கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 1994.08

Page 1
பூச்சி நாசினிகளின் வேட்டுவைக்கும் மரச்
 

பாவனை;
கெறி வகைகள்!
ஆவணி 94 விலை ரூ 15/-

Page 2
*அடிமையாயிருக்க எப்படி எனக்கு விருப்பமில்லையோ, அதைப்போல எசமானனாய் இருக்கவும் எனக்கு விருப்பமில்லை. ஜனநாயகத்தைப் பற் றிய என்னுடைய கருத்து இதுதான்'
- ஏப்ரஹாம் லிங்கன்.
இப்பக்க அமைப்பு
அங்கர் பார்மசி At chor Pha Tita CY
அரச டிவீதி - கந்தர் மடம்
யாழ்ப்பாணம்
 

நங்கூரம்
*GLGü : 2
அலை : 11
பக்கங்களின் எண்ணிக்கை : 32
ữüjö 9106ỉIIẩì 90
மாதாநத சஞ்சிகை
05-08-1994
விலை: ரூபா 15-00
முகப்போவியம்
தியா
படப்பிடிப்பு தி. தவபாலன்
நிர்வாக ஆசிரியர்
நங்கூரம்
அரசடி வீதி, கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
LILII 56ðÖT (GÎIGÜISGÏT
உ செய்யவேண்டிய வேலையை ஞாபகப்படுத்திக் கொள்ள நாட் குறிப்பேட்டைப் பயன்படுத்து கிறோம். எனினும், வேலைப் பளு காரணமாக குறித்து வைத்த விடயங்களில் பலவற்றை மறந்து விடுவோர் தான் நம்மில் அதிகம்.
இவர்களுக்குப் பயன்படும்வகை யில் நினைவூட்டும் கருவியொன்று WOCEORGANISERT குவந்துள்ளது. இக்கருவியில் செய் யவேண்டிய வேலைகளை பதிவு செய்துவிட்டால், உரிய நேரம் வந்ததும் தானாகவே ஒலியெ ழுப்பி ஞாபகப்படுத்தி விடுகிறது.
து தவளைகளின் தோலினூ LT சுரக்கப்படும் பதார்த் தம் ஒரு சிறந்த கிருமி நாசினி யென்று அ விண் மை யில் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
அலெக்ஸாண்டர் Cetrů பென்சிலியம் (Perl#) பங்கசு விலிருந்து பென்சிலின் என்னும் நுண்ணுயிர்கொல்லி மருத்தைக் கண்டு பிடித்ததிலிருந்து புது வகை நுண்ணுயிர்கொல்விகளைக் கண்டுபிடிப்பதில் உலகிலுள்ள உயிரியல் வல்லுநர்கள் புதுப்புது உயிரினங்களுள்ச் if (t !!! ଈon of
செய்து வருகின்றனர்.
இந்தவகையில் அண்மையில் தவளையிலிருந்து தயாரிக்கப் பட்ட மருந்துக்கு "மேனகனின்" என்ற பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்த மருந்துக்கு புற்று நோய்க் கலங்களைக்கூட கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக நம்புகிறார்

Page 3
வாத்து DUCK
@ಕಿಣ್ವ நீச்சல் பறவையில் மாத் திரமே 125க்கு மேற்பட்ட வகைகள் உலகம் பூராவும் பரந்து இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இப்பறவைக ளில் ஆண்பறவையை Drake என் a lib, Quaiarup606/60tu Duck அல்லது Hen என்றும் குஞ்சுகளை Duckings என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்; ஆனால் தமிழில் எல்லாமே வாத்துகள் தான்.
வால் பகுதிக்கு மேலாகஇருக் கும் சுரப்பியில் சுரக்கும் எண் ணெய்போன்ற திரவத்தை தம் அலகினால் எடுத்து, இறகுகளின் மேல் அவ்வப்போது தடவிக் கொள்கின்றன, இறகுகள் நீரில் நனைந்து போகாமல் இருக்கவே அவ்வாறு செய்து கொள்கின்றன. பூண்டுகளும் சிறுஉயிரினங்க ளுமே இதன் உணவு - கரண்டி (SPOON) போன்ற அலகுகளால் இரையைப் பிடித்துண்ணுகின் றன. அலகின் விளிம்பு இதற் கேற்ப ரம்பம் போன்று இருக் கும். அலகின் விளம்புகளும் நுனி யும் தான் உறுதியானது. மேற் பகுதி மிருதுவாயிருக்கும். இங்கு உணர்வுள்ள நரம்புகளின் நுனி கள் நிறையஉள்ளன. இப்பகு தியே வாத்துக்கு தொட்டுணரும் உறுப்பாக இருக்கிறது.
இவை தரையில் கூடுகட்டி முட்டைகளை இடுகின்றன.வெள்
2
ளை நிறம் தொடங்கி, ஒலிவ் பச்சை வரை முட்டைகளின் நிறம் இனத்துக்கு இனம் வேறு பட்டதாக காணப்படுகிறது கூட்டைவிட்டு வெளியே புறப் படும் நேரங்களில் முட்டைகள் வெளித் தெரியாத வகையில் உதிர்ந்த தம் இறகுகளினால் மூடி விட்டே செல்கின்றன, அவ்வ ளவு முன்னெச்சரிக்கை. முட் டையிலிருந்து வெளிப்பட்டதுமே குஞ்சுகள் தாயுடன் சேர்ந்துநீரில் நீந்தத்தொடங்கி விடும். சில வாத்து இனங்கள் வீடுகளில் அவற்றின் இறைச்சிக்காகவும், முட்டைகளுக்காகவும் வளர்க்' கப்படுகின்றன. சிலர் செல்லப் பிராணிகளாக கருதி இவற்றை
வளர்ப்பதும் உண்டு. SAMT
26
/ഗ്ഗത്രളമ് 矮 -
நங்கூசம்
 

கடல் - 2 அலை - 11
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன். - Uma &woest
அடிப்படைத் தொழில் நுட்ப வசதிகள் இல்லாத நிலையிலும் இந்த மண்ணிலிருந்து வியப்புறும் வகையில் சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஆனால், நீலங்கா அரசின் அழுத்தங்களுடன் ஆல மரநிழலில் வளர முடியாத புல்லின் நிலையாக தென் இந் திய சஞ்சிகைகளின் தாக்குதலும் சேர்ந்து தமிழீழ சஞ் சிகைகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றது.
பரந்த வாசகர் வட்டத்தை எட்டும் வகையிலான விற்பனைப் பெருக்கமே இச்சஞ்சிகைகளுக்குத் தீர்க்க ஆயுளை வழங்கும்.
வாசகர்களுக்கு இச்சஞ்சிகைகளை அறிமுகம் செய்து வைக்கவேண்டிய பணி புத்தக விற்பனவுக் கூடங்க ளையே சார்ந்துள்ளது.
விற்பனவுக் கூடங்களில் தென்னிந்திய சஞ்சிகை களுக்கு வழங்கப்பட்டு வரும் முன்னுரிமை தமிழீழ சஞ்சிகை களுக்கும் வழங்கப்படல் வேண்டும்.
வர்த்தகத் தளத்தில் தென்னிந்திய - தமிழீழ சஞ்சிகை களுக்கிடையேயான இடைவெளியைச் சரி செய்வதில் இந்தச் "சரியாசனம்" கணிசமான பங்கை வழங்கும்.
ീക്ഷ

Page 4
அரசடி வீதி கந்தர்மடம் யாழ்ப்பாணம்
5. 3. 94 என் பிரியமானவர்களே,
அடுத்த இதழுடன் உங்கள் நங்கூரத்துக்கு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
காலம் தன் நியதிக்கேற்பவே நகர்ந்து சென்றா லும், இலக்கை நோக்கிய வாழ்வியக்கத்தின் வேகம் இங்கு அதிகரித்திருப்பதால் இந்த இரண்டு வருடங்களும் இரண்டு தசாப்தங்களுக்கான அனுபவப் பகிர்வை எம்மில் ஏற் படுத்தியுள்ளன.
நங்கூரத்தின் பிரசவத்துக்காக இதுவரை எதிர் நோக்கிய இடர்ப்பாடுகள் ஏராளம்.
ஆனால் ஒவ்வொரு தடவையும், சாயும் போது எம்மைத் தாங்கும் சுவர்களாக நீங்கள் இருந்தமையால் மீண்டும் மீண்டும் எம்மால் நிமிர்ந்தெழக் கூடியதாயி ருந்தது. -
உங்களிடமிருந்து அதே ஆதரவைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம். w
மூன்றாம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதழ் அமைப்பிலும் இதழ் அடக்கத்திலும் செய்ய வேண்டிய மாறுதல்கள் பற்றி - சேர்க்க நீக்க வேண்டிய விடயங்கள் பற்றி-. இன்னும் இன்னும் நிறைய எழுதுங்கள்.
உங்கள் கடிதத் தொடர்பு எம்மை உற்சாகப் படுத்தும்; அதற்கும் மேலாக நங்கூரத்தை நெறிப்படுத்
ֆlւD. 0.
அனபுடன
సిరిణe్పతిని
4. நங்கூரம்

அர்த்த
5TfG)TijGTT), IIIs (GENITIDT
ல அதிசயச் சம்பவங்களை
பாருங்கள்.
அமெரிக்காவின் பெரிய ஏரிகளில் வாழுகின்ற மீன் இனங்கள் சில வற்றில், இரண்டிற்குமான இருவகைப் பாலுறுப்புக்ளும் ஒரே மீனில் தோன்ற ஆரம்பித்துள்ளன.
அதே ஏரியின் அருகில் வாழும் சில கட்டற் பறவைகளுக்கும் இதே கதிதான் - இரு பாலுறுப்பு ஜீவ ராசிகளாக உருமாற்றம் பெற்று வருகின்றன.
புளோரிடாவின் அப்போப்கா ஏரியில் பிறந்து வளர்கின்ற சில ஆண் முதலைகள் ஏக்கத்தால் கண் கலங்குகின்றன! காரணம் அவற்றினுடைய ஆண் பாலுறுப் புகள் தமது வழமையான அள வைவிட கால்வாசியாகச் சிறுத்து விட்டனவாம்.
ஆண், பெண் என்ற திடமான வேறுபாடுகள் மிருக இனங்களில் இருப்பதும், எதிர்ப்பாலினரிடை
நங்கூரம்
ஆண் பெண் ஆகிய
ஒரு திடுக்கிடும் தகவல்
ത്ത്വജ്ഞ
யே விருப்பும் கவர்ச்சியும் தோன் றுவதும், காதலும் புணர்ச்சியும் தொடர்வதும், இனவிருத்தி நிச் சயப்படுத்தப் படுவதும் இயற் கையின் அடிப்படை நியதிகள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூமி யில் உயிரினங்கள் தோன்றியதும் அவை படிப்படி யாக கூர்ப்படைந்து இன்றைய உன்னத நிலையை அடைந்ததும் இதனால்தான்,
ஆனால் இன்று அந்த அடிப் படை விதிகளில் மாற்றம் ஏற்படு
இறதா?
9 Lifa T filjafi பாலியல் இயல்புகளில் LDTbO3 airl 9CJ QUTiffici) ତ୍ରିtUTରି ୭_]ll&&ଗାଁ! 5TT60Ti Sup6)5II மனிதனா?

Page 5
மிருகங்கள் மாத்திரமின்றி. மிருக இனத்தின் அதி உன்னத வாரிசான மனித இனமும் கூட இச்சிக்கலில் மாட்டுப்பட்டிருப் பதற்கான ஆரம்ப ஆதாரங்கள் கிட்டியுள்ளன.
மிச்சிகன் நகரிலும், தாய்வா னிலும் சில நூற்றுக்கணக்கான ஆண்குழந்தைகள், விதை அமைப் பு வேறுபாடுகளுடன் (Testicular Malformation), allpatologousசிறுத்த ஆண் பாலுறுப்புகளுடன் பிறந்துள்ளன.
ஆனால் அதைவிட ஆபத்தான செய்தி என்னவென்றால் அமெ ரிக்காவிலும் ஏனைய 20 மேற் குலக நாடுகளிலுழுள்ள இன்றைய ஆண்களின் விந்திலுள்ள ரணுக்களின் எண்ணிக்கை (Sperm Count) 1938ல் வாழ்ந்த அவர் களது தந்தைமாரதும், பாட்டன்
மாரதும் உயிரணு எண்ணிக்கை
யிலும் பார்க்க 50%தால் குறைந் து விட்டது. இது தொடர்ந்தால் அப்பகுதி ஆண்கள் மலடாகிவிடு வார்களா?
உயிரினங்களின் இத்தகைய பாலியல் மாற்றங்களுக்கான காரணம் என்ன?
இலட்சக்கணக்கான ஆண்டு களில் நடக்கின்ற கூர்ப்பு மாற் றங்கள், இயற்கையினால் சில ஆண்டுகளுக்குள்-கு றுக்கப்பட்டுள் ளனவா?
அல்லது நிறமூர்த்தங்களின்
பரம்பரை அலகுகளில் கைவைத்
6
உயி
துவிட்- மனிதனின் அதி நுணு கிய விஞ்ஞான அறிவின் பெறு பேறுகளா?
இவை எதுவுமே இல்லை, குழல் மாசடைதல்தான் கார ணம் என்று சொன்னால் நீங்கள் இளக்காரமாகச் சிரிக்கக்கூடும் ஆனால் அதுதான் உண்மை,
அப்போப்கா ஏரி முதலை களின் பிரச்சனைகளுக்குக் கார ணம் DDT என்று சொல்லப்படு கிறது. மலத்தியோனின் வரு கைக்கு முன்னர் எமது நாட்டி லும் நுளம்பு அழிப்பிற்காக ஏராளமான DDT விசிறப்பட்
i náslň எம். கே. முருகானந்தன்
டதை நீங்கள் மறந்திருக்க மாட் டீர்கள். அப்போப்கா ஏரியின் சுற்றுவட்டாரத்திலும் ஏராள மான DDT கலந்த கிருமிநாசினி கள் விசிறப்பட்டதால், ஆயிரக் கணக்கான கலன் DDT அந்த ஏரி யின் நீரை மாசுபடுத்திவிட்டன. DDT சிதைவடையும் போது DDE என்ற இரசாயனப் பொருளாக மாறுகிறது. இந்த DDE தான் அந்த ஆண் முதலை களின் பாலுறுப்புகள் சிறிதாக வளர்வ தற்குக் காரணம் என நம்பப்படு கிறது.
அந்தப் பகுதியில் மார்புப் புற்றுநோய்க்கு ஆளான பெண்
நங்கூரம்

களின் உறுப்புகளை ஆராய்ந்த போது அவர்களில் வழமைக்கு அதிகமான DDE சேர்ந்திருப்ப தும் அவதானிக்கப்பட்டது, அவ் வாறு DDE கலந்துள்ள பெண் கள் ஏனையோரை விட நான்கு மடங்கு அதிகமாக மார்புப் புற்று நோய்க்கு ஆளாவதும் அவதா
னிக்கப்பட்டுள்ளது.
DDT மாத்திரமன்றி வேறு பல இரசாயனப் பொருட்களும் இத் தகைய பாலியல் இயல்பு மாற் றங்களுக்கு காரணமாகின்றனர். உதாரணமாக இலக்ரோனிக் கரு விகள் தயாரிப்பில் பயன்படும் PCB, என்டோசல்பான், அற்ற சீன் போன்ற கிருமி நாசினிகள், குழந்தைகளின் பால்போத்தல். நீர்க்குடுவை போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தும் பொலிகார்பனேட், கடதாசித் தா ள் களை வெளிற் றும் குளோரின் போன்றவை வேறு ક6) .
ஒன்றுக்கொன்று தொடர்பற்ற, இத்தகைய வித்தியாசமான இர சாயனப் பொருட்கள் எவ்வாறு மிருகங்களின் பாலியல் இயல்பு மாற்றங்களுக்குக் கா ர ன மா கிறது என்று கேட்கிறீர்களா?
மிருகங்களின் பாலியல் இயல் புகளுக்குக் காரணமாக இருப்பது ஈஸ்ரோஜென் (Estrogen), அன் ரோஜென் (Androgen) ஓமோன் கள் என்பதை நீங்கள் அறிந்திருப் பீர்கள். வாகு, மீசை அரும்புதல், தடித்த குரல், ஆண் பாலுறுப்பின் வளர்ச்சி, விந்துகளின் உற்பத்தி
நங்கூரம்
கட்டுமஸ்தான உடல்
அன்னையும்
பூவும்.
ன்னை தெரேசாவின் பெய s2/ ரில் ரோசாச் செடியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. @” ဂုံl யில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிறுவனமொன்று புதியவகை ரோசாச் செடியொன்றை உரு வாக்கிஅதற்கு அன்னை தெரேசா Gornt &F nr (Mother Teresa Rose) என பெயர் சூட்டியுள்ளது.
அன்னை தெரேசா ஆற்றிவரும் பணிகளுக்காக, சமாதானத்துக் கான நோபல் பரிசு (1979) உட் பட அநேக விருதுகள் இது வரை கிடைத்துள்ளன. இன, மத பேத மற்ற மனித நேய சேவைகளுக் காக அன்னை தெரேசாவுக்ே கிடைத்துவரும் கெளரவங்களின் பட்டியலில் அண்மையில் இந் வெள்ளை ரோசாவும் சேர்ந்து கொண்டுள்ளது.
அதிக உயரம் வளரும் இந்த ரோசாச்செடிகளின் பூக்கள்வெள் ளை நிறத்தில் இலேசான குங்கு மச் சிதறல்கள் போல - கருை யின் சின்னமாக - அழகாக கா ப்படுகின்றன.

Page 6
போன்ற ஆண் இயல்புசஞக்குக்
காரணமாயிருப்பது அன்ரோ ஜென்தான். ஒருவனது உடலில் அன்ரோஜெனின் அளவு குறை யுப் போது அல்லது ஈஸ்ரோஜென் அதிசரிக்கும் போது ஆண்மை இயல்பு குறைந்து பெண்மை அதி கரிக்கும். வாளிப்பான உடம்பு, மார்பின் வளர்ச்சி, பெண் பாலு றுப்புகளின் வளர்ச்சி, இனிமை யான குரல் போன்றவற்றுக்கக் காரணமாயிருப்பது பெண்மைக்
குரிய ஒமோனாகிய ஈஸ்ரோ ஜென்தான்.
முன்கூறிய விடயங்களான
ஆண் மீனில் பெண் பாலுறுப்பு தோன்றுவதும், சில கடற்பறவை களில் இரு பாலுறுப்புகள் தோன்
றுவதும், முதலைகளில் ஆண் உறுப்புகள் சிறுப்பதும், ஆண் களின் விந்தணுக்களின் எண்
ணிக்கை குறைவதற்கும் கார ணம் ஆண் ஒ மோ னாகிய அன்ரோ ஜெனின் குறைபாடு அல்லது பெண் ஓமோனாகிய ஈஸ்ரோ ஜெனின் அதிகரிப்பு என்பதை நீங்கள் நிச்சயம் ஊகித் திருப்பீர்கள்.
DDTக்கும், எலக்ரோனிக் கருவி களின் PCBக்கும் பொலிகார்ப னேற் பிளாஸ்டிக் போத்தில் களுக்கும், கிருமிநாசினிகளுக் கும், ஈஸ்ரோஜெனுடன் என்ன தொடர்பு என்கிறீர்களா? அவற்
றினுடைய இரசாயன இயல்பில்
எந்தவித தொடர்பும் கிடையாது தான். எல்லாமே வெவ்வேறு இயல்பு கொண்ட பொருட்கள்;
8
வெற்றிக்கு ஒரேவழி வெற்றி அடையும் வரை முயற்சிப்பது.
அவற்றிற்கும்
மனித தொழிலியலுக்கும் மொட் ட ந் த லைக் கும் முழங்காலுக்கும் உள்ள தொடர்புகூடக் கிடை யாது.
உடற்
ஆனால் அவற்றிைைடய ep6)ór my geoupy Sab (Molecular Structure) மாத்திரம் சில ஒற்று soupsair 5raortiut-G85u Qartijost: றன. ஈஸ்ரோஜென தனது இயல் பான கணங்களை வெளிப்படுத்த குறிப்பிட்ட வாங்கி (recepter) களுடன் இணையவேண்டும். இது பூட்டிற்குள் திறப்பு பொருந்து வது போன்ற முறையிலாகும். ஆனால் மிக நுணுக்கமாகச் செய் யப்பட்ட பூட்டிற்குள் கூட கள்வ னுடைய கள்ளத்திறப்பு பொருந் திவிடுவதுண்டு. W
அதேபோல்தான் இங்கு ம். ஈஸ்ரோஜென் வாங்கி ஈஸ்ரோ
· 64-0ö
 
 
 

ஜெனுடன் இணைவது போல் கள்ளத் திறப்புப்போன்ற இந்த மாறுபட இரசாயனங்களும் ஈஸ் ரோஜென் வாங்கியுடன் இணைந் துவிடுகின்றன.
இதனால் அவ்வாங்கிகள் ஈஸ் ரோஜெனால் நிரப்பப்பட்டது போன்ற நிலையை ஏற்படுத்து கிறது. எனவே, ஈஸ்ரோஜெனுக் கான குண நல இயல்புகள் அந்த மிருகங்களில் திகரிக்கின்றன. பாலியல் இயல்புகள் மாறுகின்
றன.
மேற்கூறிய பொருட்களால் மாசடைந்த நீரும் உணவும் மிரு கங்களின் அடிப்படை இன வேறு பாட்டில் கைவைத்துவிடுகின் றன. சூழல் மாசடைதல் என்பது மெத்தப் ப3 ந்த அறிஞர்களதும், பணம் கொட்டிக்கிடக்கும் அரச சார்பற்ற அந்நிய நாட்டு சமூக சேவை நிறுவனங்களினதும் விடயமல்ல; அது எல்லோரையும் எப்போதும் பாதிக்கலாம் என் பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இதைவிட வேறும் எத்தனை நவீன இரசாயனப் பொருட்கள் சூழலை மாசடையச் செய்து மனிதகுலம் உட்பட ஏனைய ஜீவ ராசிகளைப் பாதிப்படையச் செய்
கின்றனவா என்பதைப் புதிய ஆராய்ச்சிகள்தான் sa L. g. iš காட்டவேண்டும்.
அதற்கிடையில் நாம் அர்த்த நாரீஸ்வரர்களாக மாறா விட் டால் சரிதான். ()
நங்கூரம்
ம்
சிந்தியுங்கள்
ஏழ்மையிலும் -
நேர்ம்ை
கோபத்திலும்
பொறுமை
செல்வத்திலும் .
எளிமை துன்பத்திலும் -
தைரியம்
தோல்வியிலும் -
விடாமுயற்சி
தரித்திரத்திலும் -
Všanuartač
பதவியிலும் -
u6oof?6y
அறிவிலும் -
அடக்கம்
பலத்திலும் -
utfaly
யாழ். மத்திய கல்லூரியின்
அதிபர் அலுவலகத்தின் முன் னால் உள்ள நடைபாதைச் சுவ
ரில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள்.
எழுதி அனுப்பியவர்
ம. சுரேஷ்கரன் உண்டு - 3

Page 7
அழிவின்
Giff
mum ö5TI6öbILTLôc535fb ama
Nரு இருபது வருடங்களுக்கு முன்னால் சுமார் அறுபத்தி ஐயாயிரம் என்ற எண்ணிக்கை யில் இருந்த காண்டா மிருகங் கள் இன்று வெறும் இரண்டாயி ரத்து ஐநூறு ஆகச் சுருங்கிப் போய் விட்டன. காண்டா மிரு கத்தின் ஆங்கிலப் பெயரின் - Rhinoceros - அர்த்தமே கிரேக்க மொழியில் "மூக்கின் மேல் கொம்பு" என்பது தான். இந்தக் கொம்புகளுக்கா கத்தான் காண்டா மிருகங்கள் இன்று பெருமளவில் கொல்லப்பட்டு வரு கின்றன.
ஆபிரிக்காவில் இரண்டு, ஆசி யாவில் மூன்று என காண்டா மிருகங்களில் ஐந்து இனங்கள் உள்ள ன. கொம்புகளின் எண் ணிக்  ைக ஒன்று அல்லது இரண்டாக காணப் படும். ஆனால், மற்றைய விலங் குகளைப் போல கொம்புகள் தலையில் இருப்பதில்லை; நீண்ட மூக்கின் மேல், அதுவும் ஒன்றன் பின் ஒன்றாக காணப்படுகின்றன. இந்தக் கொம்புகளைப் பெறுவ தற்கு உலகின் பெரும்பாலான நாடுகள் போட்டி போடுகின்றன.
O
இனங்களுக்கேற்ப
உடலின் மேல் கவசங்களை அணிந்து கொண்டு நிற்கும் போர் வீரன் போல காட்சி தரும் காண்டா மிருகங்களினால் மணி தர்களிடமிருந்து மட்டும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள இயல வில்லை. தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வனவிலங் குகளின் உயிரைப் பறிக்கும் மனித விலங்குகளின் அடாவடித்தனங் கள் இன்று நேற்று ஆரம்பமான தல்ல, அது நெடுங்காலமாகவே நீடித்து வரும் கொடூரத் தொடர் கதை. கட்டாரிக் கைபிடியாக வும், காய்ச்சல் மருந்தாகவும் கொம்புகளைப் பயன்படுத்துவ தால் காண்டா மிருகங்கள் ஈவி ரக்கமின்றிக் கொல்லப்படுகின் றன.
ஒரு காலத்தில் இந்த விலங் குகளைக் காணவந்த சுற்றுலாப் பயணிகளால் கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்த சிம்பாப்வே இன்று இந்த வருமானத்தை முற்றாகவே இழந்து விடும் நிலை யிலுள்ளது. அந்த அளவுக்கு - ஐ. நா. வின் பாதுகாப்பையும் மீறி - இந்த விலங்குகள் அழிக்கப் படுகின்றன.ஆயுதங்களால் தாக்கி குற்றுயிராக வீழ்த்திய பின்னர்
நங்கூரம்
 

பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி விடுகின்றனர். இதன் போது கொப்பு சுலபமாக கழன்று வேறாகி விடுகின்றது
ஆபிரிக்க காண்டா மிருகங்க ளின் கொம்புகளைவிட ஆசிய மிரு கங்களின் கொம்புகளின் விலை அதிகம். கொம்புகளை அதிக விலை கொடுத்து வாங் கும் நாடுகளில் முன்னணியில் நிற்பது சீனா தான். காய்ச்ச லைத் தடுத்து நிறுத்தும் பல வித மருந்துகளைச் சீனா உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் இந்த விலங்குகள் அருகி வரு வதைக் கண்டு சுற்றுச் சூழலிய லாளர்கள் எதிர்ப்புக் குரலெழுப் பத் தொடங்கியுள்ளதால், சீனா தன் ஏற்றுமதியைக் கைவிட்டு தனது நாட்டில் மட்டும் விற் பனையைச் செய்து வருகின்றது
சீனாவுக்கு அடுத்த մւգաn 5 தைவான், கொரியா ஆகிய நாடு கள் காண்டா மிருக மருந்துகள்
தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்
தங்கூரம்
றன. எதிர்ப்பை சமாளிப்பதற் காக கொரியா, கொம்புகளின் இறக்குமதிக்கு அண்மையில்தடை விதித்துள்ளது. ஆனால், வேண் டியளவு கையிருப்பை ஏற்கனவே சேர்த்து வைத்துள்ளது. «ՓյDrւկ நாடுகளில் கொம்புகள் மருந்துகள் 5utas பயன்படுத்தப் படுவ தில்லை. பிரபுக்களின் கட்டார் களை அலங்கரிக்கும் கைப்பிடிக ளாகவே பயன்படுகின்றன.
உடல் மேற்பரப்பளவில் யானைக் கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தரைவிலங் காக உள்ள காண்டா மிருகங் கள் இன்று அழிவின் விளிம்பில் g நின்று குரலெழுப்புகின்றன.
காடழித்தல் போன்ற சுற்றுச் சூழல் பிரச்சினைகள் ஏற்கனவே பல கானுயிர் செல்வங்களை பூண் டோடு:அழிந்து விட்டன; உடல் வீரிய விருத்திக்காகவும் அழகி
யல் உணர்வுக்காகவும் நடை
பெறும் மிருக வேட்டையும் இன்று அழிவுக்கத்ரகாரணிகளில் ஒன்றாகச் சேர்ந்துவிட்டது. ()

Page 8
மாற்று *டுழற்குறிப்பிட்டவருக்கு 9a சர சிறுநீரக மாற்று சிகிச்சை சென்னை அப்பலோ மருத்துவமனையில் அ ல் ல து வேலூரில் செய்யவேண்டியிருப்ப தால் பெருந்தொகைப்பணம் தேவைப்படுகிறது. கருணை உள் ளம் கொண்டவர்கள் உதவி செய்யுங்கள்." இவ்வாறு இளம் வயதினருடைய படத் துட ன்
கூடிய செய்திகள் அடிக்கடி செய்
திப்பத்திரிகைகளில் வேண் டு கோளாக வெளிவருவதைப் பார்த் திருப்பீர்கள்.
சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக் கான வசதிகள் இங்கு குறைவாயி ருப்பதும், அவ்வாறு இருக்கு மிடத்திலும் மிக ப் பெரு ந் தொகைப் பணம் தேவைப்படு
வதுமே நோயாளிகளை இந்தியா
நோக்கிச் செல்ல வைக்கின்றது
உயிர்காக்கும்
மருந்தாக ஒரு மாற்றுறுப்பு தானம்
ത്ത
2
உயிர் கொள்ளும் நவீன போர்க் கருவிகளைக் கொள்வனவு செய் வதில் கோடிக்கணக்கான பணம் விரயம் செய்யும் பூரீலங்கா அரசு, உயிர் கா க்கு ம் நவீன சத்திர சிகிச்சை உபகரணங்களை வாங்கு வதற்குமட்டும் தயக்கம் காட்டு கிறது. இத்தகைய உயிராபத்தை எதிர்நோக்கும் நோயாளிகளுக்கு உதவுவதற்கென நிரந்தர நன் கொடைத்திட்டங்கள் கூட இந் நாட்டில் இல்லை; தனிப்பட்டவர் களின் கருணையை நம்பியே அவர் களின் உயிர் ஊசலாடுகிறது. இந் நோயாளிகளுக்கு உதவ முன்வரும்
மனித நேயம் மிக்கவர்களின் எண்
ணிக்கையை அதிகரிக்கச் செய்வ
டாக்டர் து. விக்கினராசா முந்தல்
SSESSESEELSLLLSGLELS SLLLLLSMLYSSS SS LLL EeALLGL0ES
நற்காகவேனும், சிறுநீரகம?ற்றுச் சிகிச்சை பற்றித் தெரியப்படுத்தல் அவசியமல்லவா?
உடலின் கரையும் தன்மை யு ள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதுதான் சிறுநீரகங் களின் வேலை, இ + க வேலை யாதாயினுமொரு ஆ !ரணத்தால் தடைப்படும் போது சிறுநீரக தொழில் தடைப்பா (Renal Failure) ஏற்பட்டு விட்டதாக கூறு கிறோம். இந்தத் தடை இரண்டு வகையானது ஒன்று சடுதியான
நங்கூரம்

சிறு நீரக தொழில் தடைப்பாடு (Acute Renal Failure), Lofb60pus நாட் சென்ற சிறுநீரக தொழில் 560'Luir@ (Chronic renal-r'' failure).
முதலில் கூறப்பட்டது சடுதி யாக உண்டாகக் கூடியது. சரி யான வைத்திய முறைகள், சரி யான தருணத்தில் உபயோகிக் கப்பட்டால் முற்றிலுமாக குண மாக்கக் கூடியது. இந்தவகையில் ஒரு நோயாளியின் சிறுநீர் உற் பத்தி முற்று முழுதாக தடைப் பட்டு இருந்தபோதும், சரியான வைத்திய சிகிச்சையின் பின் சிறிது சிறிதாக அவரது சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்திசெய்யும் தன் மையை மீளப்பெற்று பழைய நிலைக்குத் திரும்புகின்றன.
நாட்சென்ற (Chronic) சிறு நீரகதொழில் தடைப்பாடு, மேற்
சொன்ன வகைக்கு மாறாக மெது
மெதுவாக தோன்றும் தன்மை 4  ை- யது. சிறுநீரகங்களில் தோன்றும் சிறுநீரக அழற்சி (Nephritis) போன்ற நோய்கள் சிறுநீரகங்களின் தொழிற்பாட் டைச் சிறிதுசிறிதாக செயல் இழக்கச் செய்து ஈற்றில் முற்று முழுதாகவே இயங்கமுடியாத நிலைக்கு ஆளாக்கிவிடுகின்றன. இப்படி இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழக்கும் போது சிறுநீரக செயல்பாடு முற்றிலும் இழந்த நிலை ஏற்பட்டு விட்டதாக கூறு
sava.øb
வகைகளைத் தவிர்த்து,
b000
'தன்னுடைய
தோல் விகளுக்குப்
பிறரைக் குறைகூறும்
மனிதன்,
தன்னுடைய
வெற்றிகளுக்கும்
மறறவர்களே
காரண மென்பதை
ஒத்துக் கொள்ள வேண்டும்'
titt deepees
கிறோம். இந்த நிலையை எய்திய
ஒரு நோயாளி அவரின் உடலி லிருந்து கழிவுப் பொருட்களை வெளியேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார். இத்தகைய நோயாளிகளின் சிறுநீரகங்களை மருந்துகள்மூலம் t 160gpu நிலைக்கு கொண்டுவர இயலாது. Фануи கழிவுகளை ஏற்படுத்தும் உணவு சிறுநீர் உற்பத்தியை ஊக் குவிக்கும் மிருந்து களைக் கொடுப்பதன்
மூலம் ஓரளவு பலன் காணலாம்.
சிறுநீரகங்கள் தொ ழிற்பட இயலாத நிலை உருவாகியதும் உடலிலிருந்து செயற்கை முறை ust as கழிவகற்றுவதுதான் உட 6Wikltas a airar ஒரேயொரு வழி. இதுவே செயற்சைமுறை
13

Page 9
சுத்திகரிப்பு (DIALYSIS) எனப் படுகிறது. செயற்கைச் சுத்திகரிப் பில் லேறுமுறைகள் இரு ந் த போதும், இரத்த சுத்திகரிப்பு guiSpruh (Dialysis Machine) மூலம் குருதியில் கலந்துள்ள கழிவு களைப் பிரித்தெடுத்து வெளி யேற்றுவதுதான் சிறந்த முறை யாக கருதப்படுகிறது. இம்முறை யில் நோயாளியின் நாளத்தில் (VEIN) ஒரு குழாயைச்செருகி, அதன் மூலம் சுத்திகரிப்பு இயந் திரத்துக்குள் குரு தி  ைய ச் செலுத்தி குருதி சுத்திகரிக்கப் பட்ட பின் மீண்டும் உடலுக்குள் திருப்பிச் செலுத்தப்படுகிறது. ஆனால் இதை 2 அல்லது 3 நாட் களுக் கொருமுறை செய்யவேண் டியிருப்பதால், நோயாளி இச் சிகிச்சை வசதியுள்ள மருத்துவ மனைக்கு சமீபமாகவே தங்ச வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகிறார். மேலை நாடுகளில் வீட்டில் வைத்திருக்கக் கூடிய சிறிய இரத்த சுத்திகரிப்பு இயந் Suib (Portable Dialysis machine) பரவலாக பாவனைக்கு வந்துள் ளது. ஆனால், இத்தகைய வசதி களை வறிய நாடுகளில் எண்ணிக் al- untiaias (pag-unal.
மேற்குறித்த சிகிச்சைகள் சாத் தியப் படாத நிலையில்-கடைசி நிவாரணமாக சிறுநீரகமாற்று இ கிச் சையை ஏறகவேண்டிய கட்டாய நிலைக்கு நோயாளி தள்ளப்படுகிறார். இம்முறையில்
14
மிகவும் நெருங்கிய இரத்த உரித் துடைய சொந்தக்காரர் ஒருவரிட
Aubig (Blood Relations) gut
கம் தானமாகப் பெறப்படுகிறது.
ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு சிறுநீரகத்தின் தொழிற்பாடே போதுமானதால், தனது இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை இன் னொருவருக்குக்கு எது வித பாதிப்புமின்றி வழங்க முடியும். இப்படியான அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்னர் தா ன ம் செய்பவரும் அதைப்பெறுபவரும் 6Jib -GooL-uLuGautifas6TT (Compatability) 6Tairusipas luaj utf16&tas னைகள் மூலம் அறிந்து கொள் கிறார்கள். இதன் பின்னரே ஆரோக்கியமான சிறுநீரக ம் ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி நோயாளியின் உடலுக் குள் பொருத்தி விடுகின்றனர். ஆனால், எவ்வளவு தான் ஏற் புடையதாக இருந்தாலும் ஒரு வரின் உடல், இன்னொருவரின் உடல் உறுப்பைத் தன்னுள் வைத் திருக்க விரும்புவதில்லை. அதைத் தள்ளிவைக்கவே (Rejection) முயற்சிக்கின்றது. இதனைத் தடுப் பதற்காக மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட நோயாளி தன் னுடைய வாழ் நாள் முழுவதும் உடலின் ஒதுக்கும் தன்மையைத் தணியப்படுத்தும் விலை கூடிய மருந்து வகைகளை உட்கொள்ள வேண்டி ய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார். ()
MisadüAlagö

O துப்பாக்கிக்குண்டொன்று மேல்நோக்கி நிலைக்குத் தாக சுடப்படும்போது அது சென்ற அதே வேகத்தில் திரும்பி வருகின்றதாமே. அதற்கான காரணத்தை தருவீர்களா?
அ. ஆனந்தகணேஷன்
குண்டொன்று நிலைக்குத்தாக மேல்நோக்கி சுடப்படுகின்ற போது, அதன் மேல் நோக்கிய இயக்கத்தில் குண்டின் நிmையும் வளித்தடையும் கீழ் நோக்கியே செயற்படுவதால் குண்டு அமர் முடுகிச் செல்கின்றது. இதனால் வேகம் படிப்படியாகக் குறைந்து
சென்று ஒரு நிலையில் பூச்சியமாகி
கணநிலை ஒய்வுக்கு வருகின்றது.
ஒய்வின் பின்னர் புவியீர்ப்புக்
கவர்ச்சி விசையினால் குண்டு கீழ் நோக்கி சுயாதீனமாக விழத் தொடங்குகின்றது. புவியீர்ப்புக் கவர்ச்சி விசை குண்டின் கீழ் நோக்கிய இயக்கத்தை ஆதரிக் கும் அதேவேளையில் வளியின் தடை இயக்கத்தை எதிர்க்கின் றது. இதனால், குண்டு மேல் நோக்கி இயங்கிய போதுள்ள அமர்முடுகலின் பருமனைவிட, குறைந்த ஆர்முடுகலுடனேயே கீழ்நோக்கி இயங்குகிறது.
இதனால் மேல்நோக்கிய பய ணத்தில் ஒரு குறித்த இடத்தில்
குண்டு கொண்டுள்ள வேகத்தை
விட, கீழ்நோக்கித் திரும்பும் போது அதே இடத்தில் குண்டு
நங்கூரம்
கொண்டுள்ளவேகம்குறைவாகும்; இதனால் சுடப்பட்ட இடத்துக் குக் குண்டு திரும்பும்போது, புறப்பட்ட வேகத்திலும் பார்க்க சற்றுக் குறைவான வேகத்தையே கொண்டிருக்கும்.
ஆனால்; புவியீர்ப்பு விசையு டன் ஒப்பிடும்போது வளித்தடை புறக்கணிக்கத்தக்கது. இதனால் கீழ்நோக்கிய பயணத்தில் வளியி னால் எதுவித தடையும் ஏற்பட வில்லை எனக் கருதப்பட்டு, குறித்த புள்ளியைக் குண்டு மேல் நோக்கிக் கடக்கும் போதும் திரும்பி வரும் போது அதே புள்ளி யைக் கீழ்நோக்கிக் கடக்கும் போதும் சமனான வேகத்தையே குண்டு கொண்டிருப்பதாக கொள்ளப்படுகிறது.
இதைத்தான் " துப்பாக்கிக் குண்டு மேல் நோக்கி நிலைக்குத் தாக சுடப்படும்போது அதுசென்ற அதே வேகத்திலேயே திரும்பி வருகிறது" என்கிறார்கள்.
விளக்கமளிப்பவர் :
சு. கிருஷ்ணகுமார், கணித ஆசிரியர் உடுவில் மகளிர் கல்லூரி.
15

Page 10
மனித நாசினிகள்.
மஹரகம புற்றுநோய்ச் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட வர்களில், யாழ்ப்பாணத்தவர்களிடையே மாத்திரம் சற்று வேறு பட்ட புற்றுநோய்க் குணங்குறிகள் அண்மையில் அவதானிக்கப்பட் C8676m or.
யாழ்ப்பாணத்தவர்களின் அபரிமித பூச்சி நாசினிப்பாவனையே இம்மாறுபட்ட குணாம்சங்களுக்கான காரணமாயிருக்கலாம் என்ற சந்தேகமும் கூடவே எழுந்துள்ளது.
இக்காரணம் நிரூபிக்க முடியாது போனாலும், கண்மூடித் தனமான விவசாய இரசாயனங்களின் பாவனை மனுக்குலத்திற்குக் கேடானது என்பன த எவரும் மறுப்பதற்கில்லை.
உணவின் மீதான கோரிக்கை வளர்ந்து கொண்டேயிருப்பதால - விவசாயத்துறை உற்பத்தியைப் பெருக்குவதற்காக-விவசாய இரசாயனப் பொருளைச் சார்ந்திருக்கும் நிலை அதிகரித்துள்ளது.
பூச்சிகொல்லிகளால் ஏற்படும் நன்மையான விளைவுகளைப் 4றந்தள்ள முடியாதது போல, அது ஏற்படுத்தும் தீங்கிழைப்புக் களையும் புறக்கணிக்க முடியாது.
பொருளாதாரத் துறையில் குறைஅபிவிருத்தியுற்ற நாடுகளில் ஒவ்வொரு நிமிடமும் யாராவதொருவர் பீடைகொல்லிகளால் நஞ் சூட்டப்படுகிறார் எனவும், ஒவ்வொரு ஒன்றேமுக்கால் மணி நேரமும் பீடைசொல்லியால் மரணமொன்று நிகழ்கிறது எனவும் உலக சுகா தார ஸ்தாபனம சுட்டிக்காட்டியுள்ளது.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் தடைசெய்யப்பட்ட பீடைகொல் லிகளிற் பல மூன்றாம் உலக நாடுகளில் சர்வ சாதாரணமாகப் பாவனையிலுள்ளதே இதற்கான காரணமாகும்.
பீடைகொல்லிகளை உற்பத்திசெய்யும் பிரமாண்டமான பன் னாட்டு நிறுவனங்கள் மிகவும் நவீனமான சந்தைப்படுத்தும் உத்தி யைக் கையாளுகின்றன.
 

பட்டினி கிடக்கும் நாடுகளுக்குத் தாம் உணவூட்ட உதவிசெய்து கொள்வதாகப் பறைசாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், தமது நாடு களில் தடைவிதிக்கப்பட்ட இரசாயனங்களை மிகச் சாதுரியமாக மூன்றாம் உலக நாடுகளின் சந்தையில் நுழைத்து விடுகின்றன.
தங்கள் தாய் நாடுகளிலுள்ள சட்டவிதிகளிலி சுந்து தப்புவதற் காக, தடைசெய்யப்பட்ட பீடை கொல்லியின் தனித்தனி இரசாய னக் கூறுகளை மூன்றாம் உலக நாடொன்றுக்குக் கப்பலேற்றி அங் குள்ள தொழிற்சாலைகளில் அவற்றை உற்பத்தி செய்கின்றன; இப் படித் தயாரிக்கப்பட்ட பீடைகொல்லி சட்டவிதிகளின் தடங்கலின்றி எந்த மூன்றாவது நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
உணவிலும் நீரிலும் சிறுகச் சிறுகச் சேரும் இப் பூச்சிநாசினி கள், நாளடைவில் மனித உடலில் பெருஞ்செறிவில் திரண்டு மனித நாசினியாகிவிடுகின்றது.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரொருவரின் பணிப்புரையின்றி மருந்துச்சாலைகளில் ஒரு கடும் வலுவுள்ள மருந்தைப் பெற முடி யாதபோது; அதிக நச்சுத்தன்மையுள்ள விவசாய இரசாயனங்களை மட்டும் எதுவித கட்டுப்பாடுமின்றிப் பெற்றுக்கொள்ளும் நிலை உரு வாகியுள்ளது.
பயிர்களின் அறுவடைக்கு முந்திய இரண்டொரு தினங்களில்
பூச்சிகொல்லிகளைப் பாவிப்பதும், அரிசி போன்ற உலர் உணவு
களின்மேல் மலத்தியோன் சேர்த்துக் களஞ்சியப்படுத்துவதும் இங்கு எழுதப்படாத விதிகளாகிவிட்டன
விவசாய இரசாயனங்கள் முறையாகவும் சரியாகவும் பிர யோகிக்கப்படுவத்ை உறுதி செய்யவும், தரக்குறைவான அல்லது ஏமாற்றுப் பொருள்களின் விற்பனைக் கெதிராகக் கொள்வனவாள ரைப் பாதுகாக்கவும் புதிய அணுகுமுறைகள் அமுலாக்கப்படல் வேண்டும்.
தவறின், அறியாமைக்கும் மேலாக அதிக இலாபம் என்னும் குறிக்கோளை எட்டும் வர்த்தக நடவடிக்கைகளும் சேர்ந்து எமது மண்ணை மேலும் புண்ணாக்கிவிடும்.
நீர்மூழ்கி

Page 11
அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா
' விற்கு அடுத்த படியாக அதிக அள
வில் பால் உற்பத்தி செய்யும் நாடு தம் அயலில் உள்ள இந்தியா தான். வருடத்துக்கு 58,000 மில்லியன் தொன் பால் அங்கு உற்பத்தி செப் யப்படுகிறது.
வெற்றிலை என்றால் வெறும் இலை என்று பொருள் Footbismund பச்சை இலையாகவே தின்பதால் இப் பெயர் நிலைத்து விட்டது. வட மொழியில் இதனைப் பர்ணம் என் urrrissir இதற்கு இலை என்று பொருள். இது தன் திரிந்து ஹிந்தி பில் "பான்" ஆகியுள்ளது.
பெல்ஜியத்தின் அண்ட் வேர் ப் (Anterp) நகரில் உலக எயிட்ஸ் ஆராய்ச்சி சமைப்பு இயங்கி வருகின் றது. அண்ட் வேர்ப் நகராவது ஒழுக் கத்திற்கு முன்மாதிரியாக இருக்கட் டுமே என்று அந்நகர நிர்வாகம், அங்கு விலைமாதர்களைத் தடை செய்ய முயற்சித்தது. ஆனால், விலை மாதர்களோ பகிரங்கப் போராட் டம் நடாத்தி தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
சூரியனிலிந்து கிடைக்கும் வெப்ப சக்தியை நீர் இறைப்பதற்குப் பயன் படுத்தும் திட்டமொன்று இங்கிலாந் தின் உதவியுடன் எகிப்தின் பாலை வனப் பகுதியில் நடைபெற்று வரு கின்றது.
அதிகடத்துதிறன் (Super Conductiuity) என்பது தடையே இல்லாத அல்லது மிகக் குறைந்த கடத்தி
களுடு மின்னை சக்தி இழப்பின்றிக் கட த்தும் நுட்பம். இம் முறையில் ஒரு சிறிதளவு மின்சக்தியை நெடுந் தூரத்துக்கு இழப்பின்றி இடம் மாற் pipsvrab.
ஜப்பானிய மூளைக் காய்ச்சல் Japanese Encephalitis) genians யின் மேற்கு மாகாணத்தில் மீண்டும் தலைகாட்டியிருக்கிறது. 1935 இல்
ஜப்பானில் கண்டறியப்பட்ட இந்
நோய் வருடாந்தம் உலகில் 45,000 பேரைப் பிடிக்கிறது. இலங்கையி லும் கடந்த பல தசாப்தங்களாக இதன் த்ொல்லை அதிகரித்துள்ளது.
"நாடு உனக்கு என்ன செய்ததென்று கேட்காதே; நாட்டுக்கு நீயென்ன செப்தாப் என்று கேள்" - இப்படிக் கூறியது ஜோன் எஃப் கென்னடி என்று தான் உலகமே நினைக்கிறது. ஆனால், முதன் முதலில் இதைக் கூறியது பாரசீகக் கவிஞர் கலீல் கிபிரான் என்பது பலருக்குத் தெரி
Unr.
டைப்பிரியஸ் என்ற உரோம மன் னனுக்கு இளஞ்சிறுமிகள் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்படுவதைப் LunTrAlbgy vseħħulu BA 89 iffi u uo Tab. ஆனால், ரோம மதச்சட்டம் கன் னிப் பெண்கள் கொலை செய்யப் படுவதை தடை செய்தது. ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட அம்மன் னன், கொல்லப்படுவதற்கு முன்னர் அப்பெண்கள் மானபங்கப்படுத்தப் பட வேண்டுமெனக் கட்டளையிட் டானாம்.
உலக வரலாற்றிலேயே மிக அபாய கரமான பாலம் சுவிற்சர்லாந்து ஏரி யின் மீதுள்ள மரப்பாலம் தான். sféř øy if (Zurich Lake o usår før செல்லும் இப்பாலம் காற்றில் ஆடிய தில் இது வரை ஆயிரக் கனக் கானோர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள் ளனர். இதனால் காற்றுக் காலங்க
രഞ്ച0ർ

ளில் மக்கள் பாலத்தின் மீது .செல்வார்கள் وشقاقهه
இஸ்ரேல் பிரதமர் யிற்சாக் ராபிள் முன்னர் ஒரு யூத தீவிரவாத இயக் கத்தில் தலைவராக இருந்தவர். யூத எதிரிகளைக் கொல்வதில் இவ ரது இயக்கம் முன்னணி வகித்தது.
பாகிஸ்தானில் எந்த ஆட்சியும் நிலைக்காது போவதற்கு என்ன காரணம் ? அங்கு அரசியலில் இரா ணுவம் அதிகம் தலையிடுவது தாள் காரணம் என்கிறார்கள் அரசியல் அவதானிகள், இராணுவத் தள பதிக்குப் பிடிக்காத எவரும். ஜனாதி
பதியாக ஆட்சி புரிவது அசாத்திய
udarti.
புலிகளின் எலும்புகள் மருத்துவ குணமுடையவை என்ற நம்பிக்கை காரணமாக புலிகள் இன்று பெரு மளவில் வேட்டையாடப் படுகின் றன. இந்த நூற்றாண்டின் ஆரம் பத்தில் உலகில் மொத்தம் ஒரு இலட் சம் புலிகள் இருந்தன. ஆனால் இன்று அவை, வெறும் 5,000 ஆகக் குறைந்து விட்டன.
உலகெங்கும் மிக அதிகம் பேர் பார்க்கக் கூடிய, மிகப் பிரமாண்ட மாக நடைபெறும் விளையாட்டு உலகக் கால்பந்து கோப்பையாகும். நான்கு ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் இந்த விளையாட்டு இம்முறை ஜூன் 17 முதல் ஜூலை 17 வரை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் இராணுவத்தில் சேர்ப்பதற்காக அமெரிக்காவில் 20 இலட்சம் இளை ஞர்களைப் பரிசோதனை செய்து பார்த்த போது அவர்களில் ஒன்பது இலட்சம் பேர் உடலாலும், மனதா
லும் இராணுவ சேவைக்குத் தகுதி
யற்றவர்கள் என்று கண்டுபிடிக்கப்
நங்கூரம்
பட்டது. அமெரிக்க மக்களையும் ஆட்சியாளர்களையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்திய செய்திகளில் இதுவும் ஒன்று.
திருட்டுத் தனத்சிலும் கொடிய
சுபாவத்திலும் மரங்கொத்திக்கு ஒப் பான பறவை கிடையாது. பிற பறவைகளின் கூடுகளிலுள்ள முட்டை
களைத் திருடித் தின்னுவதில் இவை பலே கில்லாடிகள்.
விஞ்ஞான மேதை கலிலியோவின் காலத்தில் நேரத்தைக் காண்பிக்கும் asugasntraliasir பாவனைக்கு வர வில்லை. கலிலியோ தம்முடைய ஆராய்ச்சிகளின் போது கால அளவை நிர்ணயிப்பதற்கு தம்முடைய கைக ளின் நாடித் துடிப்பை அளவு கோலாகக் கொண்டாராம். "வல் லவனுக்கு புல்லும் ஆயுதம்" என்று தெரியாமலா சொல்லி வைத்தார்
se
பூனைக்கு விரோதி எலி. எனவே நம் வீடுகளில் பூனையை வளர்த் தால் அதுவே போதும். எலிகளை ஒழித்துக்கட்டி விடலாம் என்று சிலர் நினைக்கின்றார்கள். இது தவறு. சில பூனைகள் திறமையான எலிகொல்லிகள் தான். ஆனால், வெகுநாட்களாக ஒரே அறையில் வசி+கும் பூனைகளும் எலிகளும் காலக்கிரமத்தில் சினேகிதர்சளாகி விடுகின்றன என்று கண்டுபிடித்தி ருக்கிறார்கள்.
ருவாண்டாவில் கடந்த சில மாதம் களாக நடைபெற்று வரும் உள்நாட் டுப் போரில் இதுவரை ஐந்து இலட் சத்துக்கும் மேற்பட்ட மக்கள் படு கொலை செய்யப்பட்டதுடன் பல இலட்சக்கணக்கானோர் அகதிகளாக வும் இடம் பெயர்ந்துள்ளார்களாம்.
இளைஞர்களுக்கான ஒரு உலகளா விய இயக்கம் எது தெரியுமா? 1907
9

Page 12
20
இல் லெப்டினட் ஜெனரல் ரொபேட் பேடன் பவுல் எனும் ஆங்கிலேய ரால் உருவாக்கப்பட்ட "சாரணர்" இயக்கம் தான் அது.
டியாகோ மரடோனா உலகக் கிண்ண a 60 sup55tl illu Vu T ig. d5 6the பங்கு கொள்வதில் இருந்து கால வரையறையற்ற தடைக்கு உட்படுத் தப் பட்டுள்ளார். சக்தியை அதிகரிக் கச் செய்யும் போதை மருந்துகளை உட்கொண்டார் என்பதே இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 15 ஆம் திகதியை சர்வதேச குடும்டதின மாக கடைப்பிடிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை பிரகடனம் செய்துள்ளது. மாற்றமடைந்து வரும் சமுதாயத்தில் வளங்களும் குடும்பப்
பொறுப்புக்களும்" என்பதே இந்த ஆண்டிற்கான தொணிப் பொருளா கும்.
உலகெங்கு ம் 62 நாடுகளில் 8
கோடியே 50 இலட்சத்திற்கும் மேற்
பட்ட கண்ணிவெடிகள் பரவிக் கிடப் பதாக அமெரிக்க வெளி நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. இது கண்ணிவெடிகளின் யுகம் போலும!
தமிழறிஞர்கள் யாராவது இதுவரை யில் நோபல் பரிசு பெற்றிருக்கிறார் சனா ? இருக்கிறார்கள். தமிழ் நாட் டைச் சேர்ந்த சி. வி. இராமன், சுப்பிரமணியம் சந்திரசேகர் ஆகிய இருவரும் பெளதிகவியலில் நோபல் பரிசு பெற்று தமிழர்க்குப் பெருமை தேடிக் கொடுத்தவர்கள். இதில் ஆச்
சரியம் என்ன தெரியுமா ? இருவரும்,
உறவினர்கள்.">சி. வி. இராமன் சந்திரசேகருக்கு மாமா உறவு முறை иштиѣ.
புற்கள் (Grasses) காற்றினால் மக ரந்த சேர்க்கையடைவது பற்றியும் காற்றினால் எடுத்துச் செல்லப்படு வதற்கேற்ற வகையில் புற்களின் மக
ரந்த மணிகள் பாரமற்றிருப்பது பற்றியும் விஞ்ஞானத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள். இப்போது இத னையும் தெரிந்து கொள்ளுங்கள். புற்களின் மகரந்த மணிகளின் ஒரு அவுன்ஸ் திணிவில் 6 மில்லியன் மக ரந்தமணிகள் காணப்படுகின்றன வாம். அத்தனை சிறியவை அவை.
'படித்த புத்தகங்களை விட படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் வைத்துக் கொள்வது நல்லது. இருப் பது சத விகிதம் கதை, நாவல்கள் எனவும் மீதி எண்பது வீதம் கட் டுரை அறிவியல் இலக்கியம், என வும் ஒதுக்கிப் படிப்பது என் பழக் கம்" இதனை படிப்பது எப்படி என்ற நூலில் எழுத்தாளர் சுஜாத்தா குறிப்பிட்டுள்ளார்.
வானிலை ஆராய்ச்சித்துறையில் sysafQudst Böspff (Anemometer) என்று ஒரு கருவி உள்ளது. இது காற்றின் வேகத்தைக் கணக்கிடுவி றது. இந்தக் காற்று வீச்சளவியி னல் காற்று வீசும் திசையையும் அறிய முடியும். ኧ
வயது x 2 + 32 சமீ : உயரம். என்ன இது, புதுமாதிரியான் வாய்ப் பாடு என்று யோசிக்கிறீர்களா ? இதன் மூலம் பன்னிரெண்டு வயதுக் குட்பட்ட குழந்தைகள் கொண்டி
ருக்க வேண்டிய உயரத்தை நீங்களே கணித்துக் கொள்ள முடியும். வயதை இர ண் டால்
பெருக்கி வருவதை 32 சமீயுடன் கூட்டிக் கொள்ளுங்கள். அதுதான் இருக்க வேண்டிய உயரம்.
சுயஸ்கால்வாயை 1956இல் நாட்டுட மையாக்கியவர் கமால் அப்துல் நாசர். இவர் 1970 இல் இயற்கை மரணமடைந்தார். இஸ்ரேலுடனான ஒப்பந்தத்துக்காக 1981 இல் கட்டுக்
கொல்லப்பட்ட எகிப்திய ஜனாதிபதி
அன்வர் சதாத். சென்ற இதழின தக வற் களஞ்சியத்தில் இவைபற்றிய தகவல்கள் தவறாக இடம் பெற்றுள் SST,
நங்கூரம்

நேர்வழிச்
ಗಾಗಿ ಹಣ: நிறைவாக வாழ வைப்பதற்குரிய வழிகளை ஆராய்பவர்கள் நோர்மன் வின் சென்ட் பீல் என்ற அமெரிக்க சிந்தனையாளரைப் பற்றி அறிந் திருக்க வேண்டும். இவர் டாக் டர் பட்டம் பெற்ற ஒரு மதபோத கர், ஒரு உள நல ஆலோசகர் (Counselor). 3)aii syair (p53, u மானவரெனின் உலகத்தில் மணி தர்கள் அனுபவிக்கின்ற எல்லா மனப்பிரச்சினைகளுக்கும், சில தீர்க்க முடியாத உடல் பிரச்சி களுக்கும் ஒரே சொல்லில் தீர் வைக் கூறியிருக்கிறார்: நேர் orудј.5liђабост -POSITIVE THI
NK ING. என்பதே அந்தச்சொல்.
இந்தச்சொல்லுக்கு அவர்கொடுக் கும் வரைவிலக்கணம்: "இது ஒரு வாழ்க்கைமுறை - வாழ்வின் மோசமான நிலைமைகளில் நல்ல வற்றைத் தேடிக்கண்டுபிடிக்கும் ஒரு வாழ்க்கை முறை.”
டாக்டர் பீல் பெரும்பாலான உளவியலாளர்களைப் போல் சின்னவயதில் எல்லா மனித உணர்வுகளையும் அறிந்தவர்கவலை, தாழ்வுச்சிக்கல், பயம் என்று நாம் விழுகின்ற ஒவ்வொரு குழியிலும் அவர் விழுந்து எழுந்து வந்திருக்கிறார். நாற்பது வருடங்
சிந்தனை
தங்கூரம்
பெற்றிருக்கக்கூடும்.
"ஒருகை பார்த்து
விடலாம்"
களுக்கு மேலாக மனமுடைந்து வரும் மனிதர்களை தனது ஆலோ சனைகளால் உரமூட்டி மீண்டும் வாழ்க்கைக்குத் தயார் செய்யும் தொழிலை அவர் மேற்கொண்டி ருக்கிறார். பல புத்தகங்களை எழு தியிருக்கிறார். அமெரிக்காவின், நியூயோர்க்கிலிருந்து வெளிவரும் '60s, L. Gustahl - Guide post மாத சஞ்சிகை இவருடையது. முடிந்தால் இவற்றைக் தேடிப் படித்துப் பயன் பெறுங்கள்.
இந்தக்கட்டுரையில் உங்களு டன் பேசப்போவது டாக்டர் பீல்தான் - அவரது நேர்வழிச் சிந்தனைதான். செயலின்மையில்
வெற்றிக்கான வழிமுறைகள் சில!
செயலைக் காண்பது பற்றி கீதையில் படிக்கிறோம், சோதி க்கப்படுவது அல்லது துன்பத்தில் தவிர்க்க முடியாமல் உழல்வது மகிழ்ச்சி என்றே எண்ணுமாறு பைபிள் கூறுகின்றது. எமக்குத் தெரியாத மதங்களிலும், அவற் றின் கொள்கைகளிலும் இதே நெறி வேறுசொற்களில் இடம் இந்த அறி வுரை சில ஆயிரம் ஆண்டுசஞ கு முன்னிருந்தே மனிதர்களின் கண்
2

Page 13
னில் பட்டு வருகிறது ஆனால், ய்ாரும் அதைப்பெரிதாக நினைக் கவில்லை. ஏன்? இதற்கு பீல் சொல்லும் பதிலைப் பாருங்கள்.
"இதைக்கடைப்பிடிக்க மணி தர்கள் பயப்பட்டார்கள் - இப் போதும் பயப்படுகிறார்கள், நாம் கவலைப்படுகிறோம். கவ
லைக்கு பல சமயங்களில் எமக் குக் காரணம் தெரியும், சில சம
யங்களில் அது மறைக்கப்பட்டி
ருக்கும். கவலைப்படும் போது காரணங்களைத் தேடிக்கண்டு பிடிக்க, அகற்ற நாம் விழைகி
றோம். கவலையில் - சோர்ந்த மனநிலையில் - முடிவெடுப்பதும், செயற்படுத்துவதும் எமக்கு இய லாதது. என்றாலும், அத்தக் காரணத்தையிட்டு, அதை அகற் றுவதையிட்டு ஒரு நடவடிக்கை எடுக்கப்போய், அது இயலாத தாகி கவலை பலமடங்காகிறது. கொஞ்சம் நேர்வழிச் சிந்தனை யைத் தூண்டி உற்சாகத்தை அறி
முகப் படுத்துவது பலருக்கு உண் ,
மை நிலையை மறைப்பது போல் தோன்றுகிறது. யதார்த்தத்தை விட்டுத் தப்பியோடுவதுபோல் தெரிகிறது. இதனால் நேர்வழிச் சிந்தனையை நாம் நாடுவதில்லை. இருண்ட மனத்துக்கு ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி இருளை விரட்டுவதில்லை இருட்டிலேயே தேடுகிறோம் - நிலையை இன் லும் குழப்புகிறோம்?
அவர் மனமும்,
22
மேலும் சொல்வது: உடலும் களைப்படை
(SUFFERINGS)
யக் கூடியவை. அவை இயந்தி ரங்களல்ல, ஆனால் இயந்திரங் களைவிட நுணுக்கமானவை, சக் திபடைத்தவை: ஆனால் மென் மையானவை. அவை களைத்தி ருக்கும் போது களைப்பை நீக் குவது முதல்வேலை-களைப்புக்கு அல்லது சோர்வுக்கான காரணத் தை கண்டுபிடிப்பது அடுத்து படி முறை. இதையே தலைகீழா கச் செய்தால் நிலைமை இன் னும் தலைகீழாகும்."
ஆழ்ந்த கவலை, வாழ்க்கையில் விரக்தி அண்மையில் உங்களைத்
யோ. அன்ரனி பூட்
தாக்கியிருக்கும். அந்த இருண்ட
கணப்பொழுதுகளிலிருந்து மீண்டு வந்த வழியை நினைத்துப் பாருங்கள், உங்கள் மனத்தை குதூகலிக்கச் செய்த ஒன்றுதான் உங்களை நிச்சயமாக மீட்டிருக் கும். அது ஒரு ஆலயமாக, ஒரு விளையாட்டாக, நல்லதொரு உறவினரின் சந்திப்பாக, gG இயற்கை அழகாக இருக்கும். இது பீல் சொல்லும் நேர்வழிச் சிந்தனையின் ஒருவடிவம்.
சில சமயங்களில் பாதிப்புகள் நிரந்தரமான வை. அநேகமாக உடல் ஊனம் அடைதல் போன்றவை நிரந்தர LðfT6ð76ða - அவ்வேளைகளில்
நங்கூரம்

என்ன செய்யலாம்? ஒரு வெள் 68 ordistript பெண்ணுக்கு முள் ளந்தண்டு உடைவினால் ஒரு நிரந்தர வலி. அந்தவலி வாழ்க் கை முழுவதும் வரப்போகும் ஒன்று என்று அறிவிக்கப்பட்டு விட்டது. அவர் கொஞ்சக்காலம் துவண்டுபோய் வாழ்ந்தார். பின் எழுதினார்: ‘'இப்போது மலர்
களை ரசிக்க நான் கற்றுக்கொண்
டேன். மற்றவர்கள் மீது அனு தாபம் காட்டக் கற்றுக் கொண் டேன் - எதற்கும் மேலாக ஐம் பது வயதில் நான் எழுத்தாள ராகிவிட்டேன். இவையெல்லாம் என் நிரந்தர வலி எனக்குக் கொடுத்த நன்மைகள்." ஒரு நிரந்தரத் துன்பம் எப்படி நல்ல
பக்கங்களை வைத்திருக்கிறது என்று இங்கு காண்கிறோம்.-- இது நேர்வழிச் சிந்தனையின்
இன்னொரு வடிவம்.
எதுவும் செய்யாதிருக்கும் போது கூட மனிதர்கள் மகிழ்ச் சியையே விரும்புகிறார்கள் அல் லது அமைதியை (PEACE) விரும் புகிறார்கள். நேர்வழிச் சிந்தனை இதற்கு நல்லமருந்து: "நாம் எதையெல்லாம் பெற்றோம் என்று நினைத்து மகிழவேண்டும். அதேபோல் இனியும் பெறுவோம் என்று மனத்திரையில் படம்
நங்கூரம்
கப்படுமா?
போடவேண்டும்" என்று சொல் லப்படுகிறது. இதனால் எம் பிழைகள், குறைகள் பூசிமெழு
இல்லை, "அவற்றையும் ஒருகை unti ës விடலாம்" என்ற துணிவுடன் நாம் அவற்றை அணுக ஆரம்பிக் கிறோம். உங்களால் இதைப் பரிசோதித்துப் பார்க்க முடியும் என்பதால் அதிகம் விளக்க வேண் டியதில்லை.
மாறாக,
டாக்டர் பீல் சொல்லும் நேர் வழிச் சிந்தனை இதுதான். டாக் டர் மாக்ஸ்வெல் மால்டஸ் என் பவரும் வேறு சொற்களில் இதை யேதான் சொல்கிறார்: "எமது வாழ்க்கை வெற்றிகளாலும், தோல்விகளாலும் பின்னப்பட் டது. கடந்தகாலவெற்றிகளினால் பெறப்பட்ட தன்நம்பிக்கையை நாம்நிகழ் காலத்தில் பயன்படுத்த வேண்டும்.
முட்களிடையில் மலர்களைப் போலவும், எரிநெருப்பில் குளிர் போக்கும் வெம்மையைப் போல வும் - எதிலுமே நன்மையும் கலந்தே இருக்கும். அதைத்திேடிக் கண்டு பிடிக்கும் நேர் வழிச்சிந் தனை உங்களை வெற்றிக் குரிய வராக்கிவிடும் ()
23

Page 14
தமிழ் மொழியில் முதன் முதலில் .
* தமிழ் கலைக்களஞ்சியம் :
உலகின் முதல் தமிழ்க் கலைக் களஞ்சியம் “அபிதான கோசம்’
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முத்துத் தம்பிப்பிள்ளையால் வெளியிடப்
பட்டது. இதன் பின்னர் தான் அபிதான சிந்தாமணி வெளியானது.
* முதல் அகராதி :
தமிழ் மொழியில் தோன்றிய முதல் அகராதி "சதுரகராதி" ஆகும். வீரமாமுனிவர் 1819இல் இதனை அச்சிட்டு வெளியிட்டார்.
* விடுகதைத் தொகுப்பு :
அருணாசல முதலியார் 1877இல் 'இரு சொல் அலங்காரம்" என்னும் நூலைப் படைத்தார். இதுவே தமிழில் தோன்றிய முதல் விடுகதைத் தொகுப்பாகும்.
* முதல் அறிவியல் திங்கள் இதழ் ;
தமிழ் மொழியில் முதன் முதலில் வெளிவந்த அறிவியல் திங்கள் இதழ் என்ற பெருமையை 1931இல் வெளிவந்த "தமிழ் மகசின்" என்ற இதழ் பெறுகிறது.
* முதல் குழந்தைகள் பத்திரிகை :
1840ஆம் ஆண்டில் வெளிவந்த போலதீபிகை" என்ற குழந் தைகள் பத்திரிகை தான் தமிழில் முதன் முதலில் வெளிவந்த குழந்தைகள் பத்திரிகையாகும். இது நாகர் கோவிலில் இருந்து வெளியானது.
杀 முதல் செய்தித்தாள் :
'சுதேச மித்திரன்’ என்ற செய்தித் தாள் தான் தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் ஆகும். இது 1882இல் ஜி. சுப்பிர மணிய ஐயர் என்பவரால் வெளியிடப்பட்டது.
* முதல் வார இதழ்!
1856இல் வெளியான 'தினவர்த்தினி" என்ற இதழே தமிழில் வெளிவந்த முதல் வார இதழாகும்.
24 диšla od

* முதல் பெண்கள் பத்திரிகை :
பெண்களுக்காக தமிழ் மொழியில் வெளிவந்த முதல் இதழ் சுகுண போதினி” என்பதாகும். இது 1883இல் வெளியானது.
* சிறுகதைத் தொகுப்பு :
1917ஆம் ஆண்டில் வ. வே. சு. ஐயர் எழுதிய மங்கை யர்க்கரசியின் காதல்" என்ற கதையின் தலைப்பில் எட்டு கதைகள் ஒரு சிறுகதைத் தொகுப்பாக புதுச்சேரி கம்ப நிலையம் வெளியிட் டது. தமிழில் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்பு இதுதான்.
* பூரணமான சிறுகதை :
லோகோபகாரி" என்ற இதழில் 1913ஆம் ஆண்டு பாரதி யார் எழுதிய ஆறில் ஒரு பங்கு" என்ற சிறுகதை தான் தமிழில் வெளிவந்த முதல் பூரணமான சிறுகதையாகும்.
* தொடர் கதை :
விவேக சிந்தாமணி’ இதழில் 1892ஆம் ஆண்டு சாவித் திரி என்பவர், சீசரித்திரம்’ என்ற பெயரில் எழுதி வெளியான தொடர்கதை தான் தமிழில் தோன்றிய தொடர்கதையாகும்.
* முதல் நாவல் :
தமிழ் மொழியில் முதன் முதலில் எழுதப்பட்ட நாவல்
*பிரதாப முதலியார் சரித்திரம்". இதனை எழுதியவர் மாயூர.
வேதநாராயணன் பிள்ளை. வெளிவந்த ஆண்டு 1879
முதல் தமிழாராய்ச்சி மாநாடு :
1964 இலேயே முதன் முதலில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. முதலாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு 1966 இல் கோலாலம்பூரில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் 1974 இல் இம் மாநாடு நடைபெற்றது. t
தொகுப்பு:- கி. செல்மர் எமில்
நங்கூரம் 25

Page 15
சென்ற இதழ் அட்டைப்படப் பரிசுக்கவிதை
எங்கள் விளை நிலங்கள் மழைக்கு ஏங்கித் தவித்திடும் காலம்; வாடி வதங்கும் இனங்கள் நீரை தேடி நிற்கும் கோலம்.
பம்பி கொண்டு இறைக்கலாமானால் எம்பி நிற்குது எண்ணெய் விலைகள்: கட்டுப்படியாகா என்று செய்கையை தட்டிக்கழிக்கா மாமலைகள் இவர்.
எண்சாண் உடலிலே பெற்ற
திண்தோள் வலிமை துணை; ኍ பழமையான துலாமிதிக்கும் முறையின்று வழமையான நீரிறைக்கும் சுனை.
அயர்ச்சி இல்லா துழைக்கும் வேளாளர் முயற்சி என்றும் வெற்றி அளிக்கும்; உயிர்களின் பசிபோக்கும் இவரை பயிர்களினம் வாழத்திச் சிரிக்கும்
அராலியூர் வாகீசன்
வற்றா ஊற்று!
26 நங்கூரம்
 

தட்டெழுத்து இயந்திரத்தின் கதை
தட்டெழுத்து இயந்திரம் -
127 வருடங்களுக்கு முன்னால் தட்டெழுத்து இயந்திரம் உரு வாக்கப்பட்டபோது அது ஏதோ தேவையில்லாத ஆடம் பரப் பொருளாகவே கருதப்பட்டு வந் திதி கிறிஸ்ரோபர் லா தம் Gap Tagio (Christopher Latham Sholes), அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இவர் 1867 இல் எழு தும் இயந்திரத்தைக் கண் டு பிடித் த பின்னர் கூறினார். *தட்டெழுத்து இயந்திரம் மனித குலத்துசுகே ஓர் ஆசீர்வாதம் போல, உலகம் இதனால் மிகுந்த பயனடையும்"
தட்டெழுத்து இயந்திரத்தை கண்டு பிடித்தது என்னவோ கிறிஸ்ரோபர்தான். இருப்பினும் இவருக்கு முன்னால் 50 Gugtar வது தட்டெழுத்து இயந்திரத்தை உருவாக்க முயற்சி செய்திருப் பார்கள். 1714 இலேயே ஹென்றி மில் என்னும் இங்கிலாந்து நாட்டு பொறியியலாளர் ஒரு இயந்திரத்தை உருவாக்கினார் என்று சொல்வார்கள். ஆனால்
நங்கூரம்
அந்த இயந்திரம் எப்படி இாத் தது என்பதை அறிய ஒரு வரை படம் கூட இல்லை. 19 ஆம் நூற் றாண்டின் தொடக்கத்தில் கூட சில தட்டச்சு இயந்திரங்கள் தயா ரிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் அவைகள் பியானோ போலப் பெரியதாகவும், எடுத் செல்ல முடியாதனவாகவும் இருந் தனவாம். வழக்கமாக மனிதன் எழுதுவதை விட அதிக நேரம் எடுத்தன. 1833 இல் சேவிஜர் புரோஜின் என்பவர் எழுதும் இயந்திரத்தை உருவாக்கினார். சாதாரண Ꮳu ᏗᏍᏕrfᎢᎶᏛᏍ . எழுத ஒருவர் எடுத்துக் கொள்ளும் நேரந்தான் இந்த இயந்திரமும் எடுத்துக் கொண்டது.
1870களிலெல்லாம் வியாபாரத் திற்கும், பணிகளுக்கும் வேக மாக செயற்படும் ஒரு தட்டெ ழுத்து இயந்திரம் ஒரு அவசியத் தேவையானது. இவ்வாறு தயா ரிக்கப்படும் இயந்திரம் குறுகிய காலத்தில் நிறைய தயாரிக்கப் பட வசதியாகவும், குறைந்த விலை யில் கிடைப்பதாகவும் இருக்க வேண்டும். நிறையத் தயாரிக்கப்பட்டன. எல்லோரா லும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருந்தது கிறிஸ் ரோ பர் ஷோல்ஸ் தயாரித்த இயந்திரம் தான். எல்லாம் ஒருநாள் (assu கிடையாது. சுமார் ஐந்து வரு டங்களில் ஷோல்ஸ் 80 தட்டச்சு
27

Page 16
இயந்திர மாதிரிகளை செய்தார். அதுவும் தினமும் 16 மணி நேரம் கடுமையாக உழைத்த பின்னர். கிறிஸ்ரோபர் லாதம் ஷோல்ஸ் என்ற இந்த ஒல்லியும் உயரமு uomrar LDGarfisrt (1819 - 1890) அமைதியாக வாழ்ந்தவர். அச் சுத் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர், அந்த ஊர் அரசியல் வாதியாகவும் இருந்தார். தன் தொழிலகத்தில் பக்கங்களின் எண் போடும் இயந்திரத்தை உருவாக் கிக் கொண்டிருந்தபோது, நண்பர் கள் சிலர் பார்த்துவிட்டு, "ஏன் நீங்கள் தட்டெழுத்து இயந் திரத்தை உருவாக்கக் கூடாது?" என, அதையே ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு புது முயற் சியில் இறங்கினார்.
முதலில் ஒரு சக்கரம் போல் அமைத்து அதன் முனைகளில் எழுத்துக்களைப் பொறித்தார். ஆனால் அது சரிப்பட வில்லை. தூங்காத ஓர் இரவில் நல்ல எண் ணம் அவர் மனதிற்கு வந்தது. ஒவ்வொரு எழுத்தையும் தனித்
தனியாக அமைப்ப தென்றும்
அதற்குரிய கம்பியின் முனையை அழுத்தும் போது அவ்வெழுத்து மட்டும் சென்று தாளில் மோதும் படியும் செய்யவேண்டும் என்றும் முடிவெடுத்தார். Type Writer என்று ஷோல்ஸ் அழைத்த இந்த இயந்திரம் எழுத்துக்களை பெரிய வடிவத்தில் ( Capitals) மட்டுமே
28
அதிர்ஷ்டம் என்பது இது தானோ?
உவப்பூட்டும் செய்தியொன்று! அடுத்த இதழ்
filfin ஆண்டு மலர் அதிக Iக்கங்களுடன் 9,60 T.G, இதே விலையில்!
விற்பனை முகவர்களிடம் முன்கூட்டியே சொல்லிவை யுங்கள்.
நங்கூரம்
 

அடிக்கும். முழுதும் அடித்துமுடிக் கும் வரை தாளில் என் ன
பொறிக்கப்பட்டதென்பதே தெரி
Cliff.
முதலில் ரெமிங்டன் (Reming" ton) நிறுவனம் ஷோல் ஸ் உடன் ஒப்ப ந் தம் செய்து கொண் டு முதல் தட்டச்சுப் பொறியை தயாரித்தது. ஆனால் அது பார்ப்பதற்கு தையல் இயந் திரம் போல இருந்தது; ரெமிங் டன் நிறுவனம் இதற்கு முன் னால் தையல் இயந்திரந்தான் செய்து கொண்டிருந்தது. 1876-ல் பிலடெல்பியாவில் நடந்த கண் காட்சியில் இது சரியாக விற்பனை யாகவில்லை, ஆனால் 1878இல் வந்த இயந்திரங்கள் பார்க்க நன் றாகவும். பெரிய சிறிய குறிக ளைத் தாங்கியும் வந்தன. 1909 இல் அமெரிக்காவில் மட்டும் 89 தட்டச்சு தயாரிக்கும் நிறுவனங் கள் இருந்தன. ஆனால் இப்
போது பல நூற்றுக்கு மேற்பட்ட
தட்டச்சுப் பொறிவகைகள் பாவ னையில் உள்ளன.
மின்சாரத்தில் இயங்கும் தட் டெழுத்து இயந்திரம் 1920இலே யே தயாரிக்கப்பட்டது. 1961ல் IBM (International Bisinsess machines) sarg 'MODEL 72 தட்டெழுத்து இயந்திரத்தைத் தயாரித்தது, இதில் 88 எழுத்துக் களும், குறியீடுகளும் சுற்றிக் கொண்டிருக்கும் பந்தைப்போன்ற உலோகத்தின் மேற்பகுதியில்
நங்கூரம்
அமைக்கப்பட்டிருந்தன. இன்று ஏறத்தாழ எல்லா முக்கிய மொழி களிலும் இந்த இயந்திரம் உப யோகிக்கப்படுகிறது. அலுவலகங் களில் பணியாற்றும் ஒரு பெண் ணின் கைகள் ஒரு நாளைக்கு சரா சரியாக 17 மைல்களாவது பிர யாணம் செய்திருக்கும். ஒரு வரு டத்தில் இதே கைகள் நியூயோர்க் கிலிருந்து இலண்டனுக்குப் பய ணம் செய்திருக்கும். இவ்வியந் திரங்கள் பெண்களின் பணிகளில் ஒரு புது சகாப்தத்தை ஏற்படுத்
தியது.
சீனமொழியில், தட்டச்சு இயந் திரத்தில் 5,400 குறிகள் உள்ளன. ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 15 வார்த்தைகளே அடிக்க முடியும். கை, கால்கள் செயலிழந்துபோன ஒருவர் தன் மூச்சினாலேயே இயக்குமளவுக்குக் கூட தட்டச்சு இயந்திரங்கள் உருவாகியுள்ளன, தன் பார்வையில் உள்ள அட்டை யின் குறிப்புகள் படி, மெதுவாக வோ, வேகமாகவோ மூச்சுவிடு வதன் மூலம் நிமிடத்திற்கு 100
வார்த்கைகளுக்கு மேல் அடிக்க
லாம். இங்கிலாந்தில் தயாரிக்கப் பட்ட இவ்வியந்திரம் "Possum
என்பதாகும்.
கணனிகள் உலகத்திலும் தட் டச்சு இயந்திரங்கள் இன்று ஒர்
அடிப்படைத் தேவையாகிவிட் ls. O
நன்றி. அரும்பு
29

Page 17
* அறிவோ பெருங்கடல்
ஆனால் நாமோ சிறுவர்கள் கரையிலே நடக்கிறோம். புதையலைத் தேடி, தவிக்கிறோம் தனியே தடயமின்றி. பாதத்தில்படுகிறது.நங்கூரம், புதையலுக்குத் தூரம் அதிகமில்லை. வழி கிடைக்கிறது. கண்களில் ஒளி பிறக்கிறது.
எஸ் ஆனந்த் யா/கொக்குவில் இந்துக் கல்லூரி * தங்க தமிழீழத்தில்
மங்கி வரும் அறிவொளியை ஓங்கிடச் செய்யவென்றே தாங்கித் -- தகவல் பல கொண்டு ஏங்கிடும் எம் அறிவுப்பசிக்கு விருந்தாகும் நங்கூரமே ! வாழ்க நீ என்றும் வளர்க,
ப. இளவரசி யா/திருக்குடும்பக் கன்னியர்மடம்
* நல் அறிவைப் பெருக்கிவரும்
நல்லிதய நங்கூரமே ! நினது புகழ் நாடல்ல, பாரெங்கும் பரவி வர வாழ்த்துகின்றோம்
வாழ்த்துப் பல! பிறியாந்தன் வைற்றிஸ் யா/புனித பத்திரிசியார் கல்லூரி * எத்தனை மலர்கள்
இப்புவியில் மலர்ந்தாலும் எம் இனிய மலராகிய உனக்கு ஈடாகுமா ? வளரட்டும் உனது சேவை
ம. பொபி உடுப்பிட்டி
30
Εξε
c勿经多
* ஐயா, நங்கூரமே !
சேய்க்குக் காலம் பிந்திய தாய்ப் பால் போல் கிடைக்கின்றாயே, போட்டிகளில் பங்குகொள்ள போதியளவாக இல்லையே
காலம். யாது செய்வேன் - நீ ஏதுஞ் செய்யாயோ ?
யோ. கிஸோர் கண்ணன் யாlஹாட்லிக் கல்லூரி
* அறிவுகள் பல ஊட்ட
வந்திருக்கும் நங்கூரமே, வளமாக நீ வாழ வாழ்த்துகிறேன் நான்
செ ஜேம்ஸ் ரவீந்திரகுமார்
யா/ஹாட்லிக் கல்லூரி
* பொதுஅறிவுத் திறமையினை
வெளிக்காட்டும்
கொள்கையுடன் அறிவியலைப் பாய்ச்சிவ்ரும் நங்கூரமே ! உன் புகழ் திசையெட்டும் பரவட்டும். செந்திவேல் சுதாகர் யாஹாட்லிக் கல்லூரி
நங்கூரம்

வாத இதயக் காய்ச்சல்ட, , , துளிகள் ! Rheumatic fever
மூட்டுக்கள் வீங்கி, அசைக்சுமுடியாது அவதிப்படும் பல சிறு வர்களைப் பார்க்கின்றோமல்லவா. இந்நோயைத்தான் கீல்வாதம் அல்லது வாத இதயக் காய்ச்சல் என்கிறார்கள். எமது சிறுவர்களில் பாதிப்பை ஏற்படுத்திவரும் நோய்களில் இந்நோயும் இன்று கணிச மான பங்கை வகிக்கின்றது. இந்நோயைப்பற்றியறிந்து, சிகிச்சை முறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்காவிடில், ஈற்றில் இதயம் தொழிற்படாது போய் மரணம்கூட சம்பவித்துவிடலாம்.
O ஸ்ரெப்ரோ கொக்கஸ்  ைபயோ ஜீன்ஸ் (Streptococcus Pyogenes) என்னும் சங்கிலி வடிவிலமைந்த, கோளவடிவான பக்ரீறியங்களினாலேயே இந்நோய் ஏற்படுகிறது.
0 பொதுவாக 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களே இந்நோயால் அதிகம் தாக்கப்பட்டபோதும், வளர்ந்தவர்களும் இலக்கா கின்றனர்.
0 ஏழ்மையும் சனத்தொகை நெருக்கடியும் இந்நோயின் தொற்று தலை துரிதப்படுத்துகின்றன. ஒவ்வாமைக்குரிய நோயாதலால் இது ஒருவரிலிருந்து மற்றவருக்கு தொற்றுவதில்லை.
சி. யமுனாநந்தா
O பக்ரீறியா தொண்டையிலேயே தொற்றுதலை உண்டாக்குகி றது. இதனால், இந்நோய்க்குரிய அறிகுறியாக முதலில் தொண்டையில் அழற்சி ஏற்படுகின்றது. உடல் வெப்பநிலையும் கூடி காய்ச்சல் ஏற்படுகின்றது.
O இக்கிருமிகளின் தொற்ற தலைத் தொடர்ந்து, இவற்றை அழிப் பதற்காக எமது உடலில் உருவாக்கப்படும் பிறபொருள் எதிரி கள் (Anti Bodies) நோய்க்கிருமிகளை மட்டுமல்லாது சிலரது மூட்டுப்பகுதிகளிலுள்ள மென்சவ்வுகளையும், இதயத்தசை களையும் தாக்குதலுக்காளாக்கி விடுகின்றன.
O இதனால் தொண்டையழற்சியைத் தொடர்ந்து எலும்பு மூட் டுகள், இதயம், நரம்புத்தொகுதி என்பவை பாதிக்கப்படு கின்றன.
நங்கூரம் 3.

Page 18
32
இந்நோய்க்கு ஆளாவோரில் 75 வீதமானோரில் எலும்புமூட்டு கள் வீங்கிவிடுகின்றன. அசைக்க இயலாதவாறு அப்பகுதி
களில் நோ ஏற்படுகிறது.
பொதுவாக 50 வீதமானோரில் இதயம் பாதிக்கப்படுகின்றது. வழமையிலும் பார்க்க இதயத்துடிப்பு அதிகரிக்கின்றது.
சிலரில் -10 வீதமானோரில்-மூளை தாக்கப்படுவதால் கட்டுப் பாடற்ற அங்க அசைவுகள் ஏற்படுகின்றது. தரம்புத்தொகுதி பாதிக்கப்பட்டு முகத்திலும், புயங்களிலும் ஒழுங்கற்ற முறை யில் தசை சுருக்கங்கள் நிகழ்கின்றன. இதனையே St. Vitus' நடனம் என்கிறார்கள்
நோயாளிக்கு போதிய ஒய்வு கொடுப்பதுதான் சிகிச்சைக்கான முதற்படி, காய்ச்சல் குறையும்வரையும், இதயத்துடிப்பு சீரான நிலையை அடையும்வரையும் கட்டாய படுக்கை ஒய்வு அவசியமாகும்.
நோய்க் கிருமி மீளத்தாக்காது இருக்க Benzathine Penicilin மாதம் ஒரு தடவை ஊசிமருந்தாக உள்ளடுத்தல் வேண்டும். இச் சிகிச்சைமுறை தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் வரை யில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் இம்மருந்தைப் பேணும் குளிர்சாதன வசதி குறைவாகையால் மருந்தின் வீரியம் குறைந்துவிடுகின்றது, இதனால் 3 கிழமைக்கு ஒருதடவை என்ற ஒழுங்கு முறையில் ஊசி மருந்தை எடுத்துக்கொள்ளுதலே விரும்பத்தக்கது.
இச்சிகிச்சை முறையில் சிரமம் எதிர் நோக்குபவர்கள் தினமும், Gaunt uiueyp6vuib Oral Penicillin D6ör GTGösão (Bau67.79b. Penicilin இற்கு ஒவ்வாமை உடையவர்கள் Erythromycin உப யோகிக்கலாம்.
வாத நோய்க்காய்ச்சலுக்காளான சிறுவர்களை மிகக் கவனமாகப் பேணி வளர்க்கவேண்டும். சிகிச்சை முறைகளை கடைப்பிடிப்ப துடன், அவர்கள் தொடர்ச்சியாக கடினமான பணிகளில் ஈடு படுவதைத் தவிர்த்தலும் அவசியமாகும்.
தங்கூரம்

எமது வாழ்வு இயக்கங்களை, எமது சூழலின் எழிற்கோலங்களை உங்கள் புகைப்படக்கருவிகள் சிறைப்பிடித்துக் கொள்ளட்டும்.
iii இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டிய
II6)JLILILII
GLITTI -
புகைப்படங்கள் கறுப்பு - வெள்ளையில் 16சமீ x 12சமீ பரிமாணத்தில் இருத்தல் வேண்டும். இது வரை பிரசுரமாகாத, வேறுபோட்டிகளில் பரிசு பெறாத புகைப்படங்களே ஏற்றுக் கொள்ளப்படும். ஒருவர் எத்தனை படங்களும் அனுப்பிவைக்கலாம். தெரிவு செய்யப்படுமிடத்து, அப்புகைப்படத்துக்குரிய எதிர்ப்படச் சுருள் நடுவர்களின் பார்வைக்கு சமர்ப் பிக்கப்படல் வேண்டும். முழுப்பெயர், வயது, வதிவிடமுகவரி, மாணவராயின் பயிலும் பாடசாலை, பயன்படுத்திய புகைப்படக்கருவிபுகைப்படச்சுருளின் பெயர்கள், படம் பிடிக்கப்பட்ட இடம், பிரதிசெய்த புகைப்பட நிலையம் போன்ற விப ரங்களும் படத்திற்கான தகுந்த தலைப்பும் இணைக்
கப்படல் வேண்டும். புகைப்படத்தில் எதனையும்
குறிப்பிடலாகாது.
31-08-94 இற்கு முன்னர் நங்கூரம் அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் சேர்ப்பிக்கவும்.
இன்றே தயாராகுங்கள்! பரிசுக்குரியவர் நீங்களாயுமிருக்கலாம்.

Page 19
ATAN KAKO ORUM (AM
St. Joseph's Catholic Pr
 

CHOR) AUGUST S94.
ess Jaffna, 1994