கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் மொழி விளக்கம்

Page 1


Page 2

67 ĝišĝi?aLu Art Lago dors-pr éf6öoL uuu rpr fr6i5 சிபார்சு செய்யப்பட்டு வித்தியாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டது.
தமிழ் மொழி விளக்கம் இரண்டு பகுதிகள் அடங்கியது.
J. S. C., G.C. E. வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகளுக்கும் ஏற்ற புதிய தமிழ் மொழிப் பயிற்சி
ஆக்கியோன் :
5. 35u96m) Tugbi T2565T, B. A., Dip.-in-ED. உதவி அதிபர், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, சித்தன்கேணி.
பேராசிரியர் LT&Li (p. 6hl Ug UT F6i, M. A., M. O. L., PH. D. அவர்களதும் யாழ்ப்பாணத்துச் சைவாசிரியர் கலாசாலையின் இளைப்பாறிய அதிபரும், இலங்கை அரசாங்க மொழிக் குழு (தமிழ்) மேற்பார்வையாளருமான சி. சுவாமிநாதன், B, A, அவர்களதும்
அணிந்துரைகள் அடங்கியது.
1958
உரிமை ஆக்கியோனுக்கே I விலை ரூபா 3.50

Page 3
First PUBLISH 1953 Eption - 1954
REVISED REPRINTED - 1955
ih-w 1958
I All Rights Reserved by the Author

தமிழ்ப் பேராசிரியர் L-ITšL-li (yp. GAI J5 JT JF6ör, M. A., M. o., L, PH. D. அவர்கள் வழங்கிய
அணிந்துரை
முழைய முறைப்படியே தமிழிலக்கணம் கற்றலால் நன்மை பல
உண்டு ; ஆயின் இன்று அவ்வாறு கற்பதற்கு உரிய வாய்ப் பும் ஆற்றலும் மாணவர்க்குச் குறைந்து வருகின்றன. அன்றி யும், அவ்வாறு கற்றலால் தேர்வுகளுக்குரிய அளவு பயிற்சி நிரம்பப் பெறுதலில்லை. ல-ழ-ள, ர ற, ண-ன வேறுபாடுகளும், வாக்கிய அமைப்பும், குறியீடுகளும் புது முறையாகக் கற்றுப் பயிற்சி பெற வேண்டியனவாக உள்ளன. கடிதம் வரைதல், கட்டுரை வரைதல், சுருக்கி எழுதல், மொழிபெயர்ப்பு முதலி யன இக்காலத்துக் கல்வி முறைக்கு இன்றியமையாதனவாக ஆகிவிட்டன.
இந்நிலையில் திருவாளர் க. கயிலாயநாதன், பீ. ஏ. அவர்கள் தமிழ் மொழி விளக்கம் " என்னும் இந்நூலை ஆக்கி யளித் திருப்பது, தமிழ் கற்போர்க்குப் பெரியதோ ருதவியாகும். இவ் வாசிரியர் விதிகளைத் தெளிவுற விளக்கியிருத்தலோடு, பற்பல வகையான பயிற்சிகளும் உடனுடன் சேர்த்திருத்தல் மிக்க பயன்தரும் முறையாகும். நூலமைப்பு, சுவைபடு வகையில் உள்ளது ; எளிமையாகவும் உள்ளது. எடுத்துக்காட்டு முதலி யன பொருந்த அமைந்துள்ளன. ஆதலின் மாணவ ருலகம் இதனைப் பெரிதும் போற்றுமென நம்புகின்றேன். *)
ஆசிரியரின் முயற்சியும் தமிழ்த் தொண்டும் மேன்மேலும் வளர்க,
மு. வரதராசன் சென்னை

Page 4
யாழ்ப்பாணத்துச் சைவாசிரியர் கலாசாலையின் இளைப்பாறிய அதிபரும் இலங்கை அரசாங்க மொழிக் குழு (தமிழ்)
மேற்பார்வையாளருமான திரு. சி. சுவாமிநாதன், B. A. அவர்கள் வழங்கிய
அணிந்துரை
தமிழ் மொழி விளக்கம் " என்னும் பெயரையுடைய இந்நூல்
பொதுவாக உயர்தர வகுப்புக்களில் தமிழ் கற்கும் மாணவர் பொருட்டும், சிறப்பாக ஆங்கில பாடசாலைகளில் தமிழ் கற்கும் மாணவர் பொருட்டும் ஆக்கப்பட்டதொரு நூலா கும். இதுபோன்று ஏனைய சில நூல்கள் வெளிவந்துள்ளன வாயினும், அவை இதன் நோக்கத்தையேனும் கருத்து விரிவை யேனும் உடையனவல்ல ; மேல் வகுப்புப் பாடத்திட்டங்களைத் தழுவி எழுதப்பட்டனவுமல்ல. எடுத்துக்கொண்ட ஒவ்வொரு விஷயமும் இலகுவில் விளங்கக்கூடிய முறையில் இதன்கண் ஆளப்பட்டிருப்பதுடன் அது பயன்படும் மு  ைற யும் தக்க சாதாரண உதாரணங்களால் பயிற்சி முறையாகக் காட்டப்பட் டுள்ளது. இக்காலத்தில் கல்விப் பகுதியினராலோ அரசாங்கத் தினராலோ நடாத்தப்படும் தமிழ்ப் பரீட்சைகளையும் ஆதார மாகக்கொண்டு இந்நூல் “ஆக்கப்பட்டதெனின் அது மிகை
யாகாது.
இக்காலத்தில் பாஷையை இலகுவாகக் கற்கும் முறைகள் ஆராயப்பட்டுப் புதுப்புது நூல்கள் இயற்றப்படுகின்றன. நாம் படித்த காலத்தில் இதுபோன்ற இலகுவான நூலையாவது இதன்கணுள்ள அத்துணை பயன்படக்கூடிய விஷயங்களையாவது கண்டு கேட்டு அறிந்திருக்கமாட்டோம். அறிய வேண்டுவன வாகிய அநேக சொற்களும், சொற்ருெடர்களும், சொல்லடுக்கு மரபுகளும், பொதுவான சொற்பிழை, இலக்கணப் பிழைகளும் இந்த வகையில் எளிதாக அறியக்கூடிய முறையில் நாம் கற் பிக்கப்படவுமில்லை, கற்பதற்கு வேண்டிய சாதனங்கள் அக்கா லத்தில் இதுபோன்று ஆக்கப்படவுமில்லை. ஆதலால், புத்தம் புதிய முறையில் தமிழ் மொழியை இலகுவில் விளங்கக்கூடிய தாக இந்நூலை ஆக்கித் தந்த திருவாளர் க. கயிலாயநாதன் அவர்களுக்குத் தமிழ் கற்கும் மாணவர்களும், கற்பிக்கும் ஆசிரி யர்களும் மிகவும் கடமைப்பட்டவர்களாய் நன்றி செலுத்த வேண்டியவர்களே. ஆக்கியோ ன் இத் துறை யில் மேலும் உழைப்பார்களாக,

முதலாம் பாகத்தில் 5-ம் 6-ம் 7-ம் அதிகாரங்களும், இரண் டாம் பாகத்தில் 19-ம் 20-ம் அதிகாரங்களும் இந்நூலுக்குச் சிறப்பானவை. இதுபோன்ற வேறு நூல்களில் இடம்பெரு தவை. தெரிந்தெடுக்கப்பட்ட உதாரணங்களும் பழமொழிக ளும் மாணவர்களுக்கு மிகவும் வாய்ப்பானவை. சாதாரண வழக்கிலுள்ளவை. படிக்கும்தோறும் இன்பம் பயப்ப ைவ. அலுப்புத் தோன்ருமல் சிரமமின்றிப் பயிலத்தக்கவை. ஆக்கி யோன் அநுபவ வாயிலாக இவற்றைத் தெரிந்து மாணவருக்குப் பயன்படுமாறு வெளிப்படுத்தியதற்குக் கைம்மாருக எம் நன்றி யறிதலைச் சமர்ப்பிப்போமாக. ஆக்கியோன் நீடு வாழ்க! அவர் தம் மொழிப்பணி மேலும் ஓங்குக !
சி. ஆவாமிநாதன் மயிலிட்டி வ நக்கன, பங்குனி

Page 5
முன்னுரை
மிழ்தினுமினிய நந் தமிழ் மொழி அன்னியர் ஆட்சியில்
அலக்கணுற்றது. சுதந்திர ஆட்சியில் சுடர்விட்டு ஒளிர்
கின்றது. இதன் பேறே, கல்லூரிகளிலும் பொதுத் தேர்வுகளி லூம் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டது.
தாய் மொழியைக் கற்கத் தணியாத் தாகமுள்ளவர்கள், அடிப்படையான தமிழ்க் கல்வி இல்லாமையாலும், மலாய்நாடு போன்ற பிற நாடுகளிலிருந்து இலங்கைக்கு அண்மையிலேயே திரும்பியதாலும் இடர்ப்படுகிருர்கள். இவர்கள் இடரை முற் முகவும் சுலபமாகவும் தீர்ப்பதற்கு ஏற்ற தமிழ் மொழிப் பயிற்சி நூல்கள் மிக அரிதே. இலக்கணச் சூத்திரங்கள் கொண்டு தமிழ் மொழி மரபை எடுத்துக்காட்டுவதென்ருல், அது இன்று கற் போரின் ஆர்வத்தைக் குறைப்பதாகவே முடியும். எனவே, தமிழ் மரபுக்கேற்ப இலக்கண வழுவின்றித் தமிழை எழுதவும் தற்காலத் தமிழ் மொழி வளனுக்கேற்பப் பொதுத் தேர்வுகளில் காணப்படும் சொற்கள், மரபுச் சொற்ருெடர்கள், விளக்கப் பயிற்சி, கடிதம் வரைதல், கட்டுரை வரைதல், சுருக்கி எழுதல், உரைநடை ஆக்கம் செய்தல், செய்யுள் நயம் கூறல், மொழி பெயர்த்தல் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட கேள்வி களுக்குத் தகுந்தமுறையில் விடை எழுதவும் உதவுவதற்குத் * தமிழ் மொழி விளக்கம் " என்ற இந்த நூல் ஆக்கப்பட்டது. மாதிரிப் பயிற்சிகளும், பயிற்சிகளும் நூலை ஆழ்ந்து கற்பதற்குத் துணை செய்வன.
உயர்தர வகுப்பு மாணவர்களுக்கும், எட்டாம் வகுப்புத் தெரிவுத் தேர்வு, G. C. E. தேர்வுகளுக்கும், ஏனைய பொதுத் தேர்வுகளுக்கும், பொது மக்களுக்கும் இந்நூல் பயன்படும் என்பது எனது நம்பிக்கை.
தங்கள் நூல்களிலிருந்து சில பகுதிகளை இந்த நூலில் சேர்த் துக்கொள்வதற்கு அனுமதி அளித்த அறிஞர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றி உரியது.
தங்கள் சிரமத்தைப் பாராது இந்த நூலின் கையெழுத்துப் பிரதியை வாசித்து அணிந்துரைகள் வழங்கி என்னை ஊக்குவித்த பேராசிரியர் டாக்டர் மு. வரதராசன், M. A., M. O, ட. PH. D. அவர்களுக்கும், திரு. சி. சுவாமிநாதன், B. A. அவர்களுக்கும் நான் என்றென்றும் கடப்பாடுடையேன்.
வட்டுக்கோட்டை க. கயிலாயநாதன்
நந்தன. பங்குனி

vii
திருத்திய பதிப்பின் முன்னுரை
I, II, IIII, IV, V, XIII, XX- líb geg5)5smrJT fäué956vfhéñ) L5) தாகப் பொருள் சேர்க்கப்பட்டிருக்கின்றது. XV-ம் XVIII-ம்
அதிகாரங்களின் கீழுள்ள சில நீளமான பயிற்சிகள் குறுக்கப்பட்
டிருக்கின்றன. XXI-ம் அதிகாரத்தில் இலகுவான பயிற்சிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
சய, கார்த்திகை

Page 6
PPREFACE
THE introduction of the mother tongue as a compulsory second language in all the secondary schools and in all the public examinations in Ceylon is one of the benefits that have accrued to us from our newly-won freedom. But the change-over has been comparatively fast and most of those who have not received a sound primary education in Tamil, especially those who have repatriated from Malaya, find it difficult to cope with this change. This New Approach to Tamil is in a way an attempt to make the study of Tamil easy to those who are familiar with English, by the inclusion. of equivalent English terms.
The present syllabuses in Tamil for the VIIIth Std. Selective Test, the G. C. E. and for all the other public exami nations, include questions on Vocabulary, Idioms, Comprehension, Letter - Writing, Essay "Writing, Precis - Writing, Paraphrasing, Appreciation of poetry and Translation, which are modern in spirit. The candidate should train himself to: answer them in the Tamil linguistic traditions. Books to satisfy these requirements are rare. The urge to satisfy this crying need was felt long ago, but I had to put off my attempt till my experience in teaching Tamil in the higher forms would warrant such a venture.
The chief aims of this book are:
1. To remedy the defects in the writing of the commonly mis-spelt words involving the letters av, p, GMT, UT, p, GOOT. 607. The use of these words has been illustrated by sentences, in each case.
2. To provide the students with sufficient knowledge to answer the questions set in the public examinations, on vocabulary, idioms, traditional phrases and proverbs, which entail a thorough study. An attempt has been made to codify them.
3. To lead students to a sound study of grammar by adoption of the practical method, instead of the traditional one which makes the subject most dry. The emphasis is on

ix
the application of grammar to the writing of correct and idiomatic Tamil. There is a separate chapter on Common Errors. . .
To guide and direct the reader to the writing of the various types of composition. The characteristic of the various types of composition and the mode of writing them have been explained and illustrated. There is. also a chapter on Translation, including English Idioms. and their equivalents in Tamil and a Glossary containing
Tamil equivalents to difficult English words and phrases. found in the exercises on Translation.
To provide apt exercises, as would stimulate the reader's interest in the subject.
It is fervently hoped that this book would be of great
assistance to the students in the higher forms, those preparing for the various public examinations and also to the general public.
I am indebted to all those who have given me permission
to include in this book extracts from their works.
My profound thanks are due to Professor, Dr. M. Varada
rajan, M. A., M. O. L., PFI. D. and to Mr. S. Swaminathan, B. A. for the pains they have taken in going through this book in
the manuscript form and for having contributed their valuable forewords.
Vaddukoddai, K. KAILAYANATHAN. March, 1953.

Page 7
PREFACE TO THE REVISED EDITION
Additions have been made to chapters. I, II, III, IV, V, XIII and XX. Some of the exercises under chapters XV and XVIII have been reduced in length. The exercises under -chapter XXI have been revised and easier passages have been included.
November, 1954. K. K.

அதிகாரம்
III
III
IV
VI
VII
VIII
ΙΧ
உள் ளு  ைற
முதற் பகுதி Garib uuaps (Study of Words)
லகர, ழகர, ளகர பேதச் சொற்களும் அவற்றைப் பயன்படுத்தும் முறையும் ow
ரகர, றகர பேதச் சொற்களும் அவற்றைப் பயன்படுத்தும் முறையும் 8 p. 8
ணகர, னகர பேதச் சொற்களும் அவற்றைப் பயன்படுத்தும் முறையும்
(அ) பலபொருள் ஒரு மொழி (Homonyms) ...
(ஆ) ஒரு பொருட் பன்மொழி (Synonyms)
பயிற்சி esp. lle de o m
Gas TibGugli uluais (Study of Phrases)
மரபுப் பொருளுணர்த்தும் சொற்ருெடர்கள்
(Idioms)
சிறப்புப் பொருளுணர்த்தும் சொற்ருெடர்கள்
(Connotative Phrases) சிறப்புப் பொருளுணர்த்தும் அடுக்குச் சொற் Golffs, air (Significant Alliterative Phrases) ... பயிற்சி 0 o og to us
வாக்கியப் பயிற்சி (Study of Sentences)
வாக்கிய sy6)LDüL (Structure of Sentences)
பயிற்சி ope ove ove ...
செய்வினை, செயப்பாட்டுவினை (Active and
Passive Voice) . O O OP 40 a 0. பயிற்சி OO 98 o O be
தனி வாக்கியமும் தொடர் வாக்கியமும் - பங்கீ 35J 6007 lb (Analysis of Simple and Complex
Sentences) ... a p ve s பயிற்சி · · · A u D 8
västiho
Ꮧ 0
I 6.
20
26
30
3.
42
48
5.
54· 56
58
60
* 6 Ι
64

Page 8
அதிகாரம்
ΧΙ
XII
XIII
XIV
XV
XVI
XVII
XVIII
XIX
XX
ΧΧΙ
xii
பக்கம்
குறியீடுகள் (Punctuation) des ... , 66 பயிற்சி soc. OP OOO 70 Søör G-sögyth L$pti Sasögyth (Direct and Indirect Speech) ... o 0 o 8 O 72 பயிற்சி OO O so o O ed 75
Guit giant GOT 60psoir (Common Errors) ... 77 பயிற்சி . 4 O 87
பழமொழிகள் (Proverbs) ... 89
இரண்டாம் பகுதி
விளக்கப் பயிற்சி (Comprehension) 95 هنه
sц-5th OJ 600 g, d) (Letter-Writing) ... l 04 பயிற்சி OOO 8 s e o , ... I la
கட்டுரை வரைதல் (Essay-Writing) ... l l 3 பயிற்சி ooo ... 126
s(EdiS Gtepsi» (Precis-Writing) ... 128 பயிற்சி so "O O. M. ... 132 உரைநடை ஆக்கம் செய்தல் (Paraphrasing) 48 பயிற்சி o 56 Galiluysit such apá (The Appreciation of Poetry) 8 - O ... AO O . ... 157 பயிற்சி ht) ... l. 65.
மொழிபெயர்ப்பு (Translation) . ... 172 பயிற்சி . s 90 on O ... 180 Glossary ... ass O O e 187

முதற் பகுதி

Page 9

தமிழ் மொழி விளக்கம்
சொற் பயிற்சி (Study of Words)
தமிழ் மொழியிலுள்ள லகர, ழகர, ளகர, ரகர, றகர, னகர, னகரங்கள் அமைந்துவரும் சொற்களைப் பெரும்பாலார் தவருக எழுதுகிறர்கள். இவ்வெழுத்துக்களைத் தவருக உச். சரித்தலும், இவற்றில் போதிய பயிற்சி இன்மையுமே இதற்குக்
காரணங்களாகும்.
இந்தக் குறைகளை நிறைவு செய்யும் நோக்கமாகவே பொது வான லகர, ழகர, ளகர பேதச் சொற்கள், ரகர, றகர பேதச் சொற்கள், ணகர, னகர பேதச் சொற்கள் வேறு வேருக அமைந்த மூன்று பிரிவுகள் மூலம் இவற்றை வாக்கியங்களில் பயன்படுத்தும் முறை விளக்கப்பட்டிருக்கின்றது. இந்த ச் சொற்களை ஏற்ற முறையில் உச்சரித்தும், அவற்றைப் பயன் படுத்தி இருக்கும் முறையை ஊன்றிக் கற்றும் வரின் பெரும் பயன் விளையும்.
அதிகாரம் 1
லக்ர, ழகர, ளகர பேதச் சொற்களும் அவற்றைப் பயன்படுத்தும் முறையும் :
தமிழ் மொழியிலேயுள்ள உயிர்மெய் எழுத்துக்கள் வல் லினம், மெல்லினம், இடையினம் என்று அவற்றின் ஒலிக் கேற்பப் பிரிக்கப்படும். ல, ழ, ள என்ற மூன்று எழுத்துக்களும் இடையினத்தைச் சேர்ந்தவை. இவற்றுள், ழகரம் வேறு எம் மொழியிலும் இல்லாமல் தமிழ் மொழிக்கே சிறப்பாக அமைந்த தால், இது " சிறப்பு ழகரம் " எனப்படும். ளகரம் தமிழ் மொழிக்கும் வடமொழிக்கும் பொதுவாயிருப்பதால், இது * பொது ளகரம் " எனப்படும். இவற்றை முறையே " மவ் வளவு ", " கொம்பளவு " என்று வழங்குவதும் உண்டு. லகரத் திற்குச் சிறப்புப் பெயர் எதுவும் கிடையாது.

Page 10
2 தமிழ் மொழி விளக்கம்
நாரையின் அலகு மிகவும் நீளமானது (பறவையின் வாய்). பண்டைத் தமிழர் அழகைத் தெய்வமென வணங்கினர். பெண் பறவையை அளகு என்று வழங்குவார்கள்.
உழவர் அலம் கொண்டு நிலத்தை உழுவார்கள் (கலப்பை). சுடுகாட்டில் அழம் எரிவதைக் காணலாம் (பிணம்). நெய்தல் நிலத்தில் உப்பு அளம் காணப்படும் (உப்பு இருக்கும்
நிலம்). பிறப்பிலே அலி யானவரைப் பையன்கள் கேலி செய்தார்கள்
(ஆணும் பெண்ணும் அற்ற தோற்றம்). அரசன் காட்டை அழித்து நாடாக்கினன் (கெடுத்தல்). பூவிலுள்ள தேனையுண்ட அளி மயங்கியது (வண்டு).
கடலின் அலையுள் அகப்பட்டவன் தத்தளித்தான் (திரை). கந்தன் தனது நண்பனை விருந்துக்கு அழைத்தான் (கூப்பிடுதல்). எலி அளையுள் நெல்லைச் சேகரித்து வைத்தது (புற்று). மனிதன் அல்லல் இல்லாது வாழ முயலுகின்ருன் (துன்பம்). சிந்துண்ட தானியத்தைக் கூட்டி அள்ளல் வேண்டும். தேவதாசன் பாம்பினல் கடியுண்டதும் ஆலம் ஏற உயிர்துறந்
தான் (விஷம்). ஆழம் அறியாது காலை விடாதே. பரிசில் பெற்ற பையன் அளவு கடந்து ஆலித்தான் (மகிழ்ச்சி
அடைதல்). பூமியை ஆழி சூழ்ந்திருக்கின்றது (கடல்). ஆளியை மிருகங்களுக்கு அரசனென்று அழைப்பார்கள்(சிங்கம்). கரும்பை ஆலையில் பிழிந்து சாருக்குவார்கள். முதலாளி வேலை ஆளை அழைத்தான். ஆல் பரந்து வளரும் ஒரு மரம். ஆழ் கடலில் கப்பல் செல்லும் (ஆழமான). இருபது பேரும் ஆள் ஒருவருக்குப் பத்து ரூபா வீதம் பெற்ருர்
கள். இலவு மெத்தையில் தூங்குதல் உடலுக்கு நலம் தரும் (இலவம்
பஞ்சு). மண்டோதரி, மைந்தனின் இழவுச் செய்தியைக் கேள்வியுற்று
மண் மேல் வீழ்ந்தாள் (மரணம்). வேடன் மானுக்கு இலக்கு வைத்து அம்பால் எய்தான் (குறி). கைகேசியின் கபட வார்த்தைகள் தசரதனின் உள்ளத்தை
இளக்கியது (உருகச் செய்தது). குறிப்பு சொற்களின் வேறுபட்டி பொருளே. நான்காம் அதிகாரத்தின்கீழ்க் காண்க.

சொற் பயிற்சி 3.
எவரையும் இழித்துக் கூறுதல் ஆகாது (தாழ்த்துதல்). அவன் வேடிக்கையைப் பார்த்துப் பல் இளித்தான் (பல்லைக்
காட்டுதல்). மரத்தின் இலை சூரிய வெப்பத்தால் உதிர்ந்தது. பெண்களுக்கு இழையில் மோகம் அதிகம் (ஆபரணம்).
அதிக வேலையால் வேலன் உடல் இளைத்தான் (மெலிதல்).
காற்றில் உலவுதல் உடலுக்கு உறுதி அளிக்கும் (உலாவுதல்). உழவுத் தொழிலே மனிதனை வாழ வைக்கின்றது (கமம்). உளவுத் தொழிலைச் செய்பவனே களவைக் கண்டு பிடிப்பான்
(ஒற்றன் தொழில் - இரகசியமாக அறிதல்). உழவன் உழுது நெல் விதைத் தான். நெடுநாட்களாகச் சேகரித்து வைத்த தானியம் உளுத் துப்
போனது (புழு அரித்தல்). பொற் கொல்லன் உலையில் பொன்னை உருக்கினன் (கொல்லன்
உலை). வறியவன் உழைப்புப் போதாமல் அவன் குடும்பம் வாடியது
(ஊதியம்). வேலன், உடல் உளைப்பால் ஊக்கம் குறைந்தான் (வருத்தம்). உல்லம் என்பது ஒருவகை மீனைக் குறிக்கும். அருள் உள்ளம் படைத்தவர்கள் உயர்வு தாழ்வு பாராட்டமாட்
டார்கள் (மனம்). பூனை எலியைப் பிடிக்கும். எளிய வாழ்வும் உயரிய நோக்கும் மனிதனை உயர்த்தும் (ஆடம்
பரமற்ற). காலையில் கிழக்கே உதிக்கும் எல்லி மாலையில் மேற்கே மறையும்
(சூரியன்). மூடனின் வார்த்தையைக் கேட்டு எள்ளி நகைத்தார்கள்
(இகழ்ந்து). கல்விக்கு எல்லை இல்லை (முடிவு). எள்ளை ஆட்டினல் எண்ணெய் எடுக்கலாம். மணியின் ஒலி கேட்டதும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு
சென்ருர்கள் (சத்தம்). கள் குடியை ஒழித்தால் சமூகம் முன்னேறும் (இல்லாமல்
செய்தல்). உண்மையை ஒளித்தல் பாதகமான செயலாகும் (மறைத்தல்). மக்கள் கலகம் செய்யாது ஒற்றுமையாக வாழவேண்டும். பிள்ளைகள் கல்விக் கழகம் சென்று கற்ருர்கள். களகம் என்பது பெருச்சாளியின் மற்ருெரு பெயர்.

Page 11
தமிழ் மொழி விளக்கம்
சோற்றைக் கலத்திலிட்டு வயிருர உண்டான் (பாத்திரம்). இராவணன் போர்க் களத்தில் உயிர் துறந்தான் (போர்செய்யு
மிடம்).
திரை நிறைந்த கலி கடந்து திரவியம் தேடச் சென்றன் (கடல்).
காலத்தை வீணே கழித்தல் ஆகாது (நீக்கல்).
புலவன் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்பான் (மகிழ்ச்சி
அடைதல்).
அதிக நேரத்தின் பின் கூட்டம் கலைந்தது (குலைதல்). நீர்வளம் நிறைந்த நாட்டில் கழை நன்கு வளரும் (கரும்பு). குற்றம் களைந்து குணத்தைக் கொள்ளல் கற்றறிந்த மாந்தர்
கடன் (நீக்குதல்).
கல் கொண்டு கட்டப்படும் வீடுகள் பலமானவை. கள் உண்போர் ஒழுக்கம் அற்றவர்களாகக் கருதப்படுவர்.
குளிர்காலம் முதியவர்களுக்கு ஏற்றதல்ல (நேரம்). காளம் கருமை நிறம் கொண்டதனுல் மழைபெய்வதாகக் கூறி
ஞன் (மேகம்). சேனைத்தலைவன் காலாள் உதவி கொண்டு கடும்போர் புரிந்தான்
(காலாட்படை), காளான் ஒருவகைத் தாவரம். காலியைப் பின்தொடர்ந்து இடையர்கள் சென்ருர்கள் (பசுக்
கூட்டம்). காழியென்பது சம்பந்த சுவாமிகள் பிறந்த இடமாகும். அவன் காளியை வணங்கியே கடமையைச் செய்வான் (பெண்
தெய்வம்).
அவன் காலையும் மாலையும் தேகப்பயிற்சி செய்வான். * காளை " என்ற சொல் இளமையைக் குறிக்கும். ஆலயத்துள் செல்லும்போது கால் கழுவிச் சுத்தமாகச் செல்ல
வேண்டும். மரத்தின் காழ் நிலத்தில் விழுந்து முளைத்தது (கொட்டை). கிழவிப் பருவம் அடைந்த தன் தாயைத் தத்தன் பாதுகாத்தான்
(மூப்புடையவள்). இந்தக் கிளவிக்குப் பல கருத்துக்கள் உண்டு (சொல்)
புலியைக் கண்டதும் பையனுக்குக் கிலி உண்டானது (பயம்).
மிகவும் நீளமான துணியைக் கிழித்து உடுத்தான் (துண்டு
செய்து). s
சிலர் கிளி வளர்த்தலைப் பொழுது போக்காகக் கொள்ளுகிருர்
S56T.

சொற் பயிற்சி
கற்ருேர் உயர்ந்த குலத்தவராக எண்ணப்படுகிருர்கள் (சாதி). தாமரைக் குளத்தில் வாத்துகள் நீந்தி விளையாடின (தடாகம்). கறிகளுள் குழம்பும் ஒன்ருகும். குளம்பு தேய்ந்ததால் மாடு ஒட முடியவில்லை. குழந்தைகளுடன் குலவிப் பேசுவர் (அன்பு காட்டுதல்). குழவியின் மழலை யாழினும் இனிதாம் (குழந்தை). தேன் கூட்டைச் சுற்றிக் குளவிகளைக் காணலாம் (தேனி). உழவன் குழி தோண்டி வாழையை நட்டான் (கிடங்கு). குளித்துத் தூய்மையாக இருத்தல் ஒவ்வொருவனுக்கும் அவ
சியம். திராட்சைப் பழங்கள் குலை குலையாகத் தொங்கின. ஆடு குழையை விரும்பி உண்ணும். கூலம் விற்று வயிறு வளர்ப்பவன் வறுமையால் வா டினன்
(தானியம்). r கூழம் தரும் எண்ணெய் உடலுக்கு உறுதியை அளிக் கும்
(எள்ளு). கூளம் அதிகம் பெருகின் நோய்க்கு இடமாகும் (குப்பை). குப்பன் கூலிக்கு வேலை செய்து குடும்பத்தைக் காத்தான். அதிகமானேர் இரவில் கூளிக்கு அஞ்சுவார்கள் (பேய்). அரசன் கொலு வீற்றிருக்கையில் அமைச்சன் அறிவுரை பகர்ந்
தான் (சபையிலிருத்தல்).
கொழுத்திருந்தவன் வலியற்றவனை அடித்தான். நெருப்பைக் கொளுத்தித் தண்ணீரைச் சுடவைத்தான். உயிரைக் கொல்லுதல் பெரும் பாதகமாகும். கொள்ளு குதிரையின் சிறந்த உணவாகும் (ஒருவகைத் தானி
யம்). மகனின் மணக்கோலம் கண்டு தாய் மகிழ்ந்தாள் (அலங்கரிப்பு
உருவம்). பூமியின் வடிவம் கோளம் என்று கூறுகிறர்கள் (உருண்டை), குருடன் கோல் கொண்டு வழி நடந்தான் (தடி). கோள் சொல்லித் திரிபவன் வாழ்வைக் கெடுப்பவன் (புறம்
துாற்றல்). • •W துன்பம் வந்த காலத்தும் மனத்தைச் சலிக்க விடக்கூடாது
(இளைக்க). . . . . காத்திரம் இல்லாத வாளி தண்ணீர்ப் பாரம் தாங்கமுடியாமல்
சழித்தது (சப்பையாதல்). - இருமல் நோயால் வருந்துவோர்கள் சளி அதிகம் கொட்டுவார்
கள் (கபம்).

Page 12
6 தமிழ் மொழி விளக்கம்
தொழிற்சாலை நாட்டின் செல்வத்தை அதிகப்படுத்தும். அமைதி வாழ்வைச் சாழை (சாளை) அளிக்கும் (குடிசை).
நாவுக்கரசர் சூலை நோயால் நலிந்தார். சூளை வைத்துச் சுண்ணும்பு எடுப்பார்கள். தாய் சூல் கொண்டு பிள்ளையை ஈன்று அன்புடன் வளர்ப்பாள்
(கருப்பம்). நாலு புறமும் கடல் சூழ்ந்த பூமி தீவு என்று பெயர் பெறும்
(சுற்று). பதினன்கு ஆண்டுகள் காட்டில் வாழ்வதாகச் சூள் கொண்டு
இராமன் நாட்டைத் துறந்தான் (சத்தியம்).
சோழம் என்பது மூவேந்தர் ஆண்ட நாடுகளுள் ஒன்ருகும். சோளம் உணவுப் பொருள்களுள் ஒன்ரு கும்.
திருக்கேதீச்சரம் ஒரு பாடல் பெற்ற தலம் (இடம்). மேடையின் தளம் பலமாக இல்லை (அடிப்பக்கம்).
பெரியோரைத் தலை குனிந்து வணங்கல் சிறந்த பண்பாகும். மழையின்றேல் மரத்தில் தழை காண்பது அரிது (தளிர்). அடிமைத் தளை நீங்கிய வாழ்வை மனிதன் விரும்புவான் (கட்டு). யாழ்ப்பாணத்தவருக்குத் தாலம் மிகுந்த பயனை அளிக்கின்றது
(பனை). இசைக்குத் தாளம் இன்றியமையாதது. மணமான பெண்கள் தாலி அணிவார்கள்.
தாழி நிறைய நீர் இருந்தது (குடம்). தாளித்தல் உணவுக்குச் சுவையை ஊட்டும்.
பொருட்களை நிறுத்தற்குத் துலே உதவுகின்றது (தராசு). ஆணி கொண்டு மரத்தில் ஒரு துளை செய்தான் (துவாரம்).
தாமோதரன் தடித்த தோலன் என்று அழைக் கப்பட்டா ன்
(தோலையுடையவன்). ஒருவனின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு பற்றுபவன்
தோழன் (நண்பன்). * v இராவணன் இருபது தோளன் (தோள்களையுடையவன்). மிகப் பழைய காலத்தில் மிருகங்களின் தோல் உடையாக உதவி
ԱՒՑil. தோள் வலிமையிற் சிறந்தோரே படைத் தலைவராக அமைவார்
கள் (புயம்). நீலம் நிறங்களுள் ஒன்று. இருபது அடி நீளம் உள்ள அறையில் அவன் வாழ்ந்தான்.

சொற் பயிற்சி 7
உடற் பலம் இல்லாதவன் வாழ்க்கையில் இன்பம் அடைவது
அரிது (வலிமை).
உண்டபின் பழம் அருந்துவது உடலுக்கு நன்மை தரும்.
ஆலயங்களில் பலியிடுவது பெரும் பாதகம் ஆகும்.
பொய் பேசுவோர் பெரும் பழிக்கு ஆளாவர் (குற்றம்).
பல்லி சொன்னல் பலன் பார்ப்பவர்கள் உண்டு.
இளமையிலேயே பள்ளிப் படிப்பை முடித்தல் வேண்டும் (பாட
ه(رouتن gEIT
வாழ்க்கையில் பீழை வரின் அதைச் சகித்தல் வேண்டும் (துன்
Lu Lfb). − உடல் வெப்பத்தால் கண்களிலிருந்து பீளை சாறும் (கண்மலம்). புலி ஒரு கொடிய மிருகம். புளிக் குழம்பு கறிவகைகளுள் ஒன்று (ஒரு சுவை). புழுகு ஒரு வாசனைப் பொருள். புளுகு பேசுபவன் தன் மதிப்பை இழப்பான் (பொய்).
மாடு புல் உணவை விரும்பி உண்ணும். மாலை நேரத்தில் புள் இனம் தங்கள் கூடுகளைத் தேடிச்செல்லும்
(பறவை). வயலில் பயிர் பொலிந்து வளர்ந்தது (மிகுதி). . மழை பொழிந்ததால் விளைவு அதிகமானது (சொரிதல்). அவன் கல் பொளிந்து வயிறு வளர்த்தான் (கல் கொத்துதல்). மலையிலிருந்து வீழும் அருவி கடலுள் பாயும். மழை இல்லாவிடின் உயிர் வாழ முடியாது. பெரியோரை மாலிகை அணிந்து வரவேற்பார்கள் (மாலை). அரசர் மாளிகையில் வாழ்வார்கள் (அரண்மனை); திருமாலை மால் என்றும் வழங்குவார்கள். பிறந்தவர் யாவரும் மாள்தல் இயல்பு (இறத்தல்). முழவு தோற்கருவிகளுள் ஒன்று (மத்தளம்) பன்றியை முளவு என்று சொல்வார்கள். கன்று தன் தாயின் முலை நோக்கி ஓடிப் பால் உண்டது (மடி), மலைகளில் முழையைக் காணலாம் (குகை). நிலத்தில் முளை விதைத்து நீர் ஊற்றின் மரம் வளரும் (விதை) வீட்டின் மூலைதோறும் படங்கள் தொங்கின (கோணம்). மூழை கொண்டு சோறு அள்ளி உண்டான் (அகப்பை). மூளையைப் பயன் படுத்தினுல் அறிவு வளரும்.

Page 13
8 தமிழ் மொழி விளக்கம்
மணப் பெண்ணுக்குத் தாலி அணிதல் வழமை (வழக்கம்). ஆறு உள்ள நாடுகளில் வளமை நிறைந்திருக்கும் (செழிப்பு),
இறைவனை வலம் வந்து வணங்குவார்கள் (வலது பக்கமாகச்
சுற்றுதல்). நீர் வளம் நிறைந்த நாடே செழிப்புற்ருேங்கும் (வளப்பம்).
வயிற்று வலி தாங்க முடியாத துன்பம் தரும். காட்டு வழி செல்வதற்கு அபாயமானது. ஐம்பூதங்களுள் வளி ஒன்ருகும் (காற்று). பெண்களிலும் ஆண்களுக்கு வலு அதிகம் (பலம்). வழு இல்லாமல் எழுத நாம் கற்க வேண்டும் (பிழை).
வலையில் சிக்கிய மிருகம் தப்புவது அரிது. வழை என்பது ஒருவிதப் புன்னை மரம். வீட்டிற்கு வளை வைப்பதற்குப் பனைமரம் பயன்படும்.
வாலி என்போன் கிட்கிந்தை மன்னனுக விளங்கினன். * நீடூழி வாழி' என்று தன் நண்பனை வாழ்த்தினுன் (வாழ்க). கிணற்றிலிருந்து வாளி கொண்டு தண்ணீர் அள்ளினன்.
நாய் வாலை ஆட்டி நன்றியைத் தெரிவிக்கும். பந்தலை வாழை கொண்டு அலங்கரிப்பார்கள். போர் வீரன் வாளை உருவி எதிரியைக் கொன்ருன்.
தீமையை விலக்குதல் மனித வாழ்க்கையை உயர்த்தும் (நீக்
குதல்).
மாணவருக்குத் தெரியாதவற்றை விளக்குதல் ஆசிரியரி ன்
கடமையாகும் (விளங்க வைத்தல்)
காடு விலங்கு வாழும் இடம் (மிருகம்). V பெரியோர்களின் பெயர் விளங்குதல் நாட்டுக்குப் பெருமைதரும்
(நிலைபெறுதல்).
நாட்டில் விழா நடத்துவது அதிக நன்மை தரும் (கொண்டாட்
l-lb). விளா ஒருவித மரம். தூக்கத்திலிருந்து விழித்ததும் கடமையைச் செய்யத் தொடங்
கினன். அவன் இராமனை விளித்து வேண்டியதைப் பெற்ருன்(அழைத்து). போர்க் காலத்தில் பொருட்களின் விலை அதிகம் ஏறும். நன்மையை விழைதலே நன்மை பயக்கும் (விரும்புதல்). நெல் விளையாவிடின் பஞ்சம் பெருகும்.

GaFri, uu? gibî
வெல்லம் கருப்பஞ் சாற்றிலிருந்து எடுக்கப்படும் (சர்க்கரை). அதிக மழையால் வெள்ளம் பெருகியது.
வேலம் குச்சி கொண்டு பல் துலக்கலாம் (ஒரு மரம்). வேழம் மிருகங்களுள் மிகப் பெரியது (யானை). வேலை செய்யாதவன் வீணே காலங் கழிப்பவன். வேளைக்கு உண்டு உறங்கல் உடலுக்கு உறுதிதரும்(ஏற்ற நேரம்). பண்டைக்காலப் போர்க் கருவிகளுள் வேல் ஒன்ருகும்.
மன்மதனுக்கு வேள் என்ற மற்ருெரு பெயர் உண்டு.

Page 14
0 தமிழ் மொழி விளக்கம்
அதிகாரம் II
ரகர, றகர பேதச் சொற்களும் அவற்றைப் பயன் படுத்தும் முறையும்:
ா என்ற எழுத்து இடையினத்தைச் சேர்ந்ததால், இது * இடையின ரகரம் " எனப்படும். ற என்ற எழுத்து வல்லினத் தைச் சேர்ந்ததால், இது " வல்லின றகரம் " எனப்படும்.
மரம் அறுப்போன் வாளை அரம் கொண்டு தீட்டினன் (ஒரு கருவி). ஈதல் ஒரு சிறந்த அறம் என்று கருதப்படுகின்றது (நல்ல நெறி).
சைவர்கள் அான் வழிபாடு செய்வார்கள் (சிவன்). ஒவ்வொருவரும் அறன் வழி ஒழுகவேண்டும் (நீதி).
சிறுவன் பழத்தைக் கத்தியால் அரிந்து உண்டான் (வெட்டுதல்). எமது கடமையை நாம் அறிந்து செய்யவேண்டும் (தெரிதல்).
அலரி பூ மரங்களுள் ஒன்று. நோய் தாங்கமுடியாது அலறி அழுதான் (கதறி).
புத்தகத்தின் அருகு கிழிந்திருக்கிறது (பக்கம்). அறுகு என்பது ஒருவிதப் புல். குழந்தைக்கு அருத்தல் செய்தல் அவசியம் (உண்பித்தல்). தானியம் விளைந்தவுடன் அறுத்தல் வேண்டும் (வெட்டுதல்). உளுந்தை அரைத்துப் பலகாரம் செய்வார்கள். நான்கு அறைகள் உள்ள கட்டிடத்தில் அவன் வாழ்ந்தான். இரந்தவனுக்கு வயிறு ஆர உணவு கொடுத்தான் (நிறைய).
சூடுள்ள உணவை ஆறவைத்து உண்ண வேண் டு ம் (சூடு
தணிய).
துன்பப்படுபவர்களுக்கு இரக்கம் காட்டவேண்டும் (கருணை). இறக்கம் உள்ள இடத்தில் வண்டி விரைவாகச் செல்லும் (சரிவு). வாழும் வகை அறியாமல் இரந்து உண்டான் (பிச்சை எடுத்து). பிறந்தவர் எவரும் இறந்து போதல் நிச்சயம் (மரித்தல்). அழுதவனைக் கண்டு அவன் இரங்கினன் (அருள் காட்டினன்). கிணற்றுள் இறங்கிப் பிள்ளையைக் காப்பாற்றினன் (கீழுக்குச்
செல்லல்).
அமாவாசை இரவு மிகவும் இருட்டாயிருக்கும்: இறவு கடலில் வாழும் ஒரு பிராணி (இருல்),

சொற் பயிற்சி 1
மக்களிடையில் அமைதி இருந்தால் நாடு முன்னேறும். வியாபாரி தன் பணத்தை இறுக்கும்படி கடன்காரனைக் கேட்
டான் (கொடுத்தல்).
இரும்பு மிகவும் பயனுள்ள ஓர் உலோகம். இறும்பு குறவர் வாழும் இடமாகும் (மலை).
காகம் தன் குஞ்சுக்கு இசை ஊட்டியது (உணவு). மக்களுக்கு இறை வணக்கம் இன்றியமையாதது (கடவுள்). சரல் என்னும் உறுப்பிலிருந்து பித்தம் உண்டாகின்றது. மனிதனுக்கு ஈறல் ஏற்படின் அது அவன் உடலையும் பாதிக்கும்
(துக்கம்).
உரல் உருண்டு காலில் காயம் உண்டாக்கியது. வாழ்க்கையில் மக்கள் துன்பம் உறல் இயற்கை (அடைதல்). உடல் உரவு இல்லாவிடின் வாழ்க்கையில் இன்பம் அடைதல்
அரிது (வலிமை). மக்களிடம் உறவு மனப்பான்மை நிலவுதல் அவசியம் (நட்பு).
காட்டில் வாழ்ந்தோர் மரஉரி தரித்தார்கள் (பட்டை). கண்ணன் உறியிலிருந்த வெண்ணெயைத் திருடினன்.
சிறிது நாட்களுள் அவன் உரு மாறிவிட்டான் (தோற்றம்). தனையனை இழந்த தந்தை உறு துன்பம் உற்ருன் (மிகுந்த). திருக்குறளுக்குப் பரிமேலழகர் சிறந்த உரை எழுதியிருக்கின்ருர்
(கருத்து). நாட்டில் உறைவோர் அமைதியான வாழ்க்கையைக் காண்பர்
(வாழ்தல்). இனிப்புப் பண்டங்களை நோக்கி எறும்பு ஊரக் காணலாம். கடலையை ஊற வைத்தே அவித்து உண்பார்கள். கட்டற்கரையில் ஊரி பலவற்றைக் காணலாம் (ஒருவகைச் சங்கு). நிலத்தில் படும் எண்ணெய் ஊறிப் பரவும் (கசிந்து). அநுமான் இலங்கையைத் தன் வாலால் எரித்தான். மாங்காயைக் கல்லால் எறிந்து விழுத்தினன். மழையில்லாமல் ஏரியிலுள்ள நீர் வற்றியது (குளம்) மரத்தில் ஏறிப் பழங்களைப் பறித்தான். சிங்கம்" ஒரு கொடிய மிருகம். தீங்குசெய்வோரை அரசினர் ஒறுப்பர் (தண்டித்தல்). எதிரிக்குப் பயந்து காட்டில் காந்தான் (மறைந்தான்). மாலைப் பொழுதில் இடையன் பாலைக் கறந்தான்.

Page 15
12 தமிழ் மொழி விளக்கம்
விறகு எரிந்தபின் கரியைக் காணலாம். சோறும் கறியும் வயிருர உண்டான். கருவிலமைந்த குளவியும் கலங்கும்படி இடிமுழக்கம் செய்தது.
(கருப்பம்). . மேகம் இருண்டு கறுத்து மழை கொட்டியது.
கடற் கரையில் உலவி வருதல் உடலுக்கு உறுதி தரும். எமது வாழ்க்கையில் கறை வராது முயலல் வேண்டும் (குற்றம்).
ரிே பாம்பின் பகைவன். வைத்தியர் வயிற்றைக்கிறி நோயைக் குணப்படுத்தினர்.
குரங்கு சேட்டை செய்யும் ஒரு மிருகம். யானையின் குறங்கு மிகவும் பெரியது (தொடை),
தாய் தந்தையர் இருமுது குரவர் என்று அழைக்கப்படுவர் (பெரி
Guusrri).
குறவர் தேனும் தினையும் உண்டு களிப்பர் (மலையில் வாழும்
குலத்தவர்).
குருவை வணங்கிப் போற்றல் வேண்டும்.
சிறுவர் குறுநடைகண்டு பெற்ருேர் மகிழ்வர் (குறுகிய).
அதிகாலையில் குருகு பல சேர்ந்து ஒலிக்கும் (பறவை). வறியவர் செல்வரைக் குறுகுதல் இயல்பு (கிட்டுதல்). திருடரைக் கண்டதும் நாய் குரைத்தது. தன் குறைகளைக் காண்பவனே வாழ்க்கையில் முன்னேறுவான். அவன் விருந்தினரை அன்புகூர வீரவேற்றன் (மிகுதியாதல்). கூட்டத்தின் நிகழ்ச்சிகள் முடிந்ததும் நன்றி கூறப்படும். வீட்டுக் கூரையில் நின்று சேவல் கூவிற்று. • .ف மணம் நடைபெறும்போது மணமகன் மணமகளுக்குக் கூறை
வழங்குவான். கோரை ஒருவிதப் புல்லின் பெயர். கல்லில் ஒரு பெரிய கோறை உண்டானது (துளை). மரத்திலிருந்து உதிர்ந்த சருகு பயளையாய்ப் பயன்படுத்தப்படும்.
(காய்ந்த இலை). * ஆனைக்கும் அடி சறுக்கும் குதிரைச் சாரி வேட்டைக்குச் சென்ருன் (குதிரைப் பாகன்). கண்களிலிருந்து பீளை சாறியது. பெரியோரைச் சாருதல் பெரும் பயன் விளைக்கும் (சேர்தல்). கரும்புச் சாறு சர்க்கரை செய்வதற்குப் பயன்படும்.
p
என்று சொல்வார்கள் (வழுக்கும்).

சொற் பயிற்சி 3
புத்த குருமார்கள் தலையின் மயிரைச் சிரைப்பார்கள் (மொட்டை
அடித்தல்). இராவணன் சீதையைச் சிறை வைத்தான் (மறியல்). சீரிய வாழ்வே மக்களை உயர்த்தும் (சிறப்பான). பூனை நாயைக் கண்டதும் சீறியது (கோபித்தல்).
உணவு செரிக்காமல் நோய் உண்டானது (சமித்தல்) பாம்பு கடித்ததும் விடம் உடம்பு எங்கும் செறிந்தது (பரவுதல்). இனம் இனத்தைச் சேரல் இயற்கையே (கூடுதல்). செல்வரை நாடி வறியவர் சேறல் வியப்பன்று (செல்லுதல்). துக்கத்தைத் தாங்கமுடியாது கண்ணீர் சொரிந்தான் (கொட்டு
தல்). புண்ணின் வருத்தம் தாங்கமுடியாது சொறிந்தான்.
அழுக்கில்லாத ஆடையையே தளிக்கவேண்டும் (உடுத்தல்). விறகுவெட்டி கோடரிகொண்டு மரத்தைத் தறித்தான். சமமான தரையில் நெல் நன்முக விளையும் (பூமி). மரவேலை செய்பவன் மரத்தில் ஆணியைத் தறைந்தான் (தைத்
த ல்). - திரை கடல் ஒடியுந் திரவியந் தேடவேண்டும் (அலை). திறை கட்டி அரசாண்ட சிற்றரசர் பலர் பண்டைக்காலத்தில்
இருந்தனர் (கப்பம்). திருடனைத் துரந்து காவலாளர் சென்றனர் (தொடர்ந்து). இராமன் அரசைத் துறந்து நாடு விட்டுக் காடு சென்ருன் (விட்டு
நீங்குதல்). வேலைக்காரன் துரையிடம் சென்று முறையிட்டான் (அதிகாரி). நாட்டின் பொருளாதார நிலைக்குத் துறைமுகம் இன்றியமை
யாதது. கூடையிலுள்ள பழங்களுள் நல்லவற்றைத் தெரிந்து எடுத்தார்
கள் (ஆராய்தல்). நெருப்பிலிருந்து பொறிகள் நாலாபக்கமும் தெறித்தன (சிந்து
த ல்). . . . . . சிறந்த நூல்களைத் தோல் செய்தே கற்க வேண்டும் (தெரிந்
தெடுத்தல்). தேறல் உண்ட வண்டு மயங்கிக் கிடந்தது (தேன்). கல்லின்மேல் வண்டி ஏறித் தூள் தூளாக நருக்கியது (நொருக்
குதல்). கத்தியால் ஒலையைத் துண்டு துண்டாக நறுக்கினன் (வெட்டு
தல்).

Page 16
14 தமிழ் மொழி விளக்கம்
வயது முதிர்ந்தவர்கள் தலையில் நரை மயிரைக் காணலாம். வண்டுகள் நறை உண்டு களித்திருக்கும் (தேன்).
வாழ்க்கையில் நாரி பாதிப் பங்கு பெறுவாள் (பெண்). மலர்களிலிருந்து நறுமணம் எங்கும் நாறியது (மணத்தல்)
தில்லையில் நிருத்தம் செய்பவனைச் சைவர்கள் வணங்குவார்கள்
(நடனம்). நாள்தோறும் நான்கு மணிக்குத் தொழிலாளர் வேலை நிறுத்தம்
செய்வார்கள் (நிற்பாட்டல்). மாணவர்கள் நிரையில் நின்று தேகப் பயிற்சி செய்வார்கள்
(வரிசை). பஞ்சு நிறையில் குறைந்த ஒரு பொருள் (பாரம்). கையைக் கதவுள் கொடுத்து நெரித்தான். உயர்ந்த நெறியில் வாழ்வோரே உயர்ந்தோர் எனப்படுவர்(வழி). உயிர்களிலெல்லாம் பரந்து செல்லும் அன்பு அருள் என்று
சொல்லப்படும் (பரவுதல்). மாலையில் பறவைகள் தங்கள் கூடுகளை நோக்கிப் பறந்து செல்
லும். பூமியைப் பாவை சூழ்ந்திருக்கின்றது (கடல்). பறக்கும் பிராணிகள் பறவை என்று வழங்கப்படும்.
பரி ஏறுதல் அரசரின் கலைகளுள் ஒன்ருகும் (குதிரை). பூக்களைப் பறித்து அழகிய மாலை தொடுத்தான் (பிடுங்குதல்).
பார்வதிக்குப் பசை என்ற மற்ருெரு பெயரும் உண்டு. பிண வீடுகளில் பறை முழக்கத்தைக் கேட்கலாம்.
பாரை என்ற கருவி கொண்டு கல் நிலத்தைத் தோண்டலாம். கிணறு தோண்டும்போது காணப்படும் பாறையை வெடி
கொண்டு அகற்றுவார்கள் (பெரிய கல்). பாலில் பிரை ஊற்றினுல் தயிராகும் (உறை மோர்). நல்லவர் நட்பு வளர்பிறை போன்றது (இளஞ் சந்திரன்). புரம் என்பது பட்டணத்தைக் குறிக்கும் ஒரு பழைய சொல். வீட்டின் பின்புறம் முழுவதும் தோட்டம் காணப்பட்டது (பக்
கம்). கத்தரிக்காயைப் பொரித்து உண்டான். எலியைப் பொறி வைத்துப் பிடிப்பார்கள்.
பொருப்பு நாட்டுக்குச் சிறந்த அரணுகும் (மலை). ஒவ்வொருவரும் தம் பொறுப்பை உணரவேண்டும்.

சொற் பயிற்சி 15
அவன் காலில் ஒரு பகுதி மரத்து விட்டது (விறைத்தல்). ஒருவர் செய்த நன்றியை மறத்தல் ஆகாது. மரம் மாந்தருக்குப் பெரிதும் பயன்படும். மறம் வழிச்செல்லல் இழிந்தோர் இயல்பாகும் (தீய நெறி). பிறந்தவ ரெல்லாம் மரித்தல் நிச்சயம் (இறத்தல்). ஆற்றை மறித்துக் கட்டி நீர் பாய்ச்சுவார்கள் (தடுத்தல்). மரு மலிந்த மலர்கள் மக்களை மகிழ்விக்கும் (வாசனை). தன் வேலையை விட்டு மறு வேலை செய்யத் தொடங்கினன்
(வேறு).
மாை ஒரு வகை மானினத்தைச் சேர்ந்தது. உண்மையை மறைத்தல் கேடு விளைக்கும். மாரன் என்பது மன்மதனின் மற்றெரு பெயர். மாறன் என்பது பாண்டியனின் மற்ருெரு பெயர். மாரி காலத்தில் மரங்கள் செழித்து வளரும் (மழை). இரவும் பகலும் ஒன்றன்பின் ஒன்ருய் மாறி வரும் (மாற்றமடை
தல்),
முருக்கு முள் நிறைந்த ஒரு மரம். முறுக்கு பலகார வகைகளுள் ஒன்று. உயிர்களை வருத்தல் பெரும் பாதகச் செயல் (துன்புறுத்தல்). கடலையை வறுத்து உண்பார்கள் (வறுவல் செய்து). வேடர் வரையில் வாழும் ஓர் இனத்தவர் (மலை). வறை கறி வகைகளுள் ஒன்று. அவன் விரகு செய்து எதிரியை வென்ருன் (தந்திரம்). சமையல் செய்வதற்கு விறகு அவசியம். மோதிரத்தை விரலில் அணிவார்கள். வீமன் விறலுடைய வீரனப் விளங்கினன் (வலிமை).
ஆகாய விமானம் விரைவாகச் செல்லும் (வேகம்). குளிர் அதிகமானல் உடல் விறைக்கும்.

Page 17
6 தமிழ் மொழி விளக்கம்
அதிகாரம் III
ணகர, னகர பேதச் சொற்களும் அவற்றைப் பயன் படுத்தும் முறையும் :
ண, ன என்ற எழுத்துக்கள் மெல்லினத்தைச் சேர்ந்தவை.
இலக்கண அமைப்பில் ணகர மெய் டகர மெய்யைத் தொடர்ந்து வரும். (உ-ம். தொண்டு, தண்டல்). இங் கன ம் வரும் ணகரம், டண்ணகரம் " எனப்படும். இதே போல னகர மெய் றகர மெய்யைத் தொடர்ந்து வரும். (உ-ம். நன்றி, தென்றல்). இங்ங்ணம் வரும் னகரம், றன்னகரம் " எனப்படும்.
தாய் குழவிBை அணைத்து முத்தமிட்டாள் (சேர்த்து). இரப்போன் வேண்டிய அனைத்தையும் வள்ளல் ஈந்தான் (எல்லா
வற்றையும்). அண்ணம் என்பது மேல் வாயைக் குறிக்கும். அன்னம் என்ற பறவை ஆதிகாலத்தில் இருந்ததாகக் கருதப்
படுகிறது. தமையனின் மனைவியை அண்ணி என்று அழைப்பார்கள். அன்னியர் ஆட்சியை எவரும் விரும்பார் (பிறர்).
அண்டை வீட்டில் வாழ்வோரிடம் அன்பு செலுத்தல் அவசி
யம் (அயல்). அவர் வீட்டுக்குச் சென்ற அன்றைக்கே பிரயாணமானேன். அண்ணனின் உதவி கொண்டு தம்பி வாழ்ந்தான். அன்னையின் அன்பு தன்னலம் அற்றது (தாய்). பேராதனை கண்டிக்கு அண்மையில் இருக்கிறது (கிட்ட). செல்வம் அன்மையால் அவன் இரந்து உண்டான் (இல்லாமை). அரசன் நாட்டை அரண் செய்து பாதுகாக்க வேண்டும் (காவல்). சிதம்பரத்திலே அான் ஆடும் காட்சியைக் காணலாம் (சிவன்). சுவரில் ஆணி அடித்துப் படத்தைத் தொங்கவிட்டான். ஆனி மாதத்தில் வெயில் அதிகம். தந்தையின் ஆணை தலைமேற்கொண்டு இராமன் கானகம் ஏகி
ஞன் (கட்டளை). ஆனை மிருகங்களுள் மிகவும் பெரியது.
ஆனந்தனுக்கு ஆண் மகவு பிறந்தது. ஆன் நிரையைத் தொடர்ந்து இடையன் சென்ருன் (பசு).

சொற் பயிற்சி 7
தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதவே ஈண்டு இதைக் கற்
“கின்ருேம் (இங்கே). . . மகவை ஈன்று காப்பாற்றல், பெண்ணின் தலைசிறந்த கடனுகும்
(பெற்று).
உடலுக்கு உறுதி தரும் உணவை உண்ணல் வேண்டும் (சாப்
பிடுதல்). உயர்வாக உன்னல் வாழ்க்கையில் வெற்றிதரும் (நினைத்தல்).
ஊண் கொடுத்து உதவுதல் அறத்துள் சிறந்தது (உணவு). வேடுவர் ஊனும் தேனும் உண்டு உவப்பர் (இறைச்சி). எண்கல்வி மக்களுக்கு மிகவும் முக்கியமானது (கணிதம்). * என் கடன் பணிசெய்து கிடப்பதே " ஏணம் ஒர் அழகிய பிராணி. ஏனம் பன்றியின் மற்ருெரு பெயர். குழந்தையை ஏனையில் இட்டுத் தாய் தாலாட்டினள் (சீலைத்
தொட்டில்). சிங்களவரல்லாத ஏனை மக்களும் இலங்கையில் வாழ்கிருர்கள்
(மற்றைய). இருவரும் ஒரு கணமும் பிரியாது வாழ்ந்தார்கள் (மிகச் சிறிய
கால அளவு). கனம் நிறைந்த மூட்டையைத் தூக்க முடியாது திகைத்தான்
(பாரம்).
வேடன் விடுத்த கணை தாக்கியதால் வேங்கை விரைவாக ஓடி
யது (அம்பு). குதிரிை செய்யும் சத்தம் கனைத்தல் எனப்படும். நண்பனைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தான் (சந்தித்து). பசுவின் கன்று வளர்ந்தபின் பல பயன்களைத் தரும்.
சிலரைப் பார்த்து வயதைக் கணித்தல் இயலாது (மதித்தல்). பலா, மா, வாழைப் பழங்கள் முக்கணி என்று பெயர் பெறும்
(பழம்). மரத்திலிருந்து மாங்காய்க் கண்ணி'விழுந்தது (பிஞ்சு). மணமாகாத பெண்ணைக் கன்னி என்று சொல்வர். கிருஷ்ணனுக்குக் கண்ணன் என்ற மற்ருெரு பெயரும் உண்டு. கொடையில் சிறந்தவனைக் கன்னன் என்பர்.
பெரியோரைக் காணல் பெரும் பயன் விளைக்கும் (சந்தித்தல்).
கோடை காலத்தில் கானல் அதிகமாயிருக்கும் (சூடு).
2

Page 18
18 தமிழ் மொழி விளக்கம்
பெரியோரைக் காண்பது பெரும் பயன் தரும். மனிதர் வாழ்வதற்குக் கான் ஏற்றதல்ல (காடு).
பொருளின் நிறையைக் குணித்து அறிந்தான் (உத்தேசித்தல்), பதிந்த வீட்டுள் குனிந்து நுழைந்தான்.
மழை நீரினுல் குண்டு நிரம்பியது (குழி). குறிஞ்சி நிலத்தில் குன்று காணப்படும் (மலை).
பெண்கள் கொண்டையில் மாலை குடுவார்கள். கொன்றை மலர் கொண்டு இறைவனை வழிபடுவார்கள்.
இரத்தோட்டமில்லாத இடத்தில் சுனே இருக்காது (உணர்ச்சி). தாகத்தால் தவித்த மிருகம் சுனை உள்ள இடத்தைத் தேடிச்
சென்றது.
நீராடினல் உடம்பிலுள்ள சூடு தணியும் (குறைதல்). தனியாக இருத்தலை மனிதன் பெரும்பாலும் விரும்பமாட்டான்
(தனிமை).
நீரில் தண்மை இயற்கையாக அமைந்துள்ளது (குளிர்ச்சி). தீக்கு வெம்மைத் தன்மை உண்டு (இயல்பு).
மனிதன் உயர்திணையர்க இலக்கணத்தில் வகுக் கப்படுவான்
(பிரிவு). தானியங்களுள் தினை ஒன்ரு கும்.
ஒருவனுக்கு அறிவுடன் உடல் திண்மையும் அமைய வேண்டும்
(வலிமை). தின்மையான செயலில் நாம் ஈடுபடுதல் ஆகாது (தீமை).
பருத்தியிலிருந்து துணி நெய்வார்கள் (சீலை). s துனி நிறைந்த உள்ளத்தில் மகிழ்ச்சியைக் காண முடியாது
(அச்சம்).
தெண்டல் நோய் தாங்கமுடியாது வருந்தினன் (நரம்பு வலி). தென்றல் காற்றுத் தவழ்ந்து வருவதாகக் கூறுவர்.
மனிதனுக்குத் தொண்டு செய்தல் இறைவனுக்குச் செய்வதாகும்
(சேவை). தமிழர் தொன்று தொட்டு வாழும் ஓர் இனமாவர் (பழமை).
பெரிய குழி தோண்டி மரம் நட்டான் (கிண்டுதல்). காந்தியடிகள் தோன்றி அரிய தொண்டு செய்தார் (பிறத்தல்),
பணம் இல்லாதவன் வாழ்க்கையில் துன்பப்படுவான். பணுட்டு ஒரு பனம் பண்டம் (பனைக்குரிய).

சொற் பயிற்சி 19
நாவலர் தமிழுக்கு அரும்பணி ஆற்றினர் (தொண்டு). பனி காலத்தில் குளிர் அதிகம். பணை ஓங்கி வளரும் (மூங்கில்). பனை பல பயன்களைத் தரும் ஒரு மரம்.
வேட்டையாடுவோனின் பாணம் பட்டுப் பன்றி ப ைத த்த து
(அம்பு). வெயில் காலத்திற்குக் குளிர்ந்த பானம் உகந்தது (நீருணவு). உழவன் இரண்டு மாடுகளையும் பிணைத்து வண்டியில் செலுத்தி
னன் (தட்டுதல்). மாவையும் சர்க்கரையையும் பிணைந்து பணிகாரம் செய்யலாம்
(சேர்த்தல்).
புணையின் உதவிகொண்டு ஆற்றைக் கடந்தான் (மரக்கலம்). செல்வன் பட்டாடை புனைந்து உல்லா சமாய் ச் சென் மு ன்
(அணிந்து).
மலரிலுள்ள மணம் எவரும் விரும்பத்தக்கது. மனம் போன போக்கெல்லாம் போதல் ஆகாது.
மனைக் கோடரி கொண்டு மரம் வெட்ட வீணே முயன்மு ன்
(கூர்மையற்ற). மனையைப் பெண்ணே சிறப்பிப்பவள் (வீடு). பூமியில் வாழ்பவர் மண்ணவர் என்று பெயர் பெறுவர். பூமியை ஆள்வோர் மன்னவர் என்று பெயர் பெறுவர். அவன் கூறிய வண்ணம் செய்து முடித்தான் (விதமாக). சிறந்த வன்னம் தீட்டப்பட்ட சித்திரத்தை எவரும் விரும்புவர்
(நிறம்). வண்மையில் சிறந்தோன் வள்ளல் என்ற பெயர் பெறுவன்
(கொடை). பாரதியார் பாடும் வன்மை நிறைந்தவர் (திறமை).
பெரிய விழாக்களில் வாணம் இடம் பெறும். நீல வானம் கண்டு தோகை மயில்கள் ஆடின (ஆகாயம்).

Page 19
20 தமிழ் மொழி விளக்கம்
அதிகாரம் IV
(அ) பல பொருள் ஒருமொழி (Homonyms) (ஆ) ஒரு பொருட் பன்மொழி (Synonyms)
ஒரே மொழி அல்லது சொல் பலபொருளையோ அல்லது கருத்தையோ தரலாம். இத்தகைய சொல் பல பொருள் ஒரு மொழி எனப்படும். ஒரே கருத்தைத் தரும் பல சொற்கள் ஒரு பொருட் பன்மொழி எனப்படும்.
(அ) பல பொருள் ஒருமொழி
கீழே வரும் தடித்த சொற்களின் வேறுபட்ட பொருளை
உணர்த்தும் சொற்களை, அவற்றின் நேரே காண்க :
அகம் வீடு, மனம்.
9q- கால், கீழ், செய்யுள் அடி, அடித்தல், வமிசவழி,
ஆதி, நீட்டல் அளவை,
அணி அழகு, ஆபரணம், படை வகுப்பு. கூட்டம்,
அணிதல்.
அணை மெத்தை, வரம்பு, படுக்கை, அணைத்தல்.
அத்தன் கடவுள், உயர்ந்தோன், குரு, தகப்பன்.
அத்தி எலும்பு, ஒரு மரம், யானை, கடல்,
அத்திரம் அம்பு, மலை, குதிரை, கழுதை.
அத்தை தாய், குருவின் மனைவி, மாமி, தலைவி.
அமர் போர், வெறி.
அமர்க்களம் ஆரவாரம், போர்க்களம்.
அமளி பள்ளியறை, ஆரவாரம், மெத்தை.
அம்பு அத்திரம், மூங்கில், எலுமிச்சை, தளிர்.
sui sold வைசூரி நோய், வருபிறப்பு, தாய், அழகு, பார்
வதி.
<奥町ā இராசா, அரசமரம்.
svg GT காவல், கடல், மலை, கோட்டை, காடு, மதில்,
<9A色·
அரம்பை தேவலோகப் பெண், வாழை.
அரவம் பாம்பு, சத்தம், சிலம் பு.
அரி குதிரை, விஷ்ணு, மூங்கில், சூரியன், சிங்கம்,
வண்டு, வெட்டுதல்.
அரை பாதி, வயிறு, இடை, அரைத்தல்.
அலை கடல், திரை, அங்குமிங்கும் திரிதல்,

அழல் அளி அளை அறம்
அறுகு
அன்னம் ஆடல்
FU Lib Fi
-60L.
சொற் பயிற்சி 2.
சோறு, நெய், தணித்தல், புழுங்குதல், வேக
வைத்தல். கோபம், நெருப்பு. வண்டு, கோடை, மது, அருள், தேன். குகை, புற்று, தயிர், கல (பூசுதல்). நீதி, தருமம், புண்ணியம், யமன். புல், யானை, சிங்கம். அடித்தல், சொல்லுதல், வீட்டு அறை. சோறு, ஒரு பறவை. விளையூாடல், குளித்தல், கூத்து, அசைதல், ஆடி மாதம், கண்ணுடி, அசைந்து. ஒரு மிருகம், ஆடுதல், சுங்கம், மாதர் கூட்டம், ஆதாயம், சூதாடு
கருவி, தோழி. பிடுங்கல், ஆராய்தல். ஆபரணம், பூமாலை, முத்து, நந்தவனம். சக்கரம், மோதிரம், கடல், வண்டி, வட்டம். நதி, வழி, ஒழுக்கம், ஒரெண்.
ஒய்தல், சூடுதணிதல், இளைப்பாறல்.
தணிதல், சகித்தல், வலிமை. பாம்பின் நஞ்சு, ஆலமரம், மழை, மழு. சங்கீதம், புகழ், உடன்பாடு.
இடது பக்கம், விசாலம், ஸ்தானம்.
ஒலி, தாக்குதல். அரை , பக்கம், நடு, ஓர் அளவை. ஒன்று சேர், ஒப்பிடு, துணை, இசைவு. இராக்காலம், வறுமை, இரத்தல். உதடு, கண்ணிமை, பூவிதழ். பெரிய, இருத்தல், இரண்டு. சத்தம் செய்தல், உணவு, நூல், பெட்டி பாய் முதலியன இழைத் த ல்,
ஆபரணம். வரிப்பணம், இறகு, அரசன், கடவுள், ଘ୪୭୫
யிறை, இறைத்தல். கொடுத்தல், தேனி, இலையான். அன்பு, நனைவு. ஆறு, இரண்டு, இழு, தலையிலுள்ள ஈர். நொருக்குதல், உடுப்பு.

Page 20
22
உத்தரம்
D-6)
also
ஏடு
6) ஏற்றம் ஏனம் ஐயம் gPQ (95 ஒளி ஒடு
dily 56DL
&l 6DL
36óTL-Lib கண்ணி கத்தனி கயம்
கரி
6) கலம் கலி
கலை
கல் கவி கழி
களை
கள்ளி
தமிழ் மொழி விளக்கம்
பதில், வடக்கு, ஒரு நட்சத்திரம். தேய், பேச்சு, பேசு, சிறந்த மொழி. அலைதல், சமையல் உலை, கொல்லன் உலை. இருப்பிடம், வாழ்தல், மோர் உறை, புத்தகம்
முதலியவற்றிற்குப் போடும் உறை. ஊறுதல், காயம், இடையூறு. புத்தகம், கண்ணிமை, பூவிதழ். மிருகத்தின் ஆண், ஏறுதல், இடி. ஏற்ற மரம் (துலா), புகழ், உயர்வு. பாத்திரம், பன்றி. சந்தேகம், பிச்சை. ஒழுக்கமாய் நடத்தல், நீர் ஒழுகல். பிரகாசம், அறிவு, புகழ், மறைத்தல். ஓடுதல், வீடுவேய்தற்குரிய ஒடு, உ  ைட ந் த
பானை ஒடு. கடித்தல், காவல், வாசனை, கூர்மை. கடைசி, இழிவு, வாயிற் பக்கம், சா மான்
விற்கும் இடம், தயிர் கடைதல். விறகு, குற்றி, குறைவு, உடம் பு, நீளம்
குறைந்தது. தத்து, கழுத்து, வாள், துண்டு. பூமாலை, அரும்பு (பிஞ்சு), தொடு கயிறு. கத்தரிக்கோல், ஒரு செடி, வெட்டுதல். குளம், யானை, கயரோகம்.
யானை, நெருப்புக் கரி, சாட்சி, கருமை.
கரைத்தல், எல்லை, ஒரம். பாத்திரம், கப்பல், ஆபரணம். கடல், கலிப்பா, ஒலி, வஞ்சகம், கலியுகம். குலேத்தல், வித்தை, ஆண் பயான், பேயாட்டம்,
சந்திரனின் பகுதி. படித்தல், தோண்டுதல், சிலை, கல்லு. பாட்டு, புலவன், குரங்கு. நீக்கல், உப்பளம், அதிகம். மாவாற்கிண்டும் களி, களிமண், மகிழ்ச்சி, மயக்
(95 D. களை பிடுங்கல், நீக்குதல், பயிர்க் களை, களைப்பு,
குற்றம் அழகு. திருடி, ஒரு மரம்.

கணம் காப்பு
காயம் காய்
காலே
கால்
San
(Sötq–
குறி
குலை
குழவி கூடு


Page 21
24
தட்டு
தத்து
தறி
தாயம்
தாலம் திங்கள் திரி
திரு தீட்டு துணி துப்பு தேர் தேறல்
தை தொடை தொண்டு தோடு
நகை நடு நயம் நவம் நாகம்
Tipநாடு நாரி நிறை நூல் நேர்
l q
6)
U Gorf
பதம்
தமிழ் மொழி விளக்கம்
தட்டுதல், அடுக்கு, தட்டம், வண்டி முதலிய
வற்றின் தட்டு. கண்டம், பாய்தல். முதல், ஆதி, சிரசு, தலைமை, தலைவன். வெட்டு, நெய்தல் தறி, மிருகங்கள் கட்டும்
«56 l (6Ö) l.------- . ஒரு விளையாட்டு, சந்தர்ப்பம், உரிமை, சூதாடு
கருவி. நாக்கு, பனை, பூமி. திங்கட்கிழமை, மாதம், சந்திரன். விளக்குத் திரி, மூன்று, அலைதல், மாறுபாடு. செல்வம், இலக்குமி, அழகு. ஆசூசம், கூராக்கு, எழுது, சித்திரி, அடி. வெட்டுதல், துணிதல், சீலை. உணவு, வலிமை, சுத்தம், துப்புதல், பவளம். ஆராய், இரதம். தேன், கள். தைத்தல், ஒரு மாதம். மாலை, துடை, அம்பு. பணி, பழமை. காதணி, வட்டமாக அரிந்தது, பூவிதழ். சிரிப்பு, பல், ஆபரணம், இகழ்ச்சி, பூ மொட்டு. நடுவு நிலைமை, இடை, நடுதல். நன்மை, மலிவு, பயன், சிறப்பு. புதுமை, ஒன்பது. பாம்பு, யானை, கருங் குரங்கு, ஈயம். நாழிகை, தேடி, முகத்தின் நாடி, நரம்பு. தேடுதல், நினை, தேசம். பெண், இடை, பார்வதி. பாரம், நீதி, கற்பு, தராசு, மிகுதி. தையல் நூல், புத்தகம், சாஸ்திரம், பூனூல். உவமை, நேர்தல், எதிர், வரிசை, ஒழுங்கு. படித்தல், குறைதல், அளக் குங் கரு வி (கொத்து), கீழ்ப்படிதல், வாயிற் படி, பூமி. சேனை, ஆக்கு (சிருஷ்டி), நிவேதி, அடுக்கு. ஆபரணம், தொண்டு, கட்டளை, கீழ்ப்படிதல்,
.{LbחJ சொல், பாகம், பக்குவம், அறுகம் புல்.

பத்திரம் பள்ளி
Litrath பாடு Lu ar Grof .
ur Liu
ri
uTi
L6) na
பிணி
or பிழை
புகைச்சல்
பொங்கு
போது
Լուգமணம் மதம் மதி மறம் மறி
மறை D2a)
lf SG மால்
மீன் முத்தம்
சொற் பயிற்சி
இறைவன், அரசன், கணவன், தலைவன், வீடு,
ஊர், குனி. உறுதி, இலை, பூவிதழ், கவனம், கடிதம். படுக்கை, பள்ளிக்கூடம், முனிவர் வாழுமிடம்,
நித்திரை. பாதி, பக்குவம், சமையல், பங்கு, ஒர் அளவு. பக்கம், வருத்தம், பெருமை, பாடுதல். கை, சங்கீதம், பழரசம்.
டாய்தல், படுக்கும் பாய்.
கனம், சுமை, பொறுப்பு, வருத்தம், 28 துலாம்
கொண்ட நிறை. பாறை, பராமரி, அடுக்கு, பூமி, பார்த்தல். பொம்மை, பெண், கட்பாவை. நம்பிக்கை, பெண் யானை, பற்றுதல், ஆயுதப்
பிடி. நோய், கட்டு, பெண்மான், கட்டு, பூமாலை, பிணைவைத்தல். சீவன்ம் செய், குற்றம். எரிச்சல், இருள், பார்வை மழுங்குதல், புகை,
இருமல். ஆபரணம், அணிதல், உலக்கை முதலியவற்றின்
பூண். பெருகு, செழி, சோருக்கு, சின, கொதி,
கொந்தளி. காலம், பூ, அரும்பு. சீலை, வயிறு, சோம்பல், மடித்தல், பொய் கலியாணம், வாசனை. மதநீர், சமயம், வலிமை, செருக்கு, மயக்கம். கணித்தல், மரியாதை செய், சந்திரன், அறிவு. வலிமை, வீரம், பாவம். பெண் குட்டி, ஒருவித மான், தடுத்தல். வேதம், மந்திரம், கறை, மறு உழவு, ஒளித்தல். (g56örfp ub (Mountain), g5) 60) 55 lʻi l q. மாமரம், குதிரை, விலங்கு, இடித்த மா,
வலிமை, ஆகாயம், இலக்குமி, பெரிய. ஒரு மிருகம், பக்கம், செல்வம், இடம். மயக்கம், விஷ்ணு, பெருமை. கடல் மீன், நட்சத்திரம். முத்து, கொஞ்சுதல்.

Page 22
26
மெய் யூகம் வடு வண்ணம்
வரி
வலம்
வலி வளை
66)
வாணம்
6àĩLĩT trò வாளி
வாள்
விடை affapy விளக்கு வீறு வேய் ഖ
தமிழ் மொழி விளக்கம்
உண்மை, மெய்யெழுத்து, உடம்பு. புத்தி, குரங்கு.
தழும்பு, குற்றம், பிஞ்சு. நிறம், தன்மை, அழகு. கோடு, வரிப்பணம், கட்டு. வலிமை, வெற்றி, வலப்பக்கம். வன்மை, வலி நோய். வளையல், கோணலாக்கல். வீட்டு வளை, சங்கு. வாசனை, வட காற்று.
மத்தாப்பு, அம்பு. கிழமை, உரிமை, அன்பு, பங்கு, கடல். தோடு, அம்பு, தண்ணிர் அள்ளும் வாளி. வாள் ஆயுதம், ஒளி.
பதில், எருது.
வாசனை, வித்து. துலக்கு, விளங்கவை, சுத்தம் செய், தீபம். வெற்றி, தனிமை, பெரும்ை, வேகம், மூங்கில், வேய்தல். கடல், தொழில், வேலைப்பாடு.
(ஆ) ஒரு பொருட் பன்மொழி
கீழே வரும் தடித்த சொற்களின் ஒரே பொருளை உணர்த் தும் பல சொற்களை, அவற்றின் நேரே காண்க :
அணி அதிகம் அபாயம் அம்பு அரசன்
" وت&)([9ی
அன்பு
ஆகாயம்.
ஆசை
ஆரம்பம் ஆற்றல்
பூண், அலங்கரி, உடு, புனை, சூடு, தரி. சால, உறு, தவ, நனி, கூர், கழி, மிகு. இடையூறு, இடர், ஆபத்து. சரம், வாளி, அத்திரம். கோன், இராசா, மன்னன், இறை, காவலன்,
வேந்தன், கோ, பதி, மகிபன். எழில், கவின், சுந்தரம், செவ்வி, பொற்பு,
முருகு, வண்ணம், செளந்தரியம். ஈரம், தண்ணளி. வானம், சேண், வெளி. விருப்பம், இச்சை, ஆவல், வேட்கை, அவா,
வாஞ்சை, விழைவு. தொடக்கம், முதல், ஆதி. வலிமை, உரம், வலி, சக்தி.

இகழ்தல்
இரத்தம்
இரவு இனம்
இன்பம்
: all-til
உணவு உபாத்தியாயர்
5L-6)
கடவுள்
கடைசி
கணவன்
8 . கருமபு களிப்பு
காடு
கால்
காற்று குதிரை குற்றம்
சத்தம் சந்திரன் & LDurh
சாதல்
சிங்கம்
சிநேகிதர் சினம்
சொற் பயிற்சி 27
இழித்தல், பழித்தல், நிந்தித்தல், எள்ளல். உதிரம், செந்நீர், குருதி. கங்குல், நிசி, இராத்திரி, அல். சுற்றம், உறவு, கிளை , தமர், ஒக்கல். மகிழ்ச்சி, களிப்பு, உவகை, உவப்பு, சந்தோ
ஷம். உடல், தேகம், காயம், சடலம், ச திர ம்,
யாக்கை, வன்னி, சரீரம். உண்டி, ஆகாரம், போசனம், ஒதனம். ஆசிரியர், ஆசான், தேசிகன், குரு. சமுத்திரம், ஆழி, முந்நீர், உவரி, கலி, சாகரம்,
பரவை, பவ்வம், வாரி, வாரம், வாரிதி. இறைவன், இறை, தெய்வம், முதல்வன், ஆதி, ஈசன், ஏகன், தலைவன், பகவன், பகவான். முடிவு, ஈறு அந்தம். கொழுநன், பதி, நாயகன், கொண்கன், தலை
வன், புருஷன். கழை, கன்னல். மகிழ்ச்சி, உவப்பு, உவகை, ஆனந்தம், சந்தோ
ஷம். அடவி, ஆரணியம், காண்டம், காண்டவம்,
கானகம், கான், சுரம். பாதம், அடி, தாள். வளி, கால். பரி, மா, அரி, அசுவம், கந்துகம், கற்கி, புரவி. மாசு, ஆசு, கரிசு, களங்கம், கறை, பிழை, வடு,
lfOjOj. அரவம், ஒலி, ஒசை. மதி, அம்புலி, இந்து, சசி, திங்கள், சோமன்.
காலம், செவ்வி, போது, வாய்ப்பு, சந்தர்ப்பம்.
துஞ்சல், இறத்தல், பொன்றல், மடிதல், மாய்
த ல், முடிதல், மாளல்.
அரி, மா, கேசரி, சீயம், பூட்கை, வயமா, மடங்
கல், ஆளி.
நண்பர், ஒட்டுநர், ஒல்லுநர், நயவர், தோழர்.
வெகுளி, செற்றம், கோபம், காய்தல், முணிவு,
குரோதம், சீற்றம்.

Page 23
8. عے
சூரியன்
செல்வம்
Gs 2a) தகப்பன்
தமையன்
தலை தரித்திரம்
தாமரை
தாய் துன்பம் தேன் தொண்டு நகை நட்சத்திரம் நித்திரை நெருப்பு
6) பகைவர்
60l.
பல் L Tid
siu 2T புகழ்
புத்தகம் புலி
பூமி
தமிழ் மொழி விளக்கம்
பகலவன், இரவி, எல்லி, கனலி, வெய்யோன்,
பரிதி.
நிதி, திரு, பொருள், மாடு.
படை, சைனியம்.
பொழில், தண்டலை, நந்தவனம், கா.
தந்தை, பிதா, தாதை, அத்தன்.
அண்ணன், மூத்தோன், முன்னேன்,
வன்.
முன்ன
பின்னேன், பின்னவன், இளவல், இளையோன். சென்னி, உச்சி, முடி, சிரசு, சிகரம். மிடி, நல்குரவு, வறுமை. மரை, பங்கயம், முளரி, புண்டரீகம்,
அம்புயம், சரோருகம்.
கமலம்,
மாதா, அன்னை ஆய், இடுக்கண், சஞ்சலம், இக்கட்டு, அலக்கண். தேறல், நறவம், நறை, மது பணி, சேவை. ஆபரணம், அணி, பணி, பூண், இழை. தாரகை, விண்மீன். துயில், சயனம், உறக்கம், துஞ்சல், துரக்கம். தீ, அக்கினி, அழல், கனல், தழல், தேயு. வைகல், எல். − ஏதிலார், செறுநர், ஒட்டலர், ஒன்னுர், தரிய
லர், துன்னலர். தானை, சேனை, தண்டம். தந்தம், நகை, எயிறு. அரவம், உகம், பன்னகம், உரகம், பணி. மகவு, சேய், குழவி, சிசு, குழந்தை. கீர்த்தி, இசை, ஒளி, ஏற்றம், கியாதி. அருந்து, உண், தின், உட்கொள். நுகர், துய்,
)6 நூல், பனுவல், ஏடு.
வல்லியம், உழுவை, வியாக்கிரம், கொடுவரி
புண்டரீகம், வேங்கை.
மலர், தார், பொது, புட்பம்.
ஞாலம், தரை, தாரணி, நிலம், கோளம்,
தாலம், பார், படி, மண், உலகம், கிடக்கை குவலயம், சகம்.

பெண்
போர்
மகன்
மகள்
4D2a)
மனம்
மனைவி
மானவன்
மாலை
முதல் முத்து மூங்கில்
யமன்
வணங்குதல்
வண்டு
வயல் வயிறு வலிமை
வாசனை
வானம்
விடை வில்
விழி
வீடு வெளிச்சம்
சொற் பயிற்சி 29
மாது, மங்கை, நங்கை, நாரி, அரிவை, காரிகை, தெரிவை,  ைத ய ல், பே  ைத, பா வை, LDL - is 605. அமர், யுத்தம், செரு, கலி, சமர். புதல்வன், மைந்தன், புத்திரன், தனையன். குமாரி, புதல்வி, புத்திரி. வரை, குன்றம், ஓங்கல், குன்று, சயிலம், விலங்
கல், வெற்பு, பருப்பதம், அசலம், கிரி. அகம், உள்ளம், சிந்தை, இருதயம், இதயம்,
நெஞ்சம். இல்லாள், பெண் சாதி, தலைவி, கிழத்தி, பாரி. சீடன், மாணுக்கன். இண்டை, ஆரம், கண்ணி, கோதை, தாமம்,
தார், தொடை. ஆரம்பம், தொடக்கம், ஆதி. நித்திலம், தரளம். வேய், ஓங்கல், கழை,
முடங்கல், சேய். y காலன், கூற்றுவன், அந்தகன் தருமன், மறலி. களிறு, கரி, அத்தி, உம்பல், கசம் (கயம்), மாதங்கம், தும்பி, வேழம், வாரணம், நாகம், குஞ்சரம், களபம். தொழுதல், பணிதல், அஞ்சலி செய் த ல்,
இறைஞ்சுதல், கும்பிடல். அளி, சாரகம், சாளிகை, மதுகரம்,
சுரும்பு. புலம், பழனம், செய், பண்ணை, கழனி. உதரம், மடி. - ஆற்றல், வலி, அடல், இகல், வன்மை,
வீரம், துப்பு, விறல். கந்தம், கடி, விரை, நறவு, நறை, நாற்றம். கொண்டல், எழிலி, கார், மேகம், மஞ்சு,
விசும்பு, வான். பதில், மறுமொழி, உத்தரம். த னு, சிலை, கார்முகம், சாபம். கண், நேத்திரம். அகம், இல்லம், மனை, பதி. ஒளி, பிரகாசம், சோதி.
கிளை, பணை, புணை,
மதுரகம்,
பீடு,

Page 24
30
(அ)
(ஆ)
தமிழ் மொழி விளக்கம்
பயிற்சி
கீழ்க்காணும் வாக்கியங்களில் எழுத்துப் பிழைகள் உண் டேல் அவற்றைத் திருத்தி அமைக்க : அணுக்குண்டுகள் பல நாடுகளை அளித்தன.
உளப்பால் உயர்ந்தவர்கள் பலரை உலகில் காணலாம். இயற்கைக் காட்சிகளைக் கண்று கழிக்க எவரும் விரும்பு வர்.
கிள்விப் பருவம் அடைந்த தன் தாயை இராமன் காப் பாற்றினன். குப்பையைக் குளி தோன்றிப் புதைத்தல் அவசியம். தன் குஞ்சுக்கு இறை தேடிப் பரவை சென்றது.
உறை உள்ள நூல்களைப் படிப்பது சுலபம்.
6த்தைத் தரித து விறகாகப் பயன்படுத்தினர்கள். துரைமுகங்களில் கப்பல்களைக் காணலாம். அவன் மரத்திலுல்ல பள்ங்களைப் பரித்து உண்டான். வேடுவர்கள் காணில் வாள்வார்கள். வீணே உன்று கழிப்போரால் பயன் எதுவும் கிடையாது. வெக்கத்தால் தலைகுணிந்தவன் பேச இயலாது சென் முன். தெண்டல் காற்றை பலர் விரும்புவர்.
அரசன் வாளும் இடத்தை அரண்மனை என்பார்கள்.
பின்வரும் இணைச் சொற்களின் பொருள் வேறுபாடு தோன்றுமாறு ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வாக்கியத்தில் அமைத்து எழுதுக:
ஆளை ஒலி கலம் &ଛି ଭୀf கொல்லு அழை ஒளி களம் கிழி கொள்ளு கோலம் தளை வளி ଗଅଁତrt வெல்லம் கோளம் தழை வழி விழை வெள்ளம்
உரவு கரை சேரல் தரை திரை
Փ-Ո) 6ւյ கறை சேறல் தறை திறை
நரை புரம் ori விரல் பொருப்பு
நறை புறம் மறி விறல் பொறுப்பு

(g))
I.
(அ)
(ஆ)
(இ)
Iv,
சொற் பயிற்சி
ஆண் 267 6587 தண்மை கண்ணி ஆன் g2GM Gör தன்மை கன்னி பணி Li2007 வண்மை திண்மை ւյaճh புனை வன்மை தின்மை
3.
தொண்டு தொன்று
மணம்
மனம்
கீழ்க்காணும் கூட்டுச் சொற்களின் வேறுபாட்டை உணர்த்த
அவற்றின் பொருளைக் கூறுக :
அலி ஆலி இலக்கு அளி ஆளி இளக்கு அழி ஆழி கொளுத்தல் கோல் பலம் கொழுத்தல் கோள் பழம் பலி விளி வேலம் பழி விழி வேழம்
அருத்தல் அரை இரை அறுத்தல் அறை இறை குரை Gin G0) ET கோரை குறை கூறை கோறை
Go FrT if? நிருத்தம் மரம்
சொறி நிறுத்தம் மறம்
ஆணி கணம் கணை
ஆணி கனம் கனே
எண் குண்டு கொண்டை லான் குன்று கொன்றை
மணை கணம் வானம் ഥങ്ങr கனம் வானம்
கலி
களி
கழி
வலம் வளம்
வலை வளை
வழை
உரி
உறி சிரை சிறை
LD (g5
l fDO/
கண்டு கன்று தோண்டு தோன்று
வண்ணம் வன்னம்
பின்வரும் சொற்கள் குறிக்கும் வெவ்வேறு
கூறுக :
அத்தி அரவம் அரி ஆழி ஏடு ஏற்றம் கலை காயம் கால் சேண் தாலம் தோடு நூல் பாகம் பாணி LDTG) Dnr 6) வளை
அளை கண்ணி சத்தி நவம்
Got வாரம்
கூலம்
கூளம் கூழம்
6 g) 6մ (Լք மலை
மழை
штобот шу штаотић
பனை பனை
பொருளைக்
அன்னம் கவி செவ்வி நாரி
Ds
வாளி
மேலேயுள்ள சொற்கள் உணர்த்தும் வேறுபட்ட பொருள் தெளிவாகும்படி அவற்றை வாக்கியங்களில் அமைக்க :

Page 25
V.
VII.
தமிழ் மொழி விளக்கம்
கீழ்க்காணும் ஒவ்வொரு சொல்லையும் பெயராகவும் (Noun), வினையாகவும் (Verb) வாக்கியங்களில் அமைத்து எழுதுக:
அணி அவி இடி உறை
கரை தட்டு நிறை பதி LG2007
மறை
அணை அளி இணை 961) கழி தறி நேர்
T (6) பிழை மலை
அரி அளை இரு ஒளி களை துணி
L- Lוש חו_ן பூண் ଘj (f)
அரை அறை இரை கடி காய்
நகை,
60
LT fi மதி வலி
அலை
உரை
55 Gö) L.
குடி நாடு பணி பிடி மறி விளக்கு
கீழ்க்காணும் சொற்கள் ஒவ்வொன்றினதும் ஒரே பொருளை உணர்த்தும் பல சொற்களைக் கூறுக:
அம்பு இன்பம் கணவன் சிநேகிதன் நெருப்பு பூமி மூங்கில்
அரசன் இனம் நாடு தகப்பன் L 60) 95 Gnuti பெண் யமன்
அழகு Ք-ւ-ւbւյ குதிரை தாமரை பாம்பு (βι μιτ ή வண்டு
கடவுள் குற்றம் தாய்
பிள்ளை
மனம்
விடை
ஆசிரியன் ஆரம்பம்
கடைசி சந்திரன் துன்பம் புகழ் LDTడి வீடு

சொ ற்ருெடர்ப் பயிற்சி (Study of Phrases)
அதிகாரம் V
மரபுப் பொருளுணர்த்தும் சொற்ருெடர்கள் (Idioms)
அக்கரைப் பச்சை - உண்மையற்ற காட்சி. அச்சாணி - மிகவும் முக்கியமானது அடிபிடி - சண்டை அடிப்படை - அத்திவாரம் அடியடியாக - தலைமுறையாக அமளி செய்தல் - குழப்பம் செய்தல் அரை மனிதன் - மதிப்பிழந்தவன் அல்லும் பகலும் - ஓய்வில்லாது, தொடர்ந்து அல்லோல கல்லோலம் - பரபரப்பு அழுங்குப்பிடி - விடாப்பிடி அள்ளி இறைத்தல் - அதிகமாகக் கொடுத்தல் அறிமுகம் - தெரிந்தவர் அறை கூவுதல் - போருக்கு அழைத்தல் ஆகாயக் கோட்டை - கற்பனை ஆகாயத் தாமரை - இல்லாத ஒன்று ஆசை வார்த்தை - ஏமாற்றுவதற்குப் பேசும் பேச்சு, ஆப்பிழுத்த குரங்கு - தனது ஆற்றலுக்கு அப்பாற் பட்ட செய
வில் இறங்கி அதனுல் துன்பப்படுபவன் ஆழம் பார்த்தல் - திறமையை ஆராய்தல் ஆறப் போடுதல் - பின்போடுதல் ஆற அமர - ஆறுதலாக இசக்குப் பிசக்கு - குழப்பம் இடக்கு முடக்கு - இடைஞ்சல் இடைக்கிடை - வேளைக்கு வேளை இடைவிடாமல் - தொடர்ச்சியாக இரண்டு தோணியில் கால் வைத்தல் - ஒரே நேரத்தில் இரண்டு
காரியங்களில் ஈடுபடல் இருதலைக் கொள்ளி - எல்லா வழியாலும் துன்பம் நேர்தல் இலவு காத்த கிளி - காத்திருந்து ஏமாறுபவன் இலை மறை காய் - மறைவாய் இருத்தல்
6ᏓᏪ
இறு: }-பயனற்ற முயற்சி இழுத்துப் பறித்தல் - முயன்று செய்தல் இளநாக்கடித்தல் - விருப்பமின்மை
3

Page 26
34 தமிழ் மொழி விளக்கம்
இளிச்ச வாயன் - முழு மூடன்
இனிப்புக் காட்டுதல் - ஆசை உண்டாக்கல்
ஈவிரக்கம் - கருணை
உச்சி குளிர்தல் - மகிழ்தல்
உடுக்கை இழந்தவன் கை - ஆபத்து வந்த இடத்துத் தானகவே
சென்று உதவுதல்
உப்புப் புளியில்லாப் பேச்சு - கருத்தற்ற வீண் பேச்சு
உரித்து வைத்தாற்போல - வெளிப்படையான ஒற்றுமை
உருத்திராட்சப் பூனை
வெள்ளை வேட்டிக்காரன்
உலை வைத்தல் - தீங்கு விளைத்தல்
உள்ளங்கை நெல்லிக் கணி
வெள்ளிடை மலை : - தெளிவு
குன்றின் மேல் விளக்கு
ஊடாடல் - நன்கு பழகுதல்
ஊமை கண்ட கனவு - வெளியிட முடியாத நினைவு
எடுப்பார் கைப் பிள்ளை - தனக்கெனத் தனி இயல்பின்றி, பிற
ரின் விருப்புக்கேற்பக் காரியம் செய்பவன்
எண்பித்தல் - மெய்ப்படுத்தல்
ஏட்டுச் சுரைக்காய் - வாழ்க்கையோடு தொடர்பில்லாத கல்வி
ஒரு கை பார்த்தல் - வெற்றி பெற முயல்தல்
ஒருதலை - நிச்சயம்
ஒற்றைக் காலில் நிற்றல் - விடாப்பிடி
ஒன்றுபாதி - நடு இரவு
ஒடியாடிப் பார்த்தல் - ஊக்கம் கொண்டு செய்தல்
ஒட்டைக் கையன் - மிகுதியாய்ச் செலவு செய்பவன்.
ஒட்டை வாயன் - இரகசியத்தை வெளிப்படுத்துபவன்
கங்கணங் கட்டல் - தீவிரமாக முடிவு செய்தல்
கங்குகரையில்லாமல் - எல்லையில்லாமல்
கடல்மடை திறந்தாற்போல - எல்லையற்ற பிரயோகம் (பெருக்
கம்)
கண் அயர்தல் - நித்திரை செய்தல்
கண் எறிதல் - கடைக்கண் பார்த்தல்
கண் வைத்தல் - விருப்பங் கொள்ளல்
கண் காட்டல் - செய்யத் தூண்டுதல்
கண்கூடு - வெளிப்படை
கண்ட துண்டம் - பல துண்டுகள்
கண்டதும் கடியதும் - நல்லதும் கெட்டதும்
கண்ணுயிருத்தல் - கவனமாயிருத்தல்
கண்ணும் கருத்தும் - மிகுந்த கவனம்"
- பாசாங்கு செய்பவன்

சொற்ருெடர்ப் பயிற்சி 35
கண்ணெடுத்துப் பார்த்தல் - கருணை காட்டல் கண்ணுேட்டம் - இரக்கம் கண் பூத்தல் - நீண்ட காலமாக எதிர்பார்த்தல் கண் மூடித்தனம் - கவனமில்லாமை
கண்மூடுதல் காலமாதல் - இறத்தல் காலம்செல்லல் )
கண் வளர்தல் - நித்திரை செய்தல்
கம்பி நீட்டுதல் - இரகசியமாக ஒடுதல்
கரைத்துக் குடித்தல் - நன்கு அறிதல்
கழுத்தறுத்தல் - தொல்லைக்குள் செலுத்துதல்
கணியிருக்கக் காய் கவர்தல் - நல்லதிருப்பத் தீயதை நாடல்
காது குத்தல் - ஏமாற்றுதல்
காது கொடுத்தல் - கூர்ந்து கேட்டல்
காலம் தள்ளுதல் - வாழ்க்கையைச் செலுத்தல்
காலில் விழுதல் - மன்னிப்புக் கேட்டல்
கால்கட்டு - தடை
காயா? பழமா ? - தோல்வியா? வெற்றியா?
கிணற்றுத் தவளை - வெளியுலக அனுபவமற்றவன்
குட்டிச் சுவராக்கல் - பாழ் செய்தல்
குதிரைக் கொம்பு - இல்லாததொன்று
குரங்கின் கைப் பூமாலை - ஒரு பொருளின் மதிப்பை அறியாதா
ரிடத்தில் அப்பொருள் சென்றடைதல்
கூலிக்கு மாரடித்தல் - தனக்கு விருப்பமில்லாத ஒன்றைப் பயன்
கருதிச் செய்தல்
கைகண்டது - சித்தியுள்ளது
கை கலத்தல் - சண்டை செய்தல்
கைகழுவுதல் - தொடர்பை முற்றும் நீக்குதல்
கை குவித்த்ல் - வணங்குதல்
கை கூடுதல் - சித்தியாதல்
கைகொடுத்தல்
கைக்குதவல் - ஆபத்துக்குதவுதல்
கைக்கூலி - நேர்மையற்ற முறையிற் பிறரிடம் பெறும் பணம்
கைக்கொள்ளல் - ஒப்புக் கொள்ளல்
கைங்கரியம் - பணிவிடை
கைச்சாத்து - கையெழுத்து
கைசோரல் . கைதப்புதல் k தவறுதல் கைநழுவுதல்

Page 27
36 தமிழ் மொழி விளக்கம்
கைதவறுதல் - இறத்தல் கைதளர்தல் - சோர்தல் கைதுரக்குதல் - ஆதரித்தல் கைதேர்தல் - திறமை மிகுதல் கைநீட்டுதல் - அடித்தல் கைபார்த்தல் - உதவியை எதிர்பார்த்தல், நாடிபார்த்தல், கை
ரேகை பார்த்தல் கைபிசைதல் - தயங்குதல் கைப்பற்றுதல் - பெற்றுக்கொள்ளல், விவாகம் செய்தல் கைப்பாடு - கைவேலை கைப்பிடித்தல் - விவாகம் செய்தல் கைமட்டம் - உத்தேசம் கைம்மாறு - பிரதியுபகாரம் கைமாற்று - கடன் கைம்பெண் - விதவை கையாடுதல் - பறித்தல் கையாளுதல் - பயன்படுத்தல் கையாள் - ஏவல்செய்வோன் கையிறுக்கம் - உலோபத்தன்மை கையும் களவும் - குற்றம் செய்த இடத்திலேயே கையைக் கடித்தல் - பொருளை இழத்தல் கைவரிசை - திறமை . கொள்ளி சொருகுதல் - தீங்கு விளைத்தல் கோடரிக் காம்பு - தன் குலத்தைத் தானே கெடுப்பவன் கோபுரந்தாங்கி - தான் பெரும் பொறுப்பைத் தாங்குவதாக
நினைப்பவன் சந்தியில் இழுத்தல் - பகிரங்கமாகப் பழித்தல் சந்தியில் நிற்றல் - உதவியற்றிருத்தல் சாணேற முழம் சறுக்கல் - சிறிது முன்னேற அதிகம் இழத்தல் சின்னபின்னம் - துண்டு துண்டாக சுருக்குப் போடுதல் - தற்கொலை செய்தல் சுற்றுமுற்றும் - எல்லாப் பக்கமும் சூரியனைக் கண்ட தாமரை - மிகுந்த மனமகிழ்ச்சி சூரியனைக் கண்ட பனி - விரைவாக மறைதல் செவி சாய்த்தல் ਕੋਰੋਨ - கேட்டல் தட்டிக் கழித்தல் - சாக்குச் சொல்லுதல் தட்டிப் பார்த்தல் - இரகசியத்தை அறிய முயலுதல் தட்டிவிடுதல் - உற்சாகப்படுத்தல்

சொற்ருெடர்ப் பயிற்சி 3常
தட்டுமுட்டு - வீட்டிற்குரிய பொருள்கள் தலைகவிழ்தல் - வெட்கித்தல் தலைகாட்டல் - வெளியில் வருதல் தலைகுலைதல் - நிலைகுலைதல் தலைக் கொழுப்பு - அகங்காரம் தலை தடவுதல் - ஏமாற்றுதல் தலைதடுமாறல் - இடத்தடுமாறல் தலைதெறிக்க ஒடுதல் - மிக விரைவாக ஓடுதல் தலைப்படல் - தொடங்கல் தலைப்போடல் - முயற்சி எடுத்தல் தலைமுழுகல் - கைவிடல் தலைமேற்கொள்ளல் - ஏவலின்படி ஒழுகல் தலையளித்தல் - மிகுந்த அன்பு கொள்ளல் தலையால் நடத்தல் - நெறிதவறி நடத்தல் தலையிடுதல் - ஈடுபடுதல் தலையில் அடித்தல் தலையில் கை வைத்தல் தலையில் துரக்கி வைத்தல் - உயர்வுகாட்டுதல் தலையுடைத்தல் - மிகுந்த பிரயாசை எடுத்தல் தலையெடுத்தல் - உயர்வடைதல் தலையெழுத்து - விதி தலைவிரிகோலம் - அலங்கோலம் தவித்த முயல் அடித்தல் - சமயம் பார்த்து அபகரித்தல் தாளம் போடுதல் - ஒருவரின் ஏவலின்படி நடத்தல் துறட்டி போடுதல் - தன் பக்கம் இழுத்தல் தூண்டில் போடுதல் -தன்பக்கம் இழுத்தல் தூண்டிவிடுதல் - ஏவுதல் தொப்பி புரட்டுதல் - காலத்துக்குக்காலம் கொள்கை மாறுதல் தொப்பி போடுதல் - ஏமாற்றுதல் தோள்கொடுத்தல் - உதவுதல் நடுத்தெருவில் விடுதல் - பாதுகாப்பின்றி அலையவிடுதல் நடைப்பிணம் - தனக்கும் பிறர்க்கும் பயனில்லா வாழ்க்கை நட்டாற்றில் விடல் - உதவவேண்டிய வேளை யில் உதவாது
போதல் நாக்குத் தவறுதல் - பொய் சொல்லுதல் நாக்குத் தெறிக்கப் பூேசுதல் - மூத்தோர்ை இகழ்தல்” நாக்கு நீளுதல் - மிதமிஞ்சிப் பேசுதல் '
} - துன்பப்படல்

Page 28
38 தமிழ் மொழி விளக்கம்
நாக்குப் புரளுதல் - வாக்குத் தவறுதல் நிர்மூலம் செய்தல் - அடியோடு அழித்தல் நிறுத்துப் பார்த்தல் - ஆராய்தல் நெட்டுயிர்த்தல் - பெருமூச்சு விடுதல் நெஞ்சு புண்ணுதல் - மனம் வருந்தல் நெருப்பெடுத்தல் - கோபித்துப் பேசுதல் நெல்லிக்காய் மூட்டை - ஒன்றுமை போன்று தோன்றியும் ஒற்
றுமை இல்லாமை நொடி சொல்லுதல் - விளங்காமற் சொல்லுதல் பகற் கனவு - முடியாத ஒன்றை முடிப்பதாகக் கருதுதல் பசுமரத்தாணிபோல - சுலபமாகப் பதிதல் பச்சையாய்ப் பேசுதல் - பேசத் தகாதவற்றைப் பகிரங்கமாகப்
பேசுதல் பஞ்சங் கொட்டுதல் - வறுமையைப் பலகாலும் பேசுதல் பந்தம் பிடித்தல் - தன்னலங்கருதி ஒருவரைச் சார்ந்தொழுகல் பல் இளித்தல் - இரந்து கேட்டல் பல்லுக் கொட்டுதல் - தண்டித்தல் பல்லைக் கடித்தல் - துன்பத்தைச் சகித்தல் பல்லைப் பிடித்துப் பார்த்தல் - ஒருவன் ஆற்றலை ஆராய்தல் பழிவாங்கல் - தீமைக்குப் பதிலாகத் தீமை செய்தல் பிஞ்சிற் பழுத்தல் - இளமையில் முதிர்ந்த தன்மை அடைதல் பிடிகொடுத்தல் - அகப்படல் பிட்டுக்காட்டுதல் - விளக்கமாகக் கூறுதல் புண்படுத்தல் - மனத்தை வருந்தச் செய்தல் புறக்குடத்தில் வார்த்த நீர் - பயன் இல்லாத செயல் புறங்காட்டல் - தோல்வியால் முதுகுகாட்டி ஓடுதல் புறச் சுவர் தீற்றுதல் - சேர்ந்தோரை நீக்கிப் பிறரை ஆதரித்
தல், வெளிப்பகட்டு புறந்தருதல் - பாதுகாத்தல் புளிப்பிடித்தல் - செருக்கடைதல் புளிப்புத்தட்டல் - வெறுப்படைதல் பூச்சிகாட்டுதல் - பயங்கொள்ளச் செய்தல் மட்டையடித்தல் - வறுமையால் துன்பம் அடைதல் மனக்கோட்டை கட்டுதல் - வீணுன திட்டமிடுதல் மனப்பால் குடித்தல் - கற்பனை செய்து இன்பம் அடைதல் முகத்தில் அடித்தல் - நேரே நிந்தித்தல் முகத்தில் ஈயாடவில்லை - அளவற்ற கவலை முகத்தில் கரி பூசுதல் - மானங்கெட வைத்தல் முகநட்பு - வெளிநட்பு முகப்பழக்கம் - அறிமுகம்

சொற்ருெடர்ப் பயிற்சி 39
முகப்பூச்சு - வெளிப்பகட்டு முகம் கடுத்தல் - சினத்தல், வெறுத்தல் முகம் கரிகல் - துக்கமடைதல் முகம் கறுத்தல் - கோபித்தல் முகம் கவிழ்தல் -வெட்கம் அடைதல் முகம் காட்டுதல் - காட்சி கொடுத்தல் முகம் கொடுத்தல் - (சொல்லுவதைக் கேட்டல்) இசைதல் முகம் க்ோணுதல் - வெறுத்தல் முகச்சாடை - கண்டும் காணுமையும் முகச்சாய்ப்பு - விருப்பமின்மை முகம் தருதல் -"பட்சம் காட்டல் முகம் திரிதல் - வெறுப்புக் காட்டல் முகம் பார்த்தல் - அன்பு செய்தல் முகம் மலர்தல் - மகிழ்ச்சியடைதல் முகம் முறிதல் - மனம் நோதல் முட்டுக்கட்டை - தடையாக இருத்தல் முட்டுக்கொடுத்தல் - இடையூறு செய்தல் முடிச்சு அவிழ்த்தல் - திருடுதல் முடிச்சுப் போடுதல் - சண்டை மூட்டுதல் முடி சாய்த்தல் - வணங்குதல் முடிவு கட்டுதல் - தீர்மானித்தல் முடிவு காலம் - மரணகாலம் முடிவு சொல்லுதல் - தீர்ப்புச் சொல்லுதல் முதுகு காட்டல் - புறங்காட்டி ஒடுதல், தோல்வியடைதல் முதுகு கொடுத்தல் - உதவிசெய்தல் முயற் கொம்பு - இல்லாத பொருள் முழம் போடுதல் - ஒருவன் திறமையை ஆராய்தல் முழுக விடுதல் - பொருளைத் தொலையச் செய்தல் முழுகிப்போதல் - அடியோடு கெடுதல் முழுமூச்சு - ஊக்கமுடன் செய்யும் முயற்சி முள்ளுப் போடுதல் - இடையூறுசெய்தல் முறுக்கிவிடுதல் - பகை உண்டாக்குதல் முன்பின் பார்த்தல் - நன்ருய் ஆலோசனை செய்தல் முன்மாதிரி - எடுத்துக்காட்டு முன்னுக்கு வருதல் - வாழ்க்கையில் முன்னேறுதல் மூக்கால் அழுதல் - விருப்பமின்மை மூச்சுக்காட்டுதல் - வாய்திறந்து பேசுதல்

Page 29
40 தமிழ் மொழி விளக்கம்
மூச்சுக்கொள்ளுதல் - அகங்காரம் கொள்ளுதல் மூலைமுடுக்கு - எல்லாத் திக்கும், எல்லா இடமும் மெய்மறத்தல் - தன்செயலற்ற நிலை மெழுகுப் பொம்மை - துன்பங்களை அனுபவிக்க முடியாதவன் மேற்பார்த்தல் - பராமரித்தல்
மேற்பூச்சு - வெளிவேடம்
மொட்டையடித்தல் - அபகரித்தல்
வேைல் - ஏற்பாடு செய்தல் வயிறு காய்தல் - பட்டினி கிடத்தல் வயிற்றில் அடித்தல் - வருவாயைக் கெடுத்தல் வயிற்றுக்கொதி - பசி வயிற்றுப்பாடு - உணவு வயிற்றுமாரி - அளவுக்கு மிஞ்சி உண்பவன் வயிற்றெரிச்சல் - பொருமை வயிற்றைக் கட்டுதல் - செலவைச் சுருக்கல் வயிற்றைக் கலக்கல் - பயமடைதல் வயிறு குளிர்தல் - நிறைய உண்ணல் வயிறு வளர்த்தல் வயிறு கழுவுதல் வலக்கை அடித்தல் - உறுதிசெய்தல் வலை வீசுதல் - தன்பக்கம் இழுக்கமுயலுதல் வழிப்படுத்தல் - திருத்தல் வழிபார்த்தல் - உபாயம் தேடல் வழிவைத்தல் - கேடு தேடுதல்
வாக்களித்தல் வாக்குக் கொடுத்தல் } உறுதிசொல்லல்
வாக்கு மாறுதல் - முதுமை அடைதல் வாய்க்காரன் - அளவுக்கு மிஞ்சிப் பேசுவோன்
} - சீவனஞ் செய்தல்
வாய்க்கொழுப்பு - மதியாப் பேச்சு வாய்காட்டல் - எதிர்த்துப் பேசுதல் வாய்தடுமாறல் - பிழையாகப் பேசுதல் வாய்நாணயம் - சொல் தவருமை வாய்புதைத்தல் - வாய்மூடுதல் வாய்விடல் - பேசுதல் வாய்வைத்தல் - தலையிடுதல் வாயடங்கல் - அகங்காரம் குறைதல் வாயாடல் - அதிகம் பேசுதல்

சொற்ருெடர்ப் பயிற்சி 4
வாயில் மண்போடல் - தீமை விளைத்தல் வாயெடுத்தல் - பேசத் தொடங்குதல் வாயொடுங்கல் வாய்மூடுதல் ofG) வயிற்றைக் கட்டல் - சிக்கனமாய் வாழ்தல்
} - பேச்சை நிறுத்தல்
வாரியிறைத்தல் - அள்ளிக் கொடுத்தல் வாலாட்டுதல் - செருக்குக் காட்டுதல் வாழையடி வாழை - பரம்பரை 656a).5G5 - Lippa) - (Exception)
விழலுக்கு இறைத்தல் w காட்டில் எறித்த நிலா . - பயனற்ற முயற்சி
விரல்விட்டெண்ணக்கூடியது - மிகக் குறைந்த தொகை
வெளுத்துவாங்குதல் - மிகச் சிறப்பாகச் செய்தல்
வெறும் கை - வறுமை
வேதாந்தம் பேசுதல் - போலி ஞானம் பேசுதல்
வேலி பயிரை மேய்தல் - பாதுகாக்க வேண்டியவனே அழிவு
தேடல்
வேலைசாய்த்தல் - கொல்லுதல்

Page 30
42 தமிழ் மொழி விளக்கம்
அதிகாரம் VI
சிறப்புப் பொருளுணர்த்தும் சொற்ருெடர்கள்
(Connotative Phrases)
ஒருவன் முதல்வன் இருமுது குரவர் - தாய், தந்தை. இருபாலார் - ஆண், பெண். இருமை - இம்மை, மறுமை.
உயர்திணை, அஃறிணை. இருதிணை அகம், புறம். இருவகை இன்பம் - சிற்றின்பம், பேரின்பம்.
} - கடவுள்
இருஎண் - ஒருமை, பன்மை. இருவினை - நல்வினை, தீவினை. இருபிறப்பாளர் - பிராமணர். இருநிதிக்கிழவன் - சங்கநிதி, பதுமநிதிக்கு உரியவனன குபேரன். இரட்டைப்புலவர் இரட்டைப் பிள்ளைகளான இளஞ் சூரி இரட்டையர் யர், முதுசூரியர் என்ற புலவர்கள். மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை. மும்மதம் - கன்னமதம், கைமதம், கோசமதம் ஆகிய யானை
யின் மூன்று மதநீர். முத்தமிழ் - இயல், இசை, நாடகம். முத்தீ - காருகபர்த்தியம், ஆகவனியம், த ட் சிணுக் கினி ஆகிய மூன்று வேதாக்கினிகள் ; உதரத்தீ, காமத்தீ, சினத்தீ ஆகிய மூன்று உடம்புத் தீ. மும்மூர்த்தி - பிரமா, விஷ்ணு, உருத்திரன்.
* மூவக்ை நிலைபேறு - உம்மை, இம்மை, மறுமை. முமமை - { காலங்கள் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு. மும்மொழி - பழிகூறல், புகழ்கூறல், மெய்கூறல். முத்தொழில் - படைத்தல், காத்தல், அழித்தல்.
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம். சிே*"விமி " ஐ உச்சி, மாஜல. முக்கண்ணன் - சிவன். முப்பால் - அறம், பொருள், இன்பம்.
:? } - பலா, மா, வாழைப் பழங்கள்.

சொற்ருெடர்ப் பயிற்சி 43
மும்மறை - இருக்கு, யசுர், சாமம் என்ற மூன்று வேதங்கள். மும்மணி - புரு டரா கம், வைடூரியம், கோ மேதகம் என்ற
மூவகை இரத்தினங்கள். முந்நீர் - ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீரைக் கொண்ட
d5L-6). , முப்பகை - காமம், வெகுளி, மயக்கம். மும்முரசு - வீரமுரசு, நியாயமுரசு, மணமுரசு. முச்சங்கம் - முதல், இடை, கட்ை ஆகிய சங்கங்கள். முச்சுடர் - சூரியன், சந்திரன், நெருப்பு. மூவுலகு - சுவர்க்கம், பூமி, பாதாளம். மூவேந்தர் - சேர, சோழ, பாண்டியர். மூவர் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கிரசர், சுந்தரர் ஆகிய. s நாயன்மார்கள்.
மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை. நாற்குணம் - நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு ஆகிய பெண்
களின் இயற்கைக் குணங்கள். நாற்பாற் குலம் - அந்தணர், அரசர், வைசியர், வேளாளர். நான்கு பொருள்கள் - அறம், பொருள், இன்பம், வீடு. நாற்படை - தேர்ப்படை, யானைப் படை, குதிரைப்படை,
d5 f'TG) fl I65) . நானிலம் - முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல். Va நான்மறை - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்.
ந்ால்வர் - அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய
நாயன்மார்கள். ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின்பால் , ஐந்துவகையாக முடிக்கப்படும் மகளிர் கூந்தல் - கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள். ஐங்கனை தாமரைமலர், அசோகமலர், штLDGori, முல்லை பஞ்சபாணம் LDGN)лт, கருங்குவளைமலர் எனற ஐவகை மன
மத பாணங்கள. ஐந்தொழில் - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத் த ல்,
அருளல். ஐங்குரவர் - அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தமை
- {116ð ஐந்து உப்பு - கறி உப்பு, கல்லுப்பு, வெடி உப்பு, இந்துப்பு,
வளையல் உப்பு. ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.

Page 31
44 தமிழ் மொழி விளக்கம்
ஐந்து பா - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா. A. ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய
.ஐவகை நிலங்கள் ܓ
ம்பொறி s o o ேேயங்கள் - மெய், வாய், கண், மூக்கு, செவி. ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.
- நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம். ஐந்துணவு - கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்ல ல்
ஆகிய ஐந்து வகையால் உண்ணுதற்குரிய உணவுகள். ஐம்பெருங் குழு - ஐவகை அரசியல் தலைவர் - அமைச்சர்,
* புரோகிதர், சேணுதிபதி, தூதர், சாரணர். ஐம்பெரும்பாதகம் } - கொலை, களவு, கள், பொய், காமம். பஞ்சமாபாதகம ஐம்பொன் பஞ்சலோகம் ஐம்படைத்தாலி - கழுத்திலே பிள்ளைகள் அணியும் பஞ் சா யுத உருவம் அமைந்த ஆபரணம் - பஞ்சா யுதங்க ள் - சங்கு, சக்கரம், கதாயுதம், வில், வாள் என்ற திரு மாலின் ஐவகை ஆயுதங்கள். ஐம்பெருங்காப்பியம் - சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலப் பஞ்சகாவியம் பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி.
} - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்.
பஞ்சவர்ணம் - வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை. பஞ்சாமிர்தம் - வாழைப்பழம், தேன், சர்க் கரை, நெய், திராட்சை ஆகியவற்ரு ல் உண்டான அபிஷேக பண்டம். பஞ்சாங்கம் - திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து உறுப்புக்களைக் கொண்ட காலக் குறிப்பு பஞ்சரத்தினம் - செம்மணி, முத்து, வைரம், பச்சை, நீலம்
என்ற ஐந்து இரத்தினங்கள். பஞ்சபாண்டவர் - தருமன், வீமன், அரு ச் சுனன், நகுலன்,
சகாதேவன். பஞ்ச கன்னியர் - ஒழுக்கத்திற் சிறந்த அகலிகை, திரெளபதை,
சீதை, தாரை, மண்டோதரி என்ற ஐந்து பெண்கள். பஞ்ச திரவியம் - மலைபடுதிரவியம், காடுபடுதிரவியம், நாடுபடு திரவியம், நகர்படுதிரவியம், கடல்படுதிரவியம்.

சொற்ருெடர்ப் பயிற்சி 45.
அறுசுவை - கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு.
கார்ப்பு. ஆறறிவு -"சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், பகுத்தறிவு. அறுவகைச் சமயம் - சைவம், வைணவம், சாக்தம், செளரம்,
காணபத்தியம், கெளமாரம். அறுகுணம் - ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம்,
வைராக்கியம்.
அறுபதம் - வண்டு. எழுவகைப் பருவம் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் ஆகிய பெண் களுக்குரிய எழுவகைப் பருவம். எழுவகை மதம் - (1) யானைக்கு ஏழு இடங்களில் தோன்றும் மதநீர் - ஏழிடங்களாவன - கன்ன மிரண்டு, கண் இரண்டு, கரத்துவாரம் இரண்டு, கோசம் ஒன்று. (2) நூலாசிரியருக்குரிய எழு வகை க் கொள்கை - உடன்படல், மறுத்தல், பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவு, தான் நாட்டித் தனது நிறுப்பு, இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு, பிறர் நூற் குற்றம் காட்டல், பிறிதொடு படான் தன் மதங்கொள்ளல்.
எழுபவம் - தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன,
எழுபிறவி நீர்வாழ்வன, தாவரம்.
ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி,
தாரம்.
எழுவகை அளவை - நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தி அளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்க முகந்து அளத்தல், எண்ணியளத்தல். எண்பேராயம் - அரசர்க்குரிய துணைவர் - க ர னத் தி ய ல வ ர், கருமகாரர், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகர மாந்தர், படைத்தலைவர், யானை வீரர், இவுளிமறவர். எண்பதம் - நெல், புல், வரகு, தி னை, சா மை, இறுங்கு,
துவரை, இராகி ஆகிய எண்வகைத் தானியங்கள். எண்வகைச் செருக்கு - பிறப்பு, குலம், வலி, செல்வம், எண்மயம் , வனப்பு, சிறப்பு, தவம், உணர்வு. எண்திசை - வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, அட்டதிக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு.

Page 32
46 தமிழ் மொழி விளக்கம்
அட்டதிக்குப்பாலகர் - இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வரு
ணன், வாயு, குபேரன், ஈசானன். அட்டவர்க்கம் - சீரகம், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பலி,
இந்துப்பு, பெருங்காயம், ஓமம். அட்ட போகம் - பெண், ஆடை, அணிகலன், போசனம், தாம்
பூலம், பரிமளம், பாட்டு, பூவமளி. அட்டமங்கலம் - கவரி, நிறை குடம், கண்ணுடி, தோட்டி,
முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல். அட்டபரிசம் - தட்டல், பற்றல், தடவல், தீண்டல், குத்தல்,
வெட்டல், கட்டல், ஊன்றல். அட்டபுட்பம் - (1) புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை ஆகிய புற வணக் கத்திற்குரிய எட்டுப் பூக்கள். (2) கொல்லாமை, ஐம் பொறி அடக் கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு ஆகிய அக வணக்கத்திற் குரிய எட்டு வகைக் குணங்கள். எட்டுத்தொகை - சங்க காலத்துத் தொகுக்கப்பட்ட எட்டு நூல் கள் : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற் றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானுறு.
- கோமேதகம், நீலம், ப வளம், மரகதம்,
ந யம், வைரம் .
நவதானியம் - கோதுமை, நெல், து வரை, பயறு, கடலை,
அவரை, எள், உழுந்து, கொள். நவரசம் - நகை, அழுகை, இழிவு, மருட்கை, அச்
ஒன்பான் சுவை சம், பெருமிதம், வெகுளி, உவ  ைக,
சாந்தம்.
நவராத்திரி - துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி என்ற தேவதை களை நோக்கி, புரட்டாதி மாதத்தில் ஒன்பது இரவு
களில் செய்யப்படும் நோன்பு.
பத்துக் குற்றம் - நூலில் காணப்படக்கூடிய பத்துக் குற்றங்கள் : குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வழுஉச் சொல் புணர்த் த ல், மயங்க வைத்தல், வெற்றெனத் தொடுத் த ல், மற் ருென்று விரித்தல், சென்று தேய்ந்து இறுதல், நின்று பயனின்மை.

சொற்ருெடர்ப் பயிற்சி 47
பத்தழகு - நூலில் காணப்படக்கூடிய பத்து அழகு : சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றேர்க்கு இனிமை, நன்மொழி புணர்த்தல், ஓசை உடைமை, ஆழம் உடைன்ம, முறையின் வைப்பு, உலகம் மலை யாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது ஆகுதல்.
பத்துப் பாட்டு - திரு முரு காற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணுற்றுப்படை, பெரும் பாணுற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடு கடாம் என்ற பத்துப் பாடல்கள் அடங்கிய சங்கநூற் ருெகுதி.
பதினெண் கீழ்க்கணக்கு - நாலடியார், நான் மணிக் கடி கை, இன்னு நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணையைம்பது, ஐந்திணை எழு பது, திணைமொழியைம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, கைந் நிலை என்ற பதினெட்டுச் சங்க நூல்கள்.

Page 33
48 தமிழ் மொழி விணக்கம் அதிகாரம் VII
குறிப்புப் பொருளுணர்த்தும் அடுக்குச் சொற்ருெடர்கள் (Significant Alliterative Phrases)
அதிகாரி தன் வேலைக் காரனைக் கச்சுப்பிச்சு என்று ஏசினன்
(தாறுமாருக). இரு திருடர்களும் தமக்குள் கசுகுசு என்று பேசி ஞர்கள்
(மெதுவாக). தாகம் அதிகமானதால், கடகட என்று (மடமட என்று மள
மள என்று) குடித்தான் (விரைவாக). காலில் முள்ளேறிய இடம் கடுகடுத்தது (குத்துதல்). அவன் உடம்பு கணகணப்பாக இருக்கின்றது (சூடு). மாலையில் மணி கணிர்கணிர் என்று ஒலித்தது (ஒலிக்குறிப்பு). காயம்பட்ட இடத்திலிருந்து இரத்தம் கதகத என்று பாய்ந்தது
(விரைவுக் குறிப்பு). மல்லிகை மலர் கமகம என்று இருந்தது (வாசனை வீசுதல்). சோற்றில் மண் கரகரத்தது. திருடனுடைய கையைப்பிடித்துக் கரகா என்று இழுத்தான். கலகல என்று கண்ணுடி உடைந்து கீழே விழுந்த து (ஒலிக்
குறிப்பு). அவன் கலகல என்று சிரித்தான் (ஒலிக்குறிப்பு). வயதில் முதிர்ந்தோர் கறகறத்தல் இயல்பு (அலட்டல்). பகைவனைக் கண்டதும் அவன் முகம் கறுகறுத்தது (கோபங்
கொள்ளல்). கன்னங் கரே லென்ற கூந்தல் அவளுக்கு அழகைக் கொடுத்தது
(மிகக் கருமையான). பாடசாலை மணியடித்ததும் பிள்ளைகள் கிசுகிசு என்று புறப்பட்
டார்கள் (விரைவுக் குறிப்பு). மழையில் நனைந்தவன் கிடுகிடுத்தான் (நடுங்கினன்). வெறிநாயைக் கண்டதும் வேலன் கிடுகிடுத்தான் (பயந்தான்). வண்டுகள் கிணுகினு என்று பறந்தன (அனுங்குதல்). பாலத்தின்மேல் புகைவண்டி கிணுக்குக்கினுக்கென்று சென்றது
(தாமதக் குறிப்பு). காற்ருடி கிர்கிர் என்று சுழன்றது (சுழலும் ஓசை). மணி கிலுகிலுத்ததும் வேலையை நிறுத்தினர்கள் (ஒலிக் குறிப்பு). ஓராண்டுள் மரம் கிளுகிளு என்று வளர்ந்தது (விருத் தி க்
குறிப்பு). பசியால் வருந்தியவன் கிறுகிறுத்து விழுந்தான் (தலைச் சுழற்சி).

சொற்ருெடர்ப் பயிற்சி. 49
மாலை நேரத்தில் பறவைகள் கூடுகளை நோக்கிக் கீச்ச்ேசென்று
பறந்தன (ஒலிக் குறிப்பு). சிறுவன் குடுகுடு என்று ஒடிஞ்ன் (விரைவுக் குறிப்பு). மணமாலை குமுகுமு என்று இருந்தது (வாசனைக் குறிப்பு). தண்ணிர் ஊற்றி வைக்காதபடியால் சோறு குளகுளத்துப் போய்
விட்டது (நெகிழ்ந்து கெட்டுப் போதல்). கூரையில் பல்லி கெச்சுக்கெச்சென்றது (பல்லி ஓசை). அவன் வீட்டில் கொட்டுகொட்டென்று இருந்தான் (தனிமை
யாய்). அவன் வேலையைச் சடசட' என்று (சடபிட என்று) செய்தான். காய்ந்த ஒலை சலசலத்தது (வெறுமை ஒலி). மழை சளசள என்று பெய்தது (நீர் விழும் ஒலி). வேலையற்றவன் சளசள என்று பேசிக்கொண்டிருந்தான் (வீண்
பேச்சு). சிலீர்சிலீர் என்ற நீரில் நீராடினுேம் (குளிர்ச்சிக் குறிப்பு). பசி வந்தவுடன் சிலர் சீத்துப்பூத்து என்று (சுடுகடு என்று)
இருப்பார்கள் (சினக் குறிப்பு). உண்டதும் சீறுபூறென்று உறங்கினன் (மிகுந்த தூக்கம்). பாம்பின் விடம் சுருசுரு என்று ஏறும் (விரைவுக் குறிப்பு). வயிற்று வலி சுள்சுள்ளென்று இருந்தது (உறைப்புக் குறிப்பு). மாலைப்பொழுதில் வானம் செக்கச்செவேல் என்று இருக்கும்
(மிகுந்த சிவப்பு). வேலையை டக்டக்கென்று செய்து திரும்பினன் (விரைவுக்
குறிப்பு). காலையில் முரசு டமடம என்று முழங்கியது (முரசொலி). மழைக்குமுன்னர் தகதக என்று மின்னியது (ஒளிக் குறிப்பு). குழந்தை தக்குப்புக்கு என்று (தத்துப்பித்து என்று) நடத்தல்
அழகாயிருக்கும் (குழந்தை நடை). கிழவர் தடதடத்தல் இயல்பு (தள்ளாடல்). சமையலைத் தடல்புடலாகச் செய்து முடித்தான் (ஆரவாரம்). வீட்டுக்காரனைக் கண்டதும் திருடன் தறதற என்று விழித்தான்
(அச்சக் குறிப்பு). ஆற்றில் விழுந்தவன் திக்குமுக்குப் பட்டான் (மூச்சு விடத்
திண்டாடல்). குண்டு விழுந்ததும் பூமி முழுவதும் திடுதிடுத்தது (நடுங்கியது). இழவுச் செய்தி திடுதிடு (திடீர்திடீர்) எனக் கிடைத்தது (சடு
திக் குறிப்பு). * மரத்திலிருந்து பழங்கள் தொப்புத் தொப்பென்று விழுந்தன
(விழும் ஓசை).

Page 34
50 தமிழ் மொழி விளக்கம்
அண்ணனுடைய தொப்பி தம்பிக்குத் தொ ள தொ ள த்தது
(தளர்தல்). வேலையாளைக் கண்டதும் முதலாளி நச்சு நச்சு என்று நின்றன்
(வெறுப்புப் பேச்சு). குளிர் காலத்தில் பொரியல் நசுநசுத்துப் போகும் (இளகுதல்). மழை பெய்ததும் தெருவெல்லாம் நருநரு (தருபிரு நளுநொளு)
என்று இருந்தது. காலில் முள் நெருநெரு என்று ஏறியது (விரைவுக் குறிப்பு). பயிர்கள் பச்சைப்பசேலென்று இருந்தன (மிகுந்த பச்சை). நெஞ்சு படபட என்று அடித்தது (துடித்தல்). சடுதியான செய்தி கேட்டுப் பரபரப்பு அடைந்தார்கள் (திகில்). இரத்தினக்கல் பளபள என்று (பளிச்சுப்பளிச்சு என்று, மினுக்கு
மினுக்கு என்று, தகதக என்று) காணப்பட்டது. கந்தைத் துணி பறபற என்று கிழிந்தது (விரைவுக் குறிப்பு). அடுப்பிலிருந்த கறி பொடுபொடுத்தது (குறைதல்). மகனின் செய்கை சரியில்லாதபடியால் தந்தை பிறுபிறுத்தார்
(முணுமுணுத்தல்). • அயல் வீட்டவன் உயர் வைக் கண்டு அவன் பொருபொருத்தான்
(பொருமைப்படல்). துக்கச் செய்தியைக் கேட்டதும் கண்ணிர் பொலுபொலு என்று
விழுந்தது (உதிரல்). புயல் அடித்ததினுல் மரம் மடமட என்று முறிந்தது (விரைவுக்
குறிப்பு). சொல்லியவண்ணம் செய்யாதபடியால் அவன் முறுமுறுத்தான்
(குறை சொல்லல்). அழுக்குப் பிடித்ததினல் உடல் மொசு மொசுத்தது (சொறி
உணர்ச்சி). மொறுமொறுத்த பொரியலையே எல்லாரும் விரும்புவர் (நன்
முகப் பொரிதல்). வேலையற்றவன் எந்த நேரமும் வளவளத்தான் (பயனின்றிப்
பேசுதல்). குழந்தை வழுவழு என்றிருந்தது (குளிர்ச்சித் தோற்றம்). ஆகாயவிமானம் விண்விண் என்று பறந்தது (விரைவுக் குறிப்பு) பக்தி மேலீட்டினுல் உடல் விதிர்விதிர்த்தது (நடுங்கல்). வேலைகள் அனைத்தையும் விறுவிறு என்று செய்து முடித்தான்
(துரிதக் குறிப்பு). புண் விறுவிறுப்பினுல் தூக்கம் கெட்டது (கொதிப்பு). துன்பம் பொறுக்க முடியாமல் வீர்வீர் என்று அழுதான் (மிகுதி).

சொற்ருெட்ர்ப் பயிற்சி 51
கீழோரிடம் வெடுக்கு வெடுக்கு என்று விழுதல் ஆகாது (சினத்
த ல்). நோயாளி வெதுவெதுத்த நீரில் குளித்தான் (இளஞ் சூடு). கொக்கு வெள்ளை வெளேர் என்று இருக்கும் (மிகுந்த வெள்ளை). உடல் மெலிவால் அவன் முகம் வெளுவெளுத்தது (வெளிறல்),
பயிற்சி
. பின்வருவனவற்றின் பொருளை உணர்த்தும் நேரான
உவமை மரபுச் சொற்ருெடர்களைக் கூறுக:
உதாரணம் :
(அ) காத்திருந்து ஏமாறுபவன் - இலவு காத்த கிளி. (ஆ) பயனற்ற முயற்சி- விழலுக்கிறைத்த நீர்
1. தனது ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயலில் இறங்கி
அதனுல் துன்பப்படுபவன்.
2. தவிர்க்க முடிய்ாத துன்பங்களில் அகப்பட்டவன்.
3. மறைவாய் இருத்தல்.
4. பாசாங்கு செய்ப்வன்
5. தெளிவாக விளங்கல்.
6. வெளியிட முடியாத நினைவு.
7. தனக்கெனத் தனி இயல்பின்றி, பிறரின் விருப்புக்கேற்பக்
காரியம் செய்பவன்.
8. நல்ல திருப்பத் தீயதை நாடல்.
9. வெளியுலக அனுபவமற்றவன்.
10. இல்லாத ஒன்று.
11. ஒரு பொருளின் மதிப்பறியாதவனிடத்து அப்பொருள்
சென்றடைதல்.
12. தான் பெரும் பொறுப்பைத் தாங்குவதாக நினைப்பவன்.
13. சமயம் பார்த்து அபகரித்தல்.
4. ஒற்றுமைபோன்று தோற்றியும் ஒற்றுமை இல்லாமை.
15. துன்பங்களை அனுபவிக்க முடியாதவன்.

Page 35
52 தமிழ் மொழி விளக்கம்
11. கீழ்க் காணும் மரபுச் சொற்ருெடர்களுக்குப் பொருள்
கூறுக ே
ஒற்றைக் காலில் நிற்றல், வயிறு வளர்த்தல், முகத்தில் கரி
பூசுதல், இளநாக்கடித்தல், வேலி பயிரை மேய்தல், சாண் ஏற முழம் சறுக்கல், நிர்மூலம் செய்தல், மனப்பால் குடித்தல், இரண்டு தோணியில் கால் வைத்தல், பந்தம் பிடித்தல், வாயில் மண் போடுதல், வேலை சாய்த்தல், அல்லும் பகலும், ஒட்டைக் கையன், ஒருதலை, காலில் விழுதல், முடிச்சுப் போடுதல், உலை. வைத்தல், சந்தியில் இழுத்தல், அக்கரைப் பச்சை, ஆசை வார்த்தை, தலைமேற் கொள்ளல், வாக்கு மாறுதல், கை கொடுத்தல், எண்பித்தல். I. மேலேயுள்ள மரபுச் சொற்றெடர்கள் ஒவ்வொன்றையும்
பொருள் தெளிவாகுமாறு ஒவ்வொரு வாக்கியத் தில்
அமைத்து எழுதுக: '
IV. கீழ்க் காணும் கூட்டுச் சொற்களைக் குறிக்கும் ஒரே சொற்
ருெடர் தருக :
1. தாய், தந்தை.
2. இயல், இசை, நாடகம். 3. அறம், பொருள், இன்பம்.
4. மா, பலா வாழைப் பழங்கள். 5. சூரியன், சந்திரன், நெருப்பு. 6. தன்மை, முன்னிலை, படர்க்கை.
7. மெய், வாய், கண், மூக்கு, செவி.
8. வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை.
9. கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு.
1 O. கவரி, நிறைகுடம், கண்ணுடி, தோட்டி, முரசு, விளக்கு,
பதாகை, இணைக்கயல்.
V. கீழ்க் காணும் சிறப்புப் பொருளுணர்த்தும் சொற்ருெடர்
கள் குறிப்பன எவை?
இருதிணை, இருநிதிக் கிழவன், மும்மதம், மும்மை, மும்
மொழி, முந்நீர், நாற்குணம், நான்கு பொருள்கள், நாற் படை. நானிலம், ஐம்பால், ஐங்கணை, ஐந் தி லக் கண ம்,

சொற்ருெஉர்ப் பயிற்சி
ஐந்திணை, பஞ்சபூதம், ஐம்பெருங் குழு, பஞ்சமர் பாதகம்,
ஐம்பெருங் காப்பியம், பஞ்ச திரவியம், ஆறறிவு, எழுவகைப்
பருவம், எண் பேராயம், அட்ட திக்கு, அட்ட் பரிசம், ஒன்பான் சுவை.
VI. " பின்வரும் குறிப்புப் பொருளுணர்த்தும் அடுக்குச் சொற்
ருெடர்களை வாக்கியங்களில் அமைத்து எழுதுக:
கடகபட, கணிர்கணிர், கமகம, கிணுகினு, கு மு கு மு. கொட்டுக்கொட்டு, சிலீர் சிலீர், செக்கச்செவேல், தகதக, தடல் புடல், திடுதிடு, நெரு நெரு, பச்சைப்பசேல், பளபள, பொலுபொலு, வழுவழு, விண்விண், விதிர்விதிர், வீர்வீர், வெள்ளை வெளேர். w

Page 36
வாக்கியப் பயிற்சி (Study of Sentences)
அதிகாரம் VIII
6. rá8u osounů (Structure of Sentences) பேச்சு வழக்கில் அல்லது எழுத்து வழக்கில் நாம் பற்பல சொற்களைப் பயன்படுத்துகின்ருேம். பல எழுத்துக்கள் சேர்ந்து சொல் ஆவது போன்று, பல சொற்கள் சேரின் அவை சொற் sin. ”LLDT E5 lb (Group of Words). ی
கந்தன் ஏழை நனைந்தான் D60p.
இந்தச் சொற்கூட்டம் ஒரு பொருளையோ அல்லது கருத் தையோ வெளியிடாமையால் இதனுல் பயன் யாதும் இல்லை. ஆனல், இந்தச் சொற்களைக் கருத்துப் புலப்படுமாறு ஒழுங்காக
அமைக்கலாம்.
ஏழைக் கந்தன் மழையில் நனைந்தான். இங்ங்னம், ஏதேனும் ஒரு கருத்தோ அல்லது பொருளோ
புலப்படுமாறு அமையும் ஒரு சொற் கூட்டம் வாக்கியம் (Sentence) 6T60T lil Gib.
வாக்கிய வகைகள்
வாக்கியங்கள் தரும் பொருளுக்கேற்ப அவற்றை நான்காகப் பிரிக்கலாம்.
1. ஒரு பொருளை வலியுறுத்தும் (ASSertive) வாக்கியங்கள்.
உ-ம். ஒவ்வொருவரும் கல்வி கற்றல் அவசியம்.
2. கேள்வியாக (Questions) அமையும் வாக்கியங்கள்.
உ-ம். நீ எப்போது திரும்புவாய் ?
3. Guiu ši G35T " @LuíT (B&T (Request, Command or Wish)
உணர்த்தும் வாக்கியங்கள்.
உ-ம். விரைவாய் வா.
நீடூழி வாழ்க !
4. வியப்புப் பொருளை (Exclamatory) உணர்த்தும் வாக்கியங்
கள்.
உ-ம். இயற்கைக் காட்சியின் அழகு என்னே!

வாக்கியப் பயிற்சி 55
ஒவ்வொரு வாக்கியத்திலும் இரண்டு முக்கியமான பகுதி கள் உண்டு. ஒன்று எதைப்பற்றியேனும் குறிப்பிடும். மற்றது குறிப்பிட்டதைப்பற்றி ஏதாவது கூறும்.
உ-ம். ' இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதினர் " என்ற வாக்கியத்தில், முதற்பகுதி ' இளங்கோவடிகள் " என்ப தைக் குறிப்பிடுகின்றது. இரண்டாவது பகுதி, இளங்கோ வடிகளையிட்டு, “ சிலப்பதிகாரம் எழுதினர் ” என்று கூறுகின் றது. இந்த முதற் பகுதி, ' " எழுவாய் ' (Subject) என்றும், இரண்டாம் பகுதி பயனிலை ' (Predicate) என்றும் பெயர் பெறும், எழுவாய் என்பது " முதலில் அமைவது " என்றும், பயனிலை என்பது ' எழுவாய் குறிக்கும் தொழிற் பயன் நிலை
பெறுதல் என்றும் பொருள்படும். பின்வரும் வாக்கியங் களில் எழுவாய் பயனிலைகளைக் காண்க :
1. இங்கே வா. 2. மிகுந்த செல்வன் மகிழ்ச்சியடைந்தான். 3. ஆகாய விமானம் மிக விரைவாகச் செல்லும். 4. என்னுடன் படித்த மாணவன் சிறந்தவன். 5. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,
எண் : எழுவாய் Luusafäo
l o 成。 (தோன்ற எழுவாய்) இங்கே வா
(understood) 2 மிகுந்த செல்வன் மகிழ்ச்சியடைந்தான் 3 ஆகாய விமானம் மிக விரைவாகச் செல்லும் 4. என்னுடன் படித்த மாணவன் சிறந்தவன் 5 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
அடைமொழிகள் (Attributes)
ஒரு வாக்கியத்தை எழுவாயாகவும் பயனிலை யாக வும் பிரிக்கும்போது ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு சொல்லோ அல்லது பல சொற்களோ இருக்கலாம். (இதை முன்பு காட் டிய உதாரணங்களினுல் அறிக). ஒவ்வொரு பிரிவிலும் பல சொற்கள் இருப்பினும், அவற்றுள் பிரிவுக்கு ஒவ்வொரு சொல்லே முக்கியமான கருத்தை விளக்கும். ஏனைய சொற்கள் அவற்றைத் தழுவி, அவற்றின் பொருளை விளக்குவதற்காக அமையும்.

Page 37
56 தமிழ் மொழி விளக்கம்
உ-ம். நீர்வளம் நிறைந்த நாடு பெரும் பயன் விளைக்கும்.
இந்த வாக்கியத்தில் " நீர்வளம் நிறைந்தநாடு " என்பது முதற் பிரிவிலும், " பெரும் பயன் விளைக்கும் " என்பது இரண் டாம் பகுதியிலும் அமையும். முதற்பகுதியில் முக்கியமாயுள்ள சொல் " நாடு ". இதை விவரமாக விளக்கு வ தற்காக வே * நீர்வளம் நிறைந்த ’ என்ற சொற்கள் அமைந்தன. எனவே, " நாடு" என்ற சொல் " எழுவாய் ' என்றும் இதைத் தழுவி வந்த ‘நீர்வளம் நிறைந்த ’ என்ற சொற்கள் " எழுவாய் அடை மொழி " அல்லது " எழுவாய் விசேடணம் " என்றும் பெயர் பெறும். இங்ங்னமே, இரண்டாம் பகுதியிலுள்ள " பெரும் பயன் விளைக்கும் " என்ற சொற்ருெடருள் முக்கியமான சொல் * விளைக்கும்’ என்பது " பயனிலை" என்றும், இதைத் தழுவிவந்த * பெரும் பயன் " என்ற சொற்கள் பயனிலை அடைமொழி • அல்லது " பயனிலை விசேடணம் " என்றும் பெயர் பெறும்.
பின்வரும் வாக்கியங்களின் பிரிவுகளைக் கீழே காண்க : 1. கிணற்றுள் விழுந்த கந்தன் ஊரெல்லாம் கேட்கும் படி
ஒலம் இட்டான். 2. அளவு கடந்து ஓடிய வெள்ளம் நாடு எங்கும் பரவியது. 3. நறுமணம் வீசும் மலர்கள் நாட்டைச்சுற்றி வளர்ந்தன.
4. வேலையற்ற மனிதன் கவலையற்று வாழ்ந்தான்.
எண் எழுவாய் எழு. அடைமொழி au uu 6saxifäag பய. அடைமொழி
1 கந்தன் கிணற்றுள் விழுந்த ஓலமிட் ஊரெல்லாம்
டான் கேட்கும்படி 2 வெள்ளம் அளவுகடந்து ஓடிய பரவியது நாடு எங்கும் 3 மலர்கள் நறுமணம் வீசும் " வளர்ந்தன நாட்டைச் சுற்றி 4 மனிதன் வேலையற்ற வாழ்ந்தான் ! கவலையற்று
பயிற்சி கீழ்க்காணும் வாக்கியங்களிலுள்ள எழுவாய், எழுவாய்
அடைமொழி, பயனிலை, பயனிலை அடைமொழிகளைப் பிரித்து எழுதுக ே
1. கப்பலிலிருந்து தவறிக் கடலுள் வீழ்ந்தவர்கள் கரையேறி
ஞர்கள். 2. என்னுல் இயன்றமட்டும் உதவி செய்வேன்.

3.
l4.
I 5.
வாக்கியப் பயிற்சி 57 மழையில்லாதபடியால் வயலிலுள்ள பயிர்கள் வாடின. கற்றபடி ஒழுகும் மக்கள் உலகில் மிகச் சிலரே இருக்கின் முர்கள். v− சூரிய குலத்து அரசனன இராமன் தந்தை சொற்படி கானகம் ஏகினன். ஈதல் அறங்களுளெல்லாம் மிகச் சிறந்தது. வறுமை தரும் இன்னல்கள் எண்ணற்றவை. தன்னம்பிக்கை இல்லாத மனிதன் வாழ்க்கையில் முன் னேற மாட்டான். உழவுத் தொழில் செய்து வாழும் மக்கள் உலகத்தாருக் குப் பெரிதும் உதவுகிறர்கள். உலகம் போற்றும் உத்தமர் காந்தி தன்னலமற்று வாழ்ந் தார். மனம் டோன போக்கெல்லாம் போக வேண்டாம். தமக்கென வாழாப் பிறர்க்கென வாழ்வோர் பெரிதும் போற்றப்படுவர். அரசன் செல்லும் வழியிலேயே குடிகளும் செல்வார்கள்.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகமெல்லாம்
பரவியிருக்கிறது.
பத்திரிகைகள் மக்களுக்கு மிகவும் பயன்படுகின்றன.

Page 38
58 தமிழ் மொழி விளக்கம்
அதிகாரம் IX
Gasuishay, Gifu LT Gear (Active & Passive Voice)
* அவன் கண்டான்' என்ற வாக்கியத்தைப் படிக்கும்போது
எவர் உள்ளத்திலும் ஓர் ஐயம் எழும். உடனே எவரும் * என்னத்தைக் கண்டான் ? ? என்ற கேள்வியையே ஒரே முக மாகக் கேட்பார்கள். ' அவன் மாட்டைக் கண்டான் " என்று
சொல்லும்போது அந்த ஐயம் தீர்ந்து விடுகின்றது. இந்த ஐயத்திற்குக் காரணம் பயனிலையின் பொருள் முற்றுப் பெரு மையே. இதை " மாடு” என்ற சொல் முற்றுப்பெறச் செய் கின்றது. இது செயப்படுபொருள் (Object) என்று பெயர் பெறும். பின்வரும் வாக்கியங்களை ஆராய்க. தடித்த சொற் கள் செயப்படுபொருளாகும்.
நாய் வீட்டைக் காக்கும். திருவள்ளுவர் திருக்குறள் எழுதினர். அவன் எனக்குப் புத்தகம் தந்தான்.
டன் அதிக பணத்தைக் கவர்ந்தான். (5 த
சிறுவன் கடைக்குச் சென்று தின்பண்டம் வாங்கினன்.
பயனிலையாய் அமையும் வினை செயப்படுபொருள் பெற்று வருமாயின், அது செயப்படுபொருள் குன்ரு (குறையாத) வினை (Transitive Verb) GT GOT L'uLu Gub. சில வினைகள் இயல்பாகவே செயப்படுபொருள் பெருமல் அமையலாம்.
உ-ம். குழந்தை அழுதது.
அவன் நீருள் நீந்தினுன். நான் விரைவாக ஓடினேன்.
கோபாலன் அமைதியாக இருந்தான்.
மேற்காட்டிய உதாரணங்களில் வரும் அழுதது, " " நீந்தி ஞன், ஒடினேன், " " இருந்தான் " என்ற வினை க ளோ டு செயப்படுபொருள் அமைவதற்கு இடமே இல்லை. இங்ங்னம், செயப்படுபொருள் பெற்றுவராத வினை ‘ செயப்படுபொருள் குன்றிய வினை (Intransitive Verb) எனப்படும்.
ஒரு வாக்கியத்தில் செயப்படுபொருள் அமையுமாயின், அது எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில்வரும். இதுவே தமிழ் நடையாகும். இங்ங்ணம், செயப்படுபொருள் அமைந்து வரும் ஒரே வாக்கியத்தை இரண்டு முறையாக எழுதலாம்.

வாக்கியப் பயிற்சி 59 உ-ம். 1. நான் தம்பியை அடித்தேன்.
2. தம்பி என்னல் அடிக்கப்பட்டான்.
இந்த இரண்டு வாக்கியங்களிலும் ஒரே கருத்து அமை யினும், வாக்கிய அமைப்பில் வேற்றுமையைக் காணலாம். முதல் வாக்கியத்தில் வரும் வினை, எழுவாய் ஏதோ செய்த தாகக் குறிப்பிடுகின்றது. ஆனல், இரண்டாம் வாக்கியத்தில் வரும் வினை, எழுவாய்க்கு ஏதோ செய்யப்பட்டதாகக் குறிப் பிடுகின்றது. இங்ங்னம், எழுவாய் செய்ததாகத் தெரிவிக்கும் முதல் வாக்கியத்திலுள்ள " அடித்தேன் " என்ற வினை, * செய் வினை (Active Vioce) என்றும், எழுவாய்க்கு ஏதோ செய் யப்பட்டதாகத் தெரிவிக்கும் இரண்டாம் வாக்கியத்திலுள்ள * அடிக்கப்பட்டான் ’ என்ற வினை ‘ செயப்பாட்டுவினை (Passive Voice) என்றும் பெயர் பெறும்.
செயப்படுபொருள் குன்ருவினைகளைக் கொண்ட வாக்கியத் இதைச் செய்வினை வாக்கியமாகவும், செயப்பாட்டுவினை வாக்கிய மாகவும் மாற்றி அமைக்கலாம். செய்வினை வாக்கியத்தைச் செயப்பாட்டுவினை வாக்கியமாக மாற்றி அமைத்தால், செய் வினை வாக்கியத்திலுள்ள எழுவாய் செயப்பாட்டுவினை வாக்கி யத்தில் மூன்ரும் வேற்றுமை பெற்று இடையில் வரும். செய் வினை வாக்கியத்தில் செயப்படுபொருளாய் இருந்த சொல், செயப்பாட்டுவினை வாக்கியத்தில் எழுவாயாக வரும். s
உ-ம்.
1. கந்தன் படம் வரைந்தான் - செய்வினை.
படம் கந்தனல் வரையப்பட்டது - செயப்பாட்டுவினை.
2. புல் அவளுல் வெட்டப்பட்டது - செயப்பாட்டுவினை.
அவன் புல் வெட்டினன் - செய்வினை.
குறிப்பு : பொதுவாக செய்வினை வாக்கியங்களே தமிழ் கடைக்குச் சிறப்புத் தருவன. ஆங்கில கடையில் அமைவதுபோல, சில செயப்பாட்டுவிக்ன வாக்கியங்கள் தமிழ்நடைக்கு ஒவ்வாதன.
a 5 TT600TLDIT 5: “I was taken by my father GT airsp 6) in ass) யத்தை " எனது தந்தையால் நான் கூட்டிச் செல்லப்பட்டேன் " என்று செயப்பாட்டு வாக்கியமாகத் தமிழில் எழுதினுல் அது சிறந்த நடையாகாது. இதை " எனது தந்தை என்னைக் கூட்டிச் சென்ருர் " என்று எழுதுவதே ஏற்ற நடையாகும்

Page 39
60 தமிழ் மொழி விளக்கம்
பயிற்சி கீழ்க்காணும் வாக்கியங்களிலுள்ள செயப்படுபொருள் குன்ரு வினே, செயப்படுபொருள் குன்றிய வினைகளைப் பொறுக்கி எழுதுக. செயப்படுபொருள் குன்ரு வினைகள் அமைந்த வாக்கியங்களி லுள்ள செயப்படுபொருள்களையும் காட்டுக :
1. நாம் பெரியோர் சொற்படி ஒழுகவேண்டும். 2. நீந்துதல் உடலுக்கு உறுதியைத் தரும். 3. திரைகடல் ஒடியுந் திரவியந் தேடு. 4. அவர்கள் காட்டை அழித்து நாடாக்கினர்கள். 5. கம்பர் எழுதிய இராமாயணம் காவியங்களுள் சிறந்தது. 6. காகம் தன் குஞ்சுக்கு இரை தேடிச் சென்றது. 7 காவலாளர் கள்வரைப் பிடித்து வந்தார்கள். 8. சூரிய வெளிச்சம் பொருட்களைப் பழுது போகாமல் பாது
காக்கும், 9. நாம் உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்க முயலல்
வேண்டும். 10. சோம்பலாயிருப்பவர் வாழ்க்கையில் வெற்றியைக் காண
DIT LITT
கீழ்க் காணும் செய்வினை வாக்கியங்களைச் செயப்பாட்டு வாக்கியங்களாகவும், செயப்பாட்டு வாக்கியங்களைச் செய்வினே வாக்கியங்களாகவும் மாற்றி அமைக்க :
11. அரசன் நாட்டை நீதி தவருது ஆண்டான். 12. பெரியோரைக் கனம் பண்ணு. 13. அவன் பொருளெல்லாம் கள்வரால் கவரப்பட்டது. 14. அழகான மண்டபம் ஒன்று முதல் மந்திரியால் சென்ற
மாதம் திறந்து வைக்கப்பட்டது. 15. சிறு வயதிலேயே நாம் கல்வி கற்க வேண்டும். 16. கூட்டத்தின் அறிக்கையைக் காரியதரிசி திறமையாக
எழுதி வாசித்தார். 17. கடவுளை நம்பினுேர் கைவிடப்படார். 18. விழாவின் கடைசியில் கல்லூரியின் அதிபரால் துதி
செலுத்தப்பட்டது. 19. மது உடலைப் பாதித்து வாழ்நாளைக் குறைக்கும். 20. கல்வியில் சிறந்த மாணவர்கள் ஆசிரியர்களால் போற்றப்
படுவார்கள்.

வாக்கியப் பயிற்சி 6
அதிகாரம் X
தனி வாக்கியமும் தொடர் வாக்கியமும்-பங்கீகரணம்
(Analysis of Simple and Complex Sentences)
வாக்கியத்தில் செயப்படுபொருளென்று ஒன்று வருவது
இயல்பு என்பதை அறிந்தோம். வாக்கியத்தில் எழுவாய்க்கும்
பயனிலைக்கும் அடைமொழிகள் அமைவது போன்றே, செயப்படு
பொருளுக்கும் அமையும். கீழ்க்காணும் வாக்கியங்களிலுள்ள
தடித்த சொற்கள் செயப்படுபொருளின் அடைமொழிகளைக் குறிக்கும்.
l.
வறுமை நோயுற்ற மக்கள் சுவையில்லாத உணவை உண் ւյր ff 5 Gir.
இராமர் கற்பிற் சிறந்த சீதையை மிகுந்த மகிழ்ச்சியோடு
மணந்தார்.
நீர்வளம் நிலவளம் நிறைந்தநாடு முயலும் மாந்தர்க்குப் பெரும் பயனை விளைக்கும்.
மேலே காட்டப்பட்ட வாக்கியங்களில் உள்ள எழுவாய்,
பயனிலை, செயப்படுபொருள்களைத் தனித்தனியாகவும், அவற் றைத் தழுவிவரும் அடைமொழிகளை வேருகவும் கூறு செய்ய லாம். இங்ங்னம், கூறுசெய்தல் பங்கீகரணம் (Analysis) என்று பெயர் பெறும். இதே வாக்கியங்கள் பங்கீகரணம் செய்யப்பட் டிருப்பதைக் கீழே காண்க.
. Lutunu sofi &o எண் எழுவாய்|** பயணி இல 76.9 செயப்படு GeFu.
" | மொழி Gergó பொருள் | அடை.
1 மக்கள் வறுமை உண்பார் உணவை சுவை i நோயுற்ற கள் இல்லாத
2 இராமர் - மணக் மிகுந்த சீதையை கற்பிற் தார் மகிழ்ச்சி சிறந்த ሰ யோடு
3 நாடு நீர்வளம் விளைக் முயலும் பயனை பெரும்
நிலவளம் | மாகதாக நிறைந்த கு குப்

Page 40
62 தமிழ் மொழி விளக்கம்
குறிப்பு : மூன்ருவது வாக்கியத்திலுள்ள 6 மாந்தர்க்கு ’ என்ற சொல் ஆங்கிலத்தில் பங்கீகரணம் செய்யும்போது செயப்படுபொருளாகக் (Indirect Object) கருதப்படும். ஆனல், தமிழில் பங்கீகரணம் செய்யும்போது, இது செயப் படுபொருள் ஆகாது. எதை’ யாரை போன்ற கேள்விகளுக்கு மறுமொழியாக வரும் பெயரே செயப்படுபொருளாகும்.
இதுவரையில் காட்டிய உதாரணங்கள் போன்று எழுவாய் பயனிலையோடோ அல்லது செயப்படுபொருளையும் வருவித்துக் கொண்டோ அடைமொழிகளுடன் வருவது தனிவாக்கியமாகும். (Simple Sentence).
தனி வாக்கியங்கள்
1. சீவகன் பாடுகிருன்.
2. மாடு புல் மேய்ந்தது.
3. அறிவுள்ள மனிதன் நீதியாய் நடப்பான். இந்த வாக்கியங்கள் எவ்வித தொடர்ச்சியுமின்றி ஒவ்வொரு பொருளை உணர்த்துகின்றன. இத்தகைய பல தனி வாக்கியங் கள் ஒருமித்துத் தொகுக்கப்படும்போது, பல கருத்துக்கள் முன் னும் பின்னும் சேர்க்கப்பட்டு, வாக்கியம் பெருகும். இதில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஒவ்வொன்ருக இருந் தாலும், இவற்றைப் பல சொற்ருெடர்கள் (Phrases and
Clauses) தழுவி வரும். இதுபோன்ற வாக்கியம் தொடர்வாக் Sulis (Complex Sentence) at 607 luGilb.
aed - Lb.
1. மழை பெய்தது
2. சிறுவன் ஒடினன். 3. வழுக்கி விழுந்தான்.
இந்த மூன்று தனி வாக்கியங்களையும் கீழ்க்காணும் ஒரே தொடர் வாக்கியமாக ஆக்கலாம்.
மழை பெய்யும்போது சிறுவன் ஓடியதால் வழுக்கி விழுந் தான்.

வாக்கியப் பயிற்சி 63
தொடர் வாக்கியமாக்கல்
மாதிரிப் பயிற்சி
தனி வாக்கியங்கள் தொடர் வாக்கியங்கள்
1. பள்ளியில் மணி அடித்தது. பள்ளியில் மணியடித்த மாணவர்கள் வீடு சென்ருர் தும் மாணவர்கள் வீடு கள். சென்ருர்கள். 2. ஒவ்வொருவரும் முயற்சி ஒவ்வொருவரும் முயற்சி செய்யவேண்டும். அல்லா செய்யாவிடின் வாழ் க் விடின், வாழ்க்கையில் எல் கையில் எ ல் லோரும் லோரும் போற்றத்தக்க போற்றத்தக்க வெற்றி வெற்றியைக் காண மாட் யைக் காணமாட்டார். டார்.
3. சூரியன் ஒளியைத் தரும். சூரியன் ஒளி யை யும் சூரியன் உடல் வன்  ைம உ ட ல் வன்மையையும் யைத் தரும். சூரியன் மக்க தந்து ம க் க ஞ க் கு ப் ளுக்குப் பயனை விளைக்கும். பயனை விளைக்கும்.
4. இந்து சமுத் திர த் தி ல் இந்து சமுத்திரத்தில் இலங்கை இருக்கின்றது. இருக்கின்ற சிறிய இலங் இலங்கை ஒரு சிறிய தீவு. கைத் தீவில் உள்ள தமி இங்கே தமிழர்களும் சிங்கள ழ |ர் களும் சிங்களவர்க வர்களும் வாழ்கின்றர்கள். ளும் மிகவும் ஒற்றுமை அவர்கள் மிகவும் ஒற்றுமை யாக வாழ்கின்ருர்கள். யாக வாழ்கின்ருர்கள்.
தற்காலத் தமிழ் நடைக்கு ஏற்றதாக வாக்கியங்கள் சுருக்க
மாக அமைவதே பொருத்தமாகும். ஆனல், " சுருக்கம் " என்ற வுடன் ஒரு கருத்தை விளக்குவதற்குப் பல தனி வாக்கியங்கள் எழுதுவது அழகல்ல. உதாரணமாக, மேலே காட்டப்பட்ட மாதிரிப் பயிற்சியிலுள்ள வாக்கியங்களைக் காண்க. நான்கு தொடர் வாக்கியங்களில் அழகாக அமைத்து வெளியிடப்பட வேண்டிய கருத்துக்களுக்கு எத்தனையோ தனி வாக்கியங்கள் தேவையாயின. இங்ங்ணம் அவசியமற்ற பல தனி வாக்கியங்கள் மூலம் ஒரு கருத்தை வெளியிடுவது வாக்கிய அமைப்பிற்கும் சிறந்த தமிழ்நடைக்கும் உகந்தது அல்ல.
தனி வாக்கியங்களைப் பங்கீகரணம் செய்வது போலவே, தொடர் வாக்கியங்களையும் பங்கீகரணம் செய்யலாம். எழு வாய், பயனிலை, செயப்படுபொருள்களைத் தழுவிவரும் சொற்

Page 41
64 தமிழ் மொழி விளக்கம்
ருெடர்கள் " தழுவு சொற்ருெடர்கள்" எனப் பெயர் பெறும். முன்பு தரப்பட்ட மாதிரிப் பயிற்சியிலுள்ள தொடர் வாக்கியங் கள் கீழே பங்கீகரணம் செய்யப்பட்டிருப்பதைக் காண்க :
எழுவாய் a lett. 5(6) செ. தழுவு எண் எழுவாய் தழுவுசொற் பயனிலை சொற் செயப்படு சொற் Gogart - if ருெட்ச் பொருள் ருெட்ச்
1. ւrooch 1 மாண சென்ருர் °孕冠卢 t hits
வர்கள் ! $ଗit தும்
2. வீடு
1. முயற்சி 2 ஒவ்வொ a. st 6 |##### வெற்றி எல்லோ
ருவரும் urbrulmo tio | 66°42-6ör 60 Luis ரும் போற்
2 லாழ்க் O கையில் மததகக மக்களுக்கு 3 சூரியன் விளேக் ஒளியையும் Liu 8or ~'
கும் లి.ఒaుషyళr 恕
மையையும் Y தந்து
4 தமிழர் இந்து சமுத் வாழ்கின் மிகவும் Yks aws
களும் திரத்தில் | ருர்கள் ஒற்றுமை சிங்கள இருக்கின்ற it is வர்களும் சிறிய இலங்
கைத்தீவில் உள்ள |
பயிற்சி
கீழ்க்காணும் தனி வாக்கியங்களை ஒரே தொடர் வாக்கியமாக அமைக்க பின்னர், தொடர் வாக்கியங்களைப் பங்கீகரணம் செய்க:
1. ஒரு மனிதன் தெருவில் சென்ருன். அப்போது அவனுக்கு
விபத்து ஏற்பட்டது. 2. வயலை உரிய பருவத்தில் உழுதேன். உடனே நெல்லை
விதைத்தேன்.
3. கல்வி வாழ்க்கையில் பெரும் பயனைத் தரும். ஆகவே,
அதை எல்லோரும் கற்கவேண்டும். 4. சீதை சனக மகாராசனின் மகள். இராவணன் இலங்கை
அரசன்.
அவளை அவன் தூக்கிச் சென்ருன்.

1 O.
1.
12.
13.
14.
15.
வாக்கியப் பயிற்சி 65
வறுமை ஒரு நோய். இதுவே எல்லா நோய்களுள்ளும் கொடுமையானது. ஆகையால் நாம் அதை நீக்க முயலல் வேண்டும்.
ஒருவன் நூல்களை ஆராய்ந்து கற்க வேண்டும். பின்னர் அதன்படி ஒழுக வேண்டும். அங்ங்ணம் செய்பவனையே உலகம் போற்றும்.
நாம் எதையும் தீர ஆலோசனை செய்யவேண்டும். பின்
னரே முடிபுக்கு வரவேண்டும். இதன் பின்னர்தான் எதையும் செய்ய முனையவேண்டும்.
காந்தியடிகள் பெரியார்களுள் சிறந்தவர். இவர் இந்தி யாவில் தோன்றினர். இவர் இந்திய மக்களுக்காகத் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்தார். நாட்டிலிருந்து பஞ்சம் நீங்கவேண்டும். நாட்டிலிருந்து அறியாமை நீங்கவேண்டும். இன்றேல், மக்கள் உண்மை யான விடுதலையைக் காண மாட்டார்கள். r,
சுதந்திரம் பெறுவதற்குப் பல நாடுகள் முயலுகின்றன. இவற்றை வல்லரசுகள். நசுக்க முயலுகின்றன. இது பெரும் அநீதியாகும்.
கண்ணகி கற்பிற் சிறந்தவள். கோவலன் இவள் கண
வன். கோவலன் கள்வனெனக் கரு த ப் பட்டா ன்.
கோவலனை மீட்கும்படி கண்ணகி வாதாடினள். இப்போது முடியாட்சி நீங்குகின்றது. இப்போது குடி
யாட்சி இடம் பெறுகின்றது. ஆகவே, மக்கள் தாமே
அரசியலை நடத்தவேண்டும். இதை நாங்கள் உணர வேண்டும். - மனிதன் தவருக வாழ்கின்ருன். தவருண வாழ்க்கை யைத் திருத்தி அமைக்கவேண்டும். இதற்காகவே சம யங் தள் எல்லாம் எழுந்தன. ஆகவே, சமயங்கள் வாழ்க் கைக்கு இன்றியமையாதன. தமிழர் மிகவும் பழமையானவர்கள். அவர்கள் வாழ்க் கையில் பல பண்பாடுகள் காணப்பட்டன. இவற்றுள்
வீரமும் ஒன்று. இதைப் பெரிதும் தமிழர்கள் போற்றி
வாழ்ந்தார்கள். நாம் நாளும் முயற்சி செய்யவேண்டும். முயற்சி செய்து பொருளிட்ட வேண்டும். பொருளிட்டாவிடின் வாழ்க்கை யின் பயனை அனுபவிக்க முடியாது. இதனல் வருந்த வேண்டி நேரிடும். ' 1v

Page 42
66 தமிழ் மொழி விளக்கம்
அதிகாரம் XI
(5SuG'ssir (Punctuation)
எமது கருத்துக்களை வாக்கியங்கள் மூலம் புலப் படுத் து கின்ருேம். வாக்கியங்களின் பொருள் நன்கு விளங்கவேண்டு மானுல், ஏற்ற இடத்தில் நின்று, தகுந்த முறையில் வாக்கியத் தைப் பிரித்து வாசிக்கவேண்டும். இங்ங்னம், நிறுத்தவேண்டிய இடங்களைக் குறிப்பதற்குச் சில குறிகள் தற்கால நடையில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் குறிகள் " குறியீடுகள் " அல்லது " நிறுத்தக் குறிகள் " என்று பெயர் பெறும். பொது வாகப் பயன்படுத்தப்படும் குறியீடுகளைக் கீழே காண்க :
(a) . gp boyclusion (Full Stop). (ஆ) , உறுப்பிசைக்குறி அல்லது காற்புள்ளி (Comma). (இ) ; ) தொடரிசைக்குறி அல்லது J960U L’il-16î76fl (Semicolon). (ஈ) 3 விளக்கிசைக்குறி அல்லது முக்காற்புள்ளி (Colon). (d) ? 6GB) &š5 só gyáv avgi G35 6ir Glägsnó) (Mark of Interro
gation). (ஊ) வியப்புக்குறி அல்லது விளிக்குறி (Mark of Excla
mation). w− (எ) " . " மேற்கோட்குறி அல்லது அணு வா த க் குறி
(Quotation Mark). (ஏ) - இடைக்கோட்டுக்குறி (Dash).
(ஐ) () அடைப்புக்குறி (Bracket).
(அ) முற்றுப்புள்ளி : குறியீடுகளுள் பெரும் பிரிவை உணர்த்துவது முற்றுப்புள்ளி. வாசகரை அதிக நேரம் நிறுத்தி வைப்பதும் இதுவே. முற்றுப்புள்ளி உள்ள இடத்திலே நான்கு மாத்திரை அளவு நிறுத்தவேண்டும். ஒரு மாத்திரை என்பது கண்ணிமைப் பொழுதை அல்லது கைநொடிப் பொழுதைக் குறிக்கும் கால அளவாகும். முற்றுப்புள்ளி பின்வரும் இடங் களில் பயன்படுத்தப்படும்.
1. கருத்து முற்றுப்பெற்ற வாக்கியத்தின் முடிவில் வரும்.
உ-ம். நான் அதிகாலையில் எழுந்தேன். காலைக் கடனை முடித்தேன். கற்கத் தொடங்கினேன்.

குறியீடுகள் 57
2. சுருக்கப் பொருளை உணர்த்தும் சொற்களின் பின்னே
அல்லது எழுத்தின் பின்னே வரும். உ-ம். திரு. (திருவாளர்), க. முருகன் (கணேசன்), வ. மே.
பிரிவு (வலிகாமம் மேற்கு).
(ஆ) உறுப்பிசைக்குறி : குறியீடுக ளு ஸ் மிகச் சிறிய நிறுத்தத்தை உணர்த்துவது இதுவே. இந்தக் குறி உள்ள இடத்திலே ஒரு மாத்திரை அளவு நிறுத்தவேண்டும். முற்றுப் புள்ளி உள்ள இடத்தில் நான்கு மாத்திரையும், உறுப்பிசைக் குறியுள்ள இடத்தில் ஒரு மாத்திரையும் நிறுத்தவேண்டியிருப்ப தால் இதற்குக் காற்புள்ளி என்ற மற்ருெரு பெயரும் உண்டு. இது பின்வரும் இடங்களில் பயன்படுத்தப்படும். 1. ஒரு வாக்கியத்தில் ஒரே பொருள். தொடர்புள்ள சொற்
களைத் தனித்தனி பிரிக்க உதவும். உ-ம். தீ, காற்று, நிலம், நீர், ஆகாயம் ஆகிய ஐந்தும் ஐம்பூதங்களென்று சொல்லப்படும். 2. வாக்கியத்திலுள்ள அடைமொழியை அல்லது தழுவு சொற்
ருெடர்களைப் பிரிக்க உதவும். உ-ம். எதுவானுலும், நீ செய்துதான் தீரவேண்டும். மழைக்காலம் என்ருல் என்ன, பனிக்காலம் என்ருல் என்ன, நான் வெளியில் உலா வுவேன். 3. ஒருவரை விளிக்கும்போது (while addressing) உதவும்.
2-lb. இராமா இங்கே வா.
அன்பரே, எனது வணக்கம்.
குறிப்பு: சில இடங்களில் வியப்புக் குறியும் பயின்படுத்தப்படும்.
4. ஒருவாக்கியத்தில் அமையும் தன் கூற்றுக்கு முன்னர் (Direct
Speech) பயன்படுத்தப்படும். உ-ம். அவன் நண்பனைக் கண்டதும், " நேற்று ஏன் வர வில்லை ? " என்று விசாரித்தான்.
(இ) தொடரிசைக்குறி : ஒரு வாக்கியத்திலே, பொருள் தொடர்புடையனவாய், த னித் தனி முற்றுப்பெற்றிருக்கும் சொற்ருெடர்களைப் பிரிக்க உதவும். இந்தக் குறியீடு உள்ள இடத்தில் இரண்டு மாத்திரை அளவு நிறுத்த வேண் டு ம். ஆகவே, இதற்கு அரைப்புள்ளி என்ற மற்றெரு பெயரும் உண்டு.
உ-ம். ஆலயம் சென்றன் ; கடவுளை வணங்கினன்; வீடு திரும்பினுன்.

Page 43
68 தமிழ் மொழி விளக்கம்
(ஈ) விளக்கி  ைசக் குறி: இது இன்னும் சிறிது கூடிய நிறுத்தக் காலத்தைக் குறிக்கும். இந்தக் குறியீடு உள்ள இடத் தில் மூன்று மாத்திரை அளவு நிறுத்தவேண்டும். ஆகவே, இதற்கு முக்காற்புள்ளி என்ற மற்ருெரு பெயரும் உண்டு. பொதுவாக, விளக்கிசைக் குறியுடன் ஒரு சிறிய கீறும் சேர்க்கப் படும். இது பின்வரும் இடங்களில் பயன்படுத்தப்படும்.
1. ஒரு மேற்கோளை எடுத்து ஆளும்போது உதவும்.
உ-ம். வள்ளுவர் கூறுகின்ருர் - ** அகர முதல எழுத் தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு."
2. தொடர்ந்து வருவனவற்றைக் குறிப்பிடத் தொடங்குமுன்
உதவும். உ-ம். சொற்கள் நான்கு வகைப்படும். அவையாவன :- பெயர், வினை, இடை, உரி.
(உ) வினுக்குறி : இது, முற்றுப்புள்ளி வா க் கியத் தி ன் இறுதியில் பயன்படுத்தப்படுவது போன்று, கேள்வியைக் குறிப்பு தற்குப் பயன்படுத்தப்படும்.
உ.ம். உன் பெயர் என்ன ?
நீ எப்போது திரும்புவாய்?
(ஊ) வியப்புக்குறி: இது, வியப்பு, பரிதாபம், மகிழ்ச்சி முதலிய உணர்ச்சிகளை வெளியிடும்போதும், வி யங் கோ ள் குறிப்பை உணர்த்தும்போதும், ஒருவரை விளிக்கும்போதும் பயன்படுத்தப்படும்.
உ-ம். நாட்டின் அழகு என்னே !
இன்று வெயில் கடூரம் ! அம்மம்ம கொடிது ! கொடிது !
நீ பல்லாண்டு வாழ்க !
நண்பனே! நான் உனக்கு ஒரு கைம்மாறும் செய்யமுடி LTigil.
(எ) மேற்கோட்குறி: ஒருவர் பேச்சை அப்படியே வெளி யிடும்போது மேற்கோட் குறி ப யன் படுத் தப்படும். இந்த அமைப்பைக்கொண்ட வாக்கியம் தன்கூற்று அல்லது நேர்க் கூற்று வாக்கியம் என்று சொல்லப்படும்.
உ-ம். "நான் எவருக்கும் உதவி செய்வேன், ' என்று எனது அயலவன் கூறினுன்.
* ஈவது விலக்கேல், ’’ என்பது ஒளவையாரின் முதுமொழி.

குறியீடுகள் 69
(ஏ) இடைக் கோட்டுக் குறி : 1. ஒருவர் எழுதிக் 'கொண்டு போகும்போது சடுதியாகக் கருத்தை (Thought or idea) மாற்றின், இது பயன்படுத்தப்படும்.
உ-ம். நான் செல்வனுக இருந்தால் - இயலாத ஒன்றைப் பற்றிக் கவலைப்படுவானேன். 2. வேருக அமையும் பொருள் தொடர்புள்ள சொற்களை ஒன்றுபடுத்தி இறுதியில் தொகுத்துக் கூறப் பயன்படுத்தப் படும். உ-ம். அவன், கல்வி, ஆற்றல், தயை, கொடை -எல்லாக் குணங்களும் நிறைந்தவன்.
வரை, கணை, நரி - கருத்து எழுதுக.
3. வாக்கியத்தின் இடையில் வேறுபட்ட கருத்தைக் கூறுவ தற்கு இரண்டு இடைக்கோட்டுக்குறிகள் பயன்படுத்தப் LIG) b. (Parenthesis). உ-ம். நான் பேசுவதற்குக் காரணம் -நன்ற க ஆலோசனை செய்துதான் கூறுகின்றேன் - நீங்கள் நீதியில்லாமல் நடந்து கொண்டதே.
4. ஓர் எல்லையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும்.
உ-ம். அதிகாரம் 2 - 5 (2-ம் அதிகாரம் தொடங்கி 5-ம் அதிகாரம் வரையில் என்று பொருள்படும்).
(ஐ) அடைப்புக்குறி : இது கீழ்க்காணும் இடங்களில் பயன்படுத்தப்படும். 1. ஒரு சொல்லின் பொருளை அல்லது அதே கருத்துப்பட்ட
வேறு சொல்லை எழுதும்போது பயன்படுத்தப்படும். உ-ம். வரை (மலை) மிகவும் உயரமானது.
நீர் ஆவியாக (Steam) மாறும். 2. ஒரு பொருளை வரையறை செய்து சிறப்பாகக் குறிக்கும்
போது பயன்படுத்தப்படும். உ-ம். கல்லூரியில் கற்கும் மாணவர் (பெண்கள் உட்பட) உடற் பயிற்சி செய்யவேண்டும். 3. எண் பிரிவைக் குறிக்கும்போது பயன்படுத்தப்படும்.
உ-ம். மனிதன் இரண்டு வகையான செல்வங்களைப் பெற முயல்கிருன். அவையாவன :-
(1) கல்விச் செல்வம், (2) பொருட் செல்வம்.

Page 44
70
தமிழ் மொழி விளக்கம்
பயிற்சி
கீழ்க்காணும் வாக்கியங்களில் ஏற்ற நிறுத்தக் குறிகளை
இடுக :
l.
2.
0.
கந்தனும் வேலனும், பொன்னனும் ஒருமித்துச் சேர்ந்த பின் ஒற்றுமைக்கு வழி தேடிவிட்ட்ார்கள்
ஆசிரியர் என்னை அழைத்தார் உடனே சென் றே ன் புத்திமதிகளைக் கூறினர் ,
நான் இன்று திரு.முருகேசு அவர்களைக் கூப்பிட்டு உங்க ளுக்கு வேண்டியது யாது என்று கேட்டேன்'
முப்பழங்களாவன மா பலா வாழை, நாட்டைச் சுற்றிப் பார்த்தவர், ஆகா நாட்டின் அழகு என்னே என்று வியந்தார்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற வள்ளுவர் வாய்மொழியை ஏற்று நடப்பவன் ஒழுக்கம் பெருமை முதலியவற்றில் உயர்ந்து விளங்கு வான் ஆனல் இதைப் பின்பற்றுவோர் மிகச் சிலரே
ஒரு கணம் கிறிஸ்துவின் இருதயத்தை நோக்கு அது எவ் வளவு உன்னதமானது அது கருணை மன்னிப்பு சாந்தி யாகிய ஒளியுடன் பிரகாசிக்கும் தூய பொன். இலங்கையில் உள்ள எவரும் பெண்கள் உட்பட நாட்டுக் கான சேவை செய்ய முயலல் வேண்டும் அல்லாவிடின் நாடு எங்ங்னம் முன்னேறும்
காதலர் இருவர் கருத்தொருமித்து வாழ்ந்த வாழ்வில் பெண்ணின் காதல் தன்னலமற்றது பெற்றேர் உற்றேர் உறவினரை அவள் மறக்கின்ருள் செல்வத்தைத் தள்ளு கின்ருள் செயலை மறக்கின்ருள் தன்னையே மறக்கின்ருள் கணவனுடன் வாழும் வாழ்வை எத்தகைய வறு  ைம. வாழ்வானுலும் சரி இந்திரலோக வாழ்வாகக் கருதுகின் ருள் இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்ற உன்னத நிலையை எய்துகின்ருள். ' سر உலக ஆசிரியர்களின் உபதேசம் என்ன தங்கள் அகண்ட அறிவின் உச்சநிலையிலிருந்து அவர்கள் மனிதனே அமை தித் தாகங்கொண்ட உன் ஆசையையும் தரிக்கும் ஆவலை யும் உனக்காகவும் உலகிலுள்ள பிறருக்காகவும் நிறை வேற்ற வேண்டுமாயின் உன்னுள் வசிக்கும் பிரபஞ்ச சக்தியின் கட்டளைகளுக்கேற்ப உன் வாழ் வின் ஒழுக் கத்தைத் திருத்தியமை எனக் கூறுகின்றர்கள்.

.ll.
12.
குறியீடுகள் 7
பழந்தமிழ் மகளிர் கணவனுக்கு உற்ற மனைவியாய்
அமைந்து அவர் பணியே தம் நலனுய்க் கொண்டதோ டமையாது தம் கணவர் நெறி பிறழ்ந்த காலத்திலே அவரை நன்னெறிக்குய்த்தலையும் தமது உரிமை யும் கடமையுமாகக் கொண்டனர் தீண்டுவீராகில் எம்மைத் திருநீலகண்டம் என ஆணையிட்டு இன்பத் துறையில் ஈடு பட்டுத் தம்பால் வந்த கணவனைத் தடுத்து நிறுத்தி அன்றுதொட்டுத் திருநீலகண்டர் மனத்தாலும் பெண் களைத் தீண்டாதொழிக்கச் செய்த வரலாறும் சமண வலைப்பட்ட பாண்டிய மன்னனை மங்கையர்க்கரசியார் சம் பந்தர் துணைக்கொண்டு சிவநெறிக்குய்த்த வரலாறும் பழந்தமிழ் மகளிரின் திறனை விளக்குவன வன்ருே
கீழைத்தேச ஆண்களைப் பீடித்த ஆங்கில மோகம் பெண்
களையும் பற்றியது ஆங்கில மொழிக்கு மாத்திரமேயன்றித் தமக்கு ஒவ்வாத ஆங்கில நடை உடை பாவனைகளையும்
பின்பற்றலாயினர் நம் நாட்டுக் கலைஞணுகிய ஆனந்தக்
குமாரசாமி என்பவர் இந்தியநாட்டு நாகரிகம் சிதைவுரும லிருக்கின்றதென்ருல் இந்தியப் பெண்கள் தம் தொன்மை யான நாகரிகத்தைப் பேணிக் காத்தமையே எனச் சமூ
கத்தில் பெண்களின் இன்றியமையாமையை எடுத்துக்
காட்டினர் எனினும் தமிழ் நாட்டுப் பெண்கள் சிலரின் ஆங்கில நாகரிக மோகம் இன்று தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் நாகரிக உயர்ச்சிக்கும் இடையூருக வு ள்ள து அப்பா அம்மா என அமுதூறும் தமிழ் மொழியில் அழைக் காது தமிழ்க் குழந்தைகள் பப்பா மம்மா என அழைப்பது போன்ற போலி நாகரிகத்தைப் பேணிவரும் பெண்கள் கூட்டமே தமிழரின் இழிவுக்குக் காரணர் இத்தகைய மனப்பான்மை ஒழிந்து தமிழ்ப் பெண்களின் உள்ளத் திலே தமிழர் நாகரிகத்தையும் கலையையும் மொழியை யும் பேணும் வேட்கை ஏற்படின் தமிழர் சமூகம் முன் னேறும் பெண் (கலம் ஈடேறும்

Page 45
72 தமிழ் மொழி விளக்கம்
அதிகாரம் XII g565 singbpito pisabpith (Direct and Indirect Speech)
ஒருவர் பேச்சை இரண்டு முறையாக வெளியிட லா ம். முதலாவதாக, பிறர் கூறிய சொற்களை அவர் கூறியவாறே எடுத்து உரைக்கலாம். இது தன் கூற்று அல்லது " நேர்க் கூற்று " அல்லது "தன்மொழி (Direct Speech) என்று பெயர் பெறும். அல்லது பிறர் கூறியவற்றை மாற்றிப் படர்க்கை முறையில் (Third person) கூறலாம். இது பிறர் கூற்று, " அல்லது " அயற்கூற்று, " அல்லது " பிறர் ம்ொழி (Indirect Speech) என்று பெயர் பெறும்.
உ-ம். ' என்னிடம் பணம் இருக்கின்றது. " என்று சோமன் கூறினன் (தன் கூற்று).
தன்னிடம் பணம் இருந்தது என்று சோமன் கூறினன் (பிறர் கூற்று).
மேற்காட்டப்பட்ட உதாரணத்தில், தன் கூற்று வாக்கியம் பிறர் கூற்று வாக்கியமாக மாறும்போது பின்வரும் மாற்றங் களைக் காணலாம் : 1. தன் கூற்று வாக்கியத்தில் இடப்பட்ட மேற்கோட்குறிகள்
பிறர் கூற்று வாக்கியத்திற் காணப்படவில்லை. 2. " என்னிடம் " என்ற தன்மைச்சொல் " தன்னிடம் " என்ற
படர்க்கைச் சொல்லாக மாறும்.
3. " இருக்கின்றது" என்ற நிகழ்கால வினை " இருந்தது "
என்ற இறந்தகால வினையாக மாறும்.
தன்கூற்றைப் பிறர் கூற்முக மாற்றும்போது பின்வரும் விதிகளைக் கவனிக்கவேண்டும் :
தன் கூற்றிலுள்ள வினைமுற்று, படர்க்கையையும் இறந்த காலத்தையும் குறிக்குமானல், 1. தன் கூற்று வாக்கியத்திலுள்ள தன்மை, முன்னிலைச் சொற்க
ளெல்லாம் படர்க்கையாக மாற்றப்படல் வேண்டும். உ-ம். (தன் கூற்று) " எனக்குப் புத்தகம் வேண்டும், " என்று மாணவன் கூறினன் (தன்மை).
(பிறர் கூற்று) தனக்குப் புத்தகம் வேண்டியிருந்தது என்று மாணவன் கூறினன் (ப்டர்க்கை).

தன் கூற்றும் பிறர்கூற்றும் 73 (தன் கூற்று) “நீ கவனமாகப் படிக்கின்ரு ய்” கூறினர் (முன்னிலை),
(பிறர் கூற்று) அவன் கவனமாகப் படித்தான் என்று தந்தை கூறினர் (படர்க்கை).
என்று தந்தை
குறிப்பு : விளிக்கப்படுபவரே (Person addressed) பேச்சை வெளியிடின் தன் கூற்றி லுள்ள முன்னிலைச் சொற்கள் தன்மை இடத்தைக் குறிக்கும் சொற்களாக மாற்றப்படல் வேண்டும்.
உ-ம். (தன் கூற்று) " நீ வேலையில் கவனமில்லை" என்று அவன் எனக்குக் கூறினன் (முன்னிலை).
(பிறர் கூற்று) நான் வேலையில் கவனமில்லை யென்று அவன் எனக்குக் கூறினுன் (தன்மை).
2. எல்லா நிகழ்கால வினைகளும் இறந்த காலமாக மாற்றப்
படல் வேண்டும். உ-ம். (தன் கூற்று) "நான் அவசரமாய் ஒடுகின்றேன்" என்று பையன் கூறினன்.
(பிறர் கூற்று) தான் அவசரமாய் ஓடியதாகப் பையன் கூறி ஞன் (இறந்த காலம்). குறிப்பு இறந்த கால விண்கள் மாற்றப்பட்மாட்டச.
உ-ம். (தன் கூற்று) " பத்து ஆண்டுகளுக்கு மு ன்ன ர் இந்தியாவுக்குச் சென்றேன் ' என்று அவன் நண்பன் கூறினன் (இறந்தகாலம்).
(பிறர் கூற்று) பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக் குச் சென்றதாக அவன் நண்பன் கூறினன் (இறந்தகாலம்). 3. அண்மையைக் குறிக்கும் சொற்கள் சேய்மையைக் குறிக் கும் சொற்களாக மாற்றப்படல் வேண்டும். கீழ்க்காணும் சொற்களின் மாற்றத்தைக் காண்க :
தன்கூற்று பிறச்கூற்று இப்போது mam அப்போது இது - அது
இவை mnamo அவை இங்கே a- அங்கே இங்ங்னம் nus அங்ங்னம் இன்று - அன்று நாளை - அடுத்த நாள் நேற்று - முதல் நாள்
வருதல் - செல்லுதல்

Page 46
74 தமிழ் மொழி விளக்கம்
உ-ம். (அ) " எனக்கு இப்போது நேரம் வா யா து ** என்று சிறுவன் கூறினன் (தன்கூற்று).
தனக்கு அப்போது நேரம் வாய்க்கவில்லை என்று சிறுவன் கூறினன் (பிறர் கூற்று).
(ஆ) " இன்றைக்கே செய்து முடிப்பேன்," என்று அவன் சபதம் கூறினன் (தன் கூற்று).
தான் அன்றைக்கே செய்து முடிப்பதாக அவன் சபதம் கூறினன் (பிறர் கூற்று).
விளுக்கள் ஒருவரின் வினக்கள் தன் கூற்ருக வெளியிடப்படும்போது, கேட்டல், வினவுதல், விசாரித்தல் என்ற வினைகள் பயன்படுத் தப்படும். இவற்றைப் பிறர் கூற்ருக மாற்றும்போது இதே. வினைகள்தாம் பயன்படுத்தப்படும்.
உ-ம். ** நீ நேற்றுக் கல்லூரிக்கு வந்தாயா?" என்று ஆசிரியர் வினவிஞர் (தன்கூற்று).
அவன் முதல் நாள் கல்லூரிக்குச் சென் ரு ஞ என்று ஆசிரியர் வினவினர் (பிறர் கூற்று).
ஏவலும் வியங்கோளும் (Commands, Requests aid Wishes) ஏவலும் வியங்கோளும் அமையப்பெறும் தன் கூற்று வாக்கி யங்கள் பிறர் கூற்ருக மாற்றப்படும்போது செய என்னும் எச்சம் பெற்று வரும்.
உ-ம். ' பேசாமல் இரு, ' என்று அதிகாரி வேலைக் காரனைக் கட்டளையிட்டான் (தன்கூற்று).
வேலைக்காரனைப் பேசாமல் இருக்க அதிகாரி கட்டளையிட் டான் (பிறர் கூற்று).
** நீடூழி வாழ்க!" என்று மணமக்களை வா ழ் த் தின ன் (தன் கூற்று).
மணமக்களை நீடூழி வாழ்கென வாழ்த்தினன் (பிறர் கூற்று). தன் கூற்றைப் பிறர் கூற்ருக்கும்போது செய்யும் மாற்றங் களை அப்படியே திருப்பி மாற்றிச் செய்தால், பிறர் கூற்று தன் கூற்ருக மாறும்.

தன்கூற்றும் பிறர்கூற்றும் 75
உ-ம். தனக்குப் பயமாக இருந்தது என்று தாமோதரன்
கூறினன் (பிறர் கூற்று).
** எனக்குப் பயமாயிருக்கின்றது," என்று தாமோதரன்
* கூறினன் (தன்கூற்று).
என் வேலை முடிந்ததா என்று எனது தந்தை என்னை க்
கேட்டார் (பிறர் கூற்று).
* உன் வேலை முடிந்ததா ?" என்று எனது தந்தை என்
னைக் கேட்டார் (தன் கூற்று).
எல்லா இன்பமும் பெறுகெனப் பெரியவர் ஆசீர்வதித்தார்
(பிறர் கூற்று).
** எல்லா இன்பமும் பெறுக ! " என்று பெரியவர் ஆசீர் வதித்தார்.
Luuba . பின்வருவனவற்றை அயற் கூற்ருக மாற்றுக :
* நான் இன்று காந்தி அடிகள் பற்றிப் பேசப் போகின் றேன், " என்று அவன் கூறினன். ** நீ இங்கே வந்த காரணம் யாது? " என்று முதலாளி பையனை வினவினன். " பாடங்களையெல்லாம் நாளைக்குப் படித்து வரவேண் டும்,” என்று ஆசிரியர் மாணவருக்குக் கட்டளையிட்டார்.
இராமன் இலக்குமணனைப் பார்த்து, ' நான் திரும்பி
வரும்வரை சீதையைக் கவனித்துக்கொள். இவள் உன் பொறுப்பு, ' என்று கூறினன். ** நீங்கள் நாளும் முயற்சி செய்யாவிடின் இந்த வேலை யைச் சரிவரச் செய்ய முடியாது, " என்று கந்தன் கூறி
' எங்கள் தலைவர்களுள் இவரே மிகச் சிறந்தவர். இவர் இப்போது உங்கள்முன் சில வார்த்தைகள் பேசுவார், " என்று தலைவர் கூறினர்.
** நீங்கள் நீடூழி வாழ வேண்டும் என்று நான் இறைவனை வழுத்துகின்றேன், ** என்ருர் பெரியவர். எனது தந்தை என்னைப் பார்த்து, ** சோம்பரென்பவர் தேம்பித்திரிவர் என்று உன்னிடம் நான் எப்பொழுதும் சொல்லவில்லையா ? " என்று கேட்டார்.

Page 47
76
0.
II.
10.
தமிழ் மொழி விளக்கம்
* வெயிலின் கொடுமை என்னே ! ' என்று பிரயாணி கூறினன்.
** எனது சகோதரனின் கண்ணிருக்காக வருந்தினவனும், முழு உலகத்தினதும் துன்பங்களினுல் இதயம் சிதைந்த வனுமாகிய யான் சிரித்து மகிழ்ச்சியுடன் விளங்குகின் றேன். ஏனெனில், விடுதலை உண்டு. வருந்துபவர் களே! இதை அறியுங்கள், ’ என்று புத்தபிரான் கூறினர்.
பின்வருவனவற்றை நேர்க் கூற்ருக்குக: தான் அடுத்த நாளே தன் வீடு செல்வதாக எனக்குக் கூறினன். என்னிடமிருந்து ஏதேனும் உதவி கிடைக்குமோ என்று இராமன் கேட்டான். அவன் முதல் நாள் தன்னிடம் வராத காரணத்தை நண்ப னிடம் விசாரித்தான். தான் இறந்த பின்னர் தன் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று தன் மக்களைத் தந்தை வேண்டினன். வாழ்க்கைக்கு வேண்டிய பணத்தையெல்லாம் அங்கிருந்து அவன் ஈட்ட முடியுமோ என்று கந்தனைப் பொன்னன் கேட்டான்.
தங்கள் தங்கள் உடலைத் தாங்களே பேணி ஞ ல ன் றி மகிழ்ச்சியுடன் வாழ முடியா தென்று மாணவரிடம் ஆசிரி யர் கூறினர். மக்களைப் பெற்று மகிழ்வுடன் வாழ்கென மணமக்களை அறிஞன் வாழ்த்தினன். தன்னுடன் செல்பவர்களுக்குத் தான் அன்றைக்கே உதவி செய்வதாக அவன் கூறினன். எனது தமையனர் சுக மா யிருக் கிரு ரா என்று எனது மாமனர் கேட்டார். வீட்டை விட்டு நாங்கள் அப்போதே வெளியேற வேண் டும் என்று அதிகாரி கட்டளையிட்டான்.

பொதுவான பிழைகள் 77
அதிகாரம் XIII பொதுவான பிழைகள் (Common Errors)
பிழைகளைப் பொதுவாக, எழுத்துப் பிழை, சொற் பிழை, இலக்கணப் பிழை என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றுள் எழுத்துப் பிழைகளைத் தெரிந்துகொள்வதற்கு முதல் மூன்று அதிகாரங்களும் உதவுகின்றன. ஆகவே, ஏனைய சொற் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் இங்கு எடுத்துக் காட்டப் படும்.
சொற் பிழைகள்
1. நான் அவனுக்கு என்னும் பத்து ரூபா கொடுக்கவேண்டும். ( ' என்னும் " என்ற சொல் " எனப்படுகின்ற ’ என்று பொருள்படுமா கையால், இதை " இன்னும் ' (இனி மேலும் ) என்று திருத்துக 1. 2. மக்களுக்குச் சாகாடு நிகழ்வது நிச்சயம். சாகாடு " என்ற சொல் வண்டி ' என்று பொருள்படுமாகையால், இதை * சாக்காடு (மரணம் ) என்று திருத்துக 1. 3. கடைக்குச் சென்று புத்தகங்கள் வேண்டினேன். வேண் டுதல் " என்பது வணங்குதல் அல்லது " இரந்து கேட் டல் " என்று பொருள்படுமாகையால், இதை ' வாங்கி னேன் ( பெறுதல்) என்று திருத்துக 1. 4. எளிய செயல்களைச் செய்தல் ஏற்றதல்ல. ! ? எளிய' என் பது தாழ்மையான ’ என்ற பொருள்படுமாகையால், இதை * இழிய ’ (கீழ்மையான-Mean) என்று திருத்துக 1. 5. கெர்ழும்புப் பட்டணம் ஒரு துறைமுகம். துறைமுக முள்ள நகரம் " பட்டினம் என்று பெயர் பெறும். ஆகவே, இதைப் " பட்டினம் ' என்று திருத்துக 1. 6. அவன் பிலத்துக்குப் போய்ப் புல் அறுத்து வந்தான். ( ' பிலம் " என்பது ? குகை என்று "பொருள்படுமா கை யால் இதைப் புலத்துக்கு (வயல்) என்று திருத்துக 1. 7. இன்றைய பொதுக்கூட்டத்தில் இராமர் தலைமை வகுப் பார். (* வகுத்தல் " என்பது ' பிரித்தல் " என்று பொருள் படுமாகையால் இதை * வகிப்பார் " (தாங்குதல் ) என்று திருத்துக 1. ܀ " 8. மாலுமி கடலுள் நீங்கினன். நீங்கு ' என்பது ? வில குதல் என்று பொருள்படுமாகையால் இதை " நீந்தி னன்” என்று திருத்துக 1.

Page 48
78
10.
ill.
2.
13.
14.
15.
6.
17.
தமிழ் மொழி விளக்கம்
குறும்பு செய்தால் என்னைத் தாயார் பேசுவார். ( ' பேசு தல்" என்பது "வார்த்தை யாடல்" (Speak) என்று பொருள்படுமாகையால், இதை "ஏசுவார்" (கண்டித்தல்) என்று திருத்துக 1.
இந்தப் பேனவை அநேக நாட்களாகப் பாவிக்கின்றேன். * பாவித்தல் " என்பது " பாவனை செய்தல் " அல்லது
" நடித்தல் ” (Imitate) என்ற பொருள்படும். ஆகையால்,
இதைப் " பயன்படுத்துகின்றேன் " அல்லது " உபயோகிக் கின்றேன்" என்று திருத்துக).
கள்வன் பெட்டியைத் துறந்து பணத்தைத் திருடினன். ( ' துறத்தல் " என்பது ' தள்ளுதல்" அல்லது " நீத்தல் ' (Renounce) என்று பொருள்படுமாகையால், இ ைத த் " திறந்து " என்று திருத்துக). உடலில் சூடு இருந்தால் கண் களி ல் பூளை சாறும். பூளை " என்பது ஒரு செடியைக் குறிக்கு மாதலால், இதைப் " பீளை (கண்மலம்) என்று திருத்துக 1. -
வேலன் வேலையை வடிவாகச் செய்தான். ! ? வடிவாக " என்பது ‘அழகாக ’ என்று பொருள்படுமா கையால் இதைச் " சரியாக " என்று திருத்துக 1. ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் திருக்குறள் அவசரம் இருக்கவேண்டும். 1" அவசரம்' என்பது விரைவைக் குறிக்கும். இங்கே கூறவந்தது இ ன் றிய மை யாமை யையே. ஆகவே, இதை 'அவசியம்’ என்று திருத்துக 1.
பட்டணங்களில் வீடுகள் நெருக்கடியாக இருக்கின்றன. (* நெருக்கடியாக என்பது " திடீரான இடர் " என்ற பொருள்படுமா கையால், இதை " நெருக்கமாக " (அடர்த்தியாக ) என்று திருத்துக 1.
நாளைக்கு நடைபெறவிருக்கும் கூட்டத்தை ப்பற்றி எனக்கு ஓர் அறிக்கை கிடைத்தது. (* அறிக்கை " என் பது ‘ Report" என்பதைக் குறிக்குமாகையால், இதை * அறிவித்தல் அல்லது " அறிவிப்பு (Notice) என்று திருத்துக 1.
கந்தன் திருடியதாகக் குற்றம்சாற்றப்பட்டான். ( ' குற் றஞ் சாற்றுதல்" என்பது " குற்றத்தையிட்டுப் பேசுதல் " என்று பொருள்படுமாகையால், இதைக் "குற்றஞ்சாட்டப் பட்டான் ” (குற்றங் காணல்-Accuse) என்று திருத்துக).

卫8。
二I 9。
20.
21.
22。,
23.
24。
25.
26.
பொதுவான பிழைகள் 79
எவருடனும் தாழ்வாகப் பேசவேண்டும். "தாழ்வு" என்பது * இழிவு' (LOW) என்று பொருள்படுமாகையால், இதைத் " தாழ்மையாக " (பணிவாக - Humble) என்று திருத்துக 1. அதிகாலையில் எழுந்திருத்தலை வழக்கத்தில் கொண்டு வருதல் நலம். வழக்கம் " என்ற சொல் * தொன்று தொட்டு நடை பெறுதல்" (Custom) என்ற பொருள்படு மாகையால், இதைப் பழக்கத்தில் " (பயிற்சி - Practice) என்று மாற்றுக 1. அவன் கடவுளை நாளும் வழிப்பட்டான். ! ? வழிப்பட் டான் " என்பது " பாதையில் செல்லல் " என்ற பொருள் படுமாகையால், இதை " வழிபட்டான் " (வணங்குதல்) என்று திருத்துக 1. அம்பிகை அதிகாலையிலேயே வீட்டை விட்டுப் புறப் பட்டா. ( ' புறப்பட்டா " என்ற சொல் இல்லை. இதைப் * புறப்பட்டாள் " அல்லது, மரியாதையாகச் சொல்ல விரும்பின் " புறப்பட்டார் " என்று திருத்துக. இதே போல, " அவ " " இவ" என்று எழுதாது, முறையே " அவள் " அல்லது " அவர் " என்றும், " இவள் " அல்லது * இவர் " என்றும் எழுதுக 1.
நான் மாலைக்காட்சியைக் கன்று மகிழ்ந்தேன். f கன்று "
என்பது " மிருகங்களின் குட்டி " என்ற பொருள்படு மாகையால், இதைக் " கண்டு " (பார்த்து) என்று திருத்துக 1. நண்பன் எனக்குப் பழம் கொன்று வந்து தந்தா ன். (* கொன்று " என்பது " கொல்லுதல் " என்று பொருள் படுமாகையால், இதைக் கொண்டு ( உடன் எடுத்து) என்று திருத்துக). இண்டைக்கு எனக்கு வேலை அதிகம். ( ' இண்டை " என்பது " மாலை" என்ற பொருள்படுமாகையால், இதை * இன்றைக்கு" ( இந்தநாள் ) என்று திருத்துக 1. அவன் அண்டைக்கு என்னைச் சந்தித்தான். ! ? அண்டை" என்பது " அயல்’ என்று பொருள்படுமா கையால், இதை * அன்றைக்கு ’ (அந்தநாள் ) என்று திருத்துக 1. தாய் மகவை ஈண்டு பெருமகிழ்ச்சி அடைவா ள் . ( ' ஈண்டு ' என்பது ? இங்கே ’ என்ற பொருள்படுமாகை யால், இதை ஈன்று’ (பிள்ளையைப் பெற்று) என்று திருத்துக 1.

Page 49
80
27.
28.
29.
30.
31.
32.
33.
தமிழ் மொழி விளக்கம்
நாவலர் பேச்சு வண்மை நிறைந்தவர். (* வண்மை என்பது வள்ளல் தன்மை " என்ற பொருள்படுமா கை யால், இதை " வன்மை " (ஆற்றல் ) என்று திருத்துக 1. மனிதனுக்கு ஊனும் உடையும் இன்றியமையா தன. ஊன் என்பது ? இறைச்சி என்ற பொருள்படுமாகை யால், இதை ஊணும் ’ (உணவு) என்று திருத்துக 1.
நீர் தேவையானபடியால் ஒரு கிணற்றைத் தோன்றினன். ( ' தோன்றுதல்’ என்பது " தோற்றம் அளித்தல்’ என்ற பொருள்படுமாகையால், இதைத் தோண்டினன்' என்று திருத்துக 1. திருடனைக் கண்டதும் நாய் குலைத்தது. ( ' குலைத்தல்" என்பது " சிதைத்தல் " என்ற பொருள்படுமா கையால், இதைக் * கு  ைரத்த து (நாய் செய்யும் ஒலி) எ ன் று திருத்துக 1. அவன் பொருட்களை முத்தத்தில் காய வைத் தா ன். ( ' முத்தம் ' என்பது " கொஞ்சுதல் " என்ற பொருள்படு மாகையால், இதை " முற்றத்தில் (வெளி) என்று திருத்துக 1. மாடு குன்றில் தண்ணீர் குடித்தது. ( ' குன்று" என்பது * மலை" என்ற பொருள்படுமாகையால், இதைக் * குண் டில் " என்று திருத்துக 1.
கப்பலில் பல பொருட்களை ஏத்தினுன் ( ' ஏத்துதல் " என்பது வணங்குதல் " என்று பொருள்படுமாகையால்,
இதை * ஏற்றினன்' என்று திருத்துக 1.
பின்வரும் சொற்கள் பேச்சு வழக்கில் உள்ளன. அவற்
தைத் திருத்தி எழுதவேண்டும். திருத்தமான சொற்களை அவற்றின் நேரே காண்க.
34.
35.
36.
37.
38, 39.
40.
பிழை திருத்தம் தவக்கை தவளை தேள் வை தேவை எண்ணை எண்ணெய் ož அரைஞாண் கயிறு கோடாலி கோட்ரி சில து சில
பலது J. Gob)

42。
43。
44。 45。 46.
47.
48.
49.
.50.
5l. 52。
53。 54.
55。
お6。 57.
58。
59. 60.
(61. 62.
63.
64。
65
66.
67.
68. 69.
70.
71.
72.
73.
74。
பொதுவான பிழைகள் 8.
பிழை
பொம்பிளைப்பிள்ளை Gurr bl &N ஆம்பிளைப்பிள்ளை ஆம்பிள்ளை விடியப்புறம் வேணும் சொற்பனம் என்றை உன்றை அவன்றை குடுத்தல் . உஸ்தியோகம் தல கணி நொங்கு கத்தரிக்கை துற்ப்பு _u fflu anrif) இழல் புத்து இராப்போலாய் வெளிக்கிடுதல் முளித்தல் போறேன் வாறேன் சிரத்தல் திரத்தல் தண்ணி , க்டுதண்ணீர் பெடியன் பொட்டை கந்தோர் கதிரை நாகரீகம் சமுகம் W பாட்டுப் படித்தல் இத்தகையான இப்படிக்கொத்த
திருத்தம்
பெண் பிள்ளை
ஆண் பிள்ளை
விடியற்புறம் வேண்டும் சொப்பனம் என்னுடையது உன்னுடையது
அவனுடையது கொடுத்தல் உத்தியோகம் தலையணை நுங்கு கத்தரிக்கோல்
திறப்பு
_uif? Grr til
நிழல்
புற்று இராப்பகலாய் புறப்படுதல் விழித்தல் போகிறேன் வருகிறேன்
துரத்தல்
தண்ணிர்
வெந்நீர்
பையன்
பெண் பிள்ள்ை காரியாலயம், அலுவலகம் நாற்காலி
நாகரிகம்
சமூகம்
பாட்டுப் பாடுதல் இத்தகைய, இப்படியான இப்படிப்பட்ட, இதுபோன்ற

Page 50
82
75。
76.
77.
78.
79.
80.
8l.
82.
83.
84。
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95。
96.
97.
98.
99.
00.
01.
02.
03.
104.
05.
I 06。
07.
O 8.
09.
I 0.
Ill I.
12.
13.
பிழை
கதைத்தல் முசுப்பாத்தி மம்பெட்டி GBu urru972an) இஞ்சை இப்ப அப்ப uurrunt if? அருவாள் சிலவு முயர்ச்சி பயிர்ச்சி உயற்ச்சி கைமாத்து ஆக்கள் ஊத்து கிணத்தடி சித்தப்பன் தேத்தண்ணி நாத்தம் நேத்து நெத்தி ஒண்டு ஒம்பது பத்தை பீத்தல் பூர்த்தல் மதவு மாத்தம் வெத்திலை வைக்கல்
முகூத்தம்
ஈக்கு
காச்சல் கோர்வை
துடை. தோர்வி வெங்கலம் விதரம்
தமிழ் மொழி விளக்கம்
திருத்தம் பேசுதல் வேடிக்கை மண்வெட்டி புகையிலை இங்கே இப்போது அப்போது ĉŞ?u urTi urT, rfi அரிவாள் செலவு முயற்சி பயிற்சி உயர்ச்சி கைமாற்று ஆட்கள் ஊற்று கிணற்றடி சிற்றப்பன் தேநீர் நாற்றம்
நேற்று
நெற்றி ஒன்று ஒன்பது பற்றை பீற்றல் பூத்தல் மதகு மாற்றம் வெற்றிலை வைக்கோல் முகூர்த்தம் ஈர்க்கு காய்ச்சல் கோவை தொடை தோல்வி வெண்கலம், விரதம்

ll 4.
15.
1 6.
17.
18.
ll 9. Il 20. 121.
丑22。
l23.
l24.
I 25。
126.
Il 27.
28.
129.
130.
13 l. I32. 133.
134.
I35。
13 6.
37. 138. 139.
1 4 0. 141. 42. 143. 144.
45.
146.
147.
48.
49.
15 O.
151.
பொதுவான பிழைகள் 83
பிழை மாதாளம் பழம் ஆயிதம் எலிமிச்சம் பழம் உருமை வண்டிக்காறன் கறடி gTL G8). It குடும்பி பிலாமரம் கம்பிளி சுக யினம் வெண்ணை பண்டி கருப்பணி மிதுவடி
பிரையாணம்
சீயாக்காய் முளகாய் கிராணம் வேர்வை கருவேப்பிலை பெரிசு
காலமை
சாட்டு
திருவுதல்
பொக்களம்
6Almt uiu
புண்ணுக்கு கும்புடு சவுக்தாரம் புட்டு சிவர் பொக்குள் கைமாறு சிகப்பு புடுங்கு சிதல் Lunt j F 6)
திருத்தம் மாதுளம் பழம் ஆயுதம் எலுமிச்சம் பழம் உரிமை வண்டிக்காரன்
கரடி அகடபை குடுமி பலாமரம் கம்பளி
சுகவீனம் வெண்ணெய் பன்றி கருப்பநீர் மிதிதடி பிரயாணம் சிகைக்காய் மிளகாய் கிரகணம் வியர்வை கறிவேப்பிலை பெரிது காலை சாக்கு துருவுதல் கொப்புளம்
பிண்ணுக்கு கும்பிடு சவர்க்காரம் பிட்டு சுவர் கொப்பூழ் கைம்மாறு சிவப்பு பிடுங்கு சீழ் பாய்ச்சல்

Page 51
84
52.
153.
154.
155.
56.
157.
J 58。
தமிழ் மொழி விளக்கம்
இலக்கணப் பிழைகள்
நான் நண்பனுடன் அநேக நேரமாகப் பேசிக்கொண் டிருந்தேன். (* அநேகம் " என்பது எண்ணைக் (Number) g5stódig5 Dmt 60) és elèunTổv, o piš6ðoT LI ” (Denoting length) GT6ör go திருத்துக 1.
சேவை என்பது தன்னலங் கருதாது செய்யப்படுவது சேவை எனப்படும். சேவை என்ற சொல் இரு முறை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இங்கே வாக்கிய அமைப்புச் சரியில்லை. இது " சேவை என்பது தன்னலங் கருதாது செய்யப்படுவது" என அமைய வேண்டும் 1. மாணவன் கூறியது என்னவெனில், ' நான் கல்வியை விரும்பிக் கற்கின்றேன்" என்ருன். ( இது பிழையான வாக்கிய அமைப்பு. இதை நேர்க்கூற்றில் இரண்டு வகை யாகத் திருத்தி அமைக்கலாம்.
(1) மாணவன் கூறியது என்னவென்ருல், ** நான் கல்வியை விரும்பிக் கற்கின்றேன் ' என்பது.
(2) " நான் கல்வியை விரும்பிக் கற்கின்றேன்" என்று மாணவன் கூறினன் 1. பணமுள்ளவன் வாழ்க்கையில் ஏதும் குறையில்லாமல் வாழலாம். " ஏதும் " என்பது ஏதேனும் ஒன்றைக் (Amy one) குறிக்குமாதலால் இதை " எதுவும் " (ஒவ் வொன்றும் Each One) என்று திருத்துக1. எல்லோரும் பெரியவர்களாக ஆகவேண்டும். ( இங்கே * ஆக, " " ஆக வேண்டும் " என்று இரண்டு தடவைகள் * ஆக " என்பதை எழுதியது தவறு. ஆகவே, இதை ** எல்லோரும் பெரியவர்கள் ஆகவேண்டும் ' என்று திருத்துக 1. அவன் சிறிது நாட்கள் சென்றபின் திரும் பினன். (* சிறிது " என்பது அளவைக் குறிக்கும். இங்கே கருதப்
பட்டது எண். ஆகவே, இதைச் சில” என்று திருத்துக 1.
சுந்தரம் பாடுவதிலும், நடிப்பதிலும், வீணை வாசிப் பதிலோ மிகச் சிறந்தவன். (ஒரு வாக்கியத்தில் * உம் " கொண்டு சொற்கள் பிணைக்கப்பட்டால், எல்லாச் சொற் களும் அவ்வாறே ஆகவேண்டும். என் வே, இதைச் * சுந்தரம் பாடுவதிலும், நடிப்பதிலும், வீணை வாசிப் பதிலும் மிகச் சிறந்தவன் ' என்று திருத்தி எழுதுக. அல்லது " வீணை வாசிப்பதிலோ " என்ற அமைப்பை

59.
60.
61.
62.
63.
64.
பொதுவான பிழைகள் & 5
மாற்ற விரும்பாவிடின் வாக்கியத்தைச் * சுந்தரம் பாடு வதிலோ, நடிப்பதிலோ, வீணை வாசிப்பதிலோ மிகச் சிறந்தவன்’ என்று மாற்றி அமைக்க 1.
ஒவ்வொரு பெண்களும் கற்றல் அவசியம். (* ஒவ்வொரு என்ற சொல் ஒருமையாகையால் இது சுட்டும் பெயர்ச் சொல்லும் ஒருமையாக அமையவேண்டும். பெண்கள் பன்மையைக் குறிக்குமாகையால், இதை மாற்றி, * ஒவ் வொரு பெண்ணும் கற்றல் அவசியம்’ என்று எழுதுக. * பெண்கள் " என்ற எழுவாயை மாற்ற விரும்பாவிடின், * எல்லாப் பெண்களும் கற்றல் அவசியம்’ என்று மாற்றி எழுதுக 1.
ஒவ்வொரு மனிதனும் தத்தம் நன்மையை விரும்புவது இயல்பு. (*தத்தம்’ என்ற படர்க்கைப் பெயர் " மனித னும் ’ என்ற ஒருமை எண்ணைக் குறிக்கும். ஆகவே, இதைக் குறிக்கும் தன்மைப் பெயரும் ஒருமையில் அமைய வேண்டும். *தத்தம்’ என்பது பன்  ைம யா கையால் இதைத் " தன் தன் " என்று திருத்துக 1. அவனுக்குப் பல தீங்குகள் நேர்ந்தது. நேர்ந்தது" என் பதை * நேர்ந்தன என்ற பன்மை எண்ணுக மாற்றுக 1. நேற்று வாங்கிவந்த பழங்கள் ஒவ்வொன்றும் இனிமை யுள்ளன. (இந்த வாக்கியத்தின் எழுவாய் பழங்கள்" அன்று. " ஒவ்வொன்றும் " என்பதே எழுவாயாகும். இது ஒருமை எண். ஆகையால், இதைக் குறிக்கும் பய னிலையும் ஒருமையாக இருக்கவேண்டும். * இனிமை யுள்ளன ’ என்ற பயனிலை பன்மையாகையால், இதை * இன்மையுள்ளது" என்ற ஒருமை எண்ணுக மாற்றுக 1. நான் அவனுக்கு உதவி செய்ததின் காரணம் அவனை விரும்பியதால். (இந்த வாக்கியத்தில் வினை முற் று (Finite verb) இல்லை. ஆகவே, " விரும்பியதால் " என் பதை ' விரும்பியதே ' என்று வினை முற்ற க மாற்றி, வாக்கியத்தை " நான் அவனுக்கு உதவி செய்ததின் கார ணம் அவனை விரும்பியதே என்று எழுதுக. அல்லது * அவனை விரும்பியதால் நான் அவனுக்கு உதவி செய் தேன்" என்று எழுதுவதே சிறந்த வாக்கிய அமைப்பா கும் 1. * பணத்தை வயோதிய காலத்தில் செலவு செய்வதற் காகச் சேமிக்கப்ப்டல் வேண்டும். (வாக்கியத்திலுள்ள பணத்தை " என்ற சொல் செய்வினையாக அமைக் கபடி

Page 52
86
I65。
66.
67.
68.
69.
தமிழ் மொழி விளக்கம்
யால், பயனிலை செய்வினையாகவே அமைய வேண்டும். இங்கே உள்ள " சேமிக்கப்படல் வேண்டும் " என்ற பய னிலை செயப்பாட்டு வினையா கையால் ' பணத்தை வயோ திப காலத்தில் செலவு செய்வதற்காகச் சேமிக்கவேண் டும் " என்று வாக்கியத்தைத் திருத்தி எழுதுக. அல்லது * வயோதிப காலத்தில் செலவு செய்வதற்காகப் பணம் சேமிக்கப்படல் வேண்டும்’ என்றும் எழுதலாம் 1.
அவன் செல்வன் மாத்திரமல்ல அறிவாளியாய் இருந் தான். ( இந்த வாக்கியம் ? அவன் செல்வனுயும் அறி வாளியுமாக இருந்தான் " என்று பொருள் தருவதால் * அறிவாளி " என்ற சொல்லுடன் உம்மை ’க் சேர்த்து, வாக்கியத்தை " அவன் செல்வன் மாத்திரமல்ல அறி வாளியாயும் இருந்தான் " என்று திருத்தி எழுதுக 1.
பிரமாணங்களுக்கு ஏற்ப முறையில் ஒழுகினன். ( இது தவருன வாக்கிய அமைப்பு. இது " பிரமாணங்களுக்கு
ஏற்ப ஒழுகினன் ' என்றே, அல்லது " பிரமாணங்களுக்கு
ஏற்ற முறையில் ஒழுகினன்" என்ருே அமையவேண்டும் 1.
உலகில் பல கலைகள் உண்டு. அதில் நாட்டியமும் ஒன்று. [ “ 9 G6iv ” GT Gö7 pp 3 LGPL GoMuuuri (Demonstrative Pronoun) * கலைகள் " என்ற பன்மைப் பெயரைக் குறிப்ப தால், சுட்டுப் பெயரும் பன்மையாக இருக்கவேண்டும். * அதில் ' என்பது ஒருமை. ஆகவே, இதை " அவற் றுள் " என்று பன்மையாக மாற்றி, " உலகில் பல கலை கள் உண்டு. அவற்றுள் நாட்டியமும் ஒன்று, " என்று வாக்கியத்தைத் திருத்தி எழுதுக).
யாழ்ப்பாணத்தில் பனைமரங்கள் அநேகம் உண்டு. அவர் கள் பல பயன்களைக் கொடுக்கின்றன. ( " அவர்கள் " என்ற சுட்டுப் பெயர் பன்மையானலும் அது உயர்திணை யைக் குறிக்கும். இது ' பனைமரங்கள் " என்ற அஃறிணைப் பொருளைக் குறிப்பதா ல் “ அவர்கள் " என்ற உயர் திணையை அவை " என்று மாற்றி, வா க் கியத் தை * யாழ்ப்பாணத்தில் பனைமரங்கள் அநேகம் உண்டு. அவை பல பயன்களைக் கொடுக்கின்றன என்று எழுதுக).
அவன் ஓர் பிழையுமில்லாது எழுதினன். " ஒர் ' என்ற சொல் உயிரெழுத்தைக் கொண்டு தொடங்கும் சொற்க ளுக்கு முன்னரே எழுதப்படல் வேண்டும். மற்றைய சொற்களுக்கு முன்னல் " ஒரு ' என்ற சொல் லையே

70.
71.
72.
பொதுவான பிழைகள் 87
எழுதல் வேண்டும். உதாரணம், “ஓர் ஆடு, ஓர் இலை, ஒரு வீடு, ஒரு பிழை. ஆகவே ஓர் 斜 என்பதை βρ(δ φ
என மாற்றுக 1.
செல்வன் ஆகாய விமானத்தால் பிரயாணம் செய்வான்.
( ? விமர்னத்தால் ” என்பது * by plane’ என்பதன் மொழி
பெயர்ப்பு. தமிழில் எழுதும்போது " விமானத்தில் " என்று எழுதவேண்டும் 1.
தாய் தன் மகனைப் பிறர் போற்றினுல் பெரு மகிழ்ச்சி அடைவாள். இது, ஆங்கில வாக்கிய அமைப்பு. இதை, * தன் மகனைப் பிறர் போற்றினல் தாய் பெருமகிழ்ச்சி அடைவாள் " என்று திருத்துக 1. பையன் தன்னுடனுள்ள பணத்தைச் செலவு செய்தான். ( ' தன்னுடன் " என்பது with him" என்பதன் மொழி பெயர்ப்பு. இதை, தமிழ் மரபுக்கேற்ப " தன்னிடம் " என்று எழுதுக 1.
பயிற்சி
பின்வரும் வாக்கியங்களிலுள்ள பிழை களை த் திருத் தி
அமைக்க :
1.
2。
தனக்குத் தேள்வையான பொருட்களை க் கடையில் வேண்டினன்.
தலகணி உறையில் எண்ணை ஊறியதால் அதில் அழுக்குப் படிந்திருக்கின்றது.
தெருவில் செல்லும்போது பிராக்குப் பார்த்தல் ஆகாது.
எனது பிழைகளைக் கண்டித்துத் தந்தையார் என்னைப் பேசினர்.
கொழும்புப் பட்டணம் இலங்கையின் தலைநகரமாகும். வரவுக்கேற்ற சிலவு செய்தல் அவசரம். என்னும் சில நேரம் செல்ல நான் கூட்டத்துக்குச் செல் வேன்.
அவன் அண்டைக்குக் கோடாலி கொண்டு மரத்தை வெட்டினன்.
கதவைத் துறந்து வைத்ததால் நாய் பூந்து உணவ்ைத் திருடியது.

Page 53
88
0.
11.
卫2。
I5。
6.
7.
18.
19.
20.
தமிழ் மொழி விளக்கம்
கூட்டத்துக்குக் கல்வி மந்திரி தலைமை வகுப்பார் என்று ஒர் அறிக்கை எனக்குக் கிடைத்தது. mv காலையில் எழுந்தவுடன் கற்றலை நாம் வழக்க த்தில் கொண்டுவருதல் நலம்.
அவன் ஒரு உஸ்தியோகம் பார்ப்பதற்கு முயற்சி செய் கின்ருன்.
எனது தங்கை என்னிடம் ஒரு புத்தகத்தைத் தந்தா. அவனது பேச்சு வண்மையைக் கண்று எல்லோரும் வியந் தார்கள். அவன் கிணற்றுள் தவக்கை போன்றவன். இப்படிக் கொத்தவனுக்கு உலகத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாது. ஒவ்வொரு மாணவர்களும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கந்தன் பேசுவதில் மாத்திரமல்ல எழுதுவதில் சிறந்தவன்.
செல்வத்தை வறியவர்களுக்குப் பயன்படுத்தப்பட ல் வேண்டும். . உலகில் பல பெரியவர்கள் உண்டு. அதில் பாரதியாரும் ஒருவர்.
வினைச்சொல் எனப்படுவது ஒரு தொழிலையுணர்த்தும் சொல் வினைச்சொல் ஆகும்.

பழமொழிகள் 89.
அதிகாரம் XIV
பழமொழிகள் (Proverbs)
அகதிக்கு ஆகாயமே துணை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பேய். அஞ்சும் மூன்றும் உண்டானல் அறியாப்பெண்ணும் கறி
சமைப்பாள். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. S9L -T gjil செய்பவர் படாது படுவர். அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவார்களா ? அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். அடியாத மாடு படியாது. அமாவாசைச் சோறு என்றைக்கும் அகப்படுமா ? அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. அழுதழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும். அழுத பிள்ளை பால் குடிக்கும். அளவுக்கு மிஞ்சினல் அமுதமும் நஞ்சு. அறிவுடையாரை அரசனும் விரும்பும். அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும். (பான். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப் அன்பான நண்பனை ஆபத்தில் அறி. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும். ஆசை வெட்கம் அறியாது. ஆடத் தெரியாத தேவடியாள் முற்றம் கோணல் என்ருளாம். ஆடு நன்ைகிறதென்று ஒநாய் அழுகிறதாம். ஆத்திரகாரனுக்குப் புத்தி மத்திபம். ஆபத்துக்குப் பாவமில்லை. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன். ஆரியக் கூத்தாடினலும் காரியத்தில் கண்ணுயிரு. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி tA
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. ஆழ மறியாமல் காலை விடாதே.

Page 54
90 தமிழ் மொழி விளக்கம்
ஆறின கஞ்சி பழங்கஞ்சி. ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி.
அப்புறம் நீயார் ? நானுர் ? ஆற்றிலே போட்டாலும் அளவறிந்து போடு. ஆனைக்கும் அடி சறுக்கும். ஆனைக் கொருகாலம் : பூனைக் கொருகாலம். ஆனை செத்தாலும் ஆயிரம் பொன். ஆனை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே. இடங் கொடுத்தால் மடம் பிடுங்குவான். இரு தோணியில் கால் வைக்காதே. இளமையில் கல்வி சிலையில் எழுத்து. இனம் இனத்தைச் சேரும். ஈட்டி எட்டினமட்டும் பாயும் பணம் பாதாளமட்டும் பாயும். L உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை. qA SSSSLSLSSSLLLLSSSqqLLSSSS SSSS SSS S SS உண்மையே உயர் தந்திரம். உப்பிட்டவரை உள்ளளவும் நினை. உப்புச் சமைந்தால் தெரியும் உப்பின் அருமை.
அப்பன் மாண்டால் தெரியும் அப்பன் அருமை. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ? உலையை மூடலாம், ஊரை மூட முடியாது. திவ்சிபோன இடம் தெரியாது, உலக்கைபோன இடம் தெரியும். ஊமையர் சபையில் உளறுவாயன் மகா வித்துவான். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்,
தன்பிள்ளை தானே வளரும். ஊருக்கொரு தேவடியாள் யாருக்கென்று ஆடுவாள்? எட்டாப் பழத்துக்குக் கொட்டாவி விட்டென்ன ? எய்தவ னிருக்க அம்பை நோவானேன்? எலிவளை யானுலும் தனிவளை வேண்டும். எறும்பு ஊரக் கற் குழியும் (தேயும்). ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும். ஏறச் சொன்னல் எருதுக்குக் கோபம்.
இறங்கச் சொன்னல் நொண்டிக்குக் கோபம். ஏற்ற முண்டானல் இறக்கமுண்டு. ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா ? ஐயர் வரும்வரையில் அமாவாசை காக்குமா ? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரூருக்குப் பேச்சு மற்ற ஊருக்கு ஏச்சு. கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு போதும்.

பழமொழிகள் 91
கடுகு சிறிதென்ருலும் காரம் பெரிது. கடுகுபோன இடம் தெரியாது, மிளகுபோன இடம் தெரியும். கண்டது கற்கப் பண்டிதன் ஆவான். கரும்பு இனிக்கிறதென்று வேரோடு பிடுங்காதே. கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா ? கல்வி என்னும் பயிருக்குக் கண்ணீர் என்னும் மழை வேண்டும். கழுதை -9] fմ) պւDrr கந்தப்பொடி (கற்பூர) வாசனையை ? காகம் திட்டி மாடு சாகுமா ? காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு. காற்றுள்ள போதே தூற்றிக் கொள். கிட்ட இருந்தால் முட்டப் பகை. கிட்டா தாயின் வெட்டென மற. குப்பையில் போட்டாலும் குன்றுமணி மங்காது. குரங்குக்கும் தன் குட்டி பொன் குட்டி. குரைக்கிற நாய் கடியாது. - குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. கேடுவரும் பின்னே மதி கெட்டுவரும் முன்னே. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.” கையில் வெண்ணெயிருக்க நெய்க்கு அலைவானேன்? கொஞ்ச இடம் கொடுத்தால் மிஞ்ச இடம் பிடிப்பான். கோவில் பூனை தேவருக்கு அஞ்சாது. சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தாவதென்ன ? சிறிய பாம்பானுலும் பெரிய தடி கொண்டடி. சிறு துளி பெரு வெள்ளம். சுகமும் துக்கமும் சுழலும் சக்கரம். சுண்டங்காய் காற்பணம் சுமைகூலி முக்காற்பணம். சும்மா இருந்த அம்மையாருக்கு அரைப் பணத்துத் தாலி
போதாதா ? சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி வரங் கொடான். சூடுகண்ட பூனை அடுப்படியை நாடாது. செல்வம் என்பது சிந்தையின் நிறைவே. தன்னைப் புகழாத கம்மாளன் இல்லை. தன் வினை தன்னைச் சுடும். தாரமும் குருவும் தலை விதிப்படி.
கானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.

Page 55
92 தமிழ் மொழி விளக்கம்
தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான். தீராக் கோபம் போராய் Փգպմ. துணை போனலும் பிணை போகாதே. துரும்பும் பல்லுக்குத்த உதவும். (காதே. தெருவில் தேங்காயை எடுத்து வழியில் பிள்ளையாருக்கு அடிக் தேசத்தோடு ஒத்துவாழ். தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். நத்தை வயிற்றிலும் முத்துப் பிறக்கும். நரிக்குக் கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம். நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும். நாய் குரைத்தால் நமக்கென்ன குறை ? நாய்க்கு வேலையுமில்லை நடக்க நேரமுமில்லை. நாய்க்கேன் போர்த்தேங்காயை ? நித்தம் போனல் முற்றம் சலிக்கும். நிழலின் அருமை வெயிலில் போனல் தெரியும். நிறைகுடம் தளும்பாது. நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போகலாமா ? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். பணமில்லாதவன் பிணம். பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து. பல எலி கூடினுல் புற்றெடுக்காது. பல நாளைத் திருடன் ஒருநாளைக்கு அகப்படுவான். பழகப் பழகப் பாலும் புளிக்கும். பள்ளிக் கணக்குப் புள்ளிக் குதவாது. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா ? பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல். பன்றிக்குப் பின்போன கன்றும் மலம் தின்னும், பாடு பட்டவன் பட்டத்துக் கிருப்பான். பாடை (பாடம்) ஏறினும் ஏடது கைவிடேல். பாத்திரமறிந்து பிச்சையிடு, கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு பால் தொட்டுப் பால் கறக்க வேண்டும். பானையில் உண்டானுல் அகப்பையில் வரும். புதுமைக்கு வண்ணுன் கரைகட்டி வெளுப்பான். புத்திமான் பலவான். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ? பூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.

பழமொழிகள் 99
பேராசை பெருந் தரித்திரம். பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது. பொறுத்தார் பூமி ஆள்வார், பொங்கினர் காடுறைவார். பொன்னின் குடத்துக்குப் பொட்டிட வேண்டுமா ? போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே. மதியாதார் முற்றம் மிதியாதே. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மருந்தும் விருந்தும் மூன்று வேளை, மழை விட்டும் தூவானம் போகாது. மனங் கொண்டது மாளிகை. மனமுண்டானுல் இடமுண்டு. மின்னுவதெல்லாம் பொன்னல்ல. முதலிற் கோணல் முற்றுங் கோணல். மெல்லெனப் பாயுந் தண்ணிர் கல்லையும் உருவிப் பாயும். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். வற்றிய ஒலை சலசலக்கும் விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமிா ? விளையும் பயிரை முளையில் தெரியும். வெள்ளம் வருமுன்னே அணைகோல வேண்டும். வெறும் கை முழம் போடுமா ? வேண்டாப் பெண்டாட்டியின் கைபட்டால் குற்றம் கால் பட் டால் குற்றம். வேலைக் கள்ளிக்குப் பிள்ளைப் (சாட்டு) பராக்கு.

Page 56
இரண்டாம் பகுதி

அதிகாரம் XV
விளக்கப் பயிற்சி (Comprehension)
கீழ்க் காணும் பந்திகளை வாசித்த பின்னர், அவற்றின் அடியிலுள்ள கேள்விகளுக்கு ஏற்ற விடைகள் தருக. குறிப்பு பக்திகளே முழுவதும் வாசித்து விளங்கினலன்றிக் கேள்விகளுக்கு வி.ை எழுதத் தொடங்கல் ஆகாது. பக்தியிலுள்ள கருத்துத் தொடிர்பின்படி கேள்விகள் அமைய வேண்டியதில்லை. ஆகவே ஒவ்வொரு கேள்விக்கும் ஏற்ற விடையைக் கண்டுபிடித்தே எழுதல் வேண்டும் விடிைகள் பிழை யில்லாத வாக்கியங்களாக அமைய வேண்டும் ஒரு சொல்லையோ அல்லது ஒரு சொற்ருெட்ரையோ விடையாக எழுதல் தவருகும்.
(1) தனது கணவனல் துறக்கப்பட்ட பின் உயிர் வாழ விரும்பாத சீதை, அக்கினியில் வீழ்ந்து உயிர்விடக் கருதினள், இலட்சுமணனை நோக்கி அக்கினி மூட்டும்படி வேண்டினுள். இலட்சுமணன் நீர் மல்கும் கண்களோடு அக்கினியை மூட்டி ஞன். சீதை அக்கினியை மூன்றுமுறை வலம்வந்து, ** அக் கினியே, என் மனதிலாவது எனது கற்பிற்குப் பங்கமேற்பட நான் நடந்திருப்பேனயின் என்னை எரிப்பாயாக ' என்று கூறி அக்கினியுள் புகுந்தாள். ஆனல், சீதை அக்கினியால் சிறிதும் துன்புற்ருளில்லை. குளிர்ந்த தடாகத்து விருப்பாள் போன்று கொழுந்து விட்டெரியும் அக்கினியின் நடுவில் திகழ்ந்தாள். அப்பொழுது அக்கிணிதேவன் இராமர் முன்னே தோன்றி, ** இராமா, உனது மனைவி கற்புநெறி தவருதவள். அவளுடைய கற்பாகிய அக்கினி என்னையும் சுட்டுவிட்டதே. அவளை இனிமே லாவது ஏற்றுக்கொள்’ என்று இரந்தான். இராமர் அப்படியே சீதையை அன்போடும் ஆர்வத்தோடும் ஏற்றுக் கொண்டு, " எனது மனைவி கற்புநெறி தவருதவள் என்பதை யான் அறி வேன். ஆனல், அவள் கற்பின் பெருமையை உலகுக்கும் காட்ட வேண்டியே இப்படி மொழிந்தேன்' என்று கூறினர்.
1. யார் யாரைத் துறந்தார் ? 2. இலட்சுமணன் எதற்காக அக்கினியை மூட்டினன்? 3. ** நீர் மல்கும் கண்கள் " என்பது எதை விளக்கு
கின்றது ?
4. சீதை அக்கினியிடமிருந்து விரும்பிய தண்டனை எது?
5. இந்தத் தண்டனையை ஏன் விரும்பினுள் ?
6. அக்கினியில் புகுந்த சீதையின் நிலை எங்ங்ணம் வருணிக்
கப்பட்டிருக்கின்றது ?

Page 57
96 தமிழ் மொழி விளக்கம்
7. சீதையினுடைய கற்பு எத்தகையது?
8. சீதையை ஏற்றுக்கொள்ள எதற்காக இராமர் தாமதித்
தார் ?
(2) கங்கைக் கரையை அடைந்த பரதன் முதலாயினுேர் இராமனைக் காணச் செல்வாராயினர். இலட்சுமணன் இவர் களைத் தூரத்தே கண்ணுற்றுப் போர் செய்ய வருவதாக நினைத் துக் கோபங்கொண்டான். தானும் யுத்தத்துக்கு ஆயத்தங் கொண்டான். இராமன் அவனைப் பொறுமையாயிருக்குமாறு பணித்தான். பரதன் சமீபித்தான். அவனை இலட்சுமணன் கண்டு தான் கொண்ட எண்ணம் தவறு என்பதை உணர்ந் தான். பரதன் ஒடிச்சென்று இராமனின் பாதங்களில் விழுந்து அழுதான். இராமன் முதலியோர் தசரதனது மரணத்தைக் கேள்வியுற்று அழுது புலம்பினர். பின் பரதன் இராமனை நாட்டுக்குத் திரும்பும்படி கேட்டான். இராமன், " சொன்ன சொல் தவறேன். தந்தை கட்டளையை மீறேன்" என மறுத் தான். மந்திரி பிரதானிகள் யாவரும் கூறியும் இராமன் இணங்கவில்லை. ஈற்றில் பரதன், ' நான் ஒருபோதும் முடிசூட மாட்டேன். தேவரீரது பாதுகை (மிதியடி) யையாவது கொடுத் தால் அதைச் சிம்மாசனத்து வைத்து அதன் கீழ் யானிருந்து நாட்டைப் பாதுகாப்பேன். பதினன்கு வருடங்கள் கழிந்ததும் தாங்கள் வரத் தவறினல் யான் நெருப்பில் விழுந்து உயிர் விடுவேன்” என்ருன்.
1. கங்கைக் கரைக்கு ஏன் பரதன் சென்ருன் ? 2. இலட்சுமணன் எதற்காகக் கோபம் கொண்டான் ?
3. இலட்சுமணன் எப்போது தனது எண்ணம் தவறு என்
பதை உணர்ந்தான் ?
4. இராம்ன் வருந்தியதற்குக் காரணம் என்ன ? 5. இராமன் எதற்கு இணங்கவில்லை ?
6. இவன் இணங்காததற்குக் காரணம் என்ன?
7. இராமனிடம் பரதன் கடைசியாகக்கேட்ட வேண்டுகோள்
என்ன ?
8. பரதன் எங்ங்னம் அரசாள விரும்பினன் ?

விளக்கப் பயிற்சி 97
(3) வெளி உலகத்துடன் தொடர்பின்றி நாம் உயிர்வாழ Cup) Lq. uLufTğ5I . அப்படி, வாழமுடியும் என்று எண்ணியது நமது மடமையாகும். அதற்குரிய தண்டனையை ஓராயிரம் ஆண்டு அடிமை வாழ்வு வாழ்ந்து நாம் அனுபவித்துவிட்டோம். நமது நிலையைப் பிறதேசத்தாரின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்க நாம் வெளியே போகாததும், நம்மைச் சுற்றிலும் நடந்துவந்த காரியங்களைக் கவனியாததும், இந்தியர் தாழ்வடைந்ததற்கு ஒரு பெரிய காரணமாகும். . இந்தியர்கள் இந்தியாவை விட்டு வெளியே போகக்கூடா தென்பது போன்ற மூட க் கொள்கைகள் குழந்தைத் தனமானவை. அவற்றை மண்டை யில் அடித்து விடவேண்டும். எவ்வளவுக் கெவ்வளவு நீங்கள் வெளியே சென்று பிறநாட்டாரிடையே பிரயாணம் செய்கிறீர் களோ அவ்வளவுக்கு உங்களுக்கும் உங்கள் நாட்டுக்கும் நன்மை யுண்டு. பல நூற்ருண்டுகளுக்கு முன்பிருந்தே நீங்கள் அவ்வாறு செய்து வந்திருந்தால் இன்று இந்நிலையில் இருக்கமாட்டீர்கள். இந்தியுாவை ஆள விரும்பிய ஒவ்வொரு நாட்டா ருக்கும் அடிமையாகி யிருக்கமாட்டீர்கள்.
( 'நமது தாய்நாடு ? -- சுவாமி விவேகானந்தர் )
1. நமது மடமைத் தனம் என்ன ?
இதனல் நமக்கு விளைந்தது என்ன ? இந்தியர் ஏன் தாழ்வடைந்தார்கள்?
. நாம் ஏன் வெளியே செல்லல் வேண்டும் ?
*" குழந்தைத் தனமானவை '’ என்ற கருத்தை விளக் குக.
6. நாம் உயர்ந்திருக்க வேண்டுமாயின் என்ன செய்திருக்க
வேண்டும் ?
(4) நமக்கு வேண்டுவதென்னவென நீங்கள் அறிவீர்கள். அந்நிய நாட்டு ஆதிக்கமின்றி நமது சொந்த ஞானத்துறைகள் எல்லாவற்றையும் நாம் ஆராய்ச்சி செய்தல் வேண்டும். அத் துடன் ஆங்கில பாஷையையும், மேனுட்டுப் பெளதிக சாஸ்திரத் தையும் கற்கவேண்டும். இவையல்லாமல், தொழிற்கல்வியும், தொழில் வளர்ச்சிக்குரிய சகல அறிவும் நமக்குத் தேவை. இதன் மூலம், படித்தவர்கள் உத்தியோகம் தேடி அலைவதற்குப் பதிலாகத் தங்களுக்கு வேண்டிய அளவு சம்பாதித்துக் கொள்ள வும் கஷ்டகாலத்துக்குச் சிறிது பொருள் சேர்த்து வைக்கவும்
?

Page 58
98 தமிழ் மொழி விளக்கம்
சாத்தியமாதல் வேண்டும். சுடர் விட்டெரியும் தீயையொத்த தூய ஒழுக்கமுடைய ஆசிரியனேடு ஒருவன் தன் குழந்தைப் பிராயத்திலிருந்து வசித்தல் வேண்டும். உயரிய கல்விப் பயிற் சிக்கு உயிருள்ள ஓர் உதாரணமாக அவ்வாசிரியன் இருத்தல் வேண்டும். பொய் சொல்லுதல் பாவம் என்று படிப்பதால் மட்டும் பயன் என்ன ? ஒவ்வொரு சிறுவனும் பூரண பிரம்ம சர்யத்தை அநுஷ் டி க்கு மாறு பயிற்சி செய்யப்படவேண்டும். பக்தியும் சிரத்தையும் அப்போதுதான் உண்டாகும். பக்தி சிரத்தையில்லாத ஒருவன் பொய் கூரு திருப்பது எங்ங்ணம் ?
( 'நமது தாய்நாடு ? -- சுவாமி விவேகானந்தச் ) 1. நாம் ஆராய்ச்சி செய்யவேண்டிய முறை எது? 2. அங்கனம் எதை நாம் ஆராயவேண்டும் ?
3. உத்தியோகம் தேடி அலையாது, நாச் சம்பா தி க்க
எதைக் கற்க வேண்டும் ?
4. ஆசிரியனின் சிறந்த இலக்கணம் என்ன ? 5. ' உயிருள்ள ஓர் உதாரணம் ' என்பதை விளக்குக.
6. இத்தகைய ஆசிரியனிடமிருந்து ஒருவன் எங்ங் ன ம்
சிறந்த பயிற்சியைப் பெறலாம் ?
7. கல்வி எப்போது நிறைவை அடைகின்றது ?
8. பூரண பிரம்மசர்யத்தைக் கைக்கொள்வதால் விளையும்
பயன் யாது ?
(5) இந்த வளைகுடாவில் ஒருவகைப் பெரிய மீன்கள் நிறைந்து கிடக்கின்றன. இவை குளிக்கிறவர்களை அடிக்கடி கொன்று தொலைக்கின்றன. . இதற்காகச் சில மந்திரக்காரர்களை இந்த வணிகர்கள் தங்களோடு அழைத்துச் செ ல் கிரு ர் கள். இவர்கள் பார்ப்பனக் குடியைச் சேர்ந்தவர்கள். தங்களுடைய மந்திர வித்தையால் இந்த மீன்களை வசியம் பண்ணித் தங்கள் விருப்பப்படி நடக்கச்செய்து ஒரு கேடும் விளையாதபடி இவர்கள் தடுக்கின்ருர்கள். முத்துக் குளிப்பது பகலில்தான் நடக்கும். ஆகையால், இவர்கள் மாலையில் மந்திர சக்தியைச் செலுத்தாமல் விட்டுவிடுவார்கள். இராக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு முத்துச் சங்குகளைத் திருடவந்து குளிக்கும் வஞ்சகர்கள், மந் திரக் கட்டில்லாத இந்த மீன்கள் நடையாடுவதற்கு 'அஞ்சி

விளக்கப் பயிற்சி 99
அவ்வாறு செய்ய முனையாது விட்டுவிடுவார்கள் என்பது இவர்க ளுடைய எண்ணம். இந்த மந்திரக்காரர்கள் இதைப்போல எல்லா வகையான பறவைகளையும் விலங்குகளையும் வசியம்செய் யும் கலையிலும் , கைதேர்ந்தவர்கள். முத்துக்-குளிப்பது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் ; மே மாதம் நடுவரை நடைபெறும்.
(* பிறந்தது எப்படியோ?* - பேராசிரியர் தெ. பொ. மீளுறட்சிசுந்தரஞர் )
1. வணிகர்களின் தொழிலென்ன ? 2. இவர்களுக்கு நேரும் தீங்கு எது? 3. இதை எப்படித் தடுக்கிருர்கள்?
4. இராக்காலத்தில் முத்துச் சங்குகளை ஒருவரும் திருட
மாட்டார்கள் என்று ஏன் வணிகர்கள் நம்பினர்கள் ?
5. முத்துக் குளிக்கும் காலம் எது? 6. முத்துக் குளித்தல் எங்கே நடைபெற்றது ?
7. மந்திரக்காரர் தங்கள் சக்தியை எதற்குப் பயன்படுத்தி
ஞர்கள்?
(6) இன்றும் பிற மொழிகளைத் தமிழர் போலப் பேசு வோர் உண்டோ ? காலம் சென்ற சீநிவாச சாத்திரியார் பேசிய ஆங்கிலத்தினைக் கண்டு ஆங்கிலேயரும் வியந்தனர். இவ்வாறு பிறர் மொழியைத் தமிழர் கற்றுவந்த வரலாற்றை மணிமேகலை என்ற ப்ாட்டும் பாடுகிறது. ஆதிரை பிச்சையிட்ட காதை இலக்கியச் சுவை நிரம்பியது. தமிழன் கீழ்நிலையில் உள்ள மக்களை உயர்த்திய மரபினை விளக்குவது. சாதுவன் கிழக்கிந்தி யத் தீவுகளில் வழங்கும் மொழிகளை நன்கு அறிந்தவன். அவன் ஏறிச் சென்ற கப்பல் உடைந்தது, அவன் ஒரு தீவின் கரையில் ஒதுக்கப்பெற்றன். மக்களுடம்பினையே விருந்தாக உண்ணும் அத்தீவினர் அவனைக் கண்டதும் நாவில் நீரூற நின்றன ர். ஆனல், அவனே அவர்களுடைய மொழியிற் பேசினன். அவர்க ளுடைய மனம் மாறிவிட்டது : பகைத் தெ ழுந்த வர்.க ள் தொழுது உரையாடினர்கள். சாத்தனர், இவ்வாறு மொழி வழியே எழும் வியத்தகு தொடர்பினை விளக்கிவைக்கின்றர். இந்த நுட்பம் தமிழனுக்கன்ருே தெரியும் ! அவனை அவர்கள் அரசனிடம் கொண்டு செல்கின்றர்கள். கள்ளுப் பானையும்

Page 59
00 தமிழ் மொழி விளக்கம்
புழுத்த புலாலும் சுற்றி இருக்கத் தன் மனையாளோடு கிடந் தான் அவர்கள் தலைவன். இத்தகைய கொடியோன் மனத்தை யும் அன்புருவாகச் செய்தது, அவனுடைய தாய்மொழியைக் கேட்கும் இன்பம்.
C" tipiss at the vig Gaur f' - பேராசிரியர் தெ. பொ. மீகுட்சிசுந்தரஞர் ) 1. சீநிவாச சாத்திரியார் என்ன உண்மையை விளக்கு
கின்ருர் ? 2. இந்த உண்மையைப் பழைய காலத்தில் விளக்கியவர்
ሀ 1በrff ? 3. ஆதிரை பிச்சையிட்ட காதை ஏன் சிறந்தது ? 4. " நாவில் நீரூற " என்ற சொற்ருெடர் என்ன கருத்தை
விளக்குகின்றது ? 5. தீவினர் சாதுவனுடன் நட்புக் கொண்டதற்குக் கார
னம் என்ன ? இதைக் கூறுபவர் யார்? அரசனின் நிலை எங்ங் ன ம் வருணிக்கப்பட்டிருக்கின் றது ? 8. அரசன் எதற்காக மகிழ்ந்தான் ?
(7) ஒரு நாடு வாழவேண்டுமானல், உணவுவளம் வேண் டும், கைத்தொழில் வளம் வேண்டும், ஆட்சியுரிமை வேண்டும். பழங்காலத்தில் ஒவ்வொரு சிறிய ஊரிலும் அந்த ஊரு க்கு வேண்டிய உணவு இருந்தது ; அந்த ஊரு க்கு வேண்டிய பொருள்களைச் செய்யக் கூடிய குடிசைக் கைத்தொழில்கள் இருந்தன ; அந்த ஊரை ஊராரே ஆளக்கூடிய மன்ற ஆட்சி (பஞ்சாயத்து) இருந்தது. இப்படியே பல ஊர்களிலும் அமைந் திருந்த காரணத்தால் நாடு வாழும் முறை எளிதாக இருந்தது. ஒர் ஊர் மற்றேர் ஊரை உணவுக்காகவோ, கைத்தொழிலுக் காகவோ எதிர்பார்த்துக் காத் திருக்க வேண்டிய நிலைமை இல்லை; ஒர் ஊரை மற்றேர் ஊரிலுள்ளவர்கள் உறிஞ்சி ஆளும் தொல்லையும் இல்லை. அதனல், கிராமங்களில் அமைதியான வாழ்க்கை நிலவிவந்தது. ஆனல், புகழுக்கும் பெருமைக்கும் ஆசைப்பட்ட சில ம ன் னர் க ள் மண்ணுசை கொண்டு படை யெடுத்துவந்து அழிக்கும்போது அவர் களு  ைடய படை யெடுப்பை எதிர்த்துப் போர் செய்யும் நிலைமை இருந்த்து. இதுவும் பெரும்பாலும் எல்லைகளில் உள்ள ஊர்களையே கலக்கி
யது ; அரசர்கள் வாழ்ந்த தலைநகரங்களையே கலக்கியது.
(* அறமும் அரசியலும்" - டாக்டர் மு. வரதராசனர்)

விளக்கப் பயிற்சி Η 0 1
ஒரு நாடு உயர்வதற்கு வேண்டியன யாவை ? பழைய கால ஆட்சி முறை எத்தகையது? அக்காலத்தில் பொருள்களை எங்ங்ணம் செய்தனர் ? பழைய கிராம வாழ்க்கையின் சிறப்பு என்ன ? மன்னர்கள் ஏன் படையெடுத்தார்கள் ? படைய்ெடுப்புப் பெரும்பாலும் எங்கே நிகழ்ந்தது ? " ஒர் ஊரை மற்ருேர் ஊரிலுள்ளவர்கள் உறிஞ்சுதல் " என்பதன் கருத்து என்ன ?
(8) சேவை உணர்ச்சி புகுத்தப் பெற்ருற்ருன் வாழ்க்கை தன் உன்னத நோ க்க த்  ைத நிறைவேற்றுகிறது. அன்பும் தியாகமும் உள்ள வாழ்வின் நறுமணமே சேவை. வாழ்க்கையே ஒரு முயற்சியாகலின் வேலை செய்வதே வாழ்க்கையின் உண்மை இயல்பு. தொழில் அன்பினுல் ஊக்கப் பெற்ருல் அத்தொழிலே சேவை எனப் பெயர் பெறும். உண்மையான சேவை தூய அன்பாலும் கருணையாலும் செய்யும் தொழிலாகும். இப்படிச் செய்யுந் தொழில் வாழ்வை விடுதலை அடையச் செய்து அதை நித்திய இன்பத்தால் நிறைக்கும். அன்பே கடவுள், கடவுளே அன்பாகலின், உனது வாழ்வின் செயல்களனைத்தையும் தூய அன்பின் காணிக்கையாக, அன்பு பூர்த்தியடைவதற்காகவே செய்ய வேண்டும். தாய் தன்னலமில்லா அன்பினுல், சேவை யின் ஆனந்தத்துக்காகவே தன் குழந்தையின் சேவையில் ஈடு படுகிருள். இந்தச் சேவை பிரதிபலனைக் கருதாதது. சேவை செய்வதிலேயே திருப்தி ஏற்படுகிறது. அதனல், சேவையிலே வாழ்வின் மேலான இன்பம் நிலவுகிறது. தனது குழந்தைக்கு அன்னையைக் கருத்தோடு பூரண சேவை செய்ய ஏவும் அன் பின் சக்தி, வாழ்க்கையிலே உலக முழுவதற்காகவும் செய்யும் செயல்களிலே புகுந்தால், வாழ்வு உண்மையான விடுதலையும், அஃனவர்க்கும் செய்யும் இன்பகரமான சேவையும் அடங்கியதாக இருக்கும்.
( சுவாமி இராமதாஸ் ) வாழ்க்கையின் நோக்கம் என்ன ? சேவையின் தன்மைகள் எவை ? தொழில் எங்ங்ணம் சேவை ஆகின்றது ? வாழ்க்கையின் இயல்பு என்ன ? கடவுள் எப்படிப்பட்டவர் ? எமது செயல்கள் எங்ங்ணம் அமைய வேண்டும் ? தாய் குழந்தைக்குச் செய்யும் சேவை எத்தகையது? வாழ்க்கையில் உண்மையான விடுதலை எப்போது ஏற் படுகின்றது ?

Page 60
I O2 தமிழ் மொழி விளக்கம்
(9) விஞ்ஞான வளர்ச்சியால் யந்திரங்கள் பெருகியவுடன் விரைவான மாறுதல் ஏற்பட்டு வருவதாயிற்று. பெரிய பெரிய கைத்தொழில் நிலையங்களும், போக்கு வர வுக் கருவிகளும், வியாபார அமைப்புக்களும் தனித்தனியே சேர்த்து வைக்கும் ஆற்றலை மிகுதிப்படுத்திவிட்டன. அதற்கு அடுத்தாற்போல், போர் முறையிலும் சிற்சிலரையோ சிறு கூட்டத்  ைத யோ அழிக்கும் கருவிகள் இருந்த இடம் போய், கோடிக்கணக்கான மக்களையும் ஊர் ஊராகப் பெரிய பெரிய நிலப் ப்குதியையும் சில நொடிகளில் அழிக்க வல்ல அணுக் குண்டுகளும் பிற கருவி களும் வளர்ந்துவிட்டன. சேர்த்துவைக்கும் ஆற்றல் மிகுந்த காரணத்தால், வறுமைத் தொல்லை முன்னிலும் பன்மடங்கு தெளிவாக விளங்கிவிட்டது. அழிக்கும் ஆற் ற ல் மிகுந்த காரணத்தால், தனித்தனியாக ஒருசிலர் அறநெறியில் வாழ்வ தால் பயனில்லை என்பதும் விளங்கிவிட்டது. விஞ்ஞான வளர்ச் சியும் யந்திரப் பெருக்கமும் இன்னெரு பெரிய மாறுதலைச் செய் திருப்பதை மறக்கமுடியாது. ஒவ்வொரு நாட்டிலும் சிற்சிலர் தாம் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லோரும் உழைக்கப் பிறந்தவர்கள் என்று எண்ணி வந்தார்கள், எண்ணி வருகின்ருர்கள். அவர்கள் எண்ணத்தில் இடி விழுந்துவிட்டது. உழைத்து உழைத்து வியர்வை சிந்தும் தொழிலாளிகள் தலை நிமிர்ந்து ' நாங்களும் ஆளப் பிறந்தவர்களே ; உண்மையாகப் பார்த்தால், உழைப்பு எங்க ளு  ைட யது, ப யனும் எங்க ளுடையதே ஆகையால், நாங்களே ஆளப் பிறந்தவர்கள் ' என்று வாய் திறந்து கூறத் தொடங்கினர்கள். சில நாடுகளில் தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே அமைச் சர்களாகி ஆட்சியும் புரிகின்றர்கள்.
(* அறமும் அரசியலும் " - டாக்டர் மு. வரதராசனுச் ) விஞ்ஞான மாற்றத்தால் ஏற்பட்ட விளைவு என்ன ? பழைய போர்க் கருவிகளின் இயல்பு என்ன ? அணுக்குண்டுகள் எத்தகையன ? வறுமை வளர்வதின் காரணம் என்ன ? நாட்டிலுள்ள இரு பிரிவினர்கள் யாவர் ? உழைப்பின் மிகுதியைக் குறிக்கும் சொற்ருெடர் எது?
தாங்கள் " ஆளப் பிறந்தவர்கள் ' என்று தொழி லாளர்கள் ஏன் கூறுகின்றர்கள் ?
8. தொழிலாளிகளின் உயர்வை எது காட்டுகின்றது ?

விளக்கப் பயிற்சி 1 0 Ꮽ
(10) முறையாகக் கற்றலும் செய்யாது, கற்று வல்லாரை அடைந்து வழிபாடியற்றிப் பெறுதற்குரிய கேள்விச் செல்வமும் எய்தப் பெருது தமிழ்த்தொண்டு செய்ய முற்படுதல் பயனில் செயலாகும். முன்னேர் மொழி பொருளையும் மரபுபட்ட இலக்கண முடிபுகளையும் ஆராய்ந்தறிந்துகொள்ளாது நெறி யறியா மாக்களை மயக்கி அவர் தம்மை நெறியல்லா நெறியிற் புகுத்தி ஆரவாரிப்போர் செயலானது, குருடனைக் குருடன் வழி நடத்துவது போலாகும். அவைக்களத்திற் செல்லுதற்குரிய வரம்பினமைந்த ஆங்கில மொழியினை வேந்தன் மொழி " (King’s English) என அம்மொழிப் புலவர் விதந்து கூறுவர். அப்பரிசே, யாமும் அவைக்களத்திற் செல்லுதற்குரிய வரம்பி னமைந்த தமிழினைப் "பாண்டியன் தமிழ் ' என்போம். * எது தமிழ் ? " என வினவுவார்க்குப் " பாண்டியன் தமிழே தமிழ் ” என்பது விடையாகும். அதுவே நிலைபேறுடையது ; அறிஞர் போற்றற்குரியது. பொருள் வருவாய் ஒன்றினையே கருதி மனம் டோனவாறு மரபு தவறி எழுதும் மொழிவழக்கானது மழைக் காலத்திலே கோன்றி அக் கால ங் கழிய மறைந்துபோகின்ற சிறு பூடுகளைப் போல நிலைபேறில்லாதது. நிலைபேறுடைய a 657 GOLD ' (Truth), glp (5 (Beauty), * )2( .9r L60 מ( Lמ * (Goodness) என்னும் இவைதம்மையே அறிஞரது உள்ள ம் அவாவி நிற்கும். முத்தமிழுள் இயற்றமிழானது உண்மையினை யும், இசைத் தமிழானது அழகினையும், நாடகத் தமிழானது செம்மையினையும் சிறப்புற வெளிப்படுத்திக் காட்டுவன. Y ( aravíruá7 sídly sv vavr šf5f J
l
தமிழ்த் தொண்டு செய்ய ஏற்றவர் யார் ? ஆராய்ந்து அறியவேண்டியன யாவை? * பாண்டியன் தமிழ் எத்தகையது ? மரபு தவறி எழுதும் மொழிவழக்கு எத்தகையது ? இதன் நிலை எது போன்றது ?
நிலைத்த தன்மைகள் எவை ?
7. ' குருடனைக் குருடன் வழிநடத்துவது போல " என்ற
உவமையை விளக்குக.

Page 61
04 தமிழ் மொழி விளக்கம்
அதிகாரம் XVI
st-gh algoygidio (Letter-Writing)
உரைநடை அருகியிருந்த பழந் தமிழ் நாட்டிலே, கற்றேர் எழுதிய கடிதங்களெல்லாம் கவி மயமாகவே காணப்பட்டன. நாகரிகம் முற்ற முற்ற, கல்வி பொது மக்களிடமும் பரவியது. எல்லோரும் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டுமென்ற வேணவா வேரூன்றியது. " எழுதப் படிக்க என்ருல் கடிதம் எழுதப் படிக்க என்றே எவரும் பொதுவாகக் கருது வ ர். ஆகவே, மிகக் குறைவாக ஒருவர் கற்றவரென்ருல் அவருக்குக் கடிதமேனும் எழுதத் தெரியவேண்டு மென்பது இன்றைய சமூ கத்தின் கருத்தாகும். இதனல், கடிதம் வரைதல் உலகத்தின் பொதுக் கலையாய் விளங்குகின்றதென்றல் அது மிகையாகாது.
1 கடித உறுப்புக்கள் :
ஒருவரை ஒருவர் நேரே சந்தித்துப் பேசித் தம் கருத்துச் களை வெளியிட முடியாத காலத்தில், இவற்றை வெளியிடுவ தற்குக் கடிதம் ஒரு கருவியாக அமையும். எழுதும் பொருள் பற்றியும், முறை பற்றியும், கடிதங்கள் பல வகை க ளாக (நண்புக் கடிதம், வியாபாரக் கடிதம், பொதுநலக் கடிதம் முதலியன) அமையினும், இவைக்கெல்லாம் பொதுவான வடி வம் (Form) ஒன்று உண்டு. இது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப் படும். அவையாவன :
1. தலைப்பு (The Heading) - இதில் எழுதுவோர் விலாச
மும், எழுதிய திகதியும் அடங்கும்.
2. (up fib Sinibgoy (Greeting).
3. SD air (GPGMsip győi) avg GoIF i S? (The Message).
4. and, Gunt Lil Jub (The Signature).
(1) தலைப்பு: இது கடிதம் எழு தி ய வ ர் எங் கி ரு ந் து எழுதினர் என்பதையும், எப்பொழுது எழுதினர் என்பதையும் தெரிவிக்கும். இதில், எழுதியவர் விலாசமும் கடிதம் எழுதப் பட்ட திகதியும் அடங்கும். வலதுகை மேல்மூலையில் விலாசம் எழுதப்படல் வேண்டும். விலாசத்தின் ஒவ்வொரு வரியும் ஒன்றின் கீழ் ஒன்ரு ய், வலது புறமாக எழுதப்படல் வேண்டும். Ф-- Lib. 12, 2-ம் குறுக்குத் தெரு,
யாழ்ப்பாணம். ه 3 5 9 1 س-3 - 1

கடிதம் வரைதல் 05
(2) முற்கூற்று : இது, எழுதுபவர் எழுதப்பட்டவரைத் -தொடர்புகாட்டி விளிப்பதாக (Salute) அமையும்.
உ-ம். குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு எழுதும் போது அன்பார்ந்த அம்மா, அன்பார்ந்த அப்பா, அன்புக்குரிய மைத்துனன் அறிவது என்று தொடர்புக்கு ஏற்றவாறு எழுதவேண்டும். தொடர்பல்லாதாருக்கு எழுதும் போது, ஐயா, ஐயன்மீர் என்று எழுதவேண்டும். இந்தப் பகுதியின் விவரங்கள் 'கடிதவகைகள் என்ற தலைப்பின் கீழ் விளக்கப்பட்டிருப்பதைக் காண்க.
(3) உள்ளுறை அல்லது செய்தி இதுவே கடிதத்தின் முக்கிய பகுதியாகும். எழுதுபவர் தெரிவிக்கவேண்டிய கருத் துக்களோ அல்லது செய்தியோ இதில் அடங்கும். எழுதும் முறையும் நடையும் கடித வகையைப் பொறுத்தது. தொடர் புள்ளவர்களுக்கு எழுதும் கடிதநடை (Style) வியாபாரக் கடித நடையிலும் வேறுபட்டது. (இந்த வேறுபாடுகளைக் கீழே காண்க). எனினும், கடிதங்களில் பொதுவாக அமையவேண் டிய சில சிறப்பியல்புகளை அறியவேண்டும்.
ஒருவர் தெரிவிக்க வேண்டிய செய்தியைத் தெளிவாக எழுத முயலல்வேண்டும். கடிதம் எழுதுவது ஒருவரின் கல்வித் திறனைக் காட்டுவதற்கல்ல. ஆகவே, எளிமை (Simplicity), தெளிவு (Clarity), சுருக்கம் (Brevity) முதலிய இயல்புகள் முக்கியமாகக் கடிதத்தில் அமைய வேண்டும். பொருளுக்கு ஏற்ப, பந்தி பந்தியாக (Paragraph by paragraph) உள்ளுறை வகுக்கப்பட்டு எழுதப்படல் வேண்டும். (பந்தியின் இயல்பை * கட்டுரை வரைதல் " என்ற அதிகாரத்தின் கீழ்க் காண்க).
(4) கையொப்பம் : இது கடிதத்தின் கடைப்பகுதியாகும். கடிதத்தைச் சடுதியாக முடிக்காமல், எழுதிய வர் தனது தொடர்பைக் காட்டி, கையெழுத்திட்டுக் கடிதத்தை முடிக்க வேண்டும். உதாரணமாக, நண்பனுக்கு எழுதிய ஒரு வர் "" தங்கள் அன்பான நண்பன் ' என்று தொடர்பு காட்டித் தனது கையெழுத்தை இடவேண்டும். இது, கடிதத்துக்குக் கடிதம், எழுதுபவர் தொடர்பைப் பொறுத்து மாறுபடும். விவரங்களைக் கடிதவகைகள் என்ற பகுதியில் காண்க. கடித முடிவில், வலதுகைப்பக்கத்தில் இது எழுதப்படும்.

Page 62
06 தமிழ் மொழி விளக்கம்
உ-ம். மகன் தகப்பனுக்கு எழுதுவது:
தங்கள் அன்பான மகன், ச. திருவருள்.
கடிதம் எழுதுவதுடன் தொடர்பான இன்னும் ஒரு பகுதி யைக் கவனிக்க வேண்டும். அதாவது, கடித உ  ைற யி ல் (Envelope) விலாசம் எழுதுவதாம். கடித உறையின் வலதுகை மூலையில் தபால் முத்திரை (Stamp) ஒட்டப்படும். இதன்கீழ் வரிகள் ஒன்றின்கீழ் ஒன்ரு ய் எழுதப்படல் வேண்டும். வரிகள் கீழே இறங்க இறங்க, அவை சிறிது வலதுபுறம் தள்ளித் தள்ளி எழுதப்படல் வேண்டும்.
முதல் வரியில் கடிதத்தைப் பெறுவோர் முழுப்பெயரும் அவர் பட்டங்களும் (ஏதேனும் இருந்தால்) எழுதப்படல் வேண் டும். மரியாதைக்காக, பெயரின் முன்பு திரு. (Mr.), திருமதி (Mrs), செல்வன் (Mast), செல்வி (Miss) என்பதில் ஏற்றது ஒன்றும், பெயரின் பின்னர் " அவர்கள் " என்பதும் சேர்த்து எழுதப்படல் வேண்டும். இதற்குக் கீழே அவரின் தொழில் (ஏதேனும் இருந்தால்) எழுதப்படல் வேண்டும். இதற்குக் கீழே அவர் வசிக்கும் வீட்டின் இலக்கம், தெருப் பெயர் அல்லது வட்டாரம் ஏதேனும் குறிக்கப்படல் வேண்டும். பின்னர், தபால் நிலையத்தின் (Post-office) பெயரும், குறிச்சி, மாகாணம் முதலிய விவரமும் தேவையானல் எழுதப்படல் வேண்டும்.
தபால் முத் திரை
திரு. ச. பூலோகநாதன், M. A., அவர்கள்,
ஆசிரியர், `
20, செட்டித் தெரு, கொழும்பு.

கடிதம் வரைதல் 107
I கடிதவகைகள் :
கடிதங்கள் பல வகைப்பட்டாலும், அவை (1) சொந்தக் &5 g5 is air (Friendly Letters), (2) சமூகத் தொடர்புள்ள கடிதங்கள் (Social Letters) என்ற இரு பெரும் பிரிவுகளுள் அடங்கும்.
(1) சொந்தக் கடிதங்கள் : உறவினர்க்கு எழுதும் கடிதங் கள், நண்பருக்கு எழுதும் கடிதங்கள், அழைப்புக் கடிதங்கள் ஆதியன இவற்றில் அடங்கும். இவற்றில் அன்பும் நேசமும் காணப்படும். இவ்ை பேச்சு நடையிலேயே எழுதப்பட ல் வேண்டும். நேரிலே கண்டு அளவளாவுவது போலக் கடிதம் அமைதல் வேண்டும்.
மாதிரிச் சொந்தக் கடிதங்கள் (தந்தை மகனுக்கு எழுதுவது )
27, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு 11
3-3-53.
அன்பு நிறைந்த மகன் அறிவது,
இறைவன் அருளால் நான் நல்ல சுகமே இருக்கின்றேன். உனது சுகத்தையும் உனது தாயார், தம்பி சுகத்தையும் அறி விக்கவும். ' அநேக நாட்களாக நீ கடிதம் எழுதவில்லை. கார ணத்தை அறிய விரும்புகின்றேன். ۔۔۔۔۔
உனது படிப்பு நிலை என்ன ? நீ பாடங்களில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று உனது ஆசிரியர் எனக்கு எழுதியிருக் கிருர். எனக்கு இதையிட்டுக் கவலை. நீ இப்பொழுது கவனம் எடுத்துப் படிக்காவிட்டால், உனது அண்ணனைப்போல நீயும் பின்னுக்கு வருந்தவேண்டி வரும். ' முயற்சி திருவினை ஆக் கும் " என்ற உண்மையை மறந்துவிடல் ஆகாது. நான் உனக்கு உயர்தரக் கல்வி கற்பிக்க எண்ணி இருப்பதால், இப்போதே நல்ல அடிப்படையான கல்வியை நீ கற்கவேண்டும். சோம்பலை விட்டு, ஊக்கமாகக் கற்கவேண்டும்.
உனக்கு விடுமுறை எப்போது தொடங்குகின்றது ? விடு முறைக்குள் நீ இவ்விடம் சில நாட்கள் தங்கலாம்.
உடனே மறுமொழி எழுது.
அன்புள்ள தந்தை, கு. சீதத்தன்.

Page 63
-A U či தமிழ் மொழி விளக்கம்
அழைப்புக் கடிதங்கள் (Invitations)
சொந்தக் கடிதங்களில் மேலே எழுதப்படும் விலாசமும் திகதியும் அழைப்புக் கடிதங்களின் கீழே எழுதப்படல் வேண் டும். இதற்குப் பதிலாக அழைக்கப்படுபவரின் பெயர் மேலே எழுதப்படல் வேண்டும்.
திரு. சி. கலைஞானி அவர்கட்கு,
ஐயன்மீர்,
நிகழும் நந்தன ஆண்டு மாசி மீ" உக-ம் நாள் (4-3-53) புதன்கிழமை பி. ப. 3 மணிக்கு, புதிதாக அமைக்கப்பட்ட எனது வீட்டில் குடிபுகுதல் விழா நடைபெறும். அவ்வமயம் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து விருந்தில் பங்குபற்றி விழாவைச் சிறப்பித்துச் செல்லுமாறு பெரிதும் வேண் டு கின்றேன்.
வட்டுக்கோட்டை, இங்ங்னம்,
Il-3-'53. ச. சத்தியசீலன்.
திருமண அழைப்பு
திரு. ச. நக்கீரன் அவர்கட்கு
மட்டக்களப்பு, வாழைச்சேனை திரு. சுப்பையா நல்லையா அவர்களின் மகன்
திருவளர் செல்வன் நல்லையா சுந்தரம் அவர்களுக்கும் ( சுகாதார பரிசோதகர், இரத்தினபுரி ) காரைநகர் திரு. முத்தையா முருகேசு அவர்களின் மகள் திருவளர் செல்வி முருகேசு சுந்தரி அவர்களுக்கும்
நிகழும் நந்தன ஆண்டு பங்குனி மீ" க-ம் நாள் (14-3-53) சனிக்கிழமை காலை 9 மணிக்கும் 10 மணிக்குமிடையில் வரும் சுபமுகூர்த்தத்தில், மணமகள் இல்லத்தில் திருமணம் நடை பெற இருப்பதால், தாங்கள் தங்கள் குடும்பத்துடன் சமூகந் தந்து மணமக்களை ஆசீர்வதித்தேகுமாறு பெற்ருர் வேண்டுகின் றனா.
12-3-'53.

கடிதம் வரைதல் 09
(2) சமூகத் தொடர்புள்ள கடிதங்கள் : இவற்றை எழுதும் முறை பற்றி, வியாபாரக் கடிதங்கள் (Commercial Letters), விண்ணப்பக் கடிதங்கள் (Letters of Application), உத்தியோக தோரணைக் கடிதங்கள் (Official Letters), பத்திரிகைக்கு எழுதப் u(5) ib. 3. ц.g. i 5 sir (Letters to News-papers) стату (дштigyourтд. Li பிரிக்கலாம். இந்தக் கடிதங்களில் கடிதத்தைப் பெறுவோரின் முழு விலாசமும் கடித உள்ளுறையின்மேல் இடதுபக்கமாக எழுதப்படல் வேண்டும்.
மாதிரி வியாபாரக் கடிதம்
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்.
3-3-53.
அதிபர்,
கலைமகள் புத்தகசாலை, 340, காலி ருேட்டு, வெள்ளவத்தை
, gun”.
. கீழ்க்காணும் புத்தகங்கள் தங்களிடம் கிடைக்குமோ என் பதையும், அவற்றின் தனித்தனி விலையையும் தயை செய்து உடனே தெரிவிக்கவும். தங்கள் மறுமொழி கிடைத்ததும், தேவையான விவரங்கள் எழுதுவேன்.
(1) சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லாருரை - ந. மு.
வேங்கடசாமி நாட்டார் விளக்கவுரையுடன்.
(2) தொல்காப்பியம் பொருள் அதிகாரம் - கணேசையர்
பதிப்பு.
(3) திருக்குறள் - பரிமேலழகர் உரை - கிருஷ்ணமாச்சாரி
யார் விளக்கவுரையுடன்.
இங்ஙனம்,
சி. குணசீலன்,

Page 64
0 தமிழ் மொழி விளக்கம்
மாதிரி விண்ணப்பக் கடிதம் : ( ' ஒரு விகித ர் (Clerk) தேவை " என்ற பத்திரிகை விளம்பரத்தைக் கண்டு ஒருவர் விண்ணப்பம் செய்வது).
கல்முனை. அதிபர், 14-3-'53.
பருத்தித் தொழிற்சாலை,
திருக்கோணமலை.
ஐயா,
தங்கள் தொழிற்சாலையில் ஒரு லிகிதர் தேவையாக இருப் பதை 1-3-53-ல் வெளியான " இலங்கா தேவி ’ப் பத்திரிகை மூலம் அறிந்தேன்.
நான் இலங்கைக் கனிஷ்ட தராதரப் பத்திரத் தேர்தலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தே நி னே ன். பின் னர் * ரைப் அடித்தல், சுருக்கெழுத்து (Short-hand) ஆகிய பயிற்சி களில் ஈடுபட்டேன், இவற்றில் போதிய திறமையும் பெற் றிருக்கிறேன். இப்போது எனக்கு வயது இருபது.
எனது குணதிசயங்கள் திறமை முதலியவற்றின் நற்சாட் Gaj 35T GřT 35 Git (Character Certificates) ggt GổoT G0) — g)šgj Gör அனுப்புகின்றேன்.
லிகிதர் பதவியைத் தாங்கள் எனக்கு அளித்தால், எனது கடமையை இயன்றவரையில் நேர்மையாகவும் திறமையாகவும் ஆற்றுவேன் என்பதை உறுதிப்பண்ணுகிறேன்.
இங்ங்ணம், தங்கள் உண்மையுள்ள,
அ. விவேகி.
மாதிரி உத்தியோக தோரணைக்கடிதம் : ( வித் தியா தி பதி காரியாலயத்தில் வேலை செய்யும் ஒருவர் தமக்கு ஒய்வு தரும் படி விண்ணப்பித்தல்).
கண்டி, வித்தியாதிபதி அவர்கள், I 5ー3ー”53。
கொழும்பு.
அன்பார்ந்த ஐயா,
நேற்றுத் தொடக்கம் எனக்கு உடல் நலம் குறைவாய் இருக்கின்றது. இருமல் அதிகம். வைத்தியரிடம் காண்பித்த போது அவர் ஒரு வாரம் ஓய்வு அவசியம் என்று வற்புறுத்தி னர். ஆகவே, எனது கடமையை ஆற்றமுடியாமல் வருந்து கின்றேன்.

கடிதம் வரைதல் , ,
எனக்கு ஒரு வாரம் ஒய்வுதரும்படி தங்களைப் பணிவாய்
வேண்டுகின்றேன். வைத்தியரின் நோய்ச்சான்றுப் பத்திரம் (Medical Certificate) இத்துடன் அணைக்கப்பட்டிருக்கின்றது.
· இங்ங்னம்,
தங்கள் பணிவுள்ள,
, கோபாலன்.
பத்திரிகைக்கு எழுதும் கடிதம் : பத்திரிகைக்குக் கடிதம் எழுதுபவர் விரும்பின் தம் பெயரை அதில் குறிப்பிடாமல் விடலாம். இதற்குப் பதிலாக நன்மை விரும்பி, ' ' சமூக ஊழியன் " போன்ற புனைபெயரை எழுதலாம். ஆனல், இதைப் பிரசுரிக்கும்படி பத்திராதிபருக்கு எழுதும் கடிதத்தில், எழுது பவர் பெயரும் விலாசமும் எழுதப்படல் வேண்டும். இவற்றை எந்தப் பத்திராதிபரும் எவருக்கும் வெளியிட மாட்டார்.
( மாதிரிக் கடிதம் ) பத்திராதிபர்,
* தமிழ்ச் சுடர்
மன்னர்.
ஐயா,
தங்கள் மாண்பு மிக்க பத்திரிகையில் இந்தக் கடிதத்தை வெளியிடும்படி வேண்டுகின்றேன்.
நம் நாட்டில் சிங்களமும் தமிழும் அரசியல் மொழியாக அமையும் என்பது தற்போதுள்ள தேசியத் த லைவர் களி ன் கருத்தாகும். இதை நடைமுறையில் கொண்டு வருவதானல், இலங்கையில் வாழ்கின்றவர்கள் இரண்டு மொழிகளையும் கற்பது அவசியம்.
இந்த இரண்டு மொழிகளையும் எல்லோரும் அறிய வேண்டு மெனின், இது புதிய கல்வித் திட்டத்தில் வகுக்கப்பட்டிருத்தல் வேண்டும். தமிழை ஒவ்வொரு தமிழனும், சிங்களத்தை ஒவ் வொரு சிங்களவனும் கற்பது எங்ங்னம் கட்டாயமோ, அதே போலச் சிங்களத்தை ஒவ்வொரு தமிழனும், தமிழை ஒவ்வொரு சிங்களவனும் கற்றல் வேண்டும். இல்லாவிடின், தமிழும் சிங்களமும் மாகாண மொழிகள் (Provincial Languages) ஆகுமே அன்றி, தேசிய மொழிகள் (National Languages) ஆகு த ல் இயலாது.
சிங்களவரும் தமிழரும் ஒன்றுபடுவதற்கு ஒருவர் மற்றெரு வர் மொழியைக் கற்பது சிறந்த கருவியாகும். இதை நடை

Page 65
及夏名 தமிழ் மொழி விளக்கம்
முறையிற் கொண்டு வருவதற்கு அரசினரும் தேசியத் தலைவர் களும் இனிமேலாவது முயற்சி செய்வார்கள் என்பது எனது நம்பிக்கை.
மன்னர், இலங்கை மகன். I 5-3ー”53.
பயிற்சி கீழ்க்காணும் முறையில் கடிதங்கள் எழுதுக: 1. மாணவர் விடுதியில் இருக்கும் ஒரு மாணவன் தனது தந்தையைப் பணம் அனுப்பும்படி கார ண ம் காட்டி எழுதுவதாக ஒரு கடிதம் வரைக. மேலுள்ள கடிதத்திற்கு மறுமொழி எழுதுக. கல்லூரிக்குச் செல்லாத ஒரு மாணவன் தன்னை மன்னிக் கும்படி வகுப்பு ஆசிரியருக்கு எழுதுவதாக ஒரு கடிதம் வரைக. 4. பிற நாட்டிலுள்ள நண்பன் ஒருவனுக்குத் தனது நாட் டைப்பற்றி வருணனை செய்து எழுதுவதாக ஒரு கடிதம் வரைக. 5. ஒருவர் வீட்டில் நடைபெறும் தேநீர் விருந்துக்குத் தனது ஊரிலுள்ள ஒரு பிரமுகரை அழைப்பதாக ஒரு அழைப் பிதழ் எழுதுக. 6. மேற்காட்டிய அழைப்பிதழுக்கு மறுமொழி எழுதுக.
ஒருவர் தமது கிராமத்தைப்பற்றிய சீர்திருத்தங்களையிட் டுத் தமது கிராமச் சங்கத் தலைவருக்கு எழுதுவதாக ஒரு முறையீட்டுக் கடிதம் (Petition) எழுதுக. 8. பத்திரிகையில் வெளியிடப்பட்ட உத்தி யோகத்திற்கு
மனுச் செய்வதாக ஒரு விண்ணப்பம் எழுதுக. . மதுவிலக்கையிட்டுப் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதுக. 10. ஒருவர் தமது மகனின் திருமணத்திற்கு நண்புர்களையும் சுற்றத்தவர்களையும் வரவழைப்பதாக ஒரு திருமண அழைப்பிதழ் எழுதுக. 11. ஒருவர் தமக்குத் தேவையான தேர்தல் விண்ணப்பத் தாளை அனுப்பும்படி வித்தியாதிபதிக்கு எழுதுவதாக ஒரு கடிதம் வரைக. 12. பாடசாலையில் நடைபெற்ற ஒரு விழாவை வருணித்து
நண்பனுக்கு ஒரு கடிதம் எழுதுக.

கட்டுரை வரைதல். 8
அதிகாரம் XVII
கட்டுரை aloo Ty,6io (Essay-Writing)
கட்டுரை என்ருல் என்ன ?
இன்றைய பொதுத் தேர்வுகளில் கட்டுரை வரைதல் முதன் மையும் முக்கியமும் பெற்றிருக்கின்றது. ஆகவே, இதன் இயல்புகளை மாணவரும் பிறரும் அறிவது சாலவும் இன்றியமை யாததாகும்.
* கட்டுரை " என்ற சொல் கட்டு உரை " என்ற பகுதிக ளாகப் பிரிக்கப்பட்டு, முறையே கட்டப்பட்ட உரை அல்லது ஒருவரின் கருத்துக்களைத் தொகுத்துச் சொல்லுதல் என்று பொருள்படும். நல்லாசிரியர் இலக்கணம் கூறவந்த பவணந்தி முனிவர் ஒர் ஆசிரியருக்குக் ** கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை "" அமைய வேண்டுமென்று குறிப்பிடுகின்ருர், ஒருவர் நூல்களைத் தெளிவாகக் கற்ற அறிவுட ன் தன் கரு த் தை மாணவர் எளிதில் உணரும்படி தொடுத்துச் சொல்லுகின்ற சொல்வன்மையும் இருக்கவேண்டும் என்பதே கருத்தா கும். எனவே, ஒருவர் தம் கருத்துக்களைத் தெளிவாக நிரைப்படுத்தி, உருப்படுத்தித் தொடர்பாகப் பே சுவதோ அல்லது எழுது வதோ " கட்டுரை " என்று கருதப்படும். ஈங்கு எ டுத் துக் கொண்ட பொருள் " கட்டுரை வரைதல் ஆகையால், எழுதப் படும் கட்டுரையையிட்டு ஆராய்வாம். .
கட்டுரை வரைதல் பண்டைக் காலந் தொட்டே தமிழ் நாட்டில் நிலவி வருகின்றது. ந ச் சினர் க் கினியர், இளம் பூரணர் போன்ற உரையாசிரியர்களெல்லாம் க வின் பெறு * கட்டுரை நயம்பட வரைந்தோராவர். ஆயின், இவர்கள் எழு திய கட்டுரைக்கும் தேர்வுகளில் வரையப்படும் கட்டுரைக்கும் வேறுபாடு உண்டு. பழைய கட்டுரைகளெல்லாம் ஒரு நூலுக் குப் பொருள் எழுதுகையில் கட்டுரையின் இலக்கணம் வழு வாது எழுதப்பட்டன. ஆனல், இன்றைய கட்டுரை பொது வான ஒரு தலைப்பை (A General Topic) எடுத்துக்கொண்டு அதன் கீழ் அமையக்கூடிய ஒருவருடைய தனிப்பட்ட கருத்துக் களையெல்லாம் முறையாகக் கூறப்படுவதாகும். இந்த முறை பிற்காலத்திலேயே தமிழ் நாட்டுள் புகுந்தது. பதினரும் நூற் முண்டின் பிற்பகுதியில் மைக்கேல் டீ மொன்ரேன் (Michael de Montaigne) என்ற பிரஞ்சு அறிஞனல் தொடக்கப்பட்ட இந்தப் புதிய கட்டுரை எழுதும் முறை, இங்கிலாந்து தேசத்தில் பரவி,
8

Page 66
4 தமிழ் மொழி விளக்கம்
பின்பு ஆங்கிலக் கல்வியை ஆதரித்த தமிழ்நாட்டிலும் கையாளப் பட்டது. இன்று இது இலக்கியமாகக் கருதப்படுகின்றது. கட்டுரையின் வகைகள் :
கட்டுரைகளை வரையறை செய்து வகை வகையாகப் பிரிப் பது வலிதே. உதாரணமாக, ஒரு விவரிக்கும் கட்டுரையில் அதிக வருணனை வரக்கூடும். எனினும், எடுத்துக்கொண்ட பொருள்பற்றிக் கட்டுரைகளைப் பின்வருமாறு பிரிக்கலாம்.
. விருத்தாந்தக் கட்டுரை (Narrative Essay). . Guo 6007&ord, 5 Gaou (Descriptive Essay). gig, 2.0T di 5 'G) 60J (Reflective Essay). 6967555 5l Qgor (Expository Essay).
«5 ற்பனைக் 5 L. Gao) iT (Imaginative Essay)
(1) விருத்தாந்தக் கட்டுரை நடந்த ஒன்  ைற ப் பற்றி
எழுதுவதே கட்டுரைகளுள் மிகச் சுலபமானது. ஒரு நிகழ்ச் சியையிட்டு அறிந்ததை எழுதுவது விருத்தாந்தக் கட்டுரை யாகும். இதற்கு எந்த விதியையும் பின்பற்ற வேண்டியதில்லை. நிகழ்ச்சிகளை அப்படியே நடந்த ஒழுங்கின்படி கூறவேண்டியது தான். இடையிடையே வருணனையைப் புகுத்தல் வேண்டும். இன்பம், துன்பம், பரபரப்பு முதலிய உணர்ச்சிகளை ஏற்ற இடத்திலே எழுப்பலாம். பின்வருவன விருத்தாந்தக் கட்டுரை யுள் அடங்கும்.
(அ) வாழ்க்கை வரலாறுகள் (Biography). உ-ம். காந்தி அடி
கள், ஆறுமுக நாவலர். (ஆ) ஒரு நிகழ்ச்சி. உ-ம். கல்லூரிப் பரிசளிப்பு விழா, ஒரு
தீ விபத்து.
(இ) பிரயாணம், உ-ம். புகைவண்டிப் பிரயாணம், கப்பற்
பிரயாணம்.
(ஈ) கதை (சரித்திர சம்பந்தமானதோ, அல்லது நிகழாத
ஒன்ருே). உ-ம். ஏலேலன், அசோகன்.
(2) வருணனைக் கட்டுரை : ஒருவர் கண்டோ அல்லது கேட்டோ அறிந்த பொருளை அல்லது இடத்தை வருணித்தல் வருணனைக் கட்டுரையாகும். படிப்பவர் ஒரு பொருளையோ

கட்டுரை வரைதல்
அல்லது இடத்தையோ நேரில் காணில் எத்தகைய உணர்ச்சி களைப் பெறுவாரோ அத்தகைய உணர்ச்சிகளை இயன்றவரையில் ஊட்டும் வகையில் கட்டுரை எழுதப்படல் வேண்டும். ஏற்ற சொற்களைப் பெய்து வருணனையை உயிர் ச் சித் திர ம் ஆக்க முயலல் வேண்டும்.
உ-ம். கடற்கரைக் காட்சி, ஆகாய விமானம்.
(3) சிந்தனைக் கட்டுரை : பண்பு, நீதிநெறி, அரசியல், சமூக இயக்கங்கள், தத்துவஞானம், சமயம் போன்ற பொருள் பற்றிச் சிந்தனைக்குரிய தலைப்புக்கொண்ட கட்டுரைகள் இந்த வகையில் அடங்கும். கட்டுரை வகைகளுள், எழுதுவதற்கு இதுவே மிகவும் கடினமானது. ஏனெனில், இத்தகைய கட் டுரைகள் எழுதுவதற்கு, பொது அறிவு, மேற்கோள்கள் காட்டிக் கருத்துக்களை வலியுறுத்தும் திறன், எடுத்துக்கொண்டபொருளை அலசி ஆராயும் ஆற்றல், விவாதம் செய்யும் சதுர ப் பாடு முதலியவை இன்றியமையாதன. சரித்திரம், விஞ்ஞானம், இலக்கியம் முதலிய கல்வித் துறைகளைக் கொண்டு ஆதாரங் காட்டித் தன் சிந்தனைத் திறனுல் எடுத்துக்கொண்ட பொருளைக் காரணங் காட்டி விளக்கவேண்டும். சில வேளைகளில் பொருள் வாதத்துக்குரியதாயும் (Controversial) அ  ைம யும். அப்படி யானுல் கட்டுரை எழுதுவோர் குணம் நாடிக் குற்றமும் நாடித் தமது முடிபையும் வெளியிடவேண்டும். ஆகவே, இத்தகைய கட்டுரை எழுதுவோர் முன்னரே தகுந்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
உ-ம். வறுமை, சமயக் கல்வி, இலங்கை க் குக் கூட்டு அரசியல் ஏற்றதா ?
(4) விளக்கக் கட்டுரை : ஏதேனும் ஒரு புதிய பொருளைப் பற்றியோ அல்லது விளக்க மில்லாத பொருளைப்பற்றியோ விளக்கும் கட்டுரைகள் இந்த வகையில் அடங்கும். விஞ்ஞானம், இலக்கியம், பலவகை இயக்கங்கள், தொழில்கள் முதலிய தொடர்புபற்றிக் கட்டுரையின் தலைப்பு அமையலாம்.
உ-ம். வானெலி, திருக்குறளின் பெருமை, இலங்கைக் கைத் தொழில்கள்.
(5) கற்பனைக் கட்டுரைகள் : எழுதுபவர் அனுபவிக்காத ஒன்றைக் கற்பனை செய்து, வாசிப்போர் மகிழும்படி எழுதுவது கற்பனைக் கட்டுரை எனப்படும். எழுதுவோன் தன் நிலையை

Page 67
1 6 தமிழ் மொழி விளக்கம்
மறந்து வேருேர் உலகில் வாழ்வதாகக் கற்பனை செய்யவேண் டும். இதில் சுயசரிதையும் (Autobiography) அடங்கும்.
உ-ம். நான் கல்வி மந்திரியாய் இருந்தால், நாயின் சுயசரிதை.
கட்டுரை எழுதமுன்னர் கவனிக்க வேண்டியன:
* பானையில் இருந்தால்தான் அகப்பையில்வரும் ' என்ற பழமொழி கட்டுரை வரைவோருக்கு மிகவும் பொருத்த மானதே. எடுத்துக்கொண்ட ஒரு பொருளைப்பற்றி (Subject எழுதத் தொடங்குமுன், அதைத் தழுவிய கருத்துக்கள் பல எழுதுபவரின் மனத்தில் எழவேண்டும். இதற்கு, எ மு து முன்னரே தயார் செய்திருக்கவேண்டும். அடிப்படையாகக் கற்றல், கேட்டல், சிந்தித்தல், அவதானித்தல் ஆதியன அமைந்திருக்க வேண்டும்.
"" கண்டது கற்கப் பண்டிதனுவான் ' என்றபடி ஒருவன் கற்கக் கற்க, கருத்துக்கள் மனத்தில் பதியும். ஒருவனுக்குக் ** கற்றனைத்தூறும் அறிவு " உள்ளத்தை ஊக்கி, மூளையை விருத்தி செய்து, அொது அறிவைப் பெருக்கவேண்டுமானல், விஞ்ஞானம், சரித்திரம், அரசியல், வாழ்க்கை வரலாறு, இலக் கியம் முதலிய சிறந்த நூல்களை ஊன்றிக் கற்கவேண்டும். கற்பதற்கேற்ப ஒருவன் ஒரு பொருளைப்பற்றி எழுதக்கூடியதா யிருக்கும். འ་
கல்வியின் ஒரு பகுதியாகக் கேள்வி அமைந்திருக்கின்றது. *" கற்றிலனயினுங் கேட்க ' என்ருர் வள்ளுவர். ஒருவர் கற்றுத் தேறப் பல நாட்கள் எடுக்கும் பொருளை, கேள்வி மூலம் சிலமணி நேரத்தில் அறிந்துகொள்ளலாம். எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்பக் கூறுதல், நிரைப்படுத்தல், சுருங் கச் சொல்லி விளங்க வைத்தல் முதலிய சிறந்த இயல்புகளைக் கேள்வி மூலம் ஒருவன் கற்றுக்கொள்ளலாம்.
கற்றல் கேட்டலுடன் மாத்திரம் நிற்பவன் ஒர் அகராதிக் குச் சமானமாவான். அகராதி வேண்டிய விவரங்களைத் தருமே யன்றி, அவற்றைத் தொடர்புபடுத்திக்கூருது. கற்றும் கேட் டும், சிந்திக்காமல் இருப்பவன்நிலையும் இது போன்றதே. தான் அறிந்து கொண்டவற்றைப்பற்றி ஒருவன் நன்கு சிந்திக்கவேண் டும். அலசி ஆராயவேண்டும். குணம் நாடிக் குற்றமும் நாட வேண்டும். கூறுபடுத்தலும் (Analysis), ஒன்று படுத்தலும் (Synthesis) உள்ளத்தின் இ ய ல் பா கும். இந்த இயல்பை

கட்டுரை வரைதல் , 1 7
இயக்குவது சிந்தனையாகும். சிந்தனையின் விளைவே சிறந்த அறிவாகும். கருத்துக்களை ஆராய்ந்து தொடர்புபடுத்தலே தெளிந்த அறிவாகும்.
புத்தகப் பூச்சியாக இருத்தல் மாத்திரம் அறிவை வளர்க் காது. இயற்கையிலுள்ளவற்றை நாம் அவதானிக்கவேண்டும். எல்லா அறிவும் புத்தகங்களிலிருந்து கிடைப்பதல்ல. எங்களைச் சுற்றிவர எத்தனையோ காட்சிகளைக் காணலாம். கண்டும் கேட் டும் அவதானித்தும் அறியவேண்டியன அளப்பில. அனுபவக் கல்வி அவசியம். " மற்றவர்கள் கூறுவதைவிட நான் என்ன காண்கின்றேன் ? " என்ற கேள்வி ஒவ்வொருவர் உள்ளத்திலும் என்றும் எழவேண்டும். அன்ருட வாழ்க்கையில் நாம் காண்ப வற்றை எழுதியும், வருணித்தும், விவரித்தும்வரின், எமது சிந்திக்கும் திறனும் கட்டுரை எழுதும் வன்மையும் பெருகும்.
மேலே விளக்கப்பட்டிருக்கும் கற்றல், கேட்டல், சிந்தித் தல், அவதானித்தல் ஆகிய நான்கு முறைகளையும் ஒருவன் மேற்கொண்டால் அவன் கருத்துக் கள் நிறைந்தவனுவான். நிறைந்த கருத்துக்கள் மாத்திரம் சிறந்த கட்டுரையாகாது. எடுத்துக்கொண்ட தலைப்பிற்கேற்ப, கருத்துக்களைப் பொருத்தி ஏற்ற முறையில் எழுதுவதற்கு முன்னதாகவே சில ஆயத்தங்கள் செய்து கொள்ளவேண்டும்.
* கட்டுரை எழுதப் புகுமுன்னர், கட்டுரை எழுதுவதற்காகக் கொடுக்கப்பட்ட தலைப்பை ஊன்றிக் கவனி க்க வேண் டும். கட்டுரைத் தலைப்புடன் தொடர்பானவை எவை எவை என்று ஆலோசிக்கின்ருேமோ, அதேபோலத் தொடர்பற்றன எவை எவை என்றும் சிந்திக்கவேண்டும். பொதுத் தேர்வுகளில் கட் டுரை எழுதக் கொடுக்கப்படும் நேரம் மிகக் குறைவாகையால், தொடர்பற்ற பயனற்ற கருத்துக்களைப் புகுத்தி எழுதக் காலம் வாயாது. இது பொருத்தமுமற்றது. இங்ங் ன ம் எழுதல் * மற்ருென்று விரித்தல் என்ற குற்றமாகும். உதாரணமாக, * பிரயாணத்தால் வரும் நன்மைகள் " என்னும் தலைப்பின் கீழ் ஒரு கட்டுரை எழுதவேண்டி நேர்ந்ததாக வைத்துக்கொள் வோம். ஈங்கு ஒருவர் செய்த பிரயாணத்தைப் பற்றி யோ அல்லது அவர் பிரயாணஞ் செய்யும்போது பார்த்த இடங்களைப் பற்றியோ எழுதுதல் தவழுகும். எடுத்துக்கொண்ட பொருள் " பிரயாணத்தால் வரும் நன்மைகள். ஆகையால், நன்மைகளைப் பற்றியே எழுதல் வேண்டும். கட்டுரைக்காகக் கொடுக்கப்பட்ட பொருளைப் பார்த்தவுடனேயே, மிகவும் இலகுவானது என்று எண்ணி, சிறிதேனும் சிந்தியாது, அ வ ச ரமா க எழு த த் தொடங்குவோர் மேலே விளக்கப்பட்ட தவறின்பாற்படுவர்.

Page 68
8 தமிழ் மொழி விளக்கம்
எனவே, கட்டுரைக்காகக் கொடுக்கப்பட்ட பொருள் எதைப் பற்றியது என்பதை முதலில் வரையறை செய்துகொள்ளல் (Defining) இன்றியமையாததாகும்.
எழுதப்புகும் கட்டுரையின் தலைப்பை வரையறை செய்து கொண்டபின், இதையிட்டு என்ன கூறலாம் என்பதை ஆலோ சிக்க வேண்டும். பல கருத்துக்கள் ஒன்றின் பின் ஒன்ரு ய் உள்ளத்தில் எழலாம். இவற்றையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு கட்டுரை எழுதுவது இயலாத காரியம். ஏனெனில், கட்டுரை எழுதும்போது சில கருத்துக்களை மறக்கவும் நேரிடும். அல்லது தொடர்பாகக் கருத்துக்களையெல்லாம் விரித் து க் கொண்டு போகவும் இயலாது. தொடக்கத்தில் எழுதவேண்டிய சில கருத்துக்கள் கட்டுரை ஈற்றில் உள்ளத்தில் எழ லா ம். அல்லது, கட்டுரை ஈற்றில் எழுதவேண்டியன எழுதத் தொடங் கும்போது தோன்றி, எழுதி முடியுமுன்னர் ம  ைற ய ல |ா ம். இதுவுமல்லாமல், தொடர்பற்ற கருத்துக்கள் புகுந்து, கட்டுரை யின் ஒழுங்கையும் சிறப்பையும் கெடுத்துவிடும்.
இந்தக் குறைகளை நிறைவுசெய்வதற்கு, கட்டுரை எழுது வோர் ஒரு சிறந்த முறையைக் கையாளல் வேண்டும். கொடுக் கப்பட்ட தலைப்பையிட்டுச் சிந்திக்கும்போது உள்ளத்தில் எழும் கருத்துக்களை உடனுக்குடனேயே குறித்துக்கொள்ளல் வேண் டும். நன்முகச் சிந்தித்து, கொடுக்கப்பட்ட பொருள்பற்றி மேலும் கூற ஒன்றும் இல்ல்ை என்று தெரிந்த பின் குறித்துக் கொண்ட கருத்துக்களை உற்று நோக்கவேண்டும். இவற்றுள் எவை முக்கியமானவை, எவை தொடர்புள்ளவை என்பதை ஆராய்ந்து, அவசியமற்றவைகளை நீக்கவேண்டும். இங்ங்னம் தெரிவு செய்தல் (Selection) மிக அவசியமாகும்.
இதன்பின் தெரிந்தெடுத்துக்கொண்ட கருத்துக்களைச் சிறு தலைப்புத் தலைப்பாகத் (Sub-heads) தொடர்வுபடுத்தி நிரைப்படுத் தல் வேண்டும் (Arrange in logical Order). ஒவ்வொரு சிறு தலைப்பும் பல கருத்துக்கள் கொண்டதாய் இருக்கலாம். இத் தகைய ஒவ்வொரு சிறு தலைப்பும் கட்டுரையின் ஒவ்வொரு பந்தியாக (Paragraph) அமையும். முன்பு எழுதப்பட்ட சிறு குறிப்புகளின் (Notes) உதவிகொண்டு ஒவ்வொரு பந்தியையும் ஆக்கலாம். ஒரு கட்டுரையில் இத்தகைய பல பந்திகள் தொடர் பாக அமையும். ஆகவே, ஒருவர் கட்டுரை எழுதத் தொடங்கு முன்னர், மேலே சொல்லப்பட்ட உறுப்புகள் அடங்கிய ஒரு சட்டகம் (Outline) எழுதவேண்டும். இதன் உதவிகொண்டு கட்டுரையைச் சுலபமாகவும் திறமையாகவும் எழுதி முடிக்க

கட்டுரை வரைதல் 119
லாம். (இத்தகைய சட்டகங்களையும், இவற்றுள் ஒன்றின் உதவி கொண்டு எழுதப்பட்ட மாதிரிக் கட்டு ரை யையும் (Model Essay) இந்த அதிகாரத்தின் கடைசியில் காண்க).
கட்டுரையின் அமைப்பு
ஒரு கட்டுரையில் பல பந்திகள் தொடர்பாக அமையும் என்று முன்னர் குறிப்பிடப்பட்டது. இந்த உண்மை, பின்னர் வரும் மாதிரிக் கட்டுரை மூலம் விளங்கும். கட்டுரையின் சிறந்த அமைப்புப் பந்திகளின் அழைப்பைப் பொறுத் திருக்கிறது. எனவே, பந்தியின் அமைப்பை முதலில் நன்கு விளங்கிக்கொள் ளல் வேண்டும்.
தொடர்புள்ள பல வாக்கியங்கள் சேர்ந்து ஒரே பொருளை உணர்த்தி நிற்பது ஒரு பந்தி எனப்படும். ஆகவே, ஒரு பந்தி ஒரு பொருளையிட்டு மாத்திரம் கூறும். இதற்குப் பல வாக்கி பங்கள் அமையலாம். எடுத்துக்கொண்ட பொருளை விளக்க எத்தனை வாக்கியங்கள் இன்றியமையாதனவோ, அத்தனையும் எழுதப்படலாம். இதனல், பந்திகள் ஒரே அளவும் கருத்தும் கொண்டனவாக அமையமாட்டா என்பது வெள்ளிடைமலை. வாக்கியங்கள் எல்லாம் கருத்துத் தொடர் புள்ள ன வாக (Sequence of thought) gy60)Lou GG16öTG) lib.
இங்ங்னம் பல பந்திகள் கொண்ட கட்டுரையின் அமைப்பில் மூன்று முக்கிய பகுதிகளைக் காணலாம். அவையாவன : முக Gy607 (Introduction), 51 G)øog (Body of the Essay), Cup Lg6 60pr (Conclusion).
முகவுரை இயன்ற அளவில் சுருக்கமாக அமையவேண்டும். முகவுரையின் தன்மை கட்டுரையின் பொருளைப் பொறுத்திருக் கின்றது. இது ஒரு வாக்கியமாகவோ அல்லது ஒரு சிறிய பந்தியாகவோ அமையலாம். இது கட்டுரையின் தலைப்பின் வரைவிலக்கணம் கூறுவதாகவோ, அதை விளக்குவதாகவோ, வேறு ஏதேனும் தொடர்பு பற்றிய குறிப்புக் கொண்டதாகவோ அமையும். எதுவானுலும் முகவுரை கவர்ச்சியுள்ளதாக அமைய வேண்டும்.
கட்டுரை எழுதுவோர் முகவுரை வழிச்சென்று கட்டுரை யுள் நுழைவர். எழுதுவோர், காலம், அளவு, பொருள் முதலிய வற்றைக் கவனிக்கவேண்டும். சுருங்கச் சொல் லி விளங்க வைத்தலும், மற்ருெ ன்று விரித்தல் என்னும் குற்றம்பாற்படா

Page 69
互20 தமிழ் மொழி விளக்கம்
மையும், கொடுக்கப்பட்ட தலைப்பின் ஒவ்வொரு பகுதியையும் ஏற்ற முறையில் சமமாக விவரித்தலும் இன்றியமையாதன. உதாரணமாக, ' விஞ்ஞானத்தின் விளைவுகள் " என்ற தலைப் பில் கட்டுரை எழுத நேர்ந்தால், விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் பற்றியும், அவற்றின் பேறுகளைப்பற்றியும் கட்டுரையின் பெரும் பகுதியாக எழுதி, அதனுல் மனிதன் அடைந்த நன்மை தீமை களைப்பற்றிச் சில வரிகள் மாத்திரம் எழுதல் ஆகாது. இது சரியாகத் திட்டம் போடாது எழுதப்படும் கட்டுரையாக முடி եւյւհ. *" கட்டுரை எழுதுமுன்னர் கவனிக்க வேண் டியன ** என்ற தலைப்பின் கீழ் விளக்கப்பட்ட ஒழுங்கின்படி கட்டுரை எழுதினுல் இத்தகைய இழுக்குகள் நேரா, "கட்டுரைச் சட்டகம் ஒன்றை முன்னரே எழுதின், பின்னர் இடர்ப்பட வேண்டிய தில்லை.
கட்டுரை எழுதும் முறையை எவ்வளவு நன்கு அறிந்த போதிலும், உள்ளத்தில் எழுந்த கருத்துக்களை வெளியிடுவதற்கு மொழி வன்மை வேண்டும். சிந்தனையை வெளியிடும் கருவி மொழியாகையால், எடுத்துக்கொண்ட பொருளுக்கேற்ப ச் சொற்களும் வாக்கியங்களும் அ  ைம ய வேண் டு ம். சோகம் அல்லது சிந்தனை நிறைந்த கட்டுரையை இன்பம் அல்ல து விகடச் சுவை ததும்பும் நடையில் எழுதலாகாது. வாசிப் போரை மயங்க வையாது தெளிவான நடையில் எழுதல்வேண் டும். அவசியமற்ற சொற்ருெடர்களைப் புகுத்தி வாக்கியங்களை மிகவும் நீளமாகவும் விளக்கமற்றவையாகவும் செய்தல் ஆகாது. இதனுல் கட்டுரையின் நன் டச் சிறப்பும் பொருள் வளனும் பாழ்படும். பேச்சு வழக்கிலுள்ள சொற்களைக் கட்டுரையுள் புகுத்தல் கூடாது. இயல்பாகவே அமையும் நடையும், தெளி வும், எளிமையும், சுருங்கச் சொல்லலும் கட்டுரையை அழகு படுத்துவனவாம்.
கட்டுரையின் முகவுரை கட்டுரையுள் நுழையச் செய்வது போல், முடிவுரை எடுத்துக்கொண்ட பொருளின் முடிபைக் கூறும். கட்டுரையைத் திடீரென்று முடித்தல் ஆகாது. கட் டுரை முழுதும் கூறிய கருத்துக்களைச் சுருக்கிக் கூறுவதாகவோ அல்லது இவற்றிலிருந்து ஏதேனும் ஒரு முடிபை உணர்த்துவ தாகவோ அல்லது கட்டுரையிலுள்ள ஏதேனும் முக்கியமான கருத்தை வாசிப்போர் உள்ள த் தி ல் பதிய வைக்கக் கூடிய தாகவோ முடிவுரை அமையலாம். முகவுரை கவர்ச்சியுள்ள தாய் அமைவதுபோன்று முடிவுரையும் படிப்போர் நெஞ்சை யள்ளும் முறையில் அமையவேண்டும்.

கட்டுரை வரைதல் 72芷
கட்டுரைச் சட்டகங்கள் (Outlines)
1. ப்ொருள் அல்லது தலைப்பு அல்லது விடயம் :
நான் விரும்பும் தொழில்
(1) உலகில் எல்லா உயிர்களும் தொழில் செய்தல் - உதாரணம், படைப்பில் மிகச் சிறிய பிராணியாகிய எறும்பின் முயற்சி - ஆகவே, மனிதத் தொழிலின் சிறப்பும் இன்றியமை, யாமையும்.
(2) தொழில்கள் பல - சிலர் தொழில் வருவாய்க்காக மாத்திரம் செய்கிறர்கள் - வேறு சிலர் வருவாயோடு விரும்பி யும் செய்கிருர்கள் - இன்னும் சிலர் வருவாயும், விருப்பமும், மற்றவர்களுக்குப் பயனும் ஒருங்கே அமைந்த தொழிலை ச் செய்கிருர்கள். இத்தகைய தொழிலையே நான் விரும்புகின் றேன் - இது வைத்தியத் தொழிலாகும்.
(3) வைத்தியத் தொழிலின் சிறப்பு-மனிதனுக்கு உடம்பு இன்றியமையாதது - உடம்பு இன்றேல் உள்ளமும் இல்லை. ஆன்ம வளர்ச்சியும் இல்லை - திடகாத்திரமுள்ள உள்ளம் திட காத்திரமுள்ள 'உடம்பிலே உள்ளது (A healthy mind in a healthy body) என்ற ஆங்கிலப் பழமொழி - இத் த கைய 'உடம்பை நோய் பீடிக்காது பாதுகாக்க வைத்தியத் தொழில்
உதவும்.
(4) நோயைத் தடுத்துப் பாதுகாப்பதுமல்லாமல் நோயுள்ள வர்களின் வியாதியை நீக்கல் - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " - இத்தகைய செல்வத்தை மற்றவர்களுக்கு வைத் தியத் தொழில் அளிக்கும்.
(5) நோயாளிகள் தாங்க முடியாது வ ருந்து ம் போது சாந்தி அளித்தல் (Relief)-துன்பமுற்றவர் துன்பத்தைப் போக்க முயலல் - பிறர் மீது அன்பு காட்டும் பண்பு - சாதி மத பேதம் இல்லாது, உயர்வு தாழ்வு கருதாத சேவை - இதனுல் சமரசப் பான்மையும் ஆன்ம ஈடேற்றமும்.
(6) பொருள் மனிதனுக்கு அவசியமானது - " பொரு ளிலார்க்கு இவ்வுலக மில்லை ' (திருக்குறள்) - வைத் திய த் தொழில் சேவையை மட்டுமன்றி வேண் டிய பொருளையும் ஈட்ட உதவும்.

Page 70
丑22 தமிழ் மொழி விளக்கம்
(7) நான் இயற்கையாகவே வைத்தியத் தொழிலை விரும்பு கின்றேன் - ஆகவே, வருவாயும், சேவையும், விருப்ப மும் அமைந்த தொழில் எனக்கு உயர்ச்சியையும் பயனையும் அளிப் பது திண்ணம்.
11. பொருள் :
கிராமச் சீர்திருத்தம்
(1) இலங்கையில் நகரங்களை விடக் கிராமங்க ளின் தொகையே அதிகம்- எனினும், அரசினர் நகரங்களில் செலுத்து மளவு கவனம் கிராமங்களில் செலுத்துவதில்லை - எனவே, கிராமங்களின் பிற்போக்கு - ஆகையால் சீர்திருத்தம் தேவை.
(2) மக்களுக்கு முதல் அவசியமானது உணவு - இதற்கு ஆதாரமான உழவும் தொழிலும் வேண்டும் - இதை உழ வுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ருர் பாரதி யார் - உழவுத் தொழிலைப் பெருக்கல் - நீர்ப்பாசன வசதி - ஏழை உழவருக்குக் கூட்டுறவு மூலம் உதவி.
(3) தொழிற் பெருக்கம் - கிராமத்திற்கு ஏற்றது கைத் தொழில் - நெசவு, மட்பாண்டம் வனைதல், தும்பு வேலை, பெட்டி கடகம் இழைத்தல் முதலியன - பண்ணைத் தொழில் (Dairy-farming). r
(4) உழவையும் தொழிலையும் சீரிய முறையில் செய்து ஒழுக்கமாய் வாழ்வதற்குக் கல்வி அவசியம் - வறுமைத் தொழி லாளிகளுக்கு இராப் பள்ளி (Night School) அ  ைம த் த ல் - qp36 urtii 56,67 (Adult Education), DIT6) ś2jub (Library) அமைத்தல் - பொருட்காட்சி, படக்காட்சி, சொற்பொழிவு முதலியவை மூலம் அறிவை வளர்த்தல்.
(5) சுகாதார வாழ்க்கை - நோயற்ற வாழ்வு -- சுகா தார வசதிகள் - வாழும் வகை - வைத்தியசாலை அமைத்தல்.
(6) உழைப்பவர் வருவாயில் ஒரு பகுதியை மிச்சம் பிடித் தல் - தேவையான நேரத்தில் பண உதவி - இதற்கு ஐக்கிய A5T60Tu Fisib (Credit Society) gy60) LD556).
(7) கூட்டுறவு மனப்பான்மையை வளர்த்தல் - கற்றேர் வழிகாட்டல் - தேவையான பண உதவி, புத்திமதி முதலிய வற்றை மத்திய அரசினர் மூலமும், கிராமச் சங்க மூலமும்

கட்டுரை வரைதல் 1928
பெறுதல் - சீர்திருத்தத்திற்கு ஏதுவான வழி வகைகளை வகுத் தல் - இதனுல் கிராமமும் முன்னேறும், மக்களும் திருப்தியான வாழ்க்கையைப் பெறுவார்கள்.
11. பொருள் :
* அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு"
(1) ஒரு பழமொழி - அடம்பன் கொடி ஒன்றுசேர்ந்தால் எப்படி அறுக்க முடியாமல் வன்மையாக இருக்கின்றதோ அதே போல மக்களும் ஒன்றுசேர்ந்தால் ஒற்றுமையாகவும் பிறருக்கு அஞ்சாமலும் வாழலாம் என்ற பொருள்.
(2) ஒற்றுமையின்றி வாழமுடியாது - வாழ்க் கை யி ல் தாழ்வையே அடைவோம் - எமது வீட்டு வாழ்க்கையிலோ, அல்லது சமுதாயத்திலோ, அரசியலிலோ ஒற்றுமை அவசியம் - பிரிந்து வாழின் வீழ்ச்சி - இதையே " ஒன்றுபட்டா லுண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே ”* என்று பாரதியார் பாடினர்.
(3) நாம் ஒற்றுமையாய் இல்லாவிடில் எமக் கிடையே பகை ஏற்படலாம் - பிறர் எம்மைப் பகைக்கச் செய்து எங்களை வெல்லலாம் - இதனுல் பெரும் கேடும் விளையும் - உதாரணம், * சிங்கமும் எருதுகளும் " என்ற கதை.
(4) எமது அன்ருட வாழ்க்கையில் ஒற்றுமை அவசியம் - தொழில் செய்யவோ அல்லது ஒருவர்க்கொருவர் உதவவோ ஒற்றுமை வேண்டும் - இதை அடிப்படையாகக் கொண்டதே sin "Gsp 6 g) Luj 35 Tši 35 Gŷr (Co-operative Movements):
(5) ஒற்றுமை மனப்பான்மைக்குப் பரந்த மனப்பான்மை யும் பிறரிடம் அன்பும் வேண்டும் - பிழைகளைப் பொறுத்த லும், துன்பத்தைச் சகிக்கும் இயல்பும் வேண்டும் - இந்தப் பண்புகளால் ஒற்றுமையை வளர்த்து வாழ்க்கையில் பெரும் பயனை அடையலாம் - அடம்பன் கொடி திரண்டு மிடுக்காய் இருப்பதைவிட நாம் பன்மடங்கு மிடுக்காய் இருக்கலாம்.
IV. Gur (beir :
பிரயாணத்தால் வரும் நன்மைகள் (1) பிரயாணத்தின் சிறப்பியல்பு. (2) பிரயாணத்துக்கும் உள்ளத்துக்குமுள்ள தொடர்பு.
(3) பிரயாண வகை - பிரயாணத்தால் உண்டாகும் இன்ப மும் காரணமும்,

Page 71
及24 தமிழ் மொழி விளக்கம்
(4) பிரயாணம் செய்வதால் கண்ணுறும் காட்சிகள் - இதனுல் உள்ளமும் உடலும் அடையும் பயன்.
(5) பிரயாணம் செய்வோர் பெரும்பிரிவு - இளையோர், முதியோர் - அவர்கள் முறையே கல்வி, அனுபவம் ஆகிய பயன்கள் பெறுதல் - பேக்கன் (Bacon) பெரியாரின் கருத்து.
(6) இளைஞரான பள்ளி மாணவர்கள் அடையும்பயன் - நூற்கல்வியும் கட்புலக் கல்வியும் (Visual Education).
(7) பிரயாணத்தால் முதியோர் அ டை யும் பயன் - அனுபவம்.
(8) பிரயாணமும் நாகரிகமும் - பண்பாடு அடிப்படை - * யாதும் ஊரே யாவரும் கேளிர் ' என்ற மனப்பான்மை.
(9) பிரயாணத்தை ஏன் மேற்கொள்ள வேண்டு ம் - மாணவர்கள் பங்கு - நாமும் நாடும் முன்னேறும் பேறு.
மாதிரிக் கட்டுரை :
பிரயாணத்தால் வரும் நன்மைகள்
உயிர்கள் யாவும் இன்பத்தை உவப்பது இயற்கை யே. ஆயின், ஆறறிவுயிரோடு மாக்களினின்றும் வேறுபட்டு நிற்கும் மக்கள் இன்பத்தை மட்டும் நாடுபவரல்லர். அவர்கள் இன்பத் துடன் பயனையும் தேடுவார்கள். இன்பமும் பயனும் ஒன்று படும் முயற்சிகளுள் பிரயாணமும் ஒன்று.
ஓரிடம் விட்டு வேறிடம் செல்வது மக்களுக்குப் பேருவகை அளிக்கும். மனித உள்ளம் மாற்றத்தை விரும்பும் மாண் 1460ւ-Ամ 5l. அன்ருட வாழ்க்கையில் சென்றிளைத்த உள்ளம் புத்தம் புதிய வாழ்க்கைமுறையில் ஆர்வமுறும். மனம் விரும் பும் மாற்றத்தை ஏற்றமுறையில் பிரயாணம் ஆற்றுவிக்கின்றது.
பிரயாணம் செய்வதே தனி மகிழ்ச்சியைத் தரும். விஞ் ஞானம் மலிந்த இந்தக் காலத்தில் வகை வகையான வாகனங் களில் பிரயாணம் செய்ய வாய்ப்பு ஏற்படுகின்றது. மோட் டோர் வண்டி, புகைவண்டி, கப்பல், ஆகாயவிமானம் ஆதியன பிரயாணத்தில் உல்லாச உவகையை ஊட்டுகின்றன. பிரயா ணத்தில் ஏற்படும் பரபரப்பும், புதிய முகங்களைச் சந்திப்பதால் வரும் உற்சாகமும், பிறர் கூட்டுறவால் பெருகும் நட்பும் அளப்பிலா இன்பத்தை அளிக்கும்.

கட்டுரை வரைதல் 8 5
பிரயாணம் செய்யும்போது ஒருவன் கண்ணுறும் காட்சியோ பற்பல. பச்சைப் பசேலென்ற தாவரத் தோற்றமும், நாட் டிற்கு அணிசெய்யும் மலைகளின் மாட்சியும், ஊருக்கு அழ கூட்டும் அருவியின் உருவும் பிரயாணியின் கண்ணைக் கவரும். உள்ளத்தில் பொங்கும் உவகையும், இயற்கையளிக்கும் இன்பக் காட்சியும், தட்ப வெப்ப நிலை தரும் மாற்றமும் உடலுக்கு உறுதியை அளிக்கும். ஆகவே, பிரயாணம் இன்பத்தை மாத்திர மல்லாமல் புயனையும் தரும்.
பிரயாணிகள் இளையோராகவோ அல்லது முதியோராகவோ இருக்கலாம். ஆனல், இருபிரிவினரும் தனித் தனிப் பயனை எய்துவர். பேக்கன் என்ற ஆங்கில அறிஞன் இவ்விரு பயன் களையும் எடுத்துக்காட்டுகின்ருர், ' இளமையில் கல்வியையும், முதுமையில் அனுபவத்தையும் பிரயாணம் அளிக் கின்ற து" என்பது அவர் கருத்தாகும்.
பள்ளி மாணவர்களுக்குப் பிரயாணம் கல்வியின் சிறந்த பகுதியாக அமைகின்றது. தற்காலக் கல்விமுறையில் கட்புலக் கல்விமுறை சிறந்த இடம் பெறுகின்றது. சரித்திரம், பூகோள நூல், விஞ்ஞானம் முதலிய பாடங்கள் ஏட்டுக் கல்வியோடு நில்லாது நாட்டுக் கல்வியையும் வேண்டிநிற்கும். நூற் கல்வி நிறைந்த பயனை விளைக்கவேண்டுமானல் அது கட்புலக் கல்வி யோடு சேரவேண்டும். தாம் கற்பதை மாணவர்கள் நேரில் பார்வையிடவேண்டும். இத்தகைய கட்புலக் கல்வியைத் தரும் பெரும் கருவி பிரயாணமாகும்.
இளமை முதிர்ந்ததும் அனுபவத்தைக் காணலாம். முதி யோர் பிரயாணம் செய்யும்போது வாழ்க் கை யைத் துருவி ஆராய்வார்கள். அவர்களுக்கு அத்தகைய ஆற்றலும் உண்டு. பல்வேறு மக்களின் பலதிறப்பட்ட வாழ்க்கையைக் கண்ணுறும் போது அனுபவக்கல்வி தானகவே வரும். பிரயாணம் செய் பவன், தனது வாழ்க்கைக்கும் பிறநாட்டவர் வாழ்க்கைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைச் சீர்தூக்கி நல்லன தீயன வற்றை உணர்கின்றன். அவன் அவர்களின் இன்ப துன்பங் களிலும் வாழ்வு தாழ்விலும் பங்குபற்றி வாழ்க்கையில் மெய் நெறியைக் கைக்கொள்ள வேண்டிய அனுபவ த்  ைத ப் பெறு கின்றன்.
மக்களின் சிறப்பியல்புகளுள் நாகரிகமும் ஒன்ரு கும். இதற் குச் சிறந்த பண்பாடு அடிப்படையாகும். * நான் " என்ற மனப்பான்மையை ஒழித்து " நாங்கள் " என்ற உணர்ச்சியை ஊட்டும் பண்பாட்டைப் பிரயாணம் பயக்கின்றது. பலரின்

Page 72
26 தமிழ் மொழி விளக்கம்
தொடர்டாலும், புதிய வாழ்க்கை அனுபவத்தாலும் பரந்த
அறிவைப் பெறுவதால் மனம் விரிந்து "யாதும் ஊரே யாவரும் கேளிர் ** என்ற கொள்கை ஒருவர் உள்ளத்தில் வேரூன்றப் பிரயாணம் உதவும்.
இன்பமும் பயனும், கல்வியும் அனுபவமும் ஒருங்கே ஈனும் பிரயாணத்தை இளைஞரும் முதியோரும், ஆணும் பெண்ணும் மேற்கொள்ள வேண்டும். பிரயாணம் தரும் பயன்களை மாண வர்களுக்குப் பள்ளிக்கூடங்கள் உதவினுல், பின்னர் அவர்கள் முதியோராய்த் தாமே பிரயாணம் செய்வார்கள். இதனல் நாமும் முன்னேறுவோம். நாடும் முன்னேறும்.
பயிற்சி
கட்டுரைக்கான தலைப்புகள்
1. நான் விரும்பும் தொழில் முன்பு தரப்பட்ட 2. கிராமச் சீர்திருத்தம் சட்டிகங்களின் உதவி
3. ** அடம்பன் கொடியும் கொண்டு இவற்றை திரண்டால் மிடுக்கு ' எழுதலாம. . நாயின் சுயசரிதை
வாழ்க்கையில் ஒரு நாள்
4.
6. புகைவண்டி நிலையத்தில் நான் கண்ட காட்சி
7. ஒரு மழைநாள்
8. சமூக சேவை
9. புதினப் பத்திரிகை 10. பேசும் படம் 11. மின்சாரம் தரும் பயன்கள் 12. ** தந்தை தாய் பேண் ”* 13. ஒரு பெரியார் 24. ஒரு தீ விபத்து 15. " ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் " 16. வறுமை 17. கூட்டுறவு இயக்கம் 18. தாய்மொழி மூலம் கல்வி

19.
20.
21.
22.
23.
24. 25.
26.
27.
28.
29. 30.
31.
32.
கட்டுரை வரைதல் 127
மதுவிலக்கு நான் படித்துச் சுவைத்த ஒரு நூல்
விஞ்ஞான உலகம்
சமயக் கல்வி
நாகரிகம்
நூல் நிலையம்
போரின் விளைவுகள் நாம் நம் முன்னுேரைக் காட்டிலும் சிறந்தவர்களா? சுவாத்தியமும் வாழ்க்கையும்
நாட்டுப் பற்று
குடியாட்சி
இலங்கைத் தொழில்கள் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி
ப்ண்டைத் தமிழர்

Page 73
28 தமிழ் மொழி விளக்கம்
அதிகாரம் XVIII 3-(5&6 GTiggséb (Precis-Writing)
விரிவாக அமைந்த ஒரு பகுதியை, அதன் கருத்துச் சிறிதும் குன்றமல் இயன்றளவில் குறுக்கி எழுதுதல் * சுருக்கி எழுதல் ? எனப்படும். சொற்களைக் குறைத்து எழுத முற்படும்போது, மூலப் பகுதியிலுள்ள (Original) கருத்துக்கள் சிறிதேனும் வேறு படாமலும், தெளிவாகவும் அமையவேண்டும். சிறந்த சுருக்க மென்ருல், மூலப் பகுதியைப் படிக்காமலே அது விளக்கமாக இருக்கவேண்டும்.
சுருக்கி எழுதுவோருக்கு இரண்டு சிறப்பான இயல்புகள் அமையவேண்டும். ஒரு பகுதியை வாசிக்கும்போது அதிலே மனத்தைப் பதித்துப் பொருளைக் கிரகிக்கும் இயல்பு ஒன்று. இங்ங்னம், கிரகித்த பொருளைக் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இயல்பு மற்றென்று. ஆகவே, ஒருவனிடமுள்ள இந்த இரண்டு இயல்புகளையும் மேலும் மேலும் வளர்த் து வாழ்க்கையில் பயனடையச் சுருக்கி எழுதும் பயிற்சி உதவு கின்றது.
சுருக்கி எழுதும் முறை
சுருக்கி எழுதுமுன்னர், எழுதக் கொடுக்கப்பட்ட மூலப் பகுதியை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகவே, முத லில் கிரகித்தல், பின்னர் எழுதும் முறை ஆகிய இரண்டையும் அறிதல் வேண்டும்.
(அ) கிரகித்தல் (Comprehension): ஒரு பகுதியைக் கிர கிக்கவேண்டுமானல், முதன்முதலாக அதை வாசிக்கவேண்டும். ஒரு முறை வாசித்து விளங்கிக்கொள்ள முடியாவிடின், விளங் கிக்கொள்ளும் வரையில் மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டும். வாசிக்கும் பகுதி இன்னது பற்றியது, அதை எழுதியவரின் நோக்கம் என்ன, எடுத்துக்கொண்ட பொருளைப்பற்றி எழுதிய வர் எவற்றைக் கூறுகின்ருர் என்பனவற்றை முதலில் தெளிவு செய்து கொள்ளல் வேண்டும்.
மூலப் பகுதியின் விவரங்களை அறிய முற்படுமுன்னர், அது எதைப் பற்றியது என்பதை வரையறை செய்து கொள்வது அவசியம். இது, பின்னர் விவரங்களை அறிந்துகொள்வதற்கு உதவும். அல்லாமலும், தேர்தல் கேள்விப் பத்திரங்களில், சுருக்கி எழுதல் என்ற கேள்வியின் கீழ் ஏற்ற ஒரு தலையங்கம்

சுருக்கி எழுதல் 29
இடுக என்ற கேள்வியையும் பெரும்பாலும் காணலாம். இதற்கு விடை எழுதவும் இங்ங்ணம் வரையறை செய்த ல் உதவியுாயிருக்கும். சில இடங்களில் தொடக்கத்திலேயே தலை யங்கத்தைக் காணலாம். இன்றேல் மூலப் பகுதியின் கடைசி யில் காணலாம். அல்லாவிடின் முழுப் பகுதியையும் படித்து விளங்கித்தான். ஒரு தலையங்கத்தின் முடிவுக்கு வரவேண்டும்.
இதன் பின்னர் மூலப் பகுதியின் விவரங்களை அறிய முற் படல் வேண்டும். இதற்கு, அந்தப் பகுதியை வா க் கியம் வாக்கியமாகப் படித்துக் கருத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். மயக்கமாகவோ அல்லது விளக்க மற்ற தாகவோ இருக்கும் சொற்களையோ அல்லது சொற்ருெடர்களையோ தெளிவுபடுத்த முயலல் வேண்டும். ஒரு சொல்லின் கரு த்  ைத த் தவருக விளங்குவதாலேயே சில சமயங்களில் சுருக்கி எழுதப்படும் பகுதி தவருக அமையலாம்.
விவரங்களைத் தெளிந்த பின்னர், கொடுக்கப்பட்ட பகுதி யில் எவை முக்கியமானவை, எவை முக்கியமற்றவை என்ப தைத் தெரிவு செய்தல் வேண்டும். இதனல், சில வாக்கியங் களைத் தள்ளியும் சிலவற்றைக் கொண்டும் மனம்போன போக் கெல்லாம் தெரிவு செய்வதல்ல. முக்கியமற்ற விவரங்களைத் தள்ளி முக்கியமான கருத்துக்களைக் கொள்வதே தெரிவு செய்தல் ஆகும். மூலப் பகுதியின் தலைப்பு, எழுதியவரின் நோக்கம், அவர் கூறும் கருத்துக்கள் ஆகியவற்றை முன்னரே தெளிந்து கொண்டரில் தெரிவு செய்தல் மிகச் சுலபமாகும். இங்ங்னம், தெரிவு செய்து கொண்டவற்றைச் சிறிது குறிப்பு முறையில் குறித்துக் கொள்ளல் வேண்டும். -
(ஆ) எழுதும் முறை : எழுதத் தொடங்கு மு ன் னர் சுருக்கத்தின் அளவை அறிய வேண்டும். இத்தனை சொற்க ளுக்கு மேற்படாமல் சுருக்கம் அமைய வேண்டும் என்ற நிபந் தனை ஏற்படலாம். அல்லது, பொதுவாக மூன்றில் ஒரு பங் காகச் சுருக்கி எழுதும்படி விதிக்கலாம். இங்ங்ணமாயின் மூலப் பகுதியிலுள்ள சொற்களை எண்ணி, தொகை யை மூன்ரு ல் பிரித்துக் கணக்கிடுக. இந்த எல்லைக்கு மேற்படாமல் சுருக்கம் அமைய வேண்டும்.
ஒருவர் கருதிய எல்லையுள் ஒரே முறையில் சுருக்கத்தை எழுதி முடித்தல் சுலபமல்ல. ஆகவே, முதலில் ஒரு மாதிரிச் சுருக்கத்தை எழுதுதல் நலம். அது நீள மாக அ  ைம யி ன் வேண்டிய அளவிற்கு மீண்டும் மீண்டும் சுருக்கி எழுத முயலல் வேண்டும். முடிபான சுருக்கம் எழுத முன்னர், பல முறையும் எழுத நேரிடலாம்.

Page 74
30 தமிழ் மொழி விளக்கம்
முதலில் எழுதும்போது மூலப்பகுதியை வாசித்துக் கிர கித்தவற்றை மனதில் வைத்துக்கொண்டு (மூலப் பகுதியைப் பார்க்காமலே) எழுதல் நலம். பின்னர் மூலப் பகுதியையும் சுருக்கத்தையும் ஒப்பிட்டுத் திருத்தங்களோ மாற்றங்களோ செய்யலாம். சுருக்கம் அயற் கூற்றிலும் படர்க்கையிலும் அமைய வேண்டும்.
இயன்றவரையில் சொந்த நடையிலேயே சுருக்கம் எழுதப் படல் வேண்டும். மூலப்பகுதியிலிருந்து அங்கும் இங்குமாய்ப் பொறுக்கி எடுத்துச் சுருக்கத்தை எழுதாது, தொடர்பாக எழுத வேண்டும். சுருக்கி எழுதும்போது விளங்கவைக்கவும் வேண்டும் என்ற விதியை மறத்தல் ஆகாது. மூலப்பகுதியி லுள்ள எந்த முக்கியமான கருத்தையும் நழுவவிடல் ஆகாது. எழுதுவது சுருக்கமாகையால், கொ டு க்கப்பட்ட பகுதியின் பொதுவான கருத்தையே வெளியிடல் வேண்டும். ஆகவே, சுற்றி வளைத்து எழுதவோ, தடல் புடலான நடையைப் பயன் படுத்தவோ, கூறியது கூறவோ, மூலப் பகுதியிலுள்ள உவமை முதலிய அணிகளையோ (Figures of Speech), மேற்கோள்களையோ, உதாரணங்களையோ திருப்பி எழுதவோ சுருக்கம் இடம் கொடுக் காது. சுருக்கம் எளிமையாகவும், தெளிவாகவும், வழுவில்லாம லும் அமையவேண்டும்.
uDrofü Luubs (Model Exercises) 1. அவன் வெற்றி பெற்ருல் கிழக்கே உ தி க்கும் சூரியன்
மேற்கே உதிப்பான். சுருக்கம் : அவன் தோல்வியடைவது திண்ணம். 2. ** கற்றதன லாய பயனென்கொல் வாலறிவன்
நற்ருள் தொழா ரெனின். ' சுருக்கம் : கற்றலின் பயன் இறைவனைத் தொழுதல். 3. ' குடைநிழ லிருந்து குஞ்சர மூர்ந்தோர்
நடை மெலிந்தோரூர் நண்ணினும் நண்ணுவர். * சுருக்கம் : அரசன் ஆண்டியாகவும் நேரும். 4. ** தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. " - சுருக்கம் : கற்பதற் கேற்ப அறிவு மிகும்.

சுருக்கி எழுதல் 3
5. மனிதன் தொட்டிலிற் கிடந்த நாள்தொடக்கம் கட்டை
யில் செல்லும் நாள் வரையில் பகலின் பின் இரவும் இரவின் பின் பகலும் போல மாறி மாறி இன்பமும் துன்பமும் அனுபவித்தல் இயல்பாகும். சுருக்கம் : மனிதன் வாழ்க்கை முழுதும் தொடர்பாய் இன்பமும் துன்பமும் அனுபவித்தல் இயல்பாகும்.
6. )و( பின்வரும் உரைப் பகுதிக்கு ஒரு தலையங்கமிடுக. (ஆ) அதனை மூன்றிலொரு பங்காகச் சுருக்கி எழுதுக.
** மற்றவர்கள் என்ன இடையூறு செய்தாலும் சரி, என் கணவனுக்காக என் வாழ்க்கையைத் தியாகம் செய்வேன்" என்று வாழும் உயர்ந்த மனைவியைப் போல, ** மற்றவர்கள் எங்கள் வாழ்க்கையைக் கெடுக்க எவ்வளவு முயன்ருலும் சரி, என் மனைவிக்காக என் வாழ்க்கையைத் தியாகம் செய்வேன் ' என்று வாழும் உயர்ந்த கணவனைப்போல, காந்தி சமய நெறிக் காகத் தம் வாழ்க்கையைத் தி யாகம் செய்தார். அவருக் குக் கடவுள் என்ரு ல் ஒரு பெயரல்ல : ஒரு வடிவம் அல்ல : உண்மையே கடவுள் என்று உணர்ந்தவர் அவர். ச ம ய ம் என்ரு ல், சில குறிகள் என்றே, சில சடங்குகள் என்றே, சில சொற்கள் என்றே, சில நூல்கள் என்றே அவர் கொள்ளவில்லை. இன்னு செய்யாமை (அஹிம்சை) என்னும் அறத்தையே அவர் சமய நெறியாகக் கொண்டார். உலகத் தொண்டையும் தனி வாழ்க்கையையும் பிரிக்க முடியாதபடி இணைத்துக் கொண்ட அவர் உலகத்தை விட்டு ஒதுங்கவில்லை ; உலகத்தின் பெரும் போராட்டத்திற்கு இடையே நின்று உண்மை என்னும் கடவுளை வழிபட்டு இன்ன செய்யாமல் வாழ்ந்தார். சமயத்துறையில் இவர் பெற்ற பெருவெற்றி இதுதான். அதனுல்தான் அவர் தம்முடைய வாழ்க்கை நூலுக்கு வேறு பெயர் வைக்காமல், சத்திய சோதனை என்றே பெயரிட்டார். தியாகம் செய்வது என்றே துணிந்துவிட்ட கணவனே மனைவியோ குடும்ப இடை யூற்றைக் கண்டு அஞ்சாமல் மகிழ்ச்சியோடு அதற்குப் பலியாக முந்திக் கொள்வதைப் போல், காந்தி அண்ணலும் உலக வாழ்க் கையில் வந்த இடர்களைக்கண்டு ஒதுங்காமல் மகிழ்ச்சியோடு பலியாவதற்குத் துணிந்து நின்ருர், இடர் நெருங்க நெருங்க ஊக்கம் மிகுதியாகக் கொண்டார். சத்தியம் ஒன்றே தம் எதிரில் இருப்பதாகக் கருதினர் , தம்மையும் உலகத்தையும் பொருட்படுத்தாமல் சத்தியத்தையே போற்றினர். உலகத்தா ரின் பழி, புகழ், விருப்பு, வெறுப்பு இவைகளால் அவருடைய மனத்தை மாற்ற முடியவில்லை, உலகமெல்லாம் புகழ்ந்தாலும்

Page 75
'132 தமிழ் மொழி விளக்கம்
மகிழாமல், பழித் தாலும் கவலைப்படாமல், விரும்பினுலும் மயங்காமல், வெறுத்தாலும் துறக்காமல், கொண்ட குறிக் கோளையே பொருளாகப் போற்றினர். இதனுல்தான் அவர் ஒழுக்க இமயமாக வாழ முடிந்தது. இதனுல்தான் அவர் எண்ண மும் சொல்லும் செயலும் ஒரே தன்மையாக இருக்க முடிந்தது. உள்ளத்தில் உண்மை, வாயில் வாய்மை, செயலில் மெய்ம்ை. என்று அவருடைய சத்திய வழிபாடு விளங்கியது.
215 சொற்கள்)
( ? காந்தி அண்ணல் " - டாக்டர் மு. வரதராசனர், ) சுருக்கம் :
காந்தி அண்ணலின் வாழ்க்கை நெறி
என்ன இன்னல் நேர்ந்தாலும் காந்தி தளராது சமயத்திற் காகத் தம் வாழ்க்கையைத் தியாகம் செய்தார். உண்மை யையே கடவுள் என்று போற்றினர். இன்ன செய்யாமையையே சமய நெறியாகக் கொண்டார். உலகத் தொண்டையே தமது வாழ்க்கையாகக் கரு தினர். சத்தியமே குறிக் கோளாக வாழ்ந்தார் என்பதை இவர் தமது நூலுக்கு இட்ட ' சத்திய சோதனை ‘ என்ற பெயரே விளக்குகின்றது. இடரைக் கண் டால் ஊக்கம் மிகுந்து அதை அஞ்சாது எதிர்த்தார். உலகத் தார் உணர்ச்சிகளில் விருப்பு வெறுப்பற்றுத் தமது குறிக் கோளிலேயே கருத்தைச் செலுத்தினர். இதனுல்தான் அவர் உண்மை, வாய்மை, மெய்மை என்ற சிறந்த நெறியில் ஒழுகிச் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடிந்தது. (64 சொற்கள்)
பயிற்சி
(அ) கீழ்க் காணும் ஒவ்வொரு பகுதியையும் மூன்றிலொரு
பங்காகச் சுருக்கி எழுதுக. (ஆ) ஒவ்வொன்றிற்கும் ஏற்ற தலையங்கம் இடுக.
1. பத்திராதிபரின் கஷ்டங்கள் அதிக மென்று சொன் னேன். இக்காலத்தில் தமிழ் நூலாசிரியர் படுங் கஷ்டங்களை ஈசனே தீர்த்து வைக்க வேண்டும். உண்மையான கவிதைக்குத் தமிழ் நாட்டில் தக்க மதிப்பில்லை. இங்கிலிஷ் பாஷையிலிருந்து கதைகள் மொழி பெயர்த்துப் போட்டால் பலர் வாங்கி வாசிக் கிருர்கள் அல்லது, இங்கிலிஷ் முறையைத் தழுவி மிகவும் தாழ்ந்த த ரத் தி ல் பலர் புது நாவல்கள் எழுது கிரு ர் கள். அவர் களுக்கு ம் கொஞ்ச லாபம் ஏற்படுகிறது. தமிழில் உண்மையான இலக்கியத் திறமையும் தெய்வ அருளும் பொருந்

சுருக்கி எழுதல் 33
திய நூல்கள் எழுதுவோர் ஒருசிலர் தோன்றியிருக்கிருர்கள். இவர்களுடைய தொழிலை அச்சடிப்பாரில்லை. அச்சிட்டால் வாங்குவாரில்லை. அருமை தெரியாத ஜனங்கள் புதிய வழியில் ஒரு நூலைக் காணும்போது அதில் ரஸ்மனுபவிக்க வழியில்லை. இங்கிலிஷ் படித்த ஜனத்தலைவர் காட்டும் வழியையே மற்றவர் கள் பிரமாணம் என்று நினைக்கும்படியான நிலைமையில் தேசம் இருக்கிறது. இந்தப் " பிரமாணஸ்தர்கள் தமிழ் நூல்களில் புதுமையும் வியப்பும் காணுவது சாத்தியமில்லை என்ற நிச்சயத் துடன் இருக்கிருர்கள். ஆகவே, நூ லா சிரியர், தமக்குத் தெய்வம் காட்டிய தொழிலிலே மேன்மேலும் ஆவலுடன் பாடு பட வழியில் லாமல், வேறு தொழில் செய்யப் போய் விடு வார்கள்.
காலம் சென்ற ராஜமையர் புதிதாகத் தமிழ்க் கதை எழுது வதில் உண்மையான திறமை காட்டியிருக்கிருர். அவருக்குத் தகுந்த சம்மானமில்லை. ஆதலால், அவர் அந்தத் திறமையை மேன்மேலும் வளர்த்துக்கொண்டு போக இடமில்லாமல் ஆரம் பத்திலேயே கைவிட்டு, இங்கிலிஷ் மாதப்பத்திரிகை நடத்தப் போய் விட்டார். ஜமீந்தார்கள் மீதும் பிரபுக்கள் மீதும், " காமா சோமா " என்று புகழ்ச்சிப் பாட்டுக்கள் பாடினுல் கொஞ்சம் சம்மானம் கிடைக்கிறது. உண்மையான தொழி லுக்குத் தகுந்த பயன் கிடைக்கவில்லை. மேற்படி " பிரமாணஸ் தர் தமிழ் மணத்தை விரும்பாமல் இருந்ததால், இந்த நிலைமை உண்டாய் விட்டது. ஆகையால், இங்கிலிஷ் படித்த தமிழ் மக்கள் - முக்கியமாக, வக்கீல்களும் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும் - தமது வாக்கிலும் மனதிலும் தமிழரசியைக் கொலுவிருக்கும்படி செய்து வணங்க வேண் டு மென்று ம், அதுவே இப்போதுள்ள ஸ்திதியில் தமிழ் வளர்ப்புக்கு மூல சாதன மாகுமென்றும் அறிக்கையிட்டுக் கொள்ளுகிறேன்.
( பாரதியார் கட்டுரை )
2. தமிழ் வசனநடை இப் போது தா ன் பிறந்து பல வருஷமாகவில்லை. தொட்டி ற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால், இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்தப்பாஷை யைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும். கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தம மென்பது என்னுடைய ககF. எந்த விஷயம் எழுதி னலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதின லும் வார்த் தை
சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.

Page 76
134 தமிழ் மொழி விளக்கம்
பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து, அதாவது ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாமல் தனக்கும் அதிக பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித் தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும், சந்தேகமில்லை. ஆனலும், ஒரு வழியாக முடிக்கும்போது, வாய்க்கு வழங்கு கிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது, ஒரு நண்பனிடம் படித்துக்காட்டும் வழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டிவைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்று மில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும். முன் யோசனை யில்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்துவிட்டால் பின்பு சங்கடமில்லை. ஆரம்பத்திலே, மன திலே கட்டி முடிந்த வசனங்களையே எழுதுவது நன்று. உள்ளத் திலே நேர்மையும், தைரியமுமிருந்தால், கை பிறகு தானகவே நேரான எழுத்து எழுதும். தைரியமில்லாவிட்டால் வசனம் தள்ளாடும் சண்டிமாடுபோல ஒரிடத்தில் வந்து படுத்துக் கொள்ளும் ; வாலைப்பிடித்து எவ்வளவு திருகினலும் எழுந் திருக்காது. வசன நடை கம்பர் கவிதைக்குச் சொல் லிய து போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்கும் உடையதாக இருக்கவேண்டும். இவற்றுள் ஒழு க்க மா வது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை. நமது தற்கால வசனநடையில் சரியான ஓட்டமில்லை. தள் ளாட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது. உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக்கொண்டால் கை நேரான தமிழ் நடை யெழுதும்.
( பாரதியார் கட்டுரை ) 3. மே ஞ ட் டி லிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. மேனட்டாரின் கலைகளையும், பூத பெளதிக சாஸ்திரங்களையும், அவர்களிடமிருந்து நாம் கற் றறிதல் வேண்டும். புற உலகைப்பற்றிய விஷயங்களெல்லாம் அவர்களிடமிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டும். ஆனல், சமயத்திற்கும் பாரமார்த்திக ஞானத்திற்கும் அவர்கள் நம் மிடம் வரவேண்டியவர்களாவர்.
வெளி உலகத்துடன் தொடர்பின்றி நாம் உயிர்வாழ முடி யாது. அப்படி வாழ முடியும் என்று எண்ணியது நமது மடமை யாகும். அதற்குரிய தண்டனையை ஓராயிரம் ஆண்டு அடிமை வாழ்வு வாழ்ந்து நாம் அனுபவித்துவிட்டோம். நமது நிலையைப் பிறதேசத்தாரின் நிலையுடன் ஒப்பிட்டுப்பார்க்க நாம் வெளியே போகாததும், நம்மைச் சுற்றிலும் நடத்து வுந்த காரியங்களைக் கவனியாததும், இந்தியர் தாழ் வ ைடந்த தற்கு ஒரு பெரிய

சுருக்கி எழுதல் 135
காரணமாகும். . இந்தியர்கள் இந்தியாவைவிட்டு வெளியே போகக்கூடா தென்பது போன்ற மூடக் கொள்கைகள் குழந் தைத்தனமானவை. அவற்றை மண் டையில் அடித்து விட வேண்டும். எவ்வளவுக் கெவ்வளவு நீங்கள் வெளியே சென்று பிற நாட்டாரிடையே பிரயாணஞ் செய்கிறீர்களோ அவ்வள வுக்கு உங்களுக்கும் உங்கள் நாட்டுக்கும் நன்மையுண்டு. பல நூற்ருண்டுகளுக்கு முன்பிருந்தே நீங்கள் அவ்வாறு செய்துவந் திருந்தால் இன்று இந்நிலையில் இருக்கமாட்டீர்கள். இந்தி யாவை ஆள விரும்பிய ஒவ்வொரு நாட்டாருக்கும் அடிமையாகி இருக்கமாட்டீர்கள்.
என் மகனே! எந்த மனிதனல் எந்தத் தேசமாதல் பிறரைப் பகைத்து உயிர்வாழ முடியாது. என்றைய தினம் இந்நாட்டில் மிலேச்சன் என்னும் வார்த்தையைச் சிருட்டித்தார்களோ, என்றைய தினம் பிறருடன் கலந்து பழகுவதை நிறுத்தினர் களோ, அன்றே இந்தியாவுக்கு அழிவு காலம் தோன்றிற்று. எனவே, எச்சரிக்கை ! அத்தகைய கொள்கைகளை வளர்த்தல் வேண்டாம். வாயினல் வேதாந்தம் பேசுதல் எளிது. ஆனல், வேதாந்தத்தின் மிகச் சிறு போதனை களை யும் செயலில் கொணருதல் மிக அரிது.
( 'நமது தாய் நாடு ? -- சுவாமி விவேகானந்தர் ) 4. உயர்தரக் கல்வியின் உபயோகம் யாது? வாழ்க்கையின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தல் எப்படியெனக் கண்டு பிடிப் பதே. நவநாகரிக உலகின் மிகச் சிறந்த அறிஞர்களின் கவ னத்தை யெல்லாம் தற்போது க வர் ந் திருப்பது இவ்விஷய ւOT (5ւb. ஆனல், நம் தேசத்தில் அதற்குரிய வழி ஆயிரம் ஆயிரமாண்டுகளுக்கு முன்னுலேயே கண்டு பி டி க் கப்பட்டு *விட்டது. ஒழுக்கமளிப்பது, மனேவலிமையைத் தருவது, புத் தியை விசாலிக்கச் செய்வது, ஒருவனைத் தன் வலிமை கொண்டு வரச் செய்வது ஆகிய இத்தகைய கல்வி நமக்கு வேண்டும். மனிதத் தன்மை அளிப்பதே கல்விப் பயிற்சியின் இலட்சியமா யிருத்தல் வேண்டும். அதற்குப் பதிலாக நாம் எப்போதும் வெளிப் புறத்துக்கு மெருகு கொடுப்பதிலேயே ஈடுபட்டிருக்கி ருேம். உள்ளே ஒன்றுமில்லாதிருக்கையில் வெளிப்புறத்துக்கு மெருகிட்டுக் கொண்டிருப்பதால் யாது பயன் ? பண்டைக் க்ாலத்துக் குருகுலங்களைப் போன்ற கல்வி ஸ்தா பனங்கள் தேவை. அவற்றில் மேனுட்டுப் பெளதிக சாஸ்திரத்துடன் வேதாந்தமும் கற்பிக்கப்பட வேண்டும். பிரம் ம ச ரி யம், சிரத்தை, தன்னம்பிக்கை என்னும் அடிப்படைகளின் மீது கல்வி அளிக்கப்படவேண்டும். ஆசிரியன் தான் கற்பிப்பதாக எண்ணு வதினலேயே எல்லாவற்றையும் கெடுத்துவிடுகிருன். g 95@l)

Page 77
136 தமிழ் மொழி விளக்கம்
ஞானமும் மனிதனுக்குள் இருக்கிறதென்று வேதாந்தம் சொல் கிறது. அந்த ஞானம் ஒரு சிறுவனுக்குள்ளும் இருக்கிறது. அதை எழுப்புதலே தேவை, அதுவே ஆசிரியனின் வேலை. சிறுவர்கள் தங்கள் சொந்த அறிவை உபயோகப்படுத்தவும், தங்கள் கால், கை, கண், செவி இவற்றை முறையாகப் பயன் படுத்தவும் தெரிந்து கொள்ளும் அளவில் நாம் அவர்களுக்கு உதவி செய்தால் போதும். மற்ற எல்லாம் தாமே எளிதாகி விடும். உங்களால் ஒரு செடியை வளர்க்க முடியுமா ? அது போன்றே ஒரு குழந்தைக்கு நீங்கள் எதுவும் கற்பித்த ல் இயலாத காரியம். செடி தானே வளர உதவி மட்டுமே நீங்கள் செய்ய முடியும். கல்வி விஷயமும் இவ்வாறுதான். கல்வி என்பது உள்ளிருந்து விகCப்பது. அது தன் இயற்கையினல் வளர்ச்சியுறுகிறது. அதன் வளர்ச்சிக்குத் தடையுள்ளவைகளை நீக்குவது மட்டுமே நீங்கள் செய்யக்கூடியதாகும். நமது நாட் டின் கல்வி முழுதும், பாரமார்த்திகக் கல்வியாயினும் சரி, லெளகிகக் கல்வியானலும் சரி, நம் கையிலேயே இருத்தல் வேண்டும். கூடிய வரையில் தேசீய வழிகளில் தேசீய முறை களிலேயே கல்வியளித்தல் வேண்டும்.
( 'நமது தாய் நாடு " - சுவாமி விவேகானந்தர் ) 5. தமிழகத்தின் சரித்திரத்தை எடுத்துக் கொண்டால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உலகப் பிரசித்தி பெற்றிருந்தார்களென்பது தெரிகிறது. தமிழர்கள் கடல் கடந்து அயல் நாடுகளுடன் வியாபாரம் செய்து வந்தார்கள். தமிழர்களுடைய கொடியானது பல நாடுகளுக்குப் பண்டைத் தமிழர் கலையையும் அறிவு மேம்பாட்டையும் விளங்கக் காட்டி வந்தது. வாணிபத்துக்காகச் சென்றவர்கள் தமிழகத்தின் தூதர்களாகச் சென்று தமிழுலகத்தின் மேன்மையைப் பிற நாடுகளுக்கு அறிவித்துள்ளார்கள். பண்டைக் காலத்தில் தமிழ் மக்கள் பிறநாட்டு வாணிபத்தின் மூலமாகத் தமிழகத்தின் கலை உயர்வை உலகெங்கும் அறிவித்துள்ளார்கள். தமிழகத்தின் கலைத் தூதுவர்களாக அவர்கள் சென்ருர்களே ஒழிய அரசியல் சாம்ராஜ்ய ஆதிக்க எண்ணம் அவர்களுடைய மனதில் உதிக்க வில்லை. சுத்த சமரச சன்மார்க்க நன்மனதையுடைய தமிழர் கள், பிற மதத்தினர்களுக்கும், பிற நாட்டினர்களுக்கும், பிற நாகரிகத்திற்கும் தம் நாட்டில் சம உரிமையோடு வாழ வசதி அளித்தார்கள்.
இப்போதோ பிற நாடுகளில் தமிழர்கள் இருக்கும் துர்ப் பாக்கிய நிலைமையைக் கவனித்தால் அவர்கள் அவமதிக்கப் பட்டு, கேவலப்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். மலேயா வில் தமிழ் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகிறர்கள்.

சுருக்கி எழுதல் 7
இலங்கையில் தமிழ்மக்கள் அரசியல் உரிமையற்றவர்களாக இருந்துவருகிருர்கள். தென் ஆபிரிக்காவில் தமிழ் மக்கள் அடிமைகளாகவும் தீண்டாதார்களாகவும் நடத்தப்பட்டு வரு கிருர்கள். இம்மூன்று நாடுகளிலுமுள்ள இந்தியர் பிரச்னை என்பது தமிழ்மக்களினுடைய பிரச்னைதான். நமது நாடு சுதந் திரம் பெற்றும் நம் நாட்டு மக்கள் பிற நாடுகளில் அடிமைகளாக நடத்தப்படுகிருர்கள், இந்த நிலைமையை மாற்றியமைக்கத் தமிழ் மக்கள் பெருமுயற்சி செய்யவேண்டும்.
தமிழானது மிகப் பழமையான ஒரு மெர்ழி. தமிழ்மொழி பல ஆயிரம் ஆண்டுகளாக ஜீவ வலிமை க்ொண்ட மொழி யாகவே இருந்து வருகிறது. இம்மொழி இன்றும் என்றும் மங்காது நின்று வளர்ந்து முன்னேறி வருவது குறிப்பிடத்தக் கது. பிறநாடுகளுக்குச் சென்று கல்வி கற்ற நம் இளைஞர்கள் நம்முடைய பண்டை நாகரிகம் மற்ற நாடுகளுடைய நாகரி கத்தை விட எவ்விதத்திலும் தாழ்ந்ததல்ல என்று உணர்ந்தார் கள். உணர்ந்து தம்முடைய பண்டைக் கலை உயர்வில் பெருமை கொண்டு இதை உயிர்ப்பித்து வளர்ப்பதற்கு வேண்டிய தீவிர உணர்ச்சியைக் கொண்டார்கள். நாட்டின் பண்டைப் பெருமை யில் கவனம் செலுத்துவதற்குக் காந்திஜியின் கிளர்ச் சிப் போராட்டம் ஒரு பெரிய அளவுக்கு உதவி செய்தது என்று சொல்லலாம்.
( ஐந்தாம் தமிழ் விழாவில், திரு. பி. டி. ராஜன் அவர்கள்
w சொற்பொழிவு )
6. தமிழ் விழாவில் ஒவியம் சிற்பத்துக்கு இடந் தரப் படுவது இதுவே முதல் தடவை. இப்படிப்பட்ட மகத்துவம் முந்தியிருக்கவில்லை. தமிழ்க்கலை கடல் கடந்து செ ல் லு ம் பெருமை பெற்றது. பல்லவர் காலத்தில் அபூர்வ விசித்திர சிற்பங்களை நாம் இன்று கண்டு மகிழ்கிருேம். பல்லவர் காலத் தில்தான் முதன்முதலாகக் கருங்கற்களால் கோயில்கள் கட்டும் முறை ஏற்பட்டது. பல்லவர் காலத்தில் சிற்பக்கலை உன்னத நிலையிலிருந்ததை, சிற்பங்கள் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. கடல் கடந்து தமிழர்கள் சென்று சிற்பக் கலைத்திறனை வெளியிட் டுள்ளனர். யாவா, கம்போடியாவில் பல்லவர் கோயில் முறை யில் கோயில்கள் நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். மஹேந்திரவர்மன் சித்திரவாசலில் ஒவியச்சித்திரங்களை அமைத் துள்ளதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அஜந்தாவிலுள்ள கலையைப் பின் தொடர்ந்ததாக இது இருக்கிறது. இலங்கையில் புகழ்பெற்ற சிகிரியா கோபுரங்கள் இம்முறையில் அமைந் துள்ளன. தொண்டைமண்டலம் ஈழத்திற்குப் பேருதவி கலையில் செய்துள்ளது.

Page 78
38 தமிழ் மொழி விளக்கம்
தமிழ்க் கலைச் சித்திரம் இன்னும் எழுதப்படவில்லை. இது சம்பந்தமாக விரிவான ஆராய்ச்சியை நடத்துவது அவசிய மானதாகும். முத்திரைகள், சிற்பங்கள், விக்கிரகங்கள் முதலி யனபற்றி ஆராய்ச்சி செய்தல் அவசியம். மகெஞ்ஜதாராவின் நாகரிகம் தமிழ் நாகரிகத்திற்கு அடிப்படையாக இருக்கவேண்டு மெனக் கருதப்படுகிறது. எகிப்திய சித்திரம் மகெஞ்ஜதாரா சித்திரம் ஒருவாறு தொடர்புகொண்டு இரு ப்பது பற்றி ஆராய்ச்சி குறிப்பிடத்தக்கது. இம்மாதிரிப் பல விஷயங்களை ஊடுருவி ஆராய்ந்தால் சிற்பத் துறையில் தமிழன் நீண்ட காலத்திற்கு முந்தியே திறனுற்றிருப்பதற்கு வழிகாட்டியாக விளங்கி, நாகரிகம் படைத்தவனுக இருந்துள்ளான் என்பதை நிர்மாணிக்கக்கூடும்.
தமிழ்நாட்டில் கோயில்கள் கலைக் களஞ்சியமாக விளங்கு கின்றன. ஆஸ்தான மண்டபமாக விளங்குகின்றன. கலை, அழகு, அமைப்பு கண்களைக் கவர்கின்றன. பாலித் தீவில் தமிழ் மறையில் ஆகம முறை நடையில் இருக்கிறது. தமிழ்க் கலை பல இடங்களுக்குப் பரவி இருக்கிறது. ஜாவாவில் தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு குடியேறியுள்ளனர். கலை யை ப் பரப்பியுள்ளனர். இலங்கையில் நல்லூர், வட்டுக்கோட்டை, திருநெல்வேலி என ஊருக்குப் பெயர்கள் இருக்கின்றன. பல கட்டிடங்கள் சோழர்கள் கட்டிடங்களாகக் காணப்படுகின்றன. தமிழர்கள் கடல் கடந்து நாகரிகம் கலாச்சாரத்தைப் பரப்பிய வரலாறு பெரும் வரலாருகும். இந்திய நாகரிகத்தை வெளி நாடுகளில் பரப்பியவர்கள் யார் என்று ஆராய்ச்சி செய்தால் தமிழர்கள் என்று காண முடியும்.
தமிழ்க்கலை வளர்ச்சிக்குத் தமிழ் மக்களின் தெய்வ பக்தியே காரணமாகும். நாகரிகத்திற்கு உயர்ந்த தன்மை இருந்திருப்ப தற்கு அடிப்படை மக்களின் தெய்வ பக்தியே. கிடைத்தற் கரிய நம் கலைப் பொக்கிஷத்தைப் பாதுகாக்க வேண் டு ம். நாஸ்திகம் வந்துவிட்டால் கலை போய் விடும். பக்தி, கலை வளர்வதற்கு உயிர்நிலை.
( ஐந்தாம் தமிழ் விழாவில், இலங்கைத் தபால், தகவல் இலாகா மந்திரி
திரு. சு. நடேசபிள்ளை அவர்கள் சொற்பொழிவு) h
7. அக்காலத்தில் கணவனும் ம ன வி யுமாக இருந்து செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருக்கும் வாழ்க்கை சிறப்புடையதாக விளங்கியது. கணவனும் மனைவியும் வாழ்க் கைக் கல்வியைக் கற்பதற்கு விருந்தோம்பல் ஒரு நன்னூலாக இன்றியமையாததாக இருந்தது. ஆகவே அக்காலத்துச் சமூக அமைப்பிற்கு உரிய நற்றுணையாகவும் இருந்தது. வி ரு ந் து

சுருக்கி எழுதல் − 39
என்பது புதுமை. ஒரு காரணம்பற்றி ஊர்க்குப் புதியவராய் வந்த வெளியார்க்கு உணவு முதலியன தந்து காக்கும் விடுதிகள் அந்நாளில் இல்லை. பண்டமாற்று நிலவிய காலம் ஆதலின், பழகாத ஒருவரிடம் சென்று காசு முதலியன கொடுத்து வேண் டிய உதவி பெறும் வாய்ப்பும் அந்நாளில் இல்லை. உணவுக்குத் தேவையான அரிசி முதலியவற்றை ஊர் ஊ ரா ய் உடன் கொண்டு செல்லுதல் துன்பம் தரும் சுமையாக இருந்தது. போக்கு வரவுக்கு உரிய பொறிகளும் நலன்களும் குறைந்து பெரும்பாலோர்க்குக் கால்நடையே பெருவழக்காக இருந்த அக் காலத்தில் பெருஞ் சுமையைத் தாங்கி நெடுந்தொலைவு நடந்து செல்வது துன்பத்திலும் துன்பமாக இருந்திருக்கும். ஆதலின், உணவுப் பொருளை மூட்டை கட்டிச் செல்லுதல் இயலாத ஒன் ருக இருந்தது. அரசர்க்கும் பெருஞ் செல்வர்க்கும் ஊர்திகள் பல இருந்தமையாலும் அவர்கள் அவ்வாறு உணவுப்பொருளை உடன்கொண்டு சென்றிருத்தல் கூடும். மற்றவர்கள், செல்லும் ஊரை நம்பியே நடந்து சென்றிருப்பர். அத்தகைய சமூகத்தில் விருந்தோம்பல் ஒரு தனி அறமாய் விளங்கியது. குடும்பத் தார்க்கும் நாட்டின் உறவையும் அறிவையும் வளர்த் துத் தந்தது; நாட்டு மக்களுக்குள் உட்பிணைப்பையும் அன்பையும் வளர்த்துப் போற்றியது. விருந்தோம்பும் நல்ல அறத்தால், புது முகங்களைக் கண்டு முகமலர்ந்தும், புது மொழிகள் கேட்டு இன்சொல் வளர்த்தும், பசித்துன்பம் போக்கி இன் புற்றும், நாட்டுச் செய்திகளைக் கேட்டு இன்சொல் வளர்த்தும், அறிவு பெற்று வாழும் பேறு அக்காலத்தவர்க்கு இருந்தது. அதனல், வாழ்க்கைக்கு அடிப்படையான அன்பையும் அறிவையும் வளர்க் கும் வாயிலாக விருந்தோம்பல் விளங்கியது.
* ஒவச் செய்தி " - டாக்டர் மு. வரதராசனுச்
(p ն
8. இன்று, உலகம் சுருங்கிச் சுருங்கி எல்லார்க்கும் எட்டுவ தாகிவிட்டது. குடும்பத்தினுள்ளும் உலகமே நுழைந்து இட மெல்லாம் கொண்டுள்ளது. உலகம் வேறு, குடும்பம் வேறு என்று எல்லை வரையறுத்தலும் அரிதாகிவிட்டது. போக்கு வரவுக் கருவிகளும் செய்தித்தாள்களும் வானெலி முதலியன -வும் உலகத்தை மிகச் சுருக்கிவிட்டன; உலகத்தை எல்லோர்க் கும் எட்டும் நிலையில் அமைத்துவிட்டன. வீட்டில் ஒரு மூலை யில் இருந்தவாறே, பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பா லிருந்து பேசுவோரின் பேச்சை அந்த நொடியிலே கேட்க முடிகிறது : 'நெடுந்தொலைவில் நிகழும் நிகழ்ச்சியை நிகழும் நேரத்திலேயே காணவும் முடிந்திருக்கிறது. பரந்த பெரிய உலகின் மூலை முடுக்குகளின் செய்தி எல்லாம் அன்றன்றைக்கே வீட்டினுள் இருந்தவாறே தெளிவாகவும் பிழையின்றியும்

Page 79
140 தமிழ் மொழி விளக்கம்
செய்தித்தாள்களைக் கையிலேந்திக் கற்று அறிய முடிகிறது. இவற்ருல், வீட்டின் எல்லையில் உடல் இருந்தாலும், உலகச் சூழலில் உள்ளம் வாழ நேர் கி றது. இவ்வாறு அறிவியல் முன்னேற்றம், வீட்டு மனத்தை விரிவுபடுத்தி உ ல கத்தோடு பிணைத்துவிட்டது.
இதன் பயணுக விளைந்தது என்ன ? பழங்காலத்தில் ஒருவன் கண்டறிந்தனவும் கேட்டறிந்தனவும் சிலருடைய இன்பமும் துன்பமுமே. இக்காலத்தில் ஒருவன் காண்பனவும், கேட்பன வும் மிக மிகப் பலருடைய இன்பமும் துன்பமுமாகும். 66p ருடைய வாழ்க்கையை மட்டும் கண்டு அவர் களின் இன்ப துன்பங்களை உணர்ந்த காலத்தில் மனம் பண்படும் வாய்ப்பு மிகுதியாக இருந்தது ; அறிவு வளரும் வாய்ப்புக் குறைவாக இருந்தது. உள்ளொன்று புறமொன்ற க நடிக்கத் தெரியாத நிலை இருந்தது. இன்பம் உணர்ந்து அமைதி பெற வாய்ப்பு இருந்தது. ஆயின், மிகப் பலருடைய வாழ்க்கையை அறிந்து அவர்களின் இன்ப துன்பங்களை உணரும் இக்காலத்தில், மனம் பண்படும் வாய்ப்புக் குறைந்து விட்டது அறிவு வள ரும் வாய்ப்பு மிகுந்துவிட்டது. உள்ளொன்று புறமொன்ருக நடிப் பதில் தேர்ச்சிபெற முடிகிறது. எவ்வளவு இன்ப நலங்கள் பெறினும் அமைதி கிடைத்தல் அரிதாகிறது. பிறர் துன்பம் கண்டு உருகும் தன்மை குறைகிறது. சுருங்கக் கூறின், அக் காலத்தில் பெரும்பாலோரின் மனம் குழையும் தளிர் போல் மென்மையுற்று உணர்வுருவாக இருந்தது. இக்காலத்தில் அது மிகச் சிறுபான்மையோரின் தன்மையாகிவிட்டது; பெரும்பா லோரின் மனம் உரமான காழ்போல் வன்மையுற்று மரத்து விட்டது.
(* ஒவச் செய்தி " - டாக்டர் மு. வரதராசஞரர் ) 9. மற்றவர்கள் காந்தியைப் போல் ஆக முடியவில்லையே என்ரு ல், அவரைப்போல் உணர்ந்து எண்ண்வில்லை என்று கூற வேண்டும். இயற்கைப் படைப்பில் கழுத்து நீளவேண்டும் என்று ஒட்டைச்சிவிங்கி விரும்பியதைப்பெற்றது; வாய் நீண்டு திரள வேண்டும் என்று யானை வேட்டத்தைப் பெற்றது ; அலகு. வளைய வேண்டும் என்று கிளி தன் தேவையைப் பெற்றது ; இவ்வாறே ' எண்ணிய எண்ணியாங்கு எய்துப " என்று திரு. வள்ளுவர் கூறியது அஃறிணை உயிர்களிடத்திலும் உண்மையாக இருக்கக் காணலாம். ஆகவே, மக்கள் உறுதியாக உணர்ந்: தால் ஏன் அடைய முடியாது ? பொன்னையும் பொருளையும் போகத்தையும் பலரும் விரும்பி எண்ணுகின்ருர்களே, அவர்கள் எண்ணியவற்றைப் பெறவில்லையே என்று கேட்கலாம். பொன் னும், பொருளும், போகமும் படைப்பில் தனியுடைமையாக

சுருக்கி எழுதல் 4
அமைந்தவை அல்ல ; அவை எல்லோர்க்கும் பொதுவானவை எல்லோரும் பகிர்ந்து பெற்று வாழ விரும்பினுல் அந்த எண்ணம் படைப்பின் அமைப்புக்குப் பொருத்தமான எண்ணம். அதுவே நிறைவேறக் கூடியது. அதைவிட்டுத் தன்னலத்தோடு பொன் னும் பொருளும் போகமும் பெற எண்ணுவது, ஒட்டைச்சிவிங்கி தன் கழுத்து நீளவேண்டும் என்று விரும்பாமல் மர ங்கள் எல்லாம் தான் இருக்கும் இடத்திற்குத் தலை கீழாக வரவேண் டும், அப்போதுதான் தளிர்கள் தன் வாயினுள் நுழையும் என்று விரும்புவதைப் போன்றதே ஆகும். ஆகவே, இவ ற் றை எல்லார்க்கும் பொதுவாகக் கொண்டு நுகர எண்ணும் எண்ணம் ஒன்றே எய்தக்கூடிய எண்ணமாகும். பொருள் முதலியவற்றை விட்டு, அன்பு, அடக்கம், புறங்கூருமை, கள்ளாமை, இன்ன செய்யாமை, வெகுளாமை முதலிய அறப் பண்புக்களை யாரா வது விரும்பியும் பெருமல் ஏமாற்றம் அடைந்தார் க ளா ? இல்லை. இந்த அற முறை ப் படி, காந்தியும் விரும்பினர் : பெற்ருர். இவ்வாறே இதற்குமுன் விரும்பி முயன்றவர்கள் எல்லோரும் பெற்றிருக்கின் ருர்கள். இன்னும் இவ் வாறே பெறமுடியும். ஆனல், எண்ணுவோர் குறைவு ; எண்ணி உணர்வோர் மிகக் குறைவு, அறம் என்றும், நன்னெறி என்றும், சமயம் என்றும் வாயால் சொல்வோர் பலர். ஆனல், பணத்தையும் பதவியையும் புகழையும் உள்ளத்தில் நாடுகின் முர்கள். அவற்றை நாடி அலையும் வேட்கையை இத்துறையில் திருப்பினர்களா?. இல்லை. காந்தியோ சத்தியம் அஹிம்சை இந்த இரண்டையுமே போற்றி மற்றவற்றைப் பற்றிக் கவலை இல்லாமல் இருந்தார். எதை உள்ளத்தில் உணர்ந்தாரோ அதையே வாழ்க்கையில் உறுதியாக நாடினர் ; உழைத்தார். ஆகவே, எண்ணிய எண்ணியாங்கு எய்தினர் : வாழ்க்கைத் து ய்மை பெற்ருர்,
(** காந்தி அண்ணல்" - டாக்டர் மு. வரதராசனர் )
10. உலகில் இன்று இரண்டு சக்திகள் இருக்கின்றன. ஒன்று மேற்கத்திய ஐரோப்பிய சக்தி; மற்றென்று ஆசிய சக்தி. ஒன்று விஞ்ஞான சக்தி மற்றென்று ஆத்மா ர்த்த சக்தி. ஐரோப்பிய நாடுகள் விஞ்ஞான அறிவுத்துறையில் மகத்தான சாதனைகள் புரிந்திருக்கின்றன. அதிமேதைகள் பலரை உல குக்கு வழங்கியிருக்கின்றன. இந்த ஆசிய சக்தியும் ஐரோப்பிய சக்தியும் ஒன்றுபட்டால், புதிய மனித சமுதாயம் உருவாகும். விஞ்ஞான சக்தியும் ஆத்மார்த்த சக்தியும் இணைந்தால், உலகம் ஒரு குடும்பமாகும். ኴው
இன்பம் வேண்டாதவர் எவராவது உண்டா ? இல்லை. அதற்கு வழி என்னவெனில் மனத்தூய்மை பெறுவதேயாகும்.

Page 80
42 தமிழ் மொழி விளக்கம்
மனத் தூய்மை பெற்ருல் மன அமைதியேற்படும். அமைதி பிறந்தால் இன்பம் பொங்கும். அந்த இன்பம் அறத்தால் வருகிற இன்பம். அந்த இன்பமே சிறந்த இன்பமா கும். " மனத்துக்கண் மாசில ஞதல் அனைத்தறன் " என்று திருவள்ளு வர் கூறியிருக்கிறர். ஹிட்லர் குண்டு போட்டு ஆள நினைத் தான் ; அழிந்தான். துரியோதனனும் அப்படித்தான் அழிந் தான். சாந்தத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொள் ளாத எந்த முறையுமே இப்படித்தான் அழியும்.
போரில் தோல்வியடைந்து எட்னு தீவில் அடைபட்டுக் கிடந்த நெப்போலியன் தன்னுடன் இரண்டு புத்தகங்கள் வைத் திருந்தான். ஒன்று சோக நாடகம் ; மற்றென்று ஹாஸ்ய நாடகம். தன்னுடைய வாழ்வு ஒரு பக்கம் பார்த்தால் இன்ப மானதாகவும் மற்ருெரு பக்கம் துன்பமானதாகவும் இருப்பதை நெப்போலியனே கடைசி நாளில் உணர்ந்து எழுதியிருக்கிருன்,
எந்தக் காலத்திலும் வாள்வெற்றி நீள்வெற்றியாக இருந்த தில்லை. புத்தரும், யேசுவும், காந்தியும் பெற்றது ஆத்ம வெற்றி நிலையான வெற்றி. மனித வாழ்வின் குறிக்கோள் ஆத்ம சோதனைதான். அதனை உணராமல் வாழ்வைச் கழிப்பது, பன்றிக்கு முன் சிந்த ப்பட்ட முத்தைப் போன்றதேயாகும். அன்புடைமை, தூய்மை, வாய்மை ஆகியவைகளே கடவுள் உருவம். மனம், வாக்கு, காயம் ஆகியவற்றில் பரிசுத்தமா யிருத்தலே புனித வாழ்வுக்கு வழி.
wm (யோகி முறி சுத்தானந்த பாரதியார் ) 11. தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் தமிழை வளர்க்க முனைந் துள்ளார்கள். வளர்ச்சி, இயற்கை வளர்ச்சி, செயற்கை வளர்ச்சி என இருவகைப்படும். செயற்கை வளர்ச்சி மனிதன் முயற்சியால் ஏற்படுவது. அது விழுந்துவிடலாம். ஆன ல், இயற்கை வளர்ச்சியோ வளர்ந்துகொண்டு போகும். இது பற்றி வியாக்கியானங்களைப் பெரியோர் எழுதியுள்ளனர்.
தமிழ்மொழி சிறப்புற வேண்டுமென்பது சகலரின் அவாவும் ஆகும். உலகம் முழுவதிலும் அது பரவுதல் வேண்டும் என்ருல் அது சாத்தியமா? சேக்கிழார் முதல் பாரதி வரை சகலரும் உலகிற்கெனப் பொதுக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மொழிக்கு எல்லையுண்டு. ஆனல், கருத்துக்குக் கிடையாது ; பண்பாட்டிற்குக் கிடையாது. இவை எங்கும் பரவலாம். நூல் களில் பொதிந்து கிடக்கும் அரிய கருத்துக்களை உலகெங்கும் பரப்புதல் வேண்டும். இதுவே கடமை. திருக்குறள் மேல் நாட்டிலும் சிறப்புள்ளது. அதேபோல் இதர நூல்களின் கருத்

சுருக்கி எழுதல் 卫43
துக்கள் உலகெங்கும் பரவுதல் வேண்டும். ஆங்கில ம் போல வர்த்தக மொழியாக, எதேச்சாதிகார மொழியாக உலகி ல் பரவத் தமிழுக்கு இயலாது. தமிழ் மொழியைத் துரு வித் துருவிப் பார்த்தால் சோஷலிஸம் காணப்படுவதை அறியலாம். அந்த ஒளி அறத்தால் திளைத்தது. எதேச்சாதிகாரத்திற்கு இடம் கிடையாது. பிறர் கடமையைக் கவரும் இயல்பு இருந் திருந்தால் தமிழ் என்ருே செத்திருக்கும்.
ஒரு நல்ல அறத்தை வளர்க்கும் மொழி நம் தமிழ் மொழி. அதன் கருத்தை வளர்த்துப் பெருக்கிக்கொண்டு செல்லவேண் டும். கருத்து வேற்றுமை யுள்ளபோதுதான் வளர்ச்சி ஆக்கம் பெறும். பொருமைக்கு இடமளிப்பது கூடாது. அதுவே வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகிறது.
4A திருவள்ளுவர் காமத்துப்பாலில் கூறும் காதல், ஆண்டாள், திருப்பாவையில் காணப்படும் காதல், அன்பை அ டி ப்ப  ைட யாகக் கொண்டது. தமிழ்க் கொள்கைக்கு உயிர்நாடி இக் காதல். இது முதிர்ந்தால் கடவுள் அன்பாகிறது. ஒரு எல்லை யைத் தாண்டிவிட்டால் வேற்றுமைகள் மறைந்து விடுகின்றன. ஆகவே, இதற்கு இக்காதலை உயிர்ப்பிக்க வேண்டும். ஜாதி மதம், நிற வெறிக்குக் கட்டுப்பா டி ல் லாத து இக்காதல். இதனுல் ஒழுக்கம் செழுமையுறும், நிலை வளமுறும். ஆகவே, இக்காதலை உயிர்ப்பிக்க எவரும் முயற்சி செய்தல் வேண்டும். இது தெய்வத்தினிடம் கொண்டுபோய் விடும்.
(ஐந்தாம் தமிழ் விழாவில், திரு. வி. கலியாணசுந்தர
முதலியார் அவர்கள் சொற்பொழிவு)
12. சேவை உணர்ச்சி புகுத்தப் பெற்ருற்ருன் வாழ்க்கை உன்னத நோக்கத்தை நிறைவேற்றுகிறது. அன்பும் தியாகமும் உள்ள வாழ்வின் நறுமணமே சேவை. வாழ் க் கை யே ஒரு முயற்சியாக லின் வேலை செய்வதே வாழ்க்கையின் உண்மை இயல்பு. தொழில், அன்பினுல் ஊக்கப்பெற்ருல் அத்தொழிலே சேவை யெனப் பெயர் பெறும். * உண்மையான சேவை தூய. அன்பாலும் கருணையாலும் செய்யும் தொழிலாகும். இப்படிச் செய்யும் தொழில் வாழ்வை விடுதலை அடையச்செய்து அதை நித்திய இன்பத்தால் நிறைக்கும். அன்பே கடவுள், கடவுளே அன்பாகலின், உனது வாழ்வின் செயல்களனைத்தையும் தூய அன்பின் காணிக்கையாக, அன்பு பூர்த்தியடைவதற்காகவே செய்யவேண்டும்.
தாய் தன்னலமில்லா அன்பினுல் சேவையின் ஆனந்தத்துக் காகவே தன் குழந்தையின் சேவையில் ஈடுபடுகிருள். இந்தச்

Page 81
卫4星 தமிழ் மொழி விளக்கம்
சேவை பிரதிபலனைக் கருதாது. சேவை செய்வதிலேயே திருப்தி ஏற்படுகிறது. அதனல், சேவையிலேயே வாழ்வின் மேலான இன்பம் நிலவுகிறது. தனது குழந்தைக்கு அன்னையைக் கருத்தோடு பூரண சேவை செய்ய ஏவும் அன்பின் சக்தி, வாழ்க்கையிலே உலகமுழுவதற்காகவும் செய்யும் செயல்களிலே புகுந்தால், வாழ்வு உண்மையான விடுதலையும் அனைவர்க்கும் செய்யும் இன்பகரமான சேவையும் அடங்கியதாக் இருக்கும். இங்கு சேவை, தியாக்ம் என்பவைகளால் ஏற்படும் கஷ்டங்கள், தைரியமாகச் சகிக்கப்படுவதோடு, அவை தூய இன்ப உணர்ச் சிகளாகவே மாற்றப்பட்டுவிடுகின்றன.
வாழ்வின் மாட்சியே உலகில் விளங்கும் உயிர்கள், பொருள்க ! ளனைத்திலும் வியாபித்துள்ள இறைவன் பணிக்காக அர்ப் பணிக்கப்பட்டால், வாழ்க்கை எவ்வளவு ஆன ந் த மா கத் தெய்வீகமாக மாற்றப்பட்டுவிடும். உலகத்தையும் அதிலுள்ள வற்றையும் பற்றிய தத்துவம், ஓர் உண்மை, ஒர் உயிர் என்பதே. இந்த உண்மை அறிவுக்கேற்ப, மனித வாழ்வை இசைப்பதே தெய்வீக அன்பு. w
( சுவாமி இராமதாஸ் )
13. உபாயம், தந்திரம், கபடம் முதலிய சீர்கேடான சக்திகளினின்றும் விடுதலையுற்ற மனதோடு, தேசங்கள் எல்லாம் உண்மையான நிலையான இலட்சியத்தை அடையும் பொருட்டு ஒன்று சேர்ந்தால்தான் உலக சமாதானம் சாத்தியமாகும். அதிகாரம், ஆட்சி முதலான ஆவல்களால் உறுதிபெற்ற சுய நலம், உலகக் கூட்டுறவு அல்லது உலக சமாதான வுணர்ச்சியை உண்டாக்கும் ஏதுவாக ஒருபோதும் இருக்க முடியாது. சங்கங் கள், மகாநாடுகள், ஒப்பந்தங்கள் எல்லாம் பூமியிலுள்ள வெவ் வ்ேறு தேசத்தினர்க்கு இடையில் சிநேக உணர்ச் சி நிலவ வேண்டும் என்னும் எண்ணத்துடன் ஆக்கப்பட்டன. ஆனல், நாம் காணுமளவில், உலகத்திலே சமாதானத்தையும் நல்லெண் ணத்தையும் நிலைநாட்டுவதற்கேற்ற சூழ்நிலையை உண்டாக்கு வதில் அவை தவறிவிட்டன. உலகின் பல்வேறு மக்களையும் சகோதரத்துவமெனும் பொதுவான உணர்ச் சியா ல் ஒன்று படுத்துவதற்காகக் குறிக்கப்பட்ட இம் ம கா நா டு களினதும் ஒப்பந்தங்களினதும் நோக்கம் ஆரம்பத்திலேயே பரஸ்பர அயம், அவநம்பிக்கை என்ற உறுதியான கொள்கையில் நிலைநாட்டப் பட்டது என அறிகிருேம். தேசங்களுக்கிடையில் ஏற்ப டு ம் சச்சரவுகளையும் போர்களையும் தடுக்கும் பொருட்டுக் கூடும் பிரதிநிதிகள் பேரறிவாளர்களாயிருந்தாலும், மனித வர்க்கம் முழுவதன் நன்மையையும் மனதில் கருதும்படியான பரந்த

சுருக்கி எழுதல் 148
நோக்கமுடையவர்களல்லர். இம்மகாநாடுகள் கூடப்படுவதின் நோக்கம் நிறைவேறவேண்டுமாயின் தோழமை, சிநேக மனப் பான்மை முதலியன நீடித்து நிலைப்பதற்கு ஏற்படும் தடைகளைப் பற்றிய நேர்மையான விவாதங்கள் இத்தகைய மகாநாடுகளில் முக்கிய இடம் பெறவேண்டும்.
உலக சமாதானப் பத்திரத்தை உருவாக்குவதற்குப் புத்தி சாலிகளான மக்கள் சேர்ந்து ஆலோ சித்தால் மாத்திரம் போதாது. இத்தகைய ஆலோசனைகளில் அறிவாளரும் பங்கு பற்ற வுேண்டும். உண்மையான உள்ளாராய்ச்சியும் அறிவும் உடைய மக்களை வெளிக்கொண்டுவரும் பொறுப்பு உலகின் பல் வேறு தேசங்களிலும் வசிக்கும் கணக்கற்ற சனங்களைச் சார்ந் தது. இவ்வளவி காலமும் தங்கள் பொதுவாழ்வு, பாதுகாப்பு முதலியவ்ற்றுக்கு உழைப்பதற்கு எல்லா வகையிலும் தகுதி யற்றமக்களின் கைகளில் தங்கள் விதி ஒப்படைக்கப்பட்டிருந்தது என்பதை அவர்கள் அறியவேண்டும். இது, இத்தகைய தலைவர் களின் குற்றமன்று. அவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் பிரகாசிக்க முடியாத பீடத்தில் ஏற்றிய பொதுமக்களையே அக் குற்றம் சார்ந்தது. இம்மயக்கத்திலிருந்து உலகம் பலமுறை விழிப்புற்றது. செவ்வனே சித்தப்படுத்தப்படாத இத்தகைய கண்மூடித்தனமான பக்தி செலுத்திக்கொண்டிருத்தல் மடைத் தனத்தின் உச்சநில்ையாகும். ஆதலின், முக்கியமாகப் பொது மக்கள், பழைய அனுபவங்களின் அறிவைக்கொண்டு தற்போ
தைய தேவைக்குத் தகுந்தவர்களாக எழல் வேண்டும்.
(சுவாமி இராமதாஸ் )
14. கவியுணர்ச்சி ததும்பி வழியும்போது, அதனை வெறும் உணர்ச்சி வெள்ளமாக ஓடிப் பாழாய் ஒழிய விடுதல் ஆகாது. வெள்ளத்தினை அணைகட்டி மடை வழியே வயலிற் பாய்ச்சினல், நீண்ட நாள் அதன் பயனைப் பெறலாம். குதிரையை ஒடவிடு வோர், அது போகுமிடம் எ ல் லாம் போக விடுவதில் லை; கடிவாளமிட்டுச் சேணமிட்டு அதன் ஒட்டத்தினை ஒரு முறைப் படுத்தித் தாம் விரும்பியபடி ஒட்டித் தாம் விரும்பும் இடம் போய்ச் சேருவர். அப்படியே கவி வெள்ளத்தினை அணைகட்டித் தேக்கி மடையிற் பாய்ச்ச வேண்டும். இலக்கியக் குதிரை ஓர் ஒழுங்கிற்கு அடங்கி வரும்படி, இலக்கணக் கடிவாளம் இட்டு ஒட்டிக் கவி இன்பமாம் முடிவிடம் சேரவேண்டும். யாப்பிலக் கணம் முதலியன இத்தகைய கடிவாளங்களாகும். சீர், தளை முதலியனவே கவி வெள்ளத்திற்குக் கட்டும் அணைகளாம் ; மடைகளாம். ஆனல், குதிரையின் வயதிற்கும் வன்மைக்கும் தக்கபடி கடிவாளம் இடுதல் வேண்டும். எளிய மெ லிந்த
10

Page 82
A. se O தமிழ் மொழி விளக்கம்
குதிரையின் மேல் தாங்க முடியாத சேணம் இட்டால் கால் எடுத்து வைக்கவும் முடியாமல் அது தரைமேல் அழுந்திவிடும். பின் ஒட்டம் ஏது? போருக்குப் போகும் போது போடும் சேணத்தை, உலாப்போகும்போது போடுவது. உண்டோ ? அதுபோலப் பாவலன், தான் பாடவரும் பொருளுக்கும் இடத் திற்கும் காலத்திற்கும் தக்கபடி யாப்பிலக்கணத்தினை அமைத் துக்கொள்ளவேண்டும். ஆனல், ஓட் இடம் இருந்தால் அன்றே, பின் அதனை ஒழுங்குபடுத்த இடம் உண்டு ? ஓடமுடியாதபடி கட்டு திட்டங்கள் எழுந்தால் பின்னர் எதனை ஒழுங்குபடுத்து வது ? வெள்ளமே இல்லாத கட்டாந்தரையில் அணை கட்டி யாது பயன் ? பாட்டு வெள்ளம் பாயும்போது அது பாய உரிமை வேண்டும். அப்படிப் ப்ாயவிட்டபின், அஃது ஒழுங்கிற் கிணங் கப் பாயுமாறு மடைகோலவேண்டும். உரிமை இன்றி, ஒழுங்கு எழ இடம் இல்லை. ஒழுங்கு இல்லையானல், உரிமை எல்லாம் வீணே பாழாகும். ஆதலின், ஒழுங்கும் கட்டு திட்டமும் இருந்தால் மட்டும், பாட்டு வளங்கொழித்து இன்பமூட்டும் என்பதும் சரி அன்று. கட்டு திட்டம் இல்லாத பா ட் டே சிறந்தது என்பதும் சரியன்று. முன் எல்லாம் ஒழுங்கினையும் யாப்பிலக்கணத்தினையும் வற்புறுத்தி வந்தனர் ; உயிர் போன தும் அறியாமல் பிணத்தை மூடிப் பேணி வந்தனர். இது கண்ட பின்னேர், உணர்ச்சி ஒன்றனையே பொருள் எனக் கொண்டு கட்டுதிட்டம் இல்லாத பாட்டே உண்மைப் பாட்டு என மன் ருடத் தொடங்கினர். இந்த இருவகைக் கொள்கைகள் எவ்வா ருஞலும், இவர்களில் சிறந்தவர்களுடைய பாடல்களை உற்று நோக்கினல் உரிமையும் ஒழுங்கும் ஒத்துநடக்கக் காண்போம்.
( பிறந்தது எப்படியோ ? " - பேராசிரியர் தெ. பொ. மீளுறட்சிசுந்தரனுர்)
15. மனிதனும் முக்கண்ணன்தான். அறிவு ஒரு கண் ; அறம் ஒரு கண் அழகுதான் நெற்றிக்கண். இன்ப அனுபவமே இந்த அழகு. கற்கண்டினை நாவிலிட்டுச் சுவைப்பதுபோலத் தன்னலமான அனுபவம் அன்று இது. கற்கண்டு தின்பதெல் லாம் கலையனுபவமாகாதது இதனுல்தான். ந ள வீம பாகம் எல்லாம் விலங்கின் கலையே அன்றி மக்கட் கலையல்ல. ஆனல், விலங்கும் அறியாத விலங்கின் கலை, மக்கள் வளர்த்த விலங்கின் கலை. பாட்டிலே அழகன்றி வேறு ஒரு நாட்டமும் இல்ல்ை : அறிவு நாட்டமும் இல்லை பயன் நாட்டமும் இல்லை , ஊதிய நாட்டமும் இல்லை காண்பதனைக் கண்டு களிப்பதே உண்டு. களிப்பது உடல் மட்டுமன்று மகிழ்ச்சி, உள்ளத்திலும் ஊறு கிறது : இன்பம், உயிரிலும் பாய்கிறது. அனைத்தும் ஒன்றன அமைதி ஒளிர்கிறது. முழுநிலை அனுபவம் அது.

சுருக்கி எழுதல் I4.
அந்த அனுபவம் சீனி தின்பது போல வெறும் நுகர்ச்சியாக இருந்தால் வெறும் கனவாகும். பாட்டு எழுவது எங்கே? உள்ளே எழும் அனுபவம் பொறுக்க முடியாததாகிறது வெளி யிட்டால்தான் ஆறுதல் உண்டாகும் போலத்தோன்றுகிறது; பாடுகின்றன் பர்வலன். பாவாணரது அனுபவம் இவ்வழியாக நமக்கு இன்ப அனுபவமாகிறது. அனுபவ நிலை எப்போதும் ஒர் உணர்ச்சி நிலையேயாம். ஆதலின், உண்ர்ச்சி ததும்புவதே பாட்டு. உணர்வின் வல்லார் அணிபெறச் செய்வதே செய்யுள் : வெறும் அறிவு அன்று சுவைஞரது அனுபவத்தில் தோய்ந்த ஈர நெஞ்சின் ஒளியே உணர்வு. அந்த உணர்வின் வல்லோரே பாவாணர்; ஆனல், உணர்ச்சி மட்டும் பாட்டாகாது. மகன் இறந்தது கேட்ட தாயின் மனத்தில் துன்ப உணர்ச்சி பொங்கு கிறது. அழுகை அடைத்துக்கொண்டு வருகிறது; அழாது இருக்க முடியவில்லை அழுகிருள். இது பாட்டா ? இது வெறும் அழுகை. அழுகை வேறு, அழுகைப் பாட்டு வேறு. அணிபெறச் செய்வன செய்யுள். கலைத்திறம் வேண்டும். இது தான் வெளிப்பாட்டுத்திறம் செய்யுளியற்றும் ஆற்றல், அடித்துக்கொண்டு அழுவதில் அழு கை யின் கொந்தளிப்பே உண்டு. பொன்னைக் காய்ச்சி உருக்கிவிட்டால் போதுமா ? அஃது ஒரு வடிவம்கொள்ளுமாறு வார்க்கவேண்டும். உணர்ச்சி யும் ஒரு பாட்டு வடிவம் பெற்றுப் பாட்டாக வெளிவர வேண் டும். உணர்ச்சியை அமைதி நிலையில் திரும்ப நினைப்பதே பாட்டு என்பர் பெரியார். அழுகையில் ஒரு முறையும் ஒழுங்கும் புகு மானுல் அஃது ஒப்பாரிப் பாட்டாக அமைகிறது; அணிபெறச் செய்த செய்யுளாகிவிடுகிறது.
( பிறந்தது எப்படியோ ? - பேராசிரியர்
தெ. பொ. மீளுறட்சிசுந்தரஞர்)

Page 83
卫48 தமிழ் மொழி விளக்கம்
_9957 Tub XIX
உரைநடை Si Suid GFuius6io (Paraphrasing)
தமிழ் நாட்டவர் இரவல் வாங்கிய மேலை நாட்டு மொழிப் பயிற்சிகளுள், உரைநடை ஆக்கம் செய்தல்" என்ற பயிற்சியும் ஒன்ருகும். ஆகவே, " உரைநடை ஆக்கம் என்பதின் பொருளை நன்கு அறியவேண்டுமெனின், இச்சொற்ருெடருக்கு மூலமாக இருக்கும் "Paraphrasing’ என்ற ஆங்கிலச் சொல்லை ஆராய வேண்டும். இந்த ஆங்கிலப் பதம் " நேரான வாக்கியம் " (Equivalent Sentence) என்று பொருள்படும் கிரேக்க பதத்தி லிருந்தும் ஆக் கப்பட்டது. எனவே, " உரைநடை ஆக்கம் செய்தல் என்பது ' உயர்ந்த இலக்கிய நடையில் ஒருவரால் எழுதப்பட்ட ஒன்றின் முழுப்பொருளையும் வேருெருவர் தம் முடைய சொந்த இயற்கையான நடையில் மாற்றி அமைப்பது ” என்று பொருள்படும்.
1. உரைநடை ஆக்கப் பயிற்சி தரும் பயன்கள்
(அ) இப்பயிற்சிக்கு இன்றியமையாமல் வேண்டப்படுவது விளக்கம். சிலர் ஓர் உரைப் பகுதியையோ (Prose) அல்லது செய்யுளையோ (verse) வாசிப்பார்கள். ஆனல், அவர் க்ள் தங்கள் மனத்தை அதில் ஊன்றிப் பதிய வைப்பதில்லை. உரை நடை ஆக்கப் பயிற்சி, படிப்பதில் மனத்தைப் பதிய வைப்ப தோடு அமையாது, பதிய வைத்ததினல் விளக்கமாகப் படிக்கும் பயிற்சியையும் பயக்கின்றது. உரைநடை ஆக்கத்திற்கெனக் கொடுக்கப்பட்ட ஒரு பகுதியை ஊன்றிப் படித்துத் துருவி ஆராய்ந்து பொருளை விளங்கினலன்றி உரைநடை ஆக்கம் செய்வது இயலாததாகும்.
(ஆ) எழுத்து வன்மை ஒருவருக்கு இருக்கிறதென்றல், அவர் தாம் எடுத்துக்கொண்ட பொருளை எவரும் எளிதில் விளங்கக்கூடிய முறையில் எழுதும் இயல்பு பெற்றிருக்க வேண் டும். தான் படித்து விளங்கிக்கொண்ட பொருளை, மற்றவர்க ளும் படித்து இலகுவாக விளங்கக்கூடிய எளிய, இனிய நடையில் எழுதும் சிறந்த பயிற்சியை உரைநடை ஆக்கம் செய்தல் அளிக் கின்றது. இதனல், ஒருவர் இலக்கணம், மொழிமரபு முதலிய முறைப்படி எழுதக் கற்றுக்கொள்ளுகிருர்,
(இ) ஒருவர் தாம் அறிந்ததை எழுதுவதற்கு மாத்திர மல்லாது, அதை ஏற்ற முறையில் விளக்கி எழுதும் முறை யைப் பயில்வதற்கும் உரைநடை ஆக்கப் பயிற்சி உதவுகின்றது. ஒருவர் பயன்படுத்திய பலவகைப்பட்ட அணிகள் (Figures of

உரைநடை ஆக்கம் செய்தல் 49
Speech), கரடுமுரடான நடை, விளக்கமற்ற பகுதிகள் முதலிய வற்றை உரைநடை ஆக்கம் செய்வோர் தகுந்த முறையில் விளக்கி வைக்கவேண்டும்.
உதாரணமாக :
* கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்த்வே லேந்த லினிது " என்ற திருக்குறளை உரைநடை ஆக்கம் செய்கையில், " காட்டி லோடும் முயலைத் தவருமல் எய்த அம் பை ஏ ந் த லினும் யானையை எறிந்து தவறிய வேலை ஏந்துதல் மேலானது " என்று எழுதிஞல், புலவர் எடுத்துக்கொண்ட பொருள் நன்கு புலப் படாது போகின்றது. இங்கு புலவர் எடுத்தாண்ட உவமேயம் விளக்கப்படவில்லை. இச் செய்யுளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 'பிறிது ழ்ொழிதல்" என்ற அணி விளக்கப்பட்டாலன்றி உரை நடை ஆக்கத்தின் நோக்கம் கைகூடாது. ஆகவே இது, " வலி யில்லாதானை எதிர்த்துக் கொல்லுதலைவிட, வலியுடையான எதிர்த்துத் தோல்வியடைந்தாலும் அது மேலானது " என்று விளக்கப்படல் வேண்டும். இந்தச் சிறப்பான பயிற்சி உரை யாசிரியர்களுக்கு மிகவும் வேண்டற்பாலது.
11. சிறந்த உரைநடை ஆக்கத்தின் இயல்புகள்
உரைநடை ஆக்கம் என்பது ஒருவித மொழிபெயர்ப்பாகும். ஆனல், அது ஒரு மொழியிலிருந்து வேருெரு மொழியில் பெயர்த்து எழுதப்படுவதன்று ஒருவரின் நடையை, உரை நடை ஆக்கம் செய்வோரின் சொந்த நடையில் பெயர்த்து எழுதுவதாம். எங்ங்னம் மொ ழி பெயர் ப் புக் குக் கருத்து வேறுபாடின்மையும், விளக்க மும் இன்றியமையாதனவோ, அங்ங்னமே இவ்வியல்புகள் சிறந்த உரைநடை ஆக்கத்திற்கும் அவசியமாகும். ஆகவே, உரைநடை ஆக்கம் செய்கையில் மூலப்பகுதியின் முழுப் பொருளையும் தவருது எழுதுவதல்லா மல், பொருளை விளங்கவைக்கவும் வேண்டும்.
உதாரணமாக :
அவன் நிலை இருதலைக் கொள்ளியினுள் ளெறும்பொத் திருந்தது " என்பதை உரைநடை ஆக்கம் செய்கையில், இரு பக்கங்களிலும் தீப்பற்றிக்கொண்ட குழாய்க்குள் எறும்பு அகப் பட்டால் அது தப்பிக்கொள்ள ஒரு வழியுமில்லாமல் எங்ங்னம் தத்தளிக்குமோ அதேபோல, அவன் தன் துன்பங்களை நீக்குவ தற்கு ஒரு வழியும் காணுமல் வருந்தினன் " என்று விளக்கி எழுதல் வேண்டும்.

Page 84
麓50 தமிழ் மொழி விளக்கம்
சில இடங்களில் பயன்படுத்தப்படும் தடயுடலான நடையை மாற்றி எளிமையாக எழுதுவதற்கு, சுருக்கமாகக் கூறவேண்டி யும் வரும். உதாரணமாக : " நாற்பக்கமும் கடலாற் சூழப் பட்டு நடுவணமைந்த பூமியில் வாழ்ந்த குபேரன் போன்றவன், தினமும் பகலவன் தனது பிரயாணத்தைத் தொடங்குமுன்னரே, நெற்றி வியர்வை நிலத்திற் சிந்த உழைக்கப் புறப்படுவான்" என்ற பகுதியை விளங்க வைக்க வேண்டுமானல், “ தீவிலே வாழ்ந்த பெருஞ் செல்வன் அதிகாலையிலேயே உடம்பை வருத்தி உழைக்கப் புறப்படுவான் " என்று சுருக்கமாகக் கூறவேண்டியும் நேரிடும்.
மேற்காட்டிய உதாரணங்களிலிருந்தும் இரண்டு முறை களைக் கவனிக்கவேண்டும். முதலாவதாக, உரைநடை ஆக்கத் திற்காகக் கொடுக்கப்பட்ட மூலப்பகுதியிலுள்ள கருத்துக்கள் எதையும் சிறிதளவேனும் கூட்டியோ குறைத் தோ கூறல் ஆகாது. உள்ளதை உள்ளவாறே உரைக்கவேண்டும். இரண் டாவதாக, பொருளை விளங்க வைக்க முயலும்போது, மூலப் பகுதிக்கேற்ப, உரைநடை ஆக்கம் சுருக்கமாகவோ விரிவாகவோ அமையும்.
சிறந்த உரைநடை ஆக்கத்தின் இன்னுமொரு இயல் பு தொடர்ச்சியாகும். கொடுக்கப்பட்ட மூலப்பகுதி செய்யுளாக அமையின், சில வரிகளுக்கிடையில் தொடர்ச்சி வெளிப்படை யாக இல்லாது இருக்கலாம். ஒவ்வொரு வரி வரியாக எடுத்து அப்படியே உரைநடை ஆக்கம் செய்தால் அது உரைநடை ஆக்கம் ஆகாது. வரிகளின் கருத்தையும் தொடர்ச்சியையும் நன்கு ஆராய்ந்து, வரிகளை ஏற்றமுறையில் தொடுத்துப் பொருளை ஒன்றுபடுத்தித் தொடர்ச்சியாக எழுதினலே உரைநடை ஆக்கம் விளக்கமாக அமையும்,
உதாரணமாக :
** இச்சைபோல் இருந்து வாழ ஈப்புழு எறும்பும் கோரும் உச்சமாம் மனித ஜென்மம் சுதந்தர உணர்ச்சி யின்றி நச்செனும் அடிமை வாழ்வை நயந்திட ஞாய முண்டோ : நிச்சய சபதம் பூண்டு சுதந்தரம் நிலைக்கச் செய்வோம். '
(ஆஸ்தான கவிஞர் நாமக்கல் வே. இராமலிங்கம்பிள்ளை) என்ற செய்யுளை எடுத்துக் கொள்வோம். இதில் முதல் வரிக் கும், இரண்டாம் மூன்ரும் வரிகளுக்கும், நான்காம் வரிக்கும் தொடர்பு வெளிப்படையாக இல்லை. இந்தத் தொடர்ச்சியை, கீழ்க்காணும் உரைநடை ஆக்கத்தில் தடிப்பான சொற்களால் விளக்கப்பட்டிருப்பதைக் காண்க.

உரைந்டை ஆக்கம் செய்தல் I , II
அறிவிலே குறைந்த ஈ, புழு, எறும்பு முதலிய பிராணி களே தமது விருப்பப்படியே வாழ முயலும்போது, படைப்பிலே உயர்வான மனிதன் சுதந்திர உணர்ச்சியில்லாமல் வெறுக்கத் தக்க அடிமை வாழ்வை விரும்ப நியாயமில்லை. ஆகவே, நாம் திடமான சபதம் செய்து சுதந்திரத்தை நிலைநாட்டுவோமாக."
இங்ங்ணம் தொடர்ச்சியாக் எழுதுவதற்கு, செய்யுளின் சொற் கருத்தும் ஆக்கியோன் எடுத்துக்கொண்ட பொருளும் நன்கு புலப்படவேண்டும். இது சுலபமான காரி யம ல் ல. இதற்கு, தெளிந்த உள்ளமும், நிறைந்த கவனமும், சிந்திக்கும் ஆற்றலும் அமையவேண்டும். இவற்றின் உதவியோடு, செய் யுளின் முழுப்பொருளையும் உணர்ந்து தொடர்ச்சியாக எழுதின லன்றி, சிறந்த உரைநடை ஆக்கத்தைப் பெற முடியாது. உரைநடையாக்கத்தில் எவ்வித குறிப்புகளையும் தனியாக எழுது தல் ஆகாது. இவையெல்லாம் தொடர்புகாட்டி விளக்கப்பட்டு உன்ரநடை யாக்கத்தினின்றும் வேருகாமல் ஒருங்கே அமைக்கப் படல் வேண்டும்.
இத்தகைய இயல்புகள் வாய்ந்த உரைநடை ஆக்கம் சிறந்த தமிழ்நடையில் அமையுமானல், தெளிவும் விளக்கமும் பெற்று வாசிப்போருக்கு இன்பம் பயக்கும். சிறந்த உரைநடை யாக்க மெனின், மூலப்பகுதியை வாசிக்காமலே அ ைத ஒரு வர் வாசித்து விளங்கிக்கொள்ளல் வேண்டும்.
II. செய்யுளை உரைநடை ஆக்கம் செய்யும்போது கவனிக்க
வேண்டியன:
ஒரு செய்யுளின் வடிவம், உணர்ச்சி, கற்பனை, சொற் சுவை முதலியவற்றையெல்லாம் உரைநடை ஆக்கம் மூலமாக வெளி யிடுதல் முடியாது. செய்யுளின் போக்கே தனி ப் பட்டது. ஆகவே, 'உரைநடை ஆக்கத்தில் செய்யுளின் கருத்தை அல்லது பொருளை மாத்திரமே வெளியிடலாம். இங்ங்ணம், வெளியிடும் போது செய்யுள் நடையும் உரைநடை ஆக்கத்தின் நடையும் வேறுபடும். இவ்வேறுபாடுகளை ஆராய்வாம்.
1. செய்யுளில் பொருள் தொடர்பாகக் கூறப்படாமல்
இருக்கலாம். ஆனல், உரைநடை ஆக்கத் தி ல் பொருள் தொடர்பை வருவித்துக்கொள்ளல் வேண்டும். இதனல்தான் உரைநடை ஆக்கம் விளக்கம் பெறும். இதன் விரிவை, இந்த அதிகாரத்தில் " சிறந்த உரைநடை ஆக்கத்தின் இயல்புகள் " என்ற பகுதியில் காண்க.
2. உரைநடை ஆக்கத்தில் பொருள் தொடர்பைக் காட்டுவ தற்காகச் சில சொற்களை வருவித்துக்கொள்வதல்லாமல், செய்யுள் வரிகளின் ஒழுங்கையே மாற்றி அமைக்க வேண்டியும் நேரிடும்.

Page 85
52 தமிழ் மொழி விளக்கம்
உதாரணமாக :
** ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திர மடைந்து விட்டோமென்று '
(u ir rgeuuari)
என்ற பாட்டு வரிகளை அப்படியே உரைநடை ஆக்கம் செய்தால் பொருள் தொடர்பு இல்லாமல் போய்விடும். ஆகவே, இரண் டாவது வரியை முதலாவதாக மாற்றி, " மகிழ்ச்சியைத் தரு கின்ற சுதந்திரத்தைப் பெற்றுவிட்டோமென்று பள்ளுப்பாடி நாங்கள் ஆடுவோமாக ’ என்று உரைநடை ஆக்கம் செய்ய வேண்டும். இதைப் போலவே, உவமைகள் பின்னுக்குத் தரப் பட்டிருப்பின் அவற்றை முதலில் விளக்கியே பின்னர் அவை குறிக்கும் உவமேயப் பொருளை விளக்கல் வேண்டும்.
3. சில இடங்களில் பொருளை விளங்க வைப்பதற்குச் செய்யுள் வரிகளிலுள்ள சொல் ஒழுங்கை மாற்றவும் நேரிடும்.
உதாரணமாக :
*" கற்க கசடறக் கற்பவை கற்றபி
னிற்க வதற்குத் தக ""
(திருக்குறள்) என்ற செய்யுளை உரைநடை ஆக்கம் செய்யுமுன்னர், சொற் களின் ஒழுங்கை மாற்றி, ' கற்பவை கசடறக் கற்க, கற்ற பின் அதற்குத் தக நிற்க " என்று அமைக்க வேண்டும்.
4. செய்யுளில் வரும் சில சொற்களோ அல்லது சொற் ருெடர்களோ தற்காலத்தில் எழுதப்படும் சாதாரண உரை நடையில் பொதுவாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். உரைநடை ஆக்கம் செய்யும்போது, இந்தச் சொற்களையோ சொற்ருெடர்களையோ நீக்கி, இன்று பொதுவாகப் பயன்படுத் தப்படும் சொற்களைச் சேர்க்கவேண்டும். உதாரணமாக : ஞமலி, தெங்கு, எயில், பனுவல், வெண் கொற்றக்குடையோன், கட்செவி, கேண்மதி என்ற சொற்களை முறை யே, நாய், தென்னை, கோட்டை, புத்தகம், அரசன், பாம்பு, கேட்பாயாக என்று மாற்றி எழுதல் வேண்டும்.
5. செய்யுளில் வரும் கேள்விகள், வியப்புப் பொருள்கள் முதலியன உரைநடை ஆக்கத்தில் பொருளை விளக்கும் முறை யில் வலியுறுத்தும் வாக்கியங்களாக ஏற்ற வாறு மாற்றி அமைக்கப்படல் வேண்டும். .. ''

உரைநடை ஆக்கம் செய்தல் 53
உதாரணமாக
* சாதி இரண்டல்லால் வேறுளதோ ? - ஒளவைத்
தாயின் உரையும் மறந்தீரோ ! "
(கவிமணி சி. தேசிக விநாயகம்பிள்ளை) என்ற செய்யுளில் வேறுளதோ ? " என்ற கேள்வியும், " மறந் தீரோ ! " என்ற வியப்புப் பொருளும் அமைந்திருக்கின்றன. வேறுளதோ ? ? என்ற கேள்வி எதிர் ம றை யில் வந்தது. ஆகவே, உரைநடை ஆக்கம் செய்யும்போது இது வேறில்லை " என்று மாற்றப்பட்டு வலியுறுத்தப்படல் வேண்டும். இதே போல, மறந்தீரோ ! " என்ற வியப்புப் பொருள், மறந்தது அதிசயத்திற்குரியது" என்று விளக் கப்பட ல் வேண்டும். ஆகவே, செய்யுள் வரிகளை, " சாதி இரண்டல்லால் வேறில்லை என்ற தாய்க்குச் சமானமான ஒளவையின் மொழியை நீங்கள் மறந்தது அதிசயத்திற்குரியது ' என்று உரை ந டை ஆக்கம் செய்யலாம்:
6. எடுத்துக்கொண்ட பொருளை, படிப்போர் மனத்தில் நன்கு பதிய வைக்கவும், ஏற்ற உணர்ச்சியைப் பெருக்கவும், உவமை, உருவகம் போன்ற அணிகள் செய்யுளில் பயன்படுத் தப்படும். இவற்றை விரித்து உரைநடை ஆக்கம் செய்யும் போது விளக்கவேண்டும்.
உதாரணமாக :
** பஞ்செரி யுற்ற தென்ன அரக்கர்தம் பரவை யெல்லாம் வெஞ்சின மனிதர் க்ொல்ல விளிந்ததே. "" (கம்பராமாயணம்) என்ற செய்யுட்பகுதியில் பஞ்செரி யுற்ற தென்ன ? என்ற உவமையையும் (Simile), பரவை (சமுத்திரம் ) என்ற உருவ கத்தையும் (Metaphor) காணலாம். உருவகத்தை உவமையாக மாற்றிப் பின்னர் விளக்க வேண்டும். " அரக்கர்தம் பரவை ? என்பதைப் " பரவை போன்ற அரக்கர் " என்ற உவமையாக மாற்றிப் பின்னர் உரைநடை ஆக்கத்தில் விளக்கம் செய்ய வேண்டும். ஆகவே, இச்செய்யுள் வரிகள் • பஞ்சில் தீப்பற்றி ஞல் அது எவ்வளவு சுலபமாக எரிந்து சாம்பலாகுமோ அதே போல, கொடுங் கோபத்தையுடைய மனிதர் கொல்ல, சமுத் திரம் பரந்திருப்பது போன்று எங்கும் பரந்திருந்த அரக்கர் பெருங்கூட்டம் எளிதில் இறந்துபட்டது " என்ற உரைநடை ஆக்கத்தைப் பெறும். (வேருேர் உதாரணத்தை, இதே அதி காரத்தில், உரைநடை ஆக்கப் பயிற்சி தரும் பயன்கள் " என்ற தலைப்பின் கீழ்க் காண்க.) இது போன்றே மற்றைய அணிகளை
யும் பொருளுக்கு ஏற்ப விளக்கி எழுத வேண்டும்.

Page 86
及54 தமிழ் மொழி விளக்கம்
மாதிரிப் பயிற்சி
1. கீழ்க்காணும் செய்யுளை உரைநடை ஆக்கம் செய்க. உமது சொந்த நடையில் எழுதுக) :
தமிழருக்குக் கருணை எண்ணம்
தாயின் பாலில் தந்தது குமிழை யொத்த உயிரை நல்ல
கொள்கைக் கீய முந்திடும் அமுத மொத்த காந்தி மார்க்கம்
தமிழ கத்தின் செல்வமாம் நமது சேவை அதனை ஏந்தி
நாட்டி லெங்கும் சொல்வதாம்.
(ஆஸ்தான கவிஞர் நாமக்கல் வே. இராமலிங்கம்பிள்ளே)
உரைநடை ஆக்கம் செய்யுமுன்னர், செய்யுளை நன்கு விளங்கவேண்டும். முதலில் செய்யுளின் பொதுவான கருத்தை அறிந்துகொள்வோம். முதல் இரண்டு வரிகள் ஒரு தொடர் பான பொருளையும், அடுத்த நான்கு வரிகள் இன்னுமொரு தொடர்பான பொருளையும், கடைசி இரண்டு வரிகள் வேருெரு தொடர்பான பொருளை யும் தருகின்றன. இந்த மூன்று பிரிவுகளிலுமுள்ள முக்கியமான மூன்று கருத்துக்களாவன : (1) தமிழருக்குக் கருணை உண்டு (2) காந்தி மார் க் கம் தமிழகத்தின் செல்வம் (3) அதனை நாட்டிலெங்கும் சொல்லல்.
இந்த மூன்று கருத்துக்களையும் தொடர்புபடுத்தினுலன்றி, செய்யுளின் கருத்தை நன்கு விளங்கிக்கொள்ள முடியா து. ஆகவே, இவற்றைத் தொடர்புபடுத்தின், “ தமிழருக்குக் கருணை இருப்பதாலும், காந்தி மார்க்கம் தமிழகத்தின் செல்வமாகை யாலும், இதனை நாட்டிலெங்கும் சொல்வோமாக ' என்ற பொதுக் கருத்து அமையும்.
இனி, செய்யுளிலுள்ள விவரங்களை ஆராய்வாம். முதலில், முதல் இரண்டு வரிகளையும் நோக்குக. சொற்களின் ஒழுங்கு மாற்றப்பட வேண்டியதில்லை. " தாயின் பாலில் தந்தது என்ற புலவரின் ஆழ்ந்த கருத்தை விளங்கிக்கொள்ளல் வேண்டும். * தாயின் பாலில் தரப்பட்டது" என்று அதை அப்படியே உரை நடை ஆக்கத்தில் திருப்பி எழுதின் பொருள் விளக்கம் இல்லா மல் போய்விடும். ஆகவே, இதை விளக்கி, ' பிறப்பிலேயே அமைந்தது" என்று எழுதல் வேண்டும். .

உரைநடை ஆக்கம் செய்தல் 155
அடுத்த நான்கு வரிகளில் வரும் " காந்தி மார்க்கம் தமி ழகத்தின் செல்வம்" என்ற கருத்தை நோக்குக. காந்தி மார்க் கம்" என்ற சொற்ருெடர், "தமிழகத்தின் செல்வம்" என்ற அ டை மொழியைத் தவிர, " அமுத மொத்தது “ என்றும், * உயிரை நல்ல கொள்கைக்கீய முந்திடும் " என்றும் விவரிக்கப் பட்டிருக்கின்றது. மேலும், " உயிர் " என்ற சொல் "குமிழை ஒத்த என்ற உவமையையும் பெற்றிருக்கின்றது. ஆகவே, இவை விளக்கப்படல் வேண்டும். அமுத மொத்த " என்பது * பெறுத்ற்கரிய என்று பொருள்படும். ' குமிழை ஒத்த என்ற உவமை, " நீரில் குமிழி தோன்றி எங்ஙனம் சிறிய கால அளவில் மறையுமோ, அதேபோல நிலையில்லாத உயிர் " என்று விளக்கப்படல் வேண்டும். ஈதல் " என்ற சொல், இங்கே " தியாகம் செய்தல் " என்று பொருள்படும்.
கடைசியாக அமைந்துள்ள இரண்டு வரிகளிலுள்ள விவரங் களை அறியுமுன்னர், அவற்றிலுள்ள சொற்களை உரைநடை ஆக்கத்திற்கு ஏற்றதாக மாற்றி எழுதல் வேண்டும். " நமது சேவை அதனை ஏந்தி நாட்டிலெங்கும் சொல்வதாம் " என்ற செய்யுள் ஒழுங்கு " அதனை ஏந்தி நாட்டிலெங்கும் சொல்வது நமது சேவை என்று உரைநடை ஒழுங்கிற்கு ஏற்ற முறையில்
மாற்றப்படல் வேண்டும். * ஏந்தி " என்ற சொல் இங்கே * கையில் ஏந்தல் " என்று பொருள்படாது. இது " போற்றுதல்" என்றே பொருள்படும். * சொல்வது மாத்திர மல்ல அது
* நமது கடமை " என்ற விவரத்தையும் சேர்த்துக்கொள்ளல் வேண்டும்.
இதுவரையில், உரைநடை ஆக்கம் செய்வதற்குக் கொடுக் கப்பட்ட செய்யுளின் பொருள், தொடர்ச்சி, விவரங்க ள் முதலியவற்றை ஆராய்ந்தோம். இனி இவற்றைத் தொடுத்து எழுதினல் "சிறந்த உரைநடை ஆக்கத்தைப் பெறலாம்.
உரைநடை ஆக்கம் :
தமிழருக்குக் கருணை பிறப்பிலேயே அமைந்ததாலும், நீர்க்குமிழி தோன்றி எங்ங்ணம் சிறிய கால அளவில் மறை யுமோ அதே போன்ற நிலையற்ற உயிரை நல்ல கொள்கைக்குத் தியாகம் செய்வதற்காக முற்படுகின்ற பெறுதற்கரிய காந்தி மார்க்கம் தமிழகத்தின் செல்வமாகையாலும், அதனைப் போற்றி நாட்டிலெங்கும் பரப்புவது நமது கடமையாகும். «፡

Page 87
56 தமிழ் மொழி விளக்கம்
2. ( இராமாயணப் போரில் இறந்த இராவணன் உடம் பெங்கும் இராமபாணம் துளைத்திருப்பதைக் கண்ட அவன் மனைவி மண்டோதரி புலம்பி அழுதல். )
வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த
திருமேனி மேலுங் கீழும் எள்ளிருக்கு மிடமின்றி யுயிரிருக்கு மிடநாடி யிழைத்த வாருே கள்ளிருக்கு மலர்க்கூந்தற் சானகியை மனச்சிறையிற் கரந்த காதல் உள்ளிருக்கு மெனக்கருதி யுடல்புகுந்து தடவியதோ வொருவன் வாளி.
sasuh Lu prir erausruh) உரைநடை ஆக்கம் :
வெள்ளைநிற எருக்க மலரை அணிந்த சடைமுடியையுடைய சிவபிரான் உறையும் கைலாய மலையைத் தூக்கியது இராவண னுடைய அழகிய உடம்பு. இந்த உடம்மை எங்கும் எள்ளுப் போடவும் இடமில்லாதது போல மிக நெருக்கமாகத் தாக்கி உள்ளே உயிரிருக்கின்ற இடத்தைத் தேடித்தான் ஒப்பற்ற இராமனுடைய அம்பு சென்றதோ ? அல்லது, தேன் பொருந் திய மலரையணிந்த கூந்தலையுடைய சானகியை இராவணனின் மனமாகிய சிறையில் ஒளித்து வைத்தற்குக் காரணமான காதல், அவனுடைய உடம்புள் இருக்குமென்று அதை ஒழிப்பதற்குத் தான் அம்பு சென்று தடவியதோ ? எதுதான் காரணமோ தெரியவில்லை.
பயிற்சி
குறிப்பு: உரைநடை ஆக்கத்திற்குரிய பயிற்சியை செய்யுள் நயம் கூறல்” என்ற அதிகாரத்தின் கீழ்க் காண்க.

செய்யுள் நயம் கூறல் I57 அதிகாரம் XX
GFufusir Bund -p6o (The Appreciation of Poetry)
* செய்யுள்,நயம் கூறல்" என்பது ஒரு செய்யுளின் சிறப்பை எடுத்துக் காட்டுதல் என்று பொருள்படும். இதைத் " திறன் sigel, uŭ 35 ĝi) o (Criticism) என்றும் கூறலாம்.
செய்யுள் என்பது இன்னதுதான் என்று வரைவிலக்கணம் (Definition) கூறுவது வலிதாகும். எனினும், செய்யுளின் பொது வான தன்மையைக் கூறலாம். ஒரு புலவனின் உள்ளத்தில் ஒரு கருத்தோ அல்லது பல கருத்துக்களோ இயல்பாக உணர்ச்சி வசமாய் ஊற்றெடுக்கும்போது செய்யுள் பிறக் கின்றது (A spontaneous flow from the heart). g)fö5 ad 6001 ti igaoui gyug-ü படையாகக் கெரண்டு, அசை, சீர், தளை, அடி முதலியவற்றல் ஆக்கப்பட்டது செய்யுள். இது செய்யுளின் பொதுவான இயல்பாகும். செய்யுள் நயம் கூறுவதற்கு ஒருவர் செய்யுளின் சிறப்பியல்புகளை அறிந்திருக்க வேண்டுமாகையால் இவற்றை ஆராய்வாம்.
செய்யுளில் வெளிப்படையாகத் தோற்றும் இயல்பு ஒத்திசையாகும் (Rhythm). இதுவே, செய்யுளுக்கும் உரை நடைக்குமுள்ள முக்கிய வேறுபாடாகும். ஒரு செய்யுளின் ஒத்திசை அளவுபட்டுச் செல்லும் கால நிகழ்வை அடிப்படை யாகக் கொண்டது. இதற்கு, அடுத்தடுத்துவரும் ஒலியழுத் தமே காரணமாகும். குறில், நெடில் முதலிய உயிரெழுத்துக் களைக் குறித்த ஒரு கிரமத்தில் தொடர்பாகப் பயன்படுத்துவ தால் இந்த ஓசை நயம் பிறக்கும். சிறந்த செய்யுளை உரத்து வாசிக்கும்போது ஓர் இன்பமான் ஒசை தொனிக்கும். கீழ்க் காணும் செய்யுளை நோக்குக :
"" தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளன்ன
ஓங்குகுலம் நையவதன் உட்பிறந்த வீரர் தாங்கல்கட னகுமது தாக்கவரு தீச்சொல் நீங்கல்கட னகுமெதி ரென்றெழுந்து போனன் **
(சீவக சிந்தாமணி). இதில், தானதன தானதன தானதன தான என்ற மெட் டுடன் கூடிய ஒத்திசையைக் காணலாம்.
ஒசைக்கு ஏதுவாக இருக்கும் இன்னுமோர் இயல்பு எதுகை (Rhyme) யாகும். மேற்காட்டிய செய்யுளின் நான்கு வரிகளிலு முள்ள முதற் சொற்களை நோக்குக. தூங்கு ", " ஒங்கு ’,

Page 88
58 தமிழ் மொழி விளக்கம்
" தாங்கல் ", " நீங்கல் " என்ற சொற்களிலே வரும் " நீ " என்ற எழுத்து, செய்யுளைப் படிக்கும்போது ஓசை நயத்தைப் பிறப்பிக் கின்றது. இந்த ஓசையே எதுகை " எனப்படும்.
ஒசை நயத்திற்குக் காரணமாய் அமையும் இன்னுமொரு இயல்பு " மோனை (Alliteration) எனப்படும்.
உதாரணமாக :
*" துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை '
(திருக்குறள்)
என்ற செய்யுளில் * து" என்ற எழுத்தைக் கொண்டு தொடங் கும் சொற்களை நோக்குக. இங்ங்ணம் ஒரே எழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் அடுத்துவரின் மோனை எனப்படும்.
மோனை எதுகையுடன் கூடிவரும் ஒத்திசை, முன்பு விளக்கப் பட்டதுபோல், ஓசை நயத்திற்காக மாத்திரம் பயன்படுத்தப் படுவதில்லை. சில இடங்களில் ஒத்திசை பிறப்பிக்கும் ஒசை, அந்தச் செய்யுள் உணர்த்தும் உணர்ச்சிக்கு அல்லது சுவைக்கு ஏற்றதாக அமைந்திருக்கும். இங்கே ஒத்திசையும் செய்யுளின் சுவையும் ஒன்றுபடும். இது செய்யுளின் ஒரு தனிச் சிறப் பாகும். உதாரணமாக, பஞ்சவடியில் வாழ்ந்த இராமனில் சூர்ப்பநகை மையலுற்று அவன் எதிரே சென்ற காட்சியைக் கம்பர் கீழ்க்காணும் செய்யுளில் படம் பிடிக்கின்ருர்,
** பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும் வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்"
இராமனை மயக்குவதற்காக அழகு புனைந்து அன்னம்போல் அசைந்து சென்ருள். இவளின் அசைவையும் மென்னடையை யும் ஒத்திசை உணர்த்துகின்றது. " தந்தனன த ந் தன ன தானனன தான " என்ற ஒத்திசை சூர்ப்பநகையின் அசைவை யும், அத்தோடு கூடிய பஞ்சி, விஞ்சு, அனுங்க, செஞ்செவிய, கஞ்சம், அஞ்சொல், மஞ்ஞை, அன்னம், மின்னும், வஞ்சி, நஞ்சம், வஞ்சம், வந்தாள் என்ற சொற்களிலமைந்த மெல் லொற்றுகள் மென்னடையையும் புலப்படுத்துகின்றன. இதே போன்று, துரியோதனனின் கோப உணர்ச்சியை (வெகுளிச் சுவை) ஓர் இடத்தில் எடுத்துக்காட்ட வந்த வில்லிபுத்தூரர்,

செய்யுள் நயம் கூறல் 59
* பூபால ரவையத்து முற்பூசை பெறுவார் புறங்கானில் வாழ்
கோபால ரோவென் றுருத்தங் கதித்துக் கொதித்
தோதினன்
என்று ஏழுதி, " உருத்தங் கதித்துக் கொதித் தோதினன்" என வல்லொற்று மிக்கு வரும் சொற்களால்" வெகுளிச் சுவையைப் புலப்படுத்தினர்.
இசைக்காகப் பயன்படுத்தப்படும் அடுக்குச் சொற்கள் (Repetition of words) செய்யுளில் வேருெரு பயனையும் தரலாம்.
* சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்ரும்
திருப்பெருந் துறையுறை சிவனே "
(திருவாசகம்) என்ற செய்யுட் பகுதியில் * சென்று சென்று என்பதும், * தேய்ந்து தேய்ந்து " என்பதும் ஒசைக்காக மாத்திரம் அமைந்த அடுக்குச் சொற்களல்ல. உலகப் பொருள்களெல்லாம் மிகுதி யாகச் சுருங்கியும் மிகுதியாகத் தேய்ந்தும் சிவனுடன் கலக் கின்றன என்று பொருட்களின் சுருக்க மிகுதியையும் தேய்தல் மிகுதியையும் உணர்த்துவதற்கே, மணிவாசகர் * சென்று சென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்ரும் " என்று பாடினர். இத்தகைய அடுக்குச் சொற்களோ அல்லது சொற்ருெடர்களோ செய்யுளின் இயல்புகளுள் ஒன்ருகும்.
ஒத்திசை, எதுகை, மோனை, சொல்லடுக்கு முதலியன மாத்திரம் செய்யுளாகாது. இவை மாத்திரம் காணப்படின் அது உயிரை இழந்த உடலுக்குச் சமானமாகும். இந்த அமைப்பை வெறும் பாட்டு (Verse) என்று கூறலாமேதவிர உயர்ந்த செய் யுள் (Poetry) என்று கூறமுடியாது. ஆகவே, செய்யுளுக்கு உயிர் போன்றது புலவனின் கருத்துக்களாகும். செய்யு ள் பெறும் கருத்துக்களின் உயர்வு புலவனின் உள்ளத்தின் உயர் வைப் பொறுத்தது. நாங்கள் எமது அன்ருட வாழ்க்கையில் எவ்வளவோ நிகழ்ச்சிகளைக் காண்கின்ருேம். அவையெல்லாம் காண்பதளவிலேயே நிலைபெறுகின்றன. ஆனல், புலவன் இந்த நிலையைத் தாண்டி அப்பால் அகக்கண்ணுல் (Vision) வேருெரு பொருளைக் காண்கின்றன். இதுவே புலவனுக் கும் அவன் ஆக்கும் செய்யுளுக்குமுள்ள தனிச் சிறப்பாகும்.
புலவன் ஒருவன் நீரை உற்று நோக்கினன். நீரின் மூன்று இயல்புகளை எண்ணிப் பார்த்தான். நீரிலுள்ள குமிழி ஒன்று; திரை மற்றென்று ; நீரில் எழுதப்படும் எழுத்து வேருென்று. இவற்றை அவன் அகக்கண்ணுல் நோக்கினன். நீரில் நிகழும்

Page 89
60. தமிழ் மொழி விளக்கம்
இம்மூன்று நிகழ்ச்சிகளையும் மனித வாழ்க்கையுடன் ஒப்பிட் டான். இவற்றிலிருந்தும், வாழ்க்கை நிலையாமையையும், ஆகையால் நிலைத்த பொருளை உடனேயே தேட வேண்டும் என்ற அறிவுரை யையும் புலவன் பின்வரும் செய்யுளால் உணர்த்தினன்.
** நீரிற் குமிழி இளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே வழுத்தாத தெம்பிரான் மன்று "
(நீதிநெறி விளக்கம்)
புலவன் கண்ட நீரின் தன்மைகள் அவன் அகக்கண்ணில் பட்டு, இளமையும், செல்வமும், உடம்பும் நிலையாதென்பதும், அவை உள்ளபோதே இறைவனை வழிபட வேண்டுமென்பதும் ஆகிய உயர்ந்த கருத்துக்கள் தோன்றின.
** யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ' என்ற உயர்ந்த நோக்கிற் கேற்ப, தான் அனுபவித்த இன்பத்தை மற்றவர்களும் அனுபவிக்கச் செய்பவன் புலவன். தான் காணும் காட்சியை வாழ்க்கையோடு இணைத்துக் கூறும் இயல்பு புலவனுக்கு உண்டு. இந்த இயல்பை அவன் செய்யுளில் காண லாம். இதற்குக் கற்பனைத் (Imagination) திறன் வேண்டும்.
புலவன் ஒருவன் மருத நிலத்தைச் சுற்றிப் பார்க்கின்றன். அங்கே சோலையையும், ஆடும் மயில்களையும், தாமரைக்கொடி யில் மலர்களையும், முழக்கம் செய்யும் மேகங்களையும், தெளிந்த தடாகத்தையும், ஒலிக்கும் வண்டுகளையும், குவளை மலர்களை யும் காண்கின்றன். இக்காட்சிகளைத் தனது கற்பனை என்னும் கருவி கொண்டு ஒன்றுபடுத்தி, அரச சபையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியாகச் செய்யுளில் அமைக்கின்றன். புலவனின் கற்பனை யில், மருத நிலம் அரசனுகவும், சோலை நாட்டிய மன்றமாகவும், ஆடும் மயில்கள் நாட்டிய மாதராகவும், தாமரைக் கொடிகள் பெண்களாகவும், அவற்றிலுள்ள தாமரைகள் அ ப் பெண்க ள் தாங்கும் விளக்குகளாகவும், முழங்கும் மேகங்கள் ஒலிக்கும் மத்தளமாகவும், தடாகத்தில் தோன்றிய தெளிந்த அலைகள் திரை ச்சீலையாகவும், வண்டின் ஒசை மகர யாழின் இசையாக வும், குவளை, நடனத்தைப் பார்க்கும் கண்களாகவும் மாறின. இவற்றைச் சேர்த்தமைத்து ஒர் அரசின் சிறந்த நாட்டியத்தைக் கண்ணுறுவதாகப் பின்வரும் ஒவியச் செய்யுளைத் தீட்டினன் கவிச் சக்கரவர்த்தி கம்பன்,

செய்யுள் நயம் கூறல் Η 6 ΙΙ
* தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கத் கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக் தெண் டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுக ளினி துபாட மருதம் வீற் றிருக்கு மாதோ. *
இத்தகைய உயர்ந்த செய்யுளுக்கு வருணனையும் (Description), egy60ófiai (G5Lb (Figures of Speech) (?6ö7 ólu 160l DurT56ör. வருணனைச் சிறப்பு மேற்காட்டிய செய்யுளில் முன்னரே விளக் கப்பட்டது. இந்தச் செய்யுளிலுள்ள அணிச் சிறப்பை நோக்கு வோம். மருத நிலத்தை அரசனுகக் கூறும்போது சமாதி என்னும் குணவணி (Personification) பயன்படுத்தப்பட்டது. தாமரை விளக்கந் தாங்க, கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க, தெண் டிரை யெழினி காட்ட 6T6ör Lu637 2 6J 60) LD (Simile), sed (I5 6J 35 Lib (Metaphor) 9y68aĥ3,2%m li பெற்று வந்தன. இத்தகைய அணிகள் புலவனின் கற்பனைத் திறனை வளம்படுத்துவன. செய்யுள் நயத்தைப் பெருக்குவன.
சிறந்த செய்யுளின் இன்னுமொரு இயல்பு உணர்ச்சியாகும்
(Emotion). புலவன் தனது உள்ளத்திலுள்ள உணர்ச்சியை ஏற்ற முறையில் உணர்த்தல் வேண்டும். புலவன் ஒருவன் சுதந்திர தாகத்தால் வருந்துகின்றன். சுதந்திர உணர் ச்சி கரை புரண்டு ஓடுகின்றது. இந்த உணர்ச்சியை மற்றவர்களுக் கும் ஊட்டுகின்றன். எழுமின் 1 விழிமின் !" என்று வீறிட்டு எழுகின்றன். வீரசுதந்திரத்திற்கு ஈடாகப் பூமியில் வேறு யாதுதான் உண்டோ 2" என்று எதிர்மறையில் மக்களை வினவு கின்றன். மக்கள் விடையைத் தானே கூறுகின்றன். ' தேவா மிர்தம் வேண்டுமென்று விரும்பியவர் கள்ளை விரும்பமுடியுமா ? ? என்ற கேள்வியை உவமையாக்கி மக்கள் மனத்தைத் தட்டி யெழுப்புகின்ருன் தேசியக் கவி பாரதி.
*" வீர சுதந்திரம் வேண்டி நின்ருர் பின்னர்
வேறென்று கொள்வாரோ - என்றும் ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ ? ** .
சிறந்த செய்யுளைப் படிக்கப் படிக்கப் புதுப்புது நயங்கள் தோன்றும். ' நவில் தொறும் நூல் நயம் போல " என்று வள்ளுவப் பெருந்த கை வலியுறுத்துகின்றர். ஆகவே, மேலே விளக்கப்பட்ட செய்யுளின் சிறப்பியல்புகளை மனத்தில் பதித்து, செய்யுளை மீண்டும் மீண்டும் படித்து, அதை ஆழ்ந்து நோக்கின், நயம் கூறல் சுலபமாகும்.
11

Page 90
62 தமிழ் மொழி விளக்கம்
மாதிரிப் பயிற்சி
1. கீழ்க்காணும் செய்யுளிலுள்ள நயங்களை எழுதுக:
மால்கடிந்த தவமுணி வான்மீகி என்பான்
வனத்திடையே தான்கண்டு கொண்டு வந்த பால்படிந்து முள்ளடர்ந்து பருத்து நீண்டு
பரிமளிக்கும் பலவின் கனி பாருக் கீந்தான் மேல்படிந்த பிசினகற்றி மெள்ளக் கீறி
மெதுவாகச் சுளை எடுத்துத் தேனும் வார்த்து நூல்படிந்த மனத்தவர்க்கு விருந்து வைத்தான்
கம்பனென்ற தமிழ்த்தாயார் நோற்ற மைந்தன்.
(ஆஸ்தான கவிஞர் நாமக்கல் வே. இராமலிங்கம்பிள்ளை)
முதல் நூலாகக் கருதப்படும் வால்மீகி எழுதிய இராமா யணத்தையும் வழி நூலாகக் கொள்ளப்படும் கம்பர் எழுதிய இராமாயணத்தையும் ஒப்பிட்டுத் தமது கருத்தை இந்த எளிய இனிய செய்யுளில் புலவர் ஒருவர் வெளியிடுகின்ருர்.
ஒருவர் தாம் கூறவேண்டிய கருத்தைப் பலவாருக வெளி யிடலாம். இவற்றுள், வாசிப்போர் நன்கு அறிந்துள்ள ஒரு பொருளோடு ஒப்பிட்டு, அவர் அறியாத ஒன்றை விளக்குவதே சாலச் சிறந்த முறையாகும். இதை உவமை மூலம் விளக்கல் என்று இலக்கியத்தில் குறிப்பிடுவார்கள். புலவர்கள் உவ மையை எடுத்து ஆளுவது ஒரு தனியின்பம் தரும். இத்தகைய இன்பத்தை அளிப்பது மேலேயுள்ள செய்யுளாகும்.
வால்மீகியும் கம்பனும் எழுதிய இரிாமாயண நூல்களுக்கு தமிழர் நன்கு சுவைத்த முக்கனிகளுள் ஒன்ருகிய ஒரே பலாப் பழத்தைத்தான் புலவர் உவமிக்கின்ருர், எனவே, இரு நூல்க ளுக்கும் அடிப்படையான பொருள் ஒன்றுதான் என்பது பெறப் படும். ஆனல், பலாப்பழம், “ பால்படிந்து, முள்ளடர்ந்து, பருத்து, நீண்டு, பரிமளித்து " இருந்தால் அதன் சுவையை ஒருவரும் அறியமாட்டார். இதுபோன்றதுதான் வால்மீகி இராமாயணம்.
சுவைத்து இன்புறக்கூடிய நிலையிலல்லவோ பலாப்பழம் இருக்கவேண்டும் ? இதற்காகக் கம்பன் வேறு பலாப்பழத்தைத் தேடவில்லை. உள்ளுக்குள்ள சு  ைவ யை நன்குணர்ந்தான். *" மேல்படிந்த பிசினகற்றி ' உள்ளிருந்த பழச்சாறு சிறிதேனும் சிந்துண்டாது " மெள்ளக் கீறி மெதுவாகச் சுளையெடுத்தான். ' தமிழ் மக்களுக்கு விருந்துவைப்பதற்காகவே இதைச் செய்தான் என்பதை ' விருந்துவைத்தான் கம்பனென்ற தமிழ்த் தாயார்

செய்யுள் நயம் கூறல் 63
நோற்ற மைந்தன் " என்ற அடியால் கவிஞர் விளக்குகின்றர். விருந்தினருக்கு அளிக்குமுன் பழம் சுவையாய் இருக்கின்றதா என்று அறிவதற்குப் பலாச் சுளையைக் கம்பன் தனது வாயில் போட்டான் போலும். இனிமை போதாது தோன் றியது. ஆகவே, ' தேனும் வார்த்து ' பலாப்பழத்தை மேலும் தித் திக்கச் செய்து கம்பன் விருந்து வைத்தான். இத் த  ைக ய விருந்தே கம்பராமாயணம்.
இராமாயணத்தை எழுதுவதற்கு வால்மீகி தகுந்த வர் என்பதை " மால் கடிந்த தவமுணி ' என்பதாலும், இதை எழுதுவது சுலபமான காரியமல்ல, அதை வால்மீகியே முதன்முத லில் செய்தார் என்பதை ' வனத் தி டையே தான் கண்டு கொண்டுவந்த பலவின் கனி” என்பதாலும் புலவர் விளக்கினர். இங்ங்ணம், வால்மீகியை மெச்சி, அவர் அளித்த பலாப்பழ மாகிய இராமாயணத்தை, கம்பன் எங்ங்ணம் தமிழ் மக்களுக்கு இனிய கம்பரா மாயணமாக விருந்து வைத்தான் என்று தொடர்ந்து வருணிக்கும் முறை கற்கும்தோறும் இன்பம் பயக் கின்றது. கம்பன் புலமையின் உயர்வை உள்ளங்கை நெல்லிக் கனியென விளக்குகின்றது. கம்பன் தனிப்புலமை வாய்ந்தவன் என்பதை, செய்யுள் ஈற்றில் ' கம்பனென்ற தமிழ்த் தாயார் நோற்ற மைந்தன் ” என்பதால் கவிஞர் கூறினர். இதை உணராது, கம்பராமாயணத்தைத் தீக்கிரையாக்க வேண்டும் என்று கங்கணங்கட்டுவோருக்குச் சூடு கொடுப்பதுபோல, இலக் கியப் பயிற்சி இல்லாதவருக்குக் கம்பன் இராமாயணத்தை எழுதவில்லை என்ற கருத்துப்பட " நூல்படித்த மனத்தவர்க்கு விருந்து வைத்தான்” என்று கவிஞர் குறிப்பிட்டார்போலும்.
2. கீழ்க் காணும் செய்யுளிலுள்ள நயங்களை எழுதுக.
(செய்யுளின் தொடர்பையும் உரைநடை ஆக்கத்தையும் * உரைநட ஆக்கம் செய்தல்" என்ற அதிகாரத்தின் கடைசி யில் காண்க.)
வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த
திருமேனி மேலுங் கீழும் எள்ளிருக்கு மிடமின்றி யுயிரிருக்கு
மிடநாடி யிழைத்த வாருே, கள்ளிருக்கு மலர்க்கூந்தற் சானகியை மனச்சிறையிற் கரந்த காதல் உள்ளிருக்கு மெனக்கருதி யுடல்புகுந்து தடவியதோ வொருவன் வாளி.
(கம்பராமாயணம்)

Page 91
64 தமிழ் மொழி விளக்கம்
கவியுலகிலே மிகச் சிறந்தன சோகரசம் ததும்பும் பாடல் களே. இராவணனது மரணத்தினல் மண்டோதரி அனுபவித்த சோக சிகரத்தைச் சித்திரித்துக் காட்டுவது இக்கவிதை.
மண்மேல் மாண்டு கிடந்த கணவனின் உடலைக் கண்ணுற்ற தும் கணவனின் வீரச் செயல்கள் மனைவிக்கு ஞாபகம் வருகின் றன. " கயிலையங் கிரியையே அசைத்த இராவணனது திருமேனி யல்லவா அம்புகளால் துளை க் கப்பட்டு, புழுதியிலே புரள் கின்றது என மண்டோதரி இரங்குகின்ருள். இந்தப் பரிதாப உணர்ச்சியை உச்சநிலைக்கு (Climax) உயர்த் துவதற்காக, வீரனது பெரிய மேனியிலே எள்ளுப் போடவும் இடமின்றி அம்புகள் எங்கும் துளைத்து உட்சென்று அவன் உயிரைப் பருகி விட்டன என்று உயர்வு நவிற்சி அணியென்ற (Hyperbole) கருவி கொண்டு எழுதுகின்ருன் புலவன்.
இராமனின் பாணங்கள் இராவணனின் உடம் பெங்கு ம் புகுந்து அவனுடைய உயிரைப் பறித்துவிட்டனவா ? இராவண னின் அரிய உயிரை மாத்திரமன்றி இன்னுமொரு பொருளையும் அவன் உடலுள் புகுந்து அவன் அம்புகள் தேடியிருக்கவேண்டும் என் கிருள் மங்கையர் திலகம் மண்டோதரி. ஒரு பெண்ணினல் சகிக்க முடியாத துயரம் எதுவெனில், தன் காதற் கொழுநன் தன்னுள்ளத்திலே இன்னுெருத்திபால் ஆராக் காதலைப் பேணி வருதலாகும். பிற ஆடவனுெருவன் தன் மனைவிபாற் காதல் கொள்வதை வீரம் மிகுந்த ஆடவனல் சகிக்க முடியாது. இந்த இருவரது ஆற்ருமையையும் கம்பன் மண்டோதரியின் வாயினல் வெளியிடுகின்றன். ' சானகியை மனச் சிறை யில் கரந்த காதல் உள்ளிருக்குமெனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி” என்னும் அடிகளிலே மண்டோதரியின் சோகம் உச்சநிலையை அடைந்து விடுகின்றது. சான கி பால் தகாத காதல்கொண்டு அதை உள்ளச் சிறையிலே வைத்தான் இரா வணன். அந்தக் காதலைத் தேடித் தடவியது இராம பாணம் என்ற பொருள்தரும் அடிகளிலே மண்டோதரியின் மனநிலை, கணவன் சீதைபாற் கொண்ட காதலால் தன்னுள்ளம் துடித்த நிலை, தெற்றென விளங்குகின்றது. இந்த அடிகளிலே காணப் படும் தற்குறிப்பேற்ற அணி பாராட்டற்குரியது.
மக்களின் உள்ளத்தை உள்ளவாறு பளிங்கு போல் காட்டு வது சிறந்த செய்யுளாகும். இது அந்த வகையைச் சேர்ந்தது. பொருட்சுவை மாத்திரமன்றி, சொற்கள் தெளிவாகவும் அழ காகவும் அமைந்துள்ளன.

செய்யுள் நயம் கூறல் 1.65
பயிற்சி
(அ) கீழ்க்காணும் செய்யுட்களை உரைநடை யாக்கம் செய்க.
(ஆ) நயம் கூறுக. 1. . . நன்றி ஒருவர்க்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
(மூதுரை)
(எனறு தருங்கொலென வேண்டா - எப்பொழுது செய்வானே என்ற சக்தேகம் வேண்டிாம் ; தெங்கு - தென்னை ; தாள் - அடிப்பக்கம்.)
2。 செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை தொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து அறும்பாவ மென்னவறிந் தன்றிடார்க் கின்று வெறும்பானை பொங்குமோ மேல்.
(நல்வழி)
(இருகிதியம் - பெருஞ் செல்வம் ஷையத்து - பூமியில்.)
3. சுதந்திரப் பெருமை
வீர சுதந்திரம் வேண்டிநின்றர் பின்னர் வேறென்று கொள்வரோ ? - என்றும் ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ ?
புகழுநல் லறமுமே யன்றியெல்லாம் வெறும் பொய் யென்று கண்டாரேல் - அவர் இகழுறு மீனத்தொண் டியற்றியும் வாழ்வதற் கிச்சையுற் றிருப்பாரோ?
பிறந்தவர் யாவரு மிறப்ப துறுதியெனும் பெற்றியை யறிந்தாரே ல் - மானம் துறந்தற மறந்தும்பின் னுயிர்கொண்டு வாழ்வது சுக மென்று மதிப்பாரே?
மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும் வாய்மையை யுணர்ந்தாரேல் - அவர் ஊனுடல் தீயினு முண்மை நிலைதவற உடன்படு மாறுளதோ ?

Page 92
166
தமிழ் மொழி விளக்கம்
விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய் மின்மினி கொள்வாரோ ?
கண்ணிலு மினிய சுதந்திரம் போனபின் கை கட்டிப் பிழைப்பாரோ ? மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை யிழப்பாரோ ? கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினற் கைகொட்டிச் சிரியாரோ ? வந்தே மாதர மென்று வணங்கியபின் மாயத்தை வணங்குவாரோ ? வந்தே மாதர மொன்றே தாரக மென்பதை மறப்பாரோ ?
(பாரதியார்)
(ஆரமுது - கிறைய அமுது ; பெறறி- தன்மை ; இரவி- சூரியன் : மின்மினி - கபிசத்திரம் தாரகம் - பூமி)
هی
இலக்கிய பஞ்சகம்
வள்ளுவர் தந்த திருமறையைத் - தமிழ்
மாதின் இனிய உயிர்நிலையை உள்ளம் தெளிவுறப் போற்றுவமே - என்றும்
உத்தம ராகி ஒழுகுவமே. பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து - கம்பன்
பாரிற் பொழிந்த தீம் பாற்கடலை நாவின் இனிக்கப் பருகுவமே - நூலின்
நன்னயம் முற்றுந் தெளிகுவமே. தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை
தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்
ஒதி யுணர்ந்தின் புறுவோமே. கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் - இனபக்
கற்பனை சேருங் களஞ்சியத்தை முற்ற அளந்து தெரிவோமே - காதல்
மூழ்கும் துறைகண்டு வாழ்வோமே. பண்டை இயற்கை வளங்களெல்லாம் - பத்துப்
பாட்டின் வளத்தினிற் கண்டறிந்து மண்டல மெங்கும் கமழும் அருந்தமிழ் வாசம் நுகர்ந்து மகிழ்வோமே.
(கவிமணி சி. தேசிகவிநாயகம்பிள்ளை)
{களஞ்சியம் - சேகரித்து வைக்கும் இட்ம் : மண்டிலம் - பூமி)

செய்யுள் நயம் கூறல் 167
5. " பெற்றெடுத்த தாய்மிகவும் பழசாய்ப் போனள்
பிறிதொருதாய் வேண்டு மென்று பேசு வார்போல் நற்றவத்தால் நமக்கடுத்த தலைவன் காந்தி
நானிலத்தின் உயிர்கட்கெல்லாம் தாயாம் நண்பன் கற்ற கதை சரித்திரங்கள் காணுச் சுத்தன்
கருணையென்ப தின்னதெனக். காட்டுந் தீரன் உற்றதுணை காந்திவழி பழசா மென்ருல்
உய்வதற்கு வேறுகதி உண்டோ நெஞ்சே!
(ஆஸ்தான கவிஞர் நாமக்கல் வே. இராமலிங்கம்பிள்ளை)
0. கண்ணுெளி யின்றி மற்றக்
கட்டழ கிருந்தா லென்னப்
பண்ணளி இனிமை பூட்டாப்
பாட்டுகள் கேட்ப தென்னப்
புண்ணியப் புகழொன் றில்லாப்
பொற்பொதி யுடையார் போலும்
திண்ணிய சுதந்த ரத்தின்
தெரிசனம் இல்லா வாழ்க்கை.
உண்டிகள் பலவும் செய்து
உப்பிலா துண்ணல் போலும் கண்டொரு இனிமை சொல்லக்
கனிவிலான் விருந்து போலும் பெண்டரும் அழகு மிக்காள்
பிரியமில் லாமை யொக்கும் தொண்டுசெய் துரிமை யின்றிச்
சுகித்துடல் வளர்க்கும் வாழ்க்கை. (ஆஸ்தான கவிஞர் நாமக்கல் வே. இராமலிங்கம்பிள்ளை) (பொற்பொதி - செல்வ மூட்டிை.)
7. லாஜபத்ராய் துதி
(இவர் நாடு கடத்தப்பட்டபோது பாடப்பட்டது) விண்ணகத்தே யிரவிதனை வைத்தாலும் அதன் கதிர்கள் விரைந்து வந்து கண்ணகத்தே யொளிதருதல் காண்கிலமோ ?
நின்னையவர் கனன்றிந் நாட்டு மண்ணகத்தே வாழாது புறஞ்செய்யும்
யாங்களெலா மறக்கொ ஞதெம் எண்ணகத்தே, லாஜபதி, யிடையின்றி
நீவளர்தற் கென்செய் வாரோ ?

Page 93
68
தமிழ் மொழி விளக்கம்
ஒருமனிதன் றனைப்பற்றிப் பலநாடு
கடத்தியவற் கூறு செய்தல் அருமையிலை ; எளிதினவர் புரிந்திட்டா ரென்றிடினும் அந்த மேலோன் பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமென
நெஞ்சினுளே பெட்பிற் பேணி வருமனித ரெண்ணற்ருர் இவரையெல்லாம்
ஒட்டியெவர் வாழ்வ திங்கே?
(LurrBanu arif)
(கனன்று - கோபித்து எண்ணகத்தே - மனத்திடையே பெட்பு - ஆசை.)
8.
புதிய ருஷியா (ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி) இம்மென்ருல் சிறைவாசம் ; ஏனென்ருல்
வனவாசம் : இவ்வா றங்கே செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே
அறமாகித் தீர்த்த போதில்,
அம்மைமணங் கனிந்திட்டாள் : அடிபரவி
உண்மைசொலும் அடியார் தம்மை மும்மையிலும் காத்திடுநல் விழியாலே நோக்கினுள் ; முடிந்தான் காலன்.
இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்
ஜாரரசன் ; இவனைச் சூழ்ந்து சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த சுமடர் சட சடவென்று சரிந்திட்டார், புயற்காற்றுச் சூறை தன்னில் திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போலே.
(uryásurd)
(காலன் - இயமன் போன்ற ஜார் சக்கரவர்த்தி; சுமட்ச் - கீழ்த்தாமானவர்.)
நினைவும் முடிவும்
இருளும் அகலும் இரவியும் தோன்றும் ; பொருவில் இத் தாமரைப் பூவும் மலரும் ; மலரும் பொழுது இவ் வன் சிறை நீங்கி, உலகில் எங்கும் உலவித் திரிந்து, பூவெழு பற்பல புதுவனங் கண்டு,

செய்யுள் நயம் கூறல் 1 6.9°
நாவெழு சுவைதரு நறை மிக உண்டு வாழ்குவன் " என் ருெரு மதுகரம் இருப்ப, தாழ்மத வேழமொன் ருழ்கயம் இறங்கிப் பாசிலை பூவெலாம் பறித்து, வீசி எறிந்து வெறிகொண் டதுவே.
(கவிமணி சி. தேசிகவிநாயகம்பின்னே) (பொருவில் - கிகரற்ற ; வன்சிறை - வலிமையான சிறைச்சாலை : குறை - தேன்; மதுகரம் - வண்டு ; தாழ்மதவேழம் - மிகுந்த மதத்தையுடைய யானே ஆழ்கயம் - ஆழமான குளம் ; பாசிலை - பச்சை இலே)
10. (பாரதப் போரில் அம்பு பட்டு இறக்குந் தறுவாயில்
கிடந்த கன்னனை நோக்கி இரந்த கண்ணபிரானுக்கு தன் புண்ணிய மனைத்தையும் தானம் செய்வதாக அமை வது இந்தப் பாடல்)
ஆவியோ நிலையிற் கலங்கிய தியாக்கை அகத்ததோ புறத்ததோ வறியேன் பாவியேன் வேண்டும் பொருளெலா நயக்கும்
பக்குவந் தன்னில்வந் திலையால், ஒவிலா தியான்செய் புண்ணிய மனைத்தும் உதவினேன் கொள்கநீ யுனக்கும் பூவில்வா ழயனு நிகரல னென்ருற்
புண்ணிய மிதனினும் பெரிதோ.
(வில்லி பாரதம்) யாக்கை - உடம்பு ஈயக்கும் - கொடுக்கும் ஒவிலாது - ஒழியாது; அயன் - பிரமதேவன்.)
11. (தருமன் அருச்சுனனைப் பிரிந்து துயரத்தோடு இருக்கும்
நிலையையும் முனிவர் வருகையையும் கூறுவது)
விறல்விசயன் றனைப்பிரிந்த வருத்த மேன்மேல் விஞ்சவொரு தஞ்சமற வெம்பி யம் பொற் சிறகிழந்த பறவையெனத் துணைவ ரோடுந்
திறல்வேந்தன் சிந்தனையுற் றிருந்த காலைப் பொறையறிவு நிறைதரும முடைய வாய்மைப்
போர்வேந்தே யஞ்சலெனப் புகழ்ந்து வாழ்த்தி மறையொரு பொன் வடிவு கொடு வந்த தென்ன
மாமுனியு மிமைப்பினிடை வந்து ற் ருனே.
(வில்லி பாரதம்) (விறல் விசயன் தனை - வெற்றி கிறைந்த அருச்சுனனை ; விஞ்சு - அதிகரிக்க துணேவர் - தம்பிமார் திறல் - வலிமை மறை - வேசம் பொன்வடிவு - அழகிய வடிவம்)

Page 94
70 தமிழ் மொழி விளக்கம்
12. சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்
செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்பக்
குறுவெயர்ப் புருவம் கூடலிப்பக்
கோவிந்தன் குழல்கொ டூ தின போது
பறவையின் கணங்கள் கூடுதுறந்து
வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக்
கவிழ்ந் திறங்கிச் செவியாட்ட கில்லாவே.
(Gutflurbar“)
(கோட் - வளைய செய்யவாய் - சிவந்த வாய் கூடலிப்ப - ஒன்றுசேர.)
13. (வேள்வி காக்க இராமகனத் தரும்படி விசுவாமித்திரர் தச ரதனை வேண்ட, அதைக்கேட்டுத் தசரதன் துயரமடைதல்)
எண்ணிலா வருந்தவத்தோ னியம்பிய சொன்
மருமத்தி னெறிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும்புழையிற் கனனுழைந்தா
லெனச்செவியிற் புகுத லோடும் உண்ணிலா வியதுயரம் பிடித்துந்த வாருயிர்நின் றுாச லாடக் கண்ணிலான் பெற்றிழந்தா லெனவுழந்தான்
கடுந்துயரங் கால வேலான்.
(stburarueru svrth) (மருமம் - மார்பு : புழை - துவாசம்; உழந்தான் - வருந்தினன்; காலவே லான் =
'கொல்லுக்தன்மையுடிைய வேலே ஏந்திய தசரதன்.)
14. (இராவணனுக்குச் சீதைமீது மோகம் அதிகரிக்கச் செய்ய வேண்டிச் சூர்ப்பநகை இராவணனுக்கு முன் அவளை வருணித்தல்)
வில்லொக்கு நுதலென் ருலும்
வேலொக்கும் விழியென் முலும் பல்லொக்கு முத்தென் ருலும்
பவளத்தை யிதழென் ருலும் சொல்லொக்கும் பொருளொவ் வாதாற் சொல்லலா முவமை யுண்டோ நெல்லொக்கும் புல்லென் ருலு
நேருரைத் தாக வற்றே.
(கம்பராமாயணம்)
(நுதல் - நெற்றி கேர் - உவமை)

கெய்யுள் நயம் கூறல் 17
15. உண்டா லம்மவிவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே ; முனிவிலர் துஞ்சலு மிலர் ; பிற ரஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிருங் கொடுக்குவர்; அயர்விலர் அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்ருட் பிறர்க்கென முயலுந ருண்மை யானே.
(AA5 raprapy) (இயைவது - சேர்வது; தமியர் - தனித்து; முனிவு - வெறுப்பு: துஞ்சல் - சோம்பல் கொள்ளல்; அயர்வு - மனக் கவலை மாட்சி - உயர்வு; கோன்றள் ம
முயற்சி உண்மையான் - உண்டாதலான்)

Page 95
172 தமிழ் மொழி விளக்கம்
அதிகாரம் XXI மொழிபெயர்ப்பு (Translation)
ஒருவர் கருத்தை வேருெருவருக்குத் தெரிவிப்பதற்காக மொழி பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே, எந்த மொழியை யும் " சிந்தனையை வெளியிடும் கருவி " என்று நாம் கூறிவிட லாம். வெவ்வேறு நாடுகளில், மொழி வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது. ஒரே நாட்டிலுங்கூட ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளைக் காணலாம். இதனல், ஒவ்வோர் இனத்தவரும் ஒவ்வொரு மொழியைக் கையாளுகிருர்கள் என்பது விளங்கும்.
பல்வேறு இனத்தவர்கள் பலதிறப்பட்ட மொழிகளைப் பயன்படுத்துவதால் ஒருவர் மொழி மற்ருெருவருக்கு விளங் காமல் போகின்றது. ஆகையால், ஒருவர் மொழியிலுள்ள கருத்தை மற்ருெரு மொழி பேசுபவருக்கு விளங்க வைக்க வேண்டுமென்ருல், அதை அவரின் மொழியில் மாற்றி அமைக்க வேண்டும். இங்ங்ணம் மாற்றி அமைத்தலே ' மொழிபெயர்ப்பு * எனப்படும்.
ஒரு மொழியை வேருெரு மொழியாகப் பெயர்த்தலின் அவசியத்தை உணர்ந்தால், மொழிபெயர்ப்பின் அடிப்படை யான சிறப்பியல்புகள் புலணுகும். ஒருவர் மொழியிலுள்ள கருத்தையோ அல்லது கருத்துக்களையோ, இன்னுமொரு மொழி பே சுப வர் விளங்கிக் கொள்வதற்காகவே மொழிபெயர்ப்பு அவசியமாகின்றது. இதிலிருந்தும், மொழிபெயர்ப்பின் இரண்டு இயல்புகளைக் கவனிக்க வேண்டும். முதலாவதாக, மொழி பெயர்ப்புக்கு எடுத்துக்கொண்ட மொழியிலுள்ள கருத்துக்கள் எதையும் தவறவிடல் ஆகாது. எதையும் கூட்டியோ அல்லது குறைத்தோ கூறல் கூடாது. இரண்டாவதாக, கருத்துக்களை விளங்க வைத்தல் வேண்டும்.
மேலே காட்டப்பட்ட முதல் இயல்பு மொழிபெயர்ப்பில் அமையவேண்டுமெனில், மொழிபெயர் ப்பதற்கு எடுத்துக் கொண்ட மொழியிலுள்ள கருத்துக்களை ஒருவர் கிரகிக்கவேண் டும். இதற்கு, அந்த மொழியை விளங்கிக்கொள்ளும் திறன் வேண்டும். அந்த மொழியிலுள்ள சொற்கள், சொற்ருெடர் கள், மரபுச் சொற்ருெடர்கள், அணிகள், இலக்கண மரபு, வாக்கிய அமைப்பு முதலியவற்றை ஒருவர் நன்கு பயின்றிருக்க வேண்டும். எனவே, மொழிபெயர்ப்பாளர் இரண்டு மொழி களையும் நன்கு பயின்று, ஏற்ற பயிற்சியைப் பெற்றலன்றி, சிறந்த மொழிபெயர்ப்பைப் பெற இயலாது.

மொழிபெயர்ப்பு 17.3
இலங்கையில் நடைபெறுகின்ற பொதுத் தேர்வு களி ல், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும்படியே வேண் டப்படுகின்றது. ஆகையால், இந்தப் பயிற்சியைப் பற்றியே இங்கு எடுத்துக் காட்டப்படும்.
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கு முன்னர், ஆங்கிலச் சொற்களின் அல்லது சொற்ருெடர்களின் நேரான தமிழ்ப் பதங்களை நன்ற க அறிந்துகொள்ளவேண்டும். இதற் குச் சிறந்த ஆங்கிலத் தமிழ் அகராதி உதவியாக இருக்கும். எனினும், ஆங்கில வாக்கியத்தின் பொதுக்கருத்தை அறியாமல், அகராதியின் உதவியை நாடினல் சில இடங்களில் இடர்ப்பட வேண்டியும் நேரிடும். ஏனெனில், ஓர் ஆங்கிலச் சொல்லுக்குப் பல பொருள்தரும் தமிழ்ச் சொற்கள் கொடுக்கப்பட்டிருக்க லாம். இவற்றுள் ஏற்ற சொல்லைப் பொறுக்கி எடுக்கத் தெரியா விடின் மொழிபெயர்ப்புத் தவருக அமையும். உதாரணமாக, * The currysis hot என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம். இதிலுள்ள “hot என்ற சொல்லுக்கு அகராதியில் வெப்பம், சூடு, காரம், ஆவலுள்ள என்பது போன்ற சொற்கள் நேரான பதங்களாகக் கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆணுல், வாக்கியத் தின் பொதுக் கருத்தை விளங்காவிட்டால் அகராதி யைப் பார்த்தவுடன் “ வெப்பம் ' என்ற மு த லிலுள்ள சொல்லை. எடுத்து " கறி வெப்பமாய் இருக்கின்றது" என்று மொழி பெயர்த்தால், அது தவருக அமையும். இங்கே "hot என்ற சொல் கறியைப்பற்றிக் கூறும்போது " காரம் " என்றே பொருள் படும். ஆகவுே, இதைக் கறி காரமாய் இருக்கின்றது என்று மொழிபெயர்க்க வேண்டும்.
ஆங்கில வாக்கியத்தின் அமைப்பு வேறு. தமிழ் வாக்கி யத்தின் அமைப்பு வேறு. சொல்லுக்குச் சொல்லாக மொழி பெயர்ப்பின், அது தவருக அமையலாம். உதாரணமாக : * This is a dog’ என்ற வாக்கியத்தை மொழிபெயர்க்கும்போது * இது ஒரு நாயாய் இருக்கின்றது ' என்று எழுதல் தவருகும். * Is என்ற வினைக் குறிப்பு " நாய் ' என்ற சொல்லிலே அடங்கி யிருக்கின்றது. ஆகவே, இதை " இது ஒரு நாய்" என்று மொழிபெயர்க்க வேண்டும். இதேபோல, ‘I was given two books by my friend என்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தை " எனது நண்பனல் இரண்டு புத்தகங்கள் எனக்குக் கொடுக்கப் பட்டன " என்று மொழிபெயர்த்தால் அது சிறப்பாக இருக்காது. தமிழில் இதை " எனது நண்பன் எனக்கு இரு புத்தகங்கள் தந்தான் " என்று செய்வினை வாக்கியமாக மொழிபெயர்க்க வேண்டும்.

Page 96
74 தமிழ் மொழி விளக்கம்
ஆங்கிலத்திலே உள்ள மரபுச் சொற்ருெடர்கள் (Idioms) இலக்கண மரபுகள் (Figurative Uses) முதலியனவற்றை அப் படியே மொழிபெயர்த்தால், தமிழ் மாத்திரமே கற்றவருக்கு அது விளங்காமல் போய்விடும். அல்லாமலும், அது மொழி பெயர்ப்பாகாது. தமிழ்மொழி மரபை நன்கு அறிந்து, ஏற்ற வாறு மொழிபெயர்க்கவேண்டும். உதாரணமாக, * History brings to light that the Tamils traded with the Greeks' GTGirl. 16055 * தமிழர் கிரேக்கருடன் வாணிபம் செய்தார்கள் என்பதைச் சரித்திரம் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றது" என்று மொழிபெயர்த்தால், அது விளக்கமில்லாமல் போகின்றது. தமிழில், ‘ வெளிச்சத்துக்குக் கொண்டு வருதல் ” என்பது * வெளிச்சத்துக்கு முன்னுல் வைத்தல் " என்று பொருள்படுமே தவிர, ஆங்கிலத்தில் * bring to light’ என்பதின் பொருளை உணர்த்தாது. இதன் பொருளை உணர்த்தும் சொல் ' புலப் படுத்தல் ஆகும். ஆகவே, இதைத் தமிழர் கிரேக்கருடன் வாணிபம் செய்தார்கள் என்பதைச் சரித்திரம் புலப்படுத்து கின்றது" என்று மொழிபெயர்க்க வேண்டும். இதே போல, * My introducing the speaker is like carrying coal to Newcastle என்பதை " பேச்சாளரை நான் அறிமுகப்படுத்தல் நியூகா சிலுக் குக் கரி கொண்டுபோவதைப் போ லா கும் ' என்று மொழி பெயர்த்தால் அது தமிழில் விளக்கமில்லாது போ கி ன்றது. இதைத் தமிழ் மரபிற்கேற்ப, " பேச்சாளரை நான் அறிமுகப் படுத்தல் கொல்லன் தெருவில் ஊசி விற்பது போலாகும் " என்று மொழிபெயர்த்தல் வேண்டும்.
சில இடங்களில் வாக்கிய ஒழுங்கை மாற்றி அமைக்கவும் G15 flair b. 2-5m pra00TLDIT &, He asked me where I went என்ற வாக்கியத்தை அப்படியே அவன் கேட்டான் எங்கே நான் சென்றேன் " என்று மொழிபெயர்த்தால், தமிழ் வாக்கிய அமைப்புத் தவருக அமையும். இங்கே சொற்களின் ஒழுங்கை மாற்றி, "நான் சென்ற இடத்தை அவன் வினவினன்" என்று மொழிபெயர்த்தல் வேண்டும்.
மேற்காட்டப்பட்ட முறைகளை நோக்குமிடத்து, மொழி பெயர்த்தலை ஒரு தனிக் கலையென்றே சொல்லி விடலாம். இந்தக் கலையை விருத்தி செய்வதற்கு இரண்டு மொழிகளைத் தனித்தனியே பயிலுவதுமல்லாமல், மொழிபெயர்க்கும் பயிற்சி யும் வேண்டற்பாலது. ஒருவருக்கு மொழிபெயர்ப்பில் சிறந்த பயிற்சியும் கவர்ச்சியும் இருக்குமானல், தேர்வில் வெற்றி பெறுவதுடன், ' பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்க்கவேண்டும் ' என்ற பாரதியின் கனவும் நனவாகும். Y.

10.
11.
12.
13.
மொழிபெயர்ப்பு 75.
Model Translation - மாதிரி மொழிபெயர்ப்பு
. May God bless you.
கடவுள் உன்னை ஆசீர் வதிப்பாராக.
As I liked the picture I bought it at once. அந்தப் படத்தை நான் விரும்பியபடியால், உடனே வாங்கி
னேன்.
The drama ended as I wished. நான் விரும்பியபடியே நாடகம் முடிந்தது. No sooner had he reached home than he began to read. அவன் வீட்டை அடைந்ததுதான் தாமதம், வா சிக்க த் தொடங்கினன். You are bound to fail, however you may try. நீ எங்ங்ணம் முயன்றலும் தோல்வியடைதல் திண்ணம். I have not written to him since my return from Colombo. நான் கொழும்பிலிருந்து திரும்பியதுமுதல் அவனுக்கு எழுத வில்லை. -- I advise you to try although you may not profit. நீ பயன் பெருவிட்டாலும், உன்னை முயலும்படி நான் புத்தி கூறுவேன். ܝ - He does not believe what I told him. நான் அவனுக்குச் சொன்னதை நம்புகிருனில்லை. Rama would have helped the boy, had he met him. அந்தப் பையன் இராமனைச் சந்தித்திருந்தால், அவன் அவ னுக்கு உதவி செய்திருப்பான்.
Unless we pay the money, we shall not get what we want. நாங்கள் பணம் கொடுத்தாலன்றி, விரும்பியதைப் பெற сурш4-ШТgilHe, who does much service to the country, will be respected. நாட்டுக்கு அதிக சேவை செய்பவன் மதிக்கப்படுவான். The student ran fast so that he might get to school before nine o'clock. ஒன்பது மணிக்கு முன்னர் பள்ளிக்கூடத்தை அடைவதற் காக மாணவன் விரைவாக ஓடினன். In spite of the teacher's warning, the students were inattentive. ஆசிரியர் எச்சரிக்கை செய்தும் மாணவர்கள் கவனம் எடுக்க வில்லை.

Page 97
76 தமிழ் மொழி விளக்கம்
14. If I were the Minister of Education I shall make numerous
changes in the educational system of Ceylon. நான் கல்வி மந்திரியாய் இருந்தால் இலங்கைக் கல்வி முறை" யில் பல மாற்றங்களைச் செய்வேன்.
(நீளமான தொடர் வாக்கியங்களைக் கருத்துக் கேற்ப ப் பிரித்தே மொழிபெயர்க்க வேண்டும். அல்லாவிடின் மொழி பெயர்ப்பில் பொருள் தெளிவும், உணர்ச்சியும், சீரிய நடையும்' இல்லாமல் போய்விடும். கீழ்க்காணும் பந்தி இந்த முறையில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் காண்க.)
15. Unemployment is the most hideous of our social evils, and has lately seemed to have become established in a peculiarly vicious form. The worst evil of such unemployment is its creating in the unemployed a sense that they have fallen out of the common life. However much their physical needs may be supplied, the gravest part of the trouble remains. Because the man has no opportunity of service, he is turned a loafer and a self-seeker.
(William Temple)
மொழிபெயர்ப்பு :
எமது சமூகக் கேடுகளுள் வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் பயங்கரமானது. இது விசித்திர தீமையாகச் சமீபத்தில் நிலைத்துவிட்டதென்று தோன்றுகின்றது. தொழிலற்று இருப் பது, ஒருவர் தாம் சாதாரண வாழ்க்கையிலிருந்தும் விலகியவர் என்ற உணர்வை அவரிடம் கிளப்புகின்றது. வேலையில்லாத் திண்டாட்டம் தரும் கேடுகளுள் இதுவே மிகவும் கொடியதா கும். அவர்களின் உடல் தேவைகளை எவ்வளவுதான் நிறைவு செய்தாலும் இதன் கொடூர இன்னல்கள் தீர்ந்தபாடில்லை. மனிதனுக்குச் சேவை செய்யத் தருணம் வாய்க்காததால், அவன் ஊர் சுற்றுபவளுகைவும் தன்னலம் கருதுபவனுகவும் மாறு
கின்றன்.
கீழ்க்காணும் பொதுவான ஆங்கில மரபுச் சொற்ருெடர் களின் (English Idioms) நேரான தமிழ் அமைப்பு மொழிபெயர்க் கும்போது உதவலாம். A calling distance - sin. L' GIGGO5T&aav. A turn coat – gyáj9)G5á55). A leap in the dark - egypt D stóulunTLD av 351T 3a) 6ớ6iv. A sanctimonious cat — D (Bjö SITT L F L &aOT.

மொழிபெயர்ப்பு , 177
A fly in the ointment – 905 (5-lb LIT golă) g(5 golf all-lb. A close shave - கண்ணில் வரவேண்டியது புருவத்தில் வரல். A frog in the well - 56007 i) pig 56&nt. A cry in the wilderness - செவிடன் காதில் ஊதிய சங்கு நாதம்
போல. A thorn in one’s side - GAB(B5 (659a (Up Gir GBLluíTGV. A wolf in sheep's clothing - Li JigGst di) Guntrigg, Las. At one - 605 (upé5LDIT &; iii) pai). At one’s beck and cal - காலால் இட்ட வேலையைத் தலையால்
செய்தல். At one's fingers' ends - 520&p Luttlib. At one's wit’s end - 52.5G), DITsodi). Apple of the eye – 56öorLD600ft Gl T6ösog. Aladdin's lamp - 5 siblu 5 தரு. Act of God - G5 til Gurt Soot b. Arm in arm - G5IT origi) 60) as Gunt L-6). Anathema - நஞ்சை யொத்தல். Blue moonshine – 25/Tuå grruD6or.
Between the devil and the deep sea இருதலைக் கொள்ளியுள் Between Scylla and Charybdis எறும்பு ஒத்து.
Beat about the bush - 5 is a 12hr 5gili Gu Jisai).
Bag and baggage - e.pl 60 l (plgld Jr.
Carry coal to Newcastle — @snt 6iv Gv Gör G35 (1566) p6MI SF6 ibfp6iv.
Crystal clear - வெள்ளிடைமலை ; உள்ளங்கை நெல்லிக்கனி ;
குன்றின்மேல் விளக்கு ; பளிங்கு போலக்காட்டல்.
Chip of the old block - தாயைப்போலப் பிள்ளை, நூலைப்போலச்
്.
Go to Bath - gCOL-05,56).
Go to rack and ruin - LD667 (60) till GLJIT56i.
Good wine needs no bush - 45560) dig, as at thugh Galatov
டுமோ ?
In Sack-cloth and ashes - 567 Goof (5 lb (5th Lu auth.
In high feather - 605 (ppb al GTriggi).
It never rains but pours - Lul L SIT GóGG) LuGub, (os "L (e.g. Gu
கெடும்.
In a state of nature - g5 it ul Qufip GLDGoh Guit ().

Page 98
78 தமிழ் மொழி விளக்கம்
Like a bull in a Chinashop - GGJ Gð75 Gvj 35 GTM) — uy Gir - LunT&OT Lg5gö
தது போல். Like the blind leading the blind – GGL-6ör GGl–S9 hG Quf)
காட்டுவது போல். Like playing with fire - guil (p55 (5J fig Guita). Make neither head nor tail - 9 g. gply. G5 shut gold. Nook and corner - epa (pG ig5. Not dream of - 560Togy Lib scD5nt 60LD. Not fit to hold a candle to - sit 6 air gir arth Quo gold. Once in a blue moon- ஆடிக்கொருக்கால் அமாவாசைக் கொருக்
95ITG). Out of the frying pan into the fire - L&orum á sí?(!psö56) &Ir
மாடேறி மிதித்தல். Receive with open arms - LD 607 LDITpur Gaugu. Gau boto á). Sit on the fence – LDSáGLDGi) 2.0T. gy Stand to one's guns - as LIT Li Liquittii ifispái). Spread like wild fire – sit l" Gé 6 GLItr6o Lug 6u6v. Star in the ascendant - Glau Gitaift gy6orTL5) i). To lend one's ears - G& 6 FIT triggs di). To be caught red-handed – God цић (оupu ugцртици 19цLL-Gi);
கையும் களவுமாய்ப் பிடிபடல். To grease the palm of - 60s, lil 160 F asst Lai). r To give one's hand upon anything - 605 Gurtl Gdi Gd5(TG) 556). To wash one's hands of - 605 d5 (p68 as Lá). To be at sixes and sevens - 3,560so (95 Lil Jasp. To cast pearls before swine - (g5T på 66ởT GODS5 vů LDT ðav. To be under one’s thumb — Sg góGOT 8 pibgoy Gir piösp 6iv . To be Greek and Latin - Suig, b GLIT (i) gCD.giggi). To go with the tide - 5IT Glogjigj & Gës ibno G35Ta) Lib. To quake in one's shoes - asidig, L-gi) 60 5Guiggi). To make mountain of a mole-hill - 66it 60fpl. luggirr is 6). To bell the cat - 307 dig, LDaoof 5 L L-di). To make bricks without straw - Loa) g-Goulli Saitantical upd
சொல்லல். To be food for worms - L06ör (3Gö96) L06öI (3595 6i). To build castle in the air - LD60T turt Gi) glg-556); LD 63rd G5ITL 60L
கட்டுதல். To change colour - (up 5th LDIT gigs di).

மொழிபெயர்ப்பு 79
To cry for the moon - முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்
Lit - 6). To shed crocodile tears - QLpg5&avši 3567 Gorffi (pỂ Gó) i 56ð76ooftř )
வடித்தல். To nip in the bud - (paatu Gal) Soir (els di. To have one's hands full — Up # 5, 6ớL GIBT Lóláiv avst GOLD. To lose oneself - GLD till LDso gigs di). To be dead-beat - அடித்துப்போட்ட பாம்பு போல. To kill two birds with one stone - gy fig Guit SGuit G. Scourt
ரூா. To bite off more than one can chew - yatayág is 65 & 5
சுமத்தல். To fall between two stools - gCOG5IT Goofusi Sir did 606), 556). To throw a sprat to catch a whale - go à Gurtl Gá சுருப்
பிடித்தல். d To hang in the balance – DFIT & GvTL –Giv. To add fuel to the fire - 67 iffi u lib 3éudio Go B5 u 6AfT tiġi 6). To set one's face against – 6?(5 60) 35 Lut iš356). To cut one's own throat - ut 2.0T 56är 52nu di Logist 2007 autiful
போடல். - To give chapter and verse - 6 if a furtas 6 Liaiss6). To take the bread out of one's mouth - 6) intusii) LDatar Gurt Léi). To plough the sand -- Gyps@?/ di Gg5 g6Osojë 35 av. To turn a deaf ear - G&F6 FITurt GOLD. To blow one's trumpet – Gaffrjö5ü L/prrorub url –6). Togo without saying - Gogrt Giavrt. p(Sao alan siis 6ä. To fish in troubled waters - g5 655 (puá) gig.d5 gi). To wash dirty linen in public - 56är Lugia)d (555, LDipalifa, GD digs மணக்கக் கொடுத்தல். W To lie in the bed one has made'-5/Tb 5Tb GeFüg 6987 57 (Bud
அனுபவித்தல். V. To look a gift horse in the mouth - 5ft Gotti G5IrG.55 LDrt La gif
பல்லைப் பிடித்துப் பார்த்தல். To take away one's breath - g57 di S. GIT till GLIntGs di). To pay back in the same coin - Lugfolë. G5' LuyÁO) GJIT Iš 5 6ão. To run with the hare and hunt with the hounds - Lungy digli காவல் பூனைக்கும் தோழன்; பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டல்.

Page 99
180 தமிழ் மொழி விளக்கம்
Too many irons in the fire - g5& fiaopig, Gaia) Throw mud at - (p555 di) ), if g 556). − Through thick and thin – 6)rtyp693) b 5up696) b. Utopian scheme - 6ðsT q. 85 Gir LDL-lib is L L - 6v. Weigh one's words – egyGITfög (Sus, 35 db. With a high hand - a pil DITOut. Win laurels - out 605 (5L6). World of difference - மலைக்கும் மடுவுக்குமுள்ள வேற்றுமை.
பயிற்சி
Translate the following into Tamil:
I Reference may be made to the Glossary for Tamil equivalents to difficult English words and phrases. I
I. Raicharan was twelve years old when he came as a servant to his master's house. He belonged to the same caste as his master and was given his master's little son to nurse. As time went on the boy left Raicharan's arms to go to school. From school he went to College, and after College he entered the judicial service. Until the time of the boy's marriage Raicharan was his sole attendant. But when a mistress came into the house, Raicharan found that he had two masters instead of one.
(Stories from Tagore)
2. A number of people, the first time they ever saw a camel, ran away from it, for they were much afraid of such a tall and strangely shaped beast. The second time they saw it, finding that it did them no harm they ventured to draw near to it and look at it closely. But by and by they saw what a quiet and patient animal it was; so they caught it, put a bridle upon it, placed heavy burdens on its back and made it act as their servant. In short, they came at last to look upon it with no more wonder than if it had been a dog or an ass. Things which at first may seem wonderful or dreadful to us become much less so when we have grown
used to them.
(Aesop’s Fables)

மொழிபெயர்ப்பு 18
3. A goat who was being chased by hunters ran for safety into a vineyard, and there hid himself beneath a thick vine. The hunters could not find him and soon passed on. Then the goat, after he had seen them go, came out from under the vine and began to eat the leaves, spoiling the tree in a very short time. The huntsmen, who had not gone far, heard the rastling of the leaves and saw the boughs moving, and they came back for another search. Thus the goat was soon discovered and taken - a punishment which he could not help feeling was a just one. For he had brought it upon himself by hurting that which had protected him.
(Aesop’s Fables)
4. I have no doubt that the youths of this country realise the great responsibility that rests on them. I have no doubt that through their sacrifice, suffering and labour, India will before long be a free country where men and women will be free and have equal opportunities for education and development. India shall be free - of that there is not the slightest doubt. The only question is, when she will be free. We have all been born slaves but let us all resolve to die as free men. And if we are not to see India free in our own life-time, let us at least die in the attempts to free
India.
(Subhas Bose)
5. This was the pleasantest year of all the life I led in this place. Friday began to talk pretty well and understand the names of almost everything I had occasion to call for and of every place I had to send him to, and talk a great deal to me; so that, in short, I began now to have some use for my tongue again, which indeed I had very little occasion for before-that is to say, about speech. Besides the pleasure of talking to him I had a singular satisfaction in the fellow himself. His simple unfeigned honesty appeared to me more and more everyday and I began really to love the creature; and, on his side, I believe he loved me more than *it was possible for him ever to love anything before.
(Robinson Crusoe )

Page 100
82 தமிழ் மொழி விளக்கம்
6. He declared it was of no use to work on his farm; it was the most pestilent little piece of ground in the whole country; everything about it went wrong, and would go wrong, in spite of him. His fences were continually falling to pieces; his cow would either go astray, crget among the cabbages; weeds were sure to grow quicker in his fields than anywhere else; the rain always made a point of setting in just as he had some outdoor work to do; so that though his patrimonial estate had dwindled away under his management. acre by acre, until there was little more left than a mere patch of Indian corn and potatoes, yet it was the worst conditioned farm in the neighbourhood.
(Rip Van Winkle)
7. It happened one day about noon, going towards my boat, I was exceedingly surprised with the print of a man's naked foot on the shore, which was very plain to be seen in the sand. Istood like one thunderstruck, or as if I had seen an apparition. I listened, I looked round me; I could hear nothing; nor see anything. I went up to a rising ground to look farther, I went up the shore and down the shore; but it was all one. I could see no other impression but that one. I went to it again to see if there were any more and to observe if it might not be my fancy; but there was no room for that, for there was exactly the very print of a foot, toes, heel, and every part of a foot; - how it came thither I knew not, nor could in the least imagine. But after innumberable fluttering thoughts, like a man perfectly confused and out of myself, I came home to my fortification. w
(Robinson Crusoe)
8. Here I understand that there is the hateful system of dowry, whereby it becomes most difficult for young women to get suitable matches. The grown up girls - some of you are grown up - are expected to resist all such temptations. If you will resist these evil customs some of you will have to begin by remaining maidens either for life, or at least for a number of years. Then, when it is time

மொழிபெயர்ப்பு 183
for you to marry, and you feel that you must have a partner in life, you will not be in thirst of one who has money or fame, or beauty of person, but you will be in search of one - even as Parvathi was - who has got all the matchless qualities which go to make good character.
(Gатdhiji iп Сеylon)
9. You may know, that each rupee that is to be found in this purse will go to find work for sixteen semi-starving women in the remote villages of India, and give them one anna per day for the work that they may do. Remember that they and their children do not get anything like two full meals per day, and that is what I can tell you from my own experience of hundreds of Indian villages. Your gift, therefore, is really an object lesson in true charity. What can be better or nobler than that from your youth, whilst you are shouldering no responsibility, you become accustomed to thinking not merely of yourselves but of those who are much poorer and much more unfortunately
placed than you are
(Gandhiji in Ceylon),
Io. The majority of men and women in the world live by the work of their hands. Girls and women are trained from early childhood to do this work. A school system will be truly educational only if it includes this training in the curriculum and develops it further with scientific knowledge and improved techniques. The other important aspect of education is social and cultural training. Girls and women are the guardians of social and cultural traditions of a nation. Any system which does not ensure the continuity of these traditions cannot be considered truly educational. Our girls and women in India may be illiterate but during the last non-violent movements for independence they showed that they were not uneducated politically and culturally. During the recent election the illiterate women of the villages voted with dignity and restraint. They showed that they might be illiterate but not uneducated. The task in India

Page 101
罩84 தமிழ் மொழி விளக்கம்
therefore, is not simply one of opening more and more schools. The task is to preserve and revitalise what is already there, using the existing agencies of family and community education.
(Srimathi Ashadevi Aryanayagam at the 44-тatiот Сопference at Gетеva)
II. The training that a school like Kundasale can give is I think a very important training to the women in our country. It is a systematic training in a small scale in agricultural farming, house-wifery and other such activities. Education in those details, in which we as a people are sounsystematic, will make for more efficient living; it will help to build up a more economical and productive community. To my mind religious education is absolutely essential. Ceylon is one of the foremost Buddhist countries, of the world, a country which has fortunately been spared the horrors of war. Our country is one where Buddhism is practised in its pristine purity. We can take a leading part in restoring peace in at least this region of the world and denominational institutions must play a great part in achieving this object, for they are responsible for the training of our young men and women, who will be the citizens of tomorrow and who will have to guide the destinies of the country.
(Mr. Dиdley Senanayake, Ex-Prime Minister of Ceylon)
I2. This is a party government, a Congress Government. I am the leader of the party and I am the leader of the Government. I have been a Congressman for close upon forty years, and it has been the pride and privilege of vast numbers of people in this country to do so. Some of the members of the Opposition also gained some stature through this Congress Organization.
It is a party Government as government are in parliamentary democracies. That does not mean that Government functions for the benefit of the party. The permanent

மொழிபெயர்ப்பு I 85。
services etc., should, of course be completely apart from ther party. The ministers are partymen but ministers naturally should function with integrity and not use their governmental position for party purposes. That is an individual matter or behaviour. But it would be wrong if the house considered as non-partymen simply because they became ministers.
(Pundit Nehru)
I3. But as years went on, old Glos procured other assistance than that of the donkey, or as I should rather say. Providence supplied him with other help; and, indeed, had it not been so, the old man must have given up his cabin and his independence and gone into the workhouse at Camelford. For rheumatism had afflicted him, old age had bowed him till he was nearly double, and by degrees he became unable to attend the donkey on its upward passage to the world above, or even to assist in rescuing the coveted weed from the waves.
At that time to which our story refers Trenglos had not been up the cliff for twelve months, and for the last six. months he had done nothing towards the furtherance of his. trade, except to take the money and keep it, if any of it was. kept, and occasionally to shake down a bundle of fodder for the donkey. The real work of the business was done
altogether by Mahala Trenglos, his grand-daughter.
(Anthony Trollope)
I4. The condition of working journalists in the state is rapidly deteriorating. The middle class cost of living is. oppressively high, but except for one or two papers which give some sort of allowance, proprietors as a body, seem to be profoundly oblivious of the fact. On the contrary the rising costs of newsprint come in as a handy excuse for giving no relief. The meagre and belated increments that have been recently sanctioned by one or two papers make little difference to the over-all picture, which is one of

Page 102
86 தமிழ் மொழி விளக்கம்
gloom. A Tamil daily in the city has suspended publication. Another is, or was till the other day, being run with exactly three sub-editors. There are other newspapers, who bear on their faces all the marks of amateurish inefficiency that comes of relying on untrained and unqualified men. Meanwhile men who have gained considerable experience and are accounted good craftsmen by their peers are eating out their hearts in silent misery for lack of steady employment.
(N. Raghunatha Aiyer, President, Southern India Journalist Federation)
I5. There is no occasion for me to speak today. The voice of the world in many languages has already spoken and proved that Mahatma Ghandhi was a world figure, loved and worshipped by all those who have a sense of the ideals, of righteousness, right doing and peace. We are his living symbols. We are his soldiers, we are the carriers of his banner before an embattled world. Our banner is Truth, our shield is Non-Violence, our sword is the sword of the spirit that conquers without blood. Shall we not follow in the footsteps of our Master? Shall we not obey the mandates of our Father ? Shall we not be his soldiers and carry his battle to triumph 2 Shall we not give the world the completed message of Mahatma Ghandhi? Though his voice will not speak again, have we not a million, million voices to bear his message to the world - not only in this world of our contemporaries but the world, generation after
generation ?
(Mrs. Sarojini Naidu)

GLOSSARY
I The Tamil equivalents (Wide Exercises on Translation) are applicable only in their respective contexts.
1.
to nurse - Li is féd,
ju di ci al service - FL'L 5
தொழில்
sole attendant - 6 G put
லாளன்
mistress - இல்லாள்
ஏ வ
4
have no doubt - g is G.55 LiS dia) realise the great responsibility - பெரும் பொறுப்பை உணர் தல equal opportunities - FLD F is
தர்ப்பம் resolve - உறுதிசெய்
5
singular satisfaction - g5 Gofoj
திருப்தி unfeigned honesty — Lu T F IT Iš
கற்ற நேர்மை.
pestient - நோய்க்கிடமான patrimonial estate - (pg|Go)FT di
காணி dwindled - 3565715ug Indian corn - Gynt at th worst conditioned - GLDIT & LDIT GOT
நிலையுள்ள
7 like one thunder struck-2)g Gu றுண்டு மலைத்தவன் போல apparition – CôLu u/C15
fluttering thoughts-pišauf giant
எண்ணங்கள்
out of myself - GTGirahar LDfdigil
fortification — Luntig 35T L'ILL-ub
8
matches - 56007 6) rit
resist - GT S) rifj55 av
customs - வழக்கங்கள்
maidens - கன்னியர்கள்
partmer - வாழ்க் கைத் துணை
GQ GT
matchless qualities - g3,007 uSci)
லாப் பண்புகள்
9
remote villages - G F till 60 LD us
லுள்ள கிராமங்கள்
object lesson -- GTG) sägs jis 35T L-G)
whilst shouldering no responsibility - பொறுப் பில் லாத போது
O
majority-பெரும்பான்மையான system - (up 60AD curriculum – Luft L-5u "Lub scientific knowledge-6óGGIT GOT
அறிவு improved techniques-5. (Disgu
செய்கை முறை aSpect – egy lba Lb social and cultural training - சமூக பண்பாட்டுப் பயிற்சி

Page 103
88
ensure - திடப்படுத்து continuity - Gigirl Li j6) traditions - LDT LI 95 Gir non-violent movements – egy 6lb
சை இயக்கங்கள் politically and culturally - gypt சியல், பண்பாடு சம்பந்த
DIT IS election - G5 is di) voted with dignity and restraintகண்ணியத்துடனும் கட்டுப் பாட்டுடனும்வாக்களித்தார்
Ꮎ5 ᎧiᎢ illiterate but not uneducated - படிக் காதவர் களான லும் அறிவற்றவர்களல்லர் preserve and revitalise - LIT gil காத்துப் புத்துயிரளித்தல் agencies of family and community education - g5G thu f(up தாயக் கல்வி மூலம்
1.
agricultural farming-66. Frtugs
தொழில் house-Wifery - வீட்டுப்பணி economical and productive community-சிக்கனமும் பொருட் பெருக்கமும் நிறைந்த சமு தாயம் has been spared the horrors of war - போரின் கொடூரங்களி லிருந்தும் தப்பியது pristine purity - LuTIT g5 607 Laoh
தம் denominational institutions - மத சம்பந்தமான கழகங்கள் in restoring peace - FLDIT5 it னத்தை மீண்டும்நிலைநாட்ட
GLOSSARY
must play a great part - Gou (U. முயற்சி செய்தல் வேண்டும்
to guide the destinies of the country - நாட்டின் வருங்கா லத்தை வகுக்க
2
party government - 5 L & gypt
சியல் close upon - 6Jsodigy 60) fou pride and privilege - Guo Gold
யும் பேறும் М members of the opposition -
எதிர்க்கட்சி அங்கத்தினர் stature - 9 uusi 6 organization — 354p 35 h in parliamentary democracies -
குடியாட்சி முறைக்கேற்ப
permanent services etc. - pëlgië.
தர ஊழியம் முதலியன integrity — Göri Gooto
3
afflicted - SL9-555)
coveted - அவாவிய
l4
journalists - பத்திரிகை எழுத்
தாளர்
is rapidly deteriorating - 660 ut வாகக் கு றந்து கொண்டு வருகிறது
middle class cost of living - நடுத் தர வகுப் பினரின் வாழ்க்கைச் செலவு
is oppressively high - gyorgy கடந்து அதிகரித்திருக்கின் sDigil


Page 104