கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 2003.01

Page 1


Page 2

ா புத்தகங்கள் DiCbbi
மனிதன்
செல்வம் அருளானந்தம் P.O Box 7305 509 St. Clair Ave. W Toronto, ON
M6C 1CO
Canada. (416)2O2 - 6414

Page 3
BSITEGuob இதழ் - 17 2003 ஜனவரி
கே. கணேஷ் சிறப்பிதழ்
ஆசிரியர்
செல்வம்
ஆலோசனை என். கே. மகாலிங்கம்
செழியன்
அச்சுப் பதிப்பு யுனி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் 48மீ, புளுமெண்டால் வீதி, கொழும்பு - 13 இலங்கை. தொலைபேசி : 330195 LósöTGITé58á) : unieartGosltnet.lk
KALAM
P.O. Box 7305
509 St. Clair Ave.W Toronto, ON
M6C CO
CANADA kalamOtamilbook,com
(காலம்
 

காலத்தில் ?
சிறுகதைகள்
கே. கணேஷ் 22,28,92 அ. இரவி 51 அ. முத்துலிங்கம் 62 ஜெயமோகன் 66
எஸ். ஷங்கர நாராயணன் 70
பாவண்ணன் 77
இரா. முருகன் 89
கட்டுரைகள்
தெளிவத்தை ஜோசப் 20,34 கே. கணேஷ் 25
கற்சுறா 48 மணி வேலுப்பிள்ளை 56 வே. வெங்கட் ரமணன் 73 என். கே. மகாலிங்கம் 84 செழியன் 88
நேர்காணல்
கே. கணேஷ் - தி. ஞானசேகரன் 3
எம். ஏ. நுஃமான் 15
மு. பொ. - செல்வம் 42
கவிதைகள்
செழியன் ஜெபா தா. பாலகணேசன் துவிஜன்
★ ★ ★
as 17 O

Page 4
ஆசிரியர் கருத்து
இன்றும் எம்முடன் வாழுபவர் ஈழத்து மூத்த எழுத்தாளர் திரு. க. கணேஷ் அவர்கள். அவருக்குப் பல சிறப்புக்கள் உண்டு. மணிக்கொடியில் கதைகள் எழுதியிருக்கிறார். மணிக்கொடி எழுத்தாளர்களுடன் நெருக்கமாகப் பழகி இருக்கிறார். புகழ்பெற்ற இந்திய இடதுசாரி எழுத்தாளர்களான முல்க் ராஜ் ஆனந்த், கே. ஏ. அப்பாஸ், பிரேம்சந்த் ஆகியவர்களுடனும், ப. ஜீவானந்தம் போன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்தது மட்டுமல்லாமல், தமிழகத்திலும் ஈழத்திலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பிப்பதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். ஈழத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தபோது, முற்போக்குக் கட்டுப் பெட்டித்தனமாக இல்லாமல், மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களான, சுவாமி விபுலானந்தரைத் தலைவராகவும், சிங்கள நாவல் படைப்பாளிகளில் முன்னோடியான மாட்டின் விக்கிரமசிங்காவை உப தலைவராகவும், சிங்கள நாடக முன்னோடியான எதிரிவீர சரச்சந்திராவையும் தன்னையும் இணைச் செயலாளராகவும் கொண்டு மொழி, பிரதேச பேதமின்றி ஒரே குடையின் கீழ் இயங்கி இருக்கிறார்.
கவிஞராக ஆரம்பித்து, சிறுகதைகள் எழுதி, இருபதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புக்கள் செய்திருக்கிறார். 'பாரதி' என்ற தமிழ் சஞ்சிகையை உருவாக்கி நடத்தியிருக்கிறார். பன்னிரண்டு வயதிலிருந்து இன்றுவரை எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியப் பணி செய்துவரும் அந்த மனிதரைக் கெளரவிப்பது எம் அனைவருக்குமுள்ள தலையாய கடமை. கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் வாழ்நாள் சேவைக்கான விருதும் பண முடிப்பும் இவ்வாண்டு அவருக்கு அளித்துக் கெளரவிப்பதையிட்டு 'காலம்' மகிழ்ச்சி அடைகிறது. அவர் இன்னும் நீண்ட காலம் சுகத்துடனும் நிறைவுடனும் வாழ வாழ்த்துகிறது.
'காலம்" சஞ்சிகையின் பதிப்பாசிரியரும், சிறுகதை ஆசிரியரும், என் நண்பருமான குமார் மூர்த்தியின் முதலாவது நினைவு தினம் ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில் ஐப்பசித் திங்களில் நடைபெற்றது. “குமார் மூர்த்தி சிறுகதைகள்' நூல் வெளியீடும் இடம் பெற்றது. 'காலம்' சஞ்சிகை குமார் மூர்த்தியின் இருப்பை நினைவில் இருத்துகிறது.
செல்வம்
( காலம்

(γ
உன்னுடைய பெயரும் ,
என்னுடைய பெயரும்
எழுத்துக்களால்
எவ்வாறு வித்தியாசப்படுகின்றதோ
உன்னுடைய உறவுகளும்
என்னுடைய உறவுகளும்
பரிமாணங்களின் படிவுகளாய்
எவ்வாறு வேறுபட்டு நிற்கின்றதோ
உன்னுடைய விம்பங்களும்
என்னுடைய படிமங்களும்
எவ்வாறு வேறு வேறு
வடிவங்கள் கொள்கின்றதோ
உன்னுடைய வெளிகளும்
என்னுடைய வெளிகளும்
எவ்வாறு மாறுபட்டு நிற்கின்றனவோ
அவ்வாறே ஒலிச் சிதறல்களின் படலத்தில்
நமது இடைவெளிகள்
அனுமானங்களை விலகி மீறி
பேசிக்கொண்டே நகர்கின்றன.
செழியன்
இதழ் - 17 )

Page 5
மலைாகாடு என்
கோக்க
'திரு. கே. கணேஷ் அ1ெ.0 கீ.
த:ரிந்தடிய சக்கன் தேர்சு 1:1.
:iil. 11:lg|T. முதல் 1, 1, 1), புங் கய் டா ரிக்
J: JIFFT, ETT
கே.கண்ே;ெ எனது பெற்றேIII மு:111:11,
தமிழகத்தின் திருச்சி 11வட்டத்தை சேர்ந்த தத் தயங்:ம் என்ற சிற்றுTரில் இருந்து இலங்கைக்கு பந்து துடியேறியவர்கள் எனது தந்தையா வழி விண்னமாகாச ரீரங்கம் ஆரங்கநாதனையும், திருப்பதி வெங்கடா பு:பதியையும் மு:தெப்பமாக அண்11 த. கேத்திரத்தைச் சேர்ந்த Tள். தாது ருேட பஞ்சத்தில் அடிபட்டு மன்ன் - பாத்தன: வழிவநது குடி1ே111111 Tt முன் தலைமுறையினா கோப்பித் தோட்டங்களில் TSTSS S SS LLL SL S T T TtmLSS TSLL YYS :புந்தாக:11, 21 1ழப்பையே 31 தியபாகக் uTL TLLL LLLLLLSS STTuS CSS S SaMTT STT LtMG YS இருந்ததால் கல்வியில் நாட்டபில் ப் த சமூகத்தினராக இருந்தன.
த1:Iத் தாத்தா நைாட்டில் 1ங்காளி11. TSYYS u S L LS SSK K L S SA S S S KSS S rJ தோட்டத்துரையான வெள்ளையரின் நன்மதிப்பைட் பெற்றதால், துன்) 'j' 2.11 நீதிமன்றத்தில் LI gy:ñL | ñ, g, ĝ, Justice Schn T., eide: r 1:1 riăi ] பறங்கியருக்கு அறிமுகEசேபது Elததார். :ள் ஆருத்துறை ஆருகே புள்ள தனது Ful3101 (23lle என்ற தென்னந்தோட்டத்தில் தாத்தான்: கங் காணபTT நபரித தார். அத் தோடு அக்காட்த்தில் அரசு நிறுவனமான போது பன்: அமைப்புகளின் பொறியிடப்ாளராக இருந்த வெள்ளையர்களிடம் சிபா 1 ச. செ. து SS L keek YS SO00L T S S S L S AT T SS GL L Tu a00 aL கண்காணிக்கும் பணியாளராக நியமனம் பெற I FiCTITTL II++1F3-F-FWD.O."ersSeers என்போர் விரட்டர்கள் என அழைக்கப்பட்டனர். அத்துறையில் ஆங்கிலங்கற்ற +புத்தமிழர்களே செயல் புரிந்தனர். இதில் எனது தாத்தா ஒருவரே இதுவரை பணிபுரிந்த ஒரே இந்திய தீவிரயுேம் 1928ல் இவர் பேருவண் ரைட்ட பதவி வகித்த காத்தில், அரது பட்சன் 11:13து தIFமன் கொழும்புக்கும் கருத்துறைக் பூமிடையே பயனப்பேருந்து சேவை நடத்தியவா. கண்டி
( காலம்
 

ாறு கான் தனியாக கவில்லை
1.
தன: தும் ரோசிரியர் எம்.ஏ. து:ரம்
இங்கே இருபது. இடம் பெறுகிறது.
தி.ஆா.
3 # iGizio!
Hi-Nob II.
கே.கண்ேடி :
தTத்துடியா பேருந்த சேவையை முதலில் நடத்தி. பரும் அEரே அபிட்டியTளில் த, 31ந் தோட் 11 ப த ப் பின் 31 1 உரிம யாராக்iபும் எனது தாத்த விளங்கினார். ாTள் தாத்தார், கம்பன் 1ானே இருந்தது HTTT tL T0 SSSLL LLLL uuu u aL LKSYSuu STuS HuY Y HLS உயர்நிலை பிற்காததே சரிந்து போனது
வேறு:த.
உங்காது தந்தையாா வழி வைணவர்கள் LkOuT LuS HaTTTLT LL LaS K uu LCaTL TS கணேஷ் என்ற பேர் எப்படி அமைந்தது? இது 1 வா கருக்கு அமையும் பெயர் /* Inli bil biIII :
பாட்டா பேய3ரயே பேரலு:தம் சூட்டும் மரபுண்ட வர்களTதப்ாட் 1: 1 நT1:ன் Elன்றுதான் :Lந்திருக்கவேண்டும். ஃது பெற்றோருக்குத் திருபன 1: ஐந்தாண்டுகள் பிiளப்பாக்கிபத்திற்கு ஏங்கிய நிiப்பில் リ* リ品lp可 i cmlf リ『T山。リリ m。 ஆ11:13ரயருகே பிil11ய சினப் பத்து, அரகம் வேம்பும் வளர்த்து, கற்றி வழிபட்டு எனது TLOTcccO TTTL LaLLLLS a TOTSSLSLSS YS S yTTc LLLLLLS f ன் n ன் ப் பெற் றேடுத் தார் | li ப தலைப்பிள்ளையின் பிரசவம் தாவழித் தாத்தா அகத்தில்ே நடை பெறும் மரபுவழியில், கண்டி அம்பிட்டியில் தென்னந்தோட்ட உரிமை புற்றிருந்த தட்ப்பின்னாவ தோட்டத்தில் நான் பிறந்தேன். விநாயக கிரு:பால் நான் பிறந்ததினால் நனது பெற்றோர் எனக்கு சித்திவிநாயகம் எனப் பெயரிட்டனர் எனது தாயாமான் முத்துசாமிப் பி1)ா, அம்மா ஆகியோர் என்ன கணேசன் எனச் செல்லமாக அழைக்கத் தொடங்கே அதுவே நிரப்பெற்றுவிட்டது.
அந தக் காலத் தவி † Isis Is HT I (1| பத்திரிகைகளில் வெற்றில் எழுதினர்கள்
1932இல் II:பனாக இருந்தபோது டாக்ட வரதராஜநாயுடு அவர்களது தமிழ்நாடு வார அருஞ்சிகையில் எழுதினேன். ஆனந்தபோதினியிலும் க்ாழுதியுள்ளேன். மணிக் கொடி, மாதர் மறுமண்ம்.
இதழ் 17 )

Page 6
ஜனசக்தி, லோகசக்தி, கல்கி, வேறும் சில. ஞாபகம் இல்லை.
தி.ஞா. : மணிக் கொடி சிறந்த எழுதி தாளர் பரம்பரையை உருவாக்கிய பத்திரிகை. பி.எஸ் .இராமையா, புதுமைப்பித் தன் ஆகியோர் அதிலேதான் எழுதினார்கள். அப்பத்திரிகையில் உங்களது ஆக்கங்கள் பற்றிக் கூறுங்கள்.
கே.கணேஷ் : மணிக்கொடியில் எனது ஆசாபாசம் என்ற சிறுகதையும், எனது முதல் மொழிபெயர்ப்பு முயற்சியான அதிஷ்டசாலி என்ற ஹங்கேரியச் சிறுகதையும் வெளிவந்தன. தற்போது கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ள மணிக்கொடித் தொகுப்பில் அதிஷ்டசாலி இணைக்கப்பட்டுள்ளது. தத்தமங்கலம் க.கணேசன் என்ற பெயரிலேயே அது வெளிவந்துள்ளது.
தி.ஞா மாதர் மறுமணம் இதழிலிலும் எழுதியதாக கூறினீர்கள். அதென்ன மாதர் மறுமணம் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே
கே.கணேஷ் : காரைக்குடி காங்கிரஸ் காரரும் இலக்கிய
ஆர்வலருமான தனவணிகர் சொ.முருகப்பா: அவர்கள் சீர்திருத்த நோக்குடன் ஒரு விதவையை மணந்தார். அவர் பெயர் மரகதவல்லில் சொ.மரகதவல்லி முருகப்பா நடத்திய மாத இதழ்தான் மாதர் மறுமணம் இது ஒரு சீர்திருத்த நோக்கம் கொண்ட பத்திரிகை. வீரகேசரி ஆசிரியராக இருந்த கே.வி.எஸ்.வாஸ் அவர்களும் அதில் அப்போது எழுதிக் கொண்டிருந்தார். ཕྱི་ཕྱོགས་
தி.ஞா. : தத்தமங்கலம் க.கணேசன் பின்னர்
கே.கணேஷ் ஆக மாறியது எப்படி
கே.கணேஷ் : ஆர்.கே.நாராயணன் என்ற புகழ்பெற்ற எழுத்தாளருடன் எனக்குத் தொடர்பு இருந்தது. அவர் தனது பெயரை ஆர்.கே.நாராயன் என்று சுருக்கி கொண்டார். அது தந்த இன்ஸ்பிரேசனில் நானும் கே.கணேஷ் என்று எனது பெயரைச் சுருக்கி, மனுப்போட்டு கோர்ட் மூலம் அதனை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
தி.ஞா. : புனைபெயர்களில் எழுதியதுண்டா
கே.கணேஷ் : நான் பிறந்தபோது வைக்கப்பட்ட பெயர் சித்திவிநாயகம். நான் பிறந்தது சித்தார்த்தி வருஷம். இதன் காரணமாக சித்தார்த்தன் என்ற புனைபெயரில் எழுதியதுண்டு. மற்ற புனைபெயர் கலாநேசன், கே.ஜி, மலைமகன் இத்தியாதி.
( 6 топ.
 

தி.ஞா. : தாங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் கலவி கற்றுள் ளர்கள் . அதுபற்றிக் கூறுங்கள்.
கே.கணேஷ் : ஆரம்பக்கல்வி தோட்டத்து எல்லையில் இருக்கும் Baptish Mission பெண்கள் கல்லூரியில் சிங்களத்தில் படித்தேன். பெண்கள் கல்லூரி யென்றாலும் சிறுவர்கள் சேரலாம். நான் முதலில் கற்ற மொழி சிங்களம். அங்கு ஓரிரு ஆண்டுகள் படித்தேன். பின்னர் கண்டி St Anthony's கல்லூரியில் படித்தேன். (அக்கல்லூரி gie JTg5 St Sylvester E6igits 9:60). Dibiscbigib இடத்தில் இருந்தது) எனது உறவினர் அங்கு ஆசிரியராக இருந்தார். அங்கு தமிழ்மொழி கிடையாது. ஆங்கிலத்தில் கற்றேன். தமிழில் பேசினால் தண்டனை. தமிழ்மொழியை எனது தாயார் வீட்டில் எனக்குக் கற்பித்தார். தனது நண்பிகளின் பிள்ளைகள் சிலருக்கும் எனக்கும் கையில் பிரம்போடு ஓர் ஆசிரியரைப்போல் கற்பித்தார். அன்றாடம் திருப்புகழ், ஒளவையாரின் வாக்குண்டாம், ஆத்திசூடி போன்ற நீதி நூல்களையும் தேவார திருவாசகங்களையும் புகட்டினார். அதுவே எனது குருதியில் ஒடுகிறது. தமிழ்மீது ஒரு தனிப்பற்று ஏற்பட்டது. தமிழகத்திலிருந்தும் நூல்களை அஞ்சல்வழி பெற்றுத்தந்தவள் தாயார். பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை, ஆரவல்லி, சூரவல்லி கதை, நல்லதங்காள் கதை, காத்தவராயன் கதை, போன்ற நூல்களையும் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி நாவலையும் படித்தேன். தவிர அக்காலத்து தமிழாசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் தமிழகத்து தமிழ் அறிஞர்களது நூல்களை இரவல் பெற்றுப் படித்தேன்.
தவிரவும் அதிஷ்டவசமாக, கண்டியில் திருகோணமலைவீதியில் எனது தந்தையார் பங்காளியாக இருந்த, ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த செம்பனூர் வாசியான ஆறு.சுப.சுப்பையா அம்பலம் அவர்களது கடையின் முன் பகுதியில் சுபாஷ்சந்திரபோஸ் பெயரில் அமைந்த போஸ் சங்கம் வாசிகசாலை இருந்தது. அதனை தமிழ் ஆர்வலர்கள் ஆர்.எம்.செல்லையா போன்றோர் நடத்தினர் . அந்த வாசிகசாலையில் மறைமலையடிகளின் ஞானசாகரம் (அறிவுக்கடல்), இளவழகனாரின் (பாலசுந்தரம்), முல்லைக்கொடி, திரு.வி.க.வின் சென்னை சைவ சித்தாந்த நூற்பதிப்பக்தின் செந்தமிழ்ச் செல்வி, கரந்தை தமிழ்ச் சங்கம் வெளியிட்ட தமிழ்ப்பொழில் ஆகிய சஞ்சிகைகள் வந்தன. அவற்றைத் தொடர்ச்சியாக வாசித்தேன். இதன் தாக்கத்தினால் தமிழ் அறிவை வளர்த்ததோடு இந்தியாவில் உள்ள விடுதலை 9sip - 17)

Page 7
இயக்கம் குறித்த சஞ்சிகைகளையும் படித்ததனால் ஆங்கில ஆட்சியில் ஒரு வெறுப்பு ஏற்பட்டது. ஆங்கில மொழிமீது பற்றுக் குறைந்து தமிழ்மீது பற்று அதிகமாகியது.
தி. ஞா. : மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து கல்வி
கற்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது.
கே.கணேஷ் : மதுரை தமிழ்ச் சங்கத்தில் கல்வி பயின்ற தஞ்சை அறந்தாங்கி வாசியான திரு முத்துராமலிங்கம், போஸ் சங்கத்தில் முக்கியஸ்தராக இருந்தார். இவர் தமிழக மு.ரா.கந்தசாமிக் கவிராயரின் மகன் பண்டிதர் க.பழனிக்குமார் அவர்களின் மாணாக்கள். மதுரை தமிழ்ச் சங்கத்து எஸ்.எஸ்.எல்.சி. தமிழ்த் தேர்வில் முதல் வெள்ளித்தோடா பரிசு பெற்றவர். இவர் அப்போது தனியார் நடத்திய கல்லூரி ஒன்றிலும் ஆசானாக இருந்தார். அக்கல்லூரி பிற்காலத்தில் மகாத்மா காந்திக கல்லூரி என்றும் பின்பு Hindu Senior கல்லூரி என்றும் பெயர் பெற்றது. இவரே என்னை மதுரை தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து கல்வி கற்கும்படி ஆலோசனை கூறினார். தனது ஆசிரியரான பண்டிதர் க.பழனிக் குமார் அவர்களுக்கும் கடிதம் கொடுத்தார்.
தி.ஞா. : தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து படிப்பதற்கு அடிப்படைக் கல்வித்தகைமைகள் ஏதாவது இருக்கவேண்டுமா
கே.கணேஷ் : நான் அறிமுகக் கடிதம் பெற்று சென்றபோது, சோழவந்தான் என்ற ஊரில் உள்ள உயர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக க.பழனிக்குமார் கடமையாற்றினார். நான் சென்றபோது சித்திரை - கோடை விடுமுறைக்காக தமிழ் சங்கக்கல்லூரி முடியிருந்தது. அதனால் அந்த விடுமுறை. நாட்களில், தனது மாணவர் ஒருவருடன் தங்கியிருக்க திரு க.பழனிக்குமார் ஒழுங்கு செய்தார். அத்தோடு தமிழ்ச் சங்கத்தில் சேர்வதற்கு வேண்டிய பயிற்சியைக் கொடுத்தார். தமிழ்ச்சங்கக் கல்லூரியில் பாலர் வகுப்பு தேர்வு பெற்ற பின், முறையே பிரவேச பண்டிதம், பாலபண்டிதம் முடிவாக பண்டிதர் தேர்வு நடை பெறும். பாலர் வகுப்புக்குரிய பாடங்களாக Ją), Bł(p6 5 T66b (560) Luj UT6) U TL-Ló , ஒளவையாருடைய ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி போன்றவற்றையும் நாவலரின் உரைநடை வளத்தையும், பயிற்சிபெற வாய்ப்புக் கிடைத்தது. தவிரவும் யாப்பு இலக்கண நெறிகளை உணரவும் வெண்பா பயிற்சி பெறவும், நளவெண்பா போன்ற நூல்கள் பாடநூல்களாக அமைந்தன. இவற்றில் பண்டிதர் க.பழனிக்குமார் எனக்குத் தந்த பயிற்சி, தமிழ்ச் சங்கத்திலே சேர்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. பின்னர் தமிழ்ச் சங்கத்தில் தங்கியிருந்து 1934முதல் அங்கு கல்விகற்றேன். தமிழ்சி சங்கம், இராமநாதபுரம் அரசரின்
O ar ao do
 
 

உறவினரான சேத்தூர் ஜமீந்தார் பாண்டித்துரை தேவர் அவர்களது ஆதரவுடன் தொடங்கப் பட்டது. மாணவர்கள் தங்குவதற்கு உறைவிடமும் இலவசக் கல்விபெற வாய்ப்பும் கிடைத்தன.
தி.ஞா. : மதுரைத் தமிழச் சங்கத்தில் எவ்வளவு
காலம் பயின்றீர்கள்
கே.கணேஷ் : சிறிது காலத்திலேயே நான் தமிழ்ச் சங்கத்தைவிட்டு விலகவேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது. எனது சைவஉணவு காரணமாக பகல் இரவு சாப்பாட்டிற்கு வெளியே சென்று உணவருந்தி வரவேண்டிய நிலை. போகும் வழியில் ஜதீந்தாஸ் நிலையம் என்ற வாசிகசாலை அமைந்திருந்தது. இந்த வாசிக சாலை பாரதியாருடன் நெருங்கிய தொடர்புடைய ரா.ழரீநிவாச வரத ஐயங்காரின் நன்கொடையில், அவரது மனைவி பத்மாசினி அம்மாள் நினைவாக இயங்கி வந்தது. இந்த வாசிகசாலையில் வரும் ஏடுகளை தொடர்ந்து படிக்க வாய்ப்புக் கிடைத்தது. ۔ భశ ஐதிந்தாஸ் நாட்டுப்பற்று காரணமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சிறை வைக்கப்பட்டவர். சிறையில் கைதிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு சரியில்லை என்ற காரணத்தால் அறுபத்து மூன்று நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி அவரது நினைவாக அமைக்கப்பட்டதே ஜதீந்தாஸ் நிலையம். இந்த
:நிலையம் காங்கிரஸ் இளைஞர்களால்
அமைக்கப்பட்டது. அத்தோடு இணைந்து மேலே குறிப்பிட்ட வாசிகசாலை அமைந்திருந்தது. அங்கு ஏற்பட்ட நண்பர்கள் தொடர்பால், அவர்கள் என்னைத் தம்முடன் இணைந்துகொள்ளும்படி வேண்டினர். இதில் உறுப்பினராக இருந்த, தற்போது இந்திய அரசின் தியாகச் சின்னம் தாமிர விருது பெற்றவரும், திருநெல்வேலி சதி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையாகி உள்ளவருமான இ.மா.பா. என்ற இ.மாயாண்டி பாரதியின் நட்புக் கிட்டியது. அவருடன் 70, மேலைமாசி வீதி இல்லத்தில் தங்கி தமிழ்சங்கக் கல்லூரியில் பாடம் ஏற்று வந்தேன். அக்காலத்தில் 34, 35 களில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த தால் ஜெயப்பிரகாஷ் நாராயண், சந்திரபோஸ் போன்றவர்கள், காங்கிரஸ் கட்சியின் உட்பிரிவு போன்று இயங்கிய காங்கிரஸ் சோஷலிஸ்ட் பார்ட்டியில் (காங்கிரஸ் அபேதவாதக் கட்சியில்) இருந்தார்கள். அந்தக் கட்சி சார்ந்த அன்பர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டு, ஜெயப்பிரகாஷ் நாராயண் எழுதிய Why Socialism - அபேதவாதம் ஏன் என்ற நூலும், g6ia6i6oT6ö (35(b 6T(ggu u Whither India - இந்தியா எங்கு செல்கிறது என்ற நூலும், அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய சாம்ய வாதம் என்ற நூலும்
இதழ் - 17 )
భ్క

Page 8
தி.ஞா.
கே.கணேஷ் :
தி.ஞா.
வழிகாட்ட எனக்கு இடதுசாரிக் கொள்கைளில்
ஈடுபாடு ஏற்பட்டது. இதன் விளைவாக ஆக்ராவில் இருந்த அபேதவாதக் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்தேன். இதன் காரணாக இந்திய இரகசிய பொலிசார் என்னை விசாரிக்க, தமிழ்ச்சங்க தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொண்டனர்.
பொதுவாகவே அக்காலத்தில் உயர் பதவி வகித்தவர்கள் அரச விசுவாசிகளாக இருந்தனர். மிதவாதியான தலைமை ஆசிரியர் என்னை அழைத்து நீ காங்கிரஸ் அங்கத்தவனா என்று கேட்டார். நான், இல்லை. அக்கொள்கையில் ஈடுபாடு உடையவன் என்று சொன்னேன். அதற்குத் தலைமை ஆசிரியர், நீ இன்று ஈடுபாடு என்பாய், நாளை பாம் (வெடிகுண்டு) போடுவாய் நம்பமுடியாது என்றார். என்னை எச்சரித்தார். ஏற்கனவே நான் ராமநாதபுரம் சேது சமஸ்தான உறவினரான - மதுரை காங்கிரஸ் பிரமுகள் சிதம்பர பாரதி சிபாரிசுடன் காங்கிரஸ் தொடர்புடைய ராஜாராம் பாண்டி தேவரிடம் இருந்து சிபார்சுக் கடிதம் பெற்றிருந்தமையால், பாலர் வகுப்புத் தேர்வு முடியும்வரை படிக்க அனுமதி தருகிறேன். அதுவரை இங்கு கற்கலாம். அதன்பின்னர் விலகிவிடவேண்டும் என்றார் தலைமை ஆசிரியர். அதன் காரணமாக நான் சிலமாதங்களில் தமிழ்ச்சங்கக் கல்லூரியை விட்டு விலக வேண்டியதாயிற்று.
அதன் டரின் னர் எவ்வாறு உங்கள்
கல்வியைத் தொடர் ந்தீர்கள்.
சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் நுழைவுத் தேர்வு விண்ணப்ப்ம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இத்தேர்வானது எஸ்.எஸ்.எல்.சி.
வகுப்பு தமிழ் இலக்கிய பாடத்திட்டம் சார்ந்த
* கேள்விகளுடன் வித்துவான் நுழைவுத்தேர்வு * மாணவர்களுக்காக மேலதிகக் கேள்விகளைக்கொண்ட வினாத்தாள்களைக்
கொண்டிருக்கும். அதற்கென நான் விண்ணப்பப் பத்திரத்தை அனுப்புவதற்குக் கடைசிநாள் மதுரை Treasury இல் கடைசி விண்ணப்பதாரனாய் சென்றேன். உயர் அதிகாரி அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார். தேர்வில் சான்றிதழ் பெற்று திருவையாறு அரசக் கல்லூரியில் சேர்ந்து எனது கல்வியைத் தொடர்ந்தேன்.
: லோக சக்தி இதழுடன் உங்களுக்கிருந்த
தொடர்புகள் பற்றிக் கூறுங்கள்.
கே.கணேஷ் : நான் இலங்கைக்குத் திரும்பிய பின்னர்,
சித்தாரிப்பேட்டையில் இருந்த ம.கி,திருவேங்கடம் என்பாரை ஆசிரியராகக் கொண்டு லோகசக்தி இதழ் வெளியாகிக் கொண்டிருந்தது. அது சுபாஷ்
(காலம்
 
 
 

சந்திரபோஸ் அவர்களின் கொள்கைகளை ஆதரிப்பதாகவும், இளைஞர்களைக் கவர்வதாகவும் இருந்தது. அரசியல், இலக்கியம் சார்ந்திருந்ததால் அதற்குப் பெரும் ஆதரவு இருந்தது. இந்த இதழ் சக்திதாசன் சுப்பிரமணியம், கே.இராமநாதன், இ.மாயாண்டி பாரதி ஆகியோர் அமைத்த இளைஞர் காங்கிரஸ் என்ற நிறுவனத்தின் ஆதரவில் வெளிவந்தது. இ.மாயாண்டி பாரதி எழுதிய படுகளத்தில் பாரதி தேவி என்ற நூல் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி அதிலிருந்து கிடைத்த வருமானம் லோகசக்தி வெளிவர உதவியது. அத்துடன் இளைஞர் காங்கிரஸ் இயக்கத்தையும் நடத்தினார்கள். மாயாண்டி பாரதியுடன் தொடர்பு கொண்டு இந்த இதழுக்கு நான் கட்டுரைகள் கவிதைகள் எழுதினேன். இந்த இதழுக்கு நான் சந்தாவும் சேர்த்து அனுப்பினேன். இந்தத் தொடர்பால் கே.இராமநாதனின் தொடர்பும் கிடைத்தது.
தி.ஞா : கே.இராமநாதனுடன் இணைந்து கொழும்பில் நவசக்தியரிலும் தேசாபிமானியரிலும் பணிபுரிந்தீர்கள். அது பற்றிக் கூறுங்கள்
கே.கணேஷ் : கே.இராமநாதன், சக்திதாசன்
சுப்பிரமணியத்துடன் திருவி.க.வின் நவசக்தியில் பணிபுரிந்தவர். இவர்களைப்பற்றி திருவி.க. தனது
சுயசரிதையில் எழுதியுள்ளார். கே.இராமநாதன்
பிற்காலத்தில் இலங்கை வந்து சமசமாஜக் கட்சி நடத்திய சமதர்மம் என்ற ஏட்டிற்கு ஆசிரியராக இருந்தார். இவர் பல தொழிற்சங்கங்களை அமைத்தார். பிற்காலத்தில் சமாஜக்கட்சி பிளவுபட்டபோது, B.L.P. கட்சி எனவும், யுனைட்டெட் சோஷலிஸ்ட் பார்ட்டி (U.S.P) எனவும் வழங்கியது. கே.இராமநாதன் சமதர்மம் ஏட்டிலிருந்து விலகி யு.எஸ்.பி. கட்சியின் சார்பில் தேசாபிமானி என்ற இதழின் ஆசிரியரானார். யு.எஸ்.பி. கட்சி, பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயரை மாற்றிக்கொண்டது. நான் கே.இராமநாதனுடன் இணைந்து தேசாபிமானியிலும் நவசக்தியிலும் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது.
தி. ஞா. : முற்போக்கு இலக்கியத்தில் தங்களுக்கு ஈடுபாடு ஏற்படக் காரணமாயரிருந்த பின்னணியைக் கூறுங்கள்.
கே.கணேஷ் : கே.இராமநாதன் இலங்கையில் சுருட்டுத்
தொழிலாளர் சங்கம், கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம் போன்ற தொழிற் சங்கங்களை உருவாக்கியவர். அதில் பல மலையாளிகள் இருந்தனர். அதனால் கேரளநாட்டு (மலையாள) அரசியல் இலக்கியத் தொடர்புகள், முற்போக்குச் சிந்தனைகள் ஏற்பட்டன. இவர்கள் வாயிலாக
இதழ் - 17 )

Page 9
தி.ஞா.
கே.கணேஷ்
கே.கணேஷ் :
கேசவதேவி , சங்கர குருப்பு, தகழி சிவங்கரன்பிள்ளை, பிரேம்ஜி ஆகியோரது இலக்கியங்களை அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக முற்போக்கு இலக்கியத்தில் ஒரு பற்றுதல் ஏற்பட்டது. (பிற்காலத்தில் தேசாபிமானியில் பணிபுரிந்த அச் சுவேலி ஞானசுந்தரம் பிரேம்ஜியின் படைப்புகளில் ஈடுபாடுகொண்டு தன்பெரையும் பிரேம்ஜி என மாற்றினார்).
மணிக்கொடி சஞ்சிகையுடன் தங்களுக்கு
இருந்த தொடர்புகள் பற்றிக் கூறுங்கள்.
: நான் மதுரையில் இருக்கும்போதே மணிக் கொடி சஞ்சிகையை வாசிக்கத் தொடங்கினேன். திருவையாறில் இருக்கும்போதும் மணிக்கொடி வாசகனாக இருந்தேன்.
பின்னர் மணிக்கொடியில் எனது ஆசாபாசம், அதிஷடசாலி என்ற கதைகளை எழுதினேன். மணிக்கொடி எழுத்தாளரான பி.எஸ்ராமையாவுடன் எனக்குக் கடிதத்தொடர்பு இருந்தது. அவர் அன்டன் செக்கோவ் ரஷ்ய சிறுகதை ஆசிரியருடைய சிறுகதைகளையும், அக்காலத்து பெயர்பெற்ற ஆங்கில எழுத்தாளர் John Galsworthy எழுதிய Forsyte Saga வரிசை நூல்களையும் படிக்கும்படி கூறினார். அவ்வகையில் நான் அவற்றை ஆர்வத்துடன் படித்தேன். மணிக்கொடி ஆசிரியராக இருந்த ப.இராமசாமி பிற்காலத்தில் இலங்கைக்கு வந்தபோது அவருடன் மலைநாட்டுக்குச் சென்று மணிக்கொடிக்கு சந்தா சேர்த்தோம், **
; முதன் முதலில் இலங்கையில் ஓர் அகில
இலங்கை எழுத்தாளர் சங்கத்தை உருவாக்க தாங்கள் பின்னணியில் இருந்து உழைத்ததாக அறிகிறோம். அதுபற்றிக் கூறுங்கள்.
இரண்டாவது மகாயுத்த காலத்தில் லண்டனில் தங்க நேர்ந்த டாக்டர் முல்க்ராஜ் ஆனந்த் அவர்களது Untouchable என்ற 5T6)606) London Lawrance And Wishart நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதை நான் வாசித்து, லண்டனில் பி.பி.சியில் பகுதிநேர நிருபராக கடைமையாற்றிக் கொண்டிருந்த முல்க்ராஜ் ஆனந்த்துடன் தொடர்பு கொண்டேன். அந்நூலை மொழிபெயர்க்க அனுமதி கேட்டேன். அவர் அனுமதிபெற்று மொழி பெயர்த்தேன். அவரது முற்போக்குச் சிந்தனைகள் என்னைக் கவர்ந்தன. அது இரண்டாவது மகாயுத்த காலம், அதனால் அவர் அக்காலத்தில் இந்தியாவுக்கு திரும்பிவர முடியாத நிலையில் இருந்தார். பிற்காலத்தில் அவர் இந்தியாவுக்கு வந்து,
(காலம்
 
 

பம்பாயில் தங்கியிருந்து இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை, கே. அப்பாஸ் , கிருஷ்ணசந்தர், பிரேம்சந்த் ஆகியோருடன் இணைந்து உருவாக்கினார். அப்போது தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் அதன் கிளைகளை அமைக்கவேணடும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. முல்க்ராஜ் ஆனந்த் அவர்கள் இலங் கைக் கு வந்த ருந்தபோது, கொம்பனித்தெருவில் உள்ள Polski பொல்ஸ்கி ஹோட்டலில் (தற்போதைய Nippon Hotel) அகில இலங்கை எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. சுவாமி விபுலானந்த அடிகள் தலைவராகவும், மார்ட்டின் விக்கிரமசிங்கா உப தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர். டாக்டர் சரத் சந்திராவும் நானும் (கே.கணேஷ்) இணைச் செயலாளர்களாகவும், பி.கந்தையா அவர்கள் பொருளாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டோம். டாக்டர் சரத் சந்திரா மேற்படிப்புக்காக லண்டன் சென்றதும் அதன் இயக்கம் குன்றியது.
தி. ஞா. ; முற்போக்கு எழுத்தாளர் கே.ஏ.அப்பாஸ்
அவர்களின் தொடர்பு எப்படி ஏற்பட்டது
'Bombay Chronicle' என்ற பத்திரிகையின் வாரப்பதிப்பில், Last Page என்ற பத்தி எழுத்துக்கள் எழுதுவதன் மூலம் கே. ஏ. அப் பாஸ் அக் காலத் தரில் பிரசித்தமாகியிருந்தார். அந்தப் பத்தி எழுத்துக்களை நான் விரும்பிப் படிப்பேன். இதன்காரணமாக அப்பாஸ் அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அவரது சிறுகதைகள் பம்பாயில் வெளியான கம்யூனிஸ்ட் பத்திரிகைகளான People's Front, People's Age gau வாரப்பதிப்புகளில் வெளிவந்தன. குறிப்பாக காஷ்மீர் மக்கள் நடத்திய மன்னர் ஆட்சி எதிர்ப்புப் போராட்டத்தை சித்திரிக்கும் குங்குமப் பூ (Saffron BOSSoms) என்ற சிறுகதையின் அமைப்பும் அதனுடைய கருப்பொருளும் உருவ அமைப்பும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அதை உடன் தமிழில் மொழிபெயர்த்து அவரது அனுமதி பெற்று தென்னிந்திய இதழ்களில் வெளியிட்டேன். பின்னர் அவரது பல சிறுகதைகளை மொழிபெயர்த்து தமிழக சஞ்சிகைகளில் வெளிவரச் செய்தேன். சென்னையில் நடந்த ஆந்திர முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆண்டு விழா நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர் வருகை தந்தபோது நானும் அங்கு சென்று முதன்முதலில் அவரை நேரில் சந்தித்தேன்.
தி.ஞா. : 1945 இல் இந்தியாவில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அப்பாஸ்இ தி.க.சி போன் றோருடன் இணைந்து உருவாக்கினீர்கள். இதன் பின்னணியை கூறுங்கள்.
7 இதழ் - 17 ).

Page 10
கே.கணேஷ் : அக்காலத்தில் சென்னை, மதராஸ்
தி.ஞா.
மாநிலமாக விளங்கியது. கேரளம் தமிழ்நாடு கன்னடா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மாநிலமாகவும் சென்னை தலைநகராகவும் விளங்கியது. சென்னையில் நடந்த ஆந்திர முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆண்டு விழாவிற்கு கே.ஏ.அப்பாஸ் வந்திருந்தார். அப்பொழுது ஆந்திரக்காரராகிய ஜஸ்டிஸ் ராஜமன்னார் மேல் நீதி மன்ற நீதிபதியாக இருந்தார். அவருடைய விருந்தினராக கே.ஏ.அப்பாஸ் இருந்தார். அவரை நான் நீதிபதியின் வீட்டில் சந்தித்தேன். சந்தித்தபோது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை
தமிழகத்திலும் அமைப்பது பற்றிப்பேசினோம்.
இதன் விளைவாக பின்னர் ஒரு தொடக்கக் Öntilj,605 60LD6)Tui Tutorial College ஏ.ஜி.வெங்கடாச்சாரி அவர்கள் தலைமையில் நடத்தினோம். தி.கா.சி., தமிழொளி, குயிலன், சக்திதாசன் சுப்பிரமணியம், ஆர்வி, சாண்டில்யன் புனைபெயருடைய சுதேச மித்திரன் துணை ஆசிரியர் திரு பாஷ்யம் ஐயங்கார் போன்றோர் துணையுடன் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. இதற்கு நான் பின்னணியில் இருந்து இயங்கினேன்.
: கல்கி இதழில் தாங்கள் மொழிபெயர்த்த
கே.ஏ. அப் பாஸfண் சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளியிடப் பட்டன. இதற்கான சாத்தியக் கூறுகள் எவ்வாறு ஏற்பட்டன?
கே.கணேஷ் : முற்போக்கு எழுத்தாளர்:சங்கம்:
தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட காலகட்டத்தில், 擎 நானும் அப்பாஸம் சேர்ந்துகல்கியை சென்று பார்த்தோம். அப்போது கல்கி கீழ்ப்பாக்கத்தில் உள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமிஷ் ரி.சதாசிவம் தம்ப்தியினரின் இல்லத்தில் இருந்தார். அவர்கள் எமக்குப் பகல்போசனவிருந்து அளித்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் என்னால் மொழிபெயர்க்கப்பட்ட அப்பாஸ்ன் கதைகளை கல்கியில் தொடர்ச்சியாக வெளியிட கல்கி உடன்பட்டார். அவ்விதமே பல கதைகள் கல்கியில் மணியனின் சித்திரத்துடன் வெளியாகின. அக்கதைகள் பின்னர் குங்குமப் பூ என்ற தலைப்பில் தி.ஜ.ரா. அவர்களுடைய முகவுரையுடன் சென்னை இன்ப நிலைய வெளியீடாக இரண்டு பதிப்புகளாக வெளிவந்தன.
: அகில இலங்கை முற்போக்கு எழுத்தாளர்
சங்கத்தை ஆரம்பிப்பதற்குத் தாங்கள் முன்னோடியாக இருந்ததாக அறிகிறோம். அதுபற்றிக் கூறுங்கள்.
கே.கணேஷ் : அகில இலங்கை எழுத்தாளர் சங்கம்,
டாக்டர் சரத் சந்திரா மேற்படிப்புக்காக லண்டன் சென்றதால் செயற்படாமல் போயிற்று.
(காலம்
 
 

சிறிதுகாலத்தின் பின்னர் நானும் கே.இராமநாதனும் இணைந்து நடத்திய - பாரதி பத்திரிகை எழுத்தாளர்கள், தேசாபிமானி எழுத்தாளர்கள், நவசக்தி எழுத்தாளர்கள் ஆகியோரை ஒன்று திரட்டி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தோம். இதில் செ.கணேசலிங்கன், சில்லையூர் செல்வராசன், அ.ந.கந்தசாமி முதலியோரும் ஆரம்ப முயற்சிக்குப் பக்கபலமாக நின்றனர். பிற்காலத்தே பிரேம்ஜி, இளங்கீரன், என்.கே.ரகுநாதன், எச்.எம்.பி.முகைதீன், எஸ்.பொ., கைலாசபதி, சிவத்தம்பி, டொமினிக் ஜீவா, டானியல், பி.இராமநாதன், நீர்வைப் பொன்னையன், முருகபூபதி, சோமகாந்தன் போன்றோர் இணைந்து கொண்டனர். பின்னர் இதிலிருந்து கொள்கை முரண்பாடுகள் காரணமாக சிலர் பிரிந்து சென்றது வருந்தத்தக்கது.
தி.ஞா. : சுதந்திரன் பத்திரிகையில் பணியாற்றிய காலம் குறித்து கூறுங்கள்.
கே.கணேஷ : நான் இந்தியாவிலிருந்து
திரும்பிவந்தபோது எனது பெருமதிப்பிற்குரிய டிராமானுஜம் அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் இந்தியாவில் நடந்த போராட்டங்கள் பற்றி சுதந்திரனில் எழுதுமாறு பணித்ததோடு திரு செல்வநாயகம் அவர்களை அறிமுகப்படுத்தியும் வைத்தார். தமிழுணர்வு இங்கும் ஏற்படக்கூடிய
வகையில் நான் கட்டுரைத் தொடரை எழுதினேன்.
பின்னர் 1956இல் சுதந்திரன் செய்தி ஆசிரியராக சிலகாலம் பணிபுரிய நேர்ந்தது. எஸ்டிசிவநாயகம் ஆசிரியராக இருந்தார். எஸ்.ராஜதுரை, சில்லையூர் செல்வராசன், அந.கந்தசாமி ஆகியோரும் அங்கு பணியாற்றினார்கள். அங்கு நான் பணிபுரிந்த காலத்திலேதான் எனக்குத் திருமணம் நடந்தது.
அதன்பின்னர் நான் சுதந்திரனிலிருந்து
விலகிவிட்டேன். டிராமானுஜம் அவர்களே எனது ஆளுமை வளர்ச்சிக்கு பேருதவி செய்தவர். அவரும் நானும் பிற்காலத்தில் கண்டியில் அமைந்த இலங்கை இந்தியன் காங்கிரஸின் இணைச்செயலாளராக இருந்தோம்.
தி.ஞா. வீரகேசரியில் பணிபுரிந்த நாட்களை
நினைவு மீட்டுங்கள்.
கே.கணேஷ் : இலங்கை சுதந்திரம் அடைந்த
காலப்பகுதியில், வீரகேசரி வாரப்பதிப்பில், திரு. லோகநாதன் அவர் களின் கீழ் நான் துணையாசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். அச்சமயம் கே.பி.ஹரன் ஆசிரியராகவும், கே.வி.எஸ்வாஸ் அவர்கள் செய்தி ஆசிரியராகவும் பணிபுரிந்தனர். நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து வெளிவந்த வீரகேசரி சுதந்திரமலர் தயாரிக்கும் பொறுப்பும் எனக்குக் கிடைத்தது. நான் பணிபுரிந்தபோது, வீரகேசரி முகவரிக்கு
இதழ் - 17 )

Page 11
தி. ஞா.
கம்யூனிஸ்ட் தொடர்புடைய ஏடுகளும் , என் பெயருக்குக் கடிதங்களும் வரவே முகாமையாளர்கள் அதனை விரும்பாமல் என்னை விலக்கிவிட்டனர்.
; தாங்கள் நடத்திய பாரதி இதழ் பற்றிக்
கூறுங்கள்
கே.கணேஷ் : கே.இராமநாதன் அவர்கள் பத்திரிகைத்
தொடர்புகள் விட்டுப்போனதால் இந்தியா சென்று சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். அவரும் நானும் இணையாசிரியர்களாக பாரதி சஞ்சிகையைத் தொடங்கினோம். மகாகவி பாரதியின் பெயரிலேயே ஒரு ஏடு தோன்ற வேணி டும் என்ற எண் ணத் துடன் இச்சஞ்சிகையைத் தொடங்கினோம். பீற்றர் கெனமன் அவர்களது வீட்டையே செயலகமாகக் கொண்டு சஞ்சிகை வெளிவந்தது. இதற்கு மூலதனம் வேண்டியபோது என்பெயரில் எனது தந்தை எழுதிவைத்த தலாத்துஒயா - தற்போதைய தலாத்துஒயா மத்தியமகாவித்தியாலயம் அமைந்திருக்கும் இடத்தை விற்று சஞ்சிகையை ஆரம்பித்தோம். சிறிது காலத்தின் பின்னர் கே.இராமநாதன் இந்தியா சென்றார். பின்னர் அ.ந.கந்தசாமி இணைந்து அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி பாரதியை நடத்தினோம்.
: கம்யூனிஸ்ட் கட்சிப்பிரமுகர் ப.ஜீவானந்தம்
இலங்கை வந்தபோது அவருடன் தாங்கள் இலங்கையரின் பல இடங்களுக்கும் சென்றதாக அறிகிறோம். அதுபற்றிக் கூறுங்கள்.
ॐक्षं
கே.கணேஷ் : :1950இல் கம்யூனிஸட் கட்சியின்
கல்கத்தா காங்கிரஸ் மாநாடு இந்தியாவில் நடந்தபோது, இங்கிருந்து இலங்கைப் பிரதிநிதியாக கட்சித் தலைவர் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க சென்றிருந்தார். அம்மாநாட்டில் ஒரு முக்கியமான தீர்மானம் எடுக்கப்பட்டது. அதுவரை பொதுச் செயலாளராகப் பணியாற்றிய பி.வி.ஜோஷி
என்பாருடைய கொள்கைகள் மிதவாதத் தன்மை
உடையன என்றும் அது இயக்கத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும், பலாத்கார முறையிலேயே பாட்டாளி அரசு அமைக்கத் திட்டமிட வேண்டும் எனவும் PTரணதேவ் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக் கூட்டத்திற்கு ப.ஜீவானந்தம் அவர்களும் தமிழ்நாட்டுப் பிரதிநிதியாகச் சென்றிருந்தார். தீர்மானம் காரணமாக, அப்பொழுது இருந்த காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்ட் கட்சியை தடைசெய்ய இருந்ததை முன்கூட்டியே உணர்ந்த டாக்டர் விக்கிரம சிங்கா ஜீவானந்தத்தை இலங்கைக்கு அழைத்து வந்தார். அக்காலத்தில் பயணச்சீட்டு விசா முறைகள் இருக்கவில்லை. எனவே அவரை அழைத்து
C காலம்

வருவதில் எவ்வித கஷ்டமும் இருக்கவில்லை. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி பிரசாரத்திற்காக அவரை அழைத்துவந்தார். அவரும் சிலகாலம் இலங்கையில் தங்கியிருந்து யாழ்ப்பாணம், மலையகம் முதலிய இடங்களுக்குச் சென்று கூட்டங்கள் நடத்தினார். ஏற்கனவே அவரது ஜனசக்தி இதழில் நான் எழுதியிருந்தேன். அதனால் அவருடன் தொடர்பு இருந்தது. கண்டிக்கு வந்தபோது எனது இல்லத்தில் சிலகாலம் தங்கியிருந்தார். இதற்கிடையில் இந்தியாவில் எதிர்பார்த்ததுபோலவே கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதமான கட்சி எனத் தடை செய்யப்பட்டது. பல அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். எஞ்சியவர்களில் சிலர் தமிழகத்தில் தலைமறைவாக கட்சிச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
தி. ஞா. : ப.ஜீவானந்தம் இலங்கையில் தங்களுடன் இருந்த காலகட்டத்தில் அவருக்கு வேறு எவ்வகையில் உதவி புரிந்தீர்கள்.
கே.கணேஷ் : அக்காலகட்டத்தில்: நாஞ்சில் நாடு
கேரள நாட்டு மலையாள ஆட்சியில் இருந்தமையால் தமிழகத்துடன் கன்னியாகுமரி, நாகர்கோயில் முதலிய பகுதிகள் தமிழகத்துடன் சேரவேண்டுமென மா.பொ.சி., கே.ரி.தங்கமணி,
ப.ஜீவானந்தம் முதலியோர் போராடி வந்தனர். அதன் விளைவாக தற்போது சென்னை
மாநிலத்தோடு இப்பகுதிகள் சேர்ந்தது யாவரும் அறிந்ததே.
அது தொடர்பாக அக்காலத்தில் நாகள் கோயிலில் எழுத்தாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, நாடகக் கலைஞர்கள் டீ.கே.சண்முகம் சகோதரர்கள், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரது ஆதரவில் இந்த மாநாடு ஏற்பாடாகி இருந்தது. இந்த மாநாட்டுக்கு ப.ஜீவானந்தம் அவர்கள் வாழ்த்துக்கூறி தந்து அனுப்பிய ஒரு மடலை, நான் அங்கு கொண்டு சென்று சேர்க்கவேண்டியிருந்தது. அதனை நாராயணன் என்பவரிடம் சமர்ப்பித்தேன். அவர் அந்த வாழ்த்துச் செய்தியை, அஞ்ஞாதவாசம் செய்யும் ஜீவானந்தம் அவர்களிடமிருந்து கிடைத்த செய்தி எனக்கூறி கூட்டத்தில் வாசித்தார். அது பலரது கரகோஷத்தைப் பெற்றது.
தி. ஞா. : ப.ஜீவானந்தத்துடன் தாங்கள் சிலகாலம் யாழ்ப்பாணத்திலும் தங்கியிருந்ததாக அறிகிறோம். அக் காலத் தைய செயற்பாடுகள் பற்றிக் கூறுங்கள்.
கே.கணேஷ் : சென்னையில் அஞ்ஞாதவாசம் செய்த
தமிழக மத்திய குழுவினர், ஜீவானந்தம் அவர்களை இந்தியாவிற்கு அனுப்பிவைக்கும்படி
இதழ் - 17 )

Page 12
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்தனர். தமிழகத்துடனும் இலங்கையுடனும் நான் தொடர்புள்ளவன் என்ற காரணத்தினாலும், பேச்சுமொழி நடையுடை பாவனைகள் நான் இந்தியனாக இருந்தது எவருக்கும். சந்தேகத்தை ஏற்படுத்தாது என்ற காரணத்தினாலும் என்னை ஜீவானந்தம் அவர்களை அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும்படி பணித்தனர். இதனைச் செய்யுமாறு பி. கந் தையா அவர் களே என் னைக் கேட்டுக்கொண்டார். வல்வெட்டித்துறையிலிருந்து அவரைத் தமிழகத்திற்குக் கொண்டு செல்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மகாலிங்கம் ஆசிரியர், கார்த்திகேசு மாஸ்டர் ஆகியோரே இந்த ஏற்பாடுகளைச் செய்தனர். கார்த்திகேசு மாஸ் டர் வீட்டில நான் தங்கியிருந்தேன். ப.ஜீவானந்தம் அவர்கள் அப்போது திருநெல்வேலி ரி.துரைசிங்கம் வீட்டில் தங்கியிருக்க நான் அங்கு சென்று அவரை அழைத்துச் செலவதாக இருந்தது. இச்சந்தர்ப்பத்திலேதான் இந்தியாவில் ஹைதரபாத் நிஜாம் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க மறுத்து கஜாக்கள் படை அமைத்துப் போராட்டம் நடத்தினர். இதனை அடக்க ராஜாஜி அவர்கள் கவர்னராகவும் வல்லவாய் படேல் உள்நாட்டு அமைச்சராகவும் இருந்து எடுக்கப்பட்ட பொலிஸ் அக்ஷன் காரணமாக கிளர்ச்சி அடங்கியது. அக்காலகட்டம் வரை நானும் ஜீவானந்தமும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தோம். ஹைதரபாத் கெடுபிடிகள் காரணமாக இந்திய கவர்னர் ஜெனரல் அவர் களது ப் படி கரையோரப்பகுதிகள் இந்திய கட்ற்ட டயினரது கடும் பாதுகாப்பிற்கு உட்பட்டிருந்ததால் யாழ்ப்பாணத்தில் எனது தங்குதல் நீண்டுவிட்டது. , ஜிவானந்தமும் நானும் நிலைமை சீரடையும் வரை *யாழ்நகரில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் ஜிவானந்தம் பல கூட்டங்களில் கலந்துகொண்டார். அத்தோடு கம்யூனிஸம் என்ற நூலை துரைசிங்கம் வீட்டில் இருந்த காலத்தில் எழுதினார். அந்நூல் துரைசிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது. கார்த்திகேசு மாஸ்டர் இல்லத்திற்கு ப.ஜீவானந்தம் வரும்போது, டொமினிக் ஜீவா, எஸ்.பொ., தி.ராஜகோபால் போன்றவர்கள் அவருடன் கலந்துரையாட வாய்ப்புக் கிட்டியது. ஜிவானந்தம் மீது கொண்ட பக்தியினால், டொமினிக் ஜீவா தனது பெயரை ஜீவா என்ற பெயருடன் இணைத்துக்கொண்டார்.
தி.ஞா. : பின்னர் எவ்வாறு ஜீவானந்தம் அவர்களை தமிழகத்திற்கு கொண் டு சென்று சேர்த்தீர்கள்?
கே.கணேஷ் : ஜீவானந்தம் அவர்களை பாதுகாப்பாகத் தமிழகத்திற்கு கொண்டு சேர்க்கவேண்டிய
( காலம்
 
 
 
 
 

பொறுப்பு எனக்கிருந்ததன் காரணமாக நான் Air Ceylon வானூர்தி மூலம் சென்னைக்குச் சென்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அக்காலத்தில் விசா, பயணச்சீட்டு தடைகள் கிடையாது. ஆனால் வெளிநாடு செல்லும் இலங்கையர் அக்காலத்தில் வழக்கிலிருந்த தமது அரிசிக் கூப்பனை உரிய அதிகாரியிடம் சமர்ப்பித்துப் பெற்ற ரசீதைக் காட்டியே பயணச்சீட்டு பெறமுடியும். எனது அரிசிக்கூப்பன் அப்போது கையில் இருக்கவில்லை. இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்தவர் அப்போது சிறுபான்மையோர் இயக்கத் தலைவராகவும் பின்னர் நாடாளுமன்ற உறுப்பின ராகவும் விளங்கிய, எழுத்தாளர் எஸ்.பொ.வின் மைத்துனர் திரு சுப்பிரமணியம் ஆவார். அவர் தனது தந்தையாரான திரு ஐயாம்பிள்ளையின் அரிசிக்கூப்பனைக் கொடுத்து உதவினார். அதனை நான் பயன்படுத்திப் பயணித்தேன்.
செண் னையரில் , மவுணி ட் ரோட் டிலி டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் கட்டடத்தில் முற்போக்கு இலக்கிய நூல் விற்பனை நிலையம் அமைந்திருந்தது. அங்கு, பிற்காலத்தில் சரஸ்வதி இதழ் நடத்திய கோவை எஸ்.விஜயபாஸ்கரன் அவர்களைத் தொடர்புகொண்டேன். அவர் தலைமறைவாக இருக்கும் கம்யூனிஸ்ட் தோழர்
ஒருவரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அந்த
ஏற்பாட்டின்படி சென்னை மரினா கடற்கரையில்
ராஜஸ்தானிக் கல்லூரிக்கு எதிரே காந்தி சிலைக்கு அருகாமையில் நான் தினமணி இதழை கையில் அடையாளமாக வைத்தபடி அமர்ந்திருந்தேன். காக்கி ஜேர்னாப்பையுடன் ஒருவர் வந்து என்னுடன் பேசுவார் எனக் கூறப்பட்டது. அதன்படி, வந்தவர் என்னை அடையாளம் கண்டு குழுக்குறியைக் கூறியவுடன் ஏற்பாடுகள் குறித்துப் பேசினோம். அதன்படி வல்வெட்டித்துறையில் இருந்து ஜீவானந்தம் புறப்பட்டு நாகபட்டினம், காரைக்கால், சிதம்பரம் ஆகிய மூன்று இறங்குதுறைகளில் ஏதாவது ஒன்றில் வந்து இறங்கும்படி ஆலோசனை வழங்கப்பட்டது. இக் கரையில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் எந்தத் துறையில் வந்து இறங்குவது என்பதை தந்திமூலம் குழுக்குறியாக தெரிவிக்கவேண்டும். அதாவது அப்பொழுது இராஜப்பேட்டையில் பொலிஸ் ஸ்ரேசன் பின் புறத்திலே அமைந்த கட்டிடமொன்றில் முற்போக்கு இலக்கியப் பத்திரிகை நடத்திக்கொண்டிருந்த குயிலன், தமிழ் ஒளி ராஜகோபால் ஆகியவர்களுக்கு இங்குள்ள ஏஜெண்ட் தந்தி அனுப்புவதுபோல குழுக்குறியாக செய்த அனுப்ப வேணி டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இறங்கு துறைகளுக்கு ஒவ்வொரு எணர் குழுக் குறியாக வைத்துக் கொணி டோம் . நாகபட்டினம் இறங்குதுறைக்கு 50 எனவும், காரைக்கால் இறங்குதுறைக்கு 100 எனவும், சிதம்பரம் இறங்கு
இதழ் - 17 )

Page 13
துறைக்கு 150 எனவும் எண்ணிக்கையைக் குழுக்குறியாக அமைத்துக் கொண்டோம்.
நான் ஏற்பாடுகளை முடித்து இலங்கை திரும்பி வந்ததும் 1948இல் ஒருதினம் ஜீவானந்தத்துடன் அக்கரைக்குப் புறப்பட ஏற்பாடாகி இருந்தது. முன் ஏற்பாட்டின் படி, பத்திரிகை ஏஜெண்ட் தந்திகொடுப்பதுபோல, இத்தனையாவது இதழில் 50 பிரதிகள் கூடுதலாக அனுப்பவும் எனத் தந்திகொடுத்து, அக்கரையில் உள்ளவர்களுக்கு நாம் புறப்படும் திகதியையும், கரைசேரும் இறங்கு துறையையும் தெரிவித்துப் புறப்பட்டோம். ஜீவானந்தம் உயரமானவர், ஸ்டாலின் மீசை உடையவர், காது மந்தமுடையவர். இந்த அடையாளங்களை மாற்றுவதற்கு மீசையை மழித்து முஸ்லிம்போன்று சாரம் உடுத்து மாறுவேடத்தில் அழைத்துச் சென்றோம்.
தி.ஞா. : வல்வெட்டித்துறையிலிருந்து அக்கரைக்குச் செல்லும் உங்களது பயணம் எப்படி அமைந்தது
கே.கணேஷ் : அக்காலத்தில் கிராம முக்கியஸ்தராக
இருந்த திரு திருப்பதி அவர்களுடன் மகாலிங்கம் மாஸ்ரர் தொடர்பு கொண்டு எமது பயண ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதன்படி அவர் ஓரிரவில் கார்திகேசு மாஸ்டர் வீட்டிலிருந்த என்னையும் துரைசிங்கம் வீட்டிலிருந்த : ஜீவானந்தத்தையும் காரில் அழைத்துச்சென்று, கடற்கரையில் சுங்கப்பகுதி காரியாலயத்தின் அருகே இருந்து புறப்பட்ட விசைப்படகு ஒன்றில் எம்மை ஏற்றிவிட்டார்கள். - *
அந்த விசைப்படகு இரண்டாவது உலக யுத்தம்
முடிந்தபின் ஆங்கிலேயக் கடற்படையினரால் ஏலம் விடப்பட்ட விசைப்படகு. அதில் நவீன கருவி களும் இருந்தன. அதனை வல்லிவெட்டித்துறை மீனவர்கள் வாங்கித் தமது தொழிலுக் குப் பாவித்தனர். சுங் கப் பகுதியினரிடம்கூட அத்தகைய விசைப்படகு கள் இருக்கவில்லை. மிகவும் குறுகிய நேரத்தில் - ஓரிரண்டு மணித்தியாலயத்தில் தமிழ் நாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அப்போது இருந்தது. அக்காலத்தில் சர்வசாதாரணமாக வல்வையில் உள்ளவர்கள் சிதம்பரம், நாகபட்டினம் போன்ற இடங்களுக்குப் பயணம் செய்து பண்டமாற்று செய்வதற்கும், எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் கச் சேரியைக் கேட்பதற்கும் , புதிய சினிமாப்படங்களைப் பார்ப்பதற்கும் சகஜமாகச் சென்று வந்தார்கள்.
நாங்கள் சென்ற படகு புறப்படமுன் படகோட்டிகள் செல்வச்சந்நிதி முருகனை வேண்டுதல் செய்து, தேங்காய் உடைத்து, கற்பூர ஆராதனை செய்து புறப்பட்டார்கள். அக்கரை செல்லும் வழியில்
(காலம்

பல படகுகள் எதிரே வந்தன. அவர்கள் கிராமபோன் குழாய் போன்ற அமைப்புள்ள குழாயை வாயில் பொருத்தி பலத்த சத்தத்தில் பரிபாஷையில் வள்ளங்களுக்கிடையே ஏதோ பேசிக்கொண்டார்கள். எதிரே சுங்கப் பகுதியினரின் நடமாட்டம் இருப்பதாகவும் கூறிச்சென்றார்கள்.
நாங்கள் சென்ற படகு அதிகாலை நேரத்தில் நாகள்பட்டின கடற்கரையிலிருந்து சுமார் மூன்று மைல்களுக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டது. சுங்கப் பகுதியினரின் கண்ணோட்டத்திற்கு அகப்படாத முறையில் நாங்கள் கரையேற வேண்டியிருந்தது. அக்கரையில் இருந்து பாதுகாப்பான நேரம் என்பதை அறி விக்க ஒளிவிளக்குச் சமிக்ஞை கிடைக்கும் வரை காத்திருந்தோம். கடலில் நங்கூரம் இடப்பட்டு பகல் முழுவதும் கடலில் தங்கியிருந்து மறுநாள் இரவு ஒளிவிளக்கு சமிக்ஞை கிடைத்ததும் புறப்பட்டோம். அங்கிருந்து நாகூர் தர்கா (பள்ளிவாசல்) தெரிந்தது. விசைப்படகில் இருந்து இறக்கப்பட்டு சிறு வள்ளங் களில் தாம் கொண்டுவந்த பொருட்களுடன் காரைக்கால் அருகில் உள்ள அதிராமப் பட்டினத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் இறக்கப்பட்டோம் அங்கிருந்து ஒரு கோஷ்டியினர் வந்து மோட்டார் காரில் எம்மை அழைத்துச் ソ சென்று காரைக்கால் பாக்குவியாபாரியான ஒரு முஸ்லிம் அன்பரின் கடையில் எங்களைச் சேர்த்தனர்.
நாங்கள் திட்டமிட்டபடி போய்ச்சேரவேண்டிய இறங்கு துறையில் இறக்கப்படவில்லை. காரைக்கால் அப்போது ஆங்கில ஆட்சியில் இருக்க வில் லை? பிரான் ஸ் நாட் டு ஆதிக்கத்திலிருந்தது. அதனாலேயே அங்கு சென்று இறங்குவது பாதுகாப்பானது எனக் கருதப்பட்டது. காரைக்காலைச் சேர்ந்த கல்கி பீடி. வள்ளங்கள் இறங்குதுறையில் எம்மை வரவேற்க வேண்டியவர்கள் காந்திருந்தனர். அதனால் ஜீவானந்தத்தை அந்த முஸ்லிம் அன்பரின் கடையில் விட்டுவிட்டு நான்மட்டும் சென்று அவர்களைக் கண்டு அடையாளம் அறிந்து அவர்களிடம் ஜீவானந்தம் அவர்களைச் சேர்த்தேன்.
ஜீவானந்தம் காரைக்காலில் இருந்து பாண்டிச்சேரி சென்றார். பின்னர் அங்கிருந்து சென்னை சென்று சிலகாலம் அங்கு தலைமறைவாக இருக்கும் போது கைது செய்யப்பட்டார்.
தி.ஞா. : நீங்கள் எந்தெந்த வெளிநாடுகளுக்குச்
சென்றுள்ளிர்கள்
கே.கணேஷ் : மத்திய ஐரோப்பிய கம்யூனிஸ்ட்
நாடுகளான சோவியத் ரஷ்யா, ருமேனியா, பல்கேரியா, உக்கிரேன் ஆகிய நாடுகளுக்கு
இதழ் - 17 )

Page 14
சென்றுள்ளேன். அங்கு நடந்த எழுத்தாளர் மாநாடுகளில் பங்கு பற்றினேன். பல்கேரிய தேசிய எழுத்தாளர்களின் படைப்புகளையும், உக்கிரேன் எழுத்தாளர்களின் படைப்புகளையும் மொழி பெயர்த்ததன் காரணமாக அந்த நாடுகளில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாடுகளில் பற்குபற்ற அழைக்கப்பட்டேன்.
. (6bFT. மலையக தொழிற் சங்க ன் னோடி
(p
தேசபக்தன் கோ.நடேசைய்யர் அவர்களுடன்
தங்களுக்குத் தொடர்புகள் ஏதும் இருந்ததா
கே.கணேஷ் : மலையகத்தின் முத்த எழுத்தாளரான அவருடன் எனக்கு நேரடித் தொடர்புகள் இருக்கவில்லை. தேசபக்தன் நடத்தியபொழுது சந்தா சேர்ப்பதற்காக வீடுவந்து செல்வார். நான் அக்காலத்தில் சிறுவனாக இருந்தேன். அவருடைய பத்திரிகை வாசகனாகவும் அவரது எழுத்துக்களில் ஈடுபாடு கொண்டவனாகவும் இருந்தேன். திரு டிராமானுஜம் அவர்களின் மூத்த சகோதரர் டி.சாரநாதன் என்ற பிரசித்த பத்திரிகையாளர், கோ.நடேசைய்யர் மீனாட்சி அம்மை தம்பதிகளின் புதல்வியை மணந்த மருமகனாவார். இதனாலும் கோ.நடேசைய்யர் அவர்களது தொண்டும் எழுத்துக்களும் எனக்கு மிக நெருக்கமாயிருந்தன.
தி.ஞா. : இலங்கை இந்திய காங்கிரஸ் அமைப்பு
பற்றிக் கூறுங்கள்.
கே.கணேஷ் : ஜவர்ஹர்லால் நேரு இலங்கைக்கு வந்தபோது, இலங்கை வாழ் இந்தியர்களின்
- தனியொரு நிறுவனமாக செயலபட வேண்டுமென அறிவுரை கூறினார். அதன்படி கொழும்பு கொள்ளுப்பெட்டியில் இந்தியன் கிளப் கூட்டத்தில் 1939ல் இலங்கை இந்தியன் காங்கிரஸ் அமைப்பு நிறுவப்பட்டது. அதுவே பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என வழங்கியது. அதனின்று பிரிந்து ஜனநாயக காங்கிரஸ் அமைப்பு தோன்றியது.
முதற் கூட்டத்திற்கு சென்றவர்களில் அம்பிட்டிய, தலாத்து ஓயா இந்தியர் சங்கமும் போஸ் சங்கமும் கண்டிப் பகுதியின் பிரதிநிதிகளாகச் சென்றனர். பங்குபற்றியவர்களில் டி.ராமானுஜம், ராமையா ராஜப்பிரியர், கே.ராஜலிங்கம் சோமசுந்தரம், தெல்தோட்டை பழனிசாமி, கே.கணேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தி. ஞா. : நீங்கள் மொழிபெயர்ப்புத் துறையிலேயே அதிக ஈடுபாடுகாட்டியுள்ளிர்கள். இதுவரை 21 மொழிபெயர்ப்பு நூல்களை வெளிக் கொணர்ந் துள்ளிகள். இதற்கான உந்துதல் ஆரம்பத்தில் எப்படி ஏற்பட்டது
8, 6) to

கே.கணேஷ : பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கட்டளையை நிறைவேற்றும் முகமாகத்தான், மற்றத் துறைகளில் அதிகம் ஈடுபடாது மொழியாக்கத் துறையில் அதிக கவனம் செலுத்த நேர்ந்தது. அரச குடியேற்ற நாடாக Crown Colony 66ip List 1969 sely fair dg)605 பெற்ற பெரும் நாடாக இலங்கை அவர்கள் ஆட்சிக் காலத் தில் நிலவியது. பரந்த பாரதத்தினைவிட இத்தீவில் பேச்சு, எழுத்து, கல்வி உரிமைகளும் வாய்ப்புகளும் நிறைந்திருந்தன. அங்கு தடை செய்யப்பட்ட நூல்கள் இங்கு சர்வ சாதாரணமாகப் பரவியிருந்தன. உதாரணமாக சுபாஷ் சந்திரபோஸின் Indian Struggle (இந்தியப் போராட்டம்) என்ற நூல் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பினும் இங்கு இறக்குமதியாகி, தலைப்புகளை மாற்றி இந்தியாவுக்குக் கடத்தப்பட்டன. இந்தியாவில் "வெளிவந்தவுடன் விறுவிறுப்பாக இலங்கையை வந்தடையும் நூல்கள், பின்னர் அக்கரையில் தடைசெய்யப்பட்டு அபூர்வமாக அமைபவை, இங்கு பரவலாகக் கிடைத்தன. தவிரவும், ஐரோப்பிய இலக்கியங்கள் இங்கு சரளமாகப் புளங்கின. இந்த நிலையில், இந்திய எழுத்தாளரும் இங்கிலாந்தில் வசித்து வந்தவருமான முல்க்ராஜ் ஆனந் வெளியிட்ட Untouchable i GUIT Göggi நூல்கள் இந்நாட்டில் பரவியதைப் போல:ே இந்தியாவில அேறியப்படவில்லை.
பெங்குவின் வெளியீட்டினர் தொடங்கிய New Writing என்ற புதுமை இலக்கிய வரிசை இதழில், முல்க்ராஜ் ஆனந், இக்பால் அலி, ராஜாராவ் போன்றோரின் படைப்புகள் வெளியாகின. ஒரு இதழில் முல்க்ராஜ் ஆனந்தின் Barbers Trade Union (நாவிதர் சங்கம்) என்ற சிறுகதை வெளியாகியது. அதன் உணர்வும், அது உணர்த்திய புது உலக எண்ண உதய வெளிப்பாடும் என்னை ஈர்த்தது. இரண்டாம் உலக பேர்க்காலத்தில் லண்டனில் தங்கியிருந்த முல்க் ராஜ் ஆனந், அப்போது பொதுமக்கள் எண்ண வேளிப்பாடுகளை உணர்த்தும் பேட்டி காண்பவராக இருந்தார். அவருடன் தொடர்பு கொண்டு, அவரது அனுமதி பெற்று அக்கதையை மொழிபெயர்த்து சக்தி இதழுக்கு அனுப்பினேன். தி.ஜர. அவர்கள் அதனைப் பாராட்டியதுடன் தொடர்ந்தும் பல மொழிபெயர்ப்புகளை வெளியிடும்படி தூண்டிக் கடிதம் எழுதினார். இவ்வகையில், அவர் ஆசிரியராக அமைந்த, மஞ்சரி, ஹனுமான், ஹிந்துஸ்தான், ஆகிய இதழ்களுக்கும் சிறுகதைகளை மொழிபெயர்த்து அனுப்பத் தொடங்கினேன்.
பஞ்சாபி எழுத்தாளர் கே.ஏ. அப்பாஸ் அவர்களின் சிறந்த சிறுகதைகளை, இலங்கையனான நான்,
2 Qabdp – 17 O

Page 15
தமிழகத்தவர்களுக்கு அறிமுகப் படுத்தும் வாய்ப்பினைப் பெற்றேன். இப்போது போலல்லாது, அக்காலத்தில் ஆங்கிலக்கல்வி திமிழகத்தைவிட இலங்கையில் உயர்நிலையில் இருந்தமையும், ஆங்கில ஆர்வமும் பயிற்சியும் மெத்தனமாக இருந்தமையும் எனது முயற்சிகளுக்குத் தூண்டுகோலாக அமைந்தன. அத்துறையில் தீவிரமாக ஈடுபட நேர்ந்தது.
மொழியாக்கத்திற்கு ஆங்கில மொழியே துணையாக அமைந்தது. அம்மொழியில் மொழியாக்கப்பட்டவை, என்னால் தமிழ் நாட்டுச் சூழலுக் கும் பணி பாட்டுக் கும் ஏற்ப தமிழாக் கப் பட்டன. இதற்கென மொழிபெயர்க்கப்படும் பிறநாட்டு வரலாறுகள், பண்பாடுகள், மக்களது வாழ்க்கை நெறிகள்,
சமயக் கோட்பாடுகள் இவற்றுடன் மரபு, குறியீடுகள், பழக்க வழக்கங்கள், சகுனங்கள்,
சமய வழிபாடுகள் இவற்றை ஆய்வு செய்வதில் காலங்கழிந்தது? கழிகின்றது.
: ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு எத்தகைய
தகுதிகள் இருக்க வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்
கே.கணேஷ் : மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்க்கும்.
பெற்றிருக்கவேண்டும். ༢ཀྱ་
பெறுவதற்கு ஆரம்பகால முயற்சிகள் எந்த
மொழி பெயர்க்கப் படும் இரு மொழிகளிலும் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தவிரவும் நாட்டு மொழிமரபுகள்? வரலாறு , சமூக அமைப்பு இயல் அனைத் திலும் ஓரளவேனும் அறிமுகமானவனாக இருத்தல் வேண்டும். இவற்றைப்பெற பல நூல்களில் பயிற்சியும் பல மக்களிடையே பெற்ற, பூழிற்சி. அனுபவமும்
அளவிற்குப் பங்களிப்புச் செய்தன0
கே.கணேஷ் : பத் தொன் பதாம் இருபதாம்
நூற்றாண்டுகளில் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் வரத் தலைப்பட்டன. சில சமயங்களில் மேலை நாட்டு உடைமாறி உள்நாட்டு வேட் டி சட்டை அணிந்து வந்ததுமுண்டு. புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எட்கார் வாலசையும் , அகதா கிறிஸ் டியையும் உருமாற்றினர். ஸெர்லாக்ஹோம்ஸ் துப்பறியும் துரைசாமி ஆனார். மாப்பசானின் அட்டிகை சிறுகதை தமிழகத்து அக்கிரகாரத்திற்குள் புகுந்தது. ஜெரோம் கே ஜெரோம், ஓ ஹென்றி பாத்திரங்கள் உருமாறின. எனினும், பி. எஸ்.ராமையா சிட்டி நடத்திய மணிக்கொடி தோன்றியதும் இப் பம்மாத்துக்கள் மாறி, பல வெளிநாட்டுப் படைப்புகள் தமிழாக்கம் பெறுவதில்
( காலம்
 
 
 
 

மதிப்பைப் பெற்றன. மொழி பெயர்ப்புக்கும் ஒரு அந்தஸ்த்து தோன்றியது. புதுமைப் பித்தன், புரசு பால கிருஷ்ணன், தி.ஜர, அ.கி.ஜெயராமன், கு அழகிரிசாமி, தா.நா. குமாரசுவாமி, ப. ராமசாமி போன்றவர்கள் மேலை நாட்டு இலக்கியங்களை மொழி பெயர்ப்பதில் முன்னணியில் நின்றனர். சிதம்பர ரகுநாதன் ரஷ்ய இலக்கியங்களையும் கவிதைகளையும் உயர்ந்த முறையில் தமிழ்ப்படுத்தினார். இதேபோல பன்மொழி வழங்கும் இந்திய நாட்டில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மலையாளம், போன்ற மொழிகளில் தோன்றிய படைப்புகளும் தமிழில் தோன்றவும் இறவாத புகழுடைய தமிழ்நூல்கள் அவ்வம் மொழிகளில் பெயர்க்கப்படவும் ஆங்கில மொழி கருவியாக இருந்தது. திருக்குறள் திருவாசகம் போன்ற தமிழ் உயர் இலக்கியங்களின் பெருமையை, ஜி.யு. போப் மொழிபெயர்த்து, வெளிநாட்டவர் புகழ்ந்த பின்னரே தமிழர்களின் கண்களும் திறக்கத் தொடங்கின. அயர்லாந்துக் கவிஞரான ஈட்ஸ் (W.B.Yeats) தாகூரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபல் பரிசுக்கு முன்மொழிந்து பெற்றுத் தந்த பின்னரே வங்காளிகளும் அவரைப் புகழத் தொடங்கினர். ஆங்கிலப் படிப்பின் காரணமாக ஷேக்ஸ்பியர், மில்டன், வாட்ஸ்வர்த், ஷெல்லி, பைரன் போன்ற புலவர்களின் ஆக்கங்களும் நவீனத் துறையில் முன்னின்ற .சார்ல்ஸ் டிக்கன்ஸ், வோல்டர் ஸ்கொட், பிரெஞ்சு எழுத்தாளர்கள் அலெக்சாண்டர் டுமாஸ், விக்டர் யூகோ, ருஷ்ய மேதை லியோதோல்ஸ்தோய், அன்டன் செக்கோவ், தொஸ் தொவ்ஸ்கி போன்றோரின் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் தமிழில் நவீனம் என்ற புனைகதைத் துறையை உருவாக்க உதவின.
தி.ஞா மொழிபெயர்ப்பின்போது எதிர்நோக்கக்கூடிய
பிரச்சனைகள் யாது
கே.கணேஷ் : மேல்நாட்டு மரபுச்சொற்களை மரபு வழியறியாது நேரடியாக மொழி பெயர்க்கும்போது, அர்த்தத்தை அனர்த்தமாக்கிவிடுவதுமுண்டு. Go to Hel என்பதைத் தமிழ்ப் படுத்திய ஒருவர் நரகத்துக்குப் போ என்று தமிழ்ப் படுத்தியிருந்தார். தொலைந்து போ, நாசமாய்ப் போ என்பன போன்று மொழிபெயர்த்திருந்தால் நம் மரபை ஒட்டியதாக இருந்திருக்கும்.
syski.6)556) Uncle, Cousin 616L6), 5Tuj6), தந்தைவழி உறவினர் களை வேறு வேறு உணர்த்துபவை அல்ல. இந்தியப் பண்பாட்டை உணர்த்தும் நெடுங்கதை மொழிபெயர்ப்பில் தன் உடன் பிறந்தவரின் மகனை அதாவது சிற்றப்பன் தன் அணி னன் மகனை அழைத்துச் செல்லும்பொழுது சில தாயைக் குறிக்கும் வசைச்
3 இதழ் - 17 )

Page 16
சொற்களை உதிர்க்கிறான். அவனை Unde என்றே மூலத்தில் குறிப்பிட்டதால் மாமன் என்றே மொழிபெயர்பாளர் குறிப்பிடுகிறார். உண்மையில் மாமன் அப்படிக் கூறான். அவ்விடத்தில் ஒரு சிற்றப்பனோ பெரியப்பனோதான் கூறமுடியும். இத்தகைய நம் மரபுகளையும் நோக்கி, நேரடியாக மொழிபெயர்ப்புச் செய்யாது, இடம்பொருள் ஏவல் அறிந்து கையாள வேண்டிவரும். இதேபோன்று சமூகவியல் , வரலாறு போன்றவற்றில் மொழி பெயர்ப்பாளன் உணர்ந்திருக்கவேண்டிய நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு, சீன நாட்டில் ஆடவர்கள் நம்மவர்கள் கொண்டை வளர்த்ததுபோல் சடை போட்டிருந்தனர். கொண்டை கர்நாடகமாகக் கருதப்பட்டதுபோல் புதுமைக் கருத்துக்கள் தோன்றிய காலத்தில் சடை வளர்த்தவர்கள் பழமைவாதிகளாகக் கருதப்பட்டனர். 1911இல் தோன்றிய புரட்சிக்கு முற்பட்ட காலங்களில் சடை வளர்ப்பவர்கள் பிற்போக்குவாதிகளாகக் கருதப்பட்டனர். முடியாட்சியை ஆதரிப்பவர்களாகக் கருதப்பட்டனர். இத்தகைய சின்னமான சடை ஆங்கிலத்தில் PigTail என்று வழங்கப்பட்டது. இதை பன்றி வால் என மொழிபெயர்த்தனர் சிலர். உண்மையில் இம்முடி மாற்றத் தத்துவத்தை உணர்ந்து மொழிபெயர்ப்பாளன் தன் வாசகர்களுக்கு உணர்த்தும் தன்மை பெற வரலாறு அறிந்திருத்தல் வேண்டும்.
மேல் நாட்டவர்களுக்கு விளக்கமாகத் தலைப்பாகையை வர்ணித்த முல்க்ராஜ் ஆனந் தனது 0திண்டாதான்) நூலில், பலஅடி நீளமிக்க துணியை இத்தனை புரிமடித்துச் சுற்றிச் சொருக வேண்டும் என விரிவாக எழுதியிருந்தார். நம்மவர்க்கு இதனை மொழிபெயர்க்கும்போது,
இவ்விதம் இதேதிலிருந்து தமிழாக்கப்படும் சொற்கள் - நேரடி மொழி பெயர்ப்புகள், தமிழ்மரபில், ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதுபோல ஆகிவிடுவதுமுண்டு. சங்ககாலம் முதல் வழிவழியாக வழங்கும் அருவி என்ற அழகிய பழந்தமிழ்ச் சொல் இருக்க, WaterFals என்பதன் நேர்மொழிபெயர்ப்பான நீர் வீழ்ச்சி என்ற நீண்ட சொல்லும் தமிழில் இடம்பிடித்துக் கொண்டதை நோக்கலாம்.
இங்ங்ணம் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து உருமாறி உடைமாறி உணர்வுகளை ஒருமைப்பட உணர்த்தி மூல ஆசிரியரின் கருத்தை கற்பு நிலை மாறாது காப்பாற்றவேண்டிய கடமையுள்ளவனாக மொழிபெயர்ப்பாளன் இருக்க வேண்டும்.
(காலம்
 
 
 

தி.ஞா.
A.
மொத்தத்தில் இக்கூடுவிட்டு கூடுபாயும் பணியில், யாருக்காக இலக்கியம் ஆக்கப்படுகின்றதோ
"அவர்களுக்கு மூல ஆசிரியரின் உட்கருத்தை
மொழிபெயர்ப்பாளன் அனைவரும் புரிந்து கொள்ளும் நடையில் சுவைபட உணர்த்துவதே பெருங் கடமையாகும்.
நிங்கள் LD 605) 6) UL 85 எழுதி தாளராக
இருந் தபோதலும் மலையகத் தொழிலாளர்கள் பற்றி இலக் கலியம் படைக்கவில்லை என்றொரு குற்றச்சாட்டு நிலவுகிறதே.
கே.கணேஷ் : நான் இருக்கும் இடம் சுற்றுச் சார்புகள்
சிங்களக் கிராமமாக இருக்கிறது. இந்நிலையில் தேயிலைத்தோட்டம் தொலைநோக்கிச் செல்ல நேர்ந்ததால், தேயிலைச் செடிகள் கண்ட வாய்ப்பே எமக்கு அறிய முடிந்தது. தவிர்த்து அங்கு வசித்த தொழிலாளிகளைப் பற்றியோ, தேயிலைப் பயிர்ச்செய்கை சூழ்நிலைகள் குறித்து அறிய எனக்குப் பெரிதும் வாய்க்கவில்லை. இலங்கை, தமிழகப் பள்ளிப்படிப்பு முடித்து நான் முப்பதை எட்டும் காலத்திலேயே மலை நாட்டுப் பகுதியில் நண்பர்கள் உறவினர்களுடன் தங்கி தேயிலைத் தோட்ட வாழ்க் கை முறைகளையும் , சூழல்களையும் ஓரளவு அறிய வாய்த்தது. மற்றும்
ஏடுகள், நூல்கள் வாயிலாகவே அறிய முடிந்தது.
எனவே நான் வாழ்ந்த கண்டியச் சூழ்நிலையில்
மலையகத்து மக்களது வாழ்வு குறித்து ஆக்கங்கள் படைக்கத் தகுதியற்றவனாக இருந்த
நிலையில் கற்பனையில் கதைகளோ, கவிதைகளோ புனைய விரும்பவில்லை. ஒரு ஓட்டம் பார் தி துவ நீ து அவர் களது உள்ளாத்மாவையே உணர்ந்துவிட்டதாகப் பம்மாத்துப் புரிய மனம் வரவில்லை. இதுவே மலையகத்தை குறித்து நான் கவனம் செலுத்த முடியாமையின் காரணமாகும்.
சமூகத்தின் பொருளாதாரச் சீர்கேடுகள், மேடுபள்ளங்கள் சரிசமன் ஆக்கப்பட்டு கீழ்நிலையில் உள்ளவர்களும் மேல்நிலையில் உள்ளவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை எய்தவேண்டும் என்ற சமதர்மக் கொள்கையில் எனக்குக் ஈடுபாடு இருந்தது. சாதி, வகுப்பு, இனபேதம் போன்றவற்றில் ஈடுபாடுகள் இத்தகைய நோக்கத்திற்கு இடையூறாக இருக்குமேயன்றி அதற்குத் துணையாக இருக்காது என்ற எண்ணம் இருந்தது. அதனால் மலைநாடு என்று நான் தனியாக நோக்கவில்லை. சமத்துவநிலை ஏற்படும்பொழுது பெரு வெள்ளம் வந்து சிறுகுப்பை கூழங்களை அழித் துச் சமநிலையாக்கிவிடும் என்று நினைத்தேன்.
இதழ் - 17 )

Page 17
பு:மான்
ந:மானி
கண்ேடூர் :
El고山中ai
கனே:
மார்க்சீயவாதி தான் நடத்திக்
வாழ்க்கையில் பதத்தின் பங்கு பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?
மதம் என்பது சிறுவயதில் இருந்தே பெற்றோர்கள்
மூலம் பெற்றுக்கொள்ளப்படுவது. அதற்கென்று ஒரு வழிமுறை இருக்கு எந்தச் சமயமாக இருந்தாலும் அது நமக்கு ஒரு நெறிமுறையை வகுத்துக்கொடுக்கிறது. அந்த நெறிமுறையில் எது நல்லது எது கெட்டது என்பதைப் பிற்காலத்தில் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது. எஸ் ப்ா மதத்தினருக்கும் இறைவன் போதுவானவன். ஒரு சாராருக்கு மட்டும் உரியவன் அல்லப். இருப்பது ஒரே ஒரு இறைவன்தான். நான் சொல்வது எனi னவென் ற1 ல் , நங் களர் குi லா ப் போட்டிருக்கிறீர்களா? வேட்டிகட்டி இருக்கிறீர்களா, சாறன் கட்டி இருக் கிரீர்களா. நாமம் போட்டிருக்கிறீர்களா என்பது முக்கியமில்லை. இறைவன் எப்லோருக்கும் பொதுவானவன். ஆண்டவனுக்குப் பயந்துக்கிட்டு இருந்தோம் என்றால், நெறிமுறைகள் அது சட்டமாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் வாழ்க்கை ஒழுங்காக இருக்கும். இல்லை என்று சோன்னால் திக்குத் திசைமாறிப் போதும், தண்டவாளத்தில் இருந்து புரண்ட மாதிரி,
நீங்கள் இறை நம்பிக்கையை மதங்களோடு, ஒரு
குறிப்பிட்ட மதத்தோடு சேர்த்துப் பார்க்கவில்லையா?
இல்லை. இல்லை. எல்லா பதங்களையும் நாம் ஆழந்து படிக்க வேணடும். சைவமோ,  ைபேஷ ன வ மோ எல்லாத் தையும் நாம் புரிந்துகொள்ள வெண்டும், எல்லா மதங்களுக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். மதங்களில் இருந்து நலப் ப்ே  ைவகளைத் தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். வாழக்கையையும் ஒழுக்க நெறியில் வைத்திருக்க வேண்டும்,
பொதுவாக மார்க்சியம் இருத்தல், அதாவது
வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்று சொல்கிறது.
ஆII
( காலம்
 

களும் பாஸிஸத்தைத் கொண்டிருக்கிறார்கள்
&
ந:மான்
#l,03%x"f 61့်
al-IIII
கணேஷ்
நபாள்
f.3sx; '; }
lhs: JG 7 :i
கனேஜர் :
; ஆனால் மதம் சிந்தனைதான் வாழ்நிலையைத்
தீர்மானிக்கிறது என்று சொல்கிறது. இரண்டுக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு உண்டு.
ஆமா ஆமா. தற்போதுள்ள நிலையில்
காலப் லாவற் றையும் பொருளாதாரம் தான் பாதிக்கின்றது. ஆனால், என்னைக் கேட்டால் ஆத்மீகம் தான் மனிதனுக்கு அவசியமாகத் தெரிகிறது. இன்றைய அணுகுண்டு யுகத்தில் இது அவசியமாகத் தோன்றுகிறது. H L | இல்லாவிட்டாலும் கடவுள் ஒருத்தரை சிருஷ்டி பன்னிக் கொள் என்று பால்டேயர் சோன்னமாதிரி ஒவ்வொரு மனிசனுக்கும் கடவுள் அவசியமாக இருக்கிறது. அதனால், ஒரு குறிப்பிட்ட மதத்தில் வெறிபிடிக்காமல் ஆத்மிக முறையில் போகும் எதையும் நாம் ஆதரிக்க வேண்டும்.
! இப் படிச் சொண் நண்ா ஸ்ப் என்ன. நீங்கள்
பார்க்சியத்தின் தத்துவார்த்த அம்சத்தை அதாவது பொருள் முதல் வாததி தை அம்ை வளவு பொருட்படுத்தவில்லை.
தத்துவார்த்த அம்சத்தை இல்லை.
ஆனால், அதன் அரசியல் அம்சத்தை நீங்கள்
ஏற்றக்கொள்கிறீர்கள் என்று சொல்லலாமா?
ஆம். சில தத்துவங்கள் எற்புடையதாக இருக்கின்றன.
அந்த அடிப்படையில்தான் நீங்கள் மார்க்சிய
இயக்கங்களுடன் தொடர்புபட்டு இருந்தீர்களா?
ஆம். ஏனென்றால், மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை என்பது போல இந்தத் தத்துவங்களினால் பொதுமக்களுக்குப் பயன் கிடைக்கும் என்று நினைத்தேன். சோவியத் ருஸ்ஸியாவை ஒரு சொர்க்க பூமியாக நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், எனக்கு அங்கு போக வாய்ப்புக் கிடைத்தபோது, அங்கு சென்று பார்த்தபோது அது சொாக்க பூமியாக இருக்கவில்லை. ஆனால், ஒரு மாயையில்ேதான் ரொம்பப் பேர் மயங்கி இருந்தார்கள். அந்த மாயையை விடுத்து உண்மையை ஊடுருவிப் பார்க்கும்போது
இதழ் - 17 )

Page 18
அதனுடைய பல விசயங்கள் தெரிய வந்தன. உதாரணமாக ஸ்டாலின் கொடுமைகள். அதன் சாயல்தான் பல இடங்களிலும் நடக்கின்றது. இதையெல்லாம் பார்த்தபோது கடைசியில் எனது தீர்மானம் என்னவென்றால் மனிசன் நல்லா இருந்தா உலகமும் நல்ல இருக்கும். உலகம் நல்லா இருக்கிறதுக்கு மனிசன் நல்லா இருக்க வேணும்.
நஃமான் : இந்தக் கருத்து உங்களுக்குள் இளமைக் காலத்திலேயே இருந்ததா அல்லது இப்போது உங்களுக்குத் தோன்றுவதா?
கணேஷ் : இளமையில் அம்மாவிடம் இருந்து நான் பெற்றுக்கொண்ட மதக்கல்விதான் எனது அடிப்படை. அந்த வாய்ப்பு எனக்கு இருந்தது. அதை நான் விரிவுபடுத்திக் கொண்டு வந்திருக்கிறேன். ஊடுருவிப் பார்க்கும்போது மதம் மனிசனுக்கு அவசியம். அதாவது ஒரு நெறிமுறை அவசியம். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. அந்த நெறிமுறையை மீறினால் பாதகம் ஏற்படுகிறது என்பதை நான் உணர்கிறேன்.
நஃமான் : ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு இந்தக் கருத்து
இருந்தது.
கணேஷ் : ஆமா, ஆமா இந்தக் கருத்து உள்ளேயே
இருந்தது.
நுஃமான் ; ஆனால், பொதுவாக உங்களைப் பற்றிப் பேசும்போது நீங்கள் ஒரு மார்க்சியவாதி - ஒரு இடத்துசாரி - கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் என்றே சொல்லுவார்கள். நீங்கள் : ஒரு பொருள் முதல்வாதி - ஒரு நாஸ்திகர் என்ற கருத்தே பலருக்கும் இருக்கின்றது. இந்த ே இரண்டுக்கும் இடையில் ஒரு முரண்பாட்டை நீங்கள் காணவில்லையா? ఖః
கணேஷ் : வெளியில் "உள்ளவர்கள்; அப்படித்தான் நினைத்தார்கள். உறவினர்கள் கூட என்னை ஒதுக்கிவைத்தார்கள். கணேசா, அவன் ஒரு கம்யூனிஸ்ட்டு என்று ஒரு பட்டம் எனக்குக் கொடுக்கப்பட்டது. அது அவங்க அவங்களுடைய போக்கு. அதை நாம் குறை சொல்லுவதற்கில்லை. அவர்களுடைய கொள்கைகளும் எண்ணங்களும் அந்த மாதிரி இருந்தது. அவர்களுக்கு ஆழந்து பார்க்கக் கூடிய தன்மை கிடையாது. இன்றைக்கு இந்த சமுதாயத்தில் யாருக்குமே இது இல்லாமல் இருக்கு. நான் ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு நான் ஒரு நண்பரை அழைத்துக்கொண்டு போயிருந்தேன். மோகன் குமாரமங்கலம் பேசிக்கொண்டிருந்தார். நான் அழைத்துப்
(காலம்
 

நஃமான் :
கணேஷ :
போயிருந்த நண்பர் ஒரு ட்றொட்ஸ்கியவாதி. அவரை ஒரு தீண்டாதவர் மாதிரி அங்கிருந்தவர்கள் ஒதுக் கி வைத் தார்கள் . ட் றொட் ஸ் கி உண்மையிலேயே ஒரு பெரிய புத்திசாலி. அவர் கொலை செய்யப்பட்டார். அது எனக்குப் பெரிய தாக்கமாக இருந்தது. பரிணி னாளில் ட்டிெறாட் ஸ் கியவாதிகளை ஒரு சாதி வகுப்புமாதிரியே தள்ளிவைக்கிற நிலை இருந்தது.
மதங்களில் இருக்கிற "செக்ரேறியனிசம்' மாதிரி.
ஆம். அப்பிடி மதங்களில் இருக்கிற மாதிரி, ஒரு மதத்தையே அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். கம்யூனிசம் என்பதே ஒரு மதம் ஆகிவிட்டது. சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று எப்படிப் பிரிந்ததோ அந்தமாதிரி இவர்களும் பிரிந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் இப்போது கொள்கை வேறுபாட்டில் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், நான் எல்லாவற்றையும் ஊடுருவி என்னுடைய கொள்கையை உருவாக்கிக் கொள்கிறேன், சுதந்திரமாக. அதனால் அவர் அதிலையும் இருக்கமாட்டார், இதிலையும் இருக்கமாட்டார் என்று என்னைப் பற்றி சிலபேர் சொல்வார்கள். இப்படி நம்மில் சில இடதுசாரிகளும் இருந்துள்ளனர். எனக்கும் அதில் ஊடுருவிச் செல்வதற்கு இஷ்டம் இல்லாமல் போய்விட்டது. இதில் தீவிர பங்கு எடுக்காமல் போனதற்கு இதுவே காரணம்.
கம்மா இருப்பதே சுகம் என்ற சித்தர்கள் வாக்குப்படி இருப்பது. சும்மா மேடையில் ஏறாமல் இருப்பதற்கும்
* ஒரு காரணம் இதுதான். ஏனென்றால் மெளனம்
நஃமான் :
கணேஷ் :
என்பது ஞானம் . இது எனக் காக ஒரு செளகரியத்துக்காக நான் சொல்வது. இது ஒரு Philosophy அல்ல. ஆனால் அதுதான் உண்மை. இன்றைக்கு இருக்கிற குத்துவெட்டுக்களைப் பார்க்கும்போது ஒவ்வொருத்தருக்கும் ஒழுக்கம் முக்கியமானதாகக் கருதினேன். அவ்வளவுதான். அந்த ஒழுக்கத்துக்கு வால்டேயர் கூறியது மாதிரி அது அவசியம் என்றுதான் நினைக்கிறேன்.
மத நம்பிக்கை இல்லாமல் ஒருவன் ஒழுக்கமாக இருக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?
கஷடம் என்றுதான் நினைக்கிறேன். என்ன இருந்தாலும் ஒவ்வொரு சாதாரண மனிதனும் பிறக்கும்போதே மதத்தோடு பிறக்கிறான். அதில் உள்ள பண்பாடுகள், பழக்க வழக்கங்களில் வளர்கிறான். அவர் அவர் தேர்ந்தெடுத்த அந்தப் பண்பாட்டில் நல்லவை கெட்டவை எவை என்று தெரிந்துகொண்டான் என்றால் நல்லதுதான். ஆனால் இப்பொழுது என்ன நிலை இருக்கிறது
இதழ் - 17 )

Page 19
நஃமான்
கணேஷ்
என்பது பிரச்சினைதான். இப்போது பழைய நிலை இல்லை. ஒரு வெறித்தன்மை ஏற்பட்டுப் போகிறது. அது ரொம்ப வருந்தத் தக்கது. இதைத்தான் ஃ. பண்டமென்றலிசம் என்கிறோம்.
இந்தப் ஃபண்டமென்றலிசம் இன்று எல்லா மதங்களிலும் இருக்கிறது. ஒரு மதத்தில் மட்டும் என்று இல்லை. அதே மாதிரித்தான் அரசியல் கொள்கைகளும். ஃபண்டமென்றலிசம் என்றால் ஒரு வெறித்தன்மை. அந்த வெறித்தன்மையைப் போக்கி, உண்மையான நடுவுநிலைப் போக் கோடு ஆண்டவனைப் பார்த்தான் என்றால் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இருக்காது.
: தேசியவாதம் கூட ஒருவகையில் அதன் முதிர்ந்த
வடிவத்தில் ஒரு வெறித் தன் மைக்கு இட்டுச்செல்வதே. ஜேர்மன் தேசியவாதம், இத்தாலிய தேசியவாதம் எல்லாம் பாஸிசமாக வளர்ந்தது. அப்படிப் பார்க்கும் போது இன்றைய நிலையில் இலங்கையில் பெளத்த அல்லது தமிழ்த்தேசியவாதம், இந்தியாவில் வளர்ந்துள்ள இந்து தேசியவாதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அந்தக் காலத்தில் உண்மையில் ஹிட்லரின்
மைன்கேம்.ப் மூன்றுதரம் வாசித்துள்ளேன். ஹிட்லரின் கொள்கையை சிலர் இங்கு ஆதரிக்கவும் செய்தார்கள். தமிழ் நாட்டிலும் சிலர் ஆதரித்தார்கள். ஹிட்லர் ஜேர்மனியை மேம்படுத்திவிட்டார். இங்கும் அதைப் பின்பற்ற வேண்டும் என்றார்கள். சிலர் ஜப்பானையும் ஆதரித்தார்கள். இந்தமாதிரி தேசியவாதத்தினால்தான் ஒரு நாடு முன்னேற முடியும் என்றார்கள். உண்மையைச் சொல்லப் போனால் காந்தியந்தான் என்னைக் கவர்ந்தது. இந்திய தேசியவாதத்தில் காந்தியம் இருந்தது. அதனால் எனக்குக் காந்தியக் கொள்கையில் ஈடுபாடு இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும் என்று காந்தி சொன்னார். ஏனென்றால், அது institutionalized ஆகக் கூடாது என்றுதான். அரசியலில் அவ்வாறு நடக்கிறது. மதத்திலும் அவ்வாறு அமைப்பு முறைகள் உருவாகின்றன. இதனால் பல கோளாறுகள் வரத்தான் செய்யும். அரசியலில் இருந்தமாதிரி மதத்திலும் இது வந்துவிட்டால் அதுதான் பெரிய பிரச்சினையாகிறது. இதுதான் கடைசியில் அடிப்படைவாதமாகிறது. ஏறக்குறைய தேசியவாதமும் அதேநிலையில்தான் இருக்கிறது. மொழி, மதம், அரசியல் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. வேறுபாடு காட்டுகின்றது. இவை எல்லாவற்றையும் தாண்டிச் செல்வதற்கு ஒழுக்கம் என்கிற ஒன்று வேணும். ஒவ்வொருத்தரும் ஆத்மாவைச் சுத்தமாக்கிக் கொண்டால்தான் இவற்றை வெல்ல முடியும் என்பது என் கருத்து.
C காலம்

1983 ல் மகாகவி பாரதியாரின் படம் வரைவிற்காகப் பாரதி பதக்கம் பெற்ற ருஷ்ய ஒவியர் மிகையில்
நஃமான் :
கணேஷர் :
நஃமான் :
ஃபியோதரவ் வரைந்தது.
மார்க்சியத்தில் முக்கியமாக உங்களைக் கவர்ந்த அம்சங்கள் எவை?
தொழிலாளர்கள், உழைப்பவர்கள் எல்லமே மிகவும் கஷட நிலையில் இருக்கிறார்கள். இது நாம் கண்ணால் பார்ப்பது. மார்க்சியம் இவர்களுக்கு ஒரு சொர்க்கத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் பின்னால் பார்க்கும்போது அது ஒரு மாயையாகப் போய்விட்டது. நாம் பாஸிசத்தைக் குறை சொன்னோம் . கடைசியில் இவர்களும் பாஸிசத்தைத்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். நான் மதங்களைச் சொன்ன மாதிரி, பெயரில் தான் கம்யூனிசம் இருந்ததே ஒழிய நடைமுறையில் இருக்கவில்லை. உண்மையில் போலந்திலும், செக்கோஸிலவாக்கியாவிலும் சுதந்திரத்தை நசுக்கியமுறை, கருத்துக்களைத் தன்னிச்சையாக வளர முடியாமல் செய்த ஒரு தன்மை, இவற்றையெல்லாம் பார்த்தபோது வேண்டாம் என்று ஆகிவிட்டது.
ஒரு குறிப்பிட்ட கருத்துநிலையை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்ற மார்க்சிய இயக்கம் போன்ற ஒன்று, அந்தக் கருத்து நிலையின் அடிப்படையில் ஒரு சமூகத்தை உருவாக்க முனையும்போது இந்த மாதிரி நடக்கக்கூடிய அடக்குமறைகள் தவிர்க்க முடியாதவை என்ற ஒரு கருத்து இருக்கிறது. ரஷ்ஷியாவில் எவ்வளவோ அடக்குமுறைகள் இருந்தாலும் மிகப் பின்தங்கிய நிலையில் இருந்த அந்த நாட்டை ஒரு பெரிய சக்தியாக, பெரிய சமூகமான வளர்த்தெடுப்பதற்கு லெனின், ஸ்டாலின் ஆகியோரின் சர்வாதிகார முறைமை பயன்பட்டிருக்கு என்ற ஒரு கருத்து உண்டு. அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
இதழ் - 17 )

Page 20
கணேஷ :
நஃமான் :
கணேஷ் :
நஃமான் :
கணேஷர் :
ஜேர்மனியிலும், இத்தாலியிலும் பாஸிசம் வளர்ந்தது. அந்த நாடுகளும் பெரும் சக்திகளாக வளர்ந்தன. ஆனால் நான் சொல்லுவது என்னவென்றால் aims and means, அதாவது நோக்கமும் வழிமுறையும் சரியாக இருக்க வேண்டும். அது இல்லாவிட்டால் அந்த சமூகம் எதுவாக இருந்தாலும் நிலைத்து நிற்காது. ஜேர்மனியும், இத்தாலியும் யுத்தத்தில் அழிந்தன. ஜப்பானும்தான் அழிந்தது. மீண்டும் அவற்றைக் கட்டி எழுப்ப வேண்டி இருந்தது. இவற்றையெல்லாம் கூர்ந்து பார்க்கும் போது அதீத சித்தாந்தங்கள் உருப்படுவதில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
முசோலினி, ஹிட்லர் ஆகியோரின் சர்வாதிகார முறைக்கும் ஸ்டாலினின் சர்வாதிகார முறைக்கும் இடையில் நீங்கள் வேறுபாடு ஒன்றையும் காணவில்லையா?
ஆரம்பத்தில் கம்யூனிசம் சிறந்ததாகத் தெரிந்தது. ஏனென்றால் அது பொதுமக்களை மையமாகக் கொண்டிருந்தது. ஒரு நாட்டை என்று இல்லாமல் உலகம் முழுவதையும் அது கருத்தில் கொண்டிருந்தது. புரட்சியினால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. பாட்டாளிகள் மட்டுமல்ல விவசாயிகளும் புரட்சியின் பங்காளிகள் என்ற நிலை இருந்தது. ஆனால் பாட்டாளிகள், கைத் தொழில் துறையில் இருப்பவர்கள்தான் முக்கியத்துவம் பெற்றார்கள். அப்புறம் மாஓசேதுங் வந்தார். அவர் வந்த பொழுது பெரும் நன்மை கிடைக்கும் என்று நாம் நினைத்தோம். ஆனால் கடைசியில் பார்க்கும்போது? விவசாயிகளுக்கு மேலாக கைத்தொழில் துறைதான் மேலாதிக்கத்துக்கு வந்தது. விவசாயிகள் கஸ் டத்துக் காளாயினர். இத்தகைய நடைமுறையைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது எல்லா முறைகளும் சுயநலத்தில்தான் முடிவடைகின்றன என்று கூறத் தோன்றுகின்றது.
சோவியத் ரஷ்ஷியாவின் வீழ்ச்சிக்கும் உலகளாவிய ரீதியில் கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமே காரணியாக இருந்திருக்கிறது என்று கூறப்படுகின்றது. அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அதில் சந்தேகமே கிடையாது. ரஷ்ஷியரும் அமெரிக்காவின் தத்துவங்களை அதாவது முதலாளித்துவத்தை உடைப்பதற்கு முயன்றார்கள். அமெரிக்கா தனது சக்திகளைப் பயன்படுத்தி
ரஷ்ஷியாவை உடைக்க முயன்றது. CIA போன்ற
ஸ்தாபனங்கள் இதில் முயன்றன. ரஷ்ஷியர்களும் இதைச் செய்தார்கள். ஒருவர் மற்றவருடைய
(காலம்

நஃமான் :
கணேஷ :
கணேஷர்
ந:மான் :
கணேஷ் :
சித்தாந்தத்தை அழிப்பதற்காகவும் தங்கள் சித்தாந்தத்தை வளர்ப்பதற்காகவும் வேலை செய்தார்கள். ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டே மற்றவருடைய தத்துவத்தைப் பற்றிக் குறை சொன்னார்கள். அந்தக் குற்றச் சாட்டுக்களில் உண்மையும் இருந்தது.
தற்போதைய நிலையில் உலகளாவிய ரீதியிலும் சரி, தேசிய ரீதியிலும் சரி, சமூக ஏற்றத் தாழ்வுகள், முரண்பாடுகள், மோதல்கள் எல்லாவற்றையும் நீக்கி மனித விடுதலையைக் கொண்டுவர முடியுமாக இருந்தால், எந்த அமைப்பு மூலமாக அதைக் கொண்டு வரலாம் என்று நினைக்கிறீர்கள்?
எந்த அமைப்பு என்பதற்கு அடிப்படை என்ன என்று கேட்டால் கல்வி அடிப்படையில் இருந்துதான் தொடங்கவேண்டி இருக்கிறது. புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான அடிப்படைக் கல்வி வேண்டும். புதிய தலைமுறைக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை போன்ற நல்ல உயர்ந்த பண்புகளை, விழுமியங்களை ஊட்ட வேண்டும். அதில் இருந்துதான் புதிய சமுதாயம் வரமுடியும். இப்போது இருப்பதைப் பற்றி நான் சொல்லப் போனால் என்னை ஒரு .பெசிமிஸ் ற், அவநம்பிக்கைவாதி என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் நான் சொல்வது "பெசிமிசம் அல்ல.
ஐ புதிய முறையில் தான் புதிய சமுதாயத்தை * உருவாக்க வேண்டும். அது படிப்படியாகத்தான்
வரும். அது தானே உருவாகும். அதாவது கலியுகம் மறைந்து திருதயுகம் வரவேண்டும்.
ர் : பொதுவாக எல்லா மதங்களும் மக்கள் மத்தியில்
ஒழுக்கத்தையும், இறை நம்பிக்கையையும் பலப்படுத்தி அதன் மூலம் கட்டுப்பாடான ஒழுக்கம் மிகுந்த உயர் மனிதர்களை உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஆனால், மதங்கள் அந்தக் குறிக்கோளில் இதுகாலவரை வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியவில்லை. மதங்களின் பெயரில் பெரிய அனர்த்தங்கள் நடைபெற்றுள்ளன.
: Fundermentalism Segl, Gg 616öD 6!gg606öGuT
உருவாகியுள்ளன.
ஆம. ஆனால், இப்போது நீங்கள் அந்த மாதிரியான ஒரு கருத்தைத்தான் சொல்லப்
பார்க்கிறீர்கள்.
. DITلابع
இதழ் - 17

Page 21
g: 0 | Goi :
கணேஷர் :
நகமான் :
கணேஷ்
ya 036õí :
கணேஷ்
அது நடைமுறையில் சாத்தியமா?
சாத்தியமில்லை.
மதங்கள் எல்லாம் அரசியல்மயப்பட்டுப் போன இன்றைய நிலையில், இறை நம்பிக்கை சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த போதனைகள் மூலம் ஒரு புதிய சமூகத்தைக் கட்டி வளர்க்கலாம் என்பது எந்த அளவு சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
: இன்றைய நிலையில் நாம் விரக்தி அடைந்துதான்
போயிருக்கிறோம். ஆனால், உலகம் முழுவதும் பார்த்தீர்கள் என்றால் பிறநாடுகளில் கூட துன்புறும் மக்களுக்கு உதவவேண்டும் என்ற இரக்க உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அரச சார்பற்ற நிறுவனங்கள் இதைக் காட்டுகின்றன. அவையும் ஸ்தாபனமயப்பட்டு, அவற்றிலும் பல கோளாறுகள் உள்ளனதான். இருப்பினும் அவற்றின் ஊடாகவும் நல்லவை நடக்கின்றன. மனிதன் என்பவன் தானே உணர்பவனாகவும் இருக்கிறான். எப்பொழுதும் நமக்குள் நன்மை, தீமையை உணரக் கூடிய ஒரு சக்தி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அரிச்சுவடியில் இரந்துதான் நாம் இப்பொழுது ஆரம்பிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்தச் சமுதாயம் இல் லாவிட்டாலும் அடுத்த சமுதாயமாவது ஒரு நல்ல ஒழுக்கமான் சமுதாயமாக வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
ဒီ့• மார்க்சிய சித்தாந்தத்துக்கு உலகளாவிய ரீதியில் ஒரு எதிர்காலம் இல்லை என்றா கருதுகிறீர்கள்?
மார்க்சிய தத்துவமே அடிப்படையில் தொழிலாளர்களை மையமாகக் கொண்டது தானே. அது தொழிலாளர்கள் - உழைப்பவர்கள் உயர வேண்டும் என்ற தத்துவம் - அந்தத் தத்துவத்தை யாருமே மறுக்க முடியாது. உழைப்பவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள் உயர வேண்டும் என்ற அந்த அடிப்படைத் தத்துவத்துக்கு வரும் போதுதான் நான் முன்னர் கூறியது போல LD5ëf6ð 6TůUtg. 69(b Common denominator வரவேண்டுமோ, அதேமாதிரி ஒரு இரக்கத்தன்மை, ஒரு மனிசத்தன்மை ஏற்பட வேண்டும் என்ற நிலைக்கு வருகிறோம். தனிப்பட்ட முறையில் மதத்தைக் குறை சொல்கிறார்கள். அப்படிப் பார்க்கப் போனால் எல்லாவற்றிலும் ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அதை எல்லாம் மீறி அடிப்படைத் தத்துவத்தைத்தான் பார்க்க வெண்டும்.
( காலம்
 
 
 
 

நஃமான் :
கணேஷ :
匠。D町ai:
கணேஷ்
匹ニDIgj :
கணேஷ :
அடிப்படைத் தத்துவமே நசுக்கப்பட்டவர்கள் அல்லது கீழ்நிலையில் உள்ளவர்கள் உயர வேண்டும் என்பது, உயர வேண்டுமானால் அவர்கள் ஒழுக்கத்தை விடக் கூடாது. அதை விட்டுவிட்டால் அந்த சமூகம் உருவாக முடியாது.
ஒழுக்கம் என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?
ஒழுக்கம் என்று நான் சொல்வது என்னவென்றால் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய நேர்மை, சமூகத்துக்கு முரண் இல்லாத பண்புகள், அடிப்படைப் பண்புகள் என்று சொல்லுகிறோம் அல்லவா, எல்லா மதங்களும் அவற்றைப் பற்றிப் பேசுகின்றன. அவற்றில் உயர்ந்தவற்றை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
உயரிய பண்புகளைத்தான் ஒழுக்கம் என்று
சொல்லுகிறீர்கள்.?
జ్యో
* SALDs, SIDs. நான் வரையறுத்துச் சொல்லக்
கூடியது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு uDmgsf இருக்கிறது. இப்பொழுது மாமிசம் சாப்பிடுகிற
ஒருவனைச் சைவனாக இருக்கச் சொல்ல
முடியாது. சைவனாக இருப்பவனை மாமிசம் சாப்பிடச் சொல்ல முடியாது. ஆனால் அடிப்படையில் எது நன்மை எது தீமை என்று தெரிந்திருக்க வேண்டும். பொதுவாகவே குடிக்கக் கூடாது, கொலை செய்யக் கூடாது. இந்த அடிப்படைப் பண்புகளை மட்டும் கவனித்தாலே போதும் பஞ்சமாபாதகங்களைச் செய்யாமல் இருந்தால் அதுவே பெரிய விசயம்.
இலங்கையின் இன்றைய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை நீங்கள் சொல்லக்கூடிய தீர்வுகள் என்ன?
எல்லாவற்றுக்கும் பொறுமை சார்ந்த ஒரு நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்வேன். ஒருவருக்கும் பொறுமை இல்லை. மொழி, மதம் எல்லாம் ஒரு வெறித்தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. அந்த வெறித்தன்மை இல்லாமல் நடுவு நிலையோடுதான் பார்க்க வேண்டும். அதற்கு உயர்ந்த பண்புகள் உருவாக வேண்டும். மேலோர்கள் அல்லது சான்றோர்கள் என்று சொல்கிறோமே அந்தச் சான்றாண்மை எற்பட வேண்டும். அது இல்லாவிட்டால் என்ன தீர்வுதான் வந்தாலும் அதுபோய்க் கொண்டுதான் இருக்கும்.
இதழ் - 17 )

Page 22
தமிழ் இயக்கியத்துடன் ஒரு எழுபது வருடத் தொடர்பும், அனுபவமும் ஆற்றலும் மிக்கான திரு. கே. கணேஷ் அவர்களைப்பற்றி எழுதுவதில் நான் பெருமையும் பூரிப்பம் கொள்கிறேன்.
எழுபது வருட இயக்கியத் தொடர்பு என்பது எத்து: பெரிய விஷயம் இயக்கிய உட்துடனான அருடைய அனுபவங்களைத் தெரிந்து கொள்தே இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு இலக்கிய அனுபவமாகும். அவர் வாழ்ந்த காலத்திலேயே பாழ்ந்து, அவருடன் பேசவும் பழகம் எாய்ப்புக் கொள்வதே ஒரு இலக்கியக் கொEL. மேதைகளுக்கேயுரிய அபாது தோற்றமும், எளிமையாகப் பழகும் இனிய பண்பும், அவருடன் பபுதும் 1880யம் ஈர்த்துக் கொள்வது ஒன்றும் வியப்புக்குரியது அல்ல,
ஆயித்துத் தொளாயிரத்து இருபதில் கண்டி அப்பிட்டியவில் பிறந்தவர். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும் பிறகு தமிழ் நாட்டிலும் கல்வி பயின்றவர். இவரை ஒரு தமிழ்ப் பண்டிதராக்கும் நோக்கத்துடன் இளப் பதிலேயே பதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் படிக்க அனுப்பி விட்டனர் பெற்றார். திரு. பி. க. விடம் தமிழ் படிக்கச் சென்ற இவருக்கு பண்டிதராபதை விட&ம். தமிழ் இலக்கியத்தில் கருத்துப் புரட்சிாடக்கான விரும்பிய ப.ஜீவானந்தம்,ாாண்டி பாரதி (LTF); இடதுசாரி எழுத்தாளர்களுடன் தோழ:ம கொள்வதே மிகவும் பிடித்திருந்தது.
சக்திதாசன் சுப்பிரமணியம். கே. ராமநாதன், பாபாண்டி பாரதி ஆகியோர் சேர்ந்து சென்னையில் இருந்து வெளியிட்ட 'லோகசக்தி என்னும் முற்போக்கு இதழின் வெளியீட்டில் இவரும்பங்குபற்றினார். முதல் இதழிலேயே இபருEடI முதல் படைப்பும் வெளி வந்தது. அப்போது இவருக்கு பேதுடன்னிரெண்டு,
முங்க்ராஜ் ஆசாந்த், பாப்ளோ நேருடா பிரேம் சந்த், கே. 1. அப்பாள். பெங்கடாச்சாரி, தமிழ் ஒளி, குயிலன், புதுமைப்பித்தன், தி. க. சி. என்று நாம்டோபராவில் அறிந்து வைத்துள்ள இலக்கியக்காரர்களுடன் அவர் நண்பராயிருந்து பழகிய அனுபவங்களை அவர் வாயிலாகக் கேட்கையில் பிரமித்துப் போகின்றோம். அவர்கள் எழுதிய சில கடிதங்களைக் காட்டுகின்றார். பூரித்துப்போகின்றோம்.
12:பதில் எழுதத் தொடங்கி, 15 வயதில் இளைஞர் காங்கிரஸ் என்னும் அனமப்பை உருவாக்கி, பத்திரிகை வெளியிட்டு, எழுத்தாளர்களுடன் பழகி இயக்கியத்தைத் தன் இரத்தத்தில் எற்றிக் கொண்டவர் இந்த முதுபெரும் இயக்கியபோதி. அந்த இரத்த உறFபும் இலக்கிய உணர்ஃமே இந்த எண்பத்துமூன்று வயதிலும் இவரை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. 1936ல் இவர் தனது கீழத்துவக நண்பர்களுடனிணைந்து வெளியிட்ட போகசக்தியே முற்போக்குக் கருத்துக்களை வெளிக் கொண்டுவந்த முதல் பத்திரிகையாகும். இவ்வாறா 0 அதுபவங்களே முற்போக்கு எழுத்தாளர்களை ஒன்றினைக்கும் ஒரு எண்ணத்தை இவருக்குத் தந்துள்ளது. கே. ஏ. அப்பாஸ்,வெங்கடாச்சாரி, குயிலன். தமிழ் ஒளி,தி. க. சிவசங்கரன் ஆகிய
( if. Till in
 

னைஷ்
- தெரிந்தை ஜோசப் முற்போக்குச் சிந்தனையாளர்களை ஒன்றி:னத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தமிழகத்தில் ஸ்தாபித்தார்.
இலங்கை திரும்பிப்பதும் இவரால் கம்ா இருக்க முடிந்திருக்குமா? படிக்கச் சென்ற ஊரிலேயே அத்துக்ளக்க செயலாற்றியவர் சொந்ந ஆrள் Aப்ாகி இருப்பார் 40களின் நடுப்பகுதி. அப்போது முல்க்ாாஜ் ஆனந்த் இலங்கைக்கு பந்திருந்தார். அபரக்கண்டு உரையாடி, அகில இலங்கை எழுத்தாளர் சங்கம் என்று ஒரு அமைப்பை அவர் p1 = null; உருபாக்கினார். இபங்கையின் சகல எழுத்தார்களையும் ஒன்றினைக்க வேண்டும் 1ன்றும் அவரது ஆவல் போற்று தற்குiயது. இந்த அகில இங்கே எழுத்தாளர் சங்கத்தின் தiைராக சுனாமி விபுலானந்தரும், உபதலைவராக பார்டின் விக்கிய பசிங்கEபும் இருந்தார்கள், கனேரம் கயா நிதி சாத் சந்திர புேம் இ:னச் செயலாளர்களாக இருந்து பEணியாற்றினார்கள், ஈழத்தின் சகப எழுத்தாளர்கள் பட்டுமன்றி இந்திய மற்றும் உலக எழுத்தாளர்கள் சகலருடன் தொடர்புள்ளவர் இவர், ஆகவே ஆங்கிய, தமிழ் இதழ்கள் அவரைத் தேடி தாத்து ஓயாவுக்கு வந்த
பண்ணபிருக்குபாப்ட
தமிழ் இயக்கியத்தில் ரைஸ்ாறு படைத்த மணிக்கொடி. கிராம ஊழியன் ரகுநாதன் சாந்தி, விஜயபாஸ்கரனின் சரஸ்வதி, பாதரின் மறுமலர்ச்சி என்று நாம் கண்டே இராத இதழ்கள் சில பற்றை ஒவ்வொன்றாகக் காட்டுகின்றார். சில்:tட்டுப் போகின்றோம்.
1846ள் இவரும் கே. ராமநாதனும் சேர்ந்து நடத்திய பாாதி நி3:னEபுக்கு 4:ருகின்றது. பாசிஸ் எதிர்ப்புப் பிரசாரத்தை முன் வைத்து வந்து கொண்டிருந்த பென்குவின் வெளியீடான நியூ காட்டிங்ஸ்
இதழ் - 17 )

Page 23
என்னும் ஆங்கில இதழேக் காட்டுகின்றார். இத்தாலிய எழுத்தாளர் இக்கோவியஸ் சிபோ:, பஞ்சாபி கீழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த் ஆகியோரின் படைப்புக்கள் நியூனாட்டி ங்ஸ்'சில் இந்திருந்தன.
இப்படி ஒரு இதழை என் நாமும் வெளியிடக் டிடாது என்ற என்னமே 'பாரதியின் தோற்றத்துக்கு வித்தாயிற்று. 1946 ஜ:பfயில் பாரதி முதல் இதழ் வெளிவந்தது. ஈழத்தின் முற்போக்கு இயக்கிய இயக்கத்துக்கு வித்திட்ட டோகத் திகழ்ந்தது இந்தப் பாதி, 1948 ஜாவளியில் பார்க்ளிம் கோர்க்கியின் அட்டைப்படத்துடன் இந்த ஏழாவது இதழுடன் பாரதியின் இயக்கிபப் பயணம் முடிவி பெற்றுள்ளது. நியூ ரைட்டிங்கம் ஏழு இதழ்களே பேந்ததாகத் தெரிவிக்கின்றார்.
கணோஷ் ஒரு கவிஞர், தன் சொந்தப் பெயரிலும் காநேசன் என்னும் பெயரிலும் நிறையக் கவிதைகள் எழுதிபுள்ளார். உங்கக் களிதைப் போட்டியில் பங்குபற்றி ஜப்பான் சக்கரபர்த்தி ஹீரோ ஹிட்டோவிடம் விருது பெற்ற கவிஞர் இவர், பரிசு பெற இவர் ஜப்பான் செல்பயிருந்த செய்தியைப் படத்துடன் முதல் பக்கத்தில் வெளியிட்ட டெயிலி நியூஸ் உள்ளே ஒரு பக்கக் கட்டுEரயும் எழுதியிருந்தது அன்று
இவர் ஒரு சிறு கதையாசிரியரும் கூட பEக்கொடியில் கூட இரண்டு சிறு கதைகள் எழுதியுள்ளார். ஒன்று மகாசக்தி மற்றது ஆசாபாசம், சத்திய போதிமரம், பால்காப்பழனி சட்டமும் சந்தர்ப்பமும் ஆகிய சிறுகதைகளை வீரகேசரியிலும் ஆகஸ்ட் தியாகி ஆறுமுகம் என்னும் சிறுகதையை தேசாபிமாரிபிலும் எழுதியள்ளார்.
இந்தியாவில் உருவாக்கிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போய் இலங்:Tகயிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை 1946ல் தோற்றுவித்த பெருEாயும் இவருக்குண்டு
வீரகேசரியில் 49லும் சுதந்திரனில் 50களிலும் பEயாற்றி இருக்கின்றார்.
இவருடைய இயக்கியப் பEAlவெல்:பாம் முக்கிய பணியாக நிற்பது இவருடைய மொழிபெயர்ப்புப் பணிகள்.
ஜிட்':த்து :ம் =
பத்மநாத ஐயர், உக்ரோனிய புபவரும் தமிழ்
(காலம்
نقد
 

முல்க்ராஜ் ஆாந்தின் அன்டப்பிள்ஸ் நாவளை தீண்டாதான் 1ன்று 1947ல் தமிழில் மொழி பெயர்த்தார். 1956ல் கே. ஏ. அப்பாசின் சிறுகதைகளை குங்குமப்பூ என்றும் பெயரில் மொழி பெயர்த்து வெளியிட்டார். மறுபடியும் அப்பாஸின் அஜந்தா என்றும் நூலை மொழி பெயர்த்தார். குயிலன் பதிப்பகம் 1964ல் இதை வெளியிட்டது. ரே-சி- மின் சிறைக் குறிப்புகள் அண்ட்ர்பேஜாரிய எழுத்தாளர் அல்தாய் முஹம்மத்தோவின் தளேபாங் அந்த கானம்) சீன இலக்கிய மோதலுகன் சிறுகதைகள் பல்கேரிய, ஹங்கேரிய, வியட்நாமிடி, உக்ரேனிய ரஷ்ய, விேதைகள்: சீனக் குறுநாவல்கள் என்று இருபதுக்கும் மேற்பட்டமோழி பேயர்ப்பு நூல்களை அளித்திருக்கின்றார்.
என். சி. பி. Erச். சென்னை புக்ஸ், தேசிய :ப இலக்கியப் பேரவையுடன் இனணந்து சவுத் ஏசியன் புக்ஸ் ஆகிய :ேtட்டு நிறுவனங்கள் கே. கரோதின் பெரும்பான்மையான பொறி பெயர்ப்பு நூல்களே வெளியிட்டு இலக்கியப்பணியாற்றியுள்ாமே குறிப்பிடத்தக்கது
ஒரு அறுபதாண்டு கால இலக்கிய அனுபவங்களைத் தன்னுள் ஆழ்த்திக் கொண்டிருக்கும் இவரின் எழுத்துபவ அனுபவங்கள் வெளிக் கொண்டு பரப்படல்பேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் விருப்பம் ஆரவாரங்களுக்குள் அகப்படாமல் அகமதியாக இருக்கும் அவரே அதைச் செய்ய வேண்டும். இய்:tயுெEல் நாம் பாராவது அதைச் செய்ய வேண்டும், எண்பத்து மூன்று வயEத அண்மித்துக் கொண்டிருக்கும் திரு.கே. கனேஷின் எழுபதாண்டு இலக்கிய அனுபவங்கள் முழுமையாக "யூதப்படாவிட்டால் அது நமக்கெல்லாம் ஒரு இலக்கிய இழப்பே ஆகும்.
விளம்பரம் விரும்பாத இவருக்குக் கிடத்துள்ள விருதுகள் பற்றிக் கேட்டால் சிப்பார் பதில் சோல்பமாட்டார். எ:வேதான் நானே கடறினiக்கிறேன். 1991 ல் இலக்கியச் செம்மன் விருது கலாசா அலுவல்கள் ராஜாங்க அமைச்சு) 1992 வியட்நாமிய சிறுகதைகள் - சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சுதந்திர இலக்கிய விழா விபவி விருது 1993 இதே விருது உக்ரேனிய கவிதைகள் பொழிபெயர்ப்பிற்காக 1995 கலாசார அEபச்சு - கலாபூஷண விருது
எழுபத்தேழு பதிலும் ஒரு இளைஞராகப் பணிபுரியும் திருகே கனேஷ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள், பாட்டுக்கள்
1ானவருமான கர்பட்நோக்கன், கனேஷ்
இதழ் - 17 )

Page 24
அன்று திங்கட்கிழமை ஆனதால்பஸ்ஸில் அதிகமான நெருக்கடி சந்தை நாளானபடியாலும் 'கோடு, கச்சேரி என்று போனவர்கள் நிறைந்திருந்தபடியாலும் பஸ் நிறைய ஜனங்கள் இருந்தனர். சட்டப்படி முப்பத்திரண்டு பிரயாணிகள் ஏற்றப்படவேண்டியபஸ்ஸில் எழுபத்திரண்டு பிரயாணிகளாவதுஏறியிருப்பார்கள். ஒரு ஆசனத்தில்இரண்டுபேர்தான் உட்கார வேண்டியது. ஆனால் மூன்று பேரை அமர்த்தி இருந்தான் கண்டக்டர் என்பக்கத்தில் அமர்ந்திருந்தபால்காரகிரிபண்டாவோ இரட்டை நாடி ஆசாமி. மூன்று பேர் அமர்ந்ததும் என்பாடு சிரமமாகி விட்டது. நெருக்கிப்பிடித்துக் கொண்டு ஒரு வகையாக உட்கார்ந்தோம். பஸ்ஸும் புறப்பட்டுச் சென்றது. பாதித் தூரத்திற்குக் கிட்டத்தட்ட வந்திருக்கும். எவனோ ஒருவன் சைக்கிளில் சென்றவன், சைகை காட்டிவிட்டுச் சென்றான். 'பொலிஸ்காரர்கள் இருக்கிறார்கள்' என்பதுதான் அதன் பொருள். டிரைவர் உடனே பஸ்ஸை நிறுத்திபிரயாணிகள் எல்லோரையும் உட்கார வைக்கத் தொடங்கினான். இரண்டு பேர் உட்கார வேண்டிய இடத்தில் நான்கு பேரை உட்கார வைக்கும் சிரமமான காரியத்தில் ஈடுபட்டான் கண்டக்டர். வெளிப் பார்வைக்கு ஓவர் லோடாகத் தோன்றாமலிருக்கும் என்பது அவன் எண்ணம். மீண்டும்பஸ்புறப்பட்டது.
வெளித்தோற்றத்தைக் கண்டுமயங்கிவிடுவது எங்கள் இலாகா அல்ல என்றுநிலைநாட்டுவதுபோல ஒரு இன்ஸ்பெக்டரும் ஒரு சார்ஜனும் பஸ்ஸை நிறுத்தினார்கள். நிறுத்தியதும் கான்ஸ்டபிள் ஒருவன் பிரயாணிகள் தொகையை எண்ணினான். டிரைவர் இறங்கி வெளியே இன்ஸ்பெக்டரிடம் தலையைச் சொறிந்தவாறு பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான். பஸ் நின்ற இடத்திற்கு அருகில் அரச மரம் ஓங்கி வளர்ந்திருந்தது. வயதின் முதுமையைக் காட்டுவது போல் மரம் பரந்து விசாலமாக இருந்தது. அதனைப் பொதுவாக 'தியுரும் போதி (சத்திய அரசமரம் என அழைப்பார்கள்). அவ்வூரின் சுற்றுவட்டாரங்களிலிருந்தும் இன்னும் தொலைவு தூரங்களில் இருந்தும் சத்தியம் செய்வதற்கு அங்குதான் வருவார்கள். அங்கு சத்தியம் செய்துவிட்டால் அவர்களின் சர்ச்சைகளும் பூசல்களும் அத்துடன் நின்றுவிடும். பொய்ச் சத்தியம் செய்தவன் அழிந்தே விடுவான் என்பது அவர்களது நம்பிக்கை. அந்த அரச மரத்தின் கீழுள்ள பெளத்த ஆலயந்தான் அத்தகைய சக்தி வாய்ந்ததாம் அதிலே அன்று ஆள்நடமாட்டம் அதிகமாக இருந்தது. கிராம உத்தியோகத்தேவதைகள் அங்குமிங்குமாக நடமாடின. பொலிஸ்காரர்கள், பஸ் டிரைவரிடமும் கண்டக்டரிடமும் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு அந்தக் கோவிலுக்குள்ளேயே சென்றனர். பஸ் டிரைவரும் கண்டக்டரும் டிஸ்ட்ரிட் கோர்ட் நீதிபதியே கோவிலுக்கு ஒரு வழக்கு விஷயமாக வந்திருக்கிறாராம். அதற்குக் காவலாகப் பொலிஸ்காரர்கள் வந்திருக்கிறார்கள். அவர் வருவதுமுன்னமே தெரியாது போய்விட்டது என்று வருத்தப்பட்டுக் கொண்டார்கள். மீண்டும்பஸ் புறப்பட்டுவிட்டது.
ஆமாம் நானும்மறந்துவிட்டேன். அந்தரேஸ்டிக்கட் வழக்குத் தீர்ப்பல்லவா இன்றைக்கு. நான் கூட அந்த இரண்டு பேர்களை அங்கே
கண்டேன்” என்றான் ஆசனத்தில் நகர்ந்துகொண்டே கிரிபண்டா!
காலம்
 

u/ 68uU77aj6tg27ab
கே. கணேஷ்
"அது என்ன ரேஸ்டிக்கெட் வழக்கு?" என்று ஏக காலத்தில் பல குரல்கள் கேட்டன.
"தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு தொழிலாளி, கடைக்காரன் ஒருவனிடம் இரண்டு ரூபாய் கொடுத்துக் கண்டிக்குப் போகும்பொழுது ரேஸ்டிக்கட் ஒன்று எழுதிவிட்டு வரச் சொன்னான். கடைக்காரன் தன் பெயருக்கே எழுதிவிட்டான். தற்செயலாகப் பரிசும் கிடைத்து விட்டது. தொழிலாளி அதை அறிந்து பரிசைக் கேட்டான். கடைக்காரன் வேண்டு மென்றால் இரண்டுரூபாயைத் திருப்பித்தருவதாகக் கூறினான். முடிவில் பலர் உதவியுடன் தொழிலாளி வழக்குத்தொடர்ந்தான். ஆதாரம் எல்லாம் கடைக்காரன்பக்கம் இருக்கவே தொழிலாளிதியுரும்போதியில் சத்தியம் செய்தால் போதும் என்று கூறிவிட்டான். இதுதான் விஷயம் என்று விஷயம் அறிந்தவனது கம்பீரத்தில் தனது புஷ்கோட்டை முட்டிக்கொண்டு தொந்திதெரிவதை அறிந்து கோட்டை இழுத்துவிட்டுவிட்டுக் குடுமியை முடிந்தான் பண்டா.
“ஒரு லட்சம் ரூபா கிடைக்கும் பொழுது தாராளமாய் எவனும் பொய்ச்சத்தியம் செய்வான். சத்தியத்திலெல்லாம் என்ன இருக்கிறது?" என்றேன்.
"அப்படிச்சொல்லாதீர்கள். மற்ற இடத்தில் சத்தியம் செய்வதைப் பற்றி எனக்குத் தெரியாது. இந்த அரச மரத்தில் சக்தி இருக்கத்தான் செய்கிறது” என்றார் எனக்கு எதிர் ஆசனத்தில் அமர்ந்திருந்த கடைக்காரர் ஒருவர்.
"அதர்மம் செய்பவர்கள் அழிந்து விடுவதாகக் கூறுவதெல்லாம் சுத்தப்பொய் உண்மையில் பார்க்கப்போனால், அயோக்கியனுக்கும்தில்லு முல்லுக்காரர்களுக்குந்தான் நல்ல காலமாகத் தெரிகிறது. பண்டைக் காலத்தில் ஏன் இன்றைக்குந்தான் என்ன? மக்களின் வயிற்றிலடித்துக் கொழுத்த கடைக்காரர்களுக்கும் தண்ணிரில் பாலை ஊற்றிப் பணம் பெருத்தவர்களுக்கும் என்ன வந்துவிட்டது? அவர்களெல்லாம் நன்றாய்ச் செளகரியமாய்த்தான் இருக்கிறார்கள். வீடு, வயல், தேயிலைத்தோட்டம் என்றுவாங்கிக்கொழுத்துத்தான் இருக்கிறார்கள்"என்றேன்.
பக்கத்திலமர்ந்திருந்த பண்டாவும் எதிரில் அமர்ந்திருந்த கடைக்காரரும் தங்களையே கூறியதாக நினைத்துக் கொண்டார்க ளென்பதை அவர்கள் முகம் காட்டியது.
“தம்பி, நன்மையான காரியம் செய்தால் நன்மை சம்பவிக்கும். தீமை செய்தால் தீமை கிட்டும். எதை நாம் செய்கிறோமோ அது நமது வாழ்க்கையில் பிரதிபலிக்கும். இது நமது பெளத்த மதத்தத்துவம். இது என்றும் பொய்யானதில்லை" என்று அடுத்து அமர்ந்திருந்த ஆப்பக்கடை ஆச்சி கூறினாள்.
2 இதழ் - 17 )

Page 25
“என்னவோ என் அனுபவத்தில் நன்மை செய்தவர்கள் நன்மை அடைவதையும், தீமை செய்தவர்கள் தீமை அடைவதையும் கண்டதில்லை. நடைமுறையில் எதிராகத்தான் நடக்கிறது”என்றேன்.
"உனக்கு என்ன வயதுவந்து விட்டது. மகா அனுபவஸ்தன் மாதிரிப் பேசுகிறாய். என் ஐம்பத்தைந்து வருட அனுபவத்தில் எத்தனை பெத்தனையோ பார்த்திருக்கிறேன். இந்தத்தியுரும்போதியைப் பற்றிய ஒரு சம்பவம் உண்டு. அதைத் தெரிந்த பின் நீ நம்பிக்கை அடைவாய்” என்று தாத்தா முறையான ஒருவர் என்னை நோக்கிக் கூறத் தொடங்கினார். அவர் மேல்பகுதியிலிருந்து வருகிறவர்.
“இது நடந்து இருபது முப்பது வருஷம் இருக்கும். சம்பந்தம்பிள்ளை என்பவர் பெரிய முதலாளி. நம்மூரில் முதல்முதல் கடை வைத்தவரும் அவர்தான். நல்ல தாராளமான மனசு, பலருக்கும் உதவி செய்தார். அவர்கள் தகப்பனார் தேடிய பூர்வ சொத்தான தோட்டம் இருந்தது. விலைவாசிகளும் அன்று நன்றாக விற்றது. செலவு இன்றைக்குச் செலவழிவதில் பத்தில் ஒரு பங்கு கூட ஆகாது. இன்றைக்குத்தான் பஸ் என்றும் கார் என்றும் வந்து விட்டது. தொகக்கென்று எடுத்ததற்கெல்லாம் கார். கொஞ்சத் தூரம் போக வேண்டுமென்றாலும் டவுன் பஸ்ஸுக்கு மணிக்கணக்காகக் கால் கடுக்க நிற்பார்களே ஒழிய நடக்க மாட்டார்கள். அப்பொழுதோ இந்தத் துரமெல்லாம் காலாலேதான் நடந்து தீர்ப்போம்.
இன்றைக்குத்தான் நன்றாகப் பளபளவென்ற கருத்த ரோட்டிலே லொறிகளில் சாமான்களைக் கொண்டு வருகிறார்கள். அப்பொழுதெல்லாம் பொதிமாட்டின் மேல்தான் கொண்டுவருவதுவழக்கம் ஒடமறந்து விட்டேனே, எதையோ சொல்லிக் கொண்டு வருகிறேனே. வந்து. வந்து. ஆமாம் சம்பந்தம்பிள்ளைக்குச் செலவுமிகக் குறைவு ஆனால் வருமானம் நிறைய வந்தது. எனவே நல்ல மிச்சம். அவருக்கு ஒரு அண்ணன் இருந்தார். அவர் பெயர் சிங்காரம்பிள்ளை. அவர் இந்தியாவிலுள்ள சொத்துக்களைப் பார்த்துக் கொள்வார். பூர்விகச் சொத்துக்களின் வருமானத்தை இருவரும் பிரித்துக் கொள்வார்கள். இப்படியாகச் சிறிது காலம் நடைபெற்றது. உள்ளுர்க் கடையில் நல்ல னபமென்றவுடன் மேலும் பணம் சம்பாதிக்க ஆசை ஏற்பட்டு விட்டது. பணம் இருக்கிறதே அதுவும் கஞ்சா, அபின் போன்ற ஒரு போதை வஸ்துதான். மேலும் மேலும்சம்பாதிக்க ஆசைஏற்படுகிறதே ஒழிய, போதும் என்று ஒரு எல்லை ஏற்படுவதில்லை.
கொழும்பிலுள்ள எவனோ ஒரு சினேகிதன், பலசரக்கு மொத்த வியாபாரம் தொடங்கினால், நல்ல மிச்சம் என்று கூறினான். தூத்துக்குடி மிளகாயை, தூத்துக்குடியிலிருந்தும், பெல்லாரி வெங்காயத்தை பெல்லாரியிலிருந்தும், நேரே வரவழைத்தால் கொள்ளை லாபம் கிடைக்கும் என்றும் எடுத்துக்காட்டினான். சம்பந்தம்பிள்ளையும்ஒருகூட்டாளி ஆகித் தொழிலை ஆரம்பித்தார். தொழில் கொஞ்சக்காலம் நன்றாகத்தான் நடந்தது. அதில் வேலை செய்த தெக்கித்திச்சீமைப்பயல் ஒருவன், பெருச்சாளி மாதிரிச் சுரண்ட ஆரம்பித்து விட்டான். பெரும் நஷ்டம் ஏற்படத் தொடங்கி விட்டது. கொழும்பு போய்வந்த சிலர், இதனைச் சம்பந்தம்பிள்ளையிடம் கூறி, எச்சரித்து வைத்தார்கள். கிராமத்துக் கடையில் டாடு என்று ஏதோ பொட்டை அதிகாரம் செய்யமுடியுமே ஒழிய கொழும்பில் போய் இவரால் என்ன செய்ய முடியும்? பொதுவாக, அவர் கடை கொழும்பில் எந்தத் தெருவில் இருக்கிறது என்று அவரைக் கேட்டாலேசரியாகச்சொல்லமுடியாது என்றைக்கோளப்பொழுதோ அங்கு
( காலம்

கஜகஸ்தான் புகழ்மிக்க ஒவியர் 'ஜாசிரோவ் கைர் பாய் வரைந்த கே. கணேஷ் அவர்களின் படம்.
போய்விட்டு புதுமை வீடு, துறைமுகம், மிருகக்காட்சிச் சாலை என்பவற்றைப் பார்த்ததோடு தன்னுடைய கடையையும் பார்த்துவிட்டு வந்தார். அவ்வளவுதான். கடையில் நஷ்டம் ஏற்பட்டால் கடைக்குக் கடன் கொடுத்தவர்கள் எந்தப்பங்காளியிடமும் வசூல் செய்யலாம் என்று சட்டம் இருக்கிறது என்று ஒருவன் கூறினான். உடனே முன்னெச் சரிக்கையாகத் தனது பாகமாக இலங்கை இந்தியச் சொத்தை எல்லாம் சுத்தக் கிரயமாக அண்ணன் பேருக்கே எழுதிவைத்தார்.
எதிர் பார்த்தபடி கொழும்புக் கடை நொடித்து விட்டது. கடன் கொடுத்தவர்களும் சம்பந்தம்பிள்ளையின் சொத்தை ஜப்தி செய்ய முயன்றார்கள்.அவர் பெயரில் சொத்து இல்லை என்றறிந்ததும் சும்மா இருந்து விட்டார்கள். கடன்காரர் களிடமிருந்து சொத்துக் காப்பாற்றப்பட்டது. ஆனால் அண்ணனிடமிருந்து சொத்தைக் காப்பாற்ற முடியவில்லை. சொத்தெல்லாம்தன் பெயருக்கிருக்கவும் சிங்காரம்பிள்ளை முழுதும் தனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடித் தம்பியையும் தம்பியின் மகனையும் வீட்டை விட்டுத் துரத்தி விட்டார். சம்பந்தம்பிள்ளை வழக்குத் தொடர்ந்தார். ருசு இல்லாத பொழுது வழக்கு என்ன செய்யும் முடிவில் சத்திய போதியில் சத்தியம் செய்து விட்டால் போதுமென்றார். அதன்படி அந்தப் படுபாவி சிங்காரமும் கூசாமல் சத்தியம் செய்தே விட்டான்.
சம்பந்தம்பிள்ளை மனமுடையந்தவராய் இந்தியாவிற்குப் போய்
மாமனார் வீட்டில் ஒட்டுக்குடித்தனம் நடத்தினார். அதேமனவருத்தத்தால் வியாதி வாய்ப்பட்டு விரைவில் மாண்டுவிட்டார். மகன் சுந்தரம்
இதழ் - 17 )

Page 26
அனாதையாகிவிட்டான். ஊரில் மாடு ஒட்டிக் கொண்டு வயிறு பார்த்து வந்தான். பின்னர் சிலர் தயக்பால் இலங்கையில் ஒரு கடையில் போடியனாக வேலை கிடைத்தது.
பணம் கிடைத்தால் பத்தும் கிடைக்கத்தான் செய்கிறது. பவிசும் பெருமையும் எங்கிருந்துதான் வருபோ? சிங்காம்பிள்ளையின் சோத்தும் மதிப்பும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தன. சொல்லி வைத்தாற்போல் தேயிலைக் கூப்பன் 4ற்படுத்தினார்கள், பனம் பனபாகக் காய்த்துத் தள்ளியது. சிங்காரம்பிள்ளை வெகு விரைவில் பட்சாதிபதியாகி விட்டார். பாரோ எனரோ என்றிருந்த சிங்காரம்பிள்ளையைத் தேடிப்பெரிய மனிதன் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் சுற்றத் தொடங்கினார்கள். சர்க்கரையைக் கண்ட இடத்தில் ஈ மோய்க்கிறது. பனமுள்ள இடத்தில் பலரும் பொய்க்கிறார்கள் போசன கூறுகிறார்கள், கைகட்டி வாய் புதைக்கிறார்கள் பனந்தானே இன்று மூல மந்திரமாக இருக்கிறது. ஆமாம்பEuவிதத்திலும் பணத்தைச் சிங்காரம்பிள்ளை பேருக்கி விட்டார். கார்க்கப்பேனி என்றும் பெட்ரோல் ஷெட்டென்றும் பஸ் ஸ்தாபனங்களின் சொந்தக்காரராகி விட்டார். கொஞ்சக் காபம் இப்படி ஓடியது. பாதொரு குறையுமின்றி, நவீன பயயான பங்களாவில் சுகமாகக் குடும்பத்துடன்
வாழ்க்கை நடத்தி வந்தார் சிங்காரம்."
"பங்கு முறிந்து விட்டது: பிஸ்னஸ் முறிந்து விட்டது என்று யாராவது கூறப்போகிறீர்கள்" என்றேன் அவசாக் குடுக்கையாகிய நான்
"அதெல்லாம் இல்வைதம்பி முறிந்தது வேறு விஷயம் அதற்குள் என் அவசரப்படுகிறாய்? கொஞ்சம் பொறுமையுடன் கேளேன். காடு முரடாக இருந்த ரோடெல்லாவற்றையும் நேராக்கிாேடு போட்டார்கள், சிங்காம்பிள்ளை கார்சுடட வாங்கி விட்டார். அந்தக் காபத்தில் கார் என்பதை நமது பகுதியில் அபூர்வமாகத்தான் பார்ப்பார்கள். பாராவது உத்யோகஸ்தர்கள்தான் வாங்குவது வழக்கம் இன்றைக்குத்தான் கார் தண்:aர் பட்ட பாடுபடுகிறதே. அப்படி ஆபூர்வமான சமயத்தில் கார் வைத்திருந்தார். ஒருநாள் குடும்ப சமேதராகக் கண்டியில் பெரஹரா
உக்ரேனியக் கவிஞர் பிறப்பிடத்தில் டாக்டர்
பூர்ணிகாவுடன்
ai, T sul Ĥi
 
 
 
 

பார்த்துவிட்டு சிங்காரம் வந்து கொண்டிருந்தார். பெரும் வழியில்தான் சத்திய போதி இருந்தது. பாரேன் அதிசயத்தை சிறிது நேரத்துக்கு முன்னால் யாதொரு பின்னமுமில்லாமலிருந்த அந்த அரசமரத்தின் கிராயொன்று அவர்கள் காரில் திடீரென விழுந்து சிங்காரத்தின் குடும்பத்தைக் கூண்டோடு கைலாசத்திற்கு அனுப்பிவிட்டது. கோர்ட்டும் சமூகமும் தண்டிக்க முடியாத மனிதக்கான அந்தச் சத்திய போதி மரமே தண்டித்துவிட்டது. மேலும் அதிசயம் தெரியுமா? ஆக்காரின் டி3வருக்கு ஒரு சின்னச் சேதமாவது இருக்க வேண்டுமே கொஞ்ச நேரம் மயக்கம் போட்டிருந்தான். அவ்வளவுதான். ஆனால் காரும் சிங்காரம்பிள்ளையும் குடும்பந்தாரும் சட்டி : சிங்காரம்பிள்ளை மாண்ட செய்தி சுந்தரத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. தந்தி கிடைத்த இரவு ஒரு பள்ளிக்கு சுந்தாம் என்ன செய்துகொண்டிருந்தான் தெரியுமா? புடவைக் கடையில் புடEவ அடுக்கிக் கொண்டிருந்தான். இரவு ஒரு மணிக்கா ஷாப்புச் சட்டமாச்சே என்கிறாயா? அதெல்லாம் ஏட்டிலேதானே கதவடைத்த பிறகு உள்ள நடப்பது சிப்பந்திகளுக்குத் தானே தெரியும்? முடியாது என்றால்தான் பயிற்றிலடி என்ன செய்வது சிவனே என்று செய்ய வேண்டியதுதானே. இதை "தற்காகச் சொன்னேனென்றால் அவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான் சுந்தரம் என்பதற் காகத்தான். சிங்காரம்பிள்ளையின் குடும்பத்தில் ஒருவரும் மிஞ்சவில்லையாதலாலும் அடுத்த வாரிசு கந்தரமானதாலம் சொத்தெல்லாம் அவனுக்கே சேர்ந்தது. இதுதான் என்றைக்கிருந்தாலும் தருமம் வெல்லும் என்பது" என்று முடித்தார்.
"வில்லம்பை விடச் சொல்லம்பு கொடுமையானது என்று கம்பர் சொன்னாரல்லவா? அவர் போய்ச் சொல்லால் பாண்டியன் குலம் கெட்டதைப்போல் சிங்காரம்பிள்ளையின் குலமும் சாம்பாறாய்ப் போயிற்று போலும்" என்று தமது தமிழறிவைக் காட்டினார் சென்ட்ால் ஸ்கூல் போத்தியார் சிவஞானம்பிள்ளை.
"கதை நன் றாயிருக்கிறது" என்றேன் நான்.
"கதை இல்லையடா நிஜமாக நடந்தது" என்றார் அவர்,

Page 27
GNOMD GNUuD “ó°ሪጢs அவுறு
தேயிலை ஏற்றுமதி வணிகர்கள் தேயிலைத் தூளைத் தரம் பிரித்து தேர்ந்தெடுக்கச் சுவைஞர்களை (TeaTasters) அமர்த்தியிருப்பார்கள். இவர்கள் தொழில், விற்பனைக்கு வரும் தேயிலைகளின் சுவையறிந்து
மொழிபெயர்ப்பாளனும் சுவைபார்த்துத் தான் படித்தவரைப்பதம் பார்த்து'யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக என எண்ணித் தான் தரமானது எனக் கருதுவனவற்றைத் தன் மொழியில் ஆக்கித்தர முயல்கின்றான்.
ஆக்கல் இலக்கிய ஆக்கியோனை விட மொழிபெயர்ப்பாளன் பணிபலவகையில் சிக்கலான தொண்டாகும். சிறுகதை,நடப்புச்சித்திரம், நவீனம் ஆகிய துறைகளில் உலகப் புகழ்பெற்றவரும்,நோபல் பரிசுக்காக, பரிந்துரை செய்யப்பட்டவரும், மக்சயயா விருது பெற்றவருமான ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனை நாம் நாற்பது ஆண்டுகட்கு முன் நேரிற் கண்டு அளவளாவியபொழுது தமிழகத்துச் சிறுகதை எழுத்தாளர் குறித்துத் தெரிவித்த சிறு குறிப்பு நெஞ்சிலே பதிந்துள்ளது. S
“வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு எச்சி தெறிக்க ஏன் சார், என்னுடைய . தலைப்புள்ள சிறு கதையைப்படித்தீர்களா?-'அந்தப்பாத்திரப்படைப்புஎப்படி? அதுதணி அமைப்புசார் தமிழுக்கே புதுமுயற்சி.என்றெல்லாம் தன் படைப்புக் குறித்தே சுய புராணம் படிப்பார்களேயன்றி, மற்றையவர்கள் குறித்து அறியாமையோ, அறிந்து கொள்ள மறுத்துநிலையோதான் நிலவுகிறது. சிறுகதை எழுதுவது என்பது அப்படியொன்றும் பெரிய முயற்சியல்ல. ஆழ்ந்து அமர்ந்து முயன்றால் அரைமணிநேரத்தில் ஆகக்கூடியது"
மொழி பெயர்ப்புப் பணியோ இங்ங்ணம் கால நேரத்துக்குள் அமையக்கூடியதன்று. மொழி பெயர்ப்பாளன், மொழிபெயர்க்கும் - மொழிபெயர்க்கப்படும் இரு மொழிகளிலும் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தவிரவும் நாட்டு மொழிமரபுகள்; வரலாறு, சமூக அமைப்பு இயல் அனைத்திலும் ஒரளவேனும் அறிமுகமானவராக இருத்தல் வேண்டும். இவற்றைப்பெறபல நூற்களில் பயிற்சியும் பல மக்களிடையே பெற்ற பயிற்சி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கில வல்லரசு நம்மவர்கட்கு இழைத்த குறைபாடுகள் பல இருக்க, நமக்குவிட்டுச் சென்ற நன்மைகள் சில வாணிபஇயல்நிர்வாக அமைப்பு, நடுநிலைமை, கடமை உணர்வு, இப்படிச் சில. தவிரவும் ஷேக்ஸ்பியரையும் அவரது மொழியையும் நமக்கு அளித்துதவினார்கள். உலகமெல்லாம் பரவிய அவர்களது மொழியின் மூலமாக வெளிவந்த அறிவியல், நுண்கலை, இலக்கியம் போன்ற பல்துறை நூற்களும் பன்மொழிகளில் ஆக்கப்பட்டு பல நாட்டினர் பயனடைந்தனர். பல நாட்டவர்களின் சீரியபடைப்புகள் பலருக்கு அறிமுகமாகும் வாய்ப்பினை நல்கியது. இவ்வாங்கிலமொழியின் துணையினாலேயேநம்நாடுகளிலும் ( காலம்

ர்ப்புக் கலை
12uisa56
கே. கணேஷ்
பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் வரத் தலைப்பட்டன. சில சமயங்களில் மேலை நாட்டு உடை மாறி உள்நாட்டு வேட்டி சட்டை அணிந்து வந்ததுமுண்டு. புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எட்கார் வாலசையும் அகதா கிரிஸ்டியையும் உருமாற்றினர். ஷெர்லாக்ஹோம்ஸ் துப்பறியும் துரைசாமி ஆனார். மாப்பசானின் அட்டிகை சிறுகதை தமிழகத்து அக்கிரகாரத்திற்குள் புகுந்தது. ஜெரோம் கே ஜெரோம், ஓ ஹென்றி பாத்திரங்கள் உருமாறின. எனினும் பி. எஸ். ராமையா சிட்டி நடத்திய மணிக்கொடி தோன்றியதும் இப்பம்மாத்துக்கள் மாறி பல வெளிநாட்டுப் படைப்புகள் தமிழாக்கம் பெறுவதில் மதிப்பைப் பெற்றன. மொழி பெயர்ப்புக்கும் ஒரு அந்தஸ்து தோன்றியது. கலா ரசிகன் சொ. விருத்தாச்சலமான புதுமைப்பித்தன்' போன்றவர்கள் மேலை நாட்டு இலக்கியங்களையும் புரசு பாலகிருஷ்ணன்,திஜர. அ.கி.ஜெயராமன்,கு. அழகிரிசாமி,தா.நா.குமாரசுவாமி, ப. ராமசாமி போன்றோர் முன்னணியில் நின்றனர். சிதம்பரரகுநாதன்ரஷ்ய இலக்கியங்களையும் கவிதைகளையும் உயர்ந்த முறையில் தமிழ்ப்படுத்தினார்.
இலங்கையில் சிறிது காலம் வீரகேசரியில் ஆசிரிய பீடத்தில் இருந்த எச். நல்லையா சிறிது காலம் இல்லாதிருந்த இடைக்காலத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்த வ.ரா அவர்கள், இலங்கைTimes ofCyelon (டைம்ஸ் ஒஃப் சிலோன்) பண்டித நேருவின் தன் வரலாற்றினை வெளியிடப் பதிப்புரிமை பெற்றிருந்தது. எனவே வீரகேசரி அவர்களின் மூலம் உரிமை பெற்று நாளேட்டில் நாளும் தொடர்ச்சியாக வெளிவரும் வண்ணம் சிறப்பாக மொழிபெயர்த்து வெளியிட்டார்.
இதேபோல பன்மொழி வழங்கும் இந்தியநாட்டிலும் தெலுங்கு, மலையாளம்,இந்தி,வங்காளம்,கன்னடம் போன்ற மொழிகளில் தோன்றிய படைப்புகளும் தமிழில் தோன்றவும் இறவாத புகழுடைய தமிழ் நூல்கள் அவ்வம்மொழிகளில் தோன்றவும் ஆங்கில மொழி கருவியாகவிருந்தது. திருக்குறள், திருவாசகம் போன்ற தமிழ் உயர் இலக்கியங்களின் பெருமையும் ஜி.யு.போப்மொழிபெயர்த்துவெளிநாட்டவர் புகழ்ந்தபின்னரே தமிழர்களின் கண்ணும் திறக்கத்தொடங்கின. அயர்லாந்துக் கவிஞரான (W.B.Yeats)ஈட்ஸ் தாகூரை ஆங்கிலத்தில்மொழி பெயர்த்து நோபெல் பரிசுக்கு முன்மொழிந்து பெற்றுத்தந்தபின்னரே வங்காளிகளும் அவரை ஆகூ எனப் புகழத் தொடங்கினர்.
இத்தாலியரானமறைந்ததந்தைபெஸ்கியானவீரமாமுனிவர்தமிழ்ப் பணியாலும் வின்ஸ்லோ போன்ற மேலை நாட்டு சமய குரவர்களின் தாக்கத்தாலும் தமிழில் வசனநடை வந்துற்றது. ஆறுமுக நாவலர், வடலூர் இராமலிங்க வள்ளலார், வேதநாயகம்பிள்ளை, உ. வே. சாமிநாத ஐயர், மறைமலைஅடிகள்,திரு.வி.கல்யாணசுந்தரமுதலியார்(திருவிக)தமிழிலே உரைநடையினை உரம்பெறச் செய்தனர். ஆங்கிலப்படிப்பின் காரணமாக ஷேக்ஸ்பியர், மில்டன்,வாட்ஸ்வர்த், ஷெல்லி, பைரன் போன்ற புலவர்களின் ஆக்கங்களும் நவீனத்துறையில் முன்னின்ற சார்ல்ஸ்டிக்கன்ஸ், வோல்டர் ஸ்கொட்பிரெஞ்சுஎழுத்தாளர்கள் அலெக்சாண்டர்டுமாஸ்,விக்தர்ஹ்யூகோ, ருஷ்யமேதைலியேதோல்ஸ் தோய, அன்டன்செகோவ்தொஸ் தொவ்ஸ்கி
25 இதழ் - 17 )

Page 28
புலவர்களின் ஆக்கங்களும் நவீனத்துறையில் முன்னின்ற சார்ல்ஸ் டிக்கன்ஸ், வோல்டர் ஸ்கொட் பிரெஞ்சு எழுத்தாளர்கள் அலெக்சாண்டர் டூமாஸ், விக்தர் ஹ்யூகோ, ருஷ்ய மேதை லியேதோல்ஸ் தோய, அன்டன் செகோவ், தொஸ் தொவ்ஸ்கி போன்றோரின் படைப்புக்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளும் தமிழில் நவீனம் என்ற புனைகதைத் துறையை உருவாக்க உதவின.
இங்ங்னமாக ஆங்கிலத்தின் சாயலில் வளர்ந்த தமிழ் உரைநடையில் மொழி பெயர்க்கும் பொழுது இரு நாட்டு மரபுகளறியாமையால் தமிழாக்கங்களில் சில வேடிக்கைகள் நிகழ்வதுண்டு. twin the table போன்றவற்றை மேசையைத் திருப்பு என்பதாகவும் வந்ததுண்டு.
இடையே ஒரு மிளகாய்ப் புராணம், அறுசுவையில் ஒன்றான காரச் சுவைக்காக நம் மூதாதையர்கள் மிளகாயையே பயன்படுத்தினர். நாட்டில் விளைந்த பயிர் அது. தவிரவும் யவனம், மிசிரம் எனப் பிறநாட்டு வணிகர்கள் கொள்முதல் செய்தனர். இவை மலபார் என வழங்கிய மலையாளமான தற்பொழுதைய இந்திய கேரள நாட்டின் துறைமுகமான கொச்சியில் ஏற்றுமதி, இறக்குமதிகள் நடந்தன. சோனகர்கட்கும் போட்டியாகக் கடல் வாணிபத்தில் போர்த்துக்கீசியர் தென்னமெரிக்க நாடாம் லத்தீன் அமெரிக்கா என வழங்கப்படும் கண்டத்தின் பகுதியை ஆட்சி செய்த பொழுது அப்பகுதிப் பொருள்கட்குப் பண்டமாற்றுப் பெற்றுச் சென்றனர். அங்ங்ணம் தென்னமெரிக்க நாடான சிலி (Chile) யிலிருந்து கொச்சியில் இறக்கியதால் கொச்சிக்காய் ஆகியது. ஆங்கிலத்தில் Chili மேலைநாடுகளில் Pepperபெப்பர் எனப் பொதுப் பெயர் பெற்றது. மிளகு அந்நாடுகளில் இறக்குமதியானதும் கருப்பு நிறத்தினதாயுள்ள இவை Black Pepper எனவும் பச்சைமிளகாய் Green Pepper TRT6th Ug55606), Red Pepper TGTogh 6 grid வந்தனர். நம்மவர் இவற்றை மிளகு+காய்: மிளகாய் ஆக்கியதுபோல தோல் நீக்கப்பட்ட மிளகு, White Pepper என விளங்கியது. இவை மிளகு மிளகாய்களின் வரலாற்றுக் கூறுகள்.
இவ்வாறிருக்க அண்மையில் வெளி வந்த மொழி பெயர்ப்பில் Red Pepper என்பதை சிகப்பு மிளகு என்று தமிழாக்கி விட்டார்கள். மிளகாய் என்று குறிப்பிட்டு வாசகர்களின் எண்ணத்தில் குழப்பத்தை தோற்றுவிக்காதிருந்திருக்கலாம்.
மேல் நாட்டவர்க்கு விளக்கமாகத் தலைப்பாகையை வர்ணித்த முல்க்ராஜ் ஆனந்த் தமது தீண்டாதான் நூலில் பல அடி நீளமிக்க துணியை இத்தனை புரிமடித்துச் சுற்றிச் சொருக வேண்டும் என விரிவாக எழுதியிருந்தார். நம்மவர்க்கு இதனை மொழிபெயர்க்கும் பொழுது தலைப்பாகை அணிந்திருந்தான் என்றால் போதுமானதல்லவா?
இவ்விதமான சந்தர்ப்பங்களில் மொழி பெயர்ப்பாளன் தன் யுக்தியைப் பயன்படுத்த வேண்டும்.
இதேபோன்று சமூக இயல் வரலாறு போன்றவற்றில் மொழிபெயர்ப்பாளன் உணர்ந்திருக்க வேண்டிய நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சீன நாட்டில் ஆடவர்கள் நம்மவர்கள் கொண்டை வளர்த்தது போல் சடை போட்டிருந்தனர், கொண்டை கர்நாடகமாக கருதப்பட்டதுபோல் புதுமைக் கருத்துக்கள் தோன்றிய காலத்தில் சடை
C காலம் A

வளர்த்தவர்கள் பழைமை வாதிகளாகக் கருதப்பட்டனர். 1911ல் தோன்றிய புரட்சிக்கு முற்பட்ட காலங்களில் சடை வளர்ப்பவர்கள் பிற்போக்கு வாதிகளாகக் கருதப்பட்டனர்; முடியாட்சியை ஆதரிப்பவர்களாகக் கருதப்பட்டனர். சடையை அகற்றியவர்கள் குடியாட்சியைப் போற்றுபவர்களாக இருந்தனர். இத்தகைய சின்னமான சடை ஆங்கிலத்தில் PigTai என்று வழங்கப்பட்டது. இதை பன்றிவால் என மொழி பெயர்த்தனர் சிலர். உண்மையில் இம்முடிமாற்றத் தத்துவத்தை உணர்ந்து மொழி பெயர்ப்பாளன் தன் வாசகர்கட்கு உணர்த்தும் தன்மை பெற வரலாறு அறிந்திருத்தல் வேண்டும்.
மேல் நாட்டு மரபுச் சொற்களை மரபு வழியறியாது நேரடியாக மொழிபெயர்க்கும் பொழுது வேடிக்கையாக அமைந்துவிடலாம். அர்த்தத்தை அனர்த்தமாக்கி விடுவதுமுண்டு. ‘Go to Hel1!’ என்பதைத் தமிழ்ப்படுத்திய ஒருவர் நரகத்திற்குப் போ!' என்று தமிழ்ப்படுத்தியிருந்தார். தொலைந்து போ!'நாசமாகப் போக'என்பன போன்று மொழிபெயர்த்திருந்தால் நம் மரபை ஒட்டியதாக இருந்திருக்கும். தவிரவும், ஆங்கிலத்தில் Uncle, Cousin என்பன தாய்வழி, தந்தைவழி உறவினர்களை வேறு வேறு உணர்த்துபவை அல்ல. இந்தியப் பண்பாட்டை உணர்த்தும் நெடுங்கதை மொழிபெயர்ப்பில் தன் உடன்பிறந்தவரின் மகனை அதாவது சிற்றப்பன் தன் அண்ணன் மகனை அழைத்துச் செல்லும் பொழுது சில தாயைக் குறிக்கும்வகைச் சொற்களை உதிர்க்கிறான். அவனை Uncle என்றே மூலத்தில் குறிப்பிட்டதால் மாமன் என்றே மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார். உண்மையில் மாமன் அவ்வாறு கூறான், அவ்விடத்தில் ஒரு சிற்றப்பனோ பெரியப்பனோதான் கூறுமுடியும். இத்தகைய நம் மரபுகளையும் நோக்கி வெறும் நேரடியாகச் செய்யாது இடம் பொருள் ஏவல் அறிந்து கையாள வேண்டி வரும்.
இங்ங்ணம் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து உருமாறி உடை மாறி உணர்வுகளை ஒருமைப்பட உணர்த்தி மூல ஆசிரியரின் கருத்தைக் கற்புநிலை மாறாது காப்பாற்ற வேண்டிய கடமை உணர்வுள்ளவனாக மொழிபெயர்ப்பாளன் இருக்க வேண்டும். இத்தகைய மாற்றப்போக்கில் நாடு. பண்பாடு இவற்றிற்கு ஏற்ப உணர்த்தவேண்டிய நிலை தோன்றும். வால்மீகியின் சக்கரவர்த்தி திருமகன்காவியத்தின் மிதிலைக் காட்சி கம்பனின் கைவண்ணத்தால் தமிழகத்து அகத்துறை மரபின் வழி இன்பச் சுவையை ஊட்டுகிறது.
பாரசீகக் கவிஞரான உமர்கயாமின் ருபாயத்துகள் ஆங்கிலேயப் புலவனான எட்வர்ட் ஃபிட்ஸ் ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பால் உலகத்துக்கு அறிமுகமாகின.
A book of verse underneath the bough A Jug of wine, a loaf of bread and thou Beside me singing in the wilderness O widerness were paradise enow.
என்ற வரிகள் ஆங்கில மாணவர்கள் இன்ப உணர்வுடன் உச்சரித்தவை. பாரசீக மொழியில் வல்லுனரான ஏ. ஜே. அர்பெரி (A. J. Arberry) என்ற அறிஞர் இவ்வரிகள் குறித்த மொழியாக்கம் மூல ஆசிரியரின் கற்பு நெறியினை வழுவிவிட்டதாகக் குறைகூறியிள்ளார். அவர் தந்துள்ள உரைநடைக் கவிதை மொழிபெயர்ப்பு இது :-
இதழ் - 17

Page 29
கோதுமை அளித்திடுரொட்டி ஒன்றுடன் கூடிடும் இரண்டுமிடா மதுவுடனே ஆட்டுக் குட்டியதன் தொடையும் அமைதியுறு இடத்தில் அழகிய நங்கை அமர்ந்திருக்க சுல்தானும் பெறாத சுகமன்றோ அது என்ற வகையில் அமைந்தது மூலம். எனினும் மொழிபெயர்த்த கவிஞர் ஃபிட்ஸ் ஜெரால்ட் தமது ஆங்கில ஆக்கத்தில் புத்தகத்தையும், மரநிழலையும், பாடலையும் வருவித்துக் கொண்டாரென்றும், காட்டினை வைகுந்தத்திற்கு நிகராக்கினார் எனவும் குறிப்பிட்டதுடன், மொழிபெயர்ப்பாளர் பாரசீக நாட்டுப் பழக்கத்தை ஆட்டுக்குட்டியின் தொடையைரசிப்பதை குறிப்பாக எடுத்துக்காட்டும்பகுதியைச் சேர்க்காது விட்டார் எனவும், அமைதியற்ற ஆடம்பர சுல்தானின் வாழ்க்கைக்கு அமைதி மிகுந்த காதலர் ஒதுப்பிடம் என்ற கவிதையின் அடிப்படைக் கருத்துணர்வைஎடுத்துக் காட்டவில்லை என்பதாகவும் குறிப்பிடுகின்றார்.
மொழிபெயர்ப்பு குறித்த குறைகள் பல கூறினாலும் எப்படியோ ஃபிட்ஸ்ஜெரால்ட்மொழிபெயர்ப்பின் காரணமாகவே உமர்கயாம்பாடல்கள் உலகப் புகழ்பெற்றன. இவ்வாங்கில ஆக்கத்தினின்று இவ்வரிகளைத் தவிழாக்கிய நம் இரு புலவர்களதைப்படியுங்கள்:
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு கையிற் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு தெய்வகீதம்பலவுண்டு
தெரிந்து பாடநீயுமுண்டு வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ?
எனக் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை கையில் கம்பன் கவிதை நூலைத் தமிழ்மரபுப்படிகொடுத்துள்ளார்.
ரொரண்டோவி
 

பாலபாரதிசு.து. சுப்பிரமணிய யோகியார்,
மாதவிப்பூங்கொடி நிழலில்
மணிக் கவிதை நூலொன்றும், தீதறுசெந்தேன் மதுவும்
தீங்கனியும்-பக்கத்தில் காதலிநீபாட்டிசைத்துக்
கனிவோடு கூடுவையேல் ஏதும் இனிக் கவலையில்லை,
இதுவன்றோ பரமபதம்
வாசகர்களின் கவிதை அனுபவ சுகமே இவற்றில் எவை தகுந்தவை என முடிவுதருபவை
இவ்விதமாக ஆங்கிலத்தினின்று தமிழாக்கப்படும் சொற்கள் - நேரடி மொழி பெயர்ப்புக்கள் தமிழ் மரபில் ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதுபோல் ஆய்விடுவதுமுண்டு. பழந்தமிழ்ச் சங்ககால முதல் வழிவழியாக வழங்கும் அருவி என்ற அழகிய சொல்லிருக்கWater fals என்பதன் நேர் மொழி பெயர்ப்பான நீர் வீழ்ச்சி என்ற நீண்ட சொல்லும் தமிழில் இடம் பிடித்துக்கொண்டதை நோக்குக
மொத்தத்தில் இக்கூடுவிட்டு கூடுபாயும் பணியில் யாருக்காக இலக்கியம் ஆக்கப்படுகின்றதோ அவர்களுக்கு மூல ஆசிரியரின் உட்கருத்தை மொழி பெயர்ப்பாளன் அனைவரும் புரிந்துகொள்ளும்
நடையில் சுவைபட உணர்த்துவதே பெருங்கடமையாகும்.
கத்தின் !
நேகழி டகம்)
ம், தயாரிப்பு:
ஞானம் லம்பேட்
யோக் வூர்தியேட்டர்
28 APR 2003
7 Sag - 17 D

Page 30
ஒரு பைத்தியக்க
சகோதரர்கள் இருவர் - அவர்கள் பெயரை இங்கு குறிப்பிடத் தேவையில்லை - நான். உயர்நிலைப் பள்ளியில் பயின்ற காலத்தில் எனது நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பல ஆண்டுகளாக அவர்களைப்பிரிந்து இருந்ததால் தொடர்பு விட்டுப்போயிருந்தது. சிறிது காலத்துக்கு முன் அவர்களில் ஒருவன் மிகவும் நோயுற்றிருப்பதாகக் கேள்வியுற நேர்ந்தது. எனது பழைய வீட்டிற்கு மீண்டும் செல்லவேண்டி இருந்ததால் போகும் வழியில் இறங்கி அவர்களைப் பார்த்துச் செல்ல எண்ணினேன் ஆயினும் அவர்களில் ஒருவனையே காணமுடிந்தது. நோயுற்றவன் தனக்கு இளையவன் எனக் கூறினான் இவன்.
இத்தனை தொலைவிலிருந்து எங்களைக் காண வந்ததற்காகப் பாராட்டுகிறேன். ஆனால் சில நாட்களுக்கு முன் தம்பி குணமடைந்து அரசாங்க வேலை ஏற்க வேறு ஒரு ஊருக்குப் போய் விட்டான்' என்றான். பின்னர் சிரித்தவாறே தனது தம்பியின் நாட்குறிப்புகள் இரண்டை என்னிடம் தந்து இதைப் படித்தால் அவனது பழைய நோயின் போக்கைப் புரிந்து கொள்ளலாம் என்றும், நண்பன் ஒருவனிடம் இதனைக் காட்டுவதால் ஒன்றும் தவறில்லையே என்றும் கூறினான். அந்த நாட்குறிப்புக்களை வாங்கிச் சென்று படித்துப் பார்த்ததில் இளையவன் மனப்பிராந்திக்குட்பட்டிருப்பதாகத் தெரிந்தது. எழுத்துக்கள் குழறுபட்டும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றியும் காணப்பட்டன. பல இடங்களில் கன்னாபின்னா என வரையப்பட்டிருந்தது. தவிரவும் தேதிகள் எதுவும் குறிக்கப்படவில்லை. எனவே மையின் நிற, எழுத்து வேறுபாடுகளைக் கொண்டு இவை ஒரே சமயத்தில் எழுதப்படவில்லை எனப்புலனாகியது. சில பகுதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமலும் இல்லை. அவற்றில் சில பகுதிகளை மருத்துவ ஆய்விற்குப்பயன்டுத்துவதற்காகப் பிரதிசெய்து கொண்டேன். குறிப்புகளில் இருந்த முரண்பாடுகள் எவற்றையும் நான் மாற்றவில்லை. குறிப்பிட்ட பேர்வழிகள் அனைவரும் வெளியுலகில் பிரபலமற்ற நாட்டுப்புறத்தவர்களாக இருப்பினும் அவர்களது பெயரைமட்டும் மாற்றியிருக்கிறேன். தலைப்பைப் பொறுத்த வரையில் அவன் உடல் நலமடைந்து தேர்ந்தபின் அவனே சூட்டியதுதான். அதனை நான் மாற்றவில்லை.
இன்றிரவு நிலா மிகுந்த ஒளியுடன் காட்சியளிக்கின்றது.
முப்பது ஆண்டுகளாக அதை நான் கவனித்ததில்லை.
எனவே அதை நோக்கியதும் என்றுமில்லாத உற்சாகம் தோன்றியது. கடந்த முப்பது ஆண்டுகளாக நான் இருளில் ஆழ்ந்திருந்ததை உணரத்தொடங்குகிறேன்; எனினும் நான் இப்போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இல்லாவிடில் ஏன் அந்த செள வீட்டு நாய் என்னையே இரண்டுமுறை பார்க்க வேண்டும்.
எனது அச்சத்திற்கு காரணம் இருக்கிறது.
C காலம்

ITT6oflsöt
குறிப்புகள்
இன்றிரவு நிலவே இல்லை. இது எதற்கோ நல்லதற்கில்லை எனத் தோன்றுகிறது. இன்று காலை எச்சரிக்கையுடன் வெளியே சென்ற பொழுது திரு. செளவின் பார்வையில் ஏதோ விசித்திரம் தென்பட்டது. என்னைக் கண்டு அவர் அச்சமுற்றது போலவும் தோன்றியது. அங்கிருந்து மற்ற ஏழெட்டுப் பேர்வழிகளும் என்னைக் குறித்தே குசுகுசுத்துப் பேசுவது போலிருந்தது. நான் அவர்களைப் பார்த்துவிடுவேனோ என அவர்கள் அஞ்சுவதாகத் தோன்றியது. நான் கடந்து சென்ற பலரும் அப்படித்தானிருந்தனர். அவர்களில் குரூரமானவன் என்னைப் பார்த்து இளித்தான். அவர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டார்கள் என்ற உணர்வு தோன்றவே தலை முதல் கால் வரை உதறலெடுத்தது.
எனினும் நான் அச்சமின்றி வழிநடந்து சென்றேன். எனழுன் நின்ற குழந்தைகளின் கூட்டம்கூட என்னைப்பற்றிப் பேசுவதாகத் தோன்றியது. அவர்கள் கண்களின் பார்வை கூட செளவின் பார்வைபோல்தான் இருந்தது. அவர்களது முகங்களும் பயங்கரமாக வெளுத்திருந்தன. இச்சிறுவர்கள் என்மீது வஞ்சினம் கொண்டு இங்ங்ணம் நடந்து கொள்ளும் வகையில் நான் என்ன குற்றம் செய்தேன் என அறியேன். “என்ன குற்றம் செய்தேன் சொல்லுங்கள்” என என்னையறியாது கேட்கிறேன். ஆனால் அவர்களோ ஒடி விடுகின்றனர்.
என்மீது திரு. செள ஆத்திரப்படும்படி நான் என்ன கெடுதல் செய்தேன் என எனக்கே புரியவில்லை. தெருவில் நடமாடும் மக்கள் கூட என்மேல் ஏன் கோபம் கொள்ள வேண்டும்? ஏதோ இருபது ஆண்டுகளுக்கு முன்னர் திரு. குசியூவின்* பழங்கணக்குப் புத்தகத்தை மிதித்ததையும் அதனால் அவர் என் மீது வெறுப்புற்றார் என்பதையும் தவிர நான் எதுவும் குற்றம் புரிந்ததாக நினைவில்லை. திரு. செளவிற்கு அவரைத் தெரியாது. இருந்தாலும் இச்சம்பவம் அவர் காதில் விழுந்து சாலையில் செல்லும் மனிதர்களுடன் சேர்ந்து கொண்டு சதியாலோசனை செய்து என்னைப்பழிவாங்க எண்ணுகிறார் போலும். இந்தச் சிறுவர்களுக்கு என்ன வந்தது? அந்தக் காலத்தில் இவர்கள் பிறக்கக்கூட இல்லையே? அங்ங்ணமிருக்க அவர்கள் ஏன் இப்படி இன்று என்னைக் கண்டு அச்சப்படுவது போலவும் என்னைக் கொலை செய்ய விரும்புபவர்கள் போலவும் விசித்திரமாக நடந்துகொள்ள வேண்டும்? உண்மையில் எனக்கு இதெல்லாம் பயமாகவே இருக்கிறது.
ஆமாம், எனக்குப்புரிகிறது. இவர்கள் தங்கள் பெற்றோர்கள் மூலம் அதனைக் கேள்விப்பட்டிருக்கலாம்
* கு சியு என்பதற்குச் சீன மொழியில் "பழங்காலம்' என்று பொருள். சீனத்தில் நிலவிய நிலமான்ய ஒடுக்கு முறையின் நெடுங்கால வரலாற்றையே லூசுன் குறிப்பிடுகிறார்.
28 6a-17

Page 31
I
எனக்கு இரவில் தூங்க முடிவதில்லை. ஒன்றைப் புரிந்து கொள்வதாக இருந்தால் அதைப்பற்றி ஆழ்ந்து ஆராய வேண்டும்.
நீதிபதியின் கெடுபிடிக்கு உள்ளானவர்கள், உள்ளூர் பெருந்தனக்காரர்களிடம் அறை வாங்கியவர்கள், காவலாளர்களால் அழைத்துச் செல்லப்பட்ட பெண்களின் கணவர்கள், கடன்காரர்களின் தொல்லைகளின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்த பெற்றோர்களை உடையவர்கள்-இந்த மக்களிடம் நேற்று ஏற்பட்ட பீதியும், ஆத்திரமும் அச்சம்பவங்கள் நடந்த காலத்தே அவர்களிடம் ஏற்பட்டதைக் காட்டிலும் அதிகம்.
எல்லாவற்றையும்விட வ்ேடிக்கை என்னவென்றால் தெருவில் சென்ற பெண்ணொருத்தி தன் மகனை மொத்தி, “குட்டிப்பிசாசே எனது ஆத்திரம் தீர உன்னை வாய்நிறைய கடித்துத் தின்றுவிடலாமென்று தோன்றுகிறது”என்று கூறியவாறு என்னையே நோக்கினாள். நான் திடுக்குற்றுத் தடுமாறினேன். அப்போது அந்தக் குரூர முகம்படைத்த கோரப்பல் கொண்ட மக்கள் அனைவரும் வெறித்தனமாகச் சிரித்தனர். சென் பெரியவர் முன்னே வந்து என்னை வீட்டுக்கு இழுத்துச் சென்றார்.
அவர் வீட்டுக்கு இழுத்துச் சென்றார். வீட்டிலுள்ளவர்களும் என்னை முன்பின் அறியாதவர்கள் போல காட்டிக் கொண்டார்கள். அவர்களின் கண்களும் மற்றவர்களது போலவே இருந்தன. நான் படிக்கும் அறைக்குள் நுழைந்ததும், ஏதோ கோழிக்குஞ்சையோ வாத்தையோ அடைப்பது போல் வெளியில் கதவை அடைத்துவிட்டனர். இந்நிகழ்ச்சி என்னை மேலும் அதிர்ச்சியுறச் செய்தது.
சிலநாட்களுக்குமுன் ஓநாய்க்குட்டிகிராமத்திலிருந்து எங்கள் குத்தகைக்காரர் ஒருவர் விளைச்சல் பாதிப்பைப்பற்றி அறிவிப்பதற்காக வந்தவர், என் அண்ணனிடம் தங்கள் கிராமத்தின் பெயர்போன போக்கிரி அடித்துக் கொல்லப்பட்டானெனவும், சிலர் உடனே அவனது இதயத்தையும் ஈரலையும் எடுத்து எண்ணெயில் வறுத்துத் தங்கள் தைரியத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகத் தின்றார்கள் எனவும் கூறினார். நான் இடைமறித்து விசாரித்ததும் குத்தகைக்காரரும் அண்ணனும் என்னை வெறித்துப் பார்த்தார்கள். அன்று அவர்களது, கண்களின் தோற்றம், இன்று வெளியிலிருந்தவர்களைப் போலவே இருந்தன என்பதை உணர்ந்தேன்.
இதனை எண்ணும்பொழுது உச்சிமுதல் உள்ளங் கால்வரை உதறல் எடுக்கிறது.
மனிதர்களைத்தின்னும் இவர்கள் என்னையும் தின்பார்கள்.
'உன்னை வாய்நிறையக் கடித்துத்தின்பேன்’ என்ற பெண்ணும், அந்தக் குரூர முகமும் கோரப் பற்களும் கொண்டவர்களும், குத்தகைக்காரர் குறிப்பிட்ட கதையும் நிச்சயமாக ஏதோ இரகசியச் சமிக்ஞையாகத் தோன்றுகின்றன. அவர்களது பேச்சில் நஞ்சு தோய்ந்திருப்பதையும், அவர்களது நகைப்பில் கொடிய வாள் முனைகளையும் காண்கின்றேன். அவர்களின்பற்கள் பளபளக்கின்றன; அனைவருமே மனிதனைத்தின்பவர்கள்.
C காலம்

நான் அப்படி ஒன்றும் கெட்டவனாக இல்லாவிடினும் திரு. குசியூவின் பழங்கணக்குப் புத்தகங்களை மிதித்த நாளிலிருந்து நிலைமை சரியில்லை. என்னால் புரிந்து கொள்ளவே முடியாத இரகசியங்கள் அவர்களிடம் இருந்ததுபோல் தோன்றியது. அவர்களுக்கு யார்மீதாவது கோபமாக இருந்தால் அவனை நடத்தை கெட்டவன் எனப்பழி கூறினர். எனக்கு ஞாபகம் வருகிறது : என் அண்ணன் கட்டுரை வரையக் கற்றுக்கொடுத்தபொழுது, எப்பேர்ப்பட்ட நல்ல மனிதனையும் நான் மறுதலையாகக் கூறி கெட்டவனென்று எழுதினால் அவன் அக்கூற்றினை வரவேற்பான்; கெட்டடவர் செய்கைக்கு நான் அங்கீகாரமளித்தால், அவன்'சபாஷ் உருப்படுவாய் என்பான். இவர்களது இரகசிய எண்ணங்களைத் தான் நான் எப்படி உணர முடியும் - குறிப்பாக அவர்கள் மக்களைத் தின்னத் தயாராக இருக்கும் நிலையில்.
இதனைப் புரியவேண்டுமானால் எல்லாமே தீர்க்கமாகக் கவனிக்கப்படல் வேண்டும். முற்காலத்தில் மக்கள் பெரும்பாலும் மனிதர்களைப் புசித்தார்கள் என்பதாக ஏதோ கொஞ்சம் ஞாபகத்திற்கு வருகிறது. இதனைத் தட்டிக்கொட்டி ஆய்ந்தேன். ஆயினும் எனது வரலாற்று ஏட்டுத் தேடலில் ஆண்டு வரிசைக்கிரமமாக இல்லாது ஒவ்வொரு பக்க முழுமையுமே"கண்ணியம் கட்டுப்பாடு'என்ற சொற்கள் கிறுக்கப்பட்டிருந்தன. எனக்குத் தூக்கம் வராத காரணத்தால் இவ்வரிகளினூடே தோன்றும் உட்பொருளை அறியும்வரை, நள்ளிரவு நெருங்கும்வரை ஆழ்ந்து படித்தேன். புத்தகம் முழுவதுமே மனிதனைப்புசி என்ற இந்த இரு சொற்களே நிரம்பியிருந்தன.
V
காலையில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தேன். ஒருதட்டில் மரக்கறிகளையும் மற்றொரு தட்டில் அவித்த மீனையும் கொண்ட பகலுணவை சென் பெரியவர் கொணர்ந்தார். மீன்களின் கண்கள் வெளுத்து இறுகிப் போயிருந்தன. அவற்றின் வாயும் மனித இனத்தைத் தின்ன விரும்பும் அந்த மக்களின் வாய்போலவே தோன்றியது. சில கவளங்கள் உண்டதும் அந்த வழுவழுப்பான துண்டங்கள், மீன்துண்டங்களா அன்றி மனிதத்துண்டங்களா எனப் புரியவில்லை. அந்த அருவருப்பான எண்ணத்தால் குமட்டல் எடுத்தது.
“சென் பெரியவரே, எனக்குமூச்சுத் திணறுகிறது தோட்டத்தில் உலாவ விரும்புகிறேன் என அண்ணனிடம் கூறுங்கள்” என்றேன். பெரியவர் சென்னும் ஒன்றும் கூறாது வெளியில் சென்று உடன் திரும்பி வெளிக் கதவைத் திறந்து விட்டார்.
நான் அசையவில்லை. என்னை அவர்கள் நிச்சயமாகப் போக விடமாட்டார்கள் என்பதை உணர்ந்து, அவர்கள் என்னை எப்படி நடத்துகின்றார்கள் என்பதைக் கவனிக்கத் தொடங்கினேன். ஒரு கிழவரை முன்னால் போகவிட்டு அண்ணன் மெதுவாக நடந்துவந்தான். அவனது கண்களில் கொலைத்தோற்றமிருந்தது; அதனை நான் ஏதும் கண்டுவிடுவேனோ என எண்ணித் தலையைத் தாழ்த்திக் கொண்டான். தனது கண்ணாடிகளின் விளிம்புவிழியாகச் சாடையாக
கவனித்தான்.
"இன்று நீ நல்ல குணமடைந்திருக்கிறாய் போலிருக்கிறதே” என்றான் அண்ணன்.
"ട്യൂ' என்றேன்.
இதழ்-17 )

Page 32
“திரு. ஹோவை உன்னைப் பரிசோதிக்கும்படி கூறி அழைத்து வந்திருக்கிறேன்” என்றான் அண்ணன்.
“சரி” என்றேன் நான். எனினும் நிச்சயமாக இக்கிழவன் மாறுதோற்றத்துடன் வந்துள்ள ஒரு கொலைகாரன் என்பது எனக்கு தெரியும் எனது நாடிகளைப் பரீட்சிக்கின்ற சாக்கில் நான் எவ்வளவு கொழுத்திருக்கிறேன் என எடைபோடப்பார்க்கிறான். அதனால் எனது மாமிசத்தில் அவனுக்கும் பங்கு கிடைக்குந்தானே இருப்பினும் நான் அஞ்சவில்லை. நான் மனிதர்களைப் புசிக்காவிட்டாலும் அவர்களைவிடத் துணிச்சலுள்ளவன். அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை கவனிப்பதற்காக எனது இரு முஷ்டிகளையும் நீட்டினேன். கிழவன் கீழமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு சிறிது யோசித்துவிட்டுப் பின் கண்களைத் திறந்து'கற்பனைச் சவாரி விடாதே சில நாட்களுக்கு ஒய்வு எடு, எல்லாம் சரியாகிவிடும்' என்றான்.
கற்பனைச் சவாரி விடாதே சிலநாட்களுக்கு ஒய்வு எடு! நான் கொழுத்துவிட்டால் இயல்பாகவே அவர்கள் உண்பதற்கு அதிக உணவு கிடைக்கும். அதனால் எனக்குப் பயனொன்றும் இல்லையே அப்படியென்றால் எல்லாம் சரியாவது எப்படி? இவர்களெல்லாம் மனித மாமிசத்தைப் புசிக்க விரும்பிய உள்ளெண்ணத்தை மறைத்துக்கொண்டு, துணிந்து உடன் செயலாற்றாது வாளாவிருப்பதை எண்ண எனக்கு எக்கச்சக்கமாக சிரிப்புத்தான் தோன்றுகிறது. இந்த வேடிக்கைகளை நினைத்தால் ஒகோகோ எனப்பெரிதாகச் சிரிக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. இந்நகைப்பிலே அச்சமின்மையும் நேர்மையும் விளங்குவதை உணர்கிறேன். எனது துணிச்சலையும் நேர்மையையும் கண்ட கிழவனும் அண்ணனும் பீதியடைந்து வெளிறி விடுகின்றனர்.
நான் தைரியசாலியாக இருப்பதால் எனது துணிச்சலை அவர்களும் கொஞ்சம் பெறுவதற்காக என்னைத் தின்ன மேலும் ஆவலாக இருக்கின்றனர். கிழவன், வாயிலைக் கடப்பதற்கு முன் அண்ணனிடம் தாழ்ந்த குரலில் உடனே தின்று தீர்க்க வேண்டும் என்றான். அண்ணனும் சம்மதத்துடன் தலையசைத்தான். ஒகோ, நீயும் இச்சதியில் உடந்தைதானா? இந்தத் திடீர் கண்டுபிடிப்பு என்னைத் திடுக்குறச் செய்தாலும் நான் எதிர்பார்ப்பதைவிட ஒன்றும் அதிகமில்லை. என்னைத்தின்பதில் அண்ணனும் ஒரு பங்காளி
அண்ணன் ஒரு மனித மாமிசம் தின்பவன்!
நான் மனித மாமிசத்தைத் தின்னும் ஒருவனின் தம்பி
என்னை மற்றவர்களும் உண்ணலாம், இருப்பினும் நான் மனித மாமிசத்தைப் புசிப்பவன் ஒருவனின் தம்பி.
V
இச்சில நாட்களாக நான் மீண்டும் சிந்திக்கத் தொடங்குகிறேன் ஒருக்கால் இவன் மாற்றுருக்கொண்ட கொலைகாரனாக இல்லாத உண்மையான மருத்துவனாகவும் இருக்கலாம். இம்மருத்துவனின் முதாதையரான லிஷிசென்* தன் நூலில் மனித மாமிசம் அவித்துச் சாப்பிடக்கூடியது எனக் கூறியிருக்கிறார். அப்படி இருக்கையில் மனித இறைச்சி உண்ணப்படுவதில்லை என்று இன்னும் எப்படிக் கூறமுடியும்?
* (1318-1593) ஆண்டுகளில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற சீமருத்துவர்)
காலம்

அண்ணனைப் பொறுத்தமட்டில் நான் ஐயமுறுவதற்குரிய போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. எனக்கு அவன் பாடம் போதித்த நாட்களில் அவன் வாயாலேயே தின்பதற்காக மக்கள் தங்கள் பிள்ளைகளையும் பரிவர்த்தனை செய்து கொள்வார்கள் எனக்கூறியிருக்கிறான். ஒருமுறை ஒரு கெட்டவனைக் குறிப்பிடும்பொழுது அவன் கொல்லப்பட வேண்டியவன் எனக் குறிப்பிட்டதுடன், அவன் சதையை தின்று அவன் தோலையுரித்துப் பாயாக விரித்துப் படுக்க வேண்டும்' எனப் பழம்பாடல் வரியொன்றை எடுத்துக் கூறினான். அப்பொழுது சிறுவனாக இருந்தேன். சிறிதுநேரம் என் இதயம் படபடத்தது. அன்று ஒருநாள் ஒநாய்க்குட்டி கிராமத்திய குத்தகைக்காரன் மனிதனின் இதயத்தையும் ஈரலையும் தின்பதைப் பற்றிக் குறிப்பிட்டபொழுது அண்ணன் வெறுமனே தலையசைத்தான். அவனும் எப்பொழுதும் கொடுமை உள்ளமுடையவன்தான் போலும். 'தின்பதற்காகப் பிள்ளைகளை பரிவர்த்தனை செய்து கொள்ளலா மென்றால் யாரையும் பரிவர்த்தனை செய்யலாம், யாரையும் தின்னலாந்தனே. முன்னெல்லாம் அவன் கூறும் விளக்கத்தை பேசாது கேட்பேன்; ஆனால் இப்பொழுது அவன் விளக்கம் தருகையில் அவனது உதட்டில் விளிம்பில் மனிதக் கொழுப்பு இருப்பதன்னியில் அவன் இதய முழுமையுமே மனிதர்களைத் தின்னும் எண்ணமே நிலவுவதாகத் தெரிகிறது.
V
கன்னங்கரிய இருள். பகலோ இரவோ என்பதனை நான் அறியேன். செள வீட்டினரது நாய் மீண்டும் குரைக்கத் தொடங்குகிறது.
சிங்கத்தின் சீற்றம், முயலின் கோழைத்தனம், நரியின் தந்திரம்.
V
அவர்கள் போக்கு எனக்குப்புரிகிறது. ஒரேயடியாக எவரையும் அவர்கள் கொல்ல விரும்புவதில்லை, துணிவதுமில்லை. அதனால் விளையும் பலன்களை எண்ணிப்பார்த்திருக்கலாம். பதிலாக அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என் உயிரை நானே மாய்த்துக் கொள்ளும்படித் தூண்டும் வகையில் சூழ்ச்சி புரிகின்றார்கள். சில நாட்களாக தெருவில் நடமாடும் ஆண்பெண் அனைவரின் நடத்தைகளையும், அண்ணன் நடத்தையையும் கவனித்தால் வெளிப்படையாகப் புரிகிறது. மனிதன் தன் இடைக்கச்சையைக் கழற்றி உத்தரத்தில் கட்டி அதில் தூக்கிட்டுக் கொள்ளும் முறையையே அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். அங்ங்ணம் நடந்தால் தாங்கள் கொலைக் குற்றத்திற்கு ஆளாகாமல் மனப்பூர்வமாக இறந்தவனை விருந்து சாப்பிடலாமென எண்ணுகின்றனர். அதனால்தான் அவர்கள்
மகிழ்ச்சிப் பூரிப்பில் கெக்கலிக்கின்றனர்; அதே சமயம் அம்மனிதன்
சாவை எண்ணிப்பயந்தோன்றி மெலிவடைந்தாலும் அதற்கும் அவர்கள் இசைவு தெரிவித்துத் தலையசைக்கிறார்கள்.
செத்ததன் மாமிசத்தைத்தான் அவர்கள் உண்கிறார்கள்! பயங்கரத் தோற்றமும் கொடிய கண்களையும் கொண்ட கழுதைப்புலி செத்தவிலங்குகளின் மாமிசத்தை மட்டுமே புசிப்பதாக ஞாபகம். பெரிய எலும்புத் துண்டங்களைக் கூட சுக்கலாக்கிப் பொடி செய்து விழுங்கிவிடுமாம். இதைப்பற்றி மனதில் எண்ணவே உதறல் எடுக்கிறது. கழுதைப்புலி ஒநாய்கட்கு உறவு இனம்; ஒநாய்கள் நாயினத்தைச் சார்ந்தவை. அன்றொருநாள் செனவின் வீட்டிலுள்ள
gø - 17 O

Page 33
நாய் என்னைப் பலமுறை நோக்கியதே, அதுவும் இந்தச் சதியில் சம்பந்தப்பட்ட அவர்களது துணைவன் போலும். கிழவனின் கண்களும் கீழ்நோக்கியவையாக இருந்தாலும், அவனின் உள்நோக்கத்தை நான் புரியாது ஏமாந்துவிடவில்லை.
மிகவும் வருத்தத்துக்குரியவன் என் அண்ணன்தான். அவனும் ஒரு ஆண்மகன்தானே. அவன் ஏன் அச்சப்படவில்லை, மற்றவர்களுடன் அவனும் சேர்ந்து கொண்டு என்னைத் தின்ன ஏன் சதி செய்கிறான். ஒருக்கால் பழக்க தோஷத்தால், தான் புரிவது பெருங்குற்றம் என்பதை உரை முடியாது போயிற்றோ? அல்லது தவறு என்று உணர்ந்திருந்தும் அச்செயலைப் புரிவதற்காகத் தன் உள்ளத்தைக் கடுமையாக்கிக் கொண்டானோ?
மனிதனைத் தின்பவர்களைச் சபிக்கும்போது என் அண்ணனுடன் துவங்குகிறேன். மனித ஊன் விலக்குமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கும்போது அவனிலிருந்தே தொடங்க விரும்புகிறேன்.
V.
உண்மையில் இத்தகைய சர்ச்சைகள் அனைத்தும் ஏற்கனவே அவர்களது கொள்கையில் ஊறியிருக்கவேண்டும்.
திடீரென எவனோ வந்தான். அவனுக்கு இருபது வயது இருக்கலாம். அவனது தோற்றத்தை நன்கு கவனிக்கவில்லை. அவன் மூகமெல்லாம் சிரிப்பு. ஆனால் என்னைக்கண்டுதலையசைத்தபொழுது மட்டும் அது போலிப் புன்னகையாகத் தோன்றியது. நான் அவனைப் பார்த்து மனித ஊனைத்தின்பது நியாயமா? எனக்கேட்டேன்.
அவன் சிரித்தவாறே பஞ்சமில்லாத காலத்தில் ஒருவன் எப்படி ாளிதமாமிசத்தை உண்ணமுடியும்?' என்று பதில் கூறினான்.
உடனே நான், அவனும் அந்தத் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவனே என்பதை உணர்ந்தேன். இருப்பினும் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, மீண்டும் எனது கேள்வியைத் தொடுத்தேன்.
அது நியாயமா?
இத்தகைய கேள்விகளையெல்லாம் நீ கேட்பதன் காரணம்
என்ன? நீதான் - தமாஷை விரும்புகிறாயா-இன்று எல்லாம் நன்றாக
து
எல்லாம் நன்றாக இருக்கிறது. நிலவும் நன்றாக ஒளிர்கிறது. வினும் நான் மீண்டும் கேட்க விரும்புகிறேன், அது நியாயமா?”
அவன் தடுமாறியதுபோல் தோன்றினான்; 'இல்லை. காப்பிதற்றினான்.
'இல்லை? அப்படியானால் ஏன் இன்னும் அப்படிச் செய்கின்றார்கள்?
'நீ எதைப்பற்றிப் பேசுகிறாய்?
நான் எதைப்பற்றிப் பேசுகிறேனா? ஒநாய்க்குட்டி கிராமப் பகுதிகளில் இந்நாட்களில் மனிதர்களைத் தின்கிறார்களாம். புதிய கிாப்புமையினால் புத்தகங்களில் எல்லாம் எழுதியிருக்கிறதே.
( arabás

அவனது தோற்றமே மாறி வெளிறியது. என்னைத் துருவிப் பார்த்தவாறு அப்படி இருக்கலாம். எக்காலமும் அப்படித்தான் இருந்திருக்கிறது. என்றான்.
‘எப்பொழுதும் இருந்திருக்கிறது என்பதால் நியாயமாகி விடுமா?
“இத்தகைய விஷயங்கள் குறித்து உன்னுடன் பேச மறுக்கிறேன். எப்படியானாலும் இவை குறித்துப் பேசக் கூடாது. யார் இது குறித்துப் பேசினாலும் தவறுதான்”
நான் எகிறிநின்று என் கண்களை அகல விரித்தேன். ஆனால், அம்மனிதனோ மறைந்தேவிட்டான். வியர்வையில் நனைந்துவிட்டேன். அவன் அண்ணனைவிட வயதில் குறைந்தவன். இருந்தும், அவனும் இவர்களுக்கு உடந்தைதான். அவனும் அவனது பெற்றோர்களால் கற்பிக்கப்பட்டவனாகத்தான் இருக்க வேண்டும். அவனும் தன் மகனுக்கும் கற்பித்திருப்பானோ என அஞ்சுகிறேன். அதனால்தான் குழந்தைகள் கூட என்னைக் கொடூரமாகப் பார்க்கிறார்கள்.
ΙΧ
மனிதர்களை உண்ண வேண்டும். அதேசமயம் தங்களை யாரேனும் தின்று விடுவார்களோ என அவர்களிடையேயும் அச்சம். அவர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் ஆழ்ந்த சந்தேகம் வேறே.
இத்தகைய எண்ணச் சுமைகளையெல்லாம் இவர்கள் ஒழித்துவிட்டு நன்றாக வேலை செய்து, நடந்து, உண்டு உறங்கி நிம்மதியாக வாழ்ந்தால் வாழ்க்கை எவ்வளவு செளக்கியமாக இருக்கும்? இந்த ஒரே வழியைத்தான் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஆனாலும் தந்தையர் மக்கள், கணவன் மனைவியர், சகோதரர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பரம்பரை எதிரிகள், ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் என இந்தச் சதிக்கூட்டத்தில் சேர்ந்த அனைவருமே ஒருவருக்கொருவர் பயங்காட்டி இம்முறையைக் கைக்கொள்வதைத் தடுத்து விடுகிறார்கள்.
X
இன்று அதிகாலை அண்ணனைக் காணச்சென்றேன். அவன் வீட்டு பெட்டகசாலைக்கு வெளியே வானத்தைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான். நான் அவன் பின் சென்று, அவனுக்கும் கதவுக்குமிடையே நின்றுகொண்டு என்றுமில்லாத அமைதியுடனும் மரியாதையுடனும் பேசினேன்;
அண்ணா, உன்னிடம் சில விஷயங்கள் பேசவேண்டும்.
'சரி என்ன அது?’ என்று உடனே என்னை நோக்கித் தலையசைத்தவாறு கேட்டேன். சின்ன விஷயந்தான். இருந்தாலும் சொல்லுவதற்குத் தயக்கமாக இருக்கிறது. அண்ணா! ஆதிகால மனிதர்கள் அனைவரும் துவக்கத்தில் மனித மாமிசம் தின்றிருக்கக்கூடும் பின்னால் அவர்கள் கண்ணோட்டம் மாறியதன் காரணமாக சிலர் இப்பழக்கத்தை நிறுத்தினர். அவர்கள் நல்லவர்கள் ஆக முயற்சி செய்ததால் நல்ல மனிதர்களாக, உண்மை மனிதர்களாக ஆகி விட்டார்களோ? ஆனாலும் சிலர் இன்னும் மனித மாமிசம்
இதழ் - 17

Page 34
உண்கிறார்கள்-மனிதமாமிசம்தின்னும் மிருகங்களைப் போலவே, சிலர் மீன்களாகவும், பறவைகளாகவும், குரங்குகளாகவும் இறுதியில் மனிதர்களாகவும் மாறியுள்ளனர். சிலர் நல்லவர்கள் ஆக முயற்சி செய்யாமல் இன்னும் மனித மாமிசம் தின்னும் மிருகங்களாகவே இருக்கிறார்கள். மனிதனைத் தின்னும் கூட்டம், தின்னாமல் இருப்பவர்களைப் பார்க்கும்போது எவ்வளவு வெட்கப்பட வேண்டும் குரங்குகளுக்கு முன் மனித மாமிசம் தின்னும் மிருகங்கள் வெட்கப்படுவதைக் காட்டிலும் இது அதிகமாக இருக்க வேண்டும்.
பழைய கால வரலாற்றில் யியா தன் மகனைச் சமைத்து சியே, செள*ஆகியோர்கட்குப்படைத்ததாகக் குறிக்கப்பட்டிருக்கிறதல்லவா? ஆயினும் சொர்க்கமும் உலகமும். பான்குனால் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து ஓநாய்க்குட்டி கிராம மனிதன் வரை, மனிதர்கள் ஒருவரை ஒருவர் புசித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்?யியாவின் மகன் காலத்திலிருந்து ஸாஸி-லின்* காலம் வரை இது நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறதுஸாஸி-லின் காலந்தொட்டு ஓநாய்க்குட்டி கிராமத்தில் பிடிபட்ட மனிதன் காலம்வரை இது நடந்துகொண்டுதானே வருகிறது? சென்ற ஆண்டு ஒரு குற்றவாளிக்குப் பட்டணத்தில் மரணதண்டனை அளித்தார்கள். அவனது குருதியில் ரொட்டித்துண்டு ஒன்றை ஊறவைத்து ஒரு காசநோயாளி உறிஞ்சினான்.***
இவர்கள் என்னையும் தின்னப் பார்க்கிறார்கள். உன்னால் மட்டும் தனிப்பட்டு ஒன்றும்செய்யமுடியாது, இருப்பினும் இதில் நீயேன் சேரவேண்டும்? இந்த மனித மாமிசம்தின்னிகள் எதையும் செய்யத் துணிவார்கள். இன்று என்னைத் தின்றால் நாளை உன்ன்ை, ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற கூட்டத்தினரை உண்பார்கள். ஆனால் உன் வழிமுறைகளை உடனே சிறிது மாற்றினால் அனைவருக்கும் அமைதிகிட்டும். தொன்று தொட்டு இப்பழக்கம் வழக்கமாக இருந்தாலும் நாம் நல்லவர்களாகச் சீர்திருந்தி சிறப்பு முயற்சி எடுத்து இதை நிறுத்த வேண்டுமென்று கண்டிப்பாக கூறினாலென்ன? அண்ணா, நிச்சயமாக உன்னால் இப்படிக் கூறுமுடியுந்தானே? அன்று குத்தகைக்காரர் குத்தகையைக் குறைத்துக் கேட்டதற்கு முடியாது என்று கூறிவிட்டாயல்லவா?
* பழங்காலப் பதிவேடுகளில் சித்தரிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி : யியா என்பவன் தன் மகனைச் சமைத்து சி நாடு பிரபு ஹ"வான் என்பவனுக்குப் படைத்தான். ஹ"வான் பிரபு கி. மு. 685 முதல் 643 வரை நாட்டை ஆண்டவன். சியே என்பவனும் செள என்பவனும் இதற்கு முந்திய காலத்தில் இருந்த கொடுங்கோலர்கள். இங்கு இம் மூவரையும் குறிப்பிடுவதில் பைத்தியக்காரன் ஒரு தவறு செய்துள்ளான்.
* ஸ்"ஸிலின் என்பவர் வம்சத்தின் (கி.பி.1644-1911) இறுதியில் வாழ்ந்த ஒரு புரட்சியாளர். மஞ்சுவமிச அதிகாரியைக் கொன்றதற்காக இவர் 1907 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். இவரது இருதயமும் ஈரலும் உண்ணப்பட்டன.
*மனித இரத்தம் காசநோயைக் குணப்படுத்தும் என்ற ஒரு ஐதிகம் நிலவியது. இதன் காரணமாக, ஒரு குற்றவாளியின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதும் தண்டனை நிறைவேற்றுபவன் இரத்தத்தில் நனைக்கப்பட்ட அவித்த ரொட்டியை விற்பான்.
C காலம்

முதலில் இகழ்ச்சியாகப் புன்னகைத்தான். உடனே அவன் கண்களில் கொலைத்தோற்றம் எழுந்தது. அவர்களின் இரகசியத்தை நான் வெளியிட்டதும் அவன் முகம் வெளிறிவிட்டது. வாசலுக்கு வெளியே திரு. செளவும் அவரது நாயும் உள்ளிட்ட ஒரு மனிதக்கூட்டம் நின்று தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களில் எல்லோரது முகத்தையும் பார்க்க முடியவில்லை. முகத்தைச் சிலர் துணியால் மூடி மறைத்திருந்தனர். சிலர் தங்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டு வெளிறிப்போய் குரூரமாக காட்சி தந்தார்கள். இவர்களனைவருமே மனிதனைத் தின்னும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை நான் அறிகிறேன். ஆயினும் அவர்கள் அனைவருமே ஒரேவித எண்ணங் கொண்டவர்களல்ல என்பதையும் உணர்கிறேன். சிலர் பரம்பரையாகத் தோன்றிய பழக்கவழக்கத்துக்கு உட்பட்டவர் களாதலால் மனிதன் தின்னப்படுபவனே என எண்ணினார்கள், சிலர் அப்படி மனிதர்களைத் தின்பது சரியல்ல என உணர்ந்தார்கள். இருந்தாலும், அச்செயலைச் செய்து கொண்டிருந்தார்கள். அத்தகையோர் எங்கே மக்கள் தங்கள் உள்ளக்கிடக்கையை அறிந்து கொள்வார்களோ என அஞ்சினார்கள். அதனால்தான் நான் எதுவும் குறை கூறினால் கோபமடைகின்றார்கள். இருப்பினும், அவர்கள் நச்சுத்தனமான, பல் வெளியே தெரியாதவாறு புன்னகையைக் காட்டுகிறார்கள்.
திடீரென அண்ணன் வெறியுடன் உரத்தகுரலில் கத்தினான்: எல்லோரும் வெளிச்செல்லுங்கள் பைத்தியக் காரனைப்பார்ப்பதும் ஒரு வேடிக்கையா?
அவர்களது சூழ்ச்சியின் ஒருபகுதியை உணர்ந்தேன். தாங்கள் வகுத்த திட்டத்தை அவர்கள் சிறிதும் மாற்றிக் கொள்ள விரும்புவதாகத் தெரியவில்லை. எனக்குப் பைத்தியக் காரப்பட்டம் கட்டிவிட்டார்கள். பின்னால் என்னைத் தின்ன வேண்டியிருந்தால் எவ்விதத் தொல்லையுமில்லையல்லவா? யாரும் குறை கூறுவதற்குப்பதில் நன்றியல்லவா செலுத்துவார்கள். எங்கள் குத்தகைக்காரர் குறிப்பிட்ட போக்கிரி ஒருவனை கிராம மக்கள் தின்றதாகக் கூறப்படும் சம்பவமும் இத்தகைய ஒரு சாக்குப் போக்குத்தான். இவையெல்லாம் வழிவழியாக வந்த தந்திரமுறை.
கோபத்துடன் பெரியவர் சென்னும் வந்தார். இருப்பினும் என்வாயை அவர்களால் அடக்க முடியவில்லை. அவர்களுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லியே விட்டேன்.
'நீங்கள் மாற வேண்டும். அதுவும் மனப்பூர்வமாக மாற வேண்டும். இனிமேல் எதிர்காலத்தில் இவ்வுலகத்தில் மனித மாமிசத்தைத் தின்பவர்கட்கு இடமில்லை' என்றேன். நீங்கள் மாறாவிட்டால், நீங்கள் எல்லோரும் ஒருவர் மற்றொருவரால் உண்ணப்படுவீர்கள். ஏராளமானோர் பிறந்தபோதிலும் அவர்கள் உண்மை மனிதரால் துடைத்தெறியப்படுவார்கள் வேட்டைக்காரர்களால் ஓநாய்கள் கொல்லப்படுவதைப் போல்; காட்டுவிலங்குகளைப் போல
பெரியவர் சென் எல்லாரையும் விரட்டி அனுப்பினார். என் அண்ணன் போய்விட்டான். எனது அறைக்குத் திரும்பிச் செல்லுமாறு பெரியவர் சென் எனக்கு அறிவுரை கூறினார். அறை
இதழ்-17 )

Page 35
கன்னங்கரேலென்று இருண்டிருந்தது. உத்தரங்களும் என் நிலைக்க்குமேல் குலுங்கின. சிறிது நேரம் குலுங்கியதற்குப்பிறகு அவை பெரிதாயின. அவை என் தலைமீது மொத்தமாக விழுந்தன.
பஞ அதிகமாக இருந்ததால் நான்களால் நகரமுடியவில்லை. நான் சாகவேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம், பளு போஜியானது என்பது எனக்குத் தெரியும் எனவேதான்"நான் விபர்பை கொட்டக்கோட் என்னை விடுவித்துக் கொண்டேன். ஆனால் நான் இதைச் சொல்லவேண்டியிருந்தது. நீங்கள் உடனடியாக மாறவேண்டும். பனப்பூர்வமாக மாறவேண்டும். எதிர்காலத்தில் மனிதரனத் தின்பவர்களுக்கு உலகில் இடமே இல்லை என்பதை நீங்கள் தெரிந்து
கொள்ள வேண்டும்
X
பகலவனின் ஒளிவிழவில்ல்ை, கதவு திறக்கப்படவில்லை, நாளைக்கு இருவேளை சாப்பாடு
உEபுகள்எனப்பயன்படுத்தும் குச்சிகளைக் கையிலெடுத்தேன்; அண்ணன் நினைப்பு தோன்றியது. தங்கை இறந்தது நினைவுக்கு வந்தது. எல்லாம் அவனால்தான் அவளுக்கு அப்பொழுது ஐந்தே வயதுதான். அபாது அழகிய, பரிதாபத் தோற்றம் என் கண்கள் முன்னே நிற்கிறது. அம்மா கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். அவளை அழாதே என அண்ணன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தான். அக் குழந்தையை அவனே ஒருக்கால் தின்றிருக்கவோம். அதனால் ஏற்பட்ட குற்றவுணர்வால் அவள் அழுகையைக் காண அவனுக்கு வெட்கம் தோன்றியிருக்க வேண்டும் ஏதாவது வெட்கமான உாைர்வு ஆகினுக்கு இருந்திருந்தால்.
தங்கையை அண்னன்தான் தின்றான். அம்மா இனத உணர்ந்தாளோ என்னவோ தெரியாது.
அம்மாவுக்கும் தெரியாமலிருந்திருக்காது. ஒப்பாரியில் அவள் அதையெல்லாம் அப்ட்டாகக் கூறவில்லை, அதையெல்லாம் எதற்காகக் கூறுவேண்டும் என அவள் எண்ணியிருக்கலாம் எனக்கு நான்கு அல்லது Eந்து வயதாக இருந்த சமயம் அது குளிர்ச்சியான உள்ளறையில் அமர்ந்திருந்தபொழுது என் அண்ணன் கூறியவை இப்பொழுது நினைவுக்கு வருகின்றது. ஒருவனிடம் பெற்றோர் நோயுற்றிருந்தால் அவன் பகன் தனது சதையில் சிறிதைச் சமைத்துக் கொடுத்து தான் சிறந்த மகள் என்பதே நிலைநாட்டவேண்டும் என்றான். ஆம்மாவும் இக்கூற்றுக்கு மறுப்புக் கூறவில்லை. ஒரு துண்டைத்தின்றால் முழுமையும் தின் நாத் நடைபென்ன? இப்படியிருக்க ஒப்புக்கு ஒப்பாரிவைப்பதை எண்:ைirால் என் இதயக்குருதியே பிரிடுகிறது. இதுதான் இதில் உள்ள அசாதாானமான விஷயம்
ΧIΙ
இதை நினைக்கவே சகிக்கவில்:
நாலாயிரம் ஆண்டுகள் மனிதனின் பாமிசத்தைத் தின்று உளர்ந்தவர்கள் வாழ்ந்த இடத்திவே இத்தனை ஆண்டு காலமாக நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதை இப்பொழுது தான் என்னால்
f = Tsui,

உரோமுடிகிறது. தங்கை இறந்த காபத்தில் வீட்டுப் பொறுப்பை அண்ளேன் அப்பொழுதுதான் ஏற்றிருந்தான். பார் கண்டார்கள், ஆபாது மாமிசத்தையும் எங்கள் சாப்பாட்டில் எங்களுக்குத் தெரியாமலே அவன் கலந்திருக்கலாம்.
தங்ணபீயின் மாமிசத்துண்டங்கள் பலவற்றையும் நான் கூட
அறியாமல் உண்டிருக்கலாம். அடுத்த கட்டம் என்னுடையதுதான்.
நாலாயிரமாண்டு மாத மாமிசம் உண்ட போபோற்றுக்குப் பின்முதலில் இதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது இருந்திருந்தாலும் இத்தகைய மனிதர்களிடம் என்னையொத்த ஒருவன் முகங்கொடுத்து எப்படி உறபாடுவது?
ΧΙV’
மனிதர்களைத் தின்றிராத குழந்தைகள் இன்னும் எஞ்சியிருக்கலாம் அக்குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்.
ஏப்ரல் 1918,

Page 36
J26O)6Ow/66 62/76
ழுெத்தை ஆயுதமாகக் கொண்ட அறிவுஜீவிகளின் கெளரவமான ஓர் இலக்கிய முயற்சியாக கே. சீனிவாசன் என்ற லட்சியவாதியின் கனவான மணிக்கொடி 1933ஆம் வருடம் செப்டம்பர் மாதம் தனது இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்தது. மணிக்கொடியில் சிறுகதை எழுதிய ஒருவரும்மலையகச் சிறுகதை முன்னோடியாகத் திகழ்கின்றார் என்பது எவ்வளவு மகிழ்வான செய்தி.
தமிழ்ச் சிறுகதையின் கொடுமுடிகளாய்த் திகழ்ந்த புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.ப.ரா. மெளனி என்று எல்லோருமே மணிக்கொடிக் குழுவினர்தான் என்கையில் மணிக்கொடியில் எழுதியிருப்பதே ஒரு மகுடம்தான். ஒரு பெருமைதான். அந்த மகுடத்தைச் சூடிக்கொண்டவர் மணிக்கொடியில் சிறுகதை எழுதியவர் என்னும் பெருமை பெற்றவர் மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் சிறுகதை முன்னோடியுமான கே. கணேஷ் தெ அவர்கள்தான்.
மலையகத்தின் மூத்த எழுத்தாளர் கே. கணேஷ் 6) அவர்கள் மணிக்கொடியில் இரண்டு சிறுகதைகள்
எழுதியுள்ளார். ஆசாநாசம் என்பது ஒன்று மகாசக்தி தி என்பது மற்றது. தை
தீவிர இடதுசாரிக் கொள்கையுடையவரான கே. ஜோ கணேஷ் ஒரு கவிஞராகவே எழுத்துலகில் பிரவேசம் செய்தார். அதுவும் தனது பன்னிரண்டாவது வயதில், இலங்கையிலிருந்தல்ல, படிக்கப்போன இடத்தில், தமிழ் L நாட்டிலிருந்து ஏதோ ஒரு பத்திரிகையில் அல்ல. தானும் ஒரு சில நண்பர்களும் சேர்ந்து வெளியிட்ட தங்களது பத்திரிகையில். ஆம் மதுரை தமிழ்ச் சங்கத்தில் தமிழ் படித்துத் தன் மகன் பண்டிதராக வேண்டும் என்னும் அவாவில் பெற்றவர்கள் அங்கே அனுப்ப இவருக்கோ திரு. வி. க. வின் தமிழை விடவும் தமிழ் இலக்கியத்தில் கருத்துப் புரட்சி செய்த ப. ஜீவானந்தம் அவர்களின் நெருங்கிய நண்பரும், சிறந்த பேச்சாளரும், ஜனசக்தியின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவருமான மாயாண்டிபாரதியின் நட்புபிடித்திருந்தது. சக்திதாசன் சுப்ரமணியம், கே. ராமநாதன், மாயாண்டிபாரதி ஆகியோர் சேர்ந்து சென்னையிலிருந்து வெளியிட்ட லோகசக்தியின் தயாரிப்பு வேலைகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார். லோகசக்தி முதல் இதழிலேயே கலாநேசன் என்னும் புனைப்பெயரில் இவருடைய கவிதை வந்திருந்தது. அப்போது இவருக்கு வயது பன்னிரண்டு.
நவசக்தியிலும் அடிக்கடி இவருடைய படைப்புகள் இடம் பெற்றன.
கே. ஏ. அப்பாஸ் முல்க்ராஜ் ஆனந்த். பிரேம்சந்த் போன்றவர்களுடனும் புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு. ராஜகோபாலன் போன்றோருடனும் பழகியவர் கணேஷ். இந்தப் பழக்கத்தின் நெருக்கம் காரணமாகவே அப்பாஸ் ஆகியோருடன் இணைந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தொடங்கினார். குயிலன், தமிழ் ஒளி,தி. க.
C காலம்

* ബമഞ്ഞമ്
2/72/
சி. ஆகியோர் கைகோர்த்து நின்றனர். தமிழ் எழுத்தாளர்கள் என்று சகலருடனும் பழகி, சகலரையும் நண்பர்களாக்கிக் கொண்டு சகலருடனும் கடிதத் தொடர்பும் கொண்டுள்ளவர் இவர்.
அம்பிட்டியவில் 2, 3. 1920 இல் பிறந்த இவர் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும், மதுரை தமிழ்ச் சங்கத்திலும், 505606).RLIrg JorgT assigTfusgh Rajha College Oriental Studies-Thiruvaiyar &ó6ú) Göpoli.
கல்லூரிப் படிப்பைவிட கலை இலக்கிய உலகில் அவர் கற்றுத் தேர்ந்த பாடங்களே இன்றும் அவரைப்பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஓர் உயர்வைக் கொடுத்துள்ளது. இந்த எண்பது வயதிலும் ஓர் இளைஞனைப் போன்ற சுறுசுறுப்புடன் இலக்கிய உலகில் இயங்கும் உணர்வினைக் கொடுத்துள்ளது.
அமரர் சி.வி.வேலுப்பிள்ளைகூடத் தனது புதுமை இலக்கியம் என்னும்மாவலியின் கட்டுரையில் சி.வி.வேலுப்பிள்ளையின் பத்மாஜினி என்னும் ஆங்கிலக் கவிதை நாடக நூலும் கே. கணேஷ் தமிழில் மொழிபெயர்த்த முல்க்ராஜ் ஆனந்தின் ஆங்கில நாவலும் மலையகத்திலிருந்து வெளிவந்தன” என்று குறிப்பிட்டுள்ளார். கே. கணேஷ் மொழிபெயர்த்த முல்க்ராஜ் ஆனந்தின் UNTOUCHABLES என்னும் நாவல் 1947 இல்தான் வெளிவந்தது. அதற்கு முன்பாகவே தன்னுடைய இலக்கியப்பணிகளைக் குறிப்பிட்டுக் கூறும் அளவுக்குச் செய்திருப்பவர் கே. கணேஷ்.
1932லேயே எழுதத்தொடங்கி, 'இளைஞர் காங்கிரஸ்'என்னும் அமைப்பை உருவாக்கி, 'லோகசக்தி என்னும் முற்போக்குச் சஞ்சிகை வெளியீட்டில் பங்கேற்று முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தமிழகத்தில் ஸ்தாபித்து இலங்கை திரும்பினார்.
ஜப்பான் சக்கரவர்த்தியின் பிறந்தநாள் விழாவுக்கான அகில உலகக் கவிதைப் போட்டியில் பங்குபெற்று - பரிசு பெற்று சக்ரவர்த்தி ஹீரோ ஹிட்டோவிடம் விருது பெற ஜப்பான் நாட்டுக்கு அழைக்கப்பட்டது வரை அடுக்கடுக்காக எத்தனையோ இலக்கியப் பணிகள் அவரது எழுத்துப்பயணத்தில் முத்திரை பதிக்கின்றன
“இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் ஈழத்தின் தமிழிலக்கிய வளர்ச்சியும்” என்பது பற்றிய ஒரு வரலாற்று நோக்குக் குறிப்பெழுதிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
1946 இல் இச்சங்கம் தோன்றுவதற்குக் காரணமாய் இருந்தோர் அக்காலத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக இருந்த கே. ராமநாதன், கே. கணேஷ் ஆகியோரே. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உந்துதலையும் ஆற்றுப்படுத்தலையும் அடிக்கல்லாகக் கொண்டு இந்தியாவில் கே. ஏ. அப்பாஸ் முதலியோரின் தலைமையில் தோன்றிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்று
34 - 6רק-צי

Page 37
ராமநாதனும் கணேசும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தனர். (புதுமை இலக்கியம்,தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டு மலர்-1975).
இதே 46 இல்தான் இதே கே. ராமநாதனும், கே. கணேஷணம் சேர்ந்து “பாரதி” என்னும் முற்போக்குச் சஞ்சிகையும் வெளியிடத் தொடங்கினார்கள்.
1934லிருந்து 1943 வரை தினமணியின் ஆசிரியராகக் கம்பெனியில் செல்வாக்குடன் இருந்த டி. எஸ். சொக்கலிங்கம், நவயுக பிரசுராலயம் என்னும் பதிவுச் செய்து மணிக்கொடியை அதில் இணைத்தார். பி.எஸ்.ராமையாவுக்குப்பதிலாகப.ராமசாமி என்பவரை ஆசிரியராக்கினார். இதுவே மணிக்கொடியின் இறுதிக்கால கட்டம். மணிக்கொடியின் ஆசிரியர் பொறுப்பேற்றப.ராமசாமி 1938 இறுதியில் இலங்கை வந்தார்.
சந்தா சேர்க்க வரும் பெரும்பாலான தமிழகப் பத்திரிகை ஆசிரியர்களைப்போல் கொழும்பையும் யாழ்ப்பாணத்தையுமே குறிவைக்காமல் மலையகத்துக்கும் விஜயம் செய்தார் ப. ராமசாமி.
அன்றைய தமிழகத்து எழுத்தாளர்கள் பலருடனும் பழக்கமும், நட்பும், உறவும், தொடர்பும் கொண்டிருந்த மலையகத்தின் முன்னோடி எழுத்தாளர் கே. கணேஷின் ஒத்துழைப்பு ப. ரா. வுக்குத் தேவையாக
இன்னும்
நற்பங்கள் அசையா மரங்கள் குறி வைத்த அடையாளங்களில் பதுக்கி வைத்து துண்டாடப்படுகிறோம் அவனவன் இச்சைகள் அடங்க ad LLGÖ ISLQ இரவு போர்த்து உணர்வை ஏற்றும் சுயம் மறந்து புணர்வின் உச்சம் ஏறி சித்தித்து தன்னிலை திரும்பும் கனவுகளாய்க் கண்டது நிஜமாகும் பொழுதில் கேள்விகளின்றியே ஏற்றுக் கொண்டோம் வரும் ஒசையடங்கிய காலைப் புலர்வில் சுவடு தெரியாமல் நடந்தே மறைவான் இன்னும் ஆண்களின் காலமென பெருமூச்சு மட்டும் விட்டு மனம் அழுது படிமங்களாகும் கவிதைகளாய்.
s 출 *_: காலம் مجلس दूé

இருந்தது. பெரி. சுந்தரம் அவர்களின் கடிதத்துடன் தன்னைத் தேடி வந்த ப. ரா. வை வரவேற்று உபசரித்து மலையகத்தைச் சுற்றிக் காட்டிச் செல்லும் பொறுப்பை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டவர் திரு. கே. கணேஷ். இலங்கைச் சுற்றுலா பற்றிய தனது மணிக்கொடிக் கட்டுரையில் மலையக விஜயம் பற்றியும் கே. கணேஷின் நட்புறவான ஒத்துழைப்புப் பற்றியும் ப. ரா. விரிவாகவே எழுதி உள்ளார். மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதியவர் என்பது மட்டுமல்லாமல், அதன் இலக்கியப் பயணத்தின் எல்லையை மலையகம் வரைக்கும் விரிவுபடுத்திய பெருமையும் கே. கணேஷ் அவர்களையே சார்ந்தது.
தினமணி 1994இல் வைர விழாக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, சுபமங்களாவின் ஆசிரியர் அமரர் கோமல் சுவாமிநாதன் இலங்கை வந்திருந்தார். தன்னுடைய இலக்கிய விஜயத்தை மலைநாட்டுப் பக்கமும் திருப்பி இருந்தார். கொழும்பு, மலையகம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்று பலவித சிரமங்களுக்கு மத்தியிலும் கோமலின் இலங்கை விஜயத்தை ஒரு பரிபூரண இலக்கிய விஜயமாக்கிக் கொடுத்த தேசியக் கலை இலக்கியப் பேரவையின் பணி பாராட்டுக்குரியது.
தன்னுடைய மலையக விஜயம் பற்றி நிறையவே எழுதியுள்ளார் கோமல். கணேஷைக் கண்டது பற்றி அவர் எழுதியுள்ள வரிகள். கணேஷையும் மணிக்கொடியையும் பற்றி எழுதுகையில் என் மனத்தில் எழுகின்றன.
மலையக இலக்கியத்தின் முன்னோடி கே. கணேஷ். அவர் இருக்குமிடம் கண்டிக்கு அருகிலுள்ள தலத்து ஒயா, அவருட்ைய வீட்டுக்குச் சென்றபோது கிராம ஊழியன் இதழ்களையும் மணிக்கொடி பைண்டிங்கையும் பார்க்கக் கொடுத்தார்.என்றெழுதுகின்றார்கோமல், சுபமங்களா ஆசிரியர் சாமான்யமானவர் அல்ல, கோமல் சுவாமிநாதன் போன்ற ஒருவரே பார்த்து வியந்து போய், "இதை நான் பார்த்துவிட்டுத் தரலாமா?” என்று கேட்டுக் கொண்டுபோகும் அளவுக்கு இலக்கியச் சுரங்கங்கள் மலையகத்தில் இருக்கின்றன என்பது மகிழ்வாக இருக்கிறது. இந்தச் சுரங்கங்களை நம்மவர்கள் யாரும் தோண்டிப் பார்க்கத் துணியவில்லையே, ஏன்? முன்வரவில்லையே ஏன்? இவர்களிடம் என்ன இருக்கப்போகிறது என்னும் அசட்டைதான் காரணமா என்பதை நினைக்கையில் வேதனையாகவும் இருக்கிறது.
லண்டனில் இருந்து இலக்கிய ஆர்வலர் பத்மநாப ஐயர், இலங்கை விஜயத்தின்போது கணேஷைச் சந்திக்கத் தவறிவிடாதீர்கள் என்று எழுதி இருந்தார் என்றும் எழுதுகின்றார் கோமல் (இலங்கை இலக்கியப் பயணம் சுபமங்களா, மே-1994).
மணிக்கொடி பற்றித் தானும் கேள்விப்பட்டதுடன் சரி என்று கூறித்திருப்பித் தந்துவிடும் உத்தரவாதத்துடன் மணிக்கொடி பைண்டிங்கை கேட்டு வாங்கிச் சென்றார் கோமல் என்று அப்போதே கணேஷ் என்னிடம் கூறினார்.
1946 ஜனவரியில் பாரதி முதல் இதழ் வந்தது. பத்திரிகை என்றதுமே குமுதம் முதல் ராணி வரையிலான சமூகப் பொறுப்புணர்வற்ற வியாபாரத்தையே முழு நோக்கமாககொண்ட நாலாந்தரப் பத்திரிகைகளே நம் கண்முன் தோன்றக்கூடும். ஆனால் தமிழ்ப் பத்திரிகையின் ஆரம்பம் இப்படியானதாக இருக்கவில்லை.
35 - 17 )

Page 38
பத்திரிகைகளுக்கென்று சில லட்சியங்கள் இருந்தன. படிப்பறிவுள்ள சமூகத்தின் ஒரு பகுதியினருக்குப் புதிய சிந்தனைகளை எடுத்துச் சொல்வதையே இவை தம் நோக்கமாகக் கொண்டிருந்தன. இவை கடைக்குக் கடை தொங்கவில்லை. பெரும் வியாபார ஸ்தாபனமாக இயங்கவுமில்லை. அற்ப ஆயுளைக் கொண்டதாகவும் இன்றைய இலக்கிய சிறு சஞ்சிகையைப்போல் சந்தாதாரர்களின் தயவிலேயே தங்கள் பொருளாதாரத் தேவைகளைச் சமாளித்துக் கொண்டு தங்களது லட்சியங்களுக்காகவே உயிர் வாழ்ந்தன என்று வேதசகாய குமார் தன்னுடைய தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் கூறுவது அனைத்தும் பாரதிக்கும் பொருந்தியே இருக்கிறது.
伶46 ஜனவரியில் இருந்து 1948 ஜனவரி வரையிலான இரண்டு வருட இடைவெளியில் ஆறு இதழ்களை வெளியிட்டிருக்கின்றார்கள் கே. ராமநாதனும் கே. கணேஷும். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்களான இவர்கள் இருவரும், தங்களுடைய அரசியல் நிறம் தங்களுடைய பத்திரிகையில் துல்லியமாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அதற்குப் பாரதி' என்று பெயர் சூடி மகிழ்ந்தனர்.
தமிழ்ச் சஞ்சிகை வரலாற்றில் முற்போக்குக் கொள்கைப் பிரச்சாரத்துக்கென வெளிவந்த முதல் முற்போக்குச் சஞ்சிகை என்னும் பெருமை பாரதிக்கே உரியது.
婴 என்னுடைய அரசியல் வர்ணம் எனது ஏட்டுக்கு வந்துவிடக்கூடாது; இது ஒரு கம்யூனிஸ்ட் ஏடு என்றுங்ாரும் சொல்லிவிடக்கூடாது என்பதில் வெகு கவுன்மாயிருந்த விஜயபாஸ்கரனின் சரஸ்வதி பற்றிப் பேசும் முற்போக்குக் குழுவினர். s
8:
அரசியலை இழுத்து இலக்கியத்தில் ப்ோடமாட் ಇLD என்று திட்ட வட்டமாகவே கூறிய மறுமலர்ச்சிப்ற்றிப் பேசிய் முற்போக்கு விமர்சகர்கள், முற்போக்குக் கொள்கைகளுக்கு அனுசரணையாகவும் இன்னும் அழுத்திச் சொல்லப்போனால் அதற்காகவே என்றும் வெளிவந்த பாரதி பற்றி ஏனோ மெளனமாகவே இருந்து விட்டனர். இரண்டு வருத்தில் ஆறு இதழ்கள் மட்டுமே வந்து அற்ப ஆயுளில் மடிந்து போனதால், அவர்களின் மேலான பார்வைகளுக்கு இந்தப்
பாரதி இதழ்கள் கிடைக்காமல் போயிருக்கலாம்.
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு பத்திரிகைகளுக்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. மலையகச் சிறுகதை வரலாற்றின் முதல்வர்களாக, முக்கியஸ்தர்களாக, மூலவர்களாக நான் இதுவரை சுட்டிக்காட்டிய இம்மூவருமே பத்திரிகை ஆசிரியர்களாக, பத்திரிகை வெளியிட்டவர்களாக, பத்திரிகைகளுடன் நெருக்கமான தொடர்புடையவர்களாகவே இருந்திருக்கின்றனர்.
மணிக்கொடி, வீரகேசரி, தேசாபிமானி போன்ற பத்திரிகைகளில் சிறுகதை எழுதிய க. கணேஷ் தான் நடத்திய பாரதி இதழ்களில் ஒரு கதைகூட எழுதவில்லை என்பது வியப்பாகவே இருக்கிறது. சி. வி. யின் கதையில் “பசி” என்ற சிறுகதையை எழுதியிருக்கும் கே. ராமநாதன் ஆங்கிலத்தில் எழுதிப்பழக்கப்பட்டவர். நவசக்தியில் கூடுதலான படைப்புப் பணிகள் செய்தவர். பாரதியின் இணையாசிரியரான இவர் பாரதியில் சில சிறுகதைகள் எழுதியிருக்கின்றார். இவருடைய கதைகள் எதுவுமே ஒரு சிறுகதை ஆசிரியர் என்னும் தகுதியை இவருக்குத் தரவில்லை.
C காலம்
 
 

$
ళ్ల
محیی
f
கதையில் வந்துள்ள பசி இந்தியாவில் இந்து, முஸ்லிம் கலவரங்களை மனத்தில் வைத்துக்கொண்டு இலங்கையைக் களமாகக் கொண்டு எழுதப்பட்டது. பாரதியில் வந்துள்ள 'அகதி'மண் வெட்டிச் சிப்பாய், போன்ற கதைகள் வெறுமனே கம்யூனிசப் பிரச்சாரம் செய்யும் கட்டுரைகளாக அமைந்து விடுகின்றன.
தேயிலைப் புதர்களில் தங்கம் விளைகிறது என்று ஆசை வார்த்தைகாட்டி, தோட்டத்தில் உழைக்கக் கூட்டிச் செல்லப்பட்ட ஒருவன், அடிமைப் படுத்தப்பட்ட ஒருவன், தோட்டத்துரைமாரின் அராஜகங்களை எதிர்த்து சங்கம் மூலம் பலம் பெற்று சாவை வெல்ல முன்வருகின்றான். அஸாமில் உள்ள தோட்டத் தொழிலாளரின் வாழ்வைச் சித்தரிக்கும் ஆங்கில நாவல் முல்க்ராஜ்ஆனந்தின், இரண்டு ganauh 905 GuDTGih. “TWO LEAVES ANDA BUD” என்னும் நாவல், இந்த நாவலின் தமிழ் மொழிப்பெயர்ப்பு LuftJ5 வெளியீடாக விரைவில் வெளியிடப்படும் என்றும்மொழி பெயர்ப்பாளர் கே. ராமநாதன் என்றும் ஒரு குறிப்பு பாரதியின்ஐந்தாவது இதழில் இருக்கிறது. .." 黏 g }
மலரில் மலையகத்தில் சிறுகதை' என்னும் எனது கட்டுரை வெளிவந்திருந்தது. தி அதில் ஓர் இடத்தில் நான் இப்படிக் குறித்துள்ளேன். இலக்கிய எழுத்தும், எழுத்தாளர்கள், எழுத்தாளர்
鞘蕊”。猩 ಇಳ್ದ 1991இல் வெளியிடப்பட்ட தேசியத் தமிழ் சாகித்திய விழா சிறப்பு
அமைப்புகள், சஞ்சிகைகள் மொழி பெயர்ப்புகள் என்று சகல வழிகளிலும் இலக்கியத்துடன் தன்னை இறுக்கமாகப் பிணைத்துக்
கொண்ட கே. கணேஷ் அவர்கள், மலையக இலக்கியம் பொறுத்தவரையில் அந்நியப்பட்டே இருந்து விட்டார் என்பது வருத்தத்துடன் மனங்கொள்ளத் தக்கது என்பதே அக்குறிப்பு
இப்படி எழுதிய பின், நான் ஒருதடவை அவரிடம் கேட்டேன்: முல்க்ராஜ் ஆனந்தின் "UNTOUCHABLES” நூலுக்குப் பதிலாக "TWO LEAVES AND A BUD GTsarp 5.Telugoa Srilassir பெயர்த்திருக்கலாமே என்று. அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டம் பற்றியதுதான் இந்த நாவல் என்றாலும், நமது பெருந்தோட்ட மக்களின் அவல வாழ்வில் இருந்து வேறுபட்டதாக இருக்கவில்லை. மலேஷிய நாட்டின் பெருந்தோட்ட மக்கள் பற்றிய படைப்புகளும் நம்முடையவைகளைப் போலவே இருக்கின்றன என்பது கண்கூடு. லயம், பீலிக்கரை, கங்காணி, கணக்கப்பிள்ளை போன்ற வார்த்தைப் பிரயோகங்களில்கூட ஒற்றுமை இருப்பதாக வியக்கின்றார் பேராசிரியர் இரா. தண்டாயுதம் அவர்கள்.
as Golgirir gigs "TWO LEAVES AND A BUD” நாவலை கணேஷ் அவர்கள் மொழிபெயர்த்திருந்தால் மலையக வாழ்வின் அவநிலைக்குள்ளும் தன் எழுத்துமூலம் சுவடிட்டிருக்கலாமே என்னும் நியாயமான ஆவல் எனக்கு.
'உலகப் பிரசித்தி பெற்ற முல்க்ராஜ் ஆனந்த் அவர்களின் fuůLu Guru 5m sóT “UNTOUCHABLES” BT60) ao QuotgGuusisssst south, "TWO LEAVES AND A BUD” நாவலை கே. ராமநாதன் தானே முன்வந்து மொழி பெயர்க்கச் சம்மதித்ததாகவும் ஆங்கிலத்தில் நிறையவே படைப்புகள் செய்த
36 இதழ் 17 )

Page 39
இன்னொரு பிரசித்தமான எழுத்தாளரான டி. ராமநாதன் முல்க்ராஜ் ஆனந்தின் “COOLY” என்னும் நாவலை மொழிபெயர்ப்பதாகவும் முடிவாயிற்று. ஆனால் துரதிஷ்டவசமாக மற்ற இரண்டு மொழி பெயர்ப்புகளும் நிறைவுபெறவில்லை என்று கே. கணேஷ் கூறினார்.
1940களின் நடுப்பகுதியில் இலங்கை வந்துமுல்க்ராஜ்ஆனந்த் கே.கணேஷைச் சந்திக்கின்றார். அகில இலங்கை எழுத்தாளர் சங்கம் என்னும் ஓர் அமைப்பை நிறுவுவது பற்றி அவருடன் கருத்துப் பரிமாறிய கணேஷ், முல்க்ராஜ், ஆனந்த் முன்னிலையில் இந்த எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார். இலங்கையின் சகல எழுத்தாளர்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்னும் கணேஷின் ஆவல் போற்றுவதற்குரியது.
எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக சுவாமி விபுலானந்தரும் உபதலைவராக மார்டின் விக்கிரமசிங்கவும் பொறுப்பேற்றனர். கலாநிதி சரத் சந்திரவும் கே. கணேசும் இணைச் செயலாளர்களாகப் பொறுப்பேற்றனர்.
எழுத்தாளர்கள் அனைவருடனும் கே. கணேசுக்கிருந்த அருமையான தொடர்பு, சக எழுத்தாளர்களுக்கு இவர் மேல் உள்ள மதிப்பு, குறுகிய இடைவெளிக்குள் இச்சங்கம். அமைக்க எழுத்தாளர்களை ஒன்று திரட்டிய ஆற்றல், எழுத்தாளர் சங்கம் உருவாக்கிய பாங்கு ஆகிய அனைத்தும் முல்க்ராஜ் ஆனந்துக்கு நன்றாகப் பிடித்திருந்தது. தன்னுடைய “தீண்டத்தகாதலுன்" நாவலைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணியினைகனே gusol-gigiri. “TWO LEAVES ANBA BUb” Ga.
C
ராமநாதனிடம் கையளிக்கப்பட்டது ಖ್ವ
“தேயிலைத் தோட்ட & rö 議 攀 வந்தது? என்னும் క్షిర్క్స్లో அமைந்ததுதான்ஜி ရှီးနှံဖါး ஆங்கிலேயுராஜ் BRACE GIRDLE” என்பவரை லண்டனில் சந்தித்தத்ால்ஏற்பட்ட அனுபவம் அவர் சொன்ன சோகக் கதைகளும்”
என்பது. قبیلہصلى الله عليه وسلم
ஒவியக்கலை பயின்றவரான பிரேஸ்கேர்டில், தோட்டத்தில் துரையாய் தொழில் புரிய லாயக்கற்றவர் என்பது அவருடைய இளகிய மனத்தினால் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டது. துரைத்தனம் செய்யத் தெரியாத ஒருவரால், தொழிலாளர்கள்மேல் பரிவு காட்டும் ஒருவரால் எப்படி தோட்டத்தில் துரையாக இருக்க முடியும்? கம்யூனிசக் கொள்கைப்பிடிப்பும் முதலாளித்துவ எதேச்சதிகார எதிர்ப்பும் கொண்ட இவர் தொழிலாளர் பக்கம் சார்ந்து துரைமார்களுக்கு எதிராக மேடையிலும் பேசிவந்தார், இடதுசாரி அரசியல் வாதிகளின் நண்பராகிவிட்ட பிரேஸ்கெர்டிலை ஆங்கிலேய அரசு இலங்கையில் இருந்து நாடு கடத்தியது.
கலையுணர்வுமிக்கவரான இவர், லண்டனில் கலை இலக்கியக் குழுவினருடன் தொடர்புடையவராய் இருந்தார். தன்னுடைய எழுத்தால் பிரபல்யமடைந்திருந்த முல்க்ராஜ் ஆனந்தின் அறிமுகமும் நட்பும் distol-55g. "TWO LEAVES AND A BUD” SIT GusSisir உதயத்துக்கான கருவும் கிடைத்தது. தேயிலைத் தோட்டம் பற்றிய நாவல் எழ, இலங்கைத் தேயிலைத் தோட்டம் சம்பந்தப்பட்ட ஒருவரே காரணமாய் இருந்துவிட்டது. மகிழ்வான செய்திதாள்.
g
( காலம்
 
 
 
 
 

“NEWWRITING’ஏடுகளைப்பார்க்கப்பார்க்க இப்படி ஓர் இதழைத் தமிழில் வெளியிட்டால் என என்னும் எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆங்கிலத்தில் இப்படி அருமையான ஓர் ஏடு வருகிறதே என்ற எண்ணமும் ஏக்கமும் - தமிழில் இப்படி ஒன்றைப் போட்டால் என்ன என்னும் ஆர்வமுமே பாரதி' என்ற ஏட்டின் உதயத்துக்கான காரணிகள்.
இலக்கிய ஆர்வம் என்பது மட்டுமன்றி இலக்கிய நோக்கம் ubgu fig60GTugh Gosflouis JGurg). "NEW WRITING” என்பதன் வெளிப்படை அர்த்தமான புதிய எழுத்து அல்லது நவீன எழுத்து என்பதுபோல் அமையாமல், சொல் புதிது சுவை புதிது என்று சொன்ன பாரதியை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்துவிட்டது பாரதி என்னும் பெயர். .ܗܬܐܵܐ
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும்: கொண்டிங்கு சேர்த்திடுவீர் என்று ஆக்ஞை பிறப்பித்தவன், န္တီ၏နံ့နှံ့ شهوr" அதே அணியில் நின்று வர்களும் கிரைச் சிறைமீட்ட பாரதியின் சேவையே
£
சிப்பு ம் என்று முதல் இதழ் தலையங்கத்தில்
*} e ர்மி"கமாண்டரைப்போல்
ஆண்டுத் அறிவித்தலுட
றுே ரூபாய் தனிப்பிரதி அரை ரூபாய் என்னும்
46 தையில் மலர்ந்த பாரதியில் கதை, கட்டுரை,
இவீங்க்ள் ஆகியவற்றைப் பாரதி வரவேற்கிறது.
திரிக்கப்படுபவைக்கு சன்மானம் வழங்கப்படும் என்னும் குறிப்பும்
இருக்கிறது. விஷயங்களைத் தானமாகப் பெற்றுக்கொள்ள முயலாமல் எழுத்தாளர்களைக் கனம் பண்ண வேண்டும் என்னும் ஒரு கெளரவமான இலக்கியப் பண்பையும் முன் வைக்கிறது பாரதி. கொடுத்தார்களா இல்லையா என்பதல்ல முக்கியம், கொடுக்க வேண்டும் என்னும் மனம் இருந்ததும் அதை வெளிப்படையாக அறிவிக்கும் தைரியமும் இருந்தது பத்திரிகை வெளியீட்டாளர்களின் பண்பாக அது இருக்க வேண்டும் என்பதையும் பாரதி சுட்டிக் காட்டியது.
இது போன்ற சிறுசஞ்சிகைக்கு எழுதுகிறவர்கள் சன்மானம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அதை ஒரு சேவையாக அர்ப்பணிப்பாக அவர்கள் கருதினார்கள். அதுவே ஓர் இலக்கியக் கெளரவம்,இலக்கியப் பண்பு, என்றும் அவர்கள் எண்ணி மகிழ்ந்தார்கள்.
மணிக்கொடி வெளிவந்தபோதுமிகவும்பதற்றப்பட்ட பத்திரிகை ஆனந்தவிகடன். மணிக்கொடி முதல் இதழ் வெளிவந்ததும் ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த கல்கி கிருஷ்ணமூர்த்தி மணிக்கொடி அலுவலகத்துக்குச் சென்று வாழ்த்துக் கூறியதாக பி. எஸ். ராமையா எழுதுகின்றார். New Writingஆசிரியர் கூறியதைப்போல் எவ்வளவு காலத்துக்கு நிற்கப் போகின்றீர்கள் என்னும் மறைமுக முணுமுணுப்பே இந்த வாழ்த்துக் கூறலின் உள்அர்த்தமாகவும் இருந்திருக்கலாம். யார் கண்டார்கள்?.
ஆனந்த விகடனுக்கு எழுதுகிறவர்க்கு அப்போதே ஐம்பது ரூபாய் அன்பளிப்பு வழங்கப்பட்டது. அந்த முப்பதுகளில் 50 ரூபாய் என்றால் லேசுப்பட்ட காசா?.
இதழ் - 17

Page 40
இசைச் சுழல்
குழந்தையின் மகிழ்ச்சியைக் கொட்டித் துளிர்க்கிறது.பூமி மெல்விய வர்ணப் பட்டாடை குடி
மழலை பொழிகிறது.
வர்ணங்களைக் குழைத்து ஒவியம் வரைந்தவனைக் காணவில்லை வான வெளியில் ஒளிக் கற்றைக் குதிரைகளில் வருவது/அவனா?
g/Lq L/7Z"A_b /6622/22/525 அடங்காச்சிறுவனாயப்ப்பூமி எங்கிருந்து புறப்பட்டன சின்னப் பட்சிகள்? அவைக்கு வெளியில் ஏறுகிற கயிற்றை எறிந்தவன் யார்? யாருக்கேனும் தெரியுமா?
பழங்கள் கனிந்துள்ள பூமிதோட்டத்தில் காதலின் சுவட்டொலியை அறிந்தவன் யார்? மாயக் கன்னியென மலர்ந்து மனதுள் பாயும் அலைக் கனைகளை
தொடுகிறாள்
மெல்லென
அந்தி சாய்ந்த ஒருநாள்
சூரியன் முதிர் கிழமாய் முடங்கினான். மரங்களின் முடியில் வெண்பனிபடர
ஊளைக் காற்றில் காலமும் வெளியும் ஒரு புல்லாங்குழலாய் இசைக்கிறது L flaðir எல்லா வர்ணங்களும் சிந்திக் கரையும் மரங்களின் கீழ்
பயணம் ஒன்றிற்காக | காத்திருக்கிற முதியவரின் இடுப்பில்
போய்ச் செருகி
இளைப்பாறுகிறது இன்னுமொரு காலஇசைப்பிற்காக.
தா. பாலகணேஷன்
C காலம்

இருந்தும் மணிக்கொடியில் எழுதிய இலக்கியவாதிகள் மணிக்கொடியில் எழுதினால் ஐந்து ரூபாய்கூடக் கிடைக்காது என்று தெரிந்திருந்தும்கூட மணிக்கொடியிலேயே எழுதினார்கள் என்பது எதைக் காட்டுகிறது. அவர்களுடைய இலக்கிய அர்ப்பணிப்பை அல்லவா?
எழுத்தாளர்களின் படைப்புக்கு ஐம்பது ரூபாய் என்னும் ஆனந்தவிகடனின் அன்பளிப்பு இலக்கியவாதிகளைக் கணம் பண்ணுவதல்ல எழுத்தாளர்களை வசீகரிக்க முயலும் ஒரு விளம்பரம் மட்டுமே, வியாபாரத்துக்குயிர் விளம்பரம்தானே! ஆனந்தவிகடன், போன்ற பெரும்பத்திரிகைகள் வியாபாரம்தானே. செய்தன. ஆனால் கொடுத்ததே இல்லாவிட்டாலும் கூட சன்மானம் கொடுக்கப்படும் என்னும் பாரதியின் அறிவிப்பு விளம்பரம் அல்ல, உள்ளத்தின் உண்மை ஒளியால் எழுத்திலே விழுந்த பண்பின் ஒளி.
முப்பதுகளிலேயே எழுதிப் புகழடைந்திருந்த ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளான சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் சம்பந்தன் சோ. சிவபாதசுந்தரம் ஆகியவர்கள் எவருமே பாரதியில் எழுதவில்லை. அரசியலை இலக்கியத்துடன் கலக்கமாட்டோம் என்னும் அவர்களது கொள்கைகளுக்கு,அரசியலுக்கே கூடுதல் இடம்கொடுத்த பாரதியின் போக்கில் நாட்டம் ஏற்படாமல் இருந்திருக்கலாம்.
இல்லாவிட்டால் பக்கத்தில் இருக்கும் பாரதியை விட்டு விட்டு எங்கோ இருக்கும் ஆனந்த விகடனையும், கலைமகளையும் தேடி ஓடி இருப்பார்களா? எப்படி இருப்பினும் பாரதியின் அரசியல் வர்ணம் பெரும்பான்மையான ஈழத்து எழுத்தாளர்களிடமிருந்து அதை அந்நியப் படுத்தி வைத்திருந்தமையும் இதனால் புலனாகிறது.
இந்த ஆறு இதழ்களிலும் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரான முல்க்ராஜ் ஆனந்த் நான்கு கதைகள் எழுதியுள்ளமை கணேஷுக்கும் அவருக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டுகிறது.
பாரதி, பப்ளிகேஷன் மூலமாக நூலெதையும் வெளியிடமுடியாத ஏமாற்றத்தைப் பிந்திய நாட்களில் கே.கணேஷ் வெகு விமரிசையாகவே நிவர்த்திசெய்து கொண்டுள்ளார், தன்னுடைய இருபதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் மூலம்.
மலையக இலக்கிய முன்னோடி கே. கணேஷ் என்றதுமே முல்க்ராஜ்ஆனந்தின் “UNTOUCHABLES”என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் என்பதே முதலில் மனத்தில் எழுகிறது. எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இவருக்கு ஒர் இலக்கிய அந்தஸ்தைக் கொடுப்பது ஜப்பான் சக்ரவர்த்தியிடம் பரிசுபெற்ற மேகம் கவிதை அல்ல, மணிக்கொடியில் எழுதிய'ஆசாநாசம் சிறுகதை அல்ல; இரண்டு வருடமாக வெளியிட்ட பாரதி முற்போக்கு இதழ் அல்ல!.
இவைகள் அனைத்தும் துணை விளைவுகள்தான், இவருக்கான இலக்கியக் கெளரவத்தினைப் பெற்றுக் கொடுப்பது இவருடைய மொழி பெயர்ப்புப் பணிகளே, இம்மொழிபெயர்ப்புப் பணிகளுக்கு மூலமாய் அமைந்தது'தீண்டத்தகாதவன்' நூலே.
1947இல் காரைக்குடி புதுமைப் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டது.
இதழ்-17 )

Page 41
முல்க்ராஜ் ஆனந்திற்குப் பிறகு, கே. ஏ. அப்பாஸ், பிரேம்சந்த் ஹோசிமின், லூகன், பார்பரா, குப்ரியானோவ் என்று இவருடைய மொழிபெயர்ப்பு விரிவடைந்தது. மொழி பெயர்ப்பிற்காகத் தெரிவு செய்யும் ஆசிரியர்கள் வேறுபட்டிருந்தனர். இந்த வேறுபாட்டிலும்கூட இந்தியாவின் முல்க்ராஜ், கே. ஏ. அப்பாஸ், பிரேம்சந்த், வியத்நாமிய விடுதலை வீரர் ஹோசிமின், சீனாவின் சிறுகதைச் சிற்பி லூசுன், ஹங்கேரியக் கவிஞர் சண்டோர் பெட்டோவ்பி, ரஷ்யக் கவிஞர்கள் பார்பரா, குப்ரியானோவ் என்று ஓர் ஒற்றுமையும் இழையோடி நிற்பதைக் காணலாம்.
தமிழுக்குப் புதுமைப்பித்தன் எப்படியோ அப்படியே சீனத்துக்கு லூசுன்.
சமுதாய முரண்பாடுகளையும் அவற்றின் விளைவுகளையும் யதார்த்த பூர்வமாக, அதே வேளை கலைநயத்துடன் எடுத்துக் காட்டும் லூசுன் அவர்களது சிறுகதைகளைத் தமிழ் மக்களுக்கு இலகுவாக வாசிக்கக் கொடுத்த பெருமை கே. கணேஷ் அவர்களுடையது.
Selected Stories of lun Hsun GTsürghgrihalj, GigiTeg 1960இல் சீனாவில் வெளியிடப்பட்டது. 1972இலும் 1978இல் மறுபதிப்புப் பெற்றது. இந்தத் தொகுதியின் பதினெட்டுக் கதைகளின் மொழிபெயர்ப்பே லூசுன் சிறுகதைகள் என்பது. தேசியீக் ஒல இலக்கியப் பேரவை இந்தச் சிறுகதைத் தொகுதி uస్థ9ఇు வெளியிட்டது. திரு. கே. கணேஷ் அவர்கழி ஆன்மதியான இலக்கியப் பணியின் அறுவடைகளாகப் பிஜ்ருதிவெளிறிது
அணிவகுக்கின்றன.
முல்க்ராஜ் ஆனந்த், జీళ్లన్ద్యే ఫ్ల స్టేజ్తో*
இப்பாஸ், 1964
ಪ್ಲೀಳಿ
籍 漆飞豹 புகள்: ஹோசிமின், 1973 ஆரீகானம் அவ்தாய் முகம்மத்தோவ், 1974
தீண்டத் தகாதவன் : குங்குமப்பூ:ே
போர்க்குரல் :லூசுன், 1981 பல்கேரியக் கவிதைகள் : தொகுப்பு நூல் - 1984 மகிழ்ச்சிமிகு குழந்தைகள் : ஜூஷி - 1986. லூசுன் கதைகள் : இரண்டாம் தொகுதி - 1986
1
0.
எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய் நாடே ஹங்கேரியக் கவிஞர் சண்டோர் பெட்டோ ஃவ்பி - 1988 1. பாரதி பக்தன் பார்பரா கவிதைகள் : சோவியத் கவிஞர்- 1989 12. சோவியத் கவிஞரின் புதுக் கவிதைகள் வி. குப்ரியானோல்-1989 13. இளைஞன் ஏர்கையின் திருமணம் ஜெள சூலி. சீனக் குறுநாவல்
1990 س14. கூனற் பிறை : லால் ஷா. சீனக் குறுநாவல் - 1990 15. இன்றைய எனது கடமைகள் : சீனக் சிறுவர் நூல் -1990 16. சொந்த வேலையில் சுகம் : சீனக் சிறுவர் நூல் - 1990 17. சீன நாட்டார் கதைகள் - 1991 18. மூங்கிற் பள்ளம்: வியத்னாம் சிறுகதைகள் 1992 19. உடலும் உணர்வும்: சீனச் சிறப்புச் சிறுகதைகள் - 1992 20. உக்ரேனிய மகாகவி தாராஸ் ஷெவ்சேன்கோ கவிதைகள்-1993 21. இவன் பிராங்கோ கவிதைகள் - 1994 22. லூகன் சிறுகதைத் தொகுப்பு - 1995
( காலம்
 
 
 
 
 
 
 
 
 
 

வியத்னாமியச் சிறுகதை நூலுக்காக 1992லும் உக்ரேனிய மகாகவி தாராஸ் ஷெவ் சென் கோவின் நூலுக்காக 1993லும் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதினைச் சுதந்திர இலக்கிய விழாவின்போது விபவி இவருக்களித்துக் கெளரவித்தது.
இலக்கியச் செம்மல் (1991) கலாபூஷணம் (1995) ஆகிய அரசு இலக்கிய விருதுகளும் இவருக்குக் கிடைத்துள்ளன.
பிந்திய நாற்பதுகளில் வீரகேசரியின் உதவி ஆசிரியராகவும் 50களின் ஆரம்பத்தில் சுதந்திரன் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கின்றார்.
கவிஞர், பத்திரிகை ஆசிரியர், பத்திரிகை,வெளியீட்டாளர்,
மொழிபெயர்ப்பாளர், கலாச்சார, ಕ್ಲಿಲ್ಲ
DLPH జ్ఞః
ஆலோசனை சபையின் முன் ன்ர், எழுத்தாளர்
சங்கங்களை உருவாக்கியவர், த்தாளார் என்று பல
இந்த காலத்தில் வாழ்ந்தோம் அவருடன் பேசினோம், |- இருந்தோம், உலாப் போனோம் என்று சொல்லிக்
జీః శ్లో
களுக்கெல்லாம் ஒரு பெருமை இருக்கிறது.
慈 மொழி பெயர்ப்பிகளை வெளியிட்டிருந்ததும் யசொந்த ஆக்கங்கள் எதுவுமே நூலாக வெளிவராதது.ஒரு
# ெேபருங்குறையாகவே இருக்கிறது.
மகாசக்தி, ஆசாநாசம், பால்காரப் பழனி, சட்டமும் சந்தர்ப்பமும், சத்திய போதி மரம், ஆகஸ்ட் தியாகி அறுமுகம் என்று ஆறு சிறுகதைகளை 1930க்கும் 50க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதியுள்ளார் இவர். இவைகளில் 1949இல் வீரகேசரியில் வெளிவந்த சத்திய போதி மரம் என்னும் சிறுகதை மட்டுமே இன்றைய வாசகர்களுக்கு வாசிக்கக் கிடைத்திருக்கிறது. (மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் பொங்கல் விழா - மலர் 1967 மறுபிரசுரம் துரைவியின் மலையகச் சிறுகதைகள் தொகுதி) மற்ற சிறுகதைகள் கேள்விப்படுவதுடன் சரி என்னும் நிலையிலேயே விடப்பட்டுவிட்டன.
ஈழத்து இலக்கிய முன்னோடிகளின் படைப்புகள் இப்படி அனாதரவாக விடப்படும் நிலை ஒன்றும் ஆச்சர்யமானது அல்ல.
மலையகச் சிறுகதைகள் தொகுதியில் (துரைவி) இடம் பெற்றுள்ள சத்திய போதிமரம் இத்தொகுதியின் நல்ல சிறுகதைகளுள் ஒள்றாகத் தகழ்கிறது.
தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (பாரிநிலையம், 1967) எழுதிய பேராசிரியர் கா. சிவத்தம்பி இலங்கையில் தமிழ்ச் சிறுகதை என்னும் அத்தியாயத்தில் இப்படிக் குறிக்கின்றனர்.
அடுத்துவரும் சுதந்திரப் பிரிவின் பண்புகளை ஆராய்வதற்கு முன்னர், இலங்கையின் புனைகதைத் துறை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி கே. கணேஷ் அவர்களைப் பற்றிக் குறிப்பிடல் வேண்டும்.
39
இதழ்-17 )

Page 42
ஈழத்தின் மத்தியப்பிரிவைச் சேர்ந்த திரு.கணேஷ் இந்தியாவிற் கல்வி பயின்றவர். அரசியல் இலக்கிய இயக்கங்களில் ஈடுபட்டவர். கே. ஏ. அப்பாஸின் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். தமிழ்நாட்டின் முக்கிய இலக்கியக் கர்த்தக்களுடன் இவருக்கிருந்த தொடர்பால் தென்னிந்தியாவில் இலங்கையின் இலக்கிய வளர்ச்சி பற்றி முக்கியமானோர் அறிந்திருந்தனர். ஆகஸ்ட் தியாகி ஆறுமுகம் என்று அவர் எழுதிய சிறுகதை தலைசிறந்த அங்கதச் சிறுகதைகளுள் ஒன்று. கணேஷ் அவர்களின் முயற்சியால் யாழ்ப்பாணத்தில் இருந்த மறுமலர்ச்சி இயக்கத்தினருள் சிலர் தேசிய முறையில் இயங்கத் தொடங்கினர். இக்காலகட்டத்திலேயே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
இவ்விலக்கியப் பெருமகளை மல்லிகை தனது ஏப்ரல் 1971 இதழ் அட்டையில் பிரசுரித்துக் கொளவித்ததுடன், மல்லிகைப் பந்தல் வெளியீட்டுத் துறைக்குள் பிரவேசித்த முதல் நூலான அட்டைப்பட ஒவியங்களிலும் இடம் பெறச் செய்துள்ளது. முப்பத்தைந்து ஈழத்துப் படைப்பாளிகள் இடம்பெற்றுள்ள இந்த நூலில் சி. வி. வேலுப்பிள்ளை, கே. கணேஷ், என். எஸ். எம். ராமையா, தெளிவத்தை ஜோசப் அகிய நான்கு மலையக எழுத்தாளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியதே.
அந்தனி ஜீவா வெளியிட்ட கொழுந்து தனது மே ஜூன் 1969 இதழில் திரு. கே. கணேஷின் உருவப்படத்தை வெளியிட்டுக் கெளரவித்திருந்தது. கொழுந்துக்கான அட்டை ஓவியக் கட்டுரைன் மலையகக் கவிஞர் சு. முரளிதரன் எழுதி இருந்தார்.
స్టోర్థ్య
எனது ஹைக்கூ கவிதைத் தொகுதி கூடைக்குள் தேசம்' நூலை ஜப்பானிய சக்ரவர்த்தியிட ఫిళ గణి ရှို့ဒ္ဓိ கொடுத்தபோது என் மகிழ்ச்சி இரட்டித்த ーン அந்தத் தோற்றம் அவரின் ::::ಜ್ಜೈ என்னைப் பயபக்தி வர் முன் இருக்கச் செய்தது. இலக்கியப் புலத்துள் ன்ன் ந்தனை கிளறிவிடப்படும்பீேது ஏராளமான துெண்ட அவரின் பழுத்த இலக்கிய அனுபவங்கள் ܩ ܕܕܶ ர்மிக்க வைத்தன என்று எழுதிச் செல்கின்றார்
மல்லிகையின் அட்டையில் இடம் பெறும் எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகள் பொதுவாக இன்னொரு எழுத்தாளரைக் கொண்டே எழுதப்பட்டு வருவதுண்டு. சி. வைத்திலிங்கம் பற்றித் தங்கத்தேவன், பிரேம்ஜி பற்றி பெரி. சண்முகநாதன், இளங்கீரன் பற்றி கைலாசபதி, கைலாசபதி பற்றி வரதர் - இப்படி,
ஆனால் கே.கணேஷைப் பற்றிய அட்டைப்படக் கட்டுரையை டொமினிக் ஜீவாவே எழுதியுள்ளார். கணேஷைப் பற்றி நான்தான் எழுதவேண்டும் என்று தானே விரும்பி எழுதினாரா? அல்லது கணேஷைப் பற்றிய கட்டுரையை எழுதித் தரப் பணித்த எழுத்தாள நண்பர் இன்று நாளை என்று இழுத்தடித்து உரிய நேரத்தில் ஆக்கத்தைக் கொடுக்காததால் தானே எழுதினாரா என்பது தெரியவில்லை.
எப்படி இருப்பினும் கணேஷைப்பற்றிய அறிமுகக் கட்டுரையை ஆழமாகவே அழகாகவே எழுதியுள்ளார் திரு. டொமினிக் ஜீவா (மல்லிகை - ஏப்ரல் 1971அட்டைப்படக் கட்டுரை)
காலம்
 
 
 
 
 
 
 
 
 

மலையகம் தந்த கலைப்புதல்வர்களின் ஒருவர் கே. கணேஷ் என்று தனது அறிமுகக் குறிப்பை ஆரம்பிக்கும் ஜீவா மனம் திறந்து சில உண்மைகளைக் குறிப்பிடுகின்றார்.
23 ஆண்டுகளுக்கு முன்பாக ஜீவா இதை 1971இல் எழுதியிருக்கின்றார் என்றால் 1948இல் என்று ஆகிறது. 23 ஆண்டுகளுக்கு முன்னால் என்பது இவர் யாழ்ப்பாணப் பட்டினத்தில் மூன்று மாத காலம் தங்கி இருந்தார். அப்போது பல இளைஞர்கள் இவரை இவர் தங்கியிருந்த இல்லத்தில் சந்திப்பார்கள் இலக்கியப் பிரச்சினை பற்றிய கலந்துரையாடல் நடைபெறும் பல புதிய இலக்கியக் கருத்துக்களை இவர் அந்த இளைஞர்களுக்கு எடுத்து விளக்குவார். அடிப்படையில் அக்கருத்துக்கள் அத்தனையும் முற்போக்கு அம்சம் மிகுந்ததாகவே இருக்கும். தன்னால் ஆக்கப் பெற்ற கவிதைகளை வாசித்துக் காட்டுவார். விமர்சனம் நடைபெறும். அப்படிஅக்காலத்தில் இவருடன் தொடர்பு கொண்டு இலக்கியப் பிரச்சனைகள் பற்றிக் கலந்துரையாடித் தெளிவு பெற்றதுடன் சரியானபாதையை இனம் கண்டு கொண்டவர்களில் நானும் ஒருவன் என்று திறந்த மனத்துடன் கூறுகின்றார் திரு டொமினிக் ஜீவா.
鸚安繫 ஜீவாவிடம் எனக்குப் பிடித்ததே அவருடைய இந்த லக்கியமனம்தான்.
ட்டுரையை ஜீவாவே எழுதியுள்ளது பற்றிய எனது டுத்த பந்தியில் தெளிவாக்கி விடுகின்றார் ஜீவா.
s முதன் முதலில் சந்தித்தேன் பகுதியில் இவரைப் பற்றி எழுத ஒப்புக் கொண்ட நண்பரின் கட்டுரை கிடைக்கச் சுணங்கிவிட்டது. எனவேதான் நானே இந்தக் குறிப்பை எழுத வேண்டி ஏற்பட்டது. இவரைப் பற்றிச் சொல்வதற்கு ஏராளமான இலக்கியத் தகவல்கள் உண்டு. ஆனால் எழுத ஒப்புக் கொண்ட அந்த நண்பர் இதை எல்லாம் உள்ளடக்கி எழுதுவார் என நம்பி இருந்தது பொய்த்துப் போய்விட்டது என்ற தனது இலக்கிய ஆதங்கத்தையும் எழுத்திலிட்டு வைக்கத் தவறவில்லை மல்லிகையின் ஆசிரியர். அதுதான் என்னைக் கவர்ந்த அவருடைய இலக்கிய மனம்,
இந்தப் பகுதி இல்லாமலே இக்குறிப்பை ஜீவா எழுதி இருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அட்டைப்படம் செய்தாகிவிட்டது. இதழ் வெளிவர வேண்டும். அதற்கான கட்டுரை வரவில்லை என்றால் பொறுப்பு இதழாசிரியருடையதுதானே!
இந்தப்பகுதியின் இரண்டு இடங்கள் என்னை சற்றே சிந்திக்க வைத்தது. கட்டுரை கணங்கி விட்டது என்பது ஒன்று. கணேஷைப் பற்றி எழுத ஏராளமான தவகவல்கள் உண்டு. எழுத ஒப்புக்கொண்ட நண்பர் இதை எல்லாம் உள்ளடக்கி எழுதுவார் என நம்பியிருந்தது பொய்த்துப் போய்விட்டது என்பது மற்றது.
கட்டுரை சுணங்கி விட்டது என்றால், தாமதமாகவேனும் கிடைத்திருக்கிறது என்று ஆகிறது கணேஷைப் பற்றிய முழு விபரங்களும் இல்லாத ஒரு ஏனோ தானோ கட்டுரையாக இருந்தது என்பதையே இரண்டாவது இடம் குறிக்கின்றது. 40 இதழ்-17 )

Page 43
எழுத ஒப்புக் கொண்ட நண்பர் யாராக இருக்கும் என்று அறிய முயல்வதும் இப்போது ஒரு சுவையான ஆய்வுதான். கணேஷைப் போன்ற ஒரு மூத்த முற்போக்கு எழுத்தாளர் பற்றி எழுத ஜிவா யாரிடம் கேட்டிருப்பார்? முற்போக்கு எழுத்தாளர் அணியினைச் சேர்ந்த ஒரு மூத்த முற்போக்கு எழுத்தாளரைத்தான் கேட்டிருப்பார். கணேஷின் இலக்கியச் சிறப்புகளை எழுத்தில் வெளியிட விருப்பமில்லாதவராக அவர் இருந்திருக்கின்றார். ஆகவே ஜீவா கேட்டதற்காக ஒத்துக் கொண்டாலும் உரிய நேரத்தில் கொடுக்காமல் இழுத்தடித்து கடைசி நேரத்தில் ஏனோ தானோ’ என்று ஒன்றை எழுதிக் கொடுத்திருக்கின்றார்.
கணேஷ் நடத்திய முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்திற்கு வித்திட்ட ஏடான 'பாரதி பற்றி இவர்கள் ஒருவருமே எழுதவில்லையே ஏன் என்னும் எனது கேள்விக்கான பதிலும் இதிலே இருக்கிறது.
தங்களுடன் ஒடித் திரியாத அல்லது தங்களுக்குக் கட்டுப்பட்டு உதட்டின்மேல் விரலை வைத்துக் கொண்டிருக்கச் சம்மதிக்காதவர்களைப் பற்றி இவர்கள் அசட்டையாக இருந்துவிடுவார்கள். நான் மார்க் போடாவிட்டால் இவன் எப்படி இலக்கியவாதி என்னும் சர்டிபிக்கேட் வாங்க முடியும் என்னும்
அசட்டை அது. مجموعہ
8.
ஒரு விதத்தில் இதுவும் ஒரு பயங்பரவாதம்தான்
قرية s الفيلم ܬܐܘܗ݈ܘ܂ இலக்கிய ஆளுநர்களின் மேலாதிக்க முதலாளித்துவம்
: శ స్ట్రేణి : ఫ్ఘజో భీ 鹽 龜。 ※ 嗣*つ இந்த அசட்ட்ைப் பயங்கரவாதத்தை நான் நேரடியாகவும் அனுபவித்வன்
லங்கை மலேசியா இலக்கியத் தொகுப்பொன்றை 'அக்கரை
ததெ 9. இலக்கியம் என்னும் பெயரில் 1968இல் வாசகர் வட்டம் வெளியிட்டது.
இலங்கை மலேசியச் சிறுகதைகள் கவிதைகள், கட்டுரைகள்
கொண்ட தொகுப்பு அது.
ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளான வைத்தியலிங்கம் இலங்கையர்கோனில் இருந்து டானியல், டொமினிக் ஜீவா. எஸ்.பொ. வ. அ. இராசரத்தினம். தளையசிங்கம், நந்தி செ. யோகநாதன். செ. கதிர்காமநாதன் வரிசையாகவும் அறுபதுகளில் சிறுகதை எழுதத் தொடங்கிய செந்தூரன்.என்.எஸ்.எம்.ராமையா தெளிவத்தை ஜோசப் உட்பட இலங்கையின் பதினெட்டுச் சிறுகதைகளும் மலேசியாவின் பன்னிரண்டு சிறுகதைகளுமா முப்பது சிறுகதைகளும் கட்டுரைகள் கவிதைகளும் அடங்கிய 465 பக்கத்தில் வெளிவந்துள்ள ஒரு பெரிய நூல் இது.
C காலம்
 
 
 
 
 
 
 
 

o*ಅಸ್ತಿ “ሩ
ఖః 義
ဒွိ ဒွိ
இந்த நூலைப்பற்றி மஞ்சரி ஒர் இலக்கியக் குறிப்பெழுதியது. அதில் தமிழ்ச் சிறுகதை தமிழ்நாட்டில் மட்டும்தான் வளர்ந்திருக்கிறது என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். தமிழ் நாட்டுக்கப்பாலும் செழுமையுடனேயே வளர்ந்து வருகிறது. அவைகளை அறியாமல் இருப்பது நமக்கெல்லாம் எவ்வளவு பெரிய நஷ்டம். அந்தக் குறையை வாசகர் வட்டம் 'அக்கரை இலக்கியம் என்னும் நூல் மூலம் ஓரளவு நிவர்த்தி செய்துள்ளது. மாதிரிக்கு ஒரு கதையைத் தருகின்றோம் படித்துப்பாருங்கள்’ என்னும் குறிப்புடன் என். எஸ். எம்.ராமையாவின் வேட்கையைப் பிரசுரம் செய்திருந்தது. இந்த மறுபிரசுரம் பற்றி ராமையா அறிந்திருக்கவில்லை. அதை அவருக்கு நான் அறிவித்தபோது ஒரு சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார். ஆள் அம்பு சேனைகளைக் கூட்டி அவருக்கு ஒரு பாராட்டு விழா வைக்கும் பலம் எங்களிடம் இருக்கவில்லை. உள்ளத்தால் மகிழ்ந்து கொண்டோம்!
స్ట్తోళ్ల :نامه . ஈழத்து இலக்கியமும், குறிப்ப ஈழத்துச் சிறுகதையும்
மஞ்சரியால் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறது"3من
1. : తో & இதோ பாருங்கள் 95 கதை என்று ஒரு மலேசியக் கதையை மஞ்சரி மறுபிரசுரம் சய்திருந்தால் அந்தப் பெருமை மலேசியாவுக்குப்
இந்த மறுபிரசுரம் பற்றி முற்போக்கு அணியின் பெரியவர் ஒருவரிடம் நான் கூறியபோது, அதை அவர் காதில் வாங்கியதாகவே காட்டிக்கொள்ளவில்லை! இது என்ன பெரிய விஷயம் மஞ்சரி தறுபிரசுரம் செய்விட்டால் அது ஒரு பெரிய இதா. என்னும் தோரணையில் மிகவும் அசட்டையாக இருந்துவிட்டார்.
அவர்களில் ஒருவரிடம்தான் ஜீவாவும் கணேஷ் பற்றிய கட்டுரையைக் கேட்டிருப்பார்! கணேஷ் என்னத்தைப் பெரிசாக சாதித்துவிட்டார் அவரைப்பற்றி எழுதுவதற்கு என்னும் அசட்டையால் அவர் ஜீவாவை எமாற்றி இருப்பார். மல்லைகையின் ஆசிரியர் என்னும் பொருப்புணர்ந்த ஜிவா தானே கட்டுரையையும் எழுதிக்கொண்டார். இப்படித்தான் நடந்தது என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கின்றார்.
அட்டையில் படம் இருக்கிறது உள்னே கட்டுரை இருக்கிறது மல்லிகை கணேஷையும் அட்டையில் போட்டுவிட்டது என்ற தோரணையில் இல்லாமல் கிடைத்த கட்டுரை திருப்திகரமானதாக இல்லை என்பதால் கணேஷைப்பற்றித் தானாவது எழுதி அந்த இலக்கியவாதியைக் கெளரவம் செய்ய வேண்டும் என்னும் இலக்கிய மனம் ஜீவாவுக்கிருந்திருக்கிறது.
துயரம் தோய்ந்த பலவிதமான சூழல்களால் அலைக்கழிக்கப்பட்டபோது பெருந்தோட்டத் தமிழர்கள் இந்த நாட்டில் நிலையான வாழ்வுரிமைகள் கோரி போராடியதைப் போலவே பலவித இன்னல்கள், ஒதுக்கல்கள், பாராமுகங்களுக்கிடையே தோன்றி வளர்ந்த மலையக இலக்கியமும் தனித்துவமான தனது இடத்தை நிலைநிறுத்திக் கொண்டே வந்துள்ளது.
(மலையகச் சிறுகதை வரலாறு எனும் நூலிலிருந்து)
இதழ்-17 )

Page 44
கேள்வி :
பதில்
கேள்வி :
வண்முறையை எந்த
(சமீபத்தில் +புத்தின் பிர, முக்கிய படைப்
r டா வந்திருந்து ர் - அவருட
கடந்த பல ஆண்டுகளாக இடை: து இயங்கும் காபூந்தாளர் நீங்கள் இன்றைய நெருக்கடிகனோ - நிகழ்வாழ்வின் இடுக்குகளை எதிர் கொள்ளும் பெரும் படைப்புகள் இக்காத்தில் எழவில்பை என்ற கண்காணம் நீங்களுக்குண்டு, நீங்கள் அதை உணரவில்லையா?
நான் மட்டுபஸ்: பவர் இதை உணர்ந்திருக்கிறார்கள். பல இடங்களில் இக்கேள்வி என்னிடம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு நான் சொல்பிேக் கூடிய பதில் இதுதான், சந்தர்ப்பம், சூழல் கார மோகச் சிலர் தாம் எழுதிய பெரும் பEடப்புடக்க1ே1ப் பிரகரிக்காது தாமதப்படுத்தலாம், அல்லது இனிமேல்தான் இனங்கள் ஒன்று திரண்டு அடிமனதிவிருந்து புதுப்பEடப்புகளாக வெளிவானாம். பல மறக்க முடியாத நிகழ்வுகள் அடிIEதில் ஆEடகாக்கப்பட்டு LLLL L LLLL 0S LLLLLLLLS TTTTM S TTTMT DuD uuuL Ttm எடுப்பது பழமை. அண்மையில் வெளிவந்த கோரில்லா நாபல் அத்தகைய புதுஉEடப்பு 18ாவாம்.
ாழத்தின் மிக முக்கியமான கவிஞன் நீங்கள் என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது. வீரத்தைத்தூக்கு மார்கழிக்குமரி போன்ற கவிதைகளை உதாரனமாகச் ീ#1 ി TTI, விடுதலையின் எத்தன்மையைச் சுரண்டவரும் எத்தகைய துப்பாக்கிப்பதர்களும் வெட வெடக்கட்டும்' என்ற முன்னதன் வரிகளும் பார்கழிக் கார்முகச் செல்வி நார்களிகொள்ளி உலாவருகின்றாய் பணிநனை தென்றல் முனைபடத்தளின்
குமரி
கனவுகள் அதிரும் என்ற பின்:ாதன் வரிகளும் இன்னும் என்னுள் ஒலிக்கின்றது. இவை போன்ற முக்கியமான
( காப்ப்
 
 

வ்கம் சமூக மாற்றத்தில் ாவுக்கு ஏற்றுக் கொண்டார்?
பாாரிகளில் ஒருவரான மு. பொன்னம்பலம்
நடந்த உரையாடல் - ஆசிரியர்
கவிதைகளிளாத் தந்துள்ளீர்கள். ஆால் நீங்கள் இன்று புதிய தலைமுறையினரால் 3llIi I I.III. – பத்திரிகையாளராகவே அறியப்படுவது ஏன்?
பங்ஸ் இதற்குரிய நான் அறிந்த கார40கள் மூன்று:
முதலாவது நான் அறுபதுகளின் ஆரம்பத்தில் எழுதத்தொடங்கினேன். 1968ல் எனது 'அது கவிதைத் தொகுதி பெரியந்ததற்குப் பின்னர் நான் எழுதிய கவினதகள் - சிப்பேற்றைத் தவிர - பத்திia:fல் பிரசுரிக்கப்படவிங்: இEA 1985ல் 'விடுத:பும் புதிய எல்11. பம்', 'பி'பகை விட்டெழும் மனிதர்கள் El Eir தவிர்ப்புக்களில் இரு தொகுப்புக்களாக கவிஞர் க. வின் பாத்தினத்தால் வெளிக் கொணப்பட்டபோதும் அவை போர்காலச் சூழல் காரணமாகப் போதிய சுற்றுக்கு விட முன்னரே இந்திய ராணுவத்தினால் விஸ்வரத்தினத்தின் வீடு கார்க்கப்பட்ட போது E Eது கவிதை நூல்களும் எரிந்து போயிE. பின்னர் ஐயர் அவர்களால் எனது கவிதை நூல் தமிழ் நாட்டில் வெளியிட முயற்சி எடுக்கப்பட்டபோதும் எனது கவிதை தட்டச்சுப் பிரதிகள் சி. போக:ால் தொEக்கப்பட்டது. பின்னர் 1997ல் எனது ஆக்கங்கள் பப்ாத ஒன்று சேர்த்து காளி '' என்ற கவிதைத் தொகுப்: எனது எண்டன் நண்பர்களான நேமிநாதனும் பாபோபுேம் வெளியிட்டனர். இதுவும் இன்றைய இளப் பரம்பரையினர் எல்போரிடமும் போய்ச் சேர்ந்ததாகச் சொல்லமாட்டேன். இப்பொழுதுதான் இதுபற்றிச் சிலர் பேசத் தொடங்கியுள்ளனர்.
இரண்டாவது கவிதைபற்றிய புதல் தொடர்பாகாது. நான் எழுபது பட்டும் மரபுக் கவிதைகளே எழுதினேன். பின்னர் "ல்ெ இருந்து 80 வார பரணப உடைத்து நான் எழுதிய புதிய கவிதைகள், இன்றைய வழக்கிலுள்ள புதுக்கவிதைகள் போஸ் அக்போது நீண்ட வசனங்களாக அமைந்தET, "சத்திய வாலும் சந்தர்ப்பவாதியும்', 'சத்தியர் செங்காவலர் வருகிறார்', 'கடி' ஆட்சி', 'நான்' பாரதியார்', 'துரு ஆகிய கவிதைகள் கவித்துவம் மிக்க வசனங்களாகபே விபர்சகர்கால் விமர்சிக்கப்பட்டன. இதன் பின்னர் 80 களில் இருந்து 90 வரை எழுதப்பட்டன: நான் முன்னர் எழுதிய வசனக்கவிதைகளும் வழக்கிலுள்ள புதுக்களினதகளுக்கு மிடையே இருந்த இடை வெளியை நிரப்புகின்ற உருவத்தைத் தரித்த புதுக்கவிதைகளாய் அணேபந்தET. "விடுதலைபம் புதிய எல்லைகளும் 'ஜு: 83', ' இருப்பின் அதிகரிப்பு' 'வீரத்தை தூக்கு குழந்தைகளே உங்கள் இழந்த ராஜ்ஜியத்தை மீட்டெடுங்கள்', 'அம்புலிமாமா', 'சொற்களும் கம்மா இருத்தலும் "ஆக்காத்திகள்-புதியதும் பழையதும் முன்னிரவின் மோகனம்', 'விடுகளும் கூடுகளும் ஆகிய
| 보 இதழ் - 17

Page 45
கவிதைகள் இத்தகையன. 'ஆக்காதிகள் - புதியதும் பழையதும்' என்னும் நெடுங்கவிதை ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை வித்தியாசமான பார்வையில் வித்தியாசமான உருவத்தில் எழுதினேன். எனது நண்பர்கள் பாராட்டிய அளவுக்கு அது பற்றி எந்த விமர்சனமும் முன்வைக்கப்படவில்லை. காரணம் நம்மிடையே ஆழமான கவிதை பற்றிய பன்முகப் பார்வையுடைய விமர்சகர்கள் இல்லாமையே.
மூன்றாவது கவிதை பற்றிய மொழிக் கையாள்கையும் கவிஞனைப்பின்னின்று ஊக்குவிக்கும் கருத்தியலும். ஒரு கவிஞனோ கலைஞனோ தனது படைப்புக்கள் துலக்கமுறுவதற்கு ஆழமான கருத்தியல் பின்னணி கொண்டனவாக இருக்க வேண்டும். ஆழமான கருத்தியலே ஒருவன் படைப்புகளுக்கு ஆழத்தைத் தருவது. சாதி எதிர்ப்பு, இன எதிர்ப்பு, பாஸிச எதிர்ப்பு போன்றவற்றை ஒரு கருத்தியலாகக் கொள்ள முடியாது. இவற்றை எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஒரு முற்போக்குச் சிந்தனை வேண்டும். பல கலைஞர்களிடம் இது காலவரை இவ்வாறு இருந்த கருத்தியல் மரபுவழிவந்த மார்க்சீயமே. இது இனிப் போதாது. மெய்முதல் வாதப் போக்கே இனி கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இனி அடுத்ததாக ஒரு கவிஞன் கையாளும் மொழி. எந்த விஷயம் பற்றிப் பேசுகின்றனோ அந்த தளத்துக்குரிய மொழிக் கையாள்கை பற்றிய பிரக்ஞை அவசியம். அனேகமான நம் ஈழத்துக் கவிஞர்களும், புலம் பெயர் கவிஞர்களும் ஒரே வகையான தளத்துக்குரிய சொற்களைக் கொண்டே ஒரே வகை RHYTHM வெளிகாட்டலிலேயே அனைத்து விஷயங்களையும், எழுதுவோராய் உள்ளனர். அதனால் இவர்களுக்கு 3. என்னுடைய கவிதைகள் கவிதைகளாகத் தெரியீழ்ர்ட்டா.
கவிஞர்கள் யாப்பில் எழுதப்படுங்
இன்னும் பல இ
ல்கள் என்று நினைக்கிறார்கள்.
கவிதைகளைப் அப்படியென்றால் மஹாகவி, நீலாவணன், முருகையன், தான்தோன்றிக்கவிராயர் எழுதியவை எல்லாம் பாடல்களாகிவிடும். இப்படி இவர்கள் எண்ணுவதற்குக் காரணம் காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை ஆகியோர் எழுதியவை பல இசைத்துப் பாடப்படுவதால் ஏற்பட்டிருக்கலாம். படிமம், குறியீடு, உருவகம், உவமை, இறுக்கமான சொற்கட்டமைப்பு, புதுக்கவிதைகளுக்கு மட்டுமல்ல மரபுக் கவிதைகளுக்கும் உரியனவே. காசி ஆனந்தன், புதுவை இரத்திதுைைர ஆகியோரின் கவிதைகள் பலவற்றிலும் இவற்றைக் காணலாம். கூடவே இனிவரும் கவிஞன் சுரத்துக் கெட்டுப்போன பழஞ்சொற்களைத் தூக்கி எறிந்து புதிய சொல்லாக்கங்களிலும் ஈடுபட வேண்டிய நிலைக்குள்ளா கின்றான். புதிய “போராளிச் சொற்களை" புகுத்த வேண்டியவனாகிறான். அதையே எனது "இனிதனாய் மேலெழு” என்னும் என் கவிதையில் முன்வைக்கின்றேன். அடக்குமுறை அராஜகம் போன்றவற்றை எதிர்த்தெழும் "இனிதர்கள்” இனிமேலெழ வேண்டும். பழைய "மனிதர்கள்" அடிமைத்தனத்தின் காவலர்களாகவே உள்ளனர். இவற்றின் விரிவில் என்கவிதைகள் படிக்கப்பட வேண்டும்.
காலம்
 
 

கேள்வி :
கேள்வி :
மேலும் புதுக் கவிதைகள் என்பவை சிறியனவாக இருக்க வேண்டும் என்று நமது கவிஞர்கள் நினைக் கின்றார்களோ என்னவோ, எவருமே இதுகாலவரை - வ.ஐ. ச ஜெயபாலனின் ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் தவிர - நெடுங்கவிதைகள் ரி. எ. எலியட் அலெக்சாண்டா புளொக் விற்மன் செய்தது மாதிரி செய்ய முயல வில்லை. இங்கே தான் நீங்கள் முதலில் கேட்ட இன்றைய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பெரும் படைப்புக்கள் ஏன் வரவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம் போல்படுகின்றது. அத்தகைய பெரும் படைப்புக்களை உருவாக்கும் VISION அதற்கான கருத்தியல் பின்னணி இவர்களிடம் இல்லாததுதானோ என்று நினைக்கத்தோன்றுகின்றது.
நீங்கள் அண்மையில் வெளியிட்ட நாவலான "நோயில் இருத்தலில் புறவய நிகழ்வுகள் அகவய ஆன்மீக நெருக்கடிகளுக்கு காரணிகளாவதன் சித்திரம் உள்ளது. உண்மையான ஆன்மீக தேடலில் இப்படி புறவயமான நிகழ்வுகள் எதிர் வினையாக"எழுமா? ஆழமான உள் முகத் தேடல்தானே அதனுடைய ஊற்றுக்கண்?
: நீங்கள் கேட்பது எனது நாவல் பற்றி ஏ.ஜே அவர்களின்
விமர்சனத்திற்கு நேர்மாறாய் உள்ளது. அதில் நான் அகவயப்பட்ட நோக்கையே அழுத்தி இயங்கியலுக்கு ஒறுப்பாக ஒரு பக்கத் துருவ நிலையில் நின்று எழுதியுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். உண்மையில் உங்கள் கேள்வி எனக்கு ஆறுதலைத் தருகின்றது. சதா வெளிப்பாயும் மனதையுடையவன் அதை சமப்படுத்திக் கொள்ள ஆழமான அகநோக்குடையவனாகவும் இருப்பதே இன்றைய தேவை என்பதையே அதில் உணர்த்த முயல்கின்றேன். அடுத்ததாக ஆத்மீகத் தேடல் என்பது உலகத்தில் இருந்துதான் நடைபெறுகிறது. (இந்தத் தேடல் இயங்கியல் வயப்பட்டதாக அமையும் என்பதும் நாவலில் உணர்த்தப்படுகிறது) ஒருவன் இது காலவரை வெளிப்பாயும் மனதையுடைய வெளிமனிதனாக இருந்து விட்டு உள்முகம் கொள்ளும் போது புற உலகின் தாக்குதல்கள் இருந்து கொண்டே இருக்கும். அகமும் புறமும் ஒன்றையொன்று தழுவி வெட்டிச் செல்லும் தாக்குதல்கள். இத்தாக்குதல்கள் ஒருவன் தன் சுயத்தை அடையும் வரை இருந்து கொண்டிருக்கும். சுயத்தை அடைந்தபின் அவன் அங்கே இருந்தவாறு கீழே காலூன்றும் போது இன்னொரு சுழல் தொடங்குகிறது. அப்போது அவன் முன்னே தெரிவான வெல்லாம் அவன் சுயத்தின் இன்புருவாக்கங்களே. அந்நிலையில் எதிரியோடு பொருந்தும் போராட்டமும் வேறு தளப் போராட்டமாகவே மாறும். ஆகவே அகநோக்கென்பது புறத்தில் இருந்து உள் நுழைபவற்றோடு நடத்தும் போராட்டமே.
சமீபத்திய ஈழ வரலாற்றில் திசைப்பத்திரிகை ஒரு முக்கியமான பத்திரிகை. வழக்கத்திற்கு மாறாக அது எல்லாராலும் பாராட்டப்பட்டது. அப்பத்திரிகை சிறப்பாக வெளிவந்ததற்கு நீங்களும் ஆசிரியராக இருந்தும் ஒரு காரணம் எனலாம். நெருக்கடியான காலத்தில் சிறப்பாக இயங்கிய பத்திரிகை ஏன் நின்று போனது?
இதழ்-17 )

Page 46
கேள்வி :
பதில்
கேள்வி :
பதில்
C காலம்
: 80களின் பிற்கூற்றில், இந்திய (IPKF) ராணுவத்தின்
ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்பத்திரிகை விடுதலைப் புலிகள் குடாநாட்டுக்கு திரும்பி வந்தபோதும் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் சிறிது காலத்திற்குப் பின்னர் இப்பத்திரிகை "சிறப்பாக வெளி வந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் இது வேறொரு நேரத்தில் வேறு சாராரின் கையில் சிக்கிக்கொள்ளப்படும் பட்சத்தில் 의 l துஷ்பிரயோகிக்கப் படலாம். ஆகவே இதை நாம் நிறுத்தப் போகின்றோம்" என்று அன்று இவற்றுக்குப் பொறுப்பாய் இருந்த விடுதலைப் புலி உறுப்பினர் அழகு என்னிடம் கூறினார்.
தளையசிங்கம் தன்னுடைய காலத்தில் ஈழத்து இலக்கியப் போக்குகள் குறித்து சில கணிப்புகள் செய்தாரே, அவை பொய்த்துப் பொய்விட்டன எனச் சொல்லலாமா? அதாவது ஈழத்து இலக்கியம் பல வழிகளில் முன்னோடியாகத் திகழும் என்றும் கீழைத்தேய மேலைத்தேய கலை கலாச்சாரங்களின் மையமாக நான்கு மதங்களும் உடனிருந்து இயங்கும் இலங்கை அதற்கு உறுதுணை யாகவும் இருக்கும் என்றும் அர்த்தப்படும் படி அவர் சொன்னார். ஆனால் அப்படி நிகழவில்லையே?
தளையசிங்கம் கூறியவையெல்லாம் தனது திறமையை
அடிப்படையாக வைத்தே கூறப்பட்டவை. 1963 அவர் எழுதிய 'மூன்றாம் பக்கம்' (தினகரனில் வெளிவந்தது) கட்டுரையில் இலங்கை தமிழ் எழுத்தாளனே நோபல் பரிசு பெறப் போகின்றான் என்று கூறியதும் தனது திறனுமயை முன்வைத்தேதான். இன்று தமிழ்நாட்டில் 9) பெறும் தளையசிங்கம் தொடர்பான கருத்த்ர்டல்கள் வ கூற்றின் உண்மையை ஒரளவு மெய்பிப்பதாகவும்: அவர் silu PERENNIAPHILOSOPHY segsu புதியம்ேமுேதல் பெருந்தத்துலுப் போக்கும் பூரண இலக்கியநோக்கும் கலு இலக்கித்துறையில் மட்டுமல்ல புரட்சியை நீற்படுத்தவல்லது. அந்த தீால் ஆற் ள்ள எவரும் அதை
s
தளையசிங்கம்முன்னெடுத்த இலக்கியப்போக்கு அதற்குரிய சூழல், மரபில் பின்தொடர ஆளின்றி கைவிடப்பட்டுள்ளது என்று கூறலாமா? (இந்தியாவில் தளையசிங்கம் கதைக்கப்படுகின்றார். இங்கிருப்பதைவிட அங்கு அவருக்கு வாசகர் அதிகம் எனலாம்)உங்களைத் தவிர அவருக்குவேறு தொடர்ச்சி இல்லைத்தானே?
ஒருவரைப் பற்றிய கண்டுபிடிப்பும் அதன் வழிவரும்
தொடர்ச்சியும் எப்பொழுதும் எங்கும் ஏற்படலாம். உடனடியாக ஏற்படுவதுவும் உண்டு. பல காலங்கள் கடந்த பின்னரும் ஏற்படுவதுண்டு. ஆகவே தேவைசூழல் ஏற்படும்போதுபுதிய கண்டு பிடிப்புச் செய்பவர்களாகப் புதியவர் வெளிவரலாம். உதாரணமாக மு. த. வின் சிந்தனைப் பள்ளியில் இயங்கிய என்னுடைய, கவிஞர் வில்வரத்தினத்தினுடைய ஆக்கங்களில் தளையசிங்கத்தின் சிந்தனை இலக்கிய அருட்டல்கள் இருப்பதையும் விட, வெகுதொலைவில் வன்னியில் வாழும் நிலாந்தனின் எழுத்துக்களில் மு. த. அவாவிய இலக்கியப் போக்கு சுடர்வதைக் காணலாம். உதாரணத்திற்கு நிலாந்தனின் மண் பட்டினங்கள்
 
 
 
 

கேள்வி :
பதில்
இலக்கியம் என்பது எதற்கும் கட்டுப்படாத அகத்தின் சுயவிகச்சிப்புஎன்றுமு.த.கூறினார். அதனால்இலக்கியத்தை பிரசாரக் கருவியாக்கிய கைலாசபதி போன்றவர்களை எதிர்த்தார். ஆனால் அவரே பின் இலக்கியத்தைப் போதனைக் கருவியாக்க முற்பட்டார். முற்போக்கு இலக்கியத்திற்குப் பதிலாக மெய்யுள்' என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இந்த முரண்பாடுதான் அவரைத்தோற்கடித்த பலவீனம் எனலாமா?
முன்னரும் இவ்வாறு சிலர் மு. த. மேல் குற்றஞ்சாட்டிய
போது நான் பின் வருமாறுபதில் அளித்தேன். மெய்யுள் என்பத ஒரு கோட்பாடல்ல. அதுகோட்பாடுகளையெல்லாம் உடைக்கும் ஒரு விடுதலை உருவம். மெய்யுள் என்பது கலையை அழிக்கும் கலை இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம் என்று அதனால்தான் மு. த. கூறினார். இந்தத்தடைகளை உடைத்து புதிய விடுதலை உருவங்களை கலை இலக்கியத்தில் உருவாக்க வழியமைப்பதே மெய்யுளாகும். எவ்வாறு மரபு ரீதியாக யாப்புவழி வந்த கவிதையின் உடைப்பு புதிய கவிஞர்களுக்கு சுதந்திரமாக கவிதை எழுதப்பணித்ததோ, அவ்வாறே, ன்றைய கவிதை, சிறுகதை, நூலுல் நீர் 盟 கட்டுரை என்னும் பழைய உருலுங்களின் உடைப்பும் எந்தக் கட்டுகளுமற்ற புதிய ஒருங்களின் தோற்றத்திற்கு வழியமைக்கும் என்றேஅவர் கூறினர் ஒருமுழை த. சமகாலச் சிறுகதைகள் பற்றி "மண்டைதீவு கல்ை இலக்கிய விழாவில் பேச
அழைக்கப்பட்டபோது அவ்விழாவில் உலகச் சிறுகதையாக இருதுருவங்களாக நின்ற அமெரிக்காவும் சீனாவும் இணிந்தது பற்றியும், இந்தியச் சிறுகதையாக பாகிஸ்தானுக்கு எம்.ஜி.ஆர் சினிமாப்பாணியில் விடுத்த எச்சரிக்கை பற்றியும் இலங்கைச் சிறுகதையாக பண்டா. செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்பட்டதும் அதன் பின்னூக்கியான ஜே. ஆரின் கண்டியாத்திரை பற்றியும், யாழ்ப்பாணச் சிறுகதையாக, மு. த. தனது சாதி எதிர்ப்பு போராட்டத்தின் போது எவ்வாறு தமிழரசுக் கட்சி உறுப்பினர் க. பொ. இரத்தினம் எம். பி. தலைமையில் தாழ்த்தப்பட்ட சைவமக்கள் நன்னீர் கிணறுகளில் தண்ணிர் அள்ள அனுமதிக்கப்பட்டதையும் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவமக்கள் சமயம் காரணமாக தண்ணிர் அள்ளும் உரிமை மறுக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டி மு. த. பின்வருமாறு தன் உள்ளுர் சிறுகதையை முடித்தார். "க.பொ. இரத்தினம் தண்ணீர் அள்ளும் கிணற்றில் (மதம் காரணமாக) அவரின் கட்சித்தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் தண்ணிர் அள்ள முடியாது".
சமகாலச் சிறுகதைகள் பற்றிய அவரின் இப்பேச்சு, சிறுகதைகள் பற்றிய மரபையே உடைப்பதாக இருந்தது. இதிலிருந்து நாம் ஒன்றை அறியலாம். சாதாரணமாக நாம் எழுதும் நாவல், சிறுகதை, கவிதைகளே நமது எழுத்துச்சுதந்திரத்திற்கு தடையாக நிற்கின்றனவென்று அவர் கூறும் போது பிரச்சாரம் போதனை, கோட்பாடு எல்லாவற்றையும் கடந்து நிற்கும் விடுதலை இலக்கியத்தையே அவாவி நின்றார் என்பது புலனாகும்.
Qab4p - 170

Page 47
கேள்வி :
பதில்
பதில்
Cakaiaf :
தளையசிங்கம் தேசிய இலக்கியத்தின் பிதாமகர் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் பேசியது சர்வதேசியந்தானே?
தளைய சிங்கமே தமிழ்த்தேசியத்தின் முன்னோடி எனலாம்.
அவரது முதல் படைப்பான "தியாகம் (1957), பெப்ரவரி 4 இரத்தம் ஆகிய சிறு கதைகளும் 1960° எழுதப்பட்ட ஒருதனிவீடு'நாவலும் இதை நன்கு புலப்படுத்தும். அதே நேரம் அவரது ‘புதுயுகம் பிறக்கின்றது' சிறுகதை சர்வதேசிய நிலவரங்களை நம் முன்கொண்டுவரும். அவரது முற்போக்கு இலக்கியம் கட்டுரை எவ்வாறு ஒருவன் தேசியத்தைப் பேணியவாறே சர்வதேசியாக விரியலாம் என்பதைக் காட்டும்.
: மு. த. வின் 'ஒருதனி வீடு' நாவலின் தலைப்பு நீங்கள்
பிற்பாடு போட்டதாக கூறுகிறார்கள். நீங்கள் அவர் படைப்பில் ஏதாவது தலையிட்டுள்ளீர்களா?
: இது மிகவும் தப்பான எண்ணமாகும். சி. சரவணபவனால் (சிற்பி) வெளிக்கொணரப்பட்ட 'கலைச்செல்வி சஞ்சிகை நடத்திய நாவல்ப் போட்டியில் இது முதல் பரிசு பெற்ற நாவலாகும். அக்கால (1963) கலைச் செல்வி இதழைப்
போதே வெளியிட்ட போர்ப்பறை' நூ லும்(இந்நாள் ‘ஒருதனிவீடு' பற்றிக்குறிப்பிடுகிறார். ே ཕྱི་ இந்நாவலின் கடைசியில் அதன் பிரதான பாத்திர 8 சிங்கராசன் கீற்றாக வரு ஒரு ஆண்கிரீவுண்ட் ரீதச் విల్లీ அமைத்தாவது
56 புகுத்தியதாகக்
ஆனால் அதனால்தான் போர்ப் பறைநூலில் "ஓரளவுக்கு அதில் தீர்க்கதரிசனம் இருப்பதாகவும் எண்ணம்” என்று (1970) கூறுகின்றார். இந்நூலின் மூலத்தை வாசித்தவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.
இலங்கை ராணுவத்தின் படையெடுப்பால் (1991) தளையசிங்கத்தின் பலபடைப்புக்கள் அழிந்து போனதையிட்டு நீங்கள் பெரிதும் கவலையடைந்ததை நான் புரிந்து கொள்கிறேன். அவற்றைப் பாதுகாப்பதற்கு கூடிய கவனம் எடுத்திருக்கலாம் அல்லவா?
: 1991ல் இலங்கை ராணுவமும் ஈ. ப், பி. டி. பியினரும் நமது
தீவுப் பகுதியை கைப்பற்றியபோது நான் அங்கே இருந்தேன். நான்கு வருடங்களாக அடைபட்டுக்கிடந்த நான், முக்கிய அலுவல் நிமித்தமாக எனது குடும்பத்தோடு கொழும்புக்கு வந்தபோது, எனது வீடு உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டன. இதன் காரணமாய் உடைபட்டுத் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்து மாடுகளும் ஆடுகளும் லட்சக்கணக்கான ரூபா பெறுமதியான எமது புத்தகங்களை அழித்துச் சின்னாபின்னமாக்கின. இதற்குள் அகப்பட்ட மு. த.வின்
O sai
 
 
 
 
 
 
 
 
 

கேள்வி :
பதில்
கேள்வி :
பதில்
ஆக்கங்கள், டயறிகள் எல்லாம் அழிந்து போயின நான் மு. த. வின் டயறிகள் என்ற தலைப்பில் ஆவலோடு வெளியிடவிருந்த பெரிய நூல்களுக்கான திட்டம் கைகூடாமல் போனது எனக்குமட்டுமல்ல இளஞ்சந்ததியினருக்கும் பேரிழப்பே மு. த. வின் இழப்புக்குப் பின்னர் இதுவே எனக்கு நேர்ந்த பேரிழப்பாகும். இதற்கு முன்னர் தமிழ் நாட்டில் பிரசுரிக்க எடுத்துப்போன அவரது நாவல்களும் தொலைந்து போயின.
எழுத்தாளர்களும் கலைஞர்களும் அரசியல்வாதிகளின் கைப் பொம்மையாக இல்லாதிருக்க அவர்களே அரசியல் வாதிகளாகவும் இருக்கவேண்டும் என்று மெய்யுளில் தளைய சிங்கம் சொன்னார். இது சாத்தியமா?
: நான் ஆரம்பத்தில் கூறியதுபோல், இவையெல்லாம் மு. த
கொண்டிருந்த கருத்தியல், இதற்கான VISION ஆகியவற்றின் வெளிப்பாடே. அவரின் ஒத்தாளனாக இருந்து கொண்டேதான் சமூக சீர்தி இருந்ததோடு, 'ಆಕ್ಷೌಶಲ್ಯ ஆரசிய
அமைப்பையும் அமைத் LIL LIIi. 1970 தேர்தலின் போதுதமிழர்சு கட்சி வேட்பாளர் க. பொ இரத்தினம் தேர்தல்பிரசாரத்தின்போது, மு. த. வின் கருத்துக்கள்ை எதிர்த்து'அரசியல் ஒரு சாக்கடை அதில் புனிதமான சர்வோதயத்தை புகுத்தக்
2& ாது" என்று சொன்னபோது, அங்கிருந்த மு.த உடனே
எழுந்து"அப்படியானால் நீங்கள் ஒரு சாக்கடையா?” என்று கேட்ட கேள்வி கூட்டத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியதோடு க. பொ. இரத்தினத்தையும் தடுமாற வைத்தது. இத்தோடு நிற்காமல் பத்திரிகையில் வந்த இச்செய்தி மு. த.நடத்திய சாதி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அவரைப்பழிவாங்க க.பொ. இரத்தினத்தைத் தூண்டியது. பொலிசாரைக் கொண்டுமு.த. வைத்தாக்கும் திட்டம், (கோயில் பஞ்சாயத்தினரோடு இணைந்து) க.பொ இரத்தினத்தின் வீட்டிலேயே போடப்பட்டது.
கலைதரும் பரவச அனுபவத்தை எதிர்காலத்தில் எல்லா அறிவுத்துறைகளும் அளிக்க ஆரம்பிக்கும் என்றார் தளையசிங்கம். ஆனால் இன்று நடப்பது நேர்மாறாக இருக்கிறது. அறிவுத் துறைகள் மேலும் மேலும் சிக்கலுடையதாகவும் செறிவாகவும்மாறிவருவதால்கலையே முக்கியமான மாற்றாக மாறிவருகிறது, இல்லையா?
தற்போது கலை, இலக்கியம் என்பவற்றின் மூலமே பரவச
அனுபவத்தைப் பெறும் ஒருவன் எதிர்காலத்தில் எத்தொழிலைச் செய்தாலும் அதே பரவச அனுபவத்தைப் பெறும் நிலைக்குத் தன்னை வளர்த்தவனாக இருப்பான். அதாவது எவனெவன் தன் சுயத்தின் இருப்பைக் கண்டு
அந்நிலையை அடை கின்றான். தற்போது கலை இலக்கியத்தில் ஈடுபடும் நுண்ணுணர்வுடையோர் தம் சுயத்தின் ஆழத்திற்கு இட்டுச் செல்லப்பட்டு, அப்பரவ நிலையை மேலெழச் செய்கின்றனர். இதைத்தான் தளையசிங்கம் சொல்கிறாரேயன்றி, நாம் சிக்கலான
அறிவுத்தறைகளைத் தெரிந்துகொள்வதைப்பற்றியல்ல.
5
இதழ்-17 )

Page 48
கேள்வி :
பதில்
கேள்வி :
ஈழத்து சாதிப் பிரச்சினை தொடர்பாக அர்ப்பணிப்போடு இயங்கியிருக்கிறீர்கள். ஏன் அது தொடராமல் போனது? இன்றைய நிலை என்ன?
: மு.த இறந்ததற்குப் பின்னரும் நாம் சாதியத்துக்கு எதிராக
ஊரில் இயங்கவே செய்தோம். தடுக்கப்பட்ட கிறிஸ்த்தவ தாழ்த்தப்பட்ட மக்களையும் தண்ணிர் அள்ளுவதற்குத் தூண்டினோம். மேலும் தாழ்த்தப்பட்ட பகுதி மக்களின் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுவதிலும் தொடர்ந்துஈடுபட்டு வந்தோம். மு. த. தனது சாதி எதிர்ப்புப் போராட்டத்தை பல திட்டங்களோடேயே செய்தார். தீவுப்பகுதியில் ஆரம்பித்த சாதி எதிர்ப்புப் போராட்டத்தை, ஈழத்தின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கும் விரிக்கும் நோக்கமும் பின்னர் அடுத்த கட்டமாக அப்போராட்டத்தையே அரசியல் போராட்டமாக மாற்றி, தமிழர் உரிமைகளுக்காகவும் போராடவும் - உண்மையான காந்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்க இருந்தார். மு. த. வின் மரணம் எமக்கு பலவழிகளில் தடைகளை ஏற்படுத்தி, எம்மை வேறுபணிகளில் ஈடுபட கட்டாயப்படுத்திற்று. பின்னர் நேர்ந்த போர்க்காலச் சூழலால் சாதிய முனைப்புக்கள் மழுங்கடிக்கப்பட்டதாக தெரிந்தாலும் இன்னும் அடியோடி உயிர்ப்போடு இருப்பதாகவே படுகிறது. இதற்கெதிரான கலாசாரப் புரட்சியொன்று அவசியம்.
'உண்மையான காந்தீய சத்தியாகக் கிரகப்
போராட்டத்தை மு.த முன்னெடுக்க இருந்தார்
என்றீர்கள். ஏன் தமிழரசுக் கட்சியின் அகிம்சைப்சி போராட்டம் இல்லையா? அது ஒரு தற்காப்பு போராட்டம்
என்றும் சிலர் கூறுவதுண்டு. அப்படியானால் இது
காந்திக்கு பொருந்தாதா? 籃 *
: தமிழரசுக் கட்சியினர் எந்தக் கலத்திலும் காந்தீய
சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தவில்லை. காந்தியின் 議 போராட்டத்தையே அவர்கள் புரிந்திருக்கவில்லை. சத்திய்ாக் கிரகம் என்பது சத்தியத்தை சதா அழுத்துதல். அதற்காக உயிரையும் துறக்கத் தயாரானவனுக்கே அது சத்தியாகிரகப் போராட்டமாக மாறும். 1962ல் தமிழரசுக் கட்சியினர்
கச்சேரியடியில் நடத்திய சத்தியாக்கிரகத்தின்போது, சிறிமாவோ அரசாங்கத்தால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதை இவர்கள் எதிர்பார்க்கவில்லை. இவர்கள் அடித்து வதைக்கப்பட்டு வீட்டுக் காவலில் சிறைவைக் கப்பட்டனர். இத்துடன் இவர்கள் சத்தியாக் கிரகப் போராட்டம் முடிவுற்றது. 'சிறைசென்ற செம்மல்களாக" வெளிவந்தனர். காந்தியின் சத்தியாக்கிரகமாயிருந்தால் சிறையிலும் (உண்ணா விரதம்) தொடர்ந்திருக்கும். வெளியிலும் தொண்டர்கள் போராட்டத்தை தொடர்ந்திருப்பர். ஆனால் தமிழரசுக் கட்சியினரோ சூடுகண்ட பூனைகள்போல் அதன்பின்னர் அந்தப் பக்கமுமே தலைவைத்துப் படுக்கவில்லை. சமரசம் ஒப்பந்தம், மாவட்டம் என்று கோஷம் எழுப்பினர். அல்லது 'அகிம்சைப் போராட்டம் தோற்றால் ஆயுதம் ஏந்தவும் தயங்கமாட்டோம்" என்று மேடையில்
C காலம்
 
 

கேள்வி :
பதில்
கேள்வி :
பதில்
முழங்கினர். அகிம்சைப் போராட்டத்திற்குள் ஆயுதப்
போராட்டத்தைப் புகுத்திப் பேசியதே இவர்களுக்கு அகிம்சைப் போராட்டம் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்று புலனாகிறது.
நீங்களும் தளையசிங்கமும் 1970ல் ஆட்சிக்கு வந்த சிறிமாவோவின் S.L.F.P அரசுக்கு ஆதரவு அளித்தீர்களா?
நாங்கள் சர்வோதய அரசியல் முன்னணி என்ற அரசியல்
அமைப்பை உருவாக்கி, உள்ளூர் பிரமுகர் ஒருவரை வேட்பாளராக நியமித்து தேர்தலில் போட்டியிட்டோம். நாங்கள் வெற்றிபெறாவிட்டாலும் சுயாட்சிக் கழக தலைவரை தோற்கடித்து இரண்டாம் இடத்திற்கு வந்தது ஒரு சாதனையே. தமிழரசுக் கட்சியின் போலிப் போராட்டத்தை அம்பலப் படுத்தியிருந்த நாம், அவர்கள் சேர மறுப்புத் தெரிவிக்கும் அன்று ஆட்சியிலிருந்த, இடது சாரிகளோடு கூட்டுச்சேர்ந்திருந்த SLFP யுடன் சேர்ந்தோம். இதற்குரிய காரணம் தமிழர் பிரச்சினையை முதலில் சிங்கள மக்களோடு உரிய முறையில் கதைக்க வேண்டும் என்பதே. அதற்காக அவர்களுடைய மத்திய சபையில் x இடங்கேட்பிோம். அவர்கள்
இடந்தருவதாகச் சொல்லி பின்னர் இழுத்தடித்து "மறுக்கவே ஆறுமாதங்களுக்குப் பின்னர் அதிலிருந்து
எமது சர்வோதய அரசியல் முன்னணியை விலக்கிக்கொண்டோம். ஆனால் நாம் நியமித்த பிரமுகரோ அக்கட்சியிலேயே ஒட்டிக் கொண்டு வேலைபெற்றுத்தரும் வங்கியாக மாறினார் என்பது வேறுவிடயம். உண்மையான சத்தியவான் எப்போதும் பொதுநல லட்சிய நிறைவேற்றத்துக்காக எவரோடும் கூட்டுச் சேருவான். அதற்கு தடையேற்படும் பட்சத்தில் அதிலிருந்து விலகிவிடுவான். சந்தர்ப்பவாதியும் இவ்வாறே, தனது தனிநல நிறைவேற்றத்திற்கா எவருடனும் கூட்டுச்சேருவான்,தனது தனிநலன்போஷிக்கப்படாதபோது விலகுவான், வேறொன்றோடு சேருவான். இங்கே சத்தியவானும் சந்தர்ப்பவாதியும் ஒரே கோட்டில் நிற்பது போலவே தெரியும் ஆனால் காலந்தான் யார் சத்தியவான் யார் சந்தர்ப்பவாதி என்பதைப் புகட்டும். நாம் நியமித்த வேட்பாளரை நமது அமைப்பிலிருந்து ஒதுக்கியதால் அவர்கூட எமது சாதியெதிர்ப்புப் போராட்டத்தின் போது எமக்கு எதிராக இருந்தார்.
தளையசிங்கம் சமூக மாற்றத்தில் வன்முறையை எந்தளவுக்கு ஏற்றுக்கொண்டார்?
: மு. த.வின் போர்ப்பறையிலிருந்தே இதற்கு பதிலைத்
தரலாம். அவர் இது பற்றி இப்படித்தான் கூறுகிறார் என்று நினைக்கிறேன்.
ஆயுதம் ஏந்தாத அகிம்சைப் போராட்டத்துடனேயே உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒர் உன்னநிலை ஏற்றபட்டதெனலாம். அங்கேதான் உண்மையான மனிதன் பிறக்கிறான். ஆனால் ஆயுதம் ஏந்தாத போராட்டமே ஒரே
இதழ்-17 )

Page 49
Galaisí' :
ஒரு போராட்டமாக மாறுவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்பதையும் மறந்து விடக்கூடாது. குறைந்தது ஒரு தனி உலக அரசு தோன்றிய பின்னர்தான் ஆயுதப்போராட்டமே அனாவசியமாகலாம். அதற்குமுன் அதற்கும் தயாராகவே இருக்கவேண்டும். அது ஒர் அரசின் கடமை. ஆனால் ஆயுதம் ஏந்தினாலும் சரி ஏந்தாவிட்டாலும் சரி போராட்டம் அகிம்சைப்
போராட்டமாகவே இருக்க வேண்டும்.
தளையசிங்கம் சத்தியாக்கிரகத்தின்போது அடிவாங்கியதற்கும் அவர் மறைவுக்கும் இடையில் அவர் எதைப்பற்றிச் சிந்தித்தார்? என்ன செய்தார்? என்பன பற்றி சிறிது சொல்லுங்கள்.
தளையசிங்கம் பொலிசாரிடம் அடிவாங்கியதற்குப்பின் 1%
வருடமே உயிர் வாழ்ந்தார் எனலாம். அதாவது 1971 நடுப் பகுதியளவில் தனது சாதி எதிர்ப்பு போராட்டத்தை தீவிரப்ப படுத்தியதனால் பொலிசாரால் தாக்கப்பட்டார். சிறையில் ஒரு மாதம் இருந்து வெளிவருகிறார். அதன்பின் 1973 ன் ஆரம்பத்தில் நோய்வாய்ப்பட்டு, தனது எழுத்து, இயக்கவேலை களையும் துறந்த நிலையில் இறந்து போகிறார். இந்த இடைப்பட்ட 1 3/4 வருடத்தில் அவர் அதிகமாக இயங்கவில்லை. அவர் "பூரணி இதழை வெளிக்கொணர்வதில் ஆர்வங் காட்டினர். ஆனாலும் அதில் அவர் தலையீடு இன்றி ஒர் ஆசிரிய குழுவின் கீழ் இயங்க வைத்தார். பூரணிக்கு சில கட்டுரைகள்எழுதினார். 'வர்க்கவியலும் குணவியலும் என்ற தலைப்பில் பெரிய நூல் ஒன்று எழுதுவதற்கு குறிப்புக்கள் எடுத்திருந்தீர். இவற்றையெல்லாம் விட சிறையில் அவ
அனுபவங்கள் அவர்மனதில் ஆழப்பதிந்திருந்தன. அவர் சிறையில் இருந்த காலத்தில் அங்கே 1971ல் கைது செய்யப்பட்ட ஜே. வி. (S) கிளர்ச்சிக்கார fries 6T இளைஞர்கள் இருந்தனர். விக்ரர் ஜவான் லயனல் போபகே போன்றோர். இதையும் விட அங்கே அவர் சந்தித்த, பொலிசாருக்கு குண்டெறிந்து சிறைப்பட்டிருந்த ஈழத்து முதல் போராளியும் தியாகியுமான சிவகுமார் கதைத்தவை
தளையசிங்கத்தை ஆச்சரியபடுத்திற்று. சிவகுமார் தளையசிங்கத்தைப் பார்த்து, “நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்?’ என்று கேட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணிர் அள்ளுவதற்காக தாம் நடத்திய போராட்டத்தின் விளைவு இது என மு. த விளக்கினார். இதைக் கேட்டுவிட்டு சிவகுமார் சிரித்தார். சிரித்துவிட்டு பின் இப்படிக் கூறினார். "உங்களுக்கு விசர், அவ்வளவு வெள்ளாளற்ற கிணறுகளுக் குள்ளையும் பொலிடோல் ஊத்தி அவர்களை கொல்லாமல்
இப்படி அடிவாங்கிற்று வந்து நிற்கிறியளே
C காலம்
 
 
 
 

கேள்வி :
கேள்வி :
; இவையெ
இக்கூற்று அவரை வியப்படையச் செய்தது. எதிர்காலம் வன்முறை மிகுந்ததாக இருக்குமென்று அடிக்கடி கூறினார். இதற்கேற்பவே ஜே. வி.பி கிளர்ச்சிக் காரரை ஒப்பிட்டு அவர் கூறியவை முக்கியமானது. “தமிழர் பலவிதத்திலும் சிங்கள அரசின் அடக்கு முறைக்கு ஆளாகியும் இன்னும் போராடத் துணியாது இருக்கையில் ஒப்பீட்டளவில் எந்தவித அடக்கு முறைக்கும் ஆளாகாத சிங்கள இளைஞர் வெறும் பொருளாதார சுரண் டலை எதிர்த்து போர்க்களத்தில் குதித்திருப்பது நம்மவருக்கு பாடம் புகட்டும்” என்றார்.
இன்றைய ஈழத்து இலக்கிச் சூழல் எப்படி இருக்கிறது?
: ஈழத்து இலக்கியச் சூழல் ஒப்பீட்டளவில் மந்தக்கதியிலேயே
செல்கிறது. பெரிய சாதனைகளுக்கான ஆளுமைகள் இனிமேல் தெரியவரலாம் - இளஞ்சந்ததியினரிடமிருந்து
சிவசேகரம் உங்களுடன் மோதுவது ஏன்? நீங்கள் இரண்டுபேரும் நண்பர்களா? ஏனைய எழுத்தாளர்களை ஒதுக்கிவிடுவதுபோல் சிவசேகாத்தை ஒதுக்கிவிடமுடியாது. எள்ளலும் துள்ளலும் உள்ள அவர் தமிழ்நடை, அவர் எழுத்துக்குப்பின்னால்உள்ள சமூகநோக்கு அவரை முக்கிய
ॐ
எtத்தாளர் என்று கூற வைக்குமல்லவா?
န္ထန္တီမ်ား နှီ ல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன். அவர்
நல்ல மனிதர். நட்புக்கு இனியவர். ஆனால் அவர் 'புனிதங்கள் என்று கட்டமைத்து வைத்திருப்பவற்றின் மேல் காட்டும் அமானுஷ்ய பற்று அல்லது FIXATION (உதாரணமாக கைலாசபதி, சீனக் கொம்யூனிசம்) ஒரு
காலத்தில் அவரையே ஒதுக்கிவிடக் காலாய் அமையலாம்.
கேள்வி : எக்ஸில், உயிர் நிழல் பத்திரிகைகள் பற்றி உங்கள்
அபிப்பிராயம்?
பதில் : இவர்களிடையே நிலவும் போட்டி, தமிழுக்கு வளமான படைப்புக்களைத் தருவதற்கு உந்து சக்தியாக இருக்குமென நம்புகிறேன்.
கேள்வி : கனடா தமிழர் வாழ்வு எப்படி?
பதில் : கனடாவில் கொழுத்தும் கோடைகால வெயில் போலவே
தமிழரின் வாழ்வும் காய்ந்து தெரிகிறது.
கேள்வி : "காலம் பற்றி உங்கள் அபிப்பிராயம்?
பதில் : தனக்கென ஒர்பாதையை வகுத்துகொண்டு தனித்
தன்மையை பேணி வெளிவரும் சஞ்சிகை.
35 - 17 )
47

Page 50
மரணத்தின் கரும் பாறை உள்ளிருந்து மெதுவாக உ வந்து பற்றிய இறப்பின்
ைெளந்து உருக்குலைந்து போன
GLV6orsr62/g.67ai &7. A5s 45/-Aö456ogz74 VgZ7A 17ei ஒதுங்கியது மிகப் பெரிய நதிநீர் மிகுதிக் கரிப்டரில் வாயூறிக் கொட்டும் கடல்நீர் மேலெழுந்து நதியை வாரித் தள்ளியது. நதி உன்னிறங்கும் விலையில் நெளிய மீண்டும் வெளித்தள்ளி உப்பைக் கொட்டியது
கடலுக்கும் நதிக்குமான கலகம் இன்னும் இடைவெளிய தேடி நடந்து வரும் நீர்ப் புலிகள் நதியென நினைத்துக மரணிக்கின்றன. இதுதான் தற்கொலைக்கான தருண ஏறி கடல் சுற்றி ரசித்து விட்டு வந்து தற்கொலை செய்து வித்தையில் மூச்சறுக்கும் நீர்ப் புலிகளை கடல் ஒரு போ இல்லை. கடல், நதியில்லை. கடலுக்கும் நதிக்குமான கள் இடைவெளியுடன்தான். மோனலின் கடல் பயணத்திற்கு பெரியதொரு இடைவெளி இருப்பதாகவே பலரும் பேசி ( பாரதூரமான இடைவெளி எதுவும் அவளிடம் இருக்கவி கடலுக்குள் இறங்கிய அடுத்த கணமே தற்கொலையின் கொண்டது. ஒரு சினிமாக்காரியின் மரணம் என்பதற்க கவலைப்படவில்லை. ஆண்குறியைக் கட்டிக் கொண்டு ஸோபாக்களும் சுமிதாக்களும் தொடர்ச்சியாக கொலை பயப்பீதியையும் யாரும் கணக்கில் கொள்வதாயுமில்லை. பக்கம் பக்கமாய் உரித்துப் போடும் பத்திரிகைக் காரர்கரு சந்தோசத்தை விட வேறு என்னதான் செய்துவிடும் இந் கடலின் முனையினைத் தொடக்க கிடந்து துடிக்கும் நதி மணல் புற்றெழுந்து அழிமுகமாய் மறிக்கிறது. அங்கின முளைக்கும் சிறு சிராம்புப் புற்களையும் மேய்ந்துவிட்டு மணலை செயலிழக்கப் பண்ணி நதிக்கு முண்டு கொடுக்கிறது மீனக்குஞ்சுகள். அழிமுகத்தின் மீதேறி
மீள நீருக்குள் பாய்ந்து
நதியைச் சொட்டுச் சொட்டாய் கடலுக்குள் பாய்ச்சுகின்றன மீன்குஞ்சுகள்.
நதி எப்படி தன்னை கடலில் விழுத்தி தற்கொலைக்கான
C காலம்

]யை உடைத்து விட
ஊர்ந்து என் காலடியை ?
வர்ணம்
கடல்,
டன் தான் நடக்கிறது. நதியைத் டலில் வீழ்ந்து
ம். எப்படி மோனல் கட்டுமரத்தில் து கொண்டாளோ அதே தும் காப்பாற்றுவதாய் லகப் போராட்டம் இன்னும் ம் அப்பாலான தற்கொலைக்கும் வைக்கிறார்கள். ஆயினும் ல்லை. அவள் கட்டுமரத்தில் ஏறி முதல் தாக்கம் பற்றிக் ப்பால் யாரும் அவள் மீது சுத்திவரும் சினிமாக் கூத்தில் யுண்டு போவார்கள் என்ற நமது சினிமாக்காரிகளை ளுக்கு கிடைக்கும் தக் கொலைகள்?
வொயில்
தளத்தைத் தேடுகிறதோ, அதே
ð፡
றா
48
sig - 17 D

Page 51
தற்கொலைக்கான தருணம் எல்லோரிடமும் மாண்டு ே தேசத்தில் அது வியாபித்து மிகவும் மயிர்க் கூச்செறியுட வீரியத்துடன் பதுங்கியிருக்கிறது. தற்கொலை என்பது வெளிப்பாடு என்று சொல்வதெல்லாம் சுத்த போக்கிலித் சிவரமணியின் கவிதைகளை விமர்சிக்க வந்த சிவசேக முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொன்னே தலையாட்டியிருப்போம். அதன்பின் சிவரமணியின் கவி கொண்டு திரியாமல் இருந்திருப்போம். சிவரமணியின் படுகொலையில் யார் மீது குற்றம் சுமத்தமுடியும் என்று பொலிசுக்காரர்களுக்கும் சிவசேகரம்சியின் வாக்கு மூல என்ன வித்தியாசம் இருந்து விட முடியும்? அல்லது அணி என்று சொல்லி அவள் மீது இரக்கப்படும் அவளது நண் சிவசேகரம்சியின் கருத்துக்கும் என்ன வித்தியாசம் இ எனக்கு உடன் பாடில்லை என்றவுடன் அந்தச் சம்பவத்தி சம்பந்தம் இல்லை என்பதும் இவை தனக்கு அப்பாலுள் சொல்லி தப்பித்தலும் தானே அப்பட்டம். தற்கொலை எ படுகொலை. மொத்த சமூகமும் சேர்ந்து திட்டமிட்டு ஒரு சம்பவம். இதிலிருந்து சமூகம் எப்படித் தப்பித்துக் கொள் தற்கொலையின் பின்னால் அந்த உடலைச் சுற்றியுள்ள குற்றவாளிகளாகின்றன. அது ஒரு கொலையிலும் பார் உருமாறுகின்றது. இதற்கான தண்டனைகளை எந்தச் அதிலிருந்து தப்பிப்பதனையே ஒவ்வொரு சமூகமும் தை ஏமாற்றுச் சொற்களை பொதுப்புத்தி மட்டத்தில் உலவவி தற்கொலையின் தருணம் கவிதைக்கான தருணம் மாதி பிய்த்துப் பார்க்கும் அதீத கற்பனைத் திறனுடன் விளை நீர்ப்புலிகளைப் போல நதியென நினைத்துக் கடலில் வி நிலையல்ல இது. அந்தத் தருணத்தில் அதீத வன்முறை தன்னுடலை ஒடும் ரயில் முன்னால் பாய்வித்து - சுற்றும் காத்தாடியில் கிட உச்சநிலையைத் தொட்டு தன் முன்னாலுள்ள சமூகத்தி மிகவும் இலகுவாக தற்கொலை என்ற சொல்லாடலைப் அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாது. இன்னும் ஊக் என்ற சொல்லுக்கு ஒரு சுயம் இருப்பதாகவே தெரியாது செயற்பாடுடைய சொல்லை குற்றங்களை விலக்கி மொ கொலை செய்யப்பட்ட உடலின் மீது போட்டு விட்டு குற் கொள்ளும் செயற்பாட்டைக் கொண்ட தற்கொலைச் செ குஞ்சமும் கொடியும்? இப்படித்தான் தற்செயல், தன்னிச்சை, தன்நம்பிக்கை எ செயலிழந்துபோன புஸ்வாணச் சொற் குவியல்கள். ஒரு வன்முறையைக் குழி தோண்டிப் புதைக்கும் சொற்கள் தன்னம்பிக்கைப் பாலசுப்பிரமணியத்தின் வாழ்வுக்கு என கூடாது. மொழி மீது பாலத்காரமான வன்முறையைப் பி போகவேண்டிய சொற்களை உடனடியா அப்புறப்படுத்த
C காலம்

பாய்க் கிடக்கிறது. கண்காணாத்
செயற்திறனில் பலவீனமான இயலாமையின் தனம். இல்லையென்றால் ரம் அவள் ஏற்படுத்திய பாது நாமெல்லோரும் சரியென்று தைகளை முடிச்சிட்டுக் காவிக் கொலையில் அதுவும்
(55ly up
பத்திற்கும் பள் தன்னைக் கொலை செய்தாள் "பர்களின் கருத்துக்கும் ருக்கிறது? அவளின் முடிவில் நிற்கும் தனக்கும் ஒரு ா சமூகத்திடமே இருப்பதாக ன்பது ஒரு கொலை. அதுவும் நவரைக் கொலைசெய்யும் ாளமுடியும்? ஒரு ஆயிரம் உடல்கள் க்க அதீத வன்முறைக் கொண்டதாக சமூகமும் பொறுப்புக் கொள்வதில்லை. ாக்குச் சாதகமாக்கி அதற்குரிய
ட்டுள்ளது. ரிெத்தான். தன்னுடலைப் பாடுவது போன்றது. நமது ழும் ஒரு ஏமாந்த - தவறிய யை அது நாடுகிறது.
ந்து சுழன்று வன்முறையின் டம் மரணிக்கிறது. பயன்படுத்தி சமூகம் தப்பித்தலை கமாகப் பார்த்தால் தற்கொலை
கொலையின் உச்சக்கட்ட
த்தக் குற்றத்தையும் றவாளிகள் தப்பித்துக் ால்லுக்கு என்னத்துக்கு
ன்பதுவெல்லாம் 5 சூறாவளிச் சமூகக்தின் இவை. இப்படிச் சொன்னால் ானவழி என்று கேட்கக் ரயோகித்து செயலிழந்து போன வேண்டும். இல்லாத பொழுதில்
49 இதழ்-17 )

Page 52
இன்னும் அதிகமாய் கொலைக்களனாக விரியும் மொழி குற்றவாளிகளாவோம் நாம், மிகவும் தீவிரமாா பெண்ணியச் சிந்தனையுடைய சிவா அறியாமல் செய்யப்பட்டது என்பதை எப்படி ஏற்றுக் கெ நீர்ப் புலியா நதியென நினைத்து கடலில் விழ? எங்கை கடலை நன்கு தெரியும். கடல் விரிப்பில் கிடந்து கவிை எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் கடலுள் இறங் கால் நனைக்க என்னை இழுக்கிறது நீர், கால்களில் நார்ந்த நீர் சுடுமனை எவ உருட்டி என்னை ஆழப் புதைக்கிறது. எனக்கும் கடலுக்குமான தூரம் அதிகமாகிக் கொண்டி நீர் என்னைவிட்டுக் கனதுTாம் போகிறது. கால்கள் காய்ந்து கொண்டன. என்னால் மரணமுற முடியாதபடி மீளக் கருவுற்ற கனவில் தழைத்து கரையேறுகிறேன். நதியின் அரிப்பில் ஊறிறாறி மாவின் போகணிச் சுவரெங்கும் ஈரம் கசிய
கரிக்கும் உப்பில் கடலென நினைத்து உட்புகுகிறது நதிநீர் கடலுடன் புனரும் பேராசையில் கிடந்து புரளும் நதியின் பூர்வீகம் கடலுக்குத்தானே தெரியும். கடலில் நீரெங்கும் நீர்ப்புலிகளும் நீளக் கிடத்திய பெண்களுமாய் மிதக்கிறது நீர்,
C காயம்
 

பினைச் சுமந்த
மணியின் மரணம் அவரால் "ள்வது? சிவரமணி என்ன ாபெல்லாம் விட அவளுக்கு நகளாய் எழுதியவள் அவள்.
fall
ருக்கின்றது.
༽────── ه 55JLJUGUOLO
காலம் வலை பின்னும் நேற்று இன்று நாளை
இரவு பகல் மாலை
பிரியும் கால இழைகளில் முடிச்சிட்டு முடிச்சிட்டு நிகழ்வாடும்
பத்தரைக்கு இசைநிகழ்ச்சி
நாலரைக்கு சொற்பொழிவு
பின்னேரம் தகனம்
நாளை மறுநாள் "காடாத்து,
காலப் பின்னலுக்குள்
கால் செருகுண்ட ஈக்களாய் மனிதர் இடும் இரைச்சல்
நிகழ்வுகளில் காலம் உடல் தரிக்கும்
அந்நிகழ்வுணர்வுகளில் காலம் நிறம் பிரிக்கும்
இன்ப நிகழ்வில் இலவம் பஞ்சாய்
காலம் மேலெழுந்து தானழிந்து சந்தோசிக்கும்
துயரச் சுமையில் காலம் உடல் கனத்து
மண்ணில் வீழ்ந்து புரண்டழும்
கால மின்கம்பிகளில் எரியுண்டு தொங்கும் வெளவால்களாய்
அகாலம் விழுந்த மனிதர்கள்
துவிஜன்
- - --سٹ
O இதழ் - ? )

Page 53
இதுதான் சரியான நிறம். காகங்கள் பறக்காத வானைப்பார்த்தான்
ஆதி. கறுப்பாகவும் இல்லை; வெளுப்பாகவும் இல்லை. சாம்பல் நிறமாய் இருந்தது. மழைபெய்யவேண்டும். அல்லது வெயில் எறிக்க வேண்டும் இரண்டும் இல்லை. மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. இதுதான் சரியான நேரம். பனிப் புகாரினூடாக தூரத்தில் றெயின் வருகிறது. பிளாற் போமின் தொங்கலில் போய் நின்றான். றெயின் இந்த ஸ்ரேசனில் நிற்காது. கடும் வேகம். இவன் நிற்பதைப் பார்த்து ஹோர்ண் அடித்தது றெயின். அடித்திருக்கத் தேவை இல்லை. கண்ணை மூடினான்; மயங்கி நின்றான்
றெயினின் முகம் அழகாய் இருக்கின்றது. அதன் வேகம் உயிரை ஈர்க்கிறது. அதன் கம்பீரம் நிரம்ப வசீகரிக்கின்றது. "வா.வா.” என்றழைக்கிற அதன் கடுர குரலில் மனசு இலயித்துப்போகின்றது. நல்ல ருசியான பியர். வெய்யில் இல்லை. குளிர் பரவிக் கிடக்கிறது. விடாய் இல்லை. ஆனால் தாங்கேலாத்தாகம் தீர்க்க மடக் மடக் கென்று குடிக்க வேண்டும் என்கிறவெறி
எதுவும் ஆறுதலாய்த்தான் நிகழ்கிறது. முதலில் ஒரு கான் பியர். மூள் வெட்டியபிறகு நொங்கின் கண்ணில் கண்டு விரல் வைத்து அமத்த அப்படியே பீய்ச்சி அடிக்குமே, அதே போல பியர் கானின் ஒரு கண்ணைஅமத்தி அதனைத் திறக்க நுரையுடன் சீறும். ஒருகான் பியர் போவது ஆறுதலாகத் தான். பிறகு அதிவேகம். வெசர் நதியில் ஒடுவது நீரல்ல; பியர். நுரை கக்கிப்பாயும் அதன் வேகத்தில் புரிகிறது. இப்போது பியர் நல்ல துணை. விஸ்கி ஏதுமாய் இருந்தால் தாட்ட இடத்தில் புல்லும் முளைத்திருக்கும். இன்னும் சில நாட்களில் புல்லு முளைக்கப் போகிறது. பியரினாலும் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. “ஒரு நாளைக்கு வீட்டை வா. வடிவாய்ச் சாப்பிட்டுப் போகலாம். இத்தாலிச் சாப்பாட உனக்குத் தாறன், வைன் இருக்கும். பியர் இருக்கும். தேவையெண்டால் விஸ்கி எடுக்கிறன். வா’மகேன் கூப்பிட்டான். ஆதிவாறான்” என்று சொன்னான். உருளைக்கிழங்கு சேர்த்து முருங்கைக்காய் பிரட்டல், பிலாக்கொட்டை போட்ட வேள்வியிறைச்சி, விளை மீன் குழம்பு, றால் பொரியல், பசளிப்புட்டு இவை மகேனிடம் கிடையாது. பனங்கள்ளு அவனால் ஏலாது. பிறகேன் கூப்பிடுகிறான்? பனங்கள்ளுக்குத் தெரியும் எவ்வளவு ஏலும் என்று. இங்கு எதற்கும் தெரியவில்லை. எல்லாமே சாவை நோக்கித் தள்ளுகிறது. பகல் பகலா, இரவிரவா, சாமம் சாமமா, விடிய விடியவா அல்ககோலில் குடல் அவிந்துபோகிறது.
C காலம்
 

yGDJůy YGO 5yVYy Y
ந்தான்
s
மகேனிடம் ஆதி போனான். ட்ராம் எடுத்து பிறகு பஸ் எடுத்து பயணம். “மைச்சான் கார் இல்லையோ?” என்று மகேன் கேட்டான். இவன் சிரித்தான். “என்ன மைச்சான் சிரிக்கிறாய்?நீ வந்து மூண்டு, நாலு வருசம் ஆச்சுதுதானே?” என்றான் மகேன். அப்படித்தான் ஆதி சொன்னான். “நாலு வருசம் முடிஞ்சிட்டுது. என்னை என்ன செய்யப் போறிங்கள்?” வேதனை எல்லாம் போய்விட்டது. இம்முறை கோபம் வந்தது. “ஏன் வந்தாய் இங்கு? வந்த நீகாத்திரு”அவள் கத்தினாள். ஒரு சிறு புன்னகை காட்டாத அவள் முகக் கோபத்தில் ஆதி செயலிழந்தான். டொல் மேச்சர் (மொழிபெயர்ப்பாளர்) ட்ராமில் போகிற போது,"உந்த வெள்ளைத் தோல்களுக்கு இரக்கமும் மனிதாபிமானமும் ஒருக்காலும் வராது"
ஸ்ரேசனுக்குப் போகிற பாதையில் சிறியமைதானத்தில் விற்கிற கார்கள் நின்றிருந்தன. கருநீல பிஎம்டபிள்யு கார் ஆதிக்குப்பிடிக்கும். பென்ஸ்கார் எடுக்க வேண்டும் என்று மகன்மார் ஒத்திருந்தனர். ஒத்திருந்தாலும் நிற வகைத் தெரிவில் பச்சையாகவும் சிவப்பாகவும் மாறுபட்டனர். "அப்பாவிற்கு இரண்டு கார் எடுக்கக் கட்டாது" என்று ஆதி கடிதம் எழுதினான். “இரண்டு பேரும் நீல நிறக்கார் என்றே தீர்மனித்திருக்கிறோம்” என்று கடிதம் வந்தது. கூடவே மனைவி இவ்வரிகளுக்குச் சிரித்துவிளக்குமாற்றைக் கொண்டுசெல்லமுடியாத மூஞ்சூறைம் குறித்து ஒரு துண்டு எழுதியிருந்தாள்.
மைந்தர்கள் குழந்தைகள் போகடடும். மகேனின் அறிவு எங்கு போயிற்று?"மைச்சான் என்னடா மீசையெல்லாம் வழிச்சு பொட்டையன் மாதிரி நிக்கிறாய்” என்றான் மகேன். மீசையில் மயிர்கள் நரைத்த கதையை ஆதி சொல்லவில்லை. சொல்ல மகேனும் விடவில்லை. மகேனின் கன்னங்களும், கண்களுக்குக் கீழேயும் கறுப்புக் கண்டிருந்தது. முதிர்வின் அடையாளங்கள் அவன் முகத்தில் தெரித்தன. “வயசு போகுதுதானே?” என்றொரு கதையில் மகேன் சொன்னான்.மாஸ்ரர்" என்றுகூப்பிட்டான் சரவணை.அப்பாகடிதம் போட்டிருக்கிறார். உங்களையும் விசாரிச்சவர்”என்றான். சரவணையின் தந்தை ஐம்பது வயசான போதிலும், ஆதியிடம்படித்திருந்தார். காம்பில் சரவணைஆதியிடம் பிரியம் வைத்திருந்தான். சரவணையை ஒட்டிய வயசுதான் காம்பில்லிருந்த நந்தீசுக்கும், கபாவுக்கும், ரஜனிக்கும். சிவாவிற்கும் இன்னும் மற்றும் பலரிற்கும். வயசு கொஞ்சம் போய் இவர்களுடன் ஒட்டமுடியாமல் போனவர்கள் சித்தப்பா, மாமா பிறகு மாஸ்ரர் ஆதி
5 இதழ் - 17 )

Page 54
மகேனுக்காகவும் இரவிற்காகவும் ஆதி ஒருவொத்காவாங்கிப் போனான். உக்ரெய்ன் வொத்காவைப்பழக்கிவிட்டது. ஊரில் சோவியத் கதைகள் வாசித்த சுவைப்பில் வொத்கா என்னும் பெயரே மயக்கத்தைத் தந்தது. பைன் மரக் காடுகளும், சதுப்புநில ஸ்தெப்பி வெளிகளும் பிறகு வொத்காவும். ஆதி அதைக் கண்டான். பனிமணல் வெளிமரங்களின் கால்வாசியை நிறைத்துகுவியல் மழைத்துளிபோல் சீறிச்சீறிவீழ்கின்றன. மல்லிகைப்பூப்போல் கொட்டுண்ணுகின்றன. பனிபெய்கிறபோது எந்த வேலையும் தடைப்படவில்லை. நாயை பெல்ற்றில் கட்டி கையில் பிடித்து போகிறார்கள். அன்ரன் செக்கோவின் நாய்க்காரச் சீமாட்டியைக் காணவில்லை. பெண்களின் படுக்கை அறைகளில் லெனின்,ஸ்ராலின் படங்கள் பெரிதாக மாட்டப்பட்டிருக்கின்றன. வயது போன அவர்கள் லேனினை கடவுள் என்கின்றனர். ஸ்ராலினை காதலன் என்கின்றனர். உக்ரெய்யின் கீவ் நகரம் மூடுண்ட இருண்ட நகரம் போல் இருக்கின்றது. பனித்துகள்கள் மணலாய் நிறைந்து பாறைகளாய் இறுகின. கால்பட்டு கால்பட்டு இன்னும் கட்டி பத்திப் போயின. பளிங்குக் கால்லாய் ஆகின. இனி ஒரு வசந்தம் வரவேண்டும் - அது உருகிவடிந்து ஒட ஒடையாய் ஒரு புறம் போய்ச் சேர!
“மைச்சான், நீ இஞ்சை இருக்காதை, அங்கை என்ன மாதிரி இருந்தனி, இஞ்சை இவ்பிடி சீரழிஞ்சுபோய்.மைச்சான் நீ திரும்பி அங்கை போ.” மகேன் இதைச் சொல்கிறபோது பஸ்'ரெணியரைக்கடந்து விட்டது. இனி ஒரு ட்ராம். பிறகு நகரம். பழம்பெரும், பணக்கார நகரம். பஸ்ஸில்போபவர்களும் ட்ராமில் ஏறுபவர்களும் றெயினில் திரிபவர்களும்
காரில் உலாத்துபவர்களும் பணக்காரர்களாய் இருந்தார்கள்.
அவர்களுக்குத் தேவையான ரேஸ்ந்ரோறண் றுகள் ஆற் றுக்கு மேலா - துண் எழுப்பி இருந்தன. பிரதானவீதியில் முடக்கில்ஆபத்தானத் வளைவில் றோட்டுக்குச் சற்றே மேலேறி இருந்தது.கடலைப் பார்த்து துறைமுகத்தில் வந்து தரிக்கும் கப்பலில்பெரும் ஐதலை கேட்கக் கூடியதாக இருந்தது. விமானப் மேலேறுகிற போது சற்றே தலையை உராஞ்சுகிற எட்டத்தில் இருந்தது. கீழே எட்டிப்பார்த்தால் றெயின்கள் விரைகிற, விழுந்தால் அவ்வளவுதான் என்று ஆபத்தை உணரவைக்கின்ற உயர்வில் இருந்தது. நெடுஞ்சாலையில் கார்களின் விரைவினையும் அதன் சிகப்புக் கண்களையும் பார்க்கக்கூடியவாறு மேலால் ஊடறுத்துப் போகிற பாதையாக இருந்தது. இப்படியாக ரெஸ்ற்றோறன்ண்டுகளில் தான் இவர்களால் சாப்பிடமுடியும். குடிக்க முடியும். சாப்பிட்டதும் குடித்ததும் செமிக்க முடியும்,
அன்று முழுக்க பஸ்ஸில்ன்ெறபோது, ட்ராமில் குந்திய போது, கடைகள் வழியதிரிந்தபோது, பனிப்பாறைகளாக உறைந்துவிட்டவெசர் நதியினைக் கண்டபோது நெடிதுயர்ந்த தேவாலய கோபுரத்தைப்பார்த்த போது மகேன், ஆதியின் ஆளுமை குறைந்து, குலைந்துபோவது பற்றி ஒலமிட்டான். யன்னல் கண்ணாடியில் புகார் படிந்திருந்தது. துடைத்து துடைத்துத்தான் வெளியில் பார்க்க வேண்டும். மரங்களில் இலைகள் இல்லை. மக்கள் கறுப்புக்கோட்டணிந்து நடந்துபோனார்கள். சிவப்பாய் சில சுவேற்றர்கள் மின்னின. முதலுக்கும் முதல் இருந்த சீற்றில் ஒரு குழந்தை பார்த்து சிரித்திருந்தது. குழந்தைக்கு வெள்ளை, கறுப்புஎன்ற வேறுபாடு இல்லை. ஒரு தகப்பனுக்கும் அப்படி இருந்தது ஒருநாள்.
C காலம்
 
 

வெய்யில் எறித்த நேரம். வெளியில் பார்க்க விசேடங்கள் இருந்தன. ஆதி தொங்கலில் இருந்தான். மூன்று வயதிருக்கும் ஒரு மைந்தனும் தகப்பனும் முன்னுக்கும் முன்னுக்கும் முன் சீற்றில் இருந்தனர். ஆதி அந்த மைந்தனுடன் கண்ணால், கைகளால்,முகத்தால், மூக்கால் விளையாடினான். சிரித்து சிரித்து, துள்ளித் துள்ளி விளையாடியது அந்த மகவு. தந்தை இரசித்தார். இடையிடை திரும்பிப்பார்த்தார். சினேகமாகச் சிரித்தார். ஆதியின் மைந்தர்களும் புறப்படுகின்ற அன்று துள்ளித்துள்ளி விளையாடினர். ஆதி அணிகிற கோட்டைஎடுத்துப்போட்டு அது முழுஉடலையும்மூடி அதற்கு அங்காலும், நிலத்தில் இழுபட தடக்குப்பட வீழ்ந்து அழவில்லை. ஆனால் எழுந்து மூத்தவன் கையணைப்பில் கிடந்தான். இளையவன் நெஞ்சணைப்பில் சுருண்டான். ஆதிக்குக் கண் கலங்கிற்று. பெருங்கேவல் எழப் பார்த்தது. தந்தை எழுந்து வந்தார். டொச்சில் ஏதோ சொன்னார். முதுகைத்தட்டி'அலஸ் ஒக்கே?"என்றார். மைந்தனைத் தூக்கி அடுத்த ஹோல்ற்றில் இறங்கிப் போனார். மைந்தன் சிரித்தபடி போனான். பஸ்
புறப்படதந்தை கைகாட்டினார்.
குளிர் இன்னமும் கடுமையாக அடித்தது. வெண்பனிஉதிர்ந்தால் குளிர் குறையும். வெண்பனி உதிரர் நகரிஇது நகரின் மத்தியில், சனத்திரள் போனால் குளிர் குறையும். இது ஊசியாய்க்குத்துகின்றது. டொல்மேச்சர் வைத்து ஆதிகேட்டான். "நான் என் நாட்டுக்குப்போகப் போகிறேன். என்னைவிடுங்கோ" அந்த சிடு மூஞ்சிக்காரி பைகளைப்
& டிப் பார்த்துகொம்பியூட்டரைத்தட்டிப் பார்த்து, நிறைய நேரம் யோசித்துப்பார்த்து, ரெலிபோன் பண்ணிப்பார்த்து பிறகு,"உன் நாட்டில் உனக்குப்பிரச்சினை என்று இங்கு ஓடிவந்தாய். இப்போது இல்லையா *பிரச்சினை? முடிவுவரும்வரை காத்திரு'
s எவ்வளவு காலம்?
தோள்களைக் குலுக்கினாள். சடக்கென புன்னகைக்குமாறி பிறகு சந்திப்போம்" என்றாள். மேசையில் இருந்த பொத்தானை அமுக்க, கதவு திறந்து ஒரு துருக்கிக் குடும்பம் வந்தது. விறைத்துப் போகிற குளிரில் விடியஐந்து மணிக்குட்ராம்ஏறிவுண்டசாம்ற் (Bundersant) வந்து கியூவில் நின்று, ஒன்பது மணிக்கு கதவு திறக்க டொல் மேச்சர் வரச்சொல்லி,பதினெருமணிக்கு அறைக்குள் புகுந்து இந்த ஒன்றுக்கும் உதவாத பதிலைக் கேட்க வேண்டியதாயிற்று. டொல் மேச்சர் தன் இறக்கம் வர எண்பது மாக்கை வாங்கிக் கொண்டு இறங்கினார். மனைவிக்குக் கடிதம் போட மூன்று மார்க்கிற்கு இனி செழியனிடம் கையேந்த வேண்டும். ஐந்து மார்க்காய் வாங்கி விட்டால் அப்படியே இரண்டுகான் பியருமாயிற்று.
ஆயினும் மகேன் பியர் கானுடன் போய் ஆற்றைப் பார்த்தபடி இருக்கும் ஒருமதகில் குந்துகின்றபோதும் இதனைத்தான் சொன்னான். இந்த சாடையான இருளில், கடும் குளிரில் ஆற்றங்கரையில் இருந்து ஆரும்பியர் அடிப்பார்களா?சனங்கள் வேடிக்கை பார்த்தபடிபோனார்கள். ட்ராமிலிருந்தும்பார்த்தார்கள். பியர்தான்குடிக்கக் காசு கட்டுபடியாகிறது. வெள்ளைத் தோல்கள் கறுப்பு அரியண்டங்களைப் பார்க்கிறார்கள். எனினும் மகேன் சொன்னான். தன் சுட்டு விரலை நிமிர்த்தி “இப்படி
இதழ் - 17 )

Page 55
இருந்த உன்ரைபேர்சனாலிற்றி" அதே விரலை பிறகு மடக்கி"இப்படிப் போச்சு”என்று சொல்லி ஒருமடங்குபியர்குடித்தான். இராத்திரிகுடித்த வொத்காவின் வயிற்றுச் சூட்டுக்கு பியர் குளிரைத்தந்தது. இந்த ஆற்றங்கரையில், கண்சிமிட்டிலைற்எரிக்கின்றபெக்(Beck) கொம்பனி எவ்வளவுபியர்களை இந்தக் குளிர் நேரததிலும் தயாரிக்கிறது. ஆற்று நீரை அள்ளியா தன் கானை' நிரப்புகிறான் அவன்? தேவாலயத்தின் முன்னுள்ள பெக் ரெஸ்ற்றோறன்ரிலும் கேட்டாயிற்று. ஆரும் கேட்கத் துணியாததை ஆதிசெய்தான். “கொஞ்சநாளைக்குக் கோப்பை கழுவிக் காட்டுறன். பிறகு பார்த்துச் சம்பளம் தாங்கோ" என்றும் கூடக் கேட்டான். மகேனின் சுட்டுவிரலை ஆதி பார்த்தான், கறுத்துப் போய் இருந்தது. நகத்திலும் ஊத்தை"நகத்தை வெட்டிப்போய்க் கழுவுகையை”
“இது இந்த நகரத்தின்ரை மையப்பகுதி” என்றுமகேனைத் தட்டி தேவாலயப் பக்கத்தைச் சுட்டினான் ஆதி. முந்தைய மையம்வேறு. இப்போது அந்த மையம் சிதைந்துபோயிற்று என்றுமகேன் சொன்னான். ஒரு நூறு செய்திகளை இந்த நகர் பற்றி மகேனால் சொல்ல முடிந்தது. மகேனுக்கென்று ஒரிடம் இருந்தது. அது தெகிவளையில். ஆதி மகேனைச் சந்திக்கிற போதுகளில் அங்கு கூட்டிச் சென்றான். கடற்காற்று இரைகிறதும், வீசுகிறதுமான இடம் அது. சின்னத் தொந்தி வைத்த, கட்டைக் காற்சட்டை போட்ட, முகத்தை மழுங்கச் சவரம் செய்த, தங்களுக்கென்று கார் அல்லது பஜிரோ வைத்திருக்கிறவர்கள் வந்து பின்னேரம் ரென்னிஸ் விளையாடி, பொழுதுபட மீன்துண்டுப் பொரியல் சப்பி பியர் குடிக்கிற இடம் அது. இன்னும் கொஞ்சம் ஏற வேண்டு மென்றால்'இரட்டைவடிப்பழைய சாராயத்தில் இரண்டு மூன்றுபெக்த முழுமுட்டை அவியல் இரண்டு மூன்றும், ஆட்டுத் தொடை மாட்டுத்தொடையில் இறச்சித்துண்டங்களும் சப்புவார்கள் பியர் குடிக்க மறுத்து “சாராயம்” என்றான்
சாராயத்துடன்பியர் கலந்தான். கடலைப்
கூதல் அடித்ததுதான். நடுங்கும் குளிர் அப்போது இல்லை. மழை சிணுங்குகிற மார்கழி மாதம். பனை இல்லாதம ஊரில் ஒரு நான்கு வருடமாய் தன் குடும்பத்துடன், அம்மா அப்பாவுடன் ஆதி நின்றான். மழையில் நனைந்து கறுப்பாய் உயரமாய் எழுந்து நிற்கும் பனை
வாடைக்குச் சற்றே தலை சாய்க்கும். கட்டிடக்காடு அல்ல; மார்கழிக்கு ஊர்பச்சை மற்றும் திருவெம்பாவை அப்படிநேரத்தில் அம்மாள் கோயில் மணி அடிக்க அனேகமாக மோதகம் சுண்டல் வடை சாப்பிடலாம். கடைசி நாளுக்கு குழல் பிட்டு சொல்லட்டோ ஒண்டு - அப்ப வாழைப்பழம் ருசியில்லை. கப்பல் பழமா இருந்தாலும், பனிக் குளிருக்கு அப்பா தலையில் தோய்ந்து,விடிய அம்மாள் கோயிலில் நிற்பார். “விடிய எழுப்பி குளிச்சுப்பார். கிணற்றுத்தண்ணிஎன்ன மாதிரிச் சுடுதுஎண்டு”
பனை இல்லா ஊரில் திருவெம்பாவை இல்லை. மார்கழிப்பச்சை இல்லை. வாடைக் கூதல் இல்லை. செம்பாட்டு வெள்ளம் இல்லை. வெங்காய நடுகை இல்லை கடல் இரைச்சல் இருந்தது. காற்றில் உப்பு கலந்திருந்தது. அப்போ வீடு மாறியிருந்தான் ஆதி. அப்பா செத்து ஆறேழுமாதமாயிற்று. அல்ல; ஆனியில் அம்மாள் கோயில்
C காலம்
 
 
 
 
 
 

பூங்காவனத்துக்கு அடுத்தநாள் அப்பா செத்தார். புரட்டாசியில் புதுவிடு போக முன்னம்பக்கத்துவிட்டுவாப்பா,உம்மாவிடம்சொன்னார்கள். கண் கலங்கினார்கள் என்று சொல்லமுடியாது. மனங்கலங்கினார்கள். அப்பா செத்து அன்று காலையில் மாஜரின் பூசிப் பானும் பிறகு கோப்பியும் தந்தார்கள். ஆரும் சாப்பிடவில்லை. ஆயினும் அன்றிலிருந்து அவர்களும் ஒரு உறவாயிற்று. அம்மா பின்னேரங்களில் கதைக்கப்போவார். உம்மா பின்னேரங்களில் கதைக்க வராத நேரங்களில்.
வீடு மாறிய பிறகு உம்மாவிடம் கடிதம் வந்திருக்குமோ என்று விசாரிக்கிறதாக அம்மா அடிக்கடி சொல்லிப் போனா. ஆதிக்கு நேரம் வந்தபோது அல்ல; முக்கிய கடிதம்வரும் என்றுதெரிந்தபோதுபோனான். கல்வித்திணைக்களத்திலிருந்து வர இருந்தது ஒரு கடிதம். ஆனால் வந்தது வேறொன்று.
ஆதிக்கு முதுகு சில்லிட்டுப் போயிற்று. இனி
என்று மகேனிடம் சொன்னான். மேலும் நன்றாழ் விட்டது.
அதுவும் நல்லது. கடுக்கிற மூத்திரத்துக்குஇருள்த்திவி புரியும் .
سمعیبرے
கட்டியத்திப் போன வெசர் ஆற்றில்தர் s ந்ேததுே சிறு ஆவி
அந்த வீட்டிலிருந்து வரமாட்டேன் என்று முரண்டு உள் அம்மாவுக்குச் சொன்னா. அப்பா கடைசியாய் இருந்த
திண்ார். அப்பாவுக்கு இரண்டு வீடுகள் இருந்தன. அம்மாள் கோயில் வீடு அப்பாவிற்கு ஒரு வீடு கட்டியதுமற்ற வீடு. ஒரு விடும் அப்பாவிற்கு இல்லாமல் போயிற்று. ஆரோ கட்டிய வீட்டில் வாடகைக்கு இருந்ததை அப்பா செத்த பிறகு தன் வீடு என்று உறுதியாய் நினைக்கிறார். இதை உம்மா சொல்கிறா. அம்மா அதை நம்பினா என்று சொல்லக் கூடாது. அது அப்படித்தான் ஆகும் என்று அம்மாவிற்குத் தெரியும். நாற்பது வருசமாக அப்பாவை மனதாலும் உடலாலும் தெரிந்த அம்மாதானே? அப்பா செத்து இரண்டு மாதங்களும், அப்பா அந்த வீட்டில் உலாவித் திரிந்ததும்,பாத்திரங்களை உருட்டியதும் அம்மா கேட்டவா. அப்பாகுடிக்கிற சுருட்டுக் கூட மணந்தது. இருபது வருசமாயிற்றுத்தான் அப்பா சுருட்டு விட்டு. ஆனாலும் செத்தாலும் பழகிய பழக்கத்தை விட முடியுமா? விட்டாலும் பிறகு வந்து ஒட்டிக்கொள்ளும் தானே? அப்பா சுருட்டை நேராகச் சுத்த மாட்டார். ஓரிடத்தில் நெளிந்திருக்கும். அந்தத் தெளிவு வரப் புகைச்சுண்ட மணம் வரும். அந்த புகைச் சுண்ட மணம் ஆடி மாதத்திலும்மணத்தது. அம்மா அறிந்துவிட்டா. அப்பாவால்தான் அன்பு வைத்தவர்களை விட்டு விட்டுப்போக முடியாது உம்மா சொல்லத்தான் வேணுமென்டில்லை. இஃதொன்றும் தெரியாதஉம்மா திகிலுடன் சொன்னா.
அப்பா செத்து, ஆதிதன் குடும்பத்துடன் அந்த வீட்டை விட்டு வெளிப்போன பிறகு இளஞ்சிங்களக் குடும்பம் தம் சிறு பெண் குழந்தையுடன் அவ்விட்டிற்குக் குடிபெயர்ந்தது. அந்தப்பெண் அழகாய்
3 இதழ் - 17 )

Page 56
இருந்தாள். அவன் கறுவலாய் இருந்தான். அவன் வேலைக்குப் போன பகலில் பன்னிரண்டுமணி போலை அப்பாகதவு தட்டிபிள்ளை கடிதம் ஏதும் வந்திருக்கோ?" என்று தமிழில் கேட்டார். ஒவ்வொரு நாளும் கேட்டார். பகலில் கடிதம் கேட்ட அப்பா, இரவில் பன்னிரண்டுமணிபோல கதவுபூட்டப்பட்ட வீட்டுவிறாந்தையிலிருந்துசுருட்டுகுடித்தார். மூத்திரம் பெய்ய எழும்பி பாத்ரூம் போன அந்தப் பெண் திரும்பிவந்த போதுதான் பகலில் கடிதம் கேட்டவர் இரவில் சுருட்டுக்குடிப்பதைக் கண்டார். பயந்து போனார் என்று ஒரு வார்த்தையில் அதனைச் சொல்லக்கூடாது. கதவை மூடி உள்ளே வியர்க்க இருந்த அந்தப் பெண், அப்பா சுருட்டுக் குடித்து முடிந்து எழுந்து கதவைத் திறந்து போவதைக் காதால் கேட்டார். பிறகு கடிதம் கேட்பதில்லை. சாமம்பன்னிரண்டுமணிக்கு சுருட்டுமணத்தது. புகைகூடயன்னலால் போயிற்று. இனி இந்த வீட்டில் இயலாது. அவர்கள் வீடுமாறினார்கள்.
அப்பா அதற்குப்பிறகு சுதந்திரமாக சுருட்டுக் குடித்திருப்பார். ஆனால் ஆரிடம் கடிதம் கேட்டிருப்பார்? இந்தக் கேள்விக்கு விடைகாண்பதிலும் பார்க்க, இன்னொரு கேள்விக்கான விடை அறிய வேண்டும் கொலன்னாவஎண்ணைய்க் குதத்தை போராளிகள் தாக்கிய மறுநாள் இரவு சிங்கள இராணுவம் ஆதிவசித்த இந்த வீட்டைச் சுற்றி வளைத்த போது அப்பா உள்ள இருந்தாரா? சுருட்டுகுடித்தாரா? இராணுவத்துடன் ஏதும் கதைத்தாரா? அப்பா சும்மா இருப்பவர்அல்லர். எதிர்த்துநிற்பவர். ஏதும் கதைத்திருப்பார். என்ன கதைத்திருப்பார்?
கடிதம் கேட்க உம்மாவிடம்ஆதி போனபோதுதான் ക
செய்தியைஉம்மாசொன்னார். உம்மாலுமேல் வீட்டிலிருந்துர்ேத்தால் சின்ன பச்சைக் குளம் தெரியும்,தாமரை பூத்திடிரீம் تتمتعه
பூக்கிற குளம் அந்தக்குளத்தைப் பார்த்த படிதான் உம்மா பிற ஆண்களை G; iణీ ஆல
சொல்கிறபோது உம்மா நேரேதான் பார்த்தார். காரங்க வந்திருந்தாங்க. ஓங்களத்தூன் விசா எங்கேன்னாங்க. தெரியாதின்னிட்டோம் என்னமோன் நடந்திரிச்சு?" ஆதி வெற்றுப்புன்னகை சிரித்தான். அப்போது மழைவிட்டு வெய்யில் ஏறியிருந்தது. ஆதிக்கு புரிய ஏதும் இல்லை. அவனைச் சுற்றி எல்லாம் இறுகிக் கொண்டுவருகிறது. அவனை ஒட்டோக்கள்,ஜிப்புகள், கார்கள், பஜிரோக்கள் வழிமறிக்கின்றன. இவன் திரும்பிப்பார்க்க நின்று வேறு திசைதிரும்பின.
மகேன் இத்தாலிரெஸ்ற்றோறன்டிற்குக் கூட்டிச் செல்வதாகச் சொன்னான். வேலைகேட்டு, வெங்காயம் உரிப்பதிலும்,கரட், உருளைக் கிழங்குத் தோல் சீவுவதிலும், நின்ற நிலையில் பத்து நிமிடத்தில் நூறு கோப்பைகளை கழுவி ஒளிபட்டுத்தெறிக்கும்படியாகத் துடைத்து அடுக்கி வைப்பதிலும் இவன் வலுவிண்ணன் என்று'செவ்வுக்குச் சொன்னான் மகேன். "நீவா. உன்னக்கு நிறைய வேலைகள் காத்திருக்கின்றன." என்றான் மகேனிடம் செவ். கடிதம் வராமை கண்டு கல்வித்திணைக் களத்திற்குச் சென்றான் ஆதி. அந்த பஸ் வராது வந்தாலும்பிதுங்கிக் கொண்டுவரும், மூக்கின் நேருக்கு ஒரு பெண்ணின் தலை இடிக்கும். தலையிலிருந்து அலரிப்பூவின் வாசம் வரும் சிலநேரம். பல நேரம்மருத் தெண்ணெயின் நாத்தம் வரும். எனவே ஆதி நடந்தான்.
காலம்
 
 
 

முன் மேசையிலிருந்து ரைப் அடிக்கிற ரேணுவைத் தெரியும் ஆதிக்கு, சுருண்ட மயிருடன் சின்னச் சிரிப்பு இன்று ஒருமயிற்காற்றை ஒழுங்குபடாமல்மூக்குக்கு நேரே வந்துநின்றது. அந்தச் சிரிப்பு இல்லை. இவனைக் கண்டு கலவரப்பட்டாள். தலையைக் குனிந்துரைப் அடித்து ஆதி உள்ளே போகப்பார்த்தாள். ஆதிஉட்சென்று"அந்தக் கடிதம்வரக் கானன்” என்றான். “தேசிய புலனாய்வுப்பிரிவிடம் தான் போய்க் கேட்க வேண்டும் ” என்று அவனை இருக்கச் சொல்லாமல் பணிப்பாளர் சொன்னார்.
"r?"
"உன்னுடைய கோப்புகளை எல்லாம் அள்ளிக்கொண்டுசென்று விட்டார்கள்.” கண்ணாடியை மூக்கில் வைத்து மேல் மீசையில்லா முகத்தில் எந்த உணர்வும் தெரியவில்லை.
ஆதி, சின்னச் சின்ன வெங்காயம் உரித்து, மிளகாய் வெட்டி தேங்காய்ப்பால் விட்டு, உப்புப் போட்டு, கடுகு, சீரகம்,வெந்தயம் வதக்கி தூள் கொட்டி இறைச்சியோ, மீனோ,மரக்கறியோ, அல்லதுறால்தானோ எதுவோவைத்துஎல்லாம் சேர்த்துஒரு கறி செய்தான். செய்தபின் அதன் பொன்னிறத்திலும், மெல்லியமனத்திலும் அது அமிர்தம் ஆயிற்று தன்
3:ا
வயிற்றில் பிறவா அந்த அழகியமகளுக்குஅதைக் கிண்ணத்தில் ஏந்திச்
சென்றான். ஜீள்இன்னோரு குடியில், இன்னொருவர் கொடுத்த
இன்ன்ெரீருணுேவைடண்டு கொண்டிருந்தாள். வெற்றுப் புன்னகைத்தான் ாது அவனிடம் இருந்தது. கனவுகண்டு எழுப்பி சி ۔
ブ நேரத்திற்கப்பிறகுதான்காலை ஆயிற்று.
ஒப்பின் வீசா உள்ள நாட்டிற்கு பயணம் ஏறினான். மழை தூறிக் கொண்டிருந்தது. மனைவிக்கும், அம்மாவிற்கும் முத்தம் வைத்தான். மைந்தரைகட்டிப்பிடித்துமாறிமாறிக் கொஞ்சினான். அம்மாவிற்கு மகன் போகிறான் வருவான்’ என்றிருந்தது. மைந்தர்களுக்கு அப்பா பள்ளிக்கூடம் போகிறார் என்றிருந்தது. இருமைந்தர்களின் கைகளிலும் நூறு நூறு ரூபாத்தாள்களை வைத்தான் ஆதி. அது போதும் அவர்களுக்கு வருசப்பிறப்புக்கு வெடிகொளுத்தலாம். பொங்கலுக்கும் அதுபோதும்
பொங்கலுக்கு வெடிகொழுத்தினார்கள்தான். ஆனால் அதன் பிறகு ஒரு மாதம் கழித்து வந்த பிறந்த நாளுக்கு உக்ரெய்னில் இருந்து போன் உடுத்தபோது'அம்மா பேர்த்டேக்கு காற்சட்டைதான் எடுத்தவா" என்றார்கள்.
R
ஏன்?"
"சேர்ட்ஏடுக்கக்காசில்லையாம்"
உக்ரெய்னின் கீவ் நகரம் பணியால் மூடுன்டு கிடந்தது. உதயன்தான் கூட்டிச் சென்றான். ஒரு மாத விசா முடிந்தது உக்ரெய்னில், பொலிஸ்பிடிக்கும் பிடிக்கும்பொலிஸ்க்காரனைப்பொறுத்தது.அது குட்டு விழும். காசு வாங்கிவிடுவான். வேலைகள் செய்விப்பான். சிறையில் தள்ளுவான். உதயன் வேகமாகவும், கறுக்காகவும் குறுக்குப் பாதை வழியாகவும் இரண்டு கண் தவிர, இன்னோர் எச்சரிக்கைக் கண் பூட்டி, வெளியளாவி, துழாவிக் கூட்டிச் சென்றான். மகன் “சேர்ட் எடுக்கக்
54 30 - 17

Page 57
காசில்லை" என்றான். உதயனைப் பார்தான் ஆதி அழுகைவெடித்து விடும். வெறுமையாகப் புன்னகைத்தான். அன்றிரவுக் கென்று உதயன் ஆதிக்குவொத்காவாங்கினான்.
இம்முறை கொம்மியுனிக்கேசன் சென்ரருக்கு உதயன் கூட்டிப் போகவில்லை. ஐந்து நிமிச நடையில் அது இருந்தது. முதல் இருந்த டடில் ஜேர்மனிக்கு உடன் அனுப்பப்படுகிறவர்கள்தான் இருந்தார்கள். அவர்கள் பயணக்காக முழுவதையும் கட்டி விட்டவர்கள். கட்டாதவர்கள் இந்த வீட்டில்இருக்கின்றார்கள். “காசுதருவியளோ?" என்று ஆரையும் கெஞ்சஐந்துநிமிசத்தில் தொலைபோசிவசதியிருந்தது. கீரிமலைமணற் குவியலில் நடப்பது போல் கற்பனை செய்ய சுகமாக இருந்தது - கீவ் நகரின் பணிக்குவியலில் நடப்பது. அது வெறும் மேல்; வெறுங்கால். இது காலை மூடிக்கட்டிய சப்பாத்து. மேலைப் போர்த்து மூடிய கோட், மைந்தனின் உடலை முழுவதுமாய் மூடி மீதி நிலத்திலும் இழுபட்டு, அவனை நிலத்தில் விழப்பண்ணியது கோட் பொலிஸ்காரர்களிடம் அகப்படா வண்ணம் மரங்கள் இருந்தன. பனிப் பளிங்கில் கால் வைத்தபோது சறுக்கப்பார்த்தது. காலில் உறுதி இருந்தது. உறுதிஉள்ள ஊரில் பிறந்துவளர்ந்தவன் ஆதி உறுதியை உருக்குலைக்க, அம்மியை அரக்கிவைக்க அடிமேல் அடி விழுகின்றன.
வீட்டைக் கண்டுபிடித்தான்கள். வந்துவிட்டான்கள். வீட்டை புரட்டிப் போட்டான்கள். விசாரித்தான்கள். நாலாம் மாடிக்கு வா என்றான்கள். விசாரித்தான்கள். புலி அனுப்பி வேவுபார்க்க இங்கு வந்தவன் உன் புருசன். அது உனக்குத் தெரியும் என்றான்கள். புலிகாக அனுப்பி நீங்கள் இருக்கும் வீடு வாங்கப்பட்டது. அது உனக்குத் தெரியும்
கிழமைபொலிஸ்ஸ்ரேச
பற்றி என்ன தகவல்
விட்டு வெளிே . இம்மூன்று நிபந்தனைகள் விசாரணை முடியும் முற்றுப்புள்ளியை வைத்தன. முற்றுப்புள்ளி அல்ல. வீட்டிற்குக்
கொஞ்சம் தள்ளி ஒரு ஒட்டோ நின்றது. இவள் வீட்டை விட்டுப் புறப்படுகின்ற நேரங்களில் அது காணாமற்போயிற்று.
வெற்றுப் புன்னகை வந்தது. லிப்ஸ்ரிக் அப்பிய அந்தப் பெண் காசைக் கூட்டி வாங்கினாள். சாமம் இரண்டுமணிக்கு போன் வந்தது. இமானுவேல். "மாஸ்ரர் ஒருக்கால்ரீவியைத் திறந்துபாருங்கோ"
"என்ன விசயம்?"
பா asir”
கொலன்னாவளண்ணெய்க்குதம் கொழுந்துவிட்டெரிகின்றது. மகிழ்வுமின்னிற்று புலியாகியிருக்கலாமோ? வீழ்ந்துகொண்டேபோகிற வாழ்வில் வசிக்க வேண்டி வந்ததே என்கிற நோவுவந்தது. பழமின்றி, இலையின்றி ஒற்றை மரங்களாய் நிற்கிற சூழலில் பனிப்புகார் சூழ்ந்த
a su do
 

பொழுதினில் நடைக்கு தளர்வு நேர்ந்தது. மிஞ்சிய கொஞ்சக் காசில் வொத்கா வாங்க முடிந்தது. ஒறேஞ்ச் யூஸ் பக்கெற் வாங்கவும் சில சில்றறைகள் இருந்தன.
. . அவள் நாலாம் மாடிக்குப் போனாள். கடற்கரைக் காற்று வருகிறதிசையில் போனாள். வெய்யில் கடுமையாய் எரித்தது வேர்த்தது. மைந்தர்களை, ஆதியின் அம்மாவை, தன் தம்பியை கூட்டிச்சென்றாள். முகம் வியர்த்திருந்தது, கறுத்திருந்தது. பயந்திருந்துநாலாம் மாடியின் காலடியில் போய் நின்று நிமிர்ந்து பார்த்தாள். பயங்கரமாய் இருந்தது. நாலாம் மாடியிலிருந்து ஒரு தமிழ் இளைஞன் தள்ளப்பட்டு வீழ்கிறான். அவள் காலடியில் அவன் சிதைந்து கிடக்கிறான். ஒரு கணம் அவள் உடல் சிலிர்த்துத் துடித்தது. ஆறுபக்கமும்மூடப்பட்ட'லிப்ரில்போகவும் அஞ்சினாள். படி ஏறி நாலாம்மாடிக்கு வந்தாள். விசாரணைக்கு உள்ளே கூப்பிட்டான்கள். தம்பியின், ஆதியின்,அம்மாவின் கைகளைப்பிடித்தாள். கைகள் நடுங்கிற்று. மைந்தர்களின் தலையைத் தடவி க்கிக்
கொஞ்சினாள். கண் தழும்பிற்று மைந்தர்களை ஆழுமாகப்பார்த்தாள். அவர்களின் ty நிறையவாய்வாங்கிவைத்தாள். போ
திறேன்ன்ன்றுபோய் இடைவெளியில் இறந்துபோனவர்தசாங்கனின் . கவிதா முழித்திருப்பாள். காதற் கணவனிடம்ஓடிப்போகவந்தவள். இங்கு ஒடுங்கிப்போய் கிடக்கின்றாள். சுரேஷ் முழிந்திருப்பான். தன் காதலியை, மனைவியாய் வந்தவளை தனித்த ஒரு அறையில் விட்டு வந்திருக்கிறான். தன்மகனிடம்போக வந்தநல்லம்மாக்கா முழித்திருப்பா. சாவகச்சேரி சந்தையில்கத்தரிக்காய்விற்று ஒரு மகனை கவனமாகக்
காத்தவர். மகனை எப்பகாண்பன்?
யாராயினும் இந்த சாமத்தில் இடைஞ்சல் படக் கூடாது. ஆதி வெளியில் போய் சத்தி எடுத்தான். இது நிலவுநாளா? தெரியவில்லை. பகலில் வெளிச்சத்தை வாங்கிச் சேமித்துவைத்தபனிமணல்நிலவுபோல் ஒளிர்ந்தது. நிலவு நாட்கள் பலப்பல கடந்து போய் விட்டன. நீண்ட இரவுகள் தொடர்ந்து போயின. ஒரு நிலவு நாளில் போலந்தையும், ஜேர்மனியையும்பிரிக்கிற ஆற்றின் குறுக்கே ஆதிஇறங்கினான்.
சொல்ல துயர் இனி இல்லை. சொல்வதற்கு இனி ஒரு
ஓகஸ்ட் 2002(இலை உதிர்காலம்)
6 - 17)

Page 58
Ganrasásfe
GF Iக்கிரட்டிஸ் (கி. மு. 469-399) கிரேக்க நாட்டின் மாபெரும் தத்துவஞானி. ஏறத்தாழ 2500 ஆண்டுகளாக உலகம் அவரை ஒரு தலைசிறந்த மெய்ஞானியாகவே கொண்டாடிவந்துள்ளது. தொடர்ந்தும் அவ்வாறே கொண்டாடும் என்பதில் ஐயமில்லை. கொண்டாடப்படுவோர் அனைவரும் மீள்நோக்கப்பட வேண்டியவர்கள். அந்த வகையிலேயே சோக்கிரட்டிசைப்பற்றிய இந்த மீள்நோக்கு முன்வைக்கப்படுகிறது.
2. சோக்கிரட்டீசின் அடிப்படைக் கொள்கை:
கட்டளை இடுவது ஆள்வோர் கடன். கட்டளைக்கு அடிபணிவது ஆளப்படுவோர் கடன். கப்பல் முதலாளி கப்பல் செலுத்தத் தெரிந்தவர்களையும், நிலபுலம் படைத்தோர் பயிர்செய்யத் தெரிந்தவர்களையும், நோயாளிகள் நோய்தீர்க்கத் தெரிந்தவர்களையும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி அளிக்கத் தெரிந்தவர்களையும், தையல் வேலைக்குத்தைக்கத் தெரிந்தவர்களையும் நாடுவதுபோலவே, மக்கள் தம்மை ஆள்வதற்கு ஆளத் தெரிந்தவர்களை நாடவேண்டும்.அத்தகைய ஆட்சியாளரையே சோக்கிரட்டீசின் தலைமாணக்கராகியபிளேட்டோ(கி மு.427-347)தத்துவஞான ஆட்சியாளர் (Philosopher-Rule)என்றார்.
மாலுமிகுடித்து வெறித்தால் கப்பல் முதலாளி அவரை மாற்றலாம். மருத்துவர் துரோகம்செய்தால் நோயாளி அவரை மாற்றலாம்.ஆட்சியாளர் கொடுங்கோலராய் மாறினால் பொதுமக்கள் என்ன செய்வது என்ற வினாவுக்கு சோக்கிரட்டீஸ் பதிலளிக்கவில்லை. அதற்குப் பதிலாக, கொடுங்கோலர் அழிதல் திண்ணம் என்று சொல்லி மழுப்புகிறார். கப்பல் முதலாளிக்கும் நோயாளிக்கும் ஒரு நியாயம், பொதுமக்களுக்கு வேறு நியாயம்!
கொடுங்கோலரைப் போலவே துரோகம் புரியும் மருத்துவரும் குடித்து வெறிக்கும்மாலுமியும் அழிதல் திண்ணம் என்றுசோக்கிரட்டீஸ் உரைக்காதது ஏனோ தெரியவில்லை! தன்னை அகற்ற எத்தனிக்கும் பொதுமக்களைக் கொடுங்கோலர்கள் அடக்கிஒடுக்கியேவந்துள்ளர்கள். அத்தகையகொடுங்கோலர்களை அகற்றுவதுஎப்படி என்ற கேள்விக்குச் சோக்கிரட்டீஸ்பதிலளிக்கவே இல்லை.
3. சோக்கிரட்டீஸ் - ஆசான்கள் மோதல்:
சோக்கிரட்டீசின் இன்னொரு வாதம் அறமே அறிவு (அறமும் அறிவும் ஒன்றே). அறிவு என்றால் என்ன? எதை முற்றுமுழுதாக
வல்லவராயின், அதனை அவர் அறிந்தவர் ஆவார். அதனை வரையறுக்க முடியாதவராயின், அதனை அவர் அறியாதவர் ஆவார்.எவருமேஎதனையும் முற்றுமுழுதாக வரையறுக்க முடியாது. ஆகவே எவருமே எதனையும் முற்றுமுழுதாக அறியமுடியாது.
( as T 6) to

6d
மணி வேலுப்பிள்ளைர்
அதாவது பரந்துபட்ட பாமர மக்கள் அறிவிலிகள் (அறிவையோ அறத்தையோ வரையறுக்க முடியாதவர்கள்). ஆகவே அவர்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்கு அருகதை அற்றவர்கள். மக்கள் கூட்டம் ஒரு மந்தைக் கூட்டம். மந்தைகள் தாமாகவே மேயவல்லவை அல்ல. இடையரே
மந்தையைமேய்க்க வல்லவர்.வேந்தரே மாந்தரை ஆளவல்லவர்!
மக்கள் அனைவரும் முற்றிலும் அறிவாளிகள் அல்லர் என்பது உண்மையே. எனினும் தம்மைத் தாமே ஆள்வதற்கு வேண்டிய அடிப்படை அறிவு மக்களுக்கு உண்டு. அல்லாவிட்டால் காட்டுமிராண்டிகளாக விளங்கிய மக்கள் தம்மைத் தாமே ஆளும் நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது. தம்மைத் தாமே ஆளும் நிலைக்கு உயர்ந்த மக்கள் சோக்கிரட்டீசின் சிந்தையில் வெறும் மந்தையாய் தெரிவது பெரும் விந்தையாய் இருக்கிறது.
சோக்கிரட்டீஸ் பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டு முன்னதாகவே அதென்சில் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி பயிலும் வசதி அளிக்கப்பட்டுவிட்டது. அனைவரும் எழுத்தறிவு பெற்றுக் கொண்டார்கள். அடிப்படைக் கல்வியையும், அதன்வழித்தோன்றிய எழுத்தறிவையும்பொறுத்தவரை மக்கள் ஒருவருக்கொருவர் நிகரானவர்களாகவே விளங்கினார்கள். மக்களாட்சி உரம் பெற்று மேலோங்குவதற்கு அத்தகைய சூழ்நிலை ஏதுவாய் அமைந்தது.
அதேவேளை மேற்படிப்பு வசதிமேற்குடியினருக்கே கிடைத்தது. மேற்படிப்பைப் பொறுத்தவரை மேற்குடியினருக்கும் கீழ்குடியினருக்கும் இடையே காணப்பட்டவெளியை நிரப்புவதில் ஒருசாரார் தலையாய பங்கு வகித்தார்கள். அவர்கள் அறிவையும் அறத்தையும் போதித்தார்கள். ஆதலால் அவர்கள் ஆசான்கள் (Sophists)எனப்பட்டார்கள்.அவர்களுள் CasarguTsiu (Gorgias), gjábófgLOTGäu (Alcidimas), giáÉGUITST (Antiphon), GOTŮGLGlass(Tfpsiu (Protagoras), rólů îluLJIT6ño (Hippias) முதலியோர் முக்கியமானவர்கள்.
எல்லோரும் இந்நாட்டுமன்னர் என்பதே மேற்படி ஆசான்களின் அடிப்படைப்போதனை.சோக்கிரட்டீஸ் அதனை வன்மையாக எதிர்க்கிறார். அவருக்குஒருபுராணக் கதைமூலம்பதிலிறுக்குகிறார். புறொட்டேகொறஸ் (என்ற ஆசான்): கிரேக்கரின் முழுமுதல் கடவுள் (கிரேக்கரரின் சிவன்) ZeuSதனது தூதரை (Hermes) அழைத்துமக்களுக்கு அரசியல்கலையை வழங்கும்படிபணிக்கிறார். ஏற்கனவே ஏனைய கலைகளை ஆங்காங்கே வழங்கிய இறைதூதம் அரசியல் கலையையும் ஆங்காங்கே வழங்க
56 இதழ் - 17 )

Page 59
விடட்டுமா என்றுகடவுளைக் கேட்கிறார்.அதற்குக் கடவுள் கொடுக்கும் விடையில் மக்களாட்சிப் பண்பு பொதிந்திருக்கிறது:அரசியல் கலையை எல்லோருக்கும் வழங்கிவிடு அதில் எல்லோருக்கும்பங்குகொடு அதனை ஒரு சிலருக்கு மட்டும் வழங்கினால், மக்கள் எல்லோரையும் மேம்படுத்த முடியாது போய்விடும். அத்துடன் அரசியல் கலையில் ஈடுபடாதோர் மக்களைப் பீடித்த பீடைகளாய் மாள்வர் என்பதையும் அவர்களுக்கு
உணர்த்திவிடு
மக்களின் சமத்துவத்தை முதன்முதல் வலியுறுத்தியோர் மேற்படி ஆசான்களே:மக்கள் ஒருவருக்கொருவர் சரிநிகரானவர்கள். சுதந்திரம் மக்களின் பிறப்புரிமை. இயற்கை எவரையும் அடிமை கொள்வதில்லை. மக்கள் கருத்தொருமித்துதங்களைத் தாங்களே ஆளவேண்டும். வேறு துறைகளில்மக்கள் அனைவரும்பங்குபற்றமுடியாவிட்டாலும்,அரசியலைப் பொறுத்தவரை மக்கள் அனைவரும் பங்குபற்ற முடியும், பங்குபற்ற வேண்டும். என்றுமேற்படி ஆசான்கள் வாதாடினார்கள்.
இன்னோர் ஆசானாகிய ஹிப்பியாசை சோக்கிரட்டிஸ் வாதுக்கழைக்கிறார். வாதம் சூடுபிடித்து, மெய்யரையும் பொய்யரையும் பற்றிய ஆராய்ச்சியில் உச்சக் கட்டத்தை அடைகிறது. மெய்யைச் செவ்வனே அறிந்தவரே பொய்யைச் செவ்வனே சொல்லவல்லவர்.ஆகவே மெய்யரே தலைசிறந்த பொய்யர் என்று அடித்துச் சொல்லுகிறார் சோக்கிரட்டிஸ்! ஒரு மெய்யர் மெய்மையைக் கைவிடாது பொய்யராவது எங்ஙனம்? ஆகவே சோக்கிரட்டிஸ்சொல்வதைத் தன்னால் ஏற்கமுடியாது என்கிறான் ஹிப்பியாஸ். நான் சொல்வதை என்னாலுடிற் முடியாதுதான். நான் வாதாடும்பொழுது திசைமாறிப் விடுதிறிேன்
மகப்பேற்றுத்தாதி. சிே
தடவைகளே காலாட் பி) சேர்ந்து போரிட்டவர். 70 வயதுவரை வாழ்ந்தவர். உழைத்துப் பிழைக்காதவர். அப்படி என்றால் ஐவரைக் கொண்ட அந்தக் குடும்பத்தின் சீவியம் எப்படி நடந்தது? பாவம், அவருடைய மனைவி சாந்திப்பே (Xanthippe),3பிள்ளைகளின் தாய், அடுப்பைப்புகையவைப்பதற்கு என்ன பாடுபட்டிருப்பார்! அப்படி இருந்தும் சோக்கிரட்டிசின் மாணவர்கள் தமதுகுருபத்தினியைஒர் அடங்காப்பிடாரி என்றுகதை கட்டிவிட்டார்கள்.அந்த அபலையை அடங்காப்பிடாரிஎன்பது எத்துணை அபத்தம்
உண்மையில் தகப்பன் தேடிவைத்த சொத்துக்களே சோக்கிரட்டீசுக்குக் கைகொடுத்தன. அவற்றுள் வீடு வளவும் தளபாடங்களும் பணமும் அடங்கும். தகப்பன் விட்டுச் சென்ற பணம் 5 மினா என்கிறார் சோக்கிரட்டீஸ், 70 மினா என்கிறார் கிரேக்க வாழ்க்கை வரலாற்றாசிரியர் புளுட்டாக் (Plutarch), 80 மினா என்கிறார் கிரேக்க நாவலர் லிபேனியஸ் (Libanius) (1 மினா =
காலம்
 
 

4 பொன்). சோக்கிரட்டீஸ் குறைத்துச் சொல்லுகிறாரோ, மற்றவர்கள் கூட்டிச் சொல்லுகிறார்களோ தெரியவில்லை. எவ்வாறாயினும் தமது மாணவரும் நண்பருமாகிய கிறிட்டோவிடம் வட்டிக்குக் கொடுப்பதற்குப் போதியளவு பணத்தைத் தகப்பன் விட்டுச்சென்றுள்ளார் என்பது மட்டும் உண்மை.
4. அரிஸ்டோட்டில் முன்வைக்கும் விளக்கம்:
மனிதன் ஒரு சமூகப்பிராணி என்று (பிளேட்டோவின் சீடராகிய) அரிஸ்டோட்டில்(கி.மு.384-322) கூறியதாகச் சொல்வது வாடிக்கை.அவர் கிரேக்க மொழியில் அதனை Zoon politikon என்று குறிப்பிட்டுள்ளார். Logos என்றகிரேக்கச் சொல்வாக்குநீதி,நியாயம்மூன்றையும் ஒருங்கே உணர்த்தும் சொல். அந்த மூன்று தன்மைகளும் மனிதரில் இயற்கையாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் மனிதர்கள் ஏனைய சமூகப் பிராணிகளிலிருந்து இயற்கையாகவே வேறுபடுகிறார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டே அரிஸ்டோட்டில் மனிதரை 200n
ர் என்றும் ஆளப்படுவோர் என்றும்(the citis to govern and be governed), 9sissir ர் நிகரானவர் என்றும் ஒப்பானவர்என்றும்(equaland b like) அரிஸ்டோட்டில் குறிப்பிட்டுள்ளார். இது சோக்கிரட்டிஸ்கொண்ட
கருத்துக்கு நேரெதிர்மாறான கருத்தாகும்
அவ்வாறு அரிஸ்போட்டில்(கி.மு.384-322) ஏற்றுப் போற்றப்படும் ஆட்சியே அவர் பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக, அவருடைய குருவாகிய பிளேட்டோவும்(கி.மு. 427-347) பிளெட்டோவின் குருவாகிய சோக்கிரட்டீசும் (கி. மு. 469-399) பிறப்பதற்கு இரு நூற்றாண்டகளுக்கு மேலாக அதென்சில் நிலைத்திருந்தது.
5. சோக்கிரட்டீசின் இலட்சிய மன்னன் அகமெம்னன்:
மேன்மக்கள் புலவராகிய ஹோமர் (Home)தமது இலியட் (liad) காவியத்தில் கீழ்மக்களை மந்தைகள் என்றும், மாமன்னன் அகமெம்னனை (Agamemo)இடையன் என்றும்வர்ணிக்கிறார்.அந்த அகமெம்னனையே சோக்கிரட்டீஸ் தனது இலட்சிய ஆட்சியாளனாக வரிக்கின்றார். அகமெம்னன் மந்தையை மேய்த்த விந்தையை ஹோமரே எடுத்துரைக்கிறார்.
மாமன்னன் அகமெம்னன் மேற்கொள்ளும் ஒருவெற்றிகரமான படையெடுப்பை அடுத்துக்கைப்பற்றப்படும்இளம்பெண்களை தளபதிகள் பங்கு போடுகிறார்கள். அப்பெண்களுள் ஒரு புரோகிதரின் 57 இதழ் - 17)

Page 60
மகளும் அடங்குவாள். அகமெம்னனுக்குப் புரோகிதரின் மகள், காவிய நாயகனாகிய மன்னன் அகிலிசுக்கு (Achilles) வேறொரு பெண்.என்றெல்லாம்பங்கு போடப்படுகிறது.
பாவம்,அந்தப்புரோகிதர்!தனதுஉயிரையும்கப்பத்தையும்கையில் ஏந்தியபடி அந்தப் படுபாவியிடமிருந்து தனது அருமை மகளை மீட்க வருகிறார்.தனது அரசியை (Clytemnestra) விடப்புரோகிதரின் மகள் மீதே தனக்கு மோகம் அதிகம் என்று பகிரங்கமாகத் தெரிவிக்கும் அகமெம்னன், கப்பத்தை ஏற்க மறுத்ததுடன் நில்லாது, புரோகிதரையும் அவமதித்துவிரட்டுகிறான்.
புரோகிதர் பூசிக்கும் கடவுளாகிய சூரிய மூர்த்தி (Apollo) வெகுண்டெழுந்து பாசறை எங்கும் கொள்ளைநோயைப் பரப்புகிறார். மாமன்னனின் போர்வீரர்கள் சாரிசாரியாகச் செத்து மடிகிறார்கள். விழித்தெழும் மன்னன் (காவிய நாயகன்) அகிலீஸ் மாமன்னனின் ஆணையின்றியே அவையைக் கூட்டி, அந்தப் புரோகிதரின் மகளை விடுதலை செய்யநிர்பந்திக்கிறான். அகமெனனன் புரோகிதரின் மகளை விடுதலை செய்துவிட்டு, ஏற்கனவே அகிலிசுக்கு ஒதுக்கிய பெண்ணைக் கவர்ந்த செல்கிறான். அகிலிஸ் ஆவேசமடைந்து அகமெனைைனச் சாடுகிறான்.பேராசை பிடித்தவனே,வெட்கம் கெட்டவனே, குடிகாரப்பயலே, குட்டைநாய் முழியா, பெட்டைமான் நெஞ்சா.
மாமன்னனைச் சாடுபவன் அரச குடியினன். அத்துடன் காவிய நாயகன்.ஆதலால்ஹோமர் அதனைப்பொறுத்துக்கொள்கிறார்.ஆனால் சோக்கிரட்டிசினால் அதனைப்பொறுக்கமுடியவில்லை. அகிலீசின் கூற்று தணிக்கை செய்யப்பட வேண்டும் (காவியத்திலிருந்தே நீக்கப்பட வேண்டும்) என்று வாதாடுகிறார். அகமெனன் அவருடைய இலட்சிய ஆட்சியாளன் அல்லவா?
தேர்சைற்ஸ் (Thersites) ஒரு கீழ்மட்டப் படைவீரன். அவனும் மாமன்னனைச்சாடுகிறான்.மேற்குடிப்புலவராகிய ஹோமரால் அதனைப் பொறுக்க முடியவில்லை. தேர்சைற்சை இழிந்தவன் என்றும், அருவருப்பனவன் என்றும், அலங்கோலமானவன் என்றும் திட்டுகிறார். அவன் மாமன்னனை என்னவோ தட்டிக கேட்டுவிட்டான் என்ற கோபம் புலவருக்கு! அப்படி அவன் தட்டிக் கேட்ட சங்கதி என்ன தெரியுமா? (மக்களை மேய்க்கும் இடையனே என்று வஞ்சப் புகழ்ச்சியுடன் அகமெம்னனை அவன் விழிப்பதுகவனிக்கத்தக்கது):மக்களை மேய்க்கும் இடையனே, உனது பேராசை தீராதா? உனது கூடாரத்தில் பெண்குலமும் வெண்கலமும் நிறைந்திருப்பது போதாதா? தரோய் (Troy) தேசத்துப் பொன்கலமும் உனக்கு வேண்டுமா? அல்லது கூடிப்படுப்பதற்கு மேலும் ஒருகுட்டிப்பெண் வேண்டுமா? உனது பேராசையால்போரை இழுத்தடித்து எமதுநாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்தியதுபோதாதா?.
முடிசார்ந்த மன்னனையே சாடும் தேர்சைற்ஸ் அடிமட்டப் படைவீரர்களைச் சும்மா விடவானா? படுமுட்டாள்களே, மானம் கெட்டவர்களே, கிரேக்கப்பேடிகளே, பெட்டையர்களே,இந்த ஆள் இந்தக் கிழட்டுவயதில் இந்த இடத்தில் தன்னந்தனியனாய் நின்றுதான்கவர்ந்த சொத்துக்களைத்தானே அனுபவிக்கட்டும்தன்னிலும் சிறந்த அகிலீசுக்கு ஒதுக்கியமங்கையைக் கவர்ந்து அவனை மானங்கெடுத்திய இந்தப்பயல்
C காலம்

தன்னந் தனியனாய் நின்று தனது சொத்துக்களைத் தானே அனுபவிக்கட்டும் புறப்படுங்கள் நாங்கள் நாடு திரும்புவோம், புறப்படுங்கள் நாங்கள் வீடு திரும்புவோம்.
மாமன்னனைச் சாடிய படைவீரனாகிய தேர்சைற்சைத் தளபதி ஒடிசியஸ் (Odysseus) பாய்ந்து பிடித்து, அவையின் நடுவில் நிறுத்தி, இரத்தம் பீறிடநையப் புடைத்து, மானங்கெடுத்தி, அற்பப் பிறவியே, இனிமேல் மன்னனை ஏசுவதற்கு உன் வாய் உன்னினால், நீ ஆடை இல்லாது அழுது புலம்பியபடி கப்பலை நோக்கி ஓடி நேரும். என்று எச்சரிக்கிறான். அதேவேளைஒடிசியல் அகமெம்னனைப்பார்த்து அழியப் போறவனே, நீ ஆள்வதற்கு அருகதை அற்றவன். என்று சீறத் தவறவில்லை.
ஈற்றில் நாடு திரும்பும் அகமெம்னனையும் கசந்திரா (CaSSandra) என்ற அவனுடைய பிறிதோர் ஆசை நாயகியையும் அரசி கிளிட்டமென்ஸ்றா (Cytemnestra) குத்திக் கொலை செய்கிறாள். கொலைசெய்துவிட்டு அரசிகூறுகிறாள். இதோ கிடக்கிறான் எனக்குத் துரோகம் செய்தவன். அதோ கிடக்கிறாள் அவனுடைய ஆசைநாயகி, ஏற்கெனவேமாலுமிகளுடன் படுத்தெழும்பியமாதரசி.
அத்தகைய மாமன்னன் அகமெம்னனையே சோக்கிரட்டீஸ் தமது இலட்சிய ஆட்சியாளனாக வரிக்கின்றார்! எல்லோரும் இந்நாட்டு மன்னராய் விளங்க முடியாது. வேந்தரே மாந்தரை ஆளவல்லவர் என்று ஒடிசியஸ் இட்ட முழக்கமும், ஆளத் தெரிந்தவரே ஆளவேண்டும், ஆளப்படுவோர் அடிபணிய வேண்டும் என்று சோக்கிரட்டீஸ் இட்ட முழக்கமும் ஒன்றே.
6. மக்களாட்சியின் படைபலம்:
ஹெறோடோட்டஸ்(Herodotus கி.மு.484-425) கிரேக்களின் தலையாய வரலாற்றாசிரியர். அதென்சில் சர்வாதிகாரம் தலைதூக்கிய காலப்பகுதியில் அதன் படைபலம் மங்கியதையும், மக்களாட்சி தலையெடுத்த காலப்பகுதியில் அதன் படைபலம் ஓங்கியதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பாரசீகப்பேரரசர் தமது படையினருக்குச்சாட்டையடி கொடுத்துப் போர்க்களத்துக்கு இட்டுச் சென்றதாகவும், கிரேக்கப் படையினர் அவர்களை எதிர்கொள்வதற்கு மனமுவந்து போர்க்களம் புகுந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். மக்கள் தமது எசமானருக்காகப் போராடுவதற்கும், தமக்காகப் போராடுவதற்கும் இடையே காணப்படும் வேறுபாட்டையே அவர் இங்கு உணர்த்துகிறார்.
கி.மு.490ல் கிரேக்கம்மீது படையெடுத்த பாரசீகப் பேரரசன் டேறியசின் (Darius) படையை மரதன் (Marathon) என்ற இடத்தில் வைத்து முறியடித்த கிரேக்கப் படையினருள் ஒருவர் ஈஸ்சைலஸ் (Aeschylus) ST6örgy Susnuff. gjeri STgấu UTyéfasíř (The Persians) என்றநாடகம்கி.மு.472ல் (சோக்கிரட்டிஸ்பிறப்பதற்கு 3ஆண்டுகளுக்கு முன்னர்) மேடையேற்றப்பட்டது. அதன் முதல் காட்சி
8 6 - 17

Page 61
கிரேக்கரைப் பழிவாங்குவதற்காக டேறியசின் மகன் சேசெஸ் (Xerxes) மீண்டும் கிரேக்கம்மீது போர் தொடுக்கிறான். போர்க் களத்திலிருந்து எதிர்பார்த்த வெற்றிச் செய்தி கிடையாத கலவரத்தில் ஆழ்ந்திருக்கிறார் தாயரசி, அப்பொழுதுபோர்க் களத்திலிருந்து பாரசீகத் தலைநகருக்கு (Susa)மீள்கிறான் ஒரு தூதுவன். அவனை வரவழைத்த தாயரசிகிரேக்கப்படைபலம் பற்றி வினவுகிறார்:
தாயரசி அந்தப் படைக்கு யார் இடையன் அல்லது தலைவன் அல்லது
6τσιΩΤούτ’
தூதுவன்அவர்கள் எவர்க்கும் அடிமைகள் அலலர். அவர்கள் எவர்க்கும்
தாயரசி அப்படி என்றால், தம்மீது போர் தொடுக்கும் ஒரு படைக்கு
எப்படி அவர்களால் ஈடுகொடுக்கமுடிகிறது?
அந்தக் கேள்விக்கு நேரடியாகப்பதில் சொல்வதைத் தவிர்க்கும்
தூதுவன் மறைமுகமாக ஓர் உண்மையைச் சுட்டிக்காட்டுகிறான்.
தூதுவன் தம்மிலும் பெரியபாரசீகப்படையை, தம்மிலும் சிறந்த பாரசீகப்
படையை முன்னரும் அவர்கள் முறியடித்தனர் அன்றோ!
அப்பொழுது இன்னொரு தூதுவன் வந்து சலாமிஸ் (Salamis) என்ற இடத்தில் வைத்துப் பாரசீகப் படை முறியடிக்கப்பட்ட திே
V என்றும்பழிக்கிறார். கான்ரிகட்டடம், உலோகம்,உழவு,தோல்,கடைத் தொழிலாளிகள் யாவரையும் அவர் மூடர்கள் என்று இழிந்தவர்கள் என்றும்
தூற்றுகிறார்.
7. சோக்கிரட்டீசின் இலட்சிய அரசு ஸ்பாட்டா:
ஸ்பாட்டா (Spartaவே அவருடைய இலட்சிய அரசு. ஸ்பாட்டாவில் ஓங்கியசில்லோராட்சியே(Oligarchy) அவரைப்பெரிதும்ஈர்த்தது. அங்கு ஒருசில படைத் தலைவர்கள் புரிந்த சர்வாதிகாரமே சில்லோராட்சி எனப்பட்டது. அங்குமேற்குடியினருக்குமாத்திரமேவாக்குரிமை இருந்தது. கீழ்க்குடியினருக்கோ தொழிலாளிகளுக்கோ வாக்குரிமை கிடையாது. உள்ளூர்மக்கள் வெளியூருக்கோவெளியூர்மக்கள் உள்ளுருக்கோ செல்ல முடியாது. கலை, இலக்கியப் படைப்புகள் தணிக்கை செய்யப்பட்டன. கல்விப் போதனை மட்டுப் படுத்தப்பட்டது. உளவுப் படையினர் புத்திமான்களைக் கைதுசெய்துகென்றுகுவித்துவந்தார்கள்-அத்தகைய ஆட்சியேசோக்கிரட்டிசை ஆட்கொண்டது!
( a ravú
 

அதென்சில் சொலோன் (Solon கி. மு. 638-558) என்ற அரசியலாளரே ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை கிடைக்க வழிவகுத்தவர் என்று சொல்லப்படுகிறது. ஏறத்தாழ 1250 ஆண்டுகள் கழித்து, அதாவது 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளிலேயே அத்தகைய வாக்குரிமையை எஞ்சிய உலகம் பின்பற்றத் தொடங்கியது! அத்தகைய புரட்சிகரமான வாக்குரிமையை, ஏற்கெனவே அதென்ஸ் மாநகரத்தில் நிலவியமக்களாட்சியை விடுத்து, சர்வாதியாரம் நிலவியஸ்பாட்டாவையே சோக்கிரட்டீஸ் தமது இலட்சிய அரசாகக் கொள்ளுகிறார்!
8. கொடுங்கோலருள் சிலர் சோக்கிரட்டீசின் சீடர்கள்:
அதென்வில் நிலவிய மக்களாட்சிமூன்றுதடவைகள் கவிழ்ந்தது (கி.மு. 41,404,401) மக்கள் அதனைக் கவிழ்க்கவில்லை. உள்நாட்டுச் சதிகாரர்கள் ஸ்பாட்டாவின் உடந்தையுடன் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். கி.மு.41ல் ஆட்சியைக் கவிழ்த்த 400 பேர் 4 மாதங்கள் கொடுங்கோல் ஒச்சினார்கள். 30 G டுங்கோலார்கள் 8 மாதங்கள்
స్టీ o #1 * • محمجھی கொடுங்கோன்மை புரிந்தார்கள் அவர்தஞள் சிலர் சோக்கிரட்டீசின்
சீடர்கள் ஒருலுக்கி ஸ்டுias) அவர் பிளேட்டொவின் ஒன்று
விட்டதுகோதர்அவ 30 கொடுங்கோலர்களுள் தலையானவர்.
\ல்சியையேட்ஸ் (Alcibiades). 96 urfufig குமிகுந்த வாஞ்சை இருந்தது. இன்னொருவர் சாமைட்ஸ் இத்iniés). அவர் பிளேட்டோவின் மாமனார்! அவர் தலைமைக் கோடுங்கோலரின் வலக்கை போன்றவர். அவர்களுக்கு ஒரு ஸ்பாட்டா
பட்டாளம் பாதுகாப்பு வழங்கியது. சாட்டையும் கையுமாக நடமாடிய 300
குண்டர்கள் மக்களை வேட்டையாடிவந்தார்கள்.
அவர்கள் நடத்திய பயங்கர ஆட்சியைப் பழம்பெரும் கிரேக்க வரலாற்றறிஞராகிய தூசிடைஸ் (Thucydides கி. மு. 460- 400) விலாவாரியாக எடுத்துரைத்துள்ளார். மக்களாட்சிவாதிகள் உட்பட 1500 பேர்கொலையுண்டார்கள். எலூசிஸ் (Eleusis) என்ற நகரத்தில் மட்டும் 300 பேர் கொல்லப்பட்டார்கள். ஸ்பாட்டாவில் கொலையுண்டவர்களை விட அதென்சில்கொலையுண்டவர்களின் தொகை அதிகம்.அதென்சில் சுதந்திர மக்களின் தொகை நெடுங்காலமாகப் பெருகிவிட்டது. அதனால்தான்இங்கே பலரைக் கொல்ல நேர்ந்ததுஎன்கிறான் தலைமைக் கொடுங்கோலன் கிறிட்டியாஸ்
மக்கள் அடங்கிஒடுங்குகிறார்கள். எத்தனையோ புத்திமான்கள் அதென்சை விட்டுத் தப்பி ஓடுகிறார்கள் ஆனால் சோக்கிரட்டிசோ பிளேட்டோவோ எங்குமே தப்பி ஓடாது பத்திரமாக இருக்கிறார்கள்! போகட்டும், பலியான மக்களுக்காக அவர்கள் ஒரு சொட்டு கண்ணிர் சிந்தினார்களோ என்றால், அதுவுமில்லை புதியபாடம்எழுத வேண்டுமா? முதலில் கரும்பலகையை அழியுங்கள் என்று கம்மாவா சொன்னவர் சோக்கிரட்டிஸ்? ஆட்சியாளரைக் கட்டிக் காப்பதும் பொது மக்களை அடக்கிஒடுக்குவதுமேபடையினர்கடன் என்றுகம்மாவா சொன்னவர்
பிளேட்டோ?
59 இதழ் 17 )

Page 62
அப்புறம் கொடுங்கோலர்களுக்கு உள்ளேயே குத்துவெட்டுத் தொடங்கிவிட்டது. ஒருவேளை அல்சிபையேட்ஸ்மக்களாட்சிவாதிகளின் பக்கத்துக்குத் தாவி, தன்னைக் கவிழ்த்துவிடக்கூடும் என்று அஞ்சினான் கிறிட்டியாஸ். ஆதலால் அல்சியையேட்ஸ் வழக்கம் போலக் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்த தருணத்தில் அவனைக் கொல்லுகின்றான் கிறிட்டியாஸ். சோக்கிரட்டீசின் ஒரு மாணவன் இன்னொரு மாணவனைக் கொல்லுகிறான். சோக்கிரட்டிஸ் புகட்டிய பாடங்களை அம்மாணவர்கள் கசறடக் கற்றவர்கள் அன்றோ!
9 குற்றச்சாட்டு :
அதென்சில் நிலவிய மக்களாட்சியில் கீழ்க் குடியினரின் கை ஓங்கியிருந்தது. சோக்கிரட்டிஸ் ஒரு நடுக்குடியினர். அவருடைய மாணவர்கள் பெரிதும் மேற்குடியினர். சோக்கிரட்டிசின் போதனைகள் கீழ்க்குடியினரை மட்டம் தட்டு வதாகவும் மேற்குடியினரை மேம்படுத்துவதாகவும் அமைந்தது. மக்களாட்சியைமட்டம்தட்டுவதாகவும் சர்வாதிகாரத்தை மேம்படுத்துவதாகவும் அமைந்தது.
அவர் மக்களாட்சியைப் பேணுவதற்கோ மேம்படுத்துவதற்கோ பாடுபடவில்லை. அதிலுள்ள குறைகளைக் குறைப்பதிலோ களைவதிலோ ஈடுபடவில்லை. மாறாக, மக்களாட்சியையே எதிர்த்துவாதாடினார். இது பூவரசில் தங்கியிருக்கும் குருவிச்சை பூவரசையே அமுக்க முற்படுவதற்கு நிகராகும். அந்த வகையில் அவர் மக்களின் அடிமடியில் கைவைத்துவிட்டார்! மக்களாட்சிவாதிகள் அவருக்கெதிராகக் கிளர்ந்தெழுந்ததற்கு அதுவே தலையாயகாரணம்.
கிமு 401ல் அதென்ஸ்கொடுங்கோன்மையிருந்துகடைத்தேறிய தறுவாயிலும் சோக்கிரட்டிஸ் வாக்குரிமையையும் மக்களாட்சியையும் எதிர்த்து வாதாடுகிறார். அதாவது கொடுங்கோன்மையின் சூடு தணிவதற்குள் மீண்டும் அதற்குத் தூபமிடும் குரல் ஒலிக்கிறது. அது கேட்டுமக்களாட்சிவாதிகள் கொதித்தெழுகிறார்கள். மூவர்சோக்கிரட்டீஸ் மீதுவழக்குத்தொடுக்கிறார்கள். முதல்வர் அனைட்டஸ்(Anytus). அவர் தோல்பதனிடும் தொழில்புரிபவர். அடுத்தவர் லைக்கன் (Lycon). அவர் நாவலர்கள் சார்பாகப் பங்கு பற்றுகிறார். இன்னொருவர் மெலிட்டஸ் (Meletus). அவர் கவிஞர்கள் சார்பாகப்பங்குபற்றுகிறார். சோக்கிரட்டீஸ் மீது இரண்டு குற்றங்கள் சுமத்தப்படுகின்றன:
1 இளைஞர்களின் உள்ளத்தைக்கெடுத்த குற்றம் 2. அரசு நம்பும் கடவுளரை நம்பாத குற்றம்.
1ஆவதுகுற்றம்சோக்கிரட்டீசின்போதனைகள்சார்ந்தது. 2ஆவத குற்றம் அவருடைய நம்பிக்கைகள் சார்ந்தது. இவை பொதுப்படையான குற்றச்சாட்டுகள். திட்டவட்டமான குற்றச்சாட்டுகள் அல்ல. அதாவது சோக்கிரட்டீஸ் என்ன சட்டத்தை மீறி என்ன குற்றம் இழைத்தார் என்பது இங்குதெளிவுபடுத்தப்படவில்லை. அவர்என்னசெய்தார்என்பதைவைத்து அவர்மீது குற்றம் சுமத்துவது கடினமாக இருந்திருக்க வேண்டும் என்றேடுகிறது. ஆதலால்தான் அவர்என்னசொன்னார்என்பதைவைத்து அவர்மீதுகுற்றம்சுமத்தப்படுகிறதுபோலும்
500 நடுவர்களுள் 280பேர் சோக்கிரட்டிசைக் குற்றவாளியாகக்
இது ஒர் அறுதிப் பெரும்பான்மை அல்ல என்பது கவனிக்கத்தக்கது.
( sa vio

ஆனால் தன்னை விசாரித்த நீதிமன்றத்தை சோக்கிரட்டிஸ் வழக்கம்போல எள்ளி நகையாடுகிறார். தான் எள்ளி நகையாடும் வாக்குரிமையோ வாக்களிப்போ தனக்கு நீதி வழங்கினால் தனது போதனையே பொய்த்துவிடும் அல்லவா? அதனால் தனக்கு நீதி கிடையாது போவதையே அவர் உள்ளுர விரும்புகிறார். எனவே வேண்டுமென்றே அவையோரைச் சீண்டுகிறார். ஆதலால் அவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக 360 வாக்குகளும் எதிராக 140 வாக்குகளும் கிடைக்கின்றன. இது ஒர் அறுதிப்பெரும்பான்மை ஆகும். எத்தகைய வாக்குகளை அவர் எள்ளி நகையாடினாரோ, அத்தகைய வாக்குகளே அவருடைய தலைவிதியை
நிர்ணயித்தனர்
10. இறுதிக் கட்டம் :
சோக்கிரட்டிசுக்கு மரண தண்டனை தீர்க்கப்பட்ட பொழுது அதென்சில் திருவிழா விடுமுறைக் காலம் என்பதால் அது உடனடியாக நிறைவேற்றப்படவில்லை. அந்தத் தருணத்தில் அவருடன் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்த மாணவரும் நண்பருமாகிய கிறிட்டோ (Crito) அவரைச் சிறையில் சந்தித்து, காவலர்களுக்கு இலஞ்சம் கொடுத்து, தெசாலி (TheSSaly) என்ற பிறிதொரு கிரேக்க ஆள்புலத்துக்குத் தப்பியோடுவதற்கு ஒழுங்குசெய்வதாகத் தெரிவிக்கிறார். சோக்கிரட்டீஸ் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவது நீதியாகாது என்று கூறுகிறார். அது மெச்சத்தக்க பண்பு என்பதில் ஐயமில்லை.
எவ்வாறாயினும் அவர் தமது இலட்சிய ஆள்புலமாகிய ஸ்பாட்டாவுக்குத்தப்பியோடுவதற்கு ஏன் ஒழுங்கு செய்யப்படவில்லை என்ற கேள்வி இங்கே எழுகிறது. ஸ்பாட்டாவின் சர்வாதிகாரிகள் போர்வலர்களையே வாழ்த்திவரவேற்பார்கள் என்பதும்,புத்திமான்களைத் தீர்த்துக்கட்டி விடுவார்கள் என்பதும் சோக்கிரட்டீஸ், பிளேட்டோ, கிறிட்டோ போன்றவர்களுக்குத் தெரியாதா என்ன? அல்சிபையேட்ஸ் ஒரு தலைசிறந்த போர்வலர் என்றபடியால் ஸ்பாட்டாவின் படையில் சேர்க்கப்பட்டார். சோக்கிரட்டிசின் இன்னொரு போர்ப்பயிற்சி பெற்ற மாணவராகிய செனொபொன் (Xenophon) ஸ்பாட்டாவின் கூலிப்படையில் சேர்க்கப்பட்டார். இருவரும் தமது தாயகத்தின் எதிரிகளுடன் இணைந்துதாயகத்துக்கு எதிராகப்போரிட்ட துரோகிகள்
சோக்கிரட்டீசுக்குமரணதண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவருடைய தலைமாணாக்கராகிய பிளேட்டோ எவரும் துரத்தாமலேயே எகிப்துக்கு ஓட்டம் எடுக்கிறார். எகிப்தில் நிலவிய சாதிப்பாகுபாட்டைக் கண்டு மெய் சிலிர்க்கிறார்! பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து அதென்ஸ்க்கு மீண்டு, ஒரு கல்விக்கழகத்தை அமைத்து தமதுகுருவின் மக்களாட்சிக்கு மாறான கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறார். குருவின் போதனையை அவர் என்றுமே மீறியதில்லை. அதற்கெல்லாம் இடம் கொடுத்த அதென்ஸ் மாநகர சுதந்திர சமூகத்தை அவர் என்றும்
சோக்கிரட்டீஸ் தன் வாழ்நாள் பூராவும் அதென்சில் வாழ்ந்து கொண்டே அதன் ஆட்சியாளரை எதிர்த்தமாமேதை பிரித்தானியாவைப் பொறுத்தவரை பேட்றாண்றசலும்(Bertrand Russel) அமெரிக்காவை
இதழ் - 17)

Page 63
பொறுத்தவரை நோம் சொம்ஸ்கியும் (Noam Chomsky) அத்தகைய மாமேதைகளே எனலாம். இங்கே ஒர் அடிப்படை வேறுபாடு கவனிக்கத்தக்கது:சோக்கிரட்டீஸ் அதென்சில்வாழ்ந்துகொண்டு, அங்கு நிலவிய மக்களாட்சியில் திளைத்துக்கொண்டு (ஸ்பாட்டாவில் நிலவிய) சர்வாதிகாரத்தை நாடி வாதாடியவர், மக்களாட்சியை எதிர்த்தவர், சர்வாதிகாரத்தை ஆதரித்தவர். ஆனால்றசலும் சொம்ஸ்கியும் தத்தம் நாடுகளில் வாழ்ந்துகோண்டு, அந்த நாடுகளில் நிலவும் மக்களாட்சியைத் துய்த்துக்கொண்டு, அத்தகைய மக்களாட்சியை மேம்படுத்துவதற்காகவே பாடுபட்டுவந்துள்ளார்கள். அவர்கள் சர்வாதிகாரத்தை ஆதரித்தவர்கள் அல்லர். அந்த வகையில் சோக்கிரட்டிசைக் காட்டிலும் றசலும்
சொம்ஸ்கியும் தலைசிறந்தவர்கள் என்பதில் ஐயமில்லை.
சோக்கிரட்டிசைக் சிறையில் சந்திக்கச் செல்லும் மாணவன் பேட்டோ (Phaedo) திரும்பி வந்து சொல்லுகிறான். நாங்கள் உள்ளே போனோம் அங்கே (சோக்கிரட்டீசின் மனைவி) சாந்திப்பே கையில் கடைக்குட்டியுடன்நின்றாள். அவள்ளங்களைக்கண்டதும்கத்திஅழுதாள் பெண்கள் வாடிக்கையாகச்சொல்லுவதைச்சொல்லி அழுதாள் ஐயோ, ஐயா, நீரும்உமது சினேகிதரும் கதைப்பதுஇதுதான் கடைசித்தடவை.
சோக்கிரட்டிசையும் பிளேட்டோவையும் போலவே பேட்டோ சாந்திப்பேயையும் பிற பெண்களையும் இளக்காரமாகப் பேசுகிறான். உண்மையில் அவள் இங்கே தன்னைப் பற்றியோ தனது பிள்ளைகளைப் பற்றியோ சொல்லிப் புலம்பவில்லை. தனது கணவரும் அவருடைய சீடர்களும் அதுவரை புரிந்தவாதப்பிரதிவாதங்களில் அக்கறை எடுத்தழ் நிலையில் அவள் இருக்கவில்லை. அப்படி இருந்தும் அந்துதந்தளுக்கு" ஏற்பட்ட முடிவை எண்ணி அவள் மனம் இரங்குவது ல்ெ தெரிகிறது. அது சோக்கிரட்டீசின் சீடனுக்குப்பு
சோக்கிரட்டிஸ் மனைவிற் கூறவுமில்லை. தனது கனிடல் கொஞ்சவுமில்லை. ச ్సు கிறிட்டோ, அவளை ரோட்ாலுது ட்டுக்கு அனுப்பிவிடு. அவள் மார்பில் குத்திக் கதந்த்ததறு கிறிட்டோவின் வேலைக்காரர்கள் கொறகொறவென்றுஇழுத்துக்சேல்லுகிறார்கள். அப்புறம் சோக்கிரட்டீஸ் குளித்துவிட்டுமரண தண்டனைக்கு (நஞ்சூட்டப்படுவதற்கு) தயாராகும் பொழுது திரும்பவும் சாந்திப்பே வந்துவிடுகிறாள். ஆங்கிலத்தில் இற்றைவரைXanthippe என்ற பெயர் அடங்காப்பிடாரி (Shrew) என்ற பொருளில் எடுத்தாளப்படுவது எத்துணை அநியாயம்?
யேக் கையில் ஏந்திக் பார்த்துச் சொல்லுகிறார்.
சிலர் பலரைக் கொடுமைப்படுத்துவது வரலாறு. நாம் கொடுமைகளுக்கு உள்ளாவது புதுமை அல்ல. கொடுமைகள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. எமக்கு நேரும் கொடுமைகள் இரண்டு விதமானவை. பத்தோடு பதினொன்றாக அமையும் கொடுமைகள் ஒரு விதம். கலிலியோவுக்கு நேர்ந்த கொடுமையைப் போன்றவை மறுவிதம், பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்று சொன்னதற்காகக் கலிலியோ கொடுமைப்படுத்தப்பட்டார். அவர் அன்று கொடுமைப் படுத்தப்பட்டார் என்பதற்காக மாத்திரம் இன்று மெச்சப்படவில்லை. அவர் சொன்னது சரி என்பது தெரியவந்த பின்னரே அவருக்கு ஏற்கெனவே இழைக்கப்பட்ட கொடுமை பெரிதுபடுத்தப்படுகிறது. அதாவது கொடுமைக்கு ஆளானவரின்
( காலம்
 
 
 
 
 

நிலைப்பாடு சரியே என்பது தெரியவரும்பொழுது அவருடைய தியாகம் எம்மைப் பெரிதும் ஆட்கொள்ளுகிறது (பூமி தொடர்ந்து சூரியனைச் சுற்றும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று ஐன்ஸ்டைன் கூறியதை ஒரு கணம்மறந்துவிடுவோம்).
சோக்கிரட்டீஸ் கொடுமைக்கு ஆளாகவில்லை. அதென்சின் அன்றைய சட்டதிட்டப்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது (மரண தண்டனை ஒரு கொடுமையே என்பது வேறு கதை). ஒருவாதத்துக்காக அவர் கொடுமைக்கு ஆளானார் என்பதை ஒப்புக்கொள்வோம். அவருடைய நிலைப்பாடு (மக்களாட்சி தகாது, சர்வாதிகாரமே தகும் என்ற நிலைப்பாடு) சரியா, தவறா என்ற கேள்வி இங்கே எழுகிறது. அதற்கான விடை ஆளுக்கு ஆள், காலத்துக்குகாலம், இடத்துக்கு இடம் வேறுபடக் கூடும். எவ்வாறாயினும் கொடுமைக்கு உள்ளாகும் அனைவரும் கலியோ ஆகமுடியாது. கொடுமைக்கு உள்ளாவோரின் நிலைப்பாடு சரியாக அமையவேண்டும் என்றுStephen Jay Gouldön sóusna GGöSá Glasirársnó5ô&g.
இதோ கா(வ)லன் நஞ்சுடஜ் வருகிறான். ஒரு மாபெரும் தத்துவஞானிக்கு நஞ்சு ன்மீதுதமத்தப்பட்டதுகுறித்து அவன் நெஞ்சு குமுறு இது. seau படுவதை விட நஞ்சு பருகுவதே சிறப்பு என்றுசேர் ரட்டிஸ்முடிவெடுக்கிறார். தானே குடுவையை வாங்கிதிரேமிடறில்நஞ்சைக் குடித்துவிடுகிறார். அன்று
༦༧་ཆེ4)༥རྒྱུ་མ་ ஆர்வுலரிடமிருந்து நஞ்சை வாங்கித் தானே பருகிய ண்பையிழ்இன்று எங்கள் அரசியல் தலைவர்களுள் ஒருவர் தன்னைக்
செய்யும் தறுவாயில் ஐயோ என்னைக் கொல்லுறாங்கப்பா.
என்றுகுள ஊேரைக் கூட்டி ஒப்பாரி வைத்த பரிதாபத்தையும் ஒப்பிட்டுப்
பாருங்கள்
உயிர்பிரியும் தறுவாயில் சோக்கிரட்டீஸ்கூறிய கடைசிவார்த்தை கிறிட்டோ, நாங்கள் வைத்தியநாதருக்கு ஒரு சேவல் தானம் செய்யவேண்டும் அல்லவா? அதனை மறந்துவிடாதே! நோய்வாய்ப்பட்டவர்கள் இரவோடிரவாக வைத்தியநாதருக்கு(Ascleus) ஒரு சேவலைத் தானமாகக் கொடுத்துவிட்டு, அவர் சந்நிதியில் படுத்துவிடுவார்கள். அவர்கள் விழித்தெழும்பொழுதுகுணமடைவார்கள் என்பது கிரேக்கரின் ஐதீகம். வைத்தியநாதர் சோக்கிரட்டீசின் உயிரைக் கவர்ந்து அவருடைய பிறவிப் பிணியைக் குணப்படுத்தப் போகிறார்! அதற்குக் கைமாறாகத்தான் அந்தச் சேவல் தானம் நகைச்சுவை, நம்பிக்கை, முரண்பாடு என்பவற்றின் திருவுருவம் சோக்கிரட்டீஸ்
2002 - 05 - 20
உசாத்துணை
Plato, Republic Xenophon, Conversations of Socrates Homer, The liad & The Odyssey Bertrand Russell, A History of Western Philosophy Karl Popper, Open Society and its Enemies I. F. Stone, The Trial Of Socrates
- - இதழ் - 17 D

Page 64
évირიდ 64s குதிை
அடுத்துவரும் ஞாயிறில் இருந்து அவனுடையகாதலியாக இருப்பதற்கு
அவள் சம்மதித்துவிட்டாள். ஞாயிறுவருவதற்கு இன்னும்மூன்றேமூன்று நாட்கள் இருந்தன. அதுவரைக்கும் பொறுத்திருப்பது சிரமமான காரியம்தான்.
உடனேயே காதலி கிடைப்பதில் அவனுக்கு ஒருதடைஇருந்தது. தற்சமயம் அவளுக்கு ஒரு காதலன் இருந்தான். அவனுக்கு வேலை மாற்றலாகி 2000 மைல் தூரத்துக்குப் போகின்றான். இனிமேல் திரும்பி வரமாட்டான். ஆகவே அவர்கள் இருவரும் மனமொத்துதங்கள் காதலை எதிர்வரும் ஞாயிறு காலையிலே முறித்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அவள் அவனுடைய காதலியாகிவிடுவாள். -
அவள் ஒரு பெண் நாயுடன் உலாத்த வந்தபோதுதான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. தினம் தினம் அதே பாதையில், அதே நேரத்துக்கு அலை அலையான சடை வைத்த அந்த ஸ்பானியல் நாயை அழைத்து வருவாள். பழுப்பு நிறத்தில் கட்டைக் கால்களும், நீண்டு தொங்கும் காதுகளுமாக அது ஆசையைத் தூண்டும் விதத்தில் இருக்கும். நல்ல ஒழுக்கங்கள் பழக்கப்படுத்திக் கொடுக்கப்பட்ட நாய். அவளுடைய கையில் இருந்த சங்கிலிக்கு ஏற்றவாறு அது அவளது இடது குதிக்காலடியில் குடுகுடுவென்று ஓடிவந்துகொண்டிருக்கும்.
அவன் நடத்தி வந்தது ஆண் நாய், ஜேர்மன் ஷெப்பாட் இனத்தைச் சேர்ந்தது. மிகவும் செலவில் பயிற்சி பெற்றது. ஒரு துரும்புக்கும் தீங்கிழைக்காது. குலைக்காது. கண் மூடி இருந்தாலும் இரண்டு பயங்கர கண்கள் போல தோற்றமளிக்கும் கறுப்பு வட்டமான புருவங்கள். பார்த்தவுடன் யாருக்கும் சிறிது பயம் தோன்றும். அந்த நாயினுடைய பெயர் ஜாக்,
அந்த நாய்கள்தான் முதலில் சந்தித்தன. ஒன்றையொன்று மணந்து பார்த்து பிறகு உரசிக்கொண்டன.
அவள் முதலில்ஹாய் என்றாள். இவனும் சொன்னான்.
உங்கள் நாயின் முடிமிகவும்பளபளப்பாக இருக்கிறதுஎன்றாள்.
நன்றி பெயரென்ன வைத்திருக்கிறீர்கள்? என்றான்.
ஜெனிபஃர்
மன்னிக்கவும். நாயின் பெயரைக் கேட்டேன்.
அதுதான் ஜெனிப்ஃர்'என்றுவிட்டுச் சிரித்தாள்.
( காலம்

disjv6Vno) ) விறன் அ. முத்துலிங்கம்
அழகான சிரிப்பு பற்களை மிகவும் அநீதியாக அந்த உதடுகளால் மூடி வைத்திருந்தாள்.
ல் பொய் ஒரேயொரு செங்கல்லாக அப்படித்தான் ஆரம்பித்தது. அதற்குப் பிறகு ஒரு செங்கல்லைத் தாங்குவதற்கு இன்னொன்று என்று பெரிய கட்டடமே எழும்பிவிட்டது.
அது தன்னுடைய சொந்த நாய் இல்லை என்பதையோ, தான் சம்பளத்துக்கு வேலைபார்க்கும் ஒருநாய் நடத்தி என்பதையோ அவன் கூறவில்லை. ஐந்து வீடுகளில், வீட்டுக்கு ஒருநாயாக ஐந்து நாய்களைத் தினமும் நடத்துவதுதான் தன் வேலை என்பதையோ, அந்த ஊதியத்தில்தான் தன் மாதச் செலவுகளைச் சமாளித்து வருகிறான் என்பதையோ அவன் சொல்ல மறந்துவிட்டான்.
அவளோ வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். பட்டப்படிப்பை முடித்த பிறகு கம்புயூட்டரில் வரைபடம் போடுகிறாள். ஒரு குழந்தையின் படத்தைக் கொடுத்தால் இருபது வருடங்களுக்குப் பிறகு அது எப்படித். தோற்றமளிக்கும் என்பதை ஊகமாக வரைந்துவிடுவாள். அதைப்போலவே மிருகங்களையும் செய்யப்பயிற்சி எடுக்கிறாள். பூனை, நாய்,குதிரை போன்றவற்றை உருமாற்றம் செய்வது அவளுக்கு மிகவும் விருப்பமானது. தன்னுடைய நாய்க்குட்டி பத்து வருட காலத்தில் எப்படிக் காட்சியளிக்கும் என்பதை வரைந்து சட்டம் போட்டு வீட்டிலே மாட்டி வைத்திருக்கிறாள்.
அவள் வரும் நேரங்களை அவன் அறிந்திருந்தான். மற்ற நாய்களை வெவ்வேறு வேளைகளில் நடத்திப் போவான். ஆனால் ஜாக்கை மாத்திரம் ஒரு சொந்தக்காரனின் தோரணையில் குறித்த நேரத்தில் நடத்தி வந்து அவளைச் சந்தித்தான். அவர்கள் சங்கிலிகளைச் கழற்றி அந்தநாய்களை விளையாட விடுவார்கள். அவள் சங்கிலியை மாலை போல போட்டுக் கொண்டு குனிந்து ஒருமுறை தன் உடலைப்பார்ப்டாள். அந்தச் செய்கை அவனுடைய அடி உணர்வுகளைச் சில்லென்றுதட்டி ஏதோ செய்யும். அவள் உடம்பின் ஈரமான பகுதிகளில் எல்லாம் உடனேயே முகத்தை வைத்து அழுத்த வேண்டும் என்று அவனுக்குத் தோன்றும்
அவனுடைய அப்பா இரண்டு கல்யாணமும் ஒரு சிறைவாசமும் செய்தவர். வீட்டிலே நாய் வளர்ப்பதைத் தீவிரமாக எதிர்த்தார். அவன் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அது நடக்கவில்லை. டீவியில் விளையாட்டு சானல் தவிர வேறு ஒரு சானலையும் அவர் போடமாட்டார். எப்பவும் வாய் திறப்பதில்லை. பலமான மெளனம் அனுட்டிப்பார். இரண்டு மடங்குமெளனத்தில் அவனும் இருப்பான். திடீரென்று அவர் வாயைத் திறந்தால் அது ஒரு கட்டளை இடுவதற்காகத்தான் இருக்கும். அவன் வீட்டை விட்டு ஓடியபோதுகூட ஒரு கட்டளை நிறைவேற்றப்படாத நிலையிலேயே இருந்தது. 62 இதழ் - 17)

Page 65
இப்பொழுதுதான் அவன் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. தீடிரென்று இரண்டு அதிர்ஷ்டங்கள்.
அடுத்த ஞாயிறில் இருந்து அவனுக்கு அவள் காதலியாகிவிடுவாள். இரண்டாவது, ஜாக்கின் சொந்தக்காரர் குடுப்பத்தோடு விடுமுறையில் போகிறார். இரண்டு வாரத்துக்கு அவருடைய வீட்டைப்பார்க்கும் வேலை அவனுக்குக் கிடைத்திருக்கிறது. பெரும் வசதிகள் கொண்ட வீட்டில் அவன் தங்குவான். அதுவும் நல்ல
ம்பளத்துச்
அபூர்வமான தோட்டம் அமைந்த அந்த வீட்டுக்கு அவளை முதல் முறையாக அழைத்து வந்தபோது அவள் ஆச்சரியம் காட்டவில்லை. மாறாக மிக இயல்பாக நடந்து கொண்டாள். நீண்ட காலணிகளை வீட்டின் படிக்கட்டுகளில் பக்கவாட்டாக வைத்துடக்டக் என்று ஏறினாள். மேல் கோட்டைக் கழற்றிய பிறகு, முதுகுத்தண்டோடு ஒட்டிய வயிறு தெரிவதுபோலஒரு மெல்லிய நீண்ட ஆடையில் அது'இஸ்க் இஸ்க் என்று சத்தமிட நடந்து வந்தாள். அவளில் இருந்து புறப்பட்ட ஒரு பிரகாசம் வீட்டின் ஒளியை மேலும் கூட்டியது. பாம்புபோல கைகளைச் சுற்றி அவன் கழுத்திலே போட்டு என் மூன்றாவது காதலனே' என்று சிரித்தபடி சொல்லி ஒரு சிறுமுத்தம் கொடுத்தாள். பிறகு சாவதானமாக வீட்டைச் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தாள்.
நீதனியாகவா இருக்கிறாய்?"அவள் கேட்டாள்
轎 நான் சொன்னேன். என் பெற்றோர்கள் *©ಲ್ಲನ್ನು போயிருக்கிறார்கள். இரண்டு வாரத்திற்கு நானே அரசன் f
நீசமைப்பாயா? (2ク
இன்று காலைஎன்ன சாப்பிட்டேன் தெரியுமா?உறையவைத்த
உறையவைத்த முட்டையா?
மிக அருமையான தயாரிப்பு அவன் அந்த முட்டை செய்யும் விதத்தை வர்ணிக்கத்தொடங்கினான். உற்சாகமாக கண் இமைக்காமல் அதைக் கேட்டாள். நடுநடுவே அவள் தனது இடதுமார்பைத் தொட்டுத் தொட்டுநகர்த்திவைத்தப்படியே இருந்தாள்.
கொஞ்சம் இரு நாள் சிகரெட் வாங்கி வருகிறேன்' என்று சடுதியாக அவன் புறப்பட்டபோதுதான் அந்தத் தவறு நடந்திருக்க வேண்டும் ஒருபிறவியிலேயே அடையமுடியாத சமயம்கூடிவந்திருந்தது. இந்த நேரத்தில் சிகரெட் ஒரு கேடா என்பதை அவன் மனது Currófilosofi -
வீட்டின் சொந்தக்காரர் வீட்டை ஒப்படைக்கும்போதுமோஸின் பத்துக் கட்டளைகள் போலமூன்றுகட்டளைகளை அவனுக்கிட்டிருந்தார்.
as Roto
 

அந்தப்பிரம்மாண்டமான வீட்டிலே அவன் எங்கேயும் தங்கலாம், எங்கேயும் உலாத்தலாம். ஆனால் பிரத்தியோகமான அவருடையபடுக்கை அறைக்குள் மட்டும் அவனுக்கு அனுமதி இல்லை. இரண்டாவது, அவனுக்கு இருந்த சிகரெட்மோகத்தை மனதிலே இருத்திச் சொன்னது. ஸாமன் மீனுக்கு புகைபோடுவது போல சுவாசப்பைகள் கருகு மட்டும் அவன் புகை உற்பத்திசெய்யலாம். எவ்வளவுசிகரெட் வேண்டுமானாலும் ஊதித்தள்ளலாம். ஆனால் அதை வீட்டுக்கு வெளியே செய்யவேண்டும் மூன்றாவது இன்னும் பிரதானமானது. என்னதான் தலை போகிற காரியமாக இருந்தாலும் மாலை சரியாக ஆறுமணிக்கு (5.55 அல்ல6.05 அல்ல) ஜாக்கிற்கு அதனுடைய இரவு உணவைக் கொடுத்துவிட வேண்டும்.
ஜாக்கிற்கு வேண்டிய உலர் உணவுப் பெட்டிகளையும் அளவு குவளையையும் சொந்தக்காரர் விட்டுப்போயிருந்தார். குளிர்பெட்டியிலே அவனுக்குப் போதுமான சாப்பாட்டு வகைகள் இருந்தன. பாரிலே பீர், வைன் வகைகள். உடல்பயிற்சி அறை, நீச்சல்குளம், நூற்றுக்கணக்கான புத்தகங்கள், 53 இன்ச் டீவி கொண்ட கேளிக்கை அறை என்று எல்லாம் அவனைச் சந்தோசப்படுத்தக் காத்திருந்தன. இப்பொழுது அவளும் இருந்தாள்.
நல்ல பிள்ளையாக இரு' என்றான். இந்த வாசகத்தை ஜாக்குக்குச் சொன்னானா, அவளுத் கீசிவின்னர் தெரியவில்லை. išli புறப்பட்டான். முகப்பிலே
விக்கு அவன் நிழல் பட்டு திடீரென்று பற்றி
ன்று அவன் யப்பானிய உணவுவகை திரீன். ஒரு பரிசாரகனின் திறமையான அவை மேவையிலே காட்சியளித்தன. அதில்
சியில் சுற்றி, முள் இல்லாத மீன் சதையை மேலே வைத்துச் செய்தது. ஓர் அழகான பீங்கானில் நீள்வட்டமாக அவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதற்கு வேண்டிய தொடு குழம்புஇன்னொருசிறு கோப்பையில் பக்கத்தில் இருந்தது.
இந்த வீடு அவளுக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. இதன் அமைப்பு நூதனமானது. மனிதர்களின் வசதிக்காக இது கட்டியதாகத் தெரியவில்லை. பறவைகளுக்கும், வளர்ப்புப் பிராணிகளுக்கும், தாவரங்களுக்குமாகக் கட்டிய வீடுபோலக் காட்சிதந்தது.
அவளுடைய கவனம் படுக்கை அறையிலேயோ, வரவேற்பறையிலேயோ, கேளிக்கை அறையிலேயோ செல்லவில்லை. படிக்கும் அறையிலேயே சென்றது. விதம் விதமான தாவரங்களும் செடிகளும் அதை அலங்கரித்தன. வெளியே கொத்துக் கொத்தாக டியூலிப்கள் அத்தனை வண்ணத்திலும் பூத்துக் குலுங்கின. ஜன்னல் கண்ணாடியில் ஒட்டிய தேன் குவளைகளில் இருந்து தேன் குடித்த சிட்டுகள் ஒரே நேரத்தில் முன்னுக்கும் பின்னுக்குமாகப் பறந்து ஆர்ப்பாட்டம் செய்தன.
உலோகத்தில் செய்த குதிரை வீரன் சிலை ஒன்று இருந்தது. அந்தக் குதிரை இரண்டு கால்களையும் உயரே தூக்கிநின்றது. அதன் சைகை அந்தக் குதிரை வீரன் இறந்துவிட்டான் என்பதே. ஒரு காலை மாத்திரம்தூக்கிவைத்திருந்தால் அந்த வீரன் போரிலே அடிபட்டிருப்பான். குதிரை நாலு காலையும் ஊன்றிநின்றால் குதிரையும் சேமம்; அவனும்
33 இதழ் - 17 )

Page 66
சேமம். அவள் எங்கேயோ அது பற்றிப் படித்திருந்தாள். அந்தப் போர் வீரனின் பெயரைக் கேட்க வேண்டும் என்று ஞாபகத்தில் குறித்து வைத்துக்கொண்டாள்.
சட்டம்மாட்டப்பட்ட சில குடும்பப்படங்கள் தொங்கின. எல்லாப் படங்களிலும் காலடியில் ஒரு நாய் இருந்தது. ஜாக் வருவதற்கு முன்பு அந்த நாய்கள் இருந்தவையாக இருக்கலாம். படங்களில் இருந்ததெல்லாம் ஒரு கணவனும், மனைவியும், ஒரு சிறுமியும் மட்டுமே. ஒவ்வொரு படமாக அந்தப்பெண் குழந்தை வளர்ந்துகொண்டே வந்தாள். ஒரு படத்தில் கூட அவன் இல்லாதது ஆச்சரியமே. படத்தில் இருக்கும் குட்டி நாயை கம்புயூட்டரில் போட்டு வயதாக்கினால் எப்படி இருக்கும் என்றுயோசித்துப்பார்த்தாள். ஜாக்கின் முகச் சாயல் கொண்டதாக அது இல்லை.
சுத்த வெள்ளியினால் செய்த இரண்டு உள்ளங்கை குடங்கள் epgillirgiGééussissor. 5Gy Little Flower Company Tsiro சிறிய எழுத்துக்களில் பொறித்து, தேதியும் காணப்பட்டது. ஆச்சரியங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது.
அவன் வருவதற்கிடையில் அங்கு குளிக்கலாம் என்று நினைத்தாள். தயார் நிலையில் இருந்து அவனைத் திக்குமுக்காட வைக்கலாம். நீண்ட காலணியை மற்றக் குதிக்காலின் உதவியோடு கழற்றி, அதன்மேற்பாகத்தைப்பெருவிரலில் தொடங்கவிட்டு,ஒரு நிமிடம் அது பெண்டுலம் போல அசைவதை ரசித்துவிட்டு மெள்ள எற்றினாள். அது சுவர் ஒரத்தில் போய் விழுந்தது. மற்றக் காலணினுயயும்துற்றி 谢
இந்தப்படுக்கை அறையைத்தான் வீட்டின் சொந்தக்காரர் எது காரணம் கொண்டும் பாவிக்க வேண்டாம் என்று சொல்லியிருந்தார். ஆனால் அந்த அற்ப பிரச்சனையை அவன் இப்போது கிளப்புவதற்குத் தயாராக இல்லை. கைகளை அகலமாக விரித்துவா’ என்று கூப்பிட அவள் ஓடிவந்து அவன் கைகளுக்கிடையில் ஒரு பறவையைப்போல
ஒட்டிக்கொண்டாள்.
சாப்பாட்டுமேசையிலே இரண்டுபிளேட்களும் இரண்டு சிவப்பு நாப்கினும் மடித்து வைக்கப்பட்டிருந்தன. நீல நிற மெழுகுவர்த்திகள் இரண்டு கிறிஸ்டல் பீடங்களில் நின்று மெல்லிய ஒளியை வீசின. வெள்ளியில் செய்த கத்தியும் கரண்டியும் உரிய இடத்தில் இருந்தன. மிக உயர்ந்த சார்டொனே வைன் குளிராக்கப்பட்டு அதற்குரிய நீண்ட கிண்ணங்களுடன் ரெடியாக இருந்தது. சந்தர்ப்பத்தை எப்படியோ ஊகித்த ஜாக்கும் ஜெனிபஃரும் மிக ஒழுக்கத்தோடும் கண்டிப்போடும் வளர்க்கப்பட்ட இரு குழந்தைகள் போல அமைதியாக விளையாடிக்
கொண்டிருந்தன.
படுக்கையிலே கால்களை நீட்டி அவன் அமர்ந்திருந்தான். அவனுடைய முழங்கால்களில் வசதியாக தன்பிருட்டத்தை இருத்தினாள். பிறகு அவன் கன்னங்களை ஏந்தியபடிமுதலில அந்த குதிரைவீரனின் பெயர் என்ன? சொல்லு என்றாள்.
C காலம்
 

எந்தக் குதிரை வீரன்?
ஸ்டடியில் இருக்கும் குதிரை வீரன்தான்.
என்ன ஓ'
அதுவா எனக்குப் பெயர் ஞாபமில்லை.
சரிஜாக்கிற்கு முன்பு எத்தனை நாய்கள் இருந்தன?
யாருக்குத்தெரியும்?
மைக்கேல் நீவிளையாடுகிறாய்
என்னுடைய பெயர் மைக்கேல் இல்லை. அவன் பெயரைச் சொன்னான்.
'சரி விடு, ஜாக்கிற்கு முன்பு இருந்த நாய்கி ர்கள்
- تن gV í سه قسم"
羈 彰
உஇரண்டு *. படத்தில்
क्षै।
: 劉
அவனுக்குப்பதற்றமாகியது. என்ன நேரத்தில் இவள் என்ன கேள்விகேட்கிறாள்.
'உனக்கு அந்த ஞாபகங்கள் மிகுந்த துக்கத்தை உண்டாக்குகின்றனவா?
ஆமாம் அவன் கண்களை அரைக் கப்பத்துக் கொடிபோல இறக்கிதுக்கமாக வைத்துக்கொண்டான்.
மன்னித்துக் கொள். அவை எப்படி இறந்தன?
எவை?
'உன்னுடைய நாய்கள்தான்
என்ன, எல்லாத்திற்கும் ஒஎன்கிறாய்
e ● s
அன்பே,இது என்ன குறுக்குவிசாரணை, அற்புதமான எங்கள் நேரம் வீணாகிக் கொண்டு வருகிறது. கிட்டவா, கிட்டவா’ என்று மிருதுவாகப் பேசி அவளை அணைத்தான். அவனுக்குப் பயம் பிடித்துவிட்டது. அவளுடைய கேள்விகள் ஆபத்தான திசையில் போய்க் கொண்டிருக்கின்றன. நூல் இழையில் தான் தப்பிக் கொண்டிப்பதும் தெரிந்தது. 64 இதழ் - 17 )

Page 67
நான் எங்கேயும் ஓடிவிட மாட்டேன். போன ஞாயிறில் இருந்து நீயல்லவோ எனது காதலன். இந்த உடம்பு உன்னுடையதுதான். இந்தக் கேள்விக்குமட்டும்பதில் கூறிவிடு. அது தெரியும்வரை என்னுடைய மூட் தூரத்திலேயே இருக்கும்
சரி,என்ன கேள்வி?
மூடனே, அந்த நாய்கள் எப்படி இறந்தன. ஒன்று 80ல் இறந்திருக்கிறது. மற்றது 91ல் இறந்திருக்கிறது. தயவுசெய்து சொல். எனக்கு அழுகை வருகிறது.
அவள் தேம்பிதேம்பி அழுவதற்கு மிகவும் தயாராகிக்கொண்டு வந்தாள்.
அழாதே அழாதே என்தேவடியாக்குட்டி எப்படி உன்னால் அவை இறந்துபோன வருடங்களைச் சொல்ல முடிகிறது?
எல்லாம் அந்த அஸ்தி கலசங்கள்தான். இரண்டு குட்டி
8,606 silessfsi) Little Flower Company 61 sitco Giului (Tugg,
வருடங்களும் பொறித்துவைத்திருக்கிறதே. அது நாய் தகனம் செய்யும்
f
பொய்கள் தங்களுக்கு விதித்த எல்லைகளை அடைந்துவிட்டன. இரண்டு சைஸ்பெரிதான குளியல் அங்கியில் இருந்த அவளைக் கிட்ட இழுத்தான். அவனுடைய வயிறும் அவளுடைய வயிறும் இரண்டு வடக்கு தெற்கு காந்தங்கள்போல் ஒட்டிக் கொண்டன. வலதுகையால்அவள் உடம்பின் ஈரமான பகுதிகளைத் தடவித், தேடியபடி எல்லா" உண்மைகளையும் சொல்லிவிட்டான். ః
鹅 థళళ ॐ ફેં
ஒரு பகல் காலத்து மின்னலைப்போல அவள் கட்டிலிலிருந்து
ad w స్ట్రే ) * ళ్ల ܂ ܘܪܳܐ܂ 2. ...ܘ துள்ளிக்குதித்தா குளியல் மேல் அங்கியை நின்ற இடத்திலேயே கழற்றி குவியலாக விட்ர்ேள். அவளுடைய வழுவழுவென்ற நீண்ட கால்கள் அற்புதம்ானிஒரு கறுப்புமுக்கோணத்தில்சந்தித்துக்கொண்டதை அவன் பார்த்தான். அப்போது வெளியே சீறியதன் மூச்சுக் காற்றுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவனுக்கு இரண்டு சுவாசப்பைகளும்
பிளீஸ். பிளிஸ் எல்லாவற்றுக்கும் ஒரு விளக்கம் இருக்கிறது. என்று மன்றாடியபடியே அவளைப் பின் தொடர்ந்தான். ஒவ்வொரு கணமும் அந்த அழகு அவனுக்குக் கிட்டாததாகிக் கொண்டு வந்தது. சொந்தக்காரரால் அவனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட அந்த அறை, ஒரு விநாடியில் கசங்கிசுருண்டபடுக்கை விரிப்புக்களாலும், நின்ற இடத்தில் தரையிலேஉரிந்துவிட்ட குளியல் அங்கியாலும், மேசையிலே அசட்டையாக பானம் வைத்த கிளாஸின் அழியாத வட்ட விளிம்பினாலும், எறிந்ததால் புரண்டு கிடந்த இரண்டு காலணிகளாலும் அலங்கோலமாகிக் காட்சியளித்தது.
நீண்ட ஆடைகளின் கீழே அவளுடைய வெள்ளைப் பாதங்கள் தத்தியபடி இருந்தன. அவள் குனிந்து காலணிகளை மாட்டியபோது அவளுடைய பின்பாகத்தின் வெடிப்பு அவள் சட்டையை கவ்விப்பிடித்தது. அவள் மூக்கு ஒட்டைகள் கோபத்தில் அசிங்கமாக விரிந்தன. நீ ஒரு லவராக இருப்பதைக் காட்டிலும் ஒரு பொய்யனாக இருப்பதில் உன் திறமையைக்காட்டிவிட்டாய்போகிறபோக்கில் எதிரே இருந்த அரைவட்ட மேசையை அவளுடைய உருண்ட தொடைப்பக்கவாட்டில் இடித்தது.
( காலம்
 

விறுக்கென்றுதன் நாயை'ஜெனிபஃர்'என்றுகூவி அழைத்தாள். நீண்டநேரம் இருப்பதற்குத் திட்டம் போட்டிருந்த அந்த நாய் திடுக்கிட்டு எழுந்தது. ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதை எப்படியோ ஊகித்து அவள் கால்களுக்கிடையில் புகுந்து என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாமல் சுழன்று சங்கிலியின் பிடியில் மாட்டி இழுபட்டது. பிரம்புபோன்ற முதுகுடன், எரிச்சல் ஊட்டும் விதமாக மார்புகளை முன்னே தள்ளியபடி, பிடரிமயிர்துள்ள எதிரே ஒரு குட்டைத் தண்ணிர் தேங்கிநிற்பதுபோன்ற பாவனையில் கால்களைத் தாண்டி வைத்து அவள் நடந்து போனாள். அவளுடைய நீண்ட ஆடை இப்போது இஸ்க் இஸ்க் என்ற ஒலியை ஏனோ எழுப்பவில்லை. நிழல்பட்டு வேலை செய்யும் அந்த வாசல் மின் விளக்கு அவள் உருவத்தைக் கண்டு பிரகாசமாக ஒரு கணம் எரிந்து மீண்டும் அணைந்துபோனது.
அவன் கட்டிலில் மல்லாக்கப் படுத்திருந்தான். மடியில் ஒரு சாம்பல் கிண்ணம் இருந்தது. ஒட்டகம் படம் போட்ட சிகரெட்பெட்டியில் இருந்து ஒவ்வொரு சிகரெட்டாக எடுத்துப் பற்றவைத்து, பற்றவைத்து இழுத்து அந்தக் கிண்ணத்தை நிறைத்துக்கொண்டிருந்தான்.
அவன் சிகரெட் குடிக்கும் செய்கையில் இருந்ததாகத் தெரியவில்லை. அந்தக் கிண்ணத்தை எப்படியும் அன்று இரவு பூர்த்தியாவதற்கிடையில் சாம்பலால் நிறைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தவன் போலவே காணப் ரேல் s
ஜாக் மிக அமைதியாக இருந்தது. அங்கே நடந்து முடிந்துபோன அவனுடைய வாழ்க்கையின் மிகப் பெரிய சரிவைப் பற்றி அது ஒருவித খৃঃ அக்கறையும் காட்டவில்லை. அதற்கு அவனே தற்போதைய எசமான். நேற்ற்ைய் எசமானைப்பற்றியோசித்ததாகத் தெரியவில்லை. நாளைக்கு *பார் எசமான்என்ற விசனமும் இல்லை. காலை ஆகாராத்தைப்பற்றியோ,
இரவு உணவு எங்கிருந்துவரும் என்பது பற்றியோ அறிவுஇல்லை. உலகம் 影 T பும் அதன் விருப்பப்படி இயங்கியே ஆகவேண்டும் என்ற
தோரணையில் அது சாவதானமாகப்படுத்திருந்தது.
器
இரண்டு கைகளாலும் அள்ளி அணைக்கும் தூரத்தில் அவள் படுத்திருந்த மெதுவான படுக்கையின் பள்ளங்கள் இன்னும் முற்றாக அழியவில்லை. அவள் முடி ஒன்று அவளறியாமல் உதிர்ந்து அவளின் ஒரு பகுதியாக அங்கே தங்கிவிட்டது. அவள் உடம்பில் இருந்து புறப்பட்ட மெல்லிய வாசனை ஒன்று இன்னமும் அங்கேயே சுழன்று கொண்டிருந்தது.
உலகில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவசியமான, ஆனால் மிகக் குறைந்த பேர்களாலேயே அறியப்பட்ட சமையல் கலையில் அவனுக்கு விருப்பம் உண்டு. மூன்று மணி நேரம் நின்ற நிலையில் அவளுக்காக யப்பானியஉணவுசமைத்திருந்தான். அவள் ஒன்றைக்கூட ருசி பார்க்கவில்லை. கடல் பாசியில் சுற்றிய சூஸி முறுகிக் கொண்டு வந்தது. மெழுகுவர்த்தி, அவிழ்த்துவிட்ட அவளுடைய கூந்தலைப்போல உருகி வழிந்தது. மூப்பாக்கிய வைன் விரைவில் அறையின் உஷ்ண நிலையை அடைந்துவிடும்.
தீடிரென்று அவனுக்கு நினைவுவந்தது. நாயின் உணவுநேரம் மாலை ஆறு மணி அதுதாண்டி வெகு நேரம் ஆகிவிட்டது. திறமான பயிற்சிகளால் மிக நல்ல பழக்கங்கள் பழகிக் கொண்ட அந்தக் கறுப்பு நாய்,இருமுன்னங்கால்களை நீட்டிதன் காதுகளை மறைத்தபடி,பழுப்புக் கண்களால் இத்தனை நேரம் அவனையே பொறுமையாகப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறது.
女 ★ 女 ★
65 இதழ் - 17 )

Page 68
முடிவின்மையின்
Cipri
உலகு தழுவிப் பரந்த வலையில்தான் ஃபிரெடியை சந்தித்தேன். முழுப்பெயர் ஃபிரெடி விலியம்சன். வயது முப்பத்தெட்டு. இரண்டு முறை திருமணம் செய்து இரண்டும் விவகாரத்தாகி தனியாக வாழ்கிறார். அமெரிக்காவில் புளோரிடாவில். ஊர் பெயர் வேண்டாமே என்றார். நல்ல முதலீடு இருப்பதனால் தன் பண்ணை வீட்டில் மீன்பிடித்தும், பன்றி வளர்த்தும், கவிதை எழுதியும், மின்னரட்டை அடித்தும் வாழ்கிறார். கவிதைகள் தொகுக்கப்படவில்லை. ஆனால் என்னை அறிமுகம் செய்து கொண்ட போது ஃபிரெடி ஒரு நாவலை எழுதி முடித்திருந்தார்.
ஃபிரெடிக்கு முழுத்திருப்தி வராத அந்நாவலின் பிரதி, ஃபிரெடியின் சொற்களில், மனநோயாளியான மனைவிபோல அவரை தொந்தரவு செய்தது. மேற்கே ஒரு நுாலை பிரசுரிப்பதென்பது எளியவிஷயமல்ல. பிரசுரத்திற்காக உழைப்பதற்கான மனநிலையும் ஃபிரெடிக்கு இல்லை. நாவலை இணையத்தில் பிரசுரித்தாலென்ன என்று என்னிடம் கேட்டார். நல்ல விஷயம் தான் என நான் ஊக்கினேன். பரவலாக கவனிப்பு பெற்றதென்றால் பிறகு அச்சிலும் வரக்கூடுமே.
தமிழில் நான் இரு பெரும் நாவல் களை எழுதியிருக்கிறேன் என்பது ஃபிரெடியை வியப்பிலாழ்த்தியது. ஆனால் வாழ்க்கைச் செலவுக்கு குமாஸ்தா வேலை செய்கிறேன் என்பதைக் கேட்டு அவர் குழம்பிப்போனார். என் பெரிய நாவலான விஷ்ணுபுரம் பெளராணிக சாயல் கொண்டது என்றபோது உற்சாகம் கொண்டார். அவரது நாவலும் ஒருவகை புராணப் பின்ணனி கொண்டது தான். நாவலை அனுப்பவா, படித்து கருத்து சொல்ல முடியுமா என்று 'பிரெடி கேட்டார். படித்துவிட்டு அந்நாவல் முழுமை பெற்றிருக்கிறதா என்று நான் கூறவேண்டும் என்றார். நாவலை ஒரு போதும் முடிக்க முடியாது எங்காவது நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான் என்றேன். இது அதல்ல, அந்நாவலின் எழுதப்படாத ஒரு நுனி எனக்குள் எஞ்சுகிறது என்றுபடுகிறது என்றார் ஃபிரெடி.
ஃபிரெடியின் நாவல் என்னுடைய கணிப்பொறியில் நிரம்பியதும் எனக்கு ஒருவிதமான சுமை அனுபவமாகியது. என் கணிப்பொறி எதைச் செய்யும் முன்பும் அந்நாவலைச் சென்று தொட்டு ஒரு நொடி தயங்கியது. மேலும் தள்ளிப்போட முடியாதபடி ஆனதும் நான் நாவலைப் படிக்க தொடங்கினேன்
கதை புராதன ரோமாபுரியைப் பற்றியது. கதாநாயகி கிளாரின்டா பெர்க்ஸன் புராதன மதங்களைப் பற்றிய தன் முனைவர்பட்ட ஆய்வுக்காக ரோம் நகருக்குச் செல்கிறாள்.
காலம்

ThỨũJ...... (3LDIT
அங்கு 966i ஒரு பழம் பொருள் விற்பனையாளனிடமிருந்து பசுக்கன்றின் தோலில் 60 எழுதப்பட்ட ஒரு புராதன நுாலை வாங்குகிறாள். மறைந்து போன ஒரு “அபெ’யில் காவலனாக இருந்த ஒரு கிழவரால் தன் பேத்திக்குப் பரிசாக அளிக்கப்பட்டு, அப்பேத்தியின் இறுதிக்கால வறுமையில் விற்பனைக்கு வந்த நுால் அது. அது உண்மையில் ஒரு நூல் அல்ல. கடிதங்களின் தொகுப்பு. பழங்கால ரோமில் கடவுளுக்கு கடிதங்கள் எழுதும் ஒரு மதச்சடங்கு இருந்தது. அக்கடிதங்களை பலவகையான ரகசிய அடையாளங்கள் பொறித்து பூமியில் புதைத்துவிடும் பழக்கம் இருந்தது. அப்படி புதைக்கப்பட்ட கடிதத்தொகை அது. பல நுாற்றாண்டுகளுக்குப் பிறகு அது எவ் வண் ணமோ தோண்டியெடுக்கப்பட்டது. அரிய கலைபொருளாகவும் ரகசியங்கள் நிரம்பிய நூலாகவும் கருதப்பட்டு அபெயில் பாதுகாக்கப்பட்டது. அபெ சிதிலமானபோது பெரும்பாலான பொருட்கள் மெல்ல மெல்ல மறைந்தன. சில பொருட்கள் அழிந்தன. இது மட்டும் காவல்கார கிழவரால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பதினேழாம் நூற்றாண்டில் யாரோ இந்த புத்தகத்திற்கு ஒரு சிறு முன் குறிப்பு எழுதியிருந்தார்கள். உயர்ந்த தரம் கொண்ட மொராக்கோ தோலில் அட்டை போட்டு அழகிய புத்தகமாகவும் மாற்றியிருந்தார்கள். அக்குறிப்பில் அந்நூலின் உள்ளடக்கத்தைப் பற்றி சில தகவல்கள் கூறப்பட்டிருந்தன.
ரோம் நிறுவப்பட்டு ஏறத்தாழ 300 வருடம் கழித்து நடந்த சம்பவம் அது. அன்றைய ரோம் பட்ரீஷியர்கள் என்ற வம்சத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. இவர்களே ரோமில் முதலில் குடியேறியவர்கள் என்றும் கூறப்படுகிறது. முதலில் இவ்வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ரோமின் இயல்பான சுதந்திர குடிமக்களாக கருதப்பட்டார்கள். ஆனால் மேலும் முன்னுாறு வருடம் சென்ற பிறகு பட்ரீஷியன் என்ற பெயர் வம்ச அடையாளத்தை இழந்து எல்லா சுதந்திரக் குடிமகன்களையும் குறிப்பதாக மாறியது. பட்ரீஷியன் வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றான ஃபேபியன் குலத்தைச் சேர்ந்த “அதினா’ என்ற பெண்ணால்தான் அந்த பிரார்த்தனைக் கடிதங்கள் எழுதப்பட்டிருந்தன.
கிளாரின்டா அந்த புராதன இலத்தின் மொழிக் கடிதங்களை கடுமையாக உழைத்து வாசித்துப் பார்க்கிறாள். அவள் எண்ணியது போல அது ஒரு வம்ச வரலாறோ, மதநூலோ அல்ல. அது ஒரு பாலியல் நுால், அதீனா அவளுடைய பிரியத்திற்குரிய கடவுளான ரெக்ஸின் அருளைக்கோரி, தன்னுடைய அந்தரங்க காம இச்சைகளை விரிவாக வெளிப்படுத்தி எழுதியவை அக்கடிதங்கள்.
56 இதழ் - 17 )

Page 69
அன்று ரோமின் எந்தக் குலமும் தன் விருப்பப்படி போரில் இறங்க அனுமதி இருந்தது. செனட்டின் அனுமதி பெறவேண்டும் என்று மட்டும் ஒரு வற்புறுத்தப்படாத வழக்கம் இருந்தது. தோற்கடிக்கப்பட்டவர்களை கொள்ளையடித்துப் பெறும் செல்வம் முழுக்க வென்ற இனத்திற்குச் சொந்தம். ஒரு சிறு வரியை செனட்டிற்கு கட்டிவிடவேண்டும் அவ்வளவுதான். ஆனால் ரோமின் குலங்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளக்கூடாது. ஆயுதம் ஏந்த உரிமை இல்லாதவர்களான பிளிபியன்களை பட்ரீஷியர்கள் தாக்கக்கூடாது என்றும் விதி இருந்தாலும் அது மூடிய கண்களால்தான் பார்க்கப்பட்டது. ரோமின் குலங்களின் முக்கியமான தொழிலே பக்கத்தில் உள்ள வேறு நகரங்களையும் கிராமக்கூட்டங்களையும் தாக்கிச் சூறையாடுவதுதான். குறிப்பாக "பேபியன் குலம் மிகுந்த வீரியமுள்ள வீரர்கள் அடங்கியது. மிகக் கறாரான கட்டுப்பாடு கொண்டது. ஆகவே அவர்கள் தொடர்ந்து கொள்ளையடிப்பவர்களாக இருந்தார்கள்.
ரோமின் தெற்கில் இருந்த இன்னொரு பாகன் நகரமான “வெயி”யை கொள்ளையடிக்கும் பொருட்டு 306 "பேபியன் குலவீரர்கள் சென்றனர். குலத்திலிருந்த அத்தனை ஆண்களும் சென்றார்கள் காரணம் போரில் பங்கு பெறாதவர்களுக்கு கொள்ளையில் பங்கு கிடையாது. ஆனால் இவர்கள் கிளம்பி வரும் விஷயம் ஏற்கனவே நகரின் தலைவனை எட்டிவிட்டிருந்தது. நேரடிப் போரில் "பேபியன்களை வெல்வது சாத்தியமேயில்லை. எனவே வெயி ஒரு தந்திரத்தை மேற்கொண்டது. வெயியின் பெரிய கோட்டை உருண்டைக் கற்களை களிமண்ணால் இணைத்து கட்டப்பட்டது. அதன் அடிப்பகுதியை தோண்டி உடைத்து வைத்தார்கள் "பேபியன்கள் கோட்டை வாசலை மோதி உடைக்க முயன்றபோது கோட்டையை உள்ளிருந்து உந்தி இடித்து அவர்கள்மீது போட்டார்கள். ஒரு ஃபேபியன் கூட உயிர்தப்பவில்லை.
அன்று உரிமைகள் கடமைகள் அனைத்துமே குலப்பிறப்பின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட்டன. எனவே குலங்களுக்கு இடையே இரத்த உறவு என்பது அனைத்து வகையிலும் தடை செய்யப்பட்டிருந்தது. ஃபேபியன் குலத்தில் எஞ்சியது இரண்டு கால்களும் சூம்பிப்போன டைட்டஸ் என்ற பதினாறுவயது பையன் மட்டுமே. அன்றைய நடைமுறைப்படி "பேபியன் குலப் பெண்கள் முழுக்க தற்கொலை செய்து கொள்ளவேண்டும். ஆனால் குலத்தின் மூத்தவளான ஒரு பெண்மணி அதை தடுத்தாள். "பேபியன் குலத்தின் கடவுள்களை வேறு குலங்கள் எதுவுமே வணங்குவதில்லை. ஃபேபியன் குலம் மொத்தமாக அழியுமென்றால் அவற்றை வழிபடவும், அவற்றின் கோபங்களை பலிதந்து சாந்தி செய்யவும், யாருமே இருக்கமாட்டார்கள் என்றாள் அவள்.
C காலம்

ஒரு இறுதி வழி கண்டடையப்பட்டது. எஞ்சிய ஒரே ஆண்மகனான டைட்டஸின் விந்துவிலிருந்து "பேபியன் குலத்தை மீண்டும் முளைத்தெழ வைப்பதுதான் அது. முதலில் சிலர் கடுமையாக எதிர்த்தாலும் எவருமே மரணமடையத் தயாராக இல்லாததனால் அவ்வழியை அனைவரும் ஏற்க வேண்டியிருந்தது. அதிகமாக எதிர்த்தவர்கள் இளவயதுப் பெண்கள். காரணம் அவர்களில் பலர் உறவுமுறைப்படி ட்ைடஸின் சகோதரிகள். ஆனால் டைட்டசுக்கு தாய் உறவுமுறை உடைய முதிர்ந்த பெண்களுக்கு அதிக மனத்தொந்தரவு இருக்கவில்லை.
ஃபேபியன் குலத்தில் இருந்த நாநூற்று எண்பது பெண்களில் அதீனாவும் ஒருத்தி. அவளுடைய கடிதங்கள் டைட்டஸில் இருந்து "பேபியன் குலம் பிறந்து உருவான காலகட்டத்தை சித்தரிப்பவை. ஃபிரெடியின் கற்பனை முழுச் சுதந்திரம் பெறுவது இங்குதான். அதீனாவின் கடிதங்களை கிளாரின்டா வாசிக்கிறாள். இரு காலகட்டங்களைச் சேர்ந்த இரு பெண்களின் அக ஆழத்திற்குப் பயணம் செய்ய இந்தச் சந்தர்ப்பத்தை ஃபிரெடி பயன்படுத்திக் கொள்கிறார்.
கிளாரின்டா மிகமிகத் தனிமையான பெண். காரணம் அவள் அழகில்லாதவள். திக்குவாய் வேறு. எவரிடமும் பேசிப் பழகி அறியாதவளாக, புத்தகப் புழுவாக வளர்ந்தாள் இளமையில் பகற்கனவு காண்பவளாகவும், தனக்குள்த்தானே ஆழ்பவளாகவும் ஆனாள். அவள் வரலாற்றாய்வை தேர்ந்தெடுத்ததே கூட அவளுக்கு இடமில்லாத சமகால வாழ்விடமிருந்து தப்பி இறந்த காலத்தில் புதைந்து கொள்வதற்காகவே. அதீனாவின் கடிதங்கள் கிளாரின்டாவின் மனதை ஊடுருவி அவளை கொந்தளிக்க வைக்கின்றன. அக்கடிதங்களை அவள் மனப்பிறழ்வு கொண்டவளைப் போல மீண்டும் மீண்டும் வ்ாசிக்கிறாள். அக்கடிதங்களின் வழியாக விரிந்து வந்த உலகத்திற்குள் மானசீகமாக கிளாரின்டாவும் நுழைந்து விட்டிருந்தாள். "பிரெடி இப்பகுதியை அபாரமான உரைநடையில் மிகுந்த தீவிரத்துடன் எழுதியிருந்தார். காதல், தாம்பத்தியம், உறவுகள் முதலிய எல்லா அணிகளும் உடைகளும் கழன்று விழ காமம் முழுநிர்வாணத்துடன் வெளிப்படும் தருணம் அது. பெண்கள் எல்லா கட்டுப்பாடுகளையும் உதறுகிறார்கள் "நாநூற்று எண்பது கொதிக்கும் கருப்பைகள் .” என்று அதீனா குறிப்பிடுகிறாள். பசி கொண்ட மிருகக் கூட்டங்கள் நடுவே ஒரே ஒரு சிறு இரை. அதைப் பார்க்கும்போது பசி பேருருவம் கொண்டு வளர்கிறது. எரிய எரிய பெருகும் காட்டுத்தியாகிறது.
தளர்வே இல்லாத விதிமுறைகளை உருவாக்கி அவற்றை கடுமையாக அமல்படுத்தும் பொறுப்பை குலத்தின் மூத்த பெண்கள் எடுத்துக் கொண்டார்கள். முதலில் டைட்டஸ் சிறையிலடைக்கப்பட்டான். உயர்ந்தரக உணவுகளும்
95ф - 17 )

Page 70
அவசியமான உடற்பயிற்சியும் அளித்து அவனை ஆரோக்கியமாகப் பேண ஒரு குழு அமைக்கப்பட்டது. முறைவைத்து பெண்கள் அவனுடன் அந்தச் சிறையறையில் இரவை கழித்தார்கள். ஒரு பெண்ணுக்கு ஒன்றரை வருடத்தில் ஒருமுறை ஒரே ஒரு இரவு மட்டுமே கிடைத்தது. ஆகவே பெண்கள் பகற்கனவு காண்பவர்களானார்கள். தங்களுக்குள் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டார்கள். டைட்டஸின் உடல் அவர்கள் மனதை தாபம் கொண்ட பேய் என பீடித்தது. அவன் வாழ்ந்த சிறைச் சுவர்களில் ஒட்டை போட்டு அவனையும் அவனுடைய போகத்தையும் வேடிக்கை பார்த்தார்கள். பெண்களின் வேகத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அந்தச் செயல் அனுமதிக்கப்பட்டது. பிறகு அறைக்குப் பதிலாக திறந்த உள்முற்றம் அதற்கான இடமாயிற்று. முற்றத்தைச் சுற்றி குலத்தின் பெண்கள் அனைவரும் கூடி நின்று பார்ப்பது அனுமதிக்கப்பட்டது. பின்பு அது ஒர் உரிமையாயிற்று.
மெல்ல அது ஒரு சடங்குவடிவை அடைந்தது. இறுதியில் உடலுறவு ஒரு நிகழ்கலையின் தளத்தை அடைந்தது. அதற்குரிய அசைவுகளும், அதற்கு மட்டுமான இசையும், அதற்கு வசதியான நேரமும் வகுக்கப்பட்டன. குலத்தின் அனைத்துப் பெண்களும் 61606)IT நாட்களிலும் அந்தக் கலையைப் பயின்றார்கள். அது மிகப்புனிதமானதும், இறையருளை அளிப்பதுமான ஒரு அனுஷ்டானம் என்ற நம்பிக்கை பிறந்து வேரூன்றியது. அப்புனிதநிகழ்வைக் காண "பேபியன் குலத்தின் கடவுள்கள் சூட்சும வடிவில் வருவதாக பூசாரிகளாக மூத்த பெண்கள் கூறினார்கள். அச்சடங்கையும் கடவுள்களையும் தொடர்புபடுத்தி புராண கதைகள் பல உருவாயின. அக்கடவுள்களையும் அச்சடங்கையும் புகழ்ந்து பாடல்கள் இயற்றப்பட்டன. அவை அச்சடங்கின் ஒரு பகுதியாக அதற்குரிய இசைக்குழுவினரால்
பாடப்பட்டன.
டைட்டஸ் மிகச் சீக்கிரத்திலேயே மனநிலை பிறழ்ந்து வெறுமொரு காமமிருகமாக மாறிவிட்டிருந்தான். அவனால் பெண்களை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. நாளடைவில் அவனுடைய பேச்சுத்திறனும் கேட்கும் திறனும் இல்லாமலாயின. தொடர்ந்த பயிற்சியின் மூலம் அந்த சடங்கின் அசைவுகளை அவன் உடல் மிகுந்த நளினத்துடன் கச்சிதமாக நிகழ்த்தியது.
அடுத்த தலைமுறையின் இளைஞர்கள் வயதுக்கு வரும் வரை இந்த ஆசாரம் இப்படியே நீடித்தது. குலத்திற்கு வெளியே இதுபற்றிய தகவல் எதுவும் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. டைட்டஸ் தன் நாற்பதாவது வயதில் மரணமடைந்தார். அப்போது வளர்ந்துவந்த புதிய தலைமுறை இச்சடங்கை வெறுத்தது. எனவே சடங்கு மெதுவாக மாற்றமடைந்தது. அனைவரும் பங்கு
( sa o to

பெறுவதற்குப் பதிலாக தேர்வு செய்யப்பட்ட சிலர் மட்டும் பங்குபெறும் ரகசியச் சடங்காக இது மாறியது. பிறகு இச்சடங்கை நிகழ்த்த மூன்று குடும்பங்கள் நியமிக்கப்பட்டன. அவர்கள் பரம்பரை பரம்பரையாக இதைச் செய்ய வேண்டுமென வகுக்கப்பட்டது. இச்சடங்கும் வசந்த காலத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் நிகழ்த்தப்படுவதாக யிற்று. அக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் "பேபியன் குலத்தின் காம உபகரணங்களாக மாறினார்கள். அவர்களுக்கு பொதுவாக இழிவு கற்பிக்கப்பட்டாலும் வசந்தகாலத்தில் இச்சடங்குகள் நிகழும் நாட்களில் மட்டும் அவர்களை புனிதமானவர்களாக கருதி குலத்தைச் சேர்ந்த அனைவரும் வணங்கினார்கள். பிறகு சடங்கில் உடலுறவுக்குப் பதில் குறியீட்டு ரீதியான அசைவு மட்டும் எஞ்சியது.
மேலும் சில தலைமுறை கடந்ததும் இச்சடங்கு முற்றிலும் மறைந்தது. அதற்குள் டைட்டஸ் கடவுளாக மாறிவிட்டிருந்தார். வாழ்நாள் முழுக்க நிர்வாணமாக இருந்த டைட்டஸ் சிலையிலும் அவ்வாறே காணப்பட்டார். விளக்கமுடியாத சோகம் நிரம்பிய கண்களுடன் அச்சிலை தலை குனிந்து நின்றது. திருமணச் சடங்குகளில் டைட்டசுக்கு சாந்தியளிக்கும் பொருட்டு பலி தரும் வழக்கம் உருவாயிற்று. பழைய சடங்கின் பாடல்கள் அப்போது பாடப்பட்டன. பலவிதமாக உருமாறி வளர்ச்சியடைந்துவிட்டிருந்த அச்சடங்கின் இசை வசந்தகாலம் மற்றும் காதலின் இசையாக அத்தருணங்களில் வாசிக்கப்பட்டது. திருமண விருந்தின் நடனங்களில் பல அசைவுகள் அச் சடங்கின் அசைவுகளில் இருந்து உருவானவையாக இருந்தன.
ஃபிரெடியின் நாவலில் அதினா ஃபேபியன் குலத்தின் கட்டற்ற காம விளையாட்டுக்களை மிக நுட்பமாகவும் மிக அப்பட்டமாகவும் சொல்கிறாள். எல்லாவிதமான எல்லை மீறல்களும் அவற்றில் உள்ளன. நேரடியான காமம் சாத்தியமில்லாமல் போகும்போது கற்பனை சிறகு விரிக்கிறது. மேலும் மேலும் உக்கிரமான நிகழ்வுகளை மானசீகமாக அடைகிறது. மனிதனின் காமம் மூளையில் இருக்கிறது என்று இத்தனை தீவிரமாக சொல்லும் பிறிதொரு இலக்கிய ஆக்கத்தை நான் படிக்க நேர்ந்ததில்லை.
நாவலின் இன்னொரு தளம் கிளாரின்டாவின் மாற்றம். அவள் முதலில் அந்நூாலால் கவரப்படுகிறாள். ஒரு கட்டத்தில் தன் மனநிலை பிறழ்வை புரிந்து கொண்டு அதைக் கண்டு பயப்படுகிறாள். அதைத் தவிர்க்க முயல்கிறாள். ஆனால் மேலும் மேலும் தாகத்துடன் அதில் வந்து விழத்தான் முடிகிறது. அவள் மேலும் மேலும் உள்வயமானவளாகி, பகற்கனவு காண்பவளாகி, நனவிற்கே மீள முடியாதவளாகிறாள். அவளால் காமம்
இதழ் - 17

Page 71
சிதிலமடைகிறது. அவளால் ஆண்களை நெருங்கவே முடியவில்லை. ஓரினப் புணர்ச்சி குறித்த எண்ணங்கள் அவளை கிளர்ச்சியடை வைத்தாலும் அவளால் பிற பெண்களின் தொடுகையை தாங்க முடியவில்லை. இறுதியில் அவளால் செய்ய முடிவதெல்லாம் புராதன உடையணிந்த ஏராளமான பெண்கள் பங்கு பெறும் கூட்டுப்புணர்ச்சி நிகழ்வுகளை கற்பனை செய்தபடி சுய இன்பம் அடைவது மட்டுமே. நாவல் இங்கே
முடிந்தது.
“எல்லை மீறுதல் என்பது இலக்கியத்தின் ஓர் அவசியத்தேவை. சரித்திர உண்மைகளின், சிந்தனை முறைகளின், ஒழுக்க நெறிகளின் எல்லைகள் இன்னும் சொல்லப்போனால் நாம் அறிந்த அனைத்தையும் இலக்கியம் தாண்டிச் சென்றாக வேண்டும். எனவே உங்கள் நாவலின் அத்துமீறல் என்னை கவர்ந்தது. இது ஒரு குறிப்பிட்ட வகையான பகற்கனவு மட்டுமே” என்று நான் பிரெடிக்கு எழுதினேன்.
"பேபியன் குலம் ஒரு இளைஞனில் இருந்து மீண்டும் முளைத்தது ஓர் சரித்திரத் தகவல். எங்கல்ஸின்’ குடும்பம் தனிச் சொத்து “சமூகம் என்ற நுாலில் கூட இதைப்பற்றிய குறிப்பு உள்ளது” என்று ஃபிரெடி எழுதினார்.
“சரித்திரத்தில் உண்மை என ஏதுமில்லை. தகவல் என்று கூட ஏதுமில்லை. தெரிவு என்பது மட்டுமே அங்கு இயங்குகிறது” என்று நான் பதில் போட்டேன்.
“என் நாவல் முடிவடையவில்லை என்றுபடுகிறது. நீங்கள் எப்படி இதை முடிப்பீர்கள்?’ என்று ஃபிரெடி கேட்டார்.
“நான் அந்த அபெயைப் பற்றி மேலும் விரிவாக சொல்வேன். கிறித்தவத் துறவியர் தனிமையில் வாழும் மடாலயத்தில் இப்படிப்பட்ட ஒரு நுால் ஏன், எப்படி அத்தனைகாலம் பாதுகாக்கப்பட்டது? கிறிஸ்துவுக்காக உண்மையற்றவர்களாக மாறியவர்கள் அவர்கள். அவர்களில் யாராவது இதை எழுதியிருக்கலாம். அதற்கான வாய்ப்பை நான் நாவலில் தக்கவைத்துக் கொள்வேன். இந்நூலை அவர்கள் அபெயின் இருண்ட அறைகளில் தலைமுறை தலைமுறையாக வாசித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் இந்நூலில் கொந்தளிப்பது அவர்கள் உடலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட காமமே” என்று நான் எழுதினேன்.
“கிளாரின் டா இந் நுாலை படித்து அடையும் மாறுதலைப்பற்றித்தான் நான் கேட்டேன”. ஃபிரெடி எழுதினார் “ஏனெனில் என் நாவலின் மையமே அதுதான்”
( காலம்

“கிளாரின்டாவுக்கு தன் மனம் சிதறுவது நன்றாகத்
தெரிகிறது. ஆனால் அந்நுாலை அவளால் ஒரு நாள் கூட புறக்கணிக்க முடியவில்லை. கடைசிப் பக்கத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது. மிகப் பிற்காலத்தில் யாரோ எழுதிய எச்சரிக்கை வாசகம் அது பிரியமுள்ள சகோதரா, தயவு செய்து இந்நுாலை படிக்காதே. இது பைத்தியத்தை உருவாக்கும் மாயநூல். இதில் ஒரு பக்கத்தை வாசித்தவர் முழு நூலையும் படிக்காமலிருக்கமாட்டார். முழுநுாலையும் படித்தவர் மீண்டும் சமநிலைக்கு திரும் பிவர முடியாது. தலைமுறை தலைமுறையாக பைத்தியங்களை உருவாக்கி வரும் கொடுரமான நுால் இது அதற்கு கீழே இன்னொரு வரி, வேறு ஒரு கையெழுத்தில் "இந்த எச்சரிக்கை வாசகம் முதற்பக்கத்தில் இருந்தது. இதைப் பிய்த்து கடைசிப் பக்கத்தில் ஒட்டியது நான் தான். என் பெயர் லுாசிஃபர் ” இந்த வரியில் என் நாவலை முடிப்பேன். இதுதான் உரிய முடிவு. ஆனால் இதை நீங்கள் ஏற்க வேண்டியதில்லை. நான் பூமியின் மறுபக்கத்தில் வாழ்பவன்’ என்று நான் பதில்
போட்டேன்.
“நன்றாகவே இருக்கிறது. நான் பைபிளை இதற்குள் கொண்டு வரக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். சரி, இந்த நுாலை ஆண்தான் எழுதியிருக்கமுடியும் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?’ என்று ஃபிரெடி கேட்டார்.
“இது ஆணின் பகற்கனவின் எல்லைமீறல்தான்.
எல்லைகளை மீறிப் போகும் போது அதன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள நாம் தயாராவதில்லை. காரணம் குற்றவுணர்வு அந்த உத்வேகத்தின் ருசியை இல்லாமலாக்கிவிடும். எனவே ஒரு “தவிர்க்க முடியாத” சூழலை ஆண் மனம் கற்பனை செய்கிறது. அந்த எல்லை வரை தன்னை துரத்தும் பயங்கரப்
பெண்களை அவன் உருவாக்கிக் கொள்கிறான். எல்லா
ஆண்களுக்கும் அவர்கள் கனவுகளில் ரத்தம் குடிக்கும் மோகினிகளும், தாகமே அடங்காத பிடாரிகளும் உண்டு. யோசித் துப் பாருங்கள், இந்த நாவலே கூட நாம்
பரிமாறிக்கொள்ளும் பகற்கனவு மட்டும்தானே?
ஃபிரெடியின் பதில் ஒருவாரம் கழித்து வந்தது. அதுவே இறுதி மின்னஞ்சல், பிறகு எவ்விதமான தொடர்பும் இல்லை. என் மின்னஞ்சல்களுக்கு பதிலும் இல்லை. இந்நாவல் பிரசுரமானதாகவும் நான் கேள்விப்படவில்லை. "பிரெடி எழுதியிருந்தார், “அன்புள்ள ஜெ.எம், நான் ஒரு ஆண் என்று எதைவைத்து முடிவு செய்தாய்?
இதழ் - 17 )

Page 72
dwóö6272722óg
2
பாண்டிச்சேரி போனது தற்செயல்தான். சில தற்செயல்கள் வாழ்வின் திருப்புமுணைகளாக அமைந்து விடுகின்றன.
நண்பர்கள் ஒவ்வொருவராய்த் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் ஒருகுறுஞ்சிரிப்புடன் "அரவிந்தா,நீஎப்போது கல்யாணச் சாப்பாடு போடப்போறே?” என்று கேட்டபடி பத்திரிகை தந்துவிட்டுப்போகிறார்கள்.
“அதெல்லாம்மனசுலதோணணும்பா.கல்யாணமென்றதேவை வரும்போதுமனசும் உடலும் பரபரக்கும். உள்ளே பட்சி சொல்லும். அப்ப பாத்துக்கலாம்.”என்றேன் புன்னகையுடன்.
"உன் கல்யாணம் எங்கடா?” என்று சிரித்தபடி கணபதியின் பத்திரிகையை வாங்கிக்கொள்கிறேன்.
“பாண்டிச்சேரியில்.”
“அடேடே, அப்ப கண்டிப்பா வருவேன். அழகான ஊராச்சே,” என்றேன்.
“அடேய் அப்பஊருக்குக்காக வரியா? என் கல்யாணக் துக்காக வர்லியா?”
அப்டின்னில்ல. கல்யாணத்தன்னிக்கு உன்கூட நாங்க பேசிச் சிரிச்சிட்டிருக்க முடியுமா? இப்ப நீ பேசற. கல்யாணப் பந்தல்ல, பொண்ணுமுகத்தைப் பார்க்கவும், சிலிர்க்கவும், அவகிட்டப் பேசவும், குலாவவுமே உனக்கு நேரம் சரியா இருக்குமே? எங்களுக்குப் போரடிக்காதா மாப்ளோய்.” என்றேன் புன்னகைத்தபடி, “அதுசரி” என்று அசடுவழிந்தான்.
எளிய திருமணம். அதிகாலை முகூர்த்தம் நாலரை மணிக்கே மேளம் கொட்டியது. முகத்தில் மழைகொட்டினாற்போல. என் நண்பர்கள் இரவுப்பறவைகள். பிற்பகல்ப்பணி இரவுப்பணி என்று பின்தூங்கி,பின் எழுகிறவர்கள். அவர்களுக்கு மழையாக அல்ல, மேளச்சத்தம் தேள் கொட்டினாப்போல,வாரிச்சுருட்டிக்கொண்டுபதறிஎழுந்து அவசரமாய்க் குளித்து, கண் சிவக்க கல்யாணப்பந்தலில் உட்கார்ந்திருந்தார்கள்.
நான் முன்னெழுந்து பழகியவன்தான். என் அப்பாவின் வளர்ப்பு அது எத்தனை வேலை இருந்தாலும், இரவுப்பணிமுடித்துதூங்கப்போகத் தாமதமாகி விட்டாலும் அதிகாலை, நேரத்தில் எழுந்து கொள்வேன். அப்பாவுக்கு நன்றி.
முகூர்த்தம் முடிந்து நாங்கள் தனித்து விடப்பட்டோம். உண்மையில் தவில்ச்சத்தம் என்பது மழைக்கொட்டுதான். முகூர்த்தம் முடிய, தவில் அடங்க அப்பாடா என்றிருக்கிறது. இறுக்கத்தில் இருந்து
s
C as Gu to
in

தம் டன்தாமரை
விடுபட்ட ஆசுவாசம். அம்மி மிதித்து அருந்ததி பார்த்த மாப்பிள்ளை இப்போது மணப்பெண்ணின் முகத்தையே பார்த்துப்பார்த்துப்பூரித்துக் கிடந்தான்
ஆணும் பெண்ணுமான உட்கிளர்ச்சி எத்தனை நளினங்களை உள்ளே சிந்துவதாய் இருக்கிறது. உலகத்துக்கு அழிவுஇல்லை. அழகியல் உணர்ச்சி உலகைக் காப்பற்றிவிடும் என்கிறான் ருஷ்ய எழுத்தாளன் தாஸ்த்தயேவ்ஸ்கி என்ன நம்பிக்கையான முன்மொழிவு உண்மையின் பரவச தரிசனம்.
நாங்கள் சில நண்பர்களாக ஊர்சுற்றக் கிளம்புகிறோம். காலை சீக்கிரமே சிற்றுண்டிகழித்துவிட்டோம் மதிய உணவுதயாராய் இருந்தது. கல்யாணத்துக்கு வந்துவிட்டு நேரடியாக அலுவலகம் போகிறவர்கள் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்.
எங்களுக்குப்பசியும் இல்லை. அலுவலக அவசரமும் இல்லை. உயரிநேரமோ கொள்ளையாய்க் கிடந்தது.
”?பாண்டிச்சேரில எந்தெந்த இடம்லாம் பார்க்கலாம்டா“ ܗܝ என்றான் ரமேஷ்,
பாண்டிச்சேரியின் அழகுமிகு கடற்கரை. அதன் பாறைகளில் அமர்ந்துமுரட்டு அலைத் தழுவலை ரசிக்கலாம் என்பது பெருவாரியான நண்பர்களின் தேர்வாகிறது. “அடேய், அரவிந்தன்னுபேர்வெச்சிக்கிட்டு அரவிந்தர் ஆசிரமம் தெரியாம இருக்கியே?” என்கிறான் கணபதி
நான் மெல்லத் தனிவழி பிரிந்து ஆசிரமம் செல்கிறேன். நண்பர்கள் என்னைத் தாண்டிக் கொண்டு கடற்கரை நோக்கிச் செல்கிறார்கள். ஓர் அலையைப்போல அவர்களது உற்சாகக் கும்மாளம். எனவேடிக்கையாய்க் குறித்துக்கொள்கிறது மனம்
வளாக எல்லையை நெருங்கும்போதே எனக்கு அது ஒரு பரிச்சயப்பட்ட காற்றாக இருக்கிறது. முற்றிலும் விநோதமான ஓர் உணர்வு அது சட்டென்று ஒர் அமைதியும் குளுமையும் உள்ளே அமர்கிறது. வாசலில் வியாபாரிகள் முன் குவிந்து கிடக்கிற பூக்குவியலின் உள்ளே புகுந்து புறப்பட்ட காற்றின் குளுமை ஆளைத் தழுவிக் குளிப்பாட்டுகிறது. இத்தனை தாமரை மொட்டுக்கள் கொட்டிக் குவிந்து, புதுப்பதுமலர்கள் நிறைந்த அந்தக் கூட்டுவாசனையே காட்சியே எனக்குப்புதிதல்லவா?

Page 73
மலர்களை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைகிறேன். அபாடா, எப்பேர்ப்பட்ட உலகம் அது. வெளியே சிறு உலகமாகவும் உள்ளே பேருலகமாகவும் ஒருவேடிக்கையான உணர்வுஎன்னுள். என்ன அபத்தம் என அதைஒதுக்கமுடியாத அளவுஒர் கவிதைத்திகட்டல் மனக்கிளர்ச்சி
உள்ளே அரவிந்தரின், அன்னையின் சந்நிதி வளாகம். மிகப் பெரும் அமைதிசூழ்ந்தவளாகம் சற்றுஅசிரத்தையாய் நுழைகிறவர்களை எச்சரிக்கச் சேவகர்கள் இருக்கிறார்கள். அத்தனை பேர் இருந்தாலும் அந்தஸ்தாபிக்கப்பட் நிஆசீர்வதிக்கப்பட் திஎல்லாரையும் நிறைவித்துத் தளும்புகிறது. நரம்புகள் அந்தக் குளுமையைப் பந்தல்கால்கள் போல ஏந்திக் கொள்கின்றன. வான வளாகம் ஓர் ஆலமரம். அதன் வேர்களே என் நரம்புமண்டலம்
உள்ளே ஈரம் சுரந்த கணங்கள் அவை. அதை விவரிக்கத் தெரியவில்லை. எனக்குள் ஏதோ நிகழ்கிறது. ஆ நிகழப்போகிறது. மனம் அதைக் குறித்துக்கொள்ளத்தயாராகிறது. நான் ஓர் எழுத்தாளன். உள்ளுணர்வும் சூட்சுமமும்மிக்கவன். மனம் தன்னியல்பாய் ஒரு பெற்றுக் கொள்ளும்நிலைக்குத் தயாராகிறது.
ஆ நான் கடவுள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவன். பரவச உணர்வுகளைப் புறக்கணித்தவன். நடக்கும் அனுபவங்கள் எனக்குப் புதியவை. இந்தக் காற்றும் இந்த அமைதியுமே எனக்குப் புதியவைதாம். அந்தப்பிரார்த்தனை பூமியில் மனித மனங்கள் சுத்திகரிக்கப்படுகின்றன: அது தெரிகிறது. வெறும் துன்ப அலைகளில் శ్లోక్ష 5. கரையொதுக்கும், தலைதுவட்டும் சந்நிதி శళ ர:ஆல் அது.
அறிவுத்தினவு வாய்த்தவருக்கு ஆத ஜரவீன்னென்னவே
reர்ன் இதுர்ே அங்கே வந்ததில்லை. ക്റ്റി r தீதில்லிை"என்றாலும் எவ்வாறோ என்னுள் எப்பீஇப்படியோர் நீெருக்க உணர்வினை, மதிப்பீடுகளை அதையிட்டு என்னால் முன்வைக்க முடிகிறது?. ஆச்சரியம்தான்.
எல்லோரையும் பார்த்துவிட்டு நானும் மலர்களை அந்தச் சந்நிதியில் சமர்ப்பிக்கிறேன். அநேகர் என்னுடன் அந்தச் சந்நிதியை வளைய வருகிறார்கள். கூப்பிய கரங்களுக்குள் அவர்கள் அன்னையை, பகவான் அரவிந்தரை ஏந்திக் கொண்டு உற்சவம் வருகிறாப்போல் ஒரு சிந்தனைத்தித்திப்பு என்னுள்
அது மனித சராசரிவளாகம் அல்ல, அதிஉன்னதங்களின் உச்ச நிலை அது. மனிதனைத் தூக்கி உயர்த்திப் பிடித்த ஸ்தலம். மனம் சுத்திகரிக்கப்பட்டபூமி. மனிதன் தன் உட்கிடக்கையை அறியக் கிடைத்த சூழல் அது. நான் என்ன? கல்யாணத்துக்கு வந்தவன் இப்படி இங்கே வந்து, இதையெல்லாம் என்மனதில் அசைபோட்டுக்கொண்டிக்கிறேன்?
இந்த உணர்வுகளையெல்லாம் சரியாக நான் அவதானிக்கிறேனா என்பதே தெரியவில்லை. என்றாலும் மனம் மெல்ல நிரூறி நிரம்பி வழிகிறாப் போல முழுக் கவனத்தையும் ஆக்கிரமித்துக் கவிகிறது.
சந்நிதியில் வணக்கம் செலுத்திவிட்டு எல்லாரும் ஓர் மோனநிலையில் ஆளுக்கோர் இடத்தில் அமர்கிறார்கள். நான் அவர்களைப்பார்க்கிறேன். சுற்றி விரியப்பார்க்கிறேன்.
24ம்+தமிழ்த்து ( காலம் ܝܵܐ 7= ---- ܡܓ திசிசத்
 
 
 
 
 
 
 
 
 

சுற்றிலும் பக்தர்கள். அன்னையின் விதவித வண்ணப்பூக்கள் போல. பிரசாதமலர்கள்.
என் நண்பர்களோ ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளில் கால் நணைக்கப் போயிருக்கிறார்கள். நான் அமைதியில் திளைப்பதே ஒர் விநோதமான முரண் அல்லவா என நினைக்க ஒர் புன்னகை வருகிறது. ஒருபக்கம் கடல்வெளி அருகே, மிக அருகே ஓர் மெளனத்தாடாகம்.
அப்போதுதான் அவளைப் பார்த்தேன். சற்று முன்வரிசையில் பத்தாவது பதினொன்றாவது நபராக அவள். பார்த்த கணம் மனசெங்கும் ஒருசிலிர்ப்பு:ஊடுருவுகிறது. எனக்கு அவளைத் தெரியும் என்கிறாப்போல ஒர் கவனம் மயில் சிறகாய் என்னை வருடுகிறது. அந்த உணர்வுதான் எத்தனை இதமாய் இருக்கிறது.
அத்தனை தூரத்தில்இருந்தும் என்னருகில் இருக்கிறாள் அவள். நான் அவளையேபார்த்துக்கொண்டிருக்கிறேன். வெளுத்தபருத்தியாடை சிறிய கோடுகளிட்ட புடவை. அதற்கேற்ற சோளி. குளித்த, ஈரத்தலை துவட்டாததால் காய்வதற்காகத் தளர முடியப்பட்ட கூந்தல் அந்த வாசனையை முகர ஆசையாய் இருந்தது.
அட, என்ன இது, எனக்கு என்ன நிகழ்கிறது? நான் பல்லுரம் நினைக்கலாமா?. என்னுள் சிறுவெட்கம்
திறந்து மடல் விரித்த நிலை அது தந்தையை எனக்குத் தெரிகிறது. f
* ب : علی
ఫ్ట్వే ன்பற்றி நான் நடப்பதை அவர் என்னை நோக்கித் திரும்பிப்பார்க்கிறார்.
"ஐயா வணக்கம். நான் அரவிந்தன்.”
“ஆகா”என்று அந்தப்பெண் திரும்பிப்பார்த்தாள்.
"நான் குமரேசன். இது என் பெண் சைதன்யா.”
சைதன்யா.சைதன்யா சைதன்யா. சைதன்யா. என என்னுள் ஒர் ஒலிக்கும்மாளம். கோலாட்டத்தாலாட்டு.
“நான் ஓர் மத்திய அரசு ஊழியன். அதிகாரி நிலையில் சென்னையில் வேலைபார்க்கிறேன். சென்னை வாசி. தவிர முக்கியமாய் நான் ஓர் எழுத்தாளன். எழுத்து என்பொழுதுபோக்கு”
மிக இயல்பாகவும் எளிமையாகவும் வாய்த்தது அந்த நட்பு. அவளருகே எனக்குநடக்க வாய்த்தபோதுகுளுமையான நிழலடியில்போல அமைந்திருந்தது. யார் இந்தப் பெண்? எத்தனை சுலபமாகவும், கீற்றானதோர் புன்னகைப் பரிமாறுதலுடனும் இவள் என்னிடம் பன்னெடுங் காலப்பழக்கம் போல நெருக்கத்தை உருவாக்கிவிட்டாள். வாழ்வின் சில விநோதங்களுக்கு விளக்கமே இல்லை.
நான் மதுரைக்காரன், அவள் திருச்சி. பள்ளி ஆசிரியை. சைதன்யா என்ற பெயரே அற்புதமாய் இருந்தது. நண்பர்கள் கேள்விப்பட்டால் கிண்டலடிப்பார்கள். “உங்களுக்குக் கல்யாணச் சப்பாடு வேணுமா? வேணாமா?” என்றால் வாயை மூடிக் கொள்வார்களாய் இருக்கும். என நினைத்து என்னையே ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொள்கிறேன். அதற்குள் மனம் என்னென்னவோ கணக்குகள் போட்டுக் விட்டதே?
5t இதழ் - 17 )

Page 74
அவை கணக்குகள் அல்ல. விடைகள். கணக்குகள் முன்டே என்னிடம் இருந்திருக்கின்றன.
சற்று மெளனமாக நான் நடந்து வந்தாலும் என் மனசினைப்படிக்க முடியாதவர்கள் அல்ல அவர்கள். என்னை அறிமுகப் படுத்திக்கொண்ட சுருக்கிலும், நான் தொடர்ந்து அவர்களோடு உரையாட விரும்புகிற தன்மையிலும் அவர்களும் தம் குடும்பம் பற்றிய விவரக் குறிப்புக்களை அறியத் தந்தது. எல்லாமே வெகு இயல்பு.
சற்றுபின்தங்கி நான் நடைபோட்டாலும் அவளது முதுகுப்பக்கம் என் பார்வையால் அவளைச் குறுகுறுக்க வைத்திருக்கிறேன். நீளக்கை ரவிக்கை முன்மயிர்க் கற்றையில் ஒன்று ரிப்பனுக்குக் கட்டுப்படாமல் தொங்கும் அழகு. திரும்பி என்னைத் தற்செயலாகப் பார்ப்பதுபோல் புன்னகைக் கிரணத்தை வீசினாள்.
"ஐயா நான் உங்கள் பெண்ணை மணந்து கொள்ள விரும்புகிறேன்.”
அவர் என்னைத் திரும்பிப் பார்த்தார். ஒரளவு அதை அவர் எதிர்பார்த்திருக்கவும் கூடும். இதற்குப் பதில் சொல்வது தன் வேலையல்ல, என்கிறாப்போல சைதன்யாவைப்பார்த்தார்.
அந்த முகத்தில் தாமரையின் செம்மை பூசியது. அதிகாலை வெயிலில் பார்க்கச் சுகமாய் இருந்தது. “அது அன்னையின் சித்தமானால் நான் கட்டுப்பட்டுத்தானே ஆக வேண்டும்?” என்று மெல்ல நகைக்கிறாள் அவள்.
“பிராத்த்தனை - கூட்டுப்பிராத்த்தனை. இவற்றில் நம்பிக்கை கொண்டவரா நீங்கள்?”
“என்?”என்கிறேன் ஆச்சரியமாய். జో “பதில் சொல்ல விரும்பவில்லை என்றால் சரி'என்றாள்.அவள் முகவாடடததுடன. 酚。 - فنموية
எனக்குப் பதறிப் போனது" அவள் முகவாடலே என்னை இத்தனை காயப்படுத்துகிறதே."அப்படியல்ல. நாங்கள் எழுத்தாளர்கள். பிரார்த்தனை, தியானம் என்கிற மனப் பயிற்சிகள் இயல்பாகவே எங்களுக்கு உண்டு. மன அமைதி கிடைத்தேதான் நான் எழுதப்புக்
O .. م . . . . . . . . »، اشوهشها
நான் உங்களுடன் சேர்ந்தமர்ந்து பிரார்த்தனை செய்ய விரும்புகிறேன்.”
அவளை வியப்புடன் பார்த்தார் குமரேசன். அவர் எதிர்பாராதது இது. பெண் பார்க்கும் படலத்தில், இது புதிதாய் இருந்தது அவருக்கு. எனக்கும்தான்.
“சரி” என நான் ஒத்துக் கொண்டேன். “நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?”
“இதோ பக்கத்தில்தான் வாருங்களேன்?”எனறார் குமரேசன். கூட்டுப்பிரார்த்தனை என்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் கருத்துக்கள் இருந்தன. யாரிடமாவது நான் கட்டாயம் அது பற்றிக் கேட்டுக் கொள்ள விரும்பினேன்.
பொதுவாக இது போன்ற ஆன்மிக வளாகங்களில் கூடுகிறவர்கள், வெவ்வேறு தளங்களில் இருந்து, அதற்கான முன்தயாரிப்புடன் வருகிறார்கள். தவிரவும் பொருளாதார வசதியும்,தேக ஆரோக்கியமும், ஆ.குறிப்பாக கலவிரீதியான உடல் சிறுதேவைகளின் மேம்பட்டவர்கள்.
அதாவது, இவர்கள் வாழ்க்கை பொதுவாக சிறு ஓய்வினை, தம்மைத் தாமே சீர்திருத்திக் கொள்ளும் பொறுமையினை முன்னேயே வழங்கிவிடுகிறது.
( as a 6u db

“ஆனால் இவர்களால், உதாரணமாக ஒரு போக்குவரத்து நிறுத்தத்தில், பச்சை காணும்வரை பொறுமை காக்க முடியவில்லை, அல்லவா?”என நகைக்கிறாள் அவள்.
“மனிதன் யாரிடமாவது கட்டுப்பட விரும்புகிறான். நிழல்பட விரும்புதல். அது மானுட இயல்பு. அன்னையால் அது முடிகிறது. அன்னையின் சேவகர்கள் அதை முன்னிறுத்தி பக்கத்து வீட்டாருடன், சுற்றுப்புற வளாகத்திலும் புன்னகைப் பரிமாறலுடன், நல்லன பேசி. சூழலில் அன்னையின் மணத்தைப் பரப்ப வல்லவர்கள்.”
அது சரிதான். பொது சிந்தனை என்கிறதோர் அம்சம் காரல் மார்க்சிடம் ஒரு விதமாய் ஒளிப்பட்டதுபோலவே, அன்னையிடம் வேறு விதமாய் உள்வாங்கப்படுகிறது
ஆகா, சமதையான சில உயரங்களை அன்னை எனக்கு எட்டத் தருவாள் போலிருக்கிறதே.
அதுதான் முக்கியம். அன்னை எந்தத் தனி மதத்தையும் வலியுறுத்தித் தத்துவங்கள் புனையவில்லை. உண்மையில் அவளது அணுகுமுறை எளியது. கைக்கொள்ளக்கூடியது. சைதன்யா இத்தனை இயல்பாய்ப் பேசுவது எனக்குப்பிடித்திருந்தது.
தியானம் என்ற முறையில் யாருடனும் அருகமர்ந்து கண் மூடி நான் மனத்தை ஒடுக்கப் பயிற்சி கொண்டதேயில்லை. இதோ இந்தப் புதுப் பெண் தவிர, வேறு யார் என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தாலும், நான் ஒருவேளை மறுத்திருப்பேன். *
நீர்ங்கள் எழுந்தாளர்கள். மனம் ஒன்றில் குவிதல் 巴妍 க்கியமான அம்சங்களில் ஒன்றுதானே? இதில் தியானம் எனத் தனியே "என்ன?எழுத்தே தியானம்தானே?. என்றது மனது.ஆயினும் நான் அவளுக்குக் கட்டுப்பட்டேன்.வேடிக்கைஅங்குசம் அவள் நான்யானைஅல்ல, நான்வாரணம். அவள் பிடி (பெண்யானை). கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் ## ళ్ల
*శశో *} { ޚިރު33:
பெண்பார்க்கும்படலம் என இது ஒர் புது அனுபவம் அல்லவா? மெளனத்தை எடைபோட்டு, வாழ்வின் துணைதேடல். ஆயினும் எத்தனை "முக்கியமானது இது மனம் இணக்கம் காணாத ஆத்மாவின் அருகில்
மனம்தியானப்படக் கட்டுப்படுமா?
தியானம் மூச்சைச் சீராக்குகிறது. மனதை இளகவைக்கிறது. காய்ந்த பூமியை ஈரப்படுத்திபண்படுத்துவதுபோல. பிரச்னைகள் சார்ந்த உள்க்கலவரங்களை, உள்க் கொந்தளிப்புகளை அடக்குகிறது. விடைகள் பற்றிய சிந்தனையைத் தெளிவான கதிர்வீச்சுடன் அணுக அப்போது வாய்க்கிறது. s
என் மனம் என்னென்னவோ உள்வட்டம் அடிக்கிறது. இருப்பினும் ஸ்தாபிக்கப்பட்ட நல்லமைதி அது. அருகே அவள் அமர்ந்திருக்கிற குளுமை என்னுள் பாய்வதை, அவளது அன்பின் உணர்வலைகள் என்னில் இதமாய்ப் பரவுவதை, உணர முடிகிறது. எத்ததை புத்திசாலி இவள். வாழ்க்கையை எத்தனை எளிமையாய்க் கொண்டாடுகிறாள்.
எளிமை. சிக்கலற்ற தன்மை, வாழ்க்கையில் அது அத்தனை லேசில் வாய்த்துவிடுமா என்ன? எவ்வளவுநேரம் அந்த மெளனத்தின் சிந்தனாலயத்தில் நாங்கள் கட்டுப்பட்டிருந்தோம் தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்தபோது அவளது புன்னகைத்த முகம் பெரும் ஆதுரத்துடன் என்னைப் பார்த்தது.
மனைவி என்பவள் தாயா? சிநேகிதியா? காதலியா? குருவா? யாதுமாகி நிற்கிறாள் அவள். அவளது சம்மதம் என்கிற வார்த்தை தனியே எங்களுக்குள் தேவையில்லாதிருந்தது. 72 இதழ் - 17 )

Page 75
குவாண்டம்
அறிவியல்துறைகளுக்குள்ளே இயற்பியலுக்குஒருதனிமுக்கியத்துவம் உண்டு இயற்பியல் முன்னேற்றங்கள்தான் பெரும்பாலும்மற்ற அறிவியல் வளர்ச்சிகளுக்கு அடிகோலுகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. இன்று அதிவேகமாக வளர்ந்துவரும் துறைகள் இரண்டு; Gör gp gið566) Gg5styligÜLJih (Information Technology) Lagopg உயிர்த்தொழில்நுட்பம் (Biotechnology). இவ்விரண்டுக்கும் ஆதார முதுகெலும்பாக இருப்பது இயற்பியல். உயிர்த் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப் படும் அனைத்து ஆய்வுக் கருவிகளும் இயற்பியலாளர்களால் வடிக்கப்பட்டவை. அதேபோல் அதிவேகக் கணினிகளுக்கும் கருத்துப்பரிமாறல்களுக்கும் தகவல்நுட்பம் இயற்பியல் வளர்ச்சியையே சார்ந்துள்ளது.
நேர்க்கோட்டுக் கணிப்பு
கணினிகளின் வேகத்தை ஊகிக்க நுண்செயலி (microprocessor) உற்பத்திப் பெரு நிறுவனமான இன்டெலின் முன்னாள் தலைவர் மைக்கேல் மூர் என்பவர் ஒரு பெருவிரல் விதியை முன்வைத்தார். அதன்படி கணினிகளின் செயல்வேகம் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் நான்கு மடங்காக உயரும். ஆனால் இன்றைய கணினிகள் அவற்றின் ஆதார அமைப்பான சிலிக்கன் சில்லுகளின் அதிஉச்ச நிலையைக் கிட்டத்தட்ட எட்டிவிட்டன. இன்று செயலில் இருக்கும் கணினிகள் எல்லாம் பல ஆயிரக்கணக்கான சிலிக்கன் டிரான்சிஸ்டர்களின் தொடர்ச்சியான "ஆம், இல்லை' எனும் இரண்டே முடிவுகளால் கணித்தலைச் சாத்தியமாக்குகின்றன. நாம் எந்தமாதிரி செயலிகளைப் பயன்படுத்தினாலும் இறுதியில் கணினியின்இதீய்மான்” நுண்செயலிகளில் ஆம் - இல்லைவிலுகளுக்குக்கட்டுப்படும்
கேள்விகளாகப் பகுக்கப்பட்டு நிறைவே றப்படுகின்றன.
இது ஒரு வரிசையில் நிற்கும்
இல்லை என அடுத்தடுத்த கேள்விகளுக்கு နင်္ဂါ၈။ - எழுதி அடுத்த நபரிம் தாளைத் தரும் அமைப்பைப் போன்றது.இது. முதலாமவரின் விடையில்
தர்களிடம் ஒரு தாளில் ஆம்
毅
அடுத்தவரின் கேள்வி தொடங்குகின்றதுண்குழாயில் செல்லும்
நீரைப்போன்ற இந்த அமைப்பின் சக் எவ்வளுவு வேகமாகத் தாளை அடுத்தநபரிடம் செலுத்துவது என்பதில் அட்ங்கியுற்று
sss
భళ్ల
his ŞS
உதவிவந்துள்ளனர். இப்பொழுது இந்தச் சில்லுகள் மிகவிலிே சிறியதுமாக ஆகிவிட்டன. இயற்கையில் இத்தகைய நுண்செயலிகளை குறுக்கி அடக்கும் எல்லைக்கு வந்துவிட்டனர். இந்நிலையில் வருங்காலக் கணினிகளுக்கு இத்தகைய குழாயமைப்பை விட்டுவிட்டுப்புதியதாக ஒரு சித்தாந்தத்தை நாடவேண்டியிருக்கின்றது.
காலம்
 
 
 
 

கணினிகள்
২১:১১১৯১N ২২২২২২
கணிப்பின் அடிப்படை
புழக்கத்திலிருக்கும் கணினிகள் நாம் முன்பத்தியில் சொன்னதுபோல ஆம்-இல்லை என்னும் இரண்டடிமான ஏரணத்தின் (binarylogic) அடிப்பபடையில் இயங்குகின்றன. இதில் ஆம் என்பது 1ஐக் குறிக்கிறது. இல்லை என்பது 0 ஐக் குறிக்கிறது. எவ்வளவு பெரிய எண் என்றாலும் அதை இப்படி இரண்டடிமானத்தில் எழுத முடியும் (உதாரணமாக, 0 = 0, 1 = 1, 2 = 10, 3 = 11, 4 = 100.) அதேபோல எப்படிப்பட்ட கணக்கீடு என்றாலும் அதனை அடிப்படையில் கூட்டலாக மாற்றமுடியும். (3x2 = 6 என்பதை 2 + 2 + 2 = 6 என்று கூட்டலாக்க முடியும்), இதுபோன்ற இரண்டடிமானக் கணித்தலுக்கான விதிகள் நன்கு வரையறுக்கப்பட்டுவிட்டன. இதன் எளிமையை உணரும் அதே சமயத்தில் இதன் அதிநீளமான தன்மையும் புலப்படும். உதாரணமாக, 10806X 2736 என்பதை ஈரடிமானமாக்கிக் கூட்டலாக்குவது எவ்வளவு நேர விரயம் என எளிதில் உணரலாம். ஆனால் இன்றைய கணினிகள் இவ்வாறுதான் செயல்படுகின்றன. அதிவிரைவு கணிப்பு என்பது அடிப்படையில், செய்யும் அதே காரியத்தை இன்னும் விரைவாகச் செயல்படும் சில்லுக்களைக் கொண்டு செய்து முடிப்பது என்றாகின்றது. இது கிட்டத்தட்ட மனிதர்களை இன்னும் நெருங்கிய வரிசையில் நிறுத்தி, அவர்கள் அதிகம் நகராமல் காகிதங்களைக் கடத்துவதைப் போன்றது. மனிதர்களை வரிசையில் நெருக்கமாக நிற்க வைப்பதற்கு ஒரு எல்லை உண்டு. கிட்டத்தட்ட அந்த எல்லையை நாம் இன்று குறைகடத்தித் தொழில் நுட்பத்தில்
அடைந்துவிட்டோம் இனி புதிய வழிமுறைகளைத் தேட வேண்டியது
šj: :
stilisti
s Š எவ்வளவு சிறிதாக்கலாம்? - ஒரு அணு
*இன்செயலிகளைச் செய்யத் தேவையான கிட்டத்தட்ட இந்தியாவின் மொத்த வரவுருக்கும். இது தனிநிறுவனங்களால் இயலாத பூட்டமைப்பாக முயன்றாலும் சில இயற்பியல்
டியாது.
瓣 2 வோல்ட் ஆகவும் இருக்கலாம்). பாயும் மின்சக்தி இழுத்துநிலைகளுக்குள் இருப்பதைச் செயலியை
ணுக்களின் உலகில்ஜிதி கிடைக்கிறது. உதாரணமாக, இலத்திரன்கள் (electrons s மத் தாமே சுழலுபவை, இதுமேல்(1) சுழற்சியாகவோ (spin-up) கீழ் (0) சுழற்சியாகவோ (spin-down) இருக்கும். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை கிடையாது. அணுக்களின்
73 இதழ் - 17 )

Page 76
உலகில் பெரும்பாலான அடிப்படை குணாதிசயங்கள் இது மாதிரி துல்லியமாக வகுக்கப்பட்ட நிலைகளில் இருக்கின்றன. இவற்றுக்குக் குவாண்டம் (quantum) என்று பெயர். அளக்கப்படும் இயற்பியல் குணங்கள் எல்லாம் ஏதாவது ஒரு குவாண்டத்தின் முழு எண் LDLsissis(Sou (integral multiple),960Louth.
நமக்குக் கிடைக்கும் மிகச் சிறிய அளவு எது? - ஒரு இலத்திரன்? நாம் ஏன் ஒற்றை இலத்திரனையே தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தக் கூடாது? தாராளமாக முயலலாம். ஆனால் இலத்திரன்களின் இயற்கை விதி சற்றுச் சிக்கலானது. தனி இலத்திரனை <1> அல்லது <0> எனும் இரண்டு நிலைகளுக்குள் அறுதியிடமுடியாது. அளக்கும்பொழுது <1>ஆகவோ,<0>ஆகவோ காணப்படும். இவற்றின் நிலைகள் மற்ற நேரங்களில் <1,0> இரண்டும் கலந்த ஒரு நிலையில் இருப்பதாக அறிவியலார் கூறுவார்கள். இதற்கு 0.3 அல்லது 0.5 என்று அர்த்தமல்ல. இவை ஒரு போதும் அரைகுறைநிலைகளில் இருக்க முடியாது. இது <1> ஆகவும் <0> ஆகவும் இருக்கும் ஒரு “அதிகலவை” நிலை (state of Superposition). இது என்ன குழப்பம்?
காண்பவரின் பங்களிப்பு
அணுக்களின் விந்தை உலகிற்கு நல்வரவு! இங்கு இயற்கை விதிகள் நீங்கள் தினமும் உணர்ந்தறியும் விதிகளுக்குமாறுபட்டவை. இதை விளக்க சோடிங்கரின் பூனை (Schroedinger's Cat) என்று ஒரு கதை சொல்வார்கள் (எர்வின் சோடிங்கர் என்பவர் குவாண்டம் உலகின் விதிகளில் சில முக்கியமானவற்றைக் கண்டுபிடித்தவர்). ஒரு பூனையை ஒரு அறைக்குள் சிறைப்படுத்துவோம், அந்த அறையில் ஒரு கதிர்வீச்சுக் (தன்னிச்சையாக நடக்கும் ஒரு அணுஉலகச் செயல்) குழம்பு உள்ளது. அக்கதிரியக்கம் ஒரு குப்பியில் உள்ள அதிசக்திவாய்ந்த விஷ வாயுவைத் திறக்க வல்லது. அதே விஷ வாயுவின் திறக்கும் பொறி கதவிலும் உள்ளது. திறந்த அதேநேரத்தில் பூனை காலி. இப்பொழுது பூனை உயிரோடு இருக்கின்றதா (<1>) அல்லது இறந்துவிட்டதா (<0)என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? இதை அணுக்களின் உலகில் “காண்பவரின் பங்களிப்பு” (Observer's contribution) என்று கூறுவார்கள். விடைகளைக் காண்பவர்தான்தீர்மானிக்கிறார். கண்டறிய முயலாத சமயகளில், பூனை சில சமயங்களில் உயிருடனும் சில சமயங்களில் இறந்தும் இருப்பதாக இயற்பியலார் சொல்வார்கள்! அணுக்களின் உலகை அறிய முயன்றால் அதை நீங்கள் மாற்றி அமைப்பீர்கள்.
புகழ்பெற்ற இயற்பியலார்வீலர் ஒருமுறை இப்படிச்சொன்னார்: “குவாண்டம் உலகில் பார்வையாளர்களே இல்லை;பங்களிப்பவர்கள்தான் இருக்கிறார்கள்"
நிச்சயமின்மை
இன்னொரு விந்தை “நிச்சயமின்மை” (uncertainty), ஒரு துகளின் இருப்பிடத்தையும் அதன் திசைவேகத்தையும் ஒரே சமயத்தில் துல்லியதமாகச் சொல்ல முடியாது. சற்று மெதுவாக, விரிவாகச் செல்வோம். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் ஒரு பேருந்துபாபநாசம்கடைவீதியில்(இடம்) 60 கி.மி வேகத்தில் தஞ்சாவூரை நோக்கிச் (திசைவேகம்) சென்று கொண்டிருக்கின்றது என்று நாம் வழக்கமாகச் சொல்வோம். இப்பொழுதுகொஞ்சம் நெருங்கிவருவோம்.
C காலம்

கடைவீதியில் எந்தக் கடை? துணிக்கடை, இப்பொழுது வேகம் என்ன? 615 கி.மீ. /மணிக்கு, அட்டா, இதைப் பார்த்து முடிப்பதற்குள் அது துணிக்கடையை விட்டு, கசாப்புக் கடையைத் தாண்டி, மருந்துக் கடைக்கருகில் வந்து விட்டதே! அப்படியானால் நான் பார்த்த வேகம் எந்தக் கடைக்கருகில் இந்தக் குழப்பம்தான் அணுக்களின் உலகில் இன்னும் அதிகுழப்பமாக. இந்த இடத்தில் நியூட்டன் தொடங்கிமனிதன் நம்பிவந்த செவ்வியல் இயற்பியல் விதிகள் பொய்யாகின்றன. அவ்விதிகளின்படி தொடக்க நிலையையும் இயற்பியல் காரணிகளையும் அறிந்திருந்தால் வேறொரு காலத்தில் அப்பொருளின் நிலையைக் கணித்தறிய முடியும்.
தொலை விருந்து செயற்படல்
இன்னும் ஒரு விந்தையைப் பார்ப்போம் ஒரு விளக்கு (அதி உயர் குணமுடையை விளக்கு, லேசர் என்போம்) கக்கும் ஒளி பல ஒளியன்களால் (photons) ஆனது. (எப்படி அணுக்கள் இலத்திரன் (electron), Gysygy (proton), sis)atugog (neutron) golfporti) ஆனதோ அதே போன்ற சக்தித்துகள்) ஒளியன்களுக்குத்திசைப்பண்பு ஒன்று உண்டு, அது அத்துகளின் முனைப்பு (polarization) எந்தத் திசையில் இருக்கின்றது என்பது. இந்தக் கணினித் திரைக்குள்ளாகச் செல்லும் ஒளியணு இரண்டு திசைகளில் அதிரலாம் - ஒன்று இந்த வரி அமைந்த திசை (நெடுக்கு) அல்லது இவ்வரிக்குச் செங்குத்தாக (குறுக்கு). சோடிங்கரின் பூனையைப்போல இவற்றையும் நாம் அறியமுடியாது, ஆனால் ஒரு சோதனை வழியாக இதை அறிந்தால் (அறியமுடியும், சில கண்ணாடிகள் குறுக்கு அதிர்வை முழுங்கிவிடும், நெடுக்குதான் வெளிவரும்), அதனுடன்வரும்(அல்லது கண்ணாடி வழியே வராது வேறு வழிச் செல்லும்) இன்னொரு ஒளியணுவின் அதிர்வும் தீர்மானிக்கப்பட்டுவிடும்! இதற்குத் "தொலைவிருந்து செயற்படுதல்” (Action at a distance) எனப் பெயர். விந்தை நான் சாப்பிட்டேன் என்று சொன்னால் வேறு ஊரிலிருக்கும் என் சகோதரி சாப்பிட்டாளா இல்லையா என்றும் தெரிந்து சொள்ளலாம். நம்ப முடியவில்லையா? என்ன செய்வது அணுக்கள் விந்தை உலகைச் சேர்ந்தவை.
இத்தனைக் குழப்பத்தையும் வைத்துக் கொண்டு எப்படி கணினிகளை உருவாக்குவது. அதை வைத்துக் கொண்டு விண்கலம் விட்டால் போகுமா, போகாதா? (முன்னரே சொன்னபடி போகும், <1> போகாது <0>, போனாலும்போகும்;இல்லாமலும்போகும் <1/0>t??
குவாண்டம் கணிப்பின் அடிப்படை up க்யூபிட்டுகள்
அது எப்படி? போனாலும் போகும் என்று விடுவது இயற்பியலாளர்களுக்கு அழகல்ல. ஒற்றைஇலத்திரனை வேண்டுமானால் அவர்களால் அறியமுடியாது. கட்டுப்படுத்த முடியாது. ஆனால் பல இலத்திரன்களாலான ஒரு குவாண்டம் அமைப்பு எப்படிச் செயல்படும் என அவர்கள் உணர்வார்கள்; ஏன் அதை மாற்றியமைக்கவும்
அவர்களுக்குத்தெரியும்
தற்பொழுதைய கணினியின் ஒரு அலகு, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் <1> ல் இருக்கிறதா அல்லது <0> ல் இருக்கிறதா என உணரமுடியும். ஒரு n-பிட்டு இரண்டடிமான எண்ணை n சுழிகளாலோ அல்லது ஒன்றுகளாலோ குறிப்பிடலாம். ஒரு குவாண்டம்பிட்டு-க்யூபிட் (qubit)சாதாரணபிட்டைப்போல ஒன்றாகவோ, சுழியாகவோ இருக்கலாம். இதைத் தவிர இது ஒரே சமயத்தில் <1> ஆகவும் <0> ஆகவும் இருக்கலாம்(நாம் பார்க்கும்வரை,பார்க்க முயன்றால் இரண்டில் ஒன்றாக ஆகிவிடும்-காண்பவர் கைங்களியம்).
as - 17)

Page 77
இரட்டை பிட்டு பழங்கணினியின் (ஆமாம் இப்பொழுது நடைமுறையில் இருப்பவை எல்லாம் பழங்கE'கள்தான்' நிEயக் குறிக்க இரண்டு எண்கள் தேவை [<1> அவ்பது <0> உதாாETபாக <1.0> இரட்டை க்யூபிட்டு கு5:ண்டம் கணினியைக் குறிக்க நான்கு எண்கள் (2^2) தேவை இரண்டும் ஒரே சமயத்தில் ஒன்றாக இருக்கEாம். <1,12 அல்லது சுழியாக இருக்கலாம் <0.03 அல்லது முதலாவதும் மற்றது ம்ே <10: அல்லது முதலாவது பிம் மற்றது 1ம் <0.1> இருக்கப்ாம், அதாவது {0,1}> خ<1.0 > <{}.J)> <1 ,1>|
(இது பழங்கணினியில் சாத்தியமில்லை, அது 1 அல்லது 0 தான்). páté51 ಡಿ] சொன்னதுபோல் இந்த நிலை நாம் அளந்து பார்க்காத rதான் பார்த்தால், அது பழங்கEயப் போலாகிவிடும், இன்னும் சொல்லப்போனால் நாம் ஒரு அலEகப் பார்த்தால் மற்றதன் நினலயும் நிச்சயிக்கப்பட்டுவிடும். அதாவது ஒரு அUTகப் பார்த்தால் எல்லாமே ஒரு நிலைக்கு வந்து, கணினி செயலிழந்துவிடும் பார்க்காதங்கள T அலகுகள் 2^T காரியங்களைச் செய்து கொண்டிருக்கும். அதாவது மாபெரும் இணைச் செயற்பாடு (Tassive parallism). இதுதான் குவாண்டம் கணினியை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றது.
இந்த நூற்றாண்டின் ஈடினையற்ற அறிவியலாளர்களில் ஒருநபரான ரிச்சர்ட் ஃபெய்ன்மான் என்பவர் 1931லேயே இதைத் தீவிராக முன்வைத்தார். ஆனால் இதற்கு இரண்டு அடிப்படைச் சிக்கல்கள் தடையாக இருந்தன; ஒன்று க்யூபிட்டுகளை பிவத்துக் கொண்டு போடப்படும் கணக்கின் விதிகள் என்ன என்பது. இது முற்றிலும் சித்தாந்த அடிப்படையானது, இதன் அடிப்படை விதிகள் எளிதில் தீர்க்கப்பட்டுவிட்டன. குழப்பமான வைக்கும் விடைகள் தெரியவந்துள்ளன. ஆனால் இரண்டாவதான, முக்கியமான நெருக்கடி சோதனை முறையில் இதனை நடத்திக்காட்டுவது.
காணாதவரை நிச்சயமற்ற உங்கில் அலைந்து கொண்டிருக்கும் குவாண்டம் துளியன்கள் கணக்குப் போட்டுமுடித்ததும் எப்படி நிச்சயான விடைக்கு வாமுடியும்? 1980ல் தொடங்கிய இந்தக் கேள்விக்குச் சமீபகாலம் rர விடை கிடைக்காமலிருந்தது. இதற்குக் காரணம் விசேட இருக்கும் திசையை விட்டுவிட்டு வேறு திசையில் தேடிக் கொண்டிருந்தது தான். குவாண்டம் அமைப்புகள் என்ற உடனே அ18ணவருக்கும் நினைவில் வந்தது இலத்திரன்களும் ஒளியன் களும்தான். இவற்றின் சுழற்சியையோ (spin) முனைப்பையோ (polarizatiCT கணிப்பின் 
  • - ஆகவும் ki> ஆகவும் கையாளலாம் என்றுதோன்றியது. ஆனால் நடைமுறையில் ஒற்றை இலத்திரனைக் கையாளுவது அத்தனை எளிதான காரியமில்லை. கணித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது புறக் காரணிகளால் எதிரணுக்கள் பாதிக்கப்பட்டால் உடனே கணித்தல் தடைபட்டு நின்று, <13 அல்லது <0.2 இரண்டில் ஒரு நிலைக்கு வந்துவிடும் (காண்பவர் கைங்கரியம் புறக் காரணிகளும் ஒரு வகையில் காண்பதிபர்களே' அணுக்கரு ஒத்திசைவு 1997ல் நீல் கெர்ஷ்ன்ஃபெல்ட், ஐசக் சுவாங் எனும் இரண்டு அமெரிக்க அறிவியலாளர்கள் புதிய திசையில் கவனத்தேக் செலுத்தினார்கள். அணுக்கருக்களுக்கும் துகள்களைப்போல சுழற்சி உண்டு. இந்தச் சூழற்சியைக் கையாளும் வகை முன்னேரே தெரிந்ததுதான். அணுக்கரு காந்த ஒத்திசைவு (Nuclear Magnetic R&amance) எனும் விளைவைப் பலகாலமாக இயற்பியலார் அறிவர்; காபம் அந்த நுட்பத்தைத் துல்லியமாக்கி பேதியியEபாளர்களுக்கு அவர்கள் கண்டுபிடிக்கும் புதிய மூலக்கூறுக சுகா அEடயா நாம் கா:றும் AkeeLL LLuTL TLTTT LLLLLL LLaaLLLLLLLamLLLLLLLS LTTTTTTTTTTTTTTTT உடலில் இருக்கும் புற்றுநோய் மற்றும் கட்டிகளை அடையாளம் காணும் என். எம்.ஆர், அவகிபாகவும் XMR 8:12) பயன்படுத்தக் கற்றுக் கொடுத்தார்கள். ஒரு கரைசலில் (Boulin) இருக்கும் குவாண்டம் துகள்கள் கிட்டத்தட்ட ஒரு காந்தத் துண்டு (har Tag21) போல் செயல்படுகின்றன. வெளியிலிருந்து செலுத்தப்படும் காந்துப்பு:பத்திற்கு இணையாக இவை தம்மைத்தாமே திTசப்படுத்திக் கொள்கின்றன: அடுத்தடுத்த இரண்டு அEப8:புகள் (காந்தத் திசைக்கு இணையாக |parallel) அல்லது எதிரினையாக (antipariel இவை வெவ்வேறு அக்திகளையுடைய இரண்டு குவாண்டம் நில்ைகTாதும், இவைதான் நாம் விவரித்த க்யூபிட்களாகச் செயல்பட வல்லன. இணை நிலையை" 1 - எனக் கொண்டால் எதிரினை :03 என ஆகின்றது. இந்த இEை. எதிரினை நிலைகளுக்கிடையே சக்தியில் வேறுபாடு உண்டு; இது செலுத்தப்படும் காந்தத் திறனைப்பொறுத்தது. பொதுவில் இனEநி: எதிரினை நிEபயை விடக் குறைந்த சக்தியுடையது. இயல்பான ஒரு திாகக் கண்ாசவில் இணை - எதினரே நிலைகள் சம அளவில் இருக்கும் ஆனால் பெரியிலிருந்து செலுத்தப்படும் காந்தப்பும் சக்தியில் குறைந்த இணை நி:பக்குச் சாதகமாக இருக்கும், இதனால் சமநிலை பாதிக்கப்படுகின்றது. இது அளவில் மிகக் குறைந்தது. ஒரு மில்லியன் அணுக்கருவில் ஒன்று மாறக்கூடும், அணுக்கரு காந்த ஒத்திசைவில் இதைத்தான் அளக்கின்றார்கள். குவாண்டம் ஏரண வாயில்கள் ஒரு சில கரைசல்களில் சுழற்சியுள்ள அணுக்கருக்களும், சுழற்சியற்றவையும் கலந்து இருக்கும். அதிக அதிர்வுகளை உடைய ரேடியோ கதிர்கள், கரைசல்களுக்குகேற்ற சரியான அளிப் நீளத்தில் இருந்தால் இணை - எதிரினை நிலைகள் பிறழக்கூடும். சொல்லப்போனால் புறத்திலிருந்து செலுத்தப்படும் இந்தக் காந்த சக்தியையும், ரேடியோ கதிர்களையும் உணருவதுடன், சுழலும் அணுக்கருக்கள் தமக்குள்ளே ஒன்றையொன்று பாதிக்கும். இந்தப் பாதிக்கும் தன்மைதான் நாம் குாைண்டம் ஈரான போயில்களை பெanium Lப்gic (328 அமைக்கப் பயன்படுகின்றது. சுழலும் அணுக்கருக்கள் ஒரு பம்பரம் போன்றவை. இயல்பாக இபை காந்தத் திசைக்கு இன867யாகத் தம்மை அமைத்துக்கோள்ளும் (படத்தின் நடுவில் தகுந்த அவை நீளமுடைய ரேடியோ அEIகள் இவற்றின் திசையை மாற்ற வல்லன. 180 டிகிரி துடிப்பு இதைத் தலைகீழாக ஆக்கும் (உதாரணமாக, மேல் சுழற்சியை கீழ் சுழற்சியாக, படத்தின் இடப்புறத்தில்). 90 டிகிரி துடிப்பு காந்தத்திசைக்குச் செங்குத்தாகப்பம்பரத்தச் சுழல வைக்கும் (படத்தில் பதிப்புறத்தில்). 2 حہ ؟ ri ف:_h} - سم--ا۔ ” : "",i - 's اخليجيد “... + +ද්‍යයි’’ -| * |-آئ - يتحلى في 180" துடிப்பு 30 துடிப்பு

  • Page 78
    படம் 10-15 அணுக்கருக்களின் சுழற்சி ஒரு பம்பரத்தின் சுழற்சியைப் போன்றது. அது நேர்தாத்திலோ 130 டிகிரி இடது அல்லது வலதுசுழற்சி) அல்லது செங்குத்துத் தளத்திலோ (90 டிகிரி மேல் சுழற்சி அல்பது கீழ் சுழற்சி) இருக்க:பாம்.
    காந்தப்புத்தில் இடப்பட்ட கETFகளில் அணுக்கருகழற்சிகள் ஒரே திசையில் ஆயைபும் (பேய் பரிசையில் சுழற்சிபுள்ள அணுக்கருக்களைக் காணப்பும்). பின்னர், செலுத்தப்படும். ப்ே டிகிரி ரேடியோ அலைகளால் இவை செங்குத்தான திசைக்கு மாற்றப்படும் பிறகு இது அருகிலிருக்கும் இன்னொரு அறுக்கருவிற்கேற்ப வேகமாகவோ, மெதுவாகவோ அE%யக்சுடடும் சரியான காய இடைவெளியில் செலுத்தப்படும் அடுத்த 30 டிகிரி துடிப்பால் இது நில்ை பிறழவோ (வேகமாகச் சுற்றினால்), பிறழாமல் அதே நிரிைக்குத் திருப்பவோ (பொதுவாகச் சுற்றினால்) கூடும் படத்தின் அடி வரிசையில் பார்க்கவும், அருகிலிருக்கும் சுழற்சியற்ற ஆறுவிற்கு எதிரான நிலையில் அமைவதைக் காகலாம்
    சுழற்சிபிறழும்பொழுது, அது தன்னிச்சையாக நடைபெறாமல் அருகிலிருக்கும் இன்னோரு அணுக்கருவுக்கு ஒப்ப அEபயும். 18ப்டிகிரி துடிப்பால் சுழற்சி மேல் - கீழ் பாற்றப்படுவதை கணினிகளின் "இல்: வாயிலாககக்” (N0T gala) கொண்டால் (இல்லை வாயில் வழிவரும் *12, 20: ஆகவும் :03,<13 ஆகவும் மாற்றப்படும்) அருகிலிருக்கும் அ2றுவிற்கு ஒப்ப சுழற்சிபாறுபதைக் "கட்டுப்பாடான இல்லை வாயில்" (010l: NCT எனலாம். புழக்கத்திலிருக்கும் நம் கணினிகளில் இது தொடர்ச்சியான இரண்டு வாயில்களைக் கொண்டு நிகழ்த்தப்படுகின்றது. ஆனால் குவாண்டம் கணினியில் ஒரே மூலக் சுடறினால் நிகழ்கின்றது.
    குழப்பத்திலிருந்து தெளிவிற்கு
    அணுவியுலகின் குழப்ப விதிகள் குவாண்டம் கணிப்பில் எப்படி
    உதவப் போகின்றா?
    * ஆளாக்கும் பொழுது உறுதியாகத் தெரியவல்ல :1> அல்லது
    *0:குவாண்டம் நி:ைபகள் ஈரடியான ஏானத்திற் ஏற்றன81
    #1==='+ if F:
    - سی: . . . . . . " : " مهمی =
    i Ti -ܣ݀ܕ- ، ܪ ܝܢ ܐ - ܪ
    - F.¬=
    s
    § , ජ්- 축
    ഴ്ച, -- تھے۔z-
    படம் 10-2 : சுழலும் அணுக்கருக்கள் வெளியிலிருந்து செலுத்தப்படும் காந்தப்பு:பத்தின் திசைக்கு இணையாகத் தம்மை ஒழுங்கமைத்துக் கொள்ளும். ஆனால் அவற்றின் சுழற்சி அண்டையிலுள்ள இன்னொரு அணுக்கருபின் சுழற்சி திசையாலும் கட்டுப்படுத்தப்படும்
    ( காலம்
    
    * அதிகரிப்பை நிலை'நிச்சமாரின்மை :1> ஆய்பூது <0> எனத் தீர்மாளிக்கப்படாத உள்ளீடுகளாயும் வைத்துக் கொண்டு கனக்குப் போட உதயும்.
    * தொலைவிலிருந்து செயல்படுதல் க்யூபிட்டுகளின் இணைப்புக்
    கம்பிகளாகச் செயல்படும்.
    இதுதான் குவாண்டம் கணிப்பில் முதல் முறையாக நிகழ்த்திக் காட்டப்பட்ட சோத: இதிலிருந்து இன்றும் நிறைய தூரம் போக பேண்டியிருக்கிறது. இந்தக் கணிப்பில் முக்கியமான விந்தை. இது தீர்மானமில்பாத : 1. அல்ப்து «Ü-s: நிச்சயிக்கப்படாத, EilifkI:: 11 ஆகசும் 1 ஆகவும் உள்ளிடுகளையும் எவத்துக் கொண்டு கணக்குப் போடுவது. இத்தகைய சூழப்பமான காக்கீடுகளுக்கு என்று சி: இடங்கள் உண்டு. உதாரணத்திற்கு மின் பணிகத்தில் மற்றும், இராணுவ சமிக்ளுேகeரில் பயன்படும் பாதுகாப்புச் சங்கேதங்களை உருவாக்குவது leri Cryptici TI), F: FriůLg5 (de: Typltio1), y så. DJ, g) sliai, FF, நம்பர் பூட்டு:ாத் திறப்பது சுலபம். நான்கு இலக்க பூட்டு கொஞ்சம் கடினம் நானூறு இலக்க பூட்டுக்கtளத் திறக்க இப்பொழுது புழக்கத்திலுள்ள கணினிகளுக்கு ஒரு பில்லியன் வருடங்கள் ஆகும். இந்தச் சிக்கலைப் பயன்படுத்தித்தான் உங்கள் கடன் அட்டை (red card, எண்னை ஒரு Gli fu una trotrari su prime number) பெருக்கி கEllகளில் பாதுகாப்பாகச் சேமித்து வைத்துள்ளார்கள், இணையம் வழியே அனுப்புகின்றார்கள். அனுப்பப்படும் எண்கள் உள்ள கோப்புகள் கிடைத்தாலும் எந்த எண்ணால் பெருக்கப்பட்டிருக்கின்றது எனத் தெரியாமல் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் குவாண்டம் கணிப்பில் தீர்மானமில்லாத உள்ளீடுகளாலும் கணிப்பை நிகழ்த்த முடியும். தற்பொழுதேய கணிப்பின்படி 400 இலக்க எண்னைக் குவாண்டம் கணினிடால் ஒரு வருடத்தில் தகர்க்கலாம்.
    இந்தக் குாேண்டம் கணினி ஒரு காலத்தில் செயல்முறைக்கு பேந்தால் எப்படியிருக்கும்? உங்கள் தற்பொழுதைய மேசைக் கrleயப் போலவா? இல்லை, ஆனால் அதற்கு அருகில் நீங்கள் காப்பி வைக்கும் கோப்பையைப் போல் இருக்கலாம்! ஒரு குவளையில் திரவம் அதைச் கற்றி ஒரு காந்தம், காந்தத்தை அதிரச் செய்ய ஒரு சின்ன பாக்கெட் ரேடியோ, ஆப்படியானால் உங்கள் கEE போய்விடுமா ? gill J.L.IIa. இல்லை; ஆனால் இது உங்கள் கணினிக்கருகில் ஒரு அச்சுப்பொறியைப் போல் வந்து உட்கார்ந்து கொள்ளும். மேசைக் கணினிபால் செய்ய இயலாத சிக்கலான காரியங்களில் குவாண்டம் கrlதுனை செய்யும், அதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். ஏனென்றால், இப்பொழுது திரம்ே காப்பிக் கோப்பை அளவுதான் இருக்கின்றது. ஆனால் காந்தமும் ாேடியோவும் கிட்டத்தட்ட ஒரு அறையளவிற்கு இருக்கின்றன. (சிரிக்காதீர்கள். உங்கள் இன்றைய படிக்கணினியின் முப்பாட்டனாரான எனியாக் (ENIAC அதைவிடப்பெரியதாக இருந்தது.
    பெரியதாக இருக்கும் வரை நல்லது. அரசாங்கத்திலும் இராணுவத்திலும் மாத்திரம்தான் பயன்படும். சிறியதாகிவிட்டான் பள்ளிச் சிறுவர்களும் வாங்கி இணைத்துக் கொண்டு குவாண்டம் சொந்தர்கள் LaAAaLLLLLLL L LLL CLLLLLL STT MTTTTTTS LS T TTTTS எண்களெல்லாம் அவர்கள் கையில், ஐயய்போ ! நான் முந்தநாள் சாயந்திரம்தான் என்னுடைய கடன் அட்டை எண்னை சிரார்த்தம் காமில் கொடுத்திருக்கின்றேன். அடுத்த துவாதசிபில் என் பாட்டிக்கு மின்திவசம் செய்வதற்காக !
    இதழ் - 17 )
    

    Page 79
    jnīmj sto js
    @町6
    ஒனறு ee
    கற்பிழந்த அவளுடைய தலையை வெட்டிவா மகனே" என்று கர்ஜித்த ஜமதக்னியின் குரலைக் கனவில் கேட்டு விழித்துக்கொண்டாள் அம்மன். பல நூற்றாண்டுகள் கடந்த பிறகும் அக்குரல் அடிவயிற்றைக் கலக்கியது. வெப்பத்தில் உடல்தகித்தது. நெற்றியிலும் கன்னத்திலும் படர்ந்த வேர்வையைப் பெருமூச்சோடு துடைத்துக் கொண்டாள். கருவறையின் இருட்டில் அகல் விளக்கின் சுடர் அசைந்தபடியிருந்தது. கண்களை எல்லாத் திசைகளிலும் படர விட்டாள் அம்மன். அறை மூலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த உலர்ந்த மாலைகளிடையே இரண்டு எலிகள் ஏறி இறங்கி விளையாடின.தன்மயக்கத்திலே சுவரோடு ஒட்டியிருந்த பூச்சியொன்றைக் கவ்வ பல்லி சமயம் கொண்டிருந்தது. கனவில் ஜமதக்னியின் குரல் எழுப்பிய பீதிமெல்ல மெல்லத் தணிந்தது. ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் எண்ணத்தில் பீடத்திலிருந்து இறங்கினாள். அவள் நிழல் நான்கு சுவர்களிலும் விதம் விதமாக அசைந்தது. பூசைத் தட்டுகள், விளக்குகள் அனைத்தையும் தாண்டிக் கதவருகே வந்தாள்.
    இரவு விளக்குகள் மட்டும் அங்குமிங்கும் எரிய மண்டபம் அமைதியாகவிருந்தது. காற்றில் குளுமைகலந்திருந்தது. கருத்தவானில் நாலைந்து நட்சத்திரங்கள் மட்டும் தன்னந்தனியே நிலைகுத்தி நின்றன. விளிம்பிலிருந்து பாதிநிலா பற்றி ஏறிக்கொண்டிருந்தது. சுயநினைவின்றி நெடுநேரம் வானத்தையே வெறித்திருந்தாள். வானத்தைப் பார்த்தே பல நூற்றாண்டுகள் ஓடி விட்டன. ஆற்றங்கரைக்குத் தண்ணிர் எடுக்கச் சென்றபோது ஏதோ சந்தர்ப்ப வசத்தால் காலை வானத்தை நிமிர்ந்து பார்த்ததும் அதேவேளையில் புஷ்பக விமானமொன்று கருக்கலைக் கிழித்துக் கொண்டு பறந்து சென்றதும் தற்செயலான செயல்கள். அவையே தன்னுடைய வாழ்வின் போக்கை மாற்றப் போகிறவை என்பது அப்போதுதெரியாது. வெட்டுப்பட்டுத்தலை உருண்டதும் வேகவேகமாகத் தெய்வமாக்கப்பட்டதும் அடுத்தடுத்துநடந்த விஷயங்கள். கருவறைக்குள் அடையட்டபிறகு வானத்தைப் பார்க்க வாய்ப்பில்லாமலே போய்விட்டது. வானம் எவ்வளவு அழகான படைப்பா என்று மறுபடியும் நினைத்துக் கொண்டாள். கொஞ்சம் எக்கினால் தொட்டு ரசிக்க முடியுமென்று தோன்றியது. அதே கணத்தில் ஏடாகூடமாக ஏதாவது புஷ்பக விமானம் கண்ணில் தட்டுப்பட்டுவிடுமோ என்று உள்ளூர அச்சம் படர்ந்ததையும் உதற முடியவில்லை. மூலையில் குவிந்திருந்த இலைக்குப்பைகளில் முகத்தைவிட்டுக்கலைத்துக்கொண்டிருந்தநாயொன்றுஅவளைக்கண்டு குரைத்ததால் அம்மனின் கவனம் கலைந்தது.
    மெல்ல இடது பக்கம் திரும்பி நடந்தாள் அம்மன். மூலையில் பூக்காரி தூங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் மனத்தின் பரபரப்புஅடங்கிஅமைதிநிரம்புவதை உணர்ந்தாள். தலைக்குப்பக்கத்தில்
    ( கா லம்
    
    படுத்திருந்தாள் அவள். முதலில் அவளை எழுப்பலாமா என்றுதோன்றியது. பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு அவளையே உற்றுப் பார்த்தாள். நிம்மதியான உறக்கம் எந்தக்கனவின்தொந்தரவும்இருக்காது போலும் என்று தோன்றியது. ஒரு கணம் தனக்குக்கிட்டாத ஒன்றை ஆனந்தமாக அனுபவிக்கிற பிரஜையின் மீது பொறாமை எழுந்தது. மறுகணமே அவளாவது தூங்கட்டுமே என்று அமைதியடைந்தாள். அதற்குள் அவளே தற்செயலாகத் திரும்பிப்புரண்டாள். தன் மீது ஏதோ நிழல்படிந்திருப்பதைஉணர்ந்துநிமிர்ந்துபார்த்தாள். தூக்கக் கலக்கத்தில் அவளுக்கு எதுவும் சரியாகத் தெரியவில்லை. "யாருடி அங்க?" என்று கொட்டாவி விட்டபடி சத்தமுடன் கேட்டாள். பதில் வராமல் போகவே “யாருடி அங்கன்னு கேக்கறன்ல, பதில் சொல்லக் கூடாதா? வாய்ல கொழுக்கட்டயா வச்சிருக்க?" என்று குரலை உயர்த்தினாள். அதற்குள் அவளுக்கு நன்றாக முகம் தெரிகிற திசையில் நகர்ந்து நின்றபடி "நான்தான்டி” என்றாள் அம்மன்.
    “யாருடி வள்ளியா? என்னடி மறுபடியும் புருஷன்காரன் தொரத்திகிட்டுவரானா அடிக்கறதுக்கு? பேசாம அவன் கட்டனதாலிய அறுத்து அவன் மூஞ்சிலியே கெடாசிட்டு இங்க வந்து சேருடின்னு எத்தனதரம் சொல்றேன், கேக்கறியா நீ? சொல்ற பேச்ச கேக்காத மூதேவிங்களுக்குபட்டுத்தாண்டிபுத்திவரணும்" என்று அசட்டையோடு கைகளை மேற்பக்கம் நீட்டி மறுபுறம் புரண்டுபடுத்தாள். "ஐயோ கௌரி, நான்தாண்டி அம்மன்”என்றாள் அம்மன்.
    கெளரி சட்டென்று எழுந்தாள். கண்களைக் கசக்கிக் கொண்டாள். “அம்மாவா, வாவா, என்ன விஷயம் இப்படி திடுதிடுப்புன்னு வந்து நிக்கற? வந்து ஒக்காந்து சொல்லுவா?"கலவரத்துடன் எழுந்து நின்றாள். பின்னந்தலைப் பக்கம் விரல்களை விட்டுச் சொரிந்து கொண்டாள். "என்னடி கெளரி, நா சொன்னதையெல்லாம் மறந்திட்டு புதுசா பேசறமாதிரி பேசற? ஏதோ யோசிச்சி பாத்துட்டு சொல்றன்னு சொன்னே அன்னிக்கு?”என்று கோபமுடன் சொன்னாள் அம்மன்.
    "அப்படியா சொன்னேன்? சரி, இருக்கட்டும், அதுக்கென்ன இப்ப? ஆதுக்கும் ஒக்காந்துக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?வந்துஒக்காரு
    “என்ன கெளரி இது? என் பிரச்சனைல அக்கறையே இல்லாமப் பேசற?"சலித்துக் கொண்டபடி உட்கார்ந்தாள் அம்மன். “செத்த இரு வந்துடறேன்"என்றபடி எழுந்துமாராப்பைச் சரிசெய்தபடிமதிலோரமாகச் சென்றுஇருளில் சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்பினாள். -
    “சொல்லும்மா? இப்ப என்ன பிரச்சன?” என்று அம்மனிடம் கேட்பாள்.
    “மறுபடியும் புதுசா சொல்லணுமா? அதே பழைய பிரச்சனைதாண்டி ஒருதடவகாதால கேட்டாமணசிலபதியாதா ஒனக்கு? என்னடிமனுஷிநீ"ஆதங்கத்துடன் கேட்பாள் அம்மன். ( "ז 6gg 7ן
    

    Page 80
    "அதான் பிரச்சனையே. மனுஷங்களுக்குச் சிலதுங்க மனசுல நிக்கும். சிலதுங்க நிக்காமப்போயிடும். என்னதான் ஆனாலும் மனுஷங்க தெய்வமா ஆவ முடியுமா?"கெளரி புன்சிரிப்பைச் சிந்தினாள். அந்தச் சிரிப்பைப் பார்த்து அம்மனுக்கு எரிச்சல் வந்தது. "என் துக்கம் உனக்கு விளையாட்டா இருக்குதா?”என்றாள் ஆவேசத்துடன்.
    “உலகத்துல இருக்கறவங்க துக்கத்தயெல்லாம் துடைக்கறவநீ. உனக்கும் ஒருதுக்கம்னு சொன்னா கேக்கறவங்க நம்புவாங்களாம்மா?"
    "அப்ப, நான் பொய் சொல்றேங்கறியா?” பதற்றத்துடன் எழுந்திருக்க முயன்றாள் அம்மன்.
    அப்படியெல்லாம் சொல்வனாதாயி நீஎன் குலதெய்வமாச்சே எப்பவோ நடந்தத நெனச்சி இன்னிக்கும் பயம்பயம்னு நடுங்கிப் பொலம்பறியே அதப்பாக்க கஷ்டமா இருக்குது. எதை எதையெல்லாமோ போட்டு கொழப்பிக்கிறயோன்னு தோணுது. கண்டதயும் யோசிக்காம நிம்மதியாக இரு தானா சரியா போயிடும்"
    "யோசிக்காம இருக்கறதுக்கு நான் என்ன கல்லா? பூசாரி, பக்தருங்கன்னுசுத்தியும் ஆளுங்க இருந்தா எப்படியோ பெராக்கா நேரம் ஓடிடுது. தனியா இருக்குபோது தாங்க முடியாம போய்டுதுடின்னு சொன்னா நிம்மதியா இரு நிம்மதியா இருன்னு சொன்னா, எப்பிடிடி இருக்கமுடியும் நிம்மதியா?"அம்மன் குரலில் வேகமும் ஏமாற்றமும்கலந்து வெளிப்பட்டன.
    “என்னதாயிநி? அழுவறகொழைந்திக்கிநாமசமாதானமாநாலு: வார்த்த சொல்றதில்லயா? அதுமாதிரி உன் மனசுக்கு நிம்மதியாஏதோ ரெண்டுவார்த்த சொன்னேன். அதப் போயிs நித்துக்கிட்டியே
    "அப்ப என் முடிவே இல்லயா?” அம்மன் திர்ச்சியடைந்தார். --
    "இங்க பாருதாயி இந்த மண்டபத்துல ஆயிரம் பேருக்கு மேல படுத்திருக்காங்கபாருயாருன்னுநெனச்சிட்ட இவுங்கள? எல்லாரும் உன் பக்தருங்க. உன்னயே உலகம்னு நெனைக்கறவங்க. உன் ஒருத்தியாலதான் தன் வாழ்க்கையில் நிம்மதிய குடுக்க முடியும்னு நம்பி வந்தவங்க. கண்ண மூடி பக்தியோட ஒன் முன்னால தன் துயரத்தக் கொட்டிட்டு எல்லாத்தயும் ஆத்தா நல்லபடி பாத்துக்குவான்னுநெனச்சி விபூதி,குங்குமம் வாங்கிட்டுபோவறவங்க.."மூச்சு விடாமல் பேசினாள் கெளரி
    அதுக்கு?"ஆச்சரியத்தோடுகேட்டாள் அம்மன்.
    ஒன்னும்தெரியாத அப்பாவியா இருக்கியேம்மா"என்றுசிரித்தாள் கெளரி பிறகு மெல்ல "எல்லாரும் துன்பம்ன்னு சொன்னா ஓங்கிட்ட ஒடியாறாங்க. நீயும் துன்பம்ன்னு ஒடறதுக்கு இன்னோர் எடம் பாக்கறவன்னுதெரிஞ்சுதுன்னுவை, இவங்கள்ளாம் என்ன செய்வாங்க சொல்லு"
    "அவுங்களன்ன சொல்வாங்கன்னுநாதயங்கிட்டே இருந்தா என் துன்பம் தீருமா கெளரி?"நைந்த குரலில் கேட்டாள் அம்மன்.
    C காலம்
    
    "தீராதுங்கறதுவாஸ்தவம்தான். ஆனா இவுங்களபாத்துபாத்து எல்லாருக்கும் உள்ளதுதான் உனக்கும்ன்னு சொல்லி மனசத்
    தேத்திக்கலாம்.
    எதுவும் பேசாமல் அவள் முகத்தையே பார்த்தபடி இருந்தாள்
    “என் கததெரியுமில்லஓனக்கு. ஆயிரத்தெட்டுச் சந்தேகம் என் ஊடுக்காரனுக்கு. நின்னா குத்தம். பேசனா குத்தம். தள்ளுவண்டிக் காரன்கிட்ட காய்கறி வாங்க நின்னா கூட அவங்கிட்ட என்னடி குலுக்கி குலுக்கிகிட்டுப் பேசறியே, ரெண்டு பேரும் ஒடிப் போகத் திட்டம் போடறிங்களான்னுசண்டைக்கு நிப்பான். ஒவ்வொரு நாளும் தீராத இம்ச. பஞ்சாயத்துல நீயும் வேணாம் ஒன் தாலியும் வேணாம்ன்னு கழட்டி விசிட்டேன். வழியில்லாம நடுத்தெருவுல நின்ன எனக்கு நீயும் ஒன் கோயிலும்தான் நிம்மதியக் குடுத்துச்சி. ஆத்தா இனிமே நீயே தொணைன்னு இந்த மண்டபத்துலயே இருந்துட்டேன். முடிஞ்ச அளவுக்குப் பூக்கட்டி கட போடறேன். வித்த அளவுக்கு லாபம். விக்கலன்னாஒன் சன்னதிக்கு. இந்த மண்டபத்துலபடுத்துக்கறதுஒன் மடியிலியேபடுத்துக்கறமாதிரிஇருக்குது. அந்த அளவு நிம்மதி”
    eஆனா எனக்கு நிம்மதியில்லயே கௌரி ਮ பெருமூச்சு
    ,இப்பவும் ஒடம்பு ஒதறுது. ஆனா مبتلافیہ
    8 நனச்சி நெனச்சி எவ்வளவு நாளு ஒன்ன நீயே
    திப்படுத்திக்குவசொல்லு மனுஷியா பொறந்தவஎல்லாத்தயும்மறந்து தொலைச்சிட்டுப்புதுசாமாறிடணும்"
    "நா மனுஷி இல்லயே"
    "ஒ? சாமியா? அடிக்கடி மறந்து போவுது மனுஷியா இருந்தா ரெண்டுதலைவலிமாத்திரயப்போட்டுக்னுநல்லாத்தூங்கிஎழுந்தா சரியா
    போயிடும். நீயெல்லாம் சாமி குலம். அந்தக் குடுப்பனயும் இல்ல."
    “அத விடு உருப்படியா ஒரு வழியசொல்லுடி"
    "இங்க பாரு. மெரண்ட மாதிரி நின்னா இந்த மண்டபத்து வாட்ச்மேன் கூட மெரட்டிட்டுப்போயிடுவான். தைரியமா நில்லு"
    "அதுசரி”
    'நாலு ஊரச் சுத்திப் பாரு. ஊரு ஒலகத்துல எப்படி பொழைக்கறாங்கன்னுபாரு, இங்க ஒக்காந்துமத்தவங்கசொல்றகதைய காதாலதான கேக்கற. நேர்ல போயிபாரு. என்னமோ சொல்வாங்களே உலாவோ கிலாவோ அதுமாதிரிபோய்வா"
    “உலாதானே? போனாபோச்சி"
    “பூகட்டி விக்கறபொம்பளை நானு. எங்கிட்ட யோசன கேட்டா
    இதுதான் சொல்லத் தோணுது என் புத்தி இந்த அளவுதான்"நகர்ந்து கையைத்தொடும் அளவுக்கு நெருங்கினாள்.
    78 as 17
    

    Page 81
    “சரிவரட்டுமா"என்றபடி அம்மன் கிளம்பினாள். வாசலைநோக்கி நடக்கத் தொடங்கியவளை நிறுத்தி, இப்பவே கெளம்பிடாதே தாயி, நடுநேரம் ஆவப்போவுது, இப்பபோயிஎன்னத்தபாக்கப்போறநாளைக்கு பொழுது இருக்கும்போதே கௌம்பிப்போயேன்”
    “சரி வரட்டுமா” என்று மறுபடியும் சொல்லிக் கொண்டு கருவறையை நோக்கிக்கிளம்பினாள் அம்மன்.
    பாத்து போ தாயி, இருட்டுல தடுக்கிக்கப் போவுது கால்மாடு தலமாடு தெரியாம ஆயிரம்ஜனங்கபடுத்துக் கெடக்கறாங்க"பரிவோடு சொன்னாள் கெளரி
    - இரண்டு -
    அடுத்த நாளே அம்மன் உலாவுக்குக் கிளம்பிவிட்டாள். ஒரு வேகத்தில் திடுதிப்பென்றுவெளியேறி ஒரு தெருவின் எல்லைவரைக்கும் வந்த பிறகுதான் எப்படி தொடர்ந்து செல்வது என்று குழப்பம் ஏற்பட்டது. தம் பக்தர்கள் வீடுகளை எப்படிக் கண்டுபிடிப்பது என்றும் புரியவில்லை. கெளரியிடம் ஒருவார்த்தை கேட்டுக்கொண்டுவந்திருக்கலாமோ என்று தோன்றியது. கண்மூடித் திறப்பதற்குள் நூறு வாகனங்கள் இப்படியும் அப்படியுமாகப் பறந்து கொண்டிருந்தன. இரைச்சல்களும் விளக்கு வெளிச்சமும் தடுமாற வைத்தது. சரவிளக்குகள் வைத்ததைப் போல இரண்டுபக்கங்களிலும் தொகுப்புவீடுகள் நின்றிருந்தன. ஊடுபாதைகள் சரியாகத் தெரியவில்லை.
    தம் பக்தர்களின் வாழ்க்கை வளங்களைப்
    அம்மனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. யாராவதுதிர்க்ள் என்ற பதற்றமும் நெஞ்சுக்கடியில் ஒளிந்தி ந்தி ருந்துக்கா போகிறோம், ஒரமாக நின்றுஎட்டிப்பார்த் திதிரும்பத்தானே போகிறோம்என்று மனத்தைத்திடபடுத்தி ண்டு நடந்தாள். பார்வையில்முதலாவதாக
    திரில்நுழைந்துதிரும்பினாள். பிறகுநாலு தெருக்கள் தள்ளி நடந்து, வேறு வரிசையில் இருந்த சில விடுகளிலும் நுழைந்து வெளி வந்தாள். இப்படியே ஒரு வார காலம் ஓடி விட்டது. அதற்கப்புறம் உலா செல்வதில் ஆர்வம் ஏற்படவில்லை. மாறாக கெளரியைப் பார்த்துப் பேசலாம் என்று தோன்றியது.
    கருவறையை விட்டு வெளியே வந்து மண்டபத்தில் அவள் படுத்துறங்கும் இடத்தில் அவளைத் தேடினாள். அவசரமாக நடந்ததில் இருட்டில் யார் காலையோ மிதித்து விட “எந்த நாய்டி அது? மனுஷங்க படுத்திருக்கறதுதெரியாமபன்னிமாதிரிமிதிச்சிட்டுப்போறியே,கண்ணு கெட்ட கபோதியா நீ?" என்றுபடுத்த நிலையிலேயே திட்டினாள். பதில் சொல்லஅம்மனுக்குநாக்குப்புரளவில்லை. வேர்த்துவிறுவிறுத்துநின்று விட்டாள்.
    பதில்கூட சொல்லாம எவ்வளவோ ஆங்காரமாக போறா பாரு திருட்டு சிறுக்கி, இவங்கள்ளாம் கோயிலுக்குள்ள சாமி கும்பிடவா வராளுங்க?திருட்டு முண்டைங்க, இங்க வந்து கூட அலையறாளுங்க பாரு” என்று அடுக்கிக்கொண்டேபோனாள்.
    அம்மனுக்குச் சர்வநாடியும் ஒடுங்கி விட்டது. படுத்துக் கிடந்தவர்கள் முகம் தெரிகிற அளவுக்கு இருட்டில் சிறிது நேரம் நின்றிருந்தாள். கொளியைக்கண்டுபிடித்துஎழுப்பினாள். அவள் மறுபுறம்
    4. Jao što
     
     
     
     
     
     
     
    
    புரண்டு படுத்தாளே தவிர, கண்களைத் திறக்கவில்லை. குனிந்து மீண்டும் தொட்டு எழுப்பினாள் அம்மன். இந்த முறை உடனே எழுந்து விட்டாள் கெளரி பார்வைக்குநேராக அம்மன்முகம் தெரிந்ததால்குழப்பம் எதுவும் இல்லை. "யாரு அம்மனா?"என்றபடி எழுந்து உட்கார்ந்தாள்.
    “இப்பத்தான்படுத்தேன், நாளைக்கிவெள்ளிக்கிழமை இல்லிSui? கூட ஒரு கிலோ பூ? எடுத்தாந்திருந்தேன். கட்டி முடிக்க ரொம்ப நேரமாய்ட்டுது'
    “தூக்கத்தகெடுத்துட்டனா?”அப்பாவித்தனமாகக் கேட்டாள்
    "அதெல்லாம் ஒன்னுமில்ல தாயி, நீ வந்த காரியத்த சொல்லு, உலாவபோனியா?"
    “ரொம்பத்தடுமாறிப்போயிட்டேன் கெளரி எது நம்மவங்க வீடு
    எது அடுத்தவங்க வீடுன்னுஒரு வித்தியாசமும்புரியல. ஒரே கொழப்பம்"
    “எதா இருந்தா என்ன? கண்ணுக்குத்)தெரியற
    விடுங் ர்ள புகுந்துடே y Väý
    "?யாரும் இல்லாத ஊட்டுக்குள்ள பூந்துட்டியா و
    "இல்லகெளரி எல்லாரும் இருந்தாங்க"
    "நீசொல்றதுஒன்னும் புரியலையே”
    “ஒனக்கே புரியலைன்னா எனக்கு எப்படி புரியும் சொல்லு, எல்லாரும் மூலையா ஒக்காந்துக்கிட்டு, எதிர்மூலையில உத்து உத்து பாத்துக்கிட்டிருந்தாங்க. மொதல்ல எனக்கு ஒன்னும் புரியலை. நானும் எட்டிப் பார்த்தேன். என்னமோ ஒரு பொட்டி மாதிரி இருந்திச்சி. அதுக்குள்ளாற மனுஷங்க தெரிஞ்சாங்க. அவுங்களும் அழுவறாங்க.
    ப்பாத்துஇஷங் ங்க"
    "அதுவா? டிவிபொட்டி அதுசரி, எந்த நேரத்துக்கு போன நீ?" "ராப்பூசை முடிஞ்சதும்தான்" "சீரிலு நேரத்துல சரியா போயிருக்கே. அதான் அப்பிடி கொலையேஉழுந்தாக் கூட அந்த நேரத்துலஏன்னுகேக்கமாட்டாங்களே இந்த ஊருமக்க"
    "அதுஎன்ன சீரிலு?” "அது ஒரு தொடர்கத. எல்லாம் நம்மமாரி பொம்பளைங்க கதைதான். மூக்க சீந்திகிட்டே இருப்பாங்க. பாக்க சோகமா இருக்கும்"
    “பொம்பளைன்னாவே சோகம்தானா?” "அப்பிடியெல்லாம் அவசரப்பட்டு ஒருமுடிவுக்கு வந்துறாத"
    “அதுசரி, நா ஒன்னு கேக்கணும்னு நெனைச்சேன், நாட்டுக்கட்டன்னா என்ன அர்த்தம்?"
    9. இதழ் 17 )
    

    Page 82
    "திடீர்னு ஏன் இந்தக் கேள்வி?”
    “என்னன்னு அர்த்தம் செல்லேன், அப்பறம் சொல்றேன்"
    e O “வாட்டசாட்டமா ஒடம்பு இருக்கற பொம்பளங்களப் பாத்து ஆம்பளைப் பசங்க இப்படி சொல்லி கிண்டல் பண்ணுவாங்க. ஏன் என்னாச்சி?
    "உலாமுடிச்சிவந்துகிட்டேஇருந்தனா, ஒருமூலையிலநாலஞ்சி எளவட்டப்பசங்க நின்னுட்டிருந்தானுங்க. என்ன பாத்ததும் கட்ட கட்ட நாட்டுக்கட்டன்னுராகமா பாடனானுங்க, ஒடம்பே நடுங்கிடுச்சி எனக்கு. நிமுந்த பாக்காம கூட வந்துட்டேன்"
    "நிமுந்த நாலுவார்த்த கேட்டிருக்கலாமில்ல'
    “அதுசரி, ஒருதரம் நிமுந்த பாத்ததுக்கே நான் இந்தக் கதிக்கு வந்துட்டேன். மறுபடியும் அனுபவிக்கணுமா? அத நெனைச்சாலே பயமாயிருக்குது'
    "ஐயோ ஐயோ" என்றுதலையில் அடித்துக்கொண்டாள் கெளரி பயம்பயம்ன்னுஏன் இப்பிடி நடுங்கறியோ?”
    அம்மனுக்கும் தன் பயம் குறித்து வருத்தமாத்தான் இருந்தது. ஆனால் எவ்வளவு முயன்றும் அந்தப் பயம் அவளைத் துரத்தியபடியேயிருந்தது. கண்ணுக்குப்புலப்படாத ஒரு மூலையிலிருந்து ஜமதக்னியின் குரல் கசிந்தபடியே இருப்பதுபோல உணர்ந்தாள். அதைச் செவிமடுக்கக்கூடாது என்றுதான் ஒவ்வொருமுறையும் உறுதிஎடுத்துக் கொள்வாள். எப்படியோ அந்த உறுதிகுலைந்து அக்குரல் அவள் நெஞ்சில் ஒலித்துவிடுவதைத் தடுக்க இயலாதவளாக இருந்தாள். எவ்வளே
    பொழுதுகளில் மட்டும் விலகிச் சென்றுமறுபடியும்பாசியைப்போலபதற்றம் மனத்தில் படர்வதைத் தடுக்க முடிந்ததில்லை. பதற்றத்தில் ஊறி ஊறி மனம் அச்சத்தின் இருப்பிடமாக மாறிவிட்டது.
    தன்மனம்வழக்கமான பயத்தில்குவிவதைத்தடுத்தபடி"ஏதாவது வழி சொல்லு கெளரி” என்றாள். அவளுடன் இணைந்து பேசிக் கொண்டிருக்கும்போது சிறிய அளவிலாவது மனத்தில் சுதந்திர உணர்வு பொங்கிவருவதை ஆச்சரியத்தோடுஉணர்ந்தாள்.
    “வேறவழி என்னன்னுதான் யோசிக்கறேன்"என்றாள் கெளரி “பேசாம நீயும் என் கூட வரலாமே”
    “அதெல்லாம் ஒன்னும் வேணாம். நாளைக்கி கோயில் எதுத்தாப்புல ஒரு பஞ்சாயத்து நடக்க இருக்குது. சும்மா வந்து வேடிக்க பாக்கறியா?”
    “என்னபஞ்சாயத்து?"ஆர்வத்துடன் கேட்டாள் அம்மன். “அதெல்லாம் அங்க வந்துபாரு புரியும்"
    ( காலம்
     
    
    "சரிவேறஏதாவதுபேசேன்,தனியா அங்கபோயிநின்னுஎன்ன செய்யப் போறேன்?"
    "அம்மா தாயே, வெடியறதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம்தான் இருக்குது. இப்ப தூங்கனாத்தான் காலைல எழுந்து வியாபாரத்தக் கவனிக்க முடியும்? பேசிட்டிருந்தா காரியமாகுமா?"
    "சரிஅப்பநாவரேன்'சோகத்துடன் எழுந்துகொண்டாள் அம்மன்.
    "ஐய, ஒரு பேச்சுக்குச் சொன்னா ஒடனே மூஞ்சிய தூக்கி வச்சிக்குவியா? மூஞ்சப் பாரு, நல்லா தக்காளி பழமாட்டம். அது சரி, என்னத்த சொல்லச் சொல்ற?”
    ஏதாவது சொல்லு"
    “ஒரு கணம் அமைதி நீட்டியிருந்த காலை இழுத்துநீவிவிட்டபடி
    "நா வளத்த கதய சொல்றதா, வாழ்ந்த கதய சொல்றதா?” என்று - இழுத்தாள். அவளை அறியாமலேயே விழியோரம் கண்ணிர் திரண்டது.
    - மூனறு - முடியிருக்கும் கதவையே வெகுநேரபியார்த்துக் கொண்டிருந்தாள் அம்மன். தனிமையில் ஞ்சைநெருக்கும்
    அக்குரல் அன்றும் மெல்ல ஓங்குவதைப்ரேல்ப்ட்டது. கனவிலும்
    xTళ్లః sa
    କ୍ଷୁଃ குரலைக்காற்றிலிருந்து அழிக்கிற „კs2*2*ss ல்ாததை நினைத்து வருத்தத்தில் தோய்ந்தாள். ன் இருக்கங்களிலும் ஏராளமானமாலைகள் குவிந்துகிடந்தன.
    நனவிலும் சதா துரை
    R பக்தர்களின் காணிக்கை. இவ்வளவு பக்தர்கள் பக்கபலமாக
    * இருக்கும்போது பயம் என்ன பயம் என்ற கைவிசிநடக்க வேண்டும்போல இருந்தது. குரலாவது கட்டளையாவது எதையும்பொருட்படுத்தக்கூடாது என்று தோன்றியது. எல்லாம் ஒருகணம்தான். மறுகணமே அந்தக் குரல் ஒலி உருவில் அந்த அறையில் நிரம்புவதை ஒருவித இயலாமையுடன் பார்த்தபடி இருந்தாள். உதறநினைக்கிற ஒரு குரலுக்குத் தன்மனம் இந்த அளவுக்குக் கீழ்ப்படிவது ஆச்சரியமாக இருந்தது. இந்த மனம் தன்னுடையதே அல்ல என்று கூறவேண்டும் போலத் தோன்றியது. எங்கிருந்தோ வந்து பல வந்தமாக ஒட்டிக் கொண்டு தனக்கு ஏவல் சொல்கிற ஒன்றாகவும் கட்டளைகள் பிறப்பிக்கிற ஒன்றாகவும் அக்குரல் மாறிவிட்டதை ஒரிரு கணங்களுக்குப்பிறகுதான் உணர்ந்தாள். அக்குரல் ஒரு மாயக்குரல், அதற்கு ஒருபோதும் கட்டுப்பட மாட்டேன் என்று மனத்துக்குச் சொல்லிக் கொடுக்கிற விதம்புரியாமல் தவித்த சமயத்தில் “என்ன தாயி, கெளம்பலியா?” என்றபடி கெளரிநிற்பது தெரிந்தது.
    கெளரியை அத்தருணத்தில்பார்த்ததுமிகவும் தெம்பாகவிருந்தது. “வாவா கெளரி" என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றாள். “நா வர்றது - இருக்கட்டும், மொதல்ல கெளம்பு நீ. இன்னிக்கு பஞ்சாயத்துக்கு போவலாம்ன்னுதான் சொல்லியிருந்தன், நேரமாவுது பாரு, கெளம்பு” என்றாள். அம்மனின் மனம் சட்டென்று உற்சாகம் கொண்டது. பீடத்திலிருந்து உடனே இறங்கினாள். அவளுடைய சிவந்த முகத்தையும் கருத்த கழுத்தையும்பார்த்தாள் கெளரி கழுத்தில் ஏகப்பட்ட சங்கிலிகள். எல்லாம் சேர்ந்து விசிறும் ஒளிச்சிதறலில் கழுத்தின் கருமை மறைந்து போனது. கீழே விழுந்திருந்த மாலையொன்று அம்மனின் காலை இடறியது. “பாத்துபாத்து" என்று எச்சரிக்கைப்படுத்தினாள் கெளரி
    80 Ss - 17 D
    

    Page 83
    மண்டபத்தை நோக்கி நடந்தார்கள். “கெளம்பணும்னுதான் நெனைச்சிட்டிருந்தேன். அதுக்குள்ள மனசுலஏதேதோ யோசனைங்க”
    மண்டபத்தின் கூடத்தைக் கடந்து படிக்கட்டுகளில் இறங்கிச் சிறிது தொலைவுநடந்துசென்றார்கள். ஐந்தாறுபேர்கள் அங்கே வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள்."என்னபூவு? இந்த நேரத்துலளங்ககிளம்பிட்டே?” என்றான் அவர்களில் ஒருவன். “மரத்தடியில சீதாலட்சுமி பஞ்சாயத்தில இன்னிக்கு, என்ன முடிவாவுதுன்னு பாக்கலாம்ன்னுதான்.” என்று இழுத்தாள் கெளரி. "முடிவென்ன பெரிய முடிவு? அறுத்து உட்டுட வேண்டியதுதான். நீ பூவுன்னா, அதுக்கு காயோ கடலையோ வாங்கிக் குடுத்து பக்கத்துல ஒக்கார வச்சிக்கோ” என்று நமுட்டுச் சிரிப்போடு சொன்னான். ‘அண்ணிக்கு அமைஞ்ச தாலி பாக்கியம் போல எல்லாருக்கும் அமைஞ்சிடுமாண்னே? அவுங்கவுங்க வாங்கிவந்த விதி அவுங்கவுங்களுக்கு"பொறுமையாகக் சொன்னாள் கெளரி மனைவியின் பெயரைக் கேட்டதும் சட்டென அடங்கிப் போனான் அவன்.
    கொஞ்சத் தொலைவு சென்றதும்"இதான் பாத்துக்கோ ஒலகம் அவன எங்க குத்தணுமோ அங்க குத்தணும். பதில் சொல்லாம பேசாம வந்தம்ன்னுவை, அடுத்த தரம்பாக்கறப்போ இன்னும் கொஞ்சம்கூடுதலா பேசுவான். எடத்தகுடுத்தா மடத்தபடுங்கறபசங்க, இவனுங்களயெல்லாம் டக்குடக்குன்னுபைசல்பண்ணிடணும். அப்பத்தான் அடங்குவானுங்க”
    “ஒனக்குப்பயமே இல்லயா?”
    “எதுக்குப்பயப்படனும் தாயி? மனசு சுத்தமா இருந்தா எதுக்குப் பயப்படனும்? சொல்லு என் மனசுல ஒன்னுமில்ல இவனா ஆ Á
    சும்மா இருக்க முடியுமா?"
    : நேரத்தில் ஆ ரிச்காட்டின் தோற்றத்தைத் தந்தது. ஒரு பக்கம் இளம்ச்ெச்ருத்திநின்றிருந்தாள். அவளருகில் இரண்டு சிறுமிகள் நின்றிருந்தார்கள். மறுபக்கம் நடுவயதுக்காரன் ஒருவன் விறைப்பாக நின்றிருந்தான். கோவிந்தம்மாள் கிழவி ஒரமாக உட்கார்ந்து குடும்ப மானம் தெருவுக்கு வந்ததை நினைத்து ஒப்பாரி வைத்து அழுதாள். இழுவையான குரலில் அவள் இறந்துபோன தன் கணவனையும் மூதாதையர்களையும் நினைத்துப் புலம்பிப் பாடிய வரிகள் கேட்கிறவர்களையும் துக்கத்தில் ஆழ்த்தியது. கேட்கக் கேட்க அம்மனையும் சோகம் தொற்றிக் கொண்டது. நிறையக் கூட்டம் சேர்ந்து விட்டது. கோயிலுக்கு வந்து திரும்பிப் போகப் பஸ் கிடைக்காமல் மண்டபத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்களில் பலரும் ஒப்பளிக்குரலைக்கேட்டுச் சங்கதிஎன்னவென்றுதெரிந்துகொள்ளவந்து வேடிக்கை பார்த்தார்கள். முடி நரைத்த ஒருவர் வந்து மேடைக்கருகில் நின்றதும்சட்டென்று பேச்சு நின்றுஅமைதி நிலவியது. பெரியவர் திரும்பி அம்மனின் சந்நிதிப்பக்கம் திரும்பிஒரு பாடலை உருக்கமாகப்பாடிவிட்டு கைகுவித்து வணங்கிவிட்டு கட்டையில் உட்கார்ந்தார். “சொல்லுடா சிங்காரம் என்ன பிரச்சனை ஒனக்கு? எதுக்காக ஒன் பொண்டாட்டிய
    வெட்டறதுக்கு ஓடின?"என்றுவழக்கைத்தொடங்கினார்.
    சிங்காரம் வெறி கொண்டவனைப் போல "அவ நடத்தை சரிவிக்கிங்க ஏமாத்துக்காரிங்க, கட்டின புருஷன் உயிரோட இருக்கும் போதே கள்ளப்புருஷனத்தேடிக்கிட்டு ஒடற ஆளுங்க”
    Cateó
     
     
     
    
    பெரியவர் குறுக்கிட்டுக் கேட்டார். “யாரு அந்தக் கள்ளப் புருஷன்?”
    "அதஅவதான் சொல்லணும்" "அவ சொல்றது இருக்கட்டும் ஒனக்குத் தெரியுமா?" "Q f yy
    "அப்ப நீ அவனப்பாத்ததில்ல, அப்பிடித்தானே" "ஆமாங்க" “வேறயாராவதுபாத்துட்டு சொன்னாங்களா?
    "இல் லிங்க”
    “கண்ணால பாக்காத ஒரு ஆள அவ கள்ளப் புருஷனா வச்சிருக்கான்னுசொன்னா எப்பிடிசிங்காரம்?"
    சிங்காரம்தடுமாறினான். "இந்தப்புள்ளைங்கரெண்டும் எனக்குப் பொறந்ததே இல்லிங்க. யாருக்கோ பொறந்தத எனக்குப் பொறந்ததா சொல்லி ஏமாத்திட்டா முண்ட"
    "நீதான்டா ஊரூரா அலஞ்சி கூத்தியூ 6i எங்க அக்காவ பத்தி ஏதாவது தரக்கொ rజ్జీ ষ্টু னு வை, அப்பறம் பேசறதுக்குநாக்கே இத்தாஜிந்து அறுத்துடுவன்"சட்டெனக் o:ž நின்று சிங்காரத்தைப் பார்த்துக்
    0)
    ன் ன் மேல கைய வச்சிட்டு ஊரவிட்டு உயிரோட
    றிருவிங்கள நீங்க, எவனுக்கும் கையும் இருக்காதுகாலும் இருக்காது
    ஜாக்கிரதையா பேசணும்'என்றுஉடனே மறுதரப்பிலிருந்துகுரல் எழுந்தது.
    பேச்சு வளர்ந்தது. தலைக்குத்தலைபேசினார்கள். சட்டென்று எல்லாருடைய கைகளிலும் விறகுக் கட்டைகள் முளைத்தன. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கைகலப்பை அடக்குவது சிரமமாக இருந்தது
    “எப்பிடி வேணும்னாலும் பஞ்சாயத்துல முடிவெடுத்துக்குங்க ஆனா இன்னிக்குராத்திரிக்குள்ள அவளவெட்டாமவிடமாட்டன் நானு'
    கூட்டமே தாறுமாறானது. மனைவியை வெட்டும் தீர்மானத்திலிருந்து சற்றும் பின்வாங்காத உறுதி கொண்டவனை வேடிக்கைபார்க்கப்பலரும்கூடிவிட்டார்கள். எல்லாருடைய முகங்களிலும் அச்சமும் ஆர்வமும் தெரிந்தன. பழிசுமத்தப்பட்ட சீதாலட்சுமி ஓடிவந்து பெரியவரின் காலைப்பிடித்துக்கொண்டாள்.
    "ஐயா இந்தப்பைத்தியக்காரனோடஎன்னால்குடுத்தனம்பண்ண முடியாதுய்யா. பொழுது விடிஞ்சி பொழுதுபோனா இதே தோரணையா போயிடுச்சிய்யா. எவன் வந்தான், எவன்கூட படுத்தன்னு ஒரே
    ஒன்னு, அருவாள தூக்கிகிட்டு என்னவெட்டணும்னு நிப்பான். இல்ல, புள்ளைங்கள வெட்டணும்னு நிப்பான். நா வாங்கிக் குடுத்த துணியை கட்டிகிட்டு மினுக்கலாம்ன்னு பாக்கறியான்னு போனவாரம் ஒரு நாளு வயகப்புள்ளை துணியஉருவிகிட்டுதெருவுல நிக்கவச்சிட்டான்யா. அந்த அதிர்ச்சில போன பேச்சு அவளுக்கு இன்னும் திரும்பலய்யா. தாயா புள்ளயா ஊரோட போயி இருந்துக்கறேன்யா. இந்த நாறப் பொழப்பு வேணாம் அறுத்து உட்டுடுங்கய்யா"
    இதழ் - 17
    

    Page 84
    அவளைப் பேச விடாமல் மற்றொரு பக்கத்திலிருந்த சிங்காரம் கூவத் தொடங்கினான். "பஞ்சாயத்துக்கு வந்தவங்களயே வளச்சிமடில போட்டுக்கலாம்ன்னு பாக்கறியாடி சரியான கைகாரிடி நீ. கடவுளே வந்தாலும் கைக்குள்ள போட்டுக்குவ சரியானபசப்புப்பரம்பரடிஒன்னிது நீ எங்க போனாலும் தேடி வந்து வெட்டுவன். அத மட்டும் மனசுல வச்சிக்கோ’பற்களை நறநறவென்றுகடித்தபடி அங்கும் இங்கும் ஓடினான்.
    மறுபடியும் வார்த்தைகள் தடித்தன. ஆளாளுக்கு உரக்கப்பேசிக் m கொண்டிருந்ததில் எதுவும் காதில் விழவில்லை. பஞ்சாயத்துக்கு வந்த பெரியவருக்கு ஒவ்வொருவரையும் தடுத்துநிறுத்தவேசரியாக இருந்தது. கையில் அரிவாளோடு ஓங்கிய குரலில் பேசிக் கொண்டு துள்ளுகிறவர்களை நெருங்கவும் பயமாக இருந்தது. அப்படியே விட்டு விடவும் பயமாகவும் இருந்தது. “பொம்பளைங்ககிட்ட வந்து வீரத்த காட்டறியே, போ போயி ஒன்ன மாதிரி மீசவச்ச ஆம்பளைங்ககிட்ட காட்டுய்யா" என்று இருட்டில் யாரோ ஒரு பெண் கூவுவது கேட்டது. வேடிக்கை பார்க்க வந்த பெண்கள் அவசரமாக கலைந்து ஒதுங்கினார்கன். கண்ணிலிருந்து மறைந்து விட்ட சிறுவர் சிறுமிகளின் பெயர்களைச் சொல்லி பெற்றவர்கள் தேடிக் கொண்டிருந்தபோது போலிஸ் ஜிப் வந்து நின்றது.
    தலையில் தொப்பியுடனும் காக்கிச் சட்டைக்குள் கழுத்துக்கடியில் கருப்புத் துண்டுடனும் சபரமலைக்குப் போவதற்காகப் போட்ட விரத மாலையுமாக வந்த இன்ஸ்பெக்டர் நேராகப் பஞ்சாயத்துப் பெரியவரை நெருங்கி"என்னய்யா? என்ன சண்ட இங்க? கோயில் வாசல்ன்னுகூட மரியாத இல்லாம என்னய்யா காட்டு சண்டை போட்டுக்கறிங்க. என்ன தண்ணிக் கேசா? எவன் காய்ச்சறவன் இங்க? மணிவண்ணனா?
    தேவடியா மொவனுக்கு பூட்சு காலாலே நசுக்கனலும்புத்திவரா
    "مي பேசிக் கொண்டே போன #డ్డ ای நிறுத்தி
    “அதெல்லாம் ஒன்னுமில்லிங்கு ம்ப வழக்கு.
    ஞாயப்பு ங் إيلي வந்திருக்கணும். பேச்சுக்குக் கட்டுட் ளா இருந்தா பேசிப் பாக்கலாம்ன்னு நெனைச்சேன்.
    ஒன்னும் வணங்கிப் போவறமாரி தெரியல. தம்பிதான் இனிமே பாத்து G u ".
    இன்ஸ்பெக்டர் மனத்தில் சந்தோஷம் படர்ந்தது. “என்ன பிரச்சனை?சொல்லுங்க"கட்டையில் ஏறிஉட்கார்ந்தார். "ஒடுடா பரமசிவம் ஓடிப்போயிஸ்டிராங்கா நாலு டி வாங்கியா. ஐயாமாருங்களுன்னுன்னு சொல்லி சக்கர தூக்கலா வாங்கியா” என்று கட்டளை பறந்தது. சீத்தாலட்சுமிக்கு வேண்டப்பட்டவர்களும் சிங்காரத்துக்கு வேண்டப்பட்டவர்களும் அதிக அளவில் வந்து சேர்ந்து விட்டார்கள். கொஞ்சம் மனப்பிசகு உள்ளவனென்றும் அவனை மன்னித்து விட்டுவிடும்படியும் கெஞ்சிக்கேட்டுக்கொண்டது ஒருதரப்பு மனப்பிசகு உள்ளவன் கையில் இருக்கிற அரிவாள் எந்த நேரத்தில் யாரைப் பலி வாங்கும் என்று சொல்ல முடியாது என்றும் பயந்து பயந்து வாழ்கிற வாழ்க்கையை விட வாழாமல் இருப்பதே மேல் என்றும் அவனைக் கைது செய்யவேண்டியது.அவசியம்என்றும்கேட்டுக்கொண்டதுமற்றொருதரப்பு போலிஸ் முன்னிலையிலேயே இருதரப்புக்கும் நடுவே குட்டிக் கைகலப்பு நேர்ந்தது. சாரங்கபாணிக்குத் தோளில் கத்திவெட்டு, செங்கேணி அம்மாளையாரோ தள்ளிவிட்டதில் பின்மண்டை உடைந்தது.
    ( காலம்
    
    மறுகணமே சிங்காரத்தையும் அவனைச் சேர்ந்த சிலரையும் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். இன்ஸ்பெக்டரே சீதாலட்சுமியைப்பார்த்து"நீபோதாயி,பொறந்த ஊட்டுலியாவது நிம்மதியா இரு. இவன நாங்க பாத்துக்கறம்” என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். பஞ்சாயத்துப் பெரியவரும் அதையேதான் சொன்னார். மறுயோசனை இல்லாமல் சீதாலட்சுமி தன் கழுத்திலிருந்த தாலிக் கயிற்றைக் கழற்றி முன்னாலிருந்த கோயில் உண்டியில் போட்டுவிட்டுத் திரும்பினாள். வந்திருந்த சகோதரர்களோடும் நடுக்கிக் கொண்டிருந்த பிள்ளைகளோடும் நடக்கத்தொடங்கினாள்.
    மரத்தடியை விட்டுச் சற்றே தள்ளி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அம்மனும் கெளரியும் கடைசியாகத் தனிமையில் நடந்தார்கள். அம்மனுக்குப் பேச்சே வரவில்லை. கோயிலுக்குள் கைகுவித்துவணங்குபவர்களின் முகங்களே வேறு அரிவாளோடுவெட்டு குத்து என்று அலையும் முகங்களே வேறு என்று தோன்றியது.
    “என்ன தாயி, பேச்சயே காணம்? ஏதோ யோசனையில இருக்காப்பல தெரியிது”என்று கேட்டாள் கெளரி
    “என்னத்த யோசிக்கறது போடி ஒரே கசப்பா இருக்குது. மனுஷங்க இந்த அளவுக்கு கேவலமா இருப்பாங்கன்னுநெனச்சிக் கூடப்
    பாக்கல நானு. s ܠܘܐܐ(
    அம்மன் சலித்துக் கொல் وكگش
    “கோவம்ன்லுவூந்துர்ே மனுஷனா இருந்தாலும் சரி, མ-་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ல்ாரும் மிருகமாமாறிடறாங்க"
    மீண்டும் பேச்சு தொடர இயலாத வகையில் ஆழ்ந்த மெளனம் கவிந்தது. பேசாமலேயே நடந்தார்கள். மண்டபத்துக்குள் நுழைந்து எல்லாரையும் தாண்டிச் சென்று கதவருகில் வந்ததும் ஏ சரி வரட்டுமா கெளரிஎன்றாள் அம்மன்.
    “நாளைக்கிபாட்டுக்கச்சேரிமண்டபதுல, கேக்கறதுக்கு நல்லா இருக்கும். எல்.ஆர்.ஈஸ்வரிபாடறாங்க. எல்லாம் ஒன்னப்பத்தித்தான். கேக்கலாம் வரியா"
    “பாக்கலாம் கெளரி" என்றாள் அம்மன், “எனக்கும் பொழுது போவணுமில்ல. எவ்ளோ நேரம்தான் இருட்டுல ஒக்காந்து கெடக்கறது?"
    - நான்கு - கேட்கக் கேட்க கச்சேரிப்பாடல்கள் உற்சாகமாக இருந்தன.
    உத்வேகத்துடன் எழுந்த எல். ஆர். ஈஸ்வரியின் குரல் கூடி இருந்த கூட்டத்தை மந்திரம்போட்டமாதிரிவசப்படுத்திவைத்திருந்தது. அக்குரல் தனக்குள்ளும் பரவி ஒரு வெப்பத்தை உருவாக்குவதை ஆச்சரியத்தோடு உணர்ந்தாள் அம்மன். வளமான குரல். சரியான ஏற்றஇறக்கம் கேட்கக் கேட்க ஒருவித பித்துப்படர்வதைப்போல இருந்தது.
    மைதானத்தில் திரண்டிருந்த கூட்டத்தில் எள் விழஇடமில்லை. சின்னச்சின்னமரங்களின்மீதும் வீட்டுக் கூரைகள் மீதும் சிறுவர்களும், இளைஞர்களும் உட்கார்ந்துபாட்டுகேட்பார்கள். குடை ராட்டினம், பலூன் கடைகள்,பொரிகடலைக்கடைகள், கம்யூட்டர்ஜாதகம்,பூமாலைக்கடைகள் எல்லாம் வெறிச்சோடி விட்டன. முறுக்கு, எள்ளடைவிற்கிற சிறுவர்கள் தட்டுகளோடு கும்பலுக்குள் சுறுசுறுப்பாகப் புகுந்து வெளியேறினார்கள். 32 69% - 17)
    

    Page 85
    ஒவ்வொரு முறையும் ஒரு தட்டு காலியானது. பையில் குலுங்கும் சில்லறைகளைத் தொட்டுத் தொட்டுச் சந்தோஷப்பட்டார்கள் அவர்கள். "ஆத்தாடி மாரியம்மா" என்று ஈஸ்வரிபாடத் தொடங்கியதுமே கும்பலில் பல பெண்களுக்குச் சாமி வந்து விட்டது. "ஆத்தா வந்துட்டா ஆத்தா வந்துட்டா” என்று ஆடும் பெண்களைச் சுற்றி நின்றிருந்த பெண்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். “பாடறத நிறுத்தாதீங்க பாடறத நிறுத்தாதீங்க” என்று கணக்குப்பிள்ளை மேடையைப் பார்த்துச் சத்தமிட்டான். பூசாரி வந்து கற்பூரம் கொளுத்திக் காட்டினார். சுடர் விட்டெரியும் கற்பூரத் துண்டைச் சட்டென எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டு சாமி மலையேறியது. கெளரியோடு உட்கார்ந்திருந்த அம்மனுக்கு மனநெகிழ்ச்சி உண்டானது. முதல்நாள் மனிதர்கள் மீது பிறந்த கசப்பு சுத்தமாக விலகி மதிப்புப் பிறந்தது. திரும்பிப் பார்த்தாள். கண்கள் பனிக்கப்பாட்டில் கரைந்துபோயிருந்தால் கெளரி
    “என்னகெளரி ஏன் அழுவுற?"பதற்றத்துடன் கேட்டாள் அம்மன்.
    ஏஅழுவலம்மா. மனசு என்னமோ மாதிரிபொங்கிபொங்கிவருது சந்தோஷமாவும் இருக்குது. துக்கமாவும் இருக்குது'பொலபொலவெனக் கண்ணிர்த் துளிகள் அவள் கன்னத்தில் சரிந்தன.
    “என்ன கெளரி இது? சின்னக் குழந்தை போல”
    முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள் கெளரி புன்சிரிப்புபடர,"கொழந்தயா இருந்துட்டா, எவ்வளவோ செளகரியம் வளர வளரத்தான் பொண் ஜென்மங்களுக்குப்பிரச்சன”என்றாள்.
    அம்மன் அவள் தோள்களை ஆதரவுடன் தட்டிக் கொடுத்தாள்.
    “என்னங்கடி அங்க ஒரே சளசளன்னு சத்தம்? நீங்க பேசறத
    கேக்கறதா? பாட்ட கேக்கறதா?” என்று வயதான ஒரு பெண்குரல் பின்னாலிருந்து அதட்டியது. இருவரும் உடனே அமைதியானார்கள்.
    மறுபடியும் பாடல் தொடர்ந்தது. பல ரசிகர்கள் கோரித்து தாட்களை மேடைக்கு அனுப்பினார்கள். துண்டு சீட்டுக்குை போய்க் கொடுப்பதற்கென்றே சிறுவர்களும் சிறுமிகள்ங்கிருந்தோ முளைத்தார்கள். எல்லாச் சீட்டுக்களையும் சிரிப்பு மாறாத முகத்துடன் வங்கிப்படித்தார்ஈஸ்வரி சிறிது ஆஇடைவெளிக்குப் பிறகு,"பக்தர்களே, அம்மன்மீது ### பரவ வேண்டும் என்கிற ஆசையில்தரஞ் வந்து இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறேன். நான் திரைப்படப் பாடல்களைப் பாடுகிறவளாக இருக்கலாம். அது என் பிழைப்பு. தயவு செய்து புனிதமான இந்த ஆலயத்தில் பக்திப் பாடல்களைத் தவிர வேறு பாடல்களைப் பாடச் சொல்லித்தூண்டாதீர்கள் என்றுபணிவன்போடுகேட்டுக்கொள்கிறேன்" என்று புன்சிரிப்பு மாறாத முகத்துடன் சொல்லி முடித்து விட்டு அடுத்த பாட்டுக்குத் தேவையான ராகச் சேர்க்கைகளைப் பற்றிக் குழுவினரிடம் ஆலோசனைகளைச் சொல்லத் தொடங்கினாள்.
    சந்தடி சாக்கில் தன்னை நெருங்கிக் கொண்டு உட்கார வந்த ஒருவனைக் கண்டித்தாள் கெளரி பார்த்தா படிச்சவன் மாதிரித் தெரியறியே, கொஞ்சமாச்சிம் அறிவு வேணாம்? பொம்பளைங்க ஒக்கார்ற எடத்துல வந்து ஒக்கார்றியே, எழுந்து போய்யா மொதல்ல" என்றாள். அருகிலிருந்த பெண்களும் சத்தமிட்டதும் அவன் எழுந்துகொண்டான். அதற்குள்சத்தம்கேட்டுவந்த பூசாரியும் அவனை அதட்டிநெட்டித்தள்ளிக் கொண்டு போய்த்தொலைவில் விட்டான். “கச்சேரி கேக்க வfங்களா, கலாட்டசெய்பவரீங்களாபா,மூள கெட்டகழுதைங்களா"
    šéAC ந்தி o 劈
    ( காலம்
     
     
    
    “போதையில இருந்தா ஆம்பள வரிச எது பொம்பள வரிசை எதுன்னுவித்தியாசம் தெரியாமபோயிடுமா? பொறுக்கிக்கு நாலு போட்டு அனுப்பணும், அப்பதான் புத்திவரும்"
    "நாம என்ன புத்தி குடுக்கிறது? அந்த ஆத்தா குடுப்பா கூலி, அப்பதெரியும் கதி"
    ஈஸ்வரியின் பாடல் மறுபடியும் ஒலிக்கத்தொடங்கி எல்லாரையும் வசப்படுத்தியது. அதைக் கேட்கக் கேட்க அம்மனுக்கு நெஞ்சு நிறைந்தது. பக்தர்களுக்குத்தம்மீது உள்ள நம்பிக்கை நெகிழ்ச்சியைக் கொடுத்தது. கோடிக்கணக்கான ஜனங்கள். அவர்களுடையமனங்களில் தனித்தடம் பக்தி, நம்பிக்கை. அதுபோதுமே, அதை எண்ணிஎந்தப்பயத்திலிருந்தும் மீண்டுவிடலாம் என்று தோன்றியது.
    நள்ளிரவு வரைக்கும் கச்சேரி நீண்டது. இறுதியாக கணக்குப்பிள்ளை எழுந்து நன்றி சொல்ல, கூட்டம் கலைந்தது. நெகிழ்ச்சியான மனநிலையைத் தக்க வைத்தபடி அம்மனும் கெளரியும் மெல்ல நடந்தார்கள்.
    சிறிது நேரத்துக்குப் பிறகுதான் தம்மைப் பின் தொடர்ந்து ஒருவன் வருவது தெரிந்தது. கச்சேரியின்போதுபக்கத்தில் உட்கார்ந்து வம்புவளர்த்தவனே அவன் என்று புரிந்ததும் மனத்தில் கலவரம்படர்ந்தது. எச்சரிக்கை உணர்வுடன் நடையை எட்டிப்போட்டதஞணத்தில் கெளரியின் தோளைத் தொட்டான் அவன்.
    多 “என்னடி? பெரிய பத்தினியா நீ? ஒன் பக்கத்தில ஒத்காரக் கூடாதா?” لاؤ V
    ఓడిపణి பதில்சொல்லாமல் அம்மனின் * ப்பற்றிக்கொண்டுகௌரி வேகவேகமாக நடந்தாள்.அவனும் நடையில் வேகத்தைக் கூட்டினான். "கும்பலா இருந்திதுவேணும்ன்னாலும் பேசலாம்ன்னுநெனப்பா? இப்ப "ப்ேசு பாப்பம் என்ன நடக்கும்ன்னுபுரிஞ்சிக்குவ”என்றுகுழறியபடியே .தொடர்ந்தான்لٹلاڑ
    அம்மன் பாதையைப் பார்த்தாள். எல்லாரும் போய் விட்டிருந்தார்கள். முன்னும் பின்னும் வெகு தொலைவுக்கு ஆள் நடமாட்டமே இல்லை. இசையை உள்ளூர அனுபவித்தபடி மெதுவாக நடந்ததில் பின்தங்கி விட்டது புரிந்து விட்டது. "நீ செஞ்ச தப்புக்கு எல்லாரும் பேசத்தான் செய்வாங்க. அதுக்காகப் பின்னால வந்துவம்பு வாங்கறவேலயெல்லாம்வேணம் ஒழுங்காபோயிடு"என்றுநல்லவிதமாக எடுத்துச் சொன்னாள்.
    "ஆ.நீயாருபுதுக்குட்டி? அவளுக்குத்தொணையா?நீயும்தான் தளதளன்னு இருக்கற" சொல்லிக் கொண்டே கைநீட்டப் போனான். அதைக் கண்டதும் அம்மன் திடுக்கிட்டாள். திருத்தி அனுப்பி விடலாம் என்றுஎழுந்த சிறுநம்பிக்கையும் தகர்ந்துபோனதில் அதிர்ச்சியடைந்தாள். மந்திரத்தால் வாளை வரவழைத்து ஓங்கி வெட்டி விடலாமா என்று தோன்றியது. சிரமப்பட்டுக்கோபத்தைக்கட்டுப்படுத்தவேண்
    "வாம்மா"என்றுகெளரிதுண்டியதும் இருவரும் இருட்டில் ஒடத் தொடங்கினார்கள். மறுகணமே “நில்லுங்கடி கைகாரிங்களா.
    ப்பிச்சிடலாம்ன்னுெ க்கறிங்கள. இன்னிக்குஒங்களபலிே விடமாட்டன் பலி" என்று கூச்சலிட்டபடி அவனும் ஓடிவந்தான். அந்தக் குரலின் ஆவேசம் காலம் காலமாகக் காதில் ஒலித்தபடி இருந்த ஜமதக்னியின் குரலை அம்மனுக்குநினைவூட்டியது. அதே குரல். அதே வேகம், அதே கடுமை. கெளரியைப்பற்றிக்கொண்டு அம்மன் பீதியுடன் ஒடத்தொடங்கினாள்.
    33 இதழ் - 17)
    

    Page 86
    2. -aivoupouco 67o
    ரஷ்டி
    கிறாஸ்:
    /6O6076/
    இரண்டாம் உலக யுத்தத்தைப் பற்றி நினைக்கிறேன்.
    வென்றவர்களைப்போல்இல்லாமல், தோற்றவர்களுக்கு அது எப்படி இருந்திருக்கும். சொல்லப் போனால் நீங்கள் தோற்றவர்கள் பக்கம் இருக்கிறீர்கள். நீங்கள் அதை எப்படி உணர்ந்தீர்கள்? எழுதுவதற்கு அது உங்களுக்குச் சாதகமாக இருந்திருக்கின்றதா?
    தோற்றவர் என்று ஏற்றுக் கொண்டால் - ஜேர்மனியர்கள் அதை ஏற்றுக்கொள்வதுமிகச் சிரமம்-நான் அப்படி ஏற்றுக் கொண்டேன். அதைத் திரும்பிப்பார்க்குத்போது, நாங்கள் தோற்றவர்கள், யுத்தத்தில் தோற்றவர்கள் என்று ஏற்றுக் கொள்ளும்போது, நான் சிலவற்றை வென்றிருக்கிறேன் என்றேநினைக்கிறேன். அப்போதுஎனக்குப்பதினேழுவயது இப்போது போலந்திலுள்ள க்டான்ஸ்க் என்று அழைக்கப்படும் டான்ஷிக்தான் எனது நகரம். யுத்தத்தில் தோற்றதால் அதை நான் இழந்து விட்டேன். எழுதுவதற்கு மீளவும்எதையாவது கொண்டுவர முயன்றேன். எழுதுவதால் அதை வெல்ல முயன்றேன். அத்துடன் அது எனக்கொரு சந்தர்ப்பம். ஒரு யுத்தத்தில் தோற்கும்போது, ஜேர்மனியில் அது எப்படி நடக்க முடியும் என்பதன் காரணங்களை அறிய அது எனக்கொரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. அதாவது, சுருக்கமாக ஒஸ்விற்ஸ் என்றழைக்கப்படும் இடத்தில் நடந்த பயங்கரமான குற்றம் பற்றி, வெற்றி பெற்ற நாடுகளைச் சேர்ந்தவை என்று இன்னும் நம்பும் நாடுகளுக்கு நான் செல்லும்போது, தாங்கள் இழந்தவை எவை என்பதை குறைவாகவே எண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை கண்டபோதுநான் அடிக்கடி திகைத்திருக்கிறேன்.
    ரஷ்டி :நீங்கள் சொன்ன நகரத்தை இழந்தது பற்றிஎனக்கு ஆர்வம்
    ( காலம்
    சல்மான் ரஷ்டியும் குந்தர் கிறாசும் உரையாடுகிறார்கள்
    உள்ளது. ஏனென்றால் வேறு காரணங்களுக்காக, அந்த உணர்வே சரியாக எனக்கும் இருக்கிறது. அதற்கான எளிய காரணம்: எனது குடும்பம் என் நகரத்திலிருந்து என் பதினாலாவது வயதில் வேறு நாட்டிற்குப்புலம்பெயர்ந்தது. இங்கிலாந்திற்கு நான் கல்வி கற்பதற்காகச் சென்றேன். அதன்பின் அந்த நகரமே உருமாறிவிட்டது. என் நினைவில் இருந்த அந்த நகரம், நான் வளர்ந்த நகரத்தைத் தகர்த்து, கொங்கிறீற்கல்லறைக்கற்கள் போலஉயர்ந்த கட்டிடங்களால் நிரப்பப்பட்டிருந்தது. அந்நகரத்தில் வாழ்ந்தவர்கள் கூட
     
     
     
     
     
     
     
    
    7ல்லும் தளும் Uெ7ய்கணே
    தங்கள்நகரத்தை இழந்துவிட்டார்கள். ஏனெனில் அந்நகரம் மறைந்துவிட்டது. அதைத் திரும்பவும் பெறுவதற்கு மிகவும் விரும்பினேன். அது எனக்கு மிக உபயோகமுள்ளது. அந்த நகரமே நில மீட்சியால் கட்டப்பட்டதே. இபபொழுது அமைந்திருக்கும் அந்த முழு நகரமே உண்மையில் பிரித்தானியரால் கடலிலிருந்து மீட்கப்பட் நிலத்திலேயே கட்டப்பட்டது. ஒருவகையில், பம்பாய் ஒரு நகரமாக பிரித்தானியரால் கண்டுபிடிக்கப்பட்டதே. நில மீட்சியைப் போன்ற ஒரு செயற்பாடாகவே நானும் எனக்காக அந்த நகரத்தைத்திரும்பவும் பெறவேண்டும் என்றுஉணர்ந்தேன்.
    கிறாஸ்: உங்கள் புத்தகத்தைவாசித்தபோது, அதை எழுதியதின் மூலம்
    ரஷ்டி :
    கிறாஸ் :
    ஒருவர் தான் இழந்த ஏதோவொன்றை மீளகட்டமைத்து தன்னிடம் வைத்திருக்க முயல்வதாக நான் உணர்ந்தேன்.
    இழப்புப் பற்றிய கேள்வி ஞாபகத்துடனும் தொடர்புடைய தொன்று. சமகால ஐரோப்பிய இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களில் பலர் மீளவும் பெற்றுக்கொள்வது, கடந்த காலத்தைத் திரும்பப்பெற்றுக்கொள்வது, புத்துருவாக்குவது, தங்கள் தேவைகளுக்காகத்திரும்பக் கண்டுபிடிப்பதுபோன்ற விசயங்களை அணுகுகிறார்கள். அது எனக்கு நல்லார்வத்தைக் கொடுக்கிறது. அதாவது ஐரோப்பா முழுவதுமேபல எழுத்தாளர்களிடையே ஒருவகை வரலாற்றுத் திட்டம் இருக்கிறது.
    ஜப்பதுகளின் நடுப்பகுதியில் வரலாற்றுடன், ஜேர்மனிய வரலாற்றுடன், நான் முகங்கொடுக்க வேண்டும் என்பதைக் கண்டு பிடித்தேன். இனிமேலும் நல்ல பகுதிகளிலிருந்து முகத்தைத் திருப்ப என்னால் முடியவில்லை. அதற்குமுகங் கொடுக்கவேண்டும். அந்தக்காரணத்துக்காகத்தான் மேற்கு ஜேர்மனியிலிருந்து பேர்ளினுக்கு மாறினேன். ஏனெனில், இங்கே, மேற்கு ஜேர்மனியில் கடந்த யுத்தத்தின் பயனுக்கு நாம் ஒவ்வொரு நாளும் முகங் கொடுத்துக் கொண்டிருகிறோம். (பேர்ளின்) சுவரை ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொண்டிருப்பதால் எமக்கு இப்படியான உணர்வு வருகிறது. இன்னுமொரு காரணம், யுத்தம் நடந்த சிலகாலத்தின் பின் இரண்டு பகுதிகளிலிலுமிருந்த ஜேர்மனியர்கள் வென்றவர்களின் பக்கம் உள்ளவர்கள்தாம் எனச் சொல்ல முயற்சித்தார்கள். அதன் பின்னர் நாங்கள் மிக உயர்ந்த ஜனநாயகவாதிகள் ஆனோம். ஐக்கிய அமெரிக்கா விரும்பிய அனைத்தையும் நாம் செய்தோம். அதையே கிழக்கு ஜேர்மனியும் செய்தது என்று நாம் சொல்லலாம். அவர்கள் மிக உயர்ந்த சோஸலிஸ்டுகள்.
    84
    இதழ் 7.)
    

    Page 87
    A. ரஷ்டி .توضہ ہے ضمیہ کہی an
    கிறாஸ்:
    ரஷ்டி
    வென்றவர்கள் பக்கமுள்ளவர்கள். அப்பொழுதுமொஸ்கோ விரும்பியது அனைத்தையும் அவர்கள் சரியாகச் செய்தார்கள். யுத்தத்தின் முடிவு பற்றிய முறைமையான அரசியல் மொழி, சரணடைதல் அல்ல. மாறாக, அதுவொரு பேரிடர் அதுவொரு அழிவு. அதுவொரு சைபர் நேரம். உண்மையை மறைக்கும் நல்ல பொய்கள். நாஸிகளின் காலத்தில் ஜேர்மனி இருண்டதாகிறது என்று அவர்கள் சொன்னார்கள். இப்படியாக எஸ்எஸ்களை, நாஸிக்கட்சியை,
    பிசாசாக்கிய உண்மையைச் சொல்லவில்லை.
    இவை அனைத்தும் தெளிவான பட்டப் பகலில் நடந்தன என்று பின்னோக்கிப் பார்த்து என் கதையைச் சொல்லுவதற்கு,அதுவொரு காரணம் மிக மெதுவாக,அதில் ஆர்வம் காட்டும் விசேட குழுக்கள் அங்கு இருந்தன: ஆரம்பத்தில் ஹிட்லருக்கும் மூலதனக்காரரும் ஒத்துப் போனார்கள். பின்னர் சிறு பூர்சுவாக்களுக்கும் ஒத்துப் போனார்கள். ஆனால் அவர்கள் முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் மறைந்து போயினர். ஹிட்லருக்கு அவர்களை வெல்வது மிகச் சுலபமாக இருந்தது. சிறுபூர்சுவாக்களின் கனவுகளையே அவன் உண்மையில் பேசினான். அவர்களக்குக் கொடுத்த வாக்குறுதிகளை மிகக் கொடூரமான முறையில் அவன் அடைந்தான். அவற்றையே 6Tair (upgj6b ST6j6)TGOT The Tin Drumggio Dog
    இலும் சொன்னேன். எல்ல
    பூர்சுவாமுறையில்குற்றத்துக்குர்ஆத்திரீத்துக்குள்
    அதாவது
    நோக்கம் ஒருவகையில், முது
    4. என்று சொல்பவர்கள்,
    அபிப்பிராயங்களை உருவாக்குபவர்களானஅரசியல்வாதிகள் - அல்லது ஊடகங்கள் அல்லது அது எதுவாக இருந்தாலும், - புனைவுகளை உருவாக்குகிறார்கள். உண்மையைச் சொல்ல ஆரம்பிக்க வேண்டியது, புனைவுகளை எழுதுபவர்களின் பொறுப்பாகிறது. அது ஒருவகை முரண். அது இப்போது சிலவேளை பல நாடுகளிலும் உண்மை.
    எங்கள் கனவுகளும், மக்கள் வைத்திருக்கும் பேசாப் பொருள்களும் விசித்திரமான கருத்துக்களும், யதார்த்தத்தைச் சார்ந்தவை. ஒரே வசனத்தில், நீங்கள் பார்க்கும், தொடும் தட்டையான யதார்த்தத்திலிருந்து உள் விசயங்களுக்குள் நான் பாய்கின்றேன்.
    அரசியல், எழுத்தாளர்களுக்குரியதல்ல என்று சொல்லும்
    இரண்டு சிந்தனைக் குழுமங்கள் இப்போது இருக்கின்றன. நிச்சயமாக அது ஆங்கில இலக்கியத்தில் உள்ளது. ஆனால் அது எல்லா இலக்கியத்திலும் இருக்கும் என்று
    Ꮬ Ꮴ iv db
     
     
     
     
     
     
     
     
     
     
    
    கிறாஸ்:
    |ář
    எண்ணுகின்றேன். எழுத்துப் பொது விசயங்களிலிருந்து எப்படியாவது வேறானதுஎன்ற மனப்பாங்கு அவற்றிலிருந்து அதுவேறானதாகவே இருக்க வேண்டும் என்ற மனப்பாங்கு மறு பக்கத்தில், பின் நவீனத்துவ விமர்சிப்பின் முழு ஆய்கருவிகளும் இருக்கின்றன. அதுவும் தனித்த வேறு காரணங்களுக்காகப் பிரதிகளை உலகத்திலிருந்து வேறாக்குகின்றன. ஆகவே, எழுத்தாளர்கள் பொது விசயங்களில் கைவைக்கக் கூடாது என்று சொல்லும் தீவிரவாதமும், பழமைப்போக்கும் என்ற இரண்டு கருத்தாடல்கள் உள்ளன. ஆனால், உங்கள் எழுத்துக்களில் நீங்கள் பொதுப்பாதையை எடுத்துள்ளீர்கள். நாவல்களிலும், நாவல்களுக்கு அப்பாலுள்ள கூற்றுக்களிலும், எழுத்துக்களிலும் அப்படிஎடுத்துள்ளீர்கள். அதற்காகத்தானா நீங்கள் ஒரு எழுத்தாளாராக வந்தீர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அல்லது அதுஉங்களுக்கொருஇரண்டாம் நிலை உந்து விசையா? அதாவது, அந்தக் காலகட்டத்தின் அலுவல்களில் தலையிடும் அவாவா? து
    颚 2. பார்க்கிற
    ஒரு மூடக் கேள்வி என்றே எண்ணுகின்றேன். எழுத்தாளனே, தயவுசெய்து நல்லவிசயங்களை,சோகமான விசயங்களை, கவித்துவமான விசயங்களை போய் எழுது என்று ஜேர்மனியில் எப்பொழுதும் சொல்லமுயற்சிப்பார்கள். எங்களிடம் இலக்கியம் இருக்கும் வரைக்கு அது அரசியல் கேள்விகளுக்கும்முகங்கொடுக்கும். அண்மைக்காலத்தில் என்னை மேலும் மேலும் இயக்கிக் கொண்டிருப்பது, எழுத்தின் நிலைமை மாறி விட்டது என்பதே. ஏனெனில் வாழ்க்கை நிலைமை மாறி விட்டது. மனித இனம் முதல் முறையாகத் தங்களைத் தாங்களே அழிக்க இயலும். ஹிரோஷிமாவுக்குப்பிறகு, நிலைமை வருடா வருடம் மேலும் மாறுகின்றது. அதனால் ஒருநாளைக்குமறுநாள் எம்மால் மனித இனத்தை, வரலாற்றை ஒருமுடிவுக்குக் கொண்டுவர முடிகிறது.
    நீங்கள் ஐரோப்பாவின் மத்தியில், ஜேர்மனியில், வாழ்கின்றீர்கள். உலகில் வேறெங்கிலும் விட இங்கு, அணுவாயுதங்கள் கிழக்கிலிருந்து மேற்குவரை குவித்து வைக்கப்பட்டுள்ளது. இது ஒருவருக்குப்புரியாவிட்டால் அவர் அதிர்ஷ்டக்காரர் மட்டுமல்ல, ஓரளவு மூடருங் கூட. அதை ஒவ்வொரு நாளும் அவர் உணராவிட்டால் அதிர்ஷ்டகாரரும் மூடருமாக, நிச்சயமாக, அவர் வாழ்ந்துகொண்டிருப்பதுமிகச் சிரமமாக இருக்கும். ஆனால், ஜேர்மனியில்பலஇளைஞர்கள் பயந்தவர்கள் என்பதுமட்டுமல்ல அவர்கள்தாம்பயந்தவர்கள்
    இதழ் - 17 )
    

    Page 88
    ரஷ்டி
    என்பதைக் காட்டுவதில் வீரமுள்ளவர்களும் கூட நல்லது, வாழ்க்கையில் பயப்பட எந்தக் காரணமும் இல்லை. வாழ்க்கை போய்க் கொண்டே இருக்கும். அதை நாம் நம்ப வேண்டும் என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பவர்களில் எனக்குப் பயம் இருக்கிறது. அவர்கள் இனிமேல் அதை நம்பமாட்டார்கள். இந்த நூற்றாண்டிலும், அதற்கு முந்திய காலத்திலும் ஜேர்மனியர்கள் செய்த பிழைகளில் ஒன்று, அவர்கள் பயப்படுவதற்குப் போதியளவு துணியவில்லை என்றே நான் நினைக்கிறேன். இந்த யதார்த்ததத்தையே தேவை என்கின்றது. மற்றப் பக்கம் அவர்களுடைய யதார்த்தத்தையே தேவை என்கின்றது. இந்தப் போராட்டம் எங்களிடம் இருப்பதற்கு இது ஒரு காரணம்.
    நாங்கள் சொல்லும் இந்த வனதேவதைக் கதை மரபைத்
    தவிர, நான் இந்தியாவிலிருந்து எடுத்த இன்னுமொன்று, வாய்மொழிமூலக் கதைசொல்லல் என்று நினைக்கிறேன். இன்னும் பெரும்பாலும்படிப்பறிவில்லாத நாடு அது என்பதால் வலுவும் உயிர் ஆதாரமும் வாய்மொழிமூலமரபில் இன்னும் இருக்கிறது. அந்தக் கதைகளில் இன்னும் ஆர்வமுள்ள விடயம் என்னவெள்றால், அது அதிகமான கேட்குநரைக் கொண்டிருக்கிறது. சிறப்பான கதை சொல்லிக்கு ஆயிரக்கணக்கான கேட்குநர்கள் இருக்கிறார்கள். அது பெரும் கலவையான உருவத்தைக் கொண்டது. ஒருபோதுமே நேர்கோட்டில் செல்லாது. அதாவது, ஆரம்பத்திலிருந்து முடிவுக்குச்செல்லாது அது பெரும்பிணைவுகளாலும்தற் சுற்றியும் செல்லும் முன்னவற்றை திருப்பிச்சிெல்லும் பின் செல்லும். சீனப் பெட்டி அன் பசிலவேளை
    உபயோகிக்கும். அதாவது கதைத்குள் கதை கதைக்குள்
    கதை. நிறகு அை அனைத்தும் திரும்பியும் வரும். அதுسي உருவற்றிது ருக்கும். அதைப் "ಲ್ಲಿ து
    ப்கின் நிறைந்தது போலிருக்கும். கதை"சீெல் و بهمدت
    விருப்பத்தில் அது தங்கியிருக்கும்ூலுைத்தது மாதிரி
    எதையும் செய்வரர் ப்ரேது. அதற்கு நேரெதிரான கேள்வியென்திரக்குள் எழுந்துள்ளது. விவாதத்திற்காக ஒன்றை துக் கொள்வோம். அதவாது, அது
    உருவமற்றதல்லவென்றும், உருவமுள்ள அது எப்படி இருந்தும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது என்றும்,அது ஏதோ நல்ல காரணங்களுக்காத்தான் இந்த உருவத்தை எடுத்திருக்கிறதென்றும் எடுத்துக் கொள்வோம். நாவலாசிரியரிலும் பார்க்க மிக அதிகமாக ஒரு கதை சொல்லிக்கு கேட்குநரை இழுத்துவைத்திருக்க வேண்டும் என்றபிரச்சினை உள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. நாவலாசிரியனுக்கோ ஒரு வாசகன் எப்பொழுது சலிப்படைந்து அப்புத்தகத்தை மூடி வைப்பான் என்று தெரியாது. கேட்குநர் எழுந்து போவதோ, முட்டைகள் வீசுவதோ, அல்லது எதுவுமே, கதைசொல்லிக்குத் தெரியும். ஆகவே அவன் செய்வது அனைத்துமே கேட்குநரை இருத்தி வைப்பாற்காகவே செய்கிறான். இந்த யுக்திகள், வளைவுகள், நெளிவுகள், சிக்கல் கொண்ட உருவம் என்பவை, கேட்குநர்கள் கேட்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் என்று எனக்குப்புரிகிறது.
    C காலம்
     
    
    கிறாஸ்:
    உதாரணமாக Tristam Shandy போன்ற நாவல்களில் அப்படியானதொரு குணத்தைத்தான் பார்க்கிறேன். சொல்லப்போனால்,இரண்டுகலாசாரங்களுக்கு இடையேயும் உள்ள எல்லையில் இப்படியான எழுத்துக்கள் தான் இருக்கின்றன. ஆகவே, அந்தக் கலாசாரத்திலிருந்து இந்தக் கலாசாலத்திற்கு வந்த குடியேறி நான் என்பதால், அந்தப் பெட்டி படுக்கைகளை என்னுடன் கொண்டு வர முடிந்திருக்கிறது. அத்துடன் அப்படியானதொன்று ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதையும் அறிய முடிகிறது. ஆகவே என்னைத் தொடர்புறுத்திக் கொள்வதற்கும் என்னிடம் ஏதோ இருக்கிறது.
    க்டான்ஸ்க்குநான் திரும்பிப்போக்கும்போது இந்தப்போகும் உணர்ச்சி உள்ளது. இப்பொழுது அந்த நகரத்தை போலிஷ் மக்கள் திரும்பக் கட்டியதைப் பார்க்கிறேன். சில நிமிடங்களின் பின் அது இனிமேல் டான்சிக் அல்ல என்பதும் அது தொலைந்து போனது என்பதும் எனக்கும் தெரிகிறது. அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஒரு இடிமில்லாமல் பல இடங்களிலும் இருப்பதைப் பற்றிநான்முறையிடவில்லை. ஓரிடமில்லை என்பதும்மிதநல்லதொரு உணர்ச்சியையே எனக்குத்தருகிறது: பய்த்துடன்"கூடிய நடுக்கமாக, T85.
    ல்ல்ைப்ப்டுத்துவதாக, வெளியேயுள்ளு C it. சார்ந்தவர்களிர்ச் 懿堡历莎6u,
    இழந்தவைகளைத் தெரிந்தவனாக் இருத்தல் அவற்றை
    மொழியில் சுமந்துசெல் லுதல் அறிவுடன் நாம் கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். இந் பூக்ரீநாம் இப்போது இருக்கிறோம்.
    அப்படியானால், கதைகளைச் சொல்லுவது என்ற கேள்வியா? என்னை எழுத்தாளனாக்கியது எதுவென்றால் கதைகளைச் சொல்லும் அந்த அவா என்றுதான் எனக்குத்தோன்றுகிறது. நான் வளர்ந்த இலக்கிய மரபு - அதாவது, நான் சிறு குழந்தையாக இருக்கும்போது எனக்குச் சொல்லப்பட்ட கதைகள். அராபி இரவுக் கதைகள் போன்ற கதைகள். அப்படிப்பட்டவனதேவதைக் கதைகள். ஆனால் அவற்றுக்கு மேலாக, அவை பொய்யானதாக இருக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றேநான்நம்பஆரம்பித்தேன். அதாவது புனைவுகள் என்றால் பொய்யாக இருக்கவேண்டும். அத்துடன் அவை அதிசயமானவையாகவும் இருக்க வேண்டும். குதிரைகளும் கம்பளங்களும் பறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தக் கதைகளை அப்படி அற்புதமாகச் சொல்லுவதால், வேறு எந்த வழிகளிலும் சொல்ல முடியாத ஒருவகை உண்மையை உண்மையாகச் சொல்லலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அப்படிக் கதைகளைச் சொல்லுவதே இயல்பானது என்ற எடுகோளுடன் நான் நீண்ட காலம் வளர்ந்தேன். நாவல் பற்றி எதிர்ப்பார்வையுள்ள ஒரு காலத்தில், நான் சீரியஸாக எழுத வெளிக்கிட்டபோது, எனக்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அதாவது நாவல் ஒப்புப் போலியாக இருக்க வேண்டும். அது உலகத்தைப் பிரதிபண்ண வேண்டும். இயற்பண்பின்அல்லது சமூக யதார்த்தத்தின் விதிகளுக்குக்
    36
    இதழ் 17
    

    Page 89
    கிறாஸ் :
    ரஷ் டி
    கிறாஸ்:
    கீழ்ப்பணிய வேண்டும் போன்றவை. என்னுடைய எடுகோள்களுக்கு எதிரானதாக, மேற்கிலுள்ள பலருடைய எடுகோள்கள் இருந்ததால் நான் என்னுடன் இடைவிடாது போராட வேண்டியிருந்தது. மேற்கிலுள்ளவர்களுக்கு தற்புனைவுகள் அல்லது கற்பனையை உபயோகிப்பது விதிவிலக்கனாவை. எனக்கு அவை இயல்பானவை. ஒருவரிடம் அதேபோன்ற அனுபவம் உள்ளதா இல்லையா என்பதிலும் பார்க்க, அவர் எப்படிப்பட்ட இலக்கியச் சூழலிலிருந்து வருகிறார் என்பதே முக்கியம் என்று நான் சிந்தித்தேன்.
    யுத்தத்தின் பின் உண்மையில் நான் திரும்பவும் வாசிக்க ஆரம்பித்தேன். மற்றவற்றையும் வாசிக்க ஆரம்பித்தேன். ஜேர்மனியின் ஆரம்ப வெளிப்பாட்டுவாதம், சர்ரியலிச ஆசிரியகள் போன்றதடுக்கப்பட்ட இலக்கியத்திலும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. யதார்த்தத்தைப் பிரதிபண்ண, இந்தச் சிற்றறிவுள்ள யதார்த்தவாதத்துடன் என்னால் எழுத முடியவில்லை. என்பிள்ளைப் பிராயத்திலிருந்தே ஜேர்மனிய கற்பனாவாத மரபாலும் கவரப்பட்டிருந்தேன். வனதேவதைக் கதைகள். அவை உண்மையைச் சொல்லுகின்றன. பறக்கும் குதிரை உண்மையில் பறக்கின்றது.
    மீன்கன் கதைக்கின்றன. qpሠ
    வனதேவதைக்
    saiT65) jဓါဓ၈ဓစ္ကို ரி. தட்டையான யதார்த்தவாதத்திற்கான மெய் களைச் சேகரிக்காமல் இன்னும் மேலான வளம்மிக்க உண்மைக்கு எங்களைக் கொண்டு
    செல்லுகின்றது.
    எங்களிடம் பல யதார்த்தங்கள் உள்ளன. எங்களின் பிரச்சினை என்னவென்றால், பல யதார்த்தங்கள் உள்ளன என்று நாம் ஏற்பதில்லை என்பதே. இந்தப் பக்கம் இந்த என்ற உணர்ச்சிகள். ஒரு எழுத்தாளனுக்கு மொழி ஒரு வீடு போல. அந்த உணர்ச்சி எனக்கும் இருக்கிறது. மொழிக்கு இருக்கும் உறவு. எனக்கும் ஓரிடம் இருந்தால் அது இருக்கும். அதுதான் உங்களுக்கும் இருக்கும். ஆனால் எங்களுக்கு ஒரு விசேடமான பிரச்சினை இருக்கிறது. அதுதான் எங்களுடைய அயலவர்கள் திரும்பவும் பதட்டப்படுவதற்குரிய காரணம். மற்றவர்களுக்கு அது ஒரு சின்ன விடயம். ஆங்கிலேய, டச்சுக்கார, ஃப்ரெஞ்சுக்கார,
    சின்ன விடயம். ஆனால் ஜேர்மனியிலுள்ள இளைஞர்களுடக்கு அது மிகப்பெரிய விடயம். அவர்கள் கிழக்கு ஜேர்மனியர்களா அல்லது மேற்கு ஜேர்மனியர்களா என்றுவிளங்கப்படுத்தவேண்டும்.
    காலம்
     
     
     
     
    
    ரஷ்டி
    6 6
    தேசம் போன்ற ஒரு வார்த்தையை உபயோகிக்கவே நாம் பயப்படுகிறோம். ஃப்ரெஞ்சு தேசம் என்று ஒருவர் சொன்னால் அதன்பின்னால் மேலாதிக்கவாதம் இருக்கிறது. ஆனால் ஜேர்மனியில் ஒருவன் சாதாரணமாக ஜேர்மன் தேசியம்என்றுகதைத்தால் அங்கு நவீன தேசியம்வளர்கிறது என்று அனைவரும் பயப்படுகிறார்கள். அது ஒருவகைத் தீட்டு
    விநோதமான ஒரு உண்மையை நான் கண்டு பிடித்தேன்.
    அதாவது, உருவகப்பாங்கான, கற்பனைத்தனமான எழுத்துக்களாக என் எழுத்துக்கள் இருப்பதற்கான ஒரு காரணத்தைக் கண்டுகொண்டேன். உருவகம்-Melaphor -என்ற வார்த்தையும் translation என்ற வார்த்தையும் ஒரே கருத்துடையவை. Translation என்றால் இலத்தினில் எடுத்துச் செல்லல் என்பதாகும். கிரேக்கத்தில் mataphor என்றால் எடுத்துச் செல்லல். ஆகவே என்னை ஆட்கொண்டிருக்கிற குடிபெயர்வு என்ரீருத்தாக்கத்திற்கு என்னை அது எடுத்து வருகிறது: புத் ளயும் எடுத்துச்
    செல்லுகிறார்கள், ?ர்ெதீகமாகவே அவர்களையும் ஒரி இடத்திற்கு எடுத்துச் ர்க்ள், குடிபெயர்வுச் செயல் oಕ್ತಿ எப்படியோ ளாக்குகின்றது. எடுத்து சல்லப்பட்ட
    டச்
    (5 மக்களாக்குகின்றது. செதுர்ழே வ்ர்கள் உருவகப்
    படுத்தப்பட்
    உங்கள் கயம் எங்கே இருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள். வேரை, எங்கிருந்து வருகிறீர்கள் என்பதை,
    மரபுகளில் வாழகின்றீர்கள் என்பவற்றை எல்லாம் குடியேறிகள் இழந்து விடுகிறார்கள். மறுபக்கத்தில்,புதிய மொழியைப் பேசும் புதிய இடத்தில் அவர்கள் இருப்பதைக் காண்கின்றார்கள். அதனால், அவர்கள் தங்கள் சுயத்தை மீளவும் கண்டுபிடிக்க வேண்டி இருக்கின்றது. எப்படி இருப்பினும் இந்த நூற்றாண்டு குடிபெயர்வாளர்களினதும், அணுகுண்டினதும் நூற்றாண்டு தானே. தெரிவினாலும் சரி, தேவையினாலும் சரி, ஆரம்பித்த இடத்திலும் பார்க்க வேறெங்கோ இறுதியில் சென்றடைந்தவர்கள் எத்தனையோ பேர். ஆகவே அப்படியான மூலத்தில் இருந்து தான் இப்படியான மீள் நிர்மாணத்தை அரம்பிக்கலாம். சுயம்பற்றிய பழைய வரைவிலக்கணத்தில் மக்கள் அடைபடாமல், புதியவற்றை உருவாக்குவது இனிமேல் அவர்களுக்கு சாத்தியமாகும்.
    The Listener är 27. 1985
    (இந்த உரையாடல் ரஷ்டி Satanic Verses ஐப் பிரசுரித்து இரானிய கொமினிஃபாதவாப்பிரகடனப்படுத்துவதற்கும்பேர்ளின் சுவர்இடிபட முன்பும்நடந்தது)
    தமிழில்:என்.கே. மகாலிங்கம்.
    இதழ் - 17 )
    

    Page 90
    இலைகளையெல்லாம்
    மரங்கள் ஒவ்ெ இழ
    மஞ்சளாய் சிவப்பாய்நிறம்மாறி இருந்த இலைகளையெல்லாம்மரங்கள்
    ஒவ்வொன்று ஒவ்வொன்றாய் இழந்துகொண்டிருந்த நாள். குளிரை எதிர்த்து நிற்கச் சகல தயாரிப்புகளிலும் மனிதர்களும் மரங்களும் இறங்கியிருந்த காலம், “எங்களை எல்லாம்பார்க்க உங்களுக்கு என்ன ஏமாந்தவங்கள் மாதிரித் தெரியுதோ?”ரொறன்போவில் இருக்கின்ற401 என்று அழைக்கப்படுகின்ற பெருஞ்சாலையில் நூறு மைல் வேகத்தில் காரை ஒட்டிக் கொண்டே சூடாக இந்த நண்பர் கேட்ட போது அச்சம்
    ஏற்பட்டது. அங்கேயே எங்காவது தள்ளிவிடுவார் போல இருந்தது.
    ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை கவிதைத் தொகுப்புவெளிவந்தபிறகு இதுபோல பல நண்பர்கள் என்மீது எரிச்சல் அடைந்திருப்பதை உணர முடிகின்றது.
    “கவிதையில் இருந்து நாடகத்திற்குச் சென்றதன் பின்னால் கவிதை பற்றிய முனைப்பும் தேடலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே எழுதியவற்றைப் பார்க்கும் போது சற்று மனம் சங்கடப்படுவதை ஒதுக்கிவிடமுடியவில்லை"என்று அக்கவிதைத்தொகுப்பில் என்னுடைய குறிப்பில் எழுதியதன் வினைதான் இது.
    "அப்ப முந்தி நீங்கள் எழுதின கவிதைகள் நல்லது என்று நாங்கள் நினைச்சதெல்லாம்பிழை அப்படித்தானே?
    “இப்பளழுதின இந்தக்கவிதையெல்லாம் சரியில்லை எண்டுஎப்ப சொல்லப் போறியள்?
    “கவிதையை பற்றி ஒரு முடிவுக்கு வந்தாப் பிறகு இந்தத் தொகுப்புகளை எல்லாம் விடுங்கய்யா"
    கவிதை பற்றிய சில அடிப்படைகளைச் சற்றுத் தெளிவு படுத்திக்கொண்ட பின் இந்தக் கேள்விகளையெல்லாம் எதிர்வு கொள்வது இலகுவானதாய் இருக்கும் என்று எனக்குள் படுகிறது.
    கவிதை என்பது நுட்பமானதாய், சொற்சிக்கனம் நிறைந்ததாய், சொற்களின் புகை மூட்டமாய், படிமங்களின் அழகுத் தோட்டமாய், வாசகனை அவன் அறியாத உலகங்களுக்கு நடைபோட்டு அழைத்துச் செல்லும் வலிமையும் சூட்சுமங்களும் நிறைந்ததாய், புதிய தரிசனங்களைத் தருவதாயும் புதிய பரிமாணங்களைத் தொடுவதாயும் இருக்கவேண்டும்.
    ( காலம்
    
    வான்றாய்
    O ந்து கொண்டிருந்த நாள்
    ஏராளமாய் வெளிவருகின்றதமிழ்க்கவிதைகளை வாசிக்கின்ற போது, மொழியோடு அவர்களுக்கு இருக்கின்ற அனுபவம் பற்றிய கேள்வியைஎனக்குள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றது. கவிதைமொழி பற்றிய தேடல்கள் இவர்களுக்குள் இருப்பதற்கான எந்த அடையாளங்களையும் என்னால் உணரமுடியவில்லை. இன்னொரு கவிஞனின் மொழியைத் தனது மொழியாக நினைத்து ஏமாந்து போன கவிதைகள் ஏராளம். இந்தக் கவிதைகளுக்குள் படர்ந்து போய்க் கிடக்கின்ற இரவல் அனுபவங்கள் வாசகர்களை நெருடுவது இருக்கட்டும், கவிதையுடனான உறவையே அதுமுறித்துவிடுகின்றது. கவிதை எழுத ஆசைப்படுபவர்கள் சமூகத்திற்கு அறிவுரை சொல்ல நிறைய ஆசைப்படுகின்ார்கள். சுவரொட்டி ஒன்றில் எழுதி இருக்க வேண்டிய அற்புதமானவிடயத்தைக் கவிதை என்றுஎழுதிவீணடித்துவிடுகிறார்கள். அரசியல் கட்சியை அல்லது அரசியல் கோசத்தைக் செ\ கவிதைக்குள் அடக்க அடங்கா விருப்பம்கொள்ளும்போது ழி கவிதை தோற்றுப்போய்விடுகின்றது. கவிஞன் தன்னுடைய விரிந்த அனுபவத்தின் ஆழத்தின் ஊடாக வாழ்க்கையின் LJ கோரிக்கையற்றுக் கிடக்கின்ற கூறுகளையும், அதனுடைய ன் வண்ணங்களை யும், முரண்பா டு களையும், அவஸ்தைகளையும் பார்க்கின்ற ஆற்றலைப் பெறுகின்றவன். இத்தகைய சிருஷ்டிகளினாலே நல்ல கவிதைகளைத் தருகின்ற கவிஞர்களாக இருக்க முடியும்.
    இன்னோர் துயரம் அடிக்கடி நிகழ்ந்து விடுகின்றது. ஒரு கவிதையை, ஒர் தொகுப்பை வெளியிட்டதும் கவிதையின் உச்சத்தைத் தொட்டு விட்டோம் என்கின்ற தற்திருப்தி எல்லா இடங்களிலும் பரவிக்கிடக்கின்றது. இது கவிதையில் முன்னோக்கிநகர்வதற்கும் நல்ல படைப்பாளியின் உருவாக்கத்திற்கும் பெரும் தடைக்கல்லாய் இருந்து கொண்டே இருக்கின்றது.
    கவிதை பற்றிய இத்தகைய அளவுகோல்களும் கோட்பாடுகளும் கவிதை பற்றிய முடிந்த முடிவான கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்படுமா? என்று கேட்கின்ற உரிமை எல்லாப் படைப்பாளிகளுக்கு மட்டுமில்லை, எல்லா வாசகர்களுக்கும் உண்டு. இதில் நின்றும் விலகி இன்னோர் கோட்பாட்டை முன்வைத்து இதுதான் கவிதை என்று சொல்வது கவிதையைப் பற்றிய விவாதத்தில் சாத்தியமானதாயே இருந்து வருகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளுகின்ற அதேவேளை, கவிதை பற்றிய இந்த அளவீடுகளோடும் படைப்பாளி பற்றிய நம் கணிப்பீடுகளோடும் ஏற்கனவே நான் எழுதிய கவிதைகளைப் பார்க்கும் போது சற்று மனம் சங்கடப்படுவதை ஒதுக்கிவிட முடியவில்லைத்தான். 88 இதழ் 17 )
    

    Page 91
    "நேரமாயிடுத்து
    சின்னான் எழுப்பினான். அடுத்த அறைக்குப் போனார்கள். திரை மறைவில் தெய்வம் தூங்கிக் கொண்டிருந்தது.
    "இப்பக் கிளம்பினா,இருட்டறதுக்குள்ளே வந்துட்லாம்"
    சின்னான் சொன்னான். கூட நின்றவர்களும் நடுவில் மறைத்திருந்த திரையைப் பார்த்தபடி ஆமேததித்தார்கள்.
    உள்ளே இருந்து இருமல் சத்தம்.
    “வேணாம்னு சொன்னா விட மாட்டேங்கறீங்களே”
    ஆணா பெண்ணா என்று அறியமுடியாத குரல். காராம்பசுவின் தினமான முனகல் போலவும் இருந்தது.
    “வருசா வருசம்நடக்கற காரியம். ஆயிரம் ரெண்டாயிரம் வருசமாத் தப்பலே.இந்த வருசம்போகல்லலேன்னா ரொம்ப வருத்தப்
    படுவாங்க"
    வயதில் மூத்த ஒரு பெண் நைச்சியமாகச் சொன்னாள்.
    டீசல்வேனுக்குக் கூடஏற்பாடுசெய்திருக்கு"சின்னான் கூடவே சேர்த்தபடி திரையை விலக்கப்பார்த்தான்.
    "ஏய்யடுத்தாவை விடு.சாமி குத்தமாயிடும்” வயதானவள் அவனை அவசரமாகத் தடுத்தாள்.
    "புஷ்பரதம்.பல்லக்கு-எல்லாம்போய்மோட்டார் வண்டி அதுவும் போன வருஷம் வழியிலே நின்னுபோய்மெனிக்கானிக்குவர்றவரைக்கும் நான் கொட்டுக் கொடுன்னுமுழிச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தேன்"
    தெய்வம் குறைப்பட்டுக் கொண்டது. ஆனாலும் அது கிளம்பி வரும்என்றேனல்லோருக்கும்பட்டது.
    "அதொண்ணும் ஆகாது. அருமையான வேன். முகப்புலே அழகாப்பூவெல்லாம் கட்டிஜிகினாப் பேப்பர் ஒட்டிச்சோடிச்சு இருக்கு. உன் காவடியிலே உக்கார்ந்து பிரசாதம் குடுக்க நானு. கண்டல், புட்டு, இலையப்பம், இலந்தப்பழம், தேங்கா பர்பி.பார்த்துப்பார்த்துச் செஞ்சு
    ச்சிங்க்க
    சின்னான் சொன்னபோது இடைமறித்தது தெய்வம்-“எனக்கு என்ன பிரயோஜனம்? நானுஅதெல்லாம் சாப்பிடவா முடியும்?”
    As faste
    
    കഞ്ഞ
    “என்ன பண்றது.தெய்வமாகித்தொலைச்சுட்டியே"வயசானவள் கரிசனத்தோடும் அபிமானத்தோடும் சொன்னாள்.
    “சரி, வாசல்லே இருங்க . ஒரு பத்து நிமிசத்திலே திரையை விலக்கிட்டு உள்ளே வாங்க. கிளம்பலாம்"
    பத்து நிமிடம் என்றதுஅரை மணிநேரமாகிவிட்டது.
    “சீக்கிரமாகக் கிளம்பினாச் சீக்கிரமாத்திரும்பிடலாம். பொழுது சாஞ்சுடுச்சுன்னா மலைப்பாதையிலே வண்டி ஒட்டிட்டு வர்றதுக்குள்ளே உசுருபோயித்தான் திரும்பிவரும்" vn
    சின்னான் முனகினது உள்ளே கேட்டிருக்கவேண்டும்.
    "அப்படி நான் போக விட்டுடுவேனா என்ன?”
    இருமலில் முடிந்த கேள்வி. தெய்வம் கொஞ்சம் சிரித்துத் தன் பொறுப்பான தலைமையை உறுதிப்படுத்திக்கொள்ளப்பார்த்தது.அடுத்த இருமலில் கரைந்தது.
    “போகலாம்"
    திரையை விலக்கினார்கள். பெரிய மண் உருவத்தை டீசல் வேனின் முகப்பில் ஏற்றினார்கள். முகமும் உடலும் குழம்பிய உருவமாக இருந்தது அது போன வருசம்ஆட்டுக் குட்டி போல். அதுக்கு முந்தின வருசம் தேயிலை பறித்துப் போடும் பிரப்பங்கூடை போல. இந்த வருசம்
    لمنعك
    மலைச் சரிவில் ஜாக்கிரதையாக வண்டியை ஒட்டிப் போனான் சின்னான். பக்கத்தில் குட்டையனும் அவனுடைய மருமகனும் இருந்தார்கள். குட்டையன் மருமகன் ஒரு சிவப்புத் துணியைத் தலையில் கட்டியிருந்தான்.
    வயதானவளும் இன்னும் சில பெண்களும் வண்டியில் பின்னால் ஏறியிருந்தார்கள். கைகளைக் கொட்டிக்கொண்டு அவர்கள் கூடவே பாட கேசட்டேப்ரிக்கார்டர் முதன்மையாகப்பாடியது. இந்தத்தெய்வம் குறித்துக் காலம்காலமாக வாய்மொழியாக வழங்கிவரும்பாடல்கள் அவை,
    முன்னாலே வரகவட்டையில் இடப்பக்கம் போகணும்"
    குட்டையன் நினைவுபடுத்தினான். முதல் ஊர்.
    சின்னான் இஞ்சினை நிறுத்தி விட்டு காக்கி நிஜாருக்கு மேல் ஒரு சரிகைத் துண்டைக் கட்டிக்கொண்டான். வெளியேகுதித்துத்தாவி, வண்டியின் முகப்பில் ஏறித் தெய்வத்தின் காலடியில் சம்மணமிட்டு உட்கார்ந்தான்.
    89 இதழ் - 17 )
    

    Page 92
    வயதான பெண் டேப்ரிக்கார்டர் சத்தத்தை அதிகமாக்க, கூடப் பாடியவர்கள் குரலும் உயர்ந்தது.
    R 59 எங்கே யாரையும் காணோம்
    சின்னான் கீழே பார்த்துக் கேட்க, எங்கேயோ ஒரு கதவு திறந்த சத்தம்,
    “குறி கொஞ்சம் பிசாகாயிடுத்து. நேத்தே வருவீங்கன்னு சொல்லியிருந்தேன்"
    நடுவயதுக்காரன் ஒருவன் முன்னால் வந்து மரியாதையும் தயக்கமுமாகச் சொன்னான்.
    “நேத்து முச்சூடும் மோட்டார் சத்தத்துக்காகக் காத்துக்கிட்டிருந்தாங்க. நான் கூட வேலைக்குப் போகலே. நீங்க வருவீங்கன்னு குறி சொல்லிட்டு நான் இல்லாம இருக்கலாமா? ஆனாலும் ஏழு சோழியில் எந்தச் சோழி தப்பா உருண்ட்டிருக்கும்"
    பூசாரியோசித்துக்கொண்டிருந்தபோதுகுட்டையனின் மருமகன்
    விசாரித்தான் -“என்ன சோலிபாக்கறீங்க?"
    “காரைவீட்டுலேதொழுவத்துப்பக்கம்பழைய சினிமாப் படத்தை ஸ்டறேன். சனம் முச்சூடும்
    ܕ݁ܕ݂ܳ: % عصي அவன் சொல்லிக்கோண்டிருந்த போதே அந்தப்பக்கம் இருந்து விசில் சத்தம். | స్ట్రీ స్త్రీ స్ట్రేణితో
    பேச்சு”குட்டையன் சொன்னான்.
    எல்லாம் சின்ன சைஸ் புரஜக்டர்ே
    அங்கேதான்"
    "படம் அறுந்
    "சட்டுப் புட்டுன்னுவரச்சொல்லுப்பா எல்லோரையும்.முடிச்சுட்டு இன்னும் ஆறு ஊருபோகணும்"
    சின்னான் சொல்லப் பூசாரி காரை வீட்டுக்கு ஓடினான். அங்கேயிருந்து அவன் சத்தம் கொடுக்க ஆணும் பெண்ணுமாக ஒரு கூட்டம் பக்கத்து மண் குடில்களுக்கு அவசரமாக நகர்ந்தது.
    ஒருவர் இரண்டு பேராக வந்தார்கள். சிலர் கையில் பூவன் பழம். மேக்சிதரித்திருந்த ஒரு பெண் கையில் பால் பாக்கெட்டோடு வந்தாள். பூசாரி நீல நிற பிளாஸ்டிக் வாளியில் சூடாக எதையோ ஊற்றித் தூக்கிக் கொண்டு ஒட்டமும் நடையுமாக வந்தான்.
    “எங்கே உன்னோடவீட்டுக்காரன்"
    சின்னான் பால் பாக்கெட்டோடு வந்தவளிடம் கேட்டான்.
    “அதான் வருசம் பொறந்தபோது இது ஒரு பகல் நேரத்துலே ஏழெட்டு வயசுப் பையனா வீட்டுக்குள்ளே நடந்து வந்து முக்காலியிலே உட்கார்துக்கிட்டுச் சொல்லிச்சே. சினிமா செட்டு போடறஆளுகளோடு சேர்ந்தா நிறையச் சம்பாதிக்கலாம்னு . இழைப்புளியும் அறமுமாப் பையிலே எடுத்துவச்சுக்கிட்டுரயிலேறிட்டார்”
    ( காலம்
     
     
     
     
     
     
     
     
    
    அவள் சிரித்தபடி தெய்வத்தைப் பார்த்தாள். அது நான் எப்பச் சொன்னேன் என்றதுபோல் வெறித்தபடி இருந்தது.
    "அங்கே பட்டணத்திலேயும் வேலை சரிப்படலேன்னு வெளிநாடு போய்ட்டார். ஏதோ இது புண்ணியத்திலே நல்லா இருக்கோம். மாசா மாசம்மணியாடர் அனுப்பிடறார்."
    அவள் பால்பாக்கட்டைச் சின்னானிடம் நீட்டி விட்டு, மண் தரையில் விழுந்து கும்பிட்டாள்.
    பூசாரி நீல வாளியை சின்னானிடம் நீட்டினான்.
    “காரை வீட்டுலே தேத்தண்ணி போட்டு அனுப்பியிருக்காங்க. எல்லோரும் எடுத்துக்குங்க”
    "அந்தம்மாவரல்லியா?"டேப்ரிக்கார்டர்சத்தத்தைக்குறைத்தபடி வயதான பெண் கேட்டாள்.
    "எங்கே வர?"பூசாரி அலுப்போடு சொன்னன்."போன வருசமே அதுக்குக் கால் சரியா நடக்க முடியாம் இழுத்துக்கிட்டுதே.இது கிட்டக் கேட்டுப் பச்சிலையை, அரைச்சுத் தடவினாச் சரியாயிடும்னு குறி சொன்னேன் . கால்: இன்னும் தான் குணமாகுது . காரை வீட்டுக்காரருக்கு இது பேர்லே கொஞ்சம் வருத்தம்தான்.”
    தளைகள்
    அபஸ்வரத்தில் அழுகிறது முறித்துப் போட்ட புல்லாங்குழல்
    வண்ணத்துப்பூச்சியின் பிரிவு அதன் கண்களில் மூங்கில் குழலின் சுவர்களுக்குள் கறுப்பு மழை
    பிரிவின் மூர்க்கத்தோடு மோதுகிற காற்றின் மூச்சு அதன் இமைத்திரையில் நடுங்கும்
    இழந்தவற்றின் மீதான வலியின் துள்ளல்கள் அதன் உடல் வெளியில் துளைகளாகும்.
    இறுகிப்போன இருளையும்
    துளைகளிட்டு
    இசைக்க வல்லோன் ஆயின்
    இரவும் ஒரு புல்லாங்குழல் தான்
    தா. பாலகணேசன்
    27 மார்கழி 2000
    இதழ் - 17 )
    

    Page 93
    பூசாரி சாடைமாடையாகத் தெய்வத்தைப்பார்த்தார்.
    “சோழியைச் சரியா உருட்டினானா கேளு” என்று தெய்வம்
    கிசுகிசுத்ததுபோல்சின்னானுக்குப்பட்டது. அதுசும்மாத்தான் இருந்தது.
    "அப்ப ஏன் தேத்தண்ணி போட்டு அனுப்பிச்சாங்களாம்?” குட்டையன் குவளையில் தேத்தண்ணிரை உறிஞ்சியபடி சிரித்தான். “இஞ்சி, சுக்கெல்லாம் தட்டிப் போட்டு நல்லாத்தான் போட்டிருக்காங்க” என்று அவன் மருமகன் ஆமோதித்தான்.
    "அந்தம்மா கல்யாணம் கட்டிப்பத்துவருசம் கழிச்சு இப்பத்தானே உண்டாயி இருக்காங்க.புள்ளையோட இது காலையும் திருப்பிக் கொடுத்திடாதான்னு ஒரு நப்பாசைதான். இல்லே கொடுக்காட்ட நாம தான் விட்டுடுவோமா”
    பூசாரி ஒரு மண் குவளையில் தேத்தண்ணிரை ஊற்றித் தெய்வத்தின் முன் பிரியமாக நீட்டினான். பின்னால் உட்கார்ந்திருந்த வயதான பெண் அங்கிருந்தபடியே வாங்கிக் கொண்டுமடியில் படுத்துக் கொண்டிருந்த ஒரு சின்னப் பெண்ணுக்குக் புகட்டி விட்டுத் தானும் கொஞ்சம் குடித்தாள்.
    சின்னான் கேட்டாள் ക്സ് ,
    ஐே ) محکمې துே "கூறுகெட்ட ஆளா இருக்கியே.இ நாயித்துக் கிழமை ஆச்சே” பூசாரி காவிப்பல் தெரிய் சிரித்தான். “நாயித்துக் கிழமை
    எனக்குத் தான் பெண்டுநிமிரும் . நாலு படம் போடணும் . இவங்க
    . كيمي மாதிரியா . தோட்ட லுேறல் வாரா வாரம் கூலி. எல்லாம் இது பண்ற C ன்"
    தெய்வத்தைக் குற்றப்படுத்துவதுபோல் விரலைக்காட்டிவிட்டுக் கன்னத்தில் போட்டுக் கொண்டான். “ஏதோ இது புண்ணியத்துலே ஆப்பரேட்டர் வேலைகத்துக்கிட்டேனோ பொழச்சேனோ”
    "ஆமா.தோட்டத்திலே கொடுக்கிற கூலியைக் கொறச்சுட்டங்க. தேத்தண்ணித் தூள் விக்க மாட்டேங்குதாம். விக்காமலா இம்புட்டுத் தோட்டம். முதலாளிமாருகாரு, வங்களாமண்ணாங்கட்டி தெருப்புளுதி எல்லாம் நிலச்சு நிக்குது . இதுவும் வருசம் வந்து இருக்கியா செத்தியான்னு பார்த்திட்டுத்தான் போயிட்டு இருக்கு. நம்ம கதை கந்தலாத்த்தானே இருக்கு"
    வேனின் முகப்பில் ஏறி மேல் துண்டால் தெய்வத்தின் உடலை வாஞ்சையோடுதுடைத்தபடி ஒரு கைலிக்காரன் சொன்னான்.
    “போகும்போது அப்படியே வங்களா வாசல்லேயும் நிப்பாட்டிட்டுப் போகவேண்டியதுதானே?”
    காலம்
     
     
    
    }్యజోళ్ల
    ஒரு பெண் துடுக்காகச் சொல்லக் கூட்டம் சிரித்தது.
    “இதுவா . அங்கெல்லாம் எட்டிப் பார்க்குமா என்ன . ஏதோ ஆயிரம் வருசம் தாயாப் புள்ளையாப் பழகிட்டோம்னு வந்திருக்கு . அதுக்கும் முன்னே மாதிரிச்சுத்த முடியலே"
    சின்னான் சொன்னபடி பலகாரங்களை எடுத்துப் பூசாரியிடம் கொடுத்தான்.
    சின்னப் புள்ளைங்களுக்குக் கொடும் . மீதி சினிமா பார்க்கும்போது ஆளுக்கு ஒரு வாய் வரும்"
    பூசாரிவாங்கிக்கொண்டபோதுகாரை வீட்டுக்காரர் அவசரமாக வாசலுக்கு வந்தார். தெய்வத்தைப் பார்த்து அவசரமாகக் கும்பிடு போட்டுவிட்டுப்பூசாரியிடம் இரைந்தார்.
    “என்ன எளவுகுறிசொல்றீர். அடுத்த புதன்கிழமை பகலுக்கு மேலே இடுப்பு வலி எடுக்கும்னிரே. ஏதோ படம் பெயர் சொல்லி பாதி பாக்கும்போதுன்னுவரும்னிரேசோழியெல்லாம் உருட்டி. அவ இப்பவே கெடந்து ஒலயறா. மருத்துவச்சியைக் கூப்பிடப் போகணும். சைக்கிள் வேறேபஞ்சராகிக்கிடக்கு." *x
    லுயதா பெண் அவசரமாகவ்ேனிலிருந்து இறங்கினாள்.
    జ్ఞా
    * இந்த ஆளைப்பள்ளிக்கோடத்துலேபோய்திரும்பவும்எண்சுவடி
    "படிக்கச் சொல்லணும். இல்லே புதுசாச் சோழிவாங்கி இது கிட்டே வச்சு
    எடுத்துத் தரணும். எல்லாமே தப்புந்தவறுமாத்தான் செய்யறார்”என்று பூசாரியைப் பழிப்புக் காட்டி விட்டு காரை வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
    "நீங்க போங்க. நான் வேலையை முடிச்சிட்டுவரேன்.”
    "பாதியிலே இறக்கிப் போகாதே. தெய்வக் குத்தமாயிடும்" சின்னான் அவளைப்பார்த்துக்கத்தினான்.
    அவள் யாருக்கும் நிற்கவில்லை.
    "போய்ட்டு வரட்டுமே. நாம கிளம்பலாம். இன்னும் ஆறு ஊரு இருக்கே. அங்கே என்ன என்ன கஷ்டமோ நஷ்டமோககமோதுக்கமோ .போய் விசாரிச்சுட்டுச் சீக்கிரம் திரும்பணுமே”
    சின்னான் இடுப்பில் சுற்றியிருந்த சரிகைத் துணியைப் பிரித்தபடி கீழே இறங்கியபோது தெய்வம் சொன்னதுபோல இருந்தது. ஆனால் வெளியே வரும்போது அது பேசாது என்பதும் நினைவுவந்தது.
    அது சொல்லியிருக்கும்தான். பொம்பளை ஆளுகன்னா அதுக்குப்பட்சம்தான்.
    திரும்பவும் உச்சத்தில் ஒலிக்கத்தொடங்கியது.
    ★ ★ ★
    9 இதழ் - 17 )
    

    Page 94
    அதிர்ஷ்
    (ஹங்கேரி தேசத்தில் நடந்தது இந்தக் கதை. இதைச் சென்னையில்
    நடந்ததாக எழுதியிருக்கிறேன். உங்களுக்கு இதுபிடிக்கவில்லையானால் ஹங்கேரியில் அல்லது வேறு எந்தத் தேசத்திலேனும் நடந்ததாக வைத்துக் கொண்டாலும் எனக்கு ஆட்சேபனையில்லை. சம்பவம் நடந்ததுமட்டும்
    உண்மை)
    அன்று வழக்கம் போல் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு என் நண்பனின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். குறித்த நேரம் தவறி விட்டது. எதற்கும் இன்னும் கொஞ்சம் பார்ப்போம் என்று, கையிலுள்ள தினசரியை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்குச் சிறிது தூரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு வயதானவர் மெல்ல வந்து என் அருகில் உட்கார்ந்தார்; பத்திரிகையைப் பார்த்தார். என்னிடம் ஒரு ஷிட் வாங்கிக்
    கொண்டார்.
    செய்திகளை ஊன்றிப்படித்துக்கொண்டிருந்த என்னை,“ஸார்!” என்ற அவர் குரல் உலுக்கியது. “ஏன்?’ என்றேன். “இதைப் பார்த்தீர்களா?”என்று, தினசரியில் ஒரு இடத்தைச் சுட்டினார். அதில் ஒரு அமெரிக்க கோடீஸ்வரன் பணத்தைச் செலவழிக்க வழிதெரியாமல் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி காணப்பட்டது. அதைக் காண்பித்து அவர் கூறியதாவது:"பாருங்கள் ஸார்1எனக்கும் ஒருமுறை அதிர்ஷ்டம் வாய்த்தது. எனது மாமா ஒருவர், வார்சு இல்லாமையால்,தனது திரண்டசொத்தையெல்லாம்எனக்குஉயில் எழுதிவைத்திருந்ததாக,அவர் இறந்த சமயத்தில் வக்கீல்கள் மூலம் அறிந்த நான், அவர் ஊருக்குச் சென்று, சொத்துக்களை யெல்லாம் விற்று எடுத்துக்கொண்டு இங்கு வந்தேன்.”
    "சொத்துக்கள்!எவ்வளவு!”
    “பல லட்சக் கணக்காகப் பெறுமதியுள்ள சொத்துக்கள். அவ்வளவு தொகையும் கொண்டு வந்தேன். எனக்குத் திடீரென்று அதிர்ஷ்டம் கிடைத்தது வெளிக்குத் தெரியக் கூடாது என்பது என்
    எண்ணம். அந்தப் பணத்தை அப்படியே எனது கட்டுரைக் குவியலின் மத்தியில் கட்டிப்போட்டேன்.”
    "அப்புறம்-வாழ்க்கை நடத்த வேண்டுமே?”
    “அதற்கு முன் நான் பத்திரிகைகளுக்கு எழுதிச் சம்பாதித்து வந்தேன். அதுபோலவே பின்னும் வாழ்ந்தேன்.”
    ( காலம்
    
    “ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?”
    “எனக்குத் திடீரென்று அதிர்ஷ்டம் கிடைத்தது வெளிக்குத் தெரியக்கூடாது என்பது என் எண்ணம்”
    s
    ஏன்?
    “பணமுள்ளவன் முட்டாளாகி விடுவதையும், பணமற்றவன் கற்பனா சக்தி நிறைந்தவனாக இருப்பதையும் நீங்கள் உலகத்தில் பார்த்ததில்லையா? கற்பனையின் இன்பத்தை விடவா பணம் இன்பமளித்து விடப் போகிறது? ஆதலால்தான் நான் ஏழ்மையை விரும்பினேன். அவ்வாறே நடித்தேன். மிகக் குறுகிய துர்நாற்றம் அடித்த ஒரு சந்தில் சொற்ப வாடகைக்கு ஒரு சிறு அறையை அமர்த்தினேன். ஹோட்டலுக்குச் சரியாகப் பணம் கொடுக்க முடியாதவனைப் போல் பாவனை பண்ணுவேன். அழுக்குப்பிடித்து கிழிந்த சட்டைகளைத்தான் அணிவேன். இங்ங்ணமாக எனது வாழ்க்கையைக் கஷ்டப்பாதையிலேயே செலுத்தினேன். அப்படி இல்லாமல் எனக்கு வந்த அதிர்ஷ்டத்தைக் கூறிவிட்டாலோ அப்பா என் சிநேகிதர்களும், ஏன் - என் பகைவர்களுங்கூடக் கூடிவிடுவார்கள். அப்புறம் கற்பனையெல்லாம் பாழ்தான். பின் அந்தப் பணத்தை என்ன செய்வது என்று சதா சிந்தித்தேன். உறவினருக்குஎழுதிவைத்துவிடலாமென்றாலோ,எனக்குப் பிடித்தமானவர்கள் ஒருவரும் இல்லை. என் நண்பர்களே?நான் ஏழ்மையா யிருந்ததால் சரியாகக் கூடப் பேச மாட்டார்கள். அத்தகைய 'உத்தம அன்பர்களுக்கா கொடுப்பது? என்ன செய்வதென்றே அது சமயம் தோன்றவில்லை. என்னுடைய நிலையில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”
    “ஏன், எல்லோரும் செய்வதைப் போல் ஏதாவது தர்ம ஸ்தாபனத்திற்கு நன்கொடையாக எழுதிவைப்பேன்.”
    “பேஷ்! அதைத்தான் நானும் ஆரம்பத்தில் எண்ணினேன். ஆனால், மடாதிபதிகள் தங்கள் ஆசைநாயகிகளுக்கு என் பணத்திலிருந்து வைர ஆபரணங்கள் வாங்குவதையும், சத்திரங்களின் தர்மகர்த்தாக்கள் தமக்கு வேண்டியவர்களைப்போஷித்து மற்றவர்களைத் தள்ளிவிடுவதையும் நினைத்ததும் அத் தீர்மானத்தைக் கைவிட்டேன். அப்புறம் ஒர் இலக்கியப் பரிசு ஏற்படுத்தலாமா என்று யோசித்தேன். ஆனால்,பணம் ஏறியவுடன், எழுத்தாளர்கள் தங்கள் விலையற்றகற்பனா சக்தியைக் கடன் கொடுப்பதை எண்ணி அதையும் கைவிட்டேன்.”
    “கடைசியில் அந்தப்பணத்தை என்ன செய்தீர்கள்?”
    “அது வந்த வழியிலேயே செலவழிக்கலாமோ என்று
    எண்ணினேன். முன் காலத்தில் அரசர்கள் தாங்கள் பவனிவரும்பொழுது, தமக்குஎதிர்ப்பட்டவர்கட்கெல்லாம் தங்கத்தை வாரியிறைத்தார்களாமே.”
    92 இதழ் - 17 )
    

    Page 95
    "அதைப் போஸ்த் தாங்களுப் பந்தித்தவர்களுக்கெல்லாம்
    பணத்தைக் கொடுக்க உத்தேசித்தீர்களாக்கும்"
    " ஆனால், அதிலும் ஒரு தொல்?: நான்தான் புகழே விருப்பவில்லையே! அப்படிச் செய்தால் நான்கு பேரின் நன்மதிப்பையும், பத்திiாககளின் புகழ்ச்சிப் புராணத்தையும் நூற்:பேண்டும். இதெல்லாம் எனக்கு அறவே பிடிக்கவில்:L. ஆகவே, ஒருவரும் என்னை உணராமல் தா:ாஞ்செய்ய உத்தேசித்தேன். பேப்பருங்கையாகக் கனேக்குப்போட்டு, :1க்கு அறிமுகம் ஆகாதவர்களின் பெயர். விலாசம் முதலியவற்றைப் போட்டிப்பந்தயங்களில் பரிசு வாங்கும் அதிர்ஷ்டசாலிகள் ஜாப்தாபிளின்று எடுத்து அவர்கட்குத் தலைக்கு ரூபா ஐம்பதுக்கு போஸ்டல் ஆர்டர் அனுப்பி Eபத்தேன். கடைசியில் இதற்குப் பிடித்துEதயா சயன்'
    பேபடி
    'துரதிர்ஷ்டவசமாக அனுப்பிட போஸ்டல் ஆர்டர்களில் ஒன்று ஒரு பத்திரிகை நிருபனுக்குக் கிடைத்துவிட்டது அவன், நான் ஏற்கேனவே அனுப்பியிருந்தவர்களிடமெல்லாம் தகவலறிந்து போஸ்டல் ஆர்டனப் போட்டோ எடுத்து பெரிய வள்ளல் ஒருவர் இவ்வாறு தியாகம் செய்வதாகப் பிரசுரித்து விட்டான். அப்புறம் நான் தொடர்ந்து செய்தால் அகப்பட்டுக்
    கொள்: பேண்டிருப் என்று எண்ணி நிறுத்திவிட் டேன்."
    1851க்கும் அலுப்புத்தட்டியது. இவர் பேச்சுக்தமுடிபுெ இருக்காதோ என்று எண்: "அதை என்தான் பண்ணினீர்கள்?' என்றேன்.
    "நான் பல விதத்தில் தொலைக்க முயன்றேன். தெருவில் போதும் பொழுதே பணத்தை நழுவ விட்டு விடுவேன். அதில் சி: போக்யர்கள் என்:சக்கக் கண்டு என்னிடம் கொடுத்துவிடுவார்கள். வெற்றிEU பாக்குக் கண்டக்காானிடம் பத்து ரூபாய் நோட்டைக் கொ(த்துச் சில்றை வாங்காமற் போய் விடுவேன். காப்பி ஹோட்டல்களின் இனங்களுக்கு ஆடியில் பEாத்த வைத்துச் செல்பேன். இப்படி எத்தசேனயோ மு:ாறகள், ஒன்றிலும் ஒழிக்க முடியவில்' எனக்கு சுெறுப்பாய்க் கடப் போய்விட்டது நோட்டுக் கட்டுகEா எரி
    劃 謁疆
     
     
     
    
    எண்ணினேன். ஆனால் அது ஒருவருக்கும் பயன்படாது என்பதால் அப்படிச் செய்யா திருந்தேன். ஒரு சமயம் நான் பார்க்கிங் உட்கார்ந்திருக்கும் போழுது ஒருவன் ஐந்நூறு ரூபாய் நோட்டை என் ஜேபிபிவிருந்து திருடிவிட்டான். அப்போழுது ஒருபோசனை தோன்றிற்று என் நாம் ஒவ்வொருர் ஜேபியிலும் நோட்டுகளைத் திரிைத்துவிடக் கூடாது? சிங்காப் அப்படியே செய்தும் வந்தேன். கடைசியில்."
    "என்? அதற்கும் ஆபத்தா?”
    'துரத என் கேட்கின்றீர்கள்? நான் டிாாமில் போய்க் கொண்டிருக்கையில் பணத்தை எடுத்து ஒருவர் ஜே.பியில் தி:னித்தேன். அவர் அதைக் கண்டுவிட்டார். திருடன் போலிஸ் என்று கத்திEIம். அதுதான் முடிபு. அதிலிருந்து அந்த முயற்சிாய அடியோடு நிறுத்தி
    விட்டேன்.
    அப்போழுது நான் எதிர்பார்த்திருந்த நண்பன் வந்து விட்டான். நான் அந்த அதிர்ஷ்டசாலி பிடம் விடை பெற்றுக் கொண்டு என் நண்பனுடன் சென்றேன். அப்பொழுது அவன், "பைத்தியம் என்ன
    உாறிற்று? என்று கேட்டான்.
    "என்ன? பைத்தியமா? யாருக்கு? என்றேன்.
    "இவர் முன் பெரிய எழுத்தாளராயிருந்தார். பாவம் அறிவின் முதிர்ச்சியால் "ஸ்க்ரூ லூ'ாகி விட்டது என்ன வாவது பேத்திக் கொண்டேயிருப்பார்' என்றான்.
    ”பேத்தா? அது மகத்தாக் கற்பE%ன பல்பா? அபக்கIபோத்த சிறந்த கதாசிரியர்களைத் தவிர வேறு யாரால் துப்படிக் கற்பனை செய்ய
    ... -- முடியும்?
    "நீயும் ஒரு பைத்தியம்' E க்ாறு அன் மு:நுழEத்தது "ே காதின் விழாவில்:L,
    'ேேப்ே கே. கrேள் மொழிபெயர்:க்கொ:
    ளொன ஹங்கோர்பக் கதை
    1950இல் ப. ஜீவானந்தம்
    இலங்கை வந்தபோது,
    அமர்ந்திருப்போர் இடமிருந்து
    இரண்டாவதாக கே. கணேஷ்
    அடுத்து ப. ஜீவானந்தம்.
    93. శ్లో - 7 )
    

    Page 96
    இரக்கத்திற்கு ஆசிரியர் அவர்கள் 'காலம்’
    60
    வணக்கம்
    பின்வரும் கடிதத்தைப் பிரசுரித்துதவுவீர்கே இதழின் பிரதியொன்றினை மேற்கண்ட மு நன்றியுடையவனாவேன்.
    'காலம்' - 15 ல் வெளியான எம். வேத சகாயகு பார்வையில் ஈழத் தமிழ்ச் சிறுகதை எனும் கட்( கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. படித்துப்
    குழு வாதத்தின் - அல்லது குழு வாதத் விட்டிருப்பதன் பெறுபேறு இது. இருட்டடிப்ட இருட்டடிப்புக் கைங்கரியத்தில் இறங்கியிருப்பதை
    சாந்தன் பற்றிக் - கூட! - குறிப்பிடாத ஒரு
    அர்த்தமிழந்து போகிறதென்பதையும், கட்டுரை6 என்பதையும் விட, இது பற்றிச் சொல்ல வேறொன்
    YEAR FAN ( (Division of Aginc
    கல்யாணப் பூமாலைகள் ஆண்டாள் மாலைகள் சடைநாகம் கொண்டை மாலைகள்
    பூச்சரங்கள்
    米s ※※米※
    கைச்செண்டுகள்
    N
    கிறிஸ்தவத் திருமணத்திற்கான பூ அலங்காரங்க
    மரணச் சடங்கிற்கான மலர் வளையங்கள்
    FREE DELIVERY TO FUNE
    416292 8351,
    Complete line of p,
    Table - Chair Casino games Heliumbaloons Fog machine Bubble machine Wedding arch
    ※※米※米
    Tel: 416291 19
    (காலம்
    
    ரிய எழுத்தாளர்
    ளன நம்புகிறேன். (பிரசுரிக்கும் பட்சத்தில் குறித்த கவரிக்கு அனுப்பி வைக்க முடிந்தால், மிக்க
    மார் என்பவர் எழுதிய ஓர் இந்தியத் தமிழ் வாசகனின் திரை நண்பர்களால் - மிகுந்த ஆதங்கத்துடன் என் பார்த்தேன். நிற்கு இக்கட்டுரையாளர் போன்றோர் பலியாகி புகள் நடந்ததாகப் புலம்பும் இவர்களே இப்போது
    என்னென்பது! காரணத்தினாலேயே இந்த இருபது பக்கக் கட்டுரை யை எழுதியவர் மிகுந்த இரக்கத்திற்குரியவராகிறார் றுமில்லை.
    சாந்தன் (யாழ்ப்பாணம்)
    5y FLORIST ourt Party Rentals)
    Brides Banquets Brides maid and maid of honour flower Flower girls basket Head table centrepieces Guest table centrepieces Flowers for the ceremony Archdecoration
    Church decoration Sympathy arrangements Fresh cutflowers
    RAL HOME OR CEMETERY
    416 291 1919
    arty rental supplies
    D-J disco light
    Fine china
    Glass ware
    Curley linen
    Bars - tools Fantastic disposal table ware
    19,416.291 1337
    94 இதழ் - 17)
    s 米米米米米米
    ※※※
    

    Page 97
    கனடாவில் பெற்
    மகாராஜாவின் அ. முத்
    மனிதர்களுடைய நுட்பமான நடத்தை முத்துலிங்கம். இவரது கதைகள் நாட் அறியாத பாதையில் இட்டுச் செல்பவை.
    వ4 ఎ4 es 2
    குமார் மூர்த்தியின் சிறுகதைக குமார்
    வாழ்க்கைக்கும் மனிதத்துக்குமான குமார் மூர்த்தியி
    ※ ※
    لك
    செழ
    காலமும் தூரமும் இடமும் வெளி செழியனின் கவிதைகளுக்கு வழங்
    米 ※ 这
    தொடர்புகளுக்கு :
    ET
    P.O BO 509 Sr. C Toron
    M6C
    Can
    C காலம்
     
     
    
    றுக் கொள்ளலாம்
    ரயில் வண்டி
    துலிங்கம்
    நகளைக் கலைப் படைப்பாக்கியுள்ளார் ம் அறிந்த உலகங்களுக்கு நம்மை நாம்
    h
    ※ g
    ள்
    மூர்த்தி
    ா உறவுகளைப் பற்றிப் பேசுகின்றன. ன் சிறுகதைகள்
    M N N M ※ ※ 米
    ,ளற்ற தனித்த தீவுகளில் நிலவு ஈரமற்ற மழை
    மியன்
    யும் இருப்பும் இருப்பின் குலைவும் கியிருக்கும் வண்ணங்கள் புதியவை.
    4 ఎ% వ4 zis cr
    Χ 7305 air Ave. W Eo, ON 1CO
    ada.
    95 இதழ் - 17 )
    

    Page 98
    r கனடாவின் இலக் இயல் வி
    விருது பெறும் இலங்ை மலையகத்தின் மூ
    திரு. கே. கே
    இவரைக் கெளர திரு. கே. கணேஷ் அ
    45/7Gatti வெளியீட்டு நிகழ்வு
    இடம் வெள்ளவத்தை விரிவுரை மண் நாள் 02 ஜனவரி 20 LDIT6ð)Gu 5.00 0
    தலைமை : C3Lu JIT9rfuss C
    வரவேற்பும் அறிமுகவுரையும் தெளிவத்தை சிறப்புரை : பேராசிரியர் க விருதும் பரிசளிப்பும் : திரு. செல்வா
    ஒன்டாரியோ, பல்கை (கனடா தமிழ் இலக்கி சிறப்புரை பேராசிரியர் எ நீர்வை பொன் ஏற்புரை : கே. கணேஷ் நன்றியுரை எச். எச். விக்கி
    - ܬ
    காலம்
    
    கியத் கோட்டக்கி ன்
    jj 5 flygp
    கைத் தமிழ் எழுத்தாளர் த்த இலக்கியவாதி
    ண ஷ் அவர்கள்
    விக்கும் முகமாக வர்களின் சிறப்பிதழான
    (இதழ் - 77) ம் இடம் பெறுகிறது.
    இராமகிருஷ்ண மிஷன்
    ாடபம்
    03 வியாழக்கிழமை னி
    சோ. சந்திரசேகரன்
    ஜோசப் ா. சிவத்தம்பி கனகநாயகம்
    லக்கழக ஆங்கிலப் பேராசிரியர்
    த் தோட்டம் சார்பாக) ாம். ஏ. நுஃமான்
    னையன்
    ரமசிங்க
    96 இதழ் - 17 )
    

    Page 99
    
    

    Page 100
    LLLCLLLLLCLLLLLLL LGGLLLLLLL LLLLCLL KDLL GHHHHLLLLSSSaa0LLGGL00 00S LLLLLLLLS 000L0LL
     
    
    5635 Finch Avenue East, Unit 3, Scarborough, ON
    Tels 46.297.9875
    Fa x : 4 1 6 . 2 9 7 . 7 595