத்தை இறுதியாகக் கொண்டு பத்துத் தினங்கள் நடைபெறும் பிரும்மோத்சவம், ஆகம முறைகளுக்கு இம்மியள வேனும் மாறுபடாமல் நடைபெற்று வரும் ஒரு திருவிழாவாகும்.
நவராத்திரி
நவராத்திரி விழா என்பது சக்தி பூஜையையே குறிக்கும். இவ் விழா ஒன்பது இரவுகள் கொண்டாடப்படுவதால் நவராத்திரி என்ற
49. முன்னேஸ்வரம் கட்டளைச் சட்டம் - குமாரஸ்வாமிக் குருக்கள் (1927)
20

பெயர் ஏற்பட்டது. பல இடங்களில், பல பெயர்களால் நடாத்தப் பட்டு வரும் இவ்விழா, புரட்டாசித் திங்கள், பூர்வபட்சத்துப் பிர தமையன்று ஆரம்பமாகி, ஒன்பது தினங்கள் நடைபெறும். நவராத் திரி விரதத்தின்போது சக்தி ஒன்பது சொரூபியாய்ப் பூஜிக்கப்படு கிருள். நவராத்திரி விரத நாட்களில் முதல் மூன்று தினங்களும், வீரத்துக்காக துர்க்கையையும், இடை மூன்று தினங்களும், செல்வத் திற்காகத் திருமகளையும், இறுதி மூன்று நாட்களும், கல்விக்காகக் கலை மகளையும் வழிபடுவது வழக்கம்.
நவராத்திரி விரதம், தேவியின் மூன்று முக்கிய குண்ங்களெனப் படும், சாத்வீகம், இராசதம், தாமதம் பொருந்திய ஞானசக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி என்னும் தோற்றங்களைக் குறிக்கும். இத் தோற்றங்களே துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி எனப் போற்றப்படு கின்றன.
சக்தி வழிபாடு உலகத்தின் மிகப் பழமையான காலந்தொட்டு பற்பல பாவனைகளாக பற்பல பகுதிகளில் நடைபெற்று வந்திருப்பது, சரித்திரம் கூறும் உண்மை. உலகின் ஆதிவாசிகள் இயற்கையை பல்வேறு நிலைகளில் வழிபட்டு வந்தார்கள்.
சக்தி வழிபாடு மிகவும் தொன்மையானதொன்று என்பதனை சரித்திர ஆராய்ச்சியாளர்களும், புதைபொருள் ஆராய்ச்சியாளர்களும், மொகஞ்சதாரோ போன்ற தொன்மையான புதைபொருட்களை நல் கிய தொல்பொருட்களிலிருந்து ஆதாரம் காட்டிக் கூறியுள்ளார்கள். சக்தியை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சம்யம், சாக்தம் என அழைக்கப்பட்டு வருகின்றது. தந்திரங்கள் எனக் கூறப்படும் நூல்கள் சக்தி வழிபாட்டு முறைகளையும் அவற்ருல் உண்டாகும் நன்மைகளை யும் கூறுவன. நிர்வாண தந்திரம், திரிபுரா ரகசியம், காமகலா விலாசம், குல சூடாமணி, தந்திரராஜம், பிரபஞ்ச சாரம், குலார் ணவம், சாரதா திலகம் போன்ற பழைய நூல்கள் சக்தி வழிபாட்டின் மகிமையையும் அதனலுண்டாகும் பெறுபேறுகளையும் கூறும் தந்திர நூல்கள்,
நவராத்திரியில் பல வகை
நவராத்திரி விழா ஒவ்வொரு "ருது'விலும் கொண்டாடப்படும் விழா. இவற்றில் வசந்த நவராத்திரியும், சாரதா நவராத்திரியும் மிக விசேடமாகக் கொண்டாடப்பட்டு வருபவை. நவராத்திரி விழா பூர்த்தியான மறுநாள், விஜயதசமி விழா நடாத்தப் பெறும். புதி தாகத் தொடங்கப்படும் காரியங்களை ஆரம்பிப்பதற்கு, இந்நாள் மிகவும் முக்கியமானதொன்ருகக் கருதப்பட்டு வருகின்றது.
* தேவீ பாகவதம், நவராத்திரி விழாவை "நவராத்ரா' எனக் குறிப்பிடுகின்றது.
நவராத்திரி விழா இந்து சமூகத்தவர்களிடையில் நல்லெண்ணத்
தையும், நட்பையும், கலையார்வத்தையும் அணைய விடாமல் காத்து வளர்க்கும் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. பல
2.

Page 20
இடங்களில் பலவாருகக் கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி விழா, தமிழ் நாட்டில் சமய அனுஷ்டானங்கள் அதிக மின்றி, சமுதாய அம் சங்களை ஆங்காங்கே கொண்டதாக விளங்குகின்றது.
நவராத்திரி விழாவின் ஆரம்பத்திலேயே, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களுடைய குடும்ப மனைகளிலெல்லாம் 'கொலு வைப் பது ஒரு பாரம்பரியம். வீடுகளில் மரத்தினல் படிகளை அடுக்கடுக்காக கட்டி, அவற்றில் அழகான பொம்மைகளையும், விக்கிரகங்களையும் அழகுற வைத்து அலங்காரஞ் செய்து, இல்லத்தையே ஒரு கலைக்கூட மாக, ஆக்கி விடுவார்கள். இது சைவ சமயத்தவர்களின் கலைத் திற மையையும், கலையை இரசிக்குந் தன்மையையும் காட்டுகின்றது. 'கொலு' வைத்துத் தங்கள் நண்பர்களையெல்லாம் அழைத்து உப சரித்து, பல காலமாகச் சந்திக்காமலிருந்தோர்களையெல்லாம் கண்டு அளவளாவி, நட்பையும், கலைத்திறனையும், புது உறவையும் பரிமாற ஏற்படுத்துவது இந்நவராத்திரி விழவே.
தேசிய கவிஞருள் சிறந்தவர் எனப் போற்றப்படும் பாரதியார், நவராத்திரியைப் பற்றிப் பின் வருமாறு பாடியுள்ளார்:
'உஜ்ஜயினி நித்ய கல்யாணி!
ஓம் சக்தி, ஓம்சக்தி, ஓம் சக்தி, ஓம் சக்தி (உஜ்ஜ) உஜ்ஜய காரண சங்கர தேவீ உமா சரஸ்வதி பூரீ மாதா ஸா fஉஜ்ஜ) வாழி புனைந்து மஹே சுவர தேவன் தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம் (உஜ்ஜ) சத்ய யுகத்தை அகத்திலிருந்து திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி' (உஜ்ஜ)
(தெய்வப்பாடல்கள்-நவராத்திரிப்பாட்டு)
புராணக் கதை
நவராத்திரி விழா தோன்றியதை விளக்கப் பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றில் சில, கீழே கொடுக் கப்பட்டுள்ளன.
பார்வதிதேவி, ஒன்பது தினங்கள், பரமசிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து, எல்லோருக்கும் துன்பம் விளைவிக்கும், மகிஷாசுரனைக் கொல் வதற்கு அருள் பெற்ருர். கொடுமை புரிந்து வந்த மகிஷாசுரனை பத்தாவது நாள் சங்காரம் செய்தார். மகிஷாசுரனைக் கொன்றபடி யால் மகிஷாசுரமர்த்தனி என்னும் பெயரை பெற்ருர், இதனுல் தான் நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்பட்டு, பத்தாவது தினம் விஜயதசமி என்ற பெயரால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதன் உட்பொருள் என்னவென்ருல், மகிஷாசுரன், அவன் பரி வாரங்கள் முதலானவை அஞ்ஞானமாகவும், அதன் காரியங்களா கவும், தேவியை சித் சக்தியாகவும், அது, பரம்பொருளாகிய ஆத்ம சாக்ஷாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை அடியோடு அகற்றுவது மே யாம். -
22

பூரீ ராமபிரான், இலங்கை வேந்தனுகிய இராவணனை, விஜய தசமியிலன்று, கொன்று தர்மத்தை நிலைநாட்டியதாகவும், அதல்ை இவ்விழா கொண்டாடப் படுகின்ற தென்பர் சிலர்.
இலட்சுமிதேவி, ஆண்டாள் என்னுந் திருநாமத்தோடு அவ தரித்து, திருப்பதி வெங்கடேசப் பெருமானை, மணம் முடிக்க ஒன்பது தினங்கள் தவமிருந்து, விஜயதசமியில், தம் மெண்ணப்படி திருமணம் புரிந்ததாயும், எனவேதான் நவராத்திரி விழா கொண்டாடப் படு கின்றது என்பர் இன்னும் சிலர்.
தசராப் பண்டிகை
நவராத்திரி என்னும் ஒன்பது தினங்களுடன், விஜய தசமியையும் சேர்த்து சிலர், தசராப் பண்டிகை என்ற பெயருடன் கொண்டாடு வார்கள். வட இந்தியாவில் இந்தப் பண்டிகை, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தசம் என்ரு ல் பத்து எனப் பொருள் படும். ஆகவே தசரா பண்டிகை என்பது பத்துத் தினங்கள் கொண் டாடப்படும் ஒரு விழாவாகும்.
முன்னேஸ்வரத்தில் நவராத்திரி
ஆதிசிவனுடைய சக்தி எங்கள் அன்னையருள் பெறுதல் முத்தி மீதி உயிரிருக்கும் போதே அதை வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி-பாரதி.
ஒவ்வொரு வருடத்திலும், நான்கு நவராத்திரி பூஜைகள் (ஒவ்வொரு 'ருது ஆரம்பத்திலுமாக) கொண்டாடப் படுவதாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்நான்கு நவராத்திரிகளிலும், வசந்த ருதுவில் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரியும், சரத்ருதுவில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியுமே மிகவும் பிரபல்ய 1ᏝᎥᎢ ᎧᏈlᎢ 6ᏈᎧ Ꭷ! .
முன்னேஸ்வரம் தேவாலயத்தில் சாரதா நவராத்திரியையே
மிகவும் கோலாகலமான முறையில் கொண்டாடுவார்கள். இவ்விழா
புரட்டாசி மாதத்துப் பூர்வபட்சத்துப் பிரதமை தொடங்கி, நவமி யீருகவுள்ள ஒன்பது நாட்களும் நடாத்தப் பெறும்.
நவராத்திரி விழாவின்போது ஒவ்வொரு நாளும் காலையில் நூற்றி யெட்டு சங்குகளைக் கொண்ட சங்க பூஜையும், கும்ப பூஜையும், விசேட யாகங்களும் பிரதான குருவினுல் நிகழ்த்தப் பெறும் கிரிகை * களாம். ஒவ்வொரு சங்கிலும், ஒவ்வொரு விதமான மூலிகைகள் பண்டு தொட்டு, போடப்பட்டு, அபிஷேகம் நடாத்தப் பெறுவதால் தான் முன்னேஸ்வர கூேடித்திரத்தின் , நவராத்திரி அபிஷேக தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்த தொன்ருகக் கருதப்பட்டு வருகின்றது. 49*
19A. சங்க மூலிகைகள், அனுபந்தம் 17 பார்க்க
23

Page 21
காலையில், வசந்த மண்டபத்திலிருந்து வடிவாம்பிகா தேவியை த்ம்பட்ட ஒலி, மேளதாள, நாதஸ்வர இசை, மணியோசை, சங்க நாதம், பெரியதாள வாத்தியம், சேமக்கலம் போன்ற வாத்திய இன்னிசை முழங்க, குருமார் புடைசூழ்ந்து மந்திரங்களோடு, வீதியை வலம்வரச் செய்து, பின் திருவாபரணங்களை அகற்றி அபிஷேக பீடத்தில் அமர்த்துவார்கள்.
பிரதான குருக்கள் தேவியின் முன் வீற்றிருக்க, மற்றைய குருமார்கள், மாலா மந்திரம், எனப்படும் தேவி தோத்திரத்தை பக்தி சிரத்தையுடன் கோஷித்து, பஞ்சாராத்திரிகையை ஆராதிப்பதுடன் காலையில் வடிவாம்பிகா தேவிக்கு நடைபெறும் விரிவான, விசேட அபிஷேகம் ஆரம்பமாகும்.
நல்லெண்ணெய்க் காப்பிட்டு அரிசிமா, மஞ்சள்மா, நெல்லிமா முதலியவற்றினலும், பஞ்ச கவ்வியம், பஞ்சா மிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பு நீர், பல்வேறு பழரசங்கள் செவ்விளநீர் போன்றவற்றினலும், நறுமண வெண் சந்தணம், விபூதி, குங்குமம் நூற்றியெட்டுக் கலச திருமஞ்சன நீர், நூற்றியெட்டு வெண்சங்க ஒளஷத நீர், போன்றவைகளினுலும், தேவியின் திருவுருவின்ை அபி ஷேகம் செய்து, அபிஷேகத் தீர்த்தத்தை பக்தர்களுக்குக் கொடுப் Llyfr fi 35 Gir.
இதன் பின், அம்பிகையின் விக்கிரகத்தை மகா மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்து, இன்னிசை முழங்க, அலங்காரம் நடைபெற்று, உச்சிக்காலப் பூஜை நடைபெறும். இப்பூஜையின்போது, அன்னதானத் துக்கு உரியவையாவும், நிவேதனமாக அர்ப்பணிக்கப்பட்டு, ஆராதனை நடைபெறும்.
பூஜை முடிந்தவுடன் தேவியை, பலவித வாத்திய கோஷங் களுடன் எழுந்தருளச் செய்து, பிரகாரத்துக்கு வந்ததும், மங்கல வாத்திய இன்னிசைகளை ஒருங்கே நிறுத்தி, வேத கோஷம், தேவார, புராணப் பாடல்களுடன் ஆடம்பரமாக, அலங்காரம் செய்யப்பட் டிருக்கும், வசந்த மண்டபத்துக்கு, எழுந்தருளச் செய்வர். மத்தி யானப் பூஜையின் இறுதியில், கோயில் வடக்குப் பிராகாரத்தில் எல்லோருக்கும் அன்னதானம் நடைபெறும்.
மாலை ஐந்து மணியளவில், சாயரட்சைப் பூஜை முடிந்த பின், முன்னேஸ்வரம் கோயிலின் மகத்துவதற்குக் காரணங்களிலொன்று எனப் போற்றப்படும், பூணூரீ சக்ர யந்திர பூஜை, பரசுராம கல்ப சூத்திரங்கூறும் முறைப்படி விஸ்தாரமாக நடைபெற்று, லலிதா சகஸ்ரநாமம் (தேவி அருட்பேராயிரம்), லலிதா திரிசதி போன்ற அர்ச்சனைகளும், தேவி தோத்திரங்களும் பாடப் பெற்று பூஜை நடைபெறும்.
இதன்பின், நெய் விளக்கேற்றி, தசாங்க தூப கலசங்களை வைத்து, நவரத்தின கசித தங்கப் பாத்திரங்களில், செஞ்சம் பாவமுது, பாற்பாயசம், பால், பழம், தேன், நெய், கரும்பு, தோடம் பழம், எலுமிச்சம் பழம், மாதுளம் பழம், விளாம்பழம், வில்வப் பழம்,
24

பேரீச்சம் பழம், தாமரத்தம் பழம், பலாப்பழம், மாம்பழம், வாழைப் பழம், திராட்சைப் பழம் போன்ற பழவர்க்கங்கள், செவ்விளநீர், பணிகார வகைகள், ஏலம், கறுவா போன்ற நறுமணப் பொருட் களுடன் கூடிய தாம்பூலம் போன்றவைகளை நிவேதனமாக அர்ப் பணித்து, விசேட பூஜை நடைபெறும்.
பூஜையின் போது நறுமணங் கமழும் தசாங்க தூப தீபம், அடுக்குத் தீபம் (அலங்கார தீபம்) நட்சத்திர தீபம், பஞ்சமுக தீபம், சதுர்முக தீபம், வில்வ தீபம், நாக தீபம், விருஷப தீபம், புருஷா மிருக தீபம், மயூர தீபம், கூர்ம தீபம், கும்ப தீபம், ஈசான தத்பு ருஷ, அகோர, வாமதேவ, சத்தியோ ஜாத தீபங்கள், கற்பூர தீபம், பஞ்சாரத்திரிகை போன்ற தீபங்களினுலும், கண்ணுடி, குடை சாமரை, விசிறி, கொடி ஆல வட்டம் போன்ற உபசாரப் பொருட் களாலும், சுவர்ணமய சிம்மாசனத்தில் கொலு வீற்றிருக்கும் தேவியை ஆராதனை செய்வர். இதன் இறுதியில் அஷ்டோத்தரம், வேதம், ஆசீர் வாதம், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா திருப்பல்லாண்டு, திருப்புராணம், திருப்புகழ் போன்றவற்றை அழகாகக் கோஷிப்பதும் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக அமையும்.
நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் “மஹாஷோ டான்னி யாச பூர்வக கிரியா கலாப சதுஷ்ஷஷ்டியுபசார மகா பூஜை நடை பெறும்.
விஜய தசமியன்று இரவு, நவராத்திரி பூஜையின் பின், வடிவாம் பிகா தேவியை ஊஞ்சலில் வைத்து, ஊஞ்சற் பாக்களைப் பாடி, அதற் கேற்ற ராகங்கள், தாளங்கள் போன்றவற்றுடன் பூஜை நடைபெறும். நவராத்திரி விழாவின் இறுதி அங்கமாக தேவியை சிங்கவாகனத்தில் எழுந்தருளப் பண்ணி "மானம்பு' வைபவமும், திருவுலாக் காட்சியும் நடந்தேறுவதுடன் நவராத்திரிவிழா இனிது முடிவுறும்.
இலட்சார்ச்சனை
இது தை மாதத்துப் பூச நட்சத்திரத்தை இறுதி தினமாகக் கொண்டு பதினறு நாட்களுக்கு இக் கோயிலில் நடைபெறும் விழா வாகும். 750
விசேட அபிஷேக, அலங்கார, ஆராதனை, பூஜீ சக்ர பூஜைகளுடன் ஓர் இலட்சம் முறைகள் இறைவனுடைய பெயர்களைக் கூறி நடாத்தப் படும் பூஜை இது.
லக்ஷம் லக்ஷயம் போன்ற சமஸ்கிருத சொற்கள் குறிக்கோள் என்ற பொருளையுடையன. எனவே இலட்சார்ச்சனை என்பது ஓர் இலட்சம் தடவைகள் நடாத்தப்படும் பூஜை என்பதுடன், ஒரு குறிக் கோளையடைய நடாத்தப்படும் பூஜை எனவும் பொருள் கொள்ள லாம்.
50. A study of Saivism of the epicand puranic periods. K. Kailasanatha Kuru
kkal M. A. (1959).
25

Page 22
முன்னேஸ்வரம் கோயிலில் இலட்சார்ச்சனை விழாவின் போது, ஒவ்வொரு நாட் காலையிலும், நூற்றியெட்டுச் சங்குகளை, அவற்றிற் குரிய ஒளஷதங்களையும், தண்ணீர், தர்ப்பைப் புல், மாவிலை போன்ற பொருட்களையும் வைத்து, வெண் சந்தண, குங்குமத் திலகங்களையும், நறுமணப் புஷ்பங்களையும் வைத்து, விரிவான சங்க பூஜை நடாத்தப் படும். இதன் பின் பூரீ மகா மேரு யந்திரத் திருவுருவினுக்கு, நவ ராத்திரி விழாவில், அம்பாளுக்கு நடைபெறுவதைப் போன்ற விரி வான அபிஷேகம் நடைபெறும் . அபிஷேகத்தின் பின், மகா மேரு யந்திரத்தை, மகா மண்டபத்திற்கு, வடிவாம்பிகா தேவியின் முன், எழுந்தருளச் செய்து, தீபாராதனை நடத்துவர். அங்கு சாதகா சாரியர் ஒருவர், பூg லலிதா சகஸ்ரநாமா ச்சனையை அழகாக வாசிக்க, ஐந்து குருக்கள் மார், குங்குமார்ச்சனை செய்வர். இறுதியில் அன்னதானத்துக் குரிய பிரசாத நிவேதனத்துடன், உச்சிகாலப் பூஜை நடைபெறும்.
மாலையில் மூல வருக்கு பஞ்ச முகார்ச்சனையுடன் கூடிய சாயரட்சைப் பூஜை நடைபெறுவது வழக்கம். இதன் பின், பரசுராம கல்ப சூத்திரங் கூறும் முறைப்படி விரிவான பூரீ சக்ர பூஜை நடைபெற்று தீபாராதனை, அஷ்டோத் தர அர்ச்சனை, வேதம், ஆசீர் வாதம், தேவாரம், திரு வாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம், திருப் புகழ், ஆசீர்வாதம் முதலியவை நடைபெற்ற பின், ஐந்து குருமார் ஒருங்கு கூடி, காலே போல், இரவும் சகஸ்ரநாமார்ச்சனை நடாத்து வார்கள். இதன் பின் வழமையாக நடைபெறும் அர்த்த சாமப் பூஜை நடைபெற்றுக் கோயிற் கதவுகள் மூடப்படும்.
வெள்ளிக்கிழமைகளிலும், முதல், இறுதித் தினங்களிலும், பூரீ மகாமேரு யந்திரத் திருவுருவினுக்கும், வடிவாம்பிகா தேவியின் திரு வுருவினுக்கும், ஒருங்கே அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.
இலட்சார்ச்சனை விழாவின், இறுதித் தினத்தன்று இரவு, வடிவாம்பிகா தேவியையும், பூனி மகா மேரு யந்திரத்தினையும், கர்ப்பக் கிருகத்துள், மூலவரின் முன்னிலையில், முன் போல், சேர்க்கையில் சேர்ப்பித்ததும், முன்னைநாத சுவாமிக்கும், வடிவாம்பிகா தேவிக்கும், பூரீ லலிதா - ருத்ர சம்மேளன வில் வ-குங்கும மகார்ச்சனை, சிவசக்தி ஐக்கிய ரூபத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நடைபெறுவது மிகவும் முக்கியமான தொரு நிகழ்ச்சியாகும். இதன் பின் நடைபெறும் அர்த்த யாமப் பூஜையுடன், வருடாந்தர இலட்சார்ச்சனை விழா இனிது
முடிவுறும்.
சிவராத்திரி
இந்துமதத்தில் இராத்திரி என்ற பெயரால் கொண்டாடப் படும் விழாக்கள் இரண்டு உள்ளன. அவை நவராத்திரி, சிவராத்திரி எனப் பெயர் பெற்றுள்ளன. நவராத்திரி சக்தியைக் குறித்து, வழி படும் விழாவாக அமைவு பெற-சிவராத்திரி சிவனைக்குறித்து வழிபடும் விழாவாக அமைந்துள்ளது.
புறக்கண்களுக்குப் புலனுகாது. அகக் கண்களுக்கு மட்டுமே தென்படுவது அருவத் திருமேனி, புறக்கண்களுக்குப் பல்வேறு உறுப்பு
26

க்ளுடனும், அம்சங்களுடனும் புலப்படுவது உருவத் திருமேனி. ஒருவித உறுப்புக்களுமின்றி ஒளிப் பிளம்பாய்த் தோன்றுவது அரு வுருவத் திருமேனி.
அருவத் திருமேனி போன்று, புலன்களுக்குப் புலப்படாமல் போகாது, உருவத் திருமேனிகளைப் போன்று பல்வேறு உறுப்புக் களுடனும் தோன் ருது, எல்லாத் திருவுருவங்களுக்கும் அடிப்படை யான நிலைக்களஞக விளங்கும், சிறப்பினைப் பெறுவது, அருவுருவத் திருமேனியாகிய இலிங்க மூர்த்தம்.
சிவராத்திரி விழாப் பூஜைகளில், சிவலிங்க மூர்த்தமே முக்கிய இடம் பெறுகின்றது.
சிவராத்திரி விழா தோன்றியதையும், அதன் சிறப்பையும் விளக்கு வதற்காகப் பல சம்பவங்களைப் புராணங்களும், இதிகாசங்களும் இயம்புகின்றன.
சிவபுராணம், இலிங்க புராணம், ஸ்காந்தம், பாத்மம் போன்ற புராணங்களும், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் சிவராத்திரி பூஜையின் சிறப்பியல்புகளையும், மகிமைகளையும், எடுத்துக் கூறு கின்றன.
சிவராத்திரியைப் பற்றிய புராணக் கதைகள்
உலகம் சிவன்டம் ஒடுங்கிய காலத்தில் (பிரளயத்தின் போது), சிவனேடு கலந்து, சிவனை இயக்கும் சக்தியானவள், சிவனைப் பூஜித்து, மீண்டும் உயிர்கள் தோன்ற வழிவகை செய்த தினமே சிவராத்திரி யெனப்படும், என்பது ஒரு புராணக் கதை.
சிவராத்திரியின் தோற்றத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறப் படுகின்றது.
ஒரு கற்பாந்தரத்தில், உலகம் அழிந்த பின், திருமால் நான் முகனைத் தன் உந்திக் கமலத்திலே தோற்றுவித்து, உலகைப் படைக்கும் படி பணித்தார். உலகைப் படைத்த பிரம்மாவும், பிரம்மாவைத் தோற்றுவித்த விஷ்ணுவும், 'தங்களுக்குள், வல்லமை பொருந்தியவர் எவர்?’ என அறிந்து கொள்ளும் பொருட்டு வாதாடி, ஈற்றில் போர் தொடுத்தனர். அப்பொழுது எல்லாம் வல்ல இறைவன், உண்மையை விளக்கும் பொருட்டு, இருவருக்கும் இடையே, ஒளிப் பிளம்பாய்த் தோன்றி, ‘என் அடியையோ அல்லது முடியையோ, முதலில் காண்பவ ரே, உங்கள் இருவரில் வல்லமை கூடியவர்' என்று கூறினர். பிரம்மா அன்னப்பட்சி ரூபமெடுத்து முடியையும், விஷ்ணு பன்றி ரூபமெடுத்து அடியையும் காணச் சென்று, இறுதியில், ஜோதியின், அடி, முடியைக் காணுது தோல்வியுடன் திரும்பி வந்து, சிவனருளால், தம் ஆணவத் தை உணர்ந்து, நற்புத்தி பெற்றது சிவராத்திரி தினத்திலென்பர்.
சிவராத்திரியின் மகிமையை விளக்கும் பொருட்டு புலிக்குப்
பயந்து, வில்வ மரத்தின் மேல் ஏறி, சிவகதியடைந்த வேடனுடைய கதையை கூறுவது பிரசித்தமடைந்துள்ளது.
27

Page 23
பல்வகை சிவராத்திரி
நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து வகையான சிவ ராத்திரி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன வென்பதை சமய நூல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு சதுர்த்தசித் திதி, இரவுகளிலும் சிவபூஜை செய்து, வழிபாடு நடத்துவதன் மூலம், ஒரு வருடத்தில் இருபத்தி நான்கு, சிவராத்திரி பூஜைகளை நடாத்துவது நித்திய சிவராத்திரி எனப் பெயர் பெறும்.
தை மாதத்துக் கிருஷ்ண பட்சத்துப் பிரதமை தொடக்கம் பதின்மூன்று தினங்கள் சிவபூஜைகள் நடாத்தி, சதுர்த்தசியில் சிவ பூஜை செய்வதுடன் முடிவுறுவதை பட்ச சிவராத்திரி என்பர்.
மாசி மாதத்துக் கிருஷ்ண பட்சத்து, சதுர்த்தசி, பங்குனியில் வரும் முதல் திருதியை, சித்திரையில் வரும் கிருஷ்ண பட்சத்து அஷ்டமி, வைகாசியில் வரும் முதல் அஷ்டமி, ஆனி மாதத்து சுக்கில பட்சத்துச் சதுர்த்தி, ஆடி மாதத்து கிருஷ்ண பட்சத்து பஞ்சமி, ஆவணி மாதத்து சுக்கில பட்சத்து அஷ்டமி, புரட்டாசி மாதத்தில் வரும் முதல் திரியோதசி, ஐப்பசி மாதத்து சுக்கில பட்சத்து துவாதசி, கார்த்திகை மாதத்து முதல் சப்தமியும், அஷ்ட மியும் மார்கழி இரு பட்சத்து சதுர்த்தசிகள், தை சுக்கில பட்சத்து திருதியை, ஆகிய தினங்களில் நடாத்தப்படும் சிவபூஜைகள் மாத சிவராத்திரி எனப் பெயர் பெறும்.
திங்கட் கிழமைகளில் அறுபது நாழிகையும் அமாவாசை இருந் தால் அன்றைய தினம் நடாத்தப்படும் சிவபூஜை, யோக சிவராத்திரி எனப் பெயர்று பெம்.
மாசி மாதத்துக் கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசியில் நடைபெறும் சிவபூஜைகளை மகா சிவராத்திரியென அழைப்பர். முன்னேஸ்வரத்தில் சிவராத்திரி سمسمبر
சிவராத்திரி இரவு நான்கு யாமங்களாக (காலங்களாக)ப் பிரிக்
கப்பட்டு, ஒவ்வொரு யாமத்திலும் பூஜைகள் நடாத்தப்படும்.
ஒவ்வொரு யாமத்திலும் நூற்றியெட்டுச் சங்குகளைக் கொண்ட சங்கபூஜையும், விசேட அபிஷேகங்களும், விரிவான தீபாராதனைகளும். பஞ்சமுக சகஸ்ரநாமார்ச்சனைகளும் நடைபெறும்.
கடைசிக் காலப் பூஜையின் இறுதிக் கட்டத்தில், உதயசூரியனின் செங்கதிர்கள், மூலவரின் மீது, பட்டொளி வீசுவது குறிப்பிடத்தக்க தொரு நிகழ்ச்சியாகும்.
கடைசி யாமப் பூஜைகள் முடிந்தபின், திருவிழா நடைபெறு வதுடன் சிவராத்திரி விழா முடிவுறும்.
28

திருக்கார்த்திகை
கார்த்திகை மாதத்துப் பெளர்ணமித் தினத்தன்று விநாயகர், சிவன், சக்தி ஆகிய கோயில்களிலும் திருமால், முருகன் எழுந்தருளி யுள்ள திருத்தலங்களில், கார்த்திகை மாதத்தின், குறிப்பிட்ட நட்சத் திரங்களில் நடைபெறுவது, இவ்வுற்சவம். சந்திரோதயத்தின் பொழுது கிருத்திகை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
தென்னை, சண்பகம் போன்ற மரங்களால், கோயிலின் பிரா சாதத் தின் உயரமாகவோ அன்றி, கபோதத்தின் உயரமாகவோ, தீப தண்டம் அமைத்து, பனை ஓலைகளால், தீபகிலங்கள் அமைக்கப்படல் வேண்டுமெனக் கிரியை நூல்கள், கூறுகின்றன. இதனைச் சொக்கப் பனை என அழைப்பர்.
சுவாமிக்கு முன் ஒமகுண்டம் நிறுவி, யாகத் தீயினை வளர்த்து, அத்தீயினல் ஒன்பது தீபங்கள் ஏற்றி, பின் அவற்றை, ஒரு தீபமாக்கி, சுவாமியை எழுந்தருளச் செய்து, சொக்கப் பனைக்குத் தீ மூட்டுவர்.
திருக் கார்த்திகை தமிழ் நாட்டில், பெருந் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. தமிழ் இலக்கிய நூல்களிலும், இப் பெருந் திருவிழாவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. உதாரணமாக அகநானூறு, களவழி நாற்பது, கார்நாற்பது, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
புராணக் கதைகள்
திருக் கார்த்திகையை யொட்டிப் பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றில் சில மிகவும் பிரசித்தி பெற்றவை.
கார்த்திகைப் பெளர்ணமித் தினத்தில், சிவன் ஜோதிர் மயலிங்கமாகத் தோன்றி, திருமாலுக்கும். நான் முகனுக்கும் நற் புத்தியைப் புகட்டினன்.
விஷ்ணு, திரிவிக்கிரமணுகத் தோன்றி, மகாபலிக்கு நற்கதியளித் தார்.
சிவன் முப்புரங்களை எரித்தார் போன்றவை சில. சிவபிரான் முப் புரங்களை எரித்த புராணக் கதை பின்வருமாறு கூறப்படுகின்றது.
தாரகாசுரனுடைய புத்திரர்களான வித்தியுன் மாலி, தார காட்சுரன், கமலாட்சன் (மகராட்சன்) என்ற மூன்று அசுரர்கள் சிவனிடம் வரங்கள் பல பெற்று, மூன்று பட்டணங்களில் இருந்து உலகோரை இம்சித்தனர். தாம் மூவரும் அபூர்வமாகக் கூடியிருக்கும் பொழுது, பிறப்பு, இறப்பு இல்லாத, ஒரு திவ்விய புருஷர் இதுவரை உருவாக்கப்படாத அதியற்புத தேர், குதிரை, சாரதி, வில், அம்பு கொண்டு போர் செய்தால்தான், தங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என, இறைவனிடம் வரம் பெற்றிருந்தனர். இதற்கேற்ப இறைவன் கைலாசத்தையே தேராகவும், பூமியையே தேர்த் தட்டா
29

Page 24
கவும். மந்தர மலையையே தேர் அச்சாகவும், சூரிய சந்திரரையே சக்கரங்களாகவும், அட்ட குலா சலங்களையே தேர்த் தூண்களாகவும், கடல்களையே தேர்ச் சீலையாகவும், நதிகளையே கொடிகளாகவும், உப வேதம் முதலிய கலைகளையே தேரின் மணிகளாகவும், வேதங்களையே குதிரைகளாகவும், நான் முகனையே தேர்ச் சாரதியாகவும், ஒங்காரத் தையே சாட்டையாகவும், மேருமலையையே வில்லாகவும், 'வாசுகி என்னும் பாம்பினையே நாணுகவும் அமைத்து, கலைமகளையே வில்லின் மணியாகவும், திருமாலேயே அம்பாகவும், அக்கினியையே அம்பின் நுனியாகவும், வாயுவையே அம்பின் சிறகாகவும் பாவித்து, ஒரு புன் சிரிப்பை உதிர்த்தே அசுரரை வதைத்து முப்புரங்களையும் எரித்தார்.
இச் சம்பவத்தினை சிலப்பதிகாரம், புறநானுரறு, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, கலித் தொகை, கலிங்கத்துப்பரணி போன்ற தமிழ் இலக்கிய நூல்களிலேயே காணலாம்.
முப்புரம் என்பது மூன்று கோட்டைகள் என்று புராணக் கதை கூறுகின்றது. ஆனல் முப்புரம் என்பது மும் மலம் என்ற தத்து வார்த்தத்தைக் கொண்டது என்பதைத் திருமூலர் கூறுகின்ருர்,
‘‘அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள் முப்புர மாவன மும் மல காரியம் அப்புரம் எய்தமை யார் அறிவாரே'
(திருமந்திரம்)
முப்புரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங் கள் எனவும், சிவபெருமான் ஆன்மாக்களிடம் கூடியுள்ள மும்மலங் களையே அழித்தார், என்ற தத்துவார்த்தத்தை உணர வேண்டும். ~-
முன்னேஸ்வ ரத்தில் திருக்கார்த்திகை
முன்னேஸ்வரம் கோயிலில், கார்த்திகை மாதத்துப் பெளர்ணமி யன்று, திருக் கார்த்திகைப் பெருவிழா நடைபெறுவது வழக்கம், கோயிலுக்கு அண்மையில், திருக் கார்த்திகையின் போது, சொக்கப் பனையின் தீபகிலங்கள் அமைப்பதற்கு பனை ஓலை வெட்டவென்றே, பனை மரங்கள் வளர்க்கப்பட்டன. இவ்வாறு பனைமரங்கள் நிறைந்த இடத்தைப் 'பனங்குடா’ என்று அழைப்பர்.
திருக் கார்த்திகைத் திருவிழாவன்று, காலையில், அபிஷேக ஆராத னைகளும், மாலையில் சொக்கப் பனைக்குத் தீமூட்டிய பின், திருவிழா வெல்லாம், பரம்பரை பரம்பரையாக நடைபெற்று வருவதைப் போன்று இன்றும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை
மார்கழிமாதப் பூஜை
ஆடி மாதம் முதல், மார்கழி மாதம் வரை இரவாகவும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகலாகவும் தேவர்களுக்கு ஒரு
30

நாளாகும், என சமய நூல்கள் கூறுகின்றன. மார்கழி மாதம் தேவர் களுக்கு வைகறைப் பொழுதாக விளங்குகின்றது, எனக் கூறுவர். மார்கழி மாதத்து, உதய காலத்தில் பூஜைகள் நடாத்த வேண்டும் என காரணுக மம் கூறுவதற்கிணங்க, கோயில்களில் விசேட பூஜைகள் சூரியோதயத்துக்கு முன் நிகழ்வது வழக்கம்.
'வை கறையில் இருள் நீங்க ஒளி எழுவது போல், ஆன்மாக்க ளுடைய திரோதான மலம் அகல, ஞான ஒளி வெளிப்படுகின்ற முறை மையை’ திருப்பள்ளியெழுச்சிப் பூஜை இலகுவில் விளக்கவல்லது.
முன்னேஸ்வரத்தில் திருப்பள்ளியெழுச்சிப் பூஜை
மார்கழி மாதம் முழுவதும் சூரியோதயத்துக்கு முன் நடைபெறும் விசேட பூஜையாகும். காலை மூன்று மணியளவில், திருவனந்தல் பூஜையின் பின் மூல வருக்கும், மற்றும் சில விக்கிரகங்களுக்கும், அபிஷேக அலங்கா ரங்களுடன், செஞ்சம்பாவ முதினை நிவேதித்துப் பூஜைகள் நடைபெறும்.
திருவெம்பாவை, ஆருத்ரா பூஜை
மார் கழித் திங்கள், திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனப் பூஜையின், முன்னுள்ள ஒன்பது தினங்களும், காலையில் தனுர் மாதப் பூஜையின் பின், நடராஜப் பெருமான் சன்னதி யில், பரமன் ஏடெழுதக் கோவை உணர்த்திய, மாணிக்கவாசகப் பெருமான் பாடியருளிய திருவெம்பாவை என்னும் பாடல்கள், பாடப் படுவது வழக்கம், வைஷ்ணவக் கோயில்களில் சூடிக் கொடுத்த சுடர் கொடியாகிய, ஆண்டாள் பாடியருளிய, திருப்பாவை என்னும் பாசுரங்கள் பாடப்படுவது மரபு.
திருப்பாவை, திருவெம்பாவை போன்ற நூல்கள் கூறும் இப் பாவை நோன்பு, தமிழ் நாட்டில் தை நீராடல் என்ற பெயராலும் கொண்டாடப்பட்டு வந்தது. நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற தமிழ் இலக்கிய நூல்களில், தை நீராடலைப் பற்றிய குறிப்புக்களைக் காணலாம்.
முன்னேஸ்வரத்தில் திருவெம்பாவை, ஆருத்ரா பூஜை
முன்னேஸ்வரத்தில், அதிகாலை திருப்பள்ளியெழுச்சி பூஜையின் பின், விதிப்படி திருவெம்பாவைப் பூஜை நடைபெற்று, மாணிக்க வாசகப் பெருமான் அருளிய பாசுரங்களைப் பாடுவதைக் காணலாம்.
சில வேளைகளில், மார்கழி மாதத்தின் முன்போ, அல்லது அதற்குப் பின்போ, திருவெம்பாவைப் பூஜை வருமாயின், திருப்பள்ளி யெழுச்சிப் பூஜையுடன் திருவெம்பாவைப் பூஜை நடைபெறும்.
ஆருத்ரா பூஜையன்று, நடராஜப் பெருமானைக் கர்ப்பக் கிருகத் துக்குள் எழுந்தருளப் பண்ணி, அங்கு மூலவருக்கும், அம்பிகைக்கும், நடராஜப் பெருமானுக்கும் ஒருங்கே விசேட அபிஷேகங்கள், தீ
3.

Page 25
பாராதனைகள் நடைபெற்ற பின் சூரியோதயத்தின் போது தரிசன மும், திருவுலாக் காட்சியும் நடைபெறும்,
தீபாவளி
தமிழர் வாழ்வில் விழாக்களுக்குக் குறைவே கிடையாது. அன்று நாகரிக வாழ்க்கை நடாத்திய தமிழினம், விருந்தோம்பல், கோபதாப உணர்ச்சிகளை மறந்து குதூகலமாக இருத்தல், இறைவனை வழிபடல் போன்றவற்றை, அவ்வப்போது கடைப்பிடிக்க, பல்வேறு வகையான விழாக்களை தம் வாழ்வில் பின்னிப் பிணைத்துக் கொண்டார்கள். அவ் வாருண விழாக்களில் தீபாவளிப் பண்டிகை மிகவும் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது.
தீபாவளி யென்ரு ல், விளக்குகளை வரிசையாக வைத்தல் என்று பொருள். ஆனல் தீபாவளியின் போது, விளக்குகளை வரிசை யாக ஏற்றி வைத்து, உலகை ஒளிமயமாக்குவது, வழக்கத்தில் இல்லை. திருக் கார்த்திகைத் திருவிழாவின் போது, தீபங்களை ஏற்றி வரிசை, வரிசையாக வைத்து, வழிபடும் வழக்கம் இருப்பதைக் காணலாம்.
தீபாவளிப் பண்டிகை தோன்றிய வரலாற்றை, விளக்குவதற்குப் புராணக் கதைகள் பல உள்ளன. அவற்றில் சில மிகப் பிரபல்ய மானவை. அவற்றுள் ஒன்று பின்வருமாறு கூறப்படுகின்றது.
நரகாசுரன் என்னும் அசுரன் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று வானவர்களையும், மற்றவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களின் வேண்டு கோளுக்கிணங்க, கிருஷ்ண பரமாத்மா, சத்தியபாமை சகிதம், அவனை வதம் செய்த் பொழுது அசுரன், "நான் இறக்கும் இந்நாளை உலகில் உள்ளோர் தீப ஒளி ஏற்றி, சந்தோஷகரமான காரியங்களை நடாத்தி, இனிது கொண்டாடி, உலகை ஒளிமயமாக்க வேண்டும்’ என, சாகுந்தருவாயில் வேண்டிக் கொண்டான். அதனையொட்டியே தீபாவளி கொண்டாடப்பட்டு வரு கின்ற தென்பர்.
மேற்கூறிய புராணக் கதையில் இருந்து, அறிவுக்கும் (கிருஷ்ண பரமாத்மா, தேவர்கள் முதலியோருக்கும்) அறியாமைக்கும் (அசுர ருக்கும்) இடையில் ஏற்பட்ட பூசல்களையும், ஈற்றில் அறிவே அறியா மையை (திச் செயல்களை) வென்ற தென்பதையும் நாம் அறிந்து, கொள்ளலாம்.
அறியாமையின் அ ழிது
உலக மக்கள், கோபதாப உணர்ச்சிகள் இன்றி எவ்வித கவலை களுமில்லாமல், ஒரு நாளையாவது கொண்டாட வேண்டுமென்ருல், உலகில் பசி, பட்டினி, பஞ்சம், நோய், நொடி போன்றவையும் பல்வேறு பூசல்களும் இன்றி, நாடு செழிப்புற்றிருந்தால் தான் இது சாத்தியமாகும். இதற்கு முதற்படியாக, அறியாமையை அறவே ஒழித்து, அறிவை வளர்க்க வேண்டும். இது நிகழும் பொழுது, அறியாமையால், பழமைன்ய அழுங்குப் பிடியாகக் கொள்வோர்க்கும்,
32

அறிவை வளர்ப்போர்க்கும் இடையில், மோதல்கள் ஏற்படுவது இயற்கை. இதை மேற்கூறிய புராணக் கதையில் இருந்து அறிந்து
கொள்ளலாம்.
கடைசி வேண்டுகோள்
அசுரன் இறக்குந் தருணத்தில், தன் அழிவுக்காக, விழாக் கொண் டாட வேண்டுமென, இறைவனை வேண்டிக் கொண்டான். விழா கொண்டாட வேண்டு மென்முல், நாடு செழிப்புற்றிருக்க வேண்டு மென்று பொருள். நாடு செழிப்புற்று இருந்தால் தானே விழாக் கொண்டாடலாம்? இதில் இருந்து பண்டைய மக்களின் பண்பு தெளிவாக விளங்குகின்றது. அசுரன் (தீயவன்) தன்னைக் குற்றவாளி யாகக் கண்டறிந்து, இறக்கும் பொழுது கூட, தனக்குப் பின், வாழ்ப வர்கள், நல்வாழ்வு வாழ வேண்டும் என எண்ணுகிறன். அது மட்டு மல்ல, "ஒரு கொடியவன் இறந்து போனுனே என்ரு வது, உலகோர் . சந்தோஷப் படவேண்டும் என எண்ணி தான் இறந்த நாளை, மங்கள கரமான காரியங்களை நடாத்தி, ஒளியேற்றிக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டானே யொழிய, உலக மக்கள் அனைவரும், தான் இறந்த தினத்தை, ஒரு துக்க தினமாகக் கருதி, அந்நாளைத் துக்கம் அனுட்டிக்க வேண்டுமென வேண்டிக் கொள்ளவேயில்லை.
புராணக் கதைகள், உண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் அல்ல. அவற்றில் பெரும் பகுதி, வெறுங் கற்பனையில் உதித்தவையே. ஆஞல் அது பண்டைய மக்களின் பண்பாட்டை விளக்குகின்றது. புராணக் கதைகள் யாவும், எமக்கு எளிதில் விளங்காத, தத்துவக் கருத்துக்களை இலகுவில் விளங்க வைப்பதற்காக எழுந்தவையே.
சிலர் இத்தீபாவளி விழா, சமண சமயத்தைச் சேர்ந்ததாகவும், பின் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களும் கொண்டாடும் பண்டிகை யாகவும் மாறிய தென்பர்.
முன்னேஸ்வரத்தில் தீபாவளி
விடியற் பொழுதில், திருவனந்தல் பூஜையின் பின், கோயிலில் உள்ள சில விக்கிரகங்களுக்கு, நல்லெண்ணெய்க் காப்பிட்டு, அபிஷே கங்களை நடாத்தி, புது வஸ்திர அலங்காரம், பூஜை முதலியவை நடைபெறும். இத்துடன் தேவஸ்தான சிப்பந்திகள் அனைவருக்கும், "புது வஸ்திர தானம் செய்யப்படுவது, இக்கோயிலில் தொன்று
தொட்டு நடைபெற்று வரும் சம்பிரதாயமாம்,
சகஸ்ர சங்காபிஷேகம்
கார்த்திகைத் திங்களில் வரும் மூன்ரு வது திங்கட்கிழமை நடை பெற்றுவந்த சகஸ்ர சங்கா பிஷேகம் அண்மையில் நடைபெற்ற கும்பா பிஷேகத்தின் பின், கும்பாபிஷேக நினைவு தினத்தன்றே, இவ்விழாவும் நடைபெற்று வருகின்றது.
ஏழு படிகள் கொண்ட, வட்ட வடிவமான மேடையில், ஆயிரத் தெட்டுச் சங்குகள் வைத்து, விசேட சங்க பூஜைகள், யாகங்கள்
33

Page 26
நடைபெற்று, இரவு அபிஷேக ஆராதனைகள், திருவிழா முதலியவை நடைபெறும். தைப் பொங்கல்
தமிழ் நாட்டிலே, தை மாதத்தின் முதலாம் நாள்,தைப் பொங்கல் என்ற பெயரால், தமிழர் எல்லோராலும் கொண்டாடப்பட்டு வரு கின்றது. விழாக்களில் சாதிமத பேதமின்றி எல்லோராலும் குதூகல மாகக் கொண்டாடப்படுவது இத் தைப் பொங்கல் விழா. இவ் விழா வை ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரோ அல்லது ஒரு குழுவினரோ தான், கொண்டாட வேண்டும் என்ற நியதிகள் இன்றி தமிழர் அனை வரும் கொண்டாடும் விழாவாக மிளிர்கின்றது. தமிழ் மக்களில் பெரும்பாலானேர் சைவ சமயத்தவராக விருந்ததால், காலப் போக் கில், இத் தைப் பொங்கல் விழாவிற்கும், இந்து சமயத்திற்கும் தொடர்புகள் ஏற்படலாயிற்று. இதன் பலனுக, இந்துக் கோயில் களிளெல்லாம் இத் தைப் பொங்கல் விழா, ஒரு நன்னளாகக் கொண் டாடப்பட்டு வருகின்றது.
உழவர் திருநாள்
தைப் பொங்கல் திருநாள், நாட்டின் உண்மையான உழைப் பாளிகள் எனப் போற்றப்படும் உழவர்கள் திருநாள். விவசாயிகள் படாத பாடுபட்டு, நெற்றி வியர்வை நிலத்தில் விழ நெல்லை விளை விக்கின்றனர்.
நெல் விளைவின் காரணகர்த்தாவாக விளங்கும், சூரியனை வணங்கி, சூரிய பகவானுக்குத் தங்கள் வயலில் விளைந்த புது நெல்லைப் பதப் படுத்தி, பால் ஊற்றிப் பொங்கல் பொங்கினர்கள்.
விவசாயிகள், தங்களுக்கு நெல் உற்பத்தி கூடிவிட்டால், பொங் கல் விழா வை மிகவும் விமரிசையான முறையில் கொண்டாடுவார்கள். விளைச்சல் இல்லாது போனுலும், இவ்விழாவைக் கொண்டாடாமல் விட மாட்டார்கள்.
தமிழ் நாட்டு விவசாயிகள் ஏற்படுத்திய இவ்விழா, காலப் போக்கில், விரிவடைந்து, தமிழர் எல்லோரும் கொண்டாடும் ஒரு விழாவாக மாறியுள்ளது.
முன்னேஸ்வரத்தில் பொங்கல்
தைப் பொங்கலன்று, கோயில் ஸ்தம்ப மண்டபம், குலை தள்ளிய
வாழை மரங்கள், கமுகு, தென்னை போன்றவற்றின் குருத்துக்களின
லான தோரணங்கள் போன்றவற்ருல் அலங்கரிக்கப்படும்.
இம் மண்டபத்தின் நடுவே பெரியதொரு அடுப்பு மூட்டப் பட்டு, அதன் மேல் புதிதாக வனையப்பட்ட, பெரியதொரு பொங்கல் பானை வைக்கப்பட்டு, அதில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும், அரிசி, பசும்பால், சர்க்கரை, நெய், உலர்ந்த முந்திரிய வற்றல், கசுக்கொட்டை, ஏலம் கருவா, கிராம்பு, போன்றவற்றினை யெல்லாம் நிரப்புவார்கள். பொங்கல் பொங்கியதும், மூலவருக்கும், சூரியபகவானுக்கும் நிவேதனம் செய்து, எல்லோருக்கும் வினியோகம் செய்வார்கள்.
34

அத்தியாயம் ஏழு
முன்னேஸ்வரம் கோயிலில் நடைபெற்ற முக்கிய விழாக்கள்
இலட்சதீபம்
விகாரி வருடம் கார்த்திகை மாதம் முதலாம் திகதி முதல் பதின் மூன்ரும் திகதி வரை (கி. பி. 1889) சூரியன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, இராகு என்னும் கிரகங்கள் ஒரே ராசியில் கூடியதால் ஏற்படவிருந்த தீங்குகள் குறைய, கார்த்திகை மாதம் முதலாம் திகதி முதல், ஒரு மண்டலத்திற்கு ஏகாதச ருத்திர ஸ்நபணு பிஷேகமும்,மிருத்தியுஞ்ச பூஜையும் குமாரசுவாமிக் குருக்களின் மைந்தராகவும், சோமாஸ்கந்தக் குருக்களின் தந்தையாகவும் விளங் கிய, பிரம்மபூரீ முத்துக்குமாரசுவாமிக் குருக்களின் தலைமையில் சிறப் பாக நடைபெற்றது.
விகாரி வருடம் தை மாதம் பத்தாம் நாள் முதல் (கி. பி. 1900) நாளொன்றுக்கு பதினுயிரம் தீபமாகப் பத்துத் தினங்களுக்கு இலட்ச தீபங்கள் ஏற்றி மகாருத்திர ஜபங்களும், ஸ்நபணு பிஷேகங்களும் நடாத்தி பத்தாவது தினத்தன்று, சிவதீர்த்தத்தில் தீர்த்தங் கொடுத் தும், பதினேராம் நாள் முன்னேஸ்வரம் கோயிலின் முன் அமைந் திருக்கும் குளத்தில், தெற்போற்சவமும் சிறப்பாக நடைபெற்றது. 51
கோடியர்ச்சன
மேல்நாட்டு - கீழ்நாட்டு சோதிட விற்பன்னர்களும். தத்துவ ஞானிகளும், பிலவ வருடம் தை மாதம் (1962-ம் வருடம் பிப்ரவரி மாதம் 3, 4, 5-ம் திகதிகளில்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, கேது ஆகிய எட்டுக் கிரகங்கள் (இராகு
51, அனுபந்தம் 1.
3S

Page 27
வைத் தவிர, மற்றவை யாவும்) மகர ராசியில் கூடுவதாகவும், பிப்ர வரி மாதம் ஐந்தாந் திகதி ஒரு பூரண சூரியக் கிரகணமும் ஏற்படப் போவதாகவும், இதனுல் உலகுக்குப் பல தீமைகள் ஏற்படக் கூடுமென வும் அறிவித்தனர்.
கிரகங்கள் யாவும், நேர் கோட்டில் வருவதால் ஆகர்ஷண சக்தி யில் மாறுபாடுகள் ஏற்படலாம் என்று சிலரும், மற்றையோர், தீமை கள் உண்டாவதற்கான சாத்தியக் கூறுகளின் இயல்புகளையும், தன் மைகளையும் பல்வேறு வகையான முறையில் விளக்குகிருர்கள்.
ஆத்மீகப் பெருமக்கள் பலர், முன்னேஸ்வரத்தில் கோடியர்ச் சனையொன்றை செய்தால், மனச்சாந்தி பெறலாம் என்ற முழு நம் பிக்கையில், பிலவ வருடம் ஐப்பசி மாதம் ஏழா ந் திகதி (23.10.1961) தொடக்கம் பிலவ வருடம் தைத் திங்கள் இருபத்தி மூன்றும் திகதி (5. 2. 1962) வரை, நூற்றியெட்டுத் தினங்கள் நித்திய லட் சார்ச்சனை யும், பரசுராம கல்ப சூத்திரங் கூறும் முறைப்படி, பூரீ சக்ர பூஜைகளை யும் நடாத்தி வழிபட்டனர்.
எனவே கோடியர்ச்ச்னை பூர்த்தியானபோது நூற்றியெட்டு இலட் சார்ச்சனைகளும், நவா வரணங்களுடன் கூடிய பூரீ சக்ர பூஜை நூற்றி யெட்டு முறைகளும், எண்ணிக்கையிலடங்காத அளவு மிருத்தியுஞ்ச நவக்கிரக யாகங்களும் நிறைவேறியிருந்தன.
கோடியர்ச்சனையின்போது நூற்றியெட்டுத் தினங்களிலும் கிரி யைகள் அனைத்தும் எவ்விதமான இடையூறுகளுமின்றி சிறப்பா தடைபெற்று வந்தன. -
விழா விபரம்
காலையில் கால சந்திப் பூஜை முடிந்த பின், குருமார்கள் ழ்தின்மர், கர்ப்பக்கிருகத்துள் எழுந்தருளி அருள்பாலிக்கும், மூலவர்ை அணுகி, வழிபாடுகள் நடாத்திய பின், அங்கு மூலவர் முன்னுல் உள்ள பீடத்தில் எழுந்தருளியிருக்கும், பூரீ சக்ர மேரு மகா யந்திரத்தினை மேளம், தாளம், நாதஸ்வரம், சங்கொலி, சேகண்டி, மணியோசை போன்ற பல்வேறு மங்கல வாத்திய இன்னிசைகள் முழங்க, அந்தணர்கள் பூனி சூக்தம், துர்க்கா சூக்தம் போன்ற தேவி தோத்திரங்களை ஒருங்கு சேர்ந்து கோஷித்த வண்ணம், எழுந்தருளச் செய்தனர். கோடியர்ச் சனைக்கென விசேடமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த அதியற்புத அலங் கார மண்டபத்தில் சுவர்ணமய சிங்கா சனத்தில், கொலு வீற்றிருத்த வடிவஈம்பிகா தேவியின் முன் கொண்டு வந்து வைப்பதுடன் அன் றைய கோடியர்ச்சனைப் பூஜை ஆரம்பமாயின.
பல்வகையான தீபா லங்காரங்களுடனும், சோடனைகளுடனும் விளங்கிய கோடியர்ச்சனை மண்டபத்தின் வெளிப்புறத்தில் பத்துத் திக்குப் பாலகர்களின் உருவங்கள் தீட்டப்பட்ட ஒவியங்கள் நிர்மா ணிக்கப்பட்டும்,அவர்களுடைய சக்திகளின் ஒவியங்கள் மண்டபத்துள்,
தேவியை நோக்கியவாறு சித்தரிக்கப்பட்டும் இருந்தன.
36

மண்டபத்தின் மையப் பகுதியில்,முக்கோண வடிவத்தில் அமைந்த பீடத்தின் மீது, சிங்கா சனத்தில் கொலு வீற்றிருந்த வடிவாம்பிகா தேவியின் முன்னல் நிர்மாணிக்கப்பட்டிருந்த பீடத்தின் மீது, பூரீ சக்ர மேரு மகா யந்திரத்தினை வைத்த பின், பூரீ சக்ர நவா வரண தேவதைகளின் தியானம், ஆவாகனம் போன்ற கிரியைகளை, அந்த ணர்கள் பதின்மர் நடாத்தினர்கள். 臀
‘மாலா மந்திரம்’ போன்ற தேவி தோத்திரங்கள் முடிந்த பின், சாதகா சாரியர்,பூீரீ லலிதா சகஸ்ரநாமார்ச்சனையை ஒழுங்காக வாசிக்க, மேடையில் அமர்ந்திருக்கும் அந்தணர்கள் பதின்மரும், ஒருங்கே பூரீ சக்ர மேரு மகா யந்திரத்தின் மீது, குங்குமத்தைச் சமர்ப்பணம் செய்தனர். இவ்வாறு உச்சிக்காலப் பூஜையின் முன் ஆறு தடவைகள் நடைபெற்றன. (ஒருவர் 6000 வீதம் பதின்மர் 60,000 அர்ச்சனைகள்) ஒவ்வொரு முறையும் அர்ச்சனை முடிந்தவுடன், தாம்பூலத்துடன் பாயசம், வடை போன்றவைகளையெல்லாம் நிவேதனம் பண்ணி, மேள, தாள, நாதஸ்வரம், மணி, சங்கு, சேமக்கலம் போன்ற மங்கல வாத்தி யங்களின் இன்னிசை முழங்க, குருமார்கள் பதின்மரும், பத்துப் பஞ் சாலாத்திகளை ஒரே வேளையில், ஒன்ருக ஆராதித்த காட்சியினைத் தின மும் பக்தர்கள் தரிசித்த வண்ணம் இருந்தனர்.
நண்பகல், கடைசி அர்ச்சனை முடிந்த பின், குருமார் பதின் மரும், தேவியின் முன் நிர்மாணிக்கப்பட்டிருந்த, யாக குண்டத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்து, நவக்கிரக, மிருத்தி யுஞ்ச யாகங்களை நடாத்தினர்.
மாலையில் சாயரட்சைப் பூஜை முடிந்த பின் நித்திய இலட்சார்ச் சனை தொடர்ந்து நடைபெற்றது. மாலையில் முதல் மூன்று சகஸ்ர நா மார்ச்சனைகளும் முன் கூறியவாறே நடைபெற்றன. இதன் பின், பரசுரா மகல்ப சூத்திரங் கூறும் விதிப்படி பூரீ சக்ர மகா மேரு யந்திர பூஜை, மிகவும் விரிவான முறையில் நடைபெற்றபோது, அதில் ஓர் அங்கமாக அமையும் சகஸ்ரநாமமே.நித்தியலட்சார்ச்சனையின் கடைசி அர்ச்சனையாக அமைந்தது. இதன் பின், விரிவான தீபாராதனைகள், அஷ்டோத்தரம், வேதம், ஆசீர்வாதம் தேவாரம், திருவாசகம் திரு விசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம், திருப்புகழ் போன்றவை கோஷிக்கப்பட்ட பின்,நண்பகலில் நடைபெற்றதைப் போன்ற, யாகம் நடைபெற்றது.
இதன் பின், பூரீ சக்ர மகா மேரு யந்திரத்தினை மேள தாள, நாதஸ் வர இசை, சங்கு, சேகண்டி, மணி போன்றவற்றின் இன்னிசைகளுட னும், வேதியர்களுடைய வேத கோஷங்களுடனும் மூலஸ்தானத்திற்கு எழுந்தருளச் செய்து, அங்கு மூலவரின் முன் னிலையில் உள்ள பீடத்தில் வைத்துப் பஞ்சாராத்திரிகையை ஆராதிப் பதுடன், ஒரு நாளைய இலட்சார்ச்சனை முடிவுற்றது.
இவ்வாறே நூற்றியெட்டுத் தினங்களும் பூஜைகள் நடைபெற்று, இறு தி த் தி ன த் த ன் று, பூறி முன்னை நாதேஸ்வரருக்கும் பூரீ வடிவாம்பிகா தேவிக்கும் பூரீ மகா விஷ்ணுவுக்கும் தனித்தனியே ஆயிரத்தெட்டுச் சங்குகளைக் கொண்ட சங்கா பிஷேகங்களும், விரிவான
37.

Page 28
அலங்கார பூஜை, திருவிழா போன்றவையும் நடைபெற்றன. இத னேப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.
шгаът штаъйс
குரோதி"வருடம் பங்குனி மாதம் பதினரும் திகதி, திங்கட்கிழமை (29, 3. 1965) அவிட்ட நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுப தினத்தில், மிருத்தி யுஞ்ச மகா யாகம் ஆரம்பமாகி, விசுவாசு வருடம் வைகாசி மாதம் பதினெட்டாந் திகதி (30. 5. 1965) இரவு, இனிது முடிவுற்றது.
30. 5. 1965-ம் நாள் ஆறு கிரக சேர்க்கையோடு பூரண சூரிய கிரகணம் சம்பவித்தது. அன்றைய தினம் இடப ராசியில் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், குரு, ராகுஆகிய ஆறு கிரகங்களும் ஒன்று சேர அன்றையத் தினம், பூரண சூரிய கிரகணமும் சம்பவிக்க, செவ் வாய் சிங்க ராசியிலும், சனி கும்ப ராசியிலும் பரஸ்பர திருஷ்டியும் கொண்டு அமைந்தன.
இதனல் பற்பல தீமைகள் ஏற்படக் கூடுமென்றும், இவ்வாறு ஏற்படும் தீய விளைவுகளைச் சம்பூரணமாகத் தவிர்க்க முடியாவிடினும், அதனல் ஏற்படும் பலாபலன்களைக் குறைத்து, உலகோரை எதிர்நோக்கி வந்த இன்னல்கள், கோர வடிவம் எடுக்காது, சூரியனைக் கண்ட பணி போல், போகுமாறு செய்வதற்காக, ஆத்மீகப் பெருமக்கள் முன்னேஸ்) வரம் கோயிலில், மகாயாகம் ஒன்றினை நடாத்தினர்.
கிரியா விபரம்
காலை திருவனந்தல் பூஜை முடிந்த பின், மகா யாகம் செய்வதற் கென நியமிக்கப்பட்ட பிரதான குரு, பக்தி சிரத்தையுடன் சங்க பூஜை, கும்ப பூஜை போன்றவற்றினை நடாத்தி வைப்தார். இதன் பின் எல்லாம் வல்ல இறைவனுகத் துதிக்கப்படும், முன்னைநாதப் பெருமா னுக்கும், பூஞரீ வடிவாம்பிகா தேவிக்கும், சிவசக்தி ஐக்கிய ரூபமாக எழுந்தருளியிருக்கும் பூரீ சக்ர மகாமேரு யந்திரத்திற்கும் விசேட விரிவான அபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேக அலங்கார ஆராதனையின் பின், காலை சந்திப் பூஜை நடைபெற்று, பூரீ சக்ர மேரு மகா யந்திரத்தினை, மேள, தாள, நாதஸ் வர இசை, மணியோசை, சங்கொலி, சேகண்டி நாதம் போன்ற இன் னிசைகளோடும், அந்தணர்களுடைய மந்திர உச்சாடனங்களோடும், கர்ப்பக்கிருகத்திலிருந்து எழுந்தருளச் செய்து, மகா யாகத்திற்கென விசேடமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த, யாக மண்டபத்தை அடைந்தனர்.
w
இங்கு ஒன்பது குரு மார்கள் ஒன்று கூடி, மகா மிருத்தியுஞ்ச யாகத்தைச் சிறப்பாக நடாத்தினர்கள். இந்த யாகத்தின் போது மகா கணபதி யாகம் நூற்றியெட்டும், காத்தியாயணி யாகம், மிருத்தி யுஞ்ச யாகம், நவக்கிரகங்களின் ஒவ்வொரு கிரக யாகம் நூற்றியெட் டும் பயபக்தியுடன் நடந்தன. காலை வேளையின் கடைசி அங்கமாக,
38

ஈஸ்வர யாகம் ஆயிரத்தெட்டு நடைபெற்ற பின், உச்சிக்காலப் பூஜையும் அதன் பின் பெரியதோர் அன்னதானமும், தினமும் நடை பெற்றது. •
மாலையில் சாயரட்சைப் பூஜையின் பின், யாக மண்டபத்தில் சிவகாமியம்பாள் சமேத, நடராஜ மூர்த்திக்குச்சிதம்பர சம்மேளன பூரீ சக்ர யந்திர பூஜை நடைபெற்று விசேட பூஜை, விரிவான தீபா போன்றவையும், லலிதா ருத்ரத்திரிசதி, வேதகோ ז35%0. חתו ஷம், ஆசீர்வாதம், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப் 11ல்லாண்டு, திருப்புராணம் போன்றவற்றை முறைப்படி ஒதினர்கள். இதன் பின் காலையில் நடைபெற்றவாறே யாகங்கள் நடைபெற்றன.
யாக பூஜையின் கடைசி அங்கமாக, பூஞரீ சக்ர மகா மேரு யந்திரத் தினை தேவஸ்தான வாத்திய இன்னிசைகளோடும் வேதியர்களின் வேத மந்திர கோஷங்களோடும் யாகசாலையில் இருந்து எழுந்தருளச் செய்து கர்ப்பக்கிருகத்திற்குள் கொண்டு சேர்ப்பித்த பின், அர்த்த யாமப் பூஜை நடைபெற்றது. இத்துடன் ஒரு நாளைய மகா யாகம் முடிவுற்றது.
இவ்வாறு இம்மகாயாகம் அறுபத்தி நான்கு தினங்கள் நடை பெற்றது.

Page 29
அத்தியாயம் எட்டு
மகா கும்பாபிஷேகம்
முன்னேஸ்வரம் கோயிலில் முன்னைநாதருக்கும், பூரீ வடிவாம் பிகா தேவிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும், அஷ்ட பந்தன மகா கும் பாபிஷேகம் சோ பகிருது வருடம், ஆனி மாதம், பதினேழாந் திகதி, திங்கட்கிழமை, சுக்ல தசமி, சுவாதி நட்சத்திரம், அமிர்த யோகம் சாத் விக வேளை கூடிய கன்யா லக்கின, சுப முகூர்த்தத்தில் (1.7.1963) பகல் பன்னிரண்டு மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
இதற்கு முன் 1919-ம் வருடம் சோமாஸ்கந்தக் குருக்கள் (கி.பி. 1886-1940) தலைமையில் ஒரு கும்பாபிஷேகமும் 52, 1875-ம் ஆண்டு குமாரசுவாமிக் குருக்கள் (கி. பி. 1816-1909) தலைமையில் ஒரு கும்பாபிஷேகமும் 33, 1753-ம் வருடம், ஈழநாட்டை அப்போது அர சாண்ட, கீர்த்தி பூரீ ராஜசிங்கன் (கி. பி. 1747-1782) என்ற மன்னனு டைய முயற்சியினல், ஒரு கும்பாபிஷேகமும் 34,35 நடைபெற்றுள் ளன. இதற்கு முன் நடைபெற்ற கும்பாபிஷேகங்களைப் பற்றிய குறிப்புக்கள் கிடையா.
23.6.1963 ஞாயிற்றுக்கிழமை வைகறைப் பொழுதில், கணபதி யாகம் தொடங்கியது. இதனையடுத்து ஸ்நபணு பிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்று, விக்கினங்களை விலக்கும் வண்ணம், விநாயகப் பெருமானின் முன்னிலையில், நூற்றியெட்டுத் தேங்காய் களை உடைத்துப் பிரார்த்தனை நடைபெற்றது.
52. எல்லோரும் செல்லும் ஆலயத்தின் கும்பாபிஷேகச் சிறப்பு - கைலாச
நாதக் குருக்கள் தினகரன் 1.7.63.
53. முன்னேஸ்வர மான்மியம்
54. Ibid
55. Calcutta Review Volume XLVII Number 3 June 1933
40

காலை ஆறு மணியளவில் குருபூஜை நிகழ்ந்தது. இதன் இறுதி யில், முன்னேஸ்வர தேவஸ்தான பரிபாலகர், பிரம்மபூணூரீ பாலசுப்பிர மணியக் குருக்கள், பிரதான ஆச்சாரியராக, பிரம்மபூரீ கைலாசநாதக் குருக்கள், M. A. (Ceylon), Ph.D. (Poona) அவர்களைத் தேர்ந்தெடுத்து, அவரிடம் கும்பாபிஷேகத்தைத் தலைமை தாங்கித் திறம்பட நடாத்தி வைக்கும் பொறுப்பினைக் கையளித்தார்.
காலை ஏழு மணியளவில் கும்பாபிஷேகக் கர்மா ரம்பம் தொடங் கியது. அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பீடத்தில், வெள்ளிக் குத்து விளக்குகள் மங்கள ஒளியை பரப்பிக் கொண்டிருக்க, கீழே இரு மருங்கிலும் குருமார்களும், சாதகாசிரியர்களும் ஆசனங்களில் வீற்றிருக்க, பிரதான குரு, தேவஸ்தான மரியாதைகளுடன் வந்து, ஆசனத்தில் அமர்ந்தார். இவ்வேளையில் தேவஸ்தான வாத்தியக் கருவி கள் அனைத்தும் ஒருங்கே நாத வெள்ளத்தை ஒலிபரப்பி, கும்பாபிஷே கக் கிரியைகள் ஆரம்பமாகி விட்டதை எல்லோருக்கும் அறிவித்தன.
இவ்வேளையில் பிரதான குருவாக நியமிக்கப்பெற்றவர், கண்மூடி மெளனியாக, மங்கலநாத ஓசையில் இலயித்து, மனதை ஒருமுகப்படு த்தி, நாத சொரூபமான இறைவனில் மனதையொடுக்கி, சமாதி நிலையில் இருக்க, மற்றைய குருமார்களும், அவரைப் பின்பற்றி இறைவழிபாடு நடாத்தினர். இதன்பின் ஆலய பரிபாலன கர்த்தாவுக்குப் பவித்திர மணிவித்து, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் போன்ற கிரி யைகளை பிரதம குரு நடாத்தினர்.
இதன்பின் கும்பாபிஷேக வைபவத்தை மேற்பார்வை செய்து முன்னின்று நடாத்துவிக்க முன்னேஸ்வரம் பிரம்மபூரீ சாம்பசிவக் குருக்களும் (கி. பி. 1898-1965) திரிகோணமலை பிரம்மபூரீ பூர்ணுனத் தேஸ்வரக் குருக்களும் (கி. பி. 1896-1965) சர்வபோதகாசிரியர்களா கவும், காரைநகர் பிரம்மபூரீ கணபதீஸ்வரக் குருக்கள் (கி. பி. 1888-1967) யாகசம்ரட்சகராகவும் தேவஸ்தானக் காளாஞ்சி கொடுக்கப்பட்டு நியமிக்கப் பெற்றனர்.
அன்று மாலை பிரவேச பலி’, ‘கிராம சாந்தி’ போன்ற கிரியை கள் நடைபெற்றன.
24. 6. 1963 திங்கட்கிழமை காலை நவக்கிரக ஹோமமும் மாலை ரசேஷாக்ன ஹோமம் போன்ற கிரியைகள் நடைபெற்றன.
25.6.1963 செவ்வாய்க்கிழமை காலை வாஸ்து சாந்தி என்னும் கிரியை மிக விரிவாக நடைபெற்றது. மயூராண்டம்’, ‘குக்குடாண்டம் * லிகு சம்’, ‘ஆமலகம் முதலான பிரமாணங்களுக்கிணங்க, அந்த மண் டலங்களில் பலி உருண்டைகளால் பலியும், பூஜையும் நடைபெற்றன. அன்றைய தினம் மாலையில் “மிருத்சங்கிரணம்’, ‘அங்குரார்ப்பணம்’ ‘ரட்சாபந்தனம்", "பிரசன்னபிஷேகம்’ ‘கடஸ்தாபனம்’, ‘அதிவாசம்’ முதலிய கிரியைகள் மிகவும் விரிவான முறையில் சிறப்புற நடைபெற்
நறன.
26, 6. 1963 புதன்கிழமை காலை யாகாரம்பம் நடந்தேறியது. கோயிலின் வடகிழக்கு மூலையில் பெரியதொரு யாகசாலை நிர்மா
41

Page 30
ணிக்கப்பட்டிருந்தது. இதில் சுவாமி யாகசாலை 'ருத்திர விதிப்படியும், அம்பாள் யாகசாலையொன்று 'விஷ்ணு சூத்திர'\முறைப் படியும், மற்றைய அம்பாள் யாகசாலை "பிரம்ம சூத்திரத்தின் படியும் விளங்க, விநாயகர் யாகசாலை, மற்றும் விமானம், கோபுரம் யாவும் ‘மநு சூத்திர முறைக்கிணங்க அமைக்கப்பட்டிருந்தன.
யாகபூஜைகள் தினந்தோறும் காலை, மாலை ஆகிய இரு வேளை களிலும் விரிவாக நடைபெற்றன.
28, 6. 1963 வெள்ளிக்கிழமை காலை அஷ்டபந்தனம் சாத்தும் வைபவமும், சிற்பிகளின் ஸ்தூபி ஸ்தாபனமும் நடைபெற்று, மாலை, பக்தர்கள் எல்லோரும் மூலவருக்கு, எண்ணெய் சாத்தும் வைபவமும் நடைபெற்றன.
30, 6. 1963 ஞாயிற்றுக்கிழமை மாலை சிற்பிகளின் ஸ்தூபி அபி ஷேகமும், " பிம்பசுத்தி", "ஸ்பர் சாகுதி போன்ற கிரியைகள் நடை பெற்றன.
1.7.1963 திங்கட்கிழமை காலை யாகபூஜை முடிந்த பின், விசேட "மகாபூர்ணுகுதி", விரிவான தீபாராதனை, தசதானம், யாத்திராதானம், போன்ற கிரியைகள் நடைபெற்றன. இதன் பின் தம்பட்டம், மேளம், தாளம், நாதஸ்வரம், சங்குகள், சேமக்கலம், ஊது கொம்பு, மணி கள் போன்ற தேவஸ்தான வாத்திய இன்னிசைகளுடனும், யானைகள் முன்செல்ல கொடி, குடை, ஆலவட்டம், போன்ற தேவஸ்தான மரியாதைகளுடனும், வேதம், புருஷசூக்தம், பூணிசூக்தம், ருத்திரம், சமகம், சகஸ்ரநாமம், திரிசதி முதலியவற்றை கோஷித்துக் கொண்டும் யாக சாலையில் இருந்து, கும் பங்களை வீதி வலம் வரச் செய்து, நண் பகல் பன்னிரண்டு மணிக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாலை, திருக்கலியாண உற்சவமும், பஞ்சமூர்த்திகள் திருவுலாக் காட்சியும் நடைபெற்றன.

அத்தியாயம் ஒன்பது
கோயிலும் சமூகமும்
முன்னேஸ்வரம் கோயிலுடன் இப்பகுதி மக்களுடைய சமூக வாழ்க்கை பல்வேறு வகையில் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.
சமய பேதமற்ற நிலை
இக்கோயிலுக்கு சிங்கள மக்கள் பெருங் கூட்டத்தினராக வந்து வழிபடுகின்றனர். பெளத்தர்கள், கிறீஸ்தவர்கள், முகம்மதியர் போன்ற பல்வேறு சமயத்தவர்களும் எவ்வித பேதங்களுமின்றி இங்கு வந்து வழிபடுகின்றனர். 56
இஸ்லாமியருக்கும் இங்கு திருவிழாக் காலங்களில் தேவஸ்தா ன்க் காளாஞ்சி கொடுத்துக் கெளரவிப்பது, தொன்று தொட்டு இன்று வரை, நடைபெற்று வரும் அம்சங்களிலொன்ரு கும்.
சாதிபேதமற்ற நிலை
சாதி பேதங்களின்றி எல்லோரும் மகா மண்டபம் வரை சென்று வழிபடும் மரபு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. வாழையடி வாழை பாக நடைபெற்று வரும் பாரம்பரிய வழக்கம் இது.
பக்தி நிலை
முன்னேஸ்வரம் கோயிலுக்கு வரும், பெருந்திரளான மக்களின் பக்தி, சொல்லுந் தர மன்று. அவர்கள் தாம் நினைத்த காரியம் நிறை வேற இறைவனை வேண்டி, நேர்த்தி கட்டுவதும், அதன் பின் நேர்த்திக் கடனை நிறைவேற்ற, தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோ
56. A Study of Saivism of the epic and Puranic periods. - K. Kailasanatha
Kurukkal, M.A. (1957.)
43

Page 31
கப் பொருட்களையெல்லாம் கொண்டு வநது கொடுப்பதும் வழக்கம். பிள்ளைப் பேற்றை வேண்டி தென்னம் பிள்ளைகளையும், உடல் நலம் குன்றிய மக்கள், தங்களை வாட்டும் நோய் தீர்ந்தால், அவ்வுறுப்புக் களைப்போன்று, தங்கத்தினுலோ அல்லது வெள்ளியினுலோ செய்து கொண்டு வந்து கொடுத்துத் தம் நன்றிக் கடனை நிறைவேற்றுவார்கள்.
இக்கோயில் நவராத்திரி அபிஷேகத் தீர்த்தத்தை, பிணி தீர்க் கும் மருந்தாகக் கருதி அதனை அருந்தியும், தூண்டாமணி விளக்கின் எண்ணயை, சரும வியாதிகளுக்கு மருந்தாகவும், பக்தர்கள் பாவித்து வருவதை இன்றும் நாம் காணலாம்.
மனப்பயம் அகல கோயிற் குருக்களைக் கொண்டு மஞ்சள் கயிறு கட்டுவித்துக் கொள்வார்கள், பக்தர்கள். இத்தோடு கோயில் பிரதம குரு, ஒரு சிறந்த ஆயுள்வேத வைத்தியராகவும் விளங்குகின்றர்.
சுருங்கக் கூறின் இக்கோயில் சாதி சமய ஒற்றுமையை நிலைநாட்டு வதுடன் பிணி தீர்க்கும் நிலையமாகவும் விளங்குகின்றது.
இங்கு நடைபெறும் பெருந்திருவிழாவில் பெரும்பான்மையான உற்சவங்கள் பல்வேறு கிராமத்தவர்களால் ஒன்று சேர்ந்து நடாத் தப்படும், உபயங்களாக விளங்குகின்றன. மற்றைய கோயில்களில், தனிப்பட்ட ஒருவர், ஒரு நாளைய உபயத்தைப் பொறுப்பேற்று, நடாத்து வார். இங்கோ வெனில், கோயிலின் பக்கத்தில் உள்ள ஊரவர்கள், ஒவ்வொரு நாளைய உபயத்தை, ஒவ்வொரு ஊரவர்கள் பொறுப்பேற்று, ஒன்று சேர்ந்து நடாத்துவார்கள். இது ஒற்றுமையையும், பொது நலனில் அக்கறை ஏற்படுத்துவதிலும் உதவி செய்கின்றது.
பெருந் திருவிழாக் காலத்தில் அநேகமாக ஒவ்வொரு நாளும், இரவினில் கோயில் வாசலில் அமைக்கப்படும் மேடையில் கூத்து, நாடகம் போன்றவை நடைபெறுவது வழக்கம். இது கண்ணியம் கடமை, கட்டுப்பாடு, பொது நலனில் அக்கறை போன்ற நற்பண்பு களை வளர்க்க உதவி செய்கின்றது.
ആ
முன்பு இக்கோயில் இருந்த இடம் காட்டுப் பாங்கானதாக விருந்த தாலும், கோயிலில் திருவிழாச் செய்யும் ஒவ்வொரு ஊரவர்களும் ஒருங்கு சேர்ந்து, மாட்டு வண்டிகளிலும், கால்நடையாகவும் வந்து வழிபட்டனர். இராக் காலங்களில் இப்பகுதியில், அக்காலத்தில் மிகுந்திருந்த துஷ்ட மிருகங்களால் ஆபத்து ஏற்படா வண்ணம், இரவு நேரத்தில் கண்விழித்திருக்கவும், நேரத்தைப் போக்குவதற்காகவும் கூத்துக்களை ஆடியும், பாக்களைப் பாடியும் பொழுதைக் கழித்தனர். ஆணுல் இன்று நிலைமை மாறி எப்பொழுதும், எவ்வித பயமுமின்றி இக்கோயிலுக்குப் போய் வரலாம் என்ற நிலை ஏற்பட்ட போதிலும் தொன்று தொட்டு, பரம்பரை பரம்பரையாக இரவு நேரத்தில் மேடை யமைத்துக் கூத்து நாடகம் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டும் மறைந்து போகாமல், காலத்துக்கேற்றவாறு, சீர்திருத்தங்களுடன், நடைபேற்று வருவது குறிப்பிடத்தக்கதொன்ற கும்.
44

இங்கு ஒருநாள் உபயத்திற்கு அன்றைய உபயத்தை நடத்தும் ஊரவர்கள் மாலையில் கோயிலுக்கு வந்து, இரவில் நடைபெறும் திரு விழாவையும், மறுநாள் காலையில் நடைபெறும் திருவிழாவையும், பொறுப்பேற்றுச் செய்வது, தொன்று தொட்டு நடைபெறும் ஓர் அம்சமாகும்.
இதற்கு வசதியாக, இக்கோயிலைச் சுற்றி நான்கு பெரிய மடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இங்கு பக்தர்கள் எவ்வித பொருட் செலவுகளுமின்றி, பாதுகாப்பாகத் தங்கிச் செல்ல வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
முன்பு முன்னேஸ்வரம் கிராமத்தில் யாராவது இறந்து விட்டால், அவரது பூதவுடல் கோயில் எல்லையைத் தாண்டிச் செல்லும் வரை, கோயிற் கதவுகள் மூடப்பட்டிருக்கும். ஆனல் இன்று இவ்வாறு நிகழ்த்துவதனுல் பலவித இன்னல்கள் ஏற்படுவதால், இவ்வெல்லை முழுக் கிராமத்தையும் உள்ளடக்காது, கோயிலைச் சுற்றியுள்ள வீதியை எல்லையாகக் கொண்டுள்ளது.
கோயிலின் அமைப்பு சுகாதார விதிகளுக்கு அமைய, ஊரின் உயர்ந்த காற்றேட்டம் மிக்க இடத்தில், காற்று போய் வரக்கூடிய அகன்ற பெரிய வாயில்களும்,புறத்தாழ்வாரங்களும், இடையே பெரிய திறந்த இடைவெளிகளையும் கொண்டு விளங்குகின்றது.
சுத்தமான, சுகாதார விதிகளுக்கமைந்த, மிளகு, நெய் போன்ற விலையுயர்ந்த பொருட்களுடன் கூடிய, கோயில் பிரசாத உணவு, பலரது பசியைப் போக்குகின்றது.
கோயிலின் முன்புறம் உள்ள குளங்கள், ஊரின் தண்ணீர்ப் பஞ் சத்தை அறவே அகற்றுகின்றன.
இக்குளங்கள், மக்களின் புறத்தூய்மையை ஏற்படுத்தும் வண் ணம் குளிக்கவும், ஊரின் புறத்தேயுள்ள நெல் வயல்களுக்குத் தண் னிரைத் தேக்கி வைக்கவும் பயன்படுகின்றன.
கோயிற் கிணறுகள் ஊரின் குடிதண்ணிர்ப் பிரச்சினைக்கே, இட மில்லாது செய்து விடுகின்றன.
கோயிலுக்கென நிர்மாணிக்கப்பட்டுள்ள நந்தவனம், நறுமணங் கமழும் மலர்களையும், நோய் நொடிதீர்க்க வல்ல, மூலிகைகளையும் கொண்ட களஞ்சியமாகவும், ஊருக்கே ஒர் இனிய சூழலையும் கொண்டு விளங்குகின்றது.
திருவிழாவின்போது தேர்கள் இரண்டினதும் வடம் பிடிக்க, இந்நாட்டிலிருந்து ஒன்று சேரும் மக்கள் அனைவரும், தாங்கள் சமூகத்தில் வகிக்கும் நிலை, கல்வியறிவு, பட்டம், பதவி, செல்வ நிலை ள்ல்லாவற்றையுமே மறந்து பக்தியும், சந்தோஷமும் பொங்க தேர்களை ஒன்று சேர்ந்து இழுத்து, ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' என்பதை நடைமுறையில் காட்டுகின்றனர்.
கோயில் மண்டபங்கள், மடங்கள் திருக்குளங்கள் எல்லாம் இவ்வூர் சமுதாய வாழ்க்கையிலுள்ள சமதர்மப் போக்கிற்கு நிலைக் களஞக விளங்குகின்றன.
45

Page 32
அத்தியாயம் Ligg,
கோயிலும் இசையும்
பறந்து திரியும் வண்டுகளின் ரீங்கார ஓசையும், கான மெழுப்பும் பல்வேறு பறவையினங்களின் மென்மையான இசையும் தான், மணி தன் இயற்றிய, இன்னிசைக் கருவிகளுக்கு முன்னுேடிகளாக விளங் கிற்று.
பண்டைத் தமிழன் தோற்றுவித்த வாத்திய இசைக் கருவிகள் மறைந்து, அழிந்து போகாமல், நெடு நாட்களாக அவற்றை வைத்துக் காப்பாற்றிய பெட்டகம், கோயில் எனலாம். அப்படியிருந்தும் எவ்வளவோ இன்னிசைக் கருவிகள் ஆதரிப்பாரின்றி உருத்தெரியாமல் அழிந்தொழிந்து விட்டன.
முன்னேஸ்வரம் கோயிலில் பண்டைய நாட்களில் பல்வேறு வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கொடியேற்று வைபவத்தின் கிரியை முறைகளைக் கூறும், "துவஜாரோஹண விதி" என்னும் நூல் (இக்கோயிலில் ஏட்டுப் பிரதிகளாக உள்ளவை) பல வித இன்னிசைகளை தோற்றுவிக்க வல்ல வாத்தியங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. அவை பின்வருமாறு:-மத்தளம், படகம், பேரிகை, சல்லரி, மல் லரி, சங்கு, கா களம், பூரி, ஏகதாளம், பேரிவாத்தியம், நாடீவாத்தி யம், கும்பவாத்தியம், பஞ்சமுகீ வாத்தியம், கின்னர வீணை, கிம்பு புருஷ வீணை, நாரத வீணை, காந்தருவ வீணை, வேய்ங்குழல், மிருதங்கம், மேளம், நாதஸ்வரம். 37
முன்பு இக்கோயிலில் இரண்டாங்காலப் பூஜைத் தீபாராதனை யின்போதும், அலங்காரத்தின் போதும் தித்தி, முகவீணை, மிருதங்கம், தாளம் ஆகிய வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. 58
57. துவஜாரோஹண விதி. 58. முன்னேஸ்வரம் கட்டளைச் சட்டம் - நா. குமாரஸ்வாமிக் குருக்கள்,
46

நடராஜ, சோமாஸ்கந்த சபைகளில் தீபாராதனை நடைபெறுஞ் சமயத்தில் சுத்த மத்தளமும், தாளமும் இசைக்கப்பட்டன. 39
கால சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை அர்த்தசாமம் ஆகிய பூஜைகள் நடைபெறும் வேளைகளில் பெரிய மேளமும் இசைக்கப்பட் டது. 60
சுவாமி வீதியுலாக் காட்சியை ஆரம்பிக்குஞ் சமயத்தில், மல்லரி ராகமும், திருவுலாக் காட்சி முடிந்து சேர்க்கைக்குச் செல்லுஞ் சம யத்தில், கப்பல், லா லி, பரார்க்கு, எச்சரிக்கை முதலிய ராகங்களும் இசைக்கப்பட்டன. சுவாமி வீதியுலாக் காட்சியின் போது அவ்வவ்வே ளைக்குரிய ராகங்களை நாதஸ்வர வித்வான்கள் இசைத்தனர்.
59. Hbid 60. bid
4.

Page 33
அனுபந்தம் - 1
முன்னே ஸ்வரம் கோயிலில் உள்ள கல்வெட்டின் மொழிபெயர்ப்பு
நான் முன்னிஸ்வரம் கல்வெட்டிலுள்ளவற்றினைப் பல முறை கள் ஆராய்ந்துள்ளேன். அக்கல்வெட்டில் உள்ள எழுத்துக்களில் பல, வாசித்தறிய முடியாத நிலையில் இருக்கின்றன. இக்கல்வெட்டு எழுத் துக்களைக் கொண்ட கருங்கற்கள் பழையதொரு கட்டிடத்திலிருந்து அகற்றப்பட்டு, பின், இப்பொழுதுள்ள கட்டிடத்தில் பொருத்தப்பட் " டுள்ளன, என்பது என் அபிப்பிராயம். ' '-
கல்வரிசைகள் சேர்ந்து இணையும் இணைப்புக்களில் உள்ள எழுத் துக்கள், சுண்ணக்கலவையால் மறைக்கப்பட்டுள்ளன. இப்பொழுது உள்ள கட்டிடத்தின் கல்லில், இவ்வெழுத்துக்கள் செதுக்கப்பட்டிருக்கு மாஞல் இவ்வாறு இருக்கமாட்டாது.
இக்கல்வெட்டு நான்கு வரிகளைக் கொண்டதாகவும் முப்பது அல் லது நாற்பது அடிகள் வரை நீண்டும் நிலமட்டத்திலிருந்து ஏறக்குறைய, நான்கு அடிகள் உயரத்திலும் அமைந்துள்ளது.
கோயிலின் அருகாமையில் இருந்ததொரு குளத்தைத் தோண் டியபொழுது, இரண்டு சிற்பத் துண்டுகள் கிடைத்தன. நந்தியொன் றின் தலையும், சுப்பிரமணியக் கடவுளின் சிலையுமே அவை. இவை மிகப் பழமை வாய்ந்தவையாகக் காணப்படவில்லை.
சிலாபத்து நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கொன்றில், இக் கல்வெட்டுச் சாசனம் ஒரு அத்தாட்சியாக விளங்குகின்றது. என நம்புகிறேன்.
மொழிபெயர்ப்பு
எங்கும் ஆனந்தம் விளங்கட்டும்! பூரீ சங்க போதி மகாராஜாவின் வழித்தோன்றலிலே உதித்தவரும், புத்த பகவானின் பாதாரவிந்தங் களில் மலர்களைச் சமர்ப்பணம் செய்து வழிபடுபவரும், சூரிய குலத் துதித்தவரும், அரசர்க்கெல்லாம் அரசராக விளங்குபவரும், அரச பரம்பரைக்கும் வியாபார விருத்திக்கும் அதிபதியாக இருக்கின்ற வரும், மூன்று உலகங்களுக்கும் சக்கரவர்த்தியாகத் திகழ்கின்றவரு மான மாட்சிமை பொருந்திய, பூரீ பராக்கிரமபாகு மன்னர் தம்முடைய ஆட்சியின் முப்பத்தெட்டாவது ஆண்டு, ஐப்பசி மாதம், வளர்பிறை யின் பத்தாம் நாள், எல்லாக் கலைகளையும் ஐயந்திரிபறக் கற்றுணர்ந்து, முன்னீஸ்வரத்திலுள்ள கோயிலில் பூஜை செய்கின்ற குருமார்களை (நம்பிமார்களை) ஜெயவர்த்தன கோட்டைக்கு அழைப்பித்துக் கோயி லின் விருத்தாந்தங்களை விசாரித்தறிந்து, முன்பு கோயில் குருமாருக்கு, முன்னீஸ்வரம் பகுதியில், சொந்தமாகவும், கோயிலின் பெயரிலும் இருந்த நிலங்களையெல்லாம் முன்பிருந்தவாறே, மீண்டும் கையளிக் கின்றர்.
48

இலுப்பதெனியா என்னும் இடத்தில் 22 அமண நெல் விளையும் வயல்களைப் பூஜைக்கு உரியதாகவும், கோட்டைப்பிட்டியா என்னும் இடத்தில் 30 அமண நெல்விளைநிலங்களையும், தித்தக்க ட என்னும் இடத்தில் 8 அமண நெல் விளை நிலங்களையும், இத்துடன் சேர்ந்த குடியிருப்புப் பகுதிகளையும், அதனுேடு சேர்ந்துள்ள காட்டுப்பாங்கான பகுதிகளையும் பிரதான குருக்களுக்குக் கையளிக்கின்றர்.
இத்துடன் முன்னுழி அரிசி, காய்கறி வகை, கீரை வகை, நறு மணம் கமழும் பொருட்கள் போன்றவற்றினை நித்தியப் பூஜைக்குப் பெறும் பொருட்டு, மாதமொன்றுக்கு முப்பது பணத்தினை, பூஜை செய்யும் குருமார்களுக்கும், பதினுெரு பணத்தினை, பிரதான குருமாருக் கும், சூரிய சந்திரர் இருக்கும் வரை, இவர்களுடைய பரம்பரையின் சந்ததியினரும், அனுபவிக்கும் வகையில், சர்வ மானியமாக முன்னிஸ் வரருக்கு அளித்து, இதனை ஒருவரும் திருப்பி மீட்கக் கூடாதெனக் கட்டளையிடுகிறேன். இந்நிலங்களுக்குத் தீங்கு செய்பவர்கள் பஞ்ச மகா பாதகங்கள் செய்த பாவிகளாகவும், இந்நிலத்தின் அபிவிருத்தி யில் அக்கறையெடுப்பவர்கள் சுவர்க்கானந்தப் பேரின்பம் பெறுவார்
ES GINT”,
இத்துடன் ஒரு சுலோகமும் உள்ளது. அதன் மொழிபெயர்ப்பு:
எல்லையில்லாத ஞானத்தையுடைய சைவ சமயத்தின் தலைவராக,
கடவுள்களுக்கெல்லாம் கடவுளாகவும் விளங்குகின்ற, முன்னிஸ் வர ருடைய அருளினல், பராக்கிரமன் இக்கல்வெட்டினை எழுதியுள்ளான்.
g52.07 2,515 a GLDIT Audi Journal of the Ceylon branch of the Royal Asiatic Society Volume X. No. 35 gas fail G. M. Fowler Esq. C.C.S. 61 (up 3 ul கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதியளித்த அச் சபையினருக்கும், அதன் கெளரவ காரியதரிசி அவர்களுக்கும் நன்றி.
49

Page 34
APPENDIX 2
Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society.
1887
olume X No. 35
TRANSLATION OF AN INSCRIPTION AT THE TEMPLE AT MONNI’SVARAM
Note by G. M. FowleR, ESQ.. C. C. S.
(page 118 - 119)
I have examined the Monni'svaram inscription several times and much of it is illegible. It has, I think, been removed from an older building and built into the present one. Several of the letters near the joints of the stones are covered by the mortar, which would not be the case if it had been cut in situ. The inscription runs along a kind of cornice, and consists of only four lines, extending for about thirty or fourty feet. Its height from the ground is about four feet.
In digging a tank near the temple two pieces of sculpture were found: a bull's head and an image of (2) “Suppiramaniyan". These did not appear to be very ancient.
There is a case in the Chilaw court, I believe, in which the inscription is evidence.
TRANSLATION
"Let happiness be On the tenth day of the waxing moon in October, in the thirty-eighth year of his reign, His Majesty Sri Parakrama Bahu * † descendant of the illustrious family of Sri Sangabodhi, worshipper of the lotus feet of Sri Samantapatra (Buddha). of a Solar race, king of kings. serpent to the royal and mercantile races, and emperor of the three worlds, invited to the Jayawardhana Kotte * the Nampimar (priests) who officiate before the god of Monnisvaram, and addressing himself to the Brahmin Pandit, who is a proficient in all Sciences amongst them inquired into the circumstances of that temple and bestowed the lands which formerly belonged to the priests, lying within the district of Monnisvaram in the holy name, and as the property of the god. As pusai lands he granted to the priests 22 amanams of field at Ilippedeniya, and 30 amanams in Kottapitiya to Mutanmai (chief priests) and 8 amanams of
50

field in Tittakkadai, with the inhabited places and forests appertaining to this. In addition to the offering of 3 nalis of rice, he granted 30 fanams to the priests per mensem and 11 fanams to each of the Mutanmais (cheif priests) for the daily offerings of vegetable curries, greens, and perfumes, to be enjoyed from generation to generation, while the sun and moon exist, as Sarvamaniyam (free gift) to the god of Monnisvaram, which is hereby decreed to be irrevocable. Those who cause any damage to the land will be guilty of Panchamahapatakam (the five great sins) while those who take an interest in it will attain heavenly bless'.
Here follows a sulokam, the translation of which is: To this effect this was caused to be inscribed by Parakraman through
the grace of Monnisvaram, who is an ocean of wisdom in Saivasim and lord of all the different classes of gods'.
*廿 Sri Parakrama Bahu VI, 1410-1452 A. D.
' The modern Kotte
My sincere thanks to the Journal of the Ceylon branch of the Royal Asiatic Society, and to the Hony. Secretary for granting me the necessary permission for publishing the article from JCBRAS, 1887, Vol. X, No. 35, and portion from JCBRAS 1915-1916, Vol. XXIV No. 68.
51

Page 35
APPENDIX 3
Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society
1916
Volutine XXIV : No. 68
(page 186.)
Ceylon Numismatics H. W. CoDRINGTON, B.A. oxON, C. C. s.
Relative to "hook' coins or larins, referred to by the learned lecturer, I may say I came across a coin somewhat allied to this class but known in the country as "pincers coin' (Tamil - Kuraddu Kasu; Sinhallese - Andu Massa) It was minted, according to tradition, at Munnessaram during a period when the brahman of Munnessaram temple is said to have ruled Chilaw and Puttalam District in the name of the goddess. The shape of the coin is that of a pair of pincers, hence the name.
On the outer aspect of one of its forks or handles was an inscription which with some difficulty, was found to be in chola grantham, the reading of it was, I believe, Parasrama.
Mr. Codrington replied to Mr. Proctor, He said if as it has been attempted to show in this lecture. the so called Lankesvara type dates from the 9th century, if not from the 7th. Mr. Proctor's theory falls to the ground. The coin certainly preceded the Chola invasion of Ceylon in the eleventh century.
52

APPENDIX 4.
The Ceylon Littoral 1593
●
P. E. PIERIs Litt D. (Cantab.) Soc Resp. Do Instituto De Coimbru.
1949 Edn. MONICARIRAO (MUNNESSARAMA)
(page 4)
The terras of Monicarrao constituted the Domain of the Devalaya which the Portuguese destroyed in 1578 (Port. ERA.1-199) and consisted of sixty-four villages of which Munnessarama where the Devalaya once stood was the chief, and the rest were aduttha (appearing in Portuguese as azutas) thereto. The recognised boundaries were on the East, the Village Xenanam is Devamedi Korale (Hevana); West, the tree Almarao, presumably somewell known banyan tree; North, the Village Cusala in Devamedi Korale; South the tank Syratalao.
in 1614 the possessors of this domain were the Jesuits, but the Canacapole Dom Jheronimo and the Patangation Dom Pedro Xembraduria, who attended to assist the Tombo Commissioner, did not know what their title was. As a matter of fact they claimed under a grant of de Azavedo. The Canacapole produced the palm leaf accounts of the lands going back to more than a hundred years. An amunam of paddy was here valued at 2 larins, and it was possible to raise two crops in the year with the exercise of diligence, the Senhorio receiving 1 amunam 1 pela as Otu on each amunam SoWn.
The village Munnessaram a contained 203 amunam 1 pela of sowing; of these 26 formed the Muttettu though only 4 were cultivated, the rest being under forest. The usual Mayorals were here replaced by Durias, of whom there were 10, possessing 20 amunams in the Maha moncao, and 10 more in the small. Similarly the Canacapole possessed three amunams. These Durias had each under him four culles obrigatorios, who are liable to serve them. The ten sowed 104 amunams and 1 pela divided among themselves, and 40 amunams were under forest. The ten also possessed 10 garden lots, but there were no trees in them. They paid the Jesuits yearly 20 larins decum and 30 pingas worth 12 larins. A complete list of the Aduttha villages is recorded.
53

Page 36
Economically the most important was valachenna (Velihena) with 120 amunams sowing yielding sevenfold, distributed thus:
3 Ancient muttetu; 12 possessed by 4 durias; mayorals; 55 ottu : 50 under forest.
There was extensive cultivation of coconut as appears from the following details of gardens and ortas.
2 Muttetu, 300 palms, yielding 5000 nuts worth 15 larins; 4 by durias, 140 p., 2000 n. paying decum and pingas; 8 by 8 service culles, 800 p., 12,000 m., 2 by Canacapole Bramane, 120 p., 2000 n., 1 Muttetu, 20 p., 300 n., 25 by 25 natives, 1,300 p., 18,000 n., they pay the padres. 18 larins decum; 2 by 2 lascarins, 70 p., 1,000 n., 5 which on the death of the holders Raju gave to inhabitants of the Port of Chilao. 3 by 3 panicals of Elephants, 110 p., 2,000 n., 10 Abandoned by owners 20 p., 300 nuts.
My sincere thanks to Mr. P. Deraniyagala, for granting me the necessary permission to reproduce the extracts from "The Ceylon Littoral 1593' by P. E. Pieris, Litt.D. (Cantab) and from "Ceylon-The Portuguese Era' volume I and II, by P. E. Pieris.
54

APPENDIX 5
CEYLON: : THE PORTUGUESE ERA Volume I
P. E. Pieris
A. D. 1576. The Portuguese there upon landed in spite of the opposition of the inhabitants, and ravaged chilaw and the Munesseram district, burning down several spacious bangasalas filled with Areca and Cloth and destroying a large vessel With its cargo of 500 bahars of cinnamon which was destined for the red sea and four champanas full of areca. For the third time the ravaged Negumbo and Kammala, and then made their way to the ancient and revered temple of Munesseram.
One of the five Isparam or residences of Siva in Ceylon, it claimed precedence over the great fanes at Trincomalee, Mantota, Kangesanturai and Rameswaram, and was said to have been built by Ramachandra, the Awatar of Vishnu, himself, after the defeat of Ravana. Numerous inscriptions bore record to the wealth which the devotion of successive kings had dedicated to the service of the temple, and the sixty two villages of the district to which it gave its name, comprised its separate domain. Much plunder was anticipated and the Portuguese pressed eagerly on. The attapattu Mudaliyar was however on the watch and barred the way, but the Sinhalese were driven back with the loss of Mudaliyar himself, whose head was sent to Colombo, and then sacked the temple, which they rezed to the ground. Loaded with looty they turned back to Colombo, taking with them four panguals of areca as well. (chapter IX p. 199 ff)
A. D. 1600. The Portuguese showed no compassion in the reprisals they exacted. Over a thousand villagers were taken prisoners torture was unsparingly employed to discover the whereabouts of gomey though without success, and finally the great temple of Munnessaram * was razed to the ground. (Chapter XIV page 348.)
A.D. 1606. In 1607-1608 there were in the college of Colombo - and its residencies ten or twelve Jesuits one of whom, Pedro Eurizco, by name, was at the special request of de Azavedo stationed at Malwana. This priest was also sent by the general to convert the "king of the Seven Korales by whom he was well received. At this time a pestilence broke out in the island in which the Jesuits were of great help, and many were converted. In the District of Chilaw they baptised 400 of the people and their Patangatins, and across the river in the territory of Munesseram temple they erected the church of St. Paul. (Chapter XX page 407).
* Manjacirao. Q. It had apparently been rebuilt after last destruction.
55

Page 37
APPENDIX 6
CEYLON : THE PORTUGUESE ERA Volume II. Page 37.
P. E. Pieris
For instance the Jesuits held sixty two villages belonging to the temple of Munnesseramt which yielded over 500 pardos of 3 larins each and 16 Gabadegan in the three Korales yielding 400 pardaos. all of which were claimed on the grant from de Azavedo and the revenue from Which was devoted to the purposes of their College in Colombo.
The King's letter of 28th March 1608, refers to a grant by Azavedo to the Jesuits for the College at Cochin of "the lands adjoining the harbour of Quilao as far as the harbour of Cardiva, being bounded by the channel which runs from the said river as far as Cardiva the whole forming an island. Quilao is a misprint of Chilao. The grant would include whole of the Kalpitiya peninsula, and would stretch from Uddappuwa, 12 miles from Chilaw up to Dutch Bay, the channel being the sheet of water formed by Mundel Lake, Puttalam Lake and Dutch Bay. (See Doc. Rem I, 247.)
The 62 villages of the Munneswaram temple include the entirely of the
Munneswaram Pattu which up to date consists of 62 villages, though four of them are now subdivided into Ihala and Pahala hamlets.
56

APPENDIX 7
CATHOLIC CHLAW
By E. Aloysius Fernando - 1932 Edn.
Munneswaram is a village about a mile inland to the east of the Chilaw town. Its present importance is fully rested on the ancient Hindu temple. This village had fared much during the Portuguese time as an important place of Jesuit missions. The temple of Munneswaram, to give its full name, Vadivambiga Sametha Munna Nathaswamy Temple has a better tradition of antiquity than any other Hindu temple in Ceylon. It had been held, it is said by the Hindus for many centuries past as one of their four ancient Shrines in Cey.on: the others being Thirukketheswaram, Kathirgamam and Thirikona Malai (Koneswaram). Tradition has it that Brahama worshipped in it in Kretayuga, Sri Rama in Tretayuga and Sri Viyasa in Devaparayuga. By the endowment of wealth to the temple by the royal benefactors, the temple possessed 66 villages (C. M. L. 18-9-13). During the Portuguese period the number of villages had been increased to 06.
The route from Chilaw that led to the temple of Munneswaram was through extensive open fields where numerous cattle grazed. At one season it became a swampy track of land which rendered the pedestrians difficult to traverse. Perpaps with a view to minimise idolatry, the General Azevedo gave this temple village to the Jesuit priests to saw the seed of Christianity. In the year 1606, the Provincial stationed at Chilaw, Fr. L. Ruiz and going to Munneswaram gave orders to errect a Church in honour of St. Paul. When the mission was started, the Christians of Chilaw destroyed the "lingam' which was enshrined in the temple. The following is a brief account of a Jesuit priest as to how the lingam came to be destroyed. "A mile inland of Chilaw there is a Pagoda formerly well known and very rich, for it possessed 106 villages. It was nuch venerated for they believe that their god was born there. This god was a blok of stone, like marble, of a man's height, placed over another larger and square block, which is called Lingam, and I think that it is the same infamous and indecent divinity as Priapo. This Pagoda the General gave to us. The Provincial going there ordered a church of St. Paul to be built there in our own style and to destroy the infamous stone which the Brahamins maintained was impossible, as it was born there and would bring down evil of any one who dared to lay hands on it. But without more delay than was required to fetch two iron bars from the fort, with which it was destroyed the idol was brought down, exposing the falsehood, superstition and
57

Page 38
deceit into which the Brahamins had led the peóple" (Lt. of Fr. H. Gomez S. J. dated 29.12. 1606 Cey. Ant. 11 page 21.) The temple of Munneswaram, it would be seen, was razed to the ground by the Portuguese in retaliation for the wanton destruction of churches during the revolt of Manoel Gomez, a captain of the Portuguese among some Lascarins, who had deserted to the enemy is search of higher honours. (page 9-10.)
At Munneswaram the Father exerts himself very zealously for the welfare of the souls to christ. One of the christinas of this place, a man of great influence and Zeal is vey ken on destroying idols. He dug up for idols which had lain buried since the conquest of the island. One of these was a hudge idol of the god Perumal celebrated throughout the island. It was of bronze and represents the god astride on a peacock which held a writhing snake in its beak. The figure bore many crowns on its head and had four hands from which it was hurling as many thunderbolts. (page 14.)
At Munneswaram a convert of great influence destroyed many idols and further tried to root out idolatry as much as he could. (page 14.)
My sincere thanks to Mr. E. Aloysius Fernando for granting me the necessary permission and encouragement to publish the extracts from his book titled 'Catholic Chilaw'.
58

APPENDIX 8
Colombo, 12.3.1804.
To. Henry Powney Esqr.
Secretary to the Board of Revenue and Commerce,
Colombo. . Sir,
I have the pleasure to forward the petition of the padre of the pagoda at Moneswaram, requesting me to cause the paddy renter of Chilaw to deliver to him the quantity of grain formerly granted (annually) by the King of Kandy to the pagoda. i beg leave to observe for the information of the Board that 512 parrahs is too much to be paid the Renter of Chilaw alone as valuing each parrah at the rate of one Rindollar, it will amount exactly to one fourth of his rent. The grant was given by the King of Kandy long before the District of Chilaw was ceded to the Dutch at a time when it was full of inhabitance and the whole country in a state of Cultivation. At present it is not one quarter inhabited and not a third of the paddy grounds sown. I therefore take the liberty of recommending to the Board that the Chilaw Renter may be exempfed from three fourths of the payments and that if it's the intention of Government that the full quantity shall be given to the pagoda that the other paddy Renters of the District may be obliged to pay their quotas in proportion to their respective farms. -
I have the honour to be c Chilaw.
Sgd. W. E. CAMPBELL. 10.2, 1804. - Agent of Revenue and Commerce.
A true copy.
Sgd: JOHN MACDOWALL. Actg. Secy. to the Board of Rev. and Com.
Extracts from the Diary and Proceedings of the Hon'ble Fredic
North, Governor, Captain General and commander in chief
of the British possessions in the island of Ceylon.
16th March 1804.
Read letter and inclosure from the Board of Revenue and COmerce.

Page 39
To His Excellency, the Hon’ble Frederic North,
Governor and c and c, Colombo. Sir,
We have the Honour to lay before your Excellency the copy of a letter from the agent of Revenue at Chilaw with a translation of a grant by the King of Kandy to the pagoda of Mooneseram therein referred to.
By Mr. Campbell's letter, your Excellency will observe that the priests of the Pagoda consider themselves entitled by virtue of this grant to nearly 512 parras of the paddy Revenue of the District which appears to us a claim that cannot be allowed, the ground in itself is undefined with regard to the perticular land given, which cannot now be ascertained and the priests have consequently marked out, the finest fields in the district.
We are of opionion, that as the original intention of the grant could only be for the proper maintenance of the Priests attached to the pagoda, it should now receive that interpretation, and therefore we have the honour to propose that Mr. Campbell the Revenue Agent and Mr. Dean the President of the provincial court of the District should be appointed to confer with the Priests of the pagoda and compromise the matter in such a way as to allot a piece of ground as near the temple as possible sufficient for their decent maintenance and support.
We have the honour to be with the highest respect and c and c.
Sgd. Rebert Arbuthuot, President
N. Sanmarez
A. Wood. R. Boyd.
60

APPENDIX 9
TRANSLATION OF A COPPER PLATE CERTIFICATE N TAMIL
(Given by King Kirthi Sri Rajasingha (1747-1782A. D.) to this pagoda in 1753. A. D. Seen in temple record)
By the high and mighty Ruler of the world who reign the eight regions and take tributes of the Kings of Angam, Kalingam, Maradam, Mallayalam and from the Kings of the Fifty Six Kingdoms were granted as alms to the pagoda of Monasparar situated at Moonasaram, the landed property which belongs to the Revenue of the said mighty King as follows.
The Paddy fields called Carrewetty four alO3S
99. 99 * , Illooppadeniya six 9. و و ,, Peramanantalooway tWO 9 2 99 23 s ., Cannengatty three ss s , Madattuvelly one and a half s 99 s 9 ,, Paueadee tWO ss ,s ༡ , Moodaliar Talooway one and a half وو ஆ9 s ܗܝ ܕܗ ... Perapancully Nallanayakan Wely
maravan Welli Sawarana two y 32 Pallawally four ... .4 4 وو 99 99. ... Collootalooway four W. 势% & 4 મ જ ... Ollytalooway two y
Total Ammonams thirty two together with there to belonging Jungles, lands, hills and ditches in order to endure the Charity of Moonesprar till the sun and moon, Thus by order of the King in this copper plate Certificate granted on Sunday the 14th August 1675 in the year Sreemoogam.
Sgd. G. Casie Chetty, (Malabar Translater.)
A true copy of the Translation,
Sgd. John Macdowall,
(Act. Secy. to the Board of Rev. and Com.)
Copy was issued to M. Somaskanda Kurukkal by E. Rennus. Colombo 11.9.23
Editor's note * This corrosponds to 1753 A.D.

Page 40
அனுபந்தம்-10
ஒன்பதாம் பராக்கிரமபாகு (கி. பி. 1509-1528) முன்னிசுரக் கோயி லுக்கு கி. பி. 1517ல் கொடுத்த செப்புப் பட்டயத்தைப் பற்றிய
குறிப்பு. ஒலைச்சுவடியிலிருந்து எழுதப்பட்டுள்ளது.
எங்ளாடவராகிய வனசை நிரபுத் நெளக்கவாகு சக்ரவர்த்தி யின் ஆளுகையின் பின் பன்னிரண்டாம் வருஷமாகிய சகளுல் ஆயிரத்து நானுாற்று முப்பந்தைத்துக்குச் சரிவரச் செல்லா நின்ற பரிசுத்த கெளதம புத்த இ ஈராயிரத்தறுபது ஆனி மீ" பூர்வபக்ஷ சத்தமி வெள்ளிக்கிழமை பராக்கிரமபாகு அரசனின் இளவரசனுக்கு மின்ன லாலுண்டான வருத்தத்தைத் தீர்க்குமாறு தம்பதீவிலுள்ள கிம்புல வத்புரத்திலிருந்து வரவழைக்கப்பட்டவராகிய உஸ்ஷதி சகிஸ்கந்த சக்ரவர்த்தி ராசகுருவென்னும் பிராமண பண்டித முதலியாருடன் பத்தொன்பது பேரில் பன்னிருவருக்கும் பொல் லத்தை குருணணன ஹைக்கும், திஸ் கத குருலகுருணணன ஹைக்கும், தேவகுரு பண்டாரத் துக்கும், ராசகுரு பண்டாரத்துக்கும், சமரக்கொன் பண்டாரத்துக் கும், தூத்துக்குடி அப்புருளைக்கும், முன்னிச்சரத்துடன் ஐந்து கிரா மங்களுள் நூற்று நாற்பது அமுணங் கொடுக்கப்பட்டது. இளவரச னுக்கு மின்னலாலுண்டான பிணியை மலையிலிருந்தெடுத்த பாலாற் செய்த உணவால் மாற்றிய பிராமணரெழுவருக்கும், கிழக்கிற் கரை விற்தை குளத்துட்பாய் கிண்ட மல எல்வெணற நீரோட்டத்தையும் தென் கிழக்கில் நிலம் மாதம்பையின் மூன்றெல்லைகளிலும் நாட்டப் இரண்டு கற்களையும், செள மிய (வடபக்கம்) திசையில் களுதிய பொக்குணையின் மான மான் தொட்ட வென்ற துறையும், வடக்கில் முன்னிச்சுரத்துட் பாயும் நீரோ டடத்தையும், கற்குவியலையும், கர விற்றையிலிருந்து பாயும் நீரோட்த்த்தையும் எல்லைகளாகவுடைய, முன்னிச்சிரத்தில் நாநூற்றெழுபத்தைந்து அமுணங்கிரிகலுஹத்தை முன யெண் டீ வழமுனத்துடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்னேஸ் சரத்தின் பரிசுத்த தெய்வமாகிய விஷ்ணுவுக்குப் பணிவிடை செய்து, சூரிய சந்திரருள்ள வரையும், இவ்வேழு பெயருடைய புத்திர, பெளத்திரர்கள் ஆட்சி செய்து கொள்ளும்படி இது கொடுக்கப்பட்டது. இவ்வித வலிமை பொருந்திய பெரிய அரசனுகிய பராக்கிரம வாகு ஆஞ்ஞையின்படி துடராப்பத்தும் செப்புப் பட்டயங்களும் அளிக்கப் t. L-l- 6öf •
62

அனுபந்தம்-11
சிவமயம்
முன்னேஸ்வரம் இலட்ச தீப மகோத்சவ விளம்பரம் கலிவிரோத சாந்தி இலட்ச தீயேற்சவம்
காத்திகை மாதம் க திகதியில் பிரசித்தஞ் செய்தபடி கிரக கூடத்தினுல் உண்டாகும் சோரம் அக்கிணி உற்பாதம் வியாதிஜாதி சங்கீரண முதலியவற்ருல் ஆன்மாக்கள் கெடுதலடையாதபடிக்கு,கார்த் திகை மாதம் 4 திகதி சோமவார முதல் ஒவ்வொரு நாளிலும் ஏகாதச ருத்திர ஸ்பணு பிஷேகம் ஒரு மண்டலம் வரைக்கும் நடை பெற்று முடிந்து, இப்போ மிருத்தியுஞ் செயழஜை நடந்து வருகின்றது. அது, தை மாதம் 9-ம் திகதி முடிவாகும். பின்பு 10-ந் திகதி முதல் பூரீ வடிவழகி யம்பாளுக்கும், பூரீ முனிநாத சுவாமிக்கும் லட்சதீப மகோற்சவம் நடத்தப்படும்.
மகோற்சவ விபரம்
அதீ சனிக்கிழமை ஐயநார், பத்திர காளி உற்சவம். சுதீ ஞாயிற்றுக்கிழமை அநுஞ்ஞை, வாஸ்த்து சாந்தி, அங்குரர் ப்
பணம் ,
ல்தீ திங்கள் கிழமை முதலாந் திருநாள் துவஜாரோஹணம். விமா
னம்.
፱ ! Š செவ்வாய்கிழமை இரண்டாம் திருநாள் சிங்க வானம்,
ல் உதீ புதன்கிழமை மூன்ரும் திருநாள் பூவாகனம். ல் கதீ வியாழக்கிழமை நாலாந் திருநாள் இடபவாகனம், ல் சதி வெள்ளிக்கிழமை ஐந்தாம் திருநாள் திருக்கல்யாணம், பல்
லாக்கு. ம்ருதீ சனிக்கிழமை ஆருந் திருநாள் இடபவாகனம், வசந்தாேம்
சவம். ல்சு தீ ஞாயிற்றுக்கிழமை ஏழாந் திருநாள் நடேசோவசம், விமா
னம்.
யஎதீ திங்கள்கிழமை எட்டாந் திருநாள் பிக்ஷாடனுேற்சவம் இரவு
குதிரை வாகனம்.
ல் அதீ செவ்வாய்க்கிழமை ஒன்பதாந் திருநாள் பாட்டாபிஷேகம்,
இரதோற்சவம்,
t)சுதீ புதன்கிழமை பத்தாந் திருநாள். தீர்த்தம், திருவூஞ்சல்,
உ0 தீ வியாழக்கிழமை துவஜா வரோகனம் விமானம், பதினுேரா ந் திருநாள் தெற்ப உற்சவம், சண்டேகரர் உற்சவம் இவைகள் நடைபெறும்.
தை மீ" 10-தீ துவாஜா ரோஹன தினம் முதலாக, நாளொன் றுக்குப் பதினுயிரம் தீபமாகப் பத்து நாளைக்கும், லக்ஷதீபமும், மகா ருத்திர ஜபமும், ஸ்நபணு பிஷேகமும், நடத்தி தை மாதம் புதன் கிழமையும், அமாவாசையும், திருவோண நட்சத்திரமும், சூரிய உதயமுங்கூடிய கிஞ்சின் நூண மகோதை புண்ணிய காலத்தில் சிவ தீர்தத்தில் தீர்த்தங் கொடுக்கப்படும்.
63

Page 41
சைவ சமயிகள் யாவரும் புத்திரர், மித்திரர் களத்திராதி களுடன் வந்து, இம் மகத்துபவம் குறைவின்றி முடியும் பொருட்டு பொருளுபகரித்து நடைபெறச் செய்து, அவ்வாரு தலங்களில் நடக்கும் மகோதான உற்சவங்களைத் தரிசனஞ் செய்து, புருஷார்த்தங்களை யும், சிவஞானப் பேற்றையும், தீர்க்காயுளும், சகல செளபாக்கியங் களையும், இகபர செளக்கியங்களையும் பெற்றுய்யுமாறு பூரீ வடிவழ கியம் பாளுடையவும் பூg முனிநாத சுவாமியுடையவும் திருவருளே முன்னிட்டு வேண்டிக் கொள்கிறேன்.
இங்ங்னம், தரும கர்த்தா , குமாாஸ்வாமிக் குருக்கள் புத்திரர்
முத்துஸ்வாமிக் குருக்கள்
கொழும்பு,
விகாரி ஞ*
தை மீ" கதீ
(கணேஸ் பிரஸ்-கொழும்பு)
* G. G. 1889.
64

2.
3,
5
6.
அனுபந்தம்-12
தொல் பொருட்காட்சிச் சாலையில் உள்ள சான்றுகள்
வெண்கலக் குதிரை அங்கபடிகள்-ஆறு
குருநாகல் அல்லது முனிஸ் வரம்
Χ -- 6 0- 169. X - 63-169. ,69 4-1 6 - Χ .169 سس۔ 61 سس۔ X X - 62-169, Χ - 65- 169.
ஒரு வெண்கல விளக்கின் பகுதி-முனிஸ்வரம்.
Χ - 5 4-169. ஒரு வெண்கல விளக்கின் பகுதி-முனிஸ்வரம்.
13-- 1 2 Ꮽ----2 Ꮽ 0 . விளக்கின் துண்டாகிய வெண்கல அன்னம்-முனிஸ் வரம்.
13- 13 l-29 l. விளக்கின் வெண்கல அன்னம்-முனிஸ் வரம்.
13- 130-29 I.
கமண்டலத்தைப் போன்ற வெண்கலப்பாத்திரம்-முனிஸ்வரம்.
37-169-37.
7.
வெண்கல தாதுகற்பத்தின் மேற் பகுதி-முனிஸ்வரம்.
X - 57-169.
65

Page 42
அனுபந்தம்-13
முன்னேஸ்வரம் வடிவழகி முன்ன்ை நாத சுவரம கோயிலில்
முன் னிருந்த திருவாபரணங்களின் விபரம்
(1876 தாது ஞ) மீ" 2ச தீ)
0. 1. 12,
I 3.
14. I 5. 6. 17. 18. 9. 20. 2. 22。 23. 24。 25. 26.
27. 28. 29.
30. 3 I.
32, 33. 34.
35.,
வடிவழகியம்மனுக்குச் சாத்தும் தங்கப் பூச்சு வெள்ளிக்கிரீடம் க நெற்றிப்பட்டயம் அல்லது திருகோகர்ணம் நெற்றிச் சுவடி தங்கத்தால் காது தோடு சோடி வெளியால் தங்கமுலாம் செய்த காது ஜோடி டிெ ஒத்தை பொன்மணி கோர்வை உருப்படி மணி ந, உம் பின் கோர் கியுஞ் சேர்ந்த ஒரு பட்டு கோர்வை - ால்ச மணி கோர்வை
க. பூமணி கோர்வை பவளம் உரு-ம், மணி உசு-ம் சேர்ந்த மணி கோர்வை முத்து கரு-ம் மணி ருல் ச-ம் சேர்ந்த மணி கோர்வை எஅ செவ்வந்திப் பூச் சேர்ந்த பின் கோர்க்கியுள்ள பொன் LDIT & - மூன்றடுக்குக் கல்லிழைத்த பதக்கத்தில் 5, குறைந்த உருப் படி 3க்குமாக ஆறுமுக ஸ்வாமி சாத்துப்படி பதக்கம். இதில் 3 கல்லு குறைவு ரு-பட்டு பொன் சங்கிலி ள மணியும், ருல் வில் வமுஞ் சேர்ந்த பொன் மாலை ளருரு வில்வம் சேர்ந்த பொன் மாலை a பொன்னல் தாலியும் சங்கு உ-ம் சேர்ந்த உருப்படி வெள்ளிமாலை
அரசிலை, வெள்ளிச் சங்கிலி மாலை திருவாபரணம் வைக்கிற பெரிய பெட்டி
கைப்பெட்டி
வெள்ளிப்பதக்கச் சங்கிலி மாலை
டிெ பெரிய சங்கிலி மாலை
பொன் கம்பிச் சுருள் வெள்ளி அஸ்தம், காப்புக் கடசம் உள்பட உருப்படி, سمبر^ வெள்ளி யொட்டியாணம் மூக்கில் முத்துடன் வெள்ளிக்கிளி
பாதம் சோ டிப்புடன் சே டி.
வெள்ளிப்பட்டை துய்யி
பித்தளைப்பட்டை துய்யி
பல சமான் வெள்ளி உத்தேசம்
யானைத்தந்தம் ஜோடி 2چ, வெள்ளி வெண் சா மரை 의_ வெள்ளி வேலாயுதம் பெரிசு g ைெடி சின்னது 2.
இவை முன் ராஜாக்களாலும், மற்றும் பேர்களாலும் கொடுக்கப்
巴5
s.
பட்ட சாமான்கள். இவை கவடா நல்லையா வசமிருக்கின்றன. . (முன்நேசுர வடிவள கீ அம்பாள் கோவில் கணக்குப் புத்தகம்).
f56

அனுபந்தம்-14
ரு முன்னேஸ்வர தேவஸ்தான மகோத்சவ உபய விபரம்
26.
27.
28.
மருதங்குளம் வேலப்பு விதானை யார். உள்வீதித் திருவிழா முதலாவது மாடவீதித் திருவிழா இரண்டாவது மாடவீதித் திருவிழா. மூன்றுவது மாடவீதித் திருவிழா. மருதங்குளம் ஆராய்ச்சியார். மணக்குளம் ஊரவர்கள். காக்காப்பள்ளி, சேமாயிருப்பு ஊரவர்கள். சியம்பலாகஸ்வெல, பம்பல ஊரவர்கள். பொன்னுங்கண்ணி, பகலகம ஊரவர்கள். கரவெட்டி ஊரவர்கள். இனிகொட வெல ஊரவர்கள். முன்னேஸ்வரம் ஊரவர்கள். பிரப்பங்குளி, பகலகம ஊரவர்கள். வட்டக்களி நாடாவிமார். இந்து மலையாள (இலங்கை) மகாஜன சமூகத்தவர். குசலை, கருக்குப்பனை ஊரவர்கள். முந்தல் கருப்பையாபிள்ளை. சுருவில ஊரவர்கள். கல்முருகை ஊரவர்கள்.
தித்தக்கடை ஊரவர்கள்.
மருதங்குளம் ஊரவர்கள். தம்மையா ஒவசியர் (பக்தோத்சவம்)
வாணிப மடத்தார் (பிக்ஷாடனுேத்சவம்)
மருதங்குள ஆராய்ச்சியாரும், உடைப்பு அம்பலகாரரும். 25,
கொழும்பு மடத்தார் (நடேசோத்சவம்) உடைப்பு நல்லாரக்குச் சம்மாட்டி ஆசாரி சமூகத்தவர் (வேட்டைத் திருவிழா) உட்ைப்பு ஊரவர்கள்.
இராஜணுதன் வகை (தேர்த்திருவிழா) திமிலை ஆண்டியப்பு கமராளை வகையினரும், உடைப்பு இராம லிங்க வகையினரும்.
சிலாப இந்து வாலிப சங்கம் (தீர்த்தத் திருவிழா)
6.

Page 43
11.
I 2 .
l3.
14.
5.
6.
7.
18.
68
அனுபந்தம்-15
முன்னேஸ்வரம் கோயிலைப் பற்றிய சிறு புத்தக
வெளியீடுகள்
பூரீ முன்னேஸ்வர தேவஸ்தானக் கட்டளைச் சட்டம் -(1927)
நா. குமாரஸ்வாமிக் குருக்கள் பூரீ முன்னேஸ்வர மான்மியம்-மு. சோமஸ் கந்தக் குருக்கள் (1927) பூரீ முன்னநாத சுவாமி வடிவழகி அம்பாள் திருவூஞ்ச்ல் (1965) சி. பாலசுப்பிரமண்யக் குருக்கள் y முனீசுரர் நவமணி மாலை-காரைநகர் கா. சிதம்பர ஐயர் (1887) W முனிசுர தீர்த்த யாத்திரை வழி நடைப் பத்து
கொழும்பு மு. சரவணமுத்துப்பிள்ளை ஆசிரிய விருத்தங்கள்-முனிசுவரம்
கொக்குவில் குகதாசர் ச. சபாரத்தின முதலியார் முனிசுரத்து வடிவழகியம்மை ஆசிரிய விருத்தம் கொக்குவில் சி. சிலம்புநாதப் பிள்ளை பதிற்றந்தாதி-கொக்குவில் சி. சிலம்புநாத பிள்ளை முனிஸ்வர ரூஞ்சல்-கொக்குவில் சி. சிலம்புநாத பிள்ளை முன்னநாதேஸ்வரர் திருவூஞ்சல்-நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர் முனிசுவரந்தாதி-கொழும்பு அ. வைத்தியலிங்கம்-(1924) முனீஸ்வர வடிவழகி பதிகம்-புழுதிவயல் எஸ். ஆர். தம்பு முனீஸ்வரன் கப்பல் முனிசுரக் கும் மி முன்னேஸ்வரம் கோடியர்ச்சனை மலர்-தேவஸ்தான வெளியீடு (1961) س » முன்னேஸ்வரம் கும்பாபிஷேக மலர்(1963) பூரீ முன்னேஸ்வரம் வடிவழகியம்மன் விருத்தம்- எஸ். எம்.
ராஜப்பா-(1962) பூரீ வடிவாம்பிகா சமேத முன்னநாத ஸ்வாமி நவதுதி
பண்டித மாணிக்கத் தியாகராஜக் குருக்கள்--1927

0.
ll.
12.
13.
14.
5.
6.
7,
18.
19.
20. 2 Il .
22.
அனுபந்தம்-16 ,
முன்னேஸ்வரம் கோயிலைப் பற்றிய கட்டுரைகள்
முன்னீசுவரம்-கலைமகள்-1940குல. சபாநாதன் - சரித்திரப் பெருமைவாய்ந்த சிவஸ்தலம்-வீரகேசரி பா. சிவராம கிருஷ்ணன்-(18.8.1957) இந்துக்கள் கொண்டாடும் நவராத்திரியின் மகிமை-தினகரன்
பா. சிவராம கிருஷ்ணன்-(13.10.1958) சரித்திரப் பிரசித்தி பெற்ற பூரீ முன்னேஸ்வரர் ஆலயம்வீரகேசரி--நிம்பை தாசரதி-(20.8.1959) s முன்னேஸ்வரத்திலே இன்று கொடியேற்றம்-தினகரன்
என். ஈ. தங்கராசா-(9.8.1960) ஈழநாட்டின் ஆதி சைவ திரு கேஷத்திரம்-வீரகேசரி (2.9. 1960) கோள்களால் விளையும் துயர்களைய கோடியர்ச்சனை-தினகரன் கலாநிதி. கா. கைலாசநாதக் குருக்கள்-(25.10.1961) கோடியர்ச்சனை, முன்னேஸ்வரம் கோயிலில் நடைபெறும் வைப வம்-வீரகேசரி-பா. சிவராம கிருஷ்ணன்-(3. 1. 1962) அஷ்டக்கிரக சேர்க்கையும், கோடியர்ச்சனையும்-தினகரன்
பா. சிவராம கிருஷ்ணன்-(1.2. 1962) முன்னேஸ்வரத்தில் கோடியர்ச்சனை-பூgரீ லங்கா-பிப்ரவரி (1962) முன்னேஸ்வர சிவதலத்தில் இன்று கொடியேற்றம்-தினகரன்
பி. கமலேந்திரன்-(17, 8. 1962) பண்டைய மன்னர்கள் வழிபட்ட சிவஸ்தலம்-வீரகேசரி
பா. சிவராம கிருஷ்ணன்-(29.6.1963) முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள்-தினகரன்
கே. எஸ். மகேசன்-(1.7.1963) முன்னேஸ்வரத்தின் மகத்துவம்-தினகரன்
பா. சிவராம கிருஷ்ணன்-(1.7.1963) எல்லோரும் செல்லும் ஆலயத்தின் கும்பாபிஷேகச் சிறப்புதினகரன்--கலாநிதி. கா. கைலாசநாதக் குருக்கள்-(1.7.1963) பழம் பெருமைகள் மண்டிய முன்னேஸ்வர ஆலயம்-ஈழநாடு
பா. சிவராமகிருஷ்ணன்-(1.7.1963) புராண இதிகாசங்கள் புகழ்ந்தேற்றும் பூரீ முன்னைநாதர்வீரகேசரி-(31.8.1963) . . பதினைந்து நூற்ருண்டுப் பழமை வாய்ந்த முன்னைநாதர் ஆலயம் ஈழநாடு-வை. முத்துக் குமாரசுவாமி-(2.2. 1964)
சரித்திரப் பிரசித்தி பெற்ற சிவஸ்தலம்-வீரகேசரி
பா. சிவராமகிருஷ்ணன்-(27, 7. 1964) முன்னேஸ்வர மகிமை-யூரீலங்கா-(22.8.1964) முன்னேஸ்வரத்தில் நவராத்திரி-பூரீலங்கா
பா. சிவராமகிருஷ்ணன்-(10.10. 1964) . . ஆறுகிரக சேர்க்கை-ஈழநாடு
பா. சிவராமகிருஷ்ணன்-(8.4.1965)

Page 44
23.
24,
முன்னேஸ்வரத்தில் திருவிழா-தினகரன்
பா. சிவராமகிருஷ்ணன்-(6.9.1965)
முன்னேஸ்வரம்-தினபதி
சுரேஸ்குமார்-(23.7.1967)
ஆங்கில மொழியில் பததிரிகையில் வெளிவந்தவை
o Munneswaram for all faiths - Sunday Observer, Esmee Rankine - 5.8.1956.
. The devine herd of Munneswaram - Sunday Observer - D. H. R. A. Corea,
7.10.1962.
Munneswaram where men seek happiness in the Abode pf the Gods. The Times of Ceylon - Juri. 22.8.1964.
. Munneswaram Festival - The Ceylon Daily News - G. D. Weerasinghe,
2.8.1965.

அனுபந்தம் 17
அபிஷேக சங்குகளில் ஊற வைக்கப்படும் மூலிகைகள்
(Botanical names of the plants used in Sanka Abhisheka)
கோஷ்டம்
ஏலம் இலா மிச்சம் வேர் கற்பூரம் சந்தணம் குங்குமப்பூ கோரோசனை கஸ்தூரி தாமரைப்பூ
அறுகு வெண் கடு
L16ð) 61
கிராம்பு பூலாங்கிழங்கு சண்பக மொட்டு நெல்
எள் வில்வபத்திரம் கோரைக் கிழங்கு கடலை நாககேசரம் தக்கோலம் கச்சோலம்
அகில்
மஞ்சள்
நெல்லிவற்றல்
சீதேவியார் செங்கழுநீர் :
மாதுளம்பழச்சாறு தாளிக்கொடி விஷ்ணுக்கிராந்தி பெருங்குமிழ்
The Arabian Costus. Elettaria cardamomum (seed) Andropogon muricatum (root) Cinnamomum camphora Santalum album (stem) European Saffron. (stamen)
Musk of the "musk deer. Nelumbium nuciferum (speciosum) petal Cynodion dactylion
Sinapis niger
A kind of barly Eugenia caryophyllata (Inflorescence)
Michelia champaca (flower bud)
Oryza sativa. (grain)
Sesamum indicum (seed) Aegle marmelos (leaf) Cyperus juncifolius (underground part) Cicer arietinum (seed)
Mesua ferrea Calyptranthes jambaeana. Guillandina bonduc.
Aquila a Curcuma domestica. (underground stem) Emblica officianalis. (dried fruit) Vernonia cinera (leaf) Punica granatum (fruit juice) Flacourtia cataphracta. Evolvulus alsinoides, Gmelina tomentosa
7

Page 45
10.
11.
12.
13.
14.
5.
16.
17.
18.
19.
72
இந்நூலை எழுத உதவியாய் நின்ற நூல்கள்
(ஆங்கில நூல்கள்)
(BIBLIOGRAPHY) Ancient Jaffna - Mudaliyar C. Rasanayagam C.C.S. (1926) A Short History of Ceylon - H. W. Codrington (1947) A Study of Saivism of the epic and puramic periods - thesis submitted to the University of Poona. K. Kailasanatha Kurukkal. (1959)
Catholic Chilaw - E. Aloysius Fernando (1932) Ceylon Antiquity II
Ceylon Calling (1932). The Govt. Tourist Bureau. Ceylon Gazetteer - Simon Casie Chetty. Ceylon - The Portuguese Era. Vol. I & Vol. II. P. E. Pieris. History of Catholic Churches - Fr. Gnanaprakasar.
Journal of the Ceylon branch of the Royal Asiatic Society. 1887 Volume X, No. 35. ܫ
Journal of the Ceylon branch of the Royal Asiatic Society. 1915-1916. Volume XXIV. No. 68.
Sketches of Ceylon History : Sri P. Arunachalam. Report on Census 1901 : Sri P. Arunachalam.
The Ancient Pagoda of Munnucaroa - de Queyros. The Calcutta Review - Volume XLVII. No. 3; June 1933 The Ceylon Littoral 1593. P. E. Pieris, (1949). The culavamsa II - Wilhelm Geiger (1930) The Mahavansa - Mudir. Wijesinghe's Translation.
The Short History of Hindusium in Ceylon - C. S. Navaratnam 1964.

20.
2.
22,
ぁ 3.
易4,
25.
26.
27.
28.
29.
30.
3.
.32,
33.
34。
The Temporal and Spiritual conquest of Ceylon; Fr. Fernao de Queyroz 1930.
Yalpana Vaipava Mali - Mailvagana pulavar C. Britos Translation.
(தமிழ் நூல்கள்)
முன்னேஸ்வரம் கட்டளைச்சட்டம்-நா. குமாரஸ்வாமிக்
குருக்கள்-(1927)
முன்னேஸ்வர மான்மியம்-மு. சோமாஸ்கந்தக் குருக்கள்
(1927)
வடிவாம்பிகா சமேத முன்னநாத சுவாமி கோடியர்ச்சனை விஞ்
ஞாபன மலர்-(1961)
முன்னேஸ்வரம் கும்பாபிஷேக மலர்-(1963)
சைவத் திருக்கோயிற் கிரியை நெறி-கா. கைலாசநாதக் குருக்
கள்--(1963)
முனிஸ்வர அந்தாதி-அ. வைத்தியலிங்கம்-(1924)
முன்னேஸ்வரம் கோயில் கோடியர்ச்சனை மலர்-(1962)
தினகரன் கும்பாபிஷேக மலர்-1.7.1963)
ஈழநாடு கும்பாபிஷேக tᏝ6Ꮝ ff-( 1 , 7 . 1 Ꮽ Ꮾ 3)
(வடமொழி நூல்கள்)
தகதிண கைலாச மகாத்மியம்
பூீரீ சிவமகாபுராணம்
துவஜாரோஹன விதி
(சிங்கள நூல்கள்) கோகில சந்தேசய
ገ8

Page 46

பழைய ஸ்தூபி

Page 47
ழரீ முன்னேஸ்வரம் கோயிலில் அமைக்கப்பட
விருக்கும் கோபுரத்தின் மாதிரிப் படம்
 


Page 48
ழரீ வடிவாம்பிகா தேவி (நவராத்திரி தோற்றம்)
 

அறுபத்து மூவா

Page 49
சந்திர சேகரர் (ஆவிங்கனத் தோற்றம்)
 

ழரீ வடிவாம்பிகா தேவி (கோடியர்ச்சனைக் காட்சி)

Page 50
to g, 'S
(9)
தினுள் கா
கர்ப்பக்கிருகத்
 

பூனி முன்னேஸ்வரம் கோயில், பழைய ஸ்தூபி

Page 51
யூரீ முன்னேஸ்வரம் கோயிலின் பழைய ஸ்தூபி
 


Page 52
பிகா தேவி
ன் தோற்றம்)
பூனி வடிவாம் பாபிஷேக விழாவி
(கும்
 

கோவிலின் புறக்காட்சி

Page 53
i
*>.*
k:xxషభ8
பிரதான கும்பம்
(கும்பாபிஷேகக் காட்சி)
ܐ
 

சந்திரசேகரர் (உமா சகிதத் தோற்றம்)

Page 54
மறீ வடிவாம்பிகா தேவி {இலட்சார்ச்சனைக் காட்சி)
为
 


Page 55
ரூர் முன்னேஸ்வரம் கோயிப்
பற்றி ஆதாரபூர்வமான ஒரு நூலே உருவாக்கி, முன்னேஸ் வரம் பெருந் திருவிழாவின்
போது வெளியிடுகிருேம். இக் கோயிலப் பற்றி ஆதாரபூர்வ மான நூல் இல்லே என்ற குறை யை இந்நூல் ஓரளவுக்கு நிவர்த்தி செய்யும் என நம்
புகிருேம்,
■。
the H.
OF SRI MUNN TEM