கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 1993.06

Page 1
2 G5 3.jpTLâ 560’ü) ஜூன் - 5
 


Page 2
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வ்ாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆபிரம் எண்ணம் வ எார்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ?
- சுப்பிரமணியபாரதியார் -
இப்பக்க அமை ப்பு
அங்கர் பார் பசி அரச டிவீதி கந்தர் மடம் யாழ்ப்பாணம்
 

நங்கூரம்
EAGL) : 1
அலை 9
பக்கங்களின்
எண்ணிக்கை 32
fdJ5 91 plastujá 96
மாதாந்த சஞ்சிகை
05-06-1993
விலை: ரூபா 15-00
முக்ப்போவிதுரர்
தயா
படப்பிடிப்பு மழலை
நிர்வாக ஆசிரியர் நங்கூரம் அரசடி வீதி, கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
ЦjШ ф6ђ10} ili ilЦji
() பெங்களுரில் உள்ள ஒரு நிறு வனம்சூரிய சக்திமூலம் இயங்கும் குளிர் சாதனப் பெட்டியைக் கண்டு பிடித்துள்ளது:
வெளிச் சூழலில் வெப்பநிலை 13°ஆேக இருக்கும்போது இந்தக் குளிர்சாதனப் பெட்டியின் வெப் பநிலைக்சாப்பகம் 0-8°C வெப் பநிலையைப் பேனக் கூடியது இந்தக் குளிர்பதனப் பெட்டி 24 மணிநேரத்தில் 8 கிலோகிரம் பனிக்கட்டியை தோற்றுவித்து விடும்.
இக் குளிர்பதனப் பெட்டியில் உள்ள சூரியசக்தியைச் சேமிக்கும் சாதனம் சிலிக்கனினால் ஆனது. கரடுமுரடான தன்மைக்கும், அதேநேரத்தில் நீண்ட உழைப் பிற்கும் ஏற்றதாக வடிவமைக்கப் பட்ட இக்குளிர்பதனப் பெட்டி மனித மிருக தடுப்பூசி மருந்துக ளையும், குருதியையும் பொது வான மருந்து வகைகளை யும் பாதுகாத்து  ைவ ப்பதற்கு ஏற்றது
இந்த முறை உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவத்தேவை களுக்காக நிர்ணயம் செய்யப் LI LI 'L மட்டத்தில் ஏற்புடை என்று கூறப்படுகின்றது.
மின்சாரம் செல்வாத தொலை துர கிராமங்களுக்கென அமைக் கப்பட்ட இது இன்றைய சூழ்நிலை யில் எமக்கு ம் பொருத்தமானதே.

Page 3
(BasaT (koala) phascolarctos cinereus
இதன் உணவுப் பழக்க முறை ஆச்சரியமானது. சஞ்சீவி மரத் தின் இலைகளையும் மரவுரி க ளையும் மாத்திரமே உணவாகப் பயன்படுத்துகின்றது. வே று உணவு வகைகளை நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. தாகம் தீர்க்க வென நீர் அருந்தும் பழக்கமும் இதனிடம் கிடையாது. இலை அளிலிருந்தே வேண்டி யளவு நீரைப் பெற்றுக் கொள்கின்றது கங்காருவைப் போலவே இது வும் ஒரு மாசூப்பியல் முலை யூட்டியாகும். ஆனால் அவற் றின் கீழே உள்ள பை கங்காரு வைப் போல் அல்லாது பி ib பக்கமாகவே திறந்திருக்கும். இப் பையில் (pouch) வளரும் குட்டி தாயின் குதத்திலிருந்து வெளித் தள்ளும் ஒரு வகைப் பதார்த் தத்தை உ ண் ணு கின்றது. இதற்குப் பிற்பக்கமாகத் திறக் கும் பை வசதியளிக்கின்றது. பையில் ஆறு மாதம் வளரும் குட்டி மீதி ஆறு மாத மும் தாயின் முதுகில் தொற்றி க் கொள்கின்றது.
கோலாக் கரடி என அழைக் கப்பட்ட போதும் இது கரடியி னத்தைச் சார்ந்தது அல்ல. u gribucio
கிழக்கு அவுஸ்ரேலியா வாழிடம் ؟ ،
சஞ்சீவி மரக் காடுகள் நடத்தை -
தனித்து அல்லது சிறு கூட்ட மாக மரங்களில் வாழும் தாவர
உண்ணி, பொதுவாக ப க வி
அாங்கி இரவில் நடமாடும்.
e6 To
சஞ்சீவி மரத்தின்
பற்சூத்திரம்
வெ.ப, வே.ப, மு.க.ப,
5. Lu ,
தலை - உடம்பு
13 - 2 அடி (60 - 85 Fuß)
AFT)
ஒடுக்கமடைந்துள்ளது.
நிறை
11 - 33இறா ( 5 - 15 கிலோ)
வாழ்க்கைக்காலம்
15 - 20 வருடங்கள்
புணர்ச்சிப் பருவம் ஆவணி - தை
இலைகள்.
தாயின் கருப்பையினுள் முளைய விருத்திக் காலம்
35 நாட்கள்,
குட்டிகளின் எண்ணிக்கை
1, அரிதாக 2
பிறக்கும் போது
நிறையும் பருமனும்
5 கிராம், 3 சமீ
தெரிந்த மிருகம் தெரியாத தகவல்கள்
 

sLido - Joannað - 9
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன். - uavésuv míř
மற்றைய உயிரினங்களைப் புறந்தள்ளி விட்டு, உயிரியலுக்குரிய ஆட்சிவரிசையில் உச்ச ப் படி  ைய மனிதன் இன்று தனதாக்கிக் கொண்டான். ஆனால்,
இயற்கை வளங்களின் அளவுக்கு மிஞ்சிய நுகர் வால் அவன் ஆட்சி செலுத்தும் புவிக்கோளம் அவனது பிடியிலிருந்து மெதுவாக விலகத் தொடங்கி விட்டது.
இயற்கையில் நிலவும் நுட்பமான் சம நிலை யை மேலும் குலைத்தால் தாங்களும் அழிய வேண்டியதுதான் என்பது இப்போதுதான் அவனுக்குப் புரியத் தொடங்கி யுள்ளது.
மாற வேண்டும் அல்லது மடிய வேண்டும் என்பது தான் தற்போதைய நிலை
இதனால், சுற்றுப் புறம் திடீரென முக்கிய வெளி யுறவுக் கெள்கையாகி விட்டது. உலகில் பல நாடுகளும் சுற்றுப் புறச் சூழலில் அதிக அக்கறைகாட்டத் தொடங்கி யுள்ளன.
இன்னும் வருங்காலங்களுக்காகவும், வ ரு கி ன் ற தலைமுறைகளுக்காகவும் உலகை எப்படிக் காப்பது என்பது உலக நாடுகளின் கவலையாக இருநதாலும், அதற்கான கொள்கைகளை வகுப்பதிலும், நிறைவேற்றுவதிலும், அர சியல் பெரும் பங்கு வகிக்கின்றது.

Page 4
சுற்றுப்புறச் சூழல் தொடர்பான அணுகு முறைகளி ாைல் பணககார - ஏழை நாடுகளுக்கிடையே உறவுச் குழல் மாசு பட்டு வருகின்றன.
பணக்கார நாடுகள் தங்கள் இயற்கை வள நுகர் வைப் பெருமளவு குறைத்துக் கொள்ள வேண்டுமென்று வறிய நாடுகள் கோருகின்றன.
பூமியை உஷ்ணப் படுத்தும் கரியமில வாயு  ைவ அபரிதமாக வெளியேற்றும் வளர்ந்த நாடுகள், அதனைக் குறைக்க முயலாமல் பூமியைக் குளிர்விக்க வறிய நாடு களின் காடுகள் காபபாற்றப்பட வேண்டுமென்கிறது.
வட அமெரிக்கப் பகுதிகளில் பல கோடி ரூபா வரு மானமுள்ள மரம் வெட்டும் தொழிலைத் தடுக்க முன்வரா மல், இன்று அன்றாடத் தேவைக்கு விறகு வெட்டுகின்ற ஏழை மக்களினால்தான் உலகச் சுற்றுச் குழல் பாதிக்கப் படுகிறது என்று மேலை நாடுகள் வாதிடுகின்றன.
மேலாண்மை நாடுகள்யாவும் பூமிப் பாதுகாப்பை வரிய நாடுகளின் தலையில் சுமத்தி அவற்றை மேன் மேலும் அடிமை கொள்ள நினைக்கின்றன.
இருபிரிவினருக்கும் உரிய இயற்கை வங்கிதான் பூமி. நுகரும் அளவு மாறுபட்டிருப்பினும் இன்று புவிக் கோளத்தில் முற்றி வரும் கோளாறில் இருபகுதியினருமே ஒத்தியங்க வேண்டிய நிலை. தவறின்,
தானே தனது அழிவை மிக கவனமாகத் திட்டமிட் டுக கொண்ட ஒரே உயிரினமாகி விடும் மனித இனம்.
kరిణe్పతిని

விபத்தல்ல படுகொலை
எட்டரை ஆண்டுகளுக்கு முன்னால். டிசம்பர் மாதம் 4ஆம் திகதி 1984ஆம் வருடம், இரவு 11 மணியளவில் விஷவாயு அந்த நகரையே சூழ்ந்தது. மூவாயிரம் பேர் புழு - பூச்சிகள் போல் துடிக்கத் துடிக்கக் கொல் லப்பட்டனர். மூன்று இலட்சத்து அறுபதாயிரம் பேர் முடமாக, குருடாகி, நடைபிணமாய் ஆக்
சூழல் பாதுகாப்புப் பற்றி வாய்கிழியப் பேசும் முதலாளித்துவ நாடுகளின் முகத்திரையைக் கிழிக்கும் ஒரு நினைவூட்டல் நிகழ்ச்சி இது.
அனைவரின் உயிரையும் குடித் திது.
இந்த மருந்தின் நச்சுத்தன் மையை நாய்,பூனை, எலிபோன்ற வற்றிற்குச் செலுத்திப் பரிசோ தனைகள் நடத்திப் பார்த்த துண்டு. ஆனால் மனிதனிடம் சோதனை நடத்திப்பார்த்த தில்லை. விஷவாயுக் கசிவு அத னைச் செய்துவிட்டது.
கப்பட்டனர். இந்தியாவின் ரு ந் து 5-93-6 س w ஐக்கி 2
 ைல யங் க · சத் தி ன் ளில் படுத்தி 96) Jr DDAIL6M) தினம் நக ருந்தோர் மூச் ரத்தில் பூச்சி சுமுட்டி மடிந் கொல்லி மரு தனர். நகருக் ந்து தயாரிக்
புகையிரதத் தொழிற் சா தில் பயணம் லை இருக்கின் செய்த அனை ற து. இது வரும் மூச்சுத் யூனியன் கார் திணறினர். பைட்டு என்ற அ டை க் கப் அமெரிக்கப் பட் டி ரு ந்த பன் னா ட் டு வீடுகளின் கத நிறுவனத்திற் வுகள், சாளர கும் இந்திய
ங்களின் இடுக்குகளிலே நுழைந்த விஷவாயு, தொட்டிலில் தூங் கிய குழந்தைகள் உள்ளிட்ட
அரசிற்கும்சொந்தமானது. இங்கு பூச்சி கொல்லி மருந்தைத் தயா
S

Page 5
'G' (METHYLISO CYANJDE M. 1. C) என்னும் நச்சு வாயுவை உபயோகிக்கிறார்கள்; குறைந்த வெப்ப நிலையில், அதிக அமுக்
கத்தில் நிற மற்ற திரவமாக
மெதைல் ஐசோ சயனைட்டு வாயு துருப்பிடிக்காத உருக்கி னால் அமைக்கப்பட்ட tuntifu தொட்டிகளில் சீமெந்து கலவை safariri (CONCRETE) ept it பட்டு வைக்கப்பட்டிருக்கும்.
1984ஆம் வருடம், டிசம்பர் 4ஆம் திகதி இரவு 10 மணி. திடீ ரென்று வாயுவைச் சேகரிக்கும் தொட்டியில் பொருத்தப்பட்டி ருந்த வெப்பமானி வெப்பநிலை உயருவதைக் காட்டியது. தொழி லாளர்கள் அதனைச் சீர்செய்ய முயன்றும் தோற்றுப்போயினர். தொட்டியில் ஏற்பட்ட வெடிப்பி னுரடாக ஓவிஷவாயு கசியத்தெர் டங்கியது. நச்சுக் கலந்தகாற்றை சுவாசித்தவர்களுக்கு நெஞ்சிலும் கண்ணிைலும் எரிச்சல். சிலருக்கு அடக்கமுடியாதபடி தொடர்ந்து இருமல். சிலருக்கு தொடர்ச்சி யான வாந்தி. விஷவாயுவுடன் அங்கு ஜிவமரணப் போராட்டம் நடந்தது.
ஒன்று. இரண்டு. பத்து. நூறு. ஐந்நூறு. ஆயிரம் என்ற கணக்கில் மக்கள் தங்கள் உயி ரைக் காப்பாற்றிக் கொள்ள வேதனையுடன் ஓட ஆரம்பித் தார்கள். வெளியே அடர்த்தி யான பனி சூழ்ந்திருக்க எந்தப் பக்கம் ஒடுகிறோம் என்று கூடத்
6
தெரியாத நிலையில் பலர் விஷ வாயு அதிகமாகப் பரவிருக்கும் பக்கமே ஒடிப்போய் மரணத் தைத் தழுவிக்கொண்டார்கள்.
நகரில் உள் ள வைத்திய சாலையை நோக்கி ஆயிரக்கணக் கான மக்கள் உயிரைக் காப்பாற் ஹிக்கொள்ள ஓடிவந்துகொண்டே யிருந்தார்கள்.
வைத்திய சாலையில் இரவு நேர வேலை பார்த்த மருத்துவர் களும் தாதிமார்களும் ஏற்கனவே இந்த விஷவாயுவால் பாதிக்கப் பட்டத?ல் அவர்களுக்குப் பதி
4Żzź3żezź24*
லாக வேறொரு மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டது. வைத்திய சாலையின் உள்ளே இடம் போதாமையால் வெளியே கூடா ரம் போட்டு அலுவலக Gl o 600&F களைப் படுக்கைகளாக்கி நோயா ளிகளுக்கு அவசர சிகிச்கை செய் தனர். வைத்தியசாலையின் சவச் சாலை இறந்தவர்களினால் நிரம்பி வழிந்துகொண்டேயிருந் ජීවිෙl •
கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெருவெல்லாம் மனிதக் குப்பைகள். விஷவாயு அங்குள்ள கால்நடைகளைக்கூட தன் பிடியி லிருந்து தப்பவிடவில்லை. அன் றும் அதற்கடுத்த சில நாட்களும் போபால் நகரம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

இந்தியஅரசு தனது வானொ லியிலும் தொலைக்காட்சியிலும் வைபற்றிய செய்தி க ைள 0ருட்டடிப்புச் செய்தது. இறந்த வர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறியது. இவற்றுக் கெல்லாம் மேலாக வெளியேறி யது நச்சுவாயு அல்ல எனத்திரும் பத்திரும்ப ஒலிபரப்பியது.
விபத்து நடந்து எட்டரை ஆண்டுகளின் பின்பும், இன்றும் போபால் மக்களில் விஷவாயுவின் கோரப்பதிவு தெரிகின்றது.
போபால் நகருக்கு வெளியே கொண்டு செல்லுமாறு அப்போது மாநகராட்சி அதிகாரியாகஇருந்த புச் என்பவர் கூறியதற்காக அவர் உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்த ஆதிக்க வல்லூறுகள் போபால் நகர மக்களை தங்க
ளின் பசியைப் போக்குவதற் குரிய கோழிக்குஞ்சுகளாகவே கருதின.
அமெரிக்காவில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலை
எமது தேசத்திலும் இவை போன்ற விளைவு கள் ஏற்படாதிருக்க இது ஒரு படிப்பினையாகட்டும்.
இந்தப் படுகொலை நாடகத் தில் இந்திய அரசாங்கமும் அமெ ரிக்கப் பன்னாட்டு நிறுவனமும் வகித்த பாத்திரங்கள் பிரதான
to
இந்தத் தொழிற்சாலையின் மூலதனப் பங்குகளில் மாத்தி ரமே கரிசனை கொண்டிருந்த இரண்டு பிரிவினர்களும் கையா ளும் பொருட்களின் கொடூரத் தன்மை அதற்கான பாதுகாப்பு, அமைக்கவேண்டிய இடம் போன் றவை பற்றித் தீர்மானிக்கா மலேயே மக்கள் செறிந்து வாழும் பகுதியைத் தொழிற்சாலைக் கென தெரிவுசெய்தனர்.
தொழிற்சாலையைச் சுற்றிக்
குடியேற்றத் திட்டங்கள் இருப்ப தால் தொழிற் சாலையைப்
FLASH BACK
மை நிறுவனம் உள்ளது. இந்தத் தாய் நிறுவனத்தில் உள்ள பாது காப்புகள் அனைத்தும் இரட் டைத்தாழ்ப்பாள் முறையாகும். ஒரு பாதுகாப்பு முறை தவறுமா னால் இன்னொரு பாதுகாப்பு முறை ଗର୍ଧ Lاو ل g eJfibt u L-To6i) தடுக்கும். எம். ஐ. சி (M.I.C.) எனப்படும் இந்த நச்சுவாயு உயர்ந்த அமுக்கத்தில் திரவமாக் கப்பட்டு சீமெந்தினால் குழப் பட்ட உருக்குத் தொட்டிகளில் சேமிக்கப்படும் அதே நேரத்தில் தொட்டிகளைச் சுற்றி குளிரூட் டப்பட்டுமிருக்கும், ஒன்று தவ றினால் மற்றொன்று பாதுகாப் பாக இருக்கும்.

Page 6
ஆனால் யூனியன்கார்பைட்டு நிறுவனம் இவ்விரட்டைத் தாழ்ப் பாள் முறையை இந்தியாவில் பயன்படுத்தவில்லை. செலவு கருதி, இந்தியாவில் யாதாயினு மொரு முறையில் பாதுகாத்தால் போதும் என்று கருதிய அமெ ரிக்க நிறுவனம் குளிர்சாதனத் தை இயக்காமல் விட்டுவிட்டது, இந்திய அரசும் இதனைக் கண்டு கொள்ளவேயில்லை. இதுவே இப் டுகொலைக்கு வழி கோலியது.
இதில் கொடுமையென்ன வெனில் சம்பவம் நடக்கும்போ தும், அதற்குப் பின்பும் யூனியன் கார்பைட்டு நிர்வாகம் கசிந்து பரவிய வாயு எதுவென்பதையும், அதனை முறிக்கும் மருந்தையும் சொல்லவில்லை. அவற்றை அமெரிக்க இராணுவ தலைமை யகம் இராணுவ இரகசியம் என்று அறிவித்திருப்பதால் யூனியன் கார்பைட்டு நிறுவனம் மெளனம் சாதித்துவட்டது. இந்த மெளன மும் ஆயிரக்கணக்கானோர்களை நிரந் தர மெளணிகளாக்கிவிட் * القسسا
மூன்றாம் உலக நாடுகளில் இவை போன்ற மாசுறுத்தல்கள், உயிராப்த்துக்கள் இன்  ைமும் நிகழ்ந்தவண்ணமேயிருக்கின்றன. இவைகளிற் பல வெளியுலகத்திற் குத் தெரியாதவாறு திட்டமிட்டு திரையிடப்படுகின்றன.
8
|ச உண்ண மறு க் கி ன்
உங்கள் குழந்தைகளும்.
9 விரல் தப்புகின்றனவா? மகிழ்ச்சியின்மை, மனஇறுக் கம், தவறான பாலூட்டும் முறைகள், தவறான குழந் தை பராமரிப்பு, தாய்ப்பால் அருந்த இயலாமை ஆகிய காரணங்கள் குழந்தைகள் விரல் சூப்புவதற்கு உளவி Li eib க ச ர ன ம r ப் அமைகின்றன. பிறரது கவனத்தை தன்பால் ஈர்க்கும் வண்ணமும் குழந் தைகள் விரல் சூப்புவதுண்டு.
9 நகம் கடிகதிறனவா?
இது உளவியல் சார்ந்த ஒடுக்க முறைகளாலும் மன இறுக்கத்தினாலும் ஏற்படக் கூடிய ஒன்றாகும். பதட்டம் பாதுகாப்பின்மை முதலிய சூழ்நிலைகளிலும் குழந்தை நகத்தைக் கடிப்பதன் மூலம் மன இறுக்கத்தைக் குறைத் துக்கொள்கிறது.
றனவா? உடலில் நோயில்லா நிலை மைகளில் குழந்தை உண்ண மறுப்பது கவன ஈர்ப்பு, மனஇறுக்கம், பயம் பிரச்ச னைகளின் அறிகுறியாக அமைகின்றது.
தெல்லியூர் வே சக்திவேல்

வெற்றிக்கான வழிமுறைகள் சில
5ட்டின் ஒரு புல்வெளி.
அழகிய புள்ளி மானொன்று ஆறு
தலாக மேய்ந்துகொண்டு நடக் கிறது. திடீரென நிமிர்ந்த புள்ளி மானின் கண்களில் எதிரே, பச் சைப் புற்களிடையே கறுப்புவரிபதுங்கியிருக்கும் புலியின் வரி தெரிகிறது. மிரட்சியுற்ற மான்
கொள்ளாமையே இதன் கார ணம்.
மனிதன் யாரென்று உங்களுக் குத் தெரியும் ஒரு மானைப் போல அவனது பிரச்சனை அவ னது உயிர் மட்டுமல்ல. உயர் மூளை விருத்தியின் காரணமாக அவன் பெறறுள்ள ஆற்றல்கள்,
துரிதமாகச் செயற்பட்டு ஒட அம்சங்கள், அவனுக்குப் பல பிரச் ஆரம்பிக்கிறது. ::
ரச்சினைக இ ங் கே ளின் மறுதாக் மானை ஒட க ங் க ளி ன்  ைவத் த து LUMLUMO விளை வே.
புலி யி னா ல் , வி பயம். ஏ ம் பட் ட : வாழவன ". இது w எல்லா உயிர் லங்குகளான வகை களு க் மூை ளயுடன் தை கும் இயற்கை தொடர்பான யால் பகிர்ந்த உணர்ச்சிகளி ளிக்கப் பட்ட லொன்று. ஒரு உணர்வு
பயம்" என்ற உணர்வுக்கு ஒரு நோக்கம் உண்டு. அது "நீ ஆபத் தில் மாட்டிக்கொண்டாய், எப் படியாவது தப்பி ஒடு!" என எச்சரிப்பதே, அதாவது விலங் கினங்களின் நிலவுகைக்கு (Existence of Animals) givajorités யும் ஒரு அவசிய காரணியே. ஆனால் மனிதனைப் பொறுத்த வரை பய உணர்வு, ஒரு எதிர் மறை விளைவெனவே இன்றும் கருதப்படுகிறது. இயற்கையின் படைப்பு அதிசயத்தைப் புரிந்து
என்பதால் இதைநாம் பின்னடை
வான அம்சமாகக் கருதலாகாது. மாறாக, நம் பகுத்தறிவு மட்டத் திலிருந்து பயத்தை - அதன் வேர்களை எம் உள்ளத்தில்தேட நாம் முயலவேண்டும்.
ஒரு மாணவன் பரீட்சையைக் கண்டு பயம் கொள்கிறான், அவன் பாடம் படிக்கவில்லை அல்லது பரீட்சை கடினமாக இருக்கும் என எதிர்பார்ப்பதால். திருடன், காவற்துறையினரைக்
9

Page 7
கண்டு பயம் கொள்கின்றான். அவன் திருடினான் என்பதால். இப்படி ஒவ்வொரு பயத்துக்கும் பின்னால் ஒரு காரணம் உண்டு. எம்மைவிடக் கீழான விலங்குகள் ஒரு பயம்தரும் சூழல் உருவான தும் பெரும்பாலும் அச்சூழலை விட்டு அகலவே செய்கின்றன. ஆனால், மனிதன் அப்படியல்ல. அவன் சூழலை மாற்றக்கூடிய வன். எனவே, எம்மால் முடியும். எமக்கு ஒரு பயஉணர்வு ஏற்பட்டு விட்டால், காரணத்தை நாம் முதலில் கண்டறிய வேண்டும், பின்னர் அக்காரணத்தை அகற்றி விடவேண்டும். சரி, அக்காரண மும் அகற்றப்பட முடியாததா? பரவாயில்லை. உங்கள் மனதை திடப்படுத்திக்கொண்டு, பயத் தைச் சகித்துக்கொள்ளுங்கள். உங்களைமாற்றிக்கொள்ளுங்கள்.
யோ. அன்ரனி யூட்
பயங்கள் பலவிதம். சிலருக்கு தங்களைப்பற்றிய பயம். சில ருக்கு, தாளைப்பொழுது எப்படி என்ற பயம். சிலருக்கு மரண பயம். இன்னும் சில ர் அற்ப விடயங்களுக்கெல்லாம் ւյաւն கொள்வார்கள். விழித்து, வியர் த்து ஒடுங்கிப்போவார்கள். இவர் களுக்கு மனோதத்துவவியலாளர் கள் கூறுவது என்ன? உங்கள் பிரச்சினைகள்பற்றி, பயம் ஏற் படும்போது, உங்களுக்கு என்ன
10
டும் வாசியுங்கள,
வரிசையாக
அறியாமை
மூங்கில் காட்டுக்குள்ளே
மூச்சிரைக்க நானொரு
புல்லாங்குழல்
தேடுகின்றேன்.
மட்டுவில் = சதாசிவம்
பயம் ? ஏன் ? என்பதை ஒரு தாளில் எழுதுங்கள். அதை மீண் இப்போது உங்கள் பயத்தின் காரணியை நீங்கள் கண்டுகொள்வீர்கள். அடுத்தபடி நீங்கள் அக்காரணி யை அகற்றவேண்டும். அது எமது வல்லமைக்கு அப்பாற் பட்ட காரியமாயின் வேறு வழி யில்லை. எமது கட்டுப்பாட்டி வில்லாத ஒன்றைப்பற்றி நாம் பயந்து என்ன ? அழுது என்ன ? அது மாறப்போவதில்லையே. விட்டுவிடுங்கள். அக் காரணி அகற்றப்படக்கூடியதாயின்,அதற் குச் செய்யவேண்டிய கருமங் களை அதே தாளில் எழுதுங்கள். நடைமுறைப்படுத் துங்கள்.
பயம் பறந்தோடிவிடும் பெறு மதியான மனித வாழ்வில் பயப் படுவதால் நாம் பலவற்றை இழந்து விடுகிறோம் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். வெற்றி
உங்களுக்கே !

பறக்கும் மீன்கள்
இந்துசமுத்திரம், அத்திலாந்திக் சமுத்திரம், பசுபிக்சமுத்திரம் போன்றவற்றில் ஒரு வ  ைகப் பறக்கும் மீன்கள் காணப்படுகின் றன. சமுத்திரங்களின் நடுப் பாகத்திலேயே காணப்படுவதால் இவற்றை நாம் பார்ப்பது அரிது. சிலசமயம் இம்மீன்கள் ஒன்று சேர்ந்து மீனவர்களையும் கப்பல் களையும் தாக்குகின்றன. இவை பெரிய கப்பல்களைக்கூட சேத மாக்கும் வலிமை கொண்டவை, பெரும்பாலும் இம்மீன்கள் கூட் டமாகவே வாழ்கின்றன. இவை கடலில் மிதக்கும் நுண்ணிய தாவரங்கள் போன்றவற்றுடன் சிறிய மீன்களையும் உணவாக கொள்கின்றன. சில மீனவர்கள் இதனைப் பிடித்துக் கொண்டு வந்து விற்றும் விடுகின்றனர்.
கடலில் வாழும் சுறா போன்ற பெரிய எதிரி மீன்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வும் உணவு கிடைக்கும் இடத் தைத் தேடிச்செல்லவும் பறத்தல் முறை இவ்வகைமீன்களுக்கு
இறக்கைகளை விசிறிக்
பறக்கும் உடலமைப்பை பறவை களுக்கு இயற்கை அளித்துள் ளது. ஆனால் இம்மீன்கள் பறவைகளைப் போன்று பறப்ப தில்லை. அவை வேறு விதமா கப்பறக்கின்றன.
பறக்கும் மீன்களுக்கு இறக் கைகள் அவற்றின் உடலின் முன் பாகத்தில் அமைந்து ஸ் ளன. இரண்டு மார்புச்செட்டைகளுமே இறக்கைகளாக மாறியுள்ளன. இவை வன்மையான முட்களி 6r fr siv தாங்கப்பட்டிருக்கும். அவற்றிற்கிடையே மென்சவ்வு போன்ற ஆனால் வலிமையான அமைப்புக்கள் காணப்படும். இம் மீன்கள் பறக்க எத்தனிக்கும் நேரத்தில் உடலின் கோணத் திற்கு ஏற்ப இறக்கைகளை விரித்துக்கொள்கின்றன. பின் இவை சற்றுத்தூரம் நீரிலேயே வேகமாக நீந்திச்சென்று ஒர் குறிப்பிட்ட வேகத்தைப் பெறு இன்றன. இதற்குப்பின் அவை இறக்கைகளை விறைப்பாக்கிக் கொண்டு அந்த வேகத்திலேயே
பேருதவியாக அமைகின்றது. 牙线 1.മൃീഗ്ഗ
2 ந7 7
கொண்டு காற்றைக் கிழித்துப்

Page 8
உடலை நீர்மட்டத்திற்கு மேல் தூக்குகின்றன பின் மேலே பறக் கத் தொடங்குகின்றன.
இம்மீன்கள் நீரிலேயே சிறிது
தூரம் நீந்தி பின் மேலே எழுந்து
பறப்பது விமானங்கள் சிறிது
தூரம் ஓடு பாதையில் ஓடிப் பின்பு மேலே எழும்பிப் பறப்
பதை ஒத்ததாகும்.
பொதுவாக கடல் மட்டத்தி லிருந்து இரண்டு, மூன்று அடியே மேலுயருகின்றன. 35 அடிக்கு மேலாக சில சமயங்களில் நிகழ்கின்றது. 100 Qstru-tår6 400 un fi தூரம் வரை தொடர்ந்து பறக் கும் இம்மீன்கள் அதற்குப்பின்பு நீரில் குதித்து விடுகின்றன.
இம்மீன்கள் என்பு வகை மீன் களைச் சார்ந்தவை. பூக்களா
உயர்வதும்
லும், நுரையீரல்களாலும் சுவா சிக்கின்றன. இவற்றின் உடலை மூடியுள்ள வட்டச்செதில்கள் காற்றைக்கிழிப்பதற்கு ஒரளவு உதவுகின்றன. கூரான ஒரளவு ஒடுங்கிய முகத்தைக்கொண்ட இம்மீன்கள் கடலில் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
அதுசரி, இப்பறக்கும் மீன்க ளுக்குப் பெயர் என்ன தெரி யுமா ? எக்சோ சீற்றஸ் (Exo. coetus), சிப் செ லூ ற ஸ் (Cypseurus) போன்றவையே பொதுவான பறக்கும் மீன்கள் ஆகும்.
மீன்கள் பறக்கின்றன என் பதை அறிய வியப்பாக இருக் றதல்லவா ?
சிவாஜினி - பரமலிங்கம்
ஆண்டு 12 யா/வேம்படி மகளிர் கல்லூரி
புரிந்துகொள்.
எழுந்து நில், தைரியமாக இரு. வலிமை யுடன் இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்
ளேயே குடிகொண்டிருக்கின்றன.
- சுவாமி விவேகானந்தர் -
2.
 

நோபல் தந்த LITfaJ
பரிசில் மிக மதிப்பு வாய்ந்தது எது வ்ெனத் தெரியுமா? ஒரு மித்த குரலில் வரும் பதில் நோபல் பரிசு’’ தான், நோபல் Luñ6àssir (nobel prize) as ao s சுவையானது.
அல்பிரட் நோபல் (alfred nobel, 1833 - 1896) 6Tairglub சுவீட தேசத்து இரசாயன அறி ஞரின் பெயரால் இப்பரிசு வழங் கப்படுகிறது.
இவர் உயிருடன் வாழ் ந் த காலத்திலேயே புகழ் பெற்றவர். இறந்த பின்னர் அவர் புகழ் பன் மடங்காகிவிட்டது. அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் கல்வி பயின்ற நோபல், த ன் சொந்த தேசமான சுவீடனுக்குத் திரும்பி நைத்திரோ கிளிசறின் என்னும் வெடிமருந்து தயாரிப் பில் ஈடுபட்டார். இ வ ர து தொழிற்சாலையில் ஏற் பட் ட
வெடி விபத்தொன்றில் இவரது
சகோதரர் ஒருவர் பலியான துடன் தத்தையாரும் முடமாக்
கப்பட்டார்.
இதன் பின்னரே, நைத்ரோ
கிளிசறினை பாதுகாப்பாக எடுத்
துச் செல்லும் டைன ைற்றை (dynamite) 1 866g)di sygó) ypasů படுத்தினார்.
அயராத முயற்சியும், இவரது கண்டுபிடிப்புக்களும் இவரை ப் பெ ரும் செல்வந்தராக்கியது. இவர் இறக்கும் போது 9,000,000 டொலர்களை விட்டுச் சென்றார்: இப்பணத்தின் மூலம் கிடைக்கும் வட்டியைப் பகிர்ந்து வருடத் தோறும் துறைசார்ந்த வல்லுனர் களுக்குப் பரிசளிக்கு ம் படி யும் கேட்டிருந்தார்.
அல்பிரட் நோபலின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அவ ரது குடும்பத்தினர் விரு ம் ப வில்லை அனைத்துச் சொத்துக் களையும் தாமே எ டு த் து க் கொள்ள முயன்றனர். இதனால் அரசாங்கம் தலையிட்டு நோபல் நிறுவன்த்தை அமைத்தது. அதன் மூலம் 1901ஆம் ஆண்டிலிருந்து நோபல் பரிசு பிறந்தது.
பெளதீகம், இரசாயனம், மருத் துவம், இலக்கியம், உலகசமாதா னம் போன்ற ஐந்து துறைகளி லும் அரிய சாதனைகளைப் புரிந் தவர்களுக்கு இப்பரிசு வருட ந் தோறும் வழங்கப்படுகிறது.
13

Page 9
இத்த ஐந்து துறைகளையும் விட சுவீடனின் தேசிய வங்கியும் நோபலின் ஞாபகார்த்த மாக பொருளியற் துறையிலும் 1969ல் இருந்து பரிசு வழங்சி வருகிறது. இதுவும் சிலசமயங்களில் நோபல் பரிசு என வழங்கப்பட்ட போதி லும் இது அதிலிருந்து வேறா னதாகும். ஆனால் நோபல் பரிசு வழங்கப்படும் முறையிலேயே இது வும் வழங்கப்படுகிறது. பணப் பெறு ம தி யும் கூட அதே அளவுதான்.
ஒவ்வொரு துறைக்கும் உரிய
வல்லுனர்களைத் தெரிவு செய் வதில் சுவீடனின் பல கல்விய மைப்புக்கள் பங்கேற்கின்றன. ஆனால் உலகசமாதானத்திற்குரி யவரைத் தேர்ந் தெ டு க் கும் பொறுப்பு நோர்வேநாட்டு அரசா ங்கத்திடம் விடப்பட்டிருக்கிறது.
நேரடியாக் எவருமே பரிசு பெறுவதற்கு விண் ண ப் பிக் க முடியாது. நோபல் பரிசை ஏற் கனவே பெற்றவர்களுக், வல்லு நர்களும், கற்ற சமூகங்களுமே பெயர்களைச் சிபாரிசு செய்ய முடியும்.
ஒவ்வொரு வருடத்துக்குமான நோபல் பரிசுக்கும் அதற்கு முத் தைய வருடத்தின்போதே உலகம் முழுவதிலிருந்தும் பெயர் க ள் சிபார்சு செய்யப் படுகின்றன. வருடந்தோறும் ஏ றக் குறை ய
4.
த000 பேர் சிபாரிசு செய்யப்படு கின்றார்கள், ஒக்டோபர் மாதங் களில் ஒவ்வொரு நோபல் குழுவி னரும் சூடான வி வா தங்கள் நடாத்தி, ஈற்றில் இரகசிங் வாக் கெடுப்பின் மூலம் பரிசுக் குரிய வரை தெரிவு செய்கின்றனர்.
v. W ..www.Y
மருத்துவத்துக்கான தங்கப்பதக்கம்
ஏராளமான நோபல் பரிசு களை ஐரோப்பாதான் பெற்று வந்தது. அதற்குப்பிறகு அதிக மான நோபல் பரிசுகளை பெற்று வருவது அமெரிக்கா தான். இதற் குக் காரணம் இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியின் முசோலினியிடமிருந்தும் ஜேர்ம னியின் ஹிற்லரிடம் இருந்தும் ஏராளமான விஞ்ஞானிகள் அமெ ரிக்ககாவுக்குத் தப்பிச் சென்றது தான் எனச் சொல்லப்படுகிறது. ஜேர்மனியில் பிறந்த ஐன்ஸ்டீனும் இதனாலேயே அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்த போதே அவர் நோபல் பரிசுக்கு ரியவராக துெரிவு செய் ய ப் பட்டார்.
 

நோபல் பரிசு சிலசமயங்களில் பலரால் கடுமையான விமர்சனத் துக்கும் ஆளாகி விடுகின்றது. பாலஸ்தீன மக்களைச்சொந்த பூமி யிலிருந்து விரட்டிய இஸ்ரவேல் பிரதமர் மனோசின் பெகினிக்குக் கூட உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு விருதும் பெரு ந் தொகைப் பணத்தையும், ஒரு தங்கப் பதக்கத்தையும், சான்றி தழ்ச் சுருளையும் (scrol) கொண் டிருக்கும். வழங்க ப் படு ம் பணத்தொகையின் அளவு அந்த வருடத்தில் சேரும் வட்டியின ளவைப் பொறுத்து மாறுபடு கின்றது. இன்று ஒவ்வொரு துறைக்கும் வழங்கப்படும் பணத் தின் பெறுமதி ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் களிலும் அதிகமாகும்
சி. ஸ்ரனிஸ்லாஸ்
சிலவேளைகளில் ஒரு குறித்த துறையில் ஒருவருக்குமேல் தெரிவு செய்யப்படின் பரிசுத் தொகை பகிர்த்தளிக்கப்படுகின்றது GTLagi நாணைய மதிப்பின்படி இத் தொகையைக் கணிப்புச் செய்து பாருங்களேன்.
-2A57 Tab.: New standard
encyclopedia volume - 9
கடல் செய்தி. பூமியின் மொத்த நிலப்
பரப்பில்
70.68 சதவீதம் கடல்களே. கடல்களின் மொத் .35 ו" ו பரப்பளவு
3.62,033,000 சதுர கிலே த. கடல் நீரின் மொத்தக் கனவளவு
1,349 ,600 000 கன கிலோ மீ உலகின் மிகப் பெரிய பெருங் கடல் பசுபிக் சமுத்திரம். உலகப் பெருங் கடல்களில் 43.9 வீதம் இது தா ன் பரப்பளவு
166,241,000 சதுர கிலோ மீ உலகின் ஆழமான கிடலும் பசுபிக்கடல்தான் இதன் கூடிய ஆழம் 36., 200 autფ. உலகக் கடல்களில் மிகப்பெரி யது தென்சீனக்கட லாகும்* பரப்பளவு
2974,600 சதுர இலோ, மிகப் பெரும் விரிகுடா வட
கனடாவில் உள்ள ஹட்சன் விரிகுடா -
15

Page 10
சுதேசிகள்
மூலிகைச்செடிகளுக்கு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பதை எவரும் மறுப்பதில்லை,
ஆங்கில மருந்துகள் பலவும் தாவரங்களின் பிரித்தெடுப்புக்கள் என்பதும் பலருக்கும் புரியும்
சீதோஷ்ண நிலைமைகளுக்கேற்ப உலகின் பல்வேறு நாடுகளி லும் பரவிக்கிடக்கும் மூலிகைச்செடிகளை அந்நாடுகள் அடையாளம் கண்டு பாதுகாத்து பயன்படுத்தி வருகின்றன.
இம்மருத்துவ முறைகள் மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் பிறந்தவையல்ல, அனுபவ ரீதியாக உறுதி செய்யப்பட்ட, உடலுக்கு 4 ஊறுசெய்யா இயற்கை மருத்துவங்கள்தான் இவை.
ஆனால் உலகின் பல்வேறு நாடுகளும் தமது தேச்த்துக்குரிய இப்பாரம்பரிய சுதேசிய மருத்துவ முறைகளைப் பேணிப்பயன் படுத்தும் போது இங்கு மட்டும் இது வழக்கொழிந்து போகும் நிலை உருவாகி வருகின்றது.
இச்சுதேசியத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர்கள் வேறு எவர்களும ல்லர்-இத்துறையைச் சார்ந்த மருத்துவர்களே. நிறுவனமயப்படுத்தப் பட்ட யாழ் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையும் சித்த மருத்துவத்தின் வளாச்சிக்கு தடையாகவே உள்ளது.
ஆயுர்வேதம், சித்தமருத்துவம் என்றால் பரிகசிப்புக்கு ஆளா கும் நிலை தோன்றி, இவற்றின் மேல் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் குறையத் தொடங்கி விட்டன.
பழைய தலைமுறையினரை புதியவர்களுக்கு அறிமுகம் செய் யவும், இலை மறைகாயாக உள்ள புதியவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசாமி மண்ட பத்தில் இம்மாதம் நடைபெற்ற கண்காட்சி களம் அமைத்திருந்தது.
உள்ளுராட்சித் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கண்காட்சியில் ஓவியம், சிற்பம், புகைப்படக்கலை நூல்கள், சுதேசிய மருத்துவம் போன்ற துறைகளுக்கெனக் காட்சி யறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
 

அழைப்பு விடுத்திருந்தும் சுதேசமருத்துவம் பற்றிய காட்சிப் பிரிவில் சித்தமருத்துவத்துறை தன்பங்களிப்பை நல்க மறுத்துவிட்டது. இம்மருத்துவம் பற்றிய செய்திகளை மக்களிடையே வலிந்து சென்று புகுத்த வேண்டிய நிலையில் தாம் இருப்பதை இவர்கள் மறந்து விட்டனர் போலும்,
இன்று அறுகம்புல்லையே அடையாளம் தெரியாதநிலை.
ஆங்கில மருந்து வகைகளை வழங்கக்கூடாது என்ற சட்டவிதி இருந்தும், சதேசிய வைத்தியர்கள் பலரும் தமக்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாத ஆங்கில மருந்து வகைகளையே வழங்கி வருகின் றனர்.
இதன் மூலம் சுதேசிய மருத்துவம் பற்றிய நம்பிக்கையை படிப் படியாக மக்கள் மனதிலிருந்து களையும் இவர்கள் சில வேளை களில் நோயாளிக்கு யமனாகவும் மாறி விடுகின்றனர் - தமது பட்டறிவற்ற ஆங்கில மருந்து சிகிச்சை முறைகளினால்,
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல யாழ் பல்கலைக் கழகத்தின் சித்தமருத்துவத்துறை ஆங்கில மருந்துப்பாவனையை மருத்துவ பிடத்தின் எச்சரிக்கையின் மத்தியிலும் சித்தமாணவர் களுக்கு அங்கீகாரமற்ற நிலையில் அரைகுறைபாக அறிமுகப்படுத்தி வருகின்றது.
இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தவறின் சித்தமருத்துவம் அழிவதோடல்லாது காலப்போக்கில் வெற்றிலை பாக்கு விற்கும் பெட்டிக்கடைக்காரர்களும் ஆங்கில மருத்துவச் சிகிச்சையளிக்கும் நிலை உருவாகிவிடும்.
இர்கதேசிகள் ஆங்கில மருந்துச் சிகிச்சையளிப்பதை தடைசெய்
வதும், யாழ் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத் துறையில் மாற்
றத்தை ஏற்படுத்துவதுந்தான் எமது பாரம்ப பிய மருத்துவக்கல்வியை அழிவினின்றும் காப்பாற்றக்கூடிய வழிமுறைகள்.
இம் மாற்றங்களுக்காக விரைந்துழைக்க வேண்டியது தேச
நலனில் அக்கறை கொண்ட அனைவரினதும் முதன்மைப் பணி யாகும்.
நீர்மூழ்கி

Page 11
தகவற் களஞ்சியம்
8
பாழ்ப்பாணம் வேம்படி மகளிர் ல்ேலுரரியில் முன்னொரு காலத்தில் ஆண்களும் கல்வி பயின்றுள்ளார்கள். தற்போது யாழ் மத்திய கல்லூரியில் தால் நிலையப் பொறுப்பாளராகக் கடமையாற்றும் திரு. மாணிக்க வாசகர் என்பவர் வேம்படி Botariosiகல் ஆரியின் பழைய மாணவிவர் தானாம்,
உயிர்ச்சத்துக்களை (Vitam ins :
செ4:ற்கைத் தயாரிப்புகள் மூலம் அளவுத்கு அதி க ம பாக et. கொள்வதை விட, உணவின் மூலம் LA) SIN AG utras சரிவிகித அள வு உ ட் கொள்வதே உ கந்தது . விதிகளவில் மருத்துகளாக விற்ற
மின் பயன் படுத்துபவர்களிடையே வெவ்வேறு வகையான நோய்கள் தலை தூக்கியுள்ளன என ஆப்வா ளர்கள் தெரிவித்துள்ளனர்.
யர்னையில் அவற்றின் மேற்தாடை
யில் உள்ள வெட்டும் பற்களே தந் stones வளர்ச்சியடைந்துள்ளன. நன்கு வளர்ச்சியடைந்த Teobassrir தந்தம் 7 அடி நீளமும் 130 கிலோ எடையும் கொண்டது.
பசுபிக் சமுத்திரத்தின் மேற்கு, கிழக்குக் கரை பே ாரப்பகுதிகளில்
அதிக எண்ணிக்கையில் எரிமலைகள்
(Volcanoes) காணப்படுகின்றன. அடிக்கடி புவிநடுக்கங்கள் ஏற்படும் பகுதியும் இதுதான். இப்பகுதியை - Guoleår et tumra; வெப்பம் வெளி யேறும் யன்னல் பகுதி" என வழங் குகின்றனர்.
உலகமக்கட்தொகை இவ்வர்ண்டில் 550 G3F7 turs சிதிகரிக்கும் என
*க்கள் கண்காணிப்புக் குழுவொன்று அறிவித்திருக்கிறது. paðir Apari alas
நாடுகளிலேயே அதிகரிப்பு அதிகமாக உள்ளது. W
பதின்னான்கு ஆண்டுகளுக்கு மேல் நீடித்து எரியக்கூடிய மின் குமிழ் *ளை (Bulbs) ஒர் அமெரிக்க நிறு வனம் தயாரித்துள்ளது. வழக்கமாக தீாம் பயன்படுத்தும் மின்குமிழ்களுக் குத் தேவையான மின்சக்தியில் முக் கால் டங்குதான் து எரிவதற்கு பயன்படுகிறது. வாஷிங்டனில் எடி மின்சாரக்கழத்தின் ஆண்டுக் கூட்டம் யூன் முதல் தேதியன்று தட~ந்த போது இந்த மின்குமிழ் சிறிமுகப்படுத்தப் பட்ட து. தற் போது பாவனையிலுள்ள மின்குமிழ் கள் ஆறுமாதம் முதல் ஒராண்டுக் காலம் வரையிலேயே ஒளியை வழங் குகின்றன.
đFgầ}
எயிட்ஸ் நோய்க்குரிய வைரசுவி னால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்புத் தன் சிமயை அதிகரிக்க காரை உதவு வதாக ஜப்பானிய மருத்துவச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
ւյն:63)աւն ாதுகாத்து வரும் ஒசோன் குடையில் ஏற்பட்டுள்ள gattri draig) it irs சூரியனிலிருந்து வரும் 49 ஊதாக்கதிர்கள் நாம் ευπαριό பகுதிக்குள் ஊடுருவி விடுகின்றன. இக்கதிர்களினால் உயிர்கள் பாதிப் புக்கு ஆளாகின்றன. இந்த ஓசோன் வாயு பண்ட% த்தை ஆராய் ச் சி செய்வதற்காக ரஷ்யாவும் அமெரிக் disfrajih Sri Lars ஆய்வு விண்கல மொன்றை விண்ணில் செலுத்தி யுள்ளது.

கு காட்டிலுள்ள யானைகள் தங்கள்
கனமான தந்தங்களை ஒரு தாழ் வான மரக்கிளையில்
வைத்துக் கொண்டு நின்றபடி து ங் கும் தன்மை வாய்ந்தவை. துரங்கும்
போது மென்மையான தமது துதிக் கையை எறும்போ, மற்றப் g, 6 களோ கடித்து விடாதபடி சுருட்டி பத்திரமாக வைத்துக் றன. இவை ஒரு நாளில் சராசரி மூன்று மணி நேரம் மாத்திரமே தூங்குகின்றனவாம்.
அடுத்த ஒலிம்பிக்போட்டி அமெரிக் காவிலுள்ள அட்லாண்டா நகரில் நடக்கவுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறும் கிரேக்க வீரர்களுக்கு அந்த நாடு, பாராளுமன்ற அங்கத்தவர் களுக்கான சிறப்புரிமைகள் உட்பட தீர்வையற்ற கார்கள், சலுகை அடிப்படையிலான அரசகடன்கள் போன்றவற்றை வழங்கி கெளரவிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
கிறிஸ்தோபர் கொலம்பசுவுக்கு 17 நூற்றாண்டுகளுக்கு முன்னரே சீனப் Gisr-i Gi அமெரிக்காவைக் கண்டு பிடித்திருக்கக் கூடும் என்ற கூற்றை நிரூபிப்பதற்காக ஐரிஸ் ஆதரவு ஆய்வாளரான டிம்செவரின் என்பவர் மூங்கில் படகொன்றில் ஏறி ஹொங்கொங்கிலிருந்து தனது பயணத் தை ஆரம்பித்துள்ளார். இவரது வயது 53.
யானைகளுக்குக்கூட கனவுகள் வரு மாம். பயங்கரக் கனவுகள் வரும் போது பயத்தில் யானைகள் பிளிறு கின்றன என யானைகளைப் பரா மரிக்கும் பணியாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
முதன் முதலில் வளர்க்கத் தொடங் இய பறவை வாத்துக்கள் தான். இது மனிதனின் கட்டளைக்கு எளி தில் அடிபணி புக் கூடியது.
இ இன்று தேவையான அளவு குடி
நீர் கிடைக்காமல் சுமார் 170 கோடி மக்கள் அவதிப்படுகின்றார் ஆள். சுமார் 300 கோடி மக்கள் சரியான கழிப்பிட வசதியில்லாது வாழ்கின்றார்கள். நீர் மூலம் பரவும் நோய்களினால், மூன்றாம் உலக நாடுகளில் நாள் தோறும் 25,000 பேர் இறக்கின்றார்கள். வீணாகும் தண்ணீர் நாம் வாழ்நாளின் கண் ணிர் என்பதன் அர்த்தம் இப்போது புரிகிறதா ?
இந்தியப்பாடநூல்களில் ஒட்டுண் Gofa) tu (Parasite) gp3of Gwaii. 676.7Gyth, விருந்துவழங்கியை (Host) ஒம்புயிரி எ ல் று ம் குறிப்பிடுகின்றார்கள். பொருத்தமான பெயர்கள் தான்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்துக்கு அருகாமை யில் இன்று சோபையிழந்து நிற்கும் மணிக்கூட்டுக் கோபுரம் 1875 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. பிரித்தா னியாவை நீண்டகாலம் அரசாட்சி செய்த விக்ரோறியா இராணியின் மூத்த மைந்தன் ஏழாம் எட்வேர்ட் இங்கே வந்து போனதன் நினை வாகவே இது எழுப்பப்பட்டது. அப்போதைய தேசாதிபதி யேம்ஸ் லோங்டன் என்ப9ரே இ த  ைன அமைப்பதற்கு காரணமாய் இருந் தார். மணிக்கூட்டை உபகரித்த வரும் அவர்தான். அப்போது இத னைக் கட்டிமுடிப்பதற்கான செல வுத் தொகை பத்தாயிரம் ரூபாய் என்றும் இத்தொகையில் நான்கா யிரம் ரூபாவை உள்ளூரவர்கள் seL கரித்தார்கள் என்பதும் வரலாறா கும் a.
எகிப்திய பிரமிட்ஒன்றில் இரகசியக் கதவொன்று இருப்பதை ஜேர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரமிட்டின் அடியில் உள்ள இரக சிய ஒழுங்கையில் வீடியோ கமரா
19

Page 12
சகிதம் ஒரு இயந்திர்மனிதன் அனுப்
பப்பட்டுள்ளான், எதிர்பாராத புதை பல்கள் கிடைக்கும் என எதிர் பார்க்
கப்படுகிறது.
1888ஆம் ஆண்டில் ஜான் லவுஃட் என்ற அமெரிக்கர்தான் பந்து cup start Guaragpa (Ball Point Pen) முதன் முதலில் கண்டுபிடித்தார். இன்றைய பேனாபோல் அது மெலி தாக இருக்கவில்லை, ஆயினும் அன் றைய தத்துவத்திலேயே இன்றும் பந்து முனைப் பேனாக்கள் தயாரிக் கப்பட்டு வருகின்றன. 1888 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும். 1938இல் தான் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த லேஸ்லோவும் ஜார்ஜும் அதனைத் தொழில் முறையில் தயா ரிக்கத் தொடங்கினர்.
பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தால் 1986 இல் பங்காளதேஷில் கிட்டத் தட்ட முக்கால் பகுதி மூழ்கிப் போனது. கடுமையான வறட்சி, பஞ்
சம், பசி காரணமாக எதியோப்பி'
um Gai ergurá நிற்கிறது. அனைத்துக்கும் காரணம் அந் நாடுக ளில் ஏற்பட்ட காடுகள் அழிப்பு.
ஆந்தையினத்தில் Pygmy Cup என்று ஒருவகை இருக்கிறது. பின் புறத்தி லிருந்து கூட எதிரிகள் இவற்றைத் தாக்கமுடியாது. ஏன் தெரியுமா!, முகத்தைப் போன்றே பின் தலையி லும் இருகண்கள் மற்றும் மூக்குப் போன்று தோன்றும் சிறப்பான இறகு அமைப்பை இப்பறவை பெற் றுள்ளது. பின் புறத்தையும் கூட முன்புறம் என எதிரிகள் மயம்கி அகல்கின்றனர்.
னோவில் மெல்லிய ஒடு கொண்ட
அதிசய ஆமை ஒன்று கண்டெடுக்கப்
பட்டுள்ளது. இந்த ஆமையின் முது கெலும்பும் நரம்புகளும் வெளியே கண்ணுக்குப் புலப்படும் வண்ணம் இதன் ஒடு கண்ணாடி போன்று மிக
20
மெல்லியதாக உள்ளது. யாங்கூ A lé5 தியில் உள்ள ஒரு சிறு குளமொன்றி லிருந்து ஒரு மீனவரால் கண்டெடுக் கப்பட்ட இது 18-3 சமீ நீளமும் 600 கிராம் எடையும் கொண்டது. இந்த அதிசய ஆமை இன்று பாது காப்புடன் வளர்க்கப்பட்டு வருகிறது.
ரோம் நாட்டில் நிலத்தடிச் சமாதி கள் காணப்படுகின்றன. பண்டைய கிறிஸ்தவர்களின் சமாதிக் கல்லறை கள் 250 ஹெக்டெயர் பரப்பில் அமைந்துள்ளன. சில இடங்களில் ஐந்து மாடிகள் கொண்டவையாய் தரைமட்டத்தின் கீழ் கட்டப்பட் டுள்ளன.
பூமியில் இருத்து உயரே செல்லச் செல்ல காற்றின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது. 100 கிலோ மீற்றர் உயரத்திற்கு அப்பால் வளி அற்ற விண்வெளி துவங்குகிறது.
முதலாவது கிரிக்கெட் பந்தயம் கனடா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையே 1884ஆம் ஆண்டு நடை பெற்றது.
affaiGle up apl. (Cricket Bat) செய்வதற்கு வில்லோ என்ற மரம் பயன்படுத்தப்படுகின்றது. கிரிக்கெட் மட்டையின் அதிக பட்ச அகலம் 12 sté.
மிளகாயைக்கடித்து யாரேனும் தின் பதைப் பார்த்தாலே நம்மில் பல ருக்கு கண்ணில் நீர்தஞம்பும்: விதைகளின் Gud fö L S S af d saramur'uGh as 'Saðr (Capsin) G7 Går னும் காரப்பொருள்தான் மிளகா பின் உறைப்புக்குக் காரணம் ரோஜாவுக்கு முள்போல, மிளகாய் விதையை விலங்குகள் விழுங்கி விடா மல் பாதுகாக்க இப்படிச் செடியில் உருவான இயற்கை அரண்தான் இந்த கப்சின்,

ஈழத்தமிழர் பண்பாட்டின் பழமையை காட்டும் தமிழ்ப் பிராமி வடிவங்கள்!
றண்ணுக்கும் பண் புக் கு ம் இடையே என்றுமே மிக நெருக் கமான தொடர்புகள் இருந்து வருகின்றன. மண்ணுக் குரிய இயல்புகள் பண்புக்குள்ள உள் வீடாக அமைவதே இயற்கை யானது, யதார்த்தமானதும்கூட. இக்காரணத்தினாலேயே ம ண் ணும் பண்பும் சேர்ந்து "மாண்பு" என்ற நிலைப் பாட் டி  ைன த் தோற்றுவித்தது. மாண் பு " என்ற பதம் மனித அன்பு என்ற நிலையில் மானிட நேயத்தினைச் சுட்டி நிற்கின்றது. இது வே பண்பாடாகும். "பண்பாடு" என் பது பாடு அறிந்து ஒழுகுவது எனவும் குறிப்பிடுவர். அவ்வாறு பாடு அறிந்து ஒழுக்கம் பேணி நின்ற தெடர்ச்சியான முய நீற் சியின் வெளிப்பா டே பண் பாட்டுக் கோலங்கள் எ ன் று அழைக்கப்படுகிறது. அன்றைய பண்பாட்டுக் கோலங்கள் மீண்டும் அன்று அவை பிறப்புக் கொண்ட மண்ணினுள்ளேயே புதைக்கப் பட்டும் விடப்பட்டன. ஏனெனில் 'பழையன கழிதலும் புதியன புதிதலும் காலவழுவில
என்ற
வாழ்க்கையின் நோக்கில் அவை கைவிடப்பட்டனவாகலாம். அவ் வாறு புதையுண்டு போன பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பண்பாட்டு வடிவங்களாக இன்று எமக்கு தமிழ்ப் பிாரமி வரி வடி வங்கள் கிடைத்துள்ளன. அவை இன்னும் எமக்கு கிடைத் துக் கொண்டே இருக்கின்றன!! அவை எமக்கு ஈழத்தமிழர் பண்பாட்டின் பழமையைக் காட்டும் சான்றா
தாவரங்கள் ஆகின்றன!!!
பிராமி வரிவடிவங்கள் என்பது ஒருவகையான எழுத்துமுறையே. அதாவது கி. மு 3ம் நூற்றாண் டுக்கும் கி. பி 4ம் நூற்றாண்டுக் கும் இடையே உள்ள காலப்பகு தியில் தென் ஆசியா முழுவதிலும் ஒலியன்களைப் பதிவு செய்வதற் காகப் பயன்படுத்தப்பட்ட குறி யீடுகள் எனலாம். அவை வ tஇந்தியாவில் பிரகிருத ஒலியன் களுக்காகவும் (ஹிந்தி மொழி உருவாகுவதற்கு முன்னோடியாக அமைந்த மொழி) தென் இந்தி யாவில் தமிழ் நாட்டில் தமிழ் ஒலியன்சளுக்காகவும் தென் இலங்கையில் பாளி ஒவியன்களுக்
2

Page 13
காகவும் (சிங்கள மொழி உரு வாகுவதற்கு முன்னோடியாக அமைந்த மொழி) பயன்படுத் தப்பட்டிருந்தன. ஈழத்தில் வட இலங்கையைப் பொறுத்தவரை யில் பூநகரியிலிருந்து அதிகளவில் தமிழ் பிராமி வரிவடிவங்கள் பொறிக்கப் பட்ட சான்றுகள் கிடைத்துள்ளன. இதனையடுத்து இப்பொழுது கந்தரோடையிலி ருந்தும் தமிழ் பிராமி வரி வடி வங்கள் கிடைத்த வண்ணமுள் ளன. அவையே எமது பண்பாட் டின் பழமையைக் காட்டும் திட் டவட்டமான சின்னங்களாகவும் உள்ளன.
க ந் தரோ டையிலிருந்து பெற்றுக் கொள்ளப் பட் ட தமிழ்ப் பிராமி வரி வடிவங்களுள் தமிழ் நெடுங்கணக்கில் இடம் பெறும் சிறப்பெழுத்தான ‘ழ’ கர
ஒலிக்குரிய எழுத்துக் கிடைத்தி
ருப்பது என்பது எமது பழமையை
அங்கு நிலைநிறுத்திக் கொள் வ
தற்கு உதவுவதாக அமைந்துள்
ளது மேலும் 'ஈ' கார ஒலிக்குரிய
பிராமி வரி வடிவம் தமிழ் நாட்டுமுறையைத் தழுவிய வகையில்
கிடைத்திருப்பதும் அங்கு 'ஈழ’
என்ற வழக்கு நி ைலத் தி ரு ந் தமைக்கான சான்றாக கொள்ள வைக்கிறது.
இற்றைக்கு பத்து வருடங்களுக்கு (pasăressTif ஆனைக்கோட்டையிலி ருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட செப்பினாலான முத்திரை மோதி த்திலிருந்து கோவேதம் அல்லது கோவேதன் என்று கொள்ளக் கூடிய தமிழ்ப் பிராமி வாசகம் கிடைத்தது. பூநகரியில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சான்று களிலிருந்து “வேள்' அ ல் ல து வேளிர்" என்று கொள்ளக்கூடிய தமிழ்ப் பிராமி வாசகம் கிடைத் தது. கந்தரோடையிலிருந்து மீட் கப்பட்ட சான்றிலிருந்து "குணி”
செ. கிருஷ்ணராசா
என்ற தமிழ்ப் பிராமி வாசகம்.
கிடைத்தது. ஒரு வேளை பிக்குணி என்ற மணிமேகலையின் நிலை யைத் தாங்கிய வாசகமாக அது அமையக்கூடும். இவை எல்லா வற்றையும் இணைத்து நோக்கும் போழுது மண்ணுக்கும் பண்புக் கும் இடையேயான தொடர்புகள் வெளிப்படுவது போல் உள்ளன. எந்நிலைகளிலும் இப் பிராந்தியத் திற் கிடைக்கின்ற பிராமி வரி வடிவங்கள் ஈழத் தமிழர் பண் பாட்டின் பழமையைக் காட்டும் தமிழ்ப் பிராமி வடிவங்களே! U
ஒரு நண்பனுக்காக உயிரை விடுவது கடினமல்ல, ஆனால் அவ்வாறு ஒரு நண்பன் கிடைப்பது
22
கடினமாகும்.

பழுது நீக்கும் பணி
கேங்களின் தொல்லை தாங்க முடியாத சீனக் குடியரசு 1967 ஆம் ஆண்டில் காகம் அழிப்பு இயக்கம் ஒன்றை ஆரம் பித்து வெடிவைத்து காகங்களை அழித்தொழித்தது. காகங்களின் எண்ணிக்கையைப் பெருமளவில் குறைத்த சீனமக்களுக்கு புதி தாக ஓர் பிரச்சனை பூதாகர மாக உருவெடுத்தது. அவர்களது பயிர்களெல்லாம் பூச்சி புழுக்க ளின் தாக்கத்திற்கு உள்ளாயின. அவர்கள் காரணத்தைப் புரிந்து கொண்டார்கள், இதுவரைகால மும் பயிர்களைத் தாக்கும் பூச்சி களையும் புழுக்களையும் உண்டு வந்த காகங்கள் இல்லாததா லேயே பூச்சிகள் தங்குதடையின் றிப் பெருகின எ ன் ப ைத உணர்ந்து மீண்டும் காகங்களை இனம் பெருகச்செய்தனர். பூச்சி புழுக்களின் தாக்கம் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவரப்பட்டது.
லிருந்து இன்னொரு தோடை மரத்துக்கு எறும்புகள் சென்று
வரவென மரங்களுக்கிடையே மூங்கில்பாலம் அமைத்துவிடு Gnuri.
இந்தியாவிற்கூட அறுவடை முடிந்ததும் வயலை உழுது நெடு நாளைக்கு வரம்பில் நீர்தேக்கி வைத்து பெருத்த வயிறுதாரிக ளான தாராக்களைக் கூட்டமாக விட்டுவிடுகின்றனர். இவை புழுக் களைத் தின்று தீர்த்துவிடுகின் றன,
பயிர்ச்செய்கையில் இன்று
பெரும் சவாலாக விளங்குவது
பீடைகளும் (Pests) களைகளும் sWeeds) snrair.
பயிர்த்தாவரங்களை உண்டு வாழ்ந்து துவம்சம் செய்யும் பூச்சிபுழுக்கள் போன்ற பீடை களும், பயிர்களுடன் சேர்ந்து வளர்ந்து பயிர்களுக்குக் கிடைக்க வேண்டியவற்றைத் தா னும்
எலிகளுக்குப் பூனைபோல, பயிர்ப்பீடைகளுக்கும்
இயற்கை எதிரி உண்டு.
சீனாவில் இன்னுமோர் நடை முறை உண்டு, விவசாயிகள் த மிது தோடைப் பயிர்களை அழிக்கும் பூச்சியினத்தைத் தீர்த் துக்கட்ட சிவந்த எறும்புகளை மரங்களில் விடுகின்றனர். அத் அ-ன் ஒரு தோடைமரத்தி
பகிர்ந்து கொள்வதால் உற்பத்தித் திறனைப் பாதிக்கும் தாவரங்க ளான களைகளும் பாரிய பொரு
ளாதார சேதத்தினை உண்டுபண்
ணுகின்றன.
நாசம் செய்யும் பூச்சிபுழு
கிளை க் கட்டுப்படுத்தத்தான்
23

Page 14
பயிர்ச்செய்கையாளர்கள் காகங் க ைள யும், எறும்புகளையும், வாத்துக்களையும் பயன்படுத்து கின்றனர்.
வீட்டிலே எலிகளைக்கொல்ல பூனைகளைப் பயன்படுத்துவது பே ர ல பயிர்ச்செய்கையாளர் களும் இந்தமுறையைக் கையாளு இறார்கள்.
伊@ இனத்தை உணவாக உட்கொள்ளக் கூடிய இரை
கெளவிகளையும், அதில் நோய் களை ஏற்படுத்தக்கூடிய ஒட் டுண்ணிகளையும் பயன்படுத்தி
அவ்வினத்தை அழிக்கும் - இவை போன்ற செயன்முறைகள் உயிரி யல் ஆட்சி எனவும் உயிரியற் கட் Glutto (Biological Control) எனவும் அழைக்கப்படுகின்றது.
மகேசன் - கஜேந்திரன்
பீடைகளையும் களைகளை யும் கட்டுப்படுத்தப் பயன்படும் இரசாயன நஞ்சுகளை விட உயிரி այն கட்டுப்பாட்டு முறையே சூழலுக்கு உகந்ததாகும்.
பூச்சி கொல்லிகளாகப் பயன் படும் இரசாயன நஞ்சுகள் கொஞ் சம் கொஞ்சமாக மனிதனுடைய உடலிலும் படியத் தொடங்கியுள் ளன. சுற்றுப்புறச் சூழலை ப் பாதித்து மக்கள் நலத்திற்கு பெருங் கேடுகளை உருவாக்கியுள்
SITT,
24
ஆனால் இயற்கை எ தி ரி க ளைப் பயன்படுத்தி பீடைகளைக் கட்டுப்படுத்தும் உயிரியலாட்சி முறையில் சூழல் மாசுறுவதில்லை. பீடைகளைத் தாமாகவே தேடிக் கண்டுபிடித்து அழிக்கும் இந்த உயிரிகள் தாமாகவே எண்ணிக்கை யில் பெருகியும் கொள்கின்றன. இரசாயன நஞ்சுகளுக்கு எதிராக தடுப்பாற்றலை விருத்தி செய்து தப்பித்துக் கொள்ளும் பீடைகளி னால் உயிரியலாட்சி முறையில் தப்பிக்கவே முடிவதில்லை. முற் றாக அழிந்தொழிந்து விடுகின் றன.
மனிதனின் தலையீட்டினால் புண்பட்டிருக்கும் இயற்கை அன் னையைக் குணப்படுத்த தொழில் யுகத்தின் சந்ததிகளான பூச் சி நாசினிகளால் இயலாது. மாறாக பாதிப்பை அதி கரிக்கவே செய்
ա4ւ0,
இயற்கையோடு இணைந்த உயிரியலாட்சி முறையே பீடைக் கட்டுப்பாட்டுக்கு மிகவும்பொருத் தமானதாகும்
ஆனால் இங்கேயும் ஒருசிக்கல்
." ஹெயிற்றி என்னும் தீவில்
பெருகிவிட்டிருந்த பாம்புகளை அழிப்பதற்கு மக்கள் கீரிகளை வளர்க்கத் தொடங்கினர். பாம்பு களைத் தீர்த்துக்கட்டியபின்னர் கீரிகள் தம் கவனத்தை கோழி கள் மீது திசைதிருப்பி மக்களைச்
சங்கடப்படுத்திவிட்டது.

இதனால் பீடைகளைத் தவிர கர்ணக் குழந்தைகள்
வேறு உயிரிகளில் பாதிப்பை ஏற் படுத்தாத வகையில் இயற்கைப் கலிபோர்னியாவின் துவார்த் ந பிடை எதிரியை மிகவும் அவ கரின் ஹோப் வைத்தியசாலை தானமாக தெரிவு செய்யவேண் |யைச் சேர்ந்த மருத்துவர்கள் Gh. 1992 ஜூன் 2இல் இலூக்கே 8 மியா என்னும் நோ யால் இந்தத் தெரிவுக்கெனவே, பாதிக்கப்பட்டிருந்த 19 வயது உயிரியற் கட்டுப்பாட்டுக்கான அனிசா அயலாவுக்கு எலும்பு பொதுநலவாய நிறுவனம் (Com" மச்சை மாற்று அறு வை ச் mon Wealth institute of Bio gaisos Gattisgart. *。 logical control) 667 of lif AV எலும்பின் குழியினுள்ளே தேசரீதியில் இயங்கி வருகின்றது. காணப் படும் மச்சையை இந்த நுணுக்கமாக ஆராய்த பின்னரே மருத்துவர்கள் யாரிடமிருந்து பீடைகளுக்கெதிரான இயற்கை தானமாக பெற்றார்கள் தெரி எதிரிகளை அறிமுகப்படுத்துகின் யுமா? ஒரு வயதும் 2மாதமும் றனர். இதுவரைக்கும் அறுபதுக் நிரம்பப் பெற்ற மாரீசா என் | கும் மேற்பட்ட நாடுகளில் இரு |ணும், அயலாவின் சகோதரி நூறுக்குமதிகமான உயிரியற் கட் யிடமிருந்துதான். இக் குழ ந் டுப்பாட்டு முறைகள் வெற்றிகர |தையை மச்சைதானத்திற்கெ மாக நடைமுறைப்படுத்தப் பட் னவே அணிசா அயலாவின் டுள்ளன. பெற்றோர்கள் பெற்றெடுத்
தனர். தானம் பெறுவதற்காகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வது மேலை நாடுகளில் பரவலாக நடைபெற் றாலும், அதை பகிரங் கமாக அறிவிப்பது இதுவேமுதல்முறை என்கின்றனர் மருத்துவர்கள் 'கடந்த ஐந்து வருடங்களில் குறைந்த பட்சம் சுமார் 40 குழந்தைகள் இத்தகைய எலும்பு மச்சை தானத்திற்காகவே பிறந்துள்ளன' என்கிறார் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஆர்தர் சாப்லான்.
எலும்பு மச்சை, சிறுநீரகம் போன்றவற்றிற்காக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது அதிகரித்து வருகின்றது. இதையடுத்து தானம் பெறுவதற்காகவே குழந்தைகள் பெறு வது என்பது தனிமனிதர்களின் வாழ்வியல் உரிமையை மீறும் செயலா எனும் வினா மருத்துவர்களிடமும் மரபியல் வாதிகளி டமும் எழுந்துள்ளது.
நன்றி Manorama Year Book - 93
v**'-భ్యజ్య
25

Page 15
9 J6 *
பிழைத்தோர்க்கு .
அரசு பிழைத்தோர்க்கு அறங் கூற்ற மானதற்குச் சிரசிழந்த ஒளவை சிலை சின்னமாக மட்டுமில:
சென்ற இதழ் அட்டைப்படம் பரிசுக் கவிதை
சிரசில்லாச் சிங்களத்துச் சீரமைச்சர் ஆணையிட சிகரமான நூல் நிலையம் சீர்குலைந்த சினத்தினாலே
தமிழ் வளர்த்த ஒளவைசிலை தான் ஒடிந்து வீழ்ந்ததுவோ ! தமிழ் அழித்துத் தலை
அழித்தால் தா(ய)கம் போமோ தமிழருக்கு.
த. சங்கீதா ஆண்டு 20, யா/வேம்படி மகளிர்கல்லூரி
26.
 

%ஆதியரிடமிருத்தண
அரசடி வீதி கந்தர்மடம்
uvaoÜvaaoorõ
5. 6, 93. என்பிரியமானவர்களே,
நேற்று நடந்தது போல் இருக்கிறது. நங்கூரம் யாழ் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் தன் முதலாவது கால் பதித்த நிகழ்ச்சி. அது நடந்து ஒன்பது மாதங்களாகி விட்டது.
இதுவரை மாதந்தப்பாமல் நங்கூரம் வெளிவந்தமைக் கான பெருமை உங்களையே சாரும். நீங்கள் காண்பிக்கும் ஆர்வமும் ஆதரவும்தான் நங்கூரத்தை தொடர்ச்சியாக வெளியிட வைப்பதில் உந்து சக்தியாய் அமைந்துள்ளது.
சஞ்சிகைகளின் நீண்ட ஆயு ளு க்கு சந் தா தா ரர்கள் அவசியமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் சந்தாதா ரராக சேர்ந்து கொள்வதன் மூலம் அல்லது சந்தாதாரர் ஒருவரை புதிதாக அறிமுகப்படுத்துவதன் மூலம் நங்கூ ரத்தை மேலும் வளம்படுத்த முடியும். ஆவன செய்வீர் கள் என எதிர்பார்க்கிறேன்.
செப்டெம்பர் மாதம் ஒராண்டு நிறைவை எய்தவுள்ள நங்கூரத்திற்கு ஓர் மதிப்பீடு அவசியமாகிறது.
உங்களுடனான நெருக்கத்தின் காரணமாக இப் பணியையும் உங்களிடமேயே விட்டு வைக்கின்றேன் நங் கூரம் சமூகத்தில் ஏற்படுத்திவரும் தாக்கங்கள் பற்றியும், விளைவுகள் பற்றியும் எழுதி அனுப்புங்கள். நங்கூரத்தில் பிடித்த, உங்களுக்குப்பிடிக்காத அம்சங்களையும் குறிப் பிட்டு அதன் முற்பக்கம் தொடங்கி நடுப்பக்கம் ஊடாக கடைசிப்பககம் வரையில் செய்ய வேண்டிய மாறுதல்கள் பற்றியும் தெரியப்படுத்துங்கள்.
உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் இம்மாத இறுதிக்குள் பதிற்கடிதங்களை எதிர்பார்க்கின்றேன்.

Page 16
விஞ்ஞானம் விளக்குகின்றது
ஜெட் விமானங்கள் பறக்கும் போது அவற்றின் பின்னால்
28
அடர்ந்த வெண்முகில்கள் போன்று தோன்றுகின்றன.
ஜெட் விமானங்கள் பறக்கும் போது வெளியேறும் புகையில் காபனீரொட்சைட்டு வாயுவும், பிற சிறு துகள்களும் காணப் படும். ஜெட் விமானம் மிக உயரத்தில் பறக்கும் போது - அங்கு வெப்பநிலை மிகக்குறைவாகையால் காபனீரொட்சைட்டு வாயு குளிர்ந்து பனிக்கட்டியாகி விடுகின்றது இதுவே உலர் பனிக் கட்டி (Dryice) எனப்படும். சிறுதுகள் மீது நீராவியும் குளிர்ந்து பணியாகின்றது இப்பனிக்கட்டிகளே வெண்மேகம் போன்று திரள்கின்றன. சுழன்று வெளியேறும் புகையின் பாதையில் ஏற் படும் உறைதல் நிகழ்ச்சியால் நீல வான வீதியில் வெண்கோடு போட்டது போல் தோற்றம் ஏற்பட்டு விடுகின்றது.
பலமான சாப்பாட்டுக்குப் பின்னர் உறக்கம் வருகின்றது. சாப்பிட்டதன் பின்னர் உணவைச் சமிபாடு அடையச் செய்வதற் காக உணவுக்கால்வாய்க்கு அதிக அளவில் குருதி தேவைப்படு கிறது. சாதாரண நேரங்களில் பாயும் இரத்தத்தின் அளவிலும் பக்க சாப்பிட்டதன் பின்னர் இப்பகுதியில் பாயும் இரத் தத்தின் அளவு அதிகமாகும். இதனால் மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறையத் தொடங்குகிறது. இதன் விளை வாகவே உறக்க மயக்கம் ஏற்படுகின்றது. இதைத்தான் "உண்ட களை தொண்டருக்கும் உண்டு" என்பார்கள்.
நெல்லிக்காய்களை உண்ட பின்னர் நீரைப்பருகினால் இனிப்பு கவை உண்டாகிறது.
நெல்லிக்காயில் தனின் என்னும் இரசாயனப் பொருள் காணப் படுகின்றது. இது நீருடன் சேரும் போது கலிக்கமிலம் (Gallicacid) எலாஜிக்கமிலம் (Elagieacid) என்பவற்றுடன் குளுக்கோசும் உண்டாகிறது. இதனால்தான் நமக்கு இனிப் புச்சுவை ஏற்படுகின்றது.
 

O Gyoghugs (TELEPATHY)
என்னும் மனதோடு மனது தொடர்புகொள்ளும் முறை சாத்தியமா.
பாலமுருகன் யா/பரியோவான் கல்லூரி ஆம் மண்தோடு மனம்தொ டர்புகொண்டு எண்ணத்தில் அல் லது சிந்தனையில் ஒருமித்து நிற் கும் ரெலிபதிமுறை சாத்தியமா னது, உண்மையானதும் கூட.
அதாவது இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர் கள் தமது மனங்களினூடாக ஒரே நேரத்தில் ஒரே கருத்தில் நின்று தமது உணர்வைப் பரிமா றிக்கொள்கின்றனர். இடை வெளித் தொடர்புகள் எதுவும் இல்லாமல் ஒருவர் மற்றவருடன் தன் எண்ணத்தில் அல்லது நினை வில் தொடர்புகொண்டு ஒரு மித்து நிற்பது நமது அன்றாட அனுபவங்களில் ஒன்று.
உதாரணமாக அமெரிக்காவில் உள்ள தனது மகனுக்கு நடக்கக் கூடாதது எதுவும் நடந்தால் இலங்கையில் உள்ள அவனது தாய் தனது மனதில் ஒருவித கிலேசத்தை உணர் கி றாள். உடனே தன் மகனை நினைக்கி றாள். அவளின் மனம் சஞ்சல மடைகின்றது. செய்தி கேட்ட தில் மகன் கார் விபத்தில் பலி யாகிவிட்டான் என்பது தெரிகி றது, மகன் கார் விபத்தில் அகப் பட்டதும், தாய் அதை இங்கு அதே நேரத்தில் உணர்ந்ததும், ஒரே நேரத்தில் நடந்த சம்பவங்
-ട്രമീബ Zക്രീ
இடைவெளி தூரம் என்பன கடந்து, நேரம், மனங்களினூடு தமது உறவை இருவரும் ஒருமித்து உணர்கின் றனர்.
இது இயல்பில் இரட்டையர் களாகப் பிறந்தவர்கள். ஒருவர் மீது மற்றவர் அளவு கடந்த
களாக உள்ளன.
அன்பு கொண்டவர்களிடையே
சாத்தியமாகிறது.
இடைவெளிகளைக் கடந்து, புலன் உறுப்புக்களின் பயன்பாடு இன்றி ஒருவர் மனதை மற்றவர் அறியும் இந்த ரெலிபதி முறை LDao, Guit Still (Mind Reading) Taur வும் அழைக்கப்படும்.
மேலும், இந்த ரெலிபதி முறையை ஒரு சிகிச்சை முறை யாகக் கையாண்டு பல நோய் களைக்கூட குணமாக்கி வருகின் றனர்.
விளக்கமளிப்பவர்: அருட்சகோதரர்
டே. இரெட்ணராஜா 66 வசந்தகம் ** கொழும்புத்துறை
29

Page 17
ഗ്ലൂ 2%്
கு ஒ நங்கூரமே!
தடுப்பக்கமும் உண்க்கு எடுப்புத் தான். அது தீயனவற்றுக்கு தடுப்பு
நல்லனவற்றுக்கு துடுப்பு எமக்கு களம் அமைக்கும் வாசகர் கடிதம்,
கேள்வி பதிலும் அருமை இறுதியில் சிலதுளிகள் என்னும் அறிவுத்துளிகள் بر மற்றும் ஏனைய அம்சங்கள்
அனைத்தும் சிறப்பே. நன்றி.
நீ வாழ்க! வளர்க !!
ஜெயதாரணி அமிர்தலிங்கம் ஆண்டு 12, யாழ் இந்து மகளிர் கல்லூரி
கு நங்கூரம் எமது கைகளில் தவழும் போது ஏற்படும் பெரு மைக்கும் பூரிப்புக்கும் அளவே யில்லை. இத்தனை சிறப்பு மிக்க நங்கூர இதழ் எமது ஈழத்தில் வெளிவருவதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
வர்ணகுலசிங்கம் வான்மதி யாழ்/நெல்லியடி மத்திய மகா * வித்தியாலயம்
30
0 உலகில் இன்று ஒவ்வொரு நாளுமே புதுப்புது அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புக்கள் உருவாகி வரும் . இவ்வேளை யில் இவை தொடர்பான செய்திகளையோ தகவல் களையோ எம்மால் உடனுக் குடன் பெறமுடியவில்லையே என்ற குறை நங்கூரத்தைக் கண்டவுடன் நீங்கி விடுவது போல் உள்ளது.
கி. செல்மர் எமில் ஊர்காவற்துறை
O மாதம் ஒருமுறை
மலருகின்ற மலரே - நீ சதாப்த ஆண்டுகள் சென் றாலும்
சாகாத அறிவுப் பூ!
செ. ஜெயகரன் ஆண்டு 13, யாழ்/கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம்
கு நங்கூர சஞ்சிகையே
நலமே நீ வந்துதித்தாய் இங்குலக மக்களது
இருளகற்ற எடுத்துரைத் தாய் தங்கத்தமிழீழ, எம்மினத்தின் இருளகற்றி இனிதே நீ வாழி
யோ. சிவாகரன் ஆண்டு 10 யாழ்/இந்துக்கல்லூரி

நிணநீர்
சில துளிகள்
ஒவ்வொருவருடைய உடலிலும் இயற்கையாகவே நோய்களை
எதிர்க்கும் நோயெதிர்ப்புத் தன்மை காணப்படுகின்றது. உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலே நீர்ப்பீடனம் (IMMUNITY) எனப்படு கின்றது. நிர்ப்பீடனம் குறையும்போதே நாம் நோய்களின் கோரப் பிடிக்குள் ஆளாக நேரிடுகின்றது. இந்நீர்ப்பீடன ஆற்றலுக்குக் காரணம் நிணநீர்தான்.
Ο
குருதியமுக்கம் காரணமாக குருதி மயிர்க் குழாய்களிலிருந்து வெளியேறி கலங்களை, இழையங்களைச் சூழ்ந்து காணப்படும் திரவம் இழையப்பாய் பொருள் எனப்படும்.
இழையப் பாய் பொருளின் அளவு அதிகரித்ததும், இதன் அமுக் கத்தாலும் தசைச் சுருக்கத்தாலும் இழையப் பாய் பொருள் நிண நீர் மயிர்க்குழாய்களுள் புகுந்துவிடுகின்றன.
நின நீர் மயிர்க்குழாயினுள் புகுந்த பாய் பொருளே நிணநீர் எனப்படுகின்றது.
எஸ். பீ. நாகநாதன்
நிணநீர் மயிர்க் குழாய்கள் நுண்ணிய வலைபோன்று காணப் படும். இவை தோலின் கீழுள்ள இழையங்கள், தசைகள், வயிற்றறை, நெஞ்சறை அங்கங்கள் ஆகியவற்றில் காணப்படும். சிறுகுடலில் பாற்குழாயாக ஆரம்பிக்கும்.
நிணநீர் மயிர்க்குழாய்கள் ஒன்று சேர்ந்து நிணநீர்க் குழாய்
களை உருவாக்குகின்றன. உடலின் இடதுபக்கம் நெஞ்சறைக்
கானையும், வலதுபக்கம் வலது நிணநீர்க் கானையும் ஆக்கும்.
வலது நிணநீர்க்கான் தலை, கழுத்து, நெஞ்சறைச் சுவரின் வலதுபக்கம், வலதுகை, சுவாசப்பை, இதயம் ஆகியவற்றில் இருந்தும் ஈரலின் டிேற்பரப்பிலிருந்தும் நிணநீரைப் பெறும்.
நெஞ்சறைக் sintesör ஏனைய பகுதிகளிலிருந்தும் நிண நீரைப் பெறும்.
31

Page 18
3.
நிணநீர்க் கான்களினூடாகப் பாயும் நிணநீர் மீண்டும் குருதி யுடன் கலக்கும் வகையில் தோட்பட்டைப் பகுதியில் உள்ள குருதிக் குழாயான காறையென்புக் கீழ்நாளத்தில் நின நீர்க் கான்கள் திறக்கின்றன.
இடுப்பு, அக்குள் போன்ற சில இடங்களில் நடுத்தரப் பரும ணுள்ள நிணநீர்ச் சிறுகணுக்கள் அல்லது சுரப்பிகள் காணப்படும்.
இக் கணுக்களே நோய்க்கிருமிகளை விழுங்கி அழிக்கும் நின நீர்க் குழியங்களையும், கிருமிகளைத் தாக்கி அழிக்கும் பிற பொருள் எதிரிகளையும் உற்பத்தி செய்கின்றன.
நிணநீரில் குருதித்திரவ இழையம் உணவுக் கூறுகள், நிணநீர்க் குழியங்கள், பிறபொருள் எதிரிகள் காணப்படுகின்றன.
பிறபொருள் எதிரிகளும், நிணநீர்க் குழியங்களும் நோய்கிருமி களை அழிப்பதாலேயே இயல்பாகவே உடலில் நோய் ஏற் படாத தன்மையான நிர்ப்பீடனம் ஏற்படுகின்றது.
கிருமிகளின் தொற்றுகை ஏற்படும்போது சிலசமயங்களில் நிண நீர்ச் சிறுகனுக்களில் நோய்க்கிருமிகளுக்கும் நிணநீர்க் குழியங் களுக்கும் இடையில் கடும் போர் நிகழ்கின்றது. இதனாலேயே நிணநீர்ச் சிறு கணுக்கள் வீங்கி நெறிகள் தோன்றுகின்றன.
நிணநீர்த் தொகுதியுடன் தொடர்பாக பல நோய்கள் ஏற்படு கின்றன.
கியூலெக்ஸ் நுளம்புகளினால் பரப்பப்படும் ஆனைக்கால்நோய் நிணநீர்க் கான்களையே தாக்குகின்றது. கியூலெக்ஸ் நுளம்பு கள் காவிச் செல்லும் பிலாறியே (FILARIAE) எனும் நுண் புழுக்கள் நிணநீரிழையங்களில் தேங்கி அடைப்பை ஏற்படுத்து வதால் இந்நோய் உருவாகின்றது.
HIV என்னும் வைரசு நிணநீர்க் குழியங்களைத் தாக்குவத ണ്ണ Tി நிர்ப்பீடன ஆற்றல் இல்லாமற்போய் in L di பல் வேறு நோய்களினதும் விளை நிலமாகின்றது. இதுவே GTull'sfu (AIDS - ACQUIRED IMMUNE DEFICIENCY SYNDROME) என்னும் உயிர்க் கொல்வி நோயாகும்.

உங்கள்
குழந்தைகளின்
அறிவுப் பசிக்கெனவும்
நாளொன்றுக்கு
5ο σώίύ
ஒத்க்கிடுங்கள்
[[fifir
சமூக அறிவியல் ஏடு
மாத சஞ்சிகை
விலை ரூபா 1 B -
இதழொன்றின் பிற்பனை விலையைவிட இதன் ஆக்கச்செலவு அதிகமாகும். 30.6.93இற்கு முன்னர் சந்தாதாரர் ஆகி. எங்களுக்கு உதவுவதன் மூலம் உங்களுக்கு உதவிடுங்கள்.
ஆறுமாத சந்தாத் தொகை ரூபா OO =
தபாற் சேவபு உட்பட

Page 19
JNANKKOOR BIJ Wyff
31. Jaroseph's Cathol'||
 

{ Â ^gi CP-IP OF?) U U NE 93