கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம்

Page 1
சிறுவர் உ
பற்றிய கி

–sflø0)LD567
Fι DG) / ΠιII I b
දිද
E=""
-_
CE
f

Page 2

சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம்
1989 நவம்பர் 20 ஆந் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முனனுரை தற்போதைய சமவாயத்திற்பங்குகொள்ளும் நாடுகள்
ஐக்கிய நாடுகள் சாசனம் பிரகடனஞ் செய்துள்ள கோட் பாடுகளின் படி உலகில் சுதந்திரம், நீதி, சமாதானம் என்பன நிலை பெறவேண்டுமானால் மனித சமுதாயத்தின் சகல உறுப்பினர்களினதும் உள்ளார்ந்த கெளரவம், சமமானதும் பிறர் அபகரிக்க முடியாததுமான உரிமை ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளுதல் அடிப்படையான தென்பதை கருத்திற் கொண்டு,
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்தவர்கள், மனிதப் பிறவியின் அடிப்படை உரிமைகள் மீதும் கெளரவம், பெறுமதி ஆகியவற்றின் மீதும் தமக்குள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி, விரிவான சுதந்திரத்துடன் சமூக முன்னேற்றத்தையும் சிறப்பான வாழ்க்கைத் தரங்களையும் மேம்படுத்த உறுதிபூண்டுள்ளனர் என்பதை நினைவு கூர்ந்து,
ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திலும் மனித உரிமைகள் மீதான சர்வதேச ஒருப்பாடுகளிலும் வரையறுக்கப்பட்டுள்ள சகல உரிமைகளும் சாதி, நிறம், பால், மொழி, மதம் அரசியல் அல்லது பிற கோட்பாடு,தேசிய அல்லது சமூகப் பூர்வீகம், ஆதனம், பிறப்பு
1

Page 3
அல்லது பிற தராதரம் போன்ற எத்தகைய பாகுபாடுமின்றி ஒவ்வொருவருக்கும் உரியனவெனப் பிரகடனஞ்செய்து உடன்பட்டுள்ள தென்பதை ஏற்றுக்கொண்டு,
சிறுபிராயமானது, சிறப்பான பராமரிப்பும் ஆதரவும் பெறும் உரிமையுடையதென மனித உரிமைகள் மீதான சர்வதேச பிரகடனத்தில் ஐக்கிய நாடுகள் சபை அறை கூவியுள்ளமையை நினைவிற் கொண்டு,
குடும்பமானது சமுதாயத்தின் ஆதாரமான குழுவாகவும் அதன் சகல உறுப்பினர்களினதும், அதிலும் குறிப்பாக சிறுவர், சிறுமியரின் வளர்ச்சி, நல்வாழ்வு ஆகியவற்றுக்கு ஏற்ற இயற்கைச் சூழலாகவும் விளங்குகின்றபடியால், சமுதாயத்தில் அது தனக்குரிய முழுப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வதற்கு அவசியமான பாதுகாப்பையும் ஒத்தாசையையும் அதற்கு அளித்தல் வேண்டுமென்பதில் நம்பிக்கைகொண்டு,
குழந்தை தனது ஆளுமையை முழுமையாகவும் இசைவாகவும் விருத்தி செய்வதற்கு ஒரு குடும்பச் சூழலில், ஆனந்தமும், அன்பும், பற்றுணர்வும் உள்ள சுற்றாடலில் வளர வேண்டுமென்பதை ஏற்றுக்கொண்டு,
சிறுவர்கள் சமுதாயத்தில் தனி வாழ்க்கை நடத்துவதற்கு முற்று முழுதாகத் தயார் படுத்தப்படவும் ஐக்கிய நாடுகள் சாசனத்தில் வரையறுத்துள்ள ஆத்மார்த்தப் பண்புகளுக்கமைய, அதிலும் குறிப்பாக சமாதானம், கண்ணியம், சகிப்புத்தன்மை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய இலட்சிய உணர்வுடன் வளர்க்கப்படவும் வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு,
2

சிறுவருக்குச் சிறப்பான பராமரிப்பு அவசியமென்பது 1924 ஆம் ஆண்டின் சிறுவர்கள் உரிமைகள் பற்றிய ஜெனிவாப் பிரகடனத்திலும் 1959 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏற்றுக் கொண்ட சிறுவர்கள் உரிமைகள் பற்றிய பிரகடனத்திலும் கூறப்பட்டுள்ளதென்பதையும், மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனத்திலும் குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச ஒருப்பாட்டிலும் குறிப்பாக 23, 24 ஆம் உறுப்புரைகளில்) பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச ஒருப்பாட்டிலும் ( குறிப்பாக 10ஆம் உறுப்புரையில்) சிறுவர் சிறுமியரின் நலனில் அக்கறை கொண்டுள்ள விசேட முகவர் நிலையங்கள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றின் நிரந்தர விதிகள், மற்றும் தொடர்புடைய ஒப்பந்தங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள தென்பதையும் மனத்திருத்தி, சிறுவர்கள் உரிமைகள் மீதான பிரகடனத்தில் சுட்டிக்காட்டியுள்ளவாறு,குழந்தை உடலாலும் உள்ளத்தாலும் முதிர்ச்சியற்றிருப்பதன் காரணமாக அது கருவில் இருக்கும் போதும் பிறந்த பின்னரும், முறையான, சட்ட வாரியான பாதுகாப்பு உட்படவிசேட பாதுகாப்புகளும் பராமரிப்பும் அதற்கு அவசியம் என்பதை மனதிற் கொண்டு,
தேசிய மற்றும் சர்வதேச வாரியாகக் குழந்தை களைத் தாபரித்தல், தத்தெடுத்தல் தொடர்பான உறுப்புரையினைச் சிறப்பாகவும்,சிறுவர் பாதுகாப்பு மற்றும் சேமநலன் என்பன சாந்த சமூக, சட்ட விதிகள் மீதான பிரகடத்தின் உறுப்புரைகளைப் பொதுப்படையாகவும் நினைவுகூர்வதுடன்,பாலியக் குற்றவாளிகளுக்கு நியாயம்
3

Page 4
வழங்குதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குறைந்தபட்ச நியம விதிகள், பெய்ஜிங் விதிகள், அவசரகாலத்திலும் ஆயுதப்போராட்டத்தின் போதும் பெண்கள், சிறுவர்கள் ஆகியோரைக் காத்தல் சம்பந்தமான பிரகடனம் ஆகியவற்றையும் நினைவு கூர்ந்து,
உலகின் எல்லா நாடுகளிலும் சிறுவர், சிறுமியர் மிகமிகச் சிரமமான நிலைமைகளிலே வாழ்கிறார்கள் என்பதையும் அத்தகைய சிறுவர்களுக்கு விசேட கரிசனை அவசியமென்பதையும் ஏற்றுக்கொண்டு,
குழந்தைகளின் பராமரிப்புக்கும் இசைவான வளர்ச்சிக்கும் ஒவ்வோர் இன மக்களினதும் பாரம்பரியங்களும் கலாசார சீலங்களும் முக்கிய மென்பதைக் கவனத்திற் கொண்டு,
ஒவ்வொரு நாட்டிலும், அதிலும் குறிப்பாக வளர்முக நாடுகளில், சிறுவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தற்குச் சர்வதேச ஒத்துழைப்பு முக்கியமென்பதை ஏற்றுக் கொண்டு, பின்வருமாறு உடன்பட்டுள்ளன:

பாகம் 1
உறுப்புரை 1
தற்போதைய சமவாயத்தின் நோக்கங்களின் பொருட்டு 18 வயதுக்குக் குறைந்த மனிதப் பிறவி ஒவ்வொன்றும் ஒரு பிள்ளை எனக் கருதப்படும். சிறுவர் தொடர்பான சட்டத்தின் படி பிராயமடையும் வயது முன்னதாகவே வரையறுக்கப்பட்டிருந்தாலன்றி, மேற்படி வயதெல்லையே பிள்ளையைக் குறிக்கும்.
உறுப்புரை2
1. அரசதரப்பினர் தமது பரிபாலனத்துள் வரும் ஒவ் வொரு பிள்ளைக்கும் அதன் பெற்றோர் அல்லது சட்டப்படியான பாதுகாவலரின் சாதி,நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது வேறு கோட்பாடு, தேசியம், இனம் அல்லது சமூகப் பூர்வீகம், ஆதனம், ஊனம், பிறப்பு அல்லது வேறு அந்தஸ்து ஆகிய பாகுபாடு எதனையும் பொருட்படுத்தாது, இச்சமவாயத்தின் உரிமைகளை மதிக்கவும் உறுதிப்படுத்தவும் வேண்டும்.
2. அரச தரப்பினர் பிள்ளையின் பெற்றோர், சட்டப்படியான பாதுகாவலர் அல்லது குடும்ப உறுப்பினர்களின் அந்தஸ்து,நடவடிக்கைகள், அவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் அல்லது நம்பிக்கைகள் ஆகியவற்றின் மீதான எத்தகைய பாரபட்சம் அல்லது தண்டனையிலிருந்தும் பிள்ளையைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
5

Page 5
உறுப்புரை 3
I. சிறுவர்கள் சார்பாக அரசாங்க அல்லது தனியார் சமூகநல அமைப்புகள், நீதிமன்றங்கள், நிர்வாக அதிகாரசபைகள் அல்லது சட்டவாக்கக் குழுக்கள் எடுக்கும் எல்லா நடவடிக்கைகளிலும் பிள்ளையின் நன்மையே முழுமுதற் கவனம் பெறல் வேண்டும்.
2. அரச தரப்பினர், பிள்ளையின் நல்வாழ்வுக்கு அவசியமான பாதுகாப்பையும் பராமரிப்பையும் உறுதிப்படுத்துவதற்குப் பொறுப்பேற்றல் வேண்டும். இது விடயத்தில், பிள்ளையின் பெற்றோர், சட்டப்படியான பாதுகாவலர் அல்லது சட்டப்படி பொறுப்புடைய தனிநபர்களின் உரிமைகளும் கடமைகளும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
3. சிறுவர் பராமரிப்பு அல்லது பாதுகாப்புக்கு பொறுப்பாயிருக்கும் நிறுவனங்கள், சேவைகள், வசதிகள் ஆகியனவற்றில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை, தகைமை மற்றும் திறமையான கண்காணிப்பு விடயங்களில், அதிலும் குறிப்பாக பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற துறைகளில், தகுதிவாய்ந்த அதிகாரிகள் வரையறுத்துள்ள விதிமுறைகளுக்கு அமைய ஒழுகுவதனை அரசதரப்பினர் உறுதிப்படுத்துதல் வேண்டும்.
உறுப்புரை 4
இச்சமவாயத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் உரிமைகளை நடைமுறைபபடுத்துவதற்கு உரிய
6

சட்டவாக்க, நிர்வாக இன்னபிற நடவடிக்கை அனைத்தையும் அரசதரப்பினர் எடுத்தல் வேண்டும். பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் சம்பந்தப்பட்ட மட்டில் அரசதரப்பினர் தம்வசமிருக்கும் மூலவளங்களை எவ்வளவு அதிகமாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதுடன் அவசியம் ஏற்படும்போது சர்வதேச கட்டுக்கோப் பினுள்ளும் இயங்க வேண்டும்.
உறுப்புரை 5
பிள்ளை, தற்போதைய சமயவாயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் உரிமைகளைத்தனது பரிணாம வளர்ச்சித் திறனுக்கு அமைய அனுபவிப்பதற்குப் பொருத்தமான வழி முறைகளைக் காட்டுவதில் பெற்றோர் அல்லது உள்ளுர் வழக்கத்தின்படி நியமிக்கப் பெற்ற கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் அல்லது சமூகத்தினர், சட்டப்படியான பாதுகாவலர்கள் அல்லது சட்டப்படி குழந்தைக்குப் பொறுப்பாயிருக்கும் ஏனையோருக்கு உள்ள கடப்பாடுகளை அரசதரப்பினர் மதித்தல் வேண்டும்.
உறுப்புரை 6
1. ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர்வாழும் உரிமை உடன் பிறந்ததென்பதை அரசதரப்பினர் ஏற்றுக்
கொள்கின்றனர்.

Page 6
2. அரசதரப்பினர் குழந்தையின் உய்வையும் வளர்ச்சியையும் தம்மால் முடிந்தவரை உறுதிப்ப டுத்துதல் வேண்டும்.
உறுப்புரை7
. குழந்தை பிறந்ததும் பதிவு செய்யப்படல் வேண்டும். அத்துடன் பிறந்ததும் தனக்கென ஒரு பெயரைப் பெறும் உரிமை, ஒரு தேசிய இனத்தை வரிக்கும் உரிமை, தன்னால் இயன்ற வரை தன் பெற்றோரை அறிந்து அவர்களின் பராமரிப்பைப் பெறும் உரிமை ஆதியனவும் அதற்கு உண்டு.
2. இந்த உரிமைகள் தமது தேசிய சட்ட வரை யறைக்கு அமைய நடைமுறையாவதையும் அவற்றின் பால் தமக்குள்ள கடப்பாடுகள், இத்துறை சம்பந்தப்பட்ட சர்வதேச சாதனங்களின் கீழ் நிறைவேற்றப்படுவதையும் - அதிலும் குறிப்பாக, குழந்தை நாடற்ற நிலைக்கு ஆளாகுமெனக் காணும் பட்சத்தில், அரசதரப்பினர் உறுதிப்படுத்துதல் வேண்டும்.
உறுப்புரை 8
l. குழந்தை சட்டவிரோதமான தலையீடின்றி, சட்டம் அங்கீகரித்தவாறான, தேசிய இனம், பெயர், குடும்ப உறவுகள் அடங்கலான தனது ஆளடை யாளத்தைப் பேணும் உரிமையுடைய தென்பதை மதிப்பதற்கு அரசதரப்பினர் உடன்படல் வேண்டும்.

2. குழந்தையின் ஆளடையாளத்தின் சில அல்லது எல்லாக் கூறுகளும் சட்ட விரோதமான முறையில் மறுக்கப்பட்டால், அக் குழந்தையின் ஆளடையாளம் மீண்டும் நிலை நாட்டப்படும் பொருட்டு அரசதரப்பினர் உரிய உதவியும் பாதுகாப்பும் வழங்குதல் வேண்டும்.
உறுப்புரை 9
1. ஒரு குழந்தை முறையான சட்டத்துக்கும் நடைமுறைகளுக்கும் அமைய தகுதி வாய்ந்த நீதிவிசாரணை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு அதன் நலனுக்கு அவசியமெனத் தீர்மானிக்கப்பட்டாலன்றி, பெற்றோரிடமிருந்து அவர்களின் விருப்பத்துக்கு மாறாகப் பிரிக்கப்படாதிருப்பதை அரசதரப்பினர் உறுதிசெய்தல் வேண்டும்.குழந்தையைப் பெற்றோர் இம்சைப்படுத்துதல், புறக்கணித்தல் அல்லது பெற்றோர் பிரிந்து வெவ்வேறு இடங்களில் வாழும் நிலையில் குழந்தையின் வசிப்பிடம் எதுவெனத் தீர்மானித்தல் போன்ற குறிப்பிட்ட சந்தர்ப்பங் களிலேயே இவ்வாறான முடிவு அவசியமாகலாம்.
2. மேற்குறித்தவாறான விசாரணையின் போது, குழந்தையில் அக்கறையுள்ள சகல தரப்பினரும் விசாரணையில் பங்குகொள்ளவும் தமது கருத்துகளை வெளியிடவும் வாய்ப்பளிக்கப்படல் வேண்டும்.
3. பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தை, அதன் சேம நலனுக்கு உகந்ததல்லவெனக் கருதினாலான்றி, பெற்றோருடன் கிரமமான முறையில் சொந்த உறவையும்

Page 7
நேரடித் தொடர்பையும் பேணும் உரிமையுடைய தென்பதை அரசதரப்பினர் மதித்தல் வேண்டும்.
4. அத்தகைய பிரிவானது அரசதரப்பொன்று மேற்கொண்ட தடுத்துவைத்தல், சிறை வைத்தல், கடத்தல் போன்ற நடவடிக்கையினால் அல்லது (அரசாங்கத்தின் காவலில் இருக்கும் போது எக் காரணத்தினாலும் ஏற்படக் கூடிய மரணம் அடங்கலான) பெற்றோர் இருவரினதும் அல்லது ஒருவரின் அல்லது பிள்ளையின் மரணத்தினால் நிகழும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நாடு, பெற்றோர், குழந்தை அல்லது குடும்பத்தின் மற்றோர் உறுப்பினருக்கு, பிரிந்து போன குடும்ப அங்கத்தினர் பற்றிய முக்கியமான தகவல்களைக் கேட்டால், அத் தகவல் குழந்தையின் நல்வாழ்வுக்குக்குந்தகம் உண்டாக்குமாயிருந்தால் அன்றி மற்றும் படி கொடுக்கப்பட வேண்டும். விண்ணப்பம், அதனளவில் சம்பந்தப்பட்ட நபர்களுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாதிருப்பதை அரசதரப்பினர் உறுதிப்படுத்துதல் வேண்டும்.
உறுப்புரை 10
குடும்பத்துடன் சேரும் பொருட்டு ஒரு பிள்ளை அல்லது அதன் பெற்றோர் ஓர் அரசதரப்பிலிருந்து வெளியேற அல்லது நாட்டினுள் நுழையவெனச் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களை அரசதரப்பினர் உறுப்புரை 9 இன் ஆம் பகுதியிற்குறிப்பிட்ட கடப்பாடுக் கமைய தீர்க்கமாக, விதாபிமானத்துடன் துரிதமாகக் கவனித்தல் வேண்டும்.
10

அத்தகைய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்ததனால் விண்ணப்பதாரருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர் களுக்கும் எந்தவித பாதகமான விளைவுகளும் ஏற்படா திருப்பதையும் அரசதரப்பினர் உறுதிப்படுத்துதல் வேண்டும்,
2. ஒரு பிள்ளையின் பெற்றோர் வெவ்வேறு நாடுகளில் வசிப்பவர்களாயிருந்தால், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங் களில் தவிர, மற்றும்படி அவர்களுடன் சொந்த உறவையும் நேரடித் தொடர்புகளையும் வைத்துக் கொள்ளும் உரிமை அப்பிள்ளைக்கு உண்டு. இந்த நோக்கத்தின் பொருட்டு, உறுப்புரை 9 பந்தி 1 இன் கடப்பாட்டுக்கு அமையவும் பிள்ளை அல்லது பெற்றோர் தமது சொந்த நாடு உட்பட எந்த நாட்டையும் விட்டு, தமது நாட்டில் பிரவேசிக்கவும் உரிமையுடையவர்களென்பதை அரசதரப்பினர் மதித்தல் வேண்டும். ஏதேனும் நாட்டை விட்டு வெளியேறும் உரிமை, சட்டப்படியான வரையறைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொதுச் சுகாதாரம் அல்லது ஒழுக்க விதிகள் அல்லது பிறரின் உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றை மீறாததாயும் தற்போதைய ஒருப்பாட்டில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் பிற உரிமைகளுக்கு இசைவானதாயும் இருத்தல் வேண்டும்.
உறுப்புரை 11
l, பிள்ளைகள் கள்ளத்தனமாக வெளி நாடு களுக்கு கடத்தப்படுவதையும் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படா திருப்பதையும் முறியடிப்பதற்கான நட வடிக்கைகளை அரசதரப்பினர் மேற்கொள்ளுதல்வேண்டும்
11

Page 8
2. இதன் பொருட்டு அரசதரப்பினர் இருதரப்பு அல்லது பலதரப்பு உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதையோ ஏலவே நிலைபெற்றிருக்கும் உடன்படிக்கைகளை அணுகுவதையோ ஊக்குவித்தல் வேண்டும்.
உறுப்புரை 12
l. தானாகவே கருத்துகளை எண்ணித் துணியும் ஆற்றலுள்ள பிள்ளைக்கு, அதனைப் பாதிக்கும் எல்லா விடயங்களிலும், தன் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை அரசதரப்பினர் உறுதிப்படுத்துவதுடன்,பிள்ளையின் வயதுக்கும் முதிர்ச்சிக்கும் அமைவாக, அதன் கருத்துகளை உரிய முறையில் சீர்தூக்கிப் பார்க்கவும் வேண்டும்.
2. இதன் பொருட்டு, பிள்ளையைப் பாதிக்கக் கூடிய எந்தவொரு நீதி மற்றும் நிர்வாக விசாரணைகளிலும் நாட்டின் சட்ட நடைமுறை விதிகளுக்கு அமைய, நேரடியாகவோ பிரதிநிதி ஒருவர் மூலமோ, தோதான ஒரு குழு மூலமோ, தன் பக்கக் கருத்தைத் தெரிவிக்கும் வாய்ப்பு பிள்ளைக்கு வழங்கப்படல் வேண்டும்,
உறுப்புரை 13
i. பிள்ளைக்குப் பேச்சுச் சுதந்திரம் இருத்தல் வேண்டும். வாய் மொழி, எழுத்து, அச்சுக் கருவி மூலமோ, கலை வடிவத்திலோ அல்லது விரும்பிய மற்றெந்த ஊடகத்தின் மூலமோ எத்தகைய பூகோள எல்லைகளையும் கருத்திற் கொள்ளாது எல்லா வகையான சிந்தனைகள்,தகவல்களையும் தேடவும், பெறவும், பிறருக்குப் பரிமாறவும் பிள்ளைக்கு உள்ள சுதந்திரத்தையும் இந்த உரிமை அடக்குதல் வேண்டும்.
12

2. இந்த உரிமையைப் பிரயோகிப்பதில் சில கட்டுப்பாடுகள் குறுக்கிடலாம். ஆனால் இவை,
(அ) பிறரின் உரிமைகளையும் நற்பெயரையும் மதிப்பதற்கு அல்லது
(ஆ) தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொதுச் சுகாதாரம் அல்லது ஒழுக்கம் ஆகியவற்றைப் பேணுவதற்கு சட்டத்தில் வரையறுக்கப்பட்டவையும் அவசியமானவையும் ஆக மட்டுமே இருத்தல் வேண்டும்.
உறுப்புரை 14
1. அரசதரப்பினர் பிள் ளை, சிந்தனிை மனச்சாட்சி, சமயம் ஆகிய சார்ந்த சுதந்திரத்திற்கு உரித்துடையதென்பதை மதித்தல் வேண்டும்.
2. பிள்ளை தனது பரிணாம வளர்ச்சியின் ஆற்றலுக்கு ஏற்றவாறாகத் தனது உரிமைகளை ஆண்டு அனுபவிப்பதில் வழி காட்டுவதற்குப் பெற்றோருக்கும் பொருத்தமான சந்தர்ப்பத்தில் அதன் சட்டப்படியான பாதுகாவலருக்கும் உள்ள உரிமைகளையும் கடமைகளையும் அரசதரப்பினர் மதித்தல் வேண்டும்.
3. ஒருவரின் சமயத்தை அல்லது நம்பிக்கைகளை வெளிப் படுத்துவதற்கான சுதந்திரம், பொது மக்களின் பாதுகாப்பு, ஒழுங்கு, சுகாதாரம்,நன்னெறிகள் அல்லது பிறரின் அடிப்படை உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றைப் பேணுவதற்கு அவசியமானவையும் சட்டப்படி விதிக்கப்பட்டவையுமான வரையறைகளுக்கு மட்டுமே அமைந்ததாக இருக்கலாம்.
13

Page 9
உறுப்புரை 15
l. அரசதரப்பினர், சிறுவர்கள் கூடுவதற்கான சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்று சேரும் சுதந்திரம் என்பன உடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
2. ஒரு சனநாயக சமுதாயத்திலே தேசிய பாதுகாப்பு அல்லது பொதுமக்களின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு ஆகியவற்றின் நலன் கருதியும் பொதுமக்களின் சுகாதாரம் அல்லது நன்னெறிகள் ஆகியவற்றைப் பேணும் பொருட்டும் அல்லது பிறரின் உரிமைகளையும் சுதந்திரங் களையும் பேணும் பொருட்டும் அவசியமானவற்றையும் சட்டப்படி விதிக்கப்பட்ட வற்றையும் தவிர, வேறு கட்டுப் பாடுகள் எவையும் இந்த உரிமைகளை அனுபவிக் கையில் சுமத்தப்படலாகாது.
உறுப்புரை 16
l. பிள்ளையின் அந்தரங்கம்,குடும்பம்,வீடு அல்லது கடிதத் தொடர்பில் தன்னிச்சையாக அல்லது சட்டவி ரோதமாகத் தலையிடவோ அதன் கண்ணியம் அல்லது நற்பெயர்மீது சட்டவிரோதமாகத் தாக்குதல் நடத்தவோ கூடது.
2. இத்தகைய தலையீடு அல்லது தாக்குதலுக்கு
எதிராகச் சட்டத்தின் பாதுகாப்பைப் பெறும் உரிமை பிள்ளைக்கு உண்டு.
14

உறுப்புரை 17
அரசதரப்பினர் வெகுசன ஊடகங்கள் ஆற்றும் முக்கியமான பணியை அங்கீகரிப்பதுடன் பிள்ளை தகவல்களையும், தகவல்களைத் தரும் (நூல்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள் போன்ற) தகவற் சாதனங்களையும், அதிலும் விசேடமாக அதன் சமூக, ஆத்மார்த்த மற்றும் ஒழுக்க மேம்பாட்டுக்கும் உடல், உள ஆரோக்கியத்துக்கும் சிறப்பாகப் பயன்படக்கூடிய தகவல்களையும், தகவற் சாதனங்களையும் பல்வேறு தேசிய, சர்வதேச மூலங்களிலிருந்து பெறுதற்கான வழிவகைகளை உறுதிப்படுத்துதல் வேண்டும். இதன் பொருட்டு, அரசதரப்பினர்,
(அ) பிள்ளையின் சமூக, கலாசார நலனுக்கு உகந்ததும் உறுப்புரை 29 இன் கருத்துக்கு அமைந்ததுமான சர்வதேச தகவல்களையும் தகவற் சாதனங்களையும் பரப்பும்படி வெகுசன ஊடகங்களை ஊக்குவித்தல் வேண்டும்.
(ஆ) இவ்வாறான தகவல்களையும் தகவற் சாதனங் களையும் பலதரப்பட்ட கலாசார, தேசிய, சர்வதேச மூலங்களில் தயாரிப்பதிலும் பரிமாறிக் கொள்வதிலும் பரப்புவதிலும் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவித்தல் வேண்டும். (இ) சிறுவர்களுக்கு உகந்த புத்தகங்கள், பிர சுரங்கள் வெளியிடப்படுவதையும் பரப்பப்படுவதையும் ஊக்குவித்தல் வேண்டும்.
15

Page 10
(ஈ) ஆதிவாசிப் பரம்பரையை அல்லது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பிள்ளையின் மொழித் தேவைகளுக்கு வெகுசன ஊடகங்கள் விசேட கவனஞ் செலுத்துவதை ஊக்குவித்தல் வேண்டும்.
(உ) உறுப்புரை 12, 18 ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு,பிள்ளையின் நல்வாழ்வுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய தகவல் கள், தகவற் சாதனங்கள் ஆகியவற்றிலிருந்து பிள்ளையைக் காப்பதற்கு நெறிமுறைகளை உருவாக்க ஊக்குவித்தல் வேண்டும்.
உறுப்புரை 18
l. பிள்ளையை வளர்த்து ஆளாக் குவதில் பெற்றோர் இருவருக்கும் பொதுவான பொறுப்புகள் உண்டென்னும் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்படுவதை உறுதிப்படுத் துதற்கான உயரிய முயற்சிகளை அரசதரப்பினர் மேற்கொள்ள வேண்டும். குழந்தையை வளர்ப்பதிலும் ஆளாக்குவதிலும் முக்கியமான பொறுப்பு பெற்றோரை, அவர்கள் இல்லாத பட்சத்தில் சட்டப்படியான பாதுகாவலரைச் சார்ந்ததாகும். குழந்தையின் நலனே அவர்களின் முழுமுதற் கரிசனையாயிருத்தல் வேண்டும்.
2. அரசதரப்பினர் இச்சமவாயத்தில் சொல்லப் பட்டிருக்கும் உரிமைகளுக்கு உத்தரவாதமளித்து அவற்றைப்பரப்பும் பொருட்டு, பெற்றோரும் சட்டப்படியான பாதுகாவலர்களும் குழந்தையை வளர்ப்பதில் தமக்குள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான தகுந்த ஒத்தாசையை அளிப்பதுடன் சிறுவர்களின்
16

பராமரிப்புக்கான நிறுவனங்கள், வசதிகள், சேவைகள்
ஆகியவற்றின் அபிவிருத்தியை உறுதிப்படுத்தவும் வேண்டும்.
3. தொழிலாற்றும் பெற்றோரின் குழந்தைகள் தமக்குத் தகுந்த பராமரிப்புச் சேவைகளையும் வசதிகளையும் பெறும் உரிமையுடையவர்க ளென்பதை உறுதிப்படுத்து வதற்கான சகல நடவக்கைகளையும் அரசதரப்பினர் மேற் கொள்ளவேண்டும்.
உறுப்புரை 19
1. பெற்றோர், சட்டப்படியான பாதுகாவலர் அல்லது பராமரிக்கும் வேறெவரினதும் கண்காணிப்பில் பிள்ளை, வளரும் பருவத்தில், பாலியல் சார்ந்த இம்சை அடங்கலான உடலை அல்லது உள்ளத்தைப் பாதிக்கக் கூடிய வன்செயல், காயம் அல்லது இம்சை, புறக்கணிப்பு அல்லது பராமுகமான பராமரிப்பு, கொடுமை அல்லது சுரண்டிப் பிழைத்தல் போன்ற சகல வகையான தீங்குகளிலிருந்தும் அதனைக் காப்பாற்றுதற்குரிய சட்ட, நிர்வாக,சமூக,போதனா நடவடிக்கைகள் அனைத்தையும் அரசதரப்பினர் மேற்கொள்ள வேண்டும்.
2. அத்தகைய நடவடிக்கைகளில் பிள்ளைக்கும் பிள்ளையைப் பராமரிப்பவர்களுக்கும் தேவையான ஆதரவளிக்கக்கூடிய சமூகநலத் திட்டங்களை உருவாக்குவதற்கு ஏற்ற நடைமுறைகளும் அடங்குதல் வேண்டும். அதுமட்டுமன்றி, நீதித் துறையினை ஈடுபடுத்துதற்கு இசையும் வகையில் மேற்குறித்தவாறான
17

Page 11
தீங்குகளை இனங்காணுதல், அறியத்தரல், சாட்டுதல் செய்தல், விசாரித்தல், சிகிச்சையளித்தல் மற்றும் தொடர்ந்து அவதானித்தல் ஆகியவையும் வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளும் இடம்பெறல் வேண்டும்.
உறுப்புரை 20
l. தற்காலிகமாவோ நிரந்தரமாகவோ தன் குடும்பச் சுற்றாடலை இழந்த பிள்ளை அல்லது அதன் நல்வாழ்வுக்கு உகந்த சுற்றாடலை இழந்த பிள்ளை, அரசாங்கத்தின் விசேட பாதுகாப்புக்கும் தாபரிப்புக்கும் உரித்துடையதாகும்.
2. அத்தகைய பிள்ளைக்கு, அரசதரப்பினர் தமது தேசிய சட்டங்களுக்கு அமைய, மாற்றுப் பராமரிப்பினை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
3. அவ்வாறான மாற்றுப் பராமரிப்பானது தாபரிப்புப் பெற்றோரிடம் கையளித்தல்,இஸ்லாமியச் சட்டப்படியான கஃபால முறைச் சுவீகாரம் அல்லது அவசியமாயின் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சேர்ப்பித்தல் போன்ற நடவடிக்கைகளையும் அடக்குதல் வேண்டும்.தீர்வுகளை ஆராயும்போது, குழந்தையின் வளர்ச்சிப் பாங்கின் தொடர்பறாமை மற்றும் அதன் இன, மத, கலாசார, மொழிப் பின்னணி என்பன கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
உறுப்புரை 21
சுவீகார முறையை ஏற்றுக் கொண்டுள்ள அல்லது
18

அனுமதிக்கின்ற அரசதரப்பினர்குழந்தையின் நல்வாழ்வே பிரதான குறிக்கோள் என்பதை உறுதிப்படுத்துவதுடன்,
(அ) பிள்ளையைத் தத்தெடுக்கும் பணி தகுதி வாய்ந்த அதிகாரிகளின் அங்கீகாரத்துடனேயே நடைபெறுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும். இவ்வதிகாரிகள் பொருத்தமான சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் அமையவும்,பிள்ளையின் பெற்றோர், உறவினர்கள், சட்டப்படியான பாதுகாவலர்கள் ஆகியோரின் நிலைபரத்தைப் பொறுத்த வரையில் சுவீகாரம் அனுமதிக்கத் தக்கதென்பதற்கான சகல, நம்பிக்கையான தகவல்களின் அடிப்படையிலும், தேவைப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் அறிவுபூர்வமான உடன்பாட்டினைப் பெற்றும் மேற்படி சுவீகாரத்தை நிர்ணயித்தல் வேண்டும்.
(ஆ) பிள்ளையைப் பராமரிப்பு அல்லது சுவீகாரக் குடும்பத்தில் சேர்ப்பிக்க முடியாவிட்டல் அல்லது அதன் சொந்த நாட்டிலேயே முறையாக வைத்துப் பராமரிக்க முடியாவிட்டால் மற்றொரு நாட்டில் அதைச் சுவீகாரத்துக்குக் கொடுப்பது மாற்று நடைமுறையாக மேற்கொள்ளப்படலாமென்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்,
(இ) இவ்வாறு மற்றொரு நாட்டில் சுவீகாரத்துக்கு உள்ளான பிள்ளை தன் சொந்த நாட்டில் அனுபவிக்கக் கூடிய அதே பாதுகாப்புகளையும் வாழ்க்கைத் தரங்களையும் பெறுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
19

Page 12
(ஈ) மற்றொரு நாட்டில் சுவீகாரத்துக்குப் பிள் ளையைக் கொடுப்போர், அதனால் முறைகேடாகப் பணம் சம்பாதிக்கா திருப்பதற்கான தகுந்த நடவடிக் கைகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
(உ) பொருத்தமெனக் கருதும் பட்சத்தில், இந்த உறுப்புரையின் குறிக்கோளை மேம்படுத்தும் பொருட்டு, இருதரப்பு அல்லது பலதரப்பு ஏற்பாடுகள் அல்லது உடன்படிக்கைகளைச் செய்துகொள்ள வேண்டும். அத்துடன், மற்றொரு நாட்டில் பிள்ளையை ஒப்படைக்கும் பணி தகுதிவாய்ந்த அதிகாரிகளால் அல்லது அமைப்புகளினால் மேற்படி கட்டுக்கோப்புக்கு அமைய மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
உறுப்புரை 22
1. சர்வதேச அல்லது உள்ளுர்ச் சட்டம் மற்றும் நடைமுறைகளுக்கு அமைய அகதி அந்தஸ்தைக் கோரும் பிள்ளை அல்லது அகதி எனக் கருதப்படும் பிள்ளை,தனியாக இருந்தால் என்ன, பெற்றோர் அல்லது வேறெவருடனும் கூட இருந்தாலென்ன, இந்தச் சம வாயத்திலும் ஏனைய சர்வதேச மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சாசனங்களிலும் சொல்லப் பட்டிருக்கும் பாதுகாப்பையும் மனிதாபிமானத்தின் பாற்பட்ட உதவியையும்பெற்றுஅனுபவிப்பதற்கு உரிமையுள்ள தென்பதை ஏற்றுக் கொண்டுள்ள நாடுகள், அவ்வாறான உரிமைகளை மேற்படி பிள்ளை அனுபவிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
20

2. இதன் பொருட்டு, அரசதரப்பினர், அத்தகைய பிள்ளையைப் பாதுகாப்பதற்கும் அதற்கு உதவுவதற்கும், அகதிப்பிள்ளை எதுவும் தன் பெற்றோருடன் மீண்டும் சேர்ந்து கொள்வதற்கு வேண்டிய தகவலைத் திரட்டும் பொருட்டு, பெற்றோர் அல்லது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் தாபனம், ஏனைய தகுதி வாய்ந்த அரசாங்கங் களுக் கிடையிலான அமைப்புகள் அல்லது ஐக்கிய நாடுகள் தாபனத்துடன் ஒத்துழைக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தகுந்த ஒத்துழைப்பை அளித்தல் வேண்டும். பெற்றோர் அல்லது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களைத் தேடிப்பிடிக்க முடியாமற் போகும் சந்தர்ப்பங்களில், எக்காரணத்தை முன்னிட்டும் தன் குடும்பச் சூழலை நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ இழந்த பிள்ளைக்கு வழங்கப்பட வேண்டுமென இச் சமவாயத்தில் குறிப்பிட்டிருக்கும், அதே விதமான பாதுகாப்பு அத்தகைய பிள்ளைக்கும் வழங்கப்படல் வேண்டும்.
உறுப்புரை 23
1. உள அல்லது உடல் ஊனம் உடைய பிள்ளை, அதன் கெளரவத்தை உறுதிப்படுத்துவதும், சுயபலத்தை ஊக்குவிப்பதும், சமுதாயத்தில் தீவிரமாய் பங்குகொள்ளக் கூடியதுமான நிலைமைகளில் முழுமையான,
21

Page 13
கண்ணியமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டு மென்பதை அரசதரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2. ஊனமுற்ற பிள்ளை, விசேட பராமரிப்புப் பெறும் உரிமையுள்ள தென்பதை அரசதரப்பினர் அங்கீ கரிப்பதுடன் தகுதியுடைய பிள்ளைக்கும் அதன் பராமரிப்புக்குப் பொறுப்பாயிருப்பவர்களுக்கும், விண்ணப் பிக்கப்படும் உதவி, கைவசமுள்ள மூலவளங்களுக்கு அமைய வழங்கப்படுவதை ஊக்குவித்து உறுதிப் படுத்தவும் வேண்டும். இந்த உதவி பிள்ளையின் நிலைபரத்துக்கும் பெற்றோர் அல்லது அதைப் பராமரிக்கும் ஏனையோரின் சூழ்நிலைகளுக்கும் பொருத்த மானதாயிருத்தல் வேண்டும்.
3. ஊனமுற்ற பிள்ளைக்கு விசேட தேவைகள் உண்டென்பதை ஏற்றுக் கொண்டு தற்போதைய உறுப்புரையின் 2ஆம் பந்தியில் குறிப்பிட்டவாறான உதவியை முடியுமான போதெல்லாம் இலவசமாக வழங்குதல் வேண்டும். இது விடயத்தில் பெற்றோர் அல்லது பிள்ளையைப் பராமரிப்போரின் நிதி நிலைமையைக் கவனத்திற் கொள்ள வேண்டும். மேலும், பிள்ளையின் கலாசார, ஆன்மீக மேம்பாடு அடங்கலாக, முழுமையான சமுக ஒருமைப்பாட்டையும் தனிப்பட்ட முன்னேற்றத்தையும் அடைவதற்கு ஏற்றதான கல்வி, பயிற்சி, சுகாதார பராமரிப்புச் சேவைகள், புனர்வாழ்வுச் சேவைகள், தொழில் புரியும் பக்குவம், பொழுதுபோக்கு வாய்ப்புகள் ஆகியவற்றைச் சிறப்பான முறையிற் பெறுவதை உறுதிப்படுத்தும் பாங்கில் அவ்வுதவி அமைதல் வேண்டும்.
22

4. ஊனமுற்ற பிள்ளையின் நோய்த் தடுப்பு, பராமரிப்பு, வைத்திய, உளவியல் மற்றும் நடைமுறைச் சிகிச்சை ஆகிய துறைகளில் பொருத்தமான தகவற் பரிமாற்றம் நடைபெறுவதை, சர்வதேச ஒத்துழைப்பு மனப்பான்மை யுடன் அரசதரப்பினர் ஊக்குவித்தல் வேண்டும். இதில் புனர்வாழ்வுக்கான முறைகள், கல்வி, மற்றும் தொழில் சார்ந்த தேவைகள் பற்றிய தகவல்களைப் பரப்புதலும் அடங்கும் ஊனமுற்ற பிள்ளைகள் மேற்படி துறைகளில் தமது ஆற்றல்களை விருத்தி செய்வதற்கும் அனுபவங் களை வளர்த்துக் கொள்வதற்கும் வாய்ப்பளிப்பதாக இது அமையும். இது விடயத்தில் வளர்முக நாடுகளின் தேவைகள் குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டும்.
உறுப்புரை 24
l, எய்தக் கூடிய மிக உயர்ந்த சுகாதாரத்தையும் நோய்வாய்ப்படும் பட்சத்தில் மிகச் சிறந்த சிகிச்சை மற்றும் சுகாதாரப் புனர்வாழ்வு வசதிகளையும் அனுபவிக்கும் உரிமை பிள்ளைக்கு உண்டென்பதை அரசதரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்தப் பிள்ளைக்கும் இத்தகைய சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் மறுக்கப்படா திருப்பதை அரசதரப்பினர் உறுதிப்படுத்த முயலுதல் வேண்டும்.
2. அரசதரப்பினர் இந்த உரிமையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் பின்வரும் விடயங்கள் தொடர்பாக விசேட கவனஞ் செலுத்துதல் வேண்டும்.
(அ) சிசு மற்றும் குழந்தை மரண விகிதாசாரத்தைக் குறைத்தல்,
23

Page 14
(ஆ) ஆரம்ப சுகாதரப் பராமரிப்பு மேம்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்து எல்லாக் குழந்தைகளுக்கும் அவசியமான மருத்துவ உதவியும் சுகாதாரப் பராமரிப்பும் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துதல்.
(இ) நோய் மற்றும் போசாக்கின்மையைக் குறைத்தல். இது விடயத்தில் சுற்றாடல் மாசடைவதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கருத்திற் கொண்டு, ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு என்னும் கட்டுக்கோப்புக்குள், இலகுவாகக் கிடைக்கக்கூடிய நுட்பங்களைப் பிரயோகித்தல்; அத்துடன், சத்துள்ள உணவுகள், சுத்தமான குடிதண்ணிர் என்பன போதுமான அளவில் கிடைக்கச் செய்தல்,
(ஈ) தாய்மாருக்குப் பிரசவத்தின் முன்னரும் பிற்பாடும் முறையான சுகாதாரப் பராமரிப்புக் கிடைப்பதை உறுதிப்படுத்துதல்,
(உ) சமுதாயத்தின் சகல பிரிவினரும் - குறிப்பாகப் பெற்றோரும் பிள்ளைகளும் - அறிவுடையவர்களாகவும், கல்வி பெறும் வாய்ப்புடைய வர்களாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவதுடன் சிறுவர் சுகாதாரம். போசாக்கு, தாய்ப்பாலுட்டுதலின் நன்மைகள், ஆரோக்கியமும் சுற்றாடற் சுகாதாரமும், விபத்துக்களைத் தடுத்தல் என்பன தொடர்பான அடிப்படை அறிவைப் பிரயோகிப்பதற்கும் ஆதரவளித்தல்,
(ஊ) நோய்த் தடுப்புச் சார்ந்த சுகாதார பராமரிப்பு முறை, பெற்றோரை வழிநடத்துதல், குடும்பத்திட்டக் கல்வி மற்றும் சேவைகள் ஆகியவற்றை விருத்தி செய்தல்.
24

3. சிறுவர்களின் ஆரோக்கியத்துக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய பாரம்பரிய நடைமுறைகளை ஒழிக்கும் பொருட்டு, பொருத்தமானதும் உறுதியானதுமான சகல நடவடிக்கைகளையும் அரசதரப்பினர் மேற்கொள்ள வேண்டும்,
4. அரசதரப்பினர் இந்த உறுப்புரையில் ஏற்றுக் கொண்டிருக்கும் உரிமையானது, காலக்கிரமத்தில் முழுமையாக நிலைநாட்டப்படுவதற்கு ஏதுவாகச் சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்கவும் ஊக்குவிக்கவும் முன்வரவேண்டும். இது விடயத்தில் வளர்முக நாடுகளின் தேவைகள் முக்கியமாகக் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்,
உறுப்புரை 25
தகுதிவாய்ந்த அதிகாரிகளினால், தாபரிப்பு, பாதுகாப்பு அல்லது உளச்சார்பான அன்றேல் உடல் சார்பான சிகிச்சைக்கென விடப்பட்டுள்ள பிள்ளை, அதற்குக் கிடைக்கும் சிகிச்சை மற்றும் தாபரிப்பு நிலைமைகள் ஆதியன பற்றி அவ்வப்போது ஆராயப்பட வேண்டும் என்னும் உரிமையை அரசதரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உறுப்புரை 26
l, ஒவ்வொரு பிள்ளையும் சமூகக் காப்புறுதி அடங்கலான சமூக பாதுகாப்பின் நலனைப் பெறும் உரிமையுடைய தென்பதை அரசதரப்பினர் ஏற்றுக் கொள்

Page 15
வதுடன், தத்தமது தேசிய சட்டத்துக்கமைய இந்த உரிமை முழுமையாகக் கிட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும்.
2. இந்த நன்மைகள் பிள்ளையினால் அல்லது பிள்ளையின் சார்பாகக் கோரப்படும் போது,முறையானவை எனக் காணும் பட்சத்தில், பிள்ளையினதும் அதன் பராமரிப்புக்குப் பொறுப்பாக இருப்பவர்களினதும் வாய்ப்பும், வசதிகள் மற்றும் சூழ்நிலைகளையும் விண்ணப்பம் தொடர்பான ஏனைய விடயங்களையும் கவனத்திற்கு கொண்டு, வழங்கப்படல் வேண்டும்.
உறுப்புரை 27
1. ஒவ்வொரு பிள்ளையும் அதன் உடல், உள, ஆன்மீக, ஒழுக்க, சமுக முேம்பாட்டுக்கு ஏற்றவாறான வாழ்க்கைத் தரத்தினை அனுபவிக்கும் உரிமையுடைய தென்பதை அரசதரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2. பிள்ளையின் மேம்பாட்டுக்கு அவசியமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும் பிரதான கடப்பாடு பெற்றோர் அல்லது பிள்ளைக்குப் பொறுப்பாயிருக்கும் ஏனையோரின் சக்திக்கும் பணபலத்துக்கும் ஏற்றவாறு நிறைவேற்றப்படல் வேண்டும்.
3. தேசிய நிலைமைகளுக்கும், தம் நாட்டின் சக்திக்கும் ஏற்றவாறு பெற்றோரும், பிள்ளைக்குப் பொறுப்பாயிருக்கும் ஏனையோரும் இந்த உரிமையை அனுபவிப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கை

களையும், அரதரப்பினர் மேற்கொள்வதுடன் தேவை ஏற்படும்போது, குறிப்பாக போசாக்கு, துணிமணி, உறைவிடம் ஆகியவற்றிற்கான பொருளுதவிக்கும் ஆதரவுத் திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்தல் வேண்டும்.
4. பிள்ளையின் தாபரிப்புச் செலவை, உள்நாட்டிலோ, வெளி நாட்டிலோ பெற்றோர் அல்லது பிள்ளையின் செலவுக்குப் பொறுப்பாகவுள்ள பிறரிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் அரசதரப்பினர் எடுத்தல் வேண்டும்.குறிப்பாக,பிள்ளையின் நிதிக்குப் பொறுப்பாக இருப்பவர்,பிள்ளையின் நாட்டுக்கு வெளியே வசிப்பவராக இருந்தால், சர்வதேச உடன்படிக்கைகளை நாடும் வாய்ப்பை வளர்க்க அல்லது அத்தகைய உடன்படிக்கைகளை நிறைவேற்ற ஊக்குவிப்பதுடன் பொருத்தமான வேறு ஏற்பாடுகளையும் அரசதரப்பினர் செய்தல் வேண்டும்.
உறுப்புரை 28
1. கல்வி பயிலும் உரிமை பிள்ளைக்கு உண் டென்பதை அரசதரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த உரிமையைப் படிப்படியாகவும், சமவாய்ப் பென்னும் அடிப்படையிலும் அனுபவிப்பதற்கு வகைசெய்யும் பொருட்டு, அரசதரப்பினர் பின்வரும் நடவடிக்கைகளை விசேடமாக மேற்கொள்ள வேண்டும்.
(அ) எல்லோருக்கும் ஆரம்பக் கல்வி கட்டாய மாகவும் இலவசமாகவும் கிடைக்கச் செய்தல்,

Page 16
(ஆ) பொது மற்றும் தொழில்சார் கல்வி உட்பட வெவ்வேறு தரப்பட்ட இடைநிலைக் கல்வியை ஊக்குவித்து ஒவ்வொரு பிள்ளைக்கும் அது கிடைக்கச் செய்வதுடன், இலவசக் கல்வி, தேவைப்படுவோருக்கு நிதி உதவி அளித்தல் போன்ற பொருத்தமான நடவடிக்கைகளையும் மேற் கொள்ளுதல்.
(இ) எல்லோருக்கும் ஆற்றலின் அடிப்படையில் பொருத்தமான வழிமுறையில் உயர் கல்வி கிடைக்கச் செய்தல்,
(ஈ) எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்வி மற்றும் தொழில்சார் தகவல்களும் வழிகாட்டலும் கிடைக்கச் செய்தல்,
(உ) பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்குக் கிரமமாகச் செல்வதை ஊக்குவிக்கவும் படிப்பை இடையில் நிறுத்திக் கொள்வோரின் தொகையைக் குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளல்.
2. பாடசாலையின் கட்டுப்பாட்டு நடைமுறைகள் தற்போதைய சமவாயத்துக்கு அமைவாகவும், பிள்ளையின் கெளரவத்துக்கு இசைவாகவும் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையயும் அரசதரப்பினர் மேற் கொள்ள வேண்டும்.
3. அரசதரப்பினர் கல்வி தொடர்பான விடயங்களில் சர்வதேச ஒத்துழைப்பைப் பரப்பவும் ஊக்குவிக்கவும்

வேண்டும். குறிப்பாக, உலக முழுவதிலும் அறியாமை, எழுத்தறிவின்மை என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு உதவும் வகையிலும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவு, நவீன போதனா முறைகள் முதலியன அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கும், இந்த ஒத்துழைப்பு அவசியமாகும். இது விடயத்தில் வளர்முக நாடுகளின் தேவைகள் குறிப்பாகக் கவனிக்கப்படல் வேண்டும்.
உறுப்புரை 29
l. அரசதரப்பினர், பிள்ளையின் கல்வி பின்வரும் விடயங்களின் பால் நெறிப்படுத்தப்படல் வேண்டுமென உடன்படுகின்றன:
(அ) பிள்ளையின் ஆளுமை, திறமைகள், உள மற்றும் உடல் சார்ந்த ஆற்றல்கள் முழுமையாகப் பரிணமிக்கச் செய்தல்.
(ஆ) மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தில் வரையறுக் கப்பட்டிருக்கும் கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பதை விருத்தி செய்தல்.
(இ) பிள்ளையின் பெற்றோரினது கலாசாரத் தனித்துவம், மொழி, ஆசாரங்கள், பிள்ளை வளரும் நாட்டின் தேசிய ஆசார சீலங்கள், பிள்ளையின் பூர்வீக நாட்டின் ஆசார சீலங்கள் மற்றும் தன்னுடையதிலும் வேறுபட்ட நாகரிகங்கள் ஆகியவற்றை மதித்தலை விருத்தி செய்தல்,
29

Page 17
(ஈ) சுதந்திர சமுதயா மொன்றிலே, புரிந்துணர்வு, சமாதானம், சகிப்புத்தன்மை, ஆண், பெண் சமத்துவம், சகல மக்களுடனும் இன,தேசிய, சமயக்குழுக்களுடனும் பூர்வ பரம்பரை நபர்களுடன் நட்புறவு போன்ற பண்புகளுடனும் பொறுப்பாக வாழுவதற்குப்பிள்ளையைப் பக்குவப்படுத்துதல்,
(உ) இயற்கைச் சுற்றாடலை மதிக்கும் மனப்பாங்கை வளர்த்தல்,
2. இவ்வுறுப்புரையின் அல்லது உறுப்புரை 28 இன் எப்பகுதியேனும் போதனா நிறுவனங்களை அமைப்பதற்கும் நடத்துதற்கும் தனி நபர்களுக்கும் சபைகளுக்கும் உள்ள சுதந்திரத்தில் குறுக்கிடலாகாது. ஆயினும், இச் சுதந்திரம் தற்போதைய உறுப்புரை 1 ஆம் பந்தியில் விவரிக்கப்பட்டிருக்கும் கொள்கை களுக்கும், போதனா நிறுவனங்களில் புகட்டப்படும் கல்வியானது அரசினால் விதிக்கப்பட்ட குறைந்த தராதரங்களுக்கு அமைந்ததாக இருத்தல் வேண்டு மென்னும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாயிருத்தல் வேண்டும்,
உறுப்புரை 30 இனம்,மதம் அல்லது மொழிவாரிச் சிறுபான்மையினரோ பூர்வீக பரம்பரை மக்களோ வாழும் நாடுகளிலே, பிள்ளை தன் இனத்துக்கே உரித்தான கலாசார, மத, அல்லது மொழிசார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையினை மறுத்தலாகாது.
30

உறுப்புரை 31
1. இளைப்பாறுதற்கும், ஓய்ந்திருத்தலுக்கும், விளையாடுதற்கும், வயதுக்கேற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கும் கலை, கலாசார நிகழ்ச்சிகளில் சுதந்திரமாகப் பங்குபற்றுதற்கும் பிள்ளைக்குள்ள உரிமையை அரசதரப்பினர் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
2. கலை,கலாசார நடவடிக்கைகளில் பூரணமாகப் பங்கு கொள்ளும் உரிமை பிள்ளைக்கு உண்டென்பதை அரசதரப்பினர் மதித்து, கலை கலாசார மற்றும் பொழுதுபோக்கு,ஓய்வுநடவடிக்கைகளில் ஈடுபடுதற்குத் தகுந்த சம வாய்ப்புகள் வழங்கப்படுவதை ஊக்குவித்தல் வேண்டும்.
உறுப்புரை 32
i. பொருளாதாரச் சுரண்டலி லிருந்தும், ஆபத்து விளைவிக்கக்கூடிய அல்லது பிள்ளையின் படிப்புக்குக் குந்தகம் ஏற்படுத்தக்கூடிய அல்லது பிள்ளையின் ஆரோக்கியம் அல்லது உடல், உள, ஆத்மீக, ஒழுக்க அல்லது சமூக மேம்பாட்டுக்குப் பாதகம் விளைவிக்கக் கூடிய எத்தகைய வேலையிலிருந்தும் பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைக்கு உண்டென்பதை அரசதரப்பினர் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
2. தற்போதைய உறுப்புரை அமுல் செய்யப்படு வதை உறுதிப்படுத்தும் பொருட்டு சட்ட, நிர்வாக,
31

Page 18
போதனாவாரியான நடவடிக்கைகளை அரசதரப்பினர் மேற்கொள்ளுதல் வேண்டும். இதன் பொருட்டும், ஏனைய சர்வதேச சாசனங்களின் ஏற்பாடுகளைக் கருத்திற் கொண்டும், அரசதரப்பினர், குறிப்பாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்:
(அ) ஊழியத்தில் சேர்ந்து கொள்ளுதற்குரிய குறைந்தபட்ச வயதெல்லையை அல்லது வய தெல்லைகளை வரையறை செய்தல் வேண்டும்.
(ஆ) ஊழிய நிபந்தனைகள் மற்றும் வேலை நேரங்கள் தொடர்பாகப் பொருத்தமான சட்டங்களை வகுத்தல் வேண்டும்.
(இ) தற்போதைய உறுப்புரை சிறப்பாக நிறை வேற்றப்படுவதை உறுதிப்படுத்து முகமாக தகுந்த தண்டனைகள் அல்லது ஏனைய கட்டுப்பாடுகளுக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.
உறுப்புரை 34
சம்பந்தப்பட்ட சர்வதேச உடன்படிக்கைகளில் வரையறுத்தவாறான போதை வஸ்துகள் மற்றும் உள்ளத்தைப் பாதிக்கக்கூடிய பொருள்களைச் சட்ட விரோதமாக உபயோகிப்பதிலிருந்து பிள்ளைகளைப் பாது காக்கவும் இத்தகைய பொருள்களைக் கள்ளத்தனமாகத் தயாரிப்பதற்கும், கடத்துதற்கும் பிள்ளைகளை உபயோகிப்பதைத் தடுக்க, சட்ட, நிர்வாக, சமூக மற்றும் போதனா வாரியான நடவடிக்கைகள் அடங்கலாக
32

தகுந்த சகல நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அரச தரப்பினர் முன்வரவேண்டும்.
உறுப்புரை 35
பாலியல் சார்ந்த சகல வகையான சுரண்டல் களிலிருந்தும்,துர்ப்பிரயோகத்திலிருந்தும் பிள்ளையைப் பாதுகாப்பதற்கு அரசதரப்பினர் பொறுப்பேற்க வேண்டும். இதனை நோக்கமாகக் கொண்டு பின்வருவனவற்றைத் தடுப்பதற்கென சகல தேசிய, இருதரப்பு மற்றும் பலதரப்பு நடவடிக்கைகளையும் அரசதரப்பினர் குறிப்பாக மேற் கொள்ள வேண்டும்
(அ) எந்த வகையான சட்ட விரோதப் பாலியல் நடவடிக்கையிலும் ஈடுபடச் செய்யும் பொருட்டுப் பிள்ளையைத் தூண்டுதல் அல்லது வற்புறுத்துதல்.
(ஆ) விபசாரம் அல்லது ஏனைய சட்டவிரோதப் பாலியல் நட வடிக்கைகளுக்குப் பிள்ளைகளைப் பயன்படுத்திச் சுரண்டிப் பிழைத்தல்,
(இ) ஆபாசக் கேளிக் கைகளிலும் ஊடகச்
சாதனங்களிலும் பிள்ளைகளைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திச் சுரண்டிப் பிழைத்தல்,
உறுப்புரை 36
எந்த நோக்கத்துக்கேனும் அல்லது எந்த வகை யிலேனும் பிள்ளைகளைக் கடத்திச் செல்லுதல்,விற்றல்
33

Page 19
அல்லது பரிமாற்றம் செய்தலைத் தடுக்கும் பொருட்டு, அரசதரப்பினர், தகுந்த தேசிய, இருதரப்பு, பலதரப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளுதல் வேண்டும்.
உறுப்புரை 37
பிள்ளையின் சேமநலனுக்குக் குந்தகம் விளை விக்கக்கூடிய மற்றெந்த வகையான சுரண்டிப்பிழைக்கும் நடவடிக்கைகளிலிருந்தும் அரசதரப்பினர் பிள்ளையைப் பாதுகாத்தல் வேண்டும்:
உறுப்புரை 38
அரசதரப்பினர் பின்வருவனவற்றை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
(அ) எந்தப் பிள்ளையும் சித்திரவதை அல்லது வேறெந்தக் குரூரமான, மிருகத்தனமான, மானபங் கமேற்படுத்தக் கூடிய நடத்தைக்கோ தண்டனைக்கோ உட்படுத்தப்படலாகாது. பதினெட்டு வயதுக்குட்பட்ட வர்கள் இழைக்கும் குற்றங்களுக்கு மரண தண்டனையோ விடுதலை பெறும் வாய்பப்பற்றவாறான ஆயுள் தண்டனையோ விதிக்கப்படலுமாகாது.
(ஆ) சட்டவிரோதமாக அல்லது தன்னிச்சையாக எந்தப் பிள்ளையினதும் சுதந்திரத்தைப் பறித்தலாகாது. ஒரு பிள்ளையைக் கைது செய்தல், தடுத்துவைத்தல் அல்லது சிறையில் அடைத்தல் சட்டத்துக்கு அமையவே மேற்கொள்ளப்படல் வேண்டும். அதிலும்
34

கடைசி நடவடிக்கையாகவும் பொருத்தமானளவு மிகக் குறைந்த காலக் கெடுவுக்குட்பட்டதாகவும் மேற்படி நடவடிக்கை அமைதல் வேண்டும்.
(இ) சுதந்திரம் மறுக்கப்பட்ட ஒவ்வொரு பிள்ளையும் மனிதாபிமானத்துடனும் மனிதப் பிறவிக்குப் பிறப்புரிமையாகவுள்ள கெளரவத்துக்கு மதிப்பளிக்கும் விதத்திலும் அதன் வயதுக்குப் பொருத்தமான தேவை களைக் கருத்திற் கொண்டும் நடத்தப்படல் வேண்டும். குறிப்பாக,சுதந்திரம் மறுக்கப்பட்ட ஒவ்வொரு பிள்ளையும் அதன் நலனுக்குப் பாதகம் ஏற்படுத்தாது எனக் கருதும் பட்சத்திலன்றி, மற்றும்படி வயது வந்தவர்களிடமிருந்து பிரித்து வைக்கப்படல் வேண்டும். மேலும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களிலன்றி, மற்றும்படி தன் குடும்பத்தவர் களுடன் கடிதம் மூலமும் சந்திப்புகள் மூலமும் தொடர்பு வைத்திருக்கும் உரிமை பிள்ளைக்கு உண்டு.
(ஈ) சுதந்திரம் மறுக்கப்பட்ட ஒவ்வொரு பிள்ளையும் உடனடியாகவே சட்ட மற்றும் பொருத்தமான உதவியை நாடுவதற்கு மட்டுமன்றி நீதிமன்றம் அல்லது ஏனைய தகுதிவாய்ந்த, சுதந்திரமான, பக்கச் சார்ப்பற்ற அதிகார சபை முன் தனது சுதந்திரம் பறிக்கப்பட்டமை பற்றி நியாயம் கோருதற்கும் அவ்வாறன வழக்கில் துரிதமாகத் தீர்ப்புப் பெறுதற்கும் உரிமையுடையதாகும்.
рдцtiцыпП 39
l. ஆயுதப் பிணக்குகள் தொடர்பான சர்வதேச மனிதாபிமானச் சட்ட விதிகளில் பிள்ளைக்குப் பொருந்தக்
35

Page 20
கூடிய விதிகளை மதிக்கவும், மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் அரசதரப்பினர் பொறுப்பேற்றல் வேண்டும்.
2. பதினைந்து வயதை எட்டாதவர்கள் (பல நாடுகளில் இவ் வயதெல்லை 18ஆகும்) சண்டைகளில் நேரடியாகப் பங்கு கொள்ளாதிருப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கை அனைத்தையும் அரசதரப்பினர் மேற்கொள்ளல் வேண்டும்.
3. 15 வயதை அடையாத எவரையும் தமது படைகளிற் சேர்த்துக் கொள்வதை அரசதரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். படைக்கு ஆள்திரட்டும் போது, பதினைந்து வயதை அடைந்தும் பதினெட்டு வயதை அடையாதிருப்போர் மத்தியிலே வயது கூடியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க முயலுதல் வேண்டும்.
4. ஆயுதப் போராட்டங்களின் போது, குடி மக்களைப் பாதுகாத்தல் வேண்டுமென்னும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கடப்பாடுகளுக்கு அமைய, ஆயுதப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைக் காத்துப் பராமரிப்பதற்கு ஏற்ற நடவடிக்கை அனைத்தையும் அரசதரப்பினர் மேற்கொள்ள வேண்டும்.
உறுப்புரை 39
எந்த வகையான புறக்கணிப்பு, சுரண்டல் அல்லது இம்சை, சித்திரவதை அல்லது குரூரமான், மிருகத்தன
36

மான கண்டிப்பு அல்லது தண்டனை அல்லது ஆயுதப் பிணக்குகள் எவற்றினாலேனும் பாதிக்கப்பட்ட பிள்ளை, உடலாலும் உள்ளத்தாலும் குணமடைந்து சமுதாயத்தில் மீளவும் இணைந்து கொள்ளச்செய்வதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் அரசதரப்பினர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான குணமடைதலும் மீளச்சேர்தலும் பிள்ளையின் ஆரோக்கியம்,சுய கெளரவம், கண்ணியம் ஆகியவற்றைப் பேணுகின்ற சூழலில் அமைதல் வேண்டும்.
в) прицып 40
l. தண்டனைச் சட்டத்தை மீறிய பழிக்காளான ஒவ்வொரு பிள்ளையையும் அதன் கண்ணியத்தையும் மதிப்பையும் மேம்படுத்துவதற்கு உகந்த முறையிலே மனித உரிமைகளுக்கும் பிறரின் அடிப்படைச் சுதந்திரங்களுக்கும் பிள்ளை கொடுக்கும் மதிப்பை வலுப்படுத்தக் கூடியதாக, பிள்ளையின் வயது, சமுதாயத்தில் அது மீண்டும் இணைவதன் ஏற்புடைமையை மற்றும் சமுதாயத்தில் அது ஆக்கபூர்வமாக ஆற்றக்கூடிய பணி ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு நடத்தப்படல் வேண்டும்.
2. இதன்பொருட்டும், சர்வதேச சாசனங்களின் ஏற்பாடுகளைக் கருத்திற்கொண்டும் அரசதரப்பினர் பின்வருவனவற்றைக் குறிப்பாக உறுதிப்படுத்துதல் வேண்டும்:
37

Page 21
(அ) எந்தச் செயலும் அது புரியப்பட்டவேளையில், தேசிய அல்லது சர்வதேச சட்டத்தின் படி தடுக்கப்படாதிருந்தால் அச்செயலைப் புரிந்த அல்லது புரியாதுவிட்ட காரணத்தினால் தண்டனைச் சட்டத்தை மீறியதாக எந்தப் பிள்ளை மீதும் பழி சுமத்தக்கூடாது.
(ஆ) தண்டனைச் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு பிள்ளைக்கும் பின்வரும் குறைந்தபட்ச உத்தரவாதங்களாவது உள்ளன:
(1) குற்றம் சட்டப்படி நிரூபிக்கப்படும் வரை சுத்தவாளியாகக் கருதப்படல் வேண்டும்.
(1) குற்றச்சாட்டுகள் எவை என உடனடியாகவும் நேரடியாகவும் அறிவிக்கப்படல் வேண்டும். மேலும், பொருத்தமாயின் பெற்றோர் அல்லது சட்டப்படியான பாதுகாவலருக்கு அறிவிக்க வேண்டும். அத்துடன் பிள்ளை சார்பான வாதத்தைத் தயாரித்துச் சமர்ப்பிக்கத் தேவையான சட்டவாரியான அல்லது பிற பொருத்தமான உதவி கிடைக்கவும் ஏற்பாடு செய்தல் வேண்டும்.
(II) பிள்ளையின் வயது அல்லது நிலைமை, பெற்றோர் அல்லது சட்டப்படியான பாதுகாவலர் ஆகியோரை விசேடமாகக் கவனத்திற் கொண்டு, பிள்ளையின் நன்மைக்கு ஏற்றதல்ல எனக் கருதும் பட்சத்திலன்றி, மற்றும்படி, சட்டப்படியான அல்லது வேறு பொருத்தமான உதவியாளரின் முன்னிலையில் தகுதி வாய்ந்த, சுதந்திரமான, பாரபட்சமற்ற அதிகார சபையோ
38

நீதிபரிபாலனக் குழுவோ சட்டப்பிரகாரம் தீர விசாரித்து தாமதமின்றித் தீர்ப்பளித்தல் வேண்டும்.
(IV) சாட்சியம் அளிக்கவோ குற்றத்தை ஒப்புக் கொள்ளவோ நிர்ப்பந்திக்கப்படலாகாது. சமத்துவமான நிலமைகளில் பாதகமான சாட்சியங்களை விசாரணை செய்யவும் அல்லது விசாரணை செய்விக்கவும் சாதகமான சாட்சியங்கள் பங்குகொள்ளவும் விசாரணைக்கு உட்படுத் தப்படவும் இடமளிக்கப்படல் வேண்டும்.
(V) தண்டனைச் சட்டத்தை மீறியதாகக் கருதும் பட்சத்தில் அந்த முடிவையும் அதன் விளைவாக விதிக்கப்படும் தண்டனையையும் சட்டப்படி தகுதிவாய்ந்த, சுதந்திரமான, பாரபட்சமற்ற அதிகாரசபை அல்லது நீதித்துறைக் குழுவின் மீளாய்வுக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.
(V) விசாரணையில் உபயோகிக்கப்படும் மொழியைப் பிள்ளை விளங்கிக் கொள்ளவோ, பேசவோ இய லாதிருக்கும் பட்சத்தில், மொழிபெயர்ப்பாளரின் உதவியை இலவசமாகக் கொடுத்துதவ வேண்டும்.
(WI) விசாரணையின் சகல கட்டங்களிலும் பிள்ளையின் அந்தரங்கம் பூரணமாகப் பேணப்படல் வேண்டும்.
3. தண்டனைச் சட்டத்தை மீறிய பழிக் குள்ளாகும் பிள்ளைகளுக்கு விசேடமாகப் பொருந்தக் கூடியவாறான
சட்டங்கள், நடைமுறைகள், அதிகாரசபைகள்,
39

Page 22
நிறுவனங்கள் ஆகியவற்றின் தாபிதத்தை ஊக்குவிப்பதற்கு அரசதரப்பினர் முயலுதல் வேண்டும். அத்துடன்,
(அ) இன்ன வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் தண்டனைச் சட்டத்தை மீறும் ஆற்றல் அற்றவர்கள் எனக் கருதக் கூடியவாறாக,குறைந்தபட்ச வயதெல்லை ஒன்றினை நிர்ணயிக்கவும்,
(ஆ) இத்தகைய சிறுவர், சிறுமியர் விடயத்தில், மனித உரிமைகளும் சட்டப் பாதுகாப்புகளும் முழுமையாகக் கெளரவிக்கப்படும் பட்சத்தில் நீதித் துறை நடைமுறைகளை விடுத்து பொருத்தமான வேறு நடமுறைகளைக் கடைப்பிடிக்கவும் முயலுதல் வேண்டும்.
4. சிறுவர்,சிறுமியரின் சேமநலனுக்கு இசைவாகவும் சூழ்நிலைகுற்றம் ஆகியவற்றின் தாற்பரியத்துக்கு ஏற்றவாறும் அவர்கள் நடத்தப்படுவதை நிச்சயம் செய்யும் பொருட்டு, தாபன வாரியான பராமரிப்புநிலையங்களுக்குப் பதிலாக, பல்வேறு வகைப்பட்ட கவனிப்பு, வழிகாட்டல், கண்காணிப்பு, உத்தரவுகள், ஆலோசனைகள் வழங்கல், சுவீகாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்கள் போன்ற வசதிகள் கிடைக்கச் செய்தல் வேண்டும்.
உறுப்புரை 42
இந்தச் சமவாயத்திலுள்ள எதுவும்,
(அ) அரசதரப்பினர் சட்டத்திலோ
(ஆ) அந்த நாட்டில் நடைமுறையிலுள்ள சர்வதேச சட்டத்திலோ அடங்கியிருக்கக் கூடியனவும்,பிள்ளையின்
40

உரிமைகளை நிலைநாட்டுதற்கு அதிக வாய்ப் பானவுமாகிய எந்த ஏற்பாடுகளையும் பாதித்தலாகாது.
LurTö6Lib III உறுப்புரை 42
l. சமவாயத்தின் கோட்பாடுகளையும், ஏற்பாடு களையும் வயதுவந்தவர்களுக்கும் சிறுவர்களுக்கும் ஒருங்கே பரப்புதற்குத் தகுந்த மார்க்கங்களை அரசதரப்பினர் மேற்கொள்ள வேண்டும்.
உறுப்புரை 43
இந்தச் சமவாயத்தின் கடப்பாடுகளை நிறை வேற்றுவதில் காணப்படும் முன்னேற்றத்தை ஆராயும் பொருட்டு, சிறுவர் உரிமைகள் மீதான செயற்குழு ஒன்றினை அரசதரப்பினர் அமைத்தல் வேண்டும். இந்தச் செயற்குழு கீழ்க்காணும் பணிகளை நிறைவேற்றுதல் வேண்டும்:
2. மேற்படி செயற்குழுவில் இந்தச் சமவாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்களில் திறமை வாய்ந்தவர்களென அங்கீகரிக்கப்பட்டவர்களும் ஒழுக்கசாலிகளுமாகிய 10 நிபுணர்கள் இடம் பெறல் வேண்டும்.செயற்குழுவின் உறுப்பினர்களை அரசதரப்பினர் தமது சொந்தக் குடிமக்களிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் உத்தியோகப் பற்றற்ற தனிப்பட்ட முறையில் செயற்பட வேண்டும். தெரிவுசெய்யும்
41

Page 23
விடயத்தில் பூகோள வாரியான பகிர்வும் பிரதானமான சட்ட அமைப்புகளும் கருத்திற்கொள்ளப்படல் வேண்டும்.
3. செயற்குழு உறுப்பினர்கள், அரசாங்கங்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு குழுவிலிருந்து, இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும். அரசதரப்பு ஒவ்வொன்றும் தனது சொந்த நாட்டவர்களில் ஒருவரை நியமிக்கலாம்.
4. செயற்குழுவுக்கான முதலாவது தேர்தல், தற்போதைய சமவாயம் நடைமுறைக்கு வரும் தேதியிலிருந்து ஆறுமாதத்துக்குப் பிந்தாமலும் அதன்பின்னர் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும் நடத்தப்படல் வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்கும் குறைந்த பட்சம் நான்கு மாதத்துக்கு முன்னர், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அரசதரப்பினருக்குக் கடிதமொன்றினை அனுப்பி இரண்டு மாதத்துள் தமது தேர்வுநியமனங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்க வேண்டும். இதன் பின்னர், செயலாளர் நாயகம், நியமனம் பெற்றவர்களின் படடியலொன்றை அகரவரிசைப்படி தயாரித்து அவர்களை நியமித்த அரசதரப்பினரையும் குறிப்பிட்டு, தற்போதைய சமவாயத்தின் அரச தரப்பினருக்குச் சமாப்பித்தல் வேண்டும்.
5. தேர்தல்கள் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் செயலாளர் நாயகம் ஏற்பாடு செய்யும் அரசதரப்புகளின் கூட்டத்தில் நடத்தப்படல் வேண்டும். இக்கூட்டங்களில் அரசதரப்புகளின் மூன்றில் இரண்டு பங்கினர் கூட்ட நடப்பெண் உறுப்பினர்களாகச் சFI கமளித்திருத்தல்
42

வேண்டும். செயற்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் மிகக்கூடுதலான வாக்குகளைப் பெற்றவர்களாகவும், வாக்களிப்பில் நேரடியாகப் பங்குகொண்ட பிரதிநிதிகளின் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் களாகவும் இருத்தல் வேண்டும்.
6. செயற் குழு உறுப்பினர்கள் நான்கு வருட காலத்துக்குத் தெரிவு செய்யப்படுவர். மீளவும் நியமனம் பெற்றால் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதிபெறுவர், முதலாவது தேர்தலில் தேர்ந் தெடுக்கப்படும் ஐந்து உறுப்பினர்களின் பதவிக்காலம் ஈராண்டில் முடிவடையும், முதலாவது தேர்தல் முடிந்த உடனேயே கூட்டத்தின் தலைவர் இந்த ஐந்து உறுப்பினர்களின் பெயர்களை திருவுளச் சீட்டிழுப்பின் மூலம் தெரிவு செய்வார்.
7. செயற்குழு உறுப்பினர் ஒருவர் இறந்தால் அல்லது பதவி துறந்தால் அல்லது வேறு எக்காரணத்தை முன்னிட்டும் தன் நாட்டைச் சேர்ந்த மற்றொரு நிபுணரை எஞ்சியுள்ள காலத்துக்குப் பணியாற்றும் படி அரசதரப்பு நியமிக்கலாம். ஆனால், அதற்கு செற்குழுவின் அங்கீகாரம் தேவை.
8. செயற் குழு தனது நடைமுறை விதிகளைத் தானே அமைத்துக் கொள்ளும்.
9. செயற் குழு ஈராண்டு காலத்துக்குத் தனது உத்தியோகத்தர்களைத் தேர்ந்தெடுக்கும்.
10. செயற்குழுவின் கூட்டங்கள் வழக்கமாக ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் அல்லது செயற்குழு
43

Page 24
வசதியானதெனக் கருதும் வேறோர் இடத்தில் நடைபெறும். செயற் குழு வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறை கூட வேண்டும். கூட்டத்தின் காலவரையறை, அவசியமாயின், பொதுச் சபையின் அங்கீகாரம் இருக்கும் பட்சத்தில், தற்போதைய சமவாயத்தின் அரசதரப்பினர் கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டு மீளாய்வுசெய்யப்படலாம்.
ll. தற்போதைய சமவாயத்தின் பணிகள் சிறப்பான முறையில் நிறைவேற்றப்படுவதற்கு அவசியமான ஊழியர்களையும் வசதிகளையும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொடுத்துதவ வேண்டும்.
12. தற்போதைய சமவாயத்துக்கு அமைய நியமனம் பெற்ற செயற்குழு உறுப்பினர்கள் பொதுச் சபையின் அங்கீகாரத்துடன், அச்சபை தீர்மானித்த விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டவாறான வரும்படிகளை ஐக்கிய நாடுகளின் நிதிமூலங்களிலிருந்து பெறுவர்.
உறுப்புரை 45
l. இத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகளைச் செயற்படுத்துவதற்குத் தாம் மேற்கொண்ட நடவடிக் கைகள் மற்றும் அந்த உரிமைகளை ஆண்டனு பவிப்பதில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியன தொடர்பான அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் மூலமாக செயற்குழுவுக்குச் சமர்ப்பிக்க அரசதரப்பினர் பொறுப்பேற்க வேண்டும். இது,
(அ) சம்பந்தப்பட்ட அரசதரப்பு சமவாயத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்த ஈராண்டுக்குள்ளும்
44

(ஆ) அதன் பின்னர் ஐந்தாண்டுக் கொரு முறையும் நடைபெற வேண்டும்.
2. இந்தச் சமவாயத்தின் கடப்பாடுகள் நிறைவேற்றப்படும் அளவைப் பாதிக்கும் காரணிகளும் சிரமங்களும் இருந்தால், தற்போதைய உறுப்புரையின் படி தயாரிக்கப்படும் அறிக்கைகள் அவற்றைச் சுட்டிக் காட்டுதல் வேண்டும். சம்பந்தப்பட்ட நாட்டில் சமவாயம் செயற்படுத்தப்படும் விதம் பற்றிய விரிவான விளக்கத்தை செயற்குழுவுக்கு வழங்குதற்குப் போதுமான தகவல்களையும் அவ்வறிக்கைகள் கொண்டிருத்தல் வேண்டும்.
3. விரிவான ஆரம்ப அறிக்கையினைச் செயற் குழுவுக்குச் சமர்ப்பித்த ஓர் அரசதரப்பு தற்போதைய உறுப்புரையின் (அ) பந்தியின் பிரகாரம் பின்னர் சமர்ப்பிக்கும் அறிக்கைகளில் ஏற்கனவே தெரிவித்த அடிப்படைத் தகவல்களை மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை.
4. செயற்குழு சமவாயம் அமுலாக்கப்படுதல் தொடர்பான மேலும் தகவல்களை வழங்குமாறு அரசதரப்பினரைக் கேட்கலாம்.
S. செயற்குழு பொருளாதார, சமூக, சபையின் மூலம் பொதுச் சபைக்கு,தனது நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகளை ஈராண்டுக்கொருமுறை சமர்ப்பித்தல் வேண்டும்.
45

Page 25
6. அரசதரப்பினர் தமது அறிக்கைகள் தமது நாட்டு மக்களுக்குப் பரவலாகக் கிடைக்கவேண்டிய வழிவகைகளை செய்தல் வேண்டும்.
உறுப்புரை 46
சமவாயம் சிறப்பாகச் செயற்படுவதை வளர்ப்பதற்கும்
சமவாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் துறைகளில்
சர்வதேச ஒத்துழைப்பை ஊக்கு விப்பதற்கும்,
(அ) சிறப்பு முகவர் நிலையங்கள், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஏனைய அமைப்புகள் என்பன, தத்தமது அதிகார எல்லைக்குள் அமைகின்ற உறுப்புரைகள் தொடர்பான செயற்பாடுகள் ஆராயப்படும் போது தமது பிரதிநிதிகளைப் பங்கு கொள்ளச் செய்யும் உரித்துடையனவாய் இருத்தல் வேண்டும். செயற் குழுவானது சமவாயத்தின் செயற்பாட்டில் சிறப்பு முகவர் நிலையங்கள், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், ஏனைய தகுதிவாய்ந்த அமைப்புகள் ஆகியவற்றை, அந்தந்த அமைப்பின் எல்லைக்குட்பட்ட விடயங்கள் தொடர்பாக நிபுணத்துவ ஆலோசனை வழங்குமாறு அழைக்கலாம். சமவாயத்தின் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் படியும் செயற்குழு மேற்படி அமைப்புகளை அழைக்கலாம்.
(ஆ) அரசதரப்பினர் சமர்ப்பிக்கும் அறிக்கைகளில் தொழில்நுட்ப ஆலோசனை அல்லது உதவி தொடர்பான
விண்ணப்பம் காணப்பட்டால் அல்லது தேவை சுட்டிக்
46

காட்டப்பட்டிருந்தால், செயற்குழு, அவ்வாறான தேவை அல்லது விண்ணப்பத்தை அவை பற்றித் தனக்கு ஏதும் கருத்து அல்லது யோசனை இருப்பின், அதனோடு பொருத்தமான தெனக் கருதும் சிறப்பு முகவர் நிலையங்கள், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் தகுதிவாய்ந்த அமைப்புகள் ஆகியவற்றுக்கு அனுப்புதல் வேண்டும். (இ) செயற் குழு சிறுவர் உரிமைகள் தொடர்பான குறிப்பிட்ட பிரச்சினைகளையிட்டு, தன் சார்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும்படி செயலாளர் நாயகத்தை வேண்டுமாறு பொதுச் சபைக்குச் சிபார்சு செய்யலாம்.
(ஈ) செயற் குழு தற்போதைய சமவாயத்தின் 44, 45 ஆம் உறுப்புரைகளுக்கு அமையப் பெற்றுக் கொண்ட தகவல்களை ஆதாரமாகக் கொண்டு யோசனைகள், பொதுவான விதந்துரைகள் ஆகியவற்றைத் தெரிவிக்கலாம். இவ்வாறான யோசனைகளும், விதந்துரைகளும் சம்பந்தப்பட்ட அரசதரப்பினருக்கு அனுப்பிவைக் கப்படல் வேண்டும். அத்துடன், அரசதரப்பினர் குறிப்புரைகள் ஏதும் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவற்றையும் சேர்த்துப் பொதுச் சபைக்கு அறிவித்தல் வேண்டும்.
LusTafilib III உறுப்புரை 47
தற்போதைய சமவாயம் எல்லா நாடுகளும் ஒப்பமிடப்படக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
47

Page 26
ഇങ്ങ] 48
தற்போதைய சமவாயம் ஒப்புதலைப்பெற இருக்கிறது. ஒப்புதல் தொடர்பான சாசனங்கள் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.
ഉ ഇjuങ്ങ] 49
தற்போதைய சமவாயம், எந்த நாடும் சேர்ந்து கொள்ள இடமளிப்பதாய் இருத்தல் வேண்டும். அதற்குரிய சாசனங்கள் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்,
உறுப்புரை 50
1. தற்போதைய சமவாயமானது ஒப்புதல் அல்லது சேருதல் தொடர்பான இருபதாவது சாசனம், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பதாவது நாளன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. இந்த விதி, ஒப்புதல் அல்லது சேருதல் தொடர்பான சாசனத்தை ஒப்படைக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் பொருந்துவதாகும்.
உறுப்புரை 51
எந்த அரசதரப்பும் திருத்த மொன்றைப் பிரேரித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாய கத்தின்
48

கோவையிலிடச் செய்யலாம். செயலாளர் நாயகம் அந்தத் திருத்தத்தைப் பங்காளி நாடுகளுக்கு அறிவித்து, அதனை ஆராய்ந்து வாக்கெடுப்பதற்கான ஒரு மாநாட்டைக் கூட்ட வேண்டுமா என அறிவிக்கும்படி கோரலாம். இந்த அறிவித்தல் விடுத்த நான்கு மாதத்துள் அரசதரப்பினரில் மூன்றில் ஒரு பங்கினராவது அத்தகைய மாநாட்டுக்குச் சார்பாகப் பதில் அளிக்கும் பட்சத்தில், செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவில் மாநாட்டைக் கூட்ட வேண்டும். மாநாட்டில் நடைபெறும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையான அரசதரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்படும் திருத்தப் பிரேரணை பொதுச் சபையின் அங்கீகாரத்துக்குச் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
2. மேற்படி திருத்தம் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்டு அரச தரப்பினரில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் நடைமுறைக்கு வரல் வேண்டும்.
3. ஒரு திருத்தம் நடைமுறைக்கு வந்தால், அதனை ஏற்றுக்கொண்ட அரசதரப்பினர் அதற்குக் கட்டுப்படல் வேண்டும். ஏனைய அரசதரப்பினர் தற்போதைய சமவாயத்தின் உறுப்புரைகளுக்கும் தாம் ஏற்றுக்கொண்ட முன்னைய திருத்தங்களுக்கும் கட்டுப்பட்டோராய் இருப்பர்.
உறுப்புரை 52
l ஒப்புதல் அல்லது சேருதல் நடவடிக்கையின் போது நாடுகள் தெரிவிக்கும் ஆட்சேபனைகளின்
49

Page 27
வாசகத்தை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஏற்று எல்லா நாடுகளுக்கும் அறிவித்தல் வேண்டும்.
2. தற்போதைய சமவாயத்தின் இலட்சியத்துக்கும் நோக்கத்துக்கும் முரணான ஆட்சேபனை அனுமதிக் கப்பட மாட்டாது.
3. ஆட்சேபனைகளை மீளப்பெறுவதானால் எச்சமயத்திலும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு அறிவித்தல் கொடுத்து மீளப்பெற்றுக் கொள்ளலாம். அவர் எல்லா நாடுகளுக்கும் இதுபற்றி அறிவிப்பார். அத்தகைய அறிவித்தல் செயலாளர் நாயகம் அதனைப் பெற்ற தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.
உறுப்புரை 53
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் தற்போதைய சமவாயத்தின் காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்புரை 54
தற்போதைய சமவாயத்தின் மூலச்சுவடி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயாகத்திடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். இதன் அரபி, சீன, பிரெஞ்சு, ருஷ்ய, ஸ்பானிய மொழி பெயாப்புகளும் மூலப்பிரதி போலவே செல்லுபடியாகும் தகுதி கொண்டவை.
இதற்குச் சாட்சியாக அந்தந்த அரசுகளினால் முறையாக அங்கீகாரம் அளிக்கப்பட்ட அதிகாரிகள் தற்போதைய சமவாயத்தில் ஒப்பமிட்டுள்ளார்கள்.
50


Page 28


Page 29
மேலதிக வட
ஐக்கிய நாடுகள் சிறு 5. கீதாஞ்ச
கோழு
589 11:11, 587
பெக்க:
மின்னஞ்சல் Col:
 

,
s
e
-
c
e
f
ਸੁਲੇ ।
பர் நிதியம் (யுனிசெப்)
 ாேளப்,
El 7. 82, 5E4호04
28 Og into aurict.Org