கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புவி

Page 1
|-:| s',
 


Page 2
அறிவு விரிவு
கல்வி வெளியி

மலர் வரிசை 1
புவி
tட்டுத் திணைக்களம்

Page 3
ஆசிரியர் வே. வல்லிபுரம்
பதிப்பாசிரியர் வே. வல்லிபுரம்
ஆலோசகர்கள் சி. குமாரகுலசிங்கம் மு. சண்முகம் இ. குணநாதன்
படம் வரைந்தோர் ஆர். பீ. மாவில்மட டபிளியு. ஏ. தயாவஞ்ச
ஒழுங்கமைப்பு gi... 5. LDT 6i6i) LDL
அட்டைப்படம்
சோமசிறி ஹேரத்
எல்லா உரிமையும் அரசினர்க்கே முதற் பதிப்பு 1979
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தாலே தயாரிக்கப்பட்டு, அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
78 f ( /05 (5,000)


Page 4
பொ
புவியின் தொடக்கம் . அண்டவெளியில் ஞாயிற்றுத் தொகுதி - ஞாயிற்றுத் தொகுதியிற் புவி
புவியின் தொடக்கம் லாப்பிளாஸின் கொள்கை புவியின் முடிவு
புவியின் அகம்
I
4
புவியின் அக அமைப்பு . புவியின் அகத்தை ஆராயும் வழி . புவி ஒரு காந்தம் . புவியினுள்ளே மின் உண்டாகும் விதம் . புவி முனைவுகள் நகர்தல் . கண்டங்கள் நகர்தல்
I புவியின் மேற்பரப்பு 1. கண்டங்களுஞ் சமுத்திரங்களும் உண்
I
I
டான விதம் 1 2. கடல் நீர் உப்பாக இருப்பதற்கான
காரணம் 1
. கடல் வற்றுப் பெருக்குக்கள் 12
சமுத்திரப் பரப்பும் தரைப் பரப்பும் 14 புவி மேற்பரப்பை ஆக்கும் பாறைகள் 14 புவியதிர்ச்சியும் எரிமலைகளும் I 5 வெப்ப நீரூற்றுக்கள் 16

ருளடக்கம்
கம் u jiġi riħ
IV புவியின் உயிரின வரலாறு 7 1. உயிர்ச்சுவடுகள் உண்டான விதம் 1 7 2. உயிர்ச்சுவடுகளை ஆராய்ந்து அறிந்த 2 பண்டை உயிரினம் 7 3. மனித இனத்தின் தோற்றம் 8 4. பனிக்கட்டிக் காலம் 19 5. பணிக்கட்டிக் கால நிலத் தொடர்புகள் 20
V புவியின் சுழற்சியும் சுற்றுகையும் 2 II 1. புவியில் இரவும் பகலும் - 2 2. புவியின் அச்சு 22 | 3 புவியில் ஓர் ஆண்டுக் காலம் 22
4. இலைதுளிர் காலமும் இலையுதிர்
காலமும் 2.3 5. கோடையும் மாரியும் 24
VI புவியின் செல்வம் 26 1. புவியின் செல்வம் என்ருல் என்ன? 26 2. பெற்ருேலியம் 26 3. நிலக்கரி 28 4. இரும்பு 29 5. நம் நாட்டுக் கணியங்கள் 30 6. இரத்தினக் கற்கள் 3 I

Page 5
முன்னுரை
சந்திரனுக்கும் ஞாயிற்றுத் தொகுதி யைச் சேர்ந்த பிற கிரகங்களுக்கும் விண்வெளிக் கப்பல்களை அனுப்பி அமெரிக்கரும், இரசியரும் ஆராய்ச்சி செய்கின்றனர். இவ்வளவு முன் னேற்றமடைந்த இக்காலத்தில் நாம் வாழும் புவி பற்றிய அறிவை முற்ரு கப் பெற்றுள்ளோம் என்று கூறுதல் பொருந்தாது. புவி பற்றி விஞ்ஞானி கள் இதுவரை அறியாத விடயங்கள் பலவுள. ஆயின் அவர்கள் ஆராய்ந்து கூறியனவற்றைத் தானும் பொதுமக் களாகிய நாம் அறியாதிருக்கின்ருேம். இதற்குக் காரணம் இத்தகைய கருத் துக்களை அடக்கியுள்ள நூல்கள் பொது மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட வையாக இருத்தலாகும்.
இக்குறையை நீக்குவதற்காகக் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஒரு தொடராகச் சில நூல்களை வெளி யிடத் திட்டமிட்டுளது. அத்தொட ரைச் சேர்ந்த 'புவி' என்னும் இந் நூல் பொதுமக்களுக்கும் ஆரும் வகுப் பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரையு முள்ள பல்வேறு வகுப்புக்களிற் பயி லும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் எளிய நடையில், கதை உருவில் எழுதப்பட்டுள்ளது.
பீ. ஜி. டீ. பர்ணுந்து
ஆணையாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

புதிய செயலகம், ஜெயந்த வீரசேகர மாவத்தை, மாளிகாவத்தை, கொழும்பு 10.
1979. O2. O1

Page 6
I புவியின் தொடக்கம்
1. அண்டவெளியில் ஞாயிற்றுத்
தொகுதி அண்டவெளி ஆராய்ச்சி நடை பெறுகின்ற இக்காலத்தில், அண்டம் என்ருல் என்ன என்பதனையும் அதற் கும் நம் புவிக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதனையும் நாம் அறிய ஆவல் உடையவர்களாக இருத்தல் இயல்பு. இரவு நேரத்தில், முகில்கள் இல்லாத பொழுது, நாம் வானத் தைப் பார்த்தால், வைரக்கல் பர வியது போன்று ஒளிர்கின்ற, அழகான நட்சத்திரங்களைக் காண்போம். நாம் இரவிற் பார்க்கின்ற இத்தோற்றம் அண்டத்தின் ஒரு பகுதியே. இந்த நட்சத்திரங்களுட் பெரும்பாலானவை பிரகாசமான ஒளிப் பட்டை ஒன்றிற் செறிந்திருக்கும். இதுவே 'பால் வீதி' எனப்படும். இது பிரமாண்டமான ஒரு சில்லுப் போன்ற வடிவுடையது. இதன் வெளிவிளிம்புக்கு அண்மையில் நம் புவியைக் கொண்டுள்ள தொகுதி அமைந்துள்ளது. இது “ஞாயிற்றுத் தொகுதி எனப்படும். இதனைப்போல் ஏறத்தாழ 7000 ஞாயிற்றுத் தொகுதி கள் பால் வீதியில் உண்டு.
2. ஞாயிற்றுத் தொகுதியிற் புவி
இரவில் நாம் காணும் நட்சத்திரங் களுட் சில சிமிட்டிக்கொண்டு இருக் கின்றன. வேறு சில சிமிட்டாது இருக் கின்றன. இரண்டாவதாகக் கூறி யவை நம் ஞாயிற்றுத் தொகுதியைச் சேர்ந்த கோள்கள் (கிரகங்கள்) எனப் படும். அவை நட்சத்திரங்களிலும் பெரியவையாகக் காணப்படுகின்றன.

ஆயின், உண்மையில் அவை அவ்வா றல்ல. நமக்கு அண்மையில் இருப்பத ஞல் அவை பெரியவையாகக் காணப் படுகின்றன. இக்காரணத்தினலேயே சந்திரன் இன்னும் பெரியதாகக் காணப்படுகின்றது. இது புவியின் துணைக்கோள். ஞாயிற்றுத் தொகு திக்கு மிக அண்மையில் உள்ள நட்சத் திரம் "அல்பா சென்ருேரி என்பதா கும். ஞாயிற்றுத்தொகுதியில் மிகத் தூரத்துக்குச் செல்லும் வான்பொருள் கள் வால்வெள்ளிகளாகும். இவற்றின் வால் எப்பொழுதுஞ் சூரியனுக்கு எதிர்த்திசையில் அமைந்திருக்கும். இதற்குக் காரணம், சூரியனின் கதிர் வீச்சு விசை வால்வெள்ளியின் வாலை அமைக்கும் பொருள்களைச் சூரியனின் கதிர் செல்லுந் திசையிலே தள்ளு தலாகும். சில வால் வெள்ளிகளுக்குப் பல வால்கள் இருப்பதுண்டு. உலகப் புகழ் பெற்ற ஹலியின் வால்வெள்ளி என்பது 1986 இற் காணப்படும்.
சூரியனும் ஒரு நட்சத்திரமே. இது நம் தொகுதிக்கு மையமாக அமைந் துள்ள நட்சத்திரம். இவ்வாறு சூரி யன் (ஞாயிறு) மையமாக அமைந் திருக்குந் தொகுதி ஞாயிற்றுத் தொகுதி எனப் பெயர் பெறுகின்றது. ஞாயிற்றுத் தொகுதியைச் சேர்ந்த கோள்களுட் புவியும் ஒன்று. சூரிய னிலிருந்து தொடங்கும் பொழுது கோள்களின் வரிசை பின்வருமாறு அமையும் புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யூரே

Page 7
g@luoso) ș1@qsmu@
©tgoffiğiņostoj
#-}* f.~** , -yw proto ,
 

னஸ், நெப்ரியூன், புளுற்ருே . இவற் றுக்குச் சுய ஒளி இல்லை. சூரியனின் ஒளியைப் பெற்றுத் துலங்குகின்றன. சந்திரனும் அவ்வாறே.
வெள்ளியுஞ் செவ்வாயும் புவிக்கு அண்மையிலுள்ள கோள்கள் என் பதனை நாம் இங்கு அவதானிக்கலாம். புவியிலிருந்து நோக்கும்பொழுது, வெள்ளி சூரியனின் பக்கத்திலும் செவ் வாய் அதற்கு எதிர்ப் பக்கத்திலும் அமைந்திருக்கும். பிற கோள் ஒன்றிலி ருந்து புவியைப் பார்க்கும்பொழுது இதுவுஞ் சிமிட்டாது ஒளிரும் ஒரு நட்சத்திரம்போலக் காட்சியளிக்கும். சந்திரனுக்குச் சென்ருேர் புவியின் இத்தகைய காட்சியைக் கண்டுள்ள னர். புவியின் உருண்டை வடிவத்தை நிரூபித்துக் காட்டும் வகையில் அதன் ஒளிப்படத்தையும் எடுத்துள்ளனர். 3. புவியின் தொடக்கம்
நம் ஆயுட் காலத்துடன் ஒப்பிட்டு நோக்குமிடத்துப் புவி ஆதியும் அந்த மும் இல்லாதது போல நமக்குப் புலப் படுகின்றது. ஆயின் இது தொடக்கம் இல்லாத ஒன்றன்று. இதன் தொடக் கத்தை அறிவதற்கு ஞாயிற்றுத் தொகுதியின் தொடக்கத்தை ஆராய் தல் வேண்டும். ஞாயிற்றுத் தொகுதி யின் தொடக்கம் பற்றிப் பல கொள் கைகள் 18 ஆம் நூற்ருண்டில் வெளி யிடப்பட்டன. இவை ஞாயிற் றுத் தொகுதியின் கூர்ப்புக் கொள் கைகள் எனப்படும். இவற்றுள் * லாப்பிளாஸ்’ என்பவரின் கொள்கை முக்கியமானது. இவர் பிரான்ஸ் நாட் டைச் சேர்ந்த வானியலாளருங் கணித வியலாளருமாவர். புவியின் தொடக் கம் பற்றிய இவருடைய கொள்கை 1796 இல் வெளியிடப்பட்டது.

Page 8
4. லாப்பிளாஸின் கொள்கை
அண்டவெளியில் வெப்பமான வாயுப் பொருளுந் தூசியுஞ் சுழன்று கொண்டு இருந்தனவென அவர் கொள்கின்ருர் . இந்த வாயுப் பொரு ளுந் தூசியுஞ் சேர்ந்த தொகுதி ஒரு 'புகையுரு' எனப்படும். அவர் கூறு கின்ற புகையுரு ஐதானதாய், இப் பொழுதுள்ள ஞாயிற்றுத் தொகுதி யின் எல்லைக்கும் அப்பால் அதிக தூரத் துக்குப் பரந்திருந்தது. இதன் உட் பாகத்திலும் பார்க்க வெளிப்பாகம் விரைவாகச் சுழன்றது. அத்தோடு இஃது ஈர்ப்பு இழுவையினுற் சுருங் கியது. அப்பொழுது இது மேலும் விரைவாகச் சுழன்று ஒரு தட்டுப் போன்ற உருவைப் பெற்றது. சுழற்சி வேகங் காரணமாக இதன் மத்திய கோட்டுப் பகுதியிலே தட்டையான தொரு வாயுப்படை பிரிந்தது. இது பின்னர் வளையமாகத் திரண்டது. இறு தியில் இது வெப்பமான வாயுவைக் கொண்ட தீக் கோளமாக மாறியது. இந்த முறையிற் கோள்கள் எல்லாம் உண்டாயின. இவை படிப்படியாகக் குளிர்ந்து இப்பொழுதுள்ள நிலையை அடைந்தன. இத்தொகுதியின் மத்தி யிலிருந்த பகுதி சூரியனுக உருப்பெற் றது. இவ்வாருக, ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஞாயிற் றுத் தொகுதியும் அதன் ஓர் அங்க மான புவியும் உண்டாயின.
பிரெட் ஹொயில் என்னும் பிரித் தானிய வானியலாளர் 1955 இல் வானியலின் எல்லை’ என்ற நூலை வெளியிட்டார். அதில் அவர் லாப் பிளாஸின் கொள்கையை ஏற்று,

அதிற் சில திருத்தஞ் செய்தார். இன்று இக்கொள்கையைப் பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆதரிக்கின்றனர். ஆதி யிலிருந்த வாயுப் பொருளுந் தூசியும் வெப்பமாகவன்றிக் குளிராக இருந் தனவெனச் சில விஞ்ஞானிகள் கருது கின்றனர். இத்தகைய புகையுருப் பொருள்களிலிருந்து இப்பொழுதும் புதிய நட்சத்திரங்கள் உண்டாகின்
றன.
5. புவியின் முடிவு?
புவியும் ஞாயிற்றுத் தொகுதியின் பிற கோள்களும் நிலைத்திருப்பதற்குச் சூரியனிலே தங்கியுள்ளன என்பதனை நாம் அறிவோம். சூரியனில் ஐதரசன் அணுவானது கருத்தாக்க முறையினல் ஈலியம் அணுவாக மாறும்பொழுது அதிக அளவு சத்தி வெளிவிடப்படு கின்றது. இந்தச் சத்தியை ஞாயிற்றுத் தொகுதிக் கோள்கள் பயன்படுத்து கின்றன.
சூரியனில் ஐதரசன் வாயு தொடர் ந்து ஈலியம் வாயுவாக மாறுவதனல் அங்கு ஐதரசன் படிப்படியாகக் குறை கின்றது. இது முற்ருக ஒழியும் பொழுது சூரியன் வெடித்து மறை யும். இவ்வாறு பல நட்சத்திரங்கள் மறைந்துள்ளன. சூரியன் மறைய நேர்ந்தால், புவியும் ஞாயிற்றுத் தொகுதியின் பிறகோள்களும் மறை தலைத் தவிர்த்தல் இயலாது. ஆயின் இதற்கு நாம் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில், இவ்வாறு நிகழ்வதற்கு இன்னும் ஆகக்குறைந்தது 500 கோடி ஆண்டுகளாயினுங் கழிதல் வேண்டும் என்பதனலாகும்.

Page 9
11 புவியின் அகம்
1. புவியின் அக அமைப்பு
உரிக்காத தேங்காய்கள் உருவத் தில் வேறுபடுவதுண்டு. சில தேங்காய் கள் ஏறக்குறைய உருண்டையாக இருக்கும். அத்தகைய ஒரு தேங்கா யைக் கற்பனை செய்வோம். தேங்கா யின் மேற்படை தும்பாக இருக்கின் றது. அதனை அடுத்துச் சிரட்டை காணப்படுகின்றது. சிரட்டையி னுள்ளே நாம் உண்கின்ற தேங்காய் இருக்கின்றது. இத்தேங்காயினுள் இள நீர் இருக்கின்றது. புவியும் இத்தகைய ஓர் அமைப்பு உடையது என நம்பப் படுகின்றது. ஆயின் புவியின் மையத் தில் உள்ள பகுதி திண்மமாகவும் அத னைச் சூழ்ந்துள்ள பகுதி திரவமாகவும் உள்ளனவென ஊகிக்கப்படுகின்றது. இந்தத் திண்மப் பகுதி முளைகொண்ட தேங்காயின் உள்ளே இருக்கின்ற பூரா னுக்கு ஒப்பாகும்.
ஆற்று நீர் போன்று ஒடும் நீரினல்
அள்ளிச் செல்லப்பட்டுப் படிய விடப் படுகின்ற மண்ணும் பிற பொருள் களும் அடையல் எனப்படும். இது சில வாய்ப்பான இடங்களிற் படையாய் இருக்கும். எனவே, இது புவி முழு வதுந் தொடர்ச்சியான படையாகக் காணப்படுவதில்லை. இதற்குக் கீழ் உள்ள படையிற் சிலிக்கனும் அலு மினியமும் அதிகமாக இருக்கும். சிலிக் கன் என்பது சாதாரண வெண் மண லிற் காணப்படும் பொருளாகும். இந் தப் படை ஏறத்தாழ 12 மைல் தடிப்பு உடையது. கண்டங்களை ஆக் கும் முக்கிய பொருள் இதுவாகும். சமுத்திரங்களின் கீழ் இப்படை காணப்படுவதில்லை. இதனை அடுத்
4.

துள்ள படை சிலிக்கனையும் மகனீசியத் தையுங் கொண்டுள்ளது. இது கண் டங்கள், சமுத்திரங்கள் ஆகிய எல்லா வற்றுக்குங் கீழே புவி முழுவதுந் தொடர்ச்சியான ஒரு படையாக அமைந்துள்ளது. இதன் தடிப்பு ஏறத் தாழ 15 மைல். இந்த மூன்று படை களையும் ஒன்ருகச் சேர்த்துப் 'புவி ஒடு’ என்று கூறப்படும். புவியோட்டை அதன் கீழுள்ள படைகளிலிருந்து பிரிக் கும் எல்லை "மோகோ' எனப்படும். இப் பெயர் இதனை முதன்முதலாகக் கண்டு பிடித்த அறிஞரான ஏ. மோகோரோ விசிக்கு என்பாரின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
.px" : **ణణ:%wwణయి.
"rజ్ఞ
;ནི་ ༤༽
புவியின் வெட்டுமுகம்

Page 10
இதற்குக் கீழ் உள்ள படை ‘மூடு படலம்’ எனப்படும். இது 1800 மைல் தடிப்பு உடையது. இரும்பு, மகனிசி யம், சிலிக்கன் முதலியவை இப் படையை ஆக்குகின்றன. இப்படை யுந் திண்மப் பாறையாக இருக்கின் றது. ஆயின், அமுக்கப்படும்பொழுது இது சிறிதளவு உருமாறக்கூடியது. இங்கு வேறுபடுகின்ற அடர்த்தியுள்ள பல படைகள் உண்டு. மூடுபடலத் தைப் புவியின் மத்தியிலுள்ளதான ‘அகடு' என்பதிலிருந்து பிரிக்கும் எல்லை 'கேதன்பேக்கு’ எனப்படும். இதுவும் இதனைக் கண்டுபிடித்தவரின் பெயராகும்.
அகடு புவியின் மையத்திலிருந்து ஏறத்தாழ 2160 மைல் தடிப்பு உடை யது. இது நிக்கல், இரும்பு என்னும் உலோகங்களைக் கொண்டுள்ளது. இரு படைகளாக இது பிரிக்கப்படும். இப் பிரிவுகளுள் மேலே இருப்பது புற அகடு என்றும் கீழே இருப்பது உள் அகடு என்றுங் கூறப்படும். புற அகடு திரவ மாகவும் உள் அகடு திண்மமாகவும் இருக்கலாமென ஊகிக்கப்படுகின்றது. 2. புவியின் அகத்தை ஆராயும்
வழி கண்டத்தின் மீது துளையிட்டுப் புவிப் படைகளை ஆராய்தல் மிகவுஞ் சிரமம். ஆபிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் 2 மைலுக்குச் சற்றுக் கூடிய ஆழமுடையது. ஆயி னும் துளையிடுதல் முறையால் 4 மைல் ஆழம் அடையப்பட்டுள்ளது.
சமுத்திரத்தின் கீழே இரண்டு அல் லது மூன்று மைல் ஆழத்தில் மூடுபட லஞ் சந்திக்கும். மோகோல் திட்டம் என்பது அடுத்த படையை அடை வதற்காக அமெரிக்கர் மேற்கொண்

புவி நடுக்க அதிர்ச்சி அலைகள்
டுள்ள முயற்சியாகும். 3 மைல் ஆழ முடைய சமுத்திரப் பகுதியில் நங்கூர்ம் இடப்பட்டுள்ள கப்பலில் இருந்து துளை யிட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே, இத்தகைய முறைகளால் ஆகக்கூடியது 5 மைல் ஆழத்துக்கு மேற்செல்லல் இயலாது என்பது புலப் படும்.
புவியகம் பற்றி நாம் பெற்ற அறிவு அனைத்தும் புவிநடுக்கங்களை ஆராய் வதனற் கிடைத்துள்ளது. ஒளிக்கதிர் ஒன்று கண்ணுடித் துண்டு ஒன்றி னுாடே செல்லும்பொழுது அதன் திசை மாறுவதை நாம் அறிவோம். வளி, கண்ணுடி ஆகிய வேறுபட்ட அடர்த்தியுடைய இரு பொருள்களி னுாடே ஒளிக்கதிர் செல்வதனல் இந் தத் திசை மாற்றம் உண்டாகின்றது.
5

Page 11
இதுபோன்று, புவிநடுக்க அதிர்ச்சி அலைகள் புவியினுாடே செல்லும் பொழுது திசை மாற்றம் உண்டாகின் றது. எனவே, அங்கு அடர்த்தி வேறு பாடு உண்டென எண்ணப்படுகின்றது
இந்த அதிர்ச்சி அலைகள் மூன்று வகைப்படும். முதலாவது வகை ‘முதல் அலை' எனப்படும். புகைவண் டிப் பெட்டிகள் இரண்டு ஒன்றுட னென்று அடிபட்ட பின்பு, அத்தாக் கம் இறுதிப் பெட்டி வரை ஒன்றிலி ருந்து ஒன்றுக்கு மாறிக்கொண்டு செல் கின்றது. அப்பொழுது பெட்டிகள் முன்னும் பின்னுமாக அசைகின்றன. முதல் அலைகளும் இத்தகைய முன்பின் அசைவினல் ஓரிடத்திலிருந்து வேருே ரிடத்துக்குச் செல்கின்றன. வாயு, திர வம், திண்மம் ஆகிய எல்லாப் பொருள்களுக்கும் ஊடாக இந்த அலை கள் செல்ல வல்லன. இனி நாம் கூறப் போகும் எல்லா அலைகளிலும் விரை வாக இவ்வலைகள் செல்லக்கூடியன.
இரண்டாவது வகை அலை துணை அலை’ எனப்படும். இரண்டு மரங் களுக்கு இடையில் நூல் ஒன்றை இழுத் துக் கட்டியபின் அந்நூலில் ஓரிடத் திற் சுண்டினல் அப்பகுதி மேலுங் கீழுமாக அசையும். பின்னர் இந்த அசைவு கயிற்றின் வழியே படிப்படி யாக அந்தம் வரை செல்கின்றது. துணை அலைகள் இதனைப்போன்ற அசைவுடையன. இந்த அலைகள் திண் மத்தின் ஊடே மட்டுஞ் செல்லும். திரவத்தின் ஊடே செல்வதில்லை. m
மூன்ருவது வகை அலை நெட்டலை அல்லது ‘மேற்பரப்பு அலை’ எனப் படும். நீர் நிரம்பிய குளத்திற் கல் ஒன்றை வீசினல் அது விழும் இடத் தில் அலைகள் உண்டாகின்றன. இந்த
6

அலைகள் படிப்படியாகப் பரந்து சென்று கரையை அடைகின்றன. நெட்டலைகளும் இவ்வாறு மேற்பரப்பு வழியே செல்கின்றன.
புவி அதிர்ச்சியால் உண்டாகின்ற முதல் அலைகளுந் துணை அலைகளும் புவியின் ஊடே செல்லும் ஆழத்தைப் பொறுத்து அவற்றின் வேகம் வேறு படுகின்றது. வேறுபட்ட அடர்த்தி யுள்ள பொருள்களினூடே செல்லும் பொழுது அவை செயற்படும் முறை யும் வேறுபடுகின்றது. இவ்வாருக, இந்த அலைகளின் வேகம், அவை செயற்படுமாறு என்பவற்றை ஆராய் ந்து, புவிநடுக்க உற்பத்தி இடத்திலி ருந்து அவை சென்றுள்ள தூரம், புவிய கத்தில் அவை தெறித்த அல்லது வளைந்த இடத்தின் ஆழம், இத்தூரத் தைக் கடப்பதற்கு எடுத்த நேரம் என்பவற்றைப் புவியியலறிஞர் கணிக் கின்றனர். இவற்றிலிருந்து புவியகத் தின் இயல்பை அவர்கள் ஊகித்து அறிகின்றனர். புவி அதிர்ச்சி அலைகள் எல்லாவற்றையும் பதிவுசெய்யுங் கருவி புவியதிர்ச்சிபதிகருவி எனப்படும்.
3. புவி ஒரு காந்தம்
புவி ஒரு காந்தம் போலச் செயற் படுகின்றது என்பது ஏறத்தாழ ஆயி ரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டது. காந்த ஊசி ஒன்று நூலிற் கட்டிக் கிடையாகத் தொங்க விடப்பட்டால் அது வடக்கு நோக்கித் திரும்புவதற்குப் புவியின் காந்தத் தன் மையே காரணமாகும். இந்த ஊசி யின் இரண்டு அந்தங்களும் புவியின் காந்த வடமுனைவுந் தென் முனைவும் அமைந்துள்ள திசைகளைக் காட்டும். காந்த முனைவு புவியியல் முனைவிலி

Page 12
ருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பா லுள்ளது. இந்த இரு முனைவுகளுக்குப் இடையிலுள்ள தூரம் எப்பொழுதுப் மாரு திருக்கின்றது.
இந்தக் காந்தத் தன்மை பற்றி விஞ்ஞானிகள் அறியவேண்டிய விட யங்கள் பலவுள. புவியின், மத்தியி லுள்ள திரவப் பகுதியில் மின் ஒட்டங் கள் இருப்பதே புவியின் காந்த இயல் புக்குக் காரணமென இப்பொழுது பொதுவாக நம்பப்படுகின்றது.
மின் ஒட்டம் நிகழும்பொழுது கார் தப் புலம் உண்டாதலைக் காட்டுப் விளக்கப்படம் ஒன்று இங்கே தரப்படு கின்றது. இதனைப் புவியின் காந்தட புலத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள் அப்பொழுது அவற்றுக்குள்ள ஒற் றுமை புலப்படும்.
அண்டக் கதிர்கள் என்னும் அபா யம் மிக்க கதிர்கள் அண்டவெளியில் இருக்கின்றன. இவை மனிதரைக் கொல்லும் இயல்புடயன. எனவே இந்தக் கதிர்கள் புவியின் மேற்பரப்டை அடைந்தால் மனிதரும் விலங்குகளுப் வாழ்தல் அரிது. ஆயின், இவை காந்த முனைவு தவிர்ந்த பிற இடங்களிற புவியை அடையாதவாறு புவியின் கா தப் புலம் தடுக்கின்றது. இவ்வாறு இந்தக் காந்தப் புலம் நமக்குப் பெரு துணை புரிகின்றது.
4. புவியினுள்ளே மின் உண்டா
கும் விதம் புவியின் அகட்டில் உள்ள திரவட பொருள் அசைவதனலும் சுழற்சிய ஞலும் மின் ஒட்டம் நிகழக்கூடிய நிை உண்டாகின்றது. இந்த மின் ஒட்டா காரணமாகப் புவியைச் சூழ்ந்து கா தப் புலம் உண்டாகின்றது.

5
மின்னேட்டத்தினுல் உண்டாகுங் காந்தப் புலம்
காந்தப் புலத்தில் உள்ள இரும்பு போன்ற சில பொருள்கள் காந்தத் தன்மையைப் பெறுகின்றன. புவியின்
மேற்பரப்புப் பாறைகளிற் சில வேளை
களில் இரும்புப் பொருள்கள் காணப் படுகின்றன. புவியின் காந்தத் தன்மை காரணமாக இப்பொருள்கள் காந்தங் களாக மாறுகின்றன. இவற்றிற் சிறி தளவு காந்தத் தன்மை இருந்தாலும் அதனை அளப்பதற்கு இப்பொழுது கரு விகள் உண்டு. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாறை கள் உண்டானபொழுது புவியிலிருந்து பெற்ற காந்த இயல்பு இன்னமுஞ் சிறிதளவு இவற்றில் எஞ்சி இருக்கின் றது. இந்த ஆதிக் காந்தத்தின் திசை இப்பொழுதுள்ள காந்த முனைவுக்கு நேராக அமையவில்லை. எனவே, அக் காலத்தின் பின் காந்த முனைவு நகர்ந் துள்ளதெனக் கருதப்படுகின்றது. காந்த முனைவு நகர்ந்தபொழுது புவி முனைவும் நகர்ந்துள்ளது.

Page 13
காந்த வட முனைவு இப்பொழுது வட அமெரிக்காவிற் பிரின்ஸ் ஒவ் உவேல்சுத் தீவின் வடமேற்குப் பாகத் தில் அமைந்துள்ளது. காந்தத் தென் முனைவு அந்தாட்டிக்காக் கண்டத்தில், விக்டோ ரியா லாந்தின் ஒரத்திற் காணப்படுகின்றது.
5. புவி முனைவுகள் நகர்தல்
ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட முனைவு கீழைப் பசிபிக்கில் இப்பொழுது மத்தியகோடு உள்ள
ܐܶܟ݂݂ܰ
«از آs عا
புவியின் ச
 
 
 

இடத்துக்கு அண்மையில் இருந்தமத00 அறியப்படுகின்றது. பதினேழு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வட முனைவு சைபீரியாவில் இருந்தது. இப் பொழுது வெப்பமாக இருக்கும் இடங் களில் முன்பு பனிக்கட்டிப் படலம் இருந்தது. அப்பொழுது வெப்பமாக இருந்த இடங்களில் இப்பொழுது பனிக்கட்டி இருக்கின்றது. பழைய பாறைகளிலுள்ள விலங்குகளின் சுவடு கள், தாவரங்களின் சுவடுகள் ஆகிய வற்றை ஆராய்வதால் இஃது அறியப்
f
f
(-
லW NG
毛 ---
を
స్
な حقوقازيق ش 6۱۱ا (9 مسی
e. (ཙཱ་
, ッ。
な Z
-
ாந்தப் புலம்

Page 14
கண்டங்கள் நகர்வதி நகர்ந்த பின்
பட்டுள்ளது. எனவே, இனியும் முனைவு கள் நகர்ந்துகொண்டே இருக்கும் என நம்ப இடமுண்டு. 6. கண்டங்கள் நகர்தல்
ஏறத்தாழ இருபத்தேழு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதான நிலக் கரிக் காலத்தில் ஐந்து கண்டங்களும் ஒன்றுக்கு ஒன்று அண்மையாக இருந் தனவெனக் கூறப்படுகின்றது. இக் கருத்தை ஜேர்மனியரான உவேக்கி
 

நற்கு முன்னரும் ன்னரும்
னர் என்பவர் 1915 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு நூலிற் கூறியுள் ளார். அவருடைய கருத்துப்படி, ஓர் இடத்தில் இருந்த கண்டங்கள் சிறிது சிறிதாக நகர்ந்து இன்றைய நிலையை அடைந்துள்ளன. இந்த நகர்வை உணர்தல் இயலாது. ஓர் ஆண்டில் இவை ஏறத்தாழ 3 சதமமீற்றர் தூரத் துக்கு நகர்கின்றன என மதிப்பிடப் பட்டுள்ளது. பிரிவதற்கு முன்பு வட
9

Page 15
நீரிய
அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகி யவை முறையே ஐரோப்பாவுடனும் ஆபிரிக்காவுடனும் இணைந்திருந்தன. அவுஸ்திரேலியாவும் ஆசியாவும் ஆபி ரிக்காவும் ஒன்ருகச் சேர்ந்திருந்தன. இவை சேர்ந்திருந்திருந்ததைக் காட்டு தற்குப் பல சான்றுகள் உண்டு. அவற்
0
 

A.త-*
منصوبے بنی... ... "محصنعج*
(് డజāశూ*ක්‍ෂාණ خترین عضیاتیات
ல் வட்டம்
றுள் முக்கியமானது இவற்றின் கரை கள் ஒன்றுடன் ஒன்று பொருந்துதலா கும். வேருெரு சான்று பாறைகளி லுள்ள பழைய காந்தத்தன்மை. இவ் வாறு சேர்ந்திருந்த இடங்களில் உள்ள உயிரினங்களும் தாவரங்களும் ஒத்த இயல்பு உடையன.

Page 16
III புவியின் மேற்பரப்பு 1. கண்டங்களுஞ் சமுத்திரங்
களும் உண்டான விதம்
புவி உண்டானவுடன் அது தீட் பந்து போலச் சுழன்றுகொண்டு இருந் தது என்பதனை முன்னரே அறிந்தோம். பின்பு அது படிப்படியாகக் குளிரத் தொடங்கியது. இவ்வாறு குளிர்ந்த பொழுது மேற்பரப்பிற் பள்ளங்களுந் திட்டிகளும் உண்டாயின. திட்டிகள் கண்டங்களாயின. பள்ளங்கள் கடல் களுஞ் சமுத்திரங்களும் அமைவதற்கு ஏற்ற இடங்களாயின.
பாறைகள் உருகிய நிலையில் இருந்த பொழுது வாயுக்கள் குமிழிகளாக வெளிவந்தன. இவற்றுடன் சேர்ந்து நீராவியும் வாயுவாகவே வெளிவந் தது. பின்னர், நீராவி முகில்களாக மாறியது. ஏனைய வாயுக்கள் புவியின் வளிமண்டலமாக அமைந்தன. முகில் கள் கனம் மிகுந்து, அவற்றிலுள்ள ஈரப்பற்று ஒடுங்கி மழைபெய்தது. ஆயின், நிலம் வெப்பமாக இருந்தத ஞல் இந்த நீர் மீண்டும் நீராவியாகி வளியுடன் கலந்தது. புவி போதிய அளவு குளிர்ந்த பின்பு இந்த மழைநீர் மேட்டுப் பகுதிகளிலிருந்து பள்ளப் பகுதிகளை நோக்கி ஓடியது. அப் பொழுது ஆறுகள் உண்டாயின. ஆற்றுநீர் சென்று தேங்கி நின்ற இடங் கள் கடல்களுஞ் சமுத்திரங்களுமாக மாறின.

2. கடல் நீர் உப்பாக இருப்பதற்
கான காரணம் மழை பெய்யும்பொழுது அந்த நீர் புவியின் மேற்பரப்பைக் கழுவுகின்றது. இவ்வாறு கழுவப்படும்பொழுது கரை யும் பொருள்கள் எல்லாம் இந்த நீரிற் கரைகின்றன. பின்னர் இந்நீர் ஆறு களையும் ஓடைகளையும் அடைகின்றது. ஆறுகளிலும் ஓடைகளிலும் நீர் அதிக மாக இருப்பதோடு வேகமாகவும் ஒடு வதனல், மண் முதலான பிற பொருள் களையும் அஃது அள்ளிச் செல்கின்றது. மழை பெய்த பின்பு கிணற்று நீரும் ஆற்று நீருங் கலங்கலாக இருப்பதற்கு அந்த நீரிற் கரைந்துள்ள பொருள் களுந் தொங்கல் நிலையிலுள்ள பொருள்களுமே காரணமாகும். ஆற்று நீர் பெரும்பாலுங் கடல், சமுத்திரம் ஆகியவற்றையும், சில சமயம் உண் ணுட்டு ஏரிகளையும் சென்றடைகின் நிறது.
ஆற்றுநீர் கடலையோ, சமுத்திரத் தையோ அடையும்பொழுது திண்மப் பொருள்கள் படிகின்றன. இவை ‘மண்டி' அல்லது 'அடையல்’ எனப் படும். உப்புப் போன்று கரைந்த பொருள்கள் நீரிலேயே இருக்கும். ஆயி னும், கடலின் மேற்பரப்பிலிருந்து சூரிய வெப்பத்தினல் நீர் ஆவியாக மாறுகின்றது. இந்த நீராவி, முகில் களாக மாற்றமடைந்து மழை பெய்
1

Page 17
கின்றது. இவ்வாறு மீண்டும் மீண்டும் நிகழ்வதாற் கடல்களிலுஞ் சமுத்திரங் களிலும் உப்புப் பொருள்கள் அதிகமா கின்றன. கல்சியம் (அஃதாவது சுண் ணக் கல்லை ஆக்கும் பொருள்), இரும்பு போன்ற பொருள்கள் கடல் விலங்கு களாலுந் தாவரங்களாலும் பயன் படுத்தப்படுகின்றன. கடற் சிப்பி ஒடு கள், முருகைக் கற்கள் முதலியவை இவ்வாறு விலங்குகள் உருமாற்றிய கல்சியக் கற்களாகும். பவளம் என் பதும் இந்த முறையாகவே உண்டா கின்றது. ஆயின், நாம் உண்ணுங் கறி உப்பைக் கடல் விலங்குகளுந் தாவ ரங்களும் அதிகமாகப் பயன்படுத்து வதில்லை. எனவே, இது கடல்களிலுஞ் சமுத்திரங்களிலும் பெருகுகின்றது. இவ்வாருக இவற்றின் நீர் உப்பாகின் நிறது.
பாலைநிலப் பகுதிகளிலுள்ள ஆறு கள் உண்ணுட்டு ஏரிகளில் அநேகமாக முடிவுறுகின்றன. அந்த ஏரிகளின் நீர் சூரிய வெப்பத்தினற் சில சமயம் வற்று வதுண்டு. அப்பொழுது ஏரி இருந்த இடத்தில் உப்புப் பார் இருக்கும். ஆனையிறவில் உப்பளத்தைச் சேர்ந்த வயல்களில் மட்டுமன்றி அதனை அடுத் துள்ள பிற இடங்களிலும் உப்புப் படிந்திருப்பதை ஆவணி மாசத்தில் நாம் பார்க்கலாம். ஆனையிறவுக் கடல் ஒர் உண்ணுட்டுக் கடல்.
3. கடல் வற்றுப் பெருக்குக்கள்
கடல்களுக்குஞ் சமுத்திரங்களுக் கும் அண்மையில் இருப்பவர்கள் மாலை நேரங்களிற் பொழுதுபோக்குக்காகக் கடற்கரைகளுக்குச் செல்வதுண்டு. அப்பொழுது சில நாட்களில் அவை பெருகியும் வேறு சில நாட்களில் வற்றி
ዘ ፰

யும் இருப்பதை அவர்கள் அவதானித் திருக்கலாம். இதற்குக் காரணம் சந் திரனலுஞ் சூரியனலும் புவி மீது உண் டாகுங் கவர்ச்சியாகும். திறந்த சமுத் திரங்களிலும் பார்க்க நிலத்தினற் சூழப்பட்ட கடல்களிலும் வளைகுடாக் களிலும் இந்த வற்றுப்பெருக்கு அதிக மாக இருக்கும்.
முழு மதி அஃதாவது முழு நிலாக் காலத்திற் புவிக்கு ஒரு பக்கத்திற் சூரியனும் அதற்கு நேர் எதிராக மறு பக்கத்திற் சந்திரனும் இருக்கும். இவ் வாறு இரு பக்கத்துக்கும் புவி இழுக்கப் படும்பொழுது, கடல் நீர் ஓடக் கூடிய தாகையால், இழுக்கப்படும் பக்கங் களை நோக்கி ஓடுகின்றது. தரைப் பொருள்களை அசைப்பதற்கு இந்தக் கவர்ச்சி போதாது என்பதனல் இது தரையிற் புலப்படுவதில்லை. இந்த நிலை யிற் சூரியனின் திசையிலும் சந்திர னின் திசையிலும் இருக்கின்ற புவிப் பகுதிகளிலுள்ள கடல்களில் நீர் பெருகுகின்றது. இந்த இரண்டு இடங் களுக்கும் இடையில் அரைப் பங்கு தூரத்தில் உள்ள கடல்களில் நீர் வற்று கின்றது.
அமாவாசை அஃதாவது முழு இருட் காலத்திற் சூரியனுஞ் சந்திர னும் புவியின் ஒரு பக்கத்தில் இருக் கும். அதனல் அப்பக்கத்திற் கடல் நீர் வந்து குவியும். புவி ஒரு கோளமாக இருப்பதனல் ஓர் அரைக்கோளத்துக் குரிய நீர் இந்தப் பக்கத்துக்கு வர, புவியில் இதற்கு நேரடி முனையாக மறு பக்கத்தில் உள்ள இடத்தில் மறு அரைக்கோளத்துக்குரிய நீர் குவியும். இவ்வாறு இரண்டு இடங்களிற் பெருக்கு உண்டாக, நடுவாக உள்ள இடத்தில் வற்று உண்டாகும். புவி

Page 18
பன்
"" வற்றுப்ே ருக்கு இடையுவா வற்றுப்பெருக்கு
 
 
 
 
 
 
 

劃
豪
.

Page 19
சுழன்றுகொண்டு இருப்பதனல் மாறி மாறி வெவ்வேறு இடங்கள் நீர்ப் பெருக்கையும் வற்றையும் பெறும். இவ்வாருகப் பெளர்ணமிக் காலத்தி லும் அமாவாசைக் காலத்திலும் நிகழ் வது உவாவற்றுப்பெருக்கு’ எனப் படும்.
அட்டமி அன்று சூரியன் புவியின் ஒரு பக்கத்தில் இருக்க, இதற்குச் செங் கோணமான திசையிற் சந்திரன் இருக் கும். இதனற் புவிமீது இவை இரண்டி னதுங் கவர்ச்சி செங்கோணமாக அமையும். புவியைப் பொறுத்த வரையிற் சூரியனை விடச் சந் திரன் மிக அண்மையில் இருப் பதனற் சந்திரனின் பக்கத்திற் பெருக்கு அதிகமாகின்றது. ஆயின் இது சந்திரனின் ஈர்ப்பினல் மட்டும் நிகழ்வதால் உவாப் பெருக்கின் அளவை அடைவதில்லை. சூரியனின் திசையிலுஞ் சிறிதளவு பெருக்கு உண் டாகும். சூரியனின் திசைக்குஞ் சந்திர னின் திசைக்கும் இடையிலுள்ள இடங் களில் வற்று நிகழும். இஃது இடை யுவா வற்றுப்பெருக்கு’ எனப்படும். புவி சுழல்வதனல் ஒவ்வொரு நிமிட மும் வெவ்வேறு இடங்களுக்கு இந்த நிலைமை மாறிக்கொண்டிருக்கும். 4. சமுத்திரப் பரப்பும் தரைப்
பரப்பும்
சமுத்திரப் பரப்புத் தரைப் பரப் பிலும் அதிகமானது என்பது பூகோள உருண்டை ஒன்றைப் பார்க்கும் பொழுது புலப்படும். ஏறத்தாழ 71 சதவீதம் நீர்ப்பரப்பெனவும் 29 சத வீதம் நிலப்பரப்பு எனவும் நாம் கூற லாம். தரையின் சராசரி உயரம் 2,750 அடி. கடலின் சராசரி ஆழம் 2,400 அடி. தரையின் உயரத்தைக்
4

காட்டிலுஞ் சமுத்திரத்தின் ஆழம் அதி கம் என்பதனை இதிலிருந்து அறிய
G) ITL D.
தரைப்பரப்புக் குறைவாக இருப்ப தோடு அதிற் பெரும்பகுதி மக்கள் வாழ்வதற்குப் பயனற்றதாகவும் இருக்கின்றது. இவ்வாருகப் பாலை நில மும் மலை நிலமும் குன்று நிலமும் பனிக் கட்டி மூடிய நிலமும் மனிதர் வாழ் வதற்குப் பயன்படாதவை, ஆற்ருே ரச் சமநிலங்களிலும் ஆறுகள் கடலு டன் கலக்கின்ற இடங்களாகிய கழி முகங்களிலுஞ் செழிப்பான சமவெளி களிலும் மக்கள் அடர்த்தியாக வாழ் கின்றனர். நீர்ப்பரப்பும் மக்கள் வாழ் வதற்குப் பயன்படாது என்பதனைக்
கூறவேண்டியதில்லை. 5. புவி மேற்பரப்பை ஆக்கும்
பாறைகள்
புவி மேற்பரப்பை ஆக்கும் மூன்று வகைப் பாறைகள் முக்கியமானவை. அவை தீப்பாறைகள், அடையற் பாறைகள், உருமாறிய பாறைகள் என்பன. ஆதியில் இருந்த பாறைகள் எல்லாந் தீப்பாறைகளாக இருந்திருத் தல் வேண்டும். அதன் பின்னர் அடை யற் பாறைகளும் உருமாறிய பாறை களும் உண்டாகியிருக்கும்.
பொதுவாக நாம் கருங்கல் என்று கூறுகின்ற கிரனயிற்று என்பதும் கரிய நிறமுடைய gp(5 பாறையாகிய பசோற்று என்பதும் மிக முக்கியமான தீப்பாறைகளாகும். கருநிறம், வெண் னிறம், சாம்பல் நிறம், பச்சை நிறம், சிவப்பு நிறம் ஆகிய பல்வேறு நிறங் களிற் கருங்கல் காணப்படுகின்றது. பசோற்றுப் பாறை சாம்பல் நிறத்திலி ருந்து கரு நிறம் வரை வேறுபடு கின்றது.

Page 20
அடையற் பாறைகள் என்பவை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழைய கடல்களின் அடியிற் படிந்த மணற் படைகள், பரற் படைகள் என்பவற்ருல் அமைந் துள்ளன. இவற்றின் மீது கடுமை யான அமுக்கம் உண்டானதால் இவை கடினமாகிப் பாறைகளாக மாறின. மணற்கல், சுண்ணக்கல், மாக்கல் என் பவையே மிகச் சாதாரணமான அடை யற் பாறைகளாகும்.
உருமாறிய பாறைகள் ஆதியிலே தீப் பாறைகளாகவோ, அடையற் பாறைகளாகவோ இருந்திருத்தல் வேண்டும். இவை புவியின் அகத்திலி ருந்து பெறப்பட்ட வெப்பம், அமுக் கம் என்பவற்ருல் உருமாற்றப்பட் டன. சலவைக் கல், சிலேற்று, படிகப் பார் என்பவை மிகச் சாதாரணமாக நாம் காணும் உருமாறிய பாறைகளா (95 D.
அசுபெத்தோசு என்பதும் உருமா றிய பாறையாகும். இது பட்டுப் போன்று பளபளப்பான நீண்ட நார் களாகக் காணப்படுகின்றது. இதனை
உலகின் புவிய
 

நூல்களாக்கி நெய்த துணி, தீ அணைப்போருக்கு உடை தைப்பதற் கும் சினிமாப் படங் காட்டுந் திரை செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின் றது. இதனைச் சீமந்துடன் கலந்து செய்த தகடுகள் வீடு வேயப் பயன்படு கின்றன. 6. புவியதிர்ச்சியும் எரிமலைகளும்
சில இடங்களிற் புவியதிர்ச்சியும் எரிமலைகளும் அடிக்கடி நிகழ்வதுண்டு. யப்பான் இதற்கு ஓர் உதாரணமாகும். இத்தகைய இடங்கள் ஒரு வலயமாக அமைந்திருத்தலை உலகப் படத்திற்
j ft TI T59535 s TG) i D) .
புவியின் வெளிப்பக்க ஒடு பல்வேறு பாறைகளின் ஒழுங்கீனமான படை களால் அமைந்துள்ளது. இப்படை கள் மேற்படைகளால் அமுக்கப்படுவ தோடு கீழ்ப் பக்கத்தாலும் உயர்த்தப் படுகின்றன. இதல்ை இப்படைகள் வளைக்கப்படுகின்றன.
தடி ஒன்றினை வில் போல வளைத் தால் அஃது ஒரளவுக்கே வளையும். அதனை மேலும் வளைத்தால் அஃது
திர்ச்சி வலயம்
I 5

Page 21
இரண்டு துண்டுகளாக முரியும். முரிந்த துண்டுகள் எதிர்ப் பக்கமாக வீசி அடிக்கும். பாறைப் படைகளும் இவ்வாறே உடைந்து இரு பக்கமும் அதிரும்பொழுது புவியதிர்ச்சி உண் டாகின்றது. எரிமலைகள் உள்ள இடங் களிலும் அவற்றின் குமுறல் காரண மாகப் புவியதிர்ச்சி உண்டாகின்றது.
புவியோட்டின் கீழே சில இடங் களிற் பாறைகள் உருகி ஒரு தேக்க மாக நிற்கின்றன. இந்தப் பாறைக் குழம்பு மக்மா எனப்படும். இதற்கு மேலே வாயுக்கள் நிற்கின்றன. இந்த வாயுக்கள் நெருக்கப்படும்பொழுது மிகுந்த அமுக்கம் உண்டாகின்றது. அப்பொழுது ஒடு நலிவாக இருக்கும் இடங்களில் அல்லது புவியதிர்ச்சியி ஞற் பாறைப் படைகள் ஏலவே உடைந்திருந்த இடங்களில் மக்மா வெளிவருகின்றது. இவ்வாறு நிகழும் பொழுது சில சமயம் வெடிச் சத்த மும் கேட்கும். வாயுக்களும் பாறைத்
s: མ་སྙམ་ཙ་ ****
ஒர் எரிமலை
6
 

துண்டங்களுஞ் சாம்பரும் வானம் போல ஆகாயத்தில் எழுகின்றன. பாறைக் குழம்பு, ஊதுலையிற் காய்ச் சிய இரும்பு போன்று, தீ நிறத்துடன் மேற்பரப்பிற் பாய்கின்றது. பாயும் பாறைக் குழம்பு இலாவா எனப்படும். இந்தத் தோற்றப்பாடு எரிமலை எனப் படும். இவ்வாறு எரிமலை காரணமாகச் சில மலைகள் உண்டாகின்றன. இவை அநேகமாகக் கூம்பு வடிவில் அமை கின்றன. கடற்றளத்தில் நிகழும் எரி மலைச் செயற்பாட்டினலே தீவுகள் உண்டாகின்றன.
7. வெப்ப நீரூற்றுக்கள்
உலகின் சில பாகங்களில் வெப்ப நீர் மேற்பரப்புக்கு மேலே பீறிட்டு எழுகின்றது. வேறு சில இடங்களில் வெப்ப நீரூற்றுக்கள் காணப்படுகின் றன. மடிப்புற்ற பாறைகளுள் மேற் பரப்பு நீர் மிகுந்த ஆழத்துக்குச் சென்று, வெப்பமாகி, சில இடங் களில் விரைவாக மேற்பரப்புக்கு வரு தல் வெப்ப நீரூற்று உண்டாவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். நீர் ஆழத்திற்குச் சென்று வெப்பமாகி மேலே வரும்பொழுது சில கனியங் களையுங் கரைத்துக்கொண்டு வருகின் றது. இதனலே, சில நோய்களைத் தீர்க்கக்கூடிய பண்பு இதற்கு உண்டு. இலங்கையிற் கன்னியாய் என்ற இடத்திற் புகழ் பெற்ற ஏழு வெந் நீர்க்கிணறுகள் உள்ளன. இவற்றுள் வெப்பங் குறைந்த கிணற்றின் நீரில் நாம் குளிக்கலாம். வெப்பங் கூடிய கிணற்று நீரைக் கையினலே தொடு தலும் இயலாது. இடையிலுள்ள ஏனைய கிணறுகளின் வெப்பம் படிப் படியாக மாறுகின்றது.

Page 22
IV புவியின் உயிரின வரலா
1. உயிர்ச்சுவடுகள் உண்டான
விதம்
புவியின் தொடக்க காலத்தில் அதில் உயிரினங்கள் இருக்கவில்லை. ஆயின், சமுத்திரங்கள் உண்டாகிப் புவி படிப்படியாகக் குளிர்ச்சியடைந்த பொழுது ஒரு நிலையில் மிக நுண்ணிய உயிரினம் அந்த நீரில் உண்டாகியி ருக்கலாம். அதன் பின் நிகழ்ந்த படி முறை வளர்ச்சியிற் கடற்பஞ்சு, புழுக் கள், நத்தைகள், ஆதி நண்டு முதலிய உயிரினந் தோன்றியது. இந்த விலங்கு கள் இறந்தபொழுது இவற்றின் கடின மான பகுதிகள் சமுத்திரத் தளத்துக் குச் சென்று மண்டியுட் புதையுண் டன. மேன்மேலும் மண்டி படிந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னர் அவை மண்டிப் படை யுடன் சேர்ந்து இறுகிப் பாறையாக மாறின. ஆயினும், அவற்றின் புறவுரு வத் தோற்றம் பேணப்பட்டு மாரு திருந்தது.
பின்னர் புவியக அமுக்கத்தினல் இப்படைகள் வளைக்கப்பட்டு மேலே உயர்த்தப்பட்டன. இவை ஒவ்வோர் ஆயிரம் ஆண்டுகளிலும் ஓர் அங்குலம் அல்லது இரண்டு அங்குலமாக உயர்ந் தன. இவை கடல் மட்டத்திற்கு மேலே எழுந்து தரைப் பரப்பாக அமைந்தது மட்டுமன்றிச் சில சமயங் களில் இமாலயம் போன்ற பெரிய மலை களாகவும் உயர்ந்துள்ளன. இவ்வாரு கப் பண்டை உயிரினங்களின் எச்ச

வடிவங்கள் பாறைப் படைகளிற் சில சமயங் காணப்படுகின்றன. 2. உயிர்ச்சுவடுகளை ஆராய்ந்து
அறிந்த பண்டை உயிரினம் ஆகக் குறைந்தது 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புவியின் மேற் பரப்பில் அரிய இனச் சாதாழையும் பற்றிரியாவுந் தோன்றின. இவை முத லில் நீரிலேயே தோன்றியிருத்தல் வேண்டும். இவற்றின் உயிரிச்சுவடு கள் மிகக் குறைவு. பின்னர் ஏறத்தாழ 60 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒடுள்ள உயிரினங்கள் தோன்றின. இவற்றின் உயிர்ச்சுவடுகள் ஏராள மாகக் காணப்படுகின்றன. 50 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மீனை ஒத்த விலங்குகள் உண்டாயின. இவையே முதன்முதலாகத் தோன்றிய முள்ளந் தண்டு உள்ள விலங்குகளாகும். இவற் றைத் தொடர்ந்து இற்றைக்கு ஏறத் தாழ 40 கோடி ஆண்டுகளுக்கு முன் னர் முதன்முதலாக நீரிலும் நிலத்தி லும் வாழக்கூடிய விலங்குகளும் ஆதி கால மரங்களுஞ் சிலந்திகளும் மீன் களுந் தோன்றின. நீரில் வாழ்ந்த விலங்குகள் நிலத்தில் வாழும் ஆற்ற லைப் படிப்படியாகப் பெற்றன. அப் பொழுது நகர்வதற்குஞ் சுவாசிப்பதற் கும் ஏற்ற உடலமைப்பு விருத்தியா
னது. -
நகரும் விலங்குகளிற் சில, உயர்ந்த இடங்களிலிருந்து பதிந்த இடங்களுக்
1 7

Page 23
Iuj Udo Urio 199ų,5m,1990,nsora
{
-§,ooQ●時、ç# ^ a>v« (Nors opet, og @șųnuog) umg)(990quasuo ląstysory lossypnos i grasuo ugosyssessursųjųnos hŷfiurs mn-,ouasq; bungsoqi usųođì) ogsfiure ægqongqofi)ę