கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிந்தனைச்சோலை

Page 1


Page 2

சிந்தனைச் சோலை
பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை
77/22Z2 f zá<2zzf AøZøøzøvØo aØ7 (2ØMØD உதை74ழை2//wரைவர்சனங்கச்குழு வெனெறி
2024

Page 3
சிந்தனைச் சோலை
நூலாசிரியர்: பாவலர் தெ. அ. துரையய்பாபிள்ளை
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி நிறுவுநரும் முதல் அதிபரும்.
வெளியீடு: தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி
நூற்றாண்டு விழா (200)
உலகப் பழையமானவர் சங்கக் குழு
வெளியீட்டு உரிமை: கல்லூரிக்கு
முதற்பதிப்பு: 26.06.2960
இரண்டாம்பதிப்பு: 24.06.2005
நூற்பதிப்புக்குழு: உலகப் பழைய மாணவர் சார்பரில்
மயிலங்கூடலூர் பரி. நடராசன் கோகிலா மகேந்திரன் ut. (ografij66%Jab.
பக்கங்கள்: i-xi, 1-267
அச்சுப்பதிப்பு: பாரதி பதிப்பகம்,430,காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
விலை: ரூபா ,400.00
SINTHANA CHOLA
Author: Pavalar T. A. Thuraiappapillai.
Founder and First Principal. Mahajana College, Tellippalai.
Publisher: International O.B.A. Committee
for Centenary Celebration (2010) of Mahajana College, Tellippalai.
Publishing Right: College
First Edition: 26.06.960
Second Edition: 24.06.200,
Editorial Board: On behalf of The International O.B.A:
Mailangoodaloor P. Nadąyajan Kohila Mahendran P. Mahalingasivam.
Pages: i-xi, 1-267
Printer: Bharathy Pathippakam, 430, K. K.S. Road, Jaffna.
Price:
Rs.. 400.00

வெளியீடீருரை
- திரு. தெ. து. ஜயரத்தினம் அவர்கள்
மனித வாழ்க்கை சிந்தனை, செயல் என்னும் இரு கூறுகளை யுடையது. ஒவ்வொரு மனிதனும் இவ்விரு கூறுகளையுந் தன் ஒழுகலாற்றிலே தழுவிக் கொண்டே யிருக்கின்றான். உலகில் எல் லோருடைய ஒழுகலாறும் ஒளிவிட்டு எழில் பெறுவதில்லை. ஏனெனில் அவர்தம் ஒழுகலாறு மக்கள் இனத்திற் கென்று இனிமை யுறாத தினால் என்க.
திரு. தெ. அ. துரையப்பாபிள்ளை யவர்களின் ஒழுகலாற்றிலே சிந்தனை, செயல் என்னும் இரண்டும் இனிமையுற்றிலங்குகின்றன. செயலின் பகுதியாக, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி செம்மையுற்று ஐம்பதாண்டுகள் நிறைவேறிப் பொன்விழா கண்டு பொலிகின்றது. ஆனால், இற்றைவரை இலைமறைகாய் போன்றிருந்த அவர்தம் சிந்த னைச் செல்வம் இன்று சிந்தனைச்சோலை யென்னும் இந்நூல் வடிவாகத்
திகழ்கின்றது.
இச்சிந்தனைச்சோலையிலே பத்தி மலர், தேசிய மலர், சமூக மலர், சில மலர், உணர்வு மலர், நாடக மலர், இணைப்பு மலர் எனப் பல மலர்கள் மலர்ந்து கமழ்கின்றன. இவற்றுள்ளே சீலமலரா யமைந்த பாடல்கள் இதோபதேச கிதரசமஞ்சரி என்னும் பெயரிலே 1901ஆம் ஆண்டில் நூல் வடிவாக வெளிவந்தது. தென்னிந்தியத் தமிழ் விற்பன்னர் திரு. வி. கோ. சூரியநாராயணசாஸ்திரிகள் முதலாய பல புலவர்கள் அந்நூலைப் பாராட்டிப் பாடல்கள் பாடியுள்ளனர். நீதிபதி பூரீ. கு. கதிரைவேற்பிள்ளைத் துரையவர்கள் அழகியவொரு முகவாச கம் எழுதியளித்தனர். அப்பாராட்டுப் பாடல்களும் முகவாசகமும் இச் சிந்தனைச்சோலையாம் நூலின் இணைப்பு மலரிலே இடம் பெற்றுள்ளன. அவற்றை ஆண்டுக் காண்க.
iii

Page 4
கீதரசமஞ்சரியின் இனிய கீர்த்தனைகள் அந்நாளிலே யாழ்ப் பாண நாட்டின் பல பகுதிகளிலும் பரந்திருந்தன. பலரும் அக் கீர்த்தனைகளை மனப்பாடஞ் செய்து நாவாரப்பாடி மகிழ்ந்தனர். அவற்றைப் பாடிப் பாடி இன்புறும் முதியோர் பலரை இன்றும் நாம் காணலாம்.
சகலகுணசம்பன்னன் என்னும் நாடகம் இந்நாள் வரையும் நூல்வடிவில் வெளிவரா விட்டாலும், 1905ஆம் ஆண்டிலும் 1932 ஆம் ஆண்டிலும் மேடையிலே நடித்துக் காட்டப்பட்டு அறிஞர் களது பாராட்டைப் பெற்றது.
அந்நாளிலே யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ந்த ஆண்டு விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமண வைபவங்கள் எல்லாம் பிள்ளையவர்களின் வாழ்த்துக் கவிகளையோ, நன்மதி புகட்டும் பாக்களையோ வேண்டி நின்றன. அந்நிகழ்ச்சி களுக்கென, பிள்ளையவர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி களிலும் எண்ணிறந்த பாடல்கள் யாத்து உதவினர்கள். அப் பாடல்கள் நல்லிசையமைப்பும், பொருள்வளமும் ஆர்ந்து திகழ்ந்தன; யாவரதும் நன்மதிப்பையும் பெற்றுச் சிறந்தன. அவற்றுள் இனிய சில பாடல்களே இந்நூலிடைத் தனி மலராக மலர்கின்றன. எழுத்து ருவம் பெறாத பல இனிய பாடல்கள் சமயோசிதமாகப் பிள்ளை யவர்களாற் பாடப்பட்டிருப்பினும் அவற்றின் முழுமையையும் பெறமுடி யாமையால் ஈண்டு அவற்றைத் தந்திலேம்.
தேத்தண்ணிர் தருவாயே - அம்பலவான
தேத்தண்ணிர் தருவயே.
பேய்த்தன மாக என்னைப் பிசகாய்த் தாமதம் பண்ணி ஏய்த்தனுப் பாமல் நல்ல பாலொடு சீனி சேர்த்து
தேத்தன்ைனிர்.
வாழைப் பழமொன்று வடிவான தாய்த்தெரிந்து தோலை யுரித்தெறிந்து சொல்லதன் விலைவந்து
தேத்தன்னிர்.
என்ற இப்பாடலைப் போன்ற அநேக பாடற் பகுதிகளை இன்றும் நாம் பல்லோர்வாய்க் கேட்கின்றோம்.
ν

அறுபது ஆண்டுகளின் முன் எழுதப்பட்ட எழுத்துக்களை எடுத்து இப்பொழுது அச்சிற் பதிப்பிக்க நேர்ந்துள்ளமையால் நூல் வெளியீட்டுக் குழுவினர்க்குச் சிரமம் அதிகமாகவே இருந்திருக்கும். எனினும், அவர்கள் அயராது ஆர்வத்தோடு உழைத்தமையால் இச்சிந்தனைச்சோலை சிறந்து விளங்குகின்றது. இம்முயற்சியிற் பங்கு கொண்ட புலவர் திரு. நா. சிவபாதசுந்தரம், பண்டிதர் திரு. சி. கதிரிப்பிள்ளை, பண்டிதர் திரு. அ. ஆறுமுகம், ஆசிரியர்கள் திரு. வை. பொன்னையா, திரு. சி. நாகலிங்கம், திரு. செ. கதிரேசர்பிள்ளை ஆகிய அன்பர்களுக்கு நாம் என்றுங் கடப்பாடுடையோம்.
இந்நூலினை மதிப்புரை தந்து சிறப்புறச் செய்த பண்டித மணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் குறித்த கால வெல்லையுள் எழில் மிக அச்சிட்டு உதவிய கலைவாணி அச்சகத்தாருக்கும் நன்றி பாராட்டுகிறோம்.
பாவலர் திரு. தெ. அ. துரையப்பாபிள்ளையவர்கள் போலவே யாழ்ப்பாண நாட்டில் வாழ்ந்து தமிழ்ப் பணி புரிந்த பண்டிதர்கள், பாவலர்கள், நாவலர்கள் பலருளர். அவர்தம் பாடல்களையும் உரை களையும் தேடி, அவர் மாட்டுத் தொடர்புடைய அறிஞர்கள் அச்சிட்டு வெளியிடல் வேண்டும் என்பது எமது வேணவா. அதற்கு வழி காட்டுவதாக இந்த நன்னூலாம் சிந்தனைச்சோலை அமைவதாக,
செய்ய தமிழ் செழித்து வாழ்க.
மகாஜனக் கல்லூரி, விதல்லிப்பழை. தலைவர், 26. 06. 1960. பொண்விழாச்சபை.

Page 5
மதிப்புரை
- பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தம் கருமமே கட்டளைக் கல்
ஒரு தனி மனிதன் பெருமை சிறுமைகளுக்கு அம்மனிதன் செய்த செய்கின்ற செயல்களே காரணம். அவ்வாறே ஒரு சமூகத்தின் பெருமை சிறுமைகளுக்கும் அச்சமூகம் செய்த செய்கின்ற செயல்களே காரணம். புறக்காரணங்கள் கற்பித்துக் கொண்டு போர்க்கறை கூவு வது நிழலோடு போர்புரிவது போன்றதொரு வீண் முயற்சியேயாம்.
வஞ்சனை என்கின்ற களையைக் கணந்தோறுங் கண்ணுங் கருத்துமாயிருந்து களைதல் சிந்திக்குமானால் மனம் என்கின்ற மணி, மாசு நீங்கித் தூய்மையுறும். அப்பொழுது அறியாமை என்கின்ற அந்தகாரத்தைக் கிழித்துக் கொண்டு அருளொளி மனமணியிற் பிரகாசிக்கும்.
வஞ்சனையைக் களைந்து மனமாசு போக்குவது நமக்கு இடையறா முயற்சி; கடன். 'அறியாமையைப் போக்குவது அரு ளொளியின் இயற்கை.
நாம் நமது குறைகளை முறையீடு செய்தற்குரிய இடம் ஒன்றே ஒன்றுதான். அந்த ஒரே ஒரு இட்ம் ஈசுவர சந்நிதானமே. முறையீடு சிந்திப்பதற்கு உபகாரங்கள் தவ விரதங்கள். தவம் மனமாக போக்கும். விரதம் அருளொளியை அண்ணிக்கும்.
மனம் முதலிய அந்தக்கரணங்களோடுதான் நமக்கு யுத்தம். இந்த யுத்தத்தில் நாம் வென்றி எய்துவோமாயின் எமக்குப் பகைமுகம் என ஒரு முகம் இல்லையாம்; எம்முகமும் இன்முகமாம்.
νι ,

நமது அந்தக் கரணங்களின் அழுக்கே பகைமுகமாய்த் தோன்றுவது; முகத்தின் அழுக்குக் கண்ணாடியின் குற்றமேயன்று.
மேற்காட்டிய உண்மைகள் மகான்களாலே பல்வேறு நூல்கள் வாயிலாக வற்புறுத்தப்பட்டவைகள். இவைகளைக் காலந் தோறும் பெரியோர்கள் தோன்றி விளக்கஞ் செய்வதுண்டு.
இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன் பூரீலழரீ ஆறுமுக நாவலர் அவர்கள் தோன்றி அக்காலத்துக் கேற்றவகையில் விளக்கஞ் செய்தார்கள்.
சைவதுாஷண பரிகாரம், யாழ்ப்பாணச் சமயநிலை என்ற நூல்கள் நமது குறைகளை எடுத்துக் காட்டி, நம்மை நன்னி லைப் படுத்த எழுந்தவைகள்; நாவலர் அவர்கள் செய்தவைகள்.
உயர்திரு. தெ. அ. துரையப்பாபிள்ளை அவர்கள் நாவலர் அவர்களுக்குப் பின், நாவலர் அவர்களைப் போலவே நமது நிலையையும் நமது தேசத்தின் போக்கையும் நன்கு சிந்தித்தி ருக்கின்றார்கள். நாவலர் அவர்கள் வசனமூலம் தமது சிந்த னையை வெளியிட்டார்கள். பிள்ளையவர்கள் கவிதைகள் மூலம் தமது சிந்தனைகளை வெளியிட்டிருக்கின்றார்கள். கவிதை பிள்ளை அவர்களுக்குக் கைவந்தது.
பிள்ளை அவர்களின் சிந்தனைச்சோலையிலே அழகிய நறு மணங் கமழும் புஷ்பங்களா லாயதொரு மாலை சிவமணிமாலை. அது ஈசுர சந்நிதானத்தை அண்ணிப்பதற்குத் தொடுத்த தொருமாலை. அந்தக்கரணங்களைச் சுத்திசெய்து நமது குறைகளை முறையீடு செய்தற்குரிய இடத்தில் முறையீடு செய்வதே சிவமணிமாலை.
யாழ்ப்பாண சுவதேசக்கும்மியும், எங்கள் தேசநிலையும் சிந்த னைச்சோலையில் இரு நறுமலர்கள். இவைகள் நாவலர் அவர்களின் யாழ்ப்பாணச் சமயநிலை போன்று, நமது குறைகளையும் அவற் றைப் பரிகரிக்கும் வழிவகைகளையும் செவியிற் பிடித்துச் சுட்டிக் காட்டுபவை.
கும்மி சிறுவர், சிறுமிகள் கூடி நின்று படித்து மகிழ்தற்குரியது; கருத்துத் தெளிவானது.
vii

Page 6
தேசோப காரங் கருதியிக் கும்மியைச் செப்புகின் றேனாத லாலெவரும்
லேசாய் விளங்க இலகு தமிழில்
இயம்புவ தேநலம் சங்கமின்னே
என்பது கும்மியின் அவையடக்கத்து முதற் செய்யுள்.
தேச மெல்லாம் அங்லமய மாச்சு - எங்கள்
சிந்தைஐ ரோப்யவயம் ஆச்சு நீச முறைமைகளே நிலையாச்சு - சைவ
நீதிக்குப் பங்கம் வரலாச்சு
என்பது எங்கள் தேசநிலையில் இரண்டாவது செய்யுள். s சிந்தனைச்சோலையிலுள்ள மலர்களிற் சீலமலர் என்பதொன்று. அது நன்னெறிப் பாடல்களாகிய இதோபதேச கீதரசமஞ்சரி. மஞ்சரி இசைத்தமிழாகிய அருமையான கீர்த்தனங்கள் கொண்டது.
அக்ரமம் செய்வதைப் பாரீர் - சற்றும் அருளிலாமற் * கைக்கூலி வாங்கியே அக்ரமம் செய்வதைப் பாரீர்.
நகைமேல் ஆசை கொள்ளாதே - நாங்காய் நான்சொல்லும் வாக்கைத் தள்ளாதே.
என்பன மஞ்சரியில் இரு பல்லவங்கள்.
உணர்வுமலர் என்ற பகுதி சந்தர்ப்பங்கள் தோறும் தோன்றிய தனிப்பாடல்கள்.
* கைக்கூலி தன்னால் இங்கே கல்வியாழ் பட்டுப் போச்சுக் கைக்கூலி யதனால் மாதர் கன்னிமை யழிந்த தந்தோ கைக்கூலி தலைக்கு மிஞ்சிக் கற்றவர் தலைக விழ்ந்தார் கைக்கூலி சிற்றி னத்தின் **காப்பர சாயிற் றன்றே. என்று இக்காலத் தெழுந்ததொரு பாடலும் ஈண்டுச் சிந்திக்கற் UTÖBBJ.
** siTugs, Care-taker Government.
viii

சிந்தனைச்சோலை, இயலாய் இசையாய் நாடகமாய் நிறை வுறுகின்றது. இவ்வாற்றால் முத்தமிழிலக்கியமாய்ச் சிந்தனைச்சோலை என்கின்ற இந்நூல் மிளிர்கின்றது.
நாடகத்திற் சகலகுணசம்பன்னன் என்கின்ற வணிக குலதிலகம் வருகின்றான். அவன் தன் செல்வம் அத்தனையையுங் கொடுத்து அநாதர்களாய்த் தவிக்கும் பெண்களின் கற்பைப் பேணுதலாகிய பெருஞ் செல்வத்தைப் பேணுகின்றான். இது இக்காலத்திற் பெரிதுஞ் சிந்தனை செய்யற்பாலது.
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல்
என்கின்றது சிலப்பதிகாரம். காவலனற்ற இக்காலத்திற் கல்வி ஸ்தா பனங்களே களைகண்.
திரு. துரையப்பாபிள்ளை அவர்கள் நிறுவிய மகாசனக் கல்லூரியின் அரைநூற்றாண்டு நிறைவு விழாவில் பிள்ளை அவர்கள் இயற்றிய சிந்தனைச்சோலை நறுமலர்களைத் தந்து நன்மணங் கமழ்ந்து வெளிவருவது பெரிதும் மகிழ்ச்சிக்குரியது. மகாசனங்களுக்கெல்லாம் இந்நறுமலர்ச் சோலை தண்ணிழல் செய்வதாக.
1960
ix

Page 7
9 வாழ்த்துரை
- திரு. பொ. சுந்தரலிங்கம் அவர்கள் அதிபர், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி,
忍
ைெசவ நெறியாளராகப் பிறந்து தெல்லிப்பழை ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பயின்ற அருளம்பலம் துரையப்பாபிள்ளை, வட்டுக்கோட்டை செமினரியில் சேர்ந்து கற்றபோது கிறித்தவரானார். அவர் அங்கு கற்றபோது அங்கு தமிழாசிரியராகப் பணியாற்றிய தமிழறிஞர் ஆணல்டு சதாசிவம்பிள்ளை அவரது தமிழறிவைப் பெரிதும் பாராட்டினார். அவரது தொடர்பு துரையப்பாபிள்ளையைப் பாவல ராக்கியது.
1892இல் ஆசிரியர் பணியைத் தொடங்கிய பாவலர் 1900இல் அதிபரானார். அதிபராகப் பணியாற்றிய காலத்தில் அவரது சமய நோக்கில் ஏற்பட்ட மாற்றம் அவரை மீண்டும் சைவராக்கியது. அவர் பணியாற்றிய அமெரிக்கமிசன் பாடசாலையிலிருந்து 14.10.1910இல் வெளியேறினார். அங்கு பெருந்தொகையினராகக் கற்ற சைவ மாணவர் களும் அவருடன் பாடசாலையை விட்டு வெளியேறினர். அன்றே சைவ மாணவர்களுக்கான தெல்லிப்பழை மகாஜன உயர்நிலைப்பள்ளி அவரது இல்லத்தில் நிறுவப்பட்டது. 1912இல் பள்ளி இன்று கல்லூரி உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. 24.06.1929இல் அமரரான பாவலர் 19 ஆண்டுகள் கல்லூரி அதிபராகப் பணியாற்றினார்.
இளமையிலேயே தமிழறிஞராகப் போற்றப்பட்ட துரையப்பா பிள்ளை 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே பாவலரானார். 1901ஆம் ஆண்டிலே இதோபதேச கிதரசமஞ்சரி என்ற முதல் கவிதை நூலை வெளியிட்டு முன்னோடி நவீன தமிழ்க் கவிஞராகப் புகழ்பெற்றார். ஈழத்து அறிஞர்களும் தமிழக அறிஞர்களும் அவர் கவிதை ஆற்றலைப் பெரிதும் போற்றினர். தொடர்ந்தும் பாவலர் யாழ்ப்பான சுவதேசக்கும்மி (1907), எங்கள் தேசறிலை (1917), சிவமணிமாலை (1927) முதலிய கவிதை களை எழுதியதோடு 1905ஆம் ஆண்டில் சகலகுணசம்பன்னன் என்ற உரைநடை, கவிதை இணைந்த நாடகத்தையும் எழுதி மாணவருக்கு நாடகப் பயிற்சியை வழங்கினார்.

மகாஜனக் கல்லூரியின் பொன்விழா ஆண்டாகிய 1960இல் கல்லூரி அதிபரும் பாவலரின் மகனுமான தெ. து. ஜயரத்தினம் அவர்களின் நெறிப்படுத்தலின்படி மேலே கூறப்பட்ட கவிதைகளைத் தொகுத்து சிந்தனைச்சோலை பொன்விழாச் சிறப்பு மலராக வெளியிடப் பட்டது. இதன் மூலமே மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882 - 1921) என்ற தமிழகக் கவிஞருக்கு இணையான முன்னோடியாகப் பாவலர் துரையப்பாபிள்ளை (1872-1929) ஈழத்து இலக்கிய வரலாற்று நூலாசிரியர்களால் போற்றப்பட்டார்.
பாவலர் மகாஜனக் கல்லூரியைத் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை கல்லூரியில் கற்ற மாணவர்களுள் பலர் புகழ்பூத்த கவிஞர்களாகவும் சிறுகதை, நாவல், கட்டுரை, நாடக எழுத்தாளர் களாகவும் உருவாகியுள்ளனர். பல்துறை உயர் பணியாளராகவும் விளங்குகின்றனர்.
மகாஜனப் பழைய மாணவர் பலர் வெளிநாடுகளிலும் உயர் நிலைகளில் உள்ளனர். அவர்கள் தம்மை வளர்த்த கல்லூரியின் பல்துறை வளர்ச்சிகளுக்கும் பெரும்பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தாம் வாழும் நாடுகளிலும் கல்லூரிச் சார்புடைய மகாஜனன் மலர்களை வெளியிட்டு வருகின்றனர். பாவலர் மறைந்த பவளவிழா நினைவாக, பிரான்சு மகாஜனப் பழைய மாணவர் சங்கத்தினர் 2004இல் வெளியிட்ட பவளமல்லி சிறப்பு மலராகும்.
2003ஆம் ஆண்டில் கல்லூரியின் வெளிநாட்டுப் பழைய மாணவர் சங்கத்தினர் கொழும்பில் கூடி மகாஜன உலகப் பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கினர். கல்லூரியின் நூற்றாண்டு விழா நோக்கிப் (2010) பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கும் துணை புரிவதாக அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அவற்றுள் ஒன்று பாவலர் முதலான கல்லூரி எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தொகுத்து, நூல்களாக வெளியிடும் முயற்சியாகும். இதற்காக ‘உலகப் பழைய மாணவர் சங்க நூற்பதிப்புக்குழுவும் உருவாக்கப்பட்டது.
ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடியான பாவலரின் சிந்தனைச்சோலை வெளிவந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஆகிவிட்ட நிலையில் அது விரைவில் வெளியிடப்படவேண்டும் என்ற கருத்துப் பலராலும் முன்வைக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு நிறுவியவர் நினைவு நாளில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட பழைய மாணவர் திரு. த. இலங்காநேசன் தமது உரையில் இதனை வலியுறுத்தினார். நான் உரையாற்றிய போது விரைவில் நூல் வெளியிடப்படும் என்ற கருத்தை உறுதிசெய்தேன்.
xi

Page 8
கல்லூரியில் மாணவராகவும் ஆசிரியராகவும் இருந்தவரும் லண்டனில் பணியாற்றுபவருமான திரு. கே. செல்வக்குணச்சந்திரன் கல்லூரிக்கு வந்தபோது இந்நூல் வெளியீடு பற்றிய கருத்தை அவரிடம் கூறினோம். சிந்தனைச்சோலை இரண்டாம் பதிப்பை 2005 நிறுவியவர் நினைவு நாளில் வெளியிடலாமென்றும் அதற்கு வேண்டிய நிதியை அனுப்பி உதவுவதாகவும் அவர் உறுதிசெய்தார். அதன்படி நூல் வெளியீட்டுக்கான முழு நிதியையும் நூற்பதிப்புக் குழுவுக்கு அனுப்பிவைத்தார். அவரது பேருதவியின் விளைவாக இன்று இந்நூல் வெளிவருகின்றது. இந்நூல் ஆய்வாளருக்குக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை பாவலர் பற்றிய விரிவான ஆய்வுகளுக்கு வழிவகுக்கும். இப்பெரும்பணிக்கு வழிகாட்டியாகப் பணியாற்றிய திரு. செல்வக்குணச்சந்திரனை வாழ்த்துவதோடு மனமார்ந்த நன்றியை யும் கல்லூரிச் சமூகச்சார்பில் அவர்களுக்குக் கூறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.
இதனைத் தொடர்ந்தும் மகாஜன உலகப் பழைய மாணவர் சங்கப் பதிப்புக்குழு பல நூல்களை வெளியிடத் திட்டமிட்டுச் செயற் பட்டு வருகின்றது. இப்பெரும் முயற்சிகளில் ஆர்வம் காட்டும் கல்லூரி உலகப் பழைய மாணவர் அனைவருக்கும் எமது நல்வாழ்த்துக்களும் நன்றியும்.
மகாஜன உலகப் பழைய மாணவர் சங்கத்தினரால் நூற்பதிப்புக் குழுவினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலங்கூடலூர் பி. நடராசன், கோகிலா மகேந்திரன் (உதவிக் கல்விப் பணிப்பாளர்), பா. மகா லிங்கசிவம் ஆகியோர் சிந்தனைச்சோலையைச் சிறப்பாகப் பதிப்பித் திருப்பதோடு தொடர்ந்து மகாஜனப் பழைய மாணவ எழுத்தாளர்களின் குழந்தைக் கவிதைகள், கவிதைகள், சிறுகதைகள் முதலிய ஆக்கங் களைத் தொகுத்து நூல்களாக விரைவில் வெளியிடவும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். மகாஜனப் பழைய மாணவர் அனைவரும் அவர்களோடு தொடர்பு கொண்டு உதவினால் இம்மூன்று நூல்களும் தொடர்ந்து வரவுள்ள நூல்களும் முழுமை யாகவும் சிறப்பாகவும் அமையும்.
கல்லூரித் தாபகர் கல்விக் கலைஞன் துரையப் பாபுகழ் துதிப்போம்.
24.06.2005
xii

வாழ்த்துரை
- திரு. K. செல்வக்குணச்சந்திரன் அவர்கள்
தமிழீழத்தின் மூத்த நவீன தமிழ்க் கவிஞராக விளங்கியவர் பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை அவர்கள். தமிழ் கூறும் நல்லு லகின் நவீன தமிழ்க்கவிஞர் என்று போற்றப்படும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு முன்னரே, நவீன தமிழ்க் கவிதைகளை எழுதிக் கீதரசமஞ்சரி என்ற நூலாக 1901ஆம் ஆண்டில் வெளியிட்ட பெருமை பாவலருக்கே உரியதாகும்.
1910ஆம் ஆண்டில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியை நிறுவி அதன் அதிபராகவும் ஆசிரியராகவும் விளங்கிய பாவலரின் கவிதைகளைத் தொகுத்துச் சிந்தனைச்சோலை நூலாக 1960ஆம் ஆண்டில் பொன்விழா மலராகக் கல்லூரி வெளியிட்டது.
2010ஆம் ஆண்டு கல்லூரியின் நூற்றாண்டு விழாக் காலமாகும். நூற்றாண்டு விழாவை நோக்கிய முதல் வெளியீடாக, சிந்தனைச் சோலையின் இரண்டாம் பதிப்பு வெளிவருவது மிகவும் பொருத்த மாகும். கல்லூரியின் பழைய மாணவரும் முன்னாள் ஆசிரியருமான எனக்கு இந்நூற் பதிப்புக்குரிய நிதியை வழங்கும் வாய்ப்புக் கிடைத்தமை குறித்துப் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
இலக்கிய ஆர்வமுள்ள அனைவரும் இந்நூலைப் பெற்றுப் படித்துப் பாவலரின் பெருமையையும் ஈழத் தமிழகத்தின் சிறப்பையும் வளர்க்க வேண்மென விரும்புகின்றேன். இந்நூலை வெளியிடப் பணியாற்றும் கல்லூரியினர்க்கும் கல்லூரியின் உலகப் பழைய மாணவர் குழுவுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள் உரியன.
15.01.2005
xiii

Page 9
அணிந்தரை
- பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் தலைவர், தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தமிழ்க் கவிதை மறுமலர்ச்சி பெறவேண்டிய நிலையிலிருந்தது. 1901ஆம் ஆண்டு பரிதிமாற்கலைஞர் எனப் பெயர் மாற்றிக்கொண்ட வி. கோ. சூரிய நாராயணசாஸ்திரிகள் ஒரு தமிழ்க் கவிதை நூலை வெளியிட்டார். அந்நூலுக்கு முன்னுரை எழுதிய டாக்டர் ஜி. யு. போப் "தமிழ்க் கவிதை எளிமையான சந்தமும் எளிமையான மொழிநடையும் உடையதாகப் பெற்றால், அது மறுமலர்ச்சி பெற வாய்ப்புடையதாயிருக்கும்” என்று கூறியுள்ளார். இதே காலத்திலேதான் பாவலர் தெ. அ. துரையப் பாபிள்ளையின் இதோபதேச கிதரசமஞ்சரி என்னும் பாநூல் வெளிவந்தது. இந்நூலிலே காணப்படும் பாக்கள் டாக்டர் போப் குறிப்பிட்ட நிலையினை அடையவில்லையென்றே கூறலாம். ஆனால், பாவலருடைய யாழ்ப்பான சுவதேசக்கும்மியிலே இடம்பெறும் பாடல்கள் எளிய சந்தமும் எளிய நடையுமுடையனவாயமைந்தன. முன்னர் பாடப் படாத பொருளிலும் பாக்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த வகையிலே தான் சிந்தனைச் சோலை சிறப்புப் பெறுகின்றது. இந்நூலினை மீளப்பதிப்புச் செய்தல் சிறந்த பணியாகும். வரலாற்று ஆவணம் ஒன்று எங்கள் இளைய சந்ததியினர்க்கு இதனுாடாக வழங்கப்படுகின்றது. இந்நூலின் சிறப்புக்களைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.
பாரதி தமிழ்க் கவிதையூடாக அரசியல், சமூக, பொருளாதார,
சமய விடயங்களைக் கூறிய அதே காலகட்டத்தில் பாவலர் துரையப்பா
பிள்ளையும் கவிதை பாடினார். துரையப்பாபிள்ளை பற்றிய மதிப்பீடுகள்
தமிழிலக்கிய வரலாற்றிலே பாரதி பற்றிய மதிப்பீடுகளுடன்
ஒப்பிடத்தக்கவையாயுள்ளன. ஆனால், பாரதியாருடைய கவிதை
தமிழுக்கு அறிமுகமாவதற்கு முன்பே பாரதிக்குச் சற்று மூத்தவரான
XIV

பாவலருடைய கீர்த்தனைகள் வெளிவந்துவிட்டன. “பாரதிதான் முதல் முதல் சாதாரண மக்களின் சமுக வாழ்வைக் கவிதையிற் கொண்டு வந்தான்” என நிலவும் கருத்தும் இன்று மீளாய்வுக்குரியது. பாரதி தொடக்கி வைத்த நவீன மரபு எது என்ற கேள்வியும் உருவாகின்றது. ஈழத்தவரது இலக்கிய முயற்சிகள் பற்றிய செய்திகள் நன்கு ஆவணப் படுத்தப்படாமையால் இத்தகைய சிக்கல்கள் எழுகின்றன. எளிய பதங்கள், எளியநடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு எனப் பாரதி கூறிய கவிதைப் பண்புகள் துரையப்பாபிள்ளையின் பாடல்களில் பொருந்தியிருப்பதை இன்னும் ஈழத்தவருட்படப் பல தமிழறிஞர்கள் அறியாதுள்ளனர்
சிவமணிமாலை என்னும் 96 பாடல்களைக் கொண்ட பகுதி எமது சமய மறுமலர்ச்சிக்கு வேண்டியனவற்றைக் கூறுகின்றது. கிறிஸ்தவ சமயச் செல்வாக்கு இப்பாடல்களிலே தென்படுகின்றது. ‘கிருபை செய் ஈஸ்வரனே’, ‘கர்த்தனரூபி" போன்ற தொடர்கள் இப்பாடல்களிலே இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பான சுவதேசக்கும்மி 332 பாடல்களைக் கொண்டமைகிறது. யாழ்ப்பாண விவசாயம, கைத்தொழில், கூட்டுறவு, கல்வி, பல்கலைக்கழகம், தாய்மொழிக்கல்வி, பெண்கல்வி, உத்தி யோகங்கள், சாதி, சீதனம், பழக்க வழக்கங்கள் எனப் பல்வேறு விடயங்களைப் பாடியுள்ளார். எங்கள் தேசரநிலை என்ற பகுதியும் சாதி, சமயம், அரசு பற்றிய கவிதைகளைக் கொண்டுள்ளது. கீதரசமஞ்சரி, சில தனிப்பாடல்கள் என்பனவற்றுடன் சகலகுனசம்பன்னன் என்னும் நாடகமும் இந்நூலிலே இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாண சமூகத்தைப் பல வழிகளிலும் முன்னேற்றப் பாதையிலே இட்டுச் செல்லப் பாவலர் ஆசைப்படுவதை அவர் பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
என்ன படித்தாலும் நல்ல மரியாதைக் கேற்ற குணங்களில் லாதவர்கள் பன்னரும் நன்மை யடைந்து செழித்தல் பகரருஞ் சங்கடம் சங்கமின்னே
இதுபோன்ற எங்கள் பலவீனங்களையும் பலத்தையும் பாடல்களிலே அவர் பாடியுள்ளார். எளிமையான பல விடயங்கள் அவர் பாடல்களிலே
இடம்பெறுகின்றன.
Xν

Page 10
பாவலருடைய பாடல்கள் பல எளிமையான சந்தமுடையன. யாழ்ப்பான கவதேசக்கும்மிப் பாடல்களெல்லாம் கும்மி மெட்டிலே அமைந்துள்ளன. எங்கள் தேசறிலைப் பாடல்கள் கண்ணிகளிலே அமைந் துள்ளான பொதுமக்களுக்கான பல செய்திகளைக் கூற விரும்பும் பாவலர் எளிமையான சந்தங்களைப் பயன்படுத்துவது வியப்பில்லை.
எளிமையான நடையினைப் பாவலர் தன்னுடைய பெரும் பாலான பாடல்களிலே கையாளுகிறார்.
சீதனம் வரவர ஏறுகுது - நகை
திகழ்தங்கம் வயிரமாய் மாறுகுது
நீதி நெறிதனை மீறுகுது - மன
நிலையி னுசிததன்மை பாறுகுது.
என்னும் பாடலை எடுத்துக்காட்டாகத் தரலாம். சாதாரண மக்களும் விளங்கிக் கொள்ளக்கூடிய சொற்களை இப்பாடலிலே கவிஞர் கையாண்டுள்ளார். சிவமணிமாலை, கீதரசமஞ்சரிப் பாடல்களிலே பாவலர் பல வடசொற்களைப் பயன்படுத்தியுள்ளார். சிந்தனைச்சோலை எங்கள் நாட்டைச் சேர்த்த ஓர் அறிஞர் ஆக்க இலக்கியப் படைப்பாளியாயி ருந்தமை, எங்கள் சமூக மறுமலர்ச்சியிலும் எங்கள் இலக்கிய மறு மலர்ச்சியிலும் அவர் உயர் விருப்புடையவராயிருந்தமை என்பனவற்றை யெல்லாம் இளந் தலைமுறைக்குக் கூறவல்லது. காலத்துக்கேற்ற சில குறைபாடுகள் தென்படினும், காலத்தைக் கடந்த பல ஆக்கங்களை இது கொண்டுள்ளது. இந்நூலின் புதிய பதிப்புக்கு இந்த அணிந்துரையை எழுதுவதிலே நிறைந்த மகிழ்வடைகிறேன்.
25.04.2005
xvi

முகவுரை
இந்தியத் தமிழகத்தில் சங்ககாலம் முதல் தமிழ் இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. இது ஈழத் தமிழகத்துக்கும் பொருந்தும். சங்கத் தமிழ் நூல்களில் ஈழத்துப் பூதன்தேவனாரின் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்பின் மிக நீண்ட காலம் ஈழத்தில் தமிழ் இலக்கியங்கள் தோன்றியதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும், சிங்கையாரிய வேந்தர் காலத்துக்குச் சிறிது முந்திய காலம் முதல் ஈழத்தில் தொடர்ந்து தமிழிலக்கியங்கள் தோன்றி நிலைபெற்று வருகின்றன.
ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் தமிழும் சைவமும் மறைந்துவிடுமோ என்ற ஐயங்கள் ஏற்பட்டாலும் தமிழரின் முயற்சியால் சைவமும் தமிழும் நிலைபெற்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலம் முழு இலங்கைக்குமான ஆட்சி மொழியாகவும் கல்வி மூலமொழியாகவும் திணிக்கப்பட்டது. வெளிநாட்டுச் சமய நிறுவனங்கள் பாடசாலைகளை நிறுவி ஆங்கிலத்தையும் கற்பித்து, மாணவர்களுடைய பிறவித் தமிழ்ப் பெயர்களை நீக்கி ஆங்கிலப் பெயர்களைச் சூட்டின; சமயத்தை மாற்றின.
இத்தகைய கிறித்தவப் பாடசாலைகளுள் ஒன்று வட்டுக்கோட்டை கல்வி நிறுவனம் (செமினறி). 1888இல் உயர்கல்வி பெறும் நோக்குடன் அங்கு சென்ற தெல்லிப்பழை அருளம்பலம் துரையப்பாபிள்ளை, சாமுவேல் கற்சிங்கு துரையப்பாபிள்ளை தேலர் (S.H.T. Taylor) என்ற பெயருடன் கிறித்தவரானார். அங்கு தமிழ் ஆசிரியராகவும் கவிஞராகவும் விளங்கிய ஆணல்டு சதாசிவம்பிள்ளை (J.R. Arnold) அவர்கள் துரையப்பாபிள்ளை அவர்களின் தமிழ் அறிவைக்கண்டு வியந்து அவரை மேலும் வளர்த்துக் கவிஞராக உருவாக்கினார். தமது ஆசிரியர்போல் மரபுவழிக் கவிஞரான பிள்ளை அவர்கள் எப்போது கவிதை எழுதத் தொடங்கினார் என்பதை அறிய முடியவில்லை. 1898இல் வடபகுதிப்
xvii

Page 11
புகையிரதப் பாதை தோன்றக் காரணமாயிருந்த ஆள்பதி உவெஸ்ற் றிட்ஜ்வேக்கு அவர் பாடிய நன்றிகூறல் பாடலே காலத்தால் முந்தியதுபோலத் தோன்றுகின்றது. அதற்கு முன்னரும் அவர் பல பாடல்களைப் பாடியிருக்கலாம்.
1899 முதல். பிள்ளையவர்கள், மறுமலர்ச்சித் தமிழிலக்கிய ஆர்வலர் சி. பி. குமாரகுலசிங்க அவர்களின் நெறிப்படுத்தலுடன் பாடிய சமூக நோக்குடைய பாடல்கள் 1901 ஒக்ரோபர் 17இல் இதோபதேச கீதரச மஞ்சரி என்ற நூலாக வெளியிடப்பட்டன. இந்நூலுக்கு முகவாசகம் எழுதிய நீதிபதி கு. கதிரைவேற்பிள்ளை அவர்கள் இக்கீர்த்தனைகள் சர்வசமயிகளும் ஒத்த உள்ளத்தினராய்ப் பாடக்கூடியவை என்றும் தேச நன்மைக்குரிய கருத்துக்களைக் கீர்த்தனங்கள் மூலமாய் இந்நூலைச் செய்தவரே முதன் முதலில் வெளிப்படுத்துகின்றார் என்றும் பாராட்டி யுள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களும் அலன் ஆபிரகாம் அவர் களும் மகாகவி என்ற பொருளில் இவரைப் பாவலர் (பாவில்வல்லவர்) என்று பாராட்டியுள்ளனர்.
பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் ஈழத்து இலக்கிய முன்னோடி கள் நூலில்,
"உண்மையில் மக்களை நன்னெறிப்படுத்தும் இசைப்பாடல் களாகவே அவற்றைக் கொள்ளவேண்டும். கிறித்தவச் செல்வாக்கு அவற்றில் இல்லாமல் இல்லை. ஆனால் சமயக் கோட்பாடு இடம் பெற வில்லை.”
என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.
பேராயர் கலாநிதி வண. எஸ். ஜெபநேசன் அவர்கள் யாழ்ப்பாணக் கிறிஸ்தவக் கவிஞர்கள் என்ற தொகுப்பு நூலில் “கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தல்", *வருடாந்தத்துதி” என்னும் இதோபதேச கீதரசமஞ்சரிப் பாடல்களைச் சேர்த்துள்ளார். ‘தெய்வவணக்கம், ஞானம் வேண்டல் ஆகிய பாடல்கள் பாவலரின் கிறிஸ்துவ வாழ்வைக் காட்டுவன? என மல்லிகைக் கட்டுரையில் (யூலை 1972) ஆ. சிவநேசச்செல்வன் அவர்கள் குறிப்பிடுகின்றார். கிறித்தவ சமயப் பயன்பாடுள்ள தமிழ்ச்சொற்களே இக்கருத்துக்களுக்குக் காரணம். எனினும், பாவலர் தமது இதோபதேச கீதரசமஞ்சரி நூலின் ஆங்கில முகவுரையில், “எனது சிந்தனை ஒழுக்கவியல் சார்ந்த பொதுப் பயன்பாடுள்ள, மதவேறுபாடின்றி
xviii

அனைவருக்கும் பயன்படக் கூடிய பொருள்களைப் பாடியுள்ளதாகக்"
கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கிறித்தவராக இருந்த காலத்தில் பாவலர் பாடியது யாழ்ப்பான சுவதேசக்கும்மி. எனினும், இந்நூலும் எங்கள் தேசறிலை (1917), சிவமணிமாலை (1927) நூல்களும் பிற்காலத்தில் எழுதப்பட்டவை என்பது சில அறிஞர்களின் கருத்தாகும். இதற்கு ஒரு காரணம் கும்மியில் உள்ள ‘அத்திமுக அச்சுதன்" என்ற தொடர் உடைய காப்பு வெண்பா ஆகும். இது பிற்காலத்தில் விநாயகர் பற்றிப் பாவலர் பாடிச் சேர்த்துக்கொண்ட பாடல் எனக்கொள்வதே பொருத்தமாகும். இதைத் தொடர்ந்து வரும் பாடல் ‘பரன் கழல் காப்பாமே” 660 இறைவணக்கம் பாடுகின்றது. 'மாபரனே கிருபாகரனே? என்ற தொடர் கீதரசமஞ்சரியில் வருகின்றது. எனவே, இவை எல்லாம் 1910க்கு முந்திய பாடல்களாகவே இருக்கவேண்டும்.
கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி கொழும்பிலிருந்து வெளியிட்ட இலங்கைத் தேசிய நோக்கு என்ற ஆங்கில இதழில் யாழ்ப்பாணம் : அன்றும் இன்றும் என்ற பாவலரது ஆங்கிலக் கட்டுரை 1907 சனவரியில் வெளிவந்தது. இது ஒரு வரலாற்று நோக்குக் கட்டுரை எனினும் இதிலுள்ள பல கருத்துக்கள் யாழ்ப்பான சுவதேசக்கும்மி நூலிலும் உள்ளன. இக்கும்மி நூலில் ஏனைய நூல்களில் உள்ளதுபோல் சைவசமயச் சார்பு எதுவும் இல்லை என்பது நோக்கத் தக்கது.
வடக்கு, கிழக்கு, வடமேற்குப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களை ஆரிய வேந்தர் சிறிது காலம் ஒன்றிணைத்து ஆண்டனர். இந்த வரலாற்று அடிப்படையிலேயே ஈழத்தமிழரை ஒரே நாட்டினராகப் பாவலர் கருதினார்." இதுவே, யாழ்ப்பாணநாடு எனக் கருதப்பட்டது. இதனையே பாவலர் *யாழ்ப்பாண சுவதேசம்’ என்கிறார். அந்நியரால் கைப்பற்றப்பட்ட தமிழ் அரசை - நாட்டை - மீட்கத் தேசாபிமானத் தமிழ்த் தலைவர்கள் தோன்ற வேண்டும் என்பது பாவலர் விருப்பமாகும்.
மகாத்மா காந்தி அவர்கள் 1900ஆம் ஆண்டளவில் தென்னா பிரிக்காவிலிருந்து வந்து பம்பாயில் தங்கிக் காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார். இந்தியாவில் தங்கியிருந்து அவர்கள் இந்திய விடுதலைக்கு உதவவேண்டும் என்று கோகலே அவர்கள் காந்தி அவர்களைக் கேட்டுக் கொண்டார். பம்பாயில் ஆசிரியராகப் பணியாற்றிய பாவலர் (1895-1898) இச்செய்திகளை அறிந்து 1907இல் யாழ்ப்பான சுவதேசக்கும்மியில் காந்தி பற்றிப் பாடினார் எனக்கொள்ளலாம்.
xix

Page 12
பாவலரின் யாழ்ப்பான சுவதேசக்கும்மி (1907), எங்கள் தேசறிலை (1917) ஆகிய நூல்களிலுள்ள ஈழத்தமிழ்த் தேசிய நோக்கே இன்றைய தமிழர் அரசியல் நோக்குக்கும் போக்குக்கும் மூலகாரணமாகும். பாவலர் தெல்லிப்பழை உயர்நிலைப் பள்ளியில் அதிபராக இருந்தபோது அங்கு கற்ற சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்களும் 1910இல் பாவலர் சைவராகி நிறுவிய தெல்லிப்பழை மகாஜன உயர்நிலைப் பள்ளியில் பாவலரிடம் கற்ற கு. வன்னியசிங்கம் அவர்களும் முன்னோடித் தமிழ்த் தேசியத் தலைவர்களாக உருவாவதற்குப் பாவலருடைய கருத்துக்களே காரணம் என்பது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்களும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. க. சிற்றம்பலம் அவர்களும் முன் வைத்துள்ள கருத்துக்களாகும்.
மேலே கூறப்பட்ட நான்கு நூல்களைவிடத் தனிப்பாடல்கள் என்ற பகுதியில் ஒன்பது பாராட்டு வாழ்த்துப் பாடல்களையும் பாவலர் பாடியுள்ளார். இவற்றுள் சில 1910க்கு முந்திய கிறித்தவ காலப் பாடல்கள்; ஏனையவை பிந்தியவை. தெல்லிநகர் கலாசங்கத்துக்கே யாழ்ப்பாண சுவதேசக் கும்மியை (1907) விளம்புவதாகப் பாடிய பாவலர் இச்சங்க வருடாந்தக் கூட்டத்துக்குப் பாடிய வாழ்த்தும் சமகாலத்தது என்பது இங்கு நோக்கத்தக்கது.
பாவலர் 1905இல் சகலகுணசம்பன்னன் என்ற நாடகத்தை எழுதி, நெறிப்படுத்தி, மேடையேற்றினார். இதில் சங்கரதாஸ் சுவாமிகள் நாடக மரபின் தாக்கமும் செகப்பிரியர் (Shakespear) நாடகத் தாக்கமும் உள்ளன என்றும் இது சமூக மறுமலர்ச்சி நோக்கம் கொண்ட நாடகம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். இது கிறித்தவமதக் கோட் பாட்டினைக் காட்டுவது என்ற கருத்தும் உள்ளது.
பாவலர் வாழ்ந்த காலத்திலும் அவர் மறைந்த பின்பும் பாவலர் பாடல்கள் மக்களால் பாடப்படுவனவாக விளங்கின. எனினும், அவை அச்சிடப்படாத நிலையில் செல்வாக்கு இழக்க நேர்ந்தன.
இந்நிலையில் பாவலரின் மூத்த மகனும் கல்லூரி மாணவரும் ஆசிரியரும் அதிபருமான (1919-1970) தெ. து. ஜயரத்தினம் (1913 - 1976) அவர்கள் கல்லூரிப் பொன்விழா ஆண்டில் (1960) பாவலரின் மேற்குறிப்பிட்ட நூல்களையும் பாவலர் பற்றிய பிறர் பாடல்களையும் தொகுத்து சிந்தனைச்சோலை நூலாக வெளியிட்டுப் பாவலரின் பெருமை உயர்ந்து நிலைக்க வழி சமைத்தார். இவ்வெளியீடு பலரும் பாவலர் கவிதைகளை மீளப் படிக்கவும் பாவலர் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதவும் வழியமைத்தது.
XX

பாவலர் பாடல்களை எழுதிய காலத்தில் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் மாணவர்களான வித்துவசிரோமணி சி. கணேசையர் அவர்களையும் பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை அவர் களையும் அழைத்துத் தமது பாடல்களைப் பாடிக்காட்டுவார். பண்டிதர் அவர்களையே பாடப் பயிற்றி மேடைகளிலும் படிக்கவைப்பார். இதனால் நீண்ட கால நேரடித் தொடர்புடைய பண்டிதர் அவர்கள் சிந்தனைச் சோலைக்கான பாவலர் வரலாற்றை மிக விரிவாகவும் சிறப்பாகவும் எழுதியுள்ளார்.
பாவலரும் (1872 - 1929) மகாகவி சுப்பிரமணியபாரதியாரும் (1882 - 1921) சமகாலக் கவிஞர்கள். சமூக நோக்குடைய கவிதைகளை இருவரும் முதலில் எழுதியதால் நவீன முன்னோடிக் கவிஞர்கள் என்று போற்றப்படுகின்றனர். 1970ஆம் ஆண்டு முதல் பல ஆய்வாளர்கள் இருவரையும் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி 1972இல் பாவலர் நூற்றாண்டு விழாக் கொண் டாட்டத்தின்போது சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. இம்மலரில் பத்தொன்பது அறிஞர்கள் பாவலர் பற்றிய கட்டுரைகளை விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளனர். இம்மலரில் த. வேலாயுதபிள்ளை, பேராசிரியர் சு. வித்தியானந்தன், செ. வேலாயுதபிள்ளை, த. சண்முகசுந்தரம் ஆகியோர் பாவலரையும் பாரதியாரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து கட்டுரை களை எழுதியதோடு, கவிதை எழுதிய கால அடிப்படையில் பாவலரே முன்னோடியாக உள்ளர் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளனர். இக்கட்டுரையாளர்களுள் ஒருவரான கொழும்பு வளாகப் பட்ட ஆய்வு மாணவரான த. வேலாயுதபிள்ளை அவர்கள் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் நெறிப்படுத்தலில் பாவலர் பற்றிய முன்னோடி ஆய்வுக் கட்டுரையை எழுதினார். பேராசிரியர் அவள்கள் முன்னர் குறிப்பிட்ட ஈழத்து இலக்கிய முன்னோடிகள் நூலில் பாவலரையும் பாரதியாரையும் ஒப்பிட்டு விரிவாக ஆராய்ந்துள்ளார். இதே நூலில் நாவலர் அவர்கள் பற்றிய கட்டுரையிலும் பேராசிரியர் அவர்கள் நாவலர் வழியிற் சிறப்பாகச் செயற்பட்ட முன்னோடி பாவலர் எனவும் விளக்கியுள்ளார். நாவலர் மரபிலும் அதனைத் தொடர்ந்து பாவலர் மரபிலுமே ஈழத்து நவீன எழுத்தாளர்கள் உருவாகிச் செயற்படுகின்றனர்.
ஆய்வாளர்களுக்கும் கவியார்வலர்களுக்கும் பாவலர் கவிதை தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்ற நோக்குடனேயே மகாஜனக் கல்லூரி உலகப் பழைய மாணவர் சங்கத்தினர் சிந்தனைச்சோலையின் இரண்டாம் பதிப்பை வெளியிட முன்வந்துள்ளனர்.
XXi

Page 13
1910ஆம் ஆண்டு பாவலர் தெல்லிப்பழை ஆங்கில உயர்நிலைப் பள்ளி அதிபர் பதவியை விட்டு விலகித் தமது இல்லத்தில் தெல்லிப் பழை மகாஜன உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கினார். அப்போது அவருடன் வந்து கல்வி பயின்ற (1905 - 1913) க. சின்னப்பா அவர்கள் பின்னர் பாவலர் நெறிப்படுத்தலில் கவிஞர் சின்னப்பா (1897 - 1945) ஆனார். அவர் மகாஜனாவில் ஆசிரியராகவும் அதிபராகவும் (1914 - 1945) பணியாற்றிய காலத்தில் அவர்களிடம் பயின்ற செ. கதிரேசர்பிள்ளை, அ. ந. கந்தசாமி, மகாகவி து. உருத்திரமூர்த்தி ஆகியோர் அடுத்த தலைமுறைக் கவிஞராகவும் அ. செ. முருகானந்தன் சிறுகதை, நாவல் எழுத்தாளராகவும் சிறப்புப் பெற்றனர். புலவர் நா. சிவபாதசுந்தரனார், கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை ஆகியோரிடம் பயின்ற மாணவர் பலரும் இன்று புகழ்பெற்ற கவிஞராகவும் எழுத்தாளராகவும் உள்ளனர். கல்லூரியின் இந்த எழுத்து மரபு இன்றும் ஆசிரியர்கள் துணையோடு தொடரும் இவ்வேளையில் சிந்தனைச்சோலை மீண்டும் வெளி
வருகின்றது.
நன்றியுரை
சிந்தனைச்சோலையின் முதற்பதிப்பு வெளிவர மூல காரண மாயிருந்தவரும் நூல் வெளியீட்டுரை எழுதியவருமான அக்கால அதிபர் தெ. து. ஜயரத்தினம் அவர்களுக்கும் நூற்பதிப்புக்குப் பணி யாற்றிய கல்லூரி ஆசிரியர்கள் ஐவருக்கும் இந்நூலின் சிறப்பை யும் பெரும் பயனையும் தமது மதிப்புரையில் வெளிப்படுத்தியுள்ள கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் நூலா சிரியரின் வரலாற்றை விரிவாகவும் சிறப்பாகவும் எழுதிய பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை அவர்களுக்கும் நாம் பெரும் நன்றி கூறுகின்றோம். அவர்கள் ஆற்றிய இப்பெரும்பணியே இன்று ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறறில் பாவலர் உயர்நிலை பெறக் காரணமாயமைந்தது. ஈழத்தமிழ் கூறும் நல்லுலகம் அவர்கள் பெரும்பணியால் பெருமை அடைகின்றது.
இந்நூல், விரும்புவோர் அனைவருக்கும் தொடர்ந்து கிடைக்க இரண்டாம் பதிப்பு வெளிவரவேண்டும் என்ற முடிவை உறுதிசெய்து நெறிப்படுத்திய கல்லூரி அதிபர் பொ. சுந்தரலிங்கம் அவர்கள் வாழ்த்துரையை வழங்கியுள்ளார். அவர்ளுக்கு எமது நன்றி. கல்லூரி மாணவராகவும் ஆசிரியராகவும் விளங்கிய கே. செல்வக்குணச்சந்திரன் அவர்கள் லண்டனிலிருந்து கல்லூரிக்கு வந்தபோது இந்நூல் மீண்டும் வெளியிடப்படவேண்டும் என்ற அதிபர் அவர்களின் கருத்தை அறிந்ததும்
xxii

நூல் வெளியீட்டுக்கான நிதியை முழுமையாகத் தாமே தருவதாகவும் நூல்வெளியீட்டை நிகழ்த்துமாறும் கேட்டுக்கொண்டார். பெருமனதுடன் நிதியை வழங்கியது மட்டுமன்றி வாழ்த்துரையையும் வழங்கிய அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றி.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் பலரும் பாவலர் பற்றிய சிறப்புரைகளை நிகழ்த்துவதோடு கட்டுரைகளையும் எழுதி வருகின்றனர். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பாவலர் பற்றிய பட்ட ஆய்வேடுகளுக்கு மாணவரை நெறிப்படுத்தியது. இப்பணிக்குத் துணை செய்தவர்களுள் ஒருவரான பேராசிரிர் அ. சண்முகதாஸ் அவர்கள் நீண்ட பாவலர் ஆய்வுக்கட்டுரையை எழுதியதோடு, பாரதியின் கவிதையாக்கத்துக்கு முன்பே நவீன கவிதை எழுதிய பாவலரின் சிறப்பையும் உறுதி செய்துள்ளார். அவர்கள் இப்பதிப்புக்கான அணிந் துரையை வழங்கியுள்ளார். அவர்களுக்கு எமது உளமார்ந்த நன்றி.
அட்டையையும் நூலையும் சிறப்பாகப் பதித்து வழங்கிய பாரதி பதிப்பகத்தினர்க்கும், சிறப்பாக, பதிப்பக உரிமையாளர் இ. சங்கள் அவர்களுக்கும் எமது நன்றி.
2003 ஆம் ஆண்டு மகாஜன உலகப் பழைய மாணவர் சங்கங்கள் கொழும்பில் கூடிக் கல்லூரி நூற்றாண்டு விழா(2010)வுக்கான தமது பணிகளை முடிவு செய்தன. அவற்றுள் ஒன்று மகாஜனன்களின் ஆக்கங்களைத் தொகுத்தும் தனியாகவும் நூல்களாக வெளியிடு வதாகும். இப்பணியில் எம்மை ஈடுபடுத்திய சங்கத்தினருக்கும், குறிப் பாக, எம்மைச் சந்தித்து வழிகாட்டிய லண்டன் மகாஜனப் பழைய மாணவர் சங்கச் செயலர் திரு. நா. சிறிகெங்காதரன் அவர்களுக்கும் எமது நன்றி.
மகாஜனப் பழைய மாணவர்களும் மகாஜன எழுத்தாளர்களும் இப்பணிகளைத் தொடர்ந்து சிறப்பாக ஆற்ற எமக்குத் துணைசெய்ய வேண்டுகின்றோம்.
வெல்லுக வெல்லுக மாஜன மாதா.
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மயிலங்கடலூர் பி. நடராசன் உலகப் பழைய மாணவர் சங்கப் கோகிலா மகேந்திரன் பதிப்புக்குழு. uta. Inabaalsdbfarið
24.06.2005
xxiii

Page 14
நூலாசிரியர்வரலாறு
- பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை அவர்கள்
ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்தாம் ஆண்டிலே ஒரு நாள். தெல்லிப்பழைச் சந்திக்கண்மையிலுள்ள அழகிய விடொன்றின் தலை வாயிலில் ஆஜானுபாகுவான புருஷர் ஒருவர் வெளியே புறப்படத் தயாராக வீற்றிருந்தார். இடுப்பிலே தமது தூய உள்ளமே போன்ற வெண்ணிற வேஷடியும், மேலே மடிப்புக் கலையாத நீண்ட அங்கியும், தலையிற் பாகையுந் தரித்திருந்தாரவர். அவரது முகாரவிந்தமும் அதனை அலங்கரித்த அடர்த்தியான - ஆனால், அழகான மீசையும் முழு மதியையும் அதன் களங்கத்தையும் நினைவுபடுத்தின. ஆழ்ந்தகன்ற கண்களே ஆழ்ந்த அறிவினரவர் என்பதை அம்பலப்படுத்தின. கையிலிருந்த பிரம்பு இடையிடையே மெல்லச் சுழன்றது. அதி முக்கியமான ஏதோ சிந்தனை அவர் உள்ளத்தில் அப்போது சுழன்றது என்பதைத்தான் பிரம்பின் சுழற்சி பிரதிபலித்ததோ என்னவோ. ஆனால், அவர் ஆழ்ந்த சிந்தனை ஒன்றில் அப்போது ஈடுபட்டிருந்தது உண்மைதான்.
அக்காலத்திலே சைவருக்கெனத் தனித்த ஆங்கிலக் கல்விக் கூடங்கள் இல்லை. ஆங்கிலக் கல்வி பயில விரும்பிய சைவச் சிறார்களைப் பாதிரிமார் நல்லவழி காட்டுவோம் உடுபுடைவை சம்பளம் நாளுதாளுந் தருகுவோம், நாம் சொல்வதைக் கேளும் என மருட்டிச் சேர்த்து நானமுஞ் செய்யத் தலைப்பட்டனர். இச்செயலைக் கண்ட அந்த அறிஞரின் உள்ளம் பாகாய் உருகியது. சைவச் சிறுவர்களின் பரிதாபகரமான நிலைக்குப் பரிகாரந் தேடவேண்டுமென்ற எண்ணம் அப்போது சில காலமாகவே அவள் உள்ளத்தில் அரும்பி இருந்தது. அன்றும் அதே சிந்தனைதான், அவள் உள்ளத்தை வேல்போற் குடைந்து வேதனை செய்தது.
XXίν

காரிருளில் மின்னலெனக் கருத்தகத்தே எண்ண அலை ஒன்று எழுந்தது. சைவர்க்கெனத் தனித்த ஆங்கில உயர்தர வித்தியாசாலை ஒன்றை நிறுவிச் சைவச் சிறார்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற உறுதி உள்ளத்தே உதித்தது. சிந்தித்த ஒன்றைச் செயற்படுத்துவதற்கு எல்லோரையும் போல மீனமேஷம் பார்த்துக் கொண்டிருக்கும் வழக்கம் அவரிடம் இல்லை. சிந்தனை யினின்றும் விடுபட்டவராய் எழுந்தார்; விரைவில் ஆங்கில உயர்தரக் கல்விக்கூடம் ஒன்று அவர் இல்லத்தே எழுந்தது. ஆரம்பித்த ஓர் ஆண்டுக் காலத்துள்ளேயே அக்கல்விக் கூடம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்தமையின் அதனை விஸ்தரிக்க வேண்டிய அவசியம் எழுந்தது. எழவே தெல்லிப்பழைச் சந்திக்கு மேற்கே ஒருகல் தொலைவில் உள்ள அம்பனையில் தாம் விலைக்குப் பெற்ற நிலத்திலே கல்விக் கூடத்தை நிறுவி நிருவகிக்கலாயினர். அன்று, தாம் தோற்றுவித்த கல்விக்கூடம் இன்று ஈழத்தின் இணையற்ற கல்விக் கழகங்களுள் ஒன்றாய்க். கம்பீரமான கட்டடங்களுடன் கவினுறக் கதித்தோங்கிப் பொலிவதைக் காணும் அந்த அறிஞரின் ஆத்மா என்ற பொழுதிற் பெரிதுவக்கும்" என்பதற்கையமில்லை. சைவமுந் தமிழும் தமது இரு கண்களாக - மூச்சு, பேச்சு எல்லாமாக - கருதி வாழ்ந்த அந்த அறிஞர் வேறுயாருமல்லர்.
*விரையப்பா டுஞ்சீர் மிகப்படைத்த தேலர்
துரையப்பா பிள்ளையெனுந் தோன்றல்” தான் அவர்.
ஆயிரத்தெண்ணுாற் றெழுபத்திரண்டாம் ஆண்டு ஐப்பசித் திங்கள் இருபதாம் நாள் கச்சேரி முதலியார் அருளம்பலந் தம்பதிகளுக்கு அருந்தவப் புதல்வராகத் துரையப்பாபிள்ளையவர்கள் தோன்றினார்கள். வளர்மதிபோல் வளர்ந்த பிள்ளையவர்கள் ஐந்தாவது பராயத்திலே வித்தியாரம்பஞ் செய்யப்பெற்றுத் தெல்லிப்பழையிலே மிஷனரிமாரால் நடாத்தப்பட்ட தமிழ்ப் பாடசாலையிற் கல்வி பயின்ற பின் திரு. செல்லப்பா என்பவரால் அப்போது நடத்தப்பட்ட ஆங்கில ஆரம்ப பாடசாலையிற் கல்வி பயின்றார்கள். இங்கே கல்வி பயிலுங் காலை இவர் தந்தையார் தேகவியோகமானார். தந்தையை இழந்த பிள்ளை யவர்களுக்குத் தாயாரான திருமதி தங்கம்மாவே தாயுந் தந்தையு
DT60TT.
ஆரம்பர் பாடசாலையிற் கல்வியை முடித்துக் கொண்ட பிள்ளையவர்கள் உயர்தர கல்விபயில நாட்டங்கொண்டார்கள். அக் காலத்திலே உயர்தர கல்வி பயில்வதற்கேற்ற ஆங்கிலக் கல்லூரிகள் இல்லை. யாழ்ப்பாணக் கல்லூரி ஒன்றுதான் உயர்தர கல்வி பயில
XXV

Page 15
விரும்புவோரின் புகலிடமாயிருந்தது. பிள்ளையவர்கள் அக்கல்லூரி மாணவர்களில் ஒருவரானார். இங்குக் கல்வி பயிலுங் காலத்திலே இவருடைய வாக்கு வன்மையையும் விவேகத்தையும் கண்ட ஆசிரியரனைவரும் இவர்பால் அன்பு பூண்டொழுகுவாராயினர். அப்போது மிகச் சிறந்த தமிழ் அறிஞரான J. R. ஆணல்ட் என்பார் அக்கல்லூரியின் போதனாசிரியர்களுள் ஒருவராயிருந்தார். அறிஞர் ஆணல்ட் இவருடைய கூரிய மதியையுஞ் சீரிய நுண்மாணுழை புலத்தையுங் கண்டு இவரிடம் தனித்த அன்பு பாராட்டுவராயினர். இதனாற் பிள்ளையவர்களுக்கு ஆணல்டிடம் நெருங்கிப்பழகும் அரியவாய்ப்புக் கிடைத்தது. பிற்காலத் திலே சிறந்த தமிழ் அறிஞராயுங் கவிஞராயும் விளங்கிய பிள்ளை யவர்கள் தமிழ் அறிவுத் துறையிலே நாட்டங் கொள்ளக் காரண மாயிருந்தமை அவ்விருவருக்கு மிடையிலிருந்த தொடர்புதான் என்பதிலே எள்ளளவுஞ் சந்தேகமில்லை. பிள்ளையவர்கள் தாம் யாத்த கீதரசமஞ்சரி என்னும் நூலை அன்னாருக்கு அர்ப்பணமாக்கியமையே இதற்குச் சான்றாகும். பத்தொன்பதாவது வயதிலே கேம்பிரிஜ் சர்வக லாசாலையின் உயர்தரப் பள்ளி இறுதித் தேர்விலே ஆங்கிலம் முதலிய பாடங்களில் விசேஷ புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்தார். அவ்வளவிலே பள்ளிப் படிப்புக்குப் புள்ளிவைத்துவிட்டுச் சில காலம் அரசாங்கக் கணக்காளராகக் கடமை புரிந்தார்.
கல்வி பயிலும்போதே இவருடைய சாதுரியத்தை அறிந் திருந்தமையினாலே இவரை ஆசிரியத் தொழிலில் ஈடுபடுத்தப் பலரும் முனைந்தனர். அதனாலே கணக்காளர் பதவியைத் துறந்து பாணந்துறையிலுள்ள அர்ச். யோவான் கல்லூரியில் திரு. சிறில் ஜான்ஸ் என்னும் பிரதம ஆசிரியருடன் உதவி ஆசிரியராய் அமர்ந்து சிறந்த தொண்டாற்றி அன்னாரின் நன்மதிப்புக்காளானார். அங்கே இரண் டாண்டுக் காலம் சேவைபுரிந்தபின் ஆயிரத்தெண்ணுாற்றுத் தொண் ணுாற்று நாலாம் ஆண்டு இலங்கையை விட்டு நீங்கிப் பாரததேசத்திலே பம்பாய் மாகாணத்திலே உள்ள கோலாப்பூர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஆனார். இங்கும் இரண்டாண்டுக் காலம் போதனை புரிந்தபின் இம்மாகாணத்திலுள்ள பெல்காம் உயர்நிலைப் பள்ளியிலே கடமை யாற்றினர். அங்குக் கல்விபயிற்றி வருநாளிலேதான் 1898ஆம் ஆண்டின் நிகழ்ச்சியாய் இந்திய சரித்திரம் கூறும் கொடிய கொள்ளை நோய் நிகழ்ந்தது. அது பன்னூற்றுக் கணக்கான மக்கள் உயிரைப் பலி கொண்டது. இதனை அறிந்த இவருடைய அருமைத் தாயார் இவரை இலங்கைக்கு வரும்படி வருந்தி அழைத்தனர். தாயாரின் வேண்டு கோளைத் தட்டிக் கழிக்க முடியாத தனயர் தமது ஆசிரியப் பதவியைப் பரித்தியாகஞ் செய்துவிட்டு இலங்கைக்கு மீணடார்.
XXνi

இலங்கை வந்த பிள்ளையவர்கள் ஆங்கில ஆசிரியதராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தோன்றிச் (1899) சித்தியடைந்தார்கள். தாம் முன்னர் ஆரம்பக் கல்விகற்ற பாடசாலையிலே தலைமை ஆசிரியராக அமர்ந்தார். பின்னர், அப்பாடசாலை மிஷனரிமாரால் வாங்கப்பட்டு, பாதிரி வளவு என்று இக்காலத்து வழங்கும் நிலப்பரப்பிலே அமைக்கப்பட்டு நடாத்தப்பட்டபோதும் தாமே தலைமை ஆசிரியராகத் தொடர்ந்து பதவி வகித்தனர்.
கல்வி கேள்விகளிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவராக விளங்கிய பிள்ளையவர்களை மருகராகப் பெறுவதைப் பெரும் பாக்கியமெனப் பலருங்கருதி முயன்றதில் அதிசயமெதுவுமில்லை. பெற்றோரும், மற் றோரும் விரும்பியபடி ஆயிரத்துத்தொளாயிரத்து ஒன்பதாம் ஆண்டிலே தெல்லிப்பழையைச் சார்ந்த சபாபதிப்பிள்ளை அவர்களின் அருமைக் குமாரியும், ஆசிரியர் திரு. வே. தில்லையம்பலம் அவர்களின் மூத்த மருகியுமாகிய தையல்நாயகியைத் தமது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டார். மனைமாட்சியின் நன்கலனான நன்மக்கட்பேறும் அவருக்கு வாய்த்தது. புதல்வர் இருவரும் புதல்வி ஒருவருமாக மூவர், அவர் வழித்தோன்றலாக நின்று இன்றும் அவர் பணி ஆற்றுகின்றனர். இவருள்ளும் இவர் தாபித்த கல்விக் கழகத்தின் அதிபராயமர்ந்து அக்கழகத்தின் வளர்ச்சியிற் கண்ணுங்கருத்துமாய்ப் பணிபுரியும் தெ. து. ஜயரத்தினமவர்கள் பிள்ளையவர்களின் தகைமை எத்தகையது என்பதை நிச்சயிக்கும் கட்டளைக்கல் - எச்சம் ^என்றால் மிகையாகாது. மற்றொருவரான தெ. து. தர்மராஜா அவர்கள் லண்டன் சர்வகலா சாலையின் வர்த்தகமாணிப் பரீட்சையிற் சித்தியெய்தி மின்சாரப்பகுதிக் கணக்குப் பரிசோதனைப் பகுதியில் தற்போது கடமையாற்றுகின்றார்கள். பிள்ளையவர்களின் ஏகபுத்திரியான திருமதி இரத்தினம்மா, தபாற் பகுதியிற் கடமையாற்றும் திரு. அ. நடராஜா அவர்களின் வாழ்க்கைத் துணைவியாக வாழ்ந்து வருகின்றனர்.
பிள்ளையவர்களின் சகோதரர்களும் கல்வித் தேர்ச்சியும் கலைப்பணி புரியும் ஆர்வமும் நிரம்பியவர்களாய் வாழ்ந்தனர். சென்னை மாநகரத்திற் சென்று வாழ்ந்து, ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்களினதும், கிறிஸ்தவக் கல்லூரி ஸ்தாபகள் Dr. மில்லர் அவர்களினதும் வாழ்க்கை வரலாறுகளையும், பஞ்சதந்திரம், இந்தியச் சரித்திரம், கதாவாசகத் தொடர்நூல் முதலாம் நூல்களையும் எழுதி வெளியிட்டுத் தமிழ்த் தொண்டாற்றிய திரு. தெ. அ. இராசரத்தினம் பிள்ளை அவர்கள் இவர்தம் மூத்த சகோதரராவர். தபாற்கந்தோர்
XXνii

Page 16
அதிபராகி வாழ்ந்து 1908ஆம் ஆண்டிற் புவிநீத்த திரு. தெ. அ. துரை சாமிப்பிள்ளை அவர்களும், ஓவியம் சிற்பம் முதலாம் நுண்கலைத் தேர்ச்சி மிக்கவராய் வாழ்ந்து 1948ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்த திரு. தெ. அ. இராசநாயகம்பிள்ளை அவர்களும் இந்நூலா சிரியருக்கிளைய சகோதரர்களாவர். ஹற்றன் நகரத்தில் அச்சியந்திரம் தாபித்து நிர்வகித்த திரு. க. பொன்னையா அவர்களை மணம் புரிந்த திருமதி இராசம்மா என்னும் பெண்மணியார் பிள்ளையவர்களின் தனிச் சகோதரியாவர்.
பாதிரிமார்களுடைய பள்ளிக்கூடத்தில் இளமைப் பருவத்திலே கற்கப் புகுந்தவர்கள் அநேகள், சைவசமயத்துண்மையை அறியாமை யினாலே கிறிஸ்து மதத்திற் பிரவேசித்துவிட்டார்கள். அவர்களிற் பலர் சிைவ சமயத்துண்மையை அறிந்த பின் பச்சாத்தாபமடைந்து சேதுயாத்திரை முதலியன பண்ணி வெளிப்பட விபூதி தாரணம், அநுட்டானம் முதலியன செய்து வருகிறார்கள்.”
இப்படி நாவலர் அவர்கள் எழுதினார்கள். சி. வை. தாமோதரம்பிள்ளை, கறோல் விசுவநாதபிள்ளை முதலாம் அறிஞர்கள் இதற்கு இலக்கியமாக வாழ்ந்தார்கள். பிள்ளையவர்களும் சி. வை. தாமோதரம்பிள்ளை, கறோல் விசுவநாதபிள்ளை ஆகியோரைப் போலவே முதலிற் கிறிஸ்தவர்; முடிவிற் சைவர்.
பிள்ளை அவர்கள் தெல்லிப்பழை உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கியபோது கல்விமான்கள் பலருடன் பழகும் அரிய வாய்ப்பினைப் பெற்றார்கள். பிள்ளை அவர்களுடன் நெருங்கிப் பழகிய சிலருள் வித்துவான் பிரம்மறி சிவானந்தையரும், பிரம்மறி இ. முத்துக்குமாரசுவாமிக் குருக்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள். வித்துவானவர்கள் சிறந்த தர்க்க பண்டிதர்; ஆழ்ந்த சிந்தனையாளர்; தமிழ் இலக்கண இலக்கியப் பயிற்சியிலே தலைசிறந்தவர். முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், ‘கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்பமொழியவல்ல சைவப்பிரசாரகர். கிறிஸ்து மதத்தவரான பிள்ளை அவர்களின் உள்ளத்திலே சைவத்துண்மைகளை விதைத்து விளைவு கண்ட பெருமை இவ்விரு அறிஞர்களையுமே சாரும். சிவானந்தையரது பரமத கண்டனத்தினாலும் முத்துக்குமாரசுவாமிக் குருக்களது சுவமத ஸ்தாபனத்தினாலும் பிள்ளையவர்களுடைய மனம் சிறுகச் சிறுக மாற்றமடைந்தது. “சைவ சமயமே சமயம்” என்ற உண்மை
உள்ளத்தே உதித்தது; 'பொய்வந்துழலுஞ் சமயநெறி புகுதவேண்டா'
xxviii

வென்ற உறுதி பிறந்தது. சமய தீக்கைபெற்று அவர் சைவரானார். இதே வேளையில் தெல்லிப்பழை உயர்நிலைப்பள்ளியை நடாத்தி வந்த மிஷனரிமாருடன் மனவேற்றுமை ஏற்படவே பாதிரிமார் தொடர் பினின்றும் தம்மை விடுவித்துக் கொண்டார்.
இந்தச் சந்தர்ப்பத்திலேதான் ஆரம்பத்திலே குறிப்பிட்டுள்ளபடி சம்பவங்கள் நிகழ்ந்தேறின. அதன் விளைவாக மகாஜன உயர் நிலைப்பள்ளி உதயமாயிற்று. அப்போது எத்தனையோ எதிர்ப்புக் களையும் இடர்ப்பாடுகளையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. அத்தனை யும் தனித்து நின்று பொருது வெற்றி கண்ட பெருமை பிள்ளைய வர்களுக்கு என்றுமே உண்டு. பள்ளியை அரசினர் அங்கீகாரம் பெறச் செய்வதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளெல்லாம் வியர்த்தமாயின. அக்காலத்திலிருந்த கல்வி அதிகாரிகள் அதனை அங்கீகாரம் செய் வதில்லை என்ற பிடிவாதத்தோடிருந்தனர். எட்டாண்டுக் காலம் வரையில் அரசினர் அங்கீகாரம் பெற முடியாதிருந்தபோதும் பிள்ளையவர்கள் மனமொடிந்து நிலை தளர்ந்துவிடவில்லை. இக்கல்விக்கூடத்திற் பயிலும் மாணவர்கள் அரசினர் பரீட்சைகளுக்குத் தோன்றிச் சான்றி தழ்கள் பெற முடியவில்லையே என்பதுதான் அவருடைய கவலை. இந்தப் பிரச்சினைக்கும் அவருடைய கூரிய மதிநலம் சிறந்ததொரு வகையிலே தீர்வு கண்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள சிறந்த கல்விமான்களை அங்கமாகக் கொண்ட பரீட்சகர் குழு ஒன்றை அமைத்துப் பரீட்சித்துச் சான்றிதழ்கள் வழங்கவேண்டுமென்பதுதான் அவர் கண்ட முடிபு. பரீட்சகள் குழுவிலே பிள்ளை அவர்களிடம் பெருமதிப்பும் அன்பும் கொண்டவர்களான விக்ரோறியாக்கல்லூரி அதிபர், சைவப்பெரியார் திரு. S. சிவபாதசுந்தரம் அவர்கள், இந்துக்கல்லூரி அதிபர் திரு. G. சிவராவ் அவர்கள், இராமநாதன் கல்லூரி அதிபர் திரு. C. K. சுவாமிநாதன் அவர்கள், அர்ச் யோவான் கல்லூரி அதிபர் திரு. T. H. குறொசெற் அவர்கள் ஆதிய அறிஞர்கள் அங்கம் வகித்தனர். இக்குழுவினர் பரீட்சைகள் நிகழ்த்திச் சான்றிதழ்களும் வழங்கினர். இப்பேரறிஞர்கள் அக்காலத்திலே அதிப் பிரபலமான கல்விமான்களானமையின் அவர்களாற் பரீட்சிக்கப் பெற்று வழங்கப்பட்ட சான்றிதழ்கள் அரசினரால் அளிக்கப்பட்ட சான்றிதழ் களிலும் பார்க்க ஒருபடி மேலாகவே மதிக்கப் பெற்றதுமன்றி, யாவராலும் உவந்து ஏற்றுக் கொள்ளவும் பட்டன. இப்பரீட்சைக் குழுவினர் மஹாஜன உயர்நிலைப் பள்ளி, அரசினர் அங்கீகாரம் பெறும் வரையிலும் (1910 - 1918) பரீட்சைகளை நிகழ்த்துவதில் ஒத்துழைத்து இப்பள்ளியின்
XXix

Page 17
ஆரம்ப வளர்ச்சிக்கு ஆதாரமாயிருந்தமை என்றும் பாராட்டத் தக்க தொன்று.
அரசினர் அங்கீகாரம் பெறாத எட்டாண்டுக் காலத்திலும் வேதனங்கருதாது இப்பள்ளியின் வளர்ச்சி ஒன்றையே கருத்திற் கொண்டு கடமையாற்றிய ஆசிரியப் பெருந்தகைகளான திருவாளர் கள் A, கந்தையா, N. சங்கரப்பிள்ளை, K. இலங்கைநாயகம், S. இரத்தினசபாபதி, N. கந்தையா ஆதியோரின் அயரா உழைப்பினாலும் பிள்ளை அவர்களின் தளராத் தாளாண்மையாலும் மேலோங்கிய இக்கழகம் ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டிலே பிள்ளையவர்களின் பேரன்புக்குப் பாத்திரரான திரு. க. பாலசிங்கம், சேர் அம்பலவாணர் கனகசபை முதலிய அரசியல் வாதிகளின் பெருமுயற்சியினால் அரசினரின் அங்கீகாரத்தைப் பெற்றது.
அந்நாளிலே தெல்லிப்பழை கிழக்கில் ஒரு தமிழ்ப் பாடசாலை உதயமாகி வளர்ந்து கொண்டிருந்தது. தமிழறிஞர் பரம்பரைத் தோன்றலும், சைவ மாண்பு நிறைந்தவருமாகிய பிரம்மழரீ க. சுந்தர மூர்த்தி ஐயர் அவர்களே அப்பாடசாலையின் தாபகள். தமக்குப்பின் தாம் நிறுவிய கல்விக் கழகத்தைப் பொறுப்பேற்று நன்குற நடத்தவல்லார் ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார் ஐயரவர்கள். அத்தகுதி பிள்ளை யவர்களிடத்திலே நிரம்பியிருந்தமையைக் கண்ட அவ்வந்தணப் பெரியார் பிள்ளையவர்களை அப்பாடசாலையின் முகாமைக்காரராகியமர்ந்து அதனை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்குமாறு கேட்டுக் கொண்டார். தமிழும் சைவமும் மாணவருள்ளத்தே கதித்தோங்குதற்குதவியான ஒரு தமிழ்ப் பாடசாலையும் அமைத்தல் வேண்டுமென எண்ணங் கொண்டிருந்த பிள்ளையவர்கள், ஐயரவர்கள் கேள்விக்கிசைந்தமை வியப்பன்று. 1918ஆம் ஆண்டளவில் அத்தமிழ்ப் பாடசாலையின் முகாமைக்காரராகியமர்ந்த பிள்ளையவர்களிடமே 1921ஆம் ஆண்டள வில் அதன் முழு உரிமையையும், பொறுப்பையும் ஐயரவர்கள் கொடுத்து விட்டார்கள். அதன்பின் விஸ்தாரமான நிலப் பரப்பொன்றைப் பணங் கொடுத்துப் பெற்றுக் கட்டடம் அமைத்து அக்கல்விக் கூடத்தை இன்றிருக்கும் நிலைக்கு உயர்த்தி வைத்தவர்கள் பிள்ளையவர்களே.
மஹாஜன உயர்நிலைப் பள்ளிக்கு அண்மையில் ஆரம்ப பாடசாலை ஒன்றில்லாமையால் சிறுவர்கள் வெகுதூரஞ் சென்று இடர்ப்படுதலையும், தொலைவிற்குச் செல்ல முடியாத சிறுவர்கள் அவமே காலத்தைப் போக்குவதையும் கண்டு நெஞ்சம் வெதும்பிய
XXX

பிள்ளையவர்கள், மஹாஜன உயர்நிலைப் பள்ளியின் அருகே சரஸ்வதி வித்தியாசாலை என்ற ஆரம்பப் பள்ளியை நிறுவினர். இப்பள்ளி ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தெட்டாம் ஆண்டிலே அரசினர் அங்கீகாரம்பெற்றது. இருபது ஆண்டுகளுக்குப் பின் கல்லூரியுடன் இணைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
பிள்ளை அவர்கள் தனக்குவமை இல்லாத தலைசிறந்த ஆசிரியர். எத்தகைய மாணவர்க்கும் கல்வி இலகுவிலெய்தும் வண்ணம் பாடஞ் சொல்வதில் வல்லவர். ஆங்கில இலக்கண இலக்கியம் கற்பிப்பதிலோ ஈடு இணையற்றவர். கல்வியையும் ஒழுக்கத்தினையும் மாணவர்கள் உதாசீனம் செய்யவிடக் கூடாதென்ற கொள்கையிலே பிடிவாதம் உள்ளவர். ஒழுங்கை நிலைநாட்டுவதில் மிகவுங் கண்டிப்பானவர். மாணவர்களுடைய நலன்களைக் கல்விக் கூடத்திலே கவனிப்பதுடன் அவர் திருப்தி அடைந்து விடுவதில்லை. வீட்டிலே கல்விகற்க வசதியற்ற மாணவர்களுக்காகத் தமது இல்லத் திலே இராப்பாடசாலை நிகழ்த்தி வந்தனர். வித்தியா பகுதியினர் தொழிற்கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்து கொள்ளாத அந்தக்காலத்திலேயே மாணவர்களைத் தொழிற்கல்வி பயிலும்படி தூண்டி அச்சுத்தொழிலும், புத்தகங்கட்டுந் தொழிலும் மாணவர் பயிற்சி பெறுவதற்குத் தெல்லிப்பழை ஆசிரிய பயிற்சிக் கூடத்திலே வசதிகள் செய்து கொடுத்த பெருமை இவரைச் சேரும்.
அக்காலத்திலே பள்ளிகளிற் கனிஷ்ட பாடசாலைத் தராதர வகுப்பு வரையுமே ஆங்கிலங் கற்கக்கூடியதாக இருந்தது. மேலுங் கல்விகற்க விரும்பிய மாணவர்க்குப் பிள்ளையவர்கள் பேருதவி புரிந்தார்கள். கைம்மாறு எதுவுங் கருதாது அம்மாணவர்களைத் தம் மனையில் வைத்துப் பாடங்கள் கற்பித்து, கல்கத்தா சர்வகலாசாலைப் புகுமுகப் பரீட்சைக்கும் (Entrance) கேம்பிரிஜ் சர்வ கலாசாலைக் கனிஷ்ட (unior), சிரேஷ்ட (Senior) தராதரப் பரீட்சைகளுக்கும் அனுப்பி வந்தார். அங்ங்ணம் பிள்ளையவர்களிடம் கற்று, கல்கத்தா சர்வ கலாசாலைப் பரீட்சையில் தேறியவருள் ஒருவர் திரு. க. இலங்கை நாயகம் அவர்களாவர். இவர் படித்துத் தேறியபின் பிள்ளையவர்களுடன் பல்லாண்டுகள் உடன் ஆசிரியராக இருந்து பின், மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக அமர்ந்து வாழ்ந்தார். கேம்பிரிஜ் பரீட்சைகளில் தேறியவர்களில் திருவாளர்கள் K. சின்னப்பா, N. சங்கரப்பிள்ளை, N. அம்பலப்பிள்ளை, K. மதியாபரணம், T.V. செல்லப்பா, N.கந்தையா,
xxxi

Page 18
A. கந்தையா என்போர் குறிப்பிடத் தகுந்தவர்கள். அவருள்ளும் திரு. K. சின்னப்பா அவர்கள், தமதாசிரியர் நிறுவிய கல்விக் கூடத்தின் அதிபராய்ப் பின் அமர்ந்து அவர் பணியைத் திறம்படத் தொடர்ந் தாற்றியமை ஈண்டு நினைவு கூரத்தக்கதொன்றாகும்.
தமிழி, ஆங்கிலக் கல்வி அபிவிருத்திக்காக உழைத்ததுடன் பிள்ளை அவர்களுடைய சேவை முற்றுப் பெறவில்லை. தேச நலனிலும் சமூகசீர்திருத்தத்திலும் அவருக்கு மிகுந்த சிரத்தை உண்டு. இந்தத் துறைகளிலே, புகுந்து பணியாற்றுவதற்கு வேண்டிய தகைமை களும் அவரிடம் இயல்பாகவே அமைந்திருந்தன. கவிதை புனை வதிலும், கட்டுரைகள் வரைவதிலும், கடல்மடை திறந்தாற்போலச் சொன்மாரி பொழிவதிலும் மிகத் திறமை வாய்ந்தவர். நாட்டின் நலனுக்குக் கேடுவிளைக்கும் குணக் கேடர்களையும், நவநாகரிகப் பித்தர்களையும் சமூகச் சீர்திருத்தம் என்ற போர்வைக்குள் நிகழும் பேதைமைகளையும், கவிதைகளாலும், கட்டுரைகளாலும், மேடைப் பேச்சுக்களாலும் பன்முறையும் பலமாகக் கண்டித்தவர். இந்த மும்முனைத் தாக்குதலுக்கு எதிர் நிற்க முடியாது எதிரிகள் ஏங்கித் திகைத்தனர்.
பதங்கள், கீர்த்தனைகள், கும்மிகள் ஆகியவற்றிற்கு இவள் காலத்திலே மக்களிடையே பெரிய செல்வாக்கிருந்தமையின் அந்தச் சந்தப்பாக்களிலே தமது கருத்துக்களைக் கூறினாற்றான் மக்கள் மனங்கொண்டு படிப்பர் எனக்கருதினர். இவர் புகுத்த விரும்பிய கருத்துக்களையும், கொள்கைகளையுந் தெரிந்து கொள்வதற்கு, இவரது கும்மிகளையும் கீர்த்தனைகளையும். பதங்களையும் ஒருமுறை புரட்டிப் பார்த்தாலே போதும்.
கிறிஸ்து மதத்தவராய் இருந்தபோது சமயச் சார்பற்றனவும் ஒழுக்கத்தை வலியுறுத்துவனவுமான கீர்த்தனைகள் பலவற்றைப் புனைந்தனர். அவையாவுந் தொகுக்கப்பட்டு ஆயிரத்துத் தொளா யிரத்து ஓராமாண்டில் இதோபதேச கீதரசமஞ்சரி என்ற நூலாக வெளியிடப்பட்டுப் பல்லோரதும் பாராட்டுதல்களுக்குப் பாத்திரமாயின. இதனைத் தொடர்ந்து ஆயிரத்துத் தொளாயிரத்து ஐந்தாம் ஆண்டிலே சகலகுணசம்பன்னன் என்ற நாடகம் வெளிவந்தது. ஏனையவை மூன்றும் - சிவமணிமாலை, யாழ்ப்பான சுவதேசக்கும்மி, எங்கள் தேசரநிலை என்பன அவர் சைவரானபின் பாடப்பட்டனவாகும். இவற்றுட் சிவமணிமாலை, சிவம் மணக்கும் செழுமையான கவிமலர்
xxxii

களைக் கொண்டு தொடுக்கப் பெற்ற ஏற்றமிகு எழில் மாலை. மற்றையவை இரண்டும் சீர்திருத்தக் கருத்துக்களைக் கருவாகக் கொண்டவை. புதுமை புதுமை யெனக்கூறி அந்நிய நாகரிகத்தில் மதிமயங்குவதையும், பழமை பழமை எனப்பகர்ந்து, பழந்தமிழர் பண்பாட்டை, பழக்க வழக்கங்களைப் பரிகசித்து ஒதுக்குவதனையும் கண்டு கொதித்த பிள்ளையவர்களினது உள்ளக் குமுறலின் வெள்ளப் பெருக்குத்தான் யாழ்ப்பாண சுவதேசக் கும்மியில் வரும் பின்வரும் அடிகளிலே தேங்கி இருக்கிறது:
சிற்சில் ஐரோப்ய பழக்க வருக்கஞ் சிறந்ததென் பதற்காட் சேபமில்லை முற்சிந் தனையின்றி நந்தேசா சாரங்கள் முற்றும் விடலாமோ.
O. O. எம்முள் நல்லாயிருக்கும் பழக்க வழக்கத்தை நாம்விட லாகாது.
பிள்ளையவர்களுடைய சமூகசீர்திருத்த மெல்லாம் இந்தக் கொள்கை அடிப்படையிலேதான் இயங்கியது. நமது பண்பாட்டினையும் கலாசாரங்களையும் பாதுகாக்க வேண்டும்; அந்நிய நாகரிகத்தில் அபிமானங் கொள்ளக் கூடாதென்பது அவருடைய அழுத்தமான அபிப்பிராயம். கசப்பான மருந்துகளை வைத்தியர்கள் சருக்கரையிலே பொதிந்து தருவதுபோல, கசப்பான உண்மைகளை ஹாஸ்யரசத்திலே தோய்த்துத் தருபவர் அவர்.
கொண்டைக்குப் பூச்சூடுங் குணம்போச்சு - நாடாக்
கொண்டு மயிர்முடிக்குங் காலமாச்சு தண்டையாத சரங்கள் தவிப்பாச்சு - பெண்கள்
சப்பாத்துள் நொண்டுமவ காலமாச்சு
மீசைமுக் கடியினில் தூசாச்சு - திகழ்
மேலாம் முகத்தே சசும்போச்சு ஆசையந் நியப்பொருள் மீதாச்சு .
இரவினிற் பிடிப்பது மின்சாரச்சூள் - பத்தியம் எல்லார்க்கு மாவது மோல்ற்றெட்கூழ்
de es e a sp - தேச பழக்க வழக்கமெல்லாம் மாறுதுபாழ்
xxxiii

Page 19
எங்கள் தேசறிலை இது என்று ஆடவரையும் அரிவையரையும் கிண்டல் செய்வதன் மூலம் விண்டு காட்டிவிட்டுச் சமயத் துறையைச் சாடுகிறார்:
பழஞ்சைவ சமயங்கை விடலாச்சு - ஒரு
பகிடிச்சை வமிங்கு வரலாச்சு.
ஆங்கில சைவமென் றொருசமயம் - இங்கு அரசியற் சைவமென் றொருசமயம் தாங்கள் பெருக்கவொரு சைவசமயம் - எனத்
தாபிக்கி றார்சில ரிதுசமயம்
பிள்ளையவர்கள் எந்த வகையில், எந்த அடிப்படைக் கொள்கைகளுடன் சமூகசீர்திருத்தஞ் செய்யப் புகுந்தார்கள் என்பதனைத் தெரிந்து கொள்ள இவ்வளவே போதுமானது.
திருமுறைகளிலே பிள்ளையவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. தேவார திருவாசகங்களை மனமுருகிப் பாராயணஞ் செய்பவர் அவர். *முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் மொழியும் பொன்னே போற் போற்றுவம்” என்ற வழிவழி வந்த மரபைப் பேணி நிற்பவர். அதனாலேதான் தேவார திருவாசகக் கனிகளின் கொழுஞ் சாற்றைத் தமது பாடல்களாகிய பாத்திரங்களிலே பெய்து விருந்தாடி அயரும்படி நம்முன் படைத்திட அவரால் முடிந்திருக்கிறது. சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர். "தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன்” என்ற திருவாசக அடிகளின் சாரத்தைச் சிவமணிமாலையில் வரும்,
தத்தம் சமயமொன் றேஉண்மை என்று தரனிதனில் நித்தம்பல் வேறு சமயிகள் வாது நிகழ்த்துகின்றார் எத்தலத் துஞ்சிவ மொன்றே யுளதென வெண்ணுைவரேல் சித்தப் பிரமையோர் காலுங்கொள் ளாரச் சிதடருமே
இதே போலவே, அப்பர் சுவாமிகளின் திருவங்கமாலையின் அழகையும்
இனிமையையும்,
*கண்ணிரண் டாலுன் திருக்கோயில் கண்டு களிப்புடனே எண்ணு நற்
பூசனை செய்து", *கைகளைத் தந்தனை கூப்பவும் சேர்த்த கடி
மலரால், வைகலும் நின்னை வணங்கவுமி”, “கால்கள் தந்தாய்நின்,
XXXίν

திருக்கோயில் சென்று களிப்புடனே சால வணங்கவும்” என வரும் இவர் அடிகளிலே தேறலாம்.
தமிழ்ச் செய்யுள் இலக்கணங்கட்கமைய ஆங்கிலத்திற் கவிதை கள் புனைவதும் அவர் வழக்கம். ஒருமுறை புகையிலையை உப யோகிப்பதால் வருந் தீமைகளைப்பற்றி நண்பர்கள் சிலருடன் சம்பாவழித்துக்கொண்டிருந்த பிள்ளையவர்கள் புகையிலையை உப யோகிப்பதால் வரும் தீமைகளைப் பொருளாக அமைத்து ஆங்கில வெண்பா ஒன்றைப்பாடி அனைவரைபும் அதிசயிக்கச் செய்தனர். அந்த வெண்பா வருமாறு:
Eyes will be spoilt activities destroyed Yea, truly all powers impaired - by daily Smoking or chewing Snuffing or in any way Making use of tobac co.
இது போலவே தெல்லிப்பழை உயர்நிலைப் பள்ளியின் வச்சிர விழாவின்போது பரிசில் பெற்றோரைப் பாராட்டு முகமாக அப்போது பிரபலமாயிருந்த தமிழ்க் கீர்த்தனை ஒன்றின் மெட்டிலே,
Let us congratulate the winners of awards
என்ற பல்லவியை உடைய ஆங்கிலக் கீர்த்தனையைப் பாடி பலரையும் பிரமிக்க வைத்தனர். இவ்விரு சம்பவங்களும் பிள்ளையவர்கள்பால் அமைந்திருந்த விரைந்து கவிபாடும் ஆற்றலையும், இருமொழிப் பாண்டித்தியத்தையும் எடுத்தியம்பும் எடுத்துக் காட்டுக்களெனலாம்.
பத்திரிகைத் தொழிலிலும் பிள்ளையவர்கட்குப் பலவருட கால அனுபவமுண்டு. உதயதாரகைப் பத்திரிகை ஆசிரியராக இருந்து அவர் ஆற்றிய தொண்டு யாவருமறிந்ததே. இந்துசாதனப் பத்திரிகையின் ஆங்கிலப் பதிப்பின் உதவியாசிரியராக மூன்று வருடகாலம் சேவைசெய்தார். இப்பத்திரிகையில் அவ்வப்போது இவர் எழுதிய கட்டுரைகளனைத்தும் கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கிலத் தினசரிகளினால் அனுமதிக்கப்பட்டு மறுபிரசுரஞ் செய்யப்பட்டன வென்றவொன்றே போதும், இவர் பத்திரிகைத் தொண்டின் உயர்ச்சியை உரைக்க.
XXXV

Page 20
தெல்லிப்பழையிலும் யாழ்ப்பாணத்திலும் சங்கங்கள் பலவற்றைத் தோற்றுவித்து அவற்றின் அக்கிராசனராகவும் அமர்ந்து ஆற்றிய தொண்டுகள் அளப்பில. தெல்லிப்பழை ஐக்கிய சங்கத்தின் முதற் செயலாளராவும் பின், துணைத் தலைவராகவும் ஆண்டு பலவாக அயராது உழைத்தனர். யாழ்ப்பாணச் சைவபரிபாலன சபை, ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம், தெல்லிப்பழை மஹாஜன சபை ஆகிய சங்கங்கள் அனைத்திலும் செயற்குழு அங்கத்தினராக அமர்ந்து ஆற்றிய தொண்டின் பெருமை எழுத்திலடங்குந் தகைத்தன்று.
தொல்லிப்பழையிலே புகைவண்டி நிலையம், தபால் நிலையம், மற்றும் பொதுநல ஸ்தாபனங்கள் அமைக்கப்படவேண்டுமென முதன் முதலில் எண்ணியவரும், அரசினருக்குப் பன்முறை எழுதி அவற்றை அமைப்பித்தவரும் பிள்ளையவர்களே.
இவர்கள் பழகுவதற்கினியவர். இனிய சுபாவமும் உயர்ந்த பண்பும் எளிய வாழ்வும் கொண்ட பிள்ளையவர்களைப் பண்புடையாளர் பலரும் தம் நண்பராக்கி நணி மகிழ்ந்தனர். மகாவித்துவான் சி. கணேசையர், தெல்லிப்பழை வித்துவான் ச. சிவானந்தையர், இ. முத்துக் குமாரசுவாமிக் குருக்கள், வித்தியாதரிசி தி. சதாசிவஐயர் ஆகியோர் பிள்ளை அவர்கள்பால் பெருமதிப்புக்கொண்ட தமிழ்ப் பேரறிஞராவர். வித்துவான் ச. சிவானந்தையர் தாம் சீவியவந்தராக இருந்த வரையும் தினமும் மாலை 4 மணியளவில் மஹாஜன ஆங்கில உயர்நிலைப் பள்ளிக்கு வந்து பிள்ளை அவர்களுடன் கலந்துரையாடிச் செல்வதைத் தம் வழக்கமாகக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் அதிபராக விளங்கிய வண.பாதிரியார் உவில்க்ஸ் என்பாரும், மஹாஜன ஆங்கில உயர்நிலைப் பள்ளி ஆரம்பித்த காலத்தில் நிறுவப்பட்டு எட்டாண்டுக் காலம் கடமையாற்றிய, பரீட்சகள் குழுவின் அங்கத்தி னர்களும் பிள்ளையவர்களிடம் பேரன்பு பூண்ட ஆங்கிலக் கல்வி மான்களாம். எனவே கற்றார் காமுறுங் கற்றாராகப் பிள்ளையவர்கள் பெருமதிப்புடன் விளங்கினரெனலாம்.
*தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவரின் வாய்மொழிக்
கிலக்கியமாகத் தோன்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பிள்ளை யவர்கள் ஆயிரத்துத் தொளாயிரத்திருபத் தொன்பதாம் ஆண்டு ஆணித் திங்கள் 24ஆம் நாள் இறைவனடி சேர்ந்தனர். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளரான பிள்ளையவர்களின் பூதவுடம்பு பொன்றிடினும் புகழுடம்பு பொன்றாது என்றும் நின்று நிலவு மென்பது உறுதி.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டு முலகு
XXXν

ക്രങ്ങാണു് കേlിഞ്ഞേ
பொருளடக்கம்
வெளியீeடுரை: திரு. லத. து. ஐயரத்தினம் iii
மதிப்புரை : பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை vi
வாழ்த்ரீரை : திரு. லயா. சுந்தரலிங்கம் X
வாழ்த்துரை : திரு. கே. விசல்வக்குணச்சந்திரன் xiii
அணிந்துரை : பேராசிரியர் அ. சண்முகதாஸ் Χίν
yasagang பதிப்புக்குழு Xνii
நூலாசிரியர் வரலாறு பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை XXίν
பொருளடக்கம் xxxvili
பத்திமலர்
1. சிவமணிமாலை 0 1 17 س
தேசியமலர்
II. யாழ்ப்பாண சுவதேசக்கும்மி 13 - 74.
காப்பு - 18
நூல் - 18
அவையடக்கம் - . . ; 19
கிருஷிகம் - 20
கைத்தொழில் - 25
கூட்டுமுயற்சி - 28
வர்த்தகம் - 29
கல்வி - 30
XXXνii

Page 21
இலங்கைக்கொரு சர்வகலாசாலை -
எங்கள் தாய்மொழி -
அடுவற் பாஷையின் அவலட்சணம் -
எங்கள் மாணவர் கற்கும் பெண்கல்வி - உத்தியோகம்ஆசிரியர் உத்தியோகம் -
வைத்தியம் -
விஷயங்கள் -
நியாயப் பிரமாணிக உத்தியோகம் -
எஞ்சினிருத்தியோகம் -
புகைப்படமெடுத்தலும் வேறு கலைகளும் -
இங்லிஷ் பெயர்களின் தகுதியின்மை -
எங்கள் கற்ற வாலிபரின் பழக்கங்கள்
எங்கள் புதிய ஸ்திரீகள் -
எங்கள் கால நிண்ணயமின்மை -
எங்கள் தொழிலாளரின் நேர்மையீனம் -
எங்கள் பழக்க வழக்கங்கள் -
কাgth =
விவாகமும் சீதனவழக்கமும் -
கயதேசத்தில் பணி -
தேக பலக்குறைவும் அதன் காரணங்களும் -
உடற் சீர்குலைவுக் காரணங்கள் -
தேசாபிமானம் - தன்னிஷ்டம் - மதுவிலக்கு -
arepaBDoñr
III. எங்கள் தேசநிலை
சாதி சமயம் (சைவநீதி) -
பழக்கம் : வழக்கம் (தமிழ்ச்சாதி -
சுதேசம் (நாடும் அரசும்) -
xxxvilii
37
41
43
46
47
48
48
53
56
57
57
59
61
67
69
75一82

சீலமலர்
IV. இதோபதேச கிதரசமஞ்சரி
காப்பு - தெய்வவணக்கம் - ஞானம் வேண்டல் - நற்குண நற்செய்கைகள் - உண்மை - தாய் செய்ந்நன்றி - நீதியின் தைரியம் - கோபம் -
சதிசெய்தல் - பொறுமை -
வழக்காடலினால் வருந்தீமைகள் -
கடன்படல் - தற்பொழிவு - மதுபானத்தின் தீமைகள் . மெய்யான சினேகம் - முகஸ்துதியின் மோசம் - கைக்கூலி வாங்குதல் -
சுற்றத்தவரை நீங்கும் பெருமை -
நன்றி - தமிழ்மாதின் பிரலாபம் -
தமிழ்ப்பாஷையின் மகத்துவம் -
அங்கிலோ கல்வி அவசியம் -
அங்கிலோ கல்வி தரும்படி மகன் கேட்டல் -
கழக சீவியம் -
தகப்பன் மகனுக்குச் சொல்புத்தி -
பெண்கள் கல்வி -
நகை போடுதலினால் வரும் நஷ்டங்கள் -
சீதன வழக்கத்தின் தீமைகள் - வாசித்தலின் இன்பங்கள் -
XXxix
83
83
85
86
87
89
91
93
96
98
99
101.
102
104
106
107
109
110
111
113
114
115
117
118
119
122
24
83一黛4焦

Page 22
சங்கீதம் -
தொழிலின் மான்மியம் -
தேகாப்பியாசம் -
சங்கீத மகத்வம் -
பணவாஞ்சை -
பொறாமை -
வீண்செலவு -
தாழ்மை -
இன்சொல் -
ஜீவகாருண்யம் -
F6
சூதாடல் -
கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தல் -
வருடாந்தத் துதி -
6 -
உணர்வுமலர்
V. தனிப்பாடல்கள்
தெல்லிப்பழை போதனா வித்தியாசாலை
மாணவரின் அரங்கேற்றம் -
யாழ்ப்பாணத்துக்குப் புகையிரதம் தந்த.
தேசாதிபதிக்கு. நன்றி கூறல் -
சென்னை கிறிஸ்தவ கல்லூரிப் பழைய
மாணவர் தின வாழ்த்து -
தெல்லிப்பழை கலாவிருத்திச் சங்கத்து
வருடாந்தக் கூட்ட வாழ்த்து -
ஆங்கில ஆசிரியர் மாசபை வாழ்த்து -
இராமநாதன் கல்லூரி மங்கல வாழ்த்து -
அளவெட்டி மதுவிலக்குச் சங்க
வருடாந்த விழாவிற் பாடிய பாடல்கள் -
தமிழாசிரிய மகாநாட்டு வாழ்த்துப்பா -
xl
125
126
127
128
129
13
132
133
134
135
137
138
139
140
141
142
143
且45
146 148
149
153
156
142二f61

தெல்லிப்பழை மகாஜன வித்தியாசாலை
இந்து வாலிபர் சங்கச் சுதேச கொண்டாட்ட கீதங்கள்
தெய்வவணக்கம் -
சாதியபிமான மகத்துவம் -
நாடகமலர்
VI. சகலகுணசம்பன்னன் (நாடகம்)
@ O
VII, பிறப்பாடல்கள்
திருமண வாழ்த்துக் கவிகள் ஞாபகக் கவிகள்.
VIII. dẾg5sya:FocşaFfluoGoñir
சாற்று கவிகள் முகவாசகம்
முகவுரை (தமிழாக்கம்)
157
158
f 62 - 237
23S-253
238
242
254 - 267
254
259
26

Page 23

sae! !!
| ------------------- : 瀨sae|-
------|- .----------------|- |-ae, !
|- |-, !!!!!!!!! No
...—-–) - . . . . .-- - . . . . .------------------------------------------------------------------------------------------------------------------------------------ |----- ---------|× ± •----
பாவலர்
அவரகள
till tiյն11
Li
திரு. தெ. அ. துரையப்பா

Page 24

பத்தி மலர்
affles? D/76D6D
காப்பு
அருணிறை யும்பரன் விக்கினம் யாவு மகற்றிடுமெய்ப் பொருளெனு மெந்தை கயமுகன் பாதப் புனிதமலர் தெருணிறை பத்தி யுடன்பணிந் தேகவி செப்பலுற்றேன் கருணை நிறையக் கணபதி முன்னின்று காப்பதுவே.
நூல்
நித்திய நின்மல நிட்கள மாகி நிராமயமாய்ப் பத்திசெய் வோரித யத்தி லுறையும் பரசுகமாய்ப் புத்தி மொழியிவைக் கெட்டாத வானந்த பூரணமாய்ச் சித்துரு வாயொளி ரீசனை நாம்துதி செய்குவமே. 1.
எங்கும் பிரபை யியல்பொரு ளேயென் னிருதயத்திற் றங்கியுள் ஞான வொளியருள் வாயிந்தத் தாரணியிற் பங்க மிகுந்தவஞ் ஞானாந்த காரம் பரிதிமுன்னே காங்கு லகல்வது போல்நீங்கி நன்மை கதித்திடவே
0.

Page 25
điоралi Gапоo
தேனே கரும்பின் தெளிவே சுவைமிகுந் தெள்ளமுதே தானே தனக்கு நிகரா யொளிருந் தயாநிதியே மானேர்நன் னோக்கி யுமையா ஞடனுறை மாணிக்கமே
கோனே யருளுன் னொடுநான் கலக்குங் கொடையெனக்கே.
நீராய் நிலநெருப் பாய்வெளி யாய்நிக மும்வளியாய்ச் சீராய்ப் பிரபஞ்ச முற்றும் வியாபிக்கும் தெய்வசத்தாய் ஏராய் விளங்குஞ் சிவனே யெனக்குன் னினியவருள் தாராய் கொடும்பிற விப்பிணி நீங்கித் தகைபெறவே.
ஜம்புல னாற்றங் கரைமர மாயிங் கலைதலுற்றேன் எம்பெரு மானெனை யாளுடை யாயெற் கிரங்கியுன்றன் செம்பொற் பதத்தின் சரணருள் வாயெத் தினமுமுனை நம்பிப் பிறவி யெனுங்கட னிந்தி நலமுறவே.
பூவினிற் சிற்றின்ப மாய வரங்களைப் புந்திமகிழ் மேவிட வேற்று னருளமு தத்தை வெறுத்தமயல் தாவுங் கடையவ னேனறி யாமை தடிந்தருள்வாய்
தேவருந் தேடி யடையாத ஞானச் செழுஞ்சுடரே.
பிறர்பொரு டன்னைப் பெறவாசை கொள்ளும் பெரும்பவம்வே ரறவென் னிதயத் தருள்புரி வாய்நின் னடியவன்யான் பொறுமை யுடனெனக் குள்ளன வற்றொடு பூரணமாய்
வறுமை யிலும்நிறை வாம்மனம் பூண மகாபரனே.
ஈன நிறைந்த தசைநீ ரிரத்த மெலும்பிவையா லான வழிவுறுந் தேகத்தைப் போற்றிநன் காதரித்து மேனலஞ் சேர்நித்ய வான்ம சுகத்தை வெறுக்குமெற்குன் ஞானம் புரிந்திடு வாய்தில்லை வாழ்சிவ நாயகனே.
4.
5.
7.
02

aude Drogo
என்னவென் னாளை யனுபவ மோவென வேம்பலிக்குஞ் சின்ன மனமிச் சரீர புலாதிக ளாற்றியங்கி நன்னலஞ் சேர்ந்திடு மான்ம சுகத்தை நலியவிடா துன்னரு டாபர னேயுனை யென்று முனர்வதற்கே. 9.
தாருவைப் பற்றுங் கிளையினைப் போன்றுன்னிற் றங்கிநிற்கும் நீர்மையி னேனைக்கை நீவிடி லோகெடல் நிச்சயமே ஏருறு முன்றன் றிருவரு ரூட்டி யெனைவளர்ப்பாய் சீருறு மாதுமை பாகா பவப்பிணி தீர்ப்பவனே. 10.
அல்லும் பகலுஞ் சிவசின்னம் பூண்டுபல் லாயிரமாய்ச் சொல்லுநற் றொண்டரின் தோத்திர கிதஞ் சுவையுடனே கல்லு முருக வறைந்து பரவசங் காண்பதுபோல் இல்லைமற் றோரின்ப மென்றே யுணர்ந்தன னீஸ்வரனே 11.
புண்ணிய மேநலம் தீவினை சற்றும் புரிவதற்கிங் கென்னணுவ தும்மிகு கேடெனுஞ் சிந்தை யெனிலிருந்தும் நண்ணுந்துன் மாயையி னாற்பவஞ் செய்து நலியுமெனைக் கண்ணிமை காப்பது போலின்று காகரு ணாகரனே. 12.
நாளுந் தொலைந்து பெலமுங் குறைந்து நலிவடைந்து மாளுஞ் சமய மெனக்குமுன் றோன்றி மறுபிறப்பை ஆளும் பலத்தை யருளியென் சீவ னகன்றபின்னர் நீளும் சுகாநந்தம் நீயருள் வாய்சிவ நின்மலனே. 13.
செல்வத்தை யாயினுஞ் சீர்த்தியை யாயினுஞ் சீவியத்தின் நல்லணு போக சுகங்களை யாயினும் நாடிவர வில்லையென் னாணவ மாமலம் நீங்க வெழின்மிகுசிர் துல்லிப மாயொளிர் தூய்மை புரியருட் சூரியனே. 14.
03

Page 26
đgsapawá Gапаоo
புண்ணிய பாவ மிரண்டே நிலைக்கும் புவியதனில் நன்னனும் பொருள்புக ழோநிலை யாவென நானறிந்தும் எண்ணில் முயற்சி புரிந்து நிதியுக முட்டுவதிற் கண்ணனுற் றலைந்துன் கதியிழந் தேன்சிவ காருண்யனே.
நோயென்ன செய்யுந் தரித்திர மென்செயும் நூறெனுமெண் னாய்வரு மின்ன லெனையென்ன செய்யு மறிமனமே சேயனின் மேற்கரு ணாநிதி யாய சிவபெருமான் நேயமென் னெஞ்சி னிறைந்தெந்த நாளும் நிலைத்திடவே.
தேடு முலகபல் செல்வங்க ளொன்றுமென் சீவனகன் றோடும் பொழுதுத வாவெனு முண்மை யுணர்ந்திருந்தும் நாடு மவைகளின் மீதாசை வைத்து நலிந்துழன்றேன் நீடுன் னருளினி யாவது தாசிவ நித்தியனே.
இருக்கும் நடக்கும் கிடக்குமெல் வேளையு மென்மனத்தை உருக்குஞ் சிவாய நமவெனச் சிந்தித் துலகமயல் அருக்குநின் னன்பெனு மானந்த மெய்த வருள்புரிவாய் திருக்கயி லாச புரிவாழ் சிவனெனுந் தேசிகனே.
சிவ னகன்றபின் னேயினத் தாருஞ் சினேகிதரும் ஆவென் றலறுவர் கண்ணிர் சொரிவ ரழுதழுது போவார் மயானந் தகனிப்ப ராங்கிந்தப் புண்னுடலைச் சாவின்பின் னேயெனக் கென்வே றுதவி தரவலரே
தாயு மெனைக்கை விடுவாள்சிற் போதுநற் றண்ணளிசேர் நேய மிகுந்தந்தை யுங்கை விடுவரிந் நீணிலத்தில் ஆய சினேகருங் கைவிடு வாரய லாரகல்வார் தூய சிவபெரு மானே நிதமுந் துணையெனக்கே.
15.
16.
17.
18.
19.
20.
04

dlai Dalíf (liotana.)
தீவினைக் கோர்சிறி தேனும் பயமின்றித் தீங்குநிறை பாவ விருதயம் போம்வழி செல்கின்ற பாவிகளை மேவ விடாதுயர் சாதுக்கள் கூட்டமும் மேனிலையும் தாவெனக் கென்றுந் தயாநிதி யாகிய தற்பரனே. 21.
காசினி லாயினுங் கள்ளினி லாயினுங் காமநிறை வேசியி லாயினு மாசைகொண் டேயுனை விட்டகன்று மோசத் திறங்க முடுகுமல் வேளையில் முன்னெதிர்த்துப் பாசங்கள் நீங்க வருள்புரி வாய்சிவ பாஸ்கரனே. 22.
பொற்பு மிகுஞ்சிவ புண்ணியஞ் செய்யும் பொழுதுமென தற்பு நிறையு மரும்பத்தி தன்னையு மாணவமாம் துர்ப்பல மொட்டிக் கெடுத்திடு தேயுன்றன் தூயவருள் சிற்பர னேதந்து காப்பாய்மெய்ப் புண்ணியஞ் செய்திடவே 23.
ஆலயஞ் சென்றென் அமலனைப் போற்றியென் னானமட்டும் சீலநற் பூசைகள் செய்தாலென் வேதங்கள் சீருடனே சாலவு மோதியு மென்பயன் சத்திய மாயிதய கோலங்கள் மாறிச் சிவமாத லிங்கு குறைந்திடினே. 2.
ஆசை கடலினு மாபெரி தத்தை யழிக்க வுன்மேல் நேசமொன் றேயன்றி மற்றுள தோவிந்த நீணிலத்தின் பாச மெலாம்வென்றுன் பாதாம் புயமிகு பத்தியுடன் பூசிக்குங் கிர்பை புரிவாய் பரசிவ புண்ணியனே. 2.
வஞ்சம் பெருமை பகைலோபம் மோகந்துன் மாச்சரியம் நெஞ்சந் தனிலொன்று வாக்கிலொன் றாக நிகழ்த்துகுணம் கொஞ்ச மெனினுஞ் சிவசிந்தை யின்றிய கோலமிவை எஞ்சி யழிய வெனக்கருள் வாய்பர மேஸ்வரனே. 26.

Page 27
đìñg560qMở đỡIrå090
காமப் பெருமய லென்னை மயக்கியென் கண்முனின்றுன் வாம நிறைசிவ ஞான வொளியை மறைக்குதையோ சேம மடைய மருந்தருள் வாய்முன் திரிபுரமும் காமனும் நீறு படச்செய்த வாசிவ காருண்யனே. 27.
அன்ன பணம்வத் திரதான மேழைகட் கன்புடனே சொன்னயஞ் சேர்புகழ் வேண்டா தகநிறை தூய்மையொடும் எந்நிலை தன்னிலு மீதல் கடமை யெனவுணரும் பொன்னித யந்தரு வாய்தில்லை மேவிய பூரணனே. 28.
பொன்னைப் புகழினை மங்கையர் தம்மைப் புவிதுதிக்கும் மன்னிகள் வாழ்வைத்துர் மாயை யெனவென் மனநினைந்தே உன்னிரு பாத மலரே சதமென் றுவகையுடன் சென்னியிற் சூட வருள்புரி வாய்சிவ தேசிகனே. 29.
கல்வியில் நாம்செல்வர் ஆஸ்தி தனிற்செல்வர் கண்ணியஞ்சேர் வெல்லு முயர்மர பிற்செல்வ ரென்றுபல் வீம்புசொலும் புல்ல ருலகிற் சிவநேசச் செல்வத்தைப் பூண்பவரே செல்வர்மற் றோரல்ல ரென்னுமெய்ஞ் ஞானந் தெளிகிலரே. 30.
ஒன்றுமில் லான்சிவ மானா லியாவு முளனெனவே நின்று நிலவு மகாசெல்வ னென்பதை நீணிலத்தீர் என்றும் நினைந்து சிவநேச மென்னு மிருநிதிய மொன்றேமெய்ச் செல்வமற் றெல்லாம் மயலென் றுணருமினே. 31.
வணங்குதெய் வங்கட்குப் பூசைக் ணேர்ந்துதம் மாயைகளுக் கிணங்கும் வரங்கள் பெறப்பார்க்கின் றாரிவ் விகத்துடனே பிணங்கும் பரமப் பெருஞான மாமுயர் பேறுபெறுங் கணங்கன வாயினுங் கானா ரினியென் கதியிவர்க்கே 32。
06

dlajuDel (D(re)o
நீடு சுகபெல மாயுள் கனஞ்செல்வம் நித்திலத்துக் கீடு சொலும்புத் திரர்வேனும் வேனுமென் றெத்தினமும் ஆடுகின் றிரவற் றாலுயிர் யாவுக்கு மன்புசெய்து வீடு பெறாவிடிற் காண்பி ரவைகள் வியர்த்தமென்றே. 83.
தருமஞ் சிறிதெனி லுஞ்செய்ய வேதுந் தருணமிலார் அருமன்பு செய்ய வனேக வழியுள வாக்களுக்குத் தருமொரு கைபிடி புல்லேனு மிட்டுத் தயைமொழிகள் வருமெவ ருக்கும் வழங்கிடு வாரருள் வாய்ந்தவரே. 3.
கர்த்த னரூபி யவனைநங் கண்கொண்டு கானரிதால் நித்தமு மெங்கட்கு முன்னடி யார்வர நேரிடும்போ தெத்தனை பத்தி யுடன்றானம் நாமவர்க் கீகுவமோ அத்தனை யுஞ்சிவ னுக்கே வழங்கிடு மன்பொக்குமே. 35.
ஆளுஞ்செல் வாக்குப் பணமுள்ள பேர்சில ராருமற்ற ஏழை களுக்கிடர் செய்து வருத்துவ ரெள்ளளவும் மீளுந் திறமையில் லாவவ ருக்குநல் வீரமொடெந் நாளுஞ் சகாயஞ்செய் தாலீச லுக்கதை நாம்செய்வதே 36.
தெய்வத்தி னாமத்தி னாலாடு கோழி திரள்திரளாய் உய்வித் தவற்றை யொருங்கு திரட்டி யுவகைவிழாச் செய்வித்து வாயொன்றும் பேசாவச் சாதியின் செய்யசிரங் கொய்வித்து வேள்விகொள் வார்சிவ நேசங் குறைந்தவரே. 7.
சிவநேச மாவ துயிர்நேச மாவதிச் சீர்குலைந்த பவநேச ருக்கிருந் தாலக் கொடும்பலி பண்ணுைவரோ தவநேசர் சேர்ந்தித் தறுகண் தொழிற்குத் தடைபுரிந்தால் சிவனே சகாயஞ்செய் வாரக் கொடும்பழி தீர்ந்திடவே. 88.
07

Page 28
சிந்தனைச் சோலை
எந்நேர முஞ்சுய வெண்ணமொன் றேயெண்ணி யெவ்விதத்தும் துன்னிர்மை யார்த்திடு மாயையி லாழ்ந்து சுகமிழந்து கன்னேர் மனத்துடன் காசினி நாளைக் கழிப்பவர்கள் பொன்னேர மாஞ்சிவ பூசையெவ் வாறு புரிகுவரே.
ஊனம் குருடர்சப் பாணிக ளாதி யுலகிலுள ஈன மிகுமாங்க ஹின ரியார்க்கு மியன்றபொருட் டானமெந் நாளு மனப்பூர்வ மாச்செயிற் சங்கரனும்
வானத் தவரும் மகாபுண் ணியமென வாழ்த்துவரே.
செய்திடு நன்மையி னாலிக வாழ்வுந் திகழ்கதியும் எய்திடு மென்னவிங் கிந்திடு புண்ய மெளியதுகாண் உய்திடு நாம்நற் செயல்செய் வதேநம் முயர்கடனாய்ப் பெய்திடு நன்மைய தேநமக் காகும் பெருந்தவமே.
இன்றைக் கிருப்பவர் நாளைக் கிருப்பரென் றேதுதிடம் என்றுமுன் னேசிவ ஞானிகள் கூறி யிருப்பதுபோல் பொன்றுத லெந்த நிமிஷமு மாமெனப் பூரணனை என்றும் நினைப்பவ ரஞ்சார் மரண மிதுநிசமே
இறவாது பாவ வுலகி லிருப்பதற் கிச்சைவைத்தே துறவா துலகத் துராசையுற் றோர்க்குத் துயர்பெரிதே பிறவா தடையும் வரங்கிடைத் தாலநூ பேரின்பமாம் மறவா தனவர தஞ்சிவ பாதம் வணங்குவமே.
அழியு முடலினுக் கன்னமிட் டாடை யணிகள்புனைந் தொழியு மலங்கிர்த மோயாமற் செய்வ ரொருகணமும் பொழியுஞ் சிவனருள் பூனா ரிவர்வினைப் போகவுடல் கழியும் பொழுதென் புரிவார் சிவகதி காண்பதற்கே.
40.
41.
2.
4.

đenoa upremao
பத்தி யுடையார் சிவாலயங் கட்டுவர் பாழடைந்த உத்தம கோயில் புதுக்குதற் கான வுதவிசெய்வர் சித்தம்வைத் தேசிவ வுழியம் பூசை தினம்புரிவர் இத்தகை யோர்சிவ னுக்கு முயிர்க்குமன் பீபவரே. 45.
ஐந்தாறு நாளையில் வாழ்வி தநித்திய மானதென்ற சிந்தா குலமின்றி யாணவங் கொண்டுபல் தீமைசெய்து பைந்தா ரணிசிவ பாதத்திற் பூசை பரிந்துசெய்யார் நைந்தா ரெனமரிப் பாரவர் பாடு நவிலலென்னே. 46.
மற்றெத் தொழிலுந் தருமின்ப மெங்கட்கு மானிலத்திற் பற்றுத் தருநிலை யாவின்ப முத்தம பத்தியுடன் உற்றுனைச் சிந்தித் தியார்க்குந் தயைசெய் யுவகையினைச் சற்றும் புகலரி தன்பு நிறைசிவ சங்கரனே. 7.
பாவம் எவற்றிற்குங் காரன மாகியிப் பாரினிலே சீவன் சுகம்பெலம் செல்வ மிவற்றைச் சிதைவுசெய்து மேவுங் கொடிய மதுவகை தன்னின் விருப்பகற்றி ஈவா யெனக்குன் றிருவரு ளென்று மிறையவனே. 48.
என்குண மோகெட்ட தெல்லா வகையு மிழிஞனென்றன் புன்குணம் யாவு மகன்றெ ரிைருதயம் பூரணமாய் நின்குண மாகவென் னெஞ்சி னிதமும் நிலைத்தருள்வாய் இன்குணம் யாவும் நிறைந்தொளிர் தூய விறையவனே. 9.
நாளை யெனக்கு நிகழுவ தென்னென்று நானறியேன் ஏழைபங் காள னெனுமீச னேயென் னிருதயம்நீ ஆளுவை யெந்த வமயமு மென்ற வருள்கிடைத்தால் வேளை யெதுவுஞ் சரியெனக் கென்று விளங்குவனே. 50.

Page 29
சிந்தனைச் சோல்ை
சற்றோ ரிமைப்பொழு தும்நீயென் னெஞ்சந் தனந்திடினோ சுற்று முலக துராசைகள் சூழ்ந்தெனைத் துன்புறுத்திப் பற்று மெனவறி வேனோய் விலாமற் பகலிரவாய் முற்றுமெ ஆறுள்ளுறைந் தாள்வா யிதய முழுமுதலே.
கற்றுப் பலகலை நூல்வல் லவனெனக் காசினியோர் உற்றெனைப் போற்றும் புகழாள னாக வொளிர்ந்திடினும் நற்றவ னென்னவுன் பாதார விந்த நயவணக்க மற்றவ னென்னிற் பயன்யாது மில்லையிங் காரணனே.
கள்ளே கதியென் றிராப்பக லாயதைக் காதலுடன் உள்ளே செலுத்தி யுளந்தடு மாறி யுலைந்துநிதம் சள்ளே புரிகின்ற முடர்முன் மாதிரி தாரணியில் கொள்ளேன் மதுச்சிறி தும்பரு கேனென் குருபரனே.
புத்தி மழுங்கி மதுபானஞ் செய்து புலன்றளர்ந்து மத்த ரெனக்கொடும் மாயையி லாழ்ந்து மயங்கிநிற்போர் பத்தி யுடனரன் பாத கமலம் பணிகுவரோ சித்தி யவர்க்கு மறுமையி லெப்படிச் சேர்ந்திடுமே.
எப்பாவஞ் செய்யினும் முன்னே மனத்தி லெழுந்ததொரு தப்பான துர்ச்சிந் தனையே யதனைத் தருவதென்ப திப்பாரில் யார்க்கு மனுபவ மாதலி னென்னிதயம் எப்போதுஞ் சுத்த முளதாக வையென் னிறையவனே.
எனக்கன்பு காட்டு மவர்க்கன்பு காட்டி யெனைப்பகைக்கும் மனக்குறை யுள்ள மனுஷர்க்கு வன்பு மகிழ்ந்துசெயும் சினக்குன நீங்கிப் பகைஞர்க்கு மன்பு செயுமியல்பை யெனக்கருள் வாய்சிவ ஞான வரோதய வீஸ்வரனே.
10
5.
፪ዓ_
53.
54。

daRD6 UDO
கேடு பிறரெனக் குச்செய்யும் போது கிளர்பகைகொண் டிடெனத் தீமை யவர்க்கெவ் விதமு மியற்றவழி தேடும் பகைக்குன மின்றி யவர்க்கன்பு செய்சுகுணஞ் சூடும் திருவரந் தாராய் சிவனெனுந் தூயவனே. 57.
வீணாய் நடக்கு மிடம்பங்க ளுக்கு வெகுபொருள்கள் நானா தளிப்பர் தருமஞ்செய் யாரறம் நல்குமின்பம் காணாரோர் போது மழியாத நன்மை கருத்திருத்தார் வானா ளிவர்க்கெதற் காய்க்கொடுத் தாய்சிவ மாபரனே. 58.
ஆரும் முகஸ்துதி பேச வவருக் கதிகபொருள் தேரு மறிவின்றி வீணாய்க் கொடுக்குந் தியாகமுள்ளார் சீரும் பெரும்புண் ணியப்பேறு மென்றும் திகழுநயம் சேருந் தருமஞ்செய் யாத தவர்செய்த தீவினையே. 59.
தேக சுகந்தனை யொங்கெங்குந் தேடித் திரிவர்பலர் ஒகை மிகத்தரு மான்ம ககத்திற் குகந்தவழி யாகுநற் சுேத்திரஞ் செய்யார் தரிசன மாசையெனும் மோகத்து ளாழ்ந்திருப் பாரவர் செய்திட்ட முன்வினையே. 60.
மார்க்கமெல் லாஞ்சுத்த சூனிய மென்று மமதைகொண்டு தார்க்கிக ராயுனை யில்லாப் பொருளெனச் சாதனைசெய் தார்க்குமஞ் ஞானமுண் டாக்குங் கொடிய வறிவிலிகள் பார்க்கு ஞறைந்திட வேன்படைத் தாய்தில்லைப் பாக்கியனே. 61.
எள்ளுக்கு ளெண்ணெ யெனவெவ் விடத்து மிருக்குமுனை உள்ளக் கமலத் திருத்தி யனுதின மோங்குபெரு வெள்ள மெனுமன் பொடுபூ சனைசெய்து வீடுபெறா தெள்ளுங் கயவர்க்கு வாழ்நா ளெதற்கென் னிறையவனே. 62.
11

Page 30
சிந்தனைச் சோலை
பதியா முனையெனை விட்டுப் பிரித்திடு பாசஞ்செயுஞ் சதியால் மனமிக வாடியுன் றுய சரண்களையே கதியா யடைந்தன னான்ம சுகம்பெறுங் காதலெனு நிதியாம் வரந்தரு வாய்தில்லை மேவிய நின்மலனே. 63.
ஆதியில் லாதமர் பாவவெந் நோய்க்கிங் கருமருந்தாய் ஒதுன் கிருபை யெனும்வர மேயெற் குறுதுணையிம் மேதினி மீதென நம்பி மிகவும் விழைந்ததையெப் போதும்பெற் றுய்யும் வரந்தரு வாய்சிவ பூரணனே. 64.
அல்லும் பகலும் பணம்பன மென்றது ராசைதனிற் செல்லுங் கயவர் சிவமாகுஞ் சிந்தை சிறிதுமின்றிச் சொல்லுமம் மாயையிற் கட்டுண்ணு வாரிந்தத் தொல்லுலகில் நல்லுயி ரென்ன வளரார் பரசிவ நாயகனே. 65.
மானிட சென்மத்தைச் சென்மங்கள் யாவுளு மாவளிதாய் ஞானிகள் கூறின ராயினும் நாணிந்த நற்பிறப்பில் தானந் தவஞ்செய்துன் னற்புத வானந்தத் தன்மைபெறா தீனப் பவங்களு ளாழ்ந்தேன் கிருபைசெய் யிஸ்வரனே. 66.
தெரிசனந் தன்னில் வருமுற வோரைச் சினேகிதரைப் பரிசன ரைச்சொர்ப் பனங்கண் டகமகிழ் பாவிநெஞ்சே அரியயன் தேடியுங் காணாச் சிவனைக்கண் டர்ச்சனைசெய்
துருகுங் கனாவி னனுபவ மேதுமுண் டோவுனக்கே. 67.
எத்தனை துர்ச்சிந்தை புன்மொழி தீவினை யெண்ணமின்றி நித்தம் புரிந்தெனை முற்றுங் கெடுத்திடு நீசனியான் பத்தி யுடனுன் பதம்பணிந் தேனென் பவமனைத்துஞ் சித்த மிரங்கிப் பொறுத்தெனை யாள்சிவ சின்மயனே. 68.
12

dalupe (DTOGO
பாவத்தி லேயுற் பவித்தேனுன் சிந்தனை பாவஞ்செய்கை பாவமென் சீவியம் பாவமுற் றாயெனைப் பற்றியவெம் பாவத்தின் துன்பம் பகரரி தாமிந்தப் பாரினிலென் பாவ முழுது மெரித்தருள் வாய்சிவ பாஸ்கரனே. 69.
இருளொளி சேரு மிடத்தொரு போது மிராததுபோல் அருளொளி சேருஞ் சிவமென் னிருளின் னகத்துறைந்தால் மருளொழிந் தன்பின் பிரகாச மெய்தி மகத்துவமாம் பொருளொளிர் ஞான நிலைபெறு வேன்பரி பூரணனே. 70.
நின்னைத் தொழுமன்பு நித்தமும் பூண்டக நெக்குருகிப் பன்னரு மெய்ச்சிவ பத்தியி னெய்து பயனெனவே முன்னர்நின் றொண்டர் நமனைச் செயித்த முறையதுபோல் நன்னய ஞான மெனக்கருள் வாய்சிவ நாயகனே. 7.
நித்திரை விட்டெழும் போதுனைச் சிந்தித்து நின்வரத்தைப் பத்தி யுடன்பெற்று நாளைத் தொடங்கிப் பரிவுடனே எத்தொழில் செய்யினும் நின்சிந்தை யாய்ச்செய்ய வெற்கருள்வாய் சித்தி நிறையும் பரிபூ ரணவருட் சின்மயனே. 72
சற்றுப் பொழுதுக்கு மாத்திர மின்பந் தருங்கொடிய சிற்றின்ப மாயையி லாழ்ந்து கலங்கித் தியங்குவனோ முற்றும் புனித மயமான ஞான முழுமுதலே பற்றுக்கள் யாவு மெனைநீங்க நின்னருள் பாலிப்பையே. 78.
மனத்திற் கதீத னெனும்பர னேமிக மாசுளதாம் சினத்துக் கிடங்கொடுத் துப்பாவஞ் செய்துபல் திங்கிழைத்தேன் தினைத்துணை யேனுநின் பேரன் பெனுநற் றிருவருள்தந் தெனைத்தய வாயடி மைக்கொ ஞறைந்தென் னிருதயத்தே. 7.

Page 31
df5858 DGrà Garraio60
தத்தஞ் சமயமொன் றேயுண்மை யென்று தரணிதனில் நித்தம்பல் வேறு சமயிகள் வாது நிகழ்த்துகின்றார் எத்தலத் துஞ்சிவ மொன்றே யுளதென வெண்ணுைவரேல் சித்தப் பிரமையொர் காலுங்க்ொள் ளாரச் சிதடருமே.
புத்தியி னுக்குச் சிறிதும் பொருத்தம் புகல்தலிலாச் சுத்த விழற்கதை தன்னையுண் டாக்கிச் சுருதிமொழி சத்திய மென்னநற் சாதுர்யத் தோடெங்குஞ் சாற்றிடுவார் சித்தஞ் சிவமெனு மெய்ஞ்ஞானந் தன்னிற் றெளிந்திலரே.
ஈசனொங் கொங்கு முறைபவன் சத்திய மொங்குமுண்டு நேசம் பெருகு நலஞ்செய்வ தேயிந்த நீணிலத்தில் பேசரு மிக்குயர் நோக்கமென் றெண்ணிப் பெருகுதயை வாச ரெனத்தெய்வ பத்தியிற் சிவித்தல் மாநலமே.
ஆரு மொருவர் சடுதியில் மாளு மமையமதில் சாருஞ் சுடலையில் ஞானமென் றொன்று சனங்களுக்குள் நேரு மதின்பலன் மாசிறி தென்றும் நிலையுளதாய்க் கூருஞ் சிவபத்தி யின்மா பெரும்பயன் கூறரிதே.
பற்றொன்று மின்றி முழுவதுஞ் சிந்தை பராபரன்மேல் உற்றிட வைத்தவ ரேசிவ ஞான வுவகைபெற்றோர் நற்றவ மோய்வின்றிச் செய்பவ ரேயுண்மை ஞானிகளாம் முற்று மவரை விசுவசித் தாற்பயன் முற்றிடுமே.
பெற்றவென் தேகத்தி னாலே வினைகள்' பெருக்கிநிதம் குற்றம் புரியுங் குணமுடை யேனைக் கொடுமயலாய்ப் பற்றி யலைத்திடும் பாவவெந் நோயறப் பண்பநந்தம் உற்றவ னேஉடை யானே யுதவுவை யுன்னருளே.
14
75
76.
.7ל
78.
79.
80.

கண்ணிரண் டாலுன் றிருக்கோயில் கண்டு களிப்புடனே எண்ணுநற் பூசனை செய்து பிறர்க்கன் பியற்றலின்றி மண்ணுறு மாயைகள் பார்த்து மயங்கி மதியிழந்து எண்ணில் கொடும்பவஞ் செய்தே னெனக்கரு ஸ்ரீஸ்வரனே. 81.
கைகளைத் தந்தனை கூப்பவும் சேர்த்த கடிமலரால் வைகலும் நின்னை வணங்கவும் தர்மம் வழங்கவுமே மெய்கருத் தோடுய ரான்மாவைக் கேட்டுள் மிகப்படுத்துஞ்
செய்கை நிதம்புரிந் தேனெனைக் காபவம் தீர்ப்பவனே. 82.
கால்கள் தந்தாய்நின் றிருக்கோயில் சென்று களிப்புடனே சால வணங்கவு மான்ம மனசடச் சற்கருமஞ் சில முடன்செய் திடவா யினுமவை தீங்கிழைக்க ஞாலத்திற் பாவித்த பாவியை யாள்சிவ நாயகனே. 83.
போற்றுமெய்த் தொண்டர் புகல்கின்ற தோத்திரம் பூதலத்துள் நாற்றங்க ளாற்பழு தாகாமல் நாளும் நறுஞ்சுவையோ டேற்ற மிகும்பத்தி மான்களின் றுய விருதயத்தில் ஊற்றெடுத் துப்பரஞ் செல்லும் நதியினை யொத்திடுமே. 84。
ஈச னருளும்பல் சுத்தநல் லூண்க ளிகத்திருக்க மாசு நிறையும் புலாலை விரும்பி மகிழ்ந்தருந்து நீசப் பழக்க மெனிலில தாகவென் னெஞ்சினுளே நேச முயிர்களின் மீதே நிறைத்தரு னின்மலனே. 85.
மண்ணையும் விண்ணையுங் கட்டும்பொன் னானென மாநிலத்தில் எண்ணத் தகுந்திரு விண்ணப்பங் கேட்கு மிறையவனே நண்ணு மெனக்குன் றிருவருள் தாவுனை நாடொறும்நான் உண்ணினைந் தன்பினில் வேண்டுதல் செய்துன்னொ டொன்றிடவே 86.
15

Page 32
சிந்தனைச் சோலை
போகவிட் டுப்புறங் கூறாமற் பொய்புக லாமல்நெஞ்சு நோக வெவர்க்கு முரையாமல் கோள்துவ லாமலித மாக முகஸ்துதி பேசாம லிந்த வவனிமிசை யேக வருள்புரி வாய்தில்லை மேவிய விஸ்வரனே. 87.
கஞ்சா வபின்முத லாய பெருள்களைக் காசினியில் நஞ்சாய் மதித்தொரு நாளுந் தொடாமல் நலந்திகழும் பஞ்சாமிர் தென்னுநன் னிள நீர்பகப் பால்பருகி நெஞ்சார மாமகிழ் வெய்த வெமக்கருள் நின்மலனே. 88.
வட்டிக்குக் காசு வழங்கிப் பொருளை வளர்த்துமற்றோர் நட்ட மடைந்து நலியச் சுயநயம் நாடியருள் விட்டிய லுங்குணம் வேண்டாது நானவ் வினைதவிர்க்கச் சிட்டர்கள் போற்றுஞ் சிவனே திருவருள் செய்குவையே. 89.
ஊணி லுறுநல மொன்றே பெரிதென் றுணர்வுகொண்டு நாணின்றி யேபல நல்லூண் விதங்களை நாடியுண்ணு மாணில் தொழிலினை வாழ்நாட் குரிய மகாதொழிலாய்க் கானு மறிவிலி காளுயிர் போயென் கதியுமக்கே. 90.
ஆக்கிடு நியிங் கமைத்த தெனையென தானவமாந் தாக்கு மலத்தைத் தகிப்பதற் கன்றியித் தாரணியில் நாக்குக் கினிய நறிய வுணவுகள் நன்கருந்து போக்கினுக் கன்றென வெப்போதுஞ் சிந்தியென் பொய்ம்மனமே, 91.
ஆரும் வியக்கு மரிய மனத்தைநின் னாரணங்கள் தேரவும் நின்னை வணங்கவு மாநலஞ் செய்யவுமாங் காரண மாய்த்தந் தனைபர னேயதைக் கன்மவினை சேரும்வித் தாக்கின னாள்வா யெனைத்துய்ய தேசுறவே. 92.
16

நன்மைக்கு நீதந்த மற்றைய வங்காங்க ளாலுநவில் கன்ம மியற்றி யெனைக்கெடுத் தேன்காங்கை வேனியனே புன்மை யெனுநெறி மீதினில் யான்செலும் போக்கொழித்து நின்மய மாக்கு பரிபூ ரணானந்த நின்மலனே.
மோது வளியெனு மாசை மயல்தரு மோசமஞ்சிப் பேதுற் றலையும் பெரும்பாவி நான்றும்ய பேறுபெறும் ஏது வெனுமுன் றிருவரந் தந்தென் னிறையவனே ஏதுந் துராசை யிடர்ப்படுத் தாதரு ளென்றென்றுமே.
பன்னரு ஞானம் நிறையிசன் றொண்டரிப் பாரினிலே நன்னல மிக்கவிண் ணப்பம் புரிவரந் நாட்டமிலார் தன்னறி வற்ற மிருகத்தைப் போல்வர்தந் தற்பரனாம் மன்ன லுளனென் றறிந்து மவனை மறத்தலினே.
பலமே வியநித்தி யானந்த முர்த்தியைப் பாசமதில் அலையா தெனைத்தடுத் தாள்குரு நாதனை அன்புருவ நலமார் சிவாலய வாசனை யர்ச்சிக்கி னாடொறும்நாம் நிலையா கியவுயர் சாயுச்ய விடுற ரிைச்சயமே.
17

Page 33
(8.5afu I Ln6of
யாழ்ப்பான சுவதேசக் கும்மி
காப்பு
Galoos
பொன்னிறையாழ்ப் பாணப் புகழ்நாடு விர்த்தியடைந் திந்நிலமீ தோங்கி யிசைநிறைய - இன்னிசைசேர் இச்சுவதே சக்கும்மி யானியம்ப வத்திமுக அச்சுதனே தாவுன் னருள்.
நூல
தெல்லி நகரி லுதித்து வளருந் திருநிறை யுங்கலா சங்கமென்னும் மெல்லிய லுக்கிச் சுவதே சக்கும்மி விளம்பப் பரன்கழல் காப்பாமே.

(UTybùUNTEMNonaggå dibus
அவையடக்கம்
தேசோப காரங் கருதியிக் கும்மியைச் செப்புகின் றேனாத லாலெவரும் லேசாய் விளங்க இலகு தமிழில் இயம்புவ தேநலம் சங்கமின்னே. 2.
மிக்க அரும்பதத் தோடு புணர்ச்சி மிகுந்திடிற் கும்மி பொதுச்சனங்கட் (கு) எக்கால மும்விளங் காதத னால்நலம்
ஏது வருமடி சங்கமின்னே. 3.
கல்வித் திறனை யுலகோ ரறியக் கழறிட வில்லையிக் கும்மியையான் நல்வித மாகநம் நாடு திருந்த
நவிலுகி றேனடி சங்கமின்னே. 4.
ஆதலி னாலிதில் ராமா யணம்போல் அரும்பொருள் சொல்லழ கின்றெனவே மேதகு மாந்தர்தள் ளார்மனம் பூரித்து மெச்சுவர் நிச்சயம் சங்கமின்னே. 5.
கற்றோரும் மற்றோரும் இக்கும்மி யானற் கருத்தை யுணர்ந்துதே சானுகூலம் உற்றோ ரெனவிளங் கிவர வேகும்மிக்(கு) ஒரே யிலக்கடி சங்கமின்னே. 6.
எண்ணில் குறையிருந் தாலும் பெரியோர்கள். எள்ளாரெண் ணியிதன் நன்னோக்கம் புண்ணில்மொய் ஈக்களைப் போலக் கசடர்
புகல்வர் பலகுற்றம் சங்கமின்னே. 7.

Page 34
disamã Gama
கிருஷிகம்
லங்கா துவிபக்கிழ் மத்திய மேல்தெற்கென்(று) என்னு மிடங்களைப் போலவல்ல எங்கள்தத் றேசத்தி லாறு மலைகுளம் எங்கேனு வில்லையே சங்கமின்னே.
மற்றை யிடங்களைப் போலநம் தேயமண் மன்னுங் கொழுமை செழுமையில்லை நற்றகை யாய்க்கிர்வதி செய்தற் குரிய நலமொன்று மிங்கில்லைச் சங்கமின்னே.
அல்னும் பகனுங் கமக்கார ரானோர் அறைதற் கரும்பெருங் கஷ்டமுற்றுத் தொல்ைை யுறினும்நன் னிர்வள மின்றிச் ககைைட வதெங்ங்ண் சங்கமின்னே.
வானத்தை யென்றென்றும் அண்ணாந்து பார்த்து வருந்திடு மொங்கள் கமக்காரர் ானவன் ரிப்பயிர் செய்குவ தொங்ாங்ன் மதுமொழி சொல்லடி சங்கமின்னே.
காருண்ய மெத்திய எங்க ளரசார் கருத்துவைத் தேதேனு மோர்வகையாய் ஆரண்யம் போன்றவிந் நாட்டைச் செழிப்பித்தல்
நிர்மெத்த வுள்ள நிலாவரை தன்னை
பார்மெச்ச இந்ததன் னாட்டைதிர்ப் பாய்ச்சுதல் பண்பல்ல வோசொல்லு சங்கமின்னே.
20
10.
11.
12.
1S.

LNTyüJuma fiagardi dubul
நீர்வள மில்லாக் குறைமாத் திரமன்று நீடுமற் றுங்குறை எங்கள்கமக் காரளி லுண்டு கமம்பலன் செய்யாத
காரண மோபல சங்கமின்னே. 14.
சீர்திருத் தம்மிக மேலாமிக் காலத்திற் செவ்வையா கும்பல் கருவியுண்டென்(று) ஆரு மறிவர் பிரயோகி யாத (து) அறியாமை யல்லவோ சங்கமின்னே. 15.
கோணற் றடியி லிரும்புக்கூ ரொன்று கொழுவிய தையோர் கலப்பையென்ன நானமின் றிக்கொள்ளச் சீர்மிகு மாந்தர் நகைக்கிறார் ஐயையோ சங்கமின்னே. 6.
மண்ணைக்கீழ் மேலாக மாற்றாது கம்மா மறுப்படுத் திக்கிறு மோர்கருவி எண்ணத்தி னாலுங் கலப்பையே யென்ன
இயலாத நூதனம் சங்கமின்னே. V 17.
மேன்மை யுறும்விவ சாயநூல் தன்னில் விளங்கும் பிரதான உண்மைகளின் பான்மையை நன்குணர்ந் துகமஞ் செய்யிற்
பயன்மிக வாராதோ சங்கமின்னே. 18.
எங்கள்தே சத்தினுக் கேற்ற புதுப்பயிர் இன்னின்ன என்பதை நன்குணர்ந்து பங்கமில் லாம லவற்றைச்செய் தால்நற்
பயனுறா தென்பையோ சங்கமின்னே. 19.
2

Page 35
6fhö8saEDGô GB69maRDGID
கைப்பொரு எரின்றிப் பலகமக் காரர் கடும்வட்டிக் குக்கடன் செட்டியிடம் எப்படி யும்பெற் றனுபவிக் குங்கஷடம்
இம்மட் டெனலாமோ சங்கமின்னே. 20.
செய்யுங் கமத்தின் வரும்படி யோகடன் தீர்க்கவும் போதா தெனிலவர்க்கிங்(கு) உய்யும் வழியென்ன வோஜய கோளங்கள்
உள்ள முருகுதே சங்கமின்னே. 21.
கற்றவ ரெத்துணைப் பாக்கிய ராயினுங் காதல் கமத்தினிற் சற்றுமிலா (து) உற்றிடு முத்தியோ கம்வேனு மென்றவர் ஓடித் திரிகிறார் சங்கமின்னே. 22.
ஏட்டினிற் கிர்வதிக மேமிக மேலென்(று) இயம்புமெள வைதிரு வள்ளுவர்சொல் பாட்டி லுணர்ந்தும்ப ரீட்சைசெய் யாது பதுங்கித் திரிகிறார் சங்கமின்னே. 2
இப்படி யேகமக் காரர் நிலைமை இயம்பற் கரிய பழுதுளதால் எப்படி யுங்கிர் ஷிகத்தைந யஞ்செய்தல்
எங்கள் கடனடி சங்கமின்னே. 24.
புண்ணிய வாளன்சேர் ஹென்றி பிளேக்எனும் பூபாலன் கிர்ஷிகத் தையுயர்த்த எண்ணிச்செய் தயிர யாசை நலம்பெற
ஏற்ற உதவிசெய் சங்கமின்னே. 25.
22

LuTubüJUGran Gardosadh dotibus
இங்கனு கூலம் பெறவழி யில்லா திருக்குங் கமக்காரர் முன்னேறித் தங்கள் நயத்திற்கு வன்னிப் புறஞ்செல்லல் சத்திய மாய்யுக்தி சங்கமின்னே. 26.
போயவர் ஆங்கு குடியேறி மிக்க
புத்தியு டன்கமஞ் செய்தேற
நேய மிகுமர சார்தயை செய்குதல் நீதியென் றோதடி சங்கமின்னே. 27.
கோப்பிநற் றேயிலை சின்கோன வாதிய குன்றில் வளரும்ப யிர்நிகராய் யாழ்ப்பானந் தன்னில் வளர்ந்து பலன்தர யாதொன்று மில்லையோ சங்கமின்னே. 28.
ஆகாப் புகையிலை தன்னையே செய்தலி னால்வரு மேபெரும் நஷ்டம் நம்முர்க் . . . . . . . . . . . . . . . . . . . assTU600 6D6L605
................... &Frilaslóalj Geor. 29.
AsibLDU öFTÜöfurt ................
56rppā 65iuä asīts..................... செம்மை யுறுமொரு வரைநிய மித்தல் சிறப்பல்ல வோசொல்லு சங்கமின்னே. 30.
ஆங்காங் கிவர்சென்றித் தேசமெங் கெங்கும் அதிக விருத்தி கிருஷியினில் ஓங்கி யுறநன் முயற்சிசெய் தால்நலம் உண்டாகா தோசொல்லு சங்கமின்னே. S1.
23

Page 36
  

Page 37
சிந்தனைச் சோலை
மேலைத்தே யங்களின் மேலாம் நிலைக்கங்கு மேவிய பல்வகைக் கைத்தொழிலே சால உதவியென் றாலெங்க ளுரில் தரித்திர மேறாதோ சங்கமின்னே. .
இந்திய தேயத்தி லேபல் பிரபுக்கள் ஏற்ற தொழிற்சாலை யேற்படுத்தி முந்தி நலம்புரி பான்மை யெமக்குநன் முன்மா திரியடி சங்கமின்னே. 45.
குண்டுசி ஊசி நெருப்புக்குச் சாதிய கூறரும் வேறுபல் வேலைகளால் விண்டுரைத் தற்கரும் மாநிதி சேர்த்திடும் விந்தையை என்சொல்வன் சங்கமின்னே. 46.
எங்கள்தே சப்பன மெள்வகை யாயும் இதரதே சங்களைச் சேருதலால் பங்கம் மிகுந்த வறுமை யெமையெட்டிப் பாராம லென்செயுஞ் சங்கமின்னே. 丛7。
புத்திகு றைந்தவ ரைப்புத்தி மான்கள் பொருந்தும் உபாயம்மிக் குள்ளவர்கள் எத்தலத் தும்வெல்வ ரென்றது போற்பிறர் ஏய்க்கிறா ரெங்களைச் சங்கமின்னே. 48.
பார்க்கப் பளிரென் றிலங்கும்போ லிப்பொருள் பற்பல ாேயிங் கனுப்பிப்பணம் தீர்க்கமாடிச் சேகரிக் கும்பிறர் புத்தியைச் சிந்தனை செய்யடி சங்கமின்னே. 49.
26

biumaasaadi abs
அன்னிய தேசத் திருந்திங்கு வந்தெங்கள் ஆவனந் தன்னில் வகைவகையாய் மன்னும் பொருள்செல்வ மன்னியர் தேடும் வழியென் றுன்னடி சங்கமின்னே. 0.
கைத்தொழில் செய்பவர் தங்க ளுடைநடை காட்சிக்கு நன்றன் றெனச்சிலபேர் பித்தம் பிடித்தவர் போலிகழ்ந்து தள்ளல் பேதைமை யல்லவோ சங்கமின்னே. 51.
கட்டுத் தலைப்பாவும் மீசையுஞ் சட்டையும் கைத்தொழி லாளர் சரீரங்களில் ஒட்டிக் கிடக்கமாட் டோமென்று சொல்லுமோ உற்றுனர் வாயடி சங்கமின்னே. 5.
கல்விகற் றுநல்ல கைத்தொழில் செய்யிற் கனமோடி யெங்கு மறைந்திடுமோ நல்விலை யுள்ளவக் கல்விக் குளகனம்
நாளுங் குறையாதே சங்கமின்னே. 8.
அத்துவக்காத்துப் பிரதிவத் தருடன் ஆன கிளாக்குநொத் தாரிஸென்னும் இத்தகை வேலையிற் கைத்தொழில் தன்னினும் ஏது சிலாக்கியம் சங்கமின்னே. 5.
என்ன தொழிலையும் நேர்மை யுடனும் இயன்ற வலங்கிர்தத் தோடுஞ்செய்தால் பன்னரும் மேன்மை யதுவென யார்க்கும்
பகர்ந்திடு வாயடி சங்கமின்னே. 55.
27

Page 38
dligeadad Garrabo
கூட்டுமுயற்சி
செல்வமுள் ளபலர் நந்தேசத் திற்றம் திரவியத் தைமிக்க லோபமுடன் பல்வித மாகவே பூட்டியித் தேசத்தைப்
பாழாக்கப் பார்க்கிறார் சங்கமின்னே. 56.
கூடி முயற்சி செய்து சமுதாயங்
குலவும் பலவிங்கு தாபித்தவர் நாடிநற் கைத்தொழிற் சாலை திறத்தல் நலமல்ல வோஅடி சங்கமின்னே. 57.
ஒர்வ ரிருவர்செய் யக்கூடா வேலையை ஒன்றாய்ப் பலர்சுவடிச் செய்திடுங்கால் சீர்வதி யும்பலன் மிக்கவுண் டாயெங்கள்
தேசஞ் செழிக்குமே சங்கமின்னே. 58.
அவ்வகை யாம்நன் முயற்சிசெய் தாலெம் அரும்பொரு ளன்னிய தேசங்களுக் கெவ்வகை யாய்ச்செல்லு மிங்கே பெருகு மிதுநிசம் பாரடி சங்கமின்னே. 59.
கூலிவே லைதனைச் செய்து பிழைப்பவர் கொற்றவர் வேலைகட் கோடுபவர் சோலியில் லாமல்நல் வேலை பெறுவர்
சுகிர்த மதுவடி சங்கமின்னே. 60.
சிலை நெசவுகண் ணாடி கடதாசி தீக்குச்சோ டானி யெனும்பல்வகை வேலையு மிங்கு தொடங்கநஞ் செல்வம் விருத்தி யுறாதோடி சங்கமின்னே. 61.
28

gbüUmaagadobu
இப்போ திருக்குந் தொழில்களிற் றேர்ச்சிக ளெத்தனை யோபல செய்வதினால் செப்பரும் நன்மையித் தேச மடைவது திண்னமென் றோதடி சங்கமின்னே. 62.
பச்சடி யோடு கஷாயம் களியுளி பாணி வகைமுத லாமுணவு மெச்சிப் பிறர்விலை யாகக் கொளும்நல்ல
மேன்மையாய்ச் செய்யடி சங்கமின்னே. 63.
சாடிசெப் புப்பேணி தம்மில்நம் தேசத்துச் சாய்ப்புக ளில்விலை யாமுணவு மோடியி லன்றி ருசியிலெம் பண்டத்தை
முடமாட் டாவடி சங்கமின்னே. 6.
வர்த்தகம்
கைத்தொழிற் பாட்டையிம் மட்டில் நிறுத்திக் கருதிநந் தேசத்து வர்த்தகத்தைச் சித்தத்திற் சற்றே யிருத்திடு வாயடி தேசநன் மைக்காகச் சங்கமின்னே. 65.
ஈட்டும் பொருளிற் கவனமுள் ளாரென் றிசைக்கும்நாட் டுக்கோட்டைச் செட்டியரே வேட்டை யாடுகின்றார் நல்லாய்நந் தேச
வியாபார வேலையிற் சங்கமின்னே. 66.
விற்றிடு நெல்முத லாய்நம் மவருக்கு வேண்டிய பல்வகை யாம்பொருள்கள் மற்றத்தே சத்தவ ரேபலர் விற்கிறார் மாநஷ்ட மெங்கட்குச் சங்கமின்னே. 67.
29

Page 39
சிந்தனைச் சோலை
நென்முத லாய பொருள்விற்கச் சங்கங்கள் நேமித்து வர்த்தகஞ் செய்திடுங்கால் நன்மலி வாயுஞ்செல் வப்பெருக் காயும்
நமக்கு நயம்வருஞ் சங்கமின்னே. 68.
வந்திடு லாபப் பணம்நம் மவருக்கே வாய்த்திடு மாதலின் செல்வமிங்கே சுந்தர மாய்ப்பெரு கும்மெனு நன்மொழி
சொல்லவும் வேண்டுமோ சங்கமின்னே. 69.
இங்லிசார் பாலிக ளாதியர் போலவே எம்மவ ரும்பிற தேசஞ்சென்று எங்கும் வியாபாரஞ் செய்தா லெமக்குறும் லாபம் பெரிதாகும் சங்கமின்னே. 70.
கைத்தொழில் கிர்ஷிகம் வர்த்தக மாமுன்று காரண மேயெந்தத் தேசத்திற்கும் மெத்திடு செல்வங் கொணரு மெனுமுண்மை மீதுவிஸ் வாசம்வை சங்கமின்னே. 7.
மேற்சொன்ன முன்றினும் எங்கள் தேசறிலை மிக்ககி ழாகவே யெங்கள்செல்வம் காற்சதம் போலக் குறைவுற் றிருத்தல்
கவனிக்க வில்லையோ சங்கமின்னே. 72,
கல்வி
யாழ்ப்பாணி கள்கல்வி தன்னிலோர் கால்மிக ஏற்ற மடைந்தாசி யாவார்க்குள் நாப்புக முமருங் கீர்த்திபெற் றகதை ஞால மறியாதோ சங்கமின்னே. 78.
30

Tütmia alagodi dibus
மிக்கநன் மைகள்வி ளங்கு மமெரிக்க மிஷன்முன்னர் தந்த செமினாரி தக்க வுயர்கல்வி நம்மவர்க் கிந்து
தழைத்து வளர்ந்தது சங்கமின்னே. 7.
வட்டு நகர்ச்செமி னாளி யிறந்தபின் வாகா முயர்கல்வி மாகழுதை கட்டெறும் பானது போல மிகவுங்
கரைந்து குறைந்தது சங்கமின்னே. 75.
ஆங்கிலஞ் செந்தமி ழாமிரு பாடையும் ஜயந் திரிபற ஆங்குனர்ந்து ஓங்கு புகழுறும் பண்டித ராய்ப்பலர் உச்ச நிலையுற்றார் சங்கமின்னே. 76.
சென்னைச் சர்வகலா சாலை முதல்பி. ஏ. தேறினோ ரச்செமி னாரியராம் பின்னையக் காலக் கலாநிலை யைப்பற்றிப்
பேசுவா னேனடி சங்கமின்னே. 77.
சென்னையில் பீ. ஏ. கடந்த தவர்க்கொரு தேர்ச்சியென் றோதுதல் மாமடமை முன்ன ரவரிங் குறுகல்வி தன்னில் முதிர்ந்திருந் தாரடி சங்கமின்னே. 78.
அத்தனை மாட்சி யுறுஞ்செமி னாளி அருங்கலை பெற்றவப் பண்டிதர்கள் இத்தனை சூழ்ச்சி யுடன் பி. ஏ. ஆயின தென்னத்தி னாலடி சங்கமின்னே. 79.
31

Page 40
đồế56)}{Hở đỡtrū)60
ஆங்கிலம் மாத்திரம் பாஷை யளவி லடைந்தது கொஞ்சம் விருத்தியிப்போ தீங்குமற் றுங்கலை யெல்லாங் குறைந்த திதுதுக்க மல்லவோ சங்கமின்னே. 80.
காரண மென்னவென் றோர்ந்திடி னோவது காசுழைக் கக்கல்வி கற்றலுடன்
பூரண மாயறி வொன்றையே தேடாத புன்னெறி யாமடி சங்கமின்னே. 81.
பெற்றிடும் போதத்தை யுற்றுன ரார்கிளிப் பிள்ளைகள் போற்பாட மாக்கிடுவார் உற்றிடும் சோதனைப் பேறு விருதுக ளொன்றையே தேடுறார் சங்கமின்னே. 82.
சர்வ கலாசாலைப் பட்டங்கள் வாங்குதல் தக்கதன் றென்னநான் கூறவில்லை கர்வ மடைந்தத னோடு கலையேடு கட்டல் மதியீனஞ் சங்கமின்னே. 83.
சாதா ரணமாக யாழ்ப்பான வாலிபர் தாம்லங் கையின்மற்ற வாலிபரில் ஒதுங் கலாயுக்தி தன்னில்மே லானவர் உண்மை யிதுவடி சங்கமின்னே. 8.
சிங்கள ரோடு பறங்கியாம் வாலிபர்
தேற அனந்தம் வசதியுள எங்களின் வாலிபர்க் கோவவ ரைப்போல
இல்லை வசதிகள் சங்கமின்னே. 85.
32

LMTibüJUtan aardoor då dubus
என்றாலுஞ் சர்வ கலாசாலைச் சோதனை இன்னும் விசேட பரீட்சைகளில் பொன்றாப் புகழ்மற்றை யோரிலும் நம்மவர் பூணுகி றாரடி சங்கமின்னே. 86.
எத்தனை யோவச திக்குறை வுக்குளும் இத்தகைச் சித்திக ளெய்துபவர்க் கொத்த வசதிகள் வாய்ந்திடிற் பேறுகள் ஒதலும் வேண்டுமோ சங்கமின்னே. 87.
இங்கிலாந் தேயத்துக் கேகிக் கலைபயில் லங்கையின் வாலிபர் தங்களுள்ளே தாங்கும் புகழாளர் நம்மவ ரென்னற்குச் சாட்சியும் வேண்டுமோ சங்கமின்னே. 88.
இலங்கைக்கொரு சர்வகலாசாலை
மேலா முயர்தரக் கல்வியை யிங்ங்னம் மிக்க விருத்திசெ யும்பொருட்டுக் காலத்தே யெம்மர சாரிடம் சர்வ
கலாசாலை கேளடி சங்கமின்னே. 89.
ஆங்கிலம் லங்கையில் வந்தோர்துற் றாண்டுமே லாயிற் றெனினுமிங் கோர்சருவ ஈங்கித மாங்கலா சாலையு மில்லாத
தென்னவெட் கம்மடி சங்கமின்னே. 90.
கல்லூரி யின்தொகை யோபெரி தாங்குயர் கல்விகற் போர்தொகை யும்பெரிது நல்லொரு சர்வ கலாசாலை முன்னரே
நாட்டாத தென்னடி சங்கமின்னே. 91.
33

Page 41
சிந்தனைச் சோலை
என்று மிரவலிற் காரியம் பார்ப்ப தெமக்குமா நஷ்டமும் வெட்கமுமாம் வென்றி யுறுமோர் சருவ கலாசாலை
வேண்டு மெமக்கடி சங்கமின்னே. 92.
இந்திய சர்வ கலாசாலைச் சோதனை இங்கிலன் தேசப் பரீட்சைகளும் நந்திரு நாட்டுக்கு மிக்குப யோகத்தை நல்குமென் றோதடி சங்கமின்னே. 93.
எங்களின் மாணவர் தங்கள் குணங்குறைக் கேற்றதோர் சர்வ கலாசாலை துங்க முடனிங்குஸ் தாபனஞ் செய்யாத சூட்சமி தென்னடி சங்கமின்னே. 9.
பேரிந்தி யாவிற்பல் சர்வ கலாசாலை பேணி நிதங்கலை யைவளர்க்கச் சீருந்து லங்கையி லோவொன்று மில்லாத தீழ்ப்பை நினையடி சங்கமின்னே. 95.
இந்திய தேச மகாகல்வி மான்கட் கினையாம் மகான்களிங் கும்உதிக்க விந்தைச் சருவக லாசாலை யேமுதல்
வேண்டு மெமக்கடி சங்கமின்னே. 96.
எங்கள் தாய்மொழி
செந்தமி ழென்றிடு மெங்கள் சுயபாஷை சீர்குலைந் தேகவெப் பாலவரும் சொந்தமா யிங்கிலிஷ் தன்னையே கற்கிறார் துக்கமி தல்லவோ சங்கமின்னே. 97.
34

TiibüJUma haurà dibua
தன்னைப்பெற் றதமி ழன்னையை நீத்திந்தத் தாரணியி லிங்கி லீஷதையே பொன்னைப் பெறும்வழி யென்று படித்திடல் புத்தியோ சொல்லடி சங்கமின்னே. 98.
செந்தமி ழும்வேனும் இங்கிலி சும்வேனும் சேர்த்திவ் விரண்டையு மோர்பவரே புந்தி விரிந்து மகிழ்வர்தற் காலத்தில் புத்தி யிதுவடி சங்கமின்னே. 99.
செந்தமிழ் சற்று மறியாத வாங்கிலர் சீர்மை யிருந்திங்கு வந்தவர்போல் நந்தமி ழர்சிலர் செந்தமிழ் பேசிட
நானுகி றாரடி சங்கமின்னே. 100.
தஞ்சுய பாஷைப் பிரயோகந் தன்னிற் றடுமாறல் மாவெட்க மாயிருக்க கஞ்சி பெறும்வழி யென்றாங் கிலங்கற்றல் கண்ணிய மோசொல்லு சங்கமின்னே. 101.
சுத்த தமிழ்பேசமாட்டாப் பறங்கிகள் சோனகள் சிங்களர் ஆங்கிலேயர்க் கொத்த தமிழ்சிலர் பேசி விழிக்கிறார் உண்மை யிதல்லவோ சங்கமின்னே. 10.
சொன்னம் பெறும்வழி யென்றாங் கிலந்தன்னைச் சூழ்ச்சி யுடன்கற்றுத் தேர்ச்சியுற முன்னம் மொழிந்த தமிழ்பறந் தோடுமோ முடர் நடிப்படி சங்கமின்னே. 108. ,

Page 42
சிந்தனைச் சோலை
அருவற் பாஷையின் அவலட்சணம்
சீரி லடுவலிங் கிலிசொன்று சிற்சிலர் செவ்வையென் றெண்ணியே பேசுகிறார் பாரி லிதைப்போலக் கேவல மாமொன்று
பார்த்திருப் பாயோடி சங்கமின்னே. 104.
இங்கிலி சல்லது செந்தமிழ் மிக்க எழில்பெறு பூரணத் தோடுகற்றோர் பங்க முறவிப் படியடு வற்பாஷை பகருவ ரோசொல்லு சங்கமின்னே. 105.
கொஞ்சவிங் லீசுங் குறைந்த தமிழதம் கொண்டவ ரேபர விங்கிலிசு
கஞ்சியி னுக்குப் பயறிடல் போலக் கலந்து மொழிகுவர் சங்கமின்னே. 106.
தாமுமிங் லீசை யறிந்தவ ரென்ற
தகைபெற வேயில் வவலட்சண நாம முறும்பாஷை பேசுவோ ராற்றமிழ் நாளும் பழுதாகும் சங்கமின்னே. 07.
எங்கள் மாணவர் கற்கும் விஷயங்கள்
சொந்தத் தமிழ்தனைச் சாஸ்திரங் கள்தமைத் துரவிட் டுக்கிறிக் லத்தீன்தமை
விந்தை யுளவெனக் கண்டமட் டுக்கும் விழுங்கு கிறார்பலர் சங்கமின்னே. 108.

utgibüUraaagadi dubuó
ரத்தா சயமெங் கிருக்கென் றறியாத
ஈன மிகுந்தபல் வாலிபர்கள் லத்தீன் கிறிக்முழு முச்சாய்ப் படிக்கிறார் லாபமங் கென்னடி சங்கமின்னே. 109.
பஞ்சப் புலன்களை யும்பண் படுத்திப் பகரும் பொருள்களை யுற்றுணர்ந்து மிஞ்சுநல் லுண்மைக ளைப்பெற விந்நாட்டில் மிக்க வவசியம் சங்கமின்னே. 110.
ஏழு நிறங்களு மின்னின்ன வென்றுணர் வில்லாத பேரும் பலகலையில் நீளு மறிவுடை யோரென் றிருக்கிறார்
நிச்சய மீதடி சங்கமின்னே. 111.
என்ன அறியினும் புத்தக மொன்றையே ஏந்திக் கரத்தினிற் சப்பியுண்ணா துன்னத மாம்பரி சோதனை யாலும் உணர்த லவசியம் சங்கமின்னே. 112.
முருங்கை யடியினிற் சாத்திரங் கற்ற முழுமக ரைப்போல நம்முட்பலர் வருங்கலை தன்னிற் சுயவுணர் வின்றியே வாளா படிக்கிறார் சங்கமின்னே. 113.
பெண் கல்வி
பெண்கள் கல்விமுன் னிலும்பன் மடங்கு பெருகிப் பரவுதல் சந்தோஷம் வண்கலை கற்றிடும் பெண்களெம் வீட்டுக்கு
வாய்ந்தநல் ரத்நாங்கள் சங்கமின்னே. 114.
37

Page 43
flygsa Darð BarmaDaD
குண்டான் வழித்திடும் பெண்களுக் குக்கல்வி கூடா தெனச்சொன்ன தக்காலம் பண்டாய்ப் பறந்திடப் பெண்களெங் குங்கலை
பற்றுகி றாரடி சங்கமின்னே. • 115.
மட்டுக்கு மிஞ்சினால் எந்த விஷயமும்
மாநட்ட மேதரு மென்னுமுண்மை
தெட்டத் தெளியவெம் பெண்களின் கல்வியில் தேர்ந்திட லாமடி சங்கமின்னே. 110.
ஆண்களைப் போலவே பெண்களுக் குஞ்சரி யாக உயர்கல்வி வேண்டுமெனும் ヘる。 வீண்கதை யாற்சில பெண்கள் படும்பாடு
விள்ளற் கரிதடி சங்கமின்னே. 117.
பெண்க ளியல்பிற் பெலவீன ரென்ற பெருமுண்மை தன்னை யலட்சைசெய்து ஒண்கலை மிக்க அருந்திட லாற்றுயர் ஒதற் கரிதடி சங்கமின்னே. 118.
முற்காலக் கல்வி யுடலத்தை யிப்படி முற்றுங் களைத்திட வைக்கவில்லை தற்காலக் கல்வியி னாலே பலர்வேலை
சாய்கிறார் பாரடி சங்கமின்னே. 119.
ஆண்களுக் கேயிளைப் பைத்தரும் மிக்க அதிக படிப்பொங்க ளுரினிலே மாண்கலை கற்றிடும் பெண்கள் தமையொரு மட்டில் விடுமோடி சங்கமின்னே. 120.
38

- utributa aksei dibul
புத்திரர் தங்களைப் பெற்று வளர்த்திடப் போதும் பலத்தைப்பல் புத்தகமாம் வித்தையி லேபழு தாக்கி யில்வாழ்வில் மெலிந்து வருந்துறார் சங்கமின்னே. 12
இத்தகை யோர்தொகை யென்றும் வரவர ஏற விடமிருக் கும்மெனவே
மெத்தப் பயந்திதை யிங்கே யுனக்கு விளம்புகி றேனடி சங்கமின்னே. 122.
பாகநற் சாத்திரம் தேராத பெண்ணுக்குப் பாடம் வீசகனி தத்தேனோ தேக மனோசுக விர்த்திக் குரியவை
தேவை யவர்க்கடி சங்கமின்னே. 128.
ஆங்கிலஞ் செந்தமிழ்ப் பாஷைக ளில்நல் அரும்பெரும் நூல்களுள் வேண்டியவை பாங்குட னேபெண்கள் கற்றிட லிங்கித பாக்கிய மாமடி சங்கமின்னே. 12.
பெண்களு மாண்களு மோர்வகைச் சீவியம் பெற்றிட நேரா ததையுணர்ந்து கண்கள் நிகரறி வவ்வவர்க் குத்தக்க
காரணத் தோடறி சங்கமின்னே. 125.
வீட்டினிற் சீவிய மின்பம் நிறைந்து விளங்குதற் கேற்ற சுகிர்தகலை ஊட்டுதல் போதும் பீ.ஏ.எம்.ஏ. பட்டம் உதவாது பெண்கட்குச் சங்கமின்னே. 126.
39

Page 44
dfsgsendar GameDO
பாஷை திருந்து முயர்தர நூலும் பகர்கணி தங்கொஞ் சமிவற்றோ(டு) ஈசனைப் போற்று மறிவுமில் வாழ்வினுக் கேற்றன கானடி சங்கமின்னே. 127.
நற்சுவை சேரு முணவு சமைத்திடல் நாயகர் தங்கட் கிதம்புரிதல் சொற்சுவை சேருநற் பாக்கள் புனைதல் சுகிர்தம்பெண் கட்கடி சங்கமின்னே. 128.
வீட்டு நடப்பிற் குரியநற் சாத்திரம்
விள்ளும் வயித்திய சாத்திரமும் ஊட்டும் சமையலின் சாத்திர மும்பெண்கள் ஓதவேண் டும்மடி சங்கமின்னே. 129.
எல்லா மனுஷர்க்குந் தேவையாஞ் சாத்திரம் என்பவற் றின்முத லாமுண்மைகள் நல்லாய் ஸ்திரிகளுங் கற்றிட வேண்டும் நயமது பாரடி சங்கமின்னே. 星89。
தையல்பின் னல்சித்ரம் செய்யும் வகையொடு சங்கித சாகத்ய மாமுயற்சி மெய்யாலெம் பெண்கள்தம் வீட்டையின் பாக்க
மிகவுத விசெயுஞ் சங்கமின்னே. 13.
தேகம் பெலவீன மாகுங் கலைகளைத் தேடிடு தல்புத்தி யாகாது யூக முடன்தங்கட் கேற்றன வைத்தேடல்
யோக்யமெம் பெண்கட்குச் சங்கமின்னே. 132.
As

TybůUTeaagods albu
நற்கலை யும்வேணுைம் நற்சுக மும்வேனும் நற்குண மும்வேனும் பெண்களுக்கு கற்குமெம் பெண்கள்நற் புத்தியா யிம்முன்றும் காணவேண் டுமடி சங்கமின்னே. 133
உத்தியோகம்
கல்விக் கடுத்திட உத்தியோ கந்தனைக் காத லுடனிங் கெடுத்துரைக்கின் பல்வித மாங்குறை மிக்கவுண் டென்னப்
பகர்தல் சரியடி சங்கமின்னே. 134.
எங்கள் கலாசாலை தங்களி லேகலை என்றும் பயின்றிடும் மாணவர்கள் தங்கலை யானபின் யாதுதொ ழில்செய்வர் சங்கட மீதடி சங்கமின்னே. 135.
ஆங்கிலங் கற்குமெல் லாருக்கு முத்யோக மாக விடங்களெங் கேயுளவோ பாங்குட னேபலர் கைத்தொழில் கிர்ஷி பயிலுத லேவழி சங்கமின்னே. 136.
எந்த வகுப்பின ருந்தங்கள் பிள்ளைகட் கிங்கிலிஷ் கல்வி தனைப்பயிற்றி முந்திபுத் யோகப் பணம்பெற வேமுழு முச்சாக நிற்கிறார் சங்கமின்னே. 37.
தாய்த்தேச மாகிய இந்தியா சிற்சிலர் தங்களுக் குநல்லி டாங்கொடுக்கும் பேய்த்தன மாய்ச்சிலர் ஆங்குத் தியோகம் பெறக்கற் கிறாரில்லைச் சங்கமின்னே. 18.
41

Page 45
சிந்தனைச் சோலை
ராப்பக தூர்ழனி தாமோ தரம்பிள்ளை இன்னும் யூனிசெல்லப் பாபிள்ளைமன் லூயிவில் லியம்ஸ்ஹென்ஸ்மன் ஆதி நிபுணர்தம் யோகமெங் கேபெற்றார் சங்கமின்னே. 139.
சிங்கப்பூ ராதிய தேசத்துக் கும்பலர்
சீவனந் தேடியே ஒடுகிறார்
அங்குமுத் யோகம் பெறுத லினிமிக் கரிதென் றறியடி சங்கமின்னே. 10.
நற்றொழி லுக்குறும் சங்கையை யின்னுமெம் நாட்டினர் சற்று முனராமல் குற்றம தாய்ச்சில வேலைக ளேசெய்யக்
கோருகி றாரடி சங்கமின்னே. 141.
எல்லாரும் ராசாங்க உத்தியோ கந்தன்னில் இருந்ததி காரஞ் செலுத்திடவே நல்லாய் விரும்புகி றார்மறு வேலையை நாடுகி றாரில்லைச் சங்கமின்னே. 142。
சட்டைதொப் பியிட்டுத் யோககா ரரென்னச் சாற்றும் பெருமைமி கப்பெரிதென் றட்டியில் லாமல்நி னைக்கும் பெருமுட ராலே மிகுமோசம் சங்கமின்னே. i43.
தன்றகைக் குத்தக்க எந்தத் தொழிலையும் தன்னிஷ்ட மாகப் புரிந்துபணம் வென்றுநற் கீர்த்தி யுழைக்குங் கனமிக வேண்டுமெங் கட்கடி சங்கமின்னே. 144。
42

LsjbüUma aragö dibus
ஆசிரியர் உத்தியோகம்
மற்றெத் தொழிலினும் ஆசிர்ய ரின்தொழில் மான்மிய மாமென் றிசைத்திடினும் பற்றா தவர்வே தனம்ஆவெட் கக்கேடு
பட்டப் பகலடி சங்கமின்னே. 14.
இத்தனை கஷ்டம கோராத் திரம்பட் டெழிலுறு நாட்டைத் திருத்திவைக்கும் மித்திரர் தம்மைச் சரியாய் நடத்தாத மேதினி யீதடி சங்கமின்னே. 146.
என்ன தொழிலைப் புரிபவ ரும்முன்னர் இங்கிர்த வாசிர்யர் தங்கள்கையில் மன்ன விரும்வித்தி யாதானம் வாங்கிய
மாணவர் தாமடி சங்கமின்னே. 147.
எல்லாத் தொழிலுக்கு மின்றி யமையாத தென்றிடும் ஆசிர்ய ரின்தொழிலைப் புல்லாய் நினைத்துச் சிறங்கித்தல் நீதியோ புத்தியோ சொல்லடி சங்கமின்னே. 148.
லங்கா புரவரு மானத்தில் மிக்கதை
இங்கிலி கத்யோக ரும்பிறரும்
பங்காய்ப் பகிரவு பாத்திமார் பாடு
பரிதாப மாகுதே சங்கமின்னே. 149.
பேனையி னாற்கட தாசி யுழுவோர் பெருஞ்சம் பளங்கள ஆறுபவிக்க ஞானம் விதைக்குமு பாத்திமார் கூலி நவிலல்வெட் கம்மடி சங்கமின்னே. 50.
43

Page 46
சிந்தனைச் சோலை
போதனா வித்தியா சாலைக ளிற்கலை போதிக்கப் பெற்றபல் வாலிபர்கள்
a's60th GurrasstealD . . . . . . . . . . . . . . . . . . . . . .
LLLLLL LL LLLLLLLLLLLLL LL LLL LLLLLLL LL LLLLLLLL LL LLL LLL LLLLL LSL LLLLL LLLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLSL 151.
இங்கிலிஸ் கற்றுபி.ஏ. பெற்ற வருக்கும் எவ். ஏ. கடந்த தராதலத்தோர் தங்கட்குஞ் சம்பளம் ஐம்பது ரூபாக்கள் தானுமில் லையடி சங்கமின்னே. 152.
கல்வியை யாண்டுக ளாகப்பெற் றோரின் கதியது வாகக்கூ லிச்சனங்கள் வெல்வி யுடனிவ் வுபாத்திமார் தம்மினும் மிக்க வுழைக்கிறார் சங்கமின்னே. 153.
சம்பள முங்குறை வத்தொழிலை யிங்கு சாரும் மனுஷரும் தக்கோரல்லர் இம்பரில் வேறு தொழிலாள ரேயதை ஏற்கிறார் பாரடி சங்கமின்னே. 15.
நற்சம் பளமில்லைப் பென்ஷனில் லையிந்த நாட்டின ரின்னன் மதிப்புமில்லை எச்சன ருக்குமு பகாரஞ் செய்யும்
இனியர் கதியிது சங்கமின்னே. 155.
மற்றெப் பகுதியை யும்மர சாட்சியார் மாகவ னமாந டத்துகின்றார்
கற்கைக் குதவி செய்யிப் பகுதியில் கவனங் குறைவடி சங்கமின்னே. 156.
44

turbuumenaarasä albu
தக்கவர் தம்மையே ஆசிரிய ராகத் தருவித் தவர்தகுஞ் சம்பளத்தை மிக்க நயமாய்ப் பெறவொழுங்கு செய்தல் வேந்தர் கடனடி சங்கமின்னே. 157.
முப்பான் வருடங் களுக்குமேல் முன்னர் முறையென் றமைத்த உதவிக்கொடை இப்போதும் நீதியென் றத்தையே ஈகுதல் என்ன நியாயமோ சங்கமின்னே. 158.
அரிசி கறிமுத லெப்பொரு ஞக்கும் அதிகம் விலையேறி விட்டாலும் கரிசனை சற்றுமின் றிமுன்வீ தத்தையே கற்பிப்போர்க் கீகிறார் சங்கமின்னே. 59.
ஒவ்வோ ராண்டுமா சிரியர் சுமக்கும் உயர்ந்த சுமைகளை மென்மேலும் எவ்வகை யுங்கூட்டி நன்கொடை யைச்சற்றும்
ஏற்றுகின் றாரில்லைச் சங்கமின்னே. 160.
பாரத்தை மென்மேலு மேற்றியே மாட்டின் பசியைத் தனியா எசமானர்போல் வீரத் தொடுசுமை யேற்றுவோர் நன்கொடை வீதத்தை ஏற்றாராம் சங்கமின்னே. 16.
இவ்வகை யாமக்ர மத்தை மனேச்சர்மார் எள்ளள வேனுங் கவனிக்கிலர் செவ்வே மானேஜர் என்னும்பட்டங் கட்டித் திரிகிற தென்னடி சங்கமின்னே. 12.
45

Page 47
đјдара а батамо
தங்களுக் குக்கிழா சிர்யரா யென்றும் தகையாய்க் கடமை புரிபவர்க்காய்ச் சிங்கங்கள் போலெங்கள் மானேஜர் மார்சண்டை
செய்யாத தென்னடி சங்கமின்னே. 163.
ஆசிர்யர் மார்சங்க மொன்றும் மானேஜர்க ளானோர் சங்கமொன்று மாயிரண்டு தேசத்தி லென்றுமி ருத்தல கத்தியம் சேவையென் றோதடி சங்கமின்னே. 164.
வைத்தியம்
ஆங்ல வயித்தியங் கற்றெம் மவர்பலர் ஆளுகை யின்கி ழமர்ந்திருந்தும் ஈங்குதன் னிஷ்ட வயித்யம் புரிபவர் இல்லைப் பலரடி சங்கமின்னே. 165,
சீரார் சுதேச வயித்யந் தனைநற்
றிறமையு டன்பயின் றுபுரிய
ஏராரித் தேயத்த நேகருக் குநல்ல இடமதி லுண்டடி சங்கமின்னே. 166.
தக்க சுதேச வயித்தியந் தனது
தகைமுழு துமிழந் துபழுதாய் மிக்க மரியாதை கெட்டுக் கிடத்தல்மா வெட்க மெமக்கடி சங்கமின்னே. 167.
எங்கள் சுதேச வயித்தியத் தினல்ல இனத்தில் மருந்து தனக்குநிகள் அங்லோ வயித்தியந் தன்னி லுளதென் றறைகுவ ராரடி சங்கமின்னே. 168.

tangbuUta orangga di dibusi
திய வெளிச்சல் பொறாமை சுயநட்புச் செய்யுங் கொடுமையி னால்நம்மவர் ஆய கதேச வயித்யம் அதனை
அழிய விடுகிறார் சங்கமின்னே. 169.
செல்வப் பிரபுக்கள் பற்பலர் சேர்ந்தொரு சீர்மரு வுஞ்சங்க மேற்படுத்தி
நல்ல சுதேச வயித்யக் கல்லூரி
நடத்தல் நலமடி சங்கமின்னே. 70.
நியாயப் பிரமாணிக உத்தியோகம்
கற்றோர் தொடருமுத் யோகத்து ளென்றுங் கதிக்கும் நியாய துரந்தரரின் முற்றொகை யொவ்வோர் வருடமு மேறல் முழுநய மோவடி சங்கமின்னே. 7.
கோடு முழுதுந் தரணிமா ராலே
குழுமிய தென்னி லவர்க்குரிய
பாடு மிகவும் பரிதாப மென்று
பகரவும் வேண்டுமோ சங்கமின்னே. 172。
தந்தொழி லுக்குத் தகுதியில் லாருந் தகைமை நியாய துரந்தரராய்
வந்திட லென்றும் மதியின மாக வருகிறார் மென்மேலுஞ் சங்கமின்னே. 17,
கொள்ளும் வரும்படி யின்றெனி னும்மனக் கோதைய ரால்நல்ல சீதனத்தை அள்ளும் புன்னோக்கத் துடனே தரணிக ளாகிறார் சிற்சிலர் சங்கமின்னே. 74.
47

Page 48
fgabaă Canaba
எஞ்சினிருத்தியோகம்
இஞ்சினிர் வேலையில் நம்மவ ருட்பலர் இல்லை யதாலவ்வுத் யோகந்தனில் பஞ்சிப்பட் டெப்படி யும்பலர் சேர்ந்திடல்
பாக்யம தல்லவோ சங்கமின்னே. 175.
புகைப்படமெடுத்தலும் வேறு கலைகளும்
சித்திர வேலைப் புகைப்படஞ் செய்தல் திகழ்ந்திடு மின்சார எஞ்சீனியர் வித்தை யுடனிவை போன்ற கலைத்தொழில் வேண்டு மெமக்கடி சங்கமின்னே. 176.
பல்வேறு நல்ல நவமாம் பணிகள்
பயின்று கிரமத் துடன்புரிந்தால் சில்வேளை கட்குளெம் நாடு சிறந்தொரு சீமைபோ லாமடி சங்கமின்னே. 177.
செல்வ மிடமேவல் சேர்ந்தவள் புத்திரர் சீமையப் பான்முத லாமிடங்கள் துல்லிய மாய்ச்சென்று வேலை பழகல்
சுகிர்த மிகவடி சங்கமின்னே. 178.
ஒதும் நெருப்புக்குச் சாணி சவர்க்காரம் ஊசிகண் ணாடியி வைகள்செயும் மாதிரியைக் கற்றிங் கேதொழிற் சாலைகள் வந்து திறவடி சங்கமின்னே. 179.
எங்கள் தேசத்தி னுடைநடை பாவனை என்பன மாறுதல் மிக்கடைந்து தங்குபல் மாதிரி யிங்கு முலாவுமத் தன்மையைப் பாரடி சங்கமின்னே. 180.
48

Lmbüuren aagadå albus
சாதிக் குரிய ஒரேவகை யாமுடை தக்கது பின்னைப் பலவகையாம் பேத முறுமுடை பாவனை பாங்கு பிசகல்ல வோசொல்லு சங்கமின்னே. 18.
சிங்களக் கொண்டை சடையின் குடுமி திகைக்கச் செயுங்கர டிக்கிறிலோ டிங்கெவ் விதப்பல் வகைத்தலை மோடியும்
ஏகமு சாடுது சங்கமின்னே. 182.
எங்க ளுடையைவேண் டாமென்று தள்ளி இரவலா யாங்கிலர் தங்களுடை துங்கம தென்ன அணிகுதல் வெட்கமும்
துக்கமு மல்லவோ சங்கமின்னே. 183.
இந்துக்க ளாமெம்முன் னோரி னுடையினும் இங்கிலி சாருடை மேலாமோ
விந்தை யழகு வசதியி லெம்முடை மிக்க வுயர்வடி சங்கமின்னே. 18.
இங்கிலி சாருடை யிங்கிலி சர்க்கே யெழிலெங்கட் கோவ. தவலட்சணம் தங்கு சுதேசிக ருக்குச் சுயவுடை
தான்வடி வாமடி சங்கமின்னே. 185.
கற்றுத்யோ கம்பாாப்போர் நீண்டமேற் சட்டை காற்சட்டை யோடுசப் பாத்தணிந்து நற்றகை சேர்தலைப் பாகை யிடுதல் நலமென் றுணரடி சங்கமின்னே. 188.
49

Page 49
disapori Garoo
இந்திய மாதிரி யாய்த்தாறு கட்டி எழிலுறு மேற்சட்டை யிட்டதன்மேல் நந்தேய நற்றலைப் பாச்சோ டனிதலே நம்மவர்க் கேற்றது சங்கமின்னே.
வேட்டி யணிந்துமேற் சட்டை யிடுபவர் மிக்க வவசிய மாய்ச்சால்வை போட்டு வருதல்நஞ் சாதிக் கழகெனப் போதித்து வையடி சங்கமின்னே.
முற்காலத் தோர்தலைப் பாகை யணிதல் முறையென்ற தின்றிவெளித் தோற்றத்தில் தற்காலத் தோரஃ தில்லா மல்வெறுஞ் சாதிய ராகினார் சங்கமின்னே.
இந்தியா வின்பல பாகத்து மாசிய இங்கிலன் ஜரோப்பம ரிக்காவின் எந்தநற் சாதியின் மாந்தரும் தத்தமக் கேதோ அணிகுவர் சங்கமின்னே.
மேற்சொல் லியதேசப் பாலகர் தாமும் மிகவுங் கவனத் தொடுதந்தலைக் கேற்ற வேதோவிட நம்முர்ச் சிறுவர தின்றித் தவிக்கிறார் சங்கமின்னே.
முற்றுமங் லேய ருடையை இரவல் முழுமனத் தோடுபெற் றிட்டுவரும் கற்றவ ராலெங்க ளுர்க்குறு மீனங் கழற லரீதடி சங்கமின்னே.
187.
188.
189,
90.
191.
19.
50

unpuumaastassä Gabu
எங்களுள் தன்னிற் கலைகற்ற பெண்களுள் எத்தனை யோபலர் தாங்கணவர் தங்கள் நிலைக்குத் தகாத வுடைநடை தாங்கி நடக்கிறார் சங்கமின்னே. 198.
கெட்டிக்காப் புங்கொள்ளுங் காலட் டியலோடு கேட்கும் பலவுயர் வாம்நகைகள் அட்டியில் லாமற் கொடுக்கக் கணவர்கள் ஆர்வீட்டை போவரோ சங்கமின்னே. 19.
ஆண்மகன் சாதா ரணவுடை பெண்ணெனில் அட்டோலிக் கப்பிழம் பென்றுசொல்லும் வீண்மனை யாளுள்ள ஆண்மக லுக்கது
வேதனை தானடி சங்கமின்னே. 195.
அன்ன மவலட் சணவுடை மேல்மிக ஆசைகொள் பான்மை யதுபோல இந்நாட்டுப் பெண்கள் சிலரங்ல வேஷத்தை இச்சிக்கி றாரடி சங்கமின்னே. 196.
என்ன வுடுப்பெங்கள் பெண்க ளணிந்தாலும் இங்லி சர்கவுன் ஏற்காது
நன்னய மாஞ்சுய தேச வுடையே
நலமவர் கட்கடி சங்கமின்னே. 17.
பெண்கட்குப் போலவே பிள்ளைக ஞக்கும் பெருமவ லட்சன மாங்லவுடை ஒண்கவின் சேர்கய தேச வுடைதனக் கொப்பில்லைக் கானடி சங்கமின்னே. 198.
51

Page 50
dfsgspor Gor TsDGO
பாஷை யிரவலுத் யோக மிரவல் பகரு முடையு மிரவலென்றால் வேஷம் போட்டுநட னஞ்செயும் போலியர்
வேடிக்கை போலாமே சங்கமின்னே.
காற்சட்டை சப்பாத்தங் லேயர தென்றிடில் கவ்வை யதிலே மிகவுமில்லை மேற்சட்டை யுந்தலைப் பாகையு மெம்மை
விளங்கவைக் கும்மடி சங்கமின்னே.
காலத்துக் குத்தக்க கோலமா யிங்லிஷ் கார ருடையிற் சிலபொருள்கள் சீல மதாயெடுத் தாலுந் தமிழ்ச்சாதி தேர வணியடி சங்கமின்னே.
கட்டைச் சட்டையிங்லிஷ் தொப்பியீ தெல்லாம் கவனமா யிங்லிஷர் போலணிந்து மெட்டாய்த் திரிபவ ரையங்கி லேயர்
மிகவும் நகைக்கிறார் சங்கமின்னே.
எங்கள் சுயவுடை தன்னை விடுத்திங்கிலிஷ் என்னு முடையைத் தெரிவுசெய்தல் சங்கை மிகுமெம் முடையிழி வென்னற்குச் சாட்சிய தாகுமே சங்கமின்னே.
காட்டுத் தனத்தி லிருந்தசில் சாதிகள் கண்ய மிகுஞ்சீர் திருத்தமுற்று நாட்டுவர் தம்முன்னை ரோப்ய வுடையினை
நாமு மவர்களோ சங்கமின்னே.
52
199.
200.
201.
2.
20.
20.

LiibüUTxa alagadi dibus
இங்லிஷ் பெயர்களின் தகுதியின்மை
இங்லிஷ் நாமங்கள் நம்மவர்க் குள்மிக ஏராள மாக விருக்கின்றன தங்கம் நிகருந் தமிழுள்ள வெங்கட்குச் சங்கையி னம்மது சங்கமின்னே. 20s.
றைகஹன்ற் குக்சிமோல் காறல்நற் கின்ஸ்பரி லைமன் முதலிய வாங்கிலப்பேர்
உய்யுஞ் சிறந்த தமிழ்ப்பேர்கள் தம்மிலும் உச்சித மாமோடி சங்கமின்னே. 206
இந்தநா மங்களை முன்னர் செமினாரி எய்திடு மாணவர் தங்களுக்குச் சொந்த மெனமிஷ னாரிமா ரிட்டது சுத்தப் பிழையடி சங்கமின்னே. 20.
அந்தந்தச் சாதியைச் சேர்ந்தவர் நாமங்க ளாலவர் சாதி விளங்கிடுதல் விந்தை மிகுந்திடு நல்லழ கென்பது விள்ளவும் வேண்டுமோ சங்கமின்னே. 208.
பாரிற்பல் லாண்டுக ளாயிங்கி லீஷ்நாமம் பதிந்து வழங்கிவந் தோரவற்றைச் சீரற்ற வென்றுட னேவிட்டுத் தள்ளுதல் செப்பரு மாகஷ்டம் சங்கமின்னே. 209.
பத்திரந் தன்னில் விளம்பரஞ் செய்து பகருமந் நாமங்கள் தள்ளிடினும்
எத்திசை யுமந்த நாமங்க ளேயவர்க் கிட்டழைக் கும்சகம் சங்கமின்னே. 210.
53

Page 51
fligamad Garamu
ஆதலி னாலிளஞ் சேய்களுக் குப்பேர் அளிக்கும் பொழுது கவனமுடன் ஏதுங் குறைவற்ற செந்தமிழ் நாமங்கள் இட்டே யழையடி சங்கமின்னே. 211.
எங்கள் கற்ற வாலிபரின் பழக்கங்கள்
நந்தேசத் திங்கிலீஷ் கற்பதி னால்நவ நாக ரிகம்முறு வாலிபர்கள்
விந்தை மிகுமிந்துச் சாதி மரியாதை விட்டிட் டலைகிறார் சங்கமின்னே. 212.
முத்தோரைக் கண்டா சனம்விட் டெழார்நன் முறையாகச் சால்வைதோ ளாலெடுக்கார் காத்திருந் தன்போடி யார்க்கும் மரியாதை
காட்டா ரவரடி சங்கமின்னே. 213.
என்ன படித்தாலும் நல்ல மரியாதைக் கேற்ற குணங்களில் லாதவர்கள் பன்னரும் நன்மை யடைந்து செழித்தல்
பகரருஞ் சங்கடம் சங்கமின்னே. 21.
பெற்றாரு மாசிர்யர் மாரும் பிறரும் பெருங்கவ னமிவ்வி ஷயமதில் உற்றாவ லாய்மரி யாதையெம் வாலிபர்க்
கூட்ட லவர்கடன் சங்கமின்னே. 215.
எங்கள் புதிய ஸ்திரீகள்
கல்விகற் றிட்டசில் பெண்களிந் நாட்டினிற் காட்டும்முன் மாதிரி யைநினைக்க பல்வித மான பயங்களும் நெஞ்சிற் பல்கியுண் டாகுது சங்கமின்னே. 216.
54

Tybůjuma ahasardi dubuó
நாண்மட மச்சம் பயிர்ப்பென வான்றோர் நவிலு மரும்லட்ச னங்கள்சற்றும் புண்டில ராய்ச்சில் நவீனஸ் திரீகள் புரிசெயல் கேளடி சங்கமின்னே. 217.
ஆண்களுக் குந்தமக் குமென்வித் யாசமென் றார்க்கு மஞ்சாத வகந்தைகொண்டு விண்கங் கணங்கட்டும் பெண்களா லிந்நாடு
வெட்க மடையுமே சங்கமின்னே. 218.
வித்தி யாசமின்றென் றேயில் வகைப்பெண்கள் விள்ளுத லெத்துணை மாமடமை அத்தினம் மாபரன் ஆண்பெண் எனும்பேதம் ஆக்கிவைத் தாரன்றோ சங்கமின்னே. 29.
மாபரன் முன்னருண் டாக்கும்வித் யாசத்தை மாற்ற விவர்க்கதி காரமென்ன தாபர மற்ற விழலாந் துணிவுக்குத் தர்க்கமே துக்கடி சங்கமின்னே. 220.
புருஷர் குழுமி யிருக்குஞ் சபையிற்
புகழா லெழுந்துபந் யாசமழை வருவரிக்கப் பார்க்கும் ஸ்திரீகள் துணிவினால் வந்ததோர் வாதம்முன் சங்கமின்னே. 22.
தாரகை மீதினில் முன்னர் யாழ்ப்பான தரிசனன் செப்பு மொழிகளுக்காண் வீரமொ டுண்மை விளம்பிப் புகன்றது
வேடிக்கை யன்றோடி சங்கமின்னே. 222.
55

Page 52
dfligabará Goroso
ஆண்கட் கமல னருள்பல் தொழில்களை ஆண்களே செய்தல் தகையதுபோல் மாண்கவின் சேர்பெண்கள் தம்வேலை யேசெய்தல்
மாட்சியென் றெண்ணடி சங்கமின்னே.
மேலைத்தே சத்தில் நவீன ஸ்திரீகளால் மேவுந் தாறுமா றுகளனந்தம் வேலைத் துறைகளி லாண்களைப் பெண்கள் விழுத்தத் துணிகிறார் சங்கமின்னே.
பெண்கள் படித்தறி வெய்தியில் லங்களைப் பேணிக் கணவர்க் குறுதுணையாய்ப் பண்புடன் வாழுத லோவவர் வேலை பறித்திட லோசரி சங்கமின்னே.
எங்கள் கால நிணிணயமின்மை
இந்தநன் னாட்டினன் மாந்தரு ஞண்டோர் இழிவாம் பழக்கம. தென்னவெனில் எந்த விஷயத்தி லும்நேரம் தப்பி இயலுங் குணமடி சங்கமின்னே.
பத்து மணிக்கென்ற கூட்டம் சிலவேளை பன்னிரண் டுமணிக் கேதுவங்கும் எத்தகை யோரும்பிந் திப்பிந்தி யேவந் திருப்பரக் கூட்டத்திற் சங்கமின்னே.
நாட்பார்த்து நல்விவா கஞ்செய்விப் போருமந் நாள்போன பின்பேமங் கல்யங்கட்டும் யாழ்ப்பான நாடிதிற் காலத்தி னின்னயம் யாரிடத் துமில்லைச் சங்கமின்னே.
224.
227.
56

mbÜLJa aaa då dubul
எங்கள் தொழிலாளரின் நேர்மையினம்
எங்கள்நன் னாட்டினில் நேர்மை பொதுவா 6யழிலா யினுந்தொழி லாளர்தம்மில் இங்கிதஞ் சேருண்மை எள்ளள வுமில்லை
என்னசெய் வோமடி சங்கமின்னே. 229.
தச்சர்கொல் லர்சிற்பர் தட்டார் முதலிய சாதிகள் பொய்நித மாயிரமாய் அச்சமில் லாதறை யாவிடில் தந்தொழில் ஆகாதா காதென்பர் சங்கமின்னே. 230.
தேசத் திருக்கும் பெரியோ ரிதையொரு சின்ன விஷயமென் றெண்ணாமல் பேசரு மாவலா யிக்குறை தீர்த்தல் பெருங்கட னேயடி சங்கமின்னே. 231.
வேலைசெய் யெத்தொழி லாளனும் நேர்மை விலகி யனாப்பிப்பொய் சொல்லிவரும் காலையி லேநல்ல பாட மவனுக்குக்
கற்பித்து வையடி சங்கமின்னே. 232.
எங்கள் பழக்க வழக்கங்கள்
எங்கள்தே சத்துப் பழக்க வழக்கம் இழிவென நம்மவ ருட்பலபேர்
பங்க முறவவற் றைமுழுதும் விட்டுப் பரதேச ராகிறார் சங்கமின்னே. 23.
சீரார் கிறிஸ்த மதத்தைத் தழுவுவோர் செப்பிடுஞ் சாதியா சாரங்களை நேராகத் தள்ளிப் பறங்கிக ளாகுதல் நீதியோ சொல்லடி சங்கமின்னே. 234。
57

Page 53
đјорам Ватерао
ஆங்கிலே யரெமை ஆள்கின்ற சாதியார் ஆதலி னாலவர் தேசங்களில்
ஓங்கு பழக்க வழக்கங்க ளேமிக உச்சித மென்பையோ சங்கமின்னே. 235.
சிற்சில் ஐரோப்ய பழக்க வழக்கஞ் சிறந்ததென் பதற்காட் சேபமில்லை முற்சிந் தனையின்றி நந்தேசா சாரங்கள் முற்றும் விடலாமோ சங்கமின்னே. 23.
எல்லாவெந் தேசப் பழக்க வழக்கமு மினிதென நான்சொல்ல வில்லையெம்முள் நல்லா யிருக்கும் பழக்க வழக்கத்தை நாம்விட லாகாது சங்கமின்னே. 237。
சிற்சில் லுதாரன முன்றனக் கிப்போது செப்பி விளங்கப் படுத்திடுவேன் தற்சிறப் பாய்ச்சர்வ முஞ்சொல்ல விங்கு
சமய மெனக்கில்லைச் சங்கமின்னே. 238.
வீட்டினுக் குச்சாணி போட்டு மெழுகுதல் விள்ளுஞ் சவரஞ்செய் தால்முழுகல் நாட்டில்மற் றுஞ்சிலா சாரங்கள் தள்ளுதல் நன்மதி யோசொல்லு சங்கமின்னே. " 239.
தேக புனிதந் தனைப்பேண முன்னோர்கள் செய்தகட் டுப்பாடு மிக்குசிதம் ஆக விருப்பினு மவ்வழக் கங்களை அற்பமென் றெண்ணுறார் சங்கமின்னே. 20.
58

mbūt nabad abu
செத்தவீட் டால்வந்து வீட்டுக்குப் போகுமுன் தேகத் தொடுவஸ் திரத்தைமிகச் கத்திசெய் தல்வேண்டு மென்ற விதிகளைச் சோதித்துப் பாரடி சங்கமின்னே.
காலஞ் சென்றவந்த ஆளின் ரோகமுளை கால்மேல் தலைசீலை தம்மிலொட்டிச் சால விடர்புரி யாதுசுத் திசெய்தல்
தக்கதொன் றல்லவோ சங்கமின்னே.
அன்றியுந் துக்கத் தமிழ்ந்திய வீட்டை அடுத்துப்பின் னர்வீடு செல்பவர்க்கு நன்றுஸ் நானஞ்செய்த லாங்கதி னாலவர்
நல்லிளைப் பாறற்குஞ் சங்கமின்னே.
சாதி
சாதிபே தம்மாங்கி லேயர்க்குட் போலவே சற்றுக் கவனித்தல் குற்றமல்ல ஓதிடு மிக்க கடுரமாய்ப் பார்த்திடல் ஒரில் வெகுமோசஞ் சங்கமின்னே.
கிழ்சாதி யாரொரு போது முயர்ந்து கிளர்ந்த நிலைக்கு வருதலின்றிப் பாழா யிருக்க விடுதலெம் சாதியின்
பாதக மல்லவோ சங்கமின்னே.
வேளாள ரென்றிருப் போருநந் தேயத்தில் விள்ளற் கரும்பல் பிரிவினராய் மீளாப் பெருமை பிரிவினை கொள்ளல்
மிகுமோச மல்லவோ சங்கமின்னே.
59 -ــــــــــ۔۔
21.
242.
248.
244.
25.
20.

Page 54
சிந்தனைச் சோலை
ஒவ்வொரு வீட்டினுக் கொவ்வொரு சாதியாய் ஊரிற் பிரிவினை மெத்திடுங்கால் செவ்வை யுறுமைக்ய சந்தோஷ மெங்களைச்
சேருத லெங்ங்னம் சங்கமின்னே.
தாயினும் புத்திரன் தான்சாதி மானெனச் சாற்றிப் பெருமைகொள் எரிந்நாட்டில் நேயம் பெருகிநம் சாதியின் ஐக்கியம் நீடுதல் கூடுமோ சங்கமின்னே.
அண்ணனி லுந்தம்பி தான்சாதி மானென் றறைந்து திரிகின்ற விந்நாட்டில் என்ன வருமோவெக் காலத்தி லாயினும்
ஏற்றநல் லைக்கியம் சங்கமின்னே.
கல்யாணப் பந்தியு டன்மாத்ரம் நில்லாதெக் காலத்து முனிற் கலத்தலின்றிச் சொல்லரு மேட்டிமை கொண்டு திரிவது சுத்தப் பயித்தியம் சங்கமின்னே.
கண்டவி டெங்கனுந் தின்று திரிதலிக் காசினி யிலழ கென்றுரைநான் விண்டிட வில்லைச் சிநேகித ரைக்யம் விருந்தில்லா துய்யுமோ சங்கமின்னே.
சாப்பாட்டி லிவ்வள வாகச்சா தித்துவம் தாங்கி யிருந்திடிற் போலியதென் றாப்போல் மொழிகுதல் குற்றமா காதென் றறிந்துணர் வாயடி சங்கமின்னே.
60
27.
28.
249.
250.
251

UTöbüJUNTO Chagodi dubul
சாதியை ஒரே முறையினில் நம்மவர் தள்ளுத லோமிகு கஷ்டகரம்
நீதி யுடன்சிறி துசிறி தாயதை
நீக்குதல் நங்கடன் சங்கமின்னே. 2.
முன்னரொவ் வோர்சாதி யினுட்பி ரிவுகள் முற்றாக நீங்கப் பிரயத்தனம் நன்னல மாய்ச்செயி னல்லனு கூலங்கள்
நாளும் பெருகுமே சங்கமின்னே. 254。
ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவ ருஞ்சில உத்தம மாகுங்கொண் டாட்டங்களில் எவ்வகை யுமைக்ய மாகக்கொண் டாடிடில்
எய்தும் மிகுநலஞ் சங்கமின்னே. 255.
விவாகமும் சீதன வழக்கமும்
நந்தேச வாடவ ருட்பலர் மன்றலை
நாடும் பொழுது கவனமுறச் சிந்தைவைக் கும்பொருள் சீதன மென்பது செப்பவும் வேண்டுமோ சங்கமின்னே. 250
சாதியை யும்பெரி தாக மதிப்பவர் தங்கள் தொகையுங் குறைந்ததல்ல ஒதிடும் பெண்ணின் குணங்கல்வி கற்பிவை ஓரார் பலரடி சங்கமின்னே. 257.
மிக்க பெருந்தொகைச் சீதன மில்லாது
மேதினி யில்மண வாழ்விலராய்த்
துக்க முறும்பெண்கள் யாழ்ப்பான நாட்டிற்
றொகையா யிருக்கிறார் சங்கமின்னே. 258.
6

Page 55
éjsebará Gangbo
கோதில்தஞ் சாதியி லெள்ளள வேனுங் குறைந்த படியிற்றம் பிள்ளைகளுக் கோதும் விவாகஞ்செய் யமன மில்லா துலைகிறா ரேபலர் சங்கமின்னே. 259.
சுயதேசத்தில் பணி
பெற்றோரின் கோரப் பெருமையி னாலவர் பிள்ளைக ளிங்குப டும்பாட்டைச் சற்றா கிலுமந்தப் பெற்றோ ருணராத தன்மையைப் பாரடி சங்கமின்னே. 260.
செல்லு மிவருக்கு னவுமிவ் வூருக்குத் திரும்புஞ் செலவுமே ஈந்திடினும் நல்ல விளையாட்டங் கேயுழைப் போருக்கு
நஷ்டம தல்லவோ சங்கமின்னே. 261.
ஆரா யிருந்தாலும் ஏதோ பிரயாசை யாகத்தம் சீவியம் செய்குதலே சீரா யிருக்குமென் றவந்த உண்மையைத் தேர்ந்துணர் வாயடி சங்கமின்னே. 262.
மற்றோரைப் பிய்த்துப் பிடுங்கி வயிறு வளர்க்கத் துணியு மவரிலுமங் குற்றோர்க்குத் தானம் வழங்குவர் முடரென் றுய்த்துணர் வாயடி சங்கமின்னே. 268.
இங்கே யிருந்தங்கு செல்வோர்க்கு நற்பாடம் ஏற்ற படியோர் முறைகற்பித்தால் அங்கே யவர்பின்னர் செல்லத் துணிவாரோ ஆய்ந்துணர் வாயடி சங்கமின்னே. . 264.
62

LiibüUtara alagar då dubu
எங்களின் தேசத்தி லெத்தனை தோட்டங்கள் ஏதும் பயிரில்லா மற்கிடக்க இங்கவற் றையந்த வீணர்செய் தாற்பயன் எய்தாது போகுமோ சங்கமின்னே. 2.
சீர்திருத்த மெங்கள் ஊரிற் பெருகிடத் தீமைக ஞம்பல வுண்ணுழைந்து கோரத் துயரை விளைக்கின் றனவெனக் கூறிடல் குற்றமோ சங்கமின்னே. 266.
முற்காலத் திவ்வூரி னாண்களும் மற்றது முறையல்ல வென்று வெறுத்தனராய்த் தற்காலத் திவ்வூரின் பெண்களி லும்பலர் சாருகி றாரதைச் சங்கமின்னே. 267.
தேகபலக் குறைவும் அதன் காரணங்களும்
உலக்கை வரவரத் தேய்ந்து குறைந்தோர் உளிப்பிடி யாகுமத் தன்மையைப்போல் கலக்க முறவெங்கள் நாட்டினர் தேகங்
கரைந்து குறையுது சங்கமின்னே. 268.
எங்கள்பே ரன்பிட்டன் கொப்பாட்ட னாயினோர் எண்ணற் கரிய பலமுளராய்த்
துங்க மிகுந்திட காத்திர தேக
சுகிர்தமுற் றாரடி சங்கமின்னே. 269
முற்கால மாந்தர்க ஞண்டதும் செய்த முயற்சியும் மிக்க பலாங்கொடுக்கத் தற்காலத் தோரின் பழக்கமு முனுைந்துர்ச் சாபாங்க ளாகுது சங்கமின்னே. 270.
63

Page 56
đñđó")đưở đđträD60
சீவியந் தன்னில்நற் புஷ்டி வலிமை திகழு மிளமையில் நோயுளராய்
ஏவுந் தயிரிய மில்லாது போகும் இரக சியமென்ன சங்கமின்னே.
தேகாப்பி யாசக் குறைவு முனவதின் சீர்கேடுந் துர்ப்பழக் கவிர்த்தியும் ஆகா மேலைத்தேச நாகரி கப்பேறும் ஆயின காரணம் சங்கமின்னே.
உடற்சிர்குலைவுக் காரணங்கள்
உலக்கை வரவரத் தேய்ந்து குறைந்தோர் உளிப்பிடி யாகுமத் தன்மையைப்போல் கலக்க முறவெங்கள் நாட்டினர் தேகங்
கரைந்து குறையுது சங்கமின்னே
முற்கால மாந்தர்க ளுண்டதும் செய்த முயற்சியும் மிக்க பலாங்கொடுக்கத் தற்காலத் தோரின் பழக்கமு முனுந்துர்ச் சாபாங்க ளாகுது சங்கமின்னே.
நம்தேச மிக்கிளம் வாலிப ரீற்பலர் நானா வியாதிக ளால்வருந்திச் சிந்தையி லூக்கஞ் சிறிதுமில் லாது தியங்கித் திரிவதென் சங்கமின்னே.
உண்பது போலவே தேகாப்பி யாசமும் உண்மையாய் மானிட தேகத்திற்குத் திண்புவி யில்மிகத் தேவையொன் றென்பது திண்ணமென் றோரடி சங்கமின்னே.
64
27.
272
278
27.
275
276.

UbüJaadiobu
கொத்தி யுழுதுது லாமிதித் துக்கமங் கூறும் பலதொழி லும்முறையாய் நித்தமுஞ் செய்திடல் நந்தமக் கான நிதியென லாமடி சங்கமின்னே. 277.
முன்னோரைப் போலவே நல்ல வுணவும் முறையா யுடலுக்கப் யாசமும்நாம் எந்நேர முங்கைக் கொளில்நீ ரிழிவெம்மை எட்டியும் பார்க்குமோ சங்கமின்னே. 278.
நீரிழி வன்றிப் பலவேறு ரோகம்
நினைத்த படியிள மைப்பிராயத் தோரையும் பீடிக்குங் காரண மோர்ந்திடில் இளனுைம் பழக்கமும் சங்கமின்னே. 27.
இக்காலத் தோர்தேகா ரோக்கிய விதிகட் கியைந்த வுணவு களைப்புசியா தெக்கால முஞ்சொகு சோடு சுவையை இலக்காக வைக்கிறார் சங்கமின்னே. 280.
நல்வலி மைகொண்ட ஆண்வகை கள்தம்மை நல்கும் வரகொடி யல்குரக்கன் துல்லிப மாம்மர வள்ளிதம் வாய்க்குச் சுகமில்லை யாமடி சங்கமின்னே. 28.
நெல்லரி சிச்சோறு கோப்பிதே நீள்சுவை நீடும் பொரியல் கரியல்களே நல்லவை யென்றிடல் போலவ வற்றையே நாடுகி றாரடி சங்கமின்னே. 282.

Page 57
சிந்தனைச் சோலை
தானியம் யாவுளும் நெல்லி னரிசி
சவுரியங் குன்றிய தாயிருக்க நானில மீதில தையேயுட் கொள்பவர் நற்பெலாங் கொள்வரோ சங்கமின்னே. 28S.
உள்ள தையுங்கெடுத் தான்கொள்ளிக் கண்ணனென் றுாரார் வழங்கும் பழமொழிபோல் தள்ளிமென் மேலும்நற் சத்தை அரிசியின் சாதத்தை யுண்கிறார் சங்கமின்னே. 28.
நெல்லை யவித்திட நீங்குஞ்சா ரத்தொடும் நீரெனுங் கஞ்சி யுடனேயும் செல்லும் பலத்தின்பின் நெல்லரி சிச்சாதம் சேர்க்கும் பெலமெது சங்கமின்னே. 285.
எப்போது மோரே வகையா முனவை இலேசென வென்னிப் புசித்துவந்தால் தப்பாத ரோசிக முண்டாகு மென்பதைச் சாற்றவும் வேண்டுமோ சங்கமின்னே. 286
சோறுங் கறியுமே யென்றென் றுமிக்க சுகிர்தமென் றெண்ணிய வற்றையேயெவ் வாறும் புசித்து வருகிற் சுகபெலம் வர்த்திக்கு மோசொல்லு சங்கமின்னே. 287。
எக்காரி யத்திலும் போலவே யூனிலும் எத்தனை பல்வித மோவத்தனை மிக்க சுவையும் பிரீதியும் நன்மையும் மேவுமுன்ை பார்க்கடி சங்கமின்னே. 288.
66

LogbüJura alagardis auibus
சோறு கறியின்செ லவினு மிக்க சுருங்கிய காசைச் செலவுசெய்து ஆறு பத்துவகை யூண்களை நாம்நன்றாய் ஆயத்தஞ் செய்யலாம் சங்கமின்னே. 289.
தேகத்திற் சூடு கதித்தவிக் காலத்தில் தேகோப்பி யாம்சுடு நீர்களையே தாகத்தைத் தீர்ப்பதற் காகப்பா வித்தல் தகாது தகாதடி சங்கமின்னே. 290.
தேசாபிமானம்
தேசாபி மாணிக ளென்ன விருப்பவள்
தேங்கும்ப ரோபகா ரமுக்கம் பேசருந் தாழ்மையெ னுங்குணந் தம்மிற் பெரிதும் விளக்குவர் சங்கமின்னே. 29.
தம்பொருள் தஞ்சுகம் தங்கலை தந்தனம் தன்னளி யாய்ச்சுய தேசநன்மைக் கிம்பரில் விட்டிட நன்மனங் கொள்ளாதார்
என்னபி மானிகள் சங்கமின்னே. 292.
வாசால மாரி பலபேர் பொழிவர் வருங்கூட்ட மெல்லாஞ் சமுகமீவர் தேசானு கூலத்துக் காய்த்தமைச் சற்றுந் தியாகஞ்செய் யாரடி சங்கமின்னே. 293.
என்ன முயற்சிசெய் தாலு முதன்மை இலாப மிவற்றை மிகவிரும்பும் தன்னயா பேட்சிகள் செய்யு முயற்சிகள் தற்செய்யு மோசொல்லு சங்கமின்னே. 29.
67

Page 58
சிந்தனைச் சோலை
தேச நயந்தனக் காகப் பிரபுக்கள் சேர்ந்திடுங் கூட்டத்தி லும்முதலாம் ஆசனந் தன்னை அபேட்சித்து நிற்பவ ரால்நல மாகுமோ சங்கமின்னே. 295.
தங்கன மல்லஇந் நாட்டின் கனம்செல்வம் தங்களுக் கல்லவெம் நாட்டினுக்கென் றிங்கித மாயகோ ராத்ரம்பி ரயாசை
ஏற்பவ ராரடி சங்கமின்னே. 296.
யாழ்ப்பாண நாட்டினில் மேலா முயற்சிகள் இன்னுந் தழையாத காரணமோ தீழ்ப்பாஞ் சுயநய மிக்க விரும்பிடு சிந்தனை தானடி சங்கமின்னே. 297.
மெய்யான தேசாபி மாணிக ளாய்ப்பலர் மேவிட நாமிங்கு காணவில்லை ஐயோ விதுபெருந் துக்கமும் வெட்கமு மல்லவோ சொல்லடி சங்கமின்னே. 298.
இந்நாட்டில் மாத்திர மன்றுலங் காபுர மெங்கு மிதுவே பெருங்குறைவு தன்னயம் நாடாப் பரஉய காரிகள்
தந்தொகை பூச்சியம் சங்கமின்னே. 299.
அட்டதிக் கும்புகழ் காந்திம காத்மா அழியாத கீர்த்தி நவுறொஜியாம் இஷ்டரைப் போலிரு தேசாபி மானிகள் என்றிங்கு காணுவம் சங்கமின்னே. 300.
68

Erbůuroasorádbu
பாபு சுறேந்திர நாத பனர்ஜி
பகர்கொக்லெ மேதா திலக்முதலாம் ஆபர ணங்களிந்த் யாவைப்போ லிங்குறின் ஆகாத தென்னடி சங்கமின்னே. 301
சுப்பிர மண்ணிய ஐயர்ச ரோஜினிச்
சோபித மங்கை லஜபற்றிறாய் செப்புஞ்சா மிசிரத் தானந்தர் தாஸ்செய்த சேவையிங் கார்செய்வர் சங்கமின்னே. 02.
தன்னிவிடம்
தன்னிஷ்ட மென்னுங் குணம்நம் ஜனத்திற் றழைத்து வளர்ந்திடி னேபெரிதாம் நன்னிலை பெற்றெங்கள் நாடுய ரும்மென
நான்சொல வேண்டுமோ சங்கமின்னே. O
உத்தியோ கஸ்த ரதிகாரி கள்செல்வர் உற்றுச்செய் யுமக்ர மங்களுக்கு
நித்திய மும்பே ரடிமைக ளாக நிலைக்கிறா ரேபலர் சங்கமின்னே. 0.
தற்கணி சமில்லா தெத்தனை யோபலர் சார்ந்துத்யோ கஸ்தர்க்குக் கும்பிடுடன் நிற்கும் மரியாதை கெட்ட நிலையை நினைக்க வெட்கமடி சங்கமின்னே. OS
நீதிக்கன் றிமறு காரண மொன்றிற்கும்
நெஞ்சிற் பயஞ்சற்று மில்லாமல்
போதிய வான்மையு டன்வாழ லன்றோ
புருஷர்க் கழகடி சங்கமின்னே. 0.
69

Page 59
dfsadar GameDeID
ஆங்ல மொழியின் கருத்துப் படியே அரசவுத் யோகர்ச னங்களுக்குப் பாங்குறு முழிய ரென்று வழங்கிடு பான்மை யறியாயோ சங்கமின்னே. S07.
ஆகவே நாட்டின் பொதுவாம் சனங்கட் கடியவ ராகும்ரா சாங்கவுத்தி யோகரைப் போற்றிப் பணிந்திடு தலென்ன யோக்கியம் சொல்லடி சங்கமின்னே. S08.
உத்தியோ கர்க்குமுன் நடுங்கும் வியாதியில் வூரிலி ருந்ததி னும்விரிவாய்ப்
புத்தி மிகுந்து வரக்குறைந் துவரல் புண்ணிய மல்லவோ சங்கமின்னே. SO9.
எங்கள் பிரபுக்க ளுக்குத் தமைமற்றோர் என்றும் வணங்குத லேபிரியம் துங்க முடையவ ரவ்வேலை செய்யத்
துணிகுவ ரோசொல்லு சங்கமின்னே. S.O.
எங்கள்தே சந்தனில் எத்தனை யோபலர் ஏதுந்தொ ழில்புரி யாதுசும்மா சங்கை யுறும்பிச்சை யென்றுசொல் லப்படும்
தானம்வாங் குகிறார் சங்கமின்னே. 3.11.
ஒர்வன் பிரயாசை யோடுழைக் கவதை ஒன்பது பேர்கூடித் தின்னுமிந்தச் சீர்கெட்ட மாதிரி யெங்கட்கு விரின்னுந் தெரிகின்ற தேயடி சங்கமின்னே. 31.
70

LyngbüJUNTainas då du
வெட்கமில் லாது பிறரி னுழைப்பை
விரும்பித் திரியும் பழுததினால் உட்கணி சஞ்சற்று மில்லாது போறாரெம் முரார் பலரடி சங்கமின்னே. 1.
சொந்தச் சகோதர ராயினு மாங்கவர் சொத்தினிற் சிவித்தி டுங்குணம்மா நிந்தைய தல்லவோ இத்தைநல் லாக நினைத்துநீ பாரடி சங்கமின்னே. S1.
ஒவ்வோர் மனுடனுந் தன்சொந்தக் கால்தனில் ஓங்கி நிலைத்திட லேயுசிதம் அவ்வித மில்லாது மற்றோரிற் றங்கல் அழகல்ல வேயடி சங்கமின்னே. 815.
சிங்கப்பூர் கண்டி கொழும்பு முதலிய தேசங்க ளிலுத்தி யோகம்புரி எங்களி யாழ்ப்பான மாந்தரின் பாட்டினை எண்ணிநீ பாரடி சங்கமின்னே. 31.
பையும்பொ தியுங்கொண் டுபல வினர் பற்பல வேளைகளிற் றண்டலுக் குய்யும் வழியது வேயென்றும் சாகமாய் ஒடுகி றாரங்கு சங்கமின்னே. 317.
சொல்லும் வறுமையி னாலங்கொ ருமுறை சுற்றிக்கொண் டுவரப் போகிறோமென் றல்லும் பகலு மதுவேலை யாக
அனேகர் திரிகிறர் சங்கமின்னே. 18.
71

Page 60
đfigsaDaFå Barmado
செல்லு மிவருக் குணவுமிவ் ஆர்க்குத் திரும்புஞ் செலவுமே யிந்திடினும் நல்ல விளையாட்டங் கேயுழைப் போருக்கு நஷ்டம தல்லவோ சங்கமின்னே.
ஆரா யிருந்தாலு மேதோ பிரயாசை யாகத்தம் சீவியம் செய்குதலே சீரா யிருக்குமென் றவந்த வுண்மையைத் தேர்ந்துணர் வாயடி சங்கமின்னே.
மதுவிலக்கு
சீர்திருத் தமெங்க ளுரிற் பெருகிடத் தீமைக ஞம்பல வுண்ணுழைந்து திராத் துயரை விளைக்கின் றனவெனச் செப்பிடல் குற்றமோ சங்கமின்னே.
மதுபான மென்னுமம் மாநஞ்சை நம்தேச மாந்தர்முற் றாய்நீக்க லின்றியதை அதிகமா ய்ன்னும் பருகுங் கொடுமை அறைதற் கரிதடி சங்கமின்னே.
கள்ளொடு சாராயம் விஸ்கி விறண்டி கழறும்ஜின் பீர்அபின் கஞ்சாவென விள்ளும்பல் மஸ்துப்பா னங்களை நம்மவர்
வேண்டியே நிற்கிறார் சங்கமின்னே.
ஆங்கில பாஷையும் மீசையும் சட்டையும் அன்னிய சீர்திருத் தங்களுமிங் கோங்க வவற்றுட னேமது பானமும்
ஒய்யார மானது சங்கமின்னே.
3.19.
S20.
321。
$23。
32.
72

--LmbůUTa alagar då dubuso
முற்காலத் திவ்வூரி னாண்களும் மஸ்து முறையல்ல வென்று வெறுத்தனராம் தற்காலத் திவ்வூரின் பெண்களி லும்பலர் சாரு கிறாரதைச் சங்கமின்னே. 2.
அன்னிய தேசத்துக் கேகி யுழைக்கு மவரே மிகக்குடி தன்னையிங்கு உன்னத மென்னக் கொணர்ந்து பரப்புறார்
உண்மை யிதல்லவோ சங்கமின்னே. 32.
எங்கள்தே சத்திற் குடியால் வருந்தீமை யிம்மட் டென்னவிங் கியலாது சங்கங்கள் நாட்டியித் தீமையை முற்றும் தடுத்திடு வாயடி சங்கமின்னே. S27.
சாற்றுங் குடிவகைச் சாய்ப்புத் தவறனை தள்ளிய பின்னும்நம் நாட்டிற்பலர் நாற்றிசை யுங்கள வாயவை யுட்கொளல்
நாசம தல்லவோ சங்கமின்னே. 828.
மன்னுந் தவறனை யில்லாத போதும் மதுக்குடி யிங்கு பிரளயமாய் இன்னும் நடைபெறல் என்னநிர்ப் பாக்கியம்
யாதுசெய் வோமடி சங்கமின்னே. S29.
மதுவின் குதத்தை யெடுத்தும் மதுக்குடி வர்த்திக்கப் பார்த்துச்சும் மாவிருத்தல் பொதுநல வூழியர் தங்கட்கு நீதியோ புத்தியோ சொல்லடி சங்கமின்னே. 30.
73

Page 61
đбралi Gameo60
எல்லோ ரும்பிர யாசப்பட் டுமக எள்ளளவு மிந்தத் தேசத்திலே இல்லாது போகச் செயுங்கட னேயெம்
மிருங்கடன் பாரடி சங்கமின்னே. 33.
மதுவை முற்றாக வகற்ற வித்தேசத்தில் மாபாத காங்களொன் றுமின்றியே பொதுச்சனம் மேலவர் கிழவர் யாருக்கும்
புகலரு மாநன்மை சங்கமின்னே. $$2。
74

சமூகமலர்
எங்கன் தேசாநிைை
சாதி : சமயம்
(சைவநீதி)
என்ன அநியாயம் ஏதுதுர் மாயம்
எங்கள் தேசரநிலை வேறாச்சே
சொன்ன முறைகளெலாம் பாழாச்சே - எங்கள்
சுருதி அனுபவங்கள் வீணாச்சே 1.
தேசமெல்லா மங்லமய மாச்சு - எங்கள்
சிந்தைஐ ரோப்யவய மாச்சு நீச முறைமைகளே நிலையாச்சு - சைவ
நீதிக்குப் பங்கம்வர லாச்சு. 2.
சாதியில் லையென்று போதிக்கிறார் - சாதி
தம்மாலா னமட்டும் சாதிக்கிறார்
நீதிகள் போதங்கள் வாதிக்கிறார் - சைவ
நெறிகளை முற்றும்வி ரோதிக்கிறார். S.

Page 62
சிந்தனைச் சோலை
எல்லோரும் சமமென்ற கோட்பாடு - இகம் எங்குண்டோ அங்குளோர் படும்பாடு
சொல்லற் கரியபா தகத்தோடு - நித
துயரம் நரகமே அதற்கிடு.
மார்க்க விஷயத்திலும் மாய்மாலம் - லோக
வழிகளி லேயிந் திரசாலம் பார்க்கி லிதுகொடிய கலிகாலம் - சர்வ
பாவமும் ஓங்கிடும் அவகாலம்
சொகுசுள்ள உணவுகள் மிகலாச்சு - திட
சுகந்தரும் உணவுகள் விடலாச்சு தகுஞ்சுவ தேசவுடை தள்ளலாச்சு - அங்கோ
சந்தமில் லாதவுடை கொள்ளலாச்சு.
பெரியோர் சிறியோரென்ற பேதமில்லை - உயர் பெருங்குணம் பொறையன்பு நீதியில்லை
அரியவ ருணாச்ரம தருமமில்லை - எங்கும்
அனைவரும் சமமென்பா ராலேதொல்லை.
பூசுரர் தமையவ மதிக்கலாச்சு - கெட்ட
புன்னெறி யினர்தமைத் துதிக்கலாச்சு மாசுள்ள கொள்கைகளை விதிக்கலாச்சு - சைவ
மதத்துக்கு அவமானம் வரலாச்சு.
சாமிகள் தொகையூரில் கணத்துப்போச்சு - பக்தி
சத்தியம் சிவதொண்டு குறைந்துபோச்சு
வாம மிகும்புண்ணியம் அருகிப்போச்சு - எங்கும்
மறக்குன மொன்றுமே பெருகிப்போச்சு.
76
6.
7.

பழஞ்சைவ சமயங்கை விடலாச்சு - ஒரு
பகிடிச்சை வமிங்கு வரலாச்சு
வளத்துக்குத் தகுஞ்சைவ நடையாச்சு - சுத்த
வைதீக சமயிக ஞக்கேச்சு.
ஆங்கில சைவமென் றொருசமயம் - இங்கு
அரசியற் சைவமென் றொருசமயம் தாங்கள் பெருக்கவொரு சைவசமயம் - எனத்
தாபிக்கி றார்சில ரிதுசமயம்
நாலு குரவர் புகல்சமயம் - எங்கள்
நாவலர் பெருமான் துதிசமயம் - இது
போலும் சைவமெனுஞ் சைவசமயம் - இந்தப்
பூமியிற் காண்போம்நாம் எவ்வமயம்.
பழக்கம் : வழக்கம்
(தமிழ்ச்சாதி)
தமிழ்நன்கு கற்றவர் தமிழ்ச்சாதி - வாயில்
தாழ்மைநற் பழக்கம் பொறையாதி
அமிழ்தினு மரியகு ணம்நீதி - யுடன்
அணிந்து விளங்குவர் மரியாதி.
தமிழராய்ப் பிறந்தோராங் கிலம்படித்துப் - பலர்
தாமுமாங் லேய ரெனநடித்து
தமிலுமி லைப்பெரிய ரெனத்துடித்துச் - செய்யும்
தமினெடு மாந்தரி தைப்படித்து.
ஆங்கிலங் கற்பவ ராங்கிலர்போல் - தங்கள்
ஆணவ மலமிக வீங்கினர்போல்
ஈங்கித தமிழ்ச்சாதி நீங்கினர்போல் - ஈங்
கியலுகி றார்கள்வப் பாங்கினர்போல்,
எங்கள் தேகநிலை
10.
11.
12.
13.
14.
5.
77

Page 63
சிந்தனைச் சோலை
தமிழ ருடுத்திடும் வேட்டிவிட்டுச் - சிலர் சார முடுக்கிறார் மானங்கெட்டு அமிதமாய்ப் புறதேச வேஷமிட்டுச் - சிலர்
அந்நிய ராகிறார் அதனையிட்டு.
சிகறெற் றெனுமொரு புதுச்சுருட்டு - அது சீர்மையால் வருமொரு பெருமருட்டு பகருமொன் பதுநஞ்சு சேருருட்டு - கொஞ்சப்
பணம்போகு தோசீமைக் கதன்பொருட்டு.
வாலிபர் பெரியோரை ஏசுகிறார் - அவர்க்கு
மரியாதை செய்திடக் கூசுகிறார் போலநி யாயங்கள் பேசுகிறார் - சொல்லும்
புத்திக ளையப்பால் வீசுகிறார்.
மீசைமுக் கடியினில் தூசாச்சு - திகழ்
மேலாம் முகத்தே சசும்போச்சு
ஆசையந் நியபொருள் மீதாச்சு - இங்ாவன்
ஆக்கிடும் பொருளயூர் வமாச்சு.
இரவினிற் பிடிப்பது மின்சாரச்சூள் - பத்தியம் எல்லார்க்கு மாவது மோல்ற்றெட்கூழ்
பரவுது மேல்நாக ரீகங்கீழ் - தேச
பழக்க வழக்கமெல்லாம் மாறுதுபாழ்.
கொண்டைக்குப் பூச்சூடும் குணம்போச்சு - நாடாக்
கொண்டு மயிர்முடிக்குங் காலமாச்சு
தண்டைபா தசரங்கள் தவிப்பாச்சு - பெண்கள்
சப்பாத்துள் நொண்டுமவ காலமாச்சு.
16.
17.
18.
19.
2.

G.Tariasi BarDa
எண்ணெய்க்குப் பதிலாய்ப் போடுகிறார் - வஸ்லின்
எதற்குமந் நியப்பொருள் நாடுகிறார்
கண்ணைக் கண்ணாடியால் முடுகிறார் - மோடி
காட்டும்போ லிப்பொருள் தேடுகிறார். 2.
பெண்க ளுடுப்புமங்கி லமயமாய் - அவர்
பேதைமை காட்டுகிறார் அதிசயமாய்
கண்கள் மயக்கினாலந் நியமயமாய் - அவர்
காண்கிறார் மதியின அபிநயமாய். 2.
தவறனை யெடுபட்டும் மதுக்குடியே - எங்கும்
தாராளம் நடக்குது முழுப்படியே
அவமதுப் பெருக்கத்தின் நடபடியே - செய்யும்
அழிவுக்கொ ரளவில்லை யெனப்படியே. 2.
ஆடுகோழி வெட்டுந் துர்வழக்கம் - பல
ஆலயங் களிலே மிகுமுழக்கம் ஈடில்லா வக்கொடுங் கொலைப்பழக்கம் - செய்யும்
ஈனர்க்குண் டோசைவ மெய்விளக்கம். 25.
லோகா யதமத முண்டாயது - அத்தோ டுண்மைச் சைவமிங்கி லையாயது
வாகாருந் தேசாசா ரங்குடிபோயது - எல்லா
வகையநா சாரமு மிகமேயது. 20.
சுதேசம் (நாரும் அரகம்)
எங்கள் சுதேசம் எனும்மாதா - எங்கள்
இனிய அரியமகத் துவமாதா
மங்கள மாம்யாழ்ப் பானமாதா - முழு
மனதா லுனைத்துதித்தோம் ஆசிதாதா. 27.
79

Page 64
đìẳgõ60ạMã đơn(0ạ0
தேசாபி மான்கள் தாம்புகழே - சுய
தீய நலம்பண வீம்புகளே நேசஞ் செயின்விஷப் பாம்புகளே - அவர்
நிச்சயம் கோடரிக் காம்புகளே. 28.
அரசரைப் பிடித்துச் சுட்டுக்கொன்றார் - அவர்
அரசினைத் தலைகீ ழாக்கிநின்றார்
பரசுகந் தருவதாய் மொழிபுகன்றார் - கொடும்
பாதக வரசே செயழுயன்றார். 29.
கல்வியை ஈட்டத்தம் முழுநேரம் - தனைக்
காதலாய்ச் செலுத்தாம லகங்காரம்
மல்கிட வேவி னாரவாரம் - செயும்
மாணவ ரேஊருக் காதாரம். 30.
கோயில் களில்வான விளையாட்டு - தாசிக்
கூத்தெணு மருவருப் பானவாட்டு மாயிரு மெங்கள்சைவ வளநாட்டுத் - தெய்வ
மதத்துப் பதிகள்விட் டவற்றையோட்டு. 31.
சீதனம் வரவர ஏறுகுது - நகை
திகழ்தங்கம் வயிரமாய் மாறுகுது
நீதி நெறிதனை மீறுகுது - மன
நிலையி னுசிததன்மை பாறுகுது. 82.
கைத்தொழில் செய்திட அருவருப்பு - யாரும் கவண்மேந்து வேலையிற் பெருவிருப்பு
உத்தமர் புத்தியில் மிகுவெறுப்பு - இட்டம்
ஒன்றுமில் லாததிற் சுறுசுறுப்பு. 33.
80

Cr ardalodi Cloddfa Don
கற்றவர் கமந்தனை விரும்பவில்லை - அல்ல
கல்வியா லவர்மனந் திரும்பவில்லை
நற்றிற னதனா லரும்பவில்லை - கம
நலமிகு பேறுகள் நிரம்பவில்லை. 84.
சந்தைக ளிற்பழ வகைகளில்லை - நல்ல தானிய வகைகளின் நிறைவில்லை
இந்தியா விலிருந் திறங்குநெல்லை - இங்கே
இறக்கா விடில்வரும் பெரியதொல்லை. 5.
உடைநடை பாவனை யொடுபாங்கு - யாவும்
ஒருமிக்க மாறுகு தேயீங்கு
கடையிலன் னியதேச பொருள்வாங்கு - எங்கள்
காசோ டுகுதுபறந் தாங்காங்கு. 36.
சித்திரை வருஷக் கொண்டாட்டம் - தனில்
தெரியுதே நம்மவர் மனவாட்டம் எத்தின முங்கொடுந் திண்டாட்டம் - படும்
எம்மவர்க் கேதுமெய்க் களியாட்டம். S7.
பழங்கால சீவியங் கைவிட்டார் - ஒரு
பரிதாப சீவியத் துட்பட்டார்
விளங்காமற் றுன்பத்துக் கடியிட்டார் - இன்பம்
மிகவிழந் தேமன வமைதிகெட்டார். 38.
போல்ஷெவி சிம்னனு மைப்பாதி - கொடும்
பொல்லாத சனசங்க வியாதி
பல்வே றிடங்களிற் செய்யநிதி - கொடும்
பாதகங் களைவிளைக் கும்போதி, 8.
81

Page 65
đgaoалi Gamaodo
சுயராஜ்யம் சுயராஜ்யம் என்றசத்தம் - எங்கும்
தொனிக்குதே எங்கள்காது களில்நித்தம்
நயமாகச் சனங்களை அதற்கேசித்தம் - செய்ய
நாம்கானே மொங்குமேது மாயத்தம். 40.
சனங்கள் தகாரெனில் சுயராஜ்யம் - பெறத்
தலைவர்காத் திருத்தல்வீண் மனோராஜ்யம்
தனம்நே ரத்திறன் சுயராஜ்யம் - பெறத்
தத்தஞ்செய் வார்தொகை வெகுயூச்சியம். 41
ஆரிய ராசர்கள் ஆள்தேசம் - எங்கள்
அன்பு நிறைந்ததமிழ் வாழ்தேசம்
சீரிய சைவந் திகழ்தேசம் - இந்தச்
செகம்முழு திலுமெமக் கருந்தேசம். 42.
சுத்தநம் தமிழ்தொனித் திடுநாடு - நல்ல
சுகசெள கரியம் நிறைநாடு
இத்தரை தனிலினிய நாடு - இந்த
இகத்தி லிதற்கிலை யேயீடு. 48.
எல்லோரும் நல்லாயி ருக்கவேண்டும் - இகம்
இயன்றது போலிய லவும்வேண்டும் கல்லாத வர்கல்வி கற்கவேண்டும் - எல்லாம்
கவினுறு சமாதான ஹாகவேண்டும். 44
82

சீலமலர்
66.6/7/6Bajafகீதரசமஞ்ச7
காப்பு
ONGAGEdTLIT
வேத மருளும் விமலா அடியேனிக் கிதரச மஞ்சரியாங் கிர்த்தனத்தைப் - போதமுறப் பாடுதற்கென் னாவிற் பரிவா யெழுந்தருளி நீடுவரந் தாராய் நிலைத்து.
1. தெய்வ வணக்கம் விருத்தம்
அண்டசரா சரமனைத்து மமைத்த தேவை
அகண்டபரி பூரணமெய்ஞ் ஞான தேவை தொண்டர்களுக் கனுதினமு மன்பு செய்யுந்
தூய்மையெனு மணியணியுஞ் சுகுண தேவை விண்டலத்தில் வீற்றிருக்கும் வேந்தாந் தேவை
வேதமருள் புண்ணியசீர் விளங்குந் தேவை தெண்டனிடு மனமேநீ ஜெகத்தின் சர்வ
தீமைகளு நீங்கிமுத்தி சேரத் தானே.
83

Page 66
சிந்தனைச் சோலை
பதம்
இராகம்:செஞ்சுருகுட்டி ரூபகதாளம்
பல்லவம்
துய்ய தேதவனை மெய்யன் போடு தொழுது வருவாய் - மனமே!
அருபல்லவம்
மனமே அனுதினமே பரன்
ਕਹp வரமுனமே Itinu. --
சரணங்கள்
வெய்ய பாவநோய் அகன்று வெகுசுகமாய் வாழ
வாழ புண்யம் நீள்ளே நன்மைசூழ தீமை மாள digiu.
பூவுலக இன்பமெமல்லாம் பூவைப்போல வாடும் வாடும் சர்வபீடும்ம் பறந்தோடும் எதுநீடும்? quibu.--
செல்வம் கிர்த்தி  ெஜம்பமிவை சேர்ந்தயாவும் விணே வினேயென்று காணே பத்தியூணே அதுமானே Фiju.
காயம் சதமல்ல என்ற கருத்தை யெண்ணிப்பாராய்
பாராய் பவம்திரராய் மிகுசிராய் வேதம்ஆராய் &gciru.. • •
ஈசனைஉன் ஆயயுளெல்லாம் இன்பமாக நேசி நேசி விசுவாசி பபதம்பூசி பிரகாசி pinu. --
உன்னைப்போலப்ப் பிறனை நேசித்துண்மை சொல்ல நாடு நாடு அன்புசூடு தவிர்கேடு வரும்விடு துய்ய.
84

2. ஞானம் வேண்டல்
கட்டளைக்கலித்துறை
வானுந் தரையு மவற்றுள யாவும் வகுத்தபர மானந் தரஞ்சித வச்சய னேயடி யேனெனக்குன்
ஞானந் திகழ்கின்ற நன்னெறி தாவிந்த ஞாலமதில் ஈனந் தருபவ மெல்லாம் ஜெயங்கொண் டினிதுறவே.
பதம்
இராகம்: காபி
பல்லவம்
ஞானம் அருள்வாய் - சாமி ஞானம் அருள்வாய்.
அருபல்லவம்
மோனந் திகழும் நாதனே நித்ய மோட்சம் அருளும் வேதனே! ஈன மாம்அறி வீன அல்லிருள் ஏக நின்னொளி ஈகுவாய் சாமி.
சரணங்கள்
சற்குணானந்த ஈஸ்பரா எனைத் தாபரிக்குங் கிர்பாகரா எற்குணைஅறி முற்றறிவினை ஏற்றியேகுணம் மாற்றுவாய் சாமி
சாலொமோன் எனும் ஞானிக்கவ்வரம் சம்ப்ரமமாக தந்தையே பாலன்நான் ஞானப்பாலை உன்னிடம் பருகவே தயைபுரிகுவாய் சாமி
dopoupérif
ரூபகதாளம்
ஞானம்.
ஞானம்.
ஞானம்.

Page 67
சிந்தனைச் சோலை
தேவயயமே ஞான ஆரம்பம்
திர்க்க மாயிதைத் தேரவே
பாவியென்னுளம் மேவியே கிர்பை
பாலியாய் அதுகூேைன சாமி ஞானம்.
பொன்னிலும் உன்றன் ஞானமிர்தத்தை,
புனிதநான் விரும்பினேன்
எந்நிலையிலும் நன்னெறியதை
எந்தையே அருள்சிந்தை மகிழ ஞானம்.
3. நற்குண நற்செய்கைகள்
வெண்பா
சுத்த மனமுஞ் சுகிர்தகுண செய்கைகளும் நித்தம் விளங்கு நெறியுடையோர் - உத்தமரென் றெண்ணப் படுவரவர்க் கின்ப மிகந்தனிலும் விண்ணிலுமா மென்றே விளம்பு,
பதம்
இராகம்: பியாகு ஆதிதாளம்
பல்லவம்
நற்குண நற்செய்கைகளை நாடும் நேசரே.
அருபல்லவம
சற்குணங்கள் சேரும் தகையினனை யாரும் - நல்ல
சங்கைசெய மங்காப் புகழெங்கும் பெறுவான் SibESGdsor---
86

66
துஷ்டருடன் சேர்பவன் தொல்லைதரும் பாவத்தில்
சொந்த மாயுழன்று தூய்மை விட்டகன்று - வினை
சூழ்ந்து வரத்தாழ்ந் தழிவிலாழ்ந்து போவானே.
பாவ இன்பங்க ளுன்னைத்தாவ அவற்றைமிகப்
பத்திரமாய்த் தேவ பலத்தால்வென்று ஆவ - லொடு
பரமே தருங்கரமே துணைவரமே எனவே
பவத்தில் விழாதுநெஞ்சம் பரிசுத்த நெறிதன்னை
பற்றல்ஆசீர் வாதம் பணிந்துபரன் பாதம் - தினம்
பத்தி செய்துசுத்த இதயத்தின் நெறியே.
துன்பத் திருப்பவர்க்கு அன்புட னநுதாப
சொற்களைப் புகன்றும் தொண்டுசெய்தும் என்றும் - நல்ல
துணைசெய் திடுங்குனமே தேவகுணமென் றுனரே.
4. உண்மை
விருத்தம்
சத்திய நெறியினைச் சார்ந்து தேவனுக் குத்தம சேவைசெய் துண்மை யாங்குனஞ் சித்தஞ்சொல் செயலினிற் றினமுங் காட்டுதல் பத்தருக் குகந்தநற் பலன தாகுமே.
dagarUDéadf
sibees...
bibé5eset.
Jsbesexw---
Sibe,600s...
87

Page 68
digeoară Ganest
பதம்
இராகம்; தன்னியாசி
பல்லவம்
உண்மையை நேசிக்கும் யோக்கிய சீவியம் உன்னத மானதுவே.
அருபல்லவம்
திண்மையுடனே அனுதினமுமே மெய்யைச் செப்புதல்கனம் தவிர்த்திடுகெட்ட பொய்யை
சரணங்கள்
என்னநஷ்டம் வரினும் நானோபொய் சொல்லேன் இனிய நடுவுநிலை குன்றிட நில்லேன் துன்னுந்துற்சனர் செய்யுஞ் சூழ்ச்சிகள் கல்லேன் தூயபரனின் நல்ல துணையினால் வல்லேன்
உண்மை சொன்னால் உலகம்நட வாது உத்தமர் தாமும்பொய் சொல்வர்சிற் போது என்மொழி இயம்பிடும் இழிஞரின் வாது எனக்குத் தெரியும்அது பாவத்தின் (55
சிந்தனை சொல்செயல் முன்றிலும் உண்மை தெரிந்திட நடப்பது வேபெரும் நன்மை கந்தைஉடுத்து முண்மை காட்டுதல் வண்மை கருத்தும் நடையும்வேறு காணுதல் புன்மை
ஒருபொய் தன்னை மறைக்கப் பலபொய்யைக் கூட்டும் ஓயாத சங்கிலித் தொடரொன்று நீட்டும் சரிபொருந் தாமல் தன்னை ஈற்றினிற் ぷ காட்டும்
சனியன் அதுபெரிய சள்ளினில் Dr. Gib
ஆதிதாளம்
உண்.
elair...
உண்.
உண்.
e-air...

அரிச்சந்த்ர ராஜன்தன் அரண்மனை விட்டும் அசுசிப் புலையனுக்கோர் அடிமையாய்க் கெட்டும் தரித்துப்பின் வாங்காமற் சத்தியம் மட்டும் தாங்கினன் அதுசெய் வருவதுவ ரட்டும்
5. தாய் செய்ந்நன்றி
கட்டனைக்கலித்துறை
ஈரைந்து மாத மெனைத்தாங்கி யின்றதி யின்பமுடன் சீருஞ் சுகமு முறப்பரி பாலித்த சிந்தைமிகும் ஆருயி ரேஅன்னை யேயுனை நானென்ற னாயுளெலாம்
சேரும் பெருநன்றி பாய்த்துதிப் பேணிதென் செய்கடனே.
பதம்
இராகம்:இந்துளப்தான்காபி.
பல்லவம்
தாயே ஆயிரந்துதி சொன்னேன் ஆயிரந்துதி சொன்னேன் தாயே ஆயிரந்துதி சொன்னேன்.
அருபல்லவம்
நேயமுடன் எனைநிதம் பரிபாலித்தாய் நிச்சயம் உனைமறவேன்
சரணங்கள்
பெரிதுநின் உபகாரம் பிறந்தநாள் முதல்என்மேல் கரிசனையாய் இருந்தாய்
பாலூட்டி எனைமிகப் பட்சமாய் வளர்த்தாயே பதில்உனக் கென்னசெய்வேன்?
கீதரசமஞ்சளி
ஆதிதாளம்
a fresul...
25st Gu...-
தாயே.

Page 69
dñ56a:Dalrà Canalog0
தொட்டிலில் இட்டெனை இட்டமாய்த் தாலாட்டி தூங்கவைத்தாய் அன்னையே.
முத்தியிட்டெனை நீயும் முகத்திற் புன்சிரிப்புடன் மெத்தச்செல்லம் பொழிந்தாய்
அன்னங்கனிபால் கண்டு அறுசுவை உணவீந்து ஆதரித்தாய் அன்னையே.
துன்பமாய் இருக்கையில் துயருடன் அருகினில் ஆாக்கமின்றிக் காத்தாய்
சின்னவயதிற் கல்வி சிலையில் எழுத்ததுபோல் சென்னியில் எழுதிவைத்தாய்
தேவபயம் என்நெஞ்சில் ஸ்திரமாய்க்குடி கொள்ளவே ஆவலாய் அறிவீந்தாய்
அன்பு பொறுமை நீதிஆகிய லட்சணங்கள் இன்புற எனில்அமைத்தாய்
பொய்யை வெறுத்துமெய்யைப் பொன்னென மதிக்கவே
துய்யபோ தனைதந்தாய்.
சன்மார்க்க கிதங்கள் தயவாய் எனக்குச்சொல்லித்
தந்துசா தனைபண்ணினாய்
ஆயுக முழுவதும் அன்புடன் உனைநானும் ஓயாது கனம்பண்ணுவேன்.
abru...
aftsu...
assTosu...
assTSul...
abitul. . .
தாயே..
alsTSul. . .
தாயே.
தாயே.
aftGul. . .
90

கீகரசமஞ்சரி
6. நீதியின் தைரியம்.
GleaedrLIr
என்ன நயம்வரினு மெத்தனை பேர்கூடி இன்னல் புரிய வெழுந்தாலும் - உன்னி யெதுசரி யோவத்தை யின்பமுடன் செய்யு மதுநீ தியின்தைரி யம்.
பதம்
இராகம்: அமிர்தகல்யாணி. ஆதிதாளம் பல்லவம்
நீதிபுரியுந்தைரிய - மேமாதைரியம் நீதிபுரியுந்தைரியம்.
அருபல்லவம்
ஏதும்பய மின்றியே எதுசரியோ அதனை இன்பகர புனிதமாய்ச் செய்யித யத்தின் If • •
சரணங்கள்
வல்லமை யுறுஞ்செல்வர் வறிஞர்க் கிடர்விளைத்து வாது நடத்தும் வேளையில் வறிஞருக்கு - நீதி.
தேச நயவிருத்தி சேர விருந்தடையாம் தீய வழக்கங்களைத் திறலோடு விட்டு நீதி.
உலக முழுதுமுன்னை ஒருமித் தெதிர்த்திடினும் உண்மையென நீகாண்பதை ஒளித்திடாது. நீதி.
கண்ட சத்தியந்தன்னைக் கதித்த வுறுதியொடு கனமார் நியாயஸ் தலத்தில் கழறுசித. நிதி. 91

Page 70
địỗgoĐalồ đỡntaba)
7. (36s b
Galaxir Int
அற்ப பொறிக்கோ ரடவியிரை யாவதுபோற் சொற்பகோ பத்தாற் றொலையுமே - பற்பலநல் அன்பின் செயலு மரிய சினேகிதமும் என்பர் புலவ ரெடுத்து.
பதம்
இராகம்: பைரவி மீசுரதாளம்
பல்லவம்
கோபமானது Lunt LuGSD கொண்டுவந்திடும் &FTLCD.
அநுபல்லவம்
மாபரன் துணை யாலேஉன் சினம் மாற்றுவாய் வினை நீக்குவாய் முனம் Gastu ...
சரணங்கள்
சொற்ப தீக்கொரு ஆரண்யம் தொலைதல் போலஉன் காருண்யம் அற்ப நேரத்துக் கோபத்தால் அழி வாகுமே அதனா லேரீ 6.ਪੀਪੁ GasTIL ...
சினத்தறுத் திட்டமுக் கினை சிரிப்பொன்றச் செயுமோ நினை மனத்துக் கோபஞ்செய் பாதகந் தனை மாற்றுமோ பின்பு நிதசிந் தனை GatörTLU. --
92

esgrupés
சற்சனர் சினம் ஆறுவார் சாதுவாய் அன்பு கூருவார் துற்சனர்பகை சாதித் தென்றுமே சூழ்வர்தீமை எக்காலம் சென்றுமே Gastu ...
8. சதிசெய்தல்
கட்டளைக்கலித்துறை
திருக்குள நெஞ்சத் தொடுதம் பகைவர் சிதையநஞ்சு பருக்குங் கொடியதும் பாதகள் போலப் பதனமுடன் கருக்குஞ் சதிசெய் துதம்மிக லோரைக் கருவறுக்கும் இரக்கமி லார்செயல் போற்றுற் செயலென்ன விவ்வுலகே.
பதம்
Syndilh: afInn ரூபகதாளம்
பல்லவம்
சதிசெய்த லாம்நிரு வாகம் - சற்றும் தண்ணளி யில்லாத மாபெருந்த் ரோகம்
அருபல்லவம்
பதிவிருந் தேபுலி பாய்வது போல பகைஞரைச் சருவுதல் பாவமே Feb சதி.
சரணங்கள்
அவதந்த்ரஞ் செய்பவள் பாடு - தமக் கந்தர மாமென்ற அவ்வுரை சூடு
எவர்தீமை செய்தாரோ அவர்க்குமா கேடு ஈற்றில் வந்தெய்தும் இதைநிதம் List(G சதி.
93

Page 71
disapara Garapo
பகைஞர்க்கும் அன்புசெய் வீரம் - தேவ பக்தியுள் ளோர்க்கியல் பாமவ்வு தாரம் வகைதேடி வன்புசெய் வார்மனம் சோரம் வன்மம் பகைசூது வாதுஞ்சஞ் சாரம்.
அந்த்ராசி செய்சதி அன்று - அவன் அழிவுக்குக் காரண மாயின தென்று
மந்த்ரநிறை உண்மைசேர் காதை ஒன்று வழங்குமிவ் ஆரில்அதன் போதம் நன்று.
வண்ணான் குடியை அழிக்க - பொல்லா வஞ்சனைசெய் குலாலன்தத் தளிக்க நண்னு நாசம் அவன்மோசம் வெளிக்க நல்லெச்சரிப் பெங்கள் கண்கள் விழிக்க.
பூவின் சரிதத்தை வாசி - அது புகல்சதிகாரர் முடிவினை GunTaff ஆவலுடன் புத்தி சொன்னேன் விஸ்வாசி éileaearaile agurb 2-eireann umra Gaill Grself.
9. பொறுமை
விருத்தம்
சந்தன மரத்தினைத் தறிக்குங் கோடரிக் கந்ததன் மரம்மன மருளல் போலுனக்
கெந்தவல் லிடரினை யெவர்செய் தாலுறி சிந்தைவைத் தவர்க்கன்பு செய்தன் மேன்மையே.
YA ver
சதி.
if a
afia. . .

dogoof
பதம்
இராகம்: தேசிகதோடி இந்துளப்தான் ஆதிதாளம்
பல்லவம்
பொறுமை வேனுைமே - மனப் பொறுமை வேணுமே - என்றும் பொறுமை வேனுைமே - Lófasů பொறுமை வேனுைமே.
அருபல்லவம்
பொறுமையி லாதார் சிறுமைக்கு ளாவார்
புண்ணியம் அற்றவ ராவார் - ஆர் புண்ணியம் அற்றவ ராவார்
கதிசேரார் அவரே பொறுமை.
சரணங்கள்
மற்றவர் உனக்கு
குற்றஞ்செய் வினைக்கு
மாபரன் கேட்பாரே கணக்கு - ஒ மாபரன் கேட்பாரே கணக்கு
ஏன்பினக்கு உனக்கு? 6FTSpsoid. . .
தீமைக்குத் தீமை செய்தல் தீராமை
திண்ணம் விளையும் பொறாமை - ஆர் திண்ணம் விளையும் பொறாமை
பகையாமே நிதமே. பொறுமை.

Page 72
சிந்தனைச் சோலை
அக்ரமம் வெல்ல அன்பதே வல்ல
ஆயுதம் என்பது நல்ல - ஒ1 ஆயுதம் என்பது நல்ல
வழிஎல் லோருஞ்செல பொறுமை.
10. வழக்காடலினால் வருந்தீமைகள்
கட்டளைக்கலித்துறை
நாட்டின்மத் திட்ச ரிடம்போய் வழக்கில் நடுப்பெறற்குக் கேட்டு மினக்க மரிதெனக் காணிற் கிளருவழக்
காட்டின் முயலல் தவறன்று கூடுமுன் னாலெனில்நீ கோட்டுக்குப் போகா தொழியென நற்புத்தி கூறுவேனே.
பதம்
இராகம்: தன்னியாசி ஆதிதாளம்
பல்லவம்
கோட்டுக்குப் போகவேண்டாம் - கூடுமானால்
கோட்டுக்குப் போகவேண்டாம்.
அருபல்லவம்
நாட்டில் மத்தியஸ்தருன் வழக்கினில் நீடு நலஞ்செய் யாரெனிலேபின் வைமுறைப் பாடு Ga5T'L-...
சரணங்கள்
வருடந்தொறும் நியாய துரந்தரர் கூட்டம் வளர்ந்திடக் குறையுதே அவர்பெறுந் தேட்டம் பெருகிப் பரவுதெங் குமேவழக் காட்டம் பீடுறுஞ் சமாதான மீதில்லை நாட்டம் கோட்.

உள்ள வழக்கிருக்க வேறொன்றைக் ஒருவர் மற்றொருவரைச் சருவியே கள்ளவு பாயங்கள் மேசையில்
கழயூவர் பலர்நீதிக் கதுபெரும்
மீசையை முறுக்கி 'ஒஸ், பீஸ்"என்று வெகுதுரந் தரர்வழக் காளரை ஆசையுட னேஅவர் காசினை
அமர்த்திடப் பார்ப்பார் ஐயோஎன்ன
பகஒன்றை இருமுடர் எனக்குனக் பதனமாய் வேறொராள் பால்கறந் நிசமாய் அதுபோலிரு பேர்வாது நியாய தருக்கன்செழிப் பான்பலன்
வெற்றிகொண் டாலுனக் காவது வெற்றியன் றெனிற்சாம்பர் பெறுவது குற்றமிரு வகையு மென்பது கோடடி யுண்ணுபவன் ஒருதந்த்ர
பத்துமணி யளவிற் கோட்டினை பகல்முழுதும் அங்கே தூங்கிநின் உத்தம னேவருங் கேடுகள் உனக்குவேண் டாம்அந்த உதவாத
எதிரி யுடனேவழக் காளியுஞ் இருவரு மொருமனத் தோடன்பு மதுரமான சமாதா னத்தை
மகிமையாய் இனங்கலாம் மனதினில்
உன்னைப்போல் உன்னய லானையும் ஒருக்காலும் வழக்குக்குப் போகேனென் என்னவந் தாலும்நீ நீதியைப் இணக்கமாய் வாழ்ந்திருப் பாய்அது
97
கென்ன
துண்ண பண்ண
நண்ண
35sful
தெரியே
8Frf08LL.
நரியே
நாடி
Caето
மோடி
சேர்ந்து கூர்ந்து நேர்ந்து தேர்ந்து
நேசி
றாசி
CSL iëf
6arraf
கீதரசமஞ்சரி
கோட்.
கோட்.
கோட்.
கோட்.
கோட்.
கோட்.
கோட்.

Page 73
சிந்தனைச் சோலை
11. 6L6 L6)
வெண்பா
மட்டாய்ச் செலவழித்து மான்மியமாய் வாழ்தலைவிட் டெட்டாப் பொருட்களின்மே லிச்சைகொண்டு - இட்டமுடன் வட்டிக்குக் காசுகடன் வாங்குப வன்முடிவு
குட்டிச் சுவரென்றே கொள்.
பதம
இராகம்: இந்துளப்தான் வர்ணமெட்டு ஆதிதாளம்
பல்லவம்
கடன்படுபவன் ஒருபெரும் மடனே கண்டுகொள் வாய்இது திடனே.
அருபல்லவம்
கடன்படுபவன் நெஞ்சம் கலங்குமே என்றும் கரையில் துயரடை வானே. கடன்.
சரணங்கள்
அணியாயமாய் வட்டி ஆஸ்தியை அழிக்க
ஐயோவெனுங் காலம் வருமே. கடன்.
கடன்காரன் வருவதைக் கண்டு போயொழித்து
கள்ளஞ் செய்வார் பலருண்டே. கடன்.
தருவேன் தருவேனென்று தவணைகள் சொல்ல
சங்கையும் நேர்மையும் போமே. கடன்.
பல்லை இழித்துக் கடன்பணி வுடன்வாங்கி
பாடுபட் டார்தொகை கோடி. asLei.

கீதரசமஞ்சரி
வெறும்ஆடம் பரமேன்மை யைத்தேடி வீண்செலவு செய்ய நாடி. asL6...
அவeய மில்பொருள் அற்ப காசெனினும் ஆசைகொள் ளேலதன் மேலே. கடன்.
வரவுக்குத் தகுந்ததாய் வைத்திடிற் செலவை
வாரா தேகொடுங் கடனே. கடன்.
12. தற்பொழிவு
வெண்பா
பரவுபகா ரங்கருதிப் பாடுபடும் மாந்தர் பரவுகடல் சூழுமியாழ்ப் பாணம் - விரவுபலர் இல்லையது வித்தேச மேருற் றிலங்குதற்கோர் வல்லதடை யென்றே வழுத்து.
பதம
இராகம்: மோகனம் ஆதிதாளம்
பல்லவம்
தற்பொழி வாலே இந்தத் தாரணிபடும் பாடு
சாற்றவொண் ணாத கேடு
அருபல்லவம்
நெற்பயிர்க்குள் முளைக்கும் நெருங்கித்தீமை விளைக்கும் புற்பயிர்போற் றழைக்கும்
புண்யமெலாந் தொலைக்கும் தற்.

Page 74
சிந்தனைச் சோலை
சரணங்கள்
என்னநன்மை யானாலும் எனக்கித னாலே யாதும் லாபம்வந்தா லேயன்றி எண்ணே னிதையென் றோதும் சின்னத்தனத் தால்வந்த தீவினை போதும் போதும் செல்வ ரறிஞரெங்கள் தேச நிலைமை ஏதும்
சீர்திருந்தி மாஉயர்ச்சி - அது சேருதற்கு நன்முயற்சி செய்திலர் மற்றவருய்திட மெய்யருள்
பெய்திலf. தெமைநையுற வைபொருள். தற்.
யாழ்ப்பாணத் தாரில் மிககிணிமை யுறுமு தாரம் இன்னும் விளங்கவில்லை என்பர் பலரிந் நேரம் தீழ்ப்பா மப்பழி கேட்டுத்திகைத் துழலும் Lumb தீர்த்திட எல்லவருஞ் செய்வோம் பரோப காரம்
சித்தியுடன் முன்னேறவே - தேசம்
எத்தகையிலுந் தேறவே செப்பரு நல்லொளி மப்பகலப்பர
விப்பெருகும் பெருமற்புத சீருற. az5b.• • •
தன்னை யொறுத்துந் தன்னைச் சார்ந்தவருக்கு நயம்
தருண மறிந்துதவுந் தயையின் குணாதி sub விண்ணவரும் புகழும் மேன்மை யுளவி தயம் மேவுங் குணம்அதற்கு வேண்டுமே தேவ பயம்
மேலான போர்வீரனாம் - குண
சில உபகாரனாம் மிக்க புகழ்ச்சிறீ சிற்ணி யிறந்திடு மக்கண மும்புரி ஐக்ய மறிந்திடு. தற்.
100

கீதரசமஞ்சரி
13. மதுபானத்தின் தீமைகள்
வெண்பா
மதுபான மாம்நஞ்சு மானிடர்க்குச் செய்யுஞ் சதியை யுலகறியச் சாற்றின் - மதியும் நிதியும் ஸ்திதியும் நெறியுஞ் சுகமும் அதினாற் கெடுமென் றறி.
பதம்
இராகம்: கல்யாணி ரூபகதாளம்
பல்லவம்
மதுபானம் பருகுதல் தீது - அந்த மாநஞ் சுடனுறவா காது
அருபல்லவம்
மதிகெட நிதிகெட ஸ்திதிகெட மதுவுனைச்
சதிசெயுஞ் சருப்பமென் றதைத்தவிர்த் திடநினை. Diglose
சரணங்கள்
குரங்குக ளுங்குடி யாது - மனுக் குலத்தார்க்க தாகுமோ? ஒது அருமறிவில் விலங்கரு வருத்திடும் வெறி தருமது மனுஷர்க்குத் தகுமுணவல ම!). Diglose
தண்ணிரோ தாகத்தைத் தீர்க்கும் - மது சற்றும் அதைத்திரா தார்க்கும் புண்ய மிகும்பரன் பூவினிலே அதி நன்னீரைத் தந்தனன் நல்கினன்மது நதி Dáil. . .
101

Page 75
சிந்தனைச் சோலை SSSJJJS S SALSLALAS SJSJSSLALLSAS SLLLLLLLJJqSLLS
குடிவெறி உலகினிற் செய்யும் - தீமை கூறிட எம்மனம் நையும் அடிபிடி கொலைகள வொடுவிப சாரமும் குடியனை அடிமை செய்திடுமெந்த நேரமும். Dillo so
'அல்கஹோல்" என்னுமந் நஞ்சு - மது வாம்பதார்த் தத்திலுண் டஞ்சு பல்கலை ஓர்ந்திடும் பண்டி தர்பலர் මlආl கொல்லு முயிரெனச் சொல்லுந் துற்குணத் தது Değil- sa
ரத்தா சயம்ஈரல் முச்சு - பையாம் இந்த அங்கங்களின் முச்சு நித்தங் குறைந்துட லத்திற்பல ifig.gif நந்த உயிர்க்கும் அனர்த்தமெனக் கணி. Diglo so
பணத்தைக் கொடுத்துப் பயித்யம் - வாங்கும் பாங்காய்க் குடியர்கள் நித்யம் குணத்தைக் கெடுக்குங் கொடியமது வுண்ண தனத்தை அழிக்கிறார் கனத்துக்கினம் நண்ண. Dél . .
14. மெய்யான சினேகம்
கட்டளைக்கலித்துறை
பொய்யாம் முகஸ்துதி யாலுனைப் போற்றிப் புளுகிறிதஞ் செய்யாமற் றிதுசெய் வோர்தமை, நீங்கிச் சிறப்புடனே
மெய்யாஞ் சினேகத்தை விட்டமெய்ப் பாக்கியம் வேறிலையால் வையாயுன் நட்பினை யுத்தமர் மீதிந்த வையகத்தே.
102

கீகாசமஞ்சரி
LIUD
இராகம்: இந்துளப்தான்காபி ஆதிதாளம்
பல்லவம்
மெய்யான சினேகமே வேனும் - அதை விட்டமெய்ப்பாக்யம் வேறில்லைக் கானும்
அருபல்லவம்
பொய்யாம் முகஸ்துதி செய்யுங்குணம் பூனுைம் போக்கிலியின் சகவாசத்தில் நானும் மெய்.
சரணங்கள்
பாபத்தைப் பகைக்கிற பத்தியின் வாசன் பரிவாய்உனை நேசிப்பன் அவன்தேவ தாசன் ஆபத்தி லுதவிசெய் வோனேயுன் னேசன் அந்நேரம் உனைப்பிரி பவன்மாய வேஷன் மெய்.
முற்றாயுனைப் புகழ்வோன் செய்யும்மாய் LDrsob மோசம் அவன்இனிய வாக்குனக் காலம் குற்றம்நீ செய்தாலுனைக் குறைசொல்லுங் கோலம் கொண்ட சினேகிதனால் வரும்சுத்த சீலம் மெய்.
பழுத்த மரத்திற் பட்சி சாலங்கள் afia பழத்தை அருந்தி இன்ப கீதங்கள் LT களித்துப் பறத்தல் போல்உன் செல்வத்தை SfTig கள்வர் வறுமைவர நீங்குவர் 9.g. மெய்.
டேமன்பிதி யாஸ்என்னும் இருநண்பர் பண்பாய் எவ்வள வுண்மையாக நேசித்தார் இன்பாய் நாமும்எம் நேசருடன் அத்தனை நண்பாய் நாளும்உற வாய்வாழ்வோ மேஆதி அன்பாய். மெய்.
103

Page 76
đјgaporã Gamapo
15. முகஸ்துதியின் மோசம்
கட்டளைக்கலித்துறை
ஆனை கரடிதுற் காண்டா மிருக மடலரியே றானவை நானா பொறிகளிற் சிக்குண் டகப்படல்போல் ஈன முகஸ்துதி யான்மாந்தர் வீழ்வ ரெனுங்குறிப்பை ஞான முடன்மொழிந் தார்ஷேக்ஸ் பியர்எனும் நாவலரே.
பதம்
இராகம்: உசேனி ரூபகதாளம்
பல்லவம்
முகஸ்துதிக்குக் காது - கொடாதே
மோசந்தருஞ் 色@l·
அருபல்லவம்
ஜெகத்தினி லேபலர் தம்நயம் நோக்கி செய்வார் முகஸ்துதி உன்றனைத் தாக்கி அகத்தில் ஆண்மைஉண்மை யாவையும் நீக்கி ஐயோ! உனைஓர் சிறுபிள்ளை யாக்கி
அம்புகழ் எனஉன் புகழ்சொல வம்புகள் விளையும் புகல்வேன்அறி. põ•.
சரணங்கள்
சங்கை கெட்ட வேலை - முகஸ்துதி சான்றோர் செய்யா வேலை எங்கள் தலை மேலே - அந்தமருந் தேறி மதுப் போலே
104

கீதரசமஞ்சரி
தங்கி மனதின் சுயஆறி GearT தற்பெரு மைக்குணம் மெத்தவும் நீட பங்கமுற அனியா யத்தை நாட பாரபட்சம் செய்ய ஏவுமே fall
பத்திரம் நேசா பத்திரம்இதி குத்திரமாக மித்திரன் போல்வரும்.
காகம் பண்ணி காரம் - ஓர்துண்டைக்
கவ்வி மிகு சோரம்
ஆகக் கொஞ்ச நேரம் - மரமொன்றில்
ஆற அதன் பாரம்
சோகமுறும் நரியொன்றின் கன்னிற் l சூழ்ந்து முகஸ்துதி அந்நரிசெய் திட காகம் பெருமையுற்றே சத்தம்பண் 63of கவ்வுண்ட துண்டதன் வாயினின்றுங் 6asL
கண்டதேநரி துண்டதைஎடுத் துண்டதேஎன்று பண்டைக்கதை உண்டு.
தேனைப்போல ருசிக்கும் - முகஸ்துதி தித்திப்பதைப் புசிக்கும் மானிடனை நசிக்கும் - வலியுள்ள மாநஞ்சதில் வசிக்கும்
ஆனைகரடி அரிக்கும்பொறி யன்ன அம்புவியோர்க்கு முகஸ்துதியுண் டென்ன நானுனக்கிந்த நற்போதகத்தைப் Ues நம்பிஅதன்படி செய்யவேநி உன்ன
நாடுவாய் வகை தேடுவாய் மதி சூடுவாய் இதைப் பாடுவாய் என்றென்றும்.
(p5 . .
(p5- - -
(p5oo o
105

Page 77
đlịg{0ạMở đỡmråD80
16. கைக்கூலி வாங்குதல்
கட்டளைக்கலித்துறை
நீதிக்கண் மங்கிச் சிலவுத் தியோகர் நெறிதவறி வாதுசெய் வோரி லெவர்பொருள் மிக்க வழங்குவரோ ஒது மவருக்கு நன்முகங் காட்டி யுதவிசெய்து சூது புரியக்கிர மத்தை விரிவுறச் சொல்லுவனே.
Ugbuo
இராகம்: காபி ரூபகதாளம்
பல்லவம்
அக்ரமம் செய்வதைப் பாரீர் - சற்றும் அருளிலாமற் கைக்கூலி வாங்கியே
அக்ரமம் செய்வதைப் பாரீர்.
அருபல்லவம்
நிக்ரகம் செய்து நன்னிதி காத்திடு வாரெனும் நிச்சயத் தொடமைத்த வுத்யோக ருட்சிலர் தேவ அச்சமின்றியே SlėšguDid...
சரணங்கள்
ஏழைகட்கு விரோதமாய் - அதி
இடர்புரிந்திடு பகைவர் தம்மிடம்
ஏழைகட்கு விரோதமாய் வேளைகண் டேபணம் வேண்டியே அவர்பக்கமாய் வித்தையாக வச்சத் துராதிகள்
சித்தியெய்திட ஒத்து மேவியே. அக்ரமம்.
106

dosudorf
காசுமாத்ரங் கைலஞ்சமோ? - மறு கணிமுதற்பொருள் நனியினென்னவோ?
காசுமாத்ரங் கைலஞ்சமோ? மாசில்மா நெஞ்சினில் வாசமாம் மனச்சாட்சியின் மந்திரஞ் சொலுமெந்த நீதியை
யுந்தடுத் திடுமோ அதேலஞ்சம். அக்ரமம்.
கடமை செய்வோர்க்கு லஞ்சமேன்? - மிகு கவனமொடு தொழில்புரி வதவர்கடன் கடமை செய்வோர்க்கு லஞ்சமேன்? மடமைசேர் மாந்தர்தம் உடைமையை வினிலே மனமுவந் தளித்துத்யோ கத்தரை வினைசெயும் படிஏவல் நீதியோ? அக்ரமம்.
எவ்வளவாய்ப் பெருகுதே! - கை லஞ்சம்வாங்கும் வழக்கமித்தேயத்
தெவ்வளவாய்ப் பெருகுதே செவ்வையாய்க் கைலஞ்சம் எவ்வகை யும்பெறல் சீர்மிகும் இயல்பா முரித்தென
ஒர்வரே சிலராஜ சேவகர். அக்ரமம்.
17. சுற்றத்தவரை நீங்கும் பெருமை
விருத்தம்
பெருகிய செல்வமும் பெயருஞ் சேர்ந்திட அரியவும் மினத்தைவிட் டகன்று நான்மிகப் பெரியனென் றகப்ரமம் பேசி டுங்குனஞ் சரியல வெனப்பதஞ் சாற்றக் கேண்மினே.
107

Page 78
சிந்தனைச் சோலை
பதம்
இராகம்: அடாணா
பல்லவம்
ஐயோ! உமக்கேணிப் பெருமைஐயா? - உம தன்பு துறந்துற வோர்தமை நீங்கிட
அநுபல்லவம்
மெய்யாய் இனத்தவர்மீது கரிசனை
மேவ அவரோ டதியுற alsTig
உய்யும்படி அவர்க்கு மனதார
உதவி புரிவது வேநல்ல б8рпір
சரணங்கள்
நீலக் குழியுள் விழுந்த நரிதன்னை
நிச்சய மாய்மிரு கேந்திர னென்றே
சாலஞ் செய்தும்அதன் தன்மையினாற் சொந்தச் சாதி விளங்கின காதையொன் pGoirGL.
கொஞ்சந் திருந்தி நிலையி லுயரவே
கூறொனா ஆணவங் கொண்டும் இனத்தை
மிஞ்சி அவர்மேற் குதிரைவிடப் பார்க்கும்
மேட்டிமை கொல்லும் உமது கனத்தை.
அடம்பங் கொடியுந் திரண்டால் மிடுக்கென
ஆன்றோர் அறைந்த அச்சத்திய வாக்கு
திடம்பெற நீர்விசு வாசித் ததன்படி
செய்யும் சொல்லாதிரும் ஓர்போதுஞ் சாக்கு.
108
ரூபகதாளம்
găur. - -
ஐயோ.
gGur.
gGuIT. - .

dopoupédifì
செல்வர் செழுங்கிளை தாங்கல் அழகெனச்
செப்பினள் ஒளவை முன்னாளதை எண்ணி
எல்லா உறவினரும் மேன்மை யாய்வர
ஏற்ற உதவி செய்வீர்தயை பண்ணி. s:98usr-••
18. நன்றி
விருத்தம்
பாரில் நீபெறும் பற்பல நன்றியைச் சீருட னென்றுஞ் சிந்தையில் வைத்ததி நேருறும் நன்மை நின்னுப காரிகட் கேரு றப்புரி யின்பம் பெருகவே.
பதம்
இராகம் : காபி ஆதிதாளம்
பல்லவம்
நன்றி மறவாதே நேசா நானிலத் தொருவர் செய்த நன்றி மறவாதே நேசா.
அருபல்லவம்
என்றுமதை மனத்தில் இன்பமுட னமைத்து இதமாய்ப் பதில்புரி நிதமும் அவர்க்கே. நன்றி.
சரணங்கள்
செய்யும் நன்றிமறந் தோர்க்குய்யும் வழியேதென்னும் திருவள் ரூவருரை மருவி வருவாய் நன்றி.
உப்பிட் டவரைஉயி ருள்ளளவும் நினையென் றேதும் பழமொழி மீதே மனம்வை நன்றி.
109

Page 79
disapară Genoa
ஒருநன்றி செய்தவர்பின் ஓராயிரந் தீமைகள் ஓர்ந்து செயினும்நீ தேர்ந்தே நன்மைசெய் நன்றி.
பெற்றார் குருஅரசர் உற்றார் ஆசிரியர்செய் பெருநன் றியைஒரு சிறிதும் அயரேல் நன்றி.
ஈசன் உனக்கருளும் நேசமனைத் துஞ்சொல்லி எந்நா ஞந்துதி உன்னா வினாலே, நன்றி.
19. தமிழ்மாதின் பிரலாபம்
தரவுகொச்சகக்கலிப்பா
என்னருமைப் புத்திரரே என்றனைக்கை விட்டுவிட்டுப் பன்னரிய அன்பாய்ப் பரவங்லோ மாதுதன்னைப் பொன்னிகரு மன்னையெனப் பூசனைசெய் தேற்றுவர
என்னபவஞ் செய்தேனோ ஏற்குமிதோ உங்களுக்கே.
பதம்
இராகம்:இந்துளப்தான்காபி ஆதிதாளம்
பல்லவம்
என்னைக் கைவிடுவது ஏற்குமோ உமக்கென
இயம்புவீர் யான்பெற்ற இளைஞர்களே.
அருபல்லவம்
முன்னொரு காலம் முழுவனு கூலம் முத்த மிழெனக் கதுமணக் கோலம் பின்னவ காலம் பிறந்தலங் கோலம்
பெருகி டச்செய் ததக்கலி asTaoib - gCurt araisensor...
10

diogel Ddarf
சரணங்கள்
பெற்றவள் மேலே பிள்ளைவன் பாலே பிறிதொரு ஸ்திரிதா யென்றவள் UrCBao பற்றுறல் போலே பரவிங்லிஷ் நூலே படித்தி ரெனைப்பே னுைம்இனி மேலே - ஐயோ! என்னை.
கம்பராம் மேகம் கவிகாள மேகம் கலையுணர் புலவர் பெய்பிர வாகம் அம்புவி யேகம் அகமகிழ் போகம் அவைக ளிலுமக் கில்லையோ தாகம்? - சொல்லும் என்னை.
அங்கில மாது அபிவிர்த்தி மீது அழல்சிறி தெனுமெ னைஅனு காது இங்கிலிஸ் ஒது இளைஞரிப் போது என்னைப் புறக்கணிக் கிறார்.இது வேது? ஐயோ! என்னை.
நான்சக வாசம் நாளுஞ்செய் தேசம் நன்னணுவோ ரறியா தென்னிதி காசம் தேன்சுவை வாசம் செயுமென்னில் நேசம் சிறிது மற்றிருப் பதுமதி மோசம் - ஐயோ! என்னை.
20. தமிழ்ப்பாவைடியின் மகத்துவம்
தரவுகொச்சகக்கலிப்பா
தேனேர் சுவைகுலவுஞ் செந்தமிழா கும்பாஷை தானே தனக்குநிகர் சாற்றுபுகழ்த் தொன்னூலின்
ஞானா கரமுநிறை நற்பாஷை யாமதன்சீர் நானோ சொலவலியேன் நாடுமதை நண்பர்களே.

Page 80
địg}{DåHồ 6ữrrüD60
GD
இராகம்; குஸ்றோளப்
கண்ணிகள்
தேனொழுகும் செந்தமிழின் சிரைநாம் தேறுவோம்அப் பாஷைநூல்கள் செவ்வையாய்
தண்டமிழ்பல் பாஷைகளின் தாயெனல் சம்ஸ்கிர்தத்தால் வந்ததெனச் சாற்றிதல்
இன்னிசை இலக்கண விலக்கிய மாட்சி
எங்கள் தமிழ்ப்பாஷை தனக்கெந்தப் பாஷை
அறிவியலுயர் பாவலர் அனந்தம்பேர் அமிர்தநிறை செந்தமிழெம் அரியகண்
அம்புவியின் பாஷைகளில் ஆகப் ஆனவற்று ளொன்றுதமிழ் அன்பு
பாவலரின் சக்கரவர்த்தி பாரிற்
பகரிராம காதைதன்னைப் பாடும்
மதுரநிறை வெண்பாதன்னில் மான்ம்ய மாசில்புக ழேந்திபாடல் மனமாய்க்
ஒளவையைப்போல் அன்பின்பாடல் ஆர்செய்தார்
அத்தைநன்றாய்க் கற்றுவையும் அனுதினம்
ரூபகதாளம்
e Goir(6
மெய்யே
பொய்யே.
பூருவம் கூருவம்.
கம்பரே நண்பரே.
முற்றிடும் கற்றிடும்.
பூவில்?
நாவில்.
அருந்தமிழைத் தள்ளிஇங்கிலிஷ் அதனை அண்டியே. அதிகதேர்ச்சி பெற்றுமென்ன அவனோர் நொண்டியே.
பூர்வஞான நன்னிதியம் பொங்கி புத்தமிர்த செந்தமிழைப் போற்றிக்
12
வழியும் களியும்.

இராகம்:
கீதரசமஞ்சரி
21. அங்கிலோ கல்வி அவசியம்
விருத்தம்
துங்க மாமறி வுற்றுத் துலங்கியே இங்கி தம்பெற வெம்மவர் வேண்டிடில் சிங்க மென்கொடி சேரிங்கி லன்வளர் அங்கி லோகல்வி அத்யா வசியமே.
இங்கிவீனத் ஆதிதாளம்
அங்கிலோ கல்வி அவசியமே
அவனியில் மானிடர் அறிவுறவே
ஆணு பானு ஞானமிவை அதிநிறை வாயுள்ள நிதியதுவே.
சிங்க மென்கொடி துங்கமுறும் திசையெங்கு மாங்கிலம் இசைபெறவே தேசராச ரானோர் பேசிடும்
திருமருவிய செழும்பர அமுதாம் அங்கிலோ.
சீர்திருத் தத்தின் காரணமாய்த் திகழுமங் கிலமதைப் புகழுவமே
தேடிநாடி யோடி வாலிபர்
தினந்தின மருந்திடுந் தீங்கனியாம் அங்கிலோ.
பண்டி தர்மறு பாஷையினும்
பகருமங் கிலமதிற் பலருதித்தார்
பாரில்யாரும் சீரு றத்தகு
பரவ சரசகுன பாஷிதமாம் eraseof...
13

Page 81
dfsgeogrå GarmaMDGO
22. அங்கிலோ கல்வி தரும்படி Deb6 (65-6).
கட்டளைக்கலித்துறை
சிங்கக் கொடியுள்ள தேசங் களெங்குஞ் செழித்துவளர் தங்க நிகருநல் லங்கில பாஷைத் தகையுணர்ந்து பொங்கிய காத லதனில்வைத் தேனதி பூரணமாய் இங்கிதஞ் சேர்தந்தை யேயருள் வாயதை யென்றனக்கே.
CD
இராகம்:தோடி ரூபகதாளம்
பல்லவம்
கல்வி அறிவின் மேன்மை தேருவீர் - தந்தையே இங்கிலிசுக் கல்வி அறிவின் மேன்மை தேருவீர்.
அருபல்லவம்
செல்வ மதுவென் றோரும் - மனம் சிறந்து விரியும் பாரும் பல்வி தநயம் சேரும் - அதைப் பரிவா யெனக்குத் தாரும் தாரும். asdia. . . .
சரணங்கள்
இளமை யில்மனந் தேசு - பெற எழிலுறு மிங்கி லீசு வளமுடன் கற்கை லேசு - கொடும் மகிழ்வாய் ஆசிரியர் காக s கல்வி.
14

கீதரசமஞ்சரி
இங்கிலி சுக்கலை ஞானம் - பெற்ற எவருக்கு முண்டு மானம்
இங்கித மாமந்தப் பானம் - பணம் ஈட்டப் பருகுதல் ஈனம் ஈனம் கல்வி.
சிங்கப்பூ ராதியாம் தேசம் - சென்று திரவியந் தேடும் பாசம்
எங்கள் வாலிபர் நேசம் - வைக்கும் இங்கிலிஸ் கல்விக்கு மோசம் மோசம் கல்வி.
கொஞ்சம் படித்திட்ட உடனே - வேலை கொள்ளத் துணிபவன் மடனே
நெஞ்சந் திருந்துகில் திடனே - என்னை நெடுகப் படிப்பியும் கடனே கடனே கல்வி.
*யெஸ்நோ? அனையசொல் மாத்ரம் - பேச இயலு கிலதோ காத்ரம்? பைசா உழைக்கநற் சூத்ரம் - என்று பாராதிர் இங்கிலிஷெம் நேத்ரம் நேத்ரம் asses....
ஆஸ்தி யிலெனக் குரிய - பங்கை அறுதியாய் விற்றே é9rful
சாஸ்தி ரங்களைத் தெரிய - செய்யும் சந்ததமும் நன்றி புரிய qrfu கல்வி.
23. கழக சீவியம்
கட்டளைக்கலித்துறை
கல்வி யினால்வரு மெய்ப்பயன் யாவுங் கலந்துறையுஞ்
செல்வக் களஞ்சி யமாகுங் கழகநற் சீவியமே
அல்லிரு ணிக்கு மறிவதை யூட்டு மதுலநெறி துல்லிய மாய்வள ரச்செயுஞ் சோதி துலங்கிடவே.
15

Page 82
சிந்தனைச் சோலை
இராகம்: பைரவி
பதம்
பல்லவம்
கழக சீவியம் இன்பமே
கல்வி யிலையெனில் துன்பமே
அருபல்லவம்
அழகு சேரறிவால் நிறைந்திடும் அகம திற்ககுணம் உறைந்திடும்
சரணங்கள்
அன்பின் சோதரர் கூட்டமே அரிய கலைவளர் தோட்டமே பண்பு றுஞ்சுப வாழ்வதே ருசி பார்த்தி டிலதற் கிடிலைப் qaf
ஆசி ரியனின் நேசமும் அதுல வேதப்ர காசமும் மாசி லாநெறியுந் தெரியுமே மனமிகக் கனிவாய் விரியுமே
மதுர மாகிய கிதமும் மணிக ணிரெனும் நாதமும் அதிகசோ பனஅபூர வாரமும் அங்குகேட் குமேஎந்த நேரமும்
116
ரூபகதாளம்
asypes so
6P6 so
696 - a
855- - -

disgaupéjarfi
24. தகப்பன் மகனுக்குச் சொல்புத்தி
கட்டளைக்கலித்துறை
என்பால்நற் கண்யமும் நேசமுஞ் சேரு மிளமகனே இன்பாருஞ் சித்தியுன் சீவியந் தன்னி லடங்கிடவே பொன்போலும் புத்தி மதிசொல்லு வேனற் பொறுமையுடன்
அன்பாகக் கேட்டதை யாசரித் தாலெனக் கானந்தமே.
பதம்
இராகம்: பியாகு ஆதிதாளம்
பல்லவம்
என்மகனே நீகேளாய் - நல்
இங்கிதம் பெறவேண்டி லென்மதி
அருபல்லவம்
நன்மையைச் செய்திட நாடு - கெட்ட நண்பர்கள் கூட்டம்விட் டோடு - நிதம் சன்மார்க்க நெறிதனைச் சூடு - அத்தால் தடையில்லைப் பெறுவைநற் G GTGör...
சரணங்கள்
மாணவன் என்றஅப் பட்டம் - ஒன்று மாத்திரம் பெற்றால்வி சிட்டம் - என்ற வினெண்ணத் தால்வரும் நஷ்டம் - கல்வி
வேணுமென் றாற்படு கஷ்டம் என்.
17

Page 83
சிந்தனைச் சோலை
நேரத்தை ஆதாயம் பன்னணு - சென்ற நிமிஷம்பின் வாராதென் றெண்ணு - நல்ல ஆரமு தாமறி வுண்னு - தேவை அனுதினம் பணிந்திட நண்ணு என்.
புகையிலை குடிப்பது தீது - கண்கள் புகையும் நெஞ்சுலருமென் றோது - பல வகைவகை யாய்உடல் மீது - கெட்ட வருத்தங்கள் வருதற்க தேது என்.
காவடி என்றபேர் வாங்கி - என்னைக் கலக்காமல் தீமையை நீங்கி - சுத்த
தேவ அடியானாய் ஓங்கி - என்றும் செழித்திருப் பாய்எனைத் தாங்கி afsår. --
25. பெண்கள் கல்வி
கலித்துறை
ஞான மாகிய கலையையிந் நாட்டின்மங் கையர்க்குப் பான மாயளித் தவர்க்கொளி பரப்புதல் படித்த மேனி லாவுறும் பெரியவர் மீதினில் விழுந்த வானி லாவுறு கடனென வழுத்துவன் மகிழ்ந்தே.
GD
இராகம்: கமாளப் ரூபகதாளம்
பல்லவம்
பெண்கள் கல்வி எங்களுரில் பெருக முயற்சி புரிகுவீரே.
18

கீதரசமஞ்சரி
அருபல்லவம்
கண்கள் நேரும் நல்லறிவினைக் கருணை யுடனவர் கட்கருள் செயுமெம் பெரியோ ரேநிர்
சரணங்கள்
கல்வி யில்லா மங்கை யோடு கற்ற மாமண வாள னின்பமாய் இல்வாழ் வினிலிசை பெறவே இதமாய் நிதமும் எந்த விதமாய் வாழ்தல் கூடும்?
புத்தி ரர்க்குக் கல்வி யூட்டிப் புனித ஞான போத மீயும் சித்தங் கல்வி யாற்சி றந்த திகழ்சேர் மகளிர் தம்மாற் புகழ்பெற் றிடுமே தேசம்
சுற்றுச் சீலை மேஸ்சப் பாத்து துலங்கு மாபர ணம்இவை யல்ல நற்றமி ழோடங் கிலேய நறவம் நிகரறி வைஆவர் பெறுதல் அதி9வ சியமே
பூர்வம் இந்தியா வின்பல
பூவையர்கள் கல்வி தேர்ந்து
சீர்வ தியும்பன் டிதராச் சிறந்து ஜெகம்திருந் தும்வகை புரிந்தார் பலநூ லெழுதி
பெண்.
பெண்.
பெண்.
பெண்.
பெண்.
26. நகை போருதலினால் வரும் நவடிடங்கள்
கட்டளைக்கலித்துறை
தொகையாய்ப் பணஞ்செல விட்டுப்ர காசந் துலங்கிடுபல்
நகையா பரணஞ்செய் தங்கமெ லாமிட்டு நானிலத்திற் றகையாய் விளங்க விரும்பும் ஸ்திரீகளின் றன்மைமிக நகையாடப் பாத்திர மாமென் றவர்க்கு நவிலுவனே.
119

Page 84
đgsa Darê GameDO
D இராகம்: உசேனி ரூபகதாளம்
பல்லவம்
நகைமேல் ஆசை கொள்ளாதே - நாங்காய் நான்சொல்லும் வாக்கைத் தள்ளாதே
அருபல்லவம்
வகைமோச மாய்ப்பணம் மெத்தச்செல விட்டு வாகாய் நகைகள்செய் தங்கமெலா மிட்டு தகைபெறப் பார்க்குஞ் சகோதரிகள் மெட்டு
தக்கோர்நகை யாடல் புரி
மிக்கமதி யீனம் தெரி. 5605. . .
சரணங்கள்
காட்டுத் தனத்தில் வளரும் மனுஷரே காதல் கொள்வார் நகைமேலே - சீ ராட்டுத் திருத்தம் அதிக முள்ளமாந்தர் ஆகுங் கேடென்பர் அத்தாலே.
வீட்டில் என்றும் நகையால்விளை தீங்கு விள்ளற் கரிதாம் அதைவிட்டு நீங்கு நாட்டில் நடக்கும் கொலைகள வீங்கு
நவிலற்கென் னாலில்லை
நகைபூணல் வெகுதொல்லை. 5605 . . .
என்ன நகையைநீ பூண்டாலும் உன்சொந்த லட்சணத் தோடு சேராதே - இனி ஏதும் அழகற்ற மாதணி பூணுகில் இன்ப சவுந்த்ரம் வாராதே.
120

பொன்னின் குடத்திற்குப் பொட்டிட பூமக ளாகமுத் தாள்வரப் மின்னே மயிலேனன் நற்புத்தி
மெத்தக்கவ னத்தோடதை நித்தம்நினை சித்தந்தனில்.
தேடிய செல்வத்தைச் சேமித்து வைத்திடச் செய்வேன் நகையென் றுண்ணாதே - உன்றன் சீவிய காலத்திலே வறுமை வந்தாற் செய்யு முதவியென் னாதே
நாடியே கள்வர் நகையை நானமின்றிக் கொள்ளை செய்வர்
சாடுவ ருன்னை வருத்தங்
சம்பாத்தியம் பேணப்போய் வெம்பிஅழ வேண்டிவரும்.
காப்பொன் னிலுந்தட்டார் மாப்பொன் னெடுக்கிற
கள்ளத்தை நீஅறி யாயோ - அதைக் கண்டு பிடிக்க எவரால் முடியும்? கருத்தி லதைக்குறி யாயோ?
கோப்புடன் கேசாதி பாதபர் குலவும் நகைகளைப் போடுவதோ
மாப்புகழ் ஆபரனந் தருமோ?
மதிகெட்டுல கில்தட்டார் சதியாற்பலர் நிதிகெட்டார்.
121
dogaudaraf
вотGDт?
(3LnTGSDrTP
sfmEDIT?
560&s
எடுத்தே மடுத்தே
கொடுத்தே
நகை .
யந்தம் சந்தம்? சொந்த
5688. . .

Page 85
சிந்தனைச் சோலை
தட்டார வீட்டினில் இட்டமா கப்பலர் தங்கி நகைசெய் கிறாரே - அத்தாற் சாரும் சோம்புத் தனந்தன்னையும் சள்ளையும் சற்றே மனத்தெண்ணிப் பாரே.
முட்டா யிருந்தா லும்முக் குத்தி யில்லாது மொய்குழலே தேவ ஆலயம் செல்லாது விட்டா ரனேகர்நீ அவ்வழி நில்லாது
மேலாம்ஈஸ் பரபக்தி யால்ஆன்பணி வதுபுத்தி 5606. . .
27. சீதன வழக்கத்தின் தீமைகள்
கட்டளைக்கலித்துறை
மெய்மண வாழ்வி லதியின்ப மாயுய்ய வேண்டுபவர் கையி லதிபணம் பாரிய வாஸ்தி கதித்தநகை
பெய்யுமின் னாளிவ ளென்றொரு பெண்ணிற் பிரீதிகொள்ளார் செய்திறம் மேன்மை குணங்கல்வி கற்பிவை தேடுவரே.
பதம்
ராகம்: கமாளப் திதாளம்
t
பல்லவம்
சீதன வழக்கம் தவிர்ப்பீர் - சினேகிதரே சீதன வழக்கம் தவிர்ப்பீர்.
அருபல்லவம்
ஆதனத்திற் காக எங்கள்
ஆடவர்க ளானோர் தங்கள்
122

கீதரசமஞ்சரி
அரிய மனைவியரைத் தெரிவுசெய் வதுபெரும்
சரியின மென்ற உன்மைதெரி வீர்நீர் அனைவரும் föGOT...
சரணங்கள்
கல்வியின் அழகைப் பாராமல் - ஸ்திரீகளுக்காம்
கற்புநெறி தன்னைத் தேராமல்
நல்லவளோ வென்ன ஓராமல் - பணத்தைமாத்ரம்
நம்புகிறீர் அன்பு கூராமல், சொல்லும்பணம் இல்லறத்தில் தோன்றுமின்பம் எம்மகத்தில்
துலங்கவழி தராது சுகசிவியம் வராது துணைவன்துணை விக்கேற்ற சுகிர்தைக்கியம் இராது. diabaos...
பொன்னின் நகைஎன்ன தருவீர்? - அதனுடனே பூமி ஆஸ்தினன்ன தருவீர்? நன்னிதியம் மெத்தத் தருவீர் - அல்லாவிட்டால் நான்அப் பெண்ணைக் கொள்ளேன் அறிவீர்
பன்னியாய்வரு மம்மின்னைப்
பார்த்துமுடி யாமல்பொன்னை பாரினில் நாடுதல் ஓர்மதி யீனம் பண்புடை யவர்ரக்கது வெகுகன வீனம் சீதன.
தேசம் மிகக்கிழாய்ப் போனதே - சீதனத்தாலே தீங்குகள் அனந்த LeT6OTGa5 காசு நேர்ந்துகொள்ள லானதே - மாப்பிள்ளைமாரைக் கடைச்சரக் கென்றெண்ண லானதே.
நேசத்தா லிணைந்த மனம்
நிச்சயம் அதுசு குணம் நிகரிலதாய் நிறைவுற்ற சிலாக்யம் நீடுசந் தோஷவாழ் வுக்கதே யோக்யம் diabeo. . . .
123

Page 86
éögapetä 66reoa
28. வாசித்தலின் இன்பங்கள்
விருத்தம்
வித்த கர்செய்யும் மேலான நூல்களை நித்த மோதும் நெறியை யுடையவர் சித்தி யோடகஞ் சீருற் றறிவினில் மெத்தத் தேறி விளங்கி மகிழ்வரே.
பதம்
இராகம்:பியாகு ஆதிதாளம்
பல்லவம்
வாசித்தல் ஆனந்தமே - என்றும் வாசித்தல் ஆனந்தமே.
அருபல்லவம்
ஆசித்ததி சுகிர்தமாம் நூலாலும் மகத்தைப்
போவதித்த ஆறுபவியும் பொங்குமனோ சுகத்தை வாசி.
சரணங்கள்
இன்ப மனோதேர்ச்சி ஈட்டவொரு பாயம் அன்பொடுபல் புத்தகங்கள் ஆராய்வின்மேல் நேயம் வாசி.
சிந்தை விரிந்து சிறந்துநிறை 6285 விந்தைசெறி நூலுணர வேண்டும்முறை s வாசி.
வீண்பொழுது போக்கி விளையாடுமந் நேரம் மாண்புநிறை பத்திரிகை வாங்கிஅதன் சாரம். வாசி.
124

கீதரசமஞ்சரி
சிற்றின்ப சாரஞ் செறிநூல்களைத் தள்ளி நற்புத்த கங்களை நன்றாய்த்தெரிந் தள்ளி anTaf...
லெங்கும்நேர் புதினங்களைத் தேர الله மேவும் பொதுஅறிவு மிக்கநயஞ் சேர. வாசி.
29. சங்கிதம்
தரவுகொச்சகக்கலியா
பூவில் மனுடனுக்குப் புண்யமிகு மீசனருள் தேவவர மென்றேத்துஞ் செந்தே னிகளினிமை மேவியசங் கிதமெனும் மேன்மைநிறை நற்கொடையை ஆவ லுடன்பயில்வீர் அத்தியந்த வின்பமதே.
பதம் இராகம்:செஞ்சுருட்டி ஆதிதாளம்
பல்லவம்
சங்கிதம் ரஞ்சிதம் - சன்மார்க்க சங்கிதம் ரஞ்சிதம்
அருபல்லவம்
இங்கிதமாக நவரச அலங்கிர்தமுற இசைபாடிசை பூமிசைசேர். சங்கிதம்.
சரணங்கள்
ஈசன் மனுஷருக்கு இனியசுப வுசித இருமா வரமென் றருளும் சங்கிதம்.
125

Page 87
dfsgsaper CarmeoGo . ... -w- ... ----.
இன்னிசை சில்ரோகங் கட்கேற்ற அவுஷதமென்
றெண்ணனும் எண்ணம் திண்ணம் சங்கிதம்.
அகத்தின் துயரகற்றும் அமிர்தசஞ் சீவியெனும் - அதிஇன் கதியே வதியும் சங்கீதம்.
பல்கலை யுணர்வுடன் பாடும் விதந்தனையும் பயிலும் செயலோர் ஒயிலே சங்கீதம்.
தம்புரு வினை மிருதங்கம் சல்லரிநிதம்
a fe is சங்கிதம்.
30. தொழிலின் மாண்மியம்
வெண்பா
தொழிலில் நிறைந்துறையுந் துங்கங்கா ணாமல் அழிவுறவே சோம்பி யலையும் - இழிஞருக்கு
ஏற்றபுத்தி யாக வெழில்சேர் தொழின்மாட்சி மேற்பா விசைத்தேன் விழைந்து
Llgjli)
இராகம்: துசாவந்தி ரூபகதாளம்
பல்லவம்
தொழிலாங்கடன் தீராய் - அதிலுறை துங்கமதைத் தேராய்.
அருபல்லவம்
எழில்சேர் மகிமை இன்ன தொழிலில் மாத்ர முன்டென்ன எண்ணுை மெண்ணம் மாநஷ்டம் பண்ணுைம்இதுகாண் திட்டம் தொழி.
126

a6ogoTUDd8arfh
சரணங்கள்
என்ன தொழிலையும் சீராய் - செய்தல் இங்கிதமாம் ஓராய் பன்னும் மேலைத்தேசம் பாராய் -அங்கு பயிலுந்தொழில் ஆராய்.
மின்னும் சாரம் நீராவி இன்னும் நம்முரைத் தாவி மேலாம் விற்பன காட்சி காலா ததுவெம் தாழ்ச்சி. தொழி.
கமத்தின் மேன்மைஉண
ராரே - அதைக்
கற்றோர்கரு தாரே நமக்குத் யோகமேயென் பாரே - அதை நாடித்திரி SAMTGJ.
தமக்கும் பிறர்க்கும் நலம்உவக் குங்கிர் ஷிகநிலம் தன்னைத் திருத்தி யுண்ணச் சொன்னாள ஒளவை சீர்நண்ன தொழி.
கைத்தொழி லினமென் றுாரில் - பேசும்
காதையைநாம் தேரில்
சித்தந்தனக் கொவ்வாத சிரில் - கதை
சிரிப்பர்அறிஞர் Lumrafio வித்தை எதையும் நேர்மை விளங்கப் புரிதல் மேன்மை வேண்டுங் கைத்தொழில் தனைப்பூண்டு வாழ நீநினை தொழி.
31. தேகாப்பியாசம்
கட்டளைக்கலித்துறை
பாகார் சுகமெனும் பாக்யம் பெருகிப் பலிக்கநிதம் வாகாம் முயற்சி யுறும்வாழ்வை வேண்டுகில் வையகத்திர் போகா வொழுங்கொ டனுதினம் மிக்க புளசிதமாய்த் தேகாப் பியாசம் புரிவி ரதுமிகத் திவ்வியமே.
127

Page 88
சிந்தனைச் சோலை
LğjLD இராகம்; இந்துளப்தான் ஏகதாளம்
கண்ணிகள்
தேக9iப்பி யாசம் செய்யும் தினமும் நேசரே சிறந்த நற்சுகம் பொருந்தி வாழுவீர் ஜெகத்தி லின்பமாய்.
ஆகத்தோடு மனமும் வலிமை அடைய வேண்டுகில் அனுதினமும் தேகாப்பி யாசம் அவசி யமாமே.
அப்பியாசஞ் செய்யுந் தொழிலாளர் தம்பெலம் அனவரதமுஞ் சோம்பித்திரி யுமவர்கட் காகுமோ?
வேர்வை பாய்தலால் ஆரோக்யம் விர்த்தியாமென விளம்புங் கருத்தை அனுபவத்தினால் விளங்குவீர்நிதம்
களைக்க வேலைசெய்வோர் ஊணிற்கருத்துக் கொள்ளுவார் கடிதினி லவர்தீன் சமித்திடும் காணுமுண்மையே.
32. சங்கீத மகத்வம்
UGD இராகம்:மோகனம் ஆதிதாளம்
பல்லவம்
சங்கித மகத்வமதைச் சாற்றளவ ராலியலும்.
அருபல்லவம்
இங்கித மிகுமதனுக் கினையாயெதை மொழியத்தகு மிகபர மெனுமிரு தலமதில் சங்கீத.
128

daarorubées
சரணங்கள்
விண்ணுலக மீதுந்தொண்டர் விள்ளரு மினிமையோடு கண்ணுதல் நிகர்பரற்குக் கனதுதியை அனுதினமும் கழறுவராங் களிகொளவே சங்கித.
ஏதுக்கும் உருகாவொன் றிசைக்குமிக் குருகுமெனச் சாதிக்கும் பழமொழியித் தாரனிதனிற் சீரறிஞர்கள் ஒதியதுள தாதலினுயர் afriras...
அந்தக்கர ணங்கள்தம்மைப் பந்தித்த பலரோகங்கள் விந்தைமிகும் சங்கிதத்தால் விரைவாயகல் வுற்றனவென உரைசெயும் பலமுதுரை சங்கீத.
சங்கீதமில் லாதகாலை சந்தோஷமு மில்லையொரு மங்களமு மில்லையிந்த மகிதலமதி லெனுமுண்மையை மனமதிலெவ ருணருவதிலை சங்கீத.
33. பணவாஞ்சை
பதம் இராகம்: மத்தியமாவதி ஆதிதாளம்
பல்லவம்
பணவாஞ்சை ஒருகெட்ட பண்பு - அதனையுள்ள
பாவிகட் குமுண்டோ அன்பு.
அருபல்லவம்
குணமில்பணப் பேராசை கொண்டு தொகையாய்க் காசைக்
கூட்டுவோர் பெரும்பாலும் கொடைசெய் யாரே எக்காலும்.
129

Page 89
dfijgeborá Game DG0
சரணங்கள்
ஈயாத வர்க்குப்பரன் பொருளே - அவருடைய இகவாழ் வொருபெரும் மருளே நேயமி லவர்மனம் இருளே - நிறைந்துநிதம் நீடுமவர்க் கேதீசன் அருளே
மாயமாய்ப் பனந்தேடி
வைத்ததையே கொண்டாடி
மரணமுற் றிடும்போது
வரும்பயன தாலேது 625 TGAU a se
உறுமுய ரறிவினைக் கெடுக்கும் - பணவாஞ்சை ஓயாத கவலையைக் கொடுக்கும் மறுமையில் நரகினில் விடுக்கும் - ஆன்மாவைத்துய வழியிற்செல் லவிடாது தடுக்கும்
நிறைமணம் ஒருபோதும்
நிகழ்த்தாதரு ளென்றோதும்
நீர்மைதனை யறுக்கும்
நேர்மையையும் வெறுக்கும்
பிறரைய னாப்பிப்பணஞ் சேர்ப்பான் - பனம்பிடிப்பான் பெரியகொ டியவட்டி ஏற்பான் குறைசேர் சுயவிருப்பே தீர்ப்பான் - ஆசைப்பெருக்கில் கூறுங் கடலினையே நேர்ப்பான்
உறவுசினே கந்தேரான்
உலகநன்மை யைப்பாரான்
உரியநற்கு ணம்பொன்றி
ஒருவர்க்குஞ்செய் யான்நன்றி SfG
புண்ணிய மொன்றே யுறுநிலையாம் - லோகமருளும்
பொருள்க ளாணவப் பாசவலையாம்
கண்ணியம் லோபி தனிலிலையாம் - பணமொன்றையே
காத்துப் பெருக்க லவன்நிலையாம்
எண்ணனும் மனுஷ ஜென்மம்
எடுத்தநாம் தான தன்மம்
இயற்றநற் பொருளிட்டும்
முயற்சியே நயங்காட்டும் teen 130

கீதர0மஞ்சரி
34. பொறாமை
இராகம்:கல்யாணி ஆதிதாளம்
பல்லவம்
மனத்திற் பொறாமை கொண்டு மகிழ்ச்சியற் றிருப்பது மாந்தருக் கழகல்லவே
அருபல்லவம்
தனத்திற் பிறர்க்குரிய கனத்திற்செல் வாக்கில்கிர்த்தி இனத்தில் புத்திரராதி அனைத்திலின் புற்றிடாமல் EDanis...
சரணங்கள்
எங்கள் சாதியாருயர் வெய்தாம லிருப்பதற் கெரிச்சல் ஒருபெருங் காரணமே தங்கு பிறர்நன்மையில் பொங்கு பொறாமையுறில் தானதற்கென் னிவாரணமே எங்கு மெவருமதி இங்கித முடன்வாழ்ந்து துங்க முறவெனநாம் மங்களம் பொழியாமல் Doris...
தன்வினை தன்னைச்சுடு மென்பது போலத்தீமை சாரும் பொறாமை யாளனையே மன்னுறு சுகமெலாம் நன்னிதி பொலிந்தென்றும் வாழ்க எவருமென நினையே இந்நிலந் தனில்யாரும் பன்னரு முயர்நிலை தன்னை யடைவதனால் நன்னல மெங்குமோங்கும் மனத்.
131

Page 90
đlịg560&Mở đỡTũD80
மற்றவரில் அழுக்கா றுற்றிருப் பவர்மனம் மாசு நிறைந்த எரிகுழியே பற்றிலா தயலவ ருற்றவர் சுகவாழ்வை அற்றிட நினைத்தல்மா பழியே கற்றுப் பரமபதி நற்றாடொழும் பெரியோர்
முற்றும் பிறர்நன்மையைப் பற்றி யகங்களிப்பர் மனத்.
35. வீண்செலவு
glo
இராகம்: சகானா ஆதிதாளம்
பல்லவம்
வீண்செல விடலாமோ நம்பொருள்தனை விழைந்துநாம் கவனமாய்த் தேடி
அருபல்லவம்
மாண்புட னேதாங்கள் வரவையெண் ணாமல் மட்டுக்கு மிஞ்சிய செலவுசெய் வோர்க்கு வாராதே - பணம் - சேராதே
வறுமையி லாழ்வார் சிறுமையில் மாள்வார் வீண்.
சரணங்கள்.
கல்யாண மாதி காலங்கள் மீதில்
கணிப்பின்றிப் பொருள்செல வழித்திடு வோர்கள்
கட்டாமல் - பணம் - கிட்டாமல்
கடனுக்குட் போவார் கவலைக்கு ளாவார் வீண்.
32

கீதரசமஞ்சளி
ஒளதாரித் தனத்தினி லோடிய காசு உறுமுட்டுப் பாட்டினுக் குதவ வராது
ஓயாது - மனம் - சாயாது ஒறுத்திடு வோர்பணம் நிறைத்திடு வோரே வீண்.
உழைப்பன வதிலும் ஒறுப்பன வதுவே உசிதமென் றறைகுவர் உலகினில் முதியோர் ஓராது - நயம் - தேராது
உறுவரு மானம் ஒழிவித்த லீனம் வீண்.
தேவை யிலாப்பொருள் சிறுவிலை யெனினும் சிந்தைகொண் டதைவிலை தந்துவாங் காதே சிந்தாதே - பின்வ - ருந்தாதே
சேகரித் திடுபணம் ஆதரித் திடுமே வீண்.
36. தாழ்மை
பதம்
இராகமம்:கல்யாணி ஆதிதாளம்
பல்லவம்
தாழ்மைமா நலந்திகழ் சுகுணம் - அது தன்னையணி பவர்க்கொரு மன்னிறையு மாபரணம்
அருபல்லவம்
கிழவர்க ளானபோதுந் தாழவுரை யெனவேமுன் நாளதனி லெளவைமொழி பாழு றாதெமை ஆளுமுரை யாகக்கொண்டு தாழ்மையுறு வாசகமே நீளுமன் பனுதினமும் முள வழங்குவம் afraid...
133

Page 91
disabará Garabo
சரணங்கள்
நல்லகுடிப் பிறப்புடன் கல்வியறி வொழுக்கமும் துல்லிபமு மார்ந்தவர்கள் தொல்லுலகிலே எல்லவர்க்குந் தாழ்மையான சொல்லுநடை பழக்கத்திற் செல்லுவ ரதவர்க்குத் துல்லியதொ ரறிகுறி
பாரமுறும் பொருள்தாழப் பாரமில் பொருளெழுதல் தாரணி யியற்கை யென்ப தாரறிகிலார் நேரஅதைக் காத்திரமுள் ளோரணிவர் தாழ்மைதனைச் சீரில்சிறி யோர்பெருமைக் காரராய் விளங்கிடுவர்
முந்துபலர் தாழ்மையென்னும் சுந்தரசு குணமின்றி விந்தைச் சனசங்கத் தில்தகுந்த கண்ணிய வந்தனைபெற் றிலராகிச் சிந்தைநொந்த சம்பவங்கள் சந்ததமும் இதிகாசம் தந்திடும் நமக்குனர
37. இன்சொல்
இராகம்: பியாக்
பல்லவம்
assrooD. . .
தாழ்மை.
anbold...
தாளம்: திஸ்ப்ரம்
இன்சொலா லுறும்நன்மை யென்சொல்வேம் இவ்விக மதனிலே
எழுங்கல கங்கள் தமையதால் வெல்வேம்.
அருபல்லவம்
வன்சொல் மனதினிற் கோபத்தை முட்டி வலிய பகையை நிலையாய் நாட்டி வாதித்தே - வன்மம் - சாதித்தேவர வண்மையுடன் மென்சொல் தன்ம மியற்றிடும்.
34

aggan Ddaf
சரணங்கள்
இன்சொல் மனதினில் இனிய மகிழ்தரும் எவ்வேளை தன்னிலும் எவர்க்கு மதனால் ஆறு தல்வரும் துன்பப் படுக்கையிற் கிடக்கும் போதும் துக்கத் தமிழ்ந்திடுஞ் சமய மீதும்
தூய தேன்நிக ராய வாய்மொழி சோர்வக லத்தகு மாறுதல் தந்திடும் இன்சொல்.
குயில்மிக் கினிமை யாகப் பாடிடும் புன்கழுதை யெவர்க்கும் கோபம் முளக் குரல்கொண் டாடிடும் அயல்கு யில்நய இசையைப் போற்றும் அடித்துக் கழுதைக் கிடித்துத் தூற்றும் ஆகை யால்மனம் ஒகை சேர்மொழி
யாலித மாகி வசீகர மாய்விடும் இன்சொல்.
இன்மொழி பேசுதல் முகஸ்து தியன்று மனம்இரக்க உருக்கம் எய்த லால்வரு மாம்மிக நன்று நன்மொழி உண்மையாய்ப் புகலு வோர்கள் நற்செயல் செய்திட முயலு வார்கள்
நாளு மன்பது நீளு மைக்கியம் நாவின் மொழியினால் மேவி நிறைந்திடும் இன்சொல்.
38. ஜீவகாருண்யம்
go
இராகம்: ஆனந்தபைரவி தாளம்: சதுளப்ரலகு
பல்லவம்
ஜீவகா ருண்ய மவசியமே - இச் செகத்திற் புண்ணியஞ் செய்ய
35

Page 92
đlñg56)4Iở đỡíTå060
அருபல்லவம்
ஆவலுடனே உயிர்யாவையுங் காருண்ணிய - ரீ, ரீ, ரீ, ரீ, ரீ மாகக் காக்கு மன்ப மோக மாக வேணனும் sal...
சரணங்கள்
உயிர்களுக் கிரங்குதல் நமக்குறு
மதியுயர் கடனே - பெருங் - கடனே - நாம் உற்றுப் பார்க்கிலிந்த உணர்வில்லாத
மானிடனே - பாவி - திடனே தயையுடன் ஜீவர்கள் தழைத்திட நாம்புரி ரீ, ரீ, ரீ, ரீ, ரீ தான மென்றுமெமக் கான நன்மைதரும் sgal.
ஏழை மாந்தர் மிருகாதி கட்கேது மபாயம் அநியாயம் - வரில் இயன்ற மாத்தி ரத்தில் முயன்று தக்கநற் சகாயம் - மிகு - நேயம் வேளை தன்னி லெந்த நாளும் நாம்புரிய ரீ, ரீ, ரீ, ரீ, ரீ வேண்டு மொங்கட் கதெஞ்ஞான்று மாகடமை sal. .
வாய்சற்றும் பேசமாட்டா மிருகங்கட்கு
வாதை - தரும் - மேதை - யற்ற வலியநெஞ் சுடைய கொடிய ரானோர் செய்யுந்
தீதை - கொடுஞ் - சூதை ஓய்வி லாதவர்க்கு பாயமா யுணர்த்தி ரீ, ரீ, ரீ, ரீ, ரீ ஊக்கமாய்த் தடுக்கும் நோக்கம் மாவுசிதம் sal...
தனக்குக்கிழ் மனுஷர்க்கும் மிருகங்களுக்கும்
தயை - காட்டான் - வெறுங்காட்டான் - அவன் தற்பரன் றனிடம் நற்கரு னைபெற
மாட்டான் - அரு - வீட்டான் வணக்குணம் முழுதும் நீங்கியே காருண்ய வண்மை யுற்ற பின்பே நண்னுந் தெய்வ9ருள் sal. . .
136

dgroupérif
39. ஈகை
பதம்
இராகம்:தன்னியாசி ஆதிதாளம்
பல்லவம்
ஈகை யென்னுங் குணமதனை யுடையவர் - அ னேக நன்மை யனுதினமும் புரிகுவரே.
அருபல்லவம்
தாகமும் பசியும் கொண்டுவரு பவரைநிதம் தகையுட ஒபசரி தயைநிறை குணமுள
சரணங்கள்
ஓஊர்புக Nகை செயுமீ னர்களுக் கேள்வதி யும்புண்ணியமெல் வாறுவரும் - ஊர்புகழ நேர்வதியும் அன்புடனே அனுதாபம் நிகழவருள் கொடையதுவே நிலைபெறு புண்ணிய மாகும் 6 seas
தோத்திரஞ் செய்தே வருமெள்வெ வருக்கும் காத்திரஞ் சேர்தானஞ் செய்திடலாமோ - தோத்திரஞ்செய் பாத்திர மறியாமற் சும்மா வீதல் பரிவுறு புண்ணிய மன்றென விரிகரமுள ருணருதல்கடன் F605. . . .
எத்தனை யோதிட தேகமுள் ளவர்கள் நித்தமும் பிச்சைபெற ஊரெங்குந் திரிவர் - எத்தனையோ அத்தகை யோருக்கற மருளுதல் புண்ணியமோ ஆகாதா காதது மாகே டுதருமென் றுணர்வீர் ஈகை.
-- 37

Page 93
đìñgồmaIở đỡITGDao
ஒருதின மெனினுஞ் சிலஈகைச் செயல்கள்
புரிதலின்றிரீ போக்கிடுதல் நன்றன்று-ஒருதினமும் அரும்வழி வகையிலை யெனிலொரு கைபிடிபுல்
லதுவெனினும் அளிபசுவுக் கருளுடையவர் புகல்மதிபோல்
40. சூதாடல்
பதம்
இராகம்: கமாளப்
பல்லவம்
எல்லா விளையாட் டினுந்தீது கெட்ட ஈனம் நிறையும் கொடுஞ்சூது
அருபல்லவம்
நல்லா ரதையோர் நாளும் நாடா ரக்ரம மாளும் பொல்லா மனமே வீழும்
புன்னெறி யதனில் மாளும்
வறுமை தனைறிதமும் வரவழைத் திடுந்தூது வாக்குத் தவறுதற்கு வல்லதோர் பெருமேது சிறுமை தனையின்றிடும் தீயவன் னையாம்மாது
திராப் பகையைமெய்க்குச் செய்திடு மெனவோது
சூதாடுந் தொழிலினிற் சொல்லற் கரியபாசம் தொட்டுநின் றாடியவர் கிட்டினர் வெகுமோசம் மாதாவாம் ஒளவைமுன்சொல் மகத்துவ உபதேசம் மறவாதுணர்ந் தொழுகு வைத்ததில் விசுவாசம்
138
Res.
ஆதிதாளம்
GardöGOT...
GardòGOT...
GTöont...

தேரசமஞ்சளி
பஞ்சபாண் டவர்சூதாற் பண்டுபட் டவுபாதை பார்த்திபன் நளனதாற் பட்ட கொடியவேதை
வஞ்சம தாலுலகில் வளரு மழிவின்காதை வண்மையா யுணர்ந்துசெல் திண்மையொடு நற்பாதை ørsbson---
நேரத்தைக் கேட்டினில் நிதஞ்செல விடலாமோ நிசச்சூ தாடும்பொருள் நீகையால் தொடாைமோ வீரம் பணம்புத்தியை வீணிற்கை விடலாமோ வேதனை செய்யுஞ்சூதை விரும்பிநீ கெடலாமோ எல்லா.
41. கடவுளுக்கு ஒப்புக் கொருத்தல்
பதம் இராகம்: சங்கராபரணம் ஆதிதாளம்
பல்லவம்
நானே யென்னை நவமா யுனக்கு நல்கினே னென்னை ஏற்றுக் கொள்ளுவாய்
அருபல்லவம்
தேனே நிகர்தேவே நின்னருளைத் தேங்குற எனக்குத் தேசுற அருள்வாய் நானே.
சரனங்கள்
துங்க மிகுமுன்றன் தங்கத் திருவருள் தங்கியே நிற்கிர்பை பங்கமின் றிச்செய்து பொங்கு மதிதுய்ய இங்கிதம் நானுறப் பூரண நீயன்றி ஆரருள் செய்குவர். நானே.
39

Page 94
đñgñaä 6ơng)
பின்னுமோர் வற்சரம் மின்னல்போற் றோன்றியே இன்னலின் பத்துடன் இன்னே மறைந்தது இன்னும் புதியதோ ராண்டு பிறந்தது
மாபர னேகிரு பாகர னேயிதோ двTć607.
எண்ணஞ்சொல் செயலிற் பண்ணிய பாவங்கள் எண்ணில வாயினுந் தண்ணளி யாயுன்றன் புண்ணியத் தாலவை மன்னித் தெனக்கிந்தப் போதுறு மாண்டாசிர் வாதமாய் முடிய Börres.
42. வருடாந்தத் துதி
இராகம்: கமாஸ் ஆதிதாளம்
பல்லவம்
ஈசனைத் துதித்திடுவோம் - எல்லோருமாக ஈசனைத் துதித்திடுவோம்.
அருபல்லவம்
நேச முடனெமை நிதம்பரி பாலித்த நின்மல னைத்துதிப்போம் - இவ்வேளையில் Rec
சரணங்கள்
சென்ற வருடமுழுதும் - அதியன்பாகச்
சென்ற வருடமுழுதும் துன்றிய நன்மைகள் சொரிந்தெமைக் காத்தோனை நன்றி யுடன்துதிப்போம் - இவ்வேளையில்
தேகமனோ ககத்தை - அருள்பரனைத்
தேகமனோ சுகத்தை
ஈகைசெ யன்பின் இனியசர் வேசனை
இதய பூருவமாக - இவ்வேளையில் FFFS,6-
140

கீதரசமஞ்சளி
ஆத்தும நன்மைகளை - அனுதினமும் ஆத்தும நன்மைகளை
பூர்த்தி யுடன்நிதமும் புரிந்திடு மமலனைப் போற்றி நாம்மிகத் துதிப்போம் இவ்வேளையில்
மங்களம்
இராகம்: இங்கிலீஷ்
மங்களம் சொல்வோம் மனமகிழ் வுடனே மதுரநல் ரசகான கதிமுழங்க,
அங்கில ராஜ்யம் ஆளெற்வேட் ராஜன் அனவர தமுமின்ப மாய்வளர
வேதம் நன்னிதி விளங்குஞ் சுபோதம் மிகத்தழைத் திடவிந்த ஜெகத்தினிலே
மஞ்சரி யாமிம் மாலையெஞ் ஞான்றும் மகிதலந் தனிலின்ப சகிதமுற
சங்கீத ராக சாதனை யென்றும் தகையொடு வளர்ந்ததி யுவகைதர
41
RF6
ஆதிதாளம்
மங்களம்.
மங்களம்.

Page 95
உணர்வு மலர்
தனிப்பாடல்கள் தெல்லிப்பழைப் போதனா வித்தியாசாலை மாணவரின் அரங்கேற்றம்
கட்டளைக்கலித்துறை
திருவோங் கியதெல்லி மாநகர் மேவித் திகழ்கழகத் தருமான் மியத்தை அறையப் புகினெமக் காயிரமாய் வருநா விருந்தும் வழுத்த லரிதெனில் வாய்திறந்து ஒருநாக்கொ டென்செய்வ மோதுவங் கொஞ்ச முணர்வதற்கே.
3D
இராகம்: மோகளம் ஏகதாளம்
பல்லவம்
தெல்லிக் கழகமதை வெல்லஇப் புவிமீது
வல்ல கழக மேது?
அருபல்லவம்
எல்லவருந் துதிக்கும் கல்வியெனும் நிதிக்கும் நல்லபர கதிக்கும் நாடும்வழி பதிக்கும். தெல்லி.
142

gaflÚuruöði
சரணங்கள்
சந்திர மண்டபமுஞ் சாலைகளு மொருசார் தயங்கு மதிபர் மனைதரும் நந்தாவன மோர்சார் சிந்தை குளிருங் காட்சிச் செழுமரச் சோலையுஞ்சீர் செறியுமா லயமாட்சி சேருமிதற் கெதுநேர்
சித்திர வித்தை கணித்திய மும்பயில் புத்தி மிகுந்த நல்விற் பனரின்னொயில் தெல்லி.
நீராவி யந்திரங் கடல்போல் நிதமும் முழங்க நிகழுக தொழில்கள் பலநெறி யுடனே துலங்க மாறாப் புகழ்ச்சி மிகுமகி பன்பெயர் விளங்க மாணவ ரறிவினில் வளர்ந்து சிறந்திலங்க
மண்டல மெண்டிசை யுந்துதி கொண்டிடு விண்டல மென்றிதை யன்பர் புகன்றிடு தெல்லி.
வேத அறிவு கலைஞான அறிவுதரும் விருத்திக் குரிய பலவினோத சாத்திரந்தரும் போதமிகு குரவர் புனித நெறியோடரும் பொருளாஞ் சுகந்தஞான பூஷண மெனவரும் புத்தமு தந்தனை யொத்தபல் சத்தியம் சித்தியு டன்செறி வித்தகள் மெத்திய தெல்லி.
O
யாழ்ப்பாணத்துக்குப் புகையிரதம் தந்த இலங்கைத் தேசாதிபதியும் மகாதளபதியுமான கெளரவ சேய் யோ. உவெஸ்ற் றிட்ஜ்வே அவர்களுக்கு
நன்றி கூறல்
பதம் இராகம்: கமாஸ் ரூபகதாளம்.
பல்லவம்
இந்த நன்மைக் கென்னபதில்
இயற்றுவோம் யாழ்ப்பாணத் தார்நாம்.
143

Page 96
đigamad Gamaљао
அருபல்லவம்
சிந்தை வைத்தே எங்கள் தேசம் திருந்தப் புகைரத வீதியைப் பரிந்தேமிகப் புரிந்திர்ஜயா
சரணங்கள்
உத்தம மகத்துவஸ்றி ஜோசெவ் உவெஸ்ற் றிட்ஜ்வே மன்னா இத்தரையிலே உம்நாமம் என்றும் எமதித யந்தனில் நின்று வளரும் நன்றியாய்
முந்து பலராஜர் தம்மால்
முடியா தென்ற இம்முயற்சி
எந்த வகையா யுஞ்சித்தி எய்தத் தயைபெய் தேவகை செய்திர் நாம்உய் தேம்ஜயா.
கண்ணில்லாத அந்தகர்க்குக் கண்ணளித்த தண்ணளியாய் வண்மைசேர் புகைரத மருளினிர் மண்ணும் விண்ணுந் தரினும் எண்ணும் ப்ரதிபல னலவே.
செல்வம்கனம் செல்வாக்கிவை
சேர்துரைமார் சீறினாலும்
வல்லவரையும் நீர்வென்று இருள்சே ருமித்தேசந் தனக்கருள் செய்தயரத மாக்கினிர்.
போதிய பிரதி நன்றி புரிய இயலா தெம்மாலே
நீதி சேரும் ராஜ சேகரா நீதியும் சுகஸ்திதியும் உயர்பதி யாம்பரம் அதிகம்தரும்
44
இந்த.
&iss...
இந்த.
6i5...
6ias...
ais...

garflüJUTLöbabi
சென்னை, கிறிஸ்தவ கல்லூரிப்
பழைய மாணவர் தின வாழ்த்து.
கட்டளைக்கலித்துறை
திருநா ஸரிதுசென்னை சேருங் கிறிஸ்த செழுங்கழகப் பெருநா ளெனப்பழ மாணவர் நாமுயர் பெற்றிகொளு மொருநா ஸரிதுவென் றுவகைகொண் டாடவொவ் வோர்வருடம்
வருநா ஸரிதிற்கப மங்களம் பாடி மகிழுவமே.
D
இராகம்: காபி. ரூபகதாளம்
பல்லவம்
ஆனந்தங் கொள்வோம் . சுப
ஆனந்தங் கொள்வோம்.
அருபல்லவம்
ஞானந் திகழ்கி றிஸ்றியன் காலேஜின் நாளெனும் திவ்ய வேளை தன்னிலே ஆனந்தம்.
சரணங்கள்
கல்வி யென்னுநல் லமிர்தம் தந்துமா கருணை யாயெமை வளர்த்தையே செல்வ அன்னை யாம்நாங் கழகமே
செப்பியே துதிஇப் பொழுதுநாம் ஆனந்தம்.
எங்கள் ஞானமும் புகழுஞ் செல்வமும்
இதமிகு மெம்சன் மார்க்கமும்
தங்க நேருமெம் தாயே நீதந்த
சற்கலை யினற்பொற் புறும்பயன். ஆனந்தம்.
145

Page 97
dfsgsspør Carrep60
இங்குநாம் முன்பு சென்ற பாதையில் ஏகு மெங்கள் சோதரர்களே துங்கமா மெங்கள் அன்னைக்கு நன்றி
சொல்லி மகிழ்வம் எல்லோரு மாக. ஆனந்தம்.
பெற்ற புத்ரரைப் போல வெங்களைப்
பேணிக் காத்தவெம் மதிபரே
நற்றகை யாயெம் ஆசி கூறினேம்
ஞால மீதில் நீர்கோல மாயுய்ய ஆனந்தம்.
கன்றுக் கிரங்குங் கறவைபோல் ஞானம் கரிசன மாக வெங்களுக் கென்று மீந்தவெம் ஆசிரியர் மாரே
எங்கள் நன்றியாய் மங்களஞ் சொல்லி. ஆனந்தம்.
O
தெல்லிப்பழை கலாவிருத்திச் சங்கத்து
வருடாந்தக் கூட்ட வாழ்த்து
கட்டளைக்கலித்துறை
தெல்லி நகரிற் றிகழ்ந்திடு மாந்தர் சிறந்தகலா
நல்லறி வுற்றிடு நன்னோக்க மாயிங்கு நாட்டிவைத்த துல்லிய மாமித் திருச்சங்க நங்கையித் தொல்லுலகே பல்வித சீருற் றிலங்கியெஞ் ஞான்றும் பலிக்குகவே.
பதம் 1
இராகம்: காபி ரூபகதாளம்
பல்லவம்
சங்கம் வாழ்கவே - கலா
சங்கம் வாழ்கவே.
146

அருபல்லவம்
இங்கித நிறைதெல்லி மாநகர்க் கேற்றநல் லறிவூட்டி யேநிதம்.
சரணங்கள்
கல்வியறி வெல்லாச் செல்வத்தினும் கதித்திடு செல்வ மென்னவே தெல்லிநற் கலாசாங்க வாங்கத்தோர் தேர்ந்துநல் லறிவார்ந்து வாழ்ந்திட
சற்கலை யெனுமமிர்த பானத்தைத் தருமரு மொரு நிதியென பொற்குன நிறைமாந்தள் யாவரும் போற்றியே துதிசாற்று தற்கரும்
மனவிருள் தனைமாற்றி யேஞான மாவொ ளிதனை ஏற்றியே தினமுநல் லருள்செய்ய வேபரன் தேங்குகிர் பையாலோங் கியேநிதம்
இத்தவ முயர்வெய்தி யேமிக எழிலு றச்செயுங் கருவியாய் நித்தமிச் சங்கமொத் தாசைசெய்து நீடிய ஆயுள் கூடியேவர.
பதம் 2
இராகம்: சங்கராபரணம்
பல்லவம்
மகிழ்கொள்வோம் வருவீர் வருடாந்த சபைதேர்ந்து ஒன்றுசேர்ந்து.
147
gerflun Libandir
爵 拳 FD e
சங்கம்.
fad
FK De a
FD e
ஆதிதாளம்

Page 98
சிந்தனைச் சோலை
அருபல்லவம்
திகழறிவெணு மொளியருள் சபைதனில் Daélj.
சரணங்கள்
தெல்லி நகரதனிற் கல்வி யறிவுமிகச்
சேர்ந்தவர்க் களியுட ஒாட்டும் திருந்தி மனோகரனஞ் சிறந்து விரிந்தொளிரத் தேசுறு முயர்குணம் நாட்டும் திருமி குந்திடு விந்தை காட்டும் புந்தி கூட்டம் சபைதிட்டும். மகிழ்.
அறிவெணு மமுதினை அகங்களி மிகக்கொள அருந்திய பிரபுக்கள் கூட அதிசய பிரபலம் அணியும்வா சாலசிங்க அறிஞரின் பிரசங்கம் நீட
அனைவரு மாகக் கொண்டாட பதம்பாட தாளம்போட. மகிழ்.
அளவில்பற் பலவித அலங்கிர்த தோரணம் அணிந்துமண் டபம்மணக் கோல அழகுற வதிவிசித் திரதீப தூபங்கள்
அணியணி யாயெங்கும் நீல ஆகாய மீனெனக் கால சுசீல சபையேல. Dab.
ஆங்கில ஆசிரியர் மாசபை வாழ்த்து
பல்லவம்
ஆங்க்ல வித்தியா சாலை ஆசிரியர் மாசபை அனவர தமும்வாழ்க.
148

gaiffUmLibandir
அருபல்லவம்
ஈங்கித மாருடுவை எழில்நகள் தனிற்கூடி ஏற்ற ல மாசிர்யர்க் காற்றி மகிழ்வித்திடும். Seyri...
சரணங்கள்
கல்வி பயிற்றுநல்ல கவின்நெறி முறைகளைக் காதலா யாசிரியர்முன் நாட்டி பல்வித நய9lனு பவமவர் தொழில்தனிற் பரிவா யவர்க்கெடுத்துக் காட்டி துல்லிய மாகநலந் தோன்றவிங் கமர்ந்திடும் ஆாய சபைபுவியில் நேயமுடனே வாழ்க SVH---
ஆமுகில் கிருஷிநல் லறிவுத ருங்கல்வியில் அவனி தனிலேநிதம் வாழ்க வாம மிகுந்தருமம் நீதிசன் மார்க்கம்தயை வாழ்க அரசன்ஜோர்ச்சு வாழ்க சேம முடன்வித்யா செல்வவுத் யோகர்வாழ்க சிருட னிம்மாசபை பாரில்நிதமும் வாழ்க ஆங்.
இராமநாதன் கல்லூரி மங்கல வாழ்த்து.
வெண்பா
அன்பேசம் பூரணமா மானந்த மேதெவிட்டா வின்பேப்ர காசமய வீசனே - அன்பாயிங் கித்தருண மெங்கட் கினிய சமுகவருள் சித்தநிறை யத்தா திகழ்ந்து.
149

Page 99
சிந்தனைச் சோலை
கட்டளைக்கலித்துறை
சீரா ரீலங்கைத் திருமாது செய்த செழுந்தவத்தின் ஏரார் விளைவென வெய்தி யிசைபெற் றிகமுழுதும் பேரார்ஸ்ரீ மான்கெள ரவராம நாதப் பெருந்துரையே நேரார் துதியுமக் கித்தரு ணத்து நிகழ்த்துவமே.
யாழ்ப்பாண மங்கைக் கெழிலார் திலக மெனவொளிரு மாப்புகழ் சேர்வலி காமம் வடக்கினில் வைகுமியாம் பாப்புக லற்கரும் பன்னன்றி நீர்புரி பண்பையெண்ணி
நாப்புக னற்றுதி நன்றி யுடனிங்கு நல்கினமே.
முன்னாட் டமிழர் பிரதி நிதியென முதிலங்கைக் கின்னா தரவு புரிந்தி ரஃதிங் கெவரறியார்? இந்நாட் கலைஞர் நிதிக்கீர்த்தி யெங்கட் கியலுகின்றீர்
நன்னா வலர்பெரு மானேயெம் நன்றி நவின்றனமே.
ஐயாஸ்ரீ மான்கெள ரவராமநாத வருந்துரையே செய்யாள் கடாட்சந் திகழ்ந்திடுநீள்பெண்கள் சீர்கழகம் மெய்யா யிலங்கைக்கு வேண்டுமென் றெண்ணி விழைந்தெருவருஞ் செய்யாப் பெருநன்றி செய்தீர் பிரதியென் செய்குவமே.
எங்கள்நன் னாட்டுக் கெவரா யினுமுன் னியல்நலமுந் துங்க மிகுந்ததுங் கல்லூரிக் கீடு சொலுந்தகைத்தோ மங்கள யாழ்நகர் வையத்தி லுள்ள வரையுமுமக்
கிங்கித மார்துதி யித்தேச விந்துக்க ளிகுவரே.
பெண்கள்நம் சாதி சமய மிரண்டினும் பின்னமிலா தொண்கலை கற்க வுயர்ந்தகல் லூரி யுவந்தளித்தீர் கண்கள் பரம னருளுங் கருணைக் கவினிகரப்
பெண்கள்கல் லுரிதந் திரைய வெந்நன்றி பேசரிதே.
150

GaflüUTLóaá
இலங்கைத் தமிழர் சிரமேநல் வாணி யெழிலம்சமே தலங்கிள ருங்கெள ரவராம நாத நரேந்திரனே பலாங்கிள ரிந்துநற் பெண்கள்கல் லூரி பரிந்தளித்திர் பொலன்கொளச் சாலைக்கு நேரோ வளக புரிநகரே.
சித்திர மாண்பு திகழ்விஸ்வ கர்மன் செழுந்திறனோ டித்தகை மாட்சி விரைவலங் கார மினிதுறச்செய் வித்தவன் சிற்ப வியனூ லதுபவ மிக்குடைய வித்தகன் ஸ்ரீகந்த சாமியின் நாமம் விளங்குகவே.
பாட்டலங் காரஞ் சுவைகல்வி கற்றிடு பாவையரே வீட்டலங் காரம் மதியலங் காரம் விசும்பினுக்கு நீட்டலங் காரம் பயோததிக் கேயேழில் நீடுமியாழ் நாட்டலங் காரஞ் சிறீராம நாதன் கலாநகரே.
தேசாபி மானஞ் சிவபக்தி ஞானந் திகழறிவு நேசா தரவு நிறைராம நாத நிருபனெனும் வாசால சிங்க வரோதய னேயிந்த வையகமுந் தேசாரும் விண்னனுந் தெரிந்தீ கினுநன்றி தீர்க்கரிதே
இந்தநன் னாட்டுக் கியம்பற் கருநல மென்றுமுறத் தந்தஸ்றி மான்கெள ரவராம நாதநம் தன்மமன்னா புந்தி மகிழ்வு சுகநிதி யாயுள்சம் பூரணமாம் எந்த வரமுஞ் சிவபெரு மானுமக் கீகுகவே.
பதம்
இராகம்: ஆரபி ஆதிதாளம்
பல்லவம்
நன்றி சொல்வோம் - சுப
நயக வுரவராம நாதத் துரையே நாங்கள்.
151

Page 100
சிந்தனைச் சோலை
அருபல்லவம்
வெற்றியுடன் ஸி. எம். ஜி வென்ற கெம்பீரா வேந்தரின் கே. ஸி. ஆம் விருதணி வீரா நன்றி.
சரணங்கள்
எங்கள் நன்னாடுயர் வெய்திமென் மேலும் இருநிலை யுறப்பெண்கட் கெழிலொளி காலும் துங்கநூங் கழகமாம் சுபவரம் போலும் துணைபிறி தொன்றில்லைத் துதிசொல்வ மேலும் நன்றி.
நல்லுப காரியாய் நயந்தரு சீலா நானில முழுதும் போற்றிடுங் கலைநூலா வல்லுநர் யாரும் வணங்கநூ கூலா வாழ்கவென் றேத்தினம் மாமகி பாலா. நன்றி.
பூர்வ நம்மிந்திய பூவையர் மாட்சி புகன்றிடுஞ் சரித்திரங்கள் புனித நற்சாட்சி ஆர்வமுட னினியல் வானந்தக் காட்சி அருளதுங் கழகமே யரும்பெருஞ் சூட்சி நன்றி.
அருமறை புகல்சிவ அன்பின் ப்ரகாசா அரிவையர் கழகமிங் கருளு நிவேசா திருவள ரீலங்கையின் செழுந்தவ ராசா செப்புவந் துதி9து தினமெங் கணேசா நன்றி.
சுகபல நிதியாயுள் சுபவது போகல் ஆாய சுகானந்த சுகிர்தநல் யோகம் அகமதிற் சிவமெனு மன்பின் ப்ரவாகம் ஆகுக வுமக்கின்னு மாண்டிங் கனேகம். நன்றி.
152

gafUUITLübasi
வாழி
திருநிறையுஞ் சைவறிதஞ் செழித்து வாழி
தேசுறுமா முகினிரைகள் சிறந்து வாழி தெருனிறையும் பெண்கள்கல்வி திகழ்ந்து வாழி சீரரச னைந்தாம்ஜோர்ச் தினமும் வாழி பொருனிறையும் ஸ்ரீமானாம் ராம நாதன்
பொற்கழக மதுகூலம் பொலிந்து வாழி அருணிறையுந் துரையவர்கள் சர்வ பாக்ய மார்ந்திகமே ணிடுழி வாழி வாழி.
O
அளவெட்டி மதுவிலக்குச் சங்க வருடாந்த விழாவிற் பாடிய பாடல்கள்
விருத்தம்
பூதலத்திற் கொடுந்தீமை புரிமதுவாம் பானமெனும் பொல்லா நஞ்சைக் காதலுடன் வாங்கியுண்டு களிப்படையும் மதிகெட்ட கசட ரேநிர் ஏதநிறை யும்மதுவா லெழிலுடம்பு மனமாவி யெல்லாங் கெட்டுப் போதலுமக் கித்தரையிற் புகழேயோ தருமமோ புகலு விரே.
UGD இராகம்:பியாகு ஆதிதாளம்
பல்லவம்
தன்ம மாமோ நீர்சொல்லும் - சற்றுந் தகையில் லாத மதுபானம் புரிவது ?
அருபல்லவம்
கன்மங்கள் யாவுக்கும் வேரே - இந்தக் காசினி யழிவுக்குந் துன்னிரே - கெட்ட வன்மம்மன திற்செய்யும் நேரே - அத்தை வாங்கி நீருண் ணுகிறீரே. தன்ம.
153

Page 101
சிந்தனைச் சோலை
arratorialiser
உத்தம மாம்பால் பானியம் - பரன் உவந்தளித் திருக்க வபாயம் - நிறை சத்துரு வாகுஞ் சாராயம் - தானோ தகும்பெற உமதரும் நேயம் ?
மேலைத் தேசங்களி லிருந்து - வரும் விஸ்கி யாதிய மதுவருந்து - பவர்க் காலங்க ளாமவை விருந்து - ஐயோ! அழிவு செய்திடு நச்சுமருந்து.
உடல்மனம் ஆன்மாவைக் கெடுக்கும் - நிதம் ஊரினிற் சண்டைகள் தொடுக்கும் - என்றுங் கடன்பட் டலையஉமை விடுக்கும் - மனக் கவலைகள லுதினங் கொடுக்கும்
கள்ளுண்பவன் றானோ பாவி? - கள்ளிற் கருத்துறச் செய்வோனும் பாவி - அதைக் கொள்ளும்முயற்சி செய்வோன் பாவி - கள்ளுக் குதக்காரன் மாகொடும் பாவி
இராகம்:காபி
பல்லவம்
பானஞ்செய் தீவினை பாரீர் - பஞ்ச பாதகங் களுளொன் றெனும்மது பானஞ்செய் தீவினை பாரீர்.
154
56rld...
256rld...
256rld...
தன்ம.
ரூபகதாளம்

தனிப்பாடல்கள்
அருபல்லவம்
ஞானமாம் நல்லறி வீனமாய்ப் பழுதாகியே நஷ்டம் பற்பலவுற்று மானிடர் கெட்டொழிந்திட வுய்த்திடும் மது. பானம்.
சரணங்கள்
குடிவெறி கொல்லும் பேர்களை - நாம் கூட்டி யேதொகை பூட்டி லதுமிகும் குடிவெறி கொல்லும் பேர்களை சடமதை மதுவுண்ணத் தாங்கொ னாப்பல நோயினாற் சாகிறார் கெட்ட கொள்ளைநோய் கொண்டு
போகும் பேரினும்பன் மடங்கினர் பானம்.
பெண்களும் பானம் பண்ணுகிறார் - வெகு பேரிக் காலம் நம்முரி லேயுள்ள
பெண்களும் பானம் பண்ணுகிறார் பண்டுநம் நாட்டிலே பெண்டுகள் மதுபா னஞ்செய் பாத கம்ஒரு போதும் நேர்ந்தில
தாதலால் விபரீத மாம்மது. பானம்.
மேலைத் தேசத் திலும்பலர் - குடி மிக்க கேடென வொக்க விட்டனர்
மேலைத் தேசத்தி லும்பலர் சாலவும் பானஞ்செய் மேலைத் தேசிகள் தள்ளவும் சற்றும் முன்னதை மெச்சி டாதநிர் உற்ற தைக்கொளல் புத்தியோ சொல்லும், பானம்.
சொன்னதை நீரறி யீரோ - எங்கள் சுகுண ஜோர்ச்மன்னர் தமது வீரர்க்குச்
சொன்னதை நீரறி யீரோ பன்னருந் துற்குணப் பாத கனெனும் ஜேமனைப் பாரில் தோற்க டிப்பீ ரெனில்மது
தீரவுங் கட்க டாதுவிடு மென்றார். UTəyib...
O 155

Page 102
đgaoалá (Bambo
தமிழாசிரிய மகாநாட்டு வாழ்த்துப்பா
கட்டளைக்கலித்துறை
சீர்மேவு செந்தமிழ் தேரா சிரியர் செழுமவையாய் ஏர்மேவு யாழி னெழினகர் தன்னி லிசையிலகு தார்மேவு பூgதில்லை நாயக வித்தியா தரிசிமன்னன் நேர்மேவக் கூட்டு மகாசபை வாழ்கவிந் நீணிலத்தே.
LijD
இராகம்:மோகனம் ஆதிதாளம்
பல்லவம்
மங்கள மிகுமிந்த மகத்வ வித்தியாசபை மாநி லந்தனில் வாழ்க.
அருபல்லவம்
துங்க மிகுந்த யாழின் தொல்நகள் தனில்நிகழ் தூயதமி ழாசிர்ய நேயர்கள் சூழுந்திரு LDrasGIT...
pr66
பண்பு செயுமிச்சபை மாட்சியே Luočių • • • • • • • • • • • • • • DIT'afu பற்பல விங்கித நன்மை தருந்தகை பற்றிடு ஸ்தாபன மீதொரு நல்வகை பைந்தமிழா சிர்யர்மார் கணிறைந்து பரிந்து வியந்து நயந்து மகிழ்ந்திடு LUGOsirų • • • • • • • • • • • • DavisszióG6 பாங்கு தோன்றிடு நல்லுபந் நியாசமும் தேங்கு மாநலந் திகழுமப் பியாசமும்
156

குளிப்பாடல்கள்
ஓங்கு பாலியர் சிரமவுல் லாசமும் ஆங்கு கலைபயில் நெறிகளின் வாசமும் LuGorų • • • • • • • • • • • • GalinraryPiib பண்புசெயு மிச்சபை மாட்சியே - நிகர் பகரற்கரும் விவித காட்சியே ஒண்புகழ்வித் தியாநயா பேட்சியே - தில்லை உயர்நாயக மன்னன்செய் சூட்சியே உறுமா பயனென்று மிதால்நரிை
ஒதுந் தமிழாசிர்யர் மார்க்கினி LDmiliasGT...
வாழி
திருநிறைமெய் யன்புபொறை கற்பு வாழி
செய்கிருஷி கைத்தொழில்வர்த் தகமும் வாழி அருணிறைநன் மெய்ஞ்ஞான மார்ந்து வாழி
அரசன்ஜோர் ஜூடன்வித்யா கர்த்தர் வாழி தெருணிறைவித் யாதரிசி மார்கள் வாழி
தேசமெங்குங் கல்விமிகச் செழித்து வாழி பொருணிறையாழ் நகரில்நிகழ் தமிழா சிரியர்
பொலிசங்கம் நீடுழி வாழி வாழி.
O
தெல்லிப்பழை மகாஜன வித்தியாசாலை இந்துவாலிபர் சங்கச் சுதேச கொண்டாட்ட கிதங்கள் தெய்வவணக்கம் கட்டளைக்கலித்துறை
சீர்மேவு தெல்லி மகாஜன சாலை திகழுமிந்துப் பேர்மேவு சங்கச் சுதேசகொண் டாட்டப் பெருந்தினத்தின் நேர்மேவு மிச்சபை மிக்கனு கூல நிகழ்ச்சியுற ஏர்மேவு மீஸ்வர னேஇங்ங் லுன்வர மீகுவையே.
157

Page 103
đlịỗg56Daựở đỡrt{Dư0
கண்ணிகள்
இராகம்:தோடி ஆதிதாளம்
தருண மிதிலருள்செய் நாதா - சிவ
சங்கர னான ஞான போதா தெல்லித்
தகைகொள் வாலிப ரிந்து சபைதனி லேயமர்ந்து
தாதா கிர்பை வேதா
கருணை வடிவமான ஈசா - உயர்
கயிலை யம்பதி தன்னில் வாசா இந்தக்
கவினார் சபைக்குன் னருட்காட்சி தந்தாள் வாய்பிர
காசா எங்கள் நேசா. 5560 asso
பூவினில் தமிழரின் சாதி - நலம்
புகல்கொண் டாட்ட மெனவோதி - தெல்லிப் புளக மாஜனநற் கழகங் கூட்டு சபைப்
போதி லருள் சோதி. 556. . . .
சச்சிதா னந்தமுர்த்தி வாராய் - இங்கு
சாரு மஞ்ஞான விருள்தீராய் - பிர
சாரணங் கள்புரி சீரறி ஞர்க்கருள்
தாராய் தயை கூராய். 55600 . . .
சாதியபிமான மகத்தவம்
விருத்தம்
அதிநல மிகுந்தமி ழாம்நம் சாதியின் நிதியெனப் பிறந்துமும் நிலைமை நீங்கியே
மதியிலன் னியர்களாய் வாழும் நண்பரே இதமிகு முயரபி மானமேன் விட்டீர்.
158

தனிப்பாடல்கள்
D
இராகம்: இந்துளப்தானி ஆதிதாளம்
பல்லவம்
அதி அன்புள எங்கள் நண்பரே தமி ழபி மான ஆர்வமேன் விட்டீர்.
அருபல்லவம்
துதிநிறையு மெங்கள்தமிழ்த்
தொன்மையுறும் சாதியைச்
சுகிர்தமுள தென்றெவரும்
சொல்வதை நீரறியிரோ. இதி.
சரணங்கள்
பூர்வ மாட்சிமை மிகவும்
பூனுைம்தமிழ்ச் சாதிநம் புத்திதேக வன்மை ஆண்மை
புகழுள நாமல்லவோ? அதி.
கண்டபடி புத்தியின்றிக்
காதலுடன் மேலையோர் காட்டும் பழக்க வழக்கம்
கைக்கொள்ளுதல் நீதியோ? அதி.
எங்கள்பூர்வ மாந்தரைப்போல் இகமதில்மா செலவில்லா இயல்புள்ள சீவியம்செய்தல்
இன்பமென எண்ணுவீர். அதி.
இந்திய மகான்கள்நிலை எவ்வள வுயரினும் ஏர்மிகுந்தம் சாதிப்பூர்வ
எழில்வழக்கங் கைவிடார். இதி.
1.59

Page 104
dfsgsa Darê BarraDaD
அரியவெங்கள் செந்தமிழை
அலட்சியம்நாம் செய்தல்லோ அன்யபாஷை தனைவளர்த்தல்
அறிவுநீதி யல்லவே. அதி.
பூவின்மற்றெச் சமயத்திலும் புகலரும் மகாவுயர் புண்யநம் சமயந்தன்னைப்
போற்றுதல்நம் கடமையே. அதி.
கட்டளைக்கலித்துறை
பூவில் தமிழரின் சாதி யெனுநற் புகனிலையை மேவிடு வோர்தங்கள் மெய்யபி மானநன் மேன்மைதனை நாவின் மனதிற் செயலினிற் காட்டி நனிமகிழ்தல் பாவிற் புலவர் பெருஞ்செல்வ மென்று பகர்தகைத்தே.
பதம் இராகம்:பியாகு ஆதிதாளம்
பல்லவம்
மான மோர்பெருஞ் செல்வம் - நல்ல
மாட்சி சேருந்தமிழ்ச் சாதியாமபி DT6
அருபல்லவம்
ஈன மிகுமிந்தக் காலம் - பலர் எழிலில தாமன்ய கோலம்தனை மேனிலை யென்றுதஞ் சிலம்கெட மெச்சு கிறாரிந்த ஞாலம் - அபி DT6.
60

தனிப்பாடல்கள்
சரணங்கள்
இகமதிலே தமிழ்ச்சாதி - அதி
இசைபெறு திறநிறை சாதி - ஞானம் புகல்கலை மிகவுள்ள சாதி - மிகு
பூருவ மாயுள்ள சாதி - அபி De
மெய்யாய்நந் தேசாபிமானம் - உள்ளோர் விளங்குவர் தமிழபிமானம் - நிதம்
உய்சைவ சமயபிமானம் - அவர்க்
குவகைசெய் பேரபிமானம் - அபி D6
எங்கட்குத் தமிழ்சீர் திருத்தம் ஒன்றே இயைந்தநற் சுகிர்தமாம் பொருத்தம் - பர அங்க்லேய சீவியம் வருத்தம் - தரும் அறிந்ததைத் தவிர்த்திடல் திருத்தம் - அபி T6
எங்கள் தேச சுவாத்யம் - தனக்
கேற்ற வுடைகளே சாத்யம் - அன்ய அங்லேய வுடைகள சாத்யம் - எமக் கவைகளிலே யென்ன பாத்யம் - அதை de
ஐரோப்பிய பாவனை பாங்கு - தமக் காகாதென் றதைவிட்டு நீங்கு - மிகு தைரியமாய் முன்ன ரோங்கு - எங்கள் தமிழ்ப்பழம் வழக்கங்கள் தாங்கு - அபி de
செலவு குறைந்த சீவியமே - எங்கள்
சிறும் தமிழ்ச் சீவியமே - இந்த
உலகில தெமக்கென்றும் நயமே - அபி உவந்து கைக்கொளல் அவசியமே - அபி D6
வாருங்கள் தமிழர்நாம் கூடி - நல்ல வண்ண மிகும்பதம் பாடி - அன்பு
கூருங் களபிமானம் நாடி - தமிழ்க் குவலயம் யாவும் கொண்டாடி - அபி DfT6
O 161

Page 105
நாடக மலர்
ofoapojawoftbu676767 sistallasub
செப்பெரு 1
இடம் 1: வணிககுலசூரியர் வீடு வணிககுலசூரியர்:
கட்டளைக்கலித்துறை
திருவாரு மாசிர்ய நண்பா வென்னேக செழும்புதல்வன் உருவார் சகல குணசம் பனன்றனை யூர்மதிக்கப் பெருவாரி யென்னு நிதிசேரு வர்த்தகப் பெட்பிலங்கும் அருவார் தொழிலி லமைப்பேன் துதிக ளளித்துமக்கே.
பதம்
பல்லவம்
தந்தேன் துதி ஐயா - ஆசிரியா தந்தேன் துதி ஐயா - துதி தந்தேன் மனமுவந்தே மகிழ்ந்தே தந்தேன்.
அருபல்லவம்
விந்தை மிகும்பல நற்கலைக் கியானம் விரிவுறச் செய்தி வித்யா தானம் - இதோ தந்தேன்.
162

சகலதனசம்பண்ணன்
சரணங்கள்
என்னருமைப் புத்திரன றிவிற்றேற இனிதருள் புரிந்திரே புகழேற - இதோ தந்தேன்.
ஐந்துவருட மாயருங் கலையூட்டி அறிஞனென வளர்த்திரிசை நாட்டி - இதோ தந்தேன்.
நன்னய வர்த்தகத்தில் மாநிதி சேர்க்க நானவனை யமைப்பேன் தொழில்பார்க்க - இதோ தந்தேன்.
எனதன்புங் கணிசமும் நிறைந்த ஆசிரியரே! நான் எனது மகன் சகலகுணசம்பன்னனைச் சென்றுபோன ஐந்து வருடங்களாய்த் தங்க ளிடம் கலை பயிலும்படி ஒப்புவித்தேன். இன்று அக்காலம் பூர்த்தி யானதாதலானும், இனி அவன் கற்றாய்ந்த அரிய பெரிய நூல்களின் படி ஒழுகுங்காலம் வந்துவிட்டதாதலானும் அவனைக் கலை பயிலு தனினின்றும் நிறுத்தி, நம் முதாக்கள், நாதாக்கள் காலந்தொட்டு நமக்குறுதியாயுள்ளதும், தொழில்களுளெல்லாம் சிரேஷ்டமானது மாகிய வர்த்தகத் தொழிலை நடாத்தும் பொருட்டு அவனை யதிலமைக்கச் சித்தங்கொண்டேன். இதுகாறும் தாங்கள் அவனிற் செலுத்திய கவனத்துக்கெல்லாம் நானும் அவனும் எங்கள் குடும்பம் முழுவதும் தங்களுக்கு என்றென்றும் மிக்க கடமைப்பாடுடையராயி ருப்போம்.
ஆசிரியர்:
கண்ணிகள்
சொன்னமிகு வணிககுல சூரிய நன்மித்திரா சொல்லுவனுன் மகனுணர்வு சுகிர்தமாய் விசித்திரா
இலக்கண விலக்ய மெலாமிங் கிதமாயூட்டி இன்ப நற்றிறம் புரிந்தேன் என்புகழை நாட்டி
வர்த்தக மவன்மிகுந்த சித்தியொடு செய்ய வாய்ந்தநற் சாத்திரமும் நன்றாயிந்த னன்காணுய்ய
இன்னுங் கொஞ்சக்கால மறிவீந்திடு நிமித்தம் என்மனதி லாசைகொண்டே னியம்புவீர் தும்சித்தம்.
163

Page 106
சிந்தனைச் சோலை
வணிகர்க்கெல்லாம் சிரமெனப் போற்றத்தகும் அதிபா நான் தங்கள் புத்திரனுக்கு என்னாலியன்றவரையில் பாரதம், இராமாயணம், புராணேதிகாசம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சிந்தா மணி, சிலப்பதிகாரம், நன்னூல், தொல்காப்பியம் முதலிய இலக்கண இலக்கியங்களும், கணிதசாத்திரம், தர்க்கசாத்திரம், பூகோளககோள சாத்திரம், ரசாயனசாத்திரம், தாபரசாத்திரம் முதலாம் சாத்திர வகை களும் சற்போதனாலங்கிர்தம் செறிந்த அநேக சன்மார்க்க நூல்களும் நன்றாய் உணர்த்தியிருக்கின்றேன். எல்லாவற்றிற்கும் மேலாய்த் தன் தொழிலைச் செவ்வனே புரியும் பொருட்டு, வர்த்தகசாத்திரம் மிக்க திட்பநுட்பமாய்ப் பயிற்றியிருக்கின்றேன். ஆயினும், இன்னுங் கொஞ்சக் காலம் கல்வி பயிலுதலும் உசிதமெனக் கருதுகின்றேன். தங்கள் சித்தம் எப்படியோ?
வணிககுல:
ஐயா அதிகப்படிப்பு உடலுக்கிளைப்பு. “கற்றது கைம்மண்ணளவு கல்லாததுலகளவு" ஆதலாற் படிக்கப் படிக்க நெடுகப் படித்துக் கொண்டு போகலாம். ஆயின் அது அவசியமில்லை.
ஆசிரியர்:
வர்த்தகர்க்கரசே தாம் இப்படிச் சொல்வது தகுதியன்று. “மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன். மன்னற்குத் தன்றேசமல்லாற் சிறப்பில்லைக் கற்றோற்குச் சென்றவிடமெல்லாஞ் சிறப்பு” என்னும் நீதிமொழிப்படி மாசறக் கற்ற வனுக்கு ஓர் அரசனிலும் மிக்க கண்ணிய முண்டன்றோ?
வணிககுல:
அது வாஸ்தவமேயாயினும், தங்கள் புண்ணியமாய்ச் சகலகுண சம்பன்னன் அடைந்திருக்கும் அறிவு அவனுக்கு மிகவும் போதியது. இனி அவன் தன் சீவியத்தொழிலிலே தலையிடவேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாமன்றோ? அவனவன் தன்தன் தொழி லுக்கேற்ற படிப்புப் படித்தலே விசேடம். இது நிற்க, தாங்கள் எனது மகனுக்கு அருளிய பல்வகையாம் இலக்கண விலக்கிய சாஸ்திர ஞானத்தைப் பற்றி நான் மிகவும் பெருமையும், ஆனந்தமுமுற்றிருக் கின்றேன். ஆயின், நான் தங்களைக் கேட்க விரும்பும் ஒரு கேள்வி யுண்டு.
164

சகலகனசம்பண்ணன்
விருத்தம்
புந்திகூ ரறிவு தோற்றும் புண்ய வென்புதல் வனுக்கு விந்தையாய் நிர எரித்த வியனுறுஞ் சுகிர்த போத சிந்தைசேர் பிரமணத்துட் சிரேஷ்டமா னதையெ னக்குத் தந்துரை செய்வீர் மிக்க தகையுறு மருள்சே ரையா.
பதம்
பல்லவம்
உரை செய்குவீர் - அதி உத்தம மென்றென் மகற்கோது சுகிர்தபோதம் 9-6OU
அருபல்லவம்
தரைதனிற் பலகலை தயங்குஞ் சிங்காரா தயவாய் விடைபகர் வீர்தகு மலங்கார உரை.
சரணங்கள்
பற்பல கலைமிகப் பரிவுட னருணயம் பகரவ ரியவினி துறவரு சுயமயம் நற்பெருமை மகிழ்வு நனியுறு மெனிதயம் நண்ப விடையருளும் நலமுற விவ்வமயம் 9-69) D. . .
என்னருமை மகனுக் கிந்த வுயர்ந்த புத்தி எதுவென் றெனக்கிசையு மிகத்திற் பெரிய சித்தி எந்நிலை யிலும்பெறற் கேற்ற வரிய சத்தி எய்துதற் குரிய தாமெழில் சேருத்தம வுத்தி 9-6Oly...
ஆசிரியர் பெருமானே! ஞான அறிவுகளில் சன்மார்க்க போதமே விசேடித்ததாதலால், அச்சன்மார்க்க போதத்தில், தாம் என் மகனுக்குக் கொடுத்த அதி விசேடித்த போதம் எதுவென அறிய ஆசிக்கின்றேன். தயை கூர்ந்து சொல்லும் ஆசிரியரே !
165

Page 107
சிந்தனைச் சோலை
ஆசிரியர்:
நல்ல கேள்வி கேட்டீர். அக்கேள்விக்குத் தங்கள் மகனே உத்தரமருள்வார். நான் இன்னதை ஒதினேனென்று சொல்வதினும், தான் இன்னதை ஒதப்பெற்றேனென அவர் விடை பகர்தலே நலம். காத்திராப்பிரகாரம் எழுந்த இக்கேள்விக்கு என் மாணாக்கனே உத்தர மளித்தல் தமக்கு விடையாவதோடு, நான் மெய்யாய்ப் படிப்பித்து வைத்தேனென்பதற்கு மிக்க பெலப்பாமோர் திருஷ்டாந்தமுமாகும். சகலகுணசம்பன்னா! சன்மார்க்க விஷயத்தில் நான் உனக்குப் போதித்த எல்லாப் போதனைகளினும் விசேடமானதை உன் தந்தை கேட்டு மகிழும்படி சொல்லு.
சகலகுணசம்பன்னன்:
கட்டளைக்கலித்துறை
ஆனந்த னென்னு மமலனுக் கென்று மடுத்தகண்யம் நானிந்தப் பூவினி னல்கிட வேண்டிய நற்றகைசேர் ஞானந் திகழுமென் றந்தாயென் னாசிர்ய நல்லிறைவன் தானந் தருமச்சு போதப் (பி)ர மாணத்தைச் சாற்றுவனே.
பதம்
பல்லவம்
நற்செய லொருபோதும் நானிலத் தழியாது நான்பெற்ற போத மிதுவே.
அருபல்லவம்
சற்கலைகள் துதிக்கும் தயவுநிதங் கதிக்கும் நற்செயலை விதிக்கும் ஞானமே மேலுதிக்கும். Dfb6afu...
சரணங்கள்
தென்னி லிட்டநல்ல செழுமைபெறு மாகாரம் திரும்பிப் பன்னாட்கள் சென்றும்சேரு மெமையுதாரம் பண்ணனும்நல மோர்போதும் பயனறா தாதாரம் படித்தவ ரறிவரப் பண்பாம்வே தாந்தசாரம்.
166

சகலதனசம்பண்ணன்
பாரிலிதை நான்கற்கவே - கற்றுஅதின்
பாலொழுகி நிலைநிற்கவே பற்றுட னெற்குனர் வுற்றிட நித்திய நற்றகை யோடிவர் மிக்க வுறுத்திய Ibib6haful...
என்னவந் தாலும் நன்மை யிரங்கி நிதம்புரிய ஏற்றதிர் மானம் செய்தல் எதிர்க்கு மழகுரிய நன்னலஞ் செய்தா லொருநாளு மதனரிய நற்பலன் தவறாமல் நமக்குறு மென்பெரிய
ஞானமதென் மனஞ்செறிய - தந்தார்குரு
நாதரடி யேனறிய நண்ணிடு மித்திரு நுண்ணறி வாம்பொருள் எண்ணியெ னக்கவர் பண்ணிய நல்லருள். Ibib6aful...
கடவுளுக் கிரண்டாவதாய் நான் கனம்பண்ண வேண்டிய என்ன ருமையான தந்தாய் என் அன்புநிறைந்த ஆசிரியர் எனக்குப் போதித்த எல்லாச் சுகிர்த போதங்களுள்ளும் மிக்க மேலாயதென்று பன்முறை அவர் எனக்கு உறுத்தியுறுத்திப் போதித்ததும், நான் என் சீவிய பிரமாணமாய்க் கொண்டொழுகத் தீர்மானித்திருப்பதுமாகிய போதம் யாதோவெனில், நல்ல செயல்கள் ஒருபோதும் அழிந்து போகா” வென் பதே. இதுவே வேதாந்த சாரமுமாகும். நாம் செய்யும் நன்மைகள் ஒருக்காலும் அழியாமல் வர வர விருத்திபெற்று, நாம் நாட்டும் நல்ல மரங்கள் வளர்ந்து நற்கனிகளைக் கொடுப்பதுபோல் நல்ல பலனைக் கொடுக்கும். "உன் அப்பத்தைத் தண்ணிரிலெறி. அது திரும்பவும் அநேக நாட்களின் மேல் உன்னண்டைக்கு வரும்” என வேதவாக்கியமுண்டு. இத்தகைய உசித போதனையையும், இன்னும் மற்றும் நானாவித சாஸ்திர கலைக்கியானங்களையும் எனக்கு அல்லும் பகலுமுட்டிய இக்கலைக்கடலும், குணக்கடலும் ஒன்றெனப் பொருந்தியிருக்கும் ஆசிரியர் பெருமானுக்கு நான் சதாகாலங்களிலும் நன்மை பூண் டொழுக வேண்டியவனாயிருக்கின்றேன். நமஸ்காரம், ஆசிரியர் பெருமானே!
67

Page 108
சிந்தனைச் சோலை
பதம்.
பல்லவம்
சுபசோ பனதுதி சொல்லியுமைப் பணிந்தேன் சுகிர்தநிறை ஆசிர்யரே!
அருபல்லவம் தபநய மாகவித்தை தன்னை யெனக்குத் தந்த சற்குண முந்திறனுஞ் சாருங்க லைக்கடலே - சுப தயையுடன் நல்கும்பெரும் தகையாமா சிர்ய9ரும் 8tlas a
சரணங்கள்
சாத்திரகலைக் கியானம் தண்ணளியுடன் தந்திர் தக்கசன் மார்க்கபோத தயையெனக்குப் புரிந்திர் காத்ரமாமுன் மாதிரிக் கனமிகவே சிறந்தீர் கவினுறுங் கலைஞனென் றறிஞர்துதி நிறைந்தீர்
கற்றசர்வ ஞானம் பெற்ற வித்தியா தானம்
உற்றவா னந்தபானம் முற்றுக்கு மென்சன் மானம் its கணித புவன இதிகாச வறிவை யூட்டி காத லுடனே பலகல்வித் துறைகள் காட்டி அணியுறு மிலக்கண அரும்இலக்கி யங்கள் திட்டி அமிர்த மெனும்பல் ஞானம்அருளி னிர்இசை நாட்டி
அன்பு நிறைக போசா அருள்சேர் கலைப்ர காசா இன்புறும் வாணி வாசா
இதயவிஸ் வாச நேசா.
ஆசிரியர்:
கட்டளைக்கலித்துறை யுத்தியும் நன்மையும் லோகோப காரமும் யோக்கியமும் பக்தியு மோருரு வாயினபோல் வந்த பாலகனே சத்தியம் பூணும் சகல குணசம் பனாவுனைப்போல் வித்தையை என்னிடம் பெற்றிட்ட மாணவர் வேறிலரே.
168

சகலதனசம்பன்னன்
என் அன்பிற்குரிய மாணவா, சகலகுணசம்பன்ன னென்னும் பெயர் உனக்கே தகும். உன்னைப்போல் மாணவனை நான் இனி யெப்போது காண்பேன். நீ இப்பூவுலகின் சகல பாக்கியங்களும் நிறைந்து சிறந்து விளங்கி நீடுழிவாழப் பகவான் கிருபைபாலிப்பாராக,
பதம்
பல்லவம்
வாழுவாய் நிதமே - இந்த வையகத்தி லேநிடுழி துய்யகுன சம்பனாநி
அருபல்லவம்
வாழுவாய் ஜெகத்தை மிகவாளுவாய் புகழுறைய - ரீ, ரீ, ரீ, ரீ, ரீ வர்த்தகர்க் கரசனெனும் சித்தியென் றென்றும் நிறைய. samB---
சரணங்கள்
அட்டைகப ரியங்களும் கிட்டியுனைச் சேர்ந்தொளிர மட்டிலாநற் கிர்த்தியுனை யொட்டியிருந் தேமிளிர வட்டவாழி சூழ்புவியின் சிட்டரெலா ரும்பனிய இட்டமுற்றி லங்குபுகழ்த் திட்டமுடன் மாணவறி Galli- - -
எங்கெங்குநீ சென்றிடினு மங்கபணுன் னோடிருந்து பொங்குபல நலமுனக் கிங்கித முடன்புரிந்து துங்கமிகு மரசனாய்ச் சங்கையுடன் புவியினில் தாங்குநன்மை யாம்பல்புண் ணியங்கள்செய் யவருளுவார் ST---
என் அன்பு நிறைந்த மாணவா, நான் விதித்த சுபோதப்ர மாணத்தை என்றும் மனதிலமைத்து, அதன் வழி நடந்து கொள்ளு வாயாக!
சகலகுண:
தங்கள் வாக்கைச் சிரமேற் கொண்டு அதன்படி ஒழுக என்னா லானமட்டும் பிரயாசப்படுவேன், என் அன்புநிறைந்த ஆசிரியர் பெரு EDIr(3607
69

Page 109
địgsbøIở đữñogo
வணிககுல:
ஐயா. ஆசிரியரே, இனி நான் தங்களுக்குச் செய்யக்கூடிய பதில் செய்யப்போகிறேன். குறையை மன்னிக்கவேண்டும். ஐயா,
பதம்
பல்லவம்
குருவேயுமக் கென்னபதி லளிப்பேன் - ஞானங் குலவுங்கலை புதல்வார்க்கரு னிலவும்படி புகைவைத்திடு
参
திருவே பெருகென் மகனுக்கரும் திகண்ைமா நிதியெனவே வருபுக டைருள் தருதேசிக (3) es
சரனங்கள்
என்றும் நிலைக்குஞ் செல்வம் நன்களித்தின் - என்றன் இதமேவிய மகனாரொளி பெறவேயருள் பெறுநேர்வழி என்றும் நிலைக்குஞ் செல்வம் நன்களித்திர் துன்றுங் கலையரு னன்றிக் குபகாரம் தோன்றும் பல்வேறு நிதிகண் மிகுபாரம் இன்று வணக்கமாய் நாம்செய் யலங்காரம் இருநல்லும தருளுக்கொரு சிறிதும்ப்ரதி பலனேயல Es is o
நன்றியுட னென்றும் நினைந்திடுவோம் - கல்வி நலமேதரு பலமேழிகு நிலைமேவிய தலைவாஉமைக் கன்றுக் கிரங்கும் கறவை யினைப்போல காதலுடன் கலைஞானத் தந்தின் சால வென்றிமிகு மான்மஞானத் தாலிஞ் ஞால வினையகல் வழிதனை யதிகரி சனமொடு புகல்கன மிகுமுயர் குரு.
ஆசிரியர் சிரோமணியே, இப்பொழுது நான் தங்களுக்கருளப் போகும் விலையேறப்பெற்ற உபகாரங்கள் எத்துணைச் சிறப்புற்றன வாயினும் தாங்கள் எனது மகனுக்குக் காட்டிய பெரிய தயவுக்கு ஏற்ற பிரதிபலன்களென ஒரு சிறிதும் எண்ணற்பாலனவல்ல.
170

sabelasanatibarara:
ஆசிரியர்:
பறுவாயில்லை. ஐயா, நான் என் கடமையைச் செய்தேனே யன்றி வேறொன்றுஞ் செய்திலன். தங்கள் தயவிருந்தாற் போதும், பெருளைப் பற்றிக் கவனிக்க வேண்டியதில்லை.
வணிககுல:
அடா, சுப்பையா, சுப்பையா
a 6OL UA:
ஐயா, இதோ வந்தேன். நமஸ்காரம்
வணிககுல:
போய் என் கணக்கப்பிள்ளை சோமசேகரரை அழைத்துவா.
GOL:
அப்படியே செய்கிறேன், சாமி
GIBarFindBafagi:
என்ன காரியம் ஐயா?
வணிககுல:
சகலகுணசம்பன்னனை அருங்கலை வினோதனாக்கிவைத்த எங்கள் ஆசிரியருக்கு உபகாரஞ் செய்யவேண்டும். நீர் ஆசிரியரை இட்டுப் போய் என் சிற்றப்பனார் எனக்கு நன்கொடையாய் விட்டதும் என் பன்னிரண்டாம் வீட்டின் எட்டாம் சாரின் வடக்கு முலையிலிருப்பது மாகிய பூட்டழித்த பெட்டகத்தைத் திறந்து முப்பதினாயிரம் வராகன் எண்ணி இவ்வாசிரியர் கையிற் கொடும். அத்துடன் பன்னிரண்டு முதற் றரமான கஷ்மீரம் சால்வையும், மாலைதீவுச் சுலுத்தான் அனுப்பிய மூன்று நூதனமான விசித்திரச் சால்வையும், இரண்டு தங்கச் செம்பு களும், இரண்டு வெள்ளித் தாம்பாளங்களும், மூன்று முத்துமாலை களும் உபகரித்துக் கணக்கில் எழுதும். நாளைக்கு நொத்தாரிஸ் சத்தியசன்மாவை அழைப்பித்து பழக்காடு என்னும் நந்தனவனத்தை யும் முந்நூறு ஏக்கர் கொண்ட தீம்பாற்புனலடி யென்னும் நெல் வயலையும் ஆசிரியருக்கு நன்கொடையாய் எழுதுவித்துக் கொடும்.
7

Page 110
சிந்தனைச் சோலை
ஆசிரியர்:
போதும்; போதும் ஐயா, வணிகர் சிரோமணி மெத்தப் பெரிய உபகாரம், நீர் கொடையிற் கன்னனையும் வென்றீர். நான் இவ்வுபகா ரங்களைப் பெறச் சற்றும் பாத்திரனல்லன்.
வணிககுல:
ஐயா, அப்படிச் சொல்லாதேயும் ஒருக்காலுங் குறையாததும் ஒன்றாலும் அழிக்கப்படாததுமாகிய கல்விச் செல்வத்தைக் கொடுப் பதற்குப் பதில் சகடக்கால்போல் நிலையாதுருண்டு எத்தனையோ வித விபத்துகளுக்கெல்லாம் ஏதுவாய், சகல பாவத்திற்கும் வேரா யிருக்கும் தனதானிய முதலாம் சம்பத்தா? நன்று நன்று. நான் ஈவது கொஞ்சமும் போதியதன்று. இன்னும் தங்களுக்கு எப்பொழுது குறையுண்டோ, அப்பொழுது வேண்டியது கேட்டுப் பெற்றுக்கொள் ளலாம். இப்பொழுது நமஸ்காரம். போய் வாரும் ஐயா.
சகலகுண:
ஆயிரந் துதியும் நமஸ்காரமும் ஐயா.
ஆசிரியர்:
நமஸ்காரம், தம்பி, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
(3 FID(3afasg:
நேரம் போகுது. வாருங்கள் ஐயா எசமான் சொற்படி உப
காரங்கள் தர.
ஆசிரியர்:
நல்லது. வருகிறேன் கணக்கப்பிள்ளாய்.
வணிககுல:
எனது இருவிழிகளிலும் அருமையான புத்திரனே, எனக்கு நீ ஒரே மகனாதலால் இப்பூவுலகில் உன்னிலும் அருமையான பொக்கி ஷம் எனக்கு வேறொன்றில்லை. நான் உன்னை எவ்வளவு அருமை
72

சகருைனசம்பன்னன்
யாய் வளர்த்தேனென்பது உனக்கே நன்றாய்த் தெரியும். நீ ஒரு வர்த்தகன் குமரனாயினும் நான் உன்னை ஒரு கல்விமானாக்கும் பொருட்டு உன்னை ஐயாண்டளவில் மையேடு கைப்பிடித்து உனக்கு நல்ல கலையறிவூட்டுவித்திருக்கின்றேன். ஆதலால் ‘அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னும் ஆடையுமாதரவாக் கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக் குறித்ததல்லால் துள்ளித்திரிகின்ற காலத்திலேயென் துடுக் கடக்கிப் பள்ளிக்கு வைத்திலனே தந்தையாகிய பாதகனே" என்று நீ பிற்காலம் என்னை நோக நான் உனக்கு இடம் வைக்கவில்லை. இப்பொழுது நீ உன் குலத்திற்கும் இடத்திற்குமேற்க, உன் சீவியத் தொழிலில் கையிடல் வேண்டும். ஆதலால், நீ பொன், வெள்ளி முதலாம் விலையேறப்பெற்ற லோக வகைகளையும், பவளம், கோமேதகம், மாணிக்கம், நீலம், வயிரம், வைடூரியம், புஷ்பராகம், மரகத மெனப் படாநின்ற நவரத்தினங்களில் பல்லாயிரங்களையும், இன்னும் அதி விசித்திராலங்காரமாய் கஷ்மீர், பேஷியா, இந்தியா முதலாம் தேசங்களில் செய்யப்படும் நூதனம் பொருந்திய பொருள் களையும் ஆயிராயிர வகையாய் விநோத ஆபரணங்களையும் பண முதலாய் 50000 வராகனையும் என் களஞ்சியசாலையிலிருந்து எடுத்துக்கொண்டு உனக்கென்று 40000 பவுண் செலவிட்டுச் சமைப்பித்திருக்கும் “சுகிர்தலங்கார சொர்னலட்சுமி என்னுங் கப்பலில் 200 கிலாசுமாருடனும் மற்றும் வேலைக்காரருடனும் பயணமாய் மலையாளம், ஈழம், வங்காளம், சீனம், யப்பான் முதலாம் பற்பல தேசங்களுக்கும் சென்று திரை கடலோடியுந் திரவியந் தேடு" என் னும் ஒளவை வாக்கைச் சிரமேற் கொண்டு அதி யுக்தி புத்தியாய் வர்த்தகம் செய்து பெருந்தொகைத் திரவியந்தேடி மிக்க அனுபவ சாலியாம் வர்த்தகனாய்த் திரும்பி ஈங்கு வந்து எனக்குப் பதிலாய் என் வர்த்தக முயற்சிக்கு நீயே சிரமாய் என் வார்த்திக காலத்தில் நான் அல்லை தொல்லையில்லாது சந்தேஷ சமாதான சீவியம் செய்யவைத்து என் பாரிய பல்வகை நிதிகளின் சுதந்தரவாளனாய், உலகமெல்லாம் போற்றும் பெரிய வர்த்தகர்க்கரசனாய் உன் மாதுரு பிதுருவாக்கிய பரிபாலனாய் இப்பொழுது எனக்கிருக்கும் பெரிய செல்வம் இன்னும் பன்மடங்கு பெருகக் காரணனாய் வரவேண்டு மென்று என் முழு இருதயத்தோடும் ஆசிக்கின்றேன். அப்படியே நீ வரப் பகவான் கிருபை கடாட்சிப்பாராக. இப்பொழுது சிந்தா யாத்திரையாய்ப் போய் வா என் அன்புகனிந்த உதரக்கனியே
173

Page 111
đlßgöDåIở đơn(D90
பதம்
பல்லவம்
போய்வருவா யெந்தன் மகனே - வர்த்தகஞ்செய்யப் போய்வரு வாயெந்தன் மகனே
அருபல்லவம்
நேய முடனிது காறும்
நின்னை யிருத்தி நாடோறும் நிலையுறும் பலகலை யனுபவ மீண்டு நிற்கரு எரினன்றொழில் நீசெய மீண்டு போய்.
சீனா யப்பான் மலையாளம் - முதலாம் தேசம் சீய மிலங்கா வாமீழம் ஆன செல்வமார் வங்காளம் - நிதி நிறைந்த அதிவி சித்திரமாம் நேபாளம்
மான நிறையெந் தத்தேசம்
வழங்கு மோவுனக் காதாயம் மதியுட னாங்கு சென்றதி யுத்தியோங்கு வர்த்தகம் செய்து பலன்மிகக் கொணரீங்கு போய்.
ராகன் ஐம்பா னாயிரம் - அதனுடனே الهي பொருந்து ரத்னக் கல்லெண் ணாயிரம் மாவி சித்ரநகை யாயிரம் - வகைவிநோதம் வாய்ந்த சாமா னின்னோ ராயிரம்
தாவி வைத்தி தெல்லாமொரு
தக்க கப்பல் மீதேதிரு தங்குபல் தேசங்கள் போய்வியா பாரம் தகையுடன் செய்துபலன் பெறுவதுன் பாரம் போய்.
சகலகுண:
என் அன்பு நிறைந்த தந்தாய், நீர் எனக்குச் செய்த சகல
அளவிறந்த நன்மைகளையும் நினைந்து உமக்கு மனதார நன்றி
பகர்கின்றேன். தங்கள் சொற்படி பற்பல தேசங்களுக்கும் சென்று 174

சகலதனசம்பன்னன்
வர்த்தகம் செய்து பெருநிதி சேர்த்து ஒரு வருட முடிவில் மீண்டும் இவ்விடம் வந்து சேர்வேன். கடவுள் உம்மையும் அன்பு நிறைந்த மாதாவையும் காத்து ரட்சித்து நான் உங்களை எல்லாப் பாக்கியங் களுடனும் வந்து காணக் கிருபை செய்வாராக.
கண்ணிகள்
எனதன்பு நிறையுந் தந்தையே ஈந்தனன் துதி இதமாயெனக் கருணன்மை யாவு மெண்ணினேன் துதி பரதே சங்களை நாடிநிதி பாங்குடன் பெற்று பதிமே வும்வரை யென்ற னுக்குயர் பரமனே துணை. இவ்வில் லகத்தே யென்னையும் வீட்டினரையும் ஒன்றாய் இனிதாய் மகிழ விச னருள்வார் விரைவினில், புவிபோய் வருகிறேனென் தந்தாய் புண்ய மாபரன் புளகம் பெறநிர் காத்து ரட்சை பொற்புடன் செய்வார்.
loruňGUnió 1 இடம்2:துறைமுகத்திற் கப்பல்
சகலகுணசம்பன்னன் பயணம் செல்லல் கப்பற் பாட்டு. கதை விளக்கம்.
GlÖfüGIÓ 1
இடம்3 ஒரு சிங்காரப் பூங்காவனம்
(விஜயசிங்க மகாராஜனின் குமாரத்தி ஆனந்தமனோகரி,
தாதி இரத்தினாம்பாளுடன் மலர் கொய்யப் பிரவேசித்தல்)
இரத்தினாம்பாள்:
பத்திரம் ராணி காலிலே கல்லுக் குத்தும். ஓடாதே. மெல்ல நட. இனி நாம் இங்கு தரிக்கமுடியாது. பொழுதுபடும் வேளையாகின்றது. உன் தகப்பனாரும், தாயாரும் என்னைக் குறை சொல்லுவார்கள். வா. அரமனைக்குச் செல்லுவோம்.
175

Page 112
சிந்தனைச் சோலை
ஆனந்தமனோ:
அப்படியே செய்வோம். ஆயின் நாம் வீட்டுக்குப் போகமுன் இவ்வலங்காரமாம் நந்தவனத்திலிருக்கும் பரிமளமிகுந்த நறுமலர் கள் சிலவற்றையெடுத்து அரமனைக்குக் கொண்டு சென்றால் என் மாதாவுக்கு மிக மகிழ்ச்சியுண்டாம். இப்புஷ்பங்களைப் போல் ரம்மிய மானவை எங்கள் அரமனை நந்தவனத்திலில்லை.
இரத்தினாம்:
அப்படியே செய் இராஜகுமாரி சீக்கிரம் உனக்கு இஷ்ட மாகிய புஷ்பங்களைப் பறி. இருளமுன் வீடுசெல்வோம்.
ஆனந்தமனோ:
(பூப் பறிக்கும்பொழுது பாடுதல்.)
விருத்தம்
பரிமள மிகுமிந்தப் பசிய மாமலர் சொரி மணமது சுகிர்த மாமம்மா அரியவிம் மலரெம தரம னைவனம் தருமலர் தமின்மிகு தகையும் வாசமும்.
பதம்
பல்லவம்
என்ன சுகிர்தம் இம்மலர் - மணம் ஏது சுகிர்தம் இம்மலர்
அருபல்லவம்
மன்னனென் றந்தை மகிழந்துசெய் பூங்காவில் என்னென்ன பூவுண்டு இப்பூவோ ஆங்கில்லை GTGGON...
176

சகலதனசம்பன்னன்
சரணங்கள்
இப்பூவின் வாசம் இணையற்ற நல்வாசம் ஒப்பிலி தனழுகுக் குண்டோ பதில்வேறு GTGGOT...
இம்மலரின் நாமம் எனக்குத் தெரியாது அம்மா நியத்தை அறிகுவாயோ சொல்லு GTGGOT...
என்ன ஒரு நறுமலரிது என்ன அழகு என்ன சுகந்தம் புஷ்பங்கள் கடவுளுடைய புன்சிரிப்புகள் என எனது உபாத்தியாயினி அன்றைக்கு எனக்குச் சொன்னது மிகவும் உண்மை, ஐயோ! ஐயோ!
கண்ணிகள்
அன்பு மிகுந்த தாதியிங்கு வாராய் அங்கு பாராய் அச்சமுற இச்சமயம் அங்காரோ வாறார்.
நெஞ்சமிக வேங்கி யென்னிலை தளருதையோ நீசர் போலு மாரோ நேரா யோடிவா றார்பார் அன்பு.
ஈட்டியொடு பொல்லு கத்தி இன்னும்பல கொண்டு எங்களைச் சருவுவர் போலிதோ வாறார்பார் அன்பு.
தாடியுள்ள துருக்கரைப்போல் சாங்கம வர்க்குண்டு தண்டுமினன்டு செய்பவர்போல் அண்டிவா றார்பார் அன்பு.
ஐயோ! தாதி, அதோபார். நான் முன்னொரு போதுங் கண்டி ராத நவீன தோற்றமுடைய பயங்கர ரூபிகளாகிய சில மனுஷர் வாள், ஈட்டி, குத்துவாள், பொல்லு முதலியவற்றைத் தாங்கி ஆயுத பாணிகளாய் ஏதோ சதி செய்யும் நோக்கங் கொண்டவர்போல் காச்சா பீச்சா வென்று நாமறியாப் பாஷையில் அதமமாய்ப் பாடிக்கொண்டு எங்களுக்கு நேராக ஓடிவருகின்றனர். அவர்கள் வருகிற வரத்தைப் பார்க்க எனக்குத் திகில் பிடிக்குதே. நெஞ்சு ஏங்கி விறைக்குதே. ஐயோ! நாம் என் செய்வோம்.
177

Page 113
சிந்தனைச் சோலை
(துருக்கள் வருதல்) துருக்கர்க்கதியன்:
UDrů (5)
ஒலமாய் ஹிறிக்கம் கத்தாய்ப் பறாய்நே லங்கை வறதகை அடிசமான நீலம் பண்டன் ஆஉமை விடோமடி கண்கண் அங்கியாக காவுளாய் சேர்ப்பன் - பார் நமானு விஸ்கி பைகன் - ஈர் மொக்கு மோறிசன் துக்கப்படாதீர் லங்கை வறதகை.
(துருக்கர் பாடிப்பாடி இராசகுமாரத்தியைப் பிடித்துக்கொண்டு போகத் தெண்டித்தல்)
இரத்தினாம்:
(ஆனந்தமனோகரியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு) ஐயோ! ஐயோ! அடாத பாதகர்களே, எங்கள் கிட்ட வராதிருங்கள். இப் பிள்ளை இந்நாட்டையாளும் பாராக்கிரமசிங்கமாகிய மகாராஜனின் ஏகபுத்திரி. இவ்இராணி நாயகத்தை, நீங்கள் தொட்டால் ஆப்பி ழுக்கப் போன குரங்கு பட்டபாடு படுவீர்கள். அப்பாலோடுங்கள். ஒடுங்கள்.
துருக்கர்க்கதிபன்:
அடீ, பொத்தடிவாய். பொத்தடிவாய். விஜயசிங்கன் உனக்கு ஆண்டவனேயன்றி எங்களுக்கும் ஆண்டவனா? உரலிலகப்பட்டுக் கொண்டு உலக்கைக்குப் பயப்பட்டதினாலாம் பயனென்ன? வாய் பேசினால் உன்னையும், பெட்டையையும் வாளினால் இரண்டு துண்டுபட நிச்சயமாய் வெட்டி வீசுவோம். உங்கள் தலைகளைப் பந்துகளாயுருட்டி விளையாடுவோம். அடீ, அடீ, அடீ பொத்தடிவாய்.
இரத்தினாம்:
சரி, நான் ஒன்றும் பேசவில்லை. எங்களுக்கு யாதொரு தீங்குஞ் செய்ய வேண்டாம். உங்களை இரண்டு கையுமெடுத்துக்
178ー

சகலருனசம்பண்ணன்
கும்பிட்டேன். என்னைத்தான் என்ன செய்தாலும் இந்த இராச குமாரத்தியை ஒன்றுஞ் செய்யாதேயுங்கள். ஐயோ! அப்பா, விட்டு விடுங்கள். உங்களுக்குப் புண்ணியங் கிடைக்கும்.
துருக்கர்க்கதிபன்:
அe, உந்தன் மன்றாட்டமெல்லாமாருக்கு? நீ நல்ல மாய உபாய சுந்தரியாய் இருக்கின்றாய். அந்தச் சந்தங்கெட்ட உன்னை யொரு பொருட்டாயல்ல அதி ரூபலாவண்யமுங் கண்டோர் எவரும் மயங்கத்தக்க சிறந்த இந்தக் கன்னிகையையே நாம் சிறைப்பிடிக்க எவ்வளவோ காலம் காத்திருந்தோம். இன்றைக்கே நற்றருணம் வந்தது. நாங்கள் விடவே மாட்டோம். நீங்கள் அழுவதினால் யாதும் பயனில்லை. பேசாமல் ஆறுதலாய் எங்களோடு வாருங்கள். நாங்கள் உங்களைக் கொல்லவிலலை. உங்களைப்போல் எங்களாற் சிறையாக்கப்பட்ட வேறனேகருடன் உங்களையும் எங்கள் கப்பலி லிட்டு, தூர தேசத்துக்குக் கொண்டுபோய் நல்ல விலைக்கு விற்போம். இந்த இராசகுமாரத்திக்கு எந்த இராசகுமாரனும் எத்தனை யாயிரம் பவுணையும் எடுத்து வீசுவான். துறைமுகம் போம்வரையும் மூச்சுங் காட்டக் கூடாது. (பாடுகிறான். ஒலமாய் ஹிக்கம். இவ்வகையாய்க் கொண்டு போய்க் கப்பலிலிட்டுப் பாய்வலித்துக் கொண்டு துருக்கர் செல்லஸ்)
கப்பற் பாட்டு. கதை விளக்கம்
f l.
இடம் 4: விஜயசிங்க மகாராஜனின் அரமனைக் கொலுமணிபம்
விஜயசிங்க மகாராஜன்:
உண்மையுடனே எனக்கூழியஞ் செய்யும் உத்தம மந்திரியே, ஊரில் நடபடியெப்படி யென்றெனக் குரைசெய்குவாய் நீயே.
மந்திரி:
மகிதலம் புரக்கும் மகத்துவந் தங்கிய மானாபரணா, கேள். மகிழ்ச்சியோடே யுன்றன் பிரசைகள் யாவரும் வாழுகிறார், ஜயனே.
179.

Page 114
சிந்தனைச் சோலை
விஜய:
குடிவெறி கொலை களவாதிய பாவங் குறைகின்றதா? மந்திரி கோட்டினில் வழக்குகள் முன்னிலும் சற்றும் குறைந்திலவோ மந்திரீ
மந்திரி
குடிவெறி கொலை களவாதிய பாவங் குறைகின்ற தென்னரசே, கோட்டினில் வழக்குகள் முன்னிலும் பாதிகுறைந்தன வென்னரசே,
விஜய:
வேளாண்மை இம்முறை எப்படியென்று விபரிப்பாயென் மந்திரீ தாளாண்மையோடு கைத்தொழிலாளர் தந்தொழில் செய்கின்றாரா?
மந்திரி
வேளாண்மை இம்முறை மெத்த விசேஷம் வெகுநயம் ராஜேந் திரா. தாளாண்மையோடு கைத்தொழிலாளர் தந்தொழில் புரிகின்றார்.
விஜய:
தேவாலயங்களில் தினமும் வணக்கம் சிறப்பாய் நடக்கின்றதா? சீராய்ப் பிரஜைகள் சன்மார்க்க நெறியில் தேர்ச்சியடைகின்றாரா?
மந்திரி
தேவாலயங்களில் சிறப்பாய் வணக்கம் தினமும் நடப்பதுடன், சீராய்ப் பிரஜைகள் சன்மார்க்க நெறியில் செழிக்கிறார் என் துரையே.
விஜய:
தேசமெங்குஞ் சமாதானத்தாற் றேங்கிச் சிறப்பதைக் கேள்வி யுற்றே மாசிலென் மந்த்ரி, மனங்களி கொண்டேன். மகிழ்வாயென் னுடனே எனதன்பு மேவிய மந்திரீ, கடவுள் எனக்கருளியிருக்கும் இவ் விராச்சியம் இத்தனை சிறப்பும் செழிப்பும் செங்கோன் மாட்சியும் பொருந்தி, பூர்வம் தரும புத்திர மகாராஜனின் ராச்சியத்தையும் வென்றிருப்பதையுற்று நான் மிகவும் ஆனந்திக்கின்றேன். என்னுடன் நீருங் களி கூருவீராக.
180

சகலதனசம்பண்ணன்
மந்திரி:
மகாராஜ், நானும் அதைக் குறித்து மிகவும் மனமகிழ்கின்றேன்.
ஈதெல்லாம் உமது தந்திரோபாய மதி மந்த்ர யூகத்தினாலன்றோ இவ்வளவு சிறந்த நிலையை அடைந்திருக்கின்றன. இந்நாடு உம்மை அரசனாயடைந்திருப்பது எத்துணைப் பெரும் பாக்கியம்.
இடைநேரம் பாட்டு ; பகிடி.
(இருவரும் ஏகுகின்றார்கள்)
(அரசன் திரும்ப வந்து உட்கார்ந்து மந்திரியை அழைத்தல்.)
бliggш:
விருத்தம்
அரிய வென்மந்த்ரீ யென்தன் ஆரமு தாகும் புத்ரீ உரிய பூங்கா வனத்துக் குலாத்தவே சென்றா எரிப்போ
சரியுற வாழி சூர்யன் சாய்ந்துமிங் குறாத தாலே தெரிவுறுஞ் சேனை யோடு தேடிநீ செல்லு வாயே.
பதம்
பல்லவம்
காணே னேயென் புத்திரிபூங் காவனத் திலிருந்து வர.
அருபல்லவம்
மானுங் குணநிறைவும் பூனுைங் குமாரத்தியிம் மட்டும் மலர்வனம் விட்டு வரநான். assTGGOOT---
சரணங்கள்
என்ன விபத்தவளைப் பின்னப் படுத்தியதோ இகமீதென தகமிக வேங்குதே கானே.
181

Page 115
சிந்தனைச் சோலை தாதியுங் கூடச்சென்ற போதுமிடர் வந்துறச் சலிக்குதே யேம்பலிக்கு தகமே கானே.
பாரியாம் ராணிமனம் பதைக்குமம்மா சஞ்சலம் பார்க்குந் துயர்தீர்க்குந் தகைத்தோ கானே.
நம்பிக்கை மிகுமந்த்ரீ நால்வகைச் சேனையொடு நாடி யெங்கனுைந் தேடிவருவாய் கானே.
மந்தரி, இன்று சாயுங்காலம் பட்டணத்துக்கப்புறத்திலிருக்கும் சிங்கார நந்தனவனத்திற்கு உலாத்தும் பொருட்டு, ஒரு தாதியுடன் போன என் குமாரத்தி இன்னும் வரவில்லை. என்ன காரணமோ தெரியாது. இராணியவர்களின் ஏவலால் ஆங்குச் சென்று தேடிய இராணுவவீரர் எங்கெங்கோ சென்று தேடியுங் காணாது வந்திருக் கின்றார். இச்சம்பவம் என் பாரியாம் இராணியின் இரத்தாசயத்தை ஊடுருவிப் பிளக்கின்றது. அவ ஒன்றுந் தெரியாது அறிவு மயங்கி யிருக்கின்றா. இந்நேரம் நான் அவவை விட்டுவிலகுவது புத்தியன்று. ஆதலின் நீர் ரத, கஜ, துரக, பதாதியாம் சேனா சமுத்திரங்களையும் அணிவகுத்துக் கொண்டு இத்தேயத்தை மாத்திரமன்று, இதனடுத்த தேசங்களையும் கவனமாய்ப் பார்த்து இழந்துபோன என் உதரக் கனியையும் தாதியையும் சீக்கிரம் கொண்டு வருவீராக.
மந்திரி;
ஐயையோ இக்கொடிய சம்பவத்தைக் கேட்க மிகக் கர்ன கடுரமாயிருக்கின்றதே. தர்மமேயுருவாயிருக்கின்ற தங்களுக்கு இத் தகைய நிர்ப்பாக்கியமும் வந்து லபிக்குமா? என்செய்வோம். நான் தங்கள் ஆஞ்ஞையின்படி இந்த கூடிணமே சேனையுடன் போய் என்னாலான மட்டும் பிரயாசப்பட்டுத் தேடிக் காணாமற்போன இராசகுமாரியைக் கொண்டுவருவேன். மன ஆறுதலாயிரும் அரசர் சிரோமணியே.
கட்டளைக்கலித்துறை
புண்ணிய நற்சொரு பம்போல விந்தப் புவியுதித்து
மண்ணிலங் காக்கு மகாராஜ னேயிந்த மாதுயரம்
கண்ணியம் சேரு முமக்கு லபித்ததென் காரணமோ
நண்ணியென் னாலிய லும்வரை தேடிட நாடுவனே.
182

சகலதனசம்பண்ணன்
பதம்
பல்லவம்
சேனையுடன் சென்று தேடி - விடை சீக்ரம் வந்து சொல்வன் நாடி
அருபல்லவம்
மானை நிகருமிள வரசிதனை மாநிலத் தேடிக் கொணர்ந்திடு வேன்மனை. சேனை.
சரனங்கள்
புண்ய நிறைந்திடு நாதா - இந்தப்
பூதலம் போற்றும்பொற் பாதா
கண்ய முறையும் பாலகியுந் தாதியும் கண்டு கொணர்வேன் சென்றெந்த விதியும். சேனை.
இளவரசி யைப்பரன் காப்பார் - துயர்
யாவும் முற்றாய் அவர்தீர்ப்பார்
புளக முடன்விடை போய்வரவே தாரும் புனிதவிசன் சித்தமே யெய்துமென் றோரும் சேனை.
(இருவரும் ஏகுகின்றார்கள்) இடைநேரமும் கதை விளக்கமும். (அரசனும் மந்திரியும் அரமனை மண்டபத்தில்)
மந்திரி
விருத்தம்
பொற்புறு மகிபா ராச பூவையைத் தங்கணித கற்பனைப் படியே தேடிக் கண்டிலே னென்ன மாயம்
அற்புத மையோ வந்த அரிவையைத் துருக்கள் கொண்டு விற்பனை செய்யக் கப்பல் மீதினிற் சென்றார் போலும்.
83

Page 116
சிந்தனைச் சோலை
பதம்
பல்லவம்
எங்கேயுங் கண்டிலனே' - குமாரத்தியை எங்கேயுங் கண்டிலனே.
அருபல்லவம்
பங்கே ருகமூகப் பார்த்திய நாமனே பதைக்குதே யென்ற னெஞ்சம்.
சரணங்கள்
ஆர்கொண்டு போயினரோ - அரிவையந்த
ஆரமுதைக் கவர்ந்தே
சீர்குலவும் மகராஜ ராஜேந்திரா
செய்வ தென்னோ அறியேன் எங்கே.
கள்ளத் துருக்கரீங்கு - சில
காலமா கத்திரிந்தார் உள்ள முருகுதெம் மோவியத் தைக்கவர்ந் தோடி யொளித்தனரோ. எங்கே.
விஜய:
அப்படி நேர்ந்திருந்தால் - என்மந்திரீ ஆயிழையைத் துஷ்டர் செப்பிடுங் கப்பலி லேற்றிச் சிறைவிற்பர் திராக் கவலை ஐயோ.
மந்திரி;
ஆசைப் பசுங்கிளியே - என்றன் அன்னமே மாமயிலே நேசமிகு மென்றன் பத்தினி யாய்வர நேமித் துனையிருந்தேன். எங்கே.
184

சகலதனசம்பன்னன்
6fegul:
என்னவென்று தாங்குவேன்நான் - இனியுனை
எப்பிறப்பிற் காண்பேன்
அன்னமே ஆனந்த ஆருயிரே என்றன்
அன்பாரும் புத்திரியே.
GlfuňGUniñ 2
இடம்: கடலில் இரண்டு கப்பல்கள்.
சகலகுண:
தண்டையல், எங்கள் கப்பலின் முன்னணியத்துக்கு நேராய் வருங் கப்பலில் ஏதோ அழுகைக் குரல் கேட்கின்றது. அதை அறிந்து சொல்பார்ப்போம்.
தண்டையல்:
அப்படியே செய்வேன், வர்த்தகர்க்கரசனே (தண்டையல் உரத்து மற்றக் கப்பலில் உள்ளவர்களோடு பேசி மறுமொழி சொல்வது) அது துருக்கக் கள்வருடைய அடிமை வியாபாரக் கப்பல் ஐயா. அதில் சிறைகளாய்ப் பிடிக்கப்பட்டு நானா தேசங் களினின்றுங் கொண்டுபோகப்படும் ஏழைச் சனங்கள் பலர் தங்க ளுக்கு நேர்ந்திருக்கும் மகா பெரிய ஆபத்தை நினைந்து ஒல மிட்டழுகின்றனர்.
சகலகுண:
ஐயையோ ஐயோ! இது என்ன பெருங்கொடுமையப்பா இது எவ்வளவு பரிதாபப்படத்தக்க காரியம் ஐயோ! அவர்களுக்கு யார் துணை தெய்வமே. அவர்களை விடுதலையாக்க நான் என்ன செய்தல் கூடும். தண்டையல் தயவுசெய்து அக்கப்பலின் அதிபனை என்னை வந்து காணச்சொல்.
(தண்டையல் தலைவனையழைத்து வந்து சகலதனசம்பண்ணனைச் சந்திக்க வைத்தல்)
சகலகுண:
ஐயா, துருக்கர்க்கதிபரே, நீர் சிறைப்படுத்தி வைத்திருக்கும்
ஏழைகளின் அழுகுரலைக் கேட்க என் நெஞ்சு விறைக்குதே. நான் 185

Page 117
disoaró Gamoso யாது செய்தால் அவர்கள் விடுதலை பெறுவார்கள். இப்பூவுலகில் கடவுள் எல்லா மனுஷரையும் இஷ்டமுள்ளவர்களாய்ச் சிருஷ்டித் திருக்க நீரும், உம் குழுவினரும் கொஞ்சமும் இரக்கமின்றி உம் முடனொத்த மனுப்பிறவிகளைக் களவாய்ச் சிறைப்படுத்தி இவ்வித நிர்ப்பந்தத்துக் குள்ளாக்குவது எத்துணைப் பெருங் கொடுமை. ஐயோ! இதை எண்ண மனம் நடுங்குகின்றதே. ஆ1 உமக்கேன் இந்த நிஷ்டுரம். ஏழையழுத கண்ணிர் கூரிய வாளையொக்கு மல்லவா?
கண்ணிகள்
பாதகம் பாதகம் பாதக மல்லவோ - இந்தப் பாரிலினி தைப்போலும் பழியேதும் வேறுண்டோ -
பகர் - பகள் - பகள் - பகள். ஆ - ஆ - ஆ - ஆ நிஷ்டுரம் நிஷ்டுரம் நிஷ்டுரம் ஐயையோ - இதை நினைக்கவென் னிருதயம் விறைக்குதே யென்செய்வன் நிசம் - நிசம் - நிசம் - நிசம் - ஆ- ஆ - ஆ - ஆ என்னநான் என்னநான் என்னநான் செய்தக்கால் இந்த ஏழைகள் விடுதலை எய்திட அருளுவீர்
எவம் - எவம் - எவம் - எவம் - ஆ -ஆ-ஆ-ஆ துருக்கர்க்கதிபன்:
வணிகர் குலாதிபா, நீர் இப்படிச் சொல்வது எனக்குப் பெரும் ஆச்சரியத்தை விளைக்கின்றது. நீர் நான் மனுஷரைச் சிறைப்படுத்தி விற்பது பாதகமென்று சொல்வதுபோல், நான் நீர் வர்த்தகஞ்செய்து பணமீட்ட முயல்வதையும் மகா பாதகமென்றே சொல்லுவேன். தன் தொழில் விட்டவன் சாதியிற் கெட்டவன். நாங்கள் பண்டுதொட்டுப் பரவணியாய்ச் செய்த தொழிலை உம்மைப்போல் ஆயிரம்பேர் சொன்னாலும் விடுவோமா? ஆதலால் அவ்வளவில் ஏட்டைக் கட்டி வேறு அலுவல் இருந்தாற் பேசும்.
சகலகுண:
நீர் சிறைப்படுத்தி வைத்திருக்கும் ஏழைகளின் அழுகுரலைக் கேட்க என் நெஞ்சு விறைக்குதே. அவர்களை எவ்வகையாய் விடு தலையாக்கலாம். நான் யாது செய்தால் அவர்கள் விடுதலை பெறுவார்கள்? அவ்வேழைகளை எவ்வகையாய் விடுதலையாக்கலாம்? 186

சகலதனசம்பன்னன்
துருக்க:
உமது கப்பலில் பெருந்தொகையான ஏவலாட்களும், பகை வரை எதிர்க்கும் சகல முஸ்தீதுகளும் இருப்பதால் தண்டுமிண்டுக்கு வந்து காரியம் பார்க்கலாமென்று எண்ணுவீராக்கும். அது ஒரு போதும் முடியாது. உமக்கிருக்கும் பெலமளவு எங்களுக்குமுண்டு. நீர் இரங்கிக் கண்ணிர் சொரியும் இவ்வேழைகளை மீட்க ஒரேயொரு வழியுண்டு. நான் கணக்கப் பேசுவதிற் பயனில்லை. உம்மைப் பார்த்தால் ஒரு மகா பெரிய வர்த்தக சிரோமணிபோல் தோற்றுகின்றீர். ஐந்து இலட்சம் பவுண் கொடுத்தால் என் கப்பலையும் அதிலுள்ள எல்லாச் சாமான்களையும் ஆயிரக்கணக்கான சிறைகளையும் உமக்கு விட்டு நான் என்பாட்டிற் போய்விடுவேன்.
சகலகுண:
நீர் கேட்கும் தொகை மெத்த அதிகம். வேறு பேச்சு வேண்
டாம். இந்த வியாபாரக் கப்பல் நாற்பதினாயிரம் பவுண்பெற்றது. இதற்குள்ளிருக்கும் வியாபாரப் பொருள்கள் ஒரு இலட்சம் பவு ணுக்கு மேலே பெறும். என்னிடமிருக்கும் பணமுதல் ஐம்பதினாயிரம் வராகன். இக்கப்பலையும், இதன் பணம் பொருளெல்லாவற்றையும் நீர் பிடித்துக்கொண்டு உமது கப்பலையும், அதிலுள்ள அடிமைகளையு மெனக்குத் தாரும், நான் அவ்வடிமைகளை விடுதலை செய்து அக்கப்பலில் என் ஊர் போய்ச் சேருவேன்.
துருக்க.ே
நல்லது அப்படியே செய்வோம். வேறு கதை வேண்டாம்.
(ஒருவர் கப்பலை ஒருவர் ஏற்றுக்கொள்ளல். சகலகுணசம்பன் னன் துருக்கனுடைய கப்பலுட் சென்று அதை ஒப்புக்கொண்டு அதற்குள்ளிருந்த சிறைகளின் நிலைபரங்களை வினாவி விடுதலை
செய்து வரும்பொழுது இரத்தினாம்பாளையும், ஆனந்தமனோகரியை யுங் கண்டு அவர்களை இன்னாரென்று வினவுதல்)
187

Page 118
dgoaă 6onaco
சகலகுண:
விருத்தம் அதியழ குறுமிள மார ணங்கெனும் நிதியிவ ளிவணுைறு நீதி யென்னையோ மதியனை யிவளெழில் வதனங் காட்டுதுன் வதியருட் குணத்தொடு ராஜ மானெனா.
பதம்
பல்லவம்
பூரண வழகார்ந்த பத்மினி - பொற்பிலகுமிவ் வாரணங்கு ராஜ நற்கன்னி
அருபல்லவம்
தேரினி வளிந்த்ர ஒனுளி லுறையுநற் சிரியரச சிங்கார கெம்பீரியோ.
சரணங்கள்
பாட்டிற் புலவர்கள் நாட்டு ரூபகம் தீட்டு சுந்தர முட்டியோ- அழ கிட்டுவோர்க் கழகட்டு மாவெழில் காட்டுஞ் சுந்தர வாட்டியோ - எந்த நாட்டிலும் நிகர்பூட் டவரிய சீமாட்டி அரச கோமாட்டி யிதுநிசம்
பூரண.
புளகமும தனிலரச ஜெனனமது யூனுநற் சோபன புத்ரி - அக
புனிதநெறி பிரதியொளி யிலகிடுமிகு பூஜித நிறையும் பவித்ரி - அன்பு
அழகுட னதிரச குணமுதலிய விவளாட்சி போலநிகள் மாட்சிவே
றெங்குமில்லை யூரன.
ஆகா அதோ - ஜெகசோதியாய்க் கோடி சூரியப்பிரகாச மாய் - அழகே வடிவுகொண்டுற்பத்தி யானதுபோல் ஓர் இளம்மாது சிரோமணி நிற்கிறாள். இவள் யாரோ? இவ்விளம் மாது சிரோ மணி இப்பூவுலகிற்குரியவள்போல் கொஞ்சமும் காணப்பட வில்லையே! இத்தகைய அழகு இப்பூவிற்கு மிகவும் மேம்பட்ட தாயிருக்கின்றதே! இவள் இளவரசியோ, அல்லது சாதாரணமான பெண்ணோ எனக்குத் தெரியாது. ஆயின் இவளுடைய அதிருபலா
88

arabaDasartöUtara
வண்யம் பொருந்திய தோற்றமும், முகக் காந்தியும், இவளுடைய ஒயிலும் இவள் மிக்க மேலானவோர் அரச குடும்பத்திலே பிறந்து வளர்ந்திருக்க வேண்டுமெனக் கற்பிக்கின்றன. ஆதலால் இவளை இளவரசி யென்று சொல்வதிற் குற்றமில்லை. இவ்விளவரசியின் முகத்திற் காணப்படும் புனிதமாகிய பிரபை "அடுத்தது காட்டும் பளிங்குபோல் இவள் அகத்தின் களங்கமற்ற ஸ்திதியின் பிரதி விம்பமாயிருக்கின்றது. சிங்காரமானதோர் பூங்காவனத்தில் மிக்க செழிப்புற்றோங்கிய ஒரு நறுமலர் விருட்சத்தில் உற்பத்தியாய்த் தன் மிகுந்த அழகினாலும், ஒப்பற்ற சுகந்த பரிமளத்தினாலும் யாவரிதயங்களையும் மகிழச் செய்து, ஏதோ எதிர்க்காரணத்தினால் அகாலமாய் வாட்டங் கொள்ளத் தொடங்குமோர் திவ்விய புஷ்பம் போலன்றே இத்தையல் நாயகம் தோற்றுகின்றாள். அம்மா, நியார் சொல்லு,
பதம்
பல்லவம்
பாலகிநீ யாரென்றோ துவையே - இந்தப் பாதகரின் கையில்வந்த காரணமென்ன விளம்பு.
爱
சீலநிறை யோரரச பாலகி யெனவுன் முகங் காலு மொளியா லுனர்ந்தேன் கோல மயிலே ஞாலமதி லிந்த்ரலோக மேலாமெழிற் பெண்கள்வரல் வால சூரியப் ரகாசம் ஞாலமதின் மேலொளிதல் போலவரு மிக்கநற் சுசீலமுள்ள மாங்குயிலே
சரணங்கள்
என்னவிலை வந்தாலுமுன் சொர்னவுடல் தனைக்காக்க மன்னரெவ ருந்துணிவ ருன்னத மின்னே என்னிதியெ லாமிழந்து முன்னையே யிரட்சைசெயக் கன்னியே யென்னா லியலுமென்ன முன்னரே என்னிதயந் தேர்ந்திருந்தாற் பன்னநல் லின்பமுடன் கன்னனின் குணத்துடனே என்னிதி கொடுத்திருப்பேன் பாலகி.
v

Page 119
dfggaDa Garmaban இரத்தினாம்பாள்:
பதம்
வணிகள் குலாதிபனே - என்றன் வாய்மொழி கேட்டருள்வாய்.
egg sooooh.D
LaudNa6ub DMT sería Luasanib Lurfari பார்த்திய னேயெமைக் காத்தருள் புரிவாய் ܡܘܫܗesif---
சரனங்கள்
தருமமோ ருருவென வந்திடு தாதா தன்னாளி யாய்ரகைடி செய்யிரக் யாதா கருமமாய் நன்மைசெய் காருண்ய போதா காத்திரே துருக்களின் கைநின்று நிதா anafasir.--
கண்டுணர்ந் தவர்போற் கருதி நிச்சயமாய் காளிகை யிவள்ராஜ கன்னியென நயமாய் விண்டது பெரும்நூா தனம்தல் விதயமாய் விரித்துரைப் பேணிவள் காதை பத்தியாய் ananafasir.--
பெண்ணர சென்ன நிர்பேசு மிம்மாது பெரியவோ ரரசனின் புதல்வியென் றோது கண்மணி யாகவே வளர்ந்திடும் போது கள்ளத் துருக்கள் கையிற்பட்டாளிச் சாது adersofessir...
பூங்கா வனத்திற்றுாரப் போயிருந் தீது புகன்றிடு மாயையா மென்னுடன் போது பாங்குடன் பறித்துமா மகிழ்வுறும் போது பாதகத் துருக்கள்செய் தாரிந்தத் தீது வணிகள்.
ஒருவரந் தரவேணு மோதும்நாம் நல்லேம் ஊருமெம் பேருமோ ஒருபோதும் சொல்லேம் தருமதுரை யேயிவள் தந்தையும் சொல்லேம் சாற்றென்று கேட்டிடித் றம்முட னில்லேம் வணிகர்.
90

gasosaribusiani
தருமமே யுருவெடுத் தவதரித்ததுபோல் விளங்கும் மகானுபாவா? நம்முன்னோர் செய்த பூஜாபலத்தால் இப்பெரிய விபத்தினின்றும் எம்மை இரட்சிக்க ஜெகதீசன் அனுப்பிய பரம தூதன்போல் எங்களை இடரினின்றும் காத்து இரட்சை செய்த வணிகர் குலாதிபா, தாங்கள் செய்த இவ்வளவில்லாத் தயவுக்காய் நாமிருவோரும் எங்கள் ஜீவ காலமெல்லாம் தங்களுக்கு அடிமைகளாயிருப்போம். செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமு மாற்றலரிது. என்னுடன் கோடி சூரியர் உதித்து வரும் பிரகாசத்துடன் சொர்ணமயமாயிலங்கும் அதிருபலா வண்யம் சிறந்த இவ்விளவரசியார் தாங்கள் அனுமானித்தபடி ஒரு பெரிய அரசனின் ஏகபுத்திரி அரமனைக்குத் துரத்தேயுள்ள ஓர் அலங்கிருத நந்தவனத்தில் ஆயாளகிய நானும் இவ்விளவரசியும் மலர் கொய்துகொண்டிருக்கும்போது பாதக ரூபராகிய துருக்கர் எங்களைப் பிடித்துத் துறைமுகத்துக்குக் கொண்டுசென்று, ஆங்கு நின்ற தங்கள் கப்பலில் வேறு அநேக நூற்றுக்கணக்கான சிறைகளுடன் இட்டுக் கொண்டு சென்றனர். நாங்கள் தங்களைக் கேட்கும் ஒரு தயவுண்டு. எங்கள் தேசமெதுவென்று, இளவரசியின் பிதா எவ்வரசனென்றும், எங்கள் நாமமெவையென்றும் எங்களை ஒருபோதும் கேட்க வேண்டாம். நாம் ஒரு போதும் வெளிவிடமாட்டோம். நாமோ தாங்கள் காணக் கூடியதாய் நல்லவர்கள். எங்கள் சீவிய காலமெல்லாம் தங்களு டனிருக்க எங்களுக்கு முழுச்சம்மதம்.
சகலகுன:
அப்பொழுது, போக உங்களுக்கு வாஞ்சையில்லையா?
இரத்தினாம்: *メ
நாம் ஊர்விட்டு ஆறுமாதமாய் விட்டதாதலானும், இந்நேரம் கடவுளுக் கிரண்டாவதாய்த் தாங்கள் இருப்பதாலும், இக்குமாரத் தியில் தங்களுக்கு மிக்க பிரிதியிருப்பதாய்த் தெரிவதாதலானும் தங்கள் பிரிய மின்றி நாம் ஒன்றுஞ் செய்யமாட்டோம். ஒரு கேள்வி கேட்கின்றேன், குறை நினைக்க வேண்டாம். விவாகமாய் விட்டதா?
சகலகுண:
இன்னும் ஆகவில்லை.
19

Page 120
சிந்தனைச் சோைை இரத்தினாம்:
எங்கேனும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றதா?
சகலகுண:
இல்லை. இந்த ஆய்வான கேள்வி என்னத்திற்கு?
இரத்தினாம்:
அதில் ஒரு கருத்திருக்கின்றது. தங்களுக்குச் சித்தமானால் தாங்கள் அவ்வளவு சிலாக்கியமென்று சரியாய் நிதானித்து விதந்து வியந்து கொண்ட இம்மாது சிரோமணியைத் தாங்கள் கல்யாணம் செய்துகொள்ளலாம்.
சகலகுண:
ஆகா! எவ்வளவு பாக்கியம் எவ்வளவு சந்தோஷம் நான் மிக்க அவாவாய் வாஞ்சித்த அரிய திரவியம் வலியக் கிடைப்பது எத் துணைப் பேரதிஷ்டம் அகோ என் இருவிழிகளிலும் அருமையான இராஜகுமாரத்தி, உனக்குச் சம்மதமா? உன் பொன் வாய்திறந்து சொல்லு,
(ஆனந்தமனோகரிதலையசைத்துச் சம்மதங் காட்டல்)
இரத்தினாம்:
ஐயா, கரும்பு தின்னக் கைக்கூலியா? தங்களைப்போலும் தருமசீலரை, அழகிலும், குலத்திலும், குணத்தினும் செல்வத்தினும் ஒப்பாரும் மிக்காருமில்லாதவரை நாயகனாகக் கொள்ள இம்மாது என்ன தவம் செய்திருத்தல் வேண்டும் துருக்கர் நம்மைச் சிறை பிடித்ததும் ஒருவாறு நன்மைக்கே. ஏனெனில் அங்கே ஐம்பத்தாறு தேச இராசகுமாரருள் இவ்விளவரசியரை விவாகம் பண்ண விரும்பி அலைந்து திரியாத இராசகுமாரர் இல்லை. அரசனோ இக்கன் னிகையைத் தன் மந்திரிக்கே கொடுக்கத் தீர்மானித்தான். அம் மந்திரியோ சகல துன்மார்க்கத்துக்கு முறைவிடமானவன். அவனிலே வியக்கப்படத் தக்கது அவனுடைய மந்திரோபாய வலிமையன்றி வேறொன்றுமில்லை; ஆள் ஒரு மன்மத சொருபந்தான். ஓர் அவ லட்சன குருபி அவனை விவாகஞ் செய்ய இத்தோகையருக்கு அணுவளவாவது விருப்பமில்லை. அப்படியிருக்க இப்படித் தெய்வா தினமாய் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் மாலை தங்களில்
192.

சகலதனசம்பன்னன்
விழுந்தது தாங்களும், நாங்களும் முன்செய்த தபோ பலமன்றோ. துருக்கர் எங்களைச் சிறையாக்காவிடின் இவ்விளவரசியின் பாடு மிகவும் பரிதாபிக்கப்படத்தக்க தாயிருக்குமேயன்றோ? இதனால் கடவுள் எங்களுக்குச் செய்யும் எவ்வித தீமையும் எங்களுக்கு நயமாகவே முடியுமென்பது தெளிவாயிருக்கின்றது. அது எமக்குத் தீமையாய்த் தோற்றினும் உள்ளபடி நன்மையாகவேயிருக்கும்.
சகலகுண:
அம்மா! நீசொல்வது மிகவுஞ் சரி கருணாநிதியாகிய ஈஸ்வரன் எம்மை எப்பொழுதும் மிக்க கரிசனையாய்ப் பரிபாலிக்கின்றார். நீதி யாயும், உண்மையாயும், அன்பாயும் ஒழுகுவோரை அவர் ஒரு பொழு துங் கைவிடார். இராசகுமாரியின் விவாகத்தைக் குறித்து நீ சொல் வதைக் கேட்க என்னுடைய இதயம் ஆனந்தத்தால் நிரம்பி வழிகின்றது. என்னுடைய கண்கள் ஆனந்தபாஷ்பஞ் சொரிகின்றன. நான் இத்தேவ கன்னிகையை மணஞ்செய்து இன்பமாய் வாழக் கடவுள் அனுக்கிர கிப்பாராக. நீ எப்பொழுதும் எனக்கு ஒர் இரண்டாம் மாதாபோல் என்னுடனிருக்க வேண்டும். நற்செயலொருபோதும் நானிலத்தழியாது.
கதை விளக்கம்.
சகலகுணசம்பன்னன் இராஜகுமாரத்தியை விவாகம் பண்ணினா னென்பது தெளிவாய் இவ்விடம் காட்டப்படவேண்டும். ஒரு கிலாசு போய் வணிககுலசூரியருக்கு மகன் வந்ததைப் பற்றியும், பொருளை யழித்துச் சிறைகளை மீட்டதைப் பற்றியும் அறிவிக்க அவர் கோபா வேசங் கொண்டிருத்தல்.
BlữIùEUĩữ =.
இடம் 2: வணிககுலசூரியனின் வீடு
(சகலகுணசம்பன்னன் வருதல்) வணிககுல:
பதம்
பல்லவம்
புத்தியெல்லா மோடிப் போச்சோ - அடாமூடாவுன் புண்ணியமித் துணிவாச்சோ
193

Page 121
சிந்தனைச் சோலை
அருபல்லவம்
எத்தனை பணச் செலவிற் பித்தனே யுனக்கக் கப்பல் சித்தமாய்த் தயார் புரிந்தேன் இத்தனை நஷ்டம் செய்தாயோ? Lانتقا = •
சரணங்கள்
எண்ண வயிறு கொதிக்குதே - மனத்துயரும் ஏக்க மும்மிகக் கதிக்குதே
விண்ணி லிருந்து மண்வந்து
நண்னுமோர் ஆாத னானாலும்
உண்மை யாக வுனைப்போலப்
பண்ணானிப் பயித்ய நன்மை புத்தி.
நன்மை செய்வதிது தானோ? - அடடாடுடா புன்மதி யீதுனக் கேனோ
என்மனம் புழுங்க விந்த
வன்ம மியற்றி னாயுனைக்
கன்மியென்றே கொண்டே லுன்போல் சென்மத்தி லோர்பாவி யுண்டோ? புத்தி.
வீட்டை விட்டு வெளிக்கிடடா - என்கண் முன்னில்லா தோட்ட மெடுத்தோடி விடடா நாட்டி னிலிருந் தாலும்நீ கேட்டுக் கேயதேது வாமுன் பாட்டிலொங் கேயாலும் போவோர்
மாட்டினும் மதியில் லானே. புத்தி,
அடாமுடா நீ என் ஏக புத்திரனாயிருந்ததால் நான் உன்னை எவ்வளவு மதித்தேன். என்ன கவனத்துடன் நான் உன்னை ஓர் அருங் கலை வினோதனாக்கி வைத்தேன். நீ செய்த செய்கை நீ பெற்ற கலை யறிவின் பயனா? உன் சுயபுத்தியும், நீபெற்ற புத்தியும் - இரண்டும் மழுங்கி நீ இப்படிப் பித்தனானாயே. ஐயோ! என் வயிறெரிகின்றதே!
194

சகலதனசம்பன்னன்
பள்ளிக் கணக்கன் புள்ளிக்குதவா னென்ற பழங்கதை போலாயிற்றே உன்பாடு மூன்று இலட்சம் பவுண் செலவிட்டுத் தயார் செய்து தந்த வியாபாரக் கப்பலையும், அதின் நானாவித விலையேறப்பெற்ற வர்த்த கப் பொருட்களையும் ‘குயவனுக்குப் பல நாளையில் வேலை, தடியடி மிண்டனுக்கு ஒரு நிமிஷவேலை யென்ற முதுமொழிப்படி ஒரு கணப் பொழுதிற் சாம்பராக்கினாயே. முடா, முடா, முடா நீ என் கண் முன் நில்லாமல் வீட்டை விட்டோடு. இனிமேல் நீ இந்தப் படலை திறக்கவும் படாது. அடடா! நான் எத்தனையோ பாடுபட்டுத் தேடி வியாபாரத்துக் காய்க் கொடுத்த பொருளை ஒரு நொடியிற் கள்வர் கையிற் கொடுத்து அதற்குப் பதிலாய் அழுது கண்ணிர்விட்டுப் பெருமூச்சு விடுகிற ஆயிரக் கணக்கான பறைச்சிகளையும், ஒரு பொள்ளற் கப்பலையும் பெற்றுக்கொண்டு வந்தாயே. ஆ1 ஆ1 ஆ1 அப்பாலோடு,
சகலகுண:
கண்ணிகள்
அதிநேசத் தந்தாய் அறமோ நீடுழி அழியாது நிலைகொளு மதுவே சுபோதம் துதிசேரு மேழைகள் துக்கத்தைத் தீர்க்கும் தூய செயலது மாய்கையே யல்ல. es. . . .
கதிமேவு மும்பர் களிகூர்ந்து பாடி கண்யஞ்செய் வாரரும் புண்யஞ் செய்வோரை சதியா லிடருறு மேழைகட் கென்றும் தண்ணளி காட்டுத லெண்ணரு மாண்பு. அதி.
என்னருமையான தந்தாய்! நீ என்னை எப்படித் திட்டி ஏசிக் கோபித்தாலும் நான் செய்த அருஞ்செயல் மகாபுண்ணியமான தென் பதும், அதனால் எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் பெரும் நன்மையும் இன்பமும் பெருகுமென்பதும் இரண்டும் மூன்றும் ஐந்து என்பதுபோற் பிரத்தியட்சமாயிருக்கின்றது. மகா கொடிய பாதகரு டைய கொடுஞ் சிறையிலகப்பட்டுக் கூகூவென ஓலமிடும் ஏழை களையிரட்சிப்பதற்காய் மூன்று இலட்சம் பவுணல்ல; எங்களுக் குள்ள கோடி இலட்சம் பவுணையும் கொடுத்தாலும் நஷ்டமல்ல.
195

Page 122
சிந்தனைச் சோலை அது பெரும் லாபமென்பது நிச்சயத்தில் நிச்சயம். அவ்வேழை களின் அகமுக மலர்வும், இதயபூரிப்பும், சந்தோஷமும் அவ்வித நன்மையினால் தேவதூதர்களுக்கும் கடவுளுக்கு முண்டாம் விசேட சந்தோஷமும் இத்தகைத் தெனக் கூறுதலும், இவ்விலையுள்ளன வெனக் கணித்தலும் கூடாத காரியம். அவ்வித நற்செயலால் வரும் இன்பமும், லாபமும் அநேக வர்த்தகக் கப்பல்களினால் சம்பாதிக்கும் திரவியத்தினும் மேலான ஊதியத்தை நிச்சயமாய்க் கொண்டு வரும். “அறத்தால் வருவதே யின்பம் மற்றெல்லாம் புறத்த புகழுமில’ எனத்
தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் கூறியிருக்கின்றார்.
வணிககுல:
அடா போடா முடா முர்க்கனும் முதலையும் கொண்டது விடா”வன்றோ? நீ எனக்குத் தருமமும் அதன் பயனும் இன் னின்னவென்று பிரசங்கிக்க வேண்டாம். “விழுந்தவன் வெட்கத்துக் கஞ்சிச் சிரித்தல் போல்" நீ செய்த மடமையையும் தீமையையும் யுக்தி யையும், நன்மை யென்று காட்டத் துணியவேண்டாம். நீ உன் தலையைக் கொட்டைப் பாக்காக்கினாலும் நீ கொண்டுவந்த அழகிய பெண்ணின் இச்சையினாலே இவ்வித மோசம் செய்தாயென்பது எனக்குக் கரதலா மலகம் போலத் தெளிவாயிருக்கின்றது.
சகலகுண:
ஆ1 ஐயோ ஐயோ! அருமைத் தந்தாய், இந்த அநியாயமான அபத்த வாக்குத் தங்கள் கெளரவத்திற்குக் கொஞ்சமேனுந் தக்க தல்ல. நான் கப்பலையும் அதின் ஆயிரக்கணக்கான சிறைகளையும் வாங்கிய பொழுது அதிருபலாவண்யமுங் குணமாட்சியும் நிறைந்த அந்த இளவரசி அங்கிருந்ததைப் பற்றிக் கனவினு மறியேன். நான் அந்த ஏழைகளுக்கிரங்கி நற்செயலொரு போதும் அழியாது” என நான் பெற்ற சுபோதப் பிரமாணத்தாற் றுாண்டப் பெற்றுச் செய்தே னன்றி, பிறிதொரு காரணத்தினாலன்று. ஆயின் கிருபா சமுத்திரமாகிய எம்பிரான் நான் செய்த நன்மையின் முதற்பலமாய் அந்த இளவ ரசியை எனக்குக் கொடுத்தார். f
வணிககுல:
இளவரசியல்ல, நளவரசியாக்கும்.
196

சகலதனசம்பண்ணன்
சகலகுண:
தந்தாய், நீ எப்படிச் சொன்னாலும் அம்மாது இளவரசியென் பதற்குச் சந்தேகமேயில்லை. அவள் எனக்கு வாய்த்ததும் தெய்வா தினமாய் எனது நற்செயலின் கனியென்பதும் என் திடமான விசு வாசம். நற்செயலொரு போதும் நானிலத் தழியாது?
வணிககுல:
இவனுக்குக் குணபேதமென்பது சத்தியம். அடாமுடா, இனி மேலும் மேலும் உளறாமல் அப்பாலோடு என் படலை இனி மேல் ஒரு பொழுதும் திறக்கப்படாது. என் வாசல் மிதிக்கப் LJLIIS).
சகலகுண:
உமக்கிஷ்டமில்லாவிட்டால் நான் போய்விடுகிறேன். உமது கோபம் ஆறியபின் வருவேன்.
வணிககுல:
என் கோபம் இப்பிறப்பிலாறாது. ஒடடா மூடா அப்பால்.
(பிதாவும் மகனும் போகிறார்கள். மகன் முன்னேகல்)
கதை விளக்கம்
பிதா பின்பு மனமிரங்கி மகனை இரண்டாம் முறை வர்த்தகஞ் செய்ய அனுப்ப, அவன் இரண்டாம் முறை ஒரு நகரையடைந்து அங்கு அத்தேச அரசனால் பிறதேசத்தினின்று அநியாயமாய்க் கைதிகளாக்கப்பட்டுக் கொண்டுவரப்பெற்று அதிக கஷ்டங்களையடைந்து வருந்திய சிறைகளைக்கண்டு மிகவும் பரித பித்துத் தனக்குள்ள தெல்லாவற்றையுங் கொடுத்து அம்மறியற்காரரை மீண்டபின் வீடுசெல்ல, தகப்பன் முன்னிலும் பன்மடங்கு கோபா வேசனாய் அவனை வீட்டினின்று துரத்தியதைப் பற்றிய சம்பாஷணையொன்று சுருக்கமாய் இதில் சேர்க்கவேண்டியது.
97

Page 123
đјgaoамá Gamapo
வணிககுலசூரியரும் ஆசிரியரும்
ஆசிரியர்:
கட்டளைக்கலித்துறை
செல்வமுஞ் சீர்த்தியும் சிங்கார வாழ்வுஞ் செறிந்திலங்கு நல்லருள் சேர்வணிக குலசூரிய நண்பவுன்றன்
வல்லமை சேருஞ் சகல குணசம் பனன்மதியைப் புல்லறி வாளர் மதியெனக் கொள்ளற்க புண்ணியனே.
நன்றெணி னும்நல மன்றெ னினுமவன் நாடிநன்மை யென்று புரிந்த சுகிர்த செயலை யிகழ்ச்சிசெய்யா துன்றன ருட்குணத் தான்மன்னிப் பிந்துன் னுவப்புடனே சென்று வரப்பின் னுமோர்கப் பலியென் சினேகிதனே.
Ujl)
பல்லவம்
இன்னுமோர் தரம்தயவு
ஈந்திடும் புதல்வனுக்கு
அருபல்லவம்
நன்னல மாரவன்செயல்
நல்லதன்றித் தீயதல்ல இன்னு.
சரணங்கள்
முந்தி நலம்செய்தா னன்றி முடனென வெண்ண வேண்டாம்
சிந்தை யிரங்கித் தயவு
செய்யு மும்புதல்வ னுக்கு இன்னு.
புந்தி யில்மிக வலிமை
பூண்ட அவன்செய் தசெயல்
எந்த விதமும் நயமாய் ஈற்றில் வருமிது நிசம் இன்னு.

சகலதனசம்பன்னன் என் ஆருயிர் நண்பனாம் வணிககுலசூரிய நான் என் மாணாக்கனென்பதன் நிமிர்த்தம் புகழ்ந்து பேசுகின்றேனென்று எண்ணாதிர். தங்கள் குமாரன் சகலகுணசம்பன்னன் புரிந்த செயல் மிக்க மேலானதும், மகா புண்ணியமானதுமாயதொன்று. ஒரு போழ்து தாங்கள் நான் பேசுவது சரியன்றெனக் கொள்ளவுங் கூடும். ஆயினும் நன்மைக்கு ஒருபோதும் அழிவின்று என்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை. ஆதலின் தங்கள் மகன் செய்த செயல் மகா மதியீனமாமெனத் தாங்களெண்ணினும் அவனைத் தயைகூர்ந்து மன்னித்தருளி அவன் திரும்பவும் மூன்றாம் முறை வர்த்தகம் செய்யப் போவதற்காய் ஒரு நல்ல கப்பல் தயார் செய்து கொடுத்தல் வேண்டுமென்று நான் தங்களைப் பிரார்த் திக்கின்றேன். வணிககுல:
நல்ல கதை பேசினிரே ஆசிரியரே, முதலாம்முறை மூன்று லட்சம் பவுணுக்குமேல் செலவு செய்து நான் தயார் செய்து கொடுத்த கப்பலையும் அதிலுள்ள விலையேறப்பெற்ற சாமான் களையும் கள்ளத் துருக்கர் கையில்விட்டுச் சிறைகளை மீட்டான். அச்சிறைகளில் ஒருத்தியை இராசகுமாரத்தியென மனோபாவனை பண்ணிப் பின் அவளைக் கலியாணஞ் செய்தான். நான் மிக்க கோபாவேசனாய் அவனை வீட்டினின்றுந் துரத்தினேனாயினும் பின்னிரங்கிப் பிறிதோர் கப்பல், பெருந்தொகைப் பணஞ் செல விட்டுத் தயார் செய்து கொடுத்தேன். அதையும், அதின் சாமான் கள் யாவையும் விற்றுச் சில மறியற்காரரை மறியலினின்றும் விடு வித்தான். இவ்வகையாய் இவன் மென்மேலுங் காட்டும் மூடத்து வத்திற்கு என் கண்ணை முடலாமா? முதேவியார் போன இடம் முதலிலும் நஷ்டம்" என்றது போலன்றே இவன் பாடிருக்கின்றது? இப்பொழுதும் அவன் செய்த பெருங் குற்றத்திற்காக என் கண் காணாதும், எனக்கு முன்வராதும் மறைந்து திரிகின்றான். இவ னன்றோ மதியூகி இவனன்றோ அனுபோகி இவனன்றோ நிருவாகி இவனுக்கு இன்னுந் தயைகாட்ட வேண்டுமென்று தாங்கள் என்னைக்கேட்பது எனக்குப் பெரும் ஆச்சரியத்தை விளைக்கின்றதே.
பதம்
பல்லவம்
என்னவித மவனுக் கின்னுந் தயைநான் செய்வேன்.
199

Page 124
சிந்தனைச் சோலை
அருபல்லவம்
முன்னி ரண்டுமுறை முடனென வேதனை முழுதுங் காட்டியே பழுது செய்தவன் என்ன.
சரணங்கள்
எத்தனை லட்சம்பவுண் இத்தனை சீக்கிரமாய் ஏதும் பயனின்றிச் சேதம் செய்தவன் என்ன.
நன்மைசெய் கிறேனென்று என்னைக் கருவறுக்க நாளுந் துணிகுவன் கேளுங் குருவே என்ன.
ஆசிரியர்:
கேளும் வணிகர் சிரோமணி, அவன் இரண்டாம் முறையும் பெருந்தவறிழைத்தான், ஆதலின் அவன் தங்கள் தயைக்கு அருக னல்லனென அவனில் மிக்க குற்றமேற்றிப் பேசுகின்றீர். ஆயின் என்சிற்றறிவிற் கெட்டியவாறு நான் யோசிக்குமிடத்து அவன் செய்த செயல் மகா மேன்மையானதென்பதும், அஃது எவ்வகை வர்த்தகத் தினும் மிக்க பயனைத் தரத்தக்கதென்பதும், அவன் செய்த நற் செயல்கட்கு ஒரு போதும் அழிவில்லையென்பதும் என் சித்தாந்தம். நற்செயல் ஒரு போதும் அழியாது. அன்றியும் சென்ற இரண்டு முறையினும் அவன் தங்கள் அபிப்பிராயப்படி வினேயழித்த எட்டு லட்சம் பவுனும் தங்கள் கடல்போலும் நிதியின் எத்தனையிலொரு பாகமாகும்? அது மகாபெரிய பர்வதமாய் இமயமலையினின்றும் தெறித்துப் பறக்கும் 62([სნ சிற்றுருளைக் கற்போலாமன்றோ? இதற்கா இத்தனை பேச்சு? இதற்கா இத்தனையேச்சு? இதற்கா இத்தனை பெருமூச்சு? நன்று! நன்று! இனி யான் கெடுத்த கேடென் றெண்ணியாயினும் அவனுக்கு இன்னும் ஒருமுறை தயை செய்யுங்கள். ஒருபோது அவன் முன் இருமுறைகளிலும் இயற்றிய நன்மைக்குத்தக்க பிரதிபலன் அடைதல்கூடும். நற்செயல் ஒரு போதும் அழியாது.
வணிககுல:
பதம்
பல்லவம்
ஆசிர்யா உமதாவன் மொழிப்படியே - நான்
அருள்செய் குவனொரு முறையின்னும்.
200

சகருைனசம்பன்னன்
அருபல்லவம்
நேசமிகு மெந்தன் புத்ர சிகாமணி நிதிபெற் றிடவொரு கலமது நிலைபெற உதவுவன திகுண
Safrunt...
சரணங்கள்
என்ன நஷ்டமினி வந்தாலு முந்தலைமீது - பாரம் ஏற்று வனென்றனக் கேகவலை யினியேது முன்ன மிருமுறை போனது போகட்டும் முதல்வா நலமிகு மதிமொழி குவையவனு றவறிவினி Sefirum...
கோடி திரவிய முண்டெனினுங் கொஞ்சநஷ்டம் - தானும் கூறவோர் நீதியில்லா மற்படுதல் மாகஷ்டம் நாடிப் பணமிகத் தேடுநற் சூத்திரம் நன்றா யவனறியும் வரைநலி வுறுமென தகநிதம். ஆசிர்யா.
ஜயா ஆசிரியரே, தாங்கள் பரிந்து கேட்கும்படி நான் இன்னுமோர் முறை என் புத்திரனுக்குத் தயைகாட்டச் சித்தங் கொண்டேன். இனிவரும் நஷ்டத்திற்கெல்லாம் நீரே உத்தரவாதி. நான் அகோராத்திரம் கடும் பிரயாசையாய்த் தேடிய கோடி திரவி யத்தில் ஓர் இம்மியாவது யாதொரு காரணமின்றியழிதல் எவ்வளவு மனக்கிலேசத்தை எனக்குண்டாக்கும்? தாங்கள் அவனுக்கு நற் புத்தி புகட்டி இனியாவது அவன் பணமீட்டும் வழியிற் கவனமா யிருக்கும் படி செய்வீர்களென மிக்க ஆவலாய்க் காத்திருக்கின் றேன். அம்மட்டும் எனக்கு மனம் ஆறாது. இனி அவனுக்கென்று ஒரு கப்பல் தயார் செய்யக் காலம் போகுமாதலால் என்னுடைய முதற்றரமான வியாபாரக் கப்பல்களு ளொன்றையே பல்வேறு வகைப்பட்ட விலையேறப்பெற்ற பொருள்களால் நிறைத்து முன்னிரு முறையினும் பன்மடங்கு காத்திரமான ஒழுங்குகள் செய்து அனுப்புவேன். எங்கள் குடும்ப நன்மையில் தாம் இவ்வளவு சிரத்தை யெடுத்ததை நினைந்து தங்களுக்கு மிகவும் துதி கூறுகிறேன்.
201

Page 125
சிந்தனைச் சோலை ஆசிரியர்:
தங்கள் பெருந்தன்மையையும், கிர்பையையும் நான் மிகவும் மெச்சுகின்றேன். என் வாக்கைத் தாங்கள் தங்கள் இதயத்திலென்றும் பதித்து அது மெய்யாய் வருமோ, அன்றோவெனக் கவனித்துப் பார்க்கலாம். நற்செயல் ஒருபோதும் அழியாது. சந்திர சூரியரும் இப்பிரபஞ்சம் முழுவதும் நிலைகுலைந்தழிந் தொழியினும் நாம் செய்யும் நன்மையோ ஒருபோதும் அழியாது. ‘ஏழைக் கிரங்குபவன் ஈசனுக்குக் கடன் கொடுக்கிறான்” என வேதம் புகல்கின்றதே. தங்கள் புத்திரன் மிக்க யுத்தி விவேகம் வாய்ந்தவன். நன்மை செய்த லையே கடைப்பிடியாய்க் கொண்ட சகலகுணசம்பன்னன். சகல குணசம்பன்னன் என்ற நாமம் அவனுக்குப் பொருந்துதல்போல் வேறு யாருக்கும் நாமப் பொருத்தம் இருத்தலை யானறிந்திலேன். அவன் செய்த நற்செயல்களுக்குத் தகுந்த பெரும்பிரதிபலனை ஈசன் அவனுக்கு நிச்சயமாய் அளிப்பார். தாங்கள் யாதொன்றுக்கும் அஞ்சவேண்டாம். அவனைச் சந்தோஷமாய் அனுப்பிவையுங்கள். நமஸ்காரம்; போய் வருகிறேன்.
வணிககுல:
நமஸ்காரம், போய்வாருங்கள், குரவர் பெருமானே. (சகலகுணசம்பண்ணன் பயணமாய்ப் போகுதல்)
கப்பற் பாட்டு
இடைநேரம் கதைவிளக்கம்
Glastido 2
இடம்3:வியசிங்க மகாராஜனின் அரமனை
சொல்லும் மகாராஜனே.
202

சகலருனசம்பன்னன்
விஜய:
என்ன ஆச்சர்யம் இவ்வேளை ஏதோ பீரங்கி என்றன் றுறையிலிருந் ததிருது ஏது காரணம் மன்னர் யாருமென்னைக் காண வருகிறோ மென்று மறுமொழி யனுப்பி லரிதுவென்ன மாய மறியேன் பகையரசர் ஒருபோது படையெடுத் தாரோ பார்த்து வந்ததையெனக்கிச் சணமே பகருவாய் மந்த்ரீ
சடுதியாய் என் துறைமுகத்திலிருந்து ஏதோ பீரங்கி கேட் குது. என்னைச் சந்திக்கும்படி யாதோர் அரசரும் இவ்வேளை வர நான் காத்திராதபடியால் எனக்கு அப்பீரங்கிச் சத்தம் பேராச் சரியத்தை விளைவிக்கின்றது. ஒரு போது பகையரசர் நம்மைச் சருவும் பொருட்டுத் துறைமுகத்தில் வந்து நிற்கலாம். தயவுசெய்து இதைப் பற்றிப் பூரணவாராய்ச்சி செய்து வந்து எனக்கு மறுமொழி சொல்லும் எனதன்புக்குரிய மந்திரி
மந்திரி:
அப்படியே செய்கிறேன் ராஜேந்ந்ரா. (மந்திரி சென்ற வந்து மறமொழி சொல்லல்)
கட்டளைக்கலித்துறை
பூதலம் போற்றிடு பொற்பார் விஜய புரியரசே யாதும் பயமின்று பாக்ய புரியின் யவனமுறு
நீத மிகுஞ்ச கலகுன சம்பன டுைபுகழ் ஒது வணிகனன் வர்த்தக நோக்கியிங் குற்றனனே.
பதம்
பல்லவம்
யோசனை வேண்டாம் - அரசே
யோசனை வேண்டாம்.
203

Page 126
சிந்தனைச் சோலை
அருயலலவம்
பூசனை Sasarraf EDIT6LDITQ புண்ய வர்த்தகன் நண்ணினா னிங்கு (Sureferbeo.
சரணங்கள்
சகலகுண சம்பன னெனுமொரு
தயைநிறை வணிக குலன்
புகலரு நிதிமிகவு முள்ளவோர் புண்ய வானிங்கு நண்ணி னானிதோ யோசனை.
ராஜராஜர்கள் போற்றியடிபணியும் மகாராஜனே, தாங்கள் ஒன்றுக்கும் யோசனை பண்ணவேண்டாம். சகலகுணசம்பன்னனெனப் பெயரிய ஒரு பாரிய வர்த்தகன் வியாபாரஞ் செய்யும் நோக்க மாய் ஈங்கு வந்திருக்கின்றான். அவன் தன் கப்பலில்வந்து எங்கள் துறைமுகத்தைச் சேர்ந்தவுடன் எங்கள் தேசத்திற்கு வந்தனம் செய்யும் பொருட்டுக் குண்டு போட்டானேயன்றி வேறொன்று மில்லை. ジス
விஜய:
தற்காலத்தின் சேனைகளுளெல்லாம் பெலங்கொண்ட சேனா சமுத்திரங்களையுடைய யான் என்ன கப்பல் வந்தாலும் அஞ்சேன். ஆயின் அங்கு கேட்ட சடுதியான பீரங்கித் தொனியின் காரணத்தை யறியும்படியே நான் உம்மை யங்கனுப்பினேன். அவ்வர்த்தகனின் விர்த்தாந்தத்தை அறிந்து வந்தீரா? நீர் கப்பலுட் பிரவேசித்து அதைச் சோதனை பண்ணினிரா?
மந்திரி:
அவ்வர்த்தகன் இந்தியாவின் மற்றப் பக்கத்திலே எங்கள் தேசத்தினின்றும் பன்னூறு மைல் தூரத்திற்கப்பாலுள்ள பாக்கிய புரம் என்னும் பட்டணத்தேயுள்ள வணிககுலசூரியன் என்னும் பெரிய வர்த்தகனின் ஏகபுத்திரன். அவன் நாமம் சகலகுனசம்பன்னன். அவன் வந்திருக்குங் கப்பல் மிக்க விசித்திராலங்காரமாய் அமைக் கப் பெற்றது. அத்தகைய அலங்காரமான கப்பலை நான் என் சீவி யத்திற் காணவில்லை.
204

சகதைசைம்பன்னன்
அக்கப்பலில் ஐந்து இலட்சம் பவுண் பெறுமதியான நானாவித மான விலையேறப் பெற்ற பொருட்களை வியாபார நோக்கமாயீங்கு கொணர்ந்திருக்கின்றான் என்று கேள்விப்பட்டேன். நான் கப்பலுட் பிர வேசிக்கவில்லை. கப்பலின் தண்டையலைக் கரைக்கு வரவழைத்து, காரியங்களெல்லாவற்றையும் வினாவியறிந்த பின் என் காவலாட் களுளொருவனை ஆங்கு அனுப்பிக் கேள்விப்பட்டவைகள் யாவும் உண்மையென அறிந்தேன்.
விஜய:
விருத்தங்கள்
இகலர் நெஞ்சமது மிகுபயங் கொளுநல்லி ரதமாக ஜபதாதியென் றிகமிசைப் பெருகு சேனையின் வலிமை யென்றுமுள்ள வெனதரணகர் புகவியார் துணிவர் பொருது குண்டதிரு புதினமென்ன வெனவறியவே அகநினைந் துணைஅனுப்பி னேன்வணிக னவனை நீயறிவை மந்திரீ.
சொன்னமா தகைமை சூடுநற்புகழ் துலங்குமோர் வணிக னவனெனில் முன்னமே யவனையுற்றி மாநகர முழுதொடும் பெரிய வர்த்தகம் சொன்னமே பெருக வீங்குநாம் தகைதுவக்கு வோமெனிலஃ தெம்நகர்க் கென்னமா பெரியநன்மை நாளையவ னேகுவே னெனவி யம்புவாய்.
அகோ மந்திரி, நீர் சொல்லும் அளவான சீரும் செல்வமும் வாய்ந்த ஒரு வணிகன் எங்கள் தேசத்திற்கு வந்து எங்களுக்கு வணக்கமாய்க் குண்டு போடவும் மிக்க விசித்திராலங்காரம் பொருந் திய வர்த்தகப் பொருள்களைப் பெருந்தொகையாய் மிக்க சித்திர மாயமைக்கப் பெற்ற ஒரு கப்பலிற் கொண்டுவந்து எங்கள் தேசத் துடன் வர்த்தகம் தொடங்கத்தக்க ஸ்திதியில் நம்மைக் காணவும் நாம் என்ன தவஞ்செய்தோம். நமது தேசப்பொருள்களை அவன் ஏற்றுமதி செய்வதினால் நமக்குப் பெரும் நன்மை விளையுமே யன்றோ? ஆதலின் நாம் அவ்வணிக சிரோமணியை மிகக் கண்ணி யப் படுத்தல் வேண்டும். நீர் இதோ அக்கப்பலுக்குப் போய் அவ்வர்த்தகனைச் சந்தித்து அவனுடன் கலந்து பேசி, நான் நாளைக் காலையிலே பத்து மணிக்கு அக்கப்பலைத் தரிசிக் கும்படி போகவிருப்பதாய் அறிவித்து வாரும்.
20S

Page 127
đоapa Gamamo
பதம்
பல்லவம்
போய் வணிகனவனை யறிநியே
அருபல்லவம்
அறிகுவை நீயே அதிவிரை வாயே போய்.
சரணங்கள்
இத்தனை செல்வ வெழிலுங் காட்சி மெத்திய வணிகன் வந்ததோர் மாட்சி போய்.
நாளை முன்னாடி நான்செல்வந் தேடி வேளை யிதோடி விடமுன் கொண்டாடி போய்.
வியாபார நேயம் விளங்க வித்தேயம் செயினல் லுபாயம் திகழு மாதாயம் போய்.
மந்திரி
அப்படியே செய்வோம், மகராஜ்.
விருத்தம்
துங்கம் எங்கொங்கு நிறைந்திடு சிங்கம் போலிங் கரசாளரு மெங்கள் கோனே விஜயாபுரி தாங்குஞ் சிங்காரவு தாரனே
பங்கமொன் றின்றியுடன் றுறையங்கு சென்றே வணிகன்றனை சங்கம் சேருங் கனிவாய் மிகவுங் கம்பீரங் கொடுகாண்பனே.
தங்கள் ஆஞ்ஞையின் பிரகாரம் கப்பலை நாடி வணிகனைத் தேடி, கொண்டாடி வருகின்றேன் மகாராஜனே.
lČfůSundi) 2
இடம் 4: துறைமுகத்தில் சகலகுணசம்பன்னன் கப்பல்.
(மந்திரி வணிகனைச் சந்தித்தல்)
206

சகலதனசம்பண்ணன்
மந்திரி
LITT(b இராகம்.இங்கிலிஷ்
வந்தனம் வந்தனம் வந்தனம் தந்தேன் மாண்புசேர் வணிக மன்னவா வந்தனம் சிந்தை மகிழ்ந்துமைத் தேடியிங்கு கான தேசுறும் மகராஜ னிங்குசேர்வர் நாளைக்காலை.
சலாம் வணிக சிரோமணி இத்தகைய சிங்காரமான வர்த்த கக் கப்பலை நான் ஒருபோதுங் கண்டதில்லை. இக்கப்பலையும் இதன் சகல முஸ்திப்புக்களையும் நான் உற்று நோக்குமிடத்து இது ஒரு மிகப் பாரிய வர்த்தகக் கப்பலென்று காண்கிறேன். நீர் வந்து சேர்ந்தவுடன் போட்ட பீரங்கியைக் குறித்து எங்களரசன் சற்றே ஐயுற்று என்னைத் துறைமுகத்துக்கனுப்பிச் சகலமும் விசாரித்து அறிந்தபின் மிக்க திருப்திப்பட்டிருக்கின்றான். நாளைக் காலை பத்து மணிபோல் உமது கப்பலைச் சந்திக்க வருவதாக உமக்கறிவிக்கும்படி நானிங்கனுப்பப்பட்டேன்.
சகலகுண:
கட்டளைக்கலித்துறை
மன்னரெல் லாரும் வணங்கிப் பணிய மகிழ்ந்தரசு இன்னகர் தன்னி லியற்றும் விஜயசிங் கேந்திரனாம்
கன்ன நிகர்குண மன்ன னெனையிங்கு காணவர என்ன தவம்புரிந் தேன்பர மானந்த மெய்தினனே.
பதம்
பல்லவம்
ஆனந்த சந்தோஷம் - மன்னனிங் கடைகுதல் சந்தோஷம் - சந்தோஷம்.
207

Page 128
dfisodrá datoso
அருபல்லவம்
ஞானந்திகழு மரசனெனைக் கான
நானுளனோ காத்ரம் - அபாத்ரம் எம்மாத்ரம் மிகுதோத்ரம் esofia...
அப்படியா? சந்தோஷம் சந்தோஷம் நீர் இங்கு வந்ததைக் குறித்து மிகவும் மனமகிழ்கின்றேன். அரசன் நாளைக்கீங்கு வரு வது, சொல்லமுடியாத மகிழ்ச்சியையும் பெருங்கண்ணியத்தையும் கொடுக்கும். உங்கள் தயவை நினைந்து நான் மனதார நன்றி கூறுவதாயும், அரசனுக்கு வணக்கஞ் செய்து வந்தனம் சொல் வதாயும் அவருக்கறிவித்தால் கடமைப்பட்டிருப்பேன்.
மந்திரி
நான் கப்பலைச் சுற்றிப் பார்வையிட விரும்புகின்றேன்.
சகலகுண:
ஆகா தடையில்லை. வாரும் எல்லாம் பார்ப்போம்.
(மந்திரி எல்லாம் பார்த்து வருகையில் முன்னணியத்திலும், பின்னணியத்திலுமுள்ள இரு படங்களையுங் கண்டு பிரமித்து நிற்றல். சற்று நேரம் மெளனமாய் நின்று பின்.)
மந்திரி:
ஐயா, வணிகர்சிரோமணி உமது கப்பலின் மாட்சிமையையும், அதில் நீர் நிறைத்திருக்கும் விலையேறப் பெற்ற பல்வகைப் பொருள்களையும் கண்டு மிகவும் ஆச்சரிய வசத்தனானேன். இக்கப்பலின் முன்னணியத்தில் ஓர் இளம் மாதின் படமும் பின் னணியத்தில் ஓர் ஸ்திரீயின் படமும் இருக்கின்றனவே. இவை யாரின் படங்கள்?
சகலகுண:
முன்னணியத்திலிருக்கும் படம் எனது அருமை நாயகியின் படம். பின்னணியத்திலிருக்கும் படம் எனது மனைவியின் வேலைக் காரியின் படம். நான் தூரதேசத்திற்குப் பயணமாய் வந்திருக் கின்றமையால் அவர்களை விட்டுப் பிரிவது எனக்கு மிகவும்
208

சகலதனசம்பண்ணன்
விசனத்தைக் கொடுத்தது. ஆதலின் அவர்களை நாடோறும் ஒருவாறு காணுவதுபோல் இப்படங்களைப் பார்த்து மனமாறுதல் கொள்ளலாமென்றே அவைகளைச் சித்திரிப்பித்தேன்.
மந்திரி
நல்லது. நான் போய் வருகிறேன். அரசன் நாளைக் காலை ஈங்கு வருவார்.
சகலகுண:
நமஸ்காரம். போய்வாரும்.
fiങ്ങ് இடம்5. மந்திரி அரண்மனைக்குத் திரும்பும் வழியில்
மந்திரி (தனிமையாய்)
பதம்
பல்லவம்
சித்திர மிவனுக்கிங் கேதோ திகைக்குதே யென்னெஞ்சம் ஏங்கி - யிந்தச் சித்திர மிவனுக்கிங் கேதோ
அநுபல்லவம்
மித்திரை யென்னநான் மெச்சிய ராஜ மேனகை யிவன்கையுற் றாளோ - இந்தச் சித்திர.
சரணங்கள்
ஒன்றெனி லோர்போத தன்றென வெண்ணலாம் உற்ற ரத்னாம் பாளுங் கானும் - திரு சித்திர.
எனக்குக் கிட்டாப் பொருளிவனுக்குக் கிட்ட என்ன புண்ணியம் செய்தான் அம்மா - இந்தச் சித்திர.
ஆயின் சித்திரங்களைப் பற்றி இப்போதொரு கலகமும்
செய்யாமல் விடுவதுதான் புத்தி அரசனுக்கும் ஒன்றும் அதைப் 209

Page 129
đìịg56)ääở đỡrt{D60
பற்றிச் சொல்லலாகாது. கலகப்பட்டால் வணிகன் சமுசயங் கொண்டு தன்னுருக் கோடிப்போய்விட்டால் என் செய்வது? எல்லாம் புத்தியாய், மவுனமாய் நடத்துதல்தான் என்போலும் சதுருபாயம் சிறந்தவோர் மதி மந்திரிக் கழகு.
lifui Gunčñ: 22
இடம் 5 விஜயசிங்க மகாராஜனின் அரண்மனை
விஜய:
வாரும் எனதன்பு நிறைந்த மந்திரி, நீர் போய் வந்த காரியத்தைச் சொல்லும், கப்பல் எப்படி? வர்த்தகன் எப்படி?
மந்திரி
கப்பலின் அழகும், அதின் பொருள்களின் விதங்களும் தன்மையும் நான் முன் கேள்விப்பட்டதினும் ஆயிரம் மடங்கு விசேடம். அரசனே, நீர் நாளைக்குப் போகவிருக்கும் செய்தி கேட்டு அவ்வணிகன் மிக்க குதுகலங் கொண்டிருக்கின்றான்.
விஜய:
அவ்வணிகனின் குணாதிசயங்களெப்படி?
மந்திரி;
அக்கேள்விக்கு நான் எப்படி விடைசொல்லக் கூடும். அவனுடைய குணத்தை உடனே எப்படிக் கண்டு பிடிக்கலாம்.
6egul:
நல்லது மந்திரி நீர் போய் வந்தது எனக்கு மிகவுந் திருப்தி
நாளைக்கு நான் அங்கு செல்வேன்.
210

சகலதனசம்பன்னன்
Öffenfò
இடம்6:துறைமுகத்தில் சகலகுணசம்பன்னனின் கப்பல்
(அரசன் வணிகனைச் சந்தித்தல்)
சகலகுண:
ராஜா திராஜாதிபா வந்தனம் ரஞ்சித மொடுங்கஞ்ச மாமலர் அஞ்சலி செய்தேன் ரவியில கும்புவிதனை யாள்ராஜ இந்திரா ராஜர் கள்பதம் பூஜனை செயும்நீத சுந்தரா
தேசா திகார மென்றும் நீள்பவா சித்தியாய் விஜய புரிதனை நித்தம் ஆள்பவா திருநிறையும் ரதகஜ பரிசேனை சூழ்பவா தேசுறு மொயில்வா சமுறுமித் தேச மாள்பவா.
ஓசை மிகுமிக் கடன் மீதிலே உமதரு னிறைதரி சனமதி லகமகிழ் கொண்டேன் உரைசெய நீர்பர பரவென் றோடி யும்கழல் உற்றிடு வனிங்கெற் கிம்மகிமை சற்றுந் தகாதே.
மகாராஜ், நமஸ்காரம். ஐம்பத்தாறு தேசமன்னர்க்கு மன்ன னாயும், இப்பெரிய தேசத்தின் ராஜனாயும் விளங்குகின்ற ராஜ மாத்தாண்ட, ராஜஉத்துங்க, ராஜகெம்பீர், பராக்கிரம சிங்கமாகிய தாங்கள் ஏழையாகிய அடியேனை ஒருபொருட்டாயெண்ணி இக் கப்பலுக் கெழுந்தருளியதைக் குறித்து நான் தங்களை வணங் கித் துதித்து நன்றி கூறி ஆனந்திக்கின்றேன்.
6egul:
வணிகர் சிரோமணி, நான் உனது விசித்ராலங்காரமான கப்பலையும் அதில் விலையேறப் பெற்ற பொருள்களையும் நீர் ஈங்கு வந்த நோக்கத்தையும் என் மந்திரிமுலங் கேள்வியுற்று மிகவும் சந்தோஷமாய் Զւմ560ւDսրճ 2-tpgil கப்பலையும் சந்திக்கும் பொருட்டு ஈங்கு வந்தேன்.
21

Page 130
điоapad Garapao
சகலகுண:
ராஜசேகரா, என்னைச் சந்திக்கத் தாங்கள் விரும்பினால்
தங்கள் திருவடி நோக ஈங்கு வர வேண்டுமா? ஒரு சொல்லு எனக் கனுப்ப நான் தங்கள் பாதார விந்தத்தில் வந்து விழமாட்டேனா?
6afegul:
அது எனக்கு அழகாயிராது. அன்றியும் உம்மை மாத்திரம் அழைக்கலாமேயன்றி உமது கப்பலையும் அதின் சாமான்களையும் அழைக்கவியலுமா? நான் இங்கு வந்ததே அழகும் யுக்தமும் என்பது தெளிவு. இப்பொழுது நான் உமது கப்பலையும் அதின் சாமான் களையும் பார்வையிடுவேன்.
சகலகுண:
சந்தோஷம். சந்தோஷம்.
(அரசன் கப்பலைப் பார்வையிட்டு வரும் பொழுது படங்களைக் கண்டு பிரமித்துப் பின்வருமாறு பாடி விசனித்தல்.)
விஜய:
பதம்
பல்லவம்
ஆச்சரியம் என்ன ஆச்சரி யம்பெரும்
ஆச்சரியம். இது பார், பார், பார். ஆச்சரியம் இது பார்.
அருபல்லவம்
ஆச்சரியம் என்றன் புத்திரி சித்திரம் அச்சொட் டாயிங்ங்ன மைந்ததென் நூதனம்
பார் - பார் - ஆச்சரிய மிது பார். eša.
212

சகலதனசம்பண்ணன்
சரணங்கள்
புத்திரி சாயல் மாபூரண மாகவே மெத்த இலங்குதுபார்
பார் - பார் - மெத்த இலங்குது பார் சித்தி யாகவிதை வித்தை யோடிங்கு செய்வித்த நற்காட்சி என்றன் குமாரி யெழில்பெறு சாயலிங் கொன்றும் வகையிதோ சென்றவென் புத்திரி சேர்ந்தன ளோஇவர் நன்றெனப் போற்றிடும் நன்மனை யாக - பார் - பார் elief...
ஆகா! இப்படம் யாருடையது இப்படம் காட்டும் உருவம் காணாமற்போன எனது கண்மணியினும் அருமையான இராஜ குமாரத்தியின் உருவத்தைப் போல் இருக்கின்றதே! என் குமா ரத்தியின் முகப்படம் ஒருவேளை சற்றுப் பிசகினாலும் இப்படமோ சரியாய் அவளுடைய உயிருள்ள சாயலாயிருக்கின்றதே. என்னரு மைக் குமாரத்தியென் கண் முன்னிற்பது போலிருக்கின்றதே, இப்படத்தின் சாயல் இது என்ன அற்புதமம்மா இப்படம் இங்கு சித்தரிக்கப் பெற்ற காரண மென்னையோ? இது என் குமாரத்தி போன்றிருக்குந் தன்மை ஏதோ? அகோ, வணிகச் சிரோமணி, இப்படத்தின் வரலாற்றை எனக்குச் சற்றே தயை கூர்ந்து சொல்லும்.
சகலகுண:
அரசரேறே, தங்கள் மனம் இப்படத்தினால் அதிசயமும் எழுச்சியும் கொள்வதுபோல் எனது மனம் தங்கள் அதிசயத்தையும் எழுச்சியையுங் காண மிகவும் அதிசயமும் எழுச்சியுங் கொள் கின்றது. இப்படம் எனது பிராண நாயகியின் சரியான சாயல்.
6eg:
என்ன பிராண நாயகியா? இம்மாது சீரோமணி உமது இனத்திற் பெண்ணா? இவளை நீர் மணம்செய்த விருத்தாந்தத்தைச் சன்றே சொல்லும், தயவாய்.
சகலகுண:
நான் இம்மாது சிரோமணியை விகாகஞ்செய்த விருத்தாந்தம் ஏறக்குறைய என் சீவியத்தின் முழு விருத்தாந்தமுமாயிருப்பதால், நான் இப்பொழுது என் முழு விருத்தாந்தத்தையும் சொல்லுவேன். அது தங்களுக்கு மிக்க திருப்தியாாயிருக்குமென நினைக்கின்றேன்.
213

Page 131
álfisaðað GameDo விஜய:
ஆகா! அதுதான் மிகத் திருப்தி முழுவதையும் சொல்வது மிகவும் தகுதி. அதைக் கேட்க நான் மிகவும் ஆத்திரமாயிருக் கின்றேன். இனித் தாமதிக்க வேண்டாம். தயவாய்ச் சொல்லும், வணிகர் சிரோரத்தினமே.
சகலகுண:
sofurir விவிதமாட் சிகனிறை விஜய மாநகர்க் கவினுறு ராச்சியக் காவலா கேளாய் சத்திய மாயென் தகைமிகு சரித்திரம் துத்தியத் துடனே சொல்லுவன் மகிபா பாக்கிய புரியாம் பதியுறை வர்த்தக யோக்கிய நிறையும் யூகனாம் வணிக குலசூ ரியன்அதன் கூறுமென் நாமம் குலவிடும் சகல குணசம் பனனென மொழிகுவ ரிளமையில் முறையுடன் கற்ற எழிலுறு சுபோத மிசையும்ப் ரமாணம் நன்மையோர் போதும் நானிலத் தழியா தென்மதி தன்னை யியம்ப வாசிரியர் அத்தையென் சீவியத் தமைபிர மாணம் நித்த மென்றிதய நிறுவிய பின்னர் அரிய வென்றந்தை யருளிய கப்பலில் உரியல் பொருளோ டொண்கடல் கடந்து இஷ்டமாய் வர்த்தக மியற்றவே செல்ல துஷ்டனம் பாதகத் துருக்கணி னடிமைக் கப்பலா மொன்றினைக் கண்டாங் குறைந்திடும் செப்பருந் துன்பச் சிறைகளி லுருகி எப்படி யோவவ ரிடர்தனை நீக்கத் தெப்பமும் பொருளும் தியாகமாய்க் கொடுத்து மீட்டிடும் போது மிகுமலங் கிருதம் காட்டிய வரச கன்னிகை யொருத்தி தாதி யோடாங்கு தங்கிடக் கண்டு ஓதிடு மவரில் உளமிகக் கசிந்தேன்
24

சகலதனசம்பண்ணன்
பேரொடு தேசம் பெற்றவ ராரெனச் சீரொடென் றனக்குச் செப்பில ராகி என்னுட னென்று மிருந்திட விதயத் துன்னினர் நானு முவகையோ டரச கன்னியை மணந்து கடிமனைக் கேக என்னருந் தந்தை யெனைமிகக் கடிந்தும் சிந்தை கசிந்து திரும்பவு மென்னை முந்திய முறைபோல் மொழிந்திடு வர்த்தகம் செய்திட வனுப்பத் திகழுமோர் நகருக் கெய்தியே சின்னா ளிருந்திடு காலை வீதியி லுலாத்தும் வேளையி லோர்நாள் ஏழைக ளாகு மெளியகை திகள்பலர் நீடிய மறியலில் நியாய மொன்றின்றி வாடியே யாங்கு வைத்திடு மோலங் கேட்டுள முருகிக் கிளருமென் முழுப்பொருள் போட்டவர் விடுதலை பொருந்திடச் செய்தேன் தந்தைமுன் னினுமா சஞ்சலங் கொண்டுநிற் பந்தத்தி லென்னைப் படுத்தியே வீட்டால் துரத்தியும் பின்னரென் சுகுண வாசிரியர் சிரத்தையாற் றயவு செய்ததி விசித்ரம் சேருமிக் கப்பலும் திகழ்ந்திடு பொருளும் ஆருநன் னிதியு மருளிமுன் றாம்முறை பாங்குட னனுப்பப் பயண காலத்தில் மாங்குயில் நேருமென் மனைவியும் தாதியும் என்றுமென் முன்னே யிருப்பது போல நன்றென வவர்படம் நாட்டியிங் கமைத்தேன் தற்செய லாகச் சார்ந்திவ ணடைந்தேன் நற்செய லின்கனி நாதவி தரசே உச்சித குணநிறை யுன்னத மன்னா மெச்சிடு மென்றன் விருத்தாந்த மீதே.
215

Page 132
சிந்தனைச் சோலை
6afegul :-
பதம்
பல்லவம்
வாரும் வாருமென் னாசை மருமகனே - என்றன் மங்கள குமாரத்தியை மன்றல் மகிழ்ந்திரே.
அருபல்லவம்
சீரும் பிரபலமும் சேரும் விஜயநகள் - ரி, ரீ, ரீ, ரீ, ரீ சேர்ந்திரே சமுக மீந்திரே ககுன வாரும்.
சரனங்கள்
என்னரு நவமணி தன்னையிரட் சைசெய்த ஈசா தயைவா சாவணி கேந்திர னெனும்புகழ் சேர்ந்திலங் கிடுமொரு போசா மிகுநேசா பன்னரும் ஜெயமிகும் பாக்ய வுதாரா - ரி, ரீ, ரீ, ரீ, ரீ பகருநற் செயலில் நிகரில்நல் வீரா வாரும்.
ஆனந்தத் தாலென்ற னிதயம் நிரம்பி வழிகிறதே என்றன் ஆசைக் குமாரத்தியைக் காணுமின் பங்கண் பொழிகிறதே பொழிகிறதே தானந் தவமுத லெத்தகையும் நிறைமருக சகலகுன சம்பன்ன னென்றகிலந் துதிவணிக வாரும்.
இந்தப் பெருமரசி யாவு முமது சுதந்தரமே நல்லவர மேஇனி ஏது குறைமுடியும் அரசும் விட்டேனு மதுகரமே நிலைவரம் சிந்தை மகிழ்ந்துமது செல்வ மனைவி பெற்றார் சீக்ரமெல் லாரையுமித் தேச மழைத்து வாரும் வாரும்.
என்னாசை மருமகனே, உமது நற்செயல் நல்ல கனியைக் கொணர்ந்தது. நீர் சொன்ன வரலாற்றினால் என் மனம் மிகவும் ஆனந்த பரவசமாகின்றது. என் ராச்சியம் முழுவதற்கும் நீரே சுதந்தரனாயினி. அரசு, முடி, செங்கோல் எல்லாம் உமது கையில் ஒப்புவிக்கின்றேன். நீர் செய்த மகா புண்ணியமான செய லுக்கு இத்தேசத்தின் இதிகாசங்களிலும் நிகர் காண்பதரிது.
26

aanboodsaartbUatara
சகலகுண :
நற்செய லொருபோதும் நானிலத் தழியாது. நான் பெற்ற .
6 g :
கேளும், வணிகர் சிரோமணி, நான் இப்பொழுதடைந்திருக்கும் இந்தப் பேரானந்தத்தில் உமது பெற்றோரும் விசேஷமாய் உம்மைக்கோபித்துக் கடிந்த உமது பிதாவும் என்னருமைப் புத்திரியும் பங்கு பற்றி, என்னுடன் களிகூர்ந்து உமது இன்பங் களுக்கும் மகிமைகளுக்கும் பங்காயிருக்கவேண்டுமென்று வாஞ்சிக் கிறேன். இப்பொழுது என் அரமனைக்கு என்னுடன் சென்று, விருந்துண்டு களி கொண்டாடிய பின் எனது பாரிய விசித்திரா லங்காரமான கப்பல்களுளொன்றில் என் மந்திரியுடன் உமது ஜெனன தேசம் போய் எனது கண்மணிப் புத்திரியாம் உமது நாயகியையும், உமது பிதாவையும், மாதாவையும், பந்துக்களையும் இட்டுக்கொண்டு வாரும். உங்களுக்கங்கேயுள்ள எல்லா நிதிகளை யும் இங்கே கொணர்ந்து இங்கே வதியுங்கள். நீர் உமது பெற் றோருக்கு ஏக புத்திரனானபடியால் அதுவே தகுதி. இப்பொழுது அரமனை செல்வோம்.
சகலகுண:
அப்படியே செய்வோம் மகாராஜனே.
கதை விளக்கம்
விஜய:
எனது கண்மணிக் குமாரத்தியைக் கொடுஞ் சிறைத்தனத்தி
லிருந்து மீட்டதற்கு நீர் அரசனாய் வருவதும் போதிய பிரதி பலனன்று. ஏனெனில் நீர் சிறைகளையும் மீட்கும் பொழுது இராசகு மாரத்தி சிறைகளுளொருத்தி யென்பதைச் சற்றும் அறிந்தி ருக்கமாட்டீர்.
சகலகுண:
நற்செய லொருபோதும் நானிலத் தழியாது.” நான் அறியவில்லை.
217

Page 133
சிந்தனைச் சோலை
6їgш:
நல்லது நான் இப்போதடைந்திருக்கும் பேரானந்தத்தில் உமது பெற்றாரும், உம்மைச் சேர்ந்தவர்களும் பங்குபெற வேண்டுமென்று வாஞ்சிக்கின்றேன். நீர் இப்பொழுது அதோ தங்கத்தால் மூடப்பட்டு நவரத்தினங்கள் குயிற்றிய அச்சிங்கார வத்தையில் என்னுடன் துறை முகம் போய்ப் பின் அரமனை சென்று அங்கு இரண்டொரு நாட்டங்கி, விருந்துண்டு, களியாடி இராஜதானியைப் பார்த்த பின் உமது ஜெனன தேசஞ்சென்று என் அருமைக் குமாரத்தியையும், உமது பெற்றோரையும், உம்மைச் சேர்ந்த மற்றோரையுங் கூட்டிக் கொண்டு வாரும். அதுவே தகுதி. உமது பெற்றோர் உம்முடன இங்கேயே வாசம் பண்ணட்டும்.
சகலகுண:
ஆயிரந்துதியும் நமஸ்காரமும், அரசர் சிரோமணி, நற்செய லொரு போதும் நானிலத் தழியாது.
நான் வணிக குலத்தினேனாயினும் தங்கள் குமாரத்தியை மணஞ்செய்ய வாய்ந்ததையும் தங்கள் பெரிய இராச்சியத்திற்குச் சுதந்திர வாளனானதையும் நினைந்து முதல் ஈஸ்பரனுக்கும், இரண்டாவது அரசலட்சணம் பொலிந்து விளங்கும் தங்களுக்கும் மிக்க நன்றி கூறுகின்றேன். இப்பெரிய இராச்சியத்தை ஒரு குடைக்கீழ் ஆண்டு ஐம்பத்தாறு தேசராசரும் அடிபணிய வீற்றிருக்கும் இராஜாதி ராஜனாகிய தங்களை மாமனெனக் கொண்டாட நான் 67լbւDIT85յլb?
விஜய :
அப்படிக் கிஞ்சித்தும் எண்ணவேண்டாம். கல்வியும் சற்கு ணங்கள் யாவும் நிறைந்து விளங்கி அத்துடன் பெரிய செல்வமுள்ள ஒரு வர்த்தக சிரோமணியின் புத்திரனாய் குலமாட்சி, கலைமாட்சி, குணமாட்சி, செல்வமாட்சி யெல்லாம் ஒருங்கே யமைந்திருக்கும் உம்மைப் போன்ற ஒருமகானை என் அருமைப் புத்திரிக்கு மன வாளனாய்க் கொண்டது நான் செய்த பூர்வ தபோபலமின்றி மற் றல்ல.
218

சகலதனசம்பன்னன்
சகலகுண:
தாங்கள் என்னைப்பற்றி இவ்வளவு மேலான எண்ணங் கொண் டிருப்பதைக் குறித்து நான் மிகவும் மனமகிழ்கின்றேன். நான் என் ஊருக்குப் போம்பொழுது என்னுடன் நல்ல காத்திரமான ஓர் ஆளை அனுப்பினாற்றான் என்பிதா எடுபடுவார்.
விஜய:
ஆகா தடையில்லை. நான் உம்மைத் தனியே அனுப்புவேனா? என் மந்திரியும் காவலாட்களும் உம்முடன் செல்வார்கள். எனது சொந்தக் கையினால் எழுதிய கடிதங்களும் எனது புத்திரிக்கும் உமது பிதாவுக்கும் அனுப்புவேன். என்னுடைய முதற்றரமான பொற் கப்பல்களுளொன்று உம்முடன் கூடச்செல்லும். இவைகளைப் பற்றி இப்பொழுது பேசவேண்டியதில்லை. எல்லாம் அரமனையில் பேசிக் கொள்ளுவோம். இப்பொழுது செல்லுவோம்.
சம்பாஷணை
அரமனையிற் பெரிய கொண்டாட்டங்கள் நடந்ததைப் பற்றியும் சகலகுணசம்பன்னனும் மந்திரியும் பொற்கப்பலில் காவலாட்களுடன் பாக்கியபுரிக்குப் பயணமாய்ப் போய்ச்சேர்ந்து வணிககுலசூரியரைச் சந்தித்து மகிழ் கொண்டாடுவதைப் பற்றியும் ஒரு தெளிவான சம் பாஷணை இவ்விடத்தில் அவசியம்.
lÖfüGUIÓ 3
இடம்: வணிககுலசூரியன் வீடு
(வணிககுலசூரியன்,சகலதனசம்பண்ணன்,மந்திரி, ஆனந்தமனோகரி)
சகலகுண:
எனது அன்பு நிறைந்த தந்தாய், நமஸ்காரம்.
வணிககுல:
என் கண்மணிப் பாலா, வந்து சேர்ந்துவிட்டாயா? எல்லாஞ் சேமமா? உனது வர்த்தகத்தின்பாடு எப்படி? உன்னுடன் கூட நிற்பவர் யார்?
29

Page 134
đlịg604Iở đỡIrāDø)
சகலகுண:
அதிக சேமமாயும், மிகவுஞ் சந்தோஷத்துடனும் சொல்ல முடி யாத திரவிய சம்பத்துடனும் வந்திருக்கிறேன். நீர் எனக்குச் செய்த பொருட்களினும் பார்க்க எனது ஆசிரியர் தந்த சுபோதப் பிரமாணமே எனக் கிந்த உயர்ந்த ஸ்திதி கொணர்ந்தது.
வணிககுல:
என்ன? ஏதுந் தேசத்திற்கு ராசனாய் வந்துவிட்டாய் போலும்.
சகலகுண:
நீர் சொல்வது போலத்தான்.
வணிககுல:
என்ன?
சகலகுண:
நான் இம்முறை தற்செயலாய் என் ஆருயிர் போலும் இராச குமாரத்தியின் தந்தையாரின் தேசத்திற் சேர்ந்தேன். அவர் நான் துறைமுகத்திலிருப்பதைக் கேள்வியுற்று, எனது கப்பலில் என்னைச் சந்தித்து எனது விர்த்தாந்தத்தைக் கேட்டு ஆனந்த சாகரத்தில் முழ்கினவராய் என்னைத் தனது மருமகனாய் ஏற்றுக்கொண்டு அரம னைக் கழைத்துச் சென்று, களி கொண்டாடி, இராச்சியத்தையும், செங்கோல், முடி இவற்றையும் எனது கரத்தில் ஒப்புவித்திருக்கிறார். உம்மையும், மாதாவையும், எனது பிராணநாயகியையும், எங்களைச் சேர்ந்த மற்றவர்களையும் அழைத்து வரும்படி ஒரு பொற்கப்பலில், மந்திரி இதோநிற்கிறார், இவருடனும், காவலாட்களுடனும் என்னை அனுப்பியிருக்கிறார்.
வணிககுல:
ஆகா! என்னருமை மகனே, இதைக் கேட்க உபகதை போலல் லவா இருக்கின்றது? உண்மையென்று நம்ப மனம் வருகுதில்லை. மந்திரி
உமது மகன் சொன்ன யாவும் மெய்.
220

சகலருனசம்பன்னன்
வணிககுல:
ஆகா ஆனந்தம் ஆனந்தம் கடவுளுக்குத் துதி எனதன்பு நிறைந்த மகனே, உனது நற்செயல் நற்கனியைக் கொடுத்தது. என் அகபான மருமகளே, எங்கள் பாக்கியமே, நீ இராசகுமாரத்தி யென்பது உன் முகத்திலும், குணத்திலும் விளங்கினாலும், நானோ நம்பாத கொடியனாயிருந்தேன். என்னை மன்னித்தருள் மகாராணி
சகலகுண:
விருத்தம்
அருமையாய் எனைவளர்த்த அன்புசேர் தந்தா யென்மேல் இருணிறை குற்றமேற்றி யென்மனஞ் சலிக்க வைதிர் பெருமைசேர் நன்மையிந்தப் பேருல கதிலோர் காலும் அருகிடா தென்றவண்மை யடியனிற் கண்டி ரன்றோ.
எனதன்பு மேவிய தந்தாய், நான் இரண்டு முறை நீர் எனக்குக் கொடுத்த பெருநிதியைத் தியாகஞ் செய்து நன்மை செய்ததற்காய் என்னிற் பொங்கிய கோபங் கொண்டீர். இப் பொழுது நான் செய்த நன்மைகள் ஒருபோதும் அழிந்து போக வில்லை யென்பதைப் பிரத்தியட்சமாய்க் கண்டுணர்வீர் ஐயா. நற் செயலொரு போதும் நானிலத் தழியாது”
வணிககுல:
பதம்
பல்லவம்
அருமை மகனேயுன்ற னருனிறை யுஞ்செயல் அழிந்தில தெனுமுண்மை அறிந்துணர்ந் தேனிதோ
அருபல்லவம்
பெருமனம் பரிந்துபிறர்க் கருள்புரிந்து பேதமிலா ததிதயை சொரிந்து வருமுனைக் கரிந்து வைதேனா னெரிந்து வந்தாய் பலனாய் வையறந் திரிந்து பாலா 656O.D.
22

Page 135
đgoамá Gomogo
சரனம்
நானில மீதுநன்மை யென்றோது
நன்நிதிக் கழிவது வாராது
நானதோ ராது நடந்துனைத் தீது நவின்ற னணுணர் கின்றெனிப் போது பாலா 656OED. . .
நீ செய்தது மிகவுஞ் சரியும் மேன்மையும் மகனே! நற்செய லொருபோது மழியாதென்பதற்கு உனக்கு இப்போது தெய்வாதீன மாய் வந்திருக்கும் பெரும் பாக்கியமே நல்ல சான்று. நான் இப் பொழுது நல்ல உணர்ச்சியடைந்திருக்கின்றேன்.
சகலகுண:
பறுவாயில்லைத் தந்தாய், இனி நாம் நமக்கு இவ்விடத்திலே
யுள்ள பெரும் நிதியனைத்தையுங் கொண்டு எனது பிரிய நாயகியின்
பிதாவாகிய விஜயசிங்க மகாராஜனின் அழைப்பின்படி அவனுடைய
தேசத்துக்குச் செல்வோம்.
வணிககுல:
ஆகா! யாதொரு சந்தேகமுமில்லை. எல்லா ஆயத்தமுஞ் செய்து சீக்கிரம் புறப்படுவோம்.
சகலகுண:
வாராய், என் பிராணநாயகி. இவ்வளவு சந்தோசத்துடன்
உன்னைக் காண என்ன தவஞ் செய்தேனோ தெரியாது. உன்
சேமம் எப்படி?
ஆனந்தமனோ:
நீங்கள் என்மாமாவுடன் சம்பாஷித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்களைத் தடுக்க நான் விரும்பவில்லை. உங்கள் அன்பான முகம் எனக்கமிர்த சஞ்சீவியாயிருக்கின்றது. எனது தகப்ப னாரைக் காணவும் கொண்டாடவும் நீர் அரசனாகவும் நான் ராணியாய் என்பிறப்புச் சுதந்திரத்தை இழவாதவளாய் அனுப விக்கவும் நேர்ந்ததை நினைக்க என் இருதயம் மிக்க குதூகலங் கொள்கின்றது. உங்களுக்காய் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கும் பஞ்ச பட்சய பரமான்னத்தை மந்திரியுடனும் மற்றும் பரிவாரத்தவர் களுடனும் புசித்து இளைப்பாறிய பின் சகலமும் பேசுவோம்.
222

சகலதனசம்பண்ணன்
பதம்
பல்லவம்
ஆனந்த மாபெரிதே யிவ்வேளை ஆனந்த மாபெரிதே.
அருபல்லவம்
வானமுந் துதிக்குமென் மகிமை சேர்தந்தை மன்னவனைச் சந்தித்திர் என்கணவா ஆனந்தம்.
சரணங்கள்
ராசனாய் நீள்வர ராணிநா னாக
என்ன பெரும்பாக் யம்என் கணவா ஆனந்தம்.
போஜன மானபின் புகலுவம் யாவும் புண்ய மிகுந்துரை யேளன் கணவா ஆனந்தம்.
சகலகுண:
எல்லாம் சந்தோஷம். பிராணநாயகி, நீர் சொல்லிய பிரகாரம் போசன மருந்தியபின் எல்லாம் சாவகாசமாய்ப் பேசிக்கொள் வோம்.
கதைவிளக்கம்
செப்ளக 3
இடம் 2: ஒரு சிங்காரப் பூங்காவனம் (மந்திரி தனிமையாய்ச் சிந்தனை செய்தல்) மந்திரி:
பதம்
பல்லவம்
அந்த வணிகப் பயற்கிந்தக் குருசந்திர யோகம் வந்த வகையை யென்சொல்வேன்.
223

Page 136
சிந்தனைச் சோலை
அருபல்லவம்
சிந்தை களிக்க வருவிந்தை மிகுவிசித்ரம் திகழழ குறுமென தருநவ மனிதனை மகிழ்தரு திருமண மதுபுரி புகழ்கொளும் அந்த.
சரணங்கள்
வாக்குப் புரிந்துவைத்த தாக்கணங் கதைமனை யாக்கி விளங்குநற் சிலாக்கியந் தனையுற்றெவ்
வகைக்கும் வளமிக்க கொள்தகைக்கும் இகலரநெஞ் சந்திகைக்கும் சேனை பலவின் தொகைக்கும் நேரில் விஜயம்
வந்தரசாள் புகழின் தகைவாசம் வச்சிர சிமாசன வைகுநிவேசம்
வண்மகியன் மருமான் மொழிநேசம் வாங்கரத்ந மகுடந் தாங்கப் பலநிதியுந் தேங்க
செழித்து வளர்ந்தோங்க எனக்குநிசம் வரவென் றிருந்த பலவரங்கள் தமைத்தடுத்து. elisab...
இந்த வணிகப் பயலுக்கு வந்திருக்கிற குருசந்திர யோகத்தை நான் என்ன சொல்ல எனக்கென்று பேச்சிட்டு நிர்ணயித்திருந்த கன்னிகா ரத்தினத்தை மணஞ்செய்யுஞ் சிலாக்கியத்தைப் பெற்று நான் அம்மானென்று அழைக்கக் காத்திருந்த அரசனைத் தன் அம்மானென்று அழைக்கும் பாக்கியமுற்று, இப்பொழுது தன் முழுக் குடும்பத்தையு மழைத்துப்போய் நான் ஆளவிருந்த ராச்சியத்தைத் தான் ஆளப்போகிறான். என்னென்று சகிக்க இதற்கொரு சூழ்ச்சி செய்யாதுவிட்டால் நான் வெறும் பேயனாயிருத்தல் வேண்டும். இக்கணம் நாமெல்லோரும் கப்பலில் விஜயபுரிக்குப் போம்பொழுது ஓர் இராத்திரி மற்றவர்களெல்லாரும் சயனித்திருக்கும் வேளையில் கூட்டாளி தனிமையாய்க் கதை பேசுமாப்போல் மெல்ல ஒரு முலைக்கழைத்துப் போய்ச் சடுதியாய்க் கட்டிப்பிடித்துத் தூக்கிக்
ཤེས───-224

சகலருனசம்பன்னன்
கடலுட் போட்டுவிட்டால் அவர் போய் மீன்களுக்கரசனாகி யவை களை யாளுவார். காரியம் எனக்கு நல்ல வாய்ப்பாயிருக்கும். இராஜகுமாரி, இராச்சியம் எல்லாம் என்பாடாய் முடியும். நல்லது அப்படிச்செய்வேன். வேறு ஆட்சேபனையில்லை. (மந்திரி அழுதல்: "ஐயோ நான். * “இந்தவிழ வெனக்கு. ')
Glfui Gunõñ 3
இடம் 3 பிரயாணக் கப்பல்.
சகலகுணசம்பன்னனாதியோர் கப்பலில் விஜயநகர் செல்லல். சகலகுணசம்பன்னனை அர்த்த ராத்திரியில் மந்திரி தான் யோசித் திருந்தவாறு கடலுட் போடல். கப்பலிலுள்ளவர்க ளெல்லாரும் நித்திரை. சிலர் குறட்டையிழுத்தல்.
(மறுநாட் காலையில்)
ஆனந்தமனோ:
ஐயோ! ஐயோ ஐயோ! என் பிராண நாயகா. (தலையில டித்துப் புரண்டு விழுந்து மூர்ச்சையாதல்).
வணிககுல:
(கப்பலெங்கும் பார்த்தபின் தலை தலை யென்றடித்துக் கொண்டு) ஆ1 ஐயோ ஐயோ! ஆ, ஆ, ஆ என்னருமைப் புதல்வா, கடலுள் வீழ்ந்திறந்தாயோ? இதுதானா நீ செய்த நன்மைகளின் பலன்? நான் எப்படி உயிர் பிழைப்பேன்? என்னென்று தாங்குவேன்? இராசகுமாரத்தி உயிரற்றவள் போல் மூர்ச்சையாய்க் கிடக்கின் றாளே! ஈதென்ன மாயம் என் அருமை உதரக் கனியே, எங்குற் றாய்? ஐயோ, ஐயோ!
மந்திரி :
என்ன மாயமப்பா இதெப்படி விழுந்தாரென்று தெரியவில் லையே. ஈதென்ன பேரிழவு என்றாலும் தெய்வ சந்தர்ப்பத்தை யார் என்ன செய்தல் கூடும்? வணிகர் குலாதிபா, மனம் ஆறு வீராக. அரசன் உம்மை மிகவும் சன்மானம் பண்ணுவார்.
225

Page 137
afligaoGora Garapo
வணிககுல:
இதென்ன பயித்தியம் என்னருமை மகனில்லையாம். அரச சம்மானத்தை யாருக்கு வேணும்? அரசனின் குமாரத்தி உயிர் பிழைப்பது மிகவும் அசாத்தியம். அவ்வளவாய்த் துக்கக் கடலுள் ஆழ்ந்திருக்கின்றாள். ஐயோ! நான் என்ன செய்வேன் ஜெகதீசா,
(பாவியாகினேன் நானே. என்ற மெட்டு)
இந்த இழவெனக்கு இப்போ வந்திட என்னபவம் முந்திப் புரிந்தே னையோ துயர்மோதி யெனையடிக்க சிந்தை கலங்குதே யென்றன் செல்வமக னேஜயோ வந்தெனக் கோரினிய முத்தந் தந்து மகிழ்தருவாய்.
ஆசை மகனே யுனையயர்தல் கூடுமோ கண்ணே நேசமா ரென்னேக புத்ர நிதியென விளங்கினாய் பேசவாய் கொன்னிக்கு தென்பிரிய மகனே பாலா வாசமாழி வாயின் கீழே வைகினாயோ சொல்லடா.
கதை விளக்கம்
சகலகுணசம்பன்னன் நீந்தி உயிர் பிழைத்து ஒரு குடியில்லாத் (காடு) தீவையடைதல்.
lõTLüG 3
இடம்4 குடியில்லாத்தீவு
avongo:
(தனிமையாய்)
Uјш
பல்லவம்
என்னா யாசம் எனக்கேன் வந்ததிந்த மோசம்
226

சகலதனசம்பன்னன்
அருபல்லவம்
நன்னலத்தின் பயனிதுவோ நாதன்ஞானம் நானறியேன் GastoTIT...
சரணங்கள்
நாயகியும் பெற்றாருமாய் நைந்துமணம் ஏங்குவாரே ersåsom. --
ஊணில்லாமல் மாயலாச்சே உடல்வாடிப் பெலம்போச்சே என்னா.
தாகத்தாலே தவிக்கிறேனே தற்பரன்கை விடமாட்டார் என்னா.
ஆ1 ஆ1 ஆ1 படுபாவி என்னைக் கொல்ல வகைதேடினானே. என் பிராணநாயகியை மணஞ்செய்யக் காத்திருந்தவனாமே. ஆதலின் நான் அவளை மணந்ததும், அரசன் மருகனானதும், முடிக்குச் சுதந்தரவாளனாயதும் அவனுக்குத் தாங்கொணாப் பொறாமையை முட்டிவிட்டதுபோலும். இரண பாதகனென்னைக் காத்திராப் பிர காரம் கடலுள் விழுத்திக் கொல்ல நினைந்தானே. நான் நீந்தி யிஷ்வாறு உயிருடனிருப்பதை அப்பாதகன் அறிந்தால் மிகவும் துக்கப்படுவா னென்பதில் மயக்கமில்லை. என்னருமை நாயகியும், பெற்றோரும் என்ன பாடுபடுவார்கள்? ஐயோ! அவர்கள் நெஞ்சம் எப்படி இருக்கும்? இக்குடியில்லாத் தீவில் பசியால் வருந்தி மரிக்கவேண்டியதாகும். என்செய்வேன், ஈசனே இத்தீவைவிட்டு அரசன் நகரம் போய்ச் சேருதல் எவ்வகையும் இயலாது போலிருக்கின்றது? தெய்வம் இட்டதை இடட்டும். என்செய்வேன்! ஆயின் எனக்கு ஒன்று தெரியும். நன்மை செய்தவரைக் கடவுள் ஒரு போதுங்கைவிடமாட்டார். நற்செயல் ஒரு போதும் அழியாது,
(வத்தைக்கார வினாருவன் வருதல்)
வத்தைக்காரன்:
பதம்
பல்லவம்
சொல்வா யென்றனக்கு உன்றன் சொந்தநற் பேரும்?ளரும் சீரும் சொல்.
227

Page 138
சிந்தனைச் சோலை
அருபல்லவம்
பல்வித மாயிங்கு பாடி யுளறிக்கொண் டல்லற் படும்நீ யறைகுவை யுன்காதை சொல்.
சரணங்கள்
இக்குடியில் தீவுதனை
எவ்வாறு நீயடைந்தா யென்றெனக் கோது எக்காலமு மெவரும் வரவஞ்சிடும் இந்தத் தரைவந் தெய்திடு விந்தைப் புதினந் தனையிதோ சொல்.
இக்குடியில்லாத் தீவில் தன்னந்தனியனாயிருந்து புலம்பிக் கொண்டிருக்கும் நீ யார்? உன் பேரென்ன? நீயிந்தப் பயங்கர மான தீவுக்கு வந்த காரணமென்ன? தெரியச் சொல்லு,
சகலகுண:
ஒரு படுபாவியின் சதியால் கடலுள் வீழ்ந்தும் கடவுளின் காருண் யத்தால் நீந்தி உயிர் பிழைத்து, இக்குடியில்லாத் தீவையடைந்து, யாதொரு தஞ்சமுமின்றி, வாடி மரிக்க வேண்டியவனா யிருக்கின்றேன். இவ்வேளையில் எனக்கு ரட்சகனாய் நீ தோற்றியிருக்கின்றாய். என்னை உன் வத்தையிலேற்றிப் பெருந்தரையிற் சேர்த்துவிடு வாயானால் நான் உனக்கு என் சீவிய காலமெல்லாம் மிகுந்த கடமைப்பாடுடைய னாயிருப்பேன்.
வத்தைக்காரன்:
உன் பேரூர் முதலிய வரலாறு கேட்க, உன்னை இரட் சிக்கும் படி மன்றாடுகிறாய். உனக்குப் பேர் ஊர் இல்லைப் போலே.
சகலகுண:
என் பெயர் சகலகுணசம்பன்னன். நான் பாக்கியபுரியைச்
சேர்ந்த வணிககுலசூரியனென்னும் பெருநிதி படைத்த செட்டி
யாரின் ஏகபுத்திரன். விஜயபுரியின் ராஜனுடைய குமாரத்தியைச்
சிறைமீட்டு அவளை விவாகஞ் செய்தேன். சென்ற இரவு என்
பிதா, மாதா ஆதியோருடனும் விஜயசிங்க மகாராஜனின் மந்திரி 228

சகதைசைம்Uன்னன்
யோடும் விஜயபுரிக்குப் போகும் போது துஷ்டனாகிய அம்மந்திரி என்மீது பொறாமை கொண்டு என்னை, ஏதோ பேச அழைப்பது போலத் தனிமையாய்க் கடலுள் வீழ்த்தினன். நான் கடவுள் கிருபையால் உயிர் தப்பி ஈங்குற்றேன்.
வத்தைக்காரன்:
நல்லது; எனக்கேன் உனது வைபவம். குருடனுக்கு வேண்டியது கண். எனக்கு வேண்டியது பொன். இங்கிருந்து விஜயபுரி இரண் டாயிரம் மைலுக்கப்பாலுள்ளது. உன்னை ஆங்கு கொண்டுபோக என்னாலியலாது. இச்சிறு வத்தை அதற்கிடங்கொடாது. இங்கிருந்து விஜயபுரியைச் சேர்ந்த பெருந்தரை எண்பது மைல். நான் உன்னை அங்கே கொண்டுபோய் விடுவேன். நீ அப்பால் கால் நடையாய்ப் போக வேண்டும். நான் இப்பொழுது செய்யும் பேருதவிக்கு நீ எனக்கு என்ன பிரதிபலன் அளிப்பாய்?
சகலகுண:
நீ இப்பொழுது எனக்குச் செய்ய உடன்படுமிப் பேருதவி என்னாருயிரை இரட்சிப்பதாதலால் நான் எனக்கு இனிமேல் வரப் போகும் எல்லா நற்பாக்கியங்களிலும் சரி அரைவாசியை உனக்குக் கொடுப்பேன். உடுத்த அங்கிகளொடு மாத்திரம் நிற்கும் என்னிடம் இப்பொழுது ஒரு காசுக்கும் வழியில்லை.
வத்தைக்காரன்:
உன்னுடைய வாக்கை நம்பலாமா?
சகலகுன:
ஆகா! யாதோர் ஆட்சேபமுமின்றி நம்பலாம். ஒன்றுக்கும் யோசிக்கவேண்டாம். என் நாக்கு ஒருபோதும் தவறாது.
வத்தைக்காரன்:
நீ ஒருபோது விஜயபுரிக்கு ராஜனாய் வருகிலும் வருவாய். உனக்குதவி செய்து வைப்பது நல்லது. வா, வந்தேறு, வத்தையில் கொண்டுபோய் விடுகிறேன்.
229.

Page 139
dfj68Dard (30cTaDg0
சகலகுண:
மெத்தச் சந்தோஷம். மெத்தப் பெரிய உபகாரம். இதோ வந்தேன். கொண்டுபோய் விடும். புண்ணியங் கிடைக்கும்.
வத்தைக்காரன்:
(வத்தைப் பாட்டு)
ஏலேலம்மா ஏலம்மா ஏைேலம்மா ஏலம்மா
வணிக குநைற் சூரியனின் மைந்தன் சகல குணசம்பன்
அணிநற் குணசி ரமைபாலன் ஆப்பிட்டுக் கொண்டா னித்தீவில் ஏலே.
விஜய சிங்க மகாராஜன் வேந்தன் மகளைக் கல்யாணம் இசைவா கச்செய் சிங்காரன் ஏப்பிட்டுக் கொண்டா னித்தீவில் Gg Gao...
வத்தை தன்னில மைத்திவனை வாகா யோடம் தாங்கியிரட் சித்தே விடுகில் தந்திடுவான் திகழ்தன் பாக்யத் தரைவாசி ஏலே.
கதை விளக்கம்
FuGunañ 3
இடம் 5 விஜயரிங்க மகாராஜனின் அரமனை (விஜயசிங்க மகாராஜன், வணிககுலசூரியன், ஆனந்தமனோகரி, மந்திரி எல்லோரும் புலம்புதல்.)
Galeg:
இதென்ன பார இழவப்பா இதைக்கேட்க நெஞ்சம் புண்ணா குதே. ஏக்கம் பிடிக்குதே. இது கனவா நினைவா? ஐயோ துக்கப்படா திருங்கள். என் செய்வோம். வணிகர் சிரோமணி, கவலைப் படா
திரும், ஐயோ.
230

சகதைசைம்பன்னன்
என் ஆருயிர் போலுங் கண்மணிப் புத்திரி, நான் உன்னை இழந்தும் திரும்பக் கண்டது எத்துணைப் பெரும் பாக்கியம் உன்னை நான் கண்டு மகிழும் பாக்கியத்துக்கு உன் நாயகன் கடலுள் வீழ்ந்தில்லாது போனது ஒரு பெரிய குறையன்றோ? இதென்ன இடியப்பா உன் கணவனுக்கு இவ்வாறு லபிக்குமென்று நான் கிஞ்சித்துங் காத்திருக்கவில்லையே. எவ்வாறு கடலுள் விழுந்தா ரென்று தெரியவில்லை யென்கிறீர்களே. இதென்ன மாயமையோ! ஐயோ! என்னாசை மகளே, உகலத்தின் ராசர் எல்லோரும் தம் அரிய சிரோரத்தினம் என முடியில் வைத்துப் பேணத்தகும் என்னா சைத் தபோமணி, உன்னைக் கண்டதினும் மேலாகிய ஆனந்தம் இப்பிறப்பில் வேறெனக்கு வரப்போகிறதில்லை. ஆயின் அவ்வின்பம் பங்க மடைந்திருப்பது துக்கம் துக்கம் ஆயினும் தெய்வசங்கற் பத்தை யார் தடுக்கலாம்? ஆறுதலாயிரு மகளே.
வணிககுலாபதிபா, (வணிககுலசூரியர் அழுதல்) ஐயோ! கவ லைப்படாதேயும். நான் உம்மை அத்தியந்த பேரானந்தத்துடன் காண் பேனெனக் காத்திருந்த காத்திருப்புக்கு மாறாக உமது புத்திர ரத்தினம் கடலுள் வீழ்ந்திறந்தது தாங்கொணத் துக்கமாக்கி விட் டதே எங்கள் சந்திப்பை ஆ குணக்கடலாகிய உமது புத்திரசிகா மணிக்கா இப்படி லபிப்பது? ஐயோ ஐயோ!
வணிககுல:
விருத்தம்
என்னநான் செய்வே னிந்த இருநில மாளும் வேந்தே மன்னர்கள் மன்னா வென்றன் மகிமைசேர் புத்ர ராஜன் பன்னருந் துயருள் என்னைப் படுத்தியே கடலுள் வீழ்ந்தான் முன்னர்நான் செய்த தீமை முடுகிய தேயோ வையோ
பாக்கிய மாக வுற்ற பைங்கிளி நேரும் புத்ரி தாக்கணங் கரசி தன்னைத் தன்னுயிர் போலக் காத்தோன் நீக்கருந் துயரி லந்த நேரிளை யமிழ்ந்த வைத்து தீக்கட லாழ்ந்த வெண்ணத் திகைக்கு தென்னெஞ் சமையோ.
ஐம்பத்தாறு தேசமன்னரும் அடிபணிய வரசு செய்யும் மகா ராஜனே, என்னுயிருக்குயிரான ஏகபுத்திரன் என்னையும், தான் அரு
23

Page 140
சிந்தனைச் சோலை
மையாக நேசித்த இராசகுமாரியையும் வாடி மயங்கித் தியங்க விட்டு எல்லாம் சந்தோஷமாய் முடியவிருந்த தருணத்தில் வெண் ணெய் திரண்டுவரத் தாழி உடைந்த பான்மையாய்க் கடலுள் வீழ்ந் திறந்தது ஐயோ! என் வயிற்றைத் திமுட்டியெரிக்கின்றதே. ஐயோ! ஐயோ! இதை எவ்வாறு சகிக்கலாம்?
விஜய:
கவலைப் படாதிரும். வணிகர் சிரோமணி, தேவ சித்தத்தை யென்செய்யலாம். நான் தங்களுக்கு எல்லாவகைச் சம்மானமுஞ் செய்து என் சமஸ்தானத்திலேயே தங்களை வைத்திருப்பேன். ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம்.
வணிககுல:
அரசர்க்கரசே, கடவுள் புண்ணியமாய் எனக்கிருக்கும் ஐசுவரி யம் ஓர் அரசனது ஜஸ்வரியத்தினும் மிக்க பெரியதேயாம். எனக் கொன்றாலுங் குறைவில்லை. என்னாசை மகனில்லாத குறையை எதுதான் நிவிர்த்தி செய்யும்? ஐயையோ
விஜய:
வணிகர் சிரோமணி, கடவுள் செய்வதெல்லாம் நன்மைக் கேயன்றோ? பொறுமையாய் என்னுடன் ஈங்கு வாசஞ்செய்யும். நான் உமக்கும் நீர் எனக்கும் ஆறுதலாயிருப்போம். என்னுடைய புத்திரியை உமது அருமைக் குமாரத்தியாய்ப் பாவியும்.
வணிககுல:
அப்படியே செய்கிறேன். அரசே, உமது ஆறுதலான மொழி களுக்காக அனந்தஸ்தோத்ரம்.
6egul:
உமது மகன் உமது பொருளைக்கொண்டு எனது மகளுக் குச் செய்த நன்மைக்கு நான் என்ன பதில் செய்வேன்.
வணிககுல:
எல்லாம் உமது சித்தப்படியே ஆகட்டும்.
232

சகலதனசம்பண்ணன்
lèFuGunõñ 3
இடம்6: விஜயசிங்கமகாராஜனின் அரமனைக்கு முன்னுள்ள நந்தாவனம்.
(விஜயசிங்க மகாராஜன், ஆனந்தமனோகரி, வணிககுலசூரியர், மந்திரி)
ஆனந்தமனோ:
விருத்தம்
அன்புசேர் தந்தாயாங் கென்னரிய நாயக ரைப்போல இன்பநற் சாயல் பூண்ட யாவரோ நிற்கக்கண்டு என்பரி தாபமிக்க வேறலா லவரை யீங்கு தென்பட வழைத்தெனையும் தீர்த்தருள் செய்குவீரே.
பதம்
பல்லவம்
அங்காரோ நிற்கிறார் - என்ற னாருயிரை நேருமவர் யாரோ?
அருபல்லவம்
தங்குநல் லொயிலுறு மிங்கித நிறையுஞ்ச
வுந்தர மிகும்பிர காசன் தரணியில் நிகரிலை யெனமொழி சொலவரு தகையில கிடுமொரு போசன் சரியா யெனதருமை நேசன் - ரூபவாசன் எந்தத் தேசன் - சன்னியாசன் அங்காரோ.
எனதன்புள்ள தந்தாய், அரமனை வாசலில் அதோ ஒரு மனுஷன் நிற்கிறான். அவன் சாயலிலும் முகருபத்திலும் என் பிரான நாயகரைப் போலிருக்கிறான். உயரம், பருமை, நிற்கிற மாதிரி யெல்லாம் என் நாயகரைப் போலவே. அது எனக்குப் பேரதிசய மாயிருக்கிறது. அவராரோ?
விஜய:
இதென்ன புத்தியீனம் உன் கணவனைப்போல் மனுஷர்
இப்பூவுலகில் யாருமில்லையா? அவனாராயினு மிருக்கட்டும். 233

Page 141
đllỗg5{DåIở đữfĩ6000
நமக்கென்ன? என்றாலும் உன் மனம் ஆறும்படி மந்திரியைக் கேட்பேன். மந்திரி
மந்திரி;
சொல்லும், ராஜனே.
விஜய:
அதோ, நிற்கிற மனுஷன் யார்? யாரோ சன்னியாசி போலக் காணப்படுகிறான்.
மந்திரி;
நான் அவனை மூன்று நான்கு முறை துரத்தியுங் கேளாது
சுற்றித் திரிகின்றான். யாரோ துறவி போலத் தோன்றுகிறான். பொலிசையேவித் துரத்துவித்தால் நல்லது அரசனே.
ஆனந்தமனோ:
நல்ல புத்தி ஒரு பிழையுஞ் செய்யாத ஒருவரை அப்படி அநியாயம் செய்ய வேண்டியதென்ன? அது தானா தரும நீதி? அவரை உற்றுப் பார்க்குமிடத்து, சரியாய் என் நாயகரின் பிரதி ரூபமாய்க் காணப்படுகின்றார். அந்த ஆள் நிற்கட்டும். அவரை யாரென்று கவனமாய் வினவிப் பார்ப்போம்.
மந்திரி
(ஓடிப்போய்) பொலீஸ், பொலீஸ், (இரகசியமாய்) அடா முடா, ஒடு அப்பால். உனக்கிங்கே யினியென்ன அலுவல். அதுவெல்லாம் என்பாடாய்ப் போய்விட்டது. பூசை வேண்டாமல் ஒடு அப்பால். இப்பொழுது நான் அரசனென்பதை அறியாயா?
ஆனந்தமனோ:
மந்திரி யென்னவோ அந்த ஆளுடன் மெல்லமாய்ப் பேசுகி றார். இதிலேதும் சூதிருக்கலாம். என்னருமைத்தந்தாய், தயவு செய்து எனக்காக அந்த ஆளைக்கிட்ட அழைத்து வினவு.
234

சகதையைசம்பண்ணன்
வணிககுல:
அந்த ஆளைப் பார்க்கச் சரியாய் என் மகனைப் போல இருக்குது. என்ன ஆச்சரியம்
6.2L:
மந்திரி, அந்த ஆளை இங்கு வரவழை.
மந்திரி;
அந்த ஆளை இங்கு எண்னத்திற்கு? இளவரசியின் வீண்
அங்கலாய்ப்பன்றி வேறொன்றுமில்லை.
விஜய:
என் சித்தத்தைச் செய். ஆட்சேபனை வேண்டாம். மீறினால்
வில்லங்கம் வரும்.
மந்திரி:
அப்படியே செய்கிறேன் அரசனே.
வணிககுல:
(போய் மகனை உற்றுப் பார்த்து) என் ஆசை மகனே, கண் மணி, வந்துவிட்டாயா? என் பாக்கியமே, தேடக்கிடையாத திரவி யமே, செல்வமே, உன்னைக் கண்டதே போதும். என் கண்மணிப் பாலகன் வந்தான் வந்தான்! ஆனந்தம். பரமானந்தம்.
ஆனந்தமனோ:
அதோ! கையில் என் கணையாழி இருக்கிறது. என் ஆசைக் கண்ணாளா, என் ஆருயிர் நாயகா, கடவுள் கிருபையால் உயிர் மீண்டு வந்திரா? எனக்கு உம்மைச் சந்திக்குமின்பத்தினும் பெரிது இப்பூவில் வேறென்ன?
பதம்
பல்லவம்
வந்து சேர்ந்திரோ சிந்தை மகிழ என்தன் கண்ணாளனே.
24

Page 142
சிந்தனைச் சோலை
அருபல்லவம்
புந்திமிக நிர்ப்பந்த மதாகி பூவிலலைந் திரோ புகல்வி தயவாய் அதியூ ரணம்பெற நேரரும்சதி வீரமாய் வந்து.
விஜய:
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் வாரும் என் அன்பான மரு மகனே இதுவே என் இராச்சியத்தின் மகா பெரிய திருநாள். நீர் கப்பலினின்றும் கடலினுள் வீழ்ந்தது முதல் நடந்த காரியம் யாவையும் விஸ்தாரமாகச் சொல்லும்; கேட்க மிகவும் வாஞ்சிக் கின்றோம்.
வணிககுல
ஆம்; மகனே, சொல்லு, கேட்க மிகவும் ஆத்திரமாயிருக்கு.
சகலகுண:
ஆசிரியய்பா
அன்புறு தந்தாய் அரியவென் நாயகி மன்பதை போற்றும் மகிபனே கேளிர் கப்பலில் வருகையில் கடியசன் டாளன் செப்பிடும் மந்திரி சிநேகித னாக அந்தரங் கக்கதை யறைகுதல் போல புந்தியிற் பாதகம் புரிந்திட நினைந்து மெல்லெனக் கப்பல் மீதிலோர் முலைக் கல்லினி லழைத்தே யமைதியாய் யாவரும் நித்திரை செய்யும் நேரத்தின் மிக்க குத்திர மாகக் கொடியவா ழியினுள் சட்டென வென்னைத் தள்ளியே வீழ்த்தினன் கஷ்டமாய் நீந்தியோர் கானகக் குடியில் தீவை யடைந்து தியங்கி வருந்தி மேவுமோர் வத்தை விடுமனு ஷன்தயை செய்திடப் பெருந்தரை சேர்ந்து பல்மாதம் எய்தியே யருந்துயர் இந்நக ரடைந்தேன்
236

சகலதனசம்பன்னன்
மந்திரி கண்டு மனமிகத் திகைத்து நிந்தையா யென்னை நீக்க முயன்றனன். காவலா ளருக்குக் கடியகைக் கூலி ஆவலாய்க் கொடுத்தெனை யகற்றவே பார்த்தான் பன்முறை யவரெனைப் பகையாய்த் துரத்தியும் என்மனஞ் சலியா திங்ாங்னந் தரித்தேன். இன்று காலை யெழுந்தபா யத்துடன் நன்றென வரண்மனை நாடியிங் கடைந்தேன். நாயகி யாளென் நலிவுறு தோற்றம் ஆய வழைக்கென வக்கொடு மந்திரி மும்முறை யென்னை முழுதுங் குரூரமாய் இம்மதி னிக்கிட வேவினன் பொலிசை தன்பா டெலாமெனச் சாற்றினன் பொய்யாய் என்பாட் டினிற்கேட் டெல்லா முணர்ந்தேன் கொதிமனப் பொறாமை கொண்டமந் திரியின் சதியினால் வந்த சரித்திர மிதுவே.
ஆயின் எவ்வளவு கஷ்டப்பட்டும், நான் உங்களை வந்து இவ்வகையாய்ச் சந்திக்கக் கடவுள் வழிவிட்டதற்காய் நான் அவரை ஸ்தோத்தரித்து ஆனந்திக்கின்றேன். நற்செயல் ஒரு போதும் நானிலத்தழியாது.”
6egul:
ஆ7 ஆ1 ரணபாதகன். அவனைக் கொண்டு வா இங்கே.
வணிககுல:
கொடும் பாவி படு பாவி
ஆனந்த:
இயமகண்டா ஐயோ!
一ー237

Page 143
இணைப்பு மலர்
பிறர் பாடல்கள் திருமண வாழ்த்துக் கவிகள்
விருத்தம்
சீர்விளங்கு தெல்லிநகர்ப் பிரபு டிகன்
திகழருளம் பலமுதலி தவத்தால் வந்தோன் பேர்விளங்கும் அங்க்லவித்யா சாலை மேன்மை
பெறத்தலைமை பூண்டவா சிரிய அண்ணல் பார்விளங்கு குலதிலகன் பராக்ர மஞ்சேர்
பன்னுசபா பதிப்பிள்ளை பயந்த மின்னாள் தார்விளங்கு தையல்நா யகியம் மாளைத்
தான்நயந்து மங்கிலியஞ் சூட்டி னானே.
பதம்
6gatabb: döntöGBUntől ஆதிதாளம்
பல்லவம்
திருமங்கலியம் சூட்டினான் - கிர்த்தி
திகழருளம்பல முதல்யார் - மகவாந்துரையப்பாபிள்ளை திருமங்கலியம் சூட்டினான்.
238

spirUrLGðaðir
அருபல்லவம்
சுருதி முறைகள் தேற குருமார்க ளாசிகூற சுகுண பூஷண சிங்காரி மிருது பாஷண லங்காரி துய்ய சோபன வொய்யாரி தையல் நாயகியம் மாட்குத் திரு.
சரணங்கள்
திருமணப் பந்தற் காட்சி உரையடங் காத மாட்சி தேசுறு மிந்த்ர சபையே சரியெனுஞ் சூட்சி சிற்ப வினோதரு மற்புத முறவரும் செகத்தி னழகை யெல்லா மமைந்தொருங் கேதரும் சீருற் றொளிகாலுந் தீபகதிரை ஆர்வுற்றகல் வானடர்
சோதிகண்டும் asuso so
திகழுங் கொடிமுகில் தவழும் படியெழும் சிறந்துமே லெங்குஞ் செறிவுறு விற்பன்ன வேலைகள் நிறைந்த தோரன நிரையரி மளமலர் மாலைகள் சித்திர நற்பா வாடை ரத்தின கம்பள மேடை செறியும் செறியு மொங்கும் நிறையும் அழகொழுகும் 55. --
சங்கையுறும் யாழ்ப்பான மெங்குமுள்ள பிரபுக்கள் தகைபெறும் உஸ்தியோ கஸ்தர் துரைமார் சுற்றத்து மக்கள் தம்பதிமார் சுபமங்கள மேவுக தழைத்திடு கவென உளத்தா லாசிகள் சொல தவில்நா கசுரந் தண்ணுமை வீணை சரிகம பதநிச சுரதுதி பாட
asuj. . .
தத்தித்தாம் தகதித்தித் தோமெனத் தழங்கு மொலியது சப்தச முத்திர கோஷ்டமாம் முழங்கி யெண்டிசையும் மோதிச் செவிப்புல வீட்டமாம் தகுபா வலவரிசை பாடவெகு நாவலர் புகழ்சூட சலுகைபெறு முத்தண்ட கொலுதுலங்கும் மணாளன் Sub-.
239

Page 144
đìñg5&b&Mở Gđftābơ0
கட்டளைக்கலித்துறை
சீரார் திருமகள் நாமகள் சேரச் சிறந்துவளர் பேரார்ந் திடுதெல்லி மாநகர் மீதுயிறங்கி முன்னா ளேரார் குலங்குண மேற்றசெல் வாக்கெ விவைபொலியப் பாரா ரருளம் பலமுதல் யாரெனும் பார்த்தியனே
நன்றே யிருந்தன னாக வவற்குநன் னானிலத்தி னின்றே யிசைபெறு மக்க ரூதித்தனர் நித்திலமா மென்றே புகழிவ் விலங்கையிந்த் யாவினி னெத்திசையுஞ் சென்றே யெதிரொலி செய்துரை யப்பவச் சேயுளொன்றே
கல்விக் கடலென் றுலகு புகழ்கின்ற காவலனாஞ் செல்வக் குமரன் துரையப்ப பிள்ளையைச் சேயெனவே சொல்லப் பெறுமொரு பாக்கியம் வாய்த்தல் சுகுணநிறை நல்லர்க் கருளரு ளம்பல வேள்தவ நன்மையதே
இங்கிதஞ் சேர்மண வாள னிரக்க மினியமொழி தங்கு நடுவு நிலைமை பொறையருள் தண்ணளிசேர் துங்க மிகுங்கொடை சொல்வலி நீதிபொற் றுயகுண சிங்கம் சிறில சிறிதுரை யப்ப சிரோன்மணியே
நல்லார் புகழ்துரை யப்பநன் னாவலன் நானிலத்தி னல்வாழ் வெனுமனை வாழ்வுறு வான்நனி நாடியதி நல்வான் சுகுண நிறைமாது ழறிதையல் நாயகத்தைச் சொல்லார் மறைமுறை கொண்டானென் னாளுஞ் சொலிக்குகவே.
நற்குண மேவு சபாபதிப் பிள்ளை நயந்தளித்த சற்குணஞ் சேர்தைய னன்னா யகமுந் தனக்குநிகள் கற்றறி வோரி லெவரென் றிலங்கு கவின்விளக்காம் பொற்குணஞ் சேர்துரை யப்பநற் பிள்ளையும் பொற்புறவே
240

grUmrlibadi
பண்ணிரை தேங்கி வழிந்திடப் பாவலர் பாட்டிசைக்கக் கண்ணியஞ் சேர்சபை யோராசி கூறக் கவின்குருமார் நண்ணி யரும்மறை யோதிடத் தையல்நன் நாயகிக்கே புண்ணிய நேர்மண வாளன்பொன் மாலை புனைந்தனனே
செல்வம் பெருகித் தினந்தின மன்பு செழித்துவள ரில்லஞ் சிறந்தின்ப வாழ்வினின் மேவி யிணைபிரியா தல்லும் பகலு மிவரன்றில் பேடென வற்புதமா யெல்லென் றிலங்க வருள்புரி வாயெம திஸ்பரனே
சுகமே பெருகுக தீர்க்காயுள் சேர்குக சுந்தரஞ்சே ரகமே புளக மடைகுக வைய னருள்சுரந்திவ்
விகமே லிசைபெற் றிலங்குக வென்று மெழின்மகரே தகவோ டுலகி னிலைக்குக தண்ணளி தங்குகவே
வாழி
விருத்தம்
சீரேறு மறைவாழி செல்வம் வாழி
சிறந்தமுகி லரசுநெறி செழித்து வாழி ஏரேறு கலைவளருங் கழகம் வாழி
இலங்குபொறை நீதிமுதற் குணங்கள் வாழி பாரேறு மாலயங்கள் பலூழி வாழி
பாவலர்நா வலர்முதலோர் வாழி தூய தாரேறு மணமக்கள் சர்வ பாக்யந்
தழைத்துலகி னிடுழி வாழி யாமே.
241

Page 145
சிந்தனைச் சோலை
ஞாபகக் கவிகள்
புன்னாலைக்கட்டுவன் வித்துவான், பிரமபரீ சி. கணேசையர் அவர்கள் U DIU UU60D6J.
ஆசிரியவிருத்தம்
திருமருவும் தெல்லிநகர் திகழ்தருவே
ளாண்குலத்துச் சிறந்தோ னாகுந் தருமருவுங் கொடைக்கையரு ளம்பலமா
முதலிசெயுந் தவத்தின் சார்பாய் அருமருவு மணியிஃதென் றாருமிகக்
கொண்டாடி யன்பிற் போற்ற உருமருவு மதன்போலத் துரையப்ப
பிள்ளையும்வந் துதித்தா னன்றே
ஆங்கிலமா மொழிபயின்று தமிழ்மொழியிற்
கலைகளினு மறிவு மேவி தேங்குவள முறுபானந் துறைமுதலூர்
களிற்கற்பித் திட்ட பின்னர் ஓங்கியதெல் லிப்பதியின் மேவியவாங் கிலசாலை யுற்றே கற்பித் தாங்குயரா சிரியனென்னுஞ் சிறப்பினொடும்
விளங்குறுநா ளதனை நீங்கி
செல்வநிலை பெருகியிடத் தீமைநிலை யருகியிடத் தெல்லி நாட்டிற் கல்விநிலை தழைத்தோங்கக் கதியளிக்குஞ்
சைவறிலை கலக்க நீங்க நல்வகையின் மகாஜனவாங் கிலபாட
சாலைதனை நாட்டித் தானுஞ் சொல்வளரக் கலைவளர்த்தான் துரையப்ப
பிள்ளைசெயல் சொல்லற் கொன்றோ
242

ÚlpfUTLgðab Gir
தமிழ்மருவு கலாசாலை யிரண்டினுக்குத்
தலைமையுறிஇத் தமிழ்வ ளர்த்தான் அமிழ்துநிக ரிசைக்கவிகள் பலபாடி
யெவர்க்குமித மாக்கி வைத்தான் இமிழ்திரைஞா லத்தவர்த மறிவுதழைத்
திடச்சபைதோ றினிய சொற்கள் கமழ்தருநற் பிரசங்க மழைபொழிந்தான்
பெருமையினுங் கழறக் கேண்மோ
உதயதா ரகைமுதல பத்திரிகைக்
கதிபதியா யோங்கச் செய்தோன் இதயதா மரைவிரிய வொளிபரப்பி
ஞாயிறுபோ லியங்கி நின்றோன் மதியதாழ் சடைக்கடவு டன்பாத நிழலுக்கு மருவு மன்பாற் புதியதாங் கவிகடமைப் பட்டனத்தெம்
மடிகளிற்செய் புலவன் மாதோ
ஆரியமுந் தமிழும்வளர் சங்கமுதற் பலசங்கத் தங்கத் தோனாய் சீரியன வுலகினுக்குத் தெரிந்துசெயும்
பெருமையினான் தேசத் தொண்டே காரியமென் றினிதாற்று மிவன்செயலை முற்றுறயாங் கழற லாகா நேரியலச் செயுமுதவி கருதியிவன்
றனைப்போற்ற ர்ைமை யாமே.
243

Page 146
đìị580qMở đỡrrạ0gU
அளவெட்டி நொத்தாரிஸ், ச. கந்தையாபிள்ளை அவர்கள்
UDOTU UU60D6
கட்டளைக்கலித்துறை
நல்லார் குணங்க ளுரைத்தலை நாடு நயக்குமள்வை பல்லார் அறியப் புகன்றது பார்த்தனம் பார்புகழுஞ் சொல்லார் துரையப்ப தோன்றலை வற்சரந் தோறுநின்று எல்லாரு மெண்ணுைவ மேத்துவம் நீர்மை இயம்புவமே
விருத்தம்
தெல்லிநக ரீன்றெடுத்த செல்வர் தம்முள்
செந்தமிழு மாங்கிலமு நன்கு கற்றோன் வல்லியம்போ லஞ்சாமை வாய்ந்து நின்றோன்
வாய்சால சிங்கமென வழுத்தப் பெற்றோன் நல்லவர்க்கு நல்லவனாய் நாட்டி லுள்ள
நன்றறிவா ரின்றுமென்றும் நயந்து பேசுஞ் செல்வனென இறவாத சீர்த்தி யுற்றோன் சிறிலசிறி துரையப்ப பிள்ளை வேளே
எடுத்தகரு மத்திடையே நூறு நூறாய்
எழுந்தடித்த தடைகளையெல் லாமெ திர்த்துத் தொடுத்தகரு மம்முடிக்கும் வீர னெங்கள்
தோன்றல்துரை யப்பனிலும் வேறார் உள்ளார் உடுத்திரளில் ஒளிர்மதிபோ லுங்கள் மத்தி
யோங்குமகா ஜனவித்தி யால யத்தைக் கொடுத்தமகான் புகழெடுத்துக் கூறிச் செல்லக்
கூடியதோர் ஆற்றலெமக் கில்லை மாதோ
244

பிறர்பாடல்கள்
அகத்தொன்றும் புறத்தொன்றும் வைத்துப் பேசும்
ஆற்றல்சிறி தில்லாத அன்பன் தன்னை மிகத்தெளிந்த மனமுடைய மேலோன் தன்னை
மேன்மைசெறி கொள்கையுடைக் குரவன் தன்னை சுகத்தைவிடுத் துப்பிறர்க்கு உதவி செய்யும்
தொண்டுபுரிந் துலகிருந்த சுகுணன் தன்னை இகத்திலறிந் தவர்மறக்க இயலு மாமோ
இன்றுவிண்னோர் மகிழளவை இயம்ப லாமோ.
உடுக்கையிழந் தவன்கைபோ லுற்ற பேர்க்கு
உண்மைசெறி நண்பினனாய் உதவி நின்றாய் இடுக்கனுைறும் ஏழைமக்கள் இதயம் பொங்க
ஏற்றசெயல் பலபுரிந்தாய் எங்கள் நாடு விடுக்கஅடி மைத்தனத்தை வேண்டி நல்ல
விஷயங்கள் பலனழுதி விடுத்தாய் இன்னும் படிக்கமகிழ் பெருகுகின்ற கிதஞ் சேர்ந்த
பாமாலை மஞ்சரியாய்ப் பரிந்த ஸ்ரித்தாய்.
பண்ணளிக்கும் கருவியெனப் பாட வல்லாய்
பயன்பெறுநற் கவிகள்பல செய்த நல்லாய் கண்ணளிக்கு மிடனாகக் கருத நின்றாய்
கற்பவரின் ஐயமெல்லாம் நீக்கிக் காத்தாய் விண்ணவர்க்கும் விருந்தாகி இன்று நின்றாய்
விகசிதஞ்சேர் துரையப்ப பிள்ளாய் உன்னை எண்ணவெமக் கெப்போது மிச்சை யையா
ஈதன்றி என்புரிவ மிசைக்கு வாயே.
245

Page 147
சிந்தனைச் சோலை
கைத்தொழிலைக் கலையறிவைக் கற்போர் தம்மைக்
கானனுடையை உண்பனவை ஒழுக்கம் தன்னை எத்திறத்தி லெம்மவர்கள் எடுக்க லாமென்
றியம்பிடுமுன் யாழ்ப்பாணக் கும்மி கண்டால் வைத்திருகை தலைமிசையே வணக்கஞ் செய்வர் வையகத்தில் நின்பகைஞர் கூட வையா இத்தலத்தை நீத்ததுரை யப்ப வேளே
எங்களுளம் நீயகன்றா யல்லை மாதோ
cp5fGDJFuLIITaffu IiILIIT
ஆண்மையு மறிவும் ஆகநின் றனையே கேண்மையு நீயெனக் கிளர்த்தநின் றனையே அன்பு மறனும் ஆயவில் வாழ்க்கை இன்பு மடைந்து எழில்பெற் றனையே பெறுமவற் றுயர்ந்த பேறெனு மக்கள் உறுமொரு பெரியனாய் ஒதநின் றனையே உறுதியு முண்மையு முடையாய் அறிந்தியா மறைவம் அன்பநின் புகழே.
246

பிறர்பாடல்கள்
வயாவிளான் திரு. க. வேலுப்பிள்ளை அவர்கள்
UJIT QU606).
வெண்பா
இருந்தும் புகழொன் றிலரெம்முட் கோடி இருந்துமிறந் தும்புகழை யெய்த - பெருந்தகைமை யாளருட்டெல் லித்துரையப் பாசிரியன் பேருமென்று ஆளப் படுமொன்றா மே
பாவலனே யுண்மைப் பரோபகா ரம்படைத்த காவலனே கால்பரத நூல்கற்றுக் - கிதரச மஞ்சரிசெய் மாவலனே மாநிலனேத் தாசிரிய சுந்தரனே யித்துரையப் பா
கட்டளைக்கலித்துறை
தெல்லி மகாஜன வாங்கில வித்யா லயச்சுடரை நல்கிய தென்னவன் றத்தோத் திரியவ தாரநரன் வில்லுங் கலையிற் குணோதிட் டிரனென்றெஞ் ஞான்றுமிக்கார் சொல்லும் புகழைநட் டானித் துரையப்ப தூமணியே
மதுரைமுன் னிங்கப் பயம்பசு வெய்தவந் தான்றெலிக்கோர் புதுவிது போலிருந் தானென் பதைமறுத் தும்புகல எதுபொழு தேனு மிலையொரு பேரெனி லென்றுமிருப் பதுஇற வாத திவன்பே ரெனிற்படி றல்லவதே
247

Page 148
சிந்தனைச் சோலை
GilgölélčUą பண்டிதம் சி. கதிரிப்பிள்ளை அவர்கள்
UIIt U606
ஆசிரியவிருத்தம்
சீராருந் தெல்லிநக ரறிஞர் மேலோன்
செங்குவளை மாலையினான் செல்வ மேய பேராரும் வேளாளர் குலத்தின் தீபம்
பிறங்குமரு ளம்பலவேள் பெருந்த வந்தான் பாராரு மோருருவு கொண்டா லென்னப்
படியின்மிசை யவதரித்த பண்பு மிக்கான் காராரு முகினேருங் கொடைக்கை வள்ளல்
கருதுதுரை யப்பபிள்ளைக் காவ லோனே.
நற்றமிழோ டாங்கிலநூற் றுறைக ளாய்ந்து
நலந்தருமா சிரியனாய் நண்ணி மேலாம் சிற்பரனார் மதந்தழைத்துப் பல்கி யோங்கச்
சிறாரொழுக்கந் தலையெடுப்பச் சிறந்த ஆங்க்ல முற்கலைகள் மிளிரவொரு பாட சாலை
முன்தாபித் துயர்ந்தநிலை முதிர வைத்தான் பொற்புமிகு மிரண்டுதமிழ்ப் பாட சாலைப்
புரவலனாய்த் தமிழ்வளர்த்த புண்ய சீலன்.
அன்பறிவு பொறையீகை யாண்மை யுண்மை
ஆனவிவை வளரவள ரறிவு மிக்கோன் துன்பமிலா திசைக்கவிகள் தொடுத்துப் பாடித்
தொல்லறிஞர் சுவைதுகர வைத்த நூயோன் அன்பர்செறி யவைகடொறு மஞ்சா தேகி
ஆண்சிங்க மெனப்பேசு மாற்ற லுள்ளான் தன்பெருமை யுலகறிய நின்ற சீமான்
சத்தியத்தி லரிச்சந்த்ரன் தன்னைப் போல்வான்.
248

பிறர்பாடல்கள்
தொல்லுலகி லிருள்கடிந்து சுனையின் மேய
தூயதா மரையலர்த்துஞ் சுடரே போலக் கல்விபயில் மாணவர்தம் மிதய மாய
கமலங்கள் மலர்வித்த கருனை யாளன் எல்லவருங் கொண்டாடுஞ் சுகுன சீலன்
இறவாத புகழுடையான் எந்தை யீசன் தில்லைநடம் புரிபாத மறவா அன்பன்
தீயசெயல் புரியாத சிந்தை யாளன்
சங்கங்கள் பலவற்றி னாங்கத் தோனாய்த்
தானிருந்து பணியாற்றுந் தகுதி வாய்ந்தோன் இங்கெமது தேசத்தொண் டியற்ற வேண்டும்
என்னுமவாக் கொண்டுழைத்த இணையில் கோமான் மங்குலெனு முபகாரி யுடல நீத்து
வானுலகு புக்கடைந்தா னெனினு மந்தப் புங்கவன்றன் புகழுடம்பு நீங்கிற் றில்லைப்
புவியிலவன் பெருமையெல்லாம் புகல வற்றோ
கட்டளைக்கலித்துறை
தருமத் துயர்நெறி நின்றே னருளன்பு சார்ந்தவள்ளல் அருமைத் தமிழினொ டாங்கிலத் தாழ்ந்த அறிவுடையான் திருமெத் தருளம் பலஞ்சேவை நீத்தபின் தெல்லிநகள் அருமுத் தகன்றவெள் விரிப்பியொப் பாகி யலங்கியதே.
புலமைமிக் கோன்நம் துரையப்ப பிள்ளை யெனப்புகலல் நலமுடைத் தோவெனில் நான்மதிச் சென்னியன் நற்பதத்தில் பலமுட னன்பு பழுத்தங் குகைத்தபல் பாக்களிலே சிலவெனி னுங்கற் றுணர்ந்தார் தகுமென்பர் திண்ணமிதே.
பயன்மர முரிற் பழுத்துநின் றாலத பற்பலர்க்கும்
வியன்யிர யோசன மாமது போலவிம் மேதினியில்
நயன்பெறு மாணவர் மத்தியி லேகுரு நன்மணியாய்ப்
பயன்பட நின்றோன் துரையப்ப பிள்ளைநம் பாவலனே.
249

Page 149
சிந்தனைச் சோலை
எல்லா ரையுமியற் பாவல ரென்று மெழிற்ப்ரசாங்கம் வல்லா ரிவரென்றும் வண்டமிழ்ப் பேச்சினில் வல்லரென்றும் சொல்லாற் புகழ்ந்துவிட் டார்புல வோரெனிற் றுயவெங்கள்
தொல்லா சிரியன் துரையப்ப பிள்ளையைச் சொல்வதென்னே.
தூயோன் துரையப்ப பிள்ளைதன் வாழ்க்கைத் துணைதனக்கும் ஆய கலைவல புத்ர சிகாமணி யானவர்க்கும் மேய குடும்பத் தவர்மற் றெவர்க்கும் விருப்புடனே
வாயுரை யாசி வழங்குவதும் பற்பகல் வாழ்கவென்றே.
6616xit IIT
ஆங்கிலமும் வல்லான் அருந்தமிழ்நூ லும்வல்லான் தேங்குபிர சங்கமழை சேர்ந்தமுகில் - பாங்குடைய தேசநலம் பாஷைநலம் சேர்ந்ததொண்டி னிற்பிரியன் ஆசிரிய னன்றிமற்றிங் கார்.
எல்லாரு நல்லோ னெனமதிக்க நின்றவனெம் தொல்லா சிரியன் துரையப்ப - பிள்ளையெனல் சால்புடைத்தே பூவுலகிற் றண்ணளியில் வண்மையினில் மேலுரைக்க யாருளரோ மீண்டு.
கால முழுதுங் கலைகற்றங் காய்தலினும்
சீலமுறும் ப்ரசங்கஞ் செய்வதிலும் - மேலும் கவியாக் குதற்கண்ணனும் கற்பித் தலினும்
புவியாருள் யார்போக்கி னார்.
ஆங்கிலக்கல் லூரியொன்று மானதமிழ்க் கல்லூரி ஆங்கிரண்டு மோர்வறிஞ னன்புடனே - ஒம்புகின்ற நெல்வயல்போற் காத்து நிதமுமுனைப் போல்வளர்த்தார் தொல்லுலகி லுண்டோ சொல.
250

பிறர்பாடல்கள்
எடுத்த கருமத் திடையூ றுறினும் . . தொடுத்துமுடித் தின்பமுறுந் தூயோன் - அடுத்துவரும் நன்மாணாக் கர்க்கினிய நற்போ தனைபுரிவோன்
தன்மாண் புரைப்பதெங்ாவன் தான்.
ஆசிரியவிருத்தம்
அறமேய குருவென்கோ அன்றமரர் கடைந்தெடுத்த அமிர்த மென்ன நறவார்ந்த கவிபாடுங் கவியென்கோ வந்தடுத்த நன்மா னாக்கர்க் குறவான இருள்நீக்கு முதயசூ ரியனென்கோ உலகி லென்றும்
இறவாத புகழுடைய துரையப்ப பிள்ளையுனை யென்சொல் கேனே.
தெல்லிப்பழை திரு. கா. சின்னப்பா அவர்கள்
t JIT QU606).
விருத்தம்
துரையப்பா பிள்ளையெனுஞ் சுகுண தீரன்
சொல்லரிய வரம்பலவும் தோன்றப் பெற்றோன் விரைவாகப் பாக்கள்புனை வீரத் தோடு
மேன்மையுறு விரிவுரைகள் மேலோர் போற்றக் கரையிலரு முற்சாகம் காட்டிப் பேசும்
கண்ணியத்தைத் தாங்கிடுநற் கலையில் வல்லோன் வரையாது வறியவர்க்கு மகிழ்ந்து தானம்
வழங்கிடுநற் றேசிகனை வழுத்து வோமே.
251

Page 150
dflsbSogið Gafra)Go
தெல்லிநகள் மீதுதித்த சீலர் தம்முள்
தேசாபி மானமதிற் சிறந்த செல்வன் வல்லமைகள் பலவமைந்த மாண்பு மிக்கோன்
வாய்மையருள் நீதிபுகழ் வாய்க்கப் பெற்றோன் நல்லவனென் றிந்நாட்டார் நயந்து போற்ற
நன்முன்மா திரியதனை நாட்டி நின்றோன் கல்விதனி லிவற்கிணையாய்க் காட்டு தற்குக்
காசினியி லெவரினைநாம் காண்பேஞ் சொல்வீர்.
அகநிறைந்த அன்புடனே யருளும் வாய்ந்தோன்
ஆற்றல்பல வற்புதமா யமைந்த வண்ணல் சுகங்கருதா தெவர்க்குந்தன் தூய சிந்தை
தோன்றிடவே நன்மைபல தொடர்ந்து செய்தோன் மிகவரிய தேசநலம் விரும்பித் தன்னை
வெறுத்தென்றும் பிறர்க்குதவி வேண்டி நின்றோன் இகமதிலே யிவன்புகழை யெடுத்துப் பேச
எவர்க்கெனினு மியலாதிங் கீதோர் வீரே.
போதநிறை கிதரச மஞ்சரியைப் புனைந்த கோமான்
பூர்வீக முறைகளிலே பொருத்தமுறு மவற்றை யெல்லாம் திதெனவே தள்ளாது சீவியத்தி லமைத் திடவே
சிறார்களுக்கு நற்போதம் சீருடனே புகட்டுந் தீபம் ஆதரவிங் கெத்தனையோ சங்கத்திற் கார்வத் தோடும்
அளித்தவற்றை மேனிலைதா னடையச்செய் மேன்மை மிக்கோன் வேதன்முன் விதித்தபடி விழைந்துமு வித்யா சாலை
மேன்மையுற வாதரித்த மேன்மகனை மறக்கப் போமோ.
வெண்பா
கல்விக் கடலெனவே கற்றோர் கருதிடுமெம் செல்வன் துரையப்ப தேசிகன்றான் - பல்வரமும் பெற்றா னெனப்பலரும் பேசிடவிங் கற்புதமாய் உற்றா னரன்பதத்தை யோர்.
252

(guruibasi
தக்க பிரபுக்கள் சந்ததமும் போற்றுகின்ற நற்கா ரணத்தை நனியுணர்ந்து - மிக்கபுகழ்த் தெல்லி நகரின் திலகமென வேதிகழ்ந்த நல்லவர்க்கு ஞாபகமிந் நாள்
கட்டளைக்கலித்துறை
அன்புடன் நேர்மை யறிவுநல் வீர மகம்நிறைந்த இன்பமெய் கொண்ட வெழிலுடன் சிந்தையி லேற்றதனாற் பொன்பொலி நெஞ்சம் பொருந்துந் துரையப்ப புண்ணியவான் தன்னக ணமைந்த தகைமைகள் யாரிங்குத் தாங்கினரே
தேசாபி மானந் திகழ்ந்தநற் றேசிக சீலனது நேசங் கவர்ந்தநன் நேரிழை யாளுக்கும் நித்திலம்நேர் மாசற்ற புத்திர மாமணி கட்கும் மனமுவந்த ஆசியுங் கூறி யறைகுவம் நன்றி யனுதினமே
253

Page 151
கீதரசமஞ்சரிமலர்
சற்று கவிகள் உடுப்பிட்டி பரீ அ. சிவசம்புப்புலவரவங்கள் சொல்லியது.
உரைகொண்ட சுவையொடு பொருட்சுவை வளஞ்செறிந்
துற்றிடு மிதோப தேச மொன்றிடுங் கிதரச மஞ்சரி படிப்பவ
ருளங்கொள வுவந்து ரைத்தான் தரைகொண்ட வரசருத் யோகநெறி நிலைநின்ற
தனதனரு ளம்ப லவரோ தயனியற் றியதவத் துற்றபுத் திரனுண்மை சாந்தமாம் பணிபு னைந்தோன்.
விரைகொண்ட பூம்பொழி லுடுத்திடுந் தெல்லிநகர் மேவிடுங் குரவர் பெருமான்
மேதக்க வங்கிலோ கலைமுற்றும் விரிவாக
விதியுளிக் கற்ற நிபுணன்
வரைகொண்ட தோற்றமலி நல்லவர்கள் சபைநடு வயங்குமா னிக்க ரத்நம் வடிதமிழ்க் கலையுணர்வு வாய்ந்தவன் கங்கைகுலம்
வந்ததுரை யப்ப வேளே.
254

காற்றுகவிகள் யாழ்ப்பாணநகர உவெஸ்லியன் சபைப் போதகள்
கனம் ஜே. த. அப்பாபிள்ளை ஐயம் அவர்கள்
சொல்லியது. ஆசிரியவிருத்தம்
பூமேவு புலவரா மளியின முரன்றுசற்
போதமது வுணல்கா முறிஇப் புக்கலம ருந்தலைமை பொலிபுண்ய மெனுமலர்ப்
புனிதநறு மாலை யென்கோ .
நாமேவு கலைமகன லங்கிளர் சதானந்த
நடனமி டரங்க மென்கோ நவவிரச வுல்லாச சாகித்ய சம்பிரம
நண்ணிடு விலாச மென்கோ.
பாமேவு சொற்சுவை பொருட்கவை தமக்குநிகள் பாற்கடலி னமுத மென்கோ பண்ணைவளர் செந்நெல்புடை துன்னியுயர் கன்னலின்
பண்புறநி மிர்ந்து முகில்தோய்.
காமேவு தெல்லிநக ரருளம்ப லக்குரிசில்
காதலன் துரையப் பனாங்
கவிராஜ னுரைசெய்த கீதரச மஞ்சரிக்
கவினெலாங் கருதி டுகினே.
O
சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் தலைமைத் தமிழ்ப்பண்டிதர்
τόλστο வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியவர்கள் பீ. ஏ. சொல்லியது.
GleissirIIIr
விரையப்பா டுஞ்சீர் மிகப்படைத்த தேலர் துரையப்பா பிள்ளையெனுந் தோன்றல் - புரையப்பா லெஞ்ச வெழிலிகல யாத்தனனே கிதரச மஞ்சரிநன் னுலை மகிழ்ந்து
255

Page 152
சிந்தனைச் சோலை
அபிதானகோசம் என்னும் நூலின் ஆக்கியோன்
வண்ணாய்பண்ணை பரீ ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் சொல்லியது.
கட்டளைக்கலித்துறை
நாவுக் கினியது கேள்விக் கினியது நாட்டுதமிழ்ப் பாவுக் கினியது பண்ணுக் கினியதெப் பாலவரும் மேவற் கினிய துரையப்ப பாவலன் மிக்கிசைத்த வாவற் கினிய வீதகித மஞ்சரி யானதுவே
வயாவிளான் பரீ க. வேலுப்பிள்ளையவர்கள்
சொல்லியது.
பாடவமுதிர்ந்தகழ காலயமலிந்தகுழ
காலயமிலங்குவீனா
பானகபுரங்கொண்முடி யானதெல்லியம்பதியி
னானகுணமுண்டவுசித
பம்புதவழும்பல வலங்கிருதசொங்கொளரு
ளம்பலனுறும்ப்ரமுதித
பப்பரதவப்ரபல சுப்ரசுதனொப்பிறுரை
யப்பபெயரைத்தரியரி,
ஏடனைதரங்கிளய மாரியமருந்தமிழி
லேறுமதிகொண்டசுடரம்
ஏதிலரிடத்துமிகு தாழ்மையெனுமக்கிளவி
யேயனுபவிக்குமுரவோன் ஏனையமத்தவரு மாசையொடுநத்துதமி
ழேகனவிதோபதேச
ஏகவசனங்கொடொரு கிதரசமஞ்சரியெ
னாமவதனம்புனைந்து
256

சாற்றுகவிகள்
தேடருபனோடுநவ ராகவமைவார்பரத
நூலின்முறைதேரிசைபொருள்
தேசுமொழியோசைமுத லாயவழகார்தலிலெ
ணலுபதமேயருளினான்
தேனுநிகரோவெனந னுாலுணருநாவலர்க
டேயமுழுதோதுபுகழத்
தேடியுயர்பாடகள்ச பேசர்முதலோருலகு
தேறுபெருஞானமலியும்.
பீடலருமாமணிக ளாமெனவுனேயமொடு
பேசியிவைபாடியுடலம் பேனுமிகுபூரிதம தாகியிதகிதசுக
பீடுபெரிதேயெனமரூஉம்
பேண்ணுறுசிறார்செவிக ளேறவவரீதிரச
பிரமெனமாலுறுவினைப்
பேறுனரவாரியர வீழநகராரினிய
பேறிதெனவோரிடைமினே.
யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியருளொருவரும் உதயதாரகைத் தமிழ்ப்பத்திராதிபருமான அலன் ஆபிரகாம் அவர்கள் பீ. ஏ. சொல்லியது.
நிலைமண்டிலவாசிரியய்பா
திருவள ரிலங்கா சிரமென யாண்டும் பெருவளம் பொலிந்து பிறங்குயாழ்ப் பாணச் சீருறை நாட்டின் திலதமே யாகும் ஏர்பெறு தெல்லிநல் லெழில்நகள் வாசன்
257

Page 153
சிந்தனைச் சோலை
மேழிப் பதாகை விளங்குவே ளாளர் சூழுநன் மரபு துலங்குநற் பாக்கியம் அட்டத்திக் கெங்கனுை மழிவுறா நற்புகழ் எட்டிய வேளரு ளம்பல முதலியார் புரிதவப் பேறாய்ப் புவிழிசை யுதித்து அரியநற் றழிழோ டாங்கில முனர்ந்தோன் பெட்புறு மாணவர் பேணுநற் கலைகளை நட்புட னோது நலங்கிள ராசான் செவியமு தாகச் செழும்பொருண் மதுரக் கவிமழை பொழியுங் கவின்மிக வுடையான் திருந்திய கலைஞர் சிறந்தபா வலர்புகழ் அருங்கலை யுணர்துரை யப்பநற் பாவலன் சிந்தைக் கினிய செவிக்குவாய்க் கினிய சந்தவின் பம்நிறை சங்கீத மெட்டுகள் சொன்னயம் பொருணயம் சுகிர்தவின் னிசைநயம் பன்னயம் விளங்கு பதகிர்த் தனங்களால் முந்துறு நிதி முறைகலை யமைத்துச் செந்தமிழ்ச் செல்வி சிறந்து நடஞ்செயக் கிதமஞ் சரியெனக் கிளந்தஞா னப்பிர போதநன் மாலை புனைந்துசூ டினனே.
O
அளவெட்டி வைத்தியர் பரீ அ. கதிரித்தம்பியவர்கள் சொல்லியது.
கட்டளைக்கலித்துறை
பூமாது சேர்தெல்லி மாநகள் வாழ்ந்த புனிதகுணச் சீமா னருளம் பலஞ்சேய் துரையப்ப செல்வனுயர் கோமான்சங் கித ரசஞ்சேரு மஞ்சரிக் கொள்கடலாம்
பாமாலை மாரி பொழிந்தானன் மக்கட் பயிரினுக்கே.
O
258

dâağ47&fullDG%567f7f7
opo6/76roup
- நீதிபதி பூரீமாந் கு. கதிரைவேற்பிள்ளைத்துரை அவர்கள்
இதோபதேச கீதரசமஞ்சரியென்னும் இச்சிறுநூலை இயற்றிய பூரீ அருளம்பலம் துரையப்பாபிள்ளையவர்கள் கேள்விக்கிசைந்து இம்முகவாசகத்தை எழுத நான் முயன்றது தமிழ்நாட்டவர்க்குச் சற்புத்தி புகட்டி, காலவிருத்திக்கும் தேசநயத்திற்குமேற்ற சன்மார்க்க மான விஷயங்களில், சிறுவரும் விளங்கத்தக்க செம்பாகமான பாஷை யில் கேட்போர் செவிக்கின்பம்பயக்கத்தகும் மதுரமான ராகங்களில், சொற்சுவை பொருட்சுவை செறிந்த இக்கீர்த்தனா மாலையை இயற்றித் தம் புலமையின் முதற்பலமாய் வெளிப்படுத்தும் பாலியப் புலவரைத் தைரியப்படுத்த வேண்டுமென்னும் விருப்பத்தினாலேயே,
நமது தேசத்துப்புலவர் சன்மார்க்க விஷயங்களைச் சார்ந்த கீர்த்தனங்கள் இசைப்பாருளராயினும் ஒரோர்மார்க்கத்தோடு சம்பந் தப்பட்டனவாய் அல்லது நரஸ்துதியோடு கலந்தனவாயன்றிப் பெரும் பாலும் இசைத்தாரல்லர். ஆனால் இம்மஞ்சரியில் இசைக்கப்பட்ட கீதங்களோ சர்வசமயிகளும் ஒத்த உளத்தினராய்ப் பாடக்கூடிய கீர்த்தனைகள். தாம்பெற்ற அங்கிலோ தமிழ்க்கல்வியறிவின் பய னாய்த் தேச நன்மைக் கேற்ற சிறந்த தேர்ச்சிக்குரிய கருத்துக்களைக் கீர்த்தனங்கள் மூலமாய் இந்நூலைச் செய்தவரே முதன்முதல் வெளிப்படுத்துகின்றாரென்று சொல்லலாம். இவரது முன்மாதிரி யாழ்ப்பாணத்திலுள்ள மற்ற வாலிபரையுமிவ்வகை நன்முயற்சிகளிற் கையிடச்செய்யுந் தூண்டு கோலாயிருக்குமென எண்ணற்பாற்று.
இதனகத்துக் கீதங்கள் சாமானிய பதங்களை யருங்கருத்துத் தோன்ற வெடுத்துத் தொடுத்து, எதுகைமோனை நெறி தவறாது சந்தவின்பமுறச் செய்யப்பட்டிருக்கின்றன.
பாடலும் பாடலிற் கவனிக்கப்பட்டிருக்கும் விஷயங்களு மொன்றி னுக் கொன்று குறையா விசேடம் பூண்டன. ஆன்ம நயத்திற்காய் 259

Page 154
சிந்தனைச் சோலை
நற்குண நற்செய்கைகள்”, “உண்மை", "பொறுமை" முதலிய விஷயங் களும், மனோவிருத்திக்காய் வாசித்தலின் இன்பங்கள்”, “அங்கிலோ கல்வி, தமிழ்ப் பாஷையின் மகத்துவம்” முதலிய விஷயங்களும், நமது தேசத்தவரிற் காணப்படுஞ் சில துர்ப்பழக்க வழக்கங்களின் கண்டன மாய் “வழக்காடலினால் வருந்தீமைகள்", "கடன்படல்", "சீதன வழக்கத்தின் தீமைகள்" முதலிய விஷயங்களும் தேவபத்திக்காய் ‘தெய்வவணக்கம்” என்னும் விஷயமும் பாராட்டப்பட்டிருக்கின்றன.
*கோட்டுக்குப் போகவேண்டாம்” என்னுங் கீதத்தில் வழக்காட லினால் வருந்தீமைகள் நன்றாய்க் காட்டப்பட்டிருக்கின்றன. இக் கீதத்திற் சொல்லிய கண்டனம் வாதி, பிரதிவாதிக்காக ஏற்பட்டு, அவர்களுடைய நியாயங்களை யெடுத்துச் சாதுரியமாகப் பேசி, உண்மைப் பிரகாரம் அமைந்த புத்தியோடு நீதிபதியின் மனத்திற் பதியச்செய்யும் நியாய துரந்தரனுக்கன்று, மெய் பேசுவதாற்றனது பட்சத்தான் அபசெயமடைவானென்று கண்டு, அவனைப் பொய்பேச விட்டு நீதிபதியை உண்மையை விளங்காவண்ணம் மயக்கித் தன் றொழிலுக்கீனம் வருவிக்கும் நியாயதுரந்தரனுக்கே தகும். அதுவே ஆக்கியோன் கருத்து.
தமிழ்ப்பாஷையின் மகத்துவம்’, ‘தமிழ்மாதின் பிரலாபம்? என்னும் விஷயங்களிற் பாடிய கீதங்கள் நமது சொந்தப் பாஷையாகிய தமிழை நன்கு மதிப்போர் யாவர்க்கும் மிக்க பிரீதியைக் கொடுக்கும்.
இப்படிப்பட்டவொரு நூலிலிடைக்கிடை பிறபாஷைகளினின்று திரிந்துவந்த சொற்கள் சிறுபான்மை விரவியிருப்பது விலக்கற் பால தன்று. அப்படியான சொற்பிரயோகத்திற் பாடுவோர்க்குங் கேட் போர்க்குமொரு சுவைபிறக்கும். கீர்த்தனைகளிலிடைக்கிடை பழ மொழிகள், உவமைகள், இனிய கதைகள் பரவியிருக்குஞ் சித்திரமும் அதினால் வருமினிமையுங் குறிப்பிடத்தக்கன.
நமது தேசத்தவர் விநோதார்த்தமாய் இராக சாதனை பண்ணும் வேளைகளில் சன்மார்க்கத்துக் கெட்டுணையேனுந் தகாத சிற்றின்ப கீதங்களுக்குப் பதிலாய் இந்நூலின் கீதங்களை அப்பியாசிப்பரேல் இன்பமும் பிரயோசனமு மடைவதோடு 'சன்மார்க்க விருத்திக்கு முதவிபுரிபவராவர்.
இப்புத்தகம் இளைஞர், முதியோர், கலாபிமானிகள், பரோ பகாரிகள், சன்மார்க்க நேசர், சங்கீத விநோதர் முதலிய யாவ ராலுமங்கீகரிக்கப்படவும், ஆக்கியோன் நோக்கம் நிறைவேறவும் பகவான் தமதருள் பாலிப்பாராக.
O
260

தீதுரசமஞ்சரி
poj6/60/7
- சாமுவேல் கற்சிங்கு துரையப்பாபிள்ளை தேலர் அவர்கள்
தமிழ் பேசும் பொதுமக்களுக்கு ஒழுக்கநெறிப் பாடல் களைக் கொண்ட இக்கவிமாலையை வழங்குவதில் யான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இது எவ்வகையிலும் செவ்வி யல் இலக்கியம் என மதிப்பிடத்தக்கது அன்றாயினும் நல்ல தமிழ் இலக்கியம் என்ற வகுப்புக்குள் ஓர் இணைப்பாகச் சேர்க்கப்படக் கூடியது எனலாம். குரலிசையும் கருவி இசையும் தமிழர் உள்ளத்தைப் பெரிதும் கவரும் ஆற்றல் வாய்ந்தவை என்பது இடையீடின்றித் தொடர்ந்து கூறப்படும் நன்கறியப்பட்ட உண்மையாகும். இது குறித்து ஒவ்வொரு தமிழனும் உயர் பெருமை அடைய வேண்டும். இசையோடு யாப்பியலும் இணைந்து செல்லும் சிறப்பியல்பான பண்பு பெருந்தொகையான செய்யுள் இலக்கியங்கள் தமிழில் தொடர்ந்து நிலைத்திருப் பதற்குக் காரணமாக அமைந்துள்ளது. உலகின் பண்பட்ட பண்டைய அல்லது நவீன மொழிகளில் மிகச் சிலவற்றிலேயே தமிழைப்போல் மகிழ்ச்சியடையக் கூடிய இப்பெருஞ் சொத்து உண்டு என நான் நம்புகின்றேன்.
எனது இதோபதேச கிதரசமஞ்சரி என்ற இச்சிறுநூல் மூன்று
நோக்கங்களைக் கொண்டது. அவையாவன:
261

Page 155
ófssaprà Garmroco
1. தமிழ் பேசும் மக்களுக்குத் தமது அறநெறியை மாசு படுத்தாமல், எல்லோரும் பாடக்கூடிய ஒரு தொகைப் பாடல்களை வழங்குதல்.
2. எமது நாட்டுக்கு உடனடியாகத் தேவைப்படும் சில சீர்திருத்தங்கள்பால் மக்களின் கவனத்தை ஈர்த்து அவர் களை மேம்படுத்துதல்.
3. கற்றுவல்ல மக்களிடையே இசைக்கலையை வளர்க்கும்
ஆவலைத் தூண்டுதல்.
எனது இந்த நூலின் தன்மை இவ்வாறு அமைந்திருப்பதால் இதனை மக்களுக்கு வழங்குவது குறித்து நான் மன்னிப்புக் கேட்கவேண்டிய தேவை இல்லை என எண்ணுகின்றேன். இந்நூல், யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையிலாவது தனித்து வமானது என நான் உரிமை பாராட்டுகின்றேன். தனிநபர் புகழ்ச்சியாகவோ, சமயச் சார்புடையதாகவோ, நாடகத்துக் கேற்றதாகவோ பாடல்களைப் பாடும் மரபின் அடிச்சுவட்டி லிருந்து விலகி, இவ்விசைப் பாடல்களை யான் படைத் திருக்கின்றேன். மேற்குறிப்பிட்ட துறைகளில் தமது கவனத்தைச் செலுத்த என்னைவிடத் தகுதிவாய்ந்த அறிஞர்கள் உள்ளனர் எனவும் நான் கருதுகின்றேன். ஒருவரின் கவிதையாற்றல் இறைவனின் புகழ் பாடுவதற்குப் பயன்படுத்துவதே மேன்மை யானது என்ற எண்ணத்திற்குப் பதிலாக எனது சிந்தனை ஒழுக்கவியல் சார்ந்த, பொதுப் பயன்பாடுள்ள, மதவேறு பாடின்றி அனைவருக்கும் பயன்படக்கூடிய பொருள்களைப் பாடுவதே நல்லதென்று கருதியது.
ஒழுக்கநெறிசார் பாடல்களைக் கொண்ட இக்கவி மாலையை எவ்வாறு ஆக்க நேர்ந்தது என்பது பற்றிய சுருக்கமான வரலாறு வாசகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத் தும் என நம்புகின்றேன். இரு ஆண்டுகளின் முன், 1899இல் பல்கலைக் கழக மாணவராக இருந்த அமரர் சி.பி. குமார குலசிங்க மவர்கள், யாழ்ப்பாணம் வந்து தமது உறவினர்க ளோடும் நண்பர்களோடும் விடுமுறையைக் கழித்துக்கொண்டி ருந்தார்கள். தமது ஒக்சுபோர்ட்டுப் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடங்குவதற்காக இங்கிலாந்து செல்வதற்குமுன் என்னைச் சந்தித்த அவர்கள், இது போன்ற பாடல்களை எழுதுவது
262

supabGrgeog
தொடர்பாக என் கவனத்தை ஈர்த்தார்கள். சமூக, இலக்கியச் சார்புடைய பொருள்களில், தாராளமான மனப்பான்மையும் முற்போக்கு நோக்கும் கொண்ட இவ்வகையான இசைப்பாடல் களுக்கு யாழ்ப்பாணத்தில் பெருந்தேவை உண்டென்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் நான் முயலவேண்டும் என்ற தமது கருத்தையும் விருப்பத்தையும் அவர்கள் எனக்குத் தெரிவித் தார்கள். இளம் குமாரகுலசிங்க மவர்கள் தமது கருத்தை எடுத்துரைப்பதோடு மட்டும் நிறைவடைந்துவிடாது, சில பாடல்கள் யாப்பதற்குரிய பொருள்களையும் எடுத்துரைத்து, இப்பணியை நான் மேற்கொள்ளவேண்டும் என என்னைத் தூண்டினார்கள். மகிழ்ச்சி நிறைந்த, சூரிய ஒளி நிறைந்த ஒரு நாள் மாலைப் பொழுதில் நாம் இருவரும் எமது வீட்டிலிருந்து ஒரு கல் தொலைவிலுள்ள பசுமை நிறைந்த வயல்வெளியில் உலாவச் சென்றபோது, சிரமமும் உயர்வும் நிறைந்த இப்பணியைப் பொறுப்பேற்கும்படி அவர்கள் என்னைத் தூண்டினார்கள். புலமையில் தாழ்ந்த என்னைவிட ஆற்றலும் பட்டறிவும் மிக்க பல புலவர்கள் நிறைந்த நாட்டிலே என்னை ஒரு கவிஞனாக முன்னிறுத்தும் கருத்துத் தொடர்பாக என் நானத்தையும் நம்பிக்கையின்மையையும் நான் எடுத்துக் கூறியபோது, அந்த இளைஞர், “பழைய முறைமை மாறிப் புதியவற்றிற்கு இடமளிக்கும்” (பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல , கால வகையினானே' - நன்னூல்) என்று கூறினார்கள். "நவீன கல்வி பெற்ற யாழ்ப்பாணத்தில், சரியாக உங்களைப் போன்ற மனோபாவமும் புத்தி நுட்பமும் கருத்துக்களுமுடைய ஒரு கவிஞரையே புதிய சமூகம் சுவைக்கத் தயாராக உள்ளது. நம்பிக்கை இழக்காதீர்கள். உடனே பணியைத் தொடங்குங்கள்" என்று கூறினார்கள்.
ஆற்றல் மிக்க அவ்விளைஞரின் காலந்தவறிய இறப்பு எங்கும் பொருந்துன்பத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அதனை ஒரு பேரிழப்பாகக் கருதிப் பெரிதும் வருந்தினர். அவ்விளைஞரின் நேர்த்தியான சுவையுணர்வும், உயர்ந்த பண்புகளும் பெருந்தகைமைகளும் உயர்வுகளும் பற்றி நான் எனது நினைவுக் கவிதைகளில் புகழ்மாலை சூட்டியுள்ளேன். யாருடைய வேண்டுகோட்படி இச்சிறு நூலிலுள்ள பாடல்களை யான் இயற்றத் தொடங்கினேனோ, அவர்கள் இன்று நான் இதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள வேளையில்
263

Page 156
đlị95ånåở đơnēng)
என்னைப் பாராட்டவும் இதயபூர்வமாக வாழ்த்தவும் உயி ரோடு இல்லையே என்பது குறித்து நான் ஆழ்ந்த கவலை யடைகின்றேன்.
நிலையான கவர்ச்சியும் பல்வகைப்பட்ட தன்மையும் கொண்ட பொருள்களைத் தேர்வதில் அதிக அக்கறை செலுத்தப்பட்டுள்ளது. எமது சமூகத்தின் உயிர்நிலையான சில பண்புகளை அழிக்கும் தீமைகளின் உண்மையான தன்மை களைச் சுட்டிக்காட்டி நவீனத்துவமும் முற்போக்கும் கொண்ட யாழ்ப்பாணம் ஒரு கணமும் கூடத் தாமதிக்க முடியாத, முழுமையான சீர்திருத்தங்கள் குறித்துக் கூறுவதில் எவ்வித தயக்கமும் காட்டப்படவில்லை. முப்பத்திரண்டு தலைப்புக் களில், யாக்கப்பட்ட கீர்த்தனைகளில் எல்லாக் கருத்துக் களையும் தெரிவிப்பது இயலாதாகையால் எனது கவனத்தைப் பெரிதும் ஈர்த்த பொருள்களே ஆக்கத்துக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளன. இங்குள்ள கவிதைளில் தெரிவிக்கப்பட்ட உணர்வுகள் தொடர்பாகக் கருத்து வேற்றுமை காண்போர் என்மீது பற்றும் அநுதாபமும் கொள்வதாலேயே அவ்வாறு செய்வர். அவை பெருமையும் உண்மையும் கொண்ட இதயங் களின் சின்னங்களாகும்.
இப்பணி தொடர்பாக எனக்கு ஏற்பட்ட ஒரு கடினமான விடயம் பண்களைத் (இராகம்) தேர்ந்தெடுப்பதாக இருந்தது. ஒவ்வொரு தமிழ்க் கவிஞரும் இதனை உணர்ந்து, என்மீது அநுதாபம் காட்டுவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன். யாழ்ப்பாணத்தில், எமது முன்னோர் பெரிதும் விரும்பிய பழைய இசைகளில் இன்று பெருமளவு வெறுப்பு வளர்ந்து வருகின்றது. இந்திய நாடகக் குழுக்களின் பெருவருகையுடன் இசைச் சூழலை நிறைத்துப் பரந்து பெருகும் பார்சி, இந்துஸ்தானி முதலிய அயலவர் இசைகளில் யாழ்ப்பாணத்து இசைச்சூழல் அளவுக்கு மீறி ஈடுபாடு கொண்டுள்ளது. இது யாழ்ப்பாணத்தின் அற நெறிக்கு மாறானது என்று குறிப்பிட விரும்புகின்றேன். இந்த அயல்நாட்டு இசைகளை அறிந்ததாகக் காட்டிக் கொள்வோரில் தொண்ணுாறு வீதமானோர் எமது இசைமரபின் துய்மையையும் இனிமையையும் கெடுக்கின் றார்கள். அவர்கள் இந்திய இசைக் கலைஞர்களைப்போல அவற்றைச் செம்மையாகவும் அழகாகவும் இசைக்க முடியாது. இதனைக் கேட்பது வேடிக்கையாகவும் பரிதாபமாகவும் இருக்
264

மூகவுரை
கின்றது. இவ்வயல் நாட்டு இசைகளின் மனதை மயக்கும் ஈடிணையற்ற தன்மையையும் ஆற்றலையும் மென்மையான உள்ளத்தைத்தொடும் தன்மையையும் நான் மனமாரப் பாராட்டுகின்றேன். எனினும், எமது காதுகளிலே தேனாகப் பாயும் எமது பழைய இசைகள், வெளிநாட்டின் புதிய இசைகளுக்கு இடமளிக்கவேண்டும் என்று சிலர் எண்ணுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு மாறாக, எமது பழைய இசைகளுட் சில புதுவரவு இசைகளைவிட மனதை உருக்கும் எளிமையும் இயல்பான கவர்ச்சியும் மிகுந்தவை என்பது எனது உறுதியான கருத்து. எனவே, அவற்றை ஒதுக்கிவிட முடியாது. ஓர் இசைப்பாடல் ஏற்படுத்தும் உணர்வு, அது அமைத்துப் பாடப்படும் இசையிலோ (இராகம்), அதன் ஆக்கம் சார்ந்த அழகிலோ, உயர்விலோ அன்றி, அது இசைக்கப்படும் கலை நலத்திலேயே தங்கியுள்ளது என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும். அழகுற யாக்கப்பட்ட பாடல்களுட் பல இசைக் கலைஞரின் திறமையின்மையால் கேட்கும் சுவைஞரின் காது களிற் கர்ணகடூரமாக ஒலிக்கக்கூடும். ஆகவே, பழைய இசைகளைப் பாராட்டுவோரும் புதிய இசைகளை வியப் போரும் மனநிறைவு அடையும் வகையில் இசைகளைப் பழைய, புதிய இசைக் கோவைகளிலிருந்து தேர்ந்தெடுப்பது பொருத்தமானது என்று கருதினேன்.
கலைகளில் மேன்மை மிக்கதும் மிகுந்த இன்பமூட்டுவதும் வானுலகத் தேவதைகளின் சஞ்சலமற்ற பணியுமாகிய இசைக்கலையில் இந்நூல், இதன் வாசகர்களின் உள்ளத்தில் விருப்பத்தை ஏற்படுத்தி, மேம்பாடுறச் செய்யுமாயின் அது குறித்து நான் உண்மையில் தாராளமான மனநிறைவு அடை வேன். இசையை ஒரு கலையாகப் பயில்வதில் எமது மக்களி டையே வெளிப்படையாக் காணப்படும் ஆர்வமின்மை குறித்து நாம் வருந்துவது தவிர்க்க முடியாததாகும். தமிழ் இசைப் பாடல்களை உணர்வோடு பாடக்கூடியோர் இந்த நாட்டில் மிக அரிதாகவே உள்ளனர். இசையை ஒரு நுண்கலையாகப் பயில்வதில் யாழ்ப்பாணத்திலுள்ள கல்வி கற்ற மக்கள் உறுதியோடு முன்வரும் வரை இத்துறையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படும் என யான் கருதவில்லை. மேல்நாட்டி னரைப் போல் ஒவ்வோரில்லத்தினரும் இசையை மகிழ்ச்சி யின் குறியீடாகக் கருதும் வரையும் பெருந்தகைகள் இசை யில் ஈடுபடுவது வெட்கப்படத் தக்கதெனக் கருதி, சின்னமேள
265

Page 157
சிந்தனைச் சோலை
மங்கையரிடமும் மதிப்பற்ற பிறரிடமும் இதனை ஒப்படைத்து இதனைத் தாழ்வடையச் செய்யாது, ஒவ்வொருவரும் தத்தமக் குரிமையான பணி எனக் கருதி மேற்கொள்ளும் வரையில் இத்துறையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை.
இலங்யிைலும் இந்தியாவிலும் உள்ள இசைக் கலை ஞர்களிடம் கூட ஒரு பெருங்குறைபாடு உண்டு. அதாவது, அவர்களுடைய இசைக் கச்சேரிகளில் நளினம் (இங்கிதம்) முழுமையாகக் காணப்படுவதில்லை. இசைக் கலையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டோர் இசைக்கச்சேரி நிகழ்த்தும்போது அவர்களுடைய குரூரமான முகத் தோற் றத்தையும் (பாவம்) விகாரமான அங்கசேட்டைகளையும் நான் வெறுப்புடன் நோக்கியிருக்கின்றேன். இசையின் இன்சுவைக்கு மாறாக அவர்கள் உடன்பாடாகச் செய்யும் குற்றம் பற்றி அவர்கள் எதுவும் நினைப்பதில்லை. வேறொரு வகையில் உயர்வாகக் கருதும் தமது இசையையே அவர்கள் அதைக் கேட்கும் சபையோருக்கு அளிக்கின்றனர்! வாயை மிக அகல மாகத்திறத்தல், வலியால் வருந்துவோர் போலத் தலையையும் கை, கால்களையும் அசைத்தல் என்பன மூலம் துக்கம் தோய்ந்த தோற்றத்தோடு விபத்துக்குள்ளாகி வருந்துபவர்போல அல்லது அழுபவர்போல முன்னும் பின்னும் அசைந்து விகாரமான தோற்றப் பாவனையோடு பாடுபவர் பண்பட்ட மனிதரின் சுவைக்கு எதிராகப் புரட்சி செய்கின்றனர். திறமையுள்ள இசைஞராக (பாடகராக) விளங்க விரும்புவோர் இவற்றி லிருந்து தம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.
இந்நூல் வெளியீட்டு வாய்ப்பைப் பயன்படுத்தி அமரர் யே. ஆர். ஆணல்டு (ஆ. சதாசிவம்பிள்ளை) அவர்களுக்கு எனது வணக்கத்தையும் அன்பையும் மதிப்பையும் தெரிவிக்கும் நோக்குடன் இந்நூலை அவர்களுக்கு எனது உளந்தாழ்ந்த காணிக்கையாகச் சமர்ப்பிப்பது மிகவும் பொருத்தமானதென எண்ணுகின்றேன். அவர்கள் பெருந்தன்மையும் வளமும் மிக்க தமிழ் இலக்கியங்கள் மூலமும் ஒழுக்க நெறிப் போதனை மூல மும் அரைநூற்றாண்டுக்கு மேலாகப் பணியாற்றி வெற்றி யடைந்ததன் மூலம் யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் தமது பெயர் எல்லோருக்கும் தெரியும்படி விட்டுச் சென்றுள்ளார். தமிழ் இனத்தவர் தம் இதயங்களில் அவருக்குப் புனிதமான ஓர் இடத்தை அளிப்பது பொருத்தமானதாகும்.
266

முகவுரை
இந்நூலுக்குத் தமிழில் முகவாசகம் வழங்கிய ஒய்வு பெற்ற நகர்காவல் நீதிவானாகிய சி. டபிள்யூ (கு.). கதிரைவேற்பிள்ளை அவர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் புகழ்பெற்ற கல்விமானும் இப்போது தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் மிகப்பெரும் பணியாகிய தமிழ் அகராதித் தொகுப்பில் செலவிடும் நிலையிலும் அவர்கள் எனது இச்சிறு நூலைப் படிக்கவும் இதனை நல்லதெனத் தெரிவிக்கும் தமது தூய்மையான முகவாசகத்தை (Introduction) அளித்தமையும் பெறற்கரும் பேறாகும். இது இந்நூலுக்கு ஓர் அணிகலனாகும்.
முடிவாக, தமிழர் மனைகளில் மகிழ்ச்சியையும் தூய்மை யையும் ஏற்படுத்தும் இச்சிறிய முயற்சி, நல்ல ஒழுக்க நெறிகளையும் தேவதைகளும் விண்ணுலகும் நன்கொடையாக வழங்கிய இசையையும் விரும்பும் அனைவரும் இந்நூலை மனநிறைவோடு வரவேற்பர் என நம்புகின்றேன்.
இந்நூலுக்கு இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கவேண்டும் என்பதும் அவனருளால் தமிழ்பேசும் மக்கள் அனைவருக்கும் பெருநன்மைதரும் கருவியாக இந்நூல் அமையவேண்டும் என்பதும் எனது ஆர்வம் நிறைந்த வணக்கமாகும்.
இத்தமிழ் ஆக்கம் பாவலர் எழுதிய கீதரசமஞ்சரி ஆங்கில (yp35GAGOÐJuifsið öðypmäsasLDTg5b. (p6oid: KEETHARASA MANJARI, PREFACE, S.H.T.TAYLOR, Tellippalai, Jaffna. October 17, 1901.
267

Page 158
|- |- |-||
|
|-