கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (ஆனந்தம்மா)

Page 1

-ELITE

Page 2

ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்று பையலென்ற போதே பரிந்தெடுத்து - செய்யவிரு
கைப்புறத்திலேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பேன் இனி?
அமரர் திருமதி. கந்தையா செளந்தரநாயகி
அவர்களின் ஞாபகார்த்த வெளியீடான
ஆனந்தம்மா

Page 3

&ffiliuሠሖዃIJIዕቕ
மலர்வு உதிர்வு
25 - I - 31
வேஜை ந்ேதைப் பிறப்பிடமாகஆர் பாழ்கொட்டலுபை ஆசிப்பிடமாகக்ஷர் கோண்ட
அமரர் திருமதி. கந்தையா செளந்தநாயகி
ஆகிந்தம் 77
திதி வெண்பா
மாசியதில் மதிதேய பஞ்சமிசேர் பார்த்திய மதில் பேசு புகழ் செளந்தரநாயகியார் - தேஜஸ்மிகு கந்தையாதன் காதற்கிழத்தி கவின்மொழியாள் எந்தையிசன் இனைபடி சேர்ந்தார்காண்.

Page 4

பொருளடக்கம்
பற்ச புராணங்கள் O
Co?
ஆனந்தம்மா
நீங்கா நினைαδείς ed
சிந்திப்போம்.
சிந்திக்க வைப்போம் 免纪
abulega 2.
அஸ்வமேத யாகம் 27
u(asÄaosfuutib 2 மனிதநேயம் కారి
19ütfittiustigipas AR.
υιταυ ιραί (σδύει Ag
குறுக்குவழி áf
சடங்கும் சம்பிரதாயமும் 9.
eakaputar eute 9
காதல் திருமணம்
கோயில்கள் o

Page 5
கர்வம் 2
éiu/riú 46uorg)at llt.
திருமையைவிட சாதுர்யமே அவசியம்- 16
Mathematical Puzzles............................................. il.9

தேவாரம்
தோடுடைய செவி யன்விடை யேறியோர் தூவெண்மதிசூடி காடுடையசுடலைப் பொடியூசியென் னுள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தவருள்செய்த பிடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே
திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்(து) அருளுவ(து) இனியே
- 1 -

Page 6
திருவிசைப்பா
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணை மாகடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்ற வெஞ்சிவனைத்
திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிர என்கண் குளிர்ந்தனவே
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பார்க்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
தில்லைச் சிற்றம்பலமே யிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம்
உலகெலாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

ஆனந்தம்மா
சின்னஞ்சிறிய உருவம், சீரியசிந்தனை கண்ணைக் கவரும் வதனம், கனிவு கொண்ட பார்வை மென்மையிலும் உறுதி, மெழுகுவர்த்தியாய் உருகித் தனக்கென வாழாது பிறருக்கு வழிகாட்டிய ஒளி என்றால் மிகையாகாது.
உற்றவரைக் கண்டால் உளம் உருகி உள்ளன்பை உரசி நெகிழவைக்கும் உசாவல். எண்ணப்பு எப்படி சுகம், தொழில் முயற்சி எப்படி, உனக்கு எல்லாம் வெற்றி அளிக்கும், தண்பம் கொஞ்சநாட்களுக்குத்தான் நிற்கும், எண்ன கவுர்ட்டப்பட்டு என்றாலும் பிள்ளைகளைப் படிப்பிச்சுபோடு, உன் மனசுக்கு நீ நல்லாய் இருப்பாய், என்பன போன்ற gb660)LDuJIT60T, இனிமையான வார்த்தைகளைக் கூறி ஆசி கூறுவதை அவரை நெருங்கிப் பழகியவர்கள் நன்கு அறிவர்.
ஊரில் எங்கெங்கு நல்லன நடைபெறுகின்றனவோ, அங்கெல்லாம் இருப்பார், இருப்பார் என்பதிலும் உழைப்பார் என்பதே மிகப் பொருத்தம். குறு குறுக்கும் அவர் மனம் ஏதாவது செய்ய வேண்டும் எனத் தவித்த வண்ணமே இருக்கும். எல்லோரும் நன்றாக வாழவேண்டும் என்ற உயரிய விருப்போடு வாழ்ந்தவர் தான் எங்கள் அன்புக்குரிய அமரர் அன்னை திருமதி கந்தையா செளந்தரநாயகி அவர்கள்.
அமரர் வேலணை மேற்கில் உள்ள சங்கத்தானை வயிரவர் கோயிலை (இவரின் தாய் வழி பாட்டனாரினால் பராமரிக்கப்பட்டு வழிபட்ட கோவில் இன்றும் இவரின் தாய்வழி மாமனாகிய மு.குலசேகரம்பிள்ளையின் பராமரிப்பின் கீழேயேயுள்ளது) அண்டிய பகுதியில் வாழ்ந்த சைவ வேளான்
H

Page 7
குடியில் பிறந்து வளர்ந்த வைத்திலிங்கம் என்பவரின் மகளான இராசம்மா என்பவருக்கும் அதே ஊரில் வாழ்ந்த ஒரே கொடியில் உதித்த வைத்திலிங்கம் இராசையா என்பவருக்கும் ஏகபுத்திரியாக 1931 ஆம் ஆண்டு தை மாதம் 25ம் திகதி பிறந்தார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை வேலணை மேற்கில் உள்ள சைவப்பிரகாச வித்தியாசாலையில் பயின்று கொண்டிருந்த வேளையில் இவரின் தந்தையாரின் திடீர் மரணம் நடைபெற்றது. அதன் பின் தனது கல்வியைத் தொடர முடியாமல் போனபின் இவரது தாயார் தனது உறவினர் சகிதம் இவருக்குத் திருமண உறவை ஏற்படுத்திக் கொடுக்க நினைத்து அந்நாளில் வேலணை கிழக்கில் வாழ்ந்த புகழ்பூத்த சைவவேளான் குலதிலகர் நாகநாதர் ஐயம்பிள்ளை என்ற பெருமகனாருக்கும், வேலணை மேற்கில் புகழ்பூத்த சைவ பகுதியில் வாழ்ந்த நாகலிங்கம் சின்னத்தங்கம் என்பவருக்கும் மகனாக வந்துதித்த கந்தையா என்ற குல மகனைத் திருமணம் செய்து வைத்தார்கள்.
இவர் திருமணம் செய்த நாட்களில் இவரது கணவரான கந்தையா அந்நாளில் வேலணை மேற்கில் புகழ்பூத்த வை.க.பொன்னம்பலத்தாரின் (நீலமணியர்) வியாபார நிலையமான “காலி கொம்பனி கடையிலேயே’ சேவையாற்றி வந்துள்ளார். இவர்களின் திருமண பந்தத்துக்கும் இவரே காரணமாக இருந்ததாக அறிய முடிகிறது.
இவர்கள் திருமணத்தின் பின் அன்னையாரின் விருப்பப்படி
அவரின் தாய்வழியில் வந்த அண்ணரான விசுவலிங்கம்
என்பவரின் உதவியுடன் தனது கணவருக்கு யாழ்/பெரியகடைத் தொகுதியில் உள்ள புகழ்பூத்த பழைய மார்க்கட்டில் ஒரு
- 4 -

வியாபார நிலையத்தை அமைத்துச் செவ்வனே நடத்த
உதவினார்.
அத்தோடு தனது குடும்பத்தையும் அழைத்து வந்து அந்நாளில் கொட்டடியில் வாழ்ந்த ஐலன்ட் பஸ் கொம்பனி சின்னத்துரையின் மூத்த மருகள் திருவாளர் அட்சரமூர்த்தியின் உதவியோடு கொட்டடியில் குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் போது இவருக்கு இரண்டு புதல்வர்கள் பிறந்தனர் அவர்களை ஆளாக்கும் நடவடிக்கையில் கணவரோடு சேர்ந்து இவரும் கடுமையாக உழைத்தார். அந்நாளில் இவரின் கணவர் யாழ் பெரிய கடையில் இருந்த கடையிற் பிள்ளையார் கோவிலிலும் கொட்டடியில் அவரது அயலிலுள்ள வயிரவர் கோவில் வழிபாட்டிலும் மிகத் தீவிர பக்தராக விளங்கினார்.
விதி வலிது, என்னே கொடுமை பிள்ளைகளான நாகேந்திரபிள்ளை, சண்முகபவானந்தன் ஆகியோரையும் அண்ணையையும் மிக இளவயதில்விட்டு விட்டு 1965 ஆண்டளவில் விண்ணுலகு ஏவினார் இவரது கணவர்.
“தற்காத்து தகை கொண்டார் பேணி சொற் காத்த சோர் விலார் பெண்”
என்ற ஈரடியின் இலக்கணத்துக்கு உன்னதமான எடுத்துக் காட்டாக வாழ்ந்த அன்னை செளந்தரநாயகி
கணவரின் மறைவுக்குப்பின் தன்சுய முயற்சியினால் இரு பிள்ளைகளுக்கும் உயர் கல்வியை வழங்கியது மட்டுமல்லாமல் தனது தலைமகன் கொழும்பு நீர்ப்பாசனத் திணைக்களத்தில் தகுதி வாய்ந்த ஒரு வேலையையும்
- 5 -

Page 8
பெற்றுக்கொடுக்கக் காரணமாக இருந்தவர். அதேபோல் தனது இளைய மகனையும் அந்நாளில் ஏற்பட்ட நாட்டு சூழ்நிலையால் வெளிநாட்டிற்கு (ஜெர்மனி) அனுப்பி பின் அந்நாட்டிற்கும் பல முறை சென்றும் வந்தார்.
இப்படியாகத் தனது கணவர் இல்லாத காலத்திலும் தனது குடும்பத்தை தனது சாதுர்யத்தாலும், திறமையாலும் வழி நடத்தி வந்த நேரத்தில் தனது மூத்த மகனார் நாகேந்திரபிள்ளைக்கு “சுருவில்” கிராமத்தில் இருந்து பூபாலசிங்கம் லீலாவதி தம்பதிகளின் மூத்த புதல்வியான சூரியகுமாரி என்னும் நன் மகளை மருமகளாகத் தனது குடும்பத்தில் இணைத்துக் கடைசிவரையும் அவருடனேயே இருந்தார்.
அத்தோடு இளைய மகனார் கரம்பனைச் சேர்ந்த சிவனடியான் அமுதலட்சுமி தம்பதிகளின் புதல்வி சிறிசுந்தரி என்பவரைத் திருமணம் முடித்து ஜெர்மனியில் வாழ்ந்து வருகின்றனர்.
இவருக்கு மூத்த புதல்வன் மூலமாக உதயசங்கர், அமிலா, வாமினி என்றும் மூன்று பேரப்பிள்ளைகளும் இளைய மகனார் மூலம் வினோத், வசந் என்னும் இருபேரர்களும் உள்ளனர்.
இவருடைய ஆத்ம பலத்துக்கு எடுத்துக்காட்டாக தெய்வவழிபாட்டிலும் விஷேசமாகக் கந்தசஷ்டி விரதத்தை நல்லூர் முருகன் சந்நிதியில் தொடர்ச்சியாக இருபது ' வருடங்கள் அனுஷ்டித்தது மட்டுமல்ல தனக்குத் தெரிந்த உறவினர், அயலவர்களை விரத அனுஷ்டானங்களில் ஈடுபட வைத்தார். 1991ம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட இடம்பெயர்வு
- 6 -

காரணமாக கொழும்பு வந்தடைந்து மூத்த மகனாருடன் வசிக்கும் காலத்தில் கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசர் சந்நிதானத்தில் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்தும் பம்பலப்பிட்டி (வஜிரா) பிள்ளையார் கோயிலில் நடைபெறும் நித்திய பூசையிலும் இறுதிவரை கலந்து கொண்டார்.
கொட்டடியில் இவரை எல்லோரும் ஆனந்தம்மா என்றே அழைப்பார்கள், அதே போல் வேலணையில் இவரை கொட்டடி அக்கா என்று அன்பு பாராட்டி அழைத்து வந்தார்கள்.
அன்னாரினி நினைவுகள் அணி னாரினி குடும்பத்தினருக்கு மாத்திர மல்லாமல், உறவினர்கள், அயலவர்கள் மத்தியிலும் நிலைத்து நிற்கும் என்பது மட்டும்
திண்ணம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போமாக.
மைத்துர்ை கணபதிப்பிள்ளை விஷ்வநாதன் வேலணை மேற்கு (கந்தர்மடம்)

Page 9
நீங்கா நினைவில்
 

町一
அன்னையைப் போல் ஒரு
தெய்வமில்லை ޔޯ)
தாய் பற்றித் தரணியிலே வாய்விட்டுப்பேசாதார்
எவருமில்லை. நோயுற்றிருந்த வேளையிலும் தனயர் தம்
வளம் வேண்டிப் பிரார்த்திப்பவள் தாய். எவர்க்கும் பாசத்தின்
கிரீடமாகத் திகழ்பவர் தாய்.
எங்கள் அம்மா!
எழுதுவதற்கு . வார்த்தைகளே இல்லை.
எங்களது மாணவப்பருவத்திலேயே எமைவிட்டு இயற்கை
எய்தினார் எம்தந்தை.
'ஈன்று புருந்தருநல் தாய்க்குக் கடன் சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடன்.”
என்பது சங்ககாலப் பாடல் வரிகள். எமைப் பெற்றதோடன்றி சான்றோர் ஆக்க வேண்டிய (முழுப்பொறுப்பையும் தனித் தூணாகத் தாங்கியவர் எங்கள் அன்னை, அம்மா தன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. தந்தையின் மறைவின் பின் அம்மாவிற்கு உதவ யாருமில்லை. காமக்கு எல்லாமே எங்கள் அம்மாதான். கல்வி கற்க வைத்ததும், வெற்றிகளுக்காக தட்டிக் கொடுத்ததும், தோல்விகளின் போது துவண்டு விழாமல் துணிவைத்
lm

Page 10
தந்ததும், வேலைதேடித் தந்ததும், பெண்பார்த்து மணம் முடித்து வைத்ததும் எங்கள் அம்மா தான். எவர்க்கும் நல்லவைகளைத் தானாக முன் வந்து செய்வதும் எவரோடும் நல்லவைகளையே பேசுவதும் அம்மாவின் ஆத்மபலம். ஆழ்ந்த இறைபக்தியோடு வாழ்ந்த எங்கள் அம்மாவின் ஆத்மா இறைவனின் பாதார விந்தங்களில் நித்ய பேரானந்தப் பெருவாழ்வில் நிச்சயம் திளைக்கும் என்பதில் ஐயமில்லை.
“ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்”
என்ற தமிழ்மறையின் வாக்கிற்கமைய இவ்வுலக வாழ்வில் எங்கள் பொருட்டு அம்மா மகிழ்ந்திருப்பார் என நம்புகின்றோம்.
மகன்மார்
க. நாகேந்திரபிள்ளை க. சண்முகபவானந்தன்
- 10 -
 

பிள்ளை யென்றன்பாய்.
--களுைகுகுளுவ
பிள்ளை யென்றன்பாய் பிரியமளித்து மருகி என்மீது மனமுவந்துதவி எல்லை இல்லா அன்பை சொரிந்த அன்னையே சொல்லாமல் கொள்ளாமல் போனதேன் சொல்லிச் சென்றால் செல்ல விட மாட்டேன் என்றா - தாயே
பிள்ளையாரை மனதில் இருத்தி பக்தியாய் வாழ்ந்த பவித்திரத்தை மெச்சி நின்றேன் நித்தியமாய் வாழ நிமலனடி சேர்ந்தாயோ
மருமகள் Vk. சூரியகுமாரி நாகேந்திரபிள்ளை
வெள்ளவத்தை
- 1 1 -

Page 11
கருத்தோவியம் -seeOOe
கண்ணிலே கனிவிருக்க
கருத்திலே செறிவிருக்க - உங்கள்
எண்ணிலே உயர்விருக்க மண்ணிலே புகழ் இருக்க என்னதான் இருந்தும் - நீங்கள் இவ்விடம் இல்லையே
மாமி உங்கள் நினைவுகளை மறக்கவே முடியவில்லை - உங்கள் நினைவுகள் எங்கள் மனதிலே நிறைந்திருக்கிறது ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கின்றேன்
அன்பின் இளைய மருமகள்
சிறிகந்தரி (ஜேர்மனி)
- 2 -
 

d5 6.II IbuIdi -seOOOe
எழில் வதனம் சுந்தர புன்னகை அப்பம்மா செளந்தர நாயகிதான் தன்னிகரில்லாத் தலைவி தலைவனை கரம் பிடித்து தனையரை தான் பெற்று தலைவன் மாள தலைமையை ஏற்று தடைகளை உடைத்து தரும நெறி பிறழாது பெண்மையை போற்றி தலைவனங்காமல் தரணியில் ஒளிர்ந்து தனயர்க்கும், வாரிசுகட்கும் தக்கன செய்து மாய்ந்த எம் அப்பம்மா காவிய நாயகியே அப்பம்மா என் மீது கொண்ட பாசம் தனியானது தலைப்பேரன் நான் விலை மதிப்பற்ற வைரம் எம் அப்பம்மா கற்றல் நன்றே கற்றல் நன்றே பிச்சை புகினும் கற்றல் நன்றே அப்பம்மாவின் தாரகமந்திரம்
- 13 -

Page 12
நான் உயர்கல்வியில் தேறிய வேளை அப்பம்மாவின் உளக்களிப்பு மெய்சிலிர்க்கிறது. வாழும் நாள் வரை அப்பம்மாவோடு உடனிருந்து சாகும் நாளில் பிரிந்து இங்கு வந்து விட்டேன் என்னே கொடுமையிது சாகும் தருவாயிலும் சங்கர்என அழைத்திருப்பார்! அப்பம்மா அகவை பூர்த்தியாயினும் அவர் பிரிவு வருத்துகின்றது அப்பம்மா!
கைப்போது மலர் தூவி காதலித்து வானோர்கள் முப்போதும் முடிசாய்த்து தொழுநின்ற முதல்வனை அப்போது மலர் தூவி ஐம்புலனும் அகத்தடக்கி எப்போதும் இனியானை தன் மனத்துள் வைத்து அவனடியில் சேர்ந்தாரே
பேரன் நா.உதயசங்கர் B.E. 3rd Year Student I.E.C. College New delhi, India.
- 14

சக்திக்கு மேலான சக்தி
--அருகுகுளுக
சுந்தரரூபினி சாந்த சொரூபினி மந்திரவார்த்தையள் மரகதமேனியள் செளந்தர நாயகி நாமம் பூண்ட எம் சந்திர வதன அப்பம்மா நினைக்கஞ்சலி
நித்தம்நினை எண்ணி வாடுகின்றோம்
முத்தம் தந்தெம்மைச் சீராட்டிய நினைவும் சித்தமெல்லாம் எமை நிறைத்த சீர்மையும் எத்தனை எத்தனை யுகமழியினும் மாழாது
தித்திப்புப் பண்டங்கள் செய்து தந்தீர் புத்திக்கு உதவும் நல்கதைகள் சொன்னிர் எத்திக்கும் புகழ் பெற வேண்டுமென்றீர் சக்திக்கு மேலான சக்தியப்பம்மா
திருமகள் அனைய செல்வச்சீமாட்டி கலைமகள் களிப்புறம் வாசனை செய்பவள் மலைமகள் மகிழும் வீரத்தின் இலட்சணம் எம்குலமகளா மவள் நாமம் நிலைக்கும்
பேத்திகள் நா. அமிலா நா. வாமினி
கொழும்பு இந்து மகளிர் கல்லூரி
ിഖബകങ്ങക്ര
- 15 -

Page 13
வாழ்வீர் இனிது
se999ees
ஊனை உருக்கி உயிரை கரியாக்கி தேன் மொழி சொரிந்து உள்ளத்தைத் தூய் தாக்கி துன்பத்தைத் தான் சுமந்து இன்பத்தை மட்டுமே எம் அப்பாவிற்கு கீந்து வளர்த்தெடுத்த
6T5856TT se_ULDDT எங்கு சென்றீர்!
பத்து வயதில் என் அப்பாவிற்கு தன் அப்பாவின் ஆயுள் போயிற்று மெத்தக்களைத்து விட்டீர்கள் மெளனித்துப் போனிர்கள் அப்பம்மா எங்கு சென்றீர்
அலைகடலுக்கு அப்பால் ஆயிரம் கல் தொலைவில் அப்பா நின் பிரிவுச் செய்தி கேட்டு நிலைதடுமாறி நின்ற போது நினைப்புரிந்து கொண்டோம் நோயில் படுத்த நினைப்பார்க்க அப்பா புறப்பட்டபோதே சேதி வந்தது
சோதியே!
- 16

நின் மரண வேதனையை அப்பா சகிக்க மாட்டார் முற்றும் அறிந்த நீ முடிந்து விட்டாய்! நின் அன்பு, பாசம், கருணை எல்லாமே எம்கண் முன்னே நிதர்சன மாயிற்று
சில ஆண்டுகளின் முன் எம்மிடம் வந்து விந்தைக் கதைகூறி எமை மகிழ் வித்த நினைவுகள் என்றும் பசுமையாக எம்முன் நிற்கிறது என்பு தோல் போர்த்த பொய்யுடன் நீர் நீர்த்தீர் புகழுடம்போடு எம் முன் வாழ்வீர் இனிது.
ஜேர்மனியில் உள்ள
பேரப் பிள்ளைகள் ச.வினோத், சவசந்
- 17 -

Page 14
பிள்ளை வீடு -seOOOea
எவருடனும் தேடிப்பழகி ஊருடன் உவந்து களித்து தமர் பிறர் என்றில்லாது அது உறவாக இருக்கலாம் நட்பாக இருக்கலாம் தெரிந்த முகமாக இருக்கலாம் - இல்லை அறியாத முகம் கூட
இனிக்க இனிக்கப்பேசி கையில் இருப்பதை ஈந்து அரவணைத்து ஆறுதல் தந்து பரிவுகாட்டி உறவாடிடும் - அக்காவே கொட்டடி அக்காவே
பிள்ளையாரைக் கண்ணில் வைத்து பிள்ளையெனைத் தேடி வந்து இன்முகம் காட்டி அன்பு காட்டிடும் மாதரசியே அன்பின் இருப்பிடமே ஞானநாடகம் ஆட்டுவிக்கும் அந்த நிருத்தனான நிமலன் பாதம் நண்ணி நீரும் சென்றதேனோ!
தாய் வழி சகோதரி திருமதி இந்திரா திருநீலகணடன்
பம்பலப்பிட்டி
- 18

என்ஆசை சின்னம்மா
-அகுகுகுளு
கற்றறிவுடையோர் சபை தனில் கனிவுடைய வார்த்தை சொல்வீர் சின்னம்மா எத்தனை ஆற்றல் சின்னம்மா
போற்றிட வார்த்தை இல்லை
சின்னவனைக் காணவில்லை என்றால் சுகமில்லையோ எனச் சொல்லிப் பார்க்க வருவீரே சின்னம்மா
துவண்டு நீர் வீழ்ந்த போது துடி துடித்து போனேன்
சின்னம்மா
மருத்துவ மனையில் தேறுதல் நிலை அடைந்தபோது மனதளவில் ஆறுதல் அடைந்தேன் சின்னம்மா தேறுதல் நிலை அழித்து எம்மையும் பதைக்க வைத்து பேறு நல் நிலை பெறவே சென்று விட்டீர்களே சின்னம்மா
Guondai பொ.மகாலிங்கம்
(அதிபர் இளைப்பாறிய)
-
- 19 -

Page 15
அப்பம்மாவுக்கு அம்மம்மா.
-seOOOea
மக்களுக்கு நல்வழி காட்டியாய் வாழ்ந்து உள்ளுர் உறவினர் ஊரவர் அயலவர் என்று அனைவரையும் உபசரிக்கும் பாங்கென்னே
எங்கள் சமயத்தின் வழிநின்று விரதங்கள் பலவும் விருப்புடனே அனுஷ்டித்தீர்கள்
அப்பம்மா இல்லாத பிள்ளைகளைப் பார்க்க அழுகிறதே என் மனம் யார் ஆறுதல் சொல்வார்கள்
இருகரம் நீட்டி உதவிடும் உங்கள் திருமுகம் காணாது தவிக்கும் சம்பந்தி
திருமதி. பூபாலசிங்கம் லீலாவதி Scarborough, Canada.
- 20

கொட்டடி அக்கா -useOOOe
ஆறாத் துயராச்சே அழுகையாச்சே என் அன்பான பண்பான அக்காவே
நல்லூர் கோவில் என்றும் கந்தர் சஷ்ட்டி விரதம் என்றும் உங்களுடன் இணைந்த கதை சொல்லவா
சுற்றத்தில் வாழ்ந்த எங்கள் உள்ளசிர் உதவி நல்கி உதாரணமாக வாழ்ந்த கதை சொல்லவா
கடல் கடந்து சென்றனான் திரும்பி வந்து உங்களுடன் கழித்திருக்கலாம் என்றிருந்தேனே அக்காவே
குறையற்ற வாழ்வு வாழ்ந்து குணக்குன்றாய் திகழ்ந்தே இறையழைப்பை ஏற்று இப்பூவுலக வாழ்வை ஒழித்த
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றேன்
அயல் சகோதரி யோகராணி தனபாலசிங்கம் (கொட்டடி) பம்பலப்பிட்டி
- 21 -

Page 16
சிந்திப்போம்.
சிந்திக்க வைப்போம்.
சிந்தனை என்பது மனிதனுக்கே உரித்தானது என்று கருதப்படுகிறது. அறிவைப்பயன் படுத்தி பகுத்து பார்க்கும் திறனே சிந்தனை சிந்தி என்பது அறிவால் பகுத்து காணுதல் காரண காரியங்களை சிந்தித்தல் என்ற பொருள்பட விபரிக்கப்படுகின்றது. ஆகவே இவ்வுலக வாழ்வில் நாம் வெற்றிபெற வேண்டுமாயின் எமது சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது அவசியமாகிறது.
எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவதென்பது இழுக்கு
என்ற வள்ளுவரின் வாக்கில் காணப்படும் "எண்ணுதல்” என்பது சிந்தித்தலைக் குறிக்கின்றது. சிந்திக்கும் திறனை அதிகரிக்க “வாசிப்பு” மிக, மிக அவசியமான ஒன்றாக
அமைகிறது.
தமிழகத்தின் பிரபல சஞ்சிகை ஒன்றில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முனி இணை பிரதியாக ஜெ.பி.பாலசுப்பிரமணியம் என்பவரால் எழுதி வெளியிடப்பட்ட சிந்திப்போம்.சிந்திக்கவைப்போம். என்ற நூலினை நான் வாசிக்க நேர்ந்த போது, பலரும் இதனை வாசிக்கச் செய்ய ஏதாவது வழிவகை செய்ய வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தேன்.
- 22 -

வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவரான எனது அன்னை அமரர் கந்தையா செளந்தரநாயகி (ஆனந்தம்மா) இவரது நினைவாக இந்நூலை வெளியிடுவது சாலவும் பொருத்தமானது என நானும் எனது குடும்பமும் கருதியதாலும் இந்நூலை தங்கள் முன் மறு பிரசுரம் செய்வதோடு இதை முதலில் பிரசுரம் செய்த சஞ்சிகைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்நூலை வாசிப்போம், அதன் மூலம் அனைவரும் பயன்பெறுவோம் என நம்புகிறேன்.
நிலவளபகுதி க.நாகேந்திரபிள்ளை நீர்ப்பாசனத்திணைக்களம், கொழும்பு - 07.
- 23 -

Page 17
கடவுளின் அருளைப் பெறுவது எப்படி?
கடவுள் Stateso Oese
நாம் வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி?
நம் குழந்தைகளுக்குச் சிறப்பான எதிர்காலத்தைக் கொடுப்பது எப்படி?
மனிதகுலத்துக்கு நம்முடைய கடமையை ஆற்றி, மனிதகுலத்தை மேம்பாடு அடையச் செய்வது எப்படி?
கடவுள் எப்படி இருப்பார்? உயரமாக இருப்பாரா, குள்ளமாக இருப்பாரா, சிவப்பாக இருப்பாரா, கறுப்பாக இருப்பாரா, ஒல்லியாக இருப்பாரா, குண்டாக இருப்பாரா! கடவுளை முருகராக நினைத்துப் பார்க்கும்போது முருகராகவும் வெங்கடாசலபதியாக நினைத்துப் பார்க்கும்போது வெங்கடாசலபதியாகவும் விநாயகராக நினைத்துப் பார்க்கும்போது விநாயகராகவும் மாரியம்மனாக நினைத்துப் பார்க்கும்போது மாரியம்மனாகவும் அல்லாவாக நினைத்துப் பார்க்கும்போது அல்லாவாகவும் இயேசுவாக நினைத்துப் பார்க்கும்போது இயேசுவாகவும் இருப்பார்.
நாம் முருகக் கடவுளை வழிபடுகிறோம். இந்த முருகரை வடஇந்தியர்களுக்குத் தெரியுமா? அயல்நாட்டவருக்குத் தெரியுமா? ஆப்பிரிக்கவாசிக்குத் தெரியுமா? அப்போது நமக்கு அருள் புரியும் முருகர், அவர்களுக்கெல் லாம் அருள்புரியமாட்டாரா? கண்டிப்பாக அவர்களுக்கும் அருள்புரிவார். அவர்கள் தெய்வமென்று நினைத்து வழிபடும் உருவத்தின் மூலமாக அருள்புரிவார். பகவத்கீதையின் ஒரு ஸ்லோகத்துக்குக் கொடுக்கும் விளக்கத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்.
- 24

'மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் கடவுள். எந்த மதத்தின் மூலமாக எந்த சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்து கடவுளை வழிபட்டாலும் உன் வழிபாடு கடவுளைப் போய் அடைகிறது” ஆகவே, கடவுளுக்கு எந்தவிதமான குறிப்பிட்ட உருவமும் இல்லை. எந்த உருவத்திலும் அவரைக் கட்டுப்படுத்த இயலாது. நீ எந்த உருவத்தைக் கடவுள் என்று நினைத்து வழிபடுகிறாயோ, அந்த உருவ வாயிலாக உனக்கு அருள்புரிவார் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடவுள் எங்கு இருப்பார்? கோயில்களிலும் மசூதிகளிலும் சர்ச்சிலும் மட்டும்தான் இருப்பாரா? பகவத்கீதையின் மற்றொரு ஸ்லோகத்துக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் கொடுக்கும் விளக்கத்தில், “கோயிலைச் சுற்றி வலம்வந்து எட்டுத் திக்கிலும் பார்த்துக் கடவுளை வணங்குகிறோம். ஏன் இந்தப் பழக்கம் ஏற்பட்டது? கடவுள் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்துவதற்கே இந்தப் பழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது” என்று கூறுகிறார்.
பக்தப் பிரகலாதன் கூறியது - "கடவுள் தூணிலும் இருப்பார்: துரும்பிலும் இருப்பார். ஆகவே, கடவுள் இல்லாத இடமே இல்லை. எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார் என்று பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது. காற்று இல்லாத இடம் கூட இருக்கலாம். ஆனால், கடவுள் இல்லாத இடமே இல்லை என்ற உண்மையையும் பரிபூரணமாக உணரவேண்டும்.
கடவுள் எந்தவிதமான வழிபாட்டை விரும்புவார்? பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளதைப் பார்ப்போம். “எளிதில் கிடைக்கக்கூடிய நீர், இலை, Ար பழம் ஆகியவற்றால் ஆாய மனத்தோடு யார் என்னைப் பிரார்த்திக்கிறானோ, அதை நான்
அன்போடு ஏற்றுக் கொள்கிறேன்”.
- 25 -

Page 18
தூய மனம் என்பதுதான் முக்கியமான அம்சம், பணம் செலவு செய்யக்கூடிய வழிபாடுகளாகிய அபிஷேகம், ஆராதனை, ஹோமம், கடவுளுக்குக் கல்யாண உற்சவம், தங்கரதம் இழுத்தல் போன்றவற்றினால் கடவுள் மயங்க மாட்டார்: கருணை புரியமாட்டார்.
தங்கம், வைரம், வைடுரிய்ம் போன்ற விலையுயர்ந்த பொருள்களை ஒரு தராசுத் தட்டிலே வைத்த சத்யபாமாவின் பிரார்த்தனையைவிட மற்றொரு தராசுத் தட்டிலே கர்வம் இல்லாமல், அடக்கத்துடன், பக்தியுடன், பணிவுடன் மனத்தூய்மையுடன் ருக்மணியால் வைக்கப்பட்ட துளசி இலைத் தட்டுத்தான் எடை மிகுந்து கீழே இறங்கி நின்றது. அதைத்தான் கிருஷ்ண பரமாத்மா ஏற்றுக் கொண்டார்.
ஏழை நண்பன் குசேலர் உள்ளன்போடு கொண்டுவந்து, கொடுப்பதற்குத் தயங்கிக் கொண்டிருந்த அவலைத் தான் வலிய வாங்கி வாயில் போட்டுக் கொண்டார்.
கர்நாடக மாநிலத்திலே, உடுப்பியில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ணரின் விக்கிரகம் திரும்பியுள்ளது. வாயில் வழியாகச் சென்று பார்க்கும்போது, கிருஷ்ணரின் முதுகுப் பக்கத்தைத்தான் பார்க்க முடியும். “கோயிலுக்குள்ளே நுழையக்கூடாது' என்று தடுக்கப்பட்ட, கீழ்சாதியைச் சார்ந்த பக்தியுடன் தினமும் பிரார்த்திக்கும் உண்மையான பக்தனுக்கு ** கோயிலுக்குள் நுழைந்த கிருஷ்ணனைப் பார்க்க முடியவில்லையே” என்று புலம்பிக் கொண்டிருக்கும் தூய பக்தனுக்குத் தரிசனம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், அவன் கனவிலே தோன்றி, “கோயிலின் பின்பக்கச் சுவரிலுள்ள ஒட்டையின் வழியாக என்னைப் பார்!
நான் தரிசனம் தருகிறேன்” என்று கூறி, அவனுக்குத் தரிசனம்
கொடுப்பதற்காகத் திரும்பி நின்று கொண்ட கிருஷ்ணரை இன்றும் உடுப்பியிலேயே பார்க்கலாம்.
-26

=围 இறைவனுக்குப் படைக்கக்கூடாத மாமிசத்தை, அதிலும் “சுவையானதா? என்று வாயில் கடித்துப் பார்த்துப் படைத்த எச்சில் பட்ட மாமிசத்தை அளித்த கண்ணப்பரை, சிவபெருமான் ஏற்றுக் கொள்ளவில்லையா?
கடவுள் மிக மிக உண்மையானவர். மிக மிக நேர்மையானவர். ஒரு சிறு தவறுகூடச் செய்யத் தெரியாதவர். நாம் எல்லோரும் கடவுளின் குழந்தைகள். கடவுள் பாரபட்சம் பார்க்க மாட்டார். உலகத்தில் உள்ளோர் அனைவருமே தவறுகள் செய்யலாம். செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், கடவுள் ஒரு சிறு தவறுகூட எப்போதும், யாருக்கும் எந்த மனிதனுக்கும், ஏன். நாய், பூனை, ஈ, எறும்புக்குக்கூடச் செய்யமாட்டார்.
கோர்ட்டில் வழக்கு, சாட்சிகள், விவாதங்கள் எல்லாம் கேட்டு நீதி வழங்குகிற நீதித்துறைக்கு ஒரு அடிப்படையான அம்சம் - “நாறு குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டாலும் பரவாயில்லை. ஒரு நிரபராதிக்கு எந்தச் சூழ்நிலையிலும் தண்டனை கொடுக்கக்கூடாது” என்பது.
ஒரு மனிதனே நிரபராதிக்கு, குற்றத்தைச் செய்யாத ஒரு நபருக்குத் தண்டனை கொடுக்கக்கூடாது என்று எண்ணும்போது, கடவுள் எப்படித் தவறு செய்யாத ஒருவருக்குத் தண்டனை அளிப்பார்? நடக்கவே நடக்காத ஒரு விஷயம்.
அப்போது மக்களுக்கு ஏன் துன்பங்களை. நோய், உடல் ஊனம், வறுமை, விபத்து போன்ற பல வழிகளிலே கடவுள் தண்டனையாகக் கொடுக்கிறார்? தவறே செய்யாத உண்மை, நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றுக்குச் சின்னமான
கடவுள் துன்பங்களைக் கொடுக்கும் போது, அதற்கு
'ப
- 27

Page 19
நியாயமான, நேர்மையான அடிப்படை ஒன்று இருந்தாக வேண்டும். அதுதான், நாம் கடந்தகாலத்திலே செய்த தவறுகள்,
ஏமாற்றுகள், மோசடிகள், பிறரைத் துன்பப்படுத்திய பாவங்கள்.
நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றபடி நமக்குத் துன்பங்களைக் கடவுள் அளிக்கிறார். இந்தப் பிறவியிலே பிறந்ததிலிருந்து நாம் செய்த பாவங்கள், முன்பிறவியிலே நாம் செய்த பாவங்கள், நம் தாய், தந்தை, பாட்டி, பாட்டனார், முன்னோர் செய்த பாவங்களிலிருந்து நமக்கு வரும் பங்கு என அதற்கு ஏற்றபடி தண்டனைகள் கிடைக்கும்.
மகான்களும் மகரிஷிகளும் “நாம் நல்லது செய்தாலும் தவறுகள் செய்தாலும் அதற்குரிய பலன் ஏழு ஜென்மங்களுக்கு இருக்கும்’ என்று கூறுகிறார்கள். நம்முடைய ஏழு பிறவிகளுக்கும் நம்முடைய ஏழு சந்ததி மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்று எழு தலைமுறைகள்.
“அவருடைய தாத்தா பெரிய பக்திமான், வள்ளல், ரொம்ப நல்ல மனுஷன். அதுதான் அவங்க பேரன் இவ்வளவு சிறப்பாக இருக்கிறான்” என்று கூறக் கேள்விப்படுகிறோம்.
பெரியவங்க செய்த புண்ணியத்தினால் தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது என்று கூறுவதைப் பார்க்கிறோம். தாத்தா குருடன், மகன் குருடன், பேரனும் குருடன் என்று உள்ளதையும் பார்க்கிறோம்.
கடவுளுக்கு மனிதர்களிடம் எந்தவிதமான பாரபட்சமும் இல்லை. இவன் அமெரிக்கன், எனக்கு நிறைய பிடிக்கும். இவன் இந்தியன், எனக்குக் கொஞ்சம் பிடிக்கும். இவன் ஆப்பிரிக்காக்காரன், இவனை எனக்குப் பிடிக்காது என்பதோ. ராமன் பிடிக்கும், ரஹீம் பிடிக்காது, ஜோசப் பிடிக்காது என்பதோ கடவுளிடம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது.
- 28

கடவுளுக்கு எல்லோரையும் பிடிக்கும், ஆனால், கடவுளுக்கு மிகப் பெரிய கடமை உள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று பெரிய கடமைகள். காத்தல் என்கிற அம்சத்தில் நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கான பலன்களை நமக்குத் திருப்பித் தருகிறார். நல்லது செய்தால், நன்மைகள் கிடைக்கும், தவறுகள் செய்தால், தண்டனைகள் கிடைக்கும்.
நல்ல செயல்களுக்கோ, தீய செயல்களுக்கோ நன் மையோ, தணி டனையோ உடனே கடவுள் கொடுப்பதில்லை. அதை உணரும் வழியில் பல வருடங்கள் கழித்துத்தான் கொடுக்கிறார். பல வருடங்கள் கழித்தும் ஒட்டுமொத்தமாக ஒரே தடவையில் தண்டனையைக் கொடுப்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து, ஏழு பிறவிகளுக்கும் ஏழு சந்ததிகளுக்கும் கொடுக்கிறார்.
ஆகவே, நாம் தவறு செய்யும்போது, நாமே தண்டனையை வலிய வாங்கிக் கொள்கிறோம். அடுத்தவனை ஏமாற்றி, இன்றைக்கு ஆயிரம் ரூபாய் சில வருடங்கள் கழித்து, நமக்குப் பத்தாயிரம் ரூபாய்க்குச் சமமான தண்டனையைக் கொடுக்கும்.
ஒரு இலந்தைப் பழம் அளவு தவறான வழியிலே வந்த நன்மைக்கு ஆசைப்பட்டு, பிற்காலத்தில் வரும் ஒரு பலாப்பழம் அளவு தண்டனையையும் சேர்த்துப் பெற்றுக்கொள்கிறோம். இந்த உண்மை தெரிவதில்லை. 'ஆஹா! நான் அவனை ஏமாற்றிவிட்டேன், சம்பாதித்துவிட்டேன். கார், பங்களா எல்லாம் வாங்கிவிட்டேன்’ என்று தவறான வழியிலே சம்பாதித்துப் பொருளுக்கு ஆசைப்படுகிறான்; பெருமைப்படுகிறான்.
தவறான வழியிலே செல்கிற எல்லோராலும் பணம் " முடிகிறதா? ஆயிரக்கணக்கானவர்களில்
- 29

Page 20
ஒருசிலரால் மட்டுமே சம்பாதிக்க முடிகிறது. முன்னே செய்த புண்ணியங்களுக்கான பலனால் சிலருக்கு மட்டும் இன்று பொருள் கிடைக்கிறது. ஆனால், தவறான வழியிலே வந்த பணம், பின்னால் பெரிய தண்டனையைக் கொடுக்கும் என்பது தெரிவதில்லை.
கார், பங்களா, சொத்து, அமைதி, சந்தோஷம் எல்லாமே படிப்படியாக, ஒரு காலகட்டத்திலே சென்றுவிடும். அதற்குப் பதிலாக நோய், வறுமை, மன உளைச்சல், குடும்பத்தில் சச்சரவு எல்லாம் வந்து சேரும்.
ஒரு தவறு செய்துவிட்டு சட்டத்திடமிருந்தோ, மக்களிடமிருந்தோ, அரசாங்கத் திடமிருந்தோ, தண்டனையிலிருந்தோ தப்பிவிடலாம். ஆனால், அந்தத் தவறுக்குக் கடவுள் கொடுக்கும் தண்டனையிலிருந்து எந்தக் காலத்திலும், உலகத்தில் எந்த மூலைக்குச் சென்றாலும் தப்ப முடியாது. இதுதான் உண்மை உண்மை உண்மை!
எந்தவிதமான துன்பத்தை மற்றவர்களுக்கு நீ கொடுத்தாலும், அது பாவம். அந்தப் பாவத்தின் அளவுக்கு ஏற்றபடி, உனக்குத் தண்டனையின் கடுமை நிர்ணயிக்கப்படும்.
நான்கு நபர்கள் ஒரே விதமான பாவத்தைச் செய்கிறார்கள். அதாவது A என்பவர் ஒரு பணக்காரனை ஏமாற்றி நூறு ரூபாய் ஆதாயம் அடைகிறார். B என்பவர் ஒரு நடுத்தர வசதியுள்ளவனை ஏமாற்றி, அதே நூறு ரூபாய் ஆதாயம் அடைகிறார். C என்பவர் ஒரு ஏழையை ஏமாற்றி, அதே நூறு ரூபாய் ஆதாயமும் D என்பவர் ஒரு பிச்சைக்காரனை ஏமாற்றி, அதே நூறு ரூபாய் ஆதாயமும் அடைகிறார்.
கடவுள் A, B, C, D என்கிற நான்கு பேருக்கும் ஒரே விதமான பாவத்தைப் பதிவு செய்வாரா? இல்லவே இல்லை! நூறு ரூபாய் இழப்பு பணக்காரனுக்குப் பெரிய பாதிப்பு இல்லை.
- 30 -

மிகச் சிறிய பாதிப்பு ஆகவே, A - க்கு குறைவான பாவத்தையும் நடுத்தர வர்க்கத்து நபரின் நூறு ரூபாய் இழப்பு சிறிய பாதிப்பு. ஆகவே, B - க்குச் சற்று அதிகமான பாவத்தையும் ஏழையின் நூறு ரூபாய் இழப்பு பெரிய பாதிப்பு. ஆகவே, C - க்கு இன்னும் அதிகமான பாவத்தையும் பிச்சைக்காரனுக்கு நூறு ரூபாய் இழப்பு மிகப்பெரிய பாதிப்பு. ஆகவே, D க்கு மிக அதிகமான பாவத்தையும் பதிவு செய்வார்.
நாம் மற்றவருக்கு அளிக்கும் துன்பத்தைப் பொறுத்து, கடுமையைப் பொறுத்து, நபரைப் பொறுத்து, சூழ்நிலையைப் பொறுத்துப் பாவத்தின் தன்மை மாறுடுபடும்.
நம் கடமைகளை நாம் செய்யும்போது, மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டால், அது பாவமாகாது. மற்றவர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, பாவத்தை நாம் அடையக் கூடாது என்று நினைத்துக்கொண்டு, நம் கடமையை நாம் செய்யாமல் இருந்துவிட்டால். அந்தக் கடமையைச் செய்யாமலிருக்கும் செயலே பாவமாகிவிடும். இதைத்தானே கீதையில் சொல்கிறார். உதாரணத்தைப் படியுங்கள்.
ஒரு நீதிபதி கொலை செய்த குற்றவாளியை விசாரணை செய்கிறார். சாட்சியங்களைக் கேட்கிறார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, அந்தக் கொலையைக் குற்றவாளிதான் செய்தான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிகிறது. குற்றவாளி திருமணமாகிக் குழந்தைகளும் உள்ளவன். இவனுக்குத் தூக்குத் தண்டனை அளித்தால், அவன் மனைவி விதவையாகிவிடுவாள். குழந்தைகள் தகப்பன் இல்லாமல் துன்பம் அடைவார்கள்.
இவ்வளவு துன்பங்களை நாம் ஏன் இவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்து, அவர் கடமையைச் செய்யாமல்
-31 -

Page 21
.விடுதலை செய்துவிட்டால், அதுவே a بسمه هامبوری |
பாவமாக அமைந்துவிடும் மாறாக, சரியான தீர்ப்பாகிய தூக்குத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனையைக் குற்றவாளிக்கு அளித்தால், அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இவர் கொடுக்கும் துன்பங்கள் இவருக்கும் பாவமாக அமையாது.
போ..பர்ஸ் பீரங்கி ஊழலை விசாரிக்கும் பணி அளிக்கப்பட்டு, பிறகு அரசியல் தலையீட்டின் காரணமாக, உண்மையாக வேலை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட பிறகு, சி.பி.ஐ-ல் டெபுடி டைரக்டர் பதவியை ராஜினாமா செய்த உண்மையான, நேர்மையான திரு.ராகவன் ஒரு பத்திரிகையாளருக்குப் பேட்டி அளிக்கும்போது, “ஏழை இந்தியப் பொதுமக்களின் வரிப்பணத்தை, அரசாங்கப் பணத் தைத் தவறான வழியிலே அபகரிக் கும் அரசியல்வாதிகளைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, “பிச்சை எடுத்துச் சேர்த்துவைத்த குருட்டுப் பிச்சைக்காரனிடமிருந்து பணத்தைத் திருடுவதைப் போன்ற செயல்”என்று பதில் கூறினார்.
“ஏழை அழுத கண்ணின் கூரிய வாளை ஒக்கும்.”
- திருக்குறள் கருத்து - “எளியோரை வலியார் வாட்டினால் வலியோரை தெய்வம் வாட்டும்”
- பழமொழி -
எளியோரை - ஏழைகள், பாதுகாத்துக்கொள்ள முடியாத கீழ்நிலையிலே உள்ளோரை: வசதி படைத்தவர்கள், வலிமை படைத்தவர்கள் துன்பப்படுத்தினால், அவர்களைத் தெய்வம்
தண்டிக்கும் என்று தெளிவாக முன்னோர் கூறுகின்றனர்.
அதையே திருப்பிப் போட்டுப் பாருங்கள். ஏழைகளுக்கு
வலிமை உடையவர்கள் உதவி செய்தால், வலிமை
உடையவர்களுக்குக் கடவுள் உதவி செய்வார் அல்லவா? ஆம்! கண்டிப்பாக உதவி செய்வார்.
-32 -

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் கீழே குறிப்பிட்டுள்ள மூன்று வகையைச் சாரும்.
1. Larsottib 2. புணர்ணியம் 3. பாவமும்
புணர்ணியமும் இல்லாத நிலை.
" நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் கவனிக்கிறார். அந்தச் செயலும் அதன் தன்மையும் பதிவு செய்யப்படுகிறது. அதற்கேற்ப பாவமும் புண்ணியமும் பதிவு செய்யப்படுகிறது.
கடவுளுக்குத் தெரியாமல் ஒரு சிறு செயலைக்கூடச் செய்ய முடியாது. ஏன் ஒரு சிறு எண்ணத்தைக்கூட எண்ண முடியாது. கோயிலுக்குச் செல்கிறோம், கடவுளைப் பிரார்த்திக்கிறோம். எனக்கு வீடு வேண்டும், நல்ல படிப்பு வேண்டும், நல்ல உத்தியோகம் வேண்டும் என்று பலவிதமான
பிரார்த்தனைகள்.
எல்லாவற்றையும் நம் மனதுக்குள்ளேயே பிரார்த்தனை செய்கிறோம். வெளியில் யாருக்கும் தெரியாது. உங்கள் ஒருவரைத் தவிர, உலகில் வேறு யாருக்குமே தெரியாது. ஆனால், கடவுளுக்கு மட்டும் தெரியும். உங்கள் பிரார்த்தனை கடவுளைச் சென்றடையும். கடவுள் பார்ப்பார், அதை நிறைவேற்றுவார் என்று நம்புகிறீர்கள்.
அப்போது உங்கள் மனதிலே ஒடுகிற பிரார்த்தனைகளை, எண்ணங்களைக் கடவுள் தெரிந்து கொள்வார் என்பது நிதர்சனம், உண்மை. ஆகவே, கடவுளுக்குத் தெரியாமல் உங்கள் செயல் அல்ல: எண்ணம்கூட இருக்க முடியாது.
கோயிலுக்குச் செல்கிறோம். வழிபாடு, பிரார்த்தனை செய்கிறோம். கோயிலில் பொய் பேசக்கூடாது, தவறு செய்யக்கூடாது என்று கூறுகிறோம். கோயிலைவிட்டு வெளியில்
-33 -

Page 22
வந்தபிறகு பொய் பேசலாமா, தவறு செய்யலாமா? அவ்வாறு செய்தால், கடவுளுக்குத் தெரியாமல் போய்விடுமா?
கடவுளுக்குப் பிடிக்காத, கடவுள் விரும்பாத விஷயங்களையே, நடைமுறை வாழ்க் கையில் செய்துகொண்டு, கோயிலுக்குப் போகும்போது மட்டும் பசுத்தோல் போத்திய புலியைப் போல நல்லவனாகக் கடவுளிடம் வேஷம் போட்டால், அது கடவுளிடம் எடுபடுமா? கடவுள் ஏமாறுவாரா? கடவுள் ஏமாறுவார் என்று நினைத்தால், நாம்தான் ஏமாற வேண்டும்.
கோயிலுக்குள் சென்று கடவுளை வணங்கும்போது, “வாய்யா ராமசாமி. இங்கே என்னைப் பயபக்தியோடு வணங்கறே. நீ நேற்று செய்த மோசடி எனக்குத் தெரியாதா? சென்ற மாதம் 8 - ம் தேதி இரவு பன்னிரண்டு மணிக்குச் செய்த அக்கிரமம் எனக்குத் தெரியாதா? அதுக்கு முன் மாதம் 15-ம் தேதி பகல் இரண்டு மணிக்குச் செய்த அநியாயம் எனக்குத் தெரியாதா?
ஊரையெல்லாம் ஏமாத்தறது பத்தாதுனு என்னையும் ஏமாத்தலாம்னு பார்க்கறியா? செய்த எல்லா தவறுக்கும் தண்டனை தப்பாமல் கிடைக்கும். இப்ப என்னை ஏமாத்த வந்திருக்கிறதுக்கும் சேர்த்துத் தண்டனை கிடைக்கும்.” என்றுதானே நினைப்பார்!
உன்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ள மாட்டார். உண்மையாகவே செய்த தவறை உணர்ந்து திருந்தி, அழுது, ‘தெரியாமல் தவறுகள் செய்துவிட்டேன். இனி அவ்வாறு செய்ய மாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று வணங்கினால், அந்த உண்மையான பிரார்த்தனையைக் கடவுள் பரிசீலிப்பார்.
அப்போதும் செய்த தவறுக்குத் தண்டனையிலிருந்து விடுதலை
கிடைக்காது. தண்டனையின் கடுமை குறைக்கப்படும்.
- 34 -

நம்முடைய துன்பங்களுக்கெல்லாம் முக்கியமான காரணம் கடவுளையும் அவருடைய அறிவையும் சக்தியையும் மிகக் குறைவாக மதிப்பிடுவதுதான். நமக்கு இருக்கும் அறிவாற்றலில் கோடி கோடி கணக்கான அளவிட முடியாத அளவு அறிவாற்றல் படைத்தவர் கடவுள்.
வானசாஸ்திரத்திலே கூறுவார்கள், ‘கடற்கரையிலே உள்ள மணலைக்கூட எண்ணிவிடலாம். வானத்திலே உள்ள கிரகங்களை எண்ணமுடியாது’ என்று. பிரபஞ்சத்திலே உள்ள கோடிக்கணக்கான கிரகங்களிலே நாம் வாழும் இந்தப் பூமி ஒரு கிரகம், சூரியனிடமிருந்து ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம் எட்டு நிமிடம். சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை, ஒளி சென்றடையும் நேரத்தைக் குறித்து அளவிட்டு 'எட்டு நிமிடம்' என்று கூறுவார்கள்.
ஒருசில கிரகங்களுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் - அந்தக் கிரகங்களிலிருந்து ஒளி புறப்பட்டால், பூமியை வந்தடைய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகும். அவ்வளவு தூரம் தற்போது உள்ள சக்திவாய்ந்த டெலஸ்கோப் மூலமாகப் பார்த்துக் கணித்தது இது. அந்த டெலஸ்கோப் மூலமாகப் பார்த்ததற்கும் அப்பால் இன்னும் எவ்வளவோ தூரம் கிரகங்கள் உள்ளன. கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவு பிரபஞ்சம் உள்ளது.
இந்த உலகத்திலுள்ள மக்களின் ஜனத்தொகை அறுநூறு கோடி. ஆனால், இந்தப் பிரபஞ்சத்திலே உள்ள கிரகங்களின் எண்ணிக்கை, அதைப்போல் பலமடங்கு. இவை எல்லாவற்றையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கடவுள், அந்தக் கடவுளை நாம் குறைவாக மதிப்பிடுவது, அவரைக் கேவலப்படுத்துவது போல ஆகும் அல்லவா? அதுவே ஒரு பாவம்!
- 35

Page 23
■=
சிறந்த அறிஞர். நிறைய படித்தவர். நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் சென்று, பல பட்டங்களைப் பெற்றவர். உலகம் போற்றும் அறிஞர். அந்த அறிஞரை ‘உனக்கு எழுத, படிக்கத் தெரியுமா? என்று கேட்டால், அது அவரைக் கேவலப்படுத்துவது ஆகாதா?
அதேபோல், பேரறிவு படைத்த கடவுளைப் பார்த்து, *வேடம் போட்டுச் செய்யும் பிரார்த்தனையில், பூஜையில் மயங்கி நமக்கு நன்மையை அளிப்பார் என்று நினைத்தால், அது கடவுளைக் கேவலப்படுத்துவது ஆகாதா? பூஜை, சம்பிரதாயம், சாஸ்திரம், யாகம், ஹோமம் இதற்கெல்லாம் கடவுள் மயங்க மாட்டார்.
ஒரு சிறு அளவு புண்ணியத்தைத்தான் உண்மையான பிரார்த்தனைக்கும் சடங்குகளுக்கும் அளிப்பார். அதிகமான புண்ணியத்தை, பிறர் துன்பத்தைப் போக்கும் செயலுக்குத்தான் அளிப்பார்.
- 36
 

அஸ்வமேத யாகம்
State esse
கோயிலுக்குச் சென்று பிரார்த்திக்கிறோம். இன்னும் சிறப்பாக வணங்க வேண்டுமென்றால், கற்பூரம் கொளுத்தி வணங்குகிறோம். இன்னும் சிறப்பாக வணங்க வேண்டுமென்றால் தட்டில் பூ, பழம், தேங்காய் எல்லாம் எடுத்துச் சென்று, அர்ச்சகரிடம் நம் நட்சத்திரத்தைச் சொல்லி,
அர்ச்சனை செய்து வணங்குகிறோம்.
இதற்கும்மேல் பால், பழம், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வணங்குகிறோம். இதற்குமேல் ஒரு ஹோமம் அல்லது அதற்குமேல் ஒரு யாகம் செய்து வணங்குவது சிறப்பு. எல்லாவற்றுக்கும் மேலான வழிபாடு, அஸ்வமேத யாகம் செய்வது.
இந்த அஸ்வமேத யாகத்தைச் சாதாரண மனிதர்கள் செயப்ய முடியாது. பல ராஜாக் களையும் பல மகாராஜாக்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆட்சி புரியும் சக்ரவர்த்திகள் மட்டுமே செய்ய (ԼplգավID.
ஏனென்றால், அதற்கு நூற்றுக்கணக்கான யாகக் குண்டங்கள் வேண்டும். பெரிய யாகசாலை வேண்டும். வேதம் படித்த அந்தணர்கள் நூற்றுக்கணக்கில் வேண்டும். டன்கணக்கில் நெய், இதர சாமான்கள் வேண்டும்.
இவ்வளவு பெரிய, பலமடங்கு அளவிட முடியாத புண்ணியத்தை அளிக்கக்கூடிய அஸ்வமேத யாகத்தைப் பற்றி மகாபாரதத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. ஒரு சக்கரவர்த்தி அஸ்வமேத யாகத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். யாகம் ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலையில், அந்த யாகசாலைக்குள் ஒரு கீரிப்பிள்ளை
37

Page 24
வந்தது. அதன் உடம்பு முழுவதும் வால் தவிர, மற்ற இடங்கள் எல்லாம் தங்கநிறமாக ஜொலிக்கிறது!
அது, யாகத்தைப் பொறுப்பேற்று நடத்துகிற தலைமைக் குருக்களிடம் வந்தது. அவரைப் பார்த்து, “இந்த அஸ்வமேத யாகத்தைச் செய்து, உங்கள் சக்கரவர்த்தி என்ன பெரிய புண்ணியத்தை அடையப் போகிறார்? காட்டிலே ஒரு ஏழை அந்தணன் செய்த காரியத்திலே வந்த புண்ணியத்தில் ஒரு பகுதிகூடக் கிடைக்காது” என்று கிண்டலாகப் பேசியது.
எல்லோருக்கும் ஆச்சரியம்! கீரிப்பிள்ளை பேசுகிறது. உடல் எல்லாம் தங்கநிறமாக ஜொலிக்கிறது. என்ன ஆச்சரியம்’ என்று வியந்தார்கள். தலைமை குரு, அந்தக் கீரிப்பிள்ளையிடம், “உலகிலேயே மிகப்பெரிய புண்ணியத்தை அளிக்கக்கூடியது இந்த அஸ்வமேத யாகம். இதைவிடப் புண்ணியத்தை யார் செய்ய முடியும்? நீ சொல்வதற்கு விளக்கம் கொடு.” என்று கேட்டார். −
கீரிப்பிள்ளை பதில் கூறியது. “ஒரு சிறு ஊரிலே ஒரு ஏழை அந்தணன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். சிறிய ஊரிலே சரியான வேலை கிடைக்காமல், வறுமையில் வாழ்ந்து வந்த அவன், குடும்பத்துடன் பக்கத்திலுள்ள பெரிய ஊருக்குச் செல்வதற்காகப் பயணம் செய்தான். அவர்கள், இடையிலுள்ள காட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
இரண்டு நாட்களாக அவனும் குடும்பமும் பட்டினி, சோர்ந்து நடந்து வந்தவர்கள், ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்தார்கள். அந்த மரத்தடியில் அங்கங்கே நெல் சிதறிக் கிடப்பதைப் பார்த்துச் சந்தோஷப்பட்டு, ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துக் கொண்டுவந்த பாத்திரத்திலே போட்டு, உமியை நீக்கி, அரிசியாக்கி, அங்கிருந்து விறகுகளைச் சேர்த்து, தீ மூட்டி உணவு தயாரித்தார்கள்.
- 38 -

r
அந்த உணவை உண்ண அமரும்போது, அங்கு ஒரு முனிவர் களைப்புடன் தள்ளாடி நடந்து வந்தார். குணங்களில் சிறந்த அந்த ஏழை அந்தணன், அவரை வரவேற்று உபசரித்து, தயாரித்த உணவில் தன்னுடைய பங்கைச் சாப்பிடும்படி அந்த முனிவருக்கு வழங்கினான். அதைச் சாப்பிட்டு முடித்த முனிவருடைய பசியை அந்த உணவு போக்கவில்லை என்பதை அறிந்த அந்த அந்தணன், தன் மனைவியைப் பார்த்தான்.
தன்னுடைய பங்கையும் கொடுத்துவிடச் சொல்லி, மனைவி சைகையில் கூறினாள். மனைவியின் பங்கையும் அளித்தான். அதுவும் பசியை ஆற்றவில்லை. மகன்களை நோக்கினான். அவர்களும் தங்களுடைய பங்கைக் கொடுக்கச் சொல்லி, சைகையில் கூறியதை அறிந்து, அதையும் அளித்தான். முனிவர் மிகத் திருப்தியுடன் வயிறாரச் சாப்பிட்டு முடித்தார். அகமகிழ்ந்த அவர், குடும்பத்திலுள்ள அனைவரையும் ஆசீர்வதித்துச் சென்றார்.
எந்தவிதப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், முன்பின் பார்த்திராத, ஒரு நபருக்குத் தானே இரண்டு நாட்கள் பட்டினியுடன் இருந்த நிலையிலும், சிரமப்பட்டுத் தயாரித்த உணவை மனம் சிறிதும் கோணாமல் - நல்ல உள்ளம் படைத்த, பக்தியில் சிறந்த ஒரு முனிவருக்கு அளித்த செயலில் கிடைத்த புண்ணியம் மிகப் பெரியது.
அந்தப் புண்ணிய இடத்திலே விழுந்து புரண்டதால் என் உடல் முழுவதும் தங்கநிறமாக மாறியதுடன், மனிதர்களைப் போல் பேசும் சக்தியும் கிடைத்தது. ஆகவே, ஆந்த ஏழை அந்தணனின் செயலில் கிடைத்த புண்ணியத்தில் ஒரு பகுதிகூட இந்த அஸ்வமேத யாகம் செய்வதால், உங்கள் சக்கரவர்த்திக்குக் கிடைக்காது.” என்று கூறியதாம்.
- 39

Page 25
F. அஸ்வமேத யாகம் செய்வதற்கு ஆகும் பொருட்செலவில், லட்சத்தில் ஒரு பங்குகூட இல்லாத பிரயாசைகளில், முயற்சிகளில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட இல்லாத, ஒருவேளை உணவு அந்த அளவு புண்ணியத்தைக் கொடுத்துள்ளது என்றால், “செய்யும் காரியங்களில் கிடைக்கும் புண்ணியம் என்பது கொடுப்பவரின் நிலை, அவருடைய உள்ளம், எந்தவிதமான சந்தர்ப்ப சூழ்நிலைகளில் செய்யப்பட்டது. உதவியைப் பெற்றுக்கொள்பவர் யார், அவருடைய நிலை எனின என்ற பல அம் சங்களை வைத் து நிர்ணயிக்கப்படுவதாகும்.”
ஒலிம்பிக் போட்டியிலே நீச்சல்குளத்தில் டைவிங் போட்டி நடைபெறுகிறது. தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெறுபவரை நிர்ணயிப்பதற்குப் பத்துத் தேர்வாளர்கள் உள்ளனர். பத்து நபர்களும் வெவ்வேறு நாட்டைச் சார்ந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் போட்டியில் பங்குபெறுபவர்களின் டைவிங் திறமையைக் கணித்து நிர்ணயிக்கப்பட்ட, பல அளவுகோல்களின்படி (Parameter) மதிப்பெண்கள் அளிக்க வேண்டும்.
டைவிங் பிளாட்பார்மில் வந்து நிற்கும் லாவகம், குதிக்கும்போது அதன் தன்மை, தண்ணிரில் விழுவதற்கு முன்பு அடிக்கும் குட்டிக் கரணங்கள், தண்ணிரைத் தொடும்போது உடல் உள்ள நிலை, உடல் தண்ணிருக்குள் நுழையும்போது சிதறும் தண்ணி. ஆகப் பல அளவுகோல்கள் ஒவ்வொன்றுக்கும் அதிகபட்ச மதிப்பெண்கள் பத்து ஆகும்.
ஒவ்வொரு அளவுகோலுக்கும் மதிப்பெண்கள் போட்டு, ஒரு தேர்வாளரின் மொத்த மதிப்பெண், பத்துத் தேர்வாளர்களின் மொத்த மதிப்பெண்களைப் பார்த்து தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைத் தேர்வு செய்கிறார்கள். தேர்ந்தெடுத்த பிறகும் பங்கு பெற்ற வீரர்கள் ஊக்கமருந்து சாப்பிட்டுள்ளார்களா? என்று மருத்துவ சோதனை. எந்த
- 40

,தவறு ஏற்படாதபடி, மிகக் கவனத்துடன் பார்த்து سيميسس إم உண்மையான வீரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார்கள்.
ஒரு சாதாரண ஒலிம்பிக் போட்டியிலே பதக்கம் அளிப்பதற்கு இந்த அளவு சிறப்பான அமைப்புகளுடன் ஒரு மனிதன் செயல்படுகிறான் என்றால், ஒவ்வொரு மனிதனுடைய செயல்களுக்கும் அளிக்கிற பாவம், புண்ணியத்தின் மதிப்பெண்களுக்கு சர்வ வல்லமையும் அறிவும் படைத்த கடவுள், எவ்வளவு அளவுகோல்களை வைத்து, எந்த அளவு துல்லியமாகக் கணக்கிடுவார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
நமக்கு வாழ்க்கையில் வரும் நன்மைகளுக்கும் தண்டனைகளுக்கும் நாம் கூறும் காரணம் என நேரம், அதிஷ்டம், ராசி, தலையெழுத்து, விதி ஆகிய பல பெயர்கள் கூறகிறோம். என்ன பெயர் கூறினாலும், அதன் உண்மை - அது இறைவனால் கொடுக்கப்பட்டது என்பதுதான் நமக்கு வாழ்க்கையில் கிடைக்கும். ஒவ்வொன்றுக்கும் நாம் ஏற்கெனவே செய்த செயல்கள்தான் காரணம்.
நம்முடைய தலைவிதியை நாம்தான் நிர்ணயிக்கிறோம். நம்முடைய தலைவிதியை இறைவன் முடிவு செய்வதில்லை. நாம் செய்த நல்ல, தீய செயல்களினால் ஏற்படுகிற பாவ, புண்ணியங்களை வைத்து இறைவன் கணிக்கிறான். அதில் ஊசிமுனை அளவுகூடத் தவறு இருக்காது.
“நமக்குக் கிடைக்கும் நன்மைகளோ, தண்டனைகளோ ஊசிமுனை அளவுகூட அதிகமாகவோ, குறைவாகவோ இருக்காது. ஒரு விநாடிகூட முன்பாகவோ, தாமதமாகவோ கிடைக்காது. சரியான, துல்லியமான அளவிலே, துல்லியமான L கடவுள் தவறாமல் கொடுப்பார்.”
- 41 -

Page 26
கடவுள் எல்லோருடைய வாழ்க் கையிலும் நன்மைகளையும் தண்டனைகளையும் அளிக்கிற ஒரு பெரிய நீதிபதியின் ஸ்தானத்திலே இருப்பவர். அவருடைய நீதிமன்றத்தில் விசாரணைகள் இல்லை, சாட்சிகள் இல்லை, குறுக்கு விசாரணைகள் இல்லை, வாதங்கள் இல்லை. ஏனென்றால், அவருக்குத் தெரியாத உண்மைகளோ, நிகழ்ச்சிகளோ இல்லை.
ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு தவறுகள் செய்துள்ளான், எவ்வளவு நன்மைகள் செய்துள்ளான் என்பதை மிக நன்றாக அறிந்தவர். அவருடைய நீதிமன்றத்திலே ஒரு ஊசிமுனை அளவுகூடத் தவறே இருக்காது. மிக மிக நேர்மையானவர்! மிக மிக நியாயமானவர் மிக மிக உண்மையானவர்! யாருக்கும், எப்போதும், தவறான தண்டனைகளையோ, தவறான நன்மைகளையோ அளிக்க மாட்டார்.
- 42
 

புண்ணியம் Stao ose
மற்றவர்களுக்குத் துன்பத்தை அளித்தல் பாவம் என்பது எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். புண்ணியம் செய்வது எப்படி என்று கேளுங்கள். “கோயிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிடுவது, அர்ச்சனை, அபிஷேகம், யாகம், சடங்குகள் செய்வது புண்ணியம்' என்று கூறுவார்கள்.
பிறருக்குத் துன்பம் அளிப்பது எப்படிப் பாவமோ, அதற்கு நேரெதிரான பிறர் துன்பத்தைப் போக்குவதுதான் சிறப்பான புண்ணியமாக இருக்க முடியும். அதிலும் அதிகமாகத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்குச் செய்கிற உதவி, மிகச் சிறப்பான புண்ணியம்.
“தவசிகளைவிட யோகி மேலானவன். ஞானிகளைவிட யோகி சிறந்தவன். அதனால், அர்ஜூனா நீ யோகியாவாயாக." (பகவத்கீதை WT அத்தியாயம், 46 வது ஸ்லோகம்)
மணி னாசை, பொனர் னாசை, பெணி னாசை எல்லாவற்றையும் துறந்து, பந்தபாசங்களையும் தியாகம் செய்து, வாழ்வில் எல்லா இன்பங்களையும் தியாகம் செய்து, இறைவனின் மலரடிகளிலே சேர்ந்து, பிறவியில்லாப் பேரின்பம் அடையவேண்டி துறவறம் பூண்டவர்களைவிட மேலானவன், உயர்ந்தவன் யோகி என்றால், அவன் எவ்வளவு சிறப்பானவனாக இருக்க வேண்டும்.
யோகிக்குப் பகவத்கீதையிலே கொடுக்கப்படும் விளக்கம் ~ அடக்கத்துடனும் பணிவுடனும் தன்னுடைய கடமைகளைப் பலனை எதிர்பார்க்காமல் மிகச் சிறப்பாகச் செய்துகொண்டு, மற்றவர்களுக்குத் தண்பமளிக்காமல் வாழ்ந்து, மற்றவர்களின் தண்பத்தையும் போக்குகிறவன் யோகி எனப்படுவாண்.
- 43 س

Page 27
=围
6
'ஏழை ஒருவனுக்கு உதவி செய்யும்போது, கடவுள் உனக்குக் கடன் பட்டவராகிறார்.”
“எண் சகோதரர்களில் வறியவனான ஒருவனுக்கு நீ செய்யும் உதவி, எனக்கே செய்த (கடவுளுக்கே) உதவி என்று உறுதியாக நாண் உனக்குக் கூறுகிறேன்.”
- பைபிள் -
'ஏழைகளுக்கு, மிகவும் துன்பத்திலே உள்ளவர்களுக்கு, சமுதாயத்தின் அடிமட்டத்திலே இருப்பவர்களுக்குச் செய்கிற உதவி, கடவுளுக்கே செய்த உதவி என்று பைபிள் கூறுகிறது. பகவத்கீதையும் வேறு வகையில் இதே கருத்தைக் கூறுகிறது. ‘எல்லா உயிர்களிலும் நான் இருக்கிறேன்' என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
அப்போது துன்பப்படும் உயிரிலும் கடவுள் இருக்கிறார். அந்தத் துன்பப்படும் உயிருக்குச் செய்யும் உதவி, ஒருவிதத்தில் கடவுளுக்கே செய்யப்படும் உதவியாகும். “நான்தான் துன்பப்படும் உயிருக்கு உதவி செய்ய வேண்டுமா? கடவுள் நினைத்தால், ஒரு நொடிப்பொழுதில் அவர்கள் துன்பத்தைப் போக்க முடியாதா? என்ற கேள்வி நியாயமானது. கேட்கப்பட வேண்டியது.
ஆனால், கடவுளுக்கு உள்ள தலையாய கடமை, தவறு செய்தவர்களுக்குத் தண்டனையும் நல்லது செய்தவர்களுக்கு நன்மையும் கொடுத்து, இயற்கை நெறி தவறாமல் காக்கவேண்டியது.
கடவுள் நியாயமில்லாத கருணையைக் காட்டுவதாக
இருந்தால், நாட்டில் குருடர்களும் செவிடர்களும் உடல்
ஊனமுற்றோரும் துன்பப்படுபவர்களும் இருக்க மாட்டார்கள். குர்-ஆனில் கூறப்பட்டுள்ளதைப் பாருங்கள்.
3.
- 44

F கடவுளின் மாளிகைக்குச் செல்வதற்கு
மூன்று வழிகள்
முதல் வழி பிரார்த்தனை ~ அத உண்னைப் பாதி தாரம் அழைத்துச் செல்லும்.
இரண்டாம் வழி நோன்பு - அத உண்னை மாளிகையின் வாயில் வரை அழுைத்துச் செல்லும்.
மூன்றாம் வழி, ஏழைகளின் தண்பத்தைப் போக்குதல் - அது உண்னை மாளிகையின் உள்ளே அழைத்துச் செல்லும் - குர் - ஆன் -
பிரார்த்தனையைவிட ஏழைகளின் துன்பத்தைப் போக்குகிற செயல்தான், கடவுளுக்கு மிகவும் பிடித்தமான செயல் என்று குர்-ஆனும் கூறுகிறது. அடிப்படைக் குணங்களான கடவுள் பக்தி, அடக்கம், பணிவு, பிறருக்குத் துன்பமளிக்காமல் இருத்தல், ஏழைகளின் துன்பத்தைப் போக்குதல் ஆகியவற்றை எல்லா மதங்களுமே வலியுறுத்துகின்றன.
இறுதியாகச் சென்று அடைகிற இடம் ஒன்றே. போகும் பாதைதான் வேறு வேறு. மதங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டவை. கடவுள் பிரம்மம், ஆதி, அனாதி.
பிரார்த்தனை, பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், தியானம் எல்லாவற்றுக்கும் அடிப்படை சுயநலம். "நான் நன்றாக இருக்க வேண்டும். என் மனைவி, மக்கள் நன்றாக இருக்க வேண்டும். எனக்கு முக்தி கிடைக்க வேண்டும்' என்ற சுயநலமான எண்ங்கள். ஏழைகளுக்கு உதவுதல், பிறர் துன்பத்தைப் போக்குதல் ஆகியவை பிறர் நலத்தைப் பேணுதல்.
- 45

Page 28
F
அளவிட முடியாத அறிவு படைத்த கடவுள், சுயநலத்துக்கும் பிறர் நலத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்க மாட்டார் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம்? கடவுளைக் குறைவாக மதிப்பிட்டு மதிப்பிட்டுத்தான் நாம் விழப்போகும் குழியை நாமே வெட்டுகிறோம். நம் தலையெழுத்தை நாமே தவறாக எழுதுகிறோம்.
நம் தலையெழுத்தைக் கடவுள் எழுதுவதில்லை. நாம்தான் நம் அறியாமையினால் தவறாக எழுதுகிறோம். சிந்தனையாளர்கள், “உன் வாழ்க்கை உன் கையில்.” என்று கூறுவார்கள். ஆன்மீகத்தின் வாயிலாகப் பார்க்கும்போதும் இது நூறு சதவிகித உண்மை.
உன்னுடைய நிகழ்காலத்திலும் குறுகிய எதிர்காலத்திலும் நிகழ்வதை எந்தச் சக்தியாலும் மாற்ற முடியாது. ஆனால், நீண்ட எதிர்காலத்தில் நிகழப்போகும் நிகழ்ச்சிகளை நம்மால் மாற்ற முடியும். நாம் தற்போது வாழ்கிற வாழ்க்கையை வைத்து, வாழ்க்கையில் செய்கிற நல்ல, தீய செயல்களை வைத்துக் கடவுள் மாற்றியமைப்பார்.
'விதியை மதியால் வெல்லலாம் என்பதன் உண்மையான அர்த்தம் இதுதான். பாவச் செயல்களைச் செய்யாமல், தொடர்ந்து நல்ல செயல்களையே செய்து கொண்டு வரும்போது, பிற்காலத்திலே நமக்கு அளிக்க உள்ள தண்டனைகளை மாற்றுவார். அதன் கடுமையைப் பாதியாகவோ, கால் பாகமாகவோ குறைப்பார் அல்லது முழுவதுமேகூட ரத்தாகிவிடும். பலவிதமான நன்மைகளையும் கடவுள் நமக்கு அளிப்பார்.
பெங்களுர் நகரத்தில் வாழ்ந்த ஒரு பெரிய தொழிலதிபர். இரவில் பன்னிரண்டு மணிக்குமேல் குளிர்காலங்களில் தன்னுடைய காரில் உல்லன் போர்வைகளை நிரப்பிக்கொண்டு
- 46 -

செல்வார். நகரத்தில் அங்கங்கே காரை நிறுத்தி, பிளாட் பாரங்களிலும் வீட்டின் திண்ணைகளிலும் படுத்துக்கொண்டு, குளிரிலே நடுங்கிக்கொண்டு மேலே போர்த்திக்கொள்ள ஒன்றுமில்லாமல் அவதிப்படும் ஏழைகளுக்குத் தான் வந்ததும் கொடுப்பதும் தெரியாமல், ஒவ்வொரு போர்வையாக, அமைதியாகச் சத்தமில்லாமல் போர்த்திவிட்டு வருவாராம்.
யார் உதவி செய்தார்கள் என்பதையே தெரிவிக்காமல் செய்கிற உதவி, மிகச் சிறப்பான உதவி அல்லவா? இந்தச் செயலையும் கடவுள் பார்த்துக்கொண்டே இருப்பார் அல்லவா? அந்தச் சிறப்பான செயலுக்கான புண்ணியம், அவருக்கும் அவர் சந்ததிகளுக்கும் கிடைக்காமலா போய்விடும்? அவர் இறந்துவிட்டார். அவருடைய மகன், தற்போது கர்நாடக மாநிலத்திலேயே மிகப்பெரிய தொழிலதிபராகத் திகழ்கிறார்.
அமெரிக்காவிலே நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சி உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக இருந்த ராக்பெல்லர் என்ற அமெரிக்கர் நோய்வாய்ப்பட்டு, படுக்கையை விட்டு எழவும் முடியாமல் வேதனைப்பட்டு வந்தார். உலகத்திலுள்ள சிறப்பான மருத்துவர்கள் கொடுத்த எந்த மருந்துமே பயனளிக்கவில்லை!
எல்லா உணர்ச்சிகளும் சரியாக உள்ளது. ஆனால், நடமாட முடியவில்லை. அன்றாடம் அவர் நடத்தும் பல கம்பெனிகளின் எல்லாவிதமான அறிக்கைகளும் தினசரி அவர் பார்வைக்கு வரும். எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி உத்தரவுகள் பிறப்பிப்பார். எல்லாம் படுக்கையில் உள்ளபடியே!
படுக்கையைவிட்டு எழ முடியவில்லை. நாளாக நாளாக, உடல்நிலை மேலும் மோசமடைந்தது. கடைசியாக மனோதத்துவ நிபுணர்கள் வந்து பரிசோதித்து, “ஏழைகளுக்கு
- 47

Page 29
உதவி செய்து பாருங்கள். இதுதான் கடைசி வழி என்று கூறினார்கள்.
ராக்பெல்லர் வியாபாரத்திலே, நிர்வாகத்திலே மிகுந்த திறமைசாலி. பணத்தைச் சேர்ப்பதிலே, பெருக்குவதிலே சிறந்தசாமர்த்தியக்காரர். ஆனால், தர்மகாரியங்கள் எதையும் செய்யமாட்டார். மனோதத்துவ நிபுணர்கள் கூறியதால், ஏழைகளுக்கு உதவுவதற்குச் சில கோடி டாலர்களை அளிக்குமாறு உத்தரவிட்டார். சில நாட்களிலே உடல்நிலை தேறியது. படுக்கையைவிட்டு எழும் நிலைக்கு வந்தார்.
தர்மத்தின் பலனை அனுபவித்த அவர், மேலும் சில கோடி டாலர்களை அளித்தார். மேலும், உடல்நிலை முன்னேறிப் பழைய நிலைக்கு ஆரோக்கியம் திரும்பியது. அதன்பிறகு ‘ராக்பெல்லர் ஃபவுண்டேஷன் (நம்முடைய நாட்டிலே தர்மகாரியங்கள் செய்யும் அமைப்புக்கு ‘டிரஸ்ட் என்று கூறுகிறோம். அமெரிக்காவிலே ஃபவுண்டேஷன் என்று பெயரிடுவார்கள்) என்ற அமைப்பை ஏற்படுத்தி, நூற்றுக்கணக்கான கோடி டாலர்களை அளித்து, ஏழைகளின் அபிவிருத்திக்காகவும் நன்மைக்காகவும் செலவிடும்படி செய்தார்.
இன்றைக்கும் உலகிலேயே பெரிய ஃபவுண்டேஷன் ‘ராக்பெல்லர் ஃபவுண்டேஷன்” தான். எல்லா அமெரிக்க கம்பெனிகளும் மற்றும் மேலைநாடுகளிலே உள்ள எல்லா கம்பெனிகளும் தனிநபர்களும் தர்மகாரியத்துக்காகத் தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியை அளித்து வருகிறார்கள்.
ஆனால், நம் நாட்டிலுள்ள நிலைமை வேறு. பணக்காரர்கள் நிறைய நபர்கள் உள்ளனர். அவர்களில்
- 48

தொண்ணுாற்றைந்து சதவிகிதத்தினர் கோயில், மசூதி, சர்ச் ஆகியவைகளுக்குத்தான் பணத்தைக் கொடுப்பார்களே, தவிர, ஏழைகளின் துன்பத்தையோ, மற்றவர்களின் துன்பத்தையோ போக்க முன்வருவதில்லை.
தன்னுடைய வியாபார நிறுவனத்திலே பல வருடங்களாக வேலை செய்து வரும் ஊழியர், தன் மனைவியின் ஆபரேஷனுக்குப் பண உதவியைக் கடனாகக் கேட்பார். ‘வியாபாரம் சரியில்லை. தற்போது இயலாது என்று முதலாளி கூறிவிடுவார். சில நிமிடங்கள் கழித்துக் கோயில் கும்பாபிஷேகத்துக் கொடை கேட்டு வரும் நபர்களுக்குச் சில ஆயிரங்களை மனமுவந்து அளிப்பார்.
கோயிலில் டியூப்லைட்களும் மின்விசிறிகளும் கொடுத்து, அதில் கொட்டை எழுத்திலே பெயர் போட்டுக் கொள்ளும் நபர்கள் மிக அதிகம். இவர்கள் எல்லாம் “கோயிலுக்குக் கொடுத்தால், அங்கே உள்ள கடவுள் நம் நன்கொடைகளைப் பார்த்துக் கொண்டிருப்பார். அதற்குப் பலமடங்கு நன்மைகளைத் திருப்பி நமக்கு அளிப்பார். ஏழைக்குக் கொடுத்தால், கடவுள் எங்கே பார்க்கப் போகிறார்? நமக்கு என்ன பலன்? என்கிற எண்ணம். இந்த மாதிரி குறுகிய எண்ணங்களாலும் கடவுளை மிகக் குறைவாக மதிப்பிடுவதாலும் நாம் மேலும் மேலும் தாழ்ந்துகொண்டே போகிறோம்.

Page 30
மனிதநேரும்
உலகத்திலுள்ள நாடுகளில் மனிதநேயம் எந்தளவு உள்ளது என்று ஒரு சமூக நிறுவனம் ஆராய்ச்சி செய்து, நாடுகளை வரிசைப்படுத்தி ஒரு பட்டியல் வெளியிட்டது. அதில் இந்தியா 136-வது இடத்தில் உள்ளது. செல்வச் செழிப்பான மேலைநாடுகள் எல்லாமே முதல் இருபது இடங்களுக்குள் உள்ளன.
“Third World Countries” 6T 6öi Oı ön pü u(685lp மூன்றாம்தர நாடுகள் எல்லாமே நூறுக்கும் கீழான இடத்தில்தான் உள்ளன. அந்தப் பட்டியலிலே மேல் இடத்திலுள்ள நாடுகளெல்லாம் பணக்கார நாடுகள். கீழ் இடத்திலுள்ள நாடுகளெல்லாமே ஏழை நாடுகள்.
மனிதநேயம் அதிகமாக உள்ள நாடுகளிலே செல்வம், ஆரோக்கியம், கல்வி, சுகாதார அமைப்பு, வசதிவாய்ப்புகள் எல்லாம் மேலோங்கி உள்ளது. மனிதநேயம் குறைவாக உள்ள நாடுகளிலே வறுமை, நோய், பஞ்சம், பட்டினி அதிகமாக உள்ளது.
மனிதநேயம் என்றால் என்ன? பிறருக்குத் துன்பம் அளிக்காமல் இருத்தல், மற்றவர்களையும் மதித்து நடத்தல், ஏழைகளின் துன்பத்தைப் போக்குதல் இதுதான். இதுதானே கடவுளால் மதிக்கப்படும் புண்ணியத்தைக் கொடுக்கிற செயல்
ஆகவே, எந்த மனிதனிடத்தில் மனிதநேயம் அதிகமாக உள்ளதோ, அவன் உயர்ந்து நிற்கிறான். கடவுளின் கருணையைப் பெறுகிறான். அதுபோன்ற மனிதர்கள்
-50 -

அதிகமாக உள்ள நாடும் எல்லா வகையிலும் மேலோங்கி
நிற்கிறது.
“மக்கள் சேவையே மகேசன் சேவை.”
- விவேகானந்தர் -
“கோயிலில் உள்ள விக்கிரகத்திலே கடவுளைப் பார்க்கிறவன், பக்தியின் அடிமட்டத்திலே நிற்கிறான். ஒரு விதவையின் கண்ணிரைத் துடைப்பதிலே, பசியோடு இருக்கும் ஏழை ஒருவனுக்கு உணவளித்து அவன் பசியைய் போக்குவதிலே, மற்றவர்கள் தண்பத்தைப் போக்குவதிலே கடவுளைப் பார்க்கிறவன், மேலே உயர்ந்து நிற்கிற்ான்.” - விவேகானந்தர் -
எண்ணற்ற கோயில்களைக் கட்டுவதிலே நாம் மிகுந்த அக்கறை காட்டுகிறோம். கும்பகோணத்தில் மட்டுமே இருநூறுக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. ஆனால், பணக்கார மேல்நாடுகளிலே சர்ச்சுகள் மிகமிகக் குறைவாக உள்ளன. பல பெரிய நகரங்களில் நான்கைந்துதான் உள்ளது.
மேலைநாட்டுக் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் சேவையை அடிப்படையாகக் கொண்டு, எங்கோ இருக்கிற மலைப் பிரதேசங்களிலும் மிகவும் பின்தங்கிய இடங்களிலும் ஒரு குடிசையிலே ஆஸ்பத்திரியை ஆரம்பிக்கிறார்கள் அல்லது நான்கு மாணவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்குப் பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கிறார்கள். அது வளர்ந்து, பெரிய நிறுவனமாகிறது. எண்ணற்ற மக்களின் துன்பத்தைப் போக்குகின்றனர்.
- 5 -

Page 31
配─
கிறிஸ்தவ சமுதாயத்தினர் சேவை சேவை என்று சேவைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்தான் அவர்களிடம் எவ்வளவோ தவறுகள் இருந்தாலும், அதையெல்லாம் மீறி உலகிலே ஒரு உயர்ந்த சமுதாயமாக வளர்கின்றனர். உலகிலுள்ள பணக்கார நாடுகள் முதல் இருபது நாடுகளிலே, ஜப்பான் ஒன்றைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த நாடுகள்.
அவர்களுக்கெல்லாம் கடவுள் காரணமில்லாமல் நன்மையைக் கொடுப் பாரா? நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும், அதை நாம் பாராட்ட வேண்டும். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையிலே கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
கடவுள் எந்த மனிதனுக்கும் ஏன் எந்த விலங்குக்கும்கூடத் தவறான தண்டனையோ, அதிகமான தண்டனையோ, குறைவான தண்டனையோ கொடுக்க மாட்டார். அதேபோன்று தவறான, குறைவான அல்லது அதிகமான நன்மையையும் கொடுக்க மாட்டார்.
ஒரு மனிதன் ஏழையாகவோ, நடுத்தர வர்க்கத்தைச் | சேர்ந்தவனாகவோ அல்லது பணக்காரனாகவோ, நோயாளியாகவோ, ஆரோக்கியம் உடையவனாகவோ, படித்தவனாகவோ, படிக்காதவனாகவோ, எந்த நிலையில் இருந்தாலும், அது கடவுளால் துல்லியமாகக் கணிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்ட நிலை.
ஆதலால் பணக்காரனைப் பார்த்து ஏழையோ, ஆரோக்கியமானவர்களைப் பார்த்து
- 52

அழகானவனைப் பார்த்து அழகில்லாதவனோ, வேறு பல நல்ல அம்சங்களைப் பார்த்து இல்லாதவனோ பொறாமைப்படுவதால் என்ன லாபம்?
புண்ணியம் செய்திருப்பதால், அவனுக்குக் கடவுள் நல்லவற்றைக் கொடுத்திருக்கிறார். நானும் இனி நல்ல காரியங்களைச் செய்து புண்ணியம் தேடி, அதைப் போன்றோ அல்லது அதைவிட மேலாகவோ, நல்ல நிலைமைக்கு வருவேன் என உறுதி கொள்ள வேண்டும்.
கீதாசாரத்திலே குறிப்பிட்டுள்ளதற்கு விளக்கம்
கீதாசாரம் - என் மனதில் தோன்றிய விளக்கம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட நன்மைகளும் தண்டனைகளும் மிக மிக நேர்மையாகவும் நியாயமாகவும்
கடவுளால் கணிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டது.
எத நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிற நன்மைகளும் தண்டனைகளும் மிக மிக நேர்மையாகவும் நியாயமாகவும் கடவுளால் கணிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
எத நடக்கப்போகிறதோ, அத நண்றாகவே நடக்கும் ~ ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்போகிற தண்டனைகளும் நன்மைகளும் மிக மிக நேர்மையாகவும் நியாயமாகவும் கடவுளால் கணிக்கப்பட்டுக் கொடுக்கப்படும்.
“அவனன்றி ஓரணுவும் அசையாத எல்லாம் அவன் செயல்.”
- 53 -

Page 32
கடவுளைப் பற்றிய மேலே குறிப்பிட்டுள்ளவை யாவும் நூறு சதவிகித உண்மை! மகான்கள், மகரிஷிகள் கூறியவை பொய்யாகாது. அவர்கள் உண்மையைத் தவிர, வேறு பேச மாட்டார்கள். தவறான வழிகளை மக்களுக்குக் காட்டமாட்டார்கள். மத்தியிலே இடைச்செருகல்கள் நிறைய நடந்துள்ளன.
நீரை விலக்கிவிட்டுப் பாலை மட்டும் அருந்தும் அன்னத்தைப் போல, நம் சிந்திக்கும் திறனை உபயோகித்து, உண்மையை நாம் பல விஷயங்களிலிருந்து பொறுக்கி எடுத்துச் சேர்க்க வேண்டும்.
பணக்காரர்களுக்கு கடவுள் ஒரு நல்ல நிலையைக்
கொடுத்திருக்கிறார். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் மேலும் புண்ணியத்தைத் தேடிக்கொள்ள வசதியான நிலையிலே உள்ளார்கள். (எந்தவிதமான தியாகங்களும் செய்யாமல், வசதிகளைக் குறைத்துக் கொள்ளாமல், விட்டுக்கொடுக்காமல், துன்பப்படுபவர்களுக்கு, ஏழைகளுக்கு
அவர்கள் துன்பத்தைப் போக்கும் செயலிலே ஈடுபட்டுத்
தற்போதுள்ள நிலையைப் பலப்படுத்திக் கொள்ளலாம் அல்லது மேலும் மேலும் உயர்த்திக்கொள்ளலாம்.) எவ்வளவு உயர்ந்தாலும் அதற்கும் மேலே உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு “எவ்வளவு உயர்ந்தாலும் அதற்கும் மேலே உயரமுடியும்” (There is always room for improvement) 6T6ig 36igjub Liu உத்திகளைக் கண்டுபிடித்து உயர்வதற்கு ஊக்கம்
கொடுப்பதற்காகக் கூறுவார்கள். அதுவே உண்மையான
ஆன்மீகத்திற்கும் பொருந்தும்.
பணக்காரர்கள் மட்டும்தான் ஏழைகளுக்கு உதவி செய்து
புண்ணியத்தைத் தேடிக் கொள்ள முடியும் என்று
- 54

நினைக்காதீர்கள். மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ள .ך புத்தகத்தில் எழுதியுள்ள அஸ்வமேத யாகத்தைப் பற்றிக் கீரிப்பிள்ளை கூறியதை நினைத்துப் பாருங்கள்.
என்னுடைய தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண் சூப்பர்வைஸர் ஒருவரின் பெண் எட்டாவது படிக்கும் மாணவி. தன் தாயின் மூலமாக நான் செய்யும் நல்ல காரியங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறாள். தினமும் மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் யாராவது மதிய சாப்பாடு கொண்டுவராமல் இருந்தால் சில நாட்களில் தன்னுடைய உணவை அவர்களுக்கு அளித்துவிடுகிறாள். இங்கே கவனியுங்கள். “தன்னுடைய உணவை அவர்களுக்கு அளிக்கிறாள். பகிர்ந்து கொள்வதில்லை.” இந்த மாதிரி உதவிகள்தான் மிகச்சிறப்பான உதவி. தான் பட்டினியாக இருந்தாலும் பரவாயில்லை என்று, சக மாணவிக்கு உணவளிக்கிறாள். இந்த உதவியில் தியாகம் இருக்கிறது. ஆனால் நான் செய்யும் எத்தனையோ உதவிகளில் எந்தவிதமான தியாகமும் இல்லை. எண் தேவைக்கு அதிகமாக கடவுள் எனக்கு அளித்துள்ளதைத்தான் துன்பப்படுபவர்களுக்கு நான் அளிக்கிறேன். ஆகவே நான் செய்கின்ற உதவிகளைவிடத் தியாகம் செய்து அந்த மாணவி செய்கின்ற உதவியைத்தான் கடவுள் மிகச் சிறப்பானதாக ஏற்றுக்கொள்வார்.
நாங்கள் நடத்தி வரும் கண் சிகிச்சை முகாமிற்குத் தொடர்ந்து தன்னுடைய கிராமத்தில் உள்ளவர்களை அழைத்து வந்துகாண்பித்துக் கோயம்புத்தூருக்கு பஸ் ஏறி அனுப்பும் வரை கூட இருந்து உதவி செய்து வருகின்றார்; சுமார் 50 வயதுள்ள ஒரு ஏழை சமூக சேவகர் ஒருவர். " 60 வயதுள்ள ஒரு பெண்மணி வாரம் ஒரு முறை
-55

Page 33
தருமபுரி அரசாங்க மருத்துவமனைக்குச் சென்று ساسایی= நோயாளிகளுக்கு சிறு உதவிகள் செய்து வருகிறார். மற்றொரு பெண்மணி தன் வீட்டிற்கு அருகிலே தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் சேரியிலே உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக மாலை வகுப்புகள் நடத்துகின்றார் இதேபோன்று ரத்த தானம், கண் தானம், சிரம தானம், துன்பத்திலே இருப்பவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகள், குழப்பத்திலே இருப்பவர்களுக்கு சரியான வழிகாட்டி, அறிவுரைகள் என்று எத்தனையோ உதவிகள் செய்யலாம். “மனமிருந்தால் மார்க்கம் உண்டு”.
A என்பவர் காரில் மனைவி குழந்தைகளுடன் தானே காரை ஒட்டிக்கொண்டு வெளியூருக்குப் பயணம் செய்து கொண்டிருக்கும்போது காரின் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. மாற்ற வேண்டிய ஸ்டெப்னி டயரிலும் காற்று இல்லை. துன்பப்படுகின்றார். A என்பவர் நடத்தும் தொழிற்சாலைக்கான பில், பேங்கில் பணம் கட்டி எடுக்க வேண்டும். கடைசி நாள் இன்று பணம் காட்டாவிட்டால், அவருடைய கெளரவம் தொழிற்சாலையின் கெளரவம் வெகுவாகப் பாதிக்கப்படும். கட்டுவதற்கான பணம் இல்லை. துன்பப்படுகின்றார். C என்பவர் கல்லூரி மாணவர், கல்லூரிக்குக் கட்ட வேண்டிய பணம் இல்லாமல் துன்பப்படுகின்றார்.
D என்பவர் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. படுத்த படுக்கையாக உள்ளார். டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துகளை வாங்குவதற்குப் பணமில்லை, துன்பப்படுகின்றார். E என்பவர் குழந்தையின் தாய். கணவர் வெளியூர் சென்று பல நாட்களாகிறது. திரும்பி வரவில்லை. கைக்குழந்தை பசியினால் அழுகின்றது. பால் வாங்கிக் கொடுக்கக்கூடப் பணமில்லாமல் அழுகின்றார். துன்பப்படுகின்றார் لـ
-56 -

யாருடைய துன்பம் பெரியது? யாராவது ஒருவருடைய துன்பத்தை மட்டுமே உங்களால் போக்க இயலும் என்ற நிலையில் யாருடைய துன்பத்தைப் போக்க நினைப்பீர்கள்? D அல்லது E யின் துன்பத்தைத்தானே போக்க நினைப்பீர்கள். எல்லோர் மனதிலும் உள்ள இரக்கம் என்ற குணம் உங்கள் மனதிலும் இருக்குமல்லவா? D அல்லது E யின் துன்பத்தைப் போக்குவது தான் மிகச் சிறந்தது. கடவுள் மிகவும் விரும்பக் கூடியது. ஆகவே எப்போதும் ஏழைகள் துன்பத்தைப் போக்குவதற்கு முன்னுரிமை கொடுங்கள்.
குழந்தைகள், பெண்கள், முதியவர் இவர்களுக்குச் செய்கின்ற உதவி சிறப்பானது. ஏழைகளாகவும் இருந்து இந்த மூன்று பிரிவுகளைச் சார்ந்தவர்களாக அவர்கள் இருந்தால், அத்தகையோருக்குச் செய்யும் உதவி மிக மிகச் சிறப்பானது. அதனால்தான் ‘என் சகோதரகளில் வறியவனான ஒருவனுக்குச் செய்யும் உதவி எனக்கே (கடவுளுக்கே) செய்த உதவி” என்று பைபிளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் ஒரு வகையிலே கொடுத்து வைத்தவர்கள். துன்பத்தைப் போக்குவது என்று நினைத்தால் நிறைய ஏழைகள் நம் நாட்டிலே இருக்கின்றார்கள். அவர்களுடைய துன்பங்களைப் போக்கி, நாம் புண்ணியத்தை அடையும் வாய்ப்புகள் நமக்கு மிக அதிகம். செல்வச் செழிப்புடன் இருக்கும் மேலை நாடுகளிலே, அதிகமாகத் துன்பப்படும் ஏழைகளைத் தேடித்தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். மிக அரிதாக இருப்பார்கள். இருந்தாலும் அவர்களுடைய துன்பத்தை அரசாங்கமே போக்கிவிடும்.
ஒரு பெரிய அலுவலகத்திலே, ஒரு பிரிவில் சுமார் 100 நபர்கள் வேலை செய்கிறார்கள். அந்த 100 நபர்களுக்கும்
-57 -

Page 34
மேலதிகாரியாக இருப்பவர் மிகவும் நேர்மையானவர், நியாயமானவர், சிறந்த உழைப்பாளி, திறமைசாலி, வாழ்க்கையிலே உயர்வதற்குக் கீழே குறிப்பிட்டுள்ள அடிப்படைக் குணங்கள்.
1. உண்மை, 2. நேர்மை, 3. பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் சிறப்பாக செய்தல், 4. பிறருக்குச் துன்பம் அளிக்காமலிருத்தல், 5. ஏழைகளின் துன்பத்தைப் போக்குதல் ஆகிய ஐந்து குணங்களையும் அமையப் பெற்றவர். அந்த 100 நபர்களும் மாதம் ரூ.5,000 சம்பளத் தொகை பெற்றுக்கொண்டு வேலை செய்பவர்கள். பதவி உயர்வுக்காக அவர்களில் சிறந்த 10 நபர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இந்த அதிகாரிக்குக் கொடுக்கப்பட்டது. அந்த 10 நபர்களும் ஐந்து பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். முதல் பதவி 2 நபர்கள், மாதச்சம்பளம் ரூ. 10,000, இரண்டாவது பதவி 2 நபர்கள், மாதச்சம்பளம் 9,000, மூன்றாவது பதவி 2 நபர்கள், மாதச்சம்பளம் ரூ. 8,000, நான்காவது பதவி 2 நபர்கள், மாதச்சம்பளம் ரூ. 7,000, ஐந்தாவது பதவி 2 நபர்கள், மாதச்சம்பளம் ரூ. 6,000 என்ற வகையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
100 நபர்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விவரங்கள் அலுவலகத்திலே உள்ளது. வேலைக்குச் சேர்ந்த தேதி, படிப்பு, வேலைக்கு வரும் நேரம், வேலை முடிந்து திரும்பிச் செல்லும் நேரம், வருடத்தில் எடுத்த லிவு நாட்கள், வேலையில் திறமை, ஈடுபாடு போன்ற எல்லா விபரங்களும் ஒவ்வொரு வருடமும் குறிக்கப்பட்டுள்ளது. இவர் அந்த அலுவலக அதிகாரியாக வந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. இந்த ஐந்து வருடங்களிலே ஒவ்வொரு நபரைப் பற்றியும் அவரும் கணித்து வைத்துள்ளார். மேலே குறிப்பிட்ட எல்லா
سه 58 -

விவரங்களையும் வைத்து அவருடைய கணிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்துத் திறமையான, உண்மையான, தகுதியான நபர்களைத் தானே அவர் தேர்ந்தெடுப்பார்.
அதே அலுவலகத்தில் வேலை செய்பவர்களில் அவர் உறவினர்கள் சிலரும் இருக்கின்றார்கள். அவர்கள் திறமையில்லாதவர்கள். அவரைப் பார்க்கும்போதும், அவரிடம் பேசும்போதும் மிகவும் உண்மையாகவே பணிவுடன், பண்புடன் பேசுபவர்கள் சிலர். பண்பும் பணிவும் இருப்பதைப் போல வேஷம் போடுபவர்கள் சிலர். இவரைப் புகழ்ந்து பேசுபவர்கள் சிலர் . இவர்கள் எல்லோருமே திறமையில்லாதவர்கள். இவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு உண்மையான திறமை, தகுதி உள்ளவர்களை அவர்
தேர்ந்தெடுக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவரைப்
பார்க்கும்போதும் பேசும்போதும் இவரிடம் தேவைக்கு அதிகமான பணிவையும், பண்பையும் காட்டாதவர்கள். அலுவலகத்தில் இவரை அதிகமாக சந்திப்பது கூட இல்லை. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள்
உண்மையான திறமைசாலிகள். அவர்களைத் தன்னுடைய
திறமையினால் இனம் கண்டுபிடித்துத் தேர்ந்தெடுக்கின்றார்.
பொருட்படுத்தாமல் அவனுக்குத் திறமை, தகுதி அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கின்றார்.
ஒரு சாதாரண மனிதனே புகழ்ச்சிக்கும் போலிப் பணிவுக்கும் , அடிமையாகாமல், எந்தவிதமான சிபாரிசுகளுக்கும் இடம்கொடுக்காமல், நியாயம் நேர்மையுடன் சரியான நபர்களைத் தேர்ந்தெடுக்கின்றார் என்றபோது: எல்லாம் அறிந்த: எல்லாம் வல்ல கடவுள் நமக்கு நன்மைகளை அளிக்கும்போது எவ்வளவு துல்லியமாகக்
- 59 -

Page 35
கணக்கிட்டு அளிப்பார் என்பதை எண்ணிப் பாருங்கள். “தவறான ஆத்திகனை விட நல்ல நாத்திகனே மேல்” என்று கூறுவார்கள்.
நாத்திகன் கடவுளை இகழ்ந்தாலும் கடவுள் அதனைப் பொருட்படுத்தமாட்டார். இவன் இகழ்ந்து பேசுவதால் கடவுள் தாழ்ந்து விடுவதில்லை. மாறாக ஒரு ஆத்திகன் உயர்த்திப் பேசுவதால் கடவுள் உயர்ந்து விடுவதில்லை. இது எல்லாம் அவருக்கு ஒரு தூசி. அலுவலகத்திலே தன் வேலைகளை எவ்வாறு செய்கிறான் என்பதை வைத்து அந்த அதிகாரி கணிப்பதைப் போல நடைமுறை வாழ்க்கையிலே நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதை வைத்துத்தான் கடவுள் நம்மைக் கணிப்பார். அலுவலகத்திலே தம்மிடம் பணிவும், பண்பும் காட்டுபவர்களை, புகழ்ச்சியாகப் பேசுபவர்களை, அந்த அதிகாரி எவ்வாறு பதவி உயர்வுக்குத் தேர்ந்தெடுக்கவில்லையோ, அதேபோல் கடவுளும் நீ கோயிலுக்குச் செல்வதை வைத்தும் அங்கு செய்கின்ற பூஜை சடங்குகளை வைத்தும் உனக்கு நன்மை அளிக்கமாட்டார். நீ நடைமுறை வாழ்க்கையிலே எவ்வாறு வாழ்கின்றாய்? என்பதை வைத்துத்தான் கணிப்பார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நல்ல குணங்களை உடைய நல்ல செயல்களைச் செய்துகொண்டு வாழ்க்கையிலே பணம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் ஆரோக்கியத்துடன் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாத்திகனை நீங்கள் பார்த்திருப்பீர்கள்! அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள்! இவர்களுக்கு எப்படிக் கடவுள் நல்ல நிலமையை அளிக்கின்றார்? தன்னை வழிபாடு செய்வதற்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்காமல் நல்ல குணங்களுடன் கூடிய
60 -

மனிதன்; நல்ல செயல்களைச் செய்கின்ற மனிதன் என்ற அடிப்படையில்தான் அந்த நாத்திகனுக்கும் கடவுள் அருள் புரிகின்றார். அதேபோல் நடைமுறை வாழ்க்கையிலே பல தவறுகள் செய்துகொண்டு, தினமும் மணிக்கணக்கில் தன்னைப் பிரார்த்தனை செய்கின்ற தவறான ஒரு ஆத்திகனுக்கு, கடவுள் தண்டனையைத்தான் கொடுப்பார். ஏனென்றால் இவன் “பசுத்தோல் போர்த்திய புலி’ வேஷம் போடுகின்றவன், ஏமாற்றுகின்றவன்.
கடவுளை யாராலும் ஏமாற்ற முடியாது. ஏமாற்றலாம் என்று நினைப்பவர்கள்தான் ஏமாந்து போவர். எப்போதுமே ஏமாற்றுபவர்களுக்குத் தண்டனை அதிகமாகக் கிடைக்கும். தானி விழுவதற்கான குழியைத் தானே வெட்டிக்கொள்பவர்கள் இவர்கள்.
“கெடுவான் கேடு நினைப்பாண்” - பழமொழி -
மற்றவர்களுக்கும் துன்பம் அளிக்க வேண்டும்; என்று மனதில் நினைத்தாலே அவன் கெட்டுப் போவான். மற்றவர்களுக்குத் துன்பம் செய்து பாவத்தைச் செய்து, அந்தப் பாவத்தினால் கடவுளிடம் தண்டனை பெற்றுக் கெட்டுப் போவது ஒரு வகை, மற்றவர்களுக்குத் துன்பம் அளிக்க வேண்டும் என்று மனதில் நினைப்பதே உனக்குத் தீங்கு அளிக்கும் என்றால், உன் மனதில் ஏற்படுகிற கெட்ட எண்ணத்தைக் கடவுள் தெரிந்துகொண்டு அதற்கான பாவத்தை உனக்களித்து அதற்கான தண்டனையையும் தருகிறார் என்பதுதானே அர்த்தம்.
தருமபுரி மாவட்டம், பருகூர் என்ற ஊரிலே குருடர் பள்ளி ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. அதற்குத்
- 61 -

Page 36
தேவையான பலவிதமான உதவிகளை ஜெர்மனியிலுள்ள ECb Gg5T60öG sßDJ6160ILDff60I Christian Blinden Mission தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றது. ஜெர்மனியில் உள்ள பள்ளி மாணவர்களும், அவர்கள் பெற்றோர்களால் கொடுக்கப்படும் Pocket Money செலவிற்காகக்
கொடுக்கப்படும் தொகையில் மீதம் பிடித்து நன்கொடை
அனுப்பி வைக்கின்றார்கள். எங்கேயோ உள்ள முன்பின் பார்த்திராத ஒரு நாடான இந்தியா; அதில் எங்கோ ஒரு
மூலையில் உள்ள பருகூர்: அதிலுள்ள குருட்டு
மாணவர்கள்.
அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளத்துடன் செயல்படும் அந்த நல்ல மனிதர்களை கடவுள் விரும்புவாரா? அல்லது நானும் என் குடும்படும், நன்றாக சிறப்பாக இருக்க வேண்டுமென்ற சுயநல நோக்கத்துடன் பூஜை, அர்ச்சனை, அபிஷேகம், சடங்குகளைச் செய்யும் மனிதர்களை விரும்புவாரா? சுயநலம் உள்ள உள்ளம், துன்பப்படும் பிறர் நலம் நாடுகின்றஉள்ளம், இரண்டில் எது சிறப்பானது என்பதைக் கடவுள் அறியமாட்டார் என்று நினைத்தால் நம்மைவிட முட்டாள் யாருமில்லை!
பல பேர் பல சந்தர்ப்பங்களில் கூறுவதைப் பார்த்திருப்பீர்கள். 'எனக்கு இந்தத் துன்பம் வந்தது. அந்தக் கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். துன்பம் போய்விட்டது. மற்றொரு துன்பம் வந்தது. இந்தக் கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். அதை கடவுள் போக்கிவிட்டார் என்று அந்தக் கடவுளுக்கு சக்தி அதிகம். இந்தக் கடவுளுக்கு சக்தி குறைவு போன்ற பேச்சுக்கள். உங்கள் துன்பத்தைக் கடவுள் போக்குகிறார் என்றால் உங்களுக்குத் துன்பத்தைக்
- 62

கொடுப்பவர் யார்? சிந்தித்துப் பாருங்கள்! அதே கடவுள்தான் உங்களுக்குத் துன்பத்தை அளிக்கின்றார்! மற்ற நபர்கள் மூலமாக, நோய் மூலமாக அல்லது விபத்துக்கள் மூலமாக எந்த வகையில் வந்தாலும் அது கடவுளினால் உங்களுக்கு அளிக்கப்பட்ட துன்பம்தானே.
“தீதும் நன்றம் பிறர்தர வாரா"
புலவர் கணியன் பூங்குன்றனார் -
நமக்கு வரும் தீமைகளும், நன்மைகளும் பிறர் செயலினால் வருவதில்லை. நாம் ஏற்கனவே செய்த பாவ புண்ணியங்களைப் பொறுத்து கடவுள் கொடுக்கின்றார். நமக்குத் துன்பம் அளித்த கடவுள்: அந்த துன்பத்தை எப்போது நீக்குவது என்பதையும் அறிந்தவர். நீங்கள் கடவுளிடம் கேட்டு அவர் துன்பத்தைப் போக்குவதில்லை. எந்த நேரம் வரை அந்த துன்பம் இருக்க வேண்டுமென்பதைக் கடவுள் ஏற்கனவே கணித்துவிட்டார்.
முடிந்தவரை கடவுளிடம் கோரிக்கை, வேண்டுகோள் வைக்காமல் இருங்கள். கடவுள் எல்லாம் அறிந்தவர். கடவுளுக்கு எப்போது, எந்த அளவு கொடுக்க வேண்டும் என்று நன்றாகத் தெரிந்தவர். எப்போது பார்த்தாலும் கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருந்தால் உங்களைப் பார்த்தாலே அவருக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும். கேட்காமலே இருந்தால் அவர் உங்களுக்கு அளிக்கும் நன்மைகளைச் சற்று அதிகமாகக் கூட அளிக்கலாம்.
سطا

Page 37
ஒப்பிட்டுப்பார்த்தல் C2s ease
மனிதனிடம் உள்ள முக்கியமான குணங்களில் ஒன்று மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது. இதில் ஒரு பலவீனம் என்னவென்றால், எப்போதுமே தன்னைவிட மேல்நிலையில் உள்ளவர்களுடனே தன்னை ஒப்பிட்டுப் பார்த்து ஏமாற்றமடைவது. அழகாக இருப்பவனுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து ஏமாற்றமடைதல், அழகைத் தவிர வேறு அம்சங்களில் பணம், மனைவி, குழந்தைகள் போன்றவற்றில் நாம் அவனைவிட மேலாக இருந்தாலும்; அழகை மட்டும் அவனுடன் ஒப்பிட்டு ஏமாற்றமடைதல். அதே போன்று பணம், நல்ல மனைவி, ஆரோக்கியம், நல்ல குழந்தைகள் என்று தனித்தனி அம்சங்களிலே நம்மைவிட மேலானவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஏமாற்றமடைகிறோம்.
என்றைக்காவது ஒரு நாளாவது, வாழ்நாளிலே ஒரு தடவையாவது நம்மைவிட கீழே உள்ளவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோமோ? தினசரி மூன்று வேளை சாப்பிட பொருள் வசதியில்லாதவர்கள், தங்குவதற்கு இடமில்லாமல், பிளாட்பாரத்தையே வீடாக மாற்றிக் கொண்டவர்கள், குழந்தையின் படிப்பிற்குப் புத்தகம், பேனா வாங்கிக் கொடுக்க வசதியில்லாமல் தவிப்பவர்கள். குழந்தையின் நோய்க்கு மருந்து வாங்கப் பணம் இல்லாமல், குழந்தையின் பசிக்குப் பால் வாங்கப் பணமில்லாமல் தவிப்பவர்களுடன் என்றாவது நம்மை ஒப்பிடுகிறோமா? அப்படி ஒப்பிட்டுப் பார்த்தால்தானே மனதில் ஒரு திருப்தி கிடைக்கும். தற்போது நம்மை வைத்துள்ள நிலைமைக்குக் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டுமென்ற எண்ணம் வரும். அடுத்த வேலையைச் செய்வதற்கு மனதிலும், உடலிலும் ஒரு உற்சாகம் வரும்.
I was complaining that I dont have shoes, until I met a person without legs.
- 64

“நான் அணிந்துகொள்வதற்கு எனக்கு காலணிகள் இல்லையே என்று சலித்துக்கொண்டே இருந்தேன், கால்களே
இல்லாத ஒரு நபரைப் பார்க்கும் வரை” என்ற வாசகத்தை
நினைவுபடுத்திப் பாருங்கள்.
‘கடவுள் கொடுப்பதை யாராலும் மறுக்க முடியாது. கடவுள் மறுப்பதை யாராலும் கொடுக்க முடியாது.” கடவுள் உங்களுக்கு ஒரு நன்மையோ அல்லது தண்டனையோ கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்தால், உலகத்திலுள்ள எந்த சக்தியும், ஏன் உலகத்திலுள்ள எல்லா சக்திகளும் சேர்ந்து, எதிர்த்தாலும் அதைத் தடுக்க முடியாது. அதே போன்று ஒரு நன்மையோ அல்லது தண்டனையோ உங்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று கடவுள் முடிவு செய்தால்: எந்த சக்தியும் அதைக் கொடுக்கவும் முடியாது.
இந்திய இராணுவத்தின் தலைமைப் பதவியிலே விற்றிருந்த ஜெனரல் பத்மநாபன் ஒரு பேட்டியிலே கூறும்போது “யுத்தம் நடக்கும் இடங்களிலும், காஷ்மீரில் ஆபத்தான இடங்களிலும் செல்லும்போது எல்லாம் என்னைச் சுற்றி இராணுவ வீரர்கள் கொடுக்கும் பாதுகாப்பு வளையத்தைவிட கடவுள் கொடுக்கும் பாதுகாப்பு வளையத்தைத்தான் நான் மிகவும் நம்புகிறேன்” என்று கூறினார்.
நாம் டாக்டரிடம் செல்கின்றோம். நம்முடைய உடலைப் பரிசோதிக்கின்றார். மேலும் ரத்தம், சிறுநீர் ஆகியவைகளைப் பரிசோதித்துப் பார்த்து உனக்குச் சர்க்கரை வியாதி வந்துள்ளது என்று கூறுகிறார். உன்னுடைய அப்பாவிற்கு, அம்மாவிற்கு அப்பாவைப் பெற்றெடுத்த தாத்தா பாட்டிக்கு, அம்மாவைப் பெற்றெடுத்த தாத்தா பாட்டிக்கு, இந்த வியாதி இருந்ததா என்று கேட்கின்றார். அவர்களுக்குச் சர்க்கரை வியாதி இருந்தது என்றால் உனக்கும் கண்டிப்பாக வரும் என்று கூறுகின்றார். உணவையும், பழக்க வழக்கங்களையும், நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், தினசரி தேகப்
- 65 -

Page 38
பயிற்சிகள் செய்து உடலையும் நல்ல கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் சர்க்கரை நோய் வரும் என்று கூறுகிறார்.
ஏனென்றால் உன்னுடைய முன்னோர்களின் உடல் அம்சத்தைப் பொறுத்துத்தான் உன் உடல் ஆரோக்கியம். நோய் எல்லாமே அமையும். உன் உடல் வாகு, தோலின் நிறம், கண்களின் நிறம், கேசத்தின் நிறம், ஏன் குணங்கள் கூட உன் பெற்றோர் முன்னோர்களைப் பொறுத்துதான் அமையும் என்று விஞ்ஞானம் கூறுகின்றது. ஜீன்ஸின் (GENES) அமைப்பைப் பொறுத்துத்தான் இவையெல்லாம் அமையும் என்று விஞ்ஞானம் தற்போது கூறுகின்றது. அந்த ஜீன்ஸின் அமைப்பை முடிவு செய்வது பரம்பரை. முன்னோர்களின் ஜின்ஸைப் பொறுத்தத்தான் நம்முடைய ஜின்ஸ் அமைகிறது. தாத்தாவின் உடல் அமைப்பு பேரன், பேத்தியைப் பாதிக்கின்றது. இதையேதான் நம் இந்து மதம் கூறுகின்றது. செய்கின்ற பாவ புண்ணியங்களின் பலம் ஏழு தலைமுறைக்கு வரும்.
உங்கள் குழந்தைகளும் அதற்குப் பின் வரும் தலைமுறைகளும் நன்றாக இருக்க வேண்டுமென்றால், நிறைய நல்ல காரியங்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற புண்ணியங்கள் அவர்களைக் காப்பாற்றும். நீங்கள் சேர்த்து வைக்கின்ற பணமும், சொத்துக்களும் அவர்களைக் காப்பாற்றும் என்று முட்டாள்தனமாக எண்ணாதீர்கள்.
ஓரளவு சொத்து அவர்களுக்கு சேர்த்து வைக்க வேண்டியது உங்கள் கடமைதான். ஆனால் நிறைய சொத்துக்களைச் சேர்த்து வைத்தால் அதுவே அவர்களுக்குத் தீமையாகிவிடுகின்றது. அளவுக்கு அதிகமான சொத்து அவர்களுக்குத் தீய பழக்கங்களையும், தவறான நண்பர்களையும், சேர்த்து, அவர்கள் அழிவிற்குக் காரணமாகின்றது. ஓரளவு சொத்தும் நிறையப் புண்ணியமும்
அவர்களை சிறப்பான நிலைமையிலே வைத்திருந்து மேலும்
- 66

முடியாது. மரத்தை எரித்தால் கரியாக மாறும் கரியை எரித்தால்
மேலும் அவர்களை உயர்த்திவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உண்மையான ஆன்மீகம் - கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளுதல், வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்துகொள்ளுதல், உங்களுக்கு இருபது வயதிலேயே தேவை. அறுபது வயதிலே அல்ல? காடு வா, வா என்றும் வீடு போ, போ என்றும் கூறுகின்ற வயதிலே ஆன்மீகம் தெரிந்துகொள்வதால் நீங்கள் பெரியதாக ஒன்றும் சாதித்துவிடப் போவதில்லை. இளமையிலேயே அதைச் சரியாகப் புரிந்துகொண்டால் தனக்கும் தன் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும், தான் பிறந்த நாட்டிற்கும். நன்மைகளும், பெருமையும் வரும்படி வாழ்வதற்குப் பேருதவியாக இருக்கும்.
Atoms can neither be created nor be destroyed ‘அணுக்களைப் புதியதாக உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது”. இது விஞ்ஞானிகளின் கூற்று. அணு என்பது கண்ணால் பார்க்க முடியாத மைக்ராஸ்கோப் கருவியால் மட்டுமே பார்க்க முடிகின்ற ஒரு மிகச்சிறிய பொருள். உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் மரம், செடி, கொடி, உயிரினங்கள், மண், கல், கட்டிடங்கள் எல்லாமே அணுக்களின் கூட்டு.
உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை புதியதாக ஒரு அணுவும் உருவாக்கப்படவில்லை. அணுவை அழிக்கவும் முடியாது. அணுக்கள் உருவம் மாறும். ஆனால் அழிக்க
சாம்பலாக மாறும். ஆனால் அழிக்க முடியாது. இது விஞ்ஞானிகள் கூறுகின்ற உண்மை. எவ்வளவோ முன்னேறிவிட்ட இந்த உலகத்திலே இது உண்மை. இப்போது மட்டுமல்ல. எப்போதுமே ஒரு அணுவையும் புதியதாக உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. இந்த உண்மை கடவுளின் மேன்மையை உணர வைக்கின்ற S-60160) Du Tg5b.
- 67

Page 39
LJr6). Dářářů S2STO GDS
வாழ்க்கையில் எல்லாப் பாவங்களையும் செய்துவிட்டுக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்வதிலும், ஐயப்பன் சுவாமிக்கு மால்ை போட்டுக்கொண்டு 48 நாள் விரதம் இருந்து ஐயப்பனைத் தரிசிப்பதிலும், இராமேஸ்வரத்திலுள்ள 22 தீர்த்தங்களில் குளித்து இராமநாத ஸ்வாமியைத் தரிசிப்பதிலும், காசிக்குச் சென்று கங்கையில் குளித்து காசி விஸ்வநாதரைத் தரிசிப்பதிலும், கும்பமேளா தினத்தன்று கங்கையில் குளிப்பதிலும் நம்முடைய பாவங்கள் எல்லாம் போய்விடும் என்று நினைப்பது தவறான ஒரு எண்ணம். ஒரு கொலையை செய்துவிட்டு மூன்று கோயில் கும்பாபிஷேகங்களைப் பார்த்தால், அந்தக் கொலை செய்த பாவம் போய் விடும் என்று கூறுபவர்களையும் பார்த்திருக்கிறேன். இந்த அம்சத்திலும் கடவுளை நாம் மிக மிக சாதாரணமாக எண்ணுகின்றோம்.
ஒவ்வொரு வருடமும் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனைத் தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகின்றது. 48 நாட்கள் கடுமையான விரதமிருந்து ஐயப்பனைத் தரிசித்து மகிழ்ந்து வரும் பக்தர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அதற்கான பொருள் செலவு, அந்த விரதத்தின் கடுமைகளை இன்பமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், உண்மையிலேயே போற்றுதலுக்குரிய பக்தர்கள். ஆனால் கடவுளுக்காக ஏற்றுக்கொள்ளும் கஷ்டங்களையும், பொருளையும், கடவுளின் குழந்தைகளான துன்பப்படும், வேதனைப்படும், புத்தகம் வாங்க, பள்ளிப் பரீட்சைக்குப் பணம் கட்ட இயலாமல் தவிக்கும் ஏழை மாணவனுக்கோ, நோயில் வாடுகின்ற மருந்து வாங்க பணமில்லாமல் துடிக்கும் ஏழை நோயாளிக்கோ, குழந்தையின் பசியைப் போக்க பால் வாங்கக்கூட
- 68

பணமில்லாமல் தவிக்கும் ஒரு தாய்க்கோ அளிப்பீர்களானால், அந்த ஐயப்பன் உங்களைப் பற்றி எவ்வளவு ஆனந்தப்படுவார் என்பதை நினைத்துப் பாருங்கள்!
ய கோயிலக் ந்து அவரைத் தரிசித்த பக்தனுக் அளிக்கும் புண்ணியத்தைப் போல் பல மடங்கு புண்ணியத்தை பிறர் துன்பம் போக்கும் பக்தனுக்கு அளிப்பார் என்பது உறுதியான உண்மை.
நபிகள் நாயகம் அவர்கள் கூறுகின்றார்கள். “நேரம் தவறாமல் தொழுகை செய்வான், நோன்பும் இருப்பான், புனித யாத்திரையும் (ஹஜ்) செல்வான். ஆனால், வாழ்க்கையில் பொய் சர்வ சாதாரணமாகப் பேசுவான். மற்றவர்கள் சொத்தை அபகரிப்பான். தவறான வழிகளில் செல்வான். இவன் ஒரு நயவஞ்சகக்காரன்”
நயவஞ்சகக்காரன் என்பது ‘பசுத்தோல் போத்திய புலியைப்போல் வேஷம் போடுகின்றவன்’ மிக மிக மோசமானவன். கொலை, கொள்ளை செய்பவனைவிட மோசமானவன் என்று அர்த்தம். கொள்ளை அடிப்பவன்கூட ஏழ்மையினாலும், வறுமையினாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் தூண்டப்பட்டு கொள்ளையடிக்கின்றான். கொலை செய்பவன் கூட உணர்ச்சிவசப்பட்டோ அல்லது பழி வாங்கும் எண்ணத்துடனோ, கொலையை செய்கின்றாய் ஆனால் நயவஞ்சகம் என்பது மிகமிக மோசமான செயல், இவ்வாறு எல்லாம் செய்துவிட்டு கடவுள் மன்னிப்பார் என்று நினைத்தால் அது முட்டாள்தனம் செய்த தவறுக்கு வருந்தி, அழுது மறுபடியும் இந்த தவறுகளைச் செய்வதில்லை என்று கடவுளை வேண்டுபவர்களுக்கு ஓரளவு மன்னிப்புக் கிடைக்கும். உண்மையான மன்னிப்பு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் வாழ்ந்து தொடர்ந்து பல ஆண்டுகள் மற்றவர்கள் துன்பத்தைப் போக்கிக்கொண்டு வாழ்வதிலேதான் கிடைக்கும். இதைச் செய்யுங்கள், பாவம் நீங்கிவிடும் அதைச்
- 69 س

Page 40
செய்யுங்கள், பாவம் நீங்கிவிடும் என்று மக்களுக்குத் தவறான வழிகளைக் காட்டி சமுதாயத்தையே, நாட்டையே கீழான ஒரு நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்றால் அது மிகையாகாது.
நாம் எல்லோருமே கடவுளின் குழந்தைகள். கடவுள் முன் நாம் அனைவரும் சமம். ஒரு குழந்தைக்கு மட்டும் சரியான காரணமில்லாமல் பாவமன்னிப்பு அளித்தால், அது மற்றக் குழந்தைகளை வஞ்சிப்பது போல ஆகுமல்லவா! கடவுள் எதைச் செய்தாலும் அது எல்லோருக்கும் சமமாகத்தான் இருக்கும். எந்தவொரு அம்சமானாலும், சட்டமானாலும் கட்டளையானாலும் உலகிலுள்ள அனைவருக்குமே அது பொதுவானதாகத்தான் இருக்கும். எந்தவிதமான சிறுபாரபட்சமும் கடவுள் செயலிலே இருக்கவே இருக்காது. இருக்கவும் முடியாது.
நாட்டிலுள்ள நல்லவர்களில் பலர் ‘நான் யாருக்கும் தீங்கு செய்ய மாட்டேன். கெட்ட செயல்களைச் செய்ய மாட்டேன். நியாயமான வழிகளிலேதான் செல்வேன். நேர்மையான வழிகளிலே பணம் சம்பாதிப்பேன்’ என்று நினைக்கின்றார்கள். மிகவும் நல்லது. சந்தோஷமானதுதான். புதியதாக எந்தப் பாவத்தையும் செய்வதில்லை. ஆனால், நீங்கள் ஏற்கெனவே முன் பிறவிகளில் செய்துள்ள பாவங்கள் எப்படிப் போகும்? நல்ல செயல்களைச் செய்தால்தானே போகும். பிறருக்கு நன்மை செய்தல், பிறர் துன்பத்தைப் போக்குதல், ஏழைகளின் துன்பத்தைப் போக்குதல் போன்ற செயல்களைச் செய்தால்தானே ஏற்கெனவே செய்துள்ள பாவங்கள் குறையும். முன்பிறவியிலே பாவங்கள் செய்யாமலிருந்தால் உங்களுக்குக் கடவுள் இந்தப் பிறவியைக் கொடுத்திருக்க மாட்டாரே. பிறவியில்லாப் பேரின்பத்தைத்தானே அளித்திருப்பார். ஆகவே நல்ல செயல்களைச் செய்யுங்கள்.
- 70 -

ஒரு நல்ல செயலை நான்கு நபர்கள் .سیاسی میرسد A என்பவர், ஒரு குருடர் பள்ளிக்கு ரூ. 2000 நன்கொடையை ஒரு விழாவின்போது அளிக்கின்றார். அவர் அந்த நன்கொடையை அளிக்கும்போது துன்பப்படும் குழந்தைகள், கண் பார்வையின்றி அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற ஒரு எண்ணத்தை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு நன்கொடையை அளிக்கின்றார்.
B என்பவர், அதே குருடர் பள்ளிக்கு அதே ரூ. 2000 நன்கொடை அதே விழாவில் அளிக்கின்றார். நாம் ரூ. 2000 இந்த குருட்டு மாணவர்களுக்குக் கொடுத்தால், பிற்காலத்தில் கடவுள் நமக்குப் பல மடங்காக பல ஆயிரங்களைத் திருப்பிக் கொடுப்பார் என்று நினைத்துக் கொண்டு கொடுக்கின்றார். C என்பவர், அதே பள்ளிக்கு அதே ரூ. 2000 அதே விழாவில் கொடுக்கின்றார். பொதுமக்கள் எல்லோரும் இந்த விழாவுக்கு வந்துள்ளார்கள். பத்திரிகை நிருபர்களும் வந்துள்ளார்கள். அவர்கள் எல்லோருக்கும் நாம் கொடுக்கும் இந்த நன்கொடை தெரியட்டும். பத்திரிகைகளிலும் நம் பெயர் வரும்' என்ற எண்ணத்துடன் கொடுக்கின்றார். D என்பவர், அதே பள்ளிக்கு அதே விழாவில் அதே ரூ. 2000 த்தை அளிக்கின்றார். விருப்பமில்லாமல் அளிக்கின்றார்.
ABC மூவரும் நன்கொடை கொடுத்துவிட்டார்கள். நாம் கொடுக்காவிட்டால் மரியாதை இருக்காது. எல்லோரும் கேவலமாக நினைப்பார்கள். இந்த விழாவுக்கு வந்ததே தவறாகப் போய்விட்டது. ரூ. 2000 இன்று தண்டம்' என்று திட்டிக்கொண்டே கொடுக்கிறார். நன்கொடை கொடுப்பவர்கள் எல்லோருமே மனத்துக்குள்ளேதான், அவரவர் எண்ணங்களை நினைக்கிறார்கள். வெளியில் காட்டுவதில்லை. வெளிப்பார்வைக்கு D என்பவர் மற்ற மூவரை விட உண்மையாகவும், இரக்கத்துடனும் கொடுப்பதாகக் கூடத் தெரியும். ஆனால், கடவுள் இந்த நால்வருக்கும் ஒரே
- 71 -

Page 41
மாதிரியாக புண்ணியத்தைக் கொடுப்பாரா? கண்டிப்பாகக் கொடுக்க மாட்டார். பலன் கருதாமல் உதவி செய்த A க்கு அதிகமாகவும், பலன் கருதி உதவி செய்த B க்கு சற்று குறைவாகவும், பெயருக்காக, புகழுக்காக கொடுத்த C க்கு மேலும் குறைவாகவும், விருப்பமில்லாமல் கொடுத்த D க்கு மிக மிக குறைவாகவும் தான் கொடுப்பார்.
மற்றவர்கள் துன்பத்தைப் போக்குகிறேன் என்று நினைத்துக் கொண்டு ‘பிச்சைக்காரர்களுக்கும், சோம்பேறிகளுக்கும் உதவி செய்து சமுதாயத்திலே அவர்களை ஊக்கப்படுத்தி வளர்த்துவிடாதீர்கள்.” தகுதியானவர்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து உதவி செய்யுங்கள். நீங்கள் உதவி செய்பவர் என்று தெரிந்தால் உங்களைப் பல விதங்களிலும் ஏமாற்றி நடித்து, பலன்பெற நிறைய நபர்கள் முயற்சி செய்வார்கள். நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டு அதில் பாதியைக் கூட சரியாக உபயோகப்படுத்தாத அனாதை விடுதிகள், உடல் ஊனமுற் பள்ளிகள், ஆசிரமங்கள், குருடர் பள்ளிகள் என்று கணக்கில் அடங்காமல் உள்ளன. நம் நாட்டிலே ஏமாற்றுபவர்கள்தான் மிக அதிகமாக உள்ளார்கள். நல்லவர்களைத் தேடித்தேடி பார்க்கின்ற நிலைமைதான் உள்ளது. ஆகவே ஏமாந்து விடாதீர்கள்.
தவறான வழியிலே சென்றுகொண்டு, ஊரை ஏமாற்றி உலையிலே போட்டுக் கொண்டு எல்லாவிதமான அக்கிரமங்களையும் செய்துகொண்டு, கார், பங்களா, பதவி போன்ற வசதிகளுடன் நன்றாக இருக்கும் மனிதர்களையும், உண்மையாக நேர்மையாக மனித நேயத்துடன் நடந்துகொண்டு பிறருக்கு நன்மை செய்துகொண்டு வாழ்விலே பல பிரச்சனைகளைச் சந்தித்து, பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மனிதர்களையும்
- 72 -

பார்க்கின்றோம். கடவுள் இல்லையா என்று எண்ணுகின்றோம். நல்லதற்கு காலம் இல்லையா என்று கேட்கின்றோம். நீங்கள் நிகழ்காலத்தை மட்டுமே பார்க்கின்றீர்கள். அவர்களுடைய கடந்த கால, கடந்த பிறவியில் செய்த புண்ணியங்களுக்கும், பாவங்களுக்கும் கடவுள் கொடுக்கின்ற நிலைதான் தற்போதைய நிலை. அவர்களுடைய எதிர்காலத்தைப் பாருங்கள். குறுகிய எதிர்காலத்தைப் பார்க்காதீர்கள். நீண்ட எதிர்காலத்தைப் பாருங்கள். தவறான வழியிலே சென்றவர்களுக்குத் தண்டனைகளும், நல்வழியிலே சென்றவர்களுக்கு நன்மைகளும் கிடைப்பது தெரிந்துவிடும்.
தென்னங்கன்றைப் பூமியிலே நட்டு வளர்க்கின்றோம். அதை ஏழு வருடங்கள் பாதுகாத்து வளர்க்க வேண்டும். தினமும் தண்ணி விடுதல், பூச்சி மருந்து அடித்தல் ஆகிய செயல்களுடன் அதை ஏழு வருடங்கள் வளர்த்தால் அது எட்டாவது வருடத்திலிருந்து நமக்குப் பலன் கொடுக்கும். பலன் கொடுக்க ஆரம்பித்த பிறகு அதைப் பேணிக்காப்பது மிகவும் சுலபம். தொடர்ந்து 70 அல்லது 80 ஆண்டுகளுக்கு பலன் கொடுக்கும் என்று நம்புகிறோம். ஆனால், அதே அளவு உறுதியான நம்பிக்கை கடவுளிடம் இருக்கின்றதா?
இன்று ஒரு நல்ல காரியம் செய்தால், அதன் பலனை அடுத்த மாதமோ அல்லது அடுத்த வருடமோ எதிர்பார்க்கின்றோம்! கிடைக்காவிட்டால் சலித்துக் கொள்கின்றோம். நல்ல காரியத்தைத் தொடர்ந்து செய்வதில் தயக்கம் அல்லது விட்டுவிடுகின்றோம். நல்ல செயல்கள் எல்லாம் நிதானமான பலனைத்தான் கொடுக்கும். ஆனால், நீடித்த பலனைக் கொடுக்கும். மகான்கள், மகரிஷிகள் கூறியதைப் போல ஏழு பிறவிகளுக்கு, ஏழு சந்ததிகளுக்கு என்பதை மறந்துவிடாதீர்கள்.
- 73 -

Page 42
“அறம் செய விரும்பு’
“ஈவது விலக்கேல்”
“ஐயமிட்டு உணர்”
- ஆத்திகுடி -
s
“தர்மம் தலைகாக்கும்
இவை எல்லாம் உண்மைகள் இல்லையா? ஆரம்ப பள்ளிக் கூடத்திலே இவற்றைப் படித்தோம் படித்துத்தேர்விலே எழுதி மதிப்பெண்கள் பெறுவதற்காக மட்டும்தான் இவையா? வாழ்க்கையிலே கடைப்பிடிக்க வேண்டாமா? வாழ்க்கையிலே கடைப்பிடித்தால்தானே நாமும், சமுதாயமும், நாடும் முன்னேற முடியும். மகாபாரதப் போரிலே அர்ச்சுனனின் அம்புகளில் அடிபட்டு, ரதசாரதி சல்லியனால் கைவிடப்பட்டு, மண்ணிலே புதைந்துவிட்ட தேர் சக்கரத்தைத் தூக்கி நிறுத்த முயற்சி செய்து, முடியாமல் மரணத்தின் வாயிலிலே நிற்கின்றான் கர்ணன்.
தர்மதேவதை அவன் உயிரைப் பறிப்பதற்குத் தடையாக நிற்கின்றாள். அந்த தர்மத்தின் பலனைக் கர்ணனிடமிருந்து அகற்றினால்தான் அவன் உயிர் போகும் என்ற நிலையில், கடவுளான கிருஷ்ணரே அந்தணன் வேடத்தில் கர்ணனை அணுகி யாசிக்கின்றார். அந்த நிலையிலும்கூட கர்ணன் கூறுகின்றான். “எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன். இந்த நேரத்தில் என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை.
இப்போது என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. இப்போது என்னிடம் வந்து கேட்கின்றாயே? இல்லை என்று என்னை சொல்ல வைக்காதே. இந்த நிலையில் நான் கொடுக்கக்கூடியதை மட்டும் கேள். வாழ்நாள் முழுவதும்
- 74

கொடுத்துவிட்டுக் கடைசி நேரத்தில் இல்லை என்று கூறுகின்ற நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்து வைக்காதே’ என்று கூறுகின்றான்.
"நீ இதுவரை வாழ்நாள் முழுவதும் செய்திருக்கின்ற தர்மத்திலே வந்த புண்ணியம் முழுவதும், மேலும் இப்போது செய்யப்போகின்ற தர்மத்திலே வருகின்ற புண்ணியம் முழுவதையும் தானமாக எனக்குக் கொடுத்துவிடு” என்று கடவுள் யாசிக்கும்போது, மனிதனான கர்ணனின் கை உயர்ந்துவிடுகிறது. கடவுளின் கை தாழ்ந்துவிடுகிறது. இதை நினைத்துப் பாருங்கள். எந்த நூல்களிலாவது எந்த மதத்திலாவது கடவுள் மனிதனிடம் யாசிக்கின்ற செயல் சித்திரிக்கப்பட்டிருக்கின்றதா? இதிலே உள்ள உண்மை கர்ணனைப் போன்ற உயர்ந்த உள்ளத்துடன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த ஒரு மனிதனை உயர்த்துவதற்காகக் கடவுள் தன்னைத் தாழ்த்திக்கொள்ளத் தயங்க மாட்டார் என்பதுதானே? பிட்டுக்கு மண் சுமந்த கடவுள்தானே! அந்தக் கடவுளைக் குறைவாக, தாழ்வாக மதிப்பிடாதீர்கள். அது UIT6 lb.
கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, சிறையிலே தண்டனையை அனுபவித்து வருகின்றான். சிறையிலே அவன் நடந்துகொள்ளும் முறையை வைத்து, ஒவ்வொரு வேளையும் அளிக் கப்படும் உணவை வரிசையிலே வந்து பெற்றுக்கொள்வது, தனக்கு அளிக்கப்பட்ட வேலைகளைச் சரியாகச் செய்வது, சிறைக்காவலாளிகளிடம் தகராறு செய்யாமல் அவர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பது போன்ற செயல்களை வைத்து, நல்ல நடத்தைக்காக ஒவ்வொரு ஆண்டும் தண்டனையிலே தள்ளுபடி செய்யப்படுகின்றது. அந்த தண்டனை தள்ளுபடி, முதல் சில ஆண்டுகளிலே குறைவாகவும் பின்னால் வரும் ஆண்டுகளிலே *Pi*"*" அளிக்கப்படுகின்றது.
- 75 -

Page 43
நல்லவிதமாக சிறையிலே நடந்துகொண்டதால், ஆயுள் தண்டனைக் காலமான 20 ஆண்டுகளை தள்ளுபடி காலம் போக தண்டனையை 14 அல்லது 15 ஆண்டுகளில் முடித்துக்கொண்டு விடுதலை செய்யப்படுகிறார். இதேபோல் நாம் செய்த பாவத்துக்காக நமக்குப் பிற்காலத்திலே அளிக்கப்போகும் தண்டனைகளை நாம் செய்யும் நல்ல காரியங்களினால் ஏற்படும் புண்ணியத்தை வைத்துக் கடவுள் பாதியாகவோ அல்லது கால் பாகமாகவோ குறைப்பார். அந்த குறைக்கப்பட்ட தண்டனையையும் அனுபவிக்கும்போது அதை எளிதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தையும் அளிப்பார்.
ஒரு விநாடியில் ஒரு டிரில்லியன் (ஒரு லட்சம் கோடிகள்) கணக்குகளைச் செய்கின்ற சூப்பர் கம்ப்யூட்டரைக் கண்டுபிடிக்கின்ற திறமை ஒரு மனிதனுக்கு இருக்கிறது என்றால் கடவுளின் திறமைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும் அளவேது? கற்பனைகளுக்கும் எட்டாத அளவு அறிவும் ஆற்றலும் படைத்தவர் என்பதை உணருங்கள்!
சமஸ்கிருதம் கடவுளுக்கு மிகவும் பிடித்த மொழி. சமஸ்கிருதத்திலே மந்திரங்களை உச்சரிக்கும்போது கடவுள் மிகவும் சந்தோஷப்படுவார். சந்தோஷப்பட்ட நிலையிலே இருக்கும் போது நாம் கேட்டவற்றைக் கொடுத்து விடுவார் என்ற எண்ணம் தவறானது. ஆப்பிரிக்க மொழி கடவுளுக்குத் தெரியாதா? அல்லது அண்டாட்டிக்காவிலே உள்ள எஸ்கிமோக்களின் மொழி கடவுளுக்குத் தெரியாதா?
உடுப்பியிலே கோயிலுக்குள் செல்லக்கூடாது என்று தடுக்கப்பட்டவனுக்குத் தரிசனம் கொடுப்பதற்காகத் திரும்பி நின்றாரே கிருஷ்ணர்! அந்த கீழ் சாதி பக்தனுக்குச் சமஸ்கிருதம் தெரியுமா? படைக்கக் கூடாத மாமிசத்தை
- 76

சிவபெருமானுக்குப் படைத்த கண்ணப்பருக்கு சமஸ்கிருதம் தெரியுமா?
ஒரு அதிகாரியிடம் நம்முடைய வேலை வெற்றிபெற வேண்டுமென்றால் அவரைப் புகழ்ச்சியாகப் பேசியோ, அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்தோ, அரசியல் பிரமுகர்களின் சிபாரிசுகளினாலோ அடைந்துவிடலாம். அதற்கும் இடமளிக்காத நேர்மையாக, உண்மையாக இருக்கின்ற அதிகாரிகள், மனிதர்கள் பலரை நாம் பார்க்கின்றோம். ஒரு புகழ்ச்சிக்கோ, தூண்டுதலுக்கோ ஆசைகளுக்கோ, மிரட்டல்களுக்கோ பயப்படாத, பணிந்து போகாத தவறான ஒரு நன்மையை அளிக்க விரும்பாத, ஒரு மனிதன் இருக்கும் போது, கடவுளை ஏன் குறைவாக தாழ்வாக மதிப்பிடுகிறீர்கள்! அது பாவம்! அந்த பாவச் செயலை செய்யாதீர்கள்!
“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்ற பழமொழியை நினைத்துப் பாருங்கள். மற்றவர்களுக்கு நீ செய்யும் உதவிகள்தான் புண்ணியம். அந்தப் புண்ணியத்தினால் கடவுள் உங்கள் குழந்தையைக் காப்பாற்றுவார் என்பதுதானே அதன் பொருள்.
நாம் எல்லோருமே கடவுளால் படைக்கப்பட்டவர்கள். கடவுளின் குழந்தைகள். உங்களுடைய குழந்தைகளுக்குத் தீங்கு செய்பவர்கள் மேல் உங்களுக்கு எவ்வளவு கோபமும், ஆத்திரமும் வருகின்றதோ அதேபோல் கோபமும், ஆத்திரமும் கடவுளுக்கு உங்கள் மேல் ஏற்படும். நீங்கள் கடவுளின் மற்றொரு குழந்தைக்குத் தீங்கு செய்யும்போது! உங்களுடைய குழந்தைகளுக்கு நன்மை செய்பவர்கள் மீது உங்களுக்கு எந்தளவு பரிவும், பாசமும், அன்பும் ஏற்படுகின்றதோ அதேபோல்தான் பரிவும், பாசமும், அன்பும் கடவுளுக்கு உங்கள் மேல் ஏற்படும்; நீங்கள், கடவுளின்
77 -

Page 44
மற்றொரு குழந்தைக்கு நன்மை செய்யும்போது, சிந்தித்துப் பாருங்கள்! உங்கள் மேல் கோபமும், ஆத்திரமும் வரும்படி கடவுளுக்கு பிடிக்காத செயல்களை நீங்கள் செய்தால் அது பாவமாகின்றது.
உங்கள் மேல் பரிவும், பாசமும், அன்பும் வரும்படியான கடவுளுக்குப் பிடித்த செயல்களை நீங்கள் செய்யும்போது அது புண்ணியமாகின்றது. அதன் பலன் பல வருடங்கள் கழித்து திரும்ப நமக்கும் நம் சந்ததிகளுக்கும் கிடைக்கின்றது. ஆகவே எப்போதுமே கடவுள் விரும்பக்கூடிய செயல்களைச் செய்யுங்கள். பூஜை, அர்ச்சனை, அபிஷேகம், யாகம், ஹோமம் மற்றும் பலவிதமான சடங்குகள், நாம் நன்றாக இருக்க வேண்டும். நம் குடும்பமும் குழந்தைகளும் நன்றாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு செய்யப்படுபவை. உங்களுடைய எண்ணமும், நோக்கமும் கடவுளுக்குத் தெரியாதா? உண்மை, நேர்மை, கடமை, ஏழைகளின் துன்பத்தைப் போக்குதல் ஆகியவை உயர்ந்த நோக்கம் கொண்டவைகள். இதற்குத்தான் கடவுள் அதிகமான பலனை அளிப்பார்.
இன்றே இப்பொழுதே ஒரு உண்டிகையை எடுங்கள் அல்லது ஒரு டப்பாவை எடுங்கள், அல்லது ஒரு காகிதக் கவரை எடுங்கள். அதில் தருமத்திற்கு (கோயிலுக்கு அல்ல) என்று எழுதுங்கள். அதில் எவ்வப்போது முடியுமோ அப்போதெல்லாம் உங்களால் முடிந்த தொகையைப் போடுங்கள். கோயிலுக்குச் சென்று வரும் செலவுகள், அங்கு செய்யும் சடங்குகள், பூஜைகளுக்கான செலவுகள் ஆகியவற்றைப் போடுங்கள். உங்கள் வாழ்க்கையிலே மிகவும் துன்பப்படும் மனிதர்களைச் சந்திக்கும் சூழ்நிலை அவ்வப்போது வரும். அப்போது எல்லாம் இதில் உள்ள பணத்தை அவர்கள் துன்பம் போக்கப் பயன்படுத்துங்கள்.
- 78 -

- ‘கடவுளை கடவுளாகப் பாருங்கள், நினையுங்கள், பிரார்த்தனை செய்யுங்கள், விநாயகராகவோ, முருகராகவோ, ராமராகவோ, கிருஷ்ணராகவோ, இயேசுவாகவோ, அல்லாவாகவோ பார்க்காதீர்கள்.”
‘கடவுளைக் கடவுளாகப் பார்க்கும்போது உங்கள் மனம் விவடைகிறது. குறுகிய நிலையிலே இருப்பதில்லை. மதங்கள் உடைபடுகின்றது. அந்த மனத்திற்குப் பெரிய ஆற்றல் கிடைக்கிறது.” உங்களைச் சுற்றிச் சிறிய வட்டமாகப் போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே மாட்டிக்கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் குடும்பம், உங்கள் அலுவலகம், உங்கள் நண்பர்கள் என்று சிறிய வட்டம் உங்களைக் குறுக்கிவிடும். கிணற்றுத் தவளையாக இருக்காதீர்கள்! வட்டத்தைப் பெரியதாக்குங்கள் ! உங்கள் நகரத் தைவிடப் பெரியதாக்குங்கள் ! உங்கள் மாநிலத்தைவிட பெரியதாக்குங்கள் உங்கள் நாட்டைவிடப் பெரியதாக்குங்கள் இந்தப் பூமியைவிடப் பெரியதாக்குங்கள்! ஏன் இந்தப் பிரபஞ்சத்தைவிடப் பெரியதாக்குங்கள்.!
உலகத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைப் பாருங்கள்! அந்த மக்களை நினைத்துப் பாருங்கள் அவர்கள் பழக்க வழக்கங்களைப் பாருங்கள்! அப்போதுதான் மற்றவர்களிடம் உள்ள நல்லவைகளைக் கற்றுக்கொள்ள முடியும். எப்போது ஒரு மனிதனைச் சந்தித்தாலும் அவனிடமுள்ள நல்ல குணம் என்ன என்று தேடுங்கள். இருந்தால் அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். அப்போதுதான் நீங்களும் சமுதாயமும் உங்கள் நாடும் முன்னேற முடியும்.
சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள் வெற்றி வேண்டுமா? திட்டமிட்டு செயல்படு: விடாமுயற்சி செய், உழைப்பு, உழைப்பு என்று இரவும் பகலும் உழை. தோல்வியைக் கண்டு
79 =

Page 45
விடாதே. வெற்றி உனக்கு நிச்சயம் என்று. இவைகளால் மட்டும் வெற்றி கிடைக்காது. ஏற்கனவே புண்ணியம் செய்திருந்தால் தான் வெற்றி கிடைக்கும். முயற்சி மட்டும் தான் நீ செய்ய முடியும். அது வெற்றியோ தோல்வியோ என்பதை கடவுள் தான் முடிவு செய்வார். மேலே கூறிய குணங்களுடன் கூடிய வெற்றி பெற்ற சிலரை மேற்கோள்காட்டி உதாரணம் காட்டிக் கூறுவார்கள். ஆனால் வெற்றி பெற்ற ஒருவனுக்குத் தோல்வி அடைந்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள். அதை மறந்து விடுவார்கள். திறமை, உழைப்பு, உண்மை எல்லாமே இருந்தும் வாழ்க்கையில் வெற்றி கிடைக்காத பல நபர்களைப் பார்க்கின்றோம்.
திறமை, உழைப்பு, உண்மை இவைகள் இல்லாமலே வெற்றியின் சிகரத்திலே உள்ளவர்களையும் பார்க்கின்றோம். வாழ்க்கையிலே வெற்றிக்கு மேலே கூறிய குணங்கள் தேவைதான். ஆனால், அவைகள் மட்டும் போதா. அதைவிடப் பலமடங்கு முக்கியமான கடவுள் அருள் வேண்டும். அதை நீ செய்த புண்ணியத்தை வைத்துத்தான் கடவுள் உனக்கு அளிப்பார். நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும். அப்போத கடவுள் அந்த வெற்றியை நமக்கு அளிப்பார்.
நம்முடைய எண்ணங்களும், செயல்களும், முடிவுகளும் நாம் ஏற்கனவே செய்த பாவ புண்ணியங்களை வைத்துத்தான் அமைகின்றன. நமக்கு நல்ல நேரம் இருக்கும்போது மனதில் தோன்றும் எண்ணங்களும், பிரச்சனைகளின் தீர்வுக்கு எடுக்கும் முடிவுகளும் நல்ல சரியான முடிவாக இருக்கும். கெட்ட நேரம் இருக்கும்போது தவறான முடிவுகளைத்தான் எடுப்போம். தவறான எண்ணங்கள் தான் தோன்றும்.
- 80 -

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக குஜராத்திலே நடந்த பூகம்பத்தின்போது நடந்த சம்பவத்தை பத்திரிகையில் படித்தேன். அடுக்குமாடி கட்டிடத்திலே வாழ்ந்து கொண்டிருந்தவன் பூகம்பம் ஏற்படும்போது மனைவி குழந்தைகளுடன் வேகமாகத் தப்பித்து வெளியே செல்ல லிட்டிலே கீழே இறங்கி வருகின்றான். லிட்டிலிருந்து வெளியே வந்ததும் அடித்தளத்திலே நிறுத்தியுள்ள, நான்கு நாட்களுக்கு முன்பு வாங்கி வந்த, தன்னுடைய புத்தம் புதிய விலைமதிப்பு மிக்க காரைப் பார்க்கின்றான். மனைவி குழந்தைகளிடம் நீங்கள் கட்டிடத்திற்கு வெளியே செல்லுங்கள், நான் மறுபடி லிப்டிலே மேலே சென்று கார் சாவியைக் கொண்டுவந்து காரையும் நொடியிலே காப்பாற்றி விடுகிறேன்’ என்று கூறி மேலே செல்கின்றான். அவர்கள் வெளியே செல்லாமல் கணவன் வரட்டும் என்று லிப்ட் அருகிலேயே நின்றிருந்தார்கள்.
சில நொடிகளில் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து அனைவருமே இறந்து விட்டார்கள். அந்த முக்கியமான நேரத்திலே அவன் இரண்டு முடிவுகளில் ஒன்றை எடுக்கலாம். “கார் போனால் போகிறது. நாம் தப்பித்துக் கொள்வோம்' என்ற முடிவோ, அல்லது நாமும், காரும் இரண்டுமே தப்பித்துக் கொள்வோம் என்ற முடிவோ எடுக்கலாம். அவர்கள் சாக வேண்டுமென்ற விதி இருக்கும்போது தப்பித்துக் கொள்ளும் முடிவை எப்படி எடுப்பார்கள். சாவதற்கான தவறான முடிவைத்தான் எடுப்பார்கள். கடவுள் விதிப்படி அவருக்கு சாவைத் தரும் தவறான முடிவைத் தான் எடுக்க வைப்பார்.
மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தமிழ்நாட்டின் கடற்கரையிலே கடலில் மூழ்கிய நகரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து, அந்த நகரம் மிகப் பழமையான நாகரிகமுள்ள
-81 -

Page 46
மனிதர்கள் வாழ்ந்தது. சுமார் 7000 ஆண்டுகள் பழமையானது என்று கணித்துக் கூறினார்கள். சரித்திரத்திலே பழமையான நாகரிகம் என்று கூறப்பட்ட மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்கள் 5000 ஆண்டுகள் பழமையானவை. அதற்கும் 2000 ஆண்டுகள் முன்பாகவே அந்தளவு நாகரிகத்துடன் நம்நாடு இருந்துள்ளது. உலகிலுள்ள பணக்கார நாடுகளிலே ஒன்றாக இருந்த இந்தியா இன்று ஏழை நாடுகளிலே ஒன்றாக உள்ளது. இந்தளவு தாழ்வுக்கு யார் காரணம். ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் என்று சிலரும், ஜனத்தொகை பெருக்கம் என்று சிலரும், ஜாதிச்சண்டைகள் என்று சிலரும், பலவிதமான காரணங்களைக் கூறுகிறார்கள். அடிப்படைக் காரணத்தை ஆராயவில்லை. பொதுமக்கள் செய்துள்ள பாவங்கள்தான் அவரவர்கள் தாழ்வுக்கும், அவ்வாறு பாவங்கள் செய்த மக்களும் அதிகமாக உள்ளதே நாட்டின் தாழ்விற்கும் காரணம். சுயநலக்காரர்கள். நல்ல குணங்கள் இல்லாத மக்கள்தான் காரணம்.
“If wealth is lost, nothing is lost
If health is lost, something is lost
If character is lost, everything is lost” என்ற ஆங்கிலப் பழமொழி
“செல்வத்தை இழந்துவிட்டாயா ~ எதையும் நீ இழந்துவிடவில்லை.
ஆரோகியத்தை இழந்துவிட்டாயா ~ ஆம் சிலதை இழந்துவிட்டாய்
நல்ல குணங்களை இழந்துவிட்டாயா ~ எல்லாவற்றையும் இழந்துவிட்டாய்”
- 82 -

என்பது அதன்பொருள். நல்ல குணங்கள் இழந்தவன் தவறான செயல்களைச் செய்து பாவத்தைத்தான் தேடிக்கொள்வான். இதுதான் நம்முடைய நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குழந்தை பணக்கார நாட்டிலே பிறக்கிறது. ஒரு குழந்தை நடுத்தர வசதியுள்ள நாட்டிலே பிறக்கிறது. ஒரு குழந்தை பஞ்சம், பசி, நோய் தலைவிரித்தாடும் ஏழை நாட்டிலே பிறக்கிறது. அதேபோல் பணக்கார வீட்டிலே ஒரு குழந்தை: நடுத்தர வசதியுள்ள வீட்டிலே ஒரு குழந்தை; ஏழை வீட்டிலே ஒரு குழந்தை: பிளாட்பாரத்திலே ஒரு குழந்தை பிறக்கிறது. ஆரோக்கியம், புத்திசாலித்தனம், நிறம் ஆகிய எத்தனை வகையான வேறுபாடுகள்? மிகவும் நியாயமான, நேர்மையான தவறே செய்யாத கடவுள் எப்படி, இவ்வளவு வேறுபாடுகளுடன் குழந்தைகளை பிறக்க வைக்கிறார். அதற்கு ஒரு நியாயமான, நேர்மையான, உண்மையான காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அதுதான் அந்த குழந்தை முற்பிறவியிலே செய்த பாவ புண்ணியங்கள். அதனடிப்படையிலேதான் யாருக்கு எவ்வளவு, எந்த பெற்றோர், எந்த நாடு என்பவைகளைக் கடவுள் முடிவு செய்வார்.
- 83 -

Page 47
=围 U ബ്രിബ്ര മഴ്സ് Staso oase
குபேர யந்திரம், மஹாலஷ்மி யந்திரம், அஷடலஷ்மி யந்திரம் என்று எத்தனை விதமான யந்திரங்கள். அதிலும் சாதாரணம், ஸ்பெஷல், சூப்பர் ஸ்பெஷல் என்று எத்தனை வகைகள். எண் சாஸ்திரம், நீலம், பச்சை, வைரம், கோமேதகம் போன்ற கற்களை அணிந்துகொள்வதால் கிடைக்கும் அதிர்ஷ்டம், வாஸ்து சாஸ்திரம் என்று மனிதனுக்கு உடனடியான அதிஷ்டத்தை, நன்மைகளை,
செல்வத்தை அளிக்க எத்தனை வகையான வழிகள்.
எல்லா வழிகளிலும் சென்று, எல்லா நன்மைகளும் அடைந்து, உலகத்தின் உச்சிக்கே சென்றுவிடலாமே! இதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கு மக்களின் பலவீனத்தை, அறிவினத்தை உபயோகப்படுத்தி, குறுக்கு வழியிலே பணம் சம்பாதிக்கும் ஏமாற்றுக்காரர்களின் சாமர்த்தியமான தந்திரம். எல்லா நன்மைகளும் இதுவே கொடுப்பதாக இருந்தால் கடவுளுக்கு என்ன வேலை இந்த வழிகளிலே மேன்மையை அடைந்தவர் உண்மையிலேயே ஒருவர்கூட இருக்க மாட்டார். அப்படியே இருந்தாலும் அது 'காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாகத்தான் இருக்கும்.
கடவுள் எந்த குறுக்கு வழிக்கும் அங்கீகாரம் அளிக்கமாட்டார். நேர்வழியிலே வருவதை மட்டுமே ஏற்றுக்கொள்வார். வாழ்க்கை என்பது ஒரு பெரிய போராட்டம் எதிர்நீச்சல், நேரான வழிகளிலே நிறைய பேர்கள் போராடிக்கொண்டிருக்கும் போது அவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, குறுக்கு வழிகளில் வருபவர்களுக்குக் கடவுள் நன்மைகளை அளிப்பாரா? அளிப்பார் என்று கனவில்கூட நினைக்காதீர்கள். ஏமாறாதீர்கள்? அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி ஃபைனான்ஸ் கம்பெனிகளிலே முதலீடு செய்து
- 84 -

எல்லாவற்றையும் இழந்தது போல்தான் இந்த ஏமாற்று வேலையும் தவறான வழிகளிலே சம்பாதிக்கும் பணம் இதைப் போன்ற மோசடிகளையும் பித்தலாட்டங்களையும் நம்பி தவறான வழியிலேயே போய்விடும். நல்ல வழிகளிலே பணத்தை சம்பாதித்திருப்பவர்கள் இதையெல்லாம் நம்பமாட்டார்கள். யாரும் அவர்களை ஏமாற்றவும் முடியாது. கடவுள் அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து நல்ல முடிவை எடுக்கவைப்பார்.
சோதிடக்கலை (ஜோசியம்) நம் பிறந்த நாளையும், நேரத்தையும் வைத்து நம்முடைய ஜாதகத்தைக் கணித்து, அதிலிருந்து வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறும், நடைபெறப்போகின்ற, நன்மை, தீமைகளைக் கூறும் ஒரு கலை. தற்போது பெரும்பாலான வசதியுள்ள குடும்பங்களில் என்ன செய்கின்றோம். குழந்தை பிறப்பதற்கு முன்பே டாக்டரிடம் என் குழந்தை இந்த நாளில். இந்த நேரத்தில் பிறக்க வேண்டுமென்று குறித்துக்கொடுக்கின்றோம். டாக்டரும் அதே நாளில். அதே நேரத்தில் ஆபரேஷன் செய்து குழந்தை பிறக்குமாறு செய்கின்றார்.
அப்போது முன்னேறியுள்ள விஞ்ஞானம் குழந்தை பிறக்கும் நேரத்தை முடிவு செய்யும் சக்தியை உன்னிடம் அளித்துள்ளது. அதைக் கொண்டு பிச்சைக்காரனாக முட்டாளாக, நோயாளியாகப் பிறக்க வேண்டிய குழந்தையைக்கூட பணக்காரனாக, அறிவுக் கூர்மை மிக்கவனாக ஆரோக்கியமுள்ளவனாக பிறக்க வைக்க முடிகிறது. இதை எல்லோரும் அமுல்படுத்தினால் அப்போது எல்லோருமே மிகச்சிறப்பாக வாழலாம். நாடும் மிகச்சிறப்பாக மாறலாம் இல்லையா? அப்போது கடவுளின் கருணையும் அருளம்கூட தேவையில்லையே!
கடவுளின் நன்மைகளையும், தண்டனைகளையும், விருப்பத்தையும் யாராலும் மாற்ற முடியாது என்பது
- 85 -

Page 48
உண்மையானால், குழந்தை பிறக்கும் நேரத்தை வைத்துக் கணிக்கும் சோதிடக்கலை உண்மையில்லை. குழந்தை பிறக்கும் நேரத்தை முடிவு செய்யும் ஆற்றல் மனிதனிடம் இல்லாத காலக்கட்டத்தில் ஒருவேளை சோதிடக்கலையைச் சிறிதளவு ஒப்புக்கொள்ளலாம். தற்போதைய சூழ்நிலையில் சோதிடக்கலை உண்மையில்லை என்பதுதான் அறிவுபூர்வமான நிலை.
சோதிடக் கலையைப் பற்றி மகாபாரதத்திலே குறிப்பிட்டுள்ள ஒரு நிகழ்ச்சி. மகாபாரதப் போரைத் தொடங்குவதற்காக நல்ல நாளையும், நேரத்தையும் குறித்துக் கொடுக்கும்படி சோதிடக்கலையில் மிகப்பெரிய நிபுணனான பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனை அணுகிக் கேட்கின்றான் துரியோதனன். துரியோதனன் எதிரியாக இருந்தாலும் கற்ற கலையைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
பொய், ஏமாற்றுதல் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் சிறப்பான நாளையும் நேரத்தையும் குறித்துக் கொடுக்கிறான் சகாதேவன். அந்த நேரத்திலே போரை ஆரம்பித்தால் வெற்றி கட்டாயம் துரியோதனனுக்குத்தான் என்று எல்லோருக்கும் தெரிகிறது. எல்லோரும் அந்த நேரத்தை ஏன் குறித்துக் கொடுத்தாய் என்று சகாதேவனைக் கடிந்துகொள்கிறார்கள்: என்ன செய்வது என்று ஒருவருக்குமே புரியவில்லை.
துரியோதனன் போரில் வெற்றி பெறுவது நியாயமற்ற முடிவு: நடைபெறக் கூடாத ஒரு முடிவு. பாண்டவர்கள்தான் போரில் வெற்றி பெறவேண்டும் என்பது விதி என்று கடவுள் கிருஷ்ணருக்குத் தெரியும். ஆகவே அவர் தன்னுடைய சாமர்த்தியத்தினால் அந்தப் போரை அந்த நேரத்தில் ஆரம்பிக்காமல் வேறு நேரத்தில் ஆரம்பிக்கும்படி செய்துவிடுகிறார். இதிலிருந்து என்ன தெரிகின்றது. Tf"ل
- 86 -

கலையில் நிபுணனாக இருந்து எவ்வளவு தூரம் துல்லியமாக கணித்து எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் கடவுள், விதியின்படி அந்த முடிவை மாற்றிவிடுவார். சோதிடக்கலை தோற்றுவிடும். ஆகவே, விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும். அனாவசியமாக தேவையில்லாத சோதிடக்கலையை நம்பிப் பணமும், நேரமும், முயற்சிகளும் செய்வது முட்டாள்தனம் அல்லவா? சிந்தித்துப்பாருங்கள்.
என்னுடைய வாழ்க்கையிலும் என் அன்பு மகள் ஹேமலதா இறந்த பிறகு சோதிடக்கலையை நான் நம்புவதில்லை. நல்லநேரம், ராகு காலம், கெட்ட நேரம் என்று பார்ப்பதில்லை. கடைசியாக வாங்கிய புதிய காரை ஷோரூமிலிருந்து டெலிவரி ராகு காலத்தில்தான் எடுத்தேன். பாலசுப்பிரணியம் புதிய காரை ராகுகாலத்தில் பெற்றுக்கொண்டார். அதனால் அவருக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமென்று கடவுள் கண்டிப்பாக நினைக்க மாட்டார் என்று எனக்கு மிக நன்றாகத் தெரியும். பெங்களுரில் வாங்கிய புதிய வீட்டின் சாவியையும் கட்டடம் கட்டியவரிடமிருந்து கெட்ட நாளாக கருதப்படுகின்ற செவ்வாய்க்கிழமைதான் வாங்கினேன். அந்த வீட்டிற்கும், புதிய வீட்டிற்கு செய்யப்படும் சடங்குகள் (கிரகப்பிரவேசம்) எதையும் செய்யவில்லை.
வாஸ்து சாஸ்திரமும் ஒரு ஏமாற்றுவேலைதான். எந்தவிதமான குறுக்கு வழிகளையும் நான் நம்புவதில்லை. கடைப்பிடிப்பதில்லை. நான் வாழ்க்கையில் எதைக் கடைப்பிடிக்கின்றேனோ அதைத்தான் மற்றவர்களுக்கும் கூறுகின்றேன். சொல் ஒன்று. செயல் வேறு என்பது என்னிடம் காண முடியாது என்பதை அடக்கத்துடன்
தெளிவுபடுத்துகின்றேன்.
அமெரிக்காவிலே மரதன் ஒட்டப்பந்தயம் நடைபெற்றது. 26 கிலோமீட்டர் தூரம் ஓடவேண்டிய ஒட்டப்பந்தயம்:
-87

Page 49
இதில் கலந்து கொள்பவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள். இந்தப் போட்டியிலே முதலாவதாக வந்து வெற்றி பெற்றவருக்குப் பதக்கம். பரிசுகள், பாராட்டுகள் எல்லாம் அளிக்கப்பட்டது. ஒரு வாரம் கழித்து பத்திரிகை நிருபரால் பதக்கம் பெற்றவர் செய்த ஏமாற்று வேலையைக் கண்டுபிடித்தனர். 26 கிலோமீட்டர் தூரம் ஓடவேண்டிய பாதையில் சில கிலோமீட்டர்கள் ஓடி விட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக, ஆட்கள் இல்லாத பகுதியில் வரும்போது அங்கே உள்ள ஒரு குறுக்குப் பாதையிலே ஓடி, பந்தயம் முடிவடைய வேண்டிய இடத்திற்கு சில கிலோமீட்டர்கள் முன்பாக பந்தயப் பாதையில் சேர்ந்து கொண்டார். இதனால் 26 கிலோ மீட்டர் ஓட வேண்டியதற்குப் பதிலாக, 20 கிலோ மீட்டர் மட்டுமே ஓடியுள்ளார். இந்த ஏமாற்று வேலை தெரிந்ததும் அவருக்கு அளிக்கப்பட்ட பதக்கம், பரிசுகள் யாவும் பறிக்கப்பட்டது. தண்டனையும் அளிக்கப்பட்டது. நேரான வழியிலே ஓடாமல் தவறான குறக்கு வழியிலே ஓடியதற்காக மனிதனால் கொடுக்கப்படும் தண்டனை.
வாழ்க்கை என்பது ஒரு நீண்ட ஒட்டப்பந்தயம் போன்றதுதான். வாழ்நாள் முழுவதும் நாம் நன்மைகளை அடைவதற்காக ஒடிக்கொண்டுதான் இருக்கிறோம். இதில் குறுக்கு வழிகளான, அஷ்டலட்சுமி யந்திரம், குபேர யந்திரம் போன்ற பலவகைப்பட்ட யந்திரங்கள், எண் சாஸ்திரம் (நியூமராலஜி) நவரத்தினக் கற்கள் அணிவதால் நன்மை, வாஸ்து சாஸ்திரம் ஆகியவைகளை நாடும் நபர்களுக்கு கடவுள் எப்படி அருள்புரிவார். நன்மைகள் கொடுப்பார். அப்படி கொடுத்தால் நேரான வழியிலே ஓடிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மனிதர்கள் வஞ்சிக்கப்படுவார்கள் அல்லவா? ஆகவே, இந்த தவறை கடவுள் கண்டிப்பாகச் செய்யமாட்டார். மாறாக தவறான வழியை தேர்ந்தெடுத்த நபருக்குத் தண்டனை தான் கிடைக்கும். ஆகவே நன்மைகள் கிடைக்கும் என்று இந்த வழிகளை நாடும் நபர்களே சிந்தித்துப்
- 88 -

பாருங்கள்! நன்மை கிடைக்கும் என்று நம்பி, இந்த குறுக்கு வழிகளை நாடி, நன்மைக்குப் பதிலாக தண்டனையைப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள் குறுக்கு வழியை நாடும் எந்த மனிதனுக்கும் தண்டனை கண்டிப்பாக கிடைக்கும். சில வருடங்கள் கழித்து கிடைக்கும் (கடவுள் நின்று கொல்வார்) என்பது உறுதி உறுதி உறுதி!
அமெரிக்காவில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் ஏமாற்று வேலை நடந்துள்ளதா? அப்போது அங்கும் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள் இல்லையா? என்று நினைக்கலாம். கொலைகாரர்கள், கற்பழிப்பவர்கள், கொள்ளை யடிப்பவர்கள், மோசடி செய்பவர்கள், பலவிதமான தீய வழிகளிலே செயல்படுபவர்கள் எல்லா நாடுகளிலும்தான் இருக்கிறார்கள். மேலைநாடுகளிலே இந்த விதமான குற்றங்கள் 5 சதவீதம் உள்ளது என்றால், மூன்றாம் தர BIT(6æ6úG60 Third World Countries (Bld Qsbgu IT6)sb மூன்றாம் தர நாடுதான்) 90 சதவீதம் உள்ளது. மேலும், மேல்நாடுகளில் குற்றம்செய்பவர்கள் அரசாங்கம் அளிக்கும் தண்டனையிலிருந்து தப்ப முடிவதில்லை. 90 சதவீத நபர்களுக்குத் தண்டனை கிடைத்துவிடுகிறது. ஆனால் நம் நாட்டிலே குற்றம் செய்தாலும் பணம், அரசியல், அதிகாரம், செல்வாக்கு இவைகளை உபயோகித்து தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள். குற்றம் செய்தவர்களில் 90 சதவீதம் நபர்கள் தப்பி விடுகிறார்கள்.
உலகிலேயே மிக சத்திவாய்ந்த மனிதர் அமெரிக்க ஜனாதிபதிதான்! தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்புஷ. அவருடைய தம்பியின் மகள் 20 வயது நிறைந்தவள், மது அருந்தினார் என்பதை போலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துக் குற்றம்சாட்டி கோர்ட்டிலே அபராதம் கட்ட வைத்தார்கள். அமெரிக்காவிலே 21 வயது
- 89

Page 50
நிரம்பியவர்கள் மட்டுமே மது அருந்தலாம் என்பது சட்டம். இது சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.
இங்கிலாந்தின் பிரதம மந்திரி டோனி பிளேயர். இவருடைய 18 வயது மகன், லண்டனிலுள்ள பாக்கில் மது அருந்திவிட்டு இரவு 8 மணிக்கு மேல் படுத்திருந்தார். போலீஸ் கண்டுபிடித்து குற்றம்சாட்டியது. இதுவும் இங்கிலாந்து நாட்டிலே குற்றம். இங்கிலாந்து பிரதம மந்திரி டோனி பிளேயருக்கு இது தெரிந்ததும், போலீஸ் தன் கடமையைச் செய்யட்டும். விசாரணை தேவையிருந்தால் போலீஸ் என்னைக் கூட்பிட்டால், நான் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று விளக்கமளிக்கத் தயார் என்று கூறினார். இதுவும் சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம்தான்.
நம் நாட்டில் சாதாரண நகரத்து அரசியல் பிரமுகரைக்கூட போலீஸ் ஒன்றும் செய்ய இயலாது. அப்படியே மீறிச் செய்தாலும் அந்த அதிகாரி உடனடியாக வேறு ஊருக்கு மாற்றப்படுவர். இதுதானே இங்கு நடைமுறை இப்படிப்பட்ட ஒரு சமுதாயம் எப்படி மேலே வரமுடியும்? கடவுள் எப்படி இந்த நபர்களுக்கு அருள் புரிவார்?
-90 -
 

JFLIEilgolf 9FLIDL îNJ95 Tu CuypLD -Sasso ease
சடங்கு சம்பிரதாயங்களுக்கு, நம்முடைய சமூகத்தில் மிக அதிக முக்கியத்துவம் அளிக்கின்றோம். அதன் மையக் கருத்தான பக்தி, மனித நேயம், மக்களை நல்வழிப்படுத்துதல் ஆகியவைகளை மறந்துவிடுகிறோம். அந்தந்த காலகட்டங்களிலே மகான்கள், மகிரிஷிகளால் அந்தந்த சூழ்நிலைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட சில நல்ல வழிமுறைகள் சடங்குகளும், சம்பிரதாயங்களும். சூழ்நிலைகளும், காலங்களும் மாறும்போது நிறைய சம்பிரதாயங்கள் தேவையில்லாமல் போய்விடுகின்றன. உதாரணமாக, கிராமப்புறங்களில் பச்சை வைத்தல் என்று சம்பிரதாயம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை என்றால் பச்சை வைத்தால் உடம்பு குணமாகிவிடும் என்ற நம்பிக்கை.
பச்சை வைப்பது என்பது ஒரு கோழியையோ அல்லது ஆட்டையோ கடவுளுக்கு பலி கொடுத்து அதனால் தயாரிக்கப்பட்ட உணவை மற்றவர்களுக்கு அளிப்பதாகும். இதிலுள்ள மையக்கருத்து சில நபர்களுக்கு உணவு அளித்தல், அவர்களின் பசியைப் போக்குதல் என்பதுதான். மற்றவருடைய பசியைப் போக்கினால் உனக்குக் கடவுள் நன்மை அளிப்பார் என்பதுதான்.
தமிழ்நாட்டிலே திருமணங்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறுவதில்லை. மேலும் பகலில்தான் திருமணங்கள் நடைபெறும். பக்கத்து மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இரவில்தான் திருமணங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டிலே நல்ல நாட்களில்லை என்று ஒதுக்கப்படும்
-91 -

Page 51
செவ்வாய், சனிக்கிழமைகளில் அங்கு திருமணங்கள் நடைபெறுகின்றன.
சடங்கு - சம்பிரதாயங்கள் நாட்டுக்கு நாடு ஏன் சில நாடுகளில் ஒரு பகுதிக்குப் பகுதி மாறுபடுகிறது. உலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலே ஆயிரக்கணக்கான சம்பிரதாயங்கள். ஒரு நாட்டிலே நல்லது என்று கருதப்படுகிறது மற்றொரு நாட்டிலே தீமையாகின்றது. ஆகவே சம்பிரதாயம் சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். அதன் பின்னே இருக்கின்ற மனித நேயத்தை நல்ல எண்ணத்தைப் பாருங்கள். கடவுள் அதைத்தான் பார்ப்பார். கடவுளின் பெயரால் நடத்தப்படுகின்ற, மற்றவர்களுக்குத் தீங்கு, மனம் புணி படுதல் போன்றவைகளை ஏற்படுத்துகின்ற சடங்கு - சம்பிரதாயங்களை தூக்கி எறியுங்கள். அவைகளை மாற்றுவது அல்லது ஒதுக்குவது தெய்வ குற்றமாகும் என்று நினைப்பது முட்டாள்தனமாகும்.
ஒரு விதவையின் கண்ணிரைத் தடைக்காத
மசியோடு இருப்பவனுக்கு உணவளிக்காத
மதத்தைத் தாக்கியெறியுங்கள்
- விவேகானந்தர் -
விவேகானந்தர் கூறியதை சிந்தனை செய்து பாருங்கள். தெய்வத்திற்குப் படைக்கக் கூடாத மாமிசத்தைப் படைத்த கணிணப் பநாயனாரின் பக்தியை கடவுளர் ஏற்றுக்கொள்ளவில்லையா? சடங்கு - சம்பிரதாயம் செய்கின்ற நபரின் உள்ளத்தையும் அதிலிருக்கும்
எண்ணத்தையும்தான் கடவுள் பார்ப்பார். கடவுளின் அறிவு ஆற்றலை மிகமிகக் குறைவாக மதிப்பிடாதீர்கள்.
umu
- 92 -

ஒரு மனிதனின் வெற்றியை அவன் அடைந்துள்ள பணத்தை மட்டுமே அளவு கோலாக வைத்துப் பார்க்காதீர்கள். ஆயிரம் பணக்காரர்களிலே ஒருவர்தான் நிம்மதியுடன், சந்தோஷத்துடன் வாழ்பவர் என்பதை மறந்துவிடாதீர்கள். பணம் மட்டுமே வாழ்க்கையில்லை. ஓரளவு பணமிருந்தால் அது உங்களைக் காப்பாற்றும். அளவிற்கு அதிகமாக பணமிருந்தால் நீங்கள்தான் அந்தப் பணத்தைக் காப்பாற்ற வேண்டும் அதற்கு வேலைக்காரனாக நீங்கள் இருக்க வேண்டும்.
பணத்தால் பெறமுடியாத பணத்தைவிட முக்கியமான ஆரோக்கியம், படிப்பு, குடும்ப அமைதி, நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், வாழ்க்கைக்கு மிக முக்கியமானது என்பதை உணருங்கள். இவைகளையெல்லாம் எவ்வளவு கோடி பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது. பணம் உங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும். பணத்திற்கு நீங்கள் அடிமையாகக்கூடாது. தேவையான அளவிற்கு அதிகமாக வருகின்ற பணம் உங்களுக்கு எப்போதுமே துன்பத்தையும், பிரச்னைகளையும் தான் கொண்டு வருகின்றது. தவறான வழிகளிலே வருகின்ற பணம் மிக விரைவாக, மிக அதிகமாக துன்பங்களையும், பிரச்சனைகளையும் கொண்டுவரும்.
A என்பவர் ஒரு பெரிய பணக்காரர், நிறைய வியாபார நிறுவனங்களும், தொழிற்சாலைகளும், நிறைய கார்களும், பங்களாக்களும் வைத்திருப்பவர். ஒவ்வொரு நாளும் இரவில் அவருக்குச் சரியான தூக்கமில்லை. இந்த தொழிற்சாலைக்கு வந்துள்ள இறக்குமதி பில்லை பேங்கில் எடுக்க: குறைவாக உள்ள சில லட்ச ரூபாய்களை எப்படிப்புரட்டுவது. அந்த நிறுவனத்திற்குக் கட்ட வேண்டிய லோன் தவணையை எப்படிக் கட்டுவது என்பது போன்ற கவலைகள். அதை அடுத்த நாள் சமாளிக்கும் சாமர்த்தியங்கள் என்று ஒவ்வொரு
- 93 -

Page 52
நாளும் இதே கதைதான். எப்போதுமே பற்றாக்குறைதான். கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. ஆனால் எப்போதும் பணம் பற்றாக்குறை நிலைமைதான். ஏனென்றால் பணம் அதிகமாக இருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டால் அவர்தான் அடுத்த தொழிற்சாலையை ஆரம்பித்துவிடுகிறாரே.
B என்பவர் மற்றொரு பணக்காரர். சிறிய பணக்காரர். ஒரு வியாபாரத்தை நடத்திக்கொண்டு ஒரு காரும் ஒரு வீடும் ஒரு வியாபாரமும் மட்டுமே உள்ளவர். இவருக்குப் பணப்பற்றாக்குறை எப்போதுமே இல்லை. திடீரென்று பத்தாயிரம் செலவு வந்தால் அவரிடம் பதினைந்தாயிரமாகக் கைவசம் இருக்கும். மற்றொரு நாள் ஒரு லட்சம் தேவைப்பட்டால் யாரோ ஒருவர் ஏற்கனவே கொடுத்த இரண்டு லட்சங்களைத் திருப்பிக் கொண்டுவந்து கொடுப்பார். ஆக பணப் பற்றாக்குறை என்பது எப்போதுமே அவர் வாழ்க்கையில் இல்லை. இந்த இருவரில் உண்மையான பணக்காரர் யார்?
A என்கின்ற பணக்காரர் பணத்துக்கு அடிமையானவர். பேங்க்கில் லட்சக்கணக்கில் பணத்தை எண்ணுகின்ற கேஷியரைப் போன்றவர். சொத்துக்களுக்குச் சில சந்தர்ப்பங்களில் அரசாங்கம் நியமிக்கின்ற Care taker போன்றவர். பணம், பணம் என்று அதை அபிவிருத்தி செய்வதிலேயே வாழ்நாள் முழுவதையும் கழிக்கின்ற முட்டாள். இதுதான் மாயை என்று கூறப்படுவது. இவன்தான் மாயை வலையிலே சிக்கிக்கொண்டவன். உலகில் தோன்றிய மகான்கள், மகரிஷிகள், மக்கள் தலைவர்கள், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் யாரும் பணக்காரர்கள் அல்ல. குணத்தால், பண்பால் மக்களை நல்வழிப்படுத்துவதால் உயர்ந்தவர்கள். அதனால் அவர்கள் சரித்திரத்திலே இடம் பெற்றார்கள். காலத்தால் அழியாத புகழைப் பெற்று வருகிறார்கள். இறந்து எவ்வளவோ நூற்றாண்டுகள் ஆன
94 -

பிறகும் அவர்களுடைய பெயர் அவர்கள் مهندس சரித்திரங்கள் நிலைத்து நிற்கின்றது.
‘ஒரு விதவையின் கண்ணிரைத் துடைக்காத, பசியோடு இருப்பவனுக்கு உணவளிக்காத மதத்தைத் தூக்கி எறியுங்கள்’ என்று விவேகானந்தர் கூறியதைச் சிந்தித்துப் பாருங்கள்.
நாம் இந்த உலகத்தில் பிறக்கும்போதே திரும்பி இந்த உலகை விட்டுச் செல்லும் ரிட்டர்ன் டிக்கெட்டுடன்தான் வந்துள்ளோம். கண்டிப்பாக ஒரு நாள் திரும்பித்தான் போகப்போகிறோம். அந்த ரிட்டர்ன் டிக்கெட்டில் நாம் திரும்பிச் செல்லும் தேதியும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் என்ன தேதி என்பது நமக்குத் தெரியாது. அது நாளைக்கே இருக்கலாம். அல்லது 5 வருடங்கள் கழித்து இருக்கலாம். நல்ல மரணமாக இருக்கலாம் அல்லது பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையில் கவனிப்பாரற்று, நாதியற்று, கேவலப்பட்டு, ஒவ்வொரு நாளும் சித்திரவதைப்பட்டு மரணமாகலாம். செல்லும்போது நம்முடன் கொண்டு செல்வது எதுவுமில்லை.
"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ என்று கூறிய பட்டினத்தாரின் பாடலை நினைத்துப்பாருங்கள். காதறுந்த ஊசி எதற்குமே பயன்படாத பொருளைக்கூட நம்முடன், இறப்பின் பிறகு வரப்போவதில்லை என்று கூறியுள்ளார். ஆனால் ஒன்று மட்டும் நம்முடன் கூட வரும். அதுதான் நாம் செய்த பாவ புண்ணியங்கள். அதன்படி அடுத்த பிறவியை எந்த நாட்டிலே எந்த பெற்றோருக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பதை கடவுள் முடிவு செய்வார்.
*一
- 95

Page 53
உண்மையான உயர்வு
Staso Oese
வாழ்க்கையிலே வெற்றி பெறுவதற்கு அடியில் குறிப்பிட்ட குணங்கள் மிக முக்கியம்:
(1) s. 6016OLD
(2) நேர்மை (3) பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் சிறப்பாகச் செய்தல் (4) பிறருக்குத் துன்பம் அளிக்காமலிருத்தல் (5) ஏழைகளின் துன்பத்தைப் போக்குதல்
வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்களிடமே மேலே கூறிய ஐந்து குணங்களும் மிக அதிகமாக உள்ளது. இந்தக் குணங்களுடன் வாழும்படியான வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்ளவேண்டும். வாழ்க்கை ஒரு பெரிய போராட்டம். எதிர்நீச்சல் போட்டுத்தான் வெற்றிபெற வேண்டும். கணக்கில் அடங்காத சோதனைகள் வாழ்க்கையில் வந்து கொண்டிருக்கும் அந்த சோதனைகளை எல்லாம் எதிர்கொண்டு வாழ்பவன்தான் சாதனையாளன்.
இருட்டறையிலே இருந்துகொண்டு மற்றவர்கள் விளக்கு ஏற்றட்டும் என்று நினைக்காதீர்கள். விளக்கு ஏற்றும் முதல் ஆளாக நீங்கள் இருங்கள். நல்லவர்கள் வாழும் நடுவில் நல்லவனாக இருப்பது சுலபம். நம்முடைய கேடு கெட்ட சமுதாயத்திலே 360 டிகிரி கோணத்தில் எந்தப்பக்கம் திரும்பினாலும் பொய், புரட்டு, லஞ்சம், ஏமாற்று, சுயநலம், சுரண்டல் என்று மலிந்து கிடக்கு இந்த நாட்டிலே; மேலே கூறிய ஐந்து குணங்களுடன் இப்படித்தான் வாழ்வேன் என்று வாழ்ந்து காட்டுங்கள். தலையில் மேல் நடப்பது சுலபம். கயிற்றின் மேல் நடப்பது கடினம். மேலை நாடுகளிலே நல்லவனாக வாழ்வது சுலபம். ஆனால் நம் நாட்டிலே நல்லவனாக வாழ்வது மிகக்கடினம். அந்தக் கடினத்தை
L
- 96 -

வாழ்ந்து காட்டுங்கள். அரசியல்வாதிகள், سوسه சாராயக்காரர்கள், சுயநலவியாபாரிகள், சுரண்டல் பேர்வழிகள் என்று யாரையும் குறை கூறாதீர்கள். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களைத் திருத்துவதற்கு முயற்சி செய்வதோ, நியாயம் கேட்டுப் போராடுவதோ, அநியாயத்தைத் தட்டிக்கேட்பதோ தேவையில்லை.
நீங்கள் நல்ல வழியிலே தொடர்ந்து சென்று கொண்டிருங்கள். மற்றவர்களுக்கு உதாரணமாக உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டுங்கள். கடவுள் உங்களுக்குச் சிம்மாசனம் அளிப்பார். கொஞ்சம் கொஞ்சமாக உங்களைச் சுற்றி இருப்பவர்கள் தானாகத் திருந்துவார்கள். துடிப்புள்ள, உண்மையுள்ள நூறு இளைஞர்களைக் கொடுங்கள். இந்த நாட்டின் எதிர்காலத்தை மாற்றிக்காட்டுகிறேன் என்று விவேகானந்தர் கூறினார். நீங்கள் ஏன் அதில் ஒருவராக இருக்கக்கூடாது. மனிதனுக்குப் பகுத்தறிவும் ஆறாவது அறிவைக் கடவுள் அளித்துள்ளார்.
ஐந்தறிவு விலங்குகளாக நாம் மாறக்கூடாது. அறிவு படைத்தவர்கள், சிந்தனையாளர்கள் சிந்தித்து சீர் தூக்கிப் பார்த்து, தெளிந்து, அறிந்து, மேலே கூறிய ஐந்து குணங்களுடன் செயல்பட்டால் நம் நாட்டை மாற்றிக் காட்டலாம். மிகச்சிறப்பான இந்து மதத்தை வைத்துக்கொண்டு கீழே நிற்கின்றோம். எவ்வளவு தொழிற்சாலைகள் கட்டினாலும் பள்ளிகள், கல்லூரிகள் ஆரம்பித்தாலும் திட்டங்கள் தீட்டி நடைமுறைப்படுத்தினாலும், ஆஸ்பத்திரிகள் நடத்தினாலும் மேலே கூறிய ஐந்து குணங்கள் இல்லாத மக்களும், நாடும் கண்டிப்பாக முன்னேற முடியாது. எவ்வளவு திட்டங்களை உருவாக்கி உங்கள் புத்திக் கூர்மையினால் திறமையாக அமுல்படுத்தினாலும் அந்த திட்டங்களின் நன்மை மக்களைச் சென்று அடைந்தாலும், கடவுள் அவரவர்கள் செய்த பாவத்திற்கான தண்டனைகளை வேறு எவ்வளவோ வழிகளில் அளித்துவிடுவார்.
- 97

Page 54
مينېي چې: மேலும், எய்ட்ஸ், சார்ஸ் போன்ற நோய் ஏன் புதிது புதிதாக வருகின்றது. இவை எல்லாமே பாவம் செய்த மனிதர்களுக்குக் கடவுள் கொடுக்கும் தண்டனைகள், நீ என்ன தான் புத்திசாலியாக, திறமைசாலியாக, சாமர்த்தியசாலியாக இருந்தாலும், உன்னிடம் மேலே கூறிய ஐந்து குணங்களும் இல்லாவிடில் உன்னுடைய எல்லாத் திறமைகளும் விழலுக்கு இறைத்த நீராகப் போய்விடும். உன்னால் ஒன்றுமே செய்ய இயலாது.
கடவுளை சரியாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைச் சரியான வழியிலே வாழ்ந்தால் பணக்கார மேல்நாடுகளில் இருந்து நாம் கடன் வாங்குவதற்குப் பதிலாக நாம் அவர்களுக்குக் கடன் கொடுக்கும் திறமைக்கு உயரலாம். நீங்கள் உயரலாம். உங்கள் குழந்தைகளும், சந்ததிகளும் உயரலாம். சமுதாயம் உயரலாம். நாடும் உயரலாம்.
உலகிலேயே பெரிய பணக்காரரும், கம்ப்யூட்டர் உலகின் முடி சூடா மன்னனுமான அமெரிக்கர் பில் கேட்ஸ். அவருடைய நிறுவனத்திலே உலகிலுள்ள எல்லா நாடுகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கம்ப்யூட்டர் திறமைசாலிகளும் வேலை செய்கிறார்கள். எல்லா நாட்டவர்களின் திறமைகளையும் கணித்து se6f Jingossip 6 IT fig60g,56ir gg. South Indians are the most intelligent people on earth. D 6)555(36)03u 9p56i கூர்மை படைத்தவர்கள் தென் இந்தியர்கள்.
பெரிய பெரிய மகான்களும், மகரிஷிகளும் பிறந்தபூமி இது.
மிசம் உண்பதில் என்பது சிறப்பான செயல் என்று கூறுகின் இந்து மதம். இவைகளினால்தான் தென்னிந்தியர்களுக்கு இந்தப் பெருமையும் அமைப்பும் கிடைத்திருக்கின்றது. அதை நாம் புரிந்துகொண்டு கடவுளையும், வாழும் விதத்தையும் சரியாகத் தெரிந்துகொண்டு வாழ்வோமானால், உலகிலுள்ள எல்லோரையும் வழி நடத்தும் மிக உயர்வான, உன்னதமான நிலையைக் கண்டிப்பாக அடைய முடியும்.
98 -

காதல் திருமணம் Staso Osse
இளைஞர்களே! நீங்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம் இந்த நாட்டை நல்ல நிலைமைக்கு வழி நடத்திச் செல்லும் பொறுப்பு உங்களுக்கு நிறையவுள்ளது. உங்கள் குடும்பத்திற்குச் செய்யும் கடமையைப் போல உங்கள் நாட்டிற்கும் நீங்கள் கடமையைச் செய்யவேண்டும்.
நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே! நீ உன் நாட்டிற்கு என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுப்பார்! என்று அமெரிக்க ஜனாதிபதி கென்னடி கூறியதை எண்ணிப்பாருங்கள். கல்லூரிகளில் படிக்கும் நாட்களிலேயே காதலில் ஈடுபடுகிறீர்கள்.
காதல் உலகத்திலேயே மிக சக்தி வாய்ந்தது. அது உங்களை மற்றக் கடமைகளிலிருந்து திசை மாற்றிவிடும். அதை படிப்பு முடிந்த பிறகு வைத்துக்கொள்வது உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் மிகுந்த நன்மையை அளிக்கும். சரியான பக்குவமடையாத மனதிலே தோன்றும் காதல் நல்லதல்ல. படிப்பு முடிந்த பிறகு காதலில் ஈடுபட்டு, உங்கள் வாழ்க்கைத் துணைவியைத் தேர்ந்தெடுத்தாலும் உங்கள் பெற்றோரின் அனுமதியில்லாமல் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
பெற்றோரின் ஆதரவும், ஒத்துழைப்பும், சம்மதமும் உங்களுக்குத் தேவையில்லாமலிருக்கலாம். ஏனென்றால் நீங்கள் தான் உங்கள் சொந்தக் காலிலே நிற்கும் அளவிற்கு வேலை யையும் , வருமான தி தையும் தேடி அடைந்துவிட்டீர்களே! ஆனால் வாழ்க்கையில் பெரும் பகுதியை கடந்துவிட்ட அவர்களுக்கு உங்களுடைய அன்பும் ஆதரவும் தேவை. நீங்கள் வளர்ச்சியடைந்தால் உலகிலேயே
- 99 -

Page 55
அதைப் பார்த்து பெருமையடைந்து பூரித்துப் போகின்ற முதல் உள்ளம் உங்கள் பெற்றோர்களுடையது தான் என்பதை மறந்துவிடாதீர்கள் . அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு, எதிர்த்துத் திருமணம் செய்துகொண்டால் அவர்கள் மனம் என்ன வேதனைப்படும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.
யாருக்குத் துன்பத்தை அளித்தாலும் அது பாவம். நம்முடைய பெற்றோர்களுக்கு நாம் துன்பமளித்தால் அது மகாபாவம்.
தாயிற்சிறந்ததொரு கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
மாதா பிதா குரு தெய்வம்
இந்தப் பழமொழிகளை உலகுக்கு அளித்தது நம் நாடு. இதன்படி வாழ்ந்தவர் ராமபிரான். ஒரு தாய் தன் குழந்தைகளுக்காகப் படும் கவர் டங்களுக்கும் , வேதனைகளுக்கும் தியாகங்களுக்கும் உலகில் விலையே கிடையாது. ஈடுகட்ட முடியாது. அந்த நன்றிக் கடனைத் தீர்க்க முடியாது.
வட இந்தியாவிலிருந்து தன் யாத்திரையை முடித்துக் கொண்டு தாயின் ஈமச் சடங்குகளுக்காகத் தன் பிறந்த ஊரான கேரள மாநிலத்தில் காலடி வைத்து அதைச் செய்து முடித்தார் பெரிய மகானான ஆதிசங்கரர். முற்றும் துறந்த மகானுக்குக்கூடச் தாய்க்குத் செய்ய வேண்டிய ஈமச் சடங்கு அவ்வளவு முக்கியமானதாகத் தெரிந்தது. நம்முடைய தோலையே செருப்பாக்கித் தாய்க்கு அணிவித்தால்கூட தாய்க்குச் செய்ய வேண்டிய நன்றிக்கடன் தீராது.
- 100 -

மகான்கள், மகரிஷிகள் கால்களில் விழுந்து ஆசிபெறுவது என்பதை எல்லோரும் செய்யலாம். அவருடைய தந்தையும் செய்யலாம். ஆனால் அவருடைய தாய் மட்டும் செய்யக்கூடாது. ஏனென்றால் அந்த மகானைவிட உயர்ந்தவள் அவனை ஈன்றெடுத்த தாய். ஆகவே அவர் அவருடைய மகனின் காலில் விழக்கூடாது என்பது நியதி.
காதலி காதல் பரிசாக கேட்டாள் என்பதற்காகத் தன்னுடைய தாயைக்கொன்று அவளுடைய இதயத்தைத் தட்டிலே வைத்துக் காதலிக்கு அளிக்கச் சென்றுகொண்டிருந்த ஒரு முட்டாள், கல்தடுக்கித் தடுமாறும் போதுகூட அந்த தாயின் இதயம் மகனே பார்த்துச் சொல் அடிபட்டுவட்டதா? என்று கேட்டதாம் அந்தத் தாயின் மனதை நோகச் செய்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையாது. அவ்வாறு பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு வாழ்விலே பெரிய துன்பங்களை அனுபவிக்கும் நிறையப் பேர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவசரப்படாதீர்கள். பொறுமையுடன் இருங்கள். காலப்போக்கில் அவர்கள் உங்களுக்கு அனுமதி அளிப்பார்கள். தனக்குத் துன்பம் வந்தாலும் பரவாயில்லை தன் குழந்தைகளுக்குத் துன்பம் வரக்கூடாது என்றுதான் 99 சதவீத பெற்றோர்கள்
நினைப்பார்கள். அவர்கள் உங்கள் காதலின் உறுதியை
அதற்காக நீங்கள் ஏற்றுக்கொள்ளும் துன்பத்தைப் பார்த்துத் தானாக மாறிவிடுவார்கள்.
இந்த விஞ்ஞான நாகரிக உலகத்திலே பெற்றோர்கள் முதுமை அடைந்த நிலையில் அவர்களைச் சரியாகக் கவனிக்காமல் சுயநல எண்ணம்கொண்டு அலையும் நபர்களை வெகுவாகப் பார்க்கிறோம். அவர்களெல்லாம் பெரிய பாவத்தைச் செய்கின்றார்கள். மேலைநாடுகளிலே முதியவர்களின் எல்லா நலன்களையும் அரசாங்கமே முதியோர் இல்லங்களின் வாயிலாகப் பார்த்துக் கொள்கின்றது.
==م
- 101 -

Page 56
முதியவர்கள் என்றால் அங்கு எலி லாக் கட்டணங்களிலும் சலுகை, எங்கு சென்றாலும் முன்னுரிமை. சிறப்பு வசதிகள் என்று பேணிக்காக்கின்றது. அதனால் எந்தவிதமான பாவங்களுக்கும் அங்கு இடமில்லை. ஆனால் நம் நாட்டிலே நிலைமை வேறு. மேல் நாட்டவரிடமிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்வதில்லை. தேவையில்லாத, உண்மையில் வாழ்க்கைக்கு உதவா சிற்றின் பங்களைத் தரக்கூடியவைகளை மட்டுே கற்றுக்கொள்கிறோம்.
தொழிலிலே ஈடுபாடு, நேரம் தவறாமை, மேலதிகாரி பார்க்காமலேயே செய்யும் வேலைகளை சுத்தமாக, சிறப்பாகச் செய்யும் பாங்கு, சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றுதல், வியாபாரத்திலும் வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்துவதிலும், நேர்மை, ஏமாற்றாமலிருத்தல் , மற்றவர்களையும் மனிதர்களாக மதித்தல், எல்லாவற்றிற்கும் மேலாக மனித நேயம் இவைகளைக் கற்றுக்கொள்கிறோமா?
மேல்நாட்டிலே நடந்த எனக்குத் தெரிந்த சில நிகழ்ச்சிகளை இங்கே குறிப்பிடுகின்றேன். என்னுடைய சகோதரர் அமெரிக்கா சென்றபோது அங்குள்ள வால்ட் டிஸ்னி உலகத்திற்குச் சென்றார். அங்கிருந்த ஒரு சிறு
ஸ்டாலில் 3 காபியும் 1 டீயும் வேண்டுமெனக் கேட்டு
வாங்கினார். அங்குள்ளவிற்பனைப் பெண் ஞாபக மறதியாக 4 காபிகளாக வழங்கிவிட்டார். குடித்துப் பார்த்த பிறகுதான் தவறாக வழங்கியது தெரிந்தது. மறுபடியும் ஒரு மணி நேரம் கழித்து வேறு உணவுப் பொருள்கள் வாங்குவதற்காக அதே பெண்ணிடம் சென்று தின்பண்டங்களை வாங்கிவிட்டுச் சாதாரணமாகத் தவறு நடந்ததைச் சொல்லலாம் என்ற எண்ணத்துடன் நடந்ததவற்றைக் கூறினார்.
உடனே அந்தப் பெண் நான் தவறு செய்துவிட்டேன். இந்தாருங்கள் மற்றொரு டீ என்று வழங்கினார். கொஞ்சம்
حه 102 -

கூட முகம் சுளிக்காமல், இல்லை நான் சரியாகத்தான் கொடுத்தேன். நீங்கள்தான் சரியாகக் கேட்கவில்லை என்று கூறாமல், வழங்கிய மற்றொரு டீக்கு தன் சம்பளத்திலிருந்து பனம் வழங்க வேண்டுமென்ற நிலைமை இருந்தும் தவறை ஒப்புக் கொள்கின்ற பணி பாடு. வாடிக் கையாளர் உண்மையைத்தான் கூறுவார். பொய் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை. (அங்கு யாரும் சிறிய விஷயத்திற்கெல்லாம் பொய் பேசுவதில்லை) நம் நாட்டில் பார்க்க முடியாத ஒன்று.
மற்றொரு சகோதரர் லண்டன் சென்றிருந்தபோது நடந்த நிகழ்ச்சி. டவுன் பஸ்ஸில் அவர் மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். அவர் மனைவி பஸ் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். ஒரு ஸ்டாப்பிங்கில் ஒரு ஆங்கிலப் பெண்மணி பஸ்ஸில் ஏறினார். அவருக்கு ஒரு கையில் அடிபட்டுக் கட்டுப் போடப்பட்டுள்ளது. சகோதரனின் மனைவி தன் இருக்கையை விட்டு எழுந்து அவர் அமருவதற்காக இடமளித்தார். சாதாரணமாக அந்த செயலுக்கு அந்த இடத்தில் உட்கார இடம் கிடைத்த பெண்மணிதான் இடம் கொடுத்தவருக்கு நன்றி என்று கூறுவார். ஆனால் அவர் நன்றி கூறியது அல்லாமல் அந்த இருக்கைக்கு சுற்றிலும் அமர்ந்திருந்தவர்கள்கூட நன்றி கூறினார்கள்.
நான் ஐரோப்பிய நகரங்களுக்கு சுற்றுலா சென்றபோது என்னுடன் பெங்களுரை சார்ந்த அரசாங்க உயர்
பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அதகாரியும் அவர் மனைவியும்.
வந்திருந்தார்கள். அவர் மகன் அமெரிக்காவிலே கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பெற்றோர்களைத் தன்னுடன் வந்து சில மாதங்கள் தங்கும்படி அழைத்ததன் பேரில் அவர்கள் இருவரும் அங்கு சென்று சில மாதங்கள் தங்கி வந்தனர். அப்போது அவருக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியைக் கூறினார்.
- 103 -

Page 57
ஒரு நாள் அவர் வீட்டிற்குச் சற்றுத் தொலைவில் இருந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸிற்குச் சென்று சில பொருட்கள் வாங்கிக் கொண்டு அவருடைய வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். இரண்டு கைகளிலும் பொருட்கள். அப்போது ஒரு அமெரிக்கல் பெண்மணி அவரிடம் வந்து சில பொருட்களை என்னிடம் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி, இவர் வீடு வரை உடன் வந்து கொடுத்துவிட்டுச் சென்றார். அப்போது இவர் அந்த பெண்மணியிடம் நீங்கள் ஏன் எனக்காக உதவி செய்கிறீர்கள். சிரமப்படுகிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த பெண்மணி கூறிய பதில் “நீங்கள் ஒரு முதியவர். எங்கள் நாட்டிற்கு வந்துள்ள விருந்தாளி. என் வீடும் உங்கள் வீட்டு வழியிலேயே அமைந்துள்ளது. இந்த சிறு உதவியைக்கூட நான் செய்யவில்லை என்றால் வாழ்விலே என்ன அர்த்தம்”. இந்த நிகழ்ச்சி நம்புவதற்குகூடக் கொஞ்சம் கடினமாகத்தான் உள்ளது. ஆனால் உண்மை நிகழ்ச்சி. நம் நாட்டிலே கனவுகூட காண முடியாத ஒரு நிகழ்ச்சி.
அமெரிக்கர்களிடமுள்ள மனித நேயத்திற்கு மற்றுமொரு உதாரணம், 20 வருடங்களுக்கு முன்பாக ஆசியா கண்டத்திலுள்ள வியட்நாம் நாட்டுடன் அமெரிக்கா போரிடுகிறது. லட்சக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டுப் போரில் ஈடுபடுகின்றார்கள். போரின் அன்றாட நிகழ்ச்சிகளை உலகிற்குத் தெரியப்படுத்துவதற்காக உலகில் பல்வேறு பத்திரிகை நிருபர்களும் வியட்நாம் நாட்டில் இருக்கின்றார்கள்.
அதில் ஒரு பத்திரிகை நிருபர் ஒரு அற்புதமான நிகழ்ச்சியைப் படம் பிடித்து அமெரிக்க பத்திரிகைக்கு அனுப்புகின்றார். அந்த அற்புதமான புகைப்படம் அமெரிக் காவில் எலி லாப் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்படுகிறது. தொலைக் காட்சிகளிலும் காட்டப்படுகின்றது. அந்தப் புகைப்படம் அமெரிக்க மக்களின்
- 104

- 千围
மனதிலே வெகு ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அவர்களுடைய மனதை மாற்றுகின்றது. போர் நடத்த அமெரிக்க அரசாங்கததிற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த அவர்கள் மனதை போர் வேண்டாம். வியட்நாம் போரை நிறுத்த வேண்டும் என்று கூறவைத்தது அந்த ஒரே ஒரு புகைப்படம் தான்! அமெரிக்காவில் எந்த அரசாங்கமும் மக்கள் விருப்பத்திற்கு எதிராக நடந்துகொள்ள முடியாது. நடந்துகொள்ள மாட்டார்கள்.
மக்கள் விருப்பத்திற்கு அந்தளவு மதிப்புக்கொடுக்கும் அரசாங்கம்தான் அங்கு நடைபெறுகின்றது. வாரத்திற்கு ஒருமுறை, சில சமயங்களில் வாரத்திற்குப் பலமுறைகூட முக்கியமான பிரச்சனைகளில் அரசாங்கம் எப்படி நடந்துகொள்ள வேண்டும். பிரச்சனையைச் சமாளித்த விதம் சரியா? தவறா? என்ற பல்வேறு கோணங்களில் பத்திரிகைகள் மக்களிடம் கருத்துக்கணிப்பு செய்யும். அவ்வாறு செய்த கருத்துக் கணிப்புகளில் அந்த புகைப்படத்தைப் பார்த்ததின் பாதிப்பினால் மக்கள் மனம் மாறி போர் வேண்டாம் என்று கூறுகின்ற மக்கள் ஒவ்வொரு வாரமும் அதிகமாகி மக்களின் விருப்பம் அமெரிக்க அரசாங்கத்தை வியட்நாம் போருக்கு ஒரு முடிவுக்கு கொண்டுவர வைத்தது.
வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது ஒரே ஒரு புகைப்படம். அப்படி அந்த புகைப்படத்திலே என்ன இருக்கின்றது? உடலிலே ஆடையில்லாமல் சுமார் 10 வயது உள்ள ஒரு பெண் சிறுமி குண்டு வீச்சினால் பற்றி எரியும் குடிசையிலிருந்து ஓடி வருகின்றாள். அந்தக் குழந்தையின் முகமெல்லாம் அழுகை, பயம், பீதி, ஒன்றுமறியாத ஏழைச் சிறுமி அணிந்த உடை தீயினால் பற்றி எரிய, அதைக் கழற்றி எறிந்துவிட்டு உயிர் பிழைக்க ஓடி வரவைக்கும் போர் தேவையா? இந்த அளவு துன்பத்தை ஒன்றுமறியாச் சிறுமிக்குக் கொடுக்கும் போரினால் என்ன சாதித்துவிடப் போகிறோம்.
- 105

Page 58
闇= -
அப்படியே சாதித்தாலும் அந்த சாதனை தேவையா? என்ற கேள்வியை எழுப்பி அமெரிக்க மக்களின் மனத்தை மாற்றிவிட்டது.
மனித நேயமுள்ள உள்ளங்கள். ஆகையால் மனம் மாறியது. அந்தப் புகைப்படத்திலே ஓடி வருகின்ற சிறுமி தற்போது அமெரிக்க நாட்டிலே திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றாள். அவளுடைய தற்போதைய புகைப்படமும் டைம்ஸ் ஆங்கிலப் புத்தகத்திலே சமீபத்திலே வெளியிடப்பட்டது.
அமெரிக்காவில் ஒருவர் ஒரு இடத்திலிருந்து கொண்டு ஒரு விலாசத்தைத் தேடிக்கொண்டிருப்பதை மற்றவர்கள் பார்த்தால் இவரிடம் வந்து May 1 Help You நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா? என்று கேட்கிறார்கள். சாலையில் போய்க்கொண்டிருக்கும் போது முன்பின் தெரியாதவர்கள் ஹை என்றோ குட்மார்னிங் என்றோ வாழி தீதுகிறார்கள் . அதனாலி தானி இநீத மனப்பான்மைகளினால் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். கடவுள் அவர்களுக்கு, அவர்கள் செய்யும் நல்ல செயல்களுக்கான, புண்ணியத்திற்கான நல்ல பலன்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
- 1 Ոh -
 

L
(8asmusfotoas6
Staso Oesel
பெரும்பாலான கோயில்களிலே கடவுள் இருப்பதில்லை. வியப்பாக இருக்கிறதா! “நல்லவர் உள்ளம் இறைவன் வாழும் இல்லம்” என்பது எல்லோருக்கும் தெரியும். நல்லவர்களின் உள்ளங்களிலே இறைவன் இருக்கின்றார். அப்போது தீயவர்களின் உள்ளங்களிலே இருக்க மாட்டார். தவறு, தீமை என்பது கடவுளுக்குப் பிடிக்காத செயல். ஆதலால் அந்த உள்ளங்களில் இருக்க மாட்டார். அது நடைபெறும் இடங்களிலும் இருக்கமாட்டார்.
கோயில்களில் தற்போது நடந்துகொண்டிருக்கும் பல விதமான தவறுகள், பித்தலாட்டங்கள் கோயில் சொத்துக்களை அபகரித்தல், வசூல் பணத்திலே திருட்டுக் கணக்கு எழுதுதல், உண்டிகைப் பணத்திலே கையாடல், நல்ல உள்ளம் இல்லாத அர்ச்சனர், கடவுளுக்கு அளிக்கப்படும் பூஜை சாமான்களில் கலப்படம் ஆகிய தவறுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடத்தில் கடவுள் எப்படி இருப்பார்? இருக்க மாட்டார்.
கோயில்களுக்குச் சென்று வணங்கிவிட்டுத் திரும்பி வருவதற்கான மொத்த நேரத்தில் எத்தனை நிமிடங்கள் நாம் உணி மையான பத்தியுடன் கடவுளை வணங்குகின்றோம். கர்ப்பூர ஆராதனை காட்டும் ஓரிரு நிமிடங்களில் மட்டுமே கடவுளை நினைக்கின்றோம். அப்போதுகூட கடவுளிடம் பேரம்தான். எனக்கு இந்த நன்மையைக் கொடுத்தால் நான் உனக்கு அபிஷேகம் செய்கிறேன். உண்டியலில் இந்த தொகையைப் போடுகிறேன். இந்த உற்சவம் செய்கின்றேன் என்று வியாபாரம்தான் செய்கின்றோம். எத்தனை பேர் எனக்கு நல்ல எண்ணத்தைக் கொடு, நல்வழியைக்காட்டு என்று வணங்குகிறார்கள்.
- 107 -

Page 59
கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவதால் மட்டுமே நல்ல பலன்களைக் கொடுப்பதாக இருந்தால், தினந்தோறும் பல மணிநேரங்கள் கடவுளுக்கு அருகிலேயே இருந்துகொண்டு வழிபாடு செய்துகொண்டிருக்கும் அர்ச்சகர்களுக்குக் கடவுள் பல மடங்கு நன்மைகளை அளித்திருக்க வேண்டும். வாழ்நாளிலே ஒருமுறைகூட கோயிலுக்குச் செல்லாத கீழ் ஜாதியைச் சார்ந்த உண்மையான பக்தனுக்குத் தரிசனம் கொடுப்பதற்காக உடுப்பியிலே உள்ள கிருஷ்ணர் திரும்பி நின்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரார்த்தனைக்கு ஒரு மடங்கு பலன் கிடைக்கும் என்றால், நல்ல செயலுக்கு 100 மடங்கு பலனை கடவுள் அளிப்பார்.
சிந்தனையாளர்கள், அறிவாளர்கள், புத்திக்கூர்மை உடையவர்கள் இப்புத்தகத்திலே கூறப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையிலேயே உள்ளவர்கள்: இனிமேல் கோயிலுக்குச் செல்வதை சில காலங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது வெகுவாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். கோயிலிலுள்ள அதே கடவுள்தான் உங்கள் வீட்டிலும் இருக்கின்றார். உங்கள் வீட்டிலேயே வணங்குங்கள். நல்ல வழியிலே சென்றுகொண்டு, ஒழுக்கத்துடன் நடந்து, பிறர்க்கு துன்பமளிக்காமல் பிறர் துன்பத்தைப் போக்கிக் கொண்டும், வாழ்ந்துகொண்டும், கோயில்களுக்குச் சென்று வந்தால், சாதாரண பாமர மக்கள் என்ன நினைக்கின்றார்கள்? உங்களுக்கு வாழ்க்கையிலே கிடைக்கும் நன்மைகள் எல்லாம் நீங்கள் கோயில்களுக்குச் சென்று கடவுளை வணங்குவதால் தான் கிடைத்தது என்று நினைக்கின்றார்கள். நீங்கள் நடைமுறை வாழ்ககையிலே செய்யும் நல்ல காரியங்களுக்காகத்தான் கடவுள் உங்களுக்கு நன்மைகளை அளித்தார் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.
- 108

நீங்கள் கோயிலுக்குச் செல்லாமலிருந்தால், يوسيسيبيسي நன்மைகள் பெற்று சிறப்பான நிலைமையிலிருந்தால், அப்போது பாமர மக்கள் சிறிதளவாவது நினைத்துப் பார்ப்பார்கள். இவர் கோயிலுக்குச் செல்வதில்லை. ஆனால் இவர் நன்றாக உள்ளாரே. வாழ்க்கை சிறப்பாக உள்ளதே எப்படி என்று சிந்திப்பார்கள். உங்களைப் பார்த்து சில விஷயங்களைக் கற்றுக்கொண்டு: வாழ்விலே சில சமயங்களிலாவது அமுல்படுத்துவார்கள். என்னுடைய வாழ்க்கையிலே நான் இதைத்தான் செய்துவருகிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக வருடத்திற்கு இரண்டு முறை கோயிலுக்குச் சென்றிருந்தாலே அது அதிகம். அதுவும் மற்றவர்களுக்காகச் சென்றதுதான்.
கோயில்களுக்கு எந்தவிதமான நன்கொடைகளும் அளிப்பதில்லை. விழா, கும்பாபிஷேகம் என்று பல நிகழ்ச்சிகளுக்குப் பண வசூல் செய்ய வரும் அன்பர்களிடமும் கோயிலுக்கு ஒரு ரூபாய்கூடக் கொடுக்க மாட்டேன். உங்களுக்குத் தெரிந்த ஏழை மாணவனோ அல்லது நோயாளியோ இருந்தால் கூறுங்கள். அவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று கூறி வருகின்றேன்.
என்னைச் சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர்கள், மற்றவர்கள் இதைப் பார்க்கின்றார்கள். அவர்களில் சில பேர் ஏழைகளின் துன்பங்களைப் போக்குவது, ஒழுக்கமாக வாழ்வது என்ற வழிகளில்ே கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறார்கள். ஆகவே, உங்களுக்குச் சிறிதளவு கஷ்டங்கள் ஏற்படும் என்றாலும், அதைப் பொறுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். சமுதாயத்திற்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்ற நோக்கத்தை மனதில் கொண்டு கோயில்களுக்குச் செல்வதை வெகுவாகக் குறைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் எந்த நோக்கத்துடன் கோயிலுக்கு செல்வதில்லை என்பதை எல்லாம் வல்ல கடவுள் தெரிந்துகொள்ள மாட்டாரா?ل
- 109

Page 60
உங்களுடைய உயர்ந்த நோக்கத்தைப் புரிந்துகொள்ள LDTILTJIT?
நான் நரகத்திற்குச் சென்றாலும் பரவாயில்லை என் செயலினாலே, நூற்றுக்கணக்கானவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்களானால் அந்தச் செயலை செய்யத் தயாா. (சொர்க்கம், நரகம் எல்லாம் மக்களை நல்வழியில் செல்வதற்காக பெரியோர்கள் கூறி வைத்த ஒரு கற்பனை என்பது வேறு விஷயம்) என்று பெரிய மகானான ராமானுஜர் கூறவில்லையா? அதை சிந்தித்துப் பாருங்கள்.
கடந்த 20 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் ஆயிரம் முதியோர்களுக்கு சேலை அல்லது வேட்டி அல்லது போர்வை இலவசமாக வழங்கிக்கொண்டு வருகின்றேன். தருமபுரி நகரத்திலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஏழைகள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்து உண்மையான, ஏழையான முதியோர்களுக்கு பிரிண்டிங் செய்த அட்டை (டோக்கன்) கொடுக்கின்றோம். குறிப்பிட்ட நாளிலே அவர்களை எங்கள் தொழிற்சாலைக்கு வரச்சொல்லி ஏற்கனவே கொடுத்த டோக்கன் இருப்பவர்களை உள்ளே அனுமதித்து சேலையோ, வேட்டியோ, போர்வையோ அளிக்கின்றோம்.
வெளியிலே டோக்கன் இல்லாத சிலர் சேலை-வேட்டி வேண்டி நின்று கொண்டிருப்பார்கள். டோக்கன் இருப்பவர்கள் எல்லோருக்கும் கொடுத்து முடித்து பிறகு வெளியில் கேட்டருகில் வருவேன். அப்போது வெளியில் நின்று கொண்டிருப்பவர்கள் துணி வேண்டிக் கேட்பார்கள். உடல்நலத்துடன் இருப்பவர்கள் கூட்டத்தில் முட்டி மோதிக்கொண்டு முன்புறம் என்னருகே வந்து கேட்பார்கள். கூட்டத்தில் இடிபட்டு முன்புறம் வர இயலாத முதியோர் சற்று தூரத்திலே நின்றுகொண்டு பரிதாபமாகப் பார்த்துக்
- 110 -

= கொண்டிருப்பார்கள். நான் என் ஊழியர்களிடம் துணியைக் கொடுத்து முன்புறம் வர இயலாமல் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த முதியோர்களுக்குக் கொடுக்கச் சொல்வேன். முன்புறமாக வந்து கேட்கும் பலர் முதியோர்களாக இருக்க மாட்டார்கள். தகுதியில்லா தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குத் துணி வழங்க மாட்டேன்.
சிறிய அறிவு படைத்த சாதாரண மனிதனாகிய நானே அருகில் வரமுடியாமல், கேட்க முடியாமல் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு நிற்கும் முதியோர்களைத் தேர்ந்தெடுத்து அளிக் கினி றேனர். அருகிலி வந்து பல முறை வேண்டிக்கேட்பவர்களுக்கு அளிப்பதில்லை என்றால் ‘சர்வ வல்லமை படைத்த பேரறிவு படைத்த கடவுள்' எவ்வாறு நடந்துகொள்வார்? எவ்வளவு முறை மன்றாடி அழுது, யாசித்தாலும் தகுதியில்லாத, புண்ணியம் செய்யாத மனிதர்களுக்கு நன்மையை அளிக்க மாட்டார். கடவுளிடம் கேட்காமலே இருந்தாலும் புண்ணியம் செய்துள்ள நல்ல மனிதர்களுக்கு நன்மைகளை அளிப்பார் அல்லவா? சிந்தித்துப் பாருங்கள்.
கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். சரியாகப் புரிந்துகொண்டு நீங்கள் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், அவர் உங்களை நோக்கிப் பத்து அடி எடுத்து வைப்பார். உங்களுக்கு ஒரு துன்பம் என்றால் அவர் மனம் துடிக்கும். உதவி செய்கின்ற முதல் நபராக அவர் ஓடி வருவார். நீங்கள் அழைக்காமலே ஓடி வருவார். கடவுளின் உண்மையான பக்தனின் மேல் உலகத்திலுள்ள சக்திகள் அத்தனையும் ஒன்றாகச் சேர்ந்து எதிர்த்தாலும், ஒரு சிறு கீறல்கூட போட முடியாது.
- 1 1 1 سے

Page 61
TELILL1 Staso eSe
இது உங்கள் கூடவே நண்பனைப் போல் இருந்து கொண்டு மகாபாரதத்து சகுனியைப் போல உங்களைப் பழிவாங்குகின்ற குணம். தெரிந்த எதிரியை சமாளித்துக் | கொள்ளலாம். தெரியாத எதிரியான, மறைமுக எதிரியான கள்வம், உங்கள் முன்னேற்றத்தை அடைத்துவிடும். அல்லது வெகுவாகக் குறைத்துவிடும். கர்வமுள்ள மனது மற்றவர்களிடம் உள்ள நலி லவைகளை எடுத்துக்கொள்ளாது, திறமைகளுக்கு மதிப்பளிக்காது, மற்றவர்களின் நல்ல செயல்களைப் பாராட்ட உங்களைவிடாது. நிறைய நபர்களுக்கு அது அழிவைத்தான் உணர் டாக்கும் . முடிந்தவரை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள் ‘விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போகமாட்டான்' என்ற பழமொழியை நினைத்துப் பாருங்கள்.
உலகத்திலேயே முதல் தரமான பெரிய ஆலோசனை வழங்கும் கம்பெனி Consultancy Company அமெரிக்க கம்பெனியான மெக்கின்ஸி. ஒரு பெரிய இரும்புத் தொழிற்சாலை கட்ட வேண்டுமா? பெரிய அணைக்கட்டு கட்டு வேண்டுமா? கார் தொழிற்சாலை கட்ட வேண்டுமா? ஆரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டுமா? அல்லது எந்தவிதமான தொழிற்சாலைகளைக் கட்டுவதோ, பிரச்னைகளை சமாளிப்பதோ, வழிகாட்டுவதோ எல்லாவற்றுக்கும் ஆலோசனை வழங்கும் கம்பெனிதான் மெக்கின்ஸி. அந்தக் கம்பெனியில் உள்ள டைரக்டர்கள் அனைவரும் அமெரிக்கர்கள், அவர்கள் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்த தலைவர், நிர்வாக டைரக்டர் ஒரு இந்தியர் L ரஜத்குப்தா. இவர் மேற்கு வங்காள மாநிலத்தை "
- 1 12

பதவிக்கு மூன்றாம் முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். திறமைக்கு முதலிடம் கொடுக்கப்படுகின்ற அமெரிக்க நாட்டிலே அமெரிக்கரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். திறமைக்கு முதலிடம் கொடுக்கப்படுகின்ற அமெரிக்க நாட்டிலே அமெரிக்கரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கர்வமுள்ள அமெரிக்கர்களாக இருந்தால் ஒரு வேற்று நாட்டவரை, இந்தியரை அக்கம்பெனியின் தலைவராக தேர்ந்தெடுப்பார்களா?
ரஜத்குப்தா கூறுகிறார் ‘என்னுடைய வெற்றிக்கு வழிகாட்டி பகவத் கீதைதான். பகவத் கீதையிலே குறிப்பிட்டுள்ளவைகளை வாழ்க் கையிலே அமுல்படுத்துவதால் தான் நான் உயர்ந்துள்ளேன். என் வெற்றியின் ரகசியம் அதுதான். பலனை எதிர்பார்க்காமல் கடமைகளைச் சிறப்பாக செய்தல்.”
به 113 -ے

Page 62
6IIITL 6LIdb6) atzee oase
பொய் பேசுவது தற்போது நடைமுறையில் எல்லோராலும் செய்யப்படுகின்ற ஒன்றாகி விட்டது. பொய் பேசுதல் என்பது தவறான செயல், பாவச் செயல் என்பது கூட தெரியாமலே அதைச் செய்கிறோம். ஏனென்றால் சமுதாயத்திலே எல்லோராலும் செய்யப்படுகின்ற ஒரு செயல் நியாயப்படுத்தப்பட்டு விட்டது. பொய் பேசுவது என்பது தவறில்லை. நடை முறை வாழ்க்கையிலே ஒன்றிவிட்ட அது தவறாகவே தெரிவதில்லை. நம்மையும் அறியாமலே நாம் செய்கின்ற பாவச் செயலாக அது அமைந்து விட்டது.
பொய் பேசாமல் அரிச்சந்திரனாக உலகத்திலே வாழ முடியாது.அதுவும் கெட்டுப்போன நம்முடைய சமுதாயத்திலே கண்டிப்பாக வாழ முடியாது என்று நினைப்பது சகஜமாகி விட்டது. அதற்காக அந்தப் பாவத்தை சர்வ சாதாரணமாக ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்வது? சாதாரண விஷயத்துக்கெல்லாம் பொய் பேச மாட்டேன். மிகவும் அவசியமிருந்தால் மட்டுமே பொய் பேசுவேன், என்று உறுதி எடுங்கள். நடைமுறைப்படுத்துங்கள். ஒவ்வொரு நாளும் பேசும் பொய்களின் எண்ணிக்கையைக் குறையுங்கள்.
படிப்படியாகக் குறைந்து ஒரு நாளைக்கு ஒரு பொய் என்று கொண்டு வாருங்கள். பிறகு இரண்டு நாட்களுக்கு ஒரு பொய். பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு பொய் என்று உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பொய் பேசுவதை மிகமிக குறைத்துக் கொள்வேன் என்று உறுதி பூண்டு, அதை நடைமுறை வாழ்க்கையிலே அமுல்படுத்தினால் அந்த ஒரு செயல் மட்டுமே உங்களைப் பெரியளவில் உயர்த்திவிடும். உங்கள் மனதைச் சுத்தமாக்கிவிடும். உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும்.
- 114

வெளிநாட்டிலிருந்து பிரிண்டிங் தொழிலுக்குத் தேவைப்படும் பழைய மெஷின்களை இறக்குமதி செய்து உள் நாட்டிலே விற்பனை செய்யும் ஒரு அன்பர் கூறிய நிகழ்ச்சி. அவர் அதிகமாக மெஷின்களை வாங்கும் நாடு ஜப்பான். அங்கு பழைய மெஷின்கள் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் பலவற்றுடன் தொடர்பு கொண்டு அடிக்கடி ஜப்பான் சென்று வாங்கி வருகிறார். ஜப்பானில் ஒரு பிரிண்டிங் தொழிற்சாலையில் பழைய மெஷின் உள்ளது.அப்பழைய மெஷினை அன்பர் விலைக்கு வாங்கவுள்ளார். அந்த தொழிற்சாலையிலிருந்து விலைக்கு வாங்கிய அந்த மெஷரினை அந்த தொழிற்சாலையில் ஒடிக் கொண்டிருக்கும் போதே, அதை வாங்குபவருக்குக் காட்டி லாபத்திற்கு விற்று விடுவது நடைமுறை ஆகும்.
பழைய பிரிண்டிங் மெஷினைக் காட்டுவதற்காக இந்த இந்திய அன்பரைக் கூட்டிச் செல்லும் போது அந்த நிறுவன ஊழியர் அவரிடம் கூறுகிறார், பிரிண்டிங் தொழிற்சாலை அதிபரிடம் மெஷின் வாங்குவதற்காக வருபவரிடம் மெஷினில் உள்ள குறைபாடுகளைக் கூறாதீர்கள் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் குறைபாடுகள் என்ன என்று கேட்டால் நான் கூறாமல் இருக்க முடியாது. பொய் பேச முடியாது உள்ளதை சொல்வேன் என்று பதில் கூறுகிறார். அவருடைய நேர்மையைப் பாருங்கள் என்று இவரிடம் கூறுகின்றார். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஒரு மெஷினை விற்பனை செய்வதற்குக் கூட உண்மைகளை மறைத்து பொய் பேசி விற்பனை செய்ய மாட்டேன் என்ற அவருடைய உள்ளத்தையும் நம் நாட்டிலே மிகமிக சாதாரண விஷயத்திற்குகூட பொய் பேசக் கொஞ்சம் கூடத் தயங்காத நிலையில் உள்ளோரையும் ஒப்பிட்டுப் பாருங்கள் கடவுள் ஏன் அவர்களுக்கு நன்மைகளையும், நமக்கு ஏன் "" அளிக்கிறார் என்பது புரியும்.
- 115 -

Page 63
திறமையை விட சாதுர்யமே அவசியம்
‘சாதுர்யம்' என்பது வெற்றிக்கு அவசியமான முக்கிய ஆற்றல்களில் ஒன்றாகும்.
நீங்கள், உங்கள் எதிரிலுள்ள நபரின் மனோபாவத்தைப் புரிந்து கொள்வது தான் சாதுரியம் என்பதாகும். இது மிகவும் நுணுக்கமான வழி. அதை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியமாகும்.
பிறரிடம் நீங்கள் உரையாடும் போது உங்கள் உரையாடல் அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தக்க விதத்தில் அமையவேண்டும். இதற்கு அவர்களது குண இயல்புகளை நீங்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
இல்லையெனில் உங்கள் களங்க மற்ற ஒரு வார்த்தை கூட மற்றவர்கள் மனதைப் புண்படுத்தி விடக்கூடும்.
‘சாதுர்யம்” என்ற ஆற்றலின் இரகசியத்தை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டால் அதனைச் சுலபத்தில் உங்கள் சாதாரண பழக்கமாக்கிக் கொள்ள முடியும். எல்லாப் பழக்கங்களையும் போல இப்பழக்கமும் உங்களை ஒருமுறை ற்றிக் கொண்டுவிட்டால் iuss வே நிரந்தரமாகிவிடும்.
சாதுர்யத்தை வளர்த்துக் கொள்ள சுலப வழிகள்:
நீங்கள் படித்த அல்லது கேள்விப்பட்ட விடயங்களில் எதைச் சொன்னால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமோ அதையே சொல்ல வேண்டும். ஆனால் ஒருவரை முகஸ்துதி செய்வது கூடாது. ஏனெனில், அதில் உண்மையிருப்பதில்லை. உங்களிடம் பிறரால் நம்பி ஒப்படைக்கப்பட்ட " ஜாக்கிரதையாகக் காப்பாற்ற வேண்டும்.
- 1 16

அவற்றை ஒலிபரப்பக் கூடாது. அர்த்தமற்ற வதந்திகளிலும் அவதூறுகளிலும் ஈடுபடக் கூடாது.
முகங்களையும் பெயர்களையும் மறந்து விடக்கூடாது அவை ஞாபகத்தில் இருப்பதில்லை என சிலர் பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள். அது அதிசிரத்தையின் அறிகுறி. உரிய šJģ எடுக்கக் கொண்டால் b, Guures ஞாபகத்தில் வைத்திருப்பது கடினமான காரியமல்ல.
பிறரைப் பற்றிக் கேலியாகவோ. கிண்டலாகவோ பேசிச் சிரிப்பை வரவழைக்கக் கூடாது. ஒருவரை நீங்கள் நையாண்டி செய்வதற்குப் பதிலாக அவரிடமுள்ள திறமைகளை ஊக்குவிக்க முயல வேண்டும்.
பிறரிடம் பேசும் போது “நான், எனது” என்ற பதங்களை இயன்ற வரையில் குறைத்துக் கொண்டு, “நீங்கள், உங்கள்” என்ற சொற்களையே அதிகளவில் உபயோகிக்கப் பழக வேண்டும்.
நீங்கள் ஏதேனும் தவறு செய்து விட்டால் அதைத் தயங்காமல் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்தத் தவறைத் திருத்துவதற்கு அதுதான் சரியான முறையாகும்.
பிறர் சற்றுப் பேதமையாக நடந்து விட்டால் கூட அதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டி அவர்கள் சங்கோஜமடையுமாறு பேசக்கூடாது. அதற்கு மாறாக "இது எல்லோருக்கும் சகஜமானதே என்ற ரீதியில் பேசி அவர்களுக்கு உற்சாக மூட்ட வேண்டும்.
எச்சமயத்திலும் உங்கள் உணவுகளுக்கு அடிமையா காமல் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். வாயால்
அதிகம் பேசுவதை விட காதால் அதிகம் கேட்பது பயன்தரும்.
- 17

Page 64
“எனக்கு இதெல்லாம் தெரியாது” என்று கூறித் ப்பிக்கக் கொள்ளகம் நீங்கள் விட வேண்டும்
சுயநலக்காரன்தான் அலட்சியத்தால் பிறரைப் புணி படுத்துகிறான். சாதுர் யமற்றவனி தனது அறியாமையினால் பிறரைப் புண்படுத்துகிறான். இவ்விரண்டிற்கும் காரணம் வேறுவேறாக இருந்தபோதும் பலாபலன் ஒன்றுதான்.
“எனக்குத் திறமையிருக்கிறது ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே” என வருந்துவோர் நம்மிடையே பலரிருக்கின்றனர்.
சாதுர்யம் மட்டும் அவர்களுக்கு இருக்குமானால் சந்தர்ப்பத்தை அவர்கள் தாமே சிருஷ்டித்துக் கொள்ள முடிந்திருக்கும்.
வாழ்க்கையிலாகட்டும், தொழிற்றுறையிலாகட்டும்
திறமையை விட சாதுர்யம் தான் முக்கியமானமாக இருக்கின்றது. அதுதான் வெற்றிக்கு முதற்படி,
எனவே சாதுர்யத்தைப் பயிற்சி மூலம் பழக்கப்படுத்திக் கொண்டால் வெற்றி ஒன்றும் தொலை தூரத்திலில்லை.
- 1 18
 

Mathematical Puzzles
. The numbers 1 to 10 are entered into the circles in such a
way that the sum of the four numbers on each line is 21. What is the value of x?
O Answer: O O
دهسONنکرده -
6es
sun = 2
2. Minghua used 4 of the following pieces to form a 4 x 4
square. Three of the pieces he used were C, F and G. Which one of the others could not be the fourth piece?
- 1 19

Page 65
. In the figure, ABCD is a square of side 10 cm. P is the
midpoint of AB. Find the shaded area.
D C
Answer:
... What fraction of the figure is shaded?
Answer:
- 120 -

и
5. The figure shows an arrangement of 20 points. How many squares can be formed with any 4 of the points as vertices?
Answer:
6. The figure shows 16 connected stamps. How many ways can 3 connected stamps be torn out such that the remaining stamps are still connected?
(Note F is not an example of connected stamps)
Answer:
- 121 -

Page 66
-
7. The figure APBQCR is a regular hexagon (that is, AP = PB = BQ = QC = CR = RA). If the area of the shaded part is 6 cm, find the area of triangle ABC.
A
Answer:
8. The figure shows four squares each of side 10 cm. The shaded region is bounded by three quarter circles. Find the area of the
shaded region. (Take T = 3.14)
10ο Πη
10cm
Answer.
- 22 -

ring KI
9. In the following, figure A can be formed by 6 pieces of EP Of the other figures, list the ones that can also be formed by
6 pieces of
Answer:
10. In the following, figure A can be divided into 4 equal pieces
of the same shape and same size. Of the remainging figures, list the ones that can also be divided into 4 equal pieces of the same shape and same size.
A. B C D
Answer:
- 123

Page 67
11. What fraction of the figure is shaded?
Arswer:
12. The figure is made up of three squares of side 4 cm, 8 cm
and 6 cm respectively. Find the shaded area.
4 cm 8 cm 6 cm
Answer:
- 124 -
 
 

13.9 circles of the same size are drawn inside a square as shown. If the radius of each circle is 10cm, find the total area of the
shaded parts. (Take TL = 3.14)
༄།
10 cm
14. The figure shows seven rooms numbered 1 to 7. A boy walks from Room 1 to Room 7 in such a way that he always walks from one room to another room which has a larger number. In how many different ways can the boy walk from Room
to Roon 7
=围
Answer:
. . . . . HHHHHHHH
I T I
- 125
Answer:

Page 68
15. In each of the following figures, a square of side 4 cm is intersected by a rectangle which measures 8 cm by 2 cm. Which one of the figures has the greatest area of
intersection?
ZAM
Answer:
16. In the figure, ABCD is a rectangle. M and N are midpoints
of AB and AD respectively. What fraction of the figure is
shaded?
D C
N
A. M B
Answer:
Compiled By:
N.Amila (2006 A/L), N.Vamini (2008 AVL)
- 26 -

திருமதி கந்தையா செளந்தரநாயகி
வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் யாழ். கொட் டடியை வதிவிடமாகவும் கொழும்பு, வெள்ளவத்தையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி கந்தையா செளந்தரநாயகி சனிக்கிழமை (18.02.2006) அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார். அன்னார் வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா - இராசம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும் வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற ஐயம்பிள்ளை - சின்னத்தங்கம் தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை கந்தையாவின் அன்பு மனைவியும் நாகேந்திரபிள்ளை (Land Use division, Irrigation Dept, Colombo - 07) சண்முகபவானந்தன் (Germany) ஆகியோரின் அன்புத் தாயாரும் சூரியகுமாரி (கொழும்பு), சிறிசுந்தரி (Germany) ஆகியோரின் மாமியாரும் உதயசங்கர் (I.E.C.College - Newdelhi) sufsbit, shirt Lósi (Hindu Ladies College Wellawatha) 6.360TTg, slabis (Germany) ஆகியோரின் பேத்தியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் (20.02.2006) இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 2.00 மணிக்கு ஈமக்கிரியைகள் இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்; பிள்ளைகள்
க.நாகேந்திரபிள்ளை க.சண்முகபவானந்தன் 541/3 காலி வீதி, வெள்ளவத்தை. GasTyp bq - 06. Tel: 0112360485
Virakesari Monday 20th February 2006
- 27

Page 69
நன்றி நவிலல்
அணைந்தும் அணையா ஒளிப்பிளம்பாய் அன்பு, பண்பு, பாசம் ஆகிய முக்கோணங்களிலும் சிறந்து வாழ்ந்த எங்கள் குடும்பத்தலைவி அமரர். திருமதி. கந்தையா சௌந்தரநாயகி (ஆனந்தம்மா) அவர்கள்
ہم **
மீளாத்துயில் நாடி ஏகன் திருவடியை*ஆடைந்தபோது
மவர் வளையங் சாத்தியோருக்கும் தென்னி அனுப்பியோருக்கும், ! தேடி வந்து அனுதா
சயிண்டீகரண நிகழ்விலும் பங்கு கொண்டவர்களுக்கும், இன்றுவரை எமக்கு பல்வேறு உதவிகளும் நல்கிவரும் அனைத்து உறவுகளுக்கும், லகழ்மி பதிப்பகத்தாருக்கும்,
ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தனை செய்த அத்தனை உயர்ந்த உள்ளங்களுக்கும், எமது உணர்வு பூர்வமான நன்றிகள்'என்றென்றும் உரித்தாகுக.
541/3. காலி வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு - 06
Te: 0 1 2360485 இங்கணம்
மக்கள், மருமக்கள் 6agitaliepaabai.
السـ
- 128
 
 
 
 
 
 

F-மூ9ரயா9= |
gjorto1109.gif@ ouegaeo jogiorno-æ 专guqisorry@ 十 十1ņ9@gÎ1991 R9Tļođī)ņ09 ergo1909ų9şıíffæg)ligioso
Î_! |
!-&prmdomoqusomo savo {(Ģirts gąs@h)}† qofssosio919$ 11909ų9ţiqım88}-}- }} urnoɑoußĠIlgiqlous@ GiorgiKooligiLoĝlsgïoligí !18!!199·==*·(ựsúng jins (§§ngsins!(ựsúngaefflito {#ဖစ္ပါ)}goqjo)ņus){|rnus)
Ơi@sqimiņ9ų919 + qsorgiọ9$$smrtodoLỢIq|Iqğıņ91Irie) + qsorgiọ9$$$nī009
|-- sĩIOIpụIR)

Page 70

u11(5d5(djib
துன்பமளிக்காமலும் முடிந்தவரை பிறர் துன்பம் போக்கியும், வாழ்தல் இன்பமான எதிர்காலத்துக்கு வழி.
பிறருக்கு
துன்பமளித்தல் - பாவம்
பிறர் துன்பம்
போக்குதல் - புண்ணியம்
Answers
Mathematicals Puzzles
4 9. B 10. 25cm2 11. 2/5 12. 2 3. 6 14. 27cm 15. 14cm 16.
B,D B,C,D 1/4 48cm 344cm 13
B
3/8

Page 71
காவைத் தூக்கிக் கட்டிக் கொஞ்சம் LITIIIuă etirTilărzilor பருகந்தந்த அம்மா
Hழுதி அடைத்து நீ НачЕј Е-Дш еніі அழுது விழுந்த பே FIGLIEggi தாங்
அன்னிப் பொருளை ஆங்பு செய்த போது பிள்ளைக் குளத்தி பொறுத்துக் கொள்
பள்ளிக் கூடம் விட்ட பாஜி வழிக்கு வநது
துள்ளிக் குதிக்கும் தோளில் போடும் அ
Printed By: Luxmi Prin
 

IIIIT
கவள்ளிவ் ஒற்றிக் ErstflIIIT
சிங்ளிபோட்டுப்
ரும் ஆட்டிப்
IJLPT ாதும் எள்ளள கும் அம்மா
க் கொட்டிச் சிந்து தும்
击 செய்தாளென்று கரும் அம்மா
நேரம்
எள்ளலாத் தூக்கித் Hill.IIIT
līgi வித்துவான் க. வேந்தனார் கேநாகேந்திரம்பிள்ளை)
ler Tel : 7448545