கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேடல் 1992 (10)

Page 1
i'r Wy, prif - - - - - i'r gyfrif - 2 = 1 / .
W W Way & W 點 W ಕ್ಷಿ
 


Page 2
67/5FI/Z)GUI
(தடமிழி - சிங்க
ஆபிரிக்க (ஒர் அறிமுகம்)
6rpis 60s> ġëua.gifs
.(நாடகம்)
சொல்லாத
ாட்டிய நாடகம் (ந நாடகம்)
பேசுதல் (கவிதா நிகழ்வு)
a 6S-i, S.r. g.
(நாடகம்)
guti: WOOf3 (UR N CO tité Gia 7
2222 € {{ÉS/M€ fR É S
S Cl4fR £3 OfR O L GF(MARKAM & ELLESMERE)
காலம்: சனிக்கிழமை, நவம்பர் 7,
G55 Ulfs: NIT6O)6) 6 Ly6
 

fj (5 fffjlajGj
Es es esta. Liego esas», afilesoresas
7 மெல்லிசை)
க நிகழ்ச்சி
ֆ* սկսք»
சேதிகள்
>>6រី
6 gali: ROSéDALé Hé GHTS 3T, SECON DARY SCHOOL
7 l : Z3VOORST 64ST
ΤΟ κ. Ο Ν ΤΟ (CASTLE FRANK SUBWAYisypsius) 1992 காலம்: சனிக்கிழமை, நவம்பர் 14, 1992
னி நேரம்: மாலை 6 மணி

Page 3
உ6i 36
ஆசிரியர் தலையங்கம் தேடலின் பக்கங்கள்
சிறுகதைகள்
யதார்த்தம் மண் மனிதர் . . மானுடம் . . . ரொரன்ரோ - 2002
கவிதைகள்
* வாழ்வோம் * இழுத்து மூடப்பட்டது * இருப்பு * அக்கரைத் தோழனுக்கு
as GOJasir
தேசிய இனப்பிரச்சினை பற்றி பிலிப்பைன்ஸில் இடதுசாரிகள் தவறியது எவ்விதம்? முஸ்லீம் மக்கள் - ஒரு நோக்கு விடுதலைப் புலிகள் - தேசிய சக்தியும் பாசிச சக்தியும் சமூக பரிணாமத்தில் கற்பின் தோற்றம்
 

gR, Pathmanaba Iuyer 27-1B High Street Plaistouv fondon E13 041D Ies: O2O 8472 8323
தேடல் 10 வெளியீடு
gsystamagmann omarund
Lihail
Ló
Ues, Lysip cle Gymity, lymfiku. L. M4X 1 P8
THEDAL Published by
Tamil Resource Centre
For More info
TIHEDAL
566, Parliament St., Toronto, Ont. Canada M4X P8 (416) 929-7612
*உங்களது ஆக்கபூர்வமான விமர்சனங்களே தேடலை
நெறிப்படுத்தும்.

Page 4
தேடல் 10
é55IT6
தமிழ் பேசும் மக்களே ஈழப் போராட்டமான கொண்டிருந்த வேள்வி அதனை தனது ஆயுத பலத்தால் த பாவித்து தமிழ் பேசும் இன்னொரு சமூகமாகிய முஸ்லிம் ம செறிந்து வாழும் இடங்களில் வெட்டிக் கொலை செய்யப்பட்டும் தொடங்கி வைத்த கொலைகள் 92 ஆகியும் முடிந்தபாடில்லை செறிந்து வாழும் கிராமங்கள் புலிகளினால் சுடுகாடாக்கப்படுகி குடியிருப்புகளை வெட்டி சுடுகாடாக்கியதோ அதே போன்று இன் 83 யூலை 33 தமிழர்கள் யுஎண்பிக் காடையர்களினால் வெலிக்க மனிதாபமானிகள் வெட்கித் தலைகுனிந்தனர். ஆனால் தமிழ் பே அடிபட்டுப் போகுமளவிற்கு 181 முஸ்லீம்களும் (38 பெண்களு வெட்டிக் குதறப்பட்டனர். புலிகள் தங்கள் பாசிச நடவடிக்கைக சேற்றை அள்ளி வீசுகின்றனர். சிங்கள இனவாதத்திற்கு எதிரா முன்னால் புலிகள் தங்களின் வரலாற்றை ( தமிழ் பேசும் சிறு போராளிக் குழுக்கள் அழிப்பு, வெகுஜன இயக்கங்களை இயங்க வெறித்தனமான தாக்குதல்) தமிழ் பேசும் இனத்தின் மீது தின சொல்கின்றனர். இதை நம்புமளவிற்கு தமிழ் பேசும் இனம் சிந்தன
ஆனாலும் கனடா வழி தமிழ் பேசும் மக்களே தமிழ் வாழி சமூகம் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடி போன்றவற்றிற்கு வெளியிடப்படும் துண்டுப் பிரசுரங்கள் வீதி வெட்டி வீழ்த்தப்பட்ட முஸ்லிம் மக்களுக்காகவும், கொலை செ அளவுக்கு தமிழ் பேசும் சமூகத்தின் எந்தவொரு ஆக்கபூர்வ மக்கள் தம்மை மூடிக் கட்டிக் கொண்டு திரிவது போல் இங்கும்
தமிழ் பேசுமினத்தின் போராட்டம் வெறும் தான எரியும் சுதந்திர தீயில் அதன் ஆரோக்கியமான விமர்சனங்களுக் உங்கள் முன் வெறும் கனடிய டொலர்களுடன் மட்டும் உங்கள அளித்த தான தர்மத்துடன் உங்களின் பிரச்சினை முடிந்துவிட் ஒரு புறத்தில் வேதனையையும் மறுபுறத்தில் புலிகளின் கொலை
வடக்கு கிழக்கு பாரம்பரிய பிரதேசங்களில் உ கடற்கரையோரங்களிலும் எங்களுடன் கைகோர்த்து நடந்தவர்களி
* புலிகளின் முஸ்லிம் மக்கள் மீதான காட்டுமி * முஸ்லிம் மக்களையும், அவர்களின் வடக்குக் கிழக் போரா * உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும் ஒவ்வொரு விமர்சனங்களைய
* புலிகளின் போவி முகத்தி
தேடல் 10

முஸ்லீம் மக்களுக்கு அக்டோபர் 23 தமிழ் மக்களுக்கு ஜூலை 23
து உங்களது ஜனநாயக உரிமைகளுக்காக நீங்கள் நடத்திக் தாக்கிக் கொண்ட புலிகள் இன்று உங்கள் போராட்டத்தைப் க்களை சொந்த பாரம்பரியப் பிரதேசங்களை விட்டு விரட்டியும், கொண்டிருக்கின்றனர் விடுதலை என்ற புனிதத்தின் பேரால் 90ல்
இராணுவ முகாம்களை வீழ்த்துவது போல முஸ்லிம் மக்கள் ன்றன. எப்படி சிறிலங்கா இராணுவம் தமிழ் பேசும் மக்களின் று முஸ்லீம் கிராமங்களும் புலிகளினால் தாக்கி அழிக்கப்படுகிறது. டையில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட போது உலக மினம் மட்டும் கிளர்ந்தெழுந்தது. ஆனால் இன்று வெலிகடையே ம் 18 பச்சிளம் குழந்தைகளும்) 2 சிங்களவர்களும் புலிகளினால் ரின் மூலம் தமிழ் பேசும் இனத்தின் புனிதப் போராட்டத்தின் மீது க தனது புரட்சிகர அரசியலை நடத்தி வந்த தமிழினத்துக்கு ாண்மை இனமான முளப்லிம் மக்களின் அழித்தொழிப்பு, சகோதர விடாமை, புத்திஜீவிகளை சிறைப்பிடிப்பு, மாணவர் இயக்கம் மீது ரித்து கற்கச் சொல்கின்றனர். புரட்சிகர அரசியல் எனவும் நம்பச் னையற்றா அலைகிறது?
கொலைகள் நடந்து முடிந்து இரு வாரங்களாகியும் கனடாவழி க்கைகளையும் எடுத்ததாக காணோம். கந்தசஷ்டி தீபாவளி வீதியாக நிறையும் போது சொந்த நாட்டில் கிராமம் கிராமமாக ய்பவர்களுக்கு எதிராகவும் அல்லது படுகொலையை கணிடிக்கும் மான செயற்பாட்டையும் காணோம். குளிர்காலம் வந்துவிட்டது. ர்ள நம்பிக்கைகளும் உலாவுகின்றன.
ா தர்மத்துடன் மட்டும் தங்கவில்லை. அந்த இனத்தின் சுடர்விட்டு ‘கூடாகவே அது எம்மைப் பற்றிக் கொள்கிறது. மாறாக புலிகள் து சுதந்திர உணர்வை முடித்துக் கொள்கிறனர். நீங்களும் நீங்கள் - மனநிறைவுடன் உங்கள் கதவை மூடிக் கொள்கிறீர்கள். இது களுக்கு துணை போவதாயும் அமைந்து விடுகிறது.
ள்ள கல்லூரிகளிலும், வயல்வெளிகளிலும், தொழிற்சாலைகளிலும், ண் கரங்கள் துண்டித்து வீசியெறியப்படுகின்றன.
ாண்டித்தனத்திற்கு எதிராகக் குரல் கொடுங்கள் ! குப் பாரம்பரிய பிரதேசங்களையும் அங்கீகரிக்கக் கோரிப் டுங்கள்
புவி ஆதரவாளனையும் நோக்கி கேள்விகளையும் ம் முன்வையுங்கள்
ரையை கிழித்தெறியுங்கள்
— Musuh gug

Page 5
முஸ்லீம் மக்கள்
வடக்குத் தெற்கு இரு பகுதியிலும் அரசினாலும் مام مسمت புலிகளினாலும் காட்டுத் தர்பார் நடத்தப்படுகின்றது. அரசின் வாழ்விற்காக பெளத்த சிங்கள இனவாதமும், புலிகளின் இருப்பிற்கான குறுகிய நோக்கம் கொண்ட பாசிச அரசியலும் தொடர்கின்றன. இந்நிலையில் தேசிய ரீதியில், அரசியல்ப் போராட்டங்களில், அரசியல் நிலைப்பாடுகளில், முஸ்லீம் மக்களின் தொடர்பு மிகவும் சிக்கலாகியுள்ளது. இக்கால கட்டத்தில் முஸ்லீம் மக்களின் அரசியல் நிலமைகள் இலங்கை வாழ் அனைவருக்கும் தெளிவாக்கப்படல்
அவசியமாகும்.
இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரமடைந்த காலங்களிலிருந்தே தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழர் மேல் இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வர்த்தகம், தொழில் முன்னுரிமைக்கான போட்டியாகவும் காலப் போக்கில் இலங்கைப் பெரும்பான்மையினத்தினரின் வாக்குச் சீட்டிற்காகவும் திட்டமிட்டு இனவாதம் துாபமிடப்பட்டது. இப் பிழைப்புவாதம் U.N.P., S.L.F.P., J.V.P. GLUITGăgp is "6a56fas misió Aris67 Ladš56 மத்தியில் இனவாத உருவேற்றியது. இலங்கையின், வறுமை. பற்றாக்குறை, வேலையின்மை போன்றவற்றின் பிரதான காராணங்கள் காலனித்துவ, நவகாலனித்துவம் போன்றவற்றின் சுமைகள் ஆகும். இலங்கைத் தேசியவாதத்தைப் பயன்படுத்தி இவற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய சிங்கள அரசியல் கட்சிகள் அதற்குப்
இலங்கையி
பதிலாக தமிழ், முஸ்லீம், மலையக மக்களை இப்பற்றாக் குறைகளுக்கு காராண கர்த்தாக்களாக்கின. இதன் மூலம்
வாக்குச் சீட்டைப் பெறுவதற்காக பெளத்த
 
 
 

தேடல் 10
9C) நோக்கு
சிங்கள இனவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் துாவின.
இதன் பிரதிபலிப்பாக தமிழ் மக்களின் மேல் அழுத்தப்பட்ட இனவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டிய தமிழ் தலைமைகள், சரியான போராட்ட முறைகளைக் கையாளாமல் ஏற்பட்ட அரசியல் தோல்விகளுக்கான காரணத்தை அப்பாவி முஸ்லீம் மக்களின் மேல் சுமத்தின. சிங்கள இனவாதக் கட்சிகள் இனவாதத்தை திட்டமிட்ட முறையில் தமிழ் மக்கள் மீது செலுத்தியது போன்றே முஸ்லீம் மக்கள் மீதும் செலுத்தியது. 78ம் ஆண்டுவரையும் சிங்களப் பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் மக்கள் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் சமூகப் பிரிவாக இருந்தனர். அதாவது ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் ஏறத்தாள அரைவாசி சிங்கள மக்கள் ஆதரவு U.N.P.க்கும் மிகுதி அரைவாசி S.L.F.Pக்கும் ஆதரவாக இருந்தார்கள்.
இலங்கையில் மூன்றாவது சிறு பகுதியாக முஸ்லீம் மக்கள் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் காரணத்தால் சிங்கள் இனவாதக் கட்சிகளால் விலை பேசப்பட்டனர். இலங்கையின் அரசியலை கையாளத்தக்க முஸ்லீம் பணக்காரர்களின் கையில் இம் முஸ்லீம் மக்களின் தலைமை இருந்ததே இதற்குக் காரணமாகும். 78ல் சிறு
தொகுதி மூலம் தேர்தலில் தெரிவு செய்யும் முறை கைவிடப்பட்டு விகிதாசாரத் தெரிவு முறை நாடாளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட்டது. இது முஸ்லீம்களின் முக்கியத்துவமான தேர்தல்
வெற்றியை நிர்ணயிக்கும் தன்மையை இழக்க வைத்தது.
3 தேடல் 10

Page 6
தேடல் 10
சேர். பொன். இரா
இப்புதிய நிலைமைகள் இரத்தினக் கல் முஸ்லிம்களிற்கு வியாபாரம் போன்ற வர்த்தகங்களை முனப்ம்ே கழ்த் யிருந்தனர். பணக்காரர்களிடமிருந்து சிங்காவம் காங்கிரஸ் கட்சி கைகளுக்கு இனவாதக் கட்சிகளால் மாற்ற நலன்களுக்காக உதவியது. தொடர்ந்து முஸ்லீம் ஏழை வாக்குரிமை பறி மக்களின் வாழ்விலும் இனரீதியாகவும். சமூக அவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகள் குறிப்பிட
ஏற்பட்டன. இது முஸ்லீம் மக்களின் அரசியலில் கொழும்புசார் தலைமைகளை விடுத்து செறிந்து வாழும் பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களிடமும், நடுத்தர. விவசாய முஸ்லீம்களிடமும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பாராளுமன்ற, உயர் பதவிகளிலிருந்தும்கூட முஸ்லீம்கள் துாக்கி எறியப்பட்டனர். இக்காலங்களிற்கு முன்னரே முஸ்லீம் எதிர்ப்புணர்வு, வன்முறையாக இனவாத அரசுகளினால் ஏவிவிடப்பட்டன. 70களில் நடைபெற்ற முஸ்லிம் விரோத நடவடிக்கையில் இனவாத அரசே பின்னணியில் நின்றது. "ம்ே ஆண்டு புத்தளம் பள்ளிவாசலும் அதன் அண்டைக் கிராமங்களும் தாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டதிற்கும் SLFP. அரசு பின்னிற்றது. 83ல் காலி நகரிலும் அரச பயங்கரவாதம் முஸ்லீம் மக்களின் மேல் ஏவப்பட்டது. இதற்கு U.N.P, அரசு பின்னின்றது.
இந்நுாற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் கொழும்பில் உருவாகிய யாழ்ப்பான பணக்காரர் கூட்டம் அங்கே வர்த்தகம் தொழில் முன்னுரிமை போன்றவற்றிற்கு போட்டி போட வேண்டி ஏற்பட்டது. இதற்காக முஸ்ம்ேகளையும். இந்தியத் தமிழர்களையும் காட்டிக் கொடுத்தேனும் தனது அபிலாசைகளை நிறைவேற்றியது. உதாரணமாக சேர், பொன், இராமநாதன் போன்றோர் முஸ்லீம்களிற்கு எதிரான உரைகளை நிகழ்த்தியிருந்தனர். இங்கு 48ல் தமிழ்க் காங்கிரஸ் கட்சி. தமது சொந்த நலன்களுக்காக மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அவர்களுக்கு துரோகமிழைத்ததும் குறிப்பிடத்தக்கது. 1915ம் ஆண்டு கலவரம் சிங்கள தமிழ்க் கலவரமாக இல்லாமல் சிங்கள முஸ்லீம் கலவரமாக நடந்ததும் இப்பின்னணிகளே.
தமிழரசுக் கட்சியின் தோற்றத்தின் பின்னர் கிழக்கு மாகாண முஸ்லீம்களுடன் மேலோட்டமான ஒற்றுமைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் சரிவர வெற்றி பெறவில்லை. இதனால் நுாற்றுக் கணக்காக சதுரமைல் பரப்புள்ள நிலங்கள் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டம் பலமடையவில்லை. தமிழரசுக் கட்சிகளின் முன் பாராளுமன்றம் சென்ற பல முஸ்லீம்கள் பின்னர் இனவாத சிங்களக் கட்சிகளுடன் இணைந்து கொண்டனர். இக்காலங்களில் முஸ்லீம்கள் மீது மட்டும்தான் அரசியலில் நம்பத்தகாதவர்களாக அபிப்பிராயம் மக்கள் மத்தியில் வளர்க்கப்பட்டது. அதே சமயம் அறுபதுகளிலிருந்து முஸ்லிம் மக்களிற் பலர் தமிழ் தேசியப் போராட்டங்களிலும் சத்தியாக்கிரகம் போன்றவற்றில் பங்கு கொண்டு சிறை சென்ற வரலாறுகள் பல உண்டு. ஆனால் தமிழ் பிரதிநிதிகள் த டன் சேர்ந்து போராடிய முஸ்லீம் இளைஞர்களையோ அல்லது
தேடப்
 

நாதன் போன்றோர் திரான உரைகளை மக்களையோ முதன்மையைப்படுத்தாமல் இங்கு 48ல் தமிழ்க் கொழும்புப் பணக்கார முஸ்லீம்களின்
தமது சொந்த தலைமைத்துவத்தின் அரசியல் லயகத் தமிழர்களின் சூதாட்டங்களையே கருத்திற் கொண்டு , J, JLJL LL போது பெரிதுபடுத்தினார்கள். இவற்றின் விளைவாக ரோகமிழைத்ததும் முஸ்லீம்களை அரசியலில் நம்பமுடியாது என த்தக்கது. தமிழர்களிடையேயும் "தமிழர்களை அரசியலில்
நம்பமுடியாது’ என முஸ்லீம்களிடமும் கருத்துப் பரவியது. தமிழர் கூட்டணியின் வழியில் பின்னர் தோன்றிய இயக்கங்களும் இக்கருத்தோட்டத்தை மாற்ற பெரிய முயற்சிகள் எடுக்கவில்லை.
கிழக்கு மாகாணத்தில் 33 சதவீதமும், அம்பாறை மாவட்டத்திலும் மன்னார், யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு கணிசமான தொகையில் வாழ்கின்றனர். ஆனால் இலங்கை வாழ் முஸ்லீம்களில் பெரும்பான்மையினர் சிங்களப் பிரதேசங்களிலே சிதறி வாழ்கின்றனர். இப்படியிருந்த போதிலும் இயக்கம்கள் கிழக்கு மாகாணத்தை தமிழர்களது மாகாணம் என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். இது யாழ்ப்பாண நோக்கில் எடுத்த மிகவும் பிழையான மனேபாவமாகும். தொடர்ந்து புலிகள் இதனையே மிகவும் வக்கிரமாக வலியுறுத்துகின்றனர். புலிகளின் சிரேஷ்ட பிரதிநிதியான யோகி கூட்டத்தில் பேசுகையில் "முஸ்லிம்கள் தமிழர்களின் நலன் சர்ந்தே வாழவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இன்று மட்டுமல்ல பழைய தமிழன் பிரதிநிதிகள் அரசுடன் நடத்தி பேச்சுவார்த்தைகளில் கூட முஸ்லீம் மக்களின் அபிலாசைகளைகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இப்படியாக இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இனங்களிற்கிடையே காட்டிக் கொடுப்பும், குறுகிய லாபங்களிற்காக சோரம் போவதும் இனங்களிடையே பரஸ்பரம் நம்பிக்கையின்மையையே
வளர்த்துள்ளது.
தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காகப் புறப்பட்ட பிரதான இயக்கங்கள் எல்லாம் முஸ்லீம் மக்களை ஒரே இனத்தவர்களாகவே அல்லது சகோதர மக்களாகவோ நடத்தவில்லை. இது இவர்களின் கடந்தகால, அண்மைக் கால நடவடிக்கைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் முஸ்லீம் மக்கள் மீதான புலிகளின் அடக்குமுறை பாசிச வடிவம் எடுத்தது. புலிகளின் பாசிசம் நுாற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களை இரத்தப் பலி எடுத்தது. இதன் விாைவாலும், இனவாத அரசினால் துரண்டப்பட்டும் முஸ்லீம்கள் சிலரும், முஸ்லீம் ஊர்காவல் படையினரும் பல அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தனர். இவற்றால் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லீம் மக்களிடையே குரோத உணர்வு உக்கிர நிலையை அடைந்தது. பழைய தமிழ் தலைமைகள் கூட இன ஒடுக்குமுறையை தமிழ் பேகம் மக்களின் பிரச்சினையாகவே பேசினார்கள். ஆனால் இன்று குறிப்பாக புலிகளால், இன பிரச்சினையானது தமிழர்களின் பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது. அன்று தொட்டு பிரச்சினைகளை

Page 7
பேசும்போதும், போராடும் போதும் தமிழ் பேசும் மக்களின் பொதுப் பிரச்சினையாகப் பேசப்பட்டும் போராடப்பட்டும் வந்துள்ளது. இப்போராட்டங்களில் முஸ்லீம்களும் இணைந்தே போராடியுள்ளனர். ஆனால் பிரச்சினைகளுக்கான தீர்வினைத் தேடும் போது மாத்திரம் தீர்வானது தமிழர்களுக்கு மாத்திரம் என்று பார்க்கப்படுகிறது.
இன்று ஏற்பட்டுள்ள தமிழ் முஸ்லீம் குரோதத்திற்கு புலிகளின் பங்கு என்பது பிரதான பாத்திரம் வகிக்கின்றது. இலங்கை அரசும் இக்குரோத உணர்வைப் பாவிக்கின்றது. இந்திய இலங்கை அரசுகளின் ஒப்பந்தம் கூட உருப்படியான ஓர் தீர்வினை முஸ்லீம்களுக்கென முன்வைக்கவில்லை. இக்குறைபாட்டினை சில முஸ்லீம்கள் தவிர இலங்கையின் அரசியலின் எப்பகுதியாலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை. இந்திய அரசின் உதவியுடன் வட கிழக்கு மாகாண சபை உருவான போது முஸ்லீம்களால் தெரிவு செய்யப்படாத, முஸ்லீம் மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்காத ஓர் முஸ்லீம் தெரிவு செய்யப்பட்டார். இதுவும் ஓர் முஸ்லீம்களின் உரிமைக்கான உத்தரவாதம் உடைக்கப்பட்ட நிகழ்வாகும். மேலும் இது முஸ்லீம்களில் அபிலாசைகளை பூர்த்தி செய்ய முனைந்ததாகப் போலியாகக் காட்ட முனைந்த செயலாகும். இது தவிர மாகாண சபையில் உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அலியது உகுமானை மாகாண சபையில் அங்கம் வகித்த E.N.D.L.F. இனர் கட்டுக் கொன்றனர். E.N.D.LF.E.P.R.LF. போன்ற குழுக்களும் முஸ்லீம் மக்கள் பற்றிய சரியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இவர்களைவிட மோசமான நிலைப்பாட்டையே இன்று புலிகள் கொண்டுள்ளனர். மேலும் அண்மைக்கால புலிகளின் முஸ்லீம்கள் மீதான வெறித்தனமான நடவடிக்கைகள் - முஸ்லீம் மக்களின் மனதில் மென்மேலும்
அச்சத்தையே விளைவித்துள்ளது.
29- 04- 92 அன்று 54 முஸ்லீம்கள் ஆயுதபாணியான தமிழ் குழுவினால் கொல்லப்பட்டனர். 21 முஸ்லீம்கள் காயமடைந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட. அதனைத் தொடர்ந்து 22 தமிழர்கள் கொல்லப்பட்டும் 21 தமிழர்கள் காயமடைந்தனர். அழிஞ்சிப் பொத்தனை என்னும் கிராமத்தில், இரு தரப்பில் உடமைகள் வீடுகள் சூறையாடப்பட்டன. சாய்ந்த மருது சந்தையில் (2 - 09 - 92) 31 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். 83பேர் காயமடைந்தனர். அதுவும் ஆயுதக் குழுவொன்றினால். சித்தாண்டியில் முஸ்லீம் ரயில் பயணிகள் 7 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர். மட்டக்களப்பு கிரான் கிராமத்தில் மினி பஸ் பயணிகள் 19 பேர் கொலை செய்யப்பட்டனர். 8 பேர் காயமடைநதனர். இதுவும் ஆயதக் குழுவாலே நடாத்தப்பட்டது. - 7 தமிழர் வாழைச்சேனையில் கொல்லப்பட்டனர். பின்னர் 6 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகள் இருபக்கங்களிலும் நடந்தேறியனாலும் இவற்றின் காரண கர்த்தாக்கள் புலிகள் என்றே கருதப்படுகிறது. இன்று தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் முஸ்லீம்களின் பாதுகாப்பு உத்தரவாதம் என்பது சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லீம்களின்
5

தேடல் 10
பாதுகாப்பு உத்தரவாதத்தை விட பாதகமான நிலையிலே உள்ளது. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த எல்லா இயக்கங்களிலும் முஸ்லீம்கள் இணைந்து போராடியுள்ளனர். இருந்த போதிலும் இன்று முஸ்லீம் மக்களுக்கே எதிராக அவ் ஆயுதங்கள் திரும்பியுள்ளன: அதுவும் அரசியல் துரோகிகளாக, தமிழ் மக்கள் மத்தியில் உருவேற்றப்பட்டு நடத்தப்படுகின்றது. முஸ்லீம்களை அரசியல் துரோகிகள் என்பது வெறும் புனையப்பட்ட மாயை என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் 87ம் ஆண்டு வரைக்கும் இயக்கங்கள் பல தனிநபர்களை துரோகிகளாக மின்கம்பங்களில் ஏற்றியிருந்தனர். இத்துரோகிகள் என்று கருதப்பட்டவர்களில் முஸ்லீம்கள் எண்ணிக்கையளவில் இல்லை என்றே கூறலாம். இன்றைய நிலையில் முஸ்லிம் மக்கள் தேசிய இனமாக அடையாளம் பெற்றுக் கொண்டிருக்கிறார்களா? அல்லது தனித்துவமான இனக்குழுவா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. எது எப்படியிருந்த போதிலும் முஸ்லீம்கள் தனித்துவமான சமூகக் கூட்டம் என்பதை எல்லோருமே ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயம். எனவே அவர்களின் அரசியல் ரீதியான தீர்வினை அவர்களே தீர்மானிக்கும் உரிமை உண்டு. முஸ்லீம் மக்களின் இந்த உரிமைகளை தமிழ், சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அத்துடன் முஸ்லீம்கள் பாரம்பரியமாக வாழ்ந்த நிலங்களில் அவர்கள் தொடர்ச்சியாக வாழ்வதற்குரிய சகல நிபந்தனைகளையும் உருவாக்குவது அவசியமாகும். இது ஜனநாயக உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். இதற்கு தடையாக இருக்கும் பாசிச அதிகார சக்திகளுக்கு எதிராக போரா வேண்டியது இன்று எம்முன் உள்ள கடமையாகும். எப்படி சிங்களப் பேரினவாதத்திலிருந்து அரசியல் விடுதலை தமிழ் மக்களுக்கு தேவையோ அதேபோல் முஸ்லீம்கள் தமிழ்ப் பேரினவாதத்தால் அடக்கப்படாதிருக்க அல்லது எதிர் காலத்தில் மேலும் வளர்ச்சி அடையாதிருக்க நாம் விழிப்புடன் செயற்பட வேண்டும். தேசிய ரீதியிான அரசியல் தீர்வில் தமிழ் பகுதிகளால் வலியுறுத்தப்படும் வடகிழக்கு இணைப்பு என்பது நிபந்தனையற்ற இணைப்பாக முன்வைப்பதானால் அது முஸ்லீம்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யாது.
ஒரு வருடத்தில் கனடாவில் 120 பெண்கள் தங்களது ஆண் துணைவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். கனடிய பத்திரிகை புள்ளி விபரங்களின்படி
தேடல் 10

Page 8
தேடல் 10
இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் மக்க இணைத்து சமாதானமாக வாழ்ந்தார்கள். இ சேர்த்துக் கொண்டார்கள். இப்படி இரு சமூகத்தாரும் அந்நியோன்யம காரணமானவர்கள் யார் எண்பதை சற்றுக் கவனித்தோமானால் புலிகளே கொள்ளலாம். இன்று தமிழ் மக்கள் முஸ்லீம்களை ஏதோ ஒரு மூன்றாமாணவர்கள் துாரத்திலுள்ளவர்கள் என்றே நோக்குகின்றார்கள். புரிந்து உணர்வு, சமாதானத்தை காண்பது அரிது. பழைய நிலை காரணம் அண்மையில் நடந்த அழிஞ்சிப்பொத்தானை அழிவுகளைக் (
இவைகளுக்கு காரணமாக இருக்கின்ற புலிகள் தொடர்ந்தும் தமது
ஏற்படப் போவதில்லை. புலிகளின் ஆரம்பகால நடவடிக்கைகளை
ஒருவருக்கு ஒருவர் எவ்வித இனவேறுபாடுமின்றியே வாழ்ந்த மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம் அதில் முஸ்லீம்களுக்கு எ இப்படிக் கூறிய இவர்கள் காலப்போக்கில் தமது கொள்கையில் மாற்ற காரணமெனக் கூறலாம். இது தங்கள் போராட்டத்துக்கு இடையூறா திடசங்கற்பம் பூண்டு கொண்டார்கள். அதன் பிரகாரம் வட கிழக்கி சொந்தமென முஸ்லிம் மக்களை சொந்த இடங்களிலிருந்து வெளியே பல வகைகளிலும் உதவியிருக்கிறார்கள் என்பதை மறந்தே இவ்விதம் கொடுரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். காத்தான்கு
செய்யாதவர்கள் புலிகளின் இரத்த தாகத்துக்கு இவர்கள் பலியானார்கள்.
தமிழீழமே எமது தாகம் என்றார்கள் இப்போது முஸ்லிம்களின் இரத் இருபத்தெட்டு அன்று இரவு அழிஞ்சிப்பொத்தனை கிராம முஸ்லிம் பாலகர்கள் பெண்கள், ஆணர்கள் வெட்டியும் கொத்தியும் கொன்றார்கள் மானபங்கப்படுத்தினார்கள் கொன்றார்கள் புலிகளின் அடாவடித்தனம் இ முறையிலேயே கொன்று தீர்த்தார்கள். இப்படியாக பல முஸ் விளைவித்திருக்கிறார்கள். அத்துடன் நின்றார்களா மன்னார் யாழ வெளியேற்றினார்கள். இன்று வட மாகாண முஸ்லீம்கள் அகதிகளாகே
இப்படியாக முஸ்லிம் மக்களில் பெரும்பாலான ஆண் - பெண். சி கடத்தியும் வேறுவகையிலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கு இ இப்படியான இரத்தக் காட்டேரி அயோக்கியர்களுடன் சேர்ந்து வாழ்வது
தேடல் 10
 

இலங்கையில் வாழும் முஸ்லீம் மக்கள் தமது பாரம்பரிய நிலங்களிலிருந்து அணிமையில் வெளியேற்றப்பட்டடைக் கணிடித்து கனடாவில் வாழும் தமிழர்களாகிய நீங்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் காலம் தாழ்த்தியே நண்பர் ஒருவர் மூலம் கிடைத்தது. அத்துடன் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர் என்பதனையும் >அத்துணடுப் பிரசுரம் உணர்த்தியது. முஸ்லீம்கள் மீது இவ்வளவு அபிமானமா என நினைக்கும் போது நெஞ்சம் மகிழ்ச்சியால் நகின்றது. காரணம் முஸ்லீம்கள் வட கிழக்கு மாகாணங்களிலிருந்து றப்பட்டது குறித்து வெளியேற்றவர்களைக் கண்டித்தோ அல்லது ளுக்கு அனுதாபம் தெரிவித்தோ தமது உண்மை உணர்வை தெரிவிக்க வித தமிழ் அமைப்புக்களும் முன்வரவில்லை. இவ்வேளை உங்களைப் 7ண்ட தமிழ் மக்கள் கனடாவிலிருந்து குரல் எழுப்பியது கண்டு மீண்டும் |றமிருக்க
ளை சகோதரர்களாகவே ஏண் சொந்த உறவினர்களைப் போலவே தங்களுடன் து போலவே தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களை தங்களில் ஒருவராக ாக வழிந்தவர்கள் ஏன் இன்று கீரியும் பாம்பும் போல ஆனார்கள். இதற்கு இதற்கு மூல காரணமும் பொறுப்புக்களாகும் என்பதை தெளிவாக புரிந்து வேணிடாத பொருளை பார்ப்பது போலவும் தங்களின் கீழானவர்கள். இப்படி இரு சமூகத்தாரும் மனக் கசப்புடன் வாழும் போது இவர்களும் மீண்டும் வருவது இப்போதைக்கு கேள்விக் குறியாகவே இருக்கிறது. குறிப்பிடலாம்.
செயற்பாட்டில் மாற்றத்தை கொண்டு வராதவரை இலங்கையில் சமாதானம் எடுத்துப் பார்க்கும் போது இரு சமூகத்தாரும் (தமிழ் - முஸ்லீம்) ர்கள். அப்படியானதொரு நிலை இருக்கக் காரணம் தமிழ் பேசும் ந்தவித துன்பமும் இடம் பெறாது என்றே புலிகள் முதலில் கூறினார்கள். $தைக் கொண்டுவரலானார்கள். அதற்கு முஸ்லீம் காங்கிஸின் தோற்றம் ஒரு க இருக்கும் என கற்பனை செய்து முஸ்லிம் மக்களை தனிமைப்படுத்த வாழும் முஸ்லீம்கள் வெளியேற வேண்டும் என வட கிழக்கு எமக்கே ற்றி வெற்றிபெற்றார்கள். ஆனால் தங்களது போராட்டத்திற்கு முஸ்லிம்களில் நடந்து கொண்டவர்கள் நன்றிகெட்டவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்கள்
டி ஏறாவூர் கிராம முஸ்லீம் மக்கள் அப்பாவியானவர்கள் ஒரு தவறும்
நமே புலிக் காட்டேரிகளுக்கு தாகமாக இருக்கிறது. அண்மையில் ஏப்பரல் 1ள் இரத்தக் காட்டேரிகளுக்கு பலியாக்கப்பட்டார்கள் ஒன்றுமறியாத பிஞ்சுப் பாலகர்களை மரத்தில் துாக்கி துாக்கி அடித்தார்கள். கன்னிப் பெண்களை த்துடன் நின்றதாக இல்லை. அம்பாறை முஸ்லீம்களையையும் கொடூரமான சீம் கிராமவாசிகளையையும், அவர்களின் உடமைகளுக்கும் சேதம் 'ப்பாணம் போன்ற வட மாகாண முஸ்லீம்களை காலக்கெடு விதித்து
வ வாழ்கின்றார்கள்.
றுவர்கள் என ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை வெட்டியும் கொத்தியும் வர்கள் செய்த தவறுதான் என்ன? என்பது இன்னும் புரியாமல் இருக்கிறது
எப்படி? சமாதானம் பேசுவது எப்படி? தமிழ் - முஸ்லீம் இரு

Page 9
சமூகத்தவர்களையும் பகைவர்களாக்கிய இவர்களுடன் சேர்ந்து கொள்வது கொன்று முடமாக்கி விடுவது சரியா? இது பற்றி உங்கள் கருத்தை அறி
முக்கிய விடயமொன்று சிங்கள அரசுக்கு எதிராக புலிகள் தொடுத்திருக்கு தமிழ் மக்களின் சுய உரிமைகளுக்காகவும் தனித்துவத்திற்காகவம் போரா கொள்கையாக இருந்தது. ஆனால் தொடர்ந்தும் இக்கொள்கை அ கொள்கையிலிருந்து அவர்கள் துார விலகிவிட்டார்கள் என்பதை மட்டும் ெ
அடுத்து கிழக்கில் வாழும் நான் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளன கிண ஒன்றும் செய்வதில்லையா? எப்படி கனடாவில் வாழ்கிறீர்கள். ஆச்சரி எழுதுகிறேன்.
பாதுகாப்புக் காரணங்கள் கருதி கடிதம் எழுதியவரி
Gunpesumb
மீண்டுமொரு நாள் விழித்தது பூட்டியிருந்த அறைக்கண்ணாடிக:ை வெளிக்காற்றை முகர்ந்தேன் இன்றைய நாளும் எனக்கு விளக்கமழ்
நேற்று மூடப்பட்ட தொழிற்சாலையில் தொழில் இழந்து போனவன்
ஒரு மரணச்சடங்கின் பின் சுடுகாட்ஐ விட்டகன்ற உறவினன் புேல் 9ܪܐܙܧܐ
தொழிலகத்தை விடிதலிறேன்
கிழமைக் ஐஜியை விழுங்கி
if ay ܐܡܖ 恩 단 \
− கனடாவில்அரத や\ லையற்றோருக்கு கொடுக்குப
 

தேடல் 16
எப்படி? மூன்றாம் தரமானவர்களை இப்படி எவ்வித நியாயமுமின்றி ஆவலாய் உள்ளேன்
ம் போரை, போராட்டத்தை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். காரணம் டுகிறார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை. இது முன்னர் புலிகளின் வர்களிடம் இருக்கிறதா? ஒன்று மட்டும் விளங்குகிறது. தமது
தளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
ர்ணியாவிலேதான் இருந்து எழுதுகிறேன். " ஆமா புலிகள் உங்களை
பமாகவே இருக்கிறது. மேலும் விடயங்கள் உங்கள் பதில் கணிடு
psaill
இப்படிக்கு முளப்லிம் மகன்
ண் பெயர் வெளியிடப்படவில்லை - ஆ-ர் குழு
பாஅ.ஜயகரன்
* உதவிப் பணம்
தேடல் 10

Page 10
தேடல் 10
al அமெரிக்காவின் பாரம்பரிய மக்க முக்கியமான பிரச்சினைகளைப் பற்றிய கலந்துரைய ஒன்று லான்ஸ்டவுன் தமிழ்க் கூட்டுறவு இல்லத்தி - 10 - 92 அன்று இடம் பெற்றது. வட அமெரி பாரம்பரிய மக்களின் நிலவுரிமைகள், சுய நிர் உரிமைகளுக்காகப் போராடி வரும் நிறுவனங்க பிரதிநிதிகள் இருவர் முக்கியமான பங்களார்க கலந்து கொண்டனர். அதிலொருவரான திரு. பிழை ஸிங்கள் கவிஞருமாவார்.
செவ்விந்தியர்கள் என்று கொலம்பஸின் வ தோன்றல்களாலும் கொலனித்துவவாதிகளா அழைக்கப்பட்டு வந்த அமெரிக்கப் பாரம்பரிய மக்க பலஇனக்குழுமக்கள் (Tribes) வட அமெரி எங்கணும் செறிந்து வாழ்கின்றனர்.
"500 வருடங்களாக நாமும் நமது நிலங்க வளங்களும் சுரண்டப்பட்டு வந்தமை ஒரு பெரிய ச w என்று குறிப்பிட்ட பிறையன் கன மெக்ஸிக்கோ, அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்களுள் சொந்த நலன்களை அடிப்படையாகக் கொ6 வரையப்பட்ட சுய அரசாங்கம் பற்றிய சட்டங்கை தம்மீது திணிப்பதாக குற்றம் சாட்டினார்.
"கனடா அரசாங்கம் எங்களுக்குத் தர நினைப்பதெல் அரசியலில் யாப்பு, சுய அரசாங்கம் என்ற வெ பேப்பர்த் துண்டுகள். அத்தகைய வெற்றுக் கடதா எங்களுக்குத் தேவை இல்லை. எங்களுடைய அர யாப்பு எங்களுடைய கலாச்சாரத்தில் இருக்கி நாங்கள் குடிக்கும் சுங்கானில் இருக்கிறது; அ சுங்கானிலிருந்து எழும் புகையில் இருக்கி எங்களுடைய ஆறுகளில் இருக்கிறது; எங்களுன் நிலங்களில் இருக்கிறது . . . " என்று உண பூர்வமாகக் குறிப்பிட்டர் மற்றைய பிரதிநிதி.
"கனடா உருவாவதற்கு முன்பே வட அமெரிக்க பரப்புகளில் காலங்காலமாக இருந்து வந்த இ பாரம்பரிய மக்களின் பல மொழிகள் அழிந்துவிட் பல அழிந்து கொண்டுள்ளன. இந்த மொழிக இடத்தை ஆங்கிலமும் பிரெஞ்சும் ஆக்கிரமி விட்டன. ஒக்கோடடர் மாதம் 26ம் திகதி நிகழ உ சர்வஜன வாக்கெடுப்பில் கனடாவின் அர யாப்பிற்கான புதிய திருத்தா முன்மொழியப்படுகின்றன. இந்தத் திருத்ததங்க பாரம்பரிய மக்களுக்கான சுய அரசாங்கம் பற்றியும் ச
தேடல் 10
 

ளின்
ல் 3
க்கப்
SOL
65
றயன்
க்கா
ந்தப்
மூலங்கள் உள்ளன. எனினும் அவை தமது அபிலாஷைகளைப் பிரதிபலிக்கவில்லையென இந்தப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
"ஆரம்பத்தில் அந்நியர்கள் வந்து எமது நிலத்தைப் பிடித்த போது நாங்களும் அவர்களும் பரஸ்பரம் இடையூறுகள் இல்லாது பக்கம் பக்கமாக வாழ்வோம் என்ற உடன்பாடு இருந்தது. ஆனால் நாட் செல்லச் செல்ல அவர்கள் எங்களுடைய பண்பாடு, நாகரீகம்
எல்லாவற்றிலும் தலையிட்டு அவற்றைச் சிதைத்துவிட்டனர். . . . ." என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
கனடா அரசாங்கத்திற்கு எதிராக இம்மக்கள் சென்ற வருடம் நடாத்திய ஒரு முற்றுகைப் போராட்டம் பற்றிய செய்திப்படமீ(Documentry) ஒன்றும் கூட்ட இறுதியில் காட்டப்பட்டது.
ஈராக்கிற்கு எதிரான வளைகுடா யுத்தத்திற்கு முந்நுாறு படைவீரர்களை மட்டுமே அனுப்பி வைத்த கனடிய அரசு "கணவாகே" என்ற இடத்தில் மொகவாக் என்னும் பாரம்பரிய மக்கள் நிகழ்த்திய முற்றுகைப் போராட்டத்தை ஒடுக்க மூவாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தினரை அனுப்பியிருந்தமை உண்மையிலேயே ஒரு முரண் நகைதான்!
பாராளுமன்றத் தெரிவுக்குழுபரிகாரம் தேடுமா?
இனப்பிரச்சினையின் தீர்வுக்காக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழு ஐப்பசி மாதம் 14ம் திகதி அன்று வடகிழக்கு மாகாண சபையின் அதிகாரப் பகிர்வுக்கான பிரதேச அலகு(Territorial Unit) எது என்பதை தீர்மானிக்க இருக்கின்றது.
இதன் தலைவரான சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மங்கள முனசிங்க அவர்கள் இரண்டு வகையான தீர்வுகளை
கவனத்தில் எடுக்கவுள்ளார்.
1. வட மாகாணத்திற்கு ஒரு தனிச் சபை, கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தனிச்சபை, இரண்டுக்கும் தனித்தனி முதல்வர்கள்; இரண்டையும் உள்ளடக்கும் மாநிலப் பேரவை ஒன்று நிறுவப்படும். அதற்கும் ஒரு முதல்வரும் விசேட அமைச்சர்களும் இருப்பர். இத்தீர்வு யோசனையின் கீழ் தனித்தனி மாகாண சபைகள் இருக்குமோ ஒழிய முஸ்லீம்களுக்கு என்று தனி அமைப்பு இருக்காது.

Page 11
2. இரண்டாவது யோசனையின்படி வட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட ஒரே அமைப்பாக இருக்கும். அதேவேளை கிழக்கின் அம்பாறை மாவட்டச் சிங்கள பகுதிகள், திருகோணமலை மாவட்ட சிங்களப் பகுதிகள், இம்மாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்டு வடமத்திய ஊவா மாகாண சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்படும். இந்த வடகிழக்கு அமைப்பில் முஸ்லீம்களும் தமிழர்களும் தமக்கிடையில் உடன்பாடு கண்டு முஸ்லீம்களை பாதுகாக்கும் உடன்பாடு செய்யவேண்டும்.
இவ்விரு தீர்மானங்களில் குழப்பம் ஏற்பட்டால் வட, கிழக்கு இணைவது சம்பந்தமாக சர்வசன வாக்கெடுப்ப நடத்துவது. இவ்வாறான தீர்வினை பாராளுமன்றத் தெரிவுக் குழு ஐப்பசி 14ம் திகதி அறிவித்தால் என்ன நடைபெறும். எந்தவித குழுப்பமும் இன்றி இது நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றே இலங்கையர் அனைவரும் அபிப்பிராயப்படுகிறார்கள்.
தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைவரான குமார் பொன்னம்பலம் இக்குழுவின் இயலாமை பற்றி ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியிண் பழுத்த தலைவர்களில் மு. சிவசிதம்பரம் தனது கட்சியிலோ அல்லது மக்களிலோ நம்பிக்கையிழந்து அந்நிய நாடுகளின் மூலமே (மரம் பழுத்தால வெளவால் வரும்) இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா தெரிவுக்குழுவின் ஆலோசனைக்கு முன்னரே வடகிழக்கு இணைப்பை ஐ.தே.க. விரும்பாதது என்றும் புலிகள் ஆயுதத்தை கைவிடுமட்டும் பேச்சுவார்த்தை இல்லை என்றும் கூறியுள்ளார்.
எதிர் கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும், மகன் அநுராவும் எப்படி பதவியைப் பிடிக்கலாம் என்றுதான எண்ணுகிறார்களே அல்லாமல் ஒரு போதும் இலங்கையைப் பற்றியோ இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்க வேண்டுமோ என்று சிந்திப்பதாக தெரியவில்லை.
இலங்கை அரசு இனப்பிரச்சினையை உளப்பூர்வமாக தீர்க்க எண்ணினால் பின்வரும் விடயங்களை கடைப்பிடித்தாக வேண்டும். வட கிழக்கு தமிழர் பாரம்பரியப் பிரதேசம் என்பதை அங்கீகரித்து இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் தவறு என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்வதுடன் சிங்களக் குடியேற்றங்கள் இனிமேல் நடைபெறமாட்டாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தேடல் 10
வகுப்புவாதத்தை துாண்டும் விடயங்கள் பிரசுரங்கள், வானொலி, பத்திரிகைகள், பாடப்புத்தகங்கள் என்பனவற்றில் திணிப்பதை நிறுத்த வேண்டும். சகல மலையக, முஸ்லீம், தமிழ், சிங்கள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். அன்றேல் பகிரங்கமாக விசாரணை செய்ய வேண்டும். உடனடியாக யுத்த நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும். முடியாத பட்சத்தில் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய யுத்தம் நடைபெறவேண்டும்.(பாடசாலைகள், வைத்தியசாலைகள், கோயில்கள், மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல்கள் நிறுத்ப்பட வேண்டும்.)
எல்லாவற்றுக்கும் மேலாக வடக்கு கிழக்கு இணைவதா இல்லயைா என்பதனை வட கிழக்கு மக்களை தீர்மானிக்க வேண்டும் என்பதனை அங்கீகரிக்க வேண்டும். புலிகள் ஆயுதத்தை கைவிட்டால்தான் அவர்களுடன் பேச்சுவார்த்தை என்கின்ற கோரிக்கையை கைவிட வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவாையில் வடக்கு வாழ் முஸ்லிம்களை உடனடியாக அவர்கள் வாழும் பிரதேசத்தில் மீண்டும் குடியேற அனுமதிக்க வேண்டும். அப்பாவிச் சிங்கள முஸ்லிம் மக்கள் மீது எவ்வித காரணங் கொண்டும் தாக்குதல் தொடுப்பதை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.இன்றேல் பகிரங்கமாக விசாரணை செய்ய
தமது அரசியல் கட்சி உட்பட இயங்குவதற்கு தடை செய்யப்பட்ட சகல ஸ்தாபனங்களும் இயங்க அனுமதிக்க வேண்டும்.
முஸ்லிம் மக்கள் வட பகுதி தாழ்த்தப் பட்ட மக்கள், வட கிழக்கில் குடியேறிய மலையக மக்கள், நீண்ட காலமாக வாழ்கின்ற சிங்கள மக்கள் (வட கிழக்கில் வாழும்) அபிலாசைகளை, தீர்வினை நோக்கி வெளிப்படுத்த அனுமதிக்க
பேச்சுவார்த்தைக்கு முன்னர் வட - கிழக்கு மக்களுக்கு தமிழீழம் தவிர்ந்த என்ன தீர்வை முன்வைக்க விரும்புகின்றோம் என்பதை தெளிவாக்க வேண்டும்.
பேச்சுவார்த்தையில் மற்றைய குழுக்கள் கலந்து கொள்ளக் கூடாது போன்ற நிபந்தனைகளை கைவிட்டு பகிரங்கமான தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான சூழ்நிலை ஏற்படாத பட்சத்தில் பேச்சுவார்த்தை என்பது வெறும் கேலிக்கூத்தாகவே இருக்கும். மக்களும்
தேடல் 10

Page 12
தேடல் 10
வழமைபோல பாராமுகமாகவே இருப்பர். நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடி வீண் அழிவுகளே மிஞ்சும் நிலையும் ஏற்படும்.
வகுப்புவாதத்தை தந்திரமாக ஏற்றுக் கொண்டு பதவியை பிடிக்க முயலும் பாராளுமன்ற இடதுசாரிகளோ அடிக்கடி இனப்பிரச்சினை தீரவேண்டும் என்றே பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
பாராளுமன்றத்திற்கு அப்பாலுள்ள இடதுசாரிக் கட்சிகளோ இன்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு செயற்பாடு அற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
கொழும்பில் வாழுகின்ற மற்றைய இயக்கங்களோ நகைப்புக்கு இடமான அறிக்கைகளை வெளியிடுகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளுமே இனப் பிரச்சினை மேலும் மேலும் மோசமாவதற்கும், ஓர் நியாயமான தீர்வினை எடுப்பதற்கும் முக்கிய பொறுப்பானவர்களாக இருக்கின்றார்கள்.
இவ்விரண்டு பக்கத்தாரும் இராணுவத் தீர்வில் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொண்டு யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டு பெரும் இழப்புக்களை சந்திக்கின்றார்கள். முடிவின்றி நடைபெறும் கயிறு இழுத்தல் போட்டி போல யுத்தங்கள் தொடர்கின்றன.
ஆனையிறவில் பல நுாறு புலிகள் பலி - அரசு கொப்பேடுக்கவாவும் சில உயரதிகாரிகளும் பலி - புலிகள் இராணுவத்தின் பரந்தன் முற்றுகை வெற்றி புலிகள் பின்வாங்கினர் - அரசு புலிகள் ஐந்து கோடி பெறுமதியான ஆயுதங்கள் பறிப்பு - புலிகள்
(அரசு மெளனம்) இந்த நிலைமை மாறி மாறி தொடரும் வேளையில் இருபக்கத்தாரும் தமது எதிரிகளை யும் மக்களையும் அடக்குவதிலே போட்டிபோடுகின்றனர். வேற்றுமைகளிலும் இவ்விடயத்தில் ஒற்றுமை நிலவுவதை இன்று அவதானிக்கத் தொடங்குகின்றனர்.
தென் இலங்கையில் காட்டூனிஸ்ட் ஒருவரின் வீட்டிற்குள் சென்ற பல காடையர்கள் "எங்கள் ஜனாதிபதி பற்றி காட்டுனா வரைகின்றாய்" என்று கேட்டு அவரைக் கத்தியால் குத்தியுள்ளார்கள். இவ்வாறு பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன்.
வட இலங்கையிலோ நாடகம் போட முனைந்ததிற்காக செல்வி
தேடல் 10

உட்படப் பலர் புலிகளினால் கைது செய்யப்பட்டனர். இது மட்டுமல்ல இன்னும் பலர் கைது செய்யப்பட்டதும் சித்திாவதை செய்யப்படுவதும் அறிந்த நிகழ்வுகளே.
இவவிரு பகுதியினரும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு இனப்பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புவது உண்மை எனில இவர்களின் செயற்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்.
இந்நியாவின் மிகப்பெரும் நிதி ஊழலின் முக்கிய புள்ளியான ஹர்ஷத் மேத்தா 110 நாட்களின் பின் 10 இலட்சம் ரூபாப் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த ஊழலின் அவர் சட்டவிரோதமாக தடுத்துவைக்க ப்பட்டுள்ளாரென மேத்தாவின் வழக்கறிஞர்கள் கூறியதை அடுத்து பம்பாய் மேல் நீதிமன்றம் மேத்தாவை விடுவித்தது. மேத்தா பிணையில் விடுவிக்கப்பட உத்திரவிடப்பட்ட போது அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பட்டாசுகளைக் கொளுத்தி "மேத்தா வாழ்க! "என கோஷமிட்டனர். இந்திய ஜனநாயகத்தில் இதற்கு இடமிருக்கிறது.
ஆனால் இந்தியா நாட்டின் விடிவிற்காகவும், இந்தியா அடகு போவதை தடுத்தும், இந்தியாவிற்குள் கட்டுண்டிருக்கும் தேசிய இனங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் இந்திய நாட்டின் விடிவெள்ளிகளுக்கு தடா, N.S.A. போன்ற கறுப்பு சட்டங்கள் மூலம் காலவறையற்ற சிறை, சித்திரவதை தேசத்துரோகிகள் பட்டமும் வேறு عناب ||
10

Page 13
IDEJUT - DET - - lui - - - I
e. சமத்! நான் அப்பவே சொன்னான், தெரியாத வேலை எல்லாழ் உனக்கு வேண்டாம் எண்டு. உன்னால காலையில நேரத்தோட எழுந்திருக்கவே முடியேல்லை, அப்புறம் கரைவலை எல்லாம் எப்பிடி இழுக்கப் போறாய் ? வாத்தியார் தொழில் செய்தவனுக்கு கரைவலை எல்லாம் எதுக்கு ? சும்மா வந்து அதை இதை சொல்லி கழுத்தை அறுத்திட்டு, சரி, சரி, சும்மா வாயைப் பிளந்திட்டு நிக்காமல் போய் வேலையைப் பாரு” - கூனிக் குறுகிப் போவார் சமத். சில வேளைகளில் தன்மானம் தலை சிலிர்த்து எழும். ஆனால் யதார்த்தத்தின் கோரப் பிடியில் மீண்டும் அது தலை கவிழ்ந்து போய்விடும். வயதான அவருடைய பெற்றோரும், வாழ்வென்றால் இன்னதென்று அறியாத அவருடைய குழந்தைகளும், அவரை விட உலகத்தை அறியாத அவருடைய மனைவியும், வழமை போல்
இதயம் இன்றும் கனத்தது.
"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல் தான் பொங்குவதேன், நிலமைகளும் துயிலுகையில் நெஞ்சகம் தான் விம்முவதேன்" - என்ற அவர் கற்றுக் கொடுத்த இலக்கிய வரிகள் நினைவில் வந்தன.
வழமை போல வாசலில் மனைவி பரீதா கண்ணிருடன் விடை கொடுக்கிறாள். "சீக்கிரம் பேச்சுவார்த்தை வந்திடும் எண்டு பேசிறாங்க, அப்பிடி எண்டால் பிரச்சினை எல்லாம் முடிஞ்சு நாங்களே ஊருக்குத் திரும்பிடலாம், இன்னும் கொஞ்சக் காலம்தானே நீங்க கவனமா போயிட்டு வாங்க."
அவளுடைய வார்த்தைகளில் வேதனையும் அதனுாடே சிறு
 

தேடல் 10
நம்பிக்கையும் தொனித்தது.
"குழந்தைகளைச் சாப்பிட வை பரீதா, நான் பின்னேரம் வரும்போது மீன் கொண்டு வாறன்" - மனைவியின் முகத்தைப் பார்க்காமலே கூறுகிறார் சமத் அவளுடைய முகத்தைப் பார்க்கும் சக்தியை நாளுக்கு நாள் இழந்து வருவதைப் போல ஒரு பிரமை அவருக்குள் பரந்து விரிந்து கிடக்கும் அந்த நீர்ப்பரப்பை நோக்கி நடக்கிறார். அவளைக் காதலித்துத் திரிந்த அந்த இனிய நாட்கள் கணிகளில் நிழலாடுகிறது.
"முழுநிலவே முக்காடு ஏன்? உன் கனி முகத்தைக் காட்டாது கலக்குவதும் ஏன்?
உன் விழியதின் ஒளி கொண்டெல்லவா உலகின் வழியறிகிறேன் நான்.
என்னவளே."
"சமத் அண்ணை, கெதியில வாங்கோ, சம்மட்டியர் இன்னும் வரேல்ல, அது தான் உங்களைக் கூட்டிக் கொண்டு வருவம் எண்டு ஓடியாறன்" மூச்சிரைக்க ஓடிவரும் உதயனின் குரல் கேட்டுச் சுயநினைவடைகிறார் சமத்.
"என்னப்பா உதயன், கரைக்கு ஆட்கள் வந்திட்டாங்களா?" "அவங்கள் எல்லாம் கோழி கூவுறதுக்கு முன்னாடியே வந்திட்டாங்களண்ணை, இணிடைக்கு நல்லாய் மீன பட்டிருக்கு, சம்மட்டியார் நல்ல சந்தோசத்தில இருப்பார், அதுதான் உங்களுக்கு அந்தக் கணக்கெழுதிற வேலையை இண்டைக்குக் கேட்டுப் பார்க்கலாம், மனுசன் சும்மா கத்துவாரே தவிர மனசில ஒண்டுமிருக்காது." "உதயா, நீ செய்யிற உதவிகளுக்கு எப்பிடி நன்றி
11
தேடல் 10

Page 14
தேடல் 10
சொல்லுறதெண்டே தெரியேல்லை."
"சும்மா விசர்க்கதை கதைக்காமல் நடவுங்கோ அண்ணை, நீங்கள் வந்த இந்த ஆறு மாசத்திலதான் நான் என்ர பெயரையே எழுதப் பழகியிருக்கிறேன். இதுக்கு முன்னால இந்த மீனையும், கடலையும் தவிர எனக்கு என்ன தெரியும்? கடைக்குப் போனால் வெத்திலையும், பீடிக்கட்டும் வாங்கிற நான் இப்பதான் மனுசன் மாதிரி பேப்பர் வாங்கிப் படிக்கிறன். நீங்கள் என்னடா எண்டா உந்தப் படிப்பெல்லாம் படிச்சுப்போட்டு கரைவலை இழுக்கிறன்
எண்டு நிக்கிறியள்."
மடித்துக் கட்டிய சாரமும், தலையில் கட்டிய துணிடுமாக கம்பீரமாக முன்னே நடந்து கொண்டிருந்த உதயன் அவரைக் கணிகலங்க வைத்தான். இவனால் மட்டும் ஏன் என்னை வேற்றினத்தவனாக எணர்ண முடியவில்லை, ஆணிடாண்டு காலமாகப் பிறந்து வளர்ந்து, வாழ்ந்த வந்த மண்ணிலிருந்தே அகதியாக அனாதையாக வெளியேற்றப்பட்டு வந்த அவரை இவனால் மட்டும் எப்படி நேசிக்க முடிகிறது? அவனிடத்தில் எந்தத் தத்துவங்களுமில்லை, கொள்கைகள் இல்லை கோட்பாடுகள் இல்லை. ஒ மண்ணில் இன்னும் சில மனிதர்கள் வாழந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
கடற்கரையில் சம்மட்டியர் வாயெல்லாம் பல்லாக நின்றிருந்தார். சமத்தின் மனதில் சிறிது நம்பிக்கை துளிர்த்தது. உதயன் சொன்னது போல இன்று ஒரு வழி நிச்சயம் பிறக்கும். கரைவலை இழுப்பது என்பது இலேசமான காரியமில்லை. அவருடைய இந்த ஐம்பது வருட வாழ்க்கையில் அவர் எந்தக் கடினமான தொழிலையும் செய்யததில்லை. வசதியான வர்த்தகக் குடும்பத்தில் பிறந்த அவர் சிறு வயதிலிருந்தே ஆசிரியராகப் பணி புரிய ஆரம்பித்து விட்டார். தமிழ் மொழியின் மேல அவர்க்கிருந்த பற்று அவரை தமிழ்நாடு அணிணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழப் பட்டதாரியாக்கியது.
"சமத் அண்ணே! உங்களைச் சம்மாட்டியார் கூப்பிடுகிறார்." - தொலைவிலிருந்து குரல் கொடுக்கிறான் உதயன். ஒ! அல்லா என்னைப் காப்பாத்து, அவருடைய இதயம் ஈனமாக வேண்டியது. இந்தச் சம்மட்டியாரே அல்லாவாக இருக்கக்கூடாதா என மனது அவலமாக வேண்டியது. வாட்டசாட்டமான உடல் சம்மாட்டியாருக்கு, கட்டையான குரல், பரட்டைத்தலை, பார்ப்பதற்கே சிறிது பயமாகத்தான் இருந்ததது. எவ்வளவோ காலம் இயற்கையுடன் போராடிய தழும்புகள் அவரை மேலும் விகாரப்படுத்தின. கடற்கரையில் அலைகள் முரட்டுத்தனமாக மோதின. அந்தக் கடற்காற்று அவர் சிந்தனையைச் சொந்த ஊரை நோக்கிக் கொண்டு சென்றன. - "இவ்வாண்டில் சிறந்த ஆசிரியருக்கான விருதைப் பெறுபவர், யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக்
தேடல் 10

கல்லூரியைச் சேர்ந்த தமிழாசிரியர் திரு. அப்துல் சமத், கரகோசம் மண்டபத்தை அதிர வைத்தது. மிடுக்குடன் ைேடயேறுகிறார் சமத். மகிழ்ச்சியால் நீரோடிய கண்களுடன் முன்வரிசையில் மனைவி பரீதா, சக ஆசிரியர்களும், மாணவர்களும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
"சமத் அண்ணை வலைக்கு மேலே காலை வைச்சு நடக்காதீங்கோ, சம்மட்டியார் கண்டார் எண்டால் துலைஞ்சது. என்ன ஒரே யோசிச்சுக் கொண்டு வாறியள்? நீங்கள் எங்கை எண்டு சம்மட்டியார் கேட்டவர், நான் வெள்ளனக் காத்தாலே நீங்கள் வந்திட்டீங்கள் என்று சொன்னான்." - அவரின் கைகளைப் பிடித்து உலுக்கிய படியே கூறுகிறான் உதயன், எண்னதான் முயன்றாலும் பழைய நினைவுகளால் ஆட்கொள்ளப்படுவதை அவரால் நிறுத்த முடியவில்லை. நினைவுகள் சோறு போடாது என்பது அவருக்குத் தெரியும். என்றாலும் என்ன செய்வது? நெஞ்சுடன் கலந்தவையாயிற்றே. சற்று நின்று நிதானித்து, அதிபரை அணுகும் மாணவன் போல, மெல்ல மெல்ல சம்மட்டியரை அணுகினார் சமத்.
"என்னப்பா சமத், இண்டைக்கு நேரத்தோடையே வந்திட்டியாம். உதயன் சொன்னான். தொழில் எண்டால் திெல ஒரு பக்தி வேணும். அப்பதான் முன்னுக்கு வரலாம்." - சம்மட்டியர் கூறி நிறுத்திவிட்டு கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். சமத் எதுவுமே பேசவில்லை. சம்மட்டியாரின் நிதானம் சற்று நிம்மதியையும் நம்பிக்கையையும் கொடுத்தது.
"என்னப்பா ஒண்டும் பேசாமல் நிக்கிறாய், என்ன இந்தத் தொழில் உனக்குப் பிடிபடுகுதோ?”
"ஓம். ஐயா, எவ்வளவு கடினப்பட்டாவது தொழிலைப் பழகிடவேணும் எண்டு உறுதியாய் இருக்கிறன், எனக்குக் குடும்பப் பொறுப்பு அதிகம் எப்பிடியும் அதுகளை நல்லாக்கிப் போடவேணும்."
"ஒருவன்தான் படிச்ச மனுசன். நீ யாழ்ப்பாணத்தில நல்லாய் இருந்தது. பிறகு அவங்கள் உங்கட ஆக்களை ஊரை விட்டுக் கலைச்சாப் பிறகு இஞ்சை மட்டக்கிளப்புக்குக் குடும்பத்தோட வந்தது, அப்பிடி எண்டு உதயன் கொஞ்சம் சொன்னவன். என்னப்பா செய்கிறது நாட்டுப் பிரச்சினையால பலபேர் பலமாதிரிப் பாதிக்கப்பட்டிருக்கினம். ஏன் என்னை எடுத்துக் கொள்ளண், இருபத்தைஞ்சு படகுக்கு மேல வேலை செய்தவங்கள். இப்ப யார் முப்பது பேர் கூட இல்லை. நான் என்ன செத்தே போனான்? மனசை ஒண்டும் தளர விடாதே சமத் எல்லாம் நல்ல படியாய் முடியும்."
"மனசு இருந்தால்தானே ஐயா தளர்ந்து போறதுக்கு, என்ன
12

Page 15
தான் உங்களுக்கு கஷ்டம் வந்தாலும், நிம்மதியாய்ப் படுத்துத் துாங்க சொந்தமாக ஒரு வீடு இருக்கு, மரியாதையாகத் தெருவில நடக்க சொந்த ஊர் இருக்கு, துன்பத்தைப் பங்கீட்டுக் கொள்ளச் சேர்ந்து வாழ்ந்த சனங்கள் இருக்கு, அது மட்டுமல்ல, இந்தக் கரைவலை இல்லாவிட்டாலும் கூட கையாலையாவது மீன் பிடிச்சுப் பிழைக்க உங்களுக்குத் தொழில் அனுபவம் இருக்கு. இதே உங்களை இஞ்சையிருந்து ஒரு இருநுாற்றம்பது மைலுக்கங்கால, ஆரையும் தெரியாத ஊரில ஒரு வயற்காட்டில கொண்டு போய்விட்டால் எப்பிடி இருக்கும்" - சமத்தின் குரல் தழதழத்தது. அருகில் நின்று பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த உதயன் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான். சம்மட்டியார் சமத்தைப் பரிதாபமாக பார்த்தார். என்ன இருந்தாலும் படித்த மனிதர், கெளரவமான குடும்பத்தில் பிறந்து கஷ்டமறியமால் வாழ்ந்து வந்தவர். அவர் கண்கலங்குவதைப் பார்க்க ஏதோ மாதிரியிருந்தது. சம்மட்டியார் சமத்தின் அருகில் வந்து ஆறுதலாகக் கூறினார்.
"கவலைப்படாதே சமத், எங்களை எல்லாம் ஏன் நீ அன்னியனாய் நினைக்கிறாய், நாங்கள் எல்லாம் இல்லையே, எங்கட வாழ்க்கையும் வலையிலே அகப்படுகிற மீன்களை மாதிரித்தான். ஆகப் பெரிய மீன்கள் வலையை அறுத்துக் கொண்டு போடும். ஆகச் சிறியதுகள் வலைக்குள்ள அகப்படாமல் தப்பிப்போடும். இந்த இடைப்பட்டதுதான் ஒண்டும் செய்ய முடியாமல் அவதிப்படுகிறது. அது மாதிரித்தான் நாங்களும், டேய், உதயா! உதில நிண்டு சும்மா வாயைப் பார்த்துக் கொண்டு நிக்காமல் ஒடிப்போய் இரண்டு தேத்தண்ணி வாங்கிக் கொண்டு வா. -- அவர் கூறி முடிக்கு முன் காணாமற் போய்விட்டான் உதயன். சமத்தை மீண்டும் திரும்பிப் பார்த்து சம்மட்டியார் சற்றுத் தாழ்ந்த குரலில் சொன்னார்" உவன் உதயன்ர கதை தெரியுமே உனக்கு? இஞ்சை ஒரு மில் முதலாளியின்ர வீட்டில முந்தி ஒரு மலைநாட்டுப் பொம்பிளை வேலை செய்தது. அந்தப் பொம்பிளைக்கும், மில் முதலாளியின்ர மூத்த மகனுக்கும் பிறந்தவன்தான் உதயன், பிள்ளை வயித்தில எண்டவுடன் அவையள் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டினம், கையில பிள்ளையோட தனி ஒருத்தியாய் அவள் என்ன செய்கிறது பாவம்? அதுதான் பிள்ளையைக் கடற்கரையில கிடத்திப் போட்டு அந்தப் புண்ணியவதி போய்ச் சேர்ந்திட்டாள். உதயனைப் பார்த்து இப்பவும் ஆரடா உண்ர தாய், தகப்பன எண்டு கேட்டால் கடலைப் பார்த்துத் தான் கையைக் காட்டுவான், அனாதைப் பெடியன் அவனை நாங்கள் என்ன அடிச்சுத் துரத்தியே போட்டம்? அரசியலும், சுயநலமும்
கலக்காதவரைக்கும் மனுசன் மனுசனாகத்தான் இருப்பான்"
"யாழ்ப்பாணச் சனம் எல்லாரையும் நான் பிழை சொல்லேல்லை சம்மட்டியார், முஸ்லிம் ஆக்களை எல்லாம் வடபகுதியில
இருந்து வெளியேறச் சொன்னவுடன், எத்தினையோ தமிழாக்கள்
13

தேடல் 10
இது அக்கிரமம், அநியாயம் எண்டு துடிச்சதுகள். ஆனால் இந்த எதிர்ப்பை ஒரு போராட்ட வடிவமாக்கிறதுக்கு அங்க ஒரு சக்தி உருவாக முடியாமல் போச்சு, ஏனெண்டால் பூனைக்கு மணிகட்டுவது ஆர் எண்ட பிரச்சினை, அங்க வேற இயக்கப் பெடியளின்ர தாய், தகப்பணிமாரையே நாடு கடத்திக் கொண்டிருக்கிறாங்கள். அப்பிடியிருக்கேக்கை எங்கட பிரச்சினையைப் பற்றி எவர் கதைக்கிறது, துவக்குக்கு முன்னால் சுட்டு விரலைத் துாக்கிக் காட்டிச் சூடு வாங்கிறதுக்கு எவருக்கும் விருப்பமில்லை."
"அது சரி சமத், எதுக்காக உவங்கள் முஸ்லிம் சனங்களை வெளியேற்ற வேணும்? அதுகள் ஊரைவிட்டுப் போன உடன் தமிழ் மக்களின்ர பிரச்சினை முடிஞ்ச போடுமே? ஒண்டுக்குள்ள ஒண்டு உடன் பிறப்பாய் இருந்த சனங்கள்."
"ஆருக்கு சம்மட்டியார் தெரியும் என்ன காரணம் எண்டு, ஆராவது தலைவரின்ர கனவில ஏதாவது தெரிஞ்சிருக்கும், அவர் உடன காலையில எழும்பி முஸ்லீம் சனங்கள் இஞ்சை இருக்கக் கூடாது எண்டு சொல்லியிருப்பார். எங்கட போராட்டத்தில இவ்வளவு காலமும், அரசியல் தன்மையையோ, இல்லாட்டி நீண்டகால எதிர் விளைவுகளைப் பற்றியோ சிந்திச்சிருந்தால் போராட்டம் எவ்வளவு துாரம் சிதறிப்போயிருக்காது. சிங்களவன் சிறுபான்மைத் தமிழரின்ர உரிமைகளைக் கொடுக்காமல் அடக்கிறான் எண்டு அவனுக்கெதிராகப் போராடிக் கொண்டு இன்னொரு சிறுபான்மை இனத்தின்ர அடிப்படை உரிமகளை மறுக்கிறது எந்தளவில ஞாயமோ தெரியேல்லை."
"எனக்கு உந்த அரசியலில் தருமம், நியாயம் ஒண்டும் தெரியாது சமத், ஆனால் யாழ்ப்பாணம், மண்ணார்ப் பகுதியில எல்லாம் எத்தினையோ வருசக்கணக்காய் முஸ்லிம் சனம் இருந்து வருகுது. அதுகளை உடனே வெளியில போ எண்டு சொல்லுறது சரியான அநியாயம். உப்பிடியே அநியாயங்கள் அதிகரிச்சுக் கொண்டு போனால் எப்பதான் விடிவு வாறதோ தெரியேல்லை. பெடியள் உயிரைக் கொடுத்துச் சண்டை பிடிகதிறங்கள் அவங்கள் ஏதாவது செய்தால் நியாயமாகத்தான் இருக்கும் எண்டு நான் நெடுகலும் நினைக்கிறனான். இப்ப ஒரு பிரச்சினையும் வேண்டாம் எணர்டு கொஞ்சம் ஒதுங்கியிருக்கிறன்."-சம்மட்டியார் பேச்சை நிறுத்திவிட்டு இடையிலிருந்த சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைக்கத் தொடங்கினார். சம்மட்டியாருடன் மனசு விட்டுப் பேசியது சமத்திற்கும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இந்தச் சம்பாசணை இழந்து போன உரிமைகளை மீட்டுக் கொடுக்காது என்று அவருக்குத் தெரியும், என்றாலும் அவரது எதிர்காலத்தில் எங்கோ ஒரு நம்பிக்கைச் சுடர் தெரிவதாக இருந்தது.
தேடல் 10

Page 16
தேடல் 10
இரண்டாம் உலகப்போரின்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அகதிகளாக வெளியேறிய காட்சிகளைத் திரைப்பட்ங்களில் பார்த்து மனம் நொந்திருக்கிறார் சமத். ஆனால் அதே நிலையை அவர் சந்தித்ததபோது அவரால் தாங்கிக கொள்ள முடியவில்லை. - யாழ்நகர வரலாற்றிலேயே அது ஒரு கறை பிரண்ட நிகழ்ச்சி. புனிதமான போராளிகள் வேதம் ஒதும் சாத்தான்களாக மாறிய வெட்கக்கேடான சம்பவம். அதற்கும் மேல், பாசிச ஜேர்மனியின் நாசிசவாதிகள் போல, ஒட்டு மொத்தமான ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமைகளைப் பறித்து நாடுகடத்திய ஒரு மனிதாபமானமற்ற செயல், இலங்கைத் தீவில் சிறுபான்மையின் அடிப்படை உரிமைகள் கோரி தேசிய விடுதலைப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் போராளிகள், ஆணிடாண்டு காலமாக அந்த மண்ணிலேயே பிறந்து வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களை, யாழ்ப்பாணம் மன்னார்ப் பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்குக் காலக்கெடு விதித்திருந்த கொடுரம், சமத்தின் குடும்பத்தைப் போல இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்கள் இவ்வறிவிப்பினால் அடைந்த விரக்தியும், வேதனையும் சொல்லிடங்காது. கைதாகிய எதிரிப்போர் வீரர்களேயே கெளரவமாக நடாத்தும் இந்த நாகரீக உலகில், உடன்பிறப்புக்களாக வாழ்ந்த முஸ்லிம் மக்களை ஊரைவிட்டே துரத்தியடித்த மிருகத்தனமான செயல், இந்தக் கசப்பான நிகழ்விற்கு சகல தமிழ் மக்களும் பொறுப்பாளிகள் அல்ல, என்றாலும் இந்த அக்கிரமத்துக்கு எதிராக அவர்கள் போராடாமல் விட்டது மிகவும் துர்ப்பாக்கியமானதே. அது மட்டுமல்ல முஸ்லிம் மக்களை யாழ். மன்னார்ப் பகுதிகளிலிருந்து வலுக்கட்டாயமாக ஆயுத முனையில் வெளியேற்றிய இந்த அக்கிரமத்தால், தமிழ் மக்களின் நியாயமான தேசிய விடுதலைப் போராட்டமானது சர்வதேச அளவில் பெரும் பாதிப்புக்குள்ளானதை அறிந்து கொள்ளுமனளவிற்கு போராளிகள் எவரும் அரசியல் அறிவு படைத்தவர்களாக இருக்கவில்லை. உலகில் பிறக்கும் எந்தவொரு தனிமனிதனுக்கும் சுயநிர்ணய உரிமை வேண்டும். இந்த உரிமையை அங்கீகரிக்காத எந்தவொரு குழுவோ அல்லது சமூகமோ நடக்கும் எந்த உரிமைப் போராட்டமும் அர்த்தமற்றதாகத்தான் இருக்கும்.
இந்த அக்கிரமத்துக்கு எதிராக வடபகுதியில் சிறு சிறு எதிர்ப்புக் குரல்கள் எழத்தான் செய்தன. ஆனால் அவைகள்
எல்லாம் வெகுவிரைவில் ஆயுத முனையில் அடக்கப்பட்டு
விட்டன. முஸ்லிம்கள் தமிழர்கள் உட்பட நியாயம் பேசியோர் பலர் காணாமல் போகத் தொடங்கினர். அதை நினைத்துப் பார்த்தாலே சனத்துக்கு இன்னமும் குலை நடுங்கிறது. - அன்று நள்ளிரவு சமத்தின் வீட்டிற்கு முன்னால் வாகனம் கிறீச்சிட்டு நிற்கும் சத்தம், அதைத் தொடர்ந்து ஆயுதம் தரித்த நாலைந்து வாலிபர்கள். அந்தக் குழுவிற்குத் தலைவனாக
தேடல் 10

தெரிந்த வாலிபன் மற்றவர்களை வெளியே நிற்கும்படி சைகை செய்துவிட்டு அவன் மட்டும் உள்ளே வந்தான்.
"நீங்கள்தானா அப்துல் சமத்தோ?”
"ஓம் தம்பி நான்தான். உங்களுக்கு என்ன வேண்டும்." - சமத்தின் இருதயம் தொண்டைக்குள் வந்து ஒட்டிக் கொண்டது. அந்த நள்ளிரவு குளிர்மையிலும் அவருக்கு வியர்த்துக் கொட்டியது. மனிதன் இறப்பது கொடுமையல்ல, ஆனால் இதே இறக்கப் போகிறேன் என்பதை அறிந்து அவலப்பட்டு இறப்பதுதான் கொடுமை. குழந்தைகள் இரண்டையும் இறுக அணைத்தபடி சிலையாக நிற்கும் மனைவியை திரும்பிப் பார்த்தார். இரத்தமற்று அவள் முகம் வெளிறிக் கிடந்தது. சீ, ஈ, எறும்பைக் கூட கொல்லாத அவளுக்கு இப்படியொரு கொலைப்பயமா, ஓ அல்லா எங்களைக் காப்பாற்று- பூரண ஆயுதம் தரித்து ஒரு போர் வீரனைப் போல மிடுக்குடன் நிற்கும் அந்த வாலிபனைப் பரிதாபமாக பார்த்தார் சமத். அந்த வாலிபன் ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுப் பேசத் தொடங்கினான். அவனது கண்களிலும், வார்த்தைகளிலும் சற்று மரியாதை தெரிந்தது.
"நான் சொல்லுறதைக் கவனமாகக் கேளுங்கோ. இயக்கத்தன்ரை முடிவுகளை மாற்றுகிற அதிகாரம் எனக்கு இல்லை. ஆனாலும் எனக்கு மனிதாபிமானம் இருக்கு உங்களையெல்லாம் ஊரைவிட்டு போகச் சொன்னது சரியோ தவறோ என்று கூட நான் இங்கே கதைக்க வரவில்லை. நான் இப்ப வந்தது உங்கட உயிரைக் காப்பாற்றத்தான். இயக்கத்தின்ர இந்த முடிவுகளுக்கு எதிராகப் போராடி இப்ப உங்களால் வெல்ல முடியாது. இதுக்கு எதிராகப் போராட வெளிக்கிடுகிற ஆட்களைக் கைதுசெய்கிற பட்டியலில உங்கட பெயர்தான் முதலாவதாக இருக்கு இன்னும் இரண்டு நாளிளை உங்கட வீடும் எங்கட இந்தப் பகுதிக் காரியலாயமாக மாறிடும். எண்டபடியால நீங்கள் உங்கட குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு இங்கையிருந்து போறதுதான புத்திசாலித்தனம். உங்களுக்குத் தாய், தகப்பன், பெண் சாதி, பிள்ளைகள் எண்டு பொறுப்பு நிறை இருக்கு. அதுகள் நல்லா வாழ வேணும் எண்டால் நீங்கள் உயிரோடு இருக்க வேணும். நான் இதைச் சொல்ல வந்ததையே என்ர உயிரைப் பணயம் வைத்துத்தான் இனி முடிவு எடுக்கிறது உங்கடை கையிலதான் இருக்கு." - பேசி முடித்து விட்டு அவர்களை நிமிர்ந்து பார்க்காமலேயே அந்த வாலிபன் வெளியேறிவிட்டான். சமத அசையாது நின்ற இடத்திலேயே நின்றார். ஓடி வந்து அவரைக கட்டி அணைத்து கோவெனத் கதறி அழத் தொடங்கினாள பரீதா. விபரமறியாத பிள்ளைகள் இரண்டும் தாயுடன் சேர்ந்து அழுதன. மனைவியின் தலையை ஆறுதலாக வருடிக கொடுத்தபடி மெதுவாகத் பேசத் தொடங்கினார் சமத்.

Page 17
அல்லாவிட்ட வழி"
மீண்டும் வாசற்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. சமதும் பரீதாவும் கொலைப் பயத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக கொண்டனர். - "சமத் நான் காசி வந்திருக்கிறன், கதவைத் திற." - சமத் ஓடிச்சென்று கதவைத் திறந்தார். எதிர்வீட்டுக் காசிநாதனும் அவருடைய மனைவியும் சிவகாமியும் நின்றிருந்தினர். காசிநாதன் அவசரமாக உள்ளே வந்து கதவைத் தாளிட்டுக் கொண்டார்.
"சமத், பெடியளின்ர ஜீப் உன்ர வீட்டுக்கு முன்னால வந்து நிண்டதைப் பார்தனான். என்ன கோதாரியோ தெரியல்ல எண்டு கொஞ்ச நேரம் பயந்து போனன். என்னப்பா என்ன சொல்லுகிறாங்கள். ஏதாவது பிரச்சினையோ?" - அடக்கி வைத்திருந்த சமத்தின் வேதனை ஆறாய் ஓடியது. காசிநாதனின் கைகளைப் பிடித்தபடி சிறுகுழந்தை போல விம்மி விம்மி அழத்தொடங்கினார். சீ. மனிதர்கள் சிலர் எவ்வளவு கொடுமையானவர்கள். வந்தாரை வாழவைக்கும் யாழ் நகரில், சந்தர்ப்பவாத அராஜக அரசியலால் மானுடம் மரணிக்கத் தொடங்கியது.
"காசி, விடியறதுக்குள்ள எங்களை ஊரைவிட்டு போகச் சொல்கிறாங்கள். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாம். நாங்கள் எங்க போறது. ஆரிட்டைப் போறது? உனக்கு நல்லாத் தெரியும். உம்மாவுக்கு அஸ்மா வியாதி இருக்கு. வாப்பாக சரியாக
நடக்கவே மாட்டார். நாங்கள் என்னதான் செய்யப்போறம் அல்லா"
"சரி சரி. அழாதே சமத், இப்பதான் நீ தைரியமாக இருக்க வேணும். நீ உன்ர வீட்டுச் சமான்கள் எல்லாத்தையும் எங்கடை வீட்டில கொண்டு வந்து வை. எண்ரை மச்சாண் ஒருவர் வவுனியாவில கமஞ் செய்கிறார். நான் காரில கொண்டு போய் அங்கை விடுகிறான். மேற்கொண்டு என்ன செய்கிறது எண்டு யோசிப்பம், முதலில விடியறுதுக்கு ஸ்ள இஞ்சையிருந்து வெளிக்கிட வேணும். ஏன்தான் இவங்கள் மனிசரை இப்படி அலைக்கழிய விடுகிறாங்களே தெரியேல்லை" - கூறிமுடித்து விட்டுத் தாமதிக்காமல் அவர்களைப் புறப்படச் செய்வதற்கான ஆயுத்தங்களைச் செய்யத் தொடங்கினார் காசிநாதன். இன்னும் வீறிட்டு அழும் குழந்தைகளையும், பரீதாவையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்தாள் சிவகாமி. சுமார் இரண்டுமணியளவில் சமத்தின் குடும்பம் கையிலகப்பட்டதை மட்டும் எடுத்துக் கொண்டு காசிநாதனின் காரில் யாழ் நகரை விட்டு வெளியேறினார். சமத் வீட்டுக்கு வெளியே தெருவில் வந்து நின்று சுற்றுமுற்றும் ஒரு முறை கண்களை ஓடவிட்டார். அவர் பிறந்ததிலிருந்து வாழ்ந்து வந்த வீடு, வீதி, சனங்கள், அவர் கண்கள் மீண்டும் குளமாகின. வெறிச்சோடிக்
கிடந்த அந்த வீட்டில் அவருடைய குழந்தைகளின்

தேடல் 10
மழலைக்குரல் இன்னும் கணிரெண்று எதிரொலிப்பதாக அவருக்குப் பட்டது. பூட்டிய வீட்டின் சாவியை காசிநாதனின் கைகளில் கொடுத்தபோது கைகள் நடுங்கின. வீட்டின் முன்னே மண்டியிட்டு வாசற்கடியை முத்தமிட்டுக் கொள்கிறார் சமத்.
"நாண் போறன் காசி." - பேசிய வார்த்தைகள் வரவில்லை அவருக்கு அனலாக வெளிவந்த பெரூமூச்சுடன் காசிநாதனைப் பரிதாபமாப் பார்க்கிறார். கவலையை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத காசிநாதன், எச்சிலை ஒரு முறை உள்ளே விழுங்கிக் கொண்டே கூறினார். "போட்டு வாறன் எண்டு சொல்லு சமத், நீ எல்லாத் தமிழாக்களையும் வெறுக்கமாட்டாய் எண்டு நினைக்கிறன். உனக்கு நல்லாத தெரியும். இந்த விசயத்தில எவராவது வாயைத் திறந்தாலே உயிருக்கு ஆபத்து. பிரச்சினைகள் எல்லாம் முடிஞ்சு கெதியாய் இஞ்ச திரும்பி வரவேண்டும் எணர்டு கடவுளை வேண்டிக் கொள்." - பரீதாவின் கைகளை இறுகப் பற்றியவாறே பரிதாபமாகக் கூறினாள் சிவகாமி. ஒளியற்ற அந்தத் தெருமுனையில இருவருடைய உணர்வுகளும் அழுது கொண்டன. உயிரோட்டமான அந்த உணர்வுகளுக்கு இனபேதமில்லை, மதபேதமில்லை, சாதிபேதமில்லை. சந்ததிகளாகச் சேர்ந்திருந்த அந்த உறவில் சந்தர்ப்பவாதம் இல்லை.
குழந்தைகளை மடியில் கட்டி அணைத்தவாறு காரினுள் அமைதியாக அமர்ந்திருக்கிறார். அவர்களுடைய கனவுகளை மிதித்தபடி கரர் மெதுவாக யாழ்நகர் வீதிகளில் ஊர்ந்து செல்லத்தொடங்கியது. சொந்த மண்ணிலிருந்து இரவோடு இரவாகத் திருடர்கள் போல, வாழ்க்கை எண்றுமே தீர்மானிக்கப்படாத ஒன்று. அதிகாரம் கொண்டவன் அடக்குவதும், அமைதியானவன் அழிந்து போவதும், சே மனிதர்களுடன் மானுடமும் சேர்ந்து மரணித்துக் கொண்டிருந்தது எம் மண்ணில். ஒட்டு மொத்தமான 9(5 சமூகத்தின தலைவிதியை ஒரு குழு நிர்ணயிக்கும் அளவுக்கு உலகம் குறுகி விட்டது. காரின் வெளியே தலையைத் திருப்பிய பார்க்கிறார் சமத். அவருடைய எதிர்காலம் போலவே வானமும், வீதியும் வெறிச்சோடிக் கிடந்தது. அவருடைய உயிரோடும் உணர்வோடும் ஒன்றிவிட்ட அந்த நகரம் சலனமின்றி உறங்கிக் கிடந்தது. அந்த நிசப்பதத்தில் அவருடைய நெடும்பயணம் தொடங்கியது.
"சென்று வருகிறேன் என் மண்ணே உயிரையும் உணர்வையும் இங்கே விட்டு உடலை மட்டும் கொண்டு-உன்னை விட்டுச் சென்று வருகிறேன் என் மண்ணே சத்தமில்லா இந் நடுநிசியில்-உன்னை முத்தமிட்டு, முடிவில்லா ஒரு நெடுவடிவில், பாதத்தில் பிரண்டிருக்கும் உன் சிவப்பின் செழிப்பை மட்டும் சொத்தாய்க் கொண்டு சென்று வருகிறேன் என் மண்ணே
தேடல் 10

Page 18
தேடல் 10
சென்று வருகிறேன் என் மண்ணே சத்தமில்லா இந் நடுநிசியில்-உன்னை முத்தமிட்டு, முடிவில்லா ஒரு நெடுவடிவில், பாதத்தில் பிரண்டிருக்கும் உன் சிவப்பின் செழிப்பை மட்டும் சொத்தாய்க் கொண்டு சென்று வருகிறேன் என் மண்ணே - மெளனமாக ஓலமிட்ட அவரது இதயம் பாறாங்கல்லாய்க் கனத்தது. "சொந்த சகோதரர்கள் துன்பத்தை சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி" படித்துக் கொடுத்த பாரதியின் வரிகள் பல முறை மனத்தில் வந்து மோதின. உலகு விடிவதற்கு இன்னும் சில மணி நேரம்தான் இருந்தது. ஆனால் அவருக்கு? எதையும் நினைத்துப் பார்க்க மனமில்லாமல் கண்களை இறுக மூடிக் கொள்கிறார் சமத்.
"சமத், இந்தாப்பா சமத் என்ன இது சின்னப்பிள்ளை மாதிரிச் சும்மா அழுது கொண்டு பழசு எல்லாத்தையும் நினைச்சுப் பார்க்கிறாய் போல கிடக்கு, இஞ்சை எழும்பி வா. நான் கூப்பிட்ட விசயத்தைக் கதைக்கமால் ஏதோ அலட்டி உன்னை அழவைச்சிட்டன் போல கிடக்கு, டேய் உதயா அந்தத் தேத்தண்ணியை சமத்திட்டைக் குடு" - கடற்கரைத் தென்னை மரத்தடியில் கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த சமத்தின் முதுகை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தபடியே கூறுகிறார் சம்மட்டியார். அருகில் தேனீருடன் நின்றிருந்த உதயனின் கண்களும் கலங்கியிருந்தன. வெந்து போன மனங்களும், இதயங்களும் ஒன்றை ஒன்று வருடிக் கொண்டன. தத்துவங்களால் தத்தெடுக்கப்பட்ட சில மனிதர்களால் தவிக்கவிடப்பட்ட இந்த மனிதர்கள் தப்பிக்க வழியில்லாமல், சே என்ன உலகம் இது.
"சமத், எழும்பி இஞ்சை வா. கடற்கரையில காலங்காலமாகச் விேச்சுக் கொண்டிருக்கும் இந்த சனங்களைப் பார். கடலையும் வலையையும் மீனையும் தவிர வேறு ஒன்றுமே அதுகளுக்குத் தெரியாது. வாழுகிறதுக்கு மட்டுமல்ல இழக்கிறதுக்குகூட எதுவுமே இல்லாத சனங்கள். எண்டைக்குமே அதுகள் அழுது நான் பார்த்ததில்லை. இயற்கையைத் தவிர வேறை ஒன்றையுமே அதுகளுக்கு உதவியில்லை. ஆனால் கள்ளங் கபடமில்லாத இந்தச் சனங்களிட்டை இருக்கிற அன்பும், துாய்மையும் வேறை எங்கையும் இல்லை. ஐம்பத்தெட்டாம் ஆண்டு இனக் கலவரத்தில் நீர்கொழும்பில எல்லாத்தையும் இழந்திட்டு, உடுத்த உடுப்போட உயிரைக் காப்பாத்துகிறதுக்காக உன்னை மாதிரி இந்த மட்டக்களப்புக்கு ஓடிவந்தவன்தான் நான். கடலில் தொழில் செய்து நான் பிழைப்பு நடத்தியதாலும் கைகொடுத்து எண்னைத் துாக்கிவிட்டது இந்தச் சனங்கள்தான். இதுகளுக்கு நான் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்குது. அண்டைக்கு ஒரு நாள் உவன் உதயன் என்னட்டை ஓடிவந்து கொழும்புக்கு மீன் கொண்டு போன எங்கடை லொறி வியாங்கொடையில் அடிபட்ட செய்தி வீரகேசரியில வந்திருக்கு எண்டு சொல்லேக்கை நான் சிரித்துப் போட்டு, போடா போ உனக்கு உன்ர பெயரை எழுதத் தெரியாது. பேப்பரில செய்தி வாசிச்சிளியோ எண்டு கிண்டல் பண்ணின்னான். ஆனால் அதுக்கு அவன், இல்லை ஐயா சமத் அண்ணை வீட்டை போறனான். அவர்தான் எனக்கு எழுதப் படிக்க சொல்லித் தந்தவர் எண்டு சொல்லி, முழுப் பேப்பரையும் வாசிச்சுக் காட்டினவன். அப்ப
தேடல் 10

அவன்ரை முகத்தில இருந்த சந்தோசத்தையும், பெருமையையும் நீ பார்த்திருக்க வேணும் சமத் உன்னட்டை என்ன இருக்கோ இல்லையோ ஆனால் கல்விச் செல்வம் இருக்கு. அதை மற்றவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கக்கூடிய திறமையும், பொறுமையும் இருக்கு, அப்படியான நீ காலையுல எழும்பி உந்த உப்புத் தண்ணிக்கில நிண்டு சாகாமல், ஏன் இந்தச் சனங்களுக்கு உபயோகப்படத்தக்கதாக எதுவும் செய்யக்கூடாது? வடிவாக யோசித்துப் பார்? கல்விதான் மனிசனைச் சிந்திக்க வைக்கும். தான் செய்கிறது சரியோ பிழையோ எண்டு சிந்திச்சுச் சீர்துாக்கிப் பார்க்க வைக்கும். அப்படிச் சிந்திக்கத் தொங்குகிற மனிசனை அதிகாரம் கொண்டவன் அதை இதைச் சொல்லி ஆட்டிப் படைக்க முடியாது. அரசியல் அறிவும் சிந்தனைத் தெளிவும் இல்லாத எந்த ஒரு சமூகத்தாலும் முழுமையான விடுதலையை வென்றெடுக்க முடியாது. இழந்து போன உரிமைகளை ஆயுதப்போராட்டத்தாலோ அல்லது பேச்சுவார்த்தையாலோ தற்காலிகமாக வேணுமானால் மீட்டுக் கொள்ளலாம். ஆனால் இந்த அக்கிரமங்கள் திரும்பவும் தலைதுாக்காமல் இருக்க வேணுமென்டால் படிப்பறிவுள்ள ஒரு தலைமுறை உருவாக வேணும். உன்னால முழுச் சமூகத்தையும் படிப்பறிவுள்ளதாக ஆக்க முடியாது என்றது உண்மைதான் ஆனால் உன்னைச் சுற்றியுள்ள சனங்களையாவது மணிசர்களாக்க முயற்சிக்கலாம். நீயோ அல்லது உன்னுடைய சந்ததியோ இஞ்சையிருந்தும் திரும்பவும் துரத்தியடிக்கப்படாமல் இருக்க வேணுமெண்டால் நீ உன்ரை கல்வியறிவை மற்றவர்களோடை பங்கிட்டுக் கொள்ளத்தான் வேணும்"
-திடமாகப் பேசிமுடித்த சம்மட்டியார், சமத்தை கேள்விக் குறியுடன் பார்த்தார். சமத்தினால் நம்ப முடியவில்லை. இதுவரை அறியப்படாத சம்மட்டியாரின் மறுபக்கம் ஆச்சிரியப்பட வைத்தது. மனிதர்கள் இனங்காணப்படுவது அவசியம். வெளித்தோற்றம் மட்டும் மனிதனின் உள்ளக்கிடக்கை உணர்த்திவிடாது. ஓ நான் இன்னும் மனிதர்கள் மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சமத்தின் இதயம் சிறிது இலேசாகியது போல ஒரு உணர்வு. அவர் உருவாகிய சமூகத்தின் மடமையால் உருக்குலைக்கப்பட்ட அவர், புதிய ஒரு சகாப்தத்தின் பிறப்புக்காய் சமத்தின் இன்றைய இருப்பு சற்று உறுதியாவது போல, ஆனாலும் இழந்து போன அவரது உரிமைகள்?
சமத், சம்மட்டியார், உதயன் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்முறுவல் செய்து கொண்டனர். பூமியில் புதிய விடிவுக்காய் கிழக்கில் கதிரவன் வந்து கொண்டிருந்தான். ஆனால் வடக்கில் விடிவது எப்போது- சமத் இன்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
"விடிந்து விடு என் மண்ணே விடிந்து விடு, தலைமைகள் பல உருண்டும், தலைமுறைகள் அழிந்தும் - உன் விடிவிற்காய் நாம் கொடுத்த விலைகள் போதும், மண்சிவந்த மைந்தனின் கண் சிவப்பது எப்போ? கனவுகள் எம் மனங்களில் கனிவதுதான் எப்போ விடிந்து விடு என் மண்ணே விடிந்து விடு - உன், விடிவிற்காய் நாம் கொடுத்த விலைகள் போதும்!"
- சபா வசந்தன் -
16

Page 19
E Flu S BETU JaffliEDUEUT
Ugbg
தேசிய இனப்பிரச்சினை என்பது இன்று இலங்கைக்கு மட்டுமே உரிய பிரத்தியோகமான ஒரு பிரச்சினை அல்ல. இது ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டுள்ள மிகவும் பிற்பட்ட குறைவிருத்தி நாடுகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு பிரச்சினையாகும். என்ற போதிலும் இது ஒவ்வொரு நாட்டிலும அந்தந்த நாடுகளின் குறிப்பான நிலைமைகளின் தனித் தன்மையைக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. எனவே இதுவரைக்குமான புரட்சிகளின் அனுபவங்களிலிருந்தும், இன்று ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கும் பிற்பட்ட நாடுகளின் போராட்ட அனுபவங்களிலிருந்தும், எமது சொந்த நாட்டின் கடந்தகால போராட்ட அனுபவங்களிலிருந்தும், தேசிய இனப்பிரச்சினை குறித்த எமது வேலைத்திட்டத்தை முன்வைப்பது அவசியமாகும்.
வளர்ந்து வந்த முதலாளித்துவமானது ஐரோப்பாவில் தேசிய இன ஒடுக்குமுறைகளைத் துடைத்தெறிந்து தேசிய அரசுகளை உருவாக்குவதை நோக்கிச் சென்றதென்றால் ஏகாதிபத்தியத்தின் முன்னாள் காலனிகளான குறைவிருத்தி நாடுகள் இன்று தேசிய இன ஒடுக்குமுறைகளுடன் தேசிய அரசுகளாக உள்ளன. ஏன்? ஏனென்றால் ஏகாதிபத்தியமானது இந்நாடுகளின் சுதந்திரமான முதலாளித்துவ வளர்ச்சியை தடை செய்து கொண்டிருக்கிறது, அதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது.
ஏகாதிபத்தியம் "மிகச் சில முன்னேறிய நாடுகளினால் மிகப் பெருவாரியான உலக மக்களின் நிதிக் குரல்வளையை நெரிக்கக்கூடியதாகவும் காலனிகளை ஒடுக்கக்கூடியதாகவும் " வளர்ந்துள்ள ஒரு உலக அமைப்பாகும். இதன் காரணத்தால் பெரும்பாலான நாடுகளை தனது நிதி மூலதனத்தின் ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்து விடுகிறது. இதன் மூலம் ஆதிக்கத்திற்கு உட்படும் நாடுகளின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை தடை செய்கிறது. விரல் விட்டெண்ணக்கூடிய முன்னேறிய "இந்நாடுகளுக்கு ஏறத்தாழ உலகத்தின் மீதி நாடுகள் முழுவதும் ஒருவழியில் இல்லையெனில் வேறு ஒரு வழியில்
கடனாளியாகவும் கப்பம் கட்டும் நாடுகளாகவும் உள்ளன."
பிற்பட்ட ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை ஏகாதிபத்தியம் தடைசெய்வதோடு தொடர்ந்தும் இந்நாடுகளை தனது நவீன அடிமைத்தனத்துக்குள் வைத்திருக்க முயல்கின்றது.
இதனால் பிற்பட்ட குறைவிருத்தி நாடுகளின் உற்பத்தி சக்திகளின தேக்கமும் அதிலிருந்து எழும் பின் தங்கிய நிலையும், முதலாளித்துவத்திற்கு முந்திய உறவுகளின் செல்வாக்கும். இந்நாடுகளின் பொருளாதார நெருக்குதல்களும் இந்நாடுகளில் மோசமடைந்து செல்வதும், இந்நாடுகளின் ஏகாதிபத்திய சார்பு அரசுகள் மக்களின் எதிர்ப்பை எதிர் கொள்வதைத் தவிர்க்கவும்
இக்கட்டுரை அறிவதற்கும் விமர்சனத்தி
1தேசிய விடுதலைப் போராட்டம் (மொல்கோ) ar a ۔X- .......
பிரசுரிக்கப்படுகிறது. விமர்சனங்களை
தேயெ விடுதலைப் போராட்டம் (மொஸ்கோ)
உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
 

தேடல் 10
அதன் மூலம் ஏகாதிபத்தியச் சுரண்டலைப் பாதுகாக்கவும் மக்கள் மத்தியில் இன, மத முரண்பாடுகளைத் துாண்டிவிடுகின்றன. இதன காரணத்தால் தேசிய இனப்பிரச்சினைகள் இந்நாடுகளில்
கூர்மையடைகின்றன. தேசிய இனப் பிரச்சினையானது நவகாலனித்துவ அடிமைத்தனத்தின் தவிர்க்க முடியாத வெளிப்பாடாகும்.
இந்த ஏகாதிபத்திய அரசியல் ஆதிக்கத்திற்கு எதிராகவும் அவர்களுடைய மறைமுக நவீன காலனி ஆதிக்கப் பொருளாதாரச கண்டலை எதிர்த்தும் போராடாமல் இந்நாடுகளின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுவதோ அல்லது மெய்யான விடுதலையோ சாத்தியமல்ல. இன்று இலங்கையின் புரட்சிகர சக்திகள் இரண்டுவிதமான பிரச்சினைகளை முகம் கொடுக்கின்றனர். 1 ஏகாதிபத்தியத்தின் பொதுவான ஒடுக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமும் 2. அதனால் விளையக் கூடியதும் விளைந்திருப்பதுமான தேசிய இன ஒடுக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமுமாகும். இவை இரண்டும் ஒரே நேரத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் சார்ந்தும் அதேநேரம் வேறுபட்டும் உள்ளன. இரண்டும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவையாகும். ஏகாதிபத்தியம் துாக்கியெறியப்படாமல் தேசிய இனப்பிரச்சினைக்கு முடிவு கட்டுவது சாத்தியமல்ல.
இலங்கை இருபெரும் தேசிய இனங்களான சிங்களவர்களையும் தமிழர்களையும் கொண்டது. இவர்களைவிட தேசிய சிறுபான்மை இனத்தினரான முஸ்லீம்களும் மலையக மக்களும் உள்ளனர். மிகவும் சிறுபான்மையினராகவும் பெருமளவுக்கு ஏனைய சமூகங்களுடன் ஒன்று கலக்கும் நிலையிலும் பறங்கியர் வாழ்கின்றனர். இலங்கையின் சனத்தொகையில் சிங்களவர்கள் 74.0%ஆகவும் தமிழர்கள் 12.6% ஆகவும் முஸ்லீம்கள் 71% ஆகவும் மலையக மக்கள் 5.6வீஆகவும் ஏனையோர் 0.7% ஆகவும் வாழ்கின்றனர். (1981 புள்ளிவிபரம்) இலங்கை பல்லினங்களைக் கொண்ட நாடாக இருக்கும் அதேவேளை பிரதானமாக இரு மொழிகளைப் பேசுவோர் வாழ்கின்றனர். தமிழர்கள், முஸ்லீம்கள், மலையக மக்கள் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களின் தாய்மொழியாக தமிழே விளங்குகிறது. இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழர்களினதும் முஸ்லீம்களினதும் பாரம்பரிய பிரதேசங்களாகும். இங்கு தமிழர்களில் 73% தினரும் முஸ்லீம்களில் 40% தினரும் மலையக மக்களில் 9.2% தினரும் மிகவும் சிறுபான்மையாக சிங்கள மக்களும் வாழ்கின்றனர்.
இலங்கையின் முதலாளித்துவத்தின் வளர்ச்சியும் அதனோடு இணைந்த தேசியவாதத்தின் தோற்றமும் அவற்றின் அக்கம் பக்கமாக இனவாதத்தையும் வளர்த்துச் சென்றதையே இதுவரைக்குமான இலங்கை வரலாறு எமக்கு சுட்டி நிற்கிறது. இந்த இனவாதமானது முதன்முதலில் 1915இல் முஸ்லீம் வர்த்தகர்களுக்கு எதிராகவும் பின்பு மலையாளத் தொழிலாளருக்கும் தோட்டத் தொழிலாளருக்கும் எதிராகவும் இருந்தது. ஆனால் இலங்கையின் காலனித்துவ ஆட்சியின் முடிவானது இலங்கையின் அனைத்து சிறுபான்மை இனங்களின் மீதும் ற்குமாக இங்கு சிங்கள பேரினவாதம் தனது கொடுரமான
அபிப்பிரயங்களையும் தாக்குதலைத் தொடுக்க வகைகோலியது.
ஆ குழு
17 தேடல் 10

Page 20
தேடல் 10
தோன்றிய இனமுரண்பாடு சுதந்திரத்தின் பின் வர்த்தக ரீதியிலான முதலாளித்துவப் போட்டியாக மட்டுமன்றி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும், அதற்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவை வென்றெடுக்கவும்.மக்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார நெருக்கடிகளிலிருந்து அவர்களது கவனத்தை திசை திருப்புவதற்குமான ஒரு கருவியாக மாறியது.
மலையக மக்கள் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட நாடற்றவர்களானார்கள். தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் தாய் மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்களம் மட்டுமே அரச கரும மொழி சட்டம் இயற்றப்பட்டது. இதனால் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அரசினால் மொழிfதியாக ஒடுக்கப்பட்டர்கள். தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் திட்மிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு உட்பட்டது. கல்லோயாவில் தொடங்கிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் கென்பாம், டொலர்பாம். வெலிஓயா போன்ற பல சிங்களக் குடியேற்றங்கள் மூலமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழர்களும், முஸ்லீம்களும் தமது பாரம்பரிய பிரதேசங்களை, விவசாய நிலங்களை இழந்து தமது நிலங்களிலிருந்து விரட்டப்பட்டனர். இத்தகைய அரசின் பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிராக போராடிய தமிழ் முஸ்லீம் மக்களை அரசு பொலிஸ், இராணுவ வன்முறைகொண்டு காட்டுமிராண்டித்தனமாக நசுக்கி வந்தது. அவ்வப்போது தமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்கெதிரான திட்டமிட்ட இனக்கலவரங்கள் பேரினவாத ஆளும் வர்க்கங்களின் மேற்பார்வையில் நடத்தி முடிக்கப்பட்டன.
இத்தகைய அரசின் பேரினவாத ஒடுக்குமுறைகளால் சிறுபான்மை இனமக்கள் நசுக்கப்படுவதை எதிர்த்து 1930களின் பிற்கால கட்டத்தில் இருந்து இடதுசாரிகள் போராடிவந்தனர். அதேவேளை சிங்கள, தமிழ் மொழிகளுக்கு சம அந்தஸ்து என்ற கொள்கையையும் முன்வைத்தனர். ஆனால் அவர்கள் இலங்கையின் சமூக அமைப்புப் பற்றியும் அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த புரட்சியின் தன்மை பற்றியும் தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தனர். இலங்கை ஒரு ஜனநாயகப் புரட்சியை சாதிக்க வேண்டிய காலகட்டத்தில் இருந்ததைப் பார்க்கத் தவறிய இடதுசாரிகள் ஜனநாயகப் புரட்சியையும் சோசலிசப் புரட்சியையும் ஒன்றுடன் ஒன்று போட்டுக் குழப்பிக் கொண்டனர். இலங்கையின் பிற்பட்ட, குறைவிருத்தி நிலையைப் புரிந்து கொண்டு, இனப்பிரச்சினையை சரியான வழியில் அணுகி, தமிழ் மக்களின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்து, இனப்பிரச்சினைகளையும் இனப்பூசல்களையும் கொழுகொம்பாகப் பற்றிக் கொண்டு பிற்போக்கு ஆளும் வர்க்கத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராகத் தாக்குதல் தொடுக்காமல் சோசலிசம் சாதிக்கப்பட்டதும் இனப்பிரச்சினை தீர்ந்து விடும் என்ற கற்பனையில் மூழ்கி இருந்தனர். இவர்களின் தவறானது மார்க்சிய புரிதல் பற்றிய தவறு மட்டுமல்ல, இலங்கையின் சமூக அமைப்பைப் புரிந்து கொள்வதில் இவர்கள் இழைத்த தவறுமாகும்.
இவர்களின் இந்தத் தவறானது பாராளுமன்ற ஆசனங்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு இனவாத அரசியலுக்குள் புகுவதாக மாறியது. 1930களின் இறுதிப் பகுதிகளில் இடதுசாரிகளின தோற்றத்திலிருந்து தொழிலாளி வர்க்கத்தினரை இனவாதச்
தேடல் 10

செல்வாக்குக்கு உட்படாமல் பாதுகாத்தும், தொழிலாளி வர்க்கப் போராட்டங்களை முன்னின்று வெற்றிகரமாக நடத்தியும், சிறுபான்மை இனங்களுக்கெதிரான அனைத்துப் பாரபட்சங்களுக்கு எதிராகவும், சமத்துவமின்மைக்கு எதிராகவும், இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடிய இடதுசாரிகள் 1980களின் நடுப்பகுதிகளில் அவற்றைக் கைவிட்டு இனவாத அரசியலுக்குள் தாமும் இறங்கினர். "மக்களுக்குத் தலைமை தாங்குவதற்குப் பதிலாக இடதுசாரிகள் தேர்தல் வெற்றி, அதிகாரத்தில் பங்கு பெறுதல் ஆகிய தந்திரோபாயங்களில் அகப்பட்டுக் கொண்டனர்." இதன் மூலமாக அவர்கள் தமது புரட்சிகர தன்மையை இழந்தவர்களானார்கள். இனப்பிரச்சினை மேலும் சிக்கலானதாக மாறியது.
இடதுசாரிகள் இனவாதத்திற்குள் சரணடைந்தபின் முதலாளித்துவ தமிழ் தலைமைகளே தமிழ் மக்களினதும் ஏனைய சிறுபான்மை இனங்களினதும் 'ஒரே தலைமையானார்கள். இதன்பின் தமிழ் மக்களினதும் 6J60) 607 ULU சிறுபான்மை இனங்களதும் ஒடுக்குமுறைக்கெதிரான பல போராட்டங்களை இத்தலைமைகள் முன்னெடுத்துச் சென்ற போதும் அப்போராட்டங்கள் யாவும் அவர்களின் வர்க்க நலனுக்கு உட்பட்டதாகவும் பாராளுமன்ற ஆசனங்களை குறிவைத்தே இருந்ததனாலும் மக்களுடைய போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டி முன்னேற முடியாமல் இருந்ததோடு சிங்கள பேரினவாதத்துக்கு மாற்றீடாக தமிழ் இனவாதம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இது தமிழ் மக்களின் "பழம் பெருமை” பற்றி கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஏனைய இனங்கள் இழிவானவையாக மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. இந்தத் தமிழ் இனவாதத்தின் வளர்ச்சியின் ஓர் உயர்ந்த வடிவம்தான் இன்று முஸ்லீம்கள் மீதான திட்டமிட்ட படுகொலை நடவடிக்கைகளும் அவர்கள் தமது பாராம்பரிய பிரதேசங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டமையுமாகும்.
கடந்தகால போராட்டங்களில் இடதுசாரிகளின் சந்தர்ப்பவாதமும் துரோகத்தனமும் ஒருபுறமும் தமிழ் முதலாளித்துவத் தலைமைகளின் பொய்மையும் ஏமாற்றும், மக்களை மந்தைகளாக்கும் போக்கும் மறுபுறமாக தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை இனங்களும் நம்பிக்கை இழந்த நிலையில் தீவிரபோக்கு மிக்க ஒரு இளைய சந்ததி உருவாகி வந்தது. இந்த இளைய சந்ததி பெருமளவுக்கு முதலாளித்துவ அரசியல்வாதிகளின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த போதும் சில தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இளைஞர் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்களை உருவாக்கி அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்த அதேவேளை ஆயுத நடவடிக்கைகளிலும் இறங்கினர். தனிநாடு ஒன்றை அமைப்பது தொடர்பான கருத்துகளும்கூட இந்த இளைஞர் அமைப்புக்களிடமிருந்து வெளிப்பட்டன.
புதிய தீவிரவாத இளைஞர் தலைமை ஒன்று உருவாகி வருவதைக் கண்ட தமிழ் முதலாளித்துவத் தலைமை, தமது கைகளிலிருந்து தலைமையை இந்த இளைஞர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்ற அச்சத்தின் காரணமாக அவ்விளைஞர்களை தம்முடன் அரவணைத்துக் கொள்ள முயன்றது. இதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தனிநாடு ஒன்றுதான் ஒரே தீர்வு என்ற கொள்கையை தமிழ் முதலாளித்துவ தலைமை வெளிப்படையாக முன்வைத்தது.
இலங்கையின் இனவர்க்க முரண்பாடு - குமாரி ஜெயவர்த்தனா
18

Page 21
இதன் மூலம் புதிய இளைஞர் சந்ததியின் தீவிரவாதத்தை சற்றுத் தணிக்கவும். பரந்துபட்ட மக்களை இலகுவாக அணிதிரட்டி தேர்தலில் வெற்றிபெறவும் முனைந்தனர். 1977 தேர்தலில் தமிழ் மக்களுக்கு "தமிழ் ஈழம்" ஒன்றே ஒரே தீர்வு என்ற அடிப்படையில் பிரச்சாரம் செய்து அதில் வெற்றி பெற்ற போதும் 1982 இல் மாவட்ட சபைத் தேர்தலில் பங்கு கொண்டதன் மூலம் "தமிழ் ஈழ"க் கோரிக்கை என்ன நோக்கத்திற்காக முன்வைக்கப்பட்டது என்பதை தமிழ் முதலாளித்துவத் தலைமையினர் தெளிவாகக் காட்டிக் கொண்டனர்.
இருந்தபோதிலும் தமிழ் மக்கள் மீதும் ஏனைய சிறுபான்மை இனங்கள் மீதும் தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்பட்ட பேரினவாத ஒடுக்கு முறைகளும், வன்செயல்களும் சகிக்கமுடியாததாகிச் சென்றபோது, தமிழ் முதலாளித்துவ தலைமைகள் தமிழ் மக்களுக்கோ ஏனைய சிறுபான்மை மக்களுக்கோ தலைமை தாங்க தகுதியற்றவர்கள் எனத் தெரிந்தபோது தமிழ் மக்களது பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கு ஆயுத அமைப்புக்கள் செயற்பட ஆரம்பித்தன. இந்த ஆயுத அமைப்புக்கள் பலவும் பெரும்பாலும் தமிழ் முதலாளித்துவ தலைமைகளின் போராட்டத்துக்குள்ளாக வளர்ந்து வந்திருந்ததோடு அவை ஆயுத அமைப்புகளாக செயற்படத் தொடங்கியபோது இனப்பிரச்சினை குறித்து ஒரு சரியான தெளிவான பார்வையையோ அல்லது ஒரு திட்டத்தையோ கொண்டிருக்கவில்லை. தமிழ் முதலாளித்துவ தலைமைகளினால அகிம்சை வழியில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட போராட்டத்தையே இவர்கள் ஆயுத வழிமுறைகளில் முன்னெடுப்பவர்களாகக் காணப்பட்டனர். இவ்வமைப்புகள் பெருமளவுக்கு முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவச் செல்வாக்கால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த துடன் சுத்த இராணுவக் கண்ணோட்டம், தனிநபர் பயங்கரவாத வழிமுறைகள் என்பனவற்றில் நம்பிக்கை கொண்டனவாக விளங்கின. ஆனால் தமது போராட்டத்தை முற்போக்கானது என காட்டுவதற்கு அவர்கள் மார்க்சிய சுலோகங்களையும் மேலெழுந்தவாரியான மார்க்சிய கருத்துக்களையும் பாவித்துக் கொண்டனர்.
இவர்களைவிட சில தமிழ் இளைஞர் அமைப்புக்கள் தம்மை சோசலிஸ்டுக்களாக காட்டிக் கொள்ள முற்பட்டு மார்க்சியத்தை வெறுமனே ஒரு வறட்டுத் தத்துவம் போல பேசிவந்தனரே தவிர இலங்கையின் குறிப்பான நிலைமைகளை கவனத்தில் எடுக்கவோ, போராட்டங்களை தெளிவாக திட்டமிடவோ முடியாதவர்களாக கிட்டத்தட்ட கற்பனையில் புரட்சி செய்ய முற்பட்டனர். இவர்களின் கற்பனையில் பிறந்த குழந்தைதான் மலையக மக்களும் இணைங்த "ஈழம்" ஆகும்.
இப்படியாக தமிழ் மக்களினதும் ஏனைய சிறுபான்மை இனங்களதும் போராட்டம் சரியான தலைமையற்றும் தெளிவான பாதையற்றும் ஒரு திக்கற்ற நிலையை வந்தடைந்துள்ளது. போராட்டம் ஒரு தேக்க நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. முஸ்லீம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான முரண்பாடு முன்னெப்பொழுதையும் விட கூர்மையடைந்துள்ளது. பேரினவாத அரசு வடக்கு -கிழக்கை இராணுவமயப்படுத்தி ஒரு இராணுவ ஆட்சியையே நடத்துகிறது. இதன் மூலம் வடக்கு - கிழக்கு வாழ்மக்கள் மீது ஒரு யுத்தத்தைத் திணித்துள்ளது. தினம் தினம் மக்களைக் கொன்று குவித்து வரும் அரசு தமிழ்ப் பிரதேசங்களில் தொடர்ந்து திட்டமிட்ட

தேடல் 10
சிங்கள குடியேற்றங்களை நிறுவி வருகிறது. தமிழ் - முஸ்லீம் மக்களை மோதவைப்பதன் மூலம் தமிழ் - முஸ்லீம் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை பலவீனப்படுத்த முயல்கிறது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை குத்தகைக்கு எடுத்துக கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளோ ஜனநாயக விரோத பாசிச செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்களின் உண்ைைமயான போராட்ட உணர்வை மழுங்கடித்து வருகிறார்கள். இனவெறியை மக்களுக்கு ஊட்டி வருகின்றனர். அப்பாவிச் சிங்கள மக்களை படுர்ெலை செய்து வருகின்றனர். போராடும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிந்து வருகின்றனர். தேசிய சிறுபான்மை இனமான முஸ்லீம் மக்கள் மீதான படுகொலைகள், அவர்களை சொந்தப் பிரதேசங்களிலிருந்து விரட்டியடித்தல் போன்ற விடுதலைக்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலமாக தமிழ் மக்களினதும், முஸ்லீம் மக்களினதும் ஒன்றுபட்ட போராட்டத்தை துண்டிப்பதன் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்தை தற்கொலைப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களது போராட்டம் வெளிப்புற அளவில் "தேசியத் தன்மை" கொண்டதாக விளங்குகிறது. ஆனால் சாராம்சத்தில் பார்க்கப் போனால் தரகு முதலாளித்துவ நலன்களைக் கொண்டதாகவும். ஜனநாயக விரோத பாசிசத்தன்மை கொண்டதாகவுமே விளங்குகிறது.
இவ்வாறாக, இன்றைய நிலையில் இனப்பிரச்சினையானது பல சிக்கலான பரிமாணங்கள் கொண்ட ஒன்றாகத் திகழ்கிறது. இந்நிலையில் தேசிய இனப்பிரச்சினை குறித்து நாம் எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்வது என்பதே இன்று புரட்சிகர சக்திகள் முன்னுள்ள பிரச்சினையாகும். தேசிய இனப்பிரச்சினையை தத்துவரீதியான கண்ணோட்டத்திலிருந்து அல்லது போர்த் தந்திர கண்ணோட்டத்திலிருந்தோ ஒரு சார்பற்ற பிரச்சினையாகக் கருதக்கூடாது, கருதவும் முடியாது. தொழிலாளி வர்க்க போராட்ட நிலையிலிருந்து, தொழிலாளி வர்க்க சர்வ தேசிய கோட்பாடுகளின் நிலையிலிருந்து அணுகப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினை தொழிலாளி வர்க்க உழைக்கும் மக்களுக்கு அதிக கேடுபயப்பதாகும். இது தொழிலாளி வர்க்க உழைக்கும் மக்கள் திரளனரில் பெரும் பகுதியினரை சமூகப் பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பி உழைக்கும் மக்கள் திரளினருக்கும் முதலாளிகளுக்குமான "பொதுவான பிரச்சினைகளாக காட்டுகிறது. இன்று தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்கலும் ஏனைய சிறுபான்மை இனங்கள் மீதான இன ஒடுக்கலும்தான் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களின் அரசியல் மூலாதாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதன் மூலம் தமிழ் - சிங்கள மற்றும் ஏனைய உழைக்கும் மக்களிடையே பகைமையைத துாண்டவும் ஐக்கியத்தைக் குலைக்கவும் அரசு தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது.
இது பேரினவாத, பாசிச அரசுக்கெதிரான சிங்கள உழைக்கும் மக்களின் புரட்சிகரப் போராட்டத்தின் வளர்ச்சியை பெரிதும் தடைசெய்துள்ளது, தடைசெய்து வருகிறது. மக்களையும்"பிளவுபடுத்தி ஆளுதல்" என்பதுதான் இதன் நோக்கமாகும்.
தமிழ் மக்கள் மீதானதும் ஏனைய சிறுபான்மை இனங்கள் மீதானதுமான கடந்த காலத்திய, தற்காலத்திய உறவுகளால் உள்நாட்டு சமூக வளர்ச்சியானது பெருமளவுக்கு
தேடல் 10

Page 22
தேடல் 10
முடமாக்கப்பட்டதோடல்லாமல் அந்நிய சக்திகள் எம்மை ஏப்பம் விடவும் இந்தியா தனது நலன்களை நிலைநாட்ட முயலவும் காரணமாகிறது. நாம் எமது பிரதான எதிரியான ஏகாதிபத்தியத்தையும் அதன் உள்ளுர் அடிவருடிகளையும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. "பலம் வாய்ந்த" ஏகாதிபத்தியத்தையும். அதனால் அனைத்து வழிகளாலும் ஊட்டி வளர்க்ப்படும் உள்ளூர் பேரினவாத, பாசிச அரசையும் எதிர்த்துப் போராட வேண்டியிருப்பதால் தனித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தும் போராட்டங்களை ஐக்கியப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. இத்தகைய ஐக்கியப்பட்ட ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமாகத்தான் ஏகாதிபத்தியத்தையும் அவர்களது அடிவருடிகளை வீழ்த்த முடியும், ஏகாதிபத்தியத்தை, அதாவது சர்வதேச மூலதனத்தை எதிர்துப் போராடுவதால் எமது போராட்டமானது ஜனநாயகத்துனுாடாகவும் சோசலிஷத்துக்காகவும் உலகத் தொழிலாளி வர்க்கமும் ஜனநாயக சக்திகளும் நடத்தும் ஒரு போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
ஏனைய, இன்று எம்முன் உள்ள பணியானது சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும், சிங்கள பேரினவாத ஆட்சியை எதிர்த்து ஈவிரக்கமற்ற போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை தமிழ் குறுந் தேசியவாதத்தை எதிர்த்தும், "தனித்துவமான" போக்கை எதிர்த்தும் போராட வேண்டும் ' முஸ்லீம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு தமிழ் இனவாத ஒடுக்குமுறையையும் எதிர்த்து தீவிரமாகப் போராடவேண்டும். இந்தப் பணியைச் செய்யாமல் சிறுபான்மை இனங்களின் விடுதலை என்பது கனவாகும்.
தேசிய இனப் பிரச்சினையில் புரட்சிகர ஜனநாயகவாதிகளின் வேலைத் திட்டம் இதுதான். அனைத்து இனங்களுக்கும் மொழிகளுக்கும் சமத்துவம். தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காக சிறிதும் விட்டுக் கொடாது போராடும் அதேவேளை சிங்கள உழைக்கும் மக்களுடனும் ஜனநாயக சக்திகளுடனும் ஐக்கியத்தை ஏற்படுத்துதல், முஸ்லீம், மலையக மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் உரிமையை அளிப்பது.
தமிழ் மக்களும் சரி ஏனைய சிறுபான்மை இனங்களும் சரி தமது தேசிய, இன மற்றும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க சிங்கள உழைக்கும் மக்களுடனும் ஜனநாயக சக்திகளுடனும் ஐக்கியப்பட்டுச் செயற்படுவது அவசியமாகும். சிங்கள உழைக்கும் மக்களினதும் தமிழ் தேசிய இனத்தினதும் போராட்டங்கள் ஒன்றுபடுவதன் மூலமே தமிழ் மக்களினது விடுதலையும் சரி, சிங்கள மக்களது விடுதலையும் சரி, ஏனைய சிறுபான்மை இனங்களது விடுதலையையும் சரி சாத்தியமாகும். தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் வெற்றியும் சரி இன ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவருவதும் சரி சிங்களப் புரட்சிகர சக்திகளுடனான ஜக்கியத்தின் மூலமே பெறப்பட முடியும். தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவதும் அதேநேரம் சிங்கள உழைக்கும் மக்களுடனும் ஜனநாயக சக்திகளுடனும் ஒற்றுமையை ஏற்படுத்துவதும் அவசியமாகும். இந்திரன்
தேடல் 10

தழிழைப் பேசுவதால்
தமிழர்களுக்கு அடிமைக -அஷ்ரஃப் ==== ہیں۔--سیسیت
ဦးကြီးမြိို့ကြီ:ငံ့£::ိင္ငံ; 82:::ီငုံ£::R:
o* AMeriw
W
亚听以顶
SSLLLtLLL tY0LtttLEJL E00LtJ Jkek0SLLLLLYS SLLLk SLYS eqS
gmiged :$ 1.00
it . കൃത്തക്കേ
 ി (G.
g , W 4 r" -
assessess
DEgb: $1.00
2O

Page 23
சத்தியத்ரே gneauBasireilifitéar
நாணல் - காற்று அதன் தலைசீவிச் சாய்ந்திருக்க کو خgنل
அக்காளும் தம்பியுமாகப் பாய்ந்து ஓடுகிறார்கள் - கறுத்த மரவட்டை ரயில் சீறிக் கொண்டு போகிறது - ஒவ்வொரு பெட்டியாகக் கடக்கிறது. இருவரும் மகிழ்ச்சி நுரை பொங்கச் சிரித்து ரசிக்கிறார்கள் பூப்பூத்த நாணல் குஷியோடு தலையாட்டுகிறது." - இது சத்யஜித் ரேயின் முதல் படத்தில் ஒரு காட்சி
நாணலும், ஊர்ந்து செல்லும் ரயிலும் கொண்ட ஒரே ஒரு பிரேம் - இதுவே ரே எடுத்த முதல் காட்சி. அழகின் முத்திரை. அது மட்டுமே ஒருவருக்குப் பார்க்க கிடைத்தது. படத்தின் மற்ற பகுதிகளோ, அவரது வேறெந்தப் படங்களோ பார்க்காமல் இருந்தாலும், நிச்சயமாக, இந்த ஒரே பிரேமைப் படைத்தவர் எதிர் காலத்தில் மிகப் பெரிய டைரக்டராக வருவார் என்று சொல்லிவிடலாம் - இது அதே காட்சி பற்றி எனது ஓவிய நண்பர் கணிகளில் ஒருவித ஆனந்தமும் பரபரப்பும் துள்ள சொன்ன பாராட்டு.
ரே அந்த அழகே அழகான முதல்: ஷாட்டோடு நிறுத்தியிருந்தால்: பிரச்சினை இல்ல்ை பதேர் பாஞ்சாலி: (சாலையின் சங்கீதம்)யை முடித்து அதற்கு மேலும் 30 படங்கள்: எடுத்ததால்தான் ரேயின் பங்களிப்பு என்ன என்ற ஆய்வில்: இறங்குகிறோம்.
ரேயின் இறப்புக்குப் பிறகு அவரைத் தெய்வமாக்கி 'துாபதீப; நைவேதனம் காட்ட ஒரு கும்பல்: புறப்பட்டிருப்பது பற்றியோ, முன்பே அவருக்கு சினிமாவில் தாகூர் என்ற பட்டங்கட்டத் துடித்தவர்கள்: இன்று ஒருவருக்கொருவர் முந்துவது பற்றியோ நான் ஆச்சரியப்படவில்லை - இந்தியப் புதிய சினிமாவுக்கு ரே ஒரு: முன்னோடி. முற்போக்காளர் என்று: ரேயிலிருந்து நுால் பிடித்து ஒரு பாதைபோட நினைப்பவர்களின் சிந்தனையைத் துாண்டுவதற்கா: கவும் நான் ஓர் ஆய்வில் இறங்க விரும்புகிறேன் விரிவான ஆய்வை; VNM நடத்துகின்ற நோக்கம் இல்லை 35 u/ato fa Ga என்றாலும், ஒரு சில முக்கியமான
கேள்விகளை அவர்கள் முன்னே: வைக்க விரும்புகிறேன்.
 
 

தேடல் 10
ரே குப்பை மசாலாப் படக்காரர் அல்ல. தன் மனத்துக்கு நெருங்கிய சிறுசிறு அசைவுகளை, மனித உணர்வுக் கொந்தளிப்புகளை, நிகழ்வுகளை அழகாகப் படம் பிடித்தார். நுணுக்கமாக இயற்கையைப் பார்த்தார் இயற்கை மூலம் பேசினார் பதேர் பாஞ்சாலியில் இடிமுழக்கம், அசைந்தாடும் நாணல், மழையில் ரவிசங்கரின் இசையோடு துள்ளியாடும் துர்க்கா 'காஞ்சன் ஜங்கா வில் பனிமூட்டம் 'அஷானி சங்கேத்தில் பட்டாம் பூச்சி - இவ்வாறு இயற்கை ரே மூலம் பேசியது.
படம் தொகுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்காத விதத்தில் காட்சிகளை ரே மாற்றுகிறார் பின்னணி இசையைக் கதையின் போக்கோடு தைத்துவிடுகிறார்.
- இதெல்லாம் ரே படத்தில் உண்டு. ரேயின் கணங்களைக் கண்டு அதிசயித்து தரிசித்துவிட்டால் போதுமா? நீரற்ற ஆற்று மணலில் தெரிகிறது தனிமையாகப் பயணம் செய்த/ உன் / வண்டித்தடம் என்று எழுதிய கவிஞர் 'இந்திரனைப் போல நீளும் நிழல்களில் நீயும் ஒன்றாகிப் போனதற்கு ஏங்கிக் கொண்டே இருந்தால் போதுமா? போதாது.
சித்திரச் சோலைகளே உம்மைத் திருத்த இப்பாரினிலே ...-...-----...,“. எத்தனை ரத்தம் சொரிந்தனரோ
>உங்கள் வேரினிலே
நதியில் விளையாடி கொடியில் 目」。F/ தலை சீவி |- r { நடந்த இளந்தென்றலே இப்படிப் பல கவிஞர்களின் -: کہا۔ জুলাম্বাক্ষরুহুল্পস্থা ஓரிரு வரிகளில் நெஞ்சைப் பறிகொடுக்கிறோம். கவிஞர்களின் சிலவரிகளை மட்டுமே பிடித்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமா? உடனே, வேய், நீர் ஒரு மகாகவி வேய என்று அவர்களுக்கு கும்மியடித்துக் குளிப்பாட்டி விடலாமா? கூடாது.
கலைஞர்களின் முழுப் பங்களிப்பையும் ஆராய்ந்ததுதான் ஒரு கணிப்புக்கு வரவேண்டும்.
****紫*
ரேயை எப்படியெல்லாம், *எதற்கெல்லாம் பாராட்டுகிறார்
s ளோ அதிலிருந்தே தொடங்கு கிறேன்.
*ரேயின் படங்களில் உள்ள அற்புதமான விஷயம் அவரது சிக்கனம். பிரேம்களில், SMSSMSMSMSS LSLS SqqSqSS qqq qqSS SSA SS SS SSSqSSqS SASqSqqS S காட்சிகளில் எதுவுமே
வீண்போவதில்லை: "அப்புவின் உலகம் என்ற படம்.
தேடல் 10

Page 24
தேடல் 10
அபர்ணா பணக்காரி எஸ்டேட் குடும்பம் " திருமணத்தன்று அவளுக்கு வாய்த்த கணவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது அந்த 'சாபத்திலிருந்து மீட்டு அப்பு அவளைத் திருமணம் செய்து கொண்டு கல்கத்தாவில் உள்ள ஏழைக் குடியிருப்புக்கு அழைத்து வருகிறான்.
காட்சி மொத்தம் சுமார் 3 \2 நிமிடங்களே திரையில் வருகிறது. ஆனால் அதற்குள் ஒரு கருத்து சொல்லப்பட்டுவிடுகிறது. காட்சியைக் கீழே தருகிறேன் - மாடிக்கு அழைத்துச் சென்று அபர்ணாவை அறையில் விட்டு விட்டு வெளியே போகிறான் அப்பு. அறை மையத்திலிருந்து ஜன்னலருகே சென்று வெளியே பார்க்கிறாள் அபர்ணா. பார்த்துக் கொண்டே முகத்தைப் பொத்தி அழுகிறாள். பின்னணியில் குழந்தையின் சிரிப்பொலி தொடங்குகிறது. அழுகையின் ஊடாகச் செல்கிறது. பின்ணணியில் ஆழ்ந்த சிந்தனையோடு சோகம் கலந்த இசை தொடருகிறது. அபர்ணா, கிழிந்த ஜன்னல் திரை வழியே வெளியே பார்க்கிறாள். (அவளது அழுகை நிற்கிறது. குழந்தையின் சிரிப்பும், பின்னணி இசையும் தொடர்கிறது) தோட்டத்திற்குள் ஒரு பெண் நுழைகிறாள். அவள் குழந்தை பின்தொடர்கிறது. தாய் குழந்தையை குனிந்து எடுத்து கயிற்றுக் கட்டிலில் உட்கார வைக்கிறாள். (அபர்ணாவின் முகத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்பு மாறுகிறது. குழந்தையின் சிரிப்பு தொடர்கிறது.) அபர்ணா பெருமூச்சு விடுகிறாள் ஜன்னலில் இருந்து பார்வையை நீக்கி அறைக்குள் பார்க்கிறாள். கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். வெளியே குழந்தையின் சிரிப்பொலி நிற்கிறது. மீண்டும் பின்னணி இசை மட்டும் தொடர்கிறது. வெளியே குரல்கள், எதிரொலிகள் கேட்கின்றன. அறைக்குள்ளே அப்பு வருகிறான் ஜன்னலருகே நிற்கும் அபர்ணாவிடம் சென்று நிற்கின்றான் அவர்களின் பின்னே ஜன்னலிலிருந்து பிரகாசமான ஒளிவெள்ளம் உள்ளே பாய்கிறது. அவள் அவனை அர்த்தத்துடன் பார்க்கிறாள். இருவரும் சேர்ந்து கீழே உள்ள பெண்கள். குழந்தைகளை பார்க்கச் செல்கிறார்கள்.
கல்கத்தாவில் அப்புவோடு ஒரு வெற்று (வெறிச்சிட்ட அறை) வாழ்க்கை வாழப் போகிறோமோ என்ற மன உளைச்சலில் அழுகிறாள் வெளியே குழந்தை ஒன்றின் குரலைக் கேட்டதும், எதிர்காலத்தில் தனக்கு தாய் என்ற கடமை காத்திருப்பதை உணர்ந்து புரிந்து கொள்கிறாள் அழுகையை நிறுத்துகிறாள். சினிமாவைப் பார்ப்பவர்களுக்கு இதை உணர்த்திய பிறகே (எவ்வளவு பேருக்கு இந்தச் சிறு நுணுக்கம் புரிந்திருக்கும் என்பது விவாதத்துக்குரிய விஷயம்தான்) அபர்ணா கீழே அழைத்துச் செல்லப்படுகிறாள்.
மேலே உள்ள காட்சியில் சிக்கனமும், பாத்திரங்களின் உள்ளே உணர்வுகளை மன இயக்கத்தை சுருங்கப் புரிய வைக்கும் வடிவமும் அற்புதமானவை. ஆனால் இந்த அதி அற்புதமான வடிவத்தின் மூலம் ரே என்ன கருத்தைப் புரிய வைத்திருக்கின்றார்? எதிர்காலத்தில் அபர்ணாவுக்கு என்னென்ன பிரச்சினைகள் வரப்போகிறதோ அவற்றை சூசகமாகக் காட்டினாரா? இல்லை. சமூகத்தில் நெடுங்காலமாகப் பழக்கப்பட்டுள்ள ஆண் ஆதிக்க கருத்தை - 'குழந்தை ஈன்று கொடுப்பதே பெண்ணுக்கு முதல் கடமை' என்ற கருத்தைத்தான் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். சிக்கனம், காட்சிப் படிமம், செல்லுலாய்டு(பிலிம்) கவிதை - ரே தன் கருத்தைச் சுவையாகச் சொல்வதாற்காக அமைத்த வடிவம்.
ஒரு காட்சியிலேயே ரேயின் முழு தத்துவ தரிசனத்தையும் சாரமாகப்
தேடல் 10

பார்த்துவிட முடியுமென்று சொல்லவில்லை 'அப்புவின் உலகம்' கதையின் முழுப் போக்கையும் வைத்து அதில் இந்தக் காட்சியைப் பொருத்திப் பார்க்கும் போதுதான் ரே இப்படிப்பட்ட கருத்தோட்டம் உள்ளவர் என்ற முடிவுக்கு வரமுடிகிறது.
"கலைஞனின் சொந்த மன ஓட்டம், உள் உலகம், மனோதத்துவப் பார்வை, இதயக் குரல் இல்லாமல் ஒரு கலை இருக்க முடியாது. அதுதான் ரேயின் கலை."
ரேயின் சொற்களில் சொல்லுவதானால், சினிமாவின் முக்கிய அம்சமே மனதிற்கு மிக நெருங்கிய விஷயங்களை வெளிப்படுத்துவதும் பிரதிபலிப்பதும். மன அடுக்கிலுள்ள ரகசியங்களை சில அசைவுகள், மெல்லிய சைகைகள், குரலில் உண்டாகும் சில மாற்றம், ஏற்ற இறக்கம், சுற்று வட்டாரத்தில் உள்ள பொருள்கள் மூலமாக, ஒளி வித்தியாசங்கள் மூலம் பலவகையில் வெளிப்படுத்த முடியும். இதை காட்சிகளின் இயக்கம் என்பதைவிட, காட்சிகளின் வளர்ச்சி என்று சொல்வதையே ரே பெரிதும் விரும்புகிறார்.
ரேயின் வாதப்படி ஒவ்வொருவருக்கும் மனதுக்கு நெருக்கமான விஷயம் இருக்கும். அவர்களது ரசிகர்கள் கருத்துப்படி அதை ஆய்வுக்கு உட்படுத்த இயலாது. அப்படி என்றால், ரோம் பற்றி எரிந்த போது நீரோ பிடில் வாசித்ததை தவறு என்றா சொல்ல முடியும்? அவன் மனதுக்குப் பிடித்தமானதைத்தானே நீரோ இசைத்திருக்கிறான். வேண்டுமானால் அப்போது நீரோ இசைத்த ராகம், அதன் லட்சணம் பற்றி அலசி ஆராயலாம். அந்தக் கலைஞனின் இசைக்கு வழங்கும் கெளரவமாக அது இருக்கும்.
குரல் மாற்றம், சைகை, சிறு அசைவுகள் ஒரு விதத்தில் படைப்பில் இடம்பெறும். ஆனால் அதுவே முக்கியமான அம்சமல்ல் ரே அடித்துச் சொல்வது எதனால்? 'கலை, படைப்பு ஒருவரின் தனிப்பட்ட, சுயமான வெளிப்பாடு என்ற எண்ணத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன் நான் என்கிறார் ரே. எவ்வளவோ சமூக கொந்தளிப்புகள, நெருக்கடிகளைத் தாண்டி தன் அகவிளக்கை அணையாமல் காப்பாற்றினார் என்று ரே ரசிகர்கள் சொல்லுவார்கள்.
ரே அவர்களின் கருத்து - ஒரு கலைஞன் நடப்பில் உள்ள சமூகப் பிரச்சினைகள் பற்றி ஒரு சினிமா எடுத்தால் அவள் தனக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் மாட்டிக் கொள்கிறான். ஆனால் 70 களில் வேலையில்லாத் திண்டாட்டம், கல்கத்தா நகரில் நடுத்தர வர்க்க குடும்பத்தின் மாற்றங்கள், 1989ல் 'கணஷத்துரு போன்ற படங்களை ஏன் அவர் எடுத்தார்? இவர்களால் விளக்கம் சொல்ல முடிவதில்லை. ரேயிடம் உள்ள கலைக் கோட்பாடுகள் அவற்றை விளக்க வலுவற்றவை. அத்தகைய படங்களிலும் தனிநபர்களின் மன ஓட்டமாக மட்டுமே கதை சொல்லியிருந்தாலும், ஏன் அதில் தலை கொடுத்தார்?
அறுபதுகளின் இறுதியில் எழுபதுகளின் தொடக்கத்தில் கல்கத்தாவில் பரவிய புரட்சி அலை அறிவுஜீவிகளை உலுக்கி எடுத்தது. உலகுக்கே மனதாபிமானத்தை ஓதிய ஞான தேசிய வர்க்கம் நடுத்தர பத்ரலோக் வர்க்கத்தின் முன் கேள்விகள் எழுந்தன. ஒரளவு வெளிப்படையான அரசியல் பொறுப்புணர்வோடு சமூக அரசியல் விமரிசனத்தோடு இலக்கியம், நாடகம், சினிமா (மிருணாள்

Page 25
சென் போன்றவர்கள்) வெளிவந்து, அரசின் பாசிச பயங்கரவாதம், ஆகியவற்றால் ரே குறைந்த பட்சம் தன்னையே குற்ற உணர்வுக்கு ஆட்படுத்திக் கொள்ள நேரிட்டிருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் கணிசமான மார்க்கெட் பிடித்திருந்த ரே யுக்கு தனது 'மனிதாபிமானத்தை (தாராள மனதுடன்) ஒரு சிறிது வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது.
இதெல்லாம் ரே பற்றிய கொச்சையான அவதுாறு என்று அவரது சீடர்களும், ரசிகர் கூட்டமும் புலம்பித் தவிக்கக்கூடும். விரிவான விவாதத்தை பின்னால் வைக்கிறேன். ஒரே ஒரு எடுத்துக்காட்டு இதோ: 1989ல் 'கணஷத்ரு (மக்களின் எதிரி) படம் எடுத்தார். இது இப்பசனின் நாடகத்தை வங்காளச் சூழலுக்கேற்ப மாற்றப்பட்டது. ஆனால் மூலக்கதையில் இல்லாத முடிவைத் திணித்தார் ரே. கோயிலின் உள்சுற்றில் கர்ப்பக்கிரகக் கால்வாய் நீர் வெளியேறும் அழுக்கு நீரைப் 'புனித நீர் என்று மக்கள் பருகிவிட ஊரில் மிகமோசமான தொற்றுநோய் பரவிவிடுகிறது. உள்ளுர் டாக்டர் குப்தா கோயிலை மூடச் சொல்கிறார். குப்தாவின் தம்பி கோயில் நிர்வாகத்தோடு சேர்ந்து கொண்டு எதிர்க்கிறான். கடைசியில் டாக்டருக்கு ஆதரவாக இளைஞர்கள் திரண்டு ஊர்வலம் விடுகிறார்கள். இப்பசனின் நாடகத்தில் 'உன் உழைப்பு கேட்டு யாரும் வரவில்லை என்றாலும் தனி ஆளாய்த் துணிச்சலோடு முன்னேறு என்று முடியும். டாக்டர் எந்த முயற்சியும் எடுக்காமலேயே இளைஞர்கள் திரண்டு விடுகிறார்கள் என்று அதை ரே மாற்றுகிறார்.
25 ஆண்டுகளாக ரேயின் குரலைக் கேட்டுப் பழகியவர்கள் 'கணஷத்துரு வை அவரது இதயக்குரலாகப் பார்க்கவில்லை.
"பெண் பற்றிய பிரச்சினையில் ரே அக்கறை இல்லாதவர் என்ற விமரிசனம் அபாண்டமானது. அரக்கத்தனமானது ரே என்றும் நினைவில் நிற்கக்கூடிய வலுவான பெண் பாத்திரங்களைப் படைத்திருக்கிறார்"
* மறக்க முடியாத கன்னி பாலாதேவி
(பதர் பாஞ்சாலியில் வரும் கிழவி)
* குழந்தை பெறாத மலடு சாருலதா கணவனின் அத்தை மகன அமலோடு நிறைவேறாத காதலை வளர்க்கிறாள் கடைசியில் தனக்கு விருப்பமான எழுத்துத் துறையில் இறங்குகிறாள் அமல் வெளியேறி விடுகிறான்.(சாருலதா)
* அப்பாவி தயாமாயீ. ஜமீந்தார் மாமனாரால் தான் காளியின் அவதாரம் என்று நம்ப வைக்கப்படுகிறாள் கடைசியில் பைத்தியம் பிடித்து தற்கொலை செய்து கொள்கிறாள். (தேவி)
* மனவேதனைமிக்க கடந்த காலத்திலிருந்து மீளவிரும்பும் சுயேச்சையான பெண் அபர்ணர் மகப்பேற்றில் இறந்துவிடுகிறாள்.(அபு சன்ஸர்)
* உடல்பசிக்கும் அன்புக்கும் ஏங்கும் விதவை ஜெயா (அரண்யேர் தின் ராத்திரி)
23

தேடல் 10
பெண் கதாபாத்திரங்கள் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் எந்தவித மீட்புக்கான, விடுதலைக்கான வழியும் அவர்களுக்குக் கொடுக்காமல் உள்ளதை ரே உள்ளபடியே சித்தரித்திருக்கிறார்.
சினிமா பார்வையாளன், இப்பெண் கதாபாத்திரங்களைப் பார்ப்பவன், எல்லோருமே விதிவழியே பயணம் போவதாகவே புரிந்து கொள்வான். ரேயின் இரண்டு படங்களில் வரும் பாத்திரங்களைப் பற்றி விரிவாக அலசிக் காட்டுகிறேன்.
'மஹா நகரில் (1963) வரும் பெண் பாத்திரம் ஆரத்தி. வீட்டுப் பொருளாதார நிலைமை காரணமாக வேலைக்குப் போகிறாள் கணவனைவிட வேகமாக முன்னேறுகிறாள் படத்தின் கடைசியில், உடன் வேலை செய்யும் ஆங்கிலோ - இந்தியப் பெண்ணை அநியாயமாக வேலை நீக்கி விடுவார்கள் அதை எதிர்த்து ஆரத்தி வேலையை விட்டு விடுகிறாள்.
ஒரு பக்கம் சரியான காரணமாக இருந்தாலும், கணவன் மேல்நிலையை எட்டுவதற்காகவே பெண் தன் முன்னேற்றத்தைப் பலிகொடுக்கிறாள் என்ற கருத்தும் கலந்தே இருக்கிறது. ஏனென்றால், அநியாயத்தை எதிர்த்துப் போராடும் ஆரத்தி வேறு ஒர் இடத்தில் வேலை தேடிக் கொள்வதாக ஏன் முடிவை வைத்திருக்கக் கூடாது? பெண் ஆணுக்கு கீழே என்ற கருத்தை எதிர்க்கின்ற மிகமிக வலுவான பாத்திரத்தை உருவாக்க வேண்டுமானால் மாதிரி ஒன்றை உருவாக்க வேண்டும் இது ரேக்குப் பிடிக்காத கலைக் கோட்பாடு. தவிர இப்படி ஒரு மாற்று உருவாக்க வேண்டிய சூழ்நிலையை படத்தில் கொண்டுவர நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும் எனவே ஆண் ஆதிக்க கருத்தை நீவிவிடுவதானாலும், படத்தில் உள்ள முடிவே ரேயின் முடிவு.
"சாருலதாவில் (1984) வரும் பாத்திரம் சாருலதா. அற்புதம் என்று பலர் மெச்சுவதுண்டு. தாகூரின் 'உடைந்த கூடு என்ற 1901 ஆம் ஆண்டு குறுநாவலின் திரை ஆக்கம் பூபதி பத்திரிகை முதலாளி சாருவின் 13வது வயதில் குழந்தை மணம் செய்து கொண்டான். வீட்டுக்கு அடிக்கடி வரும் பூபதியின் மருமகன் அமலோடு நெருங்கிப் பழகுகிறாள். பூபதி இயல்பாக பணக்கார வங்காளிகள வீட்டில் உள்ள வழிமுறைப்படி இதை அனுமதிக்கிறான். வேலையில் எந்நேரமும் பூபதி அலைவதால், அன்புக்கு ஏங்கிய சாரு அமலிடம் ஆவலோடு பழகுகிறாள். அதுவே அவளது ஒருதலைக் காதலாக வருகிறது. அமல் புரிந்து கொண்டு அங்கிருந்து போய்விடுகிறான். அவன் திரும்ப வரமாட்டான் என்பதும் சாருவுக்கும் புரிகிறது.
பூபதி மாற்றத்தை விளங்கிக் கொள்கிறான். கடைசியில் தொழிலில் பிரச்சினையைச் சந்தித்து தளர்வோடு வரும் கணவனை சாருலதா வரவேற்பதோடு படம் முடிகிறது. அதாவது கணவனை/ ஆணைப் பராமரிப்பதுதான் பெண்ணில் ஒரே கடமை என்று நிலவும் நிறுவனக் கருத்து உறுதிப்படுத்தப்படுகிறது.
படம் முழுக்க துணிச்சலாக அவளே முடிவுகள் எடுப்பதாகவும் எனவே முற்போக்கனவள் என்று வங்காளி அறிவு ஜீவிகள் பலர் கருதுகிறார்கள். பணக்காரக் குடும்பங்களில் 19ம் நுாற்றாண்டில் பெண்கள் இலக்கியம் எழுதப் பழகியதை இதற்கொரு அடிப்படையாக எடுத்துக் கொண்டார்கள்.
தேடல் 10

Page 26

1,9 ±± 11, hoofsos i i
(lesiae运posso) gasos os Tig) (glo-Iloi in hızılo)
ıso osloË Nog) off u as gas u fosc)
(gle-ulo)


Page 27


Page 28
தேடல் 10
ரேயின் பாத்திரப் படைப்பான சாரு, தாகூரின் இலக்கியப் படைப்பான சாருவிலிருந்து மாறுபட்டவள். "கணவன் - மனைவிக்கு இடையே உள்ள வரம்புகளை எதிர்கொள்வது இருவருக்கு மட்டுமே உள்ள பொறுப்பு. அமல் போன்ற மூன்றாம் நபரின் குறுக்கீடு ஏற்க முடியாதது" என்பது தாகூரின் கருத்து. நிறைவேற இயலாத மறுகும் காதல் தாகூரின் சிந்தனையிலேயே உள்ளதுதான். ஆனால் அது முதலாளித்துவக் குடும்பங்களில் பாலுறவாகவே அனுமதிக்கப்படுவதை தாகூர் அறிவார். ரே, தாகூர் படைத்த உறவை இன்னும் முதலாளித்துவ அராஜகத்துக்கு நெருக்கமாக மாற்றுகிறார். சாரு அமல் உறவை பாலியல் உறவாக ஆழமாக்குகிறார் ரே.
அவருக்குரிய நுணுக்கங்களையெல்லாம் இதற்கும் பயன்படுத்துகிறார் ரே. எடுத்துக்காட்டாக, பான் (வெற்றிலை - பாக்கு) தயாரிப்பது அந்நாட்களில் பெண்களின் வேலை. ஒரு முறை சாரு கதை எழுதுவதை பக்கத்திலிருந்து அமல் மெளனமாகப் படிக்கிறான். இதைக் கண்டு தவிர்க்க விரும்பும் சாரு எழுந்து பான் தயாரித்து வரப்போகிறாள் அதே பரபரப்பில் சுண்ணாம்பு, மசாலா இல்லாமல் பான் கொண்டு வந்து கொடுப்பாள் இதே பான் தயாரிப்பை வீட்டுப் பெண்கள் எந்திரகதியில் செய்வதை பல இடங்களில் கொண்டுவருகிறார் தாகூர். ஆனால் திரைக்கதைல் இதை மாற்றி சாரு அமலுக்கு மிக விருப்பத்தோடு, காதலோடு பான் தயாரித்துக் கொடுப்பதாக மாற்றுகிறார் ரே. தாகூர், ரே இருவரது சாரு பாத்திர வார்ப்புகளுமே முற்போக்கான சமூக பாத்திரம் ஆற்றும் வாய்ப்பே இல்லாதவர்கள்.
அனேகமாக எல்லா பெண் பாத்திரங்களுமே பழைய, இன்றைய இந்தியாவின் ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்து நிற்க வலுவற்றவர்களாக சபிக்கப்பட்டவர்களாகவே படைக்கப்பட்டிருக்கி றார்கள். தாகூரின் கதைகளை நிறையவே ரே கையாண்டிருக்கிறார். இருவருமே ஒரே மாதிரியான கண்ணோட்டத்திலிருந்து படைத்தார்கள் என்றுகூட சொல்லலாம். அந்த விதத்தில் சில விமரிசர்கள் சொல்லுவதுபோல வங்காள மறுமலர்ச்சியின் அன்றைய கலாச்சார பிரதிநிதி தாகூர் கடைசி பிரதிநிதி ரே.
'பதேர் பாஞ்சாலியில் தாய் சரபோஜயாவுக்கு மகள் துர்காவை விட மகன் அப்புவைப் பிடிக்கும் தாய் - மகள் முரண்பாடு, துர்காவை சாகடிப்பதில் மறைகிறது தன்னைப் போலவே பெண்ணான துர்கா துயரப்படப் போவதை விரும்பவில்லை பழைய நிலப்பிரபுக் கருத்து
அசிங்கமாக நிறுவப்படுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.
'தேவியில் வரும் தயாமாயீ மூடநம்பிக்கைக்கு அடிமைப்படுத்தும் மாமானாரை எதிர்க்கவில்ல்ை தந்தையை எதிர்க்கும் சீர்திருத்தவாதி மகன் அவள் குடும்பத்து குத்துவிளக்காய் மாறுவதையே விரும்புகிறான். தயாமாயீ அவனையயும் எதிர்க்கவில்லை. கடைசியில், அவள் தற்கொலையில் 'விடுதலை (?) அடைகிறாள்.
ரேயின் பெண் பாத்திரங்கள் பலியாடுகள் வலுவானவர்கள் அல்ல.
" ரேயே கூறியதுபோல ஒரு குறிப்பிட்ட அளவு சமூக பிரக்ஞை தவிர்க்க முடியாதது. அவரது கல்கத்தா: மூன்று படங்கள்; ஜன ஆரண்ய ஆகிய நாலு படங்களும், கணசத்துரு, சகா ப்ரோஷாகா ஆகியவையும் சமூக அக்கறை கொண்டவை. அவர் என்றுமே பிரச்சாரம் செய்தது கிடையாது. அதே சமயம் மனிதாபிமானம், உண்மையிலிருந்து விலகியதும் கிடையாது" என்று கூறுகிறார்கள்.
தேடல் 10

ஒவ்வொரு கலைஞனும் வாழும்போது அவனைத் தாண்டி சமூக நிகழ்வுகள் வேகமாக நகரும். இங்கு ரேயை, குறிப்பா, வங்கப் பஞ்சம், நக்சல்பாரி இயக்கம், அவசர நிலைமை, இந்து மதவெறி ஆதிக்கம் ஆகியவை கடந்துள்ளன.
வங்கப்பஞ்சம், வியட்நாம் மீது அமெரிக்கப் போர் இரண்டுக்கும் ரே ஊர்வலம் சென்றதாகச் சொல்வதுண்டு. வரவேற்க வேண்டியதுதான். ஆனால் உள்நாட்டில் அவசர நிலைமை பற்றி ரே வாய்திறக்கவில்லை. இந்துமதவெறி பற்றி கணசத்துரு வில் வந்தாலும் டாக்டர் குப்தாவை மடக்கும் அவரது சகோதரன் முதலில் நீ இந்துவா, இல்லையா என்பதை சொல் என்று கேட்கும்போது நடுங்கும் குரலில் குப்தா "ஆம், நான் இந்து . . . ஆனால் . . . என்று சொல்லி தடுமாறுகிறார். இன்றைக்கு இந்துமத வெறி வளர்ந்துள்ள நிலையில் நேர்மையான ஒருவனின் மூலம் ரே சொல்ல வேண்டிய பதில் நான் இந்து அல்ல. இந்து என்று சொல்லி என்னை கேவலப்படுத்தாதே
ரேயைப் பொறுத்தவரை பாம்புக்கும் நோகக்கூடாது; தடிக்கும் நோகக்கூடாது, யாரையும் விரோதிக்கக்கூடாது; அதிலும் குறிப்பாக, அரசு அதிகாரத்தில் இருப்பவர்களோடு மோதக்கூடாது. அதனால்தான். கண்ணெதிரேயே கல்கத்தாவின் புறநகரில் ஆயிரக்கணக்கில் புரட்சித் துடிப்புமிக்க இளைஞர்கள் நிற்க வைத்து சுடப்பட்ட போதும், சிறைக்குள்ளேயே பலநுாறு நக்சல்பாரி புரட்சியாளர்கள் கொல்லப்பட்டு வங்காளமே கொதித்தபோதும் - அழகை ஆராதனை செய்வதாக நழுவிக் கொண்டார் ரே.
ஒரு வேளை தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இருக்கலாமல்லவா? பிறகு ஏன் 'உண்மையின் பக்கம் என்றும் இருப்பவனே மனிதாபிமானி என்று ஊருக்கு உபதேசித்தார்? முகத்தில் அறைந்த உண்மைக்கு ரே யின் பதிலென்ன? மெளனம். உலகளவில் பேர்பெற்ற ரே போன்ற கலைஞன் நேரடியாக அன்று அரசை எதிர்த்திருந்தாலும் ஒரு ஏழை கூலி விவசாயியை அடித்துக் கொன்றது போல் ரேயை செய்திருக்க மாட்டார்கள். ரே அன்று உண்மையைச் சொல்ல தயாராக இல்லை.
நான் பிரச்சாரகன் அல்ல, கலைஞன் ' என்று அவர் சொல்லலாம். தனது படத்தின் மூலம் வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சம் இரண்டையும் தோலுரித்ததாகச் சொல்லிக் கொள்ளலாம். 80 களின் இறுதியிலும், 70 களின் தொடக்கத்திலும் லஞ்சமும் வேலையின்மையும் இந்தியாவில் புதியதல்ல. ஆனால் புதியது என்பது புரட்சி இயக்கத்தின் தோற்றம்தான். அதுவே நக்சல்பாரி உழவர் புரட்சி. இதைப்பற்றி ரே ஏன் வாய் திறக்கவில்லை?
ரேயிடமிருந்து கலை ஜிகினா மட்டுமே "1943 வங்கப் பஞ்சத்தில் 50 இலட்சம் பேர் இறந்தனர்" என்று ஒரு வரியை மட்டும் அஷானி சந்கேத்' படத்தின் கடைசியில் டைட்டில் போட்டாரே தவிர, பஞ்சத்தில் சிக்கிய விவசாயின் நிலைமையை புறந்தள்ளி விட்டு பஞ்சத்தில் சிக்கிய ஒரு பார்ப்பனக் குடும்பத்தின் ஒழுக்கக் குலைவு பற்றிய பிரச்சினையைத்தான் பெரிதாக அலசினார். ரேயின் ஜலசாகள் படம் முழுவதும் நளினமான சோகத்தில் தோய்ந்தது என்பார்கள். கலைகளைக் காப்பாற்றும் நிலப்பிரபு ஒருவனின் வாழ்க்கை சரிந்து நொறுங்குவதை சோகம் கலந்த இரக்கத்தோடு,
24

Page 29
பச்சாதாபத்தோடு சித்தரிக்கிறார். இவ்வாறு சமூகத்தின் தீங்குகளுக்கெல்லாம் குளிரக் குளிர பன்னீர் தெளிக்கும் இவரது அழகியல் மதிப்பில் எத்தனை வீதம் மனித சாரம் இருக்கும்? ஒன்றிரண்டு விஷயங்களிலேயே இப்படி சோடை போன கருத்துள்ளவர் ஒட்டுமொத்தமான சமூக மதிப்பீடுகளில் என்ன கண்ணோட்டத்தை கொண்டிருப்பார். ?
அவரது கோட்பாடு மனித உணர்வு கொந்தளிப்புகளை வெளியிடுவதுதான் என்றால் 70 ஆம் ஆண்டுகளின் உணர்வெழுச்சிப் பேரலைகளை சித்தரிக்காமல் ஏன் முடக்கினார். ரே?
அவரது சமகாலத்திலேயே எத்தனையோ செய்திப்பட (டொக்குமென்ரி) இயக்குநர்கள் வந்து விட்டார்கள். கதையை வைத்துக் கொண்டு கதை பண்ணும் ரே எதையும் 'கற்பனை என்று சொல்லி தப்பிவிடலாம். ஆனால், இவர்களே நேருக்கு நேர் அரசோடு மோதுகிறார்கள். பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இவர்களுக்கும் வயிற்றுக்குச் சோறு வேண்டும்; பல எதிரிகளையும் சந்திக்க வேண்டும். இதனனைக்கும் இன்றைய சமூக அமைப்பில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள்தான் இவர்களும். இவர்கள்தான் போபால், பஞ்சாப், டெல்லி கலவரம், காஷ்மீர், அயோத்தி பிரச்சினை என்று எத்தனையோ பிரச்சாரப் படங்களை தயாரிக்கிறார்கள்.
டாக்கடர் ஆலோசனையின் பேரில் 'கணசத்துரு படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பை தவிர்த்துவிட்டு முழுக்க முழுக்க உட்புற ஸ்டுடிேயா படப்பிடிப்பாகவே தயாரித்தார் ரே. டொக்குமெண்டரி இயக்குநர்களோடு ஒப்பிட்டால் எல்லாப் படங்களையுமே ரே வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு - அதாவது சமுதாயத்தைப் புறக்கணித்துவிட்டு நான்கு சுவர்களுக்குள்ளேயே தயாரித்துவிட்டார் என்று சொல்லலாம்.
ரேயிடம் விமரிசனமேயற்ற ஆரோக்கியமற்ற மேல்நாட்டு வழிபாடும் நிரம்ப உண்டு. 1981 ல் ஒரு பேட்டியில் "நம் நாட்டில் வன்முறைகள் ஏதோ ஒரு விதத்தில் தரம் தாழ்ந்தவை, கேவலமானவை. அற்பத்தனம், குரூரம், அருவெறுப்பானவை. மேற்கே வன்முறையை எதிர்கொள்வது மனதை சுத்தப்படுத்தி மேம்படுத்துகிறது. அவர்கள் எத்தனையோ நீண்ட காலம் எத்தனை அளப்பரிய பரிமாணத்தை அனுபவித்திருக்கிறார்கள்? அவர்களிடம் தொழில்முறை தேர்ச்சிபெற்ற வன்முறையே இருக்கிறது. அதை படைப்பு நிலைக்கு உயர்த்தியவர் புனுவல் என்ற பிரெஞ்சு இயக்குநர் என்று சொல்லியிருக்கிறார்.
ரேயின் வரலாற்று உணர்வுக்கு இச்சான்றே போதும். பூர்வீக செவ்விந்தியருக்கு எதிரான அமெரிக்க கொலை வெறியாட்டமும் மத்தியகால கொடுங்கோன்மையும், அற்பத்தனமும் குரூரமும் இல்லாத வன்முறைகளா ? ரே வன்முறையிலிருந்து சமூகக் காரணியை உருவி எடுத்துவிட்டு நல்ல வன்முறை, கெட்ட வன்முறை என்று பிரிக்கிறார், அவ்வாறு நாம் செய்ய முடியாது.
மேலைநாட்டில் நடந்த ரத்தம் சிந்தும் வன்முறையும் வன்முறைதான். ஆசிய கொடுங்கோன்மையின் கீழே தாழ்த்தப்பட்டவர், பெண்கள் மீது நடத்தப்பட்ட வருணாசிரம அடக்குமுறையும் பாரபட்சமும் வன்முறைதான்.
இவை ரேயின் பருந்துக் கண்களுக்குப் படவில்லை. பிரெஞ்சு நாட்டு

தேடல் 10
இயக்குநர் புனுவல் வன்முறையை படைப்பு நிலைக்கு உயர்த்தியவர் என்று சொல்லும் ரே புனுவல் உருவான இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நிலைமைகள் பற்றி. - அதாவது குடும்பங்கள் சிதைந்தது. அநாதைக் குழந்தைகளின் மனக் கொந்தளிப்புகள் பற்றி ஏதும் சொல்லவில்லை புனுவல், அராஜகவாதத்தையே தனது அரசியல் நிலைக்கும், தத்துவத்திற்கும் இலக்கணமாக ஏற்றது
பற்றியும் ஒன்றும் சொல்லவில்லை. அந்நிலைமை விளக்கப்பட்டால்தான் புனுவலை விளங்கிக் கொள்ள முடியும்.
ரேயிடம் நடுத்தர வர்க்க கோழைத்தனம். பழமைக்கு ஏங்கும் நிலப்பிரபுத்துவ சிந்தனை, மேலைநாட்டை வணங்கும் அடிமைப் புத்தி மூன்றுமே உண்டு.
ரேயைப் பல காரணங்கள் சொல்லி புகழ்ந்தவர்கள் - " அவரை உலகத் தரத்திலுள்ள Nன் ரென்வா, சாப்ளின், ஐசன்ஸ் டீன் ஆகிய மூவரோடு சேர்த்துப் போற்ற வேண்டும். ஏனெனில் அவர்களிடம் மொத்த மனோதத்துவம் (டோட்டால் சைக்காலஜி) இருந்தது" என்று போற்றுகிறார்கள். சாப்ளின், தனது படங்கள் மூலம் சமூக எதார்த்தத்தை விமர்சனம் செய்தார். முதலாளித்துவ அழுகலை விமரிசித்தார், சோசலிசத்தை உயர்ந்த சமூக நெறி என்று பல நெருக்கடிகளுக்கிடையிலும் பிரதிபலித்தார். ஐசன்ஸ்டின் ஒருபடி மேலே சென்று சோசலிசம் பிறந்த புரட்சியைப் படம் பிடித்தார். மீன் ரென்வா சமூக விமரிசகராக தனது படங்கள் மூலம் ஏகாதிபத்திய உலக யுத்தத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.
ரே எந்த அடிப்படையில் இந்த வரிசையில் வைக்கப்பட்டார்? படத்தில் கையாளப்பட்ட உள்ளடக்கத்தால் அல்ல, வடிவத்தை வைத்து. பின்னாளில் ரென்வா வேறு வடிவத்திற்கு மாறினாலும், மேற்படி படங்களில் சமூக விமரிசனத்திற்கு ஏற்ற, மனோதத்துவத்தையே கொடுத்திருந்தார். மற்ற இருவர் நிலையும் அதுவே. இன்னமும் சரியாக சொன்னால், சாப்ளின், ஐசன்ஸ்டீன் இருவரோடும் மாறுபட்ட கண்ணோட்டங்களில் அலைபாய்ந்த ரென்வா இணைக்கப்படுவதும், அவர்களோடு ரே இணைக்கப்படுவதும் வேடிக்கையாக இருக்கிறது. வேடிக்கை என்பதைவிட உள்நோக்கத்தோடு செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. பிரமாண்டமான உழைக்கும் வர்க்கத்தின் கூட்டுத்துவ சிந்தனை, சமூக விமரிசனம், புதிய சமுதாய வாழ்க்கை ஆகியவற்றோடு சேர்ந்ததுதான் ஐசன்ஸ்டீன், சாப்ளின் மனோதத்துவம். இதில் ரேயை ஓட்ட வைப்பது கோமாளித்தனமானது.
ரேயையும் சாப்ளினையும் ஒப்பிட்டுப் பாருங்கள். சாப்ளின் கம்யூனிசத்தை விரும்பினார் சொல்லும் விசயம் சுலபமாக புரிய வேண்டும் என்று அக்கறைப்பட்டார். சாப்ளினை எளிமையாக ரசித்து உணரமுடியும் அன்றைய சமூக அமைப்பின் மீது வெறுப்பு கொண்டவர் அவர் மிக உயர்ந்த மனிதாபிமானத்தைப் படங்களில் பதிவு செய்தார் சாப்ளின் மன உணர்வும். அவரது கலை வெளிப்பாட்டின் சமூகப் பாத்திரமும் இயல்பாக பொருந்தின. நகைச்சுவைக்கு சாப்ளினை எடுத்துக் காட்டாகச் சொன்னால், மற்ற கூட்டுத்துவ மனோ உணர்வுகளுக்கு எடுத்தக்காட்டாக ஐசன்ஸ்டினைச் சொல்லலாம்.
இந்த இரண்டு கலைஞர்களின் கலையிலிருந்து ரே வேறு பட்டவர்
இதை அவரே சொல்லியிருக்கிறார் ரே தனது படைப்புக்கள் புரிந்தால் நல்லது புரியாவில்லை என்றாலும் பரவாயில்லை என்ற கருத்தையே
கொண்டிருக்கின்றார். கலைஞனின் கலையின் உள்ளடக்கம் எந்த
5 தேடல் 10

Page 30
தேடல் 10
வர்க்கத்தை பற்றியதோ அதைப்பற்ரிய விமர்சனக்கண்ணோட்டத்தை முதலில் பெற்றிருக்க வேண்டும்பிறகு எந்தப்பார்வையாளனுக்குப் புரியவைக்கவிரும்புகின்றானோ அதற்கேற்ற சினிமா மொழியையும்
அவன் பெற்றிருக்க வேண்டும். இரண்டிலும் குறைபாடு இருந்தால் கலை மறுக்கப்படும். இரண்டிலும் எல்லாக் கலைஞரும் வெற்றியடைவதில்லை.அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்தக் கோட்பாடுகளை ரே "கிடையாது" என்று மறுத்து விடுகின்றார்.
"இந்திய சினிமா இயக்குனர்களைப் பொறுத்த அளவில் ரே ஒப்பிட முடியாத இமயம்"-இப்படி சில ரே ரசிகர்கள் பிரமித்துப் போகிறார்கள். 70-80 -களில் மிருணாள் சென் எடுத்த படங்களும் தென்னிந்திய பட இயக்குனர்களான கிரீஷ் காசர வள்ளி கெளதம்கோஷ்நரசிங்கராவ், போன்றோரின் படங்களும் ரேவோடு ஒப்பிடத்த க்கவையே. சமூக அர சியல் உள்ளடக்கத்தை வைத்து ரேயை விட உயர்வாக மதிக்கப்பட வேண்டியவையே. அவர்களின் முளுப்பங்கு பற்றி எனக்கு றுே மாறு பட்ட கருத்துகள் உண்டுஇருந்தாலும் ஒப்பீட்டுக்கு அவர்களை ஏற்க முடியும்.
1943 வங்க தேசப் பஞ்சம் பற்றி வெளிப்படையான விமர்சன பூர்வ மானசெய்திப்படத் தொகுப்பு அமைந்த படமொன்றை சென் எடுத்திருக் கின்றார். இதனை ரேயின் அஷானி சங்கேதத் தோடு ஒப்பிட்டுச் சொல்ல முடியும். அதே போல ரே யின் ஜலசாகரேகடு கிரீஷ்காசர வள்ளியின் கடஸ்ரார்த்தாவைச் சொல்ல முடியும். ஜலசாகர் சரிந்துவிழும் நிலப்பிர புத்துவத்தை இரக்கத்தோடு பார்க்கிறது. கடசரார்த்தா சரிந்து விழும் நிலப்பிரபுத்துவ பார்ப்பனியத்தின் குரூரம்யாசாங்குத்தனத்தை ஈவிரக்கமி ல்லாமல் தோலுரிக்கிறது.
விரிவாக இதனை விளக்கினால் பெரிதாகும் என்பதால் இந்தக் குறிப்போடு நிறுத்திக் கொள்கின்றேன்.கடைசியாக ரே யின் ஆளுமை பற்றிய இரண்டு கேள்விகளை உங்கள முன் வைக்க விரும்புகின்றேன்.
ஒன்று அவரது கலைவடிவம் பற்றி! இவரது படத்தில் அநேகமாக எல்லாக் கதாபாத்திரங்களும் வாழ்வின் இயல்பான வேகத்தில் இல்லாமல் நிதானமாகவே இயங்குகின்றன. அது ஏன்?
ரே இதற்குப் பதில் சொல்லுகிறார்: "எல்லா 'மெதுவாக நகருத லுமே ஒரு குறை என்று நான் கருதவில்லை. வேகமாக பாடும் பாடல் களும் உள்ளன: நிதானமாகப் பாடப்படும் பாடல்களும் இருக்கின்றன . . இன்னும் கேட்டால் நிதானப்படத்தை எடுப்பதுதான் அதிக அளவு சிரமமான காரியம்." W நிலப்பிரபுத்துவம் வேரோடியுள்ள கிராமப்புறங்களில் காலம் சற்று
மந்த கதியில் செல்லும், எல்லாக் கிராமமும் சிறு நகரங்களிலும் மொத்த வாழ்க்கையும் நிதானமாகவே நகருகிறது என்பது தவறு. அந்த
வாழ்க்கையில் துடிப்பும் வேகமும் உண்டு. போராட்டம், கலகம், சாவின் விளிம்பை தொட்டுத் திரும்பும் தீவிரம் அத்தனையும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் உண்டு.
ஆனால் ஆண்டை வர்க்கம் எல்லாவற்றையுமே, ஓய்வாக செய்கிறது. மகிழ்ச்சி, சோகத்தைக் கூட அனுபவித்து நிதானமாகவே வெளிப்படுத்துகிறது. இதுவே செய்வியல் இசை (கிளாசிக்கல்) வடிவத் தில் வருகிறது. ஒப்பீடாக, கிராமிய மக்கள் இசை வடிவத்தில் துள்ள லும், ஓட்டமும், இழைவும் வித்தியாசமாக வருவதைப் பார்க்கலாம்.
இதுதான் நுாற்றுக்கு நுாறு சதவீத இலக்கணம் என்று சொல்லவில்லை. ஆழமான பார்வையில் நாம் இந்த வித்தியாசத்தைப் பார்க்கலாம். ரேயின் படங்களில் கிராமப்புறம், நகர்ப்புறம் என்று இல்லா மல் 90 வீதம் நிதானமான அசைவாகவே வருகின்றன. இது சாதாராண பார்வையாளரின் கருத்து. காராணம் ரே தேர்ந்தெடுத்த கதை மாந்தர்க ளின் வர்க்கப் பின்னணி, அவர்கள் பெரும்பான்மையாக ரேயைப் போலவே மேட்டுக் குடியினர்.
தேடல் 10

ரேயின் எதார்த்தப் படப்பிடிப்பு இதுதான் என்று நினைத்துக் கொண்டால் சிரமப்பட்டு ரசித்துவிடலாம். ஆனால் என் நண்பன் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நினைவுக்கு வருகிறது - துடிப்பான பதினெட்டு வயது இளைஞன் பக்கத்திலிருக்கின்ற வாசலுக்குப் போக பதினைந்து நிமிடங்கள் ஆகிறது. இதை எந்த எதார்த்தத்தில் சேர்ப்பது?
இரண்டாவது கேள்வி : அவரது துறையில் நடந்த போராட்டங்களில் அவரது பங்குபற்றி சமுதாயத்திலும் அரசியலிலும் கலைஞன் தன் கலை மூலம் செய்யக்கூடிய போராட்டம் ஒன்றுமில்லை என்பதே ரேயின் கருத்து. ஆனால், அவரது சமகால இந்திய சினிமா இப்படிக் குப்பையாக இருக்கிறதே என்று அடிக்கடி வருந்துவது ண்டு. இந்த நிலையை மாற்ற, அதனோடு மோத அவர் ஒன்றும் செய்ய வில்லையே ஏன்? கூவம் நாறுகின்றது என்று சொல்லிக் கொண்டே எப்படி அதன் கரையில் ஒருவன் அமைதியாக வாழமுடியும்?
வியாபார / சந்தை சினிமாக் கலை என்ற கூவத்தின் மத்தியில் ரே ஒரு மூக்றையனாகவே வாழ்ந்தார். ரேயின் பதின் மூன்று படங்களில் நடித்த சௌமித்திர சட்டர்ஜி ஒரு மசாலா படத்தின் காதல் காட்சியில் நடித்த போது சிரித்தபடியே நடித்தாராம். காட்சி அபத்தமாக இருந்த தால் சிரித்தே என்று அவர் சொல்ல, ரேக்கு மூக்கின் மேல் கோபம் வந்ததாம். "மறுபடி அதுபோல் செய்யாதே. நீ ஒரு நடிகன். இது உன் தொழில். அதைப் போன்றே படத்தில் நடிக்கும் போது, அசசரியானது என்றே நம்பு. அதுதான் சரி. இல்லையென்றால் நீ நடிகனாகவே இருக்க முடியாது. கீதையின் கண்ணன் அருச்சுணனுக்கு செய்த உபதேசம் இதுதான். இப்படியே வாழ்ந்த ரே ஒரு சரியான விடா ப்பிடியா ஒரு போராட்டத்தையோ, அதற்கேற்ற ஒரு அமைப்பேயே கட்டியதில்லை:சந்தைச் சினிமாவை எதிர்த்து கலகமும் செய்யவில்ல்ை
இந்தியாவின் புதிய சினிமாவுக்கு ரே ஒரு முன்னோடி, முற்போக்காளர் என்று சொல்கிறீர்களா? உங்கள் தரப்பு நியாயங்களை பதிைைலக் கொடுங்கள். மொட்டையாக ‘என்ன இருந்தாலும் என்று இழுத்தீர்களானால் - உங்களுக்கு இதோ இந்தக் கவிஞனின் வரிகளே பதிலாக அமையட்டும்.
" ஏ சுயநல அறிவு ஜீவிகளே!
நீங்கள் தப்பமாட்டீர்கள்!
உங்களுடைய கவிதைகளிலும் கதைகளிலும்
இடம் பிடிக்க முடியாதவர்கள்
ஆனால்
உங்களுக்கு உண்டி சமைக்கும்
உங்களுக்கு ஆடையை விடுக்கும்
உங்களுடைய காரை ஓட்டும்
உங்களுடைய பூந்தொட்டியைப் பராமரிக்கவும்
உங்களடைய நாயைக் குளிப்பாட்டும்
அவர்கள் வந்தவுடனே
விசாரணை துவங்கும்
ஏழை பாழைகளான எங்கள் வாழ்வும் கனவும்
எரிநெருப்பில் கருகிக் கொண்டிருந்த போது
ஏ! சுகபோகிகளே. சைளந்தர்ய உபாசகர்களே
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"
(ஆட்டோ ரென காஸ்புலோ, சிலி)
எனக்குப் பதில் சொல்லத் தேவையில்லை என்றால் அழகியல் உணர்வும் கலா போதனையும் கலா ரசனையும் அற்ற மந்தைகளுக்கு - ஜடங்களுக்கு - ஜனங்களுக்கு, அவர்கள் கேட்கிறார்கள். நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.
. மருத்துவன் நன்றி - புதிய கலாச்சாரம்

Page 31
UUU TTT
டேர்த்தியான மலை வேம்புகளின் மத்தியில் நகருக்கு சற்று ஒதுக்குப் புறமாக அமைந்திருந்தது அந்த ஆண்கள் கல்லூரி கல்லூரிக்கு மேற்கே பெண்கள் கல்லூரி வகுப்புக்கள் இன்னமும் ஆரம்பிக்கவில்லை என்பதை உணர்த்தும் வண்ணம் மாணவர்கள் மைதானத்தில் விளைளயாடுவதில் மும்முரமாக இருந்தனர். காலைக்கதிரவன் தனது செங்கதிர்களை இளம் மாணவர்கள் மீது அள்ளித் தெளித்தவண்ணம் இருந்தான். மைதானத்தில் இருந்து பார்த்தால் எதிரில் உள்ள பூங்காவில் உள்ள மரங்களின் மேல்பகுதி ஒரு மனிதன் படுத்திருப்பது போல் தோற்றமளிக்கும். கல்லூரியில் உள்ள வீதியில் மாணவர்கள் வகுப்பறையில் நோக்கிச் செல்வதும் மறுபுறம் மைதானத்தை நோக்கி வருபவர்களுமாக இருந்தனர்.
இவையெதிலும் கவனம் செலுத்தாது விடுதியின் முன்னால் உள்ள நீண்ட கதிரையில் குமார் தனது உபகரணங்களுடன் "வயர்லெஸ் செய்வதில் மும்முரமாக இருந்தான். அவனைச் சுற்றி ஓரிரு மாணவர்கள். "மோட்டு மார்க்கோனி" என விஞ்ஞான ஆசிரியரால் பட்டம் சூட்டப்பட்டு இன்று பலராலும் அப்பெயராலே அழைக்கப்படுகிறான். கல்லூரி தொடங்குவதற்கான முதலாவது மணி அடித்து சில கணங்களின் பின்னர் விடுதியினுள் சென்று புத்தகப் பையை துாக்கியவன் வகுப்பறையை நோக்கி ஓடத்தொடங்கினான். இறுதியாக நின்று விடுதியைப் பூட்டிச் செல்லும் சுதன் மனதிற்குள் கறுவிக்கொண்டான். இன்றைக்கு எப்படியாவது இவருக்கு அடிவாங்கிக் கொடுக்கவேண்டும். முதலாவது மணி அடித்ததுமே விடுதியை விட்டு யாவரும் சென்றுவிட வேண்டும் என்பது சட்டம்.
ஒடிய களைப்பினால் வியர்க்க வியர்க்க கதிரையில் அமர்ந்து Time Table ஐ தேடத் தொடங்கினான். கல்லூரி தொடங்கி பத்து நிமிடம் ஆகியும் இன்னமும் சுகாதார ஆசிரியரை காணவில்லை. ஒரு மாணவன் அலுவலகம் சென்று விசாரித்து விட்டு வந்து "சுத்தம் சுகம் தரும்" இன்றைக்கு ழே.ழே. என்றான். அருகில் வாசிகசாலை இருந்தும் அதனுள் செல்வதை பெரும்பாலான மாணவர்கள் விரும்புவதில்லை. குமார் தனது உபகரண வேலையை மீண்டும் தொடர்ந்தான்.
"சதானந்தன் இன்றைக்கு Hostel லிலை
என்ன சாப்பாடு
வேறை என்ன வழமையைப் போல "கொங்கிறீற் புட்டுத்தான் என்று சதானந்தன் கூறியதுதான் தாமதம் பலத்த சிரிப்பலை எழுந்தடங்கியது.
27

தேடல் 10
"அதிலை இருக்கிற சத்தைப்பற்றி உங்களுக்கென்ன தெரியும்" இது சதானந்தன். இதனைத் தொடர்ந்து விடுதி மாணவர்கள் பலர் தமது எதிர்ப்புக் குரல்களை தெரிவித்தனர். "Hostel எண்டால் காணும் உங்களுக்கு எப்பிடி இந்த ஒற்றுமை வருகுது?" "எங்கும் சமம் எதிலும் சமம்" "மணியடிச்சா சாப்பாடு உங்களுக்கென்ன கவலை" "ஜெயிலிலும் அப்படித்தான் மீண்டும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. சமுதாயத்தை புரிந்து கொள்ள முயலும் ஓர் கூட்டம் அங்கே விவாதித்துக் கொண்டிருந்தது. "kvísl jou Pløse Stop Talking ..." அந்தக் குரலைக் கேட்டதும் மாணவர்கள் கப்சிப், ஊசி விழுந்தால் கேட்குமளவிற்கு அமைதி. அது அதிபரின் குரல். அனைவரையும் வாசிகசாலையினுள் செல்லுமாறு பணித்த அதிபர் குமாரை தனது அலுவலகம் வருமாறு கூறினார். குமார் பயந்த வண்ணம் தான் செய்து கொண்டிருந்த வயர்லெஸ் உடன் அலுவலகம் சென்றான். பல மாணவர்கள் கேலியாக அவனைப் பார்த்துச் சிரித்தனர். அலுவலகத்தினுள் நுழைந்த அதிபர் விசாரித்துவிட்டு வாசிகசாலையில் உள்ள புத்தகத்தின் பெயரொன்றை எழுதி அவனிடம் கொடுத்து நுாலகரிடம் இருந்து அதனைப் பெற்று சில விடயங்களை அறியுமாறு கூறினார்.
அடுத்த பாடம் வகுப்பாசிரியை எடுக்கும் சமூகக்கல்வி இளம் ஆசிரியையான இவர் வகுப்பினுள் நுழைந்தால் வழமையாக பின்னுக்கு இருக்கும் மாணவர்கள் சிலர் முன்னுக்கு வந்து விடுவார்கள். ஆசிரியையும் இவங்களின் மனோநிலையை நன்கறிந்திருந்ததால் சமாளித்துவிடுகிறார். இவ்வாறான மாணவர்களில் ஒருவன் கல்லூரி கிரிக்கெட் குழுவிலும் அங்கம் வகிக்கிறான். ஒரு நாள் ஆசிரியை அவனைப் பார்த்து ” எப்பவாவது நீ 20 Runsற்குக் கூடுதலாக அடித்திருக்கிறாயா என கேலியாக கேட்டதும் அவன் அதனைச் சவாலாக எடுத்து கூடுதலாக ஓட்டங்கள் பெற முயற்சித்துள்ளான்.
இடை வேளையின் பின்னர் வகுப்பினுள் நுழைந்த விஞ்ஞான ஆசிரியர் கனகரத்தினம் உயர்ந்த தோற்றம். பார்த்தவர்கள் பயப்படும்படியான தேகம். எப்போழுதும் அயர்ன் பண்ணி மடிப்புக் கலையாத உடுப்புகள். நெற்றியில் பட்டையான விபூதிப் பூச்சு வகுப்பினுள் நுழைந்ததும் மாணவர்கள் 67(gig 5 sport. "Sit Down Students..." gag sittisoir கூர்ப்பு என்னும் விடயம் பற்றிப் படிப்போம். கரும்பலகையில் கூர்ப்பு என பெரிதாக எழுதியவர். "சுந்தரமூர்த்தி மனிதன்
தேடல் 10

Page 32
தேடல் 10
எவ்வாறு தோன்றினான்?"
"கடவுளால்" "பீற்றர்?" "ஆதாமும் ஏவாழும் தான் முதல் மனிதர்" "அஷ்ரப்?" "இறைவனால்" "லூயிஸ்?" "சூரிய சந்திரரால்" "முருகராஜ்?" "குரங்கிலிருந்து சேர்" "குமார்-ரவிக்குமார் "பரிணாம வளர்ச்சியில் . . . படிப்படியான வளர்ச்சியினால் (gif
முருகராஜும் குமாரும் கூறியவை சரியானவை.
இன்று நாங்கள் கூர்ப்பைப் பற்றிய முதல் படியை அதாவது மேலோட்டமாக கற்போம். பின்னர் உயர் வகுப்புகளில் நீங்கள் மேலதிகமான விடயங்களை அறிவீர்கள். இடைக்கிடை கேள்விகளும் கேட்டு மூலக்காரணிகளின் மோதலில் இருந்து DNA ன் வளர்ச்சி பின்னர் குரங்கு, மனிதன் ஆகியோர் ஒரு மூதாதையரின் தோற்றம் என விபரமாக விளங்கப்படுத்தினார். மணி அடிப்பதற்கு பத்து நிமிடங்கள் இருக்கும் போது மாணவர்களைப் பார்த்து "கேள்விகள் ஏதாவது இருந்தால் கேட்கலாம்" என்றார். ரவிக்குமார் எழுந்து நின்று "சேர் கடவுளால் மனிதன் தோற்றுவிக்கப்படவில்லையா?” "இல்லை-மனிதன் கூர்ப்பின் வளர்ச்சியில்தான் தோன்றினான்" வேறு சில கேள்விகளும் கேட்கப்பட்டன.
கனகரத்தினம் மாஸ்ரர் கூறிய பதிலைக் கேட்ட கணத்திலிருந்து குமாருக்கு ஓர் உற்சாகமும் கூடவே சில விடயங்களை கற்க வேண்டும் என்ற ஆவலும் எழுந்தது. யாரை அணுகலாம் என யோசித்த வண்ணம் இருந்தவன். மாணவர்கள் தேவாரம் பாடமாக்கும் சத்தத்தை கேட்கவே அவனுக்கு ஞாபகம் வந்தது. அடுத்த பாடம் சுப்பர் என எல்லொராலும் செல்லமாக அழைக்கப்படும் சுப்பிரமணியம் மாஸ்ரரின் சமய பாடம். அவரைக் கண்டால் அனைவருக்கும் நடுக்கம். ஒரு சேட் காற்சட்டை ஏதோ உடுப்பு போடவேணும் என்ற காரணத்துக்காக போடுவார். அவ்வப்போது முன்னுக்கு விழுந்து தொந்தரவு செய்யும் தலைமுடி அகன்ற நெற்றி மெல்லிய உடம்பு இதுதான் அவரது தோற்றம். மாணவர்களுக்குத் தெரியும் அவர் கேட்பதெல்லாம் தேவாரம் தான். அதனை ஒப்புவித்தால் காணும். "சுந்தரமூர்த்தி மந்திரமாவது நீறு தேவாரத்தைச் சொல்லும்" "மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தேடல் 10

தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் . . . . . . . . . . . வாய்மை . . . . . . பங்கன். . . . v, "கையை நீட்டு" அடி தொடங்கி விட்டது. இவ்வாறு ஒவ்வொருவரும் தொடர்ந்தார்கள். "பாடமாக்காதவர்கள் அனைவரும் இன்று பாடசாலை முடிந்த பின் நின்று ஒப்புவிக்க வேண்டும்" இன்று நாங்கள் இறைவனின் திருவிளையாடல்கள் பற்றி கற்போம். "இறைவன் துாணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் ஏன் உங்கள் மத்தியிலும் இருப்பார்" "ரவிக்குமார்-அங்கே என்ன செய்கிறாய் இறைவன் உன் மேசையில் உள்ளாரா எனப் பரிசோதிக்கிறாயா?". கேலியாக கேள்வி கேட்டவர் தொடர்ந்து இறைவனின் திருவிளைளயாடல்களை கூறத்தொடங்கினார் இரும்பை போன்னாக்கியது. சுண்ணாம்பு அறையில் வசந்தம் வீசச் செய்தது. ஞான சம்பந்தருக்கு உமாதேவியார் பாலூட்டியது" என்றவர் தொடர்ந்தும் "அவனை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ஆதியும் அந்தமும் அற்றவன் அவனின்றி அகாலத்தில் ஓரணுவும் இயங்காது" என்று முடித்தார். "சேர் மனிதனை தோற்றுவித்தது யார்?" குமார் கேட்டான். "எல்லாம் இறைவனின் திருவிளையாடல்" ஆசிரியர் பதில் கூறி முடியவும் மதிய போசன இடைவேளைக்கான மணியடிக்கவவும் சரியாக இருந்தது. மாணவர்கள் குழம்பியபடி வெளியே சென்று கொண்டிருந்தனர்.
- ரதன் -
அறிமுகம் "பெண்கள் சந்திப்பு மலர்"
"PENNKAL CHANTHIPPU" FRAUEN TRFFEN INFORMATION ZENTRUN DRITTE WELT OVERVEGSTR 31 4690 HERNE 1 GRMANY
பெண்கள் ஏன் சந்திக்க வேண்டும்?
மணம் செய்யும் நோக்கில் வரவழைக்கப்பட்ட பெண் அழகற்றவள் அல்லது வற்றலாய் வாடியுள்ளாள் என்று திருப்பி அனுப்பப்படும் தனக்கேற்படும் பிரச்சினைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமலும் வீட்டினுள் நாளாந்தம் தாக்கப்பட்டு மனரீதியாகவும் உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கைப் பெண்களுக்கு நிகழ்கின்றன. இதன் வெளிப்பாடே புலம் பெயர்ந்த பெண்கள் ஒன்றுகூடி ஜேர்மனியில் முன்னெடுக்ப்பட்ட நிகழ்வின் தொகுப்பு
28

Page 33
ஈழத்திலிருந்: கொலைவெறி பிடித்த பாசிசக் கரங்க
IDa
பொறியிலாளர் சேந்த
வீண் ஆடம்பரங்களை கொண்டு தம்மை அறிமுகம் செய்யும் ஆடம்பரங்களுமன்றி அடக்கமாக வாழ்ந்த ஓர் அற்புதப்பிறவி
மனித நேயமே மலடாகிப்போன எமது மண்ணில் மக்களை மன மறைந்து போன காட்டுமிராண்டித்தனங்களை யெல்லாம் மீட்டெ உண்மையாக நேசித்த ஓர் உன்னதப் பிறவி,
விடுதலை, போராட்டம் என்ற பேரில் கோடி கோடியாக மக் அனுபவித்தபடி மக்களுக்கு கொலையையும், சித்திரவதைக6ை உழைப்பு முழுவதையுமே தன் சக ஊழியர்களுடன் சமனாக பங் ஓர் அதிசய மனிதன்.
ஆம்! மொத்தத்தில் இவர் ஓர் உண்மை மனிதன்.
 

து ஓர் பிரசுரம் ருக்குள் மக்களை நேசித்த இன்னுமோர் தன்
நம் ன் புலிகளால் கைது! இவர்?
அற்பமான மனிதர்கள் வாழும் இந்த உலகில் எந்தவித வீணாண
தார நேசித்த ஓர் மனித ஜீவன். மண்மீட்பு மண்மீட்பு என்ற பேரில், டுத்து மக்களை அழிக்கும் அரசியல் நிலவுகின்ற எமது மண்ணை
களிடம் கொள்ளையிட்டு தாம்மட்டுமே சுகபோக வாழ்க்கையை ாயும் மட்டுமே வழங்கும் வெறியர்கள் வாழும் மண்ணில், தனது கிட்டு தானும் ஒரு சாதாரண தொழிலாளியாகவே வாழ்க்கை நடத்திய
29 தேடல் 10

Page 34
தேடல் 10
தமிழ் மண்ணில் குறிப்பாக வடக்கில் சீவல் தொழில் மூலம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் நல்வாழ்விற்கு ஓர் மறை பலரும் அறியாத உண்யைாகும்.
எப்போதுமே வேற்றுநாட்டு தொழில்நுட்ப இயந்திரங்களை உபயே திறமையையும் பயன்படுத்தி எமது மண்ணின் மூலவளத்ை திரு.சேந்தன். திக்கம், வரணி, புதுக்குடியிருப்பு போன்ற இ இயந்திரங்கள் இவரின் சொந்த வடிவமைப்புக்களே. அவை இயந்திரங்களை வடிவமைப்பதற்கும் ஓய்வு ஒழிச்சலின்றி தன் சக
இந்த வடிசாலைகளை வெற்றிகரமாக தாங்களே நடத்துவதாக இருபது கோடி ரூபாக்களை இலாபமாக கொள்ளையிட்டு செல்கில
ஈரான், பிரான்சு, கனடா, இந்தியா போன்ற பல நாடுகளில் வேலை
என்ற இதய சுத்தியோடு நாடுதிரும்பிய இவர் யாழ்ப்பாணத்தில் S தற்போது அது Ezirovie என்னும் பெயரில் இயங்கி வருகி
எப்போதும் எம் சொந்த மண்ணில் மூலவளங்களை வைத்தே அனைவரையும்கூட அப்படிச் சிந்திப்பதற்கு பழக்கினார்.
ஆனால் இன்று புலிகளின் பட்டியலில் சேந்தன் ஒரு துரோகி
எந்தவொரு கட்டத்திலும் தனது தனித்துவத்தையும் மனிதமா தவறை தவறெனவும் நேருக்கு நேர் சுட்டிக் காட்டிய நேர்மையுள்
எப்போதுமே தங்களைவிட திறமையுள்ள தனித்துவமான ஆளும் தீர்த்துக் கட்டும் செயற்பாட்டையே தமது கொள்கையாகக் ெ விட்டார்.
தமிழ்ப் புலமை பெற்ற திரு. பண்டிதர் வீரகத்தியின் மூத்தபுதல் உழைப்பினால் உடல்நலம் குன்றியவர். எந்தக் கடுமையான வேை மனம்விட்டு பேசி மகிழும் ஒரு ஆழமான பாசமுள்ள தந்தை இவ
கடந்த சித்திரை மாதம் 14ம் திகதி கற்சிலைமடுவில் வைத் மாதங்களாகியும் விடுவிக்கப்படவோ எவருக்கும் காட்டப்படே புலிகளால் எதுவுமே கூறப்படவுமில்லை. திரு. சேந்தன் அவர்க ஒன்று சேர்ந்து உரத்துக் கேட்கிறோம்.
# புலிகளே! எங்கள் சேந்தன் எங்கே?
# உடனே அவரை விடுதலை செய்யுங்கள்
# அவரைப் போன்றே நீங்கள் அடைத்து வைத்திருக்கும்
ஆயிரக்கணக்கான மனச்சாட்சியின் கைதிகளையும் விடுதலை
0.0692 திரு. சேந்தன் அவர்களை அன்போடு நேசிக்கும்
தேடல் 10 30

கள்ளு இறக்குவதையே தம் ஒரே வருமானமாகக் கொண்ட முக ஆதாரசக்தியாக திரு.சேந்தன் அவர்கள் விளங்கினார் என்பது
ாகிக்க பழகிப்போன எமது மக்களுக்கு தனது சொந்த அறிவையும் யே பொன்னாக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தவா உங்களில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் பனஞ்சாராய வடிசாலை இன்றுவரை வெற்றிகரமாக இயங்குவதற்கும் இன்னும் பல ஊழியர்களுடன் கடுமையாக உழைத்தவர் திரு.சேந்தன்.
காட்டிக் கொள்ளும் புலிகள் இதிலிருந்து மட்டும் வருடத்திற்கு றனர் என்பது பலரும் அறியாத மிகக்கசப்பான உண்மையாகும்.
செய்த பின்னர் தனது சொந்த மண்ணில் செயல்படுவதே சரியானது KYLARK என்றும் பொறியற்சாலையை ஆரம்பித்து செய்பட்டார்.
Dġbol.
தனது திட்டங்களை சிந்திக்கும் இவர் தன்னோடு தொழில் செய்த
ண்பையும் இழந்து விடாது கம்பீரத்துடன் சரியை சரியெனவும ளம் படைத்த இவரை இக்கொடியவர்கள் சந்தேகித்தது ஏன்?
மையுள்ள எவரைக் கண்டாலும் சந்தேகித்து பீதியுற்று அவர்களை
காண்ட இக்கேடுகெட்ட கொடியவர்களுக்கு சேந்தனும் இரையாகி
வரான இவர் மூன்று குழந்தைகளின் தந்தை. தனது கடுமையான லச் சுமைக்கு மத்தியிலும் தன் குழந்தைகளுடன் சிறிது நேரமாவது
r.
து விசாரணைக்காக புலிகளால் கைது செய்யப்பட்டார். ஒன்றரை
வா இல்லை. இதுவரை அவரை விடுவிப்பது பற்றி தீர்க்கமாக ளை அறிந்த அவரை நேசித்த நெஞ்சிலே ஈரமுள்ள அனைவரும
செய்யுங்கள்!
நண்பர்கள்.

Page 35
ற்பு என்ற சொல்லுக்கு பல விதமான அர்த்தங்களை நாம் நமது சூழலில் இருந்தும் சமூகத்திலிருந்தும் பெற்றோம். ஆயினும் உறுதியான விளக்கத்தை அனேகமானவை கொடுக்கவில்லை. கற்பு
என்ற சொல்லுக்குப் பின்னால் கற்புக்கரசியாக ஓர் பெண்பால் பற்றிய உணர்வே எமக்குத் தோன்றுகிறது. கற்புடையவன் என்றதும் ஆண்பால் பற்றிய சிந்தணை உருவாகுதில்லை. இது எமது சமூக அமைப்பின் விளைவாகும். பெண் என்பவள் மட்டுமே ஒழுக்கத்தை நிலைநாட்ட கட்டுப்பாடாக வாழவேண்டும் என்று வாதிடும் பலரையும் இங்கு நாம் காணலாம். பெண் வலிமை குறைந்தவள். மென்மையானவள், தொழில்விஞ்ஞானம். விளையாட்டு போன்றவற்றில் ஆணுடன் போட்டியிட முடியாதவள் என்றும் கூறுவார்கள். அப்படியில்லை! சதி செய்யப்பட்டு வளர்ந்த சமூக அமைப்பே அதற்குக் காரணம் என்றும் உண்மை ஒரு புறமிக்க, பழமைவாதிகள் கூறும்வகையில் அடக்க ஒடுக்கமாக பெண்மட்டுமே வாழவேண்டும் என்று கூறும் பலர் கூட தங்களின் கூற்றுக்களை தர்மீகக் காரணமாக பெண் மட்டுமே ஒழுக்கமாக வாழ வேண்டும் என்பது பெண்களின் நல்வாழ்வுக்கே என்று முடிக்கின்றனர்.
இவற்றின் அடிப்படைக் காரணங்களாக,
உதாரணமாக திருமணத்திற்கு அப்பால் இருபாலரிடையில் புணர்தல் ஏற்பட்டால் ஆணர்களின் பாலுறுப்புகளின் அமைப்பு முறையும், புணர்தலின் பின்னர் சமூக ஒடுக்க வடிவத்திலிருந்து தப்ப உதவுகிறது. பெண்ணின் உடலில் சிசு தங்கி வளர்வதனால் சமூகக் கட்டுக் கோப்பிற்குள் சிக்குப்படுகிறாள். இதனால் பெண்ணுக்குரிய சமுக அந்தஸ்து இழக்கப்படுகின்றது. இந்நிலையில் கற்பித்தவன் என்றும் பதம் பாவிக்கப்படுகின்றது.
அதே நேரம் கற்பு பற்றிய பல வியாக்கியானங்கள் பரவலாகக் கூறப்படுகின்றது. உடலளவில் மட்டுமா கற்பு: மனத்தளவே கற்பு போதுமானது" என்றும், பலாத்காரத்தினால் கற்பிழந்தால் மன்னிப்பு உண்டு என்றும் பல. மேற்படி கூற்றுக்கள் அர்த்தமற்ற வெற்றுப் பேச்சுக்களே உஒன்மையில் இவையாவும் ஆண்களின் உளவியல் தேவையான ஆனாதிக்க நிலை நிறுத்துவே ஆகும். இந்த உளவியல் தேவையின் உருவாக்கத்தினை பின்னர் பார்ப்போம்
ஓர் பெண் ஆணின் மேல் சார்ந்து வாழ வேண்டிய தேவையுள்ள சமூக அமைப்பில் ஒழுக்கங் கெட்டவாக சமூக அந்தஸ்து இழக்கப்பட்டால் பெண்ணுக்கு அடிப்படையில் எதிர்காலத்திற்கான பொருளாதார நிச்சயமின்மை ஏற்படும். இந்நிலை பெண்ணைப்
பிரதானமாகப் பாதிக்கின்றது. மேலும் பொதுவான கலாச்சார
 

தேடல் 10
/ firi ështrris, gu ཡོད༽
அம்சங்களிலிருந்தும் விலுக்கப்படுகின்றாள். இப்படியான அநீதிகளுக்கு "கற்பு என்னும் பதம் உதவுகின்றது. இதன் மூலம் ஆணுக்குப் பெண்ணை உடமையாக்க உதவுகின்றது.
இப்படி இருக்கின்ற கற்பு எப்படி வந்தது என்பதை அறிவது நல்லது.
விலங்கு நிலையிலிருந்துதான் மனிதன் விருத்தியாகின்றான் என்ற உர்ைமையை ஏற்போமாயின் வாவில்லாக் குரங்கு நிலையிலிருந்து குழு வடிவ சமுதாய வடிவ முறைகளில் பல படிமுறையினூடே இன்றைய நாகரீக நிலையினை மனிதன் அடைந்தான். இதை வைத்துப் பார்ப்போமாகில் கற்பு என்ற நிலையும் மனித பரிணாமத்தின் இடைக் காலத்திலேயே தோன்றியதாகும். மதத்தினைப் போன்று சமூகத்தின் மற்றைய அம்சங்கள் தேவையினையொட்டியே தோன்றுவதைப் போல் கற்பும் ஒரு தேவையினையொட்டியே
உருவாக்கப்பட்டது. அது என்ன தேவை என்பதினைப் பார்ப்போம்.
மானிடப் பரிணாமத்தினை நான்கு பிரதான பாகங்களாக பிரிக்க முடியும். அந்த நான்கு பாகங்களிற்கும் நான்கு வகையான திருமண்முறைகள் அதாவது பாலியல் தொடர்பு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. 1. காட்டுமிராண்டி நிலைக்கு முந்திய நிலை-கட்டுப்பாடற்ற
புணர்ச்சி முறை
தேடல் 10

Page 36
தேடல் 10
2. காட்டுமிராண்டி நிலை - குழு மணம் (ரத்த உறவுக் குடும்பம்) 3. அநாகரிக நிலை - இணை மணம் 4. நாகரிக நிலை - ஒரு தார திருமணமுறை
மேற்பட காலகட்டப் பிரிவுகளில் நிலவிய சமுக ஒழுக்க நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் அக்காலகட்டங்களில் நிலவிய திருமண (பால் உறவு)முறைகளில் சார்ந்திருந்தன.
காட்டுமிராண்டி நிலைக்கு முந்திய நிலை
முதலாவது நிலையில் கட்டுப்பாடற்ற புணர்ச்சி நடைபெற்றது. இந்நிலை ஏறத்தாள விலங்குகளில் நிலை போன்றது. சமூகக கூட்டத்தில் உள்ள ஆண், பெண் இருபாலரும் யாரும் யாருடனும் உடலுறவு கொள்கின்ற வரைமுறையற்ற வடிவம் இது. இந்த நிலையில் மனிதன் பெரும்பாலான நேரங்களை மரங்களிலே கழிக்க வேண்டியிருந்தது. உணவுத் தேவைக்கும் பிறவிலங்குகளிலிருந்து பாதுகாப்பிற்கும், இது தரையைவிடச் சிறந்ததாக இருந்தது, மனிதன் மொழி நிர்வாகம், கலை என்பன அற்ற நிலையிலிருந்தான். இக்காலத்தில் தந்தை மகள், தாய் மகன், சகோதர சகோதரி போன்ற முறைகள் பாலுறவுகளில் தவிர்க்கப்பட வேண்டும் என்பது
கடைப்பிடிக்கப்படவில்லை.
காட்டுமிராண்டி நிலை இக்காலத்திலேதான் விலங்குகளிலிருந்து தப்பி மரங்களில் வாழ்ந்த மனிதன், ஆற்றுப்படுக்கைளின் மூலம் உலகின் பல பாகங்களிற்கும பரவினான். அத்தோடு கற்கருவிகள் பாவிப்பதற்கு மனிதன் கற்றுக் கொண்டதுடன் தீயுண்டாக்கி வேகவைத்த உணவினை உண்பதற்கும் பழகிக் கொண்டான். வேட்டைத் தொழிலும் வில் அம்பு போன்ற ஆயுதங்களும் விருத்தியடைந்தன. இக்காலங்களில மனிதன் அனேகமாக உலகின் உஷ்ணப் பிரதேசங்களிலேயே வசித்து வந்தான்.(மனிதன் தோன்றியதும் யூப்பிரதீஸ், தைகிறீஸ் நதிக் கரையோரங்களிலேயே அதாவது உஷ்ணப்பிரதேசங்களிலேயே என்று ஆய்வுகள் கூறுகின்றன.)
அநாகரிக நிலை
மனிதனின் எண்ணிக்கையானது இக்காலத்தில் கணிசமான அளவு அதிகரிக்கத் தொடங்கியது. இதன்போது மட்பாண்ட உற்பத்தி, பயிர்ச் சாகுபடி, மந்தை வளர்ப்பு போன்றவை விருத்தியாயின. காய்ந்த செங்கற்கள் மூலம் உறைவிடம் அமைக்கும் வழக்கம் இந்தக் காலத்தில் உருவாகியது. கால்நடைகள் மந்தைகளாக வளர்க்கப்பட்டு பயன் பெற்றதன் விளைவாக அதிக அளவு புரத உணவு உண்ணக் கூடிதாக இருந்தது. இதன் விளைவாக மனிதனின் தோற்றமும மூளைவிருத்தியும் சிறப்படைந்தன. இந்நிலையின் கடைக் கட்டத்தில் இருப்புக் கனியம் கண்டு பிடிக்கப்பட்டு கத்தி, கோடரி போன்ற பாவனைப் பொருட்களின் விளைத்திறன் வளர்ச்சியடைந்தது. மேலும் சிறப்பான ஓர் விடயம் தோன்றியது. அதாவது வரி வடிவத்தில் எழுத்துக்கள் உருவாகி மொழி, இலக்கியம்
என்பனவற்றின் ஆரம்ப வடிவங்கள் தோன்றின.
தேடல் 10

நாகரீக நிலை இக்காலத்தின் ஆரம்பநிலையானது இன்றைய மக்களின் விருத்தியுறாத நாகரீகமடையாத கலாச்சாரத்தைக் கொண்டிருந்தது. இக்காலத்தில் படிப்படியாக சிறிய அளவிலான நிர்வாக முறைகள பெரிதாகின. அதேவேளை சமூகங்களிடையே பெருமளவில் தொழிற பிரிக்கை ஏற்படுத்தப்பட்டது. மக்களிடையே பொருளாதார ஆசை அளவுக்கு அதிகமாகியது. இதனால் குழுவாகச் செல்வம் சேர்த்த மக்கள் பிரிவுகளாகி பின்னர் மேலும் குறுகி இறுதியில் ஒருவர், இருவர் என தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் புதிய சட்ட நீதிகளும் ஒழுங்கு முறைகளும் சமூக நிர்வாக அமைப்புகளுக்குள் தோன்றின.
இந்த வகையிலே மக்களிடையே படிப்படியான வளர்ச்சியானது உருவாகியது. காட்டுமிராண்டி நிலையில் இறுதி நிலை வரைக்கும மனிதர்களிடம் சொத்தையோ, செல்வத்தையோ சேர்க்கும் தேவை இருக்கவில்லை. ஏனெனில் அன்றைய பிரதான தேவைகளை மனிதன் நேரடியாகவே பெற்றான். உதாரணமாக உணவுவகை, பாதுகாப்பு, உறைவிடம் போன்றவை. எனவே இக்காலம் வரைக்கும உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடையவில்லை. உற்பத்திச் சக்திகளாகப் பெண்களுக்கும் ஒரே உற்பத்திப் பொருளாக குழந்தைகளுமே இருந்தனர். எனவே பெண்களிடம் தலைமை அதிகாரம் இருந்தது. சமூக பரிணாமத்தின் எந்த நிலையிலும உற்பத்தி சக்திகளே தலைமைஅதிகாரத்தை கைப்பற்றியிருந்தன என்பதை வரலாற்றிலிருந்து கண்டு கொள்ளலாம். இதுவேதான ஆரம்பத்தில் தாய்வழிச் சமூக அமைப்புத் தோன்றக் காரணமாகியது.
பண்டைச் சுமூக மனிதனின் உற்பத்திக் கருவிகளின தோற்றமும் அவற்றின் வளர்ச்சியும் படிப்படியாக தொழிற்திறனை ஏற்படுத்தியது. இதன் விளைவாக மந்தை வளர்ப்பு பயிர்ச் சாகுபடி வேட்டைத தொழில் விருத்தி என்பன பண்டை மக்களுக்கு செல்வத்தையும சொத்தையும் விளை நிலங்களையும் சேர்க்க உதவியது. மேற்படி சேர்ந்த சொத்துக்கான போட்டியில் பரந்த சமூகமான மக்கள பிளவுபட்டு தொடர்ச்சியாக குறுகி வந்து இறுதியில் ஒரு ஆண் ஒரு பெண் என்னும் அளவுக்கு வந்து சேர்ந்தது. இந்த ஒரு ஆண ஒரு பெண் என்னும் குடும்ப அமைப்பு கொண்ட சமூக அமைப்பில் மக்கள் தனிச் சொத்தினை சேர்ப்பதில் மிகவும் பேரார்வத்தைக
கொண்டிருந்தனர்.
மேற்படி நிகழ்வானது நடக்கும் போது தாய்வழிப் பெண்ணுரிமை பறிக்கப்பட்டு ஆணாதிக்கம் வளர்ச்சியடைந்தது. பெண்களை அடிமைகளாக்குவதற்கு எவ்வகையில் தனிச் சொத்தின் வளர்ச்சி கற்பு ஒழுக்கவியல் போன்றவற்றை பெண்களின் மேல் செலுத்தி ஆணாதிக்கத்தை ஏற்படுத்த உதவியது. இதனைப் புரிந்து கொள்வதற்கு அந்தக்கால சமூக அமைப்பில் நிலவிய திருமண அம்சங்களை அதாவது ஆண் பெண் சேர்க்கையை மீண்டும பகுப்பாய்வு செய்தால் புரிந்து கொள்ளலாம்.
காட்டுமிராண்டி நிலைக்கு முந்திய நிலையில் நடைபெற்ற
வரைமுறையற்ற பாலியல் ச் சேர்க்கைக்கு அடுத்தபடியாக
32

Page 37
காட்டுமிராண்டி நிலையில் இரத்த உறவுக் குடும்பங்கள் உருவாகின. இது வரைமுறையற்ற சேர்க்கை தவிர்கப்பட்டதன் முதல் படியாகும். ஆரம்பத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான சேர்க்கைகள் தவிர்க்கப்பட்டன. ஆனால் சகோதர சகோதரிகளிடம நடைமுறையிலிருந்தது. பின்னர் வளர்ச்சிப் போக்கில் சொந்தச சகோதர சகோதரிகளிடம் தவிர்க்கப்பட்டு தொடர்ந்து ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகளிடமும் தவிர்க்கப்பட்டது. இந்நிகழ்வுகள் குடும்பங்களில் இயல்பான எண்ணிக்கை அதிகரிப்பாலும் வாரிசு உரிமை, அடுத்த தலைமை அதிகாரத்துவம் போன்றவற்றை யாரிடம
ஒப்படைப்பது என்ற விடயங்களினால் ஏற்பட்டவையாகும்.
அநாகரீ நிலையில் வகுப்புப் பிரிவுகளிடம் திருமணம் அல்லது குழுமணம் போன்றவை காணப்பட்டன. ஒரு சமூகத்தில் உள்ளவர்கள் இரண்டாகப் பிரிகின்றனர். இந்த நிலையில் அக்காலத்துச் சட்டவிதிகள் ஒரு குழுவிலுள்ள ஆண்கள் அதே குழுவில் உள்ள பெண்களுடன் இணைவதை அல்லது திருமணம் செய்வதை தடைசெய்கின்றன. ஒவ்வொரு குழுவில் உள்ள ஆண அல்லது பெண் அடுத்த குழுவிலுள்ள ஆணி அல்லது பெண்ணுடன்தான் இணைதல் வேண்டும். இதன்போது பிறக்கும் குழந்தைகள் தாய்வழிக் குழுவில் சேர்க்கப்படுகின்றன. அல்லது மூன்றாவதாக நாலாவதாக உள்ள குழுக்களில் சேர்க்கப்படுகின்றன. மேற்படி நிகழ்வுவிருத்தி கூடிய குழந்தைகளை உருவாக்க உதவியது. குழு மணம் நிலவிய காலத்தில் பிறக்கும் குழந்தைகள் தாய்வழி முறையில் அடையாளம் காணப்பட்டு தாய்வழிக் குழுக்களில் சேர்க்கப்பட்டதால் தாய் வழி வாரிசு திறமையை பெற்றன. இக்குழுமணத்தின் இறுதி நிலை வரைக்கும் தாய் மூலம் குழந்தையின் பரம்பரை அடையாளம் காணப்படுதல் நடைபெற்றது. அடுத்த கட்டத்தில் இந்த தாய்வழி உரிமை பறிக்கப்பட்டது. இவை வரலாற்றின் பெண்ணுரிமை பாதிக்கப்பட்டதின் மிகப் பெரிய திருப்பு முனையாகும்.
அடுத்த கட்டமாக இணைமண முறை தோன்றியது. குழுமணம் நிகழ்ந்த காலத்தில் தொடர்ந்து குழுக்களின் எண்ணிக்கையாலும் மனிதர்களின் தொகையாலும் விரிவுபட்டுக் கொண்டே சென்றது. இதனால் குழுமண வடிவம் தொடர்ந்து பேணப்படுவது கடினமாயிற்று. இதே நேரத்தில் இரத்த உறவினர்களிடம் உறவு கொள்வதோ அல்லது திருமணம் செய்வதோ தடை செய்யப்பட்ட நிலையில் இணைமணம் என்னும் முறை தோன்றியது. இந்த நிலையில் ஒருதார மணமுறையின் ஒர் இறுக்கமற்ற தளர்ச்சியான நிலையாகும். இக்காலத்தில் முதன்முதலாக பெண்ணை ஓர் ஆண் தவிர வேறு ஆண்களுடன் சேர்தலை கட்டுப்படுத்த முயற்சி நடந்தது.
ஒருதார மணமுறைக்கு மேற்படி இணைமுறைக் காலத்தில் அத்திவாரமிடப்பட்டது. இக்காலத்தில் ஓர் ஆணுக்குள்ள பல மனைவியர்களுள் ஒருத்தி பிரதான மனைவியாகிறாள். அதேபோல ஓர் பெண்ணுக்குள்ள பல கணவர்களுள் ஒருவன் அவளுக்கு பிரதான கணவணாகிறான். அதாவது குறுகிய காலத்திற்கோ அல்லது நீண்ட

தேடல் 10
காலத்திற்கோ ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழவேண்டிய நிலை ஏற்படுகின்றது. இக்கட்டத்தின் பிற்பகுதியின் பெண்களிடம் கற்பு நெறி சமூகத்தினால் கோரப்படுகிறது. அதேநேரம்தான் உலக வரலாற்றில் பெண்ணுரிமை பறிக்கப்பட்டு ஆணாதிக்கம் உருவாகிய பெரும் திருப்பு முனையாகும். கற்பு நெறி பெண்களுடன் கோரப்பட்டதால் ஒருவனே கணவனாக அடையாளம் காணப்பட்டான். அதேவேளை பிறக்கும் குழந்தை தாய் வழி அடையாளம் காண்பது மாற்றப்பட்டு தந்தை வழி அடையாளம் காண்பது உறுதியாக்கப்பட்டது. வீட்டில் ஆட்சியதிகாரத்தை ஆணி கைப்பற்றியதால் பெண் இழி நிலைக்கு தள்ளப்படுகிறாள். வீட்டில் பெண் பணிமகளாக்கப்பட்டதுடன் ஆணின் காம இச்சைக்கும்,
குழந்தை பெறும் சாதனமாகவும் ஆக்கப்பட்டாள்.
இதே காலங்களில் ஆணின் முக்கியத்துவம் அதிகரித்ததன் காரணத்தையும் பார்ப்போம்.மனித சமூகத்தில் தனிச் சொத்தின் உருவாக்கத்தோடு தொழிற் பிரிக்கையும் உருவாகியது. வீட்டிற்கான பொருட்களைச் சேர்த்தல, உணவு தயாரித்தல். குழந்தை பராமரித்தல
போன்றவை பெண்களால் செய்யப்பட்டது. உணவுப் பொருட்களைச்
சேர்த்தல், வேட்டையாடல், மந்தை வளர்த்தல், இத்தொழில்களுக்கான கருவிகள் தயாரித்தல் போன்றவை ஆண்களால் செய்யப்பட்டது. மேற்படிதொழிற் பிரிக்கையால் இருவகைப்பட்ட பயன்பாடுகளும பொருட்களும் ஆண்கள் பொறுப்பிலும் பெண்கள் பொறுப்பிலும் பிரிக்கப்பட்டன. குறிப்பிட்ட காலப்பகுதி வரையிலும் மேற்படி பொருட்பிரிவுகளின் அளவு மிகவும் அற்பமாகவே காணப்பட்டன. ஏனெனில் மனித உழைப்பு சக்தியானது தனது தேவைக்கு மேலதிகமான உபரியை உற்பத்தி செய்யவில்லை. ஆனால் கால்நடை விருத்தி உலோகப் பொருட்களிலான பொறிகளின் பாவனை, துணி நெசவுத் தொழில் போன்றன புகுத்தப்பட்டவுடன் மனித வாழ்க்கைமுறை மாறத் தொடங்கியது. ஓர் நிலையில் அடிமைகளைக் கொண்டு வேலை செய்விக்கும் முறையும் இருந்ததால் அதிக உபரியைத் தரக்கூடிய வகையில் பொருட்களும், சொத்துக்களும் குவியத் தொடங்கியது. குவிந்த பொருட்களும், சொத்துக்களும அநேகமாக ஆண்கள் சார்ந்த தொழிற்பிரிவின் விளைவாகவே இருந்தன.
இதனால் மந்தைக்கூட்டங்கள். விளைநிலங்கள், சாகுபடி, உற்பத்திக் கருவிகள், குவியலான உபரி போன்றவையின் அதிகரிப்பு ஆணுக்கான முக்கியத்துவத்தை உருவாக்க ஆரம்பித்தது. மேற்படி தனிச் சொத்து உபரி போன்றவற்றின் வளர்ச்சி வேகத்துக்கு ஈடாக மனித சமூகத்தின் எண்ணிக்கையும் குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. இப்படி உருவாகிய தனிச் சொத்தினால் வாரிசு உரிமையின் முக்கியத்துவம் அதிகரித்தது. அதாவது ஓர் ஆண் தனது சொத்துக்களை தனது சொந்த வாரிசான குழந்தைகளுக்கே வழங்க விரும்புகிறான். இக்கட்டத்தில தாய்வழி வாரிசு உரிமை மறுக்கப்பட்டு தந்தை வழி வாரிசு உரிமை தோன்றியது. இத்தந்தை வழி வாரிசு உரிமை உருவாவதற்கு அடையாளம் காணப்படக் கூடிய இயற்கையான தந்தையை
தாயக்குப் பக்கத்தில் நிறுத்த வேண்டிய தேவையே வரலாறு
33
கேடல் 10

Page 38
பெற்றது. இந்த ஒரே இயற்கையான தந்தையை நிறுவுவதற்கு தாயிடம் "கற்பு’ எனும் ஒழுக்க வடிவம் மிகவும் கண்டிப்புடன கோரப்பட்டது. இதுவே உலக வரலாற்றில் கற்பு பிறந்த கதையாகும்.
உபரி தனிச் சொத்து என்பனவற்றின் தோற்றமும் ஆணாதிக்கத்தின் ஆணி வேரான கற்பின் தோற்றமும் இரண்டறக் கலந்தவையாகும். இவை ஒன்றில் ஒன்று சார்ந்திருப்பது தவிர்க்கவியலாததாக உள்ளது. கற்பின் தன்மைகள் என்று எதுவுமே பொருளியல் உண்மைகளுடன் இல்லை. உடலியளவிலும் இல்லை. கற்பு தேவையினை ஒட்டி உருவாகிய ஒர் கற்பனாவாதம். கடவுளைப போன்றது. ஆணாதிக்கத்தின் மூலகாரணியான கற்பு உபரி, தனிச சொத்து ஆகியவற்றுடன் இணைந்தே உருவாகியதால் உபரி, தனிச சொத்து ஆகியவற்றின் அழிவிலேயே ஆணாதிக்கமும் முழுமையாக ஒழிக்கப்படும்.
"கற்பு ஒழுக்கம்" என்று குறிப்பிடுவது இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பில் உள்ள குடும்பங்களில் நிலவுகின்ற பெண்மீது மட்டும் பிரயோகிக்கின்ற கருத்தியலையே குறிப்பிடுகின்றது. ஏனெனில இக்குடும்பங்களில் ஆணாதிக்கமும், ஆண் மீதான பொருளாதார சார்பு நிலையும் நிலவுகின்றன.
ஆணாதிக்கமும் பொருளாதாரச் சார்பு நிலையும் அற்ற ஓர் நிலையில ஓர் ஆணும் இயல்பான தேவையொட்டி சேர்ந்து வாழும் நிலையில யதார்த்தமான குடும்பமொன்று தோன்றும். அங்கே "கற்பு என்கின்ற கற்பனாவாதமிக்க புனிதத் தன்மை எதுவும்தேவையற்றதாகின்றது.
- சவிம் -
முதலைக் கணண்ணிை ஒத
gett exist Ei ஜனகேத்திரன்ை :ே2
தென்னிந்திய வியாபார
சினிமாவில் தரமான F
படங்கணர் இய்க்கியாலு மகேந்தி க்களின் தனை வியாபார சினிமா
திருட்டுத்தனங்களுட்ன்: இங்கு முரண்படுகிறார்
சம்பந்த
"திரைப்படத்தை ஒரு முழுமையான வடிவமாகப் பார்க்க வேண்டும். காட்சி, நடிப்பு, உரையாடல், பாட்டு , இசை என்று தனித்தனியாகப பிரித்து, - பிய்த்துப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. விமரிசனம் செய்யும் போது வேண்டுமானால் மேலோட்டமாக இப்படி ஒவ்வொரு அம்சத்தையும் பிரித்தெடுத்து அலசலாம். படம் பார்க்கம் போது அதை ஒரு முழமையான படைப்பாகவே பார்க்க வேண்டும்.
தேடல் 10
 

தேடல் 10
மக்கள் ரசனை’ என்பது, மக்கள் பிறக்கும் போதே அவர்கள் கொண்டு வந்த ஒரு விஷயமல்ல. மாறாக நம்மால் அவர்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட ஒரு விஷயம்.
நமது சுயநல நோக்கங்கள் கருதி பிடிவாதமாக, பிரக்ஞைபூர்வமாக ஒரு மட்டமான ரசனையை அவர்கள் மத்தியில் (நமது மட்டமான படைப்புகளால்) நாம் உருவாக்கிவிட்டு, அவர்கள் இதைத்தான விரும்புகிறார்கள் என்று அவர்கள் மீது பழியைச் சுமத்துவது வடிகட்டின அடாவடித்தனம் . . சுத்த ஹம்பக்.
போதைப் பொருட்களுக்கு அடிமையாக்குவதைப் போல மக்களை நமது மட்டமான படங்களுக்கு அடிமைகளாக்கி வைத்திருக்கிறோம். அது எங்களுக்கு லாபகரமாக உள்ளது. சினிமா மட்டுமல்ல; மக்களைச் சென்றடையும் நாடகம், பத்திரிகைகள், அரசியல் எல்லாவற்றையும் கொண்டுதான் மக்களின் ரசனையை நாம் காயடித்து வைத்திருக்கிறோம். எல்லோரும்தான் குற்றவாளிகள். தனது மேம்பட்ட ரசனையின் அளவுக்கு மக்கள் ரசனையை உயர்த்திவிட வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுவதான்தான் ஒரு நேர்மையான படைப்பாளி. மக்கள் ரசனையை வளர்த்துவிட்டால் தமது பிழைப்புக்கு ஆபத்து வந்து விடும் என்றுதான நாடகக்காரர்கள், சினிமாக்காரர்கள், பத்திரிகைக்காரர்கள், அரசியல்வாதிகள் எல்லோரும் நினைக்கிறார்கள். இது வடிகட்டின சுயநலம்.
'லிரில் சோப் விற்பதனைப் போல நான் சினிமா விற்கிறேன்' என்று சொல்கிறார் ஒரு இயக்குனர். அவரைப் போன்றவர்களுக்கு ஒரு படைப்பு என்பது கருவாடு மாதிரி, கத்தரிக்காய் மாதிரி - சந்தையில் விலைபேசி விற்கப்பட வேண்டிய மற்றுமொரு பண்டமே. A Mere Commodity
வேலியோரத்து குரோட்டன்ஸ் செடிகளை அவ்வப்போது வெட்டி ஒரே உயரத்தில் வைப்பதைப் போலத்தான் மக்கள் ரசனையையும் நாம் ஒரே மட்டத்தில் வைத்திருக்கிறோம். அதற்கு மேலே வளர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாகவும். எச்சரிக்கையாகவும்
இருக்கிறோம்.
நிலைமை இப்படியிருக்க, மக்களுக்கு ரசனை சரியில்லை . எனவேதான் அந்த மட்டத்துக்கு நாங்கள் கீழே இறங்கி வர வேண்டியிருக்கிறது என்று முதலைக் கண்ணிர் வடிப்பது திருட்டுத்தனம், தீர்மான திருட்டுத்தனம். மக்களின் ரசனையை மட்டமாக வைத்திருப்பது நாம்தான். . மக்களல்ல.
நாமெல்லாம் சேர்ந்து ஒரு இயக்கமாக - ஆரோக்கியமான பொழுதுபோக்குப் படங்களை, கலையம்சம் கொண்ட பொழுதுபோக்குப் படங்களை, சமூக உணர்வு கொண்ட பொழுது போக்குப் படங்களை, மனிதநேயம் பேணும் பொழுதுபோக்குப படங்களை, அவர்களுக்குத் தொடர்ந்து கொடுத்துப் பார்ப்போமோயானால், அவர்களது ரசனை உயரும்; நிச்சயம் உயரும். இது நாமெல்லாம் சேர்ந்து செய்ய வேண்டிய விஷயம். ஒருவர் இரண்டு பேர் மட்டும் செய்தால் போதாது."
ஒரு பத்திரிகைப் பேட்டியில்

Page 39
گشتقاقیقت
குண்டுகள் துளைத்த குழிகளில் குந்தி இன்னும் வெப்பம் ஆறாத குண்டுகளின் உருக்குக் குவளையில் உதடுகள் பதித்து உப்புக் கஞ்சியை உதிரத்தின் உருசையுடன் உறிஞ்சும் உன்னைத்தான் தோழா . . 1 என்னைத் தெரிகிறதா உனக்கு . . ?
வானமே இடிந்து வையத்தில் வீழ்ந்தாலும் அதிலும் ஓர் வாழ்வின் தேடலுக்காய் இன்னும் வாடாமல் இருக்கும் உன் இமைகளை உயர்த்தி என்னைக் கொஞ்சம் பார் ,
புதிய எம் பூபாளத்திற்காய் பொறுத்திருக்க மாட்டாமல்,புது வாழ்வு என்றெண்ணி ஓர் புகலிடம் ஓடிய என் புறமுறகை நீ வெறுப்புடன் பார்ப்பது தெரிகிறது .
வெறும் மனிதன் நான் என்னை வெறுக்காதே உணர்வுகள் எதுவுமின்றி உயிர் வாழ்தலுக்காய் மட்டும் உடலும், , உயிருமிங்கு ஊசாலாடுவது உனக்கு எப்படித் தெரியும் . . . ?
இங்கு உண்ண உணவுண்டு,உடுக்க உடையுண்டு ,
உறவுக்குப் பலுவுண்டு ஆனால் என் உணர்விற்கு உயிரில்லை ,
இருளும் உலகும் உறவுகொள்ளும் ஓர் வேளையிலே ,
உன்னை எண்ணி என் நினைவுகள் ஓடோடி வருகின்றன .
இப்போ உன்னைப் போல் நெடிதுயர்ந்த ஓர் மரத்தடியில் நீ , வேர்களைத் தலையணையாய்

தேடல் 10
துமுக்கியைக் காதலியாய் அரவணைத்தபடி , , , , காரிருள் கூடிய ஓர் காட்டு நிசப்தத்தில் சில் வண்டுகளின் சிணுங்கலை இசையாகக் கொண்டு இன்னும் விடுதலைப் பாடலை நீ எழுதிக் கொண்டிருப்பாய் ,
தோழா , !
உன்னையும் என்னையும், ஒரே மண்தான் பெற்றது ஆனால் நான் மட்டும் ஏன் இப்படி , , ? என்னை மட்டும் எண்ணியபடி,
வேலியில் ஒடிய பச்சோந்தி மீது கல்லெறிந்து ஓர் நாள் நீ சொன்ன வார்த்தைகள் , , "சீ என்ன பிறப்புகளோ ? வேண்டிய மாதிரி நிறம் மாறிக் கொண்டு
உண்மைதான் தோழா , உலகு ஒன்று ஆனால் சிருஷ்டிகள் உறுதியான ஆலமரமாய் நீ , , உக்கிப் போகும் முருங்கையாய் நான் , நிர்வாணமான நிஜமாக நீ , , ஆடம்பரமான போலியாக நான் . .
இங்கு விலையுயர்ந்த என் கார் மீது விழுந்த வெண்பனித் துகள்களை நான் சுரண்டிக் கொண்டிருக்கும் போது , , , , விலை மதிக்க முடியாத எமது மண்ணை புதிய தேடலுக்காய் நீ கிளறிக் கொண்டிருப்பாய் , , ,
உணர்வுகளற்ற என் தேகம் இங்கு உறைந்து போகும் , , , , அங்கு , , வெற்றியின் விளைவால் உன் தேகத்தில் வியர்வை சிரிக்கும் . . . . . 2
- சபா வசந்தன்
தேடல் 10

Page 40
இருப்பு
சகாப்தன்
எல்லோர்க்குமான இப்போதைய இருப்பு தொலைந்தது. வெண்பனியும், செந்நிறமும் கடல் கொண்டு போயிற்று. யுத்தமும், வதையும் முரண்படுதலும் நிகழ்வாயிற்று.
சூரியன் மறைந்த மரத்தின் நிழல் பிசாசாயிற்று. நியாயம் தெரிந்ததன் முடிவு பரிதாபமாயிற்று. உண்மைகளும், உடல்களும் நிலம் வெடித்து அதற்கு உரமாய்ப் போனது.
அன்பு நேசம், பாசம் எவையும் தேவையற்று போயிற்று. குண்டு, கத்தி, பொல்லு இவையின் அவசியம் அதிகமாயிற்று ஒரு குழந்தையின் சிரிப்பை நசிக்க முடியாமலுள்ள
இந்த இருப்பில் வாழ்வின் அர்த்தம் பயனற்று போயிற்று.
எல்லாத் தேசங்களும் வெளிச்சத்திலும், மகிழ்ச்சியிலும் வாழ்வதற்கான நனவொன்றிற்காக நம்பிக்கையில் காலம் போய்க் கொண்டிருக்கிறது.
தேடல் 10

தேடல் 10
imLFlbum allgässt auflasch
கடலுக்கும் மலைகளுக்கும் இடையில் நான் கடலினுள் திமிலங்கள் மலைகளின் கீழ் கருங்கற்கள் சில வினாடிகளுக்குள் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்து என் தீர்ப்பை எழுத வேண்டியவள் ஆகிறேன்.
இன்று நான் ஒரு குற்றவாளி நேற்று நான் நிரபராதிதான் குற்றவாளிகள் நிரபராதிகளிற்கு தண்டனையளிக்கிறார்கள்.
நான் தொடர வேண்டிய ஆணின் பாதங்கள் தொடரப்படாததால் என் பாதையில் முட்கள் துாவப்படுகின்றது.
என்முதுகெலும்புகள் வளைய மறுப்பதால் சமுதாயத்தால் ஊனமாக்கப்படுகிறேன் பறக்க எத்தனிக்த என் சிறகுகளில் சேறு பூசப்படுகின்றது.
என் அடையாளங்கள் சிதைக்கப்படுகின்றது என் முகவரி அநாதையாக்கப்படுகின்றது என் மூக்குத் துவாரங்களின் ஓட்டை அடைக்கப்படுகின்றது
அதோ என் சிலுவை இழுத்து வரப்பட்டுள்ளது மன்னிப்புகள் என் வாழ்வில் ரத்து செய்யப்பட்டு விட்டதாம் இப்போது என் சுவர்கள் தகர்க்கப்பட்டு "பெண்" என்று எழுதப்பட்ட பலகை என் கழுத்தில் மாட்டப்பட்டது
நான் ஒரு பெண்; பிறப்பிக்கப்பட்டேன் இன்று கொலை செய்யப்படுகிறேன். நாளை மறுபடியும் பிறப்பிக்கப்படுவேன் ஆனாலும் என் மரணம் தற்கொலை என்று அடித்துச் சொல்கின்றது இந்த சமூதாயம்
ஆனாலும் என் இதய துடிப்பு ஓயாது எழுந்து நிற்கும் என் மனம் மலையை விட உயரமாக . . . . மலர்களை விடப் புதிதாக . . . . இடியை விடப் பலமாக . . . படர்ந்து நிற்கும் ஆலமரம் கிளைகளை வெட்டிவிட்டாலும் ! பூமிக்கடியில் விழுதுகள் வேரூன்றும் மறுபடியும் நான் உயிர்ப்பேன் போராடுவதற்காக மட்டும்
- muros? --
3

Page 41
மணிரத்தினம் என்று சொன்னால் சட்டென ஞாபகத்திற்கு வருவது
நாயகன்தான் பழைய எதிர்பார்ப்புடன் "ரோஜா' படம் பார்க்க சென்றவர்களுக்கு மணிரத்தினத்தினிடமிருந்து செருப்படிதான் கிடைத்தது. காஷ்மீரில் அரசை எதிர்த்து போராடி வருபவர்களை பயங்கரவாதிகள், கிரிமினல்கள் என்றும் இராணுவமானது மக்களின் பாதுகாப்புக்காய் இவர்களை ஒழித்து வருகின்றது என்பதுமே இவர் இப்படத்தில் சொல்ல வந்த விடயங்கள். நாமும் கிட்டத்தட்ட இது போன்றே ஒரு பிரச்சினையினால் பாதிக்கப்பட்டே இங்கு அகதிகளாக வந்துள்ளோம். எப்படியிருக்கும் இந்த அப்பட்டமான பொய்! எதுவாயினும் மணிரத்தினத்தின் பருப்பு இலங்கைத் தமிழ் பேசும் மக்களிடம் அவியப் போவதில்லை.
71ம் ஆண்டு ஜே.வி.பி. யினரின் கிளர்ச்சியை இந்தியப் படைகள் துணை கொண்டு அடக்கிய இலங்கை அரசு அவர்களை பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம் செய்த போது பெரும்பாலான தமிழர்கள் அதை நம்பி ஏமாந்தது உண்மை. ஆனால் 83ம் ஆண்டில் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக ஆயுதம் தாங்கி அரசை எதிர்த்த குழுக்களை அரசு ”பயங்கரவாதிகள்" 66 வர்ணித்த போதுதான் தமிழ் மக்கள் திடுக்கிட்டு விழித்தனர். இது போன்ற விடயங்களைத்தான் அரசுகள்
"பயங்கரவாதம்” என்று பிரச்சாரம் செய்கின்றது என்பதையும் புரிந்து கொண்டனர். 87க்குப் பின
 
 

தேடல் 10
மணிரத்தினத்தின் GšJTSegnT6ALS LUUŠles JTOSAITISCALFS
இந்திய இராணுவத்தின் சுயரூபத்தை உணர்ந்து கொள்ள தமிழ் பேசும் மக்களுக்கு வாய்ப்பு கிடைத்ததுதுடன், இவர்களால் பாதிக்கப்பட்ட எவரும் தனது சாவு வரைக்கும் இவர்களை மறக்க மாட்டார்கள்.
இந்திய அரசு உயர் வர்க்க நலன்களை மட்டும் முக்கியப்படுத்தி அவர்களுக்கு பாதகமானவர்களை அடக்கியும் வருகிறது. அந்த உயர் வர்க்கத்தைச் சார்ந்தவர்களுக்காக வக்காலத்து வாங்கி அரசியல் உரிமைகளுக்காக போராடுபவர்களை பயங்கரவாதிகள என்று பிரச்சாரம் செய்வது ஆச்சரியமானதல்ல. ஆனால் மணிரத்தினம் தான் யார் என்பதை ரோஜா வின் மூலம் அடையாளம் காட்டிவிட்டர். தினகரனும், டெய்லி நியூசும் செய்த வேலையைத்தான இவரும் செய்திருக்கிறார்.
கேரள, மேற்கு வங்காள மாநிலங்களில் உள்ள அரசியல் சமூக சூழலினால் ஆரோக்கிய மாநிலங்கள் வருகின்றன. இயக்குனர்கள தயாரிப்பாளர்களுக்கு அடிமையாக இல்லாமல் சுதந்திரமாக தாம்
விரும்பியவற்றை வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் தமிழகத்தில் திரைப்படம் என்பது புடவை உற்பத்தி போல் ஏதோ அது ஒரு பொருள். போட்ட காசுக்கு லாபம் வந்தால் சரி என்கின்ற நிலைமையே இருக்கின்றது. 80 களில் இந்த நிலைமைக்குள் ருத்தரைய்யா, மகேந்திரன்.பாலுமகேந்திரா. சக்தி, பாரதிராஜா. குரீதர் ராஜன் போன்றவர்கள் தலையெடுக்க முயற்சி செய்தும் முடியவில்லை. ஆனால் பாலுமகேந்திரா மலையாளத்தில்
மம்முட்டியை வைத்து எடுத்த “யாத்ரா" பெரும் வெற்றியையும விருதையும் பெற்றது. இது தமிழில் எடுக்கப்பட்ட போது பார்க்கலே சகிக்க முடியாமல் இருந்தது. இந்தச் சூழல் மாறும் வரைக்கும இயக்குனர்களும் டிஷ்யூம், டிஷ்யூம், டுமீல் டுமீல் , , , , ஆ ஊ . யம்மா, கண்ணிர் வரவழைக்கும் சோகக் காட்சிகள், திடுக்கிட வைக்கும் கற்பழிப்புகள் என்று கிளிப்பிள்ளைகள் போல் சுத்திச் சுத்தி சுப்பற்றை கொல்லைக்குள்தான் நிற்க வேண்டியிருக்கும்.
இந்தியாவில் பல விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு பகுதி ஒன்று உண்டு. படித்த வசதி உள்ள இந்தப் பார்ப்பனக் கூட்டம்(பிராமணர்) இந்திய அரசு இயந்திரத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். மத்திய உளவுத் துறை, வைத்தியம், தொழிற்துறை உற்பத்தி, அரசு நிர்வாகம், சட்டம், கலை இலக்கியம் போன்ற பல துறைகளிலும் இவர்களின் வசதி வாய்ப்புகள் 85 Πυ 6δοτιΟ Πξ5 இவர்களே முன்னணி வகிக்கிறார்கள். இதனால் கலை இலக்கியத்திலும் தங்களின் நலன்களை வி
முக் கியப்படுத்துதல் எளிதாகி
37

Page 42
விடுகிறது. திரைப்படத் துறையில் இவ்வாறான ஒருவர் திறமான டைரக்கடர் என்று அழைக்கப்படும் பாலச்சந்தர். தான் இயக்குனராக
சில
படங்களும் மற்றும் தனது பெயரைப் போடத் தயக்கமான, சீரழிந்த விடயங்களை "கவிதாலாயா" (இவரின் சொந்தப்படக் கொம்பனி) என்ற பெயரிலும் எடுப்பார். போராட்டம் என்று சொன்னாலே இவர்களுக்கு ஒரு கிலி அதை வன்முறையாகவும் கிரிமினல் செயலாகவும் பயங்கரவாதமாகவும் திரிப்பதில் படு எத்தர்கள்.
உதாரண த திற கு புன்னகை மன்னன்’ படத்தை எடுத்துக் கொண்டால் தமிழ்ப் போராளிகளை எடுத்துக் கொண்டால் தமிழ்ப் போராளிகளை அசல் கிரி மி ன ல க ள |ா க மனிதாபிமானம் அற்ற பயங்கரவாதிகள் என்று அப்பட்டமான பொய் சொல லியிருநதார் . போராளிகள் குழுக்க ளிடம் தவறுகள் இருக்கின்றன. தவறை யும் சரியையும் இவர்கள சொல்லமாட்டார்கள்.
உண்மையைச் சொல் வதாக ஒரு சரியைச் சொல்லி ஒன்பது
காஷ்மீர் மக்களை சுற்ற அரங்ே
பிழையைச் பெரிதாகச் சுட்டிக்காட்டி இரசிகனின்
தேடல் 10
 
 

ம ன நி  ைல யி ல கடைசியாக இவன் பிழையானவன் என்ற அபிப்பிராயத்தை ஆணி அடித்தால் போல பதிய வைக்கிற ஆளுமை இவர்களிடம் உண்டு. மாறிவரும் சமூகச் சூழலில் தமது அந்தஸ் த்தை நிலை நாட்டிக் கொள்ள பண்பாடு கலாச்சாரம் என்ற பெயரில் இவர்கள் மனித சமூகப் பிரிவுகளுக்குள ஏற்றத் தாழ்வுகளைப் பேணு வதற்கு செய்யும் குயுக்திகள் கொஞ்ச நஞ்சமல்ல. 'அபூர்வ ராகம்’ இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இதன் நியுவேவ் ரீமேக்தான் புதுப்புது அர்த்தங்கள்
சுஜாதா, பாலச்சந்தர், மணிரத்தினம் என்ற மூன்று பிராமணர்களும் கூட்டுச் சேர்ந்து கண்டு பிடித்த விடயம் காஸ்மீரில் போராடுவது பயங்கர வாதிகள் என்பது. அதாவது 'ரோஜா நிற்க,
குருவி. காக்கைகள் கூட தாம் வாழ்வதற்காக ஒரு கூடு கடற்கரையின் ஒதுக்குப்புறமாய் குருவிகளின் கூடுகளை விட சீரழிந்த குடிசைகளில் சீவித்து பல்லாண்டு காலமாய் தமது அன்றாட
ak W
கற்றத் தயாராகும் ராணுவம்.
நிவளைத்து ஜாலியன்வாலாபாக்குகளை
38

Page 43
என்ற திட்டத்தில் மாற்று இடமில்லாமல் இவர்களை துரத்த முயற்சித்தது. மீனவர்கள் முடிந்தவரை போராடினார்கள். ஆனால் தெருநாயை விட இவர்கள் கேவலமாகப் பட்டப்பகலில் இந்த மீனவர்கள் தமிழக பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு ஆணையிட்டவர் தமிழக சினிமாவின் ஒரு காலத்தைய கதாநாயகனும இயக்குனருமான இதயத் தெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களே. இவா கதநாயகனாக நடித்த படங்களே படகோட்டி, மீனவ நண்பன் ஆகியன.
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் அடக்குமுறையின் மிலேச்சத்தனத்தை காட்டுவதற்கு வாலியன்ஜலா பாக் படுகொலை உதாரணமாக பேசப்பட்டது. அதைவிட காட்டுமிராண்டித்தனமான மெரீனா மீனவர் படுகொலை பற்றி சுஜாதாவோ பாலச்சந்தரோ மணிரத்தினமும் மூச்சு விடவில்லை. தமிழக பொலிசாரின் பயங்கரவாதம் இவர்களின் கண்களுக்கு தெரியவில்லை. மெரீனா விலிருந்து பத்து மைல் சுற்றாடலுக்குள் வசிக்கிற பாலச்சந்தரும் மணிரத்தினமும் பல நுாறு மைல் தாண்டி காஷ்மீரில போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்று கண்டு பிடித்து தமிழ் மக்களுக்கு சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு சர்வதேச திரைப்பட விழாவின்போது இந்திய மத்திய அரசு அமைச்சர் ஒருவர், "இந்தியாவில் திரைப்படங்கள் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் எப்பவோ புரட்சி வெடித்திருக்கும்" என்று சொல்லியிருந்தார். அந்தளவிற்கு குண்டாந்தடிகளும் துப்பாக்கிகளும
புதிய சட்டமானது சிரேஷ்ட குடிவரவு அதிகாரிகளினால் நடைமுை விசாரணையின்றி மற்றும் சட்டத்தரணியின் சேவைகளின்றிக்கூட அ கொண்டிருப்பர்.
எல்லைப் புறத்தில் ஒருக்கால்.
அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் தற்போதையிலு தடுப்புக் காவல் உத்தரவானது ஒவ்வொரு ஏழு நாட்களுக்கு ஒரு தடுப்புக்காவல் உத்தரவானது ஒவ்வொரு முப்பது நாட்களுக்கு ஒ அகதிநிலை பெற்றுக் கொள்வது மென்மேலும் கடினமாயிருக்கும். விசாரணையின் பொழுது விசாரணைச் சபையின் ஒரு அங்கத்தவ பிரகாரம் அகதிநிலை கோருபவர்கள் தங்களது அடையாளங்களை அட்டை முதலியன) அழித்தொழித்துவிட்டால் அல்லது வேறு ய பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட அகதிகள்தான் என விசாரணைச் சை தற்போது நடைமுறையில் உள்ள அகதிகளை நிர்ணயம் செய்யும் காட்டுவதற்கோ புதிய சான்றுகளைச் சமர்ப்பிப்பதற்கோ இடமில்லை இடமில்லை.
Gurgudagildi (yangunu öğügü ufutbgi Sebancı இச்சட்டவாக்கமானது கனடிய பொதுமக்களின் கருத்துக்களை ம பாராளுமன்றத்தில் ஆனி மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வ நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் இ செயற்படுகின்றது. தங்களுக்கு இச்சட்டம் தொடர்பான விடயங்களுக்கு கருத்து தெரி போக்குடன் நிறைவேற்றப்படுகின்றது.
இத்தகவல் சி - 86 என்ற இம்மசோதாவிற்கு (புதிய சட்டம்) எதி ஆங்கில தகவற்பிரசுரத்தின் மொழிபெயர்ப்பாகும்.

தேடல் 10
செய்யும் வேலையை திரைப்படம் செய்து வருகின்றது. வேலையின்மை, வறுமை போன்ற இன்னோரன்ன பிரச்சனைகளினால பாதிக்கப்பட்டுள்ள மக்களை தங்களது உரிமைகளுக்காக போராட விடாமல் திசைதிருப்பி மயக்கத்திலாழ்த்தி வைத்திருப்பதுடன் இவற்றையும் மீறி எழுகின்ற போராட்டங்களை பயங்கரவாதம் என்று சொல்லி அதற்கு மத்தியில் ஆதரவு எழவிடாமலும் மக்களை எமாத்தி வருகின்றன. கின்றன. ரத்தினத்தின் 'ரோஜா வும் இதையேதான செய்திருக்கிறது.
ஒளிப்பதிவு, வசனம், தொகுப்பு என இன்னோரன்ன விடயங்கள் இவர்களிடம் சிறப்பம்சங்களாக இருக்கும். மொத்தமாகச் சொன்னால திரைப்படக்கலையின் ஆளுமை இவர்களிடம் உண்டு. அதை வைத்து இவர்கள் செய்வது மக்களை ஏமாற்றுவதுதான்.
மணிரத்தினமும் நாயகன் - அஞ்சலி மூலமாக மக்களிடம் செல்வாக்கு பெற்றுக் கொண்டு தனது சுயரூபத்தை 'ரோஜா வில் காட்டிவிட்டார். இனி அஸ்ஸாம், பஞ்சாப் என்று எல்லா இடத்திலும் பயங்கரவாதம் தானே நடைபெறுகிறது என்று (இலங்கையிலும் கூட) எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்னைப் பொறுத்த வரைக்கும் இப்படியான படங்களை மணிரத்தினம் எடுப்பதை நான வரவேற்கிறேன். அதன் மூலம்தான் அவர் திரையுலகில் இருந்து துாக்கியெறியப்படுவார்.
- நன்னியர் - 39 ம் பக்க தொடர்ச்சி றப்படுத்தப்படும். அவர்கள் எல்லைகளில் வைத்தே அகதிகளை திருப்பி அனுப்பக்கூடிய அதிகாரங்களைக்
ம் பார்க்க நீண்ட காலம் தடுத்து வைக்கப்படுவார். தற்பொழுது முறை மீள்பரிசீலிக்கப்படுகிறது. புதிய சட்டத்தின் கீழ் இத்தகைய ருமுறை மட்டுமே மீள்பரிசீலனை செய்யப்படும்.
தற்பொழுது, அகதிநிலை அந்தஸ்து கோருபவர்கள் ரை மட்டும் நம்பவைத்தால் போதுமானது. புதிய சட்டத்தின்
நிரூபிக்கும் ஆவணங்களை (கடவுச் சீட்டு, ஆள் அடையாள ரிடமாவது கொடுத்துவிட்டால் தாங்கள் ஜெனீவா ஒப்பந்தத்தின் யின் இரு அங்கத்தவர்களையும் நம்பச் செய்தல் வேண்டும். நடவடிக்கைகளில் உள்ளது போல பிழைகளைச் சுட்டிக் ). இச்சட்டத்தில் ஒரு விளக்கமான மேல்முறையீட்டிற்கு
ற்றும் ஆலோசனைகளை முன்னதாகவே கேட்டதறியாது,
ருடத்திற்குள் நிறைவேற்றி 1993 தை மாதம் முதல் ச்சட்டவாக்கத்தை நிறைவேற்றும் அவசரப் போக்குடன்
விக்கும் வாய்ப்புகளை அறிவிக்காமல் இச்சட்டம் அவசரப்
ரொக அமைக்கப்பட்ட கூட்டு முன்னணியினால் வெளியிடப்பட்ட
39 தேடல் 10

Page 44
தேடல் 10
Cs ses sa ک<حے தேசியசக்தி/மீ
டுதலைப் புலிகளை எவராவது தேசியசக்திகள் என்று குறிப்பிட்டால் சிலர் மிகவும் கோபிக்கிறார்கள் தேசியசக்தி என்று அவர்களை அழைப்பது அவர்களை அங்கீகரிப்பது என்ற மாதிரி இவர்களால் விளங்கிக் கொள்ளப்படுகிறது தேசியசக்தி என்ற பதம ஒரு பாராட்டோ விருதோ அல்ல. மாக்ஸியவாதிகளும மாக்ஸியரல்லாதொரும் ஒருஅரசியல் நிலைப்பாட்டைக் குறிக்கவே அப்பதத்தை பாவிக்கின்றனர். அது ஒரு அரசியல் இயக்கம் பற்றிய அடையாளங் காணவே ஒழிய வேறல்ல. ஒரு இயக்கம் நல்லதா கெட்டதா என்ற விதமான தீர்மானத்திற்கு நாம் எவ்வாறு வரமுடியும்? ஒரு தேசிய சக்தி முற்போக்கானதா இல்லையா என்று நாம் எவ்வாறு முடிவு செய்கிறோம்? ஒருவரது உலகப் பார்வையும சமுதாய நோக்கமும் வர்க்க நிலைப்பாடும் அவர் பயன்படுத்தும அளவு கோல்களை நிர்ணயிக்கிறன. அவற்றுக்கும் அப்பாற்பட்ட வர்க்கச் சார்பற்ற சமுதாய உணர்வு கடந்த மதிப்பீடுகள் நடைமுறையில் இல்லை
மாக்ஸிய நோக்கில் தேசியவாதம் சாராம்சத்தில் பிற்போக்கானதே. அதனால் அது உலகவரலாற்றில் எப்போமே பிற்போக்கான பங்கை வகித்ததில்லை. தேசியவாதம் மனிதரை மனிதர் தேசிய அடிப்படையில் ஒடுக்குவதை ஊக்குவிக்கும் நிலைகளில் பிற்போக்கானது. அவ்வாறான ஒடுக்கலை எதிர்க்கும் நிலையில் அது முற்போக்கானதாகிறது. கொலனித்துவாதிகளதும் ஏகாதிபத்தியயவாதிகளதும் தேசியவாதம் பிற்போக்கானது. கொலனிய ஏகாதிபத்திய ஒடுக்கலினின்று விடுபட முனையும் தேசிய விடுதலை இயக்கம் முற்போக்கானது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கிடையிலும் முரண்பாடுகள் உள்ளன. இவற்றைச் சினேகபூர்வமாகத் தீர்க்க முடியும். அவ்வாறான தீர்வை மறிக்கும் தேசியவாதம் இயல்பாகவே பிற்போக்கான ஒன்றாகி விடுகிறது.
தமிழர் விடுதலை இயக்கங்கள் தமிழ்த் தேசிய இனத்தின் மீது சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய அளவில முற்போக்கான வரலாற்றுப் பணியை ஆற்றின. அந்த அடிப்படையிலேயே, அவை தேசிய சக்திகள் என்ற காரணந் தொட்டு, தேசிய சக்திகள் முற்போக்கானவை என்ற கருத்து நம்மிடையே நிலை பெற்றது. தேசிய சக்திகளது தன்மையும் செயற்பாடும் அவற்றின் வர்க்க நிலைப்பாட்டையும் அரசியல் நிலவரங்களையும சார்ந்தன. அவை காலத்துடன் மாறுபடுவன. முக்கிய தமிழர் விடுதலை இயக்கங்கள் யாவுமே தம்மைச் சோஷலிச சக்திகளாகவும், அவசியமானபோது, மாக்ஸிய சார்புடையனவாகவும் காட்டிக் கொண்டதை நாம் அறிவோம். மாக்ஸிய முனைப்பு இந்த இயக்கங் களின் வர்க்க அடிப்படையையொட்டி அமைந்த ஒன்றல்ல. 1970 களினதும் 1980 களினதும் உலக நிலைமைகள் இளைஞர் மத்தியில மாக்ஸிச, சோஷலிச சிந்தனைகள் பற்றிய அக்கறையை ஓரளவு துாண்டின. பழைய அரசியல் தலைமைகள் வெற்றிகரமாகத் தமிழரின் பாராளுமன்ற அரசியலிலிருந்து ஒதுக்கிய இடதுசாரிச் சிந்தனைகள் 1970க்குப் பின் இளைஞர்களைக் கவர்ந்த காரணங்கள் நாட்டின் உள்ளேயும் இருந்தன. தமிழ்த் தேசியவாதத் தலைமையின வலதுசாரி அரசியலின் இயலாமையும் 1971 ஏப்ரல் கிளர்ச்சியும் 1970 களுடாகப் படிப்படியாக விரிவடைந்து 1977க்குப் பின் உக்கிர
தேடல் 10

L es S5Fs est Z uzzesarz9a57z7 

Page 45
கொண்டு செயற்பட்டாலும், அவற்றின் வர்க்க நலன்களும் அரசியல் நிலவரங்களும் அவற்றைத் தமது பிரகடனம் செய்யப்பட்ட இலக்கினின்று விலக்க இடமுண்டு. ஒரு இயக்கத்தின் தோற்றமும விருத்தியும் எழுச்சியும் வீழ்ச்சியும் சிதைவும் சீர்குலைவும் அழிவும் பல்வேறு சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் அதன் வெற்றியையும் தோல்வியையும் மட்டுமே அளவுகோலாக வைத்து அதன் தன்மையைத் தீர்மானிக்க முடியாது. ஒரு இயக்கத்தின் நடத்தை அதன் வர்க்கத் தன்மையாலும் அது சமுதாயத்தையும் வரலாற்றுச் சூழலையும் உலக நிலவரத்தையும எவ்வளவு துாரம் சரிவர அறிந்துள்ளது என்பதாலும் தீர்மானிக்கப்படுவது. நேற்றைய தேசியவாத இயக்கமோ தேசிய சக்தியோ நாளை மாறாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆயினும் ஒரு இயக்கத்தின் செயற்பாட்டின் அடிப்படையை புறக்கணித்து அதன் செயற்பாட்டின் குறை நிறைகளை மேலோட்டமாக பார்த்து அந்த இயக்கம் தேசிய சக்தியா இல்லையா என்று முடிவு காணமுடியாது.
இந்தளவில், விடுதலைப் புலிகளது அரசியல் இருப்பு, தமிழ்த தேசியவாதத்திலும் இன விடுதலைக்கான போராட்டத்திலுமே முக்கியமாகத் தங்கியுள்ளது. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோஷம் அடைந்தால் திராவிட நாடு அன்றேல் சுடுகாடு என்ற கோஷத்தின் கதியையே நாளை அடையலாம். திராவிடப் பிரிவினை தமிழ் நாட்டின் சுயாட்சி போன்ற கொள்கைகளைக் கைவிட்டதால தி.மு.க. போன்ற சக்திகள் தேசிய சக்திகளாக இல்லாத போய்விடவில்லை. இன்று விடுதலைப் புலிகளின் வர்க்கச் சார்பு பற்றிய கேள்வியே நமக்கு முக்கியமானது. அவர்களது நேச சக்திகள் யார் எதிரிகள் யார் என்பதை வர்க்க நலன்களே தீர்மானிப்பன. இன்றும் பேரினவாத ஒடுக்கலே தமிழ் மக்களை எதிர் நோக்கும பிரதான முரண்பாடாக உள்ளது. அந்த நிலைமை தொடரும வரை, அந்த ஒடுக்கலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் போராடும வரை, அவர்களது போராட்டத்தின் நோக்கங்கள் பற்றிய நமது ஐயங்களையும் விமர்சனங்களையும் மீறி. அவர்கள் ஒரு தேசிய சக்தியாகவே செயற்படுவதை நாம் ஏற்க வேண்டியுள்ளது.அவர்களது போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டுமா இல்லையா என்பது அப் போராட்டத்தின் செய்நெறி பற்றிய நமது மதிப்பீட்டை பொறுத்தது. இதில் நமக்குட் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆயினும் அவர்களை ஆதரிப்பதற்கோ எதிர்ப்பதற்கோ அவர்கள் தேசிய சக்தியா இல்லையா என்ற கேள்வியை மட்டுமே நாம் பயன்படுத்த முடியாது.
விடுதலைப் புலிகள் தேசிய சக்திகளல்ல என்பேர் அவர்களை பாசிச சக்திகள் என்று அழைப்பதைக் கேட்டிருக்கிறோம். பாலிஸசம் எண்பது தேசிய வாதத்தின் மிகவும் கொடுரமான வடிவமாக இருக்கையில் தேசிய சக்திகள் இல்லாத ஒரு இயக்கம் பாஸிஸ சக்தியாக எவ்வாறு விருத்தியடைய முடியும்? அவர்களை பாஸிஸவாதிகளாகக் கருதுவோர் பாஸிஸம் பற்றிய ஆழமான அறிவின் பேரில் அவ்வாறு கருதுகிறார்களெனத் தெரியவில்லை. சர்வாதிகார அரசியல் போக்கும் அடாவடித்தனமும் ஏதேச்சதிகாரமும மட்டுமே பாஸிஸத்தின் அடையாளங்களாயின், தம்முள்ளும் சக இயக்கங்களுடனும் கருத்து முரண்பாடுகளைத் தீர்க்க முக்கிய இயக்கங்கள் கைக்கொண்டுள்ள நடைமுறைகள் நமக்கு எதை உணர்த்துகின்றன? பாஸிஸவாதி என்பது, வகைச்சொல்லாக, ஸ்ராலின்வாதி, ட்ரொஸ்க்கிவாதி, குட்டி பூர்சுவா போன்ற பதங்கள் எவ்வாறு எதிரிகளை மட்டம் தட்டும் நோக்குடன் மட்டுமே பயன்படுகின்றனவோ, அவ்வாறு கவனவீனமாகப் பயன்படுகின்றது.

தேடல் 10
ரொமேனிய சர்வாதிகாரியாக இருந்து 1989இல் பதவியிழந்து இழந்து மரணதண்டனைக்காளான சாஸெஷ்குவையும் 'மாக்ஸிய பாஸிஸவாதி என்று சிலர் அழ்ைத்துள்ளனர். இவை பாஸிஸம பற்றிய அறிவு போதாமையாலோ தெளிவீனத்தாலோ நேர்வன என்றால் அதை நாம் திருத்திக் கொள்வது பயனுள்ளது.
பாஸிஸத்தின் பிரதான தன்மை வலதுசாரி, தேசியவாத சர்வாதிகார அரசியலாகும். இனமேன்மை, பிற இனங்கள் பற்றிய இழிவான கருத்து என்பன தவிர்க்க முடியாது அதன் சிந்தனையில் ஒரு பகுதியாகின்றன. ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தென் ஆபிரிக்காவிலும் தம்மைப் பெருமையுடன் பாஸிஸவாதிகளென அழைத்துக் கொள்ளும் இயக்கங்கள் உள்ளன. un 6MÓsmo நடைமுறையின் சில கொடுஞ் செயல்களை சில விடுதலை இயக்கங்கள் வரித்துக் கொண்டுள்ளன. அத்தகைய பாஸிஸசப பண்புகளையும் பிற மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மிகவும வன்மையாகக் கண்டிக்க நாம் ஒரு போதும் தயங்கக்கூடாது. பாஸிஸவாதி என்ற சொல் வெறும் வகையாக பயன்படும் பொது
அரசியல் தெளிவீனத்திற்கே இடம் ஏற்படுகிறது.
- சி. சிவசேகரம் -
இருண்ட காலம் ம.க.இ.க.வின் பாடல் தொகுப்பு
புதிய கலாச்சாரத்தினால் வெளியிடப்பட்டுள்ள இவ் ஒலி இழைநாடா பெற விரும்புவோர் தொடர்புகளுக்கு
மக்கள் கலை இலக்கியக் கழகம், 45, செங்குன்றம் சாலை, வில்லிவாக்கம், சென்னை 49
இந்தியா
தேடல் 10

Page 46
தேடல் 10
ங்காவிலேயாவது நிம்மதியாக கொஞ்சம் இருக்கலாம் என்றால் அந்த பிச்சைக்காரத் தாடி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. வந்து காசு கேக்கப்போகுது " காசு கொடுத்தால் பேசாமல் போய்விடும்" என்று சில்லறையை எடுத்து தயராக வைத்தேன்.
தாடி மெதுவாகத் தள்ளாடியபடி வந்தது. பூங்காவில் வேறு ஒருத்தரும் இல்லை. நேரம் இரவு ஒரு மணிக்கு மேலாக இருக்க வேண்டும். பூங்காவைச் சுற்றி ரோடுகள். அந்தப் பக்கம் ஜெரார்ட் இந்தப் பக்கம் பார்லிமெண்ட் . . . ரொரன்ரோ மாநகரம் முழுக்க அந்தப் பூங்காவைச் சுற்றி ஒரு சிறை போல வியாபித்திருந்தது. மேலே கரு நீலவானம், நட்சத்திரங்கள் . . . சில நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள கிரகங்கள் பூமிபோல உயிரினங்கள் கொண்டிருக்கலாம், என்று எங்கேயோ வாசித்தது ஞாபகத்திற்கு வந்தது. சிலநேரம் அங்கிருந்து உயிரினங்கள் சூரியனைப் பார்த்துக் கொண்டு . . . . "சே இன்னும் வெறி போகேலை" என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
தாடி"பெஞ்ச்"சில் இருக்காமல்,நிலத்தில் இருந்தது. கையில் ஒரு போத்தல், பிச்சை எடுத்த முழுக் காசும் போத்தலில்தான். என்னைக் காணாதது போல் ஜெரார்ட் ஸ்ட்ரீட்டையே பார்த்துக் கொண்டிருந்தான் தலைமயிரை சிலோனில்தான் கடைசியாக வெட்டி இருக்க வேண்டும். இங்கே வந்து 15 வருஷம் ஆகியிருக்கும். 1987ல் வந்தவன் என்று அன்றைக்கு தத்துக் கொண்டாங்கள். துாரத்தில் இருந்த "பெஞ்ச்"சில் இரண்டு வெள்ளைகள் தன்னுடைய நாக்கைத் தன்னுடைய வாயிலேயே நெடுக வைத்திருப்பது அலுத்துப் போனதாலோ என்னவோ, அடுத்தவனுடைய வாய்க்குள் ஒட்டுவதில் மும்மரமாய் இருந்தர்கள்.
"தம்பி சிலோனா?" திடுக்கிட்டுத் திரும்ப, தாடி பல்லைக் காட்டியது.
"ஓம்"
"எப்ப இங்கே வந்தனி?” "மூன்று வருஷம் ஆகிட்டுது. வந்து - 1999ல் வந்தனான்."
"இப்பத்தான் குளிர் பழகிட்டுதோ?” குளிரிலே பழகிறதுக்கு என்ன இருக்குது. தாடிக்குக்கூட திமிர் முந்தியே வந்ததிலே. ஒன்றும் சொல்லாமல் இருந்தேன். "தம்பி எப்படி இருக்கிறான் சிலோனிலே?" "தம்பியோ, யார் தம்பி . . . எனக்குத் தம்பி இல்லை", என்றேன். "அட அவன்தான், எல்லோரும் தம்பி, தம்பி என்பாங்கள்" யார் இது தம்பி? ஒ1 முந்தி பெரியவரை 'தம்பி என்றுதானே
தேடல் 10

JMJ 2OO2? -
சொல்கிறது சனம். "அவருக்கென்ன எப்பவும் நல்லாய்த்தான் இருப்பார்" "அங்கே சனம் நல்லாய் இருக்குதோ? நான் வரமுதல் தனிநாடு, தனிநாடு என்றிருந்தவையள். இப்ப என்ன மாதிரி? சந்தோஷமாய் இருக்கினமோ?"
"ஏதோ இருக்கினம்." "சந்தோஷமாய் இருந்தா ஏன் தம்பி உன்னைப்போல சனம் இன்னும் அகதிகளாய் வந்து கொண்டிருக்குது? அப்ப ஈழம் வேண்டும், இப்ப ஜனநாயகம், நாளைக்கு சந்தோஷம் எல்லாம் மனம் தம்பி"
தாடி பொக்கெட்டுக்குள் இருந்து ஐந்து, ஆறு சிகரெட் துண்டுகளை - ரோட்டில் பொறுக்கின அடித்துண்டுகளை - எடுத்து, கவனமாக ஒவ்வொரு துண்டையும் ஆராய்ந்து பார்த்த பிறகு, ஒரு துண்டை எடுத்துப் பற்ற வைத்தது.
எனக்கு ஒரே குழப்பம் சனம் இவனை பைத்தியம் என்கிறதுகள், இப்ப இவனோடு இருந்து கதைக்கிறதைப் பார்த்தால் என்னையும் விசர் எண்டுங்கள். போகலாம் என்றால், தாடி கதைக்காமல் போகிறேனென்று போத்தலால் அடித்தாலும் அடித்து விடுவான் என்று பயமாக இருந்தது. "என்ன இருந்தாலும் சிலோன், சிலோன்தான் தம்பி. சின்னனாக இருக்கும் போது நாவல் மரத்திலே ஏறிக் குரங்கு மாதிரி சாப்பிடுகிறனான் தம்பி இங்கே எங்கே அதெல்லாம் கங்கிரீட்டும், ஸ்டிலும், கார்பன் டை ஒக்ஸைட்டும் . . . பு___ யில் வாழ்க்கை."
தாடி போத்தலை எடுத்து, வாய்க்குள் ஒட்டி மிஞ்சியிருந்த ஒரு துளி சாராயத்தையும் நக்கியது. "என்ன தம்பி யோசிக்கிறாய் போல இருக்குது? யோசிக்காதே, எப்ப யோசிக்கிறியோ அப்பத்தான் பிரச்சினையே தொடங்குது. பேசாமல் பிறந்தேன், வளர்ந்தேன், செத்தேன் என்றிரு . . . . ஒரு நாளும் யோசிக்காதே. இந்த ஏன், எதற்கு, எப்படி என்றெல்லாம் கேக்காதே. சும்மா இரு. Just exist! " தாடி போத்தலை கண்ணுக்குக்கிட்டே வைத்து, மேலே பார்த்தது. உள்ளே ஒன்றுமில்லை.
"இப்படித்தான் நான் 87இலே இங்கு வந்த நேரத்திலே யோசித்தேன். முதல் சிலோன்தான் உலகம் என்று இருந்தேன். இங்கே வந்தால், இவ்வளவு முன்னேறிய நாட்டிலும் எவ்வளவோ பிரச்சினைகள். அங்கே முட்டாள்கள் மரத்தைத் தெய்வம், பாம்பைத் தெய்வம் என்று கும்பிடுவாங்கள், இங்கே எல்லாமே தமக்குத்தான் என்று அழிக்கிறாங்கள். . .
42

Page 47
அழித்திட்டாங்கள் இப்ப பார் உலகம் முழுக்க எரிபொருள் திண்டாட்டத்தில் அல்லல் படுது. இருக்கிற எரிபொருளும் பத்து - பதினைஞ்சு வருசத்தில் முடியப்போது, பிறகு என்ன செய்யப்போகிறாங்கள்? நியுக்கிளியர் பவர் புஸ்வாணமாய் போய்விட்டது . . . யோசிக்காதே எண்டும் அரசாங்கம் சொல்லேலை ஆனால் யோசி என்றும் சொல்லேலை . . . புத்திசாலிகள் . . . புத்திசாலிப் பு___கள்"
"இந்த உலகத்திலே கணக்க புத்திசாலிகள் தம்பி, அதுதான் பிரச்சினை. அறிவாளிகள் அழிந்து கொண்டிருக்கிறாங்கள். புத்திசாலிகள் வளர்ந்து கொண்டிருக்கிறாங்கள். பகிடி, என்ன ? உனக்கு புத்தகம் எழுதுகிற அறிவு இருந்தால் காணாது, அதை விற்கிறதுக்கு புத்தி வேணும். எல்லாம் கூர்ப்பு விதி"
"ஏன் இப்ப சிலோனையோ, இந்தியாவையோ பார், இதே பிரச்சினைதான் அங்கேயும். இரண்பாயிரத்துக்கு பிறகு இந்தியா சீனாவைக் கிட்டத்தட்ட முந்திவிட்டது சனத்தொகையிலே. இங்கே காருக்கு பெற்றோல் தேவை அங்கே சமைக்க விறகு தேவை. கோடிக் கணக்கான மக்கள் விறகுக்கோ கமத்திற்கோ என்று காட்டை அழித்துப் போட்டு இப்ப என்ன செய்யினம்? எதியோப்பியா எண்பதுகளில் இருந்த மாதிரி ஆகிவிட்டது. . . . இந்திய துணைக் கண்டமே கிட்டத்தட்ட ஒரு பாலைவனமாகி விட்டது. மழை ஒரு கிழமை பிந்தினால் பத்து இலட்சம் சாகுது. ஏன் தம்பி? ஒருத்தன் "கிரீன் கவுஸ் விளைவு" என்கிறான். இன்னொருத்தன் ஜஸ் ஏஜ் என்கிறான். எனக்கு இந்த சயன்ஸ் தெரியாது. ஆனால் என்ன நடக்குது என்று தெரியுது. எனக்குத் தெரிந்து என்ன? இந்த ஜனநாயக நாட்டின் தலைவர்களுக்கு தெரியவில்லையே. அரசியல்வாதிகளைச் சொல்லவில்லை, தம்பி, மக்கள்தான் இங்கு தலைவர்கள், அரசியல்வாதிகள் சும்மா தலையாட்டும் பொம்மைகள்! இப்ப பார் ஒரு நாட்டுத் தலைவன் புதிதாக பதவிக்கு வருகிறான் என்று வை, அவன் சொல்கிறான் "இந்த ஃபக்டரியை மூடு, அந்த ஃபக்டரியை மூடு, சூழலைப் பாதிக்குது என்று. அவன் பதவியில் நிலைக்க மாட்டான் கனகாலத்திற்கு அப்படி இருந்தாலும், அடுத்த இலக்ஷனில் தோற்றுப் போய்விடுவான். ஏனென்றால் சனத்திற்கு வேலை வேண்டும், பணம் வேண்டும், சுகம் வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டிலே பதவியில் நிலைக்கிறதாய் இருந்தால் ஒன்று மக்களை ஏமாத்த வேண்டும், இல்லை என்றால் மக்களுக்கு வேண்டியவைகளை உன்னுடைய பொலிசி ஆக்கிவிட வேண்டும். ஜனநாயகம் ஒரு பயங்கரமான மிருகம் தம்பி : மெதுவாக உன்னை சொகுசுபடுத்தித் துாங்க வைத்து பாதாளத்தில் தள்ளிவிடும்."
"நீ கேக்கலாம் எல்லாம் சரி இதுக்கு என்ன பரிகாரம் என்று. எனக்குத் தெரியாது தம்பி, இந்த உலகத்தில இப்ப என்ன எண்ணாயிரம் மில்லியனோ சனத்தொகை? இவ்வளவு சனமும், இருந்து இரண்டு, மூன்று வேளை சாப்பிட்டு மட்டும்

தேடல் 10
இருக்கிறதென்றாலே கனகாலம் தாங்காது. ஆனால் கார், வீடு, வேலை என்று அலைகிறாங்கள் தாய் __கள். சரி கனடாவிலே இருக்கிற உன்னுடைய ஜெனரேசனை எடு, எல்லாம் டேய்க்கேரிலும், சைல்ட் கேரிலும் வளர்ந்ததுகள் . . . இதில அரைவாசி எங்கையாவது மிசினைப்போட்டு இடித்துக் கொண்டு இருப்பாங்கள் இப்ப . . . நிலைமை இன்னும் குழம்புமே தவிர சீராகப் போவதில்லை. எல்லாத்திற்கும் ஒரு முடிவுதான் தம்பி முடிவுதான் முடிவு" தாடி எழும்பித் தள்ளாடியபடி, ஜெரார்ட் வீதியை நோக்கிப் போனது. . . இருட்டில் மறைந்தது.
நானும் எழுந்து என்னுடைய அப்பார்ட்மென்ட் நோக்கி நடக்க - என்கால் அதைத் தட்டியது. அது அவன் குடித்த சாராயப் போத்தல். ஒரு நினைவுச் சின்னமாய் இருக்கட்டும் என்று அறைக்கு எடுத்து வந்தேன். அது ஒரு "டிச்சேர்ஸ் லேபல்.
ஸ்டீரியோவில் U 2 என்ற ஒரு றொக் குரூப் பாடிய பாட்டொன்று ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது: ! w C{rìfìC{ ruf)
| Wanna see the sky | Wanna fear down these walls I'm lonely inside
Wanna reØCh Ouf Cand fOuch fhe fane Where the streets have hO nanne . . . . .
அம்மா கேட்டிருந்த விஷயம் ஞாபகத்திற்கு வர, அம்மாவிற்குக் கடிதம் எழுதினேன்.
அன்புள்ள அம்மா, தங்கச்சிக்கு, நீங்கள் கேட்டபடி சிவராமருடைய மகன் குடும்பத்தாரோடு முந்தநாள் கதைத்தேன். அவர்களுக்கு போட்டோ காட்டினான். இன்று பின்னேரம், வீட்டை வந்து அவர்களுக்கு இஷ்டம் என்று சொன்னவையள். பெடியன் இங்கு ஒரு பெற்றோல் ஸ்டேஷனில் வேலை செய்கிறான். சுமாராக இருக்கிறான். ஒரு கெட்ட பழக்கமுமில்லை என்று கேள்வி. வருஷம் 20,000 டொலர் அளவில் உழைக்கிறான். பார்ட் ரைமாகப் படிக்கிறனாம்.
என்னுடைய கணக்கின்படி அவர்கள் கேட்ட காசு இன்னும் ஒன்றரை வருஷசத்தில் சேமித்து விடுவேன். மீதி பின்,
இப்படிக்கு,
அன்பு மகன்
மணி பி.கு. இத்துடன் பெடியனுடைய படம் அனுப்பியுள்ளேன். தங்கச்சிக்குக் காட்டவும்.
விடிந்தால் வேலை என்ற நினைவு வர, கட்டிலில் சாய்ந்தேன். அந்த இரவு நான் கனவு காணவில்லை.
கரேவர் கப்பிரமணியம்
தேடல் 10

Page 48
தேடல்
தோர்களே
அடிப்படையை நடந்த நிகழ்வுடன் இணைத்துப் பார்க்கும் விதத்தில் கடந்த 8, 7 வருடங்களில்
பிலிப்பைன்சில் நடந்தவற்றிணை ஆராய்வது நல்லதென நினைக்கிறேன். ஏனென்றால் பிலிப்பைன்சின் இடதுசாரிகள் இவையெல்லாம் சிறு சிறு பிழைகள். நாங்கள் அடிப்படைப் பிரச்சினை பற்றிக் கூடுதல் கவனம் செலுத்துவோம். இன்னமும அடக்குமுறைக்கு ஆளாகி இருக்கிறோம். விடுதலை இன்னும் வரவில்லை. மக்கள் தளம்பல் நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் சரியான நிலை அடைந்தவுடன் நாம் புரட்சிக்கு ஆயத்தம் செய்வோம். அப்போது மக்கள் எங்களிடம் திரும்பி வருவார்கள். என்ற மனோநிலையில்தான் இருக்கிறார்கள். இன்னும் சில தோழர்கள் இப்படிக்கூடச் சொல்லுகிறார்கள். இது ஒரு சீட்டாட்டம் போன்றது. என்னிடம் நல்ல சீட்டுகள் வராவிட்டால் எப்படி விளையாடுவது. இருக்கிறவற்றை ஆடித் தோற்காமல் நிற்பதுதான் நல்லது. ஆனால இதே நேரத்தில் வேறெரு பக்கத்தில் விளையாட்டு முடிந்து விட்டது. ஆனால் நமது தோழர்கள் உண்மையான விளையாட்டு வரும் என்று காத்திருக்கிறார்கள்.
பிலிப்பைன்சில் மாக்கோஸ் விழுந்து கோரி அக்கினோ அம்மையா வந்ததும் இடதுசாரிகளுக்கு என்ன நடந்தது? ஏன் நடந்தது? ஏன் நடந்தது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிரு ந்தார்கள். இதே மாதிரி ஆச்சரியப்பட்ட இன்னோர் சாரார் பழமைவாத மத பீடத்தினர் ஆவர். குழந்தைத்தனமான அல்லது சோம்பேறியான இடது சாரிகளும் பழமைவாத மதபீட ங்களும் ஒரே மாதிரியான ஆய்வினை முன்வைத‘தது ஆச்சரியமாக வில்லையா?
மதவாதிகளின் கருத்துப்படி நிகழ்ந்தது ஒரு அதிசயம். கர்டினால சின் இதனை ஆராயதே நம்பு என்று கூறினார். மக்களின் சக்தி அல்ல பிரார்த்தனையின் சக்தியே எதேச்சாதிகாரியை வீழ்த்தியது. நான் அங்கிருந்த போது புனித ஆவியின் ஒரு கருவியெனவே எடிசியோ ம லா தோர். ஒரு க எண்ணைக் கருதினேன் - ஆ , மார்க்கியச் சிந்தனையாளரு மென் என்று கூறினார் ஜெனரலI சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட ரமோஸ். சில சோம்பேறி க்குச் சென்ற எட் (இது அ இடதுசாரிகளும் இது போன்றே கைது செய்யப்பட்டு 5 வரு கூறினார்கள். ஆனால் அவர்கள் பின்னர் 1982 இலும் கைது நம்பியது புனித ஆவியை அல்ல. ல் இருந்தார். மக்கள் பிவிப்பைன்வின் தேசி உருவாக்கத்துக்குக் கா
அவர்கள் குறிப்பட்டது C.I.A. ஐத்தான். பலநேரங்களில் நாமெல்லாம யாரோ எங்கேயோ எழுதிய
வசனங்களை பின்பற்றும் குற்றச்சாட்டுகள் எட் மீது நடிகர்ள்தாம். ஒரு தெளிவற்ற விசாரணை எதுவு
விளக்கத்தைக் கொடுக்க வேண்டி இவர் தென்னாபிரிக்க சென் வந்தால் 'புனிதக் கதை மேலானது கொங்கிரஸ் (uyana) அரசி என நான் சொல்வேன். உரையின் கருக்க
தேடல் 10
 
 

புனித ஆவியும் C.I.A. அங்கிருந்ததை Clip (1960)LOCUNT85 நம்புகிறேன். அதைவிட மேலும்
விஷயங்கள் இருந்தன. எப்படியான சில சிக்கலான சூழ்நிலையில் சர்வாதிகாரி வீழ்த்தப்பட்டான் என்பதை பார்ப்போம். இது நான் தனிப்பட்ட முறையில் முன்வைக்கும் காரணங்கள். இது ஒரு வெகுஜனக் கல்வியின் பயிற்சியே. ஆகையால் என்னிடம் விஞ்ஞான பூர்வ விளக்கங்களை எதிர்பார்த்து. பின் இழிவாக இருக்கிறது என்று விமர்சிக்காதீர்கள். எனது நோக்கம் பரிவர்த்தனை செய்வதே.
நான் எப்பொழுதும் சொல்வது போல் சர்வாதிகாரியை வீழ்த்த பத்து வழிகள். அதிகார கூம்பத்தின் அதி உயரத்தில் சர்வாதிகாரி மார்க்கோஸ். இந்த கூம்பில், இந்த கூம்பின் பாரம் முழுவதையும தாங்கி நிற்பவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களே. அடுத்து மத்தியதர வர்க்கம். நடுவில் நிற்பவர்கள் பெரும் வியாபாரிகளும், மதபீட அதிகாரத்துவமும், அதற்கு மேல் அதிகாரி வர்க்கமும், இராணுவமும். அதற்கும் மேல் சர்வாதிகாரி. அதிகாரத் தத்துவத்தின் வரைவு இவ்வாறே உள்ளது. ஆனால் தொகையளவில் இது தலை கீழாகவே இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் விட இன்னொன்றும் உள்ளது. அது வெளிநாட்டு சக்தியாகும்.
நாம் திட்டமிட்டு கருமமாற்றுவ தாயின் ஒடுக்கப்பட்ட மக்களை ஸப்தாபன மயப்படுத்தி மத்தியதர வர்க்கத்தை வென்றெடுத்து முறையே உயர்தர வர்க்கத்தையும், இராணுவத்தையும், ஏகாதிபத்தியத தையும் சர்வாதிகாரியை வீழ்த்த லாம். இதனை நடைமுறைப்படுத துவதாவது சட்டத்திற்கு உட்பட்டதாக அல்லது புறம்பானதாக அல்லது ஆயுதம் ஏந்துவதன் மூலமாக இருக்கலாம். இந்த வழி முறையூடாக நிகழ்ந்திருக்க வேண்டியது உண்மையில் எவ்வாறு நிகழ்ந்ததென பாருங்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களிடையே இருபது வீதமான வேலைகளே
த்தோலிக்கப் பாதிரி மட்டுமன் 6?05 மேற்கொள்ளப்பட்டு இருந்தன.
மாவர். பிவிப்பைன்வில் இராணுவச்
வேளை தலைமறைவு வழக்கை வருடை செல்லப் பெயர்) 1974ல் பங்கள் சிறையில் தள்ளப்பட்டார். செய்யப்பட்டு நான் வருடங்கள் ளைப் புரட்சிக்குத் துண்டியமை, ய ஜனநாயக முன்னணியின் ல்கோனக இருந்தமை ஆகிய சுமத்தப்பட்ட போதிலும் வழக்கு மே நடைபெறவில்லை. ரிருத்த போது ஆபிரிக்கத் தேசிய
மே இக்கட்டுரையாகும்.
மத்திய தர வர்க்கத்தைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது. அதிகாரத் தட்டின் உயா மட்டத்திலிருந்துதான் சம்பவங்கள் நிகழ ஆரம்பித்தன. 1983 ஒரு எதிர்க்கட்சி தலைவரின் கொலையுடன், பொருளாதார நெருக்கடி, தணிக்கை, இமெல்டா மார்க்கோஸின் ஊழல்கள் இவையெல்லாம் காரணமாகவும் இடதுசாரிகளின் தாக்கத்தினை விடவும் மதவாதிகளின் வேலைமுறை காரணமாக மத்திய வர்க்கம் விழிப்படைந்தது.
44

Page 49
மார்க்கோஸ் தேர்தல்களை நிகழ்த்தாமையால் உயர் வர்க்கத்துக்கு அதிகாரத்தில் பங்கு கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட ஜனநாயகத்தை நிலைநிறுத்து என்று அவர்கள் கிளர்ந்தெழுந்ததனால் அவர்களின் ஒருவரான அக்கினோ (கோரிஅக்கினோவின் கணவர்) கொலை செய்யப்பட்டர்.
மாாக்கோசின் நடவடிக்கைகளால் 1981ல் பொருளாதார வளர்ச்சி பாரதுாரமாகப் பாதிக்கப்பட்டது. வர்த்தகர்கள் பலத்த பாரபட்சத்திற்கு ஆளானார்கள். இதனால் அவர்களும் அவர்களுக்கு முன்பே பணக்கார உயர் வர்க்கமும் அதிருப்தி அடைந்திருந்தார்கள். இறுதியாக மதபீடமும், 'மார்க்கோசுக்கு நாட்டையாளும் தகுதி இல்லை என்று அறிவித்தது. இது நடந்தது 1988ல் மாசியிலாகும். ஆனால் இதற்கு முன் புரட்டாசி 85ல் மதபீடத்திற்கும், மார்க்கோசுக்கும் இருந்த வேறுபாடு அமெரிக்கத் தலையீட்டினால் தீர்த்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மாசி 88ல் அமெரிக்கா நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டபடியால் மதத் தலைவர்கள், மார்க்கோசுக்கு ஆளும் தகுதி இல்லை என அறிக்கை விட்டார்கள். இது அமெரிக்க கூட்டுப்படைத் தளபதியின் ஆசீர்வாதத்துடனேயே நடந்தது. இதனைவிட மார்க்கோஸ் மீதிருந்த வெறுப்பும், மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தில் இருந்த ஆர்வமும் புரட்சி நடந்து விடுமோ என்ற பயமும் இவ்வாறு ஒரு அறிக்கையை விட்டு மார்க்கோசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக் காரணமாகவே இருந்தன.
இங்கு புரட்டாசி 85ல் பிலிப்பைன்ஸில் உலவிய உண்மையும பகிடியும் கலந்த ஒரு கதையை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
செப்ரெம்பர் 11 மார்க்கோஸின் பிறந்த தினவிழா கொண்டா டப்பட்டது. மார்க்கோஸின் எதேச்சாதிகார நடவடிக்கை களில் ஏற்கனவே அதிருப்தியுற்றிருந்த கர்தினால்ஸின் மார்க்கோஸின் பிறந்த நாள விழாவில் பங்குபற்றி பூசை வைத்தமை பலருக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது.
"சில வேளைகளில் நான் சமரசத்தின் துாதுவன் சில வேளைகளில நான் நிராகரிப்பின் தீர்க்கதரிசி" என்று குறிப்பிட்டார் கர்டினால் ஸின்.
அது ஒரு பகிரங்கப் பூசையாதலால் பல்நாட்டு இராஜதந்திரிகள், பாப்பாண்டவரின் பிரதிநிதி, அமெரிக்கத் துாதர் ஆகியோர் வந்திருந்தனர்.
வந்தவர்களில் ஒருவர் மார்க்கோஸசுக்கும் கர்டினால் ஸின்னுக்கும சமாதானத்தின் குறியீடாக இருவருக்கும் ஒவ்வொரு வெள்ளைப் புறாவை அன்பளிப்பு செய்தார். மார்க்கோஸ் பறக்க விட்ட புறாவோ நேரடியாக சொர்க்கத்துக்கு பறந்து சென்றுவிட்டது. ஆனால் கர்டினால் ஸின் பறக்க விட்ட புறாவோ குழப்பத்துடன் சுற்றிச் சுற்றி வட்டம் போட்டுக் கொண்டிருந்தது. பின்னர் திடீரென்று அமெரிக்கத் துாதரின் தோளில் போய் அமர்ந்து கொண்டது.
பின்னர் அமெரிக்கத் துாதுவரைக் கேட்டது. இப்போது
சொல்லுங்கள், உங்களுடைய கொள்கைதான் என்ன?
இது பகிடிக் கதைதான் என்றாலும் தொண்ணுாறு வீதம் உண்மை என்று பிலிப்பைன்ஸ் மக்கள் என்று சொல்வார்கள்

தேடல் 10
இப்போது மேல்மட்ட அணிகள் பிளவுகள் தொடங்கி விட்டன. இராணுவம் பிளவுபடாத வரையிலும் மார்க்கோசை விழுத்தி இருக்க முடியாது. 1984 அளவில் தேசிய பாதுகாப்பு சபையில் மாற்றங்களை கண்காணிப்பது பற்றிய விவாதங்கள் நிகழ்ந்தது வந்தன. பயங்கரவாத எதிர்நடவடிக்கை குழுவின் பாதுகாப்பு அமைச்சர் ரமீஸ் தலைமையில் சில சதி நடவடிக்கைஈடுபட்டனர். இதற்கு 0.14. அல்லது அமெரிக்கப் படையாக செல்வாக்கு இருந்ததோ அல்லது தனித்து உள்ள ஊடுருவலோ சரியாகத் தெரியாது. எமது அரசியல் வாதிகள் ஊழல் நிறைந்தவர்களாக இருந்ததால் கிளாச் சியாளர்களை அடக்குவது இயலாது. எனவே சில அரசியல் சீர்திருத்தங்கள தேவை என்பதே இவர் களது கோஷமாக இருந் தது. அத்துடன் ஜனநாய கத்தை நிலை நிறுத்துவத நீகாக இல்லாவிடினும் கிளர்ச்சியாளர்களை அடக் குவதற்காகவாவது மார்க "கோஸ் பதவி விலக வேண் டும் என்று கோரினர்.
பிரிட்டனிலிருந்து 8.4.3. முகவர்களை அழைத்துப் பயிற்சிகூடய பெற்றனர். இந்த வலதுசாரி சதியாளர்கள் ஆயுத உதவிக்காக அமெரிக்க துாதரகத்தை நாடினார்கள். C. 1.4. இதனை மார்க்கோசுக்குத் தெரியப்படுத்தி, ‘சதிகாரர்களை இப்போது கைது செய்ய வேண்டாம் என்றும் அச்சுறுத்தியது.
மார்க்கோஸ் இந்த அறிவுறுத்தலை மீறி சதியாளர்களை கைது செய்யத் தொடங்கினான். தாங்களும் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்படலாம் என்பதை அறிந்த பாதுகாப்பு அமைச்சர் ரமோகம், படைத் தலைவரும் தாங்கள் சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போரிடுவதாக தங்களை வெளிப்படுத்தினார்கள். அவர்களில் சுமார் 400 பேர்களே இருந்தார்கள். அவர்கள் பயந்து கொண்டிருந்தமை வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த நேரத்தில் ரமோசின் மனைவியும மற்றும் சில பெண்களும் கத்தோலிக்க தலைமைப் பீடத்துடன தொடர்பு கொண்டு 'கர்டினால் சின் ஐ மக்கள் மத்தியில் தோன்றி மார்க்கோசுக்கு எதிராக பேசும்படி வற்புறுத்தினார்கள். ஒரு தலைமைத்துவத்தை எதிர் நோக்கி இருந்த மக்களுக்கு இது போதுமானதாக இருந்தது. இந்த நேரத்தில் இடதுசாரிகள் ஏதும் செய்யவில்லை. மாறாக எங்களைக் கொல்லக் காத்திருந்த இராணுவத் தலைமையை மார்க்கோசிடமிருந்து காப்பாற்ற நாம் சார்பாக நடந்து கொள்ளக்கூடாதென்றனர்.
எனவே மார்க்கோசை வீழ்த்தினால் போதுமென்றிருந்த சீர்திருத்தவாதிகளும், பழமைவாதிகளுமே முதலில் இந்தக் கிளர்ச்சியாளரை ஆதரித்தனர். பாதுகாப்பமைச்சரும் படைத்தலைவரும் தங்களுக்கு அதிகம் செல்வாக்கு இல்லை என்பதை உணர்ந்ததால் கோரி அக்கினோவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினார். அத்துடன் தேர்தலில் 'கோரி அக்கினோவே' வென்றதாகவும் தாங்கள் ஏமாற்றியதையும் என்ரயில் போன்றோர் வெளிப்படையாகக் கூறினார். இதனால் மக்கள் மத்தியில் மதிப்பும பெறமுடிந்தது.
எப்படி எனினும் ரீகனின் ஆட்சிக் காலம் முழுவதும் மார்க்கோஸ் பதவியில் இருந்திருக்கக் கூடும். அமெரிக்காவின் கொள்கையில பிளவு ஏற்படாமல் இருந்திருந்தால் இராஜங்க அமைச்சும், படைத் தலைமையகமும் மார்க்கோஸ் உடனடியாகவும் கட்டாயாமாகவும் வெளியேற வேண்டுமெனத் தீர்மானித்தனர். உண்மையில் மார்க்கோஸ் விழவில்லை. கழுகு அவனை ஹவாய்க்குத் துாக்கிச் சென்றது அவ்வளவுதான்.
45 தேடல் 10

Page 50
தேடல் 10
ஆக, இடதுசாரிகளினதும் ஜனநாயக அமைப்புகளினதும் தலைக்கு மேலாக இத்தனை சம்பவங்களும் நடந்து முடிந்து விட்டன. பிலிப்பைன்ஸ் இடதுசாரிகள் முற்போக்குத் சக்திகள பலம் பெற்று மாத்திரமே சர்வாதிகாரியை வீழ்த்த முடியும் என்று நினைத்திருந்தார்கள. உண்மையில் அவர்கள்தான் சர்வாதிகாரத்துக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
உண்மையில் இந்தச் சூழ்நிலையிலிருந்து அதிக பயனைப் பெறமுடியாமைக்கு எமது முதிர்ச்சியின்மை மாத்திரமல்ல. நாங்கள் ஒரு முக்கிய தந்திரோபாய தவறினையும் இழைத்திருந்தோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பொழுது அதில பங்கு பற்றுவதில்லையென்று கம்யுனிஸ்ட் கட்சியும், தேசிய ஜனநாயக முன்னணியும் அறிவித்திருந்தன. இது
պքlա Elgeusis fil-LionTang
நீங்கள் கனடாவிற்கு, வேறு ஒரு நாட்டிற்கூடாக வந்தீர்களா? நீங்கள் உங்கள் சொந்த நாட்டிலிருந்து தப்புவதற்கு பொய்யான நீங்கள் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு அ
இக்கேள்விகளுக்கு நீங்கள் இங்கு வந்தபோது "ஆம்" என்று பதி மாதத்திலிருந்து இக்கேள்விகளுக்கு அகதிகள் "ஆம்" என்று பதி: தடுக்கப்படுவார்கள். கனடிய அரசாங்கமானது, அகதிகள் வருகை அறிமுகப்படுத்தியுள்ளது.
அகதிகள் கனடாவின் எல்லைப்புறத்திலேயே திருப்பி புதிய குடிவரவுச் சட்டமானது அகதிகள் கனடாவில் அகதி நிலை பிரிவு ஒன்றை உருவாக்கும்.
அகதிகள் தங்கள் நாட்டிலிருந்து நேரடியாக கனடாவிற்கு வராவிடி அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வரும்போது கடந்துவந்: வேண்டும். அவர்களுக்கு அந்த நாட்டில் அகதிநிலை மறுக்கப்பட கடத்தப்பட்டாலோ கனடிய அரசு அதைப்பற்றி கவனத்தில் கொள்ள (உதாரணமாக இலங்கை நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர், அெ எல்லையில் வைத்து அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்படுவார். திருப்பி நாடு கடத்தப்படுதலையே குறிக்கும் என்பதனை அவ்வக!
கனடிய எல்லைகளில் வருகை தரும் அகதிகளில், ஆகக் குறை ஐரோப்பாவின் ஊடாகவே வருகின்றார்கள். பாதுகாப்பு தேவைப்படு அனுப்பப்படுவார்கள்.கனடிய அரசு இவ்வகதிகளுக்கான ஏற்க மறு
அகதி நிலை கோருபவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடு அவர்களின் சொந்த நாட்டு அரசினால் பொய்யாக குற்றம் சாட்டினா ஒடுக்கும் ஆட்ச்சியில் அநேக ஜனநாயக மற்றும் மனித உரிமைச விரோதமானவை யாகவே நோக்கப்படும்.) அகதிகள் சட்டவிரேபதமான செயல்களைச் செய்த எதாவதொரு அ அகதியானவர் சட்டவிரோதச் செயலைச் செய்யாதிருந்தால்க் கூட தேசியக் காங்கிரஸ்)
தேடல் 10 46
 

இப்போதைய ஆளும் கட்சிக்கு மிக இலகுவாயிருந்தது.
சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வுக்கு இராணுவக கிளர்ச்சியாளர்களும், மத்திய வர்க்கத்தின் ஒரு லிபரல் பிரிவும். மாற்று எதிரணிகளும் கொடுத்த கட்ட அமைப்பே கோரி அக்கினோ அம்மையாரின் ஆட்சி ஆகியது. ஆக பிலிப்பைன்சின் இடதுசாரிகளின் பின்னடைவிற்கு எதிரணிகளின் அமைப்பு முறையும், நாம் விட்ட தவறுகளுமே காரணமாக அமைந்தது. இது ஒரு மூலோபாயத் தவறாகும். இப்படியானதொரு சூழ்நிலையில் எமது பலத்தினை கூடிய அளவு சரியான முறையில் உபயோகத்திருக்க முடிந்திருந்தால் நன்மையாக இருந்திருக்கும்.
ஆவணங்களை உபயோகித்தீர்களா? அமைப்பின் உறுப்பினராக இருந்தீர்களா?
ல் கூறியிருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் 1993 தை ல் கூறினால் அவர்கள் கனடாவிற்குள் நுழைவதிலிருந்து யை கட்டுப்படுத்துவதற்கான ஒரு புதிய சட்டத்தை
அனுப்பப்படுவார்கள் . . . . ) அந்தஸ்து கோருவதை தடுக்குமுகமாக எல்லைக் கண்காணிப்பு
டல் அவர்கள் கனடாவில் அகதிநிலை கோருவதற்கு 5 ஏதாவது ஒரு நாட்டில் அகதிநிலை கோரிக்கையை சமர்ப்பிக்க ட்டாலோ அல்லது அவர்கள் சொந்த நாட்டிற்கு நாடு
ாமாட்டாது. மரிக்கா வழியாக கனடாவிற்கு வந்தால் அவ்வகதி கனடாவின்
மீண்டும் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவதானது, இலங்கைக்கு தி அறிவார்)
ந்த அறுபது வீதமானோர் அமெரிக்கா அல்லது மேற்கு ம் மக்கள், கனடிய எல்லைகளிலேயே வைத்து திருப்பி க்கிறது.
பட்டிருந்தார்கள் என கனடிய அதிகாரிகள் நம்புமிடத்துஅதாவது ால் கூட அவ்வாறானவர்களைத் திருப்பி அனுப்ப முடியும். (அடக்கி கள் தொடர்பான வேலைகள் தொடர்பான வேலைகள் "சட்ட
அமைப்பில் அங்கத்தவர்களாக இருந்திரந்தால் அதாவது குறிப்பிட்ட அவர்களைத் திருப்பி அனுப்பமுடியும். (உதாரணம் - ஆபிரிக்க
39ம் பக்கம் பார்க்க

Page 51
filmās - bleIGħErf; Lo MONDAY - FRIDAY;
சனி, ஞாயிறு, விடுமுறை தினங்களி SATURDAY, SUNDAY & HC
இரவல கொடுக்கும் பகுதி ஆரம்பிக்கப்ட செய்திப் படங்கள்), புத்தகங்கள், சஞ்சிகைகள்
LEO ESCRITTEJ
ág4-#ö = ng: sungir suma
dwing-Gedä en bGuib Luigingslexir gif enis வரும் தீர்வுகள் சில ஒத்திகை
2- - - TE az-A
ஒத்தின்
 

i
OURS
ITEDG) 05.30 - Bijel O.30
O5.30 - 10.30 p.m.
ல் - மதியம் 12.30 - இரவு 10.30 OLIDAYS; 12.30 - 10.30 p.m. பட்டுள்ளது. படப்பிரதிகள்(கலைப்படங்கள்,
முதலியன இரவல் கொடுக்கப்படுகின்றன.
“கர்களுக்கு
5gagnBauent polaisseauUth Gradigm
Itäib - largăfflammurassňr algjörnur
RL dñrorrenciasñr gsgógisa
7. AzyZ-sü7 salynra Kougub gişf
4zýZlatý gz - fiřazýzy

Page 52
செல்வி என்றழைக்கப்படும் செல்வநிதி தியாகராஜா ஆவஐரி 30, 8 அன் செல்வி சமூகப்பிரக்ஞை உள்ள ஈழத்துப் பெண் இள்ை யாழ் பன்ஸ்ைக் ஒரு போன்னில்ைவாதியும் கூட புகேனின் சிறையில் இருந்து ெ நிறுவனமொன்று அiருக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளது இப் எழுத்து கழக இலக்கிய தாங்களில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படு இது பற்றி ஈழத்தவர் பெருமை கொள்ள முடியாத அகாசுக்கு புலிகள் அ5
பெரு நாட்டின் இடதுசாரிக் கொரில்லா அமைப்பின் (வெளிச்சமான பாை
ஆகியோருக்குப் பின்வந்த மார்க்சிய தத்துவவாதியும் போராளியும் என்று நாட்டின் அரச படைகளால் கைது செய்யப்பட்டார்.
 
 

'று புலிகளால் பலாத்காரமாக கடத்தப்பட்டார். புலிகளின் சிறையில் வாடும் கழக கீஸ்ைத்துறை மாண்னியும், கவிஞர், நாடக நெறியாளர் மட்டுமல்ல $ாண்டிருக்கும் செல்விக்கு சர்வதேச எழுத்தாளர்களின் (பென் PEN) பரிசு தமது தாத்தில் நம்பிக்கைகளுக்காகவும் இலட்சியங்களுக்காகவம் கின்றது. இது ஈழத்தவர் ஒருவருக்கு இதுவே முதல் தடவையாகும். வரை சிறையின் அடைத்துள்ளனர்.
SHINNING PATH) தவைவரும் மார்க்னம், லெனின், மாவோ
வர்ணிக்கப்படும் திரு கூப்மன் புரட்டாசி மாதக் கடைசியில் பெரு