கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1991.12/1992.01

Page 1
CTT  Usu-as so uso o qī qT RĒ „LI 119 → dTĪ caso efī> Lęs rūs £ qȚ &ē - las cīs los to TT) res 15D-ı r-ı rī£; £;&fiso įgr ITI 3D củs 30 L us != 4) res &# LI LI *ī laps L + too cąo s IČīŤ qŤ r-ı-Loss -LI TTT ETT Ķsso Lop sa : gn 교통 역n uss U없. 州城山: 田 的o : 日n F府副 전n us E 때에 日그 res cas sēj - las cī£ 1ęs Loo-T) res 15D-Tir-ı rio q#đi=NovgT 119=Fr\sqī£TT ETI«, »LJI: BĦųos en EITRĀĒ uus=>Hır-ı Lisso rus rī Ei olur.Tilfo ff. 41-ı Lisso lo qo UsTio kao rại cus sẽ
TĪĢēlēs
 
 

; "톰"(日u엘비 때제uEDu얻s ıso L = 8x [5D lo os res 3D = fņu II lo s-ı ıųo o 15D rts + qī Fes los us qī LTD Laos res go — rī rīı ĐỀ BẾ TỔīs IgT = LI TI --oī los -i -as qī qū) + r\s cīs grī crı +> * rodījuo įI-Llaeuo qıftī'ıęsto eyoqousuH cTi < os LGD L = Loo off 15 £ - cos, kā, as uson arī kao lẻo # r'  -1  + RīŤ qŤ u eri - qı@_Lurnericos-lo qıfēııs=>=Ęo crī sē oặlas, noho IŠĒr-ırıđficos-s = orąışT askoolgi' sırrırē oặ&#qȚú5 --ụlosusųoĦTI LJrigo EILED-THE-Llos 139UILLI Los Lost+? qī qīā) + off cri crı đī> + o go qī Rīē u us + r\s cīs grī

Page 2
நோபல் பரிசு பெற்ற சான் கு கிய்
பர்டDாவின் இரும்புத் திரை விலகுமா?
கிடந்த முப்பது வருடங்களாக சோசலிசம் என்ற பெயரில் பர்மாவை ஆண்டுவரும் இராணுவ அதிகாரிகளின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்படுமா? கடந்த பல மாதங்களாக சிறையில் இருந்து தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவி சான் கு கிய் 1991ஆம் ஆண்டுக்கான நோபல் சமாதானப் பரிசு பெற்றதாக ஒஸ்லோவில் நோபல் பரிசுக் குழு (சமாதானம்} அறிவித்ததையடுத்தே சர்வதேச தொடர்புச் சாதனங்கள் இந்தக் கேள்வி யை எ மு ப் பி யுன் ன ன கடந் த ப வ வருடங்க ளா க வே மக்க ளி ன் ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் எதற்கும் விட்டுக்கொடாமல் மக்களைக் கொன்றுகுவித்துவரும் பர்மிய ராணுவம் இந்த விடயத்தில் இறங்கிவரும் என எதிர்பார்க்க இயலாது. ஆனால் சர்வதேச நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
சுமார் நான்கு கோடி மக்களைக் கொண்ட பர்மாவில் 1962ல் நி வின் (Ne Wiா) தலைமையிலான இராணுவம் மேற்கொண்ட சதிப் புரட்சியையடுத்து, நாட்டின் அதிபரான நி வின் சோசலிசப் பாதையே தமது கொள்கை எனப்
வரும் பர்மாவின்
பிரகடனம் செய்து, கடந்த முப்பது வருடங்களாக நாட்டைக் கொள்ளையிட்டு வருகிறார். போதியளவு இயற்கை வளம், மூலப்பொருள் கொண்ட பர்மாவில் திறமைசாவிகளுக்குக் குறைவில்லை. ஆசியாவில் செல் வந்த நாடுகளில் ஒன்றாகத் திகழவேண்டிய பர்மா ஐ.நா.வின் அண்மைய கணிப்பின்படி மிகவும் வறிய நாடாகவும், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் மிக மோசமான நிலையில் உள்ளது எனவும் தெரியவருகிறது.
1987க்குப் பின் கிழக்கைரோப்பிய நாடுகளில் நிலவிய கடும் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் போன்று பர்மாவிலும் தோன்றின. மக்கள் தமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் பெறுவதற்காகப் போராடத் தொடங்கினர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் போலிக்  ெகா ம் யூ ரிை ஸ் டு கள் து I க் கி எறியப்பட்டதுபோல் இலகுவாக பர்மாவில் எதுவும் நிகழவில்லை, பர்மாவில் ஆளும் வர்க்கத்துக்கு தேவையான இராணுவ உதவிகளை சீனாவும், சிங்கப்பூரும் தொடர்ந்து செய்து வருகின்றன.
நோபல் பரிசு பெற்ற சான் கு கிய், பர்மிய ராணுவ அதிகாரிகளால் நீண்ட காலம் வீட்டுச் சிறை யில்
 

ரவக்கப்பட்டுள்ளார். இவரது வெளியுலகத் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் இருபத்திநான்கு மணிநேரமும் ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் வீட்டைக் காவல் காக்கின்றனர். பத்திரிகைகளோ, இவருக்குரிய கடிதங்களோகூட இவரால் பெறமுடியாத நிலையே நிலவுகிறது. இ வருக்கு பரிசு வழங்கப் பட்ட விடயத்தைக்கூட இராணுவ அதிகாரிகள் இவரிடம் கூறவில்லை. தன்னிடமுள்ள சிறிய வானொலி மூலம் பி.பி.சி செய்தி கேட்டே தனது பரிசு பற்றி அறிந்தார் கு
ീl.
சான் கு கிய் இங்கிலாந்தில் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் கற்றவர். 1972ல் இங்கிலாந்தைச் சேர்ந்த விரிவுரையாளர் மைக் கே ல் அரி  ைஸத் திருமணம்  ெச ய் து  ெக ச எண் டு இ ரு ஆண்குழந்தைகளுக்குத் தாயானார். தனது தாயாரின் உடல்நலக் குறைவு காரணமாக நாடு திரும்பிய இவர், தனது நாட்டின் நிலையால் மனம் வருந்தி, அரசியலில் ஈடுபட ஆாம் பித் தா ர் - ம னி த உரிமை கட்காக வீதிகளில் இறங்கிப் போராடிய பர்மிய மாணவர், மக்களுடன் கு கி ய் இ ன பிணந்தார் . இந் த ப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். எனினும் மக்களின் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் போலிச் சமாதான முயற்சியில் இறங்கிய ராணுவ ம் , கட்சி களை இயங்க அனுமதிப்பதாக வும் , தேர் த லை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தது.
28 வருட ராணுவ ஆட்சியின் பின்னர் முதற்தடவையாக 1990ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் சான் கு கிய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி பெருமளவில் மக்கள் ஆதரவைப் பெற்று வெற்றியீட்டியது. ஏறத்தாழ 80% வாக்காளர்கள் இந்தக் கட்சியையே தேர்ந்தனர். நாட்டின் சகல மட்டங்களிலும்
இருந்து இராணுவத் தலையீடுகளை அகற்றி மக்களாட்சியை மலரச் செய்வதே தனது கட்சியின் முதல் நடவடிக்கை
எனக்கூறி, மந்திரிசபை அமைக்க முற்பட்ட சான் சூ கிய்யின் வீடு யூன் மாதம் 20ம் திகதி படையினரால் முற்றுகையிடப்பட்டது. உடனடியாக அவருக்கு இருந்த சகல
தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இவர் கைதாகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட அதே தேசிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அரசியல் கைதிகளுக்குரிய அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற நிலையில் மிக மோசமாக நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த அநியாயங்களை எதிர்த்துப் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மக்கள் ராணுவத்தினரின் மனிதவேட்டைக்கு ஆளா கி வருகி ன் ற ன ர் தனது செயல்களுக்கு தொடர்ந்தும் ராணுவ ஆட்சியினர் நியாயம் கற்பித்துவருகின்றனர்.
சான் கு கிய்  ைகதை யடுத் து இன்றுவரை நாட்டின் நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பர்மிய மக்கள் அயல்நாடான தாய்லாந்தில் அகதிகளாகியுள்ளனர். இங்கிருந்து பர்மிய ராணுவ ஆட்சிக்கு ы Ёl п гт д. Дь f 5ा णं खें मैं मE छं தி ட் டமிடப்படுகின்ற ன இந்த க்
சமயம் ,

Page 3
கிளர்ச்சிகளைத் திட்டமிடும், நடத்தும் அ  ைம ப் புக ள் பெ ரும் பா லும் ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகச் செயல்படுவதால் பர்மிய மக்கள் உண்மையான சுதந்திரத்தை எப்போது அ டை வார்கள் என்பது பெரும் கேள்விக்குறியே.
உலக நாடுகளில் மனித உரிமை மீறல்களை மிகமோசமாகச் செய்துவரும் நாடுகளில் ஒன்றாக பர்மா திகழ்கிறது. சர்வதேச பத்திரிகையாளர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தோர் போன்றோரை பர்மாவுக்குள் செல்லாதவாறு அந்த நாட்டின் ராணுவ ஆட்சி தடுத்துவருகிறது. உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் மிகக் குறைவாகவே நாட்டினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.
KNA INDA
BANGLADESH
LAOS
Rangoon THAILAND
இவ்வருடம் நோபல் சமாதானப் பரிசைப் பெற்றுள்ள சான் கு கிய்யிற்கு ஐரோப்பிய UT IT IT SILD 6óT Db 6 prš (gub Sakharov u f3 Lb, C35 m ri (36). Lu Den Norske Thorl of Bafros S60) 60T 6) u if sub கிடைத் துள்ளன . நோபல் பரிசு பெறுவதற்காக ஒஸ்லோவுக்கு சான் கு கிய்யை அழைத்துவர எடுக்கப்பட்ட சகல முயற்சிகளும் தோற்றன. சகல அரசியல் நடவடிக்கைகளையும் கைவிடுவதாக அவர் உறுதி தரும் பட்சத்தில் இதற்கான
அனுமதி வழங்கத் தான் தயாராய்
இருப்பதாக பர்மிய ராணுவ ஆட்சியாளர்
அறிவித்தனர். தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்க விரும்பாத சான் கு கிய் இதற்கு மறுத்துவிட்டார்.
இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் கு கிய் விடுதலை செய்யப்படுவது உறுதி. ஆனால் அது விரைவில் நிகழவேண்டும் என்பதுதான் சகலரதும் விருப்பம். ஏனெனில் எந்தவிதமான ஒடுக்குமுறையும் நிரந்தரமானதல்ல. O
சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் நிகழ்ந்த நோபல் பரிசளிப்பு சிறப்பாக நிகழ்ந்தது. பரிசளிப்பில் சுவீடன் அரசரும், அரசியும் கலந்துகொண்டனர். மிக நீண்டகாலத்துக்குப் பின்னர் இம்முறையே அமெரிக்காவுக்கு எதுவித நோபல் பரிசும் கிடைக்கவில்லை.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நடீன் கோ(ர்)டிமர் என்ற பெண்மணிக்கும், பெளதிகத்துக்கான பரிசு பியரே கில்லஸ் (பிரான்ஸ்) என்ற விஞ்ஞானிக்கும், இரசாயனத்துக்கான பரிசு றிச்சார்ட் ஏ ன ஸ் ட் க் கு ம் ( சு வி ஸ் ) , பொருளாதாரத்துக் கான பரிசு  ெற ர ண | ல் ட் கோ ஸ் க் கும் (இங்கிலாந்து) கிடைத்தன. மருத்துவத் துறைக்கான பரிசை ஜேர்மன் வாசிகளான எர்வின் நெஹர், பேட் ஸக்மன் இருவரும் பகிர்ந்தனர்.
வழமை போலன்றி இந்த முறை சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட முறை பற்றி நோர்வேயின் சகல தரப்பு அரசியல்வாதிகளும் தமது திருப்தியை வெளியிட்டுள்ளனர். பிரதமர் குறுா ஹாலம் புறுண்ட் லாந்தும், எதிர்க்கட்சித் தலைவி குல்மன் ஃபீவவும் ச ரி யா ன ந ப ரு க் கே பரிசு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர். இதே கருத்தை ஏனைய கட்சிகளும் தெரிவித்துள்ளன.
 
 

SR, Pathmanaba Iyer 27-1B High Street Plaistov fondon E13 041D flet: 02O 8472 8323
இன்னுமொரு தரம் பேச்சுவார்த்தைக் காற்று அழக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை முன்னெப்போதும் இல்லாத ஒருவர் பேச்சுக்காக முன்வந்துள்ளார். அவர் நீண்ட காலமாக மலையக மக்களைத் தனது தொடர்ச்சியான ஏமாற்று அரசியல் நடவடிக்கையால் நடுத்தெருவில் கைவிட்ட தொண்டமான்.
இலங்கை அரசின் தமிழ்ப் போராளிகள் குழுக்களுடனான பேச்சு முதன்முதலில் திம்புவில் நிகழ்ந்தது. அப்போது தமிழ்ப் போராளிகள் குழுக்கள் அனைத்தும் ஒரே குரலில் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தன. அந்தப் பேச்சுகளின்போது தமிழ்க் குழுக்கள் இலங்கை அரசுடன் நேரடியாகப் பேசினாலும் நடுநிலையாளர் என்ற நிலையில் இந்தியா இருந்தது. இலங்கை அரசு எந்த அடிப்படையையும் விட்டுக்கொடாததால் அந்தப் பேச்சு தோல்வியடைந்தது. கடைசியாக நிகழ்ந்த புலிகள் அரசு பேச்சுகளில் நேரடியாகப் பேச்சுகள் நிகழ்ந்தாலும், புலிகள் தமது அரசியல் தீர்க்கதரிசனமற்ற நடவடிக்கையால் இறுதியில் இலங்கை அரசு தனது நலன்களைப் பாதுகாத்துக் கொண்டதுடன், புலிகள் அரசியல் ரீதியாக சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப் UlueOTj.
இன்றைய நிலையில் புலிகள் தனியே பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுகிறது. திம்புவில் நிகழ்ந்தது போன்று அனைத்துத் தமிழ்க் குழுக்களுடனையும் இணைத்த கூட்டு முன்னணி ஒன்று அமைக்கப்பட்டால் அதற்கான Uலம் அதிகரித்த நிலையில் இருப்பதோடு உறுதியான தீர்வுக்கு வழிவகுக்கும். இன்றுவரை ஒரு கூட்டுமுன்னணி ஒன்று தற்போது கட்டப்படவேண்டிய அவசியம் கடந்த காலங்களின் கசப்பான அனுபவங்களில் இருந்து தெளிவாகிறது. தற்போது ஒரு கூட்டு முன்னணி கட்டப்படாமல் விட்டால் ஏனைய சக்திகளை பிராந்திய அல்லது வேறு வல்லரசுகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த வழிவகுக்கும். அவ்வாறு ஒரு கூட்டு முன்னணியில் வர மறுப்பவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த முடியும் இதற்கு முன்னதாக புலிகள் அவ்வாறான ஒரு நிலை உருவாகத்தக்க சூழலை ஏற்படுத்தவேண்டும்.
தற்போது நிகழும் பேச்சுகள் மட்டுமல்ல எந்தப் பேச்சுவார்த்தைகளும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அழப்படையில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும், அதேவேளை எந்தப் பேச்சுவார்த்தைகளின் தீர்வும் சகல

Page 4
இனக்குழுமங்களதும் உயர்ந்த பட்ச பாதுகாப்பையும், நல்வாழ்வையும் உத்தரவாதம் செய்யவேண்டும். பேச்சுகள் பங்குகொள்வோரின் தனிப்பட்ட தழுநலன்களைப் பாதுகாக்கும் முயற்சியாக அமைந்தமையை வரலாறு பலதடவை காட்டியுள்ளது. இந்த நிலை இன்னும் ஒருதடவை ஏற்படாதுபோவதற்கு பேச்சுகள் பகிரங்கமாக நடத்தப்படுவது அவசியம். இதன்முலம் எந்தெந்த விடயங்களில் முரண்பாடுகள் தோன்றுகின்றன என்ற அடிப்படையில் தொடர்ந்த அமைதிரிதியான தீர்வு முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும்.
வடிமையாக இரு தழுக்களுக்கிடையே நிகழும் பேச்சாகவே இவை இடுப்பதால் தீர்வு ஒன்று இரு தழுக்களாலும் ஏற்கப்பட்டாலும் அதை நடைமுறைப்படுத்துவது மிக்க சிரமசாத்தியம் என்பதே உண்மை. இதைப் பேச்சுவார்த்தைகள் நிகழும்போது இரு பிரிவினடும் சரியான புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுப்புடன் சாதிக்க முடியும். அதைவிட வரக்கூடிய இந்தத் தீர்வில் இருவருமே உறுதியாக நிற்பதும் அவசியம் கடந்த காலங்களில் ஏற்பட்ட சில இடைக்காலத் தீர்வுகள் நிரந்தரமாக்காமல் போனதில் சகல தரப்பினரும் கொடுத்த வாக்குறுதிகளைக் கைவிட்டதும், ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வுகளை நடைமுறையில் கொண்டுவராமல் தவிர்த்ததும் எனலாம். இந்த வகையில் தொடர்ச்சியாக சகல சிங்கள அரசுகளும் ஒரே தவறைச் செய்துள்ளன.
பேச்சுகள் ஒருபுறம் நிகழும்போதே மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. கொழும்பில் தமிழ்க் குழுக்கள் தமிழ் மக்களை வேட்டையாழ வருகின்றன. கிழக்கில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமது பாதுகாப்பு என்ற பெயரில் தமிழ் மக்கள் மீது காடைத்தனம் புரிகின்றனர். தமிழ்ப் பகுதிகளில் புலிகள் மாற்றுக் கருத்துடையோரைக் கைது செய்தும்
தாம் கொண்டுள்ள அரசியற் கருத்துக்காகப் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பேச்சுகள் நடாத்தும் பகுதியினர் மாத்திரமன்றி நாட்டில் உள்ள சகல ஆயுதம் தாங்கிய தரப்பினரும் உடனடியாக தாம் தடுத்துவைத்திருப்போரை விடுதலை செய்யவேண்டும். உடனடியாக மக்கள் மீதான தாக்குதல்களை எதுவித நிபந்தனையும் இன்றி நீக்கவேண்டும். இதனால் பேச்சுகள் சுமுகமாக நிகழ்வது மட்டுமன்றி, ஒரு அமைதியான தீர்வு சாத்தியம் என்று சகலரும் கொண்டிருக்கும்
நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் அது அமையும்
சுவடுகள் 32 மார்கழி’91 - தை92
Suvaduka'- Herslebsga18 43,0580slo S, Nona'
 

பணிபுரிந்த யொஹான் எழுதிய நூல்கள் நாற்பதுக்கு மேற்பட்டவை. இளம் வயதில் தன்னை மாக்சிசக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராக்கிய யொஹான் தனது சொந்த இடமான துரொண்ணியத்தில் பாடசாலையில் தான் தயாரித்த ஒரு ஆக்கம் தொடர்பாக, அந்த ஆக்கத்தைப் பாடசாலைச் சஞ்சிகையில் இருந்து நீக்க மறுத்தமைக்காக, பாடசாலையில் இருந்து நீக்கப்படுவார் என அச்சுறுத்தப்பட்டவர். கருத்துத் தடைக்கெதிராக அவர் அந்த நாளில் இருந்தே போராட ஆரம்பித்தார். இதனால் அவர் தனது வாழ்வில் மிகப் பெரும்
பகுதியை (75வருடங்கள்) கருத்துச்
சுதந்திரத்துக்காகப் போராடுவதில் செலவிட்டார் எனக் கூறலாம். ஒஸ்லோ பல்கலைக்கழகப் பேராசிரியராக அவர் தனது மாணவர்களை கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கல்விச்
சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றார்.
இவை வெறும் கல்விச் சுற்றுப் பயணங்களாக மாத்திரம் அமையவில்லை. இந்த நாடுகளில் இருந்த அதிருப்தியாளர்களை அவர் இந்தச் சுற்றுப் பயணங்களின்போது அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்புகளின் மூலம் அந்த நாடுகளில் கருத்து வெளியீட்டுக்காகக் கொல்லப்பட்டோர் பற்றிய தகவல்களையும் அவர் சேகரித்தார். சர்வதேச மன்னிப்புச் சபை ஆரம்பிப்பதற்கு முன்னரே அதன் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் யொஹான். உலகில் கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடுவோரின் அமைப்பு என்று குறிப்பிடத்தக்க PEN
யொகான் வொக்ட்
அமைப்பின் நோர்வேஜியக் கிளையின் தலைவராக அவர் இருந்தபோது (68 - 81), உலகில் உள்ள சகல நாடுகளிலும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டுச் சிறைகளில் வாடுவோரை விடுவிக்க நடத்தப்பட்ட போராட்டத்தின் முக்கிய போராளியாக விளங்கினார். 90 வயதில் ஒஸ்லோவின் அருகில் உள்ள அஸ்கரில் இயற்கை எய்திய யொஹான்,
Index on Sensorship g5560s, sit சந்தாதாரராக அல்லாமல் பிரக்ஞையுள்ள எந்த PEN உறுப்பினரும் இருக்கக்கூடாது என்று கூறினார். அவரது முயற்சியால் சனத்தொகை விகிதாசாரப்படி உலகில் மிகக்கூடிய சந்தாதாரர்களை, Index On Sensorship (BTriCon. CsClu கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் சில
75 கருத்துச் சுதந்திரத்துக்காக
வருடம் போராடிய நோர்வே நாட்டவர்

Page 5
புதிய நூால் gC 56 as b பண்டிதர் வீரகத்தியின் (க.வீ) புதிய .css கூறுபட்டு மாறுபட்டுக் கிடப்பது காண்கிறோம். நம்பிக்கை u གི་ו $) d -") ש (6 இச்சூழ்நிலையிலும் ஒரு
w . சஞ போகப் போகிறது မိန္းမံမ#F என்று பதறும் o:
தாதைய வீரகத்தியின் குரல்! மூ if Q!Sufi கடன் செய்யத் துடிக்கிறார் அவர
மாதங்களிலேயே நிகழ்ந்தது யொஹானின் சிறப்பான f8തഞ്ഞു.
உலகில் அடக்குமுறையாளர்களால் எப்போதும் கருத்துச் *தந்திரத்துக்குத் தடை விதிக்கப்பட்டி வந்திருக்கிறது, விருகிறது. இவற்றை எதிர்த்துப் போராடுபவர்களும் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள் இவர்களில் சிலர் தம்மை e"DULT&gü போராடுகின்றனர். இவ்வாறான சித அமைப்பே Wia & Scholars International Ltd. 8 is ŠoDÜ, Suub பிதயும் எதிர்பார
உலகின் சகல நாடுகளிலும் மேற்கொள்ளப்படும் கிருத்துச் சுதந்திரத்தின்
*தந்திரத்துக்கான தீனது குரலை உயர்த்துகிறது. இந்த அமைப்பின் குரலா வருடத்தில் $$IOpaop Index O
Censorship என்ற சஞ்சிகை வெளியாகிறது. இந்தச் சஞ்சிகையின் 9šGLTuř'91 இதழில் நோர்வேஜியப் பேராசிரியரான யொஹான் வொக்ற்றிற்கு
அஞ்சலி ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்திரங்களை ಆಣ್ಣ: உலக மெல்லாம் ஒரு @ siTLDT ஒன்றுபடுவதாலேயே அவரகள స్ట్రి சாந்தியடையும் என அவர் o: (sit.u. என்று முன்னுரை எழுதியுள்ள s பேதம்
றிமுகம் செய்கிறார். نک ாலின்
வந்திருக்கும் இந்த நு விற்பனை 9 foup:
ள் வெளியீடு
சிவன் கோயில் தெரு,
கோடம்பாக்கம்,
சென்னை 24
ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பேராசிரியராகப்
மிகுந்த لآلاLفالإ பொறுமையும் நண்பர்களிைேடே மிக்க நகைச்சுவை ഞifഖു கொண்டிருந்த யொஹான் இன்று எம்மிடையே இல்லை என்பது
2-6 მხT6თup. அவரது உணர்வும் கிருத்துகளும் எம்மையும், எமது
அடுத்தடுத்து வரும் சந்ததிகளையும் விட்டு
நீங்கப் போவதில்லை என்பதும் உண்மை.
எழிலோன்
Index on Censorship சஞ்சிகை
லண்டனில் இருந்து வெளிவருகிறது.
விருடத்தில் பத்து இதழ்கள் வெளியாகும்
இந்தச் சஞ்சிகையின் விருட சந்தர 38டொலர்கள் மோணவர்களுக்
24டொலர்கள்)
மற்றும் விபரங்களுக்கு
Writers & Scholars international,
39c, Highbury Place,
London N5 1QP
UK

அனந்தன் பிரகலாதன்
ஈழத்தடமி lupriassfleõT LorréF9F6U>6OTLLqLb
தமிழ்நாட்டு அரசியலும்
லங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களையும், தமிழ்நாட்டையும் உள்ளடக்கிய அகன்ற ஈழமொன்றை (கவனிக்கவும், அகன்ற தமிழ்நாடல்ல, ஈழம்) விடுதலைப் புலிகள் திமுக
ஆதரவுடன் அமைக்க முயற்சித்ததாகவும்
இதற்கு அப்போது முதல்வராயிருந்த கருணாநிதியின் தார்மீக ஆதரவு இருந்ததாகவும் செய்திகள் இந்தியத் தொடர்புச் சாதனங்களில் வெளியாகியுள்ளன. இச்செய்தியில் உண்மை எவ்வளவு உண்டென ஆராயுமுன்னர், திமுகவின்மீதும் அதன் நிரந்தரத் தலைவர் கருணாநிதி மீதும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு முடுக்கிவிட்டுள்ள அரசியல் பழிவாங்கலையும் கருத்தில் எடுப்பது அவசியம்.
ன் அரசியல் பழிவாங்கல்
ஆட்சி அதிகாரத்தை இழந்து இரண்டே வருடங்களில் ஜெயலலிதா
தலைமையில் வரலாறு காணாத
வெற்றிகண்ட அதிமுக, வெற்றிபெற்ற கையோடு இதுவரை இருமுறை தனது ரெளடித்தனத்தை சட்டசபையில் அரங்கேற்றியுள்ளது. திமுக, பாட்டாளிகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர்களால் நையப்புடைக்கப் பட்டுள்ளனர். (இதே இழிசெயலை இரு வருடங்கள் முன்னர் திமுக செய்ததை மறுப்பதற்கில்லை, அடுத்த முறை ஆட்சிக்கு வருகையிலும் இது தொடர்வதுடன் தமிழக சட்டசபையில் தமிழர்களின் ப்ாரம்பரியங்களில் ஒன்றாக இச்செயல் தொடர்ந்தாலும் ஆசரியப்படுவதற்கில்லை) தனது பிரதான எதிரி கருணாநிதியை அரசியலில் இருந்தே ஓரங்கட்டுவது என்ற கங்கணத்துடன் செயற்படும் ஜெயலலிதா குழுவினருக்கு, ரஜீவ் கொலையும், பிரதான சந்தேக நபர்களாக விடுதலைப் புலிகள் விளங்குவதும், விடுதலைப் புலிகளுக்கும்

Page 6
திமுகவிற்கும் இடையில் நிலவிய புரிந்துணர்வும், விட்டுக்கொடுப்பும் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகவே உள்ளது. ரஜீவ் கொலையை அடுத்து பயங்கரவாத தடா சட்டத்தின்கீழ் பலரைக் கைது செய்து அவர்களில் பலருக்கு திமுகவினர் என்ற முத்திரை குத்த முற்படுவதுடன், அகதிமுகாம்களில் தஞ்சமடைந்த ஈழ அகதிகள் யாவரும் விடுதலைப் புலிகள் என்ற புதிய கண்டுபிடிப்பையும் வெளியிட்டுள்ளது அதிமுக அரசு. இந்தியாவில் மிகவும் வறிய நிலையில் (ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் வாழும் எம்மில் பெரும்பாலானோர் போலன்றி) வாழும் இந்த உண்மையான அகதிகளை நாடுகடத்த முயற்சிப்பதன் மூலம் மத்திய அரசின் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போக்குக்கு ஆதரவு காட்டுகிறது தமிழக அரசு. தஞ்சமெனத் தேடி வந்தவர்களை விரட்டியடித்து அவர்களை இம்சிக்கும் ஜெயலலிதா அரசின் செயல், பெளத்த இனவாத அரசின் கொலைக்களத்தில் இருந்து தப்பி வந்து சற்று ஒதுங்கியிருக்கும் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை எய்தவனிருக்க அம்பை நோவது போல் யாரோ தவறு செய்ய தண்டிக்கப்படுவது அப்பாவி அகதிகளே. ஈழத்தமிழரை விரட்டியடிக்கும் இதே அம்மணிதான் 89 - 91 தேர்தல்களில் வாக்கு வேட்டைக்காக ஈழத்தமிழர்களுக்காக முதலைக் கண்ணிர் வடித்தவர்.
எம்ஜிஆருக்கும் திராவிட அமைப்புகளுக்கும் இருந்த தொடர்பு ஜெயலலிதாவுக்கு இல்லை. ஆனால் எம்ஜிஆருக்கு இருந்த செல்வாக்கைவிட அவரது பெயரை உச்சரித்து அரசியலில்
ஈடுபடும் ஜெயலலிதாவின் செல்வாக்கு அதிகம். அதிமுக சர்வாதிகாரியைப் போல செயல்பட்டவர் எம்ஜிஆர். அதைவிட மோசமான சர்வாதிகாரியாகச் செயல்படுபவர்தான் ஜெயலலிதா. கட்சியின் மூத்த தலைவர்களைக்கூட அடிமைகள் போல நடத்துகிறார் அவர். தனக்கு நிகராகவோ அடுத்ததாகவோ கட்சிக்குள் ஒரு Number 2 உருவாகக் கூடாது என்பதில் மிக்க கவனமாக நடந்துகொள்கிறார் ஜெயலலிதா. சோவின் பாணியில் கூறினால் எம்ஜிஆரை அண்டியிருந்தது ஆதரவாளர் பட்டாளம், ஜெயலலிதாவை அண்டியிருப்பதோ, அடிமைகள் பட்டாளம்.
திமுகவின் இரண்டுங்கெட்டான் நிலை கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கட்டுக்கோப்பான அமைப்பாக செயல்பட்டுவரும் திமுக, அன்று என்ன நோக்கத்துக்காக உருவாக்கப் பட்டதோ அந்த நோக்கம் இம்மியளவும் இல்லாமல் வெறும் பதவி அரசியலில் இன்று தன்னை இணைத்துக் கேவலமான அரசியல் நடத்துகிறது. ஆரம்ப
 

காலங்களில் திமுகவில் இருந்த குறைந்தபட்ச உட்கட்சி ஜனநாயகம் என்பது இன்று முற்றிலும் மறைந்துவிட்டது. வட்டம், மாவட்டங்களில் ஊழல்முதலைகளும், குண்டர்களுமே அதிகாரத்தில் இருக்கின்றனர். (இந்த நிலை ஏறத்தாழ எல்லாக் கட்சிகளிலும் உள்ளது, ஆனால் ‘உலகத் தமிழினத் தலைமை பற்றிப் புலம்பும் திமுக இவ்வாறு செயற்படுவது சகித்துக்கொள்ள முடியாதது). ஒவ்வொருமுறை தேர்தல் தோல்வியின் பின்னரும் தமிழ்மக்கள் தோற்றுவிட்டதாக சரடுவிடும் கலைஞர், ஒருமுறைதானும் தேர்தல் தோல்விபற்றிய சுயவிமர்சனத்தை முன்வைக்கவில்லை.
ஈழத்தமிழர் பிரச்சனையில் காலத்துக்குக் காலம் பல்டி அடித்துப் பிரபலமான கலைஞர், அண்மையில் புதுபல்டியையும் அடித்துள்ளார். அதாவது திமுக உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் எந்தக் கூட்டத்திலும் விடுதலைப் புலிகள் பற்றிப் பேசக்கூடாது என்பதுடன் ராஜீவின் கொலைக்குப் பின் விடுதலைப் புலிகள் பற்றிய தங்களின் கருத்து மாறிவிட்டதாக அண்ணாநகர் கூட்டத்தில் கூறினார். (தேர்தலுக்கு முன் இதுபற்றிக் கூறியிருந்தால் சில
இடங்களையாவது தக்க வைத்திருக்கலாமோ தெரியாது) சில மாதங்கள் முன்னதாக விடுதலைப் புலிகளின் தமிழ்நாட்டு ‘ஏஜன்டாக செயல்பட்ட கலைஞரின் தமிழினப் பற்றைக் கவனித்தீர்களா? அது மட்டுமன்றி விடுதலைப் புலிகளுடனான தனது நெருங்கிய உறவிற்கு வைகோபாலசாமி மன்னிப்புக் கேட்டபின்பும், அன்பழகன் மூலமாக அவரைக் கட்சியில் இருந்து நீக்கக் கருணாநிதி எடுத்த முயற்சி நாஞ்சில் மனோகரன் போன்றோரால் தடுக்கப்பட்டது. எல்லாம் தடா சட்டம் செய்கின்றவேலை. இந்தச் சட்டத்தின்படியே கோபால்சாமியின் - சகோதரர் புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். (தடா சட்டம், இலங்கையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு நிகரான பயங்கரச் சட்டமாகும்)
இவை யாவற்றையும்விட கலைஞருக்கு அடிவயிற்றைக் கலக்கும் சம்பவம் யாதெனில், கலைஞர் ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்விவகாரச் செயலாளராக இருந்த நாகராஜன், தடா சட்டத்தின்கீழ் கைதாகி, நீதிபதிமுன் வழங்கியுள்ள வாக்குமூலமாகும். இதன்படி விடுதலைப்புலிகள் விடயத்தில் கலைஞர் ஆசீர்வாதத்துடன் நடந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்கள் வெளியாகியுள்ளன எனக் கூறப்படுகிறது. தவிர முன்னாள் EPRLF செயலாளர் பத்மநாபா உட்பட, 13பேரின் கொலைகள் பற்றிய விசாரணையில் தலையிட்டு அதை ‘மூடும்படி உத்தரவிட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இதன்படி பல அதிகாரிகளின் பதவிகள் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. இதன் முதற்கட்டமாகவே (மன்னாள் உதவிப்

Page 7
பொலிஸ் சுப்ரிண்டண்ட் (தமிழ்நாடு) துரையின் தற்கொலை அமைந்துள்ளது. (முன்பு இவர் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்பட்டாலும், தற்போது தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது) மொத்தத்தில் ஈழத்தமிழர் பிரச்சனையில் தானும் குழம்பி ஈழத்தமிழரையும் குழப்பியது மட்டுமன்றித் தமிழக மக்களையும் குழப்பிவருகிறார் கலைஞர்.
ஏனைய கட்சிகளின் சந்தர்ப்பவாதம் இலங்கையில் ஈழத்தமிழர்கள் சிங்கள பெளத்த இனவாத அரசின் கொடுமைக்கு ஆளாகும் போதெல்லாம் போலிக் கண்ணிர் விடும் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் ஈழத்தமிழரின் இரத்தம் தோய்ந்த வேதனையிலும் துயரத்திலும் அரசியல் நடாத்துவதில் பழக்கப் பட்டுவிட்டன. இந்திரா கொங்கிரஸ் உட்பட அதன் தோழமைக் கட்சிகள்கூட ஈழத்தமிழரின் வேதனையில் குளிர்காய்ந்ததை மறுப்பதற்கில்லை. எனினும் ரஜீவ் கொலை ஈழத்தமிழர் பற்றிய புதிய சந்தேகங்களைத் தமிழகத்தில் உண்டாக்கியுள்ளதுடன், உலகின் ஏனைய பகுதி மக்களுடன் இணைந்து தமிழக மக்களும் ஈழத்தமிழர் அனைவருமே பயங்கரவாதிகள் எனக் கூறுவது போன்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர் பிரச்சனையில் முக்கிய சக்தியாக விளங்கும் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள நெடுமாறன் போன்றோரும் விடுதலைப் புலிகளின் தவறான போக்கைக் கண்டிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமன்றி வெட்கமான செயல் என்பதும்கூட முஸ்லிம் மக்கள் மீதான வெளியேற்றமும், அவர்கள் நடத்தப்பட்ட அநாகரிக முறையும், யாழ்
பல்கலைக்கழக மாணவ மாணவியர் கடத்தலும், ராஜனி திரணகம கொலை, இந்திய இலங்கை அரசுகளுக்கு சார்பற்ற, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்குத் துரோகமிழைக்காத அமைப்புகள் மீதான தடை என ஜனநாயக மறுப்பிலும், வன்முறைகளிலும் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் அவர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கக் கோருவது வேடிக்கையானது - ஆனால் விவேகமானது அல்ல. இன்று ஈழத்தமிழர்களுக்காகக் கூக்குரலிடும் நெடுமாறனின் அரசியற் பின்னணி எப்படியானது? தீவிர இந்திரா கொங்கிரஸ் ஆதரவாளரான இவர் திமுக - இ.கொங்கிரஸ் கூட்டைக் கண்டித்து, 1980இல் வெளியேறி காந்தி காமராஜ் கொங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்து, இன்று திடீரென தமிழ்த் தேசியம் பேசுகிறார். தமிழ்நாட்டில் ճTւ05/ போராட்டத்தை நியாயமான முறையில் ஆதரிக்கும் பல அமைப்புகள் உள்ளன. இதனால்தான் ஓரளவிற்காவது (மிகக் குறைந்தளவில்) எமது போராட்டத்துக்கு தமிழகத்தில் ஆதரவு நிலவுகிறது. புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம், கேடயம் போன்ற சஞ்சிகைகளும் அவற்றினது அரசியல் அமைப்புகளும் எமது போராட்டம் தொடர்பான விமர்சனத்தையும், ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றன. இந்திய மோதல், பத்மநாபா படுகொலை, ராஜீவ் கொலை என்பவற்றில் புலிகளை இந்த அமைப்புகள் ஆதரிப்பதாகக் கொள்ளலாம். ஆனால் அதேவேளை புலிகளின் மக்கள் மீதான ஜனநாயக ஒடுக்குமுறைகள், படுகொலைகள், அரசியற் தெளிவற்ற போராட்ட நடைமுறைகள் என்பவற்றை

கடுமையாக விமர்சித்து வருகின்றன.
உண்மையில் ஈழத்தமிழ் மக்களின்
சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை எதுவித முன்நிபந்தனையுமின்றி ஆதரித்த இவர்களே ரஜிவைக் கொலை செய்திருக்கலாம் என லண்டனில் இருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கிட்டு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருப்பது இந்த அமைப்புகளுக்கு மட்டுமன்றி பல ஈழத்தமிழர்கட்கும் ஆச்சரியம் கொடுத்துள்ளது. ஏனெனில் தமது விருப்பப்படி கொலை செய்வதும், பின் அவற்றை ஏற்றுக்கொள்ளத் தைரியமின்றி முதுகெலும்பில்லாத கோழைகளாகத் தப்பித்துக் கொள்வதும் புலிகளின் வழமையான பாணியாகும். இதையே பிபிசி பாணியில் கூறுவதாயின் "ஒரு கொலை நிகழ்ந்தவுடன் இலங்கை அரசு புலிகளைக் குற்றம் சாட்டுவது வழமை. அதைப் புலிகள் மறுப்பதும் வழமை. மறுத்தவை பின் உண்மையாவதும் வழமை" விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு கலைஞரை மாத்திரமே குற்றஞ் சாட்டுகிறார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் மட்டுமன்றிப் பொதுவில் ஏனைய சகல அமைப்புகளினதும் பயங்கரவாதத்திற்கும் மக்கள் விரோத நடவடிக்கைகட்டும் மறைமுகமாகவேனும் முண்டு கொடுத்ததில், இந்திரா காந்தி, ரஜீவ் காந்தி, எம்ஜிஆர், கருணாநிதி யாவருக்குமே பங்குண்டு. இதில் யாரின் பங்கு அதிகமானது எனக் கணக்குப் பார்ப்பது ஈழ மக்களை யார் அதிகம் வேட்டையாடியனார்கள் என்று கணக்குப் பார்ப்பது போன்றது. ஈழத்தமிழர் பிரச்சனையில் அக்கறையுள்ள தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடம் கேட்பது இதுதான். எமது மக்களின்
போராட்டம் நியாயமானது. நாம் காலம் காலமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வந்துள்ளோம். சிங்கள பெளத்த இனவாத அரசு எம்மிடம் உள்ள குறைகளைப் பயன்படுத்தி எமது பிரதேசத்தை சுடுகாடாக்கி வருகிறது. பல அமைப்புகள் இலங்கை பாசிச இனவாத அரசுடன் சேர்ந்து எமக்கு வரலாற்றுத் துரோகம் இழைத்துவருகின்றன. களத்தில் நிற்கும் விடுதலைப் புலிகளோ போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் கருத்து ஒடுக்குமுறையிலும் ஜனநாயக மறுப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்படுவது, ஈழத்தில் அன்றாடம் வாழ்வா சாவா எனப் போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்களே. எனவே தமிழ்நாட்டு அரசியல்வாதிகளே உங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் எமது போராட்டத்தை சரியான புரட்சிகரப் பாதையில் இட்டுச் செல்ல வழிவகுக்கவேண்டும். யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கத் தயங்கவேண்டாம். இதுதான் துயருறும் ஈழமக்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய பேருதவியாகும். கு
søgt Rørik Seriebyrå
விருந்துக்கா போயிருந்தாய் திலீப்

Page 8
புலிகள் நடாத்திய மாவீரர் விழா ஒஸ்லோவில் அண்மையில் நிகழ்ந்தது. இந்த விழா ஏனைய சங்க, அமைப்பு நிகழ்ச்சிகள் போலன்றி (சமகாலத்தில்) சர்வதேச ரீதியாகவும் நிகழ்வதால் இந்த நிகழ்ச்சி பற்றி எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது இயல்பே. 'பலவகையிலும் சிறப்பு வாய்ந்த இந்த மாவீரர் தின விழா உண்மையில் கொண்டாடப்படுவதன் உண்மையான நோக்கம் என்ன என்பது பற்றி எனக்குத் தெளிவில்லை. தாய்நாட்டில் இது படைக்கு ஆட்களைத் திரட்டப் பயன்படும் ஒரு இலகுவான யுக்தி என்று அங்கிருந்து அண்மையில் வந்த ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இங்கு அதற்கான தேவை இல்லாததால் வேறு நோக்கங்களுக்காக இது பயன்படலாம் என்றும் அவர் கூறினார். என்னைப் பொறுத்தவரை நிகழ்ச்சியைப் பார்த்தபின்னும் நிகழ்ச்சி பற்றி ஒன்றும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒருவர் வந்து களத்தில் இறந்த இளம்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தவேண்டினார். களத்தில் ஆயிரமாய் மடியும் மக்களின் கணக்கு புலிகளிடம் மனதிலாவது இருக்கிறதா என்று கேட்கத் தோன்றியது. இப்போது பொதுவாக நிகழ்ச்சிகளில் இந்த மெளன (விரதம்?) அஞ்சலி வழமை மாதிரி ஆகிவிட்டதால் புலிகளின் அஞ்சலியும் கருத்தற்றுப் போய்விடுமோ என்று தெரியவில்லை. ஆனால் புலிகள், களத்தில் வீரமரணமடைந்த புலிகளுக்கு மட்டும் அஞ்சலி செலுத்தும் இந்தப் பாரம்பரியத்தை விரைவில் கைவிடாவிட்டால் புலிகளாலும், அரச படைகளாலும் கொல்லப்பட்ட உண்மையான தேசபக்தர்கள் பற்றிய மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். முதலாவது விடுதலைப் புலி களத்தில் மரணமான நாளையே விடுதலைப் புலிகள் மாவீரர் நாள் எனக் கொண்டாடுகின்றனர். அவ்வாறெனின் முதன்முதல் தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகி விடுதலைப் புலிகளுக்கே சயனைட் பாரம்பரியத்தைக் காட்டித்தந்த சிவகுமாரனின் மரணம் பற்றிய விடுதலைப் புலிகளின் கருத்துத்தான் என்ன? சிவகுமாரன் துரோகிகள் வரிசையில் சேர்க்கப்பட வேண்டியவனா? அவனது நினைவுநாளை மாவீரர் தினமாக விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்யாதது ஏன்? இப்படிப் பல கேள்விகள் எனது மனதில் எழுந்தாலும்
நக்கீரன்
புலிகள் நடாத்திய மாவீரர் விழா
ஒரு சிறுகுறிப்பு
 

நெடுமாறன் நோர்வே வந்திருந்தபோது அவரது பேட்டி ஒன்றைப் பிரசுரிக்க எண்ணி சுவடுகள், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விடுதலைப் புலிகள் ஊடாக இதுதொடர்பாக அவரை அணுகியது. தான் இங்கிருக்கும் (ஐரோப்பாவில்) காலத்தில் பத்திரிகைகளைச் சந்தித்துப் பேட்டிதர விரும்பவில்லை என நெடுமாறன் கூறியதாகத் தெரிவிக்கப் பட்டது. ஆனால் நெடுமாறன் ஐரோப்பாவில் இருக்கும்போதே தமிழன்’ பத்திரிகைக்குப் பேட்டி வழங்கியுள்ளார். (தமிழன், 15.12.91, பக்கம்6) இந்த நேர்மையினம் தொடர்பாக எமது கடும் அதிருப்தியைத் தெரிவிக்கிறோம். இதுதொடர்பாக நெடுமாறன் அல்லது நோர்வே விடுதலைப் புலிகள்
தெளிவுபடுத்துவார்களாயின் அது அவர்களது
0 சுவடுகள்
அவற்றை அடக்கிக் கொண்டு நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கினேன். நிகழ்ச்சிகள் ஏறத்தாழப் புலிகளின் வழமையான நிகழ்ச்சி நிரலை ஒட்டியவாறு அமைக்கப் பட்டிருந்தன. இங்கு புலிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பலரும் ஒரு நிகழ்ச்சிநிரல் (ஏறத்தாழ) பின்பற்றப் படுவதைக் காணலாம். இந்த நிகழ்ச்சியும் அவ்வாறே அமைந்திருந்தது. சிறுவர் நடனம், அபிநயம், மெல்லிசை, உரைகள் என. இந்தமுறை நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்க முறையில் அமைந்தது மெல்லிசை நிகழ்ச்சிதான். வழமையாக ஏற்கனவே இசையமைக்கப்பட்ட பாடல்களை நிகழ்ச்சியில் பாடும் புலிகள் இம்முறை புதிய பாடல்களை இங்கேயே இயற்றி இசை அமைத்து நிகழ்ச்சியில் சேர்த்தமை சிறப்பான அம்சம். இந்தப் பாடல்கள் இங்கு இயற்றப்பட்டமை பெருமை தரும் ஓர் அம்சம். ஒவ்வொரு அம்சமும் அந்தந்த இடங்களிலேயே தோன்றுவது சிறப்பானதே. இந்தப் பாடல்கள் இங்கு தோற்றம் கொண்டிருப்பது பாராட்டிற்குரியது,
நேர்மையைக் காட்டும் என நம்புகிறோம்.
எனினும் பாடல்கள் ஓரளவு சாஸ்திரிய சங்கீதத்தைப் பின்னணியாகக் கொண்டிருந்தது சாதாரண ரசிகர்களின் ரசனைக்குத் தோதாக அமைந்திருக்குமா என்பது கேள்வியே. இந்தப் பாடல்களை நோர்வேயில் வசிக்கும் இரு பிரபல இசை விற்பன்னர்களான பொன்.சுபாஷ்சந்திரன், வாசுகி ஜெயபாலன் ஆகியோர் இசைத்தனர். இவர்கள் தமது உச்சரிப்பால் பாடல்களைக் கருத்துத் தெளிவோடு பார்வையாளர்களிடம் வழங்கினர் என்று துணிந்து கூறலாம். பல நிகழ்ச்சிகளில் நல்ல பாடல்கள்கூட அதிக இசையால் அல்லது பாடுவோரின் தெளிவற்ற உச்சரிப்புகளால் அடிபட்டுப் போவது வழமை. ஆனால் இந்த நிகழ்ச்சிகள் அந்த விதத்தில் இசையையும் அதேவேளை UTLGOSULyb காப்பாற்றின. இந்த நிகழ்ச்சிகளில் ஒரு சிறப்பம்சம்(?) தமிழகத்தில் இருந்து நெடுமாறன், மணியரசன் ஆகியோர் வந்து உரையாற்றியமை. இந்தச் சிறப்பம்சம் பற்றித்தான் பெரிய கேள்வியே எழுகிறது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர்

Page 9
நெடுமாறனும் சரி, தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சிச் செயலர் மணியரசனும் சரி, இங்கு ஒரு காட்சிப் பொம்மைகளாகத்தான் கொண்டுவரப் பட்டார்களோ தெரியவில்லை. இவர்களைக் காட்டி "இதோ பார், தமிழகத்தவரே தமிழீழத்துக்கு (புலிகளுக்கு) ஆதரவு தருகிறார்கள், நீ தருவதற்கென்ன?’ என்று கேட்பது போல இருக்கிறது. ஆனால் இவர்கள் எத்தனை துாரம் தமிழீழத்தில், தமிழ்த் தேசிய வீரர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் புலிகளால் நடத்தப்படும் அநியாய நிகழ்வுகள் பற்றி அலட்டிக் கொள்கிறார்கள் என்பது கவனத்துக்குரியது. இந்த விஷயங்கள் பற்றி ஒன்றுமே பேசாமல் 'ஏன் தமிழீழம் வேண்டும்' என்பது பற்றியோ, ‘எப்படிப் புலிகள் போராடுகிறார்கள்' என்பது பற்றியோ இவர்கள் பேசுவது ஒரு பாராட்டுக் கூட்டம் இது என்ற உணர்வைத் தோற்றுவித்தது. அண்மையில் புலிகள் பற்றி பி.பி.சி. தொலைக்காட்சியில் வெளியான ஒரு நிகழ்ச்சியில் சில பகுதிகளைப் புலிகள் தமது பதிப்பு ஆக மாற்றி வெளியிட்ட ஒரு நிகழ்ச்சியும் இருந்தது. இந்த பி.பி.சி. நிகழ்ச்சி உண்மையில் புலிகள் பற்றிய மிகக் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தது. ஆனால் புலிகளின் பதிப்பில் இது நேர் எதிரான போக்கில் வந்தது. பி.பி.சி தொலைக்காட்சியை இங்கு அனேகர் பார்க்காதது இதற்கு மிகுந்த வாய்ப்பளித்தது. பி.பி.சி நிகழ்ச்சியின் உண்மையான நோக்கம் எதுவாக இருந்தாலும், அதில் உண்மையாகக் கூறப்பட்ட விடயங்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டு சில பகுதிகள் மட்டும் ஒளிபரப்பானது தவறென்றே படுகிறது. பதிலாக அந்த நிகழ்ச்சியை
முழுதாக ஒளிபரப்பி அதுபற்றிய புலிகளின்
பார்வையை முன்வைத்திருப்பின் அது நேர்மையானதாகவும், பார்வையாளர்களுக்கு அது ஒரு விளக்கத்தைக் கொடுப்பதாகவும்
புதிய நாளமிகளுக்குத் 56öTLSoost
நோர்வேயைச் சேர்ந்த புதிய நாஸிகள் ஆறு பேருக்கு சுவீடன் நாட்டில் சிறை வாசம் கிடைத் துள்ளது. அண்மையில் சுவீடன் அரசரான காள் லுாயியின் நினைவுதினத்தன்று தீவிர வலதுசாரிகளும், புதிய நாஸிகளுமாகப் பல நுா று பேர் ஒ ன் று கூ டி நினைவுதினத்தைக் கொண்டாடினர். நோர்வே நாட்டு நாஸிகளும் இதற்கு ஆதரவாகப் பங்கெடுத்தனர். இந்தக் கூட்டத்தில் வெளிநாட்டவருக்கு எதிராகப் பெரும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சுவீடன் நாட்டி ன் நிற வெறி எதிர்ப்பாளர்களும், மனிதாபிமானிகளும் ஆயிரக்கணக்கில் இந்தக் கூட்டத்தைக் கண்டித்து எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன்போது கைகலப்பு வன்முறைகள் ஏற்பட்டன. இந்த வுர்முறைகளில் புதிய நாஸி ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வன்முறைகளில் பங்கெடுத்தமைக்காகவே நோர்வேஜிய நாஸிகளுக்குத் தண்டனை வழங்கப் பட்டுள்ளது. சேகர்
அமைந்திருக்கும். புலிகள் தம்மைப் பற்றிய விமர்சனங்களைப் பகிரங்கமாக வைக்கும் நாளில் இப்படி நான் எதிர்பாக்கலாமோ தெரியாது. பொதுவாக முக்கிய நிகழ்ச்சிகளில் பார்வையாளர் முக்கிய மானது எனக் கருதுபவற்றைக் (நெடுமாறனின் உரை) கடைசியில் போடுவது, வழமையான (திரு)விழாப் பாணி. இதையும், வழமை போலவே மிகவும் காலம் தாழ்த்தி ஆரம்பிப்பதையும் தவிர்த்தால் புலிகளால் பார்வையாளரைத் திருப்திப் படுத்தக்கூடிய அதேவேளை தரமான நிகழ்ச்சியை (கருத்து வேறுபாடுகளை மறந்து) தாமுடியும். தருவார்களா?

தொலைந்துபோன நாட்கள் பற்றிய சில குறிப்புகள்
3. லங்கை அரசு எதிர்பார்த்தபடி சார்க் உச்சிமாநாடு, மார்கழி இறுதியில் நடந்துமுடிந்துள்ளது. சார்க் நாடுகளின் தலைவர்கள் யாவரும் மாநாட்டில் கலந்துகொண்டதுடன், அமைப்பின் த  ைல  ைம ப் ப த வி இலங்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுத் திட்டங்கள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறம், இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணும் (?) பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் நடவடிக் கை களும் அ  ைமச் சர் தொண்டமானின் ‘தீர்வுத் திட்டங்களும்' மக்களின் கவனத்தைப் பெறும்வகையில் தொடர் புச் சா த ன ங் களா ல் முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.
பாராளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பான பிரேரணையைப் பிரேரித்த மங்கள முனசிங்ஹாவே (சு.க) குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதுடன் அனைத்துக் கட்சிகளும் இதில் அங்கம் வகிக்கின்றன. தீர்வுத் திட்டத்தின் ஓர் அம்சமாக அண்மையில் கனடாவிற்கு விஜயம் செய்த மங்கள முனசிங்ஹ கனடாப் பாணியை பின்பற்றி இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாணலாம் எறக் கூறியுள்ளார்.
தொண்டாவின் தீர்வுத் திட்டங்கள் குறித்த விடு த லைப் புலிகளின் உபதலைவர் மாத்தயா எழுதிய பதில்க் கடிதத்தைத் தொடர்ந்து சமாதானப் பேச்சுவார்த்தைக்கான குழல் உருவாக வழிவகுக்கப் பட்டுள்ளது. எனினும்
வடபகுதியில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படாததுடன் கண்மூடித்தனமான செல் தாக்குதல்களும் விமான் க் குண்டுவீச்சுகளும் பொதுமக்கள் வாழும் பிரதேச்ங்களில் நிகழ்த்தப் படுகின்றன. கார் த் தி  ைக ம ப த இறுதியில் வடபகுதியில் உள்ள தீவுகளை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்த இலங்கை ராணுவத்தினர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பூநகரிப் பாதையையும் தம் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததுடன் வவுனியாவிலும் கணிசமான அளவு மு ன் னே றினர் . இதை யடுத் து கொழும்பிற்கான வடபகுதி மக்களின் பிரயாணப் பாதை தடைப்பட்டது. மீண்டும் பழைய ஆனையிறவுப் பாதையைத் திறந்து விடுவதாக ராணுவம் கூறியபோதும் புலிகள் இதற்கு மறுத்துள்ளனர். செஞ்சிலுவைச் சங்கத்துடன் இது தொடர்பாகப் புலிகள் நடத்திய பேச்சு முற்றாகாத நிலையில் தொடர்கிறது.
அரசாங்கத்தில் அமைச்சராகத் தொண்டமான் இயங்குகின்றபோதும் அவரது சமாதானத் திட்டங்கள் அரசாங்கத்தின் திட்டங்கள் அல்ல என்றும், அவை தொண்டமானின் (இதொகா ) திட்டங்களே எனவும் சா துரிய மாகப் பதிலளித் துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் ரணில் விக் கி ர ம சிங் க ஆ யு த ங் க ள் கீழே போ ட ப் பட் டு அர சின்

Page 10

நிபந்தனைகள் நிறைவேற்றப்படும்வரை அரசு யாருடனும் பேச்சு நடத்தாது என கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கான குழ்நிலையை தொண்டா உருவாக்க முயலும் அதேவேளை பேச்சுகள் நிகழாது தடுத்து நிறுத்துவதில் இலங்கை பெளத்த பேரினவாதிகளும் அஸ்கிரிய மல்வத்தை மஹாநாயக்க தேரோக்களும், மகா சங்கங்களும் இந்திய அரசும் முன் னின் று செயல்படுகின்றன. பேச்சு வார்த்தைக்கான குழ்நிலை நிச்சயம் உருவாகும் பட்சத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்து அதன் தலைவர் பிரபாகரனைத் தம்மிடம் கையளிக்குமாறு இலங்கை அரசை இந்தியா கோரலாம் எனவும் இதன் மூலம் இலங்கை அரசு - விடுதலைப் புலிகள் பேச்சுகளைத் தடுத்து நிறுத்த முடியும் என இந்திய அரசு கருதுகின்றது. எனினும் இலங்கை அரசிற்கு நிரந்த ரத் தலையிடியைக் கொடுக்கும் பலம் வாய்ந்த விடு த லைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்வது தனது நீண்டகால பிராந்திய மேலாண்மைக்குத் தடையாக அமையலாம் என இந்திய க ரு து வ த ர ல் ہم y Tی பேச்சு வார்த்தைக்கான குழ்நிலை உருவாவதை தடுக்க ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி க கு எதிரா ன அ  ைம ப் புக  ைள யும் பெளத் த சங்கங்களையும் “உற்சாகப்படுத்தும்" முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இலங்கையில் பல வருடங்களாகத் துாதுவராக இருந்தவரும் இலங்கையின் அரசியல் சமூக அமைப்பை நன்கு புரிந்துகொண்டவரும் இலங்கையின் சகல அதிகார மட்டங்களிலும்  ெத ரி ந் த வ ரு ம் பெ ள த் த சங்கங்களுடனான நெருங்கிய தொடர்பைக் கொண்டவருமான டிக்சித்
இந்திய வெளிவிவகாரச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதும், இந்திய அரசின் திட்டங்களை இலகுபடுத்துவதாய் அமைந்துள்ளது.
தொண் டா வின் முயற் சி க ள் வெற்றிபெற எதிர்க்கட்சிகள் ஆசி(?) வழங்கியுள்ளபோதும் இந்தத் திட்டங்கள் சிங்கள இனத்துக்கு ஆபத்தானவை எ ன் று இ ன வ |ா த த்  ைத யு ம் கக்கிவருகன் றன. தொண்டாவின் தி ட் டங்க ள வெளிப் படை யாக வெளியிடப்படா விட்டாலும் அவரின் தீர்வுத் திட்டத்தில் பின்வருவன முக்கிய விடயங்களாாக இடம்பெற்றுள்ளன.
1. வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்பு, 2. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசம்.
3. பலாலி விமான நிலையம், திரு மலை காங்கே சன் துறை த் து  ைற மு க ங் க ள் எ ன் ப ன மாகாண சபையின் அதிகாரத்துக்கு உட்பட்டிருக்கும்
4  ெப ா லி ஸ் அ  ைம ப் பு மாகாணசபைக்கு உட்பட்டது
5. வடக்கு கிழக்கு இணைந்த மா காண ச  ைப யில் மு ஸ் லி ம் மக்களுக்கான பிரதேச சபை.
6. வரையறுக்கப்பட்ட அளவில் அந்நிய செலாவணியைப் பயன்படுத்தும் உரிமை,
7. இலங்கைப் பொலிஸ், ராணுவப் பிரிவில் இன விகிதப்படி தமிழர்கள் நியமனம்.
மேற்கூறிய தொண்டாவின் திட்டங்கள் ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடிய குழ்நிலை இருப்பதுடன் இன்றுள்ள நிலையில் இதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலேயே விடுதலைப் புலிகள் உள்ளனர். அண்மையில் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வு ஒன்றுக்குத் தாம் தயாராக இருப்பதாக புலிகளின் பேச்சாளர் திலகர் கோடிகாட்டியிருப்பதாக வெளியான

Page 11
25447...
ट्ट्या
செய்தி இதை உறுதிப்படுத்துகிறது.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்களின் சுய நிர்ண ய உரிமை க்கான போராட்டத்தை முன்னெடுக்க ஒரு தளமாக இந்தத் திட்டங்கள் அமைந்தபோதும் இத் தீர்வுத் திட்டங்கள் தொடர்பாக முஸ்லிம் ம க் க ளி ன் க ரு த் து க ஞ ம் வெளிக்கொணரப்படவேண்டும்
மு ஸ் லி ம் ம க் க ள் மீ து மேற் கொள்ளப்பட்ட வரலாற்றுத்
துரோகத் தனத்திற்கு ஈடுசெய்யும் முகமாக அவர்களின் தனித்துவம் தொடர்ந்தும் பேணக்கூடியதாகவும் அவர்களின் உரிமைகள் எவராலும் ந சு க் க ப் ப ட |ா ம ல் இருக்கக்கூடியதாகவுமான அமைப்பைத் தேர்ந்தெடுக் க அவர் களுக்கு உரிமையுண்டு. கடந்த காலங்களில் தமிழ்ப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்ட தாக் குல்களில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. தொண்டாவின்
 

இத்திட்டம் தென்னிலங்கையில் பெரும் அ ர சி ய ல் நெரு க் க டி க  ைள உருவாக்கியுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர் த லைக் கருத்தின் கொண்டு செயல்படும் பிரேமதாசா அரசியல் சதுரங்கத் தில் காய் களை மிக அவதானமாகவே நகர்த்திவருகிறார். தமிழ் மக்களுக்கெதிரான தமது போராட்டம் தொடரும் என முன்னாள் அமைச்சரும் தற்போதைய சிங்கள மக்கள் உரிமை ப் பாது காப்பு முன்னணித் தலைவருமான காமினி ஜயகுரிய கூறியுள்ளார். மேலும் ஆறு பெளத் த சங்க ங் கள் விடுத் த அறிக் கையில் ‘தொண் டா வின் தி ட் ட த் தி ல் கூ ற ப் பட் டு ள் ள சொற் கள் தா ன் வித் தி யா சப் படுகிறதேயன்றி அவற்றின் உள்ளடக்கம் ஈழம் தவிர வேறொன்று மில்லை. இத்திட்டம் முழு சிங்கள இனத்துக்குமே துரோகம் இழைப்பதாக அமையும் என வும், இந்த நிலை ஏற்படி ன் ஒவ்வொரு சிங்கள இளைஞனும் தனது உ யி  ைர யு ம் கொ டு த் து ப் போ ரா ட வேண் டு ம் " எ ன வும் கூறப்பட்டுள்ளது. மல்வத்தை பீட நாயக்க தேரோ விடுத்த அறிக்கையில் இத்தீர்வுத் திட்டங்கள் பெளத்த சிங்கள மக்களிற்கு மட்டுமன்றி இலங்கைவாழ்
மக்கள் யாவருக்குமே ஆபத்தானது, விடுதலைப் புலிகளுடன் பேசுவது பயங்கரவாதிகளுடன் பேசுவதற்கு நிகரானது ராஜீவ் காந்தியையே கொலை செய்த விடுதலைப் புலிகளை அங்கீகரித்துப் பேசுவதும் பொலிஸ் ர ஒ வ த் தி ல் அ வர் க  ைள இணைப்பதும் பயங்கரவாதத்தை அங்கீகரிப்பதற்கு நிகரானது' எனக் கூறியுள்ளார்.
மறுபுறம் விடுதலைப் புலிகளும் பாரிய அரசியல் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த காலங்களில்
சிங்கள மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க என ஒரு புதிய 9;ഞഥtL| காமினி ஜயகுரிய வால் உருவாக்கப் பட்டுள்ளது . புத்த 5 60 66ਘ ਲ6 அறிவாளிகள் பலர் இந்த அமைப்பில் அங்கம் வகிக் கின்றனர் . வேறு அமைப்புகளில் அங்கம் வகிக்காத பலர் இந்த அமைப்பில் அங்கம் வகிப்பர் என அறியப்படுகிறது. நாட்டில் நிலவும் உண்மை நிலை பற்றி மக்களுக்கு அறிய த் தர வும் , பி ரா ந் தி ய ஒரு மை ப் பாட்டை க் கா க்கவும் , ஐக்கியத்தையும் , சுதந்திரத்தையும் பாதுகாக்கவும், நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் சம உரிமையை உத்தரவாதம் செய்யவும் , சமூக பொருளாதார நிலையை உயர்த்தவும் இந்த அமைப்பு பாடுபடும் எனக் கூறப்படுகிறது. இந்த அமைப்பின் செயலாளராக முன்னாள் ஜேர்மன் துாது வர் வல் பிட்ட தெரிவாகியுள்ளார்.
சிங்கள ஆராக்ஷக சண்விதானய என்ற இந்த அமைப்பு சிங்கள மக்களின் நலனைப் பாதுகாக்க பல தரப்புகளில் இரு ந் தும் வி டு க் கப் பட் ட வேண்டுகோள்களின் அடிப்படையிலேயே ஆரம்பிக்கப் பட்டதாக அமைப்பின் நிறுவனத் தலைவரான காமினி ஜயகுரிய கூறியுள்ளார்.
இந்த அமைப்பு அமைதியான ஒன்று எனவும், அரசைக் கவிழ்க்கும் நோக்கம் அமைப்புக்கு இல்லை எனவும் காமினி ஜயகுரிய கூறியுள்ளார்.
பொது அமைப்புகள் என்ற பெயரில் இயங்கும் பல வற்றிலேயே நாம் இனவாதத்தைக் காணமுடிகிறது. இந்த நிலையில் சிங்கள மக்களின் உரிமையைப் பாதுகாக்க என ஆரம்பித்துள்ள இந்த அமைப்பு எந்த அரசியலைப் பின்பற்றும் என்பது சொல்லாமலேயே புரியும்.
மணிவண்ணன்
OOOOOOOOOOO

Page 12
அவர்கள் செய்த தவறுகள் இன்று இலங்கை அரசைவிடப் பேச்சுவார்த்தை என்பது விடுதலைப் புலிகளுக்கே அவசியத் தேவை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அவர்களின் நிலை மிகவும் சிக்கலடைந்துள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன்  ைகதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் தொடர்பாகப் பல புதிய துப்புகள் கிடைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இலங்கை அரசின் தொடர்ச்சியான பொருளாதார, மருத்துவப் பொருட் த டைகளாலும், நீரழிவு போன்ற வியாதிகளாலும் இறப்போர் தொகை
அதிகரித்துவருகிறது. இதேசமயம் தீவுப் பகு தி க ளி ல் ர ர று வ த் தி ற் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் நுாற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை இப்பகுதியில் மக்களைக் குடியேறுமாறு ஈபிடிபி அறிக்கை வெளியிட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போ லா கும். இவங்கைத் தமிழர் பிரச்சனையில், இலங்கை அரசு, இந்திய அரசு, விடுதலைப் புலிகள், ஏனைய தமிழ்க் குழுக்கள் இப்படி யாவருமே தத் தமது நலன்களையே கருத்திற் கொண்டு செயற்படுகின்றனர். ஆனால் தினசரி பாதிக்கப்படுவது தமிழ் மக்களே
இனவாதத்திற்கே 6TslJttsot si LG) 632á556O2UpLIL
க்ட்ந்த வருடம் வெளிநாட்டவர்க்கு எதிரான அமைப்பான NMIயும் அதன் த  ைல வ ர் ஆன மி ர் டா லும் புறுமெண்டாலில் நடத்திய கூட்டங்களும், அதைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கும், இனவாதத்திற்கு எதிரான அமைப்புக்கும்
இடையில் நிகழ்ந்த மோதல்களும்
வரும்.அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகள், இளைஞர் கழகங்கள், பொழுதுபோக்கு
அமைப்புகள் இதில் f 6îl y LD FT ES ஈடுபடுகின்றன. V இதேவேளை 'அரசியல் தஞ்சம்
கோருவோருக்கான நோர்வேஜிய அமைப்பின்' (NOAS) 'agit 60T IT
தற்போது புறுமெண்டால் மாநகரசபை புதிய நடவடிக் கைகள் எ டுக் கக் காரணமாகியுள்ளன. ‘புறுமெண்டாலுக்குப் புதிய பாதை’ என்ற திட்டத்தை அந்தப் பிரதேச மாநகரசபை நடைமுறைப்படுத்தி வருகிறது . நாட்டி ன் ஏனைய
காலியாகியுள்ளது. கடந்த வருடம் இந்த அமைப்பு 2,84,000 குறோணர்கள் நட்டம் அடைந்துள்ளது. இந்த நிலையை ஈடுகட்ட ஒஸ்லோ மாநகரசபை தற்காலிக உதவியாக பத்துலட்சம் குறோணர்களை வழங்கியுள்ளது.
பிரதேசங்களுக்கு முன்மாதிரியாக உள்ள at Stag-Ll Jetst இந்த த் திட்டம் செயல்பட அரசு மூன்று மில்லியன் குறோணர் களை சஞ்சீவி
வழங்கியுள்ளது. அங்கு வசிக்கும் வெளி நாட்ட வர் இன வாதத்தால் பாதிக்கப்படாது காக்கவும், மக்களுடன் இணைந்து வாழவும் புதிய திட்டங்கள் வகுக் கப்பட்டு நடை முறை ககு
Post Box 1205, 7500 Holstebro, Denmark

பேர்கன்
6TäsŠ3
fழத்தமிழர் - ஈழ மாணவர் சங்கங்களின் வருடாந்த கலை கலாசார விழா நவம்பர் மாதம் 15ம் திகதி நிகழ்ந்தது. மாநகரசபை கலாசாரப் பகுதிப் பிரதிநிதியால் குத்துவிளக்கேற்றப்பட்டு, திருமதி சாமினி திராவ்டால் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. பிரதம விருந்தினரான மாநகரசபைப் பிரதிநிதியின் உரை, ஈழத்தமிழர் சங்கச் செயலாளரின் வரவேற்புரையின்பின் ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி’ பாடலுக்கு சிறுவர்கள் விளக்குகளை ஏந்தியவண்ணம் நடனம் ஆடினர். தொடர்ந்து (மலையக மங்கையர் துயர் பற்றிய) நாட்டியம், இருபாடல்கள் வாத்திய இசை, (கோகுலத்துப் பசுக்கள் எல்லாம்) பாடல் நடனம், சினிமாப் பாடல் பரதநாட்டியம், “சப்தம் பரதநாட்டியம், மெளனகுருவின் சங்காரம் என்ற கலை நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. தமிழர்களுக்கான
SIJOI&GUpssODGOTë (Stotte gruppen)
சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்வெயின் அல்ஸ்கர் உரையாற்றினார். சங்கங்களின் நன்றியுரையுடன் விழா முடிவு பெற்றது. இந்த விழாவில் பங்குபற்றியோர் எப்படித் தமது நிகழ்ச்சிகளை நடத்தினார்கள் என்பது பற்றிப் பெரிதாக நான் குறிப்பிடப் போவதில்லை, காரணம் அவர்களின் ஆட்டம், நடிப்பு என்பன பற்றிப் பார்வையாளர்களின் கரகோஷமே விமர்சனம் கூறியது. நான் விமர்சிக்க
நகரில் கலை கலாசார
விழா
:~"-ml-l.
வருவது முக்கியமாக இவர்கள் செய்த நிகழ்ச்சிகளில் எவை மக்களுக்கு என்ன கருத்தினைச் சொல்லின என்பது பற்றித்தான். கிறிஸ்தோபர் காடுவெல்லி பின்வருமாறு கூறினார், "திருத்தப்படாது கிடக்கும் இயற்துாண்டல்களையும் உணர்வுகளையும் புறச்குழலுக்குத் தக்கவாறு திருத்தி அமைக்கும் பணியினைச் செய்வன கலை, இலக்கியங்கள்" வாத்திய நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட பாடல் "தமிழ்த்தாயின் இறைவா, தீராதா எங்கள் துயர் தீராதா" என்பது. இது எமது பிரச்சனையைக் கடவுளிடம் போட்டுவிட்டுத் தமது கடமையில் இருந்து தப்பிக்கும் செயலாகும். இந்தப் பாடலை வரலாற்றை உருவாக்கும் சக்தியாகிய மக்களிடம் கேட்டிருப்போமாயின் அல்லது ઈીந்தனையைத் துாண்டியிருப்போமாயின், அது அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும். இன்னுமொரு பாடல் இசைக்கப் பட்டது. "மண்ணில் எங்கள் வியர்வை கொண்டு எழுதிய வரலாறு" இது மக்கள் செய்த தியாகத்தினை எடுத்துக் கூறியது. இது மக்களை விடுதலைப் பாதையில் தட்டி எழுப்பக் கூடியதாய் இருந்தது. நடனங்களில் முதலிரண்டும் மெல்லிசை, சினிமாப் பாடல்களுக்கு அமைக்கப்பட்டன.

Page 13
அடுத்தது சப்தம் என்ற உருப்படிககு ஆடப்பட்டது. இந்த நாட்டியங்கள் மரபுவழியாக அளிக்கப்பட்டு வரும் அம்சங்களைத்தான் பாடல்களில் கொண்டிருந்தன. இவற்றிற்குப் பதிலாக கருத்தோட்டம் கொண்ட பாடல்களுடன் நாட்டியம் அமைக்கப் பட்டிருந்தால் அது அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும். அதேவேளை இவற்றிற்கு நேர்எதிரே மலையக மங்கையரின் துயரநிலை நாட்டியம், மக்களின் துன்பத்தை எடுத்துச் சொன்னதன் மூலம் கருத்தினை வெளிக்கொணர்ந்த கலைவடிவமாக அமைந்தது. இறுதியாக சங்காரம். இது கடவுள் வணக்கத்துடன் ஆரம்பித்து "விடிவில்லையா தேவா விடிவில்லையா"என்ற தெய்வப் பாடலுடன் முடிவு பெற்றது. இந்த நாடகம் உயிரின வளர்ச்சிக் கோட்பாட்டினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இது நாட்டுக்கூத்தில் இருந்து சுவீகரிக்கப்பட்ட நாடக வடிவமாகும். அதேவேளை இங்கு மெளனகுருவின் மூலவடிவில் இருந்து சிறுமாற்றம் செய்யப்பட்டு பிரெஞ்சு வடிவமும் இங்கு புகுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. நான் கூறவிரும்புவது இந்த நாடகத்தின் உள்ளடக்கத்திற்கும் கடவுள் வணக்கத்திற்கும் முடிவுப் பாடலான "தேவா விடிவில்லையா'வுக்கும் தொடர்புண்டா? முன்பு மேடை ஏற்றப்பட்டபோது கடவுள் வணக்கம் பாடும் முறை பின்பற்றப்பட்டதா? இந்நாடகம் எமது மக்கள் மத்தியில் இருக்கும் கருத்தியலைத் தகர்ப்பதே நோக்கமாக அமைகிறது. ஆனால் தொடக்கப் பாடல், முடிவுப் பாடல் கொண்டுள்ள உள்கருத்துகள் நாடகத்தின் மையக் கருத்துடன் முரண்பட்டு மக்களைக் குழப்பியது. முன்பு கூறியது போல இந்தப் பாடல்களும் கடமையில் இருந்து தப்பும் செயல்களாகும். இனிமேல் உருவாக்கப்படும்
கலைவடிவங்கள் புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்பக் கூடிய கருத்துகளை (பெண் விடுதலை, பாசிச ஒழிப்பு, சாதி, மத, இன, வர்க்க வேறுபாடுகளைத் தகர்க்கும் போக்கில்) கொண்டிருப்பது நல்லது என்றே நான் நினைக்கிறேன். இனிவரும் காலங்களில் இதனைச் சங்கங்கள் கவனத்தில் எடுக்கும் என நம்புகிறேன்.
C 5 T rif C3 6), és Ga95 Lou Goì L 5 SO2 Lo
நோர் வே நாட் டி ன் பிரபல எழுத்தாளரும் வெளியீட்டாளருமான பெடர் கப்பெலன் ஜனவரி 4ம் திகதி மறைந்துவிட்டார். 1931ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் திகதி பாரும் இல் பிறந்த இவர் சிறு வயது முதலே இலக்கியத் துறையில் ஆர்வமாக ஈடுபட்டார். 1958 அளவில் ஹெல்க எ றிக் சன் எ னும் வெளி யீ ட்டு நிறுவனத்தை நடாத்தி வந்தார். 1970களில் இவர் தயாரித்து வெளியிட்ட Loke', 'Kark’ நாடகங்களும் 1980களில் 9 af fj 15 på g Jomfru Lucie til Austraat, Eufemianatten 6T 6óT Lu 6oT இவருக்குப் பெருமை சேர்த்தவை. இவர் பிரபல நடிகை காரி சிமொன்சனை மணம் முடித்து ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையானார். இவரது வெளியீட்டுப் பதிப்பகமே இன்று பெரியளவில் நுால்களை வெளியிட்டு வருகிறது. பலரும் கை வைக் கத் தயங்கும் காலத்தில் துணிச்சலுடன் வெளியீட்டு நிறுவனத்தை நிறுவி இலக்கிய உலகில் சாதனை புரிந்த கப்பெலனின் மறைவு இந்நாட்டு இலக்கிய ஆர்வலர்க்குப பேரிமப்பாகம்.
ரிழப்பாகு பிரதீப்
 ேச ர் த் த

உலகின் சகல பகுதிகளுக்கும் மலிவான esÝïlleso-Desnou Silesio esxīlLOnTesoTL ou LuLLI6oolář &#l " GnagsesiiT GaohLupmp ஒஸ்லோவில் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்
@sುಹಿsಠಾs. இந்தியா, சிங்கப்பூர் போன்ற grélasterbais.g5& afpoulas as L-6001 afs21602asasoit
நேரில் வர முடியாதவர்கள் தொலைபேசியில்
FLOWRIDA TRAVELS
CLpasseuf; Osterhaus Gt 21E 0187 Oslo 1
Gosteosucuá: O2/ 114941 O2/363365
N

Page 14


Page 15
ஒரு கோயில் & Afi
அல்லது ஏழுபேர் சேர்ந்து கட்டிப் பிடித்தாலும் பிடிக்க முடியுமா என்பதை சந்தேகத்துடன் பார்க்கவேண்டிய 蠶 அளவுக்குத் தன் உடல் பருமனை &: பெருப்பித்துக் கொண்டும் நீண்ட தூரத்துக்கு தனது கிளைகளைப் பரப்பிக்கொண்டும் நிற்கும் அந்த வேப்பமரம். அதிலிருந்து சுமார் இருபது யார் தூரத்தில் வேம்புக்குப் போட்டியாக வளர்ந்தது போல தனக்கே உரித்தான பாணியில் உற்சாகமாகக் காட்சியளிக்கும் ஆலமரம்.
சிறுவனாக இருந்த காலத்தில் நான் அம்மாவுடன் அல்லது அக்காவுடன் ஒவ்வொரு நாளும் மாலையின் மைமல் பொழுதில் போய் வேம்புக்குக் கீழ் வைக்கப்பட்டிருக்கும் கல்லுக்குக் கற்பூரம் கொழுத்தி அவர்கள் தொட்டுக் குப்பிளான் Gogosesöt
கும்பிடும்பொழுது அவர்களைப் பார்த்து
 
 
 
 
 
 
 
 
 
 

அதனை அப்படியே செய்வது வழக்கம். எனது வீட்டில் இருந்து தோட்டத்துக்குள்ளால் விழுந்து குறுக்குப் பாதையால் சென்றால் நூற்றைம்பது யார்கூட இருக்காது அந்த முருகன் கோயில்.
ஆல் கனிதரும் காலத்தில் ஆலும், மிகுதி நாட்களில் வேம்பும் பறவைகளுக்கு இளைப்பாறும் இடமாக விளங்குகிறது. அந்தக் காலத்தில் யாராவது வெயில் களைக்கு அதன்கீழ் இளைப்பாற சிறிது நேரத்தை ஒதுக்கியிருந்தால் அவர்கள் தலைகளிலோ, உடல்களிலோ அந்தப் பறவைகளின் எச்சத்தைச் சுமந்து செல்வதுமுண்டு. ஏன் நாங்கள் கற்பூரம் கொழுத்தி கும்பிடும் அந்தக் கல்லும், இல்லை இல்லை முருகனும் அந்த எச்சங்களாலேயே அபிஷேகம் செய்யப் பட்டிருப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அந்தக் கோயிலின் மொண்டி திருத்தும் பொருட்டு சுற்றாடலில் வசிப்பவர்கள் எல்லாம் சேர்ந்து சிரமதானம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான சாப்பாடு ஒரு நாளைக்கு ஒரு வீடு என்று வகுக்கப் பட்டிருக்கிறது. அதிலே எங்கள் தவணை வரும் நாட்களில் அம்மா அதனைக் கொண்டுபோக, நான் அம்மாவின் சிலைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு பின்னால் சென்று சாப்பாடு பரிமாறும் வேளையில் அம்மாவின் கண்ணுக்குள் மண்ணைத் துாவிவிட்டு அருகில இருக்கும் சிறுவர்களுடன் விளையாடச் செல்ல, வந்த விடயத்தை முடித்துவிட்டு வீடு திரும்ப என்னைத் தேடி நின்றவர் போனவர்களுக்கெல்லாம் சொல்ல அவர்களும் தங்கள் அலுவல்களை நிறுத்திவிட்டு, அந்தப் பற்றைகள் கிணறுகள் எல்லாம் தேடித்திரிந்து, நான் படிபட்டவுடன் நடந்த பூசைகள்தான் எத்தனை? எத்தனை?
ஏதோ மொண்டி திருத்திக்கொண்டு நின்றவர்கள் ஆலுக்குக் கீழே ஒரு சிறு
கட்டிடமும் கட்டி வேம்புக்குக் கீழ் இருந்த சாமியை ஆலுக்குக் கீழ் இடமாற்றம் செய்துவிட்டார்கள். ஆனால் என்ன நடந்ததென்று எனக்கு விளங்கவில்லை. இதுவரையில் முருகன் கோயில் என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது அதனை அம்மன் கோயில் என்று செர்கிறார்கள். இடமாற்றத்துடன் பெயர் மாற்மும் பெற்றுவிட்டது அந்தக் கல்லு. இந்த இடைவெளியில் நான் யாருடைய துணையுமின்றி அந்தக் கோயிலுக்கு தனியாகப் போய்வரக் கூடியளவு பழகிவிட்டேன்.
இப்போது நான் பாடசாலையால் வந்தவுடன் வீட்டினர்க்குத் தெரியாது ஒளித்து ஏனைய சிறுவர்களுடன் விளையாடச் செல்வதுண்டு. விளையாட்டு முடிந்து வீடு வந்ததும் உடலில் படிந்திருக்கும் ஊத்தைக்காக அண்ணையிடமும் ஆட்டுக்கு சருகு பொறுக்கிப் போடாமல் போனதற்காக
ஆச்சியிடமும் ஏனைய எனது நண்பர்கநடன் சண்டை போட்டுவிட்டு வருவதனால், அவங்களின் பெற்றோர்களின் முறைப்பாட்டிற்கிணங்கவும் கோயில் மணியை நேரகாலம் இல்லாமல் இழுத்தடித்ததற்காகவும் ஐயாவிடமும் வாங்கிக் கட்டிய நாட்களுமுண்டு.
கோயிலுக்குப் பின்னால் சிறுவர்களுக்காக பாதுகாப்பிற்காகவோ என்னவோ உயர்த்தி சுவர் கட்டப் பட்டிருக்கும் கிணறுதான் அந்த நேரம் என் முதல் எதிரி. மாலையில் விளையாடப் போய் நிற்கும்போது வாசல் பக்கத்தால் வந்து எட்டிப் பார்த்து எச்சி துப்புவதும் அந்தக் கிணற்றுக்குள் ஏன் இதெல்லாம் தண்ணிரில் மிதக்குதில்லை என்ற எங்கள் ஆராய்ச்சிக்காக கல் எறிவதும், இதனைப் போக வருவோரும் பக்கத்தில் நின்று கிட்டி அடித்து விளையாடும் அண்ணைமாரும் கண்பால் சொல்லவா

Page 16
வேண்டும்? அகப்பட்ட பாட்டிற்கு அவர்களிடம் வாங்கிய அடிகள் மறக்கவா
முடியும்? சிலருக்கு தாங்கள் அடித்தும் திருப்தி வராத படசத்தில் போகும் பாதையில் இருக்கும் எங்கள் வீட்டடியில், சைக்கிளால் இறங்காது காலை ஊன்றியபடி நின்றுகொண்டு வேலியால் எட்டி வீட்டிலும் சொல்லிவிட்டுப் போனால் மீண்டும் இங்கு பேசவா வேண்டும். காலையில் உருட்டி உருட்டி அம்மா எழுப்பும்போது சோம்பல் முறித்துத் திரும்பிப் படுக்கும்போது அம்மாவும் விடாது சித்திரவதை செய்வது போல எழுப்ப ஒரு கொட்டாவியுடன் எழும்போது, "கோயிலடிக் கிணத்தடியில் மெசின் இறைக்குது, போய்க் குளித்துவிட்டு வந்து பள்ளிக்கூடம் போ" என்று கையில் ஒரு அலுமினியப் பாத்திரத்தையும் திணித்துவிட தண்ணியைக் கண்டாலே விசர் நாய் கடித்தவன் போல ஓடும் நான் சிணுங்கிச் சிணுங்கி நடப்பேன்.
வெள்ளிக்கிழமைகள், சரஸ்வதி பூசை, கந்தசஷ்டி விரதங், கெளரி விரதம், திருவெம்பாவை, கோயில் திருவிழா போன்ற நாட்கள் எல்லாம் எனக்கு குதுாகலம் நிறைந்த நாட்கள். அந்த நாட்களில் மாலையில் முகம் கழுவி நெற்றி, கைகள், நெஞ்சு, முதுகு எங்கும் திருநீறை அள்ளிப்பூசி பிராமண வேசத்தில் போய் கூட்டத்திற்குள்ளும் குழப்படி செய்து கோயில் நிர்வாகிகளிடமும் குட்டு வாங்கி பின்தான் மனதை ஒருவாறு தேற்றி சிவபுராணம், சகலகலாவல்லி மாலை, திருவெம்பாவை எல்லாவற்றையும் கத்திப் பாடிவிட்டு கோயில் பிரசாதத்திற்காக அடிபிடிபட்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு திரும்ப, அம்மா ஒரு பக்கத்தில் ஐயா ஒரு பக்கத்தில் தாங்கள் வாங்கியவற்றையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு திரும்புவது வழக்கம். அதனைவிட இந்த நாட்களுக்கு இன்னும் ஒரு சிறப்பு உண்டு.
இந்நாட்கள்தான் இரவில் படிக்காது கடத்திவிட்டு சந்தோசமாகத் திரியும் நாடகள.
இப்போது அந்தக் கோயிலும் வளர்ந்துகொண்டே வந்துவிட்டது. நானும் கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பை எட்டிவிட்டேன். அம்மா பழஞ்சோற்றை திரணையாக உருட்டி வாழையிலையில் வைக்க அதனைக் கவ்வி உண்டுவிட்டு அம்மாவிடம் பள்ளிக்கூடம் போவதற்காக விடை பெற்றுவிட்டு கோயிலடிப் பற்றைக்குள் புத்தகத்தை போட்டுவிட்டு பலாலி விமான நிலையத்துக்கு விமானம் பார்க்கப் போவதும் வேறு இடங்களுக்குச் சுற்றித் திரிவதும் அதே பற்றைக்குள்
முகவரி SARINIGAR.
6 Aloe Avenue Colombo 3
ஒளித்திருக்கும்போது யாராவது பிடித்துக் கொண்டுபோய் வீட்டில் ஒப்படைக்க அங்கு எத்தனை கம்புகள் முறிய முறிய சுழன்றிருப்பேன்.
இப்போது அம்மாவின் சொல்படி அந்தக் கோயிலுக்கு தேங்காய் உடைத்து கற்பூரம் கொழுத்தி விழுந்து கும்பிட்டுவிட்டு O/L சோதனைக்குச் சென்று பரீட்சை

எழுதிவிட்டு முடிவுகளை எதிர்பார்த்துக்
காத்திருக்கும் எனக்கு அருகிலுள்ள ஒன்றும் விடாது படிப்பது எனது வாசிகசாலைதான் ஆறுதல். பொழுதுபோக்கு, கடமை எல்லாம். வாசிகசாலைக்கு வரும் பத்திரிகைகளை என்னை எந்த நேரமும் அந்த
வாசிகசாலையிலேயே பார்த்ததாலோ என்னவோ அதன் செயலாளர் பதவியை எனக்கே தந்துவிட்டனர். பின்பு பேசவாவேண்டும், A/L வகுப்புகளும் வாசிகசாலை வேலைகளும்.
வழங்குவார்கள். சிரித்தால் சொல்லவா வேண்டும். அவர்களிடம் கடலை ஐஸ்கிறீம் கேட்போம். அவர்களும் அதனை ஏதோ ஒரு கெளரவப் பிரச்சனையாக எடுத்து
செத்துப்போனவர்களின் சம்பாசனை
உனது கையில் இருந்தது துப்பாக்கி. காரணங்கள்
எனது கையிலும் எமக்கென்றால் தெரியாது. இருந்தது துப்பாக்கி.
இறப்பவர்கள் பற்றி நீ சுட்டு இருப்பவர்க்குக் கவலையில்லை. நான் சாக நான் சுட்டு எண்ணிக்கை யந்திரத்தின் நீசாக- இரும்புப் பசிக்கு நேர்ந்தவை மரணங்கள். இருவருமே சிறுதீனி.
s செத்ததெல்லாம் மக்களுக்காய் மரணித்தாய் மனித உயிர். எனவும், சிதைந்தழுகிக் நான் காகம் குதறி மாக்களுக்காய் மரணித்தேன் நாய் பிடுங்கக் எனவும், கிடந்ததெல்லாம் ‘மக்கள்' சொல்கிறார்கள். மனித உடல்.
சுவரொட்டிகள்கூட இவையெல்லாம் அப்படித்தான் சொல்கின்றன. நிகழ்ந்தபின்னும்
இன்னும் உன்னை நான் சனங்களேதும்
சுட்டதற்கும் பேசாதிருத்தல் அதிசயம்தான். என்னை நீ
சுட்டதற்கும் த வெளியாள்

Page 17
இவற்றுடன் திரிந்த எனக்கு சிலருடைய நட்புகளும் பெருகிவிட்டன. இப்போது அந்த இளைஞர்களுடனான ரகசியச் சந்திப்புக்கும் கோயிலே பயன்படுகிறது. கிணற்றுக் கட்டில் ஏறி இருந்தே எங்கள் விவாதங்களை நடத்தி முடியூகள் எடுப்போம். அநத் முடிவுகளுக்கிணங்க, அநத்க கோயில் முன்றலிலேயே அடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் என்பவற்றிற்கெதிராக கருத்தரங்கம், கவிபரங்கம், பட்டிமன்றம் நடத்துவோம். அந்தக் கருத்தரங்கம் ஒன்றில்தான் கடவுள் இல்லை என்று முழங்கி அநத்ப்ப குதி மக்களின் எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டேன். இதுவரையில் பொறுமையாக இருந்த என் தந்தையாரும் வீடடைவிட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டார். இப்போது நம்பிக்கையாய் இருநத் சாப்பாடும் பறிபோய்விட்டது. இருந்தும் அநத்க் கோயிலுக்குக் கும்பிடுவதற்காக இல்லை என்றாலும் இரவு உறக்கத்திற்காகவோ அல்லது ஓய்வுக்காகவோ நான் அங்கு அடிக்கடி வருவதுண்டு. ஏன், திருவிழாக் காலத்தில் கோயிலுக்கு வரும் பெண்களை நண்பர்களுடன் சேர்ந்து நையாண்டி பண்ணுவதற்காகவும் வருவதுண்டு. அப்படி நையாண்டி பண்ணும்போது சிலர் எங்களை விழுங்குவது போலப் பார்ப்பார்கள். இன்னும் சில பெண்கள் சிரித்து ஆதரவு வாங்கித்தர அதுவே அவர்களுடனான தொடர்ச்சியான நட்புக்கு வழிகோலும்.
அப்படி ஏற்பட்டநட்பால் எனது நண்பர்கள் பலர் இப்போது பிள்ளைகள் குடும்பம் என்றநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் எங்கள் பகுதியில் உக்கிரமான போர் நடந்துகொண்டிருக்கிறது. அந்தக் கோயிலடியெல்லாம் ராணுவம் கைப்பற்றிவிட்டது. அங்கு இருந்த மக்களெல்லாம் பாதுகாப்பாற இடம் தேடிச்
சென்றுவிட்டனர். தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் பின் ஏதோ ஒரு சுதந்திரம் மாதிரி உணர்வு, ராணுவம் அவ்விடத்தை விட்டுப் பழைய நிலைகளுக்குப் போய்விட்டது. மக்கள் தங்கள் இருப்பிடத்தைப் பார்க்க வந்தனர். என்ன ஆச்சரியம், அந்தக் கோயில் இடிக்கப்பட்டு ஒரு கற்கும்பி போலக் காட்சியளித்தது. கடவுள் இல்லை என்று சொன்னதற்காக என்னை ஒதுக்கிய அதே மக்கள் இப்போது இதைப் பார்த்துக் கண்ணிரை மட்டுமே வடித்தபடி இருக்கின்றனர். என்னுடைய வாழ்விலும் பல விடயங்களுக்காக உதவிய அந்தக் கட்டிடம் இடிந்ததில் எனக்கும் உடன்பாடில்லை என்பதை எனது மனதிலேயே தேக்கிக்கொண்டு எனது அடுத்த நடவடிக்கைக்காக நகர்கிறேன்.
ŝg>JnT6öoJL6sio
Sudasien Buro GroSSeheim Str 58, 4600 Dortmund 1, Germany
LD6ofsb
Post Fach 12, 3000 Bern 11, Switzerland
Lues of Desloj
BCM POLARIS, LONDON WC1N 3XX, U.K
 

சிவரமணி
236) ЈLLugБlesio 35pioGolВЕТ6 ож6b GolsulfussGolgsтsфон -
gPC5 getLibGoLJ6 dolo o tilesõT
6hur TUpé5600-95 ȶîl60,095 Lupiop Sulu &fprolgebraslu'uL-4
சித்திரலேகா
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
யாழ்ப்பாணத்தில் 'சாந்தியகம் உள்வளத் துணை நிலையத்திலும் (Counciling Centre) அவர் பயிற்சி பெற்றார். இந்தப் பயிற்சியின் மூலம் போர்நிலையால் உளரீதியாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பெண்கள் மத்தியில் பணியாற்றுவதற்குத் தன்னைத் தயார்படுத்தலாம் எனவும் அவர் கருதினார். சிவரமணிக்கு தென்னிலங்கையில் இயங்கிய சில பெண்கள் அமைப்புகள், மாணவர் அமைப்புகளுடனும் தொடர்பிருந்தது. இத்தகைய தொடர்புகளும் அவரது பார்வை விசாலிப்புக்கும், பரந்த நோக்கிற்கும் துணை செய்தன. பிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற நாடுகளில் கருத்தரங்குகளிற் கலந்து கொண்டிருக்கிறார். அங்கெல்லாம். தமது தயக்கமற்ற, நேர்மையான உரையாடல்களால் பயனுள்ள பல சிந்தனைகளை ஏற்படுத்தியுள்ளார். இக்கருத்தரங்குகளில் அவருடன் கலந்துகொண்டோர் இதனைக் கூறியுள்ளனர். எனினும் இத்தகைய பொதுநல நாட்டமும், செயலூக்கமும், தற்துணிவும், சுதந்திர விகசிப்பும் கொண்ட இளம்பெண்களை எமது சமூகம் எவ்வாறு நோக்குகிறது? இத்தகைய பெண்களைப் பொறுத்துக் கொள்ளும் அளவு அதன் கருத்துநிலை அமைந்துள்ளதா? எத்தகைய

Page 18
கதவின் வழியாய் புகுந்த மேற்கின் குரியக் கதிர்கள் விரட்ட நாங்கள் எழுந்தோம்
உலகை மாற்ற அல்ல, மீண்டுமொரு இரவு நோக்கி"
எனது பரம்பரையும் நானும் என்ற தலைப்பிலான கவிதை இந்த அவநம்பிக்கையை மிகத்திரண்ட வடிவில்
கூனல் விழுந்த எம் பொழுதுகளை
நிமிர்த்தத்தக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை.
எல்லாவற்றையும் சகஜமாக்கிக் கொள்ளும் அசாதாரண முயற்சியில் துாங்கிக்கொண்டும் இறந்துகொண்டும்
இருப்பவர்க்கிடையே
நான் எனது நம்பிக்கைகளுடன் தோற்றுக் கொண்டிருக்கிறேன்." இந்தக் கவிதை வரிகள் சிவரமணியின் அவநம்பிக்கையைப் புலப்படுத்துவன மாத்திரமல்ல; சமீபகால அரசியல் சமூக ஓட்டங்களையும் சம்பவங்களையும் புரிந்துகொள்பவர்களுக்கு பல தட்டு அர்த்தங்களைப் படிக்குந்தோறும் அளிக்கக் கூடியவையாகும். சிவரமணியின் கவிதையாக்க முறை, நடை, மொழிக் கையாளுகை ஆகியன மிக வித்தியாசமானவை; புதியவை. அவரது உவமைகளும் படிமங்களும் சொல்கிற செய்தியும் உணர்த்துகிற அனுபவமும் ஆழமானவை. உங்களுடைய வரையறைகளின் சாளரத்துக்குப் பின்னால் நீங்கள் என்னைத் தள்ள முடியாது. இதுவரை காலமும்
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து வெளியே எடுத்து வரப்பட்ட ஒரு சிறிய கல்லைப் போன்று நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்
கண்களைப் பொத்திக்கொள்ளும் உங்கள் விரல்களிடையே தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும் ஒரு குட்டி நட்சத்திரத்தைப் போன்று எனது இருத்தல் உறுதிபெற்றது.
நா பிரசன்னமானேன்.
கல், நட்சத்திரம், கேள்வி ஆகிய உவமைகளின் பயன்பாடு மிக வித்தியாசமானது. தமிழ்க் கவிதை மரபில் உவமைகளின் தன்மையையும், பயன்பாட்டையும் நோக்கும்போது அவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு பயன்பாட்டை இங்கு கவனிக்கலாம். தன்னைத்தானே உணர்தலின் ஆழம், பெருமிதம், உறுதி ஆகியவற்றை இந்த உவமைகளின் மூலம் புலப்படுத்த
முனைகிறார். இன்னொரு கவிதையில் நட்சத்திரத்தை இறந்தவரின் கண்களுக்கு உவமிக்கிறார். "இறந்து போனவர்களின் கண்களைப் போன்று விளக்கமற்ற அர்த்தங்களை விடுத்துக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் இதுவரை காலம் தமிழ்க் கவிதையில் நட்சத்திரம் உவமையாகப் பயன்படுத்தப்பட்ட முறையிலிருந்து ஆச்சரியகரமான வகையில் இது வேறுபடுகிறது. "தோள்கள் சிவக்க எனது நண்பி சிரித்தாள்" கன்னம் சிவக்கப் பெண்கள் சிரிப்பது பற்றித்தான் வழக்கமாகத் தமிழ்க் கவிதை கூறுவதற்குப் பழக்கப்பட்ட எமக்கு

தோள்கள் சிவக்கப் பெண்கள் சிரிப்பது புதிய அனுபவமாகும். ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற அவர்களின் அழகிய காலையின் பாதைகளின் குறுக்காய் வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த
முகமற்ற மனித உடலும் உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பின் மீதாய் உடைந்துவிழும் மதிற்கவர்களும் காரணமாய் எங்களுடைய சிறுவர்கள் சிறுவர்களல்லாது போயினர் இக்கவிதைப் பகுதியின் படிமங்கள் யதார்த்தத்தின் குரூரத்தை மிக அச்சொட்டாகவும், அழுத்தமாகவும் காட்டுகின்றன. இவ்வகையில் சிவரமணியின் மொழிக் கையாளுகை புதியது; பழைய முறைகளிலிருந்து விடுதலை ப்ெறறது. தமிழில் பெண்களது எழுத்திலக்கியப் படைப்புகள் பற்றிப் பலர் அக்கறை கொள்வதில்லை. தப்பித் தவறி இவை பற்றிக் குறிப்புக் கூறுவோரும்பெண்கள் *கண்ணிர் இழுப்பிகளை'ப் படைப்பது பற்றியும், புத்தாக்கத் தன்மை இல்லாதிருப்பது பற்றியுமே பெரிதாகக் கூறுவர். இது பெண்களது இயற்கையான பலவீனம் அல்ல; படிமங்களைப் புத்தாய் அமைக்கவும், வடிவங்களைப் புதிதாய் வளர்க்கவும் முடியாத (தயங்கும்) பலவீனம் பெண்களின் இயற்கையைச் சார்ந்தது அல்ல. பெண்களது நடவடிக்கைகளை வடிவமைப்பதில் பெரும்பங்கு கொள்ளும் கலாசார அமைப்பிலிருந்து உருவாவது. பெண்களின் அனுபவங்களும், சிந்தனைகளும், அவற்றின் வெளிப்பாடுகளும் குறுக்கப்பட்டும் இறுக்கப்பட்டும் இருக்கும்போது அந்த மனத்தடையையும் அதனுடன் தொடர்பான மொழித்தடையையும் மீறுவது ஒரு
அசாதாரண பலத்தைச் சார்ந்த விடயமாகும். இந்த இளம் வயதில் சிவரமணிக்கு இந்த அசாதாரண பலம் சித்தித்திருந்தது. ஆனால் இந்தப் பலம் அவருக்கே தாங்கமுடியாததன் விளைவுதானோ இத்தற்கொலை எனவும் சிந்திக்கத் தோன்றுகிறது. மனித வாழ்க்கையை அற்புதமானதாகவும், தன்னைச் சுற்றிய யதார்த்தத்தைக் குரூரமிக்கதாகவும் ஒரே நேரத்தில் உணர்ந்த ஒரு இளம்பெண்ணின் இரண்டக உணர்வு அவரது இறுதிநேரக் குறிப்பில் மிகத் துல்லியமாகத் தென்படுகிறது. "எந்தவிதப் பதட்டமுமின்றி சிந்தித்து நிதானமாக எடுத்த முடிவு இது: எனினும் எனக்கு இன்னும் வாழ்க்கை அற்புதமாகவே உள்ளது. எரியும் நெருப்பும் காற்றில்;

Page 19
இந்த முடிவுக்காக என்னை மன்னித்துவிடுங்கள், மன்னிக்காவிட்டாலும் பரவாயில்லை. எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன். நீங்கள் செய்யக்கூடிய உதவி ஏதும் மிஞ்சியிருந்தால் அவற்றையும் அழித்துவிடுவதே. உலகின் முக்கியமான சில கவிஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். அதிலும் குறிப்பாகப் பெண் கவிஞர்கள் எமிலி டிக்கின்சன், சில்வியா பிளாத் போன்றவர்கள்; அவர்களது தற்கொலை
ஒரு சம்பவம் மாத்திரமல்ல. அவர்களது வாழ்க்கையையும், அவ்வாழ்க்கை நிகழ்ந்த சமூகத்தைப் பற்றியும் அது கூறுகிறது. சிவரமணியின் தற்கொலையும் இவ்வரிசையில் ஒன்று. சிவரமணியின் ஆளுமையும், கவிதைகளும், அவரது தற்கொலையும் எழுப்புகிற வினாக்களும், உணர்த்துகிற செய்திகளும் எமது ஆழ்ந்த அக்கறைக்குரியவை. அவரே கூறியதுபோல துாக்கி எறியப்படமுடியாத கேள்வியாய் இவை எம்முன் பிண்டப்
பிரமாணமாய் உள்ளன.
GпBrrri CBS ILI 5lesöT பெருங்குடிமக்கள்
நோர்வேயில் சராசரியாக அதிக பியர் குடிப்பவர்கள் கிறாகறோ என்ற இடத்தில்தான் இருக்கிறார்கள் என்று அண்மைய கணிப்பீடு ஒன்று கூறுகிறது. கிறாகறோ குடிமக்கள் (சாதாரண அர்த்தத்தில்தான்) சராசரியாக வருடம் ஒன்றுக்கு ஆறாயிரம் குறோணர்களை பியர் குடிக்கச் செலவிடுகிறார்கள் என்று அந்தக் கணிப்பீடு கூறுகிறது. நாட்டின் சராசரியான பியர்க்குடி வருடம் ஒன்றுக்கு
விஷயம் கவனத்திற் கொள்ளப்படக் கூடியது. கிறாகறோவில் அல்ககோல்
அதிகம் உள்ள குடிவகைகளை விற்கும் ‘வீன்மெனோபோல கிடையாது. இந்த வருடம்தான் நிறுவப்பட இருக்கிறது. பியர் விற்பனையில் எழுபது வீதம் விடுதிகளில்தான் குடிக்கப் படுகிறது
என்பதிலிருந்து ‘விருந்தினர்கள்’ குடிப்பது, எப்படி ஊராரின் தலையில் விழுகிறது என்பது புரியும்.
சிலந்தன்
இரண்டாயிரம் குறோணர்களுக்குச் சற்று அதிகம். ஆனால் இந்த இடத்தில் ஏன் இவ்வளவு அதிகம்? குழந்தையும் குடிக்குமா என்று கேட்கிறீர்களா? விஷயம் பெரிதாக ஒன்றுமில்லை, இங்கு கோடை காலத்தில் உல்லாசப் பிரயாணிகளின் வருகை மிக அதிகம். எனவே இந்தப் புள்ளிவிபரம் ஆச்சரியம் தருவதல்ல. ஆனால், இன்னுமொரு
 

உலகின் வறுமையையும் அடிமைத்தனத்தையும் நிரந்தரமாகப் போக்கவும், ஜனநாயகத்தை உறுதிசெய்யவும் தோற்றுவிக்கப்பட்ட சித்தாந்தம் மாக்சியமாகும். இதற்கு மெருகூட்டிய தலைவர் லெனின். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுமையும் பல அந்நிய ஆட்சிகளும், முடியாட்சிகளும் நிலவின. இவை மக்களின் அடிப்படைச் சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. கடுமையாக உழைத்தபோதும் எங்கும் பசி, பட்டினி என்பதே பேச்சாக இருந்தது. இவ்வாறு (சோவியத்) ரஷ்யாவில் நிலவிய சார் மன்னனின் கொடும் ஆட்சியை எதிர்த்துப் புதிய சிந்தனையோடு ஜனநாயகம் கோரி எழுந்த போல்ஷெவிக் கட்சியின் தலைவர் லெனின். ஒக்டோபர் புரட்சிக்கு வழிகாட்டியவர். அதன்மூலம் ரஷ்யாவில் மட்டுமன்றி உலகம் முழுமையும் கலை கலாசார பொருளாதாரத் துறைகளில் முற்றிலும் மாறுபட்ட சிந்தனையும், நடைமுறையும், மேம்பாடும் தோன்ற அவர் காரணமாக இருந்தார். உள்ளும் புறமுமாக இருந்த நலன்'விரும்பிகளால் இந்தச் சமதர்மச் சிந்தனை வீழ்த்தப்பட்டது. லெனின் மரணத்தைத் தொடர்ந்து ஆட்சியைக்
கைப்பற்றிய ஸ்டாலின் ஜனநாயக மறுப்பை முதன்மைப் படுத்தினார். போலிச் சமதர்மமும், போலிச் சோசலிசமும் நடைமுறையில் வந்தன. லெனின் தனது சிந்தனைகள் மூலம் உருவாக்க முனைந்த கனவு சிதைந்தது. லெனினும், அவரது சிந்தனைகளும் வெறுமனே பூஜிக்கும் பொருளாகியது. இந்த நடைமுறையின் விளைவே அண்மையில் 'சோவியத் யூனியன் கண்ட 'மாற்றங்கள். இந்த மாற்றங்களைத் தொடர்ந்து இரசாயனப் பதப்படுத்தல் மூலம் பாதுகாக்கப் பட்டிருந்த லெனினின் உடல் எரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்

Page 20
பட்டுள்ளது. இதற்கு உள்ளும் புறமுமாகப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ரஷ்ய மக்கள் இதற்கு எதிரான அமைப்பு ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். (லெனினின் உடல் மற்றும் அவர் தொடர்பான ஆவணங்களை பின்லாந்து வாங்கலாம் எனவும் அறியப்படுகிறது) இதுபற்றி இதுபற்றி மேற்குலகப் பத்திரிகைகள் பலரைப் பேட்டிகண்டு பிரசுரித்தன. ஒரு ரஷ்ய வயோதிபப் பெண்மணி பின்வருமாறு பதிலளித்தார். "லெனின் சரியாகத்தான் சிந்தித்தார், ஆனால் மற்றவர்கள் அவரது சிந்தனையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டனர். அதனால்தான் ரஷ்யா மோசமான விளைவுகளைச் சந்தித்தது" 1924ஆம் ஆண்டு லெனின் காலமானதைத் தொடர்ந்து அவரது பூதவுடலைப் புகைப்படம் எடுக்க யாரும் அனுமதிக்கப் படவில்லை. கடந்த நவம்பர் மாத நடுப்பகுதியில் முதலும் கடைசியுமாக புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அதுதான்
மேலுள்ள படம்,
சித்தார்த்தன்
ஒஸ்லோவில் பெரும்பாலான வன்முறைகளின் பின்னணியில் வெளிநாட்டவர்கள் அல்லது வெளிநாட்டுப் பின்னணி கொண்டவர்கள் இருப்பதாக ஒஸ்லோ பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பொதுவாக சந்தேகத்தின் பேரில் கைதாவோரில் ஏறத்தாழ கால்பங்கினர் வெளிநாட்டவர்கள் அல்லது வெளிநாட்டுப் பின்னணி கொண்டவர்கள் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். கடந்த வருடம் குற்றச்சாட்டுகளின்பேரில் கைதான 672பேரில் 168 பேர் வெளிநாட்டவர்கள். இவர்களில் முக்கியமாக வட ஆபிரிக்கர்கள், ஆசியர்கள், யூகோஸ்லாவிய நாட்டவர் அடங்குவர் என அந்த அதிகாரி கூறியுள்ளார்.
புதுவருட தினத்தன்று வட நோர்வேயில் இருந்து வந்திருந்த நோர்வேஜியர் ஒருவர் ஒஸ்லோவில் ஆசியர்களால் தாக்கப்பட்டதாகப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிலந்தன்
 
 
 

அண்மையில் பி.பி.சி தொலைக் காட்சியில் இவங்கை தொடர்பாக ஒரு விவரணப் படம் காட்டப்பட்டது. அதை இங்கு சில தமிழர்கள் பார்த்திருக்கக்கூடும். அதைப் பார்த்தபோது சில கேள்விகள் எழாமலில்லை.
முதலாவது இந்தத் தொடர் முழுதாக
இலங்கைப் பிரச்சனை அல்லது தமிழர் பி ர ச் ச  ைன தொ ட ர் ப ா க த் தயாரிக்கப்பட்டதல்ல. இது ரஜீவின் கொலை தொடர்பாக அதன் பின்னணியாக விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்பானதும், புலிகள் பற்றிய சிலரின் பார்வை பற்றியதுமாகும். எனவே இது ஒரு தமிழர் பிரச்சனை
பற்றிய அல்து , இலங்கை யின்
இனக்குழுமங்கள் மனித உரிமை மீறல்கள் , ஜனநாயகம் பற்றிய
முழுமையான தயாரிப்பாக இல்லை.
இதில் தமிழர் பிரச்சனைகள், அரசின் கண்மூடித்தனமான பொதுமக்கள் படுகொலைகள் பற்றிச் சிறிதும் தொடப்படவில்லை. ஒரு கட்டத்தில் தமிழர்கள் தாம் பாரபட்சப்படுத்தப் படுவதாக வாதிக்கிறார்கள் என்று கூறிய  ைத க் கூற லா ம் . இது முற்றுமுழுதான புலிகள் பற்றிய எதிரான போக்குடன் கூறப்படுகிறது. புலிகள் பற்றிய எதிர்க்கருத்துகள் வைக்கப் படுவது மட்டுமன்றி, தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பாக, அதன் நியாயப்பாட்டிற்கு எந்தச் சிறுகுறிப்பும் வைக்கப்படவில்லை.
முழுவிவரணமும் புலிகள் பற்றியே இருந்தது. இதில் புலிகள் பற்றி எழுந்த சில கேள்விகளையும் விமர்சனங்களையும் இங்கு தரலாம்.
1. விடுதலைப் புலிகள் இன்னமும் ஆங்கிலேயே மோகம் அல்லது எசமான விசுவாசம் கொண்டிருக்கிறார்களா என்பது. காரணம் யாழ்ப்பாணத்தில் வியாபார நிலையங்களின் பெயர்ப் பலகைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் 6T6örgy சில காலம் முன்னதாகப் புலிகள் நடவடிக்கை எடுத்தனர். இலங்கை அரசுடன் புலிகள் உறவோடு இருந்த காலத்தில் கொழும்பிலும் தமிழ் நீயுடன் வாகனங்கள் பவனி வந்தன. இந்த விவரணத்தில் காட்டப்படும் புலிகளின் அணிவகுப்பில் ஆங்கிலத்திலேயே கட்டளைகள் பிறப்பிக்கப் படுவதேன்?
2-இறந்த புலிகளின் இறுதி ஊர்வலத்தில் ஆங்கில பாண்ட் வாத்தியங்களே பாவிக்கப்படுகின்றன. ஏன் பாரம்பரியத் தமிழ் வாத்தியங்கள் பாவிக்கப்படவில்லை?
3.புலிகள் மத்திய குழுவைச் சேர்ந்த யோகி ஒரு கட்டத்தில் ‘எங்கள் பிரதேசத்தில் மதவெறி இல்லை" என்பதாகக் கூறுகிறார். முஸ்லிம் மக்களைக் கொல்வதும் அவர்களின் வாழிடங்களில் இருந்து துரத்தியடிப்பதும் எந்த வகை? இது இனவெறியா? அடிப்படையில் மதவாதமே வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறது.
வேதமுரளி
பி பி தொலைக்கா
L明山já)

Page 21
4.புலிகளின் தலைவர் பிரபாகரன் தமது இயக்கத்தின் துாய்மை புற்றிய குறிப்பில் *கட்டுப்பாடான எமது இயக்கத்தில் குடி, சி க ரெட் , பெண் தொடர் பு தடைசெய்யப்பட்டவை" என்கிறார். இத்தனை காலமாகியும் பெண்களைப் போதைப் பொருள்களாகப் பார்க்கும் இந்தப் போக்கு அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாகப் பார்க்க மறுக்கும் ஒரு பிற் போக்கு வாதமாக உள் ளது . இத்தனைக்கும் இவர்களது பெண்கள் அணிகள் பெரிதாக விளம்பர ப் படுத்தப்படுகின்றன. பெண்கள் அணிகள் பெண் விடுதலை என்ற கோசத்தை முன்வைக்கின்றன. பெண்கள் பற்றி தலைவர்களே இப்படிக் கருத்துத் தெரிவிக்கின்றனர் என்றால் இவர்களது பெண் விடுதலை’ எவ்வாறு இருக்கும்?
இது தொடர்பாக இன்னொரு விடயம். (பொதுவாக மற்ற அமைப்புகளிலும் உள்ளதுதான்) பொதுவாக போராளிகள் தமது பயிற்சியில் சத்தியப் பிரமாணம் செய்யும்போது "முழுமையான மக்கள் விடுதலை, மக்கள் மீதான உறுதியான பற்று, என்ற அடிப்படையில்தான் சத்தியப் பிரமாணம் செய்வர். இங்கு இது பிரபாகரனின் விசுவாசம் மீதே நிகழ்த்தப்படுகிறது. இது வெறுமனே *ராணுவக் கட்டல்' என்றே கூறலாம். இதன் பின்விளைவுகள் பற்றி இப்போது குறிப்பிடத் தேவை இல்லை. இதே ஒளிபரப்பில் பெண்களும் பிரபாகரனின் மீதான விசுவாச சத்தியப்பிரமாணம் செய்கிறார்கள். அதே பெண்கள் தொடர்பாக பிரபாகரனின் முற்சொன்ன கரு த் து க் கு இது மு ர ண |ா க அமைந்துள்ளது. அத்தோடு இரு கைகளையும் இழந்த ஒரு பெண்புலியின் தன்னம்பிக்கை வியப்புத் தருகிறது. ஆனால் அவரும் எல்லாம் ‘பிரபாகரனால் எ ல் லா ம் தீர் க் கப் படும் என்று
குறிப்பிடுவதும் விவாதத்திற்குரியது.
புலிகளின் பேச்சாளர் பாலசிங்கம், ‘சமாதானத் தீர்வு வந்ததும் எல்லாக் கட்சிகளையும், இயக்கங்களையும் இயங்க அனுமதிப்போம்" என்று கூறுவது பற்றிப் பல கேள்விகள் எழுகின்றன. தற்போது தொடர்ச்சியாகப் புலிகள் நடத்திவரும் மனித உரிமை மீறல்கள் பற்றி உலகமே அறியும். இதுபற்றி சர்வதேச மன்னிப்புச் சபை அறிக் கைகள் பல வற்றில் வெளிவந்துள்ளன. மாற்றுக் கருத்து உடையோரைக் கைது செய்யும் போக்கை இ ன் னு ம் புலி க ள் இ ன் னு ம் கைவிடவில்லை. இந்த நிலையில் ‘தீர்வு' வந்தால் இந்த விடயம் நடைமுறைக்கு வருமா என்பது பெரிய கேள்வி.
பாலசிங்கம், உலகம் தங்களை விடுதலை வீரர்களாகப் பார்க்கிறது என்று கூறுவது கேள்விக்குரியது. 83 காலப் பகுதியில் உலகில் இருந்த அபிப்பிராயம் இப்போது எப்படி மாறியிருக்கிறது என்பது யாரும் அறிந்த விடயம் . தொடர்ச்சியாக இயக்கங்களின் தவறான போக்குகள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள், சிங்கள, முஸ்லிம் அப்பாவி மக்கள் தொடர்பாக நடந்துகொண்ட விதம், ரஜீவ் படுகொலை என்பன தொடர்ச்சியாக எமது போராட்டம் பற்றியும் இயக்கங்கள் பற்றியும், மோசமான அபிப்பிராயங்கள் ஏற்படக் காரணமாயின. இன்றும் புலிகள் ஒரு பயங்கரவாதக் குழு என்ற அபிப்பிராயம் உலகில் நிலவுவதை மறுப்பதற்கில்லை. இது எமது போராட்டத்திற்கும் ஓர் பெரிய இழப்பே. இதைப் பாலசிங்கம் அறியாதவரா அல்லது கண்ணை மூடிக்கொள்கிறாரா?
தயான் ஜெயதிலக இந்த நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்கும்போது ஹிரோசிமா குண்டு மூலம் அமெரிக்கா போலத் தமிழர்களும் தம்மை (தமது பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம்) உலகப் படத்தில் போட்டுக் கொள்ள முடிகிறது என்று கூறுகிறார். இந்தப் பச்சை இனவாதத்தில் இலங்கை அரசின் போக்கு பற்றி

மூடிமறைக்க விரும்புகிறாரா இந்தப் பசுத்தோல் போர்த்திய இடதுசாரிப் புலி. புலிகளை விமர்சிப்பது என்ற பெயரில் தமிழர்கள் மீதான தனது இனவாதத்தை வெளியிட்டுள்ளார் இந்தக் காகிதப்புலி.
யாழ்ப்பாண ஆசிரியை ஒருவர் தனது பேட்டியில் முன்பு தமிழங்கள் தமது இ ய ல் பா ன கெட் டி த் தனத்தால் வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக வந்தார்கள். இப்போது இயக்கத்துக்குப் போகிறார்கள் என்கிறார். இவரது கருத்துப் போல தமிழர்கள் படிப்பதற்காகப் படிக்க வில்லை , பொருளாதாரக் கார ண ம் தா ன் உண்மை யானது . உண்மையில் மூளையுள்ள தமிழர்கள் ப டி ப் ப த ரீ க இரு ந் தி ரு ப் பி ன் யாழ்ப்பாணத்தில் எத்தனை சமூக விஞ்ஞானிகள் உருவாகியிருக்க வேண்டும்? கலை, இலக்கிய, சமூகவியல் வளர்ச்சி எமது சமூகத்தில் மிக மந்தத்தில் இருக்கிறது, காலம் காலமாக. இவற்றின் வளர்ச்சியே எமது சமூகத்தின் வளர்ச்சியாக இருக்க முடியும்.
இந்த நிகழ்ச்சியில் புலிகள் அமைத்த ஒரு சிறுவர் பூங்காவின் சில காட்சிகள் கா ட் ட ப் பட் ட ன . சிறு வர் க ள் விளையாடும் SeesaW விளையாட்டில் ஒருவரை ஒருவர் குறிபார்க்கும் விதத்தில் துப்பாக்கிகள் அமைந்திருப்பதைக் கண்டதும் நெஞ்சு திக்கென்றது. இந்தச் சிறு வயதில் அவர்களின் மனதில் இவ்வாறான கொடு ர விதைக்கப்பட வேண்டுமா?
இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும், ஏராளமான இளைஞர்கள் சிந்திய ரத்தத் தினதும், இழந்த உயிர்களதும் பெறுமதி வீணாக்கப்படுகிறது. இந்த உயிரிழப்புகளதும் தியாகங்களதும் பெறுமதி உணரப்பட வேண்டுமாயின் ஒரு புதிய தலைமை எழுந்துவர வேண்டும் என்று மனதில் நினைப்பு எழுவது தவிர்க்க (Lpg|LITSSBTépgle
எண் ணம்
விடுதலையின் பெயரால்
કGો துப்பாக்கி வைத்து சுடு
எதற்கு?
விரும்பிய எதற்கும் தேசபக்தனை, சகபோராளியை வயோதிபரை, தாயை சகோதரனை
விரும்பினால் உன் குழந்தையைக்கூட
அவ்வப்போது குறிவைத்தும் கடு
எதற்கு?
மனிதாபிமானம்,
ஜனநாயகம், தர்மம் வேண்டும் யாரையும். அத்தோடு அவ்வப்போது சில அந்நிய இராணுவத்தையும் மறந்துவிடாதே.
எப்படி இதையெல்லாம்?
கவலையைவிடு,
தலைமை நாங்கள் இவற்றையெல்லாம் நியாயப்படுத்தலாம், விடுதலையின் பெயரால். கவலையை விடுத்து விரும்பியதற்கு இலக்குவை.
சின்னா
16.11.90

Page 22
以自由U)可u坝0七求函)丁过n习m自由0 ョronmg (gミsst) @地ggコ モEs@* 199ự 1 k@ a9 uș și-los $ (91, 18 o Çoho I 点x河自取坝河增自由 油取自田颂由己函巨9巨后Q田信长田
· qi@ș-Too)? qımųos logoh qp || 109 1991) ots) qgsffr. Norsus, um 19şığı risqømsonk? qđì uns முன்யாபூ99கு (9றgதிாரபூ9ern gபியா 的)通高S법령長地法) 28um&inri& 84니ugmu恩 、Ess」sQョココココQb 3ョsegggコ possisse q@rsų9190) soos@Ġ qosnoćnoglos $ おggbs) eg Es」コモコ」gg g@ : 홍「크니m정GD니nns행rgo.9% 정us(Jun的)rou그
1991. Ilms@é, qșiyoo ŋmɔɑsɑ9$ 1,9Ųıņơngskos
g s asE』)ヒ g行ョBegョadb @地ggs, ョgbs地ョ ョgEggsgh qos ġ1909 un ņđìım qșų291090) so ‘ quas filo
飒跟喝圆石坝与田心的点后由4可。李过蜀 @1119.901$3$ ylimpsons(oss? (șos uos@ns) 爵4己可·目巨日与硕竭围增母己可 (与河迪乌德)与道与圆4946m阁up @8 (1991 ogļūroş)||1979) (soģiss Noé,
(1991&quonologo,slogs @6 司长与후트그島地그nn地通德un ,통94mak해.... 呂9@自白gé臣one)已帝Q地臣g (offis@ırò síksomrie) · @mộsiglos, sīgs quidoođù19 01@@Zigi olisso!?!?!? qihgask? qī£5 -171* 5) ș mas q; (29 + @é,пgi-че 41906 grilogos $ les is gynnes øgsk? 'googlŷmųolo șostgloc) ș@șisựiajążę ĶĒ1919 Ĝışıs ışısınmışșulo?匈é 函目冠增与写写qu恩0 @@信田田og领域引
pohȚIT(6) II, qysmit909ụun 4/TT0997
取飒m g取飒mT宫坝闻函与Q田遇巨官与 g地Q Eggョa)セE『D ョgg『コG 恩09遇了圆m河增f q因与日宣m@@n 函己巨Q函长了羽混田包s m写习449% qoyoołįįOslo șGlossoņsko ‘quodsillo mișşfi) @@@Tu田颂可G增与9950也取阁露副up密 ( % LI ) @ 109 utsajo9@ ș-ıŲsmoos un 丁宫坝Q巨因与9点可。‘围增巨己启田0 副4日可写剧与道与圆g领瑕于圆取飒色可 @ș@ms & §§ 11os-logous@h qas maïs us@@ 跟m与领七日取号 (%08)函巨94m田颂可 |ğı o)? Isqofte) @ s1soċj m3)-I(doğunolą919 드그法)日子U-19gn '95gmuar정령 :Jususishm(白山史 는長9校)는ong 정o子 그니ann長官us 41니nn3. 巨巨额与日gm84可取遍qg9顷烟了自己 Das ggEss @ココgg 地gggs 过n习取烟于自 g写颂马露于与日 1991,139||1(108139Las ļRIĘIĠ 1891,9ko įsastnosť 每已由 m函恩m 函取自白é的ummusé帝 ajo qe ș@ș los isQuコDJコココge*D 马9巨七um硕与99mgL可m爵己04与图 qìng) fish 199Ġ1661 qi@rīņoșựnso ș1919 -Nons mișşfi) 199óisoņ911@jąjus?*é
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ŽidůNosopisto qylymų poln skoop 1993$$ıldılış? Şs sĩış919 quas–Ļss@șoirsts,
田与日与国9增齿0 Q 取长田恐 z 它与丁习宫与9点的恐闰日圆圈与图阁u恩0 它领n习围增园田宫恒田口增阁阁露 įIJNos@fllqorın sıskaçosso qisigoş-iko Feggョgs gゆモbg QuコDコQ *șulosko Hņuosē un , mẹ@nigmn,, si so os o Qohi o ș sik? m (now N. L. şi i 1991,919 (soos ląstęslo 田un七己取0田Q增u田 9信田增写自巨 Gjųı (İ19919 ĜII-Tvo??ņs (glŷnsagroung 巨940习写9迪恩与94401号g B 恒田七己可 Ģo ș1919 139olgsh postoriņ@sąsis“,
!1!!19!!)||1996, so lagshoriz 1991Hoosios Hīgungson q@ossố įs@$$-Iosif șoinnis Qgna@s」コD gas ゆacs3sQsG 图4己围 0 @ @增母田七己露·E įs@soso opussae ,qo@lasurmoos, ĶĒırş)||19 apılış), -IIIīņoș0909? qg usiliqi@do un .g」g Egg Es」e」ョge・、2 ĻļĽ199ỤIIGI @șous)}} guコDコb (モEsggggEEg モEgEgg ışşolţsh ņrskools/#to) įroổ) quos uostoso Įmo um 102909$ão sogĪ ugi film 19 J109 1996)
@地Qgajagg) dgeasFDug『は npug도 思道德 :EIG)·병행田道邑)*니In 널령海高校) 白鸟on硕习90阁阁己写g与硕(mo图) Țurio) HQsìLolo, Nos@& qoỹings uns fium 19??Ųiquo apısı944 ĝ1091396) qiao Joods? oqsmolys ம9ய08 (999 mழாகு டியகிேர்நஒழிn 长54己ág q 取Q坝与田颂可。后运贰 @地DaQsagusG ゆゆ戦Qs gus%
· 10909 og úlfi sfosfisko ĶĒko · q munţiņņiko g Esg Q』aQ」gogsரகிமு அமு (90ாய(9டியாகு ரமுேடியமிகு ஒgேடுக
|(þılır;) 199Ųmosoo$$), s “g地nben gfug gEs* Esuコndg Egegg@ g行ヨseggお セEョQa) 1991;$1,9đìņi? 'Ipo sig uriņsfi@ ș@zı urış) ŋmos-kosloņsan qi@ış96 · @@@@@ @@fiosos 写与日与硕坝坝归可。田遇巨河自写习与图 Eggs』s g s Eヨ)* ココb
· @nış919 qi@sagoroş)m-Tomosos no mos ocas 由Qu己七旬运围增硕取》恩淑每围“马运6 ggass ョEEJョEコD bsbseg追コg ョQs sggコ sega g Egg 占5日巨日 与酚巨940m的地图目巨日与项
长田 由 Qu领崛n 3」コDコg gEEgg
m写习与总部已简写与田己有。由河由河 因遇函ghóf)田增hn习后Q9田增9河的河 ヨg』s gg gus」e」コョQコG ŋ o os są do & ・与s」gョQ)コョ 动m@@n占田4日生自 um写9母 则可 는CJ長99 中守山용해 정ünso-9道C83 U長9長96) *過JDa Q増usegココggコ* odsooqglĮSTŲs,Ụ1993)1996), dolis) soos osố 24与Q g取飒ng 以增可gu己ng河求 gコg」Eg8 ggs sea)Qs
guagnojeg QuコDョ@ ョQg」gD 巨945@取可。“劲道与圆g@@@@off过引
șnĝulos? couriş, sısıç-s (pismogorgo&
: : murs 29.9 g 的그 n Q9 그 없는 UT 용 너 5

Page 23
LLLTTGLTLTL LLTTTTLTTeTLTTTTL 0 L LTLLL LqTTTTLTTLLLL நுட்பத்துடன் வீடியோ படப்பிடிப்பு Gohay-Li JLu6 Jrjasoit திருமண வைபவங்களா? பிறந்தநாள் விழாக்களா? பொது வைபவங்களா? கலை நிகழ்ச்சிகளா?
வாழ்வில் ஒருதடவை மட்டுமேவரும் எந்த நிகழ்ச்சியையும், அதே வண்ணம் மாறாமல் வாழ்வு முழுவதும் கண்டுகளித்திட சிறந்த ஒளிப்பதிவுடன் கூடிய வீடியோ படங்களைப் பதிவு செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.
தொலைபேசி: 02/570456, 02/57287
உயர்ந்த தொழில் நுட்பத்துக்கும் தரத்துக்கும் உத்தரவாதம் வழங்கும் படப்பிடிப்பாளர்கள்
INDER VIDEO MOVIES Lakke Gt 75, Oppg 1
0562 Oslo 5
GlgITLfrL|&óir: KSHAN & THAYA
Phone 02/570456
02/571287
 
 
 
 
 

ரசதரப்பில் மனித உரிமைகள் மீறலுக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் 1. ராணுவம், 2.பொலிஸ், 3.விசேட அதிரடிப் படை. இவர்களைவிட கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் * இ ன ந் தெரியா த குழு க் கள்' இயங்குகின்றன. இந்த ‘இனந்தெரியாத குழுக்கள் அரச “கொலைக் குழுக்கள் (D e a t h S q u a d s ) ( Lu T 6óT ( p இயங்குகின்றன.
சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை
பல தரப்புகளில் மனித உரிமை மீறல்கள்
அ க தி மு க 7 ம் க  ைள ய ம் உ த் தி யே T க பூ ர் வ ம |ா க பொறுப்பெடுத்துள்ளனர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் (PLOTE)
வவுனியா வில் இயங்குகின்றனர். மட்டக்களப்பிற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தினர் (TELO) அனுப்பப் பட்டிருக்கிறார்கள். பாதுகாப்பு அமைச் சின் செயலாளர் தந்த தகவலின்படி 112 தமிழீழ விடுதலை
இலங்கையின் தொடர்ச்சியான துயரங்களுக்குக் காரணமான பல்வேறு அரசியற் குழுக்களையும் பற்றி ஒரு 44 பக்க அறிக்கை ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச மன்னிப்புச் சபையால் வெளியிடப்பட்டுள்ளது. ‘மக்களுக்காகவே நாம் என்ற கோசத்துடன் இயங்கும் பலதரப்பினரையும் பற்றிய உண்மைகள் இந்த அறிக்கையில் வெளியாகியுள்ளன.
அறிக்கையின் சில பகுதிகள்:
முஸ்லிம் ஊர் காவல் படையும் பு லி க ஞ க் கெ தி ர |ா ன ப ல தமிழ்க் குழுக்களும் ராணுவத்தோடு இயங்குகின்றன. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) உறுப் பினர்கள் ஊர் காவற் று  ைற யில் இலங்கை ராணுவத்துடன் பணிபுரிகிறார்கள். அ த் து ட ன் கொ மு ம் பி ல் வி டு த  ைல ப் புலி க ள் எ ன் று சந்தேகிக்கப்படுபவர்களை அடையாளம் கண்டு பாதுகாப்புப் படைகளிடம் ஒப்ப  ைடக் கின்றனர். மேலும் ,  ெக மு ம் பி ல் உ ள் ள சி ல
இயக்க உறுப்பினர்களுக்கும், 146 தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்களுக்கும், அதேயளவு sт бог боi i on a li v T бог E P D P உறுப் பினர் களு க்கு ம் ஆயுதம்
வழங்கப்பட்டுள்ளது.
இவர்களனைவரும் ராணுவத்தின் நேரடி அதிகாரத்தின் கீழேயே பணிபுரிகிறார்கள் என்று மன்னிப்புச் சபைக்கு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Page 24
CLP 6us esin5 Lib
szgariasITes) pibusoL
சென்ற வருடம் ஒகஸ்ட் மாதம் முஸ்லிம் ஊர்காவல் படைக்கு அரசு ஆயுதங்கள் வழங்கியது. இரண்டாயிரம் பேருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. வடக்கு கிழக்கு எல்லையோரப் பகுதிகளில் மொத்தம் 23,000 சிங்கள ஊர்காவல் படையினருக்கும் அரசு ஆயுதம் வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு ஆயுதம் வழங்குவது' என்ற அரசின் கொள்கை கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை இனக்குழுமங்களிடையே வன்முறையையும் கசப்பையும் அதிகரித்துவிட்டுள்ளது.
பாது காப்புப் படையினருடன் ஒத்துழைத்து வரும் முஸ்லிம்கள் தமிழர்களின் விபரப் பட்டியலைப் படையினருக்கு வழங்குவதாகவும் இந்தப் பட்டியல்களில் இருந்தே பயங்கரவாத சந் தே க ந பர் களின் தெரிவு இடம்பெறுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் பட்டியல்களில் தமிழ் அரசாங்க ஊழியர்களும், ஏனைய படித்த தமிழர்களும் இருந்தனர். உள்ளூர்ச் சண்டைகளின் விளைவான கோபதாபங்களே இத்தகைய பட்டியல் களின் பின்னணி என்று நம்பப்படுகிறது.
தமிழர்களைத் தடுத்துவைத்துப் பின்னர் பொலிசிடம் கையளிக்கும் வேலையையும் முஸ்லிம் ஊர் காவல் படையினர் செய்துள்ளனர். வீரமுனையைச் சேர்ந்த திரு நா வுக் கரசு , ரவி , ரா சன் , இலங்கே ஸ்வரன் ஆகிய நான்கு ஆசிரியர்கள் திருக்கோயிலில் உள்ள தங்களுடைய குடும்பங்களைப் urtiësë சென்றுகொண்டிருந்தபோது முஸ்லிம் ஊர் காவல் படையினரால் தடுத்து
 ைவ க் கப்பட்டு பொலி சாரி டம் ஒப்படைக்கப்பட்டனர் (செப்டம்பர் 1990). அவர்கள் நால்வரும் ‘புலிகள்" என்றும் அவர்களைப் பற்றி விசாரிப்பதில் எவ்வித பிரயோசனமுமில்லை என்றும் தேடிச் சென்றவர்களுக்குச் சொல்லப்பட்டது. இத் த ைகய பதில் கள் ஆட்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதையே பொதுவாக அர்த்தப் படுத்துகிறது.
பொத்து விலைச் சேர்ந்த கலாநிதி என்பவரும் இவ்வாறே காணாமல் போயுள்ளார். பொத்துவிலில் 160 தமிழர்களைக் கொன்றதாக விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் சொன்னதாகத் தெரிவிக்கப்பட்ட போதும் கலாநிதி அவர்களில் ஒருவரா என்பது தெரிவிக்கப் படவில்லை.
இந்த வருடம் பெப்ரவரி LD (T g5 tib கொழும்பிலிருந்து வாழைச்சேனையூடாக மட்டக் களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ்ப் பயணிகள் பஸ் ஒன்றை முஸ்லிம் ஊர்காவல் படையினர் ஏறாவூரருகில் தாக்கினர். ஏழு பயணிகள் கொல்லப் பட்டனர். பல ரைக் காணவில்லை. இச்சம்பவம் பெப்ரவரி மாதம் சதாம் ஹஸைன் கிராமத்தில் இரண்டு முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் கொன்றமைக்குப் பழிக்குப் பழி' என்று தெரியவருகிறது.
LD It uu Lo TLF LD 600 n Lilb
Deoflabri
யூன் 1990இல் இருந்து இன்றுவரை கிட்டத் தட்ட 3,000 தமிழர்கள் ‘காணாமல் போய்விட்டார்கள் என்று அறிவிக்கப்படுகிறது. இதைத் தவிர ஒக்டோபர் 1990 அளவில் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 3000 தமிழர்கள்

யுத்தத்தில் கொல்லப்பட்டோ, காணாமல் போயோ உள்ளனர். வவுனியா, மன்னார், ஊர்காவற்றுறை பகுதிகளில் இருந்தும் ‘காணாமல் போனோர்' பற்றிய விபரம் மன்னிப்புச் சபைக்குக் கிடைத்துள்ளது. பாதுகாப்புப் படையினரால் கொண்டு செல்லப்படுவோர், சுட்டோ வெட்டியோ அல்லது எரித் தோ படுகிறார்கள். இவ்வருடம் பெப்ரவரி மாதம் விஜயபாகு படைப்பிரிவின் 45 ராணுவத்தினர் விடுதலைப் புலிகளால் கொண்டச்சியில் கொல்லப் பட்டனர். பதிலடியாக நாலு ஆசிரியர்களை பாடசாலை விட்டு வரும் வழியில் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இது போன்றே மார்ச் 1991 ல்
கொல்லப்
G. BASYROV
மட்டக்களப்பு இருதயபுரத்தில் பழிக்குப் பழி யா க 11 பேர் வெட் டி க் கொல்லப்பட்டனர்.
aEgyĽu 15TáEú (Black Cobras) 6T6á7gy கூறப்பட்ட ஒரு குழுவால் மட்டக்களப்பில் நிகழ்த் தப் பட்ட த  ைல வெட் டி க் கொலைகளைப் பற்றி மன்னிப்புச் சபைக்குப் பாதுகாப்பு அமைச்சு தகவல் தருகையில் இந்தக் கொலைகளுக்கு புலிகளுக்கு விரோதமான ஒரு இயக்கமே காரணம் என்று அறிவித்துள்ளது. ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்ட

Page 25
பிற்பாடுதான் இந்தக் கொலைகள் மட்டக்களப்பில் நின்றுவிட்டன என்று அறிகிறோம்.
இந்தியப் படை வெளியேறிய காவத்திலிருந்து மறுபடி இவங்கை ஓ வ த் து ட என் மே 7 த ல் ஆரம்பமாகும்வரை கண்மூடித்தனமான கைது, தடுத்து வைத்தல், சித்திரவதை, கொலைகள் என்பவற்றில் புலிகள் ஈடுபட்டு வந்துள்ளனர். பணத்திற்காக முஸ்லிம் வர்த்தகர்கள் உட்பட பலர் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர்.
து ணுக் கா யிலுள்ள புலிகளின் சிறைச்சாலை பற்றிய தகவல்களையும் மன்னிப் புச் சபை அங்கிருந்து விடுதலை பெற்றுள்ளது. நவம்பர் 1990இல் 28 முஸ்லிம் வர்த்தகர்கள் யா ழி ப் ப ா பிண த் தி ல்  ைக து செய்யப்பட்டனர். ஒருவர் கொல்லப் பட்டதாகவும், மூவர் விடுதலை செய்யப் பட்டதாகவும் தெரியவருகிறது.
விடுதலைப் புலிகளால் கொல்லப் பட்டவர்களுள் புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்களில் இருந்தோரை விட, புவிகளின் கட்டளைக்குப் பணியாதோரும் அடங்குவர்.
slsgtser TLi JSF 4Fleur PD
சர்வதேச மன்னிப்புச் சபை இந்த வருடம் யூன் மாதம் துணுக்காய்ச் சி சீன ற யில் புவிகள் T ல் தடுத் து சித் திர வ ைத செய்யப்பட்ட ஒருவரைச் சந்தித்தது. ஏப்ரல் மாதம் 1990ஆம் ஆண்டு மூன்று விடுதலைப் புலிகள் மதில் பாய்ந்து சென்று அவரைக் கண்களைக் கட்டி அழைத்துச் சென்றார்கள். ஒன்பது நாட்கள் வேறும் 40 - 43 பேருடன் அவர் தடுத்து வைக்கப் பட்டிருந்தார். ஒன்பதாம் நான் துணுக் காய்க்கு அனுப்பப் பட்டார். துணுக்காய்ச் சிறை நெல் சந்தைப்படுத்தும் சபையின் கட்டிடங்களில் அமைக்கப் பட்டிருந்தது. ஒரு பெரிய கட்டிடத்தில் 3அடி x 2 அடி அளவுள்ள இடம் நிலத்தில் பெட்டி போல வரிசை யப்பட்டிருந்தது. ஒவ்வொரு கைதிக்கும் ஒவ்வொரு "பெட்டி ஒதுக்கப் பட்டிருந்தது. இந்தச் டுசிறு துண்டு இடத்திலேயே கைதிகள் நிற்பாட்டப் பட்டிருந்தார்கள் ஒன்பது அங்கு 2 இரும்புத் துண்டங்களால் அனைவரது கால்களும் விலங்கிடப் பட்டிருந்தன. பெரிய கட்டிடத்துள் கிட்டத்தட்ட 800பேர் இவ்வாறு சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்.
"பயங்கர"க் கைதிகனை தனியாக வைத்திருந்தார்கள். இந்தத் தனிச் சிறை என்பது எ ட் ட டி ஆழ க் குழிகளாகும். குழிகளை மூடி முட்கம்பி வலை. இவ்வாறு எட்டு நீள்குழிகள் இருந்தன. ஒவ்வொரு குழியிலும் 20, 23 "பயங்கரக் கீகைதிகள் இருந்தனர்.
 ைவ க் ஆக ப் பட் டு ச்
 

இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த க் பேரைக் கச்சாய் முகாமில் தலைகீழாகக் கீ ட் டி த்  ெத T க் க வி ட் டு நகங்களுக்கிடையில் ஆர்சி ஏற்றியதைத் தான் கண்டதாக அம் அவர் மேலும் தெரிவித்தார்.
பின்னர் இந்த ராணுவத்தினருக்கு சேறும் சகதியும் வாய்க்குள் ஊட்டப்பட்டு, அறையொன்றில் அடைக் கப்பட்டு மிளகாய் எரித்த புகை அறைக்குட் செலுத்தப்பட்டது.
சாப்பாடு
இன்றைக்கு எதுவாயும் இருக்கலாம்.
ரின்னில் வந்த மீன்
குழம்பாகியிருக்கவாம். முருங்கைக்காய்கூடக்
கறியாகியிருக்கலாம்
(அதுவும் ரின்தானே!)
சோறிருக்கும், தமிழ்க் கலாச்சாரம் சொல்லித் தந்தபடிக்கு
வேண்டிக் களைப்புக்கு வீடுவந்து சாப்பிடுதல் ஆறுதல்தான், ஆர் இல்லையெண்டார்?
பருப்பதிகம் சாப்பிடுதல் சரியில்லை, வாய்வு வரும்) பாண்கூட இன்றுவரை ஒத்துவரவில்லை. கத்தரிக்காய், தக்காளி, வாடிக் கடையடையும் போஞ்சி, ருசிகெட்ட மரவள்ளி பேணிகளில் வரும் வெண்டி, பயித்தை நீரைவகை
ால்ரமே வயிற்றுக்குள்
புலிகளின் கச்சாய்த் தடுப்பு முகாமில் தா வின் எ ல் வா று சித் திரவ  ைத செய்யப்பட்டேன் என்பதையும் அவர் விவரித்தார். அவரும் வேறு நான்கு கைதிகளும் சிறு அறையொன்றில் சுவரைப் பார்த்தபடி நிற்கப் பணிக்கப் பட்டார்கள். பின்னர் பெரிய சத்தியல் ஒன்றினால் எல்லோரும் தாக்கப்பட்டனர். தான் ஏழு முறை தாக்கப் பட்டதாகவும் அதன் விளைவாக இன்று வரை சுவாசிப்பதில் கஷ்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சண்டித்தனம் செய்யும்.
தமிழர்களின் தேசிய உணவா கோழி? இறைச்சிவிலை கட்டாது, எமக்குள்ள பட்ஜெட்டில்.
முருங்கை இவை வறுவல் உடம்புக்கு நல்லதுதான். ஆர் தருவார்?
முருகா தேனும் தினைமாவும் நீதின்று
எங்களைத்தான் நடுத்தெருவில் விட்டுவிட்டாய்
ான்ன செய்ய,
ால்லாம் போய் இல்லாத சாப்பாட்டுக்காசையுற்றுக்
திர யாங்கிரிபி இருக்க விதிசெய்தாய். வந்துசேர்ந்த வழியெல்லாம் மறந்துபோனோம் வாய்க்கு வாய்த்த ருசிமட்டும் மறவாதிருப்பதென்ன?
க சீத்தலைச் சாத்தனார் II

Page 26
ഖങ്ങബ് 9 றிக்கை
r
ஒரு ெ
பாதியாய் ஒலியிடப்பட்ட கிணறு
T ரன் இழந்துபோனவைகள்
ஒரு துண்டு நிலம்
மழையையோ, வெயிலையோ
தாங்கமுடியாவிட்டாலும் வீடு என்று அழைக்கப்படுகிற ரைகளின் தொகுதி والتلال
தென்னோலை நுனிக்குப் LITTIJI கொடுத்து
வேலியருகே, கணவனுக்காய் (அல்லது எனக்காய்?) காத்திருக்கிற கண்கள்.
நீண்ட காலமாய் உருப்படாது போனதற்காய் அம்மாவிடம் ஆட்காமலே பெறுகின்ற திட்டுகள்.
சிறுமாரி, தொடரும் புழுதிமணம், வண்டிற் சத்தம்,
[ଟା முரண்டுபிடித்து நிழலை மட்டுமே தருகிற
SUWADUGA.

e=="~="“ m"" Rقتقسیاست ===
சைக்கிள் தடியோடு ளேன். சிகரெட்டுக்காய் நிகழும் பின்னேர ஊர்வலங்கள்.
(நம்பிக்கையோடு) அடிக்கடி வந்துபோகிற திரின் காலடி ஓசை
எப்பொழுதாவது பிரசுரமாகலாம் என்பதாய் நம்பி எழுதிக் குவித்துவைத்த கவிதைப் பட்டாளம்.
திருமணத்தால் தீயணைக்கமுடியாமல் என்னோடு "ஸ்னேகமாய் இருந்த கமங்கவி.
இளமைக்கால ļot Gagari இப்போது, என்னிடம் எச்
g匹 (EU65x50T, சில கிறுக்கல்கள்.
இன்னொரு நாட்டின்
கடவுச் சீட்டு. i
t தென்னவன்
一
desember 1991 januar 1992 32