கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்

Page 1
அநாமதேயங்களாக இருந்ே இலங் முதலாளித்துவ
 
 

றறம
656.6060D
தார் அறியப் கையில் த்தின் தே

Page 2


Page 3

அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை
இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்

Page 4
முண் அட்டையில்
மேலே: மதுவிலக்கு இயக்கத்தினை வழிநடத்திய "அநாமதேயங்கள்". படத்தில் பின்னே நிற்பவர் டி. எஸ். சேனநாயக்க. இவர் இலங்கையின் பிரதமரானார். கீழே: “அறியப்பட்டோர்” ஆன பின்னர். நிற்பவர்களில் இடமிருந்து வலமாக இரண்டாவதாக டி. எஸ். சேனநாயக்க. ஏனையோர் அவரது குடும்பத்தினர்.

அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை இலங்கையில்
முதலாளித்துவத்தின் தோற்றம்
ஆங்கில மூலம் குமாரி ஜயவர்த்தன
தமிழில் க. சண்முகலிங்கம்
சமூக விஞ்ஞானிகள் சங்கம் (SSA) &
குமரன் புத்தக இல்லம்
கொழும்பு - சென்னை
2OO9

Page 5
. Wʻ
வெளியீட்டு எண்: 391 அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை: இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம் )ே குமாரிஜயவர்த்தன எழுதியது தமிழில் க. சண்முகலிங்கம் இணை வெளியீட்டாளர்கள்: சமூக விஞ்ஞானிகள் சங்கம்
12, சுலைமான்டெரஸ், கொழும்பு-5 குமரன் புத்தக இல்லம்
B-3, G-3, guibuíu un LSGaTeiv, @s Typb-10, Gg5 T. Gu. 0602097608, 6. Jy GFav: kumbhlk @gmail.com 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, வடபழனி சென்னை - 600 026
குமரன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. B-3.0-3. ரம்மியா பிளேஸ், கொழும்பு-10,
anāmatēyankaļāka iruntōr ariyappatavarkaļāņamai: ilañhkaiyil mutalälittuvattin tôrram (Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka) by Kumari Jayawardena (CO Translated into Tamil by K. Shanmugalingam Published jointly by: Social Scientists' Association
12, Sulaiman Terrace, Colombo - 05 Kumaran Book House
B - 3, G-3, Ramya Place, Colombo - 10, Tel. - 060 2097608, E.mail : kumbhlkGgmail.com 3 Meigai Vinayagar Street, Kumaran Colony, Vadapalani, Chennai - 600 026
Printed by Kumaran Press (Pvt) Ltd.
B - 3, G-3, Ramya Place, Colombo -10
ISBN 978 - 955 - 659 - 205 - 4

நீலன் திருச்செல்வம் (1944-1999) நினைவுகளுக்கு

Page 6

பொருளடக்கம்
முன்னுரை மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை
பகுதி I காலனித்துவப் பின்புலத்தில்
அநாமதேயங்கள் ஆக இருந்தோர் பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் தோற்றத்திற்கு முற்பட்டகாலத்தில் வர்த்தகமும் முதலாளித்துவ மூலதனத் திரட்சியும்
முதலாளித்துவத்தின் தோற்றம்
சாராய வர்த்தகமும் மேல் நோக்கிய உயர்ச்சியும்
சாதியும் ஆரம்பகாலத்து முதலாளித்துவமும்
பகுதி II அறியப்பட்டவர்கள் ஆகுதல்
5. பெருந்தோட்டப் பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம்
6. சாராயத்தின் விற்பனையும் நுகர்வும் மதுவிற்கு
அடிமையாகும் உழைப்பாளி வர்க்கம்
7. சாராய வர்த்தகத்தினால் பெற்ற லாபம்
8. வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தகமுதலாளித்துவம்
பின்னிணைப்புக்கள்
உசாத்துணை
சுட்டி
viii
xxii
24
34
47
64
78
96
129
l41
15

Page 7
முன்னுரை
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இலங்கையின் முதலா ளித்துவத்தின் கதையை கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. 1830க் களில் இலங்கையில் பெருந்தோட்டமுறையில் கோப்பிப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. தேக்கமடைந்த நிலையில் இருந்த இலங்கையின் பொருளாதாரத்தில் புதிய பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் முதலா ளித்துவ வகுப்பு ஒன்று உருவானது. பொருளாதார நிலையிலும் சமூக அந்தஸ்திலும் தாழ்நிலையில் இருந்த பலர் மேல் நிலைக்கு வந்தனர். சமூக அமைப்பில் மேல் நிலையில் இருந்தோரும் முதலாளித்துவ தொழில் வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டு முதலாளிகளாகினர். இவ்விரு வகையினரும் நவீன இலங்கையின் சமூக அரசியல் வாழ்க்கையில் மேலாதிக்கம் பெற்ற சமூகக்குழுவாக எழுச்சி பெற்றதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. இலங்கையில் வர்த்தக முதலாளித்துவமும் அதனோடு இணைந்ததான பெருந்தோட்டப் பொருளாதாரமும் முழுமையான முதலாளித்துவ முறைமையை ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே இருந்து வந்த அமைப்பில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தி முத லாளித்துவ வளர்ச்சிப்பாதையில் இலங்கையை எடுத்துச் செல்லும் சக்தியாகவும் இந்த முதலாளித்துவ வகுப்பு இருந்தது என்பதையும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது.
இலங்கையில் முதலாளித்துவத்தின் எழுச்சி சமூகக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவந்தது. புதிய பொருளாதார நிறுவக அமைப் புக்களும் சமூகவர்க்கங்களும் தோன்றின. எழுச்சி பெற்ற முதலாளித்துவ வகுப்பு தன்னைப் புதிய வகுப்பாக உணர்வு நிலையில் அடையாளப் படுத்தியது. முதலாளித்துவ வகுப்பினர் மத்தியில் சாதி, மொழி, சமயம் சார்ந்த பிரிவினை உணர்வுகளும் வெளிப்பட்டன. இருந்தபோதும் பல இனக்குழுமங்களிலும் சாதிகளிலும் இருந்து தோன்றிய முதலாளி வர்க்கம் தனது வர்க்க உணர்வுக்கே முதன்மை அளித்தது. இது

பொருளாதார அரசியல் விடயங்களில் ஒருமித்த நலன்களை உடைய குழுவாக செயற்பட்டது. ஆனால், சாதி, இனக்குழுமம் போன்ற அடையாளங்களை கைவிடவோ முற்றாகத் துறக்கவோ இந்த வர்க்கம் முனையவில்லை. சிலசாதிகள் தமக்கென வரலாறுகளை உருவாக்கின. இனக்குழுமங்களும் தம் அடையாளங்களை முதன்மைப்படுத்தும் வரலாறுகளை உருவாக்கின. சிங்கள மேலாண்மைத் தேசியவாதம் தோன்றியது. ஒதுக்கப்பட்ட, விலக்கப்பட்ட இனக்குழுமங்களின் தேசிய வாதங்களும் சிங்கள மேலாண்மைக்கான எதிர்ப்பாக எழுந்தன.
‘பூஷ்வா’ (Bourgeoisie) என்ற சொல்லை தமிழில் முதலாளித்துவ வகுப்பு என்றே குறிப்பிடுவோம். முதலாளித்துவம் மேற்குலகில் உதயமாகிய பொருளாதார முறையாகும். குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் காலனித்துவ சுரண்டல் மூலம் கிடைத்த தொடக்க நிலை மூலதனத்திரட்சி (Primitive accumulation) முதலாளித் துவத்தின் தோற்றத்திற்கான உந்துதலை அந்நாடுகளில் ஏற்படுத்தியது. கைத்தொழில்துறை முதலீடுகள் விரிவாகின; நிலமானிய கட்டமைப் புகள் உடைவுற்றன; புதிய வர்க்கங்கள் அங்கே எழுச்சி பெற்றன. ஜனநாயக உரிமைகள், புதிய அரசியல் முறை, புதிய கருத்தியல்கள் என்பனவும் அங்கு தோன்றின. மேற்கு நாட்டு முதலாளித்துவத்துடன் இலங்கை முதலாளித்துவத்தை ஒப்பீடு செய்து நாம் விளங்கிக் கொள் ளுதல் அவசியம். இலங்கையில் முதலாளித்துவத்தின் எழுச்சி ஆரம்ப கட்டத்தில்
- சாராயக் குத்தகை
பெருந்தோட்ட விவசாயம் - நிலங்களைக் கொள்வனவு செய்து பெரும் சொத்துடமையாளராதல்
என்னும் வழிகளில் தொடக்கம் பெற்றது. இவ்வாறு தோற்றம் பெற்ற முயற்சியாளர் வகுப்பின் ஒருபகுதியினர் பின்னர்
- ஏற்றியிறக்கல், போக்குவரத்து ஒப்பந்தவேலை - ‘கொந்தராத்து முறையில் பல்வேறு வேலைகளை செய்விக்கும்
ஒப்பந்த வேலைகள்
- காரியச் சுரங்க அகழ்வுத் தொழில்
- வர்த்தகம்

Page 8
ஆகிய துறைகளில் ஈடுபட்டு லாபம் ஈட்டிப் பெரும் செல்வந்தராயினர். இன்னோர் பிரிவினர்,
- உயர் அரசாங்கப் பதவிகள், இடைநிலைப் பதவிகள்
- கல்வியின் வழியாகப் பெறும் சட்டம், மருத்துவம் போன்ற
துறைகளில் உயர்தொழில்கள்
ஆகியவற்றில் ஈடுபட்டு மேல் நிலை எய்தினர். பெருந்தோட்ட விவ சாயம் ஆரம்பத்தில் கோப்பிச் செய்கையை பிரதானமாகக் கொண்டி ருந்தது. பின்னர் தேயிலை, றப்பர் தோட்டங்கள் ஏலம், கறுவா, கராம்பு முதலிய வாசனைத் திரவியங்களை பயிரிடும் தோட்டங்கள், தென்னைத் தோட்டங்கள் என விஸ்தரிக்கப்பட்டது.
நிலங்களை உடமை கொண்டிருத்தல் மதிப்புக்கும் கெளரவத் திற்கும் உரிய விடயமாக இருந்தது. எனினும் பெருந்தோட்ட முத லாளிகள் தம் வதிவிடத்தை நகரங்களுக்கு மாற்றிக் கொண்டனர். கொழும்பு முதலாளிவகுப்பின் மையப்பகுதியாயிற்று. பெருந்தோட்டக் கம்பனிகள், வர்த்தகநிலையங்கள், வங்கிகள் என்பன கொழும்பில் அலுவலகங்களை நிறுவிச் செயற்பட்டன. தொழில் வர்த்தக முயற்சி களினதும் அரச நிர்வாகத்தினதும் மையமாக மட்டுமன்றி உயர் சமூகத் தின் வாழ்விடமாகவும் கொழும்பு நகரம் அமைந்தது. உயர் வகுப்பின் நுகர்வுத்தேவைகளுக்கான சேவைகள் அவற்றிற்கான உட்கட்டமைப் புக்கள் என்பனவும் இங்கு வளர்ச்சியுற்றன. உடல் உழைப்பாளர்கள், ஒரளவு பயிற்றப்பட்ட உழைப்பாளர்கள் என்போரை உள்ளடக்கிய தொழிலாளர் வகுப்பு இந்நகரில் தோற்றம் பெற்றது. வர்த்தக தொழில் முயற்சிகளின் விருத்தியின் பயனாக குட்டி முதலாளித்துவ வகுப்பு ஒன்றும் உதயமானது.
இலங்கையின் முதலாளித்துவம் காலனித்துவப் பொருளாதார உற்பத்தி முறையின் கீழ் உருவானது என்பதை நாம் கவனத்தில் இருத்தல் வேண்டும். அது ஏகாதிபத்தியத்தில் தங்கியிருப்பதாகவும், ஏகாதியபத்தியத்தின் தயவிலும் ஆதரவிலும் பிழைப்பதாகவும் இருந்தது. ஆதலால் அது சுதந்திரமான முதலாளி வகுப்பு அன்று; தங்கியிருக்கும் முதலாளித்துவமாகும். சுயத்துவமும் முதிர்ச்சியும் உடையதாக உள்ள முதலாளித்துவ வகுப்புத்தான் பெருநகர முதலாளிகளுடன் மோது வதற்கும் தேசியவாத போராட்டத்தை நடத்துவதற்கும் முன்வரும். இந்தியாவின் முதலாளித்துவ வகுப்பு தொழில் துறை முதலீடுகளைச் செய்தது. பெருநகர முதலாளித்துவத்துடன் (பிரித்தானியா) போட்டியில்

Xi
ஈடுபட்டது. காலனித்துவ எதிர்ப்புணர்வு மிக்கதாயும் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவும் தலைமைத்துவமும் வழங்க வல்லதாயும் இருந்தது. இலங்கையின் முதலாளித்துவம் அப்படிப்பட்டதாக இருக்க வில்லை. காலனித்துவ நாடுகளின் முதலாளித்துவத்தில் ஏகாதிபத்திய விசுவாசம் கொண்ட தரகு முதலாளித்துவம் (கொம்பிரடோர்), ஏகாதி பத்திய எதிர்ப்புக் குணம் கொண்ட ‘தேசிய முதலாளித்துவம்' என்ற இரு பிரிவுகளை மார்க்சியர்கள் இனம் காண்பதுண்டு. அப்படியான பிரி வினையை இலங்கையின் வரலாற்றுநிலைக்கு பொருத்துதல் முடியாது. ஜெரொனிஸ் சொய்சா என்பவர் சாராயக் குத்தகை மூலம் பெருஞ் செல்வத்தைத் திரட்டிய முதலாளிகளுள் ஒருவர். இவர் 1829ம் ஆண்டில் கடுகண்ணாவையின் சாராயக் குதத்தை குத்தகைக்கு எடுத்தார். இவர் அந்த ஆண்டில் செலுத்திய குத்தகை 38 ஸ்ரேலிங் பவுண் ஆகும். ஏழு ஆண்டு காலத்திற்குள் மத்திய மாகாணம் முழுவதிலும் உள்ள சாராயக் குதங்களை குத்தகைக்கு எடுத்து ஏகபோக குத்தகைக்காரனாக மாறி விட்டார். இவர் செலுத்திய குத்தகை 6800 ஸ்ரேர்லிங் பவுணாக ஏழு ஆண்டுக்குள் உயர்ச்சி பெற்றது. 1860ஆம் ஆண்டளவில் இவர் மிகப் பெரும் பணக்காரராக இருந்தார். இவரின் சடுதியான உயர்ச்சியும் முன்னேற்றமும் கிழக்கிந்தியக் கம்பனியின் உத்தியோகத்தர்கள் இந்தியா வில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பகட்டத்தில் திடீர் பணக்காரர் களானதற்கு ஒப்பானதே. ஜெரொனிஸ் சொய்சா போன்றோர் ஈட்டிய செல்வம் இலங்கையின் ஆரம்ப மூலதனத்திரட்சி (Primitive Accumulation) ஆகும். இந்த ஆரம்ப மூலதனத்திரட்சி இருவகையில் பயன் படுத்தப்பட்டது.
1. பெருந்தோட்டங்களில் முதலீடு 2. ஆடம்பர வாழ்க்கையும் நுகர்வுச் செலவும். இலங்கை முதலாளித்துவத்தின் வரலாறு உணர்த்தும் முக்கியமான செய்தி ஒன்று உள்ளது. இலங்கையில் முதலாளித்துவ வளர்ச்சியானது தடைப்பட்ட ஒன்றாக, இன்றுவரை முழுமை பெறாத விடயமாக (Unfinished Business) உள்ளது. இதற்குரிய காரணங்களை பார்ப்போம்.
1. சிந்தனையிலும் செயலிலும் மிகவும் குறுகிய மனப்பாங்கு உடையதாக இலங்கையின் முதலாளித்துவ வகுப்பு இருந்தது. அது ‘முதலாளித்துவம்' என்றோ ‘நிலப்பிரபுத்துவம்' என்றோ பிரித்து அடையாளம் காணமுடியாதபடி இரண்டினதும் கலவை யான இயல்புகளை வெளிப்படுத்தியது.

Page 9
xii
ii.
iii.
நிலப்பிரபுத்துவத்தின் வாழ்க்கை முறைகளையும் சம்பிரதாயங் களையும் தாமும் பாவனை செய்வதன் மூலம் சமூக அந்தஸ்தில் தம்மை உயர்த்திக் கொள்வதில் கவனம் செலுத்தியது. சமூக, சமய சேவைகளிலும், தானதருமங்களிலும் ஈடுபடுவதை யும் அவற்றின் மூலம் தமது மதிப்பையும் அந்தஸ்தையும் உயர்த்துவதையும் குறிக்கோளாக கொண்டிருந்தது. இவர்களின் தான தருமப் பணிகளுக்கு கைமேல் பலனும் கிடைத்தது. பிரித்தானிய ஆட்சியாளர்கள் பட்டம், பதவிகளைக் கொடுத்து இவர்களைக் கெளரவப்படுத்தினார்கள்.
(!p56vT6î5g/6).JLb J9isiólo)JITij5515Lé605 (Capitalist Rationality) (paiop யைக் கொண்டது. இலங்கை முதலாளித்துவம் அதன் மனப்பாங்கிலும்
நடத்தையிலும் ‘குத்தகை முதலாளிகளின் இயல்புகளை வெளிப் படுத்தியது
i.
ii.
iii.
நெல், சாராயம், மீன் பண்டங்களின் விற்பனைக்குத்தகை, படகுத் துறைகளின் ஆயக்குத்தகை என்பன துரிதமாகப் பணம் குவிப்ப தற்கான வழிகளாக இருந்தன. “ரெயின்ட றாலாக்கள்’ (Rainda Rallas) என்று அழைக்கப்பட்ட இக்குத்தகைக்காரர்கள் “தொழில் முயற்சியாளர்கள்’ என்று கூறக்கூடிய முதலாளி வகுப்பின்இயல்பு களைக் கொண்டிருக்கவில்லை. குத்தகை வியாபாரத்தில் நிலை யான சொத்துக்களான யந்திரம், கருவிகள் போன்றவற்றில் முதலீடு செய்யும் தேவை இருக்கவில்லை. இத்தொழிலில் புரளும் மூல தனம் (Working Capital) அல்லது தொழிற்படு மூலதனம் மிகவும் அற்பமான தொகைதான். முதலிடும் பணமும் கூட சொந்தப் பணமாகவே இருந்தது. குத்தகை முதலாளிகள் கூட்டுச் சேர்ந்து ஒரு “சிண்டிகேற்’ ஆக இயங்கினர். இதன் மூலம் குத்தகையில் சிலர் ஏகபோக உரி மையை அனுபவித்தனர்.
தோட்டங்களிலும் நிலத்திலும் முதலீடுகளை இவர்கள் செய் தனர். இருந்தபோதும் தோட்டத்திலேயே வதிபவராகவும் அதனை முகாமை செய்பவராகவும் இல்லாது நகரத்தில் வதியும் கனவான்’ ஆக தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். புதிய சந்தை வாய்ப்புக்களை தேடுதல், புதிய உற்பத்திகளை அறிமுகம் செய்தல், உற்பத்தி முறையில் புத்தாக்கங்களை புகுத் துதல், உற்பத்திச் செலவை எவ்வளவு குறைக்க முடியுமோ

xiii
அவ்வளவுக்குக் குறைத்தல் என்பனவே ஒரு செயல்திறன் மிக்க முயற்சியாளர் வகுப்பின் குண இயல்புகள். பெருந்தோட்ட உற்பத்திமுறையில் இவ்வாறான செயற்பாடுகளுக்கான தேவை இருக்கவில்லை. அது அரைகுறைநிலப்பிரபுத்துவ முறை ஒன்றின் தன்மையை கொண்டிருந்தது. கட்டுப்பட்ட தொழிலாளர் வகுப்பு (Unfree Labour) தோட்டங்களின் உற்பத்தியில் ஈடுபடுத்தப் பட்டது. முன்னேறிய தொழில்நுட்பம் உற்பத்தியில் ஈடுபடுத்தப் படவும் இல்லை. சுருங்கக்கூறின் பெருந்தோட்ட உற்பத்தி முறை முதலாளித்துவ உற்பத்தி முறையின் தன்மையைக் கொண் டிருக்கவில்லை.
iv. இலங்கையில் 19ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற முதலாளி வகுப்பின் ஒரு பிரிவினர் ‘முதலியார்’ என்னும் நில உடமை வகுப்பினராவர். (இவர்கள் கண்டியின்நிலப்பிரபுக்களில் இருந்து வேறானவர்கள்.) முதலியார் வகுப்பு நில உடமையாளர்கள் பிரித்தானிய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட புதிய நில உடமையாளர் வகுப்பு என்பதைக் கவனித்தல் வேண்டும். பிரித் தானியர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களாகவும் இடைத்தரகர்க ளாகவும் சேவை புரிந்து பட்டம் பதவிகளையும் பெருந்தொகை நிலத்தையும் சன்மானமாக பெற்றுக் கொண்ட முதலியார்கள் (முதலியார் என்பது ஒரு சாதிப் பெயராகத் தமிழில் அறியப் படுகிறது) தம்மை சமூக அந்தஸ்தில் உயர்ந்த ‘சம்பொடி (Somebody) எனவும் புதுப் பணக்காரர்களாக வந்து சேர்ந்தோரை ‘நோ பொடிஸ்' (Nobody) என இழக்காரத்துடனும் கூறலாயினர். புதுப் பணக்காரர்கள் செல்வத்திலும் கல்வியிலும் முதலியார் வகுப்பை விட உயர்ந்து சென்றது மட்டுமன்றி நிலமானிய சமூகம் ஒன்றின் பிரபுவம்சம் ஒன்று என்னென்ன அடையாளங்களைத் தமக்குச் சூடிக் கொள்ளுமோ அவை அனைத்தையும் சூடிக் கொண்டவர் களாவும் பெருநில உடமையாளர்களாயும் தம்மை மாற்றிக் கொண்டனர்.
இலங்கையின் முதலாளித்துவ வகுப்பு தொழில் முயற்சியாளர்களுக்கு உரிய இயல்புகளைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் ஒன்றை கூறுதல் முடியும். சாள்ஸ் டி சொய்சா, யெரொனிஸ் பீரிஸ் என்ற இருவர் 19ஆம் நூற்றாண்டின் பெரும் பணக்காரர்களில் சேர்த்து எண்ணப் பட்டவர்கள். இவர்கள் விட்டுச் சென்ற உயில்களில் குறிப்பிடப்பட் டிருந்த சொத்து விபரங்களைப் பார்க்கும் போது, காணிகள், வீடுகள்

Page 10
Xiv
போன்ற ஆதனங்களே பெரும்பங்கினவாக இருந்தன. கம்பனிப்பங்கு கள், கடன்பத்திரங்கள், அடமான உறுதிகள், ஆபரணங்கள் என்ற வகையான சொத்துக்கள் சிறிய வீதாசாரமாகவே இருந்தன.
முதலாளி வகுப்பினரின் சொத்துக்களில் பெரும்பங்கு காணி, கட்டிடம், வீடு என்ற வகை அசையாச் சொத்துக்களாகவும், உடனடி யாகவிற்றுப் பணமாக்கக் கூடிய திரவச் சொத்துக்களாகவும் இருந்தன. இம் முதலாளிகள் ஆபத்தை (Risk) ஏற்கும் குணம் உடைய முயற்சியாளர் வகுப்பாக இருக்கவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. நகரத்தின் காணி, கட்டிடம், வீடு என்பனவற்றில் இவர்கள் முதலிட் டனர். அவை தாமாகவே மதிப்பில் உயர்ந்து சென்றன. இவை ஆபத் தில்லாத முதலீடுகள். குத்தகை முதலாளித்துவத்தின் பொருளாதாரம் சார்ந்த அக்கறைகள், மனப்பாங்குகள் அதன் சமூக பண்பாட்டு அடை யாளங்களிலும் வெளிப்பட்டன.
சாதி அடிப்படையில் அமைந்த தொழில் பகுப்பு உருமாற்றம் பெற்றது. இருந்த போதும் சாதீய உணர்வு மறையாது நிலை பெற்றது. சாதியமைப்பு உருமாறிய வடிவத்தில் நிலைத்திருப்பதாகவும், 19ஆம் நூற்றாண்டின் மாற்றங்கள் ‘சிங்களவர்களின் பழமைமிகு சாதி முறை மையின் இடத்தில் காலனித்துவ சாதி முறை என்னும் புதிய வடி வத்தைப் புகுத்தியது' என்றும் உயன்கொட என்னும் ஆய்வாளர் கூறியிருக்கிறார். அதிகாரம், நில உடமை, அந்தஸ்து என்ற மூன்றும் “உயர்ந்தோர் யார் தாழ்ந்தோர் யார் என்பதைத் தீர்மானிக்கும் காரணி களாக இருந்து வந்தன. முதலாளிவகுப்பின் தோற்றம், வளர்ச்சி இந்த அடிப்படைகளை மாற்றவில்லை. ஆக ஒரே ஒரு தாக்கம்தான்நிகழ்ந்தது - சாதியின் கீழ்படியில் இருந்தவர்களும் முதலாளிகளாக உயர முடிந்தது. புதிதாகக் கிடைத்த செல்வத்திற்கு இணையான சமூக அந்தஸ்தை தேடும் முயற்சியில் சாதியின் மறுகட்டமைப்பு முயற்சி மேற்கொள் ளப்பட்டது.
சிங்களத்தில் ஒரு பழமொழி உள்ளது "பணத்தின் அதிகாரத்தின் முன்னால் நிற்பதற்கு பயந்து சாதி பற்றைக்குள் பதுங்கிக் கொண்டது” சாதி பதுங்கிக் கொண்டது என்பது உண்மைதான். அது பொதுவாழ்க்கை யில் இருந்து விலகி குடும்பம் என்ற நான்கு சுவர்களுக்குள் பதுங்கியது. சாதியம் கருத்தியல் மட்டத்திலும், பெண்கள், குடும்பம், திருமண உறவுகள் சார்ந்தும் நீடித்தது. சாதி பேசாப் பொருளாகவும், பேசப்படும் தேவை எழும் போது மறைபொருள் கொண்ட சொற்களால் பொது வாழ்வில் நாகரிகமான முறையில் பேசப்படுவதாயும் இருந்தபோதும்

XV
1890க்களில் சாதிச்சண்டை சிறு துண்டுப்பிரசுரங்கள், நூல்கள் என்ற வடிவத்தில் நிகழ்த்தப்பட்டது. பகிரங்கமான இந்தச்சண்டை 1890க்களில் நடத்தப்பட்ட அதேசமயத்தில் தொழிலாளிகளுக்கும் - முதலாளி களுக்கும் இடையிலான சச்சரவுகளும் சண்டைகளும் மேற்கிளம்பின. 1893ஆம் ஆண்டின் அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தம் முதலாவது தொழிற் சங்க நடவடிக்கை என்ற வகையில் புகழ்பெற்றது. தொழி லாளிகள், அச்சுத்துறை முதலாளிகள் என்ற இரு சாராரும் சாதி, இன, மத பேதங்களைக் கடந்து ஒன்று சேர்ந்து வர்க்க அடிப்படையிலான சண்டை யைத் தொடங்கிய காலமும் இதுவே.
சாதி மட்டுமன்றி ஏனைய அடையாளங்களும் முதலாளிவகுப் பினருக்கு முக்கியத்துவம் உடைய விடயங்களாயின. அவ்வகுப்பின் ஆண்களிற்கும், பெண்களிற்கும் ‘நான் யார்?’ என்ற கேள்வி முக்கி யமாயிற்று.
என்னிடம் பணம் உண்டு, ஆனால் நான் தாழ்ந்த சாதி.
- என்னுடைய சமயம் மூடநம்பிக்கை என்ற பழிப்புக்குரியது.
- என்னுடைய மொழிக்கு கலாசாரத்திற்கு மதிப்பு இல்லை, அவை
இகழ்ச்சிக்குரியதாகின்றன.
- எனது பெண்பிள்ளைகள் எழுத வாசிக்கத் தெரியாத அறிவிலிகள். முதலாளித்துவ வகுப்பினரை வாட்டிய பிரச்சினைகள் இவை. இதனால் அவர்கள் மத்தியில் இருந்து தோன்றியவர்கள் தங்களுக்கு ‘உயர் சாதி அந்தஸ்து இருந்தது என்பதைக் கண்டுபிடித்து நிறுவினார்கள். தங்கள் சமயத்தின் மறுமலர்ச்சிச்கு உழைத்தார்கள். அது கிறிஸ்தவத்தை விட மேலானது என்று கூறினார்கள். தங்கள் இனத்தவர்களின் கடந்த கால வரலாற்றையும் இனத்தின் தோற்ற வரலாறுகளையும் கதைகளையும் எடுத்துக் கூறினர் மறைந்த ‘பொற்காலம் பற்றிய கதைகளைக் கூறினர். தங்கள் பெண்களின் நிலையை உயர்த்த வேண்டும் என்று உழைத்தனர். சமய மறுமலர்ச்சி இயக்கங்களை தலைமை தாங்கி நடத்தியதையும் ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவி நவீன கல்விமுறையை விருத்தி செய்ததையும் முதலாளிவர்க்கத்தின் அடையாளம் தொடர்பான உணர் வின் வெளிப்பாடுகள் எனலாம். பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்ட பொழுது ஒவ்வொரு இனக்குழுமமும் தமது தனித்துவத்தை நிலை நாட்டவும், அரசியல் பிரதிநித்துவ உரிமையைக் கேட்டுப் பெறவும் முனைந்தன. முதலாளித்துவ வகுப்பினர் அரசியல் சீர்திருத்தம் வேண்டிக் காலனித்துவ அரசுடன் பேரம் பேசவும் புறப்பட்டனர்.

Page 11
Xνi
காலனித்துவம், முதலாளித்துவம், தேசிய இயக்கம் என்பன அடிப் படையில் ஆணாதிக்கச் சொல்லாடலாகவே இருந்தது. இத்துறைகளில் பிரதான செயலிகள் (Principal Actors) ஆண்களாகவே இருந்தனர். இலங்கையின் முதலாளித்துவ வரலாறு ஆணின் கதை என்ற உள்ளடக் கத்தைக் கொண்டதாகவே இருந்ததெனினும், பெண்ணின் கணிசமான பங்களிப்பும் இருந்தது. 1830 முதல் பெருந்தோட்டப் பொருளாதார முறைக்குள் பெண்கள் மலிவான கூலித்தொழிலாளிகளாக உள்ளீர்க்கப் பட்டனர். நகரத்தொழில் ஆலைகளிலும் உழைப்பாளிகளாயினர். இவர்களுக்கு சமாந்தரமாக இன்னொரு பெண்கள் குழு உதயமாயிற்று. முதலாளிகளின் மனைவிகள், பெண்உறவினர்கள் என்ற குழுவே இது. கல்வி, வாழ்க்கைமுறை, ஆடை அணிகலன்கள், நடை உடை பாவ னைகள் என்பனவற்றில் தம்மை முற்றிலும் வேறுபடுத்திக் கொண்ட இப் பெண்கள் தமது சீதனச் சொத்து பற்றி மட்டுமல்லாமல் ஏனைய பல விடயங்களில் தம் மதிப்பையும் உயர்வையும் பற்றிப் பெருமிதம் கொண்டனர். ஏனைய சமூகக்குழுக்கள், சாதிகள் என்பவற்றிற்கும் தமக்கும் இடையிலான சமூக இடைத் தூரம் பற்றி இவர்கள் பெருமை பாராட்டினர். 'உடை, வீட்டு அலங்காரம் போன்ற அழகியல் அம்சங் களின் உட்பொருள் ஒருவர் தன்னை சமூக வெளியில் (Social Space) நிறுத்திக் கொள்ளும் இடம் (Position) கீழ் நிலையில் உள்ள பிறரில் இருந்து தூரத்தில் உள்ளது என்பதைக்காட்டுவதே’ என்று பிரஞ்சு நாட்டுச் சமூகவியலாளர் பூர்தியு (Bourdieu) கூறியிருப்பது முதலாளி வர்க்கப் பெண்களின் மனப்பாங்கை எடுத்துக் காட்டுவதாய் உள்ளது.
கொய்கம சாதி முதலியார்கள் இலங்கையில் காலவரிசையில் முற் படத் தோன்றிய முதலாளி வர்க்கம். கொய்கம, கராவ சாதிகளுக்குள் இருந்தும் பிறசாதிகளில் இருந்தும் புதுப் பணக்காரர்களான முதலாளி வகுப்புத் தோன்றிய போது முதலியார் வகுப்பு இப்புதுப் பணக்காரர் களை ("செத்தையில் கிடந்தது மெத்தைக்கு வந்து விட்டது' என்ற வாறான) ஏளனத்துடன் நோபொடிஸ்' (Nobodies) என அடையாளம் குத்தினர். தம்மைச் ‘சம்பொடிஸ்' (Somebodies) என்றும் தமக்கு ஒரு பாரம்பரியம் உண்டென்றும் பெருமை பாராட்டினர். இதனால் முதலா ளித்துவ வகுப்புக்குள் ஒரு உட்பூசல் எழுந்தது.
1833-1911 காலத்தில் சட்டசபை உறுப்பினர்களை நியமனம் செய்த பொழுது காலனி ஆட்சியாளர்கள் ஆட்களின் தேர்வில் பாரபட்சம் காட்டினர். கொவிகம சாதிக் கிறிஸ்தவர்களும் அகமணம் மூலம் ஒரு குழுவாகப் பிணைக்கப்பட்டு இருந்தவர்களுமான பண்டாரநாயக்க

ஒபயசேகர குடும்ப கூட்டு சட்டசபை ஆசனங்களை சுவீகாரம் செய்தி
ருந்தது. இதனால் எழுந்த பூசலையும் சண்டையையும் ‘கராவ-கொவிகம'
சண்டையாக சில ஆய்வாளர்கள் சித்திரித்துள்ளனர். உண்மையில் இது சாதிச் சண்டையல்ல; முதலாளித்துவ வகுப்பின் இரு பிரிவினர்களுக்
கிடையே நிகழ்ந்த மோதல் தான்; பட்டங்களும், பதவிகளும், சலுகை
களும் யாருக்குக் கிடைக்க வேண்டும் என்பதால் எழுந்த போட்டியே ஆகும். முந்திவந்தவர்களும் பிந்திவந்தவர்களும் போட்டியிட்டார்கள்.
புதிதாக வந்தவர்களின் ‘விசுவாசம்’ பற்றி காலனித்துவ ஆட்சியாளர் கள் ஐயுறவு கொண்டிருந்தனர். பிந்திவந்தோர் அரசியல் சீர்திருத்தம்
வேண்டினர். 1920க்களின் அரசியல் சீர்திருத்தம் கராவசாதிப் பெரும்
பணக்காரர்களின் பிள்ளைகளும் மருமக்களும் 1920க்களின் சட்டசபை
யில் ஆசனங்களைப் பிடிக்க உதவியது. அவர்களின் பணபலமும்
கல்விச்சிறப்பும் அரசியல் வானில் பிரகாசிக்க இடம் தந்தது. அரசியல்
சீர்திருத்தம் கோரிய இந்த சீர்த்திருத்தவாதிகள் தமக்குத்தாமே குழி
பறித்துக் கொள்ளுகிறோம் என்பதை அன்று உணரவில்லை. சில
ஆண்டுகள் கழிந்து 1931இல் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டபோது
பெரும்பான்மைக் கொவிகம வாக்குகளின் பலத்தால் ‘கராவ’ முதலிய
சிறுபான்மைச்சாதிகளின் வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டு ஒரம்
கட்டப்படும் பரிதாபம் நிகழ்ந்தது. இலங்கையின் சிறுபான்மை இனக்
குழுமங்களுக்கும் இதுதான் நிகழ்ந்தது . சர்வசன வாக்குரிமை தமிழ்,
முஸ்லிம், பறங்கியர் ஆகிய இனக் குழுமங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து அவர்களை ஒரம் கட்டியது. 1936ஆம் ஆண்டின் அமைச்
சரவையில் எல்லோரும் சிங்களவராக இருந்தனர். எல்லோரும் ஆண் களாகவும் இருந்தனர். சிங்களவர்களில் ஒருவர் மட்டும் கிறிஸ்தவராக
இருந்தார். கராவ சாதி அமைச்சர் ஒருவர் இருந்தார். ஏனையோர்யாவரும்
கொவிகம சாதியினராக இருந்தனர். 1947ஆம் ஆண்டின் மந்திரிசபையில் இருந்த 14 அமைச்சர்களில் 11பேர் சிங்களவர் - இந்தப் 11பேரில் 9 பேர் கொவிகம சாதியினர். கராவ சாதியினர் எவரும் இடம் பெறவில்லை.
1948இல் கராவ ஒருவர் அமைச்சராக்கப்பட்டு இக் குறை நிவர்த்திக்கப்
பட்டது. அரசியல் தொடர்பாக ஒரு முக்கிய விடயத்தைக் கூறவேண்டும்.
இக்காலத்தில் வர்க்க அடிப்படையான பிரச்சினைகளே அரசியலில் முக்கியம் பெற்றன. சாதி முக்கியம் பெறவில்லை. ஆனால் வாக்கு
களைப் பெறுவதற்காக சாதி அடிப்படையில் வேட்பாளர்கள் நிறுத்தப் படும் வழக்கம் இருந்தது. இருந்தாலும் சாதிப்பிரச்சினையை வைத்து வேட்பாளர்கள் வாக்குக் கேட்கவில்லை.

Page 12
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையில் தொழிலாளி வர்க்கம் எழுச்சி பெற்றது. சாதி, இனக்குழுமம் என்ற எல்லைகளைத் தாண்டி இந்த வர்க்கம் முன்னேறியது. இலங்கை சமூக அமைப்பிலும் சாதி அடுக்கமைவுடன் கூடவே புதிய வர்க்க அடுக்கமைவும் உரு வானது, 1920க்களில் தீவிரவாத தொழிலாளர் இயக்கம் தோன்றியது. 1930க்களிலும் 1940க்களிலும் தொழிற்சங்கப் போராட்டங்கள் வெடித் தன. 1947 தேர்தலில் லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டின. தோட்டத்தொழில் துறையின் தொழிலாளர்களுக்கு இலங்கை இந்திய காங்கிரஸ், சமசமாஜக் கட்சி என்பன தலைமைத்துவம் கொடுத்தன. முதலாளி வர்க்கத்தின் புதுப் பணக்காரர் பழையவர்கள் என்ற இரு பிரிவினரிடையிலான முறுகல் நிலை தணிவுற்றது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருசாராரும் ஐக்கிய மாயினர். Nobodies’ குழுவும் "Somebodies’ குழுவும் பேதங்களை மறந்து ஐக்கியப்பட்டனர்.
இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டிருக்கும் முக்கிய விடயங்களை இம்முன்னுரையில் தொகுத்துக் கூறியுள்ளோம். இந்நூலின் அடுத்து வரும் பொருளடக்கம் வருமாறு:
பகுதி1 - இலங்கை முதலாளித்துவத்தின் வணிகவாதக்கட்டம்
(Mercantilist Phase) gigs Lug55uigi 65uridis படுகிறது.
பகுதி II வர்த்தகவாதத்தில் இருந்து பெருந்தோட்ட முதலா
Giggsj6 JLDIT5 (Plantation Capitalism) LDavid-Stugol வதை இந்தப்பகுதி விளக்குகிறது.
பகுதி II - வர்க்கம், சாதி என்பனவற்றின் பங்கும் காலனித் துவமும் முதலாளித்துவமும் ஏற்படுத்திய தாக்கத் தினால் சாதிக்கட்டமைப்பு மாற்றம் பெறுவதும் இப் பகுதியில் விபரிக்கப்படுகிறது. சிங்களவர், தமிழர் முஸ்லிம்கள், பறங்கியர் ஆகிய இனக் குழுமங்க ளிடையே முதலாளித்துவ வகுப்பின் தோற்றம் வளர்ச்சி பற்றியும் இப்பகுதியில் எடுத்துக் கூறப் படுகிறது.
பகுதி IV இலங்கையின் கிறிஸ்தவ சமய பரம்பலும் அதன் தாக்கமும் ஆராயப்படுவதோடு கிறிஸ்தவமயமாத லின் எதிர்விளைவாகத் தோன்றிய சமய மறுமலர்ச்சி

இயக்கங்கள் பற்றியும் முதலாளிவகுப்பு இந்த இயக் கங்களில் மேற்கொண்ட வகிபாகம் பற்றியும் இந்தப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. முதலாளித்துவ வகுப்பின் பெண்கள் பண்பாட்டுத்துறை மாற்றங் களைத் தழுவிக்கொண்டதையும் தமது பிள்ளை களை (ஆண் மக்களையும், பெண்மக்களையும்) இங்கிலாந்துக்கும்இந்தியாவுக்கும்கல்விக்காகஅனுப்பி வாழ்க்கையில் உயர்நிலையைப் பெற வைத்து உயர் தொழில்களிலும் நிர்வாகத்திலும் முதலாளித்துவ வகுப்பின் பங்கை வலுப்படுத்தியதையும் இந்தப் பகுதி எடுத்துக் கூறுகிறது.
பகுதிV முதலாளித்துவம், வர்க்கம், அரசியல் மாற்றம் என்ற மூன்று விடயங்களிற்கும் இடையிலான இடைத் தொடர்பு இந்தப் பகுதியில் விளக்கப்படுகிறது. காலனித்துவத்துடன் இணங்கிப்போகும் சமரசப் போக்குள்ள முதலாளித்துவத்தின் வரலாறாக சுதந் திரத்திற்கு முற்பட்ட காலம் விளங்கியதை இந்த இயல் எடுத்துக் காட்டுகிறது. நேற்று வரை அநாமதேயங்களாக இருந்தவர்கள் (Nobodies) இன்று தங்களைக் கனம் பண்ணவேண்டிய மனிதர்கள் (Somebodies) என்று காட்டிக் கொள்கிறார்கள் என்று கூறியவர், காலனித்துவ ஆட்சிக் காலத் தில் சட்டசபை உறுப்பினராக இருந்த சேர். கிறிஸ்ரோபல் ஒபயசேகரா ஆவர். அவரிடம் நிலப்பிரபுத்துவ பாரம்பரியம் பற்றிய பாசாங்கு இருந்தது. பழைய நிலைமைகள் மாறிக்கொண்டு செல்வதாலும், சாதி அடுக்கமைவும் வர்க்க அடுக்கமைவும் கேள்விக்குட்படுத்தும் எதிர்ப் புணர்வின் வெளிப்பாட்டாலும் அவர் உள்ளத்தில் தோன்றிய திகைப் புணர்வின் எதிரொலியாகவே அவர் கூற்று அமைந்தது. முதலியார் வகுப்பு அன்று நாட்டில் உள்ள பிற குழுக்கள் எல்லாவற்றையும் பிரதி நிதித்துவம் செய்யும் ‘தெய்வீக உரிமையை’ பெற்றிருந்தது. அரசியல் களத்தில் இந்த உரிமைக்கு எதிராகத் தோன்றிய சவால் அவருடைய கோபத்தை கிளறியிருப்பதையும் இக்கூற்று எடுத்துக் காட்டுகிறது. ஒபயசேகர அவர்கள் கர்வத்தோடு பேசினார். ஆனால் அவர் கூற்று மிகச் சரியான குறிப்பு என்றே கூறவேண்டும்.
இலங்கையின் முதலாளித்துவ எழுச்சி என்ற கதையின் சாரமாக அமையும் அம்சம் ஒபயசேகரவின் கூற்றில் உள்ளது. ‘சம்பொடி’ எனப்

Page 13
A A
பட்டோர்‘நோபொடிஸ்'உடன் சமரசம் செய்தனர்; விட்டுக்கொடுத்தனர்; இருசாராரும் ஒன்றிணைந்து ஐக்கியப்பட்டு Political Dynasties என்னும் குடும்ப சாம்ராஜ்ஜியங்களை கட்டமைத்தனர். தொடக்க வேர்களின் படி ‘நோபொடிஸ்' எனக்கருதப்பட்டவரும் 1915ஆம் ஆண்டில் சிறைவாசம் அனுபவித்தவருமான டி. எஸ். சேனநாயக்க இலங்கையின் முதலாவது பிரதமராக 1948இல் பதவியேற்றார். ஒபயசேகராவின் மகளின் புதல் வரான எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க சோஷலிச ஜனநாயக திட்டத்தை முன்வைத்து தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக 1956ஆம் ஆண்டில் பதவியேற்றார். தமது பூட்டனாகிய சொலமன் டயஸ் பண்டார நாயக்க மகா முதலியாராக (பிரித்தானிய கவர்னரின் முதன்மை ஆலோ சகர்) பதவியேற்று சரியாக 100 ஆண்டுகள் முடிவடைந்த ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியேற்றார். 1994இல் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் பதவி யேற்ற அவர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று 1999 - 2005 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
இவையெல்லாம் எடுத்துக் கூறுவது யாதெனில் ‘சம்பொடி’ எனப் பட்டோர் காலத்தோடு ஒத்தோடவும், ‘சம்பொடிகளாகவே நிலைத் திருக்கவும் கற்றுக் கொண்டனர் என்பதுவே.
கொழும்பு குமாரி ஜயவர்த்தன
குறிப்புகள்
1. குத்தகை முதலாளிகள் என்ற வகையினர் கைத்தொழில் முதலாளிகளில் இருந்து வேறுபட்ட இயல்புகளை உடையவர்கள். வாடகையை உழைப்பதே இவர்களின் பிரதான நோக்கம் குத்தகை முதலாளிகள் உற்பத்தியின் பெருக்கத்திற்கும், விரிவாக்கத்திற்கும் உதவுவதில்லை.
2. 1915ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிரான கலகம் ஒன்று இலங் கையில் ஏற்பட்டது. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் சில சிங்களத் தலைவர்கள் என்று எஸ்.சி.ஒபயசேகரகுற்றம்சாட்டினார். சட்டசபையின் உறுப்பினராக இருந்த அவர்அக்காலத்தில் சட்டசபை விவாத்தின்போது ஆற்றிய உரையில் இருந்து மேற்கோள் வருமாறு: "Halfa dozen misguided, designing villains . . . have been trying to pose as leaders of
Buddhists. Had it not been for this encouragement, these disturbances would never have occurred . . . the proprietary peasant villagers . . .

XXi
have been deluded into this trap for the personal aggrandisment of a few who are nobodies, but who hope to make somebodies of themselves by such disgraceful tactics." (S.C. Obeyesekere - F. Laaou விவாதங்கள், 1915 ஆகஸ்ட் 11ஆம் திகதி, பக். 406, Nobodies, Somebodies என்ற சொற்களின் சாய்வெழுத்து அழுத்தம் எம்மால் இடப் பட்டவை.)
எஸ். சி. ஒபயசேகரமுதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். சேனநாயக்க சகோதரர்களையும் ஏனைய சிங்களத்தலைவர்களையும் “அநாம தேயங்கள்” என்றும் சுயநலமிக்க இவர்கள்
é.
“அறியப்பட்டோராக” தம்மை ஆக்கிக் கொள்வதற்காக முயற்சிக்கின்றார்கள் என்றும் குற்றம் சாட்டிப் பேசினார்.
உயன்கொட (1998)

Page 14
மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை
அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை: இலங் கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்னும் இந்நூல் Nobodies to Somebodies - The Rise of the Colonial bourgeoisie in Sri Lanka GTGörgylb ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலாசிரியர் குமாரி ஜய வர்த்தன அவர்கள் ‘இலங்கையில் தொழிலாளி வர்க்கத்தின் தோற்றம் (1972) என்னும் ஆய்வு நூல் மூலம் புலமைத்துறையாளர் மத்தியிலும் இடதுசாரி மார்க்சிய அரசியல் ஆர்வலர்களிடையிலும் மூன்று தசாப் தங்களுக்கு மேலாக பரவலாக அறியப்பட்டவராக உள்ளவர். இலங் கையின் இனக்குழும முரண்பாடுகள், மோதல்களின் வர்க்கப் பின்னணி, இனவாத அரசியல் என்பன குறித்தும் நூல் ஒன்றினையும் ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். மூன்றாம் உலகின் பெண்ணிய சிந்தனையாளர்களில் கணிப்புக்குரிய ஒருவராகவும் விளங்கும் குமாரி ஜயவர்த்தன பெண்ணியம் குறித்த பல நூல்களையும் எழுதியுள்ளார்.
“இலங்கையின் முதலாளிவர்க்கத்தின் தோற்றம்’ என்னும் ஆங்கில மூல நூல் ஐந்து பகுதிகளையும் 20 இயல்களையும் கொண்டது. அந் நூலின் முதல் இரு பகுதிகளையும் உள்ளடக்கியதாக இம் மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது. மீதமுள்ள மூன்று பகுதிகளினதும் தமி ழாக்கம் தனிநூலாக அடுத்து வெளியிடப்படவுள்ளது.
இலங்கையில் பெருந்தோட்டப் பொருளாதார முறையின் அறிமுகம் ஏற்படுத்திய மாற்றங்கள் முக்கியமானவை. இது பற்றி நூலாசிரியர் கூறுவது:
1830க்களில் பெருந்தோட்டப் பொருளாதார முறை அறிமுகமாகியது. அதுவரை இலங்கையின் உற்பத்திமுயற்சிகள்முழுமையாக முதலாளித் துவத்திற்கு முந்திய முறையாக (Pre-Capitalist) இருந்தன. கறுவா போன்ற விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதி, கப்பல் போக்குவரத்து, உற்பத்தி வினைத்திறன் குறைந்த கிராமிய விவசாய உற்பத்தி,

XXiii
கைவினைப் பொருள் உற்பத்தி என்பனவே அக் காலத்தின் பிரதான உற்பத்தி முயற்சிகளாக இருந்தன. சுதேச உற்பத்தி முறை பிரித்தானியர் பின்பற்றியவர்த்தகக் கொள்கையின்கீழ் கேள்வித்தூண்டலைப்பெறும் வாய்ப்பு இருக்கவில்லை. இதனால் அடிப்படையான மாறுதல்கள் எதுவும்நிகழவில்லை (பக்.3)
காலனித்துவமுறையின் வணிக வாதக்கொள்கை மேலோங்கியிருந்த கட்டத்தில் சுதேசிகளுக்குரியவான சில வர்த்தக முயற்சிகளும் இருந்தன. அவையானவன: 1. இந்தியாவுடனான கடல் வர்த்தகமும் உள்ளூர் வர்த்தகமும். 2. பொருட்கள், சேவைகள் என்பனவற்றை வழங்குவதற்கும் பொருட்
களை ஏற்றி இறக்குவதற்குமான அரசாங்க ஒப்பந்த வேலை. 3. சாராயக்குத்தகை, பலவித தீர்வைகள், வரிகளை அறவிடுவதற்கான
குத்தகை. உள்ளூர் முதலாளித்துவம் தனது வளர்ச்சிக்குத் தேவையான ஆரம்ப மூலதனத்தை மேற்குறித்த வழிகளில் திரட்டிக் கொண்டது.
இந்நூலின் முதலாம் பகுதியின் நான்கு இயல்களில் காலனித்துவத்
தின் பின்புலத்தில் அநாமதேயங்களாக இருந்தவர்கள் மெல்ல மெல்ல மூலதனத் திரட்சியை செய்வதையும் முன்னோக்கி நகர்வதையும் நூலாசிரியர் முதல்நிலை ஆவணங்களில் இருந்து சான்றுகளை எடுத்துக் காட்டி விபரித்துச் செல்கின்றார். உள்ளூர் முதலாளிகளின் எல்லாவ கையான வர்த்தக முயற்சிகளிலும் மிகவும் லாபந்தருவதாகச் சாராயக் குத்தகை வியாபாரம் விளங்கியது.
பெருந்தோட்டத்துறையின் தோற்றம் சாராய வியாபாரத்தில் பண்பு ரீதியானஒரு"மாற்றத்தை”க்கொண்டு வந்தது. முக்கியமற்றதாக இருந்த ஒரு வியாபாரமானசாராய வியாபாரம் மிக முக்கியமானதாகவும் லாபம் தரும் தொழிலாகவும் மாறியது. நகரத் தொழிலாளர்களும் தோட்டத் தொழிலாளர்களும் எண்ணிக்கையில் பெருகிச்சென்றனர். சாராயத்தின் விற்பனையும் இதனால் பல மடங்கு அதிகரித்தது. அரசாங்கம் தனி யுரிமை முறையை ஊக்கும் வகையில் செயற்பட்டதனால் பல குத்தகைக் காரர்கள்தமது தொழிலைவிஸ்தரித்துப்பெரும் முதலாளிகளாக மாறினர். 1830 இல் பலர் குத்தகை எடுப்பதற்குப் போட்டியிட்டனர். 1835 இல் மூலதன வசதியுடைய சிலரே குத்தகை எடுக்க முன் வந்தனர். துரித கதியில் ஒரு மாற்றம்நிகழ்ந்தது. ஒடுபாதையில் ஒடும் விமானம் ஒன்று மேற்கிறம்புவதை ஒத்ததானமுதலாளித்துவ மேற்கிளம்பல் (Take Off) நிகழ்ந்தது. சாராய வர்த்தகத்தால் முதலாளித்துவம் மேல் நோக்கிய உயர்ச்சியைஅடைந்தது. (பக்.31)

Page 15
Xxiv
சாராயக் குத்தகையில் ஆரம்பித்தவர்கள் பெருந்தோட்ட முதலீடுகள், காரியச்சுரங்க அகழ்வுத் தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டு தம் வர்த்தக தொழிலில் முயற்சிகளை விஸ்தரித்தனர். அநாமதேயங்களாக இருந் தோர் அறியப்பட்டவர்களானமை நூலின் பகுதி இரண்டில் நான்கு இயல்களில் விபரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மேற்கு மாகாணமும், மத்திய மாகாணமும் முதலாளித்துவ வளர்ச்சியின் மையப்பகுதி களாகவும் (Core) ஏனைய பகுதிகள் சார்புப் பகுதிகளாகவும் மாற்றம் பெற்றன. உலக முதலாளித்துவ முறைமையின் கீழ் சார்புப் பகுதியாக இணைக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் சுதேச மட்டத்திலும் சமனற்ற வளர்ச்சிப் போக்கை வெளிப்படுத்தியது.
இலங்கையின் முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவாக பல்வேறு சாதிக்குழுக்கள், இனக்குழுமங்களிடையே ஏற்பட்ட மாற்றங்களையும் முரண்பாடுகளையும் ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். உறவுமுறை, குடும்பம், சாதி, இனக்குழுமம் ஆகியன முதலாளி வர்க்கத்தின் தோற்றத் துடனும் வளர்ச்சியுடனும் தொடர்புபட்டு இருந்தது உண்மையே ஆயினும் முதலாளித்துவம் ஒரு வர்க்கம் என்ற வகையில் ஒன்றுபடுவதை இவை தடுக்க வில்லை என்பதையும் எடுத்துக் காட்டுகிறார்.
இலங்கையின் முதலாளித்துவம் கைத்தொழில் முதலாளித்துவமாக வளர்ச்சி பெறவில்லை. அது வர்த்தக முதலாளித்துவமாகவே இருந்தது. வர்த்தக முதலாளித்துவம் முயற்சியாண்மையின் பண்புகளைக் கொண் டிருக்கவில்லை. வர்த்தக முதலாளிகள் ஈட்டிய வருமானம் புத்தாக்கம் மிக்க முயற்சியாண்மையின் பெறுபேறு அன்று. முதலாளித்துவத்தின் வளர்ச்சியையும் அதன் இயல்புகளையும் நூலாசிரியர் விபரித்திருப்பது இலங்கையின் பொருளாதாரத்தின் அடிப்படை இயல்புகள் எவை? முதலாளித்துவதற்திற்கு முந்திய உற்பத்தி முறைகளை முதலாளித் துவம் ஏன் அழிக்கவில்லை? குறைவிருத்தி ஏன் நீடித்தது? போன்ற கேள்விகளை நாம் பரிசீலிப்பாதற்கு வேண்டிய பின்புலத்தை விளக்கு வதாக அமைந்துள்ளது.
பொருளியல், பொருளியல் வரலாறு, அரசியல், இலங்கையின் சமூகவியல் ஆகிய துறைகளில் அக்கறையுடைய மாணவர்கள், ஆய் வாளர்கள், பொதுவாசகர்கள் ஆகியோருக்குப் பயன்படக்கூடிய இந்நூல் தமிழில் வெளிவருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.
மூல நூலின் கருத்துக்களைச் சிதைக்காமலும் திரிபுபடுத்தாமலும் தமிழில் கூறவேண்டும் என்பது ஒரு மொழிபெயர்ப்பாளர்கடைப்படிக்க வேண்டிய முதன்மையான விதியாகும். மூலப்பிரதிக்கு விசுவாசமாக

XXV
இருத்தல் என்னும் இவ்விதியை தவறாக அர்த்தப்படுத்தல் ஆகாது. மூலப்பிரதியின் ஒரு பந்தியில் உள்ள அனைத்துக் சொற்களிற்கும் பதிலீடுகளை மொழிபெயர்ப்பாளர் வழங்கியுள்ளாரா என்று கணக்கிடும் முறையில் மொழிபெயர்ப்பு பற்றிய மதிப்பீடுகள் அமைவது வேடிக்கை யானதே. இந்நூலின் மொழிபெயப்பு எளிமை, தெளிவு என்னும் இலக்கு களை மனதில் கொண்டு செய்யப்பட்டது என்பதை குறிப்பிட விரும்பு கிறேன். நூலின் சில பகுதிகள் சுருக்கி எழுதப்பட்டுள்ளன என்பத னையும் குறிப்பிட விரும்புகிறேன். மூல நூல் ஆசிரியர் விரிவான அடிக்குறிப்புக்களையும், மேற்கோள் நூல்களின் பட்டியல்களையும் தந்துள்ளார். அவற்றைத் தமிழில் தருவதைத் தவிர்த்துள்ளேன்.
மொழிபெயர்ப்புக் கொள்கை தொடர்பான எனது எண்ணங்களை மேலே தெளிவுபடுத்தியுள்ளேன். மரபு வழி மொழிபெயர்ப்புகளில் இருந்து இந்நூலின் மொழிபெயர்ப்பு விலகிச் செல்வதால் இவற்றைக் கூறுதல் அவசியமாயிற்று.
இந்நூலின் மொழிபெயர்ப்புப் பணியை என்னிடம் ஒப்படைத்து ஊக்கமளித்தமைக்காக நூலாசிரியர் குமாரி ஜயவர்த்தன அவர்களிற்கு எனது உளப்பூர்வமான நன்றியினைத் தெரிவிக்கின்றேன். இந் நூலி னைச் சிறந்த முறையில் வடிவமைத்தும் அச்சிட்டும் வழங்கிய குமரன் புத்தக இல்ல உரிமையாளர் க. குமரன் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக. கொழும்பு க. சண்முகலிங்கம் 25.07.2009

Page 16

பகுதி - I
காலணித்துவப் பின்புலத்தில் அநாமதேயங்களாக இருந்தோர்
(Mainly "Nobodies' in a Colonial Backwater)

Page 17

இயல் - 1
பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் தோற்றத்திற்கு முற்பட்டகாலத்தில் வர்த்தகமும் முதலாளித்துவ மூலதனத் திரட்சியும்
பிரித்தானியர் 1796இல் இலங்கையின் கரையோர மாகாணங்களை தம் ஆட்சிக்குக் கீழ்கொண்டு வந்தனர். பின்னர் 1815ஆம் ஆண்டில் கண்டியைக் கைப்பற்றினர். பிரித்தானியர்ஆட்சியின் தொடக்க காலத் தில்தனியார் வர்த்தக முயற்சிகளை ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்தினர். டச்சு ஆட்சிக்காலத்தில் கைக்கொள்ளப்பட்ட வர்த்தகக் கொள்கை யையே பிரித்தானியரும் தொடர்ந்தனர். காலனித்துவ அரசுகளால் பின்பற்றபட்ட வர்த்தகக்கட்டுப்பாட்டுக்கொள்கையை வணிகவாதம் (Mercantilism) என்பர். வர்த்தகத்தை ஏகபோகத் தனியுரிமையாக வும் வரிகள் மூலம் தனியார் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதுமான பொருளாதாரக் கொள்கையே வணிக வாதமாகும். இக்கொள்கை முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கும் தனியார் முயற்சியாளர் கையில் மூலதனம் திரட்சியடையவும் தடையாக இருந்தது. வணிகவாதம் போட்டியைத் தடைசெய்தது. வர்த்தகப்பண்டங்களைக் குறைந்த விலையில் கொள்வனவுசெய்துகூடியவிலையில்விற்பனைசெய்வதால் லாபம் ஈட்டப்பட்டது.
கறுவா, பாக்கு, மிளகு, முத்துக்கள், இரத்தினக்கற்கள், யானை ஆகியன போத்துக்கேயர்காலத்தில் (1505-1656) இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. போத்துக்கேயருக்கு பின்னர் வந்த டச்சுக் காரர்களும் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தைதமது ஏகபோகமாக வைத்திருந்தனர். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும்பொருட்களில் டச்சு கிழக்கிந்தியக்கம்பனியின் இலச்சினைபொறிக்கப்பட்டது. இதன் மூலம்தனியார் வர்த்தகர்கள் பொருட்களை இலங்கைக்குள் கொண்டு

Page 18
4 அநாமதேயங்களாக இருந்தோர்.
வருவதுதடுக்கப்பட்டது. சட்டவிரோத கடத்தல் வர்த்தகத்தின் மீதும் தீவிரகண்காணிப்புச் செய்யப்பட்டது. ஏற்றுமதிகளையும், இறக்குமதி களையும் இவ்விதமாக கட்டுப்படுத்திய டச்சு ஆட்சியின் கொள்கை களே பிரித்தானியராலும் 1796இன்பின்னர்35ஆண்டுகளுக்கு மேலாகப் பின்பற்றப்பட்டது.
வர்த்தக முயற்சிகள் மட்டுமல்லாது கைவினைத் தொழில் பண்டங் களின் உற்பத்தியும் டச்சு ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. தையல்காரர், சப்பாத்துக்களை உற்பத்தி செய்வோர் இரும்பு முதலிய உலோகப் பொருட்களை உற்பத்திசெய்வோர், தச்சு வேலைசெய்வோர், இறைச்சிக்கடைக்காரர்ஆகிய பலவகைத் தொழில் செய்வோரும்அனுமதி பெற்றே தொழில் செய்தல் வேண்டும். அவ்வாறு அனுமதி பெறும்போது குறித்தநபர் கிறிஸ்தவரா, ஒழுங்காகத் தேவால யத்திற்குச் செல்பவரா போன்ற விடயங்களைக் கவனித்தே அனுமதி வழங்கப்பட்டது. டச்சு ஆட்சியில் ராஜகாரியமுறை இருந்துவந்தது. இதுதொழில்சந்தை உருவாவதைக்கட்டுப்படுத்தியது. கறுவாப்பட்டை உரித்தல் வேலையில் சலாகம என்னும் சாதியினரை டச்சுக்காரர் ஈடு படுத்தினர். டச்சுக்காரரின் கட்டுப்பாட்டு முறைகளையே பிரித்தானி யரும்தொடக்ககாலத்தில் பின்பற்றினர். ஆதலால்வர்த்தகமும், தொழில் முயற்சிகளும் அதிக அளவு மாற்றங்கள் இல்லாமல் பழைய முறையில் இயங்கின. இவற்றில் அடிப்படை மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.
உள்ளூரவர்கள் மட்டுமல்லாது ஐரோப்பியர்களும் இலங்கையில் வர்த்தகமுயற்சிகளில் ஈடுபடுவது கட்டுப்படுத்தப்பட்டது. வர்த்தகம் செய்வதற்கான அனுமதிப் பத்திரம் பெற்றவர்களே வர்த்தகம் செய் யலாம். கவர்னர் நோர்த் 1801இல் நியமிக்கப்பட்டார். அவ்வாண்டில் இருந்து கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் வர்த்தக உரிமை அரசால் ஏற்கப்பட்டது. இவ் வர்த்தக உரிமை பிரித்தானிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அக்காலத்தில் காலனி களுக்கான செயலாளராகவிருந்த ஹென்றிடன்டாஸ் கறுவா வர்த்தகம் தனியுரிமையாகத் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிவுறுத் தல்களை வழங்கினார். ஐரோப்பியர்கள் அனுமதியின்றி வர்த்தகம் செய்வதை அனுமதிக்கக்கூடாது, அரசாங்கம் காணிகளை கொடுக்கக் கூடாது, என்றும் கொழும்புக்கு வெளியே அவர்கள் காணிகளைக் கொள்வனவு செய்வதை அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத் தல்களையும் வழங்கியிருந்தார்.

பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் தோற்றத்திற்கு. 5
1830க்களில் பெருந்தோட்டப் பொருளாதாரமுறை அறிமுகமாகியது. அதுவரை இலங்கையின் உற்பத்திமுயற்சிகள்முழுமையாகமுதலாளித் துவத்திற்கு முந்தியமுறையாக(Pre-capitalist) இருந்தது. கறுவாபோன்ற விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதி, கப்பல்போக்குவரத்து, உற்பத்தி வினைதிறன்குறைந்த கிராமிய விவசாய உற்பத்தி, கைவினைப் பொருள் உற்பத்தி என்பனவே அக்காலத்தின் பிரதான உற்பத்தி முயற்சிகளாக இருந்தன. சுதேச உற்பத்தி முறை பிரித்தானியர் பின்பற்றிய வர்த்தகக் கொள்கையின் கீழ் கேள்வித் தூண்டலைப் பெறும் வாய்ப்பு இருக்க வில்லை. இதனால் அடிப்படையான மாறுதல்கள் எதுவும் நிகழ வில்லை.
1820க்களில் அரசாங்கத்தின்வருடாந்த சராசரிவருவாய் E330,000ஆக இருந்தது. இவ்வருமானம் பின்வரும் மூலங்களில் இருந்து பெறப் Ull-gil:
நிலவாடகை, கறுவாவர்த்தகம் தானிய வரி, முத்துக்குளிப்பு மதுபானவரி, மீன்குத்தகை தலைவரி, முத்திரைவரி உப்பு உற்பத்தி, ஆயத்தீர்வைகள்
இதனைவிட $1000நானாவித வருமானமாகக் கிடைத்தது. பிரித்தானிய வரிநிர்வாக முறையில் பலகுறைபாடுகள் இருந்தன. ஐரோப்பிய முத லாளிகள் இந்நாட்டில் முதலீடு செய்வதற்கும்தடங்கலாக இருந்த வரி, வர்த்தக வருவாய்க் கொள்கைகளை பிரித்தானியர் கடைப்பிடித்து வந்தனர். 1833இன் கோல்புறுக் - கமரன் ஆணைக்குழு இக்கொள்கை யின் குறைகளை சுட்டிகாட்டியிருந்தது.தனியுரிமை வர்த்தகம், உற்பத் தியாளர் மீது நேரடிவரிகளை விதித்தல், பழமையான வரிமுறைகளை மாற்றமின்றித் தொடருதல் ஆகிய கொள்கைகளை ஆணைக்குழு கண்டித்து விமர்சனம் செய்தது. தனியார் வர்த்தக முயற்ச்சிக்கான தூண்டுதல் இன்மையையும் வர்த்தகமும் முதலீடும் இதனால்தடைப் படுவதையும் சுட்டிக் காட்டியது. இவ்வாறான மட்டுப்பாடுகளின் கீழ் இலங்கையின் பொருளாதாரம் அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு முந்திய முறையாகவே தொடர்ந்தது. 1830இல் ஒன்பது ஐரோப்பிய வர்த்தகநிறுவனங்கள் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தை நடத்தின. இலங்கையில் அக்காலத்தில் வாழ்ந்த வெளிநாட்டவர்களின் தேவை களைநிறைவுசெய்யும் வகையில் இவை செயற்பட்டன. இரும்பிலான

Page 19
6 அநாமதேயங்களாக இருந்தோர்.
உபயோகப் பொருட்கள், பீங்கான் பொருட்கள், காகிதம், உடுதுணி, ஆடைகள், மதுபானம் என்பனவும்ஆடம்பரஉபயோகப்பொருட்களும் இறக்குமதியாயின. இப்பொருட்கள் இங்கிலாந்தில் இருந்து இந்தி யாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுப்பின்னர்அங்கிருந்து கொழும்புக்கு கெக்டு வரப்பட்டன. இந்தியாவில் இருந்து அரிசி முதலிய தானியங் களும், சிங்கப்பூர், சீனா ஆகிய நாடுகளில் இருந்து தேயிலை, கரும்பு, பட்டாடைகள் என்பனவும் இவ்வர்த்தகர்களால் தருவிக்கப்பட்டன. இலங்கையில் இருந்து கருங்காலி, முதிரை ஆகிய மரப்பொருட்கள், வாசனைத்திரவியங்கள், கோப்பி, கடல் அட்டை, மான்கொம்பு, தேங்காய் எண்ணெய்,தும்புக்கயிறுஆகிய பொருட்களை பிரித்தானியா, பினாங்கு, சிங்கப்பூர், இந்தியா, மொரிசியஸ் ஆகிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்தனர்.
இலங்கையில் வதிந்தஐரோப்பியர்களின்நுகர்வுத் தேவைகளுக்காக இறக்குமதிப் பொருட்கள் வருவிக்கப்பட்டன. இலங்கையின் சிறு தொகையினரான உள்ளூர்செல்வந்த வகுப்பின்நுகர்வு தேவைகளுக்கும் இறக்குமதிகள் பயன்பட்டன. ஐரோப்பியரது நடை உடைபாவனை களை பின்பற்றிய உள்ளூர் பணக்காரர்கள் ஆடம்பரநுகர்வில் ஐரோப் பியரையும் விஞ்சியவர்களாகக்கூட இருந்தனர்.
முன்பு சாராயம் குடித்த உள்ளூர் பணக்காரர்கள் இப்பொழுது பிறண்டி, வைன், பியர்ஆகியவற்றையே விரும்பிக்குடிக்கின்றனர். முன்பு சர்க்கரையை உபயோகித்தனர்; இப்பொழுது சீனியை உபயோகின்றனர். உடைகளையும் நன்றாக அணிகின்றனர் என்று கொழும்பில் வர்த்தகம் செய்த ஆங்கிலேயர் ஒருவர் (1829இல்) கூறினார்.’பிரித்தானியாவில் முதலாளித்துவத்தின் தொடக்ககாலத்தில் முதலாளி வகுப்பு ஆடம்பரத்தைத் தவிர்த்து சிக்கனத்தை கடைப் பிடித்தது. இலங்கையின்தொடக்ககாலமுதலாளிவகுப்பு:ஆடம்பரத்தில் ஈடுபட்டமை மூலதனத்திரட்சிக்கு சாதகமானதாக இருக்கவில்லை. அரசாங்கம் அதிகவரிகளை விதித்தது; கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தது. இதனால் வர்த்தக முயற்சிகளுக்கான ஊக்கம் இருக்கவில்லை. பிரித்தானிய அரசின்கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் செயற்பட்ட இந்தியவர்த்தகர்களில் மூன்று பிரிவினர் ஏற்றுமதி இறக்குமதி, சில்லறை வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபட்டனர். பரதவர், பார்சிகள், நாட்டுக் கோட்டைச்செட்டிகள் என்போரேஇம் மூன்று பிரிவினர். பரதவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள்; கத்தோலிக்க சமயத்தவர்கள். 19ஆம்

பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் தோற்றத்திற்கு. 7
நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இலங்கையில் மதுபான வியா பாரத்தில் இவர்கள் ஈடுபட்டனர். பார்சி வர்த்தகர்கள்மும்பாய்நகரத்தில் இருந்து வந்தனர். 1803இல் கொழும்பில் பிரபல வர்த்தகராக கொர்மஸ்ஜி ஹம்பட்டா என்னும் பார்சி இருந்தார். இவர் மூன்று கப்பல்களிற்குச் சொந்தக்காரர்ஆகவும் இருந்தார். சொராப்ஜி பெஸ்ரொன்ஜி எடுல்ஜீ ஹோமர்ஜி சொரப்ஜிரட்டன்ஜி, டடி முன்ஜெர்ஜி என்போரும் பெயர் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய பார்சிவர்த்தகர்களாகஇருந்தனர்.நாட்டுக் கோட்டை செட்டிகள் 17ஆம் நூற்றாண்டு முதல் ஆசியாவின் பல பகுதிகளிலும் வர்த்தகம் செய்துவந்தவர்கள். தென்னிந்தியாவின்செட்டி நாட்டை சேர்ந்த இந்துக்களான செட்டிகள் டச்சுக்காரருக்கு முன்பே இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடத்தொடங்கினர். பிரித்தானியர் காலத்தில் இவர்கள் மீது இருந்து வந்த தடைகள் சில நீங்கின. 1830 அளவில்இவர்களின்வர்த்தகநடவடிக்கைகள்முகவர்வேலை(ஏஜன்சி), பல்துறை வியாபாரம் என விரிவாக்கம் பெற்றது. அரசாங்க உண்டியல் களை கழிவுசெய்தல், அரிசி இறக்குமதி, உடுதுணிகள் இறக்குமதி என்பனவற்றில் நாட்டுக்கோட்டைச் செட்டிகள் ஈடுபட்டனர். 1830க் களிலும் 1840க்களிலும் 150வரையானகம்பனிகள் செட்டிகளால்நடத்தப் பட்டன. அவர்களை "உள்ளூர் வர்த்தகத்தின் முதுகெலும்பு’ என்று ஜோன்கப்பர் (John Capper) வருணித்தார். ஊர்ஊராகதிரிந்து கண்டிப் பகுதியில் முஸ்லிம்களும் செட்டிகளும் வர்த்தகம் செய்தனர். கிராம விவசாயிகளுக்கு கடன்களையும் வழங்கினர். அவர்களிடம் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்தனர் எனப்பல எழுத்தாளர்கள்குறிப் பிட்டுள்ளனர். ஐரோப்பிய வர்த்தகர்களும், இந்திய வர்த்தகர்களும் செயற்பட்ட தொடக்க காலகட்டத்தில் சுதேசிகளுக்குரியனவான சில வர்த்தக முயற்சிகளும் இருந்தன. அவை பின்வருமாறு:
1. இந்தியாவுடனான கடல் வர்த்தகமும், உள்ளூர் வர்த்தகமும். 2. பொருட்கள்,சேவைகள்என்பனவற்றைவழங்குவதற்கும்பொருட் களை ஏற்றி இறக்குவதற்குமான அரசாங்க ஒப்பந்த வேலை. 3. சாராயக்குத்தகை, பலவிததீர்வைகள், வரிகளை அறிவிடுவதற்
கான குத்தகை.
உள்ளூர் முதலாளித்துவம் தனது வளர்ச்சிக்குத் தேவையான ஆரம்ப
மூலதனத்தை மேற்குறித்த வழிகளில் திரட்டிக் கொண்டது. இதுபற்றி அடுத்து வரும் இயல்களில் விபரிப்போம்.

Page 20
அநாமதேயங்களாக இருந்தோர்.
குறிப்புகள்
l.
2
கொள்வனவுச் சந்தையின் விலைக்கும் விற்பனைச் சந்தையின் விலைக்கும் இடையிலான வித்தியாசமே வர்த்தகத்தில் கிடைக்கும் லாபமாகும். இந்த லாபத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்றதாகப் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தும் கொள்கையை வணிகவாதம் என்று மோரிஸ் டொப் விளக்கம் தருகிறார். (டொப் 1963; 199) பார்க்க: மென்டிஸ், 1956 :11, 113 - 14. விசாரணை ஆணைக்குழுமுன் சாட்சியம் அளித்த வர்த்தகர் ஒருவர் இவ் விதம் கூறினார். ஆதாரம் : இலங்கைச் சுவடிகள் திணைக்களம் கோவை SLNA 19/60, 1829. Beaufort என்பவரது சாட்சியம். 15ITL'Gidi Gissil '60Ld GFL guitis6061T "The Back bone of the Native Trade" என்று யோன் கப்பர் குறிப்பிட்டதை வீரசூரிய மேற்கோள் காட்டுகிறார். பார்க்க: வீரசூரிய, 1973:15,

இயல் - 2
முதலாளித்துவத்தின் தோற்றம்
பெருந்தோட்டங்கள் தோன்றுவதற்கு முந்திய கட்டத்தில் எல்லாப் பொருளாதாரநடவடிக்கைகளும் வர்த்தகம் என்ற ஒன்றை மையமாகக் கொண்டிருந்தன. வருமான வாய்ப்புக்கள்,மூலதனத்திரட்சி என்பனவும் வர்த்தகத்தின் வழியாகத்தான் பெறப்பட்டது. இந்த வர்த்தக முயற்சி களுள் சுதேசிகள் பெருமளவில் பங்கு பெறவும் தமக்குரிய தொழில் முயற்சிகளாகக் கொள்ளக் கூடியனவுமான துறைகள் சில இருந்தன. உள்ளூர் வர்த்தகமும் கரையோரக்கப்பல் வர்த்தகமும், அரசாங்கத்திற்கு பலவகைப் பொருட்களையும் சேவைகளையும் வழங்கும் ஒப்பந்த வேலை, அரச வருவாயை அறவிடும் வழிமுறையாகக் கையாளப்பட பல்வேறு குத்தகைகள் என்பன சுதேசிகளுக்குரிய பிரதான வர்த்தக முயற்சிகளாக இருந்தன. இம்முயற்சிகள் மூலம் திரட்டப்பட்ட மூல தனம் தான் பிற்காலத்தில் பெருந்தோட்டப் பொருளாதாரம் என்ற எல்லைக்குள் தம் நடவடிக்கைகளை விஸ்தரித்துக் கொள்வதற்கான தளமாக அமைந்தது. வர்த்தகம்தான் ஆரம்ப மூலதனத்திரட்சிக்கான வழியாக இருந்தது. இதிலும் கூட சுதேசிகளுக்கு நுழைவதற்கான வாய்ப்புக்கள் சுருங்கியே இருந்தன. பிரித்தானிய வர்த்தகர்கள் ஏற்று மதி, இறக்குமதி வர்த்தகத்தை தம்பிடியில் வைத்திருந்தனர். இந்திய வர்த்தகர்கள்அரிசி, தானியங்கள், புடவை, துணிமணி என்பனவற்றை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்தார்கள். இலங்கையில் இருந்து பல வகையான பொருட்களை இந்தியாவிற்கும் பிற ஆசிய நாடு களுக்கும் இந்திய வர்த்தகர்கள் ஏற்றுமதி செய்தும் வந்தார்கள். ஆக, எஞ்சியிருந்த வர்த்தகம் சுதேசிகளுக்குரியதாயிற்று. உள்நாட்டு வர்த் தகமும், இலங்கையின்துறைமுகப்பட்டினங்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தும் வர்த்தகமும் சுதேசிகளின் கையில் இருந்தன. இவை மூலம் மூலதனத்தை திரட்டிக்கொள்ளும் வாய்ப்புஅவர்களுக்கு கிட்டியது.

Page 21
10 அநாமதேயங்களாக இருந்தோர்.
கப்பலோட்டுதலும், தோணிகளைக் கட்டும் தொழிலும்
கப்பல் ஒட்டுதல் அடிப்படையில் ஒரு வர்த்தகமுயற்சியாக இருப்பினும் அதனோடு இணைந்த தொழிலானதோணிகள், படகுகள், கடலோடிகள் பயன்படுத்தும் பல்வகை கலன்கள் என்பவற்றை உற்பத்தி செய்யும் முயற்சியானது மூலதனத்தின்திரட்சிக்கான வழிகளில் ஒன்றாக இருந் தது. இத்தொழிலில்நிலையான மூலதனம் (Fixed Capital) அவசியம். பொருட்களை வாங்கி விற்கும்வியாபாரத்தில் இருந்து இதுதன்மையில் வேறுபட்டது. கணிசமான தொகை முதலீடு தேவை. இந்த முதலீடு வர்த்தகமுதலீடு அல்ல; பொருள் உற்பத்திக்கானமுதலீடு என்பதையும் நாம் கவனித்தல் வேண்டும். லாபத்தின் ஒரு பகுதியை முதலீடாக மாற்றவேண்டும். மூலதனச் சொத்துக்கள் விரைவில் பெறுமானத் தேய்வு அடைதலும் இத்துறையின் இன்னொரு விசேட பண்பு ஆகும். இதனால் வருமானமாக கிடைப்பதில்ஒரு பகுதியை மூலதனமாகமாற்ற வேண்டும். சேமிப்பும் மூலதன ஆக்கமும் இங்கே தோற்றம் பெற்றன. முதலீட்டுக்கானதூண்டுதலும் ஏற்பட்டது.
இலங்கையில் அக்காலத்தில் வீதிப் போக்குவரத்து விருத்தியுற்று இருக்கவில்லை. உள்நாட்டு வர்த்தகத்தின் பிரதான மார்க்கமாக கரை யோரதுறைமுகங்களிற்கு இடையிலான கப்பலோட்டுதல் இருந்து வந்தது. ‘கப்பல்” என்று நாம் குறிப்பிடுவது பெரும் கடற்கப்பல் களையன்று. 50 தொன்அளவிலான பொருட்களை ஏற்றி இறக்கக்கூடிய தோணிகளே அதிகம் பாவனையில் இருந்தன. இவை அக்காலக் கட லோர வர்த்தகத் தேவைக்குப் போதியனவாக இருந்தன. 1830ஆம் கொழும்பில் பதிவு செய்யப்பட்டிருந்த கடற்கலன்களில் இரண்டு மட்டுமே “கப்பல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தன. 190 தோணிகளும், இடைத்தர அளவிலான வேறு சில கலன்களும் பதிவு செய்யப்பட்டி ருந்தன. இத்தோணிகள் மூலம் வர்த்தகர்கள் தம் பண்டங்களைக் கொண்டு சென்றனர். அரசாங்கமும் அரிசி, உப்பு, புகையிலை என்பன வற்றை ஏற்றி இறக்குவதற்கு இத்தோணிகளை ஒப்பந்த முறையில் பயன்படுத்தியது. உத்தியோகத்தர்களையும் போர் வீரர்களையும் ஒரு துறையில் இருந்து இன்னோர்துறைக்குஅனுப்புதல்,திறைசேரிக்குரிய செப்புக்காசுகள், செம்பு என்பனவற்றைக் கொண்டுசெல்லுதல் போன்ற வேலைகளுக்கும் அரசாங்கத்தின் வசம் இருந்த கடற்கலன்கள் மட்டு மன்றித்தனியார் வசமிருந்த தோணிகளும் பயன்படுத்தப்பட்டன.

முதலாளித்துவத்தின்தோற்றம் ll
யாழ்ப்பாணத்திற்கும் ஹம்பாந்தோட்டைக்கும் இடையில் உப்பு உற்பத்தி மையங்கள் பல இருந்தன. இவற்றில் இருந்து உப்பை பிற இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக தோணிகள் பயன்படுத்தப் பட்டன. வடக்கிலும் கிழக்கிலும் அக்காலத்தில் வேறு வகைப்போக்கு வரத்து வசதிகள் இருக்கவில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டின்துறை களுக்கும் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கும் கிழக்குக்கரையூடாக தோணிப்பிரயாணம்நடைபெற்றது. புகையிலை போன்றபல்வகைப் பொருட்கள்ஏற்றிஇறக்கப்பட்டன. ஊர்காவற்றுறை தோணிகட்டும் தொழிலுக்குரிய இடமாகச் சிறப்புப் பெற்றிருந்தது. யோசப் பார்க்கின்சன் என்பவர் 1825ஆம் ஆண்டில் 75தொன் கொள்ள வுடைய ஒரு பெரிய தோணியை ஊர்காவற்றையில் உள்ளவர்களைக் கொண்டு கட்டுவித்தார். வில்லியம் டி றுாய் என்பவரும் இன்னொரு கலனைக் கட்டுவித்தார் என்பதற்கும் ஆவணச்சான்றுகள் உள்ளன.
உள்நாட்டுவர்த்தகம் அமோகமாக இருந்தது என்றும் கூறுவதற்கு இல்லை. தோணிக்காரர்கள்தமக்குப்போதிய வேலை கிடைக்கவில்லை என முறையிட்டனர் என்பதற்கு ஆதாரமான குறிப்புக்கள் உள்ளன. 1820ஆம் ஆண்டில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் நான்குபேர் தமக்குப் போதிய வேலை வழங்கப்படவில்லை என முறையிட்டனர். 1825 ஆண்டில் பருத்தித்துறையைச் சேர்ந்த மூன்று பேர் பருத்தித்துறை - திருக்கோணமலை இடையிலான புகையிலை ஏற்றியிறக்கல் வேலை தமக்குத்தரப்படவேண்டும் என்று மனுப்போட்டனர்.
தென்னிந்தியாவின் கிழக்கு மேற்குக் கடலோரத்துறைகளுக்கும் இலங்கையின் துறைகளுக்கும் இடையே தோணிகள் மூலம் ஏற்றி யிறக்கல் வேலைநடைபெற்றது. இலங்கையிலிருந்துசாராயம், பாக்கு, புகையிலை, தேங்காய், கொப்பரா,தும்பு, தேங்காய் எண்ணெய் என்பன இந்தியத்துறைகளுக்கு தோணிகளில் கொண்டு செல்லப்பட்டன. மலை யாளத்திலும் கிழக்குக்கடற்கரைப்பகுதிகளிலும் இலங்கையின்சாராயம் விற்பனையாயிற்று. அங்கிருந்து தோணிகள் திரும்பும் போது அரிசி, துணிமணி என்பன தோணிகளில் கொண்டுவரப்பட்டன. சென்னை, மும்பாய் என்ற இரு இடங்களிலும் இங்கிலாந்தில் இருந்து இறக்கு மதியான பொருட்கள் கிடைத்தன. இலங்கை வர்த்தகர்கள்சாராயத்தைக் கொடுத்து அதற்குப்பதிலீடாக இப்பொருட்களைப் பண்டமாற்றாகப் பெற்றனர். இவைபற்றி அக்காலத்தில் இலங்கையில் வருமானத்துறை

Page 22
12 அநாமதேயங்களாக இருந்தோர்.
அதிகாரியாக இருந்த பெர்ட்டலொக்கி (Bertolacci) என்பவர் குறிப் பிட்டுள்ளார்.
வடமாகாணத்திலும் கிழக்குமாகாணத்திலும் கடலோடிகளாகவும் தோணி உடமையாளர்களுமாக தமிழர்களும், முஸ்லிம்களும் செயற் பட்டனர். பேருவளை பகுதியின் தோணிக்காரர்கள் பெரும்பான்மை முஸ்லிம்களாவர். கடலோரவர்த்தகத்திலும் தென்னிந்தியாவுடனான கப்பல் வர்த்தகத்திலும் சிங்களவர்களும் கணிசமான அளவில் பங்கு கொண்டனர். சிங்களவர் கப்பல் ஒட்டுதல், கடல்வர்த்தகம் என்பன வற்றில் ஈடுபடவில்லை. அவற்றில் அக்கறை கொள்ளவில்லை என்று எமர்சன் ரெனற் எழுதியிருக்கிறார். இவ்வாறு பரவலாக நம்பப்பட்டு வந்த இந்தக்கருத்துக்குமாறுபட்டநிலை இருந்தது. சிங்களவர்த்தகர்கள் கடல் வாணிபத்தில் ஈடுபட்டமைபற்றிபி.ஜே. பெரரா, கொத்தலாவல ஆகிய இக்கால எழுத்தாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். மைக்கல் றொபர்ட்ஸ் குஸ்டாவஸ்ஜயவர்தன என்போர்வாய்மொழி வரலாற்றுச் சான்றுகளை ஆதாரம் காட்டி பரம்பரை பரம்பரையாகக் கடலோடும் தொழிலில் ஈடுபட்ட சிங்களக் குடும்பங்கள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளனர். தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் ஆகிய எல்லா இனத் தவர்களும் கப்பல் வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்பதே உண்மை.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் சிங்கள வர்த்தகர் கடலோடும் தொழிலில் ஈடுபட்டமைக்கானஆதாரங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக மொறட்டுவகடலோடிகள்தொழிற்பட்டபகுதியாகச்சிறப்புப் பெற்றது. கரையோரக்கப்பல்வர்த்தகமும், இந்தியாவுடனானகப்பல் வர்த்தகமும் விரிவாக்கம் பெறவாய்ப்பு:அற்றதாக இருந்தது.அத்தோடு தோணிகளின் கொள்ளளவும் குறைவாக இருந்தது. இவ்வாறானகுறைபாடுகள் உடை யதாக இருந்த இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு ஆரம்ப மூலதனத்தை திரட்டிக் கொண்ட முயற்சியாளர் குடும்பங்கள் பின்னர் காணிகளை விலைக்குக் கொள்வனவு செய்வதிலும், சாராயக்குத்தகை, ஆயக் குத்தகை என்பனவற்றிலும்தம் தேட்டங்களை முதலீடு செய்து உயர்ச்சி பெற்றன.
உள்ளுர் வர்த்தகம்
பிரித்தானிய ஆட்சியின் தொடக்ககாலத்தில் உள்ளூர்வர்த்தகத்தில் பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு மாட்டுவண்டில்கள் உபயோகப் படுத்தப்பட்டன. மாட்டுவண்டிக்காரர்கள் போக்குவரத்துத்துறையில்

முதலாளித்துவத்தின் தோற்றம் 13
ஈடுபட்டுநிறைய வருமானம் பெற்றனர். சொத்துக்களைச் சேர்த்தனர். தோணிக்காரர்கள்போன்றுமாட்டுவண்டிக்காரர்கள்கணிசமானஅளவில் மூலதனம் இடுதல் அவசியமில்லை. சிறிய முதலுடன் மாட்டுவண்டி ஒன்றைவைத்திருக்கலாம். இத்துறையில் முதலீடுகள்பரவலாக அமைவ தற்கும் லாபம் பலரின் கைகளில் சேர்வதற்கும் கூடவாய்ப்பு இருந்தது. கோப்பிப்பயிர்ச்செய்கைவர்த்தகமுறையில்ஆரம்பிக்கப்பட்டபொழுது கோப்பியைக் கொழும்புத் துறைமுகத்திற்கு ஏற்றுவதற்கு மாட்டு வண்டிகளே பயன்படுத்தப்பட்டதால் இத்தொழில்துறை விரிவாக்கம் பெற்றது. கொழும்பு - கண்டி வீதியில் மாட்டுவண்டிகளின் போக்கு வரத்து அதிகரித்தது. மொரட்டுவவைச் சேர்ந்த வர்ஷாஹென்னடிகே ஜெரனிஸ் சொய்சா மாட்டுவண்டி வைத்து வியாபாரம் செய்வதில் முன்னோடியாக இருந்தார். 1820இல் வண்டிக்காரர்கள் பலரைத் தன் னுடன்அழைத்துக்கொண்டு இவர்கண்டிக்குப் போனார். பிரித்தானியர் ஆட்சிக்கு முன்னரே கண்டிக்கும் கரையோரத்திற்கும் இடையிலான வர்த்தகம் விருத்தியுற்று இருந்தது. (இந்த விடயம் பலரின் கவனிப்பை பெறாத ஒன்று). டச்சு ஆட்சியின் போது கண்டி கரையோர வர்த்தகம் வளர்ச்சி பெற்றது. பிரித்தானியஆட்சியின்முதல்முப்பது ஆண்டுகளில் இவ்வர்த்தகம்துரிதமாக வளர்ந்தது.
1833 அளவில் வர்த்தகத் துறை நடவடிக்கைகள் முன்னரில்லாத அளவுக்குதுரித வளர்ச்சி பெற்றன. உணவுப்பொருட்கள், மதுபானம், எரிபொருள், ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் என்பன கண்டியில் வதிந்த ஐரோப்பிய முயற்சியாளர்களுக்கு வழங்க வேண்டியிருந்தது. அரசாங்கம் கொண்டு வந்தநிறுவனமுறைச்சீர்திருத்தங்கள் உள்நாட்டு வர்த்தகம் விருத்தியுற உதவியது. 1833இல் இராஜகாரிய முறை ஒழிக் கப்பட்டது. கறுவாவர்த்தகத்தில் அரசு கொண்டிருந்த ஏகபோக உரிமை நீக்கப்பட்டது. தேங்காய்,காரியம் என்பனவற்றின்ஏற்றுமதியில்தனியார் வர்த்தகர்கள் அனுமதிக்கப்பட்டனர். 1830களில் கோப்பிச்செய்கை புகுத்தப்பட்டதும் ஐரோப்பிய மூலதனம் உள் வந்தது. கூலித்தொழில் அதிகரித்தது; நவீன போக்குவரத்துமுறையும் வர்த்தகமும் விருத்தியா யிற்று.நிலமானதுசந்தையில் வாங்கவும் விற்கவும்கூடிய பண்டம் என்ற நிலை ஏற்பட்டது. சுருங்கக் கூறின் பெருந்தோட்டப் பொருளாதார முறைக்கானஅடித்தளம் இக்காலத்தில் இடப்பட்டது.
பண்டைக்காலம் முதல் இருந்து வந்த உள்ளூர் வர்த்தகம் பெருந் தோட்டமுறைஆரம்பிக்கப்பட்டவுடன்புதிய பரிமாணத்தைப் பெற்றது.

Page 23
14 அநாமதேயங்களாக இருந்தோர்.
இலங்கை வர்த்தகர்களுள்முஸ்லிம் வர்த்தகர்கள் குறிப்பிட்டுச்சொல் லப்பட வேண்டியவர்கள். முஸ்லிம்கள் அராபியாவிலிருந்தும் தென் னிந்தியாவிலும் இருந்தும் இங்கு வந்து குடியேறிய வர்த்தகர்களின் சந்ததியினராவர். இவ்விதம் குடியேறியோர் உள்ளூரவர்களுடன் மண உறவு, மதமாற்றம் என்பன மூலம் கலந்து இலங்கையின் முஸ்லிம் சமூகமாக உருவாகினர். வெளிநாட்டு வர்த்தகம், உள்ளூர்வர்த்தகம், ஊர் ஊராகத்திரிந்து தொலைதூரக்கிராமங்களில் வர்த்தகம் செய்தல் ஆகிய எல்லாவகை வர்த்தகத்திலும் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். மார்க்கோ போலோ (13ம் நூற்றாண்டு) போத்துக்கீசப் பயணியான பார்போசா (Barbosa), ரெனன்ற் ஆகியோர் குறிப்புக்கள் முஸ்லிம்களின் வர்த்தக முயற்சிகளின்முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
கொழும்பு நகரத்தின் புறக்கோட்டைப்பகுதி (பெற்றா - Pettah) டச்சுக்காரர்காலத்தில் டச்சுப்பறங்கியர்களின் குடியிருப்புப் பகுதியாக இருந்தது. பிரித்தானியர்காலத்தில் புறக்கோட்டை முஸ்லிம் வர்த்தகர் களும், நாட்டுக் கோட்டைச் செட்டிகளும் தம் வர்த்தகநிலையங் களை வைத்திருந்த வர்த்தக மையமாகியது. கப்பர் (Capper) என்பவர் Suid giffGÚSlaiv (1877) Gisgyu'hui (B5SUub (The Black Town) 6 TGðagy péi கோட்டையைக் குறிப்பிடுகிறார். மட்டக்களப்பையும் அதனைச்சார்ந்த கிழக்கு கரையோரத்திலும் இருந்து கண்டியின் உட்பகுதிக்கான வர்த்த கமும் முஸ்லிம்கள் வசம் இருந்தது. பிரித்தானியர் கண்டியைக் கைப் பற்றிய பின் பிரித்தானியரின் பொருளாதார வர்த்தக நடவடிக்கை களுக்கு முஸ்லிம் வர்த்தகர்கள் உதவினர். கண்டிப்பகுதிகளின் உள்ளூர் வர்த்தகம் பிரித்தானியர் காலத்தில் மாற்றம் பெற்றது. முஸ்லிம்கள், செட்டிகள், மலேயர்ஆகிய சில பிரிவினர் மட்டும்கண்டியில் வர்த்தகம் செய்து வந்த நிலை மாறி கரையோரப்பகுதியின் சிங்களவர்களும் பெருமளவில் ஈடுபடத் தொடங்கினர். செட்டிகளும் முஸ்லிம்களும் கரையோரத்தில் இருந்து கண்டிக்கு சென்றனர். 1830க்கு முற்பட்ட காலத்தில்கண்டியுடனானவர்த்தகம் பெரும் லாபம் ஈட்டும் தொழிலாக இருக்கவில்லை. ஆதலால் ஆரம்ப மூலதனத்தின் திரட்சியில் இந்த வர்த்தகம் பெரும்பங்கை ஆற்றவில்லை என்பதையும் இவ்விடத்துக் குறிப்பிடுதல் வேண்டும்.

முதலாளித்துவத்தின்தோற்றம் 15
ஒப்பந்த முறையில் பொருட்களையும் சேவைகளையும் வழங்குதல் வர்த்தகத்தில்சம்பந்தப்பட்ட பண்டங்களில் கைத்தொழில் உற்பத்திகள் காணப்படவில்லை. நிலத்தில் விளைந்த பண்டங்களே பெரும் பங்கு வர்த்தகப் பண்டங்களாக இருந்தன. அவற்றின் பெறுமதிச்சேர்க்கை அற்பமானது என்றகுறிப்பை 1817இல்பெட்டலொக்கிகூறினார்.அக்கால வர்த்தகத்தின்தன்மையினை எடுத்துக்காட்டும் இக்குறிப்பு டச்சுக்கால வர்த்தகத்தின்தன்மையை விளக்குவதற்கும் பொருத்தமானது. டச்சுக் காலத்தில் களனியில் ஒரு செங்கல் உற்பத்திச்சாலையை ஆட்சியினர் நடத்தினர். அங்கு 764 தொழிலாளர்கள் வேலை செய்தனர். யாழ்ப் பாணத்தில் சாயம் காய்ச்சும் தொழில்நடத்தப்பட்டது. படகுகட்டுதல், திருத்தவேலைகள், தச்சுத்தொழில், இரும்பு வேலை, சுண்ணாம்பு தயாரித்தல், அச்சுவேலை என்பனவும் டச்சுக்காலத்தில் நடத்தப்பட்ட உற்பத்தித் தொழில்களாகும். இவையாவும் டச்சு அரசாங்கத்திற்குத் தேவையான பொருட்களின் வழங்கலிற்காகநடத்தப்பட்டவை. இவை லாபத்தை நோக்காக கொண்டுநடத்தப்படவில்லை. அந்நிய ஆட்சியில் கைவினைஞர்களிற்கும் அவர்களின் உற்பத்திகளுக்கும் ஏற்பட்ட கிராக் கியை இவை எடுத்துக் காட்டுகின்றன. டச்சு தேசத்து கைவினைஞர் களானதச்சர்கள், கொல்லர்கள் அங்கிருந்து வந்து உள்ளூரவர்களுக்குத் தொழிற்பயிற்சியையும் வழங்கினர். இலங்கையிலும் இந்தியாவிலும் சிறந்த வேலைப்பாடுகள் உடைய மரத்தளபாடங்களை ஆக்கும்திறன் கொண்ட கைவினைஞர்கள் இருந்தனர். டச்சுக்காரர்களும் பின்னர் பிரித்தானியரும் "மேஸ்திரி’ பட்டம் வழங்கி சிறந்த தச்சுவேலைக் காரரைக் கெளரவித்தனர். (மாஸ்டர் கிராவ்ப்ஸ்மன்-Master Craftsman என்பதே "மேஸ்திரி’ எனத்திரிபு பெற்றது). மொரட்டுவ போன்ற கரையோரநகரங்களைச்சேர்ந்த "கராவ'சாதியினர்தச்சுத்தொழிலிலும் கப்பல்களைக் கட்டுவதிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். பிரித் தானியர் காலத்தில் படகுகள், தோணிகள் கட்டுதல், கட்டிடவேலை முதலிய ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்ட முயற்சியாளர் வகுப்பு இவர்களிடை இருந்து உருவானது. கபிரியல் பெர்னாண்டோ (அல்லது பின்ஹாமி) பிரபலமான ஒப்பந்தகாரர். 1822இல் ஒப்பந்தவேலை ஒன்றிற்கு இவரிற்கு மேலதிகபணம் வழங்கப்பட்டதைஅபூவணம் ஒன்று குறிப்பிடுகிறது." 1832 வரை இவர் கட்டிட ஒப்பந்த வேலைகளில் மும்முரமாகத் தொழிற்பட்டார் என்றும் அறிய முடிகிறது. ஆரம்பகால

Page 24
16 அநாமதேயங்களாக இருந்தோர்.
ஒப்பந்தகாரர்களிற்கு அரசவேலைகள் அவ்வப்போது கிடைத்தன. இவற்றால் பெருமளவு வருவாய் கிடைக்கவில்லை.
பல பொருட்களிற்கான வழங்கலிற்கும் அரசாங்கம் ஒப்பந்தகாரர் களில் தங்கியிருந்தது. 1819ஆம் ஆண்டு ஆவணம் ஒன்றில் ஹெட்டிகே வில்லியம் கோமஸ் என்பவர் ஒப்பந்த முறையில் சுண்ணாம்பு வழங் கியது குறிப்பிடப்பட்டுள்ளது. பாரண்ட்டி சில்வா என்பவர் மாட்டு வண்டில்களை ஏற்றியிறக்கல் ஒப்பந்தத்தில் உபயோகித்தார். ஏழு கோறளையில் இருந்து கொழும்புக்கு நெல்லை ஏற்றியிறக்குவதற் காக 165 பவுண் இவருக்கு வழங்கப்பட்டது. 1829 மார்ச் முதல் 1830 பெப்பிரவரி வரையான காலத்தில் செய்த வேலைக்காக இப்பணம் வழங்கப்பட்டது. 1830ஆம் ஆண்டில் ஜெரனிஸ் சொய்சா கண்டியில் இருந்த செங்கல் ஆலைக்கும் சுண்ணாம்பு ஆலைக்கும் விறகு வழங்கு வதற்கு ஒப்பந்தம்செய்து கொண்டார். இவரதுசகோதரர்லூயிஸ் சொய்சா கண்டி, றம்பொட, நுவரெலிய ஆகிய இடங்களிற்கு அரிசி வழங்கு வதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். பெரிய ஒப்பந்தகாரர்கள் மட்டு மன்றிச்சிறிய ஒப்பந்தகாரர்களும் ஒப்பந்த வேலையில் ஈடுபட்டு பணம்
பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பகாலத் தொழில்களுள் உற்பத்திச் செயல்முறையை கொண்டஒரு தொழில் என்று கூறக்கூடியது தேங்காய் எண்ணெய் வடித்தல் மட்டுமே. 1820இல் நீராவி இயந்திரத்தால் இயக்கும் எண்ணெய் ஆலை ஒன்று நிறுவப்பட்டது. உள்ளூர் தேவை களுக்கும் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் வேண்டிய எண்ணெய் இந்த ஆலையில் உற்பத்தியானது. அக்காலத்தில் இது ஒரு புதுமையான தொழில்முயற்சி. வில்லியம்றட்(WilliamRudd) என்னும் ஆங்கிலப்பொறியலாளர்இந்தஆலைக்கு பொறுப்பாகஇருந்தார். 1830ல் 30,000கலன் தேங்காய் எண்ணெய் இங்கிருந்து பிரித்தானியாவிற்கு ஏற்றுமதியானது. 1820களிலும், 1830களிலும் இந்த ஆலைக்கு வேண்டிய கொப்பராவையும் விறகையும் ஒப்பந்தஅடிப்படையில் சுதேசிகளான ஒப்பந்தகாரர்கள் கிரமமாக வழங்கி வந்தனர்.
அரசாங்க ஒப்பந்த வேலைகள் அக்காலத்தில் அதிகவருவாயைத் தரவில்லை. அதனால் மூலதன ஆக்கத்திற்கு இது பெரும்பங்களிப்பை வழங்கவில்லை. இருந்த போதும் சிறுசிறு சேமிப்புக்களை ஒன்று திரட்டுதல். உறவினர்கள் ஒன்றுசேர்ந்து வியாபாரத்தை நடத்தும் வழக்கம்ஆகியனவிருத்தியுற்றன. பிற்காலத்தில் ஒப்பந்த வாய்ப்புக்கள்

முதலாளித்துவத்தின்தோற்றம்
பெருகியபோதுமுன்னுக்குவந்து பெரும்முயற்சியாளர்களிகவருவதற் குரிய பலத்தை பலருக்கு இவை வழங்கின.
காணிகளில் முதலீடு
19ஆம்நூற்றாண்டில் தோற்றம் பெற்ற முதலாளிகளில் காணிச் சொந்தக் காரர்கள் என்னும் வகுப்பினர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு பிரிவினராவர். பரந்தஅளவில்காணிகளைஉடமையாகக் கொண்டிருந்த இந்த வகுப்பின் தோற்றம், பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை முறை விருத்தியுற்றபோது அத்துறையில் புகுந்து கொள்வதற்கு வாய்ப்பை வழங்கியது. காணிகளின் உடமை ஆரம்ப மூலதனத் திரட்சியாகும். காலனித்துவ ஆட்சியின்நிர்வாகக் கொள்கைகள் முதலியார்கள் (Muda1iyars) என்னும் வகுப்பை உருவாக்கியது. ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்பாளர்களாகச் செயற்பட்ட ஒரு குழு என்று முதலியார்களைக்கூறமுடியும். முதலியார்கள் புதிதாக உருவாக் கப்பட்ட சமூக பொருளாதார அந்தஸ்துக்குழுவினர் ஆவர். இவர்கள் பரம்பரை நிலப்பிரபுக்கள் அல்லர். அந்நியர் ஆட்சிக்கு முற்பட்ட அரசர்கள் காலத்தில் இருந்து பிரபு வம்சமாக இருந்த தொடர்ச்சி இவர்களுக்குக் கிடையாது. போர்த்துக்கீச, டச்சு, பிரித்தானிய ஆட்சி யாளர்களுக்கு சேவை செய்வதன்மூலம் மேல்நிலைக்கு உயர்த்தப்பட்ட வர்கள்; காணிகளையும் பட்டம் பதவிகளையும் தம் சேவைக்குப் பதிலீடாகப் பெற்றவர்கள், நிலமானியப் பிரபுக்களின் வாழ்க்கைப் பாங்குகளை தம் மீது ஏற்றிக்கொண்டு சிங்களவரிடையே உள்ள முன்னணிக் குடும்பங்கள் என்ற தகுதியைத் தேடிக் கொண்டவர்களே முதலியார்கள். முதலியார் குடும்பங்களின் வரலாற்றை ஆராய்ந்த பற்றிக் பீபிள்ஸ் (Patrick, Peebles) ஆரம்பத்தில் கீழ்நிலை அந்தஸ்தில் இருந்தவர்கள்’ என்றும், டச்சு உத்தியோகத்தர்களின் மொழிபெயர்ப் பாளர்களாக சேவைசெய்தவர்கள்முதலியார்பதவிக்குநியமிக்கப்பட்டு உயர்ச்சி பெற்றனர் என்றும் கூறியிருக்கிறார். ஒரு வகைமாதிரியான முதலியார் குடும்பத்தின் வரலாறு இத்தகையதே என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் "நோபொடிஸ்' ஆகஇருந்து உயர்ந்தோரே முதலியார்கள்.
பிரித்தானியர்ஆட்சிக்காலத்தில் 1817-18கலகம் ஏற்பட்டபொழுது அரசுக்கு விசுவாசம் உடையவர்களாக இருந்த முதலியார்களுக்கு வெகுமதிகள் கிடைத்தன. அவர்கள் காணிகளின் உடமையாளர்களாக

Page 25
18 அநாமதேயங்களாக இருந்தோர்.
உயர்ச்சி பெற்றதன் பின்னணி இதுவே. இராஜகாரியம் என்ற அரச சேவைகளுக்காக உழைப்பாளர்களை திரட்டுதல், வருவாயைச் சேகரித்தல், தமது பிரதேச எல்லைக்குள் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுதல் என்பன இவர்களின் கடமைகளாக இருந்தன. பிரித்தானியர் இராஜகாரியம் என்ற கட்டாய உழைப்பு முறையை நீக்கிய பின்னர் முதலியார்களின் வேலையின் தன்மை மாறுபட்டது. மொழிபெயர்ப் பாளர், எழுதுவினைஞர், வரிசேகரிப்பாளர், வெள்ளைஉத்தியோகத் தர்களின் ஆலோசகர் என்ற பல கடமைகளை அவர்கள் செய்தனர்.அரச சேவைக்காக காணிகளை உரிமையாகக் கொடுக்கும் முறை 1833இன் சீர்திருத்தங்கள்மூலம் ஒழிக்கப்பட்டது. இருப்பினும் இந்த ஆண்டுக்கு முன்னராக 50,000 ஏக்கர்காணி முதலியார் வகுப்பின் கையில் சேர்ந்து விட்டது. சொலமன் டயஸ் பண்டாரநாயக்க, கரோலிஸ் டிலிவேரா, கிறிஸ்ரோபல் டி சேரம், அபிரகாம் டிசேரம் போன்ற செல்வாக்கு மிக்க முதலியார்கள் ஒவ்வொருவரும் 1000ஏக்கருக்கு மேற்பட்டகாணிகளின் உடமையாளர்களாக ஆகிவிட்டனர். பின்னர்கோப்பிச்செய்கை தொடங் கப்பட்டபோதுகாணிகளை அரசாங்கம் விற்பனை செய்தது. நிர்வாக வேலைகளில் சம்மந்தப்பட்டவர்களாய் இருந்த முதலியார்கள் நிர்வாக விடயங்கள் தொடர்பாக உள்ளும் புறமும் நடப்பவற்றை அறிந்து வைத்திருப்பவர்களாதலால்காணிவிற்பனையின்போதும் முடிக்குரிய காணிகளைதம் உடமையாக மாற்றிக்கொள்வதில் வெற்றிகண்டனர்.
கறுவா பயிர்செய்கையும் வர்த்தகமும்
டச்சுக்காரர்கள் கறுவாச் செய்கையையும் வர்த்தகத்தையும் ஏகபோக உரிமையாக வைத்திருந்தனர். கறுவா பிரதான வருவாய் மூலமாய் இருந்து வந்ததே இதற்கான காரணம், பிரித்தானியரும் ஆரம்பத்தில் கறுவாஏகபோக உரிமையைப் பேணிவந்தனர். காடுகளுக்குள் சென்று கறுவாப்பட்டை உரித்தல், சேகரித்தல் ஆகிய பணிகளை கண்ணும் கருத்துமாக மேற்பார்வை செய்யும் தேவை இருந்தது. அரச காணி களிலும் தனியார்காணிகளிலும் காட்டுப் பயிர்போல் வளரும் கறுவா மரங்களின் உடமை அரசுக்கே உரியது என்று டச்சு அரசாங்கம் சட்டம் போட்டது. இதை மீறுபவர்களுக்கு கடும்தண்டனை விதிக்கப்பட்டது. மரணதண்டனைகூடவிதிக்கப்பட்டது. இந்தச்செய்திகளைக் கொண்டு கறுவா வருமானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். கறுவாப்பட்டை உரித்தல், சேகரித்தல், குறிப்பிட்ட அளவு கறுவாப்

முதலாளித்துவத்தின்தோற்றம் 19
பட்டைகளை ஒப்படைத்தல் ஆகிய கடப்பாடுகளைக் கொண்ட சாதி யினர் இருந்தனர். சலாகம என்ற இச்சாதியினர் 14ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இருந்து வந்து இங்கே குடியேறினர். ‘சாலியர் எனவும் இவர்கள்அழைக்கப்பட்டனர்.துணி நெசவுசெய்தல் இவர்களது சாதித் தொழில் ஆக இருந்ததால் ‘சாலியர்' என்ற பெயர் பெற்றனர். கறுவாப்பட்டை உரிக்கும் தொழிலாளிகள் கடுமையான கட்டுப்பாடு களின் மத்தியில் வருந்தி உழைத்தனர். அடிக்கடி உழைப்பாளிகளின் கலகங்கள் ஏற்பட்டன. உழைப்பாளிகளைக் கட்டுப்படுத்தும் மேற் பார்வையாளர்குழு ஒன்றும் சலாகம சாதிக்குள் இருந்தே உருவானது. அந்நிய ஆட்சியாளர்களிற்கு கறுவா உற்பத்தியிலும். வர்த்தகத்திலும் மேற்பார்வையாளர்களாக இருந்தோர்காலப்போக்கில் பணமும் செல் வாக்கும் பெற்றவர்களாகஉயர்ந்தனர். யோன்டேவிஎன்னும் ஆங்கிலேயர் 1821இல் எழுதிய குறிப்பில்சாலியர்கள் "பணக்காரர்கள், முன்னேறும் ஊக்கம் உடையவர்கள்’ என்று குறிப்பிட்டார்."சாலியர்களில் இடைத் தரகர் போன்று செயற்பட்டோர் சொத்துக்களை சேர்த்துப் பணக்காரர் ஆகியது மட்டுமன்றி பட்டம் பதவிகளைப் பெற்று அந்தஸ்திலும் உயர்ந்தனர். டச்சுக்காரர் சலாகம சாதியினரில் இருந்து முதலியார் பதவிக்கு ஆட்களை நியமித்தனர். கொவிகம முதலியார்கள் எப்படி காணிஉடமையும் அந்தஸ்தும் பெற்று உயர்ந்தார்களே அதே போன்று சலாகம முதலியார்களும் உயர்ச்சி பெற்றனர். சலாகம வகுப்பிற்கு இரட்டை உயர்ச்சி கிடைத்தது.அவர்கள் உயர்சாதியாகவும் சமூக ஏணிப் படியில் உயர்ந்தனர். சிங்களசாதிக்கட்டமைப்பில்அவர்களின்படிநிலை 19ஆம் நூற்றாண்டின்பிற்பகுதியில் மாறத்தொடங்கியது. இவ்விதமாக கறுவா பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய ஒரு பிரிவினரில் இருந்து புதிய பொருளாதார வாய்ப்புக்களை பயன்படுத்தி உயர்ச்சி பெறும் முதலாளித்துவ வர்க்கம் தோற்றம் பெற்றது.
குத்தகை வியாபாரம் டச்சு, பிரித்தானிய ஆட்சியின் போது பல விதமான வரிகள் இருந்தன.
இந்த வரிகளில் சிலவற்றை அரசாங்கம் நேரடியாக அறவிடுவதில்லை. வரி அறிவிடும் வேலையைக் குத்தகையாகக் கொடுப்பார்கள். வரி அறவிடும் வேலை ஆண்டுக்கு ஒரு முறை ஏலத்தில் விற்கப்படும் ஏலத்தில் குத்தகையை எடுத்தவர் வரியைப் பணமாகவோ பொரு ளாகவோ உற்பத்தியாளர்களிடமிருந்து அறவிடுவார் (உதாரணம் நெல்

Page 26
2O அநாமதேயங்களாக இருந்தோர்.
வரி, மீன்வரி) வீதிகளிலும், ஆற்றுத்துறைகளிலும், பாலங்களிலும் ஆயவரிஅறவிடப்படும். சூதாட்டம், கோழிச்சண்டை போன்றன சில குறிப்பிட்ட இடங்களில் நடத்தப்படும். அவற்றை நடத்துவது குத்த கைக்கு விடப்படும். எல்லாவிதக்குத்தகைகளிலும் மிகுந்த வருமானம் தருவதுசாராயக்குத்தகையாகும். சாராயக்குத்தகையாளர் சிங்களத்தில் “ரெயின்டறால’ எனப்பட்டனர். குத்தகைக்காரர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாராயத்தின் சில்லறை விற்பனைக்குரிய உரிமையைக் குத்தகையாகப் பெறுவார். குத்தகைமுறைபலநன்மைகளைக் கொண்டி ருந்தது. இதனால் பலதீயவிளைவுகளும் ஏற்பட்டன. அரசாங்கம் ஏழை மக்களை வருத்திக்கொள்ளையடிக்கும் பணியை உள்ளூர்தரகர்களிடம் கொடுத்துதனதுநிர்வாகப்பணியை இலகுவாக்கியது என்றே கூறலாம். குத்தகை வியாபாரத்தில் ஈடுபட்டோர் நிறைய லாபம் உழைத்தனர். இந்த லாபத்தின் பெரும் பங்கு மூலதனமாகத் திரண்டு முதலாளி வர்க்கத்தின் தோற்றத்திற்கு உதவியது.
நெல் வரிக் குத்தகை
காலனியநாடுகள்யாவற்றிலும் ஏழைகளின்உற்பத்திப்பொருட்கள் மீது வரிவிதிக்கும் முறை இருந்தது. இலங்கையில் நெல்வரி ஏழைகளைச் சுரண்டும் வரிகளில் முதலிடம் பெற்றது. உற்பத்தியின் பத்தில் ஒரு பங்கை விவசாயிகள் வரியாகக் கொடுக்கவேண்டும். அரசாங்கத்தின் வரிமதிப்பீட்டாளன்முதலில் கிராமங்களிற்கு போய் ஒவ்வொரு விவசா யியும் கட்டவேண்டியவரி இவ்வளவு என்று மதிப்பிடுவான். அந்த மதிப்பீட்டு அறிக்கைகளின் படி ஒவ்வொரு மாவட்டத்தினதும் வரி அறவீடுகுத்தகைமுறையில் ஏலத்தில் விடப்படும். உயர் கேள்விக்காரன் அதனைக் குத்தகையாகப் பெற்றுக் கொள்வான். பிரித்தானியர் ஆட்சி யின் ஆரம்ப காலத்தில் விதானை, பாடசாலை ஆசிரியர்கள் முதலிய உள்ளூர் செல்வாக்குள்ள நபர்கள் நெல்வரி அறவிடும் குத்தகையை எடுத்துக் கொண்டார்கள். முதல் இருவகையினரும் அரசாங்க உத்தி யோகத்தர்களாகவும் கொய்கமசாதியினராயும் இருந்தனர். இவர்களோடு வியாபாரமுயற்சிகளில்நீண்டகாலஅனுபவம் உடையகராவ, கொய்கம சாதிகளையும் பிறசாதிகளையும் சேர்ந்த வியாபாரிகள், முஸ்லிம் வியா பாரிகள் ஆகியோரும் நெல்வரிக்குத்தகைகளை பெற்றனர். "இருபதாம் நூற்றாண்டின் உயர்குழாம் வகுப்பினரில் (Elites) பலர் குத்தகைக் காரர்களாக இருந்தனர். இவர்கள் நெல்வரியை அறவிடுவதில் ஆரம்பம்

முதலாளித்துவத்தின்தோற்றம் 2.
கொண்டு உயர்நிலை பெற்றனர் என்பதை தகவல்களை விரிவாகப் பரிசீலிப்பதன் மூலம் அறிய முடியும் என்று பற்றிக் பீபிள்ஸ் கூறி uerTiff.
மீன்வரி
மீனவர்களைச்சுரண்டும் மீன்வரிமுறை டச்சு ஆட்சிகாலத்தில் இருந்து வந்தது. பிரித்தானியரும் ஆரம்ப காலத்தில் இதனைத் தொடர்ந்தனர் மீனவர்கள் தாம்பிடித்த மீனின் ஒரு பகுதியை குத்தகைக்காரன், தலையாளி, கத்தோலிக்க தேவாலயம் என்று பங்கு போடவேண்டி யிருந்தது. கோல்புறுக்விசாரணைக்கமிசன்அறிக்கையில் இவ்வரியின் காரணமாக மீனவர் மீது ஏற்றப்பட்ட சுமை பற்றிக் குறிப்பிட்டிருப்ப தோடு இதனை நீக்க வேண்டும் என்றும் சிபார்சு செய்யப்பட்டது.' 1840ம் ஆண்டில் இவ்வரிநிக்கப்பட்டது.
ஆயக்குத்தகை
வீதிகள், படகுத்துறைகள், ஆறுகள்,நீர் ஏரிகள், கால்வாய்கள் மூலமாக பயணிக்கும் பொழுது பயணிகள் மீதும் அவர்கள் கொண்டு செல்லும் பொருட்கள் மீதும் விதிக்கப்படும் வரிஅரசாங்கத்தின் வருவாய் மூலங் களில் ஒன்றாக இருந்துவந்தது. இந்த வரியை அறவிடுவதற்கான குத்த கையை எடுத்து நடத்துவோருக்கு வருமானத்திற்கும் மூலதனத் தேட் டத்திற்குமான வழியாகவும் இது இருந்தது. களனிநதியின் முக்கிய படகுத்துறைகளாகவும் கடவையாகவும் விளங்கியவை பாலத்துறை (கிராண்ட்பாஸ்), பஸ்பெட்டல்(Pasbetal), முத்துவால் என்பனவாகும். பஸ்பெட்டல்துறை போக்குவரத்துமிகுதியாக இடம்பெற்ற இடமாகும் கரையோரப்பகுதிகளில் கைய்மலி (Kaymalee), வெவல்ல, கட்டான, கிரியுள்ள, கொட்டுகொட, களுத்துறை, பாணந்துறை என்பன முக்கிய கடவைகளாக இருந்தனபேராதெனிய, ஹல்ஒலுவ, வெவல்ல, கட்டு ஹாஸ் தொட்ட, மீவத்துற என்பன மத்திய மலைநாட்டின் முக்கிய கடவைகள். இவற்றை நடத்திய குத்தகைக்காரர் சிலர் தனித்து இத் தொழிலைச் செய்பவர்களாக இல்லாமல் வேறுவகைக் குத்தகைகள், வியாபார முயற்சிகளோடு இதனையும் ஒரு தொழில் முயற்சியாக நடத்தி வந்தனர். உதாரணமாக T டொன் பிலிப் கந்தப்பா என்னும் கொழும்புச் செட்டி பஸ்பெட்டல் துறையின் குத்தகையை 1826இல்

Page 27
22 அநாமதேயங்களாக இருந்தோர்.
நடத்தியபோதுகளனியில் ஒரு சூதாட்டநிலையம், கொழும்பில் 15ஆம் இலக்க சாராயத் தவறணை என்பனவற்றையும் குத்தகைக்கு எடுத்து நடத்தினார்.
கண்டிப் பகுதியின் படகுத்துறைக் குத்தகைக்காரர்கள் ஆரம்ப கட்டத்தில் வெளியாட்களாகவே இருந்தனர். 1825 - 1830 காலத்தில் கண்டிப்பகுதியில் படகுத்துறைக்குத்தகைகளைகரைநாட்டுச்சிங்கள வர்கள், முஸ்லிம்கள், கொழும்புச்செட்டிகள் என்போர்நடத்தினர்.
ஏனைய சிறு குத்தகைகள்
சூதாட்டம், கோழிச்சண்டை முதலிய கேளிக்கைகளுக்கான வரிகள் குத்தகை முறையில் அறவிடப்பட்டன. பெய்ரா வாவியில் மீன்பிடிப் பதற்குவரிஅறவிடப்பட்டது.பாக்குத்தோட்டங்கள்வைத்திருப்போரிடம் வரியறவிடப்பட்டது. இதுபோன்ற சில்லறை வரிகளின் குத்தகைகளை எடுத்துநடத்தும் முயற்சியாளர்கள் வேறுபலவகை வியாபாரங்களிலும் ஈடுபடுபவர்களாகவே இருந்தனர்.
எல்லா வகைக் குத்தகைகளிலும் மிகவும் பிரபலமானதும் அதிக லாபம்தருவதும் சாராயக்குத்தகையாகும். ஆரம்ப மூலதனத்திரட்சிக்கு உதவிய சாராயக்குத்தகை பற்றிஅடுத்த இயலில் நோக்குவோம்.
குறிப்புகள்
1. சுவடித் திணைக்களம் SLNA 6 1907B, 1825 யூன் 3ஆம் திகதி மற்றும்
யூலை 29ஆம் திகதி குறிப்புக்கள்.
2. SLNA 6 / 140, 1820ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் திகதி: யாழ்ப்பாணத் தவர்கள் நான்கு பேர் எழுதிய மனு உள்ளது. SLNA 6/9078, 1825ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் திகதி: பருத்தித்துறையைச் சேர்ந்த மூவர் திருக்கோணமலைக்கு கப்பல் மூலம் புகையிலையைக் கொண்டு செல்ல மனுப்போட்டனர். SLNA 6 / 964A கோவையில் மட்டக் களப்பில் இருந்து திருக்கோணமலைக்கு கப்பல் மூலம் அரிசி அனுப் பப்பட்ட விபரம் உள்ளது.
3. சி. டொன் பஸ்ரியன் எழுதிய 'டிசொய்சாசரிதய’ என்ற சிங்களதுரலில்
(1904) இக்குறிப்பு உள்ளது.
4. யோன் கப்பர் எழுதிய நூல், 1877
5. பெட்ட லொக்கி, 1817 : 237 - 38.

முதலாளித்துவத்தின்தோற்றம்
SLNA 21 / 52, 1822 GoLulu Srourî 6.
SLNA 33 / 1706, 1830 9ášGLmuři 22.
Lost Sørøv, 1973.
L996irgu, 1973:22, 27.
றயன், 1953; 109 - 10.
, மென்டிஸ், 1965 : 1, 98.
SLNA 21 160, 1825 டிசம்பர் 1ஆம் திகதி. SLNA 21 / 64, 1828 டிசம்பர் 7ஆம் திகதி.

Page 28
Θπιδο - 3
சாராய வர்த்தகமும் மேல் நோக்கிய உயர்ச்சியும்
காணிகளில் முதலிடுவது போல் சாராய வியாபாரத்திற்கு பெருந் தொகைப்பணம் தேவையில்லை. ஆரம்பத்தில் பணத்தைக்கடனாகப் பெறலாம். அல்லது பங்காளர்பணத்தைக் கொடுக்கலாம். மாதம்மாதம் சாராயம் விற்றுவரும் காசுசெலவுகளுக்குப்போதும்-பற்றிக்பீபிள்ஸ்
கரையோரப்பகுதிகளில் சாராய உற்பத்தித் தொழில் 1796-1833
19ஆம்நூற்றாண்டின் முற்பகுதியில் எல்லாவகை வியாபாரங்களையும் விட அதிகலாபம் ஈட்டக் கூடியதாக சாராய வியாபாரம் இருந்தது. சாராயம் வடித்தல், அதன் மொத்தவிற்பனை, ஏற்றுமதி, சில்லறை வியாபாரம் என்பன இதனோடு சேர்ந்த தொழில்களாகும். வியாபாரிகள் இடைத்தரகர்கள் இதில் ஈடுபட்டு பெரும் செல்வத்தை திரட்டினர். 1830க்குப் பிந்திய காலத்தில் பெருந்தோட்டத்துறை மூலம் விருத்தி பெறுவதற்குரிய அடிப்படை மூலதனத்தை இவர்கள் 1830க்கு முற்பட்ட காலத்தில் தேடிக் கொண்டனர்.
தென்னைமரத்தில் இருந்து பெறப்படும் கள்ளில் இருந்து சாராயம் வடிக்கும் தொழில் மேற்குக் கடற்கரைப்பகுதிகளிலும் தெற்குக் கடற்கரைப்பகுதிகளிலும் வளர்ச்சியுற்றது. டச்சுக்காரர்ஆட்சிகாலத்தில் சாராய உற்பத்தியும், வியாபாரமும் அரசின்கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்தது. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய முக்கிய நகரங்களில் அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுசாராயத்தவறணைகள் 1660க்களில் நடத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. டச்சு பறங்கிய இனத்தவர் கொழும்பில்நான்கு சாராயத்தவறணைகளைஇக்காலத்தில்நடத்தினர். பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றிய பின்னர்அனுமதிப்பத்திரங் களிற்குப்பதிலாக குத்தகைமுறையைக் கொண்டுவந்தனர். தவறணை

சாராய வர்த்தகமும் மேல் நோக்கிய உயர்ச்சியும் 25
கள் ஏலத்தில் விடப்பட்டன. சாராய வியாபாரம் அந்நிய ஆட்சியாளர் களால் உருவாக்கப்பட்டது.அரசாங்கத்தின்ஆதரவுடன்வளர்க்கப்பட்டது என்பதுவே நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடயம்.
சாராயம் வடித்தலும், மொத்த வியாபாரமும் சாராயத்தை வடித்தல், இந்தியாவிற்கு அதனை ஏற்றுமதி செய்தல், உள்ளூரில் சில்லறை வியாபாரம்நடத்துதல் என்ற மூன்று விடயங்கள் இவ்வியாபாரத்தின்அங்கங்களாக டச்சுக்காலம் முதல் இருந்து வந்தன. சாராயம் வடிப்போர்அதிகலாபத்தை ஈட்டும்குழுவாக இருக்கவில்லை. இவர்கள்நலிந்து போனநிலையில் இருந்தனர். மொத்த வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள், சில்லறை வியாபாரிகள் என்போரேசாராய வர்த்த கத்தின் பெரும் பங்கு லாபத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். குறைந் தளவு முதலீடு, பழமையான தொழில் நுட்பம் ஆகியன சாராயம் வடித்தல் தொழிலின்முக்கிய அம்சங்களாக இருந்தன. மொத்த வியாபா ரத்திலும் ஏற்றுமதியிலும் ஈடுபட்டோர் கொடுக்கும் முற்பணத்தைப் பெற்றுக்கொண்டு மலிவான விலையில் தம் உற்பத்திப் பொருளை வழங்கும் நிலையிலேயே பலர் செயற்பட்டனர். 1832ம் ஆண்டில் களுத்துறையைச் சேர்ந்த ஐந்துபேர் தம் தொழிலில் ஏற்பட்டநட்டம் பற்றி அரசுக்கு மனுச் செய்திருத்தனர். இருந்தபோதும் சாராய வர்த்த கர்கள் பலருக்கு இது வருமானம்தரும் துறையாகவே இருந்து வந்தது. டச்சு ஆட்சிக்காலத்தில் இருந்தே இவ்வர்த்தகத்தில் ஈடுபட்ட குடும் பங்கள் இருந்தன. சில குடும்பங்கள் பிரித்தானியர்ஆட்சிக்காலத்தில் புதிதாகச் சேர்ந்து கொண்டன. அரசாங்கத்தில் கீழ்நிலைப் பதவிகளில் இருந்தோர் பலர் இத்துறையில் கால் வைத்தனர். களுத்துறையைச் சேர்ந்த டொன் லோறன்சோ என்னும் பொலிஸ் விதானை 1820க்களில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டார். 1829இல் சாராயம் வடிக்கும் தொழி லையும் நடத்தினார். மொறட்டுவவைச்சேர்ந்த அப்பிரஹாம்டி மெல் மஹாவிதானையாக இருந்தவர். இவர் 1820க்களில் பிரபலம் பெற்ற சாராய வியாபாரியாகவும், சாராயம் வடிப்பவராகவும் இருந்தார். பிற் காலத்தில் சாராயக் குத்தகையில் முன்னணி பெற்று விளங்கிய குடும் பங்கள் பல 1830க்கு முற்பட்டகாலத்தில் இத்தொழிலில் சுறுசுறுப்பாக ஈடுபடத்தொடங்கியவர்களின்சந்ததியினரே என்பது கவனிக்கத்தக்கது. சாராயம் வடிப்போர் நலிந்த நிலையில் இருந்தபோதும், சாராய மொத்த வியாபாரிகள் நிறைய லாபம் ஈட்டினர். கொழும்பு மாவட்ட

Page 29
26 அநாமதேயங்களாக இருந்தோர்.
கலெக்டர் அறிக்கையின்படி 1823ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்டத் தில்அரசாங்கப்பண்டசாலைக்கு 120,000கலன்வழங்கப்படும் எனமதிப் பிடப்பட்டது. 1828இல் இது 144,000கலன்களாக அதிகரித்தது. இதனை வழங்கும் மொத்த வியாபாரிகள் நிறைய லாபம் உழைத்தனர். கீழ் நிலைப் பதவிகளில் இருந்த அரசாங்க உத்தியோகத்தர்களே இந்த வியாபாரத்திலும் ஈடுபட்டனர். பெட்ரோ பெரராவிஜயசிங்கஜயசூரிய (பட்ட பெந்திபதவி) டொன்டொமிங்கோஅப்பு(கொழும்பு) பெட்ரோ டி சில்வா (மொறட்டுவை) தெல்கெடேவிட்பீரிஸ் ஆகியோர் ஆரம்ப கட்டத்தில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டோரில் சிலராவர். இவர்கள் மொத்த வியாபாரத்தில் இருந்து சில்லறை வியாபாரத்திற்கு தம் தொழிலை விஸ்தரித்துப் பிரபலமானகுத்தகை வியாபாரிகளாயினர்.
சில்லறை வியாபாரம்
சாராயத்தின் சில்லறைவியாபாரமே அதிக லாபம் தருவதாக இருந்தது. மேற்குகரையோரத்திலும், மத்தியமலைநாட்டிலும் வியாபாரம்நன்றாக நடைபெற்றது. மாவட்டஅரசாங்கஅதிபர்கள்ஆண்டுதோறும்தவறணை களை நடத்தும் உரிமையை ஏலத்தில் குத்தகைக்கு விட்டனர். இக் குத்தகை முறையின்முக்கிய அம்சங்கள் சில பின்வருமாறு:
1. மாவட்டத்தின் அரசாங்க அதிபர் தவறணைகளை ஏலத்தில் விடுதல், அரசாங்கவருவாயைநிர்வகித்தல்ஆகிய பணிகளுக்குப் பொறுப்பாக இருந்தார். சாராயக்குத்தகைக்காரர்அரசாங்க அலு வலர்களுடன் நல்லுறவைப் பேணுவதன்மூலமே கச்சேரி அலு வலகங்களில்தங்கள் காரியங்களைச்சாதிக்கவும் வியாபாரத்தில் வெற்றிபெறவும்நிலைத்திருக்கவும் முடிந்தது.
2. ஏலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குத்தகைத் தொகையை சாராய விற்பனைவருமானத்தில் இருந்துதடவைப்பணம் என்ற முறை யில் செலுத்தலாம். இதனால்குத்தகைக்காரர்கள் பெரும்தொகை பணத்தை ஆரம்பமுதலீடாக வைப்புச்செய்யும் தேவை இருக்க வில்லை. குத்தகைஒப்பந்தக்காரர்கள்பிணையாளிகளின்செத்தை ஈடாகவும் கொடுத்தல் போதுமானது. இதனால் இந்த வியா பாரத்தில் ஈடுபடப்பலர்போட்டியிட்டு முன்வந்தனர்.
3. சாராயம் வடிப்போருக்கு ஆண்டுதோறும் அனுமதி பத்திரம் வழங்கப்படும். அவர்களின் உற்பத்திப் பொருட்கள் அரசாங்கப்

சாராய வர்த்தகமும் மேல் நோக்கிய உயர்ச்சியும் 27
பண்டசாலையில் வழங்கப்பட்டு இருப்புச்செய்யப்படும். பின்னர் அங்கிருந்து குத்தகைக்காரருக்கு விநியோகிக்கப்படும். இவ்வித மாக சாராய வர்த்தகம் அரசாங்கத்தின் கடுமையான கட்டுப் பாட்டுடனும் மேற்பார்வையிலும் நடத்தப்படும் வியாபாரமாக இருந்தது. 4. சாராய வர்த்தகத்தை மேற்பார்வை செய்தல், கடத்தலையும், களவையும் தடுத்தல், சட்டவிரோத விற்பனையைத் தடுத்தல், தவறணைகளில் அமைதியைப்பேணுதல், குற்றச்செயல்களைத் தடுத்தல் முதலிய வேலைகளுக்காக அரசாங்க யந்திரம் ஒன்று சாராயவர்த்தகத்தை இயக்குவதற்குத் தேவைப்பட்டது. பொலி சும்,நீதிமன்றங்களும் இவ்வேலையில் சம்மந்தப்பட்டிருந்தன. மேற்குறித்தஅம்சங்கள் காலனித்துவ அரசாங்கத்திற்கும் அதன் நிர்வாகயந்திரத்திற்கும் எழுச்சிபெறும் முதலாளிவர்க்கத்திற்கும் இடையில் இருந்த நெருங்கிய தொடர்பையும் பிணைப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. கொழும்பு நகரில் புறக்கோட்டை, மோதரை, கொச்சிக்கடை, சென்ற் போல்ஸ் என்பனவும்துறைமுகத் தொழிலாளர்கள் குடியிருப்புக்களை அண்டியனவுமான தவறணைகளில் சாராய வியாபாரம் அமோகமாக விருந்தது. மேற்கு மாகாணத்தில் சாராய வியாபாரம் லாபம் தரும் தொழிலாக நடத்தப்பட்ட ஏனைய இடங்களாக பாணந்துறை, களுத் துறை, நீர்கொழும்பு என்பன விளங்கின.
பொதுமக்களின் பாவனைக்கான தவறணைகளைவிட இராணு வத்தின் "கன்டீன்களுக்கு (உணவுச்சாலைகள்) சாராயம் வழங்குதல் லாபத்தை தரும் வியாபாரமாகும். பிரித்தானிய ராணுவம், அதனோடு சேர்ந்திருந்த உள்ளூர் ராணுவத்தினர், “கபிரிகள்’ என்னும் ஆபிரிக்க ராணுவத்தினர் ஆகியோர் அருந்துவதற்கான மதுபானம் இராணுவக் கன்டீன்களுக்கு வழங்கப்படும். “பயணியர் என்றுஅக்காலத்தில்அழைக் கப்பட்ட இந்தியக் கூலி தொழிலாளர்கள் இராணுவத்தின் மேற்பார் வையில் வீதி அமைப்பு வேலைகளைச் செய்தனர். இவர்களுக்கும் சாராயம் கன்டீன்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டது. கண்டியை கைப்பற்றிய பின்னர் 1818இல் கண்டிகலகம் ஏற்பட்டது. இதன்பின் கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, றுவான்வெல ஆகிய இடங்களில்இராணுவமுகாம்கள்அமைக்கப்பட்டன. இராணுவக் கன்டீன் ஊடானசாராய வியாபாரமும் இதனால் அதிகரித்தது.

Page 30
28 அநாமதேயங்களாக இருந்தோர்.
1820ஆம் ஆண்டின் பின்னர் தவறணைகள் கண்டிய மாகாணப் பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பகட்டத்தில் சாராயத்தை கண்டியில் உள்ள மத்திய பண்டசாலையில் இருந்து பிற இடங்களிற்கு எடுத்துச் செல்லும் வேலையை அரசாங்கமே செய்தது. மாட்டுவண்டி களில்சாராயத்தை ஏற்றிஅனுப்புவர். கண்டியில் இருந்து பதுளைக்கு 25 மாட்டுவண்டில் நிரை 185கலன் சாராயத்தை எடுத்துச் சென்றதை அரசாங்கஆவணம் குறிப்பிடுகிறது. இவ்வாறுசாராயத்தை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் போது சாராயத்தில் குறைவு ஏற்படுதல் பற்றிய சுவாரசியமான செய்திகள் ஆவணங்களில் உள்ளன. மாயமாக மறைந்து விடும்சாராயத்திற்கு கணக்கு காட்டுவதற்காக 800கலன்களுக்கு 12கலன் கழிவு வழங்கப்பட்டது. அப்படியிருந்தும் ஒருதடவை 1827ம் ஆண்டில் கண்டியில்இருந்துறுவன்வலைக்குசாராயம்அனுப்பியபோது 77கலன் சாராயம் காணாமல் போனதை கண்டியின் வருமான அதிகாரி அதிர்ச்சி யோடும் கவலையோடும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் ஏற்படுத்தப்பட்ட தவறணைகளும் சாராய வியாபாரமும்
அரசாங்கம் தனித்தனித்தவறணைகளுக்கான குத்தகைகளை ஏலத்தில் விட்டது. இதனால் போதிய மூலதனம் இல்லாதவர்களும் தவறணை குத்தகை எடுப்பதற்கு போட்டியிட்டனர். இதனால் நிர்வாகம் சிக்கலா னதாக இருந்தது. போட்டியாளர்கள் போட்டியிட்டு தவறணையை எடுத்து பின்வியாபாரத்தில்நட்டமடைவதும், ஒப்பந்தத்திற்பொருந்திய தொகையைச்செலுத்தமுடியாமல் கைவிடுவதும் கூடநிகழ்ந்தது.
1832இல் குத்தகை முறையில் ஒரு மாற்றம் கொண்டுவரப்பட்டது. கொழும்பு மாவட்டத்தின் கோறளைப்பிரிவுகளில் தவறணைகளை தனித்தனியாக அல்லாமல் ஒரு பற்றுக்குரிய அனைத்தையும் கூட்டாக ஏலத்தில் விட்டனர். கொழும்புநகரில் உள்ளதவறணைகள் 1834வரை தனித்தனியாகவே ஏலத்தில் விடப்பட்டன. கூட்டாக ஏலம் விடும் முறையினால் தகுதியற்றவர்களை விலக்குவதற்கு முடிந்தது. இது இத்துறையில் தனியுரிமை முறை வளர்வதற்கும் உதவியது."
சாராய விற்பனை படிப்படியாக அதிகரித்ததை அரசாங்க அறிக் கையில் பெறக்கூடிய மதிப்பீடுகள் உறுதிப்படுத்துகின்றன.

சாராய வர்த்தகமும் மேல் நோக்கிய உயர்ச்சியும் 29
1816ஆம் ஆண்டு - 23,250கலன்கள்
1823ஆம் ஆண்டு - 120,000கலன்கள்
1828ஆம் ஆண்டு-144,000கலன்கள் எனக் கொழும்பு மாவட்டத்தின் விற்பனை அதிகரித்துச் சென்றது. 1826ஆம் ஆண்டில் கொழும்பிலும் அதன் சுற்றயல் பகுதிகளிலும் இருந்து கிடைத்தஅரசவருவாய் 4295 பவுண்களாக இருந்தது. 1827இல் இது583பவுண்களாக 30% அதிகரிப்பைக்காட்டியது.
கண்டிப்பகுதியிலும்சாராயவிற்பனைகுறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியது. கண்டிக்கச்சேரியின்பரிபாலனத்தின்கீழ் இருந்ததவறணை களின் விற்பனை
1826ஆம் ஆண்டில் - 7580கலன்
1827ஆம் ஆண்டில் - 10300கலன் கண்டி நகரிலும், இரியாகமவிலும் இருந்த தவறணைகளின் விற்ப னையும் அதிகரித்தது.
தென்மாகாணத்தின் தவறணைகள் தென்மாகாணத்தில் சாராயக்குத்தகை வருமானம் மிகக்குறைவாகவே இருந்தது. இங்கு கிடைத்த வருமானத்தை கொழும்பு மாவட்டம் மத்திய மாகாணம் என்பனவற்றுடன்ஒப்பிடமுடியாது. காலிநகரிலும், கொக்கல, அஹன்கம, பெந்தோட்டை, ஹிக்கடுவ, பத்தேகம ஆகிய இடங்களிலும்தவறணைகள் இயங்கின. 1834ம் ஆண்டில் காலி மாவட் டம் முழுமைக்குமாக கிடைத்த அரசாங்க வருமானம் 918 பவுண் களாகும். காலிநகரத்தில் ஒருதவறணை400பவுண்களுக்கும்இன்னொரு தவறணை315 பவுண்களுக்கும் குத்தகைக்கு விடப்பட்டது. பத்தேகம (24 பவுண்) கொக்கல (9 பவுண்) வெலிதோட்ட (1.10 பவுண்) ஆகிய இடங்களின் தவறணைக் குத்தகை மிகவும் குறைவானதாக இருந்தது காலியின் தவறணைகளை உள்ளூரவர்களே குத்தகைக்கு எடுத்தனர். இவர்களுள்பலர்அரசாங்கஉத்தியோகத்தர்களாகவும்ஆசிரியர்களாகவும் இருந்தனர். எத்தலிகொடகமகே பஸ்தியன் டி சில்வா என்பவர் 1830க் களில் காலியின் முக்கிய குத்தகைக்காரராக இருந்தார்.

Page 31
30 அநாமதேயங்களாக இருந்தோர்.
வடமாகாணத்தின் தவறனைகள் டச்சு ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மாற்றங்கள் குறிப் பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் ஏற்படவில்லை. பிழைப்பூதிய விவசாயம்மக்களின்வாழ்க்கைக்கானஆதாரமாகஇருந்தது. புகையிலை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது காசுக்கு விற்கக்கூடிய பயிராக இருந்தது. இங்கு சாராயவிற்பனைக்கு போதிய சந்தையிருக்க வில்லை. இதனால் பிறஇடங்களைப் போன்று தமிழர்மத்தியில் மூல தனம்திரளும் வாய்ப்பும் இருக்கவில்லை. யாழ்ப்பாணம், ஊர்காவற் துறை, பருத்தித்துறைஆகிய இடங்களில் 1834-1835ஆம் ஆண்டுகளில் தவறணைகளை எடுப்பதற்குகுத்தகைக்காரர்கேள்விமிகக் குறைவாக இருந்ததால் அரசாங்கமே இவற்றை நடத்தத் தீர்மானித்தது. குத்தகை எடுக்கமுன்வந்தவர்கள்தகுதியுடையவர்களாகஇருக்கவில்லை.நிர்வாக ரீதியாகத் தொல்லை தருபவர்களாக இருந்தனர் என்று ஜே. ஏ. டைக் என்றஅக்காலஅரசாங்கஅதிபர்குறிப்பிட்டிருந்தார்."
மன்னார், முல்லைத்தீவு என்ற இருபகுதிகளும் வட பகுதிக்குள் அமைந்த ஏனைய இரு இடங்களாகும். 1835ஆம் ஆண்டு ஆறுமுகம் மாசிலாப்பிள்ளை என்பவர்(இவர்மன்னாரைச்சேர்ந்த வேளாளர் என அறிய முடிகிறது) மன்னார் தவறணையை 195 பவுண்களிற்கு குத்த கைக்கு எடுத்தார்: முல்லைத்தீவு தவறணை யோன் யோக்கிம் டொமினிக் என்பவரால் 1833இல் 11 பவுண்களிற்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டது. கொன்டச்சி முத்துக் குளிப்பு இடமானதால் இங்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் தவறணையின் வாடிக்கையாளர் களாக இருப்பதுண்டு. 1835இல் இத்தவறணையை இராமலிங்கம் இராமசாமிப்பிள்ளை என்பவர் 113பவுண்கள் செலுத்திக்குத்தகைக்கு எடுத்தார். வடபகுதியின் தவறணைகளின் வருமானம் குறைவாக இருந்ததற்கு ஒரு காரணம் பனங்கள்ளில் இருந்து சாராயம் களவாக வடிக்கும் வழக்கம் அங்கு இருந்ததாகும். ஆனால் மிக முக்கியமான காரணம்பிரித்தானியர்ஆட்சியின்போதுவடபகுதியின் பொருளாதாரம் தேக்கமடைந்துகாணப்பட்டதுதான். பெருந்தோட்டங்களின்தோற்றம் இப்பகுதிக்கு வெளியே தான் நிகழ்ந்தது. கிழக்கு மாகாணத்திலும் ஏறக்குறைய இதே நிலைதான். அங்கும் மூலதனத்தின் திரட்சிக்கான வாய்ப்புக்கள்இருக்கவில்லை.

சாராய வர்த்தகமும் மேல் நோக்கிய உயர்ச்சியும் 31
குத்தகை வியாபாரிகள் டச்சு ஆட்சியின் போது செட்டிகளும், பறங்கியரும் மட்டும் கொழும் பில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டனர். பிரித்தானியர் ஆட்சியில் சிங்களவர்கள் இவ்வியாபாரத்தில் பெரும் எண்ணிக்கையில் புகுந்தனர். செட்டிகள், பறங்கியர் ஆகியோர் பிரித்தானியர் காலத்திலும் சாராயக் குத்தகைகாரர்களாக இருந்து வந்தனர். தூத்துக்குடியைச்சேர்ந்த பரதவர் சமூகத்தினரும் சாராயக்குத்தகை வியாபாரத்தில் ஈடுபட்டனர். மனுவல் டி குரூஸ், யுவான் டி குரூஸ் ஆகியோர் நீர்கொழும்புப் பகுதியில் செயற்பட்ட பரதவ சமூகத்தினைச்சேர்ந்த குத்தகைக்காரர்களாவர். சில பிரித்தானியர்களும் சாராயக் குத்தகை வியாபாரத்தில் ஈடுபட்டனர். கோப்பிச்செய்கையின் முன்னோடியான ஜோர்ஜ் பேர்ட் (George Bird) 1825இல் உடபலாத்ததவறணையைக் குத்தகைக்கு எடுத்தார். ஏனைய சமூகத்தவர்களைவிடகரையோரப்பகுதியின்சிங்களவர்களேசாராயக் குத்தகை வியாபாரத்தில் பெருமளவில் ஈடுபட்டனர். கிராமவிதானை, பொலிஸ் விதானை, பட்டபந்தி ஆகிய அரசாங்கப்பதவிகளில் இருந்த கரைநாட்டு சிங்களவர்கள்சாராய வியாபாரத்தில் புகுந்தனர். இவர்களில் பெரும்பாலோர் “கொய்கம் ‘கராவ' என்றஇருசாதிகளையும் சேர்ந்தவர் களாயும் தமது ஊர்களில் செல்வாக்கு உடையவராயும் இருந்தனர். அரசாங்க உத்தியோகத்தர்களாக இருந்தவர்களுக்கு அரசு அலுவலகங் களுடன் தொடர்பு இருந்தது; கையில் சிறிதளவு பணம் கிடைக்கும் வாய்ப்பும் தவறணைகளை நடத்தக்கூடிய திறமையும் அறிவும் இவர் களிடம் இருந்தன.
1830க்கு முற்பட்டகாலத்தில் பிரபலம் மிக்க சாராயக் குத்தகைக் காரர்கள் சிலரைக் குறிப்பிட்டலாம். இவர்களின் பெயர்கள் அரசாங்க ஆவணங்களில் திரும்பத்திரும்ப குறிக்கப்பட்டுள்ளன.
1. டொன்கரோலிஸ் ஆராய்ச்சி-1820க்களில் களுத்துறைபகுதியில்
தவறணைகளை நடத்தியவர். 2. ஹென்டிறிக்சுவாரிஸ் -1828இல் கொள்ளுப்பிட்டிதவறணையை குத்தகைக்கு எடுத்தவர். பிற்காலத்தில்முக்கிய முயற்சியாளராகத் திகழ்ந்தவர். 3. அப்பிரஹாம் டெப் - 1820க்களில் குத்தகைக்காரராகச் செயற் பட்டவர் - பிற்காலத்தில் இவரது குடும்பத்தினர் முன்னணிக் குத்தகைக்காரர்களாக விளங்கினர்.

Page 32
32 அநாமதேயங்களாக இருந்தோர்.
4. டொன் டானியல் - 1813-14 காலத்தில் கொழும்பு தவறணைக்
குத்தகையை நடத்தியவர்.
5. டொன் யஸ்ரினஸ் - 1826-32 காலத்தில் கொழும்பில் பல தவற
ணைகளைக்குத்தகைக்கு எடுத்தவர்.
6. டொன் டேவிட் அப்புஹாமி-1826இல் கொழும்பு தவறணை யையும் 1828இல் சென் செபஸ்டியன் தவறணையையும் நடத் தியவர்.
7. அப்பிரஹாம் டி மெல்- 1818இல் கொழும்பு தவறணையை
நடத்தினார்.
8. வீரஹென்னடிகே பெர்னாண்டோ குடும்பத்தினர் - பெட்றோ,
டேவிட் ஆகியோர்.
இக்காலத்தில் தனி ஒரு நபரோ, குழுவோ குத்தகைகள் எடுப்பதில் மேலாதிக்கம் செலுத்தும்நிலைஇருக்கவில்லை. அடுத்ததாகஇக்காலப் பகுதியில் குத்தகை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களில் சிலரே830க்குப் பின்னரும் இத்தொழிலில்நீடித்துச்செயற்பட்டனர். பலர்இக்காலத்தின் பின்னர் குத்தகை வியாபாரத்தைக் கைவிட்டனர். குறிப்பாக 1835ggit பின்னர் தவறணைகளைக் கூட்டாக ஏலத்தில் விட்டபொழுது பலர் குத்தகை வியாபாரத்தில் இருந்து ஒதுங்கிக்கொண்டனர். விதானலாகே டிமெல், தெல்கே பீரிஸ், வீரஹென்னடிகேபெர்னாண்டோ, மஹாமறக் கலாகே பெரரா, பாலப்புவடுகே மென்டிஸ் ஆகிய பெயர்கள் சாராயக் குத்தகை வியாபாரத்தில் 1830க்குப்பின்னரும் பலதசாப்தங்கள்நிலைத் திருந்த குடும்பப் பெயர்களாகும்.
கண்டிய மாகாணங்களில் கரையோர மாகாணங்களைச் சேர்ந்த ‘வெளி ஆட்களே குத்தகைக்காரர்களாய் இருந்தனர். நிலப்பிரபுக் களாகவும்,நிலத்தில்பயிரிடும் உழவர்களாகவும்இருந்தகண்டியமக்கள் வியாபாரத்தில் நாட்டமற்றவர்களாய் இருந்தனர். வியாபாரத்திறமை களும் இவர்களிடம் இருக்கவில்லை; கிராமத்தை விட்டு வெளியே போய் வியாபாரம் செய்வதற்கு இவர்கள் விருப்பம் காட்டவில்லை. கண்டியின் நிலப்பிரபுத்துவ குடும்பங்கள் வியாபாரத்தில் அக்கறை காட்டவில்லை. குத்தகைக்காரர்கள் மட்டுமல்லதவறணைகளைநடத்து வதற்கு தேவைப்பட்ட தொழிலாளர்களும், உதவியாளர்களும் கரை நாட்டை சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

சாராய வர்த்தகமும் மேல் நோக்கிய உயர்ச்சியும் 33
பெருந்தோட்டத்துறையின் தோற்றம் சாராய வியாபாரத்தில் பண்பு ரீதியானஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. முக்கியமற்றதாக இருந்த ஒருவியாபாரமானசாராய வியாபாரம் மிகமுக்கியமானதும் லாபம்தரும் தொழிலாகவும் மாறியது. நகரத்தொழிலாளர்களும், தோட்டத் தொழி லாளர்களும் எண்ணிக்கையில் பெருகிச்சென்றனர். சாராயத்தின் விற்ப னையும் இதனால் பல மடங்கு அதிகரித்தது. அரசாங்கம் தனியுரிமை முறையை ஊக்கமளிக்கும் முறையில் செயற்பட்டதனால் பலகுத்தகை காரர்கள் தமது தொழிலை விஸ்தரித்துப் பெரும் முதலாளிகளாக மாறினர். 1830இல் பலர் குத்தகை எடுப்பதற்குப் போட்டியிட்டனர்: 1835இல் மூலதன வசதியுடைய சிலரே குத்தகை எடுக்க முன்வந்தனர். துரிதகதியில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஒடுபாதையில் ஒடும் விமானம் ஒன்று மேற்கிளம்புவதை ஒத்ததான முதலாளித்துவ மேற்கிளம்பல் (Take off) நிகழ்ந்தது. சாராய வர்த்தகத்தால் முதலாளித்துவம் மேல் நோக்கிய உயர்ச்சியை அடைந்தது.
குறிப்புகள்
2. SLNA 33 / 1691, 1922 ஆகஸ்ட் 13.
SLNA 33 / 1696, 1825 டிசம்பர் 7
3. SLNA 33 / 1711, 1833 6rligsiv 25.
4. SLNA 21 / 63, 1827 ஆகஸ்ட் 18, ஒக்ரோபர் 31.
5. SLNA 33 / 1710, 1832 செப்ரம்பர் 1.
6. SLNA 6 / 1237, 1835 uqsuburi 6.
7. SLNA 6 / 1 164, 1833 u qgLiblui 2.
8. மூல நூலின் 47 - 49 பக்கங்களில் உள்ள தகவல்கள் இம் மொழி
பெயர்ப்பில் சுருக்கி தரப்பட்டுள்ளன.

Page 33
இயல் - 4
சாதியும் ஆரம்பகால முதலாளித்துவமும்
பிரித்தானியர்ஆட்சியின்தொடக்ககாலத்தில் சுமார்நாற்பதுஆண்டுகள் வரை வர்த்தகம், ஒப்பந்த வேலை, குத்தகை ஆகிய முயற்சிகளில் ஈடுபட்டோரை இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துப்பார்க்க முடியும். கிராமவிதானை, பொலிஸ்விதானை, பாடசாலை ஆசிரியர் முதலிய கீழ்நிலைப் பதவிகளில் இருந்த அரசாங்க உத்தியோகத்தர்கள் ஒரு பிரிவினர். பல்வேறு கைவினைகளைச் செய்வோர், ஒப்பந்தக்காரர், சிறுவியாபாரிகள், சாராயம் வடிப்போர், தோணிகளின் சொந்தக்காரர், குத்தகை வியாபாரிகள் என்போர் இன்னொருவகையினர். முதல்வகை யினரான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உள்ளூரில் செல்வாக்கு இருந்தது. பிரித்தானிய உத்தியோகத்தர்களின்நம்பிக்கைக்கு உரியவர் களாகவும் இவர்கள் இருந்தனர். நெல், மீன் போன்ற பொருட்களின் மீதானவரி, ஆயக்குத்தகை, சூதாட்டநிலையங்கள், சாராயத்தவறணை களின் குத்தகை போன்றவியாபாரமுயற்சிகளில் இந்த அரசாங்க உத்தி யோகத்தர்கள் ஈடுபட்டனர். இம் முயற்சிகளால் இவர்களுக்கு சம் பளத்தை விட மேலதிக வருமானம் கிடைத்தது. உள்ளூரில் தமக்கு இருந்த செல்வாக்குஅதிகாரம் என்பவற்றையும் உபயோகித்து இவர்கள் காலனிய பொருளாதாரமுறைக்குள் லாபத்தை உழைத்தனர்.
மேலேகுறித்த இரண்டாம் வகையினரான வர்த்தகர்களும் 1830 வரையுள்ள காலத்தில் குறிப்பிடக்கூடிய வளர்ச்சியை அடைந்தனர். எனினும் இவர்கள்கையில்திரண்டமூலதனத்தின்அளவு சிறியதாகவே இருந்தது. இவர்கள் ஈடுபட்டமுயற்சிகளில் ஆயக்குத்தகையும் சாராயக் குத்தகையும்கூடியலாபம்தருவனவாக இருந்தன. குத்தகை வியாபாரம் சிலவேளைகளில் நட்டம் விளைவிப்பதாயும் இருந்தது. லாபமும் நட்டமும் மாறி மாறி வரவும் கூடும். போட்டியும் ஆரம்ப கட்டத்தில் மிக அதிகமாக இருந்தது. ஆயினும் குத்தகைக்காரர்கள் ஆபத்துக்கள்

சாதியும் ஆரம்பகால முதலாளித்துவமும் 35
நிறைந்த இந்த வியாபாரத்தில்துணிந்து இறங்கினர். தூரக்கிராமங்கள் தவிர்ந்த பிறபகுதிகளில் குத்தகை வியாபாரம் விருப்புக்குரிய முயற் சியாக அமைந்தது.
பல்வேறு வியாபார தொழில் முயற்சிகளும் ஆரம்பகட்டத்தில் குறைந்த லாபத்தையே தருவனவாக இருந்தன. குறைந்த லாபமாயினும் இவற்றின் மூலம் தேடிய தேட்டம் பெருந்தோட்ட முறை ஆரம்பிக் கப்பட்டதும் ஏற்பட்ட பொருளாதார வாய்ப்புக்களை பயன்படுத்தி முன்னேறுவதற்கானஆரம்பமூலதனமாகஅமைந்தது. முன்னோடியான பெருந்தோட்ட முதலாளிகள் 1830க்களில் கோப்பித் தோட்டங்களைத் தொடங்கியபோது வர்த்தகவாய்ப்புக்கள் பெருகலாயின. புதிய வாய்ப்புக் களைநாடிச்செல்லும் செயல்முறைமரபுச்சமூகம் என்றபின்னணியில் இடம் பெற்றதை நாம் கவனித்தல் வேண்டும். மரபுச்சமூகம், குடும்ப உறவுமுறை, சாதி என்பனவற்றால் பிணைக்கப்பட்டது. இந்தப்பிணைப் புக்களில்இருந்துதனிநபர்கள்தம்மைச்சடுதியாகவிடுவித்துக்கொண்டு முதலாளிகளாகமாறிஉயர்ச்சிபெற்றனர் என்றுகூறமுடியாது. குடும்பம், உறவுக்காரர்கள், சாதி என்ற பிணைப்புகளில் கட்டுண்டவர்கள் இந்த உறவுகளின்ஆதரவு, விசுவாசம் என்பனவற்றின்பலத்தின்மீதுதான்தம் உயர்ச்சியை எய்தினர்.
18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளில் வியாபார முயற்சிகள் குடும்ப முயற்சிகளாகவே இருந்தன. முன்னோடிகளான வியாபாரிகள் குடும் பங்களை எடுத்து ஆராய்ந்தால் குடும்ப உறவு முறையும், சாதியும் வியாபார நடவடிக்கைகளில் முக்கிய பங்கை வகித்துள்ளதைக் காண முடியும். உறவினர்கள் கூட்டாக செயற்படுதல், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருத்தல், தூரத்து உறவினர்களையும் தமது சாதிக்காரர் களையும் வியாபாரமுயற்சிகளைநடத்துவதற்கு உதவியாளர்களாகவும் பணியாளர்களாகவும் சேர்த்துக் கொள்ளல் என்பன வியாபாரத்தில் ஈடுபட்டோரின் வழக்கங்களாக இருந்தன. சாராயக் குத்தகை வியா பாரத்தில் வெற்றிபெற இது ஒரு முக்கிய தேவையாகவும் இருந்தது. வர்த்தகர்களுக்கு இடையிலான உறவுகள் திருமண உறவுகள் மூலம் பலப்படுத்தப்பட்டன. மரபுச்சமூகத்தில் திருமணங்கள் ஒரேசாதிக்குள் நிகழ்வதால் ஒரே சாதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் திருமண உறவால் பிணைக்கப்பட்டு மேலும் பலம் பெற்றனர். சாதியைப் பலமுள்ள நிறுவனமாக ஆக்கவும் குடும்பம், திருமணம் என்ற இருவிடயங்கள் உதவினஎன்றுபிரைஸ்றயன்குறிப்பிட்டுள்ளதுமிகப்பொருத்தமானதே.

Page 34
36 அநாமதேயங்களாக இருந்தோர்.
1830க்களில் சாராயக்குத்தகை தொடர்பாக சிலமாற்றங்கள் புகுத்தப் பட்டன. 1832ஆம் ஆண்டு முதல்தனித்தனியாகதவறணைகளை ஏலம் விடாது தொகுதியாக ஏலம் விடும் முறை புகுத்தப்பட்டது. இதனால் குத்தகைக்காரர்களின் எண்ணிக்கை குறைந்தது. களவாகச் சாராயம் விற்பதை தடுப்பதும் புதிய முறையினால் சாத்தியமாயிற்று முழு நேரமும் வியாபாரத்திலேயேகருத்தாக இருக்கக்கூடியவர்களான பெரிய குத்தகைக்காரர்கள்ஒழுங்காக குத்தகையை செலுத்தினார்கள். அரசாங்க வருவாயும் அதிகரித்தது.
1832இல் இன்னொரு முக்கிய மாற்றமும் கொண்டுவரப்பட்டது. பல்வேறு குத்தகைகளை அரசாங்க உத்தியோகத்தர்கள் எடுத்து நடத்தி வந்தனர். அவ்வாறு அரசாங்க உத்தியோகத்தர்கள் வியாபார நடவடிக் கையில் ஈடுபடுவது அவர்களின் உத்தியோகக்கடமைகளுக்குப்பங்கம் தருவது எனக் கருதிய அரசாங்கம் இதனைத் தடைசெய்யும் சுற்று நிருபத்தை அனுப்பியது. இந்தத்தடை மூலம் கொய்கமசாதி விதானை மார்குத்தகை வியாபாரத்தில் ஈடுபடுவதுதடைசெய்யப்பட்டது. கராவ சாதியினைச் சேர்ந்த குத்தகைக்காரர்களுக்கு இது நன்மையாயிற்று. 1820க்களில் குத்தகை வியாபாரத்தில் ஈடுபட்டகராவசாதியினர் 1832இல் கொண்டுவரப்பட்ட இந்த இருமாற்றங்களினால் பெரும் நன்மையைப் பெற்றனர். மத்திய மாகாணத்தில் சாராயத் தவறணைகளுக்கு இருந்த போட்டி நீங்கியதால் முன்னணிக் குத்தகைக் காரர்களில் ஒருவரான யெரனிஸ் சொய்சா அம்மாகாணத்தின் எல்லாத் தவறணைகளையும் 1833ஆம் ஆண்டில் குத்தகையாகப் பெற்றுக் கொண்டார்:
குத்தகைவியாபாரத்தில் ஈடுபட்ட குடும்பங்கள் சிலவற்றின் வரலாற் றினை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுதல் பொருந்தமானது. வர்த்தகர் களாகவும், குத்தகைக்காரர்களாகவும், அரசாங்க உத்தியோகத்தர்க ளாகவும் பல தொழில் முயற்சிகளை ஒரே வேளையில் செய்துவந்த வர்களான கொய்கமசாதியினர்பலர் இருந்தனர்.
சல்பிட்டி கோறளையைச் சேர்ந்த இக்குடும்பத்தில் இருந்து தோன் றியவர் எச். லூயிஸ் பின்டோ. இவர் 1820க்களில் இரத்தமலானைப் பகுதியின் பொலிஸ் விதானையாக இருந்தார். கல்கிசை மொரட்டுவை, இரத்மலானைஆகிய இடங்களின்மீன்குத்தகையை 1826ஆம் ஆண்டில் இவர்நடத்தினார். இதே குடும்பத்தை சேர்ந்த எச். யெரனிஸ்பின்டோ 1828இல் கண்டியில் ஆயக்குத்தகை, சாராயக்குத்தகை என்ற இரண்டு முயற்சிகளையும் நடத்தினார். எச். நிக்கலஸ் பின்டோ சொத்துடமை

சாதியும் ஆரம்பகால முதலாளித்துவமும் 37
யாளர்; இவர் எச். யெரனிஸ் பின்டோவிற்கு பிணையாகதன் சொத்துக் களைக்சாட்டுதல் செய்து உதவினார். எச். பஸ்டியன் பின்டோ என்பவர் 1837இல் மத்திய மாகாணத்தின் தறவணைகள் முழுவதையும் குத்த கைக்கு எடுத்தார். அத்தோடு 1838இல் நான்கு கோறளைப் பகுதியில் பெறுமதிமிக்க குத்தகைகளை எடுத்து நடத்தினார்.
கொய்கமசாதிக்குடும்பங்களிற்கு உதாரணமாக பின்டோ குடும்பம் பற்றிய விபரங்கள் மேலே தரப்பட்டன. வேவகே டெப் குடும்பம் வியாபாரத்துறையில்புகுவதற்குஅடித்தளமிட்டவர்.அப்பிரஹாம்டெப் என்பவர். பின்னர் யொகான்ஸ் டெப், கொர்னெலிய டெப் என்ற பெய ருடைஅவரது இரு புதல்வர்களும் குத்தகை வியாபாரத்தைத் தொடர்ந் தனர்.அரினோலிஸ்டெப்(வீரசிங்க)அப்பிரஹாம்டெப்பின்பேரனாவர் இவர் 19ம் நூற்றாண்டின் இறுதியில் சாராயக் குத்தகைக்காரனாகச் செயற்பட்டவர். அர்னோலிஸ்டெப்முதலாளியின்மகள் ஹெலனாடெப் நடுகல்லே டொன் பிலிப் விஜயவர்த்தனவை விவாகம் செய்தார். விஜயவர்த்தனபிரபல வர்த்தகராயிருந்தவர். இவர்களின் பேரப்பிள்ளை யான ஜே. ஆர். ஜயவர்த்தன இலங்கையின் முதலாவது ஜனாதிபதி Այո6ԾTiri.*
கராவசதியைச்சேர்ந்தவர்த்தகக்குடும்பங்கள் தென்பகுதியில் உள்ள மொறட்டுவ, பாணந்துறை ஆகிய இடங்களைச் சேர்ந்தவை. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் வியாபாரத்துறையில் கொடிகட்டிப் பறந்த குடும்பங்கள் பல கராவ சாதியில் இருந்து தோன்றின. லண்ட முலாகே டி சில்வா குடும்பம் மொறட்டுவையைச் சொந்த இடமாகக் கொண்டது. இவர்களின் முன்னோர்கள் 13ஆம் நூற்றாண்டில் இந்தி யாவில் இருந்து வந்து இங்கு குடியேறினர் என்று கூறப்படுகின்றது. டச்சுக்காலம் முதல் மொறட்டுவையில் சொத்துடையவர்களாவும், வியா பாரிகளாகவும் இக்குடும்பத்தினர் இருந்து வந்தனர். டொமிங்கோடி சில்வா, லின்டா மூலகே பிரான்சிஸ்கோ என்னும் இரு சகோதரர்கள் 1820க்களில் சாராய உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் ஈடுபட்டுப் பெரும் பொருள்படைத்தவராயினர். டொமிங்கோவின்மகன்பெட்றோடிசில்வா பேரன்யுசே டிசில்வாஆகியோர்புகழ்பெற்ற வர்த்தகர்களாவர். யுசேடி சில்வாவின்மருமகன்முறையினரானசாள்ஸ்டிசொய்சா19ஆம்நூற்றாண் டின்மிகப்பெரியபணக்காரராகவும்வர்த்தகப்பிரமுகராகவும் விளங்கினார். மொரட்டுவையைச் சேர்ந்த பாலப்பு வடுகே மனக்குல சூரிய மென் டிஸ் குடும்பம், விதானலாகே டி மெல் குடும்பம், பாணந்துறையைச்

Page 35
38 அநாமதேயங்களாக இருந்தோர்.
சேர்ந்த தெல்கே பீரிஸ் குடும்பம் எனப் பல கராவசாதிக்குடும்பங்கள் வியாபாரத்தில் முன்னணி பெற்றிருந்தன. தெல்கே பீரிஸ் குடும்பத்தின் ஜெரமியாஸ், யெரோனிஸ்,டேவிட்கரோலிஸ், ஹெண்ண்றிக்ஹரமானிஸ், மார்ட்டினஸ் என்போர்ஆயக்குத்தகை, சாராயக்குத்தகை என்னும் இரு முயற்சிகளிலும் ஈடுபட்டுப் பெருஞ்செல்வம் சேர்த்தனர். 19ம்நூற்றாண் டின்புகழ்பெற்றவர்த்தகர்களாக வர்ஷஹென்னடிகே சொய்சாகுடும்பம் விளங்கியது. சொய்சா குடும்ப வரலாறு பற்றிக் கூறும் நூல் ஒன்று சி
டொன் பஸ்ரியன் என்னும் பத்திரிகையாளரால் எழுதப்பட்டது. 1904 ஆண்டில் வெளிவந்த இந்நூல் வாய்மொழி வரலாற்றுத்தகவல்களைத் தொகுத்துத் தருகிறது. இக் குடும்பத்தை சேர்ந்த ஜெரனிஸ் சொய்சா பிரித்தானியர்கண்டியைக்கைப்பற்றிய பின்னரானகாலத்தில் மொரட்டு வையைச் சேர்ந்த மாட்டுவண்டிக்காரர்களுடன் சேர்ந்து கண்டிக்குப் போனாராம். அங்கிருந்த வர்த்தக வாய்ப்புக்களை அறிந்து கொண்ட இவர் 1825 அளவில் கண்டியில் வர்த்தகத்தை ஆரம்பித்தாராம். மிக விரைவிலேயே இவர் மிகப் பெரிய சாராயக் குத்தகைக்காரராகவும் பணக்காரராகவும் மாறிவிட்டார். வாய்மூலவரலாறுஅரசாங்கஆவணங் களில் உள்ள தகவல்களாலும் உறுதிப்படுத்தப்படுகிறது. 1834ஆம் ஆண்டில் மத்தியமாகாணத்தின் எல்லாத்தவறணைகளையும் யெரனிஸ் சொய்சா குத்தகைக்கு எடுத்தார். கீழே தரப்பட்டுள்ள தகவல்கள் அரசாங்கஆவணங்களில்இருந்து தொகுக்கப்பட்டவை.
வருடம் குத்தகைக்காரர் தவறனை குத்தகை
1829 W. யெரனிஸ் சொய்சா கடுகண்ணாவ 38.5 பவுண்
83. W. யெரனிஸ் சொய்சா கண்டிஇரிகாகம தகவல்இல்லை
1832 W. யெரனிஸ் சொய்சா ஹரிஸ்பத்து 1940றிக்ஸ்
(4ம் காலாண்டு) தும்பன டொலர்கள்
8.33 W. யெரனிஸ் சொய்சா கண்டியின் தகவல்இல்லை
எல்லாத்
1834 W.யெரனிஸ்செய்சவும் மத்தியமாகாணத் 9150றிக்ஸ்
அப்பாச்செட்டிசின்ன தின் எல்லாத் டொலர் ஐயரும் தவறணைகளும்

சாதியும் ஆரம்பகால முதலாளித்துவமும் 39
1829ஆம் ஆண்டில் 38.5 றிக்ஸ் டொலர்களிற்கு குத்தகை எடுத்த யெரனிஸ் சொய்சா1834ஆம்ஆண்டில் அப்பாச்செட்டிசின்னஐயருடன் சேர்ந்து 9,150 றிக்ஸ் டொலருக்கு மத்திய மாகாணத்தின் எல்லாத் தவறணைகளையும் குத்தகையாக எடுத்தார். இது நம்ப முடியாத அதிசயிக்கத்தக்க உயர்ச்சியாகும். இக்காலத்தில்சாராயக்குத்தகை மூலம் பெரும் செல்வத்தை இவர் ஈட்டினார். அதனைமுதலீடாக்கினார் என்று கருதலாம். அத்தோடு யெரனிஸ் சொய்சா போன்றோர் அக்காலத்தில் செட்டிகளிடம் கடன் பெற்றும் வியாபாரத்தில் முதலீடு செய்தனர் என்பதற்குச்சான்றுகள் உள்ளன. 1834ஆம் ஆண்டில்யெரனிஸ் சொய்சா அப்பாச்செட்டி சின்னஐயருடன் சேர்ந்து குத்தகையெடுத்துள்ளார் என்பதைமேற்காட்டியபட்டியல் எடுத்துக்காட்டுகிறது.அப்பாச்செட்டி சின்னஐயர் வியாபாரக்கூட்டாளி மட்டுமல்ல யெரனிஸ் சொய்சாவின் வங்கியாளர்ஆகவும் இருந்துள்ளார் என்றுகருத இடமுண்டு.
பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பகாலத்தில் உருவான முதலாளி வகுப்பு, முன்னணிக்கு வந்த குடும்பங்கள்,அக்குடும்பங்களின்வர்த்தக முயற்சிகள் என்பனபற்றிய பொது இயல்புகள் சில வெளிப்படையாகத் தெரிகின்றன. கப்பலோட்டுதல், நெல், மீன், சாராயம் என்பனவற்றின் குத்தகையை நடத்துதல், ஒப்பந்த வேலைகளைச் செய்தல் போன்ற பல்வேறு தொழில்களில் ஆரம்பகால முதலாளிகள் ஈடுபட்டனர். அவர் கள் ஈடுபட்டதொழில்கள் பலவாக இருந்தனவே அன்றி எந்த ஒரு தொழிலும் பொருளாதாரரீதியில் மிகவும் முக்கியத்துவம் உடையதாக இருக்கவில்லை. காலனிய பொருளாதாரத்தின்விளிம்புநிலைப் பொரு ளாதாரநடவடிக்கைகளாகவே இவை இருந்தன.இவற்றினால்கிடைத்த லாபமும் குறைவே.இருந்தபோதும் குடும்ப உறவுமுறை, திருமணம் என்ற நிறுவன முறைகள் வழங்கிய தொடர்புகளின் வலைப்பின்னல் போன்றன.ஆரம்பகாலமுதலாளிகள் தமக்கு வேண்டிய மூலதனத்தை திரட்டவும், வியாபாரத்தில் வெற்றிபெறவும் உதவின. பெருந்தோட்ட முறை உருவானபோதுமுன்னேறிச்செல்வதற்கு வேண்டியஅடித்தளம் இடப்பட்டது."
திருமண உறவுகள் - பிணைப்புக்கள்
திருமணஉறவுகள்குடும்பத்தினரால்நிச்சயிக்கப்படுவதால் உருவாக்கப் படுபவை. சாதிக்குள்தான் திருமணம் செய்தலும் முடியும். இதனால் வியாபாரத்தில் முன்னேறிச்சென்றஒரேசாதிக்காரர்தமக்குள்திருமண

Page 36
4O அநாமதேயங்களாக இருந்தோர்.
உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ஒன்றிணைந்தனர். பிரித் தானியர் ஆட்சியின் ஆரம்ப காலத்து உதாரணங்கள் சிலவற்றைக் குறிப்பிடலாம்.
பாலப்புவடுகேமென்டிஸ்,விதானலாகேடிமெல், ஹெட்டியாகண்டகே பெர்ணாண்டோ என்ற மூன்று பிரபல வர்த்தக குடும்பங்கள் ஒன்றோ டொன்று பிணைப்புண்டன. பாலப்பு வடுகே கபிரியேல் மென்டிஸ் டச்சுக்காலத்தில் இருந்தேசாராய வர்த்தகம் செய்தவர். இவரின்மகன்பி சைமன் மென்டிஸ் (1790-1829) ஆவர். இவர் லெனோறா என்னும் பெண்மணியை விவாகம் செய்தார். டச்சுக் காலம் முதலே சாராய வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இன்னொருவரான ஹெட்டிகன்டகே யுவன் பெர்ணாண்டோவின் மகள்தான் லொனோறா. இவரின் இன் னொருமகளை பிரித்தானியர்காலத்துசாராய வியாபாரிகளில் ஒருவரான விதானலாகே பெட்றோடி மெல் விவாகம் செய்தார்.
தெல்கே பீரிஸ் குடும்பமும், விதானலாகே டி மெல் குடும்பமும் விவாகம் மூலம் பிணைப்புறுவதை இன்னொரு உதாரணமாக குறிப் பிடலாம். டேவிட் பீரிஸ், பிரான்சிஸ்கோ டி மெல் என்ற இருவரும் முறையே லெனாறோ டி மெல், லெனோறா பீரிஸ் என்ற பெண்மணி களை திருமணம் செய்தனர். (தத்தம் சகோதரிகளை மாற்றுத் திரு மணமாக செய்து கொண்டனர்) இதே போன்று வருஷ ஹென்னடிகே சொய்சா குடும்பமும் ஹென்னடி கே பீரிஸ் குடும்பமும் இணைந்தன. 1792இல் ஜோசப் சொய்சா என்பவர் பிரான்சிஸ்கா பீரிஸ் என்னும் பெண்மணியை விவாகம் செய்தார். இப்பெண்மணி மொரட்டுவையின் பணக்காரக் குடும்பங்களில் ஒன்றன் மூலவரும் 19ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற வர்த்தகருமாகிய ஹென்னடிகே ஹென்ட்றிக் பீரிஸ் என்ப வரின் மகளாவர். இவரின் மகன் யெரனிஸ் சொய்சா 1833இல் பிரான் சிஸ்காகூரேயை விவாகம் செய்தார். பிரான்சிஸ்காகூரேமுத்துதந்திரிகே பஸ்டியன்கூரே மற்றும் ஹென்னடிகேஜஸ்டினா பீரிஸ் தம்பதிகளின் புதல்வியாவர். இக்குடும்பங்கள் யாவும் தொடர்ந்து பின்னருள்ள காலப்பகுதியிலும் விவாக உறவுகளை வைத்துக்கொண்டன. இதன் மூலம் அவர்களின் வர்த்தக முதலாளித்துவ கூட்டிணைப்பு வலுப் பெறலாயிற்று.

சாதியும் ஆரம்பகால முதலாளித்துவமும் 41
சாதியும் வர்க்கமும் பொருளாதாரநடவடிக்கைகளில் "கராவசாதியின் மேலாதிக்கம்' என்ற கருத்து நவீனகால ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. கராவ சாதியினர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சாதியினர். அவர்களிடையே 'மதல்’ எனப்படும் (கரைவலை எனத்தமிழிலும்Seine என ஆங்கிலத் திலும் குறிப்பிடப்படும்) மீன்பிடிமுறை இருந்தது. இதற்கு கணிசமான அளவு தொழிலாளர்கள் தேவை. முதலீடு, முகாமைத்துவம், உற் பத்தியை சந்தைக்கு அனுப்புதல் போன்ற அம்சங்கள் யாவும் இதில் உண்டு. பிரித்தானிய காலத்திற்கு முன்பிருந்தே இவ்விதமானநிறுவன முறை தொழில் முயற்சிகளில் பழக்கப்பட்டிருந்த கராவ முயற்சி யாளர்கள் முதலாளித்துவப் பாதையில் முன்னேற முடிந்தது. இக் கருத்தை மைக்கல் றொபர்ட்ஸ் கூறியுள்ளார். கராவ சாதியினரிடையே தச்சு வேலைக்காரர்போன்ற கைவினைத் தொழில்களில் தேர்ந்தவர்கள் இருந்தனர். மூலதனத்தை சேர்த்து முதலிடுதல், முன்னேறும் ஊக்கம் ஆகிய முதலாளித்துவ வர்க்கப் பண்புகள் இவர்களிடம் இருந்தன என்றும் மைக்கல்றொபர்ட்ஸ் கூறுகிறார்ஃசாராய வர்த்தகம்மூலம்கராவ பிறசாதியினரை விட முன்னேறிச் சென்றதன் பின்னணி இதுவே என் றும் கூறுவர்.
வரலாற்றுச்சான்றுகளை நுணுகிப்பார்க்கும் போது கராவசாதிதான் முதலாளித்துவப்பாதையில் முதன்முதல் காலடி எடுத்துவைத்தவர்கள் என்றோ மேலாதிக்கம் பெற்ற குழுவாக இருந்தனர் என்றோ கூறுதல் முடியாது. பல்வேறு சாதியினரும் பல்வேறு இனக்குழுமத்தினரும் வர்த்தகமுயற்சிகளில்ஈடுபட்டனர்.நாட்டின்தூரப்பகுதிகளுக்கும்கூடப் பலரும் போய்த்தொழில் முயற்சிகளில் இறங்கினர். 1825-31காலத்தில் கண்டிப் பகுதியில் சாராயக் குத்தகை வியாபாரம் செய்தவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் கொய்கம சாதியினராவர். கொழும்பு போன்ற பிற இடங்களின் குத்தகைக்காரர்கள் பெயர்களை ஆவணங் களில் தேடினால் கராவ, கொய்கம் என்ற இரு சாதி ஆட்களின் பெயர் களும் காணப்படுகின்றன. ஆகவே கராவவின் எழுச்சி அல்ல முதலா ளித்துவ வகுப்பின் எழுச்சி என்னும் விடயமே அரங்கேறிக் கொண் டிருந்தது.
தென்மேற்கு கரையோரம் தென்னைப் பயிர்ச் செய்கைக்குரிய இடமாகும். கராவ சாதியினர் இங்கு செறிந்து வாழ்ந்தனர். இதனால் சாராயம் வடித்தல், அதன் விற்பனை, குத்தகை வியாபாரம் என்பன

Page 37
42 அநாமதேயங்களாக இருந்தோர்.
வற்றில்அப்பகுதியில்வாழ்ந்தோர்ஈடுபட்டதில்வியப்பில்லை. கொய்கம சாதியின்அரசாங்க உத்தியோகத்தர்களிற்கு குத்தகை வியாபாரம்பகுதி நேரத்தொழில்தான். கராவசாதி குத்தகைக்காரர்கள் முழு நேரமுயற்சி யாளர்களாக இருந்தனர். 1832க்குப் பின்னர் அரசாங்கம் அரச உத்தி யோகத்தர்கள் குத்தகை வியாபாரத்தில் ஈடுபடுவதைத்தடைசெய்தது. அப்போதுஅரசஉத்தியோகத்தில்இருந்தோர் வேறுதுறைகளுக்குதமது முதலீடுகளை மாற்றவோவியாபாரத்தில் நீடிக்கவோவாய்ப்பு இருக்க வில்லை. முழுநேர வியாபாரிகளான கராவ சாதிக் குத்தகைகாரர்கள் சாராயவர்த்தகத்தில் முன்னேறிய தன்பின்னணி இதுவே.
αριφ-6)16ο»ν
1830க்களுக்கு முந்திய காலகட்டத்தில் இலங்கையில் முதலாளித்துவ வர்க்கம் தோற்றம் பெறுவதையும் மெல்ல மெல்ல வெளிக்கிளம் புவதையும் இந்நூலின் முதற்பகுதியில் எடுத்துக் கூறினோம். பெரும் பாய்ச்சல் என்று கூறக்கூடிய வளர்ச்சி இக்காலத்தில் ஏற்படவில்லை. பெருந்தோட்டப் பொருளாதாரமுறைதான் அத்தகைய பெரும்பாய்ச் சலுக்கு வழிவகுத்தது. 1830க்களுக்கு முந்திய கட்டத்தில் முதலீடுகள் மிகச் சிறியனவாக இருந்தன. ஏன் இப்படிச் சிறியனவாக இருந்தன என்பதற்குரிய காரணத்தை அக்காலப் பொருளாதார அமைப்பின் இயல்பில்இருந்து விளங்கிக்கொள்ளவேண்டும்.உள்நாட்டுப்போக்கு வரத்து எப்படி இருந்தது என்பதை ஆயக்குத்தகைகளின்அளவு எமக்கு எடுத்துக்காட்டும்.
1829ஆம்ஆண்டில் பேராதனையின் படகுத்துறையில் 125 பவுண்கள் குத்தகை பெறப்பட்டது. மகாவலிநதியின் ஏனைய கடவைகளின் வரி வருமானம் 1829இல் எப்படி இருந்தது எனப்பார்ப்போம். கல்லொலுவ (75பவுண்) லெவல்ல(60பவுண்)கட்டுகஸ்தோட்ட(49பவுண்)மீவத்துற (23 பவுண்) கொழும்பு நகரை அண்மித்த துறைகள், கடவைகளில் வரிவருமானம் உயர்வாக இருந்தது. ஆனால்தூரஇடங்களின் கடவை களில் வருமானம் மிகக்குறைவானதாக இருந்தது. சூதாட்ட நிலை யங்கள்போன்றவற்றின் வரிவருமானமும் மிகக்குறைவு. கொழும்பில் சூதாட்டநிலையக்குத்தகை லாபம்தரக்கூடியதாக இருந்தது. ஒப்பந்த வேலைகளின்வருமானமும் சிலவற்றில் குறைவாகவும் ஏற்ற இறக்கம் கொண்டதாயும் இருந்தது.தானியம், சாராயம், விறகு, கொப்பறா என்ற

சாதியும் ஆரம்பகால முதலாளித்துவமும் 会3
பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் நல்ல லாபத்தை தரு வனவாக இருந்தன.
கைவினைஞர்கள், கட்டிடவேலை செய்வோர், சாராயக் குத்தகைக் காரர் என்போரும்நல்ல லாபம் உழைத்தனர். அன்ரிஸ் டயஸ் என்னும் தச்சுவேலை மேஸ்திரி தெஹிவளை பாலத்தின்திருத்த வேலைக்காக 1820ஆம் ஆண்டில் 110றிக்ஸ் டொலர்களைப் பெற்றார். இவர் 1824இல் நீர்கொழும்பில் சுங்கவரிஅலுவலகக்கட்டிடவேலைக்காக 410றிக்ஸ் டொலர்களைப் பெற்றார். கண்டி நகரின் சாராயத் தவறணைகளும், கொழும்பின்சாராயத்தவறணைகளும் நல்ல வருமானத்தைத் தருவன வாக இருந்தன. பெய்ராவாவிக்கரைத்தவறணைஉயர்வருமானம்தரும் தவறணையாகும். சாராயத்தின் மொத்தவியாபாரமும் லாபம் தரும் தொழில். லின்டாமுலகே பெட்றோடிசில்வா 1827ஆம் ஆண்டில் 81000 கலன்சாராயத்தை கொழும்பு மாவட்ட பண்டசாலைக்கு வழங்கி2268 பவுண்களை பெற்றுக்கொண்டார். இவ்விதமாக வெவ்வேறு தொழில் முயற்சிகளில் வருமானத்தின் அளவு ஏற்றமும் இறக்கமும் மிகுந்ததாக இருந்தது.
1830க்களை அண்மித்தகாலத்தில் சில தனிநபர்கள் வர்த்தக உலகில் பிரபலம் பெறத்தொடங்கி விட்டனர். அப்பிரஹாம் டெப் யுவன் டி குரூஸ், பெட்றோ டி சில்வா, டேவிட் பீரிஸ், ஜெரனிஸ் சொய்சா ஆகியோர்குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியதனிநபர்களாவர். கணி சமானஅளவு சொத்துக்களைச்சேர்த்துக் கொண்டஇவர்கள்முதலாளித் துவத்தின் முன்னோடிகளாக விளங்கினர். இவர்களும் இவர்களைப் போன்றபிறரும்குடும்பம் என்றநிறுவனஅலகு மூலம் செயற்பட்டனர். பெருந்தோட்டப் பொருளாதாரமுறை தோன்றியதும் இப்புதிய வகுப் பின் உயர்ச்சிக்கு வேண்டிய உந்துவிசை கிடைத்தது. முகவரியில்லாத நபர்களாக இருந்தோரும் (No Bodies) 'விலாசம் உடையவர்களாயும் LuugisotrisGilb (Some Bodies) Lond plb GuppaOTii.
குறிப்புகள்
1. றயன், 1953 : 25.
2. SLNA 21 / 72, 1832 GLD 2.
3. மூலநூலின் 55ஆம் பக்கத்தில் சாராயக் குத்தகை வியாபாரத்தில் ஈடுபட்ட கொய்கமகுடும்பங்களின் விபரம் விரிவாகத்தரப்பட்டுள்ளது.

Page 38
7.
அநாமதேயங்களாக இருந்தோர்.
மூலநூலின்க்-பேக்கங்களின் வர்த்தகம் - குடும்ப உறவுப் பிணைப்பு விரிவாகக் கூறப்பட்டன. அவை மொழிபெயர்ப்பில் சுருக்கி தரப் பட்டுள்ளன.
றொபர்ட்ஸ், 1979 : 208.
SLNA 6 / 58, 1820 (CMLL'yan Jy? 7; 65 / 885 – 1834 ஒக்ரோபர் W.
SLNA 33 / 1699, 1837 DTid; 39.

பகுதி -II
'அறியப்பட்டவர்கள் ஆகுதல்
(Becoming "Somebodies')

Page 39

இயல் - 5
பெருந்தோட்டப் பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம்
தலையிடாக்கொள்கை பற்றிய விவாதம் பிரித்தானியர் இலங்கையை டச்சுக்காரரிடம் இருந்து கைப்பற்றிய பின்னர் வணிகவாதம் (Mercantism) என்னும் கொள்கையை ஆரம்ப கட்டத்தில் கடைப்பிடித்தனர். கறுவா, உப்பு போன்ற பொருட்களின் உற்பத்தியையும் வர்த்தகத்தையும் அரசாங்க தனியுரிமையாக வைத் திருத்தல், விவசாய உற்பத்தியிலும், கடல் சார் உற்பத்தியிலும் உச்ச அளவில் வரிகளைவிதித்தல், இலங்கைக்கு குடிபெயர்ந்தஐரோப்பியர் காணிகளில் முதலீடு செய்வதைக்கட்டுப்படுத்தல் என்பனவணிகவாதக் கொள்கையின் பயனாக எழுந்த நடைமுறைகளில் சிலவாகும். 1830க் களில் பெருந்தோட்டப்பொருளாதாரம்அறிமுகமானபொழுது வெளியி லிருந்து மூலதனம் உள்வரவும், முயற்சியாண்மைக்கு ஊக்கம் தரவும் கூடிய வகையில் பலசீர்திருத்தங்களை செய்ய வேண்டியிருந்தது. பழமைவாதப்போக்குடைய வணிகவாத நடைமுறைகள் கைவிடப் படும் தேவை எழுந்தது. 1833ஆம் ஆண்டில் நிர்வாகம், அரசியல், நீதித்துறை என்பன தொடர்பானநிறுவனஅமைப்புக்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. பொருளாதார விருத்திக்குத் தேவையான உட்கட்டமைப்புக்களை ஏற்படுத்தும் தேவைகருதியே இம்மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
இலங்கையில் மேற்குறிப்பிட்டவகைச் சீர்த்திருத்தங்கள் தேவை யென்ற கருத்து 1833ஆம் ஆண்டிற்கு முன்னரே பலரால் தெரிவிக்கப் பட்டது. பிரதம நீதியரசராக இருந்த சேர். அலக்சாண்டர் யோன்ஸ்ரன் முதலாளித்துவபாதையிலானவளர்ச்சி,தலையிடாக்கொள்கை என்பன வற்றை ஆதரிப்பவராக இருந்தார். கறுவா வர்த்தகத் தனியுரிமையை

Page 40
48 அநாமதேயங்களாக இருந்தோர்.
ஒழித்தல், கோப்பி, கரும்பு ஆகிய பயிர்களை இலங்கையில் பயிர் செய்வதற்கு ஊக்கம் அளித்தல், பயிர்ச்செய்கை பற்றிய பரிசோதனை களைநிகழ்த்துவதற்கு ஏற்றதானதாவரவியல் பூங்காஒன்றைநிறுவுதல் காலி,திருக்கோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில்துறைமுகங் களைவிருத்தி செய்து விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையிலாத்துறைகளாக ஆக்குதல் போன்ற முற்போக்கான (இங்கே லிபரல் என்ற கருத்தில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது) கொள்கை களை அலக்சான்டர் ஜோன்ஸ்டன் 1809ஆம் ஆண்டளவிலேயே கூறி யிருந்தார். பத்தாம் பசலித்தனமான பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்த இன்னொரு அதிகாரி அந்தனி பெர்ட்டோலக்கி என்பவர். இவர் 16 ஆண்டு காலம் வருவாய் துறை அதிகாரியாக இருந்தவர். 1817ஆம் ஆண்டில் இலங்கை பற்றி இவர் எழுதிய நூலில் நிலமானிய முறைகளைவிமர்சித்து எழுதினார். யோன்ஸ்ண்டன், பெர்ட்டோலக்கி போன்றோரின் கருத்துகள் அக்காலத்தில் கவர்னர்களாய் இருந்தவர் களுக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை. சிறு சிறு மாற்றங்களே அனுமதிக்கப்பட்டன.
கோப்பிப் பயிர்ச் செய்கை தொடக்கப்பட்ட வேளையிலும் வணிக வாதக் கொள்கைக்கு ஏற்றமுறையில் அரசாங்கமே கோப்பிச் செய் கைக்கான முன்முயற்சிகளை மேற்கொண்டது. பேராதனையில் 200 ஏக்கர்நிலத்தில் கோப்பித்தோட்டம் ஒன்றை அரசாங்கம் அமைத்தது. 1829ஆம்ஆண்டில் அரசியல்நிர்வாக சீர்த்திருத்தம்பற்றிஆராய்வதற்காக கோல்புறுக் - கமரன் ஆணைக் குழு அமைக்கப்பட்டபோது கருத்து முரண்பாடுகள் வெளிப்பட்டன. 1824-31காலத்தில் கவர்னர்ஆக இருந்த சேர். எட்வார்ட் பார்ன்ஸ் வணிகவாதத்தை ஆதரித்த பழமை வாதி யாகவே இருந்தார். ஆனால் 1830 க்களில் பிரித்தானியாவில் முதலா ளித்துவ வளர்ச்சி வேகம் பெற்றது, நிலமானிய நடைமுறைகளுக்கு எதிரான கருத்துக்கள் பலம் பெற்றன. அடம்சிமித், யெரமி பென்தாம், யேம்ஸ்மில் போன்ற அக்காலதீவிரவாதிகளான சிந்தனையாளர்களின் கருத்துக்களால் கவரப்பட்டகோல்புறுக் மற்றும் கமரன் இலங்கையின் நிறுவன அமைப்புக்களின் சீர்திருத்தத்தைச் சிபார்சு செய்யலாயினர். சீர்திருத்த யோசனைகளை கவர்னர் பார்ன்ஸ் "கற்பனாவாத சிந்த னைகள்’ என்று கண்டித்தார். இருந்த போதும் பிரித்தானியாவின் அரசாங்கம் ஆணைக்குழுவின் சீர்திருத்த யோசனைகளை ஏற்றுக் கொண்டது. புதிய பொருளாதாரநடைமுறைகள், அதுசார்ந்த கருத்தியல்

பெருந்தோட்டப் பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம் 49
என்பனவற்றிற்கு ஆதரவான சக்திகளின் முன்னால் பழமைவாதச் சிந்தனைதாக்குப் பிடிக்க முடியவில்லை என்ற உண்மையையே இது எடுத்துக்காட்டுகிறது.
கோல்புறுக்-கமரன்சிபார்சுகளின்படி இருநிறுவனஅமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.
1. கவர்னரின் எழுந்தமான அதிகாரத்தை ஓரளவுகட்டுப்படுத்தும் வகையில் முக்கியமான சில உத்தியோகத்தர்களைக் கொண்ட நிர்வாகசபை ஒன்றுஅமைக்கப்பட்டது.
2. சட்டசபை ஒன்றும் உருவாக்கப்பட்டது. இச்சபையில் 9 உத்தி யோகத்தர்களும் உத்தியோகத்தர்கள் அல்லாத 6 பேரும் நியமிக் கப்பட்டனர். (இவர்களில் மூன்று பேர்ஐரோப்பியர், சிங்களவர் ஒருவர், தமிழர் ஒருவர், பறங்கியர் ஒருவர்) சட்டசபையின் கூட்டங்களுக்குகவர்னர்தலைமை வகிப்பார்.
இலங்கை இயற்கை வளங்கள் மலிந்த ஒருநாடு. பிரித்
தானியாவின்காலனியாகவும் உடமையாகவும் அது உள்ளது.
அதன் விருத்திக்கு தடையாக உள்ளவற்றை நீக்குவதில் சட்டசபை போன்ற அமைப்புக்கள் உதவும் என்று ஆணைக்குழுவின் உறுப் பினர்கள் கருதினர்.
தோட்டப் பொருளாதாரத்தின் வளர்ச்சி
1830க்களில் பிரித்தானியர்இலங்கையில் உருவாக்கிய தோட்டப் பொரு ளாதாரத்தினை கைத்தொழில் முறை அல்லாத முதலாளித்துவம் (A Non Industrial Type Of Capitalism) 6TGöp 6)J6OULLu60p GFiùuavTib. இவ்வாறானதொரு முதலாளித்துவமே காலனிகளின் வளங்களை உச்ச அளவில் சுரண்டுவதற்கு வாய்ப்பானதொரு முறை என்று கருதப் பட்டது. பிரித்தானியர் கட்டமைத்த அலுவலர் ஆட்சி (பியுரோகிரசி) திறமை மிக்க நிர்வாகத்தை நடத்தியது. ஒடுக்கும் அரசு யந்திரக் கருவிகளான பொலிஸ், இராணுவம், சிறைக்கூடம் என்பன 'சட்டத் தையும் ஒழுங்கையும் பேணின. போக்குவரத்து போன்ற உட்கட்ட மைப்புவசதிகளிலும் காலனித்துவஅரசு குறைகளைக்களைந்து ஆவன செய்தது. சுருங்கக்கூறின் சிலநூறு தோட்டச் சொந்தக் காரர்களின் தேவைகளைச் சுற்றியே காலனிய அரசு யந்திரம் விரைவாகவும்

Page 41
5O அநாமதேயங்களாக இருந்தோர்.
வினைத்திறனோடும் செயற்பட்டது. பெருந்தோட்டங்கள் அடிமைக் கூலிகளைக் கொண்டு இயக்கப்பட்டன. அவை ‘அரசுக்குள் அமைந் திருந்தஅரசுகள்’ ஆகஇருந்தன. பிளண்டர்ராஜ் (PlanterRaj) (தமிழில் தோட்டத் துரை ராச்சியம் எனலாம்) என்று இதை அழைத்ததன் பொருத்தத்தை ஜோர்ஜ்பெக்போர்ட் அவர்கள் பெருந்தோட்ட முறை பற்றி எழுதியிருப்பதில்இருந்து விளங்கிக்கொள்ளலாம்.
முயற்சியாண்மை, மூலதனம், உழைப்புசக்தி இந்த மூன்றையும் உலகின்நாலாபக்கங்களில்இருந்தும் வரவழைத்துஒரு புதிய இடத்தில் (AnewLocation) சேர்ப்பதுதான்இந்த முறையின் அடிப்படைஅம்சம். இந்த புதிய இடத்தில் நிலம் என்ற வளம் இருக்கிறது; அதை நோக்கி ஏனைய மூன்று சாதனங்களும்நகர்த்தப்படுகின்றன. இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட பயிரை - அடிப்படையான ஒன்றை மட்டும் தேர்ந்து பயிரிடுகிறார்கள். ஆரம்பம் தொட்டே பெருந்தோட்டம் என்ற அலகுஅதிகாரத்தின்உறைவிடமாக, அங்கேவந்துசேர்ந்த உழைப்பாளி மக்களைக்கட்டுப்படுத்திஆளும்ஒருவரையிடப்பட்டநிலப்பிரதேசமாக ஆகியது. 1823ஆம் ஆண்டில் ஜோர்ஜ்பேர்ட் என்பவர்கம்பொல என்ற இடத்தில் ஒரு பெருந்தோட்டத்தை 400 ஏக்கர் காணியில் அமைத்தார். இந்தக் காணிக்கு அவர் கொடுத்த விலை 400 பவுண்களாகும். ஜோர்ஜ் பேர்ட் அக்காலத்தில்கண்டியில்இராணுவக்கமாண்டராகஇருந்த லெப்டினன்ட் கேர்ணல் ஹென்றிபேர்ட் என்பவரின்சகோதரர் என்ற செய்தியும் இங்கே குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில்கவர்னராகஇருந்த எட்வார்ட்பார்ன்ஸ் (Barnes) கன்னொறுவவில் ஒரு கோப்பித்தோட்டத்தை 1825இல் ஏற்படுத்தி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொண்டார். பார்ன்ஸிற்கு பின் வந்த கவர்னர்களும் அவர் வழியைப் பின்பற்றத்தவறவில்லை. உதாரணமாக ஸ்டுவார்ட் மக்கென்சி என்ற கவர்னர் (1837-41) 2000ஏக்கர் தோட்டத்தை நடத்தினார். வணிகர்கள், காணிகளை குறைந்த விலையில் வாங்கி பிறருக்கு உயர் விலையில் விற்பனை செய்வோர், செல்வப்புதையல் தேடுவோர் எனப்பட்ட பலவகையினர் “கோப்பிப்பித்து’ (Coffee Mania) என்னும் பித்தினால் பீடிக்கப்பட்டவர்களாய் மத்தியமலைநாட்டிற்கு படையெடுத்தார்கள்1833க்கும் 1843 க்கும் இடைப்பட்ட காலத்தில் 258,000 ஏக்கர் காணி அரசாங்கத்தால் தனியாருக்கு விற்கப்பட்டது. ஒரு ஏக்கர் காணியின் விலை5சிலிங் மதிப்பில் விற்கப்பட்டது.

பெருந்தோட்டப் பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம் 5互
1880ஆம் ஆண்டளவில் கோப்பிச்செய்கை உச்சநிலைக்குப் போயி ருந்த நிலையில் திடீர் என முற்றாக அழிவுற்றது. பங்கஸ் நோயினால் கோப்பிச்செடிகள்அழிந்து பெருநாசம் விளைந்தது. இருந்தபோதும்ஒரு ஐம்பது ஆண்டு இடைவெளிக்குள் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு பெரும் மாற்றத்தை அடைந்திருந்தது. இம்மாற்றங்களில் முக்கியமானவை சில வருமாறு:
1. மூலதனம் - உழைப்பு என்ற இருசாதனங்களிடையே புதியதான உறவைக் கொண்டஒரு பொருளாதாரமுறை உருவாகியது-இது மரபுவழி விவசாயத்தில் இருந்து வேறுபட்டது. i. வெளியில் இருந்து மூலதனம் உள்ளே வந்தது. முதலீடுகள் அதிகரித்தன. உழைப்பாளிகளும் இறக்குமதி செய்யப்பட்டனர். i. இலங்கையின் வர்க்கக்கட்டமைப்பும் மாறியது. கூலிஉழைப்பு
தோன்றியது. பகுதிநேரக்கூலிஉழைப்பும் தோன்றியது. iv. வர்த்தக முதலாளித்துவம் தோற்றம் பெற்றது. வர்த்தக முதலா ளிகள் கையில் மூலதனம்திரண்டது. குறிப்பிட்டுச்சொல்லும் அளவுக்கு மூலதனத்தின்திரட்சி இருந்தது.
வீதிகளும் புகைவண்டிப் பாதைகளும் பெருந்தோட்டப் பொருளாதாரம் வளர்வதற்கு சில அத்தியாவசிய உட்கட்டமைப்புக்களை அமைக்க வேண்டியிருந்தது. வீதிகளும், புகைவண்டிப் பாதைகளும் இவற்றில் முதன்மையானவை. கவர்னர் பார்ன்ஸ் வீதிகளை அமைக்கும் வேலையில் முழுமூச்சாக ஈடுபட்டார். இராணுவ நோக்கத்திற்காகவும்வீதிகளைஅமைக்கும் தேவை அவருக்கு இருந்தது. கண்டியுடன்மட்டுமல்லாது குருணாகல, மாத்தறை, நுவரெ லியா ஆகியவற்றுடனும் வீதிகள் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. குருநாகலையில் இருந்து அம்பேபுச, தம்புளை ஆகிய இடங்களுக்கும் 1820க்களிலும் 1830க்களிலும் வீதிகள் அமைக்கப்பட்டன. களனி வரிங்குல, நானு ஓயா, மாவெனல்ல ஆகிய இடங்களின் பாலங்களும் இக்காலத்தில்கட்டப்பட்டனவே.
1880இல் கோப்பிச் செய்கையின் வீழ்ச்சிவரை உள்ள காலத்தில் பெருந்தோட்டமுறையின் தேவை கருதி வீதி அமைப்பு வேலைகள் முன்னேற்றம் பெற்றன. 1867ஆம் ஆண்டில் 2344 மைல் தூரத்திற்கு வீதிகள் இருந்தன. 1905ஆம் ஆண்டில் இது 3765 மைல்களாக அதி

Page 42
52 அநாமதேயங்களாக இருந்தோர்.
கரித்தது. கோப்பிச் செய்கை வீழ்ச்சியுற்ற போதும் தேயிலைப் பயிர்ச் செய்கை 1880க்களில் வளர்ச்சியுற்றதால் மலைநாட்டுப்பகுதிகளில் வீதிகள் அமைக்கப்பட்டன. புகைவண்டி நிலையங்களில் இருந்து செல்லும் தொடுப்பு வீதிகள்அமைக்கும் தேவையும் ஏற்பட்டது. மத்திய மாகாணம், ஊவா, சப்பிரகமுவ ஆகிய பகுதிகளில் வீதி அமைப்பு வேலைகள்நடைபெற்றன.
1867இல் கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் புகைவண்டிப் பாதை அமைக்கப்பட்டது. இது பின்னர் ஊவாவிற்கும், பண்டார வளைக்கும் விஸ்தரிக்கப்பட்டது. 1880ஆம் ஆண்டில் மாத்தளைக்கும் கண்டிக்கும் இடையே புகைவண்டிப் பாதை அமைக்கப்பட்டது. வடக்கே யாழ்ப்பாணமும், தெற்கே மாத்தறையும் கரையோர வழியில் சிலாபம் புத்தளம் என்பனவும் புகைவண்டிப் பாதைகளால் தொடுக் கப்பட்டன. பல்வேறு பிரதேசத்தவர்களும்தம்பகுதிக்குப்புகைவண்டிப் பாதை தேவையெனக் கோரிக்கை விடுத்தனர்- 1905ஆம் ஆண்டில் 488 மைல் நீளமான பாதைகள் இருந்தன.
கோப்பியின் ஏற்றுமதி காரணமாக துறைமுகங்களும் விருத்தி செய் யப்பட்டன. 19ஆம் நூற்றாண்டில் கொழும்பு உலகின் முக்கிய துறை முகங்களில் ஒன்றாக வளர்ச்சியுற்றது. 20ம்நூற்றாண்டில் கொழும்பில் ஏற்றியிறக்கப்பட்ட மொத்த தொன்நிறைப்படியும் வந்து போனகப்பல் களின் கணக்குப்படியும் பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த துறைமுகங்களில் கொழும்பு மூன்றாவது இடத்தை வகித்தது. உலகில் அது ஏழாவது இடத்தைப் பெற்றது."
வர்த்தக விருத்தி வீதிகள், புகை வண்டிப் பாதைகள், துறைமுகங்கள் என்பன கட்டப் பட்டதன் விளைவாக வர்த்தகம் பல்வழிகளிலும் கிளைத்துப் பரவியது 1. பாலங்களுக்குரிய மரங்கள், ரெயில்வே சிலிப்பர் கட்டைகள் என்பன போக்குவரத்துப் பாதைகளின் கட்டுமானப் பணிகளுக் கான உள்ளீடுகளாகும். இவற்றை வழங்குதல் லாபம் தரும் வர்த்தகமாயிற்று.
2. ராஜகாரியமுறை ஒழிக்கப்பட்டதால்கூலிக்குவேலை செய்யும்
தொழிலாளர்படை உருவானது.

பெருந்தோட்டப்பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம் 53
3. வீதிகள், புகைவண்டிப்பாதைகள் அமைப்பதற்காக மட்டு மன்றித் துறைமுகவேலை, ஏற்றி இறக்கல் வேலை என்பன வற்றிற்கு கூலித்தொழிலாளர்களை வழங்கும் ஒப்பந்தகாரர்கள் மும்முரமாக ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டனர். 4. மாட்டுவண்டிகள் மூலம் நீண்ட தூரத்திற்கு ஏற்றி இறக்கல்
செய்யும் தொழிலில் வண்டிக்காரர்கள் ஈடுபட்டனர். 5. கட்டுமானப்பணிகளுக்கானமரம், சிலிப்பர்கட்டைகள், தந்திக் கம்பங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. வீட்டுத் தளவாடங்கள், மரப்பெட்டிகள் (கோப்பியை அடைத்து அனுப்புதற்கானவை) என்பனவும் உற் பத்தி செய்யப்பட்டன. இந்த ஆலைகள் யாவும் நாட்டின் தென் மேற்குப்பகுதியில் காணப்பட்டன. இவற்றைச்சார்ந்து தேர்ந்த கைவினைத்தொழிலாளர்கள் உருவாகினர். 6. சில்லறை வர்த்தகத்தின் விருத்தி மூலதனத்திரட்சிக்கான இன் னோர்வழிஆயிற்று. கோப்பிச்செய்கை இடம்பெற்றபகுதிகளை நோக்கி சிங்களவர், முஸ்லிம்கள், செட்டிகள் சென்றனர். அப் பகுதிகளில் உணவுப் பொருட்கள், துணிமணி என்பனவற்றை விற்கும் கடைகளை ஆரம்பித்தனர். தோட்டத் தொழிலாளர்கள், பாதைஅமைப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள், கட்டிடத் தொழி லாளர்கள் ஆகியோரை குறியாகக் கொண்டு இவ்வர்த்தகம் விருத்திஆயிற்று. மேற்கூறிய வழிகளில் கிடைத்த வர்த்தக வாய்ப்புக்கள் மூலதனத் திரட்சிக்கு வழிகோலின. ஆயத்தீர்வை அறவீடுகள் அதற்கான குத்தகை வியாபாரம் பற்றித் தனியாகக் குறிப்பிடுதல் வேண்டும். 1861ஆம் ஆண்டில் பெறப்பட்ட ஆயக்குத்தகை வருமானம் பற்றிய தகவல்கள் கீழே உள்ள அட்டவணையில் தரப்படுகின்றன. மேற்கு மாகாணத் திலும் மத்திய மாகாணத்திலும் பெறப்பட்ட ஆயத்தீர்வைகள் பிற மாகாணங்களைவிட உயர்வாக உள்ளன. இது கொழும்பு-கண்டி வீதி ஊடாக நடைபெற்ற போக்குவரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

Page 43
அநாமதேயங்களாக இருந்தோர்.
மாகாணம் வருமானம் (பவுண்களில்) மேற்கு 37,966
மத்தி 13,749
தெற்கு 338
கிழக்கு 166
வடமேற்கு 2430 வடக்கு 921
மொத்தம் 58,370
1855க்கும் 1862க்கும் இடைப்பட்டகாலத்தில் கொழும்புகண்டிவீதியில் இருந்த பாலங்கள், கடவைகளில் அறவிடப்பட்ட ஆயத்தீர்வை 68% அதிகரித்தது. இதனை கீழ்வரும் அட்டவணையில் உள்ள தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ஆயத்தீர்வை 855 1862
(பவுண்களில்) (பவுண்களில்)
படகுத்துறைப்பாலம் 4655 790 அளுத்கமை 3000 584 அம்பேபுஸ்ஸ 3052 5O12 அங்குறுவெல 2761 4723 LDIT6)Gð76ð6) 26OI 4456
பேராதெனிய 298O 4405 மொத்தம் 19, 049 31, 990
மேற்காட்டிய புள்ளிவிபரங்கள் நடைபெற்ற போக்குவரத்தின் அள வையும் அதனோடு சம்பந்தப்பட்ட வர்த்தகம் உழைக்கப்பட்ட லாபம், மூலதனத்திரட்சிபற்றியும் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும் இவை யாவற்றையும் விடப்பெரிய லாபம் தரும் வர்த்தகம் சாராயக்குத்தகை
தான.
சாராயக் குத்தகை வருமானம்
பெருந்தோட்டப்பொருளாதார வளர்ச்சிபெறசாராய வர்த்தகமும் லாபம் தரும் தொழிலாக வளர்ச்சி பெற்றது. பெருந்தோட்டத்துறையின் வளர்ச்

பெருந்தோட்டப்பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம் 55
சியால் கோப்பித் தோட்டங்களில் கூலி உழைப்பாளர் தொகை அதி கரித்தது. போக்குவரத்து, ஏற்றி இறக்கல், சிறுசிறுதொழில்பட்டறைகள் என்பனவற்றில் வேலைசெய்யும் நகரத் தொழிலாளர் தொகையும் அதிகரித்தது. இருவகைத் தொழிலாளர்களும் மதுஅருந்துபவர்களாய் இருந்ததால்தவறணைவியாபாரம்பலமடங்குஅதிகரித்தது. கிராமத்து விவசாயிகளும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாயினர். இராஜகாரிய முறை ஒழிப்பால்வீதிவேலையில் ஈடுபட்டவர்களுக்குகூலிபணமாகக் கொடுக்கப்பட்டது. அத்தொழிலாளர்கள் தாம் பெற்ற கூலியின் ஒரு பகுதியைத்தவறணைகளில் செலவிட்டார்கள். கோப்பித் தொழிலின் ஏற்றஇறக்கங்கள்மதுபானத்தின்நுகர்வுப் போக்கிலும் பிரதிபலித்தன. தோட்டத் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் சாதாரண வியாபாரங்களில் ஒன்றாகஇருந்தசாராயவியாபாரம்'பெரியவியாபாரம் என்றநிலைக்கு உயர்ந்தது.
1833ஆம் ஆண்டில்ஐந்து மாகாணங்களாகஇலங்கை பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் அரசாங்க அதிபர் ஒருவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். தவறணைகளை ஏலத்தில் விடுதல், அவற்றை மேற்பார்வை செய்தல் என்பன அரசாங்க அதிபர்களின் பொறுப்பாக்கப் பட்டது. சாராயக் குத்தகை வருமானத்தை மாகாண அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய தரவுகள் உள்ளன. மேற்கு மாகாணமும் மத்திய மாகாணமும் சாராயக்குத்தகை வருமானத்தில் முன்னணியில் திகழ்ந்த மாகாணங்களாகும். இப்பகுதிகளின் குத்தகைக்காரர்களுக்கு மூன்று வகையான வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். தோட்டத்தொழி லாளர்கள், கிராமப்புறவிவசாயிகள், நகரத் தொழிலாளர்கள் என்போரே இந்த மூன்று வகை வாடிக்கையாளர்கள். இவர்களுக்கு சாராயம் விற் பனை செய்து லாபம் உழைத்துப் பெரும் பணக்காரர்களான முதலாளி வகுப்பு இந்த இரு மாகாணங்களிலும் தோன்றியது. வடக்கிலும் கிழக் கிலும் கூலி உழைப்பை (Wage Labour) அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறைகள் எதுவும் தோன்றாததால் அங்கு பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டது. முதலாளி வகுப்பு ஒன்றும் அங்கு (மேற்கு, மத்திய பகுதிகள் போன்று) தோன்றவில்லை,
மத்திய மாகாணம்
மத்திய மாகாணத்தில் எட்டுத்தவறணைகள் இருந்தன. இத்தவறணை களின் குத்தகைக்காரர்கள் கரையோரப்பகுதிகளில் இருந்து வந்தனர்.

Page 44
56 அநாமதேயங்களாக இருந்தோர்.
யெரனிஸ் சொய்சா சிறு முதலுடன் ஆரம்பித்தவர், 1830க்களிலும் 1840க்களிலும் பெரியகுத்தகைக்காரராக விளங்கினார். அவரது சகோதரர் சுசு சொய்சா 1850 வரை தவறணைக் குத்தகைகள் வியாபாரத்தில் ஈடு பட்டார். இரு சொய்சாக்களுடனும் போட்டியிட்ட இன்னும் சிலர் இருந்தனர்.பாலப்புவடுகேகொர்னோலிஸ், டொமினிங்கோமென்டிஸ், மஹாமரக்கலபட்டபந்திகேயேம்ஸ்குறே, சுவாரிஸ்கே கொர்னோலிஸ் சுவாரிஸ், செல்லப் பெருமாகே அப்பிரஹாம் பெர்ணாண்டோ, வீர ஹென்னடிகேஅலக்சாண்டர்பெர்ணான்டோ, யே. எவ். றொட்றிக்கோ தம்பியுள்ளே ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
குத்தகைத் தொகை 1833இன் பின்னர் படிப்படியாக உயர்ந்து சென் றதைக் காணலாம்."
ஆண்டு குத்தகை (பவுண்களில்)
I833 3,600
1843 10,650
1847-48 26,000
1848 18000
1864-65 48,OOO
1866-67 67,000
1867 49,800
1833க்கும் 1867க்கும் இடைப்பட்டகாலத்தில் சாராய விற்பனைஉயர்ந்து சென்றதை இப்புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. 1848ஆம் ஆண்டில் சாராய விற்பனை சடுதியாக வீழ்ச்சியடைந்தது. கண்டியில் 1848ஆம் ஆண்டில் ஏற்பட்ட கலகமே இதன் காரணம். 1848இல் குத்தகை வருமானம் 18,000ஆகக்குறைந்தது. இதன்பின்னர் 1860க்களில் கோப்பிப் பயிர்ச் செய்கை உச்ச அளவு நோக்கி சென்ற காலத்தில் சாராயக் குத்த கையும் அதிகரித்துச் சென்றது. 1867இல் முன்னைய ஆண்டைவிட வருமானம் குறைந்த தன் காரணம் கோப்பிச் செய்கை பங்கஸ் நோயி னால் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதாரப்பின்னடைவுஆகும்.
1850-1870காலப்பகுதியில் முன்னணியில் இருந்த குத்தகைக்காரர் களகசிலரைக் குறிப்பிடலாம். ய.ஹரமானிஸ் சொய்சா, ஹென்னடிகே யெரோனிஸ் பீரிஸ் (இருவரும் சொய்சாசகோதரர்களின் உறவினர்கள்; வயதில் அவர்களை விடக் குறைந்தவர்கள்) இவர்கள் 1850க்களில்

பெருந்தோட்டப் பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம் 57
மத்தியமாகாணத்தின் குத்தகையை தனியுரிமையாகக் கொண்டிருந் தனர். லிண்டமுலாகேடி சில்வா, ஹெட்டிகண்டகே பெர்ணான்டோ, மஹாவடுகே பெறரா, விதானலாகே டி மெல், தெல்கே பீரிஸ் ஆகி யோரும் முன்னணிக்குத்தகைக்காரர்களாவர். ஆயக்குத்தகையில் ஆரம் பித்தபலர் சாராயக்குத்தகையையும் எடுத்து நடத்தினர். இரண்டையும் ஒருங்கே நடத்தினர். காரணம் ஒரு பகுதியில் ஆயக்குத்தகை வைத் திருந்தால் அதே பகுதியில் வேறு இடத்தில் சாராயக்தவறணையையும் வைத்து ஒரு நிர்வாக ஒழுங்கமைப்புள் நடத்த முடியும். அரசாங்கமும் தூரப்பகுதிகளிற்கு குத்தகைக்காரர்களை ஈர்ப்பதற்கு ஒருதூண்டுதலாக ஆயக்குத்தகை சாராயக் குத்தகை இரண்டையும் ஒன்றாகச் சேர்ந்து ஏலத்தில் விட்டது.
மேற்கு மாகாணம்
மேற்கு மாகாணம் சனத்தொகை மிகுந்த பகுதி. அத்தோடு புதிதாகத் தோன்றிய தொழிலாளர் வர்க்கம் செறிவாகக் காணப்பட்ட பகுதியு மாகும். இதனால் சாராய விற்பனையில் மேற்கு மாகாணம் முதலிடம் பெற்றது. 1830 - 1850 காலத்தில் குத்தகைக்காரர்களிடையே இங்கு போட்டி இருந்தது. குத்தகையாக அரசாங்கம் அறவிட்ட தொகை அதிகரித்தது. 1836ம் ஆண்டில் 11000 பவுண்களாக இருந்த குத்தகை வருமானம் 1857-58இல் 42000 பவுண்களாக உயர்ந்தது. இது 345வீத அதிகரிப்பு ஆகும். மேற்கு மாகாணத்திற்குள் இருந்த கொழும்பு நகரத்தின் தவறணைகள் தாம் அதிக வருமானத்தைத் தந்தவை. பொருளாதார மந்தம் காரணமாக 1848 - 1850 காலத்தில் குத்தகை வருமானம் குறைந்தது. ஆனால் 1855 களின் பிற்பகுதியில் மீண்டும் வருமானம் உயர்ச்சி பெற்றது. அரசாங்க அதிபராக விருந்த லேயார்ட் என்பவர்குறிப்பிட்டுள்ளதுபோல்நாட்டில் செழிப்புநிலை ஏற்பட்டது." தவறணைகளின் வருமானமும் அதிகரித்தது. பின்வரும் புள்ளி விப ரங்கள் வருமான அதிகரிப்பை எடுத்துக்காட்டும்:
வருடம் குத்தகை வருமானம்
(பவுண்களில்)
1836 IIOOO
1841 - 41 27OOO
1845 - 46 42000

Page 45
58 அநாமதேயங்களாக இருந்தோர்.
1846 - 47 490OO
1849 - 50 4IOOO
1853 - 54 29000
1856 - 57 36OOO
857-58 42000
மேற்கு மாகாணத்தின் பகுதியாக அமைந்த கொழும்பு நகரத்தின் தவறணைகளின்வருமானமும் 1836-46காலத்தில் அதிகரித்தது. சாராய நுகர்வின்அதிகரிப்பை இது எடுத்துக்காட்டுகிறது. கொழும்பு நகரிலும் 1850ம் ஆண்டின் மந்த நிலையினால் வருமானம் குறைந்தது இக் காலப்பகுதியில் கொழும்பு நகரின் குத்தகை வருமானம் கீழே தரப் பட்டுள்ளது.*
வருடம் குத்தகை வருமானம் (பவுண்களில்)
1836 64OO
I839 9500
1846 22OOO
1847 22OOO
1848 22000
1850 19000
1850-1970 காலத்தில் மேற்கு மாகாணத்தின் குத்தகை வருமானத்தில் தளம்பல்கள்ஏற்பட்டன.இதற்குப்பலகாரணங்கள் இருந்தன. பொருள தார மந்தம் குத்தகையாளரிடையே கூட்டு, ரெயில்வே பகுதி பாதை அமைப்பு வேலைகளை நிறுத்தியமை ஆகிய மூன்று விடயங்கள் குத்தகை வருமானத்தின் வீழ்ச்சிக்கு காரணமாயின. 1866 இல் 32000 பவுண்களாக இருந்த வருமானம் 1867ல் பொருளாதார மந்தம் காரண மாக 25000 பவுண்களாக வீழ்ச்சியுற்றது.
மேற்கு மாகாணத்தின் குத்தகை வியாபாரம் பல குடும்பங்களின் கைகளில் பரவியிருந்தது. ஒரு குடும்பமே தனியுரிமை வகித்தது என்று கூறமுடியாது. சூசு சொய்சா, லூயிஸ் சொய்சா என்னும் இரு சகோதரர் கள், தெல்கே டேவிட், மார்ட்டினஸ் பீரிஸ்சுவாரிஸ்கே கொர்ணொலிஸ் சுவாரிஸ், விதானலாகே, பிரான்சிஸ்கோ, யுவான்டிமெல், யொகான்ஸ்டி மெல், லின்டா மொலாகேயூசி, யார்கோஸ் டிசில்வா வீரஹென்டிகே அலக்சாண்டர் பெர்ணாண்டோ, வெத்தசிங்க ஆராச்சிகே ஆன்டிரிஸ் பீரிஸ், ஹெட்டிகண்டகேயோசப், பஸ்ரியன்பெர்ணாண்டோபொன்னே

பெருந்தோட்டப்பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம் 59
ஹென்னடிகே மனுவல் டயஸ் ஆகியோர் மேற்கு மாகாணத்தின் குத்த கைக்காரர்களில் முக்கியமானவர்கள். இவர்கள் ஒருவரோடு ஒருவர் பங்காளிகளாகச் சேர்ந்து இம் மாகாணத்தின் தவறணைக் குத்தகை வியாபாரத்தைநீண்டகாலம் தமது உரிமையாக வைத்திருந்தனர்.
தெற்கு மாகாணம் 1845 முதல் 1865 வரையுள்ள காலப்பகுதியில் தென் மாகாணத்தின் குத்தகை வருமானத்தில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. தவறணை களின் குத்தகை உண்மை மதிப்பை விடக் குறைவாக உள்ளது. என்று 1858இல் அரசாங்கஅதிபர்கூறினார்.
வருடம் குத்தகை (பவுண்களில்)
1845 - 46 5461
1855-56 4527
1858 - 59 899
1863 - 64 95.50
1864 - 65 OOOO
மத்திய மாகாணம், மேற்கு மாகாணம் என்பவற்றோடு ஒப்பிடும் பொழுது தென்மாகாணத்தின்குத்தகை மிகக் குறைவாகவே இருந்தது. டொன்பஸ்ரியன்டிசில்வா, சோட்றிக்கு ஜயவிக்கிரம (இவர் மிரிஸ்ஸ என்ற இடத்தில் நொத்தாரிஸ் ஆக இருந்தவர்) டொன் லூயிஸ் அபய விக்கிரம (அஹன்கம என்ற இடத்தைச் சேர்ந்தவர்) ஆகியோர் தென் மாகாணத்தின் குத்தகை வியாபாரிகளில் முக்கியமானவர்கள். 1855ல் ஆவணங்களில் இவர்களின் பெயர்கள்காணப்படுகின்றன. பத்துவருடங் கள் கழித்தும் இதே பெயர்கள் காணப்படுகின்றன. இருந்தபோதும் இவர்களில் எவரேனும் 19ம்நூற்றாண்டின்முக்கியமானமுதலாளி என்ற தகுதிக்கு உயரவில்லை.
வடமாகாணம்
வடமாகாணத்தில் கூலி உழைப்பாளர் வகுப்பு தோன்றுவதற்கேற்ற பொருளாதார மாற்றங்கள்ஏற்படவில்லை. இதனால் சாராய விற்பனை தொடர்ந்து தேக்கநிலையிலேயே இருந்தது. குத்தகைக்காரர்கள் லாபம் உழைக்கவும் மூலதனத்தைத்திரட்டவும் வாய்ப்புக்கள் இங்கு இருக்க வில்லை. 1855ம்ஆண்டில்யாழ்ப்பாணம், வன்னி என்றஇருபகுதிகளின்

Page 46
60 அநாமதேயங்களாக இருந்தோர்.
குத்தகை அம்பலவாணர் வேலுப்பிள்ளை என்பவருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இவர் வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர். 1837 பவுண் களைக்குத்தகையாகஅவ்வாண்டு இவர்செலுத்தினார். இது முன்னைய ஆண்டின் குத்தகையைவிட 277 பவுண்கள் அதிகமாக இருந்ததாக அரசாங்கள் அதிபர் குறிப்பிட்டார். நீர்கொழும்பில் இருந்து வந்த சிங்களவர் முன்னைய ஆண்டில் குத்தகையை எடுத்தவர். அவரும் இவ்வாண்டு ஏலத்தில் போட்டியிட்டார்." இவ்வாண்டு குத்தகை அதிகரிப்புக்கு இதுவே காரணம் என்றும் அரசாங்கஅதிபரின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. வடபகுதியின்குத்தகைஅரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டித்தருவதாக இருக்கவில்லை. பின்வரும் அட்டவணை இதனை எடுத்துக்காட்டுகிறது:"
1870ஆம் ஆண்டின் குத்தகை வருமானம்
இடம் குத்தகைக்காரர் பெயர் குத்தகை
(பவுண்களில்)
யாழ்ப்பாணம் தாமோதரராமலிங்கம் 335 மன்னார் ஆறுமுகம் கதிரவேற்பிள்ளை 907 நுவரகலாவிய கிறிஸ்தோவோபிள்ளை
லோறன்ஸ்பிள்ளை 250 வன்னி மயில்வாகனம் வெற்றிவேலு 240 மொத்தம் 472
யாழ்ப்பாணத்தில் குத்தகை வருமானம் குறைவாக இருந்ததற்கு பனங் கள்ளில் இருந்து வடிக்கப்பட்ட சாராயம் கிடைக்கக் கூடியதாக இருந் தமை ஒரு காரணமாகும். வளவுக்குள் இருக்கும் பனையில் இருந்து பெறும் கள்ளை இரகசியமாக சாராயமாக்கி விற்கும் வழக்கம் அங்கு இருந்தது. இதனைவிடமுக்கிய காரணம் வடபகுதியின் பொருளாதார நடவடிக்கைகள் ஒரே மட்டத்தில் தேக்கமுற்றதுதான். கூலி உழைப் பாளர் வகுப்பு ஒன்றின் தோற்றத்திற்குத் தேவையான பொருளாதார மாற்றங்கள் அங்கு ஏற்படவில்லை. தொழிலாளர்வகுப்பின் பெருக்கம் சாராய விற்பனையை அங்கு உயர்த்தி இருக்கும்.
கிழக்கு மாகாணம்
பொருளாதாரஅபிவிருத்தியில் பின்தங்கிய இன்னொரு பகுதி கிழக்கு மாகாணமாகும். இம்மாகாணத்தின் தவறணைகளும் மூலதன ஆக்

பெருந்தோட்டப்பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம் 6.
கத்திற்கு வேண்டிய லாபமீட்டும் வழியாக இருக்கவில்லை. இம் மாகா ணத்தின் துறைமுகப் பட்டினம் திருகோணமலை. இந் நகரின் தவற ணைக் குத்தகையை 1855 ல் முத்துத் தம்பி சின்னக் குட்டிப்பிள்ளை என்பவர் பெற்றார். அவர் 2450 பவுண்களை குத்தகைப் பணமாகச் செலுத்தினார். கிழக்கு மாகாணத்தின்தலைநகரமான மட்டக்களப்பின் தவறணைக் குத்தகை அதே ஆண்டில் 525 பவுண்களிற்கே விற்கப் பட்டது. முல்கமகேபஸ்ரியன்டிசில்வா,மக்கோனகுருகேஏ. பெர்னாண் டோ என்னும் இரு சிங்களவர்கள் இக் குத்தகையைப் பெற்றனர். திருக்கோணமலையில் பெறப்பட்டதவறணைக்குத்தகைபற்றிதிருப்தி தெரிவித்த அரசாங்க அதிபர் மாதாந்தம் 1260கலன்கள் சாராயம் அங்கு விற்பனையாகிறது. எனத் தெரிவித்தார். 1870ம் ஆண்டில் திருகோணம லையின் குத்தகை 2380 பவுண்களாக வீழ்ச்சியுற்றது." அவ்வாண்டின் குத்தகைக்காரர்களாக விசுவாநாதர்நமசிவாயகம், சந்தியாகுப்பிள்ளை சுவாம்பிள்ளை ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 1870இல் மட்டக் களப்பின் குத்தகை 2803 பவுண்களாக உயர்ந்திருந்தது. வாரித்தம்பி குருநாதபிள்ளை என்பவர் குத்தகையை எடுத்தார். முயற்சியாளர்களும் வணிகர்களும் மட்டக்களப்பில் செயற்படுவதற்குரிய ஊக்கம் தரும் பொருளாதாரச் சூழ்நிலை இருக்கவில்லை. அப்பகுதியின் மந்தமான பொருளாதாரநடவடிக்கையின் வெளிப்பாடாகவே சாராய வியாபாரத் தின் மந்தநிலையையும் கொள்ளவேண்டும். வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் குத்தகை வியாபாரம் முக்கியமான ஒரு தொழில்முயற்சியாக இருக்கவில்லை. ஆதலால் இப்பகுதிகளில் இதன் மூலம் செல்வத்தைதிரட்டுவதும் ஆரம்ப மூலதனத்தேட்டமும் நடை பெறவில்லை.
1837 முதல் 1862 வரையான 25 வருடகாலத்தில் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும்சாராயக்குத்தகைவருமானம் மூன்றுமடங்காக அதிகரித் தது. 1837ல் 40000 பவுண்களாக இருந்த இத் தொகை 1861-62 இல் 121 000 பவுண்களாகசுமார் மூன்றுமடங்கு உயர்ந்திருந்தது. மாகாண அடிப் படையில் இப்புள்ளிவிபரங்களைப்பகுப்பாய்வு செய்துபார்க்கும்போது மேற்கு மாகாணமும், மத்திய மாகாணமும் வருமானத்தின் பெரும் பங்கைப் பெற்றுத் தந்துள்ளதைக் காணலாம். 79 வீதம் குத்தகை வருமானம் இவ்விரு மாகாணங்களில் இருந்து பெறப்பட்டது. ஏனைய மாகாணங்களில் இவ் வியாபாரம் முக்கிய மற்ற ஒரு விடயமாகவே இருந்துள்ளது. 1863ம் ஆண்டின் குத்தகை வருமானம் பற்றிய புள்ளி விபரம் வருமாறு:

Page 47
62 அநாமதேயங்களாக இருந்தோர்.
மாகாணம் குத்தகை (பவுண்களில்)
மேற்கு 57OOO
மத்தி 38OOO வடமேற்கு 11OOO
தெற்கு 8OOO
வடக்கு 4OOO
கிழக்கு 3OOO மொத்தம் I2OOO
நாட்டில் ஏற்பட்டு வந்த பொருளாதார மாற்றங்களின்தன்மையை இப் புள்ளி விரபங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மேற்கு, மத்தி என்ற இரு மாகாணங்களினதும் குத்தகை வருமானம் பிறமாகாணங்களை விடப் பல மடங்கு உயர்வாக இருந்தது. பெருந்தோட்டப் பொருளாதாரம் புகுத்தப்பட்டதன் விளைவாக இதனைக் கொள்ளலாம். இவ்விரு மாகாணங்களிலும் கூலித்தொழிலாளர் எண்ணிக்கையும் உயர் வடைந்தது. சாராய விற்பனையும் அதிகரித்தது. ஏனைய மாகாணங்கள் போன்று தென்னந்தோட்டங்கள்மத்தியமாகாணத்தில்இருக்கவில்லை. மத்திய மாகாணத்தின் கூலி உழைப்பாளர்கள் நிலமற்றவர்கள். தவற ணைகளில் இருந்துதான்இவர்கள்சாராயத்தைப் பெறமுடியும். மத்திய மாகாணத்தின் சாராய விற்பனை அதிகரிப்புக்கான காரணங்களில் இதுவும் ஒன்று.
சாராயக்குத்தகை பற்றிய புள்ளிவிபரங்கள்நாட்டில் ஏற்பட்டு வந்த வர்க்க அமைப்பு மாற்றங்களையும் எடுத்துக்காட்டுகின்றன. கோப்பிப் பயிர்ச்செய்கையின் வளர்ச்சியினால் முதலாளித்துவ வகுப்பு உயர் நிலைக்கு வந்தது. வியாபாரிகள்,தவறணைநடத்துவோர் போன்ற பலர் கோப்பிச் செய்கையால் எழுந்த வியாபார வாய்ப்புக்களைப் பயன் படுத்தினர். வணிக முதலாளித்துவம் தோற்றம் பெற்றது. சாராயக் குத்தகை வியாபாரத்தால் ஈட்டியலாபத்தை முதலீடு செய்துதம் வர்த்தக நடவடிக்கைகளை இவ் வகுப்பினர் பரவலாக்கினர். ஒரு தலைமுறை இடைவெளிக்குப்பின் ஒரு சமூக மாற்றம் நடைபெற்றது.தவறணைக் குத்தகைக்காரர் பெருந்தோட்ட உடமையாளர் என்ற கனவான்களாக உருமாற்றம் பெற்றனர்.

பெருந்தோட்டப் பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம் 63
குறிப்புகள் 1. மென்டிஸ், 1956 : 11, 223 - 25.
2. பெட்டலொக்கி, 1817
3. மென்டிஸ், 1956: 25 - 26.
பெக்போர்ட், 1983 : 8 - 6.
4.
5. முனசிங்க, 1972 : 95.
6. டென்ஹாம், 1912 - 13
7. த சிலோன் டிரைக்டரி, 1863.
8. மேலது.
9. நிர்வாக அறிக்கை 1867
10. SLNA 6 / 2377A, 1857 црпrig. 11.
11. மேலது.
12. மேலது.
13. SLNA 6 / 2437, 1858 Lortij: 30.
14. SLNA 6 / 2304, 1855 GBo 25.
15. SLNA 6 / 3379C 1870 grugoty 30, Gub 27.
16. SLNA 6 /3381 பகுதி II 1870, ஏப்பிரல் 6, 13.

Page 48
இயல் - 6
சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு அடிமையாகும் உழைப்பாளி வர்க்கம்
தோட்டங்களில் நிலவிய தொழில் உறவுகள் முதலாளித்துவத்திற்கு முந்திய பொருளாதார முறையின் தன்மையைக் கொண்டிருந்தன. 0L0LLLLLLLLCLLLCLSCSLCL0SLSCLLCLL0L0L00L அடிமைத்தொழிலாளர்களைக்கொண்டு தோட்டங்கள் இயக்கப்பட்டன. இது இந்த முறைமையின் முக்கிய அம்சம்
- எஸ். பி. டி. டி. சில்வா
தொழிலாளர்களின் வாழ்க்கைநிலை மிக மோசமானது. வாழ்க்கை நிச்சயமற்றது. அவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவது தவிர்க்க முடியாததாக இருந்தது
- பிரடரிக் எங்கல்ஸ்
இலங்கையில் தோட்டப் பொருளாதார முறை புகுத்தப்பட்டதன் விளைவாக தோட்டத்துறையில் ஒரு தொழிலாளர் வகுப்பும், நகரத் துறைத் தொழிலாளர்களும் தோன்றினர். விவசாயிகளின் வாழ்க்கை யிலும் தோட்டப் பொருளாதாரம் மாற்றங்களைக் கொண்டு வந்தது. சாராய வர்த்தகத்திற்கான சந்தை இதனால் உருவாகியது. முதலாளித் துவத்தின் வளர்ச்சியினால் தொழிலாளர்படை உருவாகும் போது அவர்களிடை மதுபானநுகர்வு அதிகரித்தல் உலகு எங்கணும் காணப் பட்ட பொது விதி. 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய தொழிலாளி வர்க்கம்மதுவுக்கு அடிமையாய் இருந்ததை சமூக வரலாற்றை எழுதிய பலர் பதிவு செய்துள்ளனர். மிகக் குறைந்த வருமானம், அன்றன்றே உழைத்துச்சீவித்தல், கடினமான உடல்உழைப்பு என்பன அவர்களை மதுவுக்கு அடிமையாக்கி அதிலே சுகம் காணவைத்தது. முதலாளித் துவத்தின் தோற்ற இடமான மேற்கிலேயே இந்தநிலை இருந்த தென்றால் காலனிகளில் அதைவிட மோசமான நிலையே இருந்தது என்பதில் வியப்பில்லை.

சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு. 65
பொருட்களை சந்தையில் விற்பதற்காக உற்பத்திசெய்தல், பணத் திற்கு விற்றல் என்ற இரண்டு அம்சமும் முதலாளித்துவ முறையின் அடிப்படை இயல்புகள். இம்முறை பண்டமயமாதல் (Commoditization) எனப்படும். உழைப்பும்கூட ஒரு பண்டம்தான். தொழிலாளி தன் உழைப்பைச்சந்தையில் விற்கிறான். கூலிஉழைப்பாளர் தொகை பெருகுகிறது. கூலிஉழைப்பாளர்பெருகமதுபானவர்த்தகமும் பெருகும். இலங்கையின் தோட்டங்களிற்கு கொண்டுவரப்பட்ட தொழிலாளர் களுக்கும், நகரங்களின் தொழிலாளர்களுக்கும் மதுபானத்தை விற்றல் லாபம் தரும் வியாபாரம் ஆகியது. கிராமத்து விவசாயிகளிடமும் குடிப்பழக்கம் பரவியது. பிரித்தானிய ஆட்சியின் தொடக்க காலத்தில் வீதி வேலைபோன்ற வேலைகளுக்காக தொழிலாளர்களை ஒரு இடத் திற்கு குழுவாகக்கூட்டிச்செல்வார்கள். குறிப்பிட்ட இடத்தில் வேலை முடிந்ததும் தொழிலாளர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவர். தவற ணைகளில் சாராய விற்பனையும் உயரும் அல்லது குறையும். ஏழைத் தொழிலாளர் வகுப்பைச்சுரண்டுவதால் லாபம் குவிப்பதாகவே சாராய வர்த்தகம் இருந்தது.
நகரத் தொழிலாளர் 1911ம்ஆண்டு மக்கள்தொகைக்கணக்கெடுப்பின்படி இலங்கையின் 41 மில்லியன் மக்களில் 1.1மில்லியன் மக்கள் மேற்கு மாகாணத்தில் வாழ்ந்தனர். மேற்கு மாகாணமே மக்கள் தொகை கூடிய பகுதியாக இருந்தது. கொழும்பு நகரத்தின்மக்கள்தொகைகீழ்கண்டவாறு உயர்ந்து சென்றது."
ஆண்டு மக்கள் தொகை
1824 30,000
Ι87Ι 95,000
1901 154,000
இவ்வாறான அதிகரிப்புக்குக்காரணம் கொழும்புநகரில் தொழிலாளர் எண்ணிக்கைகூடிச்சென்றதுதான். தொழிற்சாலைகள், பொதுவேலைப் பகுதி, துறைமுகம், போக்குவரத்துத்துறை என்பனவற்றில் பயிற்றப் பட்டவர்களும், பயிற்றப்படாதவர்களுமான தொழிலாளர்கள் உடல் உழைப்பில் ஈடுபட்டனர். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்

Page 49
66 அநாமதேயங்களாக இருந்தோர்.
போரும், நடைபாதை வியாபாரம், பொருட்களைக் கொண்டு சென்று விற்றல் போன்ற பல தொழில்களில் ஈடுபட்டோரும் கொழும்பில் வாழ்ந்தனர்.
கூலி உழைப்பாளர்களில் பெரும் எண்ணிக்கையினர் அரசாங்க வேலையோடு தொடர்புபட்டவர்களாய் இருந்தனர். அரசாங்க வேலைப் பட்டறை எனப்பட்டகவர்மென்ட் பக்டரியில் (Government Factory) தச்சுவேலை,திருத்தவேலை, ஒட்டுவேலை, பொருத்துவேலை எனப் பலவகை வேலைகளுக்கான தொழிலாளர்கள் பணியாற்றினர். தபால் பகுதி, சுகாதாரப்பகுதி ரெயில்வே என்பனவும் மிகப்பெரும் எண்ணிக் கையில்கூலியாட்கள் வேலை செய்ததுறைகளாகும்.தனியார்துறையி னரால் நடத்தப்பட்ட ஆலைகள் பலவும் அக்காலத்தில் இருந்தன. கோப்பிக் கொட்டைகளைகோதுநீக்கல், புடைத்தல், வகைப்படுதல், இடித்துமாவாக்கல் என்றுபல வேலைகள்நடைபெற்றன.ஆண்களும், பெண்களுமாக20,000தொழிலாளர்கள்கோப்பி பதனிடுதல் வேலையில் ஈடுபட்டனர். மரம்அரியும்ஆலைகள், தெங்குத்தொழிலோடு சம்மந்தப் பட்ட ஆலைகள், காரிய உற்பத்தியோடும் அதன் ஏற்றுமதியோடும் தொடர்புடைய ஆலைகள் எனப் பலவகை ஆலைகள் கொழும்பில்
1880களில் தேயிலை உற்பத்தி தொடங்கியதும் அதனோடு தொடர் புடைய ஆலைகள் கொழும்பில் தோன்றின. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரப்பர் உற்பத்தியோடு தொடர்புடைய ஆலைகள் தோன்றின. இயந்திரங்களின் திருத்த வேலையோடு தொடர்புடைய தொழில்பட்டறைகள், தோட்டத்தொழிலாளர்களுக்கான ஆடைகளை உற்பத்தி செய்யும்ஆடைத் தொழிற்சாலைகள் என்பனவும் தோன்றின. துறைமுகத் தொழிலாளர்கள் இன்னொரு முக்கிய பிரிவினராவர். இலங்கையின் பொருளாதாரம் மாற்றமுற்றுச் சென்றதால் ஏற்றுமதி, இறக்குமதி முக்கிய தொழில்துறை ஆகியது.துறைமுகத் தொழிலாளர் கள்இந்தியாவில் இருந்தும் கொண்டு வரப்பட்டனர். (தமிழ்,மலையாளி இனத்தவர்)
காலனிய முதலாளித்துவம் இயங்குவதற்கு தொழிற்சாலைகள் மட்டும் இருந்தால் போதாது. பலசேவைகள் வழங்கப்படவேண்டி யிருந்தன. அதனால் கொழும்புநகரில்உணவுச்சாலைகள்,அச்சகங்கள், ஹோட்டல்கள், பேக்கரிகள், சில்லறை வர்த்தக நிலையங்கள், தள பாடங்களை விற்கும் கடைகள், தையல்கடைகள், சலவைத்தொழில்

சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு. 67
சேவையை வழங்கும் லோண்டரிகள் என எண்ணிறந்த வியாபார நிலையங்கள் தோன்றின. இவற்றையண்டித் தொழில்புரிந்த தொழி லாளிவர்க்கம் ஆலைத் தொழிலாளர்களை விட சில இயல்புகளில் வேறுபட்டவர்கள். இவர்களது வேலை நிரந்தரமானதல்ல. இவர்கள் பயிற்றப்பட்டதிறன்மிக்க தொழிலாளர் என்ற வகையினரும் அல்ல. கொழும்புத் தொழிலாளர்வர்க்கத்தின் இரண்டாம் அடுக்காக இவர்கள் இருந்தனர். மூன்றாம்அடுக்கு ஒன்றும் இருந்தது. பிச்சைக்காரர்கள், சிறு சிறுகளவுகள் மூலம்பிழைப்போர், வீடற்றோர், அநாதைச் சிறுவர்கள், விபச்சாரிகள் என்போரைக்கொண்ட மூன்றாம் அடுக்கு இது. காலனிய இலங்கையின் ‘அதல பாதாளம் இதுவாகும். காலனிய சமூகத்தில் பாட்டாளி வர்க்கம்சுரண்டலும், நாளாந்தம்துன்பதுயரங்களும்நிறைந்த வாழ்க்கையை மேற்கொண்டிருந்தது. இப்பின்னணியில் குடிப்பழக்கத் திற்கு அவர்கள் அடிமையாகியதும் சாராய வியாபாரம் முன்னேற்றம் பெற்றதும்ஆச்சரியத்திற்கு உரிய விடயங்களல்ல.
பயிற்றப்பட்டதொழிலாளர்களின் சம்பளம் அக்காலத்தில் நாள் ஒன்றுக்கு 1ரூபாவாகும். பெண்தொழிலாளிகள்25சதம்சம்பளத்திற்காக கூலி வேலை செய்தனர். ஆண் கூலிகளின் சம்பளம் நாளுக்கு 50-60 சதங்களாக இருந்தது. அடிப்படைக்கூலி என்ற பேச்சுக்கு இடமிருக்க வில்லை. அரசாங்கத்துறையில் தொழிலாளர்கள் 10-11மணித்தியாலம் வேலை செய்தனர். தனியார்துறையில் 12-13 மணித்தியாலம் வேலை செய்தனர். கொழும்பில் குடியிருப்பு வசதிகள்இருக்கவில்லை. சேரிகள் பெருகின. வீடில்லாதவர்கள் வீதியில் தூங்கி எழும்புவது வழக்கமாக இருந்தது. 1901 மக்கள் தொகைக் கணிப்பீட்டு அறிக்கையிலும் 1911 அறிக்கையிலும் கொழும்பு நகரின் வீடில்லாப் பிரச்சினை பற்றிய குறிப்புக்கள் உள்ளன. புதுக்கடை, கொட்டஹேன, சென்ற்போல் வட் பாரம்ஆகிய பகுதிகளில்கூலித்தொழிலாளர்சேரிகள் பெருகியிருந்ததை அறிக்கைகளிலும் பிற ஆவணங்களிலும் உள்ள தகவல்கள் கொண்டு அறியலாம்.
தொழிலாளர் குடியிருப்புக்களை காட்டும் அடையாளங்களாகத் தவறணைகள் விளங்கின. கடும் உடல் உழைப்பின் வேதனையைக் குறைக்கும் மருந்தாகவும், நரம்புகளில் முறுக்கேற்றிசத்தியைக் கொடுப் பதாகவும் மதுபானம் அமைந்தது. ஆண்களும், பெண்களும் தவறணை களில் கூடிக்குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கொழும்பில் இருந்த 21தவறணைகளில் 18தவறணைகள் தொழிலாளர் குடியிருப்

Page 50
68 அநாமதேயங்களாக இருந்தோர்.
புக்கள் இருந்த வடகொழும்பு பகுதியில் இருந்தன. இவற்றுள் 8 தவறணைகள் கொழும்பு துறைமுகத்தைச் சூழ இருந்தன. 1883இன் பின்னர் கொழும்பு முதன்மையானதுறைமுகமாக ஆகியது. காலிதுறை முகம் முக்கியத்துவம் இழந்ததால் அங்கு சாராய வியாபாரமும் மந்த மானதாகவே இருந்தது. கொழும்புத் தவறணைகளின் குத்தகையும் படிப்படியாக அதிகரித்துச்சென்றது. 1894ஆம் ஆண்டில் 70,000 பவுண் களாக இருந்த கொழும்பு நகரின் குத்தகை வருமானம் 1905ஆம் ஆண்டில் 100,000பவுண்களாக உயர்ந்தது.
பொதுவேலைப்பகுதியும், போக்குவரத்துத் துறையும். அரசாங்க பொதுவேலைப்பகுதி வீதிகள், பாலங்கள், கட்டிடங்கள் போன்றவேலைகளைச்செய்வதற்காகக்கூலிகளைப் பெருந்தொகையில் அமர்த்தியது. “பயணியர்கள்’ என அழைக்கப்பட்ட இந்தியாவின் கூலி களை 400 முதல் 800 வரையான குழுக்களாக இராணுவ முறைக் கட்டுப்பாடுகளோடு வேலையில் அரசாங்கம் ஈடுபடுத்தியது. 1848இல் “பயணியர் கூலிகள்3000 பேர் இருந்தனர். 1833இல் இராஜகாரிய முறை ஒழிக்கப்பட்டபின்னர் உள்ளூரவர்களும் கூலி வேலைக்கு அமர்த்தப் பட்டனர்.
தனிமைப்படுத்தப்பட்ட தூர இடங்களில் கூடாரமடித்து தங்கும் வீதிசெப்பனிடும் தொழிலாளர்களும், இராணுவத்தினரும் தவறணை வியாபாரத்தினை உயர்த்தினர். பகல்நேர வேலை முடிந்ததும் குடியைத் தவிர்ந்த பொழுதுபோக்குகள் எதுவும் அவர்களுக்கு இருக்கவில்லை. வீதிவேலையாட்களுக்காகநடமாடும்தவறணைகளைக்கூட அமைக்க வேண்டியிருந்தது.
மாட்டு வண்டிக்காரர்கள் தவறணைகளின் வாடிக்கையாளர்களில் முக்கிய பிரிவினராவர். வீதி வலையமைப்பு விஸ்தரிக்கப்பட்டபோது போக்குவரத்தில் ஈடுபட்டமாட்டுவண்டிகளின்தொகையும்அதிகரித்தது கொழும்பு-கண்டிவீதியில் 1847ஆம் ஆண்டில் ஓராண்டுகால எல்லை யில் 79,000தடவைகள் மாட்டுவண்டில்கள் பிரயாணம் செய்தன. மலை நாட்டில் இருந்த கோப்பியை ஏற்றிவரும் வண்டிகள் திரும்பும்போது உப்பு, சாராயம், ஏனையநுகர்வுப்பொருட்கள் என்பவற்றைக் கொழும் பில் இருந்து ஏற்றிச்சென்றன. ரெயில்பாதைகள்அமைக்கப்பட்டு புகை வண்டிப் போக்குவரத்து ஏற்பட்ட பின்னரும் கூட மாட்டுவண்டில்கள் மூலம் ஏற்றியிறக்கல் நடைமுறையில் இருந்து வந்தது. 1891இல் 15,000

சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு. 69
மாட்டுவண்டிகள் சேவையில் ஈடுபட்டிருந்தன. வீதிப்போக்குவரத் தோடு தொடர்புடைய ஆயக்குத்தகை வருமானம் 1842இல்8786 பவுண் காளாக இருந்தது. 1906ஆம் ஆண்டில் 45,000 பவுண்களாக உயர்ந்து காணப்பட்டது. மாட்டுவண்டில் பாதைகளை அண்டியிருந்ததவறணை களின் வியாபாரம் சுறுசுறுப்பாக இருக்கும். புகைவண்டிப் போக்கு வரத்து ஆரம்பிக்கப்பட்டதும் சாராய விற்பனையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டது. 1869இல் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் எழுதிய குறிப்பு ஒன்றில் 'மாட்டுவண்டிக்காரர்களின்சாராயமோகத்திற்கு ஒரு அத்தாட்சி இந்த விற்பனை வீழ்ச்சி - இது ஒரு அதிர்ச்சிதரும் விடயம் என்று எழுதினார்." அவர்கள் ஏற்றியிறக்கும் கோப்பி பொதிகளில் குறைவு ஏற்படுதலும் அது பற்றிய முறைப்பாடுகளும் சர்வசாதாரணம் என்றும் இந்த உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.
1866இல் ரெயில் பாதைகளை அமைக்கும் வேலைகள்யூர்த்தியாயின. 1866ஆம் ஆண்டில் சாராய விற்பனை உச்சத்திற்குப் போயிருந்தது. 1867இல் இது சடுதியாக வீழ்ச்சியடைந்தது.
மாகாணம் விற்பனை (பவுண்கள்)
1866 1867
மேற்கு மாகாணம் 32,000 25,000 மத்திய மாகாணம் 60,000 49, OOO
மேற்கு மாகாணத்தின் அரசாங்க அதிபர் விற்பனையின் வீழ்ச்சிக்கு இருகாரணங்களைக்குறிப்பிட்டார். ஒன்று ரெயில்பாதை அமைப்பு வேலைநிறுத்தப்பட்டது. இரண்டாவது மாட்டுவண்டிப் போக்குவரத்து குறைந்தது. மத்திய மாகாண அரசாங்க அதிபரும் கொழும்பு - கண்டி வீதியில் மாட்டுவண்டிகள் குறைந்ததும் மக்களின் வறுமைநிலையும் 1867இல் விற்பனையின் வீழ்ச்சிக்கான காரணங்கள் எனக்குறிப்பிட்டார்.
ரெயில் பாதைகளின்அமைப்புக்காக தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டனர். இலங்கை ரெயில்வே பகுதியுடன் ஒப்பந்த வேலைக்கான பொருத்தனையைச்செய்து கொண் டவர் இந்தியாவில் ரெயில் பாதைகள் அமைப்பில் அனுபவம் உடைய வராக இருந்தார். அவர் அனுபவம் மிக்க இந்தியத் தொழிலாளர்கள் 6000 பேரை இங்குகொண்டுவந்தார். குன்றுகளை குடைந்து சுரங்கப்பாதை களை அமைத்தல், பாலங்கள் அமைத்தல், ரெயில்பாதைகளை அமைத்

Page 51
7O அநாமதேயங்களாக இருந்தோர்.
தல் என்பனவற்றிற்கு மிகவும் தேர்ச்சி பெற்ற பயிற்றப்பட்ட தொழிலா ளர்கள் தேவை. தச்சுவேலை, இரும்பு வேலை, மேசன் வேலை என்ற பல்வகைத் தொழில்களிலும் நிபுணத்துவம் மிக்கவர்கள் ரெயில்வே பகுதியில் வேலை செய்தனர். 1901ஆம்ஆண்டில் ரெயில்வேபகுதியில் 5800தொழிலாளர்கள் வேலைசெய்தனர். 1911இல்இத்தொகை9500ஆக உயர்ந்தது. மேற்கு மாகாணத்தில் சாராயவிற்பனையின் அதிகரிப்புக்கு ரெயில்வே பகுதியின் தொழிலாளர்கள் தவறணைகளின் வாடிக்கை யாளர்களாக இருந்தது ஒரு காரணமாகும். ஏனைய மாகாணங்களுக்கு ரெயில்வே பாதைகள் விஸ்தரிக்கப்பட்டபோதும் சம்மந்தப்பட்ட மாகாணங்களின்சாராயவிற்பனைஅதிகரித்தது.
காரியச் சுரங்கத் தொழிலாளர்கள்
காரியச்சுரங்கங்களின் தொழிலாளர்களும் சாராய விற்பனையை அதிக ரிக்க உதவினர். 19ஆம் நூற்றாண்டில் காரியச்சுரங்க அகழ்வு தொழில் துறையாக வளர்ச்சிபெற்றது. சுரங்கங்களில் வேலை செய்வோர் மிகவும் மோசமான சூழ்நிலையில் கடின உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். தோட்டத்தொழிலாளர்கள்போன்றே இவர்களும்நிலமானியமுறையை ஒத்த உற்பத்தி உறவுகளின் கீழ் வேலை செய்தனர். 1870இன் பின்னர் காரியச் சுரங்கங்களில் நவீன முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் தோன்றியபோதும். தொழிலாளர்களின்குடியிருப்பு வசதிகள்கவனிக்கப் படவில்லை. 1911ஆம்ஆண்டில் 15000 தொழிலாளர்கள்காரியச்சுரங்க அகழ்வு வேலையுடன்சம்பந்தப்பட்டதொழில்களில் ஈடுபட்டிருந்தனர். கறுவாப்பட்டை உரிக்கும் தொழிலில் ஈடுபட்ட சலாகம சாதியினைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும்சுரங்கஅகழ்வு வேலையில் ஈடுபட்டனர். டச்சுக் காலம் முதல் இவ்வேலையில் பழக்கப்பட்டிருந்த இவர்கள் கடினமான இந்த உழைப்பில் ஈடுபடமுன்வந்தனர். சுரங்கங்களில் 'பயிரவ யக்க' என்ற பிசாசு இருப்பதாகநம்பிய கிராமவாசிகள் சுரங்கத் தொழிலில் ஈடுபடமுன்வரவில்லை. இத்தொழிலாளர்களின் வேலைச் சூழல் ஆபத்து நிறைந்ததாயும் கடுமையானதாகவும் இருந்தபோதும் சம்பளம் மிகக் குறைவானதாக இருந்தது. சாராயத்தவறணைகளினை நாடிச்சென்றுகுடிப்பதுதான்இவர்களுக்குஆறுதலளிக்கும் விடயமாக இருந்தது.

சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு. 7
கிராமத்து விவசாயிகள்
மேற்கு மாகாணத்தில் சனத்தொகை அடர்த்தியாக இருந்ததும் தொழி லாளர் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றதும் சாராய வியாபாரத்தின் செழிப்புக்கு காரணம். மத்திய மாகாணத்தில் கிராமத்து விவசாயிகள், தோட்டத் தொழிலாளர் என்ற இரு பிரிவினர் இதன் விற்பனையை அதிகரிக்க உதவினர். தென்னைப் பயிர்ச்செய்கை கரையோரப் பகுதி களில் இடம்பெற்றது. தென்னங்கள்ளைதமது வீட்டுத் தோட்டத்தில் இருந்து பெற்றே குடிப்பதும் தென்னங்கள்ளில் இருந்து வடித்த சாரா யத்தை குடிப்பதும் மேற்கு மாகாண கிராமவாசிகளின் வழக்கமாக இருந்தது. ஆகையால் தவறணைகளின் வாடிக்கையாளர்களாக நகரத் தொழிலாளர்களேஇருந்தனர். கிராமவாசிகளால்நுகரப்பட்ட மதுபானம் அரசாங்கத்தின் பார்வையில் கள்ளச்சாராயம் என்றே கருதப்பட்டது. கண்டியில் நிலை வேறாக இருந்தது. கண்டி அரசர் காலத்தில் கரை நாட்டில் இருந்து களவாகக் கொண்டுவரப்பட்ட சாராயம், தானியம், வாசனைப் பொருட்கள் ஆகியனவற்றிற்கு பண்டமாற்றாகப் பெறப் பட்டது. சாராயம் வடித்தல் தடைசெய்யப்பட்டிருந்தது. கள்ளைப் பெறுவதற்கு தென்னை மரங்களும் அங்கு இருக்கவில்லை. கண்டி நகரிலும் பிற இடங்களிலும் தவறணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது கிராமவாசிகளிடம் குடிப்பழக்கம் பெருகியது. கோப்பித்தோட்டங்கள் தோன்றியதும், பாதைகளை அமைக்கும் வேலை மத்திய மாகாணத்தில் நடைபெற்றதும் கூலிக்கு வேலை செய்யும் வாய்ப்பை கிராமத்தவர் களுக்கு வழங்கியது. இதனால் பணப்புழக்கம்கூடியது. கையில் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை குடிப்பதற்குச் செலவிட்டனர். ஜோன்கப்பர் (John Capper) என்ற தோட்டமுதலாளி ஒரு பத்திரிகை எழுத்தாளரு மாவர். இவர்குடிப்பழக்கம் மல்வத்தை என்ற கிராமத்தைச் சீரழித்து வருகிறது; ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த அமைதி குலைந்து விட்டது.தவறணையின்வரவால் கிராமத்தவர்குடித்துவிட்டு அடிக்கடி சண்டையில் ஈடுபடுகிறார்கள் என்று 1877ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டதமது நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார். மேஜர் தோமஸ் ஸ்கின்னர் என்னும் வீதிவேலைகளுக்குப் பொறுப்பாக இருந்தஆங்கில அதிகாரி 'குடிப்பழக்கத்தின் தீங்குகள்' பற்றியும் கிராமவாசிகள் குடிப்பழக் கத்தால் சீரழிவதையும் குறிப்பிட்டுள்ளார்.மத்திய மாகாண அரசாங்க அதிபர்களும் பிற அதிகாரிகளும் எழுதிய குறிப்புக்களிலும் இத்தீங்கு பற்றிவிபரிக்கப்பட்டுள்ளது. 1856இல் உடுநுவரவிலும் பதுளையிலும்

Page 52
72 அநாமதேயங்களாக இருந்தோர்.
இருந்த தவறணைகள் அரசாங்க அதிபரால் மூடப்பட்டன. இருந்த
போதும் அரசாங்கம் குடிப்பழக்கத்தின் தீங்கு பற்றியல்லாது சாராய
வர்த்தகத்தினால் கிடைக்கும் வருவாய் பற்றியே கூடிய அக்கறை
கொண்டிருந்தது. 19ஆம்நூற்றாண்டில் சாராய வர்த்தகத்திற்கு அரசாங்க
ஆதரவும் ஊக்குவிப்பும் குறைவில்லாது இருந்தது. 1872ஆம் ஆண்டில்
வில்லியம் கிரகரி என்ற கவர்னர் பின்கண்டவாறு குறிப்பிட்டார்: '
ஆங்கிலேயர் ஆட்சியால் இலங்கைக்குப் பல நன்மைகள் கிட்டின. இருந்தாலும் குடிப்பழக்கம் என்ற சாபக்கேட்டைஇலங்கைமுழுவதும் பரப்பியவர்கள்நாமே. சிறிதுகாலத்திற்கு முன்னர்கண்டியில் கிராமத்த வர்கள் தங்களிடை ஒரு குடிகாரன் இருந்தானென்றால் அதனை ஒரு அவமானமாகவே கருதுவர். இப்போது குடிவெறி ஒரு சர்வசாதாரண விடயமாகப்போய்விட்டது.அதைஅவமானமாகக்கருதுவதும் மறைந்து விட்டது. முன்பெல்லாம் குடிப்பழக்கம்இல்லாத கிராமங்களுக்கும் இப்போது அது பரவிஉள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள்
காலனி நாடுகளை உச்ச அளவில் சுரண்டுவதற்கென்றே வடிவமைக் கப்பட்ட ஒருமுறைதான் பெருந்தோட்டப் பொருளாதாரமுறை. மேற் கிந்திய தீவுகளில் இது அறிமுகப்படுத்தப்பட்டபோது பெருந்தோட் டங்களில் அடிமைகளை வேலைக்கு வைத்திருந்தனர். அடிமைமுறை சட்டப்படி ஒழிக்கப்பட்டதும் கூலிகளை இறக்குமதி செய்து குடி யேற்றும் முறை கொண்டுவரப்பட்டது. கொள்கையளவில் அடிமை முறை மாறியபோதும் அது வேறொரு வடிவத்தில் நீடித்தது. தோற்ற அளவிலான மாற்றம் தான் நிகழ்ந்தது. பெருந்தோட்டமுறை அடிப் படையில் ஒரு எதேச்சதிகார முறை தான். அங்கு இராணுவ முறை யிலான ஒழுக்கக் கட்டுப்பாடு இருந்தது. முதலாளித்துவமுறையொன் றின் கீழ் தொழில் உறவுகளில் சில முக்கியமான அம்சங்கள் இருக்க வேண்டும். கூலியைப் பணமாக கொடுத்தல், வேலை முடிந்ததும் தொழிலாளி சுதந்திரமாக எங்கும் போகலாம் என்றநிலை, ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் என்பன இவற்றுள்முக்கியமானவை. பெருந் தோட்ட முறையில் இவற்றிற்கு இடமில்லை. அதனால்தான் இதனை அடிமை முறையை ஒத்ததென்றும் சுதந்திரமான தொழிலாளர் (Free Labour) என்று கூறக்கூடிய உழைப்பாளர்களைக் கொண்ட முறையல்ல என்றும் கூறுவர். தோட்டம் ஒரு மொத்தத்துவ நிறுவனம் (Total Insti

சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு. 73
tution) என்பர். தொழிலாளர் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுள்ள நிறுவன முறையே மொத்தத்துவ நிறுவனமாகும்.
இலங்கையில் 1890ஆம் ஆண்டில் தோட்டத் தொழிலாளர்களும், அத்தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுமாக 400,000பேர் இருந் தனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இத்தொகை 20ஆம்நூற்றாண்டின் முற்பகுதியில் 700,000ஆக உயர்ந்தது. இலங்கையின்தோட்டத் தொழி லாளர்கள் வரலாறுஅடிமைமுறையின்அத்தனை கொடுமைகளையும் கொண்டது. 1830க்கள் தொடக்கம் தென்இந்தியாவின் கிராமங்களில் இருந்து இத்தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டனர். பஞ்சத்தின் கொடுமையில் இருந்துதப்புவதற்காக பிழைப்புத் தேடிவந்த இவர்கள் இலங்கையின் வடக்கே உள்ளதுறைகளுக்கு தோணிகளில் ஏற்றிவரப் பட்டு அங்கிருந்து கால்நடையாகக் காடுகள் ஊடாக மலை நாட்டுத் தோட்டங்களுக்கு அழைத்துவரப்பட்டனர். இந்த வழிநடையின்போது பட்டினியாலும், வழிநடைக்களைப்பாலும், கொடிய நோய்களாலும் மாண்டோர்பலர். இதுவோர்சோகவரலாறு. கோப்பிச்செய்கைமறைந்து தேயிலைச்செய்கை தோட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டது. தொழிலாளர் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இறப்பு வீதம், தாய்மார் இறப்புவீதம், குழந்தைகள்இறப்புவீதம்ஆகிய குறிகாட்டிகள் இலங்கையின் தோட்டத் தொழிலாளர் மத்தியில் மிக உயர்வாக இருந்தன.
பெருந்தோட்ட முறைமை ஒரு சுரண்டல் முறை; சுரண்டல் அதன் இயல்புகளில் ஒன்று; அது அப்படித்தான் இருக்கும் என்ற மனோபா வத்தின்படி இயங்கிய ஒருமுறை இது. ஆணின் கூலிஒருநாளுக்கு 33 சதம். பெண் தொழிலாளியின் கூலி 25சதம். சம்பளம் அன்றன்றே வழங்கப்படுவதில்லை.தாமதித்துத்தான்கொடுக்கப்படும். சம்பளத்தை கொடுக்கும்போது சில கழிவுகள்கழித்துக்கொள்ளப்படும். வேலைக்கு அழைத்து வந்தகங்காணிக்கு கொடுக்கவேண்டிய கடன் என்றுகூறிஒரு பகுதியைப் பிடித்துக்கொள்வார்கள். தோட்டங்களில் இருந்துதப்பித்து ஒடுவதற்கும் தொழிலாளர்கள்முயற்சிப்பது உண்டு. 1865இல் கொண்டு வரப்பட்ட சட்டம் ஒன்றின்படிதோட்டத்தை விட்டு ஓடுதல் சட்டப்படி குற்றமாக்கப்பட்டது. அவ்வாறு ஓடுபவர்களைப் பிடித்து எசமான னிடமே திருப்பி ஒப்படைக்கச் சட்டம் வழிவகுத்தது. தொழிலாளர் களின் முறைப்பாடுகளையோ குறைகளையோ எடுத்துச் சொல்லும்

Page 53
74 அநாமதேயங்களாக இருந்தோர்.
வழிமுறைகள் எதுவும் இருக்கவில்லை. "அருவருப்பைத்தரும் அநீதி, கொடுமை’ ‘நீகிரோ அடிமைகளை விடக் கேவலம்” என்று அக் காலத்தின் அதிகாரிகள் இது பற்றிக் குறிப்பிட்டனர். கூலி பற்றி ஏதும் முறையிட்டால் "அடியும் உதையும். மூச்சுவிடமாட்டார்கள் முறைப் பாடுகளுக்குத்தீர்வாக "கைவிலங்கும், உதையும் கிடைத்தன என்றும் குறிப்புக்கள் உள்ளன. பெருந்தோட்ட முறையில் தொழிலாளர்கள் வெளி உலகின் தொடர்பு இல்லாமல் பிரித்துத் தனிமைப்படுத்தப் பட்டார்கள். மொழியால், மதத்தால்வேறுபட்டசமூகம்ஒன்று அயலில் சூழ இருக்க அதன் மத்தியில் அந்நியப்படுத்தப்பட்டு வைக்கப்பட் டார்கள். அரசாங்கத்தினாலும், தோட்டத்துரைகளினாலும் தொழிலாளர் களுக்கு ஒரே ஒருநிவாரணம் கொடுக்கப்பட்டது. விரும்பியபடி சுதந்தி ரமாகசாராயம் குடிக்கலாம் என்பதுதான்இந்தநிவாரணம். இது தொழி லாளர்களுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகை என்றும் நாம் கொள்ள முடியாது. ஏனெனில் தோட்டத்துரைமாரேகுடியில்சுகம்கண்டவர்கள் தாம். முழுத்தோட்டத்தினதும் கலாச்சாரம் "குடியை சுற்றிச் சுழன்ற ஒன்றுதான். 19ஆம்நூற்றாண்டின்ஆவணங்களில் தோட்டத்துரைமாரின் குடிப்பழக்கம் பற்றிச்சுவையான குறிப்புக்கள் உள்ளன. துரைமாரின் வீடுகளின் கொல்லைப்புறத்தில் எகிப்தின் பிரமிட்டுகள் போன்று வெற்றுப் போத்தல் குவியல்கள் காணப்படும் என்று ஒரு குறிப்பு உள்ளது. மதுல்சீம தோட்டத்தின் வீதியை மறிப்பதற்கு வெற்றுப் போத்தல்சாக்குமூடைகளை ஒருதடவை பயன்படுத்தினார்களாம்"
துரைமார் விஸ்கி, பியர்போன்றஇறக்குமதிசெய்யப்பட்டமதுபானங் களை அருந்தினர். தொழிலாளர்கள் வேலை முடிந்ததும் தவறணை களில் தம் பொழுதைப் போக்கினர். கள்ளும், சாராயமும்தாராளமாக அங்குகிடைத்தன. "தோட்டங்களுக்குச்செல்லும்பாதைகளில் எல்லாம் தவறணைகள் நாளுக்கு நாள் பெருகுவது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது’ என்று 1853இல் ஒருபத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப் பட்டிருந்தது." 1899ஆம் ஆண்டில் மதுபானவிற்பனை, குத்தகை பற்றிய விசாரணை நடத்தப்பட்டபோது 'சிலோன் ஒப்சேவர்' என்ற பத்திரி கையின் ஆசிரியர் பெர்குசன் சாட்சியம் அளித்தார். விசாரணையில் சாட்சியம் கொடுக்குமுன்பெர்குசன்தோட்டத்துரைமாருக்கு ஒரு சுற்று நிருபம் அனுப்பித்தகவல்களைத்திரட்டினார். 70 தோட்டத்துரைமார் அனுப்பிய பதில்களில் தொழிலாளர்களின் குடிப்பழக்கம் பற்றி குறிப்

சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு. 75
பிடப்பட்டிருந்த தகவல்களின் அடிப்படையில் பெர்குசன் கூறியதை விசாரணை அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:
கூலித் தொழிலாளர்களிடை குடிப்பழக்கம் பெரிய அளவில் பரவி யுள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. சம்பள நாளன்று முதல் 25% தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பி வரமாட்டார்கள். தாம் பெற்ற சம்பளம் முழுவதையும் குடியில் செல வழித்தபின்தான்.அவர்கள்மீண்டும் வேலைக்கு வருவார்கள்
தோட்டத்துரைமார்தம் தோட்டங்களை அண்டிதவறணைகள்அமைப் பதை ஊக்குவித்தார்கள்; ஆதரித்தார்கள் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. தோட்டத்துரைமாரிடம் இருந்து தவறணை அனுமதிபத் திரங்கள் வழங்கும்படி சிபார்சுக் கடிதங்கள் தனக்கு அடிக்கடி வரு கின்றன என்று கவர்னர் வில்லியம் கிரகரி குறிப்பிட்டிருக்கிறார். சில தோட்டத்துரைமார்கள், குடியின்தீங்குகள் பற்றி அபாயக்குரல் எழுப் பியுள்ளனர். தவறணைகளால் விளையக் கூடிய ஆபத்துக்களையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். ஹரிங்டன் என்றதோட்டத்துரை 1851ஆம் ஆண்டில் தவறணைகளால் ஏற்படும் தொல்லைகள் பற்றிக் குறிப் பிட்டார்.தன்முறைப்பாடுகளை"ஒரு பேச்சுக்காக சொன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' என்றும் 1500 முதல் 2000 பவுண்கள் பெறும தியான தோட்டச் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளவன் நான் என்றும் "இந்தக்கெடுநோக்கம் பிடித்தமனிதர்களின்தயவில்நான் இருக்கிறேன்’ என்றும் ஹரிங்டன்தனது ஆதங்கத்தை வெளியிட்டார்." தோட்டத் தொழிலாளர்கள் தமது கூலிக்குப் பதிலாக அரிசியை பெற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்தது. ஒரு கொத்துஅரிசியை 14சதம் விலையில் தோட்டநிர்வாகம் கொடுத்தது. இதனை 9சதத்திற்கோ அல்லது 10 சதத்திற்கு அருகே உள்ள பட்டினத்தின் கடைகளில் விற் கலாம். உணவுக்காக கொடுத்த அரிசியின் ஒரு பகுதியை இப்படி விற்றுவிட்டு நேரே தவறணைக்குச் செல்வான் தொழிலாளி. அங்கே கலப்படம் செய்த சாராயத்தைகூடிய விலைகொடுத்து அவன் வாங்கிக் குடிப்பான். இந்த வருந்தத்தக்கநிலையை 1889ஆம்ஆண்டின்விசாரணை அறிக்கை “வெளிப்படையான கொள்ளை' எனவருணித்தது.*
“தொழிலாளர்களுக்கு தேவைப்படுவதுஉணவு மட்டும்தான். அது தவிர மேலதிகமாக கொடுக்க வேண்டியதில்லை. அப்படிக்கொடுத்தால் அதுதவறணைக்குத்தான்போய்ச்சேரும்' என்று 1890ஆம்ஆண்டில் ஒரு தோட்டத்துரைகுறிப்பிட்டிருப்பதைக்காண்கிறோம். தோட்டத் தொழி

Page 54
76 அநாமதேயங்களாக இருந்தோர்.
லாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக் கூடாது என்பதற்கான நியாயம் ஒன்றையே மேற்கூறியவாறு அவர் தெரிவித்தார். (A New System of Slavery: The Export of Labour Overseas, 1830-1920) 6Tailip DIGSait ஆசிரியர் ஹியு ரிங்கர் (Hugh Tinker) இந்தியாவின் தொழிலாளர்கள் தோட்டங்களில் எங்கெங்கெல்லாம் போய்க்குடியேறி வேலைசெய்தார் களோ அங்கெல்லாம் உள்ள பொதுவானதொரு பிரச்சினை தான் மதுபோதைப் பிரச்சினை என்று (அவர் வார்த்தையில் (An Indian Drink Question) குறிப்பிட்டுள்ளார்.
மது மலிவாகவும் தாரளமாகவும் கிடைத்தது. அது சக்திவாய்ந்த ஒரு வஸ்து. வேலை முடிந்ததும் தொழிலாளர்களில் பலர் அது தரும் வெறிமயக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள். கூலியாட்களுக்கு உயிர்ப் பாற்றலை மது வழங்கவில்லை. அது அவர்களை மதிமயக்கம் செய்து
மறதி என்னும் மாயஉலகுக்குஇட்டுச்சென்றது.
ஹியு ரிங்கர் பிரித்தானியக் காலனிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட கூலித் தொழிலாளர்களின் பொதுவான இயல்புகளில் ஒன்றான இந்த அவல வாழ்வை மேற்கண்டவாறு எடுத்துரைக்கின்றார் (பக்.212-13மே. கு. நூல்)
செல்வத்தின்திரட்சியை, அது ஒரு பக்கத்தில் குவிவதை விளக்கிய மார்க்ஸ் துன்பமும் துயரமும் இன்னொரு சாராருக்குச் சொந்தமாகிப் பெருகுவதையும் விளக்கினார். மூலதனத்தின்திரட்சிஅல்லது குவிப்பு (Accumulation ofCapital) இலங்கையின்சமூக வாழ்வையும் சீரழித்துக் கொண்டிருந்தது. சாராயக்குத்தகை வியாபாரம்அதைத்தான்மிகநன்றாக வெளிப்படுத்தியது. எங்கேசாராயம்நன்றாகவிலைபோயிற்றோ அங்கே தொழிலாளர் வர்க்கம் மிகக் கூடிய செறிவைக் கொண்டிருந்ததைக் காண்கிறோம். மத்திய மாகாணத்தில் தோட்டத்தொழிலாளர்களும் கிராமத்து விவசாயிகளும் சாராயத்திற்கான நல்ல சந்தை வாய்ப்பை வழங்கினார்கள். அதே போன்று மேற்கு மாகாணத்தில் துறைமுகம், ரெயில்வே, கைத்தொழில் ஆலைகள், பொதுவேலைப் பகுதி என்ப வற்றைச்சார்ந்து தொழிலாளர் எண்ணிக்கை பெருகிச்சென்றது. இவர் களைவிட மீன்பிடி, உதிரித்தொழில்கள் சார்ந்தும் அன்றாடம் உழைத் துச்சீவிக்கும் பாட்டாளிகள் உருவாகினர். 1896ஆம் ஆண்டின் சாராயக் குத்தகை வருமானத்தின் 70% மேற்குமாகாணம், மத்தியமாகாணம், ஊவா மாகாணம், சப்பிரகமுவமாகாணம் என்றநான்கு மாகாணங்களில்

சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு. 77
இருந்து கிடைத்தது. (ஊவா, சப்பிரகமுவ புதிதாக உருவாக்கப்பட்ட மாகாணப் பிரிவுகள்) ஆகவே இலங்கையின் மத்திய, மேற்கு பகுதி களைச் சார்ந்து ஒரு தெளிவான மாற்றம் வெளிப்படுவதை நாம் இத் தகவல் மூலம் புரிந்து கொள்ளலாம்.
பெருந்தோட்டங்கள், காரியச் சுரங்கங்கள், ஆலைகள் என்பன அவலமான வாழ்க்கை சூழலை உருவாக்கிக்கொண்டிருந்த வேளையில் அந்தச்சூழலில் இருந்து உழைப்பாளிகள் “விடுதலை பெறுவதற்கான குறுக்கு வழியொன்றையும் சாராய வர்த்தகம் உருவாக்கியது. சாராயம் தொழிலாளர்களின் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களில் ஒன்றாக மாறியது. இந்த அத்தியாவசியப் பொருளைவிற்பதன்மூலம் முதலாளித் துவத்தின் எழுச்சிக்குத் தேவையான அத்தியாவசிய ஆரம்ப மூலத னமும் கிடைத்தது என்பது சுவைமிக்க வரலாற்றுச் செய்தி.
குறிப்புகள்
1. எஸ். பி. டி. சில்வா, 1982 : 326 - 327.
பிரடரிக் எங்கல்ஸ், 1975 : 400 - 01.
டென்ஹாம், 1912 : 126,
4.
பற்றிக் பீபிள்ஸ், 1973 : 186.
5. கப்பர் , 1877 - 13.
6. ஸ்கின்னர், 1891 : 219 - 20.
7
டிக்பி ,1879 : 11, 118.
மில்லி , 1878 அத்தியாயம் 3.
Forrest, 1967 : 33.
10. மேலது, 39.
11. செசனல் பேப்பர் x1, 1898 : 10.
12. வில்லியம் கிரகரி சட்டசபை உரைகள், 1866 - 77 யூலை 30,
3. SLNA 6 / 2093 B, 1851 Lorrriġ 3.
14. செசனல் பேப்பர் xi 1889:5

Page 55
இயல் - 7
சாராய வர்த்தகத்தினால் பெற்ற லாபம்
வர்த்தகர்கள் லாபத்தை உழைக்கும் போது உற்பத்திமுறையொன்றில் புரட்சி எதனையும் கொண்டு வருவதில்லை. அவர்கள் சந்தையினைக் கட்டுப்படுத்துவதால் மட்டுமே லாபம் உழைக்கிறார்கள். சந்தையின் மீதானகட்டுப்பாடு எந்தளவுக்கு உயர்வாகஇருக்கிறதோ அந்தளவுக்கு லாபமும் உயர்வாக இருக்கும். இக்காரணத்தால் வர்த்தக மூலதனம் தனியுரிமைமுறையினைஉருவாக்கும்.மத்தியப்படுத்தல், ஒன்றுசேர்த்து மையப்படுத்தல்என்பனமூலம்தனியுரிமைகளைஉருவாக்கும். உற்பத்தி மூலதனம் தனியுரிமைகளை உருவாக்கும் வேகத்தை விடக் கூடிய வேகத்தில் தனியுரிமை வளரும். ஆதலால் வர்த்தக மூலதனம் தலை யிடாக்கொள்கை என்ற தத்துவத்தை நிராகரித்தது. தனியுரிமைச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள அரசின்உதவியைநாடியது.
g)GumaiGg Gs (Geoffrey Kay)'' இலங்கையில் சாராய வர்த்தகம் அரசின்முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கியது. கண்டி இராச்சியத்தில் இது தடைசெய்யப்பட்டிருந்தது. டச்சுக்காரரும் பிரித்தானியரும் கரையோர மாகாணங்களில் சாராய வர்த்தகத்தை அனுமதித்திருந்தனர். கள்ளிறக்கல், சாராயம் காச்சுதல் என்பன அரசாங்க அனுமதியுடனேயே செய்யலாம். இவற்றுக்கு அனு மதிப்பத்திரம் பெறவேண்டும். மொத்த விற்பனையும், சில்லறை விற்பனையும் குத்தகையாகக் கொடுக்கப்பட்டன.சாராயத்தின் விலை யையும் அரசாங்கம் நிர்ணயித்தது. ஏற்றுமதியின் போது அரசால் வரி அறிவிடப்பட்டது. உற்பத்தியின்அனைத்துஅம்சங்களும்தனியுரிமைக் கட்டுப்பாடுகளுக்குஉட்படுவதைஇங்கேகாண்கிறோம்.இதுவே வணிக வாதத்தின் (Mercantism) அடிப்படை இயல்பு ஆகும். 1830களின் பின்னர்கூடபிரித்தானிய அதிகாரிகள் வணிகவாதக்கொள்கைகளின்பல அம்சங்களை தொடர்ந்துகடைப்பிடித்தனர்.

சாராயவர்த்தகத்தினால் பெற்ற லாபம் 79
பிரித்தானியர் ஆட்சியில் கைத்தொழில் உற்பத்திமுறை குறிப் பிடத்தக்க முன்னேற்றம் பெற்றது. தொழிலாளர் எண்ணிக்கை பெரு கியது. அவர்களுக்குக் கூலி பணமாகக் கிடைத்தது; சாராய விற்பனை யும் அதிகரித்தது. பின்வரும் மூன்றுதுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கியமானவை:
அ) பெருந்தோட்டங்கள் அமைக்கப்படுதல் ஆ) காரியச்சுரங்கத் தொழில் இ) பொது வேலைப்பகுதியின்நடவடிக்கைகள்(அரசாங்கப் பொது வேலைப் பகுதியால் கொழும்பு கண்டி ரெயில்பாதை 1860க் களில் அமைக்கப்பட்டதுமுக்கியமான வேலை)
இத்துறைகளில் ஏற்பட்டவிருத்திகளின்விளைவுகளைநாம்கவனித்தல் வேண்டும்.
1. கொழும்புத் துறைமுகத்திற்கும் கண்டிக்கும் இடையிலான போக்குவரத்து அதிகரித்தது. மாட்டு வண்டில்காரர்கள் பெரும் எண்ணிக்கையில் இவ்வீதியில் போக்குவரத்து, ஏற்றியிறக்கல் தொழிலில் ஈடுபட்டனர். 2. காடுகளை வெட்டித்துப்பரவுசெய்தல், கட்டிடங்கள் அமைத்தல், மரம் அரிதல், தளபாடங்களின் உற்பத்தி, சில்லறை வர்த்தகம் எனப்பலவிதமான தொழில்கள் வளர்ச்சிபெற்றன. இத்தொழில் துறைகளில் வேலை செய்வோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. மேற்குறிப்பிட்ட தொழில்களின் வளர்ச்சியால் தொழிலாளர் வர்க்கம் ஒன்று உருவானது. அவ்வர்க்கம் சாராய வர்த்தகத்தை லாபம் தரும் தொழிலாக ஆக்கியது. சாராயவர்த்தகத்தில் ஈடு பட்டவர்கள் ஆண்டுதோறும் பெரும் லாபம் உழைத்தனர். இவ்வாறுஉழைத்தலாபம்வளர்ச்சிபெற்றுவரும்பெருந்தோட்டத் துறையிலும் அதனைச் சார்ந்த தொழில்களிலும் முதலிடுவ தற்கானஆரம்பமூலதனமாக இருந்தது. வர்த்தக மூலதனம் சந்தையினைக்கட்டுப்படுத்தித்தனியுரிமை மூலம் லாபம் உழைக்கின்றது என முன்னர் குறிப்பிட்டோம். சாராயவர்த் தகத்தில் அதன் இயல்புகளை வெளிப்படையாக நாம் காணலாம். குத்தகைக்காரர்கள் சாராயத்தைச் சில்லறையாக விற்கும் அனுமதி பத்திரத்தை பெற்று இருப்பார்கள். அவர்கள் குத்தகைக்கு எடுத்த

Page 56
8O அநாமதேயங்களாக இருந்தோர்.
பகுதியின் விற்பனையின் ஏக உரிமை அவர்களுக்கே இருந்தது. சந்தை யின் இந்த அதிகாரம் சாராயத்தை வடிக்கும் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் என்ற இரு சாரார் மீதும் உள்ள அதிகாரம் ஆகும். உற்பத்தி யாளர்களுக்கு குறைந்த விலையைக் கொடுத்து சாராயத்தை வாங்க முடியும். நுகர்வோரையும், கலப்படம் செய்தல், நியமித்த விலையிலும் கூடிய விலையில் விற்றல் போன்ற ஊழல் நடவடிக்கைகள் மூலம் சுரண்டலாம்! இதனை விட குத்தகைக்காரர்கள் கூட்டுச்சேர்ந்து ஏலத் தின் போது குறைந்த விலைக்குக் குத்தகையைப் பெறலாம். ஆகக் குறைந்த விலைக்கு பண்டத்தை வாங்குதல், ஆகக் கூடிய விலைக்கு நுகர்வாளனுக்கு விற்றல் என்றவியாபாரதந்திரத்தை வர்த்தகமூலதனம் கடைப்பிடிக்கும். சந்தையின் மீதுள்ள ஆதிக்கம் இத்தந்திரத்தைச் செயற்படுத்த உதவுகிறது.
சாராயத்தின் உற்பத்தியிலும், விற்பனையிலும் பல படிநிலைகள் உள்ளன. இந்தப்படிநிலைகள் பலவற்றிலும் தமது கட்டுப்பாட்டை ஒருவரோ, சிலர் ஒன்று சேர்ந்தோவைத்திருந்தால் போட்டியை இல்லா மல் செய்து தனியுரிமையின் பயன்களை அனுபவிக்கலாம். சாராயக் குத்தகைக்காரர்கள்சாராய உற்பத்தியைக் கட்டுப்படுத்தினர். உற்பத்தி யாளர்களான சாராயம் வடிப்போர் மேற்கு மாகாணத்தில் சிற்றளவு முறையில் சாராயத்தை உற்பத்தி செய்வோராக இருந்தனர். தமக்குச் சொந்தமான சிறு தென்னந்தோட்டத்தில் பெறக் கூடிய கள்ளைக் கொண்டு பழமையான தொழில்நுட்பத்தின் உதவியுடன் சாராயத்தை வடித்தனர். குத்தகைக்காரர்கள்நாட்டின் பிறபாகங்களில் தமது சந்தை யினை விஸ்தரித்து இருந்தனர். சாராயம் வடிப்பவர் நேரடியாக நுகர் வோருக்கு விற்க முடியாது. குத்தகைக்காரரின் தயவிலேயே சாராயம் வடிப்பவர்கள் இயங்க வேண்டியிருந்தது. 1897ஆம் ஆண்டில் 200 சாராயம்வடிப்போர்செயற்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர்மேற்கு மாகாணத்தின்களுத்துறை, பாணந்துறைப்பகுதிகளைச்சேர்ந்தோராவர். விதிவிலக்காகச் சில பணக்காரர்கள் சாராயம் வடித்தல் தொழிலில் ஈடுபட்டனர். பெரும்பாலோர் வறியவர்களே. 1897இல் சாராயத்தின் மொத்த விற்பனைகலனுக்கு ரூ 1 முதல் 1.25ஆக இருந்தது. சில்லறை விலைகலன்ஒன்றுக்குரூ448ஆகும். குத்தகைக்காரர்கள்சாராயம் வடிப் போருக்கு முற்பண்ம் கொடுப்பார்கள். பலமாதங்களுக்கு தேவையான சாராயத்திற்கு முற்பணத்தை பெற்ற சாராயம் வடிப்பவர் குத்தகை முதலாளியின் தயவில் தொழிலை நடத்துவார். சாராயம் வடித்தல்,

சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு. 8.
அதனைவிற்பனை செய்தல் என்ற தொழில்கள் இரண்டையும் ஒருவரே செய்யக் கூடாது. அது ஊழலுக்கு வழிவிடும் என்பது அரசாங்கக் கொள்கை.நடைமுறையில் குத்தகைக்காரர்கள்சாராயம் வடிப்போரைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பலம் மிக்க குத்தகையாளர் களுக்கு போட்டியாக தொழிலுக்குப் புதியவர் ஒருவர் குத்தகை எடுத் தால் அவருக்கு சாராயம் வழங்குவதற்கு சாராய வடிகாரர் முன்வர மாட்டார்கள். பலசந்தர்ப்பங்களில் குத்தகைக்காரர்களும் சாராய மொத்த வியாபாரிகளும் கூட்டுச் சேர்ந்து செயற்படுவர். மொத்த வியாபாரி களுடனோ குத்தகைக்காரர்களுடனோ பகைத்துக் கொண்டு சாராயம் வடிப்போர் தொழிலில்நிலைக்க முடியாது. குத்தகைக்காரர்கள்சாராய மொத்த வியாபாரிகளின்துணைப்பங்காளிகளாகவும் செயற்பட்டனர். சாராயம் வடிப்போர், மொத்த விற்பனையாளர், சில்லறை விற்ப னைக்கான குத்தகைக்காரர் என்ற மூன்று பிரிவினரும் தொடர்புடைய வர்கள் என்பதை பல உதாரணங்கள் மூலம் அறியலாம்.
பாணந்துறையின் மிகப் பெரிய குத்தகைக்காரர்கள் குடும்பங்கள் குத்தகை வியாபாரத்தோடு சாராயம் வடிக்கும் நிலையங்களையும் நடத்தின. மொத்த வியாபாரத்திலும்அக்குடும்பத்தவர்கள் ஈடுபட்டனர். பொன்ன ஹென்னடிகே ஹரமானிஸ், ஆர்னல்ட் டயஸ் முன்னணிக் குத்தகைக்காரர்களாக இருந்ததோடு பல வடிசாலைகளையும் வைத் திருந்தனர். ஆர்னல்ட் டயஸின் மகன் சி. ஈ. ஏ. டயஸ் தனது தந்தையி னாலும் பாட்டனாலும் கட்டி வளர்க்கப்பட்ட வர்த்தகத்தை கொண்டு நடத்தியதோடு ஆண்டுதோறும் பதினாறு வடிசாலைகளுக்கு நிதி கொடுத்து உதவிவருவதாகறைட்(Wright) என்பவர்தமது நூலில் (1907) குறிப்பிட்டுள்ளார்.ஹரிடயஸ், யெரமிஸ்டயஸ் என்பவரின்மகனாவார், இவர் பெரிய குத்தகைக்காரராக இருந்தார். பாணந்துறையில் 60,000 கலன்கள் கொள்ளளவு உள்ளபண்டகசாலையையும் இவர் வைத்திருந் ததாக றைட் குறிப்பிடுகின்றார். பாணந்துறையில் வேக்கந்த என்ற இடத்தைச் சேர்ந்த மஹாவடுகே மத்தெயஸ் பெரரா குடும்பம் இன்னோர் உதாரணமாகும். இக்குடும்பத்தின் செல்வமும், சொத்து டமைகளும் 1860க்களில் பெருகிச் சென்றன. மத்தெயஸ் பெரராவின் மகன்களில் ஒருவர் அப்பிரஹாம் பெரரா. இவர் பல வடிசாலைகளில் பங்குதாரராக இருந்தார். இன்னொரு மகனான எம். கொர்னெலிஸ் பெரராஇலங்கையின் மிகப்பெரிய சாராய வர்த்தகராக இருந்தார் என்று றைட்தமது நூலில் குறிப்பிட்டார்.

Page 57
82 அநாமதேயங்களாக இருந்தோர்.
சாராயத்தின் கேள்விஅதிகரித்தது.அதற்கு ஈடாகவழங்கலைஅதிகரிக்க
வேண்டும். அவருடைய சொந்தவடிசாலையில் இருந்து மட்டுமல்
லாமல் பெருந்தொகையான இருப்பைபிற வடிசாலைகளில் இருந்தும்
அவர் கொள்வனவு செய்ய வேண்டி இருந்தது. இலங்கையின் மிகப்
பெரியசாராயவர்த்தகராகஅவர்(கொர்னெலிஸ்பெரரா)விளங்கினார் என்பதுறைட் அவர்களின்கூற்று.
மெலின்னகே மத்தேயஸ்சல்காடோ பாணந்துறையின்சாராய வர்த்த கர்களில் பிரபலம் பெற்ற குடும்பம் (சல்காடோபேக்கரி என்ற பெயரில் பல இடங்களில் பேக்கரிகளையும் இக்குடும்பம் நடத்தியது) இக் குடும்பத்தின் பண்டகசாலை 50,000 கலன் கொள்ளளவு உடையது. இவர்கள்பாணந்துறையில் இருந்து பிற இடங்களுக்கு இருப்பை அனுப் பிக் கொண்டிருந்தனர். பரதவர் சமூகத்தைச் சேர்ந்த குரூஸ் குடும்பம் சிலாபம் பகுதியில் சாராய வர்த்தகத்தில் ஏகபோக உரிமை கொண்டி ருந்தது. என். ஈ. டி குரூஸ் சிலாபம், கொழும்பு ஆகிய இடங்களின் குத்தகைக்காரர். களுத்துறையிலும் சிலாபத்திலும் பெரும்பண்டசாலை களை வைத்திருந்தார்."
குத்தகைக்காரர்கள், சாராய வடிசாலைகளைதமது கட்டுப்பாட்டில்
வைத்திருந்தனர். மொத்த விற்பனையாளர்களாகவும் இருந்தனர். இதனால் வடிசாலை உரிமையாளர்களுக்கு கொடுக்கவேண்டிய விலையைதீர்மானிக்கும் சக்தி இவர்களிடம் இருந்தது. ஆரம்பகாலம் தொட்டேஉற்பத்தி முதல் சில்லறை விற்பனைவரையான ஒவ்வொரு கட்ட வியாபாரத்தையும் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நேர் கோட்டு ஒருங்கிணைவு முறை சாராய வர்த்தகத்தில் ஆரம்பித்து விட்டது. பிற்காலத்தில் குத்தகைக்காரர்கள் ஒன்று சேர்ந்து ‘கார்ட்டல்’ ஆக இயங்க ஆரம்பித்தனர். இது போட்டியைக் குறைத்துச் சாராயக் குத்தகையையும் தாழ்ந்த நிலைக்குப் போகச் செய்து அரசாங்க வரு வாயை குறைக்கும்உபாயமாகும். உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்கும் விலை, குத்தகை இரண்டையும்தீரமானிப்பவர்களாக குத்தகைக்காரர் இருந்தனர். வர்த்தக முதலாளித்துவம்தனியுரிமை, சிலர்உரிமை என்ற வடிவங்களைச்சந்தையில் உருவாக்கும்இயல்பைக் கொண்டது. இலங் கையில் ஆரம்பகால முதலாளித்துவம் இந்த இயல்புகளை வெளிப் படுத்தியது. இதனோடு இணைந்ததாக குடும்பம், உறவுமுறை என்பன வும் திருமணக் கார்ட்டல்' முறை மூலம் பழமையான சமூக உறவு முறைகளை புதுப்பித்தன.

சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு. 83
சாராயக்குத்தகையாளர்களிடையே வர்த்தகக் கூட்டும் *கார்ட்டல் முறையும்
1830 - 1870க்கு இடைப்பட்டகாலம் சாராய வர்த்தகத்தில் 'ஒலிகோ பொலி” (Oligopoly) என்று ஆங்கிலத்தில் கூறப்படும் "சிலர் உரிமை வளர்ச்சிபெற்றகாலமாகும். 1830க்குமுன்னர்குத்தகைக்காரர்களிடையே போட்டி இருந்தது. 1830க்கு முந்திய காலத்தில் சிறுவர்த்தகம். ஊக வியாபாரம் என்பனவற்றில் ஈடுபட்டிருந்தோரும் அரசாங்கஉத்தியோகத் தில் இருந்தவர்களும் சாராயக் குத்தகை வியாபாரத்தில் ஈடுபட்டனர். சாராயக்குத்தகைஅவர்களுக்குதாம் செய்து வந்த பிற தொழில்களுக்கு மேலதிகமானஒரு தொழிலாகவும், வருமானமூலமாகவும் இருந்தது. அக்காலத்தில் குத்தகை வியாபாரத்தில் இழப்பும், தோல்வியும் கூட ஏற்பட்டது. பலர் தொழிலைக் கைவிட்டனர். அரசாங்க உத்தியோ கத்தர்கள் குத்தகை வியாபாரம் செய்யக்கூடாது என்ற தடைகொண்டு வரப்பட்டது. திறமையுள்ள வியாபாரிகள் சிலரே எஞ்சியிருந்தனர். தக்கதுபிழைக்கும் என்ற விதி செயற்பட்டது.
1830இன்பின்னரும் சாராயக்குத்தகை வியாபாரத்தில் ஈடுபட்டிருந் தோரில் மொறட்டுவை, பாணந்துறை என்ற இரு இடங்களைச் சேர்ந்த ‘கராவ' சாதியினர் பெரும்பான்மையினராக இருந்தனர். ஏனைய சாதிகளைச் சேர்ந்த குத்தகைக்காரர்கள் வியாபாரத்தில் நிலைத்து இருந்தபோதும் கராவ மேலாதிக்கம் இருந்தது. குத்தகைக்காரர்களின் உறவினர்கள் தவறணைகளில் உதவியாளர்களாகவும் சம்பளத்திற்கு வேலைசெய்வோராகவும்இணைந்து கொண்டனர். இதனால்குத்தகை ஒரு குடும்ப வியாபாரமாகியது. பல குடும்பங்கள் வியாபாரத்தில் முன்னணிக்கு வந்தன. சாதியும் உறவுமுறையும் சாராய வர்த்தகத்தில் வெற்றிக்குப் பிரதானகாரணிகளாக இருந்தன. வியாபாரத்தால் ஒன்றி ணைந்த ஒரே சாதிக்காரர் பின்னர் விவாக உறவுகள் மூலம் தங்கள் பிணைப்புக்களைப் பலப்படுத்தினர். வியாபாரத்தை தமது ஏகபோக உரிமையாக்கிய இக்குடும்பங்கள்தனியுரிமை லாபத்தையும் பெற்றன. 1850க்குப்பின்னர் மிகப் பெரிய சாராய வர்த்தகர்கள் என்று கூறக்கூடிய குடும்பங்கள் சில தோற்றம் பெற்றன. சாராயக்குத்தகை ஏலத்தில் குத்தகைக்காரர்கள் ஒன்றிணைந்து விலையைத் தாழ்த்தி விடுதல், கழுத்தறுப்பு போட்டி மூலம் பிறரை ஒழித்துக்கட்டுதல் என்ற சூழ்ச்சி முறைகள் தந்திரங்கள் சாராயக்குத்தகையில் சர்வசாதாரணமாயிற்று. அரசாங்கஅதிகாரிகளாலும் இதனைத்தடுக்கமுடியவில்லை. ஒருவரை

Page 58
84 அநாமதேயங்களாக இருந்தோர்.
யொருவர்கழுத்தறுக்கும்போட்டி19ஆம்நூற்றாண்டின்முடிவில்ஒய்ந்து குத்தகைக்காரர்களின் “சிண்டிக்கேற்’ (Syndicate) அல்லது கார்ட்டல் (upGosp(Cartelization) o (56)JTGOg5.
அரசாங்கதரப்பினரின்நோக்கில் வருவாயை அதிகரிக்க வேண்டும். இதற்கு இருவிடயங்கள்முக்கியமானவை, ஏலத்தில் போட்டி இருக்க வேண்டும். அடுத்த முக்கியமான விடயம் போட்டி போட்டுக் குத்த கையை எடுத்தவர் வியாபாரத்தை ஒழுங்காக நடத்திப் பொருந்திய குத்தகைப் பணத்தை மாதா மாதம் தடவைப் பணமாகச் செலுத்த வேண்டும். குத்தகைக்காரர்களைப் பொறுத்தவரை ஏலத்தில் விலை யைத் தாழ்த்த வேண்டும். அதன்மூலமே லாபம் பெறலாம். 1830 - 50 காலத்தில் மேற்கு மாகாணத்தின் சாராயக் குத்தகைக்காரர்கள் ஏலம் விடும்போது போட்டியிட்டனர். 1829 அளவில் குத்தகைக்காரர்தம்முள் கூட்டு வைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். ஜோர்ஜ் ரேர்ணர் என்ற பெயருடைய கவர்னர் குத்தகைக்காரர்கள் ஒன்று சேர்ந்து விலையை விழுத்தி விட்டனர் என்று காரணம் காட்டி 1829இல் கண்டிகச்சேரியில் நிகழ்ந்த ஏலத்தை ரத்து செய்தார். 1830க்களில் சொய்சா குடும்பம் பலதந்திரங்களைக்கையாண்டு ஏலத்தில் குத்தகைகளைப் பெற்றதோடு அரசாங்க அதிபரையும் திருப்திப்படுத்தி சாதுரியமாகச் செயற்பட்டது. 1830க்களில் யெரனிஸ் சொய்சாதலைமையிலான குத்தகைக்காரர்கள் கூட்டுச் சேர்தலின் பயன்களை மத்திய மாகாணத்தில் அனுபவிக்கத் தொடங்கினர். ரேர்ணர், மூயார்ட் (J. Mooyart) ஆகியகவர்னர்கள் குத்தகைக்காரர்கள்கூட்டுச்சேர்ந்து விலையைத்தாழ்த்துவதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் 1850க்களில் குத்தகை வருமானம் செயற்கையாகத்தாழ்ந்தநிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேற்கு மாகாணத்திலும் 1850க்களில் இதேநிலைதான். பொருளாதாரச் செழிப்பால் சாராய வியாபாரம்நன்றாக இருந்தும் குத்தகை விலைகள் உயரவில்லை.
1854 முதல் 1857 வரையான நாலு ஆண்டுகள் எச். யெரனிஸ் பீரிஸ், ஹர்மானிஸ் சொய்சா என்ற இருவரும் மத்தியமாகாணத்தின் சாராயக் குத்தகையைத் தனியுரிமையாக அனுபவித்தனர். பலம்மிக்க சொய்சா குடும்பம் இவர்களுக்குப் பக்கபலமாக இருந்தது. இவ்விருவரும் சொய்சாகுடும்பத்தின் உறவினர்களும் ஆவர். 1854இல் கண்டிக்கச்சேரி யில்நிகழ்ந்த ஏலவிற்பனையை இரத்துச்செய்து இரண்டாவது ஏலத்தை கொழும்பில்நடத்திய போது சுசு சொய்சா அரசாங்கத்தின் எண்ணத்தை

சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு. 85
நிறைவேற்ற முடியாதவாறு செய்தார். யெரனிஸ் பீரிஸ், ஹரமானிஸ் சொய்சா என்ற இருவரின்சார்பிலுமாக வைப்புப் பணத்தைச் செலுத்தி ஏலத்தில் 14,000 பவுண்களுக்கு குத்தகை எடுத்தார். குத்தகைக்காரர் களிடையே இருக்கும் கூட்டை உடைக்க முடியாது என்பதை கண்ட அரசாங்க அதிபர்கலோனியல் அரசாங்கத்தின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் மாற்றுத்திட்டம் ஒன்றை முன்வைத்தார்.
நடுத்தர முதலாளிகள் ஏலவிற்பனையில் ஒரங்கட்டப்படுகிறார்கள். பெரும்பாலானசந்தர்ப்பங்களில்ஏலம் ஒருஏய்ப்பு:நடவடிக்கைதான். குத்தகைக்காரர்கள் கூட்டுச் சேர்ந்து செயற்படுகிறார்கள். இது ஒரு திருப்தியற்ற முறை, நேர்மையற்றது மட்டுமன்றி அரசாங்க வரு மானத்தை குறைப்பது அரசாங்கநலன்களுக்கு மாறானது. என்று கவர்னர் தன் அறிக்கையில் குறிப்பிட்டதுடன் குத்தகையினை சிறுபிரிவுகளாக்கி ஏலத்தில் விட்டால்பலர் பங்குபற்றுவார்கள். போட்டி இருக்கும் என்று குறிப்பிட்டார்.
1870க்கள் வரையான காலத்தில் கோப்பிச் செய்கையின் காரணமாக ஏற்பட்ட செழிப்புகுத்தகை விலைகளை உயர்த்தியது. இருந்தபோதும் குத்தகைக்காரர்களின் கூட்டு தடுக்கப்படமுடியவில்லை. 1864இல் மத்தியமாகாணத்தில் 48000 பவுண்களாக இருந்த குத்தகை வருமானம் 1866இல் 67,000 பவுண்களாக உயர்ந்தது. 1867இல் குத்தகை விலைகள் 49,000 பவுண்களாக வீழ்ச்சியடைந்தது. காரணம் கோப்பிச்செய்கையில் இந்த ஆண்டு ஏற்பட்ட மந்தநிலைதான். இருந்தபோதும் குத்தகைக் காரர்களின்கூட்டுத்தந்திரமும் விலையின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தது. அரசாங்க உத்தியோகத்தர்களால் இதற்கு நிவாரணம் காண முடியவில்லை. அரசாங்க உத்தியோகத்தர்கள் குத்தகைக்கார்களிடம் சன்மானங்களை ஏற்பதுண்டு, என்ற குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழுந்தன. 19ஆம்நூற்றாண்டின் குத்தகை வருமானப் புள்ளிவிபரங்கள் ஏற்ற இறக்கத்தைக் காட்டுகின்றன. பொருளாதாரச் செழிப்பு மிக்க வருடங்களில் ஏன் குத்தகை வருமானம் உயரவில்லை என்பதற்குரிய காரணம் குத்தகைக்காரர்களின்கூட்டுச்சேர்க்கைதான். அவர்கள் கூட்டுச் சேர்ந்து குத்தகை விலையைத்தாழ்த்தினர்.

Page 59
86 அநாமதேயங்களாக இருந்தோர்.
சில்லறை வர்த்தகம் - தனியுரிமையாதல் 19ஆம்நூற்றாண்டின்பிற்பகுதியில்சாராய்க்குத்தகைஉயர்ந்து சென்றது. இதற்குக் காரணம் பெருந்தோட்டப் பொருளாதாரம் வளர்ச்சியுற்ற தாகும். 1880-83காலத்தில் கோப்பித்தோட்டங்கள்பங்கஸ் நோயினால் அழிந்தன; தேயிலைத் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தேயிலை உற்பத்தி விரைவில் வளர்ச்சி பெறத் தொடங்கியது. தோட்டத்தொழி லாளர்தொகையும்மிகவிரைவாகஉயர்ந்தது. இதனால்சாராய விலையும் அதிகரித்தது. குத்தகைஅதிகரித்ததோடு ஏலத்தில் குத்தகை எடுப்போர் வைப்புச் செய்ய வேண்டிய தொகையையும் அரசாங்கம் உயர்த்தியது. இதனால் பெரிய பணக்காரர்கள் தான் குத்தகை வியாபாரத்தில் ஈடு படலாம் என்ற நிலை உருவானது. மேற்குமாகாணத்தில் - 1872 - 1890 காலத்தில் குத்தகை வருமானம் ரூ 800000ற்கு மேற்பட்டதாக (80,000 பவுண்கள்) இருந்தது, உதாரணமாக 1874இல் குத்தகை ரூ 1மில்லி யனாகவும் 1877இல் ரூ.1.1மில்லியனாகவும் உயர்ந்தது. சிறிய முதலாளி கள்சந்தையில்இருந்துவிரட்டப்பட்டனர்; எஞ்சியோர்பெரும்முதலாளி களாவர். இவர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கிய தொடர்புஉடைய வர்கள். சாராய வர்த்தகத்தைத்தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் குத்தகையையும் இயன்றளவு குறைப்பதற்கு இவர்கள் முயன்றனர்.
1870-1900காலத்தில் சாராயக்குத்தகை ஏலத்தை சில குடும்பங்கள் தனியுரிமை ஆக்கின. குடும்பங்களின் பெயர் விபரங்கள் முன்னரே இந்நூலில் கூறப்பட்டன. சாராயம் வடிப்பவர்களாக முன்னர் இருந் தவர்கள் இக்காலத்தில் குத்தகைக்காரர்களாகமாறினார்கள். இவர்களுள் பொன்னஹென்னடிகேயெரமிஸ்டயஸ், தோமஸ்டிசில்வாஅமரசூரிய, மஹாவடுகே மத்தேயஸ் பெரரா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். டொன்பேற்றர் சேனநாயக்க, யோன்டி குருஸ், வெவகேஅர்னோலிஸ் டெப், ஹன்வடிகேஅந்திரிஸ்பீரிஸ் ஆகியோர்சாராயக்குத்தகையாலும், பிறகுத்தகைகளாலும் வியாபாரத்தில் உயர்ந்து காரியச்சுரங்கத் தொழி லிலும் மூலதனமிடத் தொடங்கினர். மூலதனத்திரட்சி வேகம் பெறு வதற்கு ‘கார்ட்டல் முறைக் கூட்டுகள் உதவின. விதானலாகே யொகான்ஸ் டி மெல் (யுவானிஸ் அப்பு ரெயின்டரால) எச். யோசப் பெர்ணாண்டோ (மஹாபாபசிங்கோ ரெயின்டஹாலமி) அந்தியரிஸ் பீரிஸ் என்ற மூவரும் சேர்ந்து ஒரு கார்ட்டல் ஆக இயங்கினர். இது மிகப்புகழ்பெற்றகூட்டுஆகும். 1867முதல் 1891 வரையுள்ளகாலத்தில் கொழும்பின் குத்தகையை இவர்கள் தம் கைக்குள் வைத்திருந்தனர்.

சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு. 87
அந்திரிஸ் பீரிஸின் மகன் யோகனஸ்டி மெல் என்பவரின் மகளைத் திருமணம் செய்தார். இதனால் வர்த்தக உறவு, விவாக உறவாலும் பிணைக்கப்பட்டது. 1895 - 1897 காலத்தில் யோன் குளோவிஸ் டி சில்வாவும் அந்தோனி நிக்கலஸ் டி சில்வாவும் இணைந்து பங்காளி களாக செயற்பட்டதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கூட்டு. யெரமிஸ் டயஸ், மத்தேஸ் பெரரா என்ற இருவரும் இக்காலத்தில் பங்காளிகளாக செயற்பட்டனர். ஏனைய கூட்டுக்கள் பற்றி முன்னரே குறிப்பிட்டோம்.
மேற்கு மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் சாராயவர்த்தகம் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவன வடிவத்தை பெற்றது. ‘கார்ட்டல்’ கூட்டுக்கள் இயங்கின. 1875இல் குத்தகைக்காரர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து மத்திய மாகாணத்தில் எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டனர். உயர்விலைக்கு சாராயம் விற்றதற்காக விதிக்கப்பட்டதண்டம் மிகவும் உயர்ந்ததாக இருந்தது என்பதே அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணம். கொழும்பில் இயங்கிய “சிண்டிக்கேற்’ அமைப்பு பத்து குத்தகைக்காரர்களைப் பங்காளிகளாகக் கொண்டிருந்தது. யெரமிஸ் டயஸ், என்.ஈ.டி குரூஸ், லூகஸ் பெர்ணாண்டோ, டொன் ஸ்பேற்றர் சேனநாயக்க தோமஸ்டிசில்வா அமரசூரிய, மத்தேஸ்பெரராஆகியோர் இந்த சிண்டிக்கேற்றின் முக்கிய உறுப்பினர்கள். 1909 வரை இச்சிண்டி கேற் சாராயக் குத்தகைகளில் தனியுரிமைக் கட்டுப்பாட்டை வைத் திருந்தது. யெரமியஸ் டயஸ் இந்த சிண்டிக்கேற்றின் முன்னணி உறுப் பினராவர். ஏலத்தில் கூட்டாக செயற்படுதல், குத்தகைக்கு பெற்ற தவறணைகளை உறுப்பினரிடையே பிரித்துக் கொடுத்தல், சாராய வடி சாலைகளில் இருந்து மலிவாக சாராயத்தைக் கொள்வனவு செய்து இருப்புச் செய்தல், குத்தகை வர்த்தகத்தில் பிறர் நுழைந்து விடாதபடி தடுத்தல், வேண்டிய சமயங்களில் லஞ்சம் கொடுத்துக்காரியங்களைச் செய்தல்முதலிய தந்திரங்கள்மூலம் சிண்டிக்கேற்உறுப்பினர்கள்சாராய வர்த்தகத்தால் பெரும் செல்வத்தைகுவித்தனர். 1876-1896இடைப்பட்ட காலத்தில் அரசாங்க குத்தகை வருமானத்தின் போக்கு பற்றி எடுத்துக் காட்டும் புள்ளிவிபரங்கள் கீழே உள்ள அட்டவணையில் தரப் பட்டுள்ளன.

Page 60
88 அநாமதேயங்களாக இருந்தோர்.
மாகாணம் 1876 (ரூபாவில்) 1896 (ரூபாவில்)
மேற்கு மாகாணம் 983.OOO 97OOOO மத்தி 693,000 6ll,000 தெற்கு 181,000 238,000 வடமேற்கு 180,000 322,000 கிழக்கு 70,000 lO3,OOO வடக்கு 61,000 112,000 வடமத்தி 13,000 1Ꮽ,000
do IIT 120,000
சப்பிரகமுவ - 210,000
ரூ 2,186,000 2,705.000
(ஊவா, சப்பிரகமுவ என்பன மத்திய, மேற்கு மாகாணங்களின் பகுதி களாக 1876இல் இருந்தன)
1861 முதல் 1876வரையான 15வருடகாலத்தில் குத்தகை வருமானம் 48% அதிகரித்தது. அதற்குப் பின்னரான 20 வருடகாலத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு 24% ஆகவே இருந்தது. ஒப்பீட்டளவில் பொருளாதாரச் செழிப்பு மிக்க 1876-1896 காலத்தில் குத்தகை வருமானம் குறைந்தது என்றால் அதற்குரியகாரணம்மத்திய மேற்கு மாகாணங்களின் குத்தகை யாளர்களின் ‘கார்ட்டல்கள்’ செயற்பட்டமைதான். முன்னணிக்குத்த கைக்காரர்கள் இம்மாகாணங்களின் குத்தகை வியாபாரத்தைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தனர்.
சட்ட முறையற்ற வழியில் லாபம் உழைத்தல்
சாராயத்தின் உற்பத்தி, விற்பனை என்பனவற்றிற்கான அதிகாரம் சட்டப் படிஅரசாங்கத்திற்குரியது. இந்தஅதிகாரத்தை குத்தகைக்காரர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும்அரசாங்கம் வழங்கியது. மேற்பார்வை செய்தல், கட்டுப்படுத்தல் அரசாங்கத்தின் கடமையாக இருந்தது. குத்தகைக் காரர்கள்கார்ட்டல்களைஅமைத்துசந்தையைக்கட்டுப்படுத்துதல்சட்ட விரோதமானசெயல்அல்ல.தனியுரிமைமுறையின்ஆதிக்கமுறைகளை அது குறிப்பிடும். சட்டமுறையற்ற வழிகளிலும் சாராயத்தில் லாபம் உழைக்கக் கூடியதாக இருந்தது. ஒரு பகுதியின் தவறணையைக் குத் தகை எடுத்த குத்தகைக்காரர்.அப்பகுதியில் சாராயத்தை பிறர் களவாக விற்பதைஅனுமதிக்கமாட்டார். ஆதலால்கள்ளச்சாராயத்தைதடுத்தல் குத்தகைக்காரர்களுக்கு நன்மையானதே. கள்ளச்சாராயத்தை கட்டுப்

சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு. 89
படுத்தும் வேலையில் குத்தகைக்காரர்களின் உதவியை அரசு நாடியது. பிறர் தம் பகுதியில் சாராயம் விற்பதை தடைசெய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்த குத்தகைக்காரர்கள்தாமே சட்டவிரோத விற்பனை நடவடிக்கையில்ஈடுபட்டனர்.சட்டவிரோதகலப்படம், உயர்விலையில் விற்றல் என்பன மிகவும் லாபம்தரும் வியாபாரம்ஆகும். அவர்களின் கீழ் பெருந்தொகையான பணியாட்கள் இருந்தனர். உறவுக்காரர்களான இப்பணியாட்கள் நம்பிக்கையானவர்கள். சட்டமுறை வியாபாரம், கள்ளச்சாராய வியாபாரம்இரண்டையும் இவர்களைக்கொண்டேநடத்த முடிந்தது.
1890க்களில் ஒருகலன்சாராரயத்தின் விலை ரூ.1.25ஆக இருந்தது. ஒருகலனின் சில்லறை விலை ரூ 4.48 ஆகும் தவறணையில் சாராயம் கிளாஸ்களில் ஊற்றிசிறுஅளவில் விற்கப்பட்டது. ஒரு கிளாஸ் சாராயம் என்ன விலை என்பதைஅரசுநிர்ணயிக்கவில்லை. சாராய வர்த்தகத்தின் சமூகத்தீமைகளைப் பற்றிப் பொதுமக்களும், சமூகசேவகர்களும்தான் அக்கறைப்பட்டார்கள். அரசாங்கம் சமூகத்தீங்கைப் பற்றி யோசிக்க வில்லை. அரசாங்க வருவாய்பற்றியே அக்கறை கொண்டது. சில்லறை விலையை குத்தகைக்காரர்கள்தம் விருப்பப்படிதீர்மானித்து கொள்ளை லாபம் பெற்றனர். எல்லிஸ் என்னும் அரசாங்கஅதிபர் 1896-97இல் ஒரு பரிசோதனையை நடத்தினார். பணம் உள்ள நுகர்வாளன் ரூ 448 ஐ செலுத்தி ஒரு கலன் சாராயத்தை வாங்க முடியும். ஏழையான கூலித் தொழிலாளர் கிளாஸ் அளவில் சாராயம் வாங்கிக் குடிக்கும்போது ஒரு கலனுக்கு ரூ.7.48ஐ கொடுக்கிறான் என்று இவர்கணக்கிட்டுகூறினார். சாராய விற்பனையில்சமூகநீதிஇருக்கவில்லை என்றுசுட்டிக்காட்டினார். தோட்டத் தொழிலாளர்கள் சாராயத்திற்கு இரண்டு மூன்று மடங்கு விலைகொடுத்தனர். கிளாஸ்மூலம் நடைபெறும் விற்பனையில் இடம் பெற்றமோசடியைக்கட்டுப்படுத்தஒரு வழிவகையும் இருக்கவில்லை.
சாராயக்குத்தகை வியாபாரம் சட்ட விரோத நடவடிக்கைகளோடு இணைந்த விடயமாகவே ஆரம்ப காலம் தொட்டு இருந்துவந்தது. 1834இல் பாலப்பு வடுகே பெட்றோ மென்டிஸ் என்னும் பிரபல குத் தகைக்காரர் மீதுசாராயம் கடத்தியதாக குற்றம்சாட்டி வழக்குத் தொடுக் கப்பட்டது. 1908ஆம் ஆண்டில் தொழில் ஆணைக்குழு விசாரணையின் போது குத்தகைக்காரர்களின் விற்பனை மோசடிகள் பற்றி சாட்சியம் அளிக்கப்பட்டது.

Page 61
90 அநாமதேயங்களாக இருந்தோர்.
சாராயத் தொழிலில் நிலையான மூலதனத்தின் அளவு குறைவு. தொழில்நுட்பமும் பழையதாக இருந்தது.தவறணைகளும் தற்காலிகக் கொட்டகைகள் தாம். மாறும் மூலதனம் ஒப்பீட்டளவில் அதிகம். தொழிலில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்களின் சம்பளம் மாறும் மூலதனத்தில் பெரும்பங்கைப்பிடித்தது. இப்பணியாளர்களில் பெரும் பாலானவர்கள் உறவுக்காராரகவும், ஊரவர்களாகவும், ஒரே சாதிக் காரராகவும் இருப்பர். நிர்வாக அமைப்பு தவறனை வியாபாரத்திற்கு ஏற்றதாக இருந்தது. அடிதடிசண்டைஎன்பனவற்றிற்கும் பணியாளர்கள் தயங்காதவர்கள். அரைகுறைமானிய முறையிலான விசுவாசம் பணியா ளரிடம் இருந்தது. விசுவாசமாக உழைத்த பணியாளர்களின் பிள்ளை களுக்கு மொரட்டுவை பிரின்ஸ் ஒவ் வேல்ஸ் கல்லூரி போன்ற பாட சாலைகளில் படிப்பதற்கான புலமைப் பரிசில்களை குத்தகை முதலா ளிகள் வழங்கினார்கள்.
சாராய வர்த்தகத்தைநடத்துவதற்காக கிராமவிதானைமார், பொலிஸ் காரர், கீழ்நிலை அரச உத்தியோகத்தர்கள் போன்றோரை "சந்தோஷ படுத்தி வைத்திருக்க வேண்டும். அக்காலத்தில் இது தொடர்பான முறைப்பாடுகள் பல அடிக்கடி தெரிவிக்கப்பட்டன.தவறணைநடத்தப் படும் இடம்அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனுமதி பெறப்பட்ட இடமாகும். தவறணைக்கு குத்தகை செலுத்திய குத்தகைக்காரர்தவற ணையல்லாத பிற இடங்களிலும் சாராயத்தைக் கள்ளமாக விற்பனை செய்வதன்மூலம் பிறர்கள்ளவிற்பனைசெய்வதைதடுத்ததோடு பெரும் லாபத்தைச்சுருட்டிக்கொண்டனர்; பெரும் முதலாளிகளாக மாறினர்.
சாராய வர்த்தகத்தால் திரட்டிய குபேர செல்வம் சாராயக் குத்தகைக்காரர்கள் பலவழிகளில் திரட்டிய குபேர செல்வம் பற்றிய விபரங்களை கண்டறிவது சிரமமான வேலை. அக்காலத்தில் சொத்து, செல்வ வரிமுறை இருக்கவில்லை. வரிஅறவீடு பற்றிய தரவு களைக் கொண்டு குத்தகைக்காரர்களின் செல்வத்தை மதிப்பிடும் வழி இல்லை. இருந்தபோதும்அரசாங்கஆவணங்களில்இருந்து பெறக்கூடிய தரவுகள் இவர்கள் திரட்டிய செல்வம் சொத்து பற்றிய தகவல்களை அறிவதற்கு உதவுகின்றன. குத்தகைக்காரர்கள் செலுத்திய குத்தகைப் பணம், அவர்கள் பிறதுறைகளில் செய்த முதலீடுகள், அவர்கள் கொள் வனவுசெய்தகாணிகளின்அளவு என்பனகுத்தகைக்காரர்களின்செல்வம்,

சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு. 9.
சொத்துப் பற்றிய கணிப்பீட்டுக்கு உதவுவன. வாய்மொழிமரபுச்சான்று களும் இக்குபேரர்களின் செல்வம் பற்றிக் குறிப்பிடுகின்றன.
1836ஆம் ஆண்டு மத்திய மாகாணத்தில் 77500கலன் மதுபானம் விற்கப்பட்டதாக ரேர்ணர் குறிப்பிட்டார். மொத்தமாக அறவிடப் பட்டகுத்தகைப்பணம்8754பவுண்கள்; குத்தகைக்காரனின்வருமானம் 1800 பவுண்கள். மத்தியமாகாணத்தின் குத்தகை 1836இல் யெரனிஸ் சொய்சாவின் தனியுரிமையாகும். 1835லும் இவரே குத்தகைக்காரன். ரேர்ணரின்கணக்குப்படியெரனிஸ் சொய்சா6845 பவுண்களை முதலீடு செய்து 1800 பவுண்களை லாபமாகப் பெற்றார். இது 26% லாபமாகும். குத்தகைப் பணம் மத்திய மாகாணத்தில் ஆண்டு தோறும் உயர்ந்து சென்றது. 1848இல் 18800 பவுண்களாகும். இதன் 26% 4700 பவுண் களாகும். இதே போல் 1845இல் 19700பவுண்குத்தகைப்பணத்தில் 5000 பவுண்கள் சுசு சொய்சாவின் லாபமாக இருந்திருக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கான புள்ளிவிபரங்கள் கீழே தரப்படுகின்றன. இவை சொய்சா குடும்பத்தின்வருமானத்தை அளவிட உதவுகின்றன.
ஆண்டு விற்பனை குத்தகை குத்தகையாளர் பெயர்
கலன்கள்
1833 26OOO தகவல் இல்லை | ய யெரனிஸ் சொய்சா
1834 65OOO 9150றிக்ஸ் ய, யெரனிஸ் சொய்சாவும்
டொலர்கள் அப்பாசெட்டி சின்ன ஐயரும்
1836 775OO 6845 பவுண்கள் ய. யெரனிஸ் சொய்சா
1842 தகவல் இல்லை | 10725 பவுண்கள் ய. சுசு சொய்சா, லூயிஸ்
சொய்சா மற்றும் யேம்ஸ் குரே
845 தகவல் இல்லை 19700 பவுண்கள் ய. சுசு சொய்சா
1848 தகவல் இல்லை | 18860 பவுண்கள் ய. சுசு சொய்சr
849 தகவல் இல்லை | 18800 பவுண்கள் ய. சுசு சொய்சா
1830க்கு முற்பட்டகாலத்தில் சாதாரணமாக ஒருவர் ஏதாவது வியா பாரத்தில் ஈடுபடுவதென்றால் 100பவுண்களை முதலீடு செய்வார். 1000 பவுண்களை ஒருவர் முதலிட்டார் என்றால் அது மிக மிக அபூர்வமான விடயம். 1829ஆம் ஆண்டில் யெரனிஸ் சொய்சாகுத்தகை வியாபாரத்தில் இறங்கியபோது 38 பவுண்களை குத்தகையாக செலுத்தினார். 1833இல் 3600 பவுண்களையும் 1836இல் 6845 பவுண்களையும் செலுத்தினார். ஏழுவருடங்களுக்குள் அவர் எப்படி உயர்ச்சி பெற்றார் என்பதை இத்

Page 62
92 அநாமதேயங்களாக இருந்தோர்.
தகவல்கள் காட்டுகின்றன. அலக்சாண்டர் பெர்னாண்டோ என்பவர் 1846ஆம் ஆண்டில் மத்திய மாகாண தவறணைகள் யாவற்றையும் 24000 பவுண்களுக்கு குத்தகைக்கு எடுத்தார். மேற்கு மாகாணத்திலும் குத்தகைக்காரர்கள் பெருந்தொகைப்பணத்தைக்குத்தகையாகச்செலுத் தினர். டி மெல் குடும்பம் 1850ஆம் ஆண்டில் கொழும்பு நகரில் 22000 பவுண்களைத் குத்தகையாகச் செலுத்தியது. 1871இல் கொழும்பு குத்தகை 40,000 பவுண்களாகவும் 1894இல் 70,000 பவுண்களாகவும் உயர்ந்தது. 1836ஆம் ஆண்டில் குத்தகை 6421 பவுண்களாக இருந்து இவ்வாறு உச்சநிலைக்கு உயர்ந்தது. மேற்கு மாகாணம் முழுமைக்கு மான குத்தகையும் 1836இல் 14,000 பவுண்களாக இருந்தது, 1876இல் 110,000 பவுண்களாக உயர்ந்தது.
அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய வருவாயைத் தந்திரமாகக் குத் தகைக்காரர்கள் ஏய்த்து தாமே லாபத்தைச் சுருட்டிக் கொள்கிறார்கள் என்பதைக் கண்ட அரசாங்கம் இதைத் தீர்க்க வழியில்லாமல் இருப் பதையும் உணர்ந்தது. 1896ஆம் ஆண்டில் எவ்.ஆர். எல்லிஸ்விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டார். 1896 யூலை முதல் 1897 யூன் வரையான 12 மாதங்களில் 1,019,767 கலன் சாராயம் விற்கப்பட்டது. செலுத்தப்பட்ட குத்தகை 2,708,890 ரூபா என எல்லிஸ் மதிப்பிட்டார். அரசாங்கத்தின்குத்தகைவருவாயை விற்கப்பட்டகலன்களின் தொகை யால் பிரித்தால் ஒரு கலனுக்கு ரூ 2.65 வருமானம் என்றும் எல்லிஸ் கணக்கிட்டார். செலவுகள் யாவற்றையும் கணக்கிட்டு, குத்தகைக் காரர்கள் பெற்றிருக்கக்கூடியலாபம் எவ்வளவு ஆக இருக்கும் என்றும் எல்லிஸ் கணக்கிட்டார். ஓர் ஆண்டில் ரூ5,91,464 குத்தகைக்கார்களின் லாபம் என்பது எல்லிஸ்கணக்கு. சட்டவிரோத விற்பனையால் கிடைக் கக்கூடிய லாபம் எல்லிஸ் கணக்கில் சேரவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
பற்றிக் பீபிள்ஸ் என்னும் ஆய்வாளர் 1896-97 புள்ளிவிபரங்களைப் பகுப்பாய்வு செய்து சாராயக் குத்தகை வியாபாரத்தில் ரூ 9 மில்லியன் வருமானம் கிடைத்ததென்றும், ரூ. 2.7 மில்லியன் அரசாங்க வருவாய் போக மீதி உள்ள தொகையில் வடிசாலைகளுக்கு கொள்வனவிற்காக கொடுத்ததையும் கழித்தால் ரூ 5 மில்லியன் மிஞ்சியிருக்கும் என்று கணக்கிட்டார். சாராய வியாபாரத்தில் பங்கு கொண்ட பல்வேறு தரப் பினரும்நிறைய வருவாயைப் பெற்றனர்.

சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு. 93
- சாராயம் வடிப்போர்
- மொத்த விற்பனையாளர்கள்
- குத்தகைக்காரர்கள்
- போட்டியாளர்கள்
- தவறணைநடத்துவோர் - பாதுகாப்புகடமை செய்வோர் - சாராயத்தை வண்டிகளில் ஏற்றி இறக்குவோர்
- தோட்டங்களிலும் கிராமங்களிலும் கள்ளச்சாராயம் விற்போர்
என்று ஒரு பெருங்கூட்டம் இந்த வருமானத்தில் பங்கு பெற்றது. “முதலியார்கள், பொலிஸ் விதானைகள், உள்ளூர் பெரியவர்கள்’ கூட இந்த லாபத்தில்தமது பங்கை எடுத்துக்கொள்ளத்தவறவில்லை. 1860 - 1900 காலப்பகுதியில் ரூ 50 மில்லியன் முதல் ரூ60மில்லியன் வரை சாராயவர்த்தக லாபமாக பெறப்பட்டது. என்று பற்றிக் பீபிள்ஸ் மதிப் LL*@raffi.
அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரின் குறிப்பின்படி குத்தகை வியா பாரத்தில்30பேர்வரைஈடுபட்டனர். இந்தக்குழுவில் பிறர்நுழைவதை இவர்கள்தடுத்துவந்தனர். இந்த30பேருள்ளும் பெரும்புள்ளிகள் என்று சொல்லக்கூடிய 10 அல்லது 12 பேர் இருந்தனர். இந்தச் சிறு குழு நெருக்கமான உறவுகளைக் கொண்ட “சிண்டிக்கேற்’ ஆகும். ஹென்றி யோசப்பீரிஸ் என்ற குத்தகைக்காரரின் பேரேட்டுப்புத்தகத்தில் இருந்து மேற்கோள்காட்டும் பற்றிக் பீபிள்ஸ் இவர் ரூ 253,000 வருமானத்தை 1896 - 97ஆம் ஆண்டில் மூன்று கோறளைப் பகுதியின் தவறணைகள் மூலம் பெற்றார் என்று குறிப்பிடுகிறார். வாய்மொழிச்சான்றுகளையும் உதாரணம் காட்டலாம். 1920ஆம் ஆண்டளவில் மத்திய மாகாணத்தில் இயங்கிய சிண்டிக்கேற்ரூ500,000 வரை வருமானம் பெற்றதாக சிண்டி கேற்உறுப்பினரில் ஒருவரானசல்காடோ என்பவர் குறிப்பிட்டார்.
குத்தகைக்காரர்களின் சொத்துக்களை மதிப்பிடுவதற்கு வேறு சில சான்றுகளும் உள்ளன. சாராயக் குத்தகைக்காரர்கள் சமய வளர்ச்சிக் காகவும்தருமகாரியங்களுக்காகவும்நன்கொடைகளை கொடுத்தார்கள். ஆடம்பரமானவீடுகளைகட்டிடாம்பீகவாழ்க்கையை மேற்கொண்டனர். நுகர்வுக்காக மிதமிஞ்சிச் செலவிட்டனர். பெருந் தொகைச் சொத்துக் களைசீதனமாகக்கொடுத்தனர். இதுபற்றிய கதைகள் பல உண்டு. சாள்ஸ்

Page 63
94 அநாமதேயங்களாக இருந்தோர்.
டிசொய்சாவிற்கு ஆறு பெண்பிள்ளைகள். ஒவ்வொருவருக்கும் சராசரி 200,000ரூபாபெறுமதியானசுெத்துக்களைசீதனமாகக்கொடுத்தார்என்று டொன் பஸ்ரியன் (1904) மதிப்பிட்டார். 1890ஆம் ஆண்டு சாள்ஸ் டி சொய்சா இறந்போது அவருடையபேரிலும் அவரது மனைவி பேரிலும் இருந்த சொத்துக்களின்பெறுமதி4மில்லியன்ரூபாஆகும். இச்சொத்துக் களில் மேற்கு மாகாணத்திலும்மத்திய தென்மாகாணங்களிலும் இருந்த காணிகளின் பெறுமதி ரூபா 3.6 மில்லியன் ஆகும். யெறனிஸ் பீரிஸ் மற்றும் அவர்மனைவி கரோலின் பீரிஸ் வைத்திருந்த சொத்துக்கள் ரூ 2மில்லியன்; இவற்றுள்காணிகளின் பெறுமதிரூ1.5 மில்லியன்."
‘சாராயமுதலாளித்துவம் ஒன்று20ம்நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிவிட்டது. முக்கியமான சிலகுடும்பங்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றன. இவர்கள் ஈட்டிய வருமானம் புத்தாக்கம் மிக்க முயற்சி யாண்மையின் பெறுபேறு என்று கூற முடியாது. ஆங்கிலத்தில் “றென்ரியர் (Rentier) வருமானம் என்று கூறப்படும் "வாடகை வரு மானம் முயற்சியாண்மையின் பண்புகளைக் கொண்டதல்ல. அரசின் பாதுகாப்பு, தனியுரிமை வியாபாரம், ஒரு குழுவாக கூட்டுச் சேர்ந்து வியாபாரத்தின்ஒவ்வொரு படியையும் கட்டுப்படுத்துதல், நிலையான முதல் குறைவாக இருத்தல், என்பனவே இந்த "வாடகை முறையின் பிரத்தியேக இயல்புகள். குத்தகை வியாபாரிகள் உழைத்த லாபத்தை காணிகளிலும், பெருந்தோட்டங்களிலும், காரியச் சுரங்கங்களிலும் பின்னர்முதலிட்டனர். இவைகூட கைத்தொழில் உற்பத்தி முதலாளித் துவத்தின் பண்புகளைக் கொண்டிராத துறைகள். ‘வாடகை வருமா னத்தை தந்து கொண்டிருந்த மேலதிக துறைகள். உள்ளூர் முதலாளித் துவம் இந்தத்துறைகளில் எப்படித்தன்னை விஸ்தரித்துக் கொண்டது என்பதைஅடுத்துப்பார்ப்போம்.
குறிப்புகள் 1. ஜியோவ்ரே கே (Geoffrey Kay), 1975; 96.
2. செசனல் பேப்பர்1897, 1899ஆகியனசாராயஉற்பத்திவிற்பனைபற்றிய
தகவல்களைத்தருகின்றன.
3. றைட், 1907 : 680 - 2.
4. மேலது. 682.
5. மேலது. 708.

IO.
சாராயத்தின் விற்பனையும் நுகர்வும்: மதுவிற்கு. 95
கொழும்பு நகரின் குத்தகை வருமானம் பின்வருமாறு வீழ்ச்சியுற்றது (SLNA 6 / 2342, 1856 LDITřij29)
1851 - 52 • 21000 பவுண்கள்
1852 - 53 - 17000 பவுண்கள்
1854 - 55 16000 பவுண்கள்
SLNA 18/588 வருமான அறிக்கை, 1853 - 4.
பீபிள்ஸ், 1973 : 195.
LSSaray, 1986 : 81.
டிசொய்சா, பீரிஸ் ஆகியோரின் மரணசாசனங்களின்படி சொத்துக்களின் விபரம் இந்நூலின் இணைப்பு 3இல் தரப்பட்டுள்ளது.

Page 64
இயல் - 8
வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம்
சாராயக்குத்தகை வியாபாரத்தில் ஆரம்பித்து மேற்கிளம்பிய வர்த்தக வகுப்பு பொருளாதாரத்தின் ஏனைய துறைகளிலும் வேர்பரப்பியது. விழுதுன்றிப்பலம் பெற்றது. பெருந்தோட்டங்களிலும் காரியச்சுரங்கங் களிலும்முதலிடுதல், கொழும்புநகரில்காணிகளைகொள்வனவு செய்து வீடுகள், கட்டிடங்கள் ஆகிய சொத்துக்களில் முதலிடுதல், தம்பிள் ளைகளின்கல்வியில் முதலீடு செய்து மருத்துவம், சட்டம், பொறியியல், அரச உத்தியோகம் முதலிய உயர்தொழில்துறைகளில் புகுதல் ஆகிய வழிகளில் புதிய முதலாளித்துவ வகுப்பு ஒன்றுதோற்றம் பெறலாயிற்று. மேலே குறித்த வர்த்தக நடவடிக்கைகளும், கல்வித்துறை முன்னேற் றமும் உருவாக்கிய முதலாளித்துவவகுப்பு பலசாதிகளில் இருந்தும் பல இனக்குழுமப்பிரிவுகளில் இருந்தும் தோன்றிய கலப்புக் குழுவாகவே இருந்தது. பல்சாதி, பல்இனக்குழும முதலாளித்துவம் என்ற வரைய றைக்குப் பொருத்தமானதாக இவ்வகுப்பு இருந்தது.
பொருளாதாரத்தின் ஏனையதுறைகளில் ஏற்பட்ட விருத்திகளைக் கூறுமுன்னர்பிரித்தானிய காலனித்துவ பொருளாதாரத்தின்அடிப்படை களையும், அது உள்நாட்டு முதலீட்டாளர்கள் மீது விதித்த கட்டுப் பாடுகளையும் பற்றிக் கூறுதல் அவசியம். 1840க்கள் வரை ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் மாற்றமின்றித் தொடர்ந்தது. கோப்பிச் செய்கை ஆரம்பிக்கப்பட்டதும் ஏற்றுமதிகளும், இறக்குமதிகளும் அதிகரித்தன. 1825ஆம் ஆண்டில் ஏற்றுமதி2,24000பவுண்கள் பெறுமதி உடையதாய் இருந்தது. 1850இல் ஏற்றுமதிகள் 12மில்லியன்பவுண்களாகஅதிகரித்தன. 1880இல் இது 47மில்லியன்பவுண்களாகஉயர்ந்தது. 1825-50க்கிடையில் ஐந்து மடங்காகவும் 1850-80 க்கிடையில் நான்கு மடங்காகவும் ஏற்று மதிகள் உயர்ந்தன. ஏற்றுமதிகளில் கோப்பி 75% கறுவா 27% தேங்காய்,

வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம் 97
எண்ணெய், கயிறு முதலிய தெங்கு உற்பத்திப் பொருட்கள் 10% பாக்கு 3% என முதல் விளைவு உற்பத்திகள் பெரும்பங்கை கொண்டிருந்தன. இவையாவும் பதனிடப்படாத விவசாயப் பொருட்களாகவே ஏற்றுமதி செய்யப்பட்டன. ஏற்றுமதியின் அளவு கூடிச்சென்றதே தவிர அதன் காலனித்துவ பொருளாதார இயல்புமாறவில்லை.
இதேவேளை இறக்குமதிகளும் அதிகரித்தன. 1825இல் 1.5 மில்லியன் பவுண்களாக இருந்த இறக்குமதி 1850இல் 5 மில்லியன் பவுண்களாக உயர்ந்தது. ஏற்றுமதிகளைவிடஇறக்குமதிகளின் பெறுமதி கூடியதாக இருந்தது. இலங்கையில்அக்காலத்தில்நிர்வாகத்துறையிலும் தோட்டத்துறையிலும் பணியாற்றிய பிரித்தானியர்களின்தேவைகளுக்கு ஏற்றநூகர்வுப் பொருட்களும் மக்களுக்குத் தேவையான உணவு, உடை ஆகியனவும் இறக்குமதியாயின. 1890அளவில் தோட்டத்தொழிலாளர் தொகை 400,000 ஆக அதிகரித்தது. இவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள், கருவாடு, துணிமணி என்பன இறக்குமதி செய்யப் பட்டன. ஐரோப்பியர்களுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியும் அதிகரித்தது. இலங்கையில் அக்காலத்தில் ஆடம்பர வாழ்க்கையுடையோரின் நுகர்வுப் பழக்கங்களை அறிவதற்கு இறக் குமதி செய்யப்பட்ட குடிவகைகள்பற்றிய புள்ளிவிபரம் ஒரு குறிகாட்டி யாகும். 1879இல் 120,000 பவுண்கள் பெறுமதியுடைய உயர்குடிவகை களான பிரண்டி, விஸ்கி என்பன ஐரோப்பாவில் இருந்தும் அவுஸ் திரேலியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன.
நாகரிகத்திற்கு மிகக்கிட்டியது எனக் கருதும் அனைத்தையும் பாவனை செய்தல் இலங்கையின் உயர்வர்க்கங்களில் பழக்கமாக இருந்தது என டென்காம் 1912ஆம் ஆண்டில் குறிப்பிட்டார். உலகின் பிறபகுதிகளில் உற்பத்தியாகும் நவீனமான நுகர்வுப் பண்டங்களைத் தேடிக் கொள்வனவு செய்தல் இந்த நுகர்வுக் கலாசாரத்தின் ஓர் அம்ச மாகும். தைத்த ஆடைகள், காலணிகள், சப்பாத்துக்கள், வாசனைப் பொருட்கள்,அலங்காரப்பொருட்கள், இந்தியாவில்இருந்தும்யப்பானில் இருந்தும்தருவிக்கப்பட்டபட்டுத்துணிகள், மஸ்லின், உயர்விலையுள்ள பருத்திப் புடவைகள் ஆகியன உயர் வர்க்கத்தினரின் நுகர்வுக்காக இறக்குமதி செய்யப்பட்டன. இறக்குமதிகளின் அதிகரிப்பு பெருந் தோட்ட முறையின் விரிவாக்கத்தின் விளைவு என்பது வெளிப்படை யான விடயம். கோப்பிப் பயிர்ச் செய்கை 1880க்களின் இறுதி வரை முன்னேறிச் சென்றது. கோப்பிச் செய்கையில் இடையிடையே மந்த

Page 65
98 அநாமதேயங்களாக இருந்தோர்.
நிலை ஏற்பட்டதும் உண்டு. கோப்பியின் வீழ்ச்சியின் பின் தேயிலை அதன் இடத்தைப் பிடித்தது. ரப்பர், தென்னைத் தோட்டங்களின் முதலீடும் லாபம் தருவதாக அமைந்தது. பெருந்தோட்டப் பொருளா தாரத்தின் வளர்ச்சி இறக்குமதிப் பொருட்களின் தேவையை அதி கரித்தது. சில உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வருமானத்தைக் கொண்டு உணவு, கைத்தொழில்பொருட்கள், ஆடம்பரப்பொருட்கள் என்பன இறக்குமதியாயின.
அந்நிய வர்த்தகர்கள் கொழும்பு நகரின் வர்த்தகம் ஐரோப்பியர், இந்தியர், இலங்கையின் சிறுபான்மை இனத்தவர் என்ற மூன்று பிரிவினர்களான வர்த்தகர் களின் கையில் இருந்தது. வர்த்தகத்தில் சிங்களவர்களும்தமிழர்களும் ஒரளவே பங்கு கொண்டனர். சாராயக் குத்தகை, விவசாயம், காரியச் சுரங்க அகழ்வு, பெருந்தோட்டத்துறை ஆகியவற்றிலேயே உள்ளூர் முயற்சியாளர்கள் ஈடுபட்டனர். தேயிலை, றப்பர், தென்னை ஆகிய பயிர்களது உற்பத்தி ஆபத்துக்கள் குறைந்த முயற்சி என உள்ளூரவர்கள் கருதினர். உள்ளூர் சில்லறை வர்த்தகர்களும் போரா, மெமன், பார்சி, செட்டிஆகிய இனத்தவர்களாக இந்தியவர்த்தகர்களின்போட்டியை எதிர் கொள்ளவேண்டியிருந்தது. பிரதானகோப்பிஏற்றுமதியாளர்களையும், உள்நாட்டுக்குத்தேவையான பொருட்களின் இறக்குமதியாளர்களையும் 1863ஆம் ஆண்டின் பெர்குசன் தகவல் திரட்டு அட்டவணைப்படுத்தி யுள்ளது. எல்லாமாக 33 வர்த்தக நிறுவனங்கள் அட்டவணைப்படுத் தப்பட்டுள்ளன. இவற்றுள்31நிறுவனங்கள் அந்நியவர்த்தகநிறுவனங் களாகும். சுதேச வர்த்தகர்கள் இருவர் பெயர் காணப்படுகிறது. பீ பி பெர்னாண்டோ அன்ட் சண்ஸ் என்னும் சிங்கள வர்த்தக நிறுவனம்; மற்றது இ. நன்னித்தம்பி என்றபெயருடையவரின்நிறுவனம்.
கொழும்பின் சில்லறை வர்த்தகத்தில் பிரித்தானிய கம்பனிகள் பல ஈடுபட்டிருந்தன. இருப்பினும் செட்டிகளும், முஸ்லிம்களுமே கொழும் பின் சில்லறை வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். ஐரோப்பியர் அல்லாதோரின் கேந்திரநிலையமாக புறக்கோட்டை(பெற்றா) அமைந் திருந்தது. 1863இன் பெர்குசன் தகவல் திரட்டு நூலின் சில்லறை வர்த்தகர்கள்பட்டியலில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடியதானசிங்களவர், தமிழர் பெயர்கள் இல்லை. தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களான நாட்டுக் கோட்டைச் செட்டியார்களின் 75 வர்த்தக நிலையங்களின்

வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம் 99
பெயர்கள் இந்நூலில் காணப்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் உள்ளூர்வர்த்தகத்தின் பெரும்பங்குசெட்டியார்களின்கையில் இருந்தது. அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத வர்த்தகநிலை யங்களிற்கும் நிதி வழங்குவோர்களாக செட்டியார்கள் இருந்தனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் கணிப்புக்குரியவர்களாக முஸ்லிம் வர்த்தகர்கள் இருந்தனர். 1863இல் கொழும்புநகரில் 35 முஸ்லிம் வர்த்தகர்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். 19ஆம் நூற் றாண்டின் முடிவுவரை உள்ளநிலையை எடுத்துநோக்கின் மேலே கூறியவாறு ஐரோப்பியரும், இந்தியரும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்த கத்தில் ஆதிக்கம் செலுத்துவதையே காண்கிறோம். 1880ஆம் ஆண்டின் பெர்குசன் தகவல் திரட்டு 54 வர்த்தக நிலையங்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது. இவற்றுள் 50 நிலையங்கள் ஐரோப்பியரால் நடத்தப்பட்டன. ப்பிராம்ஜிபிக்கார்ஜி, ரஸ்ரொம்ஜீமஞ்ஞர்ஜிஎன்னும் இரு பார்சி வர்த்தகர்கள் பெயர்களும் சாள்ஸ் டிசொய்சா, யெரோனிஸ் பீரிஸ் என்னும் சிங்களவர்த்தகர்கள் இருவர் பெயரும் 54 பெயர்களுள் சேர்க்கப்பட்டிருந்தன. மொத்த வியாபாரம் குறித்த நிலை இதுவே. சில்லறை வர்த்தகத்தை எடுத்துக்கொண்டால் 86 செட்டிவார்த்தகர்களும் 64 முஸ்லிம் வர்த்தகர்களும் ஈடுபட்டிருந்தனர் என்பதைக் காணலாம். செட்டிகள்அரிசி, துணிமணி என்பனவற்றை பெருமளவில் இறக்குமதி செய்தனர். முஸ்லிம்கள் பல்விதநுகர்வுப்பொருட்களையும் இறக்குமதி செய்து விற்பனை செய்தனர். தேயிலைச் செய்கை விருத்தி பெற்ற பொழுது செட்டி வர்த்தகர்கள்தம் வியாபாரநடவடிக்கைகளை மேலும் விஸ்தரித்தனர்.
1890ஆம் ஆண்டில் செட்டிகள் 66பேர்அரிசிவர்த்தகத்திலும், 38பேர் துணிமணி வர்த்தகத்திலும் ஈடுபட்டனர். 7பேர் வட்டிக்குப் பணம் கொடுப்போராகவும் இருந்தனர். மொத்தம் 111செட்டி வர்த்தகர்களின் பெயர்களை பெர்குசன்தகவல்திரட்டு குறிப்பிடுகிறது.
உள்ளூர் வர்த்தகத்தின் உயிர்நாடியான விடயங்களைத்தம்பிடியில் வைத்திருந்ததோடு வர்த்தகர்களுக்கும் ஏனைய முயற்சியாளர்களுக்கும் கடன் கொடுக்கும் வங்கியாளர்களாகவும் செட்டிகள் செயற்பட்டனர்."
பம்பாய் வர்த்தகர்கள் தற்போது மும்பை என அழைக்கப்படும் இந்திய நகரான "பம்பாய்’ வர்த்தகர்கள் 1880க்களில் கொழும்புநகரின் வர்த்தகத்தில் முக்கிய இடம்

Page 66
OO அநாமதேயங்களாக இருந்தோர்.
பிடிக்கத் தொடங்கினர். இவர்கள் ஐரோப்பியர்கள் அதுவரை செய்து வந்த இறக்குமதி வர்த்தகத்தின் சில துறைகளில் நுழைந்தனர். டார்லி பட்லர் என்னும் பெயருடைய பிரித்தானியர்கம்பனியும் (இது 1848முதல் கொழும்பில் இயங்கியது) டெல்மெஜ்ப்போர்சிக் என்னும் கம்பனியும் மா, உப்பு, சீனி, மண்ணெண்ணை ஆகியவற்றை இறக்குமதி செய்து வந்தன. மாட்டுவண்டில்கள்மூலம்நாடுமுழுவதும் மண்ணெண்ணை விநியோகிக்கும் வேலையையும் 1895 முதல் டெல்மெஜ்ப்போர்சிக் கம்பனி செய்து வந்தது. துணிமணி, உணவு ஆகியவற்றின் இறக்கு மதியிலும் ஆரம்பகாலத்தில் பிரித்தானியக்கம்பனிகள் ஈடுபட்டிருந்தன. 20ம்நூற்றாண்டின்தொடக்கத்தில் பிரித்தானியகம்பனிகளிடம் இருந்து வந்த வர்த்தகத்தை பம்பாய்நகரில் இருந்து இங்கு வந்த போரா, பார்சி, மெமொன், மார்வாரிவர்த்தகர்கள்தம் வசமாக்கினர்.
இந்திய வர்த்தகர்கள் இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதி, உள் நாட்டுச் சில்லறை வர்த்தகம் என்பனவற்றில் தம் ஆதிக்கத்தை வலுப் படுத்தியமை ஆபிரிக்காவில் இந்திய வர்த்தகர் வகித்த நிலைக்கு ஒப்பானது. தன்சானியா நாட்டில் இந்திய வர்த்தகர்கள் வைத்திருந்த ஆதிக்கத்தைப் பற்றிச்சிவிஜி (Shivi) என்னும்ஆய்வாளர்கூறியிருப்பது இலங்கையின் அன்றைய நிலைக்கும் பொருந்துவதே
விவசாயக்குடியானவன், தொழிலாளி, சில்லறை வர்த்தகன் என எந்த நிலையிலாவது ஆபிரிக்கன் இந்திய வர்த்தகனைச் சந்தித்தே ஆக வேண்டும். மேலாதிக்கம் உடைய வர்த்தகன், அவனிற்கு கீழ்ப்பட்ட நிலையில் உள்ளவன் என்ற சமத்துவமற்ற பொருளாதார உறவு அவர் களிடைஇருந்தது. வர்த்தகத்தில் ஆசியர்களின் ஆதிக்கம் என்பதன்குண இயல்பே இதுதான் என்றநிலை இருந்தது.
இலங்கையில் இந்தியவர்த்தகர்கள் பிரித்தானியரின்துணைப்பங்காளர் களாகஇருந்தனர்.அவர்கள்இருசாராருக்கும் இடையில் மோதல் இருக்க வில்லை. முழுவர்த்தகவலையமைப்பிலும் சிங்கள, தமிழ் வர்த்தகர்கள் சில்லறை வர்த்தகர்கள் என்ற முறையில் உறவு கொண்டனர். இது பகைமை உணர்வையும் போட்டியையும், முறுகலையும் உருவாக்கியது. 19ஆம் 20ஆம்நூற்றாண்டின் சிங்களதேசியவாதத்தின் பொருளாதாரப் பின்னணியைச் சமத்துவமற்றஉறவில் காணலாம்.
போரா (Borahs) என்று அழைக்கப்படுவோர். வியா பிரிவு முஸ் லிம்கள். குஜராத்தை சேர்ந்தவர்கள் (பூர்வீக g) Ll b (55 -Kutch) இவர்கள் கிழக்கு ஆபிரிக்கா. தென்கிழக்குஆசியா, மொரிசியஸ், இந்து

வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம் Ol
சமுத்திரத்தீவுகள் என்ற பரந்த ஒரு பிராந்தியத்துள் தம் வர்த்தகத்தை விஸ்தரிப்பு செய்த ஒரு குழுவினராவர். பெரும்பாலான பிரித்தானியக் காலனிகளில் போராக்கள் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தை தம் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். ஒரு வர்த்தக சமூகம் என்ற முறையில் இவர்கள்தாம் சென்றநாடுகளில் எல்லாம் உள்ளூர்அரசியல் விடயங் களிலிருந்துதம்மை விடுவித்து நல்ல பிள்ளைகளாக, இருக்கப்பழகிக் கொண்டனர். சுதேசி வர்த்தகத்தில் உள்ள ஆபத்துக்கள், பொறிகளில் இருந்துதப்பிக்கொள்வதற்கு பிரித்தானியர்களுக்கு இவர்கள் உதவினர். உற்பத்தித்துறையில் போட்டியாளர்கள் அல்லாது பிரித்தானியரின் வர்த்தகத்துறைக்கூட்டாளிகளாக இந்திய வர்த்தகர்கள் செயற்பட்டனர். ஆபிரிக்காவின் வர்த்தக முயற்சிகளில் இந்தியர் ஈடுபடுவதை பிரித்தானியர் ஊக்குவித்தனர். ஆபிரிக்கர்களுக்கு வர்த்தக அனுமதிப் பத்திரம் வழங்குவதையோ அவர்கள், வர்த்தகத்தில் ஈடுபடுவதையோ பிரித்தானிய நிர்வாகம் ஊக்குவிக்கவில்லை. இலங்கையிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய வர்த்தகர்கள்ஏற்றுமதி இறக்குமதி துறையின்சில பிரிவுகளில்தனியுரிமை பெறத்தொடங்கினர். சுதேசவர்த் தகர்களை இத்துறையில் அனுமதித்தால் ‘தேசிய மனப்பான்மை யுடைய முதலாளிகளாக விசுவாசம் குறைந்தவர்களாக ஆகிவிடுவார்கள் என்ற பயம் பிரித்தானியருக்கு இருந்திருத்தல் வேண்டும். போரா, மெமன், பார்சி வர்த்தகர்கள் பன்னாட்டு வர்த்தகஉறவுகளை வளர்த்துக் கொண்டவர்களாகவும் சொந்தமாகப் பெரும் வணிகக்கப்பல்களை வைத்திருப்போராகவும் இருந்தனர். தோட்டங்களுக்கு தேவையான "கூலி அரிசி" முதல் பல பொருட்களின் இறக்குமதி இவர்களின் தனியு ரிமையாக இருந்தது. பக்கலோக்கள்(Buggalows) எனப்பட்டஇவர்களின் கப்பல்கள்மாலைதீவு,நிக்கோபார்தீவுகள் ஆகிய இடங்களிற்கு சென்று வந்தன. கொழும்பு நகரத்தில் காணிகள், கட்டிடங்கள், வீடுகள் என்ற சொத்துகளில் முதலிட்டதோடு இவர்களில் பலர்பெருந்தோட்டஉடமை யாளர்களாகவும் இருந்தனர்.
பம்பாய் நகரில் இருந்து வந்த பார்சி வர்த்தகர்களும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் முக்கிய புள்ளிகளாக இருந்தனர். 19ஆம் நூற் றாண்டின் முற்பகுதியில் இந்தியாவில் பார்சி வர்த்தகர்கள் இடைத் தரகர்கள் என்ற நிலையில் இருந்தனர். பிரித்தானிய வர்த்தகர்களுக்கு புரோக்கர்களாகவும், கமிசன் ஏஜன்டுகளாகவும், கப்பல் முகவர்களாக வும் செயற்பட்டனர். ஐரோப்பிய வர்த்தகர்கள் கொண்டு வந்த பொருட்

Page 67
O2 அநாமதேயங்களாக இருந்தோர்.
களை இந்தியாவின் உள்ளூர் பகுதிகளுக்கு எடுத்துச்சென்று வர்த்தகம் செய்தனர். தூரகிழக்குக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்த கமும் பார்சிகள் கையிலேயே இருந்தது. குறிப்பாக "அபின் வர்த்தகம் இவர்களின் கையில் இருந்தது. பார்சிகள் 19ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில் வர்த்தகம் மூலம் பெரும் செல்வத்தைத்திரட்டினர். வங்கித் தொழில், வட்டிக்குப்பணம் கொடுத்தல், காப்புறுதி, கப்பல்கட்டுதல், கைத்தொழில் உற்பத்தி எனப்பலதுறைகளிலும்தங்கள் முதலீடுகளை விஸ்தரித்தனர். கைத்தொழில் உற்பத்தித்துறையிலும் முதலிட்டனர். ஆடை உற்பத்தி, சணல், உருக்கு, பொறியியல் ஆகிய கைத்தொழில் களில் முதலிட்டனர். இந்தியாவில் தமது பொருளாதார பலத்தை வலுப்படுத்தியதோடு அயல்நாடுகளிலும் கால்பரப்பி வர்த்தகத்திலும் தொழில்களிலும் முன்னணியில் திகழ்ந்தனர். ‘பிரித்தானிய வர்த்தகர் களின் மிகப்பெரும் கூட்டாளிகள்’ என்றுபக்சி (Bagchi) இவர்களைப் பற்றிக்குறிப்பிட்டிருப்பதுமிகப்பொருத்தமானகூற்றே"இலங்கையிலும் 19ம்நூற்றாண்டின்முற்பகுதியிலேயே பார்சிகளின் செயற்பாடுகள் ஆரம் பித்தன.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானிய வர்த்தக நிறுவனங் களில் ஒரு பண்பு மாற்றம் ஏற்பட்டது. தனிநபர் முயற்சி, பங்குடமை என்ற வடிவங்களில் ஆரம்ப நிறுவனங்கள் செயற்பட்டன. முயற்சி யாளரே முதலீட்டாளர்களாகவும் நேரடியாக வர்த்தகத்தை நடத்து பவர்களாகவும் இருந்தனர். காலப்போக்கில்பிரித்தானியாவில் உள்ளவர் களின் பங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பெரிய கம்பனிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டன. கோப்பிச்செய்கையில் இருந்து தேயிலைப் பயிர்ச் செய்கைக்கு இலங்கை மாறிய கட்டத்தில் இப்பண்பு மாற்றம் நிகழ்ந்தது. இக்காலத்தில் தோன்றிய கம்பனிகளின் முழுக்கவனமும் தேயிலை ஏற்றுமதி வர்த்தகத்தில் இருந்தது. பிரித்தானியர்கள் ஏற்றுமதி வர்த்தகத்தின் ஏனைய விடயங்களையும் இந்தியாவில் இருந்து செய்யப் பட்ட இறக்குமதிகளையும் இந்திய வர்த்தகர்களுக்கு விட்டுக் கொடுக்க விரும்பினார்கள். குறிப்பாக தெங்குப்பொருட்களின்ஏற்றுமதி, தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவையான அரிசியை இறக்குமதி செய்தல் வேலைகளில் உள்ளூர்சந்தைநிலவரத்தைநன்குஅறிந்து வைத்திருந்த இந்திய வர்த்தகர்களுக்கு கைமாற்றம் செய்தனர். தோமஸ் வில்லியற்ஸ் என்னும் எழுத்தாளர் 19ஆம் நூற்றாண்டின் முடிவில் போராவரத்தகர் களின்நுழைவால் ஏற்பட்டதாக்கத்தைப்பற்றிபின்வருமாறுகுறிப்பிட்டார்."

வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம் O3
அவர்கள் (போராவர்த்தகர்கள்) கோதுமை மா,சீனி போன்ற பொருட் களின் இறக்குமதியில் கடும் போட்டியைஏற்படுத்தினர், இவர்களோடு போட்டியிடமுடியாமல்ஐரோப்பியக்கம்பனிகள்விலகிக்கொண்டன.
பிரித்தானியர் ஆட்சியின் தொடக்க காலம் தொட்டே இலங்கையின் வர்த்தகத்தில் தம்மை ஸ்தாபித்துக்கொண்ட இந்திய வர்த்தகர் சிலரைத் தவிர்த்து மிகப் பெரிய வர்த்தகர்களான போராக்களும், பார்சிகளும், மெமன்களும் 1880க்கும் 1905க்கும் இடைப்பட்டகாலத்திலேயே இலங் கையில்கால்பதித்தனர்-பிரித்தானியர்கள் ஒதுங்கிக்கொண்டது இந்திய வர்த்தகர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது. ஏற்றுமதி இறக்குமதி வர்த்த கத்தில் பெரும்பங்கு இந்தியர்கள்கையில் சேர்ந்தது.இந்திய வர்த்தகர்கள் பிரித்தானியர்களுக்குதமது நன்றிக்கடனைச்செலுத்தத்தவறவில்லை. உள்ளூர் அரசியலில் இந்திய வர்த்தகப் பெரும்புள்ளிகள் ஒருபோதும் தலையிடவே இல்லை. முனிசிப்பல் அரசியலிலும், சமயப்பணியிலும் தான தருமங்களிலும் மட்டும் ஈடுபட்டனர். பிரித்தானிய ஆட்சியா ளருக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்தனர். காலனித்துவ ஆட்சியின் போது இந்திய வர்த்தகர்களின் முன்னேற்றம் பிரிட்டிஷ் ஆட்சியாளர் களின் அரவணைப்பினால் சாத்தியமாயிற்று "லேடி ஹவ்லொக் வைத்தி யசாலை' என்னும் மகளிர் வைத்தியசாலையை நிறுவுவதற்கு பிரித் தானியர்நிதி திரட்டியபோது இந்திய வர்த்தகர்கள் இத் தரும காரியத் திற்குதாராளமாக பணத்தைவாரி வழங்கினர். இவ்வாறான செயல்கள் பிரித்தானியருக்கு அவர்கள் மீது இருந்தநன்மதிப்பை உயர்த்தியது.
இலங்கை வர்த்தகர்கள் எதிர் நோக்கிய தடைகள் இலங்கை வர்த்தகர்களின் முன்னேற்றத்திற்குப் பிரதான தடைஒன்று இருந்தது. அவர்களால் கடன்பெறமுடியவில்லை. குறைந்த வட்டியில் இலகுவாகக் கடனைப் பெறும் வழிமுறைகள் அக்காலத்தில் இருக்க வில்லை. அந்நிய வங்கிகள் இவ்விடயத்தில் வேண்டுமென்றே பாரபட் சமான கொள்கையைக் கடைப் பிடித்தன. இலங்கையில் அன்றைய வங்கிமுறை லண்டனில் தலைமை அலுவலகத்தைக் கொண்டிருந்த பிரித்தானிய வங்கிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரித்தானியரின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்திற்கு கடன் கொடுப்பதே இவ்வங்கி களின் பிரதான நோக்கம். வங்கிகளின்வாடிக்கையாளர்களாக பிரித்தானி யாவையும் அந்நிய நாடுகளையும் சேர்ந்தோரும், நாட்டுக் கோட்டைச் செட்டிகளும் விளங்கினர்.

Page 68
104 அநாமதேயங்களாக இருந்தோர்.
பெருந்தோட்டங்களிற்கு வேண்டிய கடன்கள், ஏனைய வங்கிச் சேவைகள் பிரித்தானிய வங்கிகளால் வழங்கப்பட்டன. 1841ஆம் ஆண்டில் இலங்கை வங்கி ஆரம்பிக்கப்பட்டது. 1847ஆம் ஆண்டில் நிதிநெருக்கடியின் போது இவ்வங்கியின் நடவடிக்கைகள் பாதிக்கப் பட்டன. அப்போது 'ஒரியண்டல் பாங்க்' எனப்படும் லண்டன் வங்கி கொழும்பில் ஒரு கிளையை ஆரம்பித்தது. பின்னர் ஒரியண்டல் வங்கிக் கிளை இலங்கை வங்கியுடன் இணைக்கப்பட்டு 'ஓரியண்டல் பாங் கோப்பரேன்’ என்ற பெயரில் 1851 முதல் செயற்பட்டது. இதன்கிளைகள் கண்டியிலும், காலியிலும் ஆரம்பிக்கப்பட்டன. ஏனைய பிரித்தானிய வங்கிகள் பலவும் கோப்பித்தோட்டங்களின் வளர்ச்சி காரணமாக தமது வியாபாரநடவடிக்கைகளை கொழும்புநகரில் விஸ்தரித்தன. இலங்கை யில் வர்த்தகம் செய்தஐரோப்பியர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கிய தொடர்புடையவர்களாய் இருந்தனர். வர்த்தக உறவுகள் மட்டுமன்றி விவாக உறவுகளும் இவர்களைஒரு குழுவாக ஒன்றிணைத்தது. வங்கி களில் இவர்களால் தனியாள் பிணையின் உதவியுடன் கடன் பெற முடிந்தது. கப்பலில் ஏற்றப்பட்ட பொருட்களைசாட்டுதல் செய்து கடன் களைப் பெற முடிந்தது. இலங்கையர்களான வர்த்தகர்கள், வியாபார முயற்சியாளர்கள், பெருந்தோட்டமுதலாளிகள் வங்கிகளில் கடன் பெற முடியவில்லை, 1930க்களில் கூட இதே நிலைதான்நீடித்தது என்பதை மார்க்கஸ் பெர்னாண்டோவின் பின்வரும்கூற்று உறுதிப்படுத்துகிறது.
பெருந்தோட்ட உடமையாளர் ஒருவர் தன் உற்பத்திப் பொருளை ஈடாக வைத்து வங்கியில் கடன்பெறமுடியாது. தனது உற்பத்திப் பொருளைஒருபுறோக்கருக்கோஅல்லது எஸ்டேட்ஏஜன்ட் எனப்படும் முகவருக்கோ சாட்டுதல் செய்யலாம்; அவ்வாறு செய்யுமிடத்து இந்த இடைத்தரகர்வங்கியில் கடனைப்பெறமுடியும். இவ்வழியில் இடைத் தரகர் ஊடாக கடனைப் பெறும்போது இடைத்தரகருக்கு கமிசன்
கிடைக்கும். கடனுக்கான செலவுகூடும்.
கடன் பெறுவதில் இலங்கையர்களானசுதேசமுயற்சியாளர்கள் பட்ட கஷ்டங்கள் அவர்களின் வியாபார முன்னேற்றத்திற்கு தடையாயின. சுதேசிகள் தென்னந்தோட்டங்களில் முதலீடு செய்தனர். தென்னந் தோட்டங்களில் முதலீடுநீண்டகாலத்தின் பின்னரேபயன்தரும். ஆகை யால் நீண்டகாலக்கடன் வசதி வேண்டும். தம் சொத்துக்களை அடகு வைத்துகுறுகிய காலக்கடன்களைப் பெற்று தோட்டங்களில் முதலிட்ட வர்கள் பலர் அவற்றை நடத்த முடியாமல் பெருநட்டமடைந்தனர்.

வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம் O5
உயர்வட்டிக்குப் பெற்ற கடனை அடைப்பதற்காக சொத்துக்களை இழந்துதரித்திரர்களாயினோர் பலர்.
அந்நிய வங்கிகளின் கொழும்பு அலுவலகங்களில் இருபிரிவுகள் இருந்தன. ஒருபிரிவுஜரோப்பியர்களுக்கானது, மற்றப்பிரிவுஜரோப்பியர் அல்லாதவர்களுக்குஉரியது. இப்பிரிவில் ஏதாவது கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவர்சிறாப்பர் (Shroft) என்னும் இடைத் தரகர் மூலமே செல்லலாம். அந்நிய வங்கிகளைப் பற்றி இவ்வாறான குற்றச்சாட்டுஒன்று இருந்தது. சிறாப்பர்கள்கடனைச்சிபார்சுசெய்தனர். ஐரோப்பியர் அல்லாதோர் இடைத்தரகர்கள் மூலமே வங்கியுடன் செயற்படமுடிந்தது. இடைத்தரகர்கள்வாடிக்கையாளர்களிடமிருந்தும், வங்கிகளிடமிருந்தும் கமிசனைப் பெற்றுக் கொண்டனர். 1850க்களில் யெரனிஸ் சொய்சாவும், ஹரமானிஸ் சொய்சாவும் இணைந்து வங்கி ஒன்றைஆரம்பித்தனர். இம்முயற்சி குறுகியகாலத்திற்குள்தோல்வியில் முடிந்தது. இதுதவிர்ந்தசுதேசவங்கி என்று கூறக்கூடிய ஒரே வங்கியான இலங்கைவங்கி 1917-1921காலத்தில் செயற்பட்டது. ஒ. பி. விஜயசேகரா என்பவர் இதனைத் தொடக்கினார். இவ்வங்கி கூட தனது பங்காளர் களாக (வங்கியில் பங்கு வைத்திருந்தோர்) இருந்தோருக்கே கடனை வழங்கியது. போதிய மூலதனம் இல்லாததாலும், சிறந்த நிர்வாகம் இல்லாததாலும் இம்முயற்சியும் வெற்றிஅளிக்கவில்லை." இவ்வங்கி கடும் எதிர்ப்பையும் எதிர்கொள்ளவேண்டிஇருந்தது.நாட்டுக்கோட்டை செட்டிகளும், பட்டானியர்களும்(Pathans)(ஆப்கானியர்கள்) கொழும்பு நகரில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டனர். காணி, வீடு, தோட்டப்பயிர்கள் என்பனவற்றுக்கு ஈடாக இவர்கள் கடன் கொடுத்தனர். 19ஆம் நூற்றாண்டின் முடிவில் செட்டியார்கள் கடன் கொடுத்தல், நகை அடைவு பிடித்தல் என்பவற்றில் பிரபலம் பெற்று விளங்கினர். 1933ஆம் ஆண்டில்56செட்டிநிறுவனங்கள்இலங்கையில் செயற்பட்டன. இவற்றின் தலைமை அலுவலகங்கள் இந்தியாவில் இருந்தன. ஆசியா எங்கும் கிளைகள் இருந்தன. செட்டிகள் அந்நிய வங்கிகளில் சிறாப்பர்களின் உதவியுடன்கடன் பெறமுடிந்தது. இருந்த போதும் இக்கடன்களுக்கு அவர்கள்2% அல்லது 3% கூடிய வட்டியைக் கொடுக்க வேண்டும் (இதனை செட்டி வீதம் (ChettyRate) என்று கூறுவது வழக்கம்) உள்ளூர் முதலாளிகள் தம் கடன் தேவைகளுக்கு செட்டியார்களை நம்பியிருந்தனர். விவசாயம், வர்த்தகம் போன்ற தேவைகளோடு பிள்ளைகளுக்கு சீதனம் கொடுப்பதற்கும் விவாகச்

Page 69
106 அநாமதேயங்களாக இருந்தோர்.
சடங்குச்செலவிற்கும்கூடக்கடன்பெற்றனர்.திருமணவைபவங்களில் செட்டியார் கெளரவித்து வரவேற்கப்படுவார். "சிலோன்டெய்லிநியுஸ் பத்திரிகையின்ஸ்தாபகரான டி. ஆர். விஜயவர்த்தன- 1930க்களில் ஒரு தடவை லண்டனில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. லண்டன்பிரயாணத்திற்காக ரூ. 25,000கடன்பெறுவ தற்கு அந்நிய வங்கிக்கு விண்ணப்பித்தார். இவரால் வங்கியில் கடன் பெறமுடியவில்லை. செட்டியார்ஒருவரிடமேகடன்பெற்றார். ( (ஹ"லு கல்ல எழுதிய)டி.ஆர். விஜயவர்த்தனவின்வாழ்க்கைவரலாற்றுநூலில் இக்குறிப்பு உள்ளது)."
சாராயக் குத்தகை, தென்னந் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள், காரியச்சுரங்கங்கள்இலங்கை முதலாளிகளின் எழுச்சிக்கும் முன்னேற் றத்திற்கும் உதவிய துறைகள் என்பது உண்மையே. இத்துறைகளில் உள்ளூர்முதலாளிகள்தான்இராசாக்கள். இருந்தபோதும் ஏனையதுறை களில் அவர்களால் கால்பதிக்க முடியவில்லை. முக்கியமாக காலனிய பொருளாதாரத்தின் உயிர்நாடியான துறைகளில் இருந்து அவர்கள் தூரத்தே விலக்கி வைக்கப்பட்டனர். வங்கிகளின்கடன் கொள்கையும், பாரபட்சமானநடவடிக்கைகளுமேஇதற்கான பிரதானகாரணம் என்பது வெளிப்படையானது.
குத்தகை வியாபாரம் ஒருவகையில் மறைமுகமான வழியில் உபரி மதிப்பைச்சுரண்டும் முறையாகும். உற்பத்திநடவடிக்கைகளின் மூலம் முதலாளிவர்க்கம் நேரடியாக உபரி உழைப்பைச் சுரண்டும் முறை யிலான பெரும் தோட்டங்களில் 1830 - 1880 காலத்தில் இலங்கையர் முதலீடுகளைச் செய்தனர். சாராயக் குத்தகை மூலம் உழைத்த பெரும் தொகை லாபத்தை காணிகளைக் கொள்வனவு செய்யவும், அக்காணி களில் கோப்பித் தோட்டங்களை அமைக்கவும் பயன்படுத்தினர். 1880 களில் கோப்பிப் பயிர் பங்கசு நோயால் அழிவுற்றபோது இலங்கை முதலீட்டாளர்கள் பலர் நட்டமடைந்து பெருந்தோட்டப் பயிர்ச்செய் கையைக் கைவிட்டனர். சிலர் தப்பிப்பிழைத்தனர். அவ்வாறு தப்பிப் பிழைத்தவர்களுள் பெரும் சாராயக்குத்தகைக்காரர்களும் அடங்குவர். இவர்கள் 1880க் களின் பின்னர் தென்னந்தோட்டங்களிலும், றப்பர் தோட்டங்களிலும் முதலிட்டனர். பிரித்தானியரேதேயிலைத் தோட்டங் களில் அதிகளவு முதலீடு செய்தனராயினும் இலங்கையரான பெரும் முதலாளிகளும் தேயிலைத் தோட்டங்களிலும் முதலிட்டனர். 1830க் களின் பின்னர்காணிகளைக் கொள்வளவு செய்து காணி உடமையாளர்

வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம் O7
களானோர் தென்னை, ரப்பர் ஆகியவற்றை பயிரிட்டனர். தேயிலைப் பயிர் செய்கையிலும் நுழைந்து காணியில் முதலீடு செய்தல் மிகச்சிறந்த உபாயமாக அமைந்தது.
சாராயக் குத்தகைக்காரர்கள் வேறுதுறைகளில் முதலீடுகளைப் பரவலாக்குவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. சாராய வியாபாரம் மூலம் பணம் சம்பாதித்துப் பெரிய மனிதராக உலவுவது கஷ்டம். பெளத்தம் மதுவைப்பாதகங்களில் ஒன்றாகவிலக்கியது. காணிகளிலும், காரியச்சுரங்கங்களிலும் முதலீடுகளைபரவலாக்கி விட்டால்தம்மிடம் சேர்ந்த செல்வத்தைநியாயப்படுத்தி விடலாம்; சமூக அங்கீகாரத்தைப் பெறலாம் என்பதை உணர்ந்தனர். சாராய வர்த்தகர், குத்தகைக்காரர் என்பதைவிட நிலஉடமையாளர் என்ற புதிய நாமம் கெளரவம் மிக்க தாகக்கருதப்பட்டதில்ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தஸ்துமாறியதும் தமது வாழ்விடத்தையும் பலர் மாற்றினர். தாம் கொள்வனவு செய்த விசாலமானகாணிகளுக்குள்வளவுவ’ எனப்படும்பண்ணைவீடுகளை அமைத்தனர். ‘வளவுவ’ என்ற முகவரி பெருமைக்குரிய ஒன்றாக இருந்தது. யெரனிஸ் பீரிஸ் 1850க்களில் தனது கடிதத்தலைப்பில் ‘சாராயக்குதம், கண்டி’ என்று முகவரியிட்டிருந்தார். பின்னர் கொழும் பில் ‘வளவுவ பாணியில் மாளிகையொன்றைக்கட்டிக் கொண்டபோது தன் முகவரியில் எல்ஸ்கோட் (எல்ஸ் மாளிகை) என்ற நாகரிகமான பெயரை முகவரியாகக் குறிப்பிட்டார்.*மிகப் பெரிய குத்தகைக்காரர் களில் ஒருவரானயெரனிஸ் சொய்சாசாராயவியாபாரத்தை கைவிட்டார். 1840க்களில் பெருந்தோட்டங்களில் முதலிட்டார். அவரது மகன்சாள்ஸ் சொய்சா ஏனைய துறைகளின் முதலீடுகளில் தனது கவனத்தைச் செலுத்திய போதும் சாராய வியாபாரத்தையும் பகுதித்தொழிலாகக் கொண்டிருந்தார். அவர் இறந்தபோது அவரது திரவச்சொத்துக்களில் 64,000 கலன் சாராய இருப்பும் சேர்ந்திருந்தது. சாராயக் குத்தகைகாரர் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறையினர் ஏனைய வியா பாரத்துறைகளில் கவனம் செலுத்தஆரம்பித்தனர். 19ஆம்நூற்றாண்டில் பெரும்பணக்காரர்களாக இருந்த குடும்பங்களின் வரலாறுகள் எழுதப் பட்டபொழுது அதனை எழுதியோர் சாராய வர்த்தகம் பற்றி எதுவும் குறிப்பிடாமல் விட்டனர்; அல்லது போகிற போக்கில் ஒருதகவலாக மட்டும் குறிப்பிட்டனர்.
டி சொய்சா, பீரிஸ், டி மெல் குடும்ப வரலாறுகள் சாராயவியாபாரத் தால் உழைத்த லாபம் பற்றிக் குறிப்பிடாமல் பெரும் காணி உடமை

Page 70
O8 அநாமதேயங்களாக இருந்தோர்.
யாளர்களாக சமூக அந்தஸ்துடன் இக் குடும்பங்கள் விளங்கியதை விபரித்தன. சிங்கள அரசர்களிடம் காணிகளை மானியமாகப் பெற்ற வர்கள் பிரபு வம்சமாகச்சமூகஅந்தஸ்துடன் இருந்தனர். இந்த முற்கால வழக்கை டச்சுக்காரர்கள் தொடர்ந்தனர். பிரித்தானியரும் 1833 வரை நிலத்தை மானியமாக வழங்கும் முறையைத் தொடர்ந்தனர். காணி உடமைசிங்களசமூகத்தில் அந்தஸ்தின்அடையாளமாகும். புதுப்பணக் காரர்கள் சாராய வியாபாரத்தில் உழைத்த பணத்தைக் காணிகளில் முதலிட்டனர். தமது சொந்த ஊர்களான கரையோரப் பகுதிகளில் போதியநிலம் இருக்கவில்லை. இதனால் பிறஇடங்களில் காணிகளைக் கொள்வனவு செய்தனர். காலனி ஆட்சிக்கு முன் அரசியல் ஆட்சி அதிகாரம் உடைய பிரபுக்களின் உடமையாக நிலம் இருந்தது. டச்சுக் காலத்தில் வேறுபலரும்காணிக்காரர்களாயினர். கொய்கம சாதியினைச் சேராதவர்கள் முதலியார் பதவிக்கு நியமனம் பெற்றனர். தாம் செய்த இராசசேவைக்காக பெற்றநிலத்தை ‘பரவணி' உரிமையாக (பரம்பரை உரிமை) வைத்திருந்தனர். தென்னைத்தோட்டங்கள் அமைத்தல் ஒரு வியாபார முயற்சியாக வளர்ச்சியுற்றபோது முதலியார் வகுப்பினர் தென்னந்தோட்டங்களின் உடமையாளர் ஆகினர். ஊர்ச்சனங்கள் மீது அதிகாரம் செலுத்தும் நிலையில்இருந்தமுதலியார்கள்கூலிக்கு வேலை யாட்களை அமர்த்தி இலகுவாகத்தம் காணிகளைத் தோட்டங்களாக் கினர். கிழக்கு இந்தியக்கம்பனிக்கு கறுவாவை வழங்கிய சலாக்ம சாதியினரும் காணிகளை மானியமாகப் பெற்றனர். இக்காணிகளில் தோட்டங்களை அமைத்தனர். டச்சுக்காலத்தில்சட்டமுறை மாற்றங்கள் ஏற்பட்டன. காணி வாங்கல், விற்றல், உடமைசம்மந்தமான சட்டங்கள் இலகுவாக்கப்பட்டன. காணிஉடமையின் வளர்ச்சிக்கு இது உதவியது. பிரித்தானியர் ஆட்சியின் தொடக்கத்தில் காணிகள் 50 ஏக்கருக்கு மேற்பட்ட துண்டங்களாகத் தனியாருக்கு விற்கப்பட்டன. இந்தக் காணிகளை கொள்வனவு செய்வதில் முதலியார் வகுப்பு முந்திக் கொண்டது. அரசநிர்வாகத்தோடு தொடர்புடையவர்களாக இருந்த இந்த வகுப்பினர்தங்கள் செல்வாக்கைப்பயன்படுத்திக்காணிகளை பிடித்துக் கொண்டனர். இவ்விதமாக நிலஉடமையாளர் வகுப்பு ஒன்று முதலில் கொய்கம சாதியில் இருந்தும் பின்னர் கராவ போன்ற பிறசாதிகளில் இருந்தும் உருவானது.
1830க்கள் முதல் “கோப்பிப் பித்தம் ஆரம்பித்தது. அரசாங்கம் தரிசுநிலம்" (Waste Land)என்று கூறப்பட்ட காணிகளை விற்கத்

வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம் O9
தொடங்கியது. இதனால் காணிச்சந்தையில் நிரம்பல் அதிகரித்தது. அரசாங்கம் விற்பனைசெய்த தரிசுநிலம் பெருந்தோட்டங்கள்அமைப் பதற்கு வாய்ப்பானகாணிகளாகும். இவற்றைத்தனியார் கொள்வனவு செய்தனர். காணிவிற்பனை தொடர்பாக ‘பற்றிக் பீபிள்ஸ்" தந்துள்ள தகவல்கள் சில:'
- விற்கப்பட்டகாணிகளில் 66% சிங்களவர்கையில் சேர்ந்தது.
- இவற்றுள் பெரும்பான்மையானவை சிற்றுடமைகள்தாம்
- 5 ஏக்கருக்கும் குறைந்த சிற்றுடமைகள் இவற்றுள்?7% - இந்த 77%த்தில் 37% ஒரு ஏக்கருக்கும் குறைந்தவை.
ஐரோப்பியர்களுக்கு விற்கப்பட்ட காணிகள் 10 ஏக்கருக்கு மேற்பட்ட துண்டுகளாக விற்கப்பட்டன. ஐரோப்பியர் கொள்வனவு செய்த காணி களில் 25% உடமைகள் 50 ஏக்கருக்கும் மேற்பட்டவையாகும்.
மத்திய மாகாணத்தில் 1833ஆம் ஆண்டில் 146 ஏக்கர் தரிசு நிலம் விற்கப்பட்டது. கோப்பிச்செய்கை ஆரம்பமானதும்தரிசுநிலவிற்பனை பலமடங்கு அதிகரித்தது. 1841இல் 78,000 ஏக்கர் விற்பனை செய்யப் பட்டது. 1833-1841 காலப்பகுதியில் 265, 535 ஏக்கர்காணி3456துண்டங் களாக விற்பனையாகியது. இக்காணி ஐரோப்பியர்கள், இலங்கையர் என்ற இருசாராலும் கொள்வனவு செய்யப்பட்டன. இக்காலத்தில் ஒரு ஏக்கர் 5 சிலிங் முதல் 20சிலிங் வரை விலை போயிற்று.
காணி, சந்தையில் வாங்கவும் விற்கவும்கூடிய பண்டம் என்ற கருத்து இக்காலத்தில் உருவாகியது. காணி உடமையாளர்கள் பிற்சந்ததியின ருக்கு காணிகளைப் பாகம் பிரித்துக் கொடுப்பதும், பிள்ளைகளுக்கு சீதனம் கொடுப்பதும் இக்காலம் முதல் ஒரு வழக்கமாக ஆகியது. காணியின் உடமை காரணமாக எழும் அந்தஸ்துஅதிகாரம் என்பனவும் இயல்பில் மாற்றமடைந்தன. காணியை வைத்திருந்தவருக்கு மானிய முறையின்கீழ் விவசாயக்குடியான்கள்மீதுஆதிக்கம் செலுத்தமுடிந்தது. இலவச உழைப்பைப் பெற்றுக்கொள்ளலாம். கூலி உழைப்பு பெருந் தோட்டமுறையின் வருகையால் அதிகரித்தது. இதனால் நெற்காணியை உடமையாக வைத்திருப்போருக்கு இருந்த அந்தஸ்து, மதிப்பு படிப் படியாக குறைந்தது. இருந்த போதும் காணி உடமை என்பது ஒரு கெளரவம், மதிப்பு என்ற எண்ணம் சமூகத்தில் நிலைத்திருத்தது. அந்தஸ்து, படிநிலைஆகியவற்றிற்குசந்தை மதிப்புக் கொடுப்பதில்லை.

Page 71
O அநாமதேயங்களாக இருந்தோர்.
இதனால் காணியின் உடமையால் வரும் உயர்வு சந்தைப் பொருளா தாரத்திற்கு அந்நியமான கருத்து. காணிகளில் பயிர் செய்து லாபம் ஈட்டலாம்; பயிர் செய்யாமலேதரிசாக வைத்துக் கொண்டாலும் ஒருவ ருக்குஅதனால் சமூக மதிப்பு என்னும் லாபம் கிடைத்தது. பெருந்தோட் டங்களை வைத்திருந்த நில உடமையாளர்கள் தம் தோட்டங்களில் ஒருபகுதியை பயிரிடாமலே வைத்திருந்தார்கள் என்பதற்குச்சான்றுகள் உள்ளன. வர்ஷா ஹென்னடிகேடிசொய்சா குடும்பம் 1870-72காலத்தில் 8000 ஏக்கர்காணியின் சொந்தக்காரர்களாய் இருந்தனர். இக்காணியில் அரைப்பங்கு பயிரிடப்படாமல் பற்றைக்காடாக இருந்தது. 1880-81இல் 25,000 ஏக்கர் காணி இக்குடும்பத்திற்கு சொந்தம்; மூன்றில் ஒரு பங்கு காணிதரிசாகக் கிடந்தது. 1890 - 91இல் 24,000 ஏக்கர் சொந்தம்; இதில் மூன்றில் ஒரு பங்கு பயிரிடவில்லை. (இத்தகவல்களை றொபர்ட்ஸ் தருகின்றார்)"
கோப்பிச் செய்கை வளர்ச்சியுற்ற காலத்தில் அரசாங்கக் காணிகள் (முடிக்குரிய நிலம்) மட்டுமன்றித் தனியார் உடமைகளும் விற்கப் பட்டன. காணி விற்பனையில் இடைத்தரகர்கள் குழாம் ஒன்று ஈடு பட்டது. ‘காணி அபகரிப்பு’ என்னும் விடயம் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் 20ம்நூற்றாண்டிலும் ஒரு பிரச்சினையாயிற்று. காணிக் கான கேள்வி அதிகரித்தது. கிராமத்து விவசாயிகளின்நிலம் பறிபோய் பெருந்தோட்ட நிலங்களாயின. இலங்கையில் நான்கு வகையான காணிகள் இருந்தன. நெற்காணி, வீட்டைச்சூழஉள்ளதோட்டக்காணி, சேனைப்பயிர்செய்கைக்கானதரிசுநிலம். காடு என்பனவே இந்தநான்கு வகைக் காணிகள். இடைத்தரகர்கள் காணிகளை மலிவுவிலையில் கொள்வனவு செய்து பெருந்தோட்டங்களுக்கு உயர்விலையில் விற்று லாபம் திரட்டினர். கிராமப் பகுதிகளில் செல்வாக்குள்ளவர்களான நொத்தாரிஸ் (Notary) சட்டத்தரணி (சொலிசிற்றர்) வேலைகளில் இருந்தோர் இடைத்தரகர்களாகவும் இருந்தனர். இவர்களின் ஊழல் நடவடிக்கைகள் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. கிராமங்களில் கூட்டுஉடமையாக உள்ளகாணிகளில் ஒருவரின்பங்கை இடைத்தரகர் முதலில் கொள்வனவு செய்வார். அப்படிவாங்கும் போதுகாணி முழு வதற்கும் பணம் கொடுத்தாக உறுதி எழுதப்படும். பின்னர் மற்றப் பங்காளர் மீது வழக்குத் தொடுத்தல், மிரட்டுதல் போன்ற வழிகளில் முழுக்காணியையும்தமதாக்கிவேறுஒருவருக்கு உயர்விலையில் விற்று விடுவர். இது மோசடிகளுக்கு ஒரு உதாரணம் மட்டுமே. முதலாளித்து

வேர்ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம்
வத்தின் எழுச்சியில். காணி அபகரிப்பு முக்கியமான பங்கைப் Glpgyil” 67cölgy 6 mi Gloui (Eric Meyer) 61Göp ஆய்வாளர்கூறியிருப்பது உண்மையே."அரசாங்கக்காணிகளை அத்துமீறிப்பிடித்துத்தமதாக்கு தலும் இக்காலத்தில் கையாளப்பட்டதந்திரங்களில் ஒன்று. ஹென்றி யோசப் பீரிஸ் என்பவர்றைகம் கோறளையில் முடிக்குரிய காணியை அத்துமீறிப் பிடித்தார் என்று அரசாங்கம் 1898இல் குற்றம் சாட்டியது. சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு பீரிஸ் எழுதிய பதிலில் உள்ள பின்வரும் வாசகம் பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது:"
நான் எனது தோட்டத்திற்கு அருகில் உள்ள காணிகள் யாவற்றையும் விலை கொடுத்துப் பெற்றேன். ஒரு ஏக்கர் ரூ 10 முதல் ரூ 30 வரை விலைகொடுத்தேன். களுத்துறைமாவட்டத்தில்இவ்விதமாகபெற்ற2000 ஏக்கர்காணியில் தேயிலைப் பயிர் செய்கிறேன். ஏழைக் கிராமவாசிகளின் நிலங்களை அபகரிப்பதில் முதலாளிகள் போட்டியிட்டனர். கரைநாட்டுச்சிங்களவர், கண்டியின் சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர்கள், பறங்கியர் எனப்பலரும் இந்தநில அபகரிப் பில் பங்குகொண்டனர்.
பெருந்தோட்டங்களில் முதலீடு கோப்பித் தோட்டங்கள் அரசாங்கத்திடம்நிலத்தை விலைக்குச் பெறுதல்,தனியாரிடம் கொள் வனவு செய்தல், அத்துமீறிப்பிடித்தல், மோசடியான முறையில் அப கரித்தல் என்றபலவழிகளாலும்,நிலம்அபகரிக்கப்பட்டது.காடு, சேனை நிலம், வீட்டுத்தோட்டம், நெற்காணி என்ற நான்கு வகைநிலங்களும் தோட்டங்களுக்காக அபகரிக்கப்பட்டன. விற்பனைப்பண்டம் என்ற நிலைக்குகாணி,காணிஉரிமைஉறவுகள்மாறின.நிலமானியமுறையில் நிலம் விற்பனைக்குரிய பண்டமாக இருக்கவில்லை. சாராயக்குத்தகை யால்லாபம் ஈட்டியவர்களிடம்இருந்துநிலஉடமையாளர்களான பெருந் தோட்ட முதலாளிகள் தோன்றினர். பற்றிக் பீபிள்ஸ் தம் நூலில் தரிசு நிலம் கொள்வனவு செய்வதில் முன்னிலையில் நின்ற 13 பெயர்கள் கொண்டபட்டியலைத்தருகிறார். இவர்களில் 10பேர்சாராயக்குத்தகைக் காரர்ஆவர். அவர்களது பெயர் விபரம் வருமாறு."
சாள்ஸ் டிசொய்சா 7522 ஏக்கர்நிலம்
ஆ சைமன்பெர்னாண்டோ 4438 ஏக்கர்நிலம்

Page 72
12 அநாமதேயங்களாக இருந்தோர்.
ரிச்சார்ட் ஸ்டுவார்ட்பீரிஸ் 3949 ஏக்கர்நிலம் ஹரமானிஸ் சொய்சா 681 ஏக்கர்நிலம்
சுகுசொய்சா 4696 ஏக்கர்நிலம் யெறானிஸ்பீரிஸ் 3797 ஏக்கர்நிலம் யொகான்ஸ்டி மெல் 1236 ஏக்கர்நிலம் அண்ட்ரிஸ்பிரிஸ் 2471 ஏக்கர்நிலம் யக்கோப்டி மெல் 65 ஏக்கர்நிலம்
முன்னணியில் திகழ்ந்த முதலியார் வகுப்பினைச்சேர்ந்த குடும்பங்கள் மூன்றின் பெயரும் இப்பட்டியலில் உள்ளது.
யே. பிஒபயசேகர O 2271 ஏக்கர்நிலம்
ஜி. எல் ஒபயசேகர 1242 ஏக்கர்நிலம்
சொலமன் டயஸ்
பண்டராநாயக்க 1105ஏக்கர்நிலம் மத்தியமாகாணத்தில் செயற்பட்ட முன்னணிக் குத்தகைக்காரர்கள் யாவரும் கரையோரமாகாணங்களைச்சேர்ந்தோரே. இவர்கள் கோப்பிச் செய்கை அங்கு தொடங்கப்பட்ட பொழுது பெருந்தோட்டங்களை அமைப்பதில் முந்திக் கொண்டனர். இதனை விட உயர்நிலைப்பதவி களை வகித்த அரசாங்க உத்தியோகத்தர்கள், செட்டிகள், முஸ்லிம்கள் ஆகியோரும் கோப்பித் தோட்டங்களில் முதலிட்டனர். சிற்றுடமை விவசாயிகளும் கோப்பியைப் பயிரிட்டனர். வண்டன் ட்றைசன் (Van Den Driesen) கருத்துப்படி இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்த கோப்பியில் 1/3 முதல் 1/4 பங்கு வரை கிராம வாசிகளால் வீட்டுத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட கோப்பியாகும்." (Peasant Coffee), 1830 களிலும் 1840களிலும் கோப்பிச் செய்கையில் பூரிப்பு (Boom) நிலை காணப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் கோப்பிச்செய்கையில்புகுந்து லாபம் கண்ட குத்தகைக்காரர்கள் பெருந்தோட்டங்கள் மிகச்சிறந்த முதலீட்டு வாய்ப்பை வழங்கும் என்றஉண்மையை கண்டு கொண்டனர். சொய்சா குடும்பத்தினர் கோப்பிச் செய்கையில் தொடக்ககால முதலீட்டாளர் களாகஇருந்தனர். 1872இல்சாள்ஸ்டிசொய்சா2500ஏக்கரில் கோப்பியைப் பயிரிட்டார். அவ்வாண்டில் சுசூ சொய்சாவிடம் 930 ஏக்கர் கோப்பித் தோட்டம் உடமையாக இருந்தது."

வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம் 113
தெங்குத் தோட்டங்கள் 19ஆம் நூற்றாண்டில் தெங்குத் தோட்டங்களின் முதலீடுகள் அதிகரித் தன. இப்பயிர்ச்செய்கையில் சிற்றுடமையாளர்கள் அதிகம் பேர் ஈடுபட் டனர்-பெருந்தோட்டங்களிலும் இலங்கையரே அதிகம் முதலிட்டனர். சோப், மார்ஜரின், பல்வகை உணவுப் பொருட்கள் என்பன உற்பத்தி செய்வதற்கு தேங்காய் எண்ணெய், தேங்காய்த்துருவல், கொப்பறா என்பன மூலப் பொருட்களாக இருந்தன. தென்னந்தும்பு வேறுசில உற்பத்திப் பொருட்களுக்கு மூலப் பொருளாக இருந்தது. தெங்குப் பொருட்களின் ஏற்றுமதிக் கேள்விஅதிகரித்தபோது இலங்கை முதலீட் டாளர்கள் தெங்குத் தோட்டங்களில் முதலிட்டனர். தென்னையில் இருந்து பெறப்பட்டகள், சாராய உற்பத்திக்கான மூலப்பொருள்ஆகும். தெங்குப் பயிர்ச்செய்கை பாதுகாப்பான முதலீட்டுத்துறை எனவும் கருதப்பட்டது. 1910-20காலப்பகுதிகளில் 1மில்லியன் ஏக்கர்நிலத்தில் தென்னை பயிரிடப்பட்டது. 1930இல் இது 1.5 மில்லியன் ஏக்கராக உயர்ந்தது. 1928இல் தெங்குப் பொருட்களின் ஏற்றுமதிரூ80மில்லியன் ஆகும். தென்மேற்கு, வடமேற்குகரையோரங்களில்நீண்டகாலமாகவே தென்னை பயிரிடப்பட்டுவந்தது. பெருந்தோட்டமுதலாளித்துவமுறை உற்பத்தி ஆரம்பித்தவேளையில் வடமேற்கு மாகாணத்தில் (புத்தளம், குருநாகல் மாவட்டங்கள்), பெரும் தெங்குத்தோட்டங்கள் இலங்கை முதலாளிகளால்தாபிக்கப்பட்டன. கிராமவாசிகளது காணிகளையும், அரசாங்க காணிகளையும் "அபகரித்து இத் தோட்டங்கள் உருவாக் கப்பட்டன. ஸ்நொட்கிறாஸ் (Snodgrass) மதிப்பீட்டின் படி தெங்குத் தோட்டங்களில் 85% இலங்கையரின் உடமைகளாக இருந்தன. கரை நாட்டுச்சிங்களவர்களே இவற்றுள் 75% தோட்டங்களை உடமையாக வைத்திருந்தனர்; மீதி 25% தோட்டங்கள் தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் ஆகியோர் வசம் இருந்தன. 1000 ஏக்கருக்கு மேற்பட்ட பெருந்தோட்ட உடமைகளின்விபரம் (றொபர்ட்ஸ்தரும் தகவல்)
1881 762. GOLDL untGMTries5Git
I917 - 412உடமையாளர்கள்
1927 -- 546உடமையாளர்கள்
1880ல் தெங்குத் தோட்டங்களை உடமையாகக் கொண்டிருந்த பெரிய நிலஉடமையாளர்களின்பட்டியலையும் றொபர்ட்ஸ் தருகிறார்."

Page 73
14 அநாமதேயங்களாக இருந்தோர்.
சாள்ஸ்டி சொய்சா -8000ஏக்கர்
எவ். ஆர். எஸ். ஸ்ராடர்
எஸ்.நமசிவாயம்
இ.நன்னித்தம்பி 2000ஏக்கர் பரப்பளவுக்கு எம்.அந்தோனிபெர்னாண்டோ மேற்பட்டதோட்டங்களின் யெரனிஸ் பீரிஸ் உடமையாளர்கள்
யேம்ஸ்டிஅல்விஸ்
1917ஆம் ஆண்டளவில்தோட்டஉடமையாளர் எண்ணிக்கையும், தோட் டங்களின்பருமனும்அதிகரித்திருந்தது.அவ்வாண்டில் பெரும் உடமை யாளர் விபரம்
எல். டபிய்யூ. ஏ. டி. சொய்சா (சாள்ஸ்டி சொய்சாவின்மகன்) லூசியன்பெர்னாண்டோ 3000ஏக்கருக்குமேல் திருமதியே. பி. (கர்ணலிஸ்) ஒபயசேகர எச். ஜே. ஜே. பீரிஸ் ད།༽ எல்.ஈ.டி. குரூஸ் யக்கோப்டி மெல் ரி. என்.ஏ. டி. சொய்சாவும் அவரது சகோதரரும் > 2000ஏக்கருக்குமேல் மார்க்கஸ் பெர்னாண்டோ
சாள்ஸ்பீரிஸ்
எஸ். சி. ஒபயசேகர
என். ரட்னசபாபதி لم
தெங்குத் தோட்டங்களின் உற்பத்திமுறையின் விசேட இயல்புகளை கவனிக்கும்போது உள்நாட்டு முதலாளித்துவ வகுப்பின் பலவீனமான அம்சங்கள் எமக்குப்புலனாகும் அவையாவன:
1. தெங்குத் தோட்டங்கள்தனியாள் உடமைகளாகவோ அல்லது பங்குடமைகளாகவோஇருந்தன. தேயிலை, ரப்பர்தோட்டங்களில் SAL GOLÜ LUIG5ë 5bLJGOf5Git (Joint Stock Companies) GESTIGðipróGOT.

வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம்
2. சிறிய மூலதனத்துடன் தெங்குத் தோட்டங்களை ஆரம்பிக்க முடிந்தது. தெங்குத்தோட்டங்களில்தொழிலாளர்களின்தேவையும் குறைவு.நிர்வாகஒழுங்கமைப்பும் சிக்கலற்றது.ஆகவே தெங்குத் தோட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டமாறும் மூலதனத்தின்அளவும்
குறைவு. 3. சிறிய தோட்டம், பெருந்தோட்டம் என்ற வேறுபாடு பொரு ளாதாரரீதியில் முக்கியமற்றது. பேரளவுச்சிக்கனம் காரணமாக எழும் உற்பத்திவிளைவுவீதம்இத்துறையில் செயற்படவில்லை. அதனால் பெருந்தோட்டஉடமையாளர்கள்மூலதனச்செறிவுள்ள உற்பத்திமுறையாக இதனைஆக்கவில்லை. 4. உற்பத்தித் தொழில்நுட்பம் பழமைவாய்ந்ததாக இருந்தது. தெங்குப் பொருட்களைப் பதப்படுத்தல், தும்புத் தொழில், தேங்காய் எண்ணெய் உற்பத்தி, சாராயம் வடித்தல் ஆகியவற்றில் பழமையான தொழில்நுட்பமே உபயோகிக்கப்பட்டது. உதார ணமாக தேங்காய் எண்ணெய் வடிப்பதற்கு "செக்கு உபயோகிக் கப்பட்டது. மாடுகளைக் கொண்டு செக்கு இயக்கப்படும். 5. தோட்டச் சொந்தக்காரர்கள் தெங்குப் பொருட்களைப் பதப் படுத்தும் ஆலைகளை வைத்திருக்கவில்லை. பெரும் தோட்ட உடமையாளர்கள்கூட சிறிய ஆலைகளையே வைத்திருந்தனர். பெரும்பாலான தோட்டங்கள் தேங்காய், தெங்கு மட்டை என் பனவற்றை ஆலைகளுக்கு வழங்கின. ஆலைகளில் பெரியன கொழும்பு நகரைச் சூழவே இருந்தன. தெங்குத் தோட்டங்கள் உள்ளதுர இடங்களில் சிறிய ஆலைகளே இருந்தன. 6. முகாமைத்துவம்திறனற்றதாக இருந்தது. தோட்டமுதலாளிகள் கொழும்பு நகரில் வதிபவர்களாகவும், இடைக்கிடை தோட் டத்திற்குச்சென்று மேற்பார்வை செய்பவர்களாகவும் இருந்தனர். பலர் இதனை ஒரு உபதொழிலாக நடத்தினர். அரசாங்க உயர் பதவிகளில் இருந்தோரும் தமது சம்பளத்தை விட மேலதிக வருமானம் தரும் சொத்தாக தெங்குத் தோட்டங்களை உடை மையாக வைத்திருந்தனர். 1930க்களில் பெருமந்தம் ஏற்பட்டபோது தெங்குத் தோட்டமுதலா ளிகளின் பலவீனமான நிலை வெளிப்படையாகத் தெரிந்தது. செட்டி யார்களிடம் கடனைப் பெற்ற தோட்ட முதலாளிகளின் பலரது தோட்

Page 74
16 அநாமதேயங்களாக இருந்தோர்.
டங்கள் கடனை அடைக்கமுடியாமல் விற்கப்பட்டன. செட்டியார்கள் தமக்கு அடமானமாக வைக்கப்பட்ட தோட்டங்களில் மூன்றில் ஒரு பங்கை கடனுக்குப்பதிலாகதாமே பிடித்துக் கொண்டனர்(1934வங்கி ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதகவல்)
தேயிலை, ரப்பர், தோட்டங்கள் சுதேசமுதலாளிகள் தெங்குத் தோட்டங்களை அமைத்ததுபோல் ரப்பர் தோட்டங்களிலும் முதலிட்டனர்." ஆனால்தேயிலைத்தோட்டங்களில் ஒரளவுக்கே சுதேசிய முதலாளிகள் முதலீடுகளைச் செய்தனர். தேயி லைத்தோட்டங்கள் பெரும்பான்மைஐரோப்பியர்களின் உடமைகளாக இருந்தன. 1880க்களில் கோப்பிப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியுற்றபோது பெருந்தோட்ட முதலாளிகள் தேயிலையைப் பயிரிட ஆரம்பித்தனர். 1883ஆம் ஆண்டில் 70,000 ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டது. 1885இல் இது 15,000 ஏக்கராக அதிகரித்தது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் தேயிலை ஏற்றுமதி அதிகரித்துச் சென்றது. 1914ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டதேயிலையின் பெறுமதிரூ.90மில்லி யனாகவும் 1915ஆம் ஆண்டில் ரூ. 122 மில்லியனாகவும் இருந்தது. 1915வரை தேயிலையின் உலகச்சந்தை விலைஉயர்வாகஇருந்தது. இந்த ஆண்டிற்குப் பின்னர் தேயிலைவிலைகள் சரிந்ததால் உற்பத்தியின் அளவைக் குறைக்கவேண்டியிருந்தது. 1920க்களில் மீண்டும் தேயி லைக்கு நல்ல விலை கிடைத்தது. ஆனால் 1930க்களின் பெருமந்தம் தேயிலைத் தொழிலை மிகவும் பாதித்தது. தேயிலை பயிரிடப்படும் பகுதிகள் உயர்நிலம்,தாழ்நிலம் என்ற பிரிவுள்அடங்குவன. இலங்கை யரின் தேயிலைத் தோட்டங்கள் களனிப்பள்ளத்தாக்கு பகுதிகளிலும் சப்பிரகமுவவிலுமே அதிகமாகக் காணப்பட்டன. 1917ஆம் ஆண்டில் 300 ஏக்கர் பரப்பளவுக்கு மேற்பட்ட தோட்டங்களை உடமையாகக் கொண்டிருந்த இலங்கையர் 29 பேர் இருந்தனர். இவர்களுள் 650 ஏக் கருக்கு மேற்பட்ட தோட்டங்களின் உடமையாளர்களாக பின்வரும் ஐவரும் விளங்கினர்*
ஹென்றிஅமரசூரிய ஈ. எல். பி. டி. சொய்சா
ஆர். இ. எஸ். டி.சொய்சா யேம்ஸ் பெர்ணான்டோ
எச். ஜே. பீரிஸ்

வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம் 117
இலங்கையர்கள்தேயிலைத்தோட்டங்களைவிடரப்பர்தோட்டங்களில் முதலிடுவதில்கூடிய கவனம் செலுத்தினர். ரப்பர் 1875ல் பரிசோதனைப் பயிராக இலங்கையில் அறிமுகமானது. 5000 அடிக்கு உட்பட்ட பகுதி களில் ரப்பர் தோட்டங்கள் அமைக்கப்பட்டன. களுத்துறை, களனிப் பள்ளத்தாக்கு, கண்டி, மாத்தளை ஆகியன ரப்பர் பயிரிடும் இடங் களாகும். ரப்பரைப் பதப்படுத்திச் சந்தைக்கு அனுப்புவதற்கு உயர் தொழில்நுட்பமுறைகள்தேவையில்லை.இதனால்தேயிலைபோலன்றி இத்துறையில் நிலையான முதலீடுகள் குறைவு. ரப்பர் தோட்டங்கள் சிற்றுடமைகளாக இருந்தன; பெரிய தோட்டங்களும் இருந்தன. ரப்பர் பயிரோடு வேறுசில பயிர்களை ஊடுபயிராகவும் பயிரிடமுடிந்தது.
1900 - 1912 காலத்தில் ரப்பரின் உலகச்சந்தைவிலை அதிகரித்தது. யுத்தம் தொடங்கும் வரைரப்பர் உற்பத்தித்துறை செழிப்பாக இருந்தது. 1900 - 1910 காலத்தில் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மோட்டார் கார் உற்பத்தி வேகமாக வளர்ச்சியுற்றது. அதனால் ரப்பரின் கேள்வி உயர்ந்தது. இக்காலம் ‘ரப்பரின்பூரிப்புக்காலம்’ என்று பெயர் பெற்றது. இலங்கையில் ரப்பர் ஏற்றுமதியில் உலகச்சந்தையின்மாற்றம்
வெளிப்பட்டது.
1910 - 1600 தொன் ரப்பர் ஏற்றுமதி
1916 - 24000 தொன் ரப்பர் ஏற்றுமதி
1918 - 1921 காலத்தில் ரப்பர் விலைகள் சரிந்தன. இக் காலத்தில் இலங்கையில் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டது. மீண்டும் 1920க்களில் ரப்பர் விலைகள் உயர்ந்தன. இதனால் ரப்பர் தோட்டச் சொந்தக்காரர் லாபம் ஈட்டினர். 1929இன் பின்னர் பெருமந்த காலத்தில் விலைகள் சரிந்தபோது இத்தொழில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியது. தேயிலை விலைகளைவிடரப்பர்விலைகளின் ஏற்றஇறக்கம் சடுதியா னதாகவும் அடிக்கடி மாறுவதாகவும் இருந்தது. இதனால் பொருளா தாரத்தின்மீதானதாக்கமும் அதிகமாக இருந்தது. 1932ல்ரப்பர்விலைகள் ஆகக் குறைந்தநிலைக்கு வீழ்ந்தன.
விலைத்தளம்பலின்பாதிப்புக்கள் இருந்தபோதும் ரப்பர் இலங்கை முதலாளிகளுக்கான முதலீட்டு வாய்ப்பை வழங்கியது. பலர் ரப்பர் தோட்டங்களில் முதலிட்டனர். 1917ஆம் ஆண்டில் 100 ஏக்கருக்கு மேற்பட்டதோட்டங்களின் உடமையாளர்களான இலங்கையர் 65 பேர் ஆவர்-இவர்களுள் 700ஏக்கர்பரப்பளவுக்கு மேற்பட்டதோட்டங்களின்

Page 75
18 அநாமதேயங்களாக இருந்தோர்.
உடமையாளர்களில் பின்வருவோர் ஆவர். குறிப்பிட்டுச்சொல்லப்பட
வேண்டியோர்.
ஹென்றிஅமரசூரிய டாக்டர். டபிள்யூ. ஏ. டி. சில்வா ஏ. ஜே.ஆர். டி. சொய்சா பஸ்ரியன் பெர்னாண்டோ டாக்டர். மார்க்கஸ் பெர்னாண்டோ சாள்ஸ் பீரிஸ்.
1927ஆம் ஆண்டில் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவு தோட் டங்களை உடமையாகக் கொண்டிருந்தோர்
திருமதி ஹென்றிஅமரசூரிய டாக்டர்.டபிள்யூ. ஏ. டி. சில்வா
சி. ஈ. ஏ. டயஸ் பாக்டர்.மார்க்கஸ்பெர்னாண்டோ
எச். வாட்சன்பீரிஸ் யே. எல். டி. பீரிஸ் மேற்குறித்த ரப்பர் தோட்ட உடமையாளர்கள் சாராயக் குத்தகைக் காரர்களாக பிரபலம் பெற்ற குடும்பங்களில் பிறந்தவர்கள் அல்லது அக்குடும்பங்களுடன்திருமணஉறவுகொண்டவர்கள். பலசாதிகளை யும், பல இனப்பிரிவுகளையும் சேர்ந்தோர் ரப்பர் தோட்டங்களின் உடமையாளர்களாக இருந்தனர். 1000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பள வுடையவர்களாக இருந்த தோட்ட உடமையாளர் இன்னும் சிலர் பெயர்கள்வருமாறு:
பிரட் அபயசுந்தர
ஈ. சி. டி. பொன்சேக
எ. ஈ. டி. சில்வா (சீனியர்)
டானியல் பெர்னாண்டோ
இ. எல். இப்ராகிம் லெப்பை மரிக்கார்
அலிஸ் கொத்தலாவல
எ. ஜே. வான்டர்பூர்டன்
இ.ஜி. ஆதம் அலி ரப்பர் தோட்டங்களை வைத்திருந்தோர் தோட்டக் காணியை ஈடாக வைத்துக் கடன் பெறமுடிந்தது. சாராய குத்தகைக்காரர்கள் தோட்டங் களை ஈடாக வைத்து ஏலத்தில் குத்தகையைப் பெற்றனர்; தம் பெண் பிள்ளைகளுக்கு தோட்டங்களைச்சீதனமாகக் கொடுத்தனர்.

வேர்ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம் I9
தெங்குத் தோட்டங்களிலும் ரப்பர் தோட்டங்களிலும் முதலிடுவது பாதுகாப்பானது எனக் கருதியே சுதேச முதலாளிகள் இவற்றில் முதலிட்டனர்.அவர்கள் எதிர்பார்ப்பதற்கு மாறாக தெங்கு உற்பத்தியும், ரப்பர் உற்பத்தியும் உலகச்சந்தை மாற்றங்களால் பெரும்பாதிப்புக்கு உள்ளாகின. வர்த்தக சகடோட்டம் என்னும் ஏற்ற இறக்கம் இவ்விரு துறைகளிலும் நிச்சயமற்ற நிலையை உருவாக்கிக் கொண்டிருந்தது. 1930க்களின் பெருமந்தத்தால் பலர்நட்டமடைந்தனர்; செட்டியார்களிற்கு ஈடாக வைத்ததோட்டங்களை மீட்க முடியாமல் அவற்றை இழந்தனர். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் சுதேச முதலாளித்துவம் எதிர்கொண்ட பொருளாதாரச்சூழல் பற்றிபின்வரும் சில விடயங்களை இவ்விடத்தில் குறிப்பிடுதல் ஏற்றது.
1. சாராயக் குத்தகை மூலம் பெரும் செல்வத்தை குவித்த வகுப்பு இக்காலத்தில் உருவாகியிருந்தது. இவர்கள் தங்கள் முதலீடு களைப்பரவலாக்கிமுன்னேறுவதற்கானவாய்ப்புக்களைதேடினர். 2. முதலீடுகளைப் பரவலாக்குவதற்குப் பல தடைகள் எழுந்தன. அவற்றுள் முதலாவது தடை ஏற்றுமதி இறக்குமதி துறையில் இருந்து சுதேசிகள் விலக்கி வைக்கப்பட்டதாகும். பிரித்தானி யரும், இந்தியர்களும் இத்துறையில் கால் பதித்தனர். பிறர் புகுவதை அனுமதிக்கவில்லை. 3. பிரித்தானியர் கடைப் பிடித்த வரிக்கொள்கை கைத்தொழில் விருத்திக்குத் தடையாக இருந்தது. இதனால் இத்துறையிலும் முதலீடு செய்யமுடியவில்லை. 4. கடன் பெறும் வழிகள் இல்லாதிருந்தன. இதனால் சுதேசிகள்
முதலீடுகளைப்பரவலாக்கமுடியவில்லை.
மேற்குறித்த தடைகளின் பின்னணியில் தான் காணிகளில் முதலீடு செய்வது ஏன்கவர்ச்சி தருவதாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள லாம். தரிசுநிலங்கள் மலிவு விலையில் கிடைத்தன. கிராமவாசிகளின் காணிகளையும் மலிவாக வாங்க முடிந்தது. காணிகளின் உடமை யாளர்களாவது சமூகத்தில்மதிப்புக்குரிய விடயமாக இருந்தது. கோப்பி, ரப்பர், தெங்குத் தோட்டங்களில் சாராயக்குத்தகைக்காரர்களும் அவர் களது ஆண் பிள்ளைகளும் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டினர். அவர்கள் தோட்டத்தில் வதியாத தோட்ட உடமையாளர்களாக நகரங்

Page 76
2O அநாமதேயங்களாக இருந்தோர்.
களில் இருந்தவாறு பிறதொழில்களை நடத்தவும், சமூக மதிப்புடன் வாழவும், பின்னாளில் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாகவும் வழி ஏற்பட்டது. காலனித்துவ ஆட்சியின் போது அரசியல் பிரமுகராக உயர்ந்த ஜேம்ஸ்பீரிஸ் 1908ஆம் ஆண்டில் பின்வருமாறு குறிப்பிட்டார்ஃ எம்மில் பலர் பெருந்தோட்ட உடமையாளர்கள். பிரித்தானியர் இந் நாட்டுக்கு மூலதனத்தை கொண்டுவந்து எமக்கு முன்மாதிரியாக பாதையைக் காட்டினர். அதனால் நாம் எல்லோரும் முன்னேறி னோம். GuiTill Su GigiTL'il (upg56)76856it (European Planters)
நலன்களும் எமதுநலன்களும் ஒன்றுதான்.
19ஆம் நூற்றாண்டின் முடிவில் பொருளாதாரத்தின் ஒழுங்கமைப்பு இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானமாகிவிட்டது. பிரித்தானியர் தேயிலைத் தோட்டங்களிலும், ஏற்றுமதி வர்த்தகத்திலும் தடம் பதித் தனர்; வர்த்தகத்திலும் இந்தியர்களுக்கு ஒரு பங்குகொடுப்பட்டது: சில்லறை வர்த்தகத்திலும் ஒருபங்கை அவர்கள்வைத்துக்கொள்ளலாம் என்றும் ஆகியது. சுதேச முதலாளிகளுக்கென்றும் சில துறைகள் விடப்பட்டன.
நிலம் என்ற சாதனத்தை ஆதாரமாகக் கொண்ட விவசாய விளை பொருட்கள் அப்படியே நேராக உலகச் சந்தைக்குப் போயின. கைத் தொழில் உற்பத்தியால் அவை மாற்றமடைந்து கூட்டிய பெறுமதியை அடைதல் என்னும் விடயம் இடம் பெறவில்லை. தேயிலை, ரப்பர், தெங்குப் பொருட்கள் ஆகியவற்றை வகைப்படுத்தல், சுத்தப்படுத்தல் ஓரளவு பதப்படுத்தி ஏற்றுமதிக்கு தயார்படுத்தல் மட்டும் நிகழ்ந்தது. காரியம் உற்பத்தியிலும் நிகழ்ந்தது இதுவே. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1817) பெற்றோலொக்கி என்பவர் பிரித்தானிய ஏற்று மதிகளின்தன்மை பற்றி நிலத்தின் விளைபொருட்கள் அவை; அதில் உழைப்புசக்தியால் சேர்க்கையானது மிகக் குறைவு என்று கூறினார்.* பிற்காலத்தில் காலனித்துவத்தின் கீழ் மூலதனம் எவ்விதம் செயற் பட்டது, அது உழைப்பு சக்தியைப் பயன்படுத்திய விதம் எத்தகையது என்பதை பெற்றோலொக்கியின்கூற்றுவிளக்கிநிற்கிறது - ஏறக்குறைய 90 ஆண்டுகள் கழிந்தபின் பெர்குசன் (1903) கொழும்புப் பண்ட சாலைகள் (Colombo Stores) என்று அழைக்கப்பட்ட வேலைத்தலங் களில்நிகழ்ந்தது என்ன என்பதைப் பின்வருமாறு வருணித்தார்."

வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம் 121
ஆயிரக்காணக்கான வறியவர்கள் இங்கு வேலை செய்தார்கள். இச் சுதேசிகளின் உணவு,உடை, வேறு அத்தியாவசிய தேவைகளைபூர்த்தி செய்யக் கூடிய பிழைப்பாக இது இருந்தது; அத்தோடு (இப் பண்ட சாலைகள்) கடைகளை நடத்தியோர், வியாபாரிகள், கப்பலோட்டிகள் என்று பல்வகைஆட்களுக்கும் வேலைவழங்கினர்.
காரியச் சுரங்கங்களில் முதலீடு இலங்கை முதலாளிகளின் ஏகபோகமான தொழிலாக காரியச் சுரங்க அகழ்வு இருந்தது. இதில்வேறு எவரும்நுழையவில்லை.நிலத்தடியில் உள்ள மூலவளம் ஒன்றைஅகழ்ந்தெடுத்து எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே ஏற்றுமதி செய்வது தான் இந்தத் தொழில் முயற்சியின் குணாம்சம் - காலனிய உற்பத்திமுறையின்இயல்பைப்பூரணமாக இது எடுத்துக்காட்டியது. காரியத்தைஅகழ்ந்து எடுப்பதைவிட மேலதிகமாக ஏதேனும் வேலைகள் நடந்தன என்றால் அது தரம், அளவுப்படி வகைப்படுத்தல் மட்டுமே. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இராணுவத்தேவைகளுக்காககாரியம் ஏற்றுமதியானது. 1869-1918காரிய உற்பத்தியின் துரித முன்னேற்றக் காலம் ஆகும். இரும்பு உருக்குத் தொழில், துப்பாக்கி போன்ற ஆயுதங்களின் உற்பத்தி என்பனவற்றிற்கு காரியம் தேவைப்பட்டது. 1875க்கும் 1918க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்டு தோறும் ஏற்றுமதியான காரியத்தின் பெறுமதி ரூ 1மில்லியன் முதல் ரூ 4 மில்லியன் வரையானதாக இருந்தது. 1914 - 1918 முதலாம் உலக யுத்த காலத்தில் 33,000 தொன்காரியம் ஏற்றுமதியானது. இதன் பெறுமதி ரூ 22 மில்லியன் ஆகும். யுத்தம் தொடங்குவதற்கு முன் ஒருதொன் ரூபா820-ஆக இருந்தகாரியவிலை 1917இல் ரூபா813ஆக உயர்ந்தது. இதனால் யுத்தகாலத்தில் எதிர்பாராத மிகப் பெரிய லாபம் கிடைத்தது.
சாராயக்குத்தகை வியாபாராத்திற்கும்காரியச்சுரங்கஅகழ்வு வேலைக் கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. சாராயக் குத்தகைக்காரர்கள் நாடு முழுவதும் அந்த வியாபாரம் தொடர்பான நடவடிக்கைக்காகத் தவற ணைகளைத்திறந்தனர்- அப்போதுகாரியப் படிவுகள் உள்ள இடங்கள் எவை எவை எனக் கண்டுபிடித்தனர். சாராயக்குத்தகையில் கிடைத்த லாபத்தை காரியச் சுரங்க அகழ்வில் முதலிட்டனர். காரிய அகழ்வு வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்களால் சாராயத்தின் நுகர்வும் அதிகரித்தது. தொடங்கஸ்லந்த, ராகெதர, அம்பேபுஸ்ஸ, போகல ஆகிய இடங்களில் காரிய சுரங்க அகழ்வு நடைபெற்றது.

Page 77
22 அநாமதேயங்களாக இருந்தோர்.
காரியச் சுரங்க அகழ்வுத் தொழிலில் எல்லாச் சாதியினரும் ஈடு பட்டனர். கராவசாதியைச்சேர்ந்த சாராயக்குத்தகைக்காரர்கள் காரியச் சுரங்கஉடமையாளர்களாகவும் இருந்தனர்.
சாள்ஸ்டி சொய்சா, யெரனிஸ் பீரிஸ், யக்கோப் டி மெல், யோன் குளோவிஸ் டி சில்வா, எச். ஜே. பீரிஸ், பஸ்ரியன் பெர்ணாண்டோ, சைமன்பெர்ணாண்டோ, சிறிசந்திரசேகராஆகிய குடும்பங்கள்காரியச் சுரங்கங்களில் முதலிட்டன. கொவிகம குடும்பங்களில் காரியச்சுரங்க முதலீடுகள் செய்தோருள் டொன் ஸ்பேட்டர் சேனநாயக்க, டி.சி.ஜி. ஆட்டிகல, என்.டி.பி.சில்வா, என்போர்குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்கள் சாராயக்குத்தகை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுமாவர். இவர்கள் பெருந்தோட்டங்களிலும் முதலிட்டனர். எ. ஈ. டி. சில்வா, (சீனியர்) அமடோரிஸ்மென்டிஸ்ஆர்.எமிரான்டோ, யு.டி.எஸ்.குணசேகர என்போர் சலாகம சாதி முதலீட்டாளர்கள். மத்தியு குடும்பம், டி. டி.பெட்ரிஸ் குடும்பம் என்பனவகும்புரசாதியினர். ‘காரிய வர்த்தகர் சம்மேளனம் (1905) என்ற அமைப்பில் காரியச்சுரங்க முதலாளிகள் யாவரும் ஒன்று சேர்ந்தும் செயற்பட்டனர். இது பலசாதிகளைச் சேர்ந்த முதலாளிகள், வர்க்கம்’ என்ற வகையில் ஒன்று சேர்ந்து செயற்பட்டதற்கு உதாரண மாகும்.
தொடக்க நிலைக் கைத்தொழில்கள்
தடையற்ற இறக்குமதிகள், இலங்கையர் கடன் பெறுவதில் கட்டுப் பாடுகளும் பிரச்சினைகளும், என்ற இரு விடயங்களும் காலனித்துவ பொருளாதாரஅமைப்புக்குள் கைத்தொழில்துறை வளர்வதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆதலால் அக்காலத்தில் கைத்தொழில்கள் என்று கூறக் கூடிய உற்பத்தி முயற்சிகள் ஏதாவது இருந்திருக்குமேயானால் அவற்றைத் தொடக்கநிலைக் கைத்தொழில்கள் என்றேஅழைக்கலாம். உதாரணமாக கோப்பிச் செய்கை வேகமாக விருத்தியுற்ற போது அதற் குத் தேவையானதுணைத் தொழில்கள் சில தொடக்கப்பட வேண்டி யிருந்தன. கட்டிடங்கள் கட்டுதல்,தளபாடங்களை உற்பத்தி செய்தல், தேயிலையைப் பொதி செய்வதற்கான மரப் பெட்டிகள் செய்தல் போன்றன தச்சுவேலையிலும் மரவேலைகளிலும் பயிற்சி உடைய வர்கள் பலருக்கு தொழில்வாய்ப்பை அளித்தன - தோட்டங்களில் கட்டிடங்கள்கட்டப்பட்டன,அரசாங்கஅலுவலகங்கள்,தனியார் வீடுகள்

வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம் 23
என்பனவும் கட்டப்பட்டன. இதனால் மரம் அரியும் ஆலைகளும், மரத்தொழில் பட்டறைகளும் தோன்றின. ரெயில்வே அமைக்கப்பட்ட போது 1870க்களில் மரத்தின் தேவை பலமடங்கு அதிகரித்தது - இலங் கையர்கள் பலர்நீராவியந்திரம் கொண்டு இயக்கப்படும் மரம்அரியும் ஆலைகளைநிறுவினர். இவை சிற்றளவு உற்பத்திநிலையங்களாகவே இருந்தன - அக்காலத்தின் (1870க்கள்) மிகப் பெரிய மரம் அரியும் தொழிற்சாலையாக வியாங்கொடை மில்ஸ் விளங்கியது. இதில் 40 தொழிலாளர்கள் வேலைசெய்தனர். டபிள்யூ. பெர்னாண்டோ என்பவர் இதைநடத்தினார்.
பல இலங்கையர்கள் மரவியாபாரத்தில் இறங்கினர். ரெயில்வே திணைக்களம், பொதுவேலைப்பகுதி, துறைமுகம் ஆகியவற்றிற்கு மரக்குற்றிகளையும், மரச்சலாகைகளையும் வழங்கும் ஒப்பந்தகாரராக துடுகல்ல டொன்பிலிப் விஜயவர்த்தன விளங்கினார். இவர் செடவத்த என்ற இடத்தைச் சேர்ந்தவர், இவரது மகன் டொன் அலக்கசான்டர் செடவத்தையில் பெரிய மரக்காலையை வைத்திருந்தார். செங்கல் தொழிற்சாலைகள், செங்கல், ஒடுஆகியவற்றின் இருப்புப் பண்டசாலை களும் இவரிடம் இருந்தன.நகரசபைக்கு மாட்டு வண்டில்களைஒப்பந்த முறையில் வாடகைக்கு வ்ழங்குபவராகவும் இவர் இருந்தார். அக் காலத்தின் பிரபல மரவியாபாரிகளில் ஆர். ஜே. வி. டி. சில்வா என்ப வரும் ஒருவர். கட்டிடப் பொருட்களையும், மரத்தையும் ஒப்பந்த முறையில் அரசாங்கத்திற்கு வழங்குதல் இவரது பிரதான வியாபார முயற்சி ஆக இருந்தது. அத்தோடு படகுகட்டும் தொழிலிலும் ஈடு பட்டார்; செங்கல் தொழிற்சாலைகளையும் நடத்தினார். புறக்கோட் டையில் ‘சென்ட்ரல் குறோசறி அன்ட் வைன்ஸ்’ என்ற பெயரில் பல்பொருள் வியாபார நிலையம் ஒன்று இருந்தது. அதன் பங்காளா ராகவும் இருந்தார். இவருக்கு பல தென்னந்தோட்டங்களும் சொந்தமாக இருந்தன.
கோப்பிச் செய்கை விருத்தி பெற்ற போது கொழும்பு நகரில் கோப் பியை அரைக்கும் ஆலைகள் பல அமைக்கப்பட்டன. இந்த ஆலைகள் யாவும்ஐரோப்பியர்உடமைகளாகவேஇருந்தன. சாள்ஸ்டிசொய்சாவின் ஆலைகள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தன. அவர் வூல் பென்டால் கோப்பி ஆலை, தியத்தலாவை ஆலை என்ற இரு ஆலை களை நடத்தினார். தியத்தலாவ ஆலையில் கோப்பி அரைத்தல், எண் ணெய்வடித்தல், தும்புத்தொழில், பசளை உற்பத்தி என்பனவும் நடை

Page 78
124 அநாமதேயங்களாக இருந்தோர்.
பெற்றன. இது நீராவியால் இயக்கப்பட்ட இயந்திரங்களைக் கொண் டிருந்தது. 1870க்களில் சாள்ஸ் டி சொய்சாவின் உடமையாகப் பல கோப்பித்தோட்டங்களும் இருந்தன. இதேகாலப்பகுதியில் இலங்கை யர்கள் பலர் எண்ணெய் ஆலைகள், தும்பு ஆலைகள் என்பவற்றை நடத்தினார்கள். இந்த ஆலைகளில் இயந்திரங்கள் உபயோகிக்கப் பட்டன. ரி. அக்பர் என்பவர்ஹரணுப்பிட்டியமில்ஸ் என்றும் பெயரில் ஆலை ஒன்றைநடத்தினார். இந்த ஆலையில் 30 தொழிலாளர் வேலை செய்தனர். கப்பிரியல்டி குருஸ் என்பவர் எண்ணெய் ஆலை ஒன்றையும் தும்பு ஆலை ஒன்றையும் நடத்தினார். இவரிடம் 30 தொழிலாளர்கள் கூலிக்காக வேலைசெய்தனர். அக்பர், கப்பிரியல் டி குருஸ் என்ற இரு வரும் நீர் கொழும்பைச் சேர்ந்தவர்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கெடஸ் (Geddes) என்பவர்தும்பு ஆலை ஒன்றைநடத்தினார்.
இலங்கையரால் நடத்தப்பட்ட பெரிய தொழிற்சாலை 1879இல் டபிள்யூ கரோலிஸ் என்பவரால்நடத்தப்பட்டது. இது தோல்பதனிடும் ஆலை யாகும். ஜேம்ஸ் வால்டர் பெர்னாண்டோ என்பவர் சோடா கம்பனி ஒன்றை 1900ஆம் ஆண்டில் தொடங்கினார். பிரித்தானியரால் நடத்தப்பட்ட நியு கொலம்புஜஸ் கம்பனி என்றநிறுவனத்தில் ஜேம்ஸ் வால்டர்பெர்னாண்டோமுன்னர்வேலை செய்தஅனுபவம் உடையவர். எச். டொன் கறோலிஸ் 1860ஆம் ஆண்டு ஆரம்பித்த தளபாட வியாபாரம்தான் அக்காலத்தின்மிகமுக்கியமானகைத்தொழில்முயற்சி என்று கூறத்தக்கது. ஹேவவித்தாரண டொன் கரோலிஸ் ஐரோப் பியர்களின்ரசனைக்கு உகந்தநவீன வேலைப்பாடுகள் உடையதளபா டங்களை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்ற வியாபாரி ஆவர். உறுதியானவையும் தரம் மிகுந்தவையுமான தளபாடங்கள் வழங்கப் படுவதன்தேவையையும் இவர்கணிப்பிட்டுச்செயற்பட்டார்.
“வீட்டை அழகாக வைத்திருப்பது' எப்படி என்பதை முதன்மைப் படுத்தும் விளம்பரங்களை வெளியிட்டு தளபாடச்சந்தையை விஸ்த ரித்தார். யப்பானில் இருந்து ‘கலைப் பொருட்களை இறக்குமதி செய்தார். மெத்தைகள், தரைவிரிப்புக்கள், பிரம்புக்கதிரைகள், தள பாடங்கள்,தும்புமெத்தைகள், இறக்குமதி செய்யப்பட்டதளபாடங்கள், உணவு மேசைக்குரிய ஆடம்பர பீங்கான், கோப்பைகள் போன்ற பொருட்களை இவர் விற்பனை செய்தார். இவரது ஆலையில் வெவ் வேறுபகுதிகளில் 750 தொழிலாளர்கள் வேலைசெய்தனர். இவர்களுள் பலர்கைதேர்ந்தகைவினைத் தொழிலாளர்களாவர்.இவர்இலங்கையில்

வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம் 25
இருந்துதளபாடங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தார். "சிலேவ் ஜலன்ட்’ என அழைக்கப்பட்ட தற்போதைய கொம்பனித் தெருப் பகுதியில் இவருக்கு ஒருஆலை இருந்தது. இந்தஅபூலையில்நீராவியால் இயக்கப்பட்ட யந்திரங்கள் இருந்தன. மரப்பலகைகளை அரிதல், தளபாடங்களைச்செய்தல்ஆகிய வேலைகள்நடைபெற்றன. 250தொழி லாளர்கள் அங்கு வேலைசெய்தனர்.
டொன் கரோலிஸ் குடும்பம்நாட்டில் கைத்தொழில்களை வளர்ப் பதற்காகவும் பெருமுயற்சி செய்தது. கைத்தொழில் வளர்ச்சிக்குப் பல தடைகள் இருந்த அக்காலத்தில் இவர்கள் இது பற்றிக்கருத்துச்செலுத் தினர். டொன்கரோலிஸின்புதல்வர்களில் ஒருவரேஅநகாரிகதர்மபால. இவர் கைத்தொழில் வளர்ச்சிபற்றிப் பல கருத்துக்களை எடுத்துக் கூறினார். டொன் கரோலிஸ் ரூ 30,000 பெறுமதியான சொத்துக்களை கைத்தொழில் கல்விக்காக ஒதுக்கினார் - பெளத்த இளைஞர்களை யப்பான் தேசத்திற்கு அனுப்பியப்பானிய கைத்தொழில்முறைகளில் பயிற்றுவிக்க வேண்டும் என்பது இவரின் நோக்கமாக இருந்தது. டொன் கரோலிஸ்குடும்பத்தினர் "ஹேவவித்தாரண கைத்தொழில்பாடசாலை’ என்ற பெயரில் ராஜகிரியாவிலும் பாலத்துறையிலும் கைத்தொழில் பாடசாலைகளைநடத்திஇளைஞர்களுக்குகைத்தொழில்நுட்பங்களைக் கற்பித்தனர். இலங்கைத்தீப்பெட்டிக் கம்பனி (Ceylon Safey Matches Company) சுவிடன் நாட்டு கம்பனி ஒன்றோடு இணைந்து 1918ஆம் ஆண்டு டொன்கரோலிஸ்குடும்பத்தால்தொடங்கப்பட்டது. இதுபோன்ற புதுமையானதும் ஆக்கபூர்வமானதுமான செயற்பாடுகள் அக்காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தனவென்றே கூறவேண்டும்.
மருத்துவம், சட்டம் முதலிய உயர் தொழில்கள்
மரபுவழிச்சமூகத்தில் கல்விகற்றவர்களுக்கு மதிப்பு இருந்தது. முதலா ளித்துவ வளர்ச்சியின் போதும் கற்றவர்களுக்குச் சமூக கெளரவம் கொடுக்கும் மரபு தொடர்ந்தது. ஆங்கிலம் கற்றவர்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புக்கள் கிடைத்ததனால் இம்மதிப்பு உயர்ந்தது. கால னித்துவப் பின்னணியில் ஒருவருக்குக் கிடைக்கும் அந்தஸ்து பணம் காரணமாகவும், எந்தக் குடியில் அல்லது குடும்பத்தில் பிறந்தார் என்ப தாலும் கிடைத்தது. அத்தோடு கல்வியும் சேர்ந்து கொண்டது. 1814ஆம் ஆண்டில் ஒருமதகுரு முதலியார்களின் பிள்ளைகளின் மனப்பாங்கு பற்றிக் கூறும்போது "ஆங்கில மொழி அறிவைப்பெறுதல் உலகியல்

Page 79
126 அநாமதேயங்களாக இருந்தோர்.
மதிப்புக்கும் வருமானத்திற்குமான ஒரே வழி’ என்பதை அவர்கள் உணர்ந்திருந்ததாகக் கூறினார்.* வறியவராகவும், சாதியில் தாழ்நிலை யிலும் இருந்தோருக்கு சமூக ஏணிப்படியில் கடகடவென உயரகல்வி வழிவகுத்தது. அநாமதேயங்களாக (Nobodies) இருந்தோர் அறியப்பட் டோராகவும் (Somebodies), அதிகாரம் உடையவர்களாகவும் மாற உதவியது. புத்திக் கூர்மை உள்ள பையன்களுக்கு கல்விகற்பதற்கு உறவினர்கள் உதவினர்; படித்து உயர்தொழிலைப் பெற்றதும் குடும்பத் தையும்உயர்த்திவிட்டதோடுதாமும் எல்லோரையும் விட ஒரு படிஅப் பையன்கள்மேல் உயர்ந்தனர்.தமது சமூகஅந்தஸ்தையும் பொருளாதார நிலையையும் விட உயர்ந்த குடும்பங்களில் திருமணம் செய்தனர். முதலாளித்துவ வகுப்பிற்கு உயர்ச்சி பெற்றோரில் பலர் குட்டி முதலா ளித்துவநிலையில் இருந்து மேல் எழுந்தவர்களாவர். அப்போதிக்கரி, எழுதுவினைஞர், ஆசிரியர், பத்திரிகையாளர், சிறு குத்தகைகளை எடுத்துநடத்தியோர், சில்லறை வர்த்தகர்கள்முதலியவர்களின்பிள்ளை கள் பின்னாளில் முதலாளித்துவ வகுப்பின் உறுப்பினர்களாக உயர்ச்சி பெற்றனர். இத்தொழில்கள் மூலதனத்தேட்டத்திற்கான வாய்ப்பை வழங்கின. இத்தொழில்களில் கிடைத்த மாதச் சம்பளத்தில் ஒரு பகு தியை மிச்சம் பிடிக்கலாம்;முறையற்ற வழிகளில் உழைக்கவும் சேமிக் கவும் கூட இவை உதவின என்று ஒரு ஆய்வாளர் கூறுகிறார். குட்டி முதலாளிகளில் இருந்து உயர்முதலாளிகளாக உயர்ச்சி பெறுதல் ஒரு தலைமுறைக்குள் கூடநடந்தேறிவிடும்.
19ஆம் நூற்றாண்டில் சிங்களவர்களும் தமிழர்களும் சட்டம், மருத் துவம் முதலிய உயர்தொழில்களில் முன்னேறினர். பெண்களும் மருத் துவத் துறைக்குள் புகுந்தனர். முதலில் இந்தியாவிற்கும், பின்னர் பிரித்தானியாவிற்கும் உயர்கல்விக்காகப் பலர் சென்றனர். 1870ஆம் ஆண்டில் கொழும்பில் மருத்துவக்கல்வியும் 1874இல் சட்டக்கல்வியும் ஆரம்பிக்கப்பட்டது. சட்டக்கல்விக்காகப் பின்னர்சட்டக்கல்லூரிஆரம் பிக்கப்பட்டது. சட்டத்துறையில் பாரிஸ்டர், அட்வகேட், புறக்டர் என்ற மூன்று வகையினர் இருந்தனர். 1881ஆம்ஆண்டில் இந்த மூன்று பிரிவு களிலும் 268தொழின்மையினர்(Professionals) இருந்தனர். இத்தொகை 1921ஆம் ஆண்டில் 800 ஆக உயர்ந்தது. சட்டத்துறையில் தொழில் புரிந்தோர் தம் பேச்சுச் சுதந்திரத்தை உபயோகித்து அரசியலிலும் பிரவேசித்தனர். அரசாங்க உத்தியோகத்தில் இருந்தோர்.அரசியலில் புக முடியாது. எழுச்சி பெற்று வரும் முதலாளித்துவம் கல்விக்கு முக்கியத்

வேர் ஓடி விழுது பரப்பும் வர்த்தக முதலாளித்துவம் 127
துவம் கொடுத்தது. தம்பிள்ளைகளை மருத்துவ, சட்டத்துறை விற் பன்னர், பொறியியலாளர், கணக்காளர், நில அளவையாளர், ஏல விற்பனையாளர் போன்ற உயர் தொழில்களில் பிரகாசிக்க வைத்தனர். 1901ஆம் ஆண்டில் இந்த உயர்தொழில்களில் இருந்தோரின் இன வீதாசாரம் பின்வருமாறு: சிங்களவர் 41% இலங்கைக் தமிழர் 24% பறங்கியர் 31% முஸ்லிம்கள் 1%, தொழின்மையினர் சாதாரண குடும் பத்தில் தோன்றியவர்களாய் இருந்தாலும் சீதனம் பெற்று உயர் செல் வந்தர் வகுப்பில் திருமணம் செய்து பெரும் பணக்காரர் ஆயினர். அக்காலத்தின் கோடீஸ்வரர்கள் தங்கள் மருமகன்களாக சட்டத்துறை யினரையும் டாக்டர்களையும் தேடிப் பெற்றனர். பலவகை வியாபாரங் களின்மூலமும் பெற்ற செல்வம் மட்டு50ம் காலனிய காலத்துமுதலாளி களுக்கு சமூகஅந்தஸ்தை வழங்கவில்லை. பெரும்பதவிகளை வகித்த “மன்டரின்கள்’ (Mandarins) பணத்தால் கிடைக்காத கெளரவத்தை தேடிக்கொடுத்தனர்.
சாராயக்குத்தகை, பெருந்தோட்டங்கள், வர்த்தகம், காரியச்சுரங்க அகழ்வு என்னும் தொழில்களிலேயே முதலாளித்துவம் வளர்ச்சியுற்றது. இவையாவும் முயற்சியாண்மை என்னும் உள்ளீடு (Entrepreneurial Input) என்று சொல்லக்கூடிய ஒன்றல்ல. முதலாளித்துவம் வர்த்தகமுதலா ளித்துவமாகவே இருந்தது. இவ்வாறான குணாம்சம் முதலாளிகள் ஒரு வர்க்கம் (Class) என்ற உணர்வுடையவர்களாய் செயற்படுவதைத் தடுக்கவில்லை. உறவுமுறை, குடும்பம், சாதி என்னும் வலைப்பின்னல் வர்த்தக முயற்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததும் உண் மையே. இருந்த போதும் முதலாளிகள் “வர்க்கமாக' ஒன்றுபடுவதை இவை தடுக்கவில்லை. சாதி, மொழி, சமயம் என்ற அடிப்படையில் முதலாளி வர்க்கத்தின் மத்தியில் பேதங்கள் இருந்தன. இப் பேதங்கள் யாவற்றையும் கடந்து முதலாளித்துவ வர்க்கம் என்ற முறையில் ஒன்று பட்டுத்தம் வர்க்க நலன்களைப் முதலாளிவர்க்கம் பேணி கொண்ட தையும் 19ம் 20ம்நூற்றாண்டு வரலாறு உணர்த்துகிறது.

Page 80
28
அநாமதேயங்களாக இருந்தோர்.
குறிப்புகள்
10.
1l.
l2.
l3.
l4.
5.
16.
17.
l3.
19.
2O.
21.
22.
23.
24.
பெர்குசன் டிரைக்டரி, 1880. டென்ஹாம், 1912 - 170. மேலது. 6Sugiu, 1973: xiv. சிவிஜி , 1976 : 43. பக்சி, 1972 : 327, 215.
வில்லியர்ஸ், 1940; 122. பிரபலமான பம்பாய் வர்த்தகர்கள் இலங்கைக்கு வந்து சேர்ந்த ஆண்டுகள் (றைட் (1907) தரும் தகவல்களின்படி) றஸ்ரொம்ஜி, 1883; டாவூத் பாய், 1887 எப்ராம்ஜி மற்றும் நூர்பாய், 1889; ஜானோ ஹசன், 1898.
பெஸ்ரொன்ஜி, 1899; ஏ. ஈ. எஸ். ஜிவுன்ஜி, 1900. ஏ. எச். எஸ். ஜிவுன்ஜி, 1903. பெர்னான்டோ, 1933 : 1.35. குணசேகர, 1962 : 185 - 86. ஹராலுஹல்ல, 1960 - 154.
றொபர்ட்ஸ், 1975 : 64.
996irgu, 1995: 214. றொபர்ட்ஸ், 1982 : 304. மெயர், 1992.
SILNA 33 / 6943, 1898 GBL o, 31.
L fi Sergiu, 1973. வன்டன்ட்றிசன், 1953 : 160. றொபர்ட்ஸ், 1975 : 42. றொபர்ட்ஸ் , 1975 : 42. விக்ரமரட்ண, 1973:429 மற்றும் ஸ்னொட் குறொஸ் , 1966 : 44 - 45 றொபர்ட்ஸ், 1979 : 180. சிலோன் நாஷனல் ரிவ்யு, பெப்ரவரி 1908. பெட்டடிலொக்கி, 1817 : 237 - 38.


Page 81

இணைப்பு 1
சாராயக் குத்தகை
கொழும்பு மாவட்டம் - 1826
1826ஆம் ஆண்டுசாராயக்குத்தகை இலங்கைச்சுவடித்திணைக்களம்33/1696)
o குததகை தவறனை (égtás60b5uurTGTIT
(றிக்ஸ் டொலர்களில்)
பெய்ரா பெனரகமடொன் ஜஸ்ரினஸ் 1925 பம்பூ தவறணை மெலாப்புலாகே யோஹானிஸ் நோனிஸ் 1380 கெஹல்வத்த பெரடுவகே ஜொகான்ஸ் பெரரா 570 கருவாட்டுப் பாலம் தல்வத்து டொன்பலிப் கந்தப்பா 55 கொச்சிக்கடை பஸ்ரியன் சில்வா 725 டாங் சல்காடோ வீரரிசூரியகே டொன் டேவிட் அப்பு 620 நியர் நைடஸ் கார்டன் வெத்தமுல்லகே பஸ்ரியன் 485 முகத்துவாரம் எ. யொஹானிஸ் பெர்ணாண்டோ 300 மட்டக்குளிய அல்பராகே பிரான்சிஸ்கோ டி ஆப்ரூ 160 கொள்ளுப்பிட்டி
லூயில்பொன்சேகா
தோட்டம் சுவாரிஸ்கே ஹென்றிக் சுவாரிஸ் 72O புளிய மரத்தடி பெனரகமடொன் யஸ்ரினஸ் 490 கொள்ளுப்பிட்டி
ஹென்ட்றிக்
பெரா தோட்டம் மாத்தறகே ஹென்ட்றிக் பெரரா 7OO ஹல்கப்புவத்தே கிரான்ட் பாஸ் வீரரிசூரியகே டொன் டேவிட் அப்பு 660 பழைய மீன் சந்தை மாத்தறகே ஹென்ட்றிக் பெரரா 1320 பேக்கரிகளுக்கான கள்வரி வீரரிசூரியகே டொன் டேவிட் அப்பு 2550 பெற்றாமீன் சந்தை அருகில் விதானலாகே அப்பரகாம் டி மெல் 925 புதிய பசார் விதானலாகே அப்பரகாம் டி மெல் 290 கிறிஸ்ரோபல் டி மென்டிஸ்
வீட்டுக்கு அருகில் அப்பரகாம் டெப் 670

Page 82
132 அநாமதேயங்களாக இருந்தோர்.
பாபர் வீதி ஹெட்டி ஆராச்சிகே போலஸ் பெரரா 57O வெலிக்கடை மெரினாகே அப்பரதகாம் பீரிஸ் 185 அந்தூல டச் சேர்ச் அருகில் வீரகென்னகே டொன்டானியல் அல்விஸ் 360 மோதரை அல்வினிடேகே மத்தேயிஸ் அல்விஸ் 1620 |முகத்துவாரம் படகுத்துறை யொகனஸ் பெர்னாண்டோ 30 பஸ்ரியன் சில்வா 5丑O மக்ஸ்டீவன்தோட்டம் அருகில் மடப்புல ஆராச்சிகே டொன் பிலிப்பு 30 புதிய பசார் படகுத்துறை பி. டொன் பஸ்ரியன் 260 பாணந்துறை தெவரந்தரிகே புளோரிஸ் பெரா 2250 களுத்துறை களுத்துற குறுநான் சலாகே டொன்கரோலின் ஆராச்சியும், போடியாபடுகே கொரப்பிரு பட்டபென்டியும் 3300 பஸ்துன்கோறள மேற்படி குத்தகையாளர் 90 வெல்லாவிட்டிகோறள கினிகொம்பனகே டேவிட் சில்வா 35 றைகம் கோறள மகாமறக்கலே கைய்த்தான்குறே 600
மீன் குத்தகை 1826 1000றிக்ஸ்டொலர்குத்தகைக்கு மேற்பட்டவை மட்டும் மொழிபெயர்ப்பில்இங்கேதரப்பட்டுள்ளன
கொழும்பு பிரான்சிஸ் பெர்னாண்டோ 27500 முகத்துவாரம் அந்தோனி பெர்ணாண்டோ 13025 மக்கோண மீராலெப்பை தம்பநைனாபுள்ளே 500 பலண்டா கஹ பூசபடுகே தேனிஸ் பெர்னாண்டோ 3205

இணைப்பு 2
ஆயக்குத்தகைகள்
கண்டிப்பிராந்தியம் - 1826 (றிக்ஸ் டொலர்ஸ்)
பேராதனை கன்னொறுவ மீவத்துற
ஹல் ஒலுவ கட்டுஹஸ்தோட்ட
அளுத்கங் தோட்ட
லேவெல்ல
ஒபடேலியனகே டொன் கரோலிஸ் செகடோமா லெப்பே சின்னமரிக்கார் பட்டே நாயக்க முகாம்திரம் கே டொன்
ஜொகான்ஸ் அப்பு கன்னங்கராகே டேனிஸ் அப்பு வெள்ளவத்தகே பாவா அப்பு சிங்கபாகு ஆராச்சிகே டொன் வில்சன்
அல்விஸ் அப்பு ஒபடலனகே டொன் கறோலிஸ்
சாராயக் குத்தகைகள்
கண்டிப் பிராந்தியம் - 1826 (றிக்ஸ் டொலர்ஸ்)
கண்டி& இரியாகம ஹல் ஒலுவ கடுகண்ணாவ மாத்தளை ஹக்கத்தகல்ல அளுத்ஹன்தோட்ட கட்டுஹஸ்தோட்ட
உடபலத ஹங்குறன்கெட்ட உதுமன்கண்ட ஹினிகத்தம்பலன பலப்பனே வரக்காபொல கரண்டுபொன கலேவல ஹெனே எல்லேகம்வ
முதலிகே டொன்ஹென்ட்றிக் அப்புகாமி கோடித்துவக்கே அபே சில்வா வருஷகென்னடிகே யெரனிஸ் சொய்சா அமரதுங்ககே டேவிட் அப்பு வீரக்கொடி ஆராச்சிகே சஞ்சி அப்பு ஒபேடெயனகே டொன் கறோலிஸ் டொன் யுவன் டி சில்வா Wm. ஹெப்பன்ஸ்ரோல் டெனன் ஆராச்சிகே டேவிட் அப்பு பாலப்பு வடுகே கலேரியல் மென்டிஸ் அப்பரகாம் பெரரா அப்புகாமி முத்துநாயக்கார் அலகமொன பஸ்ரியன் டி சில்வா அப்பரகாம் பெரரா அப்புசாமி அப்பரகாம் பெரரா அப்புசாமி மார்ட்டினஸ் ரிபேரா
ஆதாரம்: SLNA2/64 வாடகைகள்கூற்று, 1 டிசம்பர் 18285
67 OO
826
850
尘500
4250
16100
3350

Page 83
இணைப்பு - 3 டி சொய்ஸா, பீரிஸ் ஆகியோரது
மரணசாசனத்திலிருந்து பெறப்பட்டதகவல்கள்
அ. சாள்ஸ்டி சொய்னாவினதும் அவரது மனைவி கதரின் டி சொய்ஸாவினதும் மரளே
சாசனத்தின்படி அவர்களது சொத்துக்களின் மதிப்பு
அரைவில்gாச் சொத்து மேற்கு மாகா:த்தில் . .3, AN. அசைபில்வாச் சொத்து மத்திய மாகாணத்தில் T: , , அரையில்:ாச் சொத்து மொறட்டுவவில் ... ii. அசைவில்லாச் சொத்து பானாந்துறையில் 57, 7: அரையில்லாச் சொத்து நீர்கொழும்பில் 975,5E, அசைவில்லாச் சொத்து காலியிலும் பாத்தறையிலும் ... அசையும் சொத்து 5. E. கடன் சிட்டைகளின் படி (புரோநோட்டுகள் வருமதி ደ I, ▪!፵፰-'†,፣ பங்குகளின் பெறுமதியும் காசிருப்பும் EI, ii 1.38 கடன் பத்திர பங்குகளின் படி போனஸ் விருதி W&l.i...8£!፰...ቓቫ] மொத்தச் சொத்துக்கள் 1l .1 ᎡᎷ Ꭻ, [ MMJ. ᏝᎳ )
சி.எச். டி சொய்ஸ்பாவின் மரண சாசனமும் பின் உரித்தும்
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் 1891இலக்கம் 21 C
ஆ, யெரனிஸ் பீரிஸ் மற்றும் கரோலின் பீரிஸ் இருவரதும் மரண சாசனம்
அட்டவணைகள்
A , als, air ], -f73, 4l-f2, ("M]
B, ஈட்டு உறுதிகளும் நீதிமன்றக் கட்டளைகளும் i., J.3 ,ே பேரேட்டுப் புத்தகங்களின் படியும் புறோ
நோட்டுகளாகவும் 33 Pé!!! I), கம்பனிப் பங்குகள் ஒதுக்குகள் வங்கியிருப்பு II, 33, F | விட்டுத் தளபாடங்கள் II, 1; }
F ஆபரணம் W !Jjደ+!.ሇll}
.ே மொத்தம் 1. Կ13, 1:ti::
கொழும்பு மாவட்ட நீதிமன்றம், பெப்ரவரி :
நன்றி அ, ஆ ஆகிய இரு ஆங்கங்களையும் இரு என். எஸ். டி. பீர் கொடுத்து உதவி:ார்.

இணைப்பு - 4
புகைப்படங்கள்
1. நெல்வரியையும் பிறவரிகளையும் விவசாயியிடம் இருந்து
அறவிட வந்திருக்கும் வரிஅறவிடுவோர். ஜெ. எல். கே. வன்டோற் வரைந்த ஒவியம் -1882 (Ceylon - The Near Past 1951"இலங்கையின் அண்மைய கடந்த காலம்
என்ற நூலிலிருந்து.)

Page 84
1:it: அநாமதேயங்களாக இருந்தோர்.
2. படகுப் பாலம், கொழும்பு 1880களில் - வருமானந்தரும் ஆயக்குத்தகைநிலையம் (நன்றி லண்டன் பிரிட்டிஷ் நூலகமும்
கொழும்பு பிரிட்டிஸ் கவுன்சிலும்)
 

ai15TLuj,5Y5ET
['fiଞ୍f
சொய்சா
ஜெரனிஸ் வியவர்
品
ர் எல். எஸ். டி. பிரிஸ்)
(3.
33
ாமு:லாகேஜ"சிடிசி
BIL
3. அ. லி

Page 85
அநாமதேயங்களாக இருந்தோர்.
4. ஜெரனிஸ் பீரிஸ் உதவியவர்: எல். எஸ். டி. பீரிஸ்)
5. சுகு சொய்சாவும் அவரது மனைவி ஏஞ்ஞலினிரினாபிரிஸ்சும்
(ஜெரனிஸ் பீரிஸ் உடைய சகோதரி) (உதவியவர் எல். எஸ். டி பீரிஸ்.
 
 

பின்னரினEப்புகள்
6. சாள்ஸ் டிசொய்சா,அவரது மனைவி கதரின்டிசில்வா (1863)
மணப்பெண்கோலத்தில். இடதுபக்கத்தில் ஜெனிஸ்சொய்சாவின்மனைவிபிரான்சிஸ்காகுரே உதவியாவர். எல். எஸ். டி. பீரிஸ்)

Page 86
அநாமதேயங்களாக இருந்தோர்.
7. மத்தியில் இருப்பவர் விதானலாகே பிரான்சிஸ்கோடி மெல்;
அருகே இடதுபக்கம் ஜொகான்ஸ், வலதுபக்கம் பெட்ரோ, நிற்போர் மனுவல், மோசஸ், யக்கோப், வில்லியம், முன்னால் இருப்போர்மருமக்கள் இடதுபக்கம் சாள்ஸ். வலதுபக்கம் மத்தியாஸ். (நன்றி, எடித்பெர்னான்டோ எழுதிய Journey of a Family, 1989 fairn IETG...)
 

உசாத்துணை நூல்கள்
LtLtEctGC SS ttttt SLLLLLLS SSL LSS LSaaS S LLLTLL T l lCCS LLLLLLLLS
cyclist led
1919, Ceylan irid the War (1914-1918), Colombo: St.Gerard's Press GHLS LtLLtS 000SS L LLLLL S LLLLS LLLLLLLLS LLTLLLLLLL LLL LLLLLLL L HLLL CLLS
Cimbridge: Callinthridge l-iniversity, l'fess LLttLS LLS 0L00SLLLLL LSLLa aattLLL L LLL LLLCCCHL lLLLLLL LLLL LL LLLLLS E0SLLLS
1913 il Shukri. 1985 AW 1:1 fusinghe, ". Ranյtiհ, !*]'jኗ} "ir trī" ti: Fii, fir!ין וווriliirיי Iէր: LL LLTTLSL S SL LLCCtlLlLLLLL LL LLL L LLLLLS LLLLLLLLS Sukial Scientists' Association ELGGLLLLLLLSS00LS LLLGLL LLL LLL LLS LLLLL tttS000SS LLSLLS 0SLLLLLLS LLtLGLLHLHL
Printer SLLLLLtLLttlLlLSlS000S LTLaL LLLLtt L L L LlLllLlS LLL0leASr0S LLLCaLSLLS LLStLLtttLL SLLLLLLLL LL tttLLLLSSS000SSS ETLLL S S TLLSL LLLLS SLLLH TLLLLtEccL LLL lLLLLLLGG SSLLLLSLS0K0SS 00 SS LLLLLLLHHLtttLS LLHLHHSS LL National ArghIVL 5
ELLLlLLLLLLLS LS0000SLL LlLLmmtmL L LLLLL LLLLCtLaaLLaLLLLL LL LL SLLLS LL LLSLS LS S LLLL S SSSS LSu S0S0 SS0L0SSLCL ulL LLLLLLCL LLELS LLtLLLLS Ministry of Stutu LLC aaS SSLL0L0LSS LL LLLT LTLLLLH uu LLLL LLLLttLLLLLLL LLLCmL SLCLLLLCLS LLLLLLaLLS
Catholic Pr:3, LLLLLLLLS LLLLLtSLKSSS0S S LLLLLLaL LLLL LLGLLLLHLHHH LLL LLLLTS S00000S 0000KS SLLLLLLaLLaLLS
Call ridge riversity Press LLtttLLLLLLLLS tttlLmtH LLLLS 0000S LLLLL LlLLkT LLSLLTLtLLL S LLLLLLa LLL
LLLLTTLLLa L ET STTGGG TT llLLLL LLL LtttLLLMLtS LLLLLL John Murray Banks, M., 1957. The Social Organisation of the Jaffna Tamils of North Ceylon, With Special Reference to Kinship, Marriage, and Inheritance", unpublished Ph.D. thesis, Cambridge University, England Baran, Paul, 1957. The Political Ecurrority of Growth, New York: Monthly Review
Press tLLLLtLLtllHtaaGLGS LLLLLLaLLS 00KS LLLLLLLHH LLTLL Ht LLLLL LLLLLLLlLS LTaLLC C HHHL SLLMLaaS
Cambridge: Cambridge University Press
1998. "Buddhist Burghers and Sinhall-Buddhist Fundamentalism', in LTLLLLLLLLLLSGLLLLLLLLl CCtL LtLLCCLLLCL LLLLLLLlLLLlL LL TLLL LLLLLLaS tLLLLLLLLS LLLLLL Birthului Ileus and Chandra de Silva, Albany, NY: State University of New York Pre55 LtttLLLLLLLLmS LLLLLLLLS 000SS LLLS LkLlLllLTLTL LLLlL LLaaLLLTkSHCCS LLTLLLLLCLL
w/Ceylor, 1872-1877, Thehiwela: Tisara Prakasakli yo

Page 87
42 அநாமதேயங்களாக இருந்தோர்.
Beckford, George, 1983. Persistent Poverty: Underdevelopment in Plantation Economies of the Third World, London: Zed Books; originally published 1973, Oxford University Press Bertolacci, Anthony, 1817. A View of the Agricultural, Commercial d- Financial
Interests of Ceylon, London: Black, Parbury and Allen Blazé, B.R., 1948. The Life of Lorenz, Colombo: Associated Nespapers of Ceylon Bourdieu, Pierre, 1984. Distinction, A Social Critique of the Judgement of Taste,
Cambridge, Mass: Harvard University Press Bond, George D., 1992. The Buddhist Revival in Sri Lanka: Religious Tradition,
Reinterpretation and Response, Delhi: Motital Banarsidass Publishers Boxer, C.R., 1965. The Dutch Sea-Borne Empire, 1600-1800, London: Hutchinson Brohier, Deloraine, 1995. Alice de Boer and the Pioneer Burgher Women Doctors,
Colombo: Social Scientists' Association Capper, John, 1871. The Duke of Edinburgh in Ceylon, A book of elephant and elk
sport, London: Provost and Co.
, 1877. Old Ceylon, Sketches of Ceylon Life in the Olden Time, Colombo: Ceylon Times Press Casie Chetty, Simon, 1834. The Ceylon Gazeteer, Colombo: Cotta Church Mission
Press Casinader, Rex, 1974a. The Evolution of Graphite Industry in Sri Lanka, Patterns
of Trade & Entrepreneurship', Ceylon Studies Seminar, No.5
, 1974b. The Graphite Industry in Sri Lanka: A Historical Sketch, Ceylon Studies Seminar, No.52 Chatterjee, Partha, 1989. The Nationalist Resolution of the Women's Question,
in Recasting Women: Essays in Colonial History, edited by Kumkum Sangar and Sudesh Vaid, Delhi: Kalifor Women Colin Thomé, Percy, 1985. The Portuguese Burghers and Dutch Burghers of Sri
Lanka, Journal of the Dutch Burgher Union, 62:169-217 Cook, Elsie K, 1951. Ceylon, Its Geography, Its Resources and Its People, London:
Macmillan and Co. Coomaraswamy, Radhika, 1987. “Myths Without Conscience: Tamil and Sinhalese Nationalist Writings of the 1980s, in Ethnicity and Social Change in Sri Lanka, Colombo: Social Scientists' Association -, 1991. Sir Muttu Coomaraswamy: British Shadows and Sri Lankan Dreans, Colombo: Law & Society Trust Coomaraswamy, Tara, 1988. "Parliamentary Representation in Sri Lanka 1931
1986, unpublished Ph.D. thesis, University of Sussex de Alwis, Malathi, 1997. The Production and Embodiment of Respectability: Gendered Demeanours in Colonial Ceylon', in Sri Lanka, Collective Identities Revisited, Vol. 1, 1997, edited by Michael Roberts, Colombo: Marga Institute , 1998. Maternalist Politics in Sri Lanka: A Historical Anthropology of its Conditions of Possibility, Ph.D. Dissertation, University of Chicago
and Kumari Jayawardena, 2001. Casting Pearls - the Women's Franchise Movement in Sri Lanka, Colombo, Social Scientists' Association.

உசாத்துணைநூல்கள் 143
de Mel, Neloufer, 2001. Engaging Difference; Gender and Nationalism in 20th
Century Sri Lanka, New Delhi: Kali for Women de Mel, V.S.M., 1986. The De Soysa Saga: A Historical Perspective, Colombo: de
Soysa and Co. Ltd. de Silva, Colvin R., 1953, Ceylon under the British Occupation, 1795-1833, Vol. I,
Colombo: Colombo Apothecaries' Co., Ltd.
, 1962. Vol. II, Colombo: Colombo Apothecaries' Co., Ltd. de Silva, Gabriel, 1895. Arrack Farming in Ceylon, Colombo: Clifton Press de Silva, G.P.S.H., 1979. A Statistical Survey of Elections to the Legislatures of Sri
Lanka 1911-1977, Colombo: Marga Institute de Silva, K.M., 1965. Social Policy and Missionary Organisations in Ceylon, 1840–
1855, London: Longmans, Green & Co.
, 1973a. The Legislative Council in the 19th century, in K.M. de Silva (ed.) History of Ceylon, Vol. III, University of Ceylon Press Board
1973b. The Reform and Nationalist Movements in the Early Twentieth Century in K.M. de Silva (ed.) History of Ceylon, Vol. III, University of Ceylon Press Board
(ed.), 1981. Universal Franchise 1931-1981 the Sri Lanka Experience, Colombo: Ministry of State
(with Howard Wriggins), 1988. J.R. Jayewardene of Sri Lanka: A Political Biography, Volume One: The First Fifty Years, London: Anthony Bondf Ouartet de Silva, S.B.D., 1982. The Political Economy of Underdevelopment, London:
Routledge & Kegan Paul Denham, E.B., 1912. Ceylon at the Census of 1911, Colombo: Government Printer Dewaraja, Lorna, S., 1972. The Kandyan Kingdom of Ceylon, 1707-1760, Colombo:
Lake House Investments Dharmaratne, G.A., 1890. The Kara-Goi Contest, with an Appeal to the House of
Commons, Colombo: Independent Press Digby, William, 1879. Forty Years of Official and Unofficial Life in an Oriental Crown Colony: Being the Life of Sir Richard F. Morgan, 2 Vols. Madras: Higginbotham & Co; London: Longmans, Green & Co. Dobb, Maurice, 1963. Studies in the Development of Capitalism, London: Routledge Don Bastian, C., 1904. De Soysa Charithaya (in Sinhala), Colombo: Sinhalese Daily
News Press Durai Raja Singham, S., 1973. The Life and Writings of Sir Mutu Coomaraswamy,
Selangor: published by the author
, 1977. Ananda Coomaraswamy: The Bridge Builder, Kuala Lumpur: published by the author Engels, Fredrick, 1975 (1845). The Condition of the Working Class in England, in Marx & Engels, Collected Works, Vol. 4, Moscow: Progress Publishers Ferguson, John, 1903. Ceylon in 1903, Colombo: A.M & J.Ferguson Fernando, A.Reginold, undated. Life of Iohannes de Mel (in Sinhala) Fernando, Edith M.G., 1989. Journey of a Family: The Mahavidanage de Mels,

Page 88
144 அநாமதேயங்களாக இருந்தோர்.
Singapore: Stanford Press
, 1998. Journal of a Family: A Portrait in Words and Pictures from the Fernando Album, Colombo: published by the author Fernando, Marcus, 1933. "On the Banking and other Credit Facilities in Ceylon, in S.E.N. Nicholas, 1933, Commercial Ceylon, Colombo: Times of Ceylon Co. Ltd. Fernando, Shelton, 1969, “S.C. Fernando & Bros. 1859-1959, mimeographed
pamphlet Fernando, J.S.A. & Jayawardene, Gustavus, 1949. Botale Senanayake pavula saha Moratu putrayan atara ativusahakara sambandhatavaya, Lanka Training Co. Ltd. Forrest, D.M., 1967. A Hundred Years of Ceylon Tea, London: Chatto & Windus
Ltd. Frank, André Gunder, 1972. Lumpenbourgeoisie Lumpendevelopment. Dependence, Class, and Politics in Latin America, New York: Monthly Review Press Gombrich, Richard and Gananath Obeyesekere, 1988. Buddhism Transformed
Religious Change in Sri Lanka, Princeton: Princeton University Press Gooneratne, Yasmine, 1968. English Literature in Ceylon 1815-1878, Dehiwela:
Tisara Prakasakayo
, 1986. Relative Merits: A Personal Memoir of the Bandaranaike Family of Sri Lanka, New York: St.Martins Press Gunasekera, H.A. de S., 1962. From Dependent Currency to Central Banking: An Analysis of Monetary Experience, 1825-1957, London: London School of Economics Gunasinghe, Newton, 2007 (1990.) Changing Socio-Economic Relations in the
Kandyan Countryside, Colombo: Social Scientists' Association
, 1996. Selected Essays, see Sasanka Perera (ed.) Guruge, A. (ed.), 1965. Return to Righteousness; A Collection of Speeches, Essays and Letters of the Anagarika Dharmapala, Colombo: Ministry of Education and Cultural Affairs Gunewardana, R.A.L.H., 1985. The People of the Lion: Sinhala Consciousness in History and Historiography, in Ethnicity and Social Change in Sri Lanka, Colombo: Social Scientists' Association Haeckel, Ernst, 1975. A Visit to Ceylon (reprint), Dehiwela: Tisara Prakasakayo Hardy, R. Spence, 1864. Jubilee Memorials of the Wesleyan Mission, South Ceylon,
1814-1864, Colombo: Weslyan Press ..." Harishchandra, Walisinha, 1908. The Sacred City of Anuradhapura, Colombo:
published by the author Hassan, M. C. A., 1968. Sir Razik Fareed, Colombo Hoole, S. Ratnajeevan H, 1997. C. W. Thanotharanpillai, Tamil Revivalist: The Man Behind the Legend of Tamil Nationalism, Colombo: International Centre for Ethnic Studies Hulugalle, H.A.J., 1960. The Life and Times of D.R. Wijewardene, Colombo: The
Associated Newspapers of Ceylon Ltd.

உசாத்துணைநூல்கள் 145
1963. British Governors of Ceylon, Colombo: The Associated Newspapers of Ceylon
1975. The Life and Times of Don Stephen Senanayake, Colombo: M.D. Gunasena & Co Ismail, Qadri, 1995. "Unmooring identity; The Antinomies of Elite Muslim Selfrepresentation in Modern Sri Lanka” in P. Jeganathan and Q. Ismail steds.) Unmaking the Nation, Colombo: Social Scientists' Association. Jayasekera, P.V.J., 1970. 'Social and Political Change in Ceylon 1900-19 j9,
unpublished Ph.D. thesis, University of London Jayawardena, Kumari, 1970. Economic and Political Factors in the 1915 Riots,
Journal of Asiani Studies, Vol. XXIX
, 1972. The Rise of the Labor Movement in Ceylon, Durham, N.C.: Duke University Press
, 1985. Ethnic and Class Conflicts, Colombo: Sanjiva Books , 1986. Feminism and Nationalism in the Third World, London: Zed Books , 1992.'Some Aspects of Religious and Culturalldentity and the Construction of Sinhala Buddhist Womanhood, in Douglas Allen (ed.), Religion and Political Conflict in South Asia, Westport, Conn. Greenwood Press
, 1993. Dr. Mary Rutrian, Colombo: Social Scientists' Association
995, The White Wannan's Other Burden: Western Women and South Asia During British Rule, N.Y. & London: Routledge ---, 1997. Annie Besant's Many Lives, Frontline, 17 October
, 2007. Erisire of the Euro-Asian: Recovering early radicalism and feminisn; in Sri Lanka, Colombo Social Scientists' Association. Jayawardena, Lalith R, 1963. The Supply of Sinhalese Labour to Ceylon Plantations,
1830-1930, unpublished Ph.D. thesis, Cambridge University Jayaweera, Swarna, 1979. “Women and Education, in Status of Women-Sri Lanka,
University of Colombo Jeganathan, Pradeep, and Ismail, Qadri (eds.), 1995. Unmaking the Nation: The Politics of Identity and History in Modern Sri Lanka, Colombo: SocialScientists' Association Kannangara, P.D., 1966. The History of the Ceylon Civil Service, A Study of
Administrative Change in Ceylon, Dehiwela: Tisara Prakasakayo
, 1988. "The Caste Problem and the Study of the Modern Period of Sri Lankan History, in Social Science Review, No. 4, Colombo: Social Scientists' Association Kay, Geoffrey, 1975. Development and Underdevelopment, A Marxist Analysis,
London: St. Martins Press Keble, W.T. & Devar Surya Sena, 1950. Life of Sir James Peiris, Colombo: Times of
Ceylon Kotelawele, D.A., 1967. Agrarian Policies of the Dutch in South-West Ceylon,
1743-1767"A.A.G. Bijdragen, Vol. XIV
1978. 'Nineteenth Century Elites and their Antecedents, in The Ceylon Historical Journal, Colombo: Wol. XXV, Oct. 1978
1988. 'Some Aspects of Social Change in the South West of Sri Lanka

Page 89
146 அநாமதேயங்களாக இருந்தோர்.
1700-1833, Social Science Review No.4, Colombo: Social Scientists' Association Kulke, Eckehard, 1974. The Parsees in India, A Minority as Agent of Social Change,
New Delhi: Bell Books Kuruppu, N.S.G., 1951. "History of the Working Class Movement in Ceylon.
Ceylon. Historical Journal, October Lipsey, Roger, 1977. Coomaraswamy, Vol. 3 His Life and Work, Princeton N.J.:
Princeton University Press. Ludowyk, E.F.C., 1966. The Modern History of Ceylon, London: Weidenfeld &
Nicolson Malalgoda, Kitsiri, 1976. Buddhism in Sinhalese Society 1750-1900, A Study of Religious Revival and Change, California: University of California Press Manor, James, 1989. The Expedient Utopian: Bandaranaike and Ceylon, Cambridge
University Press Marikar, A.I.L., 1979. Sir Mohamed Macan Markar, Colombo Marshall, H., 1954. Ceylon, A General Description of the Island, and its Inhabitants,
London: William H. Allen (1846), reprint 1954 Marx, Karl, & Engels, Fredrick, 1973. Selected Works, Volume 2, Moscow: Progress
Publishers
, 1975. Collected Works, Volume 4, Moscow: Progress Publishers , 1982. Economic and Philosophic Manuscripts of 1844, Moscow: Progress Publishers Maunaguru, Sitralega, 1995. "Gendering famil Nationalism: The Construction of Woman' in Projects of Protest and Control, in Unmaking the Nation, edited by Pradeep Jeganathan and Qadri Ismail Mendis, G.C. (ed.), 1956. The Colebrooke-Cameron Papers, Documents on British Colonial Policy in Ceylon, 1796-1833, Vols. I & II, London: Oxford University Press Meyer, Eric, 1992. "From Landgrabbing to Landhunger: High Land Appropriation in the Plantation Areas of Sri Lanka during the British Period. Modern Asian Studies 26 (2), Cambridge Millie, P.D., 1878. Thirty Years Ago, or Reminiscences of the Early Days of Coffee
Planting in Ceylon, Colombo: A.M. and J. Ferguson Mills, Lennox A., 1964. Ceylon Under the British 1795-1932, London: Frank Cass Moldrich, Donovan, 1989. Bitter Berry Bondage: The Nineteenth Century Coffee Workers of Sri Lanka, Kandy, The Coordinating Secretariat for Plantation Workers Moosajee, Asker, 1986. "Recent Arrival of Muslim Trading Communities in Sri
Lanka, in Shukrie, 1986 Mukherjee, Ramakrishna, 1974. The Rise and Fall of the East India Company, New
York: Monthly Review Press Munasinghe, Indrani, 1972. "The Development and History of Transportation in
Ceylon, unpublished Ph.D. thesis, University of London Nicholas, S.E.N., 1933. Commercial Ceylon, Colombo: Times of Ceylon Co. Ltd.

உசாத்துணைநூல்கள் 47
Olcott, H.S., 1954, Old Diary Leaves, 2nd Series 1878-1883, 2nd ed. Madras:
Theosophical Publishing House, 1986 Peebles, Patrick, 1973. "The Transformation of a Colonial Elite: The Mudaliyars of Nineteenth Century Ceylon, Ph.D. dissertation, University of Chicago
, 1986. Profits from Arrack Renting in 19th Century Sri Lanka', in Modern Sri Lanka Studies, Wol. 1, No.ll.
, 1995. Social Change in 19th Century Ceylon, New Delhi: Navrang Perera, B.J., 1952. The Foreign Trade and Commerce of Ancient Ceylon, in Ceylon
Historical Journal, Colombo: April Perera, Sasanka (ed.), 1996, Newton Gunasinghe. Selected Essays, Colombo: Social
Scientists' Association Peiris, Edmund Rt. Rev., 1952. "Fish Tax in Ceylon', in Ceylon Historical Journal,
Colombo: July Perinbanayagam, S.R., 1988. The Social Foundation of Education and Economic Activity in Jaffna, Sri Lanka', in Kailasapathy Commemoration Volume, Jaffna, Professor K. Kailasapathy Commemoration Committee Pieris, Paul E. (ed.), undated. Notes on Some Sinhalese Families, Part VI. From the
Diaries of E. R. Gooneratne, Colombo: Times of Ceylon Ltd. Pfaffenberger, Bryan, 1982. Caste in Tamil Culture. The Religious Foundations of Sudra Domination in Tamil Sri Lanka, N.Y. Syracuse University and New Delhi: Vikas Publishing House Phelps Brown, E.H., 1959. The Growth of British Industrial Relations, London:
Macmilan & Co. Ltd. Pridham, Charles, 1849. An Historical, Political & Statistical Account of Ceylon,
London: T & W. Boone Rahaman, M.A.C.A, 1975. A Biographical Sketch of Hon. M.C.Abdul Rahman,
Colombo Reimers, E, 1932. (Translation) Memoirs of Ryckloff Van Goens. 1663-1675, Governor of Ceylon, delivered to his successor, Colombo: Ceylon Government Press
, 1935. (Translation) Memoir of Joan Gideon Loten, Governor of Ceylon, to his successor, 1757 Colombo: Ceylon Government Press
, 1946. (Translation) Memoir of fan Schreuder, 1757-62 Governor of Ceylon, to his successor, Colombo: Ceylon Government Press Roberts, Michael, 1966. Indian Estate Labour in Ceylon during the Coffee Period, 1830-1880;' in Indian Economic eb Social History Review, March & June
, 1969. The Rise of the Karavas', Ceylon Studies Seminar 1968/9, No. 5, mimeo
1973. "Elite Formation and Elites, 1832-1931, in K. M. de Silva (ed). History of Ceylon Vol. III, University of Ceylon Press Board
and L.A. Wickremaratne, 1973. “Export Agriculture in the 19th Century'. in History of Ceylon Vol III, op cit
, 1975. Facets of Modern Ceylon History through the letters of Jeronis Pieris, Colombo: Hansa Publishers

Page 90
148 அநாமதேயங்களாக இருந்தோர்.
(ed.), 1979. Collective Identities, Nationalisms and Protest in Modern Sri Lanka, Colombo: Marga Institute
, 1979. "Problems of Collective Identity in a Multi-Ethnic Society', in Roberts, (ed.), 1979
, 1982. Caste Conflict and Elite Formation, The Rise of a Karava Elite in Sri Lanka 1500-1931, Cambridge: Cambridge University Press; reprint, 1995, New Delhi: Navrang
with Ismeth Raheem and Percy Colin-Thomé, 1989. People Inbetween: The Burghers and the Middle Class in the Transformations within Sri Lanka, Sarvodaya Book Publishing Services
(ed.), 1997. Sri Lanka. Collective Identities Revisited, Vol. 1, Colombo: Marga Institute Roberts, Robert, 1973. The Classic Slum, Salford Life in the First Quarter of the
Century, London: Penguin Books Russell, Jane, 1982. Communal Politics under the Donoughmore Constitution 1931
47, Dehiwela: Tisara Prakasakayo PRutnam, James, 1953. Sir Ponnambalam Arunachalam, 1853-1924, Colombo:
Sir Ponnambalam Arunachalam Centenary Committee
, 1957. "The House of Neelaperumal', Tribune, 19 July Ryan, Bryce, 1953. Caste in Modern Ceylon: the Sinhala System in Transition, New
Jersey: Rutgers University Press Sabonadière, William, 1870. The Coffee Planter of Ceylon, London: E. and F.N.
Spon Samaraweera, Vijaya, 1979. “The Muslim Revivalist Movement, 1880-1915, in M. Roberts (ed.), Collective Identities, Nationalisms and Protest in Modern Sri Lanka
, 1986. "Aspects of the Muslim Revivalist Movement in the late 19th century, in Shukrie (ed.) Muslims of Sri Lanka Scott, Jr., George M., 1989. "The Economic Basis of Sinhala-Muslim Ethnoreligious Conflicts in Twentieth Century Sri Lanka’, Ethnic Studies Report 7, I.C.E.S., Kandy Seneviratne, A.C. (ed.), 1939. Memoirs and Desultory Writings of the Late James
D'Alwis, Colombo: Ceylon Observer Press. Shivji, Issa, 1976. Class Struggles in Tanzania, London: Heinemann Shukrie, M.A.M. (ed.), 1986. Muslims of Sri Lanka, Avenues to Antiquity, Beruwela,
Sri Lanka, Jammah Naleema. Institute Sivathamby, K., 1979. “Hindu Reaction to Christian Proselytization and Westernization in 19th-century Sri Lanka', Social Science Review, No. 1, Colombo: Social Scientists' Association Skeen, William, 1870. Adam's Peak; legendary, traditional and historic nonces of
the Samanala and Sri - Pada, London: Edward Sanford Skinner, Thomas, 1891. Fifty Years in Ceylon, An Autobiography of the late Major
Thomas Skinner, London: W.M. Allen Small, W.J.T., 1971. A History of the Methodist Church in Ceylon, 1814-1964,

உசாத்துணைநூல்கள் 149
Colombo: Wesley Press Smith, Adam, 1905. The Wealth of Nations, London (1776) reprint Snodgrass, D.R., 1966. Ceylon, An Export Economy in Transition, Homewood, Il.
Richard D. Irwin Tampoe, Manel, 1997. The Story of Selestina Dias, Buddhist Female Philanthropy
and Education, Colombo: Social Scientists' Association Tennent, Sir James Emerson, 1860. Ceylon, An Account of the Island, Physical, Historical & Topographical, in 2Vols, 4th edition, London: Longman, Green, Longman, and Roberts Tinker, Hugh, 1974. A New System of Slavery: the Expart of Indian Labour Overseas,
1830-1920, Lodon and New York: Oxford University Press Thiruchandran, Selvy, 1998. The Spectrum of Fen in inity, A Process of
Deconstruction, Delhi: Vikas Publishing House Unwin, George, 1963. Industrial Organisation in the Sixteenth and Seventeenth
Centuries, London Uragoda, C.G., 1987. A History of Medicine in Sri Lanka, Colombo: Sri Lanka
Medical Association Uyangoda, Jayadeva, and Janaka Biyanwila, (eds.), 1997. Matters of Violence, Reflections on Social and Political Violence in Sri Lanka, Colombo: Social Scientists' Association
, 1998. Caste in Sinhalese Society, Culture and Politics, Colombo: Social Scientists' Association. Vanden Driesen, i.H., 1953. The History of Coffee Culture in Ceylon, Ceylon
Historical Journal, July and October, Vol. III, Nos.1 & 2 Colombo. Williers, Thomas, 1940. Mercantile Lore, Colombo: Ceylon Observer Press. Vythilingam, M., 1971. The Life of Sir Ponnambalan Rananathan, Vol. 1,
Chunnakam, Jaffna, Ramanathan Commemoration Society
, 1977. The Life of Sir Ponnambalam Ramanathan, Vol. II - 1910-1930, Chunnakam, Jaffna Walters, Jonathan S., 1996. The History of Kelaniya, Colombo: Social Scientists
Association Weerasooria, N.E., 1971. Ceylon and Her People, Vol. IV, Colombo: Lake House
Investments Weerasooria, Wickrema S., 1973. The Nattukottai Chettiar Merchant Bankers in
Ceylon, Colombo: Tisara Prakasakayo Weinman, J.R., 1947. Our Legislature. Interesting and racy reminiscences of persons and incidents connected with the old Legislative Council, Colombo: Associated Newspapers of Ceylon Ltd. Wickramasinghe, Nira, 1995. Ethnic Politics in Colonial Sri Lanka: 1927-1947, New
Delhi: Vikas Publishing House Wickremeratne, L.A., 1969. "Religion, Nationalism and Social Change in Ceylon', Journal of the Royal Asiatic Society of Great Britain, Vol. LVI. Reprinted in 1993 in Studies in Society and Culture No. 8
, 1973. "Economic Development in the Plantation Sector 1900-1947, in

Page 91
卫品Q அநாமதேயங்களாக இருந்தோர்.
K.M. d. Silva (ed). History of Ceylor, Wol, Ill, University of Ceylon Press
Wijeyekoon, Sir Gerard, 1951. Recollecifurls, ColorTib.: Tleilssociated Newspapers
of Ceylon Ltd. LELLLLLLLLaaaS LLLLSLLLLLSLLLLS 0000S LLLuLHGGLLLLLLL llllLLL TtLtltS L TTOTaT TTLS S 0LSS
Orli Cerf rury), Coloribo: Ceylon Business. Appliances Ltd.
1999. "Caste in Sinhalesc Buddhis', The Isldrid, 15 November Wright, Arnold (ed., 1907. Twentieth Century Iripressfors of Ceyluri. His sity, People, Cortifierce, Iridus tries arid Resources, London: Lloyd's Greater Britain Publishing Co., Zaffer, Muhammed, M. (ed.), 1986. AI Ethriological Survey of the Musliris (fSri
Lrka, Colombo: Sir Razik Fareed Foundation Wachariya, Faizun, ard N. Shanmugaratnam, 1997. "Com Tumalisation () fMLLsli TT15
in Sri Lanka: An Historical Perspective", in Afrer Tafi var Perspeci n'es: A Collecioj L LGGLCG LLL LLTLlLLLLLLLLCCCCCLLL LtTtTL lLLlllLGGLS LLLLLLLLmLLLLLLLS LLtLLtL LrHtmL C Research ad ction Fr
DOCUMENTS. REPORTS AND OTHER PUBLICATIONS
LLLLLL LLTLlLlL LTTTLLLLLLL LLTL LGLLLLLLL TTLmmLkkS S000SLLLLLLS LLLLLLLLS Skeel,
Goya:Till:1. PTiller Ceylon Banking Connission, Sessional Paper XXII is 1934 Ceyla7y | Directory, 1863, ColcJ Tibo: Ceriterary Soir retir of the Holy Errentiarities Church, Moratuwa, 1960 LlLLaaLLHH llllLLLLLLL LT TT LLTLLL sAS LLLLlLac tLLL ETLL LkLLGkykS LLLLLS 0000L Fergu sari's Direrrory, Colombo File on Parsi Family Histories (umpublished), loaned by Pesi Pest Linee
TLLLLCktCLLCLGGGLCC L 000S LLLLLLLHLLLLLLLS LLLLCLLLGLLLLL LLLaLLLL Loyal Rulers and Leaders of the East, A record of their services in the Great War,
L01 d.) Th | 922 LLtCLCtCLt LLTLLLLSSSLLkL LtTLLGCkS LLLkLk TlltLHHLHHLHLHCS 00S00S LCLa a
J.S.A. Fernando and Gustavus Jayawardene, Moratuwa, 1951, Centenary Committee Proceedings of Planters Association, 1869 Reports of the Female Boarding School at Oodooville, Jaffna, under the direction
of the American Ceylon Mission, Jaffna, 1839 and 1843 Systein of Farming Arrack Rents, Sessional Paper XI of 1889 System of Farming Arrack Rents, Sessional Paper XXXI of 1897


Page 92
அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்க இலங்கையில் முதலாளித்துவத்தி குமாரிஜயவர்த்தன
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இல பெற்ற வரலாற்றை இந்நூல் கூறுகின்றது படாத விடயமான இந்த முக்கிய விடய வளர்ச்சியின் படிநிலைகளை விவரிக்கிற நிலமானிய சமூகமாகவும் வணிக இந்நாடு பெருந்தோட்ட பொருளாதார மு கட்டத்தில் சுதேச வர்த்தகர்கள் சாராய வற்றின் மூலம் தொடக்க மூலதனத்தை : களில் முதலீடு, காரிய சுரங்க அகழ் நடவடிக்கைகளை விரிவாக்கினர். சா. தொழிற்பிரிவினையையுடைய சமூகம் இவற்றை இந்நூல் விவரிக்கின்றது.
இந்நூல் சாதியைவிட வர்க்கம் மு பெறுவதை எடுத்துக் காட்டுகின்றது. பல் சமயப் பண்பாடுகளை பின்னணியா இருந்தோர் (NOBODIES) அறியப்பட்டவர்க தாரப் படியில் உயர்வதை இந்நூல் மூலதனத்திரட்சி, சமய மறுமலர்ச்சி, இ இயக்கங்கள், விவாகக் “கார்ட்டல்கள்" மூ சேர்தல் என்பனவும் விபரிக்கப்படுகின் ஒன்றோடொன்று தொடர்புபட்டிருந்தன
குமாரி ஜயவர்த்தன: இலண கலாநிதிப் பட்டத்தைப் டெ பல்கலைக்கழகத்தின் அரச் இணைப் பேராசிரியராக ட
இயக்கம், மனித உரிமைக இணைந்து நீண்டகாலம் உழைத்து வரும் இலங்கைச் சமூக விஞ்ஞானிகள் சங்கம் நிறுவனத்தினை இயக்குபவர்களில் முக்கி 6) CL55pirit. The Rise of Labour Movement in in Sri Lanka (1985), Feminism and Nationalist, Woman's Other Burden (1995), Erasure of the , எழுதிய சில முக்கிய நூல்களாகும்.
சமூக விஞ்ஞானிகள் சங்கம் & குமரன்
விடயம் அரசியல் வரலாறு
 
 
 

5060D
$ன் தோற்றம்
ங்கையில் முதலாளிவர்க்கம் எழுச்சி 1. நவீன காலவரலாற்றில் கவனிக்கப் த்தை கூறும் இந்நூல் முதலாளித்துவ
து. வாதப் பொருளாதாரமாகவும் இருந்த றையைத் தழுவிக்கொண்டது. ஆரம்ப க் குத்தகை, ஆயக்குத்தகை என்பன திரட்டினர். பின்னர் பெருந்தோட்டங் வுத் தொழில் என்பன மூலம் தம் தியை அடிப்படையாகக் கொண்ட இதனால் உருமாற்றம் பெற்றது.
தலாளித்துவ மாற்றத்தில் முதன்மை சாதிகள், பல்வேறு இனக்குழுமங்கள், கக் கொண்ட அநாமதேயங்களாக 6TT5 (SOME BODIES) Felps GLITCUGTITவிளக்கிச் செல்கிறது. மேலும் இனக்குழும அடையாளம், அரசியல் மலம் பணக்காரக் குடும்பங்கள் ஒன்று ன்றன. இவ் விடயங்கள் எவ்விதம் என்பதையும் இந்நூல் விபரிக்கின்றது.
ன்டன் பொருளியற் கல்லூரியில் பற்ற இவர் கொழும்புப் சியல் விஞ்ஞானத்துறையில் 1ணியாற்றியவர். பெண்ணிய ஸ் இயக்கம் ஆகியவற்றில்
சமூகச் செயற்பாட்டாளர். (SSA) என்னும் ஆய்வு கியமானவர்களில் ஒருவராக இருந்து Ceylon (1972), Ethnic and Class Conflict n in the Third World (1986), The White Euroasians (2007) என்பவை இவர்
ISBN 978-955-659-205-4
|||
7895.56'592O54 விலை ரூபா 350.00
9