கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண் 1997 (2.3)

Page 1
"தூக்கியெறியப்பட மு
உங்கள் முன் பிரசன்
 

bடியாத கேள்வியாய் ன்னமாயுள்ளேன்”

Page 2


Page 3


Page 4


Page 5
GLIG
GASTJ55). III
சூரியா பெண்கள் அட மட்டக்க

ga).III, 1997
விருத்தி நிலையம் களப்பு

Page 6
பெண் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிை 27A, லேடி மனிங் ட்ரைவ், மட்டக்களப்பு.
The Woman - A journal publishe Suriya Women's Development Cer 27 A, Lady Manning Drive, Batticaloa.
கெளரவ ஆசிரியர் :
நதிரா மரியசந்தனம்
Cover Design : Nadira Back side Painting : Arunthathy
Printed by:
Karthikeyan (Pvt) Ltd., 50 1/2, Galle Road, Colombo - 06.
ଘ୩ ଜoଇ୬ : 30/-

லயத்தின் சஞ்சிகை.
d by tre,

Page 7
-
வாசகர்களுடன்.
சூரியா பெண்கள் அபிவிருத்தி சஞ்சிகையின் நான்காவது இதழ் வெ6
பெண்நிலைவாதம், பெண் வி கருத்துக்களும் பரவலாக இன்று எ யதார்த்தத்தில் சமூகம் இன்னும் பெரிய கூறலாம். குறிப்பாக எமது சமூக ரீதியாகவும் பெண்கள் ஓரளவு சம உரிமைக்கான தீர்மானமாக இதனைக் படுத்தப்பட வேண்டியதொன்று. ஏனெ இன்னும் எமது சமூகத்தில் நிலவும் எவ்விதத்திலும் மாற்றியமைக்கவில்ை
பொதுவாகவும் (மத, கலாசார, நடைபெறுகின்ற போர்ச் சூழல் க வகைகளிலும், பாதிப்புக்குள்ளாகி வரு பகுதிகளில் யுத்த அனர்த்தங்களால் ெ (பாலியல் வன்முறைகள், கணவன் இழந்த நிலை, பால்ரீதியான ஏனைய குறிப்பாக கிழக்குப் பகுதிப் பெண்க நேரடியாகக் கண்டு அனுபவித்த சந்தர்
இந்நிலைமைகளால் இங்கு பல குடும்பத்தின் பிரதான உழைப்பாளர் இவர்களது உழைப்பின் பெறுமானம் இந்த இதழின் முன்னட்டைப் படங்க இருக்கும் பெண்களின் உழைப்பையே

நிலையத்தின் வெளியீடான 'பெண் ரிவருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
டுதலை பற்றிய சிந்தனைகளும், ல்லா மட்டத்திலும் பேசப்பட்டாலும், மாற்றங்களைப் பெறவில்லை என்றே த்தில் கல்வி ரீதியாகவும் தொழில் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், சம கொள்ளலாமா? என்பது கேள்விக்குட் னில் கல்வி, தொழில் வாய்ப்பு என்பன ஆண்மேலாதிக்கக் கருத்து நிலையை ல என்றே கூறவேண்டியுள்ளது.
பாரம்பரிய ரீதியாக), இன்று நாட்டில் ாரணமாகவும், பெண்கள் பல்வேறு கின்றனர். குறிப்பாக, வடக்கு கிழக்குப் பண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்
அல்லது குடும்ப அங்கத்தவர்களை பாகுபாடுகள், வறுமை) அளப்பரியன. ரின் இத்தகைய அவலநிலைமைகளை L’ULUTĖJUSIGT LUGO.
பெண்கள் பொருளாதார ரீதியாகக் நிலைக்கு மாறியுள்ளனர். இருப்பினும் எடைபோடப்படாததாகவே உள்ளது. ள், கிழக்கில் குடும்பத்தலைவர்களாக
வெளிக்கொணர்ந்துள்ளன.

Page 8
இவ்வாறு சமூகத்தின் பல்வே வாழும் பெண்களின் நிலைமைக6ை பாகுபாடு சார்ந்த பிரச்சினைகளை எ தார ரீதியாக வலுவுள்ளவர்களாக உரு மாகும். இதன் முன்னெடுப்பாகவே அமையும்.
பெண்கள், தமது சகித்துக் செ யதார்த்த பூர்வமாக - எழுத்தினூ ஆணதிகாரத்துவப் போக்குடைய இன்றைய நிலையில் சில பெண்க கால்பதித்துள்ளனர். இத்தகைய பெண் தொடர்ச்சியான பெண்ணெழுத்தா6
பெண்ணின் கடமையாகும்.
பெண்ணடிமை முறையை ஒழித் வதே பெண்நிலைவாதத்தின் முதன் கருத்துக்களையும், சிந்தனைகளை (கவிதை, கட்டுரை, சிறுகதை) ஓரள6 நோக்கத்தை ஓரளவாவது பூர்த்தி செ
பெண்ணின் தொடர்ச்சியான ஆக்கங்களை உங்களிடமிருந்து ஏற உங்களுடைய ஒத்துழைப்பு பெண் என எதிர்பார்க்கிறோம்.

றுபட்ட ஒடுக்குமுறைத்தளங்களிலும் ா வெளிக்கொணர்வதும், பால்நிலைப் திர்கொள்கின்ற பெண்களை பொருளா நவாக்குவதும் 'சூரியாவின் செயற்திட்ட பெண்ணின் தொடர்ச்சியான வருகை
ாள்ள முடியாத வாழ்வனுபவங்களை டாக - வெளிப்படுத்த முடியாதவாறு சமூகம் தடையாக உள்ளது. ஆனால் 1ளாவது ஓரளவு எழுத்துத் தளத்தில் ண்ணெழுத்தாளர்களை ஊக்குவிப்பதும்,
ார் பாரம்பரியத்தை உருவாக்குவதும்
து சமத்துவமான சமூகத்தை உருவாக்கு ாமை இலக்கு என்பதால், இதுபற்றிய யும் பிரதிபலிக்கக்கூடிய ஆக்கங்கள் வு இங்கு தரப்படுகின்றன. இவை எமது ய்யும் என நம்புகிறேன்.
வருகைக்குப் பொருத்தமான, தரமான
றுக்கொள்ளத் தாயாராயிருக்கிறோம். ணின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்
-ஆசிரியர்

Page 9
பெண்களும்
-விவரங்கி ஏ. தேவ
பாலியல் தேவை என்பது, மனித னதும் இயல்பூக்கமாக இருக்கின்ற பொறுத்தவரை, பாலுறவு என்பது தன தனமான செயல் என்றோ, அல்லது ட கொள்ளமுடிகிறது. இது ஏன்? எப்படி,
சாதாரணமாக பாலியல் உணர்வு ச டையே எவ்வாறு உள்வாங்கப்பட்டிருச் சாதாரண தமிழ்ப் பெண்களைப் பந்தத்தினால் தான் சாத்தியமாகிறது. தி கூட மிகவும் கீழ்மட்டத்திலேயே உள்ள நேரிய முறையில் இல்லாததால், முரளி முனைகையில் பெண்களுக்கு கலாசார விடுகிறது. இவற்றையெல்லாம் விட பெண்கள் தெரிந்து கொள்வதற்கு திை அந்தக்கைகொடுப்பே கையை நசுக்குவ
உதாரணமாக தமிழ்ச் சினிமாக்கை உங்களுக்குக் கொடுத்தேன்' என்ற வ பெண்களின் பாலியல் தேவை கேள்வி தில் இணைந்த பெண்களும் என்னை உள்ளனர். ஏன்? பாலியல் தேவை பெ என்பதை தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கெ எண்ணுகிறது. ஏனெனில் கலாசாரம் ரீதியான கட்டுக்கோப்பை நிலைநிறுத்த சார்ந்து அச்சப்படுத்தியோ அல்லது கூ
பெண்கள் பாலியல் பற்றிப் பேசுவ

பாலுணர்வும் க் கொள்வதன் அவசியமும் 656Tif
3ர் உட்பட ஒவ்வொரு விலங்குகளி
போதும், தமிழ்ப் பெண்களைப் க்கு நடக்கவிருக்கும் ஒரு அசிங்கத் பயங்கரமான அனுபவமென்றோதான் இப்படி ஆகியது? கருத்தியல் ரீதியாக தமிழ்ப் பெண்களி கிறது?
பொறுத்தவரை பாலுறவு திருமண ருமணத்திற்கு முன் அது பற்றி அறிதல் து. அதைப் பற்றி அறிந்து கொள்ளல் ண்பட்ட வகையில் அறிந்து கொள்ள ரீதியில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி Fாதாரணமாக, பாலியல் உறவு பற்றி ரப்படங்கள்தான் கைகொடுக்கின்றன. தாகத்தான் உள்ளது. ா எடுத்துக் கொண்டால், "என்னையே சனம் கவனத்தை ஈர்க்கிறது. இங்கு க்குறியாகி விடுகிறது. திருமண பந்தத் யே கொடுத்தேனே' என்பதாகத்தான் ண்களுக்கு இல்லையா? இருக்கின்றது ாள்ள கூச்சப்படுகிறது. அசூசையாக பண்பாடு என்பன ஒழுக்கவியல் விளைந்ததில் பெண்களை பாலியல் ச்சப்படுத்தியோ தான் வைத்துள்ளது.
தே பாவம் என்றளவிற்குத்தான் சமூக

Page 10
நிலைப்பாடு உள்ளது. இதனால் தான் இ களுக்கு ஆளாகி அது பற்றிய பிரக்ை டாகவே எண்ண வைத்துள்ளது.
சிறு வயதிலிருந்தே பெண் குழந்ை வொரு அச்சத்தால் பாதுகாக்கப்படுகிற ஏன் என்பதை பெண் குழந்தை 6 திரைப்படங்களில், கதைகளில் பாலிய அதாவது 'பாலியல் பலாத்காரத்திற்கு செய்தி பெண்களுக்குக் கிடைக்கிறது. இ பற்றிய எண்ணக் கருவிற்கும் தூபமிடு எந்தவொரு தமிழ்ப் படத்திலா இன்பகரமானதாக இரு உயிர்களின் யிருக்கிறார்களா? அப்படிக் காட்ட நே குத்தப்பட்டு நீக்கப்பட்டு விடும். ஆன அவளது ஆடைகளைக்களைய முற்ப முனைவதையும் அநேகபடங்கள் காட் அத்துடன் பாலாத்கார முத்தம் ெ காட்டல் - இப்படி. இப்படியான க எண்ணப்பாட்டுக்குள் ஆட்படாமல் தொடர்புகள் மூலம் அதுபற்றி அறிந்து யான நிகழ்வு, பயங்கரமானது என்ற இதன் மூலம் பாலியல் பற்றிய உண எடுத்துக் கொள்கிறாள். பெண்ணின் இ கரமானது என்றும், அசிங்கத்தனமானது தீர்ப்பதற்காகவே இது பயன்படுகிறது 6 மீறி ஏற்றுக் கொள்கிறாள்.
திருமணத்திற்கு முன் நிலைமை பின்னாவது ஒரு பெண் பாலியல் ே றாளா? பாலியலுக்குரியவளாக இருக்கி பெண்ணாக, அனுபவித்த பெண்ணாக பாலியல் தேவை பற்றி அறிந்து செ விடுகிறாள். பாலியல் தேவையைப் பூர் பத்தி சாத்தியமாகிறது. ஆனால் பெண் திக்குத்தான் பாலியல் தேவைப்படுகிற பாலியல் திருப்தி என்பதற்கு மேலா கின்றனர். அதன் மூலம் திருப்தியும் அ பாலியல் தொழில் புரியும் பெண்

இன்று பல பெண்கள் பாலியல் ஏமாற்று ஞயை தமக்கு எதிரான ஒரு செயற்பா
தைகள் என்னவென்று தெரியாத ஏதோ ார்கள். வளரும் பருவத்தில் பாதுகாப்பு விளங்கிக் கொள்ள முனைகையில் பல் விபரிப்புகள் விடை கூறுகின்றன. ந நாம் உள்ளாக்கப்படுவோம்' என்ற இதுவே, மறுபக்கம் பார்த்தால் பாலியல் கிறது எனலாம். வது பாலுறவுக் காட்சியை மிகவும் உணர்வு ஒன்றித்த நிலையாக காட்டி ர்ந்தால் அது ஆபாசம் என்ற முத்திரை னால், ஒரு பெண்ணைப் பிடித்திழுத்து டுவதையும் பாலியல் உறவு கொள்ள சிகளாக்கிக் கொள்கின்றன.
பண்ணை அடிமைப்படுத்தி விடுவதாக ாட்சிகள் ஏற்கனவே பாலியல் பற்றிய இருந்த பெண் இப்படியான செய்தித் கொள்கையில், அது ஒரு கொடுமை எண்ணங்களுக்கே ஆட்படுகிறாள். ர்விற்கு கருத்தியல் ரீதியான வடிவை இயல்பூக்கத்தையும் மீறி பாலுறவு பயங் து என்றும், எதிர்பாலாரின் இச்சையைத் என்றும் தன்னியல்புப் பாலுணர்வையும்
இப்படியென்றால், திருமணத்தின் தவையை உணர்ந்தவளாக இருக்கின் கின்றாளேதவிர பாலுணர்வை உணர்ந்த இருப்பது வெகு குறைவே, ஏனெனில் ாள்ள முன்பே குழந்தையை பெற்று த்தி செய்வதன் விளைவாக சந்ததி உற் ாணைப் பொறுத்தவரை சந்ததி உற்பத் து. அதாவது ஒவ்வொரு பெண்ணும் க தாயாக வேண்டுமென்றே விரும்பு
டைகின்றனர்.
ண்களின் நிலையை எடுத்துக் கொண்
2

Page 11
டாலும், அவர்கள் தமது உடலை விற்கிற எங்காவது உணர்வை விற்கிறார்கள் அவர்கள் பாலுணர்வை விற்கிறார்கள் எ
ஆகவே பெண்ணின் பாலியல் தே அதேவேளை ஆண்களின் பாலுணர்6ை யல் சார்ந்து பெண்களை நிலைநிறுத்திய புற உடல் அமைப்பை மட்டும் வைத்து ட கிடப்படுகிறது. அதாவது பெண்ணுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால்
கப்பட்டு கொலை செய்யப்பட்டாள் என்
இன்று மூன்று வயதில் இருந்து அ பாலியல் பலாத்காரத்திற்கும் பாலிய நிலையைப் பார்க்கும் போது பாலுண இருந்து பிறப்புறுப்பினை மட்டும் சார்ந்: தானிக்க முடிகிறது. அதாவது ஆண்களி யும் ஒரு கருவியை பெண்கள் வைத்துள் சார்ந்த பாலியல் நிலைப்பாடாக உள்ளது இந்நிலைகளால் மேலும் மேலும் ெ இயல்பூக்கம் என்பதையே மறந்து எதிர் நிற்கும் அல்லது அதைப்பூர்த்தி செய்யு படுகிறாள்.
உண்மையில், திருமணத்திற்கு முன் வெறுப்பும், அச்சமும், ஆசூசையும், .ெ னால் தான் திருமணம் என்பது இதற்கு வது சாதாரண நிலையாக உள்ளது.
மேலும், பாலியல் பலாத்காரத்திற்கு திருமணம் செய்தல் வேண்டும் என்ட விளைந்தது. மிகப் பயங்கரமான நி6ை மீண்டும் அவனுடனேயே வாழ்க்கை கொள்ளுதல் என்பது பெண்ணின் பாலு ஏற்படுத்தப்பட்ட முடிவேயாகும்.
இத்தகைய நிலைப்பாடுகளால் பாலுணர்வு ஒரு இயல்பூக்க இன்ப உண இப்படி புரியவைக்க முடியாவிட்டா பயங்கரமானதாகவும் அசிங்கமானதாக தளவிற்காவது கலை, கலாசார நடைமுை
3

ார்கள் என்பது தான் கூறப்படுகிறது. என்று கூறுவதுண்டா? அதாவது ன்று கூறுவதுண்டா? இல்லையே! வை இன்றும் உணரப்படாததாகவும் வத்தூண்டும் கருவியாகவுமே 'பாலி புள்ளனர். இன்னும் கூறப்போனால், பாலுணர்வைத் தூண்டும் நிலை கணக் பாலுணர்வு உடல் சம்பந்தப்பட்டே தான் இன்றும் கிருஷாந்தி கற்பழிக் று கூறிக் கொண்டிருக்கிறார்கள். றுபது வயது வரையான பெண்கள் 1ல் சுரண்டல்களுக்கும் ஆளாகும் ர்வு புற உடல் அமைப்பு என்பதில் ததாக மட்டுப்படுத்தப்படுவதை அவ ன் பாலியல் தேவையை பூர்த்தி செய் ாளனர். என்பது மட்டுமே பெண்கள் 5. பண்ணின் பாலுணர்வு நசுக்கப்பட்டு பாலாரின் இயல்பூக்கத்திற்கு துணை ம் ஒரு கருவியாகவே இனங்காணப்
அனேக பெண்கள் பாலியல் பற்றிய காண்டவர்களாகவே உள்ளனர். இத நத்தானா என அருவருத்துக் கொள்
ந உள்ளான ஒரு பெண் அவனையே து கற்புக்கோட்பாட்டு மாயையில் Uயில் பாலுறவைச் சந்தித்த பெண் நடத்தி பாலுணர்வைப் பகிர்ந்து ணர்வு பற்றியே சிந்திக்காத நிலையில்
எந்தளவிற்கு ஒரு பெண்ணிற்கு ர்வு என்பதை புரியவைக்க முடியும்? லும் கூட குறைந்தபட்சம் பாலியலை :வும் பெண்களை எண்ண வைக்கா றைகள் இருக்க வேண்டாமா?

Page 12
யுத்தமும்
கிழக்கில் குடும்பங்களின்
பெண்கள் யுத்தத்தின் விளை என்பது பொதுவாக ஏற்றுக் யாகும். யுத்த அழிவுள்ள பிரே கப்படுபவர்களாக மட்டுமன்றி எதிர் கொள்வதோடு தமது வேண்டியுள்ளது. கடந்த பதினெ உள்நாட்டு யுத்தம் பல பெண்க வருவாய் ஈட்ட உதவியை எதிர் அண்மையில் மட்டக்களப்பி சாமுவேல் அங்குள்ள பெண்கள் பற்றி எழுதுகிறார்.
வடக்கில் யுத்தம் பெருமளவு
இறப்புகளுக்கு காரணமாக இருக்கின் அகப்படுவோருள் குண்டு வீச்சு, விட போன்றவற்றின் மூலம் கொல்லப்படு தல் மற்றும் இனத்தெரியாதோரால் ெ பெண்களின் கடின உழைப்பையும் த மான அளவு குடும்பங்களை உருெ யானோர் இடம் பெயர்ந்தமையும் ெ மையும் இந்த யுத்தத்தின் மற்றுமொ இறுதியில் 1.2 மில்லியன் மக்கள் இ புள்ளி விபரத்தின்படி இந்த எண்ணி
 

பிழைப்பும்
பெண் தலைமைத்துவம்
குமுதினி சாமுவேல் இல் ஆங்கிலத்தில் வெளியான தப்பாடும் தேவை கருதி
வுகளை எதிர் கொள்கின்றனர் கொள்ளப்படுகின்ற உண்மை தசங்களில் நேரடியாகப் பாதிக் தம் ஆண்சகாக்களின் இழப்பை குடும்பச் சுமையையும் ஏற்க ாாரு வருடங்களாக நடந்துவரும் ளை இடம் பெயர்ந்தவர்களாக்கி, பார்த்திருப்பவர்களாக்கியுள்ளது. ற்கு விஜயம் செய்த குமுதினி எதிர்கொள்கின்ற பிரச்சினைகள்
ار
எண்ணிக்கையான பொதுமக்களின் றது. இவர்களுள் துப்பாக்கிச் சமரினுள் Dானத் தாக்குதல் எறிகணைத்தாக்குதல் பவர்களும், காணாமல் போதல், கடத் கால்லப்படுவர்களும் அடங்குவர். இது தலைமையையும் நம்பி வாழும் கணிச பாக்கியுள்ளது. பெரும் எண்ணிக்கை சாந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்ட ரு துக்ககரமான விளைவாகும். 1990 இடம் பெயர்ந்தனர். உத்தியோகபூர்வ க்கை அரைவாசியாகக் குறைக்கப்பட்
4.

Page 13
டுள்ளது. இவர்களுள் சிலர் நாட்டை வி மீள் குடியேறியும் உள்ளனர்.
அண்மையில் நாங்கள் மட்டக்கள் போது தொடர்ந்து கொண்டிருக்கும் ய அல்லது சகாக்களை இழந்த பெண்கை வும் தனியாகவும் சந்தித்தோம் - அ பொருளாதார ரீதியாக கீழ்மத்திய த வர்க்கத்தினராகவோ, அல்லது ஏழ்மைய அவர்களுள் பெரும்பான்மையோர் 35 15 வயதையே உடையோராகவும் இ பிள்ளைகளையும் வயது முதிர்ந்த தங்கி இவர்களுள் பலர் பிழைப்புக்காக தம மையால் அவர்களை இழந்த பின்னர் . லகப் பரிட்சயமற்றவர்களாகவும் பிள்: குரிய வருமானத்தை எவ்வாறு சம் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களை செல்வது, எவ்விதத்தில் அரசினால் வ எவ்வாறு உத்தியோகத்தர்களுடன் தெ ளைத் தெரியாதவர்களாகவும் இருந்தத
இறப்பின் அல்லது காணாமல் நெருங்கிய குடும்பத்தவர், உறவினர், காலப்போக்கில் இவர்கள் தமக்காக உழைக்க ஆரம்பித்தனர். அவர்கள் மு: சொத்துக்களான நகை, வானொலிப்ெ முதலியவற்றை அடகுவைக்குமிடே இப்பொருட்களை பணப் பற்றாக்குறை எஞ்சிய சொத்துக்களும் ஆண்களால் ெ வதற்காக விற்கப்பட்டன. அடுத்ததாக ளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. 6 படி உணவு உற்பத்தி முறைகளில் ஈ நெல்குத்துதல், அவல் தயாரித்தல், கரு உணவு வகைகள் தயாரித்தல், வாசன ஊறுகாய் தயாரித்தல் என்பனவாக இ மட்பாண்டத் தொழில், பாரம்பரிய கை தொழில்களும் மேற்கொள்ளப்பட்டன
A.

ட்டு வெளியேறியும், அதிகமானோர்
ாப்புக்கு மேற்கொண்ட விஜயத்தின் த்தம் காரணமாகத் தமது கணவரை ள வெவ்வேறு இடங்களில் கூட்டாக நேகமாக அவர்கள் அனைவரும். வகுப்பினராகவோ, உழைப்பாளி ான விவசாயிகளாகவோ இருந்தனர். வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களாகவும் ருந்தனர். அநேகமானவர்கள் இளம் யிருப்போரையும் கொண்டிருந்தனர். து கணவன்மாரையே நம்பியிருந்த அநாதரவாயினர். பலர் தாம் வெளியு ளைகளுக்கு உணவு, உடுபுடைவைக் பாதிப்பது, சந்தையில் எவ்வாறு மேற்கொள்வது, யாரிடம் உதவிக்குச் பழங்கப்படும் உதவியைப் பெறுவது, ாடர்பு கொள்வது முதலிய விடயங்க ாகக் கூறினர்.
போதலின் பின்னர் உடனடியாக
நண்பர்கள் உதவி செய்கின்றனர். பும் தம்மைச் சார்ந்தோருக்காகவும் தலில் அடைக்கலம் நாடுமிடம் தமது பட்டி, துவிச்சக்கரவண்டி, தளபாடம் ம எனக் கூறினர். அநேகமாக வினால் மீட்க முடியாமல் போகிறது. பறப்பட்ட கடன்களை மீளச் செலுத்து த் தம் பிழைப்புக்காக தமது திறன்க பருவாய் ஈட்டுவதற்காக வீட்டிலிருந்த டுபட்டனர். அவை பெரும்பாலும் வாடு தாயாரித்தல், விற்பனைக்காக னத் திரவியங்களைப் பொதியிடல், ருந்தன. அத்துடன் பாய் பின்னுதல், வினைப் பொருள் உற்பத்தி போன்ற சில பெண்களால் சிறிய கடைகள்

Page 14
அமைக்க முடிந்தது. இவை சிறிய மூலதனம் தேவைப்பட்டது. இம்முதலீட் தூரம் சென்று விறகு சேகரிப்பதிலும் செய்வதிலும் வீட்டு வேலை செய்வதிலு வீட்டுத் தோட்ட உற்பத்திகளை வி கொள்வனவு செய்து விற்பவர்களாகவு! அறுவடை போன்ற பருவகாலத்தொ ஈடுபட்டனர்.
இடம் பெயர்ந்த பெண்களுக்கு இத் கிடைப்பதில்லை. அவர்கள் முழுமை நிவாரணத்திலேயே தங்கியுள்ளனர். 6 என்பவற்றில் ஒரு பகுதியை மீள்விற்ப பதிலாக மரக்கறி எண்ணெய் சவர்க்கார றனர். பிள்ளைகளை மற்றவர்களுடை தினக்கூலிகளாகவும் வீட்டுப்பணியா உணவுப் பொருள் தயாரித்து விற்றனர் டிசைகளில் வாழும் குடும்பப் பெண்கள் தன்மை என்பவற்றைப் பொறுத்து வீ இவை அநேகமாக அதிக கவனமோ கிழங்கு அல்லது மரக்கறி வகையாக இ தமிழ், சிங்களப் பெண்களைப் பொறு காரணமாக தம் தொழில் வாய்ப்புப் இருக்கும் அதேவேளையில் முஸ்லிம் ெ அடிப்படைவாத தலைவர்களாலும் ! திணிக்கப்படுவதால் அவர்களது தொழ நிலவுகின்ற முரண்பாட்டின் தன்மையும் குழுப்பகுப்பும் முஸ்லிம் பெண்களை ம பிரதானமாகப் பேண வேண்டியவர் வழக்கம், தனிமை வாழ்க்கை, கட்டுட் கிழக்கில் முஸ்லீம் பகுதிகளில் பரவ கடந்த காலங்களில் குறைவான கட்டு இப்பொழுது பாரம்பரியங்களைப் பேன நம்புகின்ற சமூகத்தின் அடையாள திகழும்படியும் வேண்டப்படுகிறார்கள்.
இக்கட்டுப்பாடுகள் மறுபுறத்தில்
வருமான வாய்ப்புகளைக் குறைக்கின்
6

முயற்சிகளாயினும் சிறிதளவேனும் -டிற்கு வழியில்லாத பெண்கள் நீண்ட ஒப்பந்தக்காரர்களிடம் கூலி வேலை ம் ஈடுபட்டனர். சில பெண்கள் தமது பிற்பவர்களாகவும் காய்கறிகளைக் ம் இருந்தனர். வேறு சிலர் மீள்நடுகை, ழில்களிலும், கதிர் சேகரித்தலிலும்
நில் அநேகமான தொழில் வாய்ப்புகள் யும் அரசினால் வழங்கப்படுகின்ற வழங்கப்படுகின்ற பருப்பு, மா, சீனி னை அல்லது பண்டமாற்றுச் செய்து, ம் என்பவற்றைப் பெற்றுக் கொள்கின் ய பாதுகாப்பில் விட முடிந்தவர்கள் ளர்களாகவும் இருக்க, வேறு சிலர் பரந்த வெளி முகாம்களில் தனிக்கு i மண்ணின் தன்மை, நீர் கிடைக்கும் ட்டுத் தோட்டங்களை அமைத்தனர். பசளைப் பிரயோகமோ தேவையற்ற ருந்தன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் றுத்தவரை சூழ்நிலையின் அவசியம் பற்றிய தேர்வில் நெகிழ்வுத் தன்மை பண்கள் மீது ஆண் மதவாதிகளாலும் கலாசார இறுக்கமும் கட்டுப்பாடும் இல் தெரிவு மட்டுப்படுத்தப்படுகிறது. தனித்துவம் பேணும் நோக்குடனான ரபு மற்றும் கலாசாரம் ஆகியவற்றைப் களாக்கியுள்ளது. பர்தா அணியும் படுத்தப்பட்ட நடமாட்டம் என்பன லாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ப்பாடுகளுடன் வாழ்ந்த பெண்கள் னவும் ஆக்கிரமிப்பிலுள்ளதாகத் தாம் ம் காணக்கூடிய சின்னங்களாகத்
b அவர்களுக்குக்கிடைக்கக்கூடிய றது. இவர்கள் வீட்டிலிருந்தபடியே

Page 15
உணவு தயாரித்தல், கைத்தறி, பாய்பி தெரிவு செய்ய வேண்டியிருந்தது. எல் கவும் சந்தைப்படுத்தலுக்காகவும் : இவர்களது வருமானம் குறைவாக இருந்
இவர்கள் சமூகத்தில் மிகவும் வறிய கவும் இருக்கின்றனர். அவர்களுள் பல டன் நாளாந்த உணவில் புரதமோ, ம கிடைத்தது.
முகாம் சூழ்நிலையிலிருந்து வெளி வீட்டுச் சூழ்நிலைக்குத் திரும்புதல் இ தேவையாக இருந்தது. இது அவர்கள வழங்குமெனக் கருதினர். அதிகமான ம வளங்களுடன் குடியமர்த்தப்படுவார்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை என அா விடயமும் காணப்பட்டது. இடம் பெயர் அரசாங்கத்திடமிருந்து பெறுகின்ற நிவ அவற்றை இழந்து, உற்பத்தித் தொழில் மீள்குடியமர விரும்பவில்லை. போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள போதா
பாதுகாவலர் இல்லாத ஒரு குறிப்பிட உணவு முத்திரை மட்டுமே பெற்றனர். தங்கியிருப்போரைக் கொண்டிருந்தால் யில் ஒரு மாதத்திற்குச் சராசரியாக ரூ உணவு முத்திரையைப் பெறுகின்றாள். 6 வேறு வழிகளை மேற்கொள்ள வேண்டு பெண் தலைவர்கள் தம் குடும்பங்களுக் உறுதிப்படுத்துவதற்கு உற்பத்தி நட6 அவசியமான ஒரு விடயமாகும்.
வடகிழக்கில் வேலை செய்கின்ற அ அரசாங்க உத்தியோகத்தர்களால் பெண் எல்லைப் பொருளாதார நடவடிக்கைகளி தேவைக்கு போதுமானதாக அல்லது இ இலிருந்து ரூபா 600 வரை மாதாந்: உதவுகின்றது. முழுச்சமூகத்திற்குமான அ
7

ன்னுதல் போன்ற தொழில்களையே வாறெனினும் மூலப் பொருளுக்கா ரகர்களை நம்பியிருந்தமையால் தது.
வர்களாகவும் அநாதரவானவர்களா கஞ்சியை உட்கொண்டனர். அத்து ாக்கறிவகைகளோ மிக அரிதாகவே
யேறி அவர்களுக்குப் பழக்கமான டம் பெயர்ந்த பெண்களின் முதல் து உடமைகளுக்கும் பாதுகாப்பை க்கள் எப்போது, எங்கே, எவ்வகை i என்பதைத் தீர்மானிப்பதில் தாம் கலாய்த்தனர். இதில் இன்னுமொரு ந்த நபர்கள் விஷேடமாகப் பெண்கள் ாரணங்கள் சொற்பமானவையேனும் மானியமான ரூபா 4000 ஐப் பெற்று வருமானத்தை ஈட்டக்கூடிய உற்பத்தி து என்பதை உணர்ந்தனர்.
டத்தக்க எண்ணிக்கையான பெண்கள்
உதாரணமாக ஒரு பெண் நான்கு அவர்களுடைய வயதின் அடிப்படை பா 200/- மட்டுமே பெறுமதியான எனவே அவள் தனது பிழைப்புக்காக ம். ஆகவே சந்தேகமின்றி வீட்டின் கான தொடர்ச்சியான வருமானத்தை படிக்கையில் ஈடுபடுவது என்பது
அரச சார்பற்ற நிறுவனங்கள் அல்லது களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்ற lன் வருமானம் அடிப்படை உணவுத் ருக்கின்ற வருமானத்தை ரூபா 400 சராசரியால் பெருக்க மட்டுமே அபிவிருத்தி நடவடிக்கைக்குள் பெண்

Page 16
களை ஒருங்கிணைப்பது பற்றி எந்த டலோ இதுவரை உருவாகவில்லை. நூற்றுக்கணக்கான ஆண்கள் இறந்த பி ளர்களாக அடையாளம் காணப்பட சுமையின் பெரும்பகுதி பெண்களுக்கு யினை பெரும்பாலான கொள்கைத் முறையாளர்களும் கருத்தில் எடுக்கத்
போதுமான வருவாய் ஈட்டக்கூடி நடவடிக்கைகள் திட்டமிடப்படவேண் மற்றும் அரசசார்பற்ற திட்டமிடல தற்காலிகமான முயற்சிகளாக மட் முயற்சிகளில் கிடைக்கின்ற வருவாய், நேரம், உழைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ற தொழில்களில் பெறுகின்ற இலாபத்: னத்தைக் கணக்கிடுவதில்லை.
வருமானம் ஈட்டித்தரும் திறன்க தேவை உள்ளது என்ற கருத்தைப் பல ஒரு தொழிலைக் கற்றல் அல்லது ச மட்டுமன்றி நடைமுறைக் கல்வி அறிவு யல், பாதீடு செய்தல் போன்ற திறன் அளித்தல், தலைமைத்துவப் பயிற்சி எ
பெண்கள் வெளிப்படுத்திய ம பிள்ளைகளுக்கான கல்வியாகும். சில கும் சண்டை காரணமாகப் பாடசா வுள்ளது. சனத்தொகை அதிகம் உள்ள பாடசாலைகளில் இடம் பெயர்ந்த பிள்
வடகிழக்கில் தொடர்ந்து கொண் கும் சுகாதார வசதிகளையும் சே போக்குவரத்து வசதிகள் குறைந்ததும் குடியமர்த்தப்படுபவர்களுமே பாதிப்பு களினது எண்ணிக்கையிலும் மருந்து 6 லேயே இப்பிரச்சினை ஏற்படுகின்றது குறைவின் காரணத்தால் நடைமுறை பயன்படுத்த பெண்கள் தயங்குகின்ற சேவைகள் கூட பெண்களுக்குரிய (

வித சிந்தனையோ அல்லது திட்டமி வடகிழக்கு யுத்தம் காரணமாக பல ன்னரும் பெண்கள் பிரதான உழைப்பா வில்லை. வருமானம் சம்பாதிக்கும் மாற்றப்பட்டு விட்டது என்ற உண்மை திட்டவாளர்களும் அபிவிருத்தி நடை தவறுகின்றனர். நீடித்திருக்கக்கூடியதும் பதுமானதாகவே வருவாய் ஈட்டும் டும் என்ற உண்மையை அரசாங்கம் ாளர்கள் உணர வேண்டும். இவை டும் இருக்கக்கூடாது. இத்தொழில் இவற்றுக்காகப் பெண்கள் செலவிடும் தாக இருக்க வேண்டும். பெண்கள் இத் நில் தம் உடல் உழைப்பின் பெறுமா
ளை அபிவிருத்தி செய்ய வேண்டிய பெண்கள் வெளிப்படுத்தினர். இவை ந்தைப்படுத்தல் போன்ற திறன்களாக பு, கணித அறிவு, அடிப்படைக் கணக்கி ாகளையும் உறுதியான நம்பிக்கையை ன்பவற்றையும் உள்ளடக்க வேண்டும்.
ற்றுமொரு தேவை அவர்களுடைய பகுதிகளில் தொடர்ந்து கொண்டிருக் லை நடத்துவது அசாத்தியமானதாக பிரதேசங்களில் போதிய வசதிகளற்ற ளைகளைச் சேர்க்க வேண்டியுள்ளது.
டிருக்கும் யுத்த நிலைமை தற்போதிருக் வைகளையும் சிக்கலாக்கியுள்ளது.
பயங்கரமானதுமான இடங்களில் மீள் க்குள்ளாக்கப்படுகின்றனர். மருத்துவர் விநியோகத்திலும் குறைபாடு இருப்பதா
பெண் மருத்துவர்களின் எண்ணிக்கை யில் இருக்கும் மருத்துவ வசதிகளை ார். நடைமுறையில் இருக்கும் சுகாதார நறிப்பிட்ட தேவைகளைக் கவனியாது
8

Page 17
விடுகின்றது. உதாரணமாக மகளிர் நே வாக இருப்பதில்லை. மாதவிடாய்க் சுகாதார வசதிகள் இல்லை. கருப்பை 6 ஏற்படும் தொற்று முதலிய ஆபத்த இருக்கின்றன. பாலியல் உறவின் மூ6 மான ஆலோசனைகள் இருப்பதில்லை கர்ப்பமாதலும் ஆரோக்கியத்தைப் பா இளம் பெண்களுக்காக எந்தத் திட்ட துணைகளை இழந்த பெண்கள் எதிர் னைகள் வெளிக்கொணரப்படுவதில்ை சேவைகளை வழங்குவது சம்பந் பராமரிப்பைப் பெற்றுக் கொள்வ:ை மருத்துவ சேவுை நேரங்கள், வீட்டுப் ( அதிக நேரம் செலவழித்தல், 影 தொலைவு, பாதுகாப் பற்ற பிரயான அன்றாட அலுவில்களைக் கவனிக் (UA வரை மருத்துவரிடம் செல்லாமையுமே இவர்களுள் சில பெண்கள் மனோ
நிலையில் உள்ளனர். கணவனுடைய
கூடிய இழப்பானது தீவிரமான மே அதிர்ச்சிக்குக் காரணமாகிறது. பல பெ மாக இவ்வாறான இழப்புகளை ଘl ருக்கிறது.
சிலவேளைகளில் இவ்வாறான இ கவே அனுபவிக்க வேண்டியுள்ளது. காணாமல் போதலின் பின்னரும் சில தமக்கு அந்நியமான சூழல்களை எதி சமூகத்தினதும் ஆதரவை இழக்கும் ே குடும்ப அங்கத்தவர்களுடன் பழகும் தோன்றுகின்றன. பல பெண்கள் அ களையும், இவ்வாறான பழைய சம்பவ யும் அனுபவிப்பவர்களாக உள்ளனர். தீவிர அதிர்ச்சி என்பன உணவு முை தையும் பதட்டத்தையும் விளைவிக்கிற விரக்திக்கும், குழப்பகரமான நடத்தைச் நிலைமைக்கும் ஒருவரை இட்டுச் ெ கப்படக்கூடிய நோய்களையும் உருவா
9

ாய் சம்பந்தமான சேவைகள் போதியள காலங்களில் பெண்களுக்குப் போதிய வாய்ப்புற்று நோய் அல்லது யோனியில் ான நோய்கள் கண்டுபிடிக்கப்படாது 0ம் தொற்றக்கூடிய நோய்கள் சம்பந்த இளம் வயதில் திருமணம் செய்தலும் திக்கிறது என அறியப்பட்ட போதிலும் -மும் ஏற்படுத்தப்படவில்லை. ஆண் நோக்குகின்ற பல குறிப்பான பிரச்சி
ᎶU) .
έ5LOIT607 பிரச்சிஒனகள் 96 L சுகாதாரப்
தச் செளகரியமற்ற
பொறுப்புக்களை முடிப்பதில் பெண்கள்
3த்துவசேவை நிலையத்தின் அதிக ÖTLb နှီးနှီး பெண்கள் தம் டியாத அளவுக்கு நோய் அதிகரிக்கும்
பொதுவான பிரச்சினைகளாகும்
நிலை, உணர்வு நிலை பாதிக்கப்பட்ட எதிர்பாராத அல்லது அதிர்ச்சியூட்டக் னா நிலை மற்றும் உணர்வு நிலை ண்கள் குடும்பப் பொறுப்புகள் ऊ76शश ாறுமையுடன் சமாளிக்க வேண்டியி
இழப்புக்களின் அதிர்ச்சியைத் தனியா தம் சகாக்களின் இறப்பின் அல்லது பெண்கள் இடம் பெயர்ந்தவர்களாகித் ர் கொள்கின்றனர். குடும்பத்தினதும் போதும், அதிர்ச்சிக்குள்ளான ஏனைய போதும் உணர்வு ரீதியான சிக்கல்கள் ச்ச மூட்டும் இராணுவ நடவடிக்கை ங்கள் மீண்டு விடுமோ என்ற அச்சதை இதனால் ஏற்படுகின்ற மன அழுத்தம், ற, தூக்கம் என்பவற்றில் ஒழுங்கீனத் து. இவ்வகை மன அழுத்தங்கள் தீவிர 5கும், தம்மைத்தாமே துன்புறுத்துகின்ற சல்வதோடு உளத்தாக்கத்தால் பாதிக் க்குகிறது.

Page 18
வீடமைப்புக்கூட ஒரு அவசிய ே கும், மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக் ஒலைக்குடிசைகளாக உள்ளன. இவர் வேண்டியுள்ளது. அரசும் சில அரச நிர்மானத்துக்குரிய மூலப் பொருட்கை மீளமைப்புச் செய்வதற்குரிய மரம், ஒ அதிகமாக இவ்வீடுகள் தற்காலிகமான விடயத்தில் இவ்வீடுகள் மீளமைக்கப்பு அரசினது ஒருங்கிணைக்கப்பட்ட மர்த்தப்பட்ட குடும் பங்களுக்கு வீ வழங்கப்பட்டது. எவ்வாறாயினும் இ இவ்வீடுகள் போதிய சுகாதார, சை முழுமையற்றவையாயும் பெண்களின் பனவாயும் உள்ளன.
பல பெண்கள் சமூகம் தம்மீது கெ அங்கலாய்த்துக் கொண்டனர். பெண் கப்படாத போதும் அமங்கலமானவர்க டங்களிலும் விரும்பப்படாதவர்களாக னர். சுதந்திரப் போக்குடையவர்களா விதி முறைகளை மீறுபவர்களாகவுL உதாரணமாக வர்ண சேலை அல்லது ந அத்துடன் அவர்களது கணவர்களது இ குற்றம் சாட்டப்பட்டு துரதிருஷ்டமுள்ள பட்டனர். அவர்களுடைய தனிப்பட்ட வலியுறுத்திக் கூறினார்கள் தொடர்ந்து மீண்டும் தங்களை இடம் பெயர்ந்த பெண்கள் அஞ்சுகிறார்கள். அவர்கள விடுவார்கள் அல்லது காணாமல் போ பயமாக உள்ளது. திடீர் சுற்றிவை அதிகாரிகளால் மறியல் வைக்கப்ப தொடர்பு கொள்ளுதலில் பயம், திடீர் கள், ஊர்காவல் படையினர் பற்றிய ப இரவில் வெளியில் திரிவதிலும் பயம் கவலையுடன் சுட்டிக்காட்டினர்.
மற்றுமொரு பிரச்சினை என்ன பெண்களின் எண்ணிக்கை பற்றிய சரி
1.

தவையாகும். இடம் பெயர்ந்தவர்களுக் கும் அமைக்கப்படும் வீடுகள் சிறிய 1றை அடிக்கடி திருத்தவும் வேயவும் ார்பற்ற நிறுவனங்களும் அடிப்படை ள வழங்குவதுடன் தேவையானபோது லை என்பவற்றையும் வழங்குகின்றன. வையே. மீளக் குடியமர்த்தப்பட்டோர் பட வேண்டியது மிக அவசியம். உதவித்திட்டத்தினால் சில மீளக்குடிய டமைப்பு மானியமாக ரூபா 25000 ம்மானியம் போதுமானதாக இல்லை. மயல், சுத்தப்படுத்தும் வசதிகளின்றி வேலைப்பழுவை மேலும் அதிகரிப்
ாண்ட எதிர் மறை அணுகுமுறை பற்றி கள் விதவைகள் என தனித்து ஒதுக் ளாகவும் விழாக்களிலும், கொண்டாட் வும் தாம் கருதப்படுவதாகத் தெரிவித்த கவும் ஆடை அணிதலில் குறிப்பிட்ட ம் இருந்தால் விமர்சிக்கப்பட்டனர். கைகள் அணிதல் விமர்சிக்கப்பட்டது. |றப்பிற்குக் காரணமானவர்களெனவும் வர்கள் என உறவினர்களால் ஒதுக்கப் பாதுகாப்பின் தேவையை அவர்கள் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போர் வர்களாக்கிவிடும் என்று அதிகமான து பிள்ளைகள் கைது செய்யப்பட்டு ய்விடுவார்கள் என்பதும் அவர்களது ளப்பு அடையாளம் காணப்படாத டுதல், பாதுகாப்பு அதிகாரிகளுடன்
சோதனை, இராணுவமல்லாத குழுக் பம், தனியே பிரயாணம் செய்வதிலும் போன்ற விடயங்களை அப்பெண்கள்
வெனில் ஆண்துணைகளை இழந்த
யான கணிப்பீடு பிரதேச செயலகங்க

Page 19
ளிலோ அல்லது பிராந்திய அரசாங்க கின்ற புள்ளி விபரங்கள் கூட பால், வய கொண்டு பகுக்கப்படாமல் உள்ளன. சார்பற்ற நிறுவனங்களிடம் கூட இது ளில்லை. இந்நிறுவனங்கள் பாதிக்கப்ப ளம் காண்பதற்கு வாய் மூலக் கூற்று வேளை சில பிரதேசங்களில் விதை கப்பட்ட உதவித்திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு இப்பெண்களுக்கு செய்யப்ப அறிந்திருக்காததோடு பிரதேச செய வழங்கவுமில்லை. இறப்பு அத்தாட்சிட் பெற முடியாமைக்குரிய காரணமாக அ துணையை இழந்த பெண்களின் எண்ணி
5600TGu66TLDTri ST600TTLD Giò (3UIT 60 பாதிப்புக்குள்ளாகின்றனர். இறப்பு அத் தீர்மானிக்கும் வரை உதவி பெறும் உள்ளனர். கணவர் காணாமல் போன இறப்புச்சான்றிதழுக்காகக் காத்திருக்க தற்போது இவ்விதி ஒரு வருடமாகச் முன்னால் கிராமசேவை அதிகாரி 8 டுத்தியதும் நீதிபதியின் கட்டளைப்படி எவ்வாறெனினும் மனிதாபிமான அ சான்றிதழ் வழங்க வேண்டியது ஓர் அ சேமிப்புக்கணக்குகள், காப்புறுதி நல என்பவற்றைப் பெற இச்சான்றிதழ் அலி எவ்வளவு சிறிதாயினும் அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையைக் கட்டியெழு

அதிகாரிகளிடமோ இல்லை. இருக் பது, திருமண அந்தஸ்து என்பவற்றைக் கிராமமட்டத்தில் பணிபுரியும் அரச து பற்றிய முழுமையான மதிப்பீடுக பட்ட இப்பெண் குழுக்களை அடையா க்களையே நம்பியிருக்கின்றன. அதே வகளுக்கு அரசினது ஒருங்கிணைக் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. பண ட்டுள்ள போதும் இவர்கள் இது பற்றி பலாளர் பிரிவுகளும் அப்பணத்தை பத்திரம் பெறமுடியாமையும் பணம் மைகிறது. அத்துடன் நட்டஈடு பெறும் ஈரிக்கை வெளியிடப்படுவது இல்லை.
நிலையிலுள்ள பெண்களே அதிக தாட்சிப் பத்திரம் பெறலாம் என அரசு வழியற்றவர்களாகவே இவர்கள் பிறகு ஒரு பெண் ஏழு வருடங்கள் வேண்டிய விதியே முன்னர் இருந்தது. 5 குறைக்கப்பட்டுள்ளது. நீதிபதியின் காணாமல் போனதை அத்தாட்சிப்ப இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். டிப்படையில் இவர்களுக்கு இறப்புச் வசரமான தேவையாகும். ஓய்வூதியம், ன்கள், நஷ்டஈட்டுக்கொடுப்பனவுகள் பசியமானது. இத்தகைய நிதி வளங்கள் ம் அவர்களில் தங்கியிருப்போருக்கும் ப்புவதற்கு உறுதுணையாக இருக்கும்.
நன்றி. ஒப்ஷன்ஸ் - ஒகஸ்ட் 1994 தமிழில் : வெ. அழகரெத்தினம்

Page 20
பெண்
--3
என் ஆதித்தாய முதுகிற்பட்ட திருக்கைச் சவு நான் காணும் ஒ முகத்திலும் தழும்பாய், தே படர்ந்து கிடக்க
அடையாளத்ை உணரும் போே 6SirfuLuršu Qasimtazó ஊழிச் சவுக்கின் மீளவும் என்ை வலிக்கப் பண்
என்னைப் பிள ரத்த உடுக்கள் வெடித்துப் பற். தனித்துச் சிதறி தனித்து, அவை ஒவ்வெ கிரகங்கள் என
உருப் பெறும்.

மொழி
பூழியாள் -
பின் s
க்கடி ஒவ்வொருவனது
மலாய்
கின்றது.
த தெல்லாம்
TIL ண் ஒலி
ଚୋT
ணும்.
ந்து
ந்து
க் கொட்டும்.
ான்றும்

Page 21
1 ܠܐ
தன்னிச்சையாய் ! தாளலயத்துடன்
அங்கு எனக்கென ஒர் பிரபஞ்சம் என்னால் உருவா அப்போது உயிர் எனக்கான வரிவடிவங்களுட என் மொழி.
அதன் பின் தேமல் படர்ந்த எ உரையாடட்டும் . கூறுகிறேன் பதின என் மொழியில் என் ஆதித்தாயின் பெண் மொழியில்
அது வரை நீ காத

சுற்றிவரும்
கும் பெறும்
ன்
கூடி
L

Page 22
தமிழ்ச்சூழலிற் “விடுதலை’
- ராஜம் (1996) 6. பற்றிய து
ராஜம் கிருஷ்ணனின் அண்டை பின்னும்' நாவலை வாசித்து முடித்த கிளம்பிய முக்கியமான வினா கொள்ளப்படும் சூழலில், பெண் 'ெ வடிவத்தை எடுக்க முடியும் என்பத
1996 இல் பிரசுரிக்கப்பட்டத பெண்நிலை வாதச் சித்திரிப்பில், ரா மேலுமொரு படியைச் சுட்டுகின்றது
'பெண் வெறும் உடலில்ை பெண் உடலிலும் அந்த உt கிறது. ஆண்மேலாதிக்கம், இ பெண்ணுக்கு இடம் கொடுத் அடக்கம் என்று தத்துவம் யைப் பறிப்பதற்கு நியாயம் ச தன்னை ஒடுக்கும் ஓர் இனத் றில் வைத்துக் காத்துப்பேணி தெடுக்கின்றாள்.
அத்தகைய தாய்க்குலம் வள கட்டாயப்படுத்தும் ஒரு சூழலை : ஆதிக்கம். எனவே சீர்குலைவுகளி நம்பிக்கை இன்று தேவையாக இரு
இந்தப் புனைகதை உண்மை எழுப்பப் பெற்றதாகும்'
என்று கூறுகிறது முன்னுரைக் கு

பெண்
கிருஷ்ணனின் 'மாறிமாறிப் பின்னும் "- பழியாகக் கிளம்புகின்ற சில சிந்தனைகள் ஒரு குறிப்பு. - பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி
மய நாவல்களில் ஒன்றான 'மாறிமாறிப் நதும் (வாசிக்கும் பொழுதே) என் மனதிற் தமிழ்ப்பண்பாடு' என்று சொல்லிக் விடுதலை" / தளை நீக்கம் என்பது என்ன ாகும்.
ாகக் குறிப்பிடப் பெற்றுள்ள இந்நாவல் ஜம் கிருஷ்ணன் காட்டும் 'வளர்ச்சியின்'
ல. அவள் மகாசக்தி ஒவ்வொரு பிர்ச்சக்தி இயங்கிக் கொண்டிருக் |றைவன் கருணாநிதி, இடப்பக்கம் தான். அதனால் அவள் அவனுள் பேசுகிறது. அவளுடைய உரிமை கற்பிக்கப்படுகிறது. ஆனால் அவள் ந்தை ஒவ்வொரு கணமும், வயிற் | உயிரையும் துரும்பாக்கி வளர்த்
ரக்கூடாது என்று அழிக்கச் சொல்லிக் உருவாக்கியிருகிறது இன்றைய சமுதாய ன் உச்சத்தில் ஒரு வழி பிறக்கும் என்ற கிகிறது.
பான நிகழ்ச்சிகளின் அடிப்படையில்
குறிப்பின் பிரதான பகுதி.
14
ܒ̣

Page 23
வயது வந்த இரண்டு பையன்களி மான தனது கணவனது தனக்கிழை கொடூரம் ஏற்படுத்துகின்ற அந்நியப்பா களுக்கு ஆட்படும் பிள்ளைகளின் போ விடுபட்டுப் போகின்ற நிலையிலிருந்து படத் தள்ளப்படும் ஒரு பெண் (ரேவதி) 'மாறி மாறிப் பின்னும்' என்ற நாவலா
இலக்கிய ரீதியில் இந்த நாவல், ர நாவல்களில் காணப்படாத சித்திரிப்பு ( கொடுக்கிறது. பெரும்பாலான தமிழ் ந பையே' (narratives) ராஜம் கிருஷ்ண விருந்தது. வேறுபட்ட கதை எனினும் ஒன்று தான். இந்த நாவலில் சில இட சக்தியென்று எடுத்துக் கூறும் இடங்களி கூறிச்செல்லாமல், நிலைமையைச் சித்தி லாம். இதனைப் பிரதானமாக அவ்விட யிற் கண்டு கொள்ளக் கூடியதாகவிரு பிரபல பாணி நடையாளர்களை (sty இந்தச்சித்திரிப்புக்கள் கதையோட்டத்தி படுத்தி, அந்த உணர்ச்சிகள், சம்பவங் தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் பகுதிகள் இல்லாமலில்லை. ஆனால் அ னுள் சற்று அமிழ்த்தி விடுகின்றன. கிருஷ்ணனின் மொழிக்கையாளுகை (F கட்டத்தைக் காட்டுகின்றது.
இந்நாவலின் பிரதான பாத்திரம் வாழ்க்கையின் கொடூரங்களுக்கு ஆட் பெண் இவர், இவருடைய 'அருத்தல்க ஏன் இந்தப் பெண் இவற்றைத் தா மற்றவர்கள் கேட்குமளவுக்கு துன்பங்க இந்தப் பெண்ணின் பின்புலம் பற்ற தானே வரித்துக் கொள்ளும் பாடுகளு இவளின் தாயாரே குடும்பம் என்ற நிய பாத்திரத்தின் வார்ப்பில் / வளர்த காணப்படுகிறது.
ஆனால் நாவலை வாசித்துக் கெ துன்பங்களும் ஒரு பெண்ணுக்கு வர எழுகிறது. அந்தவகையில் இது 'ந பயக்கிறதே. ஆனால் இது உண்மைக் க
1.

ன் தாயான ஒரு பெண் மூர்க்கத்தன $கும் கொடூரத்திலிருந்தும் இந்தக் டுகள் காரணமாக ஒவ்வாத போக்கு க்குக் காரணமாகிய குடும்ப இறுக்கம் ம், தன்னை விடுவித்துக் கொள்ளப் ணுக்கு ஏற்படும் அனுபவங்கள் தான் க அமைகின்றது. ாஜம் கிருஷ்ணனின் இதற்கு முந்திய depiction)ப் பாங்குக்கு முக்கிய இடம் ாவல்களைப் போன்ற 'எடுத்துரைப் ணின் நாவல்களிற் காணக்கூடியதாக பொதுவான கதைசொல்லும் பாங்கு உங்களிள் - குறிப்பாக பெண்ணைச் ல் (உ+ம் இறுதிப்பாகம்)- கதையாகக் திரிக்கும் (depict) தன்மையைக் காண உங்களிற் கையாளப்படும் உரைநடை க்கின்றது. இந்த உரைநடை தமிழின் lists) நினைவூட்டுகின்றது. ஆனால் ன் மையப் பொருள்களை முதன்மைப் களைச் சித்திரிப்பதிலும் காட்டியிருந் என்று கூறத்தோன்றுகிறது. அத்தகைய புவை நாவலின் பொதுவான ஓட்டத்தி எவ்வாறாயினும் இந்நாவல் ராஜம் landling of prose) ugla) број Gualti i šli,
ரேவம்மா எனும் ரேவதி. குடும்ப பட்டு விடுதலைக்குத் துடிதுடிக்கும் 1ள்' 'பாடுகள் தான் நாவலின் தளம். ங்கிக் கொள்ள வேண்டும் என்று ளைத் தாங்கிக் கொள்கிறாள்.
மிய கதை, இந்தப் பாத்திரம், தனக்குத் க்கான நியாயப்பாட்டைத் தருகிறது. மத்துக்கு அப்பாற் சென்றவள். ரேவதி தலில் நம்பகமான நியாயப்பாடு
ாண்டு போகும் பொழுது, இத்தனை வேண்டுமா என்ற கேள்வி மனதில் ாடகவழக்கு' (நாட்டிய தர்மி) ப் தையினடியாக எழுதப்பெற்றது என்று
5

Page 24
ஆசிரியர் சொல்கிறார். உண்மை ! stranger than fiction) GT66Tp ga pGp
இந்த நாவல் தமிழ்ப்பண்பாட்டி வலிவுடன் எடுத்துக்காட்டுகின்றது.
'குடும்பம் எனும் அமைப்பில் கொள்வது தமிழ்ப் பண்பாட்டில் 2-GTGT5.
எனவே நமது பண்பாட்டில் கு மாற வேண்டுவது அவசியமாகிறது தளத்தைக் கொண்ட ஒரு குடும்பமா மையில் ரேவதி கணவன் சொல்ட கூடாது என்பதைச் சொல்லிய) சுமத் குடும்பத்தில் உண்மையான தம் காணப்படுகின்றது.
இந்த 'எதிரணிநிலை” (contr குடும்பம் பற்றிய குறிப்புக்கள் இத6
இந்த நாவலின் அசாதாரணத் களின் இயல்புகள் எடுத்துக்காட்டு சந்திக்கும் பெண், ரங்கப்பாவின் ( நோக்க வேண்டிய அவசியம் ஏற்ப
ரேவதி இறுதியில், மலைப் цуз, sofistot Gu, -ej Guri 5 officiji . உண்மையான "புகலிடத்தைக் கா6
நமது பண்பாட்டில் நகர்ப்புற, குடும்பப் பிரச்சினைகளுக்கு அ முடியாதுள்ளது என்பதை இந்நாவ கொள்ள வேண்டியுள்ளது.
பெண்ணை மகாசக்தியென்று நிலையை ஆசிரியர் ஏற்றுக் கொ விமர்சகர்கள் எந்த அளவுக்கு இ கேள்விக்குரியதே.
தமிழ் நாவலின் இலக்கிய வள ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் அவ
மாறிமாறிப் பின்னும், கண்கா6 புகலிடம் தேடவேண்டியுள்ளது 6 கின்றது.

புனைவிலும் விசித்திரமானது. (Truth is நினைவுக்கு வருகிறது.
-ன் ஒரு முக்கிய சமூகவியல் உண்மையை
ருெந்து ஒரு பெண் தன்னை விடுவித்துக் மிகச் சிரமமான ஒன்றாகவே இன்னும்
டும்பம் பற்றிய கருத்து நிலை (deology) து. அப்படி மாறிய ஒரு கருத்து நிலைத் கவே, ரேவதிக்கு உதவி செய்கின்ற (உண் வற்றை மேலும் பொறுத்துக் கொள்ளக் தியின் குடும்பம் அமைகின்றது. சுமதியின் பதிச் சமத்துவம், பொறுப்புப் பகிர்வு
ast) கண்முன்னே தெரிகிறது. சுமதியின் னைத் தருகின்றன.
தன்மையை ரேவதி சந்திக்கும் பாத்திரங் கின்றன. தம்பி, ரங்கப்பா, தம்பி வீட்டிற் குடும்பம் ஆகியனவற்றையும் இணைத்து டுகின்றது. பகுதியிலுள்ள ஒரு எஸ்டேட்டிலுள்ள எளிமை நிறைந்த பண்புகளிலேயே ணக்கூடியதாக விருக்கின்றது.
மத்திய தரவர்க்கச் சூழலுக்குள் வரும்
ந்தச் சூழலுக்குள்ளேயே தீர்வு காண ல் குறிப்பாக உணர்த்துகின்றது. என்றும்
இந்துப் பாரம்பரியம் சொல்லும் கருத்து ாள்வது புலனாகிறது. பெண்நிலைவாத |தனை ஏற்றுக் கொள்வார்கள் என்பது
ர்ச்சியிலும் பெண் நிலைச் சித்திரிப்பிலும் சியம் வாசிக்க வேண்டிய நாவல் இது.
ணாத இடத்திலேயே துன்பப்படும் பெண் என்பது சிலையெழுத்தாக மேற்கிளம்பு
16
ܥܸܡ.

Page 25
II/Gaza - ஹீரா பன்ஸோெ
ஒ யசோதரா! கனவில் வரும் கடும் வேதனைபோ நீ இருக்கிறாய், வாழ்நாள் முழுவதும் துக்கம். உன்னைப்பார்க்க எனக்கு துணிச்சல் புத்தரின் மெய்ஞானம் எங்களுக்கு ஒளியூட்டியது ஆனால் நீயோ இருட்டினை உள்ளி உனது வாழ்க்கையில் நீலப்புள்ளிகளு கருப்புப் புள்ளிகளும் கறையேற்படு சிதறுண்ட வாழ்க்கை, எரிந்துபோன ஒ யசோதரா!
மிருதுவான வானம் உன்னிடம் தஞ் உனது ஒளிர்கின்ற ஆனால் பயனற் வேதனையடைந்த நட்சத்திரங்கள் க எனது இதயம் உடைகிறது
அந்திமாலைப் பொழுதைப்போல ப ஒப்புயர்வற்ற உன் அழகைக் கண்டு உனது காதலனிடமிருந்து அது பிரி
மெளனமான உன் பெருமுச்சைக் ே
17

25/7/7
(Hira Bansode) -
ல்ெலை
ழுத்துக் கொண்டாய் நம் த்தும் வரை.
வாழ்க்கை,
சமடைகிறது ற வாழ்வைப்பார்த்து
ண்ணிர் உகுக்கின்றன.
மங்கிக் கொண்டிருக்கும்
|
ந்திருப்பதைக் கண்டு கட்டு

Page 26
சொர்க்கலோக ஆனந்தம் பற்றிய பொய்யென்றே எனக்குத் தோன்
ஒன்றை மட்டும் எனக்குச் சொல் சீறும் புயலை உனது சிறிய கரங்க
எவ்வாறு உள்ளடக்கினாய்?
உனது வாழ்க்கை என்ற கருத்தே பூமியை நடுங்கச் செய்கிறது ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கரைமீது மோதச் செய்கிறது உனது வாழ்க்கை நழுவிச் சென்ற நீ நினைத்துப் பார்த்திருப்பாய் கடைசி விடை பெறும் போது சித்தார்த்தன் இட்ட கடைசி முத்த அந்த மென்மையான இதழ்களை
ஆனால் கண்ணே
அந்த முத்தத்திலிருந்த நெஞ்சை உருக வைக்கும் வெப்ப அச்சந்தரும் ஆற்றலை, தட்டியெ நீ அறிந்திருக்கவில்லையா? மின்னல் தாக்கியது, ஆனால் உனக்கு அது தெரியவில் நீ படுத்திருந்த இடத்திலிருந்து வெகு தொலைவிலுள்ள ஒரு மாே அவன் சென்று கொண்டிருந்தான் அவன் சென்றான், வென்றான், ஒ அவனது வெற்றிபற்றிய பாடல்கள் உனது பெண்மை அழுதிருக்கும்.
கணவனையும் மகனையும் இழந்த

வாக்குறுதி றுகிறது.
யசோதரா, 56fai)
பொழுதில்
த்தை,
த்தை ழுப்பும் ஆற்றலை
லை. c
பெரும் உன்னதம் நோக்கி
}ளிர்ந்தான். ளை நீ கேட்ட போது
நீ
8

Page 27
வேர் பிடுங்கப்பட்ட இள வாழை மர உன்னை உணர்ந்திருப்பாய் ஆனால் வரலாறோ உனது மாபெரு தியாகக் கதையைச் சொல்வதில்லை. சித்தார்த்தன் மட்டும் சமாதி என்ற சொல்விளையாட்டில் இறங்கியிருந்த உன்னைப்பற்றிய மாபெரும் காவிய எழுதப்பட்டிருக்கும்! சீதையையும் சாவித்திரியையும் போ புராணங்களிலும் ஒலைச்சுவடிகளிலு புகழ் பெற்றிருந்திருப்பாய் ஒ யசோதரா இந்த அநீதியைக் கண்டு நான் வெட் ஒரு புத்தவிகாரத்தில் கூட உன்னைக் காண முடிவதில்லை. உண்மையிலேயே நீ ஒரு பொருட்டி ஆனால் பொறுத்திரு - இப்படி வே: நான் உனது அழகிய முகத்தைப் பா சித்தார்த்தனின் மூடிய கண்ணிமைக நீ இருக்கிறாய்
யசு, நீ மட்டுமே.
* ஹீரா பன்ஸோடெ, மராத்திய தலித் இல
பன்ஸோடெ தலித் நிலைப்பாட்டிலிருந்து
நோக்கிலிருந்தும் இக் கவிதையை எழுதியிருட்
ஆனால் அவரது மனைவி யசோதராவை? புத்
ஆனால் யசோதராவின் வாழ்வு.? இத்தை
மராத்தியக் கவிதையின் ஆங்கில மொழியாக் Dangle (ED), Poisoned Bread, Translation Fror Longman, 1992.
நன்றி:- அ
19

"LÓ GLUMTG)
திருந்தால் மொன்று
|ம்
கப்படுகிறேன்
ab606)LLJIT?
தனைப்படாதே. ர்த்திருக்கிறேன் ளுக்கிடையே
கிேயப் படைப்பாளிகளில் ஒருவர். ஹீரா
மட்டுமின்றி ஒரு பெண்ணிலைவாத பது தெளிவு. புத்தரை வரலாறு அறியும். தர் உன்னதம் நோக்கிச் சென்றுவிட்டார். கய கேள்விகளை எழுப்புகிறார் ஹீரா. கம் இடம் பெற்றுள்ள தொகுப்பு: Arun n Modern Marathi Dalit Literature, Orient
வ்வப்போது பறித்த அக்கரைப் பூக்கள்

Page 28
மானிடவர்க்கென
= 56
கிறில் களுக்கிடையே இரு விரல்களைக் கோத்துத் தொற்றிக்கொ குழந்தை அவளைக் கடிந்துகொள்ள விழுந்துவிடாமல் இருக்க வேண்டுே கிறேன்.
இவளைப் பார்க்கையில், தோள கையை உயர்த்தி உயர்த்திச் சரிசெய்து வண்டு தேடித் திரிகிற ராஜியை அ முடிகிறது. மூக்கால் எட்டிப் பார்க்கி இழுத்துக் கொண்டு, 'டீயேய் மை அக்கா அதட்டினால் சிணுங்கிக் கொ கூட கண்முன்னால் நிற்பது போலக் க குஞ்சியம்மா' என்றுதான் அக்கா அழைப்பார்கள். அவள் மட்டும் கைகளிலும் ஒடுகிற பச்சை நரம்புக வருத்தம் வந்து வெளுத்துப்போன எலும்புகள் அனைத்தும் வெளியே ெ நீண்ட நாட்களுக்குக் கட்டை விர கொண்டிருந்தாள். ஆதலால் முன்ப தெரியும். வளர்ந்த பின்னும்கூட, இந் கூச்சப்படும் போதும், வெட்கப்ப வசப்படும்போதும் கட்டை விரல் நகத் ருந்தது.
அவருடைய ஏழு அல்லது எட்டா நான் அவளைக் காணவில்லை. ஏ6ெ
ም 4.

ன்று பேச்சுப்படின் பிதா - $கிற சிறிய இடைவெளிகளில் கை ாண்டிருக்கிறாள் இந்த நாலரை வயதுக் எனக்கு மனம் வரவில்லை, பதிலாக, மே" என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்
ால் வழிகிற பெட்டி கோட்ரேப்பை, கொண்டு கிழுவை வேலிகளில் பொன் |ப்படியே நினைவுக்குக் கொண்டுவர ற சளியை உறிஞ்சி உறிஞ்சி உள்ளே ழத் தூற்றில் நனையாதேயடி' என்று ண்டு ஓடுகிற அவளை இப்பொழுதும் ற்பனை செய்ய முடிகிறது. வின் அல்லாக் குழந்தைகளும் என்னை குஞ்சம்மா' என்பாள். நெற்றியிலும் ளை எல்லாம் பார்க்க முடிகிறமாதிரி, துபோல ஒரு வெண்மையான நிறம். தெரிகிற மாதிரி ஒட்டலாய் இருப்பாள். லை வாய்க்குள் போட்டுச் சப்பிக் ற்கள் இரண்டும் சற்றுத் தூக்கலாய்த் ந்தக் கட்டை விரல் சப்பும் வழக்கமே, டும்போதும், பொதுவாக உணர்ச்சி நதைக் கடிக்கிற பழக்கமாய் மாறிவிட்டி
வது வயதுக்குப் பிறகு சில வருடங்கள் னன்றால் அப்பாவுக்கு வேலைமாற்றம்
2O

Page 29
வெளியூருக்குக் கிடைக்க, என்னை தார்கள். விடுமுறைகளுக்கெல்லாம் ஆ டிருந்தேன். ஊருக்குப் போக வாய்க்க ராஜியின் பன்னிரண்டாவது வ ஊருக்கெல்லாம் சொல்லித் தண்ணீர் : வந்தது. இரண்டு நாட்களுக்கு முன் அக்காவும் சேர்ந்து வருந்தி வரு என்னையும் அம்மாவையும் அவர்க சம்மதித்தார். அவருக்கு விடுமுை உற்சாகம். நீண்ட நாட்களுக்குப் பிற உயரமான வேப்ப மரத்தில் கட்டியிருச் மெலிந்த பெண்ணான ராஜியும்தான் 2 பின்னணிக்கு வருபவை. "ராஜி எப்ப பண்ணிக்கொண்டே போனேன்.
ராஜியைப் பார்த்தபோது எனக்கு வளர்த்தியா, நான்கு வருடங்களுக் களைக்கூடக் காணவில்லை. நன்றாக 6 உள்ளடங்கியது மாதிரித் தோன்றியது "ராஜி! பொன்வண்டு பிடிப்பதில் சிரித்தாள். கன்னம் குழிந்தது. கட்டை "டீ! இப்பவும் விரல் சப்புவா கேட்கவும் எல்லோரும் சிரித்துவிட்ட அன்று ராத்திரி, அவள் என் அ கூச்ச சுபாவம் எனக்குத் தெரியவந்தது 'சின்னப் பாட்டீ, எனக்குச் சரி சொல்ல வேண்டாம் என்று கெஞ்சக் ( பிறகு நான் எப்படிப் பள்ளிக்கூட எல்லாம் பகிடி பண்ணுவான்களே அம்மா இந்த ஏற்பாட்டை நிறுத்திவிட குரலில் தொனித்தது.
அந்த ஊரிலேயே இருந்த கலெ படித்துக் கொண்டிருந்தாள். நாளைக் வித்தியாசமாய்ப் பார்ப்பார்கள்தானே
'அதுதானே அம்மா, "இதோ ?

ஒரு பள்ளிக்கூட விடுதியில் சேர்த் அப்பா அம்மாவிடமே போய்க்கொண் :Sીહીં) જોહ્નો).
யதில், அவள் பெரியவளானபோது பார்த்தார்கள். எங்களுக்கும் அழைப்பு பே வந்துவிடும்படி பெரியம்மாவும் ந்தி அழைத்திருந்தார்கள். அப்பா, ள் கேட்டபடி முன்பாகவே அனுப்பச் ற கிடைக்கவில்லை. எனக்கு ஒரே கு ஊருக்குப் போகப் போகிறேனே! கும் ஊஞ்சலும், பால்போன்ற நிலவும், ஊரை நினைக்கும் போது என் ஞாபகப் டி வளர்ந்திருப்பாள்?' என்று கற்பனை
அதிசயமான அதிசயம். இப்படி ஒரு $குள்? அந்தத் தூக்கலான முன்பற் வளர்ந்து வாளிப்பாக இருந்ததில் பற்கள்
என்று உணர்ந்தேன். லையா நீ இப்போ?' என்று கேட்டேன். விரல் வாய்க்குப் போயிற்று. யா?' என்று நான் அதிசயத்துடன் ார்கள். அவள் நகத்தைக் கடித்தாள். ம்மாவிடம் அழுதபோது தான் அவள்
l. யான வெக்கமாய் இருக்கு; ஊருக்குச் கெஞ்சக் கேட்கிறார்கள் இல்லையே. போவது, வகுப்புப் பொடியன்கள் என்று தவித்தாள். 'எப்படியாவது, மாட்டாளா?' என்ற ஆதங்கம் அவள்
|ன் பாடசாலையில் அப்போது அவள் குப் பள்ளிக்கூடப் பையன்கள் எல்லாம்
என்று நான் நினைத்தேன்.
rங்கள் வீட்டில் ஒரு பெண் திருமணத்
21

Page 30
திற்குத் தயார்' என்கிறமாதிரி இதென்ன ெ யாய் அவளுக்கு நான் வக்காலத்து வாங் என்னைத் தடுத்துவிட்டாள்.
"ராஜி, உன்னைப்போலத்தான் சில கூச்சப்பட்டு பெண்மையையே ஏதே நினைத்துக் குழம்பிப் போகிறார்கள். மனுஷியாக நினைத்துத்தான் உன்னைச் வேண்டும். உனக்கும்கூட நீ பெரியவள வேண்டும். இல்லாவிட்டால் குழப்பம்தா வெளிப்படவேண்டிய உண்மைதானே ரா
அம்மா ஆயிரம் சொன்னாள் ர பெரியம்மாவும் அக்காவும் கெஞ்சினா பாடசாலையில் இருந்து விலக்கி நகரத்தி சேர்த்து விடுவதாக உறுதி கூறினார். ஆ ளுடைய ஒரே ஒரு பெண்ணான அவளுக் செய்துபார்த்து மகிழ வேண்டும் என்பது
ராஜி இதை உணரவில்லை. கடைச் தன்றும் அவள் முகம் வாடியே இருந் பேயறைந்தாற்போல இருந்தாள். அதற் ளுக்கு அவளை ஏசிக்கொண்டிருந்தாள்.
எங்கள் குடும்பத்தில் அம்மா, பெரி குடும்பத்தினரும் ஒன்றாக கூடுவது ஏதாவ மறுபடியும், ராஜியின் கல்யாணத் இப்படியான வேளைகளில் உற்சாகத்துக் சின்னவர்களுக்கெல்லாம் ஒரே குவி அம்மாக்களின் கண்களில் தென்படுவா களோ என்று அம்மாக்களும் கவலைப்ட நேரம், அதிகம் அழுக்காய் இருந்தால் ஒ பூரண சுதந்திரமாக விளையாடுவார்கள்.
அம்மாக்களும் ஊர் வம்பெல்லாம் குடும்ப விஷயங்களைப் பேசுவார்க வாங்கியிருக்கிறார்கள், எந்தெந்த நகைச் என்று பார்ப்பார்கள் கொண்டை ரக சட்டைப் பற்றேன்' களைப்பற்றியும் பே யோக உயர்வைப்பற்றி, சிங்களத் தேர்ச்
22

பிசர் வேலை?' என்று வெளிப்படை பகியபோது அம்மா கண்ண்ாலேயே
பெண்கள் இப்படிக் கூச்சப்பட்டுக் ா அவமானகரமான விஷயமாக நீ பெரிய மனுஷியானால் பெரிய சுற்றியிருக்கிறவர்கள் எல்லாம் பழக ாகிவிட்டதாய் உள்ளுணர்வு ஏற்பட ன் ஏற்படும். என்றைக்கிருந்தாலும் ஜி, கவலைப்படாதே." ாஜி அழுவதை நிறுத்தவில்லை, ர்கள். அத்தான் அவளை அந்தப் நில் ஒரு பெண்கள் பாடசாலையில் அவர்களுடைய நோக்கம், அவர்க கு செய்யவேண்டிய சிறப்பெல்லாம் தான். சிவரை அழுதாள். கொண்டாட்டத் தது. புகைப்படங்களில் எல்லாம் காக அக்கா, பிறகும் வெகுநாட்க
பம்மா, மாமாமார் எல்லோருடைய பது நல்லது கெட்டது நடந்தால்தான்.
துக்கு எல்லாரும் கூடினார்கள். கும் கலகலப்புக்கும் குறைவிராது. தொன். சாப்பாட்டு நேரம்தான் ர்கள். எங்கே புழுதி அளைகிறார் படமாட்டார்கள். உடுப்பு மாற்றுகிற ரு "குட்டு கிடைக்கும். மற்றப்படி,
அலசி ஆராய்வார்கள் தங்கள் ள். யார் யார் புதிதாக நகை நளை மாற்றிச் செய்திருக்கிறார்கள் ங்களைப்பற்றியும், குழந்தைகளின் சுவார்கள். கணவர்களுடைய உத்தி சி பெறாமையால் இங்கிறமென்ற்

Page 31
கிடைக்காததைப் பற்றிப் பேசுவார்கள். கிடைக்காது? நாளாந்த வாய்ப்பாட்டு ஒரு மாற்றமாகக் கிடைக்கிற சந்தர்ட் கொள்வார்கள்.
அத்தான் பெரிய கவர்ன்மெண்ட் தைப் பிரமாதமாக ஏற்பாடு செய்திரு நாளை வெகு கவனமாகத் தேர்ந்தெ பார்த்துக்கொண்டார். பகல் முகூர்த்தம் ஊருக்கெல்லாம் அழைப்பு கொ( களைத் தவிருங்கள்' என்ற குறிப்புடன் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்.
மாப்பிள்ளை இங்கிலாந்தில் டா வந்துவிடப் போவதாய்ச் சொன்னார் ராஜி, எப்படி விட்டுப் பிரிவார்கள்?
எல்லோரும் சந்தோஷமாய் இரு அழுது மாய்ந்துபோனாள் அவள் தை ஒற்றைக் காலில் நின்றாள்.
ஏதாவது காதல் விவகாரமோ விழுந்து சிரிப்பார்கள். ராஜியாவது 8 னர், அப்பா, சித்தப்பா, மாமா, அன் ளைகளின் முகத்தையாவது பார்த்திரு. என்ற சொல்லே அவளுக்கு அலர்ஜி 'கல்யாணம் வேண்டாம்' என்று மனுசியாக நினைத்து அவளுடை கொடுத்துக்கொண்டிருக்க வேண்டு எல்லோருக்கும் பச்சைக் குழந்தை கல்யாணம் வேண்டாம் என்று நினைத்தார்கள். நல்ல நிலையில் வசதி திருமணத்தைச் செய்யாமல் விடுகிற பெற்றவர்களுமே செய்யமாட்டார்கள் என்றே எண்ணிக்கொண்டு ஏற்பா( அத்தான் முறையானவன். நல்லவன். என்ற நம்பிக்கை.
ராஜியின் பிடிவாதம் எடுபடவி

குடும்பம் என்றால் பேசவா விஷயம் ரீதியான ரூட்டீன் முறையிலிருந்து
|பத்தைச் சரியாகவே பயன்படுத்திக்
உத்தியோகத்தர். ராஜியின் கல்யாணத் ந்தார். சாஸ்திரப் பற்று அதிகம். நல்ல டுத்து இரவில் முகூர்த்தம் வரும்படி
சிறக்காதாம்.
டுத்தார் - தயவுசெய்து அன்பளிப்புக் சங்கீதக் கச்சேரி - நாதஸ்வரக் கச்சேரி
க்டராய் இருந்தார். இனி இங்கேயே கள். ஒரே பெண் குழந்தை அல்லவா
ந்தார்கள் - ராஜியைத் தவிர, அழுது
ாக்குக் கல்யாணமே வேண்டாம் என்று
என்று யாராவது கேட்டால் விழுந்து ாதலிப்பதாவது? அவளுடைய உறவி எணன்மாரைத் தவிர வேறு ஆண்பிள் பாளா என்பதே சந்தேகம்தான். காதல் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அவள் சொன்ன போது அவளை ஒரு ய அபிப்பிராயங்களுக்கு மதிப்புக் ம் என்று யாரும் நினைக்கவில்லை, யாகத்தான் அவள் தென்பட்டாள். அறியாமையால் கூறுகிறாள் என்று யாக இருக்கிறபோது பொருந்திவருகிற மடத்தனத்தை எந்தப் பெண்ணைப் ராஜிக்கு என்ன தெரியும்? குழந்தை' செய்தார்கள். பையன் அவளுக்கு ராஜி போகப் போகச் சரியாகிவிடுவாள்
ல்லை. அழுகையில் பிராணனை விட
23

Page 32
இருந்தாள். 'ஊரெல்லாம் இந்தச் சம்ப குது. இவள் என்னடீ பெரிய கரைச்சல் பட்டுக் கொண்டார். புத்தி சொல்லு நியமித்தார்கள்.
அம்மா சொன்ன எதுவும் அவள் : வார்க்கும்போது நடந்த நாடகம் முழுவது "சும்மா இரம்மா, மாப்பிள்ளையை மாதிரி இருக்கிறார். இப்படி ஒருத்தரை ராஜாத்தியல்லவா, குழந்தை மாதிரிப் பி அப்பாவும் எவ்வளவு கவலைப்படு முத்தாய்ப்பு வைத்தபிறகு அவள் என்ை "குஞ்சம்மா பயமாயிருக்கே' என்று. அதன் பிறகுதான் இதில் ஒரு சிக்க ஆரம்பித்தேன்.
ராஜி ஒரே ஒரு பெண் இன்னும் ஆண்களுடனேயே பழகியறியாதவள். த இல்லறத்தின் அந்தரங்கத்தையோ சரிய பாளா? என்று என்னுள் கேள்வி ஒன்று யாக வளர்ச்சியுறவில்லை என்றே தே னால்,பெண்மை அவளுள் தூங்கிக்ெ விளக்கேற்றம்மா, ஸ்வாமிக்குப் பூக்கட்டு அம்மா' என்று அத்தான் அவள் கவனத் திருப்பிவிட்டிருந்தார். வயதுவந்த பின் பெண்கள் கல்லூரியில் சேர்த்தார். ப திருமணம் செய்து வைக்கப்போகிறார் பேச்சுப்படின் வாழ்கிலேன்' என்று தவி ஆண்டாளுக்கும் இருந்திருக்குமோ? : காதலுடன் ஒன்றித்துக்கொண்டு மானு போகத்தான் துடித்தாளோ?
அவள் எப்படியோ, ராஜியின் பி இச்சைகள் எதுவும் அவளை அண்டவி நியாயம் இல்லா பாவம் என்பதாக ஒ( உடலெல்லாம் கூச்சமாக வியாபித்திருந் அத்தானும் அவளுக்குகாக வக்காலத்து செய்துவந்ததில் ராஜி, உலக அனுப
24

ந்தத்தைப் பார்த்துப் பெருமைப்படு ' என்று அக்கா என்னிடம் குறைப் ம்படி மறுபடியும் அம்மாவையே
ாதில் ஏறவில்லை. முன்பு தண்ணீர் ம் மறுபடியும் நடந்நது.
|ப் பார் எப்படி கம்பீரமாய் ராஜா பிறகு எங்கேயும் தேடமுடியுமா? டிவாதம் பிடிக்கிறாயே, அம்மாவும் கிறார்கள் பார்' என்று அம்மா னப் பிடித்துக் கொண்டு கதறினாள், அவள் உடலெல்லாம் நடுங்கியது! 5ல் இருப்பதாக நான் நினைக்க
பதினெட்டு வயது நிரம்பவில்லை. நாம்பத்தியத்தின் தாத்பரியத்தையோ ானபடி அவள் புரிந்துகொண்டிருப் எழுந்தது. அவள் இன்னும் செம்மை ான்றிற்று. சரியாகச் சொல்லப்போ காண்டிருந்தது. பூஜை அறைக்கு அம்மா பஜனைப் பாடல்கள் பாடு தைத் தெய்வீக விஷயங்களில் தான் னர் நகரத்தில் ஒரு கட்டுப்பாடான தினெட்டு நிரம்புவதற்கு முன்னர் அவளோ, 'மானிடவர்க்கென்று விக்கிறாள். இப்படி ஒரு சிக்கல்தான் அவளும் கண்ணன் என்ற கற்பிதக் டரிடமிருந்து தப்பித்துக்கொண்டு
ரச்சினை இதுதான். மானுடத்தின் ல்லை. 'செக்ஸ்" என்பதே ஒருவித ந நினைவு அவளுள் ஊறிப்போய், தது. ஒரே பெண் என்று அக்காவும் வாங்கிக் கொண்டு எல்லாவற்றையும் பங்கள் எதுவுமே இல்லாதவளாக

Page 33
வளர்ந்துவிட்டிருந்தாள் ஒவர் 1 தன்மையும் ராஜியின் வாழ்வில் சூழ் இப்போது நான் 'செக்ஸ் எஜூே பெரிய குறையாக உணர ஆரம்பித்ே உலகம் பெற்றுவந்திருக்கிற அறிை திணிப்பதுடன் கல்வியின் வேலை சமுதாயத்தில் தன்னைப் பொருத்தப் வழிவகுப்பது அதன் வேலை இல்6ை ஆதாம் ஏவாள் காலம் தொட் பெருக்கம் வரை, உலகின் பாரம்பரிய பார்க்கிற அளவுக்கு ராஜிக்குத் தீட்ச வரப்போகிற ஒரு அந்நியனை எப்படி ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதிக் எனக்கு சூசகமாகத் தெரிந்தது.
அவள் விஷயத்தில் அக்காவும் இருந்திருக்கலாம் என்று பட்டது. மு றேஷன் செய்து, அவளுடன் பழக எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக் திருமணத்தையும் நிறைவேற்றி வை இந்த உலகத்துக்கும் அதன் நியதிகளு திருப்பிவிடலாம் என்று பயந்தேன் விட்டால், எலிகூடத் தன்னை எதிர் விடுகிறதே - அதைப்போல், மனம் நிலையில் அன்பு வளர இடமேது? வாரோ, மாட்டாரோ!
எனக்குள்ளே குழப்பமாக இ திறந்து யாருக்கும் கூறவில்லை. என் பெரியவர்கள் நிச்சயித்திருக்கிறார்: கொள்ள மாட்டார்கள், கேலி தான் ( என்று. வாயைத் திறப்பேனா நான்? கல்யாணம் வைபோகமாக நட நான்கு நாட்கள் இருந்துவிட்டு பிறகு, எத்தனையோ நாளாந்த சமயங்களில் ராஜியைப் பற்றிய நி

புரொட்டெக்ஷன்' என்பதன் முழுத் ந்துகொண்டிருக்கிறது! கஷன்' நம் நாட்டில் இல்லாமையை ஒரு தன். அரிஸ்டாட்டில் காலம் தொடக்கம் வ எல்லாம் ஒருவனின் மூளைக்குள் முடிந்து விடுகிறதா? இந்தச் சிக்கலான பாடுள்ளவனாக ஆக்கிக்கொண்டு வர்ழ பயோ? எனக்குப் புரியவில்லை.
-டு, நாடுகளின் மிகையான குடிசனப் வளர்ச்சி பாவமானதா என்று எண்ணிப் ண்யம் போதாது. தனக்குக் கணவனாக டி நேருக்கு நேர் சந்திப்பது என்பதையே கொண்டு அவஸ்தைப்படுகிறாள் என்பது
அத்தானும் கொஞ்சம் பொறுமையுடன் தலில் அந்த மாப்பிள்ளைக்கே றெஜிஸ் வைத்து அவள் மனதை மாற்ற முயற்சி கும் என்று எண்ணினேன். உடனடியாகத் |ப்பதில் இத்தனை பிடிவாதம் செய்வது நக்கும் எதிரான மன நிலைக்கு அவளைத் மூலைக்குள் அகப்பட்டுக் கொண்டு ப்பவனைத் திருப்பித் தாக்கத் தயாராகி நிறைய வெறுப்பை வளர்த்துக் கொண்ட
மாப்பிள்ளை இவளைப் புரிந்துகொள்
ருந்த இந்த நினைவுகளை நான் வாய் னிலும் பார்க்க வயதால், அனுபவத்தால் 5ள். நான் சொல்வதை யாரும் ஏற்றுக் செய்வார்கள் - பெரிய சைக்காலஜிஸ்ட்
தது. எல்லோரும் விடை பெற்றோம்.
வேலைகள், சிரமங்களுக்கிடையே சில னைவும் வரும், கடிதம் எழுதி அவள்
25

Page 34
தாம்பத்தியம்' பற்றி அறிய வேண் கொள்வேன் பிறகு மறந்து போய்வி வருவதில்லை.
ஒரு முறை ஊரிலிருந்து தலைக மூரட்டுக்காளை மாதிரி நின்றிருந்த ர என்று திருப்திப்பட்டேன், 'உண்ை பலமுறை கேட்டு உறுதிப்படுத்திக் கொ
அவளுடைய கல்யாண சமயம் 6 களுக்காக வெட்கினேன். நல்ல ( இருந்தோமே என்று என்னையே பாரா
'மினக்கெட்டு உட்கார்ந்து ராஜிக் முந்திய நினைவுகளுக்குப் பிராயச்சித் யைப் பிரதிபலிப்பதாகவும், ராஜியின் ட நான் எவ்வளவு மறுகிக் கொண்டிருந்ே
அந்தக் கடிதத்துக்கு ராஜியிடமிரு ‘ஏண்டா எழுதினோம் என்றிருந்தது.
ராஜி இன்னமும் அப்படியே தான் புலப்படுத்தியது. அவள் பழைய பல்ல தில் '.குழந்தைப் பேற்றை வீட்டிலேே அந்தக் காலத்தில் எல்லாம் ஆஸ்ட எழுதியிருந்தாள்.
இதைப் பற்றி நான் அவ்வளவு மானுடத்துக்கும் அவளுக்குமான போர தான் அந்த வரிகள் எனக்கு உணர்த்தின் நினைத்தபடியே ஆகிவிட்டிருக்கிறாளே விட்டுக் கொடுத்தது திருப்பித் தாக்குக் தலைப்பிரசவம். மிகவும் பலவீனமாக தேன். அசட்டுத்தனமாகப் பிடிவாதம் பி என்று கவலையாக இருந்தது.
சில நாள் கழித்து, நான் ஊருக் கண்டேன். சற்று வாடினாற்போல இருந்
அவள் என்னைப் பார்க்க எங்கள் பெய்து ஓய்ந்திருந்தது. தலையில் தண்ை
எடுத்து முக்காடாய்ப் போட்டுக் கொண்
26

டும் என்று தீவிரமாய் நினைத்துக் விடுவேன், ராஜியிடமிருந்து கடிதம்
ால் புரியவில்லை ஒரு வழியாக, ாஜியின் சுபாவம் படிந்து விட்டதே மதானா? உண்மைதானா?' என்று ண்டேன்.
என்னுள் எழுந்த அசட்டுக் கற்பனை வேளை யாருக்கும் சொல்லாமல் ட்டிக் கொண்டேன். 5கு ஒரு கடிதம் எழுதினேன் - என் தமாகவும், என் அளவற்ற மகிழ்ச்சி மண வாழ்க்கை வெற்றியாகுமா என்று தன் என்பது எனக்கல்லவா தெரியும்?
ந்து வந்த பதிலைப் பார்த்த போது,
ா இருக்கிறாள் என்று அந்தக் கடிதம் வியையே பாடியிருந்தாள் - புதுவிதத் யே வைத்துக் கொள்ளப் போகிறோம். பத்திரிக்கா போனார்கள்?' என்று
கவலைப்பட்டிருக்க மாட்டேன், ாட்டம் இன்னமும் ஓயவில்லை என்று எ. இப்படியும் ஆகலாம்' என்று நான் என்று வருந்தினேன். இத்தனை நாள் ற கட்டம் என்று உணர்ந்தேன். இது இருப்பதாகவும் கேள்விப்பட்டிருந் பிடித்துக் கொண்டிருக்கப் போகிறாளே
குப் போயிருந்தபோது ராஜியைக் ந்தாலும் நல்ல அழகாக இருந்தாள்.
வீட்டுக்கு வந்திருந்த போது மழை aர் விழாமலிருக்க, தோள் சேலையை ாடு, காலடிச் சேலை தரையில் தோயா

Page 35
மல் சற்றே உயர்த்திப் பிடித்தபடி எங் கோலம் கனுதேசாய் வரைந்த ராதை பெண்ணின் செளந்தர்யம் என்பதின் நான் கண் முன்னால் தரிசித்தேன்.
அந்தக் குளிர்ந்த வேளையிலும் முத்து முத்தாய் வியர்த்திருந்தது. அ வைத்துக் கொண்டு நான் பிரமிப்புட தேன். "குஞ்சம்மா' என்று குழந் என்னருகில் அமர்ந்து கொண்டா அவளுக்கு.
'நீ நல்ல வடிவாய் இருக்கிறா விமர்சித்து விட்டேன்.
அவள் முகம் வாடிவிட்டது. அ யத்தை அசந்தர்ப்பமாக நினைவூட்டி நான்.
அவள் கொஞ்சம் யோசித்தாற் யோட நான் செத்துப் போய்விடுவே "சீ கழுதை' என்று அவள் வா அவள் கண்களில் நீர் துளித்திரு 'இம்மாதிரி சந்தர்ப்பத்தில் இப் அறிவுக்கெட்டியவரையில் புத்திமதி 'பிரசவ சமயம் ஹொஸ்பிடலுக்குப் இந்த விடயத்தை விட்டு விடுங் அசுவாரஸ்யமாக, 'இவர் கூட ஒ விரலைக் கடித்துக் கொண்டே
எனக்குக் கொஞ்சம் ஆறுதலாய மறந்து போய் இருந்தேனே இதுவன நிம்மதியாய்த் திரும்பினேன் ஊ மலைகளின் மடிப்புகளுள் பிறருக்குத் தெரியாதது போல் ந இராமபாணம் மாதிரி இலக்குத் த6
"ராஜி எக்ஸ்பயர்ட்" என்று

கள் வீட்டு வாசலில் அவள் வந்து ஏறிய யின் சித்திரத்தை நினைவூட்டியது. ஒரு முழு அர்த்தத்தையும் அப்போது தான்
அவளின் வெண்மையான நெற்றியில் ரைவாசி பின்னிய 'லேஸைக் கையிலே -ன் அவளையே பார்த்துக் கொண்டிருந் தைத்தனமாகக் கூவிய படியே வந்து ள், 'தஸ் புஸ் ஸென்று மூச்சிரைத்தது
ய் ராஜி' என்று என்னை மறந்து நான்
வள் மறக்க வேண்டும் என்றிருந்த விஷ விட்டேனோ என்று சங்கடப்பட்டேன்
போல் இருந்து விட்டு 'இந்தப் பிள்ளை
|ன் குஞ்சம்மா' என்றாள்.
யைப் பொத்தினேன்.
ந்தது.
படி எல்லாம் பேசக் கூடாது' என்று என் சொன்னேன், மறந்து போய்விடாமல்,
போய்விடு' என்று சொன்னேன்.
கள் குஞ்சம்மா' என்பது, போல அவள் ரு டாக்டர்தானே' என்றாள் - கட்டை
இருந்தது. அந்த விஷயத்தையே நான் Ul
ரிலிருந்து.
மறைந்து கொண்டு, இருக்குமிடமே ான் வாழ்ந்து கொண்டிருந்த ஊருக்கு பறாமல் ஒரு தந்தி வந்தது ஒரு நாள். அத்தான் அடித்திருந்தார். ஐயோ இது
27

Page 36
உண்மையாய் இருக்க்ககூடாதே என் தந்தியின் வாசகத்தை ஒவ்வொரு எழுத் உறுதிப்பட்டு விட்ட உண்மையைச் முறையாகக் காணவுமாய் பாதாதிகேசட் ரயிலேறினேன்.
நான் போனபோது, ரோஜாவாக போட்டிருந்தார்கள். ஆமாம், நாராகத் வேண்டும் என்ற ஆவேசத்தில் கடைசி பார்த்திருந்தார்கள்.
வீட்டில் பிரசவம் பார்ப்பது காரியமில்லைதான். ஆனால் ராஜியி போயிற்று. ஒரு குழந்தையைப் பிரச6 இழந்து விட்டாள். பிழைக்கமாட்டாள் பிடலுக்குக் கொண்டு போக ஆயத்தங்க கிறாள் 'என்ன செய்தாலும் நான் பின சாக விடுங்கள்' என்று. யார் அந்தச் கொண்டிருக்கப் போகிறார்கள்? வழக் தட்டிவிட்டார்கள்.
ஆஸ்பத்திரியில் ஆறு சர்ஜன்களு யுமாய் நின்று கவனித்துக் கொண்டு என்று பிறகு அறிந்தேன். அத்தனை
கேஸுக்காக வந்திருப்பதை எண் கொள்ளக்கூட முடியாமல் அவள் என்: மனம் எண்ணிப் பார்த்தது.
மாப்பிள்ளை யாருக்கோ சொல்லி போத்தல் ஏற்றினோம். நின்றவர்கள் அ வைத்தியத்தில் ஒரு குறையுமே இல்ை ஆசையே இல்லை - போய்விட்டாள்.'
நான் ராஜியைப் பார்த்தேன். புதுக் கருக்கு அழியாத சிவப்பு நீ கொண்டு தீபமாய்ச் சுடர்விட்டாள், ! எவையும் அண்டாத மனமாக என்னு அவை என்னை நெருங்கியுபோது, சொல்லத் தெரியாமல், ஒவ்வொரு க
28

று பிரார்த்தித்துக் கொண்டு அந்தத் தாகத் திருப்பி வாசித்தேன். அதனால்
சந்திக்கவும், அவளைக் கடைசி b பரவிவிட்ட வெறுமை உணர்வோடு
இருந்த ராஜியை, நாராகக் கிழித்துப் தான். எப்படியும் பிழைக்க வைக்க முயற்சியாக "ஆபரேஷனும் செய்து
என்பது அத்தனை கஷ்டமான ன் கேஸ் "கொம்பிளிகேடட் ஆகிப் வித்த கையோடு நிறைய இரத்தத்தை என்ற நிலை ஆகிவிட்டது. ஹொஸ் ள் செய்தபோதே அவள் கெஞ்சியிருக் ழக்கமாட்டேன் அம்மா - இங்கேயே சமயத்தில் அதை எல்லாம் கேட்டுக் கம் போல அவள் வேண்டுகோளைத்
ம் மூன்று டாக்டர்களும் மாப்பிள்ளை அவளைக் காப்பாற்ற முடியவில்லை ஆண்களுக்கு முன்னால் இப்படி ஒரு னிக் கட்டை விரலைக் கடித்துக் னமாய்த் தவித்திருப்பாள் என்றே என்
க் கொண்டிருந்தார் 'இரத்தம் நான்கு த்தனை பேரும் 'ஸ்பெஷலிஸ்டுகள் ல. அவளுக்கு வாழவேண்டுமென்ற
றக் கூறைப்புடவையைப் போர்த்திக் குஞ்சம்மா, மானுடத்தின் ஆசைகள் டைய மனம் இருந்தது. பலவந்தமாக வெருண்டு போய், வாய்விட்டுச் ட்டத்திலும் என்னால் இயன்றவரை

Page 37
போராடிப் போராடித் தோற்றுப் போ எப்படி எனக்கு வரும்?' என்று அ எனக்கு.
அவளைப் பொறுத்தவரை இது அக்காவும் பெரியம்மாவும் த தெய்வங்களை எல்லாம் அர்ச்சித்துக் கிறில்களுக்கிடையே கைவிரல் கொண்டிருக்கிற இந்தச் சின்னப் பென் குஞ்சம்மா என்றுதான் கூப்பிடுகிறாள் பாரம்பரியப் பண்புகள் எவ்வ ஊடுருவுகின்றன என்று பரீட்சித்து
இல்லை. இவளும் மற்றொரு ராஜி ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்கி
இவள் ராஜியின் பெண்
ஈழத்துச் சிறுகதையுலகில் குற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கவி நாகேஸ்வரி கணபதிப்பிள்6ை முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ஆ பாடசாலைக் காலம் தொடக்கம் லும் கவிதைகள், சிறுகதைகள் "வாழ்க்கையின் ரகசியம்” என்ற இல் கலைச்செல்வியினூடாக வரையான ஐந்தாண்டுக் கா செயற்பட்ட இவர் தற்பொழு: விலகியுள்ளார். பெண்கள், ! நுழைந்தவுடன் குடும்பச் சுமை களால் எழுத்துலகிலிருந்து தம் என்பதற்கு கவிதா என்ற இப்டெ இவர் எழுதிய பல சிறந்த சிறு (1986 இல்) என்ற தொகுப் பெற்றுள்ள "மானிடவர்க்கென் சிறுகதையை இங்கு நன்றியுடன்

னேன்! வாழ வேண்டும் என்ற ஆசை அவள் சொல்கிறாள் போல் இருந்தது
ஒரு விடுதலையே! ான் பரதேசித் தெய்வங்கள்' என்று கொண்டிருந்தார்கள். களைக் கோர்த்துக் கொண்டு தொற்றிக் ண்ணும் அவளைப் போலவே என்னைக்
ளவு தூரம் தலைமுறைகளுக்கிடையே நீ கொண்டிருக்க எங்களுக்கு திராணி யாகாமல் இருக்க வேண்டும் என்று றோம்.
றிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்
தா என்னும் புனைபெயரையுடைய ா. இவர் தற்பொழுது கொழும்பு சிரியையாகப் பணிபுரிகிறார். தனது பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளி எழுதுவதில் ஈடுபட்டிருந்த இவர் தனது முதல் சிறுகதை மூலம் 1963 அறிமுகமானார். இருப்பினும் 1973 லமே எழுத்துலகில் தீவிரமாகச் து தனது எழுத்துப்பணியிலிருந்து குடும்பம் என்ற வட்டத்துக்குள் வேலைப்பளு போன்ற காரணங் மை விடுவித்துக் கொள்கின்றனர் ண் எழுத்தாளரும் விதிவிலக்கல்ல. கதைகள் "யுகங்கள் கணக்கல்ல' பாக வெளிவந்தது. இதில் இடம் று பேச்சுப்படின்' (1971) என்ற
மறுபிரசுரம் செய்கிறோம்.

Page 38
இருப்பு.?
பல திசைகளிலிருந்தும் அகப்படுவது திணறவ ஓடுவது சாத்தியமாயி
சில நேரங்களில் சிந்தி ஓடுதல் என்பது
ஓட்டத்துடன் சம்பந்தம் அல்லது துரத்துதலுட6
சில நேரங்களில் உண
அன்பு' என்கிற பதம்
கட்டுக்களுடன் சம்பந் கட்டுக்கள் உடைபடும்
அன்பு என்பது சிதறிப்
நண்பனே புல்லாங்குழலிசை துவாரங்களுடன் மட்( ஊதுதல், அழுத்துதல் எல்லாவற்றிற்கும் அப் இசைத்தல் என்பது மிக
துவாரங்களின் அடை
துயரமாய் வழிகிறது என் இசை,

- கொற்றவை
துரத்தப்படுகிறேன் ாய்த் தெரிந்ததால் %ബ്ര,
க்கிறேன்
ப்பட்டதா
ர்கிறேன்
தப்பட்டது.
| Gυσ63ουουσώ
போகிறது.
நிம் சம்பந்தப்பட்டதல்ல.
உயிர்ப்பானது.
படுதலில்
3O

Page 39
முனை
- ஆகர்வு
'முனைந்தேன் கவிதைப்ெ முனைதல் புனைதலாயிற்
புனைதல்
CO/6000/
புனைதல்
இருள்
புனைதல்
ஆளுதல்
புனைதல் ஆட்பட வைத்தல்.
புனைதல் பாம்பின் நாக்கெனப்
பிளவுண்டு பிளவுண்டு
நீ,
நான்
உன் ஆண்மை
என் பெண்மை
q_J/76)/(ó
புனைதலின் முனைவுகள
புனைந்த புனைகளை முனைந்து சிதை புனைகெட்ட உள்ளிடு
வித்தின் நுண்மைகள் விருட்சமென விரியட்டும்
31

nധിസ്ത്ര.

Page 40
தமிழக - இலங்ை - ஓர் 4
நவீன தமிழ்க்கவிஞருள் பெ தொகையினரே தமிழகத்தை எடுத் தரம் கைலாசம், இலங்கையை ருஷ்ணன் என ஒரு சிலரே நிை வரை இத்தகைய நிலையில் மாற் காரணங்களுள்ளன.
பொதுவாகவே நவீன இலக் தொடர்பு இருந்து வந்துள்ளமை போது, எழுபதுகள், எண்பதுகள் : போது கல்விகற்கும் பெண்களின்
தவிர, தமிழ்ச் சமூகத்தின் மே வந்துள்ளது. அதாவது, பெண் 6 சொந்த வாழ்க்கையுடன் தொடர்பு சமூகத்திடம் காணப்பட்டது. இந் வெளிப்படுத்தும் கவிதை வடிவ படைப்பாளிகள் தயக்கம் காட்டி ெ
மேலும், மரபுக்கவிதை வடி யாப்பிற்குக் கட்டுப்பட்டே இருந்து கடினமானது என்றொரு மனப்பார்
அனைத்தையும் விட, பெண் சுமை அவர்களது தொடர்ச்சியான
இருந்து வருவது அனைவருமறிந்த

கப் பெண் கவிஞர்கள்
ஒப்புநோக்கு
- செ.யோகராசா
ண்கவிஞர் எண்ணிக்கை ரீதியில் குறைந்த ந்துக்கொண்டால் அறுபதுகளளவில் செளந் எடுத்துக்கொண்டால் மகேஸ்வரி பாலகி னவுக்கு வருகின்றனர். ஆக, எண்பதுகள் றமெதுவும் ஏற்படவில்லை. இதற்குச் சில
கிய வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் தெளிவு. இப்பகைப் புலத்தில் நோக்கும் வரை ஆண்களின் தொகையுடன் ஒப்பிடும் தொகை குறைவாக இருந்துள்ளது.
னாபாவமும் வித்தியாசமானதாக விளங்கி எழுத்தாளர் படைப்புக்களை அவர்களது புபடுத்திப் பார்க்கும் மனோநிலை தமிழ்ச் நிலையில் மன உணர்ச்சிகளைச் சிறப்புற த்தை பெருமளவு கையாள்வதில் பெண் பந்துள்ளமை இயல்பானதே.
வம் போன்று நவீன கவிதை வடிவமும் வந்துள்ளது. இதனால், கவிதை எழுதுவது வகு காணப்பட்டது.
களது வாழ்க்கையில் நிலவும் "இரட்டைச் இலக்கிய முயற்சிகளுக்குத் தடையாகவே நதொன்று.
32

Page 41
மேற்கூறிய நிலைமை எண்பதுகளிலி கியது. குறிப்பாக, கல்விகற்கும் பெண்கள் கியது. மேலைத்தேயப் பெண் நிலைவாதச் விளைவாக, பெண் விடுதலை அமைப்பு இவ்வாறு ஏற்பட்ட சமூகவிழிப்புணர்ச்சி எதிரொலித்தன. பெண் நிலைவாதப் பி சஞ்சிகைகளும் ஆய்வுகளும் பரவலாக ெ நவீன கவிதை வடிவ நிலையில் ஏற மறந்துவிடுதற்கில்லை. யாப்பினை மீறிய பெறத் தொடங்கியதையே இங்கு குறிப்பி வடிவத்தில் தமிழகத்தில் வானம் பாடி ஆகியோரும் இலங்கையில் நுஃமான் கவிஞர்களும் ஏற்படுத்திய பாதிப்பு கணிக தமிழகப் பெண்கள் மத்தியில் ஏற்பட மத்தியில் ஏற்பட்ட சில மாற்றங்களும் இ றன. அரச, இன ஒடுக்குமுறையின் உச்ச தலை இயக்கங்களில் பெண்கள் இணைந் புகலிட வாழ்க்கை அனுபவங்கள் என்பன மத்தியில் ஏற்பட்ட இத்தகைய சமூக அ வெளிப்பட்டமையும் இதனால் இலங்கை நோக்கும் போக்கும் தமிழகத்திலிருந்து சி மென்பதும் எதிர்பார்க்கக்கூடியதே.
மேற்குறித்த பின்னணியில் தமிழ்ப் சமூக விழிப்புணர்ச்சியின் கவிதை நிை லிருந்தே ஒலித்தது. ஆழ்ந்த அர்த்தம் பெ என்ற கவிதைத் தொகுப்பாக அது வெளி பெற்றுள்ள கவிஞர்கள் அ.சங்கரி, சி. சிவ ஏ. மஜீட், ஒளவை, மைத்ரேயி, ரேணுக ஆணாதிக்கம் பண்பாட்டின் பேரால் கட்டுப்பாடுகள், அடிமை வாழ்வு, குடும் தொடர்பான எதிர்ப்புக் குரல்கள் இ. கேட்கவில்லை. சொல்லாத சேதிகள் எத் கவிதையை எடுத்தாள்வது பொருத்தமான
33

ருந்து படிப்படியாக மாறத்தொடங் lன் தொகை அதிகரிக்கத் தொடங் சிந்தனைகள் பரவத் தொடங்கின. புக்கள் உருவாகத் தொடங்கின. கலை, இலக்கிய முயற்சிகளிலும் ரக்ஞையுடனான படைப்புகளும் »JGrflûLILGoffu960T.
பட்டு வந்த மாற்றமொன்றையும் புதுக்கவிதை வடிவம் செல்வாக்குப் டுகின்றேன். இதற்கு புதுக்கவிதை வழிவந்த மேத்தா, வைரமுத்து தொடக்கம் சேரன் வரையிலான
மானது.
ாத, இலங்கைத் தமிழப் பெண்கள் |வ்விடத்தில் நினைவுக்கு வருகின்
கட்ட விளைவுகள், தமிழீழ விடு தமை, புலப்பெயர்வு ஏற்படுத்திய வே அவை. இலங்கைப் பெண்கள் ரசியல் மாற்றங்கள் கவிதைகளில் ப் பெண்கவிஞர் படைப்புக்களின் ற்சில விதங்களில் வேறுபட்டிருக்கு
பெண்கள் மத்தியில் உருப்பெற்ற லப்பட்ட முதற்குரல் இலங்கையி ாதிந்த சொல்லாதசேதிகள் (1986) ப்பட்டது. (இத் தொகுப்பில் இடம் ரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூறா ா நவரட்ணம், பிரேமி, ஊர்வசி) சமூகம் விதித்த (அநாவசியக்) பச்சுமைகள் முதலான விடயங்கள் துவரை தமிழ்க் கவிதையுலகில் நகையன என்பதனை விளக்க ஒரு
து.

Page 42
அவர்கள் பார்வையில்
"எனக்கு
முகம் இல்லை இதயம் இல்லை ஆத்மாவும் இல்லை அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள் நீண்ட கூந்தல் சிறிய இடை பருத்த தொடை இவைகளே உள்ளன.
சமையல் செய்தல் படுக்கையை விரித்தல் குழந்தை பெறுதல் பணிந்து நடத்தல் இவையே எனது கடமைகள் ஆகும்.
岛
இக் கவிதையை மேலோட்டப இத்தகு பார்வை பன்னூறாண்டுகளு இப்போதுதான் வெளிப்படுகின்ற பொருத்தம் கருதி நூலின் முன்னுை படுகிறது:
'பெண் என்ற நிலையிலிருந்து கருத்துக்களையும் வெளிக்க இதனை வெளியிட முயன்று முன்மாதிரியாக அமையத் (முன்னுரை சொல்லாத சேதி யாழ்ப்பாணம், 1986) தமிழகத்தில் 'பெண் என்ற நிலை திலகவதியின் 'அலைபுரளும் கரைே இத்தொகுப்பு கவிஞர் வெளியீடா பெண்கள் ஆய்வு வட்ட வெளியீட விடயங்களாகின்றன. அதுமட்டுமன்றி போது இலங்கைக் கவிதைகள் கவித்து போகிறபோக்கில் இன்னொரு 6

ற்பு பற்றியும் ழைபெய்யெனப் பெய்வது பற்றியும் தைக்கும்
/வர்கள் ப்போதும் எனது உடலையே நாக்குவர்.
கணவன் தொடக்கம் டைக்காரன் வரைக்கும் இதுவே வழக்கம்'
(அ. சங்கரி)
ாகப் பார்க்கும் போதே ஆண்களது க்கு மேற்பட்டதென்பதும் கவிதையூடாக தென்பதும் புலப்படுகின்றதல்லவா? ரயின் ஒரு பகுதி இங்கு எடுத்தாளப்
து அவர்களின் உணர்வுகளையும் ாட்டும் ஒரு தொகுதியாகவே ள்ளோம். இவ்வகையில். தக்கது என எண்ணுகிறோம்' கள், பெண்கள் ஆய்வு வட்டம்
யிலிருந்து வெளிவந்த முதற்தொகுப்பு யோரம் (1987) ஆகலாம். ஆயினும், க அமைவதும், சொல்லாத சேதிகள் ாக வருவதும் சிந்திக்கப்பட வேண்டிய , கவிதையாக்க முறை நின்று நோக்கும் துவம் மிகுந்துள்ளன.
விடயமும் நினைவுக்கு வராமலில்லை.
34

Page 43
சொல்லாத சேதிகளின் தாக்கம் பிற்பட்ட புகள் பலவற்றில் வெளிப்பட்டது ஒரு
ஈர்த்துக் கொள்ளத் தவறவில்லை. பிரா மறுபாதி (1993) இதற்குச் சான்றா பெற்றுள்ள கவிஞர்கள் மல்லிகா, சே நிருபா, பாமினி, மைத்ரேயி, பிரியத சுகுணா, சுமி, கலிஸ்ரா, பானுபாரதி வாசங்கங்களே அதனை வெளிக்காட்டி
'ஈழத்திலே இதுவரைகாலமும் ! டிமை கலாசாரத்திற்கு பலமா? சொல்லாத சேதிகள் கவிதைத் ே இரண்டாவது அடி, புகலிடத்தி லாம்' (மறையாத மறுபாதி, ! பிரான்ஸ், பெப்ரவரி 93) இத்தொகுப்புக் கவிதைகளில் பெண் பரிமாண நிலையினை எட்டுகின்றன. சமத்துவ நிலை தமிழ்ப் பெண்களது 6 செய்கிறது. அதேவேளையில் அத்தகை ஆண்களின் ஆதிக்கம் வலுப்பெற அ விடுகின்றது.
தவிர, இலங்கைப் பெண்கவிஞர் சீதனப்பிரச்சினை பற்றியே பேச, தமிழ் பல்வேறு பிரச்சனைகள் பற்றி - வித குடும்பக்கட்டுப்பாடு - சிரத்தை கொள்கி தமிழகப் பெண்கவிஞர்கள் பொது - வேலையில்லாத் திண்டாட்டம், மூடந தொழிலாளர் என - கவனஞ் செலுத் பெண்கவிஞர்கள் அரசியல் விடயங்களு ஒடுக்குமுறையும், ஈழவிடுதலைப் போர விதந்து பேசுகின்றனர். இவ்விதத்தி சிவரமணி, முதலானோர் குறிப்பிட சிவரமணி, செல்வி முதலானோரின் சி மும் இடம் பெறுகின்றது. இவர்கள் மத்தி சுல்பிகா தனித்து நிற்கிறார்.
எண்பதுகளின் பின் பெண்கவிஞ பற்றிக் கவனிக்கும் போது யாப்பு வழி
35

- இலங்கைப் பெண்கவிஞர் படைப் புற மிருக்க, புகலிடப் பெண்களை ன்ஸிலிருந்து வெளிவந்த ‘மறையாத கின்றது. (இத்தொகுப்பில் இடம் rசல்யா சொர்ணசிங்கம், கல்யாணி, ர்சினி, சா. ஜெயந்தி, உமையாள், தி, புஷ்பா, கிறிஸ்ரி) பதிப்புரை விடுகின்றன:
இருந்த இருக்கின்ற பெண்ண ன அடியின் நாதமாக வந்த தொகுதியின் பிற்பாடு; அதன் ல் ஒலிப்பதை இங்கே காண புகலிடக்கருத்து இலக்கியம்,
நிலைவாதக் கவிதைகள் இன்னொரு அங்கே மேலைத்தேய பெண்களது விடுதலைக் குரலை உரத்தொலிக்கச் ய மேலைத் தேயச் சூழலில் புகலிட |வ்வெதிர்ப்புக்குரல் இருமடங்காகி
கள் முன்னர் போன்று பெண்களது ழகப் பெண்கவிஞர்கள் பெண்களது வை நிலை, ஏழ்மை, பெண்கல்வி,
ன்றனர்.
வான சமூகப் பிரச்சனைகள் பற்றியும் ம்பிக்கை, வீடற்ற நிலை, குழந்தைத் துகின்றனர். மாறாக, இலங்கைப் நக்கு முதன்மையளிக்கின்றனர்; இன ாட்டமும் போர்க்கால வாழ்வும் பற்றி b ஊர்வசி, ஒளவை, மைத்ரேயி, த்தக்கவர்கள். இவற்றிற்கப் பால், ல கவிதைகளில் அரசியல் விமர்சன யில் மனித விடுதலை பற்றிப் பேசிய
ர்கள் கையாண்ட கவிதை வடிவம் ப்பட்ட வடிவங்களில் நவீன கவிதை

Page 44
இயற்றியோர் இலங்கையில் எவருமிலர் குறிப்பிடக்கூடிய சிலருள்ளனர். மால மானவர். இவரது கவிதைகளில் திரு ளமை தெரிய வருகின்றது.
மேலும் இலங்கைப் பெண் கவி தன்னுணர்ச்சிப்பாங்கின. தமிழகக் கவின் டவை. பெண்களது மன உணர்ச்சி வெளிப்பட்டு மனதிலே தொற்றிக் மிகையுணர்ச்சியுடன் - போலி உணர்ச் பட்டு வாசகர் மனதைப் பற்றிக் கொள்ள இலங்கைக் கவிதைகளில் இடம் ெ கள், வர்ணனைகள் இயல்பானவை. தமி வழி மனோரதியப்பாங்கின் செல்வ சிவரமணி, பொன்மணிவைரமுத்து ஆ எடுத்துக்காட்டுகளாகின்றன.
தமிழகக் கவிதைகளில் காணப்பு காணப்படாத - முக்கிய பண்பொன்று தளத்தில் வெளிப்படுகின்ற தன்மைே கொள்ள முடியாத படிமங்கள், குறியீடுக மறுவாசிப்புக்களை நாடி நிற்பவை. ெ சிறந்த சான்றாகின்றன.
இனி, குறிப்பிடத்தக்க அண்ை அவதானிக்க வேண்டும். இவ்விடத்தி போதுமானது:
1. எண்ணிக்கை ரீதியில் பெண் கவிஞ துள்ளமை (எனினும் அவ்வதிக தன்று.)
2. இலங்கையின் ஏனைய துறைப் டெ கவிஞர்களும் ஒரு குறிப்பிட்ட காெ கொள்கின்றமை. (எ-டு: சொல்ல எழுதுவதில்லை.)
3. தமிழ்கத்தில் புதிய கவிஞர்கள் சி ளாகின்றமை. (இவ்விதத்தில் கனி பெறுகின்றன. (கருவறை வாசன
36

என்றே கூற வேண்டும். தமிழகத்தில் தி ஹரீந்திரன் இவ்விதத்தில் முக்கிய ச்சிற்றம்பலக்கவிராயரின் பாதிப்புள்
ஞர் கவிதைகளுள் கணிசமானவை தைகள் பெருமளவு பொது நிலைப்பட் கள் முன்னையவற்றில் இயல்பாக கொள்கின்றன. பின்னையவற்றில் சியுடன் செயற்கை பாங்கில் வெளிப் ாத் தவறிவிடுகின்றன.
பறும் படிமங்கள், குறியீடுகள், அணி ழகக் கவிதைகளில் வந்த வானம்பாடி ாக்கு கணிசமாகவுண்டு முறையே ஆகியோரின் கவிதைகள் இவற்றிற்கு
படும் - இலங்கைக் கவிதைகளில் ண்டு. அதாவது, உணர்ச்சி புலமைத் ய அதுவாகும். எளிதில் விளங்கிக் 5ள் கொண்ட இத்தகைய படைப்புகள்
பருந்தேவியின் கவிதைகள் இதற்குச்
மக்கால மாற்றங்கள் சில பற்றி
ல் பின்வருவனபற்றிக் குறிப்பிடுவது
தர்கள் தொகை தமிழகத்தில் அதிகரித் ரிப்பு சனவிகிதாசாரத்திற்கமைவான
ண் படைப்பாளிகள் போன்று பெண் த்திற்குப் பின் அஞ்ஞாத வாசம்மேற் ாசேதிகள் கவிஞர் பலர் தற்போது
லரது வரவு முக்கிய கவனிப்புக்குள் மொழியின் படைப்புக்கள் முக்கியம் ன 1995) எடுத்துக்காட்டாக ஒரு

Page 45
4.
5.
கவிதை
"எமக்கு என்று சொற்கள் இல்லை. மொழி எர்மை இணைத்துக் கொள்வது உமது கதைகளில் ഗ്ര ഭൂരിതഞ്ച്, எனக்கென்று சரித்திரமின் நீங்கள் கற்றுத் தந்ததே, வார்த்துத் தந்ததே நிஜம். எனக்கென்று கண்களே 6%%7&0)&67 இல்லை அவ்வப்போது நீஇரவல! தருவதைத் தவிர:
இலங்கைப் புகலிட கவிஞர்கள் ம இவ்விதத்தில் மல்லிகா, றஞ்சினி மல்லிகா ஆங்கிலத்திலும் எழுது கவிதை ஒன்று பின்வருமாறு:
/ثر 5%قی "எனது இயக்கம் எனது ஆற்றல் எனது சிந்தனை எனது திறமை அனைத்தும் எனக்கே இருக்கக்கூடியவை. ம/7ரிடம7வது இருந்து இவற்றைப் பெற்றால் நான் பெண்ணாக இருக்க முடியாது. நீங்கள் உருவாக்கிய ெ எனது அடையாளமல்ல. நான் பெண் பிறக்கும் போதே '
(இனியும் சூல்கொள்
(தொடர்ந்து எழுதிவருவோர் குறை
37

z%üборат)
ിതണ്ഡ,
7//
த்தியில் முதிர்ச்சி ஏற்பட்டுள்ளமை. ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ம் ஆற்றலுடையவர். றஞ்சனியின்
UØ0
-23 வது இலக்கியச்சந்திப்பு 1997) வென்றாலும்) புதிய கவிஞர்கள் பலர்

Page 46
இலங்கையில் தோற்றம் பெறுகின் ரேவதி, பெண்ணியா) இவர்களு களைத் தருகின்றமை (கலாவி இக்கவிதை வெளியானதைத் தொட பல இதழ்களில் தொடர்ந்து இடம் ( ஒட்டுமொத்தமாக ஒப்பிட்டுக் கவ
கவிதை வளர்ச்சிக்கு இலங்கைப் பென ரைக்கத்தக்கதாயுள்ளமை புலப்படுகின்ற ளில் கைகூடியுள்ளது:
1.
பிரக்ஞை பூர்வமாக பெண் என்ற ளையும் கருத்துக்களையும் முதன் அவ்விதத்தில் பின்வந்தோரில் ஆழ யும்.
விடுதலைப் போராளிகளே தமது ( படுத்தியுள்ளமை. (எ-டு:- மேஜர் பா இவ்விதத்தில் மேஜர்பாரதியின் 8
எடுத்தாள்வது பொருத்தமானது:-
3.
"எனது இனியதேசமே குறிப்பெடுத்துக் கொள் எரியுண்டு சிதைந்து போன என் தேசத்தின் காப்பகழ் ஒன்றில் எழுகின்ற உணர்வு அலைகளைக் குறிப்பெடுத்துக்கொன்' (தொகுப்பு:
புகலிடப் பெண்கவிஞர்கள் பெண் முற்றிலும் புதிய புகலிட அனுபவங்
இவ்விதத்தில் கிருபா முக்கியமான
அவரது கவிதையொன்றின் ஒரு பகுதி:
38

ன்றமை. (எ-டு கலா, ஆகர்ஷியா, ள் சிலர் சர்ச்சைக்குரிய படைப்புக் ன் கோணேஸ்வரிகள், சரிநிகர் - ர்ந்து நீண்டதொரு சர்ச்சை சரிநிகரின் பெற்றது.)
னிக்கும் போது பொதுவான நவீன ண்கவிஞர்களின் பங்களிப்பு விதந்து து. இது முக்கியமாக மூன்று விதங்க
நிலையில் நின்று தமது உணர்வுக முதலாக வெளிப்படுத்தியமையும்
மான பாதிப்புகளை ஏற்படுத்தியமை
போர்க்கள அனுபவங்களை வெளிப் ரதி, கப்டன் வானதி, கப்டன் கஸ்தூரி) கவிதை யொன்றின் ஒரு பகுதியை
காலம் எழுதிய வரிகள்)
நிலைவாதப் படைப்புக்களுக்கப்பால்
களை வெளிப்படுத்துவது.
தொரு கவிஞர் நிறவாதம் பற்றிய

Page 47
நாங்கள் ஏன் அகதிகை என் தாய் நாடு எங்கே என் தாய் மொழி எது? நாங்கள் ஏன் கறுப்பர்கன7யிருக்கிே
அவர்க7ை7ல் 'ஏன் ஒதுக்கப்படுகின்றோம் துருக்கித் தோழி ஏன் 7ரித்தப்பட்டரர்?"
(தே இங்கே கவிஞரின் குரல் தமிழ்க்
உலகக் கவிஞர் என்ற நிலையை எட்(
இக்கட்டுரையை பொருத்தமும் பகுதியுடன் முடிப்பது பயனுடையதெ
'பெண் விடுதலை, பெண் உரி பொருளில் இன்னும் தமிழில் பே எண்ணுகின்றேன். ஏனைய இந்திய ெ ஞர்கள் தமிழிலே போதிய அளவு : குரியது.
புதுக்கவிதைத் துறைக்கு நிறைய மிய நிர்மல பிரபா பிர்டோலாய், வா இந்திரா பத்மா, இந்தியின் மம்த சுகதகுமாரி போல நமது மொழிக்கும் ஒன்றே அவசியப்படுகின்றது'(திலக (முன்னுரை), அலைபுரளும் கரைே டிசம்பர் 1987)
ஆயினும் மேற்கூறிய பகுதியில் -பெண் விடுதலை, பெண் உரிமை ட ளில் இன்னும் தமிழில் போதியளவு குப் பொருந்தாது என்றே கூறவேண் உருவாகாமலிருக்கலாம். ஆயினும் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

76,0757
றார்?
னிதை 1991) கவிஞர் என்ற நிலைக்கப்பால் ஓரளவு டுகின்றது என்றுரைப்பதில் தவறில்லை.
அவசியமும் கருதி ஒரு மேற்கோள் ன்று கருதுகின்றேன். மை பற்றிய புதுக்கவிதைகள் சரியான ாதியளவு உருவாகவில்லை என்றே மாழிகளைப்போல பெண் இயக்கக் கவி உருவாகவில்லை என்பது வருத்தத்திற்
வே பெண்கள் வரவேண்டும். அஸ்லா ங்காளத்து சவிதா சின்ஹா, மராத்தியின் ா, இந்து ஜெயின், மலையாளத்தில் நமது பெண்களுக்கும் கலாசார அணி வதி, எனது கவிதைகள் எனது கனவுகள் பாரம், திருமகள் நிலையம், சென்னை
முதல் வாக்கியத்தில் கூறப்படும் கருத்து ற்றிய புதுக்கவிதைகள் சரியான பொரு உருவாகவில்லை என்பது - இலங்கைக் டும். ஒரு வேளை இங்கு போதியளவு
குறிப்பிடத்தக்க பெண்கவிஞர் சிலர்
|39

Page 48
மாற்றத்துக்கு
திருமணம். தாலிகட்டும் வைபவம் நிறைவேறிய பெண்ணும் குழந்தை குட்டிகளுமாக சன ருக்கும் பசிக்களை ஒரேமாதிரியாகவே இ பந்தி போசனம் ஆரம்பமாகியது. முதற் பந்தியில் ஆண்களே இருந்து ளுக்கு உணவு பரிமாறப்பட்டது.
* * 誓 அந்தக் கிராமத்தில் நீருக்குக் கஷ் குழாயில் அடித்தெடுக்கும் நீரைப் பெற அவசர அவசரமாக அங்குவரும் ஆண்களு முன் வந்து நீரைப் பெற்றுத் தமது தே6ை பின் தங்கவேண்டியதுதான்.
நீண்ட நேரம் குழந்தைகளையும், பை காகக் காத்திருப்பர். பிரயாணிகளால் நிை சாவகாசமாக நின்று பயணிகளை இறக் கொண்டு ஆண்கள் பஸ்ஸினுள் நுழைந்: காகக் காத்து நின்ற பெண்கள் கால் கடுக்க
* * * 菁 அலுவலகம் மூடும் நேரம் கையொப் நெருக்கியடித்துக் கொண்டு நுழைந்து ெ ஒப்பமிட்டுவிட்டு ஆண்கள் பறந்துவிடு: நின்று கொண்டிருக்க வேண்டியதுதான்.
கோவிலில் கற்பூர ஆராத்தி வணக்கத் நாளாந்தம் இப்படிப் பல இடங்களி
40

- மார்க்கம்
பத்மா சோமகாந்தன்
து. அடுத்ததாக விருந்து ஆணும் ங்கள் நிறைந்திருந்தனர். எல்லோ ருந்தது.
உண்டனர். பின்னர் தான் பெண்க
*
டம் தெருவோடு அமைந்துள்ள அநேக பெண்கள் காத்திருப்பர்.
நம் வாலிபர்களும் நெருக்கியடித்து
பயை நீக்கிக் கொள்வர். பெண்கள்
களையும் சுமந்து கொண்டு பஸ்ஸிற் றந்து வழிந்துவரும் தரிப்பிடத்தில் குவதற்கிடையில் மிண்டியடித்துக் து விடுவர். நீண்டநேரம் பஸ்ஸுக்
நிற்க வேண்டியதுதான்.
·鲁 பமிட ஓரிரு நிமிடங்கள் இருக்கவே காப்பியைத்தமதாக்கி அவசரமாக பர். நெருக்கியடிக்காமல் நின்றால்
திற்கும் ஆண்களே முதலில். லும் பல சிக்கல்களையும் சிறுமைக

Page 49
ளையும் ஆண் முன்னிலைப்படுத பிழையென்பதல்ல, பெண்ணென் பதிவுகள் படிந்து கிடப்பதை அவத நாம் முன்னேற வேண்டும். டெ சொந்தக் கால்களில் நிற்கவேண்டு ளைக் கருத்தில் எடுக்கக்கூடாது. லைப்படுத்தி வந்த சமூகம் அ கிடக்கின்றது.
இத்தகையதொரு சூழ்நிலைய றோம்.
சில காலத்திற்கு முன்பு பெண் ஒழுக்கத்தைக் கெடுத்துவிடும், படி டாள் அடங்கிப் போகமாட்டாள். வேண்டிய பெண்ணுக்கு கல்வி ஏ யது. இத்தகைய அடக்குமுறை நீங் புகள் யாவும் பெற்றுள்ளனர். கன் பெற்றதோடு உத்தியோகங்களிலும் தங்களது தேவைக்கேற்ற வழு அடைகின்றனர். என்றாலும் கல்வி தனரேயன்றி தம் நிலைமை, பெண் ளென்றால் கை விட்டு எண்ணக்கூ கற்ற மற்றையோர் கவலை கொள்: இன்றைய பெண்கள் கற்றிரு தொழில் துறை பற்றிய விளக்கத் லாம். சமயம், கணிதம், விஞ்ஞா அந்தந்த விடயத்தைப் பற்றிய அறி திறமையும் இருப்பதை மறுக்கமு இனம் பற்றியோ, தமது அசமத்துவ களா? உணர்கிறார்களா? இதைத்த டுவர விரும்புகின்றோம். இதற்கு
1. மரபு வழி வந்து இறுக்கப 2. பெண்கள் விழிப்புணர்வு இநத இரு நிலைகளையும் 6 ஆராயமுயல வேண்டும். முதலா கொண்டால் சமயம் தொடக்கம் ச பெண்ணை இரண்டாந்தர நிலை எமது கலாசார பாரம் பரியங்கள்,

லையும் நாம் சந்திக்கிறோம். இதில் சரி றால் இரண்டாம் பட்சமானவள் என்ற IT665.5GOTLs).
பண்கள் தமது காரியங்களை ஆற்றத் தமது ம் என்றால் இத்தகைய சிறு சிறு சிரமங்க காலங்காலமாக ஆண்களையே முன்னி ந்தப பாரம்பரியத்துள்ளேயே மூழ்கிக்
பில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கி
ாகள் கல்வியறிவு பெறுவது பாவமானது, த்த பெண் கணவனை மதித்து நடக்கமாட் குசினியில் அடுப்போடு வேலை செய்ய ன்? என்ன தேவை என்ற கருத்தே நிலவி கி பெண்கள் கல்வி கற்க வசதிகள், வாய்ப் னிசமான பெண்கள் கல்வி வாய்ப்பைப்
அமர்ந்துள்ளனர். நவாயைப் பெற்றுக் கொள்வதில் திருப்தி பியைக் கற்றுத் தொழில் பார்க்க முனைந் களின் உரிமைகள் பற்றிச் சிந்திக்கின்றார்க டிய மிகக் குறைந்த தொகையினரைத்தவிர, வதேயில்லை. நக்கும் கவ்வியைப் பற்றி நோக்கினால், தைத் தருவனவாக அவை அமைந்திருக்க னம், சமூகவியல், ரசாயனம், மொழி என வைப் பெற்றதோடு கற்பிக்கும் ஆற்றலும் டியாது. ஆனால் சமூகத்தையோ, தனது வமான நிலையைப் பற்றியோ சிந்திக்கிறார் ான் நாம் இங்கு வெளிச்சத்திற்குக் கொண் இரு விஷயங்களை மனங்கொள்ளலாம். ாகப் படிந்து விட்ட பாரம் பரியம்.
அடையாத நிலை. விளங்கிக் கொண்டு எமது தரத்தை நாம் வதாகக் குறிப்பிட்ட கருத்தை எடுத்துக் ரித்திரம் வரை நூல்களின் பதிவுகள் யாவும் யில் வைத்தே பேசுகின்றன. அப்படியே சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் கூட
41

Page 50
ஒரு சில இடங்களில் பெண்ணை ம இடங்களில் தாழ் நிலையிலேயே வை. சாதியினதோ குறைபாடல்ல. இவற்றி முடியும். சில பழமொழிகள் பாடல்க வைத்தே ரசித்து மகிழ்கின்றன.
பெண் புத்தி பின் புத்தி பெண்களை நம்பாதே, கண்களே இப்படிப்பல இவற்றை யெல்லாம் பெண்கள் அ போன்ற கொச்சைத்தனங்கள் நம் மத் பார்த்திருக்கவா?
பெண் - பொறுமைக்கு இருப்பி என்ற தன்மையினாலாக்கும் இதுவரை
பெண்கள் தாழ்வுற்ற நிலையிலி சமூகத்துக்கே இழுக்கானது. வளர்ச்சிக்கு ணைந்து சமமாக இழுக்க வேண்டிய மற்றது மெதுவாகவும் இழுத்தால் வண் இது தான் இன்றைய எம் சமுதாய இருந்தால் தான் சமூகம் சிக்கென முன்ே பின்தங்கிய நிலையில் பெண்களை இந்த நிலை பற்றி பெண்கள் மாத் டும். பெண்கள் உரத்துச் சிந்திக்க வேண் பெரும் பெரும் மாற்றங்களை ே தான் - ஈடுபட்டால் வேண்டாமென்றில் அன்றாடம் நடைமுறையில் சந்திக்கு விழிப்புணர்வோடு செயல்பட்டால் வுெ
D-5TT600TLDT35, ஒரு குழந்தையைப் பார்த்து. நீ வாழவேண்டும். தம்பி ஆண்பிள்ளை. சிறிதாயினும்) ஆண்பிள்ளை தானே எ என்ற மனப்பதிவை ஏற்படுத்துவது நேரிடும்.
அப்போதெல்லாம் நாமே விழிப் நிலை நாட்ட வேண்டும். அதற்கு டெ வேண்டும். தனது ஆற்றலை சமூக ந முரண்பாடுகளைத் தவிர்த்து முன்னேற
4.

தித்துப் பார்த்தாலும், அநேகமான ந்துள்ளன. இது ஒரு இனத்தினதோ, ற்குப் பல சான்றுகளைக் குறிப்பிட ளெல்லாம் பெண்ணை அடிமையாக
பெண்களை நம்பாதே
அறிந்திருப்பர். அப்படியிருந்தும் இது தியில் இன்னும் இருப்பதை நாம்
டம் எதையும் சகித்துக் கொள்வாள்' பேசாமடந்தையாக இருந்தாள். ருப்பது பெண்ணுக்கு மட்டுமல்ல. நக் குந்தகமானது. இருமாடுகள் ஒன்றி வண்டியை ஒருமாடு விரைவாகவும், டி முன்னேறிச் செல்வது எப்படி?
நிலை. ஆணும் பெண்ணும் சமமாக னேறும்
வைக்கும் சமூகம் முன்னேறுமா? திரமல்ல ஆண்களும் சிந்திக்கவேண் ாடும். விழிப்படைய வேண்டும். நாக்கி பிரமாண்டமான திட்டத்துடன் லை - ஈடுபட வேண்டுமென்றில்லை. ம் சிறு சிறு விடயங்களில் எலலாம் ற்றி நிச்சயமாகும்.
பெட்டைப்பிள்ளை அடங்கித்தான் Fாண்பிள்ளை யென்றாலும் (அளவில் ன்று பெண்ணை விட ஆணே உயர்வு போல் பல விடயங்களைச் சந்திக்க
புடனிருந்து நம்மவர் பெருமையை |ண் தன்னைப் பற்றி நன்கு அறிதல் Uனோடு ஒட்டி வளர்க்க வேண்டும். துடிப்புடன் விழிப்படைய வேண்டும்.

Page 51
மூடுதல்
பாழ் வெளியில் ஓர் அரண் அமைத்து இன்றெனைக் காக்கிே
அழைப்பின் எந்தக் குரலுக்கும் நான் விலக்கப் போவதி எனது அரணை.
என்னிடமிருந்ததையெ ஒவ்வொரு முறையும் UGUGuigcontes பறித்துச் சென்றீர்கள்.
இன்று இச் சாய்வு நாற்காலிய யாருக்கும் தயங்காமல் கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறேன்.
இப்பொழுது தான் தைரியமாய் இருக்கிறே பாதுகாப்பாய் இருக்கி
யாரையும் அனுமதிக்க என்னிடமிருந்து எதையுமே பெற முடிய
பொறுக்க இயலாதபடி கத்துகிறார்கள் சத்தமிடுகிறார்கள் தூங்க விடுவதே இல்ை

bid/7-
ரன்.
தில்லை
αύουσώ
2607
గ9
றேன்.
மாட்டேன்
ாது.
DGU.
43

Page 52
எனினும் என் தனிமை6 உருவாக்குகிறேன் இந்த இரைச்சல்களின்
இப்பொழுதும் எல்லாவகை சாத்யங் இருக்கலாம்.
எப்போதாவது கேட்கி புதுமையாய் வியப்பூட்டும் அழைப்பு (UTGon
எதையோ கொடுக்க வந்திருக்கி
வஞ்சகமுள்ள அழைப் பயங்களால் எனது அரண்களை இ6 வலுப்படுத்துகிறேன்.
வழிதவறி வந்த தேவதைகள் சிலவும் திரும்பிப் போயிருக்கக்
29 வயதாகும் சல்மா கடந்த சி வருகிறார். கவிதைகளுடன் புத்த லும் ஈடுபட்டிருக்கிறார். இஸ் இருந்து வந்திருக்கும் சல்மாவி: பாலுறவு வழியே பெண்ணின் தப்படும் அழுத்தங்களை மிகு காலச்சுவடு, நிகழ், பாரதி சு இவரது படைப்புக்கள் வெளிவர
நன்றி
امتي

உள்ளிருந்து.
களும்
2து
2ndia, Gir
புகளின்
ன்னும்
கூேடும்.
ல ஆண்டுகளாகக் கவிதை எழுதி க விமர்சனம், சிறுகதை முயற்சிகளி லாமிய கலாசாரப் பின்னணியில் ன் கவிதைகள் சமூகம், வீடு, மதம், உடல் மீதும் மனம் மீதும், செலுத் ந்த வலியுடன் பதிவு செய்பவை. ம்ெ விழிச்சுடர் ஆகிய இதழ்களில்
.80Tזז אדוק דין
| காலச்சுவடு, ஏப்ரல் - ஜின் 1997

Page 53
முரண்பாடுகளுட - தென்னாபிரிச்
1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத 5 ஆம் திகதி வரை தென்னாபிரிக்காவி இடம் பெற்ற முரண்பாடுகளுடன் பணி கருத்தரங்கில் பங்கு பற்றும் வாய்ப்பு கி இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த றெஸ்போ ing to Conflict) GTg) Lib (6gp 6J60TġġSGOTI ஏற்கனவே மட்டக்களப்பிலும், யாழ்ப்பு விலும், பெண்கள் அமைப்புகளிலும் பல கிற்குத் தெரிவு செய்யப்படுவதற்கு சாத்
தென்னாபிரிக்காவில் கடந்த சில ச வெள்ளை இனத்தவர்களுக்குமிடையில் 1994 ம் ஆண்டு விடுதலை கிடைக்க ஏற்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் முரண்பாடுகளுக்கான பின்னனியை ஆ அமைந்ததனாலும் பயிற்சிக் கருத்தரங்ை களமாகத் தெரிவு செய்யப்பட்டது. இக் நான்கு பேர் உட்பட சர்வதேச நாடுக கலந்து கொண்டனர். இவர்கள் யுத்தம் தான், கென்யா, புரூண்டி, லைபீரியா, டியா, உகண்டா, இங்கிலாந்து, அமெரி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அ8 பிரச்சனைகளை பகுப்பாய்வு செய் முன்வைப்பதும், பிரச்சனைகளை நை புதிய யுத்திகளை கையாளுவதும், கற் சூழலுக்கு ஏற்றவகையில் நடைமுறை கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக அன
45

ன் பணியாற்றல் க அனுபவம்
விஜயகுமாரி முருகையா.
நம் 25 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் ன் தலைநகர் ஜொஹானஸ்பேர்க்கில் ரியாற்றுவது சம்பந்தமான பயிற்சிக் டைத்தது. இப்பயிற்சிக்கருத்தரங்கை ண்டிங்க் ரூ கொன்விலிக்ற் (Respondf ஒழுங்கு செய்திருந்தார்கள். நாம் பாணத்திலும் அகிம்சைப் பணிக்குழு ணி புரிந்தமை இப்பயிற்சிக் கருத்தரங் தியமாக அமைந்தது.
காலமாக கறுப்பு இனத்தவர்களுக்கும் கொடூரமான போர் இடம் பெற்று ப்பெற்றது. சமாதான உடன்பாட்டை மேற்கொள்ளப்பட்டு வருவதனாலும் ய்வு செய்யப் பொருத்தமான இடமாக கை நடத்த தென்னாபிரிக்கா பயிற்சிக் கருத்தரங்கிற்கு இலங்கையிலிருந்து 5ளில் இருந்து முப்பது பிரதிநிதிகள் நடக்கும் நாடுகளான ஆப்கானிஸ் ரஷ்யா, யூக்கோஸ்லாவியா, கம்போ ரிக்கா, மொசம்பிக், தென்னாபிரிக்கா னுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும், வதும், அவற்றுக்கான தீர்வுகளை டமுறையில் பரீட்சித்துப்பார்ப்பதும், றுக்கொண்ட புதிய அனுபவங்களை ப்படுத்திப்பார்ப்பதும் இப்பயிற்சிக் மந்தது.

Page 54
பயிற்சிப் பட்டறை முரண்பாடுகை வளர்த்தலும் நடைமுறைப்படுத்தலும், பாதிக்கப்பட்டவர்களை, வலுவுள்ளவ டையேயான நல்லுறவை கட்டியெழுப் என்பவற்றுக்கிடையே உள்ள அனு தொடர்பு ஊடகங்களுடன் பணி புரி எனக் கட்டம் கட்டமாக வடிவமை பட்டறையில் பங்குபற்றியவர்கள் L பணியாற்றுபவர்களாகவும், பின்வரு வருபவர்களாகவும் இருந்தனர். பால் (Gender Development, and Conflict (56)6OLD556 lb) (Working With C பேச்சுவார்த்தை (Negotation), முரண்ட Conflict), ஒன்று கூடி இணைந்து செய முரண்பாட்டை கையாளுவதற்கான ப வன்முறை, பலாத்காரம், பயங்கரவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களு People Affected by Violence), -95 h60) மத்தியஸ்தம் வகித்தல் (Mediation), ம Work), சமாதானத்திற்கான பூர்வாங்க 3Long, T6073,566 (Peace Education),
9,1966(555ujib (Post-War Reconstru 3560)GIT širšgsáo (Problem-Solving), FL ளும், செயற்பாட்டு முறைகளும் (Re துன்புறுத்தல்களை கையாளுதல் (Deal (Demobilisation), தலைமைத்துவமும், Peacekeeping), gråuš85ITTIÉJ856T (Sanct gâ) (Preventing Escalation,of violenc டங்களில், முரண்பாடுகளுடன் செய பயனுள்ளதாக அமைந்தது.
இப்பயிற்சிக் கருத்தரங்கில் பெண் துவம் கொடுக்கப்பட்டு, இன நிற உலகையே இன்று அச்சுறுத்துகின்ற பாதிப்புகளும், இவைகளால் பெண்கள் ளும் கவனத்தில் கொள்ளப்பட்டு ஆய் தென்னாபிரிக்காவில் பெரும்பா அங்கு வெள்ளை இனத்தவர்களுக்கு
4.

|ளப் பகுப்பாய்வு செய்தல், திறன்களை யுத்தத்தின் பின் உடல், உள ரீதியாகப் ர்களாக மாற்றுதல், முரண்பட்டவர்களி புதல், பல்வேறு சமூகங்கள், இனங்கள் பவங்களைப் பகிர்ந்து கொள்ளல், நல், யுத்தித் திட்டமிடலும் மீளாய்வும் க்கப்பட்டு இருந்தது. இப்பயிற்சிப் பல்வேறு முரண்பாடுகளுக்கிடையில் நம் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு நிலை அபிவிருத்தியும், முரண்பாடும் ), நிறுவனங்களுடன் செயலாற்றுதல் Drganisations (leadership), FLDII gl JmTilʻltqób 9|19leSl(15ğ5ğ5) (Development in Gorribgiggi) (Coalitions And Networks), IGibá (Training for Conflict - Handling), 5th (Violence, Intimidation, Terrorism) 5L6T G6, GoGo Glauiggi) (Working With 3 DL6 Il-3,603.5GT (Active Nonviolence), னித உரிமை வேலை (Human Rights (ஆரம்ப) வேலை (Peace Initiatives), புத்தத்திற்கு பிற்பாடான மீளமைப்பும், ction And Development), Gygalgogo ாதானப்படுத்துவதற்கான அமைப்புக conciliation Structures And Processes), ing with Trauma), இராணுவக்கலைப்பு glorg, T60TLDT55(plb (Monitoring and ions), வன்முறை அதிகரிப்பை தவிர்த் :e) என்பனவாகும். இவ்வேலைத்திட் பலாற்றுவது பற்றிய பயிற்சி மிகவும்
ண்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத் வேற்றுமை, உள்நாட்டுப் போர்கள், வறுமை என்பவற்றால் ஏற்படுகின்ற ரின் வாழ்வில் ஏற்படுகின்ற அவலங்க வுக்குட்படுத்தப்பட்டது. ான்மை மக்கள் சூழு இனத்தவர்கள். ம், கறுப்பு இனத்தவருக்குமிடையில்
6

Page 55
மோசமான போராட்டம் இடம் பெற்றது வகையில் மிகவும் அடக்கப்பட்டு வந்துள் போராட்டத்திற்கு மத்தியில் 27 வருட பின்னர் ஜனாதிபதியாகத் தெரிவு செய பெறுமதியுள்ள மனிதராகப் பாராட்ட உண்மைக்கும் இணக்கப்பாட்டிற்குமான ச mission) அமைக்கப்பட்டு, கடந்தகால இ ளானவர்களையும், குற்றவாளிகளையும் குற்றங்களை சபையின் முன்னர் நேர்மை மன்னிப்பு வழங்குகிறது. மனித உரிமைன செய்வதே இச்சபையின் நோக்கம். இரு தார பலம் வெள்ளை இனத்தவர் கையில் தொழிலாளிகள் என்ற வகையில் கீழ் முடிந்தது.
தென்னாபிரிக்கப் பெண்களின் நிை மாக இருந்தது. போர் சூழல் காரணமாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருந்தனர். உ பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ெ தென்னாபிரிக்கப் பெண்களாக உள்ள இவ்வன்முறைச் செயலுக்கு எதிர்ப்புத் ஆண்கள் ஒன்று சேர்ந்து தேசிய மட்ட செய்திருந்தார்கள். இதில் கலந்து கொ கொள்ளும் வாய்ப்பு எமக்கு கிடைத் ஆண்கள் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை ந இந்த நிகழ்வில் ஜனாதிபதி நெல்சன் மண் அதே வேளை மற்றைய நாடுக முரண்பாடுகளால் பெண்களுக்கு ஏற்ப உள்ளமையை அறிய முடிந்தது. ே காரணமாகவும் இவர்கள் வன்முறைகளு சிலவற்றைக் குறிப்பிடலாம் என நினைக் வெளியே வேலைக்கு செல்ல முடியாத வில் இளம் பெண்கள் வயதுக்கு வந்த உறுப்புக்களை வெட்டிச் சிகிச்சை செய்கி மாதவிடாய் காலத்தில் சரியான வேதன கள். இது கொடூரமான கலாசார மூடநம் காம்களில் அதிகாரிகளால் பல பெண்கள் கியுள்ளதையும் அறியக் கூடியதாக இருந்
47

வறுமை கலாசாரம், நிறம் என்ற ாளனர். ஜனாதிபதி மண்டேலா பல சிறை வாழ்க்கையை அனுபவித்து, ப்யப்பட்டு, உலகிலேயே மிகவும் ப் பெறுகிறார். அங்கு தற்போது :60L (Truth and Reconciation Comஇனவன்முறைகளால் பாதிப்புக்குள் இனங்கண்டு அவர்கள் தத்தமது யாக ஏற்றுக் கொண்டதன் பின்னர், யப் பேணும் பண்பாட்டை விருத்தி ப்பினும் இன்றும் அங்கு பொருளா இருப்பதையும் கறுப்பினத்தவர்கள் மட்டத்தில் இருப்பதையும் காண
லமையை அறிந்த போது ஆச்சரிய அதிகளவான பெண்கள் பாலியல் லகிலேயே யுத்த சூழல் காரணமாக பண்களில் பெரும்பான்மையினர் உண்மையை அறிய முடிந்தது. தெரிவிக்குமுகமாக தென்னாபிரிக்க த்தில் ஊர்வலம் ஒன்றை ஒழுங்கு ாண்ட சில பெண்களுடன் கலந்து தது. உலகில் முதல் தடவையாக டத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. டேலாவும் கலந்து கொண்டார். ளிலும் நடந்து கொண்டிருக்கும் பட்ட நெருக்கடி நிலை கூடுதலாக பாரினாலும், கலாசாரத்தடைகள் க்குள்ளாகியுள்ளனர். உதாரணமாகச் கிறேன். ஆப்கானிஸ்தான் பெண்கள் கலாசாரத்தடை உள்ளது. கென்யா வுடன் அவர்களது இனப்பெருக்க ன்றார்கள். இதனால் அப்பெண்கள் னகளை அனுபவித்து வருகின்றார் பிக்கையாகும். அத்துடன் அகதிமு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளா
தது.

Page 56
இலங்கையிலிருந்து தென்னாபி நிலையத்தில் தாமதித்த போது அ நேர்ந்தது. இவர்களை இலங்கையி இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு பணத்தையும் அபகரித்துக் கொண்டு மறைவாகி விட்டனர். யுத்த சூழலில் வெளி நாடு சென்ற இவர்கள் ஏமாற்ற இலங்கை வர விமான நிலையத்தில் னையால் தொழில் ரீதியாகவும் ஏை களுக்குப் புலம் பெயரும் பெண்களி
பொதுவாக எல்லா நாடுகளிலும் போன்ற பல காரணங்களால் மக்கள் மற்றவர்களின் ஒத்துழைப்பின்மை போவதும், வறுமை நிலையும் மு அடிப்படைக் காரணமாக அமைகின்
பயிற்சியின் போது பல புதிய இருந்தது. பல்வேறு சமூகங்களையு இணைந்து செயற்பட்டமையால் நி வாய்ப்பாக அமைந்தது. இவ்விடய மட்டக்களப்பைப் பொறுத்தவரையி விடயங்களை நடைமுறைப்படுத்துவ களில் உள்ள உழைக்கும் மக்களுக்கு கருத்தரங்குகளை நடத்துதல், பெ டுப்பயிற்சிக் கருத்தரங்கினை நட விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தல், ச1 சியை உருவாக்குதல், சமாதானத் பணியாற்றும் ஊழியர்களுக்குள் சம்பந்தமாக அறிவுறுத்தல், நம்பிக் இவ்வாறான திட்டங்களை செயற்ப கொண்டு வரலாம். இப்பயிற்சிக் க திட்டங்களுக்கும் பொருத்தமானதாக இருந்தது.

ரிக்கா சென்றபோது டுபாய் விமான ங்கு இலங்கைப் பெண்களை சந்திக்க லிருந்து அழைத்து வந்த முகவர்கள், அனுப்புவதாகக் கூறி லட்சக்கணக்கான கென்யாவில் கைவிட்டு விட்டு தலை இருந்து விடுபட்டு தமது பிழைப்புக்காக ப்பட்ட நிலையில் துயரத்துடன் மீண்டும் காத்திருந்தனர். இன்றைய இனப்பிரச்ச னய காரணங்களுக்காகவும் வெளிநாடு ன் நிலை கேள்விக்குறியாகவேயுள்ளது.
இனவன்முறை, யுத்த சூழல், வறுமை, தமது உரிமைகளை இழக்கும் போது யும் நம்பிக்கையற்று மனம் தளர்ந்து ழரண்பாடுகளுக்கு உள்ளாவதற்கான D5).
அனுபவங்களைப் பெறக்கூடியதாக ம் இனங்களையும் சேர்ந்தவர்களுடன் றைய விடயங்களைக் கற்றுக் கொள்ள ங்களைப் பகுப்பாய்வு செய்தபொழுது ல் தொடர் நடவடிக்கையாக பின்வரும் தாக தீர்மானிக்கப்பட்டது. கிராமப்புறங் ந மனித உரிமை சம்பந்தமான பயிற்சிக் ண்கள் அமைப்புகளுக்கு முரண்பாட் த்துதல், அகிம்சைப் பணிக் குழுவிற்கு மகால சூழ்நிலை பற்றிய விழிப்புணர்ச் திற்காக பணிபுரியும் நிறுவனங்களில் உறவு முறையைக் கட்டியெழுப்புதல் கையை ஏற்படுத்தல் என்பனவாகும். டுத்துவதன் மூலம் பல மாற்றங்களைக் ருத்தரங்கு எமது சூழலுக்கும் வேலைத் அமைந்ததால் மிகவும் பயனுடையதாக

Page 57
- நூதனச்
மாலைநேரத்துக் கொட்டுமழை தடுமல் பிடித்துவிடுமென்று பயந்து
எழுத்தாளர் நூதனசாலைக்குள் விரை இறந்த விலங்கொன்றைச்சூழ பிள்ளை புதுமணச் சோடிக்கு முகங்காட்டும் நிர்வாண அழகியொருத்தி குளியல் முடித்து சேலையை எடுக்கக்
மெல்லியதானதொரு தொடுகை, அந்த
அவளது மார்பகங்கள் விம்மின நேற்றைய கதையை நினைவுபடுத்திய
அவள் கணவன் பின்னால் நின்றிருந்த அவளது கண்கள் பிரகாசமாய் ஒளிர்ந்
உடல் பதறியது தங்களை யாரோ பார்ப்பதாக அவளுை
அவள், அவனை அப்பால் இழுத்துவிட்ட தொலைந்துபோன கதைகளின் படிமா
அந்தக்கணத்தின் அந்த அசைவில் படி பையனும் பெண்ணும் அந்த எழுத்தாள
நூதனசாலையுள்.
வெளியே மழை பெய்தது
அந்த நெரிபடும் சனத்திரளில் தொலைந்து போனார்கள் ராமரும் சீன
அவர்களுக்காகக் காத்திருந்த அந்த ம
49

F/76)6) -
ந்தார்.
கள் இருந்தனர்.
கைநீட்டியபடி,
ப்பெண் திரும்பிப் பார்த்தாள்,
/Oζ2.
ரன்
தன
ணர்ந்தாள்
(Gr.
/கள்
மமாயிற்று. ருமே

Page 58
வயோதிகனானான். மூலையொன்றில் தாயொருத்தி பி
யாரோ தள்ளிவிட தட்டுத்தடுமாறி அடுத்தறையுள் பே Unriš30/i உள்ளங்கையில் நாடியைத் தாங்கி அழகிய இளம்பெண்ணொருத்தி கா எதிர்பார்க்கையின் படிமம் அவள். அவள் இருந்தாள், காத்திருந்தாள், ! பலர் வந்தனர். ஆனால் எங்கே ராட் எழுத்தாளருக்கு அது தெரியாது கதை எவ்வாறு முடியப்போகிறதெ ஆனால், ஆங்காங்கே தரிப்புகள் வி
H.S. Caris C8
தென்னாபிரிக்காவில் 97ம் ஆண்டு இடம்பெற்ற தேசிய ஆண்கள்
 

ளைக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்
ானார் எழுத்தாளர்
g
த்திருந்தாள்
அகலிகையைப்போல,
ரன்?
ன்றும் அவருக்குத் தெரியாது. பந்துபோகும்.
டச மூர்த்தியின் கன்னட மூலத்திலிருந்து,
ஆங்கிலத்தில் DA சங்கர். தமிழில் சி. ஜெயசங்கர்
பாலியல் பலாத்காரத்தினை எதிர்த்து ஊர்வலம், இடது மூலையில் விஜி
50

Page 59
வரலாற்று ஓட்டத்தில் தாய்வழிச் சமூக அமைப்பின் உருவாக்கம் நிகழ்ந் பெண் மீதான சமூக ஒடுக்குமுறை ெ தந்தை வழிச் சமூக அமைப்பில் தோற்று மதம், சட்டம், கலை, இலக்கியம், குடு களும் இந்த ஒடுக்குதல் நிறைவேற்றப்ப அமைகின்றன.
இந்தfதியில் திருமணமாதல், ெ கொண்டிருத்தல் எனப் பலவாறாக இல் நிறுவனம் அதிகாரத்தினால் கட்டை அதிகாரத்துவ அமைப்பாக உள்ளது. கொண்ட ஆணாதிக்க அடக்கு முறை பெண்கள் மீதான சகல ஒடுக்குமுறை வருகிறது.
எமது சமூகத்தில் ஒரு புனிதத்து நிலை நிறுத்தும் அமைப்பாக, சமூகக் தப்பட்டு, பேணப்பட்டும் வந்த கண குடும்ப அலகே பெண்ணின் அடிை இந்நிலையில் இவ்வமைப்பு இன்று ( வியப்புக்குரியதல்ல.
எனவே குடும்ப நிறுவனமானது காரணிகளில் அவ்வமைப்பில் பெண்கள் பாலியல் பலாத்காரமும் முக்கியம் ெ வரை கணவராலும் ஏனைய குடும்ப ஆ
5.
 

ான வன்முறையின் குடும்பம்
சேகரம்
சமூகம் வீழ்ச்சிகண்டு தந்தை வழிச் த வரலாற்றுத் தோல்விக் கட்டத்தில் தாடங்குகிறது. இந்த அதிகாரத்துவ விக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் கல்வி, ம்பம் போன்ற அனைத்து நிறுவனங் டும் - பலப்படுத்தப்படும் களங்களாக
பற்றோராதல், ஒரேவதிவிடத்தைக் ன்றுவரையறைப்படுத்தப்படும் குடும்ப மக்கப்பட்ட ஒரு உறவு நிலையாக, அதிகார மயப்பட்ட உறவுகளைக் நிறுவனமாகச் செயற்படும் குடும்பம் க்குமான சமூக வடிவமாக இருந்து
வமான, பெண்களுக்கு பாதுகாப்பை கருத்தியல்களால் அடையாளப்படுத் வன், மனைவி, குழந்தைகள் என்ற மத் தனத்திற்கும் காரணமாகிறது. கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருப்பது
கேள்விக்கு உட்படுத்தத்தூண்டும் ா மேல் செலுத்தப்படும் வன்முறையும் பறுகின்றன. குடும்பத்தைப் பொறுத்த
ண் உறுப்பினர்களாலும் பலவகையில்

Page 60
பெண்கள் வன்முறைக்கும் பலாத்க இலங்கையிலும் இத்தகைய குடும்ப சமீபத்திய ஆய்வுப் புள்ளி விபரங்கள் 60% இற்கு மேலான பெண்கள் கு( தெரியவந்துள்ளது.
குடும்ப அமைப்பில் ஆணின அடிமைகளாக ஒடுக்கப்படும் ஒரு தாக்கத்திற்கு உட்படுகின்றனர். இத்த6 ஆதிக்கச் செயற்பாடுகளில் முக்கிய ப சொற் பிரயோகங்களே குறிப்பா பிள்ளைகள் தந்தை, சகோதரர்களா உள்ளாகின்றனர். இத்தகைய தாக்கங்க கிராமியப் பெண்களே, அனேகமான அல்லது வீணான குற்றச் சுமத்தல் கேவலமான வார்த்தைகளால் பெ தொனியில்) என்பது வாழக்கமாக உ சுட்டும், உடல் உறவினைக் குறி பிரயோகிக்கப்படுகின்றன. அத்துட வல்லுறவை மேற்கொள்வதாகக் கூறு பேய், பசாசு, போன்ற இழிவுச் ெ குறிப்பிடத்தக்கது. இத்தகைய வன்மு
* குடிவெறி-நிதானமற்ற நிலையில்
* ஆண் தனது விருப்புகள்,
நிறைவேற்றத்தவறிவிட்டாள் எ6
ஆண்களின் விருப்புகளுக்கு மா
ஆணின் தவறுகளைப் பெண் சுட்
பெண்கள் தம் சுதந்திரத்தைப் டே
பெண்ணின் கடந்த காலத்தின் ஆண் மீட்டிப்பெரிதுபடுத்தல்,
ஆணின் வீண் சந்தேகங்கள்,
பெண் மீது வெறுப்புணர்வு ஏற்ட போது ஆண் தனது சொல் வ வன்முறை உணர்வையும், தலை போது பெண்கள் பெரும் உளப்

ாரத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
வன்முறைகள் அதிகரித்துள்ளமையை ள் சில தெரிவிக்கின்றன. இவ்வகையில் டும்ப வன்முறைக்கு உட்பட்டுள்ளமை
லப்பட்ட சிந்தனையால் பெண்கள் பாசிசச் சூழலில் உளவியல் ரீதியான கைய உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் ங்கு வகிப்பது, ஆண்களின் வக்கிரமான ாக மனைவி கணவனாலும், பெண் லும் சொல்ரீதியான வன்முறைகளுக்கு 5ளால் பெருமளவு பாதிக்கப்படுபவர்கள் வீடுகளில் தினமும் குடித்துவிட்டோ, களின் பேரிலோ வாய்க்கு வந்தபடி ண்களை ஏசுவது (கூடுதலாக உரத்த 1ள்ளது. இவ்வகையில் பால் உறுப்பைச் க்கும் வார்த்தைகள் பெண்கள் மீது -ன் தான் அப்பெண் மேல் பாலியல் ம் வார்த்தையை பிரயோகிப்பதும், நாய், சாற்களால் கேவலப்படுத்தப்படுவதும் றைகள்
ஆண் இருத்தல்,
நலன்களை முழுமையாகப் பெண் னக் கருதிக் கொள்ளும் நிலை,
றாகப் பெண் நடத்தல்,
படிக்காட்டல், எதிர்த்தல்,
பண முயல்தல்,
சிலவாழ்க்கை நிகழ்வுகள், தவறுகளை
டல், ஆகிய பல்வேறு சந்தர்ப்பங்களின் ன்முறைகளினூடாகத் தனது ஆதிக்க மைத்துவத்தையும் நிலைநாட்ட முயலும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
52
ܥܝܢ

Page 61
இப்படியான சந்தர்ப்பங்களில் அல்லது நியாயத்தைக் கூற முற்படு தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க வே
ஆண் அங்கத்தவர்களால் பெ முறையில் கை,கால்,கம்பு, என்பவர் அமிலம், சுடுநீர் என்பவற்றை உடம் என்பன அடங்கும்.
இத்தகைய வதைகள் இடம் பெ களும் அது குடும்பப் பிரச்சினை என் செயல் என ஒதுங்கி விடுகின்றனர்.
இங்கு ஆண் ஆதிக்கத்தினதும் தெரிகிறது. இங்கு பெண் ஒரு மனித மட்டக்களப்புப் படுவான்கரைத் தெ6 களுக்கு முன்னர் ஒரு திருமணமா உறுப்பு அவளது மச்சானால் சவரக் டப்பட்டுப் பின் வைத்திய சிகிச்சை டாகும்.
ஆனால் எவ்வளவுதான் து
நடவடிக்கையை நாடுவது என்பது அ
சட்ட நடவடிக்கையை நாடும் பாடு செய்வதா' என்று பெண்களின் களால் தட்டிக் கழிக்கப்படுகின்றது. படும் போது பெரும்பாலான ஆண் யைத் தீவிரப்படுத்தி மனைவியை இரட்டைச் சுமை அழுத்தத்தையும் ட கொள்கின்றனர். இவை பெரும்பால வாழ்வின் ஒரு அங்கமாகவே எடுத் கணவனுக்கு அடங்கியவள் ம கருத்தாக்கம் இவர்களை எதிர்த்துப் ( ளுக்கு எதிராகப் பெண்கள் செயற். பிடாரி, ஆண் மூச்சுக்காரி எனக் கு பழி கூறுகின்றது.
எனவே தொடர்ந்தும் இத்தை தாலும் கல்வியறிவின்மை, தனித்

அதனை எதிர்த்துப் பேசும் போது ம் போது பெண்கள் உடல் ரீதியான ண்டியுள்ளது. ண்கள் மீது மேற்கொள்ளப்படும் வன் றால் அடித்தல், வெட்டுதல், தீச்சூடு, பில் ஊற்றல், குரல்வளையை நெரித்தல்,
றும் போது சுற்றத்தவர்களும் அயலவர் பதால் அதில் தலையிடுவது முறையற்ற
பெண் அடிமைத்தனத்தினதும் உச்சம் 5 உயிரி என்று ஆண் சிந்திப்பதில்லை. ன்புறக் கிராமமொன்றில் ஓரிரு வருடங் ன இளம் பெண்ணின் இனப்பெருக்க கத்தி கொண்டு அலங்கோலமாக வெட் செய்யப்பட்டமை இதற்கு எடுத்துக்காட்
|ன்பப்படுத்தினாலும் பெண் சட்ட அரிதாகவேயுள்ளது. போதும் 'இவற்றுக் கெல்லாம் முறைப் 1 குற்றச்சாட்டுக்கள் பொலிஸ் அதிகாரி இதை விட சட்ட நடவடிக்கை எடுக்கப் கள் மேலும் பெண்கள் மேல் வன்முறை ப விட்டு விலகுவதனால் பெண்கள் ல்வேறு சமூக வன்முறைகளையும் எதிர் ான பெண்களால் வன்முறைகளாகவன்றி துக் கொள்ளப்படுகின்றது. னைவி என்ற எமது சமூகப்பாரம்பரியக் பேசாதவர்களாக்குகிறது. இவ்வன்முறைக Iட்டால் சமூகம் அவர்களை அடங்காப் டும்ப'இலட்சணம் இழந்தவர்கள் எனப்
கய வன்முறைகளைத் தாங்க முடியாத தியங்கும் வல்லமையின்மை போன்ற
53

Page 62
வற்றாலும் பல பெண்கள் சட்ட ந தன்கொலை செய்து கொள்வதையே மு
அண்மைக் காலங்களில் பெண் முடியாமல் தற்கொலை முயற்சிகளில் ளன. கணவனின் சித்திரவதைகள், கண வீட்டு அங்கத்தவர்களின் பாலியல் விருப்பமற்ற திருமண நிச்சயிப்புக்க தற்கொலைக்கான முக்கிய காரணங்க கொடுமை தாங்க முடியாமல் தற்கொ ணிக்கையே அதிகம். புள்ளிவிபரங்கள் 90% மானவர்கள் பெண்களே என்பது தற்கொலை செய்வதோடு தம் பிள்ளை கல்வி அறிவின்மையும் வறுமையுமே இ
தற்கொலைளுக்குக் காரணமான கொள்வதுடன், தம் துயர நிலையைக் க அநேகமாகக் குடும்ப அங்கத்தவர்கள் கவே இருக்கின்றனர். இவர்கள் தண்ட தண்டனையாகவே உள்ளது.
எனவே, சட்ட நடவடிக்கையின் ே ஒரு முக்கிய காரணியாகிறது. கிரா இவ்வாறு ஒரு பெண் தற்கொலை செய்து தன் பிள்ளைகளைக் காரணம் காட்டித் த முடிக்க அவளின் பெற்றோரிடமிருந்து திருமணங்கள் பெரும்பாலும் பெண் நடக்கின்றன.
கணவனால் மனைவி கொலை அதிகரித்துள்ளது. 'பெண்கள் உரிமைகள் Watch) go66)a) 1997 9Q5p.
'இம்மாதத்தில் 43 பெண்கள் படுே அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இ6 வன் அல்லது ஏனைய குடும்ப வர்கள்'
என்று கூறுகிறது. 1997 ம் ஆண்டு ஒரு
சம்பவங்கள் பற்றித் தொடர்பூடக
54

டவடிக்கைகளை நாடுவதை விடத் டிவாகக் கொள்கின்றனர்.
கள் கணவரது கொடுமை தாங்க ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள் வன் வேறு பெண்ணுடனான தொடர்பு வல்லுறவு, வன்சொற் பிரயோகம், ள் ஆகிய குடும்ப வன்முறைகளும் 5ளாகின்றன. இவற்றில் கணவனின் லை செய்து கொள்பவர்களின் எண் ரின்படி தற்கொலை செய்பவர்களில் தெரியவருகிறது. சில பெண்கள் தாம் 5ளுக்கும் நஞ்சூட்டிக் கொல்கின்றனர். இதற்குக் காரணமாகும்.
வர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக் ாட்டி அனுதாபத்தைப் பெறுகின்றனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு சாதகமா னைக்குட்படினும் அது குறைந்த பட்ச
போதாமை தற்கொலைகள் அதிகரிக்க மப்புறக் குடும் பங்கள் பலவற்றில் து கொண்ட பின் ஆண் சில நாட்களில் ன் மனைவியின் சகோதரியை மணம் சம்மதம் பெறுகிறான். இத்தகைய மீதான வற்புறுத்தலின் பேரிலேயே
செய்ப்படும் சம்பவங்கள் இன்று ரின் கண்காணிப்பு (Women's Rights
கொலைக்கு உட்பட்டார்கள் என பற்றுள் 17 சம்பவங்களுக்கு கண அங்கத்தவர்களே பொறுப்பான
சில மாதங்களில் நிகழ்ந்த கொலைச் வ்களில் வெளி வந்த (ஜீலை -

Page 63
செப்டெம்பர்) விபரங்கள் சில கீ அட்டவணையின் மூலம் கூடுதலாக செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிற
Gargos) வயது சம்பவம் நடந்த 1
uLL Glu6oT விசாரணைக்குட்
பட்ட இடம்
4 குழந்தைகளின் - Afurtsid
தாய்
2 பிள்ளைகளின் 30 ஊருபொக்கே
தாய்
அம்பிகா (மனைவி) - திருகோணமலை
இஸ்ஹாக் ஜமிலா 34 அட்டப்பள்ளம்
மனைவி - நெலூவ
கு. காயத்திரி O2 -
ஜி.வை. மாலிகா - அங்குரு மலேகந்த
LD6061T6S - தனவா
பெண் 28 மேல்கடிகமுவ
இ.எம்.வீரபிரசங் 16 புத்தளம்
கணி
4 பிள்ளைகளின் - 6Jsoa5LD
தாய்
மனைவி 28 || Gräué suum
பெண் 36 மாத்தறை நீதிமன்றம்
பெண் - | மீககவத்த பொலீஸ்
Quest 40 புத்தளம்
LomTLÉ - காலி உயர் நீதிமன்ற
பெண், 2 பிள்ளை - சம்மாந்துறை
பெண் 25 அகுறஸ்ஸ
பெண் 32 வத்தள
மனைவி/மகள் 30 வத்தகம நீதிமன்ற
மனைவி - கொழும்பு
பெண் 25 அகுறஸ்ஸ
பெண் 24 பொலனறுவ
பெண் (14.4.97) - குருநாகல உயர் நீ
மன்றம்
பெண் 18 மட்டக்களப்பு (இடப் பெயந்தோர் முகாம்
பெண் 36 மாத்தறை
பெண் 22 வாழைச்சேனை
பெண் (ஜன "97) 41 நிகம்பு நீதிமன்றம்
பெண் 24 || G6J606AD6AJITULUI QUITGAS
பெண் 25 கல்கிரியகம பொலில்
பெண் 48 கலுவித்த தோட்ட
பெண் 50 கண்டி உயர் நீதி
மன்றம்

ழே பட்டியலிட்டுக் காட்டப்படுகிறது. இளம் பெண்கள் கணவனால் கொலை
து.
கொலை முயற்சி குற்றம் சாட்டப் வெளியான
பட்டவர் பத்திரிகை
வெட்டல் கணவன் தினமின
கணவன் லங்காதீப
கோணேஸ்வர ஐலண்ட் ஆலய மதகுரு அடித்துக் காயப் கணவன் தினகரன் பட்டு தீயூட்டிக் கொலை கணவன் லங்காதீப கழுத்து நெரிக்க தந்தை தினகரன் - ப்பட்டு வெட்டப்பட்டு கணவன் தினகரன் கழுத்து நெரிக்க கணவன் தினகரன் -ப்பட்டு மண்வெட்டியால் | கணவன் தினமின தாக்கி கழுத்து நெரிக்க கணவன் தினக்குரல் - ப்பட்டு அடித்து சகோதரன் தினமின
மண்வெட்டியால் கணவன் டெய்லி அடித்து நியூஸ் வல்லுறவு செய்து சகோதரன் தினமின குத்தப்பட்டு ஒன்றுவிட்ட சிலுமின் LD567 தலையில் அடித்து கணவன் தினகரன் மருமகன் தினமின - கணவன் லங்கா தீப
கணவன் தினகரன் சகோதரன் லங்கா தீப கணவன் லங்கா தீப குத்தப்பட்டு கணவன் தினகரன் அடித்து கணவன் ஐலண்ட் அடித்து மாமன் திவயின அடித்து மகன் டெய்லி
|நியூஸ் <罗桦莎g Ε36.Ο ΟΤΕΣ ΗΘΟΤ 36600TL
- சகோதரன் ஐலண்ட் அடித்து கணவன் தினக்குரல் தடியால் தாக்கல் கணவன் திவயின் அடித்தல் கணவன் தினகரன் அடித்தல் சகோதரன் லங்கா தீப அடித்தல் மகன்/மருமகன் லங்கா தீப GesffLmfluumso கணவன் GLtius S. தாக்கி நியூஸ்
55

Page 64
பெண்களின் மனித உரிமை மீற6 பலாத்காரமாகும். பெண்ணின் சுயவி ஆணாவது பெண்ணைத் தன் இச்சைக்கு உடற்துன்புறுத்தலுக்குட்படுத்தல் என் அடங்கும்.
இந்தவகையில் கணவன் மனைவி பலாத்காரங்கள் (Marital rape) ஒரு வ6 போது உறவு கொள்வது ஒருவகை. விடாய்க் காலங்கள், குடிபோதையில் பாலுறவு கொள்ள முயலுதல் ஆகிய6ை இவற்றை ஆண் பெரிதுபடுத்துவதில்6ை கருத்தில் கொள்ளாத ஆண் ஆதிக்க நாட்டப்படுகின்றது.
அடுத்தப்படியாக இருவரும் உறவு தொடர்பான அறிவின்மை, மறைந்து கி பெண்களைப் பாதிக்கிறது. இத்தகைய களின் பாலியல் உறுப்புக்களைக் கடித் ஆகிய கொடூரங்களுக்கு பெண்கள் ஆ எடுத்துக்காட்டாக, ஒரு சில வருடங்க அடுத்தாற் போல் உள்ள கிராமத்தைச் ே போது காயப்படுத்தப்பட்டு, மட்டக்கெ அளிக்கப்பட்டமையைக் கூறலாம். ஆன ளால் வன்முறைகளாக உணரப்படாது முடியாத விடயங்களாகக் கொள்ளப்பட் டாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. உட்படுத்தப்படாத வன்முறையாகவே இ கான ஜடமாக, பாலியல் பண்டமாகப் ட இவை குறிக்கின்றன.
இதே போல இரத்த உறவுகளுக்கு இ காரங்கள் உறவு நிலைக் கட்டமைப்பை இதில் தந்தை மகளையும் சகோதரன் ச குறிப்பிடத்தக்கது.
பலாத்காரத்திற்கு உள்ளான பெண் நிலையின் அடிப்படையில் பாரதூரம குற்றமிழைத்தவனை விட, பாதிப்புக்குள் கக் காணும் சமூகக் கொடுமை இங்கு நி
56

ல்களில் முதன்மையானது பாலியல் ருப்பின்றி கணவன் உட்பட எந்த நட்படுத்தல், பாலுணர்வு நோக்குடன் பன பாலியல் பலாத்காரத்தினுள்
யரிடையே இடம் பெறும் பாலியல் கையின. இதில் மனைவி விரும்பாத
பெண் சுகயினமுற்றிருத்தல் மாத இருக்கும் சந்தர்ப்பங்கள், அடிக்கடி வயும் இவற்றில் அடங்கும். ஆனால் ல. இங்கு பெண்ணின் உணர்வுகளை $ப் போக்கே பாலுறவிலும் நிலை
கொள்கின்றபோதும் பாலியல் உறவு டக்கும் ஆணாதிக்க உணர்வு என்பன வக்கிர உடலுறவின் போது பெண் தல், நெரித்தல், நகத்தால் கிழித்தல், ளாகின்றனர். இதற்குச் சிறந்த தொரு ளுக்கு முன் மட்டக்களப்பு நகருக்கு சர்ந்த ஒரு இளம் பெண் உடலுறவின் ாப்பு வைத்திய சாலையில் சிகிச்சை ால் இத்தகைய வல்லுறவுகள் பெண்க உடலுறவில் ஏற்படுகின்ற தவிர்க்க டு, தம் உடல் ரீதியான ஒரு குறைபா அதேவேளை சட்ட நடவடிக்கைக்கு து உள்ளது. பெண் இச்சை தீர்ப்பதற் பயன்படுத்தப்படுகிறாள் என்பதையே
இடையிலான (incest) பாலியல் பலாத் மீறிய தண்டனைக்குரிய குற்றங்களே கோதரியையும் பலாத்காரம் புரிவது
கற்பிழந்தவள் என்ற சமூகக் கருத்து ாகப் பாதிக்கப்படுகிறாள். எனவே ாளாகிய பெண்களைக் குற்றவாளியா கழ்கிறது.
“

Page 65
இந்தவகையில் இலங்கையில் ( வரையான 3 மாதகாலத்தில் செய்தித் தகவல்களைப் பின்வரும் பட்டியல் க
பாலியல் பலாத்கா ரத்துக்கு உட்பட்ட வர்
6նա5!
இடம் / விசாரிக்க ப்பட்ட இடம்
Lossit
மகள்
Lossit
சிறுமி
மகள்
LDITSETGS
சந்தரேகா
மகள்
மகள்
சிறுமி முஸ்லிம் சிறுமி தாய்
மகள்
passit
மகள்
மைத்துணி
மகள்
Lost
சிறுமி(கர்ப்பமானாள்) சிறுமி(3மாதகர்ப்பம்) சிறுமி சிறுமி சிறுமி சிறுமி சிறுமி சிறுமி சிறுமி சிறுமி
பெண்
சிறுமி
பெண்
Losert
18
12
15
13
12
12
12
13
O6
13
15
16
19
14
16
O3
15
15
15
22
16
21.
18
மாத்தறை
கேகாலை
இரத்தினபுரி ஹரிபிட்டிய
கேகாலை
தலாத்து ஓய
கிரிதிவல மினுவான்கொட மஸ்பொதலை இரத்தினபுரி
வெயாங்கொடை
LDITSSouL686)
ஹதிகலை அல்பிடிய நீதிமன்ற
எம்பிலிப்பிட்டிய பொலி தெகியத்த, கண்டி இரத்தினபுரி பன்வில நீதிமன்றம் வலப்பிட்டிய
பலாங்கொடை
மினுவாங்கொடை நீர்கொழும்பு அத்தனகல நீதிமன்றம் மாத்தறை நீதிமன்ற
அத்தனகல நீதிமன்ற பதுளை பொலிஸ்
நீர்கொழும்பு மகாவ நீதிமன்றம்
களுத்துறை நீதிமன்ற கோட்டை நீதிமன்ற
குருனாகல நீதிமன்

சென்ற வருடம் ஜூலை செப்டெம்பர் தாள்களில் வெளிவந்த சில வன்முறைத்
ாட்டுகிறது.
பலாத்காரப் 6ՀJա5/ வெளியான படுத்தியவர் பத்திரிகை
தந்தை - திவயின
தந்தை - தினமின தந்தை லங்காதீப
Lorrupst 21. தினமின தந்தை 37 திவயின மாமன் திவயின
தந்தை திவயின/லங்காதீப தந்தை திவயின
மாமன் - திவயின
மாமன் - திவயின தந்தை 37 திவயின
lossy - லங்காதீப தந்தை 55 ஐலன்ட்
தந்தை - -
ம் மனிதன் 35 -
மனிதன் 37 டெய்லிநியூஸ்
ஸ் தந்தை - ஐலண்ட் தந்தை 38 திவயின
தந்தை - திவயின தந்தை வீரகேசரி
மச்சான் - திவயின தந்தை திவயின தந்தை 37 திவயின
பாட்டன் 5O திவயின
b Lonlon. - திவயின
ம் பாட்டன் திவயின
b || LonTuom (Glumes Seño) - ஐலண்ட்
defences
மச்சான் திவயின
தந்தை 45 ஐலண்ட்
ம் கணவன் - ஐலண்ட் ம் தந்தை லங்காதீப
Dம்தந்தை - ஐலண்ட்
57

Page 66
அட்டவணையை நோக்கும் போது பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ள காரங்களுக்குத் தந்தையே காரணமாக இ விஷேசமாக சிறுமிகள் மீதான பாலியல் முக்கிய பங்குண்டு என்பதையும், இத்த ணமாக மறைக்கப்பட்டு, பெண் கர்ப்பம் னரே வெளிப்படுகின்றன. இதற்கு அப்ெ செய்யப்படுவதுடன், வாழ்நாள் முழுவது ணே சுமக்க வேண்டியுள்ளது. உதாரணம தென்புறக் கிராமமொன்றில் 1997 மு (வயது20) வல்லுறவுக்கு உட்படுத்தப்பு மாதங்களாகியே தெரிய வந்தது குறிப்பி
குடும்ப அமைப்பினுள்ளும் வெளிய காரங்கள் பெண்களாலும் குடும்பத்தாலு னில் பலாத்காரம் தொடர்பான எமது ஆ டங்கள் பெண்களின் வாழ்க்கையில் பா வெளிப்படுத்தப்பட்டாலும் -சட்டநடவ பெண் மேலும் துன்புறுத்தப்படுகிறாள், ! தல், குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் ஒத் வழங்கப்படல், நீதிமன்றத்தில் பெண்ண என்பவை அவளை உளவியல் ரீதியாக சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்குத்
குடும்ப அமைப்பினுள் பெண்ணின் பாசிசப் போக்கால் ஆக்கிரமிக்கப்பட்டு ரீதியான வன்முறைகள் பலவற்றிற்கும் உ அமைகின்றது. எனவே இத்தகைய வன் ஜனநாயக அமைப்பாக உருவாக்கம் செ
பெண்கள் தமது உரிமைகளை கெதிராகப் போராடவும் முன்வரல், அை ஆரம்பக் கல்வியில் இருந்தே பாட நூல் விடயங்களைப் புகுத்தல் இத்தகைய வ: கொள்கைகள் வகுக்கபப்ட்டு வன்முறை கூடிய சட்டங்களாக உருவாக்குதல், அவற்றின் சேவைகளையும் கிராம ம பல்வேறு செயற்பாடுகளை அறிமுகப்ப( அதை ஜனநாயக மயப்படுத்த வேண்டும்
58

பெருமளவில் இளம் பெண்களே தையும், குடும்பப் LTCSuນລ່ງ பலாத் ருந்துள்ளதையும் அவதானிக்கலாம். குற்றமிழைப்பில் குடும்பத்திற்கும் கைய பலாத்காரங்கள் அச்சம் கார தரித்துச் சிலமாதங்கள் சென்ற பின் பண்ணும் ஒத்துழைத்ததாகக் கற்பிதம் ம் சமூக வடுச் சொற்களைப் பெண் ாக, மட்டக்களப்புப் படுவான்கரைத் ற்பகுதியில் அண்ணனால் தங்கை பட்டுப் பின் கர்ப்பம் தரித்துப் பல டத்தக்கது. பிலும் இடம் பெறும் பாலியல் பலாத் ம் மூடி மறைக்கப்படுகின்றன. ஏனெ ஆண் முதன்மைச் சமூகக் கருத்தோட் திப்பினை ஏற்படுத்துகிறது. அவை டிக்கை நோக்கிச் சென்றாலும் அப் கூடுதலான வழக்குகள் தள்ளுபடியா திவைப்புச் சிறைத் தண்டனையே ரிடம் துருவப்படும் விசாரிப்புக்கள் ப் பாதிக்கிறது. இதனால் பெண்கள்
தயங்கின்றனர். ா உடலும் உள்ளமும் ஆணாதிக்கப் ள்ளது. அவள் உளரீதியான, உடல் ட்படுத்தப்படும் களமாகக் குடும்பம் முறைத் தனங்களைப் போக்கி அதை ப்ய வேண்டும்.
வென்றெடுக்கவும், வன்முறைக் னவருக்குமான பாரபட்சமற்ற கல்வி, களில் பெண்ணுரிமை தொடர்பான ன்முறைகளைத் தடுக்கும் வகையான செய்தவரைச் சுலபமாகத் தண்டிக்கக் பெண்கள் அமைப்புக்களையும் ட்டத்திலும் விரிவுபடுத்தல், எனப் }த்தி குடும்ப வன்முறைகளை நீக்கி,

Page 67
வருடாந்த
ஐரோப்பா, வட அமெரிக்கா
அவுஸ்திரேலியா
(2).sög)u III
இலங்கை
சந்தா விண்ண
பெண் சஞ்சிகைக்கு சந்தா அ
************- ●●●●●●●●
******●●●●●●●●●●●●●●●●
இத்துடன் காசோலை / ம அபிவிருத்தி நிலையத்தின்பேரி
சூரியா பெண்கள் ஆ
27A லேடி
L D L LI LI
Suriya Women D 27A, Lady N
BCH

சந்தா - பெண்
US $ 20/- US $ 10/-
ரூபாய் 100/-
MOSTLIL I Lb 199......
னுப்பியுள்ளேன்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ணி ஒடரை சூரியா பெண்கள் ல் அனுப்பிவைக்கிறேன்.
அபிவிருத்தி நிலையம், மனிங் ட்றைவ், க்களப்பு.
levelopment Centre, Manning Drive, caloa.

Page 68


Page 69


Page 70


Page 71
சூரியா ஆலே
அம்மன் கிளி
ஒட்றி
கமலினி கதிர்வே
சூரியா அல
சிறிவஸ்ளியம்மன் விஜயகுமார் யமுனா ! ஜெயந்தி த கிரிஜா இரத்

ாசனைக்குழு
முருகதாஸ் SIĜU JIT லாயுதப்பிள்ளை சாமுவேல் மானுவேல் மெளனகுரு பேயசேகரா பஞ்சநாதன் யசந்தனம் தட்சணாமூர்த்தி ஜயசங்கள்
வலர்கள்
சிதம்பரப்பிள்ளை முருகையா இப்ராஹிம் O)6ITUeff*IEELD தினசிங்கம்

Page 72