கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1993.02

Page 1


Page 2
4ീഴ്ത്തB4ناروو؟
கடந்த இதழில் ஏறா ரைட் சம்பவம் தொடர்பாக வெளிவந்த கட்டுரையில், "பயங்கரவாதிகள் என்று கருதப்பட்ட இரு தமிழர்கள் கைது செய்யப்பட்டுச் ಇಂ| அடைக்கப் பட்டனர்" எனக் குறிப்பிடப் பட்டிருந்தது.
இதுபற்றிக் குறிப்பிட்ட இரு தமிழர்களில் ஒருவர் சுவடுகளைச் சந்தித்து, சம்பவத்தில் தாங்கள் கைது செய்யப்பட்டதா 4.அம், ll H I T sai nai Isri தங்கள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படாமையால் El Gl 5 fir a (al || || || கூறியுள்ளா
* வடுகளில் வெளிவந்த கட்டுரையில் இவர்களது உனர் புகள் பாதிக்கப்படும் Ell:Tägli El H ont un அமைந்திருந்தமைக்காக iliini வருந்துகிறோம்.
lil Fil FT FT
Lil' தாக புேம்
the G.I. it
H
H
“ سے کھیلیں
| 3 |г ц— f L "
岛品冯m 邻叫
i, nai a, fibi விவாதிக்கு LII ". ார்களது சந்தி"
미 鷺 தங்கி | r f விரு
ாாப்பிய Fooo."T) e i un grifl, L F - 行点 ரர்கள் {{: oạĩ III off : LI미ITT 후 LIL II
| čo 山凸直潭潭 தள் e]] [####if: LነlዘቨI 潭:1平 ச் இ A.
....!!!!!!!!! |고("민" 直 பிரிக்க
நாடுகள் |고
தொடர்பு r I li Trust), C.202 la.jpill Ill
Delhi 1.1 (X)24.
eu seirir i'r ff"
ifir, fill ar fir1 l! ஆசிய
டார்கள் ;'; Manushi (Man LI shi gar 1, ኵሃùW
610,604, 85,000
கடந்த வருடம் சுவீடன் நாட்டுக்கு 85,000 பேர் அரசியற் தஞ்சம் கோரி ஐந்துள்ளனர் ஏனைய ஐரோப்பிய ந I டு களு டன் ஒப் பி டு  ைக |பி ல் , (சனத்தொகை வீதத்தின் அடிப்படையில்) சுவீடனுக்கே அதிக அகதிகள் வருகின்றனர். வட ஐரோப்பிய நாடுகளில் பின்லாந்து 350() (:Lճմլյլւրք, நோர்வே 4.5) பேரையும் a siliili II. HK C. & 3 Juni) எடுத்துள்ளன.
1991 இல் சுவீடன் நாட்டுக்கு வந்த அகதிகள் தொகை 270 மட்டுமே. 92இல் இத்தொகை மூன்று மடங்காக அதிகரிக்க "யூகோ ஸ்வா வியா "வில் உள்நாட்டுப் போரே. ஆயினும் கடந்த Guy L Lfi 45 ( ) () Liff LD L G : un அகதிகளாகத் தங்க அனுமதிக்கப் பட்டுள்ளனர்
சுவீடனில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக் கடி யும் திண்டாட்டமும் கடந்த இரு வருடங்களாக வெளிநாட்டவருக்கு எதிரான போக்கை அதிகரித்து ள் ளது டன் நிற வாதத் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன
"சுவீடன் நாடும் ஒரு குடி வருகைத் தேசமாகும். சுவீடன் நாட்டவர்களும் "lp15ğfiliLJaI;IT 61Ji"I" ( Middle agc) Lugg#lvʻ9laii வெளிநாடுகளில் குடியேறி அறிவியலையும் இன்று
வெளிநாட்டவர்கள் சுவீடன் நாட்டின்
AIF, III II : LT Lia ,
முக்கிய
தொடங்கிய
வே ன வ யில் வா த்
கE வகளையும் பயின் நனா
ஒருபகுதி மக்களாவர். இவர்கள் சுவீடன் நாட்டின் கலாசாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர்" என்று ஆவீடன் Abril L{Gl அரசர் அண்மையில் கூறியுள்ளார்.
இதுபற்றி சுவீடனின் நவ ஜனநாயகக் கட்சி"யின் தஈ:வா கூறியது: "அரசர் வெளிநாட்டவர்மீது பிரியமுடையவராயின் அவர்களைத் தமது அரண்மனையில் Burry அனுமதிக்கட்டும்"
- THE FIET

υφιεία.
மிக நீண்ட காலத்தின்பின் அமைதியாக ஒன்றியிருந்து பார்க்கும் படியாகத் தயாரிக்கப் பட்டிருந்த 'மறுபடியும்" படத்தை ஒஸ் வோ தி ரை யாங் கொன் றில் எழுத்தோட்டம் (டைட்டில்) இல்லாமற் பார்க்கக் கிடைத்தது.
பலரால் கையாளப்படும் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அல்லாடாமல், ஒரு சாதாரண குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனையைப் பொறுப்புணர்வோடு அணுகியிருப்பது இந்தப் படத்தின் வெற்றி, சாதாரணமாகச் சின்ன வீடு' என்று கூறப்படும் அம்சத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை, அந்த விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ள மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அதிகம் அலட்டாமல் நேரடிப் பார்வைக்குத் தருகிறது படம். இதுவரை பாலுமகேந்திரா என்ற நெறியாளரிடம் இருந்து பார்க்கக் கிடைத்த படங்களில் கையாளப்பட்ட விசயங்களில் இருந்து இது கொஞ்சம் மாறுபட்டது. இது மனிதர்களது உறவுகள்
', 'iraாசி பூer 27-H High Street TA:Iist:r:: f. Jfr 'CI. 3 tr) IéI: (13) - 7: 833
பற்றியது ; அவர் களது உணர்வுகள் சிதைக்கப்படுகையில், நாளாந்த வாழ்வில் உறவுகள் மாறுபடும்போது எதிர்பாராமல் வருகிற அவஸ்தைகள் பற்றியது.
தனது கணவனை இன்னொருத்தியிடம் "பறிகொடுக்க நேர்கிற பெண்ணான து ள சி ( ரே வ தி ) , இ ரு பெண்களுக்கிடையில் அவஸ்தைப் படுகிற முரளி (ரவி), ஒரு குடும்பத் தலைவனைத் தனக்குள் வரிய நினைக்கிற கவிதா ( (: || п д) впf] ) சி றி ய வட்டத்தினுள்ளேயே கதையின் நிகழ்வுகள் கண்டபடி தலையை நீட்டிக்கொண்டு வேறு கதாபாத்திரங்கள் வருவதில்லை. வருவன அவசியம் கருதித்தா ன் - துளசியின் சினேகிதி, அவள் கணவன், வீட்டு வேலைக்காரி அவளது கணவன் எனச் சில பாத்திரங்கள். இவற்றைவிட முக்கியமான ஒரு பாத்திரம் இடையில் அறிமுகமாகிறது. துளசியின் நண்பனாக வரும் அரவிந்த் தான் அந்தப் பாத்திரம்,
5T 55 5
முரளி யின் அசிஸ் டண்ட் ,

Page 3
கதையைத் திசைதிருப்பிவிடக் கூடிய சம்பவங்கள் எதுவும் இல்லாமல் தமிழ்ப் படத்தைப் பார்க்க முடிவதில்லை. மறுபடியும் ஒரு விதிவிலக்கு முன்பு ‘வீடு' படம் பற்றி எழுதிய பல விமர்சகர்கள் 'இதுதான் (வீடு) தமிழின் முழுமையான முதற் பட ம் ' எ ன க் கருத் துத் தெரிவித்திருந்தனர். அவ்வாறுதான் இந்த மறுபடியும் . எந்தச் சமரசத்திற்கும் தயாராகாமல் விட்டுக் கொடுப்புகளற்று ஈடுபாட்டுடன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். துணிச்சல்தான்.
L ւ- th ԼD ID L կ) եւ մի լD ID L կ) եւ th நினைவுகளில் வந்து போகிறது. படத்தின் கரு துணிச்சலானது. இப்சன் ‘ஒரு பொம்மைவீடு' நாடகத்தில் செய்திருந்த முடிவைப் போல, மறுபடியும் படத்தின் முடிவும் துணிச்சலானது மட்டுமன்றி நடைமுறைச் சாத்தியமானதும், நம்பிக்கை ஊட்டுவதும். மிகச் சாதாரணமான ஒரு பெண் தனது நிலையில் இருந்து மாறித் தனது எதிர்காலத்தை உறுதியாகக் கட்டியெழுப்பத் தனிவழியை நாடுவதை உறுதியாகச் சொல்லும் துணிச்சல் இன்று பல இயக்குனர்களிடம் இல்லை. துளசி தனது வாழ்வுக்காகப் போராடுகிறாள், பணிந்து பார்க்கிறாள் , இறுதியில் அர்த்தமுடைய ஒரு வாழ்வைத் தேடுகிறாள். பழைய வாழ்வுக்குத் திரும்ப மறுக்கிறாள்.
பல படங்களில் ஏற்படக்கூடிய சாதாரண குறைகளில் இருந்து இந்தப் படம் தப்பியிருக்கிறது. “சின்னவீடு' என்பது தவறான விவகாரம் என்று அடித்துச் சொல்லாமல், அது வாழ்வின் ஒரு நெருக்கடி என்கிறது படம் . ஒரு பெண்ணால் தனித்து வாழ முடியும் என்பதைச் சொல்கிறபோதே, மனிதர்கள் த னி நபர் க ள ல் ல எ ன் ப ைத யும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க வே ண் டி ய வ ர் க ள் எ ன் ப  ைத யும் உணர்த்துகிறது. வாழ்வில் மிகுந்த நெருக்கடி ஏற்படுகிற போது எவருக்கும்
உடன் உண்டாகும் தடுமாற்றங்களையும் மனதில் நிறுத்திவிட்டுப் போயிருக்கிறது ULLb.
படம் பார்த்தபோது அரங்கில் அமைதி நில வி யது ஒரு ஆ ச் ச ரி யம் . அதுமட்டுமன்றிப் படம் பார்த்தபிறகு, பலரிடத்தில் படம் பற்றிய உரையாடலும் நிகழ்ந்தது. மற்றைய படங்கள் பலவற்றைப் போலல்லாமல் இப்படத்தின் கருவே சர்ச்சைக்குள்ளானது. பலரும் துளசி எடுத்த முடிவு பற்றிச் சரியான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் துளசி தனது கணவனிடம் நியாயம் கேட்கும் காட்சியில் ஏன் குடித்துவிட்டு நியாயம் கேட்கிறாள் என்ற ஒரு கேள்வி எழுந்தது. ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் குடிக்க முடியும் என்ற கருத்தைச் சொல்லவே அந்தக் காட்சி புகுத்தப் பட்டிருந்ததாக சிலரது கருத்து இருந்தது . வேறு சிலர் , மென்மையான கதாபாத்திரமான துளசி ஒரு பொது இடத்தில் கணவனை எதிர்க்கும் தன்மை உடையவளல்ல. எனவே அவள் சாதாரண நிலையில் (குடியாமல்) அவ்வாறு வாதிட்டிருந்தால் அது பாத்திரப் படைப்பிற்கு ஊறு விளைவிக்கும் என்பது வேறு சிலரது கருத்தாக இருந்தது.
எவ்வாறாயினும் பலரது கவனத்தை ஈர்த்த ஒரு திரைப்படமாக 'மறுபடியும் " அமைந்திருந்தமை ஒரு நல்ல விடயம். எப்பொழுதாவது வருகிற இதுபோன்ற நல்ல படங்களை ஊக்குவிப்பது தமிழ் ரசிகர்களுக்கு நல்லது. அவ்வாறு ஊக்குவிப்பார் இல்லாவிட்டால் இப்படி வருகிற ஓரிரு படங்களிலும் போதிய வருமானம் கிடையாமல் தயாரிப்பாளர்கள், இதுதான் சாட்டெனச் சாக்கடைக்கு
ஓடிவிடுவர். தமிழ்ப்படங்களைப் பார்த்தும் ‘ஏ தாழ்ந்த தமிழ்ப்படமே!’ என விழிக்க நேரிடும்.
оцобобllsnлоболоослеёлт

Elligiji
கேட்டீரோ சேதி ? கிளாவிக்கடவினிலே போட்டறிவந்தவர்கள் புவிகளாமீ-காட்டேரி எனவுந்து கடற்படையோர் Qasigadaptas
リ受”。 -- 鬣 به همین
لالهای
"சனிக்கிழமை பின்னேரம்,பொழுது கருகிக்கொண்டு வருகிறது. நேரம் ஐந்தரை, ஐந்தே முக்கால் இருக்கும். நானும் எனது மனைவியுமாக கிளாலிக் கடலைக் கடப்பதற்காக புறப்படத் தயாராக நின்ற படகில் ஏறினோம். எங்களது படகில் ஆண்களும் பெண்களுமாக இருபது பேர் இருந்தோம். எல்லாப் படகு களி லும் இப் படித் தா ன் . இருபதுக்கு மேல் ஏற்றப் பெடியள் அனுமதிப்பதில்லை. இரவில்தான் கடலைக் கடப்பது வழக்கம். ஏறத்தாழ நாலு நாலரை மணித்தியாலங்கள் எடுக்கும். அங்கிருந்து புறப்பட்ட படகுகளில் எங்களது ஐந்தாவதாக இருக்க வேண்டும். படகு புறப்பட்டது. கும்மிருட்டு. அங்கொன்றும் இங்கொன் று மாக வெள்ளிகள் . கூதலடித்தது. கிட்டத்தட்ட ஏழேகால், ஏழரை இருக்கும் என்று நினைக்கிறேன். படகோட்டி திடீரென்று கத்தினான். "ஐயோ நிக்கிறாங்கள் , நேவிக்காரங்கள்
நிக்கிறாங்கள்" நெஞ்சு திக்குத் திக்கென்று
அடித்தது.
அன்றைக் கென்று பெ டிய ஞம்
பாதுகாப்புக்கு வரவில்லை.
அனைவருமே மக்கள் குராைர்க்கு.
*sapagpapasaporabesseroMoMoMoMoM***
கிளாலிப் பயங்கரம்
இரத்த சாட்சிபம்
ik,
s U
நேவிக்காரர் ஒன்றும் செய்துவிடக் கூ ட |ா து எ ன ஊ ரி லு ள் எ கோவிலுக்கெல்லாம் நேர்த்தி வைத்தேன். கெர் ஞ ச துாரத்தில் கடலுக்குள் வெளிச்சமாய் ஏதோ எரிந்துகொண்டு இருந்தது. எமக்கு முன்னால் போன பட கா யிருக்க வேணும் . நே விக் கப்பலிலிருந்து "பரா" வெளிச்சம் போட்டுக் கொண்டு சுடத் தொடங்கினார்கள். படகையே பிளக்குமாப் போல பெரிய சத்தத்துடன் ஏதோ வந்து அருகில் விழுந்து வெடித்தது.
அது தண்ணிரை படகுள் இறைத்தது. நாங்கள் படகுக்குள் விழுந்து படுத்தோம். நான் மனைவிக்கு மேலே எதுவும் படாதவாறு படுத்துக் கொண்டேன்.
எமது படகிலிருந்த எல்லோரும் அரோ கரா அரோ கரா " என்று பயமிகுதியால் முனகிக் கொண்டிருந்தார்கள். நேவிக் கப்பல் எங்களுக்கு கிட்ட வந்து விட்டது. அதிலிருந்து யாரோ கண்களைக் கூசுமாப்போல் ரோச் அடித்து எங்களைப் பார்த்தார்கள்.
ரோச் நூர்நத்து. இருள். அடுத்தது என்ன? என்பதற்கிடையில் துப்பாக்கி சடசடவென வெடிக்கும் சத்தம்.
"நான் போறன்" என்றபடி என்னுடைய கையை இறுகப் பற்றியப் பிடித்தாள் என்னுடைய மனைவி. மனைவியின் இடுப்புப் பகுதியில் இரத்தம் பிசுபிசுத்தது. துப் பாக்கிக் குண்டு இடுப்பைத் துளைத்துச் சென்றிருந்தது.
படகிற்குள் ஒரே மரண ஒலம். எனது முதுகில் என்னவோ கொண்டு தாக்கினாற்போல வலித்தது.
.ஈழமோகம்

Page 4
எத்தனை பேர் செத்தார்கள் , பிழைத்தார்கள், கடலுக்குள் விழுந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது.
எமது படகின் என்ஜினைக் கழற்றிக் கடலில் போட்டார்கள் படையினர். டீசலை எடுத்து எமக்குமேல் ஊற்றினார்கள். ஏனோ நெருப்பை பற்றவைக்கவில்லை. எம்முடைய தையும் இன்னும் இரு படகுகளையும் தம்முடைய கப்பலுடன் இழுத்துக்கொண்டு போனார்கள்.மற்றைய இரு படகுகளிலும் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியைகள். சிறிது துாரம் சென்றதும் அவர்களுடைய கப்பலுடன் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்து போயிருக்க வேண்டும். எமது படகு பின் தங்கத் தொடங்கியது. படகு தன்னுடைய பாட்டிற்கு எங்கோ அடித்துச் செல்லப் பட்டது. நீண்ட நேரத்திற்குப் பிறகு எங்கோ கரையொதுங்கியது. எனது மனைவி மடியில் பிணமாய்க் கிடந்தாள்.
ze ze ze de 4e ze ze காயப்பட்ட வர்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டோம். மின்சாரம் இல்லை. லாம்பு வெளிச்சத்தில் எனது காலிற்குத் தையல் போட்டார்கள்.
கால் பா த த்  ைதயும் கு குண்டு து  ைளத் திருந்தது . ஏற் கனவே  ெகா மும் பி லு ள் ள ம க ஞ க் கு
அறிவித்திருந்தேன். கிளிநொச்சியிலேயே மனைவியின் மரணச் சடங்குகளை முடித்துவிட்டு மகளுடன் கொழும்புக்கு வந்தேன்.
"ஆஸ்பத்திரியில் அவருக்கு உதவியாக நிற்கும் அவரது மகள் தொடர்கிறார், "அம்மாவையும் பறிகொடுத்துவிட்டு அப்பாவும் காயங்களுடன், கஷ்டப்பட்டுக் 1CRC வாகனத்தில் கொழும்புக்கு வந்து  ெக r எண் டி ரு க் கி றே r ம் . 1CRC வாகனத்தைக்கூட படையினர் விட் டு வைக்க வில்லை . அங்குலம்
அங்குலமாகச் சோதித்தார்கள். எங்களுடைய
'பாக்"கைப் பிரித்துப் போட்டார்கள். நான் திரும் பவும் அவற்றை அடுக் கிக்
கொண்டிருந்தேன். இயக்கப் பெடியளைப் போல நாலைந்துபேர் அங்கே நின்றார்கள். ஒருவன்வந்து கேட்டான், என்ன நடந்தது என்று. நான் கிளாலியில் அம்மாவை நேவிக்காரர் சுட்டுவிட்டார்கள் என்றும் அப்பாவுக்கு குட்டுக் காயங்களுடன் கொழும்புக்குக் கொண்டு போகிறேன் என்றேன். அவன்கள் சொன்னான்கள் "உங்களுடைய ஆக்களே உங்களைச் சுட்டு இங்கை அனுப்பிப் போட்டு, நேவி சுட்டதென்று பொய் சொல்லுறாங்கள். நீங்களும் அதையே சொல்லுங்கோ" என்றான்.
எனக்கு அழுகையும் கோபமுமாக வந்தது. அந்த இடத்திலேயே அவன்களைக் கழுத்தை நெரித்துக் கொல்ல வேணும் போல இருந்தது".
தகப்பனார் குறுக்கிட்டார். "அவன்களை வி டு அ  ைத ப் ப ற் றி ஏ ன் கவலைப்படுகிறாய்? அவன்கள்தான் துரோகிகளாய்ப் போனாங்களே. காட்டிக் கொடுக்கிற ஆக்களாய்ப் போனாங்களே. அவங்களைப்பற்றி ஏன் கதைக்கிறாய்?" என்றார் அவர் வேதனையுடன் நெளிந்தபடி, வெறுப்பு, கவலை, வெப்பிசாரம், கோபம் அனைத்தும் கலந்த ஒரு பாவம் அவர் முகத்தில் தெரிந்தது.
"கொழும்புக்குக் கொண்டு வந்ததும் முதுகு வலிக்கிறது. நேவிக்காரங்கள் அடிச்சிருக்கிறாங்கள் போலை என்றார் அப்பா. மறுநாள் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்து எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தோம். முதுகில் மூன்று ஷெல் துண்டுகள் இருந்தன. ஒப்பிரேஷன் செய்து நேற்றைக்குத்தான் எடுத்தது. இன்னமும் வயிற்றிலும் காலிலும் இருக்கிறது. இன்னமும் இரண்டு நாளைக் குப் பிறகுதான் எடுக்கவேணும்" என்றார் மகள்.
அவ வும் போ ன பிறகு இனி என்னத்துக்கு இதெல்லாம்?" என்றபடி விக்கி அழ ஆரம்பித்துவிட்டார் அப்பா.9
நன்றி. சரிநிகர்

鄒
ॐ
ॐ ॐ 28 ॐ * ॐ
後 象
ॐ
கடந்த வருடம் கோடை காலத்தில் நோர்வேயில் வசித்த ஒரு தாய்லாந்துப் புத்த பிக்கு
ஒருவர், ஒஸ்லோப் பல்கலைக்கழகத்தில் கோடை காலக் கல்வியகத்தில் “இலங்கையின் இனப்பிரச்சனையின் மதப்பரிமாணங்கள்' என்ற தலைப்பில் குறுங்கால ஆய்வுக் கல்வி ஒன்றை மேற்கொண்டார். இலங்கை இனப்பிரச்சனையில் அதிக ஆர்வம் கொண்ட இவர், யுத்தம் நீடிக்கக்கூடாது, அழிவுகள் நிறுத்தப்பட வேண்டும், சமாதான முறையில் இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதைத் தனது முக்கிய கருத்தாக முன்வைத்தார்.
பி.எம்.சொம்ஷாம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவரது மதப்பெயர் தம்மதேரோ என்பது. தனது ஆரம்பக் கல்வியையும் பின் மதகுரு ஆவதற்கான கல்வியையும் முடித்த இவர், பிறநாடுகளில் பெளத்தம் பற்றி அறிவதற்காக ஆங்கிலத்தையும் கற்றார். அப்போது தாய்லாந்து சென்ற இலங்கைப் பிக்கு ஒருவரது நட்பால் இலங்கை செல்லும் ஆவல் இவருக்கு ஏற்பட்டது. இலங்கையில் பெளத்தம் பற்றி அறிய வந்த இவருக்கு இலங்கையில் அப்போது நிகழ்ந்த இன அழிப்பும், அந்த இன அழிப் பில் சொத்துகளைச் குறையாடிய, கொழுத்திய மனிதர்கள் மகிழ்ச்சியில் திளைத்ததும் அதிர்ச்சியைத் தந்தன. சிங்கள பெளத்த பிக்குகளை மட்டுமன்றித் தமிழ் அகதிகளையும் சந்தித்த அவர் தமிழர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தன்னைச் சந்திப்பவர்களிடம் கூறினார்.
பெரும்பாலான பெளத்த பிக்குகள் இ ன வ ச த க் கருத்து க  ைள க்  ெகா ண் டி ரு ந் த  ைத த் தா ன் அவதானித்ததாகக் கூறும் இவர், தமிழர்கள் பற்றி மட்டுமன்றிப் பொதுவாக உலகம் பற்றியும் போதிய பரந்த அறிவு இலங்கைப் பிக்குகளிடம் - குறிப்பாக முதிர்ந்த
பிக்குகளிடம் - இல்லை என்பதையும் தான் அவதானித்ததாகக் குறிப்பிடுகிறார். அவ்வாறு அறிவைக் கொண்டிராதது, இந்தப் பிக்குகளைத் தவறான முறையில்

Page 5
கருத்துகளைத் தெரிவிக்கவும் அந்தக் கருத் துக ளி ன் வழி நடக் கவும் துாண்டுகின்றன எனவும் தம்மதேரோ கவலையோடு தெரிவித்தார். மஹாவம்ச, புத்த நுால்கள் உட்பட அவ்வாறான விஷயங்களை மாத்திரமே படித்து, விகாரைக்குள்ளேயே ஒரு மூடுண்ட வாழ்க்கை வாழ்வதால் இவர்களால் புற உலகைப்பற்றிச் சரியான கணிப்பைக் கொண்டிருக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
"சிங்களவர் கடந்த காலங்களில் இருந்து பல கற்பிதங்களைக் கொண்டிருக்கிறார்கள்.
வரலாற்றி ல் இருந்த சோழப் படையெடுப்புகள் போன்றவற்றின் காரணமாகத் தமிழர்களுக்கு ‘அதிக இடம்" கொடுத்தால், தாங்கள் வாழ இடம் இல் லா மற் போய் விடும் எ ன நினைக்கிறார்கள் . முக்கியமாக தமிழ்நாட்டில் ஆறுகோடி தமிழர்கள் வாழ்வதுபற்றிக் காலம் காலமாக உள்ள பயமும் தமிழ்மக்களுக்குரிய உரிமைகனை வழங்கப் பயப்படக் காரணம்.
தமிழ் மக்கள் மத்தியிலும் இப்படியான பயங்கள் உள்ளன. முக்கியமாக நூாலக எரிப்பு. 83கலவரம் போன்றவற்றிற்குப் பின் சிங்களவருடன் இணைந்து வாழமுடியாது என அவர்கள் நினைக்கிறார்கள்.
இலங்கைத் தீவினுள் யார் முதல் வந்தது என்பதுபற்றிப் பெரிய பிரச்சனைகள் நிகழ்கின்றன . மஹா வம்சம் ஒரு கதையைக் கூறுகிறது. அவ்வாறே தமிழ் மக்கள் முன்வந்தவர்கள் எனச் சொல்லவும் ஆதாரங்கள் உள்ளன. ஆனால் யார் முதல் வந்தது என்பதைப் பற்றி அடிபடாமல், இத்தனை காலம் இரு சமூகத்தினரும் ஒற்றுமையாக இருந்தவர்கள் என்பதை நினைப்பது நல்லது." என்றார் தம்மதேரோ.
"தமிழ் மக்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாமல் காலம்காலமாக நாங்கள் ஏமாற்றப் படுகிறோம் என்பதையே,
நாங்கள் ஆயுதம் தாங்கியபின்பே உலகம் அறிந்தது. இந்த வகையில் நாம் யுத்தத்தை ஆரம்பிக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப் பட்டோம், இதை உங்களால் புரியமுடிகிறதா?" எனக் கேட்டபோது, தன்னால் அதைப்புரிய முடிவதாகவும், பிரிட் டி ஷ் அரசின் காலத் தில் ஏற்படுத் தப் பட்ட பிரித்தா ளு ம் கொள்கையாலேயே சிறுபான்மை இனத்தவர் பாதிக்கப்படும் நிலை உருவானதாகவும், சிங்கள அரசுகள் தொடர்ந்து சரியாக நடந்துகொள்ளத் தவறியதால் இத் தவறு விஸ்வரூபம் எடுத்ததாகத் தான் கருதுவதாகவும் தம்மதேரோ கூறினார்.
" இலங்கையில் உள்ளது போல தாய்லாந்திலும் பிக்குகள் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறார்களா?" இது நான்.
"கிடையாது, பொதுவாக அரசியல் என்பது ஒரு ஆபத்தான விளையாட்டு. இதில் மதம் தலையிடவேண்டும் என்ற கருததுப் பொதுவாகத் தாய்லாந்தில் இல்லை. ஆனால் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் பிக்குகள் மக்களின் பக்கம் சார்ந்துவிடுவார்கள். அரசியல்வாதிகளின் பக்கம் அல்ல. அண்மையில் ஜனநாயகம்
கோரிய மக்கள் போராட்டத்தின்போது
மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டார்கள். அப்போது, தொலைக்காட்சியில் தோன்றிய புத்தபிக்கு, நடந்த சம்பவங்களை நேரடியாகக் குறிப்பிடாமல், யாரையும் நேரடியாகச் சுட்டிக் காட்டாமல், புத்தமத ஜாதகக் கதைகள் சிலவற்றைக் கூறி நியாயத்தின் குரலைக் கூறினார். இலங்கையின் புத்த பிக்குகள் மிக அதிகளவில் அரசியலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். இது நல்லதல்ல. அதேவேளை தமிழ் மக்களைப் பற்றிய அறிவும் , அவர்கள் மீது அனுதாபமும் புத்தபிக்குகளிடம் மிகக்

குறைவாகவே உள்ளது. இந்த யுத்தம் நீடித்து மக்களே இல்லாமற் போய்விட்டால், (எந்த) மதமும் இருக்காது என்பதை யாரும் சிந்திப்பதில்லை.
வடபகுதிக்குச் சென்று அவர்களது உணர்வுகளை அறிந்த சில பிக்குகளிடம் நல்ல சிந்தனைகளைக் காணமுடிகிறது. அவர்கள் அவர்களது பிரச்சனைகள் தீர்க்கப்பட வே ண் டும் " என்று கூறு வ ைத க் கேட்டிருக்கிறேன். ஆனால் பெரும்பாலான பிக்குகள், சிங்களத் தேசியவாதத்தில் ஊறியிருப்பது கவலை தருவது.
கடந்த வருடம் சில பெளத்த பிக்குகளைத் தாய்லாந்திற்கு அழைத்து சிறுபான்மையினருடன் அமைதியான முறையில் வாழ்தல் பற்றிப் பயிற்சி, கருத்தரங்குகள் நடத்தினோம். இறுதியில் ஒரு பெளத்த பிக்குவிடம் தமிழரது நிலை பற்றி அபிப்பிராயம் கேட்டபோது, அவரது அபிப்பிராயம் மாறாமல் இருப்பதைக் காணமுடிந்தது. இதுதான் இப்போதைய நிலை . எனவே உடனடியாக நாம் எல்லாவற்றையும் மாற்றிவிடலாம் என நம்பவில்லை.
எல்லோரும் யுத்தம் நல்லதல்ல என்கிறார்கள் . ஆனால் யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது . இழப்புகளைப் பொதுமக்களும், லாபங்களை அர சி ய ல் வா தி க் ஞ ம் , ஆ யு த விற்பனையாளர்களும் பெறுகிறார்கள்"
பிறகு பேசிக்கொண்டிருக்கையில் அதிர்ச்சி தரும் ஒரு விடயத்தைக் கூறினார் தம்மதேரோ, "இந்த வருடம் (92) தாய்லாந்தில் நிகழ்ந்த வன்முறைகள் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். இந்த வன்முறைகள் நிகழ்ந்த மாதம் ‘தமிழ் மாதம் என அழைக்கப் படுகிறது. தமிழ் என்பது மிகப் பயங்கரமான
வன்முறை என்ற கருத்திலேயே எமது மொழியில் வழங்கப்பட்டு வருகிறது"
சற்றே ஆச்சரியம் தந்த இந்தத் தகவல்
* தமிழர்கள் நல்லவர்கள்.
பற்றி மேலும் கேட்டபோது, அவ்வாறான ஒரு சொல் எப்படிப் புழக்கத்தில் வந்தது எனத் தான் அறியவில்லை எனவும், ஆனால் நீண்ட காலமாக இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் புத்தமத ரீதியான தொடர்புகள் இருப்பதால், நீண்ட காலத்தின்முன் இலங்கையில் இருந்து வந்த புத்தபிக்கு ஒருவர், வன்முறை என்பதைத் தமிழ் என்ற சொல்லின் மூலம் கூறியிருக்கலாம் என்றார். அதற்குக் காரணம் அப்போதைய காலங்களில்
வடக்கிலிருந்து வந்த தமிழர்கள் (சோழர்கள்) சிங்களவரது இடங்களைப் பிடித்து வன்முறையில் ஈடுபட்டமையாக இருக்கலாம் என்றார்.
வேறொரு நாட் டி ல் இருந்து வருபவருக்கு எமது நாடு பற்றியும் அங்கு நிலவும் பிரச்சனைகள் பற்றியும் பரந்த அறிவு இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கும். அதுவும் இந்த மனிதர் ஒரு புத்தபிக்குவாக இருப்பது இன்னும் ஆச்சரியம் தந்தது. ‘சமஷ்டி கொடுத்தால் தமிழர்கள் எங்களை (சிங்களவர்களை) அழித்து விடுவார்கள்" என்று நம்பும் இலங்கைப் புத்த பிக்குகள் பற்றி
நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சசாகுந்தலன்

Page 6
அகதிகளுக்கு எதிராக
rI Tru ITrt esCrossilt
அகதிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த ராடார் கருவிகளைப் பயன்படுத்துவது பற்றி ஜேர்மனி ஆராய்ந்து வருகிறது. போலந்து, செக்கியா, ஸ்லாவாக்கியா நாட்டு எல்லைகளைக் கண்காணிக்கவே இக்கருவி பயன்படுத்தப்படும்.
ராடாரின் தொழில்நுட்பம் முன்னாள் கிழக்கு ஜேர்மனி பாவித்த கருவியையே பாவித்துப் பெறப்படும். இதுவே உலகின் மிகச் சிறந்த கண்காணிப்புத் தொழில் நுட்பமாக உள்ளது.
கடந்த வருடம் இந்த எல்லைகளுடாக 54,000 பேர் களவாக ஜேர்மனிக்குள் பிரவேசித்தனர். இத்தொகை ஏற்கனவே அகதிகளாக வந்த நான்குலட்சம் பேரில் அடங்காது.
- தூதுவன் -
ترچھی چھچھیجی
* தமிழ்ச் சங்கம் நடத்திய நத்தார் விழா ஒஸ்லோவில் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நிகழ்ந்தது.
* தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா ஜனவரி இறுதியில் ஒஸ்லோவில் நிகழ்ந்தது.
* யாழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா.சிவத்தம்பி ஜனவரியில் நோர்வே வந்திருந்தார். ஒஸ்லோ, பேர்கன் ஆகிய நகரங்களில் அவரது சிறப்புரைகள் வெவ்வேறிடங்களில் நிகழ்ந்தன.
* தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ‘புலர்வின் பூபாளம்’ என்ற கலைநிகழ்ச்சி ஒஸ்லோவில் ஜனவரி நடுப்பகுதியில் இடம்பெற்றது. சிறப்பம்சமாகப் பேராசிரியர் சிவத்தம்பியின் உரை இடம்பெற்றது.
- செய்தியாளன் -
நோர்வேயில் வெளியாகும் தினசரிகளில் மிக அதிகம் விற்பனையாகும் தினசரி முன்புபோலவே "வேகே"(VG)தான். சராசரியாக 3,74000 பிரதிகள் தினசரி விற்கும் இப்பத்திரிகை, இரண்டாவது இடத்தில் உள்ள "ஆப்தன்யூஸ்தன்' (Aftonposton) spuSO)6OTGOLSSL ஒருலட்சம் அதிகமாக விற்கிறது. மூன்றாவது இடத்தில் உள்ள டாக்பிளா(த) (Dagbladet) இன்னுமொரு 50,000 குறைவாக விற்கிறது. அதேவேளை கடந்த வருடம் விற்பனை அதிகரிப்பு என்ற விடயத்தை மட்டும் கவனத்தில் எடுத்தால் ஏனைய பத்திரிகைகளைவிட டாக்பிளா" முன்னணியில் உள்ளது.
- சிவன் -
கொழும்பில் கேட்டது
மூட்டைப் பூச்சி 1: என்ன மச்சான், கொழும்புப் பக்கம் தலைகாட்ட மாட்டன் எண்டு சவால் விட்டிட்டுப் போனீர்! இப்ப ஒரு கிழமையாலை திரும்பி வந்து நிக்கிறீர்?
ep . . 2: G s t u , யாழ்ப்பாணத்திலை உணவுத் தடையாலை சனங்கள் மெலிஞ்சு செத் த லாப் போச்சுதுகள். பிறகு எப்பிடிப் பிழைப்பு நடத்திறது?
எ ன் ன
- ஆவன்னா -
 

ண்மையில் பலரது கவனத்தையும் ஈர்த்த முக்கிய நிகழ்வுகள் சில, கிளாலிப் படுகொலைகளும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பி.பி.சி. பேட்டியும், பின்பு பி.பி.சி. சர்வதேச (ஆங்கில) ஒலிபரப்பில் ஒலிபரப்பான ஜனாதிபதி பிரேமதாசாவின் நேயர்கள் கேள்வி பதிலும் எனலாம். உண்மையில் அனேகரது கவனத்தைக் கவர்ந்திருக்க வேண்டிய தெரிவுக் குழு, தனது கோணங்கிப் போக்கினால் வெற்றுவாணமாகிவிட்டது.
கிளாலியில் தொடர்ச்சியாக நிகழ்ந்த படுகொலைகள் யாழ் குடாநாட்டுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் இருந்த ஒரே தொடர்பைப் பெருமளவு துண்டித்தன. இந்தப் படுகொலைகள் எத்தனை பேரைப் பலியெடுத்துள்ளன என்பது பற்றி யாரும் சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. கிளாலி தடைசெய்யப்பட்ட பிரதேசம் என்ற பல்லவியைத் தொடர்ச்சியாக அரசு பாடியதுடன், கொல்லப் பட்டவர்கள் புலிகளே என்று கூறி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது. இதைவிட அவமானமான விடயம் , கொழும் பில் இருந்து ஒலிபரப்பாகும் ‘மக்களின் குரல்" என்ற பினாமி வானொலியும் கொல்லப் பட்டவர்கள் புலிகள் என்று கூறியதுதான்.
கிளாலிக்கு மாற்றீடாக வேறொரு பாதையைத் திறக்க எடுக்கப்பட்ட ஆரம்ப
முயற்சிகள் விடுதலைப் புலிகளது நிபந்தனைகளால் தோல்வி அடைந்தன. வழியில் ராணுவ முகாம் அமையுமாறு பாதையை உருவாக்க இலங்கை அரசின் முயற்சி இருக்கையில், அதற்கு மாறாக விடுதலைப் புலிகளது நிபந்தனைகள் உள்ளன. இடையில் துாதுவராக இருந்த அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு முதலாவது முயற்சியில் தோல்வி என அறிவித்தது. எனினும் கடைசியாகக் கிடைத்த சில தகவல்கள் பாதை திறக்கப்படும் சாத்தியம் பற்றிக் கோடிகாட்டுகின்றன.
பி.பி.சி.யில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய பேட்டி,
தேசப்பிரியன்

Page 7
அண்மையில் அரசியல் அரங்கில் கவனத்தைக் கவர்ந்தது. தமிழீழம் தவிர்ந்த ஒரு நியாயமான தீர்வுக்குத் தாம் உடன்படலாம் என்பதை அவரது பேட்டி மறைமுகமாக உணர்த்திற்று. இவ்வாறான தொனி ஏற்கனவே பல தடவைகள் புலிகளின் கருத்தாக வெளிவந்த போதிலும், பிரபாகரனின் வாக்குமூலமாக இம்முறையே சொல்லப் பட்டிருக்கிறது.
இப்பேட்டியின் இன்னொரு விடயம், முஸ்லிம் மக்கள் பற்றிக் குறிப்பிட்டமை. இரண்டு வருடங்களுக்கு மேலாக வடக்கில் இருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வாழும் முஸ்லிம்கள் தெற்கே அனுப்பப் பட்டது (துரத்தப் பட்டதல்ல) ஒரு பாதுகாப்பு நடவடிக்கை தான் என இத்தனை காலத்திற்குப் பின்னர் புலிகளின் கருத்தாக வெளிவந்துள்ளது. இதுவரை காலம் முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டமை தொடர்பாகச் சரியான அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைப்பாட்டைப் புலிகள் கொண்டிருக்கவில்லை. இப்போது, யுத்தம் முடிந்து ஒரு தீர்வு ஏற்படும்போதுதான் அவர்கள் திரும்பிவர அனுமதிக்கப் படுவார்கள் என்பது, தற்செயலாக யுத்தம் அண்மைக் காலத்தில் முடியாவிட்டால் அவர்கள் திரும்பவே முடியாதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
சமாதானத் தீர்வுக்குத் தாம் தயார் என்பதான புலிகளின் அறிவிப்பு, சிங்கள மக்கள் மத்தியிலோ அரசியல்வாதிகள் மத்தியிலோ பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தியதாக நம்ப முடியவில்லை. இதை பி. பி. சி. யில் நேயர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரேமதாசாவின் வார் த் தைகள் தெளிவா க் கி ன . தெரிவுக்குழுவின் முடிவுகளையே தான் அமுல்படுத்துவேன் எனப் பிரேமதாசா கூ றி யி ரு ப் ப து இ த  ைன த் தெளிவாக்குகிறது. புலிகளின் பிரேரணை என ஒன்றும் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில் தாம் ஒன்றும் செய்யமுடியாது எனத்
தெரிவுக்குழு முன்பு கூறியிருந்தது.
தெரிவுக் குழு வடக்கு கிழக்கைப் பிரிக்கும் ஒரு திட்டத்தை மட்டுமே தீர்வாக முன்வைக்கும் என்பது தெளிவு. எனவே தெரிவுக்குழுவுடன் இனப்பிரச்சனைத் தீர்வு பற்றிப் பேசுவதே பயனற்ற செயல் எனக் கொழும் புக் குழு க் கள் உணர ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த அறிவு, முன்பே வந்திருக்க வே ண் டி ய து எ ன் ப  ைத யு ம் , இனப்பிரச்சனைக்கு ராணுவத் தீர்வுதான் அரசின் உண்மையான திட்டம் என்பதும் கடந்த காலங்களை அவதானிக்கும் எவரும் ஊகிக்க முடிந்த ஒன்று.
கிழக்கை ஓரளவுக்கேனும் ராணுவரீதியாக விடுவித்து, இடம்பெயர்ந்த வடக்கு வாக்காளர்களையும் வைத்து, வடக்கு கிழக்கு மாகாண சபையின்/ சபைகளின் தேர்தலை நடத்தத் திட்டம் தீட்டியுள்ள அரசு, ராணுவத் தலைவர்கள் தமது வெற்றிகள் பற்றிக் கொண்டுள்ள
நம்பிக்கையில் நுாலிழையில் தொங்கிக்
கொண்டிருக்கிறது. ராணுவத்தின் இவ்வாறான பல கணிப்புகள் பொய்த்துப் போனதையும், பலவந்தமாக மக்களின் விருப்பமற்ற தீர்வு ஒன்றைத் திணிப்பதன் லாப நட்டங்களையும் இலங்கை அரசு
 
 

அறியாததல்ல.
(ଶ 乐 f
ਪੰ தீ ர்  ைவ பிரேம த் துவதாக க் கூறி வரும் கூட்டங்களில், தமிழீழத் (5 LD :: o: மறுப்ப தாகவும் தமிழர்கள்தான் ராக
லங்
அரசு, மனித உரிமைக ?:"?"
೮೯DDu೧ು தமிழ் மக்கள் 66
ல்லப்
\/arieties of
Denmark and
from perseاس reception of refugees al over the word.
hiS undamen u
owever, ged by the growth o xenop in view of the respect now We receive fleeing
people has aS
Sive public debates O
de
Despite extes
scribing the
world, empirica studies
Denmark and England is a un
nte 38, 2. sal
The Tamil Refugee Experience
England
en, this article has
man right is at prese hobia and racism in
tor numan rights
sumed increasing importance.
experience newN conditions a stil very fе
e presen ook on the integration Sri Lankan Tamil refugeo
ique analysis of a
r for Menneskerett
பட்டபோது மயிலந் கொல்லப் பட் ந்தனையில் 35 தமிழர்கள் LJ SU) பட்டமை) .ெ ଜୋଗ ணுவ வீரர்கள் மீது வ தாகப அறிவித் து ழககுத
வழக்கு ಛಸಿ: தண்டிக்கட் நடந்து குற்றம் செய்தவர்க 960) ப் பட்டால், இலங்கையின் 町&&们 னவாம் மக்கள்
வரும் விடுதலை
t
முதற்படியாக w
asylum been the pasis of the
n othe countries
nt being chaken* Eህfopé.
ክከe
in Europe, question o
of ከe people
s in ou part
refugee
whicn theSe
ways
topical SSue.
gneder

Page 8
லேசர் மனிதன் - பொலிஸ் வலையில்
ஸ்ரொக்ஹோம் நகரைச் சுற்றிய பகுதிகளில் 1991 - 92ஆம் ஆண்டுகளில், வெளிநாட்டவரைத் தனது லேசர் துப்பாக்கியால் சுட்டுத் திரிந்து, சுவீடன் நாட்டையே கலக்கிவந்த "லேசர் மனிதன்” பிடிக்கப்பட்டு விட்டான் என 9 2 g go) L él u9 áv Gl u T szó s a fi அறிவித்தனர். இவன் மீது குற்றப் பத் திரி கை தயா ரிக் கப் பட்டு , நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
இவனால் சுடப்பட்டவர்களில் ஈரானியப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மரணம் அடைந்தார். ஸ்ரொக்ஹோம் சுரங்கரயில் நிலையக் கடை ஒன்றன் உரிமையாளரான துருக்கியர் ஒருவர் கடுமையாகத் தாக்கப் பட்டதால், பேசும் சக்தியும் நடமாடும் சக்தியும் இன்றிச் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களைத் தவிர ஏனைய எட்டுப் பேரும் ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றப் பட்டவர்களே. தாக்குதல்கள் பொது இடங்களில் நிகழ்ந்தாலும் நேர டியா க க் குற் ற வாளி யை அடையாளம் காட்டக்கூடிய சாட்சிகள் இல்லாதது குறிப்பிடத் தக்கது.
கொலைக் குற்றங்களில் தேடப்பட்ட இவன் வங்கி ஒன்றைக் கொள்ளையிட முயன்றபோது கைது செய்யப் பட்டான். பொலிஸ் விசாரணையில் இவன் ஏற்கனவே பல வங்கிக் கொள்ளைகளை நடத்தியவன் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன்," "லேசர் மனிதன்' அவனாக இருக்க வேண்டும் என்பதற்கான துப்புகளும் கிடைத்தன.
வங்கிக் கொள்ளைகளில் கிடைத்த பணத்தைத் தென்னாபிரிக்க ஆயுதங்கள்
வாங்கப் பயன்படுத்திய அவனுக்குத் தெ ன் னா பிரிக் க நிற வெறி இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகப் பொலிஸார் கருதுகின்றனர். ஆனால் இதற்காகத் தென்னாபிரிக்காவுக்குப் பயணமாகி, அந்நாட்டுப் பொலிசாரது உதவியுடன் நடத்திய விசாரணைகளில் தமக்குச் சாதகமான தகவல்கள்
கி  ைட க் க வி ல்  ைல எ ன க் குறிப்பிடுகின்றனர்.
" ( Sv g f ம ணி த னி ன் "
கொலை முயற்சிகளுக்குப் பாவிக்கப் பட்டதாகக் கூறப்படும் லேசர் கைத்துப்பாக்கி பொழுதுபோக்கிற்கு மீன்பிடிக்கும் ஒருவரது துாண்டிலில் தற்செயலாகச் சிக்கியது. தனக்குச் சொந்தமாக இருந்த அத்துப்பாக்கியைத் தான் ஏற்கனவே வேறொருவருக்கு விற்றுவிட்டதாகச் சொல்லியிருக்கிறான் லேசர்மனிதன்.
* லே சர் ம னி த ன் மீ தா ன குற்றச்சாட்டுகளை நிரூபிக்க மேலும் பல ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகக் கூறிக் கொள்ளும் பொலி சார் , அ வ் வி வர ங் க  ைள வெளி யி ட மறுத்துள்ளனர்.
கொல்லப்பட்ட சுவீடன் பிரதமர் ஊலா பா(ல்) மேயின் கொலை பற்றிய விசா ர  ைண  ையத் தவிர்த் துப் பார்க்கும்போது, இந்த "லேசர் மனிதன்" தொடர்பான விசாரணைகளை பெரும்  ெப ா ரு ட் செ ல  ைவ யு ம் , வேலைப்பளுவையும் உண்டாக்கி, அவர் களைப் பற்றிச் சகலரும் கடுமையாக விமர்சிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத் தியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
049-Teiresñux – J9-6)SfLesör

சில காலம் முன்னதாக ஆசியாவின் சொர்க்கபுரி என வர்ணிக்கப் பட்டது இலங்கை என்று யாராவது சொன்னால், இப்போது அது நகைச்சுவைக்குரிய விஷயமாகிப் போய்விடும். அப்படியே, ஆசியாவில் கல்வியில் சிறந்த, வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்த நாடுகளில் இலங்கை ஒன்று என்று சில காலம் முன்னர் இலங்கைக்கு ஒரு பெயர் இருந்தது. இப்போது நம்புவதற்குக் கஷ்டம்தான்.
இவற்றையெல்லாம் விட்டுப் பார்த்தாலும், இலங்கையர்கள் பெரியளவு மூட நம்பிக்கை உடையவர்கள் என்று குற்றச்சாட்டுகள் வந்ததில்லை. இப்போது எல்லாம் தலைகீழ்தான்.
அதியுத்தம பிரேமதாசா சனாதிபதியாக
வந்தபிறகு, மாந்திரீகர்களுக்கு என ஒரு ஐ
தனி பட்ஜெட்டே நடக்கிறது. இது சனாதிபதி மட்டத்தில் இருந்து சாதாரண மட்டம் வரை நடக்கிறது. மலையாள மா ந் தி ரீ க ர் க ளின் உழைப்பு , வருமானவரியைக் கடந்த உழைப்பு.
எதிர்க் கட்சிகளைத் தன்வசம் இழுக்க சனாதிபதியின் தந்திரம், பாராளுமன்றத்தில் அவர்களது கதிரைகளில் மாந்திரீக மை தடவுவது. எதிர்க்கட்சிகளின் பயம், அந்த மை தங்களை "விழுத்தி விடும்" என்பது.
தனது காலம் சரியில்லை என்று நம்புகிற சனாதிபதி தொடர்ந்து, மாந்திரீகர்களின் உதவியை நாடி வருகிறார் . மா ந் தி ரீ கர் களின் ஆலோசனைப்படியே அவரது பல நடவடிக்கைகள் நடக்கின்றனவாம். இரவு முழுவதும் நிர்வாணமாக மலர்களை மூடிப் படுத்திருப்பது, பிறகு பூசைமுடித்து கன்னி ஒருத்தி நிர்வாணமாகப் பாலாபிஷேகம் செய்வது ஒரு வகை. இந்தியாவில் வாராந்தம் விசேட பூசை நடத்துவிப்பது (இதற்காகவே அவரது செயலாளர் பாஸ்கரலிங்கம் விசேட விமானத்தில் சென்னை சென்று வருகிறாராம்) இன்னொரு வகை. இளம்பெண்களின்
பாலைத் தொட்டியில் நிரப்பி அதில் குளிப்பது இன்னொருவகை.
இவ்வாறாகத் தனது நம்பிக்கைகளால் மாந்திரீகர்களின் வருமானத்துக்கு வழிதேடும் பிரேமதாசாவின் இன்னொரு அதிரடி நடவடிக்கை மிகப் பயங்கரமானது. நாடு முழுவதும் இளைஞர்களையும், யுவதிகளையும் கைது செய்து அவர்களைப் பலியிட்டு அவர்களது ரத்தத்தால் பூசைகள் நடத்தப் படுகின்றன . இவ்வாறு , பிரேமதாசா மட்டுமன்றி, அவரது சகாக்களும் ஈடுபடுவதாகவும் இதனால் பெருமளவு இளைஞர்கள் காணாமல் போவதாகவும் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் என்று ஒருபுறம் அரசு

Page 9
அறிக்கைகள் விட மறுபுறம், இந்தச் செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள் தமது ஆதாரங்களை வெளியிட்டன.
இந்த அநியாயங்கள் ஒருபுறமிருக்க, புதையல் தேடுகிறோம் என்று கூறித் தென்னிலங்கையில் பெருமளவில் பூசைகள் நடத்தப் படுவதாகவும் , இதனால் பெருமளவில் இளைஞர்கள் யுவதிகள் பலியிடப் படுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இவர்களது உயிர்கள் பிரேமதாசாவின் அரசில் மதிப்பிழந்தவை. ஆயிரக் கணக்கில் தமிழர்களைக் கொன்று மட்டுமல்ல, சிங்களவர்களையும் கொன்றுதான் பிரேமதாசா அரசு ஆட்சியில்
பிரச்சனையைத் தீர்ப்பதில் அக்கறை இருக்கிறது என்று கூறுகிறவர்கள், பிரேமதாசாவுக்குப் பிரச்சனையைத் தீர்ப்பதைவிட, ஆட்களைத் தீர்ப்பதில்தான் அதிக அக்கறை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வார்களா?
இந்த அரசுக்கு ஆட்சியில் இருக்க என்ன அருகதை இருக்கிறது? காணாமற் போ வோர் பற்றி யார் கேட்க இருக்கிறார்கள் என்று நினைக்கும் இந்த அரசும், அதன் மந்திரி பிரதானிகளும் எப்போது காணாமற் போனோர் பட்டியலில் சேரப் போகிறார்கள்?
இருக்கிறது. பிரேமதாசா வுக்குப் Gos Top bUtesör
மரணபூமி
மேற்குத்திசையின் அடையாளம் தெரியாதபடி அடிவானில் அரைகுறை எரிந்த சடலங்கள் குரியனை தெருமுனைகளில் கிடந்து. éisil. ர் விமங்கம்
அன்றாடப் புதினங்களும், விடுப்புகளும் Dorsos இவைகளாகிவிட்ட மண்ணில் இருள் தின்னும் யாரோ ஒருவனின்
நாட்டு வளப்ப ஊர்வலம். பதட்டத்துடன் நட்சத்திரங்கள். அவனுக்கு மொழிபெயர்க்க நாங்கள்.
கொடும் பசியோடு எவ்வளவு விளங்கப் படுத்தினாலும் சுடுகுழல்கள்; அவனுக்குப் புரிவது கடினமாயிருந்தது.
தெருச் சந்துகளிலிருந்து மனிதத்தைத் தின்று தீர்க்கப்
ப்படும்.
செத்துக் கொண்டிருக்கும் மனிதர்களை மிதித்துவரும் காலைச் குரியனை வரவேற்க
ஆனால்,
எமது மண் ஒரு மரணபூமி" என்பது மட்டும் அவன்
விளங்கிக் கொண்டான்.
விமல்ராஜ்

sessi5u JTLJLib 1.
"மழ வருகுது மத்தளங் கொட்டுது வேலப்பன் பெண்டில வெள்ளங் கொண்டோடுது." அவர்களின் ஒருமித்த குரல்களின் பாடலுக்கு தாளஜதியோடு நடனமாடுவதுபோல தாழ்வார ஒட்டுப் பீலிகளினால் வழிந்து நிலத்தில் விழும் மழைத்துண்டுகள், ஏற்கனவே நிலத்தில் விழுந்து தேங்கிக் கிடக்கும் வெள்ளத்தில் வீழ்ந்து துள்ளின.
மழைத்துளிகளின் துள்ளலில் சிறிது பெரிதாய் குமிழிகள் தோன்றி உடைந்தன. இது அந்தக் கிராமத்தின் இருபக்க அரைச் சுவர் கொண்ட சிறு பள்ளியின் இடைவேளை நேரம். ஆனால் மழைதுாறுவதால் மாணவர்கள் யாரையும் வெளியே செல்லக்கூடாது என்பது செல்வதி ரீச்சரின் கட்டளை. காலையிலேயே தொடங்கிய மழை, இன்னும் ஓய்வதாயில்லை.
கண்களுக்கெட்டிய தொலைவிற் தெரியும் உப்புக்கழியின் பரந்த வெளி இப்போது சிறுகடலைப் போல் வெள்ளத்தால் நிரம்பித் தெரிந்தது. சோளகக் காற்றில் உவர்ப்புழுதி நடனமாடும் அந்தவெளி, இப்போது ; தனக்கும் , கோடைப்புழுதிக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல வெள்ளத்தால் மூழ்கிக் கிடந்தது.
கிராமத்தின் கடைக்கோடி மேட்டுப் பகுதியில் இருந்து சில்லுகள் ஊர்ந்து பள்ளமாய்ப் போன தெருவின் வழியே, வளைந்து நெழிந்து இரு கோடுகளைப் போல வெள்ளம் உப்புக்கழியை நோக்கி ஊர்ந்து சென்று இறங்கியது.
"மழ வருகுது மத்தளங் கொட்டுது வேலப்பன் பெண்டிலை வெள்ளங் கொண்டோடுது" மாணவக் கலகலப்புகளுக்கிடையேயும் அரைச்சுவரோடு நின்று மழையை வேடிக்கை பார்க்கும் மாணவர்கள் சிலரின் சிறுகுரல்களால் இழைந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
"எல்லாரும் அவயவட வகுப்புகள் லை போய் இருங்கோ" இரு தடவை கைப்பிரம்பால் மேசையிற் தட்டி மாணவர்களின் இரைச்சலை அமைதிப் படுத்திவிட்டு, அவர்களின் கவனத்தைத் தன்பாற் திருப்பியபின் செல்வதி ரீச்சர் மாணவர்களுக்குக் கட்டளையிட்டார்.

Page 10
பொன்னுத்துரை மாஸ்டர்தான் தலைமை ஆசிரியர். ஆனால், செல்வதி ரீச்சர்தான் ஏதோ தலைமை ஆசிரியைபோல பல விடயங்களில் நடந்துகொள்வார். அதிகாரத் தொனியில் மாணவர்களை உறுக்கிப் பேசுவா. இதனால் செல்வதி ரீச்சரை மாணவர்களுக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை.
செல்வதி ரீச்சருக்கு அடங்கிப் போவதுபோல் பொன்னுத்துரை மாஸ்ரரின் நடவடிக்கைகள் இருப்பதால், மாணவர்களுக்கு அவர்மீதும் வெறுப்புத்தான். மூன்றாமவர் ஞானப்பிரகாசம் மாஸ்ரர். ஆறு மைல்களுக்கப்பால் இருந்து தினமும் சைக்கிளில்த்தான் வருவார். வியர்த்துக் களைத்துப் பாடசாலையை வந்து சேர்வார்.
அந்த ஆரம்பப் பள்ளியின் அறுபது மாணவர்களுக்கு இவர்கள் மூவருமே ஆசிரியர்கள். மழையை வேடிக்கை பார்த்த மாணவர்கள் கலைந்து தத்தமது வகுப்புகளில் சென்று அமர்ந்துகொண்டனர். ஐந்தாம் வகுப்புப் பாலன் எல்லா வகுப்புகளுக்கும் சென்று தனது சிறு அதிகாரத்தைக் காட்டி அமைதியாக்கிக் கொண்டிருந்தான். எல்லோரும் அமர்ந்தபின்னும் தான் எழுந்து திரியமுடியும் என்ற பெருமை அவனுக்கு.
ஐந்தாம் வகுப்புப் பாலன் என்றால் எல்லா மாணவர்களுக்கும் பயம். அடிப்பான், தூஷணம் கொட்டுவான். "சரியான அம்மண முத்தையா" என்பது அவனுக்கு எல்லா மாணவர்களும் அவனுக்கு வைத்துள்ள இரகசியப் பட்டம். எந்த மாணவர்களும் அவனோடு முண்டுவதில்லை.
பாடசாலையின் மதியவுணவு இடைவேளையில் எல்லா மாணவர்களையும் நிரையில் நிறுத்தி பணிஸ் கொடுப்பதும் அவன்தான். தன்னோடு ஒட்டுறவாய் உள்ளவர்கள் என்று கண்டால் இரண்டு பணிஸ் கொடுப்பான். தனக்குப் பிடிக்காதவர்களானால் கோணல்மாணலாய், பொங்காமல், சிறிதாய்க் கிடக்கும் பணிஸ்தான் கொடுப்பான். மாணவர்கள் யாருமே அவனுக்கெதிராய்க் கேள்விகள் கேட்கக் கூடாது; அது முடியாது. அப்படி மீறிக் கேட்டால் அடிப்பான். பாலன் அடிக்கிறான் என்று ஆசிரியர்களிடம் முறையிட முடியாது. முறையிட்டால் பாடசாலை முடிந்ததும் பாடசாலை முடிந்ததும் வெளியில் வைத்து மீண்டும் அடிப்பான், அல்லது புத்தகம் கொப்பிகளைப் பறித்து துாஷணம் எழுதிக் கொடுப்பான்.
மதிய உணவு இடைவேளையில் அரைகுறை வெந்தும் வேகாத பணிஸின் களியாயிருக்கும் உட்பாகத்தை எடுத்து, குறுணிக்கல், கண்ணாடித்துண்டு, துருப்பிடித்த சிறுதகரத்துண்டு போன்றவற்றை வைத்து உருண்டையாக்கி காகங்களுக்கு எறிவான். நீண்ட நாட்கள் இவன் செய்யும் திருவிளையாடல்களை அறிந்ததனாலோ என்னவோ, காகங்கள் இவன் எறியும் பணிஸ் உருண்டைகளைத் துாக்கிச்சென்று மரத்தில் குந்தியிருந்து ஆறுதலாகவே கொத்திப் பிரித்து உள்ளேயிருக்கும் கல், கண்ணாடித்துண்டு, தகரம் போன்றவற்றைக் கீழே தட்டிவிட்டுத் தின்னும்.
பாலனும் தினம்தினம் ஒவ்வொரு உத்திகளைக் கையாள்வான். ஆனாலும் காகங்கள் கண்டுபிடித்துவிடும். அந்தப் பாடசாலையில் துணிவுள்ளவனும் அவன்தான்.
ஒருதடவை பாடசாலை தளபாட அறையினுள் நல்லபாம்பு செல்வதி ரீச்சரின் கட்டளையின் பெயரில் எல்லா மாணவர்களுமே வெளியே ஓடிவிட்டனர். ஆசிரியர்கள் மூவரும்கூட வெளியில்தான்.
தும்புத்தடி முறியமுறியப் பாம்பை அடித்து, முறிந்த தும்புத்தடித் துண்டில் செத்த பாம்பை வெளியே கொண்டுவந்தான். இன்னுமொரு சமயத்தில், பாடசாலை விடுமுறை முடிந்து தொடங்கியபோது, குட்டித்தாச்சிப் பூனையொன்று பாடசாலைக்குள் செத்து ஊதி, வெடிக்கும் பருவத்தில் கிடந்தது. பாடசாலை முழுவதும் ஒரே நாற்றம். சகிக்கமுடியாத நாற்றம். பொன்னுத்துரை மாஸ்ரர் உட்பட எல்லோருமே வெளியில்தான். என்ன செய்வதென்றே

தெரியாமல் அனைவருமே திணறிக்கொண்டிருந்தனர். பாலன் தனது சேட்டைக் கழற்றி, தனது மூக்கை மூடிக்கட்டி, பாடசாலைக் கட்டிடம் கட்டியபோது சீமெந்து அளளுவதற்காக உபயோகித்த பழைய வாளியொன்றை எடுத்து, இன்னுமொரு கறள்ப்பிடித்த தட்டால் அந்தப் பூனையை செருக்கி எடுத்து வாளிக்குள் போட்டு வெளியே கொண்டுவந்தான்.
பாலன் மற்றைய மாணவர்களுக்கு அடிப்பது, துாஷணம் எழுதுவது எல்லாமே வாத்திமாருக்குத் தெரியும். ஆனால், கவனிக்காததுபோல விட்டுவிடுவார்கள்.
பாலன் பாடத்தில் ஏதோ பிழை விட்டுவிட்டானென்று செல்வதி ரீச்சர் ஒருதடவை அடித்ததற்கு, மறுநாள் அவவுடைய புத்தகமொன்றில் "பொன்னுத்துரைக்குப் புள்ளைப் பெத்தவளே" என்று திருட்டுத்தனமாக எழுதிவைத்த சம்பவங்களும் உண்டு. அந்தச் சம்பவத்தைச் செல்வதி ரீச்சர் கமுக்கமாக மறைத்துவிட்டா.
இவனோடு முண்டினால் பிசகு என்ற அச்சம் வாத்திமாருக்கு. சொல்லப்போனால் ஒரு பயம் கலந்த மரியாதை அவன்மீது. வாத்திமாரிடையே நிறையச் செல்வாக்கைச் சம்பாதித்திருந்தான் அவன.
பொன்னுத்துரையரும், செல்வதி ரீச்சரும் இவனிடத்தில் செல்லமாய் வேலை வாங்குவார்கள். கடற்கரைக்கு மீன்வாங்க அனுப்புவது வீட்டிற்குச் சென்று கிணறு இறைத்துச் சுத்தம் செய்வது, உடைந்க ஒடு மாற்றுவது - இப்படி நிறைய.
பாலன் ஐந்தாம் வகுப்பை எட்டிப் பிடித்தது என்பது பெரிய புதினம்தான். ஒவ்வொரு வகுப்பிலும் ஆணியடித்ததுபோல அசையாமல் இருப்பான். வயதுகூடிப் போயிற்றென்று பாவத்திற்கிரங்கி, பத்தோடு ஒன்று என வகுப்பேற்றி விட்டார்கள்.
பெருமழை குறைந்து சிறுதுமி மட்டும் துமித்துக் கொண்டிருந்தது. கூரை ஒட்டு நுனிகளால் சிறுசிறு துளிகள் மட்டும் தாழ்வாரத் தண்ணீரில் “தொளப் தொளப்' என்று விழுந்து கொண்டிருந்தன.
கருமுகில் கரைந்து போனதால் வானம் வெளித்தது. ஆனாலும் "இரவு ஒருகை பார்க்கிறேன்" என்பதுபோல் வடமேற்கு மூலைக்குள் கருமுகிற் குவியலொன்று கவ்வியபடி இருந்தது.
பாடசாலை முடிவுமண அடித்தது. எல்லா மாணவர்களும் வகுப்புமுறைப்படி, ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறமுமாய் வரிசையில் நின்று முடிவுத் தோத்திரம் கூறிவிட்டுப் பாடசாலையைவிட்டு வெளியேறினார்கள்.
இரண்டு மூன்று மாணவர்கள் மட்டுமே குடைகளுக்குச் சொந்தக் காரர்களாய் இருந்தார்கள். அனேகமானோர் மெழுகுதுணியாலும், சாக்குகளாலும் மழைபடாமல் பிடித்துக்கொண்டு சென்றனர்.
பாலன் தனது கல்விச் சொத்துகளான மேல்மட்டையை இழந்த மாணவர் குழல் வாசகம், தமிழ், கணிதம் ஆகிய புத்தகங்களையும், நடுப்பக்கத் தாள்களைக் கிழித்ததால் மெலிந்துபோன, மேலுறை கசங்கிய மூன்று கொப்பிகளையும் மாட்டுத்தாள் பைக்குள்
2
&
8 4X
2
భ X
緣
K 緋 쳤 多

Page 11
அடுக்கிவைத்து, பையின் வாயைமடித்து நெஞ்சோடு அணைத்தபடி பாடசாலை வாயிற்படியில் நின்றுகொண்டிருந்தான்.
துமிமழை விடுவதாயில்லை. இப்போது பாலனுடைய எண்ணமெல்லாம் பூவரசங் குளித்தையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இந்த மழையோடு பூவரசங்குளம் நிரம்பிவழியும். அவனது உள்ளத்தினுள்ளும், நிரம்பிவழியும் குளத்தை எண்ணி இன்பக் கனவுகள் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன.
மேற்குக் கண்ணகையம்மன் கோயிலுக்குப் போகும் வழியில் அமைந்திருக்கும் அந்தச் சிறு குளத்தின் மாரிகாலப் பறவைகளில் இவனும் ஒருத்தன். சொல்லப் போனால் அந்தக் குளத்தின் மாரிகால அரசன்.
அந்த வட்டமான குளத்தின் கிழக்குக் கரையில் அடர்ந்து, பருத்து குளத்தைநோக்கி வளைந்து நிற்கும் ஒரேயொரு பூவரசமரம். அதனால்த்தான் அந்தக்குளம் பூவரசங்குளம் என்ற பெயரைப் பெற்றிருந்தது.
"இண்டைக்கெப்பிடியாவது குளத்தடிப் பக்கம் போய் ஒரு முழுக்கடிச்சால் மணியாத்தா னிருக்கும்" என்று தன்னுள் எண்ணியவனாய் துமி மழையையும் பொருட்படுத்தாது இறங்கி நடக்க முற்பட்டபோது பாலனோடு ஐந்தாம் வகுப்பில் படிக்கும் ஜெயரூபன், பாடசாலையில் இருந்து அப்போதுதான் வெளியே வந்துகொண்டிருந்தான். குடை வைத்திருக்கும் இரண்டு மூன்று மாணவர்களுள் ஜெயரூபனும் ஒருவன். வளைந்த, பெரிய கைப்பிடி கொண்ட, புதிய மான்மார்க் குடை அவனுடையது.
"டேய் ரூபன், என்னையும் வீட்டடியில விட்டுப்போட்டுப் போடா” என்றபடி ரூபனின் பதிலுக்குக் காத்திராமல் அவனது குடைக்குள் உள்ளிட்டான் பாலன். பாடசாலை வளவைவிட்டு வெளியேறித் தெருவில் இறங்கியும் இருவரும் எதுவுமே பேசவில்லை.
தெருவின் பள்ளத்தால் ஓடிவரும் வெள்ளத்தின்மீது பாதங்களைச் சீராகத் துாக்கிவைத்து இருவரும் நடந்தனர்.
"நீ ஏனடா என்னோட சேர்ரதில்லை?" ஜெயரூபனை நோக்கிக் கேள்வியொன்றை வீசிவிட்டுத் தொடர்ந்து நடந்தான் பாலன். ஜெயரூபனும் எதுவுமே பேசாமல் சீராகத் தன் பாதங்களைத் துாக்கி வெள்ளத்தின்மீது வைத்து நடந்தான். பதில்கூறச் சங்கடமான கேள்வியைக் கேட்டுவிட்டானே என்ற அச்சம் அவன் முகத்தில் அப்பிக் கொண்டிருந்தது.
தொடர்ந்தான் பாலன். "என்னோட சேரவேணாம்ென்டு உங்கட வீட்டில சொன்னவயோ?" "....... அப்பிடியில்லை." "அப்பிடியெண்டால் நீயேன் என்னோட சேர்ாதில்ல?"
"நீ என்னோட சேர்ந்தா உங்கட வீட்டில பேசுவினம், என்ன?”
"என்னோட சேந்தால் நீயும் கெட்ட பழக்கம் பழகிப் போடுவாயெண்டுதானே, என்னோட உன்னைச் சேரவேண்டாமெண்டு உங்கட அம்மா மறிச்சவ?"
"நான் எப்பயாவது உனக்கு அடிச்சிருக்கிறனாடா?” "இல்லை." "பேசியிருக்கிறனா?"
"அப்பிடியெண்டால் நீ ஏன்ரா என்னோட சேர்ரதில்ல?"
 

"நான் ஏன் உனக்கு அடிக்கிறதில்லைத் தெரியுமாடா?"
"என்ர அம்மா சரியான வருத்தமாப் பெரியாஸ்பத்திரியில சாகக் கிடக்கேக்கை உன்ர கொப்பர்தான் காசுமாறித் தந்து உதவினவர். உங்கட மரத்தில ஒரு குல செவ்விளணியும் வெட்டித் தந்துவிட்டவர் தெரியுமாடா உனக்கு?"
"தெரியா. "ஆனாலுன்ர அம்மாவுக்கு என்னக் கண்டால்ப் பிடிக்காது. இந்த ஊரில இருக்கிற சில நாயன் கதைக்கிற கதைக்கிறத உன்ர அம்மாவும் நம்புறா, என்ன?"
பாலனின் இந்தக் கேள்விக்குரிய பதிலோ, அல்லது விளக்கமோ தனது வயதினையும் மீறிய விடயம் என்பதுதான் ரூபனின் அச்சத்திற்குரிய காரணம்.
பாலனின் வீட்டுப் படலையடியில் இருவரும் வந்து சேர்ந்துவிட்டனர். துமித்துக் கொண்டிருந்த மழையும் எப்போதோ நின்றுவிட்டது என்பதை இப்போதுதான் இருவரும் கண்டனர். "இண்டைக்குப் பூவரசங்குளத்துக்குக் குளிக்கப் போறம், நீயும் வாறியாடா?" மட்டைப் படலையைத் திறந்து உட்சென்றபடி, தெருவில் நின்று இவன் உட்செல்வதையே பார்த்துக்கொண்டு நின்ற ரூபனைப் பார்த்துக் கேட்டான்.
"எனக்கு நீந்தத் தெரியா. நான் வரயில்ல" "டேய், நீ வா நான் உனக்கு நீந்தப் பழக்கிவிடுகிறன்." ரூபன் மெளனமாய் நின்றான், அப்பாவித் தனமான சிறுசிரிப்புடன், ரூபனுக்கும் குளத்திற்குப் போய்க் குதித்து நீச்சலடிக்க வேண்டும் என்ற ஆசைதான். ஆனால் அம்மா அடிப்பா என்ற பயம்.
ரூபனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவனுடைய அப்பர் அவனுக்கு ஒன்றிரண்டு தடவைகள் அடித்திருக்கிறார். ஆனால் அம்மா நிறையத் தடவைகள் அடித்திருக்கிறாள். அண்மையிற்கூட காய்ந்த தென்னம் பூம்பாளையால் நல்ல அடிதந்து முற்றத்தில் ஒரு மணிநேரமாகச் சுடுபுழுதியில் முளந்தாட்படியிட்டு இருக்கச் செய்தவள் அம்மா. அதனை இப்பொழுது நினைத்தாலும் ரூபனுக்கு நடுக்கமெடுத்தது. அந்த நடுக்கத்திற்குரிய சம்பவம்.? ரூபனின் வீட்டிற்குச் சற்றுத் தள்ளி அமைந்துள்ள முதலைக்கழி குளத்தில் நிறையவே இறால், மீன் பெருகிக் கிடந்தது. மாரி காலத்தில் கடல்நீர் அந்தக் குளத்தோடு கலப்பதால், கடலிலிருந்து சிறுமீன்கள் நீரோட்டத்தோடு ஓடிவந்து குளத்தில் சேருவதுண்டு. கோடையில் குளம் வற்றி, கெண்டைக் காலளவு தண்ணீரில் நிறையப்பேர் அதனுள் இறால், மீன் பிடிப்பதுண்டு. அப்படி மீன்பிடித்துக் கொண்டு நின்றவர்களை வேடிக்கை பார்ப்பதற்காக சிறுவர்களோடு ரூபனும் போயிருந்தான். அவன் தன்னையும் மறந்து நீண்டநேரம்தான் அந்தக் குளக்கரையில் நின்றுவிட்டான். அவனை எங்கெல்லாமோ தேடிய அம்மா, இறுதியாக முதலைக்கழி குளக்கரையில் கண்டுபிடித்து, அதிலேயே நாலு சாத்துச்சாத்தி, வீட்டிற்கு இழுத்துவந்து பூம்பாளைப் பூசை.
அந்தச் சம்பவத்தின் மீதான வெறுப்பும் பயமும் இப்போதும் அவனைச் சுள்ளிட வைத்தது. "என்னடா நான் கேக்கிறன், நீ பேசாமல் நிக்கிறாய்?" மட்டைப் படலைக்குள் நின்றபடி பாலன் ரூபனின் மெளனத்தைக் கலைத்தான். "ஒண்டுமில்ல. அம்மா விடமாட்டா, அதுதான். " என்று தயங்கிய குரலில் ரூபன்.
"நீ ஏன்ரா குளத்துக்குப் போறதெண்டு சொல்லுறாய்? உங்கட மாமா வீட்ட போறனெண்டு சொல்லிப்போட்டு வாறதுதானேயடா" யோசனை கூறினான் பாலன். "பாப்பம், சிலவேளை வருவன்." விடைபெற்று நடந்தான் ரூபன்.

Page 12
uəuuuuØuļS
- if9fමණි -
•-m-usis
·șaispo)pings@ qřníkosso-Tusiųonso Ixxgis olofnasosogļsoos@ Irs)skoos T. 增* noca**else通圈官。吉Tu*2 ***mbysososiosựeqsisse (gissis-Tyro oặalogię) gron sựson 06 soonigolo issssss역成정 長生는m역니u昌宮星6 弓aao通臣e器no 而且可通否則通naelso每司吉Tu*Q **mfru £ © ® qr nssons issuo
isæ

Page 13
இன்றைய அயோத்தியில் இவ்வாறான பண்டைய மனிதர்கள் வாழ்ந்ததற்கான அகழ்வுச் சான்றுகள் எதுவும் இல்லை. இப்பகுதியில் குடியேற்றங்கள் நிகழ்ந்த ஆரம்ப காலம் கி. மு. எட்டாம் நுாற்றாண்டாக இருப்பதுதான் சாத்தியம் என இங்கு நிகழ்ந்த அகழ்வாராய்ச்சிகள் காட்டுகின்றன.
* ராமாயணத்தில் குறிப்பிடுவதுபோல நகர்ப்புறச் குழலில் பெருமளவிலான கட்டிடங்கள் வளாகங்கள் பற்றிய விவரிப்புகளை கி.மு. எட்டாம் நூற்றாண்டு குறித்து அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் உறுதிப்படுத்தப் படவில்லை. அயோத்தி அமைவிடம் குறித்து ஓர் பிரச்சனை s_്.
* கோசல நாட்டின் பெரிய நகரங்களாக விராவஸ்தி, சகேதம் ஆகியவற்றையே ஆரம்ப காலப் பெளத்த நுால்கள் கூறுகின்றன ; அயோத்தி பற்றிக் குறிப்பிடவில்லை. அவ்வாறே கோசலத்தின் தலைநகர் சகேதம் என ஜைன நூல்களும் கூறுகின்றன. அயோத்தி பற்றி மிகக் குறைந்த குறிப்புகளே உள்ளன . அவ்வயோத்தி கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது, ஆனால் இன்றைய அயோத்தி சரயு நதிப்பகுதியில் அமைந்துள்ளது.
* ஸ்கந்தகுப்தன் என்ற அரசன் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு, அதை அயோத்தி என அழைத்தான். இவன்தான் விக்கிரமாதித்தன் எனப் பெயர் குடிக் கொண்டு , அதனைத் தான் வெளியிட்ட நாணயங்களில் பதித்தான். இவ்வாறு இதிகாசக் கவிதையின் கற்பனையில் இருந்திருக்கக்கூடிய அயோத்தி பிற்காலத்தில் சகேத நகரோடு இனம்கண்டு கொள்ளப்பட்டது. இதனால் ஸ்கந்தகுப்தன் ராமனின் பக்தன் எனக் கருதவேண்டியதில்லை. சகேதத்தை அயோத்தி என்று பெயர் மாற்றுவதன்மூலம்
ராமன்பிறந்த வம்சமாகச் சொல்லப்படும்
குரிய வம்ச அரச பரம்பரை யைச் சேர்ந்தவனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றான்.
* அயோத்தி வேறு மதங்களுக்கும் | 6of 5š 56ULD mtas இருந்துவந்துள்ளது. கி.பி.ஐந்தாம் நுாற்றாண்டில் இருந்து எட்டாம் நுாற்றாண்டு வரையான கல்வெட்டுகள் மற்றும் இதற்குப் பிந்திய காலத்த வை கூட மக்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. அந்த இடத்தை ராமனுடைய வழிபாட்டுடன் இணைத்து ஒன்றுகூடக் குறிப்பிடவில்லை.
* பிக்குகளின் ஸ்துாபிகள் மடங்கள் மற்றும் ஒருசில பெளத்த மத சார்பற்ற கட்டிடங்களும் இருந்த அவ்விடம் பெளத்தத்தின் ஓர் முக்கிய தலமாகும் என அயோத்திபற்றி யுவாங் சுவாங் எழுதுகிறார். புத்தர் சிறிது காலம் அயோத்தியில் தங்கியிருந்ததாகவும் நம்பப்படுகிறது.
* கி.பி. 18ஆம் நூற்றாண்டு நூல்கள் அயோத்தியில் கோபதரு தீர்த்தம் என்ற இடத்தைக் குறிப்பிடுகின்றனவே தவிர ராமனது ஜென்மபூமியுடனான தொடர்புகள் எதையும் குறிப்பிடவில்லை.
* 13ஆம் நுாற்றாண்டில் இருந்துதான் ராமனது வழிபாடானது பரவியிருப்பதாகத் தெரியவருகிறது. ராமநந்தி சமயப்பிரிவின் மெதுவான தோற்றத்தோடும், ஹிந்தியில் ராமாயணம் எழுதப்பட்ட தோடும் ராமவழிபாடு அடித்தளம் பெற்றது.
* 15 - 16ஆம் நூற்றாண்டுகளில்கூட ராமநந்திகள் அயோத்தியில் குறிப்பிடத்தக்க அளவு குடியேற வில்லை . அங்கு ராமவழிபாட்டைவிட சைவசமய வழிபாடே இருந்தது.
* 18ஆம் நூற்றாண்டில் இருந்துதான் ராமநந்தி சாதுக்கள் இங்கு குடியேறி இருப்பதாகத் தெரியவருகிறது. அதன்பின் வந்த நுாற்றாண்டுகளில்தான் அவர்களது கோயில்கள் பலவற்றைக் கட்டினார்கள்.
முன்னர் ஒரு கோயில் இருந்த இடத்தில் தான் பாபர் மகுதி கட்டப் பட்டிருக்கிறது என்ற கருத்துக்கு

ஆதரவாக வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை.
ஒரு ம குதி நிறுவப்பட்டது என்பதைக் குறிக்க மகுதியின் இரு பக்கங்களிலும் பாரசீக மொழியில் பொறிக்கப் பட்டுள்ளதில் உள்ள இரு வரிகளைத் தவிர வேறு எந்த மூலச்சான்றும் கிடையாது. ‘பாபர்நாம'வை முதன்முதல் மொழிபெயர்த்த திருமதி பெவரிட்ஜ் மேற் சொன்ன பாரசீக மொழியிலான இருவரிகளையும், அவற்றின் மொழிபெயர்ப்புகளையும் அந் நுாலின் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளார். அதன் முக்கிய பகுதி பின்வருமாறு - "விண்ணுலகத்தையும் எட்டும்வகையில் நீதியை நிலைநாட்டிய பேரரசர் பாபரின் ஆணைப்படி, நல்லிதயம் படைத்த மீர் பாக்கி என்பவர் தேவதுாதர்கள் வந்திறங்கும் இடமாக இதைக் கட்டினார். இச்செயல் நீடித்து நிலைக்கட்டும்.
பாபர் அவையின் அறிஞரான மீர்பாகி இநத மகுதியைக் கட்டினார் என்று மட்டுமே கூறும் இந்தப் பொறிப்பு, ஓர் கோயில் இருந்த இடத்தில் இந்த மகுதி கட்டப்பட்டதாகக் கூறவில்லை.
* அ யி ன் இ அக்பரியான து 'திரேதாயுகத்தில் ஆன்மீக ஆற்றலும் அரச பதவியும் கொண்ட இராமச்சந்திரனின் இருப்பிடமாக அயோத்தி இருந்தது' என்று குறிப்பிடுகிறது. ஆனால் ராமர் கோயில் இருந்த இடத்தில் இந்த நுாலாசிரியரின் பாட்டனாரை ஆதரித்தவரால் மகுதி அமைக்கப் பட்டது பற்றிய குறிப்பு எதுவும் இதிலில்லை.
* இந் த க் 19 ஆம் நுாற்றாண்டுகளில் தான் பரவியது. அச்சமயம் இது அரச பதிவேடுகளில் இடம்பெற்று, அதுவே பின் சரியான வரலாற்றுச் சான்றாக மற்றவர்களுக்குக் காட்டப் பட்டது. இப்பதிவுகள் பற்றி பிரிட்டிஷ் ஆட்சிக்காலப் பதிவேடுகளில் கோயில்கள் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் க  ைத , வரலாற்றுப் பூர்வமான
* பா பருக் காக
&S 60) 5 ,
உண்மைகளை ஆராயாமல் அப்படியே கூறப்பட்டுள்ளது. (ஆதாரம் - பி.கார்நேகி, ஹிஸ்டொரிகல் ஸ்கெட்ச் ஒஃப் பைஸாபாத் தாசில், பைசாபாத் ஜில்லா, லக்னோ -1870, ஹெச்.ஆர்.நெவில், பைஸாபாத் மாவட்ட கெஜட், அலகாபாத் - 1905)
* இந்தியா வை ஒன்றுக்கொன்று பகையுணர்வுள்ள பல சமயப் பிரிவுகளைக் கொண்ட ஒரு நாடாகக் கருதிய பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இத்தகைய கதைகள் சுயச் சான்றுகள் கொண்டவையாகத் தோன்றலாம். ஆனால் வரலாற்றாளனோ, ஒவ்வொரு வரலாற்றுக் கூற்றின் நம்பகத் தன் மை யை யும் அதன் ஆதார மூலங்களை யும் கூர்ந்து ஆராய வேண்டியிருக்கிறது.
அக் கம் பக்கத்தில் கள்ள மற்ற உணர்வுகளுடன் குடியிருந்தவர்கள் அயோத் தி யைச் சார்ந்தவர்கள் . பாபர் மகுதியும், ராம ஜன்ம ஸ்தானமும் மகுதியின் வெளிவளாகத்தில் மகுதியில் இருந்து சுமார் 150 அடி தொலைவில் சபுத்ரா என்றழைக்கப்படும் மேடை (17X21 'அளவில்) கட்டப்பட்டுள்ளது. மகுதியும் சபுத்ராவும் ஒரு வேலியால் பிரிக்கப் பட்டுள்ளன. இவ்விரண்டுக்கும் பொதுவாக ஒரு வெளிவளாகம் உள்ளது. ராமர் பிறந்த இடம் என மக்களால் நம்பப்படும் ராமஜென்ம ஸ்தானத்தில்தான் சபுத்ரா அமைக்கப்பட்டுள்ளது.

Page 14
மகுதியும் ராமஜென்மபூமியும் ஒரே வளாகத்தில் நீண்ட காலம் இருந்து வந்துள்ளன. மேலும் ஏற்கனவே உள்ள இந்துமத நம்பிக்கையின்படி ராமர் பிறந்த இடம் (சபுத்ரா) மகுதியின் வெளியே உள்ளது; இப்பொழுது மதவெறியாளர்கள் குறிப்பிடுவது போல மகுதி கட்டப்பட்டுள்ள இடத்தில் இல்லை எற்பது குறிப்பிடத் தக்கது.
இந் து ம த வெறி யா ள ர் க ள் குறிப்பிடுவதுபோல, கோயில் இருந்த இடத்தில்தான் மகுதி கட்டப் பட்டது என்பதற்கு எந்தவித ஆதாரபூர்வமான சான்றுகளும் இல்லை. அவ்வாறாயின் ராமர் எப்படி மகுதிக்குள் மாயமாகத் தோன்றினார் என்பது பலருக்குக் குளப்பமாகவும், சர்ச்சையாகவும் உள்ளது. இந்த விடயம் பற்றிச் சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.
1949 டிசம்பர் 23ஆம் திகதியன்று பாபர் மகுதி ராமர் கோயிலாக மாறிய பம்மாத்து ஒன்று நடந்தது. இந்தியா, பாகிஸ்தான் என இந்தியத் துணைக்கண்டம் பிரிந்ததும் வகுப்புவாதத்தின் கொலைவெறியாட்டம் நிகழ்ந்தது. மதக்கலவரத்தைத் துாண்டும் வேலைகளில் ஈடுபட்டிருந்த குழலில் மேற்கண்ட பம்மாத்து (மாயாஜாலம்) நிகழ்ந்தது.
அகிலபாரதிய ராமாயண மஹாசபா எனும் இந்துமத அமைப்பின் சார்பில் மகுதியின் வாசலில் ஒன்பது நாட்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட ராமாயண உபன்யாசத்தின் உச்சக் கட்டத்தில்தான் இந்தப் பம்மாத்து நிகழ்ந்தது. ஆர்எஸ்எஸ் ஆதரவுப் பத்திரிகை (ஆர்கனேசர், மார்ச்29,87) பின்வருமாறு கூறுகிறது 1949.12.23 அன்று காலை ராமா சீதா ஆகியோரது சிலைகள் ஜென்ம ஸ்தானத்திற்குள் மாயமாகத் தோன்றின. இப்பம்மாத்து எப்படி நிகழ்ந்தது என ஃபைசாபாத் மாவட்ட மஜிஸ்திரேட் கே.கே.நாயர் என்பவர் உ.பி. முதலமைச்சருக்கு
அனுப்பிய செய்தி அம்பலப் படுத்தியது.
பழமைவாத அமைப்புகள்
மகுதியில் யாருமற்ற நேரம் அங்கு புகுந்த இந்துக்களே சிலையை வைத்ததாகவும், க T வ லு க் கு இ ரு ந் த 1 5 காவல்துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இச்செய்தி கூறுகிறது. அயோத்தி காவல்துறை எஸ்.ஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் (F.1.R) அடிப்படையிலேயே மஜிஸ்ட்ரேட் நாயரின் தகவல் அனுப்பப் பட்டது.
இக் கட்டத்தில் பிரச்சனை யைச் குடுபிடிக்க அனுமதிக்காமல் சிலை திடீரென எவ்வாறு தோன்றியது என்பது பற்றி மக்களிடம் அம்பலப் படுத்தி, சிலையை அகற்றி இந்துமதவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பின், இன்று இவ்வாறு அனர்த்தங்கள் நிகழாமல் தடுத்திருக்கலாம்.
சிலைய அகற்றும்படி மதச்சார்பற்ற பல ஜனநாயக அமைப்புகள் குரல் கொடுத்ததன் பின்னர், நேருவில் இருந்து உ.பி. தலைமைச் செயலர் வரை பலர் ம குதியிலிருந்து அகற்றவேண்டும் என அறிக்கைகள் விட்டார்கள். ஆனால் சிலை அகற்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இவர்களுக்குச் சிலையகற்றும் நோக்கம் இல்லை. இவர்களும் ஒருவகையில் இந்துமத வெறியர்களே. இவர்கள் போட்டிருந்த (மதச்சார் பின்மை ) வேடத்தால்தான் சிலைகளை அகற்றாது அறிக்  ைக க  ைள வி ட் ட ன ர் . இப் பிரச்சனையை முளையிலேயே கிள்ளிஎறியாமல் வளரவிட்டதற்கு நேரு உட்பட பலருக்குப் பங்கு உண்டு. இவர்களுள் முக்கிய பங்குவகித்தவர் ஃபைசாபாத் மஜிஸ்திரேட் நாயர். அதாவது இச்சிலைகளை அகற்றினால் அயோத்தியில் மதக்கலவரம் ஏற்பட்டு உயிர்ச் சேதங்கள் நேரும் என அஞ்சிச் சிலைகளை அகற்றாது விட்டார். பிற்காலத்தில் இவர் தனது வேலையைத் துறந்து ஜனசங்கம் கட்சியில் (இன்றைய பாரதீய ஜனதா)
அச் சிலைகளை

சேர்ந்து விட்டார் . பின்பு இவரது உருவப்படம் அயோத்தியில் வைக்கப் பட்டது. இவற்றைத் தொடர்ந்து 1949 டிசம்பர் 29ஆம் திகதியன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி மகுதி பூட்டப்படும். நீதிமன்றம் சார்பாக நியமிக்கப்படுபவர் சட்டம் ஒழுங்கு சீர்குலையாது பாதுகாப்பார். மகுதி வளாகத்தின் ஒதுக்குப்புற வாசலால் பக்தர்கள் சென்று சிலைகளைத் தரிசிக்கலாம். இதற்கென நான்கு பூசாரிகள் நியமிக்கப் படுவார்கள். மகுதிக்குள் இருக்கும் சிலைகளை அப்புறப் படுத்தாமல் அங்கேயே பூசை நடத்தும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தது, முஸ்லிம் மக்களுக்கு 1984 ஒக்ரோபர் ஏழாம் திகதி பிறந்த ராமஜன்மபூமிச் செயல் கமிட்டி ‘பூட்டைத்திற' என்ற இயக்கத்தைத் துவக் கி , ரதயாத் திரை நடத்திக் கலவரத்தைத் துாண்டியது. பின் 1986 ஜனவரி 31ஆம் திகதி மகுதி திறக்கப்பட வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில், மாவட்ட மஜிஸ்திரேட் பண்டே நீதி விசாரணையைத் தொடங்கி 40 நிமிடத்திற்குள் தீர்ப்பளித்து விட்டார். அதாவது, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப் ப டு வ த ந் கும் சி  ைல க  ைள ப் பாதுகாப்பதற்கும் மகுதிக் கதவுகள் பூட்டி வைக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை எனத் தீர்ப்பு வழங்கினார். இது இந்துக்களுக்கு ஆத்திரத்தை மூட்டும் விடயமே. இத்தீர்ப்பின் மற்றொரு வாசகம் பின்வருமாறு: கடந்த 35 வருடங்களாக இந்துக்கள் சில கட்டுப்பாடுகளுடன் வழிபட்டு வருகிறார்கள். ஆகவே, ம குதியைத் திறப்பதால் ஆகாயம் விழுந்துவிடாது. சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்கள் வழிபடவோ அவ்விடத்திற்குப் போகவோ அனுமதிக்கப் படுவதில்லை. இவ்வாறு இருந்தது தீாப்பு. (பின்பு பண்டேயின் உருவப் படமும் மகுதியில் வைக்கப் பட்டது)
எல்லாவற்றுக்கும் மேலாக மகுதி
புதிய ஆங்கிலப் Luğ55 flesto Dest
நோர்வேயில் ஆங்கிலப் பத்திரிகை எதுவும் வெளியாவதில்லை. இந்தக் குறையைப் போக்கும் விதத்தில் அண்மையில் "த நோர்வே ட்றபியூன் என்ற வார இதழ் வெளிவருகிறது. முக்கியமாக நொஸ்க் மொழி படிக்கமுடியாத வெளிநாட்டவர்களுககுப் பயன்படும் விதத்தில் இந்தப் பத்திரிகையின் வருகை உள்ளது. கடந்த வருடமே ஸ்கன்டினேவிய நாடுகளுக்குப் பொதுவான ஒரு ஆங்கில வார இதழ் வெளிவரத் தொடங்கியது குறிப்பிடத் தக்கது.
- அவதானி -
திறக்கப்பட்டு சிலைகளுக்கு பூசை நடப்பது தொலைக்காட்சியில் காட்டப் பட்டது. முஸ்லிம்களுக்கு எதிரான திட்ட மிட்ட சதி என வே இது தோன்றுகிறது. இதைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி (1986) தனது மதச்சார்பின்மை என்ற போலித் திரையை விலக்கி, சிவராத்திரிக்குள் ஹிந்துக்களுக்காக மகுதிக் கதவுகள் திறந்து விடப்படும் என விஸ் வ ஹிந்து பரிஷத் தலைவர்களிடம் உறுதியளித்தார் . இந்துக்களுக்கு அளிக் கப்பட்ட இச் சலுகையால் முழு ப் ப ய  ைன யும் கொங் கிர ஸ் அடைவதற்காகவே தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்த் தப் பட்டது . அ ன் றி லி ரு ந் து இ ன் று வ  ைர இந்துமதவெறியை வளர்ப்பதில் கொங்கிரஸ் கட்சியினர் முக்கிய பங்கு வகித்தனர் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
இன்று இந்து மதவெறியர்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு கூறி,

Page 15
இந்து மதத் தீவிரவாத அமைப்புகளைத் தடை செய்துள்ளது. ஆனால் இந்துமதத் தீவிரவாத அமைப்புகள் எல்லாவற்றையும் தடைசெய்யவில்லை. தடை செய்யப்பட்ட அமைப் புக ளின் த லைவர் களும் தொண்டர்களும் மறைமுகமாக இயங்குகிறார்கள். இது அரசுக்கும் தெரியும். இவர்களைக் கைது செய்யவோ தண்டிக்கவோ அரசுக்கு விருப்பமில்லை. இவர்களைக் கைது செய்து தண்டித்தால் தனது நாற்காலியை இழக்க வேண்டும் என நரசிம்மராவ் அரசு நினைக்கிறது. இன்றும் மறைமுகமாக மதவாத அமைப்புகளை வளர்த்து வருகிறது கொங்கிரஸ் கட்சி.
இப்பொழுது இந்து மதவெறியாளர்கள் தமது செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் தொடர்ந்தும் இவ்வாறான மதவெறிப பாசிசச் செயல்களால்தான் ஆட்சி அதிகார நாற்காலியில் குந்தலாம் என நினைத்துக் கொண்டு இன்னும் சில மகுதிகளைத் (காசி, மதுரா , டில்லி ஜம்மா ) தகர்ப்பதற்கான பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது இந்து மதவெறியாளர்களது பேச்சுகளில் இருந்து தெரியவருகிறது.
இந்துமதவெறியாளர்களின் தாக்குதலுக்கு இலக்காவது முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல. ஏனைய சிறுபான்மை மதத்தினரும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும், ஏழை மக் களு மே ஆக வே இந் து மதவெறியாளர்களது தோலை உரித்து மக்களிடையே அடையாளம் காட்ட வேண்டிய கடமை முற்போக்கு ஜனநாயக சக்திகளுடையது. இந்தியாவில் உள்ள சகல முற்போக்கு ஒனநாயக சக்திகளும் ஒன்றுதிரண்டு இரத்தவெறியுடன் திரியும் மதவெறியாளர்களைத் துரத்தி அடிப்பார்களா? அதேநேரம் அண்மைக் காலங்களில் இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் கொலை வெறித்
தர் ககுதல்களையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். அதர்வது சர்வதேச ரீதியில் குறிப்பாக இந்தியாவிடம் இருந்து தனிமைப்பட்டுள்ளனர் புலிகள். அத்துடன் இலங்கை அரசின் மூர்க்கத் தனமான தாக்குதல்களுக்கும் பல இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.
புலிகளுக்கு ஆயுதப் பரிமாற்றத்துக்கும் ஏனைய தேவைகளுக்கும் ஒரு தளம் தேவை. அது இந்தியாவாகத் தான் இருக்க முடியும். இந்திய அரசியற் கட்சிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் பாஜகட்சியினது வளர்ச்சியும், கொங்கிரசின் வீழ்ச்சியும் அதிகரித்து கொங்கிரஸ் ஆட்சி நீங்கி பா.ஜ. கட்சியின் ஆட்சி ஏற்படலாம். அதன்பின் தமக்கும் இந்தியாவுக்கும் இடையில் உறவை வளர்த்துக் கொள்ளலாம் எனக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் புலிகள் முஸ்லிம் மக்கள் மீது தாக்கு த ல் களைத் தொடுத்திருக்கிறார்களா? எனச் சிந்திக்க வைக்கிறது.
ܦܝ
எஸ்.எம்.நிஅsழேஸ்வரன்
.--മീ
தமது குறுகிய நலன்களுக்காக முஸ்லிம் மக்கள் மீதும் ஏனைய ஜனநாயக சக்திகள்மீதும் புலிகள் தொடுத்துள்ள தாக்குதலை முறியடிக்க வேண்டுமாயின் சகல முற்போக்கு ஜனநாயக சக்திகளும் இணைந்து புலிகளின் மக்கள் விரோதச் செயல்களைத் துகிலுரித்துக் காட்டி மக்களிடம் இருந்து அன்னியப்படுத்த வேண்டும். ஆனால் மேற்குலக நாடுகளில் வாழும் ஜனநாயக சக்திகளிடையே - குறிப்பாக ஐரோப்பா - ஓர் குறைந்தபட்ச பொது உடன்பாட்டுக்கு வரமுடியாமல் இருப்பது வருந்தத் தக்கதே. இதற்கு அவர்களது அக்கறையின்மையே காரணம். இந்நிலை தொடருமாயின் ஈழமக்களது எதிர்காலம்.

பெண்கள்மீது பலாத்காரம் புரியும் ஆண்கள் இலகுவில் தப்பிவிடாதபடி, ஒரு x புதிய ஆயுதம் வந்திருக்கிறது. இலகுவில் அழிக்கமுடியாத ஒரு பச்சை நிற மையைக் குற்றவாளியின் முகத்தில் படவைப்பதோடு, சிறிதுகாலம் அவனைக் குருடாகவும் ஆக்கிவிடும்
2
- இந்த "ஸ்ப்றே பிரிட்டனில் அறிமுகமாகி உள்ளது.
"டைவிற்னஸ் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இதன் விலை ஏறத்தாழ முன்னுாறு குறோணர்கள். நச்சுப் பொருட்களைக் கொண்ட "ஸ்ப்ரேக்களைப் பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கொண்டு திரிவது பிரிட்டனிலும் நோர்வேயிலும் தடை செய்யப் பட்டுள்ளது. ஆனால் இந்த "டைவிற்னஸ் அவ்வாறு தடை செய்யப்பட முடியாது. ஏனெனில் இது சாயத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் நச்சுப் பொருட்கள் எதையும் கொண்டிருக்கவில்லை.
- LDirajgir -
- திரைப்பித்தன் -
கடந்த வருடம் நோர்வேயில் வெளிவந்த திரைப்படங்களில், மிக அதிகளவில் ஒஸ்லோ பார்வையாளர்களைக் கவர்ந்தது, "லெதால் வெப்பண்" என்ற ஆங்கிலப் படம். இப்படத்தை 103000பேர் பார்த்துள்ளனர். ஏற்கனவே இரு
பாகங்கள் வெளிவந்து பெருவெற்றி
ஈட்டிய இந்த அமெரிக்கப் படத்தில் டன்னி குளோவர், மெல் ஜிப்சன் என்போர் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்திருந்தனர்.
திரைப்படச் சாதனை
Den muntre trioen Danny Glover (t.v.), Joe Pescil og Mel Gibson l «Dødelig vápen 3 er
1992S fees Sette fin i Oslo.

Page 16

*
ÈNovae
3山海關州博세

Page 17
Hņogiko hoaxasko 因的 eu甲博尚可預里可用Bis每r Eur函恩m帝。與「凶 qu@mysg isosooạn:coloșwesigsfi) massouriņđqsum コ*ヒagコョ@場* コココgas ・ și gresno s@soos įrsionsum yujo-noir, tzm4니18 *니는드o日帝 李有n守長官地 ... qșukis, quaelit – polash qofsson ŋwuleș . hng@命。用氨后运T Tn)占本。虽T团 Quaestoqsẽ riņs@sossaegs-, Øqissions unŋfium . Įrsono ķboxasso ns45遇与C 马gs?f - ào?写七眼巨0日退与电n3 정정u的) 486 통통통~5백 m열(者5 : 李宮明 : Hņovasko ķī£ și șosos 場」シajョ*コヒコDョ%場nes gusおQQ』も 19-Nossoos oặã qooo yoɔ șnos osasus un . Li ựssru) hņajas? spisaxosoɛɛ ɖoŋooŋTusc șir six . 富n仁ppāu鹰溪渥岛增设堰己与沟田。 hingoạiko saeus g-s -innoșơnovulash form##0. ursos: . qnquo? nexosLoss @sofins oxosuolo isosos . 「月石學官系해 地上的長子적 「며국적「그仁城 セコひョ』ョE頃場コ ョ%ョp @agggaヒ』・ 91 gresorto மேயூகுேற hnfo可匈增向图写4丽台面习围巾岛增岛田等县mf
●过由巨母自己用增闲2渤海海明电池田24跟喝r -运用) șaestrof)%s\$ possh sĩ; nosną, o qylymų sunsự . 負u與 南忠rphro小占的呂u的時尚通的不 - 용병정oH 그&ign:홍그日月城 홍6un n*니l여r홍形成a . çi gressus) Įoom @șosios, possh đượs@șợrns
長 s Q. 그
gr그長石高城on mun%에og 정해행f용1ms in城城n .... 电池己专用字长于向函u田颂命的49旨制 懒m目与可巨恩虽七m引与影点上的增司的领s布 gaコ gコョag ge」コョ* ココgas ol grossru) on solon œur, possh - qersus (synsong mikoso hņeșș-~ian . Hnosso
; noaps euoț3 uəeyò [} HS-MOUI UIGID 3 SIX ! '31$30 Shopus BI J 3 : H > INotI885 tu 3 put21S ^ [3^oXsioT (BUJULIO-IT. e uoy saa oos ənxioa tassies-oupuuon II en |opeo na 3o una euq ! No AO JO 1SIT-I o 3XIS
Botso III, TUB>) · Laes ); 3o ox{sojoppnns anan ST3 putos su BIG -- 3 ULI 3uas 3 ua pətu 32s - JOH. .. 3! Du & Æ (le 1 uəou ə ɲaga axyxis ; oasso.Aosdd uə nog uouoos ožiu ưd sysos əp yasiuos
-s-m-n fournagsuoto シg@コan ョ“g』ggs ・ otrossfire șos@ko großul Ģșoșşșe șistosos?? oro corpolo ș$$0); 'basso munnfum 勋阁与魔弓目u函占田的3遇巨电 șițele și sợiş;&## los pueloquo(!) - mā每ug mog号回地与圆圈与安丽姆电己T mysoups.goog goleslovome qimặawosło to“Tuf - » ựrsinnae)
·qaiqinisyysoso (pourmofi, ofiss ocas, ynàu奥丁nnsgfm 运贞娘与白宫丽姆后的迅珂 Qシモ」s』』コモQFegg@s fg*・ Hron șomoso qysslu (spolo@rgsuoto film 医u的运河增su巨与增岛南海姆由与3项眼引日与河 -hns@命。因极点T
•ęponso qigo punongs-, possows ofiçio too „40-noși sus $#@% to maicasso diasosoo • htşgsko s』s s」gsヒョgコaっegjeュ ョQ*gュ çz gọso uno possonga3ヒb 3gsgヒョ・ o groísmo
●后运hu思 m日長an 용병nus은, 國民日: 安仁城遺는*C 통행은日:3* Be ョQgaS Jョaggシhnne* sgDaセs 19-a kosos, subsoarasų, og som følso assoo • roszoną, ou o gormssoo olikogg语内含了门。 常道r-3 長31mm城主神42% gọn nɑɑmbo@ –ņņi nog olymosomos · z ựssions) 制后专制弩u90 日s也可号4巨*守目る3」』g sヒgggモヒュ 그大師學3,n)r T6946 %n日月 源高城守主義的 原守ger :
·論946rr: 日月城宮合역 gr「TE 學的)道:Tu月 용도용병 분그녀n日는日るな環aege ヒョgga・
i gaestoru)
 
 
 
 
 
 
 
 
 

99点间里Faurfāg esposo osídio owun orn;ro);) - ļoti? .
Įiburukoosựųs 唱f的增己o田守nh q fih us to -モhsdsg@ュ *度勻亡nonug帝恩o湖與照hhn毛用而不 ショE Esuggg」s迪的遇可在服母mgL可。 *susom spolote - Goog osobowo poginiso oesyong . 写自己 owęGolf și scoss@ko sąjutn ogss官u电图母um osos possosir モ』gQu』 BEコg gghe』35セEssq -zz ựrsurno **íotoogooo suo sino susaequae mae:- 古寺七PP역** : 長56 %병는「덤93 %는 용역6子T. 日月城그李3: 日合主는「여 병mu宮長安城 )白色官名o尸用 gaQQ』ョ函与9烟4寸与奥0日on布白h习电信
quaesomn ņou-fựsuis;弓与电增强nghuum寸 . “sols|posins (§§§@₪gsas) usurirexasíussols ņeļrm = ほngs QQg場duコショes‘yơiếup . Oz greirno toqsmî quorsul asustaess) 河道与3 Ausagn求。商圈与圈子gusāgāF. dissoqui?#(s ropus, - byssuɔ onișe qușąg ssyssessh9*pröტuuurp ņ@ș07 uogogqisĒLoĝ0,90 (stas įs psigs . 61 yrstaeno oorpors-o domoso şey与QX团领s布 qĻoqof) (şişmiş@n que@gns unョg@*コsC・ frog om Tuturo įrafia ofişşascasson . two ogo-Tos șomsoos sąmoniae - įledigolo@gnus posso șnņieș șşæggungon *『Feag ョ@LコDコシsge場gEas@
6回增官巨求确姆每岛目与4日,9习,. h?海百点用色与白色汁用 m深
qystoul (spole ș$#0s (pse, og pruseș– nr .
-askas sotoo@zae ipţTası,suo noķs une longososms .
领头印。冯mgua河 osios qood-s bano-s popsomn oooo . ɛi ŋrslaeruo ıssı!!:)?ış ıssorain - quaeso poro sąjn onnais šos un ņé, proge . 写专用的Q遇6G 与g ‘Ikast??? ipseaso@ quæfi) șoko (opștesus . rossosoo sxuo ipogrs–se si qymysus? . 与9岳汽D斗n 习眼眼七s的运用钢自s à取崛丁习的增rgu明usn布。 zi greirno russo - qi@agsiso -ins og fins șqjųnn ņossui nu-ins 号的增司的七目巨与己国s 占据了虽写电台退己感。 冯自己m0点与0 g)-ne đì u anh rụ • b • • •『増gs場」a eggモgD șnasonas usuar ?)?@ş yısı şşure qușđìşșię . It greirno 七郎的日 岛增设了海后的 ヒBEg」B*3 aeヒョg』『Cシgg Q」gsg 『saagョ8*gョgョggs g号」ョgする・ q##sī£txaors: „rkooos ‘函眼七颂与图u!习n习用增巨浪滔的七月阁阁员of*場Q@ quoussoumi?#e lysfoșnaseloosun umgeborso . soos soux,$figɛ li topçđìưso . 'ws-Tr Irmele, que of spuntos įm-kongs-is go@-in os(s|ssssulelo . -- In qysĩ - Nomorps, uolo qosh $$$ $ısıgoșormoçon mhuwiesyn-as-ຫຼືມຖາມກົງ
*ヒgコョコョ*場に greggh Qss *baa」園 増aQL ほるョ『Cシ場s場gヒョgるる hrysisko ggs」ga@コQヒegsse場*aj『Istwo nsgs une sis* uonno??@mosoɛ sɔŋɔɓo ŋooggle . 6 ựrsione 与坂aupg色巨T围墙的巨可日o了用 qEng正 àng自于55于需 ș@-@. Tuoqae sosy;湖的湖巨日由地与习卢圆. 'uologii:Non - , quaesæșđfisko ipsisPC的顺台后s气g员 Turo 反自用七o命。占占自us用博fue co科s 臣。 sosoɛɛgoko ugloss solosas ursos, omhourso, . 8 UrsurTrmo * コgg-g* ョ* g g『g J83ココシヒse 5『 唱的可卡与T 而后用七fg奥匈阁瓦岛h?2日圆 占Trm总长5°C增9了s (glossoBus & profò cognisso-irs hņlsoņ: . h冯淑旨 (oss?? ustosos? ’ ışoğun (sopolo fi un运唱增日 TissouTıp 'yesaeos ossosirenque ossueso . quaes-Too ɗoofisso groepsg司岛通by90 七瓦卢马丁n习的增写习老ns南o增自而領白é 9 ựnsiono sosire - Nomuret qdiscoutur nesiaeg シgコ“ョコョgessg』コg@g場gggo・ Haemosiologo D旨9点的增nu已寸写的增umgョaeqQg・ osuwo loĝloos 'ueloquois - qurbessio się #@ș1990s oặlığı sışĘsfits slutnaesto习的增岛增6河丁n 音合唱日日占间长官由每母已b长写明地m. 3 Unpur극적8 praers soirs ootaeɛ neɛɛ đo? $3|$)& (pg.uşf) hn@şșocasýrsesnio ,

Page 18
‘quono III:sfilm
'(9[[ჯეიgdfტრე)ც:
'qofioșasœgn film
:@-shự-usts, “ෆිIsl90.Jහඟු ඉI9gyහJöÜü qđìuro qoựso@lofų sists,‘qofioșastosoqon m』ヨ Q」ョQ園城;*1니는 홍 용U35 *h日
Ķēsī£6 mossosioloș& ·losisiphumisosos, 19 o 71 logo ho n sự lọ9 , -i o nɛ o o ç , z oĘılırs (qoņqđì uolo) ajo sąstos ·losisig-s *EョaegD シgEgg Q』sgョ* 1991. Giml?? (fi) est? 19 lgh. Is ış uşoq; ano ョ「ョggほコG も頃gsfs地eeggコ fum田与日m河增f日围巨mm丽己可 函é臣n)已恩o坦甲fi印胡oo田9n 『Eョggg』g Egggasmsseeseコ
m las cos so o as cas qọ & Ģ Ģs m顷巨n)马丁领崛田f国博009田因n习取飒于自 1909şformo 109 umrooooo qi@oio įrsions un q@ș@oymų po q@ș@& ‘qosmoscassos !!@马与950 @与国ug己0 长田七mut等引 tion : los 191șHışoğls qi@ų nuo 19șnscasos, 嘲讽图占领壤田f田增005gn g司后田宫坝— 199ų9? Jófițgis qif) uns golygos)113īųomsto m C페 CI on m 행 등 5 *i m 原 直 3 eேgg)n 习b运取坝9博009图mágn)田增鸟与河遇 因运用的巨可色寸与自信己0日 @@ m 통s편反9명(同gI 영政15 gnsfis행rpo958.그 g行ョeeg gEeg@ sヒgョgEコD quonon soos orguns qıhılı909șşılmassion-s qıhluscosoqo uso odsooqső oli?#1091.gif@sunɔ 跟阎 q mm的U)齿巨可。用 Q 遇 己圆 台短恩田fi的地oo田qgn:fum 白9迴m@ 启写丁Q画@@增司田令田增自自0坝宫己n
|quaestos@-@ qs@æsąLLAÍ
Hrussoko esko suffisioon sur uolo ș@șđưs ogų, possui, cz @ inrī-l-ule qaiq@ șolomeo 己巳与的U)增岳Q9塔七f写坝SE g与巨9日坝图己与日 șarşựuae suorgis soļus qIışıms& đượfrusợ (ș și uos, o mos ipsos o ș1. praes & * (as ķlas & . 丽阁学f 2x2us宫 (93%) și o los uogi yisumouslyĝon nșușors . omộsoț șợ?? olymomstolpassasso @-inq-masną, o tạųngs uis? . uz ựrsuru) (-sun) lạsusțoșquaesi asso - qi@ngorogoș5)# ##ươnsumosos uolo poștnỆunuo og mno dolgos y unɔ los uus is oș@ş çøh . (-sın) ņeuss) - sēns posso qoymskog (slossetsko ョJDas gョg』* Eggs aヒsJDaいァ・
ļu Tīri sõjqsmouproto susựrs-, 且每日司un的电娘淑马mmánpf可增岛增可4浪淑才 長にsョヒ頃Lコs gョ* gggasg@LEヒコ・ sz ựsírras) quo: ĶĪĢIsto ???:?ụuoɔ đẹp quosogorskogsfrs ョeggヒ3』コョQ場QコD g』ョ*マg ・ 占反后湖% cgi?#-noulunɔ ŋoșđơn aino quenque ynɔ00çç 长可信与Bf员p @领瑕!u的心 锻与q岛增丁n姆与 역Tu-3 %병행on &행했1명 quae đượhaeroo iso-sunɔ simfos umgqoko . hnţsoko eșancosko sofijos įlash solossig-z -rrrr!?!? gued sgnns Q」dCaョ @場g@コJa・ »z ựrsirrus, qoșmỡ hoursoun soạo - quaer-raso 3s場g ョ3qC Esesゆ』5 ョaQ *gqs (golff (gosto (synsreo-o ipsius? .

ஏன் கருத்துகள்மீது இரட்டிப்புத் தன்மை?
சு வடுகள் 42 இல் சிவ சேகரம் , கணேசமூர்த்தியின் விமர்சனத்தை வியப்பூட்டுவதாகக் கூறி, மீண்டும் தற்கொலையை ஊக்குவிப்பவனல்ல, ஆனால் கண்டிக்க மாட்டேன் எனக்கூறித் தனது இரட் டைத் தன் மை யை வெளிப்படுத்தியுள்ளார். தற்கொலை கோ  ைழ த் தன மாக இரு க் க வேண்டியதில்லை என வாதிடும் சிவசேகரம் இதை மிகக் கடுமையான விமர்சனமாகவும் அல்லது மிரட்டலாகவும் இருக்கலாம் என வாதிட்டு நிறைய உதாரணம் உண்டு எனக் கூறியவர், உதாரணம் எதையும் முன்வைக்கத் தவறியிருந்தார்
சமுதாயத்தில் எழும் முரண்பாடுகளின் வெளிப்பாடுகளினால் மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தனிமனிதர்கள் போராட முறப்டும்போது ஏற்படும் தோல்வி, விரக்தி என்பவற்றின் வெளிப்பாடாகத் தற்கொலையைத் தீர்வாக முன்வைக்கின்றனர். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தயார் நிலையில் உள்ள எந்த மனிதனும் அதற்கெதிராகத் தற்கொலைக்குப் பதில் சமுதாயத்தில் எதிர் நீச்சல் இடுகிறான். இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிவசேகரம் இவர்களுக்கான தீர்வை தற்கொலையைத் தீர்வாக முன் வைப்பதை கண்டிக்க மாட்டேன் என்று சொல்வதன் ஊடாக ஏற்றுக் கொள்கிறார். இக்கருத்து என்பது அவர் சார்ந்த அரசியல் நிலையில் நின்று வெளிப்படுவதே. வாக்கப் போராட்டத்தை நிராகரிக்கக் கோரும் இவரின் அரசியல்
நிலையில் நின்று எழுந்ததே இந்நிலை. பாராளுமன்றத் தேர்தல் மூலம் ஆட்சியை இடதுசாரிகள் பிடித்து வர்க்கப் போராட்டம் இன்றி ஆட்சியை மாற்றிவிடமுடியும் என்ற கனவுகளில் இருந்து வெளிவந்ததே இவரின் அரசியல் நிலை. வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் எப்போதும் தற்கொலைக்கும் , சமரசத்துக்கும் , இரட்டைத் தன்மைக்கு பதில் எதிர்த்துப் போராடுவதையே முன்வைப்பார்.
புலிகள் சயனைட் அருந்துவதை புலிகளின் கட்டுக்கோப்புகளில் ஒன்று எனச் சொல்லிப் புலிகளின் கோழைத்தனத்தை வீரமாக நியாயப் படுத்தியுள்ளார். புலிகள் சயனைட்டை அருந்த நினைத்தது என்பது, எதிர்த்துப் போராடுவதில் நம்பிக்கை இழந்து, கைது செய்யப்படும்

Page 19
போது எதிர்த்து நிற்க முடியாத கோ  ைழ த் தன த் தி ல் இருந்தே த ற் கொ  ைல  ைய த் த ம து  ேக T  ைழ த் த ன த் து ட ன் அமுல்படுத்துகின்றனர் . இதைக் கட்டுக் கோப்பு என்று சொல்லி , கட்டுக்கோப்பின் அடிப்படையை ஆராயத் தயார் இன்மை பூசிமெழுகலே. புலிகளின் கோழைத்தனம் அம்பலம் ஆகாமல் பாதுகாப்பது என்பது சிவசேகரத்தின் அரசியலே புலிகளின் முன்னாள் உறுப்பினரான திரு.நித்தியானந்தன் கூட
சிவ சே க ரத் தி ன் வா த த் தி ன் படி இராணுவத்திடம் பிடிபட்ட நிலையில் தற்கொலை செய்யாமை கட்டுப்பாட்டை மீறிய நிகழ்வா? அல்லது வீரமா? அல்லது கோழைத்தனமா? இதைச் சிவசேகரமே தனது அரசியலில் நின்று, இரட்டைத் தனத்தைக் கைவிட்டுக் கூறட்டும்.
supi,
87, Rue De Colombes,
92600 Asniers Surseine OFrance
அன்புள்ள சுவடுகள் ஆசிரியருக்கு,
ஒரு தனிப்பட்ட எல்லைகளை உண்டாக்கிக் கொள்ளாமல், பரந்துபட்ட விடயங்களை "சுவடுகளில் வெளியிட்டிருக்கிறீர்கள். இப்படியான அமைப்பு புகலிட சஞ்சிகைகளுக்கு அவசியமாகிறது. சகல துறைசார்ந்த கட்டுரைகளும் பல விடயங்கள் தொடர்பான தெளிவைத் தருகின்றன. அல்லது சிலவேளை மூடிமறைக்கும் தன்மையினைக் கொண்டிருக்கின்றன. பொதுவாக அனேகமான கட்டுரைகள் உள்ளடக்கத்தில் இறுக்கமாக அமைந்திருக்கின்றன. முல்லை அமுதனின் கவிதைகள் அற்புதமானவை. வாழ்வியல் சுதந்திரம் பறிபோன நிலையிலும், வெறுமையாகத் துாங்கிக் கொண்டிருக்கின்ற சோம்பேறிகளைச் சாடியிருக்கின்ற தன்மை சிறப்பு உணர்வை அக்கவிதை தடவுகிறது. இன்றைய மனித வாழ்வின் அனுபவிப்புகள், அனேக திசைகளில் வலிபட்டுக் கொண்டிருக்கிற இச்சந்தர்ப்பத்தில், முல்லை அமுதனின் கவிதை போன்ற இன்னும் பல படைப்புகள் உருவாக வேண்டும். இது சார்ந்த இலக்கியப் படைப்புகளுக்கு முன்னுரிமை தரவேண்டும். புலம்பெயர்ந்ததன் தடயங்கள் படைப்புகளில் வெளியாவது மட்டுமல்லாமல், அதில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு புனர்வாழ்வு கொடுக்கும் உணர்வை ஏற்படுத்துவதாக அவைஆமையவேண்டும். பறிபோன சகலதையும் மீட்டு, உண்மையான நிம்மதிக்காக ஒவ்வொருவரையும் தயார் செய்கின்ற வீரத்தை எப்படைப்பு ஆக்கித் தருகின்றதோ, அதற்கே தாங்கள் "சுவடுகளில் அந்தஸ்துக் கொடுக்க வேண்டும். இது தங்களது இந்த இலக்கியத் தொடர்புப் பணியை அர்த்தம்
செய்யும்.
“எதுவரை தொடரும் மனிதரின் கதை?’ நாகரிக எழுத்துகளை நாற்றமுறச் செய்கின்றது. என்ன மயக்கத்தில் இருந்துகொண்டு அக்கட்டுரையை வெளியிட்டீர்கள்? எழுத்தாளரின் உரிமை - சுதந்திரம் பற்றி கட்டுரை நியாயம் பேசலாம். சல்மான் ருஷ்தியின் 'சாத்தானிய வசனங்கள்' பற்றி நியாயம் பேசுவது பேய்த் தனமானது. சல்மான், எழுத்தின் உயிர்ப்பைக் கொலை செய்தவர். ஒரு தனித்துவ சமயத்தைக் கேலி செய்யப்போய், எழுத்தின் -
இலக்கியத்தின் கெளரவத்தை அசிங்கம் பண்ணியவர் சாத்தானிய வசனங்களை எழுதும்போது, இலக்கியத் தரத்தையோ உள்ளடக்கத்தையோ

சல்மான் ருஷ்தி கருதவில்லை. மேற்குலகப் பிரபல்யத்தையே எதிர்பார்த்தார். அவரது அயோக்கிய எண்ணப்படியே முதலாளித்துவ வெறி மேற்குலகும், மேற்குலக பிரபல்ய - புகழ் விரும்பி எழுத்தாளர்களும், அவருக்கு முதுகு சொறிந்தார்கள். நடைன் கோடிமர்கூட தடுமாறிவிட்டார். எது, மனித குலத்துக்கு செய்யப்பட்ட அநீதி என்பது அவருக்குத்தான் விளங்கவில்லை. மனிதநாகரிகத்தையே - வரலாற்று நிதர்சனத்தையே அசிங்கப்படுத்தி, மனிதகுலத்துக்கு முதலில் அநீதி செய்தவர் சல்மான். அவர் துப்பிய புகழ் வெறிதான், அவரது உயிருக்கு ஆபத்தாய் மாறியது. நவீன முற்போக்குச் சிந்தனைகளை எழுத்துகளில் தந்த நடைன் கோடிமர் ஒரு தண்டனையை அடக்குமுறை என்கிறாரே! சிரிப்பாய் இருக்கிறது. தண்டனை கடுமையாக இருந்தால்தான், அடுத்தவன் தனது தவறைக் கட்டுப்படுத்துவான். அப்போதுதான் சமூகம் பொலிவாகும். இந்தச் சின்ன விடயம்கூட நோபல்பரிசு எழுத்தாளருக்கு தெரியாமல் போய்விட்டதே. சல்மானின் குரல்வளை நெரிக்கப்பட வேண்டும் என்பதன் உண்மை, இனிவரும் எழுத்தாளர்களின் கெளரவம் - நாகரிகம் காக்கப்பட வேண்டும் என்பதுதான். எழுத்துச் சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்று, செயற்கையாக ஒரு கோபத்தை உண்டுபண்ணிக் கொண்டு, ஒரு தனித்துவத்தை அழித்து, மேற்குலக ஆதிக்கபலத்தை வலுப்பெறச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் சல்மானுக்கு விசிறி வீசுகிற அறிவற்ற செயலைத் தாங்களும் செய்தது வேதனையாக இருக்கிறது. நீங்கள் மனித சுதந்திரம் - நாகரிகம் என்று போலிக் காரணம் கூறலாம். ஆனால் - கட்டுரையின் கடைசிப் பந்தி, தங்களதும், மூலக் கட்டுரையாளரதும், சுசீந்திரனதும் வெறித்தனத்தை அல்லது முதலாளித்துவ அடிமைப்படுத்தும் தன்மைக்குத் துணைபோகிற புத்திசாலித்தனமற்ற செயலை வெளிக்காட்டுகிறது. எழுத்துகள் உணர்வில் வீரத்தை உண்டுபண்ண வேண்டும். அதைப் புண்படச் செய்யக் கூடாது. தங்களது செயற்பாடுகளை அர்த்தப் படுத்துங்கள். ‘சுவடுகளின் எழுத்துகளால் மானுட சுதந்திரம் தெளிவடைய வேண்டும். பண்பாடு - கலாசாரங்களை காயப்படுத்துகிற போக்கிரித் தனமான செயலிலிருந்து விடுபடுங்கள். அவ்வாறான படைப்புகளை "சுவடுகளில் பதியச் செய்யாதீர்கள். "சுவடுகளின் தடம் புதிய சிந்தனைகளின் உருவாக்கத்துக்குத் துணை போக வேண்டும் என்றே விரும்புகிறேன். எந்த, மனிதத் தன்மையை - நாகரிகத்தை நேசிக்கிறவனும் இதையே எதிர்பார்ப்பான்.
நன்றி.
STLDSS)60
o Qaicas — ———————————---------------------------------
சுவடுகளுக்கு மனிதத் தொடரை விளங்காதவர்களுக்கு எங்கே சென்றடையப் போகிறது? திறந்தே
மலையக மக்களுக்கு அரசு செய்த பார்க்க விரும்பாதவர்களைக் கண்டு துரோகத்தனத்தையும் அவர்களின் பரிதாபப் பட்டிருக்கிறேன். புலம்பெயர்ந்த வாழ்க்கை நிலையையும் கொழுந்தன் நாடுகளில் இருந்து வெளிவரும் தரமான விரிவாக எழுதியிருந்தார். அவருக்கு எமது சஞ்சிகைகளின் ஆக்கங்களின் நன்றியும் கடமையும். இவற்றை பெறுமதியையோ தேவையையோ உணர்ந்தவர்களைத் தவிர நான் யாருக்கும் அறியாமலும் தமக்கென்று 905 கடமைப் பட்டவனில்லை என்று சொல்லும் வரலாற்றுக் கடமை உண்டு என்பதையோ,

Page 20
அங்கு இறக்கும் உயிர்களுக்கு நாங்களும் நீதியாய் வர்ழபவனாகவும், அநீதிக்கு பொறுப்பாளிகள் என்பதையோ, எதிராகக் குரல் கொடுப்பவனாகவும், இனவாதத்தையும் பிற்போக்கு கலாசாரப் இயற்கையாய் சிந்தித்து உண்மையைத் பிண்ைப்புகளையும் விட்டு மனித தேடி உண்மையாய் வாழ முயற்சிப்பவனாக, நேயத்திற்கும், அடிமைநிலை நீங்கிய புதிய உழைத்து உண்பவனாக இருக்க வேண்டும். கலாசாரத்திற்கும் நாம் செல்வது எமது T . விடுதலைப் போராட்டத்திற்குப் சுசீந்திரன் சித்தார்த்தன் எழுதிய பங்களிப்புத்தான் என்பதையோ புள்ளிவிவரங்கள் தெரிந்தும், துணிவுடன் உணர்வார்க்ளா என்பதும் காலம்தான் பதில் எழுதும் ஆசிரியர் குழுவிற்கும் சொல்லவேண்டும். சிங்கள மொழி ஆக்கதாரர்களுக்கும் எனது பாராட்டுதல்கள். பேசுபவர்கள் மூடர்கள் என்று சொல்லும்
எம்மவர் அறிவாளிகளாக இருந்திருக்க எஸ்ரி, வேண்டும். அப்படி அறிவாளிகள் என்றால் 9ஜேர்மனி
பலஸ்தீனக் கவிஞர் அடோனிஸ் as66 tosseir ஆங்கிலம் வழிபாகத் தமிழில்: மணி
தூக்கிலிடுவோனுக்கு ஒரு கண்ணாடி
"நீ ஒரு கவிஞனென்றா சொன்னாய்?
நீ எங்கிருந்து வருகிறாய்? உன் சருமம் அருமையானது.
துாக்கிலிடுவோனே, நான் சொல்வது கேட்கிறதா?
இவனது தலையை நீயே வைத்துக்கொள்.
ஆனால் இவனது சருமத்தைச் சிராய்காமற் கொண்டுவா. இவனது சருமம் எனக்குப் பெறுமதி வாய்ந்தது.
இவனைக் கொண்டுபோ.
உன் வெல்வெற் சருமம் என் கம்பளமாகும்.
நீ ஒரு கவிஞனென்றா சொன்னாய்?
கவலைகள் (ஒரு சொப்பனம்)
பிறந்த மேனியராய் வந்தனர் கன்னமிட்டு வீடு புகுந்தனர் குழியொன்றைத் தோண்டினர் குழந்தைகளைப் புதைத்துப் போயினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெகு அண்மைக் காலத்துக்குரிய அரசியல் வரலாற்றை எழுதும் வரலாற்றாசிரியர்கள் இலங்கை அரசியல் வரலாற்றை ஏழு பிரிவுகளாகப் பிரிப்பர். அதாவது - இலங்கையில் சமூக பொருளாதார அரசியல் விடயங்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை (1796 - 1948) பின்வருமாறு வகைப் படுத்துவர்.
1796 - 1800 - Usouru Tsu66T STsub
1801 - 1833 - அரசகுழுவுடன் ஆதரவுடன் இடம்பெற்ற ஆள்பதி ஆட்சிக்
1834 - 1920 - உத்தியோக
விதுரன்
வரலாற்றில் ஒரு பக்கம் Cp66u5lu TCJTG Cp6šOL2 u ஆள்பதி
ஆங்கிலேயர் ஆட்சி இலங்கையில் ஏற்பட்டது முதலே அதற்கெதிரான அமைப்புகள் தோன்றத் தொடங்கின. இலங்கை மக்களது தொடர்ந்த போராட்டங்கள் கிளர்ச்சிகளது விளைவாக 1834இல் இலங்கையில் சட்டசபையை அமைக்க வேண்டிய கட்டாய நிலை ஆங்கிலேய அதிகார வர்க்கத்துக்கு ஏற்பட்டது. அன்று முன்னெடுக்கப்பட்ட சுதந்திரப் போராட்டம் பல வடிவங்களை அடைந்து கடைசியில் 1948இல் இலங்கை முழுமையாக சுதந்திரம் அடைய
வழிவகுத்தது. இக்காலகட்டத்தில் சிங்கள
அங்கத்தவரைப் பெரும்பான்மையாகக்
கொண்ட சட்டசபை ஆட்சிகாலம்
1920 - 1930 - 9 - 5 gì (3 tu fr &ủ பற்றற்றவர்களும், தெரியப் பட்டவர்களும் பெரும்பஏன்மையாகக் கொண்ட சட்டசபை ஆட்சிக் காலம்
1931 - இரட்டை ஆட்சிக்காலம்
1947 - 1948 உள்ளூர் அலுவல்களில் பூரண பொறுப்பாட்சியைக் கொண்ட ஆட்சி காலம்
பின்வந்த 1948 -
ஆட்சி எனக்கூறுவர்
1946 - அரச சபையின்
72 காலத்தை k பொதுநலவாயத்திற்குள் பூரண சுதந்திர

Page 21
த மி ழ் மு ஸ் லி ம் அ ர சி ய ற் தலைவர்களிடையே இருந்த ஒற்றுமை, அ வர் களு க் கி  ைட யி ல் இருந்த வேற்றுமையிலும் பார்க்க அதிகமாக இருந்தமையால், அவர்கள் தங்களது நோக்கங்களை அடையமுடிந்தது. எனினும் ஆரம்பம் முதலே சிங்கள தலைவர்களில் பலர் தங்களது பேரினவாதக் கருத்தை முன்வைக்கத் தவறவில்லை. அதேபோல தமிழ் முஸ்லிம் மக்களிடையே காட்டிக் கொ டு ப் புக ளு ம் ஆங் கி லேய ஏகாதிபத்தியத்திற்கு ‘கா க் காய் பிடிப்பதிலும் பின்னிற்க வில்லை. இவைபற்றிப் பின்வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.
இலங்கைக்கு முதன்முதலாக வருகை தந்த ஆள்பதி நோத்தைத் தொடர்ந்து வருகை தந்த சேர் தோமஸ் மெயிற்லண்
சிறந்த ராணுவப் பயிற்சியும் தலைமைத்துவ அனுபவமும் கொண்டவர். கல்கத்தா கைதர் அலியோடு போரிட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் சிறந்த ராணுவ நிபுணராகக் கணிக்கப்பட்ட இவர் கடந்தகால சம்பவங்களைக் கருத்திற் கொண்டு கண்டிமீது படையெடுக்கத் துணியவில்லை. இலங்கையில் இவர் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக அக்காலத்தில் பிரித்தானிய அரசுக்கு 3,00,000 பொன் மிச்சம் ஏற்பட்டது. ஆள்பதி நோத்தால் நீக்கப்பட்ட * ஊழிய முறை  ைய இவர் மீள நடைமுறைக்குக் கொணர்ந்தார்.
ஆங்கிலேயர் ஆட்சியை வேரூன்றச் செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்ட மெயிற்லண் அதற்குத் தடையா யிருந்த முதலியார்களின் செல்வாக்கைக் குறைப்பதில் கூடிய கவனம் செலுத் தினார் . அக் கா லத் தில் முதலியார்கள், சமூகத்தில் மிகச் செல்வாக்கோடு விளங்கினர். இவர்கள் நிர்வாகத் துறையிலும், வருமானத் துறையிலும் , நீதித் துறையிலும் ,
"தோம்புகள்' எனப்படும் பதிவேடுகளைப் பாதுகாக்கும் துறையிலும் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்தனர்.
முதலியார்களின் செல்வா க்கைக் குறைக்கும் நோக்குடன் முதலில் மே லுத்தியோகத் தர்களை சுதேச மொழிகளான சிங்களம் அல்லது தமிழைக் கற்றுப் பொதுமக்களுடனான தொடர்பை அதிகப் படுத்தினார் . இதனால் சின்ன விதானை மா ரையும் , வட்ட விதானை மாரையும் , முதலியார்களே நியமிக்கும் நிலைமையை மாற்றித் தாமே அந்நியமனங்களைச் செய்தார். இதனால் முதலியார்களின் நீதித்துறை முற்றாகப் பறிக்கப் பட்டது. விதானைமார் ‘சிவில்" உத்தியோகத்தருக்குக் கீழ்ப்பணியாற்றவும் மு த லி யா ர் க ள் அ ர சு க் கு ப் பணிவுள்ளவர்களாக கடமையாற்றவும் வழிவகுத்தார். மேலும் பெளத்த குருமார், பிராமணக் குருமார்களது செல்வாக்கைக் குறைக்கும் நோக்குடன், அதுவரை காலமும் ஒல்லாந்தர் காலத்தில் இருந்து கத்தோலிக்க மதகுருமார்மீது விதிக்கப் பட்டிருந்த தடையை நீக்கி அவர்களுக்கு சுதந்திரமாக இயங்க அனுமதி அளித்தார். படைத்தலைவன் வெயிஸ் என்பவனுடன் முரண் பட்ட மெயிற்லண் படைக் கழகத் தைக் கலைத் துப் புதிய அணுகுமுறைகளை மேற்கொண்டார். ஆங்கிலேய ஆட்சியை வேரூன்றச் செய்வதற்குரிய சகல திட்டங்களையும் மேற்கொண்ட மெயிற்லண் 1811வரை இ ல ங்  ைக ஆ ள் ப தி யா க க் கடமையாற்றினார். புதிய ஆள்பதி றொபேட் பிறவுண்றிக் 1912இல் இலங்கை Guibpyri. O ーー。 O Jeño
gettpól6* 3 Doou压海周° egy 607 3. வெளிவரும் சஞ்சிகை,
தொடர்புகள்: 37 Mahinda P1aCo,
乐
7 ܐܤܗܪܚܙܝ

செய்வார்கள புலிகள்?
சுவடுகள் இதழ் 38இல் வெளியாகியிருந்த "ஒரு யாழ்ப்பாண கடிதத்தில் இருந்து" என்ற (பெயரில்லாத) கடிதம் தொடர்பாக எனது கருத்துக் கள் சிவ வற்றை தெரிவிக்க விரும்புகின்றேன்.
வெளிநாடுகளிலுள்ள புவிப் பிரமுகர்கள் புலிகளின் இராணுவ வீர சாகசங்களை மட்டுமே பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கையில் போராடும் போராளிகளினதும் போராடிய போராளிகளினதும் யதார்த்த நிலையைப் புடம்போட்டுக் காட்டியுள்ள கடித ஆசிரியர் பாராட்டிற்குரியவர். ஆனால் இவ் யதார்த்த நிலையிலுள்ள உண்மை நிலையை கடித ஆசிரியர் உணராதது ஆச்சரியமாகவுள்ளது.
விடுதலைப்புலிகள் இன்று தனித்து நின்ழ போராடுவதாக புலம்பும் இவர் இதற்கான காரணத்தை அறியவில்லையா? ஆனையிறவு போல் இன்னும் எத்தனை சம்பவங்கள் இடம்பெறுமோ தெரியாது. ஆனால் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் தற்போதுள்ள போக் கையே புலிகள் கடைப்பிடிப் பார்களாயின் போராட்டம் தேவையற்ற தொன்றாகி ஈழம் முழுவதும் சுடுகாடாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
எமது போராட்டத்தின் தொடக்கமும், அதன் இரத் தக்க  ைற படி ந் த வரலாறும்  ேப ா ர |ா ட் ட த் தி ன் 6( 6%ש ש ק60 ז தேக்கநிலையையும் சீர்துாக்கிப் பார்த்தால் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகும்.
எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுத பரிமாணத்தை அடைந்த போது பல்வேறுபட்ட இயக் கங்கள் தோ ன் றின . சக ல இயக் கங் களுமே நேர டியா க வோ மறை முகமாகவோ மக்கள் விரோத செயல் களி ல் ஈடுபட்டன ஈடுபட்டு
இந் நி  ைல யி ல் தென்னிலங்கையில் பிரபல்யமாவதற்கு முன்பே ஈழத்தில் "டயர் கலாச்சாரத்தை" நிகழ்த்திக்
வ ரு கி ன் ற ன .
காட் டிய வர் கள் புலிகள் . இதிலும் துரோகத்தனமான தலைமைகள் தப்பிவிட புலிகளின் கொலைவெறிக்கு இலக்கானவர்கள் அப்பாவிப் போராளிகளே. பிராந்தியத்தில் இந்திய மேலாதிக்கத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் இதே புலிகள்தான் 1985இல் இந்தியக் கைக்கூலிகளாகச் செயற்பட்டு. 150இற்கு மேற்பட்ட அப்பாவிச் சிங்கள மக்களை அனுராதபுரத்தில் கொன்று குவித்தனர். இதன் மூலம் எமது நியாயமான போராட்டத்திற்கு ஆதரவளித்த முற்போக்கு சிந்தனை கொண்ட சிங்கள மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத் தினர். சிங்கள இராணுவத்துடன் தொடர்புடைய அனைவரும் துரோகிகளாக கருதப்படுவர் எனக் கூறி சென் ஜோன்ஸ் அதிபர் ஆனந்தராஜாவை சுட்டுக் கொன்ற புலிகள், பின் ஹில்டன் ஹோட்டேலில் இராணுவ அதிகாரிகளுடன் கோழி இறைச்சியும் பியரும் சாப்பிட்டனர். இதுமட்டுமா 80,000ற்கு மேற்பட்ட சிங்கள மக் க ைள பி ரே ம தா சா நரவேட்டையாடிய போது பிரேமதாசாவுடன் கூடிக் குலாவியது மட்டுமன்றி, பிரேமதாச அரசியலுக்கு ஜெனிவா மனிதவுரிமைகள் மா நாட்டில் நற் சான்றிதழ் வழங்கி "பிரேமதாசா கண்ணியவான் தமிழர்களின் பிரச்சனைகளை நன்கு புரிந்து கொண்டவன்" என்ற பாராட்டையும் தெரிவித்தனர். எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை
ர ண சிங் த

Page 22
உறுதியாக முன்னெடுப்பதற்குப் பதிலாக தமது நலன்கள் பாதிக்கப்படும் போது இலங்கை, இந்திய அரசுகளுடன் சமரசம் செய்யவும் தயங்காதவர்கள் என்பதை புலி க ளின் கடந்த கா ல வ ர லா று நிரூபிக்கின்றது.
வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பூமி. ஆனால் இப்பாரம்பரிய பிரதேசங்களில் பல நுாறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மற்றுமொரு சிறுபான்மையினரான முஸ்லீம் மக்களை குரூரமாக கொன்று குவித்தும், பலாத்காரமாக வெளியேற்றியும் சிங்கன பேரினவாதத்திற்கு தமிழ்ப் பேரினவாதம் சற்றும் குறைந்ததில்லை என்பதை புலிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எமது தேசிய விடுதலை போராட்டத்திற்கு எதிராக இலங்கை இந்திய அரசுகள் மட்டும் செயற்படவில்லை. ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடிகளும் எமது போராட்டத்தை நசுக்க முனைப்பாக செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில் மொசாட்டிடம் ஆயுத உதவிகளைப் பெற்றுக்கொண்டதை வெறும் வியாபாரமாக மட்டும் கருத இயலாது. தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக கூறிக்கொள்ளும் புலிகள் ஏகாதிபத்திய பாசிசத் திடம் (இஸ்ரேல் ) இருந்து ஆயுதங்களை பெற்றுக் கொள்வதானால் அ த ன் வி ைள வு க  ைள க ற் ப  ைன செய்துபாருங்கள்.
புலிகள் அப்பாவி சிங்கள - முஸ்லிம் மர் த் திரம் படுகொலை செய்யவில்லை. எமது போராட்டத்தை ஆதரித்த நேசித்த பல தேசபக்தர்களையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளனர். இந்திய படைகளின் அராஜகத்தையும், அதனுடன் கூட்டுச்சேர்ந்து மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்ட இயக்கங்களையும் அம்பலப் படுத்தி எமது விடுதலைப் போராட்டத்தில் மக்களை நெருங்கிவரச் செய்த ராஜினி திரணகமவை தெரு நாயைப் போல் நடுரோட்டில் வைத்துப் புலிகள் சுட்டுக் கொன்றனர். பல்கலைக்கழக மாணவன் விஜித ர ன், விம லேஸ்வரன் ஆகியோரை சுட்டுக் கொன்ற புலிகளின் வேட்டை முற்றுப்பெறவில்லை தொடர்கின்றது.
சர் வ தேச ம ன் னிப்பு ச  ைப யின் அறிக்கையின் படி துணுக்காயில் சிறை வைக்கப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள்,
மக் க ைள
ஏனைய இயக்க போராளிகள் பலர் மிகக் கடுமையான மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் சித்திரவதை செய்யப் படுவதாக குறிப்பிட்டுள்ளது.
தேசத்தையும் மக்களையும் நேசித்த கேசவன் (டொமினிக்), செல்வி, தர்மலிங்கம், மீரா, மணியண்  ைண, மனோகரன் இப் படிப் புலிகளால் கைது செய்யப்பட்டவர்கள் பலர். சிலர் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டனர். இவர்கள் செய்த தவறு தேசத்தையும் மக்களையும் நேசித்தது தான்.
எந்த நாட்டை எடுத்தாலும் சில பல காரணங்களுக்காக மனித உரிமைகள் மீறப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் கருத்து சுதந்திரத்தை வென்றெடுக்க இது நேரமில்லை என்றும் நிபந்தனையற்ற புலி ஆதரவே முக்கியம் என்ற கடித ஆசிரியரின் கூ ற் று எ வ் வி த த் தி லும் ஏ ற் று க் கொள்ளத்தக்கதல்ல. அப்படிப் பார்த்தால் பாலஸ்தீன மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொண்டு குர் திஷ் மக்களைக் கொன்றுகுவித்து, குவைத்தைச் குறையாடிய சதாம் குசைன் யாராலும் போற்றத் தக்கவராகவும், மூன்று மில்லியன் மக்களைக் கொன்று குவித்த கம் பூச்சியா வின் பொல்பொட்டும் பாராட்டுக்கு உரியவர்கள் ஆகலாம். ஆனால் உண்மை அதுவல்ல. தமது நலன்கள், பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களுக்கு முக்கியம். அடுத்து இன்றைய நிலையில், முழு அதிகாரம் கிடைக்கும் முன்னரே கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் புலிகள் நாளை பூரண அதிகாரம் கிடைத்தபின் கருத்துச் சுதந்திரத்தை வழங்குவார்களா அல்லது இரும் புக் கரம் கொண்டு அடக்குவார்களா, எது சாத்தியம்?
நாம் அனைவரும் புலிகளின் வழியில் ஊன்று கோ லாய் நின்று செயல்பட வேண்டுமாயின், முதலில் மக்களுக்கு ஜனநாயகத்தைப் புலிகள் வழங்கட்டும். கருத்து, சிந்தனை. பேச்சுச் சுதந்திரங்களை வழங் கட்டும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கட்டும். சுதந்திரமான விமர்சனங்கள் மூலம் கடந்தகாலத் தவறுகள் திருத்தப்பட்டு சந்தர்ப்பவாத சமரச அரசியலுக்கு முடிவு கட்டட்டும். மனித

நாகரீகத்திற்கு முரணாக பலாத்காரமாக வெளியேற்றப் பட்ட முஸ்லீம் மக்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்தி முஸ்லீம் பகுகொலைகளுக்கு பொது மன்னிப்பு கோரட்டும். ஒருவர் இருவரல்ல தவறான தலைமைகளினால் வழிநடத்தப்பட்டு தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தையே நசுக்கும் இலங்கை இந்திய அரசுகளுக்கு குடை ஆலவட்டம் பிடிக்கும் இயக்கங்களிலுள்ள, இயக்கத்தை
விஷர்நாய்க்குப் பூத்த புன்னகை
பிடித்துப், பொத்தி எறி நான் உனக்குப் பூத்த புன்னகையை திரும்பவும் எனக்கு.
جس * C aur -- Uyi
வெளியேறி விரக்தியடைந்துள்ள ஆயிரக் கணக்கான போராளிகள் புலிகளுடன் இணைந்து எதிரியைத் துரத்தி மண்ணை மீட்க தயாராய் இருக்கின்றார்கள். அது மட்டுமன் றி போராட் டத் தி லிருந்து ஒதுங்கியிருக்கும் பொது மக்களும் போராட்டத்தில் பங்கு பெற தயங்க மாட்டார்கள் செய்வார்களா புலிகள்?
- ஜெயக்குமார் - (ஷெயன்)
சரி, என் புன்னகையைச் சிதைத்து
என் முகத்தில் வீசு.
நான் என்பாட்டில் போயிருக்கலாம். உன் முகத்தைப் பார்த்து
நுளம்புக்கும் கொசுவுக்கும் பூத்துக் காட்டியிருக்கலாம்.
நீ மனதுக்குள் வளர்க்கும் விஷர்தாய்க்கு நான் மிட்டாய்போட்டு
உறவாக்கிக் கொள்ள நினைத்தது தவறேதான், நான் பூத்த நகையை எறி
என் புன்னகையை நான் மீண்டும் சப்பி விழுங்கிக் கொள்கிறேன்.
உன்னைக் கண்டால் நான் இனி எட்ட நடந்து கொள்கிறேன். உன்னைப் பார்த்து என் பூவைப் பூக்காமல்
ge, 外
தோளில் என்முகத்தைச் சுமந்தபடி நான்தான் போகிறேன்.
உன் இதயத்தின் இரத்தத்தின் நிறமோ கறுப்பு
அதை நான்
எப்படிச் சிவப்பர்க்குவது? சரி. உன் பல்லின் ஒட்டறையை இனி நான்
பார்க்க விரும்பவில்லை. இன்று நீ சிதைத்த என் புன்னகையின் துயரத்தால் மழையில் நனைந்த காகம்
கொடுகுவது மாதிரி
கொடுகுகிறேன்.
ஒரு பட்ட மரத்தின் கிளையில்
குந்தி இருந்து
அழுகிறேன்.
உன் விஷர்நாய் மகிழட்டும்!

Page 23
ஆபிரிக்க நாடுகள் பலவற்றைப் பெரும் பஞ்சம் பீடித்தாட்டுகிறது. இவ்வாறு ஏற்பட முக்கிய (மறைமுகக்) காரணங்களாக மேற்குலக நாடுகளைக் குறிப்பிடலாம். முக்கியமாக சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி ஆகியன தாம் கடன் வழங்குவதற்குப் பொருத்தமில்லாத நிபந்தனைகளை விதிப்பதால் பல நாடுகள் தமது பொருளாதார ஒழுங்குமுறைகளையும், பயிர்ச்செய்கை வழிவகைகளயும், உற்பத்திகளையும் மாற்றி :ՀՀ:
அமைக்க நேரிடுகின்றது. Angoli இந்த நடவடிக்கைகளால் வறட்சி ஏற்பட Bot வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, வறட்சியை எதிர்கொள்ளும் திறனும் அற்றதாக இந்த
வறிய நாடுகள் ஆக்கப் படுகின்றன. 8ே இந்தச் சர்வதேச மோசடி அமைப்புகளுக்கு Lib
மயமாக்கல், வெளிநஏட்டு:
blik நிறுவனங்களுக்குத் தமது உரிமை இழந்த988
நிலையில் தொழிலாளர் copsou, Namibia * வழங்கல் என்ற சில அம்சங்களைSomala*
இலங்கையில் இப்போது காணமுடிகிறது. sudan*
விரைவில் சோமாலியாவுக்குச் Swaziland
சென்றதுபோல அமெரிக்கர்கள் ஆயுதங்களுடன் சாப்பாடுபோட வரும்ட்
சந்தர்ப்பம் இலங்கைக்கும் உள்ளது. Tchad .انستند نسبیبیسی − :് -- நாடுகளும், பட்னியாற் பாதிக்கப்பட் zambia 1700000 (7804000) மக்களது எண்ணிக்கையும். நாடுகளின் Zimbabwe 4 OOOOOO (9 120 000)
சனத்தொகை அடைப்புக்குள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தார் கவிராயர். கையில் இருந்தது பகவத் கீதை
 ெம து வா க க் க  ைத  ைய த் தொடக்கினேன். "என்ன கவிராயர் கவலையாக இருக்கிறீர்" என்றேன். என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு பார்த்துவிட்டு மெளனமானார். பின்னர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.
"தம்பி ஊர் உலகில நடக்கிறதை நினைச் சா கவலைப்படாமல் என்ன செய்யிறது?" என்று கேட்டார்,
தொடர்ந்து "தம்பி இந்து சமயம் ஆசையைத் துறக்கச் சொல்லுது, லெளகிய வாழ்வைத் துறந்து முத்தி நிலையை அடையச் சொல்லுது. நல்ல விசயம்தான். ஆனால் அவற்றைக் கடைப்பிடிப்பதாகச் சொல்பவர்களோ, தம்மை "இந்து'க்கள் என்று சொல்லி மார் த ட் டு ப வர் க ளே T எ ன் ன செய்கிறார்கள் ? இந்தியா வில் எப்போதோ வரலாற்றில் நிகழ்ந்த தவறுக்காக கல்லுக்கும் மண்ணுக்கும் கட்டிடத் துக் காகவும் அடித் துக்
கொள்கிறார்கள். அப்பாவிகளைக் கொல்கிறார்கள்.
கிருஷ்ணனின் அவதாரங்களில் ஒன்று ராமர். ராமர் கோயிலுக்கு அடித்துக் கொள்கிறார்கள். பாரதப் போரின்போது பகவத் கீதை என்ற நல்ல நூாலைத் த ந் தருளிய வர் அவர் . அதில், 'கொல்லவரும் பசுவைக் கொல்' என்று ஒரு வரி வருகுது. ஆனால் இவர்கள் சும்மா தன்பாட்டில் இருக்கும் பசுவைப் போன்ற அப்பாவிகளை எல்லாம் கொல் கிறார் க ள் . அது தா ன் விளங்கேல்லை.
இன்று நடைபெறுவது ராமரைக் காப்பாற்ற அல்ல. குறுகிய சுயநல அரசியல்வாதிகள், குறுக்கு வழியில் பதவிகளைப் பிடிக்கவே இந்தத் இந்துவெறியைக் கிளறிவருகின்றனர். அறிஞர் காள் ஸ்மாக்ஸ் ஒருதடவை சொன்னார், மதம் ஒரு அபின் எண்டு. அது எவ்வளவு உண்மை யாச் சு, பாத்தீரா? இதுக்கு இன்னொரு நல்ல உ தா ர ண ம் , நம் ம நா ட் டி ல்
பெளத் தத்தின் பெயரால் நிகழும் கொலைகள் கொடுமைகள்.
மதங்கள் மனத்தைப் பண்படுத்தவே படைக்கப் பட்டன. ஆனால் இவை இன்று என்ன செய்கின்றன?" என்று கேட்டார்.
அதுதானே என்ன செய்கின்றன?

Page 24
சி றி து நே ர ம் க N த் து "அது மாதிரித்தான் தம்பி இதுவும் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை, இவர் என்னத்தைச் சொல்கிறார் என்று. என்ன இவரும் விசு மாதிரிக் கதைக்கிறார்?" என மனதுக்குள் கேட்டுக் கொண்டேன். சமாளித்து, "என்ன அது?" என்றேன்.
"இல்லைத் தம்பி, சிலர் நீதி நியாயம் என்பது மற்ற ஆக்களுக்குத் தான் எ ங் களு க் கு இல்  ைல எ ன் று நினைக்கினம். உதாரணத்துக்கு இந் தி யா விலை பாபர் ம குதி உ  ைட ச் ச து க் கும் மு ஸ் லி ம் அப்பா விகள் மீது நடத்தப்பட்ட தாக்கு த ல் களுக்கும் கண் டனம் தெரிவிச்சு, காரசாரமாக எழுதின.
நல்லது, எழுதத் தான் வேணும். ஆனால்." என்று இழுத்தார்.
" ஆனா என்ன . . . . . ?" என்று துாண்டினேன்.
"ஆனால் தம்பி எங்கட நாட்டில பல நுாறு அப்பா வி முஸ்லிம்கள் படுகொலை செய்யப் படுகினம். காலம் கால மா யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த மண்ணில் இருந்து விரட்டப் பட்டனர். இவர்கள் இன்று தெற்கிலே அவர்கள், வீடுகளும் இல்லாமல் வீதிகளில் பிச்சை எடுத்து வாழும் நிலைக் கும் பல்வேறு கஷ்டங்களுக்கும் உள்ளாகின்றனர்.
இ  ைத ப் பற்றி யோ , இ ைத க் கண்டித்தோ இவைகள் எழுதுவதில்லை. இது ஏனெண்டு விளங்கேல்லை. மற்றவனின்ர எண்டா எழுதலாம். எங்கட பிழை என்றால் முடி மறைக்கிறது
நியாயமே?" என்றார்.
" பத் தி ரி கா தர்மம் எண் டு
ஒ எண் டி ரு க் கி ற து த மி ழ் ப்
பத்திரிகையாளர்களுக்குத் தெரியுமோ?"
என்றேன்.
நான் நியூஸ் வீக் இதழ்களைச் சுவாரஸ்யமாக புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். "தம்பி நீர் ஏன்
இங்கை வந்த னிர் , இங் லி ஷ் *கண்ட்றிக்குப் போகாமல்?" என்றார் கவிராயர்.
நியூஸ்வீக் புரட்டியதற்கு நக்கலாகக் கேட்கிறார் என நினைத் துச் சிரித்துவிட்டுச் சும்மா நின்றேன்.
"ஏன் தம்பி இங்லிஷ் கண்ட்றிக்குப் போகேல்லை?" என மீண்டும் கேட்டார். இப்போது நான் உசாராகி "கேள்வி சீரிசாகத்தான் என உணர்ந்தேன்.
"ஏன்? நாட்டில பிரச்சனை உயிரைக் காக்க இஞ்ச ஓடிவந்தனான். படிக்கிறன், உழைக்கிறன், பிறகு எதுக்கு இங்லின் கண்ட்றி? அங்க என்ன கைக்குமேல பத்துடொலர் கூடவே தரப்போறான்? நொஸ்க் எண்டா என்ன ஜேர்மன் எண்டா என்ன இங்லீஷ் எண்டா என்ன, எங்கட சொந்த நாடுமாதிரி வருமே?” என்று சற்றுச் குடாகவே கேட்டேன்.
இந்தப் பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டார் கவிராயர். மெளனமாகித் தொடர்ந்தார்.
"தம்பிக்குக் கோபம் வந்திட்டுது போல கிடக்கு. நல்லது உம்மை மாதிரி இப்ப யார் ஆரோக்கியமாச் சிந்திக்கினம்.
 
 

இங்க. நான் கதைக்கிறதிலை கனபேர் சொல்றது இதைத்தான். ‘எங்கையாவது இங்லிஷ் கண்ட்றிக்குப் போகவேணும், எங்க ட பிள்  ைள ய ள் இங் லி ஷ் மீடியத் திலை படிக்கலாம். இந்த நொஷ் கை, ஜேர்மனை, டச்சை, பிரெஞ்சைப் படிச்சுப்போட்டு என்ன செய்யிறது? எண்டு கேட்கினம். தம்பி, இப்ப இந்த மொழியைப் படிச்ச ஆக்கள் உயிர்வாழேல்லையே?
எங்களிட்டக் காலம் காலமா இருக்கிற பல மாயைகளில இதுவும் ஒண்டு, இங்லிஷ் எண்டா அறிவும், காசும், வேலையும் அள்ளிக் கொட்டும் எண்டு நினைக்கினம். ஆங்கிலம் படிக்கிறது நல்லது , எ ல் லா இடத் தி லும் பாவிக்கக் கூடிய மொழி. ஆனால் அதுதான் வாழ்க்கை எண்டில்லை. தமிழிலை படிச்ச பலர் இண்டைக்கு பல துறைகளில் முக்கிய சாதனை செய்த  ைத க் காணே ல் ல யே? ஜப்பா ன் காரர், ஜேர்மன் காரர், இஸ்ரேல்காரரெல்லாம் தங்கட சொந்த மொ ழி யி லை படி ச் சுத் தானே
ப்யா! i எங்கே?
இண் டைக்கு உலக நாடுகளில முன்னுக்கு நிக்கினம், இல்லையே.
சிங்களவன் எங்களை அழிக்கிறதிலை இருந்து போாராடிக் கொண்டே, இன்னொரு ஆக்க ளிட்ட எங்க ட மொழியை, எங்கட சுயத் தை , கலாச்சாரத்தை, விரும்பித் தங்கனை அறியாமல் அடகு வைக்கச் சிலர் முயலுகினம் இதுஎன்?" அதுதானே ஏன்? 9
உணமையான தந்தை எனக் கண்டறிய
உதவுகின்றன.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் நிச்சயம் தாயும், தந்தையும் இருப்பார்கள். ஆனால் நோர்வேயில் கடந்த வருடம் 1000 குழந்தைகளின் தந்தையர், தாங்கள் தந்தையரல்ல என மறுத்துள்ளனர். ஐரோப்பாவில் இத்தகைய பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்புப் பிரச்சனை பெருத்து வருகிறது.
எது எவ்வாறாயினும் இந்தப் பம்மாத்துப் பருப்புகள், இந்த நவீன விஞ்ஞான உலகில் அவிவதில்லை. இரத்தப் பரிஞ்தேனையும், ly 6ĩ 6öI 6] பரிசோதனையும் LJ st fi
ஒரு பெண் பல ஆண்களுடன் உறவு கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் த ந்  ைத  ைய க் கண்டு பிடிப்பது இலகுவானதல்ல. இவ்வாறான 9 (5 சந்தர்ப்பத்தில் 96tf060 ז( tD 6שi( 9 (5 பெண்ணால் குழந்தையின் தந்தையாக இருக்கலாம் எனக் காட்டப்பட்ட எட்டு ஆண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப் Ut-67 f. 6T66rsor ஆச்சரியம்! அவர்களில்
ஒருவருமே தந்தையாக இருக்கவில்லை.
- மதி -

Page 25
மாத இதழ் ஸ்தாபிதம்: புரட்டாதி88
*எச்சத்தாற் காணப்படும்"
ண்மையில் இலங்கை இனப்பிரச்சனையில் முக்கிய
நிகழ்ச்சி எனப் பலரால் வர்ணிக்கப்பட்டது கிட்டுவின் மரணம் விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்டத் தளபதியாகவும், பின்னர் சர்வதேசச் செயலகத்திலும் பணியாற்றிய கிட்டு மரணம் அடைந்த சூழ்நிலை பலவகைகளிலும் தடிப்பம் நிறைந்ததாக உள்ளது. மரணம் சம்பவித்த சூழ்நிலை பற்றியும், அதன் காரணங்கள் பின்னணி பற்றியும் வெவ்வேறு முலங்களிலும் வெவ்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.
கிட்டு ஒரு சமாதானத் திட்டத்தைக் கொண்டு வந்ததாகப் புலிகளின் செய்திகள் கூறுகின்றன. இதைக் குவேக்கர் சமாதான நிறுவனம் உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் கிட்டுவின் கப்பலை சர்வதேசக் கடற்பரப்பில் மறித்ததை இந்தியா புரிந்தமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. இந்தியா இவ்வாறு நடந்ததன் முலம் இலங்கைப் பிரச்சனையில் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த முயன்றிருக்கிறது. இதன் மூலம் ஒரு சமாதான முயற்சிக்கு இடையூறாக இருந்திருக்கிறது இந்தியா. கிட்டு இலங்கையில் நிகழ்ந்த தமிழ்மக்களது ஆயுதம் தாங்கியபோராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார். இவரது காலத்தில் பல ராணுவத் தாக்குதல்கள் வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளன. அத்துடன் கிட்டு யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த காலத்தில் யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை ராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப் பட்டனர். இவ்வாறான சாதகமான அம்சங்கள் ஒரு சிறந்த ராணுவ வீரனாகக் கிட்டுவை முன்நிறுத்தும் அதே சமயம், கிட்டுவின் காலப் பகுதியில்தான் மற்றைய இயக்கங்கள்மீது தடை பெரிய அளவில் நடைமுறைக்கு வந்தது. இவ்வாறு தடை விதிக்கப்பட்ட இயக்கங்களில் இருந்த எத்தனையோ போராளிகள் வீதிகளில் சுடப்பட்டதும், உயிரோடு எரிக்கப் பட்டதும் கிட்டுவின் காலத்தில்தான். கிட்டுவின் காலப்பகுதியில் மாற்று அபிப்பிராயங்களைக் கொண்டிருந்த பலர் deO) DLS6) 9 could 5U Ulul 60)uoulo UG6ós (O)6) usfluu UL i Leo)Lou Lio LO]éid:UULá éin (plly freiðI[]96ool).
கிட்டுவின் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கருத்துச் சுதந்திர மறுப்பு போராட்டத்தின் பின்னடைவுகளுக்கு ஒரு முக்கிய காரணமாக இன்றுவரை இருப்பதை பாடும் மறுக்கமுடியாது
 

ஆசிரியர் குழு: துருவபாலகர்
முகவரி: Herslebs Gate 43, 0578 Oslo
கிட்டு கொண்டுவந்ததாகச் சொல்லப்படும் சமாதானத் திட்டத்தைக் கைவிடாமல் பரிசீலனைக்கு எடுத்து அதுபற்றிய சாதகமான முடிவுகளைப் புலிகள் மேற்கொள்வது, உண்மையிலேயே புலிகள் சமாதானத்திற் கொண்ட அக்கறையைக் காட்டும்
மரணம் எய்திய ஒருவரது நல்ல அம்சங்களை மட்டுமல்ல, தவறுகளையும் மீள்பார்வைக்கு உட்படுத்தல் அவசியம். இதன்முலம்தான் நாம் எதிர்காலத்தைச் சீராக்க இயலும் அதுவே அவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியுமாதம்
gfibes unte'leist asLLJITCG
இந்தியா, அண்மைக் காலங்களாக இலங்கைத் தமிழர் தொடர்பாகத் தனது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தாமல் இருப்பதும், இவ்வாறு சமாதான முயற்சிகளைப் பாதிக்கும் விதத்தில் நடந்து கொள்வதும், ஏற்கனவே இந்தியாவால் காயம்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலாக இருக்காது. ஈழத்தமிழர் தொடர்பான தனது நிலைப்பாட்டை இந்தியா தெளிவுபடுத்தல் அவசியம்.
இந்தியா தங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இந்தியாவை ஈழத்தமிழரது இன்னல் தீர்க்க அழைக்காத ஈழத் தலைவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். இந்தியாவின் மேலாதிக்கத்தை யாரும்
ஏற்க முடியாது என்றபோதும், இந்தியா ஈழத்தமிழர் விடயத்தில் நியாயமாக நடந்துகொள்ளும் என்ற நீண்டகால எதிர்பார்ப்பு பாரிய கசப்பான அனுபவங்களில் முடிந்திருக்கிறது.
கடந்த சில வருடங்களாக ஈழத்தமிழரது பிரச்சனை பற்றி வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மெளனம் சாதிக்கிறது இந்தியா. தனது பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தனக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று எண்ணுவதைவிட, பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழவேண்டும் என்று இந்தியா எண்ணுவது, இந்தியாவுக்கும் தென்னாசியாவுக்கும் நல்லது. அவ்வகையில் தமிழீழத்தில் இலங்கை அரசால் நிகழ்த்தப்படும் அநியாயங்களை நிறுத்த இந்தியா பங்களிக்க முடியும்.
இந்தியாவில் உயிாத்தஞ்சம் கோரிச் சென்ற ஈழத்து அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கைக்ளும், அரசியற் பழிவாங்கல் போலத் தொடராமல், உடன் நிறுத்தப்பட வேண்டியதே.

Page 26
-
சந்தா:
பன்னிரு இதழ்களுக்கு 300 குறோணர்கள்
ཚ་ཚོ་
முகமூடிக் கொள்ளையர்கள்
LJ (BJUo.5TőTaleo egéluge (BUTáBebáb6T 86)é5also U6ugni. புரிந்துகொள்ளக்கூடியன அல்ல, அவ்வாறே பிரேமதாசாவுக்குக் கிடைக்கும் அரசியல் வெற்றிகளும்
அண்மையில் சர்வதேச அகதிகளுக்கான தொண்டர் நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி ஒருவர், 'கண்ணியமாக புத்தத்தை நடத்துபவர் எனப் பிரேமதாசாவைப் புகழ்ந்ததை எந்த வகையில் குறிப்பிடுவது? முன்பும் ஒருமுறை, இலங்கையில்தான் போராளிகளுக்கும் (அரசு) சிகிச்சை வடிங்குவதைத் தான் கண்டதாக ஒரு தொண்டர் நிறுவன அதிகாரி தெரிவித்தார். இலங்கையில் தொடர்ந்தும் மிகமோசமாகப் படுகொலைகளும் யுத்தமும் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் நாடு ஒழுங்காக இடுப்பதுபோல ஒரு மாயத் தோற்றம் சர்வதேச ரீதியில் ஏற்படுத்தப் பட்டுள்ளது
இவைலயல்லாம் எவ்வாறு சாத்தியமாகின்றன? ஒரு கொலைகார அரசுக்கு எவ்வாறு நற்பெயர் ஈட்டித் தரப்படுகிறது? இவற்றிற்தக் காரனம் எமது அரசியற் சானக்கியங்கள் தவறாக இருந்தமையா? எமது போராட்டத்துக்கு சரியான ஆதரவைத் திரட்டாமல்விட்ட எமது அணுகுமுறையின் தவறா? நாம் இவைபற்றி என்ன செய்யப் போகிறோம். வெளிநாடுகளில் வாழும் நாம் இலங்கை அரசின் போலி முகத்திரையைக் கிழிக்கும் நடவடிக்கைகளில் எம்மை ஈடுபடுத்திக் கொள்ளாதவரை இவ்வாறான விடயங்கள்தான் ởIIộjuuOTGOIGoal.
86olájet) ő el Jő debé esia (85ő filum eo 5 6luueog ஏற்படுத்தியதில் தமிழர்களது பங்கு என்ன? இதில் பல விடுதலை இயக்கங்களது பங்கு கடந்த காலத்தில் இருந்ததை மறத்தல் இயலுமா? இலங்கை அரசு தனது கைகள் சுத்தமானவை என நிருபிக்க முடியுமாயின், தமிழ் மக்களது இழப்புகளும், (BUTOstlu (pub futuoli Peoa LT63 (sia Bg3 a 633b * *- 8 SEGON FTub egipoikäissü CBUTápToT?
சுவடுகள்43
სorldff93
"SuPaduka-Herslebsgate 43,05780sos, Norway
 

பலத்து வீசிய காற்றுடன் சேர்ந்து வந்த மழைத்துாறலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ‘தில்பூட்'இல் (14.50 குறோணருக்கு) வாங்கிய சாந்தனுடைய குடை தடுமாறியது. காற்றின் திசைக்கேற்ப குடையை மாற்றி மாற்றிப் பிடித்தவாறு பல்கலைக்கழகக் கட்டிடத்தை நோக்கி விரைவாக நடந்துகொண்டிருந்தான் சாந்தன். அவனுக்கு இன்று மாலைதான் விரிவுரைகள் இருந்தபோதும், அவ்வப்போது அத்திபூத்தாற்போல் அவனுக்கு வரும் உற்சாகத்தின் விளைவால் இன்றுபோல் அசாதாரண விடியல்களும் தோன்றுவதுண்டு. இன்று எப்படியாவது அவனுடைய பெளதிக ரசாயனப் புத்தகத்தில் குறைந்தது இரண்டு அத்தியாயங்களையாவது வாசித்து முடிப்பது என்ற முடிவுடனேயே வீட்டில் இருந்து புறப்பட்டான்.
குடையைச் சுருக்கி உதறியவாறே நுழைவாயிற் கதவை இழுத்துத் திறந்துகொண்டு உள்ளே சென்றவன், உள்ளே தொங்கவிடப் பட்டிருந்த இரண்டு அறிவித்தற்
பலகைகளையும் நோட்டம் விட்டவாறு நுால்நிலைய வாயிலை நோக்கி முதுகில் இருந்த புத் த க ப்  ைப  ைய யும் க ம ந் த வா று சென்றுகொண்டிருந்தான்.
"என்ன இண்டைக்கு வெள்ளன விடிஞ்சிட்டுது போல கிடக்குது?" என்ற யோகனின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். ”ஒம், இன்றைக்காவது ஏதாவது உருப்படியாகச் செய்வம் என்று நினைச்சனான், அதுதான்" என்றவாறு யோகனை நோக்கி நடந்தான் சாந்தன்.

Page 27
"வாருமன் மேல கன்ரீனுக்குப் போய் நித்திரை முறிய ஒரு கோப்பி அடிச்சிட்டு வந்து வாசிக்கத் தொடங்குவம்" என்ற யோகனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு இருவருமாகப் படிகளில் ஏறி நடந்தனர்.
யோகன் வயதில் சாந்தனிலும் பார்க்க இரண்டு வருடங்கள் இளையவன். யாழ்ப்பணத்தின் அசல்
கிராமப்புற இளைஞன் ஒருவனுடைய சாயல்கள்
நிறையவே யோகனிடம் இளையோடியிருந்ததும், அவனுடைய போலித்தனமற்ற நட்பும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடையே கடந்த ஆறேழு வருடங்களில் மிகச் சிலரிடமே சாந்தன் கண்டிருக்கிறான். இதனால் சாந்தனுக்கு யோகன் மேல் மிகுந்த மதிப்பு ஏற்பட்டிருந்தது. இதைவிட வேறெந்த ஆழமான புரிந்துணர்வும் இருவருக்கும் இடையில்
இருவரும் மூச்சுவாங்கியவாறு இரண்டாம் மாடியின் கன்ரீன் கதவை இழுத்துத் திறந்துகொண்டு உள்ளே சென்றனர். யோகன், சற்றுப் பின்வாங்கியவாறு கன்ரீனின் பரந்த கூடத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு, "சாந்தன், இங்கே வாரும் இந்தப் பக்கமாக இரண்டுபேர் இருக்கிற மேசை இருக்கு. இதில இருப்பம். அங்கே பாரும், அந்த மூலையில இப்பவே எங்கட அஞ்சு சனம் இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில 10 - 15 ஆகும். பிறகென்ன வழமைபோல மாறிமாறி யாற்ரையும் தலையைப் போட்டு உருட்டுங்கள், பிறகு ‘பாக்கையும் துாக்கிக்கொண்டு யூனிவசிற்றியிலை படிச்சிட்டு வாறம் எண்டு வீட்டை போவினம். ஏன்தான் இப்பிடிக் காலத்தை வீணடிக்குதுகளோ தெரியாது" என்றவாறு கதிரையை இழுத்தான் யோகன்.
"உமக்கென்ன ரீயோ, கோப்பியோ?" என்றவாறு முதுகில் இருந்த புத்தகப் பையைக் கழற்றினான் சாநதன.
"நீர் இரும் நான் எடுத்து வாறன், உமக்கு கோப்பிதானே?" என்றவாறு நடந்தான் யோகன். சாந்தன் ஐக் கெற்றைக் கழற்றிக் கதிரையில் கொழுவிவிட்டுக் கதிரையை இழுத்து எதிரே வந்த சக நோர்வே ஜிய மாண வி ையப் பார்த் துப் புன்னகைத்துவிட்டு, செளகரியமாக அமர்ந்து, காத்திருந்தான் யோகனுடைய வாவிற்காய்.
யோகன் தட்டில் இரண்டு கோப்பைகளில் கோப்பியை ஏந்தி நிதானமாக சாந்தனை நோக்கி வந்து அமர்ந்தான்.
"எப்படி உம்மடை படிப்புப் போகுது? உமக்கென்ன மொழி பிரச்சனையில்லை, அதோடை ‘எக்ஸாம்'க்கு கிட்ட ஒரு பிடி பிடிச்சு நல்ல மார்க்ஸ்சும்’ எடுப்பீர். என்னால அப்படி ஏலாது.” என்றான் யோகன். , அப்பிடியெண்டில்லை. ஏதோ வாழுற காலத்தில ஏதாவது பிரயோசனமாயச் செய்யவேணும், நாங்கள் மற்றவைக்கு ஒரு நன்மையும் செய்யாவிட்டாலும்
李つし
பறவாயில்லை, ஆனால் அவர்களுக்கு ஒரு சுமையா இருக்கக் கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். அதுசரி, சாந்தன் நான் உம்மைக் கனகாலமா ஒண்டு கேக்கவேணும் என்றிருந்தனான். ஆனால் . உமக்குக் கெதியாக் கோபம் வரும் எண்டு பெடியள் சொன்னதாலை விட்டிட்டன்"
"சீச்சி பறவாயில்லை கேளும். எனக்குக் கெதியில கோபம் வாறது உண்மைதான். ஆனால் அதற்குக் காரணம் இருக்கு. ஒரு மனிசன்ா போலித்தனம் எனக்குப் பிடிக்கிறேல்லை. உதாரணமா நாட்டிலை சனம் சண்டையாலையும், பசி பட்டினியாலையும் சாகேக்கை இங்கே கண்மூடித்தனமா விதண்டாவாதம் கதைக்கிறவை அல்லது ஏதோ போராட்டத்தைத் தாங்கள்தான் குத்தகைக்கு எடுத்து விட்டிருக்கிறம் என்று யதார்த் தத்துக்குப் புறம் பஈ மார் பு தட்டுறவைதான் இதுவரையும் என்னட்டை நல்லா வாங்கிக் கட்டியிருக்கினம். இதில் இன்னும் ஒன்றை நீர் கவனிக்க வேணும். இப்படியான விவாதங்களைச் சும்மா பொழுதுபோக்குக்காக கதைக்கிறதை நான் விரும்பேல்ல. அதில ஏதாவது பிரயோசனம் இருக்கவேணும். ஏனெண்டால் இதில எங்கட மக்களின்ர வாழ்க்கைப் பிரச்சனை அடங்கியிருக்கு. நாங்கள் தப்பி வந்திட்டம் எண்டதுக்காக கம்மா வாயிலை வந்ததை உளறக்கூடாது."
"இப்பிடி உளறித்திரியிற கனபேரிட்டை ஒருவிதமான தெளிவும் கிடையாது. ஏதோ மூளைச் சலவை செய்த ஆட்களைப்போல கதைப்பினம். இப்படியான கருத்துச் சுதந்திரம் இருக்கிற சமூகத்திலயும் இவையின்ர அறிவுக்கண்கள் திறபடாதது எங்கட துரதிர்ஷ்டம்தான். இவையை ஒரு "சீரியசான விவாதத்திற்கு இழுத்தால் பெரும்பாலும் தப்பிக்கொள்ளப் பார்ப்பினம் அல்லது எங்கட சனத்துக்கு இப்பிடித்தான் நடத்தவேணும், இல்லாட்டி உணராதுகள் என்று முடிவுக்கு வருவினம். அதோடை அஈவக்கு எதிரா கதைக்கிறவை என்ன சொல்லினம் என்றதை விட்டிட்கு தேசத்துரோகிகள் என்றும் , கோபப்படு வினம் என்றும் கம்மா பிதற்றிக்கொண்டு திரிவினம்"
"அதெண்டால் உண்மைதான் சாந்தன், நானும் உம்மைப் பற்றிப் பயங்கா மாத்தான் கேள்விப் பட்டனான். ஆனால் இப்ப பழகிப் பார்க்கேக்கை தானே தெரியுது. ஆனால் ஒன்றுமட்டும் உண்மை பாரும், இப்படியான பிதற்றல்காறங்கள் கன காலம் ஏமாத்தேலாது. இவங்கள் இங்கேயும் வெருட்டு, அடிபிடியெண்டு ஆட்களோடை மோதின காலம் எல்லாம் இப்ப மலையேறிப் போட்டுது. இப்ப கொஞ்சம் கொஞ்சமா பொட்டுக்கேடுகள் வெளிக்கிடத் தொடங்கியிருக்கு" என்றான் யோகன்.
சாந்தன் மேசையை வெறித்துப் பாாத்தபடி கோப்பியை மெதுவாக உறிஞ்சிக் கொண்டிருந்தான். அவன் சற்று உணர்ச்சிவசப் பட்டிருப்பதை யோகன் இனம்கண்டு கொண்டான்.

உருக்குலைஞ்சு போய் என்னையே வந்தடையிற பரிதாப சம்பவங்களும் நிறைய இருக்கு. அதால நான் இப்போதைக்கு ஒன்றும் வேண்டாம், நிலைமைகளை அவதானித்தபடி காலத்தை வீணடிக்காமல் என்னை வளர்த்துக் கொள்ளுவம் என்று நினைச்சன். இப்போதைக்கு இல்லாட்டிலும் எதிர்காலத்திலயாவது என்னால ஒரு மனுசனுக்கோ, சமூகத்துக்கோ ஏதும் பலன் கிடைக்கும் எண்டால் நல்ல விசயம்தானே" என்றான் சாந்தன், ஒரு நீண்ட பெருமூச்சுடன்.
"உமக்கு நேரம் இருந்தால் நான் உம்மட்டை இன்னொரு விசயம் கேட்கலாமோ?" என்றான் யோகன். "தாராளமா" என்றபடி யோகனைப் பார்த்துட புன்னகைத்தான் சாந்தன்.
"இப்ப கொஞ்சக் காலமா வெளிநாடுகளில இருந்து ஏராளமான தமிழ்ச் சஞ்சிகையள் வருகுது. இப்ப கிட்ட டியில கூட ஏதோ ஒரு புதுச் சஞ்சிகை வாசித்தனான். அதுகூட தன்னை 44வது தமிழ்ச் சஞ்சிகை என்று அறிமுகப் படுத்தியிருந்தது. இவ்வளவு ஏாாளம் சஞ்சிகையள் எங்களுக்குக் கட்டாயம் தேவைதானா, அதைவிட இவை இங்கை வெளிநாட்டில என்ன சாதிக்கப் போகினம், கம்மா அங்கை எழுதிக் கெடுத்தது காணா தெண்டு இங்கையும் வந்து தொடங்கிட்டாங்கள்" என்று சலிப்புடனும் , எரிச்சலுடனும் முடித்த யோகன், "நீர் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்?" என நிறுத்தினான்.
"இதில நாங்கள் கன விசயங்களைக் கணக்கில் எடுத்துத் தான் முடிவுக்கு வரவேண்டும்" எனத் தொடங்கினான் சாந்தன். "நாங்கள் இன்றைக்கு விரும்பியோ, விரும்பாமலோ இந்த வெளிநாட்டு வாழ்க்கை தவிர்க்க முடியாத ஒன்று ஆகிப்போச்சு. எழுபதின் ரை பிற்பகுதியில் இருந்து, இன்றைக்கு மட்டும் தொடர்ச்சியா எங்க டை ஆட்கள் வெளிநாடுகளுக்கு வந்துகொண்டுதான் இருக்கிறம். அதோடை எதிர்காலத்தில இது குறையிறதுக்கான சாத்தியப்பாடுகள் எதுவும் இப்போதைக்குத் தெரியிற மாதிரி இல்லை. இங்கை வந்தனாங்கள் கம்மா வாழாவெட்டிகளாய் காலத்தைக் கடத்த ஏலாது. ஏதோ வாழ்ந்துதான் ஆகவேண்டும், அதோட ஒரு சராசரித் தமிழன் முதுகில ஏரா ளம் க ைம க  ைள ச் கமந்துகொண்டேதான் வெளிநாட்டுக்குள்ள வாறது. இந்தச் சுமைகளை இறக்கி வைக்கிறதுக்காகவாவது வாழ்க்கையை ஒட்டித்தான் ஆகவேண்டும்.
இப்படி இங்கை வாழ வெளிக்கிடேக்கை மொழி, கலாச்சாரம், இப்பிடிப் பல பிரச்சனைகளை நாங்கள் சந்திக்கிறம். அதோட கால ஓட்டத்தில இந்த நா டு களின் ர வரையறைகள் எங்க  ைட கலாசாரத்திலையும் வாழ்க்கை முறையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது தவிர்க்க முடியாத ஒன்று ஆகிப்போச்சு. சுருக்கமாகச் சொன்னால் நீரும் நானும் அன்றைக்கு யாழ்ப்பாணத்திலை இருந்த அதேமாதிரி
ろ今
இன்றைக்கு இல்லை. அதோடை இந்தப் பிரச்சனைகள் வெவ்வேறு மட்டங்களில் வெவ்வேறு பாதிப்பை ஏற்படுத்தி வருகுது. இந்தப் பாதிப்புகளின் விளைவுகளாலை நன்மையான விசயங்களும் உண்டு, தீமையான விசயங்களும் உண்டு. அப்ப இதுகளை எல்லாம் , இங்க இருக்கின்ற ஆக்க ளின்ா பிரச்சனையை எல்லாம் நாட்டில இருக்கிற சஞ்சிகையளும் பத்திரிகையளும் வெளிக்கொணரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறது தவறு.
அந்த வகையில இங்கையுள்ள நடைமுறைப் பிரச்சனைகளையும் அதனடிப்படையில் எழுகிற கலை, கலாசார வடிவங்களையும் வெளிக்கொண்டாறFலை இந்தச் சஞ்சிகையள் நல்ல பங்கு வகிக்கிறது என்றுதான் நினைக்கிறன். வெளிநாடுகளிலும் அந்தந்த நாடுகளின் ரை சட்டதிட்டங்கள் வேலை வாய்ப்பு என்ன என்பதைப் பொறுத்து எங்கட ஆட்களின் ர வாழ்க்கை முறையும் அது க்கு ஏற்றாற்போலதான் அமைந்திருக்கு. உதாரணமா "இங்லண்'டிலை இருந்து வாற ஒரு சஞ்சிகையிலை நோர்வேயிலை இருக்கிற மாணவன் ஒருவன்ாை "லோண கஸ்ஸ" பிரச்சனையைச் சொல்லுறதிலும் பார்க்க நோர்விேல இருக்கிற சஞ்சிகை இலகுவாக எடுத்துச் சொல்லலாம் என்று நினைக்கிறன். அதோட இந்தச் சஞ்சிகையள் இங்கு வளர்ந்து வாற எங்கட இளஞ் சந்ததிக்கும் நல்ல வழிகாட்டலாயும், எங்கட பின்னணியை எடுத்துச் சொல்லுற கருவியாயும் இருக்கு என்று நினைக்கிறன்"
"என்ன பயங்கரமான டிஸ்கவுன்" நடக்குது போலை கிடக்குது” என்றபடி அவர்களை நோக்கி வந்தான் ஜோசேப்.
"இல்லை மச்சான் கம்மா இப்பிடித்தான்" என்றான் யோகன், ஜோசேப் 'ஒரு இயக்க ஆதாவாளன், சாந்தனுடன் யாரும் கதைத்தால் அவனுக்குக் குலைநடுக்கும். சாந்தன் ஏதும் சொல்லிச் சனத்தைப் பழுதாக்கிப் போடுவான். பிறகு காசு சேர்க்கப் போகேக்கை சனம் கேள்வி கேக்கும். இதுதான் அவனுக்கு உள்ள பயம், இதனால் சாந்தனுடைய நண்பர்களையும், தொடர்புகளையும் அவ்வப்போது அவதானித்துக் கொள்வது ஜோசப்பினுடையவும் அவனது சகாக்களதும் வழக்கம்.
ஜோசப் மிகுந்த சங்கடத்துடன், "அப்ப நான் வாறன், நீங்கள் இருந்து கதையுங்கோ” என்றவாறு அடுத்த மூலையில் இருந்த மேசையை நோக்கி நடந்தான். இப்போது அதில் இருந்தவர்களின் எண்ணிக்கை 10 - 12 ஆக இருந்ததை சாந்தன் அவதானித்திருந்தான்.
"இந்தக் காய்க்கு இதில இருந்து எங்களைக் கதைக்கவிடாமக் குழப்பிறதுதான் விருப்பம். ஆனால் நாங்கள் இரண்டுபேரும் சேர்ந்து தன்னைப் பிச்சுப் பிடுங்கிப் போடுவம் என்று தான் சங்கடப்

Page 28
53
"என்ன சாந்தன், யோசிக்கிறீர்?" என்றான் போகன். "இல்லை ஒன்றுமில்லை" என்றவாறு தன்னைச் சுதாரித்துக் கொண்ட சாநத்ன், "நீர் ஏதோ கேட்க வேணும் என்றீர் , பிறகு ஒன்றையும் காணேல்லை" என்றான் யோகனைப் பார்த்தபடி,
"நான் என்ன கேட்க நினச்சனான் எண்றால், உம்மைப்போல ஆக்கள் ஏன் இங்கைவந்து மெளனமா இருக் கிறியள் எங்கட நாட்டுக்கு எவ்வளவு பிரயோசனமான விசயம் செய்யலாம். ஆனால் நீர் எல்லாம் ஒன்றுக்கும் முன்வாறேல்லை. என்று கேள்விப் பட்டனான்" என்று முடித்தான் யோகன்.
"ஒம், நான் ஒன்றுக்கும் முன்வாறேல்லை என்றது ஒருவகையிலை உண்மைதான். நீர்கேட்ட இந்தக் கேள்வியை என்னை நானே பல தடவை கேட்டிருக்கிறன். ஆனால் விடைகாது முடியேல்லை. அதுக்கான காரணங்களும் இருக்கு"
"முதலாவது நான் எங்கட மக்களின்ா உண்மையான விடுதலை யை நேசிக்கிறன் . இந்த ஒரு காரணணத்துக்காக மட்டும் நான் புலிகளைச் சார்ந்தோ அல்லது கொழும்பு இயக்கங்களோடை சேர்ந்தோ அவையஞக்காக வெளிநாட்டில அரசியல் வேலை செய்யேலாம இருக்கிறன். உமக்கு விளங்கும் என்று நினைக்கிறன். இதுக்கு மேலே, எங்கட மண்ணில சரியான இயங்கு சக்தி இல்லாமல் வெளிநாட்டில செய்யிற அரசியல் வேலையால வெறும் திரிபுவாத சக்திகள்தான் பலனடையும். இதாலதான் நான் அரசியல் ஊனமாகிவிட்டன்" என்று கூரையைப் பார்த்தபடி கூறி முடித்தான் சாந்தன்.
"அரசியல் இருக்கலாம் மனிதாபிமான அடிப்படையில குழந்தைகளுக்குக் காசு சேர்க்கிறது, புத்தகம் சேர்த்து அனுப் பிற து இப் பி டி க் கன வேலை கள் செய்யலாம்தானே" என்று மீண்டும் கேட்டுவைத்தான் யோகன்.
"அது உண்மைதான், அது செய்யக் கூடாது என்று நான் சொல்லேல்லை, இப்படியான வேலையளாலை ஒன்று இரண்டுபேர் பலனடைந்தாலும் அது பெரிய விசயம்தான். இந்த வேலைகளில நான் என்னை நேரடியா என்னை இணைத்துக்கொள்ளவில்லையே தவிர, இங்கேயும் சரி, நாட்டிலயும் சரி இயங்குகறி ஸ்தாபனங்களுக்கு என்னால் ஏலுமான தை அவ்வப்போது செய்துகொண்டுதான் இருக்கிறன். ஆனால் அதை நோட்டீஸ் அடிச்சுச் சொல்லுறேல்லை, அவ்வளவுதான்
ஆனால் இப்படியான வேலைகள் மட்டும் எங்கட மக் களின் ர உண்மை யான விடுதலை யை வென்றெடுக்காது. சரியான அரசியல் மார்க்கம் இல்லாத ஒரு சமூகத்தில நடக்கிற இப்படியான வேலைகள் கூட விழலுக்கு இறைத்த நீராகத்தான் போகும். ஆனால் குறுகியகாலக் கண்ணோட்டத்தில் இநத உதவிகளில ஒரு சிறுபகுதியேனும் எங்கன்ரை சாதாரண சனத்திட்டப் போய்ச் சேர்ந்தால் அதுவே
பெரிய வெற்றிதான். ஆனால் புலிக்குக் காக கொடுத்துப்போட்டு எங்கட கடமை முடிஞ்சுது, விடுதலை வந்தவுடன் அறிவிப்பாங்கள் என்று வெளிநாட்டு மோகத்திலை மூழ்கியிருக்கிற ஆட்களைப்போல, இந்த உதவிகளை மட்டும் செய்யிறதோட நாங்கள் திருப்திப்படக் கூடாது. உண்மையான விடுதலையையும், தீர்வையும் நோக்கின தேடலும், அதோட கூடவே யதார்த்த ரீதியில் அதற்கான சாத்தியப் பா டு களையும் , நடைமுறைகளையும் ஆராய்ந்து நேசசக்திகளை இனங்காண வேண்டும். இதுதான் எதிர்காலத்தில எங்கட சமுதாயத்துக்காக உதவக் கூடியதாய் இருக்கும்" என சாந்தன் முடிக்கவும், அவனுடைய கோப்பியின் கடைசி முறட்டை உறிஞ்சி இழுக்கவும் சரியாக இருந்தது.
"என்ன? உம்மட படிக்கிற நேரத்தை வீணாக்கிப் போட்டனாக்கும்" என்றா ெயோகன்.
"இல்லை இல்லை நாங்கள் சும்மா அரட்டை அடிக்கேல்லைத்தானே. இதுவும் பிரயோசனமான விசயம்தான். இன்றைக்குக் கன நாளைக்குப் பிறகு இப்படியொரு 'டிஸ்கலுன்" தொடங்கியிருக்கு, நான் பெரும்பாலும் இப்ப இதுகளைத தவிர்த்துக் கொள்ளு ற து வழ  ைம . சனம் கம்மா பொழுதுபோக்கிற்குக் கதைக்கும், பிறகு அங்கால போய்க் கொஞ்சம் மாத்தி விடுவினம். இப்பிடியே போய் கடைசியா நான் சொன்ன கருத்து

பட்டுக்கொண்டு அங்கை போகுது" என்றான் யோகன்.
"நீர் இடையில விட்டிட்மர், இந்த சஞ்சிகையளின்ாை அரசியல் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்?" என்று கேட்டான் யோகன்.
"வெளிநாடுகளில இந்தச் சஞ்சிகையளுக்குப் பின்னாலை இருக்கிற பெரும்பாலான ஆட்கள் நாட்டில கலை இலக்கியங்களோடை பரிச்சயமான ஆட்கள். ஒன்றில் தங்கடை இயக்கங்களுக்கை இருந்த அராஜகங்களால அல்லது புலிகளின் ரை காட்டுமிராண்டித் தனத்தால அல்லது இரண்டாலயும் தங்கட உயிரைக் கையில் பிடிச்சுக்கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவந்த ஆட்கள்தான் இவை. இதில கனபேரிட்ட கடந்தகால அனுபவங்களின்ா பாதிப்பும், விரக்தியும் நிரம்பிஇருக்கு. ஆனாலும்கூட தாங்கள் நாட்டுக்கு ஏதும் செய்யவேணும் என்ற ஆவல் இன்னும் இருக்கிறது பெரிய விசயம். இன்றைக்கு
எங்கட மண்ணில கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு, ஜனநாயக சக்திகள் எல்லாம் தேடித்தேடி அழிக்கப் படேக்கை வெளிநாடுகளில அரசியல் ரீதியில் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கிறதுக்கு இந்தச் சஞ்சிகையளின்ா பங்கும், அதுக்குப் பின்னாலை இருக்கிறவையளின்ாை பங்கும் மதிப்பிட ஏலாத ஒன்று என்றுதான் நினைக்கிறன்"
"ஒம், பத்தாக்குறைக்கு இங்கை உள்ளவங்களின்ாை செலிபோன் மிரட்டல்களுக்கும், அ:பதுாறுகளுக்கும் இடையில சலிப்படையாமல் செயல்படுகிறதெண்டால் இலேசான காரியமில்லை. அவனவன் தம்பியை, தங்கச்சியைக் கூப்பிட ஏஜென்சிக்கு காசுகட்ட விழுந்து விழுந்து உழைக்கேக்கை, ஒருத்தன் இதைத் தன்ாை கடமையா நினைச்சு தன் ரை உழைப்பைக் கொடுக்கிறது சாதாரணமா ஏலாத காரியம்" எனக் குறுக்கிட்டான் யோகன்.
" இப் படி யான அரசியல் விவாதங்கள் தனிநபர்களின் ரை அரசியல் பாண்டித்தியத்தைக் காட்டிறஈத விட்டிட்டு உண்மையான தேடலோடை, ஒரு ஆரோக்கியமான அரசியல் மார்க்கத்தைத் தெரிந்தெடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். எங்கட கடந்தகாலப் போட்ட வரலாற்றில் கிடைத்த படிப்பினைகளையும், அனுபவங்களையும் வைத்துக் கொள்கை ரீதியாகவோ அல்லது நடைமுறை ரீதியாகவோ நாம் விட்ட தவறுகளை மனத்திறப்புடன் சுயவிமர்சனங்களுக்கு ஊடாக உணர்ந்துகொள்ள வேண்டும்.
எங்கடை போராட்டத்தில் ஆரம்ப காலத்தில் கருத்துச் சுதந்திரம் இருந்தபோது நல்ல கொள்கையள், அரசியல் திட்டங்களோடை கன இயக்கங்கள் இருந்தும், போராட்டம் இப்படிச் சீரழிந்து போனதென்றால் நாங்கள் நடைமுறையில விட்ட பிழைகள் தான் காரணம். ஆனபடியால் இந்தச் சஞ்சிகையள்
ՀS
1-------ه
as ontgs TestTLb CohuestioLIT Lib
Lrfler CSso söoIGlLb11
இந்த வருடத்திற்கான சமாதானத்திற்கான நோயற் பரிசுக்கு இதுவரை 10பேரது பெயர்கள் பிரேரிக்கப் பட்டுள்ளன. அறுபத்தேழு லட்சம் சுவீடிஷ் குறோணர்களும், உலகப் புகழும் கொண்ட இந்தப் பரிசை யாருக்கு வழங்குவது என, நோர்வேயிலுள்ள நோபல் (சமாதானப்) பரிசுக்குழுவே தீர்மானிக்கும். இவ்வருடம் முன்மொழியப்பட்ட பெயர்களில் ஹெல்மட் கோல், மித்ரோண் என்போரது பெயர்களும் உள்ளன. இவர்களுடன் ஜோர்ஜ் புஷ்ஷின் பெயரும் உள்ளது. புஷ் இல்லாத suomgm6oTuot?
- சிவன் -
སངས་
இப்படியான விவாதங்களும், ஒருமைப்பாடுகளும் நடக் கிற துக்கு ஒரு நல்ல க எ மாக இருக்குதெண்டுதான் நான் நினைக்கிறன். அதோட வாலாறு ஒருநாளும் ஸ்தம்பித்து நிக்கிறேல்லை. நாளைக்கு எங்கட மண்ணில உதிக்கப்போகிற புதிய சமுதாயம் நிச்சயமா பாசிச அமைப்பு முறையை எதிர்த்து வெற்றி கொள்ளத்தான் போகுது. அப்ப எங்கட மக்களின்ர தலைவிதியை நிர்ணயிக்கிற ஒரு முக்கியமான சகாப்தத்தைக் கடந்து வந்தனாங்கள் என்ற பெரிய பொறுப்பு எங்கட நலைமுறைக்கு இருக்கு. இதெல்லாம் புரிந்து கொள்ளாமல் வெளிநாட்டுக்குத் தப்பிவந்து கண்மூடித்தனமா அல்லது பாராமுகமா இருக்கிறது நாங்கள் எங்கட மண்ணுக்கும் எங்கட மக்களுக்கும் செய்யிற பெரிய துரோகம். அந்த வகையில் வெளிநாடுகளில் எங்கடை அனுபவங்கள், தாய்நாட்டை மையப்படுத்தின செயற்பாடுகள் என்ன என்றதை எழுந்துவாற புதிய சமுதாயம் கட்டாயம் அறியவேணும்"
"ஆனால் நீர் சொன்னது மாதிரி இன்றைக்கு இந்த சஞ்சிகையளின் ரை எண்ணிக்கை கூடிக்கொண்டு
போறதைப் பார்த்தால், நாட்டில இருந்த

Page 29
இயக்கங்களிலும் பார்க்க எண்ணிக்கையில அதிகமாயிட்டுது. ஒருமைப்பாடு ஏற்படுறதுக்குப் பதிலா ஏதோ விரிசல் ஏற்படுகிறமாதிரித்தான் தெரியுது. இது பிறகு நாட்டில் இருந்த மாதிரி குழுவாதம், பிரதேசவாதம் என்று குறுகிக்கொண்டு போய்த் தனிநபர்வாதத்தில் முடியும்போலக் கிடக்கு. ஆனபடியால் இந்த விசயத்தில நாட்டின்ாை நலனை விரும்பிற ஆட்கள் கவனமா இருக்கவேணும். தங்கட விவாதங்களுக்கு ஏற்கனவே அமைக்கப்படுகிற களங்களைப் பயன்படுத்த வேணு:ம். அப்படியெண்டால் இந்த சஞ்சிகைகளின் ரை எண்ணிக்கை தானாகவே குறையும்.
அதோட சஞ்சிகைகளுக்கு வெளியில நடைமுறையில எ ங் க ட மண் ணி ல வே ரூ ன் றக் கூ டி ய சாத்தியப்பாடுகளையும் ஆராயவேணும். இல்லாட்டி எல்லாம் சம்மா விழலுக்கு இறைத்த நீராப் போய் 2.3 புதுக் கவிஞர்களையும், கட்டுரையாளர்களையும் உருவாக்கிறதோடை அடங்கிப் போகும்" என்ற சாந்தனுடைய நீண்ட பிரசங்கத்தை 'கன்ரீன்'ஐ
அதிாவைத்த அந்தச் சிரிப்பொலி முடிவுக்குக் கொண்டு வந்தது.
சாந்தன், யோகன் “உட்பட அனைத்துக் கண்களும் அந்த மூலையில் இருந்த மேசையைக் குறிவைத்தன. அந்த மேசையைச் சுற்றி, ஆட்களின் எண்ணிக்கை இப்போது 15,16ஆக அதிகரித்திருப்பதை அவதானித்த சாந்தன் மீண்டும் ஓர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான்.
"சாந்தன் பன்ரெண்டு மணியாகுது, வாரும் இனிப்போய் வாசிப்பம். அதோட நானும் ஒரு ரெலி போன் அடிக்கவேணும்" என யோகன் எழும்புவதை அவதானித்த சாந்தன் வெற்றுக் கோப்பைகளை தட்டில் அடுக்கி அதற்கான இடத்தில் வைத்துவிட்டு தனது "பாக்கையும் கொழுவிக் கொண்டான்.
இருவரும் அமைதியாக மாடிப் படிகளில் இறங்கிச் சென்றனர்.
290992
گفتی باشلو که భహా ჭ6

சுவீடனின் நோர்க் கெ நகருக்கு
(Narke) 25 85 CU5* G3 அருகில் உள்ள 後 gg இன்னொரு தாக்குதல் சிறு 红ó万á °5*亚° ஹோல்கர்
நில்சன் கடந்த வருடம் 压T所莎娜@° கனடாப் பத்திரிகையான -செந்தாமரை
Dr历山 莎°色 3 வது வயதில் أللا ان ان يو " 。心.aa Q&"臀 மரணமானபோது மார் மூன்றுகோ? அப்பத்திரிகையில் வெளிவந்த ஆக்கம் குறோணர் பெறுமதியான தனது ஒன்று தொடர்பாகத் தாக்கப் பட்டுள்ளார். 汤5T岛g西@在°”” உயிலில் தன் இத்தாக்குதலைச் சுவடுகள் asiropuJT** கிராமத்தைச் சேர்ந்த அனைவரையுமே கண்டிக்கிறது.
வாரிசுகள் 。在西山命阿T* தலைக்கு uäfo压母的 வெளியிடும் கருத்துகள் ஒருலட்சம் குறோணர்கள் பெறப்போகும் Gruff us ab உடன்பாடு இல்லாதோர் 翰方ro施5°市°* இச் செய்தி அதுபற்றிய ஆரோக்கியமான Spigsarj605 **「區nsfsu ۹ ق) 5 قله «ه آنها °°u施曲fog (قا60 ID UP (60 لا آلیہ 2ássunto o 山T可T6l) நினைத்தால்
வெளியானபோது ஒருங்கே ஆச்சரியமும், சந்தோஷமும் அடைந்தனர்.
- சாள்ஸ் -
அது தவறானது மனந்திறந்த கருத்துப் uffud Tippth மூலமே TITاللاالی غDfآ65 آ சமுதாயத்தை உருவாக்க فالمللولايا .
D -- 2 sess Celt - சுவடுகள் "
ஒஸ்லோ நகரின் souub Upůufuo ന്ധ്ര ഞpuി للا m fسالا لا تقع في ا உள்ளது .
இதற்கான ஒப்ந்தம் ஒன்று goit soupulo 2 1 .9( 19 " ש. שו fע " ண் டி ன் கைச்சாத்திடப் பட்டது இந்த pouflon 600 ஆரம்பத்திற்குள் ரஷ்யா மேலும் 23 alonullib 19959 தயாராகிவிடும். @画列 அணு மின் சா ர ച്ചു ത ബി , ഞ ബ a o可uL鮑部* 9- 6 st ğA p ü u ib é ib நிறுவப்போவதாக அந்நாட்டு அணுவச்கி என்னவெனில் آ6 ق لینا واقع uosbg) üb அ  ைம ச் சர் só uy 6t 617 ir ñ · is 60) is us i இருந்து - u uD M 60 பாதாளங்களிலும், மலைச்சாரல்களிலும் Qum@LE响° a_山可施@弼" பத்து இவை நிறுவப்படும். அணுமின்சார சதமமீற்றர்வரை துல்லியமாக அளவிடுவது. நிலையங்களால் ஏற்படக் கூடிய @画列 6) sof' LJL-tb suurt få 5 ğ தனியார் ஆபத்துகளைப் பற்றித் தமக்கு நன்கு ിനൃഖങ്ങb ஒன்று ஒருகோடி குறோணர்கள் தெரிந் திருப்பினும் ரஷ்யா வின் Qup Däuft" 9 Ju 55th ஒன்றைச் எதிர் காலத் தைப் பொறுத்த வரை செய்துள்ளது. அணு சக்தி முக்கியமானதாகக்
கருதப்படுவதாக அவர் கூறினார்.
- வாசன் -
- சாள்ஸ் -

Page 30
ஒள்வோவில் தற்போது போரEபுவில் (Fornghu) உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குப் பதிவாகப் புதிய விமான
நிலையம் ஒன்றை கடமூவன் ((lardomon) என்ற இடத்தில் அமைப்பது பற்றி நீண்டகாலம் நோர்வே அரசியல் அங்கில் சர்ச்சைகள் நிகழ்ந்தன. கடந்த வருடப் பிற்பகுதியில் புதிய விமான நிலையம் காடமுவிகளில் திறக்கப்படப் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. திட்டப்படி எல்லாம் நடந்தால் 1998இன் இறுதிப் பகுதியில் முக்கிய சர்வதேசப் போக்குவரத்து அனைத்தும், காடழுவனரின் ஊடாக நிகழத் தொடங்கும். ஏற்கனவே 吕国1 மூவனின் அபிவிருத்திக்காக ஏறத்தாழ பில்லியன் குறோனர்கள் செலவு செய்யப் பட்டுவிட்டது. முக்கியமாகக் கட்டி
வேலைகளுக்கும், ரயில் 1ாதே
புதிய சர்வதேச விமானநிலையம்
இணைப்புக்கும் பெரும் பணம் செலவானது * 24 X K1, gyia ஆண்டில் கா மூவின் விமானநிலையத்தைப் பாவிப்போது தொகை ஒருகோடியே 'லட்சமாக
இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது
இரு ஓடுபாதைகளே இருபக்கத்தில் கொண்டு நடுவில் கட்டிடம், போக்குவரத்து வசதிகரங்க் கொண்டதாக
விமான நிலையம் அமையும் * பிரதான கட்டிடத்தின் கீழிருந்து செல்லும் புகையிரதம் ஒஸ்லோ பிரதான ரயில் நிகாலயத்துடன் இணையும், இதுவே பெரும்பாலான பணிகளை நகரத்துக்குக்
பொண்டுவரும், பத்துநிமி இடைவெளியில் இயங்கும் இந்த ரயில் ஒஸ்லோவை ಪ್ಲೀUY_L! Io நிமிடங்கள் எடுக்கும்.
* புதிய விமான Elstral util நிமிடம் ஒன்றுக்கு riமானங்கள் எழும்பிப் பறப்பதற்கும். 32 fish DIT FRIEI, fiii தரையிறங்குவதற்கும் ஏற்ற வசதிகEாக் கொண்டிருக்கும்,
* புதிய விமான நிலையத்தின் மூலம் TTg5 Typ 50,000 பேருக்கு அடுத்துவரும் &ly ங்களில் வேலை வாய்ப்புகள் ாடக்கும் சந்தர்ப்பம் உள்ளது. இதில் பெரும் பகுதி கட்டி வேலைபாகவே இருக்கும்.
- புதிய விமான flexMLI is அநாமக்கப்பட உள்ள இடத்தில் ஏறத்தாழ 25aடுகள் தாரமட்டம் ஆக்கப்படும். சிடிவீடுகளில் தொடர்ந்து குடியிருக்க அனுமதிக்கப்படும். ஆனால் அவற்றின் கட் டுப்பாட்ாட விமான நிாலயமே கொண்டிருக்கும்
- LILara -
 

- gEQー シコショ“』g gg撮Jg ggg地ョ記」『』 シ『F」シ 00gg場9「g o00 シ」ョ*g「Fg gもに『Q シコ「にも“g FS 地にシbs pgga g『地 國自可斗司旨劃通日*T坦均& "雨順七n 已關唱司官。弓u情它也真暗占Tusan員自 "T司亡自 역「3D5 的력「原 長安仁成學史上AT城명:344EF5 %地心自意義守的 역國배rfr: 역%3地따라 racr民主地上的 思용해역9.5 정5.5%%%에 r:;!배역서
ŰŰo[[NosĽĽ†[][]ËĽĽŁĘs]] |Ľ|
| 1|| | || | | | |1| 1|-|| | || 1| || 1| | || LE I BIDu|| 9:2TIJBE|
EE| || ||SELE 55 T jeĒnuo). I usær įrtsr-ır.Toir-i EEBlue,dS £{soudÅxErrolşokā明E|E주고 ETEl프 a}는}uE는노 |BEJ5|| EĻĒįąE ÞUE|| || EpELIEC) B||EJļsno s’ST) puELIEE puĒĻEBZ MĒN Epsewd|50}}{a|sı DUE|JBp BN Buodefiuss funquuax n-1 Đs|]]B15Ø pūEssĂ L. %는Eu드ECJ ! EEluuEl는 그는olE 4寸§ļļBAS § 15-a5|18.^5 恒才gpuE|드」 []E9uēdēT |DUgBĦION

Page 31
SUJJWWA LOUGAL, A TI
அண்மைக் காவமாகச் சிலரது சந்தாக் ஆனால் பலர் சந்தாவை இதுவரை செலுத்த செலுத்தாமல் இருப்பவர்கள் தயவுசெய்து வேண்டுகிறோம். சந்தாக்களை வங்கி ஊட உதவுங்கள். புதிய சந்தாக்களையும் சேகரித்து
கடந்த இதழ்களில் அறிவித்தபடி இந் குறுநாவல் ஆரம்பமாகிறது. அது பற்றிய பற்றியும் உங்கள் மனந்திறந்த விமர்சனங்க கொண்டிருக்கும் விமர்சனங்களை சுவடுகள் என்ற சந்தேகம் வேண்டாம் தவறுகனை பு உள்ளது. நாங்களும்தான். எனவே தவறு பின்நிற்காதீர்கள் விமர்சனங்கள் பிரசுரி விரும்பினால், அதைக் கடிதத்தில் குறிப்பிட்டு தவிர்க்க முடியாத சில காரணங்களால் மேலும் சிறிது தாமதம் ஆகிவிட்டது. மன் தாமதத்தைத் தவிர்ப்பதில் உங்களது பங்களி உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,
சுவடுகளுக்குப் படைப்புகளை வா எதிர்பார்க்கிறோம். தயவுசெய்து சுருக்க கட்டுரைகளை மாத்திரமே சுமந்து சு வாசகர்களுக்கு விருப்பமான ஒன்றாக இருக்க சூழல் பாதுகாப்பு தொடர்பான படை சுவடுகளில் இடம்பெற்று வந்துள்ளன. எ5 விவரங்களை வாசகர்கள் எளிமையாக அறி ஒரு பகடைப்பும் வரவில்லை என்ற கு கொள்ளுகிறோம். இவ்வாறான ஒரு பகடைப்
சுவடுகளில் எவ்வாறான படைப்புகள் வெள் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அன படுத்துங்கள். அவ்வாறான படைப்புகளை அணு சுவடுகள் தங்களுக்கு விருப்பமற்ற கருத் பொறுக்கமாட்டாத சிலர் எந்த அடிப்படை சுவடுகள்மீது வீசுகிறார்கள். இவர்கள் தாங்கள் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாமும் கொக வெளிவரும் கருத்துகள் தவறான ை விமர்சிப்பதுதான் முறையானது, விமர்சனத்திர சிந்தனை வளர்ச்சி இவ்வாதவர்கள் அவதுா வழமையோ! இவர்களைப் பற்றித்தான் உரமுமின்றி" எனப் பாடினாரோ?
அன்புடன்
- கண்டுகள் -

mil Monthly fron Norway, Issulic: Nr 43, Fcb'93
கள் வந்து சேர்ந்துள்ளன. வில்லை. சந்தா இதுவரை உடன் செலுத்தி உதவ ாக மாத்திரம் செலுத்தி உதவங்கள்.
த இதழில் ஒரு புதிய பும் ஏனைய படைப்புகள் ளை எழுதுங்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாது பாரும் இழைக்க வாய்ப்பு களைச் சுட்டிக்காட்டப் B. ELILLă, fin. LITg. 55
எழுதுங்கள்.
இம்முறை வழமையைவிட ானிக்க வேண்டுகிறோம். பும் (படைப்புகள், சந்தா)
சகர்களிடம் இருந்து மாக எழுதுங்கள். ஓரிரு வடுகள் வெளிவருவது
|Tg}}.
ப்புகள் தொடர்ச்சியாகச் வினும் சூழலியல் பற்றிய ந்துகொள்ளும் வகையில்
றையைக் கவனத்திற் பு இனிவரும் இதழ்களில்
ரிவர வேண்டும் என்பதை த எங்களுக்கும் தெரியப் |ப்பி உதவுங்கள்,
துகளைப் பிரசுரிப்பத்ைப் யுமற்ற அவதுாறுகளைச் கூறிவரும் கீழ்த்தரமான ண்டிராதவர்கள். கவடுகளில்
வ எ னில் அவற்றை தச் செய்யுமளவு தங்களது றுகளைப் பொழிவதுதான்
பாரதியார் 'நெஞ்சில்