கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1973.11.15

Page 1
நவெம்பர் 15, 1973
სი, 6126ზ : 3O சதம்
 
 

i qoỹrı : Uys iso??) hobidfi) Nos úgjoẾų, glasrı ışsųısoos J. Húseo & gjømtesso qoŲsımẹuosoofiɛ giastfīNoopurus ışsun yıloğfer oors usos for Lịsoos FiņQŪ@ ɑsɑ mɑɑrıņrotss@asuolo, Țılıņsīņ ipsit sựlısı Jilms@sip misfī£ siltissilē
@ınıņs údì) 1çoğoğrusIỆoặųısı,asgữ đī) — antasisūris

Page 2
சரித்திரத்து முடிவு
-: வரதபாக்கியான் ;-
குன்றை, குளிர்நிலவை, உழைப்பவர்க்கும், புதியதொரு குமரிமுலை போன்றவையை மாற்றத்தைத் தேடி வெண்பா, கலிப்பாவாய் மகத்தான வாழ்வமைக்க விருத்தமொடு, அகவலதாய் ஆற்றல் அளிப்பதுவே,
பண்டிதர்கள் யாவுரைத்த பழங்காலம் போய்முடிய இன்று புதுக்கவிஞர் ஈழமதிற் தோன்றியுள்ளார். அன்னுர் முலைபாடார் அழகுமிகு தொடைபண்டார் இன்னுள் மினிபாடார் இயற்கை யெழில் தனப் பாடார் நல்லூர் முருகனையும் நாச்சிமார் கோவிலையும் செல்வக் கதிர்காமச் சேந்தனையும் பாடவரார் உண்ட கைதன்னை உதருத கருமிகளைக் கன்னன் எனச் சொல்லிக் கல்வெட்டுப் பாடவரார் கண்ணகியா? மாதவியா? கற்புடையாள், என்றுளறிப் பண்ணுகின்ற காவியங்கள் பன்டக்கவரார், அன்னவர்கள் பின்னெதனைப் பாடப் பிறந்தாரா, சொல்லுகிறேன் பொய்யை, புனைகதையை பெரிய முதலாளரது பையை அழிப்பதற்குப் பாட்டெழுத வந்தவர்கள் ஏழைகளின் வீட்டில் எழுகின்ற பிரச்சனையை கூழுக் கலைபவரின் கொதிமனத்துச் சிந்தனையை வாழத் துடிப்பவரின் வாழ்க்கையினை, கவிதையதாய் ஆழப்பதிக்க, அவதாரம் எடுத்தவர்கள் மேனியுதிரத்தை வியர்வையதாய் உருமாற்றிக் காணிக்கு நீர்பாய்ச்சிக் களைக்கும் தொழிலாளிக்(கு) ஏணியென வந்து எழுந்து கவிபுனையும் ஆற்றல் மிகப் பெற்றேர் ஆணுலும் தற்பெருமைக் கூற்றுக் கிடம் கொடுக்காக் ခြိမ္ပိ பாவலர்கள்
லையும் இலக்கியமும் ளணியிலே உழுபவர்க்கும் உலைக்களத்தில் நித்தம்
அன்றிப் பிறவனைத்தும்
குப்பையிலே போடும் கூழங்கள் என்பதிலே தப்பில்லை. ஆமாம்
சரித்திரத்து முடிவிதுதான்.
நிதர்சனம்
எங்கள் உடலினின்றும் உதிர்பவை. வெறும் வியர்வைத் துளிகள் அல்ல
966) ... வர்க்கப் போராட்டத்தில் சிந்தப்படும் இரத்தத்துளிகள்.
ஒவ்வொரு சொட்டுக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
-பேணு. மனுேகரன்
சீனுவைப் பாடுவதால் . . .
சிணுவைப் பாடுவதால். செங்கொடியைப் பாடுவதால் ஏணுே சில “கவிஞர்? எம்மீது துள்ளுகிறர். எங்கள் கவிதைகட்கு இருக்கின்ற “மவுசு” வெம்பற் கவிஞருக்கு வேதனையைக் கொடுக்கிறதாம். வான விடிநிலவை வகை வகையாய்ப் பாடுகின்ற ஊனப் பிறவிகட்கு உள்ளெரிச்சல் ஏற்படுதாம் பெண்ணின் தொடைகளையே புதுவாழை என்று கவி பண்ணித் துலைக்கின்ற பாவலர்க்கு. ஆத்திரங்கள் மின்னித் தெறிப்பதிலே. விசித்திரங்கள் ஏதுமில்லை.
- வரதபாக்கியான்
இல

அரபு மக்களின் பலம்
அடுத்த ஆறு ஆண்டுகளிலும் அரபுநாடுகள் எண்ணெய் விற்பனை மூலம் 10,000 கோடி ஸ்ரேலிங் பவுணைப் பெறுவர். இத்தொகையில் பாதியை செலவு செய்யினும் மிகுதி அமெரிக்க அரசின் ஒதுக்குப் பணத்திலும் பார்க்க 10 மடங்காகிவிடும்.
"அரபுமக்கள் கைத்தொழில் அபிவிருத்தியடைந்த நாடுகள் அனைத்திற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் சவால்விடும் நிலையை அடைந்துவிடுவர்" என்று அமெரிக்க செனட்டர் ஆபிரகாம் றிபிகோவ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
* எண்ணெய் பாவிப்பதைக் கட்டுப்படுத்துங்கள்,கார் ஓடுவதையும் வீடுகளில் சூடாக்குவது குளிரூட்டுவதையும் குறையுங்கள்" என்று அமெரிக்க ஜனதிபதி நிக்சன் அண்மையில் ரேடியோ டெலிவிஷன் பேச்சில் வேண்டியது மட்டுமல்ல வெள்ளைமாளிகை அறைகளை உஷ்ண மூட்டுவதைக் குறைத்துள்ளார். எண்ணெயை மிச்சம் பிடிப்பதற்காக தமது விமானத்தை வேகம் குறைத்து ஒட்டுவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவில் எண்ணெய் கட்டுப்பாடு என்ருல் பலர் நம்பமாட் Litrisch !
உலக நாடுகள் அனைத்திலும் எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித் துள்ளது. இதனுல் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. கைத்தொழில்களே பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய மக்கள் எதிர்வரும் பணிக்காலத்தை பயத்தோடு காத்திருக்கின்றனர்.
அரபுமக்களின் பலத்தையும் தேவையையும் இன்றே உலகம் விழிப்புற்று அறிய ஆரம்பித்துள்ளது.
ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடுகள் அவர்களின் வளங்களை இனிமேலும் சுரண்டி வாழ முடியாது. is
புதிய ஊற்று ! புதிய சிந்தனை !
க ள னரி
(கலை, இலக்கிய, அறிவியல் காலாண்டு இதழ்)
கொழும்பில் கிடைக்குமிடம்:
தொடர்பு:
சுப்பிரம்ணியம் கட்டிடம், விஜயலட்சுமி புத்தகசாலை, கண்டி வீதி, 248, காலி வீதி, கிளிநொச்சி. வெள்ளவத்தை.
- 3 -

Page 3
அச்சுக் கலையில்
ஐம்பது ஆண்டுகள்
அனுபவம் பெற்றேர்
அழகான
★ 96).Je=U
வர்ண
அச்சுவேலைகளுக்கு
எம்முடின் உடனே தொடர்புகொள்ளுங்கள் !
குமரன் அச்சகம்|
201, டாம் வீதி : : கொழும்பு-12.
தொலைபேசி : 21388

வறுமை - முதலாளித்துவத்தின்
(yp PJ ண் பா (b) "பெருமாள்'
வறுமையையும் ஏற்றத்தாழ்வையும் முதலாளித்துவ அமைப்பில் தவிர்க்க முடியாதா?
வறுமை, ஏற்றத்தாழ்வு முதலாளித்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் முதன்மை பாகிறது. முதலாளித்துவம், வறுமை இரண்டும் பகைமை உறவு கொண்டவை. ஒன்றை ஒன்று அழிக்க முயலுபவை. அதறல் தான் முதலாளித்துவம் அதன் பிறப்பிலேயே அதை அழிக்கும் கருவையும் கொண்டிருக்கிறது என்று கூறுவர். முதலாளித்துவம் வறுமையையும் ஏற்றத்தாழ்வுகளையும் கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக பேணுகிறது:
(1)கூலிவிகித ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி பல்வேறு ரக இக்கட் டான வேலைகளையும் தொழிலாளர்களைக் கொண்டு செய்விக்கமுடிகிறது. (2) வேலையில் உள்ளவர்களுக்கு வறுமையைக்காட்டி எச்சரித்து தொழிலாளர்களைப் பல்வேறு படிகளில் பிரித்து வேலை வாங்குகிறது. வேலை செய்யாவிடின் பட்டினியிருக்க நேரும் என்று எச்சரிக்க முடிகிறது.
(3) வேலையற்ற ஏழைகளை ஒதுக்குப்படையாக வைத்து உழைப் போர் ஊதியத்தைக் குறைத்து, தொழிற் சங்கங்களைப் பலவீனப்படுத்த முடிகிறது. உழைப்போர் லாபத்தில் அதிக பங்கு பெற முடியாது போகிறது.
(4) குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளரும் வறியவர்களின் சேவையையும் உற்பத்திப் பண்டங்களையும் குறைந்த விலையில் பெற முடிகிறது.
‘வறியவர்களானதால் கூலி உழைப்பிற்குச் செல்கிருர்கள், கூலி வேலைக்குச் செல்வதால் வறியவர்களாகிருர்கள்’ என்று தோமஸ் அக்குவினுஸ் என்ற அறிஞர் கூறுகிருர்,
O 'ஸ்கூல்" என்ற வார்த்தை ஓய்வு என்று பொருள்படுகிறது: ஒய்வு நேரத்தைக் கொண்டிருந்த வர்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கே கல்வி இருந்துள்ளது. தனது வேலைகள் யாவற்றையும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைக்கொண்டு செய்வித்த சொத்துடைமை வர்க்கத்தைத் தவிர வேறு யாருக்கு ஒய்வு நேரம் இருந்தது. இன்னும் இருக்கிறது? ஆகவே மிகச் சமீபகாலம் வரைக்கும் கல்வி ஆளும் வர்க்கத்திற்கே உரியதாயிருந்தது.
மு. கார்த்திகேசன் களனி இதழ் ஐப்பசி-மார்கழி 1973
- 5 -

Page 4
கிழக்காசியாவில் அமைதி?
. "தியாகு" .
ரபு மக்களின் இயற்கைச் செல்வம் எண்ணெய். இ ன் சுமத்துவம் இன்றுபோல் உலகில் என்றும் தெரிந்ததில்லை. ஏனெ ல் முன் இந்த எண்ணெய்ச் செல்வம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. இன்று சிறிது சிறிதாக அரபு மக்களின் ஆதிக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது. எண்ணெய் விற்பதை கட்டுப் படுத்தத் தொடங்கியதும் ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடுகள் அரபு நாடுகளின் அடிதடவ வந்துவிட்டன.
ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் தொடங்கப் போகிறது. மத்தியகிழக்கு எண்ணெய் இல்லாவிடின் அவர்கள் குளிரினுல் விறைத் துச் சாகநேரிடும். இதை நிக்சனே தன் வாயால் கூறியுள்ளான். மேற்கு ஐரோப்பிய நாடுகள் அரபு நாடுகளின் நல்லெண்ணத்தைப் பெற போட்டியிடுவதைக் காண்கிருேம்,
அரபு நாடுகளைப் பயமுறுத்தி எண்ணெய் வளத்தைச் சுரண்டிய காலங்கள் மலேயேறிவிட்டன. இதற்காகவே ஏகாதிபத்திய, முதலா வித்துவ நாடுகள் இஸ்ரேல் என்ருேர் புதிய பாஷிச நாட்டை அரபு மக்களிடையே ஆயுதபலங்கொண்டு சிருட்டித்தனர். இதன் பலத்தை அரபு மக்களால் இத்தடவையே உடைக்க முடிந்தது. வீரப்போர் மட்டுமல்ல, அரபு மக்களின் ஒற்றுமை, எண்ணெய் விற்பனையின் கட் டுப்பாடு ஆகியவையும் சேர்ந்து ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடுகளை அச்சுறுத்தின. தோல்வி என்றதும் சமாதானம் பேசுவது ஏகாதிபத் தியத்தின் இயல்பான சுபாவமாகும்.
ஆயுத விற்பனை மூலமும் எண்ணெய் வளச் சுரண்டலில் பங்கு பெறுவதற்கும் முயலும் சமூக ஏகாதிபத்தியத்துடன் சமரசம் பேசி இன்று சமாதானத்தை ஏற்படுத்த முயன்றுள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
யுத்தம் சென்ற மாதம் ஆரம்பித்ததும் அமெரிக்க சமூக ஏகாதி பத்தியங்கள் இரண்டும் உலக யுத்தத்திற்கு மத்திய கிழக்கில் மல்லுக் கட்டிக் கொண்டு நின்றதை நாம் கண்டோம். பின்னர் வாஷிங் டனிலும் மொஸ்கோவிலும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இன்று எகிப்து, இஸ்ரேல் நாடுகள் ஆறு அம்ச சமாதான உடன்படிக்கை செய்துள்ளன. இது நிரந்தரமான சமாதான மாகுமா? அயலயலாக வாழும் மக்களின் சமாதானம் ஏகாதிபத்திய நாடுகளால் தீர்மானிக்கப்படுகிறது!
- 6 -

1938ல் மியூனிச் உடன்படிக்கை எழுதப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாவது உலகப்போர் அடுத்த ஆண்டே தொடங் கியது. தற்போதைய உடன்படிக்கை தற்காலிகமான சமாதானத் தையே ஏற்படுத்த முடியும்.
அரபுமக்கள் இன்று விழிப்படைந்து வருகிருர்கள். தமது சொந்தப் பலத்தையும் எண்ணெய் வளத்தின் சிறப்பையும் உணர்ந்து விட்டார்கள் சமூக ஏகாதிபத்தியத்தின் ஏமாற்றுவித்தைகளையும் எண்ணெய் ஆயுத விற்பனைச் சுரண்டல் நோக்கங்களையும் அறிந்து விட்டார்கள்.இனிமேல் ஏகாதிபத்திய ஆதிக்கங்களை முறியடித்து தமது விடுதலைப்போரைத் தொடங்கி விடுவார்கள். அதற்கு உலகமக்களின் ஆதரவு என்றும் இருக்கும்.
"இலக்கியத்தின் நலிவு தேசத்தின் நலிவு வீழ்ச்சியில் இரண்டும் இணைந்தே இருக்கும்.
களனி அட்டை, ஐப்பசி - மார்கழி 1973
O யாழ்ப்பாணத்தில் மட்டுமே செம்பிலோ குவளைகளிலோ உதடு களைப்பதியாது பானங்களைப் பருகும் சிறப்பான வழக்கம் நிலவுகிறது. இது 1884ல் யாழ்ப்பாணத்தில் பரவிய வாந்திபேதி நோய் கற்பித்த நல்ல பழக்கமாகும். வாந்திபேதி தடுப்புக்கு டாக்டர் கிறீன் பரப்பிய பிரசாரத்தைத் தொடர்ந்து இப்பழக்கம் ஏற்பட்டது. எச்சில், மலம் மூலமே வாந்திபேதி கிருமிகள் பெரும்பாலும் பரவுகின்றன. சாவீடு, ஆசுபத்திரிக்குச் சென்று வந்ததும் குளித்தல், வெளியே சென்று வந்ததும் கால் முகம் கழுவுதல் போன்ற பல நல்ல சுகாதார பழக்கங்களையும் இந்நோய் கற்பித்தது.
பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்கள் கூறியவை; கேட்டு எழுதியவர் இராசரத்தினம்
* இந்தச்சமுதாய அமைப்பு தாசிகளை மட்டுமல்ல, கள்ளர்களை, ஏமாற்றுக்காரர்களை, பொய்யர்களை, தறுதலைகளை, கொலையாளிகளைத் தானே உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது - எனக்குள்ளே ஒரு எரிமலை புகைக்கிறது.
யோ, பெனடிக்ற் பாலன் - களனி ஐப்பசி - மார்கழி 1973

Page 5
sigo Ergr2, or நான்கு ஒரு அரசாங்க அதிகாரியின் வாக்குமூலம்
- யோ. பெ. --
..............................
"நீ ஒரு அரசாங்க அதிகாரியாக எவ்வளவு காலம் இருக்கிருய்?" 'முப்பத்து மூன்று வருடங்கள்” "பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலா நீ நியமிக்கப்பட்டாய்?" "ஆம்" "கூறப்படும் சுதந்திரமடைந்த பின்னும் இன்றுவரை உனது பதவி மாறவில்லை”* .
'இல்லை. எமது பதவி நிரந்தரமானது" 'இப்போது நீ ஒரு திணைக்களத்தின் செயலாளர் இல்லையா?* "ஆம்!?? "நீ இந்தப்பதவிக்கு வந்தபின் எத்தனை அரசாங்கங்கள் மாறி விட்டன?"
'நாலு!" *எத்தனை கட்சி அரசாங்கங்கள் மாறி மாறி வந்துள்ளன' "இருகட்சிகள்!" "ஆணுல் உன்னுடைய நிலை மாறவில்லை. நீ யாருக்காக சேவை QamPaiu6ßqysiü?ʼ
'அரசாங்கத்துக்காக!' 'அரசாங்கம் யாருக்காக என்று கூறப்படுகிறது?" "தெரியும். மக்களுக்காக!" "நீ ஜனநாயகத்தைப் பற்றி என்ன கருதுகிருய்?" "அது ஒரு சிறந்த அரசியற் சித்தாந்தம். பிரித்தானியர் எமக்குத் தந்த பரிசு. அதுதான் எமது நாட்டுக்குப் பொருத்தமானது. அதை நாம் பலப்படுத்தினற் தான் எல்லாரும் சுதந்திரமாக சுபீட்சமாக aumpsvirblo
"இது யார் உனக்குச் சொல்லித்தந்தது?" *எனது பட்டப்படிப்புக்கு அரசியல் ஒருபாடம். மேலும் ஜன நாயகத்தின் நன்மைகளை நான் அனுபவிக்கின்றேன்!"
"நீ எந்தக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராகவும் வேலே செய்துள் ogaraum?'''
--سے 8د سیس۔
 

*இல்க்ல." "அரசாங்கங்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான்ே asir Gaia).** . . .
**ஆம்!" *நிர்வாக யந்திரம் அரசாங்கத்தைப் பாதுகாப்பது அது அரசாங் கத்துக்கு எதிராக இயங்கினல் அரசாங்கம் இயங்க முடியாது என்பது QAsffiaquDmr?ʼʼ
**ஆம் அதிகாரத்துவம் உண்மையில் நிர்வாக அதிகாரிகளிடம் தான் உண்டு"
**இருகட்சிகள் அரசாங்கத்தில் மாறிமாறி ஆட்சி நடத்துவதாகக் கூறினீர், அவற்றின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளீர். அவற்றின் கொள்கைகளில் என்ன வேறுபாட்டைக் கண்டீர்"
** அப்படி ஒரு பெரிய வேறுபாடும் இல்லை. அடிப்படையில் வித் தியாசம் இல்லை. ஏனென்ருல் அவை ஜனநாயக அரசாங்கங்கள் தானே?"
"இதிலிருந்து நீ என்ன கருதுகிருய்?" "ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது!" "யாருடைய ஜனநாயகம் என்று நினைக்கிருய்?
"மக்கள் ஜனநாயகம்!" **அதுதான் பொய். மக்கள் என்ருல் யார்?" **இந்த நாட்டில் உள்ள அனைவரும்!”*
இல்லை. மனிதர்கள் எல்லாம் மக்கள் இல்லை. மனிதர்கள் வர்க்கங்களாகப் பிரிந்துள்ளார்கள். சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் என பிரிந்துள்ளார்கள். இதில் சுரண்டப்படும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் மக்கள். சுரண்டும் வர்க்கம் மக்களின் எதிரிகள். இன்று சுரண்டும் வர்க்கம் தான் ஆளும் வர்க்கமாக உள்ளது. உண்மையில் மக்கள் அல்ல." -
"அது எனக்குப் புரியாது!" W "உனக்குப் புரியாவிட்டால் என்ன, புரிந்தால் என்ன உண்மை இதுதான்! ஆகவே ஆளும் வர்க்கத்தின் ஜனநாயகம் தான் பாதுகாக் கப்பட்டுள்ளது என்று திடமாகக் கூறுகிருேம்!"
"அது எனக்குத் தெரியாது!" *உன் வாக்கு மூலமே உண்மையைக் கூறுகிறது. அரசாங்கங்கள் மாறியும் நடைமுறைக் கொள்கையில் வித்தியாசம் இல்லை என்று. கறிஞய். அதன் அர்த்தம் என்ன? கட்சிகள் மாறியும் ஆளும் வரிக்கம் மாறவில்லை. ஆட்கள் மாறியுள்ளார்கள், அடிப்படைச் கொள்கைகள் மாறவில்லை. அதாவது பிரித்தானியர் விட்டுச்சென்ற
سس- 9 سس

Page 6
சொத்துடமை அமைப்பு, நிலவுடைமை முதலாளித்துவ அமைப்பு மாறவில்லை. அந்தச் சொத்துடைமையை காக்கின்ற வர்க்கம் தான் ஆட்சியில் தொடர்ந்தும் இருக்கிறது என்பது புரியவில்லையா?" “எனக்கு இந்த அரசியல் புரியவில்லை”* x - Y **இது மக்கள் அரசியல். உனக்குப் புரியாதுதான்!' *"மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட பாராளுமன்றம்தானே ஆட்சி நடத்துகிறது!"
"அது ஏமாற்றுவித்தை, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகளே தவிர மக்கள் பிரதிநிதிகள் அல்ல' VK.
'நீங்கள் கூறுவது புதுமையாக இருக்கிறது" ‘புதுமைதான். இந்த நாட்டு உழைக்கும் விவசாயிகளும், தொழி லாளர்களும் தான் இந்நாட்டு மக்கள். அவர்கள் பிரதிநிதிகள் தொழி லாளிகளாக விவசாயிகளாக இருக்க முடியுமே தவிர அவர்களைச் சுரண்டுகின்ற முதலாளிகளும், நிலச் சொந்தக்காரரும், பெரும் வியாபாரிகளும் அல்ல என்பது புரிகிறதா?”
**ஆம்!" **இதுவரை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள், விவசாயிகளோ, தொழிலாளர்களோ அல்ல."
**வேறுயார்?' * சுரண்டல் காரர்கள், சொத்துடைமை வர்க்கத்தினர்!" "மக்கள் தானே தெரிந்து அனுப்பினுர்கள்'" "அது தவறு, ஜனநாயகப் போர்வையிலே மக்கள் ஏமாற்றப் பட்டுள்ளார்கள்!'
**நான் ஜனநாயகத்தை நம்புகிறேன்!' 'நீ ஒரு நிலச் சொந்தக்காரனின் மகன். உன்வர்க்கத்தின் கொள் கையை நீ நம்பத்தான் வேண்டும். நீ இதுவரை ஆளும் வர்க்கத்தின் அரசாங்கத்துக்கே சேவை செய்துள்ளாய். அத்துடன், அந்தச் சுரண்டும் வர்க்கத்தோடு சேர்ந்து நீயும் சுரண்டியிருக்கிருய்!??
"ஐயோ! இல்லை’ ""உனக்கு மாதம் எவ்வளவு சம்பளம்?"
1,500 eurl'' . . . “கொழுத்த சம்பளம்பெறும் நிர்வாக அதிகாரி இல்லயா?
"ஆம்! 罗多 **நீ யாருக்குச் சேவை செய்ய வேண்டும்??? X. 'மக்களுக்கு!" . . . . 'ஆளுல் நீங்கள் மக்களுக்குச் சேவை செய்யவில்லை. மக்கள் உங்களை அணுக அஞ்சுகிருர்கள். மக்களைக்கண்டால் நாய்போல் குரைக்கிறீர்கள் மக்கள் காரியங்களை விட உங்கள் சொந்தக்காரியங்கள் பெரிதாக படு
س- 10 س

கின்றன: அதிகாரத்தை உங்கள் சொந்த நலன்களுக்காகப் பாவிக் கிறீர்கள், மக்கள் பணத்தில் முழு நேரமும் உங்கள் சொத்து, சுகம், மனைவி மக்கள் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்! அலுவலக நேரத்தில்தான் மனைவிக் குச் சேலை வாங்கவும் செல்கிறீர்கள். ஒரு மணித்தியாலம் கூட அலுவல கத்தில் இருப்பதில்லை"
'இல்லை. நான் மறுக்கிறேன்!"
"இன்னும் கேள். நாடு எப்படிப் போனுலும் பரவாயில்லை. உங்கள் பேரில் சொத்துப் பெருகினற் போதும் என்று கவலைப் படுகிறீர்கள். மக்கள் பணத்தில் எவ்வளவை வாரிக்கொள்ள முடியுமோ அவ்வளவையும் வாரிக்கொள்கிறீர்கள். உங்களுடைய நண்பர்கள் மக்கள் அல்ல. முதலா ளிகளும், பெரும்வியாபாரிகளும், நிலச்சொந்தக்காரர்களுமே உங்கள் இனிய நண்பர்களாக இருக்கிருர்கள்.""
'பொய்! பொய்! இதுவரை அப்படி ஒரு குற்றச்சாட்டும் என்மீது
இல்லை. நான் விசுவாசமான அரசாங்க ஊழியன்?”
'இதோ மக்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் நீ கைலஞ்சம் வாங்க வில்லையா? அரசாங்கப் பணத்தை மோசடி செய்யவில்லையா? உன் திணைக்களத்தில் ஊழல்கள் நிறைந்துள்ளன???
'அபாண்டம்! " **அப்படியா? நீ பதவிக்கு வந்த பின் உன் மனைவிபெயரில் கம்பணி களில் பங்கு வாங்கவில்லையா? சொத்து எதுவும் வாங்கவில்லையா? புதுக்கார் வாங்கவில்லையா? இவையெல்லாம் எப்படி வந்தது? உன் சம்பளம் உன் சுகபோக வாழ்க்கைக்கே போதாது என்கிறேன். உன் வரவு செலவுக் கணக்கைக் காட்டு. நீ தொடர்ந்து மக்களை ஏமாற்றமுடியாது" "ஆணுல் நான்மட்டுமல்ல, வேறும் பலரும் அப்படித்தான். என்னை மட்டும் குற்றம் சாட்டக் கூடாது!" • "பார்த்தாயா?, உண்மைகள் உனது சொல்லுக்கு மாருக இருக் கிறது. நீ ஏன் ஜனநாயகத்தைப் போற்றினய் என்பது இப்பொழுது புரிகிறது. சுரண்டல் வர்க்கத்தின் ஜனநாயகம் நிலைத்திருந்தால் நீயும் சுரண்டலாம். சொத்துச் சேர்க்கலாம். ஒய்வு எடுத்தபின் தேர்தலில் நின்று ஒரு பிரதிநிதியாகவும் ஏன் மந்திரியாகவும் வரலாம் இல்லையா?"
'எனக்கு அந்த யோசனை இல்லை" "உன் கதையை விடு! உன்னை விசாரணை செய்ததில் இருந்து இந்த முடிவுக்குத்தான் வருகிருேம். அரசாங்கம் ஒரு நடு நிலையான அமைப்பு அல்ல; அது வர்க்கம் சார்ந்தது. சுரண்டல்வர்க்கத்தால் அமைக்கப்படும் அரசாங்கமும், அதன் உறுப்புக்களான பொலிஸ், இராணுவம், அரசாங்க இயந்திரம் என்பனவும் சுரண்டல் அமைப்பையும், சுரண்டல் வர்க்கத் தையும் பாதுகாக்க உதவுவன. அத்துடன் பொதுத்தாபனங்களும் சுரண்டற்காரரின் குகைகளாகவே மாறிவிடுகின்றன." O
- 11 -

Page 7
கே. ஏறும் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாதா?-க. சாந்தி, கண்டி,
பு: விலைக்ளையோ, நாட்டின் பொருளாதாரத்தையோ முதலாளித்துவ அமைப்பில் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் முதலாளித்துவம் லாபம் சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்ட கட்டுப்பாடற்ற அமைப்பாகும். லாபம் சேர்க்க முடிந்த உற்பத்தியை நோக்கி கெடுபிடித்து முதலாளிகள் ஒடுவர்; லாபமில்லாவிடின் உற்பத்தி யைக் கைவிடுவர். சோஷியலிசத்தில் உள்ளது போன்ற திட்ட மிட்ட உற்பத்தி முதலாளித்துவத்தில் கிடையாது.
அடித்தளமில்லாத பணம், உற்பத்திக் குறைவு, ஏகபோக உற்பத்தி ஆகியன விலைகளை விஷம் போல் ஏறச் செய்கின்றன.
கே: வங்கீட்டரிசியைக் குறைத்ததாலும் உணவுப் பண்டங்களின் விலை
ஏற்றத்தாலும் லாபமடைபவர் யார்? - க.சிவகுரு, திருகோணமல்ை. '
பு: ஆளும் வரிக்கத்தவர். அவர்களுக்குத் தொடர்ந்திருந்த உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி குறைந்து வருகிறது. மக்கள் போரிட்டுச் சும்மா பெற்ற ஒரு படி அரிசிக்கு இப்போது அரசு ஒரு ரூபா விற்கு மேலாகப்பெறுகிறது. (சும்மா க் படி - ஒரு ரூபாவிற்கு படி, மக்கள் வெளியே வாங்க நேரும்போது படிக்கு இரண்டு ரூபா கொடுக்கின்றனர். ஆகவே ஒரு படி இரண்டு ரூபாவாகிறது. இது அரசுக்கு லாபமே) மா, சீனி மூலமும் மக்கள் பெற்ற சலுகைகள் குறைந்துவிட்டன. இப்பெரு லாபங்களே மறைத்து சிறு சலுகைகள் காட்டி பெரிய பிரச்சாரம் செய்ய ஆளும் வரிக்கம் முயலலாம்.
கல்வியின் நோக்கம் என்ன? வர்க்க ஆதிக்கமுள்ள சமூகத்தின் அமைப்பு, கொள்கைகள், தத்துவம் ஆகியவற்றை ஆளும் வர்க்கத்தின் பிள்ளைகளுக்குப் போதிப்பதே i. அதன் நோக்கமாகும். ஒரு சமூகம் எந்தளவிற்கு உழைக்கிறது, ஆளும் ★ வர்க்கத்தின் நலனுக்காக எப்படி ஒரு சமூகம் நிலை நிறுத்தப்படவேண்டும் என்பதும் அவர்களுக்குப் போதிக்கப்பட்டது. மற்றவர்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு சர்வவியாபகமான கல்வியின் நவீன நடைமுறையின் கீழ் வர்க்க சமூகத்தின் பண்புகளோடு விடுதலை, சமத்துவம், தோழமை, ஜனநாயகம், உலகநீதி ஆகியவற்றையும் போதித்து வர்க்க ஆதிக்க சமூக அமைப்பை ஏற்றுக் கொள்ளவும் பாதுகாக்கவும் கற்பிக்கப்
படுகிறது.
மு. கார்த்திகேசன் களனி இதழ், ஐப்பசி-மார்கழி 1973
- 12 -
 
 
 
 
 
 

};***_్కస్క్రీస్ల i
懿 వీ.పీ.జీ.శ.టీ.సీ. వీ.పీ.సీపీ
கேள்வி வேல பதில்
Se .
米 கே:
கே:
அரபு-இஸ்ரேலிய யுத்த நிறுத்தம் எவற்றைக் காட்டி நிற்கின்றது? மு. உசெயின், கல்முனை.
கிழக்காசியாவில் அமெரிக்க, ரஷ்ய ஏகாதிபத்தியங்களின் ஆதிக்
கத்தைக் காட்டி நிற்கிறது. எண்ணெய், ஆயுத விற்பனைச் சுரண் டலே இருவரது குறிக்கோளுமாகும். சுரண்டலை போரிடாது பங் கிட்டுக் கொள்வோம் என்பதே இருவரது ‘சமாதான முடிவாகும். அரபு மக்கள் சோவியத் சமூக ஏகாதிபத்தினுல் இரண்டாவது தடவையாக ஏமாற்றப்பட்டார்கள். விரும்பாத மக்கள் மேல் சமாதானத்தைத் திணிக்க முடியாது. விழித்தெழும் பலஸ்தீனிய, அரபு மக்கள் ஏகாதிபத்தியங்களை கிழக்காசியாவிலிருந்து விரட்டியே இஸ்ரேலிய மக்களோடு சமாதானமாக வாழ்வர். மொஸ்கோவி லும் வாஷிங்டனிலும் முடிவு செய்து திணிக்கப்படுவது தற்காலிக சமாதானமே. "எதிர்காலச் சந்ததியினரை ஈடு வைக்க மாட்டோம்" என்ற பிரதம ரின் கூற்றை அமைச்சர்கள் மீறிவிடுவார்களா?
மே. மனேகரன், கொழும்பு.
நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டத்திலேற்பட்ட பற்ரூக் குறையை கீழ்க்கண்ட முறையாக நிவர்த்தி செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். பண்டக்கடன் உதவி: ரூ. 40 கோடி, திட்டக் கடன் உதவி ரூ. 12, 3 கோடி.
அமெரிக்காவைப் பகைக்க விரும்பவில்லை. அதற்காகவே சமர
தானத்திற்கு உடன்பட்டேன் என்று எகிப்திய ஜனதிபதி கூறி , சாதிக்-கல்முனை.
யதன் உட்பொருள் என்ன?
ஏகாதிபத்தியத்தைப் பகைக்க விரும்பவில்லை என்பதேயாகும்: அரபு நாடுகளில் இன்றும் ஆளும் வர்க்கமாக விளங்கும் தேசிய பூஷ்வா தரகு முதலாளிகளின் குரலே இதுவாகும், அரபு மக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முற்ருக எதிர்க்கின்றனர்: அதன்
சுரண்டலையும் இஸ்ரேல் மூலம் காட்டும்பலாக்காரத்தையும் பகைக்
கின்றனர். அவர்களின் விடுதலையியக்கம் வலுவடையும்போது ஏகாதிபத்தியங்களுடன் சமரசம் பேசும் நில ஏற்படமாட்டாது.
- 13 -

Page 8
, கொலமுவைப் ற்றிய
சில குறிப்புக்கள்
* பேராசிரியர் அ. சின்னத்தம்பி *
இந்நோயின் பெயர் கொலி என்னும் கிறேக்கச் சொல்லிலிருந்து பிறந்தது-கொலி-பித்தம் இறியா-இரிவு-(கழிச்சல்). பித்த வாந்திக் கழிச்சல் நோய் கொலரு ஒரு பிழையான பதமாம். தமிழில் கோதாரி நோயென்பர்-கொற்றைவாரி கொத்தைவாரி=கோதாரியாக மாறியது.
யாழ்ப்பாணக்குடா நாட்டில் சென்ற நூற்ருண்டில் இருதரம் மீக்குடி நோயாகப் பரவி பல மக்களை மாய்த்தது. ஒருக்கால் 1855 ம் ஆண்டிலும் மற்ருெருக்கால் 1866ம் ஆண்டிலும் மீக்குடியாகப்பரவியது.
1817 ஆம் ஆண்டுக்கு முன் இந்நோய் சிறப்பாக கிழக்கு தேச நாடுகளில் மட்டும்தான் குறிப்பாக இந்தியாவில் மட்டும் நிலவி யது. 1817-1823 வரைக்கும் இந்தியாவிலிருந்து உலகத்துப் பல நாடு களுக்குப்பரவி அகல் குடி மீக்குடி நிலைமையடைந்தது. 1923-1958 ஏனைய நாடுகளில் நிலவும் சுகாதார முறைகளால் மீண்டும் இது கிழக்குத் தேச நோயாப் நிலவுகின்றது. இந்தியாவிலிருந்து அயல் நாடு களுக்கு இன்னமும் அடிக்கடி பரவும். யோன்சுனே என்பவர் (இலண் டன்) இது ஒரு நீரால் பரப்பப்படும் நோயென அறிந்து (1854) இலண்ட னில் நோய் பரவும்பொழுது ஒரு முக்கிய வீதியில் இருந்து நீர்ப்பம்பியை அகற்றி (தொற்றுற்ற கிணற்றிலிருந்து நீர் பம்பப்பட்டது) நோய் பரவலைத் தடுத்தார். மேலும் அவர் இது குடல் மியூக்கசு மென்சவ்வை மட்டும்தான் பாதிக்குமெனக் கண்டார். 1883 இல் கொக் என்பவர் இசிப்பற்று நாட்டில் கொலரு மீக்குடி நோயாக பரவுவதை ஆராய்ந் தார். அவர் இறந்தவர்களின் குடலில் உள்ள மியூக்கசுவை பட லம் செய்து சாயமூட்டி பார்க்கும்பொழுது குறு கொம்மா வடிவ பசிலசுகளைக் கண்டார். மீண்டும் வங்காள நாட்டில் (நோயின் அகக்குடியிடம்) இறந்த நோயாளர்களின் குடலி ஆறு ம் மலத்தி லும் அதே கொம்மா உயிரியைக் கண்டார். இதை கொலரு வியிறியோ எனப் பெயரிட்டனர். மேலும் 1906 இல் கொற்சிலிக்கு என்பவர் எல்தோர் என்னுமிடத்தில் மக்கா யாத்திரை செய்பவருக்காக நிறு விய (அரேபியா) தொற்றுத் தடுப்பு நிலையத்தில் யாத்திரிகர்களின் டிலத்திலிருந்து கொலரு விபிறியோக்கள் போன்ற உயிரிகளைத் தனிப்

படுத்தினர். இவை மரபு விபிறியோக்கள் போன்றன்று. செம்மறி வெள்ளாடுகளின் செங்குருதிக் கலங்களை குருதியிழிசல் செய்தன.
இவற்றை தீங்குவிளையாக்கோதாரி நோயெனக் கருதினர். ஆணுல் 1938
இல் செலிபீள் நாட்டில் இதே போன்ற உயிரியால் ஒரு கொலரு போன்ற நோய் பரவியது. நோய் ஓரிடத்திலிருந்து வல்விரைவு போக்கு வரத்து வாகனங்களாலும் தல யாத்திரைகளாலும் குடி பெயர்வதால் மக்கள் கூட்டம் பெருகும் திருவிழா பெருநாள் காலங்களிலும் பரவக்கூடும். பரவி உயிர்களைப் பெருவாரியாகக்கொல் லும் கொள்ளே நோயாகத் தோற்றும்.
இந்த எல்தோர் கொலருவானது 1958 இல் இன்டோனேசியா, தாய்லாந்து ஆய நாடுகளுக்குப் பரவியது. 1968 இல் மேற்கு பசி பிக்கு நாடுகளுக்கு பரவியது. 1964 இல் பங்காளதேசிலும், பேமாவி லும் தோன்றியது. 1964 இல் கல்கற்ருவிலும் காணப்பட்டது. இங் கிருந்து அயல் நாடுகளுக்கும்-(நேபாளம், மேற்கு பாக்கித்தான்) உரு சியா, பேசியா ஆய இடங்களுக்கும் பரவியது. இந்தியாவில் காணப் பட்ட வியப்புக்குரிய நிகழ்ச்சியானது இந்த எல்தோரானது பழைய கொலரு விபிறியோ நோயை விரைவில் குடிபெயர்த்து மறையச்செய் கின்றதென்பதேயாகும். தற்காலத்துப் போக்குவரத்து வாகனங்கள் நாடுகளின் இடை தூரங்களையும், பயண காலவளவையும் மிகக்குறுக்கம் செய்கின்றபடியால் சிறப்பாக இந்த எல்தோர் கொலருவும் பழைய கொலருவும் இப்போ அனைத்துலக நாடுகளுக்கு ஒரு பெரும் புதிரா குமென்பதேயாகும். இந்த எல்தோர் நோய் வடிவத்தின் கடும் தாக் கங்கள் பழைய கொலருவிலிருந்து வேறுபடுத்த முடியாதவையாம். தீர்வு பெருவிடின் சில மணிகளுள் (ஒரைகள்) உயிரைக் கொள்ளை கொள்ளும். சாதாரணத் தோற்றங்களில் எளிய வயிற்றுக் கழிச்சல்களைப் போலிருக்கும். பொது மருந்துத்தீர்வைக்கும் குணமடைவர். இவர் கள் காவிகளாகப் பின்னர் கெடுதியை விளைவிப்பர். சிலருக்கு அறிகுறி கள் தோன்ருது காவிகளாக அமைவர். ஆகவே 1962 இல் இதை யும் தொற்று தடுப்புப் பாதுகாப்பு முறைக்கு உட்படுத்தின்ர். இந் நோய்களின் விபிறியோ காவிகள் நோயின் அகக்குடி நிலைமைக்கு பொறுப்பாளிகளாவர். இவர்களால் மக்களுக்கு பெரும் கெடுதி விளை யக்கூடும். இவர்களைக் கண்டு பிடிப்பதும் தீர்ப்பளிப்பதும் வில்லங்க மாகும். வசீனேற்றல்மூலம் காவிகளையில்லாமற் செய்யவே முடியாது, ஆனல் தோய் தொற்றது சிறிது கால பாதுகாப்பையளிக்கும். 1910 மட்டில் உருேஜர் (ஸ்) என்பவர் அதி தொணிப்பு உவரி நீரையும் காரக்கரைசல்களையும் தீர்ப்புக்குப் பயன்படுத்தினர். இதனல் சா வீதம் 60% இலிருந்து 20% உக்குக் குறைக்கப்பட்டது. தற்காலத்தில் சமசெறிவு உவரி நீரையும் காரக் கரைசல்களையும் நுண்ணுயிரெதிரிசு
- 15 -

Page 9
*ளயும் பயன்படுத்துவர். குடிப்பதற்கு பொற்ருசியக் கலவைகக்ாயும் இன நீரையும் (தெங்கு) கொடுப்பர். நுன்னுயிரெதிரிகள் நோயாளி விபிரியோக்களைக் கழிக்கும் நாட்களைக் குறுகச் செய்யும். ஆகவே கிரு மிகள் மற்றவருக்குத் தொற்றுவதையும் குறைக்கும். நுண்ணுயிரெதி ரிகள் மேலும் ஊடிரியா (பீச்சலின்) நிலவும் நாட்களையும், மலத்தின் கனவளவையும் குறைத்து தாள் மூடாக வழங்கும் தீர்ப்பு நாட்களே பும் குறைக்கும்.
குழந்தைகளுக்கு இலற்றேற்றேற்றிய இறிங்கர் கரைசல்யும் நுண் ணுயுரெதிரிகளையும் கொடுத்து நற்பலனப்பெற முடியும். ஏற்ற தீர்ப்பு வேளையுடன் அளிப்பின் சாவீதம் புறக்கணிக்கத்தக்கவளவிலாம். சுகாதார முறைகள்: மீக்குடி நிலைமையாய் பரவும் பொழுது தீர்ப்பு நிலையங்களை சிறிது காலத்துக்கு நோய்காணும் இடங்களில் திறுவ வேண்டும். நோயாளருக்குத் தீர்ப்பு செய்வதுடன் தொற்றுற்ற வீடு களையும் மாசுற்ற உடைகளையும் தொற்று நீக்கல் செய்ய வேண் டும். மலம், கஞ்சல், கூளம், செத்த உடல்கள் யாவற்றையும் ஏற்ற முறையில் அழிப்புச் செய்ய வேண்டும். நெருங்கிய தொட்டுப் பணி யாளரையுபட ஏனையோரையும் பாதுகாவல் செய்ய வேண்டும். நோயைப் பற்றிய அறிவையும் சுகாதார விதிமுறைகளையும் மக்களுக்குப் புகட்ட வேண்டும்.
நீர் வழங்கல் முறைகளைச் சோதித்து ஏற்ற ஒழுங்குகளைச் செய்ய வேண்டும். (முற்காலத்தில் தமிழ்ப்பிரதேயங்களில் நிலவிய சுகாதார விதிகள் இந்நோயிஞற்போலும், ஏதனங்களிலிருந்து வாய்வைத்துக் குடிப்பதில்லை. புறவிடங்களில் நீர் பருகார்.)
முக்கியமாக வாய்வழியாக நோய் பற்றுவதால் நீரிலும், குடிபானங் களிலும் பழங்கள் உணவுப் பொருட்கள் ஆதியனவிலும் நோயாளி பயன்படுத்திய ஏதனங்கள், உடைகள் ஆயவற்றிலும் நோயுயிரியின் வாழ்காலத்தை அறிய வேண்டும். இவ்வகையான பொருட்களை வெளி தாடுகளுக்கு ஏற்றுமதி செய்யின் அந்நாடுகளிலும் நோய் பரவக்கூடும். விகொலறையானது இயற்கை நீரில் 5-7 நாட்களுக்கு பெற்றுப் பெருக் கமடையாது உயிருடன் வாழும். குளோறினேற்றிய நீரில் சில நிமி டங்கள் மட்டில்தான் உயிருடன் வாழும். பல்வகை உணவுச்சாமான் களிலும் பழங்கள் உணவு பொருட்கள் மரக்கறிகளிலும் அவற்றின் உயிருடன் நிலைக்கும் வாழ்நாட்கள் உணவின் வகை நீர்ப்பதன், அமி லநிலை ஆயவற்றிலும் இவற்றின் வைப்பிடங்களின் ஈரப்பதன் வெப்ப நிலை ஆயவற்றிலும் தங்கியிருக்கும். இவை 30-32 ச.வெப்ப நிலையில் (அதாவது படுக்கையறை வெப்பநிலை) 2-3 நாட்களுக்கு உயிருடன் இருக்கும். (மாசுபடுத்திய தின்பொருட்களிலிருந்து விபிறியோக்கள் 'அகற்றும் சிறந்த முறை அவற்றை அவித்தலாம்.)
- 16

ஈர உடைகளில் 3 நாள் மட்டில் உயிருடன் வாழும். தூய நீரில். கொதிக்க வைத்த நீரில் விறைவிலிறக்கும் உப்பையும் சேதனப் பொருள்களையும் அடக்கிய அழுக்கு நீரில் நாட்கணக்கில் (6 கிழமை கள் மட்டில்) வாழும். கடல் நீரில் சில நாட்களுக்கு உயிருடன் வாழும், மட்டான வெப்பமும் அமிலமும் அவற்றை இலகுவிற் கொல் லும். (முற்காலத்தில் மோரைக் குடிக்க) எல்தோர் விபிரியோயுயிரி யானது பழைய கொலருபுயிரியிலும் பார்க்க நீடிய காலத்துக்கு உயி. ருடனிருக்கும். மீண்டும் நினைவுறுத்த விரும்புகிறேன்-மனித கூட்டத்தில் தொற்ருனது மலத்தில், எச்சில் (உமிரி நீர்) ஆயவற்றிலுள்ள எல்தோர் கொலரு விபுரியோ சரி, பழைய கொலரு விபிரியோசரி இவற்ருல் அழுக் குற்ற குடிதண்ணீராலும், அல்லது நீர் பானங்களாலும், உணவுப்பண் டங்களாலும், பால், பாலா லாக்கிய உணவுப் பொருள்கள், குளிரான சமைத்த அட்டுக்கள் நீரால் கழுவப்பட்டும் ஆளுல் அவிக்கப்படாத பழங் கள் கீரை வகைகள்ஆயனவற்ருலும் வாய் வழியாகத் தொற்றுறும். தொற்று ஒருவரிலிருந்து மற்றவருக்கு மலத்துடன் அல்லது வாந்தியுடன், தொடுகையுறுவதால் உண்டாகும். இத்தொற்றைப் பரப்புவதில் வீட் டிலையானும், கொலருயுயிர்களைத் தம் கைகளில் காவும் பிணியாளனு டன் ஈடுபடும் நெருங்கிய சுற்றத்தாரும், பணியாட்களும் நோயிலிருந்து மாறுண்ட கொலருக் காவிகளுமாம். இவர்களிருபாலரும் மலம் கழித்தபின் அல்லது முந்தியவர் நோய்ப்பட்ட மலத்துடனும் உமிரி, நீருடனும் தொடுகையுற்ற பின்னர் தம் கைகளைச் சுகாதார விதிப் படிச் சவர்க்காரமும் தூய நீரும் கொண்டு கழுவாது உணவுப்பொருட் களுடனும் உணவு சமைப்பதிலும் ஈடுபடுவர். (தற்காலத்தில் விஞ் ஞான அறிவு மிகப்பெற்றிருப்பினும் அவற்றிற்கு அமைய ஒழுகுவ தில்லை) நோயாளிக்கு அவனுக்கென புறம்பாக வைக்கப்பட்ட குடி கிண் னங்கள் தட்டுக்கள் ஆயவற்றை பிறர் பொது வேதனங்களாகப் பயன் படுத்துதல் நோயுழிரிகள் செறிந்த உமிரி நீரால் (எச்சிற்படல்) இவ் வேதனங்கள் தொற்றுறும்.
மிகக்கெடுதியானவை வீட்டிலையான்களாம். மலம், எச்சில் ஆய வற்ருல் அழுக்குற்ற பொருள்களிலிருந்து தம் கால்களால் நோய்க் கிருமிகளைக் காவியபின், அவை எவரின்வாய், சொண்டுகள் ஆயவற் றிலும், குடிபானம், உணவுப்பொருள்கள் மற்றும் பயன்படுத்தும் ஏத னங்கள் ஆயவற்றிலும் குந்தி நோயைப் பரப்பும். நோய் தோன்றின் உடனடியாக விஞ்ஞான அடிபடைத்தீர்ப்பு பெறவும் (பேராசிரியரால் எழுதப்பட்ட அயனந்த தேச நோய் நூலின் இரண்டாம்பதிப்பு அச் சேறவிருக்கின்றது. இதிலிருந்து அவரின் அனுமதியுடன் பெறப்பட்டது. நோயைப் பேணும் முறைகளை அவரால் வெளியிடப்பட்ட நலம் போல் விஞ்ஞான நூலைப் படிக்கவும்.) O,
ب- :17, سي

Page 10
மனித குலத்தின் வரலாறு 14. அடிமைச் சமுதாய வீழ்ச்சியும் பிரபுத்துவத்தின் பிறப்பும்
இத்தாலி அடிமைச் சகாப்தத்தின் கேந்திரமாக விளங்கிற்று. கணக் கற்ற அடிமைகளை வைத்திருந்த ரோம எஜமானர்கள் பெருமளவில் விவ சாயம்செய்துகொள்ளைலாபம் சம்பாதித்தனர். அன்று அடிமைகளின்முது கெலும்பின்மீது செல்வம் எனும் மாளிகை கட்டப்பட்டது. உண்மை யில்அடிமைகளின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்தனர் ரோம எஜ மானர்கள்.
உரிமைகளும் உற்பத்திக் கருவிகளும் இல்லாத அடிமைகள் அவமதிக்கப்பட்டனர். செக்குமாடுபோல் உழைக்கும்படி நிர்ப்பந்திக் கப்பட்டனர். துன்பம் நிறைந்த வாழ்க்கை அவர்களின் ஜீவசக்தியை உறிஞ்சியது. வாழ்க்கை எனும் சுமையை சுமக்க முடியாமல் அவர்கள் துன்பக் கண்ணீர் வடித்தனர். கேவலமான வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்காக அவர்கள் தப்பி ஓட முயன்றனர். எனவே இரவில் அவர்களுக்கு எஜமானர்கள் விலங்கிட்டினர். குடும்ப வாழ்க்கை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அடிமைகள் கல்யாணம் செய்யக்கூடாது எனும் நியதி அமுலில் இருந்தது. கல்வி கற்கவும் அடிமைகள் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அறிவு அடிமைகளின் அறிவுக் கண்களைத் திறக்கும் னன்பது எஜமானர்களுக்குத் தெரியும். அடிமைகள் மீது எஜமானர்கள் ஏகபோக உரிமை கொண்டாடினர். அடிமைகளை அவர்கள் எதுவேண்டுமாஞலும் செய்யலாம். அடிமைகளை அவர்கள் சித்திரவதை செய்யலாம்; உருக்குலைக்கலாம்; கொலை செய்யலாம். பல நாட்கள் பட்டினிபோடப்பட்ட சிங்கத்துடன் எந்த விதமான ஆயுதமுமின்றி போர் புரியும்படி அடிமைகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். அந்தக்காலத்தில் இதுபெரிய வேடிக்கையாக மதிக்கப்பட்டது, “னஜமானர்களின் இன்பத்துக்காக, அவர்களின் நன்மைக்காக அடிமைகள் தங்குதடையின்றிப் பலியிடப்பட்டனர். எஜமானர்கள் கிழிக்கும் கோட்டைக் கடந்து செல்லத் துணியும் அடிமையின் கதி அதோ கதிதான். அவன் எஜமானுக்கு ஏதும் தீங்கு செய்தால் அவன் மாத்திர மல்ல, அவனைச் சேர்ந்தவர்கள் கூட நிர்மூலம் செய்யப்படுவார்கள். அடிமைச் சகாப்தத்தில் இந்த நிலைமை எங்கும் குடிகொண்டிருந்தது.
முதுகெலும்பு முறிய வெயிலிலும் மழையிலும் வேலைசெய்த அடிமைகளுக்குக்கிடைத்த ஊதியம் சவுக்கடி. கடுமையான உழைப்பால் தளர்ந்த அடிமைகள் உழைக்கும் சக்தியை இழந்தனர். வேலை செய்யும்படி அவர்களைத் தூண்டுவதற்காக கங்காணிகள் இடைவிடாது அடித்தனர். இவ்வாருன துன்பத்தைச் சகிக்க முடியாமல் அடிமைகள் ஈசலப்போல மடிந்தனர். காலப்போக்கில் அடிமைகளின் எண்ணிக்கை
- 18 -

படிப்படியாகக் குறைந்தது. யுத்தக்கைதிகளை அடிமைகளாக மாற்றும் முறையும் அன்று அமுலில் இருக்கவில்லை, சகிக்க முடியாத வறுமையும், பொருளாதார பேதமும் அடிமை முறைக்கு உலைவைத்தன. துன்பத் தால் விறைத்த அடிமைகளின் இதயத்தில் துணிச்சல்பிறந்தது, அவர்கள் கொடுமையை எதிர்த்துப் போராடத் தொடங்கினர்.
அடிமைமுறை, வளர்ந்து வரும் விவசாய முறைக்குக் குறுக்கே நின்றது. உற்சாகமின்றி அடிமைகள் உழைத்ததால் விவசாயம் தடைப்பட்டது. எஜமானர்களின் வருவாய் குறைந்தது. அடிமைகளைக் கொண்டு விவசாயம் செய்வது இலாபத்தைத்தராது என்று அவர்கள் உணர்ந்தனர். அடிமை உழைப்பால் சமூகத்தின் உழைப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனுல் உற்பத்தியும் தேவையும் முட்டி மோதின. பழைய முறைக்கு விடை கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நிலத்தை வைத்திருந்த எஜமானர்கள் தமது நிலங்களைத் துண்டுபடுத்தி, அந்தத் துண்டுநிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைத்தனர். இதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு அவர்கள் திருப்தியடைந்தனர்.
வர்த்தகம் ஆரம்பமானதைத் தொடர்ந்து கடற்கரை ஓரங்களில் நகரங்கள் தோன்றின. நகரத்தில் வாழ்ந்த வர்த்தகர்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தினர். வர்த்தகம் தலை தூக்கியதும் சாமான்களின் தேவை அதிகரித்தது. தலை தெறிக்கும் வேகத்தில் வர்த்தகம் விருத்தி யடைந்தது. ஆயினும் ஒர் எல்லைக்கு உட்பட்ட அடிமைகளின் உழைப்பு உற்பத்திசெய்த பண்டங்கள் வளர்ந்துவரும் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. எனவே வர்த்தகம் தேங்கி நின்றது. அதே சமயத்தில் வர்த்தகர்களிடமும், வட்டித் தொழில் செய்வோரிடமும் செல்வம் மலை போல் குவிந்துகிடந்தது. வர்த்தகம் தேங்கிநின்றதைத் தொடர்ந்து நகரவாசிகள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் வாடினர். வேலையில் லாத்திண்டாட்டமும் வறுமையும் மக்களைச் சித்திரவதை செய்தன. வளர்ந்துவரும் சமூகத் தேவையும் பழைய உற்பத்திமுறையும் முட்டிமோதின. பழைய சமூகமுறை சாகவேண்டும் என்று சரித்திரம் தீர்ப்புச் சொல்லியது. அது செத்தது.
ஐந்தாம் நூற்ருண்டில் அடிமை சகாப்தம் மரணநிலையை அடைந் தது. அடிமைமுறையை அடித்தளமாகக் கொண்டிருந்த ரோமசாம்ராஜ் யம் தளர்ந்தது. இதனைத்தொடர்ந்து அதன் அரசியல் அமைப்பும் நில் குலைந்தது. இராணுவ ஆட்சி எங்கும் தலைதூக்கியது. அந்தக்காலத்தில் அடிமை முறையை எதிர்த்து அடிமைகளும் வளர்ந்துவரும் வர்த்தகர்க ளோடு போர்புரிந்தனர். அத்துடன் ஜெர்மனியர் ரோமசாம்ராஜ்யத்தின் மீது படை எடுத்தனர், முன்னரே தளர்ந்திருந்த ரோம சாம்ராஜ்யம் இடிந்துநொருங்கியது. அத்துடன் அடிமைசகாப்தமும் செத்தது. மனித சமூகம் பிரபுத்துவ சகாப்தத்தைக் கொட்டுமேளத்துடன் வரவேற்றது:
ܚ- 19 -

Page 11
சிவப்பொளியின் அடிச்சுவட்டில்
- கணேசு -
நாங்கள் சிறுபிள்ளைகள் அரசாங்கப் பள்ளிக்கு நமக்குள்ள ஆசைகளோ. செல்வதென்ருல், அனுமதியோ! என்ருலும், பெரும் பஞ்சம் "எம்மாசை நிறைவேற பணம் பதவி வசமிருந்தால்
இதுவரையும் எவ்வழியும் வஞ்சமில்லை பஞ்சமில்லை இப்புவியில் கிடைத்ததில்லை. இதுதவிர, இன்றைக்கு
ஏனென்ருல், எம்முடலை மறைத்திருக்கும்
நாங்கள், கிந்தல் உடைதவிர துயரத்தின் பிறப்பிடமாம் மாற்றுடைகள் எமக்கில்லை. தொழிலாளர் மத்தியிலே
பிரசவித்த குழந்தைன்நாம் என்றதஞல்,
எமக்குள்ள ஆசைகளோ
6Trossth, Erffs என்ருலும், இன்றைக்கு, காலையாறுமணி யளவில் வேலைக்குச் செல்லுமன்னை ஆலேசங்கு எதிரொலியில் அவள் குரலும் ஒலித்திருக்கும் "பகலைக்கு வரமாட்டோம் பட்டினியாய். . தேதிதண்ணிர் போத்தலுடன்
விக்கிரமாய் வந்துவிடு அப்பாவுக்கு தண்ணிர் அவனிடத்தில் கொடுத்தனுப்பு வீட்டினிலே விறகில்லை.” இப்பாடம் தப்பாது எப்போதும் நிகழ்ந்துவிடும்
وطtلأيقنع
புலிகள் ஆவோம்
பெற்றதாய் எதிராய் வந்து
புரட்சியின் போது ஏதும் குற்றங்கள் செய்தா லெங்கள்
குண்டுகள் அவளின் நெஞ்சைப்
புற்றுகள் ஆக்கும், ஆமாம்
புரட்சியின் போது நாங்கள் சுற்றமும் துணையும் பாரோம்
சூடு காண் புலிகள் ஆவோம் நேற்று நாம் பேசா வூமை
நோயர்கள், ஆணுலின்று காற்றைப் போற் கிளர்த்தெழுந்து
காரியம் முடிக்க வல்ல கூற்றுவர், சுரண்டி வாழும்
கும்பலை அரைத்துத்தின்னும்
மாற்றத்தை விரும்பி வந்த
மாபெரும் உழைப்பாளர்கள்
அன்னையரின் பாடத்தை படிக்காமல் விட்டுவிடின் -வரதபாக்கியான் தந்தையரின் முரட்டடிகள் Lổ ளு 6ιμ πή எம்முடம்பை பதம்பார்க்கு
இந்நிலையில், சூழவே. கடலார்த்திடும் எம(து)
ஈழநாட்டிலும் போர்க்குரல் ஏழை மக்களின் கையிலே, கொடு
வாளுடன் விஷக் குண்டுகள் நாளையா? இது கேள்வியா, இனும்
ஆளவா முதலாளிகள்
நாலைந்து வயதினிலே நம்மு.ைய உழைப்புக்கள் தேயிலையின் விறகுடனும் தேரிமலை கடப்பதிலும் இப்பாரில் ஆரம்பம்
இப்படியே, சூளுரைக்கிறேன் நாளை யேழைகள் இக்கட்டு மத்தியிலும் மீளுவார் பகை வென்றுமே. இருக்கின்ற தோட்டத்துப் -வரதயாக்கியான்
பள்ளிக்குச் சென்று படிக்க முயலும் சிலர் சத்தியமாய்ச் சொல்லுகின்றேம் படிப்புக்கு, சரித்திரத்தை மாற்றிடுவோம். ஐந்தாம் வகுப்பினிலே விம்மற் குரல்களும் கதவடைப்பு செய்துவிடும் வேதனையின் பெருமூச்சும் என்ருலும், அநியாய மரணமும் இரு நான்கு மைலுக்கு இந்தத் தலைமுறையில் அப்பால் இருக்கின்ற மரணித்துப் போகட்டும்-தினகரன்
- 20

விரைவில் வெளிவருகிறது ! ふ
புதிய திட்டக் கணிதம் 7
* முழு ஆண்டு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கியது. மாணவர் - ஆசிரியர் - பெற்றர் -
யாவருக்கும் பயன்படக்கூடிய நூல். புதியதிட்டக் கணக்கு முறையில் சிறப்பாகப் பயிற்சி பெற்ற ஆசிரியரால் எழுதப்பட்டது.
விஜய ல ட், சுமி புத் த க ச |ா ல்ை 248, காலி வீதி வெள்ளவத்தை
கொழும்பு-6.
தொலைபேசி : 88930
விரைவில் வெளிவருகிறது !
இலங்கையின் தேசப் படப் புவியியல்
பேராசிரியர் க. குலரத்தினம் அவர்களது முன்னுரையுடன்
கூடியது.
G. A. O, க. பொ. த. உயர்தர, சாதாரண வகுப்புகளுக்கு மட்டுமன்றி கீழ்வகுப்புகளுக்கும் பயன்படத்தக்க உயர்ந்த நூல். கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி புத்தகசால்ே 248, காலி வீதி, வெள்ளவத்தை,
கொழும்பு-6.
தொலைபேசி 88930
- 21 -

Page 12
உணர்ச்சிகள் ஒய்வதில் இல
சீனக்கவிதை தமிழில் * பேணு, மனுேகரன்
துணிவு மிக்க வீரனே
நீ சாகவில்லை
உணர்ச்சிமிக்க உன் குரல்
எங்கள் உயிர்மூச்சாகத் திரண்டிருக்கும்
இம்மண்ணில்
இன்னும் கேட்கிறது.
மழை மலரும் மலை முகட்டினின்றும்
தீர்க்கப்பட்ட வேட்டுக்கள்
உன்னைத் தீர்க்கவில்லை.
தமக்குத் தாமே சவக்குழி தோன்றுவோரை மட்டுமே அவைகளால் தீர்க்க முடிந்தன.
இலையுதிர் காலத்து இரவில் எழில் பூத்த காட்டுப் பூக்கள் இனிய மணம் கமழ்ந்து திற்கின்றன. அமைதியாகத் தூங்கும் உன்முகத்தில் அமுத நிலவு கூட ஒளியைச் சிந்துகிறது இரவுப் பறவைகள் உனக்காக இசைக்கின்ற கீதங்கள் எவ்வளவு இனிமையானவை.
சாய்ந்து விட்ட வீரனே காய்ந்து விடவில்லை உன்மக்களின் வீரம் உன்கையினின்றும் விழுந்த ஆயுதங்களை உன்னுடைய காதலி ஏந்திக் கொண்டாள். நீ மூட்டிய சுதந்திர தாகம் அவள் தெஞ்சில் பற்றி எரிகிறது.
சிந்திய கண்ணிரைத் துடைத்து, அவள் சிலிர்த்து எழுந்து "பழிக்குப்பழி” என்ற மார்போடு ஆர்த்து நிற்கின்ருள்.
இனிமேல் காதலர்கள் எப்போதும் இப்படிக் கொடூரமாகப் பிரிக்கப்படமாட்டார்கள் பச்சைக் குழந்தைகள் தாய்மடியிலேயே இச்சை தீர இருக்கலாம் இளமைக்கனவுகள் அனைத்துமே இனிமேல் ஈடேறப் போகின்றன. துணிவு மிக்க வீரனே,
அமைதி கொள். உன் கையினின்றும் விழுந்த ஆயுதங்களை உன்னுடைய காதலி ஏந்திக் கொண்டாள்.
- 22 -

வெளிவந்துவிட்டது !
தமிழவேள்எழுதிய" 6Ꭰ Ꮷ Ꭿl Ꮷ tᎠ lll th
வினு - விடைமுறை விளக்கம்
க. பொ. த. 1974 முதல்
* சுருக்கமுறை, விரிமுறை வினவிடைமூலம் புதிய பாடத் திட்டம் முழுவதையும் எளிதில் கற்க உதவும் ஒரு நூல்.
* சைவசமய உண்மைகளையும் வரலாறுகளையும் உள்ளடக்
கிய அரிய நூல்.
பரீட்சையில் விசேட சித்திபெற விரும்பும் மாணவர்க்கு சிறந்ததோர் துணை நூல்.
உயர் வகுப்புகளில் பல்லாண்டு கற்பித்த அனுபவமும் புதிய பரீட்சை முறைகளில் ஈடுபாடும் அனுபவமும் கொண்ட ஆசிரியரால் எழுதப்பட்டது.
விலை: ரூ. 5-00
வெளியீட்டாளர் :
விஜயலட்சுமி புத் தகசாலை 248, காலி வீதி : : வெள்ளவத்தை
கொழும்பு-6.
தொலைபேசி : 88930
- 23 -

Page 13
இலங்கையில் செய்திப் ப
ஜி. சி. ஈ. (உயர்தர வ
உயர்தர இரசாயனம் – தாவரவியல்-பரமானந்தன் விலங்கியல் - சங்கரஐயர் 4 விலங்கியல் பயிற்சிகள் திருத்தொண்டர் புராணம் இரட்சணிய யாத்திரிகம்: - A CONCISE ATLAS GE - Foreword by Prof. K. K.
ஜி. சி. ஈ. (சாதாரண வகு
நவீன இரசாயனம் 2. நவீன இரசாயனம் 11
பரமானந்தன் & பாலசுந்தரம் நவீன உயிரியல் நவீன உயிரியல் II
பரமானந்தன், இராஜசே (திருத்திய பதி நவீன பெளதிகம் 1
தமிழ் இலக்கிய விளக்கம்
க. கி. நடராசன் & (
வாங்கிவிட்டீர்களா ?
தமிழவேள் தமிழிலக்கியத் தொகு
"அ" பாடத்திட்டம்
கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி
248 காலி வீதி, ெ Gla:TԱքլքլ
இப்பத்திரிாக கொழும்பு 12, டாம் விதி, 201ங் க
அதே முகவரியிலுள்ள குமரன் அச்சக திருவாக ஆசிரியர் : மீ. கணேசலிங்கள்.
 

ந்திரிகையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பகுப்பு) நூல்கள் :
கணேசர்&சிவபாலன் 36
2 பகுதிகள் 28பகுதிகள் 25.75 3'-
3
- சிலுவைப் பாடு - OGRAPHY OF CEYLON Lularatnam 5/-
|ப்பு) பாட நூல்கள்:
450 8.75 (திருத்திய பதிப்புகள்
500 650 னன் & குலேந்திரன் ப்புகள்)
5/50 3OO இரத்தினசிங்கம்
எழுதிய ப்பு - விளக்கம்
வினுளிடை
புத்தகசாலை வெள்ளவத்தை,
-6.
தொலேபேசி: 88930
விக்கும் மீ. கணேசலிங்கன் அவர்களாங், Aġs3rie Joq il-PLIĊI LI LG Għall naf LA LI LILL-su