கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 1995.02

Page 1
년 - )은」)
 


Page 2
GUII ᏰᏏ60ᎠᏧᏏlᏝ[
சிங்கப்பூர் புதிய டிசைன் நகைகள் நகரில
விலையிலும் பலவித தெரிவுகளுக்கும் தேவை எதுவானாலும் செய்து கொள்ள சிறுமிகளுக்கும் தேவையான வெள்ளி பலவித டிசைன்களில் நீங்கள் ெ ஜெயசாயி நன
Seiko, Citizen ஆகிய ஸ்தாபனங்களின் ஏக விநியோகஸ்தர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட ஒரே ஒரு ஸ்தாபனம் அட்டியல் TWO in One Guptstub கறுப்பு மணிமாலை பதக்கம் யானை மயிர் மோதிரம் நெக்கிலஸ் TWO in One G5ITGssir முத்துச் சங்கிலி யானை மயிர் கைச் சங்கிலி தாலிக்கொடி கைக்கடிகாரம்
தை
Jbl
|56
JAYASA
(Division of Ra
3601
 
 

d'Is ாளிகை
b வேறு எங்கும் பெற முடியாத மலிவு குறித்த தவணையில் உங்கள் நகைத் ாவும், மற்றும் நாகரீக நங்கையருக்கும், .
கொலுசுகளையும் மெட்டிகளையும் பற நாடவேண்டிய ஒரே இடம் கைமாளிகை
மணமகனுக்குத் தேவையான லைப்பாகை, மணப் பெண்ணுக்குத்
தேவையான அலங்காரப் பொருட்களையும் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்
நீங்கள் எம்மிடம் வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும் ம்மவர்களுக்கும் நாமே வரிகளை கட்டி பற்றுச்சீட்டுடன் 22 கரட்
என்ற உத்தரவாதத்துடன் கைகளைக் கொடுப்போம். மற்றும் ங்கள் பற்றுச் சீட்டுடன் எம்மிடம் வாங்கும் நகைகளை உங்கள்
பணத் தேவையாக திரும்ப எம்மிடம் விற்கும் போதும் கூலி
சேதாரம் நீக்கி அப்போதைய வுண் விலைப்படி 18% கழித்து காண்டு பணமாகவோ அல்லது
நகையாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
JI JEVVELLERY LTD
aga Maaligai Jewellers Singapore itd.)
Lawrence Ave. East, Unit 14, Scarborough, Ontario Tel: (416)431-1436 Fax: (416) 431-7712

Page 3
ஆசிரியர்:செல்வம் ெ
இணையாசிரியர் ெ ஆனந்த் பிரசாத் ? வெளியிடுபவர்; (E
குமார் மூர்த்தி விளம்பரங்கள் ராஜ0
凸弹
தமிழ் அச்சமைப்பு மொனிக்கா
தி
2
s i
ཕྱི་ Kalam
și PO.Box:73505,
şS 509 St.Clair AV West
- TOTOntO, Ont 江
M6C 1CO வி
அட்டைப்படம் நிக்கிற்றா மிக்ஹால்கோவின் g
அனா-ே18 படத்திலிருந்து ஒரு காட்சி
 

காலம் மாசி 95)
காலமும் கருத்தும்
லி பிடிக்க பூனை வேண்டி பூனைக்கு பால் காடுக்க பசு வேண்டி. இப்படி கதையாய் பாயிற்று-வெளியில் எங்கள் வாழ்வு
பிறந்த பொன்னுட்டின் நினைவுகளைச் சுமந்து காண்டே இன்னுெரு நாட்டின் குடிமக்களாய் ாழ்கின்ருேம்- நாம் என்னத்தைச் சொன்னுலும் னேத்தாலும் எங்கள் புதிய பரம்பரைக்கு ந்நாடே தாய் நாடாய் மாறிவருகின்றது.
நாள் ஒன்று போவதற்கு படும் பாடு தாளம் ாடுமோ தறிபடுமோ என்னும் விட்டுக்கு வெளியே ந்தால் இட்ட அடி சறுக்குது எடுத்த அடி தையுது- என்று எங்கள் முதியவர்கள் லம்புகின்ருர்கள்
வேலையில் இருக்கும் நடுத்தர வயதினர் ட்டிமுடியாத கடன்களோடு ஆறியிருக்க நரமின்றிய வாழ்வு
ஆனல் எங்கள் குழந்தைகள் மொழியாலும் ாழ்வாலும் இந்த நாட்க்குரிய வாழ்வைத் தாடங்கிவிட்டார்கள்
புலம் பெயர்ந்தோம், புலம் பெயர்ந்தோம் ன்று சொல்லி நிலை கொள்ளத் தாடங்கிவிட்டோம்.
இங்கு வரும் போது எங்களில் பலர் கையில் ரு பயணப் பெட்டியுடனும் தலைமாற்றிய கடவுச் ட்டுடனும் வெறுகையாய் வந்தவர்கள்
இன்று வீடென்றும் கார் என்றும் நிலேயான வலையென்றும்-எல்லாவற்றுக்கும் மேலாக ாழ்க்கைக்குரிய பாதுகாப்பு- நம்பிக்கையுடன்
ருக்கின்றோம்.
உயிர்தப்ப வந்திருந்தாலும் அல்லது காசுதேடி னடா வந்திருந்தாலும் இக் கனடா தேசம் ங்களைக் கைவிடவில்லே
யாரோ தேடி எவரோ உழைத்து ட்டியெழுப்பிய நாட்டில் எங்கள் வாழ்வு ற்காலிகமாகத்தானும் நல்லவிதமாய் தாடருகின்றது.
கால நிலை மோசமென்றாலும் எங்கள் ாழ்வு நிலை எங்களவர்கள் குடியேறிய மற்ற ாடுகளைவிட தரமாக இருக்கின்றது இங்கும் சில ல பிரச்சனைகள் இருந்தாலும் அது மனிதர்கள் ங்கிருந்தாலும் இருக்கின்ற பிரச்சனேதான்.
நாம் வாழ்கின்ற இந்த நாட்டிற்க்கு சுவாசமாய் இருப்பதன் மூலமும் நன்றியாய் ருப்பதன் மூலமும் எங்கள் தாய்நாட்டின் கிமையை உணரச் செய்வோம்.

Page 4
சூரியன் இல்லாத
பதது O நாடகள
ராறன்ரோ திரைப்பட வ
சேரன்

ரொறன்ரோ சர்வதேச திரைப்படவிழா பதீ தொனி பதாவது தடவையாகக் கடந்த செப்ரம்பர் மாதம் ரொறன்ரோவில் நிகழ்ந்தது. நாற்பத்தைந்து நாடுகளிலிருந்து முந்நூறு படங்கள் திரையிடப்பட்டன.
கனடாவின் மாநில அரசின் உதவியுடனும் வேறு பல தனியார் நரிறுவனங்களினி அநுசரணையுடனும் இடம் பெறுகிற ரொறன்ரோ திரைப்பட விழா உலகின் பல பாகங்களிலிருந்தும் முக்கியமான திரைப்படங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதில் குறிப் பிடத் தக்கது என பது சினிமாவியலாளரின் கருத்தாகும்.
சிறந்த படம், சிறந்த நடிகர் போன்ற விருதுகளுக்கான போட்டிகளோ தெரிவோ இந்த விழாவில் இடம் பெறுவதில்லை. உலகெங்குமுள்ள திரைப்பட விநியோகத்தர்கள் படங்களைத் தெரிவு செய்து வாங்குவதற்காக ஆயிரக் கணக்கில் கூடுகிறர்கள்.
நல்ல திரைப்படங்களுக்காக மாநகர் ரொறன்ரோவில் ஒரு தீவிர ரசிகர் கூட்டம் பெருமளவில் இருப்பது இத்தகைய திரைப்பட விழாக்களின் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணமாகும்.
இந்தியப் படங்களுக்கும் வேறு ஒன்றிரண்டு படங்களுக்குமான அனுமதிச் சீட்டுக்களை விட ட ஏனைய எல்லாப் படங் சர்வதேசத் களுக்குமான அனுமதிசி சீட்டுக் களி இரணிடு பிழா, 1994 வாரங்களுக்குமுன்பாகவே பெரும் பாலும் விற்றுத் தீர்ந்து விட்டன. இந்தியப் படங்களிலும் சேகர் குப்தாவின் ஃபூலான் தேவியின் அம்மணத்தைப் பார்க்க என்று ஒரே சனம் .
எவ்வளவுதான் பிரயாசை எடுத்தாலும் பத்து நாட்களில் ஒரு இருபது முப்பது படங்களுக்கும் மேல் ஒருவரால் பார்க்க முடியுமா என்ற பெரிய சந்தேகம் முதல் நாள் மனதில் எழுந்தது. எனினும் திரைப்பட விழா முடிவுற்ற பிறி பாடு பார்த்த படங்களை எண்ணிப் பார்த்தபோது முப்பத்தாறு படங்கள் என்று தெரிய வந்ததில் பெரிய ஆச்சரியம்.
பரவசம், மகிழ்ச்சி, பொழுது போக்கு போன்ற காரணங்களுக்காக அன்றித் தேடல், கற்றறிதல், அரசியல் போன்ற வேறுபல முக்கியமான காரணங்களுக்காகவும் திரைப்படங்களைப் பார்க்க முனைபவர்களுக்கு இது பெரிய ஆச்சரியமான விஷயமாகப் படாது என்றுதான் தோன்றுகிறது.
இத்தகைய திரைப்பட விழாக்களில்

Page 5
என்னென்ன படங்களைப் பார்ப்பது என்று தெரிவு செய்வது மிகவும் சங்கடமான காரியம் என்றலும் பயன்படக் கூடிய சில அனுபவக் குறிப்புக்களை முதலிலேயே சொல்லி விடுவது எல்லோருக்கும் உதவும்.
முதலாவதாக, விழாவில் திரையிடப்படுகிற நவீன திரைப்படங்கள் எல்லாவற்றையுமே ஒருவரும் பார்த்து முடிக்க முடியாது. குறைந்த பட்சம் ஒரு பத்துப் படங்களையாவது பார்த்து விடுவார்களாயின் அது அற்புதமான சாதனை.
இரண்டாவதாக, திரையிடப்படுகிற படங்களைப் பற்றிய விவரங்களும், விமர்சனக் குறிப்புகளும் அடங்கிய கையேட்டை முன்னதாகவே பெற்று, பார்க்க வேண்டிய படங்களைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். ரொறன்ரோ சர்வதேசத் திரைப்பட விழாவைப் பொறுத்தவரை இக்கையேடு நிதானமானதும் பயனுள்ளதுமான விமர்சனக் குறிப்புகளைத் தருகிற ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது.
முன்ருவதாகக் கனடியப் பத்திரிகைகளான THE GLOBE AND MAIL TORONTO STAR gasuso, திரைப்படங்கள் பற்றித் தரும் விமர்சனங்களையும் அறிமுகக் குறிப்புக்களேயும் நம்பக்கூடாது. (நீங்கள் இவற்றை வாசிப்பவரானல்!)
நான்காவதாக, ஒவ்வொரு படத்தையும் $750 கொடுத்து பார்ப்பதற்கு ஒருவருக்குமே முடியாது. திரைப்பட விழா முழுமைக்குமே செல்லுபடியாகக் கூடிய பாஸ் வாங்குவது என்ருல் கூட 80-100 டொலர்கள் வரை தேவை. நீங்கள் எழுத்தாளர், பத்திரிகையாளர் என்றல் dr GU LLD | 6 வழி ஒன்றிருக்கிறது. ரொறன்ரோவிலிருந்து வெளியாகும் ஏராளமான தமிழ்ப்பத்திரிகைகளில் ஒன்றினி நிருபராக அல்லது ஆசிரியராகப் பணிபுரிபவர் என்று ஒரு "சான்றிதழி எடுக்க முடியுமானல் (நீங்கள் உண்மையிலேயே திரைப் படங்களி பற்றி எழுதுபவராகவுமிருந்தால் !) சர்வதேசத் திரைப்பட விழாச் செயலகம் உங்களுக்கு முழுத் திரைப்பட விழாவையுமே இலவசமாகப் பார்க்க வசதி செய்து தருகிறது. ஆனல், நீங்கள் குறைந்தது ஒரு மாதத்திற்கு முனி பாகவே விண்ணப் பிக்க வேண்டும். ஐந்தாவதாக பிரபலமான அமெரிக்க, கனடிய ஐரோப்பியத் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு முண்டியடிக்க வேண்டாம். அவை பின்னர் சாவகாசமாக அரங்குக்கு வருகிறபோது பார்த்துக் கொள்ளலாம்.
ஆருவதாக, செனேகல், கினிபிஸ்ப்ஸோ, லத்தீனமெரிக்கா, கியூபா, இந்தியா போன்ற

காலம் மாசி 95) இடங்களிலிருந்து வரும் நல்ல படங்களைத் தவற விடக் கூடாது. இவற்றைப் பார்க்கிற சந்தர்ப்பம் பின்னர் கிடைக்காமலே போய் விடும். 才 ★ ★
y*)\ap ü புத் திரைப்படங்களி, கனடியத் திரைப் படங்களி , F) 5 fe) உலகதி திரைப் படங்களி, லத்தீனி அமெரிக்கத் திரைப்படங்கள், இந்தியா இன்று, ஆசியத் திரைப்படங்கள் ஆகிய பொதுவான பிரிவுகளில் படங்கள் திரையிடப்பட்டன. ஆசியப் பிரிவுள் சீனு, ஹொங்கொங், பிலிப்பைன்ஸ், கம்போடியா போன்ற நாடுகள் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தன. (வட அமெரிக்கரின் விசித்திரமான பூகோளக் கருத்து நிலையுள் இந்தியா இலங்கை போன்ற நாடுகள் ஆசியாவுள் அடங்கா).
இந்தப் பொதுப் பிரிவுகளை விட, விழாவில் முக்கியத்துவம் பெற்ற நெறியாளராக நிக்கிற்ரு மிக்ஹால்கோவ் (ரஷ்யா) தெரிவு செய்யப்பட்டு அவருடைய படங்கள் அனைத்தும் காண்பிக்கப்பட்டன. கூடவே கியூபாவின் புகழ் மிக்க நெறியாளர் தோமாளப் குட்டியாறெளப் அலேயாவின் சிறப்பைக் கெளரவிக்குமுகமாக அவருடைய படங்களும் விசேடமாகத் திரையிடப்பட்டன.
இநீதியா என்ற பிரிவினி மறி ருேர் சிறப்பம்சமாக மணி ரத்தினத்தின் நான்கு படங்கள் காண்பிக்கப்பட்டன. மெளன ராகம், திருடா திருடா, ரோஜா, நாயகன் ஆகியவயே இந்த நான்கும். பிரபலமான, ஜனரஞ்சகமான இந்தியப் படங்கள் எப்படி இருக்கும் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவே மணிரத்தினத்தின் படங்கள் திரையிடப்படுகின்றன என்று விமர்சனக் குறிப்பு ஒனிறு கூறுகிறது. I I GA) அமெரிக்க திரைப்படங்களும் இதே காரணத்திற்காகவே திரையிடப்பட்டன.
பார்க்க முடிந்த எல்லாப் படங்களைப்
பற்றியும் எழுதுவது என்னுடைய நோக்கமல்ல. முக்கியமான பிரிவுகளில் நான் பார்த்தவை பற்றிய எனினுடைய பதிவுகளைத் தருவதே இக் கட்டுரையின் நோக்கம்.
முதலில் கியூபாவும் தோமாளப் குட்டியாறெஸ், அலேயாவும் (எழுபது வயதாகப் போகும் தோமாளப் குட்டியாறெஸ் அலேயா இப்போதும் கியூபாவில் வாழ்பவர். எல்லா வகையான அர்த்தங்களிலும் புரட்சிகரமானவர். அரசாங்கத்தின் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும் திரைப்படத் துறைக்கூடாகவே மிகவும் பலமான திரைப்படச் சாதனைகளைப் புரிந்துள்ளார்

Page 6
| காலம் மாசி 95 பெரும்பாலும் இவருடைய படங்கள் கியூபப் புரட்சி புரட்சியின் பின்னுன விளைவுகள், வாழ்வு மாற்றங்கள். சிக்கல்கள், இவையனைத்தும் மனித உறவுகளில் ஏற்படுத்தும் பாதிப் புக்கள் பற்றியதாகவே இருக்கின்றன. புரட்சியின் கதைகள் (1961) என்பது புரட்சிக்குப் பின்பான அலேயாவின் முதலாவது திரைப்படம். இத் திரைப்படத்தில் சொல்லத் தொடங்கிய கதையைத்தான் வேறுவேறு படங்களிலும் பின்னர் வளர்த்துச் செல்கிறர் அலேயா, திரைப்படங்கள் உல்லாசத்துக்கு மட்டுமல்ல சமுக விமர்சனம், சமுகமாற்றம் போன்றவையும் திரைப் படங்களின் முக்கியமான குறியாக வேண்டும் என்ற கருத்தில் தீவிரமாக இருப்பவர் அலேயா. தனிமனிதர்களுடைய உணர்வுகள், உணர்ச்சிகள் மனுேபாவங்களைத் தீர்மானிப்பதில் கூட சமுக, வரலாற்று விசைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதையே அவருடைய திரைப்படங்கள் பல்வேறு வழிகளாலும் காட்ட (! முறி படுகின்றன. மிகச் சிறந்த உதாரணம் STKKT TL TT LTLTGCLGGL TT LLLLLL LLLGLCCHDLLH SL0L0L0
点
குறைவிருத்தியின் நினைவுகள் 'S
(I
ளேபர்ஜியோ எனப் படும் ஒரு "பூர்வு" வா’ப் புத்திசீவியைப் பற்றியது கதை. கியூபப் புரட்சிக்குப் பிற்பாடும் ளேபாஜியோ ஹவாணுவிலேயே தங்கி
கீளப்லோள்ளப்கியினர் The Re
 

விடுவது என்று தீர்மானிக்கிருண். எவ்விதமான நோக்கமும் ஆசையும் அற்று வாழி வது என்பதுதான் ளேபர்ஜியோவின் இப்போதையகுறி. நன்னேச் சூழவர ஏற்படும் மாற்றங்களில் கலந்து கொளி ள முடியாமலும் அதே நேரம் முற்றுமுழுதாக அம் மாற்றங்களினுல் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து தப்பி ஒட முடியாமலும் நவிக்கிறன் ஸேர்ஜியோ. இடைக்கிடை இலக்கியம் படைக்கும் ஸேர்ஜியோவின் சிக்கல்களே மிகுந்த அனுதாபத் தோடும் நுண்ணுணர்வோடும் சித்திரிக்கிருர் அலேயா, ளேபர்ஜியோவின் பாத்திரப் படைப்பினூடாகப் புரட்சிக்குப் பிந்திய கியூபாவின் "முக கிலேயையும் முரண்பாடுகளேயும் வெளிக் கொணர்கிறர் அலேயா, உணர்வுகளே வெளிப் படுத்துவதற்கு எப்போதுமே வண்ணங்கள் தேவையில்லை என்பதற்குக் கறுப்பு வெள்ளைப் படமான இது மிகச் சிறந்த உதாரணம்.
அலேயாவின் மற்றுெரு படமான Srwherry Id 00:0le விழாவின் சிறப்பு பிரிவில் திரையிடப்பட்டது. இப்போது ஹவானவில் மிகுந்த வரவேற்புடன் காண்பிக்கப்பட்டு வரும் rterytchரColleஅங்கதச் சுவை நிறைந்தது. மனிதமும் காதலுமே இப்படத்தின் அடிநாதம் ான்று அலேயா குறிப்பிடுகிருர், டேவிட் என்கிற ஒரு இளம் சமுகவியல் மாணவனைப் பற்றிய படம்.
" = ------ قسمf = dஇல் ஐரீன் ஜேகப்

Page 7
வாழிக்கை பற்றிய திட்ட வட்டமான கருத்துக்களையும் மிகக் குறுகிய சிந்தனை வட்டத்தையும் கொண்டிருக்கும் டேவிட் , தனினுடைய நீண்ட ஆய்வுப் பயணங்கள் ஒன்றின்போது டீகோவைச் சந்தித்து நேர்கிறது. Le G34517 எல்லாவற்றையும் கேளி வரிக் குள்ளாக்குபவன். மேலும் அவன் எழுப்புகிற கேள்விகள் பெரும்பாலும் மிகப் பொருத்தமான கேள்விகளாக இருக்கின்றன. டீகோ ஒரு பாலுறவு நாட்டம் கொணி ட வனர் . ஒரு வகையில் , Sa Lungpa (Homo sexuality)Lupibgóluu Lqff35ðavunqub அறிவையும் சமுக மட்டத்தில் கிளர்த்தும் நோக்கத்துடனேயே அலேயா இந்தப் படத்தை எடுத்திருக்கிருர் என்று தோன்றுகிறது. ★ ★ ★
"சொல்லப்படாத சேதிகளையும் பேசப்படாத சொல்லையுமே எப்போதும் விரும்புகிறேன்" என்று அறிவிக்கும் நிக்கிற்ரு மிக்ஹால்கோவ் சோவியத் அமைப்பு, வாழ்க்கை முறையூடாகவே சமுக மயமாக்கும் பெற்றவர். ரஷ்யப் புரட்சியினி பின்னன கலைஞர்களில், சோவியத் அரசியலின் எல்லா of 656 முக்கியமான காலகட்டங்களுடாகவும் வாழ்ந்து வந்திருக்கிற மிக் ஹால் கோவி ஒரு கலைக் குடும் பத்தில் பிறந்தவர். இவருடைய சகோதரரும் இன்னுெரு புகழ்பெற்ற ரஷ்ய நெறியாளருமாகிய அந் ரே கொஞ்சலோவ்ஸ்கி எண்பதுகளில் ரஷ்யாவை விட்டு வெளியேறி ՃՈւ ւ- mri. சமரசங்களுக்குட்பட்டாலும் ரஷ்யாவிலேயே தங்குவது என்று தீர்மானித்தவர் நிக்கிற்றா மிக்ஹால்கோவ்.
அலேயாவின் படங்கள் புரட்சிகரமானவை என்று சொன்னுல் நிக்கிற்றா மிக்ஹல்கோவின் படங்கள் புரட்சியைப் பற்றியவை என்று சொல்லலாம். நடிகராகவும் புகழ் பெற்றிருக்கிற மிக் ஹால் கோவின் சினிமா பப் பாணி பாரம்பரியமானது மட்டுமல்ல. ஒரு வகையில் வைதிகமானதும் கூட. வடிவமைப்பிலும், கதை சொல்லும் முறையிலும் இவ்வம்சம் தூக்கலாக இருக்கிறது. எனினும் மிக்ஹால் கோவினது பல படங்களை அடுத்தடுத்துப் பார்த்த போது, இந்த வைதிகத் தன்மையையும் மீறி மேலெழுந்து ரஷ்யாபற்றிய அவருடைய ஈர்ப்பும், "பிறந்த இடம், நமக்கான இடம்" என்பது பற்றிய அவரது ஆதங்கத்துடன் கூடிய உள்ளத்தைத் தொடும் சித்திரிப்பாகும். ரஷ்யாவின் கடந்த காலத்தையும், ஸ்டாலின் காலம் மற்றும் போல்ஷெவிக்குகளின் போராட்ட காலம் பற்றிய அலசலையும் கடந்த

காலம் மாசி 95) காலதி தையும் ரஷ்யாவினி இனி றைய காலத்தோடும் இணைத்து ரஷ்ய வாழ்வு பற்றிய கோலங்களைத் தருகிறார் மிக்ஹால் கோவி. கடவுளிடமி நமி பிக்கை இல்லாமல் போய் விட்டமையே இன்றைய ரஷ்யாவின் அவலங்களுக்குப் பிரதானமான ஒரு காரணம் என்று குறிப்பிடுகிற மிக்ஹால்கோவின் கருத்துப் பலருக்குச் சிறு பிள்ளைதீதனமாகதீ தோன்றக்கூடும். எனினும் ஏதாவதொன்றில் நம்பிக்கை வைக்க முடியாவிட்டால் வாழ்வு பற்றிய பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் சிக்கலுற்றுக் குழம்பவேண்டியிருக்கும் என்ற சிந்தனையில் நம்பிக்கைகளைத் தேடிச் செல்கிற சென்ற ஒரு கலைஞர் பட்டாளமே இருந்தது என்பதை நாம் அனுதாபத்துடன்தான் பார்க்க வேண்டும். இன்னெரு தளத்தில், ரஷ்யாவின் சிந்தனை, கலை மரபு, விழுமியங்களின் ஸ்லாவிய (slavic) வேர்கள், ஊற்றுக்களுக்கும் பிற்காலத்திய மேலைத் தேசப் பாதிப்புக் களி , பாரம் பரியங்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை மிக் ஹால் கோவி மிகவும் கலாபூர்வமாகச் சித்திரிக்கிறார். மிகச் சிறந்த உதாரணம் அவருடைய ஊர்கா என்ற திரைப்படமாகும். அமைதி கவியும் பாரிய ஸப் தெப்பி வெளிகளில் எடுக்ப்பட்ட ஊர்கா, கொம் போ எனிறு அழைக்கப்படும் மொங்கோலிய இடையன் ஒருவனின் வாழ்வைப் பேசுகிறது. நவீனத்துவத்தின் நிழலே படாமல் ஸ்தெப்பி வெளியில் தன்னுடைய குடும்பத்துடன் கூடாரம் ஒன்றுள் வாழும் கொம்போ ஒரு போதுமே ஸ்ப் தெப் பி வெளிகளை விட்டு வெளியேறியது கிடையாது. ஆட் டு மந்தையிலிருந்து, தேவையான போது ஆட்டைப் பிடித்துக் கொன்று திண்று கொள்கிறார்கள். ஐந்து நிமிடங்களுக்கு கமரா கொம்போ குடும்பம் ஆட்டைக் கொல்வது முதல் இறைச்சிக்கறி தயாரிப்பது வரை காட்டுகிறது (பேட்டலுசியின் நோவெ சென்ரோ இத்தாலியத் திரைப்படத்தில் அவர் பன்றியைக் கொல்வதை காட்டுகிறார் இரண்டுமே விருந்துக்காகத்தானி) என்ன LuulsióUTLbl'
ரஷ்யனான ஸேர்கே ஒரு ட்றக் ஒட்டுநர். வழி தவறி ஸ்ப் தெப்பி வெளியில் கொம்போவைச் சந்திக்கிறான். இருவரும் நண்பர்களாகின்றனர். முதல் தடவையாக ஸ்தெப்பிவெளிகளை விட்டு ஸேர் கேயுடன் நகரத்துக்குக் குதிரையில் செல்கிறான் கொம் போ. மீண்டும் வீடு திரும்புகிறபோது கொம்போவின் குதிரையின் முதுகில் TV மற்றும் நவீனத்துவத்தின் இதர

Page 8
Lamrouob Draf 95
அம்சங்களும் வருகின்றன. கொம் போவின் மனைவி வாங்கி வரச் சொல்லிய "கொண்டோம்" வாங்குகிற துணிவு கொம்போவுக்கு வரவில்லை. எனவே கொம்போவுக்கு மேலும் ஒரு குழந்தை பிறக்கிறது. இந்தப் பின்னணியில் நவீனத்துவமும், தொழில் துறையாக்கமும் அமைதியான, சுற்றுச் சூழலுடனிணைந்த ஒரு வாழ்வை எப்படிச் சிதைத்து விடுகின்றன என்பதை மிக்ஹால்கோவ் நளினமாகச் சித்திரித்துள்ளார். மிக்ஹால்கோளியின் ஐந்து மாலைநேரங்கள் (Five Evenings) gaŭ GóesunTG3upnT6ŭ (Oblomov), d5n1g56a5lesör அடிமை (A Slave of love) ஆகிய படங்களும் மனதைத் தொட்டவை.
ஐந்து மாலை நேரங்கள் படத்தில், நாயகன் அலெக்சாந்தர் இலீனி பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு மொஸ் கோவுக்கு வருகிறன். அங்கே 1941இல் யுத்தத்துக்குப் போக முன்பாக அவனி வாழிந்த வீட்டையும் அவனுடைய பழைய காதலியையும் காண்கிருண். இருவருக்குமிடையில் ஐந்து மாலைநேரங்களில் இடம் பெறும் சம்பவங்களைச் சூழப் படம் நகர்கிறது. பழைய நினைவுகள், இப்போதைய வாழ்வு, இடையிடையே தளிர்க்க முனையும் காதல், குழப்பம், உணர்ச்சிச் சுழிப்புகள் என்று ஐந்து மாலை நேரங்களும் மிகவும் அற்புதமாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. கறுப்புவெள்ளை படம் .இறுதிக் கணங்கள் மட்டும் உயிர்த் துடிப்புடனி கூடிய இசையுடனி வண்ைணத்துக்கு மாறுகின்றன.
நிக்கிற்றா மிக்ஹால்கோவின் அனா:6-18 குறிப்பிடத் தகுந்த ஒரு படமாகும். இப் படத்தை எடுத்து முடிக்க மிக்ஹால் கோவுக்குப் பத்து வருடங்களுக்கு மேல் சென்றது என்பது வெறும் செய்தியல்ல. படத்தினி மையம் மிகவும் எளிமையானது மிக்ஹால் கோவின் புதல் வி அனாவுக்கு ஆறு வயதாகியதும் இந்தப் படத்தை எடுக்க ஆரம்பித்தார் மிக்ஹால்கோவ் அனாவின் வாழ்வைக் குழந்தைப் பருவத்திலிருந்து இளம் பருவம் வரை பதிவு செய்வதுதான் மிக் ஹால் கோவின் எண்ணம். அனாவுக்கு ஆறு வயதானதிலிருந்து பதினெட்டு வயதாகும் வரைக்கும் ஒவ்வொரு வருடமும் அஞவிடம் அதே முன்று கேள்விகளைக் கேட்டு அஞவின் பதிலைக் கமெராவில் பதிவு செய்கிறர். கேள்விகள் இவைதான்.
உனக்கு மிகவும் வேண்டியது என்ன? நீ மிகவும் வெறுப்பது எதனை? நீ மிகவும் பயப்படுவது எதற்கு? கேள்விகள் எளிமையானவைதான் எனினும்
(,

பழைய சோவியத் யூனியனில் விடைகள் ாளிமையானவையாக இல்லை. பிரெஷ்னேவ், சேர்னென்கோவ் ஊடாகக் கொர்பச்சேவ் காலம் பரையான பன்னிரண்டு வருடங்களில் சோவியத் முகமும் வாழி வும் எவ வாறு மாறி பந்திருக்கின்றன என்பதை அனாவூடாகவும், பொருதீதமான தகவல் திரைப்பட தீ பணி டுகளுடாகவும் தன்னுடைய சொந்தக் தர லினாலான கதை மொழிதல் முலமும் பிக்ஹால் கோவி கொண்டு வருகிறார். ஒரே நரத்தில் தகவல் திரைப்படமாகவும் (documenIry) கதாசித்திரமாகவும் இப் படம் தொழிற் படுகிறது. ஆறு வயது அனாவினி பதில் களை பதினைந்து, பதினாறு வயது அனாவின் பதில்களோடு சோவியத் யூனியனின் பினினணியிலும் மிக் ஹால் கோவினர் தை மொழிதலுTடாகவும் பார்க்கிற போது பலசாத்தியப் பாடுகளுக்கான வாய்ப்பற்றதும் சிகுந்த இறுக்கம் நரிறைந்த அரசியல் கட்டு பபாடுள்ளதுமான சமுகம் தழந்தைகளில் ஏற்படுத்துகிற பாதிப்புக்கள் பயங்கரமாகத் தெரிகின்றன. குழந்தை அனாவின் பார்வையூடாக பிரஷ்னேவ் முதல் கொர்பச்சேவ் வரையான சோவியத் வரலாற்றையும் பிக்ஹால்கோவ் இன்னெரு தளத்தில் கொண்டு பருகிறர் சொந்தமாகத் திரைப்படம் எடுப்பது டை செய்யப்பட்டிருந்த காலத்திலும் பத்து மிடம் எடுக்கக்கூடிய திரைப்படச் சுருளை தான் வேலை பார்த்து வந்த ஆய்வு கூடத்திலிருந்து பருடாவருடம் ரகசியமாக எடுத்து வந்தே அனாவைப் படம் பிடித்தார் மிக்ஹால்கோவ். iனிப்பட்ட அனுபவம் பொதுவான அனுபவம், *கப்பன்-மகன் அண்மை-சேய்மை போன்ற pரண்படக்கூடிய அம்சங்களின் உன்னதமான லவையாக மிளிர்கிறது. அனா:6-18 k ★ ★ இந்தியா இன்று' பிரிவில் காண்பிக்கப்பட்ட படங்கள் சமகால இந்தியச் சினிமாவின் வட்டுமுகத்தைக் காட்டுவதாக அமைய வண்டும் என்பதே விழா ஒழுங்கமைப்பாளரின் பிருப்பாக இருந்தது. எனவேதான் அப்பாஸ்p ஸப்தானினர் பாவிகார் போனிற Y&F Te ITL LJ L is d6t முதல் அடுர் காபாலகிருஷ்ணனின் விதேயன் வரை பல பகையான படங்கள் திரையிடப்பட்டன. கெளதம் காஸ், எம்.டி.வாசுதேவன் நாயர், சேகர் கபூர், விக்ரம்ஜித் சிங், மணிரத்தினம், தேங் பெனகல், பியேந்து சட்டர்ஜி, கே.பி சசி, ருச்சிர்ஜோஷி, லீப் கோஷ், ஜில் மிஸ்ற்றா, றீனா மோகன்,

Page 9
புத்ததேவ் தாளப்குப்தா, சுதீர் மிஸ்ரா, ஆனந்தி பட்ட வர்தனர், பக்கஜ் புட் டாலியா ஆகிய நெறியாளர்களின் படங்கள் இடம் பெற்றன.
அடூர் கோபாலகிருஷ்ணனின் விதேயன் பல அம்சங்களாலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படமாகும். அடுரின் படங்களின் பொதுவான இயல்புகளான அழகு, நளினம், மனிதம் மற்றும் தானி எடுத்துக் கொண்ட பொருளை தி திரைப் படத்தினி சாத்திய எல்லைகளுக்குட்பட்டமுறையில் அறிவுசான்ற முறையில் அலசுவது போன்றவை விதேயனுக்கும் பொதுவானவை.
விதேயனர், அதிகாரத்தினர் ("O1") முகங்களையும் அதிகாரத்திலிருந்து பிறக்கும் அடிமைத்தனத்தையும்-இந்த அடிமைத்தனம் உடல், பொருள், ஆத்துமம் எல்லாவற்றையும் பீடித்துள்ளது-ஒரு கிராமியப் பின்னணியில் பரிசீலனை செய்கிறது.
தொம்மி ஒரு வறிய கூலித் தொழிலாளி. பாஸ்கர பட்டேலார் என்கிற நிலப்பிரபுவிடம் சேவகனுக இருக்கிறான் தொம்மி, பட்டேலார் பயங்கரமானவன். தான் வாழும் பிரதேசம் முழுவதையுமே கொடூரமான முறையில் கட்டுப் பாட்டுக் குளி வைத் திருக்கிறான்.
 

காலம் மாசி 95| தொம் மியைப் பலவழிகளிலும் இம் சைப் படுத்துவது பட்டேலாரின் பொழுது போக்கு. தொம் மியினி அழகான மனைவியையும் பவாதிகாரம் செய்து வருகிறான் பட்டே லார். பட்டே லாருடைய எல்லா நடவடிக்கைகளுக்கும் தொம்மியே துணை புரிய வேண்டிய நிர்ப்பந்தம், கோயில் குளத்தில் டைனமைற் எறிந்து மீன் பிடிக்க முயற்சி செய்வதிலிருந்து தன்னுடைய மனைவியைக் கொல்வது வரைக் கும் பட் டே லாரினி எல்லாச் செயல்களுக்கும் தொம்மிதான் துனை, சாட்சியம் எல்லாமே. தொம்மியினர் விசுவாசத்தில் பட்டே லாருக்கு எவ வித சந்தேகமும் இருப்பதில்லை. கிராமமக்கள் அனைவரும் கோபப்பட்டு எழுந்த போது பட்டேலார் காடுகளுக்குத் தப்பி ஓடுகிறார். அப்போதும் கூடத் தொம்மி விசுவாசமாகப் பட்டேலாருடன் துணை செல்கிறான். இறுதியில் பட் டே லாரினர் விரோதிகளி காட்டுக் குளி பட்டேலாரைச் சுட்டுக் கொன்று விடுகிறார்கள். பட்டே லாரின் துவக் கை ஆற்றுக் குளி வீசி எறிந்துவிட்டுத் தொம்மி மனைவியிடம் ஒடி வருகிறான். பலசந்தர்ப்பங்களில் தனது எஜமான் பட் டே லார் மீது கோபம் எழுந்தபோதும் அடிமைத்தனமும், விசுவாசமும் தொம்மியை
கே ாபகுமார்

Page 10
(காலம் மாசி 95 ஒரு போதுமே பட் டே லாருக்கு எதிராகதி துTணி டவில்லை. உணர்மையில் தொம் பரி பாத்திரத்தூடாக அடூர் வெளிக்கொண்டு வரும் அடி மைத்தனம் , அதிகாரத்துக் குக் கண்முடித்தனமாகப் பணிந்து போவதாலும் அதிகாரம் உக்கிரம் பெறுகிறது என்பதைக் காட்டுகிறது.
தொம்மியின் மனைவியான ஒமனாவைப் பட் டே லார், பலாத்காரம் செய்த பிற்பாடு ஒமனா, பட் டே லாரின் "தேவை களுக்கு அவ்வப்போது "பயன்படுவது தொம்மி- ஒமனா இருவரது அடிமை வாழ்விலும் ஒரு தவிர்க்க முடி யாத அம்சமாகப் போய் விடுகிறது. சமயங்களில் பட்டேலார் பாவிக்கும் வாசனைத் திரவியம் ஒமனாவிலும் கமழ்வதைத் தொம்மி உணர்ந்தாலும் வெகுளித்தனமாகச் சிலிர்த்துப் போய் விடுகிறானே தவிரத் தொம் மி கோபப் படுவதில்லை. அந்த அளவுக்கு தொம் மியின் இயல்பு அடிமைத்தனத்தை உள் வாங்கியதாகச் சரித்தரிக்கப்படுகிறது. எவ்வளவுதான் அற்புதமான திரைச் சித்தரிப்பு என்றாலும் அடூரின் கருத்தியல் தொம் மி பாத்திரத்தில் நெருடுகிறது. அடிமைத்தனத்தை எவ்வளவு மோசமான சூழலாலும் தாங்கிக் கொண்டு விசுவாசத்தை வெளிப்படுத்துகிற ஒரு பாத்திரத்தைச் சித்தரித்து அதன்மேல் எமக்கு மிகுந்த அனுதாபத்தை ஏற்படுத்துவதாகப் படத்தை நகர்த்தியிருப்பது அரசியல் தளத்தில் ஒரு பிரச்சினையாகும். அடூர் சொல்ல வருவது போல அதிகாரமும் அடிமைத்தனமும் தார்மீகம் மற்றும் ஒழுக்கவியல் (moral) சார்ந்த பிரச்சினைகள் அல்ல. அவை அரசியல் பிரச்சினைகளி அடி மைதீ தனத்தையும் கட்டற்ற விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமான கலைப் படைப்பூடாகக் கொண்டாடினாலும் அரசியல் ரீதியாக அவற்றோடு நாம் முரண்படுவது தவிர்க்க முடியாதது.
அடூரின் நிலைப்பாடு வேறுவிதமானது. அவர் தங்கியிருந்த ஹோட் டலருகேயுள்ள தேநீர்க் கடையில் சாவகாசமாக அமர்ந்து உரையாடிய போது அவர் தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவை. சமுக ஈடுபாடு மிக்க ஒரு கலைஞராகத் தன்னை இனங் காணுவதாகவும் விதேயன் தெளிவாகவே அதிகாரத்தின் பரிமாணங்கள் பற்றிய படம் என்றும் சொன்னார் அடூர். "அதிகாரத்தை எவ்வித எதிர்ப்புமில்லாமல் விசுவாசமாகக் கீழ்ப்படிவதுதான் அதிகாரத்திலுள்ளவர்களுக்கும் மேலும் தார்மிக வலுச் சேர்க்கிறது. அந்த
ଜୋର

அம்சத்தைத்தான் விதேயனுாடாகச் சொல்ல மயன்றிருக்கிறேன்" என்பது அடூரின் வாதம்.
கேரளத்தின் கிராமமொன்றில் பெண் டுக்குமுறை பற்றிச் சித்திரிக்க முயலும் கே.பி. சியின் இலையும் முள்ளும் இயல்பாகவும் பிரக்ஞை பூர்வமாகவும் நகர்கிறது. எனினும் தார்த்தத்தின் இயல்பான சித்திரிப்புக்கு அப்பால் ாத்தகைய ஆழமான சிந்தனைகளாயோ, உணர்வலைகளையோ எழுப்பத் தவறி விடுகிறது JLub.
எம்.டி.வாசுதேவன் நாயர், பொற்றேக்காடு ாழுதிய கதையொன்றைப் படமாக்கியிருக்கிறார். டவு குறைந்த மொழியோடும் நரிறைந்த மெளனத்தோடும் நுணுக்கமாக ஆணுல் மெதுவாக கரும் படம் இத்தகைய படங்கள் பற்றிய பிரச்சினை என்னவென்றால்-இவையே ஒரு பாணிபோல (Trend) உறுதியாக வந்துவிட்டன. இவ்வகையான எராளமான படங்கள் பல்வேறு மொழிகளிலும் உலக சினிமாத் தளத்தில் பந்துவிட்டன. இதனை விடப் புதிய வழிகளிலும் புதிய படிமங்களிலும் திரைமொழியைக் கண்டு கொள்வதுதானர் இன்றைக்கும் முன்னணியிலிருக்கும் LD ce) life நெறியாளர்களின் பணியாக இருக்க வேண்டும் ான்று சொல்லத் தோன்றுகிறது.
எனக்கு மிகவும் ஈடுபாடான அரவிந்தனின் )ாறாட்டம் படம் பார்க்க முடி யாமல் பாய் விட்டமை துயரம் குறிப்பிட்ட படி இரண்டாம் தடவை மாறாட்டம் திரையிடப்பட பில்லை. ஏமாற்றத்துடன் ஏற்பாட்டாளர்களை பிசாரித்தபோது போதியளவு அனுமதிச் சீட்டக்கள் பிற்க முடியவில்லை என்பதால் ரத்துச் செய்து பிட் டோம் எனிறார்கள் அரவிந்தனினர் )ாறாட்டத்துக்குப் பதில் ஒரு ஒஸ்ட்ரியப் படம் திரையிடப்பட்டது.
சாதாரணமான ஆஞல் சுவாரசியம் மிக்க ILLDIT607 English, August Lupafuyub gig, 67(ups வேண்டும். படம் நவீன இந்தியாவைப் பற்றியது. வீன இந்தியாவின் கறுப்பு உடலும் வெள்ளைக்கார மனோ பாவமும் கொண்ட இந்திய மேட்டுக் குடியினர் பற்றிய ஒரு சித்திரிப்பு nglish, August, gafas6it -gialaJub LDGGD பேசுபவர்கள், அமெரிக்கத் திரைப்படங்களையே பார்ப்பவர்கள், இந்திய மரபுகள், சங்கீதத்தைப் பற்றி இவர்களுக்குத் தெரிந்ததை விட அமெரிக்கா ற்றும் மேலைத் தேசம் பற்றி இவர்களுக்குத் தெரிந்தது அதிகம் எனலாம். படத்தின் நாயகனின் பெயர் அகஸ்தியா எனினும் பெயரை அவன் ஒகளப் ட் என்று மாற்றிக் கொள்கிறானர்
s

Page 11
(கனடாவுக்கு வந்த பிற்பாடு எத்தனையோ தமிழ்ப் பெயர்களுக்கும் இந்த அவலம் நேர்ந்துள் ளதை நான் ஞாபகப்படுத்தத் தேவையில்லை).
ஒகளப் ட், ஆங்கிலத்தில் கவிதை வாசிப்பவன். றொக் இசையும் ஜாஸ் சங்கீதமும் கேட்பது பொழுதுபோக்கு வாசிப்பு சுகத்துக்காக மார்க்கஸ் ஓரேலியஸ் வாசிக்கிறான். இந்திய நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தி பெற்று ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மட்னா என்ற பின் தங்கிய பிரதேசத்துக்கு அனுப்பப்படுகிறான். சொந்த நாட்டிலேயே அந்நியனாக உணர வேண்டிய நரிலை. ஒகளப் ட்டுக்கு மொழி தெரியாது. இந்தியாவின் கிராமப்புறத்து வாழ்வுடனும் கலாசாரத்துடன் எந்த ஒட்டுறவுமே கிடையாது. தன்னுடைய ஒரு வருடத்தை ஒகஸ்ட் எப்படிச் சமாளிக்கிறான் என்பதை மெல்லிய நகைச்சுவை இழையோடக் காட்டுகிறார் நெறியாளர் பெனகல், படம் ஆங்கிலத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது. இநீதியாவில் மட்டுமல்ல, பெரும்பாலான வளர்முக நாடுகளில் அதிகாரம் இத்தகைய ஆங்கில மோகிகளான ஒரு வர்க்கத்திடமேயே இருக்கிறது என்பது உண்மை. திறந்த பொருளாதாரம் துரிதமாக ஆட்சி பெற்று வருகிற இன்றைய சூழல், இந்த வர்க்கத்தையே வளர்முக நாடுகளில் மேலும் மேலும் அரசியல், கலாசார, பொருளியல் ரீதியாகப் பலமாக்கி வருகிறது. இந்த அம்சம் படத்தில் இல்லை. படம் முடிவில் மனதில் தங்குவது அங்கதமும் நகைச்சுவையுமே தவிரச் சீரிய சமுக விமர்சனம் அல்ல என்பது படத்தின் மையம் தவறி விட்டது என்பதைக் காட்டுகிறது. மறுபுறத்தில் இத்தகைய படங்கள் அதே மேட்டுக் குடியினருக்கு உல்லாசம் தரும் நகைச்சுவைக்காகவே எடுக்கப் படுகின்றனவோ என்றும் கேட்கத் தோன்றுகிறது.
புலம்பெயர்ந்துள்ள இந்தியர்கள் தயாரிக்கிற அல்லது முக்கிய பங்களிப்பு செய்கிற படங்களிலும் வெளிநாட்டவரையே (வெள்ளை, ஆங்கிலமொழி பேசும் என்று வாசிக்கவும்) குறிவைத்து எடுக்கப்படுகிற படங்களிலும் ஒரு பொதுவான தனிமையை நாணி அவதானிக்கிறேன். எமது பழக்க வழக்கங்கள், கலாசாரக் கூறுகள் மரபுகளில் எவற்றை வெளிநாட்டார் கேலிக்கும் இழிவுக்கும் உரியதாகக் கருதுகிறார்களோ அவற்றையே நகைச்சுவை மிக்க அம்சமாகப் படங்களில் சித்தரித்து விடுவது என்பதும் வெள்ளையர்கள் எம்மைப் பற்றிக் கொண்டிருக்கிற வகைமாதிரிகளை stereotypes. அப்படியே திருப்பிக் கொடுப்பதும் தான் அந்த அம்சம் மிஸிஸிப்பி மஸ்ாலா, மசாலா முதல் இப்பொழுது பரபரப்பாகப் பேசப்படுகிற Bai

576vb upirál 95 on the Beach வரை இந்த அம்சம் பரவிக் கிடக்கிறது. சுயவெறுப்பில் வேர் கொண்ட அங்கதத்தையும், நகைச்சுவையையும் விட்டால் இத்தகைய படங்களுக்கு வேறு ஊடகங்களே இல்லையா என்ற கேள்வி இத்தகைய படங்களை வெளிநாட்டுச் சந்தைக்காகத் தயாரிப்பவர்களின் அரசியலைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
சிறப்புப் பிரிவிலும் சமகால உலகத் திரைப்படங்கள் பிரிவிலும் பார்க்க முடிந்த படங்களுள் அந்ரே வாஜ்டாவின் நஸ்ப் டாசியா ஃபாளப்பிண்டரின் மார்தா, கீளப்லோவ்ஸ்கியின் றெட் எனி பன மிகவும் சிறப்பானவை. கீஸ் லோவி ஸ்கியினி றெட் இப் பொழுது ரொறனர் ரோவில் திரையிடப்பட்டுள்ளது. வண்ணங்களைத் குறியீடாகக் கொணிட வெள்ளை, நீலம் ஆகிய தொடர்படங்களின் வரிசையில் முன்ருவதுதான் சிவப்பு. போலந்தில் பிறந்து பிராணி சில் தனி கலை வாழ்வை அமைத்துக் கொண்ட கீஸப் லோவ்ஸ்கியினி படங்கள் முக்கியமான எல்லாத் திரைப்பட விழாக்களிலும் உயர் விருதுகளைப் பெற்றுள்ளன. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் எனும் முன்று அம்சங்களையும் குறிக்கிற பிரெஞ்சுதீ தேசியக் கொடி யினி முவண்ணங்களால் உந்தப்பட்டே நலம் , வெள்ளை சிவப்பு ஆகிய முன்று படங்களையும் கீஸ் லோவஸ்கி எடுத்துள்ளார். சிவப்பு சகோதரத்துவத்தைக் குறிக்கிறது. வலண்டின் எனும் மிகவும் அழகிய ஒரு பெண்ணுக்கும் பிறருடைய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட் பதில் பரவசங் கொள்ளும் விசித்திரமான ஒரு ஒய்வுபெற்ற நீதிபதிக்கும் இடையில் அரும்பும் நட்பைப் பற்றியது. படம் வணிணங்களை- குறிப்பாகச் சிவப் பைஒவப் வொரு காட்சிதி துணி டுகளிலும் பயனர் படுத்தியிருக்கிற முறையே கீஸ்லோவ்ஸ்கியின் கற்பனைப் படிமங்களின் சிறப்பைத் தெரிந்து கொள்ளப் போதுமானது. எவப் வாறு சிறு சிறு சமி பவங்களி கூட வாழ்க்கையில் உணர்வு மயமான திருப்பங்களை ஏற்படுத்தி விடுகினிறன எனி பதும் ஒவ்வொருவரது வாழ்வும் ஒரு பெரிய சிக்கல்கள் வாய்ந்த நாடகம் தானி எனி பதும் கீஸ்லோவ்ஸ்கியின் மையம். விழாவில் இடம் பெற்ற படங்களுள் கனடிய நெறியாளர் அட் டொமி ஈகோயனினர் எக்ஸோட்டிகா, நன்னி மொறற்றியின் டியர் டயரி ஆகியன இப்பொழுது ரொறன்ரோவில் திரையிடப்பட்டுள்ள நல்ல படங்களாகும். O

Page 12
straub unre 95
மீனா சக்திவேல்
உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆலோசகராக ஏறத்தாழ இரண்டாயிரப மக்களுக்கு அகதி மனு விசாரணைகள் அடிப்படை முறையிலும் குடிவரவு ே G6pgluti ilqj, gjigj REALESTATË LE பெற்றவரும் இலங்கை தமிழ் மக்க
மேலதிக தொட For Consultation Without O
Tel: (416)281809 (416) 754-481 Fax (416) 281-275:
 
 

மான பங்களா, நகர வீடுகள், இரு டர் வீடுகள் நியாயமான விலைக்கு க, விற்க அல்லது வாடகைக்கு எடுக்க லாபகரமான வர்த்தக நிலையம் வாங்க லது விற்க லகுவான முறையில் அடமான ங்குகள் செய்திட லவச பெறுமதி மதிப்பீடுகட்கு er of Sale வீடுகளை மிக நுணுக்கமான றயில் வாங்க அல்லது விற்க
>"ஐ நாடுங்கள்
5 வருட காலமாக குடிவரவு ம் கனடா வாழ் இலங்கைத் தமிழ்
மூலமும் மனிதாபிமான, கருணை நர்முக விசாரணை முறையிலும் GALTRANSACTIONS @6ứ Giff) ளின் நன்மதிப்பை பெற்றவர்.
ர்புகட்கு bligation, please call
) (24 Hrs Pager) 7 (Res) 3
EENASAKTHIVEL
Homelife/Champions Realty inc. Realtor Member 30 Sheppard Ave E. Suite 206 arborough, Ontario M1B 3W3

Page 13
looooog)
சிவதாசன்
எந்த மதத்தைக் கேட்டாலும் கடவுள் ஆகாயத்திலிருந்து வந்ததாகவே சொல்லிக் கொள்ளும். கடவுளைத் தேவைப்படும் போதெல்லாம் மனிதர்களும் அண்ணார்ந்து ஆகாயத்தையே பார்க்கிறார்கள். கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று சொல்கின்ற இந்து மதமும் விண்ணுலகுக் கடவுளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. அப்படியெண்ண ஆகாயத்துக்கும் கடவுளுக்கும் அற்புதமான பிணைப்பு?
இப்பிரபஞ்சம் முழுவதும் இரண்டு பொருட்களினால் ஆனதென்று தத்துவதர்சிகள் சொல்வார்கள். ஒன்று ஆகாயம் மற்றது சக்தி. எங்கும் வியாபகமாகவும் நிறை பொருளாகவும் இருப்பது ஆகாயம். இப் பிரபஞ்சத்தில் உருவமெடுத்திருக்கும் சடப்பொருட்கள் முழுவதுமே ஆகாயத்திலிருந்து உருவானவையேதான். சூரியர், பூமி, சந்திரர் எண்றாலெண்ண, விலங்கு செடி, கொடி, வாயுவாயிருந்தாலெண்ண அத்தனையும் ஆகாயத்தின் பிறிதொரு வடிவங்கள்தாம்.
புலண்களுக்கெட்டாத சூட்சும வடிவத்தில் ஆரம்பிக்கும் சிருஷ்டியின் முழுமுதற் தொடக்கமே ஆகாயமேதான். பல படிகளினூடு செல்லும் சிருஷ்டி ஸ்தூல வடிவினையெடுக்கும்போது அவை காட்சிக்குரிய பொருட்களாக மாறுகின்றன. சிருஷ ‘டியின் காலக்கெடு முடியும்போது பிரளயம் உண்டாகி
படைக்கப்பட்ட அத்தனை சடப் பொருட்களும்
மீண்டும் ஆகாயநிலையை அடைந்து விடுகின்றன.
இந்து மதம் சொல்கின்ற பஞ்சபூதங்கள் சிருஷ்டியின் பல நிலைகளே. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்

girsaoilb uDireáil 95 |
=शलालकृढ़ाष्ट्रल गुमनायान्द्र =
ஆரம்பித்து ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கிப் பார்த்தால் சிருஷ்டி-பிரளய செயற்பாட்டிற்கு விளக்கம் புரியும், v
நம்பமுடியாவிட்டால் விஞ்ஞானத்தையே துணைக்களைத்துப் பார்க்கலாம். நிலமாகிய திண்மத்திண்மீது சக்தியைப் பிரயோகித்தால் அது திரவமான அடுத்த நிலைக்குப் போகிறது. தொடர்ந்தும் சக்தியைப் பிரயோகிப்பின் திரவம் ஆவியாகிறது. தீ என்பது ஆவி நிலைக்குட்பட்ட சடப் பொருளின் வடிவமேதான். அதனால் தான் தீ இன்னும் கட்புலனுக்கு காட்சிதருகிறது. அதிஉஷ்ண நிலைக்குள் தள்ளப்பட்ட சடப்பொருட்கள் பருக்கைகள் துணிக்கைகளாகி விலகி விலகிச் செல்லும்போது வாயு நிலையை அடைந்து விடுகிறது. ஒரு கணம் ஸ்தூலமாகவிருந்து காட்சி தந்து கொண்டிருந்த சடப்பொருள் மறு கணம் காட்சியினின்றும் அகன்று சூட்சுமமாகி விடுகிறது. அதுவே தான் ஆகாயம்.
பெளதீக விஞ்ஞானத்தில் சக்தியின் தொழிற்பாடு பற்றிப் படித்திருக்கிறோம். ஒரு பொருளை ஆக்குவதற்கு எப்படி சக்தி தேவைப் படுகிறதோ அதேபோல ஒரு பொருளை அழிக்கின்றபோதும் சக்தி அதிணின்றும் பெறப்படவும் முடிகிறது. சிருஷ ‘டியின்போது ஆகாயத்தில் ஆரம்பித்து நிலம் ஈறாக
சக்தியின் பிரயோகமே பல நிலைப் படைப்புகளாகப் பரிணமித்தது. சடப்பொருட்களின் படைப்பு முதல் இயக்கம் ஈறாக இச்சக்தியின் தொழிற்பாட்டினால் தான் இப் பிரபஞ்சமே இயங்கிக் கொண்டிருக்கிறது.
மனித தேவைகளுக்காய் சக்தியைப் பயன்படுத்துவது விஞ்ஞானம். சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்று விஞ்ஞானம் மெஞ்ஞானம் இரண்டுமே ஏற்றுக் கொள்கிண்றன. சக்தி நிலை

Page 14
| smradub uprf) 95 மாற்றத்திற்குட்படுமேயொழிய அளவு மாற்றத்திற்குட்படுவதில்லை. படைப்பின் போது பொருளின்பால் முடக்கப்பட்டிருந்த சக்தி தான் பிரளயத்தின் போது அழிக்கும் சக்தியாய் மாற்றமெடுக்கிறது. அணுக்களைப் பிரிக்கின்ற போது பிளவு சக்தியாகவும் (fission). அணுக்களைச் சேர்க்கின்ற போது தொகுப்பு சக்தியாகவும் (fusion) விஞ்ஞானம் சக்தியை வெவ்வேறு வடிவங்களில் பாவித்துக் கொள்கிறது. ஐன்ஸ்டீன் சொல்லிப்போண e=mc என்ற சமன்பாட்டினால் பொருளின் அழிவிற்கும் சக்தியின் பொலிவிற்கும் ஒரு பொதுமையை உருவாக்கலாம்.
ஏவுகணைகளில் சூட்சும உருவில் முடக்கப்பட்டிருக்கும் சக்தி திடீரென்று விடுவிக்கப் படும்போது அது மனிதனை வாணவெளிக்குள் தள்ளிவிடும் எனறு விஞ்ஞானம் காட்டித்தத்திருக்கிறது. மணித மணங்களில் ஸ்தூல உருவில் முடக்கப்படும் சக்தி திடீர் விடுதலையடையும்போது அவர்களை ஞானவெளிக்குள் தள்ளிவிடும் என்று இந்து மதம் காட்டித் தந்திருக்கிறது.
விஞ்ஞான உலகில் சக்தி-சடப்பொருள் சமநிலையைப் பேணவேண்டிய அவசியம் பற்றி விஞ்ஞானமே எமக்குக் கற்றுத்தந்திருக்கிறது. பகுத்தறிவுள்ள மனித பரிணாமமே இந்த சமநிலையுச்சத்தின் அறிகுறி. சடப்பொருளை அழித்துச் சக்தியைப் பெற்றாலுஞ்சரி, சக்தியைச் செலவு செய்து சடப்பொருளை உற்றாலுஞ்சரி சமநிலை குலையத்தான் போகிறது. சமகால அணுவாயுதப் போர்களும், சூழலழிப்புகளும் நிலைகுலைந்த சமநிலையிண் வெளிப்பாடுகளே. இதுவெல்லாம் எதைக்காட்டமுணைகிறது?
சிருஷ்டியின் எல்லைக்கு நாங்கள் வந்துவிட்டோமா?. பிரளயம் பேரழிவுக்காய்க் காத்துக் கொண்டிருக்கிறதா?. இருக்கலாம். விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் இப்போதுதானே ஒன்றையொன்று புரியவே ஆரம்பித்திருக்கின்றன
நிலம், நீர் , தீ, காற்று. ஆஹா.

ரிக்ஷாவும் விருந்தும்
தொண்டைக்குள் உருகி வழியும் ஐஸ்கிரீம், ஏர்கணிடிஷன் ரூம்
எனக்கெதிரே வேசியாய் எங்கும் விரிந்து கிடக்கும் மேசை விருந்து வணிணங்கள்.
மனதுக்குள் மறதி பூசி உடல் முனைகள் குத்திட்டுத் திமிர எத்தனையோ மருந்துக்கள். அறிவை இடறிவிட்டு தோள்தட்டி, உதடு விரிக்கும் உறவு மாயங்கள் பல பல.
இருந்தும், வெளியே திசையுடைத்த ஒயாப் புயல் மழையில் வான் பிளந்த சாட்டை மின்னலில், என்னை சுமந்து வந்து கையேந்தியவனை, அரையிருட்டில் ஒரு செல்லாக்காசால் ஏய்த்த என் சிறுமை எரிமலையப் வளர்கிறது, நெஞ்சுகள் இன்னும்.
எஸ்.வைதீஸ்வரன் நன்றி நகரச்சுவர்கள்

Page 15
வடமேற்கு இலங்கையும் தமிழர் வரலாற்று முதன்மையும்
பின்பு ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் காரணமாகவும் தமிழ்படை எழுப்புகளின் காரணமாகவும் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சினுல் 5ம் நூற்ஆண்டில் எழுதிய மகாவம்சத்தையும், அதன் தொடர்ச்சியான சூளவம்சத்தையும் பயன்படுத்தி ஆதித் தமிழரான இயக்கரையும், நாகரையும் பேய்களாகவும், பாம்புகளாகவும் உலகில் உலவவிட்டனர்”
பூனரீசங்கபோதி

SITGlob Draf 95 மானிடத்தினதும், திராவிடத்தினதும், மனித நாகரீகத்தினதும், தொட்டில் எனப்படும் இலங்கையின் வடமேற்குப் பகுதி ஈழத்தின்
ஆதிக் குடிகளான இயக்கர்களினதும், நாகர்களினதும் தொனிறு தொட்ட வாழி நரிலேப் பகுதியாகும். தமிழி
கலாச்சாரத்தினதும், சைவ மதத்தினதும் சொந்தக் STUTíħ56MT Tafuu இவர்கள் காற்றல் அள்ளப்பட்டு கதியற்று வந்தவர்கட்கும், வியாபார மதியால் வந்த வேற்று வணிகர்கட்கும் தமிழ் பண்பாட்டிற்குஇசைய கைகொடுத்து உதவியதன் விளைவாக அவர்கள் சதியினில் வீழ்ந்து தங்கள் ) முடித்து விட்டவர்களாவர். இதனல் அப்படி பட்டவர்களின் சுயத்தையும், சொந்த வரலாற்றையும், அவர்கள் புதை குளியில் இருந்தே நாம் இன்று அறியக் கிடக்கின்றது.
வடக்கே அருவி ஆறு முதல் தெற்கே மாயவன ஆறு (தெதுறு ஒயா) வரை உள்ள பகுதி இலங்கையின் வடமேற்குப் பிரதேசமாகும். இக்கடற்கரைப் பிரதேசங்களில் முத்து, பவளம், சங்கு, ஆமைகள் நிறைந்த கடல்வளமும் பல ஆறுகள், குளங்கள், வில்லுகளி என்ற நிர்நரிலேகளுடனி கூடிய மணி வளமும் நிறைந்திருந்தமையால் அல்லி, குவேனி போன்ற அரசிகள் அரசாட்சி செய்த பிரதேசமென்றும் நாகர்களால் பூசிக்கப்பட்ட கேதீஸ்வரம், முனிஸ்வரம் என்ற சிவ ஆலயங்களை கொண்ட சிவபூமி என்றும், மாந்தை (ஒவிர், மகாதித்த) மனிஞர் குதிரைமலை, (கிப்பிரஸ்) அரிப்பு, புத்தளம், கற்பிட்டி, சிலாபம் ஆகிய பண்டைய துறைமுகங்களை கொண்ட பிரதேசங்கள் என்றும், கடற் பயணிகளான இபின் பட்டுட்டா, மார்க்கோ போலோ, ஆணியளப் லோக்கமளிப், விசயனி போன்றேர் கடல் கொந்தளிப்பினுல் காலத்திற்கு காலம் கரை ஒதுங்கிய பிரதேசமெனிறும் , பினிசியர், அரேபியர், உரோமர், கிரேக்கர், சீனர், ஐரோப்பியர், இந்தியர், ஆகியோரின் வணிக முயற்சிகள் வளர்ந்த பிரதேசமென்றும், பரவர், மறவர், தேவர் கரையார், சாஞர் (சாண்ருேர்) முக்குவர் என்ற சாதியினர் வாழ்ந்த பகுதி எனவும் , வணினியர், முக்குவ வணினியர் என்பவர்களின் தனித்துவமான ஆட்சி நடந்த பிரதேசமென்றும் கூறப்படும் வடமேற்குப் பகுதி 16ம் நூற் ஆண்டுவரை முற்று முழுதாக தமிழர் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதை போத்துக்கேய கிறிஸ்தவ பாதிரியார் குவய்ஸ்றேஸ் சுவாமிகள் எழுதிய குறிப்புகளின் முலம் தெரியக் கிடக்கிறது. ஆனல் இன்று அதை தமிழ் பிரதேசங்களில் உள்ள அனைத்து இடங்களின் தமிழ் பெயர்கள் சிங்கள மயப்படுத்தப் பட்டதுடனி இக் குறுகிய காலத்திற்குளி அப்பகுதி மக்களும் தமிழி

Page 16
| காலம் மாசி 95 அன்னியராக்கப்பட்டுள்ளனர்.
கி.மு. 544ல் விசயனி இலங்கைக்கு வந்ததற்கு பின்பே இலங்கையின் வடமேற்குப் பகுதியில் நாகரீகம் கொண்ட மக்கள் வாழ்ந்தனர் எனவும் அதன்பின்பே ஆற்று குடியிருப்புகளும், விவசாய முயற்சிகளும் இங்கு ஏற்பட்டதாக கூறும் சிங்கள பெளத்த வரட்டு வரலாற்று ஆசிரியர்கள் தமிழரும், தமிழும் போருக்காக வந்தது என்று புரட்டு கதைகளை நாள் தோறும் வெளியிட்டு வருவது வேதனைக்குரியது.
கி.பி 5ம் நூற்றண்டில் அதாவது விசயன் வந்து 900 ஆண்களின் பின்பு எழுதப்பட்ட மகாவம்சம் வட இந்திய லாலா நாட்டு மன்னன் தனது விசயன் என்ற மகன் துஸ்ட்டனக இருந்த காரணத்தால் அவனை அவனது தோழர்கள் 700பேருடன் சேர்ந்து நாடு கடத்தினுன் என்று கூறுகிறது. இக்கதைக்கு வரலாற்று ஆதாரங்கள் கிடையாது. சில கலிங்க நாட்டு மக்களி அக்காலத்தில் இலங்கை வந்து குடியேற்றினர் என்பது உண்மை. ஆனல் விசயன் கதை ஒரு கட்டுகதை என்று பல வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.
அவ்விதம் உண்மையாக இருப்பினும் கலிங்கம் அந்நாளில் திராவிட நிலமாக இருந்தது. அசோகன் காலத்திள் பின்பே கலிங்கம் ஆரியத்தை தழுவியது. ஆகவே விசயன் தமிழ் மொழியையே குவேனி, பாண்டிய இளவரசி ஆகியோருடன் பேசினன். இலங்கையும் அன்று தமிழ் தெரி நிலமாக இருந்தது. எழு எனும் ஆதி திராவிட மொழியையே குவேனியும் பேசினுள். எனவே விசயன் வருகையோடு இலங்கையில் ஒரு ஆரிய இனம் தோன்றியது என்பது பொருந்தாக கூற்று. மேலும் விசயனின் முதல் மனைவி குவேனி, இரண்டாம் மனைவி பாண்டிய நாட்டு இளவரசி, விசயன் தோழர்கள் திருமணம் செய்ததும் பாணி டிய நாட்டு பெனி களி அவர்களுக்குதவியாக 1000 குடும் பங்களை கொண்ட 18 சாதியினரும் அவர்களும் வந்தனர் என்று மகாவம்சம் கூறுகிறது. இவர்கள் அனைவரும் தமிழர்கள் (திராவிடன்) என்பதை சொல்ல வேண்டியதில்லை. மேலும் இலங்கையில் மேற்குப் பகுதியில் கல்யாணியிலும், குதிரை மலையிலும் , மாந்தையிலும் நாகர்கள் அரசிருக்கைகள் இருந்திருக்கின்றன. எனவே சிங்கள இனம் இயக்கர், நாகர், தமிழர் கலிங்கர் ஆகியோரின் கலப்பால் தோன்றிய கலப்பிளம் போன்றே சிங்கள மொழியும் சமஸ்கிருதம், பாளி, எழு, தமிழ் ஆகிய மொழிகளை அடியாகப் பெற்று உருவானது.
இதுபோன்று பெளத்தமும் தமிழர்களால் அனுசரிக்கப்பட்டதோடு அதன் வளர்ச்சியிலும்

வர்களே முன்னின்றனர் எனி பதற்கு மிழர்களால் இயற்றிய மணிமேகலை, குண்டலகேசி பூகிய தமிழ் காவியங்கள் சான்று பகரும். ஆனல் ன்பு ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் காரணமாகவும் மிழ் படை எழுப்புகளின் காரணமாகவும் ற்பட்ட காழ்ப்புணர்ச்சினுல் 5ம் நூற்ஆண்டில் ழுதிய மகாவமிசத்தையும் , அதனர் தாடர்ச்சியான சூளவம்சத்தையும் பயன்படுத்தி தித் தமிழரான இயக்கரையும், நாகரையும் பய்களாகவும், பாம்புகளாகவும் உலகில்
லவவிட்டனர்.
இத்தகைய கதைவிடுபவர்களில் பராசிரியர் ஐ.சி. மெணி டி ல் , கலாநிதி ரணவிதான ஆகியோர் முக்கியமானவர்கள், )ண்ணுள் தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் லாநிதி பரணவிதான நாகர்களை மனிதர்கள் ல்ல என்று கூறுகிறர். "சில அறிஞர்களைப் பாறுத்தமட்டில் நாகர்களை மனிதர்கள் என்பது ழமையாகி விட்டாலும் நாகர்களை மனித வணிகளாக மாற்றுவது நியாயமற்றதாகும். ாகர்களை மனிதர்களாக கொள்ளலாம் என்பதற்கு டைபெறும் விவாதம் தேவர்களை மனிதர்களாக்க g56ayub ”The Arya Kingdom in North 1961) மலும் பிறிதொரு இடத்தில் நாகர்களை மனித வன்களாக ஏற்று கொண்டாலும் அவர்களை ராவிடருடன் இனம் காண்பதற்கு எந்தவிதமான றிப்பான காரணமும் இல்லை. பழைய நாகதீவில் ாழ்குடா) தற்போது தமிழர்கள் வாழ்கிறர்கள் ன்பதற்காக நாகர்களை திராவிடர் என ஏற்று காண்டாலும் வட இந்தியாவில் நாகபுர என்ற டத்தை சுற்றி ஆரியர்கள் வாழ்வதால் அவர்களே பூரியராகவும் கொள்ளலாம்." என்கிறர்.
நாகர்களைப் பற்றி யார்தான் என்னதான் ட்டுக்கதைகளை பரப்பிய போதிலும் நாகர் ானிடர் என்றும், இலங்கைத் தீவின் ஆதிக் டிகள் என்றும் சர், எமேர்சனி ரெனனிற் -றுகிறர் (சிலோனி -லண்டனி 1859) அதே ருத்தினை எச்.பார்க்கர் தனது நூலில் நாகர் ானிடரென்றும், திராவிடர் என்றும், நாகரீகச் றப்புடையவர்களி என்றும் வட மேற்கு லங்கையில் வாழ்ந்தார்கள் என்றும், ஒழுங்கான பூட்சி அமைப்பைக் கொண்டு இருந்தார்கள் ன்றும், தாங்களே தங்களே ஆட்சி புரிந்தார்கள் 6traub staldost. (Ancient Ceylon, 1909)
இயக்கரும் நாகரும் இலங்கைத்தீவின் திக்குடிகளி என்று மேல் நாட்டு சரித்திர பூய்வாளர்கள் சொனி னதனி பின்னரும் ப்பூர்வகால, மக்களை மனிதர்கள் அல்ல என்று ழுங்குப்பிடியாக மாய உருவங்களாக்கிவிட்டு னி வேடர் கதை சொல்வதின் நோக்கம் லங்கைத்தீவில் நாகர்களின் வரலாறு முன்னணி

Page 17
வகித்தமையே.
மேலும் உலகின் முதல் சாம்ராட்சியமான உரோமாபுரிக்கு இலங்கையில் இருந்து தூதுவர்கள் கி.பி.45 ல் சென்றிருக்கிறர்கள். சென்ற துTதுவர்கள் நால் வரும் தமிழர். அத்துாதுக்குழுவின் தலைவனின் பெயர் ராச்சியா சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இச் செய்தி கி.பி 4ம் 5ம் நூற் ஆண்டுகளில் தொகுக்கப்பட்ட மகாவம்சம், தீபவம்சம் போன்ற பாளி நூல்களிலோ அல்லது பேரினவாத பேராசிரியர் பரணவிதானவின் வழிவந்த வரட்டு வரலாற்று திரிபுபாதிகளினி நூல்களிலோ வெளிவரவில்லை. ஆஞல் கி.பி முதலாம் நூற்றண்டில் வாழ்ந்த பிரபல சரித்திர ஆசிரியரும் விஞ்ஞானியும் மாலுமி சாத்திர நிபுணருமான பிளினி என்பார் எழுதிய இயற்கைச் சரித்திரம் (Natural History) 6Tg) sub plasib Gunpopulb நூலினிலேயே சொல்லப்பட்டுள்ளது.
அடுத்து இலங்கை தூதுவர்கள் உரோமபுரிக்கு செனிறதனி பினி னணியை நோக்கின் உரோமபுரி சக்கரவர்த்தியான குளோடியஸ் சீசரின் காலத்தில் அரபிக் கடலில் வணிக முயற்சியில் ஈடுபட்டிருந்த கப்பல் ஒன்று பருவப் பெயர்ச்சிக்காற்றில் சிக்குணிடு 15 நாட்களின் பின்பு தப்ரபேனின் ஷிப் புரளப் துறைமுகத்தை அடைந்தது. இப்புரஸ் என்பது குதிரை மலைக்கு கிரேக்கர் வைத்த பெயராகும். கிரேக்க மொழியில் ஹிப்ரஸ் என்பது குதிரையும், ஏரஸ் என்பது மலையையும் குறிப்பதாகும். எனவே இதுவும் தமிழி கிரேக்க மொழிப் பெயர்ப்பேயாகும். அக்கப்பலின் தலைவனி ஆனியஸ் லோக்கமஸ் எண்பான் குதிரை மலையின் மன்னனை சந்தித்தான். மனினனும் அவனை பண்புடன் வரவேற்றன். ஆறு மாதங்களில் அங்கு அவன் தங்கி இருந்ததன் முலம் உள்ளுர் மொழியை பயின்று கொண்டதஞல் மன்னன் உரோமானியர்களைப்பற்றியும் அவர்களின் சக்கர வர்த்தி பற்றியும், நாணயங்கள் பற்றியும் பல விடயங்களை அவன் முலம் அறிந்து கொண்டான். கப்பற் தலைவனின் தகவல்களில் மன்னனை மிகவும் கவர்ந்தது. அவர்களின் நீதிமுறை தான். இதனல் அத்தகைய நாட்டுடன் வியாபார முயற்சிக்கு புறம்பான நட்பையும், ஒத்துழைப்பையும் பேணுவதற்காக 4 தூதுவர்களை ரோமாபுரிக்கு அனுப்பினுண். நான்கு தூதுவர்களும் தமிழர். துTதுவர் தலைவனினி பெயர் ராச்சியாளப் இராசையா)
முற்காலத்தில் இலங்கையைப் பற்றி மெகஸ்தனிஸ் (கி.மு.326) எறரொஸ்தெனிஸ் (கிமு 275 -195) போன்ற கிரேக்கர்கள் சொல்லியதைவிட அது தொடர்பான சிறந்த விளக்கத்தையும்,

காலம் மாசி 95
தகவல்களையும் இலங்கையில் இருந்து சென்ற தமிழ் தூதுவர்களிடமிருந்து பெறமுடிந்ததாக பிளினி குறிப்பிடுகிறர்.
இது குறித்து எச்.ஏ.ஜெ.கலுகல்ல தனது நூலில் கூறியிருப்பதாவது "நான்கு தூதுவர்களும் சிங்கள வரல்லர் தமிழர்கள் 61 6մ Այl சொல்லப்பட்டதற்கு காரணம் தூதுக்குழுவின் தலைவனினி பெயர் ராச்சியாளப் என்று குறிப்பிட்டிருப்பது தான் அப்பெயர் ராஜா என்ற Guugout. Gunted psy' (Ceylon of the Early Travelers- இரண்டாம் பதிப்பு கொழும்பு 1969)
பிளினி ஒர் அறிஞர் பல்துறை விற்பன்னர் அத்தகைய தகமையுடையவர் ஒரு பெயரை மட்டும் கவனத்தில் கொண்டு துTதுவர்கள் நால்வரையும் தமிழர் என்று கூறியிருக்கமாட்டார். தவிரவும் தூதுக்குழுவின் தலைவனின் பெயர் தமிழ்ப்பெயர் என்று குறிப்பிட்டிருக்கின்றர். இத்தாலியின் கோமோ நகரில் பிறந்த பிளினி எழுதிய 37 தொகுதிகளைக் கொண்ட நச்சுறல் ஹிஸ்றரி என்ற பெரும் கலைக் களஞ்சியத்தின் 6ம் தொகுதியில் இருந்தே வடமேற்கு இலங்கையினது தமிழர் வரலாற்று பெருமைகளை உலகம் அறிய முடிந்தது.
கி.பி. 14ம் நூற்றண்டில் (கி.பி.1344) பிரசித்தி வாய்ந்த இஸ்லாமிய யாத்திரிகரான இபின் பட்டுட்டா புத்தளத்திற்கு வந்திருந்தார். இவர் மொத்தம் 75 ஆயிரம் மைல்கள் வரை பல நாடுகளுக்கு பிரயாணம் செய்து பின்னர் சிவனுெளிபாதமலைக்கு செல்வதற்காக இலங்கைத் தீவின் புத்தளம் கரையை அடைந்தார். இதுபற்றி பேராசிரியர் மெண்டிஸ் தனது (Our Heritage 1-1935) என்ற ஆங்கில நூலில் ஒரு விதமாகவும் அதன் தமிழி மொழிபெயர்ப் பில வேறு விதமாகவும் மொழி பெயர்த்து வரலாற்று திரிபை ஏற்படுத்தியதற்கு மேலாக "புத்தளம் வரலாறும் மரபுகளும் (1992) என்ற நூல் முலம் அதன் ஆசிரியர் ஏ.என்.எம்.ஷாஜகான் சம்பந்தமில்லா பல தொடர்புகளை ஏற்படுத்தி அக்காலத்தில் புத்தளத்தில் ஆட்சி செய்த மன்னனி ஆரியச்சக்கரவர்த்தி என்ற இஸ்லாமிய தக்கியுத்தீன் அப்துர் ரஹற்மாண் என்று இன்னும் மயக்கம் ஏற்படுத்தியுள்ளார்.
எனவே இதினி பட் டூட்டாவினர் குறிப்பின்முலம் அதன் உண்மையை காண்போம். புத்தளம் என்ற பெயரை இபின் பட்டுட்டா புத்தளா என்று குறிப்பிடுகிறர். அக்காலத்தில் புத்தளம் உட்பட்ட இலங்கையின் வடமேற்கு கரையோரதிதினி ஒர் பகுதி யாழிப்பாணமனினர்களினி ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இபின் பட்டுட்டா புத்தளம் வந்த வேளை யாழ்ப்பாண இராச்சிய மன்னர்

Page 18
| காலம் மாசி 95 இருந்திருக்கிருர். ஆனல் மன்னனின் பெயர் சொல்லப்படவில் லே பொதுவாக ஆரியச் சக்கரவர்த்தி என்றும் அவன் விக்கிரக வழிபாட்டு இந்து சமயத்தவன் எனவும் குறிப்பிடப்படுகிறது. யாழ்ப்பாண மன்னர் பெயர் பட்டியல்களை கொண்டு நோக்கும் போது அம்மன்னனின் பெயர் மார்த்தாண்ட ஆரியன் அல்லது குணசிங்க ஆரியன் ஆக இருக்கலாம் ஆனல் அவனுக்கு பாரசீக மொழி தெரிந்திருந்ததெனவும் அந்த மொழியிலேயே சம்பாஷித்ததாகவும் அத்துடன் நீர் விரும்பும் எதையும் என்னிடம் கேட்கலாம், நாணமுற வேணி டாம் என்று மன்னனி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு "நான் இந்த தீவிற்கு வந்தது முதல் ஆதாமின் புகழ்பெற்ற பாதத்தை தரிசிப்பதையே ஆவலாக கொண்டுள்ளேன்" என்றேன். அது சுலபமானது என்ற மன்னன் எனக்கு ஒரு பல் லக்கையம் பல லக்கு காவவோர் நால்வரையும், முன்று பிராமணர்களையும் பத்து பிரமுகர்களையும் வழித்துணைக்கு 15 பேரையும் கூடவே அனுப்பி வைத்தான்." (Great Travels of Ibin Batuta, National Geography pauubut 1991) இவற்றில் குறிப்பிட்டுள்ள பிராமணர்கள், இந்து என்ற பதங்களை நீக்கிவிட்டு வடஇலங்கை ஆரியச் சக்கரவர்த்தியான தமிழ் மன்னனை இஸ்லாமிய மன்னனுக்க புத்தளம் வரலாறும் மரபுகளும் ஆசிரியர் முயன்றதன் முலம் வடமேற்கு இலங்கையில் யாழ்ப்பாண தமிழ் மன்னன் வரலாற்று முதன்மையை திசை திருப்ப முயன்றுள்ளார்.
பற்று என்ற தமிழ் சொல்லை பத்து என வழங்குகின்றனர். ஆஞல் பற்று என்பது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதிகளை குறிக்கும். பண்டைய இலங்கையில் நிலப்பகுதிகள் பற்றுக்களாகவே பிரிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இலங்கையின் மேற்குப் பகுதியும் தமிழ்ப் பற்று (தெமழ ஹத் பற்று) பொன் பரப்பி பற்று, வில் பற்று, முசலிப் பற்று எனப் பிரிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ் பற்று என்பது புத் தளத்தினி கிழக்கேயுள்ள ஆனைமடு பரிரதேசங்களை சூழவுள்ள Lקו ]B $ நிலப்பரப்பாகும். இந்த தமிழ் பற்று என்ற பேரில் இருந்தே தமிழர்களின் ஆதிக்கம் மேற்கில் எப்படி இருந்திருக்கிறது என்பதையும். அது எப்படி சிங்கள பெளத்த, இளப் லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக் குட் பட்டு நிலைமாறியுள்ளன என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.
இலங்கையின் முன்று முக்கிய பிரிவுகளிலும் வன்னியர்கள் இருந்துள்ளனர். அவ்வாறே புத்தள பிரதேசத்திலும் வன்னியர்கள் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டி இருந்தனர். ஆனல் புத்தளத்தில்

இருந்த வணிளிமை முக்குவ வணினிமை எனப்படுகிறது. இம்முக்குவர் என்ற பிரிவினரும் நாகர் வழி வந்தவர்களே. நாகர்கள் அந்நாளில் பல உட்பிரிவுகளை கொண்டிருந்தனர்.
அவர்களை சங்கு நாகர், முகுழி நாகர், ஒவிய நாகர் என அழைப்பர். ஒவிய நாகரே மாந்தையில் ஆட்சி செய்தவர்கள் இதனுல் பிறநாட்டினர் மாந்தையை ஒவிர் துறை என்று அழைத்தனர். அது போல முகுழி நாகர் வழிவந்தவர்களே முக்குவர் என்பதும் அவர்கள் கடலில் முழ்கி முத்தெடுத்து அன்றைய முத்து வாணிபத்தில் ஈடுபட்டு இருந்ததால் பண்டைய வடமேற்கு பகுதியில் செல்வாக்குள்ளோராக இருந்தனர்.
இவர்கள் வீரமும், செல்வாக்கும் மிக்க ஒரு குழுவினராக புத்தளம் பகுதியில் வாழ்ந்தமையால் சிங்கள மனினர்கட்கு பணியாது போரிட்டு மதமாற்றங்கட்கும், மொழி மாற்றங்கட்கும் இசையாது வாழ்ந்து வந்தனர். பாதிக்கபாய என்ற சிங்கள மன்னன் ஆட்சி புரிந்த காலத்தில் இவர்கள் அவனுக்கு எதிராக படை எடுத்து சென்றனர் என்று உடறட்ட விற்றி எனும் சிங்கள நூல் கூறுகின்றதென சிலுமின 1938 இல4 கூறும். இது நிகழ்ந்தது கி.மு. 20 ம் ஆண்டிலேயாகும். இதை அடக்கமுடியாது திணறிய மன்னனி இந்தியாவில் இருந்து உதவி கோரி அடக்கினன் என அறியப்படுவதுடன் அக்கால சிங்களவர் இவர்களே காக்கறறிரு முக்குவர் என அழைத்தனர் என்றும் அதன் கருத்து புத்த சமயக் கொள்கையை ஏற்காதவர் என்று பொருள்படும்.
மேலும் முக்காறு கற்றணு என்ற சிங்கள காவியம் வட பகுதியில் இருந்து இவர்கள் பெரும் படையுடன் சிலாபம் வரை சென்று நாட்டைப்பிடித்து ஆண்டனர் என்றும் இது சக வருடம் 1159ல் நடந்ததென அந்நூல் கூறும், அந்நாளில் ஆண்ட சிங்கள மன்னஞன 2ம் பராக்கிரமபாகு இதனை அடக்குவதற்காக காஞ்சி, கீழ்க்கரை, காவிரிப்பூம் பட்டினம் முதலிய இடங்களில் இருந்து படைகளைப் பெற்றும் யுத்தம் முடிவுற 3 மாதமும் 25 நாட்களும் எடுத்ததாக கூறுகின்றது. மேலும் முக்கர கத்தாவ (முக்குவர் கதை) என்ற சிங்கள நூலின் ஆசிரியரான நெவில் 5 ம் நூற் ஆண்டில் ம்ே பராக்கிரமபாகுவிற்கும் 1410-1468) இவர்கட்கும் இடையில் நடைபெற்ற போர் பற்றி கூறியுள்ளார். (தினகரன் 18.7.93) இவ்விதம் வீட்டு விளையாட்டு முற்றம் போன்று புத்தளம் பகுதியில் போராட்டங்களை நடத்திய இவர்களுக்கு சிங்கள மன்னர்கள் காலத்திற்கு 5ாலம் செப்புப் பட்டங்கள் முலம் நிலங்களையும், பிற விலை மதிப்பு மிக்க பொருட்களையும் வழங்கியுள்ளதுடன் அவர்களே இவர்களுக்கு

Page 19
ராயகுல முக்குக வன்னியர் என்ற பட்டத்தையும் வழங்கினர்.
இவர்கட்கு சிங்கள மன்னன் வழங்கிய செப்பு பட்டயம் ஒன்றின் தமிழ் மொழி பெயர்ப்பு 6/Ա5ւDոմ]].
"சக வருடம் 1467 எசல மாதம் பிறை ஐந்து புதன் கிழமை அன்று இராஜ வன்னியனர் 2 மாதம்பை 3 அரசமாளிகயிைல் பெற்றுக் கொண்ட முப்பது சோடி யானைத்தந்தம், நாவற்காடு கிராமம் சித்திராவெளி, 4 புத்தளம் ஆகியவை அவருக்கு மானியமாக அளிக்கப் பட்டன. அத்துடன் குதிரை மலைக்கு இப்பக்கமும், கலா ஒயாவிலுள்ள ஊலுவகு குபுக் காவுக்கு 5 இப்பக்கமும், திவுரும் கலவுக்கு 6 இப்பக்கமும், பரமாகந்த மலைக்கு இப்பக்கமும் அடங்கும். சமக்கட்டாக முத்திரை மோதிரமொன்றும் , கழுத்துப் பட்டி யைச் சுற்றி கொசுவம் வைக்கப்பட்ட கையுள்ள மேலங்கியும், வெள்ளி வாளொன்றும் அவருக்கு கொடுக்கப்பட்டன.
இத்தகைய சிறப்புடன் வாழ்ந்தவர்களின் ஒரு பகுதியினர் போத்துக் கேயர் இலங்கை வந்தகாலத்தில் மாயாதுன்னையுடன் சேர்ந்து போர்த்துக்கேயருடன் போரிட, மறுபகுதியினர் போதி துக் கேயரினி சலுகைகளுக்காக மதமாற்றங்களுக்கு உட்பட்டு கிறிஸ்தவர் களாகினர். ஆனல் யுத்தம் புரிந்தவர்கள் புகழ்பெற்ற மாயாதுன்னையின் சதிமுயற்சிக்கு ஆளாகி முஸ்லீம்களுடனி சேர்ந்து சோரம் போனதால் அரசியல் அஞதைகளாகி வரலாற்று வறுமையாளர்களாக இஸ்லாம் மதத்தில் சேர்ந்து கொண்டனர். இதனுல் ஒரே உறவினர்களான
கணமுலை, விழுதோடை, புழுதிவாசலி , கடையாமோட்டை, நல்லாந்தழுவை ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் முஸ்லீம்களாகவும், நாவற்காடு, மாம்புரி, மணல்தீவு, ஆழியாவளை, கல் கமுவ பகுதிகளில் வாழி பவர்கள் கிறிஸ்தவர்களாகவும் ஒட்டுறவு இன்றி வாழ்கின்றனர்.
இவ்விதம் தங்கள் கட்டுக்கோப்பையும் அதற்கு உந்து சக்தியாக இருந்த சைவசமயத் தையும் அன்னியர் வருகையின் பின் இவர்கள் வடமேற்கு இலங்கையில் பலமிழக்க செய்திருந்தாலும் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் முழுக்க முழுக்க சிங்கள மொழி வழங்கிய பகுதிகளிலும் கூட வாழிந்துள்ள முஸ்லீம்களின் மொழி தமிழ் மொழியாக இருந்து வருகின்ற மைக்கு இவர்களே காரணமாக இருந்திருக்கிறர்கள் என்று இலங்கை சோனகர்

காலம் மாசி 95
இளவரலாறு- ஐ. எஸ்.எம்.அப்துல்) நூல் கூறுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக வடமேற்கு இலங்கையின் பொன்பரப்பி (கலாஒயா) ஆற்றுக்கு அணித்தாயுள்ள தாளிக்காட்டில் ஈமத்தாளிகளில் இறந்தோரை அடக்கம், செய்யப்பட்டதற்கான சான்றுகளை இலங்கை தொல்பொருளாய்வாளர் களும் பெனிசில் வேனிய பல்கலைக்கழக புதைபொருள் ஆய்வுக் குழுவினரும் இணைந்து 1970ல் நடத்திய ஆய்வின் போது கணி டு பிடித்தனர். ஏறத்தாள 8000 தாழிகள் இங்கே காணப்படுகின்றன என்றும் , 12000 பேரினி உடல்கள் இங்கே அடங்கம் செய்யப்பட்டி ருக்கலாம் என்றும் கருதுகின்றனர். இதுபோன்று 1950 ல் மாந்தையில் செய்த ஆய்வின்போது ஒரு முழு நிலையான எலும்புக்கூடு கிடைக்கப்பெற்றது. இவற்றை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்ச நல்லூர் தாழிகளுடனும், அத்துடனிருந்த இரும்பு ஆயுதங்கள் அணிகலண்களுடன் ஒப்பு நோக்கி ஈமச்சின்னத்து எலும்புகளையும் ஆராய்ந்த மானிடவியலாளரான கெனடி இவர்களை இன்றைய திராவிட மொழி பேசும் தென் இந்திய மக்களின் முதாதையர் என்று கூறியுள்ளார்.
எனவே இலங்கையின் வட மேற்குப் பகுதியில் விசயன் வருகைப் பற்றி மகாவம்சம் கூறும் தகவல்கட்கு மாருக வரலாறுகளை மாற்றி அமைக்க கூடிய அதிசயமிக்க தகவல் களி கிடைத்தமையால் இலங்கை அரசாங்கம் ஆய்வுகளை தொடராமல் கைவிட்டது மட்டுமல்லாமல் அப்பகுதியை வனவிலங்குகளின் காப்பகமாக பிரகனடப்படுத்தி குடியேற்றதி திற்கோ, ஆய்வுகளுக்கோ தடைவிதித்துள்ளது.
மேலும் புதைகுழியில் இருந்த அடக்க முறையை ஆராய்ந்த இலங்கை வரலாற்று அறிஞர்கள் பேராசிரியர் ஜயவர்த்தன, பேராசிரியர் இந்திரபால எண் போரும் இவ்விடங்களில் வாழ்ந்த மக்கள் திராவிடரே என்று கூறியுள்ளனர். எனவே ஈழத்தினி நாகரீகத்திற்கு அடி கோலியவர்கள் பெருங்கற்கால பண்பாட்டைப் பேணியவர்களான திராவிடமக்களே என்பது தெளிவாகின்றது.
விசயன் வருகைக்கு முன்பே மரமாக செழித்திருந்து நிழலாக இதமளித்த இலங்கை தமிழர் நாகரீகத்தில் கொடியாக படர்ந்தவர்களின் கொடுமைகளால் அவர்களி சநீததியினர் விதையாக வேற்று நாடுகளில் மீண்டும் வேர் ஊன்றும் நிலையை வரலாற்று பின்புலத்தில் சிந்திப்பது எதிர்கால இளைஞர் பரம்பரைக்கு பயனுள்ளதாகும்.

Page 20
(காலம் மாசி 95
(ID.ġb2aII u Idj வாழ்க்ை சில பக்
நூறு ஆண்டுகள் வாழ்ந்தவர்களிலும் பார்க்க 37 ஆண்டுகளே இவ்வுலகில் வாழி நித மு. தளையசிங்கம் அதிகம் பேசப்படக் கூடிய விசயங்களைச் செய்து விட்டுச் சென்றிருக்கிருர், எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதல்ல, எதைச் செய்தார் என்பதே முக்கியம். அவர் வாழ்ந்ததால் சிந்தனையும் அறிவும் மனிதனும் மேம்பாடு அடைந்திருக்கிறதா என்பதைக் கொண்டே அவர் வாழ்ந்தாரா என்பதைக் காண வேண்டும். அவர் சிந்தனைகள், செயல்கள், எழுத்துக்கள் மனித நாகரிகத்திற்கு உதவி இருக்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும். மு.த வாழ்ந்ததுக்கான தடயங்கள் அவர் எழுத்துக் களி மட்டுமல்ல, அவருடனர் பழகியவர்கள் , அவரினி மாணவர்கள் , உறவினர்கள், ஊர்மக்கள் அனைவரின் மனதிலும் அழியாத அணி பான உருவமாக இன்னும் இருக்கிறர் என்பதும் அவர் மதிக்கத்தக்தொரு நல்லதொரு மனிதராக வாழி நதிருக்கிருர் என்பதையும் காட்டும்.
அவர் புங்குடுதீவிலே படிப்பித்தது ஒர் ஐந்து வருசம். அங்கு வாழ்ந்ததும் அப்போது தான். (அதற்கு முன் இரத்தினபுரியில் வாழ்ந்தவர்) சமுக முயற்சிகளில் ஈடுபட்டதும் அப்போதுதான். அந்தக் குறுகிய காலத்தில் இத்தனை கவர்ச்சி
18

ங்கத்தின் கையின் கங்கள்
O
என்.மகாலிங்கம்
உடையவராக, சக்தியாக, நிறுவனமாக வந்தார் என்பதற்கு அது ஒரு சிறிய கிராமம். அங்குள்ள மகாவித்தியாலயத்தில் சிறந்த எவரும் விரும்பும் ஆசிரியராக இருந்தார் என்பது மட்டுமல்ல, உண்மையான நேர்மை, தனி னலமற்ற முற்ப போக்கான செயல்கள், ஈடுபாடுகள் அவருக்கு அந்த வசீகர ஆளுமையைக் கொடுத்திருக்கின்றன. 欢 ★ ★ புங்குடுதீவில் நவம்பர் 25, 1935ல் பிறந்தார். தன் ஆரம்ப காலக் கல்வியை சண்முகநாதனி வித்தியசாலையில் கற்ருர். பின் ஐந்தாம் வகுப்புடன் இரத்தினபுரிக்கு சென்றர். அவரின் தகப்பனர் அங்கு கடை வைத்திருந்தார். அங்கு புனித அலோசியஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 195760 வரை படித்தார். 1961ல் திரும்பி வந்து தான் படித்த புனித அலோசியஸ் கல்லூரியிலேயே 1967 வரை ஆசிரியராகப் பணியாற்றினர். 1968-73 வரை புங் குடுதீவு மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றினர். 1973 ஏப்ரல் 2ம் திகதி முன்று மாதங்கள் நோய்வாய்ப்பட்டிருந்து தனது 37 வது வயதில் காலமாஞர். நியூமோனியாவாக இருக்க வேண்டும் என்பது OSI 695D.

Page 21
14 வயதில் தந்தையை இழந்தார். இவருக்கு முத்தவர் ஒரு சகோதரி. இளையவர் தம்பி கவிஞர் மு.பொன்னம்பலம்.
பல்கலைக்கழகத்திலிருந்து Sout பட்டதாரியாக (B.A) வெளியேறினர். பேராதனைப் பல்கலைக்கழக வாழ்க்கையில் வாழ்க்கையின் பல கோணங்களையும் அனுபவித்தவர். நுாற் கல்வியிலும் பார்க்க சூழல், சமுக விசயங்களில் முழு ஈடுபாட்டுடன் வாழ்க்கையைக் கண்டவர். இவர் பல்கலைக்கழகத்தில் இருந்த காலம் ஆங்கில முலம் கல்வி பயின்ற காலம். சிங்கள- தமிழ் இனக்கலவரம் 1958ல் முதன்முதல் நடந்த காலம். பல்கலைக்கழகத்தில் குழப்பம் ஏதும் நடைபெறவிட்டாலும் இடதுசாரியினருக்கும் சமஷ்டிக்கட்சியினருக்கும் பல விவாதங்கள் நடந்தன.
மு.த சமஷ்டியை விரும்பியவர். இடதுசாரித் தனிமை கொண்டவர். இலக்கியம் அவரை ஏற்கனவே கவர்ந்திருந்தது. 1956 இலிருந்து பல சிறுகதைகளை எழுதியிருந்தார். தம்பி மு.பொ தீவான்’ என்ற பெயரில் கவிதைகள் எழுதினுர். வீரகேசரி, தினகரன், சுதந்திரன் பத்திரிகைகளில் இவர்களின் ஆக்கங்கள் பிரசுரமாகி இருந்தன. சமஷ்டிக் கொள்கையின் தாக்கத்தை இவர் நாவலான "ஒரு தனிவீடு' இலும் சிறுகதைத் தொகுதியான புதுயுகம் பிறக்கிறது' இலும்
SITGITTEJfTIL Ď.
சமஷ்டிக் கட்சியாக கொழும்பிலும், தமிழ் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சியாகவும் இரட்டை வேடம் போட்டதுமன்றி, வகுப்புவாதிகளாகவும் பொதுச்சிங்கள மக்கள் விரோதக் கோஷங்களையும் போட்டு இனவெறியையும் ஊட்டியதை நேரடியாக கண்டபின் அவரின் சமஷ்டி கட்சி பற்றிய கருத்துக்கள் முற்ருக மாறி விட்டன. அதே வேளை அவருடைய அறிவு விசாலமடைந்து, இராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர், காந்தி, வினுேபா போன்றவர்களின் பாதையில் வளர்ந்து விட்டிருந்தது. கூடவே ஞானகுருவாக நநீத கோபாலகிரியையும் ஏற்றுக் கொண்டிருந்தார்.
மேல்நாட்டு இலக்கியகாரர்களான டி.எச். லோரனர் ஸப் , காவப்கா டோஸ்ப்ரோவெளிப் கி, ரோல்ஸ்ரோய், சார்த்தர், காமு, ஜேம்ஸ் ஜோய்ஸ், ஆர்தர் கோஸ் லர், நோர்மனி மெய்லர், போல்ட்வின் போன்ற பலரையும் மேல்நாட்டு தத்துவங்களையும் தீவிரமாக வாசித்தறிந்தார். அத்துடன் இந்திய தத்துவங்களாலும் வேதாந்தத்தாலும் ஆகர்ஷிக்கப்பட்டு ஒரு சுற்றுச் சுற்றி வந்திருந்தார் அப்போது.
ஆர்தர் கோஸ்ப்லர், போல் பிறண்டன், ஆர்னேல்ட் ரொயின் பீ, பிலிப் ரொயின் பீ, அல்பேட் சுவைட்சர், அல்டளப் ஹக்ஸ்ப்லி,

காலம் மாசி 951
விவேகானந்தர் போனி ருேர் திரும் பவும் கீழ்நாட்டைக் காட்டினர். இராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர், ரமணர் இவரைக் கவர்ந்தனர். உபநிஷதத்துக்கள், பகவத் கீதை வேதாந்ததி தைக் காட்டின. சர்வமத நம்பிக்கையை இராமகிருஷ்ணர், விவேகானந்தர், காந்தி, நந்தகோபாலகிரி போன்றேர் காட்டினர். உளி சென்று அனுபூதி பலம் பெறுவதை நந்தகோபாலகிரி குருவாக தியானத்தில் இருந்து காட்டினர். சந்தேகச் சிக்கல்களை எளிமையாகச் சிரித்துக் கொண்டே எளிய சொற்களில் அறுத்து விடுவித்தார். அவர் தேடிய ஞானத்தை தேவை அறிந்து கொடுத்தார். அது முதவைத் திருப்திப் படுத்தியது. அவரைப் பூரணமாக நம்பினர். ஏற்றுக் கொண்டார். "போர்ப்பறை' நூலைச் சமர்ப்பணம் செய்தார். குருவைக் கண்டது 1966ல், குரு சமாதியடைந்தது 1970ல், எல்லையற்ற இந்திய ஞானத்தை முழுவதாக ஏற்றுக் கொண்டார்.
துளிளல் நடை. தடித்த வெட்டிய மீசை, கண்ணுடிக்கூடாகத் தெரியும் பிரகாசமான குண்டுமணி அளவான கணிகள், மெலிந்த உருவம். சுட்டித்தனமான பார்வை. நுட்ப
அறிவுத் தீட்சணியம். இடைப்பட்ட நிறம்.
வெள்ளப்பற்கள், கறுத்த மீசைக்கூடாகத் தெரியும் பிரகாசமான சிரிப்பு. நீளக் காற்சட் டை. உள்சொருகிய சட்டையை மணிக்கட்டில் இருமடி மடித்திருப்பார். சிலவேளை நாலு முழவேட்டி. வெளியால் சேட் விட்டிருப்பார். காலில் றபர் சிலிப்பர். (இது புங்குடுதீவுக்கு மாற்றலாகிச் சென்ற பின்)
இவருடன் உரையாடத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவருடைய வசீகரத்தன்மையால் எவரும் கவரப் பட்டு விடுவர். பெரியவர்களாயினும் சரி, சிறியவர்களாயினும் சரி இவருடைய மாணவர்கள் இவரால் கவரப்பட்டது ஆச்சரியப் படுவதற்கில்லை. மாணவர்களை அன்பால் அனைத்தவர். தட்டிக் கொடுத்து ஊக்குவித்தவர். சக ஆசிரியர்கள் கூட இவரை மதித்தனர். ★ ★ ★ தீவிரம், சிந்தனை, வேகம் எட்டிப் பிடித்து அடைந்து விட வேண்டும் என்ற அவசரம், விறுவிறுப்பு, துடிப்பு, விவேகம், கூர்மையான, சோம்பலற்ற அறிவு, தேடல் , எதையோ அவசரமாக எடுக்கப் போகும் அவதி, அதைத் தனிஞல் பிடித்து விட முடியும் எனிற அபாரமான தன்னம்பிகை, அதற்காக எதையும் துறப் பதற்குக் கூட தீ தயங்காத மனம் , ஆபத்துக்களை, விளைவுகளைக் கணக்கிலெடுக்காத பொறுப்பின்மை (ஆபத்துக்களைப் பற்றிய கவலை,
t

Page 22
|stsuub ucrf) 95 தன்னம்பிக்கையின் பாற்பட்டதாக இருக்கலாம்) எதையும் தனி அறிவால், நம்பிக் கையால் நேர்மையால் தன்னலமின்மையால் வென்று விடலாம் என்ற ஒரு ஒப்பற்ற எண்ணம், பொருள், பணம், உறவுகள், தொழில், பாசம் என்பன தடைகள் என்ற குணம், ஒர் புரட்சிவாதியின் உண்மையான குளும்சம். துறவியாகப் போகக் கூடிய மனுேபாவம்.
நீட்ஷே ஆபத்தாக வாழ் (டுஎைந danger Ously) என்று கூறினுரே அதுபோல வாழ்ந்தவர். பணம், பொருள், நிலம், சொத்து எவற்றையும் எதுவித கவலையும் இன்றி பயமும் இன்றி பின்விளைவுகள் பற்றிய அச்சமும் இன்றி மனைவி, மக்கள் நிலை என்னவாகும் என்ற சாதாரண குடும் பளப்தனின் பொறுப் பின்றி, அள்ளித் தானமாகக் கொடுக்கக் கூடிய, கொடுத்த, அசாதாரணமான, அதிசயமான குணும்சம். உடல் உபாதைகளைக் கூட, (இடைக்கிடை துன்புறுத்தும் ஆளப்துமா) தடையாக எனினுமல் தனி ஞானத்துக்கு ஏற்பட்ட சோதனை, அவற்றையும் கடக்க வேண்டும், உடம்பு என்ற நிலைக்கு அப்பால் போக வேண்டும் என்று அடிக்கடி கூறியவர். செயற்பட்டவர். அக்காலத்துக் கூட தியானம், எழுத்து போன்றவற்றில் அதிகம் ஈடுபாடு காட்டியவர். ஞானத்துக்கு எவை எவை தடையாக இருக்கிறதோ அவற்றைத் துறக்க ணிே டும் என்று அடிக்கடி கூறியவர். சுயஉணர்வுடன் ஞானத்தை தேடியவர்.
"இலக்கியம் எண்ணில் வளர்த்த துறவு இலக்கியத்தையே துறக்குமளவுக்கு வந்து விடும் என்பதை இப்போது தான் உணர்கிறேன்" என்றர். "சாதாரண மனிதன் எதை எதை பெரிதாக நரினைத்து ஈடுபடுகிருணுே அவற்றிலெல்லாம் ஈடுபடாது, விடுபட்டு, வெளியே நின்று வேடிக்கை பார்த்துச் சிரிக்கும் பிறத்தியான் போக்கை என்னில் இலக்கியப் பற்று வளர்த்திருக்கிறது" என்றர்.
சாதாரண மனிதன் என்று அவர் கூறியது உலகாயுதத்தில் நம்பிக்கை வைத்தவர்களை, அவர்களின் உலகியல் ஆசைகளை, அவற்றில் எல்லாம் விடுபட்டு, கமுவின் "பிறத்தியான்" போக்கு இலக்கியவாதிகளுக்கு, எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டிய தகைமைகளில் ஒன்று. வேற்றணுக நின்று வேடிக்கை பார்க்கும் பண்பு, அதாவது கூர்ந்து அவதானிக்கும் பண்பு முன்ருமவராக நிற்றல் இலக்கியத்தால் வந்தது என்கிறர். அது அவருக்கு இலக்கியப் பரிச்சயத்தால் இளமையிலேயே வந்து விட்டது. அந்த வளர்ச்சியின் பயன்தான் அவரின் துறவு அல்லது ஏற்கனவே இருந்த துறவு மனப் பானர் மை யை அது கணி டுபிடித்தது என்கிறர். தியானம் என்பதும் ஆழச் சிந்தித்தல்
s

நானே.
தைரியம் அவரின் உடன்பிறப்பு. மிக மெலிந்த உருவம். அதற்குள் இருந்த வீரம், அறிவு, தன்னம்பிக்கை அதிசயப்படக் கூடியது. 971ம் ஆண்டாக இருக்க வேண்டும. ஊர்காவற்றுறை. பொலிஸ் இன்ஸ்பெக்டர் சி. குே முன்னுல் நிற்கிறர். சமுகப் பிரச்சனையில் இவரையும் இன்னும் சில இளைஞர்களையும் இன் ஸப் பெக்டர் அழைத்துச் சென்றிருந்தார். இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விகளுக்கு இவர் மேசையில் ஊன்றிக் கொண்டு பதில் சொல்கிறர். இனி ஸப் பெக்டர் தனி நாட்டாணி மையைக் 5ாட்டுவதற்கு மேசையிலிருந்து கையை எடுத்து, நிமிர்ந்து நிற்கும்படி கட்டளை இடுவது போல்” ஆங்கிலத்தில் அதட்டுகிறர். "நான் எப்படி நிற்க வேண்டும் என்பதை நீர் எனக்குச் சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை" என ஆங்கிலத்திலேயே பதிலளிக்கிருர். முன்றம் உலக நாடுகளில் பொலிஸப் கார அதிகாரிகளினி அதிகார துஷ்பிரயோகம் சட்டத்தை மீறும் குற்றவாளிகளில் முதற்தரமானவர்களி 66of l 1gi உலகமறிந்ததொன்று. பொலிஸ்ப் நிலையத்தில் குட்டி அரசர்கள் அவர்கள்.
இதே இன்ஸ்பெக்டரைத் தான் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் நிர்வாகிகளும் பஞ்சாயத்தினரும் (1971) லஞ்சம் கொடுத்து விடுதலையில் அனுப்பி விட்டு வேறு பொலிஸ்காரரைக் கொண்டு இவரையும் இவர் மாணவரான கவிஞர் சு.வில்வரத்தினத்தையும் இரவு காளி கோயிலில் அமைதியாகத் தியானத்தில் இருந்து சத்தியாக் கிரகம் செய்து கொண்டிருக்கையில், (அரிசனங்களை கோயில் கிணற்றில் தண்ணிர் அள்ள விட வேண்டும், கோயிலுக்குள் வழிபட விட வேண்டும் என்று கோரி,) நையப்புடைத்து அப்போது அமுலில் இருந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ் , சேகுவேராப் புரட்சி என்ற ஜே.வி.பியினரின் புரட்சி முடிந்த காலம், இவர்களை கைது செய்து பாழிப்பாணம் கோட்டையில் சிறையில் அடைத்தனர். இவர்கள் சிறையில் இருந்த 5ாட்களில் ஜே.வி.பி தலைவர் ருேகண விஜேவீரவும் அதே கோட்டைச் சிறையில் இருந்தார். வேடிக்கை என்னவெனி ருல் , கோயில் நிர்வாகத்தில் இருந்தவர்கள் அனைவரும் மு.த, சு. வியின் தூரத்து உறவினர்கள். அவர்களுள் ஒருவர் இவருடன் மகாவித்தியாலயத்தில் படிப்பித்த சக ஆசிரியர். உறவுகளுக்கு அப்பாற் பட்ட பணச் செருக்கும் அதிகாரமும் ஆணவமும் கோயிலும் கடவுளும் தங்கள் தனியுடைமை என்ற Dன அபக் குவமும் தான் இவர்களிடம் 5ாணப்பட்டன.

Page 23
★ ★ ★ விவேகானந்தர், அரவிந்தர் போனிற தீவிரவாதிகள் தான் உண்மையான துறவிகளாக முடியும். காந்தியைப் போன்று சத்தியத்தை நம்பும் பிடிவாதக்கார மனிதரால் தான் இந்திய சுதந்திரத்திற்காக சாத்வீக முறையில் பாடுபடவும் முடியும். தன்னை இழக்கத் தயாரான ஒருவரால் தான், சத்தியத்தை, ஞானத்தை தரிசிக்க முடியும். உலகத்தையே வெல்லக் கூடிய பயமற்ற பலமும வரும். உண்மையான பொதுவுடைமைவாதி உலகாயுத வாழ்வையும் துறக்கத் தயாராக இருக்க Gau Goo fó என்ருர் மு.த. அதுதாணி உண்மையையும் பேரறிவையும் கொண்டு சர்வாதிகாரமினிறி, தொழிலாளர் சர்வாதிகாரமின்றி, உலகத்தை உண்மையாக உயர்த்த உதவும். அங்கு தான் சமதர்மம் நிலைகசூம் என்ருர். சத்திய யுகம் வரும். கூட்டுமுக்தி அனைவர்க்கும் கிடைக்கும் என்றர்.
இலக்கியவாதி கதை, கவிதை, நாவல் என்று தன்னை குறுக்கிக் கொள்ளாமல் சமுக, பொருளாதார , அரசியல் ஆத்மீக தளங்கள் அனைத்திலும் மாற்றம் கொண்டு வர உழைக்க Gou Goi (5)шћ. அனைத்திலும் சதி தியதி தை உள்நுழைக்க வேண்டும். சத்திய தரிசனமற்றவன் இந்த துறைகளிலும் தங்கள் ஆணவத்தை வெளிக்காட்டவே முனைவர் என்று கூறுவார்.
இவரைப் போல் ஆழி நீத சமுதாய தரிசனமுள்ளவர் இலக்கிய வாதிகளில் அருமை. சமுதாயப் பார்வையை அழுத்துகிறேன் என்று கூறும் எழுத்தாளர்களிலும் பார்க்க சமுதாய நோக்கத்துடன் அவர்களின் ஈடேற்றத்துக்கான கூட்டு முக்தியை நோக்கி தன் பார்வையைப் பதித்தவர் இவர்.
மெய்யுள் என்னும் பிரபஞ்ச யதார்த்தத்தில் இந்தப் போலிப் பிரிவுகள் இருக்க மாட்டா. சத்தியத்தை உள்ளடக்கமாக கொண்ட அது அதற்கரிய உருவத்தையும் எடுத்துக் கொள்ளும் என்றர்.
தனி சிந்தனை வளர்ச்சியும் தரிசனமும் அனைவருக்கும் புரியும் என்று காலத்தையும் கடந்து சிந்தித்த ஒரு தமிழ் இலக்கியவாதி இருப்பாரேயாகில் அது மு.த. வாகத் தான் இருக்கும். இலக்கியப் பிரிவுகளைக் கடந்து சிந்தித்தவர். செயல்படத் துடித்தவர். அந்த ஆத்மாவைப் புரிந்து கொள்வதற்கு அவரைப "போல் பெரும் கனவு காண்பதற்கும் சாதாரண
எங்களால் முடியாது.
மனைவி, மக்கள், உறவினர், வீடு, மொழி, சமயம், நாடு, பணம், உடல், நோய் என்று சிறு சிறு வட்டங்களுக்குள் உறங்கிச் சுற்றி வரும் எமக்கு அவற்றை எல்லாம் கடந்து வாழ வேண்டும், மக்கள் அனைவரும் விமோசனம் பெற

காலம் மாசி 951 வேண்டும் என்று துடித்த ஒரு ஆத்மாவைப் ւ, ՄՊրծ Ֆ] கொளி வது கற்பனைக்கு அப்பாற்பட்டதுதான். அந்தக் கற்பனை, கனவு, தோல்வியடைந்தாலும் அந்தப் பெரும் கனவைக் காண்பதற்கே பெருமனமும் பேர் ஆத்மாவும் தேவை.
முதலில் ஒரு பெருமனித இனம் தோன்றும் என்று அரவிந்தர் கூறினர். பெருமனித இனத்தில் முதலாவது பெருமனிதனுக மு.த. தன்னையும் தன்னுடன் செயற்பட்டவர்களையும் நினைத்தார் என எண்ண இடமுண்டு. சமுகத்தில் ஞானிகளுக்கு அடுத்தபடியாகத் தயார்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறவர்கள் கலைஞ்ர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர் போன்றேர் என்ருர் மு.த. பேர்மனித இனம் தோன்றுவதற்கு இவர்களிடம் அடையாளங்கள் இருக்கின்றன என்று நம்பினர். பரவலாக மனித குலம் முழுவதும் பேரறிவுக்குள் இறங்கும் சத்திய யுகமல்லவா இனி வரப் போகிறது என்று பெருங்கனவு கண்டார்.
"புதுயுக ஞான அலையினி அறிகுறிகள் மெல்லிய அடிமன உந்தலாகவே சர்வதேச கலை இலக்கிய தத்துவ பரப் பெல் லாம் சிதறிக் கிடக்கின்றன" என எழுதினர் மு.த. எனினே நம்பிக்கை! 欢 欢 ★
மு.த தான் சத்தியமாக நம்பியவற்றையே எழுதினுர். சொன்னுர், செயற்பட்டார். அதில் தான் அவரின் நம்பகத் தன்மையே இருக்கிறது. விவாதிப்பதற்காக, மற்றவர்களை தி திருப்திப்படுத்துவதற்காக, போலியாக ஒன்றையும் சொல்ல எத்தனிக்கவில்லை. தான் செய்வதில், சொல்வதில் நம்பிக் கையீனம் அவருக்கு வரவில்லை. சத்தியத்தின் அடிவயிற்றிலிருந்து, நாபியிலிருந்து மனச்சாட்சியே சாட்சியாக இருக்க வருவது அது. தன்னையே சந்தேகிக்கும், தான் சொல்வது பிழையாகி விடுவோ எனிறு எண்ணுபவர்களிடமிருந்து விளைவுகளைப் பற்றிச் சிந்திப்பவர்களிடமிருந்து நம்பகத்தன்மையை அதிகம் எதிர்பார்க்க முடியாது. சுயநலம் கலந்து விட்டால் நம்பிக்கையே வராது. சமுதாய ரீதியில் மனித நேயத்துடன் சிந்திப்பவர்களிடமிருந்து, சுயநலம் அதில் எள்ளளவும் இல்லாதவரை அவரை நம்பத் தான் வேண்டும்.
அவரின் செயல்கள் சூதறியாத (Naive) WSpமையான, அப்பாவித் தனமானவை என்று சிலர் மதிப்பிடலாம். ஆளுல் யதார்த்தத்துக்கும் செயற்பாட்டுக்கும் எப்போதுமே இடைவெளி இருக்கும். சொல்லுக்குமி, செயலுக்கும் எண்ணத்துக்கும் இடைவெளி இருக்கத் தான் செய்யும். கனவுக்கும் நனவுக்கும் வேறுபாடும் போதாத் தனி மையும் இருக்கும். எந்த
2

Page 24
(காலம் மாசி 95 இலட்சியவாதிகளிடமும் துயரமுரண் (Tragictaw) இருக்கத்தான் செய்யும். புருட்டஸ் தன் இலட்சிய நோக்கத்தால் சதிகாரருடன் சேர்ந்து யூலியஸ் சீசரைக் கொனிருண். பெண்களைப் பற்றிய அறியாமை, கியூகோவின் தந்திரத்துக்குப் பலியானது ஆகியவற்றல் அப் பழுக் கற்ற ஒதெல்லோ டெஸ்ப் டி மோனுவைக் கழுத்தை நெரித்துக் கொன்றர். அரசன் லியர் தனது வெகுளித்தனத்தால் தனது சொத்துக்களை நன்றியற்ற பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டு தன்னில் உண்மையாக அன்புள்ள மகளைத் தள்ளி வைத்தான்.
இப் படி இவர்கள் இருந்த போதும் இவர்களுடைய இலட்சியம், வீரம், நேர்மை ஆகியவற்றை நாம் சந்தேகிக்க முடியாது.
அதே போன்றது தான் மு.த தன் சொந்த வாழ்க்கையில் செய்த சில செயல்களும். ஆனல் அவருடைய கனவு, எண்ணம், இலட்சியம், உயர்ந்த நோக்கங்களைச் சந்தேகிக்க முடியாது. தேடல், சத்திய வேட்கை, சத்தியத்தில் நம்பிக்கை இவற்றை நாம் சந்தேகிக்க முடியாது. யோகியும் முட் டாளும் LLI 6) வேளைகளில் ஒரே தோற்றமுடையவர்களே. சுவாமி இராமகிருஷ்ணர் பைத்தியக்காரப் பிராமணன் தான் பலருக்கு. ரமணரும் கோவணச் சாமியார் தான். காந்தியும்
அரை நிர்வாணப் பக்கிரிதானே. ★ ★ ★
மற்றவர்களுக்கு ஒன்றைப் புரிவதற்கு எடுக்கும் நேரத்திலும பார்க்க குறைந்த நேரத்தில் அதைக் கிரகிக்கும் விவேகம் மட்டுமல்ல, அதற்கு அடுத்த படிகளிலும் பாய்ச்சலாகச் சென்று சிந்திக்கக் கூடியவர். பல விசயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியவர். பல விசயங்களை உள்ளுணர்வாலும் இன்னும் பல விசயங்களே தர்க்க நியாயங்களாலும் எளிதில் புரிந்து கொண்டவர்.
ஆனந்த வக்கும்பர, தொழிலாளர் பாதை (கம்கரு மாவத்தை) ஆசிரியராக இருந்தவர். புரட்சிகரக் கம்யூனிஸ் கழக முக்கிய உறுப்பினர். காமினி கலவான கூர்ந்த, நுணுக்கமான மதியுடையவர். பல நூல்களையும் சிறப்பாகப் புரிந்து கொண்டு விளங்கிக் கொள்ளக் கூடியவர். இருவரும் நல்ல சிந்தனையாளர்கள். பல தத்துவங்களையும் மேற்கத்தைய கிழக்கத்தைய தத்துவங்களையும் புத்தசமயத் தத்துவங்களையும் நன்முகக் கற்றவர்கள். வக்கும்பர ருெட்ஸ்கிய வாதி. ருெட் ஸப் கியவாதிகள் ளப் டாலினிஸவாதிகளையும் விட தாராளக் கொள் கையுடை வர்கள் மட்டுமல்ல நல்ல புத்திஜீவிகளும் கூட. ‘முதலாளித்துவ இலக்கியங்களையும் வாசிப்பவர்கள். நுஃமான், சிவசேகரம் ஐயப்படுகின்ற மாதிரி அல்லாது மு. த.வும் மார்க்ஸிய முலங்களையும் முலவர்களையும்

வாசித்தவர். முலங்களை வாசித்தீரா என்று மடக்குவது ஒருவகை ஆராய்ச்சிக் காய்ச்சல் (வித்துவக் காய்ச்சலின் புதிய பரிமாணம்) மு. பொவுடன் ஒன்முக இரத்தினபுரியில் படித்தவர்கள். மு.தவின் அறைக்கு அடிக்கடி வந்து உரையாடுபவர்கள். பல கருத்துக்களுடன் ஒத்த கருத்துக்கள் இருந்தாலும் அவர்களின் போதாத்தனர் மைகளையும் மு.த எடுத்துக் காட்டுவார். ஒரு முழுமையை மார்க்ஸியம் அடைய முடியாது, ஆன்மீகம் அடுத்த பக்கங்களையும் படி களையும் காட் டுவது எனிபதை தர்க்க நியாயங்களுடன் எடுத்துக் காட்டுவார். இறுதியில் அனைவரும் ஒவ்வொருவருக்கும் வேறுபடுவதற்கு gd føOLD (Békásmg (They agree to disagree) 676ógaj பக்குவத்துடன் நிறுத்திக் கொள்வார்கள்.
இப் படியான உரையாடல்களுமி தொடர்புகளும் அவருடைய தத்துவ சிந்தனை வளர்ச்சிப் பாதைக்குக் கிடைத்த அனுகூலங்கள் எனலாம். 1967-72 வரை பல கட்டுரைகளில் குறிப்பாக ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி கட்டுரைத் தொடரில் கைலாசபதியினர் பங்களிப்பை ஏற்று ஈழத்து இலக்கிய விமர்சனத் துறையை வளர்த்ததையும் எழுத்தாளர்களை ஊக் குவித்ததையும் பாராட்டியிருக்கிறர். அதேவேளை கைலாசபதி எஸ்.பொன்னுத்துரை போன்ற சிருஷ்டி கர்த்தாக்களை மறைத் து விமர்சிக்காமல் விட்ட போது அதைச் சுட்டிக் காட்டியது மட்டுமல்லாமல் க.கையின் நழுவல் விமர்சனம், போலித்தனம் போன்றவற்றையும் எடுத்துக் காட்டியிருக்கிருர். முறி போக்கு சர்வாதிகாரக் கூட்டைச் சாடினர். திறமான சிருஷ்டி இலக்கியங்களை ஆக்காமல், கட்சி சார்ந்து நரின் ருல் அங்கீகாரம் பெறும் ஒர் போலி இலக்கியப் போக்கையும் அதையே தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கும் போக்கையும் சாடிஞர். இப்படிச் சாடிய மு.தவை அவர் இறக்கும்வரை க.கை விமர்சனத்துக்குட்படுத்தவில்லை. எஸ்.பொ, மு.த போன்றவர்கள் இருக்கவில்லை (non-existem) என்ற முறையில் கண்களை முடிக் கொண்டு தரமில்லாத ஒரு முற்போக்குப் பரம்பரையைத் தட்டிக் கொடுத்தார். இந்தப் பரம்பரையை இன்று காணவே இல்லை. அன்றைய முற்போக்கு எழுத்தாளர்கள், விவசாய தொழிலாளர் புரட்சிகள் யாழ்ப் பாணப் பிற் போக்கு நலமானியச் சமுகத்தில் வந்து விட்டதாக கற்பனைக் கதைகள் எழுதியவர்கள் இன்று பெண்ணியம், தமிழீழம் போன்ற அலைகளில் சவாரி செய்கிறர்கள்.
ஈழத்தில் தனர்னேயே கேள்விக்கிடமாக்குபவர்களை விட்டு விட்டு தமிழ் நாட்டுக்கு ஒடி , மு.வரதராசனேயும் க.நா. சுவையும் ராஜாஜியையும் aslost 575 5

Page 25
வெளிக்கிட்டார் க.கை. அவர்கள் விமர்சிக்கப்பட
வேண்டியவர்கள் தானி , அதேவேளை உள்நாட்டில் உள்ள எஸ்.பொ. மு.த, வ.ந. இராசரத்தினம் போன்றேர்களும் விமர்சிக்கப்பட வேண்டியவர்களே. இங்குதான் அவர்களின் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஒரு பிரதான நீரோட்டத்தில் (Main Stream) கலந்து கொள்வதற்காக, அங்கீகாரம் பெறுவதற்காகச் சென்றிருக்கிறர்கள். அத்துடன் எஸ்.பொ. மு.த போன்றேர்களை ஒருவகை Snobbishதன்மையுடன் ஒதுக்கி விடலாம் என்ற எணி ணமும் இருந்திருக்கிறதை அனுமானிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆனல் திறமை, உண்மையான கருதீதுக் களி எங்கிருநதாலும் எனிருவது வெளிக்காட்டிக் கொள்ளும் என்பதை மறந்து விட்டார்கள். இந்த ஒதுக்கல் பாரம்பரியத்துக்கு, கைலாசபதியின் வாரிசான சிவசேகரத்தின் கூற்று எங்களுக்கு சான்று பகருகின்றது. மு.த வைப் பற்றி எழுதாமல் இருந்ததற்கு, மு ன்று வருடங்களுக்கு முன் எண்ணம் இருந்தும், மு.த வுக்குள்ள முக்கியத்துவமே ஒரு குறுகிய வட்டத்துக்குட்பட்டது என்பதால்" என்கிருர்,
பின்னர் அவரைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதைக் கூறுகிறர். 'அண்மையில் தென்னிந்தியாவில் சில மார்க்ஸ்பிய எதிர்ப்பாளர்கள் மத்தியில் மு.த பற்றிய புதிய அக்கறைகள் எழுந்துள்ளதும், அது அந்த வட்டத்திற்கு வெளியேயும் சிறிது சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதால் மு.த வின் கருத்துக்கள் பற்றி எழுத முற்படுகின்றேன்" என் கிருர் சிவசேகரம். (மரபும் மார்க்ஸியவாதிகளும். சி.சி) சிவ சேகரத்தினர் அடிப் படைகளி சந்தேகத்துக்கு இடமானவை. “மு.த வினி முக்கியத்துவம் குறுகிய வட்டத்துக்குள் இருந்தது' இது பெரும்பான்மையினர், சிறுபான்மையினர், ஆரவாரம் , கைதட்டல்களைக் கொணி டு கருத்துக்களை (Ideas) அளக்க வெளியிட்டதால் வந்த (ஜனநாயகத்தின் பிழையான பகுதி) வில்லங்கம்.
‘தென்னிந்தியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதால் எழுத முற்படுகின்றேன். இதுவரை பிரதான நீரோட்டத்தை அடையாது என்று நினைத்திருந்தவர்களுக்கு அங்கு அவருடைய கருத்துக்களைப் பற்றி பேச வெளிக்கிட்டவுடன் மட்டும் மு.த வைப் பற்றி ஆராய வெளிக்கிட்டிருக்கிறர். அந்தச் சலசலப்புக்கு அஞ்சியா? அல்லது தங்கள் குரலும் அங்கு ஒலிக்க வேண்டும் என்பதில் அக்கறையா?
இவர்கள் நோக்கம் புரியவில்லை. தங்கள் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்கள் எங்கிருந்து வந்தாலும் சலசலப் புக் காட்டினுலும் சரி, காட்டாவிட்டாலும் சரி, அதைப் பற்றி குறிப்பிட்டு

காலம் மாசி 95
தங்களி கருத்தை நரிலேநாட்டுவது தானி நேர்மையான புத்திஜீவிகளின் உண்மையான செயல். ஒதுக்குவதால் ஒரு கருத்தை வெல்ல (Լp Lգ- աn 3]. அநீததி தந்திரம் சிந்தணுவாதிகளுக்குரிய அம்சமல்ல.
மு.த வாழ்ந்த போது அவரைப் பற்றிய விமர்சனங்களை எவரும் வைக்கவில்லை. கே.எஸ். சிவகுமாரனி மட்டும் சில பத்திரிகைகளில் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறர். இந்திய விமர்சகர்களுக்கு இவரின் எழுத்துக்கள் இவர் வாழ்ந்த போது கிடைக்கவில்லை. ஈழத்து விமர்சகர்கள் கண் முடி மெளனம் சாதித்தனர். இறந்த பின் கைலாசபதி மு.த வின் இரண்டகத் தன்மை பற்றி விளாசித் தள்ளினர். அவர் இருந்த போது அதை எடுத்துக் காட்டி இருந்தால் மு.த அதைச் சிலவேளை ஏற்றுக் கொணி டு "முறி போக்காகக் கூட மாறி இருக்கலாமே! விமர்சனம் சூடு பறக்க வேணும். அவ்வளவு தான். விமர்சனத்துக்குரிய முக்கியமான குணமான தவறைச் சுட்டிக் காட்டுதல்" ஐ மனமறிந்து விட்டு நழுவி விட்டார்கள். பின்னர் வெளிவந்து தாக்கும் போது நம்பகத் தன்மை கேள்விக்கிடமாகிறது. ★ ★ ★ மு.த எதிலுமே அவசரமாக இயங்கினர் எனத் தோன்றுகிறது. வாழிக் கையில் எழுத்தில் சிந்தனையில் செயலில் எதிலுமே ஒரு அவசரம் guppiisg.J. missionaryZeala L6ir guiiga IIIrds(267 அப்படி இயங்கினர். 1969-72க்கும் இடையில் அவருடைய பாய்ச்சல்கள் பல. எழுத்து, தியானம், கூட்டுத்தியானம் , பிரார்த்தனை, சிரமதானம், மக்கள் கடை, அரிசனவகுப்பு, படிப்பித்தல் தொழில், அரசியல் எதையுமே துறக்கக் கூடாது னிறு பக்குவம் வந்த காலம். அவர் எழுதிய மாதிரி எல்லாவற்றிலும் தலைமுழுகி விடும் காலம். அரசியல் கூட்டங்களில் பேசினர். மல்லிகை, சத்தியம் பத்திரிகைகளில் எழுதினர். போர்ப்பறை மெய்யுள் கட்டுரைகள் எழுதினர். பல நாவல்கள் எழுதினர். இவை அனைத்தையும் 1962-72 கால இடைவெளிக்குள் செய்து முடித்தார். இத்தனை வேகம் ஏன்? இவ்வுலகை விட்டு நீங்குவதற்கா என்று கேட்கத் தோன்றுகிறது. ★ ★ ★
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, முற்போக்கு இலக்கியம், மட்டக்களப்பு விழா ஒர் வெட்டுமுகம் போன்ற கட்டுரைகள் தான் இவரின் ஆரம்ப விமர்சனக் கட்டுரைகள். இவை தான் இவரை ஒரு சீரியஸ் விமர்சகர் என்றக்கியவை. அத்துடன் முற்போக்கு மோஸ்தருக்கும் மரபுவாதிகளுக்கும் அப்பாற்பட்டு சிந்தித்து நற்போக்கு எளப். பொவையும் விமர்சித்து ஒரு முன்ரும் பக்கத்தை துணிகரமாகக் காட்டத் தொடங்கியவை. அதனுல் எந்தச் சாராருமே 6/60/ے(LT ஏற்றுக்

Page 26
incub upril 95
கொள்ளவில்லை. அவரின் விமர்சனங்களைப் பற்றி விமர்சனம் எழுதியதுமில்லை. அப்படி ப் Lu Tiff Gods usedů ஈழத்தில் 6f pff &F 60TLð வளர்ந்திருக்கிறது என்பதில் அவ்வளவு உண்மையில்லை. கைலாசபதி, சிவத்தமி பி போன்றேர் தமிழ் நாட்டில் வேரு னிருத, வேருன்ற முடியாத மேற்கத்தைய மார்க்ஸிசப் பார்வையை ஈழத்தில் அறிமுகம் செய்தது உண்மை. ஒரு சில பழைய நூல்களுக்கு புதிய விளக்கம் கொடுத்தது உண்மை. மார்க்ஸிய விஞ்ஞான கோணத்தில் இருபதாம் நூற்றண்டு இலக்கியம், நாடகம் போன்றவற்றை விமர்சித்தது உண்மை. ஆனல் விமர்சன ஆரம்ப பாடங்களைத் தானி கைலாசபதி எழுதினர். பள்ளி மாணவர்களுக்கு விமர்சனத்தை அறிமுகம் செய்து வைக்கக் கூடியவை. கவிதைகளைப் பற்றிய ஆர்வமும் ஈடுபாடும் இருக்கவில்லை. சமகாலச் சிறுகதைகளைப் பற்றியோ, கவிதைகளைப் பற்றியோ நாவல்களைப் பற்றியோ ஆழமான விமர்சனம் அவர்கள் எழுதவில்லை. கவிஞர் இ.முருகையன் மட்டும் சில கட்டுரைகளே எழுதியிருக்கிறர். ★ ★ ★ சர்வோதயம் என்ற தத்துவத்தை தனக்கே உரிய முறையில் வரித்துக் கொண்ட பின் அவரின் செயலும் சிந்தனையும் அதை நாடியே சென்றது. மனமும் சிந்தனையும் ஒர் தத்துவச் சிந்தனையை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டன. அநீததி தத்துவத்துக் கு ஏற்ற உருவங்களையும் உள்ளடக்கங்களையும் முழுமையை நோக்கிய பேரறிவை, சத்தியத்தை அறியும், அடையும் வழிகளாகவே கொண்டார். சர்வோதயத்தை (தமிழ்) இலக்கிய சிந்தனைப் பிரக்ஞைக்குள் உட்புகுத்தி, அதனடியாகப் பிரபஞ்ச யதார்த்த அடிப்படையில் எல்லாதி துறைகளும் அணுகப்பட வேண்டும் என எண்ணினர். இந்தச் சிந்தனைகள் அவருக்கே ஒரு புதிய திசையையும் நோக்கத்தையும் கருத்தையும் கொடுத்ததால் மேலும் அதில் உள்நுழைந்து ஆழப் புகுந்தார். அவருடைய ஆன்மீகத் தேடலும் தியானம், பிரார்த்தனை, குருவிளக்கம் போன்றவற்றல் துலக்கமும் ஒளியும் பெற வெளிக் கிட்டது. அவற்றின் அடிப்படையில் செயலில் காட்டும் சிந்தனையாளர்களைப் போல நடைமுறைத் திட்டங்கள் தீட்டினர். "பூரணியில் வந்த கல்வி சம்பந்தமான கட்டுரைகள் அப்படியானவை. மனித நேயச் சிந்தனையாளர்கள் அப்படியான செயற்திட்டங்களை தி தீட்டி நடைமுறைப்படுத்துவது இயல்பு என்பதைக் காந்தியின் கல்வித் திட்டங்களும் ஆசிரமங்களும் தாகூரின் சாந்திநிகேதம், ரோல்ஸ்ரோயின் பள்ளிக் கூடங்களும் கோடிட்டுக் காட்டுகின்றன. ★ ★ ★

மு.தவின் மனைவி ஒரு தங்கம். அவருடைய சகல விசயங்களுக்கும் மனம் கோளுமல் ஒத்துழைப்புக் கொடுத்தவர். எந்தக் குடும்பப் பிரச்சனைகளையும் அவரிடம் பொறுப்பிக்காதவர். அன்பு, பண்பு, ஒழுக்கம், விட்டுக் கொடுத்தல், பொறுமை, கடமை, தாராள மனப்பான்மை முதலிய எல்லாப் பண்புகளும் ஒருங்கே அமைந்தவர். மு.தவின் மரபு மறுப்புக்கோ, சமுகத்துடன் ஒத்தோடாத எந்த விசயத்துக்கோ, எதுக்காகவிருந்தாலும் சரி, மறுப்போ, முணுமுணுப்போ, முகஞ் சுழிப்போ காட்டாதவர்.
ஆங்கிலம் நன்ருகப் பேசவும் எழுதவும் வாசிக்கவும் கூடியவர். மு.த எழுதியவற்றை வாசித்ததாகத் தெரியவில்லை. ஆனல் மு.தவில் நல்ல மதிப்பு வைத்திருந்தவர். சிறுவகுப்பிலிருந்து உயர் வகுப்பு வரை யாழி. இந்து மகளிர் கல்லூரியில் விடுதி மாணவியாக இருந்து படித்தவர். விளையாட்டு வீராங்கனையாக்வும் பாடசாலேத் தலைவியாகவும் இருந்தவர். புங்குடுதீவில் உள்ள நல்லதம்பியாரின் இளைய மகள். கனகம்மா என்ற பெயர். மு.த அன்புடன் கனகம் என்று தான் அழைப்பார். மு.த அவரைக் கடிந்து பேசியதைக் காண முடியாது. பணம், பொருள் பற்றிப் பெருமையோ அந்தஸ்தோ, பாகுபாடோ காட்டாதவர். இயல்பான பேச்சும் நகைச்சுவையும் அணி பும் எளிமையும் சினேகபாவமும் உள்ளவர். மனம் விட்டு இயற்கையாக அன்பாக பழகுபவர். எவ்வளவு பொருளை இழந்தாலும் செல்வந்த மனமும் குணமும் உள்ளவர். மு.த வினி முழு ஈடுபாட்டுக்கும் அர்ப்பணிப்புக்கும் இவரின் குணங்கள் மிகவும் உதவியாக இருந்தன. இந்த வரப்பிரசாதம் மு.த செய்த புண்ணியத்தின் பயன் எனிறு பாவ புணிணியத்தில் நம்பிக்கை வைத்தவர்கள் நிச்சயமாகக் கூறுவர். மு.தவுக்கு அப்படிப்பட்ட மனைவி அமைந்தது அவரின் பரிசோதனைகளுக்கு வேண்டிய சுதந்திரத்தைக் கொடுத்தது.
மு.த வுக்கு நான்கு குழந்தைகள். இரண்டு ஆண், இரண்டு பெண். மு.த இறக்கும் போது முத்தவருக்கு வயது பத்து. இளையவளுக்கு வயது இரண்டு. அவர்களை எவ்வளவோ சிரமத்துக்கும் மத்தியில் படிப்பித்து ஆளாக்கிய பெருமை மு. தவினர் துணைவியாருக்குத் தானி. மு னிறு பிள்ளைகளும் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். ★ ★ மு.தவின் தம்பிமு.பொன்னம்பலம் நல்ல கவிஞர். விமர்சகர். கட்டுரையாளர். மு.தவும் மு.பொ வும் நல்ல நண்பர்களைப் போல் மனம் விட்டு சமமாக சகஜமாக பழகியவர்கள். எழுத்து, சொல், செயல் ஆகியவற்றில் கூட கருத்து வேறுபாடற்றவர்கள். சிறுவயதிலிருந்தே நன்முக வே ஆரம்பத்தில்

Page 27
இரத்தின புரியிலும் பின்பு புங்குடுதீவிலும் வாழி நீதவர்கள். ஒருவருடைய இலக்கிய அறிவார்ந்த ஆத்மீக வளர்ச்சியில் மற்றவர்கள் ஈடாகவும் உதவியாகவும் ஒற்றுமையாகவும் இயங்கியவர்கள். கடைசி வரை இணைபிரியாது இருந்தவர்கள்.
மு.த இறந்த பிறகு அவருடைய நுTல்களுக்கும் தத்துவத்துக்கும் வாரிசாக இருப்பவர். மு.த வின் பிரசுரமாகாத நூல்களும் இவர் கையில் இருக்கின்றன எண்பது பலரின் அபிப்பிராயம். மு.த இருந்த போது தன் நூல்களே எரித்து விடும்படி கூறியதாக அல்லது எரித்து விட்டதாக ஒரு கதையும் உண்டு) அவற்றைப் பிரசுரிக்கும் நோக்கம் அவருக்கு இருப்பதாக தெரியவில்லை.
1967ல் மு.த தன் இரண்டாவது சிறுகதைத் தொகுதியை வெளியிட இருந்தார் என்பதற்குட் "போர்ப் பறை" ஆதாரம் . அதீதுடன் போர்ப் பறையில் அநீதச் சிறுகதைகளில் பிரசுரமாகியும் இருக்கின்றன. மிகுதி இருக்கின்றன என்கின்றர். அவை எங்கே?
ஒரு தனிவீடு, யாத்திரை, கல்கி புராணப் எழுதி முடிந்து வெளியிடாமல் இருக்கின்றன என்றர். மு.த காலம் சென்ற பிறகு ஒரு தனி வீடு மட்டும் பதிமநாப ஐயரினி முயற்சியால வெளியாயிற்று. மற்றவை எங்கே?
ஒளியை நோக்கி பாதியில் நின்று விட்டதாக 1970ல் எழுதினுர். எழுதி முடித்தாரா தெரியவில்லை.
புதிய முயற்சிகளாக குருக்ஷேத்திரம் எதிரிகள், ஒமாக்கினி உள்ளன. அவை எழுத முடிக்கப்பட்டனவா என்பது மு.பொ வுக்குத் தான் தெரியும்.
சுகுல் குறுநாவல் தினகரனில் 1967ல வந்த தெணிற நரினைவு. அது நூலாக வெளிவரவில்லை.
ஒமாக்கினி, பிரபஞ்ச யதார்த்த காவியப் என்ருர் மு.த. அதைத் திரும்பவும் எழுதி முடித்து *விட வேண்டும் என்ற ஆவேசம் எழுகிறது என்ருர் முத 1970ல். அதை முடித்தாரா அப்படியே இருக்கிறதா தெரியவில்லை.
"புதிய பிரக்ஞையை ஒரளவுக்கு பூரணப்படுத்த உதவியது ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன்பு நான் எழுதி முடித்துள்ள "கல்கி புராணம்" என்ற நாவலே தான். இதையே அடுத்து வெளியிட விரும்புகிறேனர் என்று "போர்ப்பறையில் எழுதினர். அது வெளிவரவே இல்லை.
"இவற்றின் பயனுகவும் (அவர் எழுதிய நூல்களின் பயனுக) அடித்தளம் வரை தேடலை நடத்துவதற்கு எனக்கு கிடைத்துள்ள

5Tab upiral 95
வழிகாட்டியினர் (குரு நநீத கோபாலகிரி) பயனுகவும் ஏறி பட்டுள்ள தெளிவே போர்ப்பறைக் கட்டுரைகளாக வெளிவருகின்றன? என்று போர்ப்பறை முன்னுரையில் எழுதினுர்.
இவருடைய இந்த வளர்ச்சியை, தெளிவை ஆராய்வதற்காக, அறிவதற்காகவேனும் அந்த
"புதிய வார்ப்புகளைப் பற்றிய பிரக்ஞையை ணமாக எழுப்ப உதவிய தேடல் சிருஷ்டிகளே வையெல்லாம்" என்று அவர் எழுதியவற்றை இலக்கிய உலகம் அறிய ஆவல் காட்டுவதில் பிழையே இல்லை.
இந்த நூல்களை விட அவர் எழுதிய பல கட்டுரைகளி மல்லிகை, இதயம் , ரணி சஞ்சிகைகளிலும் மு.பொ ஆசிரியராக இருந்த "சத்தியம்' பத்திரிகையிலும் ‘விசாரம்" என்ற மு. தவின் தனிப் பிரசுரங்களிலும் உள்ளன. அவை வெளியிடும் தரம் நிறைந்தவை. அவை வெளிவர வேண்டும்.
அதற்கு மு.பொ வழிசமைக்க வேண்டும். உதவியாக இருக்க வேண்டும். மு.த இறந்து 21 வருடங்களுக்குப் பிறகாவது (1973 ஏப்ரல் 2ல் இறந்தார்) அது நடைபெற வேண்டும். அவற்றை வெளியிட வெளிநாட்டில் வாழும் இலக்கிய அபிமானிகள் அவரது மாணவர்கள் ஆகியோரின்
மு.த ஒரு வேகத்தில் தானி நூல்களை எரிக்கும் படி காவப்காவைப் போல கூறி இருக்கலாம். காவ்காவின் நண்பன் அப்படிச் செய்திருந்தால் உலகம் இன்று ஒர் அழகான ஜேர்மன் உரைநடையாளனை இழந்திருக்கும். காவ்காவின் இருப்பியல் உலகை அறிந்திருக்காது. நீற்ஷேயின் பிரபஞ்சத்தை அறியமுடியாதபடி அவரது தமக்கையார் இருந்தார். இன்றும் Lieup IIgy tb பேசப்படுகினிற நீறி ஷே பைத்தியக்காரணுக மட்டுமல்லாமல் இன்றும் புதிராகவே இருந்திருப்பார். மு.தவின் உலகத்தை அறிய, இனிவரும் பரம்பரை அறிய அவரின் நூல்கள் அத்தனையும் வெளிவர வேண்டும். மு. தவுக்கும் இலக்கியத்திற்கும் சிந்தனைக்கும் உள்ள பந்தம் இறுக்கமானது. ஆத்மார்த்தமானது. அவர் ஒரு பொதுச்சொத்தாக வேண்டும்.
"மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் அப்படி என்னதான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ? அந்த வரிசையில் தமிழிலும் பாரதி, புதுமைப்பித்தனி, கு.ப.ராஜகோபாலன், கு. அழகிரிசாமி, மு.தளையசிங்கம் என்று எத்தனை இழப்புக்கள்' என்ற படுமுடிச்சை அவிழ்க்க முடியாமல் அவஸ்தைப்படுவது சுந்தர ராமசாமி (ஜே.ஜே சில குறிப்புக்கள்- நாவல்) மட்டுமல்ல, நாங்களும் தான். அந்த மேதாவிலாசத்தை அறிய விரும்புவது இயல்புதானே?

Page 28
strai ter 95
SHIVATHVIDEO" * Digital Vide
* NTSC-PAI
* 4 field CO
* 3/4 SP
* Dupli
* 8 mm, 16 mm
* Sli
Tel: (416) Fax: (416)
 

விவிடின்
வீடியோ உலகில் தமக்கென ஒரு இடத்தைப் பெற்று பாழ்ப்பாணம் (குணம் வீடியோ)
நெதர்லாந்து (டென் ஹாக்கேவிசி விஷன்) போன்ற இடங்களில் மக்களின் பாராட்டுக்களைப் பெற்று இன்று ராறன்ரோவில் முற்றிலும் புதிய
பாணியில் வீடியோ பிரதி மாற்றம் செய்யும் நிறுவனம்
eo Transfers L-SECAM inversion S-VHS cation l, 35 mm film deS
284-2845 289 (0399

Page 29
Sri Lankan
KaYAG" | Qr Audio & Video For Sale & Rent
Specialized in
Floral arrangements
for all OCCasions
Boutonniere Flower Baskets Bridal Bouquet Unique arts & Crafts Gift Ware
சிறுவர் சிறுமியழு தரமான அன்ப6
வெள்ளிப்
வீடியோ
போட்டோ கொ மற்றும் உங்கள் இல்ல வைபவங்களிற்குத் தேவை 6T60i LI6
தொடர்பு (
WARU
272 MARKHAM R ONTARI (416) 266-9638 Fax (416
யாழ் பேன்சியினுள், பிர பூg இராமகிருஷ்ண பஜை சாயி பஜனையும், மற்றும்
இடம் டெ
 
 

காலம் மாசி 95)
F Wide Selection Ο C V Englislinovies
O VGİOsnS
available for rent
திருமணம்-பூப்புனித நீராட்டு விழா உங்கள் மங்கள வைபவங்களுக்கு தேவையான
கல்யாணப் பூமாலைகள் சடைநாகம பூசசரங்கள கொணர்டை மாலைகள் ஆண்டாள் மாலைகள் கைச்செண்டுகள் கிறிஸ்தவ திருமணங்களிற்கான
ԱՖ அலங்காரங்கள் இன்னும் மணப்பெண்ணின் அலங்கார நகை செற் மேசை அலங்கார பூக்கள் எல்லாவற்றிற்கும்
ரிப்புப் பொருட்கள், பாத்திரங்கள், பிரதி மாற்றம், ாப்பி பக்ஸ் சேவை Oங்களில் நிகழும் விஷேட பான கதிரை, மேசை வாடை வற்றிற்கும் N கொள்ளுங்கள்
ΕβNO
;D,SCARBOROUGH O M13C5 & (416) 510-1480 ) 266-7431
தி புதன் கிழமை தோறும் னயும், வியாழக்கிழமைகளில் பரத நாட்டிய வகுப்புக்களும் பறுகின்றன.

Page 30
(காலம் மாசி 95
தன் ஆத்மா
அ?லயும்
பேராசிரியர்
g
ாதயா Gлғпті
தயா சோமசுந்தரம் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உளவியற்துறை முதல்வராகவும் யாழ். பொதுவைத்தியமனை, தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலைகளின் உளமருத்துவ நிபுணராகவும் பணியாற்றுகிருர், உளமருத்துவத் துறையில் இவரது ஆராய்ச்சிப் பணிகள் விவேகக் குறைபாடு, உளப்பிளவு நோய், நெருக்கீட்டின் உள்தாக்கம் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. இவரது எழுத்துப் படைப்புகள் இங்கும் சர்வதேச ரீதியிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புத்தகங்களிலும் ஆராய்ச்சிச் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. தற்போதைய யுத்த சூழ்நிலையால் ஏற்படும் உளப்பாதிப்புகளை விளக்கும் மனவடு" இவரது ஆய்வு நூல் யாழ். பல்கலைக்கழகத்தால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆத்மீக சம்பந்தமான இவரது நாட்டமும் தேடலும் அறுபதுகளின் பிற்பகுதியில் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உருவாகிய கலாசார மறுமலர்ச்சியுடன் ஆரம்பமானது. 1972ல் இவர் இங்கிலாந்திலிருந்து இலங்கை வரை கிழக்கை நோக்கி தரை வழி மேற்கொண்ட பயணம் ஆத்மீகத்தின் தேடலுக்கும் தாகத்துக்கும் மேலும் வலுவூட்டியது. இந்தியாவின் இமயம் முதல் குமரி வரையான பகுதிகளில் புனித ஸ்தலங்கள், ஆலயங்களைத் தரிசித்தும் அனுபூதி மகான்களை அணுகியும் ஞானநூல்களை ஆராய்ந்தும் தமது ஆத்மீக வளர்ச்சிக்கு உரமிட்டார். இவர் யோகவழிமுறைகள், தியானம் போன்றவற்றை சமூகத்தில் மீள் அறிமுகம் செய்து வருகிருர், (இவ்வுரையை நன்றியுடன் காலம் மறுபிரசுரம் செய்கிறது)
28

வைத் தேடி மனிதன்
சுப்பிரமணியம் வித்தியானந்தன் இரண்டாவது நினைவுப் பேருரை
மசுந்தரம்ா
அறிமுகம் ாயுமானவர், மனிதனின் அஞ்ஞான நிலையினைக்
ண்டு இரங்கி, தம்மை அந்தக்கீழ் மட்டத்திற்கு றக்கிப் பாடுகின்றர்.
ஆணிலே பெண்ணிலே என்போல ஒரு பேதை புகிலத்தின் மிசையுள்ளதோ யூடிய கறங்குபோல் ஒடியுழல் சிந்தையை அடக்கியொரு கணமேனும் யான் ானிலேன் திருவருளை, அல்லாது மெளனியாய்க் ண்முடி யோடு முச்சைக் ட்டிக் கலாமதியை முட்டவே முலவெங் னலின எழுப்ப நினைவும் ணிலேன் இற்றைநாட் கற்றதுங் கேட்டதும் பாக்கிலே போகவிட்டுப் பாய்யுலக ஞயினேன் நாயினுங் கடையான ன்மையேன் இன்னம் இன்னம் iணிலே அலையாமல் மலையிலக் காக நீர் வளிப்படத் தோற்றல் வேண்டும் வதாந்த சித்தாந்த சமரசநன் நிலைபெற்ற த்தகச் சித்தர் கணமே
என்று தம் ஆத்மாவைத் தேடிசி சித்தி டைந்தவர்களினி சாதனையை RC5 )ண்மாதிரியாக எங்களுக்கு எடுத்துக் காட்டுகிறர். ஆத்மீகம் என்றல் என்ன? ஏன், அப்படி ன்று உள்ளதா? இறைவன் என்று ஒருவர் ருக்கின்றரா? அல்லது இவை எல்லாம் னிதனின் கற்பனையாP போன்ற கேள்விகளே றி பொழுது மேலோங்கி நறிகின்றன. பரும்பாலானுேர் ஆத்மீகத் துறையை 1ற்புதங்கள், கலை உரு, பார்வை பார்த்தல், ருத்தீடு, செய்வினை, சூனியம், பேய் பிசாசுகள் ற்றும் FuDulu ITF ITDT (hii 456ti , சோதிடம் தலியவற்றுடன் தொடர்பு படுத்துகின்றனர். வறு சிலர் ஆத்மீகத்தைப் பற்றிச்

Page 31
சிந்திப்பதேயில்லை. இவ்வாறன பல தப் பபிப் பிராயங்கள் நரிலவும் இக் காலக் கூட்டத்தில் மேலைத்தேயங்களில், குறிப்பாக விஞ்ஞான, மருத்துவ வட்டாரங்களில், ஆத்மீகத்தைப் பற்றி ஒரு புதிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணரத் தொடங்கி விட்டனர். ஆத்மீக நன்னிலை ஒரு மனிதனின் பூரண ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றது என்பது தெளிவாகி வருகின்றது. உலக சுகாதார நிறுவனம் ஆரோக்கியத்துக்குக் கொடுத்துள்ள வரைவிலக்கணத்தில் இந்த முன்னேற்றத்தைக் காணலாம்.
"ஆரோக்கியம் என்பது நோய் நிலைகளிலும் இயலாமையிலும் இருந்து விடுபட்ட நிலை மாத்திரமல்ல ஒருவர் தம் உடல், உள, சமுக, ஆத்மீக நன்னிலைகளில் அடையக் கூடிய அதி உயர்ந்த நிலையே ஆரோக்கியம் எனலாம். ஆரோக்கியம் மனிதனின் அடிப் படைப் பிறப்புரிமைகள் ஒளிருகும்".
ஆத்மீக ஆரோக்கியம் இருக்கும் பட்சத்தில், அதாவது ஒரு மனிதனுக்கு உறுதியான இலட்சியம், பலமான நம்பிக்கை, மன அமைதி ஆகியன கிடைக்கும் பொழுது மற்றைய உடல், உள, சமுக ஆரோக்கியக் கூறுகள் தாமாகவே சீராகின்றன. உதாரணமாக வவுனியாவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் நடாத்தப்பட்ட ஆய்வில், ஒரு காரணமுமின்றித் தடுத்து வைக்கப்பட்ட இலட்சியமற்ற அப்பாவி மக்களில் கூடுதலான உடல், உள, சமுக பாதிப்புக்கள் காணப்பட்டன.
மேலும் ஒரு தனிமனிதனின் ஆத்மீக நிலை மேம்படும் பொழுது அவனது குடும்பமும், சமுகமும் சூழல் முதலியன் கூட ஆரோக்கியம் அடைகினர்றன. அவனது செம்மையான தொழிற்பாடு, நடத்தை, அமைதி , முன்மாதிரி போன்றவற்றினுTடாக அலுவலகத்தைப் பெறுகின்றன. உதாரணமாக ஒரு சமுகத்தில் ஒரு சதவீதமானேர் ஆழி தியானத்தில் (TranScedental Meditation) epis) as Ta, ஈடுபடும் பொழுது, அந்தச் சமுகத்தினர் குற்றவியல் விகிதாசாரம் மற்றைய சாதாரண சமுகங்களுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்ச அடைவதை ஆராய்ச்சிகள் நிருபித்துள்ளன." மேலைத்தேயக் கருத்துக்களைப் பெரும்பாலும் பிரதிபலிக்கும் உலக சுகாதார நரிறுவனம் ஆத்மீகத்தைப் பற்றிக் கீழைத்தேய நாடுகளைச் சேர்ந்த எம்மவர்க்கு எடுத்துக் கூறுவது வியப் பிற்குரியது. நாங்களே மறந்த எங்கள் பின்னணியை மேலைத் தேயத்தவர் தட்டி எழுப்புவது போல் அது அமைகின்றது.

காலம் மாசி 951 மேலைத்தேய கீழைத்தேய நிலை ஆத்மீகம் சம்பந்தமாக மேலைத் தேயங்களின் மனமாற்றத்துக்கும் எங்களின் பின்னடைவுக்கு மான காரணங்களைச் சுருக்கமாக ஆராய்வது இந்த தருணத்தில் பொருத்தமாக அமையும். ஹெகல் (Hege) ஸப் பெனி சர் (Spencer) போன்றவர்களால் விளக்கப் பட்ட பெரும் பாலான மேலைத் தேய சமுகக் கோட்பாடுகளின் படி வரலாறானது நாகரிகத்தை நோக்கி வளர்ச்சி அடைகின்றது. அதாவது நேர்கோட்டு வடிவத்தில், மேல் நோக்கி, முன்னேறி, அபிவிருத்தி அடைகின்றது என்று நம்பப்படுகின்றது. ஆயினும் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர், தோயின் பி(Toynbee) நாகரிகங்களினி வரலாறுகளி சுழற்சிச் செயற்பாங்கில் நடைபெறுகின்றன எனிற முடிவுக்கு வந்து, மேலைத்தேய நாகரிகம் ஆத்மீக தத்துவங்களை உள்வாங்காவிட்டால், விரைவில் அழிந்து போகும் என்று எச்சரித்தும் உள்ளார். தங்களது ஒரு சார்பான பொருளியல் முன்னேற்றத்தால் ஏறி பட்ட பல விதமான வேண்டத்தகாத விளைவுகளுக்கு அவர்களி தற்பொழுது முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. பலதரப்பட்ட உள, குடும்ப, சமுக நோய்கள், அணு சக்தி அபாயம், குழல் மாசடைதல் போன்ற சீர்குலைவுகள் அங்கே தலைதுாக்கத் தொடங்கிவிட்டன. இப் பெளதிக, உலகியல் நாட்டத்தால் தங்கள் ஆத்மாவை விற்று விட்டனர் 676 in ago (Jung), LSGJпић (Fromm) Gштвор உளவியலாளர்கள் வருந்துகின்றனர். இந்த விழிப் புணர்வால் , தங்களி நரிலையை மறுபரிசீலனை செய்து, கசப்படைந்து, தமது ஆத்மாவை மீளவும் தேடும் பயணம் அங்கே தொடங்கிவிட்டது. இத்தேடல் பலலை ஆத்மீகக் கருத்துக்கள் செறிந்து காணப்படும் கீழைத்தேய கோட்பாடுகளை நுணுக்கமாகவும் ஆராயவும் அவற்றில் ωΠΟδιο πυ 6οτιό பெறவும் வழிசமைத்துள்ளது.
நவீன விஞ்ஞானிகள் தத்தம் விசேட துறைகளின் முதன்மை நிலையில் நடாத்தப்படும் ஆராய்ச்சிகளில் பல புதிய, புரட்சிகரநுட்பங்களை, அதிசயங்களை அவதானிக்கின்றனர். பழைய, நியூற்றணினி (Newton) ஸப்திரமான உலகத் தோற்றம் அழிந்து, காண்போனின் காட்சியில் தங்கியிருக்கும் நரிரந்தரமற்ற கால தேச வர்த்தமானத்தைக் கண்டு, திகைதி துப் போகின்றனர். மேலும் இயற்கை அன்னையின் நியமங்கள், எவ்வாறு ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையனவாக, சுழற்சிச் செயற்பாங்கில்
iiiiiiiiiiiiiiiiiiii i iiiiiiiiiiiiii iiiiiiiiiiiiiii

Page 32
| காலம் மாசி 95 இவ்வாறான அனுபவத்தால் ஐன்ஸ்ற்றையின் (Einstein ) தொடங்கி விண்வீரர் வரை, பலர் ஆத்மீகத் துறைக்குத் திரும்புவதைக் காணலாம். தாங்கள் நவீன விஞ்ஞானத்தின் எல்லைகளில் அவதானித்த அற்புதங்களின் விளக்கத்தை, பணி டைய ஆத்மீக சமயக் கூற்றுகளிலும் தத் துவங்களிலும் இன்னொரு நோக்கில், சொற்பிரயோகத்தில் கண்டு வியப்படைகின்றனர். பழைய ரிஷிகளினது நுட்ப அறிவாற்றலையும் பரந்த ஞானத்தையும் விஞ்ஞானிகள் மெச்சத் தவறவில்லை. கப்ரா (Capra) என்ற அணுப் பெளதிகவியலாளர், அணுத்துகள்களின் (SubatOmic ParticleS) Lim Gog, đ5 GO)6II đi đ5 m : Quỏ கருவியில் நடக்கும் சிருஷ்டி, அழிவு நிகழ்வுகளை, ஆனந்த குமாராசாமி அவர்கள் நடராஜரின் தாண்ட வத்திற்குக் கொடுத்த விளக்கத்துடன் gelli'u 530afaöigm/Trff. CypédfulLDITas, pOSitron, electron போன்ற மறுதலைத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஏற்படும் அழிவு, உற்பத்தி, அவற்றின் பாதைகள், சக்தி சடப் பொருளாக மாறுதலும் சடப்பொருள் சக்தியாக மாறுதலும் கப்ராவுக்கு நடராஜரின் ஆட்டத்தைக் கண்முன் கொணி டுவந்தன. அதே போல் பழைய சூத்திரங்களில், விஞ்ஞான யதார்த்த தத்துவங்கள் புதைந்திருப்பதையும் இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆத்மீக அடிப்படையில் இருந்து நோக்கும் பொழுது, வரலாறு சக்கர வட்ட வடிவில், சுழற்சியாக நகர்ந்து செல்வதுதான் உண்மை நிலை. காலங்கள் மாறினாலும் மனிதனின் அடிப்படைத் தேவைகள், போராட்டங்கள், அப்படியே இருக்கின்றன. உணவு, உடை, வதிவிடம், பாதுகாப்பு முதலிய தேவைகள் மாறுவதில்லை. மற்றும் மனிதன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பிறப்பு, இறப்பு, நோய், பிணி, வயோதிபம், இழப்பு, திருமணம், p5 4, கோபதாபங்கள் முதலியன ஒரு பாண்மையில் நிகழ்கின்றன. கோலங்கள் மாறுகின்றன. ஆனல் வாழ்க்கை ஒரே மாதிரியில் அமைகின்றது. சைவசித்தாந்த தத்துவவார்த்தை களின்படி, ஆதி தொடக்கம் முன்று நிரந்தரப் பொருள்கள் உள்ளன. அவையாவன பதி, பசு, பாசம். இவற்றை அறிந்து, பாசத்தில், அதாவது உலகியல் மலங்களில் இருந்து விலகி, பதியைச் சார்வதே பசு, அதாவது பந்திக்கப்பட்ட ஆன்மாவின், வாழ்க்கை இலட்சியம். எமது முன்னோரின் பண்பாடு, முக்கியமாக ஞானிகளின் வாழ்க்கை முறை, சிந்தனைத் துணிவு, அவர்கள் எட்டிய சிகரங்கள், முடிந்த முடிவுகளைக் கணிப்பிடும் பொழுது, அவர்கள்
3()

அடைந்த உயர்ந்த நரிலை புலப் படும். ற் பொழுது இவ்வாறானவர்கள் முழுதாக ) றைந்து போன நரிலையில் , அவர்கள் ட பதேசித்த சித்தாந்தங்களைக் கேட்டுத் , தெளிந்து, விளங்கக் கூடிய சாதகர்கள் கூட இல்லாத நிலையில், எங்கள் சமுக வரலாறு ஒரு ழி மட்டத்தை நோக்கிடப் போவதை -ய்த்தறியலாம். எங்கள் சமுகத்தில் ஆத்மீகத்துக்கு -கந்த சூழலே மாறி, ஆத்மீக சாதனையில், ஆராய்ச்சியில் ஈடுபடக் கூடிய தகுந்த ாணவர்களே இல்லாது போய்விட்டனர். சமுக ]னப்பான்மை, எதிர்பார்ப்புக்கள், விழுமியங்கள் pதலியன பொருளியல், உலகியல் இலக்குகளை நாக்கியே அமைந்திருக்கின்றன. ஆத்மீக நூல்கள், காட் பாடுகள் , தத்துவார்த்தங்கள் ழ தலியனவற்றுக்கும் மற்றும் துறவிகள் , பெரியோர்கள், அனுபவ முதிர்வு பெற்றவர்கள் போன்றோருக்கும் கிடைக்கும் தற்போதைய சமுக அந்தஸ்து, மதிப்பு போன்றவற்றில் இருந்து ஆத்மீகத் துறையின் வீழ்ச்சியை ஊகித்துக் கொள்ளலாம். அதே வேளையில் நவீன இயந்திர, ஆயுத நுட்பங்கள்: உடனடியாக வன்மையான ர்ப்புக்கள் போன்றவற்றுக்கு சமுக முதன்மையும் pக்கியத்துவமும் கொடுக்கப்படுகின்றன. ஏன், iமிழுக்கு அரும் பணியாற்றிய பேராசிரியர் பிதியானந்தனை நாங்கள் இறுதியில் நடத்திய பிதம் இதை நன்கு தெளிவாக்குகின்றது. இவ்வாறு மேலை நாடுகள் போன பாதையில் ாங்களும் சென்று, சமுக சீர்குலைவுக்குப் பிறகு, திரும்பவும் வரலாற்றுச் சக்கரத்தின் மேல் பளைவில் ஏறத் தொடங்கலாம். நடுவழியில் பாதையத் திருப்புவதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு என்றே கூறலாம். வரலாறு திரும்பவும் திரும்பவும் நிகழ்வதே அன்றி, வேறு ரு காலத்தில் அல்லது சமுகத்தினாற் கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்களைப் பயன்படுத்தித்தன் பழியைத் திருத்தி அமைக்கும் என்பது டைபெறாத காரியம் எனர் பது அனுபவ த்தாந்தமாகும்.
மனிதனின் தேவைகள்
னிதனின் உயிர்வாழ்வுக்கு நீர், உணவு, மற்றும் பிராணவாயு என்பன அத்தியாவசியமானவை. மேலும் வதிவிடம், பாதுகாப்பு, தன்னினப் பெருக்கம் போன்ற அடிப்படைத் தேவைகள் உள்ளன. இவற்றைப் பூர்த்தி செய்வது பாழிக் கையில் முதன்மை பெறுகின்றது. இவற்றைப் பெறுவதற்கு ஒரு உந்து சக்தி ாரியப்படுகின்றது. சிலர் தம் அனிருட பாழ்க்கையையே ஒரு போராட்டமாக நிமிடத்துக்கு

Page 33
நரிமிடம் ஏதோ ஒரு விதத்தில் வாழிந்து கொண்டிருக்கின்றனர். தேவைகளை உடனே பூர்த்தி செய்வதில் அவர்களின் கவனமும், முயற்சியும் செலவிடப்படுகின்றன. பின் போட முடியாத நரிலையில் , திருப்தி உடனி கிடைக்காவிடில், அது அவர்களுக்கு தாங்க முடியாத துன்பமாக, கசப்பான விரக்தியாக அமைந்து விடுகின்றன. தேவைகள் கிடைக்குமிடத்து, தற்காலிக இன்ப மனநிறைவு பெறுகின்றனர். இந்நிலை, கூடுதலாக மிருக வர்க்கத்திலும் குழந்தைப் பருவத்திலும் காணப்படுகின்றது. இவ்வாருக தேவைகள், போக நுகர்ச்சிகள், இன்ப துன்பங்கள் நிலைத்து நிற்காமல், மாறி மாறித் தோன்றி, மறைந்து, தெவிட்டி, சலித்து, வாழ்க்கை தொடர்கின்றது. ஆயினும் பெரும்பாலான மக்கள் தம் தேவைகளை மையமாக வைத்து, இலக்குகளை அடைவதற்குத் திட்டம் தீட்டி, வாழ்க்கையை நடாத்துகின்றனர். இந்த உண்மையை நவீன விஞ்ஞானிகளும், எமது பழைய ஞானிகளும் உணர்ந்து பல முறைகளில் ஒத்திசைவான கோட்பாடுகள் முலம் மனிதனின் நிலையை வகுத்துள்ளனர்.
ஆகவே, மேலைத்தேயத்தவர் ஆத்மீகத்தைப் பற்றித் தேடத் தொடங்கும் இக்கால கட்டத்தில், எங்கள் பழைய தமிழ், இந்து மதக் கோட்பாடுகளும் தத்துவக் கருத்துக்களும் மிகப்
A) உயர்திறன்
மனநிறைgசயதிறனடைவு. உள்ளார்ந்த ஆற்றலை -
அடைதல்,
acs. 2 படிநிலைத் தேவைகள் (From Maslow")
 
 

காலம் மாசி 95)
பயனுள்ள பங்களிப்பினை உலக சமுதாயத்திற்கு ஆற்றலாம். இதற்கமைய, தற்கால விஞ்ஞான, மருத்துவ, உளவியல் அறிவை அடிப்படையாக உபயோகித்து தொன்மையாயினும் சநாதன தர்மம் என்று அழைக்கப்படும் எப்பொழுதும் புதுமையுடனும் , நரித்திய மெய் ப் பெரும்பான்மையோடும் திகழும் ஆத்மீகத் துறை பற்றிய கருத்துக்களை ஒப்பியல் நோக்கில் ஆராய்வதே இவ்வுரையின் நோக்கம்.
மேலைத்தேய உளவிலாளர் மாளிப்லோவ் (Maslow) மனிதனின் தேவைகள் அவனின் நடத்தையை உந்துகின்றன என்றும், அவை படிநிலைகளில் அமைந்துள்ளன என்றும் விளக்கியுள்ளார். முதலில் வருவன அடிப்படை உடற் தேவைகளாகிய நீர், உணவு, பாலியல், அடுத்து பாதுகாப்பு தேவைகளாகிய அபாயமற்ற சூழல், நிம்மதி முதலியன. இவற்றைத் தொடர்ந்து அன்பு, உறவு, தொடர்பு, உரிமை கொண்டாடல், ஏற்கப் படல், ஏதோ ஒரு முழுமையினி அங்கத்தவர் என உணரும் உணர்வு முதலியன முதனிமை பெறுகின்றன. அதனி பிணி , தன்மானம்,சுய கெளரவம், மதிப்பு, மரியாதை, ஆற்றல், அங்கீகாரம் போன்றவை முக்கியமாகின்றன. அடுத்து மனிதனின் உயர்ந்த தேவையாக அறிவாற்றல் தொகுதியில் ஏற்படும் விளங்கல், தெளிவு, புத்தாய்வு, ஞானமாகியவை அமைகின்றன. இதற்கு மேல் ரசனை, அதாவது கலை ஆக்கப்படைப்புக்களை ரசித்தல், உளம் பூரித்தல், அழகுணர்ச்சி, செவ்வொழுக்கங்களைக் கண்டு மகிழ்தல் போன்றவை அமைகின்றன. இறுதியாக, மிகச் சிறுபான்மையினர், தங்களால் அடையக்கூடிய உயர்ந்த ஆற்றலை நோக்கி முயற்சித்து மனநிறைவு பெறுவர். வாழ்க்கையின் உயர்ந்த பேறாக உள்ளார்ந்த ஆற்றலை அடைதலாகிய சுயதிறனடைவு Self-Actualization) மிக அரிதாக நிறைவேறுகின்றது.
இவ்வாறு மனிதர்கள் இந்த வெவ்வேறு படிநிலைகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவர். ஒரு மனிதன் எந்தப் படிநிலையில் இருக்கின்றனோ அந்தத் தேவைகளை மையமாக வைத்து அவனது வேட்கைகள் , விருப்பு வெறுப்புகள் , தொடர்புகள், நடைமுறைகள், சிந்தனைகள், கருத்துலகம், பார்வை, நோக்கம் , திருப்தி முதலியன அமைகின்றன. சுருக்கமாகச் சொல்வதாயின், ஒரு மனிதனின் சைதன்னியமும் புவனமும் அந்தப் படிநிலையினைப் பிரதிபலிக்கும். மேலும் மனிதன் முன்னேறி விருத்தி அடைவதற்கு, ஒவ்வொரு படி நரிலைத் தேவைகளையும் பூர்த்தி செய்து, அடுத்த மட்டத்திற்கு p. Luff

Page 34
| காலம் மாசி 95 முயற்சிக்கின்றான். இவ்வாறு மேலேறி, பரிணாம வளர்ச்சியடைய மனிதனில் ஒரு உந்து சக்தி செயற்படுகின்றது. கார்ல் ரோஜர்ஸ் (Carl Rogers) என்ற உளவளத் துணையானர், மனிதனின் உள்ளார்ந்த சுபாவத்தை வெளிக் கொணர்ந்து, அவனின் சுயருபத்தை அறிந்து, அதன் அடிப்படையில் வாழ வைப்பதே எங்களின் குறிக்கோளாக வேண்டும் என்று கற்பித்தார்.
பிராங் கிளி (frank) என்ற உளப் பகுப்பாய்வாளர், மனிதன் தனது வாழ்க்கையில் ஒர் அர்த்தம் காண்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். இவர் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பல வருடமாக நாஸிச கூட்டு முகாம்களில் சிறைவைக்கப்பட்டு, சொல்லொ ணாத் துயரங்களை அனுபவித்தும், மற்றக் கைதிகளின் நிலையை அவதானித்தும், இந்த உண்மையை உணர்ந்தார். தமது அனுபவத்தின் அடிப்படையில் Logotherapy என்ற சிகிச்சை முறையை வையத்துக்கு அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
பிராங்கிளின் வாழ்க்கையின் அர்த்தம் என்று சொல்லாமல் சொல்வது ஆத்மீகத் துறையையே என்று அவரின் எழுத்துக்களில் இருந்து ஊகித்துக் கொள்ளலாம். நவீன உளயியலாளர்களில் மனித நேயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பகுதியினர், மனிதனின் பல்வேறு தேவைகள், இலட்சியங்கள், கடும் முயற்சி போன்றவற்றின் உயர்ந்த பெறுபேறு ஆத்மீக மெய்ப்பொருள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். குறிப்பாக அஸ்ஸாஜியோலி (Assogioi) என்ற இத்தாலிய உள மருத்துவர் விளக்கும் உள ஒன்றிணைப்பில் (Psychosynthesis) iš LDIIT, மனித வாழிக் கையினர் மையப் பெருளாகின்றது. இவ்வாறு உளவியலாளர்கள் மன உலகத்தை ஆராய்ந்து, அதன் முடிவில் மனிதாந்த உளவியல் (transpersonal Psychology) என்ற புதியதொரு அறிவுத் தொகுதியில் ஆத்மீகத்தை வந்தடைந்துள்ளனர்.
வரலாற்று ரீதியாகவும் , எல்லாச் சமுகங்களும் சமயங்களும் மனித வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடியுள்ளன. அன்றாட உலகியல் தோற்றத்துக்கு அப்பால் ஒரு கடந்த பொருள் (கடவுள்) இறைவன், மெய்ப்பொருள், ஆத்மா இருக்கின்றது என்று தத்தம் சூழல், காலத்துக்கு ஏற்றவாறு, ஆயினும் மனம் வாக்கு போன்றவற்றால் வர்ணிக்க முடியாத ஒன்றைப் பற்றி அறிந்து,அத்தாட்சிகள் தந்துள்ளனர்.
32
(

முறையியல்
கீழைத் தேயங்களில் , குறிப் பாக இந்தியாவில், ஆத்மீகத்தைப் பற்றிய கருத்துக்கள் நான நுTல்களில் தாராளமாகக்
ாணப்படுகின்றன. இவை மனிதர்களின் ஆத்மாவை நோக்கிய பயணத்தில் உள்ள ல்வேறு நிலைகளை வெவ்வேறு கோணங்களில் இருந்து விபரித்துள்ளன. மனிதனின் உணர்வு laoa (State of ConsciousneSS) gorgsgorgohulb அல்லது பிரக்ஞை என்று அழைக்ப்படுகின்றது. நீ நரிலை கோசங்கள் , அவஸ்தைகள், ஆதாரங்கள் என்று பல்வேறு கோட்பாடுகள் ழலம் விளக்கப்படுகின்றது. பெரும்பாலும் இவ்வகைப்படுத்தல்கள், 99.9 சதவீதமான பாமர க்களைச் சகலர், அதாவது கீழ் அஞ்ஞான இருளில் முழ்கி இருப்பவர்கள் என்று விலக்கி, குெதியான 1 சத வீதமானவர்கள் ஆத்மீகத் பறையில் உயர் ஸ்தானங்களை அடைந்தவர்கள் ான்று கூறி, அந்த அரிய சாதகர்களைப் பற்றி ட்டும் விரித்துரைக்கின்றது. ஆயினும் இங்கே, ந்தரதரத்தில் உழலும் சாதாரண மக்களாகிய rங்களைப் பற்றி ஆராய்வதே பிரதான நாக்கமாகின்றது. இந்த முயற்சிக்குச் சில ாளப் திர, AF L po tu iš கருதுகோளி களி , ட்டமைப்புக்கள் உதவிக்கு வருகின்றன. -தாரணமாக ஆதாரம், சக்கரம், அவஸ்தை pதலிய, பெயரளவில், பாவனையிலுள்ள சாற் பதங்கள் , கருத்து அமைப்புக் களி , தாகுதிகள் எடுத்துக் கையாளப்பட்டுள்ளன. னிதனின் அடிப் படைத் தேவைகளும் , அவற்றால் உந்தப்படும் செயற்பாடுகளும், பாழ்க்கை இலக்குகளும், இவை எவ்வாறு இறுதியில் ஆத்மாவில் சென்று முடிகின்றன ாண்பதும் இக்கட்டுரையில் நுதல் பொருளாகும். இவற்றை விளக்குவதற்கு ஆதாரக் கட்டமைப்பு பொருத்தமாக அமைகின்றது. தாந்திரிக (சாக்த) ாஸ்திரங்களில் ஆறு சைதன்னிய நிலைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. கீழிருந்து மலாக முலாதாரம் , சுவாதிட்டானம் , 1ணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்ற க்கரங்களும், அவற்றுக்கு உயர்ந்த நிலையாக களிப்ரார கமலமும் விளக்கப் பெற்றுள்ளன. சிலர் ஆதாரக் கோட்பாடுகளைத் தூல சரீரத்தில் pதுகுத் தண்டுடன் சார்ந்த நரம்புக் குவியல்கள் Nerve Plexus) 916)ag) upgotiatioITGir (Spinal Ord) மையங்களுடன் தொடர்புபடுத்துகின்றனர். ஆயினும் இவை சூக்கும சரீரத்துடன் தாடர்புள்ளன. அல்லது குறியீடாகத் தான் ாவனை பணி னப் படுகினிறன என்று

Page 35
தோன்றுகின்றது. இக் கொள்கைகளின் உண்மை எவ்வாறு இருப்பினும், இங்கே கூறப்போகும் கருத்துக்கு உதவக்கூடிய ஒரு கட்டமைப்பாக, உபசார வழக்கில் மட்டுமே முலாதாரம் முதல் சகஸ்ராரம் ஈறான பதங்கள் பயன்படுத்தப்படும். குறிப்பாக முதல் நான்கு ஆதாரங்களுக்கும் கொடுக்கப்படும் விளக்கங்கள் பழைய கருத்துப் படி வங்களுடனி சற்று வேறுபட்டனவாகத் தென்படும். பொதுவாக, ஆதாரச் சக்கரங்கள் ஆத்மீக சாதனையில் முன்னேறிச் செல்லும் பாதையில் உள்ள முக்கிய மையங்கள், முதல் மு ன்று ஆதாரங்களுடனர் தொடர்புபடுத்தப் படுகின்றன. இவ்வாறு செய்வதற்கு உளவியல் ஆதாரங்கள் உள்ளன. தாந்திரீக சாஸ்திரங்களை இறுக்கமாகப் பின்பற்றினால், இவ் உயிரியல், உள் உரிய ப்ெ தேவைகளினி சை தனி ரிைய விளக்கத்துக்கு முலாதாரத்தின் கீழ் உள்ள பாதாள உலகங்களுக்குப் போக நேரிடும். சமய
 

காலம் மாசி 951 நூல்களிலும் ஆதாரக் கோட்பாட்டு விளக்கங்களில் பேதங்களைக் கானலாம். உதாரணமாக சிவஞானசித்தியாரில்27. ஜாக்கிரம் முதல் ஐந்து அவளப் தைகளை ஆதாராங்களுடனர் தொடர்புபடுத்தி, கீழாலவத்தையில் துரியாதீதம் முலாதாரத்தில் வந்து முடிகின்றது. மேலும் ஒவ்வொரு ஆதாரத்துக்கும் உரியன என்று சொல்லப்படும் அதிட்ட தெய்வம், வாகனம், தத்துவம், அக்ஷரங்கள், பீஜ மந்திரம், வர்ணம் ஆகிய பல குணதிசயங்களில் வேற்றுமைகள் காணப்படுகின்றன. தமிழ் மரபில், முலாதார அதிட்ட தெய்வமாக விநாயகரும், சுவாதிட்டான அதி தெய்வமாக பிரம்மாவும், வாகனமாக அன்னமும் கூறப்படுகின்றன. ஆயினும் இங்கே, கூடுதலாக தாந்திரீக சாஸ்திரங்களைத் தழுவிய கருத்துக்கள் முலமாக உபயோகிக்கப்படும். அவற்றில் கொடுக்கப்படும் விளக்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, பொருத்தமான சாராம்சம்

Page 36
காலம் மாசி 95 ஒவ்வொரு ஆதாரப் பகுதியிலும் முதல்பந்தியாக வருகின்றது. அதன்பின் ஒவ்வொரு பகுதியிலும் இவ்வாய்வின் உள ஆத்மீகக் கருத்துக்கள் ய தொகுக்கப்பட்டுள்ளன.
எங்களுக்கு மரபு வழியாக வரும் சொத்துக்களை "சிதைந்து போகாமல் உலகம் ஏற்றுக் கொள்ளும' கட்டுப்பாட்டுடன் பல புதிய துறைகளிற் காலத்திற்கேற்ப விருத்தி செய்தல் வேண்டும்", என்ற பேராசிரியர் வித்தியானநீ தனினர் அறைகூவலைச் செவிமடுத்து, இவ்வாய்வானது பழைய தாற் பாரிங்களை புதுப்பித்து, அவற்றில் புதைந்திருக்கும் நவீன விஞ்ஞான உளவியல் அர்த்தங்களை, அடியேன் சொற்ப அறிவிற்கு எட்டியவாறும், கடலளவான அறியாமையினர் மட்டுப்பாடுகளுக்கு அமைவாகவும் காண்பதையே நோக்கமாய்க் கொண்டது. பின்வரும் செய்யுள் இந் நோக்கத்தை வெளிக்கொணர்கின்றது:
"பழைமை என்ற விளக்கை எடுத்து புதுமை என்ற திரியைக் கொழுவி ஆர்வமென்ற நெய்யினைப் பெய்து வாழ்வெணுந் தீபமேற்றுமின் இருள் கெட"
பொருள் விளக்கம் 零 ஆதாரங்கள்-சக்கரங்கள், ஸ்தானம், 6 படி நரிலை, d5LD 6AJLfö (பதிமம் ) என்று தி அழைக்கப்படும் ஒவ்வொரு ஆதாரத்துக்கும் !
(
ஏற்றவாறு ஒரு மனிதனினி சைதன்னியம் , அதாவது உணர்வு நிலை, சித் அல்லது பிரக்ஞை அமையும். சமஸ்கிருதத்திலும் சென்னிலும் (Zen) பிரக் ஞைக்கு மிக ஆழமான கருத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதாரத்தின் தேவை அல்லது முதனிமைப் பொருளை (உ-ம் ( முலதாரத்தில் உணவு) மையமாக வைத்து சிந்தனை, கவனிப்பு, கருத்துலகம், காட்சி, ( பார்வை, நோக்கம் செயற்படும். இந்த ஆதாரப் பொருள் வாழ்க்கையின் இலக்கு அல்லது குறிக் கோளாகினர்றது. அந்தப் பொருளை ( நினைத்து பேராசைகள், விருப்பு, வெறுப்புகள்: { அவற்றை அடைவதற்கான முயற்சி, செயற்பாடு ( நடத்தை உந்துதல், அடைந்தால் இன்பம், ! திருப்தி கிடைக்காது விட்டால் கசப்பு, துன்பம், ( அதிருப்தி இவ்வாறு அந்த ஆதாரப் பொருளைப் ( பெறுவதற்குப் பாடுபட்டு அதை நுகர்ந்து, அனுபவித்து, இறுதியில் தெவிட்டி , சலிப்படைந்து, அப்பொருளில் பற்றற்ற நிலை ஏற்படுகின்றது. இந்த இருவினை ஒப்பு நிலையில், ! ஒருவன் அடுத்த ஆதாரத்துக்கு முன்னேறிச் ( செல்கின்றான். ஓவி வொரு ஆதாரத்திலும் காணப்படும் சைதன்னிய நிலை, தேவைகள்,
filii filii iiiiiiiiiiiiiiiiiii

கூட்டுமொத்தமாக அந்த ஆதாரத்துக்கான புவனம், உலகம் (லோகம்), பிரபஞ்சம், அல்லது பதார்த்தம் என்று வர்ணிக்கலாம்.
இதை இன்னொரு வகையில் குறியீடாகக் கூறுவதாயின் ஒருவரின் குண்டலினி சக்தி எந்தச் Fக்கரத்தில் தங்குகின்றதோ, அந்தத் தங்கு ரிலையைச் சார்ந்தனவாக அவனது சைதன்னியம், புவனம் முதலியன பிரதிபலிக்கும், அந்த ஆதாரப் பொருளாக, தேவைகளாக, இலட்சியமாக, அதிட்ட தெய்வம், மனிதனை உந்தி, அவ்வுலகத்திற் செயற்பட வைக்கும். உளவியல் தத்துவங்களின் படி மனிதனின் உணர்வு வலயத்துக்குக் கீழ் நனவிலி (Unconscious) அல்லது ஆழி மனப் பகுதியில், All GLT (Libidinous Energy) 6T60TL, LGui) மாபெரும் உந்து சக்தி இருக்கின்றது. அது தேவை. அனுபவம், பிள்ளைகளின் வளர்ச்சிப் பருவச் சிக்கல்கள், மேலும் சந்தர்ப்பம், வாய்ப்பு போன்றவற்றைப் பொறுத்து, அகப் புறப் பொருள்களைப் பற்றி, மனிதனை அதிட்டித்து இயக்கும்.
இந்த மாபெரும் சக்தியை, உந்துதலை அகப், புற உலகியல் பொருள்களில் செலவிட விடாமல் , மெய்ப் பொருளை நோக்கித் நிருப்புவதே ஆத்மீக சாதனையின் குறிக்கோள். இத்திசை திருப்பல் மடைமாற்றம் (Subimation) எனர்ற உளவியல் பொறிமுறை முலம் விளக்கப்படுகின்றது. குறியீடாக முலாதாரத்தில் குண்டலினி சக்தியை எழுப்பி, வெவ்வேறு ஆதாரங்களினூடாக மேல் நோக்கிச் சென்று, இறுதியில் சகஸ்ரார பத்மத்தில் சிவத்துடன் ஒன்று சேர வைப்பதே ஆத்மீக சாதனை. ஒவ்வொரு ஆதாரத்திலும் அதிட்ட தெய்வமாக அப்புவனப் பொருள்களில் மறைந்து ஆத்மா இருக்கும். சைதன்னியமும் அந்த ஆதார எல்லைக்குள் கண்டப்படுத்தப்பட்டு, குறுகிய வட்டத்துள் செயற்படும். ஆதார புவன போகங்கள் நுகரப்பட்டு, தேவைகள் பூர்த்தி செய்யப்படும் பொழுது அந்த ஆதாரப் பொருள்களுக்கு விருப்பு வெறுப்பற்ற நிலை தோன்றுகின்றது. அந்த உலகத்தைப் பற்றிய ஞானம் பிறக்கின்றது. சைதன்னியம் சற்று விருத்தி அடைந்து விழிப் புணர்வு ஏற்படுகின்றது. ஆதிமாவை மறைத்த திரை சிறிது நீக்கப்படுகின்றது. அத்தருணத்தில் அந்த ஆதார தொழிற்பாடு பூரணத்துவம் எய்துகின்றது. குறியீடாக, அவ்வாதாரத் தாமரை இதழ்கள் விரிந்து மலர்கின்றன. இதேபோல் ஒவ்வொரு ஆதாரமாக, இறுதியில் சகஸ்ரார கமலத்தில்
பரமாத்மாவை iiiiiiiiiiiiiiiiiiiii தனது

Page 37
இலங்கை, இந்திய, கை அனேத்தும் ஒரே இடத்
அன்ரனி
முத்திரை, சிகரெட்,
போட்டோக்கொப்பி,
ஃபாக்ஸ் வசதிகள் TTC Tickets, Lottery Tickets
வாரப்பத்திரிகைகள் சஞ்சிகைகள்
அஜூனத்தும்
ANTTCDNAY BRODOTT
1472 Queen St West (Queens
Toronto, Ont. M6K 1M4 TEL:(416)588-O733 TEL/FAX:(416) 51639
VANTONY BROTEE
I VVS (DIN (IS
சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான உடைகள் அஜூனத்தும் மலிவு வி
 
 
 

காலம் மாசி 951
ாடிய உணவுப் பொருட்கள் தில் மலிவு வி?லகளில்!
பிறதர்ஸ்
வாரத்தில் 7 நாட்களும் காஜல 9 மணி முதல் இரவு 11 மணி வரை
Lansdowne)
GQ t O 3 疑 오 Lee St W
1484 QUEENST WEST
Tel:(416)588 0310
லயில் பெற்றுக் கொள்ள

Page 38
| காலம் மாசி 95 மறைப்பு நீக்கப்பட்ட சற் சொருபத்தைத் மு தரிசிக்கின்றது. முழுதாக விழித்து, சைதன்னியம் ப தூய்மை பெற்று சித்தாகிறது. இதுவே விடுதலை அலலது முக்தி என்று கூறப்படுகின்றது. C
இவ்வாறு சோபான முறையில் வளரும் பொழுது, அந்தப் படிநிலைக்குத் தேவைப்படும் கி தனு, கரண, புவன, போகங்கள் அந்த உயிரின் ே பக்குவ நிலைக்கு ஏற்றவாறு பெறப்படும். அம் ( மனிதன் அனுபவிக்க வேண்டிய பிரச்சினைகள், ! சோதனைகள், சவால்கள் என்பன நிகழும் ஒரு ே பரீட் சைக் களமாக அவி வாதார உலகம் ( அமைகின்றது. அவற்றைச் சமாளித்து, மு மேலாண்மை அடைந்து, கடந்து செல்ல வேண்டிய அளவிற்கான தாங்கும் சக்தி, ( மனப் பலம், ஆற்றல் முதலியவையும் மு கொடுக் கப்படுகின்றன. அதாவது ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சநீதிக்கும் க சவால்கள், அவர்களின் ஆத்மீக ஈடேற்றத்திற்கு கி வாய்ப்புக்களாக அமைகின்றன. அதைக் கையாள 2 வேண்டிய சக்தியும் அவர்களில் இருக்கின்றது. ச இத் தருணத்தில் அப் பரீட் சையில் 6 தோல்வியடைந்து சந்தர்ப்பத்தை நழுவவிட்டால், ப எங்கள் முன்னேற்றம் , வளர்ச்சி என்பன ( தாமதமடைகின்றன. இதைவிட, கர்மவினை ே விதிகளின் படி மற்ற உயிர்களுக்குத் 6 தடைக் கல்லாக அல்லது ஹிம் சை, தீமை விளைவிப் பவர்களாகச் செயற்பட்டால் ( பின்னடைவு gJgiÖ LI L 6Av) ITLfö. e 935 TI 6 J j, 6 ஏணிப்படியில் கீழே சறுக்க நேரிடும். இம்மையில் ( A5 LDSI If f j புண்ணிய வினைகளில் 2 ஈடுபட வைக்கும் மனநிலையும் , அதனால் அ ஏற்படும் எதிர்விளைவு மாற்றங்களும், இன்ப துன்ப விளைவுகளை நுகர வைக்கின்றன ( (அட்டவணை 1) இவ்வாறு வினையினூடாகக் ! கிடைக்கும் தனு, கரண, புவன, போக நிலைகளே நரகம், சுவர்க்கம் என்று வர்ணிக்கப்படுகின்றன. ஆகவே இவ்வுலக வாழ்வில் எமக்கு நரகமோ, சுவர்க்கமோ கிடைப்பது எமது முயற்சியில் தங்கியுள்ளது. "தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற புறநானூற்று வரி மனதிற்கு வருகின்றது. ( இங்கே ஒவ்வொரு ஆதார தேவைகளும் ( பூர்த்தி செய்யப் பட்டு அப் புவனம் ( அனுபவிக்கப்பட்ட பிறகே அடுத்த படிக்கு ( முன்னேறலாம். அந்த ஆதாரப் பொருள்கள் க மனதால் ஜீரணிக்கப்பட்டு, ஊடகப் படுத்தப்பட்ட 6 பின், அவற்றைச் சாதகமாகக் கையாண்டு, மேலாண்மை பெற்ற நரிலையிலே அடுத்த பூ ஆதாரத்துக்கு உயரலாம். ஆயினும் ஆத்மீக ச முன்னேற்றம் ஒரு பிறப்பில் நிறைவு
பெற வேண்டும் என்பதற்கும் இல்லை. i

முக்கியமாக ஒவ்வொரு ஆதாரத்தில் காணப்படும் மறுதலைப் பணிபுகள் அனுபவிக்கப்பட்டு ஒன்றிணைக்கப்படல் வேண்டும். இயற்கையில் தோற்றப்படும் உடன்பாடு எதிர்மறை நிலைகள் பகல் இரவு, ஆண் பெண், விருப்பு வெறுப்பு, ஈகம் துக்கம், நன்மை தீமை, சுவர்க்கம் நரகம் போன்ற இருமைத் தத்துவம் சீன தாஒ (TAO) கோட்பாடுகளில், யின் யாங் (YinYang) கருத்துப் படிவங்களால் விளக்கப்படுகின்றன. 'ഉb செம்பொன்னும் ஒப்பவே நோக்கிய" அப்பரின் இரு வினை ஒப்பு நிலை ஆத்மீக முன்னேற்றத்துக்குத் தேவைப்படுகின்றது.
இங்கே சுலபமாக விளக்குவதற்கு ஆதார தணங்கள் வெவ்வேறாக விபரிக்கப்பட்டி நந்தாலும், இயல்பு வாழ்க்கையில் இவை ஒவ்வொரு மனிதனிலும் வெவ்வேணு அளவில் கலந்தே காணப்படும். ஒரு மனிதனின் பயணம் சிலபொதுத் தன்மைகள் கொண்டிருப்பினும், உண்மையில் ஒவ்வொருவரின் பாதையும், Fாதனையும் சிறப்பம்சங்களும் தனித்துவம் வாய்ந்தவையாக அமையும். மேலும் ஒரு மனிதனின் பின்னணி, வரலாறு, வாசனைகள், தணம், ஆளுமை, மொழி, பண்பாடு, சூழல், சுற்றம் போன்றவை ஒரு புதிய, ஒப்பற்ற வாழ்க்கை நிலையை உருவாக்கும். ஆகவே ஒவ்வொருவருக்கும் உரிய புவனம் ஆளுக்காள் வேறுபடும். நாங்கள் ஒரு குறிப்பிட்ட கால தேச வர்த்தமானத்தில் இருப்பது போல் தோன்றினாலும், ஒவ்வொருவரும் வெவ்வேறு உலகங்களில் வாழ்கின்றோம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆயினும் இந்தத் தனி உலகங்கள் சில முக்கியமான பொதுத் தொகுதிகளில் சஞ்சரிக்கின்றன. இதனுல் குடும்ப, இன, ஊர், குழு, சமுக, கலாசார மட்டங்களில் ஓர் ஒற்றுமை, பொதுத்தன்மை தோன்றுகின்றது. மூலாதாரம் உடலின் மத்தியஸ்தானத்தில் முலத்திற்கு Fற்று மேலாக முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் முலாதாரம் இருப்பதாக விளக்கப்படுகின்றது. இந்திரனின் வாகனமாகிய யானையின் மேல் இருக்கும் படைப்புக் கடவுள் பிரம்மாவை அதிட்ட தெய்வமாகவும், பிருதிவிதியைத் தத்துவமாகவும் கொண்டுள்ளது. உலகத்தை மயக்கும் குண்டலினி Fக்தி இச்சக்கரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் பாம்பு வடிவத்தில் சுருணி டு கிடக் கினிறாள். குண்டலினியை எழுப்பி, மேல் நோக்கி மற்ற ஆதாரங்களினூடாகச் செல்ல வைப்பதே ஆத்மீக Fாதனையின் நோக்கம்.
முலாதாரத்தில் மனிதனின் உயிர் வாழ்விற்கு
**ii iiiiiiiiii நீர், iiiiiiiiiii Ф - Ш - өй

Page 39
ஆரோக்கியம், உடை, வதிவிடம் போன்ற அடிப்படைத் தேவைகளை மையமாக இங்கே எடுத்தால் அது பொருத்தமாகும். இன்னொரு விதத்தில் விளக்குவதாயின், ஒருவரின் உணர்வுகள் அண்மைய கோசத்தில் நிலை நிலைபெற்றிருக்கும் பட்சத்தில், அவரின் தேவைகள், பேராசைகள், கவனிப்பு, திருப்தி, தூல சரீரத்தைத் சார்ந்தே GoFuusb uGb.
நீரும் உணவும் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதன. தாகமும், பசியும் மிகக்
- C C
ஆதாரம் சைதன்னியம் புவனம சக்கரம் சித் உலகம் தேவை மையம் பிரக்ஞை பிரபஞ்சம் 器 ஸ்தானம் பதாாததம நாக படிநிலை நிஜ உலகம் காட்சி கமலம் ரகம்/ s
e Guantay நிலை ஃம் State of alarii Consciousness கவனி
அட்டவனே 1 ஆதார விளக்கம்
 

காலம் மாசி 951
கொடியன. உணவு, முக்கியமாக வறுமைக் கோட்டுக்குக் கீழி வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு, பிரதான தேவையாகின்றது. ஒரு பிடி அரிசிக்காகக் கஷ்டப்படுபவரின் அல்லக் கதைகள் இவ்வுலக வரலாறும், நிகழ்கால யதார்த்தமுமாகும். பசி எரியும் நெருப்பைப் போல ஒரு வரை வாட்டிப் படைக்கும். திருவள்ளுவர், "பசி என்னும் தீப்பிணிதீண்டல். ." என்று சுட்டுகின்றார். இவ வுயிரியல் நிர்ப் பந்தத்தைச் சாடி , பட்டினத்தார்,
அடுத்தபடி
క్తి CS த்ெவிட்டல்/சலிப்பு e இருவினை ஒப்பு R ஞானம் Գ சைதன்னிய அபிவிருத்தி
i ஆத்மா திரைநீக்கம் CS
குளுதிசயங்கள் அதிட்ட தெய்வம் பகள் தகவல்கள் செயற்பாடு றிக்கோள் வகள் கரணம் உந்துதல் லககு கம் சிந்தனை தடத்தை லட்சியம்
கருத்துலகம் மறைநத ஆதமா போகம் இறைவன்
விருப்பு/வெறுப்பு ப்பு கர்ச்சி
திருப்தி/அதிருப்தி

Page 40
reguob onref 95 "தொலைவு இலாச் சோற்றுத் துன்பக் குழியை" என்றும், வயிற்றை நிரப்ப உணவு தேடி ( அங்கலாய்கின்ற மக்களுக்கு இரங்கி,
"செல்வரைப் பின் சென்றுபசாரம் பேசித் ( தினந்தினமும்
பல்லினைக்காட்டிப் பரிதவியாமல்" என்றும் பகர்வர்.
இவற்றிற்கு எதிர்மாறாக, சிலர் பலவிதமான சுவைமிக்க உணவுப் பண்டங்களில் ஆசைப்பட்டு, அதற்கான பொருள்களையும், ! பாகமுறைகளையும் தேடி அலைந்து, பெற்று, பலகாலம் சிரமப்பட்டு, தயாரித்து, எச்சில் ஊற ரசித்து, அவற்றை வயிறு நிரம்ப உண்பர். இந்நிலையை பட்டினத்தார்,
"பருத்திப் பொதியினைப் போல் வயிறு பருக்கத் தங்கள்
துருத்திக் கறுசுவை போடுகின்றார்" என்று படம் பிடித்துக் காட்டியுள்ளார். உண்பதற்கே வாழ்வர் சிலர்; மற்றுஞ் சிலர், வாழிவதற்கே உண்பர், என்ற இரு நிலைகளையும், அதற்கு இடையிலானவற்றையும் காண்கினர் றோம். உணவிற்காக வாழும் பெரும்பாலோரிடம் தமோ குணம் மேலோங்கிப் பிரதிபலிக்கும். வயிறு நிரம்பப் புசித்து, உறங்கி, மந்தர தரத்தில் அழுந்திக் காணப்படுவர். அளவுக்குக் கூடுதலாக உண்பவரின் உடம்பு பருத்து, அதுவே நோயாகின்றது.
சிலர் உணவை விட, மது, போதைவஸ்து, மருந்துத் துர்ப்பாவனையில் இன்பம் பெற்று, காலப் போக்கில் அப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். இவற்றினி பிடியில் சிக்குண்டவர் அப்பொருளின் போதையின்றி வாழ முடியாமல், அதைப் பெறுவதற்கான பொருட் செலவு as TD 667 LD Tas, மிகக் கீழான அடிமட்டத்திற்குத் தள்ளப்படுகின்றனர். எல்லாவற்றையும் விற்று, கடன்பட்டு, இரங்கி, கெஞ்சி, அல்லது களவெடுத்து, தம் அடக்க முடியாத தேவையை அவ்வப்போது பூர்த்தி செய்கின்றனர். அவர்களின் முழு வாழ்க்கையும் அந்த வளப் துவை மையமாக்கி நடத்தப்படுகின்றது.
சிலர் தங்கள் உடலைப் பேணி வளர்ப்பதிலும், நல்ல ஆரோக்கிய நிலையில் வைத்திருப்பதிலும் கவனம் செலுத்துவர். வேறு சிலர், தங்களைப் பலவிதமான நோய்கள் பீடித்திருப்பதாகக் கற்பனை செய்து, வருந்தி, பல மருந்து வரை நாடி, சிகிச்சை பெற்றும், விலையான மருந்துகளை வாங்கி விழுங்கியும், நிம்மதி பெறாமல் தவிக்கின்றனர். மற்றும் ஒரு பகுதியினர் தங்கள் தேகத்தைப் பலவிதமான

நவீன பாணியில், உடைகளால் அலங்கரித்தும், முடியைச் சிங்காரித்தும், வடிவொப்பனைப் பொருளி களி, வாசனைத் திரவியங்கள் முதலியவற்றைப் பூசியும், தம் வெளி அழகை அதிகரிக்கத் தெண்டிப்பர். இதைவிட, சிலர் செளகரியமான ஆடம்பர வாழ்வு வாழ்வதற்கான வசதியுள்ள வதிவிடங்கள், மென்மையான படுக் கைகளி வீட்டு உபகரணங் களர் போன்றவற்றைத் தேடித் திரிவர். ஒரு சாரார் உணவு, உடை, வதிவிடம் , பொருளி களி முதலியவற்றை அனுபவிப்பதற்குத் தேவை என்று கருதப்படும் பணச் செல்வத்தை ஈட்டப் பாடுபடுவர். சிலர் பணத்தைச் சேமித்து, அதாவது காணி, பூமி, வளவுகள் , மணி போன்றவற்றுக்கு உரிமையாளராக வரப் போராடுவர். இவ் வகையான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எம்மவரில் பலர் வெளிநாடுகளுக்குச் செல்வதை அவதானிக்கின்றோம். உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படை உடலியல் தேவைகளையும், அவற்றைப் பூர்த்தி செய்யத் தேவைப்படும் பொருளியல், பொருண்மியச் செல்வங்கள் ஈட்டுவதற்கு நடைபெறும் தொழில் முயற்சிகளையும் ஆராய்ந்து, மார்க்ஸ் (Marx), லெனின் (Lenin) மாவோ (Mao) போன்றவர்கள் உலக, சமுக, வர்க்க இயக் கப்பாட்டை விமர்சித்தனர்.
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தே மனிதன் தன்னாத்மாவைப் பற்றிச் சிந்திக்க தொடங்கலாம் என்று கருதப்படுகின்றது. இவ்வகையில் , அபிவிருத்தி அடைந்த மேலை நாடுகள் ஆத்மீக ஆராய்ச்சிகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுகின்றது. ஆயினும் எங்களைப் போன்ற முன்றாம் உலக வறிய நாடுகளில், வாழ்வதற்கே போராடும் நிலையில், ஆத்மாவைத் தேடும் களத்தை எட்டுவதற்கு இன்னும் காலமுண்டு என்று வாதிடலாம். எனினும் இயேசுநாதர் அறிவுறுத்தியது போல், "மனிதன் உணவால் மட்டும் வாழ்வதில்லை".பலர் ஒரு மேலான குறிக்கோளுக்காக அடிப்படைத் தேவைகளைப் புறக்கணிக்கின்றனர். இக்கால கட்டத்தில் இஞைர்கள் பலர் உணவு, உடை, உயிர் முதலியவற்றைத் தியாகம் செய்து ஒர் இலட்சியத்திற்காகப் போராடுவதை நாம் காண்கின்றோம். சிலர் சமயரீதியாக நோன்பு, விரதம், நேர்த்திக் கடன், தவம் ஆகியவற்றை மேற்கொண்டு, தங்கள் உடலை வருத்தி, வாட்டி: பரிகாரம், விமோசனம் அல்லது தாம் செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடுகின்றனர்.

Page 41
இது மனிதன் உணவின் நிர்ப்பந்தத்தை, உயிரியல் உந்துதலை வென்று அதைத் தனர் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து, மேலாண்மை செலுத்தக் கூடிய விடுதலை நரிலையை அடையலாம் என்பதை நிருபிக்கின்றது.
இது எவ்வாறாயினும், மருத்துவ ரீதியாக ஆரோக்கியத்தைப் பேணுவோராயினும் சரி, ஆத்மீக சாதனையில் ஈடுபடுவோராயினும் சரி, எல்லாவற்றிலும் நடுநிலமை பேணும்படி, அதாவது கூட அல்லது குறைவாக அருந்தாமல், தேகத்தின் தேவைக்கு அளவாக உண்ணும் படி மருத்துவ விஞ்ஞானமும், சமய நூல்களும் ஆலோசனை கூறுகின்றன. "மிகினும், குறையினும் நோய் செய்யும்" என்பது குறள்.
இந்த முலாதாரத்தைக் கடப்பதாயின் அடிபடைத் தேவைகளில் விருப்பு வெறுப்பற்ற இருவினை ஒப்பு நிலை ஏற்பட வேண்டும். இவ்வாறான அகப் புறத் துறவு நிலைக்கு, பட்டினததார் நல்ல எடுத்துக்காட்டு:
"மாத்தானவத்தையு மாயா புரியின் மயக்கத்தையும்
நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோ, நித்தனன்பு கொண்டு
வேர்த்தாற் குளித்துப், பசித்தாற் புசித்து, விழிதுயின்று
பார்ததாலுலகத் தவர்போ லிருப்பர்பற் றற்றவரே"
சுவாதிட்டானம் முலாதாரதிதுக் குச் சற்று மேலாக, பாலுறுப்பின் முலப்பகுதியில் இம் மையம் அமைந்துள்ளது. கிருஷ்ணர் அதிட்ட தெய்வமாக விளங்குகின்றார். காமம், மோகம் முதலிய உட்பகைகளை வென்று கடக்கும் சக்கரமும் இதுவாகும்.
ஆகவே இவ் ஆதாரத்தில் செயற்படுபவர், ஒரு முக்கிய இலக்காக பாலியல் இன்பத்தைத் தேடி ரசிக்க முயல் வர் என்றால் அது பொருத்தமாகும். தொடுகை, பார்வை, கற்பனை, தொடக்கம் உடல் உறவு, புணர்ச்சி ஈறாக, சிற்றின்ப நுகர்ச்சிக்காக வாழ்நாளையும் , செயற்பாட்டையும் , சிந்தனையையும் செலவிடுவர். எதிர்ப்பாலாரினர் உடல் அசைவுகள் , கணிணோட்டம் , துகில் களி மறைப்பதையும் காட்டுவதையும் ரசிப்பர். இதற்கு ஈடாக எதிர்ப்பாலினர் கடைக்கண் வீச்சு அசைவு, உடை, எடுப்புச் சாய்ப்பு, நடை முதலியவற்றால் இச் சையைத் துTணி டுவர். இதைவிட சம்பந்தப் பட்ட நுTல்களை வாசித்தும் , சஞ்சிகைகள், சினிமா, வீடியோப் படங்களைப்

காலம் மாசி 95 பார்தீதும் , u MTL Gð 45 GoGMT iš Gas L. Glf பாலுணர்ச்சியைப் போகிப்பர்.
இவ்வாறு காம மோக இச் சைகள் துTணி டப்பட்டு, பாலியல் புவனத்தில் வாழ்பவர்கள் பார்வையும் சைதன்னியமும் அதிலே முழ்கி இருக்கும். பட்டினத்தார் இம் மயங்கிய பார்வையைத் தெளிவுற விபரித்துள்ளார்.
"மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும் மானுடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின் முள்ளும் கல்லும் முயன்று நடக்கும் உள்ளங் காலைப் பஞ்சென வுரைத்தும் தசையும் எலும்பும் தக்க புன் குறங்கை இசையும் கதலித் தண்டென இயம்பியும் நெடுமுடை தாங்கி நின்றிடு மிடையைத் துடியிடை யென்று சொல்லித் துதித்தும் மலமுஞ் சலமும் வழும்புந் திரையும் அலையும் வயிற்றை ஆலிலை யென்றும் நகுவார்க் கிடமாய் நாண்று வற்றும் முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்
குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன்" என்றும்,
"நீருஞ் சளியும் நின்று நின்றொழுகும் கூரிய முக்கைக் குமிழெனக் கூறியும் கண்ணி பீளை தவிராதொழுகும் கண்ணினைப் பார்த்துக் கழுநீரென்றும்." என்று ஒவ வொரு உறுப்பாக திரிவு பட்ட காட்சியை விளக்கி இப்பாட்டுத் தொடர்கிறது.
மோக உணர்ச்சிக்குச் செலவிடப்படும் நேரம், சிந்தனை, முயற்சி, திட்டம் தீட்டுதல், பார்த்தல், கதைத்தல், முதலிய செயற்பாடுகளை உற்று ஆராயும் போது, மனித குலம் எந்தளவிற்குக் காம நுகர்வில் சிக்குனி டு கிடக்கின்றது என்பது புலனாகும். இதே முடிவிற்கு உளப்பகுப்பாய்வாளர் சிக்மண்ட் 3. fogl: (Sigumund Freud) aupšásait. gyautheir கணிப்பின்படி எங்களின் எல்லா (கணிசமான) செயற்பாடுகளுக்கும் சிந்தனைக்கும் பின்னணியில் மறைமுகமாகவோ, அல்லது சில வேளைகளில் நேரடியாகவோ, பாலியல் காரண காரணிகள் இயங்குகின்றன.
ஆத்மீக சாதனையில் அல்லது வேறு காரணங்களுக்கா (உ-ம் மாணவன் ஒருவன் தனது படிப்புக்காக) பிரமசரிய விரதத்தைக் காத்து, இந்த மாபெரும் சக்தியை அடக்கி, ஒரு நல்ல நோக்கத்துக்காகத் திசைதிருப்ப முயல்கின்றான். உளவியல் பொறிமுறைகளில் இத் திசைதிருப்பல்
39

Page 42
| sirslob uorf) 95 மடைமாற்றம் என்று அழைக்கப்படும். ஆயினும் பாலியல் சக்தியை வலோற்காரமாக ஒடுக்குதல் ஆபத்தானது; அது எப்படியாயினும் வெவ்வேறு கோலங்களில் வெளிவரத்தான் செய்யும் என்று ஃ பிரைட் வலியுறுத்தினார். பல விதமான உணர்ச்சிக் கோளாறுகளுக்கு அல்லது மறுக்கப்படும் பாலியல் உணர்ச்சிதான் காரணம் என்று விளக்கினார். இதனாலே போலும் அப்போஸ்தலராகிய பவுல், பால் உணர்ச்சியைக் கட்டுப் படுத்தக் கஷ்டப்படுகின்ற ஒருவர், "வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் செய்வது நலம்" என்று ஆலோசனைக் கூறினார்.
பாலின் கவர்ச்சி வலிமையை நன்கறிந்த மாணிக்கவாசகர், சிற்றினி ப இச் சையைச் சாதுர்யமாகப் பேரின்பத்தை நோக்கித் திருப்பி, ஆன்மீக நாட்டத்தை ஏற்படுத்துவதைத் திருக்கோவையாரில் காணலாம். இதேபோல், ஆழி வார்களில் ஒருவராகிய ஆணி டாளும் , கண்ணன் மேல் ஏற்பட்ட காதலுக்குத் தெய்வீக உருமாற்றம் கொடுத்து, புருஷோத்தமனை அடைந்து ஒன்று சேரும் உத்தியாகப் பயன்படுத்துகின்றார். காஜூரகோ(Khajuraho) போன்ற கோயில்களில் காணப்படும் பாலியல் சிற்பச் சிலைகளும் (உரு.4) ஒவியப்படைப்புகளும் சிற்றின்ப எழுச்சியைப் பேரின் பத் துறைக்கு ஈர்க்கும் தெய்வீக ஆற்றலுடையன.
மணிபூரகம்
தொப்பூழுக்கு நேராக நாபி பத்மம் வருகின்றது. பல மணிகள் போல் பிரகாசிக்கும் தேஜோ மயமானது. அக்கினிதத்துவம் முக்கோண வடிவில் முன்று சுவாஸ்திக அடையாளங்களைக் கொணி டுள்ளது. உருதீதிரனி அதிட்ட தெய்வமாகவும் பீடு நடை போடும் எருது அவருடைய வாகனமாகவும் காணப்படும். அவருடைய துணைவியார் வாகினி சக்தி மாமிசத்தை விரும்பி அருந்துவாள். அவளின் இரண்டு கொம்பு பல்லுடைய வாயில் இருந்து வடியும் இரத்தத்தாலும், கொழுப்பாலும் மார்பு இரத்த மயமாகக் காணப்படும். இச்சக்கரத்தை முறைப்படி தியானிப்பதால், உலகத்தைப் படைத்து அழிக்கும் அதிகார சக்தி கைகூடும்.
இங்கே மணிபூரக ஆதாரம் , அதிகாரசக்தியை மையமாகக் கொண்டது என்று எடுத்துக் கொள்ளலாம். இச் சக்கரத்தில் உள்ளவர்களி மற்றவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக் குளி கொண்டு வந்து அடிமைப்படுத்த முயல் வர். இவ்வாறான மேலாதிக்க நிலை ஏற்படும் பொழுது திருப்தி அடைவர். முனி குறிப் பிட்ட முலாதார,
4()

சு வாதிட்டான மக்களினி தேவைகளி , அபிலாசைகள் போன்றவற்றை தங்கள் சூழ்ச்சித் திறனால் கையாணி டு, அவர்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவர். சில வேளைகளில், அதிகார வெறியால் சுற்றத்தாரைத் தியாகம் செய்து, சதி அல்லது கொலையும் செய்யதி தயங்கமாட் டார்களி , தங்களி நேரத்தையும் , சிரமத்தையும் இவர் வாறு தந்திரங்கள், வஞ்சனைகள், சதித்திட்டங்கள் போன்றவற்றை வகுப்பதில் செலவிடுவர். உலகத்தை அரசியல் மயமாக, அதிகார போட்டிக்களமாகக் காண்பர். ஒரு சர்வாதிகாரப் போக்கும் அராஜகத் தன்மையும் அதிகாரம் . பயிலுபவரின் மிகச் சுலபமாக தோன்றும்.
பெரும் பாலான அரசியல் வாதிகளி இவ்வாதாரத் தன்மையரே. பரெற்றோ (Pareto) பெரும்பாலும் அவதானிக்கலாம். இவர்கள் தங்களுக்கு மேல் இருப்பவர்களி இடும் கட்டளைகளை ஏற்று, அதற்கு அடிபணிந்து வாழும் அதே வேளையில், தங்களுக்குக் கீழ் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செலுத்துவர். பொதுவாக ரஜோ குணத்தைப் பிரதிபலித்து, வீரத்துடன், தீவிரமாகச் செயற்பட்டு, மற்றவர்களை ஆண்டு, தலைமை தாங்கி வழி நடத்துவர்.
சற்று மிதமாக, மற்றவர்களினதும் சமுதாயத்தினதும் மதிப்பு, அந்தஸ்து பெயர், புகழ் போன்றவற்றிற்கு ஏங்கி முயற்சிப்பதும், இவ வாதார குணமாகும். பரீட் சைப் பெறுபேறுகளை இலக்காக்கி, அதற்குத் தயாராகுவதற்குத் தமது முழு நேரத்தைச் செலவிடுபவரும் , குறிப்பிட்ட உத்தியோகங்களுக்குப் பாடுபடுபவரும், உயர்ந்த விவாகத்துக்காக ஈடுபடுபவரும், இவற்றை ஊக்குவிப்பவரும் இதில் அடங்குவர். சற்றுச் சிந்தித்தால் யாழிப் பாணச் சமுதாயத்தினி பெரும்பாலான அங்கத்தவர், ஏதோ ஒரு வகையில், அதிகாரச் சக்கரத்துள் வசிக்கின்றனர் என்பது புலனாகும்.
இவ்வாறாக அதிகாரத்துக்காகத் தம் முழுப்பலத்தையும் செலவிட்டு, உழைக்கும் உந்துதலை, மேலாண்மைக்கான சங்கற்பம் (Wil Power) என்று நெயிற்சே(Nietzche) என்ற மெய்யியலாளரும், அட்லர் (Adler) என்ற உளவியலாளரும் வர்ணித்துள்ளனர். இவர்களின் கூற்றின்படி, மனிதர்களிடையே மற்றவர்களைக் கட்டுப்படுத்தி ஆட்சி செய்வதற்கு ஒர் அடிப்படை உள் அவா, உந்துதல் இருக்கின்றது. வாழ்க்கையில், முக்கியமாக சிறு பிள்ளை

Page 43
liiallyal
Take-outs cate
ரொறன்ரோ நகரில் மிக
பிரபல்யமடைந்த சமையற்காரர்களினா தினமும் தயாரிக்கப்பழு
உணவு வகைகள்
Lunch
திங்கட் கிழமை சோறும் மீண் கறியும் செவ்வாய் கிழமை மரக்கறி பிரியாணி புதன் கிழமை சோறும் கோழிக் கறியும் வியாழக் கிழமை சோறும் ஆட்டுக் கறியும் வெள்ளிக் கிழமை சோறும் மரக்கறியும்
(வடை பாயாசத்துடனர்)
Delivery on Request
 

காலம் மாசி 951
Daily Menu O
கொத்து ரொட்டி (ஆடு) $4.75 கொத்து ரொட்டி(மாடு) $4.50 கொத்து ரொட்டி(கோழி) S4.25 പ്ര~ வெறும் தோசை SO.6O மசாலா தோசை $2.50 pris நெய் தோசை
g முட்டை வெண்காய தோசை 2.5O பிரியாணி (ஆடு) S4.75 பிரியானி (மாடு) $4.50 பிரியாணி (கோழி) S4.25 ஆட்டுக்கறி S2.50 மாட்டுக்கறி S
e கோழிக்கறி வும உருளைக்கிழங்கு கறி S1 OO கத்தரிக்காய் கறி ဒွိ ဒွိ
e புட்டும் பொரித்த மீன் ல பொரித்த பாறை மீண் S1 59 நம முட்டைப் பொரியல் Regular $0.75 முட்டைப் பொரியல் Special S1.OO மட்டன் Rol SO.75
Dinner
$2.99 |புட்டும் பொரித்த மீனும் S2.99 $2.99 தோசை SO.40 $2.99 கோழிக் கொத்து $3.49 $3.99 ஆட்டுக் கொத்து $3.99 $3.99|இடியப்ப மரக்கறிக் கொத்து $2.99
சோறு ஆட்டிறைச்சிக்கறி, மரக்கறியுடன் $4.75
சோறு கோழிக்கறி மரக்கறியுடன் $3.75 சோறு அரைத்த மீன்கறி, மரக்கறியுடன் S3.99 மரக்கறி பிரியாணி $4.00
கல்யாணி
Tel (416)261 9774 (416) 2612278 292 Marham RaOd (Markham Eglinton)
Scarborough, Ontario
M1J 3C5

Page 44
| காலம் மாசி 95 வளர்ச்சிப் பருவங்களில் , மற்றவர்களால் ஏற்படும் ஏமாற்றங்கள் , d5 F L J H 607 அனுபவங்களி, தோல் விகள் , வெற்றிகள் போன்றவற்றால் உயர்வு மற்றும் தாழ்வு LD607 Lungi GOLDasgir (Superiority and Inferiority Complexes) உருவாகின்றன. அதனால் பிற்காலத்து சிநேக, சமுக உறவுகள் முந்தி நடந்தவற்றை நரிவர்த்தி செய்யும் மேலாதிக்கத்திற்கான போராட்டமாக மாறுகின்றன.
மேலே கூறப்படும் முன்று ஆதாரங்களும் கூட்டாக "தீ மண்டலம்' என்று கூறப்படும், கீழாலவத்தை என்றும் குறிப்பிடலாம். அவை அடிப்படைப் பெளதிக பந்த பாசங்களை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. அவ்வவ்வாதார மயமாக எங்கள் சைதன்னியமும் உலகமும் அமையும். அந்த ஆதாரப் பொருளை அடைவதில் கண்ணும் கருத்துமாகக் காரியப்படுவோம். ஆயினும் நாங்கள் எங்கள் நிலையை உணர்வதில்லை. எங்கள் சைதன்னியம் மாயா சக்தியால் மறைக்கப்பட்டு அந்த புவன போக நுகர்ச்சியில் அழுந்த வைக்கும். அந்த ஆணவ மயக்கத்தைத் திருவருட் பயன். "ஒரு பொருளுங் காட்டா திருளுருவங் காட்டும், இரு பொருளுங் காட்டாதிது"
என்று உணர்த்துகின்றது.
உதாரணமாக அதிகார சக்கரத்தில் இருப்பவர், எல்லாவற்றையும் அரசியல் அடிப் படையில் கணிப் பிட் டு, தானர் மற்றவர்களின், சமுதாயத்தின் நன்மைக்காகச் செயற்படுவதாக எண்ணி, அதிகார உந்துதலால் பல தீமைகள் விளைவிப்பவராகலாம். இவ்வகையான தப்பான போக்கினல், போர்கள் முள் வதற்கும் அதனுல் மக்கள் படும் சொல் லொணாதி துயரங்களுக்கும் கருத்தாவகலாம். இம் முன்று ஆதாரங்களைக் கடந்தே, அதாவது பற்றுக்களை நீக்கியே ஆத்மீக மார்க்கம், சாதனை ஆரம்பமாகின்றது. இதனை நின்மலாவத்தை அல்லது மேலாலவத்தை என்று குறிப்பிடலாம்.
அனாகதம்
அடுத்ததாக இருதய ஸ்தானம் சிவப்புத் தாமரை போன்றது. தத்துவமாக வாயுவையும் வேண்டியதைத் தந்தருளும் கற்பகதருவையும் கொண்டுள்ளது. இங்கே நாதத்தில் இருந்து பிறக்கும் சப்த பிரமம் (Logos) கேட்கப்படும். ஜீவாத்மா விளக்கின் அசைவற்றி சுடர் போல் காணப்படும் இஷ்ட தெய்வமும், அமிர்தம் பருகியதால் நெகிழிந்த இருதயத்தை

உடையவாகினி சக்தியும் மானத பூசைக்கு உரித்தானவர்கள்.
அன்பு கருணை, இரக்கம், கரிசனை, தொண்டு செய்தல் போன்றவை பிரதான பண்புகளாக அமைந்து இம் மையத்தைப் பிரதி பலிக்கின்றன. அன்பு நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. தாய் தன் குழந்தையில் காட்டும் அன்பு, பிள்ளை பெறிறோரில் செலுத்தும் அன்பு, தோழமை அன்பு, காதலன் காதலிக்கிடையில் தோன்றும் அன்பு என்பனவே அவையாகும். gD - 6öðîo 602 LD uu 760T அன்பு மற்றவர்களைச் சிறைப்பிடித்துத் தன் வசமாக்கும் தன்மையன்று. சுயநலம் கருதாது மற்றவர்களை * மதித்து, சுதந்திரமாக வாழவைக்கும் சக்தியாக அன்பு காரியப் படும். தான் செலுத்தும் அன்பினால் பெறப்படும் மனநிறைவே போதும் என்று, பிரதி உபகாரம் எதிர்பாராது விரிந்த நோக்கத்துடன் இவ் வன்பு மேற் கொள்ளப் படுகின்றது. அன்புக்குரியவர் "நல்லாய் இருக்க வேண்டும்; நன்றாக வாழ வேண்டும் "என்று தங்களை மறந்து, தியாகம் செய்பவரே மெய் அன்பர். அன்புக்குரியவரே அவர்களின் முழு D - 6) di D f d வாழ்க்கையினர் அர்த்மாகிவிடுகின்றனர்.
அன்பின் உச்ச நிலையில் பக்தி கணிகின்றது. முற்கூறிய நான்கு வகை அன்பும் பக்தியில் ஒன்று சேருகின்றது. மாணிக்கவாசகர்
"என்புநைந்துருகி நெக்கு நெக்கு ஏங்கி அன்பு எனும் ஆறு கரையது புரள நன்புலன் ஒன்றி நாதவென்று அரற்றி உரைதடுமாறி உரோமம் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித்து இருதயம் மலர கண்களி கூர நுண்துளி அரும்பச் சாயா அணி பினை நாள் தொறுநித தழைப்பவர்" என்று ஒதியுள்ளார்.
இறைவன் பால் தோன்றும் அன்புமுழு அர்ப்பணத்துடன் பணிபுரிந்து போற்றிப்பாடும் பான்மை கொண்டது. இப்பரவசநிலையில் சிலர் தங்களை மறந்து குழந்தைகள் போலவும், பித்துப்பிடித்த அடியார்களாகவும் கூத்தாடுவர். இறைவன் மேல் செலுத்தும் அன்பே தங்கள் வாழ்க்கையின் குறிக் கோளாக, பயனாகக் கொண்டு மனநிறைவு பெறுவர். காரைக்கால் அம்மையார், முதல்வரமாக, எல்லாவற்றுக்கும் மேலாக, இறைவனிடம் இறவாத அணி பு வேண்டியதாகச் சேக் கிழார் வெளிப்படுத்துகின்றார்.
மற்றைய மார்க்கங்கள் இவ் யுகத்தில்

Page 45
கடினமாக இருந்தாலும் பக்தி இறைவனை அடையும் சுலபமான வழியாக, ஏணி வசப் படுத்தும் வலையாக மாறுகின்றது. மாணிக்கவாசகர் இதை,
"சொற்பதம் கடந்த தொல்லோன் காண்க சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க பக்தி வலையில் படுவான் காண்க" அன்புக்கும், கடவுளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இயேசுநாதர்,
"கடவுள் அன்பாகவே இருக்கிறார்"
என நினைவூட்டி, "உனது முதன்மையான கட்டளையாக, கடவுளை உன் முழு இருதயத்தோடும் உண் முழு ஆத்மாவோடும்,
உனி முழு மனத் தோடும் அணி பு கூருவாயாக"
என்றும் இரண்டாவதாக "நீ உன்னிடத்தில் அன்பு கூருவது போல பிறரிடத்திலும் அன்பு கூருவாயாக" என்றும் வழி காட்டியுள்ளார். இஸ்லாமிய சுவி மார்க்கமும் அன்பை மையமாகக் கொண்டுள்ளது. திருமுலர் அன்பிலே கடவுளைக் காண்கின்றார்
"அன்பும் சிவமும் இரண்டென்பர் - அறிவிலார்
அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே' இந்த படி யை அடைவதே வாழிக் கையின் உயர்ந்த பயன் என்று பலர் கருதுகின்றார்கள். புத்தர் உயிர்கள் மேல் கருணை காட்டுவதே மேலான பண்பு என்று, இதற்கு மேலுள்ள படிகளைப்பற்றி மெளனம் சாதித்தார். ஏனெனில் சகலராகிய நாங்கள் கீழ் ஸப்தானங்களில் (கீழாலவத்தை) நிகழும் உலக ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி, அதனால் இன்ப துன்பங்களில் இருந்து விடுபட்டு மேல் நோக்கி, மேலாலவத்தைக்கு அடி எடுத்து வைப்பதே பெரிய சாதனையாக அமைகின்றது. இதற்கு அவர் நடுநரிலை ஒழுக்கத்தையும் பஞ்சசீலங்களையும் வகுத் துளி ளார். இவ்வாறின்றி, எங்கள் சொற்ப அறிவுக்கு அப்பாற்பட்ட ஆத்மா பிரம்மம் என்பவை பற்றித் தர்க்க வாதங்களில் ஈடுபடுவது வீண் விரயம் என்று கருதினார்.
ஆயினும் சித்தர்களும், ஞானிகளும் தாங்கள் இருதயகமலத்துக்கு மேலாக சென்ற பாதையில் அனுபவித்த நிலைகளை விளக்க முற்பட்டனர். ஆத்ம தரிசனம், விடுதலை, முக்தி, ஞானம்

காலம் மாசி 95)
அடைவதுடன், பிரமம் அல்லது சிவ அநுபூதிக்கு இட்டுச் செல்லும் படிமுறைகளே இவை. உலக பந்த பாசங்களில் சிக்குண்டு உழலும் மனிதன் இவ்வாறான மேல் நிலைகளைப் பற்றிச் சந்தேகம் கொள்வது இயற்கையே. "ஆத்மா என்று ஒன்று உள்ளதா?" என்ற வினா எழுகின்றது ஆயினும் அனுபூதிமானிகள் ஆத்மாவைப் பிரத்தியட்சமாகக் கண்டு, உறுதியாகவும் சாட்சி அளித்துள்ளனர். உபநிஷத்தில்,
"நான் இருளுக்கு அப்பால் ஆதித்தனைப் போல் பிரகாசிக்கும் அந்த மஹா புருஷனைக் கண்டேன். அவனை அறிந்தால் ஒழிய இறப்பைக் கடக்க முடியாது. விடுதலை அடைவதற்கு வேறு வழி இல்லை". என்று தியான நிலையில் கண்ட காட்சியை சுவேதாசுவதர ரிஷி இமாலய உச்சியில் இருந்து வெளிப்படுத்தியுள்ளார். தேவாரத் திருமுறையில் அப்பர் இச் சாதாரண தரை உலகிலே தாம் கண்ட காட்சியை, "மாதர்ப் பிறைக் கண்னியானை மலையான் மகளொடும் பாடி போதொடு நீர் சுமந் தேத்தி புகுவார் அவர் பின் புகுவேன் யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது காதல், மடப் பிடி யோடும் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதன
56 GBL 6ř” என்று பாடியுள்ளார்.
இந்தச் சொற் பதங்கள், பாட்டினி அமைப்பு என்பவை நம்பிக்கையூட்டும் வகையில், மிக உறுதியான தன்மை கொண்டவை. பிரம, ஆத்ம உண்மை இப்பாட்டில் மிகத் தெளிவாகப் பிரகாசிக்கின்றது.
இவ்வாறு மேலாவதி தையில் கடைத் தேறுபவர்களில் சாதி வீக குணம் மேலோங்கி இருப்பது வழக்கம். அவர்கள் மனச் சமநிலையுடன், அமைதியாக, அஹிம்சை வழியில், ஆத்மீக முன்னேற்றத்திற்குப் பாடுபடுவர்.
சைவதித்தாந்தம் ஆத்மீக சாதனையை சரியை, கிரியை, யோகம் , ஞானம் என நால் வகைப் படிமுறைகளி (Ա) 6vած விளங்குகின்றது. மேலும் ஞானப் படியில் மெய்ப் பொருளினி உபதேசங்களைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்ற சன்மார்க்க வழி கூறப்படுகின்றது. தமிழ் மரபில் பக்தி வேறாகக் கணிக்கப்படுவதில்லை. மற்ற மார்க்கங்களுக்குப் பொது, அல்லது

Page 46
| smradub uprf) 95 அடிப்படையாகக் கொள்ளப்படலாம். சிலர் பக்தியை ஞானத்துடன் சேர்க்கின்றனர். வட இந்திய மரபின்படி சரியையும், கிரியையும் கர்ம யோகத்தில் சேர்க்கப்பட்டு, ராஜயோகம், பக்தி யோகம், ஞான யோகம் என நான்காகப் பிரிக்கப்படுகின்றது. விவேகானந்தரினர் கூற்றுப் படி , ராஜ யோகத்தில் பதஞ்சலி முனிவரால் வகுக் கப்பட்ட அட் டாங்க உறுப்புக்கள், ஆத்மாவை அடைவதற்கான மிகச் சுலபமான, நேரான, மேலும் விஞ்ஞான ரீதியான, வழி முறையாக உள்ளன. அரவிந்தர் எல்லா மார்க்கங்களையும் ஒன்றிணைத்த சாதனையை உபதேசித்தார்.
இந்த நான்கு மார்க்கங்களையும் வைத்து எமது சமுகத்தினரை மதிப்பீடு செய்தால், சிறுபானி மையினர் சரியை, கிரியை ஆகிய படிநிலைகளை எட்டி யுள்ளதை அவதானிக்கலாம். ஆயினும் பெரும்பான்மையினர் இவ் விரு படிநிலைகளையும் அடையாமல் முலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம் ஆகிய முதல் முன்று ஆதாரங்களிலும் முழி கி உழல்வதைக் காணலாம். இவ் ஆதாரங்களின் இலக்கினை அடைவதற்கு, சமயாசாரங்கள் முலம் இறைவனைப் பிரார்த்திப்பர், அல்லது பேரம் பேசி வியாபார ஹோதாவில் அல்லது ஒப் பாசாரதிதுக்காகக் கிரியைகளை மேற்கொள்வர். கீழ் நிலைகளில் ஆத்மா அழுந்தி, முழ்கி மயங்கி இருப்பது இயற்கை. மனிதன் தன்னாத்மாவை இவ்வாறு வெளி உலகில் தேடிய பிறகே, அவன் அந்தர் முகமாகத் தன்னுள் இருக்கும் ஆத்மாவைக் கண்டு கொள்வான் என்று சொல்லப்படுகின்றது. சிவவாக்கியர்
நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பஞ் சாத்தியே சுற்றிவந்து மொன மொனென்று சொல்லு மந்திரமேதடா நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கறிச்சுவை யறியுமோ” என்று நகைச்சுவையுடன் விகடமாகப் பாடியிருப்பினும், மாக்ஸிய வாதிகள் சமயத்தைப் பாமர மக்களினர் போதை வளப்து என்று இழிவுபடுத்தியிருப்பினும், சமயக் கிரியைகள், முதல் முன்று படிகளில் இருப்பவர்களுக்கு, வெளியில் திரியும் தம் மனத்தை இறைவனால் செலுத்துவதற்கும், பதியைச் சார்ந்து, சார்ந்ததன் வண்ணமாக வருவதற்கும் இன்றியமையாதன. எல்லாவற்றிலும் ஒரு பயனும், அர்த்தமும் இருக்கின்றது. யோக சுவாமிகள் 'முழுதும் உணிமை" என்ற மகா வாக்கியதி தை

உபதேசித்துள்ளார்.
விசுத்தம்
இருதய கமலத்துக்கு மேலாக, கண்டஸ்தானம் வருகின்றது. இதன் தத்துவமாக வெட்ட வெளியாகிய ஆகாயம் திகழ்கின்றது. சிதம்பர J 5 gՊալճ 61 601 նոյւծ குறிப்பிடப்படும். அர்த்தநாரீஸ்வரர் அதிட்ட தெய்வமாக விளங்குகின்றார். இங்கேயே ஜீவாத்மா சுத்தமடைந்து (ஆதிம சுத்தி), புத்தி மு ன்று காலங்களையும் அறிந்து, முக்திக்கு வழி திறக்கப்படுகின்றது.
பக்திக்கு ஒரு மெலிந்த அகங்காரம் தேவை என்று ராமகிருஷ்ணர் விளக்குவார். அதாவது அடியேன், உன்னை அணி போடு போற்றி வணங்குவதற்கு நான் வேறான ஒருவன்' என்ற உணர்வுடன், "நான் உன்னைச் சொந்தம் கொண்டாடக் கூடிய பக்தன்' என்ற உரிமை காணப்படுகின்றது. ஆயினும் விசுதீதியில் இவ்வாறான ஆணவ உணர்வு முழுமையாக அற்றுப் போகின்றது. தேசாபிமானம், இனம், ஊர், சாதி, குலம், குடும்பம், பால், உடல் முதலிய மாய உணர்வுப் போர்வைகளைப் கடந்து, தனி ஆத்மாவை, எல்லாவற்றிலும் உயிருக்கு உயிராக இருக்கும் உட்பொருளை அனுபவிக்கின்றான். ஹாவர்ட்(Harvard) பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் அல்போர்ற (Alport),இவ்வாறு வியாபிக்கும் மனிதனின் அடையாளத் தன்மையை, விரிவடையும் வட்டங்கள் முலம் நன்கு விபரித்துள்ளார். (உரு. 5) நடுவில், அடிப்படையாக, சுயநலம் அல்லது அகங்காரம் இயங்குகின்றது. சற்று உயர்ந்து, குடும்ப அங்க உணர்வும் அதனுடன் அடையாளம் காணுதலும்: கூட்டுக் குடும்பம் அடுத்ததாக வருகின்றது. அதற்கு மேலாக சாதி குலம் முதலியவற்றுடன் சொந்தம் கொண்டாடல் பிரதானமாகின்றது: அடுத்தபடி யாக ஊர், சமுகம் முதன்மை பெறுகின்றது: சற்று விரிந்து பிரதேசம், தாயகம், மண்பற்று போன்றவை மேலோங்குகின்றன. அடுத்து மொழி, இனம், கலாசாரம், பண்பாடு முதலியவற்றினி உறுப்பினராக உணர்தல். பெரும்பாலும் நாங்கள் இந்த வட்டத்தை வந்தடைந்துள்ளோம், அதுவும் இனத்துவேஷம் எனர்ற குறுகிய சைதனி னியத்துக் குளி சிக்குண்டுள்ளோம். இவற்றைவிட உயர்ந்து தேசாபிமானமும் அடுத்து, சமயத் தோழமையும் வருகின்றன. இவற்றை எல்லாம் கடந்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பண்டைய தமிழ்ப் பண்பில் மனித குலத்துடன் தன்னை இணைத்து அடையாளம் காணுதல், இறுதியாக உள்ளது

Page 47
எல்லா உயிர்களையும் , ஏன் சராசரிப் படைப்புக்கள் அனைத்தையும் பரப்பிரமத்தின் படி வங்களாகக் கணி டு, பரமாத்மாவின் வியாபகத் தனிமையை, விளப் வருபதி தை உணர்தல்.
விசுத்தியினர் அதிட்ட தெய்வமாகிய அர்த்தநாரீஸ்வரர் ஒரு முக்கிய உளவியல் தத்துவத்தை விளக்கி நரிற்கின்றார் (உரு.6) மனிதனின் இயல்பு நிலையில், ஆண், பெண் குணங்கள் வெவ்வேறு விகிதாசாரத்தில் கலந்து காணப்படும். இந்த நிதர்சன உண்மையை æOgsJung) 905LInød grgjæElbGOLu (Androgynous) கோட்பாட்டைக் கொண்டு விளக்குகின்றார். ஆத்மாவுக்குப் பால் இல்லை. ஆயினும் ஆணவத்தின் மயக்கம் பால் உணர்வைத் தோற்றுவிக்கின்றது. இதைக் கடப்பதே விசுத்தியின் கர்மகதி இறுதியாக நான் இந்த உடம்பு’ என்ற தேக உணர்வைத் தாண்டும் பொழுது ஆத்ம சுத்தி நிகழ்கின்றது.
ஆக்ஞேயம்
இச் சக்கரம் புருவ நடுவில், சந்திரைனைப் போல் வெள்ளை வர்ணத்தில் காணப்படும், சுழுமுனைவழியான நீண்ட பயணம் இடைகலை, பிங்கலையுடன் சேர்ந்து முற்றுப்பெறும். இதன் பீஜ மந்திரமாகிய பிரணவ ஒமை உச்சாடனம் செய்து, சூக்கும தத்துவமாகிய மனத்தைத் தியானத்தில் நிறுத்தி, சித்த சுத்தம் எய்தி, அந்தராத்மாவை ஜோதி வடிவில் தரிசிக்கலாம்.
ஆத்ம சாதனை பல படிகள் முலம், சோபான முறையில் முன்னேறி, இந்த ஆதாரத்தை வந்தடைகின்றது. இந்தப் பரிமாணத்தினி முதிர்வை, ஞானக் கணி திறக்கப்பட்டு, விழிக்கின்றது என்று உபசார வழக்கிலும், பூரணத்துவம் அடைந்த சுத்த சைதன்னியம் அல்லது பிரக்ஞையின் உதயம் என்றும் விளக்குவர். இந்த ஜீவன்முக்தி நிலையில் ஒருவரின் பார்வை, காட்சி, முழுதாக முன்னைய நிலையினின்றும் மாறுபடும். உதாரணமாக, முற் குறிப்பிட்ட சுவாதிட்டானத்தில், காதல் உணர்ச் சரியில் சிக் குண்டவரின் காட்சி, காதலிக்கப்படுபவரைக் குற்றமில்லாத தேவையாகக் காட்டும். புற உலகமும் அழகான உருமாற்றம் பெற்றுப் பிரகாசிக்கும். ஆயினும் ஆக்ஞேய நரிலையில் பார்வை, உணர்வு முதலியவற்றின் திரிவுபடுத்தும், மயக்கும் தன்மை நீக்கப்பட்டு, தெளிவான யதார்த்தம் புலப்படும். இவர்களை ஏதமில் காட்சியினர் என்று ஞான நூல்கள் குறிப்பிடும். உலகியல் தோற்றங்களை கணி டவர், அதற்குள் குக் குமமாக

காலம் மாசி 95)
அந்தர்யாமியாக, உள் நின்று எல்லாவற்றையும் அதிட்டித்து இயக்கும் அந்தராத்மாவைத் தரிசிப்பர். திருமுலர் இந் நிலையை உவமை முலம் அழகாக வர்ணித்துள்ளார்.
"மரத்தை மறைத்தது மாமதயானை மரத்தில் மறைந்தது மாமதயானை பரத்தை மறைத்தது பார் முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே”
சகளப்ரார கமலம் எல்லா ஆதாரங்களுக்கும் மேலாக, சிரசில், ஆயிரம் இதழுடைய வெனி டாமரை, பரமசிவனின் உறைவிடமாக, கைலாசமாகத் திகழ்கின்றது. முலாதாரத்தில் உறங்கியிருக்கும் குண்டலினி சக்தி விழித்தெழுந்து, மேல்நோக்கி ஒவ்வொரு ஆதாரத்தினூடாகவும் ஊடுருவிச் சென்று இறுதியில் சகளப்ரார சக்கரத்தில் சிவத்துடன் அந்நியோன்னியமாக இரண்டறக் கலக்கின்றது (உரு,3) ஜீவாத்மா, பரமாத்மாவை இங்கேயே அடைந்து அத்துவித நிலையைப் பெறுகின்றது. "நீ அதுவாய் இருக்கின்றாய்" என்ற விழிப் புணர்வுடனி சச் சிதானந்தமாய் நிலைத்திருப்பது முக்தி, விடுதலை, மோட்சம் என்று அழைக்கப்படுகின்றது. சத்தியம் , மெய்ப்பொருள், சிவானுபூதி என்று பல விதமாக இறைவனை ஞான வடிவில் அனுபவித்து, ஞானமயமாகிறதே பேரானந்தப் பேறு. பரவிந்துவாகிய சூனியம் அல்லது நிர்வான நிலையும் இதுவே. மனிதனின் சைதன்னியம் விருத்தி அடைந்து, தூய்மையான சித்தாகி, பரிபூரணத்துவம் எய்திய துரியாதீதம் அல்லது நிர்விகல்ப சமாதியும் இதுவே. சிவனின் தாண்டவ நடனத்தையும் இங்கேயே தரிசிக்கலாம் மனம் வாக்குக் கடந்த நிலையிது. 'கண்டவரும் விண்டதில்லை விண்டவரும் கண்டதில்லைத் -தங்கம் வேறுபொரு ஸ்ரில்லையெடி" என்று யோக சுவாமி "பட்டது பட்டேற்றும்" என்ற பாட்டில் அறிவூட்டுகின்றார். இதற்கு மேல் இந்நிலையைப் பற்றிச் சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.
CւՔւգ-6ռյ6ԾՄ மனிதன் அறியாமலே தன்னாத்மாவைத் தேடி நீண்ட, தில்லுமுல்லு நிறைந்த பல திருப்பங்கள் உடைய பயணத்தில் ஈடுபடுகின்றான். முதலில் புறத்தில், வெளி உலகத்தில் இன்பத்தைத் தேடி அலைகின்றான். இன்ப துன்பங்களை நுகர்ந்து அவளிப்தைப்படுகின்றான். இவ்வனுபவங்க" ளுடாக நன்மை, தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றல் பிறக்கின்றது. தீயனவற்றை விலக்கி

Page 48
| grovlb prof 95 நல்லனவற்றைச் செய்ய முற்படுகின்றான். இறுதியில் இவ்விரண்டையும் சமமாக நோக்கும் இருவினை ஒப்பு நிலையை எய்துகின்றான். உலக பந்த பாசங்களிலிருந்து விடுதலை பெறுகின்றான். மெய்ப் பொருளை அறிய நாட்டம் கொள்கின்றான். தனி னாத்மாவை உள்ளே அகத்தில் தேட அருள் வழிகாட்டுகின்றது. இந்த உன்னதமான யாத் திரையை, குறியீடாக, குண்டலினி சுழுமுனை வழியாக ஆறு ஆதாரங்கள் ஊடாக, சகஸ்ப்ரார கமலத்தை சென்று அடைவதுடன் ஒப்பிட்டோம் (உரு.3) ஒவ்வொரு ஆதாரத்தையும் இப்பயணத்தில் காணப் படும் தங்கு மடங்களாக விளக்கி, அவற்றின் பொதுத் தனி மைகளையும் , குணாதிசங்களையும், இலட்சணங்களையும், சைதன்னிய நிலைகளையும் விபரித் தோம் (அட்டவணை 1) ஆயினும் ஒவ்வொரு மனிதனின் பயணமும் தனித்தன்மை வாய்ந்தது. பாதைகள் வேறுபடும். ஆதார சைதன்னிய அம்சங்கள் வித்தியாசமான அளவிலும் தன்மையிலும் கலந்து காணப்படும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
உலக வாழிக் கையில் , ஒவ்வொரு ஆதாரத்திலும், பள்ளிக்கூட வகுப்புகள் போல், அத்தரத்துக்கான பாடப் படிப்பு முடிந்து, தேர்ந்த பிறகு, அடுத்த வகுப்புக்கு, ஆதாரத்துக்கு மனிதன் உயர்த்தப்படுகின்றான். இன்னொரு விதத்தில் கூறும் பொழுது, குண்டலினி எந்த ஆதாரத்தில் நிலைகொள்கின்றதோ, அதற்கு ஏற்றவாறு அந்த மனிதனின் தனு, கரண, புவன, போகங்கள் அமைகின்றன. அந்தச் சைதன்னிய நிலைக்குப் பொருத்தமாக நனவிலும், கனவிலும் உலகத் தோற்றங்கள், பார்வை, வேட்கைகள், உந்துதல், திருப்தி எல்லாமே குறிப்பிட்ட அந்த ஆதாரமயமாக அமையும். அப்பு வனத்தில் மனிதனின் இச்சா, கிரியா, ஞான சக்திகள் செயற்படும். அதாவது இச்சா சக்தி குறிப்பிட்ட ஆதாரப் பொருள்களில் ஆசைப்பட அவற்றைப் பெற கிரியா சக்திகாரியப்படும். அவ்வுலகத்திற்கு ஏற்ற ஞானம் பட்டறிவால் பிறக்கும். மனிதன் அந்த ஆதார போகங்களை நுகர்ந்து, சலித்து, விருப்பு வெறுப்பற்ற நிலையில் அடுத்தபடியை அடைகின்றான்.
அக, பிற பிரபஞ்ச விஷயங்களில் அவாப்படும் மனத்தைக் கட்டுப்படுத்தி, வெளி உலகில் செலவிடப்படும் சக்தியை அந்தர் முகமாகத் திருப்பி, தன்னாத்ம விசாரணையில் ஈடுபடுத்துவதே சாதனை எனலாம். மனிதனின் பக்குவத்துக்கு ஏற்றவாறு ஆதார, புவன அனுபவங்களை உடம் புடன் சேர்ப்பதே
(f

கர்மவினை.
இவ்வாறு சோபான முறையில் சகலரும் தங்கள் ஆத்மாவை நோக்கிய பயணத்தில் பிறந்திறந்து அலைந்து அல்லற்படுகின்றனர். பந்த பாசங்களில் சிக்குண்டு சம்சார சக்கரத்தில் சுழல்கின்றனர். மாணிக்க வாசகர்,
" எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேள் எம்பெருமான்" என்று, அறாப்பிறவிப் பிணியை இட்டு வருந்துகின்றார்.
ஆயினும், ஒவப் வொரு அனுபவமும் , வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் அவர்களின் முன்னேற்றத்திற்கு வாய்ப்பாக அமைகின்றது. பின்னடைவுக்குச் சந்தர்ப்பமாகவும் அமையலாம். உதாரணமாக அன்பு அல்லது ஞான நிலையைக் கிட்டியவர், பாலியல் இசைக்கு ஆளாகும் பொழுது, மேல் நிலையில் இருந்து சுவாதிட்டான மையத்திற்குத் திடீர்ச் சறுக்கல் ஏற்படுகின்றது (உரு.3) இக் கீழிறங்கலை, எங்கள் சைதன்னியம் முழுதாக கர்ம மோகத்தில் அழுந்தாமல் சற்று விழிப்பாக இருந்தால், உடலில் உணர்ச்சி பூர்வமாக உணரலாம். மறுதலையாக, சுடலை ஞானம் போல் எங்கள் துன்பங்களின் முலம் பெற்ற பட்டறிவு, எங்களைச் சிலவேளை தூண்டி, கணப் பொழுதாவது, உலக நாடகத்தின் நிரந்தரமற்ற தன்மையையும் சூக்குமமாக மறைந்திருக்கும் ஆத்மாவையும் காண வைக்கின்றது. சைவசித்தாந்தக் கருத்துப்படி, திரோதான சக்தி ஒரு சிறிது நேரத்திற்குத் திரை நீக்கம் செய்து, மெய்ப் பொருளைக் காட்டி, ஒரு சடுதியான விழிப்பை அளித்து, மறைக்கின்றாள். இவ்வாறான அனுபவங்கள், தக்க தருணத்தில் மனிதனை ஆத்மீகத்தில் நாட்டம் கொள்ள, தெரிந்தோ, தெரியாமலோ தம் பயணத்தைத் தொடர வழிவகுக்கின்றன. படிப்படியாக அறிவு விருத்தியடைந்து ஞானம் பிறக்கின்றது. இறுதியில் தன்னாத்மாவை வந்தடைகின்றான். அனுபூதி கைகூடுகின்றது. இதுவே தற்சொருப, ஆத்ம தரிசனம் என்று சொல்லப்படுகின்றது.
ஆயினும், நாங்கள் எமது ஆத்மாவைத் தெரியாமல், தேடி அலையும் பயணத்தில் இவ் வாத்ம தரிசனத்தை வந்தடைவதற்கு இருக்கும் தூரத்தை, வந்தடைவதற்கான L InfoSeoul,
"உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை உள்ளம் விட்டோரடி நீங்கா தொருவனை உள்ளமும் அவனும் ஒன்றாயிருந்தும் உள்ளம் அவனை உருவறியாதே." என்று திருமுலர் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றார்.

Page 49
உடன் ஆட்டுஇறைச் மீன், இறல்,
இந்தியாவில் இருந். காஞ்சிபுரம் சேலைகள் கூறைச் சேலைகள், மணப் பெணி அல
எவர்சில்வர்
குறைந்த விலையில் நிறைற
Pilonya
Sri Lankan, East & West II
3630 Lawrence AV Scarborough, Tel:(416)
 
 

O فيعمه ± ார் ரேடர்ஸ்
சி, கோழி இறைச்சி,
d6606) L,
து தருவிக்கப்பட்ட
காஷ்மீர் சேலைகள்,
சல்வார் கமீஸ்,
வ்காரப் பொருட்கள் பாத்திரங்கள்
ந்த திருப்தியுடன் வாங்க.
" Tronders
ndian Groceries & Textiles
e East (at Markham)
Ont M1G 1 P6 438 7746

Page 50
(காலம் மாசி 95
( 99era
72/ W3%o, Ssa'')
Varonso,0,

(, 90e26
m/anfo

Page 51
Do YoU serio other Uchys to
9 நான் (
உங்கள் பகுதி rெ நேரத்தில் முயற்சிய் மேலதிகமாய் உங்கள்
பணம் ஈடுபடல சம்பாதிக்க ஒதுகக ( விரும்புகிறீர்களா? c இது
ஆம் இ
9ே இந்த
மூலதன இந்த BL அத்தோடு
66Ds
Home ba
 ைஇது இல்லை இல்லை
сэ g)ѣgъ
எவ்வாறு எமது ெ கொணர்டு இலக்கத் நாம் உங் தொடர்ப
உநான்
IF You say "Yes" call
(416) 752-4195 இல்லை. NEW INTERNATIONAL ess
BUSNESS WAY செலுத்த

usly look for moke money?
முழுநேரமாக வேலை செய்து ருக்கிறேன். என்னுல் இந்த BUSNESS ல் ஈடுபட முடியுமா? ஒய்வு நேரத்தில் இந்த BuSINESSல் ாம். வாரத்தில் 10 மணிநேரம் உங்களுக்கு முடியுமாயின் அது போதுமானது.
ஒரு சட்ட ரீதியான BUSINESS? து சட்ட ரீதியானது
BUSINESS g6) FGLIL 6T60Tig b Gig,606) fu IT? JSNESSற்கு மூலதனம் தேவையில்லை தி இதற்கென தனியான ஒரு இடத்தை க்கும் எடுக்கத்தேவையில்லை இது ஒரு Se business
P(ut Door to Door Business? g)g51 6205 Door to Door Business
BUSINEESSgú Lippó Gyp(gsoLouTJ.
அறியலாம்? தாலைபேசி இலக்கத்துடன் தொடர்பு
அல்லது உங்கள் தொலைபேசி தையும் பெயரையும் பதிவு செய்யுங்கள் iss6061T (Bifos Figgigi BUSINESS
ான விபரங்களை கூறுவோம்.
இந்த விபரங்களை உங்களிடமிருந்து ணம் செலுத்த வேண்டுமா?
BUSINESS G5ITLiLT60T ouTIsiss6i, னைகள் எதற்குமே நீங்கள் பணம்
வேண்டியதில்லை.

Page 52
குளிர் உறைக்கு குளிர் காற்று உங்கள் முகத்தி எங்கள் நினைவு உரு
உங்கள் சகல
விதமான
குருேசரிகளுக்கும் * .ܠܣܛ தொலைபேசி மூலம்
ேெள் 4. 2
 
 

ї аъботи 3 தேசமா இது?
ம் தேசமய்யா! ல் அறையும் போதெல்லாம் வ்களுக்கு வரும்!
$35 க்கு மேற்பட்ட ஒடர்கள், இலவசமாக உங்கள் வாசலுக்கே
4O ಇಂÇä
1183 Victoria Park Ave, Scarborough, Ont M4B 2K5