கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தோழன் 1993.02-03

Page 1
ད། ཐ་
* மலர் - 1 இதழ் - 4 + 1993 ெ
ఆపిల**--
 

பப்ரவரி - மார்ச் அன்பளிப்பு ரு, 10
التي

Page 2
WITH THE BEST CoM PLMENTS of
SELECTION JEWELLERS
22, Carat Gold Jewellers and Designers
NIZAM SHOPPING COMPLEX, No. 1 0/1, Yatinuvara Veediya, KANDY.
Tel: 08-23232 Ext. No. 1
i
Wff H BEST COMPA/MENTS FROM
| MAHIR ENTERPRISES
DEALERS IN HIGH CLASS JEWEL BOYES
418, KANDY ROAD, Beligammana,
MAVANELLA.

ஆசிரியர் : தோழன் 1993 ــــــــــ۔ பெப்
நிந்ததாசன் LD6) ri - 02 மாதாந்த கலை, 118, பிரதான வீதி, ! இலக்கிய இதழ் மாவனல்லை. இதழ் - 04
வினாடி நடை
தோழமையுள்ள விழிகளே!
இலக்கியம் இதயங்களைக் கோர்க்கும் கயிறு. இந்த இலக் கியங்களை ஈன்றெடுக்கும் எழுத்தாளனுடைய நாமத்தின் சத்தம் சரித்திரத்திற்குள் கண்சிமிட்டும். காலம் அவனைக் கைது செய்து விளக்கேற்றி விளம்பரப்படுத்தும். இலக்கியங்களில் படியும் தூசுக் களைத் தட்டி, பட்டைதீட்டி, ஒரு புதுப்பாதைக்குள் புகுந்து கொள்ளவும், வளர்ச்சியினை அழைத்து, தமிழ் இலக்கியங்கள் புகழ்ச்சிக்குள் புன்னகைக்கவும் ஆய்வுத்துறை அவசியமாகிற்து.
இந்த வகையில் க. கைலாசபதி அவர் க  ைள த் தமிழ் உலக மு ம், தமிழ் எழுத்தாளர்களும் மறதிக்கு இரையாக்க மாட்டார்கள். விமர்சனத்துறைக்கு பேருதவிபுரிந்த சாரதி அவர். துணிவு, நடு நிலைமை, ஆழமான அறிவு இம் மூ ன் றும் ஒரு விமர்சகனுக்கு இருக்க வேண்டிய முக்கண்கள். பக்கசார்பு நிறம் பூசியவர்கள் வீசி எறியப் பட்டார்கள். ஆனா ல், இப்போது விமர்சனத் துறையின் இருதயத்துக்குள் சுவாசிப்பவர்களான பேராசிரியர் கா. சிவத்தம்பி, கலாநிதி க. அருணாசலம், கலாநிதி துரை மனோகரன், K. S. சிவகுமாரன், கலாநிதி M. A. நுஃமான் போன்றவர்கள் ஆய்வுப் பயணத்தில் ஒய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக்காரணம் க. கைலாசபதி என்ற அந்தப் பெளர்ணமிதான்.
இந்த விடியல்களில் கைலாசபதி அவர்களின் தமிழ்ப் பணி பற்றிய நூல்கள் பிரசவிக்கப் படுகின்றன. உரைகள் உணர்வு களோடு ஊர்வலம் போகின்றன. இந்த முயற்சிகளுக்கு நட்சத் திரங்களை நாம் காணிக்கையாக்க வேண்டும். நாளைய உலகும் கைலாசபதி என்ற மகானின் மேன்மைக்கு ஒளி வழங்கவேண்டும்,

Page 3
Ο 2 தோழன்
பல்கலைக்கழக மாணவராக, விரிவுரையாளராக, பேராசிரி யராக, ஆய்வாளராக, இலக்கியவாதியாக, பத்திரிகை ஆசிரியராக அவரின் மூச்சுக்கள் தொடர்ந்தன. கைலாசபதியே..! நீ மரணிக்கவில்லை. நீ தேசித்த நெஞ்சங்கள் உன் பெயரை கல்லில் செதுக்கியுள்ளன.
வெள்ளாடை சுமக்கும் மல்லிகைகளான பாடசாலை மாண வர்களின் தமிழ் பாடப்புத்தகத்தில் கைலாசபதி அவர்கள் பற்றிய கட்டுரை இடம்பெறல் வேண்டுமென்பதே தோழனின் கொள்கை யாகும். (-勢一fi)
இலக்கியப் பயணம்
மணிப் புலவரின் இலக்கியப்பணி தொடர்கிறது. மருதூர் ஏ. மஜீத் அவர்களின், 'பன்னீர்க் கூதலும் சந்தனப் போர்வை யும் கவிதைத் தொகுதி மிக விரைவில் இலக்கிய நெஞ்சங்களின் கைகளில் கிடைக்கவிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். தோழ னும் ஆவலோடு காத்திருக்கிறான் "பன்னீர் வாசம் பரவுகிறது’ (சிறுகதைத் தொகுதி) " இஸ்லாத்தைப்பற்றி இதர மதத்தவர்கள் (தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர் ம ரு துர ர் ஏ. மஜீத் அவர்கள், தற்பொழுது பிரதிக்கல்விப் பணிப்பாளராகக் கடமை புரிகின்றார். தொடர்பு: - பழைய சந்தை வீதி, சாய்ந்தமருது-1. (கி. மா)
கொழுந்துப் பிரசுரம்
"இருளைத் துளாவும் மின்மினிகள் தலைப்பே வாசிக்கத் துடிக்கும் தாகத்தை ஏற்படுத்துகின்றது. இன ஒற்றுமைக்கு ஒரு வெளிச்சம் பளிச்சிடுகிறது. இந்தக் கவிதைத் தொகுப்பில் இரு கவிஞர்களின் உணர்வுகள் ஒரு தொகுப்பிற்குள் தவம் செய் கின்றன. பொகவந்தலாவை சோ. பூரீதரன், கலகெதர உனைஸ் ஆரிப் என்ற இளங் கவிதை உள்ளங்களின் புதையல்கள் விடிவுக் காகப் பாதை போடுகின்றன. சு. முரளிதரன் அணிந்துரை வழங்கி யுள்ளார். மலையக வெளியீட்டகத்தின் கொழுந்துப் பிரசுரம் ஈன்றுள்ள முதற் குழந்தை இது. அந்தனி ஜீவாவின் இந்த முயற்சி மேலும் தொடர என் கைதட்டல்கள். விலை - 15. 00 ரூபா
தொடர்ப்பு:- S. பூரீதரன், 32, மெயின் வீதி, பொகவந்தலாவை M. A. M. உனைஸ் , 261, றம்புக்கண வீதி, கலகெதர.

தோழன் 693
மல்லிகைப் பந்தலும் மலர்ந்த பூக்களும் - ஒரு மதிப்பீடு
ஈழத்து இலக்கியவுலகைப் பொறுத்தவரையில், ஆக்கபூர் வமான சிந்தனை வளமும், தரமான எழுத்தாற்றலும் நிரம் பியோர் நிறையவே உள்ளனர். ஆயினும், அவர்களது முக்கிய பிரச்சினையாக இருப்பது, பிரசுர களம் பற்றியதாகும். ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துக்கள் அவ்வப்போது அவரவரது தனி முயற்சிகளினாலும், இலக்கியத் துறை சார்ந்த சில அமைப்பு களாலும், சில நூல்வெளியீட்டு நிறுவனங்களினாலும், பத்திரிகை நிறுவன முயற்சிகளாலும், சிற்றேடுகள் சிலவற்றின் வெளியீட்டு ஆர்வத்தினாலும் இயன்றவரை பிரசுரம் பெற்றுவந்துள்ளன" ஈழத்து எழுத்தாளர் சிலரது ஆக்கங்கள் தமிழ் நாட்டிலும் பிரசுர வாய்ப்பைப் பெற்றுள்ளன. இவ்வகையில், மல்லிகையின் வெளி யீட்டுக்களமான, "மல்லிகைப்பந்தலின் முயற்சிகளும் பரவலாக வளர்ச்சிபெற்று வந்துள்ளன. ஏழு நூல்களை வெளியிட்டுள்ள இப்பந்தல் பற்றிய பரிசீலனை இன்றைய நிலையில் அவசிய மானதாகவே தோன்றுகின்றது.
கலாநிதி துரை. மனோகரன்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகளாக இதுவரை, “என்னில் விழும் நான்’ (1986), "மல்லிகைக் கவிதைகள்’’ (1987) என்ற இரு கவிதைத் தொகுதிகளும், "ஆகுதி" (1986), இரவின் ராகங் கள் (1987), "ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள’ (1989) ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகளும், அட்டைப்பட ஒவியங்கள் (1986), தூண்டில்(1988)எனும் இலக்கியத்துறையோடு தொடர்புடைய இரு நூல்களும் வெளிவந்துள்ளன. ஈழத்தின் எழுத்தையும், அதில் ஆழமாகவும், அகலமாகவும் சுவடு பதித்து வரும் பழைய - இளைய தலைமுறை எழுத்தாளர்களையும் இனங்காண்பதற்கு இவை ஒருவகையிற் துணையாகின்றன
பல்கலைக்கழக மாணவரான வாசுதேவனின் ‘என்னில் விழும் நான்” என்ற கவிதைத்தொகுதி, ஈழத்தின் இளைய தலைமுறைக் கவிஞரொருவரை இனங் காட்டுகின்றது. அண்மைக் காலத் திலேயே கவியுலகிற் புகுந்திருப்பினும், அவர் செல்லும் வழி இருட்டல்ல என்பதை அவரது கவிதைகள் உணர்த்தி நிற்கின்றன. நம்பிக்கையுணர்வும், முயற்சியும், பரந்த மனப்பாங்கும் அவரது ஆளுமையின் அடிப்படைகளாக விளங்குகின்றன. 'நான் . “ என்ற கவிதைமூலம் தம்மை அவர் இனங்காட்டியுள்ளார். ‘எழுந்து நட!

Page 4
04 தோழன்
பூமியும் சுருங்கியுன் | பின்னாலேயொரு புள்ளியாகி விடும் வரை ! எழுந்து நட!’ (விளக்கின் காயமே வெளிச்சம்) என்றும், “நான் விடியலுக்காகவே/ காத்துக் கொண்டிருக்கிறேன், நீ இ ன் னு ம் இரவாகவே இருந்து கொண்டிருக்கிறாயே!’’ (விடிவாயா?) என வும் கூறும்போது, அவரது நம்பிக்கையுணர்வின் விசாலிப்பினையே உணர முடிகின்றது. பொதுவாகவே வாசுதேவனின் கவிதைகள் அனைத்திலும் இவ்வுணர்வு இழையோடியிருப்பதை அவதானிக்க லாம். இதன் பிரதிபலிப்பாக, அவரது கவிதைநடையில் ஒருவகை மிடுக்கும், பெருமிதமும் சுவடு பதித்துள்ளன.
இவ் இளங்கவிஞரிடத்து காணத்தகுந்த இன்னோர் அம்சம் ஒரு கருவைத் தேர்ந்து, அதனைத் திறம்பட படைக்க முயலும் சாதுரியமாகும். இளங்கவிஞர் சில ரி ட த் துக் காணப்படுவது போன்ற அவசர கோலங்களும், ஒலங்களும், கோஷங்களும், பிறழ்வு பட்ட மனவெளிப்பாடுகளும். நோக்கற்ற போக்குகளும் வாசுதேவனிடத்துக் காணப்படாமையே, அவரது க வித் து வ ஆரோக்கியத்தைத் தெளிவாக இனங்காட்டுகின்றது.
புதுவை இரத்தினதுரை தமது ‘முதலுரையிற் பொருத்த மாகக் குறிப்பிட்டுள்ளமைப் போன்று, வாசுதேவனின் கவிதை களில் ஒர் ஒத்திசைவு இயல்பாகவே இடம் பெறு வ ைத க் காணலாம். ஈழத்தின் ஒருசில புதுக்கவிதையாளருக்கே வாய்த்த இத்தகைய பண்பமைதி, இக்கவிஞரின் கவிதைகளுக்கும் ஒருவகை தனித்துவத்தை அளித்துள்ளது. படி மங்க  ைள அளவறிந்து கையாளும் திறமையையும் இவர் வளர்த்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத் தொகுதியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கவிதை கள் பொதுவாகத் தமது தரத்தை உணர்த்துவதற்கு முனைந் துள்ளன. குறிப்பாக, ஜெர்மன் தெருக்களிலே, விளக்கின்காயமே வெளிச்சம், வெளியேறும் வேர்கள், தள்ளாடும் தாவணிகள், தோழமைக்குரிய போராளிக்கு, கல்லறைத் தொட்டில்கள், தீவின் திறப்புவிழாவும் பிறகும், என்னில் விழும் நான், வானமாய் தெரி யும் புள்ளிகள், அந்தி போன்ற கவிதைகள் வாசுதேவனை மிக நன்றாகவே இனங்காட்டுகின்றன. "எங்களுக்குச்/ சம்மதம்தான் சிங்கக் கொடியின் கீழ்/ சினேகமாய் இருக்கவும். ஆனால் தேசியக்கொடியில்/ ஒரேயொரு திருத்தம்/ செய்ய வேண்டும் - | சிங்கத்தின்/ கையில் இருக்கின்ற கத்தியை எடுக்க வேண்டும்!' என்ற கவிதை (விரலையல்ல நகத்தைத் தான்) சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. (அடுத்த இதழில் தொடரும்)

தோழன் 5
கண்சிமிட்டும் கடுகுகள் - கனன் ட
1. உலகில் அறியப்பட்டுள்ள மிகவும் சிறிய முலையூட்டி இனம்?
O.
l
2.
3.
14.
5.
கராம்பு(Clove)னது வர்த்தகப் பெறுமதி வாய்ந்த தாவரப்
பகுதியானது.
உலகின் மிக உயரமான நீர் வீழ்ச்ச்சியான ஏன்ஜல் (Angel)
அமைந்திருப்பது. உடையக்கூடிய பொருட்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கு நாம் உபயோகிக்கும் ரிஜிபோம் இனது இரசாயனப் பெயராவது . அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப். கனடியின்
பூர்வீகம்.
. Axis axis உயிரினயியற் பெயரால் பிரதிநிதித்துவப் படுத்தப்
படும் அங்கி.
. இலங்கையில் சூழல் மாசுறுதலில் (Pollution) மிக முக்கிய
இடத்தை வகிப்பது . . .
. 'HELVETIA" எனப் பெயர் குறிக்கப்பட்டுள்ள தபால் முத்
திரை.
. புவியின் சராசரி வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் இவ்வாறு
அழைக்கப்படும். . . மனிதனின் உடலில் முழு நிறையின் 75% அடங்கியிருக்கும் சேர்வையாது. . நீளம் பாய்தலில் தற்பொழுது உலகசாதனை நிலைநாட்டி யிருப்பவர். கஸ்தூரி (MUSK) ஒருவகை மானினத்திலிருந்து பெறப்படு கின்றது. பெறப்படும் மானின் உறுப்பு. உலகில் மிகப் பிரச்சினைக்குள்ளான சூழலை மாசுபடுத்தும் மிக முக்கிய நீர்க் களைகளிரண்டு. சந்திரனிலிருந்து பூமியை நோக்கும் போது, மனிதனின் வெற்றுக்கண்களினால் அவதானிக்கக் கூடியதும், மனிதனால் நிறுவப்பட்டதுமான ஓர் அமைப்பு . தற்பொழுது மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சைகளை மிக இலகுவாகவும், வெற்றிகரமாகவும் நிகழ்த்துவதற்காகப் பயன்படுத்தப்படும் கதிர் . . .
6. இலங்கையின் உள்நாட்டுக்குரிய தாவரம் .
கிரீன்லாந்துத்தீவு’ (GREENLAND) இந்த நாட்டுக்குரியது.

Page 5
06
8
19
2.
22.
23.
24.
25.
தோழன்
. மிளகாயின் உறைப்பிற்குக் கா ர ண மா ன இரசாயனப்
பொருள். * இறைசக்தியினால்தான் முதல் உயிரினம் படைக்கப்பட்டது' என்ற சிறப்புப்படைப்புக் கொள்கையை (Special Creation Theory) நவீன விஞ்ஞானிகள் ஏற்க மறுப்பதற்கான காரணம் உலகின் மிகப் பெரிய புல் நிலம். . இரப்பர் மரத்தின் பூர்வீகம். . மிகப் பெரிய முட்டை. . . . தற்பொழுது சிம்பாப்வே (Zimbabwe) என அழைக்கப்படும் நாடு முன்னர் இவ்வாறு அழைக்கப்பட்டது. . நாம் வாழும் சூரியக் குடும்பத்தை (Solar System) மிக அண்டி அமைந்துள்ள நட்சத்திரம் பூமியிலிருந்து அமைந் துள்ள தூரம். பூமியின் நிறைக்கேற்ப உயர் சதவீதத்தில் அடங்கியுள்ள
மூலகம். . . .
விடைகள் 24ம் பக்கத்தில்
மயான ராத்திரிகள்
மனிதம் வெடிகுண்டாகி
ஒவ்வொரு ராத்திரியும் உலவும் போது இப்படித்தான்! யாருடன் கைகுலுக்குவது? வைகறையில் பூசல் கூண்டை விட்டு வயல் காட்டில் சமாதானப் புறா சில பிணக்குவியல் விடைபெற நினைக்கும்! இந்த யுகத்தின் சிறகுகள் விரிய நிரந்தர செய்திகள்! கறைபடிந்த வாட்கள் நேற்றைய சிறகுகளை உடைக்கும்! அனுபவங்களை விட மனங்களெல்லாம் இன்றின் ரண அவஸ்தைகள்! மயானங்களாய் கிடக்க நாளையதைக் கனவுகூட ராவுகளெல்லாம் நினைக்க வெறுக்கும்! இப்படித்தான்
இமை மூடுகிறது!
இங்கு சுவாசிக்கப்படும்
ஒட்சிசன் பரிசோதிக்கப்படுகிறது
ஒரு பயங்கரவாதி உருமாறி வருவானென்று! * ஒட்டமாவடி அறபாத்

தோழன் 07
மைதானமும் மனிதனும்
மனிதன் தோன்றியது முதல் அவன் நடக்கவும், ஒடவும், பாயவும், வீசவும் கூடியதாக அவனது உடலமைப்பு அமைந்துள் ளது. மனிதன், தான் வாழ்க்கையின் தேவையை நிறைவு செய் வதற்காக நடந்தான், ஒடினான், பாய்ந்தான். இந்த அங்க அசை வுகளைக் கொண்டே, தன் திறமையை மட்டிட மனிதகுலம் பல போட்டிகளை வைக்கத் தொடங்கியது. இதுவே, இன்று சரித் திரம் புகழும் ஒலிம்பிக் போட்டிகளாக வளர்ச்சி பெற்றுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி முதன் முதலில் கிரேக்க நாடே பல தரப்பட்ட விளையாட்டுப் போட்டிகளை நடாத்தியதில் மூலகர்த்தாவாக உள்ளது. புராதன ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்கத்திலேயே நடைபெற்றுள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்கத்தில் கி. மு. 776ம் ஆண்டிலிருந்து கி. மு. 334 ம் ஆண்டு வ  ைர நடைப்பெற்றதாக சான்றுகள் உள்ளன .
முதலாவது பதிவு செய்யப்பட்ட ஒட்டப் போட்டி கி. மு. 776ம் ஆண்டு யூலை மாதம் நடந்தது. இது 192 மீட்டர் தூர மாகும். இத்தூரத்தை அன்று ‘ஒரு ஸ்டேட்' (Stade) என்று கூறுவர். இத்தூரத்தினை "கொறப்பஸ்" (Coroebas) என்பவர் ஒடி முதலிடம் பெற்றார். இந்த "ஸ்டேட்' என்ற பதமே தற் போது புத்துருவம் பெற்று ஸ்டேடியம்’ (Stadium) என்று அழைக் கப்படுகிறது.
இதே போல் முதலாவது பதிவான பாய்தல் நிகழ்ச்சி, நீளம் பாய்தலாகும். கி. மு. 656ம் ஆண்டு ‘சிஅன்ஸ் ஒஸ்பர்டா' என்பவர் 23 1.5’’ தூரம் பாய்ந்து முதலாம் இ ட த்  ைத ப் பெற்றார்.
பல காலம் நடந்துவந்த ஒலிம்பிக் போட்டிகள் சக்கரவர்த்தி "தியோடீசியஸின் ஆட்சிக் காலத்தில் கி. பி. 394 ம் ஆண்டில் குழப்பங்கள் போன்ற காரணங்களால் தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
காலம் செல்லச் செல்ல மனித நாகரிகம் வளர வளர பிரிட் டனில் மீண்டும் விளையாட்டுப் போட்டிகள் உயிர்ப்பெற்றன. அரச இராணுவக் கல்லூரி ஒன்றில் 1810ம் ஆண்டு விளையாட் டுப்போட்டிகள் நடைபெற்றன என பதிவுகள் கூறுகின்றன.

Page 6
08 தோழன்
நாளடைவில் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக ஒழுங்கமைய நடாத்தப் படவேண்டும் எ னு ம் நோக்குடன் பிரிட்டனில் *அமெச்சூர் மெய்வல்லுனர் சங்கம்" 1880ம் ஆண்டு தாபிக்கப் பட்டது இதன் தூண்டுதலால் பல்கலைக்கழகங்களில் விளை யாட்டுப் போட்டிகள் நடைபெறத் தொடங்கின. விளையாட்டுப் போட்டிகளின் தேவை, தார்ப்பரியம் என்பவற்றை முழு உலகமே உணரத் தொடங்கியது. இதன் விளைவாக சர்வதேச மெய் வல்லுநர் சங்கம் 1913ம் ஆண்டு உருவானது.
இங்கு விளையாட்டுப் போட்டிகளின் வளர்ச்சிக்கால ஒட்டத் தில் இதன் மகிமையை உணர்ந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உடற்கல்வி வல்லுநரான 'பரன் பியரி டி கபடின்” என்பவரின் முயற்சியால் 1896ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின. இப்போட்டி கிரேக்க நாட்டில் ஏதென்ஸ் நகரத்தில் நடைபெற்றது.
ஒலிம்பிக் போட்டிகள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகின்றன. முதலாவது மகா யுத்தத்தின் காரண மாக 1916 லும், இரண்டாவது உலக யுத்தத்தின் காரணமாக 1940, 1944ம் ஆண்டுகளிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற வில்லை. இம்முறை 1992ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியுடன் 22 ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாக நடை பெற்று முடிந்துள்ளன. அடுத்த நவீன ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் அட்லாண்ட ரா நகரில் 1996ம் ஆண்டு நடைபெற ஆயத்தங்கள் செய்யப்பட்டவண்ணம் இருக்கின்றன.
எமது இலங்கை நாட்டிலும் பண்டைக்கால அரசர்கள் காலத்தில், ஓட்டங்கள், பாய்ச்சல்கள், எறிதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக சரித்திரம் கூறுகிறது. 1890ம் ஆண்டு பிரிட் டிஷ் ஆட்சிக் காலத்தில் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தப்பட்டுள்ளன. 1922ம் ஆண்டு எமது நாட்டிலும் இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தாபிக்கப்பட்டது.
இலங்கை 1948ம் ஆண்டு இரண்டுவகையில் சிறப்புமிக்க ஆண்டாகத் திகழ்கிறது. ஒன்று, இலங்கை இல்வாண்டிலேயே ஏகாதிபத்திய ஆட்சியாளரின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற்றது. மற்றது, முதன் முதலாக ஒலிம்பிக் போட்டியில் இலங்கை கலந்து கொண்டதுமல்லாமல் வெள்ளிப் பதக்கம் ஒன்றை 400 மீ வேலிச்சட்ட ஒட்டத்தில் பெற்றது. இந்த மகத்தான சாதனை 1948ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்

தோழன் 09
டன்கன்வயிட்' என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. இது 12வது ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 51, 8 செக் கனில் ஒடி 2ம் இடத்தைப்பெற்றார். இவர் முன்பிருந்த ஒலிம்பிக் சாதனை நேரத்தை முறியடித்தமையும் குறிப்பிடத்தக்கது. இன்று வரையும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற ஒரே யொரு இலங்கை நாட்டு வீரர் இவரேயாவர். 1950ம் ஆண்டு நடந்த பொதுநலவாய நாடுகளுக்கான, விளையாட்டுப் போட்டி களிலும் 400 மீட்டர் வேலிச்சட்ட ஒட்டத்தில் தங்கப் பதக்கத் தைப் பெற்று, ‘பொது நலவாய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டிகளின் புதிய சாதனையை ஏற்படுத்தினார். இப்போட்டி நியுசிலாந்தில் நடைபெற்றது. இவர் கண்டி கிரித்துவ கல்லூரியின் பழைய மாணவராவர்.
இவ்வாறான ஒலிம்பிக் சாதனையைத் தொடர்ந்து இலங்கை தன் அயராத முயற்சியினை விளையாட்டுத் துறையில் மேற் கொண்டு வருவதை நாம் இன்று காணக்கூடியதாகவுள்ளது. எமது விரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய சம்மேளனம் (SAF) விளையாட்டுப் போட்டிகள் என்பவற்றில் கலந்து தமது சாதனைகளை ஏற்படுத்திவருவதை நாம் பாராட்டு வதோடு, ஒவ்வொரு மனிதனும் விளையாட்டின் மூலம் சமூக ஒற்றுமை, நற்பண்பு, நேர்மை, உண்மை என்பவற்றின் மூலம் பூரண ஆளுமையுடைய மனிதனாக வாழ முன்வர வேண்டு மென்பதே விளையாட்டின் உணர்வுகளாகும்.
எம். எஸ். அஸாத்.
சிறுகதைப் போட்டிக்காக வந்த கதைகள் போட்டி விதி களை (இரு கதைகள் தவிர்ந்த அனைத்துமே) மீறியுள்ளன. ஆகவே, மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தைத் தோழன் தருகிறான். புல்ஸ்கப் தாளில் 5 பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதுக.
=== -- تتمسك கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற் பனை ஆக்கங்களைத் தபால் மூலமே அனுப்புதல் வேண்டும். அவற்றைத் திருத்தவும், சுருக்கவும் ஆசிரியருக்கு உரிமையுண்டு.

Page 7
O தோழன்
-9° = முற்றுப்புள்ளி.
பூமியின் முதுகில் இருள் சவாரி செய்யும் நேரம். அந்தக் கிராமம் அமைதிக்குள் விழுந்து கிடந்தது. நிலவு மங்கைமட்டும் உளவு பார் த் து க் கொண்டிருந் தாள். ஒளி வியர்வை சிந்திக் கொண்டிருந்தாள்.
'சந்தியா’’ அப்பா விசுவின் குரல் இரவைக் கிழித்தது; அவள் உணர்வைக் சிலிர்க்க வைத்தது.
‘இன்னும் தூங்கல்லையம்மா...? பன்னண்டு மணியாச்சு. யோசிக்காம தூங்கு. *" வார்த்தைகள் இரப்பராக நீண்டன. அவள் மெளனமேடையில் ஊமை நாடகம் நடித்தாள். இதயமோ சூரியனுக்குப் பக்கத்தில் வைத்த மலர்போல் கருகிக் கிடந்தது. தூக்கம் தூர நின்று கொண்டிருந்தது. மன வானில் எண்ணத் தாரகைகள் எண்ணிலடங்காமல் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.
‘விடிந்தால்... ! என்னைப் பொண்பார்க்க வருகிறார்களாம். இப்ப என்ன செய்யுறது.?’’ யோசனை பாசங்கொண்டது.
*நான். அப்பாக்கிட்ட எப்படிச் சொல்வேன்...??? அவளின் மனம் தீக்குள் ஜீவித்தது. அப்பாவின் திடீர் இடியினால் நொடிப் பொழுதுகள் சோகத்தை இலவசமாக அவளிடம் சமர்பித்தது. பூவினால் பின்னப்பட்ட மனம் புண்பட்டுக் கிடந்தது. விழிகள் வேதனைகளை விளம்பரம் செய்து கொண்டது.
நிந்ததாஸன்
அந்தப் பகலின் மறுபக்கம் நீண்ட பகலாகவே கழிந்தது. சூரியனின் சிரிப்பில் உதயத்தை சந்தியா தரிசிக்கவில்லை. அது விடிவாக வடிவெடுக்கவில்லை. அவளின் வாழ்க்கை முடிவை அறிவிக்கும் கொடியாகவே கருதினாள.
உடலைவிட சுமையான மனதோடு குளியலறைக்குள் மலர்ந் தாள். நீரின் குளிர் அவளிடம் தோற்றுப் போனது. வசந்த மேனி யில் நீர் பட்டுச் சூடானது. r
'சந்தியா. ! உனக்கொரு லெட்டர் வந்திருக்கு' அப்பாவின் சத்தம் அவளிடம் அரங்கேறியது.

தோழன்
ஒருதென்றல் அவளை முத்தமிடுவது போல, மலர்கள் நகர்ந்து வந்து வாழ்த்துவது போல சந்தியா உணர்ந்தாள். மனதில் நட் சத்திரமாலை உற்பத்தியானது. சோகம் விற்பனை செய்யப் பட்டுவிட்டது போன்ற நிலை .
காகித மேனியின் ஆடை மீது அமர்ந்திருந்த எழுத்துக்களை அவளின் விழிகள் பார்க்கவில்லை; பருகியது. ஏதோ ஒரு இனிய கானம் அவள் மேனியெங்கும் கேட்டது. முகவாட்டம், மன வாட்டம் ஒட்டம் பிடித்தது. கடித ஆடையினைக் கழற்றினாள். எழுத்து அங்கங்கள் அவளின் விழிகளை இழுத்துக் கொண்டன.
அந்த மடல் அவளின் இதயத்தில் மறுபதிப்புச் செய்யப் பட்டது. முட்களால் வேயப்பட்ட கூரையில் வீசப்பட்டவள் போலா னாள், மீண்டும் வேத  ைன சந்தியாவை உ ண் டு ஏப்பமிட்டது
பெண்மேயும் விழிகள் வந்திறங்கின. அவளில் வழிந்தோடும் எழிலைப் பருகின. சந்தியாவோ மெளனமாகப் புகைந்து கொண் டிருந்தாள். உடலில் மட்டும் அலங்காரக் கவிதைகள். உள்ளத் திலோ துயர விதைகள். சந்தியாவை சங்கீதமாக நினைக்கும் அப்பா மகிழ்ச்சிக்கு மரியாதை செலுத்திக்கொண்டிருந்தார்.
‘என்ன. பொண்ணப் புடிச்சிருக்கா...??? சந்தியாவின் அப்பா சப்தமின்றி வினாவுக்குள் ஒப்பந்தமானார்.
* புடிச்சிருக்காவா?. . மகாலட்சுமி மாதிரி இருக்குது...!" சந்தியாவுக்குப் புகழ் சான்றிதழ் வழங்கினார்கள். சந்தியா வின் அப்பா ஒரு வசந்த தேசத்தில் குடியேறினார், அவர் தன் உள்ளத்தினை வெல்லத்திற்கு எழுதிக் கொடுத்தார். ஆனந்த வெள்ளத்தில் துள்ளிக் குதித்தார். இருபக்க வார்த்தைகளும் “சரி”க்குள் சறுக்கி விழுந்தன.
‘அப்ப. . . . நாங்க போயிட்டு வாரம் . ** திருப்திக்குள் நின்று விடைபெற்றார்கள்.
சந்தியாவின் விழிகள் உடைந்தன. அவளின் அறைக்குள் உறைந்தாள். துன்பத்தால் நிறைந்தாள். இடிமுழக்கம் அவளின் இதயத்தில் அணிவகுப்பு நடத்தியது. மேனியெங்கும் மின்சார
மின்னல்கள் !
*ம.க ன் ...! அப்பா குரல் கடிதம் வரைந்தார். ‘'நீ இப்படி அழுதுகிட்டிருக்கிறதால பிரயோசனமில்ல. நீ ஏன் அழுகிறாய் எண்டு எனக்குத் தெரியும் சந்தியா. 象 爱 அவரின் வார்த்தைகள் பாரமாக இறங்கின.

Page 8
12 தோழன்
‘அ.ப்.பா..!" ஆச்சரியம் உச்சரிக்கப்பட்டது.
** அப்பா. நான் சதீசை. விரும்பினன்’’
அவள் உண்மைக்கு வெள்ளையடித்தாள். உள்ளம் கொள்ளை யடிக்கப்பட்டதை திறந்து வைத்தாள்.
.அப்.ப.டி.யா . சங்கதி.? நீ அம்மாவை ! מg **
நினைச்சித்தான் அழுகிறாய் எண்டு நினைச்சேன்..!
உண்மை உறங்க மறுத்தது. அவளின் அப்பா அதிர்ச்சிக்குள் மூர்ச்சையானார்.
"அப்ப . ஏன் என்கிட்ட இதப்பத்தி சொல்லல .?’’ வினா நிமிர்ந்து நின்றது
** அப்பா, சதீசுக்குப் பல பொம்புளைங்களோட தொடர்பு இருக்கிறதா பல முறை நான் கேள்விப்பட்டன். அது உண் மையுந்தான் ! இங்கபாருங்க இண்டைக்கு சதீசுக்கிட்ட இருந்து வந்த கடிதம். ' குற்றம் சந்தியா மீது ஒற்றுமை யானதை அப்பாவின் செவிகளில் வாசித்தாள்.
"இதுக்குத்தான் சொல்றது. பொம்புளைகள் யோசிச்சி நடக்கனும் எண்டு !' புத்திமதி பூச்சொரிந்தது.
""மகள். ! ஒரு அயோக்கியனிடமிருந்து நீ தப்பியிருக்காய் . அது போதும். இனியாவது சந்தோசமா இரு!’’ ஆறுதல ராகமிசைத்தார் அப்பா. சந்தியா தேறுதல் யோகமின்றி அவ ளின் வாழ்க்கைத் தேர்தலில் தோற்றுப் போனாள்.
காதல் ஒரு வேதம். வசந்தகாலத்துப் பறவைகளின் ஒசை யது. சந்தியாவின் நட்சத்திர வசனங்களிவை, இதயத்தின் இருப் பிடம் இடம் மாறியபின் அன்பிற்குள் தடம் புரண்டாள். இதயம் ஒருமுறைதான் பூப்பூக்கும். அந்தப்பூவில் நறுமணம் அமர வில்லை, இதயத்தில் உட்கார்ந்திருக்கும் சதீசுக்குத் தீ வைக்க முயற்சிக்கின்றாள். மறதிக் கடலுக்குள் அவனை மூழ்கடிக்கின்ற போதிலும் அலைகளின் சத்தம் கேட்கிறது அவளிடம்
அறியாமை குறி வைத்ததினால் இதயம் முறிந்தது ஆழம் அறியாமல் இறங்கியதால் இன்று சுவாசங்களுக்காக சந்தியா ஏங்குகிறாள். நிலவால் நெய்யப்பட்ட இதயம் புயலால் பின்னப் பட்டுள்ளது. சதீசை அவளால் சபிக்க முடியவில்.ை வீடு தேடி வந்த திருமண நறுமணத்தை நுகரவும் முடியவில்லை. விடிவில் லாத இரவானாள். ஒரு முடிவில்லாத தொடர்கதையானாள்.

13 தோழன்
அவள் ஒரு காதல் கைதி. விடுதலை விண்ணப்பம் கேட்டு தானே தனக்குள் பேசுகிறாள். அந்த வாசத்தின் கதவுகளை மூட நினைக் கிறாள். அவளால் முடியவில்லை! காதலை சீலையிலா வரைந் திருந்தாள்? ஒலையிலா தீட்டியிருந்தாள்? இதயம் என்ற வேதத் தில் பொறித்திருந்தாள். இசையாலே ஆசையினை எழுதியிருந் தாள். மெளன பாசையினால் உணர்வு நரம்புகளை வாசித் திருந்தாள் சந்தியா. உள்ளத்தால் களங்கப்பட்டவளுக்கு இனி வாழ்க்கையில் வெல்லமேது?
*சந் தியா. !' தோழி ரம்யாவின் அழைப்பு. * ரம்யாவா..? வா வா!" வார்த்தை விருந்தோம்பலுக் குள் விழுந்தது. சிறிது நேரத்தை மெளனம் விழுங்கிக்கொண்டது
* சந்தியா. நான் குமாரை லவ் பண்ணினன். அது உனக் குத் தெரியும். ஆனா. இன்னொருத்தியை குமார் மெரிபண் ணிட்டாரு. அதப்பத்தி எனக்குக் கொஞ்சம்கூட வொறி இல்ல. நெக்ஸ்ட் வீக் தேஸ் டே எனக்கு றிTஸ்ரேசன் நடக்க இருக்கு நீ கட்டாயம் வந்துடனும் ரம்யா அமைதியை அப்புறப் படுத்தினாள். அவளின் முகம் செழிப்பை விளம்பரப் படுத்தியது. மகிழ்ச்சி மலர்ந்திருந்தது.
'மாப்பிள்ளை யாரு .. ? ? சந்தியா சோகத்திற்குத் திரை போட்டுக் கேட்டாள்.
“பேரு ஆனந்தன். பேங்க்ல வேர்க் பண்றாரு...”* ரம்யா விபரத்தை திறந்து வைத்தாள். பல கதைகள் பகிரப்பட்டன. ரம்யா விடைபெற்றுக் கொண்டாள்.
“சே.! ரம்யா போல எனக்கு வாழ முடியல்லயே. மன சில ஒருத்தனை நினைச்சிக்கிட்டு இன்னொருத்தனோட..? தன் வேதனையை ஒத்திகை பார்த்தாள் சந்தியா. ஒரு முடிவைப் பிடித்துக்கொள்ள முயன்றாள். அப்போது வெளியில் சென்ற அப்பா உள்ளே நுழைந்தார்.
**மகள் . சந்தியா . அந்த மாப்பிள்ள சரிபட்டு வராது." * ஏனப்பா .?’’ வினாக்குறியாகி நின்றாள் சந்தியா. ‘இன்னொரு பொம்புளயைக் கூட்டிக்கிட்டு படம்பார்க்கப் போனதை நான் பார்த்தன் மகள் ‘’
‘அப் பா ! இப்ப நான் சொல்றன் அந்த மாப்பிள்ள தான் எனக்கு வேணும்.’’ முடிவைப் பிடித்துக் காட்டினாள் சந்தியா. அப்பாவுக்கு ஆச்சரியம் எ ச் ச ரி க்  ைக செய்தது போலிருந்தது.

Page 9
14 தோழன்
"அப்பா..! நான் தூய்மை இல்லாதவள். தூய்மையான ஒருத்தர்ர வாழ்க்கையை என்னால களங்கப்படுத்த முடியாது. என்னப் போலத்தான் அவருக்கும் ஒரு பொண்ணோட பழக்க மிருக்கு என்ற விசயங்களைத் தெரிஞ்சதுக்கப்புறம் என்ன அவரு தப்பா நினைக்க சந்தர்ப்பமே இல்ல. அவரும் ராமனில்ல; நானும் சீதையில்ல.' நியாயத்தை நிரூபித்தாள் சந்தியா.
'சந்தியா. .!' அப்பாவின் வார்த்தை வியர்த்து ஒலித்தது. 'கல்யாணத்துக்குப் பிறகு நான் அவரை மாற்றிக்கிறன் . நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்ல ** அப்பாவுக்கு முற் றுப்புள்ளி வைத்தாள். அத்தோடு சதீசின் நினைவிற்கும் முற்றுப் புள்ளி வைக்கத் தீர்மானித்தாள். இப்போது அவளில் எழுதப் பட்ட சோகத்தை முற்றுப்புள்ளி வைத்துக் கழுவினாள்.
C? முற்றும் C
விருந்தும் மருந்தும்
உலகிலேயே பெரிய மீன் ஆழி
உலகில் உள்ள மீன்களில் மிகவும் பெரியது சுறாமீன் தான்! சுறாவின் சட்டகம், மற்ற மீன்கள் போல் கடினமான எலும்பி னால் ஆனது அல்ல; அது குருத்து எலும்பினால் ஆனது. பொது வாக, மீன்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. ஆனால் குட்டி போடக்கூடியது சுறாமீன். ஒரு தடவைக்குச் சுமார் 28 குட்டிகள் போடும்.
Wy
'பரீட்சை சமயத்துல ஜ"ரம் வந்தால்தான் பரீட்சை
ஜ"ரம்ன்னு சொல்லிடlங்க . இப்ப பரீட்சை முடிந்த பிறகு வந்திருக்கே. இது என்ன ஜ"சரம் டாக்டர்?'
*ரிஸ்ல்ட் ஜ"ரம். ! ?

5
தோழன்
கடல் விட்டு நிலம் ஏறும் ஆறு
சாதாரணமாக நிலத்திலிருந்து கடலை சென்றடையும் ஆறுகளைத்தான் கண்டிருப்பீர்கள். ஆனால், கிரீஸ் தேசத்துக்கு அருகிலுள்ள "செபலோனியா’ என்னும் தீவில், கடலிலிருந்து நிலத்துக்குச் செல்லும் ஆறுஒன்று உள்ளது. அங்கே கடல்நீரானது மணிக்கு இரண்டு மைல் வேகத்தில் 150 அடி தூரம் நிலத்தின் மீது செல்கின்றது. அப்படிச் செல்லும் நீர் 150 அடி தூரம் ஓர் ஆறுபோல் அங்குள்ள பாறைகளின் இடையே பாய்ந்து மாயமாக பறைந்து விடுகிறது. அப்படி மறைவதற்கு என்ன காரணம் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
Δ Δ ΔΔΔ Δ A
புத்தியைத் தீட்டக் கத்தி
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், எர்னஸ்ட் ஹமிங்வே எழுகத் தொடங்குவதன் முன் ஒரு பெரிய பென்சிலை எடுத்து கூர் சீவத் தொடங்குவார். சீவிக்கொண்டே இருப்பார், பென்சிலே தேய்ந்து போய்விடும் ,
இப்படியாக இரண்டு மூன்று பென்சில்களைக் கத்தியால் சீவிச் சீவியே தீர்த்தவுடன் எழுதத் தொடங்குவார்.
பைத்தியமா இவருக்கு? இல்லை! அப்போதுதான் அவருக்கு எழுதுவதற்கு மூட் வருமாம். இப்படி ஒரு விநோதப் பழக்கம்!
Δ Δ Δ Δ.Δ Α Δ
டெஸ்ட் டியுப் புலிக்குட்டி
‘டெஸ்ட் டியுப்" குழந்தையைப் பற்றி கேள்விப் பட்டிருக் கின்றோம். டெஸ்ட் டியுப் புலியைப் பற்றி தெரியுமா? 'ஒமாகா வின் "ஹென்ரி துர்லி மிருகக் காட்சிச்சாலையிலுள்ள "நிகோல்’ என்ற புலிக்கு இரண்டு புலிக் குட்டிகள் டெஸ்ட் டியுப் மூலம் பிறந்துள்ளது. உலகிலேயே முதன் முதலாக டெஸ்ட்டியுப் மூலம் பிறக்கும் மிருகம் இதுதான்,
தொகுப்பு:- பாத்திமா நுஸ்ரா றாசிக் - மாவனல்லை.

Page 10
6
சந்தேகப்பூக்கள்! உன் வாசல் தேடி என் விலாசம் வந்ததுண்டு! ஒளி மாற்றத்தில் உன் வாசற்படிகள் மறதிக்குத் தீனியானது! மழையில் விழிக்கும் காளான்கள் போல்
உன்னை மொய்க்கும் வண்டுகள்! இதை இதயம் எழுதிய பின்னும் நம் உறவுப் புஷ்பம் மலர்ந்தால் வாசம் வேசமே! அவர்கள் வரவில்லை என்றால் உன் தரிசனக்குயில்
jn(9) b: தரிசனத் தடையோ சோகத்தை யாசிக்கும்! சூரியன் முகம் புதைத்த பின்னும் நீ சென்ற ஊர்வலத்தை என் இதயமே வாசித்தது உன் வரவுமழையில் பூத்த என் ஆத்மா அக்கினிக்குள் அவதிப்படுகின்றதடி உன் ரகசியங்களில் வெளிச்சம் முளைத்தபோதும் என் அழைப்பிதழில் நீயில்லை! * மன்னம்பிட்டி
எஸ். வை. பூீரீதர்
தோழன்
நான் சுதந்திரமானவன்
வாய்க்கதவு மெளனப் பூட்டுக்குள் விழுந்தாலும் என் பேனாக்குயில் கூவும்! கால் மேகங்கள் கைதானாலும் கற்பனை மழை விற்பனையாகும்! என் கைகள் விலங்குக்குள் குடியேறினாலும் நம்பிக்கை வெளிச்சம் விருட்சமாக வளரும்! விழி வழிகளை திரை கொய்தாலும் மன மதியில் விழிகள் முளைக்கும்! செவி மேடைகளில் ஒலி அரங்கேற்றம் இல்லையென்றாலும் உணர்வு மின்மினிகள் உறக்கம் திறக்கும்! ay Gift fb
என் வசமாகாவிட்டாலும் அந்த நேசம் என் வசமே!
g? . . . . . . நான் சுதந்திரமானவன்!
* எம். எம், ரவூப்
மாவனல்லை.

தோழன் 17
சென்ற இதழ்களின் தொடர்ச்சி இலக்கியத் தேறல் கட்டுரைத் தொகுதி ( சில குறிப்புக்கள் ]
மேலும், "மூவகைக்கற்பு’ என்னும் கட்டுரையில், அகளங்
கன் சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியம்’ என அழுத்திக் கூறியுள்ளார். அகளங்கன் மட்டுமல்ல. சுமார் முப்பது ஆண்டு களுக்கு முன்பே சிலம்புச் செல்வர் ம. பொ. சி, பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் முதலியோர் உட்பட, பலரும் சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியம் எனப் புகழாரம் சூட்டி யுள்ளனர். தமிழில் எழுந்துள்ள ஏனைய காப்பியங்களோடு ஒப் பிடுகையில் சிலப்பதிகாரம் தனக்கேயுரிய சில சிறப்பியல்புகளைக் கொண்டிருத்தலை உணரலாம். ஆயின் குடிமக்கள் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைப் போற்றுவது எந்த அளவிற்குப் பொருந்தும் என்பது சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். இற்றைக்குப் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னதாகவே இது பற்றிப் பலர் ஆராய்ந்து, சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் அல்ல என நிறுவியுள்ளனர். பேராசிரியர் கைலாசபதி தமது ‘அடியும் முடியும் என்னும் நூலில் இதுபற்றி மிக விரிவாக ஆராய்ந்து போதிய விளக்கம் கொடுத்துள்ளார். இச்சிறு கட்டுரையில் இது பற்றி விரிவாக நோக்குவதற்கு இடமில்லை. ஒருசில விடயங்களை மட்டும் இவ்விடத்தே தொட்டுக் காட்டலாம்.
கோவலன் - கண்ணகியோ அவர்களது பெற்றோர்களோ சாதாரண குடிமக்களல்லர். வேண்டுமானால், "மேட்டுக் குடி" மக்களுள் முதலிடம் வகிப்பவர்களெனலாம். அவர்கள் குபேரர்கள்; பெருங்குடி வணிகர்; கொழுங்குடிச் செல்வர்; செழுங்குடிச் செல் வர்; இருநிதிக் கிழவர்; பெருநிதிக் குவையினர்; அன்றைய காவி ரிப் பூம்பட்டிணத்தையே விலைக்கு வாங்கக் கூடியவர்கள். அன் றைய அரசர்களே அவர்களிடம் பொன், பொருள், படையுதவி களைப் பெற்றனர். தமக்கெனப் பல்வகைப் படைகளும் கொடி யும் தாரும் வைத்திருந்தனர்; சோழப் பேரரசர் காலத்தில், இருநிதிக் கிழவர்'களின் இத்தகைய செல்வப் பெருக்கும் படை பலமும் செல்வாக்கும்மேலும் பல மடங்கு பெருகியிருந்ததை அக் காலச் சாசனங்கள் ஐயத்திற்கிடமின்றி நிரூபித்துக்காட்டும். சுருங்கக் கூறின், கோவலன் - கண்ணகியோ அவர்களது பெற் றோர்களோ, இன்றைய அமெரிக்க, ஜப்பானிய, இந்திய கோடீஸ் வரர்களுக்கு நிகரானவர்களாகவோ அவர்களையும் விஞ்சியவர் களாகவோ காணப்பட்டனர்; அன்றைய முடிசூடா அரச்ர்களாக விளங்கினர் எனலாம்.

Page 11
18 தோழன்
கோவலன் - கண்ணகி திருமணக் கோலாகல நிகழ்ச்சிகளைக் கூறவந்த இளங்கோவடிகள்,
அவ்வழி, முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம் வெண்குடை அரசெழுந்ததொர் படி யெழுந்தன அகலுள் மங்கல அணியெழுந்தது என விபரித்துச் செல்கின்றார். மேலும், பாண்டி மாதேவி யின் காற்சிலம்பிலும் பார்க்க கண்ணகியின் காற்சிலம்பு விலை யுயர்ந்தது என்பதையும் இளங்கோ புலப்படுத்தியுள்ளார். கோ வலன் - கண்ணகியினரும் அவர்களது பெற்றோர்களும் அன்றைய சிற்றரசர்கள், நிலப் பிரபுக்கள், அரச உயர் அதிகாரிகள் முதலி யோரிலும் பார்க்கப் பலவகையிலும் உயர் நிலையிலிருந்தனர். 'அடிச்சுவடிகள்', "மனுநெறி" ஆகிய கட்டுரைகளில் இடம் பெற்றுள்ள சேக்கிழார் பற்றிய செய்திகள் சில, கடந்த இருபது வருடங்களாகப் பெரும் சர்ச்சைகளுக்குள்ளாகி வருகின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை ம ட் டு ம் இங்கு மிகச் சுருக்கமாக நோக்கலாம்.
சேக்கிழாரின் கவித்துவ ஆற்றலில் எவரும் ஐயுறத் தேவை யில்லை. ஆயின் கவிநயம் மிகுந்த அழகிய பா ட ல் க ளு ட் பொதிந்துள்ள விடயங்கள் பல - அன்றைய அரசநீதி, சமூக மதிப்பீடுகள், அறப் போதனைகள், பக்தி மேம்பாடு முதலியன - ஐயப்பாடுகளையும், உளக்கொதிப்பையும் ஏற்படுத்துவன. பெரிய புராணத்தை, 'பக்தியுணர்வு மேலிட நம்வசமிழந்து பாடித் துதிப் பதையும், பாடல்கள் சொட்டும் தேறலைச்சுவைத்து மாந்தி மயங் குவதையும் சற்றே நிறுத்திவிட்டு, அறிவுபூர்வமாக நோ க் கு மிடத்து அதன் ஒப்பற்ற சிற்ப்புகளையும் நிறைகளையும் மட்டு மன்றிக் குறைபாடுகளையும் கண்டறிய முடியும். அன்றைய மனு தர்மநெறி, தெய்வ அவதாரங்களாக விளங்கிய அரசர்களின் அரச தர்மம் முதலியன மட்டுமன்றிச் "சாதிதர்ம"மும் மிகுந்த சாதுர்யத்துடன் பெரிய புராணத்தில் விள்க்கப்பட்டுள்ளதைக் கூர்ந்து நோக்கும் எவரும் கண்டறியலாம். "புல்லடிமைத் தொழில் செய்யும் புற்குரம்பை வா சி க ளின் மகா பரிதாபகரமான நிலைமைகள் மனத்தை உறுத்துபவையாக உள்ளன. ‘திருநாளை போ வார்" நந்தனார்) என்னும் சிவனடியார் பற்றிய சேக்கிழா ரின் பாடல்களையும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே கோபால கிருஷ்ண பாரதியார் பாடிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனை" யையும் ஒப்புநோக்கில் இவ்வுண்மை புலப்படும்.
மனுநீதிச்சோழனின் நீதிநெறியை நூலாசிரியர் வெகுவாகவே சிலாகித்துள்ளார். மனுநீதிச் சோழனுக்கு அது ஏற்புடையதே.
9 Ο

தோழன் 9
மனுநீதிச்சோழன் தனக்கெனத் தனித்துவமான மனுதர்மநெறி யைக் கடைப்பிடித்தான். அது போற்றத்தக்கதே. கன்றினை இழந்த பசுவுக்கு, ஆராய்ச்சி மணியை ஏன் அடிக்க வேண்டும் என்பது தெரியுமா என இக்கால ‘விடலை கள் தயங்காமலே கேட்கக்கூடும். மனிதர்களுக்கு மட்டுமன்றிப் பறவைகள், மிருகங் கள் முதலியவற்றுக்கும் சமத்துவமிக்க சமநீதி வழங்கிய சோழ மன்னர்கள் போற்றுதலுக்குரியவர்களே யொழிய ம னு த ர் ம சாஸ்திரம் கூறும் நீதிநெறி தூற்றுதலுக்குரியதே.
நயவஞ்சக சதித்திட்டங்கள் நிறைந்த மனுதர்ம சாஸ்தி ரத்தைப் பாரதியார் முதல் நம்பூதிரி பாட் முதலிய வரலாற் றாசிரியர்கள், ஆய்வாளர்கள் வரை ஒரே குரலில் "சதித்திட்டம் எனக் கண்டித்துள்ளமை கவனத்திற் கொள்ளப்படவேண்டிய தாகும். "தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதியும் மாடாக உழைத்து ஓடாகத் தேயும் சூத்திரனுக்கு ஒரு நீதியும்" காட்டிய மனுதர்ம சாஸ்திரநெறி சேக்கிழார் காலத்தில் சோழப் பேரரசர் காலத்தில் - மிகத்தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டதை யும் வரி அறவிடுதல், தண்டனைகள் வழங்குதல், சலுகைகள் அளித்தல், நாளாந்தக் கடமைகள் முதலியவற்றில் சாதிதர்ம அடிப்படையிற் பாகுபாடான நெறிமுறைகள் கடைப்பிடிக்கப் பட்டதையும் அக்கால வ ர ல ள ற் று ச் சான்றுகள் நிரூபித்து நிற்கின்றன.
தமிழப் பேரரசர்களுள் முதன்மையானவனாகக் கொள்ளப் படும் முதலாம் இராசராச சோழனின் சேக்கிழாரின் காலத் துக்குச் சற்று முற்பட்டவன் - ஆட்சிக் காலத்திலும் கூட மனு தர்ம சாஸ்திர நெறி மிகத் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டதால் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டவர்களான சூத்திரர்கள், சாதிக் கொரு நீதியின் கொடுமைகளையும், வரிப்பளுவையும் தாங்க முடியாது எதிர்ப்புப் போராட்டம் நிகழ்த்தியதும், அவர்களது போராட்டம் கொடூரமாக நசுக்கப்பட்டதும், அதேசமயம் “வரி நீக்கம் வேண்டிக் கிளர்ந்தெழுந்த பிராமணர்களுக்கு தண்டனை வழங்காதது மட்டுமன்றி விஷேட சலுகைகள் வழங்கப்பட்டமை யும் வரலாற்றுச் சம்பவங்கள்; கற்பனை அல்ல. சேக்கிழாரும் இவைபற்றி அறிந்திருக்கக் கூடும்.
திரைப்பாடல்களில் மரபிலக்கியச் செழுமை’ என்னும் கட் டுரையில், இன்றைய சினிமாப் பாடல்கள் சில எவ்வெவ் வகை களிற் பழந் தமிழ் இலக்கியங்களைப் பின்பற்றிப் பாடப்பட் டுள்ளன என்பதை ஆசிரியர் மிக நுட்பமான முறையில் எடுத்துக்

Page 12
20 தோழன்
காட்டியுள்ளார். அவர் அவ்வாறு எடுத்துக் காட்டாத பாடல் களும் அதிகம் உள்ளன. கண்ணதாசனின் பாடல்களே அதிகம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
கண்ணதாசனின் பாடல்களிலும் பிற ஆக்கங்களிலும் குறிப் பிடத்தகுந்த சில சிறப்பியல்புகள் காணப்படுவது உண்மையே. ஆயின் அவருக்குக் 'கவியரசர்’ என்னும் அடைமொழி வழங்கு வதுபற்றியும் அவரது பாடல்களின் உள்ளடக்கம், கருத்து நிலைப் பாடு முதலியன பற்றியும் இன்று பலத்த சர்ச்சைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தமிழகத் தைச் சேர்த்தது. மூர்த்தி, கேசவன் முதலியோர் தெரிவித்துள்ள குறிப்புகளும் இங்கு மனங்கொள்ளத் தக்கவை. அதிர்ஷ்டவசமாக கண்ணதாசனது பாடல்களது உள்ளடக்கம், கருத்துநிலைப்பாடு முதலிய சிக்கல்களுக்குள் அகளங்கன் தன்னை மாட்டிக் கொள் ளாது, கண்ணதாசன் எவ்வெவ் வகைகளிற் பழந்தமிழ் இலக்கி யங்களைப் பின் பற்றிப் பாடியுள்ளார் எனக் காட்டுவதுடன் நிறுத்திக் கொண்டார்.
அகளங்கனின் இலகுவான தெளிந்த நடை, மிகமிகப் பொருத் தமான கட்டுரைத் தலைப்புகள், விடயங்களை அறிமுகப் படுத் தும் பாங்கு, தமது கருத்துகளை நிறுவுந்திறன் முதலியவை விதந்து கூறத்தக்கவை. ஆண்டில் இளைஞனான அகளங்கன் நிட் சயம் 'வாலி'யைப் போன்ற பெரிதும் பயன்படத்தக்க ஆய்வுகளை வெளிக்கொணர்வார் எனத் தமிழுலகம் -குறிப்பாக திறனாய்வு உலகம்- மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
(uptib plub
கலாநிதி, க. அருணாசலம்,
கவனிக்கவு D
தோழனின் புதிய முகவரி:
நிந்ததாசன், 100, மாவனல்லை வீதி, ஹெம்மாதகம.

தோழன்
2基
துளிர்விடும் தளிர்கள்.
கடன்காரர்கள்
காய்த்த மரம் தான்
கல்லடி படும்!
இங்கே..?
காய்க்காத மரமும்
சொல்லடி படுகிறது!
() ச. மணிசேகரன்
ஒற்றுமை நீர் தினம் எம்மை சூழ்ந்து வந்த இனத் துவேசத்துக்கு ஒற்றுமை நீர் தெளிப்போம்! மலர்ந்து சிரிக்கும் புத்தாண்டிலே மன அழுக்குகளை சலவை செய்து மகிழ்ச்சிக் கொடியினை இதயங்களால் செய்து மனிதர்களாக வாழ்வோம்!
; மாவனல்லை ஹ"ஸைன்
அன்றும் இன்றும் மலர்களில் தேனோட்டம் மனிதர்களுக்கிடையில் போராட்டம் மரங்களில் நீரோட்டம் மானிலத்தில் இரத்த வெள்ளோட்டம்!
0 முஹம்மத் ரிஸ்வான்
உயிர் உறிஞ்சி
மலரிதழில் அமர்ந்து தேனை உறிஞ்சும் அறுகாற் பறவை போல மனிதனின் இதழ் ஆசனத்தில் அமர்ந்து உயிரை உறிஞ்சும் சிகரட்!
* செய்யத் இம்ரான்
X
కా
f பிரபல எழுத்தாளரான
*ஹெரால்ட்
ஆரம்ப காலத்தில் நியுயோர்க் நகரிலிருக்கும் "ஹெல்ஸ்" என்ற ஹோட்டலில் சமையலறையில் எடுபிடியாக இருந் தவர்.
இவர் தான் எழுதும் நாவல்கள் ஒவ்வொன்றிலும் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ரூ 1220 வாங்குகிறார். இவரது நாவல்கள் ஒவ்வொன்றும் குறைந்தது ஒரு இலட்சம் வார்த்தைகள் கொண்டவை.
ஒவ்வொரு நாவல்களும் 40 மொழிகளில் வெளியிடப் படுகின்றது
ஒவ்வொரு நாவலிலும் மு ப் பது கோடி பிரதிகள் விற்பனையாகின்றன. தொகுப்பு: எம். நஜீபுல்லா
**NPN, ராபின்ஸ்”

Page 13
22 தோழன்
ஒரு ஜனாதிபதியின் கடிதம்!
அவன் படிக்கவேண்டும். ஆம், படிக்கத்தான் வேண்டும்;
எனக்குத் தெரியும் - எல்லா மனிதர்களும் நேர்மையானவர் களல்ல. எல்லாரும் உண்மையாக நடப்பவர்களல்ல என்பது. அவனுக்குச் சொல்லித்தாருங்கள் - ஒவ்வொரு முரடனுக்கும் ஒரு "ஹீரோ” இருப்பான் என்று! ஒவ்வொரு எதிரிக்கும் ஒரு நண்பன் கிடைப்பான் என்று சொல்லுங்கள்! இதற்குச் சிறிது காலம் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அவனிடம் கூறுங்கள் - சுயமாகச் சம்பாதிக்கும் ஒவ்வொரு நாணயமும், மாற்று வழியில் கிடைக்கும் நூறு நாணயங்களை விடப் பெரிதென்று.
வெற்றியைக் கண்டு பூரிக்கும் சமயம், தோல்வி வந்தால் துவண்டு போகாமல் தன்னம்பிக்கையுடன் இருக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள். பொறாமையைக் கைவிட்டு நேசத்தைக் கைகொள்ளச் சொல்லுங்கள்.
புத்தகங்கள் படிப்பதன் நன்மையை உணர்த்துங்கள். அதே சமயம் அவனைப் புத்தகப் புழுவாக்கிவிடாமல் வான் முட்டும் மலைச் சிகரங்கள், எழில் கொஞ்சும் சோலைகள், பறக்கும் பட்சிகள், பாய்ந்து வரும் ஓடைகள் போன்ற இயற்கைக் காட்சி களை ரசிக்கும் ரசனையையும் அவனிடம் ஏற்படுத்துங்கள்.
காப்பியடித்து வெற்றி பெறுவதை விட, தேர்வில் தோல்வி யடைவதே மேலானது என்ற உண்மையைச் சொல்லுங்கள். தன் இலட்சியங்களில் மற்றவர் குறை கண்டாலும், மனம் தள ராமல் முன்னேறும் வழியைப் போதியுங்கள். மற்றவர் சொல்வ தைப் பொறுமையுடன் கேட்கப் பழக்குங்கள். முடிவெடுக்கும் சமயம் நேர்மை வழியில் நின்று தன் மனத்திற்கு சரியென்று பட்டதை தயங்காமல் செயல் படுத்தும் துணிவை அவனிடம் ஏற்படுத்துங்கள்.
துயரம் சூழும்நேரம், சிரீக்கும் மனவலிமையை அவனிடம் உண்டாக்குங்கள். தற் புகழ்ச்சிக்கு அடிமையாகாமல், முகஸ் துதிக்கு மயங்காமல் இருக்கும் நடுநிலை உணர்வை அவனுக்குச் சொல்லித் தாருங்கள்.

தோழன் 23
உழைப்புக்கேற்ற ஊதியத்தைப்பெறும் உரிமையை அவனிடம் உணர்த்துங்கள். சோம்பேறித்தனமாக இருக்கும் ஆபத்தைப் பற்றியும் எச்சரியுங்கள். பொய்மையை எதிர்க்கும் துணிவை அவனிடம் உண்டாக்குங்கள். ஆத்திரப் படுவதற்குப் பதிலாக பொறுமையைக் கைகொள்வதன் மகத்துவத்தை அவனுக்குச் சொல்லுங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக மனிதாபிமானத்தின் சக்தியை யும், எந்த நிலையிலும் அவன் அதைக் கைவிடாமல் இருக்கும் மனவலிமையையும் அவனிடம் உண்டாக்குங்கள்.
நான் ஆசைப்படுவது அதிகம் தான்! அவன் என் ஆசை மகனல்லவா? எனவே, கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்!
அன்புடன், ஆபிரகாம் லிங்கன்.
(ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தன் மகன் படித்த பள்ளி ஆசிரி -யருக்கு எழுதிய கடிதம் இது.)
(நன்றி - குங்குமம்)
தொகுப்பு:- எம். ஏ. சிபாயா
தன்னால் நல்லவைகளைச் செய்யாவிடினும், நல்லவைகளைப் பேசாவிடினும் பிறருக்குத் துன் பத்தை ஏற்படுத்தாதே! நீ பேசுவது அனைத்துமே துன்பத்தை ஏற்படுத்துமானால் பேசுவதை நிறுத் திக் கொள்! அது உனக்கும் நன்று, ஏனையோருக் கும் நன்று. நன்று என்ற சொல்லை மனச்சாட்சி யோடு ஒப்பிட்டு நடந்து கொள்! அப்போது
வாழ்வே நன்று என்றாகிவிடும்!

Page 14
24 தோழன்
நல் வாழ்த்துக்கள்!
இந்த வருடத்திற்கான "வாழ்வோரை வாழ்த்துவோம்” பெருவிழா அண்மையில் ஜோன் டி சில்வா அரங்கில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் கொண் டா ட ப் பட்டது. கலை, இலக்கியத்துறையில் பல வருடகாலம் பங்களிப்புச் செய்த பெருமக்களுக்குப் பொற்கிழியும் பணமுடிப்பும் வழங்கப் பட்டது.
இந்த வகையில் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவ னல்லைப்பிரதேச கலை இலக்கியவாதிகள் நால்வர் கெளரவிக்கப் பட்டனர். ஹெம்மாதகம, தும்புளுவாவ எம். வை. எம். மீஆத், பெலிகம்மன ஜே. எம். காசிம், உயன்வத்தை றம்ஜான், தல்கஸ் பிடிய என். எம். அமீன். இவர்களோடு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூர் ஹசன் மெளலானா , சாய்ந்த மருது மருதூர் ஏ. மஜீத் ஆகியோர்களும் இலக்கிய விருதுகள் பெற்ற செம்மல் களாகும்.
தோழன் இவர்களையும், பரிசு பெற்ற ஏனையோரையும் வாழ்த்துகிறான். அத்தோடு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சுக்கும் வாழ்த்துப் பூத்தூவல்கள்.
கடுகுகளின் காரங்கள்!
1. வெளவாலினம் 2. பூவரும்பு 3. வெனிசியுலா (Vene2te la) வில் 4. பொலிஸ்டைரீன் (Polystyrine) 5. அயர்லாந்து (Ireland) 6. புள்ளிமான் 7. விவசாய இரசாயனப்பதார்த் தங்களின் (Agro Chemicals) உபயோகம் 8. சுவிட்சர்லாந்து 9. Lug 60 y of G. 663)6T6 (Green House Effect) 10。虚斤 1 1. Mike Powel 12. ஆண் இனப்பெருக்கவுறுப்பு Il 3. Saf
yinia, Eich ornia 14. சீனப் பெரும் சுவர் 15. கழி ஒளிக் 5Srias 6T (Ultrasonic rays) 16. gF 6sfu'il u GMT (Artocarpus nobilis) 17. டென்மார்க் (Denmark) 18. Slug Saif (Cap. sacin) 19. இக்கொள்கையை ஆய்வு கூடத்தில் பரிசோதனை
ரீதியாக நிரூபிக்க முடியாமை 20. ஆபிரிக்காவின் சவன்னா 21. பிரேசில் (Brazil) 22. ஒர் இன சுறா (Shark) 23. Rho desia 24. ஒரு ஒளி ஆண்டு - ஒளியானது ஒரு வருடத்தில் பய ணம் செய்யும் தூரமாகும். ஒளியின் வேகம் - 1, 86, 000மைல்/ செக்கன் 25. ஒட்சிசன் (O)

சேர் போஸ்ற்
செல்வி ஏ. எம். ரிஜானா, இக்கிரிகொல்லாவ, 1992. 1 0. 30. தோழன் ஆசிரியருக்கு!
தோழன் 1, 2 வெளியீடுகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத் தது மிகவும் சந்தோசம் ஒர் இலக்கியச் சோலையில் இனிய வாசத்தை அறிந்ததுபோல் இருந்தது. r
சேர்! தோழன் இன்னும் வளர வேண்டும். இதுதான் என் அவா. அதை வாசித்ததும் எனக்கும் எழுத வேண்டும் என்ற அவா ஏற்பட்டது.
தோழனான தோழனே, பெருமைப் படுகிறேன்!
தோழனே! உன்னுடன் தோழமை கொண்டதால் எனக்கு மட்டுமல்ல; உன் மூலம் பயன் மிக்க பல தகவல்களைப் பெற் றுக்கொள்ள முடியுமாயிருக்கிறது. பாடசாலை முதற்கொண்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் வரை சந்திக்கும் வாய்ப்பையும் நீ தொட்டுத் தந்தாய். الأرد
எனவே தோழி வாழ்த்துவது நீ நீடுழி காலமும் மூலையில் தங்கிடாது பல தோழர்களிடத்தும் சுற்றிவந்து உன்னை நீ காப்பாற்ற வேண்டும். அத்துடன் தோழனே, இதுவரை தோன்றி வந்தவர்களினின்றும் நீ சிறப்புப் பொருந்தியவன் என்பது நான் சொல்லாமலே உன்னைச் சந்தித்தவர்களுக்குப் புரிந்திருக்கும். S‹ኔ ஸ்ஹ்ரா 26.11. 192 தல்கஸ்பிட்டி
இனிய தோழனுக்கு,
" இதயம் கனிந்த ஆசிகள்!
"ஒரு புல்லாங்குழல் புகைகிறது. உண்மையிலேயே அந்த புல்லாங்குழல் எல்லோர் மனதிலும் புகைகிறது. கதை சூப்பர். அதில் வரையப்பட்டிருந்த கவிதை அதனிலும் சூப்பர். மனைவி என்ற மகுடத்தில் ஒரு நிலவுக்கு இடம் கொடுத்த உங்கள் கதையின் கதாநாயக பாத்திரம் அருமை. மேலும் உங்கள் கதை,
கவிதைகள் தொடருமென எண்ணுகிறேன்.
செல்வி ஸினா ஹாஷிம் ஹபுகஸ்தலாவை, ‘92. 10, 29
* yo

Page 15
రంగTర-ర రంగLర
சேலைகளின் ே
டவர்களின் 을
3. குழந்தைகளுக்க 登
சிறுவர்களுக்க 9 அனைத்திற்கும். Ο . GOLD
o No. 63, M MAWA
с
Ծ:
[न्तः।
እ°..
OKOLIČKIM IKO3,
இல, 100, மாவனல்லை வீ A, C. நா தில் என்பவரால் மா தில் அச்சிட்டு வெரியிடப்பட்ட

DCCCCCOCCICCOLIG
FT66)
ஆடைவ கைகள்!
T601,
கான உடைகள்!
STAR
ain Street, NELLA.
T. P. 035 - 6315
XO6L): 1:XDÖE CD::Oý
Himm
சி, ஹெம்மாதகமையில் வசிக்கும் வனல்லை எம். ஜே. எம்.அச்சகத்
1 التي ك=