கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1978.08

Page 1
| 摧 §
 

རྒྱ་

Page 2
துணிகள் பளிச்சிடீ எ
EN
நறுப நுரை
தூய்மையாக்கும் ஆற்
srbued) (3
உபயோகித்து நீங்கே
விநியோகஸ்தர்கள்: н.

TuíbI (0.6iu)
மணத்திற்கு
வளத்திற்கு
றலுக்கு வேறெந்த சோப்பும் சாப்புக்கு ஈடாகாது
iள அறிந்து கொள்ளுங்கள்.
) to Gi)
P. T. குரூப் - கொழும்பு - 8.

Page 3
With the best Compliments from KUMLAR | JLWILLIERS
SRI RAMANA
JEWELLERS
183, SEA STREET, anpasse COLOMO -
நுகேகொடையில் தலைசிறந்த
d சிகை அலங்கார நிலையம்
புதிய பாணி சிறந்த சேவை
ELANGO
SAILOON
141, Station Road, അ: ' NUOSEGODA.

நுட்பமும், சிறப்பும், அழகும் ஒருங்கே அமையப்பெற்ற ஆபரணங்களுக்கு உத்தரவாதமான தரமிக்க தங்க வைர நக்ைகளுக்கு
జ*
அருமையான வேலப்பாடுகள் அமைந்த
டிசைன் தங்க ஆபரணங்களுக்கு
நேர்த்தீயானதும் மகிழ்ந்து பரவசமடையக் கூடியதுமான அணிகலன்களுக்கு
யாழ்ப்பாணத்தில் சிறந்த நகைக்கடை
تسمیہ:۔
s
t - ஹரன் ஜூவல்லர்ஸ்
50, கன்னதிட்டி --ы.......-- யாழ்ப்பாணம், தொலைபேசி: 444 தந்தி: இரத்தினம்ஸ்"

Page 4
லீலாவின் கலாரீதியான
அழைப்பு -
மன்மத ஞ கலாம்
எமது பவுடர், கிறீம் அழகு சாதனங்களையும் பாவியுங்கள்
அறிஞஞ கலாம்
எம்மிடமுள்ள சிந்தனை யைத் தூண்டும் நவ நவ மான நூல்களைப் படி யுங்கள்.
மன்மதனுக, அறிஞனுகக் திகழ, ஆரோக்கிய உடலை பேணுங்கள் எமது ய்ாழ். நல்லெண்ணெய் பாவியுங்கள்
ஒரு இரகசியம்
பல சலூன்கள் கலைக்கூடங்களாய்த் திகழ்வதற
இரகசியம் அவை எமது சலூன் சாதனங்களை,
உபகரணங்களை, ஆலோ ச னை களை புதிது புதிதாய்ப் பெறுவதே.
இத்தனக்கும் அத்தனக்கும் எமது மலிவு விலைதான்!
லீலா சலூன் 24. பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு-13

s-Oos, IIT,P,S)
4ırmųjego ---
·, !orsogog) șHņđges@ș& igogoo 4ırı ngogs dregeree) 199đios) s otrogoqoqi (3) ngouroso) po urm ugon @ «»ợseș-ıælįs-a nəuqi qo qaoqi g-moc o qiÁÐg) 199ɛ ɑwo orno», 199gj sĩ quo qi@ș@re loogko upę
4ırı ış9ko oo@4gre mye os@@@ qs draqueso o 1994ıfı spoof
megspas@ @ @đeoq; & aes-Ifùqīlo o uşşØdegi
$qi@ąerepuo@o@', urie), pogogo, reg) isols • Eff-ızıgo o
uzz u fisẽ
je po ogło opsøg og æ neque figyeɛr
赵g 粤唱—郎。“卧4949@日r门阀圈七m) •ılmıştı@ 白醫áz匈*e&gen 匈白白匈 g&7的匈9爾@é
*q塔塔月29的曲喻将领 ą91, g-a-neggae@ qīngornrī sī£đợi? " so-77.759g4哈哈 surn-indħ) oș4, seg, quoquo qøĝ19@reųorto(?) 4:0907 ·
· q ogysgogg-Tesko gofigonorio qęgāriņ577 gose, soo ��ęīgos dosae q. 5) laef, sẽ rẻ Jos@@rī ņo giỗ
göre, qıfırındfing) áreg明ge坦 quingƆgos, qui teqpis 河电图的“与母混将岛 ng与姆习写电 qyho um isosogłosfogo 19ægning) qi@rotegisse ges» o 19șoceso qi@ urm goreg) op 5 nogogogoda
sexu etI țis *VN HẢIV f. opeo a os oys osa ovogz waaəf ɔțațuaoq sueuipo ivyiTivw
sogorgude sõj
m불民)들r국적:Jr법 Ģgs (ap 19 oog) oog) V -yƐƐ Hisố șųoņıH-ve) įmụsoo
:ųırsae»do
əuszp3 pJAV fiņųquos odųssəuổoues,Johnsow,
REICHE, IGE,
-, pure@ups@ @opso ao@iros, yargı - grioriţa-Igf qıs 19-TO-Trioe quo ip-a - qøựsoago Thugsngute goso qingqosg" (poē) uri (95%)oo.

Page 5
எதார்த்த உண்மைகளின் ஆதார வலம்!
பதினுலாவது ஆண்டு மலர் உங்களது கரங்கள் தவழும் இந்தச் சந்தரிப்பத்தில் பல்வேறு மன உண வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வ மேலீட்டினல் இந்தக் கடிதத்தை வரைய வேண்டிய எண்ணம் எனக்கு ஏற்பட்டது,
இந்த மலர் தயாரித்து முடியும் கட்ட த் தி ல் எனக்குத் தமிழகத்திலிருந்து ஓர் அவசர அழைப்புக் கிடைத்தது - அவசியஅழைப்பு!
திருப்பூரில் நடைபெறும் கலை இலக்கியப் பெரு மன்றத்தின் 3 - வது மகாநாட்டில் என்ளைக் கலந்து கொள்ளும்படி அந்த அன்பழைப்பு என்னை உரிமை உணர்வுடன் கேட்டுக் கொண்டது:
மலரை முடிப்பதா அல்லது தற்காலிகமாக அம் துலர் வெளியீட்டை ஒத்திவைத்துவிட்டுத் தமிழகம் செல்வதா என்ற பிரச்சினே என் நெஞ்சைப் போட்டு அலெக்கழித்தது.
ஏற்பட்டதால் மல்லிகை மலர் வெளிவர வேண்டிய நாளும் தாமதித்து விட்டது
மல்ரின் தாமதத்திற்கான நிலைமையை நீங்கள் புரிந்து கொள்வதற்காகவே இந்தத் தகவலை உங்க ளது கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.
ஒவ்வொரு மலரையும் படித்துப் பார்த்ததுடன் அதைப் பாதுகாத்து லைத்திருக்கும் இலக்கியத் தர மான நண்பர்களுக்கு இந்த மலர் ஏமாற்றம் தராது - என்ற மன நிறைவுடன்தான் இந்தக் கருத்துக்களை நெஞ்சத்துக்கு நெருக்கமான உங்களுக்கு எழுது கின்றேன்.
சென்ற ஆண்டு மலர் தயாரிக்கும்போது ஏற் பட்ட பிரச்சினைகளை விட, இப்போது மலர் தயாரிக் கும்போது ஏற்பட்ட நிலை வேறுவிதமானது.
மலருக்குத் தேவையான மூலப் பொருட்களின் அசுரத்தனமான விலையேற்றம் சிறிய சஞ்சிகைக் காரர்களின் குரல்வளையைப் பிடித்து நெருக்கி வரு கின்றது. அதையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் இந்த மலர் வெளிவருகின்றது.
எங்கெங்கெல்லாமோ இருந்து மல்லிகையின் ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர்.
அவர்களினது ஆதரவுக்கான காரணத்தை என் ல்ை துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. மல்லிகை தனது நெடும்பயணத்திற்கான சரியான திசைவழியில் தெளிவாக நடைபோடுகின்றது என்ற உறுதியான நம்பிக்கையே அவர்களினது ஆதரவுக்கு அடி அத்திவாரமாகும்:
 

ნრთშ5
பல நண்பர்கள் நான் இந்த மகாநாட்டில் கலந்து கொள்வது அத்தியாவசியம்ானது, எனவே சகல வேலைகளேயும் ஒத்தி வைத்துவிட்டுப் பிரயாணத்திற்கு ஆவன செய்யும்படி வற்புறுத்தினர்கள். எனக்கும் அதுவே சரியெனப் பட்டது. காரணம் பல சந்தர்ப் பங்களில் தமிழகம் புறப்படப் புறப்பட ஆயத்தப் படுத்தியும் இடையிடையே ஏற்பட்ட சிரமங்கள், 936nol- கள் காரணமாக என்னுல் எனது பிரயா SRTS நீத். அமுல் தடத்த முடியாமல் போய் விட்டது. எனவேதான் இந்த அழைப்புக் கிடைத்த தும் எப்படியும் தமிழகம் செல்வது என்ற தீர்மானத் துடன் அலுவல்களைப் பார்க்க முற்பட்டேன்.
எனது தமிழகப் பயணத்தைப் பற்றித் தனியாக மல்லிகை இதழ்களில் தொடர்ந்து எழுதலாம் என எண்ணுகின்றேன். இந்தப் பிரயாணத்திற்கு இரு வழங்களுக்கு மேற்பட்ட நாட்களை ஒதுக்க வேண்டி
எத்தனை சிரமங்கள் வ்ந்த போதும் - எத்தகைய நெருக்கடிகள் என்னை அலைக்கழித்தாலும் - நான் எனது விசால நோக்கைக் குறுக்கித் தற்காலிக லாபத் திற்காகத்தடம் புரண மாட்டேன் என்பதை வாக்கு மூலமாக இந்தக் கட்டத்தில் சொல்லிவைக் சி விரும் புகின்றேன்.
தமிழகத்தில் எனது சுற்றுப் பயணத்தின்போது பல நல்ல அனுபவங்களைப் பெற்றேன். சுவையா னவை: பலவேறு வகைப்பட்டவை. அதில் மல்லிகை சம்பந்தப்பட்ட அனுபவங்கள் தனியானவை
மல்லிகைபைப் பற்றித் தெரியாத தரமான ரஸி கர்கள் தமிழ் நாட்டில் இல்லை ன்றே சொல்லி விடலாம். சென்ற இடங்களிலெல்லாம் மல்லிகை பற்றியே விசாரித்தனர். படைப்பாளி என்கின்ற முறையில் மாத்திரமல்ல, இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் என்ற வகையிலும் நான் கெளரவித்து வர வேற்கப்பட்ட்ேன் என்பதையும் இங்கு குறிப்பிவேண்டும். - அப்படி ஒரு வரவேற்பு
ஒரு சஞ்சிகையை இந்த மண்ணில் வேர்விட்டுத் தளைக்கப்பண்ண எடுத்த முயற்சிகள், சிரமங்கள், சோதனைகள் அத்தனையும் தமிழகத்தில் அதன் கார ணமாக எனக்குக் காட்டிய பரிவு கலந்த பாசத்தின் காரணத்தால் மறக்கடிக்கப்பட்டு விட்டது.
இந்தக் கடிதத்தை மனந்திறந்து எழுதும்போது நெஞ்சில் ஒருவித நெகிழ்ச்சி ஏற்படுகின்றது.
நேரடியாக உங்களுடன் சம்பாஷிக்கும் ஒரி உணர்வே என் மனதில் நிழலாடுகின்றது.

Page 6
』고學學, 제記事역는 「T5 —
*역%3ADuaJe g는國
思國「T國 中學gmage&gFT r려國rg록』 『?guコg BE日 シ」』シg シ g地eg 『Qgg シQp『ggb園g gシ 2peg @reg *44±nn骨唱g@* மசிது கிரமிதி野h±間唱凱h*Q54匈 *過匈 已唱h部4白自日白官。陶生自也ETQE *g 隔*n T官屬agh*QFDT**T日「* 劑思g zneeng&日éggg函* @*Q湖* 4%駐唱zh劑。下引LFé白匈區間日* 上門。 碘國——噴 *隱喻函咀計』 "*T* 晚)塔) 劑屬「gāq官國順德「*** 唱白匈皆L會員唱白屬坦克Q_*_*Q Ta劑ng唱己匈 tr引I *員g司占追"ö 日シg F』シ gus』 E』 シgg シ gge』 ngge圆圈) săieri, seseksuel Histos@osa Tsoe)『」g |-*) 日ggbコg g@『g シ『シ 中白自己「卧明爾噴七日醫目dé端即 nh**尼阿 日e@ 白圈日回唱g電取自吉日時真4。國風 ~ r.5%정ggrTfTF rTrmag 역A법rm&s
통s的ra 學g學的對: - **** ******的王rg :년城主r
않ws — 역학 역효는 的的grgg *4열·환 환적용확**Pre
日点占보통改urermg학Rus 時역aggggr면 的神的5仁r더A**
o paesas:sēsīgie soos Faes russo: §đòls soqosoɛ gɛŋırı koliūrīgsfè sosios?FEī£Tu/ss) 引ün n_mg@自喻與過*Q_虎「因暗傳聞_* シHgeg*g シg ggb シg 區已白顯唱真日唱圈白鷗 暗gn白日上唱*h引自弗n忘坦Q4日「*唱 g*T 影s)u书g收hnā每日鸣呜呜闻 『aggシ 『ggg シ』*『「gagg『シに『QQ
演ap恒像蜥自g)与四 已獨的n白白TE **』mptg己h引4***「 ーシ QHE』D シシ
「gsgg QFd 』』ggggegஒஇ? |-gue-g)
rassessins so solustrisijos 『シ』gョコシシ QQ園コ
- 國白宮邸明白頸 확#Tu법 5월nsus —T德 5활6的高Sug國T Ag的高祖T&역 광학&활환rT シ図 ggs"Eqシ 感),官尼日 シ」 「g」シEugg『g JHFFシ『シ
-*TistaessaeqıH siɲɛsɛ sɛ nn-itseɑsesijaersŵs Isosos, grossos Le』D g ggシgョシ 唱#白gö méts@國日比öfu心*pT口國 H屬hTQ心聞唱片「白員官&gnèg唱e上同迴白日
| –
sae ;! |-: : , ae_-- :)
 
 

"உலுகின் பல்வேறு பண்பு களே இஜோத்து
பிரதிநிதித்துவம் செய்யும் பண்பு கலேயின் இயல்பாதல்ால், அது
(அதிகுேடு தொடர்புறும்) ம்ரித
ஓரிடத்து முரண்பாடற்ற நித் திசைவுடைய ஒரு தக்கத்தினே ஏற்படுத்தும் ஆற்றியுேடைய தாக விளங்குகின்றது. அத்து டன் அவன் மனதிலே ஓர் உண்ர் வப் பூரணத்துவத்தையும் வாழ் வின் மனித சீவிபத்தின்) நோக் கமுடைமை பற்றிய உணர்வை யும் அது ஏற்படுத்துகின்றது."
பூபக்கோவ்வெவ்
கலேயானது எ ல் வாறு சமூக- அழகியல் முழுமையினேப் பெறுகின்றது என்பது பற்றி விவரிக்கும் ஒரு கட்டுரையி: ருந்து மேலேயுள்ள சுற்று எடுக் அப்பட்டுள்ளது. இது கலேயின் சமூகத் தாக்கத்தையும் அழகி
யற் பூாண்த்துவத்தையும் எடுத்
துக் காட்டுகின்றது.
நாடகம் பற்றிய சிரத்தை தமிழில் அதிகரித்து வரும் இந்நாட்களில், நாட்கம் என்னும் கவேவடிவத்தின் சமூகத்
தள்த்தையும், அழகியற் பாதுை பும் பற்றி ஆழமான ஒரு நோக்
முழுமையாகப்
நாடகக் கலேயின் சமூக - அழகியல்
91фll:11851—8ьзіі
காததிகேசு சிவத்தம்
蠶 பெற்றுக் கொள்வது அவ சியாகின்றது நாடகம் :
வடிவத்தின் அழகியல்
சமுகத்தையும் விரிங்பூர்வம் 颚"山ü பொழுதுத்ான் அதனே'நன்கு பருதிற்கான் ஆற்றலும் சிெவும்'ாகும். அத்தியை ஒரு முயற்சிக்கின் ஒரு ஆரம்ப மாகவே இக்கட்டுரை எழுதப் படுகின்றது
முதலில், கல் பற்றிய விவம்
TE நிலப்பட்ட ஒரு விளக்கம்
அத்தியாவசியமாகின்றது. கல்ே என்பது ஏதுேரு ஒரு குறியீடு கொண்டு தெரிடர்பினே ஏற் படுத்துகின்றது. கரியின் தன்
மைக்கேற்ப இக் குறியீடு வேறு படும் இக்கியமெனில் துது சொல்லாகவும் இசையெனில் அது ஒவி (நாதம்) யாகவும் ஓவியமெனில் அது பிம்பமாகவும் அமையும் இந்தக் குறியீடுகள் சமூகப் பிரக்ஞயின் வடிங்பாக அர்மமென்பர் சுயிேன் ஒழுங்
மைக்கப்பட்ட முப் ளுையென்று கூறுவர். இந்தச் சமூகப்பிரக்கு எடுத்துக் கூறப் படும் முறுவிப்பில் அந்தக் சுங் வடிவத்திற்கு ஒரு சமூக ஆம்ஸ் ரற்படுகின்றது,
*。
மிகப் பரந்துபட்டி ஒரு சமூகப் பிரக்

Page 7
ஞையிஃா கல்வடிவம் முனேட் ாக வெளி ப் ப் டுத்துகின்ற பொழுது அக்கலவடிவம் முக்கி பத்துவத்தைப் பெறுகின்றது. நாடகம் இன்து முக்கிய கலே வடிவமாகப் போற்றப்படுகின்ற தெரி அக்கவே வடிவத்தின் ஆற்றதும் ஆற்றற் சாத்தியப் பாடுகளும் நன்கு உண்ரப்படு கின்றன என்பதே கருத்தாகும்.
க: பற்றி மேலே தரப் பட்டுள்ள பிராரம்ப அறிமுகம் கலேயின் அழகியல் அமிசங்களே யும், சமூகத் தாக்கத்தையும் தனித்தனியே நோக் காது, இரண்டையும் இதுேத்தே நோக் குகின்றது. கலேயின் அழகியல்
அமிசங்க்ள்ே அதன் தனித்துவ
பாள கவர்ச்சி முறைமைக்கும் சமூர்த் தாக்கத்துக்கும் காரனை மர்களிருக்கின்றது என்பதும், துக்கவே பின் சமூக நுகர்வும் (நுகர்விகுல்'ஏற்படும் தாக்க மும்) தன் அழகியல் அமைப் பின் பழியாகத் தோன்றுகின் றது என்பதும் தெரியவருகிறது. தேய்க்குத் தெரன்ர்ே ஆதாரம் தொன்ஃன்க்கு நெய் ஆதாரமே
இந்தப் பின்னணியில் நாட சக்திவேயின் முக ஆற்றலேயும், ஆகியற் பூரர்ேத்துவத்தையும் அறிய முன்பும் பொழுது ஆன் விர்ப்வின மூன்று நிலப்படுத்
R), Ir P T
臀。
நடக்கயின் ப
Küy :)
'நில் அமிசங்கள். அதா
து இக்கல் பில் ப் படும்
முந்பைகர்வமாகத்தேரன்
துெம் ஆந்தியல்வி சிவ நிசங்
விரும் 'அக்கு: எத்தகைய தொடர்பாற்றப்க் கொண்டுள்
புது என்பது பற்றிய தக்வல் தளும் இப்பிரிவில் முக்கியத்துவம்
புெ ாம்
நடித் என்னும் ஆலே
* அண்மப்பு
0.
இது பற்றிய ஆய்வு பல்வேறு I. T. J. வகைகளுக்குமிடையே ஓர் ஒருமைப்பாட்டின்ே நிறுவு வதாகவிருத்தல் வேண்டும் நாட கத்தை அவற்றின் உருவ அமைப் புக் கொண்டு பிரித்து நோக்கும் பண்பு காணப்படும் எமது இன் றைய அறிவு நிலையில் (கிராமி பக் பீடத்து - நவீன நாடக ம் வடமோடி- தென்மோடி எனப் பல) இவ்வாய்வு கவனத்துடன்
மேற்கொள்ளப்படுதல் அத்தி
பாவசியமாகும்.
(இ) நாடகத்தின் உயிர்த்துடிப் புடைய சமூகப் LITEL) புத் திறனுக்குக் Kif TIJIET E LOTT அமையும் அதன் வரலாறு
இம் மூன்றைப் பற்றியும் தனித்தனியே ஆராய்ந்து பின் னர் இணேத்து நோக்கும்பொழுது நாடகத்தின் சமூக - அழகியல் அடிப்படை தெளிவாகும்.
நாடகத்தின் பயில் நிலேயின் அச்சானியாக அமைந்து, அக் சுஃபின் தனித்துவமான அமி சங்களெனக் கொள்ளப்படத்தக் சுவை இரண்டாகும். முதலாவது நாடகம் பார்ப்போர் முன் ஆற் ற ப் பெறும் தன்மையாகும். நாடகம் என்னும் கலேவடிவம் பார்ப்போர் முன் ஆற்றப்பெறும் பொழுதே அதன் பூரணத்துவத் தைப் பெறுகின்றது. வானுெவி நாடகம் இப் பொது விதிக்குப் புறநடையாக அமைவதுபோலத் தோன்றினுலும், வானுெவி நாட LY Sa SYS KLLLLLLLLTT aLLuTuS S L T L S SLLLT னும் அரங்கிலே நிகழ்வது என் ஒனும் உண்மையை மனத்திருத்தி நோக்குவோமானுல் பாரிப்
போன் இல்லாது நாடகம் அதன்
கலேயமைதியைப் பெருது என் பது தெளிவாகின்றது. இரண் டாவது நாடகம் காலவரை யுள்ள ஒரு கஃவடிவமென்ப தாகும் ஒரு குறிப்பிட்ட கால

வரையறைக்குள் அது தா ன் எடுத்துக் கூறவேண்டியனவற் றைக் கூறிமுடித்தல் வேண்டும் என்ற ஒரு வரையறை இந்தக் கலேவடிவத்தின் இயல்பான அமி சமாகும். அந்த க் காலவரை பறை முழு இரவாகவோ, ஐந்து மணித்தியாலமாகவோ அல்லது இரண்டரை மணித்தியாலமா கவோ இருக்கலாம். அந்தக் கால அளவுக்குள் அது ஆற்றப் பெறல் வேண்டுமென்பதும் அதற் குள் அது பூரணத்துவத்துடன் ஆற்றப்பெறல் வேண்டுமென்ப
தும் அத்தியாவசியமாகின்றதுg
மேலே கூறிய இரு பண்பு களும் தனித்தும் இனேந்தும் நாடகத்தின் பல்வேறு இயல்பு து : நிர்ணயிக்கின்றமையை நாம் காணலாம்.
நாடகத்தின் மிக முக்கிய மான பார்ப்போர் - நடிப்போ! தொடர்பு இதன் வாயிலாகவே தோன்றுகின்றது Tir IT ருக்கு முன்னுல் (கட்புல நி3 யில்) நடிகன் ஆற்ருதவிடத்து TTT L S L L SYTLL SKM MSS TSSSY L SSS கம் கூட் டுக் கஃயென்னும் பொழுது அது ஒளி ஒளி வண் னம் சொல் போன்ற பல்வேறு க ஃ) த் துறை களே ஒன்ருக இனத்து நிற்கும் நியிேன்க் குறித்து நிற்பதிலும் பார்க்க அது தயாரிப்பாளன், தயாரிப் பாளரின் கலேப்பிம்பங்களே முன்னிறுத்தும் கலேஞர்கள் (நடி கர், ஒலி ஒளி, வண்ணமிழைப் போர் ஆதியோர்) பார்ப்போர் ஆகிய மூன்று நிவேயினரும் இனே பும் நிலையிலேயே இதன் கலேப் பூரணத்துவம் தெரிவதாலே இதனேக் கூட்டுக்கலே எனக் கொள்கின் ருே மென்பதைத் தெளிவு படுத்திக் கொள்ளுதல் அவசியமாகும்.
நாடகத்தின் நேர வரை விற காரETமாக எடுத்துப்
பேசும் விடயம் பற்றிய சகீல்
தகவல்களேயும் ஒரே வகையாக
வரம், ஒரே முறையாகவும் எடுத் துக் காட்டலாம், அவற்றை ஏதோ ஒரு வகையில் தொகுத்
துக் கூறும் பண்பு நாடகத்தின்
芭(,),、 颚凸匣 மாகும். இவ்விடத்தில் தொல் காப்பியர் கூறும் நாடக வழக் குக்கு இளம்பூரண்ர் தரும் விளக்கம் மிக முக்கியமானதா கும் நாடக வழக்காவது சுவைபட வந்தனவெல்லாம் ஓரி பத்து வந்தனவாகக் கூறல்" என் ரூர் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுதியை இனத்துக் காட் டும் முறையிலேயே நாடகத்தின்
உயிர்ப்பாற்றல் தங்கியுள்ளது. வாழ்க்கைபற்றிய அல்லது வாழ்க்கையிலே தோன்று ம்
சுவையான சம்பவங்:ள ஒருங் கினேக்கும் பொழுது வாழ்க்கை பற்றிய உண்மை முன்ேப்புடன் வெளிக்கிளம்பும்
நாட்க்ப் பயில் நியிேன்
அடுத்த முக்கிய அமிசாக அமைவது "அரங்கு" அல்லது மேடை" யாகும் அரங்கு அல்
வது மேடை என்பது இங்கு
நாடக நிகழ்ச்சி ட்புலன்க முகிழ்த்தெழும் டத்தையே குறிக்கின்றது. இது LITF
லும் பார்க்க உயர்ந்த மேடை பாகவோ அல்லது பார்ப்போ ருக்குச் சமதளமான ஒன்ருகவோ அன்றேல் பார்ப்போரிருக்கு மிடத்திலும் தாழ்ந்த இடமா சுவோ இருக்கலாம் இந்த ஆரங் கம் வெறுமன்ே கல் மக்ாணுர்ே
அல்லது மரம் தடிகளாலோ ஆன ஒரு இடமல்ல, இது வாழ்க்கையைக் காட்டுகின்ற, வாழ்க்கையின் ri Sör GILD F*T +
காட்டுகின்ற நிகழ்ச்சிக்ளேக் காட் டுகின்ற கனே மயம், அதிலே காட்டப்பட்டப் போவது பற்றிய பார்ப்போர் எதிர்பார்ப்பு காட் டப்பட்டின் ஏற்படுத்தி திருப்

Page 8
தியுணர்வு அன்றேல் புதிய உந்து தல்கள் ஆதியன நாடகத்தின் மேடையை அல்லது அரங்கை, உளவியல் ரீதியில் மிக முக்கிய மான ஒரு களமாக ஆக்கி விடு
கின்றது. நடிகனின் வேடம், நடிப்பு, மொழி ஆதியன இந்த வட்டத்துள்ளேயே அவற்றுக் குரிய உயிர்ப்பைப் பெறுகின்
றன. அரங்க நிர்மாணம், இசை போன்றவை அரங்கத்தினை ஏற் கனவே எமக்குப் பழக்கமான குறியீடுகள் கொண்டு விளக்கு வனவாகவே அமைந்துள்ளன. நாடகக் கலையின் உயிர் மையம் அதன் ஆடுகளம்தான். அதா வது அரங்கம்தான். அ ந் த அரங்கை மையமாகக் கொண்டே பார்ப்போன், நடிகன், தயாரிப் பாளன் ஆகிய மூவரும் ஒருவன் திருப்தியில் மற்றவர் யுறும் நிலைமை ஏற்படுகின்றது . நாடகத்தின் பயில் நிலை அமி சங்களுள் முக்கியமானவையாக எடுத்துக் கூறப்பட்ட இவ்வமி சங்கள் நாடகத்தின் உ ரு வ அ  ைம தி பற்றிய ஆய்வுக்கு எம்மை இட்டுச் செல்கின்றன.
நாடகம் என்னும் தமிழ்ச் சொல்லின் வடமொழி மூலமா கிய நாட்டிய" என்னும் சொல் "பிரதிசெய்வது" அல்லது 'இன் னென்று) போலச் செ:து" எனும் கருத்தையுடையதென் பர். "டிருமா? என்ம்ை கிரேக்
கச் சொல், "நீ காரியம்" என்ற கருத்தையுடைய "டிருெ? மெனென்’ எனும் 1ெ7ல்லின் வழியாகவே வந்தது. 'கழ்ந்த
காரியத்தை மீட்டும் நிகழ்த்தல், அல்லது முன்னிகழ்ந்ா து டே"லச் சொல்வதுதான் "டக நின் சொல்லொடு பொருட் கருத் தெனில், அச்சொல்லே நாடகக்
கலையின் உருவ அமைதிட நிய சிறப்புப் பல களையும் சூசக மா க வெஸ்க்கொணருகின்ற
ag siar sort th {
திருப்தி
நாடகத்தில் செ ய ல் க ள் அன்றேல் செயல் நிகழ்வுகள் பி ர தி பண் ன ப் படுகின்றன. இவை மனிதச் செயல்கள் சொல் நிகழ்வுகளாகும். அல்லது மனித
நிலைப்படுத்தப்பட்ட சொ ல் நிகழ்வுகளாகும். ந்ெத மனிதச் செயல்களும், செல் நிகழ்வு
களும் தம்முள் தாம் முடிந்த முடிபுடையனவல்ல, இவை ஏற் கனவே நிகழ்ந்த மனிதச் சொல் கள் செயல் நிகழ்வுகளின் கார ணமாக அமையும் அதே வேளை யில் இனிவரும் சொல் நிகழ்வு களுக்கு வழிவகுப்பனவாகவும் அமைகின்றன அதாவது நாட கத்தில் மனிதச் செயல்களும் சொல் நிகழ்வுகளும் சமூக ச் சூழலில் நிகழ்த்தப்பெறுகின்றன. இதன் காரணமாகவே நாடகத் தினை களம், காட்சி ஆக க் காணும் ஒரு நோக்குமுறை யுண்டு. இவற்றுள் களம் எனும் பிரிவு இலக்கியவழிப் பட்ட தாகும். இது பின்னரே புகுத் தப்பட்டது. ஆனல் நாடகத்தை *காட்சி அவிழ்ப்பாக க் காணும் முறைமை உலக நாடக வரலாற் றிற் காணப்படும் ஒரு பொது உண்மையாகும்.
நாடக அரங்கு அ ல் ல து
மேடை, நாடகத்தில் வரும் மனிதச் செயல்கள், செயல்
நிகழ்வுகளுக்கான பிரத்தியட்ச சூழலை ஏற்படுத்தித் தருகின்றது. புராதன அரங்குகளில் கட்புலச் சாதனங்கள் கொண்டு செயல் நிகழ்வின் சூழலைச் சித்திரிக்கும் முறைமை குறைந்தே காலப் பட்டது.
செயல் நிகழ்வினைப் பிரதி செய்வதற்கு "பாவம்' அத்தியா
வசியமாகின்றது. அ பி ந ப ம் மூலம் 'பாவம்" தோற்றுவிக்கப் பெறுகின்றது. நாடகத்திற்கு
வேண்டிய அபிநயங்களைப் பரதர் பின்வருமாறு தொகுப்பர்:- ஆங்
嘉露、

கிகம், வாசிகம். சாத்விகம், ஆஹாரியம். ஆங்கிகம் அங்க அசைவுகள் பற்றியது; வாசிகம் மொழி/ செயல் பற்றியது; சாத் விகம் உணர்ச்சி வெளிப்பாடு பற்றியது; ஆஹாரியம் ஒப்பனை உடை பற்றியது. A.
"நாடக இலக்கியம் எ ன நாம் கூறும் நாடக எழுத்து மேற் கூறிய செயல், செயல் நிகழ்வி னேப் பிரதி செய்வதற்கான ஒரு அமிசம்மாத்திரமே நாடகத்தை இலக்கியமாகப் போற்றும் மரபு தமிழரிடையே காணப்படாதிருந் தமையால் நாடகத்தின் இலக்கி யத்துக்கான ஒரு தனிப்பிரயோ கம் (ஆங்கிலத்தில் பிளே என் பது போன்று) தமிழில் இல்லை. இத்தேவை தமிழி. முன்னைக் காலத்திலும் விட இப்பொழுது உணரப்படுகின்றது. ஏனெனில் நாடக எழுத்துக்கள் பல இன்று தோன்றியுள்ளன. நாடக எழுத் துப் பற்றி அதன் அமைப்பு, ஒட் டம் பற்றி முதன்மையாக எடுத் துக் கூறப்பட வேண்டுவது அது "நடிக்கப்படுவதற்கான ஆக் க எழுத்து" என்பதே.
மனிதச் செ ய ல் களை யும் செயல் நிகழ்வுகளையும் எடுத்துக்
காட்டுவதே நாடகமெனில், அந்
தச் செயலோ, செயல் நிகழ்வோ வெறும் பிண்டப் பிரமாணமான செயலாக இருக்க வேண்டுமென் பதில்லை. வெறும் உடலியக: யே செயல் அல்ல. சில வேளை டி.ஜில் வெறும் பேச்சே செயலாகலாம்
பின்னும் சில வேளை க சி ல் n rளனம் கூட ஒரு செயல் : கது செயல் நிகழ்வாகலாம். 11 பல் பற்றி இத்தகைய ஒரு
பிலான கருத்தை ஏற்றுக் கொண்டோமானுல் இ ன் று துடிமையானதாகக் கொண்டா
ப் பெறும் சொல் நிகழ்வதிக iற ‘அனர்த்த நாடகங்கள்
. இப் பொது விதிக்கு உட்
பட்டு நிற்பதைக் காணலாம்
மனித ச் செயல்களையும் செயல் நிகழ்வுகளையும் நாடகம் சித்திரிக்கின்றது எனும் பொழுது அதன் ஆக்கவியற் பண்பு ஒன்று முனைப்புப் பெறுகின்றதை அவ தானிக்கலாம். மளிதச் செயல் களை, செயல் நிகழ்வுகளைச் சித் திரிக்கப் புகும் நாடக: உண் மையில் சமூகச் செயல்களை, செயல் நிகழ்வுகளை அவற்றின் தாக்கம்- மறுதாக்கம் ஆதியன வற்றையே " சித்திரிக்கின்றது. அதாவது ஒருமுக நோக்காக
மாத்திரம் அமையாது, ஒன்றை
மற்றென்றின் விளைவாக அன் றே ல் காரணமாகக் கண்டு கொள்ளும் சமநோக்கு - சமூக நோக்கு - நாடக ஆக்கத்திற்கு அத்தியாவசியமாகின்றது. அது தகைய பன்முகப் fTrio)6) is கணிப்பு கை ட்யவர்களாலேயே சிறந்த நாடகத்தை எழுத முடி யும். அத்துடன் மேற்கூறிய சமூக நோக்கும் பன்மு க! பார்வையும் மேலோங்கி நிற் கும் காலகட்டங்களிலேயே p5frtகம் அதிகம் வளர்ந்துள்ளமை யையும் காண்கின்ருேம்,
மனிதச் செயல்கள், செயல் நிகழ்வுகளைச் சித்திரிப்பதுதான் நாடகத்தின் அச்சாணியான பன்னிெல் அப்பண்பு விெ நிறைவேற்றப் படுகின் து? மனிதச் செயல்கள் செயல் கழ்வுகள், சமூக, மனித முரண் 1ாடுகளினை விவரிப்பனவாகவும ளேக்குவனவாகவும் அமையும. தனுல் நாடகத்தில் முரணுறு நிலை மிக முக்கியமாகும். இந்த முரணுறு நில ஒன்றுக்கொன்று திரான பாத்திரங்களிடையே காணலாம் அல்லது ஒரு பாத ரத்துக்குள்ளேயே, அதன் அ* முரண்பாடுகளில் காணலாம்.
முரணுறுகின்ற மனித ச் செயல்களை,செயல் நிகழ்வுகளைக் காட்டுவதற்கு, அத்தகைய முர ணுறு நிலை தோன்றுவதற்கு
霹

Page 9
முன்னும் பின்னுமுள்ள சமூக ஒத்தியையை அல்லது ஒத்தியை பின்மையை காட்ட வேண்டிய தவசியமாகின்றது. என வே தான் நாடகம் மனிதச் செயல் களின் முரணுறு நிலைகளையும்
அ வ ற் றின் தோற்றத்தையும் '
முடிபையும் காட் டு கி ன் ற பொழுது சமூகக் களத்தினைத் தளமாகக் கொள்ளவேண்டியுள் ளது. ம வரி த ச் செயல்கள், செயல் நிகழ்வுகளின் ப யன் காட்டை சமூகக்களமும் தளமும் கொண்டே உரைத்துப் பார்க்க வேண்டும். நாடகக் கலை வடிவம் பற்றி அரிஸ்டோட்டில் கூறிஞர்:
கதைப்பின்னல், சொல்நயம், சிந்தனை, கவர்ச்சி, பாடல்
கிறிஸ்துவுக்கு முன் 384 முதல் 333 வரை வாழ்ந்த அரிஸ் டோட்டில் இவ ற்றை உயர் நா ட க த்தி ன் அமிசங்களென எடுத்துக் கூறினுர்,
இவ்வாருன கட்ட  ைம வு கொண்டு தோற்றுவிக்கப்பெறும் நாடகம் உண்மையில் ஒரு மாயத் தோற்றமாக அமைகின்றது. ஆஞல் அரிஸ்டோட்டில் கூறியது போன்று. இம் மாயத் தோற் றம், உண்மையான உலகு பற் றிய தெளிவான அறிவை ஏற் படுத்துகின்றது. சமூகத் தாக் கங்களுக்கும் எதிர்த் தாக்கங்க ளுக்கும் ஆக்கரீதியான களம மைக்கும் நாடகாசிரியன் உலகை நன்கு விளங்கிக் கொள்கின்றன்; சுலபமாக மற்றவர்க்கு விளக்கி யும் கொள்கின்ருன்.
நாடகத்தின் மேற்கூறிய கலையமிசங்கள் அது வீருப்பான ஒரு கலை வடிவமாக விளங்கு வதற்கான காரணிகளை எடுத் துக் கூறுகின்றன.
ஆனல் நாடகத்தின் சமூக நிலைப்பட்ட பலத்துக்கான அதன் சனரஞ்சகத்துக்கான காரணம் அதன் வரலாற்றிலேயே தங்கி யுள்ளது. நாடகத்தின் அச்சானி
பண்புகள்
காட்சிக்
யான அமிசம் அதன் சமூகக்
செல்ல,
0)
கூட்டுப பொதுமை நிலையாகும் இச் சமூக க் கூட்டுப் பொது மையை நாடகம் எங்கிருந்து பெற்றுக் கொள்கின்றது? நாட கம் சமயச் சடங்குகளினடியா கத் தோன்றியமையே நாடகத் தின் இப்பண்பினை அதன் மிக முக்கிய பலமாக ஆக்கியுள்ளது.
நாடகம் சமயச் சடங்கினடி யாகத் தோன்றி, அச்சமயச் சடங்கு அதன் மத நம்பிக்கை அடிப்படை இழுத்து செல்லச் நாடகமும் படிப்படி யாக சமயச் சார்பற்ற, உலக விடயங்கள் பற்றிய கலைவடிவ மாக மாறுகின்றது என்பது வரலாற்றின் முடிந்த முடிபுக ளில் ஒன்று.
ச ம ய ச் சடங்கினடியாக நாடகம் தோன்றியமை காரண மாக நாடகம் பற்றிய பல முக் கிய தரவுகள் எழுகின்றன.
(அ) நாடகத்திற்கு முழுச் சமு தாயமும் வருகின்றது: பங்கு கொள்கின்றது அல்லது கலந்து கொள்கின்றது.
நிகழ்த்திக் காட்டப்படும் செயல்கள் பற்றிய மனப் பதிவு. அ' வில் குறிப்பிடப்பட்' ر@) டுள்ள பங்குகொளல் அநு பவம் காரணமாகவும், "ஆ" வில் குறிப்பிடப்பட்டுள்ள மனப் பதிவு காரணமாகவும் நாடகம் குறிப்பிட்ட பண்பாட்டின் அடி வேர்களிலொன்ருக அமைகின்
İ0ğil (ஈ) இதனுல் அச் சமூகத்தின்
கூட்டுப் பொதுமையை நாடகம் பிரதிநிதித்துவப் படுத் துகின்றது
எமது சமுதாயத்தில் நாட கம் ஒரே சமயத்தில் சம ய ச் சடங்காகவும், சமயச் சார்பற்ற கலைவடிவமாகவும் மிளிர்கின்றத ஞல் இப்பண்பினை நன்கு அவ தானிக்கக் கூடியதாகவிருக்கிள் Dale op
vY

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட l
MANadatioma SamayO Sony போன்ற தரமான றேடியோ கஸற் றேடியோ ரேப்ரெக்கோட்டர்
ஜப்பான் சுவிஸ் நாட்டு MONDIA GARUDA OMAX SEIKO CITIZEN
கைக் கடிகாரங்களுக்கும்
சுவர் மணிக்கூடுகள்
RON BOX CASSE "TE TARPE TAN
போன்ற வாழ்க்கைக்குத் தேவையான
பொருட்களும்
ஒரு வருட உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள
தொடர்பு கொள்ள
யாழ்ப்பாணத்தில் தலைசிறந்த ஸ்தாபனம்
| *K, MALAYAN RADIO SERVICE »k
48, Kasthuriar Road, JAFFNA.

Page 10
éM vagy a Telephone: 26482 Telegrams: "ARASPRINT
(0th the Соифliиеиts of
Aransamm morinters
30, HYDE PARK CoRNER, COLOMEBO -- 2.
a 2 ulA Llanda MA FRIHRAR s ~ w
 

சென்ற இதழ் தொடர்
இலங்ை கப் பிரச்சனபற்றி சில கருத்துக்கள்
rnM vn Y-Yr MM rY- \rr \\1-1-1-
நா. வானமாமலை
LAAAAAAA ASA AAAqq AALLAL LMAqLALAS LAqLAL LALASLSLLAALLLLLALS TALL LAqqLLLAS
உ ங் களு  ைட ய விவாத மேடையில் ஒரு பிரச்சினை முதன் மையான முக்கியத்துவம் அளிக் கப்ப்ட்டுள்ளது. அது இலக்கி யத்தில் கலாநிதிகளின் ஆதிக்கம் பற்றியது. கல நிதிகள் முற் போக்கு இலக்கிய இயக்கத்தில் பங்கு பற்றியுள்ளார்கள். இப் பொழுது கலாநிதிகளல்லாத வரும் பங்குபற்றுகிருரர்கள். ஆரம்ப காலத்தின் தாக்கம் இலக்கியத்தில் இரு க் க லா ம். ஆணுல் படைப்பாளிகள் மிகப் பலர் சாதாரணப் படிப்பும், வாழ்க்கைப் பல்கலைக் கழகத்தில் கற்ற அனுபவமும், கலை வெளி பீட்டு உந்துதலும் உடையவர் கள். இவர்கள் மீது கலாநிதி கள் ஆதிக்கம் செலுத்த முடி யுமா என்பது எனக்கு ஐயமா கவேயுள்ளது. கலாநிதிகள், தற் கால முற்போக்கு இலக்கியத் தின் விமர்சகர்களாகத் தங்கள் பணியைச் செய்யட்டும். அதை அவர்கள் மிகத் திறமையாகவே செய்திருக்கிருரர்கள் என்பது எனது கருத்து. மற்றவர்களும் செய்கிருர்கள் கடைசியில் இலக்
கியப் போக்கை நிர்ணயிப்பது
I7
வாழ்க்கையை,
படைப்பாளிகளே. படைப்பாளி களின் ஜனநாயகம்தான் வெல் லும். எங்களுக்குக் கலாநிதிக ளின் அலட்சியமும், எதிர்ப்பும் உள்ளது. உங்களுக்குக் கலா நிதிகளின் ஆதிக்கம் இருப்பதாக உணருகிறீர்கள். இந்த முரண் பாட்டை நேசப்பான்மையோ டேயே தீர்த்துக் கொள்ள முடி யும் என்று கருதுகிறேன். விவாத மேடையில் கூட கலாநிதிகள் சார்பில், முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் வகையில் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முறையில் யாராவது ஒரு கலா
நிதியை எழுதச் சொல்லுங்க ளேன். எ ன் ப் பொறுத்த வரை, விமர்சனக் கொள்கை
களை, பழமையில் இரு ந் தும் தத்துவங்களில் இருந்தும், முக் கியமாக தற்கால இலக்கியப் படைப்புக்களில் இருந்தும் உரு வாக்கித் தருகிற தத்துவப் பணி புரியும் கலாநிதியை விட, நிஜ கலை ப் படிம வாழ்க்கையாக ம |ா ற் று கிற படைப்பாளி மாற்றுக்குறைந்த வனல்ல. அவனே இலக்கியப் போக்கைத் தீர்மானிப் பவன். முற்போக்கு அணிக்குள் படைப் பாளி. விமர்சகன், ஆய்வாளன் என்ற மூன்றுபகுதி இலக்கியப் பணியாளர்களிடையே பொது நோக்கும், ம க் க ள் இலக்கிய முன்னேற்றத்தில் அக்கறையும் வளர்க்கப்பட வேண்டும். இலக் கிய மேடை விவாதங்கள் முற் போக்கு இலக்கிய ஊழியர்களில் எல்லாப் பகுதியினரிடையேயும்,
முற்போக்கு இலக்கிய ஊழியர்
களையும் மிகப் பொதுவான உல கக் கண்ணுேட்டம், இலக்கியக் குறிக்கோள்களின் அடிப்படை யில் ஒன்றுபடுத்துகிற விளைவை ஏற்படுத்தும் என்று நம்புகின் றேன்.
தமிழ் நாட்டின், பண்டைய இலக்கியப் படைப்புக்களான, சங்கப் பாடல்கள், காப்பியங்

Page 11
க்ள், பக் தி இலக்கியங்கள், இரண்டாவது காப்பிய கால நூல்கள், பிரபந்தங்கள், தற் கால இலக்கியங்கள் இவற்ருள் இலங்கைத் தமிழ் இலக்கியம் தாக்கம் பெற்றுள்ளது. ஆயி னும் இலங்கை வாழ் தமிழரின் சமூக வாழ்க்கை மாற்றங்களுக் கேற் ப இலக்கியம் தோன்றி
வளர்ச்சி பெற்றுள்ளது. அத னைத் த மி ழ க இலக்கியங்கள் பாதித்துள்ளன. ஆணுல் இலங்
கையின் இலக்கிய இயக்கங்கள் தமிழகத்தை ஏன் பாதிக்கவில்லை? இலங்கையின் சுயமான இலக்கிய இயககங்கள் எவை? இ த னை இ ல ங்  ைக இலக்கியவாதிகள் ஆராய வேண்டும்.
e
இலங்கைக் கலை வளர்ச்சி பற்றி ஆனந்தகுமாரசாமி எழுதி μΗ 6η ΘτΠ fi . ந்தியக் கலையின் தாக்கம் பற்றி அவரும், அவ ரைப் பின்பற்றி திருநெல்வேலி சிவசாமியும் கருத்துத் தெரிவித் துள்ளார்கள். அடிப்படையில் இலங்ர்ைக்கென்றே தோன்றிய கலைப்பாணிகள், வட இந்திய பெளத் த ப் பாணிகளாலும், நாகர் எனக் கொண்ட பாணி யாலும், இந்து சிற்பக்கலை தமி ழக. ஆந்திர பாதிப்புகளாலும் மாற்றப்பட்டது என்று கூறு கி.ா?ர்கள். எனவே இலங்கை
யின் கலைவளர்ச்சி முற்றிலும்
அயல் ந7 ட்டின் மரபுமல்ல. அது
இலங்கையில் வேர் விட்டு நிற் கும் கலையே. இது பல நாட் டைச் சேர்ந்த பல நாட்டுக்
கலையம் சங்களால் மா ற் ற ம் அடைந்திருக்கிறது. மாற்றமடை யாத கலை என்ருல் ப  ைழ ய "கற் காலக் கருவிச் செதுக்கு" தான். புதிய" கற்கால மைக் ரோலித்துகள் கூட ஒரு மாற் றம்தான். பலவிடங்களில் இது அந்நியர் நுழைவிலுைம், அவர் களது வள ர் ச் சி ய  ைட ந் த
தொழில் திறஞலும் மாற்ற
மடைந்தன. இது போன்ற கை வளர்ச்சிக்கும், கலைத் தேய்வு கும் அந்நியரோடு ஒரு நா( வரலாற்றில் கொண்ட உறவுகள் காரணமாகலாம்.
இது போன்றே இலக்கிய மும், உள்ளடக்கத்தில் பொது வான இலக்கியம், தேசிய வேறு பாடுகளால் வெவ்வேறு உருவா கள் கொள்ளும், சமுதாய இய: கங்கள் வலுக் கொண்டு எழுட பொழுது, அவ்வியக்கங்கள் எந்த நாட்டில் வெற்றி பெற் னவோ, அங் கு தோன்றி. இலக்கியப் படைப்புகளின் த கம் இங்கு ஏற்படும். இதன6 உள்நாட்டு கலப் படைப்பின் தனித்தன்மை செத்துப்போய் விடாது.
இன்று இலங்கையின் தமிழ் இலக்கியத்தில் ஒரு ஜனநாய மறுமலர்ச்சி காணப்படுகிறது மனித நேசப் போக்கு, முதல ளி துவ ஆணவப் போக்ை எதி க்கும் போக்கு, All as it போரை எதிர்த்து மக்களை திரட்டும் போக்கு சமுதா முன்னேற்றத்துக்கான போரா டம், உலக மக்களிடையே நட புறவுக்கான இயக்கம், இவ றில் ஆர்வம் கொண்ட மக்க பகுதியினரிடையே இரு த்
"டைப்பாளிகள் தோன்றுகின் னர். அவர்களது கொள்ை வளர்ச்சியும், ஒற்றுமை உண வுமே ச (ம தா ய மாற்றத்தி கான கலைப் ப  ைட ப் பு க தோன்றுவதற்கான விளைநில மக்களிடையே மேற்குறிப்பிட் குறிக்கோள்களுக்காக ப ர ந் ஒற்றுமையைக் காட்டுவதே மு போக்குக் கலைஞனின் கடமை.
"தமிழ் நாட்டுச் சஞ்சி களின் கட்டுப்பாடற்ற வர இலங்கை முற்போக்குச் சஞ்
கைகளின் கழுத்தை நெரிக்கி
8

றது" என்ற கருத்தை நீங்களும், G3 a gy கட்டுரையாளர்களும் வெளியிட் டுள்ளிர்கள். இப் பொழுது இந்தியாவில் முதலா
க ளு க்கு க் கட்டுப்பாடற்ற சுரண்டல் சுதந்திரம் வந்திருக் கிறது ஆசிய, ஆபிரிக்க நாடு களில் சில நூற்றுக்கணக்கான தொழில்களில் இந்தியப் பெரு மு த லா ஸ்ரீ க ள் மூலதனத்தை இயந்திர ரூபமாகப் போட்டிருக் கிருர்கள். ஏகாதிபத்திய உபக் கிரகமாக இந்திய முதலாளித் துவம் செயல்படத் துவங்கியுள் ளது. இந்தியா மு ற் றி லு ம் தொ ழி ல் வளர்ச்சி பெற்று இந்திய மக்கள் எல்லா வகை யிலும் தன்னிறைவுபெற்றுள்ளது போல, இந்திய முதலாளிகள் அ ய ல் நாடுகளுக்கு "உ வி செய்யக் கிளம்பியுள்ளார்சள். இது போலவே தான் த ங் கள் கலைக்குப்டைகளை புதிய புதிய பெயர்களில் உங்கள் நாட்டில் திணிக்கிருர்கள். இதற்கு அவர் கள் வைத்துள்ள பெயர் கலாச் சாரப் பரிவர்த்தனை. எங்க ள் நாட்டிலும் இவர்களது மயக்கும் கலைகள் ஆண்மையையும் வீரத் தையும் கொல்லும், நச்சுக் கலை கள், பெண் களை அடிமை மோகத்திலும், பழமையின் பிற போக்கில் ஆழ்த்தும் இருட்டுக் கலைப்படைப்புகள், சினிமாக்கள் எல்லாவற்றையும் எ தி ர் த் து நிற்கக்கூடிய சில சக்திகள் இங்கு உள்ளன. இதனை அரசியல் ரீதி யில் தீர்க்க முடியாது. இதனை மக்களது ரசனையை மாற்றுவ தன் மூலமே, இந்த வளர்ச்சி
யைத் தடுக்க முடியும், இதற்கு
முற்போக்கு இலக்கிய சக்திக ளின் ஒற்றுமை அவசியம். இவை இப்போது அரசியல் கட்சிகளி இ. செல்வாக்கில் பிளவுபட்டு நிற்
கின்றன. ரசனையை மாற்றச் சில முயற்சிகள் இங்கு துவங்கி யுள்ளன. உற்சாகமும், மனித தேசமும் முற்போக்கு இலக்கி
பரந்த இயக்கம்
யக் கொள்கையும் உடைய இக்ள ஞர்கள் பல நகரங்களில் 1000 சந்தாக்கள் அல்லது அன்பளிப் புகள் பெற்று சில பத்திரிகை களைத் துவங்கியுள்ளார்கள். இது ஒரு மாபெரும் இலக்கிய இயக் கமாக மாறுகிற நிலையில் உள் ளது. இத்தகைய பத்திரிகைகள் யாவும் முற்போக்குப் பார்வை கொண்டவை. இவையே தமிழ கத்தில் வருங்காலத் தமிழ் இலக்கியத்தின் நம்பிக்கையா கும். இந்திய முதலாளிகளின் புதிய கலோனியக் கொள்கையை முறியடிக்க அவர்களது மூலத னச் சுரண்டல் நுழையும் நாடு களில் தற்காப்பு இயக்கமும் அந்நியச் சுரண்டல் எதிர்ப்பு இயக் க மும் வளர்ச்சிபெற வேண்டும். இதன் ஒரு பகுதியாக அவர்களது கலைக்குப்பை எதிர்ப் பும் தோன்ற வேண்டும். இவ் வெதிர்ப்பு இந்தியாவில் போல புதிய பத்திரிகைகளின் தோற் றத்தால் ஏற்படலாம். அரசியல் ரீதியிலும் தேசியக் கலப் பாது காப்பு இயக்கமாக தீ தோன்ற லாம். உடனடித் தீர்வு எதனை யும் முற்போக்குவாதி எ தி ர் பார்க்க முடியாது. ஏகாதிபத் திய எதிர்ப்புப் போராட்டத் தின் ஒரு முனையாகவே கலைக் குப்பை எதிர்ப்புப் போராட்டம் நடைபெற வேண்டும். ஐ Iங்கள் அரசை, தமிழ்நாட்டுக் குப்பை களுக்குத் தடை விதிக்கும் படி
நடத்துங்கள். இதில் தமிழகத்தில் உள்ள முற் போக்கு இலக்கிய இயக்கமும் அதன் நிறுவனமான கலை இலக் கியப் பெருமன்றமும் கலை க் குப்பை உற்பத்தியை எதிர்த்துப் போராடும். எ ங் க ள் நாட்டி லேயே லட்சக்கணக்கான வா/7 கர்களையுடையதும், பணபலம் வாய்ந்ததும், மக்களின் உன்னத மான இயல்புகளைச் சீரழிப்பது ம +ன பத்திரிகைகளுக்கு இந்தத் த லை மு  ைற எழுத்தாளர்கள்,

Page 12
வாசகர்களின் கொள்கை பூர்வ மான எதிர்ப்பு உருவாகி வரு கிறது. அதைத்தான் புதிதாகத் தோன்றியுள்ள, சிறிய வாணிப ரீதியற்ற பத்திரிகைகளும், கலை இலக்கியப் பெருமன்றத்தின் பிரசார இயக்கமும் முற்போக்கு எழுத்தா ள ர் நிறுவனத்தின் எதிர்ப்பும் காட்டுகிறது.
தமிழ்நாட்டு முற்போக்கு, ஜனநாயக இலக்கிய வளர்ச்சி யில் ஆர்வம் கொண்ட படிப் பாளிகளும். இலங்கையில் இப் போக்குகளை உறுதியாக ஆதரிக் கும் இலக்கியவாதிகளும் கை கோர்த்துப் போராடினல், மணி
தனது மேன்மையைச் சீரழிக் கும் இலக்கியக் குப்பைகளைக்
கூட்டிக் குவித்து சொக்கப்பனை கொளுத்திவிட முடியும் ,
எனவே இந்த நெடு நோக் கோடு ந ம து போராட்டத் தந்திரங்களை வகுத்துக் கொண்டு நம்மிரு தாட்டு மக்களும் போரா டத் து 3 6υ πιο π. Φ. (3) . போராட்டத்தில் எங்கள் நாட்டு முற்போக்குப் பத்திரிகைகளும், உங்களது முற்போக்குப் பத்திரி கைகளும் இருமுனை இலக்கியத் தலைமைகளாக விளங்கட்டும் , இம் மாபெரும் போரில் இலக்
கியச் சீரழிவு தோற்று, முற் போக் கு க் க லக்கியம் வெல்லும், வருங்காலம் நம்
முடையதே. இதில் ஐயம் இல்லை. இ லக் கி யக் குப்பைகள் வலு வாய்ந்தது போல் தோன்றினு லும், அவை உண்மையில் முத லாளித்துவத்தால் சீரழி க் கப் பட்ட மனித உணர்வுகளையே உள்ளடக்கமாக உ  ைட யது.
அதற்கு யானைக்கால் வியாதி உள்ளே வலுவாய்ந்த எலும்பு இல்லை. நம் இ லக் கி ய மோ சுரண்டலையும், ஆதிக்கத்தையும்
எதிர்த்துப் போராடும் மக்களது எழுச்சியையும் அதனுல் வெளிப் படும் மனிதனது உன்னதமான
ag
உள்ளடக்கமா மனிதனது
இயல்புகளையும், கக் கொண்டவை. விடுதலையுணர்வு பெறும்போது, அவனது Gipair மையான உணர்வுகள் வளர்ந்து அவ னது ரசனையும் வளர்ச்சி அடையும்
இந்த எ தி ர் காலத்தைக் குறிக்கோளாகக் கொண்டு நாம் எழுச்சியுறுவோமாக. உலகம் முழுவதும் நடைபெறும் முற் போ க் குக் கலை - இலக்கிய இயக்கத்தின் தேசியப் பிரிவுக ளான நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. "மனிதன்! எத் தகைய ம க த் தா ன சொல்" என்று மார்க்ஸிம் கார்க்கி போற் றிஞர். சுரண் டலையும், சீரழிவு களையும் எதிர்த்து ப் போராடு கிற மனிதர்களது பிரதிநிதிகள் நாம். நிச்சயமாக வெற்றி நம் முடையதுதான்.
(முற்றும்)
Merre AMAMIN AMTMFs Mr MMI- MM MMM MMR
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 12 - 00
(மலர் உட்பட) தனிப்பிரதி 7 - مسعمسع இந்தியா, tro63606;tuait 20 -090 حسن
(தபாற் செலவு உட்பட
 

vso كالحرم s فyك
ஈழத் துத் தமிழரிடையே
இரு வேறு வகையான் ஆடல்
முறைகள் இருந்து வருகின்றன.
ஒன்று பரத நாட்டிய வகையில் அமைந்த ஆடல் முறை. இன் குென்று நாட்டுக் கூத்து நெறி சிார்ந்த ஆட்ட முறை.
சமுதாயத்திலே வர்க்கப் பாகுபாடு தோன்றியதையடுத்து உயர் தோரைச் சார்ந்த கலை கள், உழைப்போரைச் சார்ந்த கலைகள் என இருவேறு கலைகள் உருவாகின. இவ்வகையில் பர தம் உயர்ந்தோருக்குரிய கலை யானது. கூத்து உழைப்போருக் குரிய கலையாயிற்று. இவை இரண்டும் தத்தம் அளவில் வர லாற்றுப் போக்கிற்கு ஏற்ப வளர்ச்சி பெற்று வந்துள்ளன.
கி. பி. இரண்டாம் நூற்
ருண்டுக் கால ந் தொடக்கம்
இற்றைவரை தமிழகத்தின் பரத நாட்டிய வளர்ச் சி பற்றிய சான்றுகளுண்டு. சமூக அந்தஸ் தில் உயர்ந்தோர் குழாத்திந் குரிய இப் பரதக்கலை ஆரம்பத் தில் அரசர் முன்னிலையில் ஆடப் பட்டது. ஏறத்தாள இதே கால கட்டங்களில் அரசரோ டொப்ப வணிக சமூக அந்தஸ் துப் பெற்றபோது அவர்கள் 'முன்னிலேயிலும் அரசு சார்ந்த
கொண்டு கூறுவர்
பாமரர் கூத்தும்
சி. மெளனகுரு
உயர் குழாம் முன்னிலையிலும் ஆடப்பட்டது. அரசர்க்கு முன் னர் ஆடிய நடனத்தை வேத் தியல் எனவும், வணிகர் முத லிய உயர் குழாம் "முன்னிலையில் ஆடிய நடனத்தை பொதுவியல் எனவும் சிலப்பதிகாரச் சான்று ஆராய்ச்சி யாளர். மத்திய காலங்களில் பல்லவ, சோழ, ந | ய க் கர் ஆட்சிக் காலப் பகுதிகளில் ஆட் சியின் மையமாகவும் சின்னமா கவும் கோயில் மாறிய போது இக்கலை கோயில்களில் ւ-ւն பட்டது அதன் பின்னர் கோயி லில் நடனம் ஆடியோர் தேவ தாசிகளாகக் கணிக்கப்பட்டா லும் அண்மைக் காலமாக அந் நிலை மாறி இன்று பரதம் ஒரு குறிப்பிட்ட குலத்தின்ர் பயிலும் கலை மாத்திரமன்றி சமூக அந் தஸ்தை நிலைநாட்டும் மத்திய தர வர்க்கக் கலையாகவும் பரிண மித்துள்ளது.
இவ்வண்ணம் உயர்ந்தோர் குழாத்திற்குரித்தான பரதக்கலை அரசர் முன்னிலையிலும் பின்னர் வணிகர் பிரபுக்கள் முன்னிலை
யிலும் ஆடப்பட்டு பின் கோயில்
களில் வளர்க் சப்பட்டு இன்று மத்தியதர வர்க்கத்தினருக்குரிய 2. u uff ur Guðsorulu பொருளாக வளர்ச்சி பெற்றிருக்கிறது.
‘盖氢

Page 13
உழைப்போர் கலை யா ன கூத்தும் தனக்கென ஒரு வர லாற்றையுடையதே. ஆரம்பத் தில் கூத்து வெறும் சமயச் சடங்காகவே இருந்தது. சிலப் பதிகாரத்திலே ஆய்ச்சியர் எனப் படும் இடைச்சியர் ஆடும் குர வைக் கூத்தும், குறவர்களின் குன்றக் குரவையும் தாம் இலக் கியத்தில் காணும் ஆரம்பகாலக் கூத்துக்களாகும். இவை பற்றிய ஆட்ட முறையினை அறிய முடி யாவிடினும் கிராமியந் தழுவிய கூத்துமுறை இருந்தது என்பதை யும் இதன் ஊற்றுக் கண்ணுக இ தி கா ச புராணக் கதைகள் அமைந்தன என்பதையும் அறிய முடிகிறது. இக் கூ த் து க் க ள் கிராமிய மட்டத்தில் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. 17, 18 ஆம் நூற்ாரண்டுகளில் பள்ளு, குற வஞ்சி உருவத்தில் asīriģg படைந்திருக்கின்றன. இன்றுஈழத் தில் பல பாகங்களிற் பேணப் படுகின்றன. இன்று இக் கூத்து கிராமச் சிடங்குகளினின்று மீட் டெடுக்கப்பட்டு நவீனப்படுத்தப்
பட்டுள்ளது. கூத்து ஆட்ட முறைகளை பேணவும், L1 Tğ5/ காக்கவும், வளர்க்கவும் வேண்
டும் என்ற உற்சாகம் சில இளை ஞர்களிடையே ஏற்பட்டுள்ளது. இவ்வண்ணம் கூத்தும் தன்னள வில் இன்னுெரு வளர்ச்சிக் கட் டத்தினை அடைந்திருக்கின்றது.
பரத நாட்டியம் உயர்ந்
தோராலும் அரச ஆதரவு பெ ற் ற வித்துவான்களாலும்
கவனிக்கப்பட்ட தினுல் சி ற ப் பான, நுணுக்கமான வளர்ச் சியை அது பெற முடிந்தது.
ஆளுல் கூத்து உழைப்போருடன் மாத்திரம் நின்று விட்டபடியி ஞல் உழைப்போர் மத்தியில் இருந்து வந்த இயற்கைக் கலை ஞர்களினுல் மாத்திரம் கவனிக் கப்பட்டமையினுல் பரத நாட்டி பம் பெற்ற அத்துணை நுணுக்க
வளர்ச்சிகளை அது பெறவில்லை. எனினும் இத்தகைய இரு வேறு பட்ட ஆட்ட முறைகள் சழத் துத் தமிழரின் பாரம்பரியச் செல்வங்கள் என்பதை நா ம் மறந்துவிடலாகாது.
உயர்ந்தோர். தாழ்ந்தோர் என்ற வேறுபாடகற்றி பொது மைகாண முனையும் சமுதாய வளர்ச்சிப் போக்கின் திருப்பு முனைக் காலத்தில் நாம் வாழ் கிருேம். இக் காலத்தில் வாழ். கின்ற நமது ஆட்டக் கலைஞர் கள் மேற்குறிப்பிட்ட இருவேறு பட்ட ஆட்டக் கலைகளையும் ஒன் றிணைப்பதன் மூலம் புதிய வலு வும், புதிய வனப்பும் பொருந் திய ஆட்டக் கலையினை உருவாக்க முடியும், இக் காரியம் வரலாற் றியலும் சமூக உணர்வும் கலைப் பிரக்ஞையும், சிருஷ்டித் திறனும் நிரம்பிய கலைஞர்கள் பலரின் கூட்டு முயற்சியாலேயே ஆகவேண்டியதொன்ருகும்.
மூன்று வருடங்களுக்கு முன் னர் கார்த்திகா கணேசா அவர் களும் நானுமாகச் சேர் ந் து 'இராமாயணம்" எ ன் ற பரத நாட்டியமும் கூத்தும் இணைந்த ஒரு நாட்டிய நாடகத்தை பம் பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத் தில் மேடையேற்றினுேம், பார் வையாளர்கள் அந் நா ட க த் தைப் பிரமாதமாக இரசித்த போதும் பரத நாட்டிய விற்பன் னர்கள் பலர் அக்காலத்தில், பரதநாட்டியத்தின் புனித ம் இ த ஞ ல் கெடுகிறது என்று போர்க்குரல் எழுப்பினர். ஆனல் இத்தகைய ஒரு எதிர்ப்புக் குரல் அர்த்தமற்றது. பரத நாட்டி யத்தின் வரலாறு அறிந்தோர் பரதம் பல்வேறுபட்ட ஆட்ட முறைகளையும் தன்னுள் அடக்கி வளர்ந்ததை மறுக்கமாட்டார்.
தனி ஒர் ஆணின் உடல் அசைவினையும், உ ண ர் ச் சி ப்

பாவங்களையும் ஆட்ட லாவகங் களையும் காட்டும் கலை யா க இருந்த பரதம், நாட்டிய நாட கமாக உருவானபோது கூட்டு ணர்வினையும் புதிய பரிமாணத் தி னை யும் பெற்றது. கச்சேரியின் உள்ள கலை நுணுக் கம் பொதிந்த ஜதீஸ்வரம், வர் ணம் போன்ற உருப்படிகளை இரசிப்பதை விட கதையம்சந் ததும்பிய நாட்டிய நாடகங்களை மக்கள் அதிகமாக இரசித்தனர். கலா கூேடித்திரம் இதில் ஒரு மறு ம ல ர் ச் சியை ஏற்படுத்தியது. எனினும் சீ தா கல்யாணம், மீனுட்சி கல்யாணம், ஆண்டாள் போன்ற புராண இதிகாசக் கதைப் பொருள்களே இந் நாட் டிய நாடகங்களின் க  ைத ப் பொருள்களாயின்.
பிற்காலத்தில் தமிழ் நாட் டில் தனிப்பட்ட சில நாட்டிய வல்லுனர்கள் ஒரு படி முன் சென்று பொன்னியின் செல்வி, சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியக் கருப் பொருள்களை உள்ளடக்கிய நாட்டிய நாட கங்களை உருவாக்கினர். எனி னும் அவற்றின் வளர்ச்சி அத்து டனேயே நின்றுவிட்டது. சுருங் கச் சொன்னல் மரபு மரபான விடயங்களையே த ன து கருப் பொருளாகக் கொண்ட இப் பரதக் கலை இறுக்கமான மரபுப்
பிடியினின்று தன்னை மீட்டெ டுத்துக் கொள்ளவில்லை.
தென்னிந்தியாவில் பரதக்
கலை வளர்ச்சி நிலை இப்படியாக வட இந்தியாவில் பரதக் கலை வேருெரு திசையில் வளர்ந்தது. நாட்டிய கல ர மேதையான பூரீ உதயசங்கர் கதக், மணிபுரி, கதகளி போன்ற வெவ்வேறு ஆடல் வகைகளிற் காணப்படும் தேவையான அமிசங்களை எடுத் துப் பரதத்துடன் இணை த் து
நாட்டிய நாடகங்களை உருவாக்
கிஞர். ‘உழைப்பும் யந்திரமும்"
பரதக்
மணிப்புரி கலந்து
அளித்தார்.
எ ன் ற அவருடைய நாட்டிய நாடகம் தொழில் நுட்ப வளர்ச் சிக்கும் மனித சமுதாயத்திற்கு முள்ள வேறுபாட்டினைச் சித்த ரிப்பதாக விமர்சகர் கூறுவர். உதயசங்கருடன் சேர்ந்து பணி யாற்றிய சாந்திபர் தன் அவர் கள் பரதத்துடன் கதக், கதகளி
"வங்கப் பஞ் சம்" என்ற நாட்டிய நாடகத்தை இவ் வரலாற்றுண் மைகள் புனிதச் சின்னமாகக் கருதப்பட்டுப் பேணப்படும் பர தம் மெல்ல மெல்ல உருமாற்றம் பெற்றதையும் புராண இதிகா சக் கதை விரினின்றும் மாறி உழைப்பு சம காலப் பிரச்சனை என உள்ளடக்க மாற்றம் பெற் றதையும் காட்டி நிற்கின்றன.
fDDT L - ரீதியீான பரதத்தை யும், ஏனைய ஆட்ட முறைகளை யும் இணைத்து சமகால உள்ள டக்கத்தைப் புகுத்தி பரதத்தில் உதய சங்கரும் அவர் பின்ஞே ரும் செய்த மாற்றங்களை நமது நாட்டுப் பரத நாட்டிய விற் பன்னர்கள் கூ ர் ந் து நோக்க வேண்டும். புனிதப் பொருளா கப் பரதத்தைப் பாதுகாத்து வைத்திருப்பின் உதய சங்கரின்
அற்புதமான நாட்டிய நாடகங்
களையும், தன் புதிய பரிமாணத் தையும் பரதம் இழந்திருக்கும். நமது நாட்டு நாட்டியக் கலை ஞர்கள் இதனேயிட்டு ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
ந ம து நாட்டிலும் தென் மோ டி வட-மோடி என்ற கிரா மிய ஆட் ட முறைகளுண்டு. இவை தம்மளவில் வளர்ந்தவை; தமக்கெனச் சில சிறப் பா ன ஆட்ட முறைகளை உடையவை. பரத நாட்டியத்தால் வெளிக் கொணர முடியாத பல உணர்ச் சிகளை இலகுவாக ஏற்படுத்தி விடும் அம்சம் பொருந்தியவை. சிறப்பாக மட்டக்களப்புக் கிரர மங்களிலே இவற்றின் உயிரோட்
岛岛

Page 14
படத்தைக் காண் வாம். முஸ்லத்
தீவு, மன்னுர்ப் பகுதிகளிலும் இவ்வாட்ட முறைகள் GLIGHT"| படுகின்றன இவ்வாட்ட முறை
பிளே விட நமது அயல் இனக் தினரான கண்டிய நடனமும் நம் நாட்டி லுண்டு.
இக் கிரமியக் கூத்து ஆட்முறைகளேச் செம்தப்படுத்திப் பரத த் துடன் இனப்பதன் மூலம் புதிய ஆட்ட முறைகளே பும் புதிய பரிமானந்தையும் ரதத்தில் ஏற்படுத்த முடியும்
வெறுமனே புதிய ஆட் முறைகளேத் தோற்றுவித்தலும் உடுவி மாற்றத்தினே ஏற்படுத் துதிலும் வெற்றுப் பரிசேரி தன
பாகவே முடியும் மரபு மர பாக வழங்கி வரும் புரான் இதிகாசப் பொருளுக்குப் பதி லாக இன்றைய 岳町、 பும், சமூக மாற்றங்களேயும்
பரதம் பொருளாகக் iால் வேண்டும் இராமனும், கன்ன ரர்தையும், சிவனும் தான்றிய பாதத்தில் இன்றைய புக, புருஷர்களான பொது மக்கள் தோன்ற வேண்டும், இப்ப டி மாறு திற்கு இன்னும் சில ஆட்ட முறைகளின் தேவை ஏற்படும். அப்போது நாட்டுக் கூத்து ஆட்ட முறைகளேப் துடன் இண்ணக்கலாம்.
புதிய உள்ளடக்கம் ஒரு புதிய ஆட்ட வடிவத்தைத் தரும் பொதுவாக நாட்டுக் கூத்துப் பற்றி எமது பரத நாட் டியக் காரர்களிடம் ஓர் ஒதுக்கு நீர்ப்பாண்மையே நிலவி வரு கின்றது. அது சமூகக் காரணி
எம்ந்து
களால் ஏற்பட்ட ஒரு கண்ப்
பாங்கு ஆகும். எ ஒனும் நாட் டுக் கூத்தில் உள்ள சில ஆட்ட முறைகள் பரதத்திற்தப் பக்க பவமாக அமையுந் தன்மையண்
மக்களின்
வேகமும் விறுவிதுப்பும் துடிப் பும் பாய்ச்சலும் பெருந்திய ஆட்ட முறைகள்
சி த் துக் காட்டக் கூடிய ஆட்ட முறைகள் பாத் திர அமைப்பின் ஆட்டத்திலேயே iT T( ஆட்டமுறைகள், הולf_" ו"חח. ஆகியன நாட்டு க் கூத்திலே தானுண்டு.
இத்தகைா ஆட்டணி: சுளே'இனம் தெரிந்து வரி: சுண்டு ப்ரதத்துடன் இனத் துல் வேண்டும். இது.தனி ஒரு மனித ரின் முயற்சியாக இருக்க ! (UTது பல்வேறு சு:ஞர்களின் சுட்டுறவின் அடிப்படையிலேயே
எழ முடியும் சிறப்பாகக் கூந்து அறிந்தோரினதும், பரத ம் அறிந்தோரினதும் இ ஃண் ப் பு
முயற்சிகள் இதற் துத் தேதுை. இத்தன்கய LP ய ற்சிகள் அண்மைக் ஈழத்தில் நடைபெற்று வெந்நியீட்டி முள்ளன. கார்த்திக் ஆடற் :பகம் அளித்த இராமாய எம் நடிகர் ஒன்றியம் அளித்து சுந்தன் கருணே ஆகியன ே வற்
। ... । ‘
நாட்டுக் ஒதுக்கும்
早岳盟 för "Tri in D Giã f5.5 I. I y?ibiy bi, 4 r rr L.Fʼr*si) "; 品而5,、 Lú血"一型 வேண்டும் இதன் மூலமே நடத் துப் பயின்ற நாணு க்கர் குழந்தை உருவாக்க முடியும்
எத்தகைய கூத்துப் பயின் ருதும் சமூகுப் பிக்குைஆவி2ள்ளடக்கமே பிரதானம் என் பண்ரு மறக்கலாக்ாது சுத்தும் பரதமும் இனேந்து ச மூ சி ப் பிரக்ஞை புரிடய கதைகளும் உருவர் க அமிைகையில் நாம் பரதத்தின் புதிய பரிமானங் களக் காணமுடியும் அப்போது தான் அதனே வெகுஜனங்களு டன் இ&னத்து மக்கள் சுமேயாக் கவும் முடியும்

மஹாகவியின் வாழ்க்கை நோக்கு
எம். ஏ. நுஃமான்
மஹாகவி மறைந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அவர் வாழ்ந்த காலத்திலும் மறைந்ததன் பிறகும் அவரது படைப்புக் கள் இதுவரை ஏழு நூல்களாக வெளிவந்துள்ளன. வள்ளி, குறும்ப்ா, கோடை கிண்மணியாள் காதை, விடும் வெளியும், ஒரு சாதாரன மனிதாது சரித்திரம், இரு சாவியங்கள் ஆகியன அவை நூல்வடிவம் பெறவேண்டிய அவரது படைப்புக்கள் இன் நூம் ஏராளமாக உள்ளன. ஆயினும் மஹாகவி பற்றி நம்மி டையே இன்னும் ஒரு முழுமையான விமர்சன் முயற்சி மேற்கொள் ளப் படவில்ல்ே என்பதும், அவர்பற்றிய ஒரு சரியான பார்வை பரவலாக்கப் படவில்ல் என்பதும் விசனிக்க்த்தக்கதே. இக் கட்டு ரையில் மஹாகவியின் நூல் உருப்பெற்ற நூல் உருப் பேறித படைப்புக்களே அடிப்பன்டயாகக் கொண்டு அவரது வாழ்க்கை நோக்கைத் திரட்டிக் காண்பதற்கான ஒரு முயற்சி மேற்கொள்
ாப் படுகின்றது.
மஹாகவியின் படைப்புக்கள் பற்றிய பின்வரும் மூன்று விளுக் களுக்கு விடை காண்பதன் மூலம் அவரது வாழ்க்கை நோக்கைஅவரது உள்ளடக்கத்தின் சாராம்சத்தை - நாம் ஒருவாறு திரட் டிக் காண முடியும்
(1) சமூக அமைப்பின் எ ந் த த் தளத்தின் மீது அவரது
பார்வை விழுந்திருக்கின்றது? (2) அவரது படைப்புக்களில் இழையோடுகின்ற பொதுத்
தன்மைகள் பாவை
(8) * அவரது படைப்புக்களில் ஆங்காங்கே வெளிப்படையா கத் தேரிகின்ற வாழ்க்கை பற்றிய கருத்தோட்டங்கள் எத்தகையன்?
மஹாகவியின் பணுடப்புக்கள் அதிரத்தையும் நாம் மொத்து மாக எடுத்து நோக்கிளுல் - நாங்கள் சாதாரண பொதுமக்கள் ான்று கருதும் கிராமப் புறத்து விவசாயிகள், தகரப் புறுத்து வாழ்க்கைக்குப் பவியான ஏழைகள் மத்தியதர வர்க்கத்தில்ார் போர் மீதே பெரும்பாலும் அவரது பார்வை விழுந்திருக்
கின்றது என்பதைச் சுலபமாகக் காணலாம் நூற்றுக் கணக்கான

Page 15
அவரது கவிதைகளில் ஒரு கணிசமான் தொகையும், அவர் எழு திய ஒன்பது நாடகங்களில் மேடைக்காக எழுதிய கோடை முற்றிற்று புதியதொரு வீடு ஆகியவையும் அவர் எழுதிய ஐந்து காவியங்களில் கல்வழகி, கந்தப்ப சபதம் தவிர சடங்கு சாதா ரண மனிதனது சரித்திரம் சன்மணியாள் காதை ஆகியனவும் சாதாரண மக்களின் அருண்ட வாழ்க்கையையே உள்ளடக்கமாக்க் கொண்டுள்ளன. பொதுவாக ' -க்குப் பிற்பட்ட மஹாகவியின் பெரும்பாலான் கவிதைகளில் சாதாரண மக்களின் அன்ருட வாழ்க்கை நிகழ்ச்சிகளும் பாழ்க்கை முரண்பாடுகளும் அவற்றின் விள்ேவாக மனித படத்தைகளுமே சித்திரிக்கப் பட்டிருப்ப்தை நாம் காணலாம். 5-க்கும் 80-க்கும் இடையில் அவர் எழுதிய செத்துப் பிறந்த சிசு சீமாட்டி விட்ட முதல் நீருழவன், விசா தீர், திருட்டு நேர்மை, மீண்டும் தொடரும் மிடுக்கு முதலிய கவிதைகளே உதாரணமாகக் காட்டலாம்.
நடப்பியல் வாழ்வில் இருந்து புறம் போக்காக ஒதுங்கிச் சென்று கற்பரே ஆங்கிங் அவர் சஞ்சாரம் செய்யவில்லே என்ப தையே இவை காட்டுசின்றன.
இன்னவைதாம் சுவின்முத ஏற்றபொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் செரி:ாதீர், சோஃப், டங் மின்னர், முகிங் தென்றலினே மதவுங்கள் ந்ேதிருக்கும் இன்கல் நன்றிப்பு ஏழ்மை உயர்வு என்பற்றைப் பாடுங்கள் என்று இருபது வருடங்களுக்கு முன் மஹாகவி எழுதினூர், "நிகழ் காலச் செய்திக்ளேயும் பிரச்சின்ளேயும் கவிதையில் ஆண்டு அதன்ே இன்றைய யுகத்துக்கு இழுத்துவது அவசியமாகும் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்னும் அவர் எழுதிஞர்.
இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள் இன்ற்ை சுத் திங்கும் நோக்குகள் இன்றைய காலத்திழுப்புகள் எதிர்ப்புகள் இன்றிய கால்த்திக்கட்டுக்கள்." ஆகியவையே கவிதையில் இடம் பெற வேண்டும் என்று அவர் கருதிஞர். சுருக்கமாகச் சொல்ன்தரினுள் இலக்கியத்தினதும் கே களினதும் ஒரே ாற்றுக் கண்ணு: மனிதனது சமுதாய வாழ்வே மஹாகவியின் படைப்புக்களில் உள்ளடக்கமாகவும் உள்ளது அவரது ஆரம்பகாலப் படைப்புக்களில் சில புறநடை கள் தள்ளர் எந்தும் அவரது அடிப்படை இதுவே 'பெரும் பாலும் நடப்பியல் வாழ்வில் இருந்தே அவர் தின் படைப்புக்க ளூக்கான கருப்பொருக்ாப் பெற்று தான் துண்டு அனுபவித்த வாழ்க்கையை அதன் முரண்பாடுகளே அவர் பிரதிபலித்தார்.
,4
நடப்பியர் Faun அடிப்பட்ையாகக் jfTT LI இவரது பெரும்பலான படைப்புகளில் இழையோடுகின்ற பொதுத் தன் மைகளாக நாம் மூன்று அம்சங்காேக் குறிப்பிடலாம்:

(1) ஆழமான மனிதாபிமானம், (8) வாழ்க்கையின் மீது ஓர் உறுதியான்நம்பிக்கையும் வாழ
வேண்டும் என்ற முக்ாப்பும்
(3) சமூக ஏற்றத்தாழ்வின் மீம் தன் போன் ஆசாரம்
கள் மீதும் எதிர்ப்பு
இந்த மூன்று அம்சங்களும் ஒன்றி இருந்து ஒன்று வேறு பட்டதல்ல பதிலாக உள்ளார்ந்த டவுள்ா ஒன்றின் பகுதிகளே யாகும். மனிதர்களேயும் வாழ்க்கையையும் நேசிப்பதும் மற்றவர் களின் இன்ப துன்பங்களில் அக்கறை காட்டலும், சமூக முரண் பாடுகனேக் கஃாந்து அதைச் சீரம்க் விரும்புவதும் மனிதாபி மானத்தின் அம்சங்கர்ேபாகும் அந்த வகையில் மஹாகவியை ஒரு மனிதாபிமானி என்று ஆள்தப்ப்து புற்றிலும் பொருந்தும்
தமிழ் வழக்கிலே nn மனிதாபிமானி ஆகிய சொற்கள் இடர் உறும் மனிதர்கள் மீது இரக்கமும் நேசப்ான் மையும் காட்டுவதையே பொதுவாகக் குறிக்கின்றன. மேலுேத் தேச வழக்கில்ே இவை இன்னும் விரிந்து பொருளப் பெறுகின் றன; இயற்கை அதீத நம்பிக்கைளேயும் உண்மை நசீளயும் நிரா கரித்து மனித இயற்கையின் அடிப்படையில் விழுமியங்களேயும் மனித அனுபவத்தின் அடிப்படையில் கையுேம் காண்டவ னேயும் மனிதாபிமானி என்ற சொல்வான் அழைக்கின்றனர். இந்த வரைவிலக்கணம் மஹாகவிக்கு மிகப் பொருத்தமாய் உள் ளதை நாம் காண வரம் இடர் பூம் மனிதர்கள் : அவர் காட்டும் இரக்கமும் நேசபான்மையும் அவரது பல கவிதைகளில் மிகத் துவக்கமாகத் தெரிகின்றன. "விடும் வெளியும் தொகுப் பில் உள்ள பல கவிதைகள் இத்தகையன் குறிப்பாக சீமாட்டி, விட்டமுதல் தேரும் திங்களும் நீருழவன் விசாதீர் திருடாதே, செத்துப் பிறந்த சிசு மற்றவர்க்காய்ப்பட்ட துயர் ஆகியன இதற்குச் சிறந்த தோரணங்களாகும் கஷ்டப்படும் சாதாரண மக்களேயும் அவர்களது வாழ்க்கை நெரிதல்துளயுமே மிகுந்த அது தாபத்துடன் இக் கவிதைகளிங் மஹாகவி சிந்திரிக்கின்ருர், இதிே வேளே அவரது மிகப் பல படைப்புக்களில் இயற்கை அந்த நம் பிக்கைகளே மரிேத வல்லஐமயின் மீதுள்ள நம்பிக்கையினுல் அவர் நிராகரிப்பதையும் காண்கின்ருேம்
4
வாழ்க்கையின் மீது ஒர் உறுதியான பற்றுதலும் வாழவேண் டும் என்ற முனேப்பும் அவரது பெரும்பால்ான் படைப்புக்களில் பரவலாகக் காணப்படும் இரண்டாவது அம்சமாகும். இதே கார னத்தினுல் விதியையும் கடவுளயும் மஹாகவி நிராகரிக்கின்ருர்,
அண்டங்கள் ரவ்லாம் அலுவல் படுதல் கண்டு இங்கு உள்கோர் கடவுள் பொருள் ஒன்று உண்டென்றிடுவார் - அதை வாள் நரக் கொண்டாடிடுவார் = கோயில் களிலே,
இல்லாதது ஒன்றினேயே இவர்கள் கல்லாக் கிடுவார் உள்ள்ேல் கடவுள்
..

Page 16
பொல்லான் அவனைப் புகழ்தல் பிழை என்று எல்லாம் அடியேன் எதிர்வா திடுவேன்?
என்று 1934-ல் மஹாகவி எழுதினர். இறைவன்ரின் சித்தப்படி பல்ல, வாழ்க்கை தன்பாட்டிலேயே போகின்றது என்ற பொரு ளில், தம் கருத்துப்படியன்று இறைவரோ தண்டவாளத்தின் மீதே செலுத்திஞர்" என்று ஒரு உதாரண மனிதனது சரித்திரத் திலும் அவர் எழுதிஞர். ஆகவே வாழ்க்கையும் வாழும் முனைப் பும் முற்றிலும் மனிதளையே சார்ந்தது என்ற கருத்துக்கு அவரி வந்தார்.
உன்னேடு மிகஉல் கின்றதஞல் என்னத்தைக் கண்டனரோ இவரே . பொன்னின் பின்னுேடிடும் இப் புவியின் சின்னத் தனம் நீங்கியதோ சிறிதும், பொருள் மக்களிடைப் பொதுவாகிட நீ அருள் செய்தனையோ? அதுதான் இலையே ஒருபோதும் இனி உண் நம்பிடில், எம் இருள் போய் அகலும் எனதின் நுழலோம்" என்ற வரிகள் இதையே காட்டுகின்றன.
"பிழையினைக் கடவுள் செய்தால் சரியாக்கல் மனிதன் வேலை" என "புதியதொரு வீடு"
நாடகத்தில் மறைக்காடர் பேசுவதும் இதையே காட்டுகின்றது.
வாழ்க்கையும் வாழும் முனைப்பும் மனிதசச் சார்ந்தது என்ற் படியினல் விரக்தி, சோர்வு, முனைவு, நம்பிக்கை என்பவற்றை அவர் ஆதாரமாகக் கொண்டார். சாவின் மீது உள்ள பயத் தைக் களைய முயன்ருர்.
*காற்றினுல் உலைக்கப் பட்டுக் கழுத்தினைக் குனிந்து சாம்ப நேற்றை மழைக்கு வந்த நெடும்புல்லோ நாள்கள். "வேருக்குள் உறுதி கொண்ட வேம்புகள் மனிதர்."
உண்மை கொடிதே, உலகில் அதளூேடு போரிட்டு வாழப்புகுந்தோம் -கலங்குவதோ வீரிட்டு அலறி விழுந்து புலம்புவதோ பார் எட்டுத் திக்காய்ப் பரந்து கிடக்கிறது" *எறிகின்ற கடல் என்று மனிதர்கள் அஞ்சார் எதுவந்த தெனின் என்ன அதை வென்று செல்வார்."
போன்ற வரிகளை இதற்கு உதாரணமாகக் காட்டலாம், சாவின் மீது மனிதனுக்கு உள்ள பயத்திற்கு ஒரு சமாதானமாகவும் ே தலாகவுமே மனிதன் ஆாவதில்ல்ை என்ற கருத்துக்கு ஒரு புதிய அழுத்தம் கொடுக்க முன்ந்துள்ளார். .

அன்று பிறந்து இன்று இறப்பதுத்
ஆயதன்று நம் மானிட வாழ்வுகாண் அப்பண்ே மகனகி, உயிர் ஒய்தலற்று உயர்வு ஒன்றினை நாடலே உண்மை;
என்ற அவரது கருத்து முற்றிற்று என்ற நாடகத்திலும் சாதா ரண் மனித னது சரித்திரத்திலும் கலைவடிவம் பெற்றுள்ளது: வாழ்வின் மீதுள்ள் பற்றுதலின் ஒரு அம்சமே இது.
S
கவிஞர் முருகையன் மஹாகவியின் வாழ்க்கை நோக்குப் பற்றி ஓர் இடத்தில் குறிப்பிடுகையில் "முரண்பாடுகளையும் இடர்பாடு களே யும் கண்டாலும் காணுதமாதிரி விடுத்து இதுதான் உலக இயல்பு, ஏதோ ஏலுமானவரை சமாளிக்க முயல்வோம் என்ற பார்வைதான் இவரது படைப்புக்கள் பலவற்றில் ஊடோடி நிற் பது" என்றும் உலகத்தை உள்ளது உள்ளபடியே ஏற்றுக் கொண்டு அந்த உலகத்தில் இயலிமானவரை சுலபமான ஒரு பாதையில் நடந்து செல்கையில் கைக்கு எட்டும் சுகானுபவங்களை நுகர்த்து ஈடுபடும் ஒரு வாழ்க்கைத் தத்துவம் இவரது கவிதைகளில் பின் புலமாக உள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முருகையன் என்ன அடிப்படையில் இந்தக் கருத்துக்கு வந் தார் என்பது தெரியவில்லை. ஆளுல் நாம் இதுவரை பார்த்த மஹாகவியின் வரிகளே இக் கூற்றுத் தவமுனது என்பதைக் காட் டப் போதுமானவை என்று நினைக்கின்றேன். மஹாகவி பெரும் பாலும் சாதாரண மக்களின் நடப்பியல் வாழ்க்கையைத் தள் படைப்புக்களுக்குக் கருவாகக் கொண்டவர். அன்ருட வாழ்க்கை அனுபவத்தைக் கருவாகக் கொள்ளும் எவனும் சமூக முரண்பாடு களைப் பிரதிபலிக்காமல் - கண்டும் காணுதது போல் ஒதுங்கிச் செல்ல முடியாது. அத்தகைய கலைஞனின் படைப்புக்களில் விரும் பியோ விரும்பாமலோ, பிரக்ஞை பூர்வமாகவோ பிரக்ஞை பூர்வ மற்ருே அவை பிரதிபலிக்கப்படவே செய்யும். அது யதார்த்த நெறியின் ஒரு முக்கிய பண்பு ஆகும். நிலப் பிரபுத்துவ வர்க்கத் தின் சார்பில் நின்ற பால்சாக்கும், கிறிஸ்தவ ஆன்மீக வாதியான டால்ஸ்டாயும் கூட இதற்கு விலக்கு அல்ல என்பதை நாம் அறிவோம்.
அந்த வகையில் மஹாகவியின் முக்கியமான படைப்புக்கள் அனைத்திலும் சமூக முரண்பாடுகள் மீதும் அதன் போலி ஆசாரங் கள் மீதும் எதிர்ப்புணர்ச்சியும் அவற்றைக் களைய வேண்டும் என்ற விருப்பும் சில இடங்களில் வெளிப்படையாகவும் - சில இடங்க கில்ே பின்புலம்ாகவும் தெரிவதை நாம் காணலாம். 80-க்கு முந் திய அவரது பல தனிப் பாடல்களில் இந்த எதிர்ப்புணர்ச்சியும் சமூக 'முரண்பாடுகளுடன் ஒத்தியங்க முடியாத மனப்பாங்கும் தெளிவாகத் தெரிகின்றன. இம் மானிடரி, இனம் உய்ய வழி உண்டா, மடிகிருேம் இயற்கைப் பெருந்தாய் இதயம் கடவுளே
2)

Page 17
முதலிய கவிதைகள் இதற்குச் சில உதாரணங்களாகும். சீமாட்டி, செத்துப் பிறந்த சிசு, வீசாதீர், விட்டமுதல், நீருழவன் திருட்டு, தேரும் திங்களும் போன்ற கவிதைகளில் மனித வாழ்வின் நெரி சலும், முரண்பாடுகளின் மோதலும் தெளிவான சிந்திரங்களாகத் திட்டப்படுகின்றன. மனித வாழ்வு ஏன் இவ்வாறு அவலமாக இருக்க வேண்டும்? என்ற கேள்வியே இப்படைப்புக்களின் அடிப் படைத் தொனியாகும். இந்த அவலம் களையப்பட வேண்டும் என்ற தூண்டுதலே அவற்றின் பின்புலத்தில் அழுத்தப்படுகின்றது.
சடங்கு, கோடை, கண்மணியாள் கர்தை ஆகிய 30-க்குப் பிந்திய மஹாகவியின் பெரும் படைப்புக்களில் சமூக முரண்பாடு களே பிரதிபலிக்கப் படுகின்றன.
தன் திருமணத்துக்கு எள் வி த எதிர்ப்புமில்லாத போதும் போ லியான சடங்கா சாரங்களுக்குக் கட்டுப்பட விரும் பாது தனது காதலியுடன் வன்னிப்பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்லும் ஒரு யாழ்ப்பாணத்து இளைஞனின் கதையைக் கூறுகின்றது சடங்கு. கோடை, ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், அவர்கள் தோற்று வித்து புதிய நாகரீகத்துக்கும் பழைய விழுமியங்களுக்கும் இடையே தோன்றிய முரண்பாடுகளைச் சித்திரிப்பது. கண்மணியாள் காதை சமுதாய மூடத்தனங்களையும் சாதிக் கொடுமை9யயும் பற்றிய ஒரு துன்பியல் காவியம், இவை எல்லாம் உலகத்தை உள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனுேபாவத்தைக் காட்ட வில்லை. ’ச மூக முரண்பாடுகளையும் இடர்பாடுகளையும் கண்டும் காணுதது போல் மஹாகவி இருந்தார் என்பதற்கு அ வ ர து படைப்புக்களில் எவ்வித ஆதாரமும் இல்லை.
மஹாகவி சமூக முரண்பாடுகள் பற்றியதன் உணர்வுகளே தன் படைப்புக்களில் காட்சியனுபவ வெளிப்பாடுகள் மூலம் மட்டு மன்றி கருத்து நிலையிலும் வெளிப்படுத்தியுள்ளார், "பாதி உலகை மறுபாதி தின்றுழுலும் சேதியைக் காணுர், செழும் சிந்தனை யற்ருர், காதலோ காதல் கவிதைகளே கட்டுவதில் போதைக் கழிக்கும் பொடியள்" என்று முரண்பாடுகளைக் காண மறுக்கும் கவிஞர்களை அவர் சாடுகின்ருர், "பிறர் உழைப்பில் பிழைத்தல்" என்ற கவிதையில் அவர் பின்வரும் கருத்துக்களைக் கூறுசின்ருர்.
'சுற்றம்போல் சேர்ந்து சுய உழை பைப் பங்கிட்டு நிற்றலே வைய நிலை இந்த நிலைமை இடறப் பிறந்தவரை நிந்தித்து வீறு படுத்து உட்கார்ந்து மற்ருேர் உழைப்பிற் பிழைப்பவனின் நிட்டூரம் நீக்கு நிலத்து சுரண்டு வோர்க் கஞ்சிச் சுருண்டு கிடவேல் திரண்டுபோய் நீதி பெறும் எதுவும் எவர்க்கும் பொது என்று பெற்றல் அதுவன்றே வைத் தறம்

இவை எல்லாம் அடிப்படையில் சமுதாய மாற்றம் வேண்டும் என்ற மஹாகவியின் விருப்பத்தையே காட்டுகின்றன. தப்பிச் செல்லும் மனுேபாவத்தைக் காட்டவில்லை. ஆனல் இந்த மாற் றத்துக்கான வழி முறைகள் என்ன என்பது பற்றிய எவ்வித தெளிவான சிந்தனையும் அவரிடம் காணப்பட்வில்லை, அந்த வகைப்பட்ட அரசியல் சித்தாந்தம் எதையும் அவர் சுொண்டிருக்க வில்லை. எப்போதும் இயக்க பூர்வமான நடவடிக்கைகளில் இருந்து அவர் தனித்தே நின்ருர் . ஆயினும் தனது இயல்பான மனிதாபி மான உணர்வு நிலைக்குட்பட்டு கஷ்டப்படும் சாதாரண மக்களின் அன்ருட வாழ்க்கை நெரிசல்களுக்குக் கலைவடிவம் கொடுத்தார். ஒய்தல் அற்று உயர்வு ஒன்றின நாடும் வேட்கையை அதில் அவர் அழுத்தினர். அதுவே மஹாகவியின் தனித்துவம் ஆகும்.
啤ခန္တိ- ※· 哆 哆 喙· ※ 啤 +ဒွိ• 哆 爱·喙· e 喙, 来, * 噪、 ※
சினிமாத் துறையிலும் முன்னணியில் பெண்கள்
நான் சினிமாக் கலைஞனக உருவானதில் சோவியத் இனிக் கலை பெரும் செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது. கார்க்இ எழுதிய "குழந்தைப் பருவம்" என்ற நூலை அடிப்படையாகக் கென் படம்தான். சோவியத் திரைப்படக் கலைச் செல்வத்தின் மதிப்பை எனக்கு வெளிப்படுத்தியது. ஐசன்ஸ்டீன், புதோவ்கின் தோன் ஷெங்கோ போன்றவர்களின் படங்கள் எனக்கு இன்னமும் மகிழ்ச் சியும் உத்வேகமும் ஊட்டுகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன், ஜி. சுக்ராயின் சிறந்த தயாரிப்பr கிய பாலட் அஃப் எ சோல்ஜர்" என்ற படத்தைப் பார்த்தேன். இந்த விழாவில் "அஸெண்ட்" என்ற சோவியத் திரைப்படத்தைப் பார்த்தேன். இது ஓர் அற்புதமான படைப்பு. இதை யாராலும் அலட்சியப்படுத்த முடியாது. சோவியத் திரைப்படங்கள் தொழில் முறையில் மிகச் சிறந்தவை என்பது நெடுநாளாகத் தெரிந்த உண்மை. ஆனல் "அஸெண்ட்’ படத்தைத் தயாரித்தவர் லீ ஷெபித்கோ என்ற ஒரு பெண். திரைப்படத் துறையில் இவ்வளவு சிறந்த ஒரு பெண் டைரக்டர் இருக்கிருர் என்ப்து, சோவியத் பெண்கள் மற்றத் துறைகளில் முன்னேற்றம் அடைந்திருப்பது போலவே சினிமாக் கலைத் துறையிலும் உறுதியான இடம் பெற் றிருக்கின்றனர் என்பதற்கு அத்தாட்சியாகும்.
ஷியாம் பெனகல்
来、率**率、喙,
JI

Page 18
淤 சங்கிலித் శ్రీ
SY 领
GS
"ஐல். ஜல். ஜல்.
சதங்கையொலி Lnrié5 FITLDT HEI சுற்றிலும் இசை வார்க்க வழி பெல்லாம் அழகுத் திருக்கோல ா அந்த'வில்லுக் கறுத்த (yaratora Parfiği செல்கிறது சமாந்தரமான சரடுகளுக! வொழுங்கையில் நீண்டு செல்லும் புத் தடத்தில் அத்தக்கரக் தையின் பவனி தொடர்கிறது. ர்ேகள் ஆரோகணித்திருக்க புரவிகள் பூட்பு அலங்காரத் தே ரீ க ஸ் ராஜபாட்டையில் ந்ேது சென்றன்வாமே அக் காலத்தில் அவற்றின் நல்வி தாஸ்மாக்கும் அரிசி என்ருே வழக்கொழிந்து விட்டன. இல் ' வை கர்வபங்க முற்று மானமிழந்திருக்கக் கூடும்
ஜல். ஜல். ஜூல்
சுருதி பேதலிக்காமல் ரே சீராக ச் சதங்கைகள் பெருக்குகின்றன என்ருல் நாள்ள அர்த்தம் கா அவ்வளவு நீங்ாசமாக முறுகல் முன் தசைதல் இன்றி வருலாயமறன தன் பணியை நிறைவேற் றுகின் றது என்பதுதான்.
ஜஸ். . . . . . ஜங்.
அறுகின்றன
மருதூர் - கொத்தன்
சதங்கையொகி வாண்டு களின் செவிப்பறைகளிற் பட்டுத் தெறித்ததுதான் தாமதிக் தேன் சிந்திய இடத்தில்
எறும்புகள் திரள்வதுபேர் புடலிகளுக்கு
ஆட்டம் போட்டுக் குவிந்து ଓଳil". । ட்ார்கள். அந் த க் கரத்தைப் பவனி அவர்களுக்கோ கண் கொள்ளாக் காட்சி வரண்டு களுக்கு மட்டுமென்ஜி பள். திதி அனேவருக்குமே அது
சென்ாாத காட்சிதான் நெத்திப் பொட்டன் துள்ளி வால்ன், நாலு காற் சிலம்பன் ஒருசாண் சுளியன் டோங். ஒடியாங்கடோவ். יו
காளேயின் அங்க இவட்சனங் தளக் காரணங் கேன்ாக்கி
வாரு நிறைய மொழிந்து மகிழ்
வதோடு க்ாட்சிகான மற்றவர் அழைப்பு விடுப்பது
களுக்கும் அவர்களுக்கு ந Tr Tத் தப் பொழுதுபோக்கு தாங்கள் நிற் கும் இன்சுர்ேக் கடந்து கள் இறுக்கு மனு ற ஆழ் நுரையின் கர்த்தையின் இாட்சி கண்டு கும் மாளமிட்டுக் களிப்பார்கள். 蠶 தும் அவர்கள் அதே பணியின் ELங்களும் சம்பிரதாயங்களும் பிழைக்காம்ல் செய்து முழக்கின் மூர்கள். சுரத்தையை விடவும்

அதை இழுக்கும் காளேதான் அவர்களின் கும்மாளத்துக்கு முக்கிய காரணம்
பபிலே நிறப் பின்னணியில் பா ஃ வண்ணத் திட்டுக்கள் நெற்றியிலே பரந்த பொட்டாய், கால் முட்டுக்களுக்குக் கீழ் சிலம் பாய், வா வின் நுனிப்பாகம் வள்ளியாய், கவடுகளுக்குள் அடி வயிறு முழுவதும் மறையாப்
எவரைத்தான் கவராதுரி நிமிர் வான தஃவயெடுப்பும் மதர்த்த இன முல்ேகள் ஒட்டித் தளும்பு வது போன்ற ஏரிக்கட்டும் தொங்கும் கருத்துச் சவ்வும் கூட அடைந்த கம்பீரம்வேறு துரிக்கட்டிலிருந்து ஒரு சாண் தொல்வில் முதுகுச்சளி அபூர்வ மாகச் சில கான்களுக்கு அம்ை கின்ற ராஜ இலட்சணமாகும், ಶ್ರೆಕ್ಟಿವ್ಲಿ **** அமைந்து விட்டது.
அரு ையிலும் அருமையாக ராஜயோகம் உள்ளவர்களில் ஆபிரித்தில் ஒருவருக்குத்தான் இப்படியோரு வரும்புரிச் சங்கு கிடைப்பது வாய்க்குமாம்,
தரத்தையில் சாரதியாகவும் பிரயாணியாகவும்தானேயொரு துராப் அமர்ந்திருக்கும் சேமன் இபுரும்ே ஒரு ராஜ யோகிதான். ாேள்ேயும் அவரது பட்டியில்ே வளர்ந்ததுதான். காளே கரந்தை இழுக்கத் தொடங்கிய சுப சகு ன்மோ என்னவோ முதrவ தாக அறிமுகப் படுத்தப்பட்கிராமச்சங்கத் தேர்தலில் அரும் பொட்டில் வெற்றியும், சேமன் பதவியும் வாய்த்துவிட்டன.
ஒழுங்கையிலே எதிர்ப்பட்ட
ஒருவர். சர்ல்வையை எடுத்துக் நம்முக்கட்டில் இடுக்கிய வள் ஆம் தல்ேகுனிந்து விலகிச் செல் கிருர், சோன் இடரும்ே தெரு வில் இறங்கிவிட்டால் ஏகப்பட்
Gjiri argir இப்படியொரு |-
Tā ir
னேயைத் தங்களுக்குத் தாங் களே விதித்துக் கொள்வார்கள். பெண்கள் எதிர்ப்பட்டாலும் முக்காடுகளே சிக்காராசு இழுத் துப் போட்டு தட்டிவேலிகளில் முட்டிக் கொள்வர்
ஜல் ஜல் ஜலஜல ஜல் ஜல்" ரதங்கையின் # தி காட்டு
கிறது வீடு நெருங்குகிறது என் பதற்கு அது அடையாளம்,
r.ர்"
"சிக்கு ஹருங்குட்டி' என்ற வார்த்தைகளே ஆத்திரத்தோடு முழங்கிக் கொண்டு முக்கணுங் பிற்றை இழுத்துப் பிடித்தார் சேமன் இபுரும்ே. காளே, கழுத் துச் சலங்கைகள் ச வ ச R க்க, தைேய நிமிர்த்தி முன்னங்கால் சுள்ால் நிலத்தை திங்கி உதைத் துக் கோண்டு தனகந்தது கையிலே மஞ்சள் கொண்ட மண் சட்டியோடு தளுக்குச் சிரிப்புச் சிரித்தவுளாக சல்சவத்து நிற் சின்ருள் ஒரு சிறுமி
"FLUFFfF ,,,,,,,, far, ..." எஞ்சியிருந்து மஞ்சள் நீரை
அவர் மீது வளமாக
பு:
இறைத்துக் குதித்துக் குதித்துக்
கு ஆங்கிச் சிரித்தாள். அது அது எங்ே தம்மாளமோரி அவளுக்குத்தான் என்ன துணிச்சல், பெரியவர் களே கண்டு பயங்கலந்த மரி பாதை பண்ணும் சேமன் இபு ரும்ே மீது இப்படியொரு காரி பத்தைச் செய்துவிட்டுக் கும்மா ர்ர் போட எவ்வளவு நெஞ் சமுத்தம் வேண்டும் கன ப் பொழுதில் சேமனின் கோபமும் அடங்கிப் போயின. அதுதான் என்ன அதிசயம்!
என்னடி பேத்தி நாத் தாக்க ஜி வெடிச்சிற்ருளா?" என்று சாந்தமாக வினவிய வண் ஜும் சால்வையால் தலேயையும்

Page 19
முகத்தையும் துடைத்துவிட்டார் அவா .
"தாத்தா காலம்பொறவே பெரியமனிசாப் போச்சுது. அப் பச்சி இப்ப திரும்பி வருவியள்
எண்டு பகலெல்லாம் காத்துக் கிருந்தன் மஞ்சள் தண்ணி ஊத்த"
சொல் லிவி ட் டு க் கிசுக் கென்ன்ன வ ள வுக் கு ஸ் ஓடி மறைந்தாள். அவளுக்கோ வெற் றிப் பெருமிதம்.
சேமன் அப்பச்சிக்கி வாய்க் கச்சீக்க மஞ்சத்தண்ணி ஊத்திற் றேன்"
"அடியேய் சேமன் அப்பசி சிக்கி ஏண்டி ஊத்தினய்ர்"
தா ய் க் கா றி பதறிக் கொண்டே கேட்டாள்.
"ஊ த் தி ஞ என்னவாம் செ மில த் து" முத்தம்மாவுக்கு ஊத்தலாமெண்டா, கா த T மச் சானு க்கு இறைக்கலா மெண்டா, டாத்துமா மச்சிர பொடவையெல்லாம் பூ ச லா Gin Gior L- . சேமன் அப்பச்சி மாத்திரம் என்ன கொம்பா? அவரும் நம்மட அப்பச்சிதான்
அவள் தனது செய்கையை ஆதார பூர்வமாக நியாயப் படுத்திக் கொண்டிருந்தாள். அவ ளின் துடுக்கான வார்த்தைகளைக் கேட்டு குறுஞ் சிரிப்பை உதிர்த் துக் கொண்டே சேமன் மாட் டைச் சாய்க்கிருர்,
* , ১*১৮
அவர் அணிநதிருந்த பட்டுச்
சால் ை1, வெள்ளை பெனியன், போனகரிச் சாறம் எல்லாம் மஞ் சள் படிந்து விரசமாகக் காட்சி தந்தன .
T சதங்கைச் சத்தம் கேட்டு சேமனின் மனைவி ஆசுரு உம்மா கடப்படிக்கு ஓடிவந்தாள். உழ
லைக் கடப்புக்குக் குறுக்கால் போடப்பட்டிருந்த மாங்குக் கம் புகளை வேகமாக உருவியெடுத்து
வழியைத் திறந்தாள். கரத்தை
கரத்தைக் குடிலுக்குள் வேகமாக போகின்றது. கீழே இ ற ங் கி காளையின் பூட்டான் கயிற்றை உருவிவிட்டுக் கரத்தையை முட் டிலே வைத்துவிட்டு வெளியே வந்தார். அவரது கோலத்தைக் கண்ட மனைவிக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.
"அவளுக்கிட்ட வகையாக மாட்டிக்கிட்டீங்க என்ன? .
"அந்தச் சின்னத் தொளுப் புறி மஞ்சத்தண்ணியக் கொண் டாந்து சிலாவி உட்டுட்டாள்"
* காலத்தால நீங்க போன பொறவால மருமகள் வந்து விஷயத்தைச் சொல்லிற்றுப் போன”
"பொட்டி கொண்டு போற அடுக்கப் பாக்கல்லய நீ?"
"ஏன் அடுக்குப் பண்ணும . பச் ச ரி சி குத்திப்போட்டேன், கோழி முட்டை இருவத்தஞ்சி கூட்டம் பண்ணிற்றன் நல்லெண் ணப் போத்தலுக்கு சேகுக்கிட்ட காசு குடுத்து அனுப்பியிருக்கி றன், நிலா க் காலந்தானே. ர்ாவக்குப் போக எல்லா ஏற் பா டு களை யும் செஞ்சிற்றன்" சோ று சாலச்சிப் போகும் - கெதியா மேலக் கழுகிக்குட்டு வாங்க"
இருவரும் வீட்டுக்குள் சென் றனர். மடியை அவிழ்த்து கட தாசியால் சுற்றப்பட்ட பொட் டலமொன்றை ம ன வி யிடம் கொடுத்துவிட்டு இடுப்பு வாரை கழற்றி சுவர் மான்கொம்பிலே தொங்கவிட்டார். அதே மான் கொம்பில் தொங்கிய சாரினை யும் சால்வையையும் எடுத்துக் கொண்டு கிணற்றடிப் பக்கம் சென் ருர்,

ஆசுரு உம்மா பொட்டலத் தைப் பிரித்துப் பார்த்துவிட்டு மீண்டும் பழையபடி ம டி. த் து பெளத்திரப் படுத்தப் பெட்கத்தைத் திறந்தாள்.
ஏங்கா புள்ளே பொட்ட கத்துக வைக்காய், புள்ளயளக் கூப்பிட்டுப் போட்டுடுகா"
மேல் கழுவி உடை மாற் றிக் கொண்டு வந்த சேமன் மனைவியைத் தடுத்தார்.
"பொன்னுக்கு வாங் சிப் புதனுக்கு உடுக்கச் சொல்லி சும்மாவ சொல்லியிருக்காங்க"
"லெக்கா லெத்கா" நீ யும் ஒண்ட பத்தாசியும், பொழுது அ ச ரு ல சாஞ்சிற்று, புதன் பொறந்த மாதிரித்தான். புள்ள யக் கூ ப் பிட் டு ப் போட்டுடு. மூணு மாசமா என்ன அலைக்காத விதமாக அலக்கழிச்சிப் போட் டான் அந்த ஆசாரி. நாளத் தான் இழுத்தடிப்பான், எண் டாலும் அவன்ர வேல வேல யாத்தான் இருக்கும்:
ஆசுரு? பெட்டகத்தை மூடி விட்டு தி ன் னை க் கு வந்து அமர்ந்து கடதாசியை விரித்
தாள். தங்கத்தால் செய்த அந்த நகைகளின் பிரகாசம் அவன் வதனத்திலும் கொடி விரித்தது. குசினியில் தயிர் க  ைட ந் து கொண்டிருந்த மூத்தவள் கலந் தர் நா ச்சி அசுப்பறிஞ்சதும் மத்தை அப்படியே வைத்துத் தாயிடம் வந்தாள்:
தங்கச்சி எங்க மனே! கூப் பிடுகா தங்கச்சிய"
"புள்ளே மைமு அச்சி! வா ப் பா அரமுடி சலங்கைக் கோர்வை கொண்டாந்திருக்கா. ஒடியா கிளி. ஒடியா போட்டுப் LufthLubo"
தந்ன்தயின் பணி ப்பை யேற்று புறவளவில் சாம்பலப்பம்
சுட்டு விளையாடும் தங்கச்சியை பெரிதாகக் கு ர ல் கொடுத்து அழைத்தாள் மூத்தவள். பிறந்த மேனியாகச் சாம்பல் அளைந்த கையோடு ஓடிவந்தாள் இளைய வள். நாலு வயது மதிக்கலாம் அவளுக்கு நேர் மூத்தவனுண காக்காவும் அம்மணக் கோலத் தில் ஓடிவந்தான். , சின்னவள் சே ம னி ன் மடியிலே தொப் பென்று விழுந்தான். அவனே அவர் தூக்கிப் பிடிக்க மனவி
தகதக தங்கங் கொண்டிழைத்த
அரை மூடி சல ங்  ைக க் கோர் வையை இடுப்பிலே அணிந்து விட்டாள். அரணுக்கொடி சிறிய அரசிலை வடிவத்தில் கொத்து வேலைப்பாடுகள் கொண்டு செய் யப்பட்ட அரைமூடி அதி லே தொங்கியவாறு அவளது பெண் ணு ட ம்  ைப ச் சம்பூரணமாக மறைத்து நின்றது. அரை மூடி யின் இரு பக்கங்களிலும் இடுப் பைச் சுற்றி அரும்பு இழைத்த மாங்காப் வடிவச் சலங்கைகள். தாரைகளின் நடுவில் தண்மதி போல அரை மூடி சலங்கைக் கோவைகள் ஜ க ஜோதியாய் ஒளி வீசின. பிள்ளையின் முகத் தில் மாத்திரமல்லாது பெற்ருெ ரின் வதனங்களிலும் பூரிப்பின் ஒளிக்கீறுக்கள் கிளித்தட்டு விளை பாடின, "எனக்கில்லய?" என மகன் சிணுங்கிஞன். கழுத்திலே
காறையும், கையிலே குண்டுக் காப்புகளும் தம்பித் துணைய னும் பூணிட்டிழைத்த புலி ப்
பற்களிரண்டும் கோர்த்த அர ஞக் கொடியோடு அவன் காட்சி தந்தான்.
"உனக்குத்தான் இ தெ ல் லாம் போட்டிருக்கென்னடா?" என்றவாறே அவ ன் முதுகை ஆறுதலாகத் தடவிக் கொடுத் தார் தந்தை,
தேங்கச்சிக்கும் அர மூடி சலங்க முந் திக் கெடந்தானே

Page 20
அவவுக்கு பு தி சா எனக்கிக் தந்திருக்கென்ன?
பையன் விடுவதாக இல்ஃ. அவனே எப்படிச் சமாளிப்ப தென்று தெரியாமல் பெற்ருேர் இருவருமே பெந்த விழித்தனர். சே மனு க்கு ஒரு யோசஃன் தட்டியது
ஆம்புள்யள் தங்கம் போடா மனே போட்டா அல்லா நெருப் பாஸ் சுடுவார் கோழும்புக்குப் போப், நல்ல வடிவான மவெயோ தொப்பி வைக்கிக் கந்து தாறன், வன்னம் என்ன
மான படமெல்லாம் இரிக்கும். பொண்டுகள் குத்துக்கரணம் போட்டாலும் அவியருக்குக் குடுக்கிறல்ல'
தந்தையின் மடிக்குத் தன் பன் போனுன் சிறு பிள்னேகனி நண்டும் கும் மா ள விட்டு க் கொண்டு புறவளப் பக்கம் ஓடினர். சிறுபிள்ளேயின் அரை மூடி சலங்கைகள் "கலீர் கலீர்! என இசை பெருக்கி ஓய்ந்தன. மூத்தவள் தங்க நகைகளேக் ாண்ட உற்சாகத்தில் அன்னிந் திருந்த வெள்ளிநகைகளே மன் மீளவென்று கழற்றிக் கொண்டி ருத்தாள் சேமனுக்கோ பசி குடஃப் பிராண்ட்வே எழுந்து குசினிக்குள் சென்ருர், அவருக்கு விருப்பமான பண்பான் மீன்கறி 激 வரால் பொரியலும் மீன் பாட்டுச் சுண்டிய நிராய் சுண் டலும் கறிகளாய் இருந்தபடி பால் ஒரு பிடி பிடிக்கத் தொடங் கிணுர்,
ஹோவ்." கனமான தொண்டையிலி ருந்து கிளம் பிய அதரமான எவறையோடு வெளியே வந்த சேமனின் முன்னுல் மூத்தவள் தங்க நகைகளால் பூத்து க் குலுங்கிப்போய் நின்ருள் அவர் கண்களேயே அ வரால் நம்ப
முடியவில்லை. தன் எதிரில் நிற் 'து தனது மகளா? அல்லது
தேவ லோகத்திலிருந்து இறங் கிய ஏறார்வின் பொண்ணு என்று அவரால் நிதானிக்க முடி பாதிருந்தது. சந்தன நிறத்தில் கொடி போன்ற தேக வாகுடன் இயற்கையான அழகுச் சிலேயான அவள் தகதகக்கும் தங்க ஆபர னங்களால் மெருகு பெற்று நின்ருள் கழுத்தோடு ஒட்டிய ஒட்டியானம், நீண்டு தொங்கும் மண்ணிச்சரம், காதுகளிற் கூர்
அல்லுக்குத்தும், சிமிக்கு வாணி
பும், பூனே க்கு ட் டி கையில் தாவத்துக் கொடி, மணிக்க்ட் டுக்களில் கட்டு வாயல் காப் புக்கள் வைத்த கள் வாங்காது அ வளி ன் திருக்கோலத்ததப் பருகிக்கொண்டு நின்ருர் .
போதும் புள்ளேக்குக் கண் பட்டுப் போகும். தாய் தகப் பண்ட கன்தான் ஒரடிப்படும்" மன்ேவி அவர் கவனத்தைக் சுலுேத்தாள்.
போடி விபத்தியக்காரி என்ர புள்ள் க்கு என்ர கண் படு
சேமன் சாடை விரிந்து கிடந்த கற்பன் பாயின் படிப்பை விரித்துவிட்டு சிரமத்தோடு அமர்ந்தார். மகள் உற்சாகத்துடன் மத்துக் கவிட யும் வேல்ேபைத் தொடர்ந்தாள் தாய்க்காறி காய்ந்த கொச்சிக் காய்கள் சிவதையும் நட்ப் யு க் கற்கள் அடுப்புத்தணலில் போட்டாள்
பாத்தா பாசி கொச்சிக்காய் புரையேறவுமில்ல நடப்புக்கல்லு வெடிக்கவு கண்படாது
ETTELIGIT ? "
சொல்லிக் கொண்டே வெற் றிலே வட்டாவுடன் கணவனுக் குப் பக்கத்தில் வந்ததர்ந்தாள்
சேமன் இபுருமுேக்கு இந்த முறை வேளாண்மையும் புகை பிஃபும் அட்டி சொல்லாமல் அறுள்ள வழங்கின. சேன்
நிரேனேக்கு வந்து
ஒரு கிள்ளும் எடுத்து
 

பதவியால் பனச் சிலாக்சிங் கள் தாராளமாகக் கிடைத்தஐ
தல்ால் மனேவி மக்களின் வள்ளி நகைகளேத் தங்க நகை களாக மாற்றத் துணுரிந்தார். வெள்ளி நகைகள் கெளரவக் குறைவாகி, தங்க நகைகள் பெருவழக்காகத் தலேவைக்கத் தொடங்கி விட்டனவல்லவா? மேன் அதில் பின் நிற்கலாமா? இந்தப் போசுத்தோடேயே மிக ளின் திருமணத்தையும் செய்து முடிக்க அடுக் குப் பண் ண் த் தொடங்கினூர்,
ஆசுரு உம்மா பழப்பர் தைப்" புர்க்குவெட்டி இடுக்கில் வைத்து நறுக்கென வெட்டிலுள்: பாக்கு இரு துண்டாகியது. தோல் சீவி அரியத் தொடங் கினுள்.
நரச நம்மா துெக்கோவ் கிரைத்தடித் தென்னங்கன்று பTள தள்ளிற்றுகா: எ ன் ன் பென்னும் பெரிய பாளர் பளக் கவிபாரம் எடுக்க வேணும் டிம்மர், "சனங்களக் கூப்பிடுமா!
தன் வேலேயை முடித் து விட்டுக் கிணற்றடிக்குச் சென்று முத்திவளன் பாஃாயைக் கண்டு கும்மாளமிட்டாள்
ாங்ன புள்ள நீ குழந்தை மாதிரி, ங். என்ற உடனே பார்க்கவியானதும் ந டத் தி ட வாமா? பெரிகி ஆயத்தப்படுத்தி வேணும்: மஞ்சலரைக்க வேனும் வெடில் வாங்க வேணும் வTற சனங்களுக்கு தின்னக்கடிக்கப் போட ஆயத்தப்படுத்த வேணும்
நாளக்கி நல்லநாள் 點電亞 நான்க்கி பாப்பம்"
மகள் தாய் சொல்த்
தட்ட முடியாமல் தன் பில் ஈடுபட்டாள். ஆசுருடம்மா பாக்குச் சிங்கில்க் க்ண்வனிடம் கொடுத்து விட்டு காம்பு கிள்ளி வெற்றிலுேக்குச் சுண்ணும்பு இட
விள்ை ஆண்ணும் த பு mo u
வெற்றிலேயை மடித்துக் கனவ னிடம் நீட்டியவாறு பேச்சை ஆரம்பித்தாள்.
மத்தியானத்துக்கு முந்தி காக்கா பொண்டி வந்துபோனு' ரேமன் வெற்றிலே பாக்கை அது க் விக் கொண்டிருந்தார்: :வாரின் விளிர் வழியப் ாேவதைக் கண்ட் மனேவி படிக் கத்தை எடுத்து ஏந்திப் பிடித் தான். படிக்கத்தில் உமிழ்ந்து விட்டு, கடைவாயைக் அராவிக் கொண்டார். அவள் படிக்கத்து கீழே வைத்துவிட்டுப் புன்கயில் நறுக்சையும், gth !ill" புப் பொளகையும் எ டு 岳、 கொடுத்தாள்.
呜斤品巫m @虚 வருத்தத் தாலே பெளப்பேஞ் இல்லேயோ ாண்டு ஒபெத்துச் சொல்லு ராராம். கண்ணுேகி ம த இன் ர நீரியானத்தப் பன்னிப்பார்க்க வேணுமெண்டு துங்கலாய்க்கா TTih"
। ।।।।
தானே"
நாம் ஏர் கோல்ம் பண் ஆம் அவிய எப்பிடிச் செய்யிறது"
வருட புள்ளக்கி கலியா னைத்துக்கு நாமென்னத்துகள் பண்ணுறு அபி தோடங்கினு நாளும் போய் நீண்டு செய்து முடிச்சிற்றுவரலாம்.
பென் நம்மட பெண்ணு இருக்க, நாம் அடுக்குப் பண்ணு
ಕ್ಲಿಜ್ಜಿ! நான் படிச்சிப் படிச்சிச்சொல்விற்றன் அந்தச் சம்மந்தம் நமக்குவேணுமெண்டு எங்கயாவது ஒரு பெண்ணப் பாக்கச் சொல்லு நாமனும் தவிஒத்தாசையச் செய்வம்"
அந்த மாப்பிள்ளக்கும் ராஜாக் கூறபோட்ட பெரண் நம்மட பொன்தான் நம்மட அப்பா பாட்டன் பூட்டன் காலத்
Af
1 ܒܬܐ .

Page 21
திலிருந்து வந்த வழக்கத்துக்கு மாறு செய்யாதங்க. நீங்க
DnTLDT L- Lo #5 6ör. Så sub LD mt எனக்கு சாணக் கூற போட்டா. இது பரம்பரையா வந்த சங்கி
லித் தொடர். அத அறுக்கா தங்க, அல்லாக்கும் பொருந் தாது எனக்கும் மா ர் மடி தாங்காது"
இசைச் சொல்லி முடிக்கும் போதே பால் சுரந்த முலையாக அவளது கண் கள் ஐ.டைந்து சொரிந்தன
*அது க் கெ ல் ல 7 ம் இரு தெறத்தாருக்கிட்டயும் த குதி இருந்திச்சி செய்தாங்க. என்ர தகுதிக்குக் குறைஞ்ச இடத்தில் மாப்பிளை எடுக்க மாட்டேன். அதுகும் ஊட்டுக்கு வாற முதல்
prTitu96ir åT*
அவளுக்கு அழுகை ஆக்ரோ ஷமாக ம்ாறியது.
"என்ற காக்காக்கு ஒண்டும் த குதி கொறயல்ல. இரண்டு மூணு வருஷத்துக்குள்ளதானே அவர்ர சொத்து சுகமெல்லாம் அழிஞ்சிச்சி. போன செல்வம் திரும்பிவர நாளெடுக்காது. இப்ப பாலில்லாட்டிபும் பால் வார்த்த பான என்ர காக் கா. அத மறந்திராதீங்க. ரெண்டு மூணு முறை வெள்ளாமையும் போயிலவாடியும் கையுட்டுச்சி. கடயோக காணிய அடவு வச்சி மூன்று போயில வாடி வச்சார் ஒளக்கலாம் எண்டுதான் . அவர்ர போதாக் காலம் போயிலக் கண் டுகளையும். மாடு கண்டுகளையும் வெள்ளம் அள்ளிக்கிட்டு போயிற் றுது அவர்ர காணி பூமியையும் நீங்கதானே அறுதியாக்கி எடுத் தீங்க. அது எங்கட பாட்டன் பூட்டன் சொத்து. அத பொறத் தியான் வந்து ஆள நானுட 19ாட்டன் அந்த மகுமூது
மரைக்காண்ட ம க ன் ஏண்ட ஊட்டுக்க கால் மிரிக்க உட மாட்டன்"
"மகுமூதுர ம க ன் த ரான்ே வேணும்; அத நானும் கை கழு விற்றன்"
Syans GSGMdl- u முகத்தில் நம் பிக்கை ஒளி பிரகாசமிட்டது,
"நான் போடி மாத்திரமல்ல. இப் ப சேமன். உத்தியோகம் பார்க்கிறவன் , எனக்கு மரும கன வாறவனும் உள்ள இடத் துப் பிள்ளையா, உத்தியோக காறனத்தான் இருக்கவேணும் . அதுக்கேத்த மாப்பிள்ளையா பாத் துட்டன். நீ கவலப்படாத"
"இந்தச் சேமன் பதவி எங் கால வந்திச்சி. ஒங்களுக்கு எதி ராக ஒங்கட தம்பி எலக்சன் கேட்டாரே. என்ர காக்காவும் என்ர குடும்பமும் சேந்து ஒங்க துண்டுப்பொட்டிய நெறப்பினத் தாலத்தான் வெண்டிங்க, சேமன் பதவியும் வந்திச்சு. ஒ ங் க ள வெல்லவக்க என்ர காக்கா பட்ட பாட்ட மறந்திற்றியள. அவர்ர வண்டில்ல மஞ்சக் கொடி கட்டி சனத்த ஏ த்தி ப் பறிச்சார். மருமகப் பொடியன் பத் து த் தரம் கள்ளத்துண்டு போட்டான் எண்டு பெருமையாப் பீத்தியடிச் சயளே. ஆக அஞ்சி துண்டால தானே வேண்டீங்க"
சேமன் இபுருகீம் ஊறிவந்த எச்சிலை புளிச்சென்று படிக்கத் தில் துப்பினுர், பின் எழுந்து நின்று ,
"ஒண்ட காக்கா பொண்டி போட்ட சாணக் கூறைய இப் துவே கொண்டுபோய்க் கொடுத் திற்றுவா" என்று உறிதியாகக் கூறிவிட்டு பட்டுச் சால்வையை உதறித் தோளிலே போட்டார். ஆசுரு பேயறைந்தவள் போல பெருமூச்செறிந்தாள்.

வெளிச்சம்.?
திக்குவல்லே - கமால்
SiSqAM SS SLALSLSL qqLALAL LALALAL LqLAL MLALALALAL SLLMLL LLLLL qqqqLLLL LALAL SAqqLML LqL LALA A SqSAAM
D&ரிபு" மூதல் 修 'இஷா வரை அந்தச் சந்தியில் கொஞ் சம் சனச்செறிவுதான்.
கோப்பி உமலோடு வந்த
குஞ்சலிக் காக்கா, மொத்தமாக
அவற்றை வாங்கிக் கொள்ளும் கடைப்படியில் குந்திக் கொண்டி ருந்தான். அவன்போல் காலை யிலிருந்தே காடுமேடெல்லாம் கால் ந  ைட யாக த் திரிந்து கோப்பி சேகரித்துக் கொண்டு வந்த எ த் த னை யோ பேர் உள்ளே . .
அப்பாடா : அ  ைர மணி நேர க் காத்திருப்புக்குப் பின் உள்ளே செல்லும் வாய்ப்பு அவ ருக்குக் கிடைத்தது. கோப்பிக் கொட்டைகளைப் lH IT L. g. L'i
பார்த்து தராசுத் தட்டுகளிற்
போடும்வரை அவனுக்கு எந்தப் படபடப்பும் இருக்கவில்லை.
நிறை அதிகம் பிடிப்பதற் காக நீர் தெளித்து அல்லது குறுமணிக் கற்களைப் போடும் அற்பத்தனத்துக்கு அப்பாற்பட் டவள் குஞ்சலிக் காக்கா,
இருத்தல் பதினுன்கு ரூபா
வீதம் ஏழு இருத்தலுக்கும் கிடைத்த காசைப் பெற்றுக் கொண்டு. வழமைபோல் அடுத்
தடுத்த க  ைட க ரூ க் கு ஏறி இறங்கத் தொடங்கிஞன்.
இருத்தலுக்கு இர ண் டு ரூபா நயம் . ஒவ்வொரு தாளும் சேரும் கோப்பியின் அளவு. p இவற்றில்தான் குஞ்சலிக் காக் காவின் குடும்ப வாழ்வே தங்கி யுள்ளது: x
தேங்காய், கறிகாய் சகிதம் மறக்காமல் ஐந்து பீடிகளுமாக வீட்டுக்குப் புறப்பட்டான்
எங்கும் சிறுசிறு குழுக்களாக ஏ தோ அலாதியான பேச்சு அவற்றுக்குக் காது தாழ்த்தவோ கருத்துப் பரிமாறல் செய்யவோ அவனுக்கேது அக்கறை?
நாளை எந்தப் பக்கம் திரியப் போவதென யோசனை பண்ணி யவனுக வீட்டையடைந்தான். தார் ரோட்டைத் தா ண், டி அகன்ற மண்பாதையொன்றிலி ருந்து விலகிய மேட்டுப் புற மொன்றில்தான் அவனது வாச ஸ்தலம் அமைந்துள்ளது.
மேசையில் குப் பி.லாம் பொன்று ஆடியசைந்து ஆடிய சைந்து வெளிச்சம் பரப்பிக் கொண்டிருந்தது.
குசினிக்குள் இராச்சாப்பாட் டுக்கான ஏற்பாடுகள் போலும்

Page 22
காலடிச் சத்தம் கேட்டதும் ஓடிவந்து கைச்சுமையை எடுத் துக் கொண்டாள் அவ ன து மனேவி ஜைனமுத்து
த லேயிலிருந்து அங்குமிங்கு மாக அந்ேத அவனுக்: ' சு தி  ை வரவேற்பளித்தது
圆圆圆圆圆圆圆圆圆卧圆圆圆
அப்பாஸ் அவர்களுக்கு திரும்பவும் கண்பார்வை
இந்தியாவின் பிரபல் எழுத் தாளர் குவாஜா அகமதி சி' பாஸ் அவர்களுக்கு 茜一 岛 நான் கு ஆண்டுளார்க் பார்வை தெரியாமலிருந்தது
இவருக்குப் | ii | திரும்பாது என எல்லாரும் விசு விட்டுவிட்டனர்.
சில மாதங்களுக்கு முன்பு சோவியத் யூனியனிலிருந்து தின் சிகிச்சை நிபுனர் பேராசிரியர் GETTILL TT5 இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது அப் பாஸ் அவ்ர்க்ள் அவரைச் சென்று பார்த்தார்.
அப்பாஸ் அவர்களின் கண் தஜாப் பரிசோதித்துவிட்டு மாஸ் கோவுக்கு வாருங்கள் தி S II நாளில் உங்களுக்குக் கண்பார்வை தந்து விடுகிறுேம் என்று கூறிச் சென்ருர்,
அதன்படியே அப் பாஸ் அவர்கள் மாஸ்கோ சென்டூர் கள் கண் ஆபரேஷன் நடந்தது. அப்பாஸ் கண்பார்வை பெற்று விட்டார்.
அவர் பூரண குண்ம் பெற்று நாடு திரும்பி, தன்து எழுத்து
பணி தொடங்க வாழ்த்துகின் ருேம். 哑
மற்ற வேண்களில்,
பழைமையை எடுத்துக் காட்டும் அச்சாய்வுகதிரை சில இரவுக வில் அவனுக்குக் காட் டி லும் கூடத்தான்.
அவனுக்கு இரவில் மாத்தி ரந்தான் ஏதாவது ஒழுங்காக என்றில்லாவிட்டாலும் மனேவி பிள்ளேகளோடு சந்தோஷமாக
FFF" | 7 d. ைே:
வழி வழி பெல்லாம் பாண்துண்டும் கசட் டையுமாக நகர்ந்துவிடும்,
சில நிமிடங்கள் சாய்ந்த படியிருந்த குஞ்சவிக் காக்கா வுக்கு மஃராவியின் தே நீர்க் கோப்பை மிகுந் த உசாரை புளித்தது. அன்புக்குரியவரிக ளின் கைகளுக்கு எப்பொழுதுமே யொரு அவாதியான ஆற்றல் இருக்கத்தானே செய்கிறது.
துப்பொழுதுதான் அவன் மேசைன்யத் தாண்டி சுருண்ட படி பாபில் படுத்துக் கொள் டிருந்த மகளேக் கவனித்தான்.
இந்த நேரத்தில் என்ன படுக்கர்" என்ற கேள்விப் பான்
மயில் அமைந்த Yils TE பார்வை ஜெய்னமுத்துவுக்குப் புரிந்துவிட்டது
அவள் இதுக்கங்கள ஸ்கூ லுக்குப் பேர்றல்லபாம். எல் லாப் புள்ளயருமே வெ எ கி வெங்கிப் பெய்த்து. அவங் மு னு பேராம் சந்த, நேந்து தானுச்சினுரட்டு காதர்ட மக ஞரும் எங்கியோ ஸ் கூது க்கு பெய்ந்தாம்.
பருத்தக் குட்கம் செல்வி பாம் இனி வாரல்லயென்டு. அப்ப இவள் மட்டும் சும்மா ாம்ா பெய்த்து எனத்தியனிக் தி வேலரி படிச்சிக் குடுக்க பாஸ்டரிமாரில்லாட்டி போர்த் திலெம் வேவில்லேன்
 

அவளுக்கு படிக்கியத்துக்கு என்ன பூந்ததீதுக்கு எங்கிளுக் கும் வழியோனேன். அ விட பின்டே நாள் போறபாடு எங் குளுக்கும் தேரீம். அவன் சுருக்கமான விளக்கக் குத்பா ஒன்றையே நிகழ்த்தி முடித்து விட்டு நடுப்பில் மனக்கும் தேங் காய்ச் சுண்டலேப் புரட்ட ஓடி ஞள்.
ஜென்னத்து
குஞ்சவிக் இரக்கர் பின் ஒரே மகள் சென்ற தடவை ஒன்ப தாம் வகுப்புப் பரீட்சையில் சித் தியடைந்து, உள்ளூர்ப் பாட சாலேயிலேயே ஏற்ற ஒழுங்குக ளோடு மேல் வகுப்பில் படித்து வருபவள்.
துரதிர்ஷ்டவசமாக இடை யில் நிகழ்ந்த இன்க் குழப்பம். உயிர்களுக்கும் உடைமைகளுக் கும் மட்டுமல்ல, சு ல் வி யிலும் பரிய பாதிப்பை ஏற்படுத்தி
விட்டதல்லவா?
யாழ்பபாணப் பகுதியைச் சேர்ந்த, அதுவும் ஆசிரியைக ளென்ருல், சிங்கள மக்கள் செறிந்துவாழும் இப்படியோரு
கிராமத்துக்கு பயமின்றி எப்படி வரமுடியும் அதன் விளேவு
மாதங்கள் ஆறு ஏழென்று விட கு எண் டு கொண்டிருந்தன. பழைய ஆசிரி ஈய கி ஸ் வரவு மில்ஃப், புதியவர்கள் நியமிக்கப்
படவுமில்லே அதைப்பற்றிய அக்கறையும்.
வசதி" என்று சொல்வக்
கூடிய அளவுக்கு இல்லாவிட்டா லும், எப்படியெப்படியோ ஒழுங் கமைத்துக் கொண்டு வெவ்வேறு
பாடசாங்களுக்கு ஒவ்வொரு பிள்ளைகளாகச் சென்று கடை
சியில் எதற்குமே வழியற்ற இப்படி இரண்டொன்று:
குஞ்சலிக் காக்கா நீண்ட பெருமூச்சொன்றை விட்டவாறு மீண்டும் சாய்ந்தான். இந்த இக்
கட்டாா நிக்யை உரிய இடத் துக்கு எடுத்துச் சொல்வியோ, அல்லது வேறு வழிகளிலோ
பதின் நடவடிக்கைகளில் பிரபா ஈசயோடு. பெரியவர்கள் எவருமே ஈடுபடாததை நினேக்க அவனது மனதை வேத சின் சின்டியது.
அவனுல் என்னதான் செய்ய முடியும் ஆவண்ப் போன்ற சிவு பெற்ருேfகளும் சில ஆசிரியர் கரும் மாத்திரம் பேசித்திரிவு தாங் காரியமாகிவிடுமா? எதற் கும் அரசியலின் க  ைடக் கண் பார்வை பட வேண்டிய கால மல்லா இது
நாவேந்து நாட்களுக்கு முன் புதான்.
கொழப்பத்துக்குப் பொறகு எல்லா ஸ்கூல்வேம் இப்பிடியாம், எங்கியோ ஆாரால்சேத்தி சம்ப இளம் குடுக்கியத்துக்கு ரேண்டு மாக்டரீமாரக் கெT என ந் து படிப்பிக்கியாமே! இங்கே ம்
தாராலும் இப்பிடி"
- முக்கியமான் பிரகிருதி ஒருவரிடம் சாடையாகப்போட்
டான் அவன்.
"இந்த இரானுகளுக்கு என் ருேரு படிப்பள். வண்டிய வங்க் வேண்டியவேடத்துக்கு அறுப்பி படிப்பிக்கட்டும்." இதுதான் கிடைத்த பதில் அதற்குமேல் குஞ்ச விக் #ff"##ff ": பேசவில் பேசி என்னதான் பயன்?
ஜெய்ன முத்தோவ், பக் கத்து வீ ட்டு க் கஞ்சிப்பியின்
குரல் பின்பக்கமாக ஓவித்த ಶಿ

Page 23
"ஆ. என
"கருவேப்பில ஒரு இத்தி கேட்டுக்கொளவென்டு வந்தேன்! தெரீமோடி செய்தி.எங்களூருக்கு லைட்டு வரப்போருமேன். இன் டக்கி எல்லாரும் கொழும்புக்குப் பெய்து ம ந் தி ரியக் கண்டு பாஸாக்கீட்டு வந்தீக்காம். அன்ன எல்லாரும் கதக்கிய. அப்ப வெடிய வெடிய ஊட்டி யல்லயெல்லம் சொகர நெசுக்கி னுெடன பெல்பு பத்தும். லேட்டு வந்தாலும் பைப்பு வந்தாலும் ா கி க ட செய்தி எந்தநாளும் இப்பிடித்தான்"
இதைக் கேட்டதும் குஞ்ச லிக் காக்க " வுக்கு, கா லை யி ல் போகும்போது குறு க் கிட் ட. ராமிஸ் முதலாளியின் காரும் அதற்கு ஸ் இடம் பிடித்துக் கொண்டிருந்த "இலக்ஷன் அவு லியாக்களி' ன் தோற்றமுப் நினை வைத் தொட்டது.
கல்வி, பாடசால், பொதுப் பிரச்சினை அவர்களுக்கு முக்கி: மல்லவே அவர்களது பிள்ஃ' களை அனுப்பத்தான் பணமு: ந க ர் ப் புறப் பாடசாலைகளும் இருக்கின்றனவே!
பு  ைக த் து கொண்டிருந்த பீடித் துண்டின் இறுதி இழுப பைச் சுவைத்துவிட்டு, அதனைக் காலுக்கடியில் போட்டு மிதி த தான். அது கொஞ்சம் சுட்டது தான்! அப்படித்தான் இந் 3 சுயநலமிகளையும் நசுக்க வேண்டு மென்ற உணர்வு அவனுக்கு
எழுந்ததோ என்னவோ?
"டக்" கென்று கதவுத் தட்டு மூடப்பட்டது. அதனுfட 3 வீசிப் பாய்ந்த காற்று குப் லாம்பை "பக்" கென்றணைத்தது,
எங்கும் இருள்...!
அதற்குள் மகள் ஜென்னத் துவின் முனகல் மெல்ல ஒலித் ટૂંક • القوة قوي
உள்ளூர் உணவு உற்பத்திப் பொருட்களான வெங்காயம், உருளைக் கிழங்கு, மிளகாய் போன்றவை களும் பீட்ருட்டும் ஏனைய மரக்கறி வகைகளும் கொமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து கொடுப் பதில் கொழும்பு மா நகரில் பிரசித்தி பெற்ற ஸ்தாபனம் இறக்குமதி செய்யப்பட்ட ஏனைய உணவுப் பொருட் களும் சாய்ப்புச் சாமான்களும் இதே ஸ்தாபனத்தில் சகாயமான விலைக்குப் பெற்றுக் கொள்ளலாம். முக்கிய குறிப்பு: w
சவ்வரிசி, பார்லி, வெந்தயம், மஞ்சள், சிங்கப்பூர் சாம்பிராணி, சீயாக்காய் போன்றவைகளுக்கு எம்மை நாடுங்கள்.
ரத்கம ஸ்டோர்ஸ் 64. நாலாம் குறுக்குத் தெரு, கொழும்பு - 11.
தொலைபேசி: 20693
4.

1Z.
கட்டுரைப்
பிரவேசம்
a
t ~~
S
gurt. Gogu J.TTT
தமிழ் இலக்கியத்தின் நவி னத்துவத்தைப் பற்றி ஆய்வறி நோக்கிலும் அழகியல் நோக்கி லும் ஆழ்ந்து சிந்தித்த மணிக் கொடி குழுவினரின் பார்வை யிலே பளிச்சிட்ட கட்டுரை இலக் கியம், அவர்களின் பின் வந்த இராட்சத விமர்சகர்களாற் கூட ஆழ் ந் து நோக்க்ப்படவில்லை என்பதைக் கூறுவதற்குக் கூச்சம் டைய வேண்டியதில்லை,
**இன்று கட்டுரை வ ச ன நடையின் இலட்சிய உருவமாக நின்று இலக்கியத்தின் பரப்பு முழுவதையும் ஆக்கிரமிக்க முயலு கிறது. கட்டுர்ை மூலம் எதையும் சொல்லலாம் என்னும்படியாக ன்று அது அவ்வளவு வளர்ச்சி பற்று விட்டது.’’ என்று 1944 ஆம் ஆண்டு தினமணியில் கு.ப. ராஜகோபாலனுல் முன் வைக்கப் பட்ட கருத்து, 1960ஆம் ஆண் டிலே தேவை நோக்கி மீண்டும் எழுத்துவில் மறு பிரசுரம் செய் யப்பட்டது.
அந்த இடைவெளிக் காலத் திலே கட்டுரை இலக்கியம் வேக மாக வளர்ச்சியுற்றுச் சென்றமை ட்டை வெள்ச்சமாக இருப்பி
தோனும்,
னும், மதிப்பீடுகள் மந்தம்ாகவே இருந்தன. இந்திய சுதந்திரப் போராட்டங்களின் எழுச்சி, பகுத்
தறிவு இயக்கங்களின் வளர்ச்சி,
பேர்ன்றவற்றின் எடுப்பு நிலைக ளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பலம் கட்டுரை இலக்கியத்தை விறுவி றென்று வளரச் செய்யும் துலங் கலையளித்தது.
இக் கட்டத்திற் பிறிதொரு சங்கதியும் வெளிச்சத்துக்கு வரு கின்றது. பேச்சுக்கலைக்குரிய சில வியல்புகள் கட்டுரை இலக்கியத் துக்கும் ஏற்புடையதாக விளங் கும் இணைப்புச் சரடுகளை நோக்கு கையில், உள்ளடக்கமாக அமை யும் விஷயஞானமும், உருவமா கத் துலங்கும் கவர்ச்சியும் நுட்ப மும் மிக்க மொழிநடையும் கை கொடுக்கின்றன.
தமிழிலே கட்டுரை என்ற கலைவடிவின் ஆளும்ை முதல்வ ராக விளங்கும் ஆறுமுகநாவலர் பேச்சுக் கலையிலும் வல்லவராக விளங்கியம்ை அந்த இணைப்பு நுட் பங்களை வீரியப்படுத்துகின்றன. *பதிசாத்திரத்தில் விருப்பமில்லா நித்திய கருமத்தை விடுத்தோனும், ஈசுர நிந்தை செய்வோனும், குருநிந்தை செய் வோனும், தேவத்திரவியங் கவர் வோனும், கொலை செய்வோனும், புலாலுண்போனும், கள்ளுண் போனும், கள்வனும்.’’ என்ற வாறு மேடைப் பேச்சைத் தழு விச் செல்லும் கட்டுரையாக்க வசன நடையை ஆறுமுகநாவலர் மேற்கொண்டார். நாவலரின் வச னங்கள் நீண்டவையாக அமைந்த போதிலும், அவற்றிலே எளிமை சுவாலித்திருந்தமை, கட்டுரை யாக்கத்திலே பேச்சுக்கலையின் செல்வாக்கைப் புலப்படுத்துகின் நிறது. தவிர்க்கமுடியாதவாறு, திராவிடமுன்னேற்றக் கழகத்தின ரது கட்டுரையாக்கங்களிலும் இப் பண்பு விரவியிருந்தது.

Page 24
நாவலரது கட்டுரையாக்கம் பற்றிய கருத்திலே தமிழ்க் கலைக் களஞ்சியம் குளறுபடியாக நடந் துள்ளமையைப் பலர் அறியாதி ருக்கலாம். **கட்டுரையென்று முற்றிலும் கூறத்தக்க முறையில் பலபகுதிக்ளை எழுதியவர் யாழ்ப் பாணத்து ஆறுமுகநாவலர் ஆவர்" என்று கலைக்களஞ்சியம் தொகுதி மூன்றிலே குறிப்பிட்டுவிட்டு, தமிழ் இலக்கியவரலாறு பற்றி எழுதப்பட்டுள்ள ஐந்தாம் தொகு தியிலே, கட்டுரை இலக்கியம் பற்றி விரித்துக் கூறுகையில், ஆறு முகநாவலர், சி. வை. தாமோ தரம்பிள்ளை. விபுலானந்த அடிகள் ஆகியோரின் பெயர்கள் மருந்துக் கேனும் காட்டப்படவில்லை. இத் தகைய ஒரு தவறு தமிழ்க் கலைக் க்ளஞ்சியத்தின் பக்கங்களுள்ளே எளிதில் மறையக்கூடியதன்று.
இலங்கையிலே தமிழ்க் கட் டுரையாக்கம் பொலிவு பெறுவ தற்குரிய வரலாற்றுச் சூழலை நோக்கும்பொழுது, கிரீஸ்தவக் கல்வி இயக்கங்களும், இந்துக் கல்வி இயக்கங்களும், 18:3ஆம் ஆண்டு நிறுவப்பெற்ற யாழ்ப் பாண துண்டுப்பிரசுரசங்க்ம் வெளி யிட்ட பிரசுரங்க்ளும், உதயதார கைப் பத்திரிக்ை பிரசுரித்த வாதப் பிரதிவாதங்களும், வெகுஜனப் பண்பு தழுவிய பேச்சுக்கலையின் வளர்ச்சியும் இணைத்து நோக்கு தற்குரியன. m
அத்தகைய பின்னணியில் ஆய்வறிநோக்கும் தமிழ்ப் புலமை யும் இணையத் தொடங்க் சி. வை. தாம்ோதரம்பிள்ளை யவர்களின் கட்டுரையாக்கங்கள் ஆய்வு நோக் கிலே திசை கொண்டன. அதன் வளர்ச்சி நிலைகளை விபுலானந்த அடிகளின் ஆக்கங்களிலே மேலும் ஆழ்ந்து காணமுடியும்.
தமிழகத்திலே தோன்றிய தனித்தமிழ் யக்கம், தனித் திமிழைப் பயன்படுத்தக் கட்டு
ரையைக் கருவியாக்கும். முயற்சி
யிலே, ஒப்பீட்டளவிற் கூடிய கவனஞ்செலுத்தியமையால், கட் டுரையின் பொருட்கனதிக்கும், அழகியல் வார்ப்புக்கும் தமது ஆற்றலுக்குரிய பங்களிப்பைச் செய்யவில்லை என்று கூறினும் பொருந்தும் ,
தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கங்களைப் பார்க்கிலும், எளி மை இயக்கம் தமிழ்க் கட்டுரை வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப் டைச் செய்துள்ளது என்று கூறு தல் மேலும் பொருத்த முடைய தாகும். 'ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்க ளெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுதல்' என்ற பாரதியின் குறிக்கோள், (பாஞ்
சாலிசபதம் முன்னுரை) மக்களை
யும் இலக்கியங்களையும் இணைக்க முயன்ற எழுத்தாளர்களது கட் டுரையாக்கங்களிலே புகுந்து விளை штtg.60т.
* 'திக்கும் சிவந்தது. செக்க ரும் பரந்தது. பகலும் போயிற்று: இரவும் வந்தது. இருளும் செறிந் தது. சந்திரனும் எழுந்தது. தா மரையும் குவிந்தது. குவளையும் மலர்ந்தது. விண்மீன்களும் விரிந் தன. . இப்படியே இரவும் போ யிற்று. காலையும் வந்தது.' (சுன் ஞகம் குமாரசாமிப்புலவர் 18541922 சிசுபாலசரித்திரம்) என்ற வாறு எளிமை தழுவி, சிறிய சிறிய வசனங்களாற் கட்டியெழுப் பப்பட்ட உரைநடை கட்டுரை யின் அழகியற் பரிமாண வளர்ச் சிக்கு நெம்புகோலாயிற்று.
ஆயினும் தனித்தமிழ் இயக் கத்துக்காகக் கட்டுரைகளைக் கருவி யாக்கும் பண்பு தொடர்ந்து நீடிக் கலாயிற்று. ‘இந்நூற் கட்டுரை கள் பள்ளிமானவர்கட்கும் மற் றும் தமிழ்ப் பொதுமக்கட்குந் தனித்தமிழ் அறிவையும் உல்ச
d4

இயற்கை, மக்களியற்கைகளிற் காணப்படும் அரும்பொருள் உண் மைகள் புதுமைகளைப் பற்றிய மெய்யறிவையுந் தருவனவாகும்"
(இளைஞர்க்கான இன்றமிழ் திரு
நெல்வேலித் தென்னிந்திய ச்ைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், முன்னுரை) என்ற கூற்றிலும் தனித்தமிழ் அறிவுக்கு முதன்மை அளிக்கப்பட்டுள்ள மை யைக்
iT ara)Tib .
கடந்த ஒன்றரை நூற்ருண் டுக் காலமாக் தமிழிலே வளர்ச்சி பெற்று வரும் கட்டுரையாக்கங்
களை, வரலாற் றுக் கட்டுரை,
விளக்கக் கட்டுரை, விவரணக் கட்டுரை, கற்பனைக் கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரை என்று, வாய்பாடுபோலப் பழகிவரும் பிரிவுகளிலே பகுத்து நோக்கும் பொழுது, சில தகவல்களைப் பெ றக் கூடி யதாக இருப்பினும், பல புதிய கோணங்களிலே சிந்த னேயை விரித்துக் கட்டுரைகளை உரைத்துப் பார்க்க முடியாமலி ருக்கின்ற அவலங்களையும் அவ தானிக்க முடிகின்றது, m
இலக்கியத்தை மதிப்பிடும் வழக்கமான அளவு கோல்களு டன், பின்வரும் அளவு கோல்க ளையும் இனத்து மதிப்பீடு செய்ய முயன்ருல், மேலும் புதிய தகவல் களை நிரப்பிக்கொள்ள முடியும்
1. சுயாதீனப் போக்கும்
எடுப்பார் கைப் போக்கும்
சுயாதீனப் போக்குடைய கட்டுரைகளில் எழுதுவோரின் தனித்தன்மையும் அவர்களுக்கே யுரிய முத்திரைகளும் காணப்ப டும். இதற்கு மறுதலையானதே ள்டுப்பார் கைப்போக்கும் ஆகும். தனித் தன்மைக்குப் பதி லா க. பிறரிலே சார்ந்து நிற்கும் பண்பே
எடுப்பார் கைப்போக்கில் முழித் துக்கொண்டு நிற்கும்
2. முழுமைப் போக்கும்
இடை வெளித்தன்மை யும் y
முழு  ைம ப் போக்குடைய கட்டுரையாளர்கள் தாம் எடுத் துக்கொண்ட விஷயம் எத்துணை பெரிதாக இருப்பினும் இயன்ற வரை முழுமையான காட்சியை உருவாக்கி விடுவார்கள். முழும்ை யிலே சிதறல்கள் கானப்படும் பொழுது இடைவெளித் தன்மை யுடைய கட்டுரைகள் தோன்று கின்றன. 3. அகன்ற பரப்பில் அடக்குத
நுட்பம் r க் இவேறுபடுத்து தலும்
பழக்கப்பட்ட பெரிய பிரிவு
களுள்ளே எடுத்துக்கூறும் விஷ
யங்களை அளந்து கொட்டும் கட் டுரையாக்கங்கள் முதலாவது பிரி லே வருகின்றன. பிறர் வழமை யாகச் சிந்திக்காத நுட்பமான பாகுபாட்டிலே எடுத்த பொருளை வகைப்படுத்தும் ஆற்றல் இரண் டாம் பிரிவிலே வருகின்றது.
4. பழை ய எண்ணக்கருவும்
புதிய எண்ணக்கருவும். பழக்க்ப்பட்ட அகவுருவங்க் களை உருவாக்குதல் முதலாவது பிரிவிலும்
புதுமையான அகக் காட்சி களை உருவாக்குதல் இரண்டாவது பிரிவிலும் அடங்குகின்றன.
இவ்வாருக சில புதிய அளவு கிோல்களையும் பாய்ச்சிக் கட்டுரை லக்கியத்தை அளவிட முயற் த்தால், எங்கோ மூலையிலுள்ள சில கட்டுரைகள் சுவாலித்து எழ வுங்கூடும்.
o
d

Page 25
உண்மைதான் எமக்கு வேண்டும்!
உண்மை தான் எம்க்கு வேண்டும் ஒரு துளி பொய்யும் வேண்டாம். வெண்மையாய் ஒளிகள் கோடி விண்ணிலே உண்டென் முலும் கண்செல்லா இருட்டுச் சூழல் காட்சிக்குத் தடைகள் ஆகும். எண்ணத்தின் துணையும் கொண்டே எடுத்தடி வைக்கிருேம் நாம். உலகத்தின் இருட்டில் எங்கள் உள்ளத்தின் விளக்கை ஏற்றிச் சில சில உண்மை கண்டு சேகரித்திருக்கிருேமே! பல செயல் அநுபவத்தின் பரீட்சைக்குத் தேறி வந்த நலிவிலா உண்மையாலே நயங்களும் கண்டுள்ளோம்ே! சேகரித்திருக்கும் உண்ம்ைச் செல்வத்தில், பொய்ம்மையான போலிகள் -செல்லாக் காசு புகுவதை விரும்ப மாட்டோம். ஆகட்டும் என்று சொல்லி அனைத்தையும் அள்ளிக் கொள்ளோம். நாலெட்டுத் திக்கும் தேடி - நலந்தரும் உண்மை சேர்ப்போம் நலந்தரும் உண்மை கொண்டு நாம் எங்கள் உலகை மாற்றிப் பலம் பெறும் துணிவு கொண்டோம். பகை எல்லாம் துரள் தூளாகும். பலந்தரும் என்று சொல்லிப் படுபொய்ம்மைச் சார்னிய நாட இடந்தர நாங்கள் ஒப்போம் ஏனென்றல் மனிதர் நாங்க்ள். நம் வசம் உள்ள உண்மை நாம் பெற்ற செல்வம் அன்ருே? பொய்ம்மைகள் கலந்து கொண்டால் பொறுப்பது தருமம் ஆமோ? எண்ணிய எண்ணியாங்கே எய்திட வேண்டும் என்முல், உண்மை தான் எம்க்கு வேண்டும் - ஒரு துளி பொய்யும் வேண்டாம்.
முருகையன் 1
4.

வசந்தக் காற்றை வர இனி விடுங்கள்!
அன்பு முகைதீன்
வசந்தம் இன்னும் வரவே இல்லை! எங்கள் வாழ்வில் இனிய வசந்தம் வந்து எங்கள் வாட்டம் தீர எழுந்து நன்ருய் இனிது வீசும் என்று நாங்கள் ஏங்கிக் கிடந்தும் இன்னும் வசந்தம் எங்கள் பக்கம் ஏஞே வீச எழவே இல்லை! வசந்தக் காற்றின் வருகை காணி ஆண்டுக் கணக்காய் ஆவலாய் உள்ளோம். இன்றும் நாங்கள் ஏங்கிக் கிடந்தோம்,
வசந்தக் காற்று
வரவே இல்லை!
வசந்தக் காற்றின் வருகைக் காக ஏங்கிக் கிடக்கும் ஏழைக்ள் நாங்கள் உழைத்து களைத்து உணர்ச்சி யற்று பிண்ட மாய் இங்கே பிணமாய் கிடக்கிருேம். குந்திக் கொள்ள குடிசை யில்லை! அணிந்து பார்க்க ஆடை யில்லை! பசியைத் தீர்க்க் பாணம் இல்லை. அன்புக் குழந்தை ஆசை தீர கையில் கொடுக்க காசும் இல்லை! எல்லாம் இழந்த ஏழைகள் நாங்கள் இழக்க எதுவும் இல்லாத வர்கள். ஒன்று மட்டும் உண்மை உண்மை!
ந்த நாட்டை இயக்குவோர் நாங்கள் ந்த நாட்டின் ه . در ஏழ்மை போக்க்வும், இந்த நாட்டின் ஏழிலைப் பெருக்கவும், உழைப்பை இந்த உலகுக் காக் இன்றும் கொடுக்க இசைவாய் உள்ளோம். எல்லா மக்களும் எல்லாம் பெற்று இன்பத்தோடு இருக்க வேண்டும், என்ப தொன்றே எங்கள் குறிக்கோள்.
●曹

Page 26
எங்கள் பக்கம் இனிய வசந்தம் வருவதைச் சிலபேர் வழியில் நின்று தடுப்பதைக் க்ண்டு தய்ங்கி நின்ருேம், இனியும் நாங்க்ள் இருக்க மாட்டோம்,
எங்கள் பக்க்டம் எழுந்து வீசும் வசந்தக் காற்றின் வரவை இனிமேல் தடுக்க நினைப்போர் தலையில் நாங்கள் பொல்லால் நாலு போடவும் உள்ளோம்.
வசந்தக் காற்றை வர இனி விடுங்கள் வசந்தக் காற்றை வர இனி விடுங்கள்! அந்தக் காற்றில் அமைதி காண நெஞ்சச் சூடு நீங்கிக் குளிர உழைத்த களைப்பு உடனே நீங்க் உழைப்புக் கேற்ற ஊதியம் கிடைக்க் வசந்தக் காற்றை வர இனி விடுங்கள்! வசந்தக் காற்றை வரஇனி விடுங்கள்
حسن مداحی سیسیپی حس
* நாவுக்குச் சுவையான உணவு வகைகளுக்கு * சுத்தமான பலகாரங்களுக்கு சிற்றுண்டிகளுக்கு * தரமான மதிய போசனத்திற்கு
சிறந்த ஹோட்டல்
திறி கொயின்ஸ் ஹோட்டல் 73, கஸ்தூரியார் வீதி, urbůLTsorbo
48

ராஜ நாராயணனின்
கோபல்ல கிராமம்
துறை மூர்த்தி
தெலுங்கு நாட்டிலிருந்து துலுக்க ராஜாக்களின் பெண் விஷ யமாக ஏற்பட்ட கெடுபிடிகளுக்குப் பயந்து "அரவ தேசத்துக்கு (தமிழ் நாடு) வந்து அங்கு காடாய்க் கிடந்த நிலத்தை தம் சலியா உழைப்பினுல் பண்படுத்தி தமது சமூகத்தை அதில் புனர மைத்து முன்னேற்றம் காண முயலும் ஒரு மக்கள் கூட்டத்தின ரின் வரலாறு தான் இந் நாவலாகும் , அதில் அவர்கள் புதுச் சூழலை தம்வசப்படுத்திக் கொள்ள எடுத்த பிரயத்தனங்கள்; கொள்ளையர் இயற்கை போன்றவற்றிலிருந்து தம்மவரைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகள் பல்வேறு : கராறுகளைத் தீர்த்த பாங்கு நீதி, ஒழுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொண்ட முறைமை போன்ற விஷயங்கள் வெகு சுவாரஸ்யமாக விபரிக்கப் கப்பட்டுள்ளன.
வழமையான தமிழ் நாவல்களில் காணப்படும் தனி நபருக்கும் சமூகத்தவர்களுக்கும் ஏற்படும் முரண்பாடு பிரச்சினைகள் இதில் இல்லாமையே நாவலின் தனித் தன்மைகளில் ஒன்ருகும். "சில விமர்சகர்கள் மேற்கூறிய அம்சமே நாவலிலும் அடிப்படை என்று கூறுவர். அவ்வாறு இல்லாமல் ஒரு சமூகத்தவரின் படிமலர்ச் சியை இந் நாவல் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதெனலாம் :
இயற்கையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சியில் மனித சமூகம் அடைந்த அனுபவத்தின் வகைப்படுத்தப்பட்ட திரட்டுத்தான் இப்போது நாம் பெற்றுள்ள விஞ்ஞான தொழில் நுட்ப மற்றும் அறிவியல் துறைகளைச் சேர்ந்த அறிவாகும். இந் நாவலில் அதை ஓரளவு தரிசித்து உணர்ந்து கொள்ளக் கூடிய தாக உள்ளது. இது ஒரு வகைக் கிளர்ச்சியையே ஊட்டுகிறது. உதாரணமாக இந் நாவலில் வரும் அக்கையா என்னும் பாத்தி ரம் விவசாயிகளின் வசதிக்காக கண்டுபிடிக்கும் இர ட்  ைட க் கலப்பை வாகடம் புல்லையா செய்யும் "தழையிறது", பயிருழவு பங்காரு நாயக்கரின் செய்கையால் ஏற்படும் எதிர்பாராத விளைவு, போன்ற காரியங்கள் அவ்வாருனவை.
ஒரு சமூகத்தவரின் வாழ்வில் ஏற்படும் முக்கிய நிகழ்வுகள் எவ்வாறு சிலிர்ப்பூட்டப்படும் உருவகிக்கப்படும் கதை வழங்கும்என் தையும் இந்நாவலில் வரும் மங்கத்தாயாரு அம்மாள் சொல்லும் கதை மூலம் அறியலாம். ஒரு பெண்ணைக் கொன்ற கொலேகார ஞன கள்வன் சம்பந்தப்பட்ட விஷயம்; தீவட்டிக் கொள்ளைக்
49

Page 27
கூட்டத்தவரை எதிர்க்க கிராமம் எடுக்கும் முஸ்தீபுகள்; பாட்டி சொல்லும் கிராமத்தவரின் முன்னேர்கள் படை பெயர்ந்து வந்த தைப் பற்றிய கதை ஆகியவை இந்நாவலில் விட்டு விட்டு விப ரிக்கப்பட்டிருக்கும் முறைமை தாவலுக்கு ஒர் அழகையும் விறு விறுப்பையும் கொடுக்கிறதென்றே கூறலாம்.
அத்தோடு இந் நாவலில் இன்னுெரு குறிப்பிடத் தக்க அம்ச மென்னவெனில் நடைச்சித்திர பாணியில் பாத்திரங்களின் குண விசேஷங்களை விபரிப்பதனுல் சிறிய அளவு வரும் பாத்திரங்கள் கூட நெஞ்சில் பதிந்து விடுகிறன. ”ராம நாமமு கல்கண்டு. 爵 என்று தம்புராவை மீட்டும் மெல்லிய மனம் கொண்ட பஜனை மடம் பார்த்தசாரதி நாயக்கர் மண்ணை வாயில் போட்டு Tருசி பார்த்து மண்ணின் தராதரம் சொல்வதில் நிபுணரான மண்ணு தின்னி ரெங்கநாயக்கர் உபயோகமில்லாத சுண்ணும்புக் கலயத் தையே தன து தயாதிக்குக் கொடுக்க மனசில்லிாத படுபார் செங்க்கன்னு மற்றும் பயிருழவு பங்காரு நாயக்கர்; நாலு வேளைச் சாப்பாட்டுக்காரச் சின்னத் தம்பி, நல்ல மனவு திரவத்தி போன்ற பாத்திரங்கள் அப்படிப்பட்டவை. இவர்களை அறிமுகப் படுத்து வதற்கு ஆசிரியர் கையாளும் வசனங்களை விரல்விட்டே எண்ணி
. 632 TTLA
மொத்தத்தில் இந் நாவல் இத் துணைச் சிறப்படைவதற்கு மூலகாரணமாயுள்ளது என்னவெனில் கிராம வாழ்க்கையோடு ஊறித் தோய்த்து விளங்கும் ஆசிரியரது எழுத்து நடைதான். கிராமத்தின் தனித்துவமான சொற்கள், சொல்லடை மொழி கள், பழமொழிகள், கதைகள், பாடல்கள் விரவி நிற்கும் அவரு டைய நடை ரசிக்கத்தக்கது. ஆழ் .ந்த", "கொஞ். சம்", (ομ Τιο... ... ப" என்று எழுதியிருப்பது சற்றுப் புதுமையாகவும் சொல்லவந்த பொருளை கொஞ்சம் அழுத்தமாகவும் புலப்பட்ச் செய்கிறது,
கோபல்ல கிராமத்தின் தோற்றுவாய் தொ ட் டு அதன் 185-ம் ஆண்டு வரையுமான பரிணும வளர்ச்சியையே இதில் விவரிக்கட்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் நாட்டில் தமது ஆட்சியை ஊன்றத் தொடங்கும் காலகட்டத்தில் நாவல் முடிவடைகிறது. அக்காலத்தில் - கும்பினியாரின் ஆட்சியின் போது கோபல் ல கிராமத்தில் என்ன கலகம் ஏற்பட்டதென்பதையும் ஆசிரியர் கோடிகாட்டத் தவறவில்லை.
கிராமத்தின் உள் விவகாரங்களையே விபரித் துச் செல்லும் நாவல் கடைசிச் சில அத்தியாயங்களில் சற்று விட்டுத் தெரிகிறது. கொஞ்சம் பரபரப்போடு மாறிமாறி விபரித்து வந்த மேற் கூறிய மூன்று விவகாரங்களும் முடிய நாவல் திடீரென்று வேறெரு பிரச் சினை ஒன்றை- வெளியார் தலையீடு" பற்றி சொல்வது இதற்கு காரணமெனலாம். இதை ஒரு குறை என்று சொல்வதற்கில்லை. நாவலின் இரண்டாம் பாகம் வெளிவரும் போது இது அடங்கிப் போகலாம்.
வழக்கமான தமிழ் நாவல்கள் வாசித்து சலிப்படைந்துள்ள
வாசகர்கள் "கோபல்ல கிராமத்துக்குள் நுழைந்து பார்க்குமாறு வேண்டுகிறேன். ” - - -
50

தமிழ் நாவல் வரலாற்றில் ஒர்
இருண்ட காலம்
மறுமதிப்பீடு
செ. யோகராசா
* இடைக்காலத்தில் அதாவது இந் நூற்ருண்டின் மூன்ரு வது தஸாப்தத்திலே தொடங்கி, நூற்றுக்கணக்கான ஆங்கில நாவல்கள் மொழிபெயர்ப்பாகவும் தழுவலாக வும் வெளிவந்தன. இவற்றில் கூடுதலானவை மர்ம நாவல் வகையைச் சேர்வன, இத்தொடரில் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை. மு. கோதைநாயகி அம்மாள் கே. ஆர். ரங்கராஜா டி. டி சாமி ஆகியோரைக் குறிப்பிடுவது சம்பிரதாயம். நாவல் இலக்கிய வரலாற்றில் இவை தோன்றிய காலப் பகுதியை, "இருண்ட காலம்" என்று கூறிக்கொள்வதும்
நாகரிகமான செயலாகிவிட்டது. .
மேலே கூறியவாறு, தமிழ் நாவல் வரலாற்றில் குறிப்பிட்ட காலப்பகுதியானது (ஆ ஷ ரீ கருத்தின்படி 900 தொடக்கம் 1945 வரை), இருண்ட கால மென்றும், (இன்னும் நயமாகக் களப்பிரர் காலப்பகுதி யென் றும்) பரபரப்பு நூல்களின் காலப்பகுதியென்றும், நாவல் வரலாற்றில் ஓர் வீழ்ச்சிக் கால மென்றும் தமிழ் நாவல் ஆய்வா ளர் பலராலும் கூறப்படுகிறது
இக் காலப்பகுதியில் எழுந் தவை பெரும்பாலும் "பரபரப்பு நாவல்கள்" (அற்புதம், மர்மம், மாயாஜாலம் , திகில், உளவு முதலிய தன்மைகளைச் சேர்த் துச் சுட்டும் சொல்) எ ன் று கருதியமையால் இக்காலப் பகு தியைப் "பரபரப்பு நாவல்களின் காலப்பகுதி" என்றும், இவை இலக்கியத் தரமற்றவை என்று
-
க. கைலாசபதி --ܟ
தமிழ் நாவல் இலக்கியம்
கருதியமையால் "இருண்ட கால"
மென்றும், அதஞல் நா வல் இ லக் கி ய வளர்ச்சியில் ஒரு வீழ்ச்சிக் காலமென்றும் இவ் வா ய் வா ள ரி கொண்டனர். ஏறத்தாழ, பத்தாண்டுகட்டு முன்பு இவர்கள் கூறிய கருத்து
இன்று தன்னுரல்" குத்திரமாகி
விட்டது. தமிழ் நாவல் ஆய் வின் பத்தாண்டுக்கால வளர்ச் சியில், முற்பட்ட இக்கருத்து, மறு மதிப் பீட்டிற்குள்ளாவது தவிர்க்க இயலாதது.
இம்மறுமதிப்பீட்டினை, மிகச் சுருக்கமாகக் கூறுவதாயின் பின்
வரும் தலைப்புக்களில் பார்ப் Our bi- (uy) (56iful as Tay மெனக் கூறுவதற்கான கார
ணங்கள் எவை? (ஆ) இக் கார ணங்கள் வலுவுள்ளனவா? (இ) எல்லா நூல்களும் ஆய்வுக்குட் பட்டனவா? (ஈ) கூறும் கார
6

Page 28
ஈங்கள் வலுவற்றன என்பதற் காச ஆதாரங்கள் (உ) இக் காலம் இலக்கிய உணர் வற்ற காலமா? (உள்) அடிப் படைத் தவறுகள் எங்கே நிகழ்ந்துள்ளன?
மேலே (மேற்கோளில்) கூறப்பட்டுள்ள நாவலாசிரியர் அன்று நாவல்கள் மட்டுமே பல பதிப்புக்களேக் கண்டும் பலரா லும் வாசிக்கப்பட்டு. இதனுள் எளிதில் கிடைக்கக் கூடியன வாயும் விள்ங்கின. இத்தகைய வாய்ப்பும், காரணங்களும் இவ் வாய்வாளருக்கு வசதியாகின. ஆகவே, இக்காலப்பகுதியை இருண்டகாலப் ப தி யெ ன் வெகு இலகுவாகவே முடிவு கட்டி விட்டனர். ஆனூல், இத் தகைய நாவல்களில் குறிப்பிடத் தக்க வேறு இயல்புகளும் இருந் தன் என்ப்தும், இந் நாவலாசி ரியாரே த விர வேறு பல நாவலாசிரியர்களும் நாவல்கள் எழுதியிருந்தனேரென்பதும் பர பரப்பு அம்சங்களற்ற நாவல் களும் வெளிவந்திருந்தனவென் பதும் இன்றைய எமது கவனத் நிற்குள்ளாக வேண்டும்.
பரபரப்பு நாவல்களின் மன் னர்களுள் ஒருவரெனப்படும் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் மாயா விநோதப் பரதேசி என்ற நாவல்பற்றி "ஆன்ந்த குனபோதினி" என் சஞ்சிகை பின்வருமாறு எழுதியிருந்தது:
"கதாநாயகனின் பெண் வேட் விபரீதம், பல திடுக் கிடும் சம்பவங்களே யுண்டு EFTER #FFF"| டிச் சென்துள்ள கற்பங் விநோதகரமானது. தே"
॥ மேற்றிசை IFE
蔚置
நாகரீகங்களும் பிறகு தவிடு பொடியாதிலும் பெண்மச் சுள் வாசித்து அறிவுபெற வேண்டியவில்தாம் திகம் பர சாமியாரின் துப்பறியும் சூழ்ச்சிகளும். வாசி தீ தறிந்தே ருசிக்க வேண்டும்
இது நா வ லா மட்டு மில்லே, அநேக அரிய போத ன்ேகளும், அநுபவங்களும் உலக நீதிகளும் அடங்கிய விதா ர சிரந்தமாகவும் இருக்கின்றது. அவ்விதம் வரைவதை ஆசிரியர் தமது வழக்கமாகக் கொண்டிருக் கிருf."
இறுதிப்பகுதி சில முக்கிய விட பங்களப் பு வ ப் படுத்த வில் லேயா? அதாவது காப் பகுதியில் ள் முந்த பரபரப்பு நாவல்கள் பரபரப்பு அம்சங்களே யும், பொழுது போக்கு அம்சங் களேயும் மட்டுமல்ல, வாய்ப்புக் கி  ைடக் கு ம் போ தங்லாம்
போதனை செய்வதையும், சீர்
திருத்தக் கருத்துக்க்ஃள் வெளி யிடுவதையுங் கூட தமது முக் கிய இங்ல்புகளாகப் பெற்றிருந் # ହିଙ୍ଗ୍] , வடுவூராரது தாவங்கி குருக்கு மட்டுமல்ல, ஏனேயோர் களது நாவல்களுக்கும் இது பொருந்துவதே
வை. மு. கோ. வின் நாவல் களின் குறிப்பிடத்தக்க அம்சம் விறுவிறுப்பான தன்மையாகும் ஆனுலும், அவரது சாஸ் 2 நாவல்களும் வேறு மூன்று கருதி துக்களே - வாப்ம்ையே இறுதி யில் வெல்லும்", "அபவேகள் எ சி பின் கரைசேரிவர்", "சோகம் இன்பமும் தரும்"- அடிநாதமாக ஒவித்துள்ளன.
மேலேத் தேசத்தின் புகழ்
பெற்ற ஷெர்லக் ஹோம்ஐச" ஒத்த ப்ரீ கோவித்தப்ே
 ைட த் துப் :
ஜேஆர் ரங்கராஜா."
 

கிருஷ்ணன்' நாவல் பல இடங் களில் பெண்கல்வி ਪੁ வத்தை வலியுறுத்துவது ஒரு àTrá710
க்முவியும் சொந்தமாக அம் எ முதி ய மேலே கூறிய மூவாரத் தவிர, நாவல் கள்ே அவ்வாறே மொழிபெயர்த் தவரெனக் குற்றஞ் சாட்டப் படும் ஆரணியார் கூட அடிக் கடி கதைநடுவில் வந்து குதிப் | t கள். மேல்நாட்டு நாகரிகத்தின் தீமையை கல்வென்ருலும் பன் வன். புல் என்ருலும் புருவூர் என்தும் பாரத நா ட் டு ப் பெண்மணிகளின் கற் புக் கும் இந்த மேல்நாட்டு நாகரிக மங் கையர்களின் போக்குக்கும் எத் தீனே வேற்றுமை" என்று கூறத் தொடங்கிவிடுவார்.
ஆக, ஒரு பானே சோற் றுக்கு ஒரு சோறல்ல. நான்கு சோறு கிளேப் பதம் பார்த்தது போதாதா?
எனவே, பரபரப்பு அம்சங் சுள் மட்டுமல்ல, பரபரப்பு அம் சங்களே விட ஒருபடி மேலதாக நீதி, அறப் போதனே, சீர் திருத்த அம்சங்களும் இந் தப் பரபரப்பு" நாவல்களில் இடம் பெற்றிருந்தன் என்று கூறலாம். எனவே, பரபரப்பு அம்சங்களேக் காரணமாக்கி இந் நாவல்களின் காலப்பகுதியை இருண்ட காலமென்று கூறு வதைத் தவிர்க்கலாம்.
இவ்விடத்தில் இன்னுென் நையும் கூற முடியும் நீதி, அறம், சீர்திருத்தக் கருத்துக் கனேக் கூறுவதற்குப் பரபரப்பு நாவல் சார்ந்த இயல்புகள் வ ப் ப் பாது நமகின்றது: அதாவது, தியோரைத் தியோ
ਸੰ
பாத்திர இயல்புகளும், நிகழ்ச் சிாரும் உருவாக இப் பரபரப்பு நாவல்கள் எனப்படுவனவற்றின் இயல்புகள் மிகு இலகுவில் வழி சமைத்துள்ளன என்பதை சி குறிப்பிட வேண்டும். ஏ பி து கருத்தை இவ்வுண்மை மேலும் அரண் செப்பும்
4.
மேலே சுறிய "புகழ் பூத்த" நாவலாசிரியர்கள் தவிர வேறு பலரும் இக்காலத்தில் நாவல் களே எழுதியிருந்தமையை இன்று அவதானிக்க முடிகிறது. மேற் கூறிய ஆய்வாள்ாது கவனத்திற் குள்ளாகாத இந் நாவலாசிரியர்
ளே வசதி க்ருதி இரு பிரிவு
그 rh.
முதற் பிரிவில் பொன்னு
ສT . ກຊ ຫຼື prDສາ
வாமி ஐயர் மேலச் சிவபுரப் பனேயப்பச் செட் டி யார், P TT" மறைமதியடிகள்
முதலிய்ோரைக் குறிப்பிடலாம்: இவர்களது நாவல்களில்_ப பரப்பு அம்சங்கள் விரவியிருதி பரபரப்பு அம் தங்கள் மட்டுமல்ல, தேச விடு து மேகச் சிவபுர பணயப் பது இரட்டிபாரின் காந்திமதி" பெண்ணுரிமை (டி. எஸ்.டி சாமியின் சரளா), சுதந்திரப் போராட்டம் (மு ராஜ் செட்டி பாரினி சந்திர சேகரி") முத வான கருத்துக்களும் கலந்திருதி
தன என்பதே நம் கவனத்துக் குரியது
இர வீ டாம் பிரிவிங்
து. ஆப்பிரமணியபாரதி, நாரணி துரைக்கண்ணன் வ. ரா. gi. எஸ். வேங்கடரமணி, பி. எஸ். ராமையா குப் பிரியை முதி Norrainer Lå Farr suff ாது நாவல்களிலே பரபரப்பு து ம் சங் கள் அருகியிருந்தன:
ராகவும் நல்லோரை நவோ இல்லாமிலிருந்தனவென்றும் சூற ராகவுமே படைப்பதற்கேற்ற முடியும் குடும்பப் பிரச்சின்
*
■

Page 29
| nl | "ஜடா வல்லபர்) வித வா Er G.B.ET L.F. (நாரன துரைக்கன் ண னி ஸ் பார் ரண் பேன் இணுய்ப் பிறந்தேன்') விதவைக் துயர் வ.ரா, வின் சுந்தரி), தேச விடுதலே வெங்கட்ரமன்னி ன் முருகன் ஓர் உழவன்") முதலான கருத்துக் கிளே முதன்மை பெற்றிருந்தார்.
iii மல் இருந்த மேல்ே கூறிய நாடி வாசிரியர்களது நாவல்களில்ே கூட பரப்பரப்பு அம்சங்கள் பல் #: அம்சங்களுள் ஒன்றுக ருந்தது ஆங்ஸ்து பரபரப்பு அம்சங்கள் இல்லாமல் அமைந் தன என்று முடிவு செய்யலாம் அவ்வாறெனில், இக்காலப்பகு
தியை இருண்ட் "காலமெனக் முேடியுமா?
5
இக்காலப்பகுதியில்ாநாங்'
இலக்கியம் முழுமையாக வேரூன்
ருத நியிேல் - ஒரு நாவல்தர
-
ான நாவலென்று கருதப்படு வ ம் குத் தமிழறிஞர்களின் பாட்டுக்களேயும் ஆதரவை பும் ஒரளவாவது பெறவேண்டி யிருந்தது கற்றறிந்த அறிஞர் கள்ேத் திருப்திப்படுத்த வேள் 부 அவசியமாயிருந்தது. ஆகவே வெறும் பரபரப்பு
அம்சங்களால் மட்டும் நிரப்பப்
பட்டுள்ள நாவல்கள் பாராட் டுப் பெறும் என்று கருதுவதற் கில் ஆணுல், பெருமளவிற்கு இத்தகைய நாவலாசிரியர்களது நாவல்கள் தமிழறிஞர்களாலும் தமிழ்ச் சங்கங்களிளுதலும் இலக் கியச் சஞ்சி  ைக ச எரி ஞ லும் பாராட்டப்பட்டு வந்துள்ள்ன என்று அறியமுடிகிறது. இதி விருந்து நாம் உப்த்துனர்வது
T
எடுத்துக்காட்டாக ஒன்று; வடுவூரார் நாவல்பற்றி ஒரு தடவை திராவிடன் உப பத் திராதிபர் வித்துவான் இராஜ K K OTT ltLLL LL LTET L Te
பாராட்டியவற்றுள் ஒருபகுதி பின்வருமாறு;-
நாவாரிேக் ஈயந்தேற்றுவவு நங்காய்
சிறிது நவிகேள்
வோ பரிேகள் விழைவி ஜேர்ந்த
நிக்கோ ரெவரும் வியப்பாரப்
ਨੇ
பயஞர் சரிதம் பகிர்ந்தளித்தான்
ür-rā) urü、 )
மறவா நெறிசேர் மறயவனே"
பாராட்டு செய்யுள் வடிவிலே
படம் பெற்றுள்ாவியும் குறிப்
டத்தக்கது. பொதுவாக பாராட்டுப்பத்திரங்கள் பட்டு மல்ல தங்க வெள்ளிப் பதக்கப் பரிசுகளும் கூட சொடுக்கிப் பட்டு வந்துள்ளன் என்று அறிய முடிகிறது. தங்களது முறையிற் சிறந்த பேராற்றவே
臀
நவீன
நோக்கித் தங்கட்குப் பலரும் பல நற்சாகழிப் பத்திரங்களும், தங்க வெள்ளிப் பதக்கப் பரிசு களும் தந்து தங்களே உற்சாகப் படுத்தி இருக்கின்றனர்" - வடு ஆராருக்கு அளிக்கப்பட்ட நற் சர்சுழிப் பத்திரமொன்றில் செந் தமிழ் வாசிகசாகிஸ் அக்கிராச
னர் கூறுவது,
鹉
 

நாவல்கள் பற்றி, தமிழ்ச் சங்கச் சஞ்சிகையான செந்தமிழ் நீண்ட மதிப்புரை கள் எழுதி வந்தது. உலகநாத் நாயக்கர் என்பவர் எழுதி பு சுந்தரி பரிணயம்' அல்லது சரசாவதியின் சாகசம்" என்ற நாவலுக்கு திரு. வி. கு ஒரு சிறப்புப்பாயிரம் கொடுத்துள்
T.
ஆகவே இன்று நாம் பர பரப்பு நாவல்கள் என்று ஒதுக்கி விடுவன அக்காலச் சூழிவில் கற்ருேர் மத்தியில் பெருமதிப் பி:னப் பெற்றுள்ளன. காரம் என்ன? அவை பரபரப்பு நாவல் கள் என்று கருதப்படவில்ே தரமற்றன என்று முந் ரு க ஒதுக்கப்படவில்லே. இன்னுரு விதமாகக் கூறின் நாவலின் அற, நீதிக் கருத்துக்களே முன் னுக்கு நின்றனர் பரபரப்பு அம் சங்கள் மறைந்து தொண்டE இது வியப்புக்குரியதன்று தமிழ் நாவல் வளர்ச்சிப் போக்ாே டும் இயைந்ததே. ஆரம்ப கால் நாவல்களில் சமூகப் பிரச்சிே
களும், போத&னகளும் கிளேக் கதைகளினூடாகவும், நகைச்
சுவை ரீதியிலும் இடம் பற் றிருந்தன, அவ்வாறே இப் போது சீர்திருத்தக் கருத்துக் களும், போதனே க்ளும் பரபரப்பு அம்சங்களினூடாக இடம் பெற் றன என்பது தமிழ் நாவல் வளர்ச்சிப் போக்கினே நோக்கு வோருக்குப் புலனுகும்
இவ்விடத்தில் இன்ஒெரு
கருத்தும் வலியுறுத்தத் தக்கது. மேலே நாடுகளில் அக்காலத்தில்
ஏற்பட்ட சமுதாய மாற்றங் கள் இந்தியாவிலோ அல்லது தமிழ் நாட்டிலோ சமுதாயத்
தின் முழுமட்டத்திலும் ஏற்பட வில்ம்ே சமகாலத்திலும் நிகழ்
இயல்புகளே ஒரளவு
த்துக்க
கரு
மட்டுமே பெருமளவிற் பிரிவின்
இந்நியிேல் பரபரப்பு நாவல் களின் இயல்புகளும் தமிழ்நாட் டின் பின்னணியை ஒட்டித் தம் மாற்றிக் a _n மாற்றமுறுவது கஷ்டமாகவும் இருக்கவில்லை. மாறியபோது மாற்ற ங் கள் (நமிழ் நாவல் வரலாற்றுப் பின் எனணியில் வைத்துப் பார்க்கும் போது) நகைப்பிற்குரியனவாக ஆம் அமையவில்லே (தமிழில் பரபரப்பு நாவல்களின் தோற் ற  ைத மேனுட்டு பின்ன் பன்னியை மட்டும்  ைவத்து ப் பார்ந்தார் அவை தமிழ்நாட்
■ Q-站QL L罩」鳶r 而直置 முடிவுக்கே வருவோம்) பின் வரும் மேற்கோள் கூர்மையாக 、“
மேகுடுகளில் பல் ரும் நம் நாட்டிற் சிலரும் சாசு தார நன்மையை விண் *、 நாட்டமின்றி, 飙、L山岛suü 、 பாகிப் பணம் கைக்கு வர வேண்டுமென்ற ஒரே எண் னைத்துடன் உசிதாவுசிதம், புத்தா யுத்தம் முதலியவை காேக் கவனியாது படிக்கும் போதுமட்டில் ஒரு வித 匾r」ā豆 錳 醬rá 壺 酗 கூடியதாகவும், சில சமயங் களிலும் தீய வழிகளிலும் 臀)、一凸 凸 போரைத் தாண்டிவிடக் சு டிய வழியிலும் எழுதி பிருப்பதைப் போவில்லாது நமது நூலாசிரியர் தற் காலம் நமது சமூகத்திலி ருத்து வரும் குறை களே நிார்ந்து அவைகசோப் பரி சு ரிக் கும் நோக்கத்துடன் படிப்பவருடைய மனதிங் நல்லு வழியான வாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டு பொன்ற ஆவல் சுலபமாய்
üü

Page 30
உதிக்கக் கூடிய விதமாய் எளிய நடையிலும் சிே
உருக்கக் கூடிய விதமாக ୋ|lf): நாவல்களே எழுதி வேளியிட்டு வருவதற்குத்
என்றேன்றும் நன்றி பாராட்டக் கடமைப் பிட்டிருக்கிருர்கள் ந ம் முன்னிருக்கும் இந்த நாவ வில் மனித வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வரு EUI இயல்பென்பதையும் Liri நம்பினுேர் விே Tடாரி என்பதையும் கெடுவான் கேடு 다 பரன்" என்பதிைம மேனுட் டுக் கல்வி முறையினுலும்
ாவ தேர்வுத்திஇது ஏற்படக் பீர்!! இன்னவை Fiat LJ BigJj Li | Lib... மனிதருடே 山、山壶园 வால் வித்தனே விஷயங்களே 'வ்விதம் சுல்பமாய்க் கண்டு பிடித்துவிடக் சூடு ஒன்பதிையும் நூலாசிரி ர். வர் Eத்திரு க்கிருர்
மேஐ நாட்டினரைப் பின்பும் நிப் பரபரப்பு நாவல்களே எழு தியவர் இங்கு ஒரு சிலர் இருந் தாலும் பொது' நாட்டுப் பரபரப்பு நாவல்களின் நோக்கமும் இயல்புகளும் தமிழ் நாவல்களின் நோக்கத்துடனும் இயல்புகளு-லூயி " if a! IT [[]] - ாவ்வளவு தூரம் சங்கமமாயிற்று ன்பதை இட்பகுதி சிந் ம் முறையில் வளிப்படுத்துகிறது.
எனவே இக்காசிப் பகுதி நாரண்துரைக் 1 = חtiu au , Prתח சுதுணைன் முதலியோர் எழுதிய நாவல்கள் டுமே சீர்திருத்த நாவல்கள் என்பதன்து பரப நீர்ப்பு நாவல்கள் என்று கூறப் E_இவயும் ஒருவிதத்தில் சி திருத்தி நாவல்களே. உண்ை இவ்வாறிருக்க இக்காலப் பகுதி பரபரப்பு நாவல்களின் காலப்
ــــــ
பகுதியென்றும் இருண்டகாலப் பகுதியென்றும் கூறப்படுமாருள் இவர்களால் சீர்திருத்த நாவல்
கேரி காலப்பகுதியென்று கூறப்
படும் பிற்பட்ட காலப்பகுதி யையும் இருண்ட காலமென்து கூறுவதும் சரியல்லவா?
7
பரபரப்பு நாவல்கள் என்று இவர்களால் கருதப் பட்ட நாவல்கள், தரம்ான நா வல் என்று இவர்களால் கருதப்படக் கூடிய வேறு நாவல்களுக்குரிய சில குறிப்பிடத்தக்க சிறப்பியல் புகாம்பும் பெற்றிகுந்தன.
இவற்றுள் முதன்மையா அது இப்பரபரப்பு நாவல்கள் ாப்படுபவை சமகால் அாழ் வைத் திறம்படச் சித்திரித்த மையாகும். எடுத்துக்காட்டாக திருப்பங்கள் பல Fr. L. நீலகண்டன்" என்ற நாவல்,
தாதுச் சமூகப் பொருள் தார நிலைமைகளே விளக்குவதை யும் "ஜிங் காருண்யம்" அல்லது பேண்மையும், ஆண்மையும்" என்ற நாவல் சீமால் ஜமீன் குடும்பங்களின் வாழ்வைச் சித் நிர்ப்ப தயும் குறிப்பிடலாம்.
வடுவூராரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று: Laorff, " வின் ஒரு ப்க்கத்தில் இடம் பெறும் அடிக்குறிப்பொன்றில் ார்பசிவ ஐயர் மேன் கா என்பவை உண்மைப் பெயர்களே மறைக்கும் பொருட்டு வைக்
கற்பனப் பெயர்கள்
Tiårsmo (Typ STEP ஆசனப்படுகி றது. இதிவிருந்து உணர்வது "மேன்கா மட்டுமல்ல,
இவர் எழுதிய ரனேய நாவல் களும் ஓரளவு உண்மை நிகழ்ச் இவரின் அடிப்படையிலெழுந்த நாவல்கள் என்று ஏன் சுறி முடியாது
 
 

அதுமட்டுமன்று "நாகரி கம்" என்ற நாவலின் முன்னு  ைரயில் ராஜா செட்டியார் குறிப்பிடுகிருர் நாவலாசிரிய னுடைய முக்கிய கடமை உள் ளதை உள்ளபடி எடுத்துக் காட் டுவதே இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் நான் இயற் கையில் காணப்படும் குற்றங் குறைகளே எடுத்துக் காட்ட வேண்டியவனுகின்றேன். அதை வாசகர்கள் தவருகக் கரு தி மாட்டார்கள் ஏ ன் று நினக் கிறேன்" இதிலிருந்து நாவல் படைப்பில் சமகால வாழ்க்கை சித்திரிக்கப்படுவதன்-நடப்பிய லாக அமைவதன் -முக்கியத்து வமும், காஸ் உணர்வும் அக் 酉 s 萤 நாவலாசிரியர்களால் உண்ரப்பட்டமை புலணுகின்றது.
புதிய நடத்திகள் இவ்வாருன நாவல்களில் கையாளப்பட்டுள் னமையும் குறிப்பிடத்தக்க அம் சமாகும். (தாகை தண்டபாணிப்
பிள்ளே எழுதிய கழுகுமலேக் கள்வர்" இதற்கோருதாரண மாகும். இதில் வரும் ஒரு
பெண் ஒரு கட்டத்தில் தெளி வாகச் சித் தி கீ க முடியாமல் மனங் குழம்பும் போது அவளு டைய மனமும் அறிவும் போரா டுவது நீண்டதோர் உரையாட
லாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மர்ம நாவல் என்று அரு தப்படும் நாவல் இவ்வாருண உள் மன உரை யா ட வே க் கொண்டுள்ளமை - ஆசிரியர் நாவலின் உத்திமுறைகளில் கவ னஞ் செலுத்தியமை - விதந் துரைக்கத் தக்கதே.
எனவே, போதிய ஆய் வின் றி இக்காலப் பகுதிை நாவல் வரலாற்றில் ஒரு வீழ்ச் சிக்காலம் என்று முடிவு கட்டி விடுவது தவருனதாகும்.
S
இக்காலத்தில் பிரக்ஞை பூர்வமான இலக்கிய உணர்வு காணப்படவில்லே எ ன் ருெ ரு குற்றச்சாட்டுள்ளது. ஆயினும், இக்காலப் பகுதியில் வெளிவந்த சிவ தமிழ்ச் சஞ்சிகைகளும், இவைகளில் எழுதப்பட்ட கட்டு ரைகளும் மதிப்புரைகளும், சில நாவல்களின் முன்னுரைகளும் ஆராய்ந்து பார்க்கப்படுகின்ற பொது இக்கால LT -- I LILLI ஆரோக்கியமான வளர்ச்சி புலப்படாவில்லே.
இவ்விதத்தில் புதுமைக்
ਪਰ விவேக ாேதினி", வித்தியா விதாரிணி முதலிய சஞ்சிகே கள் குறிப்பிடத்தக்கன். இவற் நில் நாவல் பற்றிய குறிப்பிடத் தக்க சில கட்டுரைகள் அவ்வப் ਤੇ । வெளிவந்துள்ளன தம்பி புருஷோத்தமன், ரா. வாசுதேவன் முதலியோர் புது மைக்கமேகளில் எழுதிய சுட்டு ரைகள் கவாத்துக்குரியன்
நாவல் பற்றி இக்காட் Բրյոմի வெவ்வேறிடங்கள் எழுதிய கருத்
துக்கள் பின்வருமாறு:
உலக வழக்கிற்கு முரண் படாதனவாயும் தேசிாசாரத்தை தழுவின் வாயும் பொதுசனம் ਸ਼ நடவடிக்கைகட்குப் பொருந்தியனவாயும், 轟 『 ■ தேச நிச ரூப வர்த்தான்ய் கட்கு ஒத்தான் புள்ள கிங் பாேக் கதைகள்ே நாவல் எனப்
Lif CEO ta'
உலகியற்கை நன்கறிந்து அதன் ஒரு பயன்கருதி கதை மூலமாகப் படிப்போர் மண்ம் சலியாவண்ணம் பாங்குபெற அமைத்தெழுதப் பட்டதே நாவல் எனப்படும்"

Page 31
நாவல்பற்றிய மேற்கூறிய வளரவிக்கன்ங்கள் இன்றைய வரை விக் கணங்களுடன்
பொருந்தக் கடியதே.
ஒன்றைய விமர்சனங்கள் பற்றிேேய பாந்திரங்க எளின் இயல்புகளே நுணுகி ஆராய் வதும் நடப்பியவோடு பாத்தி ரங்களின் இயல்புகளே ஒப்பிட் டுப் பார்ப்பது இடம்பெறும். இவ்விருண்ட காலத்தில் வெளி வந்தவற்றுள் ஒன்ரன் 'ரமணி" என்ற நாவலுக்கு எழுதப்பட்ட விமர்சன்த்தின் ஒரு பகுதி இது, சந்நியாசி வேடம் பூண்ட
|- கண்டறிந்து டக இயற் கக்கு அவ்வளவு பொருத்த 凸r、 高rāLú,
எவ்வேடம் தரிப்பினும், எக்கோலம் பூ எனினும் குழந் தைப் பருவத்தினின்று தன் ளூேடு கூட் வளர்ந்தவள் பல பல முறையும், மீள மீளவும் துள்ளுேடு சுந்து பேசியும் குர விஜதும் பார்வேயினுலும் கூட ஜனுர்த்தளன் ர ம னி ன் யத் தெரிந்து கொள்ளாதிருந்தது வாச சுருக்கு விபரிதமாகக்
" பாத்திரங்களின் இ யல் பு களே அலசி ஆய்ந்து கண்டிக்கும் தற்கா விமர்சகனது குரலேயே இங்கே கேட்கிருேம்
நாவல்களில் உத்திமுறை சுள் இடம்பெறுவது பற்றியும், சில வேண்டுகோளின்படி தாம் ந் திரு பிற கள் சில
வற்று மாற்றிக் கொண்டது பற்றியும் வை மு' த ப து நாவாேன்றின் முன்னுரையில் சுரவது இங்கே நினேவுக்கு வருகிறது.
ஆ. இருண்ட காலத்தி வர்" என் படுவோர் நா வல்
岳岛
இலக்கியம்பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் 7. Giŝro, L' விதத் தெளிவுபடுத்த மேவிடம் பெற்ற பகுதிகள் போதுமென
Կլյrr:E -
Г]
குறிப்பிடத்தக்க சில புதிய முயற்சிகளும் பரிசோ த ஃன முயற்சி களு ங் கூட, இந்த "இருண்ட கால ப் பகுதியில் பிரகாசித்துள்ளன.
தமிழ்நாட்டிற்கு அ ப் பா லுள்ள பிரதேச சரித்திரத்தை (ராஜஸ்தான்) அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ள முதல் வரலாற்று நாவல் என்ற விதத் தில் ஆர். பி. குழந்தைச்சாமிப் பிள்ளே எழுதிய சத்திய வல்லி" (1910) குறிப்பிடத் தக்கது. நாவல் வடிவில் இந்திய விடுதலே உணர்ச்சியைத் திறம்படச் சித் திரித்த முதல் நாவல் ஆக விளங் குகிறது மேலேச் சிவபுரி பனே யப்பச் செட்டியார் எழுதி ய காந்திமதி (1926), குறிப்பி டத்தக்க சமுதாய ஊழல்கள் பலவற்றை வெளிப்படுத்தும், (தேவகுஞ்சரி அம்மாள் எழுதிய) "விஜயலக்ஷ்மி" (19 5) என்ற நாவல் சில புரட்சிகரக் கருத் து தி க ளே க் கொண்டுள்ளது (உதாணரமாக, பிராமணரும் பிராமணரல்லாதாரும் சமபந்தி யில் உட்கார்ந்து சாப் பி டும் காட்சி), நல்லவர்களேக் கதா நாயகர்களாகக் கொண்டெழு தும் வழமைக்கு மாருக, கெட்ட பெண் ஒருத்தியைக் கதாநாயகி பாகக் கொண்டு எழுதப்பட் டது (பி. சி. கோவிந்தராஜா எழுதிய) "மரகதவல்லி" என்ற நாவலென அக்கால விமர்சன மொன்று கூறுகிறது:
கடிதங்கள் மூலமாகக் கதை கூறும் உத்தியைப் பின்பற்றி புள்ளது மறைமலேயடிகள் எழு
 
 
 
 
 
 
 

திய கள்" என்ற நாவலாகும். பார தியார் எழுதி முற்றுப்பெருத "சந்திரிகையின் கதை" எா ன் ற நாவலிற்கூட புதியதொரு உத் தியைக் காணலாம் கற்பனேட் பாத்திரங்களோடு, நிஜவாழ்க் கையிலுள்ள சமகாலப் பாத்தி ரங்களேயும் இனத்து (உ- ம் சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர்) கதை பின்னப்படுகிறது.
1.
இக்காலப் பகுதியை ஆய்வு செய்தோர் இன்னுெரு தவறை பும் நிகழ்த்துகின்றனர். ஆங்கி லத்தில் மட்டுமன்றி, வங்கா எம். மராட்டி முதலிய பிற இந் தி ய மொழிகளிலிருந்தும் நாவல்கள் இ க் கா லத் தி ல் மொ ழி பெயர்க்கப்பட்டன. ஆயினும், இம்முயற்சிகளே - பாதிப்புக்களே - இவ்வாய்வா 岛 க் கால ப் பகுதியோடு சேர்த்து அவதானிப்பதில்லே,
இக்காலப் பகுதியில் வங்க நாவல்கள் மூலம் - சிறப்பாக, சரத் சந்திரரின் நாவல்கள் - மத்தியதர வர்க்க மக்க ளி என் தினசரி வாழ்க்கையும், அவர் களுடைய அற்ப பொருமை களும், சில்லறை மனத்தாங்கல் களும், வாய்விட்டுக் கூருமலி ருந்த போதிலும் அவர்கள் உ ண்  ைம யி ல் உள்ளாகிவரும் கஷ்டங்களும் எளிய மகிழ்ச்சி சுளும் த மிழ் நாவலுக்குள் எட்டிப் பார்க்கின்றன. அதா வது பெரும்பாலும் மத்தியதர வ ரீ க்க மக்களின் வாழ்க்கை
முறையை வ ங் க நாவல்கள் வெளிப்படுத்திா கவனத்தை சரித்தன. இதஞல், கால ப்
போக்கில் தமிழ் வாசகரது ரச னேப் போக்கில் மாற்றழேற்பட வழிபிறந்தது; இத் த ரி க ய நாவல்களும், இவ்வாறெழுதும்
கோகிலாம்பாள் கடிதங்
நாவலாசிரியர்களும் தமிழிலும்
ਲ மேலும், குடும்ப நாவல்களும், । ।।।।
। நாவல் மொழிபெயர்ப்பும் ாே । । । பும் மறுப்பதற்கிங் (நாங்க
ni பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன் வென்பது வேறுவிடயம்)
மராட்டிய |- AF M) E LI IT IT, ETT GIMP CARE Effi är நாவல்கள் - பொதுவாக இல் சியப் பாங் கு  ைடயனவாக
அமைந்தன. 嵩(孟岛品
களும் உருவாக ஒருவிதத்திங் சாரணமாகின. ஆண், பெண்
ணுறவு தொடர்பான சில புரட்
ਮੋ: விய மொட்டு" இந்நாவல் பற்றி - - - MT கிராம சாமிய வில்" நிகழ்த்திய சர்ச்சைகளும், சா. நா. சு. கருகாத பொட்டு" என்ருெரு சிறுகதை எழுதியமை பும் சுவைமிகு விடயங்களாகும்) புதுவிதமான் சில உத்திகளேயும் அறிமுகப் படுத்தின் - ம் பாத்திரங்களே தும் கதைகனேக் சு நுத ல் கதைக்குள் கதை இடம்பெறுதங்) (மராட்டிய நாவல்களாலும் LUFTRAGTIGE DI TIGAT சில பாதிப்புக்கள் ஏற்பட்டுள் எனவென்பது தேவையற்ற விடயமாகும்).
ஆகவே, இவ் வங்க மராட் டிய நாவல்காே விரிவா ள் ஆரா பாமல், அறவே ஒதுக்கிவிட்டு, இக்காலம் பற்றி இலகுவாகவே சிவ முடிவுகளே காடுத்து விடுகின் ரூர்கள்
11
சரி இந்நூற்றுண்டின் ஆரம் | நம்வரை (1910 வரை நாவ

Page 32
லின் இருண்டகாலம் என்று
கூறிஞல் ஒரு வாதத்துக்காக ஏ ற் று க் கொண்டால் - இன்
ணுெரு கருத்தையும் அல்லவா இவர்கள் கூறவேண்டும்; ஏற் றுக் கொள்ளவேண்டும். அதா
வது, "கல்கி தோன்றிய பின் பும்" ( கல்கியையும் சேர்த்து) இக்காலம் நீடித்துள்ளது:
இவர்களுள் சிலர், கல்கியை முதன்மைப் படுத்திக் கூறு ம் போது, கல்கியின் நாவல்களின் அடிப்படைத் தன்மைகளை மறந் தவர்களாக அல்லது உணராத வர்களாகவே காணப்படுகின்
றனர். கல்கியின் வரலாற்று
நாவல்களும், சமூக நாவல்களும்
அடிப்படையில் பரபரப்பு நாவல்
களின் இயல்புகளைப் பெற்றுள் ளனவே. கல்கி, வடுவூரார், ஆரணி முதலியோர் பண்ணிய
கைங்கரியத்தையே இ ன் னும் சற்றுத் தொடர்ந்து விடாப் பிடியாகப் பத்திரிகையுகத்தின் வெற்றியுடன் செய்தார் என் பது ஆஷர்களையும், ன பூழி ல் முதல்வர்களையும் . தண்டாயுதங் களேயும் தவிர ரனையோருக்குப் புதுவிடயமன்று.
கல்கியின் வருகையோடும் கல்கியின் பின்னரும், தமிழிலக்
கிய உலகில் ஜனரஞ்சகச் ச ஞ் சிகைகளின் பேரரசுக் காலம்  ெத ர ட ங் கி யது. எனவே,
தொடர்ந்தும் பரபரப்பு நாவல்
கள். வேறு வேறு வேடங்களில் நடமாடிக் கொண்டிருத்தன என் பதுதானே அர்த்தமாகும்!
ஏறத்தாழ, கள் வரையும் - இந்த இருண்ட காலம் நீடிக்கின்றது இன்னுெரு விதமாகக் கூறின், இக்காலப் பகுதியிலிருந்தேதான் முத ன் முதலாகத் தமிழில் இலக்கிய
வடிவம் என்ற விதத்தில் நாவல்
"முதிர்ச்சி நிலை எய்துகிறது: (பார்க்க மல்லிகை, டிசம்பரி
ஐம்பத்தைந்து
76. பக். 20) அதாவது நாவல் களில் வெளிப்படையாகச் சீர் திருத்தக் கருத்துக்களும், போத னைகளும், பர பரப்பு அம்சங் களும் காணப்பட்ட நிலைமை மாறுகின்றது. சீர்திருத்தக் கருத் துக்களும், போதனைகளும் நாவ லின் போக்கோடு அத்வைத மாகி விடுகின்றன. சில மர்மக் கதைகளென்றும், துப்பறியும் கதைகளென்றும் தனிவகையாகி விடுகின்றன. t
இவற்றை நோக்கும்போது அவர்களது கருத்து இவ்வாறு கூறத் தோன்றுகிறது: "1900-ல் இருந்து ஜெயகாந் தனது வருகை வரையும் இருண்ட காலமே இருண்ட காலம் அல்ல எனச் கருதுவார்களானுல் இவ்வாறு கூறுவோம்: "1900-ல் இருந்து ஜெயகாந்தன் வருகை வரை இருண்டகாலமன்று. சமூக ச் சீர்திருத்தத்தைப் பொருளாகக் கொண்ட காலம். இக் கால நாவல்களின் வளர்ச்சி உள்ள டக்கத்திலல்ல, உத்திகளிலேயே காணப்பட்டது"
12
இறுதியாக, இதுவரையும் கூறியவற்றைச் சுருக்கமாக நினை வூட்டுவோம்! இக்காலப் பகுதி இருண்ட காலமெனக் கூறப் பட்டுவந்ததற்கான காரணங்கள் எவையென்றும், இத் த கைய நாவல்கள் பரபரப்பு அம்சங் களை மட்டுமல்ல >வேறு பல முக்கிய அம்சங்களைத் கொண் டிருந்தனவென்றும், “ւ 5 լի பெற்ற நாவலாசிரியர்களைத் தவிர வேறுபலரும் எழுதி ய நாவல்கள் இருந்தனவென்றும் , அவை ஆய்வாளரால் கவனிக் கப்படவில்லையென்றும் கூ றி னுேம். இக்காலப்பகுதி நாவல் கள் கற்ருேர்களின் பாராட்டு தல்களைப் பெற்றிருந்தனகுவன் Apylò. Luar tugT is nr nu áv a sir
፵0

தமிழ் நாட்டுப் பின்னணியில் எவ்வாறு தமது இயல்புகளை மாற்றிக் கொண்டனவென்றும் 35 siður Gumtub. இந்நாவல்களில் காணப்பட்ட சிறப்பியல்புகள் பற்றியும், இது இலக்கிய உணர் வுள்ள காலமே என்றும், இக் காலப் பகுதியின் புதிய முயற் சிகள் பற்றியும், கவனிக்கப் படாத பிறமொழி நாவல்கள் வேறும் உள்ளனவென்பதுபற்றி
யும் விளக்கினுேம். இறுதியில்
இது இருண்ட காலப்பகுதியல்ல என்றும் நிறுவிளுேம் பதிலாக சமூகச் சீர்திருத்தக் காலமே எனப் புதுப் பெயரும் வைத் தோம், இல்லையா?
இ ன் ஞெரு நியாயமான கேள்வியையும் எழுப்புவோம்: இவ்வாய்வாளர் இக்காலப் பகு தியை இரு ண் ட காலமென
முடிவு கட்டுவதற்கான தாற் பரியம். யாது?
இக்காலப் பகுதியை இவர் கள் ஆய்வு செய்த காலத்தில்  ைஏறத்தாழப் பத்தாண்டுகட்கு முன்புதான் என்ருலும்- நாவல் இலக்கிய ஆய்வு இன்றைய நில் யில் வைத்தெண்ணப் படும் போது அவ்வளவு தூரம் முனைப் புற்றிருக்கவில்லை. ஏலவே கூறி யதுபோல, பரபரப்புக் காணப் பகுதியைச் சேர்ந்த நாவல்களுள் மிக இலகுவில் கிடைத்தகவ அக்காலத்தில் பிரபல்யம்பெற்று விளங்கிய ஒரு சிலரது நாவல் 4.ளே. இவ்வாருன நாவல்கள் தரமற்றவை என் ஒதுக்கப்பட் டமையால் வேறு நாவல்களும் கவனிக்கப்படவில்லை. கிடைத் தவையும் "நுனிப்புல் ஆய்வுக்கே" உட்பட்டன. இந்நியிேல் விரும் பிய கருத்துக்களே உறுதியாக வெளியிடும் வாய்ப்பும், திறமை யும், அவாவும் ஆய்வாளர்களுக் கிருந்தமை வியப்புக்குரியதன்று
பின்வந்த ஆய்வாளருக்கு தொடர்ந்தும் ஆய்வு செய்து தான் கருத்துக்களை வெளியிட வேண்டுமென்ற நேர்மையோ, ஆர்வ மோ, நிர்ப்பந்தமோ அமைந்திருக்கவில்லை; முன்னை யோர் கருத்துக்களைப் "பயபக் தி யுடன் ஏற்றுக் கொண்டனர்; நளின வார்த்தைகளில் வெளி யிட்டனர். ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியற்றி எழுதும் விமர் சகர் பலரும், ஆரம்ப காலச் சிறுகதையாளர் பற்றி - குறிப் பா. க, சி. வைத்தியலிங்கம் இலங்கையர்கோள், சம்பந்தன் பற்றி - அவரது ஆ க் கங்களை வாசித்தறியாமலும், 1930 - ம் ஆண்டினையே முக் கி ய காலக் கோடாகக் கொண்டும் முன்னே
யோர் கருத்துக்களை அப்படியே
et
கூறி ச் செல்வன்த ஒத்ததே, இப் பரபரப்பு நாவல்கள் பற் றிய போதிய ஆய்வுக்குட்படாத பல கருத்துக்களுமாகும்.
இன்னெகு முக்கிய குறை பாடும் குறிப்பிடத் தக்கதா கும். கீழைத்தேயப் பின் ன ணியை அவதானிக்காது" மேலைத் தேய விமர்சன அளவுகோல் களை" அவ்வாறே ஏற்று, நூல் களை ஆய்வு செய்யும் நிலையே அது. தமிழ் தா வே ல் க ளின் தோற்றம்பற்றிய ஆய்வுதொடக் கம், தமிழ்ப் புதுக் கவிதைகளின் தோற்றம் பற்றிய ஆய்வுவரை இந்நிலை நீடித்துள்ளது. எனி னும், மெளனி க  ைத கண் (மேலைத்தேய அளவுகோல்களை முற்றிலும் ஒதுக்கிவிடாமல்) இந் திய மரபுவழி நின்று ஆய்வு செய்த தமிழவன் என்பவரது விமர்சன முறையே, தமிழ்விமர் சன வளர்ச்சிக்கு ஏற்றதாகும் ஆயினும் இது பற்றிய விரிவான ஆய்வு, அவசியமாகும். *

Page 33
தமிழகத்திலிருந்து ஒரு கடிதம்
நான் தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்தவன் தஞ்சாவூர்க்காரன் தி ஜானகிராமன் எனது ஜில்லாவைச் சேர்ந்தவர் என்ற பெருமை எமக்குண்டு. எனவே நமது ஜில்லா உணர்வின் ஊறல் எமது இரத்தத்திலும் ஊறியுள்ளது.
எளக்கு இலக்கிய ஆர்வம் பூர்வீக சொத்து. எங்கிருந்தாலும் தேடித் தேடி நல்ல இலக்கியத்தை ரளிப்பது வழக்கம் 5 சமீப காலங்களாக தமது நாட்டில் வரும் சஞ்சிகை, “ புத்தகங்களைப் படித்துப் படித்து எனக்கென்னமோ தெவிட்டிப் போய்விட்டது. அரைத்த மாவையே அரைக்கிருர்கள். காதலைத் தவிர, இவர் களுக்கு உலகத்தில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரிய வில்லை. சஞ்சிகைகள் கவர்ச்சிப் படங்களைப் போட்டுப் போட்டே தமது வியாபார நோக்கத்தை நிறைவேற்றி வருகின்றன,
சமீப காலத்தில்தான் எனக்கு இலங்கை இலக்கியப் பரிச்சி யம் ஏற்பட்டது. தாமரை மூலம் இலங்கையில் நல்ல தரமான சஞ்சிகைகள் வருவதாக அறிந்தேன். அதில் மல்லிகை முதலிடம் வகிப்பதாகவும் தகவல்கள் மூலம் தெ ரிந்து கொண்டேன். திருச்சி நண்பர் ஒருவரது ஒத்துழைப்பு மூலம் மல்லிகையின் சில இதழ்களைப் பெற்றுப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு புதிய தமிழ் உலகமே எனக்கு முன்னுல் விரிந்து பரந்து கிடப்பதை உணர்ந்தேன். தமிழ் கூறும் நல்லுலகம் என்பது தமிழகம் மாத்திரமல்ல, அது மிக வியாபிதமான ஒன்று என் பதை இலங்கை இலக்கிய முயற்சிகளைத் தெரிந்து கொண்ட பின் னர்தான் என்னுல் உணர முடிகிறது.
14 ஆண்டுகள் என்பது சொற்ப காலமல்ல.
இவ்வளவு நீண்ட நெடுங்காலமாகத் தரமான ஓர் இலக்கியச் சஞ்சிகையைத் தொடர்ந்து நடத்துவதென்பது அசுர சாதனை தான். இந்தச் சஞ்சிகையை ஆரம்ப காலத்திலிருந்தே என்னல் படிக்க முடியாமல் போனது ஒரு பெரிய துரதிர்ஷ்டம் என்றே நான் கருதுகின்றேன்.
வேறு யாருக்காவது இல்லாமல் போஞலும் கூட தரமான இலக்கிய ரஸிகர்களுக்காக இலங்கையிலிருந்து நூல்கள், சஞ்சி கைகள் இங்கு வரவேண்டுமென விரும்புகிறவர்களில் நானும் ஒருவன், அதற்கான வழி வகைகளை ஆக்க பூர்வமாக நீங்களும் செய்ய வேண்டும்; அதே சமயம் நாங்களும் முன் முயற்சி எடுத்து இதில் ஊக்கம் காட்ட வேண்டும். வேறெந்தக் காலங்களையும் விட, இன்று இது எரியும் இலக்கியப் பிரச்சினையாக மலர்ந்திருப் பதே இதனது வெற்றிக்கு நல்ல சான்ருகும்.
,ே சொக்கலிங்கநாதன்
on

எமது கிளைகளில்
பெற்று மகிழ்ந்திடுவீர் இன்று.
புஸ்பா அன் கோ.
279, ஸ்ரான்லி ருேட்,
· யாழ்ப்பாணம்.
பாத அணி உற்பத்திப் பொருட்களுக்கு
நியூ புஸ்பா ஹாட்வயர்
23, ஜும்மா மொஸ்க் லேன்
கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்.
அச்சுக்கலை ஒரு அருமையான கலை அதை அற்புதமாகச் செய்வதே எமது வேலை
எம்மை ஒரு தடவை அணுகுங்கள்.
தொலைபேசி: 35422
நியூ கணேசன் பிரிண்டர்ஸ் 22, அப்துல் ஜப்பார் மாவத்தை கொழும்பு - 12
ዛuሡዞ"ዛዛutዘዞ"ካዛuuuዞሠዛዛuuuዞ"ህዛuuuህዞካዛዛuuዞዞ"ባዛዛuሡዞዞክህሡወካካuዞዛuuuutዞ"ዛu፡፡•“"ዘ"~
ህዞ"ዛዛuluህዞ"ካዛuu!ዞ"ቫካuuህዞ"ካካuuuዞ፡"ካuuዞህ"ካካuuዞ"ሄ'ካባuruዞ፡"lካuuuቦ፡"ዛu፡፡uዞዞ"ካካuዛዞዞ"ዛዛuሠዞዞዛዛዛዛu
கொழும்பில் அற்புதமான அச்சக வேலைகளுக்கு
நீங்கள் விரும்பும் பொருட்களைக் குறைந்த விலையில்
உங்களுக்குத் தேவையான மோட்டார் உதிரிப்பாகங்களுக்கு
சீற் குஷன்ஸ், தோல் குளோத் வகைகள் மற்றும்
费
5三 豐
still

Page 34
தொலைபேசி
3286
எந்த வர்த்தகமானலும் எழிலார்ந்த அச்சுக் கலையால் ஏற்றம் பெறுவது இயல்பே. அந்தச் சிறப்பிற்கு நீங்கள் அணுகவேண்டியதும் எமையே.
அழகான
அட்டைப் பெட்டிகளை ஆக்கித் தருவோர்
6aguT
209, பழைய சோனகத் தெரு,
கொழும்பு 12

மு. கனகராஜனின்
கல்யாணிகள்
1. சிறுகதையல்ல 2
ܣܐ /
விசும்பாளின் நீல வதனத்து செக்கர் கன்னங்களைத் தன் கதிர் விரல்களால் வருடுகின்ற அந்த வெள்ளி மூக் குத்தி யுவன்தான் என்னமாய்ச் சிந்துகிருன் மோகரைச் 3?flaoll
மாலையும் இரவும் பிணையப் போகும் இவ் வேளையில் காலிமுக ஹோட்டலுக்கெதிராயுள்ள இந்த பஸ் தரிப்பி டத்திலிருந்து தெரியும் அக் காட்சிதான் எவ்வளவு கல்யா ணகரமாயிருக்கிறது!
எனக்கும்தன் பெயர் வைத்திருக்கிருர்கள் கல்யாணி என்று. ஹ். ம்..ம்..!
வழக்கம்போல வந்து இதோ கால்கடுக்க நிற்கிறேன். இன்றைய இசவை எங்கே கழிக்க நேருமோ? இன்னமும் தெரியவில்லை. எவளுவது வருவான். எவனும் சந்திக்கா விட்டால். இன்றிரவு பட்டினிதான? இரவு மட்டுமா, காலையில்...! அது ஒரு கொடுமை! டம்பப் பையில் ஒன்றரை ரூபாதான் இருக்கிறது. ஆனல் என் அலங்கா ரமோ இதையெல்லாம் சொல்வதில்லை.
என் அலங்காரத்தைக் கண்டு எத்தனையோபேர் திரும் பித் திரும்பிப் பார்க்கிருர்கள். நான் விரும்புவதும் அதைத் தான். அழகான பூக்களிட்ட கிரேப் துணி யி லா ன "ப்ரொக்", செக்ளியாகத்தானிருக்கிறது. வெளிர் பச்சை "டயல்" கொண்ட கரூடா - அதை எப்போதும் நான் வலது மணிக்கட்டில்தான் கட்டுவேன். கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலி, இரண்டு பவுண். எவ்வளவு நீண்டகால உழைப்பில் நான் ஆசையோடு வாங்கியவை ம். என் உழைப்பு - எத்தனை பேர் தந்த பணம்! சே, இப்படியும் ஒரு வாழ்க்கை என் தலையில் எழுதப்பட்டதே.
அதோ அந்த டைப்பிஸ்ட் வருகிருள் அமைதியான அழகு. அவளின் வாழ்வுதான் எவ்வளவு நிம்மதியானது. அழகழகான சேலைகளை ப்ரொக்குகளை அவள் அணியும்

Page 35
போது அதுவே ஒரு நிர்மல் வசீகரம் அவளுக்கென்ன மாதம் முடிய சம்ப்ளம் போன்ஸ் கவயேற்றசீவியம்.
அப்படியொரு வாழ்க்கை எனக்கும் வாய்த்தால் Gij zij வளவு சந்தோஷமாக இருப்பேன். அவளேப்போல நல்ெ தோர் குடும்பப் பெண்ணுக வாழும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருந்தால். திருமணம் செய்து குழந்தைகளு Tணவரின் வரவை எதிர்நோக்கி. அதுவே ஒரு மனுேஹரமான வாழ்க்கைதான்! 5Togr:#fff37, fit sit க்னவர் எதிர்பார்த்திருப்பார் என் சுதுக்கங்களில் அவர் பங்கு கொள்வார் அவருடன் சிரியாவுக்குப் போசுவாம் பிச்சிற்குப் போகலாம்: அப்படியொரு வாழ்க் என க எனக்கு அவமாகவே G. TEYGIRL". Laj.
அவள். அந்த டைப்பிஸ்ட் என்னே ஏன் இப்படிக் கூர்ந்து பார்த்துக்கொண்டு வருகிருள்டி
**
ஒ0ா அற்புதமான மாலே மயக்கும் பெள வூ ன நேரம். எவ்வளுவு கல்யான' காட்சி. இதையெல்
விாம் அனுபவிக்க முடியாமலாகிவிட்டதே.
என்று. ஹ்..ம்ம். !
எனக்கும்தான் பெயர் வைத்திருக்கிரீர்கள் ,שנוצלת Jrב חuul
'விரல்களெல்லரம் ான்னபாப் வலிக்கின்றன. முதுகு ஒருபக்கம் நோகிறது. தினமும் டைப்" அடித்தடித்து
வேண்டாமென்ருகி விட்டது இப்படியும் ஒரு மாட்டு வாழ்க்கையா
செக்கு
இனி வீட்டிற்கு ஓடோடிப் போகவேண்டும் இரண்டு வயது மகள் போனதும் போகாததுமாகத் தோளில் வந்து ஏறி கொள்வாள். நல்ல காலம் குழந்தையைக் கவனித் துக்கொள்ள ஒரு கிழவி கிடைத்தாள். கிழவி குழந்தை யைப் பார்க்கிருளேர் இல்லேயோ சம்பளம் மட்டும் ஒழுங் காசுக் கொடுத்துவிட வேண்டும். என் கணவர் - அது ஒரு பிரகிருதி எத்தனே மணிக்கு வருமோ தெரியாது. அந்த மனுஷனுக்கு ஒரு ஸ்கூட்டர் இருக்கும் வரை நேர
கர்த்திற்கு வந்து சேராது. பொறுப்பில்லாத மனுஷன்
வேல் செய்கிறேனென்று பெறும் பெயர்தரின்
நான்
எத்தனேயெத்தன்ே பிரசினேசு:ளச் சமாளிக்க வேண்டியிருக் கிறது. தலேக்கு மேல் ஆடன், நிம்மதியே இல்லே, ஒரு நாளாவது ஆறுதிT4 சினிமா, பிச் கோவில் என்று
போக முடிகிறதா? வாழ்க்கையா இது?
இதோ இவள் - எவ்வளவு சந்தோசமாக வாழ்கிருள் நாளுக்கொரு ஆடுப்பு வேளேக்கொரு அலங்கரம். அவள் விரும்புகின்ற இடங்களுக்குப் போகலாம் நினத்து இன் பங்களிேயெல்லாம் அடையலாம் பெரிய ப்ெரி ஹோட் 'விளப்களில் விஸ்கி ஆருத்தலாம் நபி' லாம். இத்தனேக்கும் அந்தச் செலவுகளே யாரோ அவ
G
 

ளுக்காகச் செய்வார்கள் சுளேயாகப் பணமும் தருவார்
கள். எவ்வளவு சுதந்திரமான வாழ்க்கை
எனக்கும் இப் படி அமைந்ததே ஒரு வாழ்க்கை: பொதி சுமக்கும் கழுதைபோல இதற்குள்ளேயே சுற்றிச் வேண்டிக்
கற்றி. என்ன குடும்பம் என்ன இல்லறம் கிடக்கிறது - எல்லாம் சுத்த ஹம்பக்
இப்போ அவளுக்கென்ன குறைந்துவிட்டது? அவளேப் போல சுயேச்சையாக வாழ்வது தான் உண்மையான
வாழ்க்கை:
*
மிய அந்த டைப்பின்டின் முகத்தில்தான் எத்த&ன நிம்மதி பஸ் எப்போ வருமென பரபரக்கிருள். வீட்டிற் குப் போய்விட அத்தவே அக்கறை, ஒரு குடும்பப் பெண் ணுக இருப்பதில்தான் எவ்வளவு சுகம் வாழ்க்கை என்பது அதுதான். இப்படியொரு நடைப்பின வாழ்வு எனக்கும் வாய்த்ததே. இது பின வாழ்க்கையில்லாமல் வேறென்ன? வாழ வேண்டுமே என்பதற்காகத்தானே இந்தப் பல்லி விப்பு எல்லாம். நெஞ்சின் ஆயிரம் வேதனேகளிருந்தாலும்
முகத்தில் மட்டும் சிரி ப் பை வரவழைத்துக் கொள்ள
வேண்டியிருக்கிறது. பணம் தருபவனின் மனம் நோகக் கூடாதே. அதற்காகத்தானே கூலி என்ருலும் எத்த னேயோபேர் பனம் தராமலே ஏமாற்றி விடுகிருன்கள். கொடுக்கக் கூடாததைக் கொடுத்தால்தானே பணம் தரு வான் ன்று போகிறவாே வஞ்சிக்கிருனே அவன் சொறி நாயிலும் கேவலமானவன். உலகில் இப்படியொரு மோசடி இருக்க முடியாது.
நான் கெட்ட கேட்டிற்கு என்னே வஞ்சித்துவிட்டான்' என்று பொலிசிவா புகார் பண்ண முடியும்? ஆனுலும் இதில் கூட "டீசன்சி' யைக் கடைப்பிடிக்கிறவன்களும் இல் லாமலில்லே. என்ருலும் நோய், நோடி என்று வந்துவிட் டால். அதை நிரேத்தாலே "குலே ந்டுங்குகிறது. இவ் விஷயத்தில் கவனமாயிருப்பதுதான் கஷ்டமான சங்கதி எந்த நேரத்தில் எது நடக்குமோ? எந்தப் பாம்பில் எந்த விஷம் இருக்குமோ? அதனுல்தான் கூடியவரை 'உருப்படி பான வன்களோடு போக முயற்சிக்கிறேன். அப்படியும் நோய்க்குப் பயந்து எவ்வளவு செலவு செய்ய வேண்டி இருக்கிறது. வற்றைக் கழுவுவதைவிட இதற்காகவே பெரும் பகுதியும் கரைத்து விடுவதுதான் என் துர்ப்பாக் கியம் சே இந்தக் கழிசடை வாழ்க்கைக்கு என்றுதான் விடிவோ?
அதோ, அவர் சிரித்தவாறே வருகிருர்.
မဒ္ဒိ+ န္တီး++"
அவள் சிரிக்கும்போதுதான் எவ்வளவு அழகு! சுவலேயே இல்லாத சிரிப்பு வாழ்க்கையே என் காலடியில்
என்பதான சிரிப்பு
፴፻

Page 36
லும் ஒன்றிரண்டு.
புதிது புதிதாய் பொட்டவிழுமே.
துடிக்கின்றனவல்லவா?'
சிறும்போதெல்லாம் இப்படியொரு சிரிப்பு அவ
ருக்கு வில்லேயே அது அற்புதமானதோர் சிரிப்புத்தான்!
அவர் என்னிடம் எதிர்பார்ப்பது மல்லிகைப்பூப் புன்
ETF
யாசிப்பதை உணர்கிறேன். அதஞல்தான் அவர் சிரிக்கும்
போது
பம் கெள்விக் கொள்கிறது. அவரே என்னுல் ஏமாற்ற முடியாது ஏனெனில் நான் அவரே நேசிக்கிறேன்.
இன்னமும் பஸ் வரவில்லேப் போலிருக்கிறது?" மிருந்த வாஞ்சையோடு கேள்வி பிறக்கிறது.
நானும் அப்படி வாழ்ந்தால்: முற்று முழுதி" அவ3ளப் போலவே ஆகாவிட்டா
թԱյ மாற்றத்திற்காகவாவது" ஆம்! எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் நாட்கள்
இநல்லுமாய்ச் சிரிக்கத்
ஓ யார் அது: உதடுகள்
*
காதல் சிரிப்பு எனக்கு இப்படிச் சிரிக்க முடிய
ப; மாசு படியா மனத்தை அவர் என் காதலே
ட்லே நடுங்குகிறது; இதயம் பதைக்கிறது
அவன் அழகாகத்தான் இருக்கிருன் நல்ல சிவப்பு கவர்ச்சியான உருவம்.
"ஒரு ஹோட்டலுக்குப் GLIT I gosllrtër அறையில் சொகில்ற் ஜஸ்கிரீம் புருட்சலட் ன்று சுவைத்தவாறு சுவரில் தொங்கும் வகைவகைய? திரக் காட்சிகே ரளித்தபடி இதமானதோர் அணேப்பில் காதல் மொழி கிளின் ேெல்ல"மெல்ல கிறகு விரித்து காற்றில் மிதந்து, இமைகளே முடி அப்பப்பா -
நான் பதில் சொல்லவில்லை; அவர் எதையும் எதிர் பார்த்து ஏமாறக் கூடாதே என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு நகர்ந்து விலகி நிற்கிறேன். அதற்காக என் இதயமே பேயாய் அலறுகிறது
ஐயோ! நான் விரும்பும் வாழ்க்கை அதை gy GR) - III முடிய்வில்லையே. இந்த உடல் மட்டுமல்ல நரசிங்ட ஆவி ருக்கு அர்ப்பணிக்கிக் கூடியதல்ல.
7ಷೆ செய்கையைக் கண்டு களங்கமற்று அலு முகம்தான் என்னமாய்ச் சுண்டிவிட்டது
அதோ அவர் போகிருர்:

எத்தரேயோ பேரை சந்தோஷப்படுத்திய என்னுல் தான் விரும்பும் ஒருவரைச் சந்தோஷப்படுத்த முடியவில் லேயே நான் பாவி. பாளி. பாவி
மனம்விட்டு அறக்கூடக் கோடுத்து வைக்காத ஜென் மம் நான் அழக்கூடாது. ஆமாம் நான் அழுதால் என் வயிறு இரண்டு நாட்களுக்கு அழவேண்டியிருக்கும். என்ன குரூரம் இது.
அவன் என்னே நோக்கி மெதுவாக வருகிருன் ஸ்னிவான நடை
★ இவன் யார். திடகாத்திரமான சரீரம் செல் வாக்கான ஆடைகள் என்ரிடம்தான் வருகிருன்.
: ஹலோ! உங்களே எங்கோ பார்த்தமாதிரி இருக்கி TE . நினைவுக்கு வருவதில்: " சினேகம் பிடிக்க
விழையும் பாஷை
அவள் தான் வேலே செய்கிற இடத்தைச் ரொஜ்
=မ္ဘိန္နုိင္ငံ+" "ஹலோ டி கள நேரமாக நிற்கிறீர்களா? எங்கே போக வேண்டும்? நான் மவுன்ற்விைனியாவுக்குப் போக வேண்டியிருக்கு பஸ்ளைக் காணுேம்"
"இந்த பஸ்ள்ே இப்படித்தான். எவ்வளவு நேரம் காத்துநிற்க வேண்டியிருக்கு டாக்வியில் போவோமா?" நாகுக்கான - நாசமான அழைப்பு
அவளிதயம் படபடக்கிறது. கண்கள் மாங்க வங்க விழிக்கின்றன.
နုိ႕Hန္တီ+
"நீங்களும் மவுண்டிற்குத்தானே. இஃப் யூ டோன்ட் மைன்ட்கென் ஜொய்ன் மீ" பாேைது எவ்வளவு கெளரவ மாயிருக்கிறது.
"து என்று மறுத்துவிட்டால் என்ன?".
ငါ့ဖြိုးစန္တီး கம் வில் கோ இன் ஏ டெக்ஸி. அ ப் படியே கிரீம் ஹவுளிற்கும் போப் "கஸ்டர்டும்" குழு குழு ஜெல்லி கிறீமும் பருகிவிட்டு ஷெல் வீ. ப்ளீஸ்".
_၊ ဒန္တီးနန္ဒန္တီ။ மனதை அமுக்கிவிட்டு வயிறு புருபுருக்கிறது. அவ்ன் தெருவிலிறங்கி கையை நீட்டுகிருன்.
||နှိုး၊ နုိင္ငံန္တိ။
GᎲ

Page 37
அவன் மிக மிக அருகில் நெருங்கி.
மனம். மனம். மனம்,
அது தட்டுத் தடுமாறி
நோ'
வீடு, குழந்தை, கணவன் என்னுல் முடியாது முடி யாது."
ಇನ್ಹಿ।
கிறிச்சிட்டபடி டாக்ஸி பேவ்மன்ட்" டில் உரசிக் கொண்டு நிற்கிறது.
'சர்' என விரைந்து வந்த பஸ் மோதி தசுக்கிவிடு வதைப்போல தரிப்பிடத்திற்குச் சிறிது தூரத்திலேயே நிற்கிறது.
=န္တီး= மிக ஒயிலாக பின் சிற்றில் அமர்ந்த கல்யாணியின் அடிவயிற்றில் ஒரு ஆறுதல் பெருமூச்சாய் வெளியேறி டாக்ளியின் இரைச்சலில் கரைகிறது.
青
ஓடோடி சென்று ஏறிக்கொண்ட கல்யாணியின் மன தில் ஒரு அமைதி மேல் முச்சு, ம்ேமூச்சாய் வெளியேறி பஸ்ஸின் இரைச்சவில் கரைகிறது. 歌。
SS
மல்லிகை
ல்லிகை
லிகை
"ஆம் தன் கையே தனக்குதவி கைத்தொழில்கள் பழகுங்கள் வெளிநாடுகளில் வேண்கள் பெற,
வெல்டிங், வயிறிங், ரேடியோ, P. M. G. போன்ற பயிற்சிகன்
LLLLLL LL LLLLL LLLYYYSZ L Y L L L L L Z TLLT
37, பாங்சோல் வீதி, பiாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 

சமீபத்தில் வெளிவந்துள்ள சோஷலிஸப் புத்தகங்கள்
மார்க்லையும் ஏங்கல்ஸையும் பற்றிய நினேவுக் குறிப்புகள் மனித இனங்கள்
மி. நெஸ்தூர்ஹ் உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் ஜான் பீடு போர் இல்லாத இருபது நாட்கள் iTLDati
அரசியல் பொருளாதாரம் லெவ் லியோன்டினள்
மெய்யறிவின் வறுமை Լորիեքiն
லெனின் எழுதியவை: இரண்டாவது அகிலத்தின் தகர்வு
அரசும் புரட்சியும்
பொருளாதாரத் தன்னுணர்வு வாதம் பற்றிய ஒரு பணிப்புரை இடதுசாரி கம்யூனிஸம் இளம்பருவக்கோளாறு, சோஷலிஸ் சித்தாந்தமும் கலாசாரமும் குறித்து ஜனநாயகப் புரட்சியில் சமூக - ஆனநாயக வாதத்தின் இரண்டு போர்த் தந்திரங்கள். கூலி முறை
கூலி - விலே - லாபம் மார்க்ஸ் - ஏங்கல்வி - மார்க்றிையம்
直曼-5曹
置凸-ß
வி. பி பி யில் அனுப்பப்படும். ருபா 25-க்கு அதிகமாக வாங்
குபவர்களுக்கு வி. பி.பி. செலவு இகும்.
124, Kumaran Ratnam Road, Colombը 2.
phone: 36
PEOPLE'S PUBLISHING HOUSE

Page 38
அன்பான பெற்றேர் தங்கள் குழந்தைகளுக்கு அன்றடம் கொடுப்பது
Yry A. A. Ayry ******掌
حسن 酸 O ; GIL II : 女 大大大大女*大女大女*大大
டொபிகள்
ஸ்வீட்ஸ்கள்
கெரமல்கள்,
ஏனெனில் அவைகள் சுத்தம்ானவை, சுகாதார முறைப்படி கைபடாமல் இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப் படுபவை என்பது அவர்களுக்குத் தெரியும்.

இந்தியக் கலையும் இரசனையும் - சில குறிப்புகள்
சோ. கிரு ஷ்ணராஜா
புராதன சமுதாயங்கள் ஒவ் வொன்றும் த ம க் கென ஒரு மொழியை விருத்தி செய்து கொண்டதைப் போலவே ஒரு பண்பாட்டையும் விருத்தி செய்து
வந்துள்ளன. பண்பாடு எனும் சொல் பலவகையாக விளக்கப் பட்டாலும், அவ் விளக்கங்கள்
அனைத்திலும் கலை அம்சம் இடம் பெற்றிருக்கும். உழைப்பார்வமும் அறிவார்வமும் கல்யார்வமும் எல்லா மனிதர்க்கும் பொதுவா னதே. இனக்குழு வாழ்க்கையில் இசையும் நடனமும் ஆடம்பர வnழ்வின் அறிகுறியாக இல்லாது நாளாந்த வாழ்க்கையில் இடம் பெறும் ஒன்ருகவே இருந்து வந் தன. மனிதன் தான் கண்டு உணர்ந்தவற்றை கலை உணர்வு டன் பல் வேறு வடிவங்களில் வெளிப்படுத்த ஓவியத்  ைத ப் பயன்படுத்தினுன். உணர்ச்சிப் பெருக்கால் நடனங்கள் ஆடப் பட்டன. கலைகளின் தோற்றம் நடனத்திலிருந்தே ஆரம்பமாகி யது எனலாம். கூட்டாக உழைப் பில் ஈடுபட்டபொழுது பாடப் பட்ட பாடல்களும், ஓ ய் வின்
பொழுது இடம்பெற்ற இசை
இருந்த காலத்தில் கலை,
யும் நடனமும் இனக்குழு வாழ்க் கையில் த னி யா ன தொரு
தொழில் முறையாக வளர்ச்சி
பெறவில்லே. கலையும், இரசனை
யிம் உடலுழைப்புடன் இணைந்தே
s T60örül full-65T.
மனித ன் நாடோடியாக கலைக் கென்ற ஒரு வடிவத்தைப் பெற வில்லை. அதாவது வாழ்க்கை யும் கலையும் வேறுபட்டதாக உணரப்படவில்லை. உ ற் பத் தி
உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்
கள் ஓரிடத்தில் நிலையாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தை, மணி தனுக்கு ஏற்படுத்தியது. அக் காலத்திலிருந்துதான் மனிதனல் கலை முழுமையாக உருவாக்கப் பட்டது. எனினும் அது உடல் உழைப்புடன் கொண்டிருந்த தொடர்பிலிருந்து முற்ருக விடு வித்துக் கொள்ளவில்லை. அடி மைச் சமுதாயத்தில்தான் கலை யானது உழைப்பிலிருந்து மெது வாக விடுபடத் தொடங்கியது இரு க் கு வேதத்தில் கவிதை, இசை, நடனம் பற்றிய குறிப் புகள் காணப்படுகிறன. நாட கம் பற்றிய குறிப்பு மிகப் பிந் திய வேதமான யவுர் வேதத் தில் காணப்படுகிறது. வேத காலத்தில் கலைப்படைப்பை உரு வ T க்கு த ல் தனித்ததொரு தொழில் முறையாக வளர்ச்சி பெறவில்லை. ஆனல் உபநிடத காலத்திலோவெனில் கலைஞன் உழைப்பிலிருந்து தன்னை முற் ருக விடுவித்துக் கொண்டான்.
கி. மு. இர ண் டி ற் கும், ஏழிற்கும் இடைப்பட்ட நூற். முண்டுகளில் தரிசனக் குழுக்கள் இந்தியாவில் பூரண வளர்ச்சி (பற்ற நிலை காணப்பட்டது. அக்காலத்தில் கலைஞன் தான் சார்ந்திருந்த சமுதாயத்தின் (வர்க்கத்தின்) தே  ைவ களை நி  ைற வு செய்யும் வகையில்
78

Page 39
கலைப் படைப்புக்களை உருவாக் கிஞ்ன், சமய சடங்கு முறை களிவிருந்து கலைக்குரிய வடிவங் கள் ஒழுங்குபடுத்தப் பட்டது. இதஞல் புதிய உள்ளடக்கங்கள் கலேயில் இடம் பெறுவது சாத் தியமாயிற்று. இந்தியக் கலை வரலாற்றில் நிலப்பிரபுத்துவ காலசட்டம் மிக முக்கியமானது. ஏனெனில் இன்று இந்தியக் கலை என் நாம் அறிய வருவதெல் லாம் அக்காலகட்டத்தில் தோன் றியவையே. அத்துடன் நில மானிய சமுதாய வளர்ச்சிக் காலத்தில் சான் மரபுபேணும் தூய கலை வடிவங்களும், நாட் டார் கலை வடிவங்களும் ஒன்றி லி ரு ந் து ஒன்று பி ரி பட த் தொடங்கு கிற ன. கி. பி. நாலாம் , ஐந்தாம் நூற்ருண்டு களிலேயே மரபு பேணும் தூய கலைசளுக்கான கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு விட்டது. அக் காலத்தில் நிலப்பிரபுத்துவம் இந்தியா வில் திடமாக உருப் பெற்றுவிட்டது. கி. பி. ஐந்தாம் நூற்ருண்டில் வாழ்ந்த புத்த கோசர் கலா ரசனை பற்றிய உணர்சி வெளிப்பாட்டுக் கொள்  ைக  ைய எடுத்துக்காட்டிஞர். மீண்டும் மீண்டும் கதை சொல் லுபவர்களால் பல தலைமுறை களாக கூறப்பட்டு வந்த புனை கதைப் பாங்கான செய்திகள் நிலப் பிரபுத்துவ காலத்தில் புத் துருவம் பெறலாயிற்று. முஃனப் புடன் தன்னிறைவு கொண்ட கலே இலக்கிய மு ய ந் சிக ள் வளர்ச்சியடைந் ன. பாஷா, காளிதாசர் போன்ற கலைஞர் களது படைப்புக்களை நினைவு கூருதல் இங்கு பொருத்தமே. இவர்கள் முறையே நாலாம், ஐந்தாம் நூ ற் ரு ண் டு களி ல் வாழ்ந்தவர்களாவார்.
கலைஞன் தன் அனுபவத்தை கஃபாக புறநிலையுருவாக்கம் செய்கிருள். அதற்குக் காலப்
போக்கில் விதிமுறைகள் வகுக் கப்பட்டு தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றது. இந்தியக் கலை விமர்சகரான ஆனந்தக் குமாரசுவாமி இந்தியக் கலை பற்றிய தனது நூலொன்றில் கலைஞனை ஒரு யோகிக்கு ஒப்பிடு தல் குறிப்பிடத்தக்கது. கலைஞன் தியானத்தினுல் தன் முயற்சிக்கு இடையூருக இருக்கும் மன அவ லங்களை நீக்க ஆழ்நிலைத் தியானத் தில் ஈடுபடல் வேண்டும். அதன் மூலம் மன ஒருமைப்பாட்டைப் பெற்று, தான் படைக்கவிருக் கும் கலைப் பொருளை கற்பனை
யில் காணுதல் வேண்டும். பின்பு
கண்டதையே புறநிலையுரு
அக் கற்பனையிற் கலைப்பொருளாகப்
qLAqqL LASLLALSL qSLA TiSLLALAL LqL LAqqLALLAAAAALLALLqLLLLLLLAL
சிருஷ்டிக் கடலே!
கலைத்தாயின் தலைமகனே! வாழ்வுக் குழந்தையை சாகடித்து - வார்த்தைக் குழந்தைகளை வாரியே அணைக்கிருய்!
காணும் பொருட்களை கண்களால் புணர்ந்து மனக் கர்ப்பத்தில் வளர்த்து சிருஷ்டிச் சிசுக்ளாய் l9graf Galtu Lurruli
அனுபவப் பஞ்சில் படைப்பு நூல் எடுத்து மனித மனப் புடவைகளை தைப் பாய்!
இறந்தகால எதிர்கால நினைவுகளால் நிகழ் காலத் துடுப்புகளை இழந்தே தவிப்பாய்
ஒ. சிருஷ்டியாளனே! நீ பன்னீர்குளத்தில் மிதந்ததாய் சரித்திரச் சுவடுகளில் இல்லை.
74

வாக்கம் செய்தல் வேண்டும். "பஞ்சாரத்திர" என்ற நூல் கலைப்படைப்பொன்றை உருவாக் கும் க லே ஞ ன் மேற்கொள்ள வேண்டிய சமய அனுட்டானங் களை எடுத்துக் கூறுகிறது. இந்தி யாவில் மரபு பேணும் தூய கலைகள் சமயத்தைச் சார்ந்து வளர்க்கப்பட்டன என்ற உண் மையை இங்கு கவனித் த ல் வேண்டும். அழகு எவ்வாறு கலையில் வெளிப்படுத்தப்படல் வேண்டுமென்ற கலைநுணுக்க விபரங்களை "ஈஸ்வர சமித்தி என்ற நூல் எடுத்துக் காட்டு கிறது; கலைப்படைப்பை கற்பனை யிற் கண்டு கொள்ள அது உத வும், பரதமுனிவரின் நாட்டிய
LSLA LLA LAqq LALALALAqALALALLAqLAL LLLLAALLLLLALLLL LLLLLLLALALLAqLALAALLLLLAS
உன் வீட்டுக்குக் கண்ணிரே கூரையென உன் படைப்பு இயம்பும்!
வறுமை சைத்திரீகனின் பசி ஒவியம் உன் வாழ்வுத்திரையில் வரையப்படும் கணங்கள்.,
நீயே கலை இன்பக் காட்டில் மோனத்தவம் புரிவாய்!
உன் படைப்புகளின் ஜனன மழையில் உன் வீட்டு சேலையோரங்கள் தினந் தோறும் - குளியல் நடத்தும் வேளை. நீயே சிருஷ்டி கர்த்தவாய் பிரபஞ்ச வீதியில் சஞ்சாரம் செய்வாய்!
ஒ. சிருஷ்டிக் கடலே காலக் கவிஞனின் உன்னதக் கவிதையே! உன் வாழ்வு மரணித்தாலும் உனக்கு அஸ்தமனமே இல்லை!
“ (Lolosir assís
சாஸ்திரம் என்ற நூலும், நந்தி கேஸ்வரருடைய அபிநயதர்ப்ப ணம் என்ற நூலும், இந்தியக் கலை மொழியின் பூரண வளர்ச்
சியை (நிலப்பிரபுத்துவகால) சுட்டிக் காட்டுகின்றன. கி. பி. ஏழாம், எட்டாம் நூற்முண்டு
களுக்கு முன்பதாகவே மேம் கூறிய நூல் கள் தொகுக்கப்
பட்டு விட்டன.
இந்தியக் கலஞன் அழகு (செளந்தரியம்) பற்றிக் கொண் டிருந்த கருத்து ரசக் கொள்கை எனப்படும். ரசம் என்பது சுவை யைக் குறிக்கும். அது விப்பவனதும், படைப்பாளியின தும் மனநிலையைச் சார்ந்தது. தன் அகநிலை உணர்வுகளை புற நிலைப்படுத்த முயலுவதே இந்தி யக் கலை ஞனி ன் நோக்கம். கி. பி. பத்தாம், பதினுெராம் நூற்ருரண்டுகளில் ரசக் கொள் கைக்குப் பதிலாக தொனி க் Costrarso ès (psira) ai si . டது. கல்ப் படைப்பின் சிறப்பு: அது எவ்வாறு தரப்படுகிறது என்பதில் தங்கியுள்ளது, என்
பதே தொனிக் கொள்கையின்
சாராம்சமாகும். மேற்கூறிய இரு கொள்கைகளும் இரு வேறு பட்ட கருத்துக்களை முன்வைப் பினும், அடிப்படையில் மனித னின் அகநிலை உணர்வுகளையே ஆதாரமாகக் கொண்டவையா கும். உடல் வனப்பு (லா வண் யம்) அழகின் அம்சமாக இந்தி யக் கலைஞனுலோ அன்றி ரசிக
னுலோ முதன்மைப் படுத்தப் படவில்லை. ஆனல் கிரேக்கக் கலையிலோ உடல் வனப்பே
முத ன் மை பெற்றிருந்தது. கலைப் படைப்பில் தனித்துவம் மேலைத்தேயத்தோரால் போற் றப்பட்ட ஒன்று. ஆஒல் இந்தி யக் கலையாக்க விதிமுறைகள், கலைஞனது தனித்துவம் வெளிப் பட இடமளிக்கவில்லை. கி. பி. ஒன்பதாம், பத்தாம் நூற்முள்

Page 40
டுகளில் நிலப்பிரபுத்துவம் பூரண வளர்ச்சியைப் பெற்றிருந்தது. சாதி அமைப்பும் பேரரசு வாத
மும் இந்தியச் சமூகத்தை இறு
கப் பற்றியிருந்தன. வர்க்கத்தின் கருத்துக்களையே சமயம் நியாயப்படுத்தியது. ச ம யம் கூறும் உண்மைகளே உறுத்துவதாகவே ச ரி வ கலை களும் விளக்கப்பட்டன. கலா ரசனைக் கோட்பாடுகள் உருவாக் கப்பட்டன. பத்தாம் நூற்ருண் டில் வாழ்ந்த அபிநவகுப்தர் அபிநவபாரதி என்ற நூலை எழு தினர். அது நிலப்பிரபுத்துவத் தின் பிழிசாருண கலைக் கொள் கையாக இருப்பது குறிப்பிடத் தக்கது. குறிப்பாக நாடகத்தை அடிப்படையாகக் கொண்டே அபிநவகுப்தர் தன் கலைக் கொள் கையை விளக்கிஞர்.
(85 in
கலைக்கு ஒரு நோ க் கம் உண்டு. அதாவது மனிதனை துன்புறுத்தும் மன அவலங்களி லிருந்து ”அவனை விடுவிப்பதே நாடகத்தின் நோக்கம். தாடக உத்திகள் ரசிகனது உணர்ச்சி களைத் தூய்மைப் படுத் த ல் வேண்டும். உணர்ச்சிகள் தூய் மைப்பட வேண்டின் நாடகம் த ரு ம் அனுபவம் சாதாரண உலகியலனுடவமாய் இருத்தல் கூடாது. அதிலிருந்து வேறுபட் டதாயும், கற்பனை ஆற்றலைத் தூண்டுவதாயும் நாடகம் அமை தல் வேண்டும். நாடகம் காட் டும் கற்பனை உலகுடன் ரசிகன் இணைந்து கொள்ளுவதற்கு உதவி யாக அழகியற் கற்பனையை உரு வாக்கும் ஆற் ற ல் ரசிகனுக் இருத்தல் வேண்டும். அதாவது கலைப்படைப்புகள் தரும் அனுப வத்தை ரசிகன் உளத்தாலும் உடலாலும் உணருதல் வேண்
டும், கலையின் முக்கிய நோக்கம் நயப்போர் தன்னை மறந்து கல்ை யுடன் ஈடுபாடு கொள்ளுதலா
கும் தன்னை மறந்த ஈடுபாட் டிற்கு கவிதையிலும் பார்க்க நாடகமே சிறப்பாக உதவும்
என இந்தியர் கருதினர். வட மொழி இலக்கியத்தில் நாடகம் முதன்மை பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. நா. க ம் பார்க்கத் தீர்மானிப்பதிலிருந்து நாம் ஒரு எதிர்பார்ப்புக்கு தயா ராகிருேம். இசை மன அவலங் களையும் பிற எண்ணங்களையும் ம ன தி லி ரு ந் து நீக்குகிறது. நாடக நாயகரும் மற்றவரும் மேடைக்கு வரும் வேளையில், இசை ரசிகனை உலகியல் நிலை யிலிருந்து விலக்கி கலை உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இத ஞல் தன்னை மறந்து, நாடகம் காட்டும் கற்பனை உலகுடன்
DCCGCO3
n- -a-
தொடர்ந்து மல்விகை இதழ்களே! படிக் து வரும் நண்பர்களுக்கு இதை சொல்லுகின்ருேம். தனி இதழ்களேத் தவற விட்டு விடாதீர்கள். ஏனெனில் பின்னர் அது உங்களது தொகுப்புக்குக் கிடைக்காமலே போக லா ம். காலம் செல்லச் சிெல்லத்தான் மல்லிகையின் பெறுமானம் தெரியும். அதன் உள்ளடக் கம் சேமித்து வைத்துப் பயன்படுத்த வேண்டியதாகும். குறிப்பாக உயர்கல்வி கற்கும் மாணவர்கள் இதில் கவனமாக இருக்க வே ண் டு ம். பின் ரூ ல் எத்த னையோ சிரமப்பட்டும் கிடைக்காத இதழ்களே மாதா மகதம் மிகப் பெறுப் பாகச் சேமித்து வைக்கப் பழகுங்கள். பின்னல் அது உங்களுக்கு உபயோகமாக விளங்குவதை அனுபவ பூர்வமாக உணரு
வீர்கள்.
-ஆசிரியர்
affsfahassifs
 

ஒன்றிவிட நாம் தயாராகிறுேம்,
ஒன்றிவிடுதல் திடீரென ஏற்படு வதல்ல படிப்படியாகவே நிக மும், நாடக நா ய கருட ன் தன்னை இனங்கண்டு கொள்ளும் ரசிகன், Tநாடகத்தில் திருப்பு மையம் (கிளேமாக்ஸ்) வருவதற் கிடையில் பூரண கற்பனுபாவத் தைப் பெற்று விடுவான். திருப்பு மையம் ரசிகனது உணர்ச்சியை கிளர்ந்தெழச் செய்து, ஒருவகை யான திகில் உணர்வை ஏற்படுத் துகிறது. நாடகம் முடியும் தறு வாயில் திகில் உணர்வு பெற்ற ரசிகன். அவ்வுணர்வு நீங்கி ஒரு வகையான நிறைவுணர்ச்சியைப் பெறுவான். an.
இந்திய நாடகங்கள் ரசிக னுக்கு ஒரு உணர்வனுபவம் ஏற்படுத்துவதையே நோக்கமாக கொண்டவை. அதனுல் புறநிலைப் பட்ட நோ க் கல் நாடக ரச ளேக்கு உதவுவது அல்ல. கலை தரும் அனுபவம் அகவயமான
தால், சார்பற்ற நோக்கோ அன்றி பற்றற்ற அவதானிப்போ கலாரசனையாகாது என இந்திய ரசனைக் கோட்பாடு வற்புறுத்து கிறது.
கைத்தொழிற் புரட்சியின் பலாபலன்கள் இந் தி யா ைவ எட்டும் வரை கலையாக்கத்திலும் கலாரசனையிலும் இந் தி ய ர் க ளால் ஏற்றுற் கொள்ளப்பட்ட கலைக்கொள்கை இந்தியாவிற்கே உரியது. முதலாளித்துவம் பூரண வளர்ச்சி பெருமையும், நிலமா Gofu y gysottot' sår 6rjar Frrás சங்கள் இன்றுவரை சாதாரண இந் தி ய னி ன் வாழ்க்கையில் காணப்படுவதுமே; இன்றுவரை, இந்தியக் கலைக்கொள்கை பாரிய மாற்றத்தைப் பெருமலிருப்ப தற்குரிய காரணம் எனலாம்:
*
மல்லிகை மடந்தை மணம் பரப்ப
டொலர் , அலுமினிய பித்தளை எவர்சில்வர்
பாத்திரங்கள் வல்லேத் துணிவகைகள் w பரிசுப் பொருட்கள்
பஜாஜ் ஸ்கூட்டர்
:ሥ{ **.• , “ - ••- ** سنن بلندت 8% ويتضحلة
முதலிய பொருட்களுக்கு யாழ் நகரில் ஏக விநியோகஸ்தர்களான எம்
நல் வாழ்த்துக்கள்
சிவன் ஸ் ரோர் ஸ் 80, கே. கே. எஸ். வீதி,
தொலைபேசி 1837
- யாழ்ப்பாணம்.
77.

Page 41
உணவுற்பத்தியைத் துரிதமாக்குக!
வெற்றிகரமான ஆறண்டுகள!
நிதான விலை! நிறைந்த சேவை!
விவசாயிகளின் தேவைகளை
இரசாயனங்கள் உரவகைளால்
சிறந்த முறையில் நிவர்த்திக்க
அணுகுக
c p
*அக்ருே விலாஸ்' "
(AGRO VILAS) இடைக்காடு, - - - அச்சுவேலி,
 

52(5 சோவியத் விமர்சகர்
பார்வையில்
தற்காலத் தமிழிலக்கியம்
நவீன தமிழிலக்கியம் அத னது இரண்டாவது நூற்ரூண்டி னுள் பிரவேசிக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1 78-ல் முதற் தமிழ் நாவலான வேத நாயகம்பிள்ளையின் *பிரதாப முதலியார் சரித்திரம்" வெளி யானதன் நூற்ருண்டு விழா தற்போது தமிழ்கூறும் நல்லுல கெங்கும் கொண்டாடப் படுகி றது. இது சோவியத் இந்திய வியலாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. த மிழ் நாவல் நூற்ருண்டு விழாவையொட்டி மாஸ்கோவில் கீழைத்தேயவியல் நிலையத்தில் நடைபெற்ற கருத் தரங்கில் சில இந்தியவியலாளர் கள் சொற்பொழிவாற்றினர்.
சோவியத் இந்தியவியலா ளர்கள் புராதன தமிழ்ப் பேரி லக்கியங்களில் மட் டு மின் றி, புதுத் தெம்புடன் பாய்ந்தோடும் நவீன தமிழ் இலக்கிய வரலாற் றுப் போக்கிலும் பேரார்வம் காட்டி வருகின்றனர் சோ வி யத்தேசம், இந்தியா, இலங்கை ஆகியவற்றுக்கிடையில் வளர்ந்து வலுப்பெற்று வரும் உறுதியான நட்புறவு பரஸ்பர இலக்கிய பரிவர்த்தனைக்கும். ஆய்வுக்கும் துணை செய்கின்றன.
கடந்த இரு த ஸா ப் த காலங்களில் திருக்குறள், சிலப்
பதிகாரம் ஆகிய புகழ்பூத்த தமிழ்ப் பேரிலக்கியங்கள் ருஷ்ய
罗9
விதாலி. ஃபோர்னிகா
மொழியில் ଶt $f ।
பெயர்க்கப்பட்டுள்
நவீன தமிழ் எழுத்தாளர் களின் சிருஷ்டிகளைப் பொறுத்த ள வி ல், புதுமைப்பித்தன், கல்கி, கு. ப. ரா. ஆகிலன், பி. எஸ் , ராமையா, கி. வா, 岛。 ராஜம் கிருஷ்ணன், ஜெயகாந் தன் முதலானேரின் எழுத்துக் கள் ருஷ்ய மொழியிலும் இதர சில சோவியத் மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. இவை மக்கள் மத்தியில் வெகு பிரபல் யம் பெற்றுள்ளன.
*முதலாவது தமிழ் நாவலா
சிரியரின் "பிரதாப முதலியார் சரித்திரம் முதல் ஜெயகாந்த னின் "சில நோங்களில் சில
மனிதர்கள்" வரை தமிழ் நாவ லின் வளர்ச்சி பற்றி இங்கு முடிந்தளவு விரிவாக ஆய்வுகள் மே ற் கொள்ளப்பட்டுள்ளன. முன்னைய நா வ ல் வாழ்க்கை பற்றிய ஒரு அர்த்த  ைகற்பிதப் பிரமையிலிருந்து எழுந்த ஒன்ற கும் (ஐரோப்பிய வீரசாகஸ் நாவல்களினது பாதிப்பினுக்கு உட்பட்ட ஒரு நிக்லயில் வேத நாயகம்பிள்ளையினுல் இந் நாவல் சிருஷ்டிக்கப்பட்டது). இன்று ஜெயகாந்தனின் "சில நேரங் களில் சில மனிதர்கள்" *ஜய ஜய சங்கரா", மேனவெளி மணி தர்கள்" ஆகிய நாவல்களில் அல்லது அகிலன் "எங்கே போகி

Page 42
ருேம் ராஜம் கிருஷ்ணனின் விளக்கரம்'முதலான நாவல் களில் மிக எதார்த்த பூர்வ மான முறையில், ஆழமான அத்தியாத்ம் விசார வழிப்பட்ட ரீதியில் வாழ்க்கை சித்திரிக்கப் பட்டிருப்பது கண்டு நாம் மகிழ்ச்சியடைகின்ருேம்.
Eரிக் கொடி கா வந் தொட்டு நாளாந்தம் நாம் சீத் திக்கும் சாதாரண மனிதர்களேஇன்றைய எதார்த்த வாழ்வில் ஷ்ேட நஷ்டங்களுடனும் துன்ப துய்ரங்களுடனும் புதிய நம்பிக் கைகளுடனும் எதிர்பார்ப்புகளு டனும் பின்னிப் பிணந்த LEEF தர்களே - பாத்திரங்களாகச் சித் நிரிக்கும் புதிய சிருஷ்டி பி நுக்களே தமிழிலக்கியம் உற்பரித் துள்ளது. த மிழ் இலக்கியப் பரப்பிங் நூற்றுக்கணக்கான கதாபீஜங்கள் தோன்றியுள்ன. தமிழ் 'மறுமலர்ச்சிக்" குழுவின் *ன்'இந்த தீவிர எழுச்சி தமிழ்ப் புண்க்தைத் துறையை முன்தள்
ரிச் செல்ல ஆரம்பித்தது.
தமிழ் எழுத்தாளர்கள் ஆரா மும் பிரச்னைகள் தமது சம' சமுதாயத்தினது வாம் இங்த்து அம்சங்களேயும் தழுவி விாகவுள்ளன. நான் இங்கு பிரச்சினகள்" என்று குறிப்பிடும் போது எழுத்தாளர்கள் தமது பட்ைப்புக்களில் கையாளும் வாம்க்கை அம்சங்களேயும், சமூக பிரதிமைகளேயும் பொது க் அவர்களின் கிரகிப்பு ரீதியான கொள்கையையே நான் குறிப் பிடுகின்றேன்.
இந்தியாவின் வரலாற்று வழிப்பட்ட நிலைமைகளுக்கமைய தமிழ் நாவல்களின் கையாளப் துடும் பிரச்னைகளும் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு வந்துள் ன்ன் இவ்வாறு நான் முன்னர் குறிப்பிட்டது போல முதலி"
வது தமிழ் நாவலில் முக்கிய அம்சமாக வீரசாகனம் அமைந் தது கல்கியின் வரலாற்று நாவல்களில் தேசபக்த உணர்வு விரவியிருப்பதனே ஒருவர் கான லாம்: டாக்டர் மு. வரதராச னுரி நாவல்கள் தத்துவார்த்த வழிப்பட்ட ஒழுக்கசீலத்தைகம் தியாகத்தையும் உணர்த்தும் து ம் சங் சன் நிறைந்தவை ஆஞல், அதே வேளேயில் புது மைப் பித்தன் )35 + LJיחים ל காலம் முத்ல், சமகால தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சித்தி ரிக்கும் ஆழமிக்க எதார்த்த ரீதி பன பாத்திரப் பிரதிமைகள் தமிழ்க் கதை இலக்கியத்தில் செறிந்து வரத் தலைப்பட்டன. புதுமைப்பித்தன் ஆ ல் து கு. பா. ராவின் கதாநாயகர் ரன்" அன்றைய கர்லத்து சமூக சூழ்நிலமைக்ளின் பாதிப்புக்குப் திரானவர்களாக இருந்தனர். தமது பிரச்னேகுளுக்குத் தாமே தீர்வுகாணும் வீச்சின் அவர்கள் பெற்றவர்களாய் இருக்கவில்லே ரgரம், 4-ம் ஆண்டுகளில் எய்தப் பெற்ற மிக முக் கி ய பெறுபேறு எழுத்தாளர்களிது சமுதாய நோக்கில் ஏ பட்ட மாற்றமேயாகும். இத் தோற் றப்பாட்டினேநாம் 1939 - 0 வே கட்ட்த்தில் இந்தியாவில் ஒளிர்ந்தெழுந்த தீவிர தேசிய இயக்கத்துட்ன் தொடர்புபடுத்தி நோக்கலாம்.
சுதந்திரத்துக்குப் பிற்பட்டி சாலத்தைய தமிழ் எழுத்தரளர் களில் புதிய தலேமுறையினர் த தி கதாநாயகர்களேயும் கதாநாயகிகளேயும் புதிய வெளிச் சத்தில் தரிசிக்கத் தலப்பட்டனரி
இவ்வாறுதான் ஜெயகாத் தன் தனது சிருஷ்டிகளில் மன வுறுதி கொண்ட சமன ஸ்து பாவத்தைக் கொண்ட பாத்தி ரங்கள் வளர்த்தார். இவரது பாத்திரங்கள் ஒரு 'நீஜம்ான

வாழ்விகுல் முழுமை பெற்ற வையாக, இயக்க மும் கா யார்த்தமும் நிரம்பியவையாக இருந்தன.
தமது தாயகத்தின் சமூக வாழ்வில் மக்கள் தீவிர பாக்கி ரத்தை வகிக்கத் துவங்கிய ஒரு தறுவாயில் இந்தியா பில் உருவா கிப்புதிய உள் நிலமைகளினது தாக்கமும் பிரதிபலிப்புமே ஜெய காத்தன்து பாத்திரங்களின் புதி யதும் முக்கியமானதுமான தும் சங்களாக அமைந்தன. இதர தமிழ் எழுத் தாளர்களின் சிறு கதிைகள் பலவற்றிலும் இதர அம்சங்கஃாக் காண்லாம்
நவீன தமிழிவுக்கியத்தில் காரைக்கூடிய பிறிதோரு முக்கிய அம்சமாயிருப்பது Tໆ ກໍ ຂຶ້ນ விசாரம்" ஆகும்.
பாபுவிடம் ஒன்றும்
岛西曼 °"@ துப்பா- எடே பாபு ஒன்றும் கூட்டினுல் எத்தனே வரு குது சொல் பார்ப்போம்:
பாபு யோசித்துச் சொன்ன பதில்:- இரண்டு ஒன்றையும் சேர்த்துக் கூட்டினுல் பெரிய ஒன்று வரும்"
மனித வாழ்வின் உண்ர்ந் தறிவதற்கும் பிரதிபலிப்பதற் கும் உளநில அல்லது 岛品岛
யாத்ம அம்சங்களே மிக முக்கிய முறைகளாகக் கையாளலாம், எழுத்தாளர் தனது கதா பாத்திரத்தின் தனித்துவமான உள்ள நுபவத்தைச் சித்திரிக்கும் போது, அந்த மனிதன்சின் வாழ்க்கையில் வாசகனும் பங்கு பெற உதவுகிருர்,
தமிழிலக்கியத்தில் ஆரம்ப கால கட்டத்தில், ந், ளநி ே அல்லது அத்தியாத்ம அம்சங் கள் வலுவான விதத்தில் பிரதி பவிக்கப்படவில்: புத இயக் கங்களும், சம்பாஷனேகளுமே ஆன்றைய படைப்புகளில் மேலா
திக்கஞ் செலுத்தின்,
ஆகுல் பின்னர் இந்த அம்சங்கள்பால் மேலும் மேலும்
சிரத்தை காண்பிக்கப்பட்டது. இந்த வகையில் 茵·H·町T。 ஆற்றிய பங்குப்பணி குறிப்பி புத்திக்கது.
அசாதாரண ஆற்றல் வாய்ந் தவரான் மென்னியின் படைப் புகளில் மிகச் சிறந்த உளநிலே அல்லது அந்தியாத்ம விசா ர வழிப்பட்ட அம்சங்கள் செறிந் திருப்பதை ஒருவர் காணலாம்.
மெளனி ஏறத்தாழ 80 கதை களே எழுதியுள்ளார். "பிரபஞ்ச கானம்" அல்லது "நினேவுச்
சூழல்'ப்ோன்ற இவரது கதை களில் புற நல்கின் தன்தியான பாதிப்புக்குட்பட்ட கதாபாத்தி ரங்களின் வெகு நன்மையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இவரது
அத்துபான வெளி' என் கதையில் புற்இயக்கப்பாடு வெகு வாகக் குன்றக்கப்பட்டுள்ளது.
வேறு புல் தமிழ் எழுத்தா ார்களின் பல சிறுகதைகள் நாவல்கள் குறுநாவல்கள் முத லான்வற்றின் மனிதர்களின் உள் வாழ்வின் பாலான மிகக் கவன மான் திட்சன் பமிக்க கருத்து ஸ்ததியுடன் நெருக்காகத் தொடர்புபட்டி உளதிலே விசா ரம்பர்சிடுவின்தக் காலாம்: ஆதாரமாக அகிலனின் "பூச் சாக்ரடி ஜெயகாந்தனின்"ஆடும் நாற்காதிகள் ஆடுகின்றன". "சில நேரங்களில் சில மனிதர்கள்' ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
நாங்கள் எனும்போது
கதாஸ்து" பாத்திரங்களின்

Page 43
நடத்தை, அவர்களின் எண்ணங்
கள், உணர்வுகள், மனவெழுச் சிகள் முதலானவற்றையே குறிப் பிடுகின்ருேமாயின், சமகாலத்
தமிழ்ப் புனைகதைத் துறை நிஜ மான் வாழ்வுடன் மிக நெருங்கி நிற்பதை நாம் காணமுடியும்,
பாத்திரங்களின் உணர்வு களையும், உளநிலையியல்புகளையும் சித்திரிப்பதானது தனித்தனியா கச் செய்யப்படுவதில்லை. மாருக இவை, இன்றைய சமுதாயத் தின் ஒரு யதார்த்தமான, ஜீவ முக்கியத்துவம் வாய்ந்த சூழ் நிலைமைகளை அடியொற்றியவை யாகவே சித்திரிக்கப்படுகின்றன. இம்முறை, சமகால சமுதாயத் தில் நடைபெறும் மாற்றங்களை ஆழமான விதத்திலும் நிஜபூர் வமாகவும் எழுத்தாளர்கள் சித் திரிப்பதற்குத் துனை செய்கின் றது.
தமிழ் நாவலின் ஒரு நூற் ருண்டு வாழ்க்கைக் காலத்தில், $]] கதா வஸ்து Lo L - L- Gãi) பெருஞ் சாதனைகளைச் சாதித் துள்ளது. வேதநாயகம்பிள்ளை யின் முதல் நாவலில், முதலா வதாக அர்த்த - கற்பிதமான, அரை - யதார்த்தமான வாழ் வினை அம்சப்படுத்தும் பாத்தி ரங்கள் தேர்ச்சியுடனும் வீச்சு டனும் சித்திரிக்கப்பட்டுள்ளன. "பிரதாப முதலியார்' சரித்திரத் துடன் ஒப்பிடும்போது இன்றைய தமிழ் நாவல்கள் கணிசமான அளவு வளர்ச்சி பெற்றுள்ளன; மனித வாழ் க்  ைக  ைய உள் ளார்ந்த ரீதியில் சித்திரிக்கும் வீச்செல்லை இன்று விரிந்துள்ளது.
சமகால தமிழ்ப் புனைகதை யின் ஆர்வமூட்டும் அம்சங்களில் ஒன்ருயிருப்பது உள்ளுர் பேச்சு வழக்கின் பிரயோகம் ஆகும். வ. வே. சு. ஐயர் கா ல ந் தொட்டு - அவரது பி ர பல கதையான 'குளத்தங்கரை அரச
மரம் வெளி வந்த காலத் தொட்டு - உள்ளூர் பே ச் சு வழக்கு தமிழ்ப் புனைகதைகளில் பிரயோகிக்கப்பட்டு வருகின் றது. இது பாத்திரத்தின் இயல் பினைத் வெளிப்படுத்தவும் உள் ளக வாழ்வினைச் சித்திரிக்கவும் துணை செய்கின்றது. ந வீ ன தமிழ்ப் புனைகதையின் சிறப்பம் சமாயிருப்பது பேச்சுமொழி பொருத்தமான வி த த் தி ல் கையாளப்படுவதேயாகும்.
தனது கதைகளில் பேச்சுத் தமிழைத் தீவிரமாகப் பயன் படுத்த ஆரம்பித்தவர் புதுமைப் பித்தனே. பல தமிழ் எழுத் தாளர்கள் அவரைப் பின்பற்ற ஆரம்பித்தனர். இவர் க ளில் ஒருவரான ஜெயகாந்தன் பல் வேறு பிரதேச பேச்சு வழக்கு களையும் திறமையாகப் பிரயோ கிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்.
எந்தவொரு வெளிநாட்ட வரும் புராதன தமிழ்க் காவி யங்களின் தனித்துவத்தையிட்டு ஆழ்ந்த மனப் பதிவு கொள்வர் என நான் கருதுகிறேன். நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான பழந் தமிழ் இலக்கியத்தின் தாக்கத்தையும் தொடர்சியை யும் பல தமிழ் நாவல்களிலும் குறு நாவல்களிலும் நெடுங் கதைகளிலும் காண முடியும். இப் பிரச்னையைக் க லா நிதி க. சிவத்தம்பி அவர்கள் தமது "தற்கால தமிழ் இலக்கியத்தில் பண்டைய இலக்கியத்தின் தாக்
கமும் வளர்ச்சியும்" எ ன் ற நூலில் நன்ருக ஆராய்ந்துள். ளார். தமிழுலகினல் நன்கறி
யப் பெற்ற திராவிடவியலாள ரான காலஞ்சென்ற பேராசிரி யர் செம்பியன் (று தின்) இவ் வாறு ஓரிடத்தில் குறிப்பிட்டார். 'திட்டவட்டமான கருத்துருவங் களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மரபார்ந்த பிரதிமைகள், பாத்
8名

திரங்கள் ஆகியன ஒவ்வொரு தமிழ்ப்பிரஜையினதும் பிரிக்கப் பட முடி யா த அம்சங்களாக மாறியுள்ளன. இதைத் தெரிந்து கொள்ளாத வகை யி ல், இன் கூடப் புரிந்துகொள்ள முடியர்து. தொன்மையாகா, சேஷங்களுக்கு சமகால வாழ்விலும் அவற்றிற் குரிய இடம் உண்டு, சமகால த மிழி ல் இருக்கையிலிருந்து இவற்றைப் பிரிந்துவிட முடியாது என்று எம்மால். கூற முடியும்" (ரூதின் - ருஷ்ய மொழியில் பிரசுரிக்கப்பட்ட தமிழ்ச் சிறுக தைத் தொகுப்பினது முன்னு ரையில்)
தற்காலத் தமிழிலக்கியம் பற்றிய தத்துவார்த்த வழிப் ப ட் ட ஆய்வுகள் சோவியத் யூனியனில் நடைபெறும் அதே வேளையில் தமிழ் நூ ல் களை ருஷ்ய மொழியில் பதிப்பிக்கும் செயல்பூர்வமான முயற்சிகளும்
தனித்துவச் சஞ்சிகை
ཕན་
༢་ཡས་པས་ས་འགག་བཞ742
عريم سمــه*
.nത്ത്
*エリー 、
窒以S吸
மேற்கொள்ள பட்டு வருகின்
றன.
தமிழ் எழுத்தாளர்களின் த லை சிறந்த படைப்புக்களைப் படிக்கும்போது சமகாலத் தமி ழி லக் கி யம் வெற்றிகரமாக வளர்ந்து வருவதை எம்மால் first முடிகிறது. பெருந் தமிழ்க் க விஞர் சுப்ரமணிய பாரதி, வ. வே. சு. ஐயர் புதுமைபித் தன், கல்கி, கு. ப. ரா. , அகி லன், ஜானகிராமன் நா. பார்த்
னிக் ஜீவர், கனக செந்திநாதன் பே n ன் ற எழுத்தாளர்களின் படைப்புக்களை நாம் ஏற்கனவே ஆழமாக அலசி ஆராய்ந்துள் ளோம்.
தமிழிலக்கியத்தின் உள்ளழ கினை அறிந்து அனுபவிக்க முன் வந்த ஒரு மாணவனின்- எதிர் காலத்திலும் இந்தப் பயனுள்ள ஆய்வினைத் தொடர எண்ணங் கொண்டுள்ள ஒரு மாணவனின் மனப்பதிவுகள் இவை, YA
S>リア
محتعم۔
தொடர்ந்து படித்துப் பாருங்கள்

Page 44
ஏமாற்று
தேர்தல் என்ற திருவிழா வந்தது! தெய்வம் என்றுதலேவர் தெருவெலாம் ார்வலங்கள் புரிந்தனர் மேடையில் 鷺 அமர்ந்தனர் ஆசையால் வேர்க்க வேர்க்க விரிவுரை ஆற்றினர்
:ே பில்லா நின்மையை மாற்றுவேன்! சோற்றை மூன்று பொழுதிலும் காப்பிட சுந்த மாதந்ான் சேவைகள் செய்குவேன்!
என்னே மட்டும் தெரிந்தெடுப் பீர்களேல் இந்த மண்ணிலே பொன்மண் நாட்டுவேன்! அண்ணன் தம்பி உறவினர் யாமலோ? அறுத்துப் பாரும் இத்: ஒன்றுதான்! எந்தப் பேதமும் என்னிடம் இங்ேேய! என்றன் விடோ ார்க்கும் திறபடும்! உண்மை என்றன் டிரையினே நம்புவீர்!
பிரைக் காக்க உரிபை வழங்குவீர்!"
என்று கூறி இரந்து திரிந்தவர்
வர் நாய்கள்ே எங்கும் அனுப்பினுர், கண்ட கண்ட இடங்களில் கத்தியே கடிக்க வந்தன காசுகள் ஈந்தன! கொண்டு இந்து சுமிகள் போட்டன் குடிக்கப் போத்தற் குவியல் கொடுத்தன! பெண்கள் கையிலே நைலெக்சுச் சாரிகள் பிரியத் தோடு கோடுத்தும் சிரித்தன
அந்த நாளும் வழமை போல் வந்தது! ஆன்சயோடு நடந்தனர் யாவரும் இந்த மண்ணிலே இடர்கள் தீரவும், ஏற்றத் தாழ்வுகள் இங்கிருந்தோடலும், செர்ந்த வாழ்வு சிறக்கவும் வேண்டியே சொல்லி வைத்த தஃலவரைக் காட்டிடும், சின்னத் திற்குமுன் புள்ள போட்டனர், ” சிறப்பு வந்திடும் என்று திரும்பினர்!
வெற்றி அந்தந் தலேவரும் பெற்றனர் வீடு தோறும் வெடிகள் கொழுத்தினர்! புத்தி யுள்ள மனிதரே என்றனர், புதிய மாலேகள் சூட்டிக் களித்தனர்!
சென்று வந்துங்கள் சேவையே ஆற்றுவேன் சீரும் நல்ல சிறப்பும் விருேந்திடும்! என்று போனஅள் எங்களின் எம்பி"யை இன்னும் இந்தத் திசையிலும் கண்டிலேன்
மு. சடாட்சரன்
 
 
 

சோவியத் யூனியனில் புதுமைப்பித்தன் எழுத்துக்கள் பற்றிய ஆய்வு
தமிழ் நாட்டின் பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தனின் எழுத் துக்கள் பற்றிய ஆய்வு சோவியத் யூனியனில் தொடர்ந்து நட்ை பெறுகிறது.
புதுமைப்பித்தனின் 30வது சிரார்த்த தினம் ஜூன் 30ந் திகதி 徽 அருஷ்டிக்கப்பட்டது. இத் தினத்தையொட்டி தற்காலத் தமி லக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்து வருபவர்களில் ஒருவரான விதாவி பூர்னிகா புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றி சோவியத் யூனியனில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் குறித்து பல விவரங்களே வெளியிட்டுள்ளார்.
புதுமைப்பித்தனின் சில சிறுகதைகள் 1959ல் ருஷ்ய மொழியில் பெயர்க்கப்பட்டன. 1961ல் "காதல் தீபம்" என்ற மகுடத்தின் கீழ் சோவியத் யூனிய வில் புதுமைப்பித்தனின் 20 சிறுகதைகள் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டன்.
1971ல் நவுகா' பிரசுராலயத்தினர் வெளியிட் 'கோவில் விளக்கு என்ற தமிழ்க் கதைத் திரட்டிலும் புதுமைப் பித்தனின் "மன்க்குகை ஓவியங்கள்" "தெரு விளக்கு" ஆகிய இரு கதைகள் டம் பெற்றன. இ. கதைகளே தமிழ்நாட்டில் செம்பியன்" என்ற பரில் ஆறிமுகமாகியுள்ள பிரபல சோவியத் இந்தியலியலாளர் நூதின் மொழிபெயர்த்திருந்தார்.
சோவியத் இந்தியவியலாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் புது விமப்பித்தனின் 200க்கும் மேற்பட்ட சிதைகள், கட்டுரைகள், கவி தைகள், நாடகங்கள் ஆகியவற்றுடன் நெருங்கிய பரிச்சயம் கொண் | டுள்ளனர். கடந்த ஐந்தாண்டு காலத்தில் நடைபெற்ற பல இலக் கியக் கருத்தரங்குகளில் புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழிலக்கியம் பற்றி ஆராயும் இளம் ஆய்வாளரான லியூபோ வ் பிச் கிஞ புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் பற்றிய தமது நாலாண்டு கால் ஆராய்ச்சியின் பின்னர், சோவியத் விஞ்ஞானப் பேரவையின் கீழைத்திேயவியல் நியே உயர் பீடத்துற்கு தமது ஆய்வுன்ரயொன்றினச் சமர்ப்பித்தார்.
பிரபல ருஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செஹாவ்வின் எழுத்துக் கண் முதன் முதலில் தமிழ் வாரர்களுக்கு அஜிமுகப்படுத்தியவரும் புதுமைப்பித்தனே செஹாவில் வின் பாணியை பின்பற்றிய்ே எழுத ஆரம்பித்த புதுமைப்பித்தன், தமது சக் - தமிழ் எழுத்தாளர்க் ஞக்கும் இந்த வடிவம், சித்தி முதலானவற்றின்' அறிமுகிப்படுத்தி
வைத்தார்.
இன்று சோவியத் வாசகர்கள் மத் தி யில் பிரபல்யமாகியுள்ள 蠶 எழுத்தாளர்களில் புதுமைப்பித்தன் முன்னனிஸ்தானத் தை வகிக்கின்ருர்,
፴፭

Page 45
சேர
r அகதியாகாமல் தப்பிقTeآb விட்டேன். இது என் வீரத்தி ஞல் அல்ல. கதை என்னைப் பற்றியதல்ல. எனவே நா ன் எப்படித் தப்பினேன் என்பதும் அவசியமில்லாததாகிறது அந்த அகதிகள் முகாமில் உள்ளவர் களைக் கண்டு ஆறுதல் சொல் லும் துடிப்புடன் சென்ற என் முன் ஆபிரமாயிரமாய்ச் சோக காவியங்கள் திறந்திருந்தன. செத்துவிட்ட மனிதத்துவத்தின் மொத்த விளைவுகளாக அங்கே நான் கண்ட காட்சிகள். கேட்ட
கதைகள், சொந்த நாட்டிலேயே
அகதிகளாகி ஆறுதல் சொல்ல முடியாத அளவிற்கு அழுகின்ற இதயங்கள்.
கொஞ்சத்தூரம் த ள் விரி யிருந்த நடுத்தர வயதுக்காரர் தான் சொன்னர்
அ வரை ஆமோதித்துத் தலையை ஆட்டினேன். எ ன் பார்வை தீயினல் வெந்து வாடிய "அந்த அவள் முகத்திலேயே நிலைத்திருந்தது. S.
"இங்காருங்கோ வெளியிலை எல்லாம் இப்ப நோமலோ" எண்டு கேளுமப்பா அந்த நடுத் தர வயதுக்காரரின் அருகிலிருந்த
அவள் அ வ ரின் மனைவியாக இருக்கவேண்டும்.
மெய்யே தம்பி. . “ என்று ஆரம்பித்து புதினம் விசாரித்த அ வ ரு க் கு ப் பத்திரிகையாக கொஞ்ச நேரம் கடமைபுரிய வேண்டியிருந்தது.
"அந்த இடத்திலை அப்படி நடந்ததே ப்போ எப்பிடி
இந்த இடத்திலை இப்படி நடந்
சோழ
வழிந்தோடும் கண்ணிருடன் அந்த மூலையிலிருந்த அவள் மீது என் பார்வை விழுந்தது. அவ ளின் முகத்தில் எத்தனை எரி காயங்கள். "இரக்கமே இல்லா மல் தீ யி ன ல் சுட்டிருக்கிருங் કG6Ir*
என் நினைவும் நெஞ் சும் எரிந்தன.
உதென்ன தம்பி, கும்பிட்ட கையையே போயிருக்கிருங்கள்' பக்கத்திலி ருந்த பெரியவர் சொன்னர். அவரைப் பார்த்தால் வதந்தி களைப் பரப்புபவர் போல த் தெரியவில்லை.
*இந்தமுறை ஐம்பத்தெட்டி லும் மோசமாய்ப் போச்சு. வேலியே பயிரை மேய்ஞ்சால்."
வெட்டிப்போட்டுப்
ததே இப்போ எப்பிடி’ என்று அந்த மிஸிஸ் நடுத்தர வயது கேட்டுக்கொண்டிருந்தாள். வதந் திகளைப் பரப்புவதற்காக முத லில் கைது செய்யப்படவேண்டிய செய்யப்பட்டிருக்க வேண்டியவர் வெளியே இல்லாமல் அகதிகள்
முகாமில் இருப்பதும் நல்லதுக் குத்தான் எ ன எண் ணி க் கொண்டேன்.
இ லகு வில் அவர்களிடம் இருந்து விடைபெற முடி ய வில்லை. உடலிலோ மனதிலோ காயம்பட்டவர்களாக அவர்க
பாண்டியர்
\

ளைத் தெரியவில்&ல. அவர் தன்
அரசியல் ஞானத்தையும் மனைவி யின் முன் காட்டிவிடத் துடித் தாா.
"எங்களுக்கு இனி எங்கடை நாடுதான் ஐசே.. எங்கடை காலந்தான் போச்சுது. இனி எங்கடை வருங்காலமெண்டா லும் சந்தோஷமாயிக்க வேணும்" வருங்காலம்பற்றி அவர் கூறியபோது அழுகின்ற அந் தச் சிறுமியின், பிஞ்சு முகத் தின் எரிகாயங்களைத் திரும்பி ஒருதடவை பார்த்துக் கொண் டேன்.
‘ஓந்தம்பி, குழந்தையள், குமர்ப்பிள்ளையஸ் எண்டும் Lifrrir மல் படாதபாடு படுத்தியிருக் கிருங்கள்" அம்மாதான் பேசின. சவீடுகளை விட்டிட்டு போன வையிலை கனபேர் இப்ப திரும்ப வந்துகொண்டிருக்கினமாம்"
மெய்தானே என்பது மாதிரி என்னை ப் பார்த்தார் அந்த மிஸிஸ் நடுத்தரவயது.
"ஓ கன இடங்களிலை ஆட் கள் வீடுகளிலை இல்லாததாலை தான் கொள்ளையஸ் நடந்திருக் குதாம்"
எங்கோ பார்த்த பொலிஸ் ரிப்போட்டை ஒப்புவித்தேன்.
"இங்காருங்கோ, எங்கடை ருேட்டிலை ஒண் டு ம் நடக்கை யில்லையோ எண்டு கேளுங்கோ அப்பா?
அவர் திரும்ப என்னிடம் அதனை ஒப்புவித்தார். இவர்கள் பயத்தினல் வந்து சேர்ந்த அக திகள் ரகம், அவர்கள் குறிப் பிட்ட ருேட்டில் மட்டுமல்ல. அந்தப் பகுதியிலேயே ஒரு சம்ப வமும் இல்லை.
"இங்காருங்கோ. அப்ப நீங்கள். . மிஸிஸ் நடுத்தர வயது இழுத்தாள்.
"சும்மா இரும். உம்மை இங்கை தனிய விட்டிட்டு எப் பிடியப்பா நான் போறது.
"இங்கே நல்ல பாதுகாப்பு இருக்குத்தானே? என்பது போல் சுற்றிவரவுள்ள இராணுவ வீரம் SåTu பார்த்தாள் அவள்
sala! Gou li untiag பரிதாப மாக இருந்தது. அவர் கதையை ഖ சையில் திருப்ப (1ՔԱյair ரூர்.
'திருகோணமலைக் கோட்டை வாசலிலை இருந்த பிள்ளையா ரைக் கடலுக்கை போட்டுவிட்டு, அது இருந்த இடத்திலை பிள்ளை யாா குளிக்கிருர் எண் எழுதி யிருக்கிருங்களாம். அவர் தான் பேசினும்
"தெய்வம் நிண்டறுக்கி தானே. ஏ ன் எத்தினை இடத்திலை காட்டியிருக்
குது. கொள்ளையடிச் இடத்தி லேயே பாம்பு கடிச்சுச் சாகிருங் *ள ஒருத்தனுக்கு விசர்நாய்
என். கிண்முகலிங்கன்
கடிச்சுதாம்." மிகுந்த உணர்ச் சியுடன் இடையிட்டார் ஆரம் பத்தில் கதைத்த பெரியவர்
தான்.அந்த அகதிகள் முகா மிருந்த பிள்ளையாரைப் LTř3 தேன். அவருக்குப் பயமில்லை. பலத்த பாதுகாப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் அருகிலி ருந்த இருவரிடையே ஒரு கவிதை பிய்க்கப்பட்டுக் கொண்டிருந் சிஆ* அன்றைய வார இதழ் ஒன்றில் வெளியாகியிருந்த கவி தைகசூத்தான் அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. தம்படயருக் குச் செய்திப் பத்திரிகையாக இருப்பதிலிருந்து விடுதல் ப்ெ வதற்காக அந்த க் கவிதைச் சம்பாஷனையில் என்னை நுழைத் துக் கொண்டேன்.
"ஞாலம் முழுதும் வாழும் இனிய கோலக் கனலின் வே&ள
87

Page 46
ஒலக்குரல்கள் உள்ளந்தைக்க எழுந்தேன். எங்கும் நெருப்பு:
என்று அரம்பித்த கவிதையில் நாட்டில் நடந்த அரக்கத்தக் தைச் சாடி வேதாேப்பட்ட கவிஞர் முடிவில் அரக்கன் எனவோர்" அன்புக் குழந்தை ஆகக் காரணம் யாதோ' வினுவையும் எழுப்பி அதற்கு விட்காணும் பாதையிலே அறி மைச் சம்பவங்களே ஒரு சமூகப் பிரச்சனையாகச் சித்திரித்திருந் தார்.
பாருமைசேடி இவ்வா வுக்கும் பிறகு அன்புக்குழந்தை எண்டு பாடியிருக்கிருன்"
விமர்சகரில் ஒருவர்திரன் என்விடம் முறையிட்டார். இப் பொழுதுதான் ஆளேக் கவனழா கப் பார்த்தேன். பல தேசிய ஒருமைப்பாட்டு (:Lj 1, 'Brfaði L
ரில் பார்த்த ஞாபகம்.
இவர்கள் கவிதை விமர்சி எத்தில் மனம் ஈடுபடவில்லே. வாடிக் கிடந்த அந்தச் சிறுமி
பின் கதையை அறியும் ஆவல் உந்த அவளருகில் சென்றேன்.
தங்கச்சி . டெசுமுதம் துக்கமும் கவிந்த நி3லயில் நிமிர்ந்தான். பலநாள் சாப்பிடாதது போன்ற சோர்வு
தனிய இருக்கிருளே: அப்படியானுல் இவளின் பெற் ருேர். ஒருவேளை கலவரத் தின்போது." என் நெஞ்சு தாக்க அவளிடம் கேட்டேன். தங்கைச்சியின் அப்பா." அப்பா இல்லே,
என்ன மதுரை ஜில்லாவா"
ஆம், இந்தியாவிலே மருதை ஜில்லாதான் ஆஜ் அ ח הם חו" கண்டி தோட்டத்திலே
பாட்டா" தான் மருதை ஜில்லாவிலே
துப்ப நீ என்ன இங்கே என்று கேட்க நினைத்த கணத்தி வேரே என் ஆளே கண்டு பிடித்து விட்டது.
அகதிகள் முகாமின் அன்பு விப்புச் சட்டைக்குள் அவளேத் தெரியவில்லே
அவள் இங்கு எங்கோ Tr வீட்டிலோ வேலேக்காரி ஒ; அவள் இருந்த வீட்டுக்காரர் இப்போ இல்லேயோ? தனிய இருக்கிருளே என்ற GTGT & Er வின் இடையே.
அண்ணுசசி; ஒரு உதவி செவிங்கள்ா?"
|ன்ன? ஆவலுடன் கேட்
*( 、T回岐姬。剧 @ சுடுதாசி எழுதிப் போடு நீங்களா என்னேக் கூட்டிகிட்டுப் போகச் சொல்வி இதை அக்கம் பக்கம் பார்த்து மிரண்டு மெதுவாகத் தான் சொன்குள்
வ்ெ ட் கப் படுகிருள் என நிரேத்தேன்.
இவள் வேலைக்கு இருந்த வீட்டுக்காரர் இந்தக் கலவரத் தில் இறந்து விட்டார்களா? அல்லது.
முன்ன்ேய அதே சந்தேகம் என் நெஞ் சில் மீண்டு எழ
தங்கச்சி, "எங்கே இருக்கிறது'
இடத்தைச் சொன்னுள்
அந்த நடுத்தரவயதுத் தம்பூதி "குடும் விசாரித்த அதே
விதி.
அங்குதான் ஒன்றும் நடக்க
இீடு அப்படியானுல் இவ னின் இந்தக் காயங்கள் பட்டினி ATTELLED 1 - i -
துங்கடை ருேட்டிலேதான் ஒன்றும் நடக்கையில்லேயே அவ ரிடம் கேட்டேன்:
 
 
 
 

இதுகள் எங்கடை வீட்டில் நடந்ததுகள்" அவள் பேசினுள்
அவளின் கதை என் இத பத்தில் இரத்தமாகக் கொட்டி துே.
நான்கு நாட்கள் சாப்பாடு கொடுக்கவில்யோம், ருத்தனே எரிகாயங்களும் அவளின் எஜ மானியம்மாவின் முத்திரைகள் தரன்
அவை இப்ப எங்கே.
பயத்துடன் விரவால் சுட் டிக் காட்டிய அவள் 'இனிச் செத்தாலும் நான் அவையோட் போகமாட்டன்' என்ருள்
சுட்டிய திசையில் சற்று முன்பு என்னுடன் கதையள்ந்த நடுத்தரவியதுத் தம்பதி 凸
அவையள் எந்த ஐயா யா ந் ப் பா ன ம், அம்மா மட்டக்களப்பு"
அவள் பேசும் அல்லது 마 -
வேதனமான இந்த நிலையி தும் என் மன்து இதிலே ஒரு வேடிக்கையான பொருத்தத் LDE" Ligir. புத் தமிழர் சேரவம்சத்தின் செல்வாக்கிற்கும். யாழ்ப்பாணத் தவர் பாண்டியரின் செல்வாக் திற்கும் பெரும்பாலும் உட்பட் டவர் என்று வரலாற்று ஆசிரி
KYYS Y S S S S S LLLHLL L S S u S
i இராஜ ராஜ சோழ ன்
ஆண்ட மதுரை வம்சம்! 疊
R
ஒரு கருத்து
ந்தத் தமிழ் நாட்டிலிருத்து வெளிவரும் ஜனரஞ்சக வாராந் திர மாதாப்திர பத்திரிகைகளின் ஆக்கிரமிப்பு தேச எல்வேயையும் தாண்டி வருகிறது (முதலாளி துவத்தின் வீச்சு மாதிரி) இலங் கையில் இந்த சரக்குகளின் இறுத குமதி அங்குள்ள சுதேச பத்திரி கைகளே மோசமாக நடுநடுங்: வைக்கின்றது இலங்கையிலிருந்து வெளிவரும் டொமினிக் ஜீவாவின் "மல்லின்" பிப்ரவரி மார்ச் தழ்களில் இத்தக் குமுறக் கேட்க முடிகிறது இந்தியாவிளி ருந்து எவ் வள வு வெளியீடும் ஆங்குச் செல்லலாம் ஆணுல் அங் கிருந்து இந்தியாவுக்கு எந்தப் பத்திரிகையும் வர முடியா து என்ற நிஃமை இப்போது இருக் கிறது இது அவர்களுக்கு ஒரு தன்
மானப் பிரச்சினே என்பது ஒரு பக்கம் இருக்க சுதேச இலக்கியம் மற்றும் ந் த ஃன வளர்ச்சியை
இது எவ்வளவு மட்டுப்படுத்தி விடும் என்பது நிதரிசனம். இங் கிருந்து சில வெகுஜனப் பத்திரி கைகள் இலங்கைக்குப் போவது கடட அதற்காக 'ஸ்பெஷலாக', சில அயிட்டங்களுடன் போகின்ற
வைாய், இங்கிருந்து சுதந்திரபா
சுப் போன் பெரும்பாலும் இத் தக் குப்பைகள்தான். நல்வி பத் திரிகைகள் போவதென்பது அதிச பமான விஷயம். அங்கிருந்து எந் தப் பத்திரிகையுமே
ாவில்) இங்கு வர முடியாதவாறு இங்கு சுட்டுப்பாடு இருக்கிறதாம் இந்தக் கட்டுப்பாடு கட்டண்டியாக உடைத்தெறியம் படவேண்டியது அண்டை நாட்டு உறவுக்கும் தமிழிலக்கிய வளர்ச்சிக்கும் மிக அவசியம். இதில் அரசாங்கம் உடனடியார்க் கவனம் செலுத்த வேண்டும். இப்போது "மல்லிகை" போன்ற சின் தரமான பத்திரி கைகளே அங்கிருந்து இந்தியா வுக்கு நண்பர்கள் தொடர்பாக மாந்துப் பிரதிகளாக சில அனுப் பப்படுகின்றன பல்லிகை வாசகர் ஒருவர் அந்த ஆசிரியரைக் கேட்
குர். அவர்கள் நாடு (இந்தி
யா) கனடப்பிடிக்கும் தீவிர கட் டுப்பாடுகளுக்கு பத்தியில் இதை பும் ஏன் செய்கிறீர்க்ள் சில புத் துப்பேர்களுக்குத் தீனி போட்வா, பேசாமல் நிறுத்தி விடுங்கள்" இந்த நி யா யா ன் டன்ர்வு மனசைத் தொடுகிறது இல்போர்
- மகாநதி
nirrir,...
(விற்பனேய

Page 47
மல்லிகையின் 14வது ஆண்டு மலருக்கு எமது மனமார்ந்த நன்றி
1945ம் ஆண்டு முதல் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி, முற்போக்கு நூல்களையும், சஞ்சிகைகளையும் இறக்குமதி செய்து விநியோகித்து வருபவர்களும்
தமிழ் நாட்டின் மிகப்பெரிய உயர்தர புத்தக வெளியீட்டுத்துறை நிறுவனமான நியூ செஞ்சரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்
என்ற ஸ்தாபனத்தின் இலங்கை ஏக விநியோகஸ்தர்களும் தாமரை - மார்க்சீய ஒளி - ஜனசக்தி ஆகிய சஞ்சிகைகளின் இலங்கை சோல் ஏஜண்டுகளுமாகிய நாம்
பொதுமக்களை எம்முடன் ஒரு தடவை தொடர்பு கொள் ளும்படி அன்புடன் அழைக்கின்ருேம். گی
e O O பூபாலசிங்கம் புத்தகசாலை 4, பஸ் நிலைய முகப்பு, கிஃாக: யாழ்ப்பாணம். 2.R 7 6 3 1
ぐ。「ざ* 199, முதலாம் குறுக்குத் தெரு,
யாழ்ப்பாணம். புகையிரத நிலையப் புத்தகசாலை, யாழ்ப்பாணம்,
\

நவீன தமிழ் நாடகங்கள்
இயல்பு தாக்கம் பற்றி சில நோக்குகள்
MMMM MMM
புராதன பொருளாதார சமூக அமைப்புக்கள் பூரணமாக உடைபடாத இடங்களில் பயி லப்படும் மரபு வழி நாடகங் களினின்றும் பிரித்துக் காட்டவே நவீன நாடகங்கள் என்ற பதப் பிரயோகம் சுட்டப்படுகின்றது" நவீன ஈழத் தமிழ் நாடகங்கள் என்ற விடயம் பற்றிச் சடங்கா சாரமாகக் கூறின் அது "மந்திர சடங்கின் ஆர ம் ப நிலையாக ஸ்பெஷ ல் நாடக மரபினைத் தொட்டும் பேராசிரியர் கணப திப்பிள்ளையின் நாடகங்களையும் கலையரசு சொர்ணலிங்கத்தின் முயற்சிகளையும் "வா லா யம்" ப ண் ணு ம் முயற்சியாகவும் அமைந்து போய்விடுவது வழக் கம். தி மு. க. சினிமாப் பாணி யும், சிங்கள நவீன நாடக முகிழ்ப்புக்களும் ச ட ங்கி ற் கு துணை செய்யும் தீப ஒளி ஆரா தனையாகவும் தேங்காய் உடைப் புக்களுமாக சுட்டப்படுகின்றன:
தற்கால நாடகங்கள் என்று கூறும்போது அது பன்முகப்பட் டதாகவும் - பல்வேறு பாணி களையும், பொருள்களையும் உட் கொண்டதாயும் பல்வேறு வகுப்
பினர்களின் உணர்வுகளையும் அறிவுகளையும் அந்த அந்த வகுப் பினர்களது ஆர்வங்களுக்கும்
தேவைகளுக்கும் ஏற்ப அமைக் கப்பட்டு வழங்கி வருவதாயும் இருப்பதைக் கண்டு கொள்ள முடியும். பன்முகப்பட்ட தன்மை களையும் சுட்டும் இந்த நவீன நாடகங்களின் போக்கும் பண்
பும் காலத்திற்குக் காலம் தக்க வழிகாட்டலின் கீழ் திறனுய்வு செய்யப் படாததால் இது மனம் போ ன போக்குக்கெல்லாம் வகைப்படுத்தப் பட்டு அபிப்பி ராயங்கள் கூறப்பட்டு வந்துள் ளன. எனவே வகைப்படுத்து தல் வில்லங்கமானதாகவே உள் ளது. இந்த வில்லங்கங்கள் பற் றிய விடயம் தனி ஆய்வாக விரியும். ஆணுல் இங்கு எமது இந்த நவீன மரபில் கடூழியத் தில் இருந்து கந்தன் கருணை வரை நாற்காலிக்காரரிலிருந்து பயங்கள் வரையுள்ள அண் மைக் கால நாடகங்களை அவ
எம். சிறீபதி
தானித்தோர் இதனைப் புதிய நெறி நாடக மரபு எனச் சுட்ட
முயன்றுள்ளனர். நெறி இங்கு பாணி என்ற அர்த்தத்தில் வழங்குகின்றது. பாணிக்குள்
உருவ அமைப்புக்கள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. பாணிகள் என்ற அளவில் தனித்து நோக்க முயலுதல், யா ன பார்த்த குருடர் போன்ற நா ட க த்  ெத வி வினை வழங்குவதற்கும் வாய் ப் பு ஏற்பட்டுவிட வழி
புண்டு,
9.

Page 48
புதிய பாணி என்பது மேடை யமைப்பு. ஒளி, ஒலி, உத்தி முறைகள் ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்டதுடன் சொல்லாடல் முறைகளையும் உள்ளடக்கும் எனலாம். இவற் றினை வளர்ப்பதும், இவை பற் றிய திறனய்வுகளை மேற்கொள் வதும் நாடக வளர்ச்சிக்கு உத வுமே எனினும் அது நாடகம் என்ற ஒட்டுமொத்த வளர்ச் சியைக் க ன க் கி லெ டுக்காது போகும் போது அதற்கு ஊறு விளைவிப்பனவாகவும் அமைய லாம். இந்தப் பண்பினை மன தில் கொண்டு இக் கட்டுரையில் கூறப்போவனவற்றை நோக்கு வது ஏற்புடையதாக அமையும்.
நவீன நாடகப் பாணிகளைப் பின்வருமாறு வகுத்து அவற் னைப் பற்றிய நோக்கங்களையும் தன்மைகளையும் எடுத்துக் கூற இக் கட்டுரை முனையும்.
முதலாவது அம்சம் பழைய கூத்து வழிப்பட்ட ஆட்ட முறை கண் நவீன நாடகத்தில் பயன் படுத்துதல் இ த னு ஸ் மரபு வழிப்பட்ட நாடக ஆட்ட முறையுடன் சாஸ்திரிய றிெப் பட்ட நடன மூறை உத்திகளும் அடங்கும் என்க. இது பொது வாக 1936 - க்குப் பின் சிங்கள நாடக உலகில் ஏற்பட்ட பிரதி பலிப்புக்களின் தாக்கமாக ஏற்
பட்டது என சில திறனய்வா
an si 35 6r குறிப்பிடுவார்கள். பழைய ஆட்ட முறைமைகளைப் பயன்படுத்தல் என்ற நிலைக்கு வரலாற்றுப் போக்கம்சங்களும் துணை புரிந்தன. 19 சி - ம் ஆண் டிற்குப் பின் சிங்களவர் மத்தி யில் ஏற்பட்ட பரவலான தேசிய விழிப்புப்போல; தமிழர்கன் மத்தியில் ஏக தேசமாக வளர்ந்த தமிழ் உணர்வு பேணல் விவகா ரம் எமது பாரம்பரிய கூத்துக் களை" பேண வழிகோலின. அது பே ர ல சு; வித்தியானந்தன்
g
போன்ருேரது கூத் துக் களை சுருக்க முறையில் அமைத்தல்
ஆகிய நிகழ்ச்சியும் அப்பேண லைத் தொடர்ந்தன. இவ்விரு நிகழ் வும் நகர மத்தியதர
வர்க்க இயல்புடைய மக்களால் விரும்பியோ விரும்பாமலோ ஒரு கா லத் தே  ைவ க் காக: மறைந்த பொருளைப் பார்க்கும் உற்சாக மனப்பான்மையோடு இவ ற் றினை உள்வாங்கினர். நேரம் சுருக்கப்பட்டமை, முழு நேர ஆட்டமாக இ ல் லா து அதனை இடைநேர ஆட்டமா கப் பார்த்தமை, வ ச ண ம் பாட்டு அம்சங்களுடள் கலந் தமை ஆகிய இயல்புகள் நகர மக்களுக்குக் கவர்ச்சியூட்டும் போதைக் கருவிகளாயின. இவற் றினல் மேற்கூறிய முயற்சிகள் ந க ரங் களி ல் போடப்பட்ட போது கைதட்டலைப் பெற்றன, நகரங்களில் கைதட்டல் வழங்கியோர் பூரணமாக சகல கலை ஆர்வ மத்திய தர வகுப் பினர்களும் அல்ல என்பதனை இவ்விடத்தில் மனங்கொள்ளு தல் வேண்டும். 'பல்கலைக்கழக மட்டங்களில் இருந்து பேணல் முயற்சி தொடங்கியத. து ஒருவகை ரசனைக் கவுரவம. - ஆம் மாறியது; சிலருக்கு. அதாவது த ம்  ைம மற்றவர்களிடையே பிரித்துக்காட்ட இது ஒரு நல்ல சாதனமாயிற்று. பரத நாட்டிய பயில்வு இ ல் று எப்படி நகர மயப்படுத்தட 'ட்ட è 6ör (? 5 அமைவதற்குரி காரணங்களில் முக்கியமாக, உயர் சமூக நிலைப் படும் கட்டத்தன் சடங்காசார மான காரணமாக அமைந்துள் ளமை எத்துணை தெளிவா க தெரிகின்றதோ அது போலவே த மது தமிழ் கலை உணர்வு பற்றி ஈடுபாட்டினை வெளி ப் படுத்த இத்தகைய மரபுவழி நாடகங்களுக்குரிய ரசிகர்களாக மாறும் தன்மை பெரிதும் உத யது மரபுவழி நாடகங்களுக்

ஆ த ர வு அளியாதவர்களிலும் போலி நயப்பு வாதிகளே துன் பம் செய்தவர்கள். இதன் கார, ணமாகத்தான் மக்களிடம் ஏற் பட்ட கவர்ச்சியைத் தளர்ந்து ஊர்ந்து கொண்டிருந்த நவீன தமிழ் நாடகங்களுக்குப் புகுத்து வதன் மூலம் உயிர் ஊட்டலாம் 24 # தயாரிப்பாளர்கள் எண் இந்த ஆட்டமுறைகளைப் புகுத்தினர். இது புகுத்தப்பட்ட போது மிகுந்த கவர்ச்சியாகவும் அலுப்பூட்டாததாகவும் அமைந் துள்ளது. இந்த அம்சத்துடன் நாடகத்தினை பாரிய அளவில் காட்சி கலையாக மாற்றும் அள வில் மிகுந்த அளவில் அதிகப் படுத்திக் காட்டும் வகையில் ஆறுதலான மெதுவான உடல் அசைவுகளும் நா ட க ங் களில் புகுத்தப்படலாயின. YM
இந்த நெறியில் எம்மவர் பழைய கூத்து ஆட்ட உத்திகளை யும் தாள லயங்களையும் எடுத் துக் கொண்டனர். ஆயின் எமது பாரம்பரிய கூத்துகள் பெரும் பாலும் சமய சடங்கிற்காகவோ அல்லது சமய விழ7 விற்காகவோ ஆடப்பட்டும் அந்தப் பொரு ளில் பேணப்பட்டும் அந்த நிலை யில் உள்ளவர்களினலே பயிலப் பட்டும் வந்தவை. அங்கு ஆட்ட மு  ைற பெரும்பாலும் ச ம ய சம்பந்தமானவையாக அமைந் தன. இந்த வகையில் பயிலப் பட்டு வழங்கி வந்த கூத்தில் உள்ள ஆட்ட முறைகளை எடுத்து நவீன நிலையில் கையாளுவது என்பது கடினமானதே. சமய ஊற்று மூலத்தோடும் சம ய பாவத்தோடும் சேர்ந்து வளர்ந்த இந்த ஆட்டமுறைகளை தற்கால உ ல கி ய ல் பொருள்களுக்குப் பயன்படுத்துவதற்கு மே  ைத க ளின் வியாக்கியானத்திறன் நன் முறையில் கட்டிவளர்க்கப் பட்டிருக்கிறது என்று கூறுவதற் கில்லை. நாடகத்தின் தர உயர்
விற்கும் ஜன ரஞ்சகப்படுத்து வதற்கும் உள்ள வேறுபாடுகள் கண் டு அறியப்பட்டு அவை
பாகுபடுத்தி அறியப்பட்டு பின்
இணைக்கப்படுதல் அவசியம். இந்த வகையில் தமிழ் நாட க த்தை ஜனரஞ்சகப்படுத்த முயன்று வழுக்கி விழுந்த நில் யில்தாம் யாம் நிற்கிருேம்,
மேலே பார்த்த மரபுவழி நாடக உத்திகள் புகுத்தப்பட்டு மேடையேறும் நாடகங்களைவிட வேறு ஒருவகையான நாடகங் க ஞ ம் மேடையேறுகின்றன. நாற்காலிக்காரரிலிருந்து "பயங் கள்" வரை ஈருக உள்ள நாட கங்களைக் குறிப்பிடலாம். இவை பற்றிய விடயங்களை நாம் நாட கம் கூறும் சமூகச் செய்திகள். அச் செய்திகள் கூறப்படுவதற் காக சமூக ரீதியான தொடர் புகள் அந் நாடகங்கள் தயாரிப் பாளர் மட்டத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் என அவற்றை வகுத்து நோக்கலாம்.
இந்நாடகங்களில் இ ட ம் பெறும் செய்திகளைச் சுருக்கமா கக் கூறுவதானுல் அது மத்திய தர வர்க்கத்தின் உக்கிரமான விர க் தி யி ன் வெளிப்பாடாக அமைந்து இருப்பதைக் கண்டு கொள்ள முடியும். மத்தியதர/ வர்க்கப் பாத்திரங்களை மூடி மறைத்து நிற்கும் பிரமையை உடைத்து சுய பரிசீலனை செய் யும் வகையில் அமைந்து காணப் படுகின்றன. இந்த நாடகப் பாத்திரங்கள் போலிப் பிரமை களை உடைத்து உள்நோக்கிப் பார்க்கும் தன்மை கொண்டன வாக அமைகின்றன எனக் கூற லாம். கற்பனை செய்வதையே தொழிலாகக் கொண்டு "நடுக் கிணற்று வாழ்க்கையில் உள்ள வர்கள் அக் கற்பனையிலே கிடந்து ஊச லா டு ப வர்களுக்கு இது அதிர்ச்சி வைத்தியம் செய்கின் றது. மத்தியதர வர்க்கத்தின்
98

Page 49
கற்பு காதல், பாசம், நட்பு ஆகியன தோலுரித்துக் காட்டப் படுகின்றன. மத்தியதர வர்க்கத் தின் வெறுமை இந் நாடகங்கள் பார்வையாளர்களுக்கு த ரு ம் செய்திகளின் ஒட்டுமொத்தப் பொருள் ஆகின்றது. இதனை அவன் மரபுவழி நாடக நிலை யில் இல்லாது வேறு ஒரு பாணி யிலே கூறித் தெளிவிக்க முயல் கின்றன. இந்தத் தெளிவு காரண காரிய விளக்கம்போல அமை யவும் தவறி விடுகின்றது. இத ஞலேதான் இத்தகைய நாடகம் ஒன்றினைப் பற்றி ஒருவர் கூறும் போது பின்வருமாறு அதனைக் கூற முயன்ருர் .
"நாடகத் தயாரிப்பு ஒழுங் குடையதாகவும் நாடகத்தின் இயல்புக்குப் பொருத்தமானதா கவும் அமைந்தது எ னி னு ம் மேடையமைப்பு இசை ஆகியவை றியீட்டு முறையில் உணர்த் ய சில செய்திகளை அறிய முடியாத இடைவெளி நாடகத் தைப் பார்த்தோருக்கும் நாட கத்திற்குமிடையில் நிலவியது. நாடகத்தின் உணர்வு நிலையைக் கொண்டுவரத்தக்கதாக மேடை யொழுங்கு பின்னணி இ  ைச ஆகியவையாவும் சிறப் புற அமைந்தும் அத்தகைய உணர்வு நிலை தோன்முததற்குரிய கார ணம் ஆழமாகச் சிந்திக்க வேண் டியதாகும்" ஆம், இந் நாடகங் களின் செய்திகளைப் புரி த ல் என்பது உணர்ச்சியோடு சம்பந் தப்படாது அறிவோடு சம்பந் தப்பட்டதாக மாறிவிட்டது. எமக்கு அடுக்கு வசனம், பாடல், அ யார் த் த ப் பின்னணியில் கூறப்படும் உச்சரிப்புக்கள் என் பனவற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகப் பிரமையில் சிக்கித் தவிக்கின்ருேம். அதில் வாழ்வும் நடத்திக் கொண்டிருக் கிருேம். இடதுசாரிக் கோஷங் களே வாய்விட்டுக் கூறுவதும்
வதற்குரிய சமூகப்
எழுதுவதும் அத்தகைய மாயை யின் தொடர்ச்சிதான். இந்தத் தொடர்ச்சி நிலை எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாக அமைந்து கற்பனையை வளர்த்துச் செல்லும். ஆயின் வாழ்க்கையை வெறுமையின் கோலமாக தரிசிப்பவனுக்கு எல் லாம் தொடராகவே தோன்ரு. யாவும் அறுபட்டு சிக்கலுற்று அடி நுனி தெரியா இயல்புடை யதாகவே இருக்கும். இதனுலே இத்தகைய நாடகங்களில் எல் லாம் தனித்தனியாகவே காட் டப்பட வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. இவ் வாறு பார்வையாளன a) நிலையும், நாடகத்தில் தெரிவிக் கப்படும். நிகழ்ச்சிகளும் துண் டாடியே நிற்கும். அதாவது எல்லாமே அதரிக்கமாக இருக் கும். அதர்க்கமாக உள்ளதை பார் ையாளன் வாழ்க்  ைக T )6( தொடர்புபடுத்திப்ו וש $) பார்க்க வேண்டியது அவசியம். குறியீடு படிமம் என்பன இன்று இந்த வகையிலேதான் தொடங் குகின்றன; செயல்படுகின்றன.
இத்தகைய நாடகச் செய்தி கள் நாடகங்களாக உருப்பெறு u ଜଙ୍ଘି ଗ୍r ଗoof பற்றிய கருத்துகளைச் சுருக்க மாகப் பின்வருமாறு கூறலாம்.
வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியும் நகர மயமா தலின் அதிகரிப்பும் மக்களது மனுேபாவங்களை - சமூக மனுே பாவங்களை பெரிதும் மாற்றி அமைத்து விடுகின்றன. இந்தப் பின்னணியில் ஆங்கிலக் கல்வி வளர்ச்சியும் அதன் வியாப்தி யும் கல்வி பயிற்றப்பட்டு வரும் முறையும் அதன் பயில்வு நிலை யும், ப யி ல் வு நோக்கங்களும் பெருமட்டாக கல்வி கற்றவனை அயன்மைப்பட்டவணுக மாற்றி:
விடுகின்றது. காலனித்துல வழி
94

வந்த கல்வி இன்று இந்திய மனிதனை - குறிப்பாக கீழைத் தேச மனிதனை உற்ருர் உல
னரிடம் இருந்தும் சமூகத்திடம் இரு ந் தும் அயன்மைப்படுத்தி அன்னிய மனிதனுகவே மாற்நி விடுகின்றது. ஆகவே நகரமய மா க் கலை அடிப்படையாகக் கொண்ட அன்னியமயமாக்கம், மேலும் புத்திஜீவிகளினது மனே பாவத்தினல் பெரிதும் அதிகரிக் கப்படுகின்றது. மேலே நாட்டில் இருந்து வரும் இருப்புவாதம் நவீனத்துவம், மேலைத்தேச மய மாதல், மயமாதலைப் பெரிதும்
M/1.aun Mr. Van M/s/aw asar Aar
Gantop: நான் முருகப்பெருமா னின் நூறு பெயர்களையும் ஒரே மூச்சில் சொல்லிக்காட்டட்டுமா?
ராமு உனக்கு இ நீ த முருக பக்தி எப்போ வந்ததடா?
சோமு பக்தி இல்லையடா நான் பெற்முெல் செ ற் றி ல் வேலை பார்க்கிறேன். லாரி பெயர்களை ஞாபகத்தில் வைத்திருக்கிறேன் அவ்வளவுதான்.
^.^-A--^^---, A---^---* *--- o--- “---
அடிப்படையாகக் கொண்ட ஒரு உப- பண்பாட்டுத்தளங்களையே உருவாக்கி விடுகின்றன.
இந்த உப - பண்பாட்டுக் குழுவினர் வாழ்க்கையை அதனை உள் பிரக்ஞையோடு நோக்காது தனிமனிதர் கிளாகவே நோக்க வும் ஆராயவும் முயல்கின்றனர். தனி மனி த ப் பிரச்சனையை முதன்மைப்படுத்தும் இந் த நோக்கமானது தனித்த அழகி 1ல் நாட்டத்தையும் வற்புறுத் }ப் பெரிதும் சாதனமாகி விடு
ன்றது.
95
இவர்சுள் பொருளாதார் பெறுமானத்திற்கும் வாழ்க்கைப் பெறுமானத்திற்கும் உ ள் ள வேறுபாட்டையும், அதனை மறப் பது போல பாவனை புரியும் மத்தியதர வர்க்கத்தின் போலி மையையும் கண்டு எரிச்சல் உறு கின்ருர்கள். இச் சந்தரிப்பத் திலே இம் மனிதர்கள் தமது மனவுலகத் தொழிற்பாடுகளுக்கு கூடிய முக்கியத்துவம் அளித்து ஆக்க முயற்சிகளை ஆக்க முயல் கின்ருர்கள். இதன் பெறுபேருக வாழ்க்கையின் ந  ைட மு  ைற வாழ்க்கையின் அமிசத்துக்கும் இவற்றுக்கும் தொடர்பு இயல் பாய் காரண காரிய ரீதியாக இல்லாது சிந்தித்துப் பெறப்பட வேண்டியதாக அமைந்து விடு கின்றது.
தனி மனிதனுக்கும் பொது வாகச் சமுதாயத்திற்கும் ஏற் பட்ட முரண்பாட்டின் அடிப் படையாக் ஏற்பட்ட தனிமனித வெடிப்புகளை, மனக்குமைவுகளை, விரக்தியை வரலாற்று அ டி ப் படையில் விளங்கிக் கொள்ளு தல் வேண் டு ம். (வரலாற்று அடிப்படையென்பது கொச்சைத் தினமாகப் புரிந்து கொள்ளப் படத்தக்கதும் அன்று. இந்த தரிக்க்வியல் வ ர ல |ா ற் று ப் பொருள் முதல் வாதத்தை வாழ்க்கையின் அநுபவமாகக் கண்டு கொள்ள வேண்டியது அவசியம். அதனை அது ப வ முயற்சியாக மாற்ற வேண்டும் அப்போது நல்ல வெளியீடுகள் தோன்ற வழி ஏற்படும்.) இத் தகைய வரலாற்று அடிப்படை யில் உணரப்படாததன் காரண மாகத்தான் சமூக யதார்த்தம் இருப்பு வாதம் என்ற கோட் பாடுகளுக்கு தம்மைப் பலியாக் கிக் கொள்கின்றர்கள். அதன் பெறுபேருகத்தான் இத்தகைய நடைமுறைகள் தமிழகத்தில்

Page 50
குறிப்பாக டில்லி வாழ் எழுத் தாளர்களினல் எழுதப்படுகின் றன. இந்தப் பின்னணியில்தான் இந் தி ரா பார்த்தசாரதியின் நாடகங்களை நோக்குதல் வேண் டும். (இந்திரா பார்த்தசாரதி யும் பொருளாதார பெறுமானத் திற்கும் வாழ்க்கைப் பெறுமா னத்திற்கும் இடையே பேதை மைகளைக் கண்டாலும் அதனைப் புறங்காணும் சக்தியற்றவர் கலாநிதிப் பட்டத்திற்கு சென் னைப் பல்கலைக் கழகங்களை அவ ரால் விட்டுவிடவும் முடியவில்லை)
மனிதனது நடைமுறையில் உள்ளவற்றை இயல்பாய் எழுதி விட்டாலே அந்த கண்டனத்தொணியை உருவாக் கும்என்ற அடிப்படையில் எழுதப் பட்ட அன்னிய மயமான இந் நாடகங்கள் ஈழத்தில் வரவேற் கப் படுவதற்கு தமிழ் நாட்டினை ஒத்த சூழல் இங்கும் காணப் படுகின்றன" என்பதனைக் கண்டு கொள்வது அத்துணை கடின மல்ல. இந்த முயற்சிகளில் முன்
னிற்பவர் பல்கலைக்கழக பட்ட தாரிகளாக குறிப்பாக எந்திர வியல், மருத்துவவியல் பட்ட
தாரிகளாக இருப்பதையும் இவர் கள் இயல்பாகவே மனிதரது பெறுமானங்களுக்கு இடையில் உள்ள முரண்பாடு கண்டு மனம் வெதும்புபவர்களாகவும் காணப் படுவதையும் கண்டு கொள்ள லாம்,
இத்துடன் மரபுவழி நாடக மரபில் தொழில்நுட்ப தற்புத மைகளை வெளிக்காட்டுவதிலும் பார் க் க இந்த 'மனக்கோல" நாடகங்களில் ஒலி, ஒளி, அரங் கமைப்பு ஆகியவற்றில் கூடுத லாகக் காட்டக்கூடிய வாய்ப்பு இருப்பதனையும் நாம் கண்டு கொள்ள முடியும். ஏனெனில் "சப்" என்று இருக்கும் எமது
 ெவறு  ைம .
நாடக மேடையை இந்த நாடக மேடையேற்றங்கள் நிச் ச யம் உயிரூட்டும் தன்மை கொண்டன வாக அமைக்கும் எ ன் ப தி ல் ஐயமில்லை. ஏனெனி ல் தற் பொழுதுதான் நாடகப் பிரதிக் கும் முக்கியத்துவம் ஏற்பட்டி குக்கிறது. நல்ல நாடகப் பிரதி களுக்காக தயாரிப்பாளர்கள் ஆலாய்ப் பறக்கும் நிலையையும் நாம் கண்டு கொள்ள முடியும். "புறவயமான உலகியல் நிகழ்ச் சிகளை மனவுலக கோலமாகக் காணும் கதாசிரியனின் கருத் துக்களை வெளிப்படுத்தும் முறை மைகளுக்கு முதன்மை கொடுத்து அதனைச் செம்மையாக வெளிப் படுத்தக் கதாசிரியன் கூறி ய உத்தி முறைகளோடு தனது புத்தி சாதுர்யத்தையும் சேர்த்து வெளிப்படுத்த முனை கி ன் ற போதுதான் எமது நாடக உல கம் நாடக உருவத்தோடு சம் பந்தப்பட்ட உத்தி முறைகளை யும் தொழில்நுட்ப வளர்ச்சி முறைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். ஒலி, ஒளி விகற்பங் கள் பாத்திரங்களின் மன உணர் வுகளேயும் அவர்களது நிலைப் பாடுகளையும் உணர்த்தவும் கால அளவு பரிணும வேறுபாடுகளை யும் உணர்த்தும் வாகனங்களாக மாறியுள்ளன.
நாடகத்தின் மையக்கருவை மனதில் பதிய வைக்கத் தயா ரி ப் பா ளர் உரையாடல்களைப் பயன்படுத்திய விதம், ஒளியைக் கையாண்ட முறைமை இசை யைப் பயன்படுத்திய பாங்கு என்பவற்றில் தயாரிப்பின் தற் புதுமை வெளிப்பட்டது" என மெளனகுரு நஷ்சத்திரவாளி பற்றிக் சுறியது வளரும் நாடக அரங்க நிர்மாணம், தயாரிப்பு ஆகியவற்றுக்கு ந ல் ல தோர் விடியல் கால கூவல்.
96

குறுக்கே போன கை ஒழுங்கையால் திரும்பி நடந்து, பின்னர் கிழக்குப் பக்கமா
6ბYბ)TI கச் சரிந்து வளைந்து தொடுக்கும் ஓர் ஒற்றை W யடிப் பாதை வழியாகச் சென்று தட்டிப் படலைக்கு அணித்தாயுள்ள கிளுவை முள் வேலிக்கு மேலால் எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்தார் நன்னித்தம்பி.
-"சின்னப்பொடி!. சின்னப்பொடி!" gFLİbl(35 ஆளரவத்தைச் சற்றும் காணவில்லை.
முற்றத்தில் வேப்பமர நிழலில் சுருண்டு - படுத்திருந்த சொறிநாய் சட்டென்று எழுந்து டொமினிக் ஜீவா குரைத்த வண்ணம், சற்று நேரம் அங்குமிங் 空》 கும் பார்த்துவிட்டு, மீண்டும் படுத்த இடத்
திலேயே சுருண்டு படுத்துக் கொண்டது.
மீண்டும் குரல் கொடுத்தார். நன்னித்
தம்பி, இம்முறை குரலைச் சற்று உயர்த்தி
ஒசை எழுப்பியபடி கூப்பிட்டுப் பார்த்கார், - ஒருவேளை ஆட்கள் கீட்கள் இல்லையோ?
& w w 7 ܀ "ஆரது?" - குடிசைக்குள் இருந்து கேள்வி பிறந்தது.
"இஞ்சை ஒருக்கா வந்திட்டுப் போ, சின்னப்பொடி, நாய் குலைக்குது. உள்ளை வரப் பயமா இருக்குது. ஒருக்கா இங்கை வா!'
"அதொண்டும் வாய் வைக்காது, சும்மா குலைக்கும். சரி;
நான் இந்தா வாறன்" எனச் சொல்லிக் கொண்டு வெளியே வந்த சின்னப்பொடி, எழுந்து நின்ற நாயை அதட்டி அடக்கி விட்டவாறு படலையடிக்கு வந்தான்.
பின்னல் அந்த நாயும் சேர்ந்து வந்தது.
படலையைத் திறந்து ஒழுங்கைப்பக்கம் வந்த சின்னப்பொடி ஆளை அடையாளம் கண்டு விட்ட தோரணையில் "ஓ! எங்கட் மணியகாரனே? வாருங்கோ. வாருங்கோ. என்ன சங்கதி கன காலத்துக்குப் பிறகு இந்தப் பக்கம்? அத்தி பூத்தாப்பலே வந்தி ருக்கிறியள். ஏதாவது சங்கதியே?’ என விசாரித்தான்.
பழைய மணியகாரன் பரம்பரை என்ற பெருங்காய வாசனை யின் மிச்ச சொச்ச மணத்தைக் கிராமத்தின் வரம்பு வாய்க்கா லெல்லாம் பரப்பிக் கொண்டிருக்கும் கடைசிக் கொழுந்து என்ற கடைக்குட்டிப் பெருமை எப்பொழுதும் நன்னித்தம்பியாருக்கு உண்டு. இப்படியானவர்கள் அடிக்கடி அவரை மணியகாரன் மணியகாரன் என அழைப்பதைக் கேட்பதிலே அவருக்கொரு அலாதி விருப்பம். வசதி கிடைக்கும்போது தனது மூத்த பரம் பரையின் வீரத்தையும், கொடைச் சிறப்பையும், பாரம்பரிய பண் பாடுகளையும் விளம்பரப் படுத்துவதில் அவர் மன்னுதி மன்னர் அதே சமயம் அவரைப் போன்ற சம தரத்தினர் அவரை வெறும் நன் னியரி என்றே அழைப்பார்கள். அதைக் கேட்டும்போது அவருக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வரும் ஏதோ ‘கண்ட நிண்ட சாதி களைக் கூப்பிடுவது போல அது அவருக்கு மனதில்படும்.
9.

Page 51
இருந்தாலும் நன் னியர் என்ற பெயரே கிராமப்பிரசித் தம்.
'உள்ளே மணியகாரன்"
வாருங்கோவன்
உ ள் ளே போனவர்களைத் தொடர்ந்து நாய் முன்னே ஓடி யது. இருவரும் பின்னல் சென் றனர்.
சுையிலிருந்த சிறு கடதா சிப் பார்சலை இடது சக்கத்துக் குள்  ைவ த் து ப் பிடித்துக்
கொண்டு, கழுத்தில் ஏகவட மாகப் போட்டிருந்த பரமாஸ் சால்வையின் தலைப்பைக் கோதி முகத்தையும் அத்துடன் நெற்றி கழுத்தையெல்லாம் சேர்த்தும் ஒருமுறை அழுத்தித் துடைத் துக் கொண்டார், நன் னி த் தம்பி.
உஸ். உஸ். என வாயால் ஊதி ஒசை எழுப்பியவண்ணம், வெளி உஷ்ணத்தைத் தாங்கிக் கொள் ள மாட்டாதவராகக் காட்சி தந்த அவர் வேப்பமர நிழலுக்கு வந்த சமயம் ஆறுதல் பெருமூச்சொன்றை வெகு நிதா னமாக வெளிவிட்டார்.
"இஞ்சை பார் சின்னப் பொடி, பத்து மணியாகேல்ல. இப்பவே இப்பிடி வெயிலெண் டால் மத்தியானம் எண்டிட்டா மணிசர் மாஞ்சாதி வெளியிலை 3 of t 2) வெளிக்கிடேலாது போலக் கிடக்கே ! ?
"இது காண்டாவனக் கால மெல்லே. வெய்யில் இப்பிடித் தான் தகிக்கும் இ ன் னு ம் கொஞ்ச நா ள் போயிட்டா தணிஞ்சு போயிடும் வெயில். அதுசரி கிடக்கட்டும் . என்ன சேதி திடீரெண்டு இந்தப் பக்கம் வந்தனியள்?’ என்ருன் சின்னப் பொடி
அவரது ணத தை
வருகையின் கார ஓ ர ள வு அவனுல்
98
ஊகிக்க முடிந்தது. இருந்தும் அவரது வாயினுலேயே அது வரட்டும் என்ற பாவனையில் ஏதோ ஒன்றும் தெரியாத அப் வாவி போலக் கேட்டு வைத் தான் அவன்.
"அதில்லைச் சின்னப்பொடி! இண்  ைட க் குப் போ யா நாளெல்லே. அதுதான் இந்தப் பக்கத்தாலை வந்தனன். கோப்ப ரேசன்காரன் த வ ற ணை  ைய இழுத்து முழுநாளும் பூட்டிப் போடுருன். வாயைச் சொண்டை நனைக்கிறதுக்கு ஒரு வழியும் இல்லை. அதுதான் யோசிச்சுப் போட்டு உன்னைத் தேடிட்டு வந் திட்டன். அதோடை வேருெரு அலுவலும் உன்னட்டை"
போயா தினங்களில் கள் ளுத் தவறணைகளை முழுசாகப் பூட்டிவிடுவதை ஆதரிக்காத தின வாடிக்கைக்காரர்களில் நன்னித்
தம்பியும் ஒருவர். தென்னம் பாலுக்கு இதென்ன த  ைட என்று சூ டா க விவாதிக்கும்
போது கேட்பார். இருந்தாலும் அரசாங்கம் இந்தப் பாலுக்கு மது என்ற முத்திரை குத்தி தடுத்தாட்கொண்டதை ஏற்றுக் கொள்ளாத அவர் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அரசாங்கத் தின் சட்டதிட்டத்தை எதிர்ப்
Gr
இப்படியான நா ட் களில் சின்னப்பொடி போன்றவர்கள் தான் இப்படியானவர்களுக்குத் தஞ்சம். இவரைப் போல அவ னது அன்பாதரவைத் தேடிப் பெற இன்னும் சிலரும் இருந் தனர்.
காரணம் தவறணக்கு ஒழுங் காகக் கள் சீவிக் கொடுக்கும் தொழிலாளியான அ வ ன், போ யா நாட்களிலும் சீவட் போவதுண்டு. ஒருநாள் தவ ஞலும் சீவும் மரங்கள் கள் சுர

காமல் மரத்துப் போய்விடும், எனவே சீவித்தானுக வேண்டும். அப்படிச் சீவும் கள்ளின் ஒரு பகுதியைத் தனது சொந்ததி தேவைக்காகப் பத்திரப்படுத்து வதுண்டு. அதில் பங்கு கேட்கப் போட்டி நிலவும். அவன் இதைப் பணத்தின் நோக்கமாகச் செய்வ தில்லை. வீடு தேடி வரும் விருந் தா ளி க ளின் விருப்பத்தைப் பூர்த்தி பண்ணும் மனப் பாங்கு டனேயே இதை அவன் கைக் கொள்வது வழக்கம்.
தனது ஊக்கம் சரிதான் என்பதைப் புரிந்து கொண்ட சின்னப்பொடி மனதிற்குள் சிரித் துக் கொண்டான். அது ஒரு த வி ப் பு. "குடி விடாய்" ஒரு வேதனை. இது அ வ னு க் கும் புரிந்த ஒன்று. அனுதாபமாக அவன் அவர்களைக் கவனிப்பான் . எனவேதான் அவனில் சிலருக் குத் தனி அன்பு.
"அதென்னது வேறை அலு வல் என்னட்டை?”
"கொஞ்சம் பொறன். ஆறு தலாகப் பேந்து கதைப்பம். இப்ப எனக்கு முழுசா ஒண்டு கிடைக்குமே?”
வேப்பமர நிழலில் நின்று நிதானித்தவருக்கு அந்த வள வில் நிகழும் மாறுதல் தெரிந் தது. கல்வீடு ஒன்று மேற்கு மூல்ை மாமரத்துப் பக்கம் எழுந்து விட்டது. மரம் நின்ற இடத் தில் வீடு, ஒடு வேய்ந்தாகி விட் டது. பூச்சுப் பூசப்படாத நிலை. பெரிய வீடு. நவீன மோஸ்தர் அலங்கார வளைவுகள் வேறு.
வாழ்ந்து கொண்டிருக்கும் கிடுகுக் கொட்டிலை ஒட்டினுற் போலப் போட்டிருந்த சார்ப் புப் பகுதிக்கு - முன்னர் அதுவே கள்ளுக் கொட்டிலாக இயங்கி வந்தது. அவரை அழைத்துச் சென்ற சின்னப்பொடி பனை மரத்தைத் துண்டு படுத் தி
அ  ைரத் திண்ணையோரமாகப் ப்ோட்டிருந்த குத்தி ஒன்றில் அவரை உட்கார வைத்துவிட்டு குடிசைக்குள் நுழைந்தான். `
சின்னப்பொடி த ன க் குத் தனக்கென பதமாகச் சீவிப் பத் திரப்படுத்திய புளியமரத்தடித் தனி ஒற்றைத் தென்னைமரத்துக் கள்ளின் புதுச் சுவையின் தாக் கத்தில் தன்னை மறந்தவராகிப் போன் நன்னித்தம்பி" சின்னப் பொ டி யி ன் சகோதரத்துவ உணர்வைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனர்.
ஒரு போத்தலுக்குப் பதில் இரண்டாகி, மூன்முகி, மூன்ற ரையும் முடிந்துவிட்டது.
ஒரு கட்டத்தில் அவரது கண்களில் இருந்து கண்ணிர்கூட வழிந்தது. "இப்பிடி ஒரு தனிப் பிறவி அடுத்த பிறப்பில் எனக் குச் சகோதரமாக ஒரு தாய் வயிற்றில் பிறந்தால்தான் என் நெஞ்சு பட்ட கடனைத் தீர்க்கும்" என ஏதேதோ சம்பந்தா சம் பந்தமில்லாமல் புலம்பி வைத் தார், அவர்.
* கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டாலும் 6ör 600T Li பொடி அந்த அலம்பல் விரிவு ரையை ஆறுதலாகச் செவிமடுத் தான். அவன் அனுபவஸ்தன்.
முன்னர் இதே கள்ளுக் கொட்
டிலில் இரவு பகலாகக் கேட் காததையா அவன் இப்பொழுது கேட்கிருன்? இப்படியான எத்த னையோ பேர்களின் அலம்பல் கள். . விதண்டா வாதங்கள். தெய்வீக அறிவுரைகள். சகோ தரத்துவ நட்புரிமைகள்.
நான் நெடுகக் கேக்கிறன். அதென்னது என்னட்டை வேறை அலுவல்?" என குரலில் சற்றுக் கண்டிப்புத் தொனிக்கக் கேட் டான் சின்னப்பொடி வெறி முற்றிவிட்டால் அந்த களேபரதி தில் அந்த அம்சம் விடுபட்டுப்

Page 52
போய் விடுமோ என்ற தவிப் பில் அந்த முக்கிய விஷயத்தை அறிந்து விட வேண்டுமென்ற
துடிப்பில் நெரு ங்கி வந்து கேட்டான் அவன்.
மணலைக் கூட்டி, புளாவை
அதில் வைத்து விட்டு. நிமிர்ந்து திரும்பிய நன் னி த் தம் பி.
சால்வை முனையால் ஒருதடவை .
முகத்தைத் துடைத்து விட்டு தனக்குப் பக்கத்தே திண்ணை ஒட்டில் வைத்திருந்த சிறு பார் ச்லை எடுத்து மெதுவாகப் பிரித் தார்.
ஏதோ புதினமான சங்க தியை அறியப் போகும் குழந்தை மனத் துடிப்பிற்கு ஆட்பட்ட சின்னப்பொடி அவரது செயலை மிக உன்னிப்பாக அவதானித் துக் கொண்டிருந்தான்.
மஞ்சள் நிறத்தில் அச்சடிக் கப்பட்டிருந்த ஒரு கார்டை அதிலிருந்து உருவி எ டு த் து வழக்கத்துக்கு மீறின பணிவுடன் சின்னப்பொடியின் முன் நீட்டி ஞர் நன்னித்தம்பி.
அவனும் அதே பவ்வியத் துடன் அதை வாங்கிக் கொண்
டான். வாங்கும்போது "இது என்ன புதுச் சங்கதி?" என்பது போல பார்வையால் வினவி னன் அவன்.
"படிச்சுப் பாரன், இதுக் கெண்டுதான் முக்கியமா உன் னட்டை வந்தனன்."
*பணச் சடங்கு" எ ன க் கொட்டை எழுத்தில் எழுதி
இருந்தது மாத்திரம் அவனுக்கு விளங்கியது. மற்றவை சிறிய எழுத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த படி யா ல் சின்னப்பொடியால் வாசிக்க முடியவில்லை. வ ய து ஐம்பதைக் கடந்து விட்டதால் வெள்ளெழுத்து வேறு.
esg160L- தவிப்பைப்
புரிந்து கொண்ட நன்னித்தம்பி,
"நான் நாளையிண்டைக்குப் புதன் கிழமை ஒரு பணச் சடங்கு நடத் திறன். அதுக்குத்தான் உனக் கும் துண்டு குடுக்க வந்தனன். சகோதரத்தைப் போலப் பழ் கீட்டம் கன காலமா, அதுதான் உனக்கும் ஒருக்காச் சொன்னத் தான் என்ர மனசுக்கு ஆறுதல். ஊரிலே இப்ப முப்பது வருசமா கலியாண்மெண்டு, சாமத்தியச் சடங்கு எண்டு, பணச்சடங்கு எண்டு எல்லாருக்கும் குடுத்து இருக்கிறன். இப்பதான் எனக்கு நேரம் வந்திருக்கு. ஊருப்பட்ட பேருக்குக் குடுத்ததை வாங்கத் தான் இப்ப நானெரு பணச் சடங்கை நடத்திறன். நீதான் உன்ரை மூத்த மே 1ா ளு க்கு ச ட ங் கு நடத்தேக்கை எனக் கொருசொல்லுச் சொல்லேல்ல. இருந்தாலும் நானுன்னை மறக் கேல்லை. நாளை கழிச்சு அடுத்த நாள். சும்மா அளவாத்தான் செப்யிறன். பெரிசா அப்பிடி இல்லை. இருந்தாலும் ஊருக்கை உள்ளவர்கள் எல்லாரும் எனச் குக் கடமைப்பட்டவன்கள் வரு வான்கள். நீயும் மறக்காமல் வந்திடு. என்ன சரிதானே?
ஒரளவுக்கு நிதானம் தவறி ஞலும் பழக்க தோஷம் காரண மாகத் தன்னைச் சமாளித்தபடி வெளியே வந்த நன்னித்தம்பி, "இந்த நாய் எப்ப வந்தாலும் என்னிலை சொறியுது. இதைக் கவனிச்சு வை சின்னப்பெடி" எனக் கூறியவர் "இப்ப காசு கீசு இல்லை எண்ட துக் காக யோசிக்காதை! உனக்கு நான் கடன்காரன்தான். ஆஹ ரா ன் எல்லாம் எனக்குக் கடன்காரப் பயல்கள் நாளையிண்டைக்கு எல்லாம் சரியாப் போயிடும். உ ன்  ைர கடனையும் தீர்ப்பன் அப்." என்றபடி படலையைத் திறந்து ஒழுங்கைக்குள் காலடி எடுத்து வைத்தார், நன்னித் தம்பி. s
09

சிறிய பந்தல். சின்னச் சின் svj. (3а ти акта 6ir. நிலத்தில் விரிக்கப்பட்டிருந்தன.
லாம்பு வைக்கும் நேர ம் கடந்துவிட்டது.
பெற்ருேமெக்ஸ் விளக்கு சிணுங்கிச் சிணுங்கி எரிந்து கொண்டிருந்தது.
வாசலடி வாழை மரத்தடி யில் ஆரவாரம் கேட்டதைக கூர்ந்து அவதானித்த நன்னித் தம்பியர், "ஆரது?" என்ற (366fr வியுடன் வெளியே வந்தார்.
எட, எ ங் க ட சின்னப் பொடியே? எ ன் ன பதுங்கிப் போய் நிக்கிருய்? வா. வா. பந்தலுக்குள்ளை வா, இஞ்சை அப்பி டி ஒருத்தரும் இல்ல: பணச்சடங்குக்கு வந்திட்டு.இப் பிடி ஒழிச்சு ஒழிச்சு நிக்கிறியே? என்று கூறிக் கொண்டே அவ ஆளப் பந்தலுக்குள் இழுத்துச் சென்ருர் .
குழந்தைகள் ஒன்றிரண்டு விளையாடிக் கொண்டிருந்தன. பந்தலுக்குள் இருந்த ஒரு சில பெண்கள் குசினிப்பக்கம் சென்று மறைந்து கொண்டனர். சந்தனத்தை எ டு த் துப் பொட்டு வைத்தார். பன்னீர்ச் செம்பை எடுத்து அதில் நிறைந் துள்ள தண்ணீரைத் தலை முழு வதும் தெளித்து விட்டார். பின் னர் சின்னப்பொடியை விரித்தி ருந்த பாயொன்றில் இரு க் க வைத்துவிட்டு, "இஞ்சேரும். இஞ்சேரும். இங்கை ஒருக்கா வந்திட்டுப் போம்!" எனக் குரல் கொடுத்தார்.
இவரது குரலைக் கேட்டு யாரும் வராதிருக்கவே அதைச் சுதாரித்துக் கொண்டு எழுந்து குசினிப் பக்கம் சென்ருர்,
GScerrur Go6fiċi;
சின்னப்பொடி பந்த ao அண்னத்து பார்த் தா ன் வெள்ளை கட்டிய அவசர நேர்த் தியைக் கூர்ந்து நோக்கிஞன். தனித்திருக்கக் கூச்சமாக இருந் தது. மன்சில் பதட்டம் வேறு இந்த இடத்தை விட்டு போய் விட வேண்டும் என்ற மனப் பதைபதைப்பு முகத்தில் துலாம் பரமாகத் தெரிந்தது.
இளாசில் ஊற்றி வைத்த
குடித்துவிட்டு நன்னித்தம்பியர் வற்புறுத்திய தின் பேரில் தட்டத்தை வாங்கி தாம்பூலம் தரித்தான்.
அவர் அன்று வந்த பலரைப் பற்றி விரிவாக அவனுக்கு விளக் கிக் கூறிஞர். சட்டம்பி திருப்
இ. போ. ச. பஸ் கண்டக்டர் வே லை ககு விண்ணப்பித்திருந்த ஒருவருக்கு இன்னெ ரு வர் கொடுத்த நற்சாட்சிப்பத்திரம்.
இவர் நேர்மையானவர். கட மைகளில் கண்ணுயிருப்பவர் என்னுடைய விறகு டிப்போவில் இரண்டு வருட காலம் வேலை பார்த்தவர். மூன்று லாரி விறகு களை இரண்டு லாரிகளில் அடுக்கி அனுப்பிவைத்த திறமைசாலி.
பதியரில் இருந்து சட்டத்தரணி சத் தி ய வே ல ன் வரை வந்து போன பிரமுகர்களின் பெருமை களை அள்ளி வீசி விளாசினர் elől fT .
"அப்ப என க் கு வேலை இருக்கு. . . வாறன்" என்று கூறியபடி எழுந்தான் சின்னப் பொடி அவரும் எழுந்தார். கையில் தயாராக வைத்திருந்த தபாலுறையை நன்னித்தம்பி யின் கைக்குள் திணித்தவண்ணம் விடைபெற்ருன் சின்னப்பொடி,
இப்ப என்ன அவசரம்? கொஞ்ச நேரம் இருந்திட்டுப்

Page 53
போளுல் என்னப்பா? கணக்கக் இதைக்க இருக்கு" என்று கூறிய வாறு பந்தலுக்கு வெளிப்புற மாக வந்து அவனை வழியனுப்பி வைத்தார் நன்னித்தம்பி.
அவனை அனுப்பிவைத்த கையோடு உள்ளே வந்த அவர் மனைவி யை க் கூப்பிட்டார் "இஞ்சேரும், ஒரு சொட்டுத் தேத்தண்ணி வைச்சுத் தாரும்; நெஞ்சை எரிக்குது, கொஞ்சம் சுடுதண்ணி குடிச்சாத்தான் இந்த நெஞ்செரிச்சல் தீரும்"
மனைவி மூக்குப் பேணியில் கொண்டுவந்து வைத்த தேநீரை ஒரு மிடறு விழுங்கிக் குடித்து விட்டுப் பேணியைப் பக்கத்தில் வைத்தவாறு, பெரிய நீளமான கொப்பியை பந்தலுக்குள் விரித் திருந்த கம்பளத்திற்கு அடியிலி ருந்து உருலி எடுத்தார்.
ஆறுமாதக் கர்ப் பிணிப் பெண்ணின் அடிவயிற்றுப் பருப்
பத்துடன் அக் கொப்பி தொந்தி விழுந்திருந்தது. அதற்கு ஸ் அன்று அங்கு வந்துவிட்டுச் சென்றவர்கள் அளித்துச் சென்ற மூ ட ப் பட் ட தபாலுறைகள் பிதுங்கி வழிந்தன.
உறைகளை ஒவ்வொன்ருக எடுத்து ஓரங்களைக் கிழித்துப் பிரித்தார்.
ஒன்று. இரண்டு. மூன்று. எல்லாமே.. எல்லாமே  ெசா ல் லி வைத்தால் போல வெறும் கா கி த த் துண்டுகள் திணிக்கப்பட்ட உறைகளாகவே காட்சி தந்தன. பணத்திற்குப் பதிலாக அதே அளவில் கத்த ரிக்கப்பட்ட கடதாசித் துண்டு கள்! -காகிதங்கள்!
ஆணுல் ஒரேயெரு கவரைப் பிரித்தபோது மட் டு ம் பத்து ரூபா நோட்டொன்று தலையை நீட்டி எட்டிப் பார்த்தது. *
fror
என்பதை உணருகிறேன்.
மல்லிகை மென்மேலும் வளர வேண்டும். இதுவே எனது மன ஆசையாகும். மல்லிகை ஆரம்பித்த காலத்திலிருந்தே அதன் அபிமான வாசகன் நான் எனவே அதன் இலக்கியத் தாக்கத்தை என்னுல் மனப்பூர்வமாக உணர முடிகிறது. இப்படியான தரமான சஞ்சிகைகளின் வளர்ச்சியில்தான் நமது ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சி தங்கியுள்ளது
ஏ. எவ். செல்வராசா
வெள்ளவத்தை
0.

<>0 »csob0éer>-0-«Sk<>000p0 »a
* ரசாயனப் பொருட்கள் வர்ணப் பூச்சுக்கள் வாசனைத் திரவியங்கள் உபகரணப் பொருட்கள்
எம்மிடம் நிதானமான விலையில் கிடைக்கும் யாழ்ப்பாணக் கமக்காரர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்
y புதிய இறக்குமதித் திட்டத்தின்கீழ் இறக்குமதி செய்ய ஈவண்டிய
. எல்லாவித சாமான்களையும் இறக்குமதி செய்து தருவோம்.
O
: o
* வியாபாரிகள் தொடர்பு கொள்ளவும் *
O
உள்நாட்டு விளைபொருள் மொத்த கமிஷன் S
ou unrunriflessar
ஹ" சை ன் பிற தர்ஸ் , 137, மலிபன் வீதி,
கொமும்பு-11
தொலைபேசி: 20712
SLqLqLLLeLLLYeLSLLL LLLYLeSLLzSLSSLqLSLSL SSLSJJuASSLS LLLYLqLLLL LLLLLLLLYSL
உள்ளூர் விளைபொருட்களை எம்மிடம் m மொத்தமாகவும் சில்லறையாகவும் சக்ாயமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
நவீனமானதும் வீட்டுத் தேவைகளுக்குப் பாவிக்கத் தக்கவையுமான
சாய்ப்புச் சாமான்களும்
எம்மிட்ம் கிடைக்கும்
ஒருமுறை விஜயம் செய்யுங்கள்
எஸ். குலசேகரம்பிள்ளை அன் பிறதர்ஸ்
168, ஐந்தாம் குறுக்குத் தெரு,
கொழும்பு - 11.
தொலைபேசி 33856

Page 54
சுத்தமான முடிவவி
சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட முகல உண்ெ வகைகளுக்கும்
கொழும்பு மாநகரில் பிரசித்திபெற்ற சைவக் கிளப்
துே 1 ல் டன் க பே
98. பாங்சோல் வீதி, கொழும்பு-11.
பூச்சிக் கொல்லி الكاكات تاريع حسب تقاقه ரன்ரெட்- எலிக் Gartglog. ன் இன்செக்ட் கில்லா " சகல பூச்சிக் கொல்லி ாவா கொஸ்மெடிக்
கலவித பேப்பர் இக்ஸ் சைஸ்கள்
தயாரிப்பாார்:
அப்துல்லா இன்டிஸ்ரீஸ் அன்
பேப்பர் பேக்ஸ் மெனுபெக்ஷரி
டி பார்பர் விதி: கொழும்பு-13
தொலைபேசி 33952
 
 
 

Er:::::::::: ::: YL LLLL LL LLL LLL LLLLLL L L L L L LLLLL LL LL LLL LLL LLLLLLLL L L L L L LLLLLL
■■
LLLLL ::::
தனிமை கண்டதுண்டு, அதிலே.
வ. அ. இராசரத்தினம்
LLLLLL LLLL LL L LL LLLLL L LLLLL LL LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLS LLLLLLLLLLLLLLLLLLLLLLL LLL LLLLLLLLLL LLLLLLL
ஒவ்வொரு ஜன்னாலாக ஒவ் வொரு சதவாக இழுத் துப் பூட்டிக் கடைசியாக இன்ன மும் தலவாயிற் கதவை மட் டுமே பூட்ட வேண்டியிருந்தது. அந்த வாசிகசாஃலயிலே தற் போது சாரங்கனேத் தவிர வேறு எந்த வாசகருமே இல்லை.
இன்னமும் தான் அந்த வாசிகசாவியில் தரிக்க முடியாது என்பதை உண்ர்ந்து பொண்ட வனுகச் சாரங்கன் அதைவிட்டு வெளியேறிஞன்.
கடந்த மூன்று மாதங்களாக அந்த வாசிகசாஃபை விட்டு வெளியேறும் கடைசி வாசகன் சாரங்கனேதான். தற்போதெல் லாம் அந்த வாசிக்சாஃக்குட் புகுந்து கொண்டு எதையாவது வாசித்துக் கொண்டிருப்பது அவ ஒதுக்கு ஒரு 'Gray 3r, i'r gyfi hi." தன்னே வருத்திக் கொண்டிருக் கும் அகோரமான த ரிை  ைம  ையப் போக்கடிப்பதற்காகத் தீக்கோழி தன் தலேயை மன லுள்னே மறைத்துக் கொள்வ தைப் போல ச் சாரங்கனும் புத்தகங்களிலே மூழ்கி ப் போ வான். அது அவன் தரிவைப மறக்கடித்ததா அல்லது மேலும் துயரமாக்குகின்றதா என்பது இன்னமும் அவனுக்கே சரியா கத் தெரியவில்ஃப்.
பத் துக்கு ம்
வாசிகாலேக்கு வெளியே வங்காளக்குடாவிலிருந்து சீதனச் குல்களேச் சுமந்து வந்த கடற் காற்று அவன் உடஃப் மென்மை பாகி விருடியது ஆணுல் அதன் வருடல் சாரங்கனுக்குக் குளு மையைத் தரவில்லே, சோர்வும், து Eார்ச் சி யும் கொண்டவனுக அவன் நடந்து கொண்டேயிருந் தான் எ தி ரே பிரெடெரிக் கோட்டை வாயிலில் இருந்து
மஃபவரைக்கும் வட்ட விருத்தமாக வளந்திருக்கும் ஆடற்கரையில் நீலச் சேலேக்குப்
பிடித்த சரிகைக்கரை போன்ற மணற்பரப்பில் ஒரே மனிதத் தல்ேகள்
சித்திரை மாதத்து வெப் புழுக்கத்துக்கும் ஆற்ருது திருக்கோமேஃப் பட் டினமே அந்தக் கடற்கரையில் வந்து குடியேறி விட்டதைப் போன்று ஒரே சனத்திரள்
மணற் குளித்து வின்ப ாடும் rly arri gi, in Eorl Tr., காற்று வாங்கும் முதியவர்கள், கரையில் இழுத்து வைக்கப்பட் டிருக்கும் தோணிகளின் மறை விலே காதல் பண்ணும் இள வட்டங்கள் - இவர்கள் எவரை யுமே பார்க்க விரும்பாதவருக, அவர்கள் எ வர் கண்ணிலும் தான் பட்டுவிடக் கூடாது என்ற ஆதங்கத்தோடு தன் தனிமை

Page 55
யும் தானுமாகச் சா ரங் க ன் நடந்து கொண்டேயிருந்தான். வாசிகசாலைக்கு மு ன் ஞ ல் இருந்த சமூக சேவாநிலையத்து மே ல் மாடியில் ஆங்கிலத்திற் செய்திகளைச் சொல்லி முடித்த வானுெலி அ ந் த அலுப்பைப் போக்கிக் கொள்வதற்காக உற் சாகமாகப் பா ட த் தொடங் கிற்று.
தனிமை கண்டதுண்டு- அதிலே ஸாரமிருக்குதம்மா..
சாரங்கனுக்கு எரிச்சலாக இருந்தது. "இந்தக் கவிஞர்கள் எல்லாருமே பைத்தியக்காரர் கள். தனிமையாம், அ தி லே சாரமாம். சுத் த ப் பைத்திய காரத்தன்ம்' என்று அலுத்துக் கொண்ட சாரங்கன், அந்தப் பாட்டே த ன் காதுகளுக்குக் கேட்காத தூரத்துக்கு ஓடிவிட வேண்டும் என்று எண்ணியவணு கத் தன் நடையை வேகமாக்கி ஞன். எவரோ ஒரு வித்வானின் வாயில் அகப்பட்டுக் கொண்ட பாரதியார் மீண்டும் மீண்டும்
தனிமை கண்டதுண்டு- அதிலே ஸாரமிருக்குதம்மா . .
என்ற அடியையே பாடிக்கொண் டிரு 5 தான்!
தன் நடையின் வேகத்தைக் கூ ட் டி ய சாரங்கன், "இந்த வேகத்திலே நா ன் சென்ருல் இன்னமும் இருபது நிமிடங்களிற் திருக்கடலூரிலுள்ள என் வீட்டை அ00 டந்து விடலாம் அங்கே போய் என்ன செய்வது? ஒவ் வொரு நாளும் வரும் நீண்ட மாலை வேளைகளில் என் வீடே எனக்குச் சூன்யமாகவல்லவா இருக்கிறது என்று எண்ணிக் கொள்கையில் அவன் நடையிலே ஓர் அசட்டையும், அசமந்தமும் தலைதுாக்கின.
அந்த அசமந்தத்தில் அவ னது சா ர மு ஸ் ள தனிமை
06
நிறைந்த நாட்கள் அவன் மனத் திரையில் நெளிந்தன.
இருபத்தைந்து ஆண் டு க ளுக்கு முன்னே. அப்போதெல் லாம் அவன் தனிமையிலும் ஒரு சாரமிருக்கத்தான் செய்த து. அப்போது, "நா ன் அழகாகத் தான் இருப்பேன்" என்று அடம் பிடித்துக் கொண் டி ருக்கு ம் தெற்குமலை நாட்டிலே அவனுக்கு உத்தியோகம். ஆணுலும் விடு தலையில் ஊருக்கு வந்து மீள் கையில் ஏதோ ஒரு சிறைச் சாலைக்குப் போகிருேம் என்ற உணர்வுதான் அவனுக்கு ஏற் படும். மலை நாட்டின் தூங்கு மூஞ்சி மா லை வேளைகளிலே, நண்பர்களோடு சேர்ந்து ஊர்
சுற்றுகையிலே, அவன் மனம் மட்டும் தனிமை கண்டு அத் தனிமைபின் சாரமாகிய அவ
ளையே நினைத்துக் கொண்டிருக் கும். அந்த நினைவுகளிலே எத்
தனை இதம்! எத்தனை சுகம்!
அந்த ச் சுகானுபவத்தில் அவன் கண்ட கனவுகள். அவன் அ  ைட ந் த நம்பிக் கைகள். அந்தக் கனவுகளையும் நம்பிக்கை களையும் எழுத்தில் வடித் து அவளுக்கு எழுதிய நீண் ட கடிதங்கள். ஆமாம். தனி மையிற் சாரமிருக்கவே இருந் தது அப்போது.
ஆனல் இன்று என் தனிமை யில் ஏதாவது சாரம் இருக்கி றதா? ஏன், இன்றைய எனது வாழ்க்கைக்கே ஏதாவது அர்த் தம் இருக்கின்றதா? அல்லது நான் வாழ்ந்து கொண்டிருப்ப தற்கு ஏதாவது அர்த்தம் இருக் கத்தான் வேண்டுமா? தன்னைத் தானே கேட்டுக் கொண்டவனுக நடந்தான் சாரங்கன்.
நெல்சன் படமாளிகையைத் தாண்டிச் செல்கையில் சில நாட் களுக்கு முன்னர் பார்த்த படம் அவன் ஞாபகத்ற்கு வந்தது,

அவன் படம் பார்ப்பதை. அதிலும் தமிழ்ப்படம் பார்ப் பதை விட்டு வருடங்களாகியிருந் தன உதடுகளால் முத்தமிட் டாற் கலாசாரம் பாழாகி விடும் இன்ற அசட்டு வைராக்கியத் தோடு மூக்கு நுனிகளை அரைச் சென்ரி மீற்றர் நெருக்கத்திற் குளோசப்பிற் காட்டும் அபத் தங்களும் கிழட்டுக் காதலர்கள் மலட்டுப் பேடுகளை ஒடிப்பிடிக் கும் அலங்கோலங்களும் கொண் !-துதானே தமிழ்ப் படங்கள் என்பது அவனது ை வரித்த அபிப்பிராயமாகி விட்டிருந்தது:
ஆனலும் ஊர் முழுவதுமே திரண்டு சென்று பார்த்த அந்தப் படத்திலே அப்படி விழுந் து விழுந்து பார்ப்பதற்கு என்ன தான் இருக்கின்றது என்பதைப் பார்ப்போமே என்ற எண்ணத் தோடு சாரங்கனும் அந் த ப் படத்துக்குச் சென்ருன். புத்த கம் பார்ப்பதைப் போலப் படம் பார்ப்பதும் ஒரு இன்ரஸ்ட்தானே
என்று எண் ணி க் கொண்டு சென்றன்.
அவ ன் எதிர்பார்த்தது போல அந்தப் படமும் தமிழ் நாட்டின் சராசரிக் குடும்பத் தைச் சித்தரிக்காத குடும்பக் கதை அசாத்தியமான பொறு
மையோடு படத்தைப் li jirriġ தான்.
*தன் தாய் வீ ட் டு க்கு ச் சென்ற கதாநாயகி ரயிலில் கணவன் வீ டு திரும்புகிருள். அவள் கணவன் காரை எடுத் துக் கொண்டு புகையிரத நிஜ்ல யத்துக்குச் செல்கிருன். அங்கே அவள் பிரயாணம் பண்ணிய ரயில் விபத்துக்குள்னானதைக் கேள்வியுற்று விபத்து நடந்த இடத்துக்கு ஒடுகிருன். அங்கே அவளது பிரேதத்தைக் கண்டு தின் குழந்தைகளோடு அதன்
மேல், மேல் விழுந்து புலம்பு கின்றன்.
அதற்குமேல் அப்படத்தைப் பார்க்கச் சாரங்களுல் (PL 911 வில்லை. அவன் கண்கள் கலங்சி அழுகை யே வந்துவிட்டது. அதற்குள் இடைவேளைக்காகத் தியேட்டருள் "வெளிச்சம் வந்து லிடவே தான் அழுவதை மற்ற வர்கள் பார்த்துவிடக் கூடாதே எண்ற எண்ணத்தோடு சார கன் எழுந்து வந்துவிட்டான்.
தன் நினைவுத் தொடரை அறுத்துக்கொண்ட சாரங்கன், தன்_சட்டைப்பையைத் துளாவி அங்கே நசிந்துகிடந்த சிகர்ட்டை எ டு த் துப் பற்ற வைத்துக் கொண்டே நடந்தான், அவன் அசை நடை மேலும் தளர்ச்சி யடைந்து கொண்டே இருந்தது.
நான் வீட்டிற்கு எப்போது வேண்டுமானலும் போகலாம். போகாமலும் விடலாம். எவருக் கும் தொல்லையாக இரு க் கக் கூடாது என்பதற்காக ஏற்கனவே தான் சொல்லி வைத்ததுபோல வீட்டோடு ஒட்டாத வெளிக் கூடம் ஒன்றிலே எனக்குச் சாப்
Lu T (6) வைக்கப்பட்டிருக்கும் சாப்பிடலாம். சாப்பிடாமலும் விடலாம். ஏன் சாப்பிடவில்லை
என்று எவருமே கேட்க HTS)
(Մ)ւգ
வீட்டிலுள்ள பெரியவர்கள் எல்லாரும் தன்னை இப்படி விட் டேற்றியாக விட்டுவைத்திருப் பதே தன் தனிமையை இன்ன மும் சூன்யமாக்கிக் கொண்டிருக் கிறதா?
அந்தப் பயங்கரமான தனி மையிற். தரன் காலந்தாழ்த்தி வந்தமைக்கள் கத் த ன் னை க் கடிந்து கொள்ள உரிமை பெற் றிருந்து அந் த க் குரலுக்காக ஏங்கி மெளனமாக எத்தனையே
Ꮧ07

Page 56
நாட்கள் அவன் கண்ணீர் விட் டிருக்கிருன்.
நேருஜி தன் சுயசரிதத்தில் எழுதிய வரிகள் அவன் ஞாப கத்துக்கு வருகின்றன.
சிறையிலே பெண் குரலைக் கேட்காமல்இருப்பதுதான் அதன் மிகப் பெரிய துன்பமாக இருக் கிறது" m
சாரங்கன் சிகரட்டை ஊதி இழுத்துப் புகையின் கமறலில் இருமிஞன்.
"காரியாலயத்திலும் வெளி யிலுமாக எத்தனையோ பெண் களின் குரலைக் கேட்கிறேன். ஆனல் அந்த ஒரே ஒரு குரலை மட்டும் கேட்க முடியாததுதான் உலகமே எனக்குச் சிறையான தற்குக் காரணமா? என்று தன் ன்ைத்தானே கேட்டுக்கொண்டே சாரங்கன் நடந்தான். அவன் நடையிலே, வீட்டுக்குப் போய் விட வேண்டும் என்ற அவசரம் இல்லை. எங்கு போவது என்ற இலக்குக்கூடக் கிடையாது. "சிந்தம் போக்கு சிவம் போக்கு" என்பார்களே அந்தப் போக்கில் நடந்து கொண்டேயிருந்தான்.
தெருவின் இருமருங்கிலும் நிழலுக் காக நடப்பட்டிருந்த வாகை மரங்கள் இருளிலே கரும் பூதங்களாக உருவெடுத்து ஒரு பயங்கரத்தைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தன. இடப் பக்க மாக இருந்த மதில் வளைந்த காணிக்குள், எப்போதோ இந் நகரில் மரித்துவிட்ட வெள்ளைக் காரரைப் புதைத்திருந்த சவக் குழிகளின் மேலே நினைவுத் தூபிகள் எழுந்து நின்றன. அந் தத் தூபிகளின் ஒவ்வொன்றின் மீதும் அப்புதைகளில் மீளாத் துயில் கொள்பவர்களின் அன்புக் குரியவர்கள் எதையெதையெல் லாமோ எழுதி வைத்திருந்தனர்.
எப்போதோ ஒரு நாள் அவன் அந்தப் பிரேதக் காலைக் குட் சென்று அப்புதைகுழிகளின்
மே ல் எழுதப்பட்டவைகளை வேடிக்கையாக வாசித்திருக்கி ருன். அதோ அந்த மூலையிற்
தோன்றும் கல்லறையில் ஆங்கி லக் கவி வேட்ஸ் வோர்தின்" க வி ைத வரிகள் பொறிக்கப் பட்டிருக்கின்றன. சாரங்கன் அக்கவிதை அடிகளை நினைவுக் குக் கொண்டுவந்து வாய்விட் டுச் சொன்னன்.
ஆ, அவன் கிடக்கிருன்
இந்தக் கல்லறையில்
என்வாழ்விற்தான்
என்ன மாறுதல்கள்
சாரங்கன் பெ ரு மூச்சு ஒன்றை நெட்டித் தள்ளிவிட்டுக் கொண்டே, நடந்தான். இப்படிச் சிந்தனை வயப்பட்டவஞக நடந்து கொண்டிருப்பது இப்போதெல் லாம் தவிர்க்க முடியாததொன் ருக ஆகிவிட்டது, ப க லிலே தன் உத்தியோகக் ளிலோ, அல்லது தன் தனி மையை மறக்கடிக்க எங்கோ எதிலோ தீக்கோழி போலத் தலையைப் புதைத்துக் கொண்டி ருந்துவிட்டு இருட்டி வெகு நேர மான பின்னரே அவன் வீட்டுக் குப் போவான். அப் :ே து எங்கோ ஒரு குன்யத்தை நோக் கிச் செல்வதாகவே அவனுக்குத் தோன்றும். ஒரோர்வேளை தன் காரியாலயத்தில் நடந்த சுவை யான சம்பவத்தை அல்லது தெருவிலே சமபவித்த ஏதோ ஒரு நிகழ்வை, புத்தகத்தில் ரசித்த ஏதோ சில வ ரி க ஆள இவளிடம் சொல்லிச் சிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கூட அவன் நடந்திருக்கிறன்
፮ዕቋ

ஆனல் வீ ட் டு வாயிலிற் காலடி எடுத்து வைத்த பின்னர் தான் அந்த வீட்டிலே அவள் ග්‍රිහීමයික්‍ෂා. தன்னைப் பொறுத்த வரையிலும் அவ்வீடே ஒன்று மற்ற வெறும் சூன்யம் என்ற
யதார்த்த உணர்வு அவ ன
உறுத்தும்
அந்த உறுத்தலோடு தன் அறையிற் புகுந்தால் கதவைப் பூட்டிக் கொண்டு மெளனமாக அழுவதைத்தவிர அவ னு க்கு வேறு வழியே இல்லை,
சூன்யத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றேன் என்ற உணர்வு அவன் மனத்தை
இப்ப்ோதே உறுத்தத் தொடங்
கியது.
அவன் தன் சட்  ை. ப் பையை மீண்டும் துழாவினன்.
திறப்பு. நசிந்து போன ஒரு சிகரட், ஒரு ரூபாக் குத்தியும் சில்லறையும்.
தன் சட்டைப்  ைப யி ன் கனத்தைக் கண்ட சாரங்களும் காளி கோயிலுக்கு மேலே நடக்க முடியாதுபோல இருந்தது. அது கனபாக இருந்தால் "மான்சன்" ஹொட்டலுக்குச் சென்று அவ் விடுதி பூட்டப்படும் வரையும் அங்கே இருக்கலாம். அதன் பின்னர் வீட்டுக்குச் சென்ருலும் வீடு சூன்யமாகத்தான் இருக் கும். ஆனல் அந்தச் சூன்ய உணர்வில் நீண்ட நேரம் வதை படத் தேவையில்லை. மதுவின் போதையில் வீழ்ந்து படுத்து நித்திரையாகி விடலாம்!
ஆனல் இ ன்  ைற க்கு க் கொட்டு கொட்டென்று ஆந்தை மாதிரி விழித்துக் கொண்டே நீண்ட நேரம் அந்தச் சூன்ய உணர்வை அனுபவிக்க வேண்டி
யிருக்கும். அந்த இனிமையான குரலுக்காக ஏற்க வேண்டியிருக் கும் பெண்மையின் மென்மை யான பரிச்சயம். வெதுவெதுப் பான மூச்சுக்களின் உஸ்ணம் கலந்த தழுவல்.
காளிகோயிலை அண் மிய சாரங்கனின்  ைக க ள் சொல் லு நா நமசிவாயத் தத்துவமாக" தலைக்குமேற் கூம்பின. எதிரே பெட்டிக் கடை யி லி ரு ந் த வானெலி பாடிக் கொண்டிருந் 望53W・ மோகத்தைக் கொன்றுவிடு
அல்லாலெந்தன் மூச்சை நிறுத்திவிடு. தேகத்தைச் சாய்த்துவிடு
அல்லாலதிற் சித்தனை மாய்த்து விடு யோகத்திருத்திவிடு- .
அல்லாலெந்தன் ஊனைச் சிதைத்து விடு ஏகத்திருந்துவகம் - இங்குள்ளன
யாவையும் செய்பவனே.
பாரதியாரின் இந்தப் பாடல் சாரங்கனின் மனதுக்கு இதமா கவே இருந்தது. பாரதியார் மகாசக்தியிடம் விண்ணபித்தவை களையே தா னும் காளிதேவி யிடம் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல இருந்தது அவ னுக்கு. அந்த நேரத்தில், அந் தப் பாட்டின் இசையில் ஏதோ சாந்தி பிறந்ததுபோல இருந் தது ஆ ஞ ம் பாட்டு முடிவ டைந்தபோது மீண்டும் அதே சூன்யமும் துயர நினைவுகளும் தோன்ற "இப்போதுதான் ஒன் பதே முக்கால் ஆகின்றது அதற் குள் வீட்டுக்குப் போய் என்ன செய்வது" என்று எண்ணியவனுக முற்றவெளிக்குள் இறங்கி எதிரே தோன்றும் கடலை வெறித்துப் பாரத்தபடி பின்னுற் கைகளை ஊன்றிக் கொண்டு மல்லாந்து உட்கார்ந்தான்
rea

Page 57
r p LunrL_%Dئی 67 bunrrہونچھ قLAJ(U - ۔۔۔ "حمح^حمہہم حصہہ حصہ حصہہ حصہہ حمحہ
மேன்மை தங்கிய பிரதமர் சேரி வின்ஸ்டன் சேர்ச்சில் அவர் கட்கு.
என்னுடைய நாடகம் ஒன்று வருகிற முதலாம் திகதி ரவுண் ஹோலில் மேடையேறுகிறது. அந்த நாடகத்தின் இரண்டு ரிக் கற்றுகள் இந்த அழைப்பிதழு டன் அனுப்பி வைக்கின்றேன். தங்களுக்கும் தங்களின் நெருங் கிய நண்பருக்கும். அப்படி எவராவது இருப்பாராயின்
தங்கள் பெர்ணுட்ஷா
அ ன் பன் பெர்ணுட்ஷா அவர்கட்கு
தங்களின் அழைப்பிதழும்
ரிக்கற்றுகளும் பெற்றுக்கொண் டேன் நன்றி. தாங்கள் குறிப் பிட்ட திகதிக்கு நாடகம் பார்க்க வரமுடியாததையிட்டு வருந்து கிறேன். மீண்டும் மேடையேறும் பொழுது கண்டிப்பாக வருகின்
றேன். அப்படியும் நட்க்கு Lorrusăr.
தங்கள் GF rioj 66
LAAAAALLAALLLLLALALAAAAALLAAAAL ML LAMA MALLAAAAALLAALLMLLALM
தூ ரத் தே மலையுச்சியில், கோணேசர் கோயிற் கோபுரக்
கலசங்கள் மின்ஞெளியிற் கண் சிமிட்டி மினுக்கிக் கொண்டிருந்
தன. பரந்து கிடந்த நீலக் கடலிலே அங்கொன்றும் இங் கொன்றுமாக மின்னிக் கொண்
டிருந்த சூள் விளக்குகள் அந்த
கார இருளிலும் ஏ தோ நம் பிக்கை ஒளி இருக்கத்தான்செய் யும் என்று தத்துவம்: பேசுவன போல நம்பிக்கையூட்டிக் கொண் டிருந்தன.
சாரங்கன் மீண்டும் பாரதி யாரின் அந்தப் பாடலை தனிமை அண்டதுண்டு- அதிலே ஸார
நினைவுக்குக் கொண்டுவந்தான். கோரப் பு ய ல் சீறியடித் தது. எண்ணற்ற மரங்கள் அங்கு மிங்கும் சிதறி வீழ்ந்தன. ஆளுல் அந்த வட்டாரத்திலே ஒர் ஏழை யின் சின்னஞ்சிறிய தோப்பு மட் டும் எப்படியோ தப்பிப் பிழைத் துக் கொண்டது. புயலுக்குத் தப்பிய அந்தச் கின்னஞ் சிறிய தோப்பின் நிழலிலிருந்து கொண் டுதான் பாரதியார் அ ந் த ப் பாடலைப் பாடியிருக்கிருர்,
வீட்டிலேயடித்த கோ ர ப் புயலுக்குத் தப்பிப் பிழைத்துத் தலை நிமிர்ந்து நிற் கும் என் குழந்தைகள் என்ற தோப்பின் நிழலில் அமர்ந்து கொண்டு என் தனிமையிற் சாரத்தைக் காண முடியாதா? என்று எண்ணினுன் சாரங்கன்
தான் வீட்டை வி ட் டு வாசிகசாலைக்குப் புறப்படுகை யில் த ன் இளையமகன் தல் யணையை எடுத்துக் கொண்டு "நான் அப்புவோடதான் படுப் பன்" என்று தன் படுக்கையில் விழுந்து நித்திரையாகி விட்டது அவன் ஞாபகத்துக்கு வந்தது. அவனை யாராவது தூக்கி எடுத்தார்களோ அல்லது தனி யாகத்தான் அங்கு படுத்திருக் கிருனே? என்ற நினைவு வரவே grrrr på 35 Gör திடீரென எழுநது, தி ரு க் கடலூரிலிருக்கும் தன் வீட்டை நோக்கி வேகமாக-- மிக வேகமாக நடக்கத் தொடங் கினன்.
ஆம், இப்போது தன்னை வருத்தும் தனிமையிலும் ஒரு சாரம் இருப்பதாகப் பாரதியார்
பாடியது உண்  ைம . என்றே அவனுக்குப் பட்-து,
வீட்டை நோக்கி வேகமா
கச் சென்றுகொண்டே இரு ந் தான். *
40

rMVANNMMMMMMMA
இஸ்ரேலிய - தென்னுபிரிக்க உறவுகளின்
உண்மையான சொரூபம்
எல். மீரானுேவ்
தென் ஆபிரிக்க அரசு பின்பற்றி வரும் இனவாதக் கொள்கையை ஆட்சேபிப்பதற்கு அடையாளமாக அந் நாட்டுடனுன வர்த்தக உற வுகளை ரத்துச் செய்யுமாறு ஐ. நா. பொதுச் சபை சில காலத்துக்கு முன்னர் இர்மானமொன்றினை நிறைவேற்றியது. த் தீர்பானத் துக்கு இணங்க் ஐ. நா. அங்கத்துவ நாடுகள் தென்ஆபிரிக்கக் குடியர சுடனுன வர்த்தக தொடர்புகளை நிறுத்திக் க்ொண்டன.
ஆஞல், பல பொதுச் சந்தை நாடுகளுக்கு தென் ஆபிரிக்கா தனது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் தென் ஆபிரிக்கா தனது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு இஸ்ரேல் பல வழி களிலும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இஸ்ரேல் செய்து வரும் இந்தத் தரகு வேலையை தென் ஆபிரிக்க - இஸ்ரேலிய வர்த்தக சபையின் தலைவர் டி. பிளம்பேர்க் பகிரங்கமாகவே ஒப்புக் கொண் டுள்ளார்.
அண்மையில் இஸ்ரேலிய நிதியமைச்சர் எஸ். எ ல் றி ச் தென் ஆபிரிக்காவுக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இவ் விஜ யத்தின் போது கைச்சாத்தான உடன்படிக்கைக்கு அமைய முக்கிய இஸ்ரேலிய தொழிலதிபர்களையும் வர்த்தகர்களையும் கொண்ட குழு வொன்று தென் ஆபிரிக்காவுக்கு பத்து நாள் விஜய மொன்றை ம்ேற்கொண்டது.
டெல் அவிவ்வுக்கும் பிரிடோரியாவுக்குமிடையிலான இந்த விசேஷ உறவினை மேற்குலகம் பத்திரிகைகள் ஒரு "விசித்திரமான பிணைப்பு' என வர்ணிக்கின்றன. இரண்டாவது உலக மஹா யுத்த காலத்தில் ஹிட்லர் யூதர்களுக்கு இழைத்த கொடுமைகளுேஇஸ்ரேல் என்ருெரு ராஜ்யம் உருவாகக் காரணமாக இருந்தது. அதிே"வேளையில், ஹிட்லர் ஜெர்மனிக்கு ஆதரவும் அனுதாபமும் காட்டியவர்கள் இன்று தென் ஆபிரிக்க ஆட்சி பீடத்தில் இருக்கின்றனர். இதனுல்தான் இன்றை

Page 58
இஸ்ரேலிய - தென் ஆபிரிக்க உறவுகள் 'விசித்திரமான உறவுகள்" என மேற்குலகப் பத்திரிகைகளால் வர்ணிக்கப்படுகின்றன. பகைமை யுணர்வு கொண்ட ஒரு வரலாற்றுப் பகைப்புலமொன்று இருக்கின்ற சூழலில், டெல் அவிவ்வையும் பிரிட்டோரியாவை யும் இன்று இணைத்து நிற்கும் காரணி என்ன? பிரிட்டோரியா பின் பற்றும் இனவாதக் கொள்கையும், டெல் அவிவ் பின்பற்றி வருகி ன் ற் இனவாதத்தின் பிறிதொரு வடிவமென ஐ. நா. வினல் பிரகடனப் படுத்தப்பட்ட ஸயானிஸக் கொள்கையுமே இந்த தென் ஆபிரிக்க - இஸ்ரேலிய விசித்திர பிணைப்பினது அத்திவாரமாக உள்ளது. பெரும் பான்மை கறுப்பர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளைக் கூட மறுத்தொதுக்கும் நூற்றுக்கணக்கான சட்டங்கள் தென் ஆபிரிக்காவில் இன்று உள்ளன. அதே போல, அரபு வம்ச வழிப்பட்ட இஸ்ரேலிய பிரஜைகளுக்கு அநீதி இழைக்கும் பல சட்டங்களை இஸ்ரேலிய அரசு இயற்றியுள்ளது.
அரபு வம்சா வழிப்பட்ட இஸ்ரேலிய பிரஜைகள் பொலீஸ் அனுமதியின்றி வெளியேற முடியாத பிரதேசப் பிரிவுக்ள் கூட இஸ் ரேலில் உள்ளன.
பெகின் தலைமையிலான அதி தீவர வலதுசாரிகள் இஸ்ரேலில் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் இனவாத, லயானிஸ் கொள்க்ைகளில் அடிப்படையிலான டெல் அவிவ் - பிரிடோரிய உறவுகள் வலுவடைய ஆரம்பித்தன. தெ ன் ஆபிரிக்காவுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மீது ஐ. நீா. தடையுத்தரவினை விதித்திருக்கின்றன எந்த நிலையிலும், **இஸ்ரேல் தொடர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு ஆயுத உதவி செய் யும்?" என இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் மோ ஷ தயான் பகிரங்கமாகவே கூறி வருகிறர்.
அணு ஆயுத உற்பத்தித் துறையில் இஸ்ரேலுடன் தென் ஆபி ரிக்கா ஒத்துழைக்க ஆரம் பித் திருப்பது பல உலக நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சி. ஐ. ஏ. வெளியிட்ட சில தகவல்களின் பிரகாரம் இஸ்ரேலிடம் ஏற்கனவே சில அணு ஆயுதங்கள் உள்ளன. தென் ஆபிரிக்கப் பிரஜைகள் இஸ்ரே லில் மூலதன முதலீடு செய்வதற்கு வகை செய்யும் 1974 இரகஸிய உடன் படிக்கையை அமுல்படுத்துவது பற்றி அண்மைக்காலங்களில் இஸ்ரேல் பிரிட்டோரியாவிடம் வலியுறுத்தி வருகிறது. தென் ஆபிரிக்காவின் இந்தப் "பிரஜைகள்' மத்தியில் 150 ஆயிரம் யூதர்களும் உள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுத உற்பத்தித் துறையிலும், இதர துறைகளிலும் டெல் அவிவ்வுக்கும் பிரிடோரியாவுக்குமிடையில் வலுவடைந்து வரும் ஒத்து ழைப்பு அண்டையயல் நாடுக ளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனல் ஆபிரிக்க கண்டத்திலும், அரபு நர்டுகளிலும் இந்த இனவாத - ஸயானிஸ ஒத்துழைப்புக்கு எதிரான இயக்கம் தீவிரம் பெற்று வருகிறது.
2

மொழியைப் பிரக்ஞைபூர்வமாகக் கையாள்பவன் என்ற வகையில்
இலக்கியம் என்பது எவ்வெ வற்றை உள்ளடக்கியுள்ளது என் பதைப் பலரும் பல்வேறு வகை களிற் கூறுவர். குறிப்பிட்ட வரையறைகளுக்குள் கட் டு ப் பட்டு பல்வேறு இலக்கிய ஊட கங்களினூடே மக்களது வாழ் வினைப் பிரதிபலித்து விளக்கு வதுதான் இலக்கியம் என்று மேலெழுந்த வாரியாகக் கூறி விடலாம். புதுமைப்பித்தன் கூறு வதைப் போன்று "மனித சித் தத்தைச் சித்திரமாகத் தீட் டுவது இலக்கியம்" என்பதுவும், "டீடொனுல்ட்டு’ கூ று வ து போன்று சமுதாயத்தைச் சொல லில் வடித்தளிப்பதே இலக்கி யம் என்பதையும் ஏற்றுக்கொள் வோமென்ருல், அவர் க ள து கூற்றின் மெய்மைத்தன்மையை உணர்ந்தவர்களாவோம். பொது மக்களை, அடித்தள மக் களை அடிநாதமாகக் கொண்டு சிருஷ் டிக்கப்படும் இலக்கியவகைகளில் கவிதை, புனைகதை என்ற இரு பிரிவுகள் காணப்படுகின்றன. கவிதையாயினும் சரி. புனைகதை வகைகளிலெவையாயினும் சரி "மனிதத் தொடர்பு கொள்வ
தற்கு இணைப்பூடகமாகப் பயன்
படுத்தப்படுவது மொழி ஆகும். சுருங்கச் சொல்லின் கலைஞன் ஒருவன் தான் கூர்ந்து நோக்கும்
புனைகதையாசிரியனும் ஒரு சொற்கலைஞனே
க. நாகேஸ்வரன்
சமுதாய்க் 'ன, அச் சமுதாயத் திற்கு விe க்கமளிக்கக் கூடிய வகையில் தொடர்பு சாதன 10ான மொழியைப் பயன்படுத்தி வார்த்தைகளின் துணையுடன் தானும் கலந்து படைத்தளிக் கும் கல! சிருஷ்டியே இலக்கியம் எனலாம். தமிழிலக்கியப் பாரம் பரியத்தில் கவிதையைப் பாடும் * கவிஞனே முதன்மை பெற்ற ஞெகவும், இலக்கிய அந்தஸ்துப் பெற்றவனுகவும் விளங்கியதோடு 'கவிதையே இலங்கியங்களுள் அரசி' யாகவும் போற்றும் மரபு நெடுங்காலமாக நிலைத்து வந் துள்ள தொன்ருகும் ஆ ன ல் சமூக முரண்பாடுகளினடியாக வும், மாறிவரும் இலக்கியப் போக்குகளினுலும் ஏற்படுகின்ற தருக்க ரீதியான மாற்றங்களை வெகு யதார்த்தத்துடன் வெளிக் கொணரப் பயன்படும் புனைகதை
களேயும், அவற்றின் ஆசிரியர் களையும் போற்றிக் கூறும் மரபு இன்னும் எம்மவர் மத்தியில் நிலைகொள்ளவில்லை. மண்வாச
னையுடன் தோன்றும் புனைகதை களும், வாழ்க்கைக்கு வியாக்கி யானம் கூறும் தருக்கரீதியான படைப்புக்களும், நுணுக்க விப ரங்களுடனுன மனுேநிலையைச் சித்திரிக்க வேண்டிய தேவையும் அச்சுவாகனம், பத்திரிகைகளின்
il 19

Page 59
தோற்றம் என்ற காரணிகளும் புனைகதையா ளனை உருவாக்கு வதற்கான காரணங்களுட் சில. இவை காரணமாகப் புனைகதை யினது பரப்பளவும் அ த ன து தரப் பெறுமானமும் "கவிதை' என்ற நிலை யி ன் இடத்திற்கு உயர்வடையலாயிற்று. ՛ւյ3657 கதைகளும் ம ந் தி ர ச் சொல் இன்பம்" த ரு ம் நிலை ஏற்பட் டது. இந்தவொரு பின்னணி யில் “கவிஞனைப் போன்று" புனை கதையாசிரியனும் ஒரு சொற் கலைஞனே என்பதை நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வார்த்தையானது தன்னை உபயோகிக்கின்ற கர்த்தாவை விட, ஞானமுள்ளது என்னும் கருத்தொன்று வழக்கிலுண்டு. கால தேசத்தை ஒட்டியும் தம் மைப் பயன்படுத்துபவனது மன நிலையையொட்டியும் *சொற் கள் பொருள் திறத்தில் மாறும் தன்மை படைத்தவை. இதனல் ஒரு சொல் ஒரு பொருளைக்
குறிப்பதாக எழுந்தது என்ற நிலைமை மாறி, ஒரு சொல் பல பெ ரு ளை ச் சந்தர்ப்பத்திற்
கேற்ப உணர்த்தும் என்பது விளங்கும். சொற்கள் ஒரு சம்ப வத்தை நினைவுக்குக் கொணர்ந்து அந்தச் சம்பவத்தைச் சுற்றிக் சற்பனையைப் பின்னி, அப் பின் னலின் மூல ம் உணர்ச்சியை உண்டாக்குகின்றன. சொற்கள் பொருளை எ வ் வ ள வு தூரம் அழுத்தமாகத் தெரிவித் த போதும் மனதிலுள்ள கருத்துக் சள் யாவும் சொற்களில் அடங்கி விடா. ஆனல் கவி  ைத யில் பயின்று வரும் சொற்கள் உரை நடையில் வருவனவற்றைக் காட் டிலும் அதிகம் பொருட்செறிவு உடையன மேலும் உரைநடை யிலும் பயிலும் சொற்கள், பல கையாளப்படுவதால் { }ועg זf ע கற்பனை உணர்ச்சியைத் தூண் டும் இயல்பைப் பெருதவை.
"கவிதையில் பயிலும் சொற்கள் இவ்வாறு சாதாரண மக்களால் மிகுதியும் கையாளப் பெருதன வாய் இருத்தல் நல்லது" என அரிஸ்டோட்டில் சுறுவது கவி  ைத யி ன் "உயர் இயல்பினை" விளங்கிக் கொள்ள உதவும்.
கவிதைக் கலை சாராம்சத் தில் மொழிக் கலை" என்று கரு துவது சரியாக இருந்தால் புனை கதைக் கலையும் அவ்வாறே என் பதும் நிறுவப்பட்டுள்ளது. 19 ம் நூற்றண்டில் தமிழ் இலக்கிய வரலாற்றில் உரைநடை பருவ மெய்தியது என்ற பேராசிரியர் க. கைலாசபதி அவர் க ள து கூற்று சமூக, பொருளாதார அரசியற் காரணங்களினுல் ஏற் பட்ட மாறுதல் நிகழ்ச்சிகளால் மலர்ந்த ஒரு துறையின் "ஒரு கட்ட நிகழ்வை” க் குறித்து நிற் கின்றதாயிறும். அவர் கூறி யுள்ளது போன்றே தற்காலத் தமிழிலக்கிய கொலுவில் "க விதை
அரசியாக அரசோச்சிய இடத் நாவல் கோலோச்சுகின் என்ற வகையில் உரை க வி  ைத யு ம் சம தன்மை வாய்க்கப்பெற்ற கலை ஞனுலேயே சிருஷ்டிக்கப் படு கின்றதென்ற உணர்வு வலுப் பெறுவது தவிர்க்க முடியாத தாகி விட்டது.
"!ע, מ), தடையும் ,
பிரெஞ்சு இலக்கிய மேதை "ஸ்டெந்தால்" காவியங்களையும் வசனத்தையும் பற்றிக் கூறுகை யில் பின்வருமாறு கூறுவார்.
"இனிமேல் காவியங்களை எழு த ச் செய்யுளில்தான் முடியுமென்பதில்லை. நமது வசனம் ஒரு பூரணத்தை அடைந்துவிட்டது. இன்று எழுதப்படுகின்ற செய்யுள் எதையும் விட நமது வசனம் அற்புதமாக அமைந்து விட் டது. நாவல்கள்தான் வரப்
14

போ கி ற தலைமுறையின் காவியங்கள் எள்நு
IIT It மேலை நாட்டு இலக்கியப் போக்கின் தாக்கத்தாலும், பல் வேறுபட்ட துணைக் காரணங்க எாலும் கவிதையினின்றும் உரை நடைக்கு மாறவேண்டிய கட் ட த்  ைத உண்டுபண்ணியது. இந்த வ ர ல |ா ற் று வளர்ச்சி முனைப்பினுள் கட்டுப்பட்ட புனை கதை ஆசிரியர்கள் தாம். மக்க ளுக்குக் கூற நினைத்ததை அலர் களுக்கே பழக்கப்பட்ட பாட்டு, செய்யுள், கவிதைச் சிறப்புடன் கூறவேண்டிய தேவை ஏற்பட் டது. கவிதைக்குரிய நுட்பத் தன்மை வசன நடைக்கு ஏற் கவிதைக்குரிய ஒத் - الآن سبا الـt திசை, புனைகதைக்கும் உண்டாயிற்று. இந்த வகையில் புனைகதையா ள னது பாத்திர சிருஷ்டி விசேடமே அவனையும் சொற்கலைஞனுக, சொற்கொண்டலாக மாற்றியது. புனைகதையாசிரியன், பேசு பவன் பண்புக்கு ஏற்ற உரையா டல், அவன் பேசும் சந்தர்ப்பத் திற்கு ஏற்றதாகவும் அமைதல் வேண்டும். பேசுபவன், பேசப் படுபவன், பேசும் சந்தர்ப்பம், வெளிப்படுத்தப்படும் உணர்ச்சி, நிலைக்களம், சூழ்நிலை முதலிய வற்றை மனத்துட் கொண்டு தான் உரையாடலே அமைத்தல் வேண்டும். அந்த வகையில் அவன் பயன்படுத்தவுள்ள சொற்கஃாப் பற் ய எண்ணம் சிருஷ்டியை உருவாக்கு முன்பே யோசித்து வைத்துக் கொள்ள வேண்டிய வணுகிருஞகையால் அக் கலைஞ னும் ஒரு சொற் கலைஞனே தான் .
உரைநடையாக எழு த ப் பெறும் சொற் ளுக்கும் உயி ராற்ற லுண்டு. உணர்ச்சி அழ குண் டு. ஒசையினிமையுண்டு. சிந்தனையின் ஆழமுண்டு. ஒர் ஆசிரியன் தாம் வெளியிட விரும்
கூறு
அடிப்படை அ  ைம தி
தோன்றும். இறுக்கமுடனும்,
பிய உணர்ச்சிகளையும் சிந்தனை கஃளயும் தெளிவாகவும், முழுமை யாகவும், கச்சிதமாகவும், அநா யாசமாகவும் வெளியிடும்போது சிறந்த நடையழகு பிறக்கிறது. வ்ெவாரு ன நடையியலையுடைய னகதையாசிரியனும் gliar u ш0 т 45 ф; சொற்கலைஞணுகவே மதிக்கப்படல் வேண்டும். முதல் தமிழ் நாவலாசிரியர் வேதநாய கம்பிள்ளையைப் பற்றி " அகிலன்' கூறும்போது "படிப்பவர்களு டைய உணர்ச்சியைத் தூண்ட வும் சிந்த%னயைக் கி ள ற வும் அவர் எவ்வளவு நளினமாக அந் தச் சொற்களைப் பயன்படுத்தி யிருக்கிருர் எ ன் ப ைத நாம் கவனிக்க வேண்டும்"
ஒட்டுமொத்தமாகப் பார்க் கும்பே து மொழியைப் பிரக்ஞை பூர்வமாகவும், பொருத்தமான இடங்களிலிட்டும், க ரு த் து க் கோவையுடனும் கையாளும் போது வாசிப்போனுக்கு இயல் பாகவுள்ள இரசனையனுபவம் "இது கவிதையோ?" என்று வியக் கத்தக்க அளவுக்கு நினைக்கத் சொற்கட்டுமானம் சொல் வந்து விழும் இடம் மிக்க பொருத்த முடனும் அமையுமானல் அப் படைப்பின் அதியுத்தமப் பயன் பாடு படிப்போனுக்குக் கிட்டும். இந்தவகையில் சி ந் தி க் கும் பொழுது வெறுமனே அகராதி யிலுள்ள சொற்களைக் கையாளு வதிலும் பார்க்க எத்தனையோ புதுப் புதுச் சொற் பிரயோகங் கள் ந வீ ன இலக்கியவுலகில் பெருவழக்காகவும், அநாயாச மாகப் பயிலப்பட்டு வருகின்றன. அவற்றின் பிறப்பாக்கம் மேலெ ழுந்தவாரியான வகையிலல்லாது ச மூ க வரலாற்றினடிப்படையி லும் அனுமதிக்கப்பட்டு வரும் ஒரு புதிய இலக்கியப் போக்கின தும் தருக்க ரீதியான முட்டி மோதலின்" விளை வெ ன் றே கொள்ளல் வேண்டும். *

Page 60
படைப்பாளிகள் இயக்கம்
முகுந்தன்
மண்வாசனை, தேசிய இலக் கியம், முற்போக்கு இலக்கியம், என்று என்னதான் நமது படைப் பாளிகள் உரத்துப் பேசிக் கொண் டிருந்தாலும், இந் நாட் டி ன் ப  ை. ப் ப ா ளி க ள் இங்கே தொடர்ந்தும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி கொண்டுதாணிருக் கிருர்கள் எ ன் ற உண்மையை எவரும் மறுத்துவிட முடியாது!
இங்கு பிரச்சினை என்று குறிப் பிடப்படுவது- வெறுமனே இலக் கியப் பிரச்சினையோ அல் ல து இலக்கியத்தின் தத்துவார்த்த, கோட்பாட்டுப் பிரச் சினையோ அல்ல. நம் நாட்டில் தமிழ் எழுத் தாளர்கள் காலாதிகாலமாக எதிர் நோக்கிப் போராடுகின்ற அடிப் படைப் பிரச்சினைகளைப் பற்றியும் அதற்கு நிரந்தரத் தீர்வு காணப் படவேண்டும் என்பது தொடர் பாகவுமே இதனை இங்கே எழுது கின்றேன்.
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இந்த நவீன இலக்கியம் படைக்க்ப்டட்டு வருகி ற து இக்கால கட்டத்துள் பல தேசியப் பத்திரிகைகள், சிறு சஞ்சிகைக்ள் வெளிவந்துவிட்டன, பல மடிந்து விட்டன . சிறு சஞ்சி கைகளை விடுத்து. பல லட்சக்கணக்கான மூலதனத்துடன் ஆரம்பிக் கப் பட்டு இ ன் று விற்பனையிலும், சிக்கள் ஆதரவிலும், முன்னணி
? itä
SLLSLkCL LMMSqqA qSqASqAAAS SMSMGCSCSCSMA ALSM00SLS
யில் இன்று திகழுகின்ற தேசியப் பத்திரிகைகள் இந் நா ட் டி ன் படைப்பாளிகளுக்கு வழங்கு ம் ஆதரவும், அபிமானமும் பற்றி ஆராய்ந்தால் படைப்பாளிகள் மத்தியிலிருந்து பெருமூச்சுத்தான் கிளர்ந்தெழும்.
இன்று தேசியப் பத்திரிகை
களை எடுத்துக் கொண்டால்அவற்றின் விற்பனை எண்ணிக்கை, அவை த னி யார், அரசாங்க, கூட்டுத்தாபன துறைகளிலிருந்து பெறுகின்ற விளம்பரங்கள், பத்திரிகையின் விற் பனை விலை என்பன -- சுமார் பத்து வருட்ங் களுக்கு முன்பிருந்ததை விட, மேற்படி எல்லா மட்டத்திலும் அதிகரித்தே உள்ளன.
ஆளுலை.
இப்பத் திரிகைகள் எமது படைப்பாளிகளுக்கு அவர் த ம் படைப்புகளுக்கு )9( 68T 60( ,)ו מLנ காலகட்டத்தில் வழங்கும் சன்மா னம்தான் என்ன?
இலங்கை வானெலி சுமார்
அரை மணிநேர நாடகத்திற்கு 90. ரூபாய் வழங்குவதாக அறிகி
ருேம். ஆணு ல் இலங்கையின் தமிழ் தேசியப் பத்திரிகைகள் ஒரு சிறுகதைக்கோ, அ ல் ல து
கட்டுரைக்கோ ரூபா இரு பத் தைந்து அல்லது இருபதுதான் வழங்குகின்றன என்றும் அறிகி

ருேம். இப்பத்திரிகைகள் தாம் வழங்கும் சன்மானத்தை கொஞ் சம் அதிகரித்தால்தான் என்ன?
இந்நாட்டின் படைப்பாளி கள் பணத்தை எதிர்பார்த்துத் தான் எழுதுகிருர்கள் எ ன் று இந்கு நான் கூற வ ர வில் லே. இந்நாட்டின் படைப்பாளிக்ளின் நி யாய பூர்வமான் தார்மீகப் பண் புள்ள கோரிக்கையையே இங்கு நான் முன்வைக்கின்றேன்.
தென்னிந்திய சஞ்சிகைகளின் இறக்கும்திக்கு கட்டுப்பாடு விதிக் கப்பட வேண்டும். அத்துடன், ஈழத்து சஞ்சிகைகள், நூல்கள் தென்னிந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என்ற போராட்டம் 70-ன் பி ன் னர் ஆரம்பித்து அப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் இந் நாட்டின் முற்போக்கு எண்ணங் கொண்ட எழுத்தாளர்களும், கலைஞர்களுமே!
ஆனல், அதில் ஐம்பது சதவீத மான வெற்றியைத்தான் இவர் களால் பெறமுடிந்தது. எழுத்தர் ளர் கலைஞர்களின் போராட்டித்
தின் விளைவாக - அதன் பெறு
பேருக விரகேசரி நிறுவனம் இது வரை 60-க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்களை வெளியிட்டு விற்பனை யில் வெற்றி பெற்றுவருகிறது. பல புதிய புதிய எழுத்தாளர்கள் ஆர்வத்துடன் எழுத முன்வந் தார்கள். பல நல்ல படைப்புகள் ஈழத்து இ லக் கி ய உலகுக்குக் கிடைத்தது.
77-ல் புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்பு இந்நாட் டின் படைப்பாளிகளின் கையில் மண் விழுந்தது. மீண்டும் ಟ್ವಿ: கூழங்கள் இங்கு புற்றிசல் பால் வரத்தொடங்கிவிட்டன. இதற்கு எதிராக யார் போராடு வது? ... ."
நம்பிக்
டுகளை முன்வைத்து, மெழுப்பிய இலங்கை முற்போக்கு
இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கம் சிலமாதங்களுக்கு முன்பு நூல், சஞ்சிகை வெளியீட் டுத் துறையுடன் சம்பந்தப்பட்ட வர்களை "தென்னிந்திய சஞ்சிகை களின் இறக்குமதி தொடர்பாக கொழும்பில் ஒர் கருத்தரங்கை நடத்தியது. வானெலியிலும் இது பற்றிய நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றதாம். இவற்ருல் விளைந்த
பலன்தான் என்ன?
வெறுமனே காற்ருேடு நாம் சண்டை போட்டுக்கொண்டிருக் கிருேமே என்ற சந்தேக்ம்தான் வருகின்றது!
தமிழ்நாட்டிலிருந்து வரு கின்ற எழுத்தாளர்கள், கலைஞர் கள், அரசியல்வாதிகள் ஆகியோரி டம் "இலங்கை இந்திய கலை இலக் கியப் பரிவர்த்தன்ை' யில் இருக்கும் நெருக்கடி பற்றி எடுத்துக்கூறி இந் நெருக்கடிக்கு நிரந் த ரத் தீர்வு காண்பதற்கான வழிவகை களை மேற் கொள்ளும்படி, இந் நாட்டுப் படைப்பாளிகள் அவர் களை பணிக்கின்றனர் எ ன் பது என்னவோ உ ண்  ைம தான். ஆணுல், இது வரை க் கும் இந் நெருக்கடிக்கு - இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதா?
இதுபற்றி கவனிக்கின்ருேம் - ஆவன செய்கிருேம் --என் றெல்லாம் கூறிவிட்டு கப்பலேறு கிழுர்களே தவிர அங்கு போனவு டன் இனித்யெல்லாம் மறந்து விடுவார்க்ள்.
இப்பிரச்சினைபற்றி மல்லிகை ஆசிரியர் பல கூட்டங்களில் மட்டுமல்லாது மல்லிகையிலும் எழுதியுள்ளார் என்பது பலருக் கும் நினைவிருக்கலாம்
மண்வாசனை, தேசிய இலக் கியம், என்றெல்லாம் கோட்பா G g, fr | | |r
எழுத்தாளர் சங்கம். ஒருமைப்

Page 61
பாட்டு மகாநாட்டின் பின்னர், அறிக்கை விடுவதிலும், கருத்த ரங்கு நடத்திக் கா ற் று ட ன் போராடுவதிலும் மட்டும்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்கபூர்வமான நடைமுறைச் சாத்தியமான செயல் பாடுகளில் இ. மு. எ. ச. ங்குவதாகத் தெரியவில்லை. இற த
திரைப்படக் கூட்டுத் தயா ரிப்பு தொடர்பாக இந் தி ய இலங்கைக் கலைஞர் மத் தி யில் பலதரப்பட்ட கருத்து முரண்பா டுகள் போ ரா ட் டம் என்ற "பத்திரிகைகள் அறிக்கை” யுடன் மட்டும்தான் நின்றுவிடுகிறது. கூட்டுத்தயாரிப்பு தொடர்பாக ஏற்படும் பாதிப்பையோ அல்லது நெருக்கடிகளையோ தெரிவித்து அரசுடன் இது பற்றி பேச்சு
வார்த்தை நட த் தி அதற்கான
தீர் வுக்கு வழிசமைக்கப்படுவ தாகத் தெரியவில்லை!
இதைப்போல்தான் எமது சஞ்சிகை, நூல் வெளியீடுகளில் உள்ள நெருக்கடிகளும் இந்நாட் டின் முற்போக்கு எழுத்தாளர்கள்
என்று தம்  ைம் ப் பிரகடனப் படுத்திக் கொண் டி ரு க்கு ம் படைப்பாளிகள் மேற்படி காரணி களை முன்வைத்து ஸ்தாபன ரீதி யாக செயல்பட்டு அரசு ட ன் போராடாது இருக்கின்றனர்.
"முற்போக்கான அரசு வரட் டும் - அதன் பின்னர் அவ்வரசு டன் பேச்சுவார்த்தை நடத்து வோம்" - என்று அமைதி அடை கின்றனரோ தெரியவில்லை.
இந்நாட்டின் படைப்பாளி கள் பொருளாதார ரீதியாக மட்டு மல்லாது, தார்மீக ரீதியாகவும் பெரிதும் பாதிப்புற்று வருகின்ற னர். இதற்கான நிரந் த ரத் தீர்வுக்கு இந்நாட்டின் சக ல எழுத்தாளர்களும் கருத்துவேறு பாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு மேற்படி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஒர் வேலைத்திட் டத்தை தயாரித்து போராட முன்வரவேண்டும்.
இதற்கான படைப்பாளிகள் இயக்கம் ஒன்று உருவாக்கப் பட வேண்டும். 喙·
அட்டைப் படம்
கொழும்புக் கோட்டைப் பகுதிக்குச் செல்பவர்கள் திடீ ரென முளைத்துள்ள இந்தக் கலைத் தூணைப் பார்த்து
ரஸித்திருப்பார்கள்.
மனதைத் தொட்டு ஈர்க்கும் இந்தக் கலைத் தூண் லேக் ஹவுஸ் நாற்சந்தியின் நட்ட நடுவில் எழுப்பப்பட்டுள்ளது. பார்வையாளர் கவனத்தையும் பயணிகளின் உள்ளத்தை யும் கவரும் இந்தக் கலைத் தூணை நிறுவியதுடன், பாது காத்துப் பராமரிப்பவர்கள் மட்பாண்டக் கூட்டுத்தாப
வைத்தினர் .
இந்த அழகான காட்சியைத் தனது புகைப்படக் கருவி யின் மூலம் புதிய கோணத்தில் படமெடுத்து உதவியவர்
சகல நண்பர்களினதும் நண்பரான
கம் அவர்கள்.
திரு. வி. சுந்தரலிங்
118

Phone: 36067
REPRESENTATIVE OF SRI LANKA TAMIL Books PUBLICATION FOR U. S. LIBRARY OF CONGRESS,
C. S. 7/h. Cili
23; II, Wolfendhal St.
COOMBO 3.
(Sri Lanka.) a
vAMMYMAYXMMa^NAY^
Y*YA
T”grans: 'SARAVANAN”" T' phone 25389 & 23509 LGGIGO)5 2-6, 615s a 26TGIT,617 6ff)|260TLITGITf
ng Peoples Trade & Supplies ag
Wholesalers & Retailers in
PROVISIONS, GROCERIES, OLD NEWS PAPERS, EMPY GUNNIES, PACKING MATER ALS ALL KINDS OF LOCAL PRO DUQES
& COMMISSION AGENTS
78/4. GRANDPASS ROAD,
COLOMBO-14 | No. 143, Maliban Street,
& 鞋
No, 3 MALIBAN LA NIE,
COLOMBO-11 No. 112. Fourth Cross St.,
# , CoᏞO MBO-11
javMN Mei
, "--\~േ~േ.. ". M *

Page 62
Vith fhe Best
Fነrዐክ
BOND INS
274 2, (DSP
JAFF
nimmunistimu

Compliments
TITUTES TAL ROA D, NA.