கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 1995.02

Page 1
இந்த
ஆ)சாமிகள்?
o
பலவீனத்தை
பனமாக்கும்
agang STU
புருஷர்கள்
søgå 95
〜 梧 呼 인 霸 후
 


Page 2
"நாம் சமாதானததை விரும்புகின்றோம். ஆனால் ஏகாதி பத்தியம் ஒரு போரை நடத்துவதில் அழுங்குப்பிடியாக நின்றால் நாமும் உறுதியான தீர்மானத்துடன் போரை நடாத்திவிட்டு, பின்னர் நிர்மாணத்தில் ஈடுபடுவதின்றி வேறுவழியில்லை. ஏகாதிபத்திய வாதிகள் பழிவாங்குவதற்குப் போடும் சூழ்ச்சிகளுக்கு எதிராக நமது விழிப்புணர்வை ஒரு போதும் தளாத்தி விடககூடாது. யார் நமது விழிப்பு புணர்வைத் தளர்த்துகிறாரோ, அவர்தம்மை அரசியல் ரீதியில் நிராயுத பாணியாக்கி, தம்மை ஒரு செயலற்ற நிலைக்குள் தள்ளிவிடுவார்.'
- மாஒ சேதுங்
இப்பக்க அமைப்பு, அங்கர் பார்மசி Anchor Pharmacy
அரசடிவிதி கந்தர்மடம்,
யாழ்ப்பாளம் =
 
 

நங்கூரம்
AGLIG) : 3
ք հմiնմ է 5
பக்கங்களின் எண்ணிக்கை 32
சமூக அறிவியல் ஏடு
மாதாந்த சஞ்சிகை
O5-02-1995
விலை: ரூபா 15-00
படப்பிடிப்பு பேபி போட்டோ
நிர்வாக ஆசிரியர்
நங்கூரம் அரசடி வீதி, கந்தர்மடம்
யாழ்ப்பாணம்.
IŠIII 56ôTBÉf12ĎL156I
த கோப்பி, தேநீர் போன்ற பானங்களிலுள்ள த ஃ பின் (Caffeine) என்னும் சேர்வை பெண்களின் தாய்மைப்பேற்றைக் குறைக்கும் ஆற்றல் வாய்ந்தது என்று அண்மையில் கண்டறியப் பட்டுள்ளது. அமெரிக்காவில் 1909 பெண்களை ஆராய்ந்து இந்த உண்மையை வெளிக் கொணர்ந் திரு க் கிறார்கள். நாளொன்றுக்கு 30 தில் கிராம் சுஃபின் - இது 3 குவள்ை கோப்பியில் அல்லது 9 குவளை தேநீரில் உள்ள அளவாகும்-உட் கொள்ளும் பெண்களின் தாய் மைப் பேறு 87 வீதத்தினால், சாதாரண பெண்களை விடக் குறைந்துள்ளமை ஆப் வில் தெரியவந்துள்ளது.
 ைசாதாரண மின் குமிழ்கள்
குழந்தைகளைக் கவர்கின்றன அநேகமாக கோளமாகவோ குழா யாகவோ இருக்கும் இத்தகைய விளக்குகளைக் குழந்தைகள் தொடப்போப் மின் அதிர்ச்சியை வாங்கிக் கொள்வதுடன் சில சம பங்களில் நிக் காயங்களையும் ஏற்படுத்திக் கொள்கின்றன. ச்ெ சிரமங்களைத் தவிர்க்க அமெரிக் காவின் ஆஸ்ரின் (Austin) நிறு வனம் புதியவகை மின்விளக் கொன்றை அறிமுகம் செய்துள் ளது. லைம்லைற் (Line light) எனப்படும் இது சாதாரண மின் விளக்குகள் போல சூடாகாது
L K L L S S S Y TTM L T S L S K படக்கூடியவாறு தட்டையா
அமைந்திருக்கும்.

Page 3
மணற்காடு
ச்சி பிரித்தாற்போன்று செல் 9 லும் கற்பாதையின் ஒரு புறம் அடர்ந்த சவுக்கங் காடு களும், மறுபுறம் எந்த மரங் களுமேயில்லாத மணல் மலை களும், பாதையின் (pg. 69a) முடிவேயில்லாது விரியும் நீலப் பெருங்கடலுமாய் பார்ப்பவர் களை வியப்பில் ஆழ்த்தும் மணற் காட்டுப் பிரதேசம் வடமராட்சி கிழக்கின் தனித்துவங்களில் ஒன்று.
தமிழ் மன்னர்கள் ஆட்சியின் புராதனச் சான்றுகளைத் தனக்கு கீழாகத் தாங்கி நிற்கும் சரித் திரப் பிரசித்தம் பெற்ற இப்பகுதி இன்று சுற்றுலாத் தளமாகி விட்
ه in-س
1510 ஆம் ஆண்டளவில் கட்டி முடிக்கப்பட்ட கிறீஸ் த வ த் தேவாலயமொன்று, மணல் மலை களின் முகடுகளில் இடிபாடுகளா கத் துருத்தி நிற்கின்றது. ஒரு நூற்றாண்டு காலம் பூரணமாகக் கழியும் முன்பே மணற்புயலி னால் மூடப்பட்ட இவ் வேதக் கோயில் கடந்தகாலங்களில் பாலை பரவிய வீதத்தின் சாட்சி யமாய் நிற்கின்றது.
பாலை பரவுதலை இன்று தடுத்து நிறுத்திய பெருமை தமிழீழ பொருண்மிய மேம்
பாட்டு நிறுவனத்தையே சாரும். பெருமளவிலான நிலப்பரப்பில் சவுக்கங்காடுகளை உருவாக்கி
2
பொருண்மிய மேம்பாட்டு நிறு வனத்தின் சூழல் பாதுகாப்புப் பகுதி பராமரித்து வருகின்றது.
பருவப் பெயர்ச்சிக் காற்றி னால் மணல்கள் வீசப்பட்டு மேலும் பாலை பரவுவதை
சவுக்கங்காடுகள் தடை செய்வ துடன், குடாநாட்டு மக்களின் அதிகரித்துள்ள விறகுத் தேவை யின் ஒரு பகுதியையும் ஈடு செய்து வருகின்றது. இயற்கைக் காடுகள் இல்லாத யாழ்க் குடா நாட்டின் குறையை இச் சவுக் கங்காடு பூர்த்தி செய்துள்ளது.
வானத்துக்குச் சாமரம் வீசும் சவுக்கங்காடுகளும், ஆர்ப்பரிக்கும் கடலும், வீசியெழும் மணற் புயலும் மீன் பிடிக் கிராமமான மணற்காட்டுப் பகுதியை இன்று சுற்றுலாக் கேந்திரமாக முயர்த்தியுள்ளது.
岛历
 
 

ܝ݇ܬܵ}
sL6) - 3 o66) - 5
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன். - umovévarů
அதிக எண்ணிக்கையில் பல்கலைக்கழகம் சென்று கொண்டிருந்த தமிழ் மாணவர்களை ஒரங்கட்டுவதற் கென்றே அன்று பூரீலங்கா அரசால் தரப்படுத்தல் அமுல் படுத்தப்பட்டது.
விதைத்த வினைகளின் விளைவை அறுவடை செய்து கொண்டிருக்கும் பூரீலங்கா அரசு, இன்று தரப்படுத்தலை முற்றாக நீக்கி விடுவது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது
க. பொ.த. உயர்தரத்தின் கலைப் பிரிவுக்கும், ஆண்டு 5இன் புலமைப் பரீட்சைக்கும் இலங்கை பூராவும் ஒரே வெட்டுப்புள்ளிதான் என அறிவிப்பும் செய்து விட்டது.
அரசின் இந்த நடவடிக்கை, சமாதானப் புறா சுமந்து வரும் ஒலிவ் மரத்தின் பச்சைத் தளிராகவே வெளி உல குக்குத் தென்படும்.
ஆனால் உண்மை நிலை அதுவல்ல யுத்தத்தினால் கல்வித்தரம் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பகுதிகளில் அடிப் படைக் கல்வி வசதிகளையேனும் பூர்த்தி செய்யாத அரசு, அவசர அவசரமாகத் தரப்படுத்தலை நீக்க முயற்சிப்பதன் தட்சுமம் தெளிவானது.
இன்று வசதி வாய்ப்புகளினால் உயர்ந்து நிற்கும் தென் இலங்கை மாணவர்களைப் பெரும் எண்ணிக்கையில் பயனடைய வைக்கும் தந்திரோபாயம்தான் இந்தத் தரப் படுத்தல் தளர்வு. ()

Page 4
ரு வரும் இரட்டையர்கள். ®: ஒத்த இரட்டையர் கள். பிறந்து ஆறுவாரங்களின் பின்னர் அவர்கள் பிரிய வேண்டி ஏற்பட்டது. முப்பத்தொன்பது ஆண்டுகளின் பின்னர் அமெரிக்
காவின் மின்னசோட்டாப் பல் கலைக் கழகத்தில் இரட்டையர்,
கள் தொடர்பான ஆராய்ச்சி யொன்றுக்காக அவர்கள் சந்தித் துக் கொண்ட போது ஆராய்ச்சி யாளர்களுக்குச் சுவையான செய் திகள் கிடைத்தன. இருவரும்
- துலக்கப்படாத மர்மம்
-æs/^^seannevana/^^^ aðæ'\*\• aðs^-A-
இரண்டு திருமணங்கள் செய்தி
ருந்தனர். இருவருடைய முத லாம், இரண்டாம் மனைவிய ரின் பெயர்கள் ஒன்றாயிருந்தன. அவர்களது முதல் குழந்தைக்கு ஒரே பெயரிட்டிருந்தனர். இரு வரும் ஒரே மாதிரியான கார் களை வைத்திருந்தனர்.
இதுவும், இதுபோன்ற சம்ப வங்களும் இரட்டையர்கள் பற் றிய மர்மங்களில் ஒரு பகுதி தான். அருகருகே வைத்துப்
4.
பார்த்தாலும் அடையாளம் பிரிக்க முடியாத இத்தகைய மனிதவார்ப்புகள் எமது சூழலி
லும் உண்டு.
இரட்டையர்களில் இருவகை யினர் இருப்பதாகத்தான் பெரும் பாலானவர்கள் அறிந்திருக்கி றார்கள். ஒன்று : ஒத்த இரட் டையர்: ஒரு முட்டை ஒரு விந் தினால் கருக்கப்பட்டு உருவாகும் நுகம் இருசமபாதிகளாகப் பிரிந்து த னித் தனி முளையங்களாக விருத்தி அடைவதால் ஒத் த gul 60Luit (Identical Twins) உருவாகின்றனர். இவர் க ள் பெரும்பாலும் எல்லா வழிகளி லும் ஒத்தவர்கள். அவர்களது பரம்பரை அமைப்பும் ஒத்தவை. அடுத்தவகை : ஒவ்வா இரட்டை யர். இரு வெவ்வேறு முட்டை கள் ஒரே மாதிரியான விந்துக ளால் கருக்கட்டப்பட்டு, தனித் தனி முளையங்களாக விருத்தி யடைவதால் ஒவ்வாத இரட்டை turiassir (Fraternal Twins) acts
sfžalob
 

வாகின்றனர். இவர்கள் பரம் பரை அமைப்பிலிருந்து பால் வரை சகல விடயங்களிலும் வேறு படுகின்றனர்.
இவ்விருவகையினரையும் விட, இன்னுமொரு வகை இரட்டை யர்களும் உள்ளனர் - அ  ைர ஒத்த இரட்டையர் (Half
றுமையைக் காட்டுகின்றனர்; aå ø இரட்டையர்களுடன்
குறைந்தளவு நெருக்கத்தையே கொண்டுள்ளனர்.
இம் மூன்று ரக த் தி னரில் ஆராய்ச்சிக்குரியவர்கள் ஒத்த இரட்டையர்களே. உலகில் உள்ள இரட்டையர்களில் மூன்றிலொரு
செல்வன், ப. வினோஜன், செல்வன். ப, அனோஜன் இந்த ஒத்த ASøvu Gouluu dhasht இருவரும் ஆண்டு 12இல் பயிலும் of. Gautavast கல்லூரி (Pasov6lvi és cir. இக்கட்டுரை தயாரிப்பிற்கான தகவல்களைப் 6up
067 ஒத்துழைப்பு வழங்கியவர்கள்
Identical Twins) ser GT särgy gairt களுக்குப் பெயர். பெண்ணின் உடலில் முட்டைக்கு முன்னர் தோன்றும் அமைப்பு (Precursor of ovum) gav Lu nr 60 s GMT T s LÜ பிரிந்து, பின் முட்டைகளாகிக் கருக்கட்டப்படுவதால் 60 pt ஒத்த இரட்டையர்கள் பிறக்கின் றனர். இவர்கள் ஒவ்வா இரட் டையர்களுடன் நெருங்கிய ஒற்
நங்கூரம்
பங்கினர் ஒத்த இரட்டையர்கள் தான். உலகில் ஆயிரம் பிறப் புக்களில் 4 சோடி ஒத்த இரட்டை யர்கள் பிறக்கின்றனர்.
இந்த இரட்டையர்களின் உல கம் மர்மம் நிறைந்தது. சில மர்மங்கள் துலக்கப்பட்டு விட் டன. நுகம் பிரியும் காலம் ஒத்த இரட்டையர்களின் ஒத்த தன்மை
s

Page 5
யைத் தீர்மானிக்கிறது. நுகம் காலங்கடந்து இரண்டாகப் பிரி வடைவது இரட்டையர்களிடை யேயான ஒத்த தன்மைகளை அதிகரிக்கின்றது, கருக்கட்டப் பட்டு 13 நாட்களின் பின்னர் நுகம் இரண்டாகப் பிரியுமா னால் இரட்டைக் குழந்தைகள் ஒட்டிப்பிறக்கின்றன. இப்படி ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் தான் சயமிஸ் இரட் | GDLuurf (Siamese Twins) 6T 6UTŮ படுகின்றனர். நுகப் பிளவு கருக் கட்டலின் பின்னர் 10 நாட் களுக்குள் நடந்தால் ஒவ்வொரு முளையமும் தனித்தனியான சூல்வித்தகத்தைக் கொண்டிருக்
கும். சூல்வித்தகம் (Placenta) என்பது தாயிடமிருந்து சிசு உணவைப் பெற உதவும்
அமைப்பு. நுகப்பிளவு கருக்கட் டல் நடைபெற்று 10 நாட்களுக் குப் பின்னர் நிகழ்ந்தால் இரு முளையங்களும் ஒரே சூல்வித்த கத்தைப் பங்கு போ ட் டு க்
கொள்ளும். இப்படிப் பிறக்கும்
இரட்டையர்களில் ஒருவர் மற் றவரின் "ஆடி விம்பம்" போன்று இருப்பார். அதாவது ஒருவருக்கு இடது கைப்பழக்கமிருந்தால் மற் றவருக்கு வலது கைப்பழக்கமிருக் கும். ஒருவரின் தலைமுடி இடப் புறமாக சுருண்டால் மற்றவரின்
தலைமுடி வலப்புறமாக சுரு ளும்,
பெண்ணின் பலோப்பியன்
குழாயில் முட்டை வித்தினால் கருக்கட்டப்பட்டு, எதிர்கால உயி ரொன்றின் நுகம் (Zygote) உரு
6
வாகும் போதே ஒரு "உயிர்க் 646tub (Clock of Life) gly-dias ஆரம்பித்து விடுகிறது. இவ் உயிர்க்கடிகாரம் அவ் உயிரின் பல இயல்புகளை ஆள்கிறது.
ஒத்த இரட்  ைடய ரைப் பொறுத்தவரை இக்கடிகாரம் ஒரேமாதிரியாக இயங்குகிறது. இரட்டையர்கள் இரு வரும் பெண்களாயின், இரு வரும்
பெரும்பாலும் ஒரே நேரத்தில் பூப்பெய்துகின்றனர் பல் முளைப் பது, வழுக்கை ஏற்படுவது - சில சமயங்களில் தலைவலி ஏற்படு வதுகூட ஒன்றாகவே நிகழ்கின் றன.
புலன் கடந்த உணர்வுகள் (Extra Sensory Perceptions) Gréir பது எமது புலன்களின் உதவி யின்றியே சில தகவல்களை உணர் வதைக் குறிக்கும். இவ்வகை உணர்வு இரட்டையர்களிடையே நிலவுவதாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாகப் பல சம் பவங்கள் பதிவு செய்யப்பட்டுள் ளன. இரட்டையருள் ஒருவருக்கு ஏற்படும் ஒரு பாதிப்பு, மரணம் என்பன வெகு தொலைவிலுள்ள மற்றவரால் உணரப்படுவதாக இப்பதிவுகள் மூலம் அறியப்படு கின்றது. இப்புலன் கடந்த உற் வுக்கு விஞ்ஞானிகள் வேறு வகை யில் விளக்கம் தருகின்றார்கள். இருதனியான உடன்பிறப்புகள் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொள்வதிலும் பார்க்க, இரட் டையராகப் பிறந்தவர்களில் ஒரு வர் மற்றவரைப்பற்றி அதிகமாக நினைத் துக் கொள்கின்றனர்
நங்கூரம்

இப்படி 'நனவிடைத்தோய்ந் திருப்பது புலன் கடந்த உணர்வை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு வரைப் பற்றி ஒருவர் அடிக்கடி எண்ணுவது இரட்டையர்களி டையே பலமான ஒற்றுமை நில வக் காரணமாகிறது.
இயற்கையின் செயல் பாடுக ளைப் பற்றி ஆராய விஞ்ஞானி களுக்கு இயற்கையே "ஒத்த இரட் டையர்' எனும் பெயரில் உப கரணத்தைக் கொடுத்திருக்கிறது. ஒத்த இரட்டையர்கள் ஒரே பர: பரையலகு (gene) களைக் கொண் டிருப்பதால், பரம்பரையலகுக ளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஒத்த இரட்டையர்கள் பயன் படுகின்றனர். மனிதனின் இயல் புகளில் எவை “ஜின்’களால் ஆளப்படுகின்றன, எவை வளர்க் கப்படும் சூழலினால் ஆளப்படு கின்றன என ஆராய ஒத்த இரட்டையர்கள் பயன் படுகின் றனர். இவ்வகை ஆராய்ச்சியில் முன்னணியில் நிற்கும் அமைப்பு மருந்துவப் பிறப்புரிமையியல், மற்றும் இரட்டையர் பற்றிய ஆராய்ச்சிக்கான கிறகர் - மெண்
டல் இன்ஸ்டிடியூட் (Gregor Mendel Institute of Medical Genetics and Twin Studies) ஆகும். இத்தாலித் தலைநகர்
ரோமில் இருக்கிறது இவர்களது ஆராய்ச்சிகளிலிருந்தும் பல விட யங்கள் வெளியாகியிருக்கின்றன.
LASGëraorGafru LLITij Lugi 3560 apë கழகத்தில் நடாத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் எமது நடத்தையில்
நங்கூரம்
6 6 எப்போதும்
மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும் மனிதன், இறுதியில் தனக்கென்று ஒரு கொள்கை கூட இல்லாதவனாக ஆகிவிடுகிறான்.
...99
ஒரு பகுதி பரம்ப ரை யு டன் தொடர்புடையது எனத் தெரி விக்கின்றன. தலைமை தாங்கும் இயல்பின் பெரும் பகுதி, கற் பனாசக்தி, கவலைப்படுவது, ஆபத்தைத் தவிர்ப்பது போன்ற இ ய ல் புக ள் பரம்பரையுடன் தொடர்புடையவை. GBsmru' LCDag (Aggression), Qev "Su a 600 stay ( Achievement), Fepass தில் நெருங்கிய உ ற வுகள் (Social Closeness) Qasir aireyti, ஆற்றல் போன்றன சூழலினால் ஆளப்படும் இயல்புகளாகக் குறிப் பிடப்படுகின்றன. ஒரு கொள் கையின் படி ஒருவர் எந்தச் சூழ்நிலையை விரும்பித் தேர்ந் தெடுக்கின்றார் என்பதை அவ ரது ஜின்’ தீர்மானிக்கிறது. அவர் தேர்ந்தெடுக்கும் குழ் நிலையோ, அவரது நடத்தையை வடிவமைக்கிறது. எனவே, ஜீன் கள் ஒரு மனிதரின் நடத்தையை
மறைமுகமாகவும் தீர்மானிக்கின்
நறன.

Page 6
எனினும் மனிதர்கள் ஜின் களுக்கு அடிமைகள் அல்ல என் றும் இரட்டையர்கள் பற்றிய ஆய்வுகள் மூலம் தெரியவருகி றது. வளரும் சூழ்நிலையை ஒத்த இரட்டையர்களுக்கு மாற் றி வைத்து ஆராய்ந்த போது, அவர்களின் நடத்தையைக் கணி சமாக மாற்ற முடிந்துள்ளது.
த. கெங்காதரன்
அமெரிக்கப் பெண்களிடையே செய்யப்பட்ட ஆய்வுகளின்படி ஒரு பெண் இரட்டைக் குழந்தை களில் ஒருவராக இருப்பின் அவ ருக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் வாய்ப்பு 58 இற்கு ஒன்று ஆக இருந்தது. தனது பரம்பரையில் இரட்டைப் பிறப் புகளே இல்லாத ஒரு பெண் இரட்டைக் குழந்தை பெறும் வாய்ப்பு ஒரு சதவீதத்திலும் சிறிது அதிகம் ஏற்கனவே குழந் தைகள் பெற்ற ஒரு பெண்ணுக்கு, 35 - 40 வயது வீச்சினுள் இரட் டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.
கருக்கட்டலை ஊக்குவிக்கும் tortigoprasai (Fertility Drugs) பெண்ணின் உடலில் சனணித் g5GU L 6pGuontestwassir (Gonado - tropins) இன் செறிவை உயர்த்து கின்றன. இதனால், கருக்கட்டல் மாத்திரைகள் பயன்படுத்தும் பெண்களுக்கு இரட்டைக் குழந் தைகள் பிறக்கும் வாய்ப்பு அதி கம், கருக்கட்டல் மாத்திரை
8
உட்கொண்டபின், உடனடியாக் விந்து முட்டையைக் கருக்கட்டு மானால் இரட்டைக் குழந்தை உருவாவதற்கான் வாய்ப்பு மிக வும் உயர்கிறது.
இரட்டையர்கள் பற்றிய புதிய விடயம் ஒரு நோயைப் பற்றி யது - இரட்டையர் மறையும் வியாதி (Vanishing - Twin Syndrome) 6T6irp Gu u if. இரட்டைக் குழந்தைகள் பல உரு வானாலும், அவற்றுள் 78% ஆனவை ஒரு குழந்தையில் தான் முடிவடைகின்றன. க ர் ப் படம் தரித்து ஐந்தாம் மாதமளவில் ஒரு குழந்தை தாயினால் உறிஞ் சப்பட்டுவிட ஒரு குழந்தை மட் டும் எஞ்சுகிறது. இதன் கார ணத்தை விஞ்ஞானிகளினால் இன்னமும் அறிய முடியவில்லை.
உலகின் பல அமைப்புக்களைப் போல் இரட்டையர்களுக்கும் சங் கங்கள் உண்டு. அமெரிக்காவிலி ருந்து ஒரு இரட்டையர் சங்கம் ட்வின் (Twin) எனும் பெயரில் சஞ் சி ைக வெளியிடுகின்றது. மேலும், அமெரிக் கா வின் ஒ ஹியோ மாநிலத் தி ல், * “6?särsso (? fé (Twins burg) எனும் நகர் இருக்கிறது. ஆண்டு தோறும் கோடை காலங்களில் இந்நகரில் உலகம் பூராகவுமிருந்து ஆயிரக்கணக்கான இரட்டையர் கள் வந்து ஒன்று கூடி இரட்டை யர் விழாக் கொண்டாடுகின்ற 6wrf. O
நங்கூரம்

உங்களுக்காகவே ஒரு புதியதொடர் ! சமூக்ச்சீரழிவுகளின் சாட்சியங்களாக எம் மிடையே வாழ்ந்து வரும் 'உயிர்ச்சுவடுகள்" பற்றி நீங்களும் எழுதி அனுப்புங்கள், இவை: கற்பனை கலக்காத உண்மைச் சம்பவங்களாக இருத்தல் வேண்டும், சமூகச்சீரழிவுகளுக்கு எதிரான மனப்பாங்கை வாசகர்களிடையே வளர்க்கக் கூடியதாய் இருத்தல் வேண்டும்.
Mamam Ma
-96T6)D FDLIQlb
AANaMMM MMMNMMMMNMMMMNMMM MMMMYMbin/*
க்கிங் நடவடிக்கைகளில் பலி J l வெள்ளாடுகளில் ரூபா ரட்ணசீலியும் ஒருவர். ரூபா ரட்ணசீலி இப்போது இருக்கும் நிலையை நெடுந்தூர நடைப்பய
நங்கூரம்
ணத்தின் பின்னர் அடைந்திருக் கிறார். அந்தப் பெண்ணுடைய இரண்டு கால்களும், கடத்த பத் தொன்பது ஆன்டுகளாகச் செய லிழந்துள்ளன. இந்தக்கசப்பான உண்மையையும் கடந்து, ரூபா ரட்ணசீலி நடந்து வந்த பாதை
தடைகள் பல நிறைந்தது.
பேராதனைப் பல்கலைக் கழக, விவசாய விஞ்ஞான பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட போது, ரூபாவைப் போல் பெருமைமிக்க பெண் யாரும் இருந்திருக்க முடி யாது. கரன்தெனியாவிலிருந்து விஞ்ஞானப் பிரிவுக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்த ஒரே மாணவி ரூபா ரட்ணசீலிதான்.
ரூபாவின் தந்தை இறந்து விட் டதால் தன் குடும்பத்திற்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு ரூபாவிடம் இருந்தது, படிப்பில் கவனம் செ லுத்த வேண்டும், சமுக அந்தஸ்
ரூபா ரட்ணசீலி;
ராக்கிங்கின்
கொடுமையினால் VK.
முடமாகிப்போன
ஒரு உயிர்ச்சுவடு

Page 7
துடன் வாழ வேண்டும் எ ன் ற கனவுகளுடன் ரூபா பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குள் பிரவே சித்தார் ஆனால், அப்பல்கலைக் கழகத்தை விட்டு சக்கர நா ற் காலியுடன் வெளியேறவேண்டிய நிலை எற்பட்டுவிட்டது.
ரூபா ஒரு கலவன் பாடசாலை யில் படித்த பெண்தான். எனினும் பல்கலைக்கழக சூழலும் ராக்கிங் உபாதைகளும் அவளது நெஞ்சில் அந்நிய உணர்வைத் தோற்து வித்தது.
1975 ஆம் ஆண்டில் அந்த விதிவசமான நாள் வந்த து, அப்போது ரூபாவுக்கு இருபத்தி ரண்டு வயது. அவர் தங்கி யிருந்த இராமநாதன் மண்டபத் தின் இரண்டாவது மாடிக்கு சில சிரேஷ்ட மாணவர்கள் வந்தனர். அவர்கள் ரூபாவை ராக்கிங் என்ற போர்வையில் மானபங்கப்படுத்த முயற்சித்திருக்கின்றனர். தப்பிக் கொள்ளும் முயற்சியில் கூச்சலிட் டுத் தோற்ற ரூபா அவர்களிட மிருந்து தப்பி ஓட ஆரம்பித்தார். அவர்கள் தொடர்ந்து துரத்திவந் தனர். இக்கட்டான சூழ்நிலையிலி ருந்து தப்பிக் கொள்வதற்காகத் தற்கொலை செய்ய முடிவெடுத்து இரண்டாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியே கீழே குதித்து விட்டார் ரூபா ர ட் ண சீ வி. அதிர்ச்சியில், ரூபாவின் அடி முள் ளென்புப் பகுதி பாதிக்கப்பட்டு
O
இடுப்புக்கு கீழுள்ள உடற்பகுதி செயலிழந்து போய்விட்டது.
அற்த மண்டபத்திலிருந்த சமை யலறைக்கு அண்மையில் அவர் தரை தொட்டிருக்கிறார். சமை பல்காரர் அவரை கண்டி அரச வைத்தியசாலைக்கு எடுத் து ச் சென் றார். துரத்தி வந்த சிரேஷ்ட மாணவர்கள் மறைந்து விட்டனர். ரூபாவின் தோழிகளும் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியி னால் அவருக்கு உதவும் நிலையில் இல்லை.
மருத்துவ மனை யி ல் மயக்க நிலையிருந்து மீண்ட போது தான் இனிமேல் முன்னர் போல எழுந்து நடமாடமுடியாது என்ற உண்மை ரூபாவுக்குப் புரிந்தது. சுதாகரித் துக் கொள்ளவே அவருக்குப் பல நாட்கள் பிடித்தன. பின்னர் அவர் பேசிய போது தற்கொலை செய்யும் நோக்கத்துடன் தா ன்
மாடியிலிருந்து குதித்ததாக ஒப்புக்
கொண்டார். ' என் ஈல் அவர் களை வெல்ல முடியாத போது செத்து விட நினைத்தேன். அவர் களிடம் துன்பப்படுவதை விட, மரணம் பரவாயில்லை. ஆனால் இப்போது தான் எ ன க் குத் துன்பம் ஆரம்பித்திருக்கிறது ". இப்படி ஜீரணிக்க முடியாத அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். பாடசாலையில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட
இனி மேல் எழுந்து
நங்கூரம்
நான்,

நடமாட முடியாத நிலையிலிருப் பதை நினைத்த போது, மன வேதனை அதிகரித்தது.
ரூபாவின் கால்களில் குழாய்கள் செலுத்தி திரவங்களை வெளி யேற்றினார்கள். நோவைச் சரி செய்ய சிறிய சத்திரசிகிச்சைகள் பல செய்தார்கள். உடற் பயிற்சிச் சிகிச்சை அளித்தார் கள் : ஆனால் இவை எதுவும் செயலற்
இப்படி இ ட மாற்றங்களை யும், சத்திரசிகிச்சையும் அனுப வித்த பின் 1978இல் ரூபா அவரது வீட்டிற்கு வந் தார் , கண்டி லயன்ஸ் கழகம் அவருக்கு ஒருசக் கர நாற்காலியை வழங்கியது. வீட்டிலிருந்தபடியே  ைதய ல் வேலை செய்ய ஆரம்பித்தார். மாதம் ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது என்பதை விட, கவ லைகளிலிருந்து தப்பியிருக்க
詹/// ன்ற efé III ré Í í ;
**?& /^(?6°p? &# @ * (মে’ হৈ) * முேகங்க:ன ஒக்ஸ்போட் கேம் சிறிட்ஜ் பல்கலைக்கழகங்களில் ac. 'a (ré é a' Gdariday. evórsanad
മൃf( களில் தான் ந்த ஆல்ங்கள் எல்லாம், ர/ :ங்கில் ஈடுபடுபவர் ad c Gar pa Avapac& Gar நோயாளிகளாகத்தான் f க்கீ prd 4 év. Sgy 6:3. 議á குறைபாடு, இதை நி:த்தில் ப்ய பல்கலைக்கழகத் 'கு வெளியே
'qyö 6Qu/rdğğ (oor6a7 43C-Giu 4pdiaD46
as ir Gg GMpaw" Guig a fosfoaudi , y. gyadøø avasos
றுப் போன கால்களை ஒன்றும் செய்யவில்லை. கண் டி, அரச மருத்துவ மனையில் ஏழு மாதங் கள் இவ்வாறு கழித்து விட்டு, ராகம மறுவாழ்வு மருத்து வ ம  ைன க்கு மாற்றப்பட்டார் அங்கு அடுத்த ஐந்து மாதங்கள் இருந்தபின் மீண்டும் கண் டி மருத்துவ மனைக்கு மாற்றினார்
喀尔*。
Sava.wd
அவருக்கு ஒரு வேலை கிடைத்தது தான் சந்தோஷமான விடயம்.
1980 இல் ரூபாவுக்கு இன்னு மொரு பிரச்சினை. சூழ்நிலை தாங்கமுடியாத பாரமாக த் தோன்றியதால் மனநிலை பாதிக் கப்பட்டார். ஆறு மாத காலமாக சுயமான நினைவுகளற்றுப் படுக் கை யில் இருந்தார், இ ைட
1

Page 8
யிடையே நி ைன வு கள் வரும்; ஆனால், சில நாட்களில் மீண்டும் மனநிலை பாதிக்கப்பட்டுவிடும். ஆங்கில மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என்று தொடர்ந்த சிகிச்சைகள், அவரது இளைய சகோதரிகள் இருவரின் ஆதரவு என்பன, இந்த இருண்ட குகையி லிருந்து அ வரை வெளியே கொண்டு வந் த ன.
அவரது கதை சில பத்திரி கைகளில் வெளிவந்தபோது பலர் அவருக்கு உதவ முன் வந்தனர், 1993 பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கல்விக் கழகம் மூன்று லட்ச ரூபாய்களுக்கு மேல் செலவு செய்து ரூபாவுக்கு ஒரு வீடுகட்டிக் கொடுத்திருக்கிறது.இன்னுமொரு 50,000 ரூபா வங்கியில் நிரந்தர வைப்பில், ரூபாவின் பெயரில் இடப்பட்டிருக்கிறது. அரசும், தனியார் நிறுவனங்கள் சில வும் கூட உதவிகள் வழங்கின. ஒரு வர் ன த் தொலைக்காட்சிப் பெட்டி, சில தளபாடங்கள் என்ப வற்றுடன் வசதியான ஒரு சக்கர நா ந் கா லி யு ம் ரூபாவுக்கு அன்பளிப்பாகக் கிடைத்துள்ளன" இப்போது ரூ பா é956Qu60)6ayu படுவதற்கு நேரமில்மை, ஒரு நாளைக்கு ஒரு உடை என்ற விதத் தில் தையல் வேலை செய்து சம் பாதிக்கிறார். படிப்பு என்ற அத் தி யா யம் தன் வாழ்க்கையில் கடந்து விட்டதாகக் கூறும் ரூபா ரட்ணசீலி, பத்திரிகைகள், புத்த கங்கள் வாசிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.
Jan 25, 95,, Sun Day Times aenog iš
திருமதி சரோஜா சிவச்சந்திரன்
12
நங்கூரம்
 

தியிலிருந்தே புறாக்களை நெடுந்து ர ம் செய்தி அனுப்புவதற்குப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் புறாக்கள் எப்படித் திசை தவ றாமல் பறக்கின்றன என்பது பின்னர்தான் தெரிய வந்தது. "பூமியில் பரவியிருக்கும் வலிமை குறைந்த காந்தக் கதிர்வீச்சுத் தான் புறாக்களைத் தமது திசையை அறிய வைக்கின்றன என்பதுதான் அந்தக் கண்டு பிடிப்பு. இக் கதிர் வீச் சில்
இன்னுமொரு 9IIITLIlli
- மன்காந்தக் கதிர்ப்பு
செயற்கையாகக் குழப்பங்கள் ஏற்படுத்தப்படும் பொழுது புறாக்களும் திசை மாறுகின்றன. இந்த உண்மை அறியப்படும் வரை உயிர்த் தொழிற்பாடுகளை மின்காந்தக் கதிர்வீச்சுகள் எந்த வித த் தி லும் பாதிப்பதில்லை என்றுதான் எல்லோரும் நம்பி யிருந்தனர். இதன் பின்னர்தான், அதிக செறிவுள்ள மின்காந்தக் கதிர்வீச்சுக்களால் உயிர் இழை யங்கள் சூடாக்கப்பட்டு இறப்ப
gdaorö
தாக அறியப்பட்டது. ஆனால் தற்போது பலவீனமான மின் காந்த அலைகளும்கூட உயிர் களைப் பாதிப்பதாக கண்டறிந் துள்ளார்கள். 'மின் கா ந் த க் கதிர்ப்புக் கடலில் மூழ்கியிருக் கும் எமக்கு இச்செய்தி முக்கிய மானது.
மின்காந்தக் கதிர்ப்பு (Electro magnetic radiation) 676irg fisir துணிக்கைகளின் அதிர்வினால் உருவாகும் அலைகளைக் குறிக் கிறது. எமது சூழலில் இயற்கை யாக உள்ள மின்காந்த அலை களை விட, செயற்கையாகவும் உற்பத்தி செய்யப்பட்ட மின் காந்த அலைகளும் பரவியுள்ளன. ஒளி என்பது இயற்கையாகவுள்ள மின்காந்தக் கதிர்ப்பு அண்ட வெளியிலிருந்து வரும் கொஸ் மிக் கதிர்களும், எக்ஸ்-கதிர்ப் படம் எடுக்கும் எக்ஸ் கதிர்களும் கூட மின்காந்தக் கதிர்ப்புகள் தான். இக் கதிர்ப்புகளெல்லாம் ஒரே வேகத்தில் சென்றாலும் இவை ஒவ்வொன்றும் அ  ைல நீளத்திலும் அதிர்வெண்ணிலும் வேறுபடுகின்றன. மின்காந்த
இராணுவத்தின் இரகசிய ஆயுதங்களில்
இதுவும் ஒன்று
13

Page 9
அலைகளின் ஒளியை எமது கண் உணர்கிறது. ஒளி யை மட்டுமே நாம் உணரமுடியும் என்று முன்னர் தம்பிக் கொண் டிருந்தார்கள். ஆனால் ஒளியின் சகோதர அலைகளையும் நாம் நம்மையறியாமலேயே உணர்கி றோம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
வலிமை குறைந்த மின்காந்தக் கதிர்வீச்சுக்கள் அயனாக்கம் செய்யாத மின்காந்தக் கதிர்ப்பு as Gir“ (Non Ionizing Electro Magnetic Radiation) -NIEMRஎன அழைக்கப்படுகின்றன. பூமி யின் இயற்கைக் காந்தப் புலமும், தொலைத் தொடர்பு நிலையங் களால் வளியில் பரவ விடப்படும் மின் காந்த அலைகளும் இந்த "வலிமை குறைந்த" வகையின தான். ஆனால் இத்தகைய பலங் குறைந்த கதிர்கள் கூட இன்று மனுக்குலத்திற்குப் பயங்காட்டத் தொடங்கிவிட்டது.
புறாக்கள் புவிக்காந்தப் புலத் 66ir (Geomagnetic field) asefa யுடன் பறப்பதை அறிந்ததி லிருந்து மின்காந்தக் கதிர்ப்புகள் தொடர்பான ஆராய்ச்சிகள் ஆரம்பமாகின. கடலடிப் படிவு களை ஆராய்ந்த விஞ்ஞானிகள், புவியின் காந்த முனைவுகள் இலட்சக்கணக்கான வருட ங் களுக்கு ஒரு தடவை இடம் மாறுவதாகவும், அந்த மாற்றத் தின்போது பெரும் எண்ணிக்கை யான உயிர்கள் இறப்பதாகவும் கூறினர். பல கடல் அங்கிகள் வேரோடு அழிந்து போனமைக்கு
14
இந்த முனைவு மாற்றம் காரண மாக இருக்கக் கூடும் என நம்பப் படுகிறது.
அமெரிக்கப் பல்கலைக் கழகங் களில் அன்று முதல் நடாத்தப் பட்ட ஆராய்ச்சிகள் உயிர்களுக் கும் மின்காந்தக் கதிர் வீச்சுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிக்கொண்டு வந்துள்ளன.
விலங்குகளைச் செயற்கையாக உருவாக்கப்பட்ட மின்காந்தக் கதிர்வீச்சலில் வைத்துப் பரிசோ தித்துப் பார்த்தனர். ஒரு தூண் டலுக்கு ஒரு விலங்கு துலங்க லைக் காட்டும் நேர இடைவெளி மின்காந்தக் கதிர்ப்பின் செறிவில் தங்கியிருந்தது. பாலூட்டி விலங்குகளில் பலவீனமான மின் காந்தக் கதிர்ப்பே கண்புரை (Cataract) நோயை ஏற்படுத்தப் போதுமாயிருந்தது. ஒரு ஆராய்ச்
வாமதேவன்
சியில் 60 ஹேர்ட்ஸ் வலிமை யுடைய மின்காந்தக் கதிர்ப்பை எலிகளுக்குச் செலுத்தியபோது அவற்றின் உடலில் உயிர் இர சாயன மாற்றங்கள் அவதானிக் கப்பட்டன. ஒமோன் சுரப்பு களில் வேறுபாடுகள் காணப்பட் டன. இதனால் எலிகளில் மனச் சோர்வு போன்ற நிலைமை ஏற் ull-gil. 60 ஹேர்ட்ஸ் மின் காந்தக் கதிர்ப்பு எலியின் மைய நரம்புத் தொகுதியின், மனச் சோர்வுடன் தொடர்பான பகுதி யைப் பாதித்து, மனச் சோர்வை ஏற்படுத்தியதாக விளக்கினர். இவ்வகை எலிகளில் மூன்று தலை முறைகளை மின்காந்தக்
நங்கூசன்

கதிர்ப்பில் வளர்த்தபோது, எலி களின் வளர்ச்சிவீதம் குறைந்தது, மரணவீதம் அதிகரித்தது. அறு பது ஹேர்ட்ஸ் என்பது, உயிர். Jczgś5 Astronu. ub (High voltage transmission line) goir றின் சூழலில் இருக்கக்கூடிய மின் காந்தக் கதிர்ப்பின் அளவு என் பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களிலும் இது தொடர் பான ஆராய்ச்சிகள் செய்யப்பட் டுள்ளன, அமெரிக்காவின் மாக்ஸ் lenn rid fispapu (Max Plank Institute) த்தில் செய்த ஆய் வொன்றில் மனிதனின் தூக்க நிலை-விழிப்புநிலை வட்டம் மின் காந்த கதிர்வீச்சில் பாதிக்கப்படு வதாக அறியப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படை ஆய்வு நிலையமொன்றில், செயற்கை பாக உருவாக்கப்பட்ட மின் காந்தக் கதிர்ப்பில் சிலரைப் பரி சோதித்தனர். இவர்களின் உட லில் ‘முக்கிளிசரைட்டுகள்" என் னும் கொழுப்பின் கூறு அதிகரித் திருக்கக் காணப்பட்டது. முக் கிளிசரைட்டு” என்னும் இச் சேர்வை குருதிக் குழாய்களில் அடைப்பை உருவாக்கி Լon g டைப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு அபாயகரமான பொருளாகும்.
தொழில் நுட்ப வளர்ச்சி, எந்நேரமும் இத்தகைய மின் காந்தக் கதிர்களை எம்மைச்
குழப் பிறப்பித்துக் கேடு விளை வித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் புதிதாக இன்னு மொரு அச்சமும் சேர்ந்து கொண்டுள்ளது. மின்காந்தக் கதிர்கள் மருத்துவ விஞ்ஞானி களின் பரிசீலிப்பில் இருந்த பொழுதே, வ ல் ல ர க ச ன்
தங்கூரச்
அவற்றை இராணுவ நோக்கில் பயன்படுத்திய செய்திகள் இப் G3 Lu mr gy வெளியாகியள்ளன. 1976 ஆம் ஆண்டளவில் மொஸ் கோவிலிருந்து அமெரிக்கத் தூது வராலயத்தை ரஷ்யா நுண்ண 60) assir (Micro wave) 6T67th படும் ஒருவகை மின்காந்தக் கதிர்ப்பினால் தொடர்ந்து தாக்கி வந்ததைக் கண்டு பிடித்தார்கள்" நுண்ணலைத் தாக்குதல் தூதுவ ராலயத்தில் உள் ள வர் களின் நடத்தையைப் பாதித்து, ரஷ்ய அரசுக்கு சாதகமாக அவர்கள் நடந்து கொள்ளக்கூடும் என்று அமெரிக்கா சந்தேகித்தது. ஆனா லும், அமெரிக்காவால் இக் கண் ணுக்குத் தெரியாத தாக்குத லைக் கிண்டிக்க இயலவில்லை. ஏ னெ ரிை ல், அமெரிக்காவில் "சேதமில்லை" என்று அனும திக்கப்பட்டிருந்த மின்காந்தக் கதிர்ப்பின் அளவு 10,000 மைக் குரோ வா ற் / சதுர ச. மீ. ரஷ்யாவில் இந்த அளவு 10 மைக் குரோவாற் / சதுர ச.மீ. ஆனால் தூதுவராலயத்தைத் தாக் கி ய நுண்ணலைக் கதிர்ப்பு ஒரு சதுர சதம மீற்றருக்கு 18 மைக்குரோ வாற் ஆக இருந்தது. இதனால் "நாம் பாதிக்கப்படுகிறோம்? என வெளிப்படையாக கூச்சலிட அமெரிக்காவால் இயலா மல் போய்விட்டது.
எ மது பாவனையிலுள்ள தொழில் நுட்பக் கருவிகளி லிருந்து வரும் மின்காந்தக் கதிர்ப் பிலிருந்து நம்மைக் காப்பாற்று
வற்கு முன்னர், இந்த இரகசிய
ஆயுதங்களை இராணுவத்தின ரிடமிருந்து காப்பாற்ற வேண் டும் போலிருக்கிறது. )
5

Page 10
மோட்சபாதை
ஓசை மனிதனின் அச்ச உணர்வைத் தொடுகின்றது.
பொலீசும் இராணுவமும் ஒருவனைக் குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ளவைக்க, மிக ஏளிய வழியாக ஓசையையும் இரைச் சலையும் தான் கையாளுகின்றன.
தூக்கமின்றி இருக்கச் செய்து, மணிக்கணக்காக ஒசைக்கு உட்படுத்தும் போது குற்றம் புரியாதவன் கூட குற்றவாளி ஆகி றான்.
கூடுமானவரை மனிதர்களைக் குற்றங்களிலிருந்து மீட்க, முன்னோர்கள் அமைத்த தார்மீக வேலிகள் தான் மதங்கள்.
ஆனால், அந்த வேலியே இன்று பயிரை மேய்ந்த கதையாக,
asst ஒலிபெருக்கி இல்லை என்றால் திருவிழாவே இல்லை என்
றாகி விட்டது.
---- தத்துவங்கள் மூட்டை கட்டப்பட்டு, மந்திரங்கள் கூட ஒலி வாங்கியின் முன்னால் தான் உச்சாடனம் செய்யப்படுகின் ரன.
seg ஆசார விதிகளுக்கு எட்டாத வீதிகளில், ஒரு இரவில் தோன்றிவிடும் ஆலயங்கள் கூட இரவு பகலாக கதறுகின் றன.
மற்றவர்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் ஆரம்பப் பள்ளிகள் தான் மதங்கள்.
ஆனால், எல்லாப் பக்திக்கும் மேலானது பிறரை நிம்மதி யாக வாழ விடுதல் என்பதை இந்தப் பக்திமான்களால் இன்று உணரமுடியவில்லை.
ஆர்ப்பாட்டமில்லாமல் ஒதுங்கி நிற்கும் சித்தர்களை விட, உடுக்கின் ஒலியில் உரு ஏற்றிக்கொள்ளும் எத்தர்கள் தான் இன்று வெளிச்சத்தில் தெரிகின்றார்கள்.
குற்றச் செயல்களைப் புரிவதற்கென்றே காவியை ஒரு
கவசமாகப் பயன்படுத்தும் போலிச்சுவாமிகளின் தங்குமிடங்களாக, சடங்கள் அடைக்கலம் தருகின்றன.
 

அபிஷேகர்களே, மக்களின் பலவீனத்தைப் பணம் பண் ணும் அவதார புருஷர்களாக பிறப்பெடுத்துள்ளனர்.
பல்வேறு காரணிகளினாலும் நலினப்பட்ட மனித மனங்கள், இந்தக் குறி சொல்லும் சோதிடக்காரர்கள் முன்னால் பலியாகி நிற்கின்றன.
கறுப்புப் பணத்தைச் சலவை செய்யும் முதலீட்டு நிலையங் களாக வணக்கத்துக்குரிய தலங்கள் பயன்படுகின்றன.
மற்றெல்லா மதங்களையும் விட இந்து மதத்தில் இவை அநேகம் என்பதற்குத் தமிழகத்துச் செய்திகளே ஆதாரம் .
தன்னில் புகுந்து கிடந்த தீண்டாமையையும், மிருக வதையை யும் களைந்தெறிந்த இந்துப் பாரம்பரியம், இன்னும் தூர வீச Gavarr guvao au vora76mt dö.
மதச்சுதந்திரம் என்னும் பெயரால் மற்றவர்களின் சுதந்திரத் தையும், உடல் நலத்தையும் பரிக்கும் ஒலி பெருக்கியின் தாராளப் uudiruna upp9uyä,
ஆண்டவன் பவனிபோல, பக்தர்களால் காவப்படும் புதிய
சோதிட க்காரர்கள் பற்றியும் இந்து மதத் தலைவர்கள் செவி uvG30 cv stri 4567 m ?
இல்லையேல்;
**கோயில்கள் உள்ள ஊரில் குடியிருக்க வேண்டாம்"-
என்ற நிலைக்கு மக்களைத் தள்ளிய பெருமை, வாழ்வியற் தத்துவங்கள் பலதைத் தன்னகத்தே கொண்ட இந்து மதத்தையே
*సెళిణe

Page 11
தகவற்
களஞ்சியம் .
8
யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி Lorraf (Bachelor of Education) U L-ÜLuuqdis Lu additemuntfu unressayb வெளிவாரியாகவும் ஆரம்பிக்க தமி Nழ கல்வி மேம்பாட்டுப் பேரவை முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இத் திட்டத்திற்கு யாழ். பல்கலைக் கழக மூதவை அங்கீகாரம் வழக்கி விட்டது. இப்போது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அங்கீகாரத்திற் காக இத்திட்டம் சமர்ப்பிக்கப்பட் டுள்ளது.
அமெரிக்காவில் அடுப்படியிலும் கணணி செயற்படுகிறது. வீட்டிற்குத் திடீர் விருந்தாளிகள் வந்துவிட்டால், இருக்கும் பொருட்களைக் கொண்டு என்ன உணவு வகைகளைத் தயாரிக்க லாம் என்று கணனியே பட்டியல் போட்டு விடுகிறது. புது வகையான உணவுகளைத் தயாரிப்பதிலும் இக் கணனிகள் பயன்படுகின்றன.
பூமியும், ஏனைய கிரகங்களும் தம் மைத் தாமே சுற்றுவதுடன் சூரிய னைச்சுற்றியும்வருகின்றன. சூரியனும் தன் ஒன்பது கோள்களோடு சேர்ந்து நட்சத்திரக் குடும்பத்தின் (galaxy) மையத்தைச் சுற்றி வருகிறது. இப் படி சூரியக் குடும்பம் ஒரு தடவை சுற்றி முடிக்க 20 மில்லியன் ஆண்டு கள் எடுக்கும். 250 மில்லியன் ஆண்டு கள் ஒரு கொஸ்மிக் (Cosmic) வருடம் எனப்படுகிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் நில நடுக்கங்கள், சூறாவளிகள், வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவுகள், எரிமலைக் குமுறல், காட்டுத் தீ, வெட்டுக்கிளி படையெடுப்பு, வரட்சி, பாலை பர
வுதல் போன்ற இயற்கை அழிவுகளி Gwnrdio Draš Suruh selav6edio Lorrahuruaurit
தொகை எவ்வளவு தெரியுமா?
மு.ப்.ப.து இலட்சம்.
சில ஆண்கள் பெண்களைப் போல் கீச்சுக் குரலிலும், சில பெண்கள் ஆண்களுக்குரிய தடித்த குரலிலும் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். இக் குரல் மாறுபாட்டைக் குரல்வளையில் சிறிய அறுவைச் சிகிச்சை செய்து குணப்படுத்துகிறார்கள்.
நீர்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுப வரா? அப்படியானால், உயர் இரத்த அழுத்தம் தொடக்கம் புற்று நோப் வரை பல நோய்களால் நீங்கள் பீடிக்கப்படலாம். அமெரிக்காவில் நடாத்தப்பட்ட நீண்ட கால ஆப்வு இவ்வுண்மையை உறுதி செப்துள்ளது
ரி. என். சேஷன். இது இந்திய அர சியல் வானில் தற்போது அடிக்கடி உச்சரிக்கும் ஓர் நாமமாகி விட்டது. ஆம், இந்திய தேர்தல் ஆணையாளரே இவர். கேரளா பாலக்காடு எனுமிடத் தைச் சேர்ந்த தமிழர் தான் இவர். தற்போது இந்திய நிர்வாகத்தில் தேசிய ரீதியாக உயர்ந்த பதவிகள் பலவற்றை தமிழர்கள் அலங்கரிக்கின் றனர். இந்திய மத்திய வங்கியான இந்திய நிசேர்வ் வங்கியின் ஆளுத ரும் ஒரு தமிழரே. அவர் பெயர் கலாநிதி சி. ரங்கராஜன்.
அனைத்துலக இளைஞர் மாநாடு இந்த ஆண்டு ஜனவரி திங்களில் பிலிப் பைன்சின் மணிலா நகரில் நடைபெற் றது. உலகின் பல பாகங்களிலிருந் தும் ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகள் இந்த மகாநாட்டில் பம் கெடுத்தனர். பிலிப்பைன்சுக்கு 4 தாள்கள் வருகை தந்த பரிசுத்த பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் அவர்களும் இம் மகாநாட் டில் கலந்து கொண்டமை சிறப்பிற் குரியது.
நங்கூரக்

முன்னாள் சோவியத் யூனியனின் அத பராக "மிகெயில் கொபர்ச்சே 9 இருந்தபோது "பெரஸ்ட்ரோய்க்கா, கிளாஸ்நோஸ்ட்" எனும் சொற்கள் உலகப் பிரபலம் பெற்றவை. ரஷ்ய மொழியில் பெரஸ்ட்ரோய்க்கா என் றால் மறுசீரமைப்பு என்று அர்த்தம். திறந்த தன்மை என்ற கருத்தை "கிளாஸ்நோஸ்ட்" எனும் சொல் தருகிறது.
நாம் வாழும் ஆசியாக் கண்டத்திலே உள்ள ஒரேயொரு கிறிஸ்தவ நாடு எது தெரியுமா? அது பிலிப்பைன்ஸ். அதுசரி. உலகிலேயே இந்து மதத்தை
ஆட்சி மதமாகக் கொண்ட ஒரே பொரு நாடு அதுவும் தெரியும். Gsurarub.
இந்த ஆண்டு ஜனவரித் திங்களில் தென் ஆபிரிக்காவில் "மண்டெலா வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக் கெட் போட்டி" நடைபெற்றது. இறுதிப் போட்டியில் தென் ஆபி ரிக்கா பாகிஸ்தானை எதிர்த்து விளை பாடி வெற்றிக் கிண்ணத்தைப் பெற் றுக் கொண்டது.
இராகம்களை ரசிக்க தெரிந்த எமக்கு அவை பாடப்படும் நேரம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? பூபா ளம் காலை நேரத்தில் துயிலெழுப் பும் இராகம். ஆனந்தா, வசந்தா: இவையும் இராகங்கள் தான். ஆனந்தா மதிய நேரத்திலும் வசந்தா மாலை நேரத்திலும் பாடப்படுகின்
ஸ்பெயின் நாட்டிலுள்ள பொலன் ஹியா என்னும் இடத்தில் புனித மரி யாள் சிலை ஒன்று இருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இதன் தலையிலுள்ள தங்கக் கிரீடத் தில் 4835 வெள்ளை வைரங்களும், 3082 சிவப்பு வைரங்களும், 65 முத் துக்களும், 16 மரகதங்களும், 8 புஸ்ப ராகக் கற்களும், 7 செவ்வந்திக் கற் களும், 5 நீலக் கற்களும், 4 நிறம் மாறும் மணிகளும் பொருத்தப்பட் உள்ளன. இதைவிட ஆச்சரியம் இது வரை இது திருட்டுப் போகாமல் இருப்பது தான்,
தங்கூரம்
அமெரிக்காவிலுள்ள டிஸ்னி லாண்ட் வால்ட்டிஸ்னி உலகம் ஆகியவற்றி லும் சிங்கப்பூரிலும் சுவீங்கம் விற் பனை தடைசெய்யப்பட்டுள்ளது. வானொலி, தொலைக்காட்சி என்ப வற்றில் கூட சுவீங்கம் தொடர்பான விளம்பரங்கள் சிங்கப்பூரில் இடம் பெறுவதில்லை. நகர சுத்தம் பேணு வதற்காகத்தான் இந்த ஏற்பாடு.
பெரும்பாலான பாம்புகள் கறையான் அமைக்கும் புற்றினுள் ஆக்கிரமிப்பு நடத்தி வாழ்கின்றன. ஆனால் பற வைகளைப் போலத் தனக்கெனத் தனியாகக் கூடு கட்டி வாழும் ஒரே பாம்பு இராஜ நாகம் தான், இலை தழைகளால் கூம்பு வடிவில் 30 சதம மீற்றர் உயரத்திற்கு அமைக்கப்படும் கூட்டில் பெண்பாம்பு முட்டையிட்டு அடைகாக்கும்.
இயற்கையாக ஒரே பிரசவத்தில் ஒன் றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறப் பதை அறிகிறோம். அவுஸ்திரேலியா வில் ஒரு பெண்ணுக்கு சோதனைக் குழாய் முறையில் மூன்று குழந்தை கள் பிறந்துள்ளன. 24 வாரங்களில் குறை, மாதமாகப் பிறந்த இக் குழந் தைகள் மூன்றும் மருத்துவ உதவியி னால் உயிர் பிழைத்து விட்டன.
இரண்டாயிரம் ஆண்டுக்கான கார் கள் தற்போதைய கார்களை விடச் சிறப்பாக இருக்கும். உலகின் எரி பொருள் பற்றாக்குறையைச் சமாளிக் கக் கூடியதாயும், சூழலை மாசுபடுத் தாததாயும் இருக்கும். சூழலுக்கு நண்பனாக விளங்கும். இவ்வாகனத் துக்கு இப்போதே பெயரும் சூட்டி விட்டார்கள். "எக்கோமொபைல்
(Ecomobile)”.
லெனின் கிராட் என்பது ரஷ்யாவின் ஒரு நகரம் என்பது எல்லோருக்கும் தெரியும். கொஸ்மோ கிராட் என் பது ரஷ்யாவால் விண்வெளியில் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டு உள்ள தகரம், :་
19

Page 12
20
சேனா ஒலி மூலம் கண்டெலி, எலி ஆகியவற்றை ஒழிக்கலாம், சுது டெலி, எலி என்பன சாகும்போது போடும் மரணக்கத்தலைப் போன்று கேளா ஒலியெழுப்பி எலிகள், கண் டெலிகளை தற்போது ஜேர்மனியில் கொல்லத் தொடங்கியுள்ளார்கள், பூனைகளுக்கு இது கவலை தரும் செய்திதான்.
துவிச்சக்கரவண்டி விறகு வியாபாரம் யாழ்ப்பாணத்தில் இன்று தனித் தொழிலாக வளர்ந்துள்ளது. துவிச் சக்கரவண்டிகளில் விறகு வியாபாரம் செப்பவர்களில் 15 வீதமானோர் 20 வயதுக்கும் உட்பட்டவர்கள். நாட்டின் சூழ்நிலை தான் புத்தகங் களுக்குப் பதிலாக விறகைச் சுமக்க வைத்துள்ளது.
இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆண்ட போது "சிறிய இங்கிலாந்து" (Little England) என்று ஒரு நகரத்திற்குப் பெயரிட்டிருந்தார்கள். இப்போது அந்த நகரம் "தோட்ட நகரம்' என்று பெயர் பெற்றுள்ளது. எதுவென்று இப்போது தெரிந்திருக்குமல்லவா? - நுவரெலியா தான்.
*"ஒருவரின் அறிதிறன் ஈவு (Irel. gent Quotient) argi iš Salt Infano சூழலாலும், பரம்பரையாலும் நிர்ண விக்கப்படுகிறது. ஆனால் புத்திக்
கூர்மையின் 60 வீதம் பரம்பரையினா
லேயே நிர்ணயிக்கப்படுகிறது". இவ் வித்தியாசமான கருத்தைக் கூறியிருப் பவர் அமெரிக்க சமூகவியல் விஞ் ஞானி சாள்ஸ் முர்ரே. கறுப்பர், வெள்ளையர்களிடையே இருக்கும் அறிவு வேறுபாட்டுக்கு அவர்களது பரம்பரை அமைப்புத்தான் காரணம் என்று கூறும் இவரது கருத்துக்கு அங்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள் or.
திமிங்கிலம்கள் இதுவரை எண்ணெய்
எடுப்பதற்காகத் தான் வேட்டை பாடப்படுகின்றன என்று அறிற்
திருக்கிறோம். இப்போது ஜப்பானி வர்களின் உணவுக்காகவும் இரகசிய மாக அது வேட்டையாடப்படுகிறது. அப்பானிய உணவு விடுதிகளிலிருந்து பெறப்பட்ட இறைச்சியை D.N.A. ஆய்வுக்குட்படுத்திய போது இது தெரியவந்துள்ளது.
இப்போது உலகின் சனத்தொகை க0ே கோடி. அதாவது 5.6 பில்வி பன். இத் தொகை ஆண்டுக்கு 9.3 கோடிவீதம் அதிகரித்து வருகிறது.
‘காதலர்கள் தோற்கலாம், ஆனால் காதல் தோற்பதில்லை" என்று ஒரு மேல் நாட்டுப் பொன்மொழி உண்டு. அதே போல் 'கம்யூனிசம் தோற்ப தில்லை. கம்யூனிஸ்டுகள் தான் தோற்றுவிட்டார்கள்" என்று கூறுகி மார் இத்திய மாக்ஸிஸ்ட் ஆதர வாளர் என். இராதா கிருஷ்ணன். கம்யூனிசம் கைவிடப்பட்டநாடுகளில் நிகழும் பொருளாதார அனர்த்தம் களை தன் கூற்றுக்கு ஆதாரமாக அவர் மேற்கோள் காட்டுகிறார்.
தனது தேசத்தில் மதுப்பாவனை அதிகரித்ததைக் கண்ட நெதர்லாந்து அரசாங்கம் அதற்கான காரணத்தை அறிய பல ஆய்வுகளைச் செய்தது. "மதுபானம் பற்றிய கவர்ச்சிகரமான விளம்பரம்கள்தான் மதுப்பாவனை அதிகரிப்புக்கான காரணம்" என்று ஆய்வுகளின் முடிவில் உறுதியா சொல்கிறது. கொழும்புப் பத்திரிகை களின் முழுப்பக்க விளம்பரங்கள் எமக்கும் எவ்வளவு ஆபத்தானவை என்பதை இப்போது புரிந்து கொள்
தாடி வளர்ப்பவர்களின் தலை விரை வில் வழுக்கையாகிறது. தாடி உரோ மங்களில் பென்சீன், அமோனியா போன்ற மாசுபடுத்தும் பொருட்கள் சேர்வதால் இப்படி ஆகிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள். தாடி வேண் மொ? அல்லது தலையில் முடி வேண் டுமா? என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளும்கள்.
gSavaøö

ww*w*wrs
மியையும், சூரியனையும் இது
போன்ற பல சூரியக்குடும்பங் களையும் உள்ளடக்கிய பரந்த படுக்கைக்குத்தான் அண் ட ம் என்று பெயர். அண்டம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி யது என்பதில் பல கால மாக சர்ச்சை இருந்துவருகிறது. தற் போதைக்கு அண்டத்தின் வயது 7 பில்லியனிலிருந்து 20 பில்லி யனு (Billion) க்குள் இருக்கலா மென்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சென்ற அக்டோபர்
my We MaManaMm ~~~~)
அண்டத்தின்
6)ILLI J5 K
விடுவிக்கப்படாதபுதிர்,
f J് ഞെ.-ത്തങ്ങ~ടി
மாதம் விஞ்ஞானிகள் அண்டத் தின் வயது முன்னைய கணிப்பு களிலும் பார்க்க 8 பில்லியன் ஆண்டுகள் குறைவு என்று அறி வித்துள்ளார்கள். சில நட்சத் திரங்களின் வயது 16 பில்லியன் ஆண்டுகளாக இருக்கும் போது
நட்சத்திரத்தைத் தாங்கு ம் அண்டம் எப்படி இவ்வளவு இளமையாக இருக்க முடியும்
என்ற கேள்வியும் கூடவே எழுத் துள்ளது.
நங்கூ øya
அண்டத்தின் வயதைக் கண்டு பிடிக்க 1929 இல் அடிப்படை போட்டவர் எட்வின் ஹபிள் (Edwin Hubble) argir Doeserted தான். இவர் தான் பிரபஞ்சம் - அண்டம் - ஒரு காற்றுதப்படும் பலூனைப் போல விரிவடைந்து கொண்டிருப்பதாகக் கண்டுபிடித் துக் கூறினார். இதைத்தான் விரிவடையும் பிரபஞ்சம் என்று அழைக்கிறார்கள். பிரபஞ்சக் கூறுகள் இப்படிப் பரவிக்கொண் டிருப்பதால், பிரபஞ்சம் ஏதோ ஒன்று வெடித்ததால் உருவாகி யிருக்கவேண்டுமென்றும் அனுமா னிக்கப்பட்டது. பிரபஞ்சப் பிறப் பினை விளங்கப்படுத்த இன்று வரை எடுத்துக் கொள்ளப்படும் கொள்கை இந்தப் பெரு வெடிப் yš GQsmrGirauns (big bang theory) தான். அண்டம் என்ன வேகத் தில் விரிவடைகிறது என்பதை அறிந்து அதன் மூலம் அண்டத் தின் வயதை அறிய முற்பட்
Trifssør.
பிரபஞ்ச விரிவைக் கொண்டு அண்ட வயது இப்படித்தான் கணிக்கப்படுகிறது. பூமியைவிட்டு நகர்ந்து கொண்டிருக்கும் உடுக் கூட்டங் (galaxy) 'களிலிருந்து வரும் ஒளியைப்பெறுகிறார்கள். இவ்வொளியை வெவ்வேறு நிறக் கூறுகளாகப் பிரிப்பார்கள். வெள் ளொளி இவ்வாறு பல நிறங்க ளாகப் பிரியும் போது அது திரு சியம் எனப்படுகிறது. பூமியி
21

Page 13
லிருக்கும் ஒளியையும் இப்படி நிறப்பட்டைகளாகப் பிரித் து திருசியம் பெறுவார்கள். இரண்டு திருசியங்களையும் ஒப்பிடும் போது, அந்த உடுக்கூட்டம் என்ன கதியில் சென்றுகொண்டி ருக்கிறது என்று தெரிந்து விடும்.
அடுத்து அந்த உடுக்கூட்டம் பூமியிலிருந்து தற்போதிருக்கின்ற தொலைவைக் கணிப்பார்கள். உடுக்கூட்டங்களில் சி ஃபீட் ஸ் (cepheids) என்ற அரிதாக மின் னுகின்ற நட்சத்திரங்கள் இருக் கின்றன. இந்த நட்சத்திரமொன் றின் மின்னும் வீதத்தை நிமி டத்திற்கு எத்தனை தடவை என்பது போல கணிப்பதால் நட் சத்திரத்தின் உண்மைப்பிரகா
55 (true brghtness)& sania,
Փւգսյւհ
தொலை நோக்கி மூலம் நட் சத்திரத்தைப்பார்த்து அதன் Gastippu9rdStaf (apparent bri8htness) த்தைக் கணிப்பார்கள். இப்போது, தோற்றம் பிரகா சத்தையும், உண்மைப்பிரகாசத் தையும் ஒப்பிட்டால் அந்த நட் சத்திரம் பூமியிலிருந்து உள்ள தொலைவு அறியப்பட Փւգսյւն.
அந்த உடுத்தொகுதி, குறித்த அாரத்தில், கொண்டிருக்கும் விரி விடையும் வீதம் கணிக்கப்படும். இந்தப் பெறுமானம் விஞ்ஞானி ஹபிள் இனுடைய பெயரால் ஹபிள் மாறிலி என்று அழைக்கப்
22
படும் காணப்பட்ட ஹபிள் மாறிலியை ஒரு சமன்பாட்டில் பொருத்தினால் அண்டத்தின் வயது கிடைக்கும். இந்த முறை யில் தான் அண்டவயது 7-20 பில்லியன் என்று கணிக்கப்பட் டது. ஆனால் அக்டோபர் மாதத் தில் இதனைக் கணித்தபோது - விண் வெளியியலில் அண்டத்தின் வயது குறைந்துவிட்டது.
ஒரு வேளை நட்சத்திர வயது களைக் கணித்ததில் தான் பிழை வந்ததா ? இல்லை என்று உறுதி யாகக் கூறப்படுகிறது. பின் எது பிழைத்து விட்டது?
சி. ஸ்ரனிஸ்லாஸ்
அண்டம் வேகமாக விரி வடைந்தால் அது இளமையாக இருக்கிறது என்று பொருள். அண்டம் இப்போது விரிவடை
வதைவிட இன்னும் வேகமாக
விரிவடைந்தால் அதன் வயது
இன்னும் குறைந்ததாகக் கணிக் கப்பட்டிருக்கும். இங்கே ஒரு சந் தேகம் வருகிறது. விரிவடையும் அண்டத்தை ஈர்ப்பு எதிர்ப்புச் Jáš9 (Antigravity (Surreiro விசையொன்று விரிய விடாமல் தடுப்புக்கொடுக்கிறது. இதனால், உண்மையில் வேகமாக விரிவ டைய வேண்டிய அகிலம், கொஞ்
நங்கூரக்

சம் வேகத்தைக் கொண்டு விரிவடைகிறது. அந்த விசையின் - தடையின்-அளவைக் கணித்தால் அண்டம் உண்மை யாகவே பரவக்கூடிய வேகத்தை யும், - அதன் மூலம் நிஜவயதை யும் கணிக்கலாமல்லவா?
இப்படி ஒரு தடைவிசையைப் பற்றி அல்பேர்ட் ஐன்ஸ்ரினே ஒரு தடவை பேசியிருக்கிறார் - இவ் விசையைவிண்வெளியியல் மாறிலி (Cosmological constant) GT6ör gpy பெயரிட்டிருக்கிறார். ஆனால், பின்னர், "எனது வாழ்வின் மிகப்பெரிய தவறு இதுதான்" என்று அற்த மாறிலியை மறந்து Glu-rn
ஆனால் விஞ்ஞானிகள்,
ஐன்ஸ்ரின் தன்னைத் தவறாக |
நினைத்ததுதான் பெரிய தவறு என்று கருதுகிறார்கள். இப்படி ஒரு தடை விசை இருக்கலாமென விஞ்ஞானிகள் இப்போது நம்பத் தொடங்கியுள்ளார்கள்.
இப்படி ஒரு தடை விசை இருப்பதாக ஏற்றுக் கொண்டால் இன்னுமொரு உண்மையையும் நாம் ஏற்க வேண்டும். மாறாத தடை விசையை எதிர்த்து ஒரு கதியுடன் விரிந்துகொண்டிருக்கும் அண்டம் முடிவின்றி விரிவடை யப் போகிறது. மதங்கள் சொல் வது போல் அதன் முடிவு நெருப் புத்திரளாக அல்ல, அண்டத்தின் முடிவற்ற வெளியும், குளிருமாகத் தான் இருக்கும். 0
gSavaørö
குறைத்துக்
இவ்வளவு பெரியதா?
- இப்போது கொய் யாப்பழப்
பருவம்
- அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவு களிலிருந்து தான் இது உலகின் மற்றைய நாடுகளுக்குப் பரவி யுள்ளது.
- இனவேறுபாட்டுக்கு ஏற்ப கொய்யாப்பழங்களின் அளவும் வேறுபடுகின்றது. 5 சமிஅல்லது அதனிலும் கூடியதாகக் கூட இதன் நீளம் இருக்கலாம். சில வகைப்பழங்கள் 12 சமி வரை கூட - பெரிதாக இருக்கின்றன
- தோடம்பழச்சாறில் இருக்கும் விற்றமின் ‘சி’யின் அளவை விட 2-5 மடங்கு அதிகமான விற்றமின் "சி" கொய்யாப் பழத்தில் உண்டு.
- சமைத்து உண்ணக் கூடிய கொய்யா வகைகளும் உண்டு.
23

Page 14
வித மாத இதழின் நடுப்பக்கக் கட்டுரை அருமையிலும் அருமை, அறிவை வளர்க்கும் நூல்களை விடுத்து, ர்மணிச் சந்திரன் போன்றோரின் ஆபாசமான, அர்த்தமற்ற கதைகளை விரும்பிப் படிக் கும் யாழ்ப்பாணத்து "ரீன்ஏஜ் பெண் களை விழித்தெழச் செய்ய முயன்ற நங்கூரமே உனக்கு என் மனமார்ந்த நன்றிகள். அறிவுக் கடலான உனது பணி பல்லாண்டு காலம் பல்கிப் பெருகித் தொடர எனது வாழ்த்துக்கள் உரித்தா கட்டும்.
என்னை வெற்றிப்பாதையில் இட்டுச் சென்று பல்கலைக் கழகம் புகவைத்த நங்கூரமே உனக்கு எனது வாழ்த்துக் கள் உரித்தாகட்டும்.
ஆச்சரியமாய், அற்புதமாய், பற்பல செய்திகளைத் தாங்கி வந்து எமது அறிவுப் பசிக்கு விருந்தளிக்கும் நங் கூரமே ! உன்புகழ் பாரெங்கும் கடல் போல விளங்கட்டும்.
உனது இலவசப் பயணச் சீட்டைப் பார்த்தேன், விபரங்களை விரைவில் வெளியிட்டு எனது ஆவலைத் தணிக்க uonrl LTunr P
ஆயிரமாயிரம் நங்கூரப் பிரியர்களில் நானும் ஒருவன். எமது பாடசாலைக்கு நங்கூரம் சற்றுக் காலதாமதமாக வருவ தால் நாம் போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்படுகின்றது. இந்த நிலையைத் தவிர்த்து எம்மையும் போட்டி களில் பங்குபற்ற வழிசெய்யுமாறு கேட் டுக் கொள்கிறோம்.
24
- சுஜீதா சண்முகராசா
யா/மகாஜனாக் கல்லூரி,
- இ. யோண்சன்,
urlLjsofis
பத்திரிசியார் கல்லூரி.
- Gar. aufruA76of
யா/இந்து மகளிர் கல்லூரி
- க. பாலமுருகன்
யா/பரி. யோவான் கல்லூரி.
- நி. நிஷாந்தன். இ. ஜெனா, யா/ஹட்லிக் கல்லூரி,
நங்கூரம்
 

O அண்டவெளிக்கதிர்கள் (cosmic rays) 67 airportal) என்ன என்பது பற்றிச் சிறிது விளக்குவீர்களா?
ஞா. செந்தமிழ்ச்செல்வன் யா/சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி ம. ம. வி.
அணுவினுள்ளே காணப்படும் நுண்துணிக்கைகளாலான கதிர் கள்தான் அண்டவெளிக்கதிர்கள் எனப்படுகின்றன. அண்டவெளிக் கதிர்களின் பிறப்புப்பற்றி எவருக் கும் தெளிவாகத் தெரியாது. பெருவெடிப்பு (Bigbang) ஒன்றி னால் அண்டம் உருவானபோது சிதைந்த அணுக்களின் கூறுகள் அண்ட வெளிக்கதிர்களாக இன் னும் நிலைத்திருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். சூரியன் போன்ற நட்சத்திரங்களில் As l- is gil கொண்டிருக்கும் கருத்தாக்கங் களின் விளைவுகளாக இக்கதிர் கள் தோன்றுவதாகவும் இன்னு மொரு கொள்கை கூறுகிறது.
அண்டவெளிக்கதிரின் வேகம் ஒளிக்கதிரின் வேகத்தை அண் மித்ததாக உள்ளது. இக்கதிர் களில் ஒருபாகம் பூமியின் வளிப் போர்வையினுள் ஊடுருவுகிறது. இப்படிப் பூமியில் நுழையும் அண்டவெளிக்கதிர் முதல் அண்ட வெளிக்கதிர் எனப்படுகிறது. இவ் வாறு நுழையும் முதல் அண்ட வெளிக்கதிர்கள், தாம் போகும் பாதையில் உள்ள வாயு அணுக் களைமோதி அங்கிருந்தும் பல கதிர்களை விடுவிக்கின்றன;
Øsvaacð
இவை துணையான அண் ட வெளிக்கதிர்கள் ஆகும்.
அணுவைப் பிளக்க செயற்கை யாகப் பல கருவிகள் தயாரிக்கி றோம். இயற்கையாகவே உள்ள அணுப்பிளப்பி அண்டவெளிக் கதிர்கள்தான். முதல் அண் ட வெளிக்கதிர்கள் பெரும்பாலும் புரோத்தன்களால் ஆன வை. துணை அண்டவெளிக்கதிர்களில் மீசன் எனப்படும் உப அணுத் துணிக்கைகள் இருக்கின்றன,
சிலசக்தி மிக்க கதிர்கள் கடினப் பாறைகளைக் கூட பல நூறு அடிகள் வரை ஊடுருவுகின்றன அதி ஊதாக்கதிர்களைப் போல அல்லாமல், இக்கதிர்களால் உயிர் களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவு எனினும் மனிதப் பரம் பரை
இயல்புகளுக்குக் és TJtéssy LDIT6ör விதை, சூலகங்கள் இதனால் பாதிக்கப்படுவதாக தற்போது கருதுகிறார்கள்.
விளக்கமளிப்பவர்
திரு. சி. வர்ணகுலசிங்கம் பெளதிகவியல் ஆசிரியர் யா/புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி
25

Page 15
உதயத்துக்கான பூபாளமாகட்டும!
மத்தியின் மைதான மணிக்கோபுரம்: கோட்டையின் "ஷெல்? இங்கு ஒட்டைபோடாது விட்ட கூட்டுக்கோபுரம், அந்நியச் சிலந்தி பின்னிய வலை! கோழி கூவி காலை விடியாது- நீ நாழிகாட்டியா நாங்கள் விழிக்கிறோம். நித்தமும் கையசைத்த நீள் மணிக்கோபுரமே, சுத்தமாய்ச் சொல் பதில் - நீ சத்தமின்றி நிற்பதேனோ?
என்ன மொழிகிறாய்? எதும் புரியவில்லை அந்நியர் கை அரவணைப்பில் தங்க மண்ணில் தடம்பதித்து அங்கமென நிற்கிறாய் அட, எந்தனிற்கும் உந்தனிற்கும் எத்தனையோ ஒற்றுமைகள், நானும் நீயும் ஒடுங்கித் தலை சாயாது நிற்கின்றோம் ஏன்? பருப்பின்றி வாழ்ந்தாலும் இன்னும் இருப்பின்றி போகவில்லை. இன்னும் எத்தனையோ. இனியுனது இதயத்துடிப்பு உதயத்துக்கானபூபாளமாகட்டும்
26
சென்ற இதழ்
அட்டைப்படப்
பரிசுக் கவிதை
:::::: *.":
* யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிமைதா னத்துக்கு அருகாமையில் இன்று சோபை இழந்து நிற்கும் இம் மணிக்கூட்டுக்கோபு ரம் 1875 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. பிரித்தானியாவை நீண்டகாலம் ஆட்சி செப்த விக்ரோறியா ராணியின் மூத்த மைந்தன் ஏழாம் எட்வேர்ட் இங்குவந்து போனதன் நினைவாகவே இது எழுப்பப் பட்டது. அப்போதைய தேசாதிபதி யேம்ஸ் லோங்டன் என்பவரே இதனை அமைப்பதற்குக் காரணமாய் இருந்து மணிக்கூட்டையும் உபகரித்தார். அப் போது இதனைக் கட்டிமுடிப்பதற்கான செலவுத்தொகை பத்தாயிரம் ரூபாய் என்றும் இத்தொகையில் நான்காயிரம் ரூபாவை உள்ளூரவர்கள் உபகரித்தார் என்பதும் வரலாறு.
யோ. சிவாகரன் யா/இந்துக் கல்லூரி
saivaalació
 

Y^W"YY~~~MMNNWMT,
னித வாழ்வில் இன்று விளக்கு D கள் முதன்மையானவையாக உள்ளன. இருளகற்றி ஒளியூட்ட ாண்ணெய் விளக்குகள், மின்சார விளக்குகள், வாயு விளக்குகள் பொதுவாகப் பயன்படுத்தப்படு கின்றன. இன்றைய நவநாகரிக உலகில் விளக்குகளும் நாளுக்கு நாள் புதுப் புது வடிவங்களை எடுக்கின்றன. விளக்கு உருவான வர லா று நீண்ட பல்லாயிரம் ஆண்டுகளைக் கொண்டது.
* NM MVayYY-N
ஒளிதரும் விளக்கு
உருவான வரலாறு
சுமார் இருபதினாயிரம் ஆண்டு களுக்கு முன்னரே நம் மூதாதை யர்கள் குகைச் சுவர்களில் சிந்தை இனிக்கும் வியத்தகு ஒ வி ய ங் களைத் தீட்டியுள்ளனர். இருண்ட குகைகளில் விளக்குகளின் வெளிச் சத்திலேயே இவ் ஒவியங்கள் தீட் டப்பட்டிருக்க வேண்டும். இன் னும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே ஆதி மனிதன் தன் வாழ்க்கையில் நெருப்பை பயன் படுத்தியிருக்கிறான் என்பதற்கு
Astru i&5eir ap_siwG9.
தங்கூரம்
அடர்ந்த காடுகளில் மரக் கிளை கள் ஒன்றோடொன்று உராய்ந்து தீப்பற்றி எரிந்ததைக் கண்ட பொழுது தான் மனிதன் முதன் முதலில் நெருப்பைப் பற்றி அறியத்தொடங்கினான். இவ் அனுபவத்தின் வாயிலாக ஆதி மனிதன் தான் வாழ்ந்த குகை களின் வாயிலில் காய்ந்ததடி களையும், சுள்ளிகளையும் குவித்து வைத்து எரித்து அதன் மூலம் பெற ப் பட்ட வெளிச்சத்தைக் கொண்டு இருண்ட குகைகளுக்கு ஒளியூட்டினான். இந்த நெருப்பு அணைந்து போகாதவாறு உள்ளி டாக தொடர்ந்து விறகு போடப் பட்டு வந்தது.
o di astra LD65sir 567go உணவுத் தேவைக்காக வேட்டை பாடப்பட்ட விலங்குகளை நெருப் பிலிட்டு எரித்தான். அவை வெந்து கருகியபொழுது அவற்றி லுள்ள கொழுப்புப் பொருள் பிரகாசமாக தீப்பற்றி எரிவதைக் கண்டான். இதன் பெறுபேறாக தான் வாழ்ந்த குகைகளில் மிரு கங்களைத் தீயிலிட்டு எரிப்பதன் மூலம் வெளிவந்த வெளிச்சத்தை யும் விளக்காகப் பயன்படுத்தி னான்.
அடுத்த நிலை சிறிய வளர்ச் சிக் கட்டமாகும். வே ட்டை யாடப்பட்ட மிருகங்களின் மண் டையோட்டில் கொழுப் பை நிரப்பி அதில் காய்ந்த செடி
27

Page 16
நார்களிலான திரியை அமைத்து அதை விளக்காகப் பயன்படுத்தத் தொடங்கினான். இதற்கு மிரு கங்களின் உறுதிவாய்ந்த மண்டை யோடு பயன்பட்டிருக்கிறது. இலகுவாகக் காவிச் செல்லக் கூடிய வகையில் அமைக்கப்பட் டிருந்த இவ்விளக்கு காலத்தின் பரிணாமத்தைச் சுட்டுகிறது.
பெரிய கற்களைச் சிறியள வில் செதுக்கி கைக்கடிக்கமான முறையிலமைத்து அவற்றில் குழி களையிட்டு அதில் கொழுப்பை நிரப்பி மண்டையோட்டிற்குப்பதி லாக பயன்படுத்தப்பட்டமையை தொல்லியல் எச்சங்களிலிருந்து அறிய முடிகிறது.
பின்வந்த காலப் பகுதியில் இயற்கையில் கிடைத்த சங்கு சிப்பி, போன்ற பொருட்களும் விளக்காகப் பயன்படுத்தப்பட் டன. அத்துடன் இயற்கையாக கிடைத்த வேதியியல் (இரசாயன) பொருட்களைக் கோ ல் களில் வைத்தும் விளக்கை உபயோகித்
தான்.
மனிதனின் உலக அனுபவ மும், சிந்தனைத் திறனும் மேம் படும் ஒரு காலகட்டத்தில் களி மண்ணைக் கொண்டு அமைக்கப் பட்ட மண் அகல் விளக்குகள் பயன்பாட்டிலிருந்தன. கி. மு. 900 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட இவ் வகை விளக்குகள் மேற்புறத்தில் திறந்த
28
நிலையிலிருந்தன. மத்திய காலத் தில் கிரேக்க, ரோமப் பேரரசு களில் மண்ணினால் செய்ய ப் பட்ட மேற்புறம் மூடப்பட்ட மண் விளக்குகள் வழக்கில் இருந் தமையை புதைபொருள் ஆய்வு கள் எடுத்தியம்புகின்றன.
உலோகங்கள் கண்டறியப் பட்ட காலத்தில் விளக்குகளும் உலோகத்தால் செய்யப்பட்டன. அக்காலத்தில் கிரேக்கரும், ரோம ரும் உலோகத்தால் செய்யப் பட்ட விளக்குகளைப் பயன்படுத் தினர். பல திரிகள் இடப்பட்ட உலோக விளக்குகளும் பாவனை யிலிருந்தமையை புராதனச் சின் னங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
மத்திய காலத்தில் மனித நாகரீக முன்னேற்றத்தின் குறி
வேதநாயகம்
தபேந்திரன்
யீடாக எண்ணெய் நிரப்பி எரிக் கும் விளக்குகளும், மிரு கக் கொழுப்பிலிருந்து மெழுகுவர்த்தி கள் தயாரித்து எரிக்கும் விளக்கு களும் நடைமுறையிலிருந்தன.
6. L . l 5- l 8 , Rwopru u mraw நூற்றாண்டு காலப் பகுதிகளில் அறியப்பட்ட விளக்குகள் இன்
gava-0ó

னும் மேம்பட்ட நிலையிலிருந் தன. உலோக தாங்கி களி ல் மெழுகுவர்த்தி பொருத்தப்பட்ட விக்குகள் கிறீஸ்தவ ஆலயங் களிலும், செல்வந்தர் வீடுகளி லும் நாகரீக விளக்காகப் பயன் பட்டமையை அறிய முடிகிறது"
வாயுக்களினால் எரிக்கப்படும் விளக்குகள் 18 ஆம் நூற்றாண் டின் இறுதிக் கூறில் தோன்றின. ஒரு திறப்பின் வழியாக வெளிக் கொணரப்படும் வாயு எரியூட் டப்பட்டு அது மஞ்சள் நிறத்தில் எரிய வைக்கப்பட்டது.
நூற்றாண்டின் ஆரம் طاليد 19 பத்தில் "சேர்ஹம்ப்ரிடேவி' எனும விஞ்ஞானி முதல் மின் சா ர விளக் கை கண்டுபிடித்தார். இவரது மின்விளக்கில் காபன் விற்கள் ஒளிர்ந்து ஒளிகொடுத் தன. அமெரிக்காவில் இவ்வகை விளக்குகளைத் தெரு விளக்கு களாக பயன்படுத்தினார்கள்.
முதன் முதலில் வெப்பத்தி னால் ஒளிர்வு தரும் விளக்கு GATLD6iu Joydibar TgFeofawmreà 1879 இல் அமைக்கப்பட்டது. 1882 இல் நியூயோர்க்கில் வீடு சளில் இவ்வகை விளக்குகள் பொருத்தப்பட்டு மின்வழங்கப் பட்டது.
434vadú
29

Page 17
சுரங்கக் கைத்தொழில் தோன் றிய காலப் பகுதியில் விளக்கின் தேவை இன்னும் அதிகரித்தது. ஏனெனில் இருள் சூழ்ந்த குகை களில் தொழிலாற்றுவதற்குப் பிர
காசமான வெளிச்சம் தேவைப்
பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்காவில் எண் ணெய்ச் சுரங்கங்கள் தோன்றிய பொழுது அதிக பிரகாசத்துடன் ஒளிதரவல்ல எண்ணெய் விளக்கு கள் பயன்பாட்டிற்கு வந்தன.
19 ஆம் நூற்றாண்டின் இறுதி யில் வலை விளக்குகள் கண்டு பிடிக்கப்பட்டன. இதில் வலை போல் பின்னப்பட்ட ஒரு உலோ கக் குழாய் இருக்கும். இதன் மத்தியில் வாயு எரியும் போது இவ்வலைக் குழாய் சூடாகி வெண் ணிற ஒளியைப் பாய்ச்சிப் பிர காசிக்கும். இதேகாலத்தில் காபன் எரியிழை(FILAMENT)பொருத் தப்பட்ட மின்சார விளக்குகள் புழக்கத்திற்கு வந்தமை சிறப்பிற் குரியது. காபன் எரியிழைகள் இலகுவில் நொறுங்கி விடக் கூடி யனவாக இருந்ததால் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்ஸ்ரன்' எரியிழை பொருத் தப்பட்ட மின்விளக்குகள் அறிமு கப்படுத்தப்பட்டன.
இக் கால மின்விளக்குகளில் தங்ஸ்ரன் எரியிழை சிறிய சுருள்
3O
வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது அத்துடன் "ஆர்கன் வாயு?? நிரப்பப்பட்டு அதிக பிரகாசத்து டன் எரிய வழி செய்யப்பட்டுள் ளது.
1920 as Gfddio “ ‘ 693uuntair Gaura“ விளக்குகள் விளம்பரத்துறையில் அறிமுகமாயின. இவ் விளக் கு களில் இருக்கும் வாயுவை ஊட றுத்து உயர் அழுத்த மின்சாரம் செல்லும் போது இவை பிரகாச மாக எரிகின்றன. உலகின் எல்லா நாடுகளிலும் நியோன் விளக்கு கள் விளம்பரத்திற்கும், அலங்கா ரக் காட்சிகளுக்கும் உபயோகிக் கப்படுகின்றன.
75 வாற்று சக்திகொண்ட இழைவிளக்கின் ஒளியை 20 வாற்று சக்தி கொண்ட ஃபுளோ ரொளிர்வு விளக்குத்தருகிறது. இதன் பாவனையும் அதிகம்.
இ ன் று நாம் இருபதாம் நூற்றாண்டின் விளிம்பில் இருக் கிறோம். விளக்குகள் இ ன் று பெரும்பாலும் மின்சாரத்தின் துணை கொண்டு ஒளிர்கின் றன. மின்வசதியற்ற மின்வசதி மறுக்கப்பட்ட இடங்களில் தான் எண்ணெய் விளக்குகள் இருள் போக்கவும், பல தேவைகளுக்கும் பயன்படுகின்றன. அண்மித் து வரும் இருபத்தோராம் நூற் றாண்டில் விளக்குகள் தொடரி பாக இன்னும் பல அதி முன் னேற்றங்கள் எற்படலாம் ()
நங்கூரம்

வெள்ளீய ம் ܫܝ உலோகச்
Tin (Sn) - ’செய்திகள்
தகரம் என்று அழைக்கப்படும் இவ்வுலோகம், கிறிஸ்துவுக்கு முன் 5000-6000 ஆண்டுகளிலேயே பாவனையில் இருந்திருக்கிறது. இலத்தீனில் இதன் பெயரான ஸ்ரானம் (Stannum) என்பதற்கு கடினம் அல்லது திண்மம் என்று பொருள். ஆனால் பெயருக்கேற்ற திண்மை தகரத்தில் இல்லை. பூமியின் தென் முனைவுக்குச் சென்ற ஆராய்ச்சியாளர்கள் ஒரு முறை தகரக் கொள்கலன்களில் மண்ணெண் ணெயை நிரப்பி இறுக்கமாக மூடி விட்டு வந்தார்கள். இரண்டு வருடங்களின் பின்னர் சென்ற போது மண்ணெண்ணெயைக் காண வில்லை. காரணம்: குறைந்த வெப்ப நிலையில் தகர மூலக் கூறு கள் தெருக்கம் குறைகின்றன. இந்த இயல்பைப் பயன்படுத்தி மந்திர வித்தைகள் கூட செய்ய முடியும். இப்படித் தகரம் ஐதாவதைத் தடுக்க பிஸ்மத் கலக்கப்படுகிறது.
0 தகரத்திற்கு அழுகின்ற உலோகம் என்றும் ஒரு பெயருண்டு. தகரத்தகடு முறுக்கப்பட்டால் அது யாரோ அழுவது போன்ற ஒலியை எழுப்புவதால்தான் அதற்கு இந்தப் பெயர்.
O வரலாற்றில் செப்பு ஆட்சி செலுத்திய காலத்துக்கும், வெள் ளியம் ஆட்சி செலுத்திய காலத்துக்கும் தெளிவான எல்லை இல்லை. இதனாலேயே செப்பும் வெள்ளியமும் கலந்த வெண் asayuys b (Bronze age) a CDauntsvg.
மகேசன் கஜேந்திரன்
O புராதன காலத்தில் எகிப்தில் இறந்தவர்களைத் தகரப் படலத் தினால் மூடினார்கள். உரோமர்கள் முகம் பார்க்கும் கண் னாடி தயாரிக்கக் கூட இதனைப் பயன்படுத்தியுள்ளனர்.
0 பெருநாட்டின் இன்கா நகரத்திலும், எகிப்திய நாகரிகத்திலும் வெள்ளியம் ஆபரணங்கள் செய்யவும், பாத்திரங்கள் செய்யவும் பயன்படுத்தப்பட்டமைக்கு சான்றுகள் உண்டு. பைபிளிலும் வெள்ளியம் பற்றிய குறிப்புகள் உண்டு.
gávala aj 31

Page 18
3.
பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் வெள்ளீயம், வெள்ளியின் மதிப்புடன் கையாளப்பட்டது. காரணம் அப்போது வெள்ளி யம் இங்கிலாந்தில் மட்டுமே இருந்தது
ஆனால் இப்போது உலகின் வெள்ளீய விநியோகத்தில் மூன்றி லொரு பங்கு மலேசியாவினால் பூர்த்தி செய்யப்படுகிறது. அதிக வெள் ஒளி ய ப் படிவுகள் சீனா, பொலீவியா, ரஷ்யா போன்ற காடுகளில் இருக்கின்றன.
இயற்கையில் வெள்ளீயம் கசிரெறைற்று (Cassiterit) என்னும் படிவாக காணப்படுகிறது. இப்படிவுகள் நிலத்தின் அடியில் மட்டுமன்றி, கடலின் அடியிலும் கூட காணப்படுகின்றன.
ரஷ்ய விஞ்ஞானிகள் வெள்ளீயத்தைப் பயன்படுத்தி சூரிய சக்தி யைச் சிறைப்பிடித்து வைத்திருக்கக் கூடிய ஆடி (mirror)களைத் தயாரித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஃபோர்ட் (Ford) வாகன உற்பத்தி நிறுவனம், திரவ வெள்ளியத்தின் மீது உருக்கிய சுண்ணாடியை வார்த்து தமது வாகனங்களுக்குரிய கண்ணாடிகளைத் தயாரிக்கின்றனர்.
வெள்ளீயத்தின் உருகுநிலை அதிகமாக (3ே2°C) இருந்தாலும் லுெள்ளீயத்தின் சில கலப்பு உலோகங்கள் மிகக் குறைந்த வெப்ப நிலையில் உருகுகின்றன. இப்படிப்பட்ட வெள்ளியக் கலப்பு உலோகங்கள் மின்னியலில் உருகி (Fuse)கள் செய்வதற்கு பயன்படுகின்றன.
தகரம் நீர், ஒட்சிசன், காபோவிக்சுமிலம் போன்றவற்றால் பாதிக்கப்படுவதில்லை. வெள்ளிய அயன்கள் உடலுக்கும் நீங் கற்றவை. இதனாலேயே உணவுப் பொருட்கள், குடிபானங்கள் என்பவற்றை சேமிக்கும் குவளைகளின் உள். வெளி மேற்பரப்பு கள் வெள்ளீயத்தின்ால் முலாமிடப்படுகின்றன.
நீர் வண்ணம் (Water colour), பற்பசை போன்றவற்றைத் தாங்கி வரும் நெகிழக் கூடிய கொள்கலன்கள் (Tubes) Qasirar யத்தினாலேயே செய்யப்படுகின்றன.
சாயப்பொருட்கள் (dyes) தயாரிக்கவும், பங்கசு கொல்விகள் சுத்தமாக்கும் பொருட்கள் என்பவற்றின் தயாரிப்பிலும் வெள் எளிய இரசாயனங்கள் பயன்படுகின்றன.
நங்கூரக்

எங்களுக்கு உதவுவதன் மூலம் உங்களுக்கு உதவிட, சந்தாதாரர் ஆகுங்கள்.
சமூக அறிவியல் ஏடு

Page 19
\"& \! KK CC}*L"M" (Arự
■仁
------|- .---T니다.- . F--------- |-| |---- ... .|- |-_·|-|- - ( )|- ----「』|- |- | T:!-!*) |-|- |- |- -|- ----|- ~ . . .|- .
——)
---- .. s' . ... . . .
·|- sae) シ|-
() No ()~~ ~~
(~~~~
苫 シ
---- =~:: -
シ
|:|| -----닐- .– ()if (!! | ()!)*) ---- |--- No= | - No. !!!|-- - ( ) . sae.|- !』|- |-
Noae, ----**|- シ*–)需*|×
St. Joseph's Catholic
 

HoR) FE EBRILAR Y S95
1995,
Press. Jafffla,