கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மில்க்வைற் செய்தி 1990.05

Page 1
தபாற்பெட்டி இல, 77, யாழ்ப்பா
*********FFF----
على "
கெளரவ ஆசிரியர் திரு. க. சி. குலரத்தினம்
hrr=#FFF;
சுவாமி விபுலான
கண்டு யாழ் நூலும், நாடகத்துறையை நனிவிளங்க மதங்க சூளாமணியுந் தந்தவர். தூய மனமும் இனிய உரையும் அஞ்சாத போக்கும், பணிவான இயல்பும் கொண் டவர். வடநாட்டு நகரங்களிலும், தெற்கில் சென்னே, சிதம்பரம், மதுரை முதலான நகரங்களிலும், தஞ்சைப் பெரு நகரத்திலும் அவர் புகழ் நிலவவிட்டுப் போனவர். யாழ்ப்பாணத்தில் அவர் பணி பெரிது. சென். பற்றிக்ஸ் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரிகளில் பணி செய்த வாறே, இங்கே நாடகத்துறையை வளர்த்ததோடு, சைவ
★ தானஞ் செய்பவருக்கு 6
 
 

um
mihi
пляцї, தொ8லபேசி: 23233
* வைகாசி 1990 X இதழ்-173
ாந்தர் பெருமை
(UPத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் வர்களின் பெருமை, வித்தகம், பன்முகப்பணி பரவ ான அறிவு என்றித்திறத்தன பல்லாயிரவர் ஒருவ மே அமையக்கூடியவை. அந்த மகான் செய்த தாண்டு தூய்மையானது. பெற்ற பேறு பெருமள ானது. எல்லாவற்றையும் துறந்த தூய சந்நியாசி ாயிருந்து, இருந்தமிழே உன்னுல் இருந்தேன், ண்ணுேர் விருந்தமிழ்தும் விரும்பேன் என்று மிழைத் துறக்க மாட்டாமல், முத்தமிழிலும் துறை பாகத் தொண்டு செய்தவர்.
####FFF_F_FFFFFFFF
பூர்வாச்சிரமத்தில் இளமையிலேயே புலமையூறப்பெற்று, ல மொழிகள் அறிந்து, விஞ்ஞானத்துறை நன்கறிந்து, வதாந்தத் துறையில் புகுந்து விழுமிய நூல்கள் தேர்ந்து ராமகிருஷ்ண மடத்தை அலங்கரித்தவாறே, தனித்துவ ான போக்கில், ஆலயத்தொழுது என்றும் சம்புடத்தில், ருநீறு வைத்திருந்து பரவலாகப் பூசி, சிவனே மறவாச் ந்தையுடன் வாழ்ந்தவர். அண்ணுமலே, பேராதனைப் பல் லக் கழகங்களில் முதற் பேராசிரியராயிருந்து தமிழ் மாழிக்கு ஏற்றங் கொடுத்தவாறே இயற்றமிழ் வளம்பெறக் ட்டுரைகளும் பாடல்களும் எழுதியதோடு, இசை மரபு
வித்தியா விருத்திச்சங்கத்தையும், ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கத்தையும் வளர்த்ததோடு, கலாநிலேயத் திற்கும் வித்திட்டவராவர். அவர் பெருமையை அறிந்த மானுக்கர் கூட்டம் மறைந்து வருகிறது. அவரிடம் படித் தவர்கள் அவரைப்பற்றி நிறையச் சொல்லவேண்டும். அவர் மட்டக்களப்பையும் யாழ்ப்பாணத்தையும் இணேத்தி உயிர்ப்பாலம், அந்த உயிர்ப்பு உயிர்ப்பாகவே நிலவுதல் வேண்டும்.
வானம் கிட்டவுள்ளது ★

Page 2
2 - மில்க்ை
منبیگی Sخ۴نفر V Eği Y ga777777777777YY *. ܪ
சுந்தரமூர்த்தி நாயனுர் தேவாரம்
திருநாகைக்காரோணம் பண் - கொல்லிக் கெளவாணம் திருச்சிற்றம்பலம் பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறி பேசிப் படிருடித் திரிவீர் செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் : ;
செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கொருநாள் இரங்கீர் முத்தாரம் இலக்கிமிளிர் மணிவயிரக் கோவை
யவையூணத் தந்தருளி மெய்க்கினதா நாறும் கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் கடல்நாகைக் காரோன மேவியிருந்தீரே கடற்கரையிலுள்ள திருக்காரோணம் என்னும் திருத் தலத்தில் எழுந்தருளியுள்ள வரே, தேவரீர்பலவூர்களுக்கும் சென்று பலவாய்ப் பாடல்கள் பாடி இரந்து உண்பீர், பிச்சையிட வரும் பெண்களோடு பொய்பேசிக் கரந்தும் 'திர்வீர், செத்தார் ரிலும்புகளை அணிந்து இடபம் ஏறி யும் திரிவீர் உள்ள டொருளை மறைத்து வைத்து விட்டு எமக்கு ஈவதற்கு எதுவும் இல்லை என்று பொய் பேசுவீர், இவை யாவும் தேவரீருக்குச் சிறிதும் ஒவ்வா தனவாகும். இப்பொழுது அடியேன் அணிந்து கொள் வதற்கு முத்தாரம், மாணிக்கமாலை, வைரமாலே ஆகியவை யும், பூசிக்கொள்வதற்கு சஸ்தூரி, சந்தணம் ஆகியவை யும் கட்டாயமாகத் தந்தருளல் வேண்டும்.
பிறநாட்டவர்கள் இப்படியும் சொன்னுர்கள்
1. உன்வயதை ஆண்டுகளைக்கொண்டு கணக்கிடாமல்
நண்பர்களைக்கொண்டு கணக்கிட்டுப்பார். 2. வாழ்வை மட்டிடுவதற்குப் புன்முறுவல் நல்லஅளவை 3. வாழ்க்கைப் பாதையில்சிலசமயம் முட்களிருக்கலாம். 4. கற்பனை என்பது செயற்படும் வகையில் பிரயோசன
முள்ளது
Yr கடவுள் தந்த வாழ்
 

நீ செய்தி 1-5-1990
0.
1.
2.
3.
4.
I5。 16.
17。
8.
9.
20。
Α'
மகிழ்ச்சிக்கு வழி மற்றவருக்கு மகிழ்ச்சி ஊட்டுவ தாகும். தன்னை அடக்கி ஆண்டு பழகியவனே பிறரை ஆள வல்லவன். வழுவழுப்பான பேச்சு வாழ்வை வெகுவாகத் தாழ்த்தும். எரிந்து கொண்டிருக்கும் விளக்கே இன்னுெரு விளக்கை ஏற்றும்.
படித்துக்கொண்டிருக்கும் ஆசிரியரே படிப்பிக்க
ahudiyevairi. மனிதன் செயல்களைக் கணிக்கிருன், தெய்வம் நோக் கத்தைக் கணிக்கிறது. அவா என்பது வாழ்வைக் கறைபடியச் செய்வது. மற்றவர்கள் உன் இனப்பற்றி நினைப்பதைவிட, நீ உன்னைப்பற்றி நினைப்பதே பிரதானம். சிந்தனை தூய்மையாளுல்தான் பிரார்த்தனை பயன் தரும். கோபத்தை விடக்கொடிய பகைவன் எவருக்கும் இல்லை. துரி ப்மையான மனச்சாட்சியே கடவுள். மனிதருக்கு ஆளுமை என்பது மலருக்கு வாசனை போன்றது. மனத்துரண்டுதல் என்பது மனிதனின் வலிமையைச் சோதிப்பதாகும். நல்ல மனச்சாட்சி நல்ல நித்திரையைத்தரும் சாதன மாகும, இரண்டு கண்களையும் திறந்தவாறு தும்ம இயலாது. உண்மை பேசுதல் நல்ல குண நலத்தின் மூலக்கல்
நபணுடைமை
(ஒவ்வாத கருமங்களுக்கு இணங்காமை)
பிறர் நாணத்தக்கது தான் நாணுணுயின் அறம் நாணத்தக்கது உடைத்து
மற்றவர்கள் கண்டாலும் கேட்டாலும் நாணம்
அடையத்தக்க செய்கைகளே ஒருவன் தான் நாளம் இல்லாமல் செய்வானுயின் அறம் அவனிடம் இருப்பதற்கு நாணி அகன்று விடும்.
A Sence of Shame
If a man is not ashamed of what others shrink from,
his shamelessness has a trait that virtue is
ashamed of
வு ஒரு வரப்பிரசாதம் YAY

Page 3
I・5・H990' மில்க்வைற்
எங்கள் பறவைகள்
சங்ககாலப் புலவர்கள்முதல் இக்காலப் புலவர்கள் வரையிலான எல்லோரும் எங்கள் சூழலில் வாழும் பறவையினங்களைப் பற்றி அருமையாகப் பாடியிருக் கிருர்கள். சுப்பிரமணிய பாரதியார் பறவைகளோடு தோழமை கொண்டு சிறுவருக்கான பாடல்களையும் பாடி யுள்ளார்.
பழைய காலத்து அரசன் ஒருவன் தனது நாட்டில் வாழ்ந்த பறவைகளின் தொகையை கூறுபவருக்கு ஆயிரம் பொன் தருவதாகப் பறையறிவித்தான். மனத் தணிவும் விவேகமும் உள்ள ஒருவன் அரசனிடம் சென்று இரண்டுலட்சத்து ஐந்நூற்று அறுபத் தாறு பறவைகள் உள்ளன என்ருன். அரசன் அவனை இடைமறித்து இத் தொகையிலும் பார்க்க அதிகமாயிருந்தால் என்ன சொல்லுவாய் என்று கேட்டான். அதற்கு அந்த விவேகி அப்படியானுல் அயல் நாட்டுப் பறவைகள் சில இங்கே வந்தேறியிருக்கலாம் என்ருன். சரி நீ சொன்ன தொகை யிலும் பார்க்க இங்கே குறைவாக இருந்தால் என்ன சொல்லுவாய் என்ருன். அப்படியானுல் எங்கள் நாட்டுப் பறவைகள் சில அடுத்த நாடுகளுக்குப் போயிருக்கலாம் என்ருன். இக்கதையிலிருந்து நாம் அறியக்கூடிய விடயம் ஒன்று பறவைகள் தேசம் விட்டு ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டிச் சென்று மீள்வது வழக்கம் என்ப தாகும்.
எங்கள் நாட்டிலுள்ள பறவைகளைப் பார்த்து இன் ، مسیو புறுவதற்கு வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வருகி மூர்கள். பறவைகளை அவதானித்தல் (Bird Watching) என்னும் ஒருவகைப் பொழுதுபோக்குக் கலையாகும்.
எங்கள் நாட்டில் 21 இனப் பறவைகள் உண்டு. இவற்றைவிட 86 உட்பிரிவுகளுள் அடங்கும் பறவை களும் உண்டு. எங்கள் சிறியநாட்டில் நூற்றுக்கு மேற் பட்ட விதமான பறவைகள் உண்டென்பது ஒரு பெருமை. இங்குள்ள பல இனங்கள் வெளிநாடுகளிலி சுந்து பருவ காலம் தோறும் வந்துபோவனவாகும் எங்கள் பறவை களும் நெடுந்தூரம் போய் வருகின்றன.
எங்கள் பறவைகளைப் போன்ற பறவையினங்கள் இந்தியா, பர்மா, பாகிஸ்தான், வங்காள தேசம், நேபாளம், பூட்ட7 ன் இந்தோசீனம், மலேசியா. இந்தோ னேசியா, சீனு முதலிய நாடுகளிலும் காணப்படுகின் றனவாம் பறவைகளைப் பலவிதமாகப் பிரிப்பார்கள். பகற் பறவைகள், இராப் பறவைகள், நாட்டுப் பறவைகள், காட்டுப் பறவைகள். இவற்றை விட உயரப்பறப்பன, உயரப்பறவா தன. இன்னும வளைந்த சொண்டுள்ளன. * நீண்ட சொண்டுள்ளன. பழந்தின்பன பூச்சி தின்பன, தரையில் வாழ்வன நீரில் வாழ்வன, கூடு கட்டுவன, கூடுகட்டத்தெரியாதன, கீதம்பா கிவன பேசப்பழகுவன, அழகானவை, ஆட6:வல்லன. மனிதசகவாசத்தை விரும்பு பவை இப்படியான பலவித பறவைகளின் பெயர்களை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள், நாங்கள் எங்கள் மில்க்வைற் செய்தியில் பாடசாலைப் பிள்ளைகளுக்காக இனிமேல் பல விடங்களை வெளியிடுவோம். i.
* நேர்மையுள்ளவன் தன்

செய்தி 3
முன்னர் சூழற்கல்வி, சுற்ருடற்கல்வி, சமூகக்கல்வி என்ற தொடர்களில் பல நூல்களை எழுதிய செய்தி யாசிரியர் இடையில் கல்வி வெளியீட்டுத் திணைக்களஞ் சென்றமையும் வேறுதுறைகளில் ஈடுபட்டமையும் காரண иотек உங்களுக்க போதியளவு சுற்ருடல் அறிவை அவர் தரவில்லை. இனி உங்களுக்கு நிரம்ப எழுதுவார். நீங்கள் மில்க்வைற் செய்தியை இலகுவாகப் பெறுவதற்கு ஒரு வழி மில்க்வைற் தயாரிப்புக்களின் மேலுறைகளை அனுப் புங்கள்.
அது பறக்கிறது!
பறவையல்ல பறவைக்கப்பல்தான். ஆனல் மிகப் பெரியது. அது 5600 கிலோ மீற்றர் போவதற்கு வேண்டியளவு பெற்றேல் கொள்ளும். அந்தப் பெற்றேல் சாதாரண மோட்டார் வண்டி உலகத்தை முப்பத்தொரு தரம் சுற்றி வரப் போதுமானது. அந்தக் கப்பலில் புல்டோசர்கள், றக்குகள், ஹெலிக்கொப்டர்கள், பஸ் வண்டிகள், கார்கள் எல்லாம் ஏற்றிப் போகிழுர்கள். அதில் 225 பிரயாணிகள் 76,500 கிலோ பொதியுடன் பறக்கலாம். அது ஒரு இராட்சத விமானம். இதற்கு இன்று இருபது வயதாகிறது. இது அமெரிக்காவுக்குச் சொந்தமானது. -
இருபத்து நான்கு சோயா விதைகள்
தென் வியட்நாம் நாட்டில் விந்தை புரிந்த விவசாய விஞ்ஞான வரலாற்றில் 24சோயா விதைகள் வரல்ாற்றுப் புகழ் பெற்றுள்ளன. நாட்டின் விவசாயத்தையே மாற்றி யமைத்த சோயா அவை.
முன்னரே அந்நாட்டின் லொங்காண் மாநிலத்தில் சோயா விளைவு குறைவாகவே இருந்தது. எனவே அம் மாநில மக்கள் வேறுபயிர்களை நாட்டிய வேளையில் சீன அமெரிக்கநிபுணர்கள் கைகொடுத்துப்பழைய கொம்பென் இனத்தில் வேலையில்லையெனக் கூறிப் புதிய இனத்தைப் புகுத்தினர், பாமெற்ருே என்றும் சன்கோ என்றும் பெயர் பெற்ற இருவகை விதைகளை விதைத்து அநேகமாக விளைவு பெற்றனர். முன்னர் ஹெக்ரெயருக்கு 200 கிலோ பெற்றவர்கள் இவற்றை விதைத்து முறை யே 800கிலோ, 1500 கிலோ விளைவு கண்டனர்
ரொமி என்னும் சீன விவசாயி சோயா அவரையில் தீவிர ஆராய்ச்சி செய்து புதிய முறைகளைக் சண்டார். அவர் வியட்னும் வாசிகளிடம் புதிய இனத்து விதைகளைக் கொடுத்துதவினர். அவரே இதற்கு K. 32 எனப் டெய ரிட்டார்.
வியட்னும் விவசாயி ஒருவர் இருபத்து நான்கு விதைகள் மாத்திரமே பெற்றர். நிகுவான்ரன் என்னும் விவசாயி 24 விதைகளை நாட்டிப் பயிர் விருத்தி செ. து மூன்று ஹெக்ரெயரில் 4600 கிலோ அறுவடை செய்தார். அவரிடம் விதைகளைப் பெற்று விதைத்த வேறு சிலர் ஹெக்ரெயரில் 26000 கிலோ விளைவு கண்டனர். இன்று வியட்னும் மக்கள் இன்னும் மேலதிக விளைவு கண்டு பாழ்வில் தலை தூக்கியுள்ளார்கள்.
னம்பிக்கையுள்ளவன்

Page 4
மில்க்வை
சூரியோதய நாடு
சு று சுறுப் புக் கும் விடாமுயற்சிக்கும் துரிதகைத் தொழில் பெருக்கத்துக்கும் புகழ் பெற்ற யப்பான், பூமி யதிர்ச்சி எரிமலைக் குழப்படி முதலிய இயற்கை இன்னல் களையும் தாண்டி எத்தனையோ விதமான உற்பத்திகளைக் குடிசைத் தொழிலாகவே வீடுகள் தலைதுாக்கச் செய்து பணம் ஈட்டுகிறது. எறும்புகளில்நுள்ளான் அனையவராய் அவர்கள் இருந்தும் எறும்புகளையே சோம்பேறிகள் எனக் கணிக்கும் வகையில் உழைப்பதால் உலகின் முதற் பெரு நகரமான லண்டன் மாநகரை ஒதுக்கி விட்டு இன்று உலகின் முதற்பெரு நகரமாக டோக்கியோவைக் கொண்டு நிலவுகிறது. டோக்கியோ, ஒசாக்கா, யோக்க காமா நகரங்களால் பொலிவு பெறும் நாடு யப்பான்.
கம்பர் புகழ் மணக்கக் கன்னித் தமிழ் GISTriGLIff
ஆதிகாவியம் எனப்புகழ் பெற்ற இராமாயணம் வேதவாக்கியத்தை வலியுறுத்துவதோடு சைவசமயத்துக் கும் பரத்துவம் கூறுவது. அது இந்தியா இலங்கை ஆகிய இருநாடுகளின் கதையுமாகும். இராமாயணத்தில் வரும் பாத்திரங்களின் பெரும்பாலானேர் சிவபக்தர். சிவபூசை செய்த பெரியவர்கள். இராமர் இலங்கையிலும் இந்தியா விலும் ஈஸ்வரங்களில்சிவபூசைசெய்தவர். இராவணன் திருநீற்றுப்பிரியன் சிவபூசைக்காரன். அவன் மைந்தன் யாகஞ் செய்வதில் ஊக்கமும் உய்தியும் பெற்றவன்,
கம்பராமாயணத்தில் யாழ்ப்பாணத்தார் பாரம்பரிய மாக ஈடுபாடும் ஆற்றலும் கொண்டவர்கள். ஆறுமுக நாவலரின் குருவாய சேனதிராயரின் ஆசிரியர் வட்டுக் கோட்டை சுவாமிநாத முதலியார் இராமாயணம் சொல்லிக் கொடுப்பதில் சமர்த்தர். ஆறுமுகநாவலரின் தமையன், தகப் ஞர் இராமாயணப் பிரியர்கள். இராம நாடகம்அவர்களின குடும்பத்தாரின் உபகரிப்பு நாவலரின் மருகர் வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை இராமாயண ரசனையில் தமிழுலகப் புகழ் பெற்றவர். சுன்னுகம் குமாரசுவாமிப்புலவரும், திருக்கோ க்ாணமலை கனகசுந்தரம்பிள்ளை அவர்களும் கம்பராமாயணத்தில் வெகுவாக ஈடுபட்டுப் பாலகாண்டத்துக்கு அருமையான அடிக்குறிப்பு எழுதிப் பதிப்பித்தவர்கள்.
குமாரசுவாமிப்புலவர் அவர்களின் இராமாயண ரசனையில் நன்ருக நனைந்து ஊறியவர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை. பிள்ளை அவர்கள் 1918 முத,ெ 1942 வரை கால் நூற்ருண்டுக் காலம் இராமாயணப் பிரசங் கத்தில் தனிச் சுவை கண்டவர். சீதையில் காதல்கொண்டு ரசனையைச் சுவையூட்டியவர். தமிழ் நாட்டில் சித: பர நாத முதலியார், வ வே. சு. ஐயர், பி பூரீ, கிருஷ்ணமா சாரியார், பதுமநாத ஐயர், சுந்தராச ஐயங்கார், சேதுப் பிள்ளை முருகேசமுதலியார், இராதாகிருஷ்ணன் முதலா னேர் சென்ற வழிகளில் செல்லாமல் புதுவழியிற் புகந்து சுவைக்க வைத்தவர். தாம் சுவைத்த வண்ணம் பேசிய வற்றையும் எழுதியவற்றையும் பேணி வைத்திருந்து அண்ணுமலை பல்கலைக்கழகத்தார் இராமாயண ஆராய்ச்சி
大 அவமானம் வந்த

ற் செய்தி 1-5-1990
யில் ஈடுபட்டபோது அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பியவர். அவற்றைப் பெற்ற சேதுப்பிள்ளை அவர்கள் அவற்றை கடவுட் கொடை எனக் குறிப்பிட்டு நன்றியும் தெரிவித்தார். கம்பர் காவியத்தை தமிழிலும் ஆங்கிலத் திலும் வெகுவாகச் சுவைத்தவர். வ. வெ. சு. ஐயரவர் 45ož7. (The Study of Kampan) goši 6)avš9á Guifiu
விமர்சனம்,
டிராசராசசோழப் பேரரசன்
அம்மன்குடி என்னும் ஆலயம் முன்னர் அமணரி குடியாயிருந்து அமண் குடியாகி அம்மன் குடியானது என்பர் இது " சோழமண்டலத்து உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணுட்டு அம்மன் குடியான கேரளா ந் தன் சகர்வேதி மங்கலம்" என்று செப்பேடுகளில் வழங்கப் பெற்றது.
இது சோழப்பேரரசர்களின் படைத்தளமாய் இராச ராசன், இராசேந்திரன், இராசாதிராசன் ஆட்சிக் காலங் களைக் கண்டது இவ்வூரிலுள்ள கைலாசநாதர் சிவா லயத்தைக் கட்டியெழுப்பியவர். சோழப்பேரரசர்களின் படைத்தளபதியாயும் திருமந்திர ஓலைக்காரராயுமிருந்த அந்தணர்.இவரே தஞ்சைப் பெருங்கோயிலின் திருச்சுற்று மாளிகையையும் கட்டியவராவர். இவரைக் கிருஷ்ணன் இராமன் எனக்கல்வெட்டுக்கள் வழங்குகின்றன. இவர் மூன்று பெருமன்னர்கள் காலத்திலும் பணி புரிந்தவர். இவருடைய சேவைக் காலம் எழுபது ஆண்டுகள் வரை யிலாகும். இவரை மும்முடிச் சோழபிரமமாராயன் என வும் வழங்கினர். இவருடைய அறப்பணிகளும் கலைப் பணிகளும் மிகப்பலவாகும். அவை யாவும் தஞ்சாவூர் திருவையாறு, திருமழபாடி திருநாகேச்சுரம், திருவெண் காடு முதலிய தலங்களிலுள்ள கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றன. இவருடைய சேவைக்காலத்தில் திருவுருவங்கள் வடித்தல், வார்த்தல் முறைகள் வெகுவாக முன்னேற்றமடைந்துள்ளன. தஞ்சைப் பெரியகோயிலின் அர்த்தநாரீசுவரர் செப்புத்திருமேனி இவர் செய்வித்த தாகும். திருவெண்காட்டுத் திருக்கோயிலுக்கும் இவர் செப்புத் திருமேனிகள் செய்வித்துள்ளார். நாட்டை வாழ் விப்பது சிவ வழிபாடு. சிவன் கோயில்களைப் பரிபாலித்து வணங்குதல் எம் தலையாய கடன். எமக்கு ஆயிரக் கணக்கான திருமுறைப்பாடல்கள் வரப்பிரசாதமாயுள் ளன. சிவாலயங்களை வலம் வந்து திருமுறைகளை ஒதும் சந்ததி வேண்டும் எனத்தவஞ் செய்வோமாக.
தமிழர் வாழ்வில் பசுக்களும் பூக்களும் தமிழர் விவசாயத்தில் பசுமை கண்டதும், பசு வளர்த்தலில் வெண்மை கண்டனர். போர் மூண்ட காலத் தில் பசுக்களையே முதலில் காத்தனர். பசுக்களைக் காப்ப தற்குமுன் கவருதல் முதற்படி. கவரப்போனவர்கள் ஆள் அடையாளத்திற்கு வெட்சிப்பூ சூடினர். பசுக்களை மீட்கச் செல்பவர் கரந்தைப்பூச் சூடினர். மீட்கவருவோரைத் தாக்குவோர் வஞ்சிப்பூச் சூடினர். வஞ்சி சூடியவரை எதிர்ப்பவர் காஞ்சிப் பூக்களைச் சூடினர். இவை சீருடை வருவதன்மு ன் தமிழன் கண்ட பூவணி.
ல் அமைதியே வழி Ar

Page 5
15- 990 மில்க்வை
தமிழன் கண்ட கோட்டையும் பூக்களும்
மதில்கள் சூழ்ந்த கோட்டையைத் தாக்குவோர் உழிஞைப்பூ சூடினர். கோட்டையைக் காத்தவர் நொச் சிப்பூ சூடினர்.
தமிழன் களப்போரும் பூக்களும் களத்தில் வீ ர ம் காட்டப்புகுந்தவர் தும்பைப்பூ சூடினர். வெற்றியீட்டியவர் வாகைப்பூ சூடினர்.
சொன்னவையும் சொன்னவர்களும்
சொன்னவை
1. விரும்பியதை அடைவதில் ஒரு துன்பவியல், அடையா விட்டால் ஒரு துன்பவியல் இதுவே வாழ்க்கை. 2. பெரியவை யாவும் நல்லவையல்ல. நல்லவை யாவும்
பெரியவை. 3. உண்மையில் நல்லவனல்லாதவன் பெரியவனல்லன். 4. நல்ல ஆசிரியர் ஒருவர் ஆயிரம் போதகர்களுக்கு
நிகர். 5. முசத்தைச் சூரியன் பக்கம் திருப்பினுல் நிழலைக்
65 m 6007 uDry LL-Tuin 6. நாட்டின் இளைஞர்களே செழிப்பின் பாதுகாவலர்கள் 7. சமயம் இல்லாத விஞ்ஞானம் நொண்டி, விஞ்
ஞானம் இல்லாத சமயம் குருடு, 8. நோ சகம் குறிக்கோள் இல்லாத மனிதன் சுக்கா
னில்லாத கப்பல். 9. வாழ்வின் அளவை ஆயுள் அல்ல, வாழ்வில் உப
கரித்த அளவே. 10. இராக்கதனின் தைரியம் நல்லதுதான். அதனை உய
யோகித்தல் கொடூரம். 31. ஆயிரம் மைல் யாத்திரை ஒரு அடி நகர்தலில் ஆரம்
பிக்கிறது. 12. நல்லன காண்போன் ரோஜாமலரைப் பார்க்கிருன். தீயன காண்போன் முட்களைப் பார்க்கிருன்.
சொன்னவர்
1. பேணுட்ஷோ 2. டெமொஸ்தனிஸ் 3. சேக்ஸ்பியரி 4. இங்கர்சல் 5. கெலன் கெலர் 6. பெஞ்சமின் டிசறலி 7. எயின்ஸ்ரீன் 8. தோமஸ் கார்லையில் 9. கதரின் மார்ஷல் 10. சேக்ஸ்பியர் 11, லா ஒட்ஸ் 12. காவில்கிப்ருன்.
குளத்தங்கரை நாகரிகம்
யாழ்ப்பாணத்து நாகரிகம் குளத்தங்கரை நாகரிகம் கங்கை, யமுனே, காவேரி, வை4ை, நைல், யூபிரிட்டீஸ் ரைகிறிஸ், யங் ரிஸ் கி யாங் நதிகளின் நாகரிக மேம் பாடனைய நாகரிகம் தம்மவர்கள் நாகரிகம் எங்கள் பகுதிகளில் உள்ள குளங்களின் எண்ணிக்கையும் அவற் றின் உபகரிப்பும் அதிகம், குளங்களை வரளவிடுவதால் நமது நாகரிகமும் வளருகிறது. குளங்கள் வற்ருத செல்வ மாயிருந்தால் எங்கள் பகுதி வளஞ்சிறக்கும். வெள்ளைக் காரர் வேண்டுமென்று விஷமத்தனத்தில் குளங்களைப் புறக்கணித்தவர்கள். நாங்களும் அடி வருடிகளாய்க் குளங் களைக் கவனியாது விட்டுவளஞ்சுருங்க வாழ்கிருேம்.
அன்பைப் போல ஆய ”ܐ

b செய்தி 5
O
பட்டணப்பக்கத்துக் குளங்கள்
ஆரியகுளம், கன்னதிட்டிக்குளம், எனபன ஒரு சில, இன்னும் உள்ளே தாராக்குளம், தேவரீர்க்குளம், மஞ்சள் கரைச்சான்குளம், வண்ணுன் குளம் என்பன அமைந்துள் ளன. இக்குளங்களைச் சூழப்பசுமையான நிலமெங்கும் மக்கள் நெருக்கமாகக் குடியேறி வாழ்ந்தனர்.
நாளடைவில் ஒழுங்கைகள் உருவாகி நிரைநிரை யாக வீடுகள் எழுந்தன. அப்பால் கடற்கரையையடுத்த பகுதிகளில் முதலைக்குளம், மறவக்குளம், மூண்டுகுளம் என்பன இருந்தன. அவற்றின் கரைகளில் மீனவர்கள் குடியேறி இருந்தனர். அக்காலத்தில் எங்கும் அதிகமாக மண் வீடுகளே இருந்தன. தென்னங் கிடுகுகளாலும் பனே யோலைகளாலும் வேயப்பட்ட கொட்டில்களே மிகவதிக மாக இருந்தன. குடியிருப்புகள் பெரும்பாலும் குடில் களேயாம்.
வேம்படி உருவான கதை வேம்படி உருவாவதற்கு வாய்ப்பாக வந்தவர்கள் வெஸ்லி மிசன்காரராவர். வெஸ்லி மிசன் வழிவந்த இலங்கை மிசனரிமார் பழைமை வாய்ந்தவர்கள். மனி தாபிமானமிக்க இயக்கத்தார் எனக்கருதப்பெற்ற அவர் களுள் கலாநிதி கோக் என்பார் குறிப்பிடத்தக்கவர்.
மனிதாபிமான சேவை செய்வதற்கு ஆங்கிலேயர் மிசனரிமாராக வெளியே செல்வதற்கு 1813ஆம் ஆண்டில் தயாரானர்கள், இலங்கை, யாவா, தென்னபிரிக்கா ஆகிய இடங்களுக்குப் போவதற்கு கோக் தயாரானபோது இன்னும் ஆறுபேர் ஆயத்தமானர்கள்.
போட்ஸ் மவுத்துறையில் 30-12-1813 இல் கப்பலேறி யவர்சளுள் வழியில் கோக் அவர்களும், திருமதி அல்ற் அம்மையாரும் காலமானர்கள். எஞ்சியவர்கள் பம்பாயில் இறங்கி, அங்கே ஆள்பதியாயிருந்த இவன் நிப்பியன் அவர்களின் உதவியால் வேறுகப்பலேறி இலங்கையை நோக்கி வந்தார்கள். அவர்கள் காலித்துறைமுகத்தில் இறங்கித் தங்கிச் சிலநாள்களின் பின், 11-7-1813 ஆம் நாள் தாங்கள் எங்கே எங்கே போதல் வேண்டும் என உரையாடிஞர்கள். லிஞ்ச் என்பாரும் ஸ்குவான்ஸ் என் பாரும் யாழ்ப்பாணம் வந்தார்கள். மூவாண்டுகளின் பின் வணக்கத்துக்குரிய யோசேப் ருெபேட்ஸ் என்பாரும் வேறிருவரும் இங்கே வந்தார்கள்.
வந்தவர்கள் முற்றவெளிப்பகுதியில் அலுாதரின் பெய ராலமைந்த வழிபாட்டிடத்தையும், அஞதைகள் இல் லத்தையும் விலை கொடுத்து வாங்கினர்கள். அந்த இடத் தில் ஒரு பாடசாலையையும் தொழுகைக்கான மண்டபத் தையும் அமைத்தார்கள். இவ்வாருக 1823 ஆம் ஆண்டு உதயமாயிற்று.
இவர்கள் இருவருடகாலம் தங்கள் மதப்பிரசார சேவையும் கல்விப்பணியும் செய்துவந்தபோது, இங்கே 26 பாடசாலைகள் உருவாகி எங்கும் 795 பிள்ளைகள் படித் தார்கள். பெரும்பாலும் ஒவ்வொரு பாடசாலையிலும் ஒவ்வொரு சட்டம்பியார் கற்பித்துவந்தார்.
தம் ஆட்சிபுரியாது

Page 6
Бlфšenoa
நாய் இனங்கள் நா. நாய்தான். அதன் இயல்பு அடிப்படைப்போக்கு ஒன் மு: ந்தாலும், பழக்க விசேடத்தால், சகவாச தோ சித்தால் குணபேதங்கள் உண்டாகின்றன. இதனல் அவற்றை நாம் பறைநாய், அல்சேசியன் நாய், பெரிய நாய் எனறெல்லாம் பகுத்து வழங்குகிருேம்.
நாய் வீட்டைக் காக்கும். நன்ருகக் குரைக்கும், வேட்டை யாடவும் உதவும். வேட்டை நாய் வேகமாகப் பாய்ந்து ஒடும். சில நாய் மோப்பசத்தி மிகுந்தவை. நகர் காவற்காரர் என்னும் பொலிஸ் காரருக்குப்பக்கத் துணை:ாய்ச் சென்று, பெருங்குற்றவாளிகளை மடக்கிப் பிடிக்கவும். துப்புக்கொடுக்கவும் அவை பயன்தருகின்றன. குண வேறுபாடுகள் பழக்க வேறுபாடுகள் ஒருபுறமாக அவை உருவவேறுபாடுகள் உள்ளவையுமாம். பயங்கர trான வளர்ச்சியில் குட்டிக்குதிரைபோல உள்ளவையும், பொக்கற் என்னும் பெயரில் பூனையளவில் சிறியனவாயும் சிய காணப்படுகின்றன. மூஞ்சை வேறுபாடு, சடைவேறு பாடு, வால் வேறுபாடு, என்பனயாவும் அவற்றைவேறு படுத்துகின்றன.
காள்தோறும் இருபத்தைந்து ரூபாவுக்குக் குறையாத பணச்செலவில் முட்டை, இறைச்சி தின்று, சொகுசாகப் படுத்திருந்தவாறு “வெஃ” என்று ஒருக்கால் அது சத்த மிட் டால் எவரும் வெலவெலத்துப் போவார்கள். நாயினங் களில் இன்னும் கிறேற்டேன், பொக்சர். பிளட்ஹெளண்ட், சென்பேனுட் முதலியவைகளும் உள்ளன.
எல்லா நாய்களிலும் அறியக்கூடியதான நல்ல குணம் விசுவாசம், நாய் நன்றியறிவுள்ளது. வீட்டுக்காரரோடு வி%ாயாடி, விசுவாசம் காண்பிப்பது. நாபின் விசுவாசத் தைக்கூறும் கதைகள் உலகம் முழுவதிலும் வழங்குகின் றன. எந்த நாயிடத்தும் காணக்கூடிய அழகு அதன் பல்லழகு. அதன் பற்கள் மிகவும் சுத்தமுள்ளதாயும், தூய வெண்ணிற முள்ளனவாயும் இருக்கும். புழுத்துச் செத்துக் கிடந்த நாயொன்றைக்கண்டு, எல்லோரும் காறித்துப் பியவாறு போனபோது, பேசுபெருமான் அதன் அழகிய பற்களை வியந்து கூறிக்கொண்டு போனை தக்கேட்டுப் பலர் நாணமடைந்தார்கள் என்ப.
எஸ்கிமோஸ் என்னும் வடபுலத்துக் குளிர்ப்பிர தேசப்பனியுலக வாழ்க்கை நடத்துவோர் தங்கள் சறுக்கு வண்டியிழுக்க நாய்களையே பயன்படுத்துகிரு ர்கள். அங்கே யுள்ள நாய்கள் வலிமை வாய்ந்தவை.
இன்று எங்கள் மத்தியில் அல்சேசியன் இனத்து நாய்கள் பரவியுள்ளன. ஐரோப்பாவில் அல்சாஸ்லோ றெயின் பிரதேசத்து ஜேமன் இனத்து நாய் அது. அது மந்தைமேய்ப்போரின் நண்பன். அது ஒரு கலப்பு இனம். அதைக்கலந்து கண்டவர் றிட்மெஸ்ரர்வொன் ஸ்ரீபன்ற்ஸ் என்பவராவர். அது 1920 ஆம் ஆண்டளவிலேதான் பர வத் தொடங்கி, இங்கிலாந்து, அமெரிக்கா எங்கு ம் பெரும் புகழ்பெற்றது. பொலிசுக்காரருக்கு உதவியாயும் குருடருக்கு வழி காட்டியாயும் அது சேவை செய்பத் தொடங்கியது. அதன் உடல் உறுதியானது. மேற்குலகில் அல்சேசியன் உற்ற நண்பன், நல்ல செல்லப்பிராணி.
உள்வீட்டுச் செல்லப்பிள்ளையாய, நாற்காலிகளிலும், கட்டில்களிலும் மடியிலும் கிடந்து ஓடித்திரியும் சின்ன
Ak கோழைகள் நீதியைப்

ற் செய்தி -5-1990.
இனத்துச்சடை நாயொன்று பீக்கின் கீஸ் எனப்பெயர் பெறுவது. இதற்கு அரண்மனை நாய், சிலீவ் நாய், சிங்க நாய் என்றெல்லாம் பெயர்கள் வழங்குகின்றன. சிங்கம் போல மயிரடர்த்தியுள்ளது. பெரிய மாளிகைகளில் சுயா தீனமாயுலாவுவது. இது விக்ரோறியா மகாராணியின் மடியில் 1880 ஆம் ஆண்டில் விளையாடியது என்று வர லாறு படைத்த இனத்தது மடியிலேறி விளையாடும். இது மூன்று கிலோ நிறையுள்ளதென்பர். இதன் கால்கள் மிகக்குறுகியவை. முன் கால்கள் இரண்டும் சற்றே வளை வானவை. இவ்வாருக உடல் சிறிய இந்த நாய் மூளைப் பலம் உள்ளது மனுேபலமும் காட்டுவது அன்புக்குரியது.
தமிழகத்தையும் தமிழர் நாகரிகத்தையும்
கண்டறிந்து பராட்டிய மேற்கு நாட்டவர்
மெகஸ்தனிஸ், பெரிப்புளூஸ் பிளினி, தாலமி
யுவான் சுவாங், மார்க்கோபோலே
பெண்ணின் வளர்ச்சி பெண்கள் வளர்ந்து ஆளாகும் பருவங்களுக்குப் பழந்தமிழர் பெயர்கள் வைத்துள்ளார்கள். இந்தப்பருவ காலங்களும் ஆண்டு நிறைவும் அமைவானவை.
பேதை - 5 வயதினருள் பெதும்பை -a-ra- O
மங்கை 6
tol- is 6.5 rear- 25 அரிவை - 30
தெரிவை " 5 --س பேரிளம்பெண் - 45
மூதாட்டி at8rco 60
கிழவி reas
யூனி யூனி பிரகாசா அவர்கள்
பாரதநாட்டின் பழைய முனிவர்களைப்போல இல்லற ஞானிகளாய் அண்மைக் காலத்தில் வாழ்ந்தவர்களுள் பகவன்தாஸ் என்னும் பெரியார் ஒருவர். அவர் தந்த மைத்தன் பிரகாசா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முது மாணிப்பட்டம் பெற்றவர். நாட்டுக்காகத் தம்மை அர்ப் பணித்து, காங்கிரஸ் தொண்டனய் நிர்வாக சபையில் 1918 முதல் 1945 வரை கடமையாற்றிபவர். இடையில் ஈராண்டுகள் காரியதரிசியாயும் இருந்தவர்.
சுதந்திர பாரதத்தில் பாக்கிஸ்தான் தூதராயும் அசாம்மாநில ஆளுநராயும், தமிழ் மாநில ஆளுநராயும் இருந்தவர். தலைசிறந்த அறிவாளி பாயும் ஆட்சியாளராக வும் இருந்த அவர் சிறந்த பேச்சாளியுமாவர். அவர் ஒரு முறை யாழ்ப்பணம் வந்து சேர். இராமநாதன் நினைவுப் பேருரை பேசியுள்ளார். அவ்வமயம் சேர் அருணுசலம் மகாதேவா அவர்களும் பரமேஸ்வராக் கல்லூரி அதிபர் S. சிவபாதசுந்தரம் அவர்களும் சேரவே கேம்பிரிட்ஜ் மாணுக்கர் மூவரின் அரிய சந்திப்புக் கிட்டியது. ஒருவர் தலைமைதாங்க, ஒருவர் பேச, ஒருவர் நன்றி கூற, பர மேஸ்வரா மே  ைட யி ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கூடியது அது அரிய சந்திப்புத்தானே.
பற்றி நினைப்பதில்லை

Page 7
-5-90 மில்க்வை d
தமிழ் இலக்கியத்தில்
ஐந்திணை தொழில்கள்
தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல் நிரை மேய்த்தல், வரகு விதைத்தல் நிரைகவர்தல், சூறையாடுதல் நெல் விதைத்தல்
dಷ பிடித்தல் விற்றல், உப்பு விளைவித்தல்
浚
:
ஐந்திணைகள் விரவிய நூல்கள்
தற்றினை 2. குறுந்தொகை 3. ஐங்குறுதிறு 4. கலித்தொகை 5. அகநாநூறு
தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் 1. சிலப்பதிகாரம்
. மணிமேகலை
சிந்தாமணி
. குண்டலகேசி வளையாபதி
;
தமிழில் ஐஞ்சிறு காப்பியங்கள் 1. சூளாமணி 2. நீலகேசி 3. யசோதரகாவியம் 4. உதயணன் காதை 5. நாகசூமார காவியம்
தமிழில் ஆற்றுப்படிை நூல்கள்
1. திருமுருகாற்றுப்படை 2. பொருணராற்றுப்படை 3. பெரும்பாளுற்றுப்படை 4. சிறுபாஞற்றுப்படை 5. தணிகையாற்றுப்படை
தமிழில் இலக்கணங்கள்
1. எழுத்து இலக்கணம் 2. சொல்லிலக்கணம் 3. பொருளிலக்கணம் 4. யாப்பிலக்கணம் 5. அணியிலக்கணம்
大 அறிவற்ற துணிவினல்

ற் செய்தி 7
தமிழில் பாவகை
Genuair tunt ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா
Daug unr
:
உங்களுக்கு 1. எமக்கு இரண்டு கண்களும், இரண்டு காதுகளும் உள்ளன. ஆனல் நர்க்கு ஒன்றேஒன்று தான் உண்டு. நன்ரு கப் பார்த்து, நன்ருகக் கேட்டுமிகச்சுருக்கமாகப் பேசுதல்
வேண்டும். வேண்டும்போது கவனமாகப் பேசுதல் வேண்டும். கண்டபடி பேசுவதிலும் பார்க்கப் பேசாதிருத் தல் நல்லது.
2. மற்றவரிலும் பார்க்க நீ புத்திசாலி என்பதை உடனடியாக நம்புதல் தீது. ஆறுதலாக அநுபவத்தில் உன் னை மட்டிட்டுக் கொள்ளலாம் தானே. தன்னைப்பற்றி உயர்வாக எண்ணுவதால், ஆயிரக்கணக்காஞேர்பாடு அதோ கதியாகி வடலால் கவனமாயிருத்தல் வேண்டும். - 2, 3. ஒருவர் மயக்க மில்லாமல் தெளிவாகச் சிந்திக்க வேண்டும்.
தன்னெத்த மக்களை நேயத்தோடு இதய பூர்வமாக நேசித்தல் வேண்டும்.
துப்புரவாய தூயமனத்தோடு செயற்பட வேண்டும். இறைவனிடம் உண்மையான அன்பு வைத்திருத்தல் வேண்டும். - அநாமதேயம்
ரஷ்யர் வாழ்வில்
ஐரோப்பாவில் ஆசிய பிரதேசமும் சேர்ந்த பென்னம் பெரிய நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களுள் ஜோர் ஜியா என்பதும் ஒன்று. ஜோர்சியமக்கள் நல்லவர்களாம். உழைப்பாளிகளாம்" அங்கே 1500 தொழிற்சாலைகள் உள்ளனவாம். அங்கே "வைன்' சன்னும் திராட்சை ரசம் வடிச்கும் தொழிலகங்களும் உள்ளனவாம். அங்கே 70, 000 00 போத்தல் வைன் தயாராகிறதாம். வைன் மிகவும் நல்லதாம்.
அக்கே கூட்டுறவு முறையில் விவசாயப் பண்ணேசள் பெருமளவில் உற்பத்தியைப் பெருக்குகின்றனவாம். வின் பொருள்களின் விபரமும் உண்டு. கால்நடை, தேயிலை, பழ வகை இன்னும் பலவகை ஜோஜிய மக்கள் விருந்து கொடுப்பதில் பெருமனம் படைத்தவர்களாம். அருகி
ருந்து ஊட்டித்தாமும் உண்டு மகிழ்வார்களாம்.
ஆவது ஒன்றுமில்லே 女

Page 8
S. மில்க்வை
இசைத்தமிழ் எங்கள் தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூவகையாய் நிலவி முத்தமிழ் என மொழியப் பெறும். இசைத்தமிழில் ஒசைநயம்உள்ள தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி என நான்கு இசைக்கருவிகள் உள்ளன.
தோற்கருவிகள் பேரிகை, படகம் இடக்கை, உடுக்கை மத்தளம், சல்லிகை கரடிகை திமிலை குடமுழா, தக்கை as 6007th 68AD, தமருகம் தண்ணுமை, தடாரி அந்தரி, முழவு சந்திரவலையம், மொந்தை முரசு, கண்விடுதூம்பு நிசாளம், துடுமை சிறுபறை, அடக்கம் தருணிச்சம், விரலேறு பாகம், உபாங்கம் நாழிகைப்பறை துடி பெரும்பறை நரம்புக்கருவிகள் பேரியாழ் சிறியாழ்
ĉ. 253rz Forup - ago3 za ?or-u- uzu Tuià செங்கோட்டுயாழ், Lurraumtyp குறிஞ்சியாழ், மருதயாழ்
நெய்தல்யாழ் துணைக்கருவிகள் குழல், நாதசுரம் கஞ்சக்கருவிகள் தாளம் பண் - இசைப்பண் குரல், துத்தம் கைக்கிள, உழை இளி, விளரி, தாரம் திறங்கள் பண்ணிலிருந்து பிறப்பின்
குறிஞ்சிப்பண், பாலைப்பண் முல்லைப்பண் மருதப்பண்
நெய்தற்பண் வரிப்பாடல்கள் ஆடலும் பாடலும் அலுப்பைப் போக்குவன. பாடல் களில் வரிப்பாடல்கள்.
கானல்வரி, கந்துகவரி ஊசல்வரி. வேட்டுவவரி ஆடல்கள் சம்பந்தமான மாடல்கள்
அம்மானை, பொற்சுண்ணம்
யாழ்ப்பாணம் சாந்தி அச்சகத்தில் அச்சிட்டவர் திரு. தி.
தொழிலகத்தின் சார்பாக வெளியிட்டவர் *சிவெ கெளரவ ஆசிரியர் தி

b செய்தி 1-5-1990s
தெள்ளேணம், உந்தி பறத்தல் தோள்நோக்கம் நடனக்கலை குரவைக்கூத்து, ஆய்ச்சியர் குரவை துணங்கை, அல்லியம் கொடுகொட்டி, குடை குடம், மல், துடி.
கூத்துவகை புகழ்க்கூத்து, வசைக்கூத்து கருங்கூத்து, கழலைக்கூத்து வள்ளிக்கூத்து, குரவைக்கூத்து சாந்திக்கூத்து
LMLMLMMLMLMMLMMLMLMLMMLMLqLMLMMMMMMMMLMLMLMLMML
வாழும் உடலை வகையாய் வைக்க நாளும்ஆசனம் தன்gகப் பழகுவோம்
* மில்க்வைற் நீலசோப்” புதிய மெருகுடன் பெரிய அளவில்
புதுப்பொலிவுடன் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. மில்க்வைற் நீலசோப்பை வாங்கிப்பாவித்து அதன் மேலுறைகளிலுள்ள திருக்குறள் 25ஐ வெட்டி அனுப்பி யோகாசன விளக்கப்படங்களேயும் யோகக் கலை
என்ற புத்தகத்தையும் பரிசாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.
மில்க்வைற் - யாழ்ப்பாணம்
ayV/MMgWYMM AmaananawwwwWYYY vivíparryMܥܫൾ
நாகரத்தினம். யாழ்ப்பாணம் மில்க் வைற் சவர்க்காரத் நறிப்புரவலர்" க. கனகராசா ஜே. பி. அவர்கள் குக. சி. குலரத்தினம் 1-5-90