கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மில்க்வைற் செய்தி 1990.07

Page 1
f
தபாற்பெட்டி இல, 77, யாழ்ப்பு
கெளரவ ஆசிரியர்: திரு. க. சி. குலரத்தின்
உள்ளூர்த் தேவை:
எங்கள் நாகரிகம் ஆற்றங்கரை நாகரிகம் அல்ல. எங்கள் நாட்டை வளம்படுத்த வற்ருத ஆறுகள் கிடையா. அதிக மழையைப் பொழி விக்கும் உயர்ந்த மலைகள் கிடையா. எங்கள் பிரதேசமெங்கும் எம் முன்னுேர் குளங்களைத் தோண்டிநீரைத் தேக்கி வளஞ் செய்தவர்கள். எங்களுக்கு ஓரளவுக்கே
காலமழை பெய்கிறது. அந்த மழைநீரை வீண்போகவிடாது தேக்கவல்லவை நீர்த் தேக்கங்களாய குளங்கள், மலைகள் இல்லா விட்டாலும் முன்னர் சோலைகளும் தோப் புக்களும் காடுகளும் ஒரளவு மழையைப்
- யோகாப்பியாசம் GD
 
 

ானம். தொலைபேசி: 23233
எம் * ஆடி 1990 * இதழ் - 175
கள் நிறைவு பெறுக
பெய்வித்தன. இன்று காடு கெடுத்து நாடாக்கிக் குடியேறிய நாம் மாற்றுத் திட்டம் எதனையும் செய்யவில்லை. உள்ள குளங்களை ஆழமாக்கவில்லை. வீதியோரங் களிலாவது மரங்கள் நடவில்லை. நெடுஞ் சாலை வழியே புளி, இலுப்பை, வேம்பு நட்டால் பயன்தரும் என்பது தெரிந்தது தானே. மின்சார அடுப்பையும் காஸ் என் னும் எரிவாயு அடுப்பையும், நம்பி விறகுக்குவழி செய்யாதிருந்தோம். இன்று எண்ணெய்வகை தட்டுப்பாடு காரணமாக இலுப்பை யையாவது நோ க்கவில்லை, வேம்பை நோக்கவில்லை. உள்ளூரில் விளை யக்கூடிய உளுந்து/ பயறு, பருப்பு, எள், மிளகாய், வெங்காயம், மரவள்ளி முதலிய வற்றின் விளைவு அதிகரிப்பதற்கு வழி கோலுகின்றேமில்லை.
வறுமையும் வெறுமையும் கொடுமை யும் அதிகரித்தும் வியர்வை சிந்தாமல் வாழப் பார்க்கிறேம். கடின உழைப்புத் தேவை. சிக்கன வாழ்வு அவசியம். நல்ல காலம் பிறப்பதற்கு குடுகுடுப்பைக்காரன் தேவையில்லே.
லதிக சக்தியைத் தரும் *

Page 2
4. மிலகவை
சுந்தரமூர்த்தி நாயனுர் தேவாரம் திருவாலங்காடு பண் - பழம்பஞ்சுரம் திருச்சிற்றம்பலம் தூண்டா விளக்கின் நற்சோதீ
தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய் பூண்டாய் எலும்பைப் புரம்மூன்றும்
பொடியாய்ச் செற்ற புண்ணியனே பாண்டாழி வினைக் ளவ்ை தீர்க்கும் பரம்ா பழைய னுார்மேய ஆண்டா ஆலங் காடா உன்
அடியார்க் கடியேன் ஆவேனே. s திருச்சிற்றம்பலம்
தூண்டாமலே ஒளிவீசும் திருவிளக்குப் போலத் திருவொளி கால்பவரே, வணங்குவார்களின் துன்பங்களை நீக்கியருள்பவரே, எலும்புமாலையைத் தரித்தவரே, முப் புரங்களேயும் அழித்தருள்செய்த அறக்கடவுளே, பழைய வினைகளை நீக்கி அழுந்தாமற் காப்பவரே, பழையனுரரை விரும்பி எழுந்தருளியுள்ளவரே, திருவாலங் காட்டில் ஆடல்புரிந்து அருள்பவரே, தேவரீரின் அடியார்களுக்கு அடியானகவே வாழ்வேனக.
சித்தவைத்தியத்தில் குழுக்குறி
241. பாணன் w
காட்டாமணக்கு 242, பாதலத்தம்பி . நிலக்காளான் 243. பாதிரி - மூங்கில் 244. umt ri dñé#56ñ? . சிறுதேக்கு 245. பாலனைக்காத்தாள் - மணத்தக்காளி 246. urien r60) L- . ஆடாதோடை 247. பிச்சை . வாழை 248. புட்பராசன் . கருஞ்சீரகம் 249. பூதநாசினி . பெருங்காயம் 250. பூததை . கடுக்காய் 251. பூதம் . ஆலமரம்
t
女 யோகாப்பியாசம்
 

ற செய்தி
252. பூதன் 253. பூதாத்திரி 254. Աւյ6) 255. பூமிநாதம் 256, பூமிநாயகன் 257. பூரணி 258. gaw 259. பூனை வணங்கி 260 ( 60 261. பொற்காக 262. போசனகஸ்தூரி 263. மகாவல்லி
264. மங்கல்யம்
265, மங்கை 266. மதலை 267. மதில் 268. மதுக்குடி 269. மதுரவல்லி 270. மயிரை 271. மயிலம் 272. Loffg 273. மலையாளி 274. மறலி 275. மாடு 276. மாதவி 277. மகுபாகம் 278. மாமுனி 278, மால்தொடை 280. மீனுட்சி
I-7-90
கடுக்காய் கீழாநெல்லி மல்லிகை இந்துப்பு
நிலவேம்பு
இலவமரம் இலவம் பிசின் குப்பைமேனி பனை
கொள்ளு நாரத்தங்காய்
வில்வம்
சந்தனம் கற்ரு ழை கொன்றைமரம் இஞ்சி எலுமிச்சை வத்தாலைக்கொடி தக்கோலம் குப்பைமேனி மிளகு
மிளகு குங்குமப்பூ பொன் குருக்கத்தி LLUTJIrah LD நாயுருவிச்செடி துளசி பொன்னங்காணி
இருப்பவர்களைக் கண்டு நிலமாகிய பூமித்தாய்,
உழவு (முயற்சிகள் எல்லாவற்றிலும் சிறந்தது உழவுத்தொழில்)
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும்.
நாங்கள் வறியோம் என்று கூறிச் சோம்பேறிகளாய்
93)tř
களுடைய சோம்பலை இகழ்ந்து சிரிப்பாள்.
Farming The good goddess of the earth, that is mother earth laughs at those who are idle and Saying that they are poor and have nothing to eat.
ஆயுளை நீடிக்கும்

Page 3
I-7-90 மில்க்வை
அம்பை
அம்பா எனவும் பெயர் வழங்கும் இவள் காசிராச னின் புதல்வியர் மூவருள் மூத்தவள். மற்றிருவரும் அம்பிகை அம்பாலிகை எனப் பெயர்பெற்றவராவர்.
காசிராசன் அக்காலத்து வழக்கப்படி தன் குமாரத்தி யர் மூவரும் தமக்கு விருப்பமான மணளரைத் தெரிந்து எடுக்கும் சுயம்வரம் என்னும் விழாவை நடத்தினர்.
சுயம்வர விழாவில் நாட்டிலுள்ள அரச குமாரர்கள் வீரர்கள் அங்குச்சென்று தங்கள் வீர பராக்கிரமங்களைக் காண்பித்து நின்ற வேளையில், சந்தன மகாராசாவின் மூத்த மைந்தன் வீடுமர் என்பார் தனது தம்பி விசித்திர வீரியனுக்கு மணஞ்செய்து வைப்பதற்காக அங்குச் சென்ருர்,
அங்கே கூடியிருந்த வீரர்களை வென்று, பெண்கள் மூவரையும் தேரிலேற்றித் தன்னகரம் சென்ருர், அவர் கள் மூவரையும் விசித்திரவீரியனுக்குத் திருமணஞ் செய்வ தற்கு விழாவெடுத்த வேளையில் அம்பை, தான் சாளுக்கிய நாட்டு மன்னனை மனத்தால் மணந்துகொண்டதாகக் கூறினள்.
அவள் பேச்சைக் கேட்டதும் சத்தியந் தவருத வீடுமர் அவளைப் பாதுகாப்பாகத் தேரிலேற்றிச் சாளுக்கிய நாட்டுக்கு அனுப்பினர். அம்பை சாளுக்கிய மன்னனிடம் போனதும் அவன் கோபித்து, "வேருெருவர் வென்று கொண்டுபோன உன்ளை நான் மணஞ்செய்து கொள்ள மாட்டேன்’ என் முன்,
அதைக் கேட்டதும் அம்பை ஆறமுடியாத துயரங் கொண்டு தன்னை அவமானப்படுத்திய வீடுமரிடம் மீண்டு தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கேட் டாள். அவர் மறுக்கவே, மனமுடைந்த அம்பை தீயில் இறங்கி உயிர் நீத்தாள். அவள் தன் பழைய நினைப்போடு துருபதராசன் பிள்ளையாசப் பிறந்து சிகண்டி என்று பெயர்பெற்ருள். பாரதப் போரில் பத்தாம் நாளில் சிகண்டி அருச்சுனன் தேரிலேறி யுத்தம்செய்து வீடுமர் மீது அம்புவிட்டுக் கொன்று பழிவாங்கிக்கொண்டாள்.
வைணவக் கோட்பாட்டில் சில ஆதார விடயங்கள்
வைணவ தந்திரங்கள் ஐந்துவிதமான வடிவங்களைப் பற்றிக் கூறுகின்றன. பரம் என்பது பகவானின் கடந்த நிலையைக் குறிப்பது. அது ஊர், பெயர், குணம், குறி
女 யோகாப்பியாசத்தால்
 

1ற் செய்தி 3
முதலியவற்றைக் கடந்த நிலை. வியூகம் என்பது எல்லா வற்றின் கூட்டமைப்பான வடிவம். வில்வம் பகவானின் அவதார வடிவத்தின் பெயர். அந்தர்யாமித்துவம் இது பகவானின் உள்ளார்ந்த வடிவத்தைக் குறிப்பது. அர்ச்சை பகவானின் விக்கிரக வடிவம் என்பது பொருள்.
பகவானின் ஆறுகுணங்கள்
பகவானின் தெய்விகக் குணங்கள் ஆறு. அவை ஞானம், ஐசுவரியம், சக்தி, பலம், வீரியம், தேஜஸ் என் பனவாம். இவற்றை முறையே அறிவு தலைவனின் இயல்பு. ஆற்றல், வலிமை, ஆண்மை, ஒளிமயம் என விளக்குவர்.
பரபத்தி என்னும் பிரபத்தி
இறைவனின் விருப்பம் எதுவோ, அதனையே தன் விருப்பமாகக் கொள்ளுதல். இறைவன் விரும்பாதவற் றைத் தாமும் விரும்பாதிருத்தல், இறைவன் மாத்திரமே உண்மையான பாதுகாப்பு எனக்கருதியிருத்தல், தனது வாழ்க்கையை இறைபணிக்காகவே முற்ருக அர்ப்பணித்து இருத்தல், அனைத்தும் இறைவன் செயல் எனவே முற்றுக நம்பி இருத்தல்.
பொலநறுவைத் திருக்கோயில்கள்
இலங்கையின் பழைய தலைநகரங்களுள் ஒன்ரு ய பொலநறுவை சோழப் பெருமன்னர்களால் புகழ் பெற் றது. வளம் பெற்றது, சிவமயமானது. அங்கே ஏழு சிவாலயங்கள் இருந்தன. அவற்றுள் மூன்று கருங்கல்லா லும் நான்கு செங்கற்களாலும் அமைந்தவை. அவை யாவும் அமைப்பில் ஐம்பது அடிக்கும் அதிகமானவை. ஒன்று 130 அடி நீளமானது. இக்கோயில்களைச் சூழ சுற்றுப்புற ஆலயங்கள் பல இருந்தன. அவை ஏழு கோயில்களுக்கும் முறையே நான்கு, இரண்டு, இரண்டு, மூன்று, ஏழு, நான்கு இரண்டு என்னும் எண்ணிக்கை யில் எல்லாமாக இருபத்து நான்கென நிலவின.
நிகரிலி சோழவள நாட்டு புலைநரியான ஜனனத புரத்து என்றும் ஜனநாத மங்களத்து எனவும் இத்திருக் கோயிலிருப்பிடங்கள் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற் றுள்ளன. பதினுெராம் நூற்றண்டின் ஆரம்ப ஆண்டு களிலேயே இராசராசப்பெருவேந்தன் பொலநறுவையைச் சிவமயமாக்கிஞன் என்பது வரலாற்றுறுதியான உண்மை
uut (öb.
காற்று உயிரினங்கள் வாழ்வதற்கு முதலில் அவசியமாக வேண்டியது காற்று. காற்றில்லாமல் எவ்வுயிரும் வாழ முடியாது. நீரின்றி ஒருநாள் இருநாள்கள் வாழலாம். உணவின்றி ஒருவாரம் வாழலாம். ஆனல் காற்றின்றிச் சில நிமிட நேரங்கள் தவிர வாழமுடியாது. காற்றினுல் மாத்திரம் உயிர் வாழ்ந்த ஒருவர் பவ ஹாரி எனப்பெயர் பெற்றிருந்தார்.
காற்றுக்கு வாயு என்றும் பெயர். அது நம்மைச் சூழவுள்ளது. அதுவொன்றே நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது. காற்று நமது மூக்கு வழியாக உடம்புள் (தொடர்ச்சி 4ம் பக்கம் பார்க்க)
உள்ளம் தூய்மையாகும் 大

Page 4
மில்கவை.
யார் இந்த இராமநாதன்?
புலவர்கள் போற்றிய புரவலராயும், நாட்டவர் போற்றிய நலன்புரியாளராயும், தேசீய வீரராயும் ஐம்ப தீ7ண்டுகள் சட்டசபையை அலங்கரித்து, பெண்களுக் கொரு கல்லூரியையும், ஆண்களுக்கொரு கல்லூரியை யும் அமைத்ததோடு, கொழும்பில் பொன்னம்பலவா ணேசுவரம் என்னும் பெருங்கோயிலையும் கருங்கற் கொண்டு அமைத்து, இலங்கையெங்கும் சைவப்பாட சாலைகளை அமைப்பதற்காகச் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தையும் தாபித்து, இலங்கையெங்கும் சைவப் பிர சங்கம் செய்தமையோடு அமையாது தமிழ்நாட்டிலும் பலமுறை பேசியும் தலைமை தாங்கியும் சிறப்புப்பெற்று, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இலங்கை யின் பெருமையை அறியச்செய்து, பல நூல்களை எழுதியும் நூல்களுக்கு விளக்கங்கள் வியாக்கியானங்கள் செய்தும்; மொழிப்பணி, சமயப்பணி, சமூகப்பணி, நாட்டுப்பணி புரிந்த நல்லவராய் எண்பதாண்டுகள் வாழ்ந்து பரமேஸ் வரப் பெருமான் திருவடிகளைச் சேர்ந்த மனிதருட் தலையா ஒருமனிதன் இராமநாதன் என்க.
பெற்றேர் பெருமை
தாய்வழி, தந்தைவழி, இருமரபுந்துளய பெருமை பெற் றவர்களின் மைந்தர் அவர். தாயார் பருத்தித் துறையைச் சேர்ந்த கெருடாவில் ஆறுமுகத்தா பிள்ளை குமாரசுவாமி என்னும் பெரியமுதலியாரின் பெண் செல்லாச்சி என்ப வராவர். தந்தையார் மானிப்பாய் நகரைச் சேர்ந்த ஆனைக்கோட்டையூரின் தருமவான்கள் எனப்டெயர்பெற்ற குடும்பத்து அருணுசலம் பொன்னம்பலம் என்னும் முத லியாரும் காசாளருமான பெரியாராவர்.
தோற்றம் பொன்னம்பலமுதலியார் செல்லாச்சி அம்மையார் செய்தவப்பயணுக 1849ஆம் ஆண்டில் ஒராண்குழந்தை
t யோகாப்பியாசம் Կov։
 

ற் செயதி I-7-90
பிறந்ததும் தாய்வழிப் பாட்டனராய குமாரசாமி முத லியாரின் பெயரை இட்டு மகிழ்ந்தனர். அடுத்து தமிழ் நாட்டு இராமேஸ்வரத்துப் பெருமானை வழிபட்டு வரம் பெற்றுப்பெற்ற குழந்தை 1851இல் தோன்றியதும், இராமநாதப் பெருமான் பெயரையே இட்டு வழங்கி மகிழ்ந்தனர். அடுத்து 1853ஆம் ஆண்டில் மூன்றம் குழந்தை பிறந்ததும், தகப்பன் வழிப்பாட்டன் பெயராய அருணுசலம் என இட்டு மகிழ்ந்தனர். மைந்தர் மூவரும் மும்மணிகளென வளர்ந்து வந்தனர்.
(3 ஆம் பக்கத் தொடர்ச்சி)
காற்று . . . புகுந்து நுரையீரலையடைந்து அங்கே இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. காற்று இல்லாவிட்டால் நெருப்பு எரியாது.
காற்றை வீட்டுக்குள் வரவேற்பதற்கே நாம் யன்னல் கள் அமைக்கிருேம். நல்லகாற்றைச் சுவாசிக்கவே பூஞ் சோலை கடற்கரை, ஆற்றோரம், மலையடிவாரம் போகி றோம். நல்ல காற்று நமக்குத் தேவை என்று கருதியே காற்று வாங்கப் போகிருேம், காற்று இலவசமாகவே இடைக்கிறது. an நிலம், நீர், தீ, காற்று ஆகாயம் என்பன பஞ்ச பூதங்கள் என வழங்கும். இவை அமைவாக எங்கள் உடம்பில் உள்ளன. காற்றுத்தன்மை அதிகம் பெற்றவர் கள் இருவர். ஒருவர் இராமாயணப் புகழ் பெற்ற அநுமான். மற்றவர் பாரதப்புகழ் பெற்ற வீமன்.
காற்றுப் பலமாக வீசினல் அது நீரிறைப்பதற்குக் கருவியை அசைக்கும். அதனுல் அசையும் கருவி காற்ருடி எனப்பெயர் பெறும். நீங்கள் பட்டம் ஏற்றுவதற்கும் காற்று உதவுகிறது. கடலில் பலவிதமான கப்பல்களுள் பாய்க்கப்பல்கள் ஒருவிதம். பாய்க்கப்பல் விரைவதற்குக் காற்று சக்தியாக உள்ளது.
காற்று வீசும் போது சுகம் உண்டாகிறது. காற்று வீசாத போது தாம் விசிறி கொண்டு விசுக்குகின்ருேம். காற்று தரையிலிருந்து கடல்நோக்கி வீசும்போது தரைக் காற்று எனவும், கடலிலிருந்து தரையை நோக்கி வீசும் போது கடற்காற்று என்றும் பெயர் பெறும். தெற்கி லிருந்து வீசும் மென்மையான காற்றே தென்றல் எனப் பெயர் பெறுகிறது.
சிலசமயம் காற்று மிக வேகமாக வீசும். அது குரு வளி எனப் பெறும். அது பெரிய அழிவுகளையும் செய் துவிடுவதுண்டு.
Learn Your English
Three parts of speech at a glance
Noun Verb. Adjective 1. Courage Encourage Couragious 2. Timidity intimidate Timid 3. Largess Enlarge Large 4. Acceptance Accept Acceptable 5. Deception Deceive Deceptive 6. Obedience Obey Obedient 7. Example Exemplify Exemplary
னடக்கத்திற்கு உதவும் 女

Page 5
I-7-90 மில்க்ை
Il Meaning of words
1. Arresting - drawing the attention 2. Forlorn - desolate
Insignificant -- unimportant Intimacy - friendliness . Tranquility - peacefulness
Virility - masculine strength
Words with Different meanings
Disinterested, Uninterested Affection, Affectation Imaginary, Imaginative Intelligent, Intelligible ... Complimentary, Complementary 1. The rich man gave some money in a disinter rested effort to do some good. The pupils were bored and uninterested by what I had to say. 2. My affection for the woman was gradually turning into love. The pavement trader delighted in all types of affectation. 3. The imaginary story made the children laugh.
Some boys are highly imaginative. 4. The boy was able industrious and intelligent. The argument was so confused and not intelligible. 5. The book seller gave me a Complimentary
calendar. The two books are two halves the latter is com. plementary to the one before.
மாதகல் ஏரம்பு ஐயர் அவரிகள்
பிரிவரிய ஊசிதனைப் பின்தொடரும் நூல்போல பூரீல பூரீ ஆறுமுக நாவலர் அவர்களைப் பின்தொடர்ந்து, அவர்காலத்திலும் அவருக்குப் பின்னரும் சைவம் வளர்த் தவர்களுள் மாதகல் ஏரம்பு ஐயர் அவர்களும் ஒருவர். இவரின் முன்னேர்கள் தமிழ்நாட்டின் திருப்பூவணப்பதி யைச் சேர்ந்தவர்கள். இவர் நாவலர் அவர்களிடத்தும் படித்தவர். சைவ சமயத்துத் தீட்சை வகைகள் யாவும் பெற்றுத் திகழ்ந்ததோடு, நிர்வாண தீட்சையும் பெற்றுப் பெரும் பக்குவசாலியாயிருந்தவர், சித்தாந்தம் வல்லவர்.
அன்று கந்தமடம் வைரவநாதர் சின்னத்தம்பியார் சுருட்டு முதலாளியாயிருந்து பெருந்தருமங்கள் செய்து வந்த காலத்தில், அவர் தம்பியார் ஆறுமுகத்தார் என் பவர் நீராவியடியில் வாழ்ந்தவாறே மிகுசைவத்துறை விளங்கப் பணிசெய்துகொண்டு நாவலர் அவர்களைப் பின்தொடர்ந்து, ‘எது எமைப் பணிகொள்ளுமாறு, அது கேட்போம்" என்று கேட்டுப் பணிபுரிந்துவந்தார். முகத்தாரின் வேண்டுகோளின்படி கந்தபுராணத்தைப் பதிப்பதற்கு நாவலர் அவர்கள் பரிசோதனஞ் செய்து கொடுப்ப முகத்தார் அதனை இரண்டாம் பதிப்பாக 1883ம் ஆண்டில் நீராவியடியில் தாம் நிறுவிய சைவப்பிர காச யந்திர சாலையில் அச்சேற்றி வெளியிட்டவர். முகத்
女 யோகத்தால் தொலைவி

ქ5
வற் செய்தி
தாரின் வேண்டுகோளுக்கிணங்கியே ஏரம்பு ஐயர் அவர் கள் சேதுபுராணத்தை உரை நடையில் எழுதியவர். அன்றி சைவப்பிரசாரமும் செய்து, சைவச் சூழலைப் பாதுகாத்து வந்தவர்.
அறிந்து கொள்ளுங்கள் 1. உலகத்தில் உயரமான மனிதன்
ஒன்பது அடி மூன்றரை அங்குலம் உயரம் வளர்ந்த ஒல்லாந்து தேசத்து யான்வான் அல்பேட் அதிசய மனிதனுவர். 2. அதிசயமான தீவு
கிரேக்க தீவுகளுள் சந்தோறின் என்பதும் ஒன்று. அங்கே வீடுகளிற் பார்க்கத் தேவாலயங்கள் அதிகம். நீரிற் பார்க்கத் திராட்சை ரசம் அதிகம். மனிதரிற்பார்க்க மந்திகள் அதிகம். 3. மிகநீளமான விடப்பாம்பு
நாகராசா எனப் பெயர்பெற்ற இனத்து விடப்பாம்பு ஒன்று பதினெட்டு அடி ஒன்பது அங்குல நீளமானதாம். அது மலேசியாவில் பிடிக்கப்பட்டதாம். 4. மகிழ்ச்சி
ஆனந்தம் ஆனந்தம் என்று கூறி மகிழ்ச்சியாய் இருத்தல், மனிதர் பருகும் பாணவகைகளுள் உயர்ந்த பானமாகும். இது மனத்தால் பருகும் மகத்தான பானம். 5. அமைதி
அமைதி என்பது படைகளால், வலோற்காரத்தால் வருவதல்ல. அது அறிவாலும் ஞானத்தாலும் மெளனத் தாலும் எங்கும் நிலவுவதாகும். அது மனிதராலேயே உண்டாக்கப் பெறல்வேண்டும். 6. இயற்கைக்காட்சி
ஓவியக்காரன், சிற்பி, கட்டடக் கலைஞன், கவிஞன் எனவுள்ளவர்கள் எல்லோரும் இயற்கையின் உந்துதலி னலேயே உயர்வடைகிறர்கள் என்று பெரிய விஞ்ஞானி இராமன் கூறினர். 7. எலிகளின் உபத்திரவம்
தென்கிழக்காசிய நாடுகளில் ஆண்டுதோறுத் சரா சரியாக 3,30,00000 தொன் தானியங்களை எலிகளின் உபத்திரவத்தால் இழக்கின்றன. இந்நாடுகளில் 200 வகையான எலிகள் இருக்கின்றனவாம். உலகில் எல்லா மாக 1700 இனங்கள் உள்ளன என்பர் சுண்டெலி, (தொடர்ச்சி 6 ஆம் பக்கம் பார்க்க)
ல் உள்ளதை உணரலாம் 女

Page 6
ó மில்க்வை
அறிந்து . . .
(5 ஆம் பக்கத் தொடர்ச்சி) அகழான், எலி, பெருச்சாளி என்றெல்லாம் நாமறிந்த தவை ஒருசில. ஒர் எலி ஒராண்டில் 20 இருத்தல் உணவு உண்டு 25000 பிழுக்கை கழிக்குமாம். பெண் ணெலி ஆண்டில் ஆறுமுறை சராசரிபத்துக் குட்டிகளை ஈனுமாம். பூனை என்ன செய்யும்? பொறி என்ன, செய்யும்? நஞ்சு என்ன செய்யும்?
விரதங்கள்
திருச்சிற்றம்பலம் விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினல் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
திருதாவுக்கரசு சுவாமிகளின் அருமையான தேவாரம் இது. பாலில் வியாபித்திருக்கும் நெய்யை நாம் முதலில் காண்பதில்லை. விறகில் வியாபித்திருக்கும் நெருப்பை நாம் முதலிற் காண்பதில்லை. ஆனல் பாலைக்காய்ச்சித் தயிராக்கிக் கடையும்போது வெண்ணெய் திரளுகிறது. விறகைக் கடையும்போது தீ வெளிப்படுகிறது.
எங்கும் வியாபித்திருக்கும் இறைவனைக் கண்ணுற் காணமுடியாதவருக்கு, அவரைக் காண்பதற்குப் பெரி யார்கள் வழிவகுத்துள்ளார்கள். அவ்வழியே சென்ருல் இறைவனைக் காண்பதோடு, எல்லையில்லாததும் உவமை யில்லதாததுமான ஆனந்தப் பேற்றையும் அடையலாம். இறைவன் அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூவகை நிலையில் உள்ளார். அருவநிலையில் அவர் சிவம், சக்தி, நாதம், விந்து எனப் பெயர் பெறுவர். அருவுரு வமாகவுள்ளபோது சதாசிவம் எனப்பெயர் பெறுவர். அவர் உருவமாய் இருக்குப் போது மகேசன், உருத்திரன் மால், அயன் எனப் பெயர் பெறுவர்.
சைவசமயத்திற் கடவுளை அடைவதற்குச் சொல்லப் பட்ட நெறிகள் நான்கு. அவை சரியை, கிரியை, யோகம் ஞானம் என்பனவாம். இவற்றை நாற்பாதங்கள் என வும் கூறுவர். இவற்றுள் சரியை கிரியை யோகம் என் னும் மூன்றும் ஞானத்திற்குவழி. ஞானம் ஒன்றே முத் திக்கு வழி. முத்தி என்பது வீட்டின்பமாகிய மோட்சம். அது பேரின்பம் எனவும் வழங்குவது. வீட்டின்பமே உயிர்கள் அடையும் முடிந்த பயன். இந்தச்சரீரம் நமக்குக்
YAY யோகம் வாழ்வில் அப்
 

ற் செயதி i-7-90
கிடைத்தது, நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்.
வீடு, முத்தி, மோட்சம் என்ருல் விடுதலை என்பது பொருள். இவ்விடுதலையாவது பாசப்பிணிப்பிலிருந்து பெறும் விடுதலையாகும். ஆசைகள் பற்றுகள் பாசங்கள் பந்தங்கள் ஆன்மாவுக்குத் தளையாகவுள்ளன. அற்றது பற்றெனில் உற்றது வீடு என்பது ஆன்ருேர் வாக்கு பாசங்களினின்றும் விடுபடுவதற்குப் பல சாதனங்கள் செய்யவேண்டியுள்ளன. இவை தெய்வம் என்ப்தோ சித்தம் உண்டாகிச் செய்வனவாம். இவை மிக மேலான சாதனங்களானமையால் மெய்கண்டதேவர் இவற்றை இறப்பில் தவம் என்று இயம்பியுள்ளார். மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல, இனமலர்கையிற் கொண்டங்கு இச்சித்த தெய்வம் போற்றி எனவரும் அருமையான பாடல் அருணந்தி தேவர் அருளிய விளக் மாகும். இறைவனை நோக்கிச் செய்யும் புண்ணியங். களே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாம்
புண்ணியங்கள் தீட்சை
சரியை கிரியை, யோகமாகிய புண்ணியங்களைச் செய்வதற்கு நம்மைத் தகுதியுள்ளவராக்குவது தீட்சை, அது முதலில் பெறும்போது சமயதீட்சை எனப்படும். சமயதீட்சை பெற்றவர் சரியை" என்னும் புண்ணியங்களைச் செய்வதற்குத் தகுதியுள்ளவராவர்.
சமய தீட்சையின் பின் சரியையாகிய தொண்டுகளைச் செய்தவர் இரண்டாந் தீட்சையாகிய விசேடதீட்சை பெற்றுக் கிரியை யோகம் ஆகிய புண்ணியங்களும் செய்வதற்குத் தகுதியுள்ளவராவர்.
இங்ங்ணம் சமயதீட்சை, விசேடதீட்சை பெற்றுச் சரியை கிரியை, யோகம் ஆகிய மூவகைப் புண்ணியங் களையும் செய்துவந்தவர், நிர்வாண தீட்சை என்னும் மூன்ருவது தீட்சையும் பெற்று ஞானவழியில் ஒழுகலாம் என்பர். மூன்ரும் தீட்சைக்கு மேல் உள்ள நான்காம் தீட்சை ஆசாரியாபிடேகம் எனப்படும். அது ஆசாரியரா வோருக்கு உரிய தீட்சையாகும். அதனைப் பெற்றவரே பிறர்க்கு தீட்சை வைக்கும் குருவாய் இருப்பதற்குத் தகுதியுடையவராவார். தீட்சை என்பது அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைத் தருவது என்று பொருள் தருவ தாகும்.
அவளும்
*வள்ளுவர்”
யார் எதைத்தான் சொன்னபோதிலும் காதல் என் பது ஒரு நோய் தான். அதுவும் பருவமறிந்து பக்குவ மறிந்து வருவது. காமாலை என்னும் நோய் வந்தவனுக்கு எல்லாம் மஞ்சள் மயமாகத் தோன்றுமாப்போல், காதல் (தொடர்ச்சி 7 ஆம் பக்கம் பார்க்க)
பியாசத்துக்கே நல்லது 寅

Page 7
1-7-90 மில்க்வைற்
h
அவனும் அவளும் . . . (6 ஆம் பக்கத் தொடர்ச்சி) நோய் வந்தவனுக்கு எங்கும் காதலி மயமாகத் தோன் றும். "எங்கெங்கே நோக்கினும் அங்கங்கே தோன்றும்"
அவன் கண்ட அவளுக்கும் இந்த நோய் வந்தபின் மலர்களாலான உடம்பும், மதியாலான முகமும், யாழா லான குரலும் இன்ன பிறவும் முன்னமைந்த வண்ண மில்லாமல் மாறிவிட்டன. ஆயினும் அவளைக் கண்ட அவனுக்கு அவள் தொட்டால் மலர், நுகர்ந்தால் சந்த னம், சுவைத்தால் தேன் - இந்த அமைவுகளை எல்லாம் அவள் எங்கிருந்து பெற்ருள்? தாய்மை நிலை அடைந்த வளுக்கு மார்புகனத்துப் பால் இடம் பெற்றமைதல் போல அவள் காதல் வயப்படும்போது மேலும் பெண் னியல்புகளைப் பெறுகிருள்.
அவள் நேற்றுத் துணியைத் தலைக்கு அணிந்து மாலை
யைக் அரையில் அணிந்தவள். இன்று நாணம் முதலிய வற்றை அறிந்துவிட்டாள். அவள் நேற்று திணைப்புனத் தில் கிளிகலைத்தவள். இன்று கிளிமொழியளாகி விட் டாள். அவள் இவற்றையெல்லாம் எங்கிருந்து பெற்ருள்? அவளிடம் ஒரு தீத்தன்மை இருந்தது. அது அவளை “நெருங்கினல் சுடாது, தூரவிலகினல் சுடும். இத்தீயை அவள் எங்கே பெற்ருள்? பெட்டை என உலாவியவள் பெண்ணினல்லாளாகிப் பீடுபெற நின்றவள், தன் நலத் தையெல்லாம் அவனிடம் கொடுத்துவிட்டாள். அவன் கவர்ந்து கொண்ட கள்வணுகிவிட்டான். அதனுல் அவ ளிடம் இப்போது அவன் நினைவாக மனநோயும் உடல் நோயும் உண்டாயின. அவன் அவளிடமிருந்து சாயலை யும் நாணத்தையும் பெற்றுக்கொண்டான். சாயலும் நாணமும் பறிமுதலாக அவ்விடத்தில் நோயும் பசலையும் வந்துள்ளன.
பசலை என்பது பொன்மயமான தேமல், அது படரு மிடம் மார்பகத்து மலைபோலமைந்த இடம். அது கொண் றைப் பூபோல இருக்கும். பொன்பூச்சொரியும் கொன்றை என்றும், கொன்றைகளும் கொங்கைகளும் பொன்சொரி யும் என்றும் புலவர்கள் பாடுவர். இவள் ஊரன்மகள். இவள் பாணர் நரம்பினும் இன் கிளவியாளே என்பர் அகநாநூறுடையார். **ஆணிப்பொன்மேனி அதிற்கிடக் கும் நல்லொளியை காணிக்கை நீ வைத்தால் காப்பரசர் வாராரோ' என்பர் பாரதிதா தன். 'சொல்லை இதழ் அணைக்கும் சுகமோ என அணைக்கும்?’ என்று திருவை யாற்றுப் புலவர் பாடியதும் இச்சுகத்தையே தான்.
'வானத்து மீனும் வையத்து மணலும் இருக்கிற வரையில் என் காதல் மாழுது, நான் உன்னைக் கைவிட மாட்டேன் என் கண்ணே" என்று கூறிய அவன், அவ ளுடைய நலனை உண்டான் என்பது இலக்கியம். இது படைப்புக்காலம் முதல் இன்றுவரை நடைபெறும் தொடர் நாடகமுமாம்.
அவன் கண்ட அவளிடம் அவன் நலனுண்டமை நனவில் மாத்திரமல்ல. அவன் நினைவாகவே இருந்த, கிடந்த அவள் கனவிலேயும் அவன் வந்து அவள் நலனைப் பருகியே போனன். முன்னர் கனவில் வந்தவன் பின் கனவிலேயும் வந்து உண்டு போகவே கள்வனுயிருந்த
* யோகம் வாழ்வில் அப்

செய்தி 7
அவன் கொடியனயும் மாறிஞன். ஆனல் அவள் அவ்னைக் கொடியன் என்னது உயர்திணை ஆண்பால் ஒருமையில் கூறியபோதிலும் மரியாதைப் பன்மையில் கொடியர் என்றே கூறினுள்.
சில நாள்கள் வராதிருந்து சில நாள்கள் பல நாள் களாக நீடிக்க அவளால் பிரிவுத்துயரத்தைப் பொறுத் துக்கொள்ளமுடியாத நிலையில் அவனைக் கனவிலே கண்டு மகிழ்ந்தாள். அந்தக் கனவு அவளுக்குத் தூதுபோல வத் ததாம். கனவில் வந்த அவன் நனவிலே வருவான் என்று தேறிய அவள், அவன் வருவான் என வரவுரைத்த கனவை வாழ்த்தி, அதற்கு எவ்வகையில் விருந்துவைத்து உபசரிக்கலாம் என்று நினைத்தாளாம். அந்த நினைவையே திருவள்ளுவரும் நயந்து பாடியுள்ளார். காதலரிடமிருந்து அாது கொண்டுவந்த கனவினுக்கு நான் என்ன விருந்து செய்வேன் என்று தலைவி தோழிக்குக் கூறினுள்.
"காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து".
சமூகக்கல்வி புவியின் தோற்றம்
9) (35 fusiT
சூரியன் காலையில் கிழக்குத் திசையில் தோன்றி மாலையில் மேற்குத் திசையில் மறைகின்றது. இங்ங்ணம் சூரியன் தோன்றி மறைவதைக் கொண்டு முற்காலத்த வர் அது பூமியைச் சுற்றிவருகின்றது என்று கருதினர் கள். பின்னர் கொப்பர்னிக்கஸ், கலிலியோ, நியூட்டன், கெப்லர் முதலாள விஞ்ஞானிகள் சூரியன் ஓரிடத்தில் இருக்க அதனைப்பூமியே சுற்றி வருகின்றது என்று கண் Lntrisier.
வானவீதியில் பூமியைப் போல ஒன்பது கிரகங்களும் அக்கிரகங்களைச் சேர்ந்த 31 உபகிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. சந்திரன் ஓர் உபகிரகம். அது பூமி யாகிய கிரகத்தைச் சேர்ந்த உபகிரகமாகும். இங்ங்னமே வேறு கிரகங்களுக்கும் உபகிரகங்கள் உள்ளன.
கிரகங்கள் யாவும் சூரியனில் இருந்தே"தோன்றின. அவை சூரியனில் இருந்தே ஒளியைப் பெறுகின்றன. அவை சூரியனை விட்டு விலகாமல் அந்தரத்தில் ஆகாய வீதியில் அற்புதமாய் வலம் வருகின்றன. கிரகங்களும் உபகிரகங்களும் சூரியனைவிட்டு விலகாமல் அதனைச் சுற்றி வலம் வருவதற்குக் காரணம் சூரியனில் உள்ள இழுப்புச் சக்தியாகும்.
சூரியன் பூமியைப் போன்ற திடமான பொருளன்று அது என்றும் எரிந்து கொண்டிருக்கும் வாயுக்களால் ஆன ஒர் உருண்டை. அவ்வாயுக்களில் நீரகம் எனப்படும் ஹைட்ருெ?ஜின் 80 வீதம் உள்ளது. எஞ்சிய ஹீலியம் எனப்படும் இன்னெரு வாயு 18 வீதம் உள்ளது. எஞ்சிய இரண்டு வீதம் வேறு வாயுக்களால் ஆனது.
சூரியனில் உள்ள ஹைட்ருெஜின் வாயு எரியும் போது ஹீலியமாக மாறுகிறது. ஒவ்வொரு செக்கன் (தொடர்ச்சி 8 ஆம் பக்கம் பார்க்க)
வியாசத்துக்கே நல்லது *

Page 8
8 மில்க்வைற்
சமூகக்கல்வி . . . (7 ஆம் பக்கத் தொடரிச்சி)
பொழுதிலும் 56 கோடியே 40 லட்சம் தொன் நிறை யுள்ள ஹைட்ருெயின் எரிந்து 56 கோடி தொன் ஹீலி யம் உண்டாகிறது. அதேவேனேயில் எஞ்சிய 40 லட்சம் தொன் ஹைட்ருெஜின் வாயு ஆற்றலாக மாறிச் சூரி யனைச் சூழ ஒளியாகவும் வெப்பமாகவும் மின்னலையாக வும் வீசப்படுகின்றது.
சூரியவொளி வெண்ணிறமாகத் தோன்றுகிறது. ஆணுல் அதில் ஏழுநிறங்கள் பொருந்தியுள்ளன. அவ்வேழு நிறங்களையும் வானவில்லில் நாம் காண்கிருேம், அன்றி முப்பட்டைக் கண்ணுடி மூலம் பிரதிபலித்தும் காணலாம். அவை UIBGIOR என்னும் ஒழுங்கில் உள்ளன. அவ் வேழு நிறங்களை ஏழு குதிரைகள் என முற்காலத்தவர் கூறினர்கள்.
சூரியன் எமக்கு வெப்பத்தையும் ஒளியையுந் தருகின் றது. சூரியவொளி இல்லாவிட்டால் நாம் இவ்வுலகில் வாழமுடியாது. புல் பூண்டுகள் உண்டாகி வளரமாட்டா. காய் கனிந்து பழமாகமாட்டா. நம்மைச் சூழவுள்ள கடல் கள் யாவும் உறைந்துவிடும். காற்று நீராவியைச் சுமந்து மழையைத் தரமாட்டாது.
சூரியன் ஒரு பெரிய நட்சத்திரம். அதற்குச் சுய வொளியுண்டு. அதற்கு இழுப்புச் சக்தியுண்டு. அதன் இழுப்புச்சக்தியில்லாவிட்டால் பூமிதிசை தப்பி அந்தர வெளியில் வீசப்பட்டு விடும்.
சூரிய ஒளி பூமியை அடைவதற்கு எட்டு நிமிட மும் 18 செக்கனும் கழியும். ஒளி மிகவோகமாகப் பிர யாணஞ் செய்வது. அது ஒரு செக்சுனில் 1,86,000 மைல் துரம் பிரயாணஞ்செய்யும் தன்மையுள்ளது. சூரியவொளி பூமியை அடைய 498 செக்கன் நேரமாகிறபடியால் சூரியன் பூமியிலிருந்து 9, 29,48,000 மைல் தூரத்தில் உள்ளது என்று கணக்கிடுவார்கள்.
சூரியனுக்கு ஆதவன், இரவி, கதிரவன், தினகரன் பரிதி, வெய்யோன் என்பனவாகிய பல பெயர்கள் வழங் குகின்றன. முற்காலத்தவர் பலர் சூரியனைச் சூரியபக வான் என வழிபட்டனர். தானியங்களை விளேயச் செய்யும் சூரியனுக்கு நாம் பொங்கல் வைக்கிருேம். சூரியனும் அதனைச்சுற்றி வரும் கிரகங்களும் உபகிரகங்களும் உப கிரகங்களிலும் பார்க்கச் சிறிய குட்டிக் கிரகங்களும் விண்கற்களும் எல்லாஞ் சேர்ந்து சூரிய குடும்பம் எனப் பெயர் பெறும். இவற்றை அண்டம் எனவுங் கூறுவர்.
இந்த அண்டத்தின்மையமாக அமைந்தது. சூரியன் சூரியன் ஒரு பெரிய நட்சத்திரமாகும்.
கழிவுநீரில் காய்கறித் தோட்டம்
சமையலறையில் பாத்திரம் கழுவும் நீரும் குளியல் அறையில் இருந்து வெளியேறும் நீரும் இன்று ஊர்களில் சாக்கடையாகக் காட்சியளிக்கின்றன புத்தியுள்ள குடும்பப் பெண்கள் இவற்றைச் செல்வமாக மாற்றி விடலாம். இவை பாயும் இடங்களில் காய்கறித்தோட்டம் போட்டால் வீட்டிற்கு வேண்டிய கீரை, கத்தரி, வெண்டை, சீமைத்தக்காளி, கறிவேப்பிலே போன்ற உணவுப் பொருட்களை உண்டாக்கலாம். வாழை வைத்து விட்டால் இலை காய் பழம் என பல பெறலாம். பத்துக்கோடி ஜனத்தொகையுள்ள ஜப்பான் நாடு ஆயிரம் சிறுதீவுகளைக் கொண்டது. எரிமலைப் பிரதேசமும் கூட இடநெருக்கடி அதிகம். எனினும் ஜப்பானில் பெண்கள் வீட்டுப்புறத்தில் எந்த இடத்தையும் காலியாக விட்டு விடுவதில்லை. சட்டிகளில் உரமிட்டு தங்களுக்கு வேண்டி
யாழ்ப்பாணம் சாந்தி அச்சகத்தில் அச்சிட்டவர் திரு.
தொழிலகத்தின் சார்பாக வெளியிட்டவர் 'சிவ
கெளரவ ஆசிரியர் திரு.

} செய்தி I-7.90
பவற்றைத் தயார் செய்து கொள்கிறர்கள். அப்படியிருக்க வெளிகள் அதிகம் உள்ள நமது கிராமங்களில் நாம் ஏன் நமக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து தன்னிறைவு அடையக் கூடாது. சிந்தியுங்கள்.
நன்றி . சர்வோதயம்
பஞ்சத்தைக் கெஞ்சவைப்போம் பட்டினியை மண்டி இடச் செய்வோம் வீட்டில் பயிரிட்டுப் பயன் பெறுவோம் மற்றையோருக்கும் உதவுவோம் சிறந்த விளைச்சலுக்குச் சிக்கன விலையில்
வைத்தந்து பயிர்களைப் பாதுகாக்கும். மண்ணில் உள்ள கறையான், எறும்பு, பூச்சிகளை அழித்து விடுகிறது.
ஒரு கிலோ பைக்கெற்றுகளில் பைக்கெற் 01 ரூ. 5/ பைக்கெற் 10 ரூ. 40/-
பைக்கெற் பத்தும் மேலாகவும் வாங்குவோர்க்கு efu
“விவசாயக் கைநூல் அன்பளிப்பு”
மில்க்வைற் - யாழ்ப்பாணம்.
苏 நாகரத்தினம். யாழ்ப்பாணம் மில்க்வைற் சவர்க்காரத் நெறிப்புரவலர்' க. கனகராசா ஜே. பி. அவர்கள் க. சி. குலரத்தினம் 1-7-90