கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1976.11

Page 1

AAAS A SATS MS MSMSMS S eSMeS SeMMeMSALSMM MMSMSMSMSeSMMSMMSMSMM SMS
鱲球_經_淺_羅_潑墨靈
匾* 量 * g 円
F
;{ [ 38:58چہ
(ޗެޗްA8.j. ?(/
ଝୁଣ୍ ଝୁଣ୍ଟୁ ଷ୍ଟ ।
ليf =ی شي. ليك.

Page 2
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் - உள்ளம் ... : சடுபட்டென்றும் நடப்பவர் பிறர் SS சனநிலை கண்டு துள்ளுவார்? . . . . . . - - - - چ : ===
'Mallikai' Progressive
முகவரி: ஆசிரியர் டொமினிக் 234-A (3as.(3s.6Tsu urbunarh (இலங்கை
Šatoid
வாழ்த்துக்கள்
ரஸிகமணி கனக செந்திநாதன் அவர்களது மணி விழா அவரது பிறந்த ஊரில் வெகு சிறப்பாக இம் மாதம் 10-ம் திக்தி நடைபெற்றது. அன்னருக்குச் சகல சிறப்புக்களும் கிடைக்க வேண்டுமென மனப் ஆர்வமாக வாழ்த்துகின்ருேம்.
இம் மாதம் 26 - 27-ம் திகதிகளில் யாழ். வளா கத்தில் தமிழ் நாவல் நூற்ருண்டு விழா மிகக் கோலா லமாக நடைபெற இருக்கின்றது. அசோகமித்திரன், கசபாபதி போன்ற தமிழகத்து எழுத்தாளர்கள் இவ் விழாவில் கலந்து விழாவைச் சிறப்பிக்க இருக் கின்றனர் என அறிகின்ருேம். இவ் விழா ஏற்பாட்
 
 

Monthly Magazine
MIALLKA மணக்கும் "மல்லிகை
, பெயர், ge Editor: Dominic Jeeva EEsof,
வீதி 234A, K. K. S. Road, கருத்து,
' JAFFNA எல்லாம் ஆக்கியோர்
Sri Lanka தனித்துவம்
பொறுப்பும் அவரே
டாளர்களின் பணி சிறக்க நமது உளங்கனிந்த வாழ்த்துக்கள்
டில்லியைச் சேர்ந்த இலக்கிய நண்பர் திரு. கே5 சுப்பிரமண்யன் சென்ற வாரம் இங்கு வந்திருந்தார். மல்லிகைக்கு அவர் வருகை தந்திருந்தார். பல சுவை * யான இலக்கியப் பிரச்சினைபற்றி அவரது உரையா டல் நமக்கு உதவிகரமாக இருந்தது. பல்வேறு இலக் கிய நண்பர்களையும் அவர் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடி மகிழ்ந்தார். அன்னர் சிரமத்தைப் பாராமல் பல இலக்கிய நண்பர்களைச் சந்தித்ததை யிட்டு அவருக்கு எமது நன்றி உரியது.
- ஆசிரியர்

Page 3
செய்யப்படுவதாக ஒரு குறை சொல்லப்படுவதுண்டு. இதைப் போலவே இந்தப் பகுதியினரும் சொல்லிக் கொள்ளுகின்றனர்.
இதற்கு எதிராக ஏன் எழுத்தாளர்கள் குரல் கொடுக்கக் கூடாது எனவும் இவர்கள் அடிக்கடி கேட்டு வைக்கின்றனர். அதே சமயம் இந்த நாட்டுப் படைப்பாளிகள் நமது நாட்டின் தனித்துவத்துக்காகப் போராடிய பொழுது இவர்கள் ஒன்றுமே பேசாது ஒதுங்கியிருந்தவர்கள் என்பதும் கவனிக்கத் தக்கது.
சமீபத்தில் கொழும்பில் ஒரு முன்னேடி நாடக நடிகருக்குப் பாராட்டு விழா நடந்தபொழுது இந்தக் குழுக்களைச் சேர்ந்த கலைஞர்கள் அன்னரது விழாவைப் பகிஷ்கரித்ததும் நாம் அறியா ததொன்றல்ல.
படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், உத்தியோகம் பார்ப் பவர்கள் என்ற உயர்வு உணர்ச்சி காரணமாகப் பின் தங்கிய பகுதிகளில் இருந்து திறமையின் காரணமாக நாடக உலகில் உழைத்து உயர்ந்து வரும் கலஞர்களை மேற்கண்டவர்கள் மதிப், பதில்லை - கெளரவிப்பதில்லை - அவர்களது பெயர்கள விமர்சனக் கட்டுரைகளில் குறிப்பிடுவதில்லை என்ருெரு குற்றச்சர்ட்டும் உண்டு"
இதில் ஒரளவு உண்மையும் உண்டு. பட்டம், படிப்பு, உத்தியோகம், அரச செல்வாக்கு ஆகிய வைகளால் ஒரு கலைஞன் கலைஞனுகி விட முடியாது. அவனிடத் தில் கலைத்துவம் நிரம்பியிருந்தால் - திறமை மெருகடைந்திருந் தால் - மாத்திரமே, அவன் ஒரு கலைஞணுக உருவாக முடியும். ஆயிரம் இடைஞ்சல்கள் ஏற்பட்ட போதிலும் கூட, உண்மைக் கலைஞனை யாருமே இருட்டடிப்புச் செய்துவிட முடியாது. தம்மைத் தாமே நாடக உலகின் தகைமையாளர் என முடி சூடிக் கொண் டுள்ளவரிகள் கூட அவர்களது ஆற்றலை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது இயலாது.
அப்படியானவர்களிடம் தேங்கிக் கிடக்கும் நடிப்பு ஆற்றலைச் செம்மைப்படுத்தி, வளர்த்து, அத்துடன் தாமும் வளர்வதுதான் நாட்டுக்கும் நல்லது; நாடகத் துறைக்கும் பெறுமதியானதாகும். மற்றென்று: இந்தக் குழுக்கள் ஒருவர் நாடகத்தை இன்னெ ருவர் பார்ப்பதுகூட இல்லையாம்!- பார்க்காமலேயே பழிப்பார் களாம்! நொட்டை சொல்வதில் சுய இன்பம் காண்பார்களாம்! இப்படியாள மனப்பான்மை வேரோடி இருந்தால் இந்த நாட் டில் எப்படி ஆரோக்கியமான நாடக வளர்ச்சி ஏற்படும் என்பது யோசிக்கத்தக்கது.
இந்த ஒதுக்கல் மனப்பான்மையை மிக இறுக்கமாகப் கண்டிக் கின்ருேம், நாம்:
கலை நாடகத்துறையில் கருத்து வித்தியாசங்கள் நிலவலாம் அபிப்பிராய முரண்பாடுகள் எழலாம்; நோக்குச் சம்பந்தமாக பார்வைகள் வேறுபடலாம். ஆனல், நமது நாட்டின் கலாசாரப் பொது வளர்ச்சியைப் பாதிக்கக் கூடியதாக எது அமைந்தாலும் அதைக் களைந்து எறிந்துவிடக் கலைஞர்கள் முயல வேண்டும். இது அடிப்படைத் தேவை மாத்திரமல்ல; அத் தி யா வ சி ய ம |ா ன கடமையுமாகும்
இன்று நாடகத் துறையில் புதிய புதியபரிமாணங்களில் நமது சகோதரர்கள் பரிசோதனையும் வெற்றியும் பெற்று வரும் இந்த வேளையில், இதை நாம் சொல்லி வைப்பது முக்கிய நோக்கத்திற் காகவேயாகும் - -- s

:கோமாளிகள்'
யாழ்ப்பாணத் தியேட்டரில் ஓர் அ தி சயம் நடந்தது: "கோமாளிகள்" திரைப்படம் பார்க்க வந்த ரஸிகர் கூட்டம் நுழை வுச் சீட்டுக் கிடைக்காமல் திரும்பிப் போஞர்கள், என்பதே அந்த அதிசயமாகும்.
ஈழத்தில் வெ6ரிவந்த அத்தனை தமிழ்ச் சினிமாப் படங்களை யும் பார்த்தவர்களுக்கு ஒன்று விளங்கும். கட்டம் கட்டமாக நமது தமிழ்த் தயாரிப்புக்கள் மெருகேறி வருவதையும் குறைபாடு கள் குறைந்து வருவதையும் அவர்கள் அவதானித்திருப்பார்கள்.
கோமாளிகளைப் பிரமாதம் எனச் சொல்ல முடியாது விட்டா லும் கூட அலுப்புச் சலிப்பில்லாமல் காட்சிகள் முன்னேறியதை ரஸிக்கக் கூடியதாக அமைந்திருந்தது.
பொதுவாக இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களில் போரடிக் கும் தன்மைகளே அதிகமாக காட்சி தருவன. இதில் அந்த அம் சம் கணிசமாகக் குறைந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. நடிகர் களில் தணிகாசலமாக வரும் ஜவாகர் நடிப்பு மனதிற்குப் பிடித் திருந்தது. அலட்டாமல் நடித்திருந்தார். உபாலி அடுத்த நல்ல நடிகர். மூன்ருவதாக மரிக்காரைச் சொல்லலாம்.
ஐயர் பாத்திரத்தின் மிகை நடிப்பும் இயல்பற்ற சம்பாஷ%ண யும் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. சுப்புலக்ஷ்மி காசிநாதன் நடிப்பு குடாநாட்டுப் பெண்ணைப் படம் பிடித்துக் காட்டுகின்றது:
நமது நாட்டில் சிறுகதை, நாவல், கவிதை வளர்ந்த அள விற்கு நாடகம், திரைப்படம் வளர்ச்சி அ ைர், திருக்கவில்லை என்ற உண்மையை நாம் ஒப்புக்கொள்ளும் அகே வேளையில், படைப்பு இலக்கியத்துறையில் வேரோடியவர்கள் நாடக, சினிமாத் துறை களில் முன் நின்று உழைக்க முன் வராமையும் ஒரு குறைபாடாகும்;
சினிமாப் படர், டுன் உயிர் நி?'யே நல்ல ஊட்டமுள்ள கதை யம்சம்தான். இதற்குப் பின்னர்தான் மற்றெல்லாம். ந ம து திரைப்படங்களில் கதையம்சத்தைப் பற்றியே யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. கோமாளிகளிலும் இந்தக் குறைபாட் டம்சம் தெளிவாகத் தெரிகின்றது.
ஒளிப்பதிவு ஒப்பனே, டைரக்ஷன் பாராட்டும்படி அமைந்தி ருந்ததும் போற்றப்படத் தக்கதாகும். அதே சமயம் ஒலிப்பதிவுப்

Page 4
லண்டின் கடிதம்
மல்லிகை செப்தெம்பர், ஒக்டோபர் இதழ்கள் கிடைத்தன. மிக்க நன்றி.
உலக பாராளுமன்றங்களுக்கெல்லாம் அன்னை எனக் கொள்ளப் படும் வெஸ்ட்மினிஸ்ரரிலிருந்து எழுதுகிறேன். இதனை எழுதத் தூண்டியது இங்கு "மல்லிகை" க்கும் ஒரு பிரிட்டிஷ் மகனுக்கு மிடையில் ஏற்பட்ட ஒரு தொடர்புதான்.
நான் இங்கு சில மாதங்கள் பயிற்சிபெற வந்திருப்பது நீங்கள் அறிந்ததே. அன்ருெருநாள் கையில் மல்லிகையைப் பிரித்துப் படித் துக்கொண்டு ‘லிப்ற் ல் மேலே வந்துகொண்டிருந்தபோது, முத லாம் தட்டில் இன்னுெரு வெள்ளையர் ஏறிக்கொண்டிருந்தார். அறிந் தவர்களாயில்லாத போதிலும் வணக்கம் கூறி, காலநிலையைப்பற் றிப் பேசிக்கொள்வது சம்பிரதாயம். இது முடிந்ததும், அவர் மல் லி  ைக என்று எழுத்துக்கூட்டிப் படித்தார். நான் அசந்தே போய்விட்டேன். ஒக்டோபர் இதழ்தான் என் கையிலிருந்தது. அதன் முன்பக்கத்தில் ஆங்கில எழுத்தேயில்லை. கடைசிப் பக்கத்தி லிருக்கிறது. ஆனல், நான் அதனைத்தான் சுருட்டி கையிற் பிடித் திருந்தேன். ஆகவே அவர் தமிழைத்தான் படித்தாரென்பதிற் சந் தேகமேயில்லே. என்ன தமிழ்ப்படிக்கிறீர்களேனன்றேன்.தெரிந்ததைப் படிக்கக்கூடாதா? எனக்குத் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று இந்திய மொழிகளும் ஒரளவு தெரியும் என்ருர். இப்படி யான ஒரு 'தமிழ் அன்பரை" க் கண்டால் சும்மா விட்டுவிட முடி யுமா? அவரைப் பின்னர் அடிக்கடி சந்திப்பேன். அவருக்கு தமிழ் "ஒரளவு" அல்ல, நன்ருகத் தெரியும். மல்லிகையைப் படித்துப் பார்த்தார். பல கேள்விகள் கேட்டார். மனமார வாழ்த்தினர்.
இவர் பிரிட்டிஷ் ராஜதந்திர சேவையிலிருந்து ஒய்வு பெற்றவர் சென்னையுட்பட பல ஆசிய நகரங்களில் பிரிட்டிஷ் தூதராக இருந் தவர். ஜப்பான், சீன, மலே மொழிகளுந் தெரிந்தவர். திருக்கு றள் உள்ளிட்ட பல தமிழ் நூல்க்ளை சுவைத்துப் படிப்பவர். ஐரோப் பிய மொழிகள் பலவும் தெரிந்தவர். ரஷ்ய அரச தூதர் ஒருவரு டன் வந்த மொழிபெயர்ப்பாளர் ஏதோ ஒரு சொல்லைத் தப்பாகச் சொல்லியபோது, அதனைத் திருத்திக் கூறி, ரஷ்ய அதிகாரியையே வியப்பிலாழ்த்தியவர். இவருக்கு இப்பொழுது வயது 65.
சென்னையிலிருந்தபோது பல தமிழ் அறிஞர்களையும், எழுத்தா ளர்களையும் சந்தித்திருக்கிருர், இந்திய ராஷ்ட்ரபதியாக இருந்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் மாணுக்கன் என்று தன்னைக் கூறிக்கொள்வதில் பெருமையடையவர்.
இவர் மல்லிகைக்கும் மல்லிகை மூலம் தமிழ் கூறும் நல்லுல கிற்கும் தமது வாழ்த்தைத் தெரிவிக்க விரும்புகிருர்,
மல்லிகைக்கு மற்றுமொரு அன்பு நேயர் கிடைத்துவிட்டார்."
வி. சுந்தரலிங்கம்

பன்முகத் தன்மை வாய்ந்த நல்லிணக்கம் தேவை.
நமது நாட்டில் இன்று தமிழ் நாடகத் துறை சம்பந்தமாக ஒரு புதிய உற்சாக விழிப்புணர்ச்சி தோன்றியுள்ளதை 'அவதா னிப்பவர்கள் நிச்சயம் மனமகிழ்ச்சியடைவார்கள்
நாட்டுக் கூத்துப் போன்ற பழைய அண்ணுவி மரபுநாடகங் களும் நவீன கதையம்சம் கொண்ட புதிய நாடகங்களும் தினசரி நாடு பூராவும் மேடையேறி வருகின்றன:
வெறும் கலை ஆர்வத்தை மாத்திரம் மூலதனமாகக் கொண்டே இயங்கி வரும் நாடக சபாக்களும். நிறுவனங்களும், தனி நபர் அமெச்சூர் இயக்கங்களும் இந்த நாட்டில் நாடக வளர்ச்சிக்காக தொடர்ந்து தொண்டாற்றி வருகின்றன.
இவற்றுள்ளே போட்டி, பொருமை, இருட்டடிப்பு, நக்கல் பண்ணுவது போன்ற சிறுமைத் தன்மைகள் வேரோடி உள்ளதை யும் நாம் கவனத்தில் எடுத்துள்ளோம்)
நமது தலைப் பட்டினத்தில் அடிக்கடி நாடகங்கள் மேடையே றுவது சகஜம். பல வகையான பல தரப்பட்ட நாடகங்கள் இவற்றுள் அடங்குவன:
இந்த நாடகக் குழுக் 1.1, க் குள்ளே இன்று கோஷ்டி மனப் LLLTTOTTTTT STTLL S00 SSS S S tt STLLLLLLL LLLLLL STLTTTLL TTT S S TTLL உணர்ந்து வேதனைப்படு.ெ i.
கொழும்பு மா நகரிலேயே நாடகக் கலஞர்கள் மத்தியில் ஒருவகைப் பகுதி மனப்பான்மை வளர்ந்து வருவதை நாம் அனு பவ பூரிவமாக உணர்ந்து, அதற்கான காரorம் என்ன என்பதை யும் ஆராய்ந்து வருகின்முேம்,
கொழும்பு-6 கொழும்பு - 13, கொழும்பு - 10 என்ற வகை யில் நாடகக் கல்ஞர்கள் தரம் பிரிக்கப்பட்டு - பகுதிப் பண்பு மிளிரும் நாடகக் கலைஞர்கள் இவரிகள் என்ற முத்திரை குத்தப் பட்டு - ஒதுக்கப்படுவதையும் நாம் அலட்சியம் செய்துவிட முடியாது
இந்த நாடகக் கலைஞர்களுக்குள்ளேயே உயரிவு - தாழ்வு பார்க்கப்படும் ஒரு அவல நிலை உருவாகியுள்ளது.
அந்தப் பகுதியில் ஒரு சிறந்த நடிகர் இருந்தாலும் பகுதி ாரணமாக அவரது சிறப்பம்சம் திட்டமிட்டு இருட்டடிப்புச்

Page 5
பணியில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
சண்டைக் காட்சிகளைத் தென்னிந்திய சில திரைப்படங்களை மனசில் வைத்துத் தயாரித்துள்ளனர். இப்படியான வேண்டா அம்சங்களைப் புகுத்தித்தான் ஒரு படத்தை வெற்றிகரமாக ஒட வைத்து விடலாம் என யாராவது கற்பனை பண்ணிஞல் அவர்கள் நமது ரஸிகர்களின் தரத்தைத் தவருக எடை போட்டவர்களாக முடிவில் முடிந்து விடுவார்கள்.
இலங்கைத் தமிழ்ப் படம் நமது தனித்துவத்தைத் தொட்டுக் காட்ட முனையலாமே தவிர, யாரையோ பிரதிபண்ணுவதென்ருல் நமது ரஸிகர்கள் மூலத்தையே பார்த்துத் திருப்தி அடைந்து விடுவார்கள் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
இந்தப் படத்திற்கு இத்தனை பரபரப்பு ஏன்? எனச் சிந்திக் கும் சமயம், வானெலியில் நாடகமாக இது நடைபெற்று, ஒரு பரந்த ர லிகர் கூட்டத்தையே முன்னர் பெற்றிருந்ததுதான் முக்கிய காரணமாகும்.
டொமினிக் ஜீவா YAr
கடிதங்கள்
"கோமாளிகள்" வெற்றிப் படமாக ஒடிக்கொண்டிருக்கின்றது. ஒரு வீட்டில் ஏற்படும் ஒற்றுமை நாட்டின் ஒற்றுமைக்கு வழி வகுக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவை ததும்பத் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் வெற்றிக்கு இயக்குநர் இராமநாதனின் நெறிப்படுத்துகையும் நடிகர்களின் ஒத்துழைப்பும் காரணம். கமலினி செல்வராசன் எந்த இந்திய நடிகைக்கும் தான் குறைந்தவரல்ல என்பதை நிரூபித்து விட்டார். பிராமணரான இராமதாஸ் மரைக்கார் பாத்திரத்திலும் முஸ்லீமான அப்துல் ஹமீட் ஐயர் பாத்திரத்திலும் சக்கைபோடு போடுகிருர்கள் . கே. ஏ. ஜவஹர், செல்வசேகரன், இராசகோபால் ஆகியோரின் நடிப்பும் படத்தை வெற்றிப் பாதையில் செலுத்துகின்றன. ஐய ரின் நடிப்பு மிகையாகவும் பாஷை போரடிப்பதையும் கவனிக்க வேண்டும். ب "
மானிப்பாய், பல்கலைமணி சி. கதம்பிராசா
கதை இல்லாமல் கதை பண்ணியிருக்கிருர் ராம்தாஸ். வச னங்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவங்களை விடச் சம்பவங்க ளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. சிலவற்றைப் பார்த்து - ரசித்துச் சிரிக்கலாம். சி ல வ ற் றை நினைத்து நினைத்துச் சிரிக்கலாம். பாத்திரங்களில் என் நெஞ்சில் நிலைத்திருப்பவர்கள், மரைக்கார் அப்புக்குட்டி உபாலி ஆகி யோர் மட்டுமே, ஐயர் கொஞ்சம் “ஓவர்" உச்சரிப்பு சில இடங் களில் தெளிவில்லை, ஒரு கேள்வி? ஈழத்தில் வாழ்கின்ற ஐயர்
6

மாரெல்லாம் கோமாளிகள் பட ஐயர் பேசும் பாஷையில்தான் பேசுகிருர்களா? பாடல்களும், படப்பிடிப்பும், நடிப்பும் சிறப்பா யிருக்கிறது. ஒலிப்பதிவு ஒத்துழைத்திருந்தால்" இன்னும் நன்முயி ருந்திருக்கும். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் ஓர் நம்பிக்கை - நாடகங்களைத் திரைப்படமாக்கி ஈழத்தில் வெற்றி பெறலாம். வானெலி நாடகங்களைத் திரைப்படமாக்கினலும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கைதான் அது.
நீர்கொழும்பு. லெ. முருகபூபதி
படம் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை போரடிக்காமல் இருந் தது. ரசிகர்க்ளுடைய எந்தவிதமான முணுமுணுப்பையும் (ஏனைய சில ஈழத் திரைப்படங்களைப் பார்த்தபோது இருந்தது போல) கேட்கமுடியவில்லை. காட்சிக்குக் காட்சி "நன்ருக நடிக்கிருர்கள். நன்முக எடுத்திருக்கிருர்கள். நல்ல ஒலிப்பதிவு" என்பன போன்ற விமர்சனக் குறிப்புகளைக் கேட்கக்கூடியதாக இருந்தது. இலட்சி யங்கள் வேறு, நடைமுறை வேறு என்றிருந்தால் சில்லையூராரின் ஒடிப்பிடிக்கும் காதல் காட்சிகளையும் கும் கும் (எம். ஜி. ஆர். பாணி) குத்துச் சண்டைகளையும் இங்கு விமர்சிக்காமல் விடலாம். ராம்தாஸ், ராஜகோபால், ஹமீட், சுப்புலக்ஷமி, கமலினி, செல்வ சேகரன் ஆகியோரது நடிப்பில் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. நகைச்சுவை என்ற வகையில் நல்லதோர் திரைவிருந்து. வசூலைப் பொறுத்தவரையிலும் இது வெற்றிப் படம் எனலாம். இதே குழுவினர் தொடர்ந்தும் பல சிறந்த படங்களைத் 5 Linar ரிக்க வேண்டும்.
நெல்லியடி. நெல்லை க. பேரன்
M
இந்தியப் பட்டங்களுக்கு ஈடாக இப்படம் தயாரிக்கப்பட்டுள் ளது. படத்திற்கு உயிரூட்டுபவர் மரிக்கார் ராம்தாஸ்தான். இப் படத்தில் பல குறைகள் இருந்தாலும் அவற்றைப் பெரிது படுத் தாமல் எமது நாட்டுத் தயாரிப்பு என்ற உணர்வோடு ஆதரவ ளிக்க முன்வர வேண்டும்.
கொழும்பு - 11 என். பாலச்சந்திரன்
★
வானெலியில் நாடகமாகக் கேட்டதைவிடத் திரையில் பார்த்த போது மிகவும் நன்ருக இருந்தது. ஈழத்தில் இப்படி முன்னேற்ற மாகப் படம் தயாரிக்க முடியும் என்பதை நி ரூ பித்து விட்ட சகோமாளிகள்" தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் எனது பாராட்டுக்கள்
யாழ்ப்பாணம். திருமதி சிவமலர் அரியரத்தினம்
7

Page 6
இப்படத்தில் நடித்த பெரும்பாலான கலைஞர்களுக்கு இது முதல் படமாக இருந்தபோதிலும் இந்தியக் கலைஞர்களுக்கு நாம் கொஞ்சமும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபித்துள்ளதுடன் ஈழத்தில் மேலும் நல்ல தமிழ்ப் படங்களைத் தயாரிப்பதற்குக் *கோமாளிகள்" மூலம் உற்சாகமூட்டியிருக்கிருர்கள். எழுந்து நிற் கக்கூடிய அளவிற்கு வளர்ந்துவிட்ட ஒரு குழந்தையைப் போல் உள்ள ஈழத்துத் தமிழ்த் திரைப்பட வளர்ச்சி வெகு வேகமாக வளர்ந்து வாலிபப் பருவத்தை அடையும் என்பதில் ஐயமில்லை.
எஸ். எம். கருணுநிதி
இதுவரை காலமும் வெளிவந்த இலங்கைத் தமிழ்த் திரைப் படங்களை விட பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதென்ற வகை யி ல் கோமாளிகள் வெற்றிக்குரிய தொன்றுதான். வெறும் நகைச்சுவை மட்டுமல்லாது நடிப்புத் திறன், பின்னணி இசை, டைரக்ஷன் போன்ற குறிப்பிடக்கூடிய அம்சங்களுக்கும் இதன் வெற்றியில் பங்குண்டு. பொது வாக வானெலி, மேடை நகைச்சுவை நாடகங்களைப் போல் யாழ்ப்பா ணப் பேச்சுத் தமிழ் மிகைப்படுத்தப்படாதது இங்கு வரவேற்கப் படத்தக்கதொன்று. தென்னிந்தியத் திரைப்படங்களின் தாக்கம் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது.
கந்தர்மடம் தேவன் ரெங்கன்
岸 ★
இப்படத்தின் கதை பற்றிச் சொல்வதானுல் ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனல் ஈழத்தில் வாழும் பல இனத்தவர்களைக் கதாபாத்திரங்களாகப் படைத்ததன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்றனர். பாடல்கள் திருப் திகரமாக இருந்தாலும் "அடி என்னடி சித்தி டீ." என்ற பாடல் மெட்டு இரவல்! இது வருந்தத்தக்கது. தனித்துவமான முன் னேற்றத்தை விரும்பும் நாம் இப்படியான இரவல் வாங்கக்கூடாது. இசை; இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களின் இசையை விட முன்னேற்றமாயும் ரசிக்கத்தக்கதாகவும் உள்ளது. ஐயர் மரிக் கார் ஆகியோரது நடிப்பில் செயற்கைத்தன்மை தெரிகிறது. அப் புக்குட்டி தமது பாகத்தை நன்ருகச் செய்தாலும் சில வசனங் களைப் பேசும்போது எங்கேயோ பார்த்துப் பேசுவது ஒரு குறை யாகத் தென்படுகிறது. சுப்புலகடிமி காசிநாதன் ஒரு யாழ்ப்பாணப் பெண்ணை அப்படியே தன் சிறப்பான நடிப்பினுல் சித்தரிக்கிருர், டேவிட்டாக வரும் சந்திரசேகரன் நிதானமாக நடிக்கிருர், இயல் பாக நடிப்பவர்களில் சிறப்பாக உபாலியையும் தணிகாசலத்தை யும் (கே. ஏ. ஜவாஹர்) குறிப்பிடலாம். ஆக, மொத்தத்தில் "கோமாளிகள் சில குறைபாடுகள் உடையதாயினும் துணிந்து ஈழத்தில் தமிழ்ப்படம் எடுக்க முன்வந்த தயாரிப்பாளர்களைப் பாராட்டுவதுடன் ஈழத்து முதல் நகைச்சுவைப் படம் என்ற ரீதியில் கோமாளிகளுக்கு வரவேற்புக் கூறுகின்ருேம்.
ஒரு ரசிகன்

தமிழ் வாசகர் ரசனையும்
தமிழ் நாவலின் போக்குகளும்
வரலாறு எங்கெங்கு தெளி வின்மையைக் கொண்டுள்ளதோ, எவ்வெவ்விடங்களில் குறைவான ஆதாரங்களைக் கொண்டுள்ளதோ சாதுர்யமாக அவ்வப் பகுதிகளைக் களமாகத் தெரிந்தெடுப்பதும் அதற்காக முன்னுரையில் மன் னிப்புக் கேட்பதும் இவர்கள் அனைவருக்கும் பொதுவியல்பு. அழகாக அகிலனது வார்த்தை களிலேயே சொல்வதானுல் *சரித்திர ஆராய்ச்சியாளர்கள் தக்க சான்றுகள் கிடைக்காமை யால் சிற்சில இடைவெளிகளை இன்னும் விட்டுவைத்திருக்கிருர் களல்லவா? அந்த இடைவெளி களின் வழியே கற்பனையின் சில கொடிகளைப் படரச் செய்வது" தான் இவர்களது வரலாற்று நாவல் முயற்சிகள்.
இவர்கள் தமக்கும் வாசக ருக்குமுள்ள இடைவெளியைக் குறைப்பதற்காக வ ர லா ற் று "இடைவெளி' களை நிர ப் பும் போது நாவலுக்கும் வரலாற் றுக்குமுள்ள இடைவெளி நீண்டு விடுகிறது. வாசகரிடமிருந்து கண் ணி ர் த் துளிகளை யும், பாராட்டு மடல்களையும் பெறு வதற்காக வரலாற்று நிகழ்வுக ளையே முற்று முழுதாக மாற்ற வும் தயங்குவதில்லை. அகிலனது *வெற்றித் திருநகர்" அதன் முடிவின் மூலம் அதிக வாசக ரது பாராட்டுக்களைப் பெற்றி
செ. யோகராசா
छ 1r;
ருந்தது. ஆயின், வரலாற்றின் படி அதில் வரும் சாளுவந்ர சிம்மர் குறித்த சந்தர்ப்பத்திலே இறக்கவில்லை. தப்பித் தவறி இதையறிந்த வாசகரொருவர் தப்பித்தவறி அதைக் கேட்டும் விட்டார். 'சாளுவ நரசிம்மர் தாம்பர பரணி நதிக்கரையில்
இறந்ததாகச் சரித்திரம் கூற வில்லை" என்று கேட்டதற்கு அகிலன் கூறினர். சாளுவநர
சிம்மர் சிறை செய்யப்ற்ெறு அனுப்பப்பெற்ருர் என்றுதான் வரலாறு கூறுகிறது. எனினும் நான் வரலாற்று ஆசிரிய ன் அல்லன். வரலாற்றுக் கதாசிரி யன். ஆகவே, அடிப்படையான சில வரலாற்று நிகழ்ச்சிகளை 常儡器 Pಙ್ಗಹಿ கொண்டு என் கற்பனைப் போக்குப்ப 6) #%ဓါးနှီ##ဓါဒိ#ခိဒ္ဓိ” ருக்குள்ள இந்தக் குறைந்தபட் சக் கற்பனை உரிமையை வாச கர்கள் பாராட்டுவார்கள் என்றே நம்புகிறேன்" த மிழ் வாசகர் தாம் இன்றுள்ள நிலையில் நிச்ச யமாகப் பாராட்டவே செய்வர் இவ்விடத்தில் "வேங்கையின் மைந்தன்" தொடர் நாவலாக வந்தபோது கொண்டிருந்த முடி வினை நூலுருப் பெற்றபோது அகிலன் மாற்றியதும் நினைவுக்கு வருகிறது.
விரும்பிய விதங்களில் கற் பனையை வளர்ப்பதற்கு வாய்ப்

Page 7
பாகவும், எழுதுவது மிக இலகு என்பதற்காகவும் அதிகம் இலக் கிய நூல்களே வரலாற்ருதாரங் களாகவுள்ள ஆரம்ப காலப் பகுதிகளைச் சில ர் களமாகக் கொள்வர் இவ்விதத்தில் முன் னிற்பவர் நா. பார்த்தசாரதி; அவரது கேபாடபுரம், வஞ்சிமா நகரம் மணிபல்லவம் நித்தில வல்லி எ ன் பன மூவேந்தர், களப் பி ர ர் காலப் பகுதிக ளைச் சேர்ந்த  ைவயே. இக் காலப் பின்னணியில் பொற் காலப் பெருமைகளை மீட்டுவதும் எளிதாகும்
7
விடுதலைக்குப் பிற் பட்ட சமூக நாவல்களுட் பெரும்பா லானவை, குறித்த சில குடும் பப் பிரச்சினைகள், மேலை நாக ரீகத் தாக்கங்கள் பண்பாட்டு மாற்றங்கள், காந்தீய மகத்து வங்கள், சீர்கேடுகள், ஊழல் கள் முதலியவற்றைத் தற்காப் பாகக் கொண்டு ஒன்றில் மிகை யுணர்ச்சிக் காதல் கதைகளாக அல்லது ந வீ ன வாத்ஸாயன விளக்கங்களாக வெளி வருவ தைக் காணமுடிகிறது.
*நா. பா. வின் ஆரம்பகா லச் சமூக நாவல்கள் பொது வாகப் பழைய தமிழ் இலக்கிய சமயக் கதைகளை நவீன காலப் பின்னணியிலே தருபவை: "ஒரு நூற்ருண்டுக்கொருமுறை மட்டும் மலரும் தகைமை பெற்ற" நாவ லான குறிஞ்சி மலர்" திலகவதி யாரின் கதை. 'பொன்விலங்கு" சிலப்பதிகாரப் போக்குகளைத் தழுவியது. அண்மைக் காலத் தவை காந்தீயப் போராட்டங் களையும், சீரழிவுகளையும் காட் டுபவை. இந் நாவல்களின் உள் ள ட க் கம் எதுவானலும் ஒவ் வொரு நாவல்களிலும் ஓர் இலட் சியப் பற்றுள்ள இளைஞன் -
அவன் ஒன்றில் பத்திரிகை நிரு பன் பத்திரிகை ஆசிரியன், கல் லூரி ஆசிரியன், நடிகன், படத் தயாரிப்பாளன். அல்லது காந் தியவாதி - அவனது இலட்சி
யப் போராட்டம். அவ ன து காதலுக்காக உருகி, ஏங்கி, தம் மை யே அாப்பணிக்கும்
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற் பட்ட பெண்கள் முதலியோர் இடம்பெறுவர். இதனுா டே தெய்வீகக் கா த ல் உணர்ச்சி வெளிப்பாடுகளும் கவிதைகளும் மேற்கோள்களும் வெளிப்பட்டு வாசகர் மனத்தைப் பற்றி க் கொள்ளும். எல்லா நாவல்களி லும் "சிவந்த தாமரைப் பூப் பாதங்கள் நளினமான வளை ஒலிக்கும் கரங்கள் க வி யின் த னி  ைம நாட்டியக்காரியின் இங்கிதம், பதங்களின் பக்குவம் திரும்பத்திரும்ப இடம்பெறும்.
"காதல் என்பது இந்த நாட் டின் வேற்றுமைக்கு அருமருந்து. அன்பு ப் போர் புரிவதற்குக் கூர்மையான மலர்க்களை அது" என்ற கொள்கையுடைய அகிலன் மிகையுணர்ச்சிப் பாங்குடைய காதல் கதைகளை எழுதி வாசக ரின் பேரபிமானத்தைப் பெற்ற வர். வங்கத்து நாவல்கள் எழுப் பிய மிகைப்புணர்ச்சிப் பாங்கு இப்போதுதான் முழுமை நிலை யில் சுவைக்கப்பட்டது. தமிழி லெழுந்த மிகையுணர்ச்சிக் காதல் நாவல்களுள் பாவை விளக்கு சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது.
உணர்ச்சி வசப்பட்ட எழுத் தாளன் ஒருவன் கதாநாயகனுக இருந்தமையும் நாவலில் நாவ
லாசிரியரது சொந்த அனுபவங்
கள் கலந்திருந்தமையும் ஒருவர் இருவரல்ல நான்கு பெண்கள் கதாநாயகனை விரும் புவது ம் உண்டென்ருல் அந் நாவல் எந் தளவுக்கு மிகையுணர்ச்சி உடை யதாயிருக்கும் என்பதைக் கூற

வும் வேண்டுமா? வாசகரின் நாடிண்யப் பிடித்துப் பார்த்துக் கதை சொல்லத் தெரிந்தவர் *அகிலன்" என்பது உண்மை தான். இப் பாவை விளக்கில் வாசகருக்காக அகிலன் படைத்த பா நிரங்களே உமாவும், செங் கமலமும். (தமக்காகப் படைத் துக் கொண்ட பாத்திரம் தணி காசலம்) தமிழ்ப் பண்பாட்டுக் காகப் படைத்த பா த் தி ரம் தீேவகி. எனவே, பல்வகைப் பட்ட வாசகரையும் கவர்ந்தமை இயல்பானதே.
பாத்திரங்களை மட்டுமன்றி க  ைத யையும் பல்வகைப்பட்ட வாசகரும் படிக்கும் விதத்தில் பின்னும் தி ற  ைம அகிலனுக் குண்டு இன்னுெரு விதமாகக் கூறுவதாயின் நா வலி லிட ம் பெறும் ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகள் எந்நிலை வாசகரை யும் இலகுவில் ஈர்க்கின்றன. தேசப்பற்றினை வெளிப்படுத்தும் ஆரம்பகால நாவலான பெண்" பெண் வாசகராலும் பெரிதும் விரும்பப்பட்டது. காதல் ஒரு வனைக் கைப்பிடித்து அவன் காரி யம் யாவினும் கைகொடுத்து உதவுவதே மாதரின் தலையாக அறம் என்ற பாரதியின் கருத் துக்கு விளக்கமாக அமைந்திருக் கிறது அகிலனின் பெண்" என்று விகடனில் எழுதியிருந்தார் ஒரு பெண் . ஆயினும் ஆசிரியரது நோக்கம் அதுவல்ல. வியப்பென் னவெனில் அந் நாவலை இத்த கைய பின்னணியிலும் வாசகர் நோக்குவரென்பது அகிலனுக்கு அதுவரையும் தெரியாதாம். இதன் பின்பே பல்வகைப்பட்ட வாசகரையும் எவ்வாறு கவர லாம் என்பதை உணர்ந்து கொண்டார் அகிலன்.
மத்தியவர்க்க உயர் வகுப் பிரின் குடும்ப வாழ்க்கையைப் பின்னணியாக வைத்துத் திரைப்
படப் பாணியில் நாவல்கள் எழுதிக் குவிப்பவர் மணியன் மிகச்சிறிய சம்பவங்களை இயன்ற வரையிலும் நீட்டி ஆங்கில தமிழ் இலக்கிய மேற்கோள்களுடனும் கவிதைகளுடனும் ஆரவாரத்து டன் எழுதி வருபவர். ஏதோ ஒரு புதிய விடயத்தை அப்போது தான் கண்டுபிடித்தது போல முன்னுரை அல்லது பின்னுரை யிலிடம்பெறும் செய்திகள் ஆர்ப் பரிக்கும். அண்மையில், இந்தியக் குடும்பங்கட்கிடையேயுள்ள சில பிரச்சினைகள் அமெரிக்கப் பேரா சிரியர் சிலருடன் உரையாடிய பின்பு புலப்படவே அதனை மைய மாகக் கொண்டு "ஆசை வெட் கமறியும்" என்ற நாவலை எழுதி வருகின்றர். தம்மோடு வாசக ரையும் ஒத்துழைக்குமாறு கேட்
டுள்ளார்.
என் சிந்தண்யை மையக் கருத்தாக்கி நான் நெருங்கிப் பழகிய கேள்விப்பட்ட சில நண் பர்களையே கதாபாத்திரமாக்கி இக் கதையை எழுதுகின்றேன்; "மோகம் முப்பது வருஷம்" என்ற கதையை எழுதும்போது உங்கள் கருத்துக்களைக் கதை முடிவில் எழுதுங்கள் எ ன் று கேட்டுக் கொண்டேன். இப்போது அப் படி அல்ல. இக்கதை உங்கள் ஒவ்வொருவருடைய அந்தரங்க வாழ்க்கைப் பிரச்சினை. L 160“ வெளியே சொல்லமுடியாமல் வடிகால்கள் தேடிக்கொண்டிருக் கலாம். உங்கள் பிரச்சினைகளை உங்கள் முன் தெளிவாக்கி வெளி யிட நீங்கள் தெரிவிக்கும் கருத் துக்கள், பிரச்சினைகள், அனுப வங்கள் என க் கு உதவியாக இருக்கலாம். அவற்றை அவ்வப் போது எழுதுங்கள்" அடுத்த தடவை வெளிநாடு செல்லும் போது வேறுசில பிரச்சினைகள் புலப்படுவதும் அவற்றை வாச கரையே எழுதும்படி கேட்பது வும் நிகழக்கூடும்!
冀

Page 8
8
8, ಗ್ಲà:4G trpur ro முதலிய "நியூ * ፵ திரைப்படங்கள் பிரதிபடுத்திய பரபரப்பு ஏற்க இது வந்து கொண்டிருந்த *லியல் ரீதியிலான நாவல்க திடீரி வளர்ச்சிக்கு உத் ஷ்ேக்மளித்தன. நியூ வேவ் திரிவில் என்ற மகுடமிட்டு லவ் பேட்ஸ்" என்ருெரு நா வலை முதலில் எழுதினர் மணியன். *ஆக்கினிப் பிரவேசம், தோரஹா
ய உரையாடல்கள் இதில் க்ரூகின்றமை குறிப்பிடத்தக்கது) இத்ரீடர்ந்து குமாரி பிரேமலதா, gவிப்ா தங்கதுரை முதலிய இந்திய எழுத்தாளர் அரங்கே றினர். "நியூவேவ்" என் ரு ல் ஆன் பெண் உறவுபற்றி அல்லது விபசாரப் பெண்களின் வாழ்க்கை பூற்றிக் கூறவேண்டுமென்பது ချွံချွံ{#ၾ၈rg/ எண்ணம். உள்ள க்கம் மட்டுமன்றி எழுதுபவ |းမြို့ பெயர்களும் கவர்ச்சியாயி நீக்க வேண்டுமெனக் கரு தி
yi 器 ነኽ
ஸ்கண்ல்லாரக வாசகரையும் ஜிக்கத் தூண்டுவதற்காக "நியூ கிேவ்' என்பதற்குப் பதிலாக இண்மைக்கதை" என்ற "லேபல்" 29போ து பயன்படுகிறது. என்ற பெண் விபச்சார இகுதியொன்றில் பட்ட கஷ்டங் *இ* வைத்து உண்மையான க்ஷித் என்றெழுதப்பட்ட "என் y கமலா" முடிந்த பின்பு, திதிாயிரக் கணக்கான வாசகர் போது கமலா என்ன செய் ஒழுள்? என்று தொல்லைப் Rடுத்தியமையால் இப்போது ஆதலா? வை எழுதி வருகின்ருர் டிப்ா தங்கதுரை. “என்பெயர் கமலா முடிந்த பிறகு அதுபற்றி
莖體
பெருகியமைக்குப்
க்க் பூண்களது பெயர்களையும் சிலர் டு க் கொள்வர். வேணு
நிகழ்ந்த உரையாடல்கள், சாதக பாதகமான கருத்துக்கள் வாசகராகிய முன்னணிச் சினிமா நடிகைகளின் அபிப்பிராயங்கள் வெளியிடப்பட்டது போல இந் நாவல் முடிந்தபிறகு வெளியி
II. --God) TLD .
"உண்மை நாவல்" வகைகள் பிறிதொரு காரணமுமுண்டு. "தன்னை வாச கர்கள் நன்ருகக் கவனிக்க வேண் டும் எ ன் ற பிரக்ஞையோடு எழுதிய கதைதான் கமலா படித்துவிட்டு வேலை கிடைக் காமல் ஒரு வர்க்கம், வரதட்சணை வாங்கிக் கொண்டிருக்கும் வர்க் கம், பிச்சையெடுத்து வயிறு நிரப்பும் ஒரு வர்க்கம் - இவை பற்றி எழுதினல் யாரும் படிப் பதில்லை. கதிரில் "நைட்ஷோ" என்ற கதையை எழுதினதால் தான் என்னையும் இந்த வாசகர் கள் கவனிக்க ஆரம்பித்தார் கள். கத்திக் கத்திப் பேசி ஆவர் ஆக்டிங்குக்குக் கிடைக் கிற பாப்புலாரிட்டி இது என்று ஒருவர் எழுதியிருந்தார் கதிரில், ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மை தான் இது. "என்பெயர் கமலா" வைப் பொறுத்தவரையில் நாவ லின் பெயர் கமலா" என்று குறுக்கப்பட்டதிலிருந்து கமலா வின் முகந்தவிர முழுமை த் தோற்றம் வரவில்லை என்பது வரையில் வாசகர் கூர்மையாக அவதானித்திருந்தனர், இத்த கைய நாவல்கட்கு ஜெயராஜ் முதலியோர் வரையும் படங்கள் மே லும் கவர்ச்சியேற்படுத்து கின்றன என்பெயர் கமலா பற்றிய கலந்துரையாடல் முடி வில், "புஷ்பா தங்கதுரை, ஜெய ராஜ் இருவரும் சீர்தி ஒரு நியூவேவ் ஏற்படுத்தி இருக் கிருர்கள்" என்ற கருத்து ஏற் கப்பட்டது. இன்றைய நாவல் களை ப் பொறுத்தவரையிலுங்
கூட இது பொருந்தும்
 

9
வாசகரது ரசனையை மாற் றும் ஆற்றலும், வர் ய் ப் பும் ஆரம்பகால நாவலாசிரியருக்கு இருந்திருக்கலாம் இருந்தது. ஆயினும், பின்பு உணரப்பட்ட சமுதாய மாற்றங்களின் நிர்ப் பந்தங்கள் வாசகரது ரசளயை யும், நாவலாசிரியரது இயல்பி னையும் மாற்றும் தடைகளாயின பரபரப்பு நாவல்கள் தொடக் கம், "உண்மைக் கதை கள்" வரையில் புதிய நாவல்வகை கள் - ஆயினும் அடிப்படையில் பிரதாப முதலியார் சரித்தரப் போக்கிலிருந்து விலகாமல் ை வாசகரின் ரசனைக்கேற்ப வந்து கொண்டிருப்பதனையே நாம் அவ தானிக்கிருேம். கல்கி" வாசக ரென்ருலென்ன, "கதிர்" வாசக ரென்ருலென்ன அண் வரும்
"கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் உற்சாகமுறும்" குடும்பத்தின்
வாரிசுகளே; அண்மைக் கால நாவலொன்றின் பின்னுரையில் இடம்பெறும் இவ் வாக்சியங்கள் சந்தேகமின்றி இதையே மெய்ப் பிக்கின்றன:
"காபரே ஹாலில் மேனகா வுக்கும் ரமேஷ்க்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தைக் காட்டி முடிவில் சஸ்பென்ஸில் நிறுத்தி யதும் வாசகர்கள் மத்தியில்
மெனகா தன் தூய்மையை • ارسا இழந்துவிடப் போகிருள் என்று வாசகர்கள் பதறிய பதறல் பரபரப்புடன் கடிதம் மூலமும் போன்கள் மூல மும் துடித்த துடிப்பு மறக்கமுடியாதவை. Οι
(எனவே, 5 Logi பயமும் பதட்டமும் அர்த்தமற்றவை என்பதை கண்ணதாசன் உணர் өшптатптаь!)
(முற்றும்)
புதிய சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 12-00
(மலர் உட் பட தனிப்பிரதி - 75 இந்தியா, மலேசியா 18-00
(தபாற் செலவு உட்பட)

Page 9
நரகத்தின் நறும் பூக்கள்
கொடிய இருட் கூடாரம் கொடும் இரும்புச் சங்கிலிகள் வேகும் நரக நிழல், வெஞ்சிறையாம் - இவ்வாருய் வாடும் என் மக்களினை வாயூமை யாக்குகிருர்;
tul lig.6 of சாட்டையடி படுசாவு
- இவ்வாருய் அச்சுறுத்து கின்ருர் - என் அருமந்த மக்களினை வோழ்க நரகில்?
rum T6 வாய்க் கொழுப்பாய்க் கூறிச் சென்ருர்,
இந்த அணுதைக் குழந்தைகளைக் s6ðarle prir? அழுகுணிப் பீடைகளை ஆண்டாண்டாய்த் துணைகொண்ட அனுதைக் குழந்தைகளின் அவலத்தை
அறிவீரா? அவர்கள் பிராத்தனைகள் எவர் செவியும் எட்டாமல் சோர்ந்து களத்துவிட்ட செல்வங்கள் பார்த்தீரா?
★
பாலஸ்தீனக் கவிதைகள்
*சின்னக் குழந்தைகளே, சொல்லுங்கள்- - நீங்கள் யார்? அருமைக் குழந்தைகளே அவதிக்குக்
sfrut6oorb uurir ti ?”
"கொடு நரகில் வெடித்தெழுந்த கோடி முகையரும்பாய் நரகத்தில் பூத்த நறும் பூக்கள் p5TLDT (BonunTużè ! மனிதக் கொழுந்துகளாய் மா கொடியோர் மதிக்காத நமக்காக,
நிற்கும் - இக் 49h.L_ITTIEJ és6PT நடுவே
நிலையாம் ஒர் வழி சமைப்பான் நிதமொளிர
வருஞ் சூரியன்: பொன்வாழ்வு காணப் புறப்பட்ட நெடும்படையாய் பூமியிலே அணி நடந்து படைகொணர்வான் செஞ்சூரன்! - காதலெனும் பெய் பணியால் கரு நரகின் நெருப்பணைப்போம்!
நான் ஆசியாவைச் சேர்ந்தவன்
ஆசியா துதான் |و-- எநதன கண்டம்
வளர்த்திடும் காதலின்ன வடித்திடும் குருதியின்உந்தி, உந்தி
எழும்
உற்சாகத்தின்
பெருநிலம், கண்டம் அதுதான் ஆசியா!

காலத்தைத் தள்ளிப் போடுவோர் மீது, கடுஞ்சினம் கொண்ட மனிதர்கள் வாழும்
பெருநிலம், கண்டம் அதுதான் ஆசியா பசித்து, சோர்வுற்ற, மறுக்கப்பட்ட மக்களை - என்னுயிர் மாணிக்கங் கள்தமை
நேற்று - கண்ணெடுத்து நோக்கா திருந்து
மூலம்: ரஷீத் ஹசஸைன்.
தமிழில்:
இன்று= ஆசியாவின்
கெளரவம் தன்னை கணக்கிலெடுக்கும் கதிக்காளான
எஜமானர்களின் எதிரியாய் எழுந்த கலகக்காரரின் கனல் தீச் சுவாலையின்
d567 lb அதுதான் எந்தன் ஆசியா
பண்ணுமத்துக் கவிராயர்
துடுப்புகள் இழந்த ஒடங்கள்
சமுதாயக் கடலின் துடுப்புக்கள் இழந்த ஒடங்கள் நாங்கள்! எங்கள் உணர்ச்சிப் பூக்கள் பூக்க நீரை ஊற்றிய.-- துணைகள் றி இல்லாமல் போனதால். கனவுத் தீயில் சாம்பலாகின அப்பூக்கள்! நாங்கள் சத்தியவானின் சாவித்திரிகள் அல்ல; கால தேவணுேடு போராடி எங்கள் கணவர்களைக் காக்க; நாங்கள் கண்ணகிகள் அல்ல! எங்கள் கணவர்களை எடுத்துச் சென்ற கால தேவனை எரித்துச் சாம்பலாக்க! கால விசுவாமித்திரமுனிவனின் சாபத்தால் எங்கள் உணர்ச்சி அகலிகைகள் கல்லாக் அவைகளுக்கு சாபவிமோசனம்
reser
கொடுக்க எத்தனை இராமன்கள் இந்த சமுதாயத்தில்? சிலநேரம் .சில இளசு" கள் துடிப்பு வேகத்துடன் எங்கள் துணைகளாகவர ~ அவர்களின் உணர்ச்சிப்பூக்கள் பூத்து வாடியபின் அவர்கள் எங்களை கைவிட மீண்டும்=
நாங்கள் சமுதாயக் கடலின் துடுப்புகள் இழந்த
ஒடங்கள்: என்ருே ஒரு நாள் போராடி. போராடி..
சமுதாயக் கடலின் கரையில் ஒதுங்கும் எங்களுக்கு அப்பொழுது, துடுப்புகளும் தேவை இல்லை! துணைகளும் தேவை இல்லை! அன்று
நாங்கள் எங்கள் உணர்ச்சிகளுக்கு
சமாதிகள் கட்டி முடித்திருப்போம்! ★
மேமன்கவி
15

Page 10
உணவு உதவியும்
அமெரிக்கக் கொள்கையும்
அமெரிக்காவின் நலன்களுக் குகந்த வகையில் அதன் உணவு உதவிக் கொள்கையை எவ்வாறு மாற்றியமைக்கலாம்? இப் பிரச் சின்ை இன்று அமெரிக்க அரசி வல்வாதிகளின் LDGðIT GOL-GOpuJä. குடைந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் உணவு உத வியானது, அதைப்பெறும் நாடு களனைத்திலும் அமெரிக்காவின் செல்வாக்கைப் பதிப்பிப்பதாயி ருத்தல் வேண்டும் என்று விவ சாயத் துறைக்கான அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஏரல் எல். புட்ஸ் பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். அமெரிக்கா வின் உணவு விநியோகத்தை லாபந்தரும் முதலீடொன்ருக்கு வதற்கு இது ஒன்றே வழி என அவர் நம்புகிருர்,
தம்மிடம் அமரிமிதமாக வுள்ள உணவை அரசியல் நோக் கங்களுக்காக அமெரிக்க ஆளும் வட்டாரங்கள் பயன்படுத்துவது ஒரு மரபாகிவிட்டது. பி. எல். 480-வது சட்டத்திற்கமையவே அமெரிக்கா வளர்முக நாடுக ளுக்கு உதவி வழங்குகிறது. இந் தச் சட்டத்தை உருவாககுவ தில் பங்குபற்றிய வில்லியம், பவுல் புடொக் ஆகிய இருவரும், உ ண வு விநியோகங்களுக்கு ஊடாக இதர நாடுகளை அமெ ரிக்கா கட்டுப்படுத்தும் சாத்தி யப்பாடுகளைத் தாம் ஆரம்பத் திலிருந்தே கண்டு கொண்டதாக
எல் மனெஷின்
*பட்டினி - 1975" என்ற தமது நூலில் ஒத்துக்கொண்டுள்ளார்
96.
பி. எல் 480 சட்டத்தின் நோக்கங்கள் செயல்படுத்தட் பட்டு வந்துள்ளன. 1961 - ல் அமெரிக்க செனட்டின் வெளி விவகாரக் கொள்கைக் கமிஷன்
இந்தியாவுக்கு வழங்கப்படும் 1962 - 1963-ம் ஆண்டுகளுக் கான உதவியை 25 சத வீதத்
தால் வெட்டியது. இதற்குக் காரணம் இந்தியா, அமெரிக் காவின் விருப்பத்திற்கெதிராக நடந்து கொண்டதுதான். இந் தியா த னது நிலப்பரப்பில், கோவாவிலும் டியூமிலும் நில விய போர்த்துக்கேய காலனியா
திக்க ஆட்சியை அகற்றியது அமெரிக்காவுக்குப் பி டி க்க வில்லை;
1965 - 66 ம் ஆண்டுகளில் இதே சாதனத்தைப் ப யன் படுத்தி இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் தனது செல்வாக் கைச் செலுத்த அமெரிக்கா புதிய பிரயத்தனங்களை எடுத் தது. ஆனல் இந்தோ சீனவில் அமெரிக்க ஆக் கி ரமிப்பு த் தொடர்பாக இந்தியா எடுத்த நிலை அமெரிக்க ஆளும் வட்டா ரங்கள் அதிருப்தியடைந்தன.
கடந்த பல வருடங்களாக அமெரிக்காவின் உணவு உதவி யானது அரசியல் நோக்கங்களுக்

க்ாக முன்னரைக் காட்டிலும் பரந்த அளவில் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. நீண்ட கால மாக தென் வியட்நாமிலும் கம் போடியாவிலுமிருந்த பொம்மை அரசாங்கங்களுக்கு பெ ரு ந் தொகையான உணவு வகைகளை அமெரிக் கா இலவசமாகவே அளித்தது. இவையனைத்தும் மேற் கூறிய இரு நாடுகளிலும் தேச பக்த சக்திகள் வெற்றி யடைந்தன் காரணமாக நிறுத் தப்பட்டுவிட்டன. இந்த உதவி களை அமெரிக் கா அளித்த போதும், தென் வியட்நாமின தும் கம்போடியாவினதும் பொரு ளாதாரத்தை அதன் ஆக்கிர மிப்புப் படு மோசமாக நாசம் செய்தது
1975-ல் சிலி குடி ய ர சில் சல்வடோர் அலண்டேயின் சட் டபூர்வமான ஜனநாயக அரசாங் கத்தைக் கவிழ்ப்பதற்கு அமெ ரிக்கத் தலைவர்கள் உதவி செய் தனர். சிலியின் உணவு நெருக் கடி யை உக்கிரப்படுத்தினர், கடனுக கோதுமை கொடுக்கும் படி சிலி விடுத்த வேண்டுகோளை அமெரிக் கா ਪੰਨੇ
ல் ராணுவ பாளிஸ்ட்டுகள் #ಣ್ಣ: சிலி ஆட்சி யைக் கைப்பற்றியதும் அமெ ரிக்கா உடனடியாக உணவு வாங்குவதற்குக் கடன் கொடுத் ësi e
ஐ. நாவில் ஆட்டம் கண் டுள்ள தமது நிலையை வலுப் படுத்துவதில் அமெரிக்க ஆளும் வட்டாரங்களது கவனம் சென் றுள்ளது; இந்த நோக்கத்துக் காக இன்று அவை தமது உணவு உதவியைப் பயன்படுத்த முயற் சிகள் செய்து வருகின்றன. ஐநாவில் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்கும் சகல நாடுகளுக்கும் அளிக்கப்படும் உதவியை அமெரிக்க அரசாங்
கம் வெட்டிக் குறைக்கவுள்ளது என்று அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹென்றி கீசிங்கர் அறிவித்துள்ளார்.
இன்று மூன்றும் உலக நாடு களில் அமெரிக்காவின் அரசியல் குறிக்கோள்கள் மீது வன்மை
யான கண்டனம் தெரிவிக்கப் படுகின்றது; இவற்றிலிருந்து தப்பித்துக் காள்வதற்காக
உலகின் உணவு நெருக்கடிகளைத் த ன க் குச் சாதகமாகப் பயன் படுத்த அமெரிக்கா பிரயத்த னங்களை எடுத்து வருகின்றது; இதர நாடுகளுக்கு சிறு தொகை யான உணவை வினியோகித்த வுடன் அந்நாடுகளது உள்நாட்டு விவகாரங்களில் தாம் தலையிடு வதற்கு உரிமை உள்ளவர்கள் என்று அமெரிக்கத் தலைவர்கள் நம்புகிருர்கள் என கால ஞ் சென்ற எகிப்திய ஜனதிபதி தா சர் அடிக்கடி கூறுவார்; *உலகிலேற்பட்டுள்ள உணவுப் பற்ருக்குறையை அமெரிக்க நிர் வாகம் தனது நலன்களுக்கேற்ற வகையில் பயன்படுத்துகின்றது. மனிதகுலத்துக்கு எதிரான படு மோசமான குற்றம் இது என்றே கருதவேண்டும்" இவ்வாறு இந் திய செய்திப் பத்திரிகையான நாஷனல் ஜெரால்ட் அண்மை யில் எழுதியுள்ளது.
உணவு உதவி வழங்குவதில் அமெரிக்க நிர்வாகம் காட்டும் தவருண பிரயோகங்களை வளர் முக நாடுகள் கண்டித்து வரு கின்றன. இப் பிரச்சினை குறித்து ஒரு பொதுத் திட்டத்தை உரு வாக்கவும் அமெரிக்கா உணவை ஒரு அர சி ய ல் சாதனமாகப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் அனைத்தையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எ டு க்க வும் வளர்முக நாடுகள் பல்வேறு சர்வதேச மகாநாடுகளில் முயற்சி செய்து வருகின்றன. கொழும்

Page 11
சீனியை நக்கிக்கொண்டு குடித்த வெறும் தேனீர் வயிற்றில் எங்கு போயிற்றே என்று எண்ணியபடி,
"இந்த அநியாயம் விழுந்த அரிசியைப் பாருங்கோவன். எத் தினை மணித் தி யா ல மாய்க் கிடந்து அவியுது. இது க ள் வேறை பசியால் துடிக்குதுகள். நேர காலத்துக்கு இந்த அரிசியை வாங்கித்தந்திருந்தால்.
அவள் கீரை ஆய்வ  ைத நிறுத்திவிட்டு அவசரமாக கஞ்சி வடிக்க ஆரம்பித்தாள்.
"நான் என்னப்பா செய்ய, நேரகாலத்துக்கு அந்த மனிசன் கடைதிறந்தால்தானே. நேற் றுப் பின்னேரம் வேலையாலை வரேக்கை ஞாபகமாய் போனன். அரிசி இல்லை வரவேணும் எண் டுது. காலமை கடைதிறக்கிற நேரம் போனுல் ஒரு ஆள்தான் சாமான்வாங்க நிக்குது, அந்த ஆ ளை க் கவனிச்சுப் போட்டு ஒவ்வொருத்தராய் வாறவை யைக் கவனிக்குது அல்லாமல் நான் நிக்கிறதைக் கண்டதாயும் காட்டேல்லை. நான் என்ன கையிலை காசு வைச்சிருந்தன நியாயம் பேசுறதுக்கு. கடனுக்கு அரிசி வாங்கிறவன் காத்திருக் கிறதுதான் நி யா யம் எண்டு பேசாமல் வாயை மூடிக்கொண்டு நிண்டன்"
ஆத்திரத்திற்கு மேல் அடி பட்ட நெஞ்சின் ஆற் ரு  ைம தொனிக்கிறது அவன் குரலில்.
கஞ்சியைத் தயார் செய்து கொண்டே பரிவுடன் அவனப் பார்க்கிருள் அவள்
நீேங்கள் ஏன் வேதனைப்படு நீங்கள். ஏழையளுக்கு எப்பவும் மற்றவை தாற மரியாதை அவ மதிப்புத்தானே? இந்த ஊரி லையே அந்தப் புண்ணியவான் தான் கடனுக்கு அரிசி தாறது. அதுக்காக அந்தாளை கையெ
0.
டுத்துத்தான் கும்பிடவேணும் ெ இல்லாட்டி இந்த வீட்டிலை எத் தினை நாள் அடுப்புப் புகையா மல் இருந்திருக்கும்"
அவனை அமைதிப்படுத்தும் முகமாகக் கூறியவள் ஆளுக் கொரு சிரட்டையைக் கொடுத்து கஞ்சியை வார்க்கிருள். வெளியே உள்ள மூத்தவனைக் கூப்பிடுகின் ருள். அவன் வந்ததும் அவனுக் கும் கஞ்சியை வார் த் துக் கொண்டே சொல்கிருள்.
நோளைக்குத் திங்கட்கிழமை கூப்பன் எடுக்க வேணும். காசுக் கென்ன செய்யிறதாய் யோசனை? இண்டையப் பொழுது இப்பிடிப் போட்டுது. காலமை பாணை வாங்கலாம். அரிசி வா ங் க ஏதென் வழி செய்யவேணுமே?*
அவன் மெளனமாகக் கஞ்சி
யைக் குடித்துவிட்டு எழுந்து போய் கையைக் கழுவுகிருன். மூத்த வன் ராசு சிரட்
டையை முன்னே நீட்டியவன் ஏதோ நினைவாக எட்டிப்பார்க் கிருன் பாத்திரத்தை, "எனக் குப் போதுமம்மா" என்றவாறு எழுகிருன் அவன் எண்ணத்தை உணர்ந்தவளாக சட்டென்று அவனை எட்டிப் பிடித்து உட் கார வைத்து மீதிக் கஞ்சியை அவனுக்கு ஊற்றுகிருரள்.
என்னம்மா இது. நான் போதுமெண்டனே. இன்னும் கொஞ்சத்திலை சாப் பி டு ற து தானே. இதுக்கை சோறுகூட இல்லை ஒரு கொஞ்சக் கஞ்சி. இதையாவது நீங்கள் குடிக்கக் கூடாதா அம்மா? அவன் கோப
மாகச் சொல்கிருன். அவள் சிரிக்கிருள்.
*நீ குடிதம்பி. நான் இண்
டைக்கு விரத மெல்லே"
“என்னம்மா விரதம் எண்டு பொய் சொல்லுறீங்கள்? இண்

டைக்கு ஞாயிற்றுக் கிழமையும் விரதமே?*
"தான் இப்ப ஞாயிற்றுக் கிழமையும் விரதம்தான். உனக் தத் தெரியாது தம்பி. நீ குடிச் சிட்டுப் போய் படி" என்று குனிந்து தரையைப் பார்த்த படியே கூறுகிருள் அவள்.
"உங்களுக்கு வருசத்திலை விரதமில்லாத நாள் எது அம்மா? எண்டைக்குத்தான் விரதமில்
லாத நாள்??
"எ ன க்கு விரதமில்லாத நாள் கட்டாயம் வரும் தம்பி. நீங்கள் வயிறு நிறையச் சாப் பிடவேணும், நல்லாய் படிக்க வேணும். உழைக்க வேணும். அந்த நாள்தான் எனக்கு விரத மில்லாத நாள்"
"நான் எப்ப படிச்சு முடிக் கிறது. நான் எப்ப உழைக்கத் தொடங்கிறது. நீங்கள் எப்ப சாப்பிடுறது அம்மா"
உணர்ச்சி வசப்பட்ட குரல் அழுகையில் உடைய குடிக்க மனமின்றி கஞ்சியையும் தாயை யும் மாறிமாறிப் பார்க்கிருன் அவன்
"தம்பி தம்பி நீ ஏனடா அவநம்பிக்கைப் படுகிருய்? இந்த மாதிரி நினைச்சு மணஞ்சோர்ந்து போறதாயிருந்தால் எப்பிடித் தான் இந்த உலகத்திலை 6մո (լք றது. காலத்துக்கென்ன அது இப்ப பறந்து போயிடும். இப்ப தான் நீ எம்பிற்றியேச் சோதனை பாஸ் பண்ணிப்போட்டு வந்து அம்மா நான் முதல் பிரிவிலை பாஸ்" எண்டு துள்ளிக் குதிச்சது என்னுடைய கண்ணுக்கை நிக் குது. அதுக்கிடையிலை ரண்டு வருசம் எப்பிடிப் போனதோ தெரியேல்லை. இன்னும் கொஞ் சக் காலம் போறதுதான் பெரிய பாடே? நீ ஆம்பிளைப்பிள்ளை சண்ணிர் விடாதை கண்ணிலை
வழியிற தண்ணிரைவிட மனத் திலை எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைதான் நிரம்பி வழிய வேணும் உங்களுக்கு. குடிச்சிட் டுப் போய் படிதம்பி 7
அமைதியும் ஆறுதலும் நம் பிக்கையும் நிறைந்த Tகுரலில் கூறியபடியே அவள் எழுந்து கீரையை மறுபடியும் ஆய ஆரம் பிக்கிருள். வெளியே கைகழுவி யபடியே இவைகளையெல்லாம் கேட்டபடி நின்ற தங்கராசா கண்கள் கலங்க உள்ளே வந்து அவர்களைச் சந்திக்கத் தென் பில்லாதவனுக வாசற்படியில் செம்பை வைத்துவிட்டு அப்ப டியே தோட்டத்தில் մն/ 6ծ եք கிருன்.
மனதில் ஏதேதோ ஏக்கங் கள், பயங்கள், சூன்யமான நினைவுப் படலங்கள் எதிரே வளர ஆரம்பித்திருக்கும் புதிய பயிர்ச் செடிகள், காற்றில் அவை கள் அசைந்து அவனை வரவேற் கும் போது மனைவியின் நம் பிக்கை நிறைந்த வார்த்தைக்ள் தான் செடிகளாகி தன்னை வர வேற்பதுபோல் அவ னு க்கு ப் படுகிறது.
'கண்ணீரில்தான் அன்று உங்களை உருவாக்கினேன். நீங் கள் வளர்ந்து எனக்கு கண்ணி ரைத்தான் பரிசாகத் தருவீர் களா அல்லது. அவன் மனத் திற்குள் அவைகளோடு பேசிக் கொள்கிருன்.
இந்தத் தோட்டத்தை உரு வாக்குவதற்கான ஆரம்பச் செல வுகள் அத்தனைக்குமாக தன் மனைவியின் நகைகளை விற்பதற்கு அவளிடம் வாங்கியபோது அவன் கண்ணீரில் குளித்தான். அவளோ மனத்தின் நம்பிக்கை கண்களில் மின்ன சிரித்தபடியே நகைகளை அவனிடம் தூக்கிக் கொடுத் தாள்,

Page 12
இன்றைக்கு இந்த சின்ன? ராசுவிற்குச் சொன்ன அதே மொழிகளை அன்று இந் த ப் பெரிய" ராசுவிற்குச் சொன் ஞள்: "ஆண்பிள்ளைகளுக்கு கண் னில் நீர் வழி ய வேண்டாம், மனத்தில் எதிர்காலத்தைப் பற் றிய நம்பிக்கைதான் நிரம் பி வழியவேண்டும்" என்ருளே.
அவன் நிமிர்ந்து பா ர் த் தான். ஒரு வாழைக் குலையில் இடைப்பழம் பழுத்திருந்தது. மனம் பளிச்சிட்டது. காலமை என்ரை கண்ணிலே படேல்லை. நல்லவேளை காகம் குதனழுந்தி இப்ப கண்டது. இதை வெட் டிப் பழுக்கப் போட்டு சந்தைக் குக் கொண்டு போனல் கூப்பன் p if g abor தீர்ந்துபோகும். நாளைக்கு முதல்லை இலவச அரி சியை எடுப்பம்.
மனத்தில் படரும் எண்ணங் களோடு ராசு" என்று கூப் பிட்டு கத்தியைக் கொண்டு வரும் படி சொன்னன். வா  ைழ க் குலையை வெட்டும்போது மற்ற இரண்டு பிள்ளைகளும் அவளும் வந்து பார்த்துக் கொண்டிருக் கிருர்கள். அவன் வா  ைழ க் குலையை வெட்டிவிட்டு அவளைப் பார்த்துக் கூறுகிருன்.
"நாளைக்கு காசுக்கு என்ன செய்ய எண்டாய் இஞ்சைபார் காசு வந்திருக்கு
அவன் முகத்தில் பூக்கும் சிரிப் பை ப் பார்க்கும்போது அவள் முகத்திலும் நகை படர் கிறது.
அன்று மத்தியானம் எல் லோரும் சாப்பிட்டுக் கொண்டி ருக்கிருர்கள். வீட்டுப் பொரு ளாதாரம் முதல் நா ட் டு ப் பொருளாதாரம் வரை பேச்சு அடிபடுகிறது.
"அப்பா இந்த சனி ஞாயி றுக்கிள்ளை ஒரு கட்டுரை எங் களை எழுதியரச் சொல்லியிருக் கிருர் சேர். நாட்டின் பொரு ளாதாரக் கஷ்டங்கள் வேலை இல்லாப் பிரச்சினைகள், உணவுப் பற்ருக்குறை இவற்றை எல்லாம் நாட்டை விட்டுத் துரத்தவே ணும். நீங்கள் பிரதமராய் வந் தால் இதற்கெல்லாம் எ ன் ன நடவடிக்கை எடுப்பீர்கள் எண்டு கட்டுரை எழுதச் சொன்னர்" என்ருன் ராசு.
அப்பா நான் பிரதமராய் வந்தால் இலங்கையில் உள்ள எல்லாச் சனங்களுக்கும் காணத் தக்க அளவு அரிசியை இலவச மாய்க் குடுப்பன். இப்ப தாற அ ரி சி எங்களுக்கு காணுதில் லையே என்ன அம்மா? என்கி முன் சின்னவன்.
பெரியவர்களின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதிருந்த அவர்களுடைய சின்ன மகள் தனது சின்ன அண்ணனின் பேச் சைக் கேட்டுவிட்டுக் கூறுகிருள்.
நோன் பிரதமராய் வந்தால் எல்லோருக்கும் நல்ல நல்ல சட் டையள் நல்ல நகைகள், பேற். றிபன் எல்லாம் வாங்கிக் குடுப் பன் அம்மா"
ஆடம்பரப் பொருட்களில் உள்ள ஆர்வம் அவைகள்தான் வாழ்க்கைக்கு அவசியம் என்ற உணர்வு சின்னஞ் சிறிய பெண் மனத்தில் எப்படிப் புகுந்து விடு கிறது என்று அதிசயப்படுகிருள் அவளுடைய அம்மா.
"தங்கச்சி நாங்க ரண்டு நேர ம் சாப்பிடுறம். எத்தினை பேர் ஒரு நேரம் கூடச் சாப்பி டாமல் இருக்கினம் தெரியுமோ? முதல்லை எல்லோரும் ஒரேமாதிரி வயிறு நிறை ய ச் சாப்பிட வேணும். அதுக்குப் பாடுபட்டு உழைக்க வேணும் எல்லாரும்

கொழும்பில் மல்லிகை" ஆசிரியரைச் சந்திக்கும் முகவரி
ஒவ்வொரு மாதத்தினுடைய கடைசி வாரத்தில் ஆசிரியர் கொழும்பில் கீழ்க்கண்ட முகவ ரிகளில் தங்கியிருப்பார்; 137ம் மலியன் வீதி, 182, முதலாம் குறுக்குத்தெரு, 24, பூரீ கதிரே சன் வீதி. தொலைபேசி: 20712 விரும்பியவர்கள் தொடர்பு
கொள்ளலாம்.
ச்சு அறிவாளிகளாக இருக்க
ம்ே இதுகள்தான் முக்கி
யம்" என்கிருள் பூப்போன்ற
அந்த மனத்தின் தவருன சல
ខ័n
னங்க நீ க் கி உண்மையின் ஒளியை ஊட்டும் உணாவுடன அந்தப் பொறுப்பு நிறைந்த அன்ன.
"கம்மா குடுக்கிறது எண்ட தன் பலாபலன்களை யோசிக்கத் தெரியாத வயது இதுகளுக்கு ஆணுல் சும்மா குடுக்கிறது எண்ட துக்குப் பின்னலை இருக்கின்ற உணர்வு இருக்கிறதே அது இல் லாமையின் கொடுமையை பூர ணமாக உணர்ந்து அதை இல் லாமற் செய்யவேணும் என்ற உறுதியில் எழுந்த உணர்வு, நான் பிரதமரானுல் இப்படி யெல்லாம் வாழுவேன் என்று தன்னைப்பற்றி மட்டுமே எண்ணு மல் எல்லோருக்கும் எ ன்று சொன்னதை நினைச்சு தாங்கள் பெருமைப் படத்தான் வேணும் என்ற தங்கராசா ராசுவைப் பார்த்துக் கேட்கிருன் "நீ என்ன மாதிரி எழுதினுய்??
*நான் பிரதமராய் வந்தால் முதல்வேலை இல வ ச அரிசி கொடுப்பதை நிறுத்துவதுதான் என்று எழுதினேன் அப்பா? என்ருன் ராசு தம் பி  ையப் பார்த்தபடி,
"என்ன அண்ணு சனங்களை யெல்லாப் பட்டினி போட்டுக் கொல்லப் போறியா. இவ்வளவு விலைக்கு அரிசி வாங்கிச் சமைக்க முடியுமோ எல்லாராலும்" என்று கத்துகிருன் அவன்,
"இலவச அரிசியை த்தி விட்டு நியாயமான ‰ቇዖ፻፰ உழைக்கிற எல்லோரும் வாங் கக் கூடியதாய் செய்வன். எல் லாரும் உழைக்கக் கூடியதாய் ஏற்பாடுகள் செய்வன். எல்லா ருக்கும் தொழிற் கல்வி, நாட் டிலே எங்கை பார்த்தாலும் தொழிற்சாலைகளும் வயல்களு மாய் இருக்கச் செய்வன். உழைக் கிற சனங்கள் கூடினுல் உற்பத்தி கூடும். ஊதியம் கிடைக்கும். எல்லாப் பொருள்களும் அப்ப வாங்கலாம்தானே அப்பா? என் கிருன் ராக,
"இலவச அரிசியை நிறுத்த வேணும் எண்டு நீ நினைச்சதுக்குக்
காரணம் என்ன?" என் ፴? Gär தங்கராசா.
"அதுதான் எத்தினையோ
மனி ச ைர சோம்பேறிகளாய் ஆக்கியிருக்குது. உழைக்காமலே உண்ணலாம் என்ற உணர்வை ஊட்டியிருக்குது. அன்றைக்கு நான் பள்ளி க் கூட த் துக்குப் போறபொழுது ரண்டு தடியன் கள் உடம்பிலே ஒரு குறையுமில் லா த தடியன்கள் கதைச்சுக் கொண்டு நிக்கிறன்கள். "இண் டைக்கு வேலை ஒண்டுக்கும் போகத் தேவையில்லை, திங்கக்
as

Page 13
கிழமை தானேடா, இ ல வ ச அரிசி கிடைக்கும். ரண்டு நாள் பொழுது உடம்பு முறியாமல் போகும்" எண்டு கதை ச் சுக் கொண்டு நிக்கிருங்கள். இந்தக் கதைக்கும் உழைக்காமல் சாப் பிட நினைக்கிற சோம்பேறித் தனத்திற்கும் காரணமே இல வச அரிசிதானே? நான் சொன்ன மாற்றங்களை நாட்டில் ஏற்படுத் தினல் இப்ப எங்கடை ஆக்கள் பேப்பர் எல்லாம் எழுதிற புது யுகம் நவயுகம் எல்லாம் எங்
கடை வாழ்க்கையிலே வருமே
அப்பா" என்கிருன் கன வுக்
கண்களுடன் ராசு.
மிகப்பெரிய அற்புதம் ஒன் றைப் பார்ப்பதுபோல் அவனை அன்புகனியப் பார்க்கிருன் தங்க ртптағпт.
இம்மாதிரிச் சிந்தனைகளை
வெறும் கனவுகளாகவும் கற்ப னைகளாகவும் ஒதுக்கிவிடும் வய
நம்பிக்கைகளை கண்களில் கனவு களாக நிறைத்துக் கொண்டு இ ள  ைம யி ன் வாயிற்படியில் நின்று உலகை அகல விரிந்த கண்களுடன் நோக்கும் அற்புதப் பருவமல்லவா இவனுக்கு எதிர் கால நம்பிக்கைகள் பற்றிய
அவனது இந்தச் சிந்தனைகள்.
"இந்த வார்த்தைகளுக்காக பெருமைப்பட கூடியவள் நீதான் என்பதுபோல் தனது மனைவியை நிமிர்ந்து பார்க்கிருன் அவன். அவனது பார்வையைப் புரிந்து கொண்டவளாக மனம் நிறைந்து சிரிக்கிருள் அவள்,
அல்லல்களும் தொல்லைக ளும் நிறைந்த வாழ்க்கையின் ந டு வே நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைக் கேட்கும்போது மனதிற்கு எவ்வளவு இதமாக இருக்கிறது. அது யாருடைய நா வி லி ரு ந் து வந்தால்தான் என்ன? இந்த யுகத்தின் வாழ்க் கைத் தர்மமே நம் பி க்  ைக
தும் அனுபவமும் அவனுக்கு:
ஆஞல் எதிர்காலத்தைப் பற்றிய தானே?
இ0 இலுத்திய •?'#...??
)ན ாக ஆரமபககபபட LO LO முழகுஇதழ்
இதழ். நவ இலங்கையை உருவாக்
பன்னிரண்டு ஆண்டுக் காலமாக எத்தனையோ சிரமங்களுக்கு மத்தி யிலும் நிமிர்ந்து நின்று போராடி வரும் இதனது அடித் தளப் பச ளையே மக்களது ஆதரவுதான். பல்வேறு வகைப்பட்ட மக்கள் மத்தியில் சென்றடையும் இம் மாத இதழின் தாக்கம் இன்று நாட்டில் ஒரு புதிய இலக்கியப் பரம்பரையை உருவாக்கி வருகிறது.
இந்த இலக்கிய வேள்வியில் உங்களையும் இணைத்துக் கொள்ள விருப்பமா? எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
குவதே இதன் குறிக்கோளாகும்.
4ே

யாழ்ப்பாணத்தில்
ஒருவகை உறவு யுகராகங்கள்
அறிமுக விழா
நெல்லை க. பேரன்
கடந்த 24 - 10 - 76-ல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் எழுத் தாளர் கூட்டுறவுப் பதிப்பக வெளியீடுகளான காவலூர் இராச துரையின் "ஒரு வகை உறவு", மேமன் கவியின் யுேகராகங்கள்? ஆகிய நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது,
பழம் பெரும் எழுத்தாளரான திரு. வரதர் தலைன்மவகித்த இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் திரு. டொமினிக் ஜீவா எழுத்தா ளர் கூட்டுறவுப் பதிப்பகத்தின் புனருத்தாரணம் பற்றியும் அதன் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினர். இவர் பேசுகையில், "சிங்கள எழுத்தாளர்கள் மத்தியிலே கூட இப்படி ஓர் ஒற்றுமையான திட்டமிடப்பட்ட அமைப்பு ஏற்பட வில்க, உலகிலேயே எழுத்தாளர்களுக்கு அதிகமான "ருேயல்டி" யைக் கேரளத்து எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தார் கொடுத்து வருகிருர்கள். இப்பதிப்பகத்தின் வளர்ச்சிக்குச் சகல எழுத்தாளர் களும் வாசகர்களும் உதவுவதன் மூலம் தேசிய இலக்கிய வளர்ச் சிக்கும் எழுத்தாளர்களின் முன்னேற்றத்திற்கும் வகை செய்தவர்
களாவீர்கள்" என்ருர்,
தொடர்ந்து "யுகராகங்கள் பற்றி ஆகசி கந்தசாமி விமரிசிக் கையில், "இன்று கவிதைகளில் பிரச்சாரம் செய்வதே மரபாகி விட்டது போலத் தோன்றுகிறது. சமூகத்தின் எரிகின்ற அன்ருடப் பிரச்சனைகள் பலவற்றை மையமாகக் கொண்டு மேமன்கவி தமது கவிதைகளைப் படைத்துள்ளார். இது பாராட்டுக்குரியது" என்ருர்,
துரை மனேகரன் பேசுகையில் மேமன் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழில் ஆர்வம் கொண்டு கவிதை படைப்பது பாராட் டிற்குரியது. படைப்பில் ஆற்றலைக் காண்பிப்பவர்களின் ஊடகம் எதுவாக இருந்தாலும் உள்ளடக்கம் சிறப்பாக இருக்க வேண்டும். எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பக வெளியீடுகளின் அட்டை தென் னகத்து வாசகர் வட்ட வெளியீடுகளை ஒத்திருக்கிறது. இது பதிப்பகத்துறையிலும் நாம் முன்னேற விரும்புகிருேம் என்பதைக் காட்டுகிறது" என்ருர்,
சி. மெளனகுரு கருத்துத் தெரிவிக்கையில் புதுக்கவிதை மரபின் தோற்றமாகப் பாரதியைக் கூறுவார்கள். இன்றைய
es

Page 14
புதுக்கவிதைகளில் அதிகமானவை துணுக்குகளாகவும் கோஷங்க ளாகவுமே இருக்கின்றன. யுகராகக் கவிதைகளின் உருவங்களைப் பார்க்கும்போது ஆக்கத்திறன் மேமன் கவியிடம் சற்றுக் குறை வாக இருப்பது போலத் தோன்றுகிறது. அனுபவம் இதைச் சரி செய்யலாம். இவர் மீண்டும் மக்களிடம் போய் அவர்களிடம் படித்து அந்த அனுபவங்களைக் கவிதைகளாகத் தரவேண்டும். துணுக்குகள் புதுக்கவிதையுடன் கூடப்பிறந்த அம்சங்களே தவிரத் துணுக்குகள்தான் புதுக்கவிதைகள் அல்ல. இன்று புரட்சிக்குத் தலைமைதாங்கும் தொழிலாள வர்க்கத்தை மேமன்கவியின் கவி தைகளில் காணமுடியவில்லை, இனிமேல் எதிர்பார்க்கிருேம்" என்ருர்,
*ஒருவகை உறவு' பற்றித் தெணி யா ன் பேசுகையில், "பழைய எழுத்தாளரான காவலூர் இராசதுரை 1954-ல் சமு தாயத்தைப் பார்த்தது போல் 73-ல் பார்க்கவில்லை. ஈழத்தைப் பொறுத்தவரையில் வாய்ப்பாட்டு விமர்சகர்கள்தான் இருக்கிருர் களே தவிர நடுநிலையான விமர்சனங்களைக் காண்பது அரிதாக இருக்கிறது. எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தின் புனருத்தா ரணம் எமக்குப் புதுத் தெம்பைத் தருகிறது. இனியாவது நச்சு இலக்கியங்களின் ஜனனங்கள் ஒழியட்டும்" என்றர்.
படைப்பாளர்களுள் வருகை தந்திருந்த மேமன் கவி பதிலளித் துப் பேசுகையில், 'தமிழை நான் முறைப்படி கற்ற பண்டிதனல்ல. எட்டாம் வகுப்புவரைதான் தமிழ் படித்தேன். புதுக்கவிதை வடி வம் எனது கருத்துக்களைச் சொல்வதற்கு இலகுவாக இருந்ததால் அதனைக் கையாள்கிறேன். தொழிலாளர்களைப் பற்றி நான் சிந் திக்கவில்லை என்ருர்கள் எனது பாக்டரியில் பல தொழிலாளர் களைக் கண்டு அவர்களுடன் பழகி நிறைய அனுபவங்களைப் பெற் றிருக்கிறேன். பார்த்ததையெல்லாம் எழுத முடியுமா என்ன? எனக்காக எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் இந்நூலை வெளி யிட முன் வந்தமைக்காக நான் நன்றி சொல்கிறேன்" என்ருர்,
இறுதியாக எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தின் பிரதி நிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய லெ. முருகபூபதி "இன்று இனப் பிரச்சனைக்கோ அன்றேல் வேறு பிரச்சனைகளுக்கோ தீர்வுகாணும் முயற்சிகளில் எழுத்தாளர்கள்தான் ஈடுபட்டு வரு கிருர்கள். தென்னிலங்கையில் பலர் தமிழ் படித்துத் தமிழ் மக் களின் நியாயமான உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்கிருர்கள். இந்த ஐக்கியத்திற்கான நல்ல அறிகுறிகளை நாம் அவசரப்பட்டு எதிர்த்து விடக்கூடாது. எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்திற்கு அனுசரணையாகப் பிரதேச வாரியாக வாசகர் வட்டங்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. பிரதேச அமைப்பா ளர்கள் உங்களை அணுகும்போது ஏற்ற உதவிகளைச் செய்து பதிப் பகத்தைப் பலப்படுத்துங்கள் பதிப்பகத்து நூல்களில் சுமார் 500 பிரதிகளை அரசு கட்டாயம் வாங்க வேண்டும் என வலியு றுத்தி வருகின்ருேம்" என்ருர்,
மிகவும் இலக்கியத் தரமுள்ள நூல் அறிமுகவிழாக்களில் ஒன் முக இதுவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
26

இது கற்பனைக் கதையல்ல. அமெரிக்காவில்
இடம்பெற்ற ஒரு உண்மைச் சம்பவம்.
சம்
பவத்தைச் சம்பவமாகக் கூறினல் சுவை இருக்காது. அதேபோல, கற்பனைத் துப்பட் டியால் முழுவதையும் போர்த்து மூடிவிடவும்
முடியாது. எனவே
உண்மையை உண்மை
யாக - அதே நேரத் தி ல் சுவையாக - சொல்ல முயல்கிறேன். வெறும் சுவைத்த லுக்காக அல்ல - சிந்த னை க் காகவும்.
*விலையுயர்ந்த பரிசு"
1938-ம் ஆண்டு யூன் மாதம் 2-ம் திகதி,
காலப் பொழுது முதிர்ச்சி ய  ைடற் து கொண்டிருக்கும் Ggrub.
அழகாகவும் அக்கறையாக வும் அர ல ங் கா ரம் செய்து கொண்டு இளமைப் பொலிவு டன் கணவனின் அறை வாச லில் வந்து நிற்கிருள் முெஸாலீ.
அவளின் கையில் அழகான ஒரு
ரோஜா மலர்.
சொல்வி வைத்தாற்போலத அவள் வந்து அரை நிமிடத் துக்குள் அவன் அறையிலிருந்து வெளியேறுகிருன்.
கையிலிருந்த G3 r mr ag ar மலரை அவனுடைய கோட்டின் இடதுபக்கக் காலரில் அணிந்து விட்டு, உள்ளம் நிரம்பிய புள காங்கிதத்துடன் அவனை முத்த மிடுகிருள்.
"ருெஸா, ஏன் இ தெ ல் Goirth ?”
"இன்று திகதி என்னவென்று தெரியாதா?
"அட, இன்று யூன் இரண்டு gsdsvatnb"
*Mnr.--~*~a-rrrr-mm
சிவா. சுப்பிரமணியம்
*உங்கள் பத்திரிகையில் பக் Sடம் பக்கமாக நீங்கள் கிறுக்கித் தள்ளும் கிறுக்கல்களைத் தவிர வறு என்னதான் உங்களுக்கு நினைவிருக்கிறது? ளுக்
"என்னுடைய எழுத்துக்கல் ஜீவனுள்ளவை என்று அறி ளோஞ மாகாணத்தில் மாத்தி ரமல்லாமல் அமெரிக்கா முழு வதிலுமே போற்றுகின்ருர்கள்: ஆனல் நீ அவற்றைக் கிறுக்கல் கள் என்கிழுப்" Ĉio " ಶ್ದಿ: எனக்குப் LugaOLD 6&sourT2 ல், எங்கள் திருமண 2ள்" கள் நினைவி ல் வைத்திருக்க வில்லை என்பதை நினைக்கும் போது எனக்குத் தாங்க முடிய வில்லை?
*நாள் மறக்க வில் இல் ருெஸா எட்டு ஆண்டுகளல்ல எண்பது ஆண்டுகள் சென்ருலும் மறக்க முடியாத திருநாளல் லவா. சில மாதங்களாக எனக்கு இருந்துவரும் மனப் போராட் டங்களைப் பற்றி உனக்குத் தெரி யும் தானே. அந்த அல்பில் திருமண நாள் பற்றிய நினைவு gò5rsaSuetra e dopo A dà

Page 15
டது; இன்று நான் சீக்கிரமா வே வீட்டுக்கு வந்துவிடுகின் G{ወፋm”
*நான் கேட்க நினைத்ததை நீங்களே சொல்லிவிட்டீர்கள். இன்று உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பரிசு தரப் போகிறேன்
*தான் கூட உனக்கு மிகவும் வியுையர்ந்த ஒரு பரிசு தர்ப் போகிறேன்" s
சிவப்பேறிய அவளுடைய கன்னக் கதுப்பைச் செல்லமா கக் கிள்ளிவிட்டுப் படியிறங்கி தடக்கிருன்,
அவனுடைய கார் வீட்டிலி ருந்து புறப்பட்டு வீதி யி லே வழுக்கிச் சென்ற அழகை அவ
ளுடைய விழிகள் வாஞ்சை
யோடு விழுங்கின:
டொனட் பொல்ஸ் ஒரு பத்திரிகையாளன்: 'அறிஸோஞ றிபப்ளிக்"என்ற பத்திரிகையின் உயிர்நாடிகள் என்று கருதப் படும் ஒரு சிலருள் பொல்ஸ் ஒருவன்
பத்திரிகைக் காரியாலயம் களில் வெவ்வேறு பிரிவு க ஆள சீடெஸ்க்" என்று அழைப்பது வழக்கம் "ஸ்போட்ஷ் டெஸ்க்" "ஃபோறின் டெஸ்க்" போன்ற பல டெஸ்க் குகள் உண்டு, அமெரிக்காவிலுள்ள பெரிய பத்திரிகைக் காரியாலயங்கள் பலவற்றில் மேக்றேக் டெஸ்க்" என்று ஒரு பகுதி உண்டு. பிர முகர்களின் ஊழல்கள், லஞ்சம், குற்றச் செயல்கள் ஆகியவற் றைப் பற்றிய விபரங்களைச் சேகரித்துள்முதுவது இப் பிரி வின் வேல்
'அறிஸோஞ றி பப்ளி க்
பத்திரிகையின் Tமக்றேக்? பிரி வுக்குப் பொறுப்பாக நீண்ட smra omröss “Go unr 66ño” ருந்து
வந்தான் அந்தப் பொறுப்பிலி
குந்து அவன் தன்னை விடுவித் கொண்ட பின்னணி கசப்பா னது.
மக்றே ; பிரிவுக்காக பெறு மதி மிக்க் செய்திகளைச் சேக ரிப்பதற்காக பொல்ஸ் இரவு பகலாக ஓய்வின்றி உழைத் தான். இந்த "வேட்டை"யின் போது அறிஸோன மாகாணத் தில் செல்வாக்கு மிக்கவரான ஒரு அரசியல்வாதி அவனுடைய வலையிலே மாட்டிக்கொண்டார்,
செனட்டரி பறி கோல்ட் வாட்டர் அமெரிக்ாவின் பிற் போக்கு அரசியலில் ஒரு பெரும் புள்ளி நில விற்பனை முகவரான நெட்லறென் என்பவனுடைய உதவியுடன் கோல்ட் வாட்டர் பல நிலங்களைச் சட்டவிரோத மான முறையில் விற்பனை செய்து Tப்ெருஞ் செல் வம் சேர்த்து வருவதைப் பற்றி பொல் ஸ் அம்பலப்படுத்தத் தொடங்கினன் கோல்ட் வாட் டரின் சட்ட்விரோத நில விற் பனை தொடர்பான பல் தஸ்தா வேஜுகள் பொல்ஸிடம் இருந் தன. ஒன்றன் பின் ஒன்முகக் கோல்ட்வாட்டரின் இரகசியங் கள் அம்பலமாகத் தொடங்கின. அவரை விலைக்கு வாங்க எடுத்த முயற்சிகள் தோற்றுப் போன் தால் மிரட்டல்கள் ஆரம்பித் தன். அவனுடைய மனைவிகூடப்
LG ppj595 'ilmreir.
டெலிபோன் மணி ஒலிக் கும் ருெளாலீ OTGES L mres”.
அதிர்ச்சியூட்டும் செய்தி வரும். *உன் கணவன் நடுவீதியிலே
பரிதாபமாக இறந்து கிடக் Sagskr" w “ad-6"Muara l-au as Garou aurė சுட்டுக் கொன்ற என்னுடைய கைத்துப்பாக்கியை உ எ க்கு அனுப்பி வைக்கட்டுமா??
*உன்னுடைய கணவனின்
பிரேதத்தை எங்கே போடுவது?
8.

இவைதான் மறு முனையிலி நந்து கேட்கும் குரல்கள்.
முதன் முதலாக இப்படி யான செய்தியைக் கேட் ட போது அவள் மூர்ச்சையடைந்து விட்டாள்; இப்போது எல்லாம் பழகிவிட்டது.
சட்டவிரோதமான நடவ
டிக்கைகளில் ஈடுபடுபவர்களு டைய செல்வாக்கையும் அதி astrums uth Luntdijeh) Gibutag
யாக உணர்ந்தான். குற்றச் செயல்களும் ஊழல்களும் அதி கரிப்பதற்கு அமெரிக்க சமுதாய அமைப்பே காரணம் என அவன் நம்பிஞன் அமெரிக்காவில் குற் றச் செயல்கள் அதி க ரித்து வருவதைப் பற்றியும், அந்நில் மாற வேண்டுமானல் சமுதாய அமைப்பில் அடிப்படை மாற் றம் ஏற்பட வேண்டும் எனவும் தான் பணிபுரியும் பத்திரிகைக்கு ஒரு கட்டுரை எழுதினன். அக் கட்டுரை நிராகரிக்கப்பட்டது
எந்தப் பத்திரிகைக்காகத் துருவித் துருவிச் செய்திகளைச் சேகரித்து - அதனுல் இ ன் று மிரட்டல்களுக்கும் பயமுறுத்தல் களுக்கும் இலக்காகி நிற்கிருனே அதே பத்திரிகை அவனுடைய நியாயமான கட்டுரையை நிரா கரித்து விட்டது. மனமுடைத்த பொல்ஸ் தன்னை வேருெரு பிரி வுக்கு மாற்றும்படி விண்ணப்பித் தான். இப்போது அவன் மேக் றேக்” பிரிவில் இல்லை,
பொல்ஸ் காரியாலயத்திற் குள் நுழையும்போது அவனு டைய நெருங்கிய நண்பனும் சக ஊழியனுமான சிற்றர் அவ னுடைய அறையில் அவனுக் காகக் காத்திருந்தான்.
*என்ன பொல்ஸ், "வெடிங் அனிவேலரி என்ருல் காரியா லயத்துக்குத் தாமதித்துத்தான் வரவேண்டுமா? உன்னே வாழ்த்
திவிட்டுப் போகலாம் என்று வந்தேன். ஆஞல், நீ இப்போது தான் வருகிருய்"
"கிற்றர், இன்று ருெஸா வுக்கு மிகவும் விலையுயர்ந்த ஒரு பரிசு கொடுக்க வேண்டும். பசி சுப் பொருளைத் தேர்ந்தெடுப்ப தற்கு நீயும் என் கூட வர வேண்டும்"
“pi&Fuu Lorras anu (u G au dîr, உனக்கு மனைவி என் பதால் கடந்த சில மாதங்களாக அவள் அனுபவித்து வரும் வேதனைக ளுக்காகவாவது அவளுக்கு ஒரு சிறந்த பரிசு கொடுக் க வேண்டும்"
"பாவம் ருெஸா மனத் தைரியம் இல்லாதவள் என்ருல் இதுவரையில் பைத்தியக்ஷாரி யாகியிருப்பாள்"
சிற்றர் தன்னுடைய பகு திக்குச் சென்றுவிட்டான்.
கோல்ட்வாட்டரின் சட்ட விரோதமான நில விற்பனை பற்றி ய தஸ்தாவேஜ"களே பொல்ஸ் மீண்டும் படித்துப் பார்க்கிருன்; உதவாக்கரை நிலம் ஒன்றை அபிவிருத்தி செய் யப்பட்ட காணியாக விற்பனை செய்து தரும்படி கோல்ட்வாட் டர் தன் கைப்பட நெட்வாற னுக்கு எழுதிய கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டுப் பக் குவமாக மடித்து வைத்தபோது டெலிபோன் மணி ஒலித்தது
"ஹலோ, டொ ஞ ல் ட் பொல்ஸ் ஹியர்"
*உங்களுடன் நான் தனியா கப் பேச விரும்புகிறேன்" ܡ
"என்ன விஷயம்? நீங்கள் ዚ፡trff?”
ளேன் பெயர் அடம்ஸள்; கோல்ட்வாட்டரின் a lவிரோத நிலவிற்பனை தொடர் பான சில தஸ்தாவேஜுகள்

Page 16
ான்னிடம் இருக்கின்றன: அவை
உங்களுக்குப்பிரயோசனப்படும்
என நினைக்கிறேன்"
*அவற்றை என்னிடம் தரு வதற்காக நீங்கள் என்ன எதிர் பார்க்கிறீர்கள்?"
கடெலிபோனில் எல்லாவற் றையும் சொல்லக்கூடிய நில் யில் நான் இல்லே. நாம் சந் திக்க முடியுமானுல் எல்லாவற் றையும் விபரமாகப் Gu533 கொள்ளலாம்"
"எங்கே சந்திப்பது?" * கிளாறென்டன் ஹோட்ட லில், விருந்தினர் பகுதியில் உங்களுக்காகக் கா த் தி ரு ப் பேன். ச ரி யா கப் பதினுெரு மணிக்கு வாருங்கள்"
"நாங்கள் ஒருவரையொரு வர் தெரிந்து கொள்வது எப் шв.7*
எனக்கு உங்களை நன்முகத் தெரியும். நானே என்னை அறி முகப்படுத்திக் கொள்கிறேன்"
*ஆல் ரைட்"
சரியாகப் பதிஞெரு மணிக் குக் கிளாறென்டன் ஹோட்ட லுக்கு முன்ஞல் பொல்ஸின் கார் வந்து நிற்கிறது
பொல்ஸ் உள்ளே போகின் முன்.
விருத்தினர் பகு தி யில் யாரையும் காணுேம். பதிளுென் றரை மணிவரை யாரும் வர வில்லை;
முெஸாவுக்குப் ப்ரிசு வாங் கப் போகவேண்டும். இனி த் திரும்ப வேண்டியதுதான்"
காரை ஸ்ராட் செய்கிருன் பொல்ஸ்,
| LJL-nrifl
அந்தப் பிரதேசம் முழுவ தையும் செவிடு படுத்தும் அள வுக்குப் பெரிய வெடிச்சத்தம் ஹோட்டல் மேல் மாடியளவு உயரத்துக்கு பொல்ஸின் கார் தூக்கி எறியப்படுகிறது.
பொல்ஸின் உடல் பல துண்டுகளாகச் சிதறியது. *
தந்திரமுள்ள ஆட்டுக்காரன்
ஒரு ஊரில் ஒர் ஆட்டுக்காரன் இருந்தான், அவன் மிகவும்
தந்திரக்காரன்.
"ஏய் ஆட்டுக்காரா! என்னை ஏமாற்ற முடியுமா உன்னல்?
எங்கே ஏமாற்று பார்க்கலாம்?" என்ரு ன் அவனது எஜமானன்.
எேன்னுல் முடியாது. நான் என் மந்திரக்கோலை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்" என்ருன் ஆட்டுக்காரன்.
“ söylüLUıq. Axumr! எஜமானன்.
ஓடிப் போப் அதனைக் கொண்டுவா” என்ருள்
"ஆடுகளை யார் பார்த்துக் கொள்வது?" நோன் பார்த்துக் கொள்கிறேன் நீ என்னுடைய குதிரை
யில் வேகமாகச் சென்று மந்திரக் கோலைக் கொண்டுவா.
综岛岛
ரம் போ!" என்ருன் எஜமானன்;
ஆட்டுக்காரன் குதிரையின் மேல் ஏறி வேகமாகப் போஞன்
ஆஞல் மாலைபில்தான் திரும்பி வந்தான்.
அன்று பகல் முழுவ
தும் ஆடுகளை எஜமானனே பார்த்துக்கொள்ள வேண்டி வந்தது!

*ஜெய ஜெய சங்கரா'
ஆசிரியர் ஜெயகாத்தனின் ஜெய ஜெயசங்கர் முழு நாவல் குறைந்த விலையில் பட்டுள்ளது.
ஜெயகாந்தனின் நடையே தனி அலாதியானது படிக்க ஆரம்பித்தால் முடித்துத்தான் கீழே வைக்க முடியும் அமோ கமாக விற்பனையாகி வருகிறது. சூரியோதயத்தில், காஞ்சி புதுப் பெரியவாள் படமும் நாவ லின் முகப்பை அலங்கரிக்கின் (D.
ஜெயகாந்தனின் சிறுகதை, நாவ ல் கள் அனைத்தையும் விடாமல் படித்துவரும் வாசக னில் ஒருவன் என்ற முறையில் இதையும் படித்தேன்.
புதுப்பெரியவாளின் லாற்றைச்
Mur சொல்வதுபோல
நாவல் அமைந்துள்ளது. விடுத
லைப் போராட்டக் காலத்தில் காந்திஜியின் தீண்டாமை ஒழிப் பில் ஈடுபட்ட பிராமணக் குடும் பத்தின் வாழ்க்கையையும் சித் தரிக்கப் பட்டுள்ளது. அந்த நேரத்திலும் காந்தீயத் தொன் டர்களால் நடத்தப்பட்ட ஆல யப் பிரவேசத்திலும் கல த் து கொள்ளத் துணிச்சலில்லாத ஆடு மாடு மேய்க்கும் அரிசனச் சிறுவன்தான் ஜெயகாந்தனின் கதாநாயகர்களில் ஒருவனுக வருகி ரு ன். "ஆதி" எனும் அவனே காந்தீயத்துக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த பிராமணர் சதாசிவ அய்யரின் மகளைத் திரு ம ன ம் செய்து கொள்கிருன். அப்போதும் ஆதி "தாழ்த்தப்பட்டவன்" எ ன்
உணர்விலேதான் இருக்கிருன். ஆஞல் தன் மகன் அரிஜன்"
வெளியிடப்
என்று சொல்லி அரசின் "சலு
கைகளைப் பெறமுயலும்போது மாத்திரம் ஆதிக்கு கொள்கை
கொழுந்துவிட்டு எரிய ஆரம் பித்து விடுகிறது. ம க ஆனயே வெளியேற்றி சாதி எதிர்ப்பு தலைதுாக்குகிறது.
சிறு வயதில் தன் உயிரையே காப்பாற்றிய ஆதியைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை புதுப் பெரியவாளுக்குத் "தோன்றுகின் 2து. கிராமத்தில்அழிந்துவந்த கோவிலைப் புதுப்பிக்கும் விழா வுக்குச் சென்றவர் ஆதியைப் பார்த்துப் பேச விரும்புகிறர் மாடு களை மேய்க்கிறமாதிரி வேலி அருகில் வந்தாலும் urfá துப் பேசலாம் என்று துTது அனுப்புகிருர்,
"மாசுசான்ற மணிமந்தி ரத்தை உதிர்த்து பக்தகோடி க ளின் கல்லைகளையெல்லாம் போக்கும் புதுப் பெரியவர். "ஆதி"யை இன்னும் அரிசனணு கவே பார்க்கிருர், "குசேலரை அரண்மனைக்கு அ ை ழ த் து ச் சென்ற கிருஷ்ணனின் நட்புறவு, தன் உயிரைப் பாதுகாத்த அரி சன ஆதியிடம் ஜெயகாந்தனின் புதுப்பெரியவாளுக்கு வரவில் லையே! அந்த அளவுதான் இந்து தர்மம் இடம் கொடுக்கிறது.
ந்த Its tኑ மம் @: இந்த காக்க எத்தனையோபேர் முய றும் முடியவில்லை. நண்பர் ஜெய காந்தன் உயிரூட்டிப் புதுப்பிக்க முயற்சித்திருப்பதைக் ”கான அழுவதா ஆத்திரப்படுவதா?
கோயில் தோறும் ஆஸ் மங்கள் தோன்ற வேண்டுமென்று கூறப்படுகிறது.
கோயில்களெல்லாம் էյքՓւ0 நாகரீகத்தின் சின்னமாக இருக் கட்டும் அழிக் கக் ċirati frġ ஆன ல் செல்லரித்துப்பே të PPU ëOsGOT situantiasër, புதுப்பிக்க வேண்டியதில்லை
酚夏
 ̧.ܕ ܐ .

Page 17
அதைப் பரப்ப ஆஸ்ரமங்கள்
தேவையில்லை.
கோவிலின் பெயரால் இருக் கும் நிலத்தைப் பாதுகாக்க, உழவர்களைச் சுரண்டிக் ககாள்ளை அடிக்க வேத பாடசாலைகளும், பள்ளிக்கூடங்களும் துவக்கப்படு கின்றன. துவக்கப்பட்ட பன்னிக் கூடங்களையும் மடாதிபதிகள் அந்தரத்தில் விட்டு விடுகிருர் கள். இதெல்லாம் கோயில் க alair Guurrdi) LoLi assir Guu ரால் நடக்கும் திருக்கூத்துகள் ஆசிரியர் ஜெயகாந்தனுக்குத் தெரியாததல்ல. பாலி ஆஸ்தி கரிகளுக்குத்தான் "ஜெயஜெய சங்கரா" நல்ல ஆ யு த மா க Քյ6oւpպմ,
இன்றைய தேவை; தமிழகத்தின் தேவை*ஜெயஜெய சங்கரா" அல்ல; *ஜெயஜெய பாட்டாளி
உழவுக்கும் தொழிலுக்கும்
நன்றி ஜனசக்தி"
இந்தியாவின்,
வற்தனை செய்வோம் வீனில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்" என்ருர் Lumrprisl
ஆ வ டி தொழிற்சால்யில் டாங்கிகளை உற்பத்தி செய்து குவிக்கும் தொழிலாளி, கல்பாக் கம் அணுசக்தித் தொழிற்சாலை யில் பணியாற்றும் தொழிலாளி, பழவேற்காட்டில் ஆர் ய பட் டாவைப் பறக்கவிட்ட நவீன இந்தியத் தொழிலாளி ஆகியோ ரின் படைப்பாற்றலையும் செயல் திறனையும் பர்ராட்டி, அவன் வாழ்வதற்கும் அவனின் உத் வே க த்தை வளர்ப்பதற்கும் ஜெயகாந்தனின் எழுத்தாற்றல் பயன்படுவதற்கு Lo mT Ggo as - அழிந்துவரும் அக்கிரகாரத்தின்
கதாநாயகராக சிருஷ்டித்து வரும் ஜெயகாந்தனுக்காக மன வேதனைப்படுவதைத் ,aע dע מ" வேறு வழியில்லை! +【
ஆர். நல்லக்கண்ணு
கடிதம்
என் யாழ்ப்பான பயணத்தின் பொழுது நான் சந்தித்தவர்
களில் என்னுல் மறக்க முடியாதவர்கள் இருவர்.
வர்களில்
ஒருவர், "மல்லிகை"யின் நிரந்தர ஊழியன் திரு. சந்திரசேகரன் அவர்கள். முதன் முதலில் அன்றுதான் அவரைச் சத்தித்தேள் ஆனல், பல நாள் பழகிவிட்ட உணர்வோடு பழகும் அவரின் இந்தப் பண்பு என்னை மிகவும் கவர்ந்தது.
இன்னெருவர் இரசிகமணி கனக செத்திநாதன். மெலிந்த உருவம் குழி விழுந்த கன்னங்கள். என் மனத்திரையில் நான் போட்டுவைத்த உருவத்திற்கு நேர் எதிராகக் காட்சி தந்தார் இரசிகமணி, அவரருகே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது குருவிடம் உபதேசம் கேட்கும் சிஷ்யனின் மனேநிலை எனக்கு. ஒரு தட்டில் பூவை வைத்து என் கவிதைத் தொகுதியையும் வைத்து நீட்டினேன். உடனே, அவர் தட்டை வாங்கி தம கையை எனது தயிைல் வைத்து ஆசீர்வதித்தார்.
இவ்வளவு சிறப்பான மனிதராகத் திகழும் இரசிகமணி இன்று நடமாட முடியாவிடினும் என்போன்ற இளைய தலைமுறை யினரின் நெஞ்சங்களிலும் என்றுமே இலக்கிய உலகிலும் அவர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமே
ஏ கே ரஷாக்
●2

அக்டோபர் புரட்சி;
ஆசிய, ஆபிரிக்க, லத்தீன மரிக்க மக்களது தலைவிதியில் ஏற்பட்ட புரட்சிகரமான திருப் பமானது ந ம து காலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ் வுகளில் ஒன்ருகும். இதனை மாபெரும் அக்டோபர் புரட்
இன்று இப்புரட்சி நடைபெற்று 59 வருடங்களாகின்றன. மகத் தான அக்டோபர் புரட்சியா னது உண்மையிலேயே வரலாற் றுச் சிறப்பு மிக்கதாகும். அது ஏ கா தி பத்தியத்திற்கெதிரான போராட்டத்தில் ஆசியாவின்
லட்சோப லட்சம் ஆண்களும்
பெண்களும் உட்பட ஏரான மான அடிமைப்படுத்தப்பட்ட Lošasèr அவர்களது அரசியல் எழுச்சியை மேம்படுத்தியது. 1919-ல் சீஞ வில் நடைபெற்ற நிகழ்வுகளும் 1919-ன் கொரிய மக்களது கல கமும் மங்கோலியாவின் புரட்சி சியும் துருக்கி, ஈரான், இந்தோ னேஷியா மற்றும் தாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக் க மும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஆசிய மக்களது தேசிய விமோசனப் போராட்டமானது உலகப் புரட்சிகரப் போக்கில் ஒரு பிர தா ன காரணியாக
தொடக்கி வைத்தது.
சம்பந்தப்படுத்தியது,
சமாதானமும்
ஆசியாவும்
ஐ. பெந்தோபாயேவ்
மாறுவதைத் G g ofl at m æ á காட்டின.
ரஷ்யாவிலேயே அக்டோபர் புரட்சி ஏற்பட்டது என்ற கார ணம் கூட, ஆசியா உட்பட காலனி உலகம் முழுவதற்குமே அளப்பரிய முக்கியத்துவத்தைக்
கொண்டிருந்தது. ஏனெனில் - pr6 Lunt", அடிமை முறையும் நிலப் பிரபுத்துவமுமிக்க கிரா
மப்புறங்களை மிகு தி யா கக் கொண்ட நாடாக இருந்தது; எ ல் லைப் புற ப் பகுதிகளில் வாழ்ந்த ஏராளமான தேசிய இனங்கள் அடிமைகளாகவிருந் 2 estar பெரும்பான்மையான விவசாயிகள் நிலமில்லாதிருந்த னர். தொழிலாளர்கள், ரஷ்ய பூரிஷ"வாக்களினதும் அந்நிய முதலாளிகளினதும் இரட்டை அடக்கு முறையின் கீழ் அல்ல ಸ್ಟಿಲ್ಲ: ரஷ்யாவில் ஏற்பட்டி அக்டோபர் புரட்சியின் விளை வாக, காலனி அடிமைக்குள்ளி ருத்த நாடுகளது விமோசன இயக்கங்கள் முகம் கொடுத்த பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிந்தது. இந்த இயக் கம் மேலும் வளர்வதற்கான வல்லமை மிக் க தூண்டுதல்
38

Page 18
அளித்தது. 1919 நவம்பர் 2 ம் திகதி ஆசிய மக்களுக்கு அக் டோபர் புரட்சியின் வெற்றியி னது சிறப்பை வர்ணித்துக் கூறு கையில் வி. ஐ. லெனின் பின் வருமாறு தெரிவித்தார்: "ரஷ்யா பல சூழ்நிலைகளைக் கொண்டிருக் கிறது. அவற்றுள் ரஷ்யாவின் பின் தங்கிய நிலையையும் அதன் பரந்த பூமியையும் குறிப்பிட லாம்; அதன் எல்லைகள் ஐரோப் பாவிலிருந்து ஆசியாவரை விரிந் துள்ளன. எனவே நாம் முழுத் தாக்குதலையும் தாங்க வேண்டி யவர்களாயுள்ளோம். அதே நேரத்தில் ஏகாதிபத்தியத்துக் GoasgurnT Gor 26 si G3Lurrrrr . டத்தில் நாம் வழிகாட்டிகளா கவுமிருக்கிழுேம்"
அக்டோபர் புரட்சியின் வெற்றி, சோவியத் ராஜ்யம் ஸ்தாபிதமானது. இவை இரண் டும் சர்வதேச உறவுகளில் அளப் பரிய மாற்றத்தை ஏற்படுத்தின. ராஜ்யங்களுக்கிடையில் புதிய வகையான தொடர்புகள் ஏற் பட்டன. இது, குறிப் பாக ஆப்கானிஸ்தான், RF print sir, துருக்கி போன்ற ஆசிய நாடு களுடன் சோவியத் நாடு செய்து கொண்ட உடன்படிக்கைகளின் வழியே உறுதிப்படுத்தப்பட்டது.
1922-ல் சோவியத் சோஷ லிஸ்ட் குடியரசு களது ஒன்றியம் உருவானதானது ஆசியாவின் தலைவிதிகளில் மாபெரும் முக் கியத்துவமிக்க நிகழ்வாகும் உலகில் முதன் முறையாக ஒரு பல்தேசிய இன ராஜ்யம் உரு வானது; அது தனது தேசிய இனங்கள் சகலவற்கும் முழுமை யான சமத்துவத்தை உத்தர வாதப்படுத்தியது. ம னி த னை மனிதன் சுரண்டுவது இல்லா தொழித்தது* ர கா தி பத் தி யத்தை எதிர்த்த போராட்டத் தில் வல்லமைமிக்கதொரு அர ஞ கவும், அடிமைப்படுத்தப்
வில் திப் பிடிப்பதையும் சுதந்திர
பட்ட மக்களது நண்பனுகவும் பாதுகாவலனுகவும் அது மாறி tLğ578
2-வது உலக யுத்தத்தில் ஜெர்மன் பாஸிஸமும் ஜப்பா ளிய ராணுவ சந்நதமும் தோற் கடிக்கப் பட்ட பின்னர் சோவி யத் யூனியனுக்கும் ஆசிய நாடு களுக்குமிடையே நிலவிய உறவு களில் முற்றிலும் புதியதொரு கட்டம் ஆரம்பமானது. இந்தக் கட்டம், ஏகாதிபத்திய விரோ தப் போராட்டத்தில் சர்வதேச ஒருமைப்பாட்டை வலுப்படுத் துவதையும் பல ஆசிய நாடுக சமாதானத்தை உயர்த்
பூர்வமான தேசிய பொருளா தாரத்திற்கான த ள த் தை அமைப்பதையும் நோ க் கி ய போ க் கிஞ ல் சிறப்பிக்கப்பட் اسسا
சோஷலிஸ நாடுகளது சமா ஜம் உருவானதானது, உலக அரங்கில் வர்க்க சக்திகளின் சம நிலை யில் முற்போக்கான
மாற்றம் ஏற்பட்டது. உலக காலனி அமைப்பின் வீழ்ச்சி தீவிரமாகியது; புதிய சுதந்திர
நா டு களது உதயம் ஆரம்ப LDfT607 g.
மா பெ ரும் அக்டோபர் புரட்சியைக் கண்ட பூமி, வர ல றின் சகல கட்டங்களிலும்
தலை, சுதந்திரம், சமாதா .ம். இவற்றுக்காகப் போரா டும் மக்களது 266)LDL 6 நண்பணுகத் திகழ்ந்தது, இன்ன மும் திகழ்ந்து வருகிறது என் பதைக் காலம் நம்பிக்கையுடன் காட்டுகிறது.
தமது சுதந்திரத்திற்காகப்
போராடும் மக்களை எமது கட்சி
ஆதரி சீ கிற து, (LD e) th தொடர்ந்து ஆதரிக்கும், அவ்
母4

வாறு செய்யும் போது சோவி யத் யூ  ையன் அனுகூலங்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை, சலுகைகளுக்காக வேட்டையா டுவதில்லை, அரசியல் ஆதிக் கத்தை தாடுவதில்லை, ராணுவ தளங்களைக் கோருவதில்லை” இவ் வாறு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளர் லியோ னிட் பிரெஷ்நேவ் கட்சியின் 25-வது தேசிய மகாநாட்டில் தெரிவித்தார்
au ir sy otpТ3потi, ழைப்புக்காக மக்களது சுதந்தி த்துக்கும் சுயாதீனத்துக்குமாக மே ஆறும் போராடுவதற்காக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யின் 25-வது காங்கிரஸ் முன் வைத்த வேதை திட்டத்திற் குத் தெளிவான உத்தரவிா தத்தை அளிக்கிறது. சோவி யத் வெளிநாட்டுக் கொள்கை யின் வளமார் அனுபவங்களைக் கொண்டுள்ள இந்த தஸ்தா வேஜ"சர்வதேச உறவுகளின் துறையில் முடிவமைதி, ஒத்து ழைப்பு ஆகியவற்றில் ஈட்டப் பட்ட வெற்றிள்ள்ை உறுதிப்ப த்ேதும் நோக்கத்துடன் துல்லி யமான பணிகளை முன்வைத் துள்ளது இத் தஸ்தாவேஜ0 வைத் தொடர்ந்து ஐ. நா. பொதுச் சபையின் 31-வது கூட் டத் தொடரில் பல பிரதான முன் முயற்சிகளை சோவியத் யூனியன் முன்வைத்தது. இது *சர்வதேச பொருளாதார உற வுகளைப் புனர் நிர்மாணப்படுத் துவது" என்ற சோவியத் அர சாங்கத்தின் அறிக்கையையும்
உள்ளடக்கியிருந்தது: இந்த அறிக்கை வெளிநாட்டு வர்த் தகத்தில் உள்ள செயற்கையான
வார்த்தைகள்'
சர்வதேச ஒத்து
தடைகள் அனைத்தையும் வேறு பாடுகளையும் அகற்றவும், நாடு களுக்கிடையிலான பொருளா தார உறவுகளில் அசமத்துவம் அதிகார ஆணை, சுரண்ட்ல் ஆகி பவற்றின் சகல வெளிப்பாடுக ளேயும் அழித்தொழிக்கவுமான பணிகண் வகுத்தள்த்துள்ளது: எந்தவொரு நாட்டையும் தவிர்க்காது சகல நாடுகளின் நலன்களுக்கும் உகந்ததான சமத்துவத்திற்கும் பரஸ் பர அனுகூலத்திற்குமான அக்டோ பர் புரட்சியின் நாடு தொடர்ந் தும் உழைக்கும் என்பதற்கு இது ஒன்றே போதுமானது;T
சோவியத் வெளிநாட்டுக் கொள்கைப் பாதையின் மாற்ற வியலாத தன்மையும் இத்த விவகாரங்களுக்குச் சான்ருக விருக்கிறது. ஆயுதப் பரிகர னம் அணுவாயுதங்களைத் தட்ை செய்வது, ஐரோப்பாவில் அண் டையயல் - நல்லுறவுகள்: ஆசி யாவில் கூட்டுப்பந்தோபஸ்து ஆகிய வற்றிற் கான இதன் போராட்டம், இதர சகல மக் களின் மீது சோஷலிஸ்ட் சமா ஜம் கொண்டுள்ள மிக நெருங் கிய அக்கறையை வெளிப்படுத் துகிறது:
மா பெரும் அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சியின் பின்னர் ஆரம்பமாகிய உலகைப் புனர மைப்பதற்கான GEmprir மானது தொடர்ந்து நடைபெறு கிறது; இதில் தீவிரமாகப் பங்கு கொண்டுள்ள லட்சோய லட்சம் மக்கள் தேசிய விமோசனத்துக் காக இன்னமும் போரா டி வருகிருர்கள். இது விடுதலைக் கும் முன்னேற்றத்துக்குமான கருத்துக்களின் இறு தி வெற் றியை அருகே கொண்டு வரு கிறது:
BS

Page 19
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற
நாட்டுக் கூத்துப் போட்டி
சி. மெளனகுரு
செப்டம்பர் 20 ஆம் 21 ஆம் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண ரஸிக ரஞ்சன சபாவில், யாழ்ப் பாண மாவட்டப் பிரதேச கலா
மன்றம் நாட்டுக் கூத்து ப் போட்டி ஒன்றினை நடத்தியது. யாழ்ப்பாணப் பிரதேசத்
தின் பல்வேறு பாகங்களிலுமி ருந்து பல நாட்டுக் கூத்துக் கலைஞர்களும் அண்ணுவிமார்க ளும் இப் போட்டியிலே உற்சா கத்துடன் கலந்து கொண்டார் கள். அருச்சுனன் தவ நிலை, கண்டியரசன், ஜெனேவா சாம் TITL - 9yGSgFT B56öT, FL-IT rUr6ir வதை, சங்கிலியன் வீரபாண் டியக் கட்டபொம்மன் அரிச் சந்திரா. மயானகாண்டம், இள வரசன் பாலகுமாரன் ஆ கி ய நாடகங்கள் மேடையேற்றப்பட் டன. யாழ்ப்பாணத்தின் பெயர் பெற்ற அண்ணுவிமார்கள் இக் கூ த் துப் போட்டியில் பங்கு
கொண்டமை குறிப்பிடத்தக்க தொன்ருகும் மக்களும் வெகு உற்சாகத்துடன் இ க் கூத்துக்
களைப் பார்வையிட்டனர்;
86
இக் கூத்துப் போட்டியினை அவதானித்தபோது இரண்டு வகையான கூத்து வகைகள் இப் போட்டியில் இடம் பெற்ற மையைக் காணக் கூடியதாக இருந்தது. ஒன்று ஆட்டமும் பாட்டும் கலந்த ஆட்டக் கூத்து: மற்றது பாட்டு மாத்திரமுள்ள பாட்டுக் கூத்து. FLITsiprair வதை, அருச்சுனன் தவநிலை என்பன ஆட்டக் கூத்துக்களா கும். ஏனையவை பாட்டுக் கூத்துக் களாயிருந்தன. ஆட்டக் கூத்துக் காரர்களில் சடாசுரன் வதையை ஆடியவர்கள் பிரமாதமாக ஆடி ஞர்கள் சடாசுரன், வீ ம ன் இருவருக்குமிடையில் நடந் த சண்டை ஆட்டத்தின் சிகரத்தை எட்டியது. ஆனல் ஆட்ட மும் முரத்தில் அவர்கள் பாடிய பாட் டுகள் எதுவும் ரசிகர்கள் காதில் விழவில்லை;
பாட்டுக் கூத்தில் சங்கிலி யன் நாடகம் கச்சிதமாக அமைந் திருந்தது. புகழ் பெற்ற யாழ்ப் பாண நடிகர் பலர் இதில் நடித் தனர். இவ் ஆட்டக் கூத்துக் களையும் பாட்டுக் கூத்துகளை
 

யும் பார்க்கும்போது ஒருண்மை புலஞயிற்று. அதாவது மகாபா ரதக் கதைகளைத் தழுவிய கூத் துகள் ஆட்டக் கூத்துகளாகவும் ஏனைய நவீன அந்நிய கதைக ளைத் தழுவிய கூத்துகள் பாட் டுக் கூத்துக்களாகவும் இருந்த  ைமயே அவ்வுண்மையாகும். இதனைப் பார்க்கும்போது ஆட் டக் கூத்துக்களே ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்க - வேண்டுமென்றும், பின்பு மெல்ல மெ ல் ல பாட்டுக் கூத்துகள் தேன்ற ஆட்டப்பண்பை யாழ்ப் பாணக் கூத்து இழந்திருக்க வேண்டும் என்று எண் ண த் தோன்றியது.
நாடகப் போட்டி முடிய ஆட்டக் கூத்துக்காரர் தமது கூத்தே உண்மையான கூத்து என்றும் காலிலே சதங்கை கட் டாமல் என்ன கூத்து என்றும் கேட்டு தமது கூத்தே கூத்து எனக் கூறினர். பாட்டுக் கூத் துக்காரர் தமது கூத்தே நாகரிக மான மரபுக் கூத்து என்றனர்
இவர்களிருவரும் தமக்குள் என் ன கூறிக் கொண்டாலும் யாழ்ப்பாணத்திற்கு என ஒரு கூத்து மரபு உண்டென்றும், அது இரு கிளைப்பட்ட வளர்ச் சியை உடையது எ ன் பதும் அனைவரும் ஒப்புக்கொள்ள G36)1azilis7uq. uLu g5 6öör 63p uD uLu fT (ğ5 ib. போட்டியில் பங்கு பற்றியவர் களில் அனேகமானேரின் பாடல் கள் சபையோருக்கு விளங்கவே யில்லை. ஆர்மோனியமும், கட மும், மிருதங்கமும் அளவுக்கு அதிகமாக ஒலித்து பாடல்களின் குரலை விழுங்கிவிட்டது.
சில நாடகங்களில் நடிகர் ஆர்மோனியத்தை மிஞ்சி ப் பாடப்போய் குளறி தொண் டையும் அடைத்தது. இனிமே லாவது நடிகர்கள் வாத் தி யப் ஒசைகளைவிடக் குரலுக் கும், சொற்களுக்கும் அதிக அழுத்தம்
கொடுத்துக் கவனம் செலுத்து வார்கள் என்று நம்புகிருேம்.
அடுத்து உடை அலங்காரங் களிலும் ந ம து கூத்துக்காரர் சிறிது கவனம் செலுத்த வேண் டும். கட்டபொம்மனின் தளபதி இன்றைய ராணுவ உ டு ப் பு அணிந்து வருவதும், அரசகு மாரி கைக்கடிகாரம் அணிந்து வரு வ தும், காலமுரணுகும். இவை தவிர்க்கப்பட வேண்டும்:
முக்கியமாகச் சினி மா ப் Lurrosofi நடிப்பு நாட்டுக் கூத்திலி ருந்து விரட்டப்பட வேண்டும். னிமாவைப் பின்பற்றி காதல் காட்சிகள் செய்வதும், வீரப் பேச்சுகள் பேசுவதும் நாட்டுக் கூத்தினைச் சீரழித்து விடும்:
என்ஞேடு கூட நாடக க் கூத்தினைப் பார்த்துக் கொண்டி குந்த ஒரு நண்பர் "ஏன் இந்தப் பழைய கதைகளையே போடு கிருர்கள்? இந்தக் காலப் பிரச் சனைகளைக் கூத்துக்களாக்க முடி யாதா? என்ருர். இந்தக் கேள் வியை நமது கூத்துக்காரர்கள் தமக்குள் பலதடவை கேட்டுக் கொள்வது அவசியம். சங்காரம், கந்தன் கருணை போன்ற மரபு வழிக் கூத்துகள் சமகாலப் பிரச் சனையை மையமாக்கி மக்கள் மத்தியில் வெற்றிபெற்ற கூத்து களாகும்.
மக்கள் பிரச்சினையை மக்க ளுக்கு விளங்கப்படுத்த மக்களின் கலை வடிவமான கூத்தினை நமது கூத்துக் கலைஞர்கள் வடிவாகப் பயன்படுத்தலாம்; நமது கூத் துக்கலைஞர்கள் இதில் முயற்சி எடுக்க வேண்டும்
மேற்குறிப்பிட்ட பல குறை களிருப்பினும் உற்சாகமாகப் போட்டியில் கலந்து கொண்ட மைக்காகக் கலைஞர்களும் இதை நடத்திய பிரதேச கலாமன்றத் தினரும் நமது பாராட்டுக்குரிய வாகள்

Page 20
முளைகள்
சாந்தன்
அம்மன் கோவில் குளத்துக் குள்ளிருந்தி ஐந்துதலை நாகம் பள்ளிக்கூட விளையாட்டிடத்த டிக் கொய்யாப் பற்றைக்குள்ளி ருந்த "முள்ளுப் பண்டி" - இவை களெல்லாம் இப்போது எங்கே போயினவோ, தெரியவில்லை. இவைகளுடன், செல்லர் வள வுப் போண் கிணற் றடி நெல்லி மரத்தில் ஒரு முனியும் அந்த நாட்களில் இருந்தது. இந்தப் பாண்கிணற்று மு னியிலும் பார்க்க, அதற்குள்ளிருந்த பாம் புகள்தான் எங்களை அதிகம் பய முறுத்தியிருந்தன. பள்ளிக்கூடப் பிள்ளைகளை வாத்தியார், கோவி லுக்கும் விளையாட்டு இடத்துக் கும் என்று தங்களுடன் அழைத் துக்கொண்டு போகிற நேரங்க ளைத் தவிர்த்து, மற்ற நேரங்க ளில் - அதிலும், முக்கியமாக மத்தியானம் பன்னிரண்டு மணிக் குப் பிறகு - மேலே சொன்ன இந்தப் பயங்கரங்களெல்லாம் உலாவ வெளிக்கிட்டுவிடுமென்
றும் சின்னப் பிள்ளைகளைத்தான் அவை தேடித் திரியுமென்றும் அநேகமாக எங்களெல்லோருக் குமே வீடுகளில் சொல்லியிருந் தார்கள் பள்ளிக்கூடம் மத்தி யானம் ஒரு மணிக்குத்தான் அப்போது விடுவது வழக்கம் என்பதை நினைத்துப் பார்க்கை யில், இந்தப் பிராணிகளெல்லாம் ஏன் பன்னிரண்டு மணிக்குப் பிற் பட்ட நேரத்  ைத த் தமது வாலாய வேளையாகக் கொண்டி ருந்தன என்று இப்போது புரி கிறது. என்றலும் மூன்ரும் வகுப் புத் தாண்டிய கையிலி ருந்தே இந்தப் புரிதல் மெல்ல மெல்ல ஆரம்பித் திருக்க வேண்டும்.
எப்படியிருந்தாலும் பெரிய விக்கினி, இரண்டு விக்கினி”கள் எங்களோடு ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்கள்: "பெரிய விக்கினி" என்ற விக்கினராசா வும், சின்ன விக்கினி" என்ற விக்கினேசுவரனும், துணிச்சல் காரன்தான். மூன்ரும் வகுப்பில் படித்தபோதே ஒரு நாள், அந் தப் பாண்கிணற்றுக்குள் நீர்மட் டத்தில், சுவர்க்கரையோடு நீந் திக் கொண்டு கிடந்த பெரிய பாம்பொன்றை நிலத் தி ல் நின்றே குறிதவருமல் கல்லால் எறிந்து கொன்ருன் அதிலிருந்து எங்களுக்குள் அவனை ஒரு விண் ணணுக நாங்கள் ஒப்புக்கொண் டோம்.
எங்கள் பள்ளிக்கூடத்துப் பெயர், கல்விக் கந்தோரிலும், முன் சுவரில் வாசலுக்கு மேலும், "பாரதி வித்தியாசாலை" ஆனல், அந்தப் பெயரை ஊருக்குள் யாராவது சொல் லி, நான் கேட்டதில்லை
*தம்பி எங்கை படிக்கிருய்? என்ருல்
பொன்னையா பள்ளிக்குடத்
திலை." என்றுதான் மறுமொழி
98

வரும் பொன்னையர்தான் பாரதி வித்தியாசாலையை நிறுவியவர் எப்போதோ செத்துப் போய் விட்டவர். எங்களுர்க்காரர்கள் நன்றி மறவாதவர்களாய் இருந்
தார்கள்
۶ 2
இராசலிங்கம் வாத்தியார்
சிரித்ததை அவரிடம் படித்த ந்து வருட காலத்திலும் ஒரே
முறைதான் பார்த்ததாக ஞாபகமிருக்கிறது. சாதித்தவன் கனகநாதன்.
இராசலிங்கம் வாத்தியார், நாலம் வகுப்பில் எங்களுக்கு இங்லிஷ் எடுத்தார். ஸ்பெல்லிங் முடிந்து. புத்தகங்கள் வாசிக்கிற கட்டம் வாத்தியார், எங்களின் உச்சரிப்பில் அதிக அக்கறை காட்டினர். ஒருநாள் சொல்லித் தந்த மூன்று வசனங்கள்
I am a boy
You are a girl
This is my book
ma (96) வ்வொருவராக 67 Cup *? வேண்டும். *கலவன்" பாடசாலையிற் கலவன் வகுப்பு ஆதலால், ஆட்களுக் கேற்றபடி, Boy யும் Girlலும் முத லிரு வசனங்களிலும் இடம் மாறும் கனகநாதனின் முறை வந்தபோது அவன் இவ்வசனங் களை, லீலாவதியைப் பார்த்துச் சொல்லவேண்டியிருந்தது. கணக நாதன் வண்டுறுட்டி போலக் கட்டைக் கறுத்தப் பெடியன். லீ லா வ தி நெடுத்த பெரிய பெட்டை, அவன், பயப்படா மல் எழுந்து நின்று உசாராகச் சொன்னன். " I am a boy
you are my girls' s
 ைஇதற்கு மேல் அவனைச் சொல்லவிடவில்லை வாத்தியார்
போதும், போதும்.! இரடா
இ  ைத ச்
மடையா!' என்றவர் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர். ஒரு சின்னப் பிழை விட்ட்ரல் கூட கையிலுள்ள கொய்யாத் தடியால் வெளுத்து வாங்குகிற இராசலிங்க வாத்தியார் சிரிப்ப தைக் கண்ட மகிழ்ச்சியிலேயே அன்று, எங்களிற் பலர், பகிடி என்னவென்று விளங்காவிட்டா லும்கூட, சேர்ந்து சிரித்தோம் என்று நினைக்கிறேன்.
பள்ளிக்கூடத்தில், இராச
லிங்க வாத்தியார் இரண்ட்ாவது
பெரியவர். முதல் வாத்தியா ருக்கு அடுத்தவராக இருந்தார்3
○
என்ருலுங்கூட, இராசலிங்க வாத்தியாரின் அடிக்கொடுமை தாங்காமல் நாங்களெல்லோரும் ஒருநாள் கூடி ஆலே 1ா சி க் க நேர்ந்தது. “சிங்கமும் முயலும்” கதையில் காட்டு மிருகங்கள் கூடி ஆலோசித்தது போ ல. ஆனல், நாங்கள் "பெட்டைய' ளைச் சேர்க்கவில்லை. அ வ வா வையை நம்பவும் முடியாது: அதோடு இராசலிங்க வாத்தி யார் பெட்டையளுக்குக் கை நீட்டுவதுமில்லை.
பெரிய விக்கினிதான் ஒரு யோசனைசொன்னன் உவருக்கு ஒரு நல்ல வேலை செய்யலாம்.
*சொல்லன்ரா??
கிட்ட வாங்கோ..." தலைகளை நீட்டினுேம்:
என்ன?? "ஒரு செய்வினை செய்யலாம்" *செய்வினையோ?!. எங்க ளுக்குப் பயம் முளைத்தது:
*வெ ருளாதையுங்கோடா? என்ற பெரிய விக்கினி, எல்லாம் விளக்கமாகச் சொன்னன்:
வாத்தியாருடைய காலடி மணலைக் கவனமாக அள்ளுவது
B
ب۸-۰۰۰۰۰ه

Page 21
தான் முக்கியமான வேலை, அதை அள்ளி மண் சட்டியொன்றில் போட்டு வறுத்து, அந்த மண லைப்பாண்கிணருென்றில் கொட் டிவிட வேண்டும், அவ்வளவு தான்! அடுத்த நாள் ஆள் பள் ளிக்கு வர ஏலாது! கால் இரண்டு பாதமும் தோ ல் வெடிச்சுப் புண்ணுய்ப் போகும்!
மணலை இரகசியமாக வறுத் துக்கொண்டு வருவது தன்னுல்
முடியுமென்று பெரிய விக்கினி,
சொன்னன், பாண்கிணறு தேடத் தேவையில்லை; லேயே இருக்கிறது. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது:
எங்களுடைய வகுப்பு அப் போது நாலு பள்ளி கூட்டுற முறைநாள், செவ்வாய்க்கிழமை, பெட்டையள் தும்புக் கட்டோடு வகுப்புகளெல்லாம் கூட்டுவா ளவை. பெடியள் விளக்குமாறுங் கடகமுமாய் முற்றம் பக்கம், கோடி எல்லாங் கூட்டுவோம். பெரிய விக்கினியின் திட்டத்தின் பிறகு அடுத்த செவ்வாய்க்குக் காத்திருந்தோம்
வழமைக்கு மாருக முற்றத் திலிருந்து கோடிவரை போகா
மல் கோடி பக்கமெல்லாம் முடித்துவிட்டு, பிற கு வாசல டிக்கு வந்தோம். இராசலிங்க
வாத்தியார் வருகிற நேரத்திற் குக் கொஞ்சம் முன்ஞல் முற் றம் கூட்டப்பட வ ண் டு ம். பெரியவிக்கினி, ஒரு பெரிய கடதாசித் துண்டைத் தன் கழு சான் பொக்கற்றுக்குள் ஆயத்த மாய் வைத்திருந்தான்.
நாங்கள் கூட்டிக் குவிக்கவும் வாத்தியார் பள்ளிக் கேற்றடி யில் சைக்கிளால் இறங்கவும் சரியாயிருந்தது. பின்னி நெளித் திருந்த சைக்கிள் சில்லு அடை யாளத்தினருகில் செ ரு ப் பு ப் போடாத வாத்தியாரின் கால டிகள் ப்ளிச்சென்று பதிந்திருந்
அது எங்களருகி ,
தன. பெரிய விக்கினி, ஒன்றுக்கு இரண்டு பாதமாக அள்ளி க் கொண்டான். அள்ளின அடை யாளந் தெரியாமல் இரு க் க, தேவராயன் விளக்குமாற்றை அதன்மேல் போட்டு இழுத்த படி போனன்.
மத்தியானம் பள்ளி விட்ட தும் எல்லாப் பெடி பெட்டை யளுங் கலை யு மட்டு ம் பேய்க் காட்டிவிட்டு, பெரிய விக்கினி மண்சரை வைத்திருந்த இடத் திற்கு மெல்லப் போனுேம்.
போச்சடா!" என்று பெரிய விக்கினி கத்தினன்.
மதில் ஒட்டைக்குள் மறை வாய் அவன் ஒளித்து வைத்தி ருந்த சரையில், கடதாசி மட் டும் கிழிந்து ஓட்டையாகிக் கீழே கிடந்தது.
"சனியன் காகம்! ..? *மூதேசி!.
வயிற்றெரிச்சலுடன் மீண் டும் அடுத்த செவ்வாயை எதிர் பார்க்கலானுேம்
4
மு த ல் வாத்தியாருடைய அறை எப்போதும் பூட்டித்தா னிருக்கும். அவர் அந்த அறைக் குள்ளிருப்பது வழக்கமில்லை, மண்டபத்து நடுவில் மேசையைப் போட்டுவிட்டு, எல்லா வகுப்பு களும் அல்லது எல்லா வகுப்பு களுக்கும் கண்ணிற் படுகிறமாதிரி இருந்து கொள்வார் அறைக் குள், ஒரு அலு மா ரி, கால் உடைந்த பெரிய மேசை ஒன்று ஒன்றின் மே லொன் ரு ய் க் கொஞ்ச வாங்குகள் இப்படிச் சில சாமான்களிருந்தன. மேசை யின்மேல் ஒரு பெரிய சரஸ்வதி படமும், இலே சா க மங்கிப் போன ஒரு பூகோள உருண்டை யும், அலுமாரியின் மேல், தேசப்
40

படமொன்றும், உலக ப் பட மொன்றும் சுருட்டப்பட்டுக் கிடக்கும். இவைதவிர, இன் ணுெரு கிழிந்துபோன இலங் கைப் படம், சுவரில் தொங்கிக் கொண்டு கிடந்தது. அலுமாரிக் குள், சோக்கட்டிப் பெட்டிகள் ட்ாப்பு இப்படி.
இவ்வளவற்றையும் பார்க் கிற சந்தர்ப்பம், அந்த அறை யைத் துப்புரவு செய்யச் சொல்லி எங்களிற் கொஞ்சப் பே  ைர முதல் வாத்தியார் பிடித்து விட்டபோது கிடைத்தது.
பின்பக்கம் போனல், கக் கூஸ். ஒரு பக்கம் பெடியள், மற்றப்பக்கம் பள்ளிக்கூடத்தின் பாதி தாண்ட
முதலே, தன் இருப்பை உணர்த்
திக் கொள்ள சக்தி வாய்ந்த கக்கூஸ் அது.
அதற்கு முன்னல், பெரிய பெரிய இலைகளை விரித்தபடி பரந்து நிற்கும் ஈரப்பலா மரம். ஒவ்வொரு நாளும் காலையில் பள்ளிக்குப் போய் புத்தகங்களை வாங்கில் வைத்த கையோடு, முதல் காரியமாய் இந்த ஈரப் பலாவடிக்கு ஓடி வந்து, விழுந்து கிடக்கிற பழுத்த இலைகளைப் பொறுக்கிக் காம் பை முறிப் போம்ரு பென் சில் எழுத்தை *அழிரப்பர்" அழிப்பது போல இந்த இலைக்காம்பு சிலேற்றை அழிக்கப் பெரிதும் உதவியாயி ருந்ததை, யாரோ ஒரு முன் னேன் எங்களுக்காகக் கண்டு பிடித்து வைத்திருந்தான்.
ஈரப்பலாவிலை இல் லா த நாட்களில், கிணற்றடிப் பள் ளத்து இடுக்கில் ச ணைத் து க் கொழுத்திருந்த, "தண்ணிப் புல்லு" எங்களுக்குப் பயன் பட் டது. இவ்விரண்டும் இருந்துங் கூட, கன பெடியன்களின் சிலேற் எச்சில் மணத்தது5
4.
ஒழுங்கையாலேயே
பெட்டையள்.
இந்த இலைக்காம்பு பொறுக் குகிற சண்டையால், மூன்ரும் வகுப்புக் கடைசித் தவணையில் ஒருநாள், நா ன் இராசலிங்க வாத்தியாரிடம் அடி வாங்கி
னேன்.
55
எங்கள் வீட்டிலிருந்து பள் ளிக்குப் போவதென்ருல் ருேட் டுக்குப் போகத் தேவையில்லை; போய்விட லாம். மழைகாலங்களில் வெள்
ளம் ஓடி வாரடிக்கிற வெள்ளை
மணல் ஒழுங்கை. வளவுகளும் வடலிகளும் பனங்காணிகளும், பற்றைகளும் மாறி மாறி வரும். ப ற்  ைற க ளு க்குள் ஒன்றில் காண்டை நிற்கும், அ ல் ல து கொய்யா
நிற்கு ம் அல்லது இரண்டுமே நிற்கும். உள்ளே நுழைந்தால், தின்னுவதற்கு
எப்போதும் ஏதாவது தரக்கூடிய பற்றைகள், கொய்யாப் பழமோ காண்டைப் பழமோ இல்லாவிட் டால், கொய்யாக் குருத்து அல் லது கரண்டைக்காய் இருக்கும். காண்டை நித்திய கல்யாணி காய் இல்லாத காலமே கிடை uuTgl.
இந்தக் கொய்யாவுக்கும், காண்டைக்கும் அப்பால், தேவ ராயன் இன்னுெரு சா மா னை எங்களுக்குக் காட்டித் தந்தான் பாக்குவெட்டிச் செடியின் குருத் தைப் பணங்குருத்தோடு சேர்த் துச் சப்பினுல் வெற்றி லை மாதிரி வாய் சிவக்குமாம். இந்த ஆ  ைசயி ல் பாக்குவெட்டிக் குருத்து நுள்ளப்போன கண்க நாதனுக்கு ஒருநாள் பிசுங்கான் ஒடு வெட்டிப் பெருகிய இரத் தம் இன்னமும் நினைவில் சிவப் பாயிருக்கிறது. '
கனகநாதன் ஏழெட்டு நாள்
பள்ளிக்குக் கள்ளம் போட்டது

Page 22
பற்றிய விசாரணை தேவராயன் இராசலிங்க வாத்தியாரிடம் பிரப்பம்பழம் தின்றதில் முடி வடைந்தது;
(s
காலையில் ஒருகும்பல் சேரும் என்ணுேடும் என க் கு க் கீழும் படிக்கிற அயலட்டைக் குஞ்சு குருமனெல்லாம் ஒன் ரு கப் போவோம். இந்தப் பட்டாளத் திற்கு நான் பல நாட்கள் தலை வஞயிருந்திருக்கிறேன்; நான், கனகநாதன் அவன் தம்பி தரு மநாதன், தேவராயன், சிவலிங் கம், ராசேசுவரி, செல்வராணி
Litug-". . . . . . . . .
போகப் போகப் பட்டாளம் பெருகும். படலைக்குப் படலை கூப்பிடுவதும் உண்டு.
இந்தத் தினசரிப் பயணத் தில் முக்கிய இடம் வகித்தது,
கதிரவேலர் வீட்டு நாய். சரி யான கடி யன் ஒவ்வொரு நாளும் எங்களை த் துரத்தி
அதற்கு அலுப்பதில்லை. துரத்து வதென்றல், வேலிக்கு அந்தப் பக்கந்தான். கதிரவேலர் நல்ல மனுசன்: புத்திக்காரனும். பெடி யள் பள்ளிக்குப் போகிற நேரத் தில் தன்னுடைய வீமன் சொறி தேய்க்கும் என்று உணர்ந்தவர். நாயை உள்ளே விட்டு, படலை யைப் பூட்டித்தான் வைப்பார். வேலியின் கீழ் வரிச்சு நல்ல ப தி வு. பொட்டுகளுமில்லை. எனவே, நாய்ப்பிள்ளை வெளியே வரமுடியாமல், நாங்கள் ஒழுங் கையால் நடக்கும்போதுதான் வளவுக்குள் குரைத்தபடி வேலி நீளம் ஓடிவரும். "எப்பிடியெண் டாலும், வெளி யா லை வந்து
தெண்டா..?" என்ற பயம் எங்களுக்கு நித்திய கண்டமா யிருந்தது.
4.
நாய்க்குப் பயந்து நாங்கள் பேச்சை நிறுத்தி நடந்தாலும் எங்களோடு வருகிற பெட்டை களின் "தையல் பெட்டிகள்',
"கி லுக்கு க் கி லுக் கென்று
கிலுங்கி எங்கள் வரவை நாய்க்கு அறிவிக்கும். இந்தத் தையல் பெட்டி இல்லாத பெட்டையை நான் அப்போது கண்டதில்லை.
ஒவ்வொருத்தியும் மூடி நெளிந்த,
கிறுக்குப்பட்ட ח "שr 6% L5( לוי பெட்டி ஒன்று வைத்திருப்பாள்.
அது இல்லாதவளிடம் வெறும்
பவுடர் ரின்னுவது இருக்கும் N இதற்குள், நூல்பந்து, அதில்
குத்தப்பட்ட ஒன்றிரண்டு தையல்
ஊசி. "கிளிப்பர் கள், ஆட்டுப்
புழுக்கைப் பென்சில் துண்டுகள்,
அழிரப்பர், காப்புகள், பட்டை
ஊசிகள் தடிதண்டுகள், காண்
டைப் பழங்கள் என்று என்
னென்னவோ போட்டு வைத் திருப்பார்கள்.
இவர்களுக்கு, தையல்பாடம் என்று தனியாக ஒரு பாடமிருந் தது. தையலம்மா ரீச்சர் ஒரு
கதிரையிலிருந்து ஏதோ தைக்க,
இதுகளும் சுத்தி நின்று குத்திப் பிடுங்குகிற வேளைகளில், நாங் கள், பெடியள் பன்ன வேலை" செய்வோம். தையலம்மாவுக்குப்
பெயரே அதுதானேவென்று,
கனகாலம் ஐமிச்சப்பட்டேன். ஆனல் பிறகு "தையலக்கா" என்று இன்னெரு ரிச்சர் கொஞ்
சம் வயது குறைவு வந்ததும் என் ஐயந் தீர்ந்தது.
இரண்டு மூன்று வருடம்
படித்த பன்னவேலையில். உருப் படியாக ஒரு பெட்டி கூட நான் இழைக்கவில்லை. "மூலை திருப்பு கிற வேலை, எனக்குப் பிடிபடா மலே இருந்தது இந்தச் சிக்கல் பெரிய விக்கினிக்கும் இருந்தது, எனக்குத் தெரியும். மூன்ரும் வகுப்புக் கடைசியில் வகுப்பேற் றச் சோதனைக்கு பெரிய விக்கினி

மூல் திருப்ப முடியாமல் கண்க பூசணி-எப்போதும் ஒரு பெரிய சாம்பல் பூசணிக்காயை நினைவு படுத்துகிறவள் - கனகநாதனின் தமக்கை, எங்களுக்கு ஒரு வகுப்பு மேலே படித்தவள் -யிடம் இர கசிய்மாகக் கொடுத்து "மூலை திருப்பிக் காட்ட த் தெண்டித்த போது அநியாயம்ாய் இராச லிங்க வாத்தியாரிடம் அகப்பட்
டுக் கொண்டான். சவிள் அடி விழுந்தது.
காலையில், ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு வகுப்புக்குச் சங்கீதம் முதற் பாடமாயிருக் கும். தன்னெச் சூழ எல்லோரை யும் வட்டமாக நிற்க வைத்து
விட்டு, ஐயர் வாத் தி யார்,
"சரிகமடதநிச" சொல் லி க் கொடுப்பார். பிந் தி வருகிற வேளைகளில், பள்ளிக்குக் கால்
கட்டை தள்ளியிருக்கிற மதவடி யில் வரும்போது இந்தச் சங்கீ தம் காதில் விழும். நேரம் பிந் தியதை ஞாபகப்படுத்தி, இரா சலிங்கம் வாத்தியாரின் கொய்
யாத்தடியை நினைவு க்கு க் கொண்டு வருவதால், இந்த *சரிகமபத நிச" இன்றுங்கூட - சில வேளைகளில் எனக்கு ஒரு பயத்தையும் பதட்டத்தையும் தருகிறது.
கனகநாதன், இந்த விஷ
யத்தில் பல நாட்கள் இராச லிங்க வாத்தியாரின் வாடிக்கை யாளனுக இருந்தான்.
of 5 ளு (ா ன த்தை உணர்ந்தோ, அல்லது தன் சீடப் | Gir am 5 af GăT ஞானத்தை அறிந்தோ, ஐயர் வாத்தியார், இந்த சங்கீத பாடத்தை நல்ல S”) DIT 5 சரிகமபத நிசவுக்கு மேலே போகவிடவில்லை. நான் கூட இரண்டு வருஷம் அவரி டம் இந்தக் கலைய்ைப் பயின்
றேன் பள்ளிக்கு நேரத்துக்குப் போன நாட்களில்.
*சரிகமபதநீச "வில், "நிச? வை இழுத்து இழுத்து நீ சா. வாக அழுத்தி அழுத்தி, வாத் தியாரைப் பார்த்தபடி வலு உற்சாகமாக நாங்கள் பா (ரி Garris. ۔۔۔۔
S
அணில், ஆடு, இலை ஈ ஊசி எலி, ஏணி, ஒட்டகம், ஐயா, ஒலை, ஒளவை இதுக ளெல்லாம் எப்படி இன்னமும் சிலையிலெழுத்தாக இரு க் கி ன் றன?
அ ஆ படிப்பித்த தையலம் மாவின் முகமும், படம் என்ற பெயரில் புத்தகத்தில் கறுப்புக் கறுப்பாக அச்சு மை அப்பிக் கிடந்த திட்டுக்களுங்கூட, இன்
னமும் இந்த அணில். ஆட்டுட
னும் கொக்கு சங்கு, பூச்சி, குஞ்சுடனும் நினைவுக்கு வருகின் றன. இதற்குப் பிறகு நெஞ்சில் முன்ப்பது, கரடி காட்டு மிரு கம். * தான். .ே கண்ணைத் தோண்டும், பொல்லாத மிருகம்* என்று கரடி புராணம் முடிகிற போது, இராசலிங்க வாத்தியார் திரும்பவும் நினைவுக்கு வருகிருர்
*கந்தசாமி நல்ல சிறுவன்" என்று தொடங்கி, ".. பிள்ளை களே, நீங்களும் கந்தசாமியைப் போல நல்ல பிள்ளைகளாயிருக்க வேண்டும்" என்று Сур цф 6 др பாடத்தைப் படிப்பித்தவர், முதல் வாத்தியார். அவர் படிப் பிப்பதற்கென்றே எழுதப்பட் டது போல அமைந்திருந்த பாடம், அது. "பிள்ளையஸ். பெடியள்." என்று ஒவ்வொரு த ர மும் எங்களை அழைக்கும் முத்ல் வாத்தியார் క్ష அப்படி அழைத்தது இன்னமும்
A

Page 23
நினைவி ல் நிற்கிறது. அந்த அழைப்புடன் கந்தசாமியும் மு த ல் வாத்தியாரும் மட்டு மில்ல்: இராசலிங்க வாத்தியா ரும் பெரிய விக்கினியுங்கூட நினைவுக்கு வருகிருர்கள். எல் லோருள்ளும், பெரிய விக்கினி
தா ன், பெரிதாய் நினைவுக்கு வருகிருன்கு
'பிள்ளையன்." என்று முதல் வாத்தியார் எங்க ள்
வகுப்புக்கு வந்து எங்களைக் கூப் பிட்டார். அது அவர் பாட வேளை அல்ல. ஒரு வியாழக் கிழமை. நாங்கள் மண் அள்ளிய செவ்வாயை அடுத் வந்த வியாழன். முதலாம் பாடம் தேவாரம் முடிந்து, "அரஹர மகாதேவா" சொல்லிவிட்டு, "த வேரூ இங்லீஷ்'ஐயும் இராச லிங்க வாத்தியாரையும் எதிர் பார்த்து நெஞ்சு படபடக்க, மூத்திரம் முட்ட கொண்டிருந்த வேளை.
முதல் வாத்தியார் கூப்பிட் டதும், நிமிர்ந்து பார்த்தோம். இராசலிங்க வாத்தியாருக்குப் பதில் முதல் வாத்தியாரே இங்
அந்தரித்துக்
லீஷ் எடுப்பதில் எங்களுக்கு வலு
விருப்பந்தான். ஆனல், அவர் பாட மெ டு க்க வரவில்லை; சொன்னர்
*.சத்தம் போடாமை
இரு ந்து படியுங்கோ. இண் டைக்கு இராசலிங்க வாத்தியார்
வரமாட்டார்."
எங்களுக்கு அவர் சொன் னது மண்டையில் உறை க் கு முன்னரே, முதல் வாத்தியார் மிச்சத்தையுஞ் சொ ன் ஞர். "நேற்றுப் பின்னேரம் அவரைக் கார் தட்டிப் போட்டுது. தோட்டவெளி ருே ட் டி லை சைக்கிள்லை போகேக்கை அவரை ஆரோ கா ரா லை அடிச்சுக் கையை முறிச்சுப்போட்டான். வாத்தியாரை இப்ப பெரியாஸ் பத்திரியிலை வைச்சிருக்கினமாம்"
முதல் வாத்தியார் சொல்லி முடிக்க முன்னரே, யாரோ விக்கி விக்கி அழத் தொடங்கிய சத்தங் கேட்டுத் திரும் பி ப் பார்த்தோம்
பெரிய விக்கினி, 女
எங்களூரான அச்செழுவில் இந்தச் சம்பவம் நடந்தது. ஒரு
பெண் .
வசதியான குடும்பம். நல்ல அழகி.
இவளுக்குத் திரும
ணப் பேச்சுக்கால் அடிபட்டது. இனத்தவர்களைச் சேர்ந்த குடும் பத்தினரில் மூன்று வாலிபர்கள் இப் பெண்ணை எப்படியாவது கலியானம் செய்துவிட முயன்று முயற்சித்தனர். மூவரும் சகல தகுதிகளும் நிரம்பப்பெற்றவர்களாக விளங்கினர். ஒவ்வொருவரும் சம தகுதிவாய்க்கப் பெற்றிருந்தனர். -
பெண்ணின் தாய் தந்தையருக்கு மாப்பிள்ளையைத் தேர்ந் தெடுப்பது சிரமமாக இருந்தது. முடிவில் ஒரு முடிவுக்கு வந்தனர். *மூவர் பெயரையும் எழுதி திருவிளச் சீட்டுப் போட்டு யார் பெயர் முதலில் வருகின்றதோ அவரையே தமது மருமகளுக எடுப்பது? எனச் சொல்வி வாலிபர்களைச் சம்மதிக்க வைத்தனர். முடிவில் அப்படியே அத்திருமணம் இனிது நடைபெற்றது. மற்ற இரு வாலிபர்களும் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவதற்கு
உதவினர்
வி, சி. தம்பையா
44

அறிவியல் - ஆக்க இலக்கியக் கருத்தரங்கு
சென்ற சில மாதங்களாக யாழ். வளாகத் தமிழ்த் துறை,
ஆக்க இலக்கிய கர்த்தாக்களுக்காக ஒரு கருத்தரங்குத் தொடரை நடாத்தியது. நவீன உலகில் இலக்கியத்தில் அறிவியல் துறைக ளில் அத்தியாவசியத்தை வற்புறுத்தும் பொருட்டும், அது பற்றிய எழுத்தாளர்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கும் வகையிலும் இக் கருத்தரங்குத் தொடர் அமைந்தது. ஆக்க இலக்கியங்களும் அறி வியற் துறைகளும் என்ற தலைப்பில் நடாத்தப்பட்ட இக் கருத் தரங்குகளின் பிரதம பொறுப்பாளராக இருந்த சித்திரலேகா மெளனகுரு ஆக்க இலக்கியத்துடன் நெருங்கிய தொடர்புள்ள அத்தியாவசியமான அறிவியற் துறைகள் பலவற்றை கருத்தரங் கிற்குரிய பொருள்களாகத் தேர்ந்தெடுத்திருந்தார். பேராசிரியரி கைலாசபதியின் ஆலோசனையுடன் நடத்தப்பட்ட இக் கருத்தரங் குகளில் ஆராயப்பட்ட விஷயங்களின் பட்டியலைத் தருவது அதன் நோக்கத்தையும் புதுமைத் தன்மையையும் காட்டுவதாக அமை யும். இக் கருத்தரங்குகளில் பின்வரும் தலைப்புகள் ஆராயப்பட் டன. ஆக்க இலக்கியமும் மொழியியற்துறையும், ஆக்க இலக்கிய மும் அறிவியற் துறைகளும், ஆக்க இலக்கியமும் உளவியற் துறை யும், ஆக்க இலக்கியமும் பாலியலும், ஆக்க இலக்கியமும் மானு டவியலும், ஆக்க இலக்கியமும் நாட்டுப் பண்பாட்டியலும், ஆக்க இலக்கியமும் அரசியலும். ஆக்க இலக்கியமும் அழகியலும், ஆக்க இலக்கியமும் சமூகவியலும், ஆக்க இலக்கியமும் நடையியலும்
இவ்வருடம் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப் பட்ட இக் கருத்தரங்குத் தொடரில் மேற் குறிப்பிட்ட பதினுெரு தலைப்புகளும் ஆராயப்பட்டன. ஒவ்வொரு துறை பற்றியும் அவற் றில் தேர்ச்சியும் ஆர்வமும் உள்ள பலர் பேசினர், கட்டுரை படித் தனர். கருத்துரைகளைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதங்கள் பலருக்கும் பயனுடைத்தாயிருந்தன. பல்வேறு நாவல்களையும் சிறு கதைகளையும் உதாரணம் காட்டியும் எழுத்தாளர்களை விமர்சித் தும் நடந்த இவ்விவாதம் கருத்தரங்குகளின் சுவையான அம்ச மாக அமைந்தது. இக் கருத்தரங்கு தற்காலத் தமிழ் இலக்கியப் போக்கின் திறனுய்வு போன்று அமைந்தது எனலாம். ஆக்க இலக் கிய காரர்களும் அறிவியற்துறை அறிஞர்களும் பங்கு பற்றிய இக் கருத்தரங்கு சமூக விஞ்ஞான நோக்கின் அடிப்படையில் இலக்கி யத்தை நோக்கவும் புரிந்து கொள்ளவும், மதிப்பிடவும் உதவிய ஒரு பயிற்சிக் களமாக அமைந்தது என்று பங்கு பற்றியவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர்.
இக் கருத்தரங்குத் தொடர்க் கட்டுரைகள் நூல் வடிவில் வெகு விரைவில் வர இருப்பதாக அறிகின்ருேம். இது போன்ற பயனுள்ள கருத்தரங்குகளை யாழ். வளாகத் தமிழ் த் துறை தொடர்ந்து ஒழுங்கு செய்யும் என நம்புகிருேம்:
*அவதானி
45

Page 24
ஜெயகாந்தனின் "ஜெய ஜெய சங்கர."
குறுநாவல் சம்பந்தமாக
எனது மனப் பதிவுகள்
நண்பர் ஜெயகாந்தனின் *ஜெய ஜெய சங்கர." நாவலைப் படித்தீர்களா? அதுபற்றி உங்க ளது அபிப்பிராயம் nr 6ir GoT? என்று ஒர் இலக்கிய நண்பர் கேள்வி கேட்டிருந்தார். அந்த நாவலை ஒரு தடவைக்கு இரு தடவை படித்துப் பார்த்துவிட் டுத்தான் இந்தக் கருத்துக்களை இங்கு அவதானத்துடன் சொல் லுகின்றேன். இக் கேள்விக்குச் சுருக்கமாகப் ப தி ல் சொல்ல (ԼՔւգ-Ամn */ என்ற காரணத்தால் இங்கு அதை விரிவாக எழுத முயல்கிறேன்.
தமிழக இலக்கிய ரசிகர் ஒருவரின் கருத்தையும் பிறிதோர் இடத்தில் படித்துப்பார்க்கலாம். இந்தக் குறுநாவலை எதன் ஆதாரத்தின் மீது எழுத முன் வந்துள்ளார் என்பதை நாவ லாசிரியர் தமது முன்னுரையில் கூறியுள்ளார். புதுப்பெரியவர்கள் பத்திரிகை உலகிற்கு விடுத்துள்ள வேண்டுகோளை எழுத்தாளன் என்கின்ற முறையில் அங்கீக ரித்து இந்த நாவலை எழுதியுள் ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுருக்கமாக இந் நாவலின் உள் ளடக்கத்தைக் கூறுவதாஞல் *இந்து ன்மீகப் பரம்பரை யைத் தார்மீக ரீதியில் மாத்தி
ரமல்ல நடைமுறை அம்சமாக வும் பேணிப் பாது கா த் து வளர்த்து வருவதுடன் வீட்டுக் கொரு ஆண் குழந்தையை அதற் காகத் தானம் செய்வதே இந்தி யாவுக்கு இன்று அத்தியாவசி யம், இந்த நாவலில் மறைமுக மாகக் கூறியுள்ளார் நண்பர் ஜெயகாந்தன். அதற் கான ஆயத்த வேலைகளாகக் கிலம டைந்து போயுள்ள கோயில்க ளைத் திருத்தித் திருப்பணிகள் செய்வதுடன் நில்லாது, அந்தக் கோயில்களைச் சார்ந்து ஆச்சிர மங்களை அமைக்க வேண்டும் என ஆலோசனையும் கூறியுள்
ளார்.
ஆதி என்ருெரு தீண் டா தானை- ஹரிஜனன- படைத்து உலவ விட்டுள்ளார். அவ ன் தன்னையொத்த மக்கள் நடை முறையில் உள்ள நீசக் கொடு மைகளின் தாக்கங்களால் படும் அவலங்களைப் பற்றி யாதொரு கவலையும் படாமல் ஏதோ தத் துவம் சேசுகிருன், ஆரம்பக் கட்டத்தில் ஆலயப் பிரவேசம் என்ற போராட்டம் வந்தபோது எனக்கு அவர்களது ஆலயத் திற்குள் போக விருப்பமில்லை என. காந்தியடிகள் அங்கீகரித்த GBunrurnr 2 augiau ARPAgG3, pprrr
4.
 

கரிக்கின்ருன் பின்னல் இதே குனம்சம் மாருமலே க த ர் ச் சட்டைக்காரணுக விளங்குகின் முன். சநாதன த ர் மத் தி ன் பாதுகாவலர்கள் எனச் சொல் விக் கொள்பவர்கள் சா தி க் கொடுமையால் இழைக்கும் அநீ திகளுக்குச் சாட்சியமாய் நின்று காட்சி தருகின்றன்.
நந்தனைச் சிதம்பர ஆலயத் திற்குள் தீ மூட்டி எரித்துச் சாம் பலாக்கிவிட்டு நந்தனுராக்கி இப் பிரச்சினையைத் தெய்வாம்சப் படுத்திய தில்லை அந்தணர்களின் வேலையைக் கதாசிரியர் தனி நபராக நின்று கொண்டு செய் யப் பார்க்கின்ருரோ என்ருெரு சந்தேகமும் என் மனசில் நிழ லாடியது. அப்படியொரு செயல் தொடர்பு இதிலும் இருக்கின் றது. அதில் நந்தன் எரிக்கப் பட்டான்; இதில் ஆதி ஆத்மா வையே இழந்து தனிமைப்படுத் தப் படுகின்றன்.
ஆதி சங்கரரின் இந்து ஆன் மீக தர்மமும் ஆதியின் கதர் நெய்யும் தகளியும் இணைவதால் பழைய சம்பவம் ஒன்றைச் சுட் டிக் காட்டுவது உசிதமானது எனத் தோன்றுகின்றது.
வ. வே. சு. ஐயர் என்பவர் மிகச் சிறந்த தேசபக்தர்; கல் விமான்; ஆன்மீக பலமிக்கவர்; Gs gu lit போராட்டத்தில் பெரும் பங்கு வ சித் த வர் ஐரோப்பிய நாடெங்கும் சென் றவர்; எழுத்தாளர்; குளத்தங் கரை அரசமரம் என்ற சிறுகதைத் தொகுதியை எழுதி “வெளியிட் டவர்; தமிழ்ச் சிறுகதை உல கின் முன்னேடி எனப் பெயர் பெற்றவர்.
இவர் சேரன். மாதேவி என் ருெரு ஊரில் பாரதமாதா பெயரால் குருகுலம் ஒன்றை நடத்தி வந்தார். தேசிய வீரர் களே உருவாக்குவதே அதன்
தலையாய நோக்கம் எனச் சொல் லப்பட்டது. அக் குருகுலத்தில் பிரச்சினை தோன்றியது. பிராம ணக் குழந்தைகளுக்கு உள்ளே வைத்துப் போஜனம் பரிமாறப் பட்டது. பிராமணர் அல்லா தார் குழந்தைகளுக்கு வெளியே திண்ணையில் வைத்து உ ண வு கொடுக்கப்பட்டது.
இந்த மனுதர்ம சாஸ்திர இன வகுப்புப் பிரிவினையைக் கேள்விப்பட்ட தேசிய வாதிகள் கொதித்தெழுந்தனர். தேசிய இயக்கத்தினரிடையே சலசலப் புத் தோன்றியது. அப்பொழுது திரு. ஈ. வே ரா. தமிழ்நாடு காங் கி ரஸ் காரியதரிசியாக இருந்தார். இந்தப் பாரபட்ச மான நடவடிக்கையைக் கண் டித்து இயக் கம் * நடத்தினர் அவர். ஒரு பொது நிறுவனத் தில் இப்படியான சாதி அகம் பாவம் தலையிடுவதை அவர் கடுமையாக எதிர்த்தார்.
பிரச்சினை அகில இந்தியச் சூடு பிடித்தது. காந்தியடிகள் இப் பிரச்சினையில் த லை யி ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட் டது. காந்திஜீயே தமிழ் நாட் டுக்கு வருகை தந்து இப் பிரச் சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைக்க முற்பட்டார். சமரசப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன. −
பிராமணர்கள் ச  ைம ய ல் காரியங்களைக் கவனிக்கட்டும். குருகுல மாணவர்கள் ஒன்ருக இருந்து சமப்ந்தி போஜம் பண் ணலாம் என்ற சமரச முடிவு எடுக்கப்பட்டது.
இதை ஐயர் மிகக் கடுமை யாக எதிர்த்து வாதிட்டார். தன்னுல் ஒப்புக் கொள்ள முடி யாது எனக் காந்தியடிகளிடமே கூறிவிட்டார். முடிவில் சமரச G um so ähör கைவிடப்பட்டுத் தோல்வியில் முடிந்தது,
47
معہ

Page 25
'அன்றிலிருந்து ஈ. வே. ரா. தேசிய அரசியல் அரங்கத்திலி ருந்து மாகாண அரசியலுக்குத் தன்னைக் குறுக்கிக் கொண்டார். இச் சம்பவத்தினுல் தமிழ் நாட்டு ஆரசியலில் நஞ்சு கலக் கப்பட்டு விட்டது.
இத்தனைக்கும் ஹரிஜனக் ந்தைகள் பாரதமாதா குரு o:?"?*:: பிராமணர் அல்லாதார் குழந் தைகளுக்கே இந்தக் கதி அந்தக் காலத்தில் ஏற்பட்டதென்ருல் ஹரிஜனர்களுக்கு என்ன கதி ஏற்பட்டிருக்கும் என்பதைச் "க் தித்துத்தான் பார். . . தியாகப் பெருங் கலைஞ , )ன வ. வே. சு. ,ו (ר, ושמיTGu Վեւ -1911 படைத்து அடக்கிவிட்ட சநா தன இந்து தர்ம நெறிப்பாடு கள் இப்பொழுது விஞ்ஞா ன யுகத்துக்கேற்ப நவீன வடிவத் துடன் போலிச் சீதை ராமன் முன்வந்து அழகு காட்டியது போல, ஹரிஜனங்கள் முன்னல் வந்து ஆசை காட்டப் பார்க் கின்றது.
கைராட்டைக்குப் பின்னல், கதர்ச் சட்டை ம ன ற ப் பின் ஊடாக பார்ப்பணியம் சநாதன தர்மத்தின் பெயரால் தமிழகத்து அரசியல் வாழ்விலும் பொது வாழ்விலும் செய்து விட்ட அவ கேட் டி ன் அறுவடையாகவே கறுப்புச் சிவப்புத் துண்டர்கள் பொது வாழ்வில் தலைதுாக்க வேண்டிய வேண்டத் தகாத நிலை ஏற்பட வழி அமைத்து விட்டது. இந்து தர்மத்தின் உள்ளோட் டமாக இருக்கும் ஆன்மீக பண் புகளை - அதன் தொன்மையைவாழ்வியலில் அதன் பாரிய பங் களிப்பை நான் மனசார மதிக் கின்றேன்: கெளரவிக்கின்றேன். இங்கு பிரச்சினை அதுவல்ல, அதன் தொன்மையையும், ஆன்மீக பலத்தையும் பாரம்
பரியத்தையும், ஆக்க சக்தியை யும் நிலப் பிரபுத்துவத்துக்குத் தானம் சய்ய வைத்து. அதன் பெயரா ல் நிலப்பிரபுத்துவம் அடி டிட்ட வாய் இ ல் லா ப் பிராணிகளான ஹரிஜனங்களுக் குச் 7ெ ப் த சொல்லொணுக் கொருமைகளுக்குத் துணை நின் றதையும் நாம் மறந்து விடக் கூடாது. தீண்டத்தகாதவர்கள் தாம் பெற்று இன்று அனுப
, து வரும் மனித உரிமைகள் ஏதும் மல் றையோரின் ஆன்மீக தவபலத்தினுல் பெற்றுக் கொண்
டவையல்ல. மாருகத் த ம து C3 Ir Irtir u '... " 6:00T ttafogóir eup G)GBuo தr ,ாக்கிக் கொண்டார்கள் என்
it i. S2) sy @ குறிப்பிடத்தக்க தாகும்.
வர்களது அடிப் ப ைட மனிதத் துயரங்களை ஜெயகாந் தன் புரிந்து கொண்டிருக்கலாம். இ தி ல் சந்தேகமில்லை. ஆனல் அதை அனுபவ பூ ர் வமா க உணர்ந்து கொண்டிருக்க முடி யாது. தெளிவாகச் சொல்லப் போனல் இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொண்டவர்கள் சரியா கவோ தவருகவோ எடுத்துக் கையாளுகின்றனரே தவிர, இந் தச் சாக்காட்டுக் கொடுமையை நேரடியாக அனுபவித்தவர்கள், அதனை தமது நெஞ்கில் வடுவா கப் பதித்துக் கொண்டவர்கள் படைப்பிலக்கியமாக எழுதியது கிடையாது; அப்படி எழுதின லும் இப்படியான பிரபல ம் பெற்றுக் கொண்டதில்லை.
தேசிய இயக் கத் துட ன் இணைந்து பிணைந்து போராடிப் பெற்றுக் கொண்ட உரிமைகளை மறக்கடித்துப் ւյ6ծtpաւյւգպւն ம த த் தளைக்குள் பிணைத்துப் பாதுகாக்கவே ம த பீடங்கள் இப்படியான வேண்டுகோள்ை விடுகின்றன எனக் கருத இட மிருக்கின்றது. . . .
丝8

சில ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை ஜில்லாவில் கீழவெண்
மணி என்ருெரு சிற்றுாரில் ஒரு
சர்வ தேசக் கொடுமை நடை பெற்ற து. விவசாயக் கூலிக ளான 44 ஆண், பெண், தைகள் குடிசைக்குள். பூட்டப் பட்டு வைத்து. பெற் ருே ல் ஊற்றிக் கொழுத்தப்பட்டனர். எரித்தவர் எனச் சொல்லப் படுபவரும் இந்துக்கள்; எரிந்து செத்தவர்களும் இந்துக்களே! இந்த மகா கொடூரத்தைக் கேட்ட மனித குல மனச் சாட் சியே திடுக்கிட்டு விட்டது.
நானும் மிகக் கூர்மையாகச் செய்திகளைப் படித்துப் பார்த் தேன்.-- பழம் பெரியவர் சொன் னதையும் புதுப் பெரியவர் சொல்லி வருவதையும் மிகக் கவனமாகப் படித்து வருபவன் நான் - ஒரு கட்டத்தில் கூட இந்த அக்கிரமத்தைக் கண்டித்து அவர்கள் ஒன்றுமே சொன்ன தில்லை.
இந்து தர்மத்தைப் போஷிப் பதானுல் கோ சம் ரட் சனே செய்ய வேண்டுமெனக் கூறி கோ மாதாவின் உருவை லோக மாதாவாகக் கற்பிதம் செய்யத் தெரிந்த இவர்கள் - மாட்டுக் காக மகா யாகங்களே செய்ய லாம் என உருகி உருகிப் பேசும் இவர்கள் - மனிதர்களை உயிர்க் கொலை செய்து கூட்டுச் சுடலை வேள்வி நடத்தியதையும் உயிர் கள் இப்படியாக நீசத்தனமான மூறையில் வீணடிக்கப்பட்ட தைக் கண்டும் வாய் பேசாமல் இருந்தது எந்தத் தர்மத்தின் பாற்பட்டது எனக் கே ட் டு வைப்பதில் நியாயம் இருக்கின் هي fD
பெரியவர்கள் ஒரு ஊருக் குக் கோயில் திருப்பணிக்காக எழுந்தருளி இருக்கின்றர்கள் என்ருல் இவர்களினது தினசரிச்
குழந்.
சேவைக்கும் திருப்பணி நோக் குக்கும் சேவை செய்ய முன் நின்று உழைப்பவர்களே' இப்ப டியான கீழவெண்மணி மிலேச் சர்கள்தான் என்பது அனுபவ உண்மையாகும். -
எனவே, மாமீடுக்காக்க் கண் ணிர் விடுபவர்கள் மனிதர்களுக் ,
காக - குறிப்பாகத் தர்ழ்த்தப்
பட்ட சகோதரர்களுக்காக ஏன்
இரங்குவதில்லை எ ன் ப இங்கு சிந்திக்கத்தக்க கும்.
நாவலில் வரும் சங்கரர், ஆதியைப்பற்றி மனதில் உருகித் த விக் கி ரு ர். ஆனல் அதே ஆதியை பக்கத்தே சில நடை தூரம் இருந்தும் தனது பால பருவத்து நண்பனைச் சந்திக்க வெகுவாகக் கூச்சப்படுகிருர். வெருண்டு தனது அந்தரங்கச் சீடனை அடிக்கடி தூதனுப்புகின் முர். கதர்ச் சட்டைக்கார ஆதி, தனக்குள் புதைந்து போனது போல, வேலிக் குறுக்கீட்டில் தனது தத்துவத்தைத் தரிசனம் செய்கின்ருர்து
சிஸ் -
ஒன்ரு
பாரதி கூட கனகலிங்கம் என்ருெரு ஹரிஜனப் பையனுக் குப் பூணுரல் அணிவித்து மூல மந்திரம் செப்பச் செய்து அவ னைப் பிராமணன் ஆக்கி வைத் தார். தனி நபர்களைப் பிடித்து இப்படியான மகோன்னத உப தேசம் செய்வித்து அவர்களைத் தெய்வப் பிறவிகளாக ஆக்கிக் காட்டுவதுகூட புராணம் படித்த வர்களுக்குப் புதிசல்ல
பிரச்சினையை இப்படி மழுங் கடிக்கலாமே தவிர, பிரச்சினை யின் தீர்வுக்கு இவைகள் வழி காட்டல்களல்ல. பூரீ காஞ்சிப் பெரியவரின் அல்லது இளையவ ரின் தபோ ஞான பலம் பற் றியோ ஆன்மீக நெறிப்பாடு குறித்தோ சந்தேகிக்கவில்லை. அலட்சியம் செய்வதும் எனது
49

Page 26
நோக்கமல்ல. ஆனல் லெளகீகலோகாயத விவகாரத்தில் அவர் கள் கடைப்பிடிக்கும் குறைபா டுகள் பற்றியதே எனது கருத் துக்களாகும்.
உதாரணமாக கொலாச் சார - மட்டரகமான - நியூ வேவ் என்ற உத்திகளைப் பயன் படுத்தி நவீன விபசார சாதன மாகப் பயன்பட்டு வரும் தமிழ கத்துச் சஞ்சிகைகளிலும் பத்தி ரிகைகளிலும் பெரியவர்களது பெயரால் வெளிவரும் அருள் வாக்குகளை அச்சிடக் கொடுப் பதே இந்த ச் சந்தேகத்தை என்னுள் முளைவிடச் செய்துள் வாது
வாசகர்களுக்கு ஒரு சிர மத்தை நான் தருகிறேன் என் பதை இப்பொழுது ஒப்புக் கொள்ளுகின்றேன். மூல நூலைப் படிக்காமலே இந்தக் கருத்துக் களே - இதை விமரிசனம் என நான் கருதவில்லை - படிப்பவர் கள் திகைக்க நேரலாம். அவர்
களுக்கு இது உதவியாக அமை
யக் கூடும் அவரவர் தகுதிக் கேற்ப, தரத்திற்கேற்ப மூல நூலைப் படிப்பவர்கள் இந்தக் கருத்துக்களையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.
கீழவெண்மணிப் பிரச்சினை நடைபெற்ற காலகட்டத்தில் 3. கூட்டத்தில் மறைந்த தாழர் கே. பாலதண்டாயுதம் ஜெயகாந்தன் போன்ற முன்
னணி எழுத்தாளர்கள் இந்தப்
பிரச்சினையைத் தொட்டு எழுத லாமே எனக் குறிப்பிட்டிருந் தார். அதற்கு அவர் "ஓர் எழுத் தாளனைப் பார்த்து இதை எழு துங்கள்; அ  ைத எழுதுங்கள் எனச் சொல்வதற்கு யாருக்குமே உரிமையில்லை!" எனப் பட்ட வர்த்தனமாகச் சொல்லி அக் கருத்தை நிராகரித்த அதே ஜெயகாந்தன், புதுப் பெரியவர்
80
பட்ட மக்கள் துணிந்து குரல் கொடுத்து வந்
பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக் கையைப் பார்த்துவிட்டு ஒரு நா வலையே எழுதி முடித்து விட்டார்,
மக்களுக்காகவே த ன
வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வாழ்வில் பெ ரும் பகுதியைச் சிறையில் அடைபட்டுக் கழித்த வர் ஒடுக்கப்பட்ட - நசுக்கப் குலத்திற்காகத்
தவரான ஒரு தேசியத் தலைவன் சொன்ன ஆலோசனையைப் பகி ரங்கமாக நிராகரித்த அவர் எழுத்தாளருக்காகவல்ல, வேறு யாருக்கோ மத உயர் பீடம் விடு த் த வேண்டுகோர சிர மேலேற்று ஒரு நூலயே எழுதி யுள்ளார் என்ருல் ஒரு கருத்தை நிராகரிப்பதும் ஏற்றுக் கொள் வதும் தனது வசதிக்காகவே தானே என எண்ணத் தோன் றுகின்றது.
காலம் போகப் போக நாவ லா சிரியர் ஆன்மீக நெறியே - அதன் வழி நடப் பதே - இந்தியாவின் முழுப் பிரச்சினைகளையும் தீர்க்கும் சர் வரோக நிவார ணி எனச் சொல்லி முழுக் காவிய மே படைத்தளித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
"ஜெய ஜெய சங்கர. s நாவலில் வெளிவரும் கருத்துக் கள் இன்றைய இந்திய மண் ணுக்கு இப்பொழுது தேவை தா7ை
சநாதன தர்மத்தின் பெய ரால் ஹரிஜனங்களுக்குக் கடந்த காலங்களில் செய்யப்பட்ட முன் னுதாரணமற்ற கொடுமைகளை மறைத்து அல்லது மறக்கப் பண்ணி, அவர்கள் மத்தியில் இருந்து புதுப் பக்தர்களை உரு வாக்குவதே இதன் அடிப்பட்ை யான நோக்கம். அதற்கு சநா தன தர்மத்தின் தூண்களைப்

பக்குவ நெறிப்படுத்திக் காட்டு வதே கட்டுமான உத்தி,
19-ம் நூற்ருண்டின் பின் பகுதியிலிம் 20-ம் நூற்றண்டின் முன் பகுதியிலும் "போப்" ஆண் டவரை முன்நிறுத்தி ஆன்மீக புனருத்தாரணம் சம்பந்தமாக இப் படி யான இலக்கியங்கள் ஐரோப்பாக் கண்டத்தில், பல நாடுகளில், பல ரூபங்களில் பல மொழிகளில் வெளிவந்துள்ளதும் உண்மை.
மனு நீதி சாஸ்திரத்தை மையக் கோட்பாடாக வைத்துக் கட்டப்பட்ட ஒரு சமூக அமைப் பில் வழி வழி வந்தவர்கள்தான் மதுரை வைத்தியநாதையர், சத் தியமூர்த்தி, மணப்பாறை ஐயர் போன்றவர்களும் இ ன் னும் எனக்குத் தெரிந்திராத பிராம ணுேத்தமர்களும்- இதில் ராஜா ஜியை நான் வேண்டுமென்றே தான் குறிப்பிடவில்லை. அவர் தீண்டாதார் பிரச்சினைக்குப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்பது உண்மை என்ற போதி லும் கூட, இந்தச் சாதி விவ காரத்தில் அவரது ஆத்ம சுத் தியை நான் விசுவாசிக்கவில்லைஇப்படியான பிராமண உத்த மத் தலைவர்கள் பெரும் பங்கு வகித்து, தேசிய இயக்கத்தின் திசைவழியே, அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு, உரிமை பறிக்கப் பட்ட மக்கள் பகுதியினருக்கு நியாயம் வழங்க முன் நின்று உழைத்து வந்துள்ளனர் என் பதை புனிதமான உணர்வுடன் இங்கு நினைவு கூரும் அதே சம யம் மனுநீதியின் பெயரால் ஆன்மாவையே அடக்கிய சமூ கம், செல்லரித்துப் போ ன சநாதன தர்மத்தைக் காரணம் காட்டிச் செய்துள்ள அளப்பரிய கொடுமைகளை, வாய் மூடி, மெள்னச் சாட்சியாய் நின்று பொறுத்துக் கொள்வதே தனது தனிப் பெரும் ஆளுமை என
வாழா நிற்கும் பாத்திரமான
ஆதியின் முகத்தில் ஒங்கி அறைய வேண்டும் போ ல எனக்குள் ஆத்திரம் பீறிட்டது. அப்படி ஒரு மன எரிச்சல். அந்த அறை மனித குல மனச்சாட்சியின் மீதே விழ வேண்டுமென்பதும் எனது ஆசை
சமீப காலத்தில் இந்திய மண்ணில் மிகப் பெரிய மாற் றங்கள் நடைபெற்று வருவதை அவதானிக்கும் என்னைப் போன் றவர்களுக்கு சநாதன தர்மப் பிரச்சினையல்ல இங்கு குறுக்கிடு வது அவசர காலப் பிரகடனம் 20 அம்சத் திட்ட அமுல், தமி ழக கைலஞ்ச ஊழல் அரசு விலக் கப்பட்டு 20 அம்சத் திட்ட அமுலில் பரம்பரை பரம் பரையாகவே அடிமை" குடிமைக ளாக நிலப் பிரபுக்களால் தமக்கு அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் - குறிப்பாக ஹரிஜனங்கள் - விடு தலை, நீல மற்ற மக்களுக்குக் குடியிருக்க நிலம் போன்ற சமூக மாற்றங்கள் மிகத் தீவிர நடை பெற்று வரும் ஒரு நாட்டில் ஒர் எழுத்தாளன் சொல்வதற்கு எத்தனையோ சங்கதிகள் செய்தி கள் உண்டு என்பதை நான் உண ரு கிறேன். இ ைத த் தவிர்த்து, அல்லது இதை மறந்து ஏதோ சநாதன தர்மத் தின் புனிதத்தை அதன் மகி மையைப் பாதுகாப்பதே இப் போதைய முதல் நோ க்கம் என்ற மனப்பான்மையை கலந்து எழுதப்பட்டுள்ள ஜெய ஜெய சங்கர குறு நாவலில் அப்படிப் படித்துத் தெரிந்து கொள்வதற் கான ஒன்றுமேயில்லை என்றே எனக்குச் சொல்லத் தோன்று கின்றது:
சரஸ்வதி காலத்தை இந்தச் சமயத்தில் எண்ணிப் பார்க்கத் தோன்றுகின்றது. ஏனென்றல் சரஸ்வதிதான் நமக்கெல்லாம்

Page 27
ஜெயகாந்தனை அறிமுகப்படு தியது.
கடல் கடந்து தூரம் தொ வாக இலக்கியப் பரம்பரையின பிரிக்கப்பட்டிருந்த போதிலு கூடது ஆத்ம பூர்வமாகத் து? நின்று அந்தக் காலத்தில் ஜெ காந்தனின் க ைத களை எழு தெண்ணிப் படித்த ஞாபக வருகின்றது. நண்பர்களுட அவரது கதைகளைப் பற் மணிக் கணக்காக விவாதித் சம்பவங்கள் இப்பொழுது எனது நெஞ்சில் பசுமையா பதிந்திருக்கின்றன.
ஆனல் இன்று அ வர முதிர்ச்சி என அவரே கரு எழுதும் கதைகளைப் படிக்கு போது ஓர் அந்நியத் தன்ன மாத்திரம் வெறிச்சோடித் ெ கின்றதை என்னுல் இனம் புரி கொள்ள முடிகின்றது,
நடையிலே ஒரு செழுை சொல்லும் உத்திகளிலே ஒ முதிர்ச்சி, பாத்திரங்களை நி னமாகக் கையாளுகின்ற திறன் யிலே ஒரு லாவகம், அவர் படைப்பு எழுத்தைப் படிப்பத இலட்சக் கணக்கான வாச கிட்டம் இத்தனையும் இருந்து ஜெயகாந்தனின் ஆன்மாவை ஆ லது ஆளுமையை அவரது எழு திலே இன்று என்னல் கண்டு கொள்ள முடிவதில்
அவரது தற்போதைய பலத்தைப் பார்த்து ம ய ங் அவரே 1ா அல்லது அவர் ரஸிகர்களோ புளகாங்கி; கொள்வார்களானுல் அது ஆபத்தான பிரமையாகும்.
சரஸ்வதி சம்பந்தமாக ந பெருமைப்பட்டுக் கொள்வத நிரம்பிய நியாயமுண்டு. ந கருத்துக்களின் தாக்கம், ந கொள்கையின் பயனு று தி தன்ம்ை, ஆக்கபூர்வமான செ. பாடுகள்பற்றிக் கொண்டிரு உறுதி அத்தனையையும் வெ படுத்த அந்த இயக்கம் நமக்

த்ெ தமிழகத்தில் புதுச் சிந்தனைத் தடத்தில் நடைபோட முயன்ற 2. பலருக்கும் உறு துணையாக அமைந்து வழி :ಶಿಣ್ಣ: தத் தது என்பதை நா ன்ம்ை O மறந்துவிடவில்லை. GDI 2u. அந்தக் காலத்தில் இருந்த * ஆரோக்கியமான இலக்கிய சிந் கழி தனை - துணிச்சலான கருத்துப் பி பரிமாற்றம் - இன்று தமிழகத் 2றி தில் அருகி வருகின்றதோ என தி உண்மையாகவே ஐயப்படுகின் ம றேன், நான்.
பல தமிழகத்து எழுத்தா ளர்கள் கருத்துச் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தமது உள்ளக் 5 கருத்துக்களை வெளியே சொல் லாமல் - நமக்கு ஏன் இந்த வீண் தரி வம்பு?- என்ற ரீதிழில் மெளன மாக இருப்பதினுல் வளர்ந்து வரும் இளம் தலைமுறைக்கு எத் தனை பெரிய நட்டத்தைச் செய் ம, கின்றனர் என யோசிக்க வேண்டி ஒரு யுள்ளது.
சரஸ்வதி காலம் கூர்மை து பான மனச் சாட்சியுள்ள எழுத் தாளர்கள் தமது கருத்தைப் பகி 2 ரங்கமாக வெளிப்படுத்திய் காலம் என்ற ஒரு உண்மையே மனதிற்கு எத்தன் இதத்தைத் தருகிறது. கருத்தையும் கருத்தையும் மோத வைப்பதால் தனிமனித விரோ தம் வளரும் என நான் நம்ப வில்லை. அப்படி அதைத் தனி பிர மனிதகுரோதமாகப் பார்ப்பவர் கி கள் இலக்கிய உலகில் தாக்குப் rது பிடிக்கத் தகுதியற்றவர்களாக தம் முடிவில் மாறி விடுவார்கள்.
ஓர் a Ya u 8
முடிவாக ஆரம்பத்தில் நண் பர் கேட்ட கேள்விக்கு எனது ாம் பதில் இதுதான். கிருஷ்டியா ற்கு ளன் என்கின்ற முறையில், தனது மது படைப்பில், தனது மேலாதிக் மது கத்தைத் திணித்து தான் சொல் த் லும் விதத்திலேயே- தனது கருத் யல் துக்கிசையவே - பாத்திரங்க ளை ந்த நடமாட வைத்து ஜெயகாந்தன் ளிப். "ஜெய ஜெயசங்கர வை எழுதி கும் புள்ளார்; வேருென்றுமில்லை*