கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1975.02.15

Page 1
குடும்பத்திட்டமும் புதிய தீண்டாச்சா சீனுவின் புதிய பு மூன்றுலக முக்கே
தரகு முதலாளித்
கந்தன் கருணே - சரியான கணக்கு பாட்டில் தெறித்த மயக்கங்கள் திரட் இலக்கிய உலகில்
 
 
 
 

கருத்தடையும்
அரசியலமைப்பு 5ான முரண்பாடுகள் துவம் 3
ஒரு புதிய திருப்பம் \
பொறி 2
டும்
கேள்வி? பதில்!

Page 2
இலக்கிய உலகில்
- ஆனந்தி
சென்னையிலிருந்து "விடியல்" என்ற புதிய புரட்சிகர கலை, இலக் கிய விமர்சன மாத இதழ் தைத் திங்களிலிருந்து வெளிவரத் தொடங்கியிருக்கிறது. முதல் இதழில் யமுளு புத்திரன் எழுதிய நீண்ட கவிதையும் இன்குலாப் கவிதைகள் பற்றிய துணிச்சலான விமர்சன மும் வெளிவந்துள்ளன. ‘அம்மாவுக்கு ஒரு குழந்தையின் தாலாட்டுப் பாடலில் யமுனு புத்திரன் பின்வருமாறு எழுதுகிருர் :
எங்கள் அம்மாக்கள் பிறக்கிற குழந்தைகளிடமெல்லாம்
காத்தி என்ன வாங்கிக் கொடுத்தார் ayaw py Giurrura b GuG
"சுதந்திரம்." என்று சொல்விக் கொடுக்கிருர்கன் விழாக்கால கும்பலில் வழி தப்பிய குழந்தையிடம் அழுகிய ஆரஞ்சை வாங்கி கொடுத்துவிட்டு தங்கச் சங்கிலியை கழற்றிக்கொண்டு "மாமா என்ன கொடுத்தார்" என்று கேட்டு "ஆப்பின்." என்று பதில் வாங்கும் திருடனைப் போலுள்ளதேயிது.
இன்குலாப்பின் கவிதை விமர்சனத்தில் பின்வரும் பகுதியை எம் நாட்டு கவிஞர்களும் கவிதை எழுதும்போது கருத்திற் கொள்வது நல்லது :
* சேரிப் புதல்வர்களின்
சிவப்பு விழிகளில்
of Gum as refisossdir சாம்பலாகின்றன ?
அழகான கற்பனை சுகமான கற்பனை ஏன். இந்தியா சிவப்பாகி விட்டது என்றுகூட கற்பனை செய்து கவிதை எழுதிவிடலாம். இப்படி எழுதியே இந்தியாவை சிவப்பாக்கிவிட முடியாது. இது அதீத கற் பன. இதுபோன்ற கற்பனைகள் செயலைத் தடுக்கின்றன.
எழுதியே (காகிதப்) புரட்சி செய்துவிடலாம் என்பதில் உள்ள வேகம் இன்குலாபை துப்பாக்கியைவிட எழுதுகோலுக்கு முக்கியத் துவம் கொடுக்கவேண்டிய நிலக்கு கொண்டுபோப் நிறுத்தியுள்ளது.
- 2 -

“Sigras Laur ui” கவிதையில் av Sqđi SMT nrrt :
* இளைய தலைமுறை எழுகி, நமது
எழுதுகோலால். இருக்யுத் துப்பாக்கியால் விடுதலைராகம் மீட்டுவதற்கு பூமி வீணையின் புழுதியைத் துடைப்போம்
எழுதுகோலால் புரட்சிகர கலை, இலக்கியத்தைப் Luolda (pup. யும்; புரட்சிக்கான மனப்பக்குவத்தை மக்களிடம் உருவாக்கமுடியும்.
எழுதுகோல் என்பது கலாச்சாரப்படை துப்பாக்கி என்பது மக்களே விடுவிக்கும் ஆயுதப்படை.
எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் செய்யும் தவறு கள் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவை. இதுபோன்ற தவறு கன் புரட்சிகர இலக்கியத்தில் பிடுங்கி எறியப்படவேண்டிய களைகள். "நடுவே கிளம்பிநிற்குக் கோரப்புல்களை வெட்டி வீசணும்" என்று "கண் யெடுப்பு" கவிதையில் சொல்லுகிரு+. இதுபோன்ற வெட்டி வீசப்பட வேண்டிய களைகளே இவரே வர்ைத்து விட்டிருக்கிருரி.
இத்தவறுகளே மேலோட்ட மாய்ப் பார்த்து மயக்கம் என்று சொல்லிவிடலாம்; தத்துவக் கண்ணுேட்டத்துடன் தீர்க்கமாய் பார்க் கும்பொழுது திரிபு என்றுதான் சொல்லவேண்டும்.
'இக்னய சத்ததி பூமியைத் திருப்புக’ கவிதையிலும் இதே தவ றைச் செய்திருக்கிருர்,
* ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் உனது நெருப்புக்கரங்கள் எவை எவை, கூறுக"
ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் கருவிகளை வரிசைப்படுத்துகிருர், அரிவாள். சுத்தியல். உழுபடை. பேகு. வயலின் இத்தக்ளக் கும் பிறகு - துபபாக்கி.
兴 米 兴
புத்தளத்திலுள்ள கலை, இலக்கிய ஆர்வமுள்ளவர்களும் எழுத் தாளர்களும் ஒன்றிணைந்து ‘விடிவெள்ளிகள்" என்ற பெயரில் சங்கம் அமைத்துள்ளனர். இதே பெயரில் சிற்றேடு ஒன்றையும் வெளியிட உள்ளனர்
※ ※
மள்ளுரில் மதம் மாறினர்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் *சிந்தனைக்கு விலங்கெதற்கு? என்ற தலைப்பில் புரட்சிக்கவிஞன் 'கே' தன்மையில் கவிபரம்கமும் நடைபெற்றது.
محہ
- 3 -

Page 3
பா ட் டி ல் தெறித் த பொறி - 2 - த. ச. இராசாமணி --
மிகப் பழங்காலத்தொட்டே அரசு இருந்ததில்லை. அரசின்றியே வாழ்ந்த மனித சமுதாயங்கள் உண்டு. அரசையும் அரசு அதிகாரத் தையும் கனவிலும் கருதியிராத சமுதாய அமைப்பு இருந்ததை வர லாற்றில் காண்கிருேம், சமுதாய வளர்ச்சியின் - பொருளியல் வளர்ச் சியிள் - ஒரு கட்டத்தில் சமுதாயம் வரிக்கங்களாகப் பினவுண்டன. வர்க்கங்கள் பிளவுண்டாலும் அவைகள் இணைந்தே சமுதாயத்தில் செயல்பட வேண்டிய நிலை இருந்தது. இருப்பினும் அவ்வர்க்கங்களி டையே நிலவிய பகை இனக்கங்கான முடியாதவை. பிளவும் அவை களிடையேயுள்ள பகை முரண்பாடுகளும் அரசின் தோற்றுவாயாக அமைந்தன. ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கம் என்ருயின. மிகப் பெருவாரியான மக்களுக்கு விரோதமாய் மிகச் சொற்பமான சிறு பான்மையினரது சுயநலத்துக்காக அரசு தேவைப்பட்டது. அரசு 1-es Erb è வர்க்க நலனை எதிரொலியபது. ஆளும் வரிக்கம் ஒடுக்கப்பட்ட வர்க் கத்தை அடக்கி ஆள ஓர் ஆற்றல்மிக்க கருவியாக அரசு பயன்பட் டது. அது பலர்க்காரத்தையே உள்ளீடாகக்கொண்ட ஒரு தனி வகை ஒழுங்கமைப்பு: ஏதோ ஒரு வரிக்கத்தை அடக்குவதற்கான டலாத்கார ஒழுங்கமைப்பு. ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அரசியல் முறையில் அடக்கி வைக்கவும் கரண் டலை நிலைப்படுத்தவும் அரக பயன்பட்டது மக்கள் உரிமைக்காகப் போராடும் போதெல்லாம் ஆளும் வீக்கம் அப்போ ராட்டங்களை ஈவிரக்கமின்றி அடக்க அரசு பந்திரத்தைப் பயன் படுத்தும், ;
எந்த ஒரு நூலும் வர்க்கச் சார்புடையதே. வர்க்க சமுதாயத் தில் வர்க்கச் சார்பற்ற நூல் தோன்ற முடியாது. ஒரு நூல் எதிரொ விக்கும் வர்க்கத்தை நாம் தெளிவாக வரையறுப்பதின் வழியாகவே அதிநூல் வெளிப்படுத்தும் சமுதாய உணர்வுகளை நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும்; எவ்வர்க்கச் சார்புடையது என்பதையும் சவ்வரிக் கப் போராட்ட உணர்வுகளைக் கூர்மைப்படுத்துகிறது அல்லது கூர் மழுங்கச் செய்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியும். வர்க்கச் சார்புடைமையை எவ்வாறு கணிப்பது என்பதை வரையறுத்துவிட்டால் வள்ளுவரின் முழுமையான சமுதாயச் சண்ணுேட்டத்தை நாம் நன்கு விளங்கிக் கொள்ளலாம். பின்வருவன அவற்றிற்கு அளவுகோலாகும் : (1) அரசியல் அதிகாரம் யார் கையில் இருக்க வேண்டுமென்று
வலியுறுத்தப்படுகிறது ? () எந்த வரிக்கம் தன் காலத்தில் சமுதாயம் முழுமைக்கும் தானே
பிரதிநிதியாய் இருந்தது ?
- 4 -

(3) எந்த வரிக்கத்தின் உற்பத்தி உறவு முறை எடுத்துக் கூறப்
படுகிறது ? r- , , அரசியல் அதிகாரமே மற்ற அதிகார அமைப்புக்கள் அன்த்துக் கும் முதுகெலும்பு. அரசியல் அதிகாரத்தை பார் கையில் எடுப்பது - செயற்படுத்துவது - என்பதில் வள்ளுவர்க்குத் தீர்க்கமான ஒரு முடி வுண்டு. இதனை நாம் கருத்திற் கொள்வதின் வழியாகவே வள்ளுவர். கூறும் ஆளும் வர்க்கத் தலமையைத் தெளிவாக வரையறுத்துக்கொள்ள முடியும்; அவர் எவ்வர்க்க நலனை வெளிப்படுத்துகிருர் - எவ்வர்க்க நடைமுறைகளே நியாயப்படுத்துகிருர் - என்று நாம் புரிந்துகொள்ள (υρίφια εδ.
திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பால்கா - பிரிவுகளேக் கொண்டது. பொருட்பாவில், முதலியல் அரசியல். தம் வரையறைக்குரிய சான்றுகள் பல்வேறு இடங்களில் காணப்படினும் இவ்வியலில் மிகுதியும் காணப்படுகின்றன.
அரசியலில் முதலதிகாரம் இறைமாட்சி. இறைமாட்சி என்பது LTLTLLTLLL TTTTLSLCTETTTLLLL LLLS SLLTLLTTT TETTTTLTL
'படை குடி கூழ் அமைச்சு தட்(பு) அரண் ஆறும்
a. ap un 6ër aypavgoir gjap ' ' STeir up எடுத்த எடுப்பிலேயே அரசனின் இயல்பை - ஆட்சி முறையை - அரச நீதியை - விளக்க முனைகிருர், படை, மக்கள், பொருள், அமைச்சு, நட்பு. அரண் என்று ஆறு உறுப்புக்களைக் கொண்டு அரசு இயக்க வேண்டும் என்றும் அவ்வாறு இயக்குபவனே அரசருள் தகவன் என்றும் கூறுகிருர் அரசியல் அதிகாரம் நிலவுடைமையின் தலைவஞன மன்னன், கையில் இருத்தல் வேண்டுமென்று வள்ளுவர் திட்டவட்டமாக aľap யறுக்கிருர்,
படை முதல் உறுப்பாக இக்குறளில் இடம்பெற்றிருக்கிறது. பிறி தோரிடத்தில் படை அரசனுக்குத் தலையாய செல்வமென்று குறிப் பிடப்படுகிறது (குறள் 761). ஆளும் வாக்கம் தனக்குத் தொண்டூழி பம் செய்யக்கூடிய ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகை நிரந்தரப்படையொன்று வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிருர், ' tế
வள்ளுவருக்கு முன் தமிழ் நாட்டில் பேரரசுகள் உருவாகிவிட்டன. அவ்வரசுகள் தன் படைபலத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தன. அப் பேரரசுகன் தம் நாட்டை விரிவுபடுத்த (புறம் 8 : 1-3), சிற்றரசு களே ஒழித்துப் பேரரசை உருவாக்க (தலையாலங்காளம், வெண்ணிப் பறந்தலை, கானப்பேர் முதலிய இடங்களில் நடந்த போர்) அரசர்
- 5 -

Page 4
மையைப் பெற (புறம் 213), தனக்கு மாாக்குறைவு ஏற்பட்ட விடத்து (புறம் 73), பிறன் ஒருவனுட்ைய மகக்ளத் தனக்கு மனம் செய்து கொடுக்குமாறு அரசன் ஒருவன் வற்புறுத்தியபொழுது அாம் மகளிரையுடையவன் மறுத்த காலத்தும் (புறம் 338 முதல் 354ஆம் , செய்யுள் முடிய) போர் நடத்தியதையும் படையைப் பயல் படுத்திய தையும் சங்க இலக்கியத்தின் வாயிலாக அறிகிருேம். வள்ளுவத்துக் குப் பின் தோன்றிய சிலப்பதிகாரமும் படைகொண்டு கள்வனைக் கொல்லுதல் அரச நீதி என்கிறது (சிலப். 20 : 64-65).
படையை முதன்மை உறுப்பாகக் கூறிய வள்ளுவர் அப்படை பயன்படும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டே கூறியிருப்பார். அக். நோக்கம் எதுவர்ப் இருக்கும்? இவ்விஞ எவர் உள்ளத்திலும் எழு
வது இயக்பே. - ..: . பரந்து கிடக்கும் படை பற்றிய செய்திகளை முறைப்படுத்தினல் அவை மூன்று அமைப்புக்களுன் வந்து அடங்கும் : w
1. பகிரங்க வர்க்கப் போராட்டங்கள் எழும்போது அவற்றை
அடக்குதள்; 名, தற்காப்பு: 3. நாட்டை விரிவுபடுத்துதல்,
வரிக்க முரண்பாடுகளும் - மோதுதல்களும் - முற்றி முதிர்த்த நிலைகள் அவர் காலத்தில் இருந்ததைக் குறட்பாக்களிலிருந்து நாம் உணர முடிகிறது. மன்னனுக்கு - ஆளும் வர்க்கத்துக்கு - நிலப்பிரபுத் ரவத்துக்கு - மாறுபட்ட சக்திகள் வலுப்பெற்றிருந்தது தெரிய வருகிறது. ži
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் 'வேத்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு - குறள் 735 (மாறுபாடு கொண்ட பல வகைக் குழுக்களும் உடனிருந்தே அழிவு செய்யும் உட்பகையும் அரசனை வருத்துகின்ற கொல்லுந்தன்மையான கூட்டமும் இல்லாதது நாடு.
அரசளுேடு மாறுபாடு கொண்டிருந்த குழு எவை என்பது நம் சிந்தனைக்குரியது. அவை மாறுபாடு கொள்ளவேண்டிய தேவை - சூழ்நிலை - ஏன் ஏற்பட்டன? மன்னளை வருத்திக்கொள்ளும் தன்மை யான கூட்டம் மன்னனின் படைபலத்தையும் மீறி உருவாகக் கார னம் என்ன? உட்பகை ஏற்படும் நில உருவானதேன்? இக்கேள்வி அளுக்குச் சமுதாய விஞ்ஞானம் மிகவும் எளிமையாக - சரியாக - விடையிறுக்கிறது. வரிக்க சமுதாயத்தில் பகை முரண்பாடுகள் இறப்
பதும், கூர்மையடைவதும் தவிர்க்க முடியாதவை.
- 6 -

வர்க்க முரண்பாடுகள் இருந்ததை வள்ளுவர் பல்வேறு இடங் களில் பல்வேறு குறட்பாக்களில் உணர்த்துகிருர், குறிப்பாக நாம் ஒன்றினைக் குறிப்பிடலாம் : . . . . .
இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை எல்லோரும் செய்வர் சிறப்பு. s | r வறுமையின் கோரப்பிடியில் வறுமையின் இன்பத்தை நுகர்வோர் என்ற இரு வேறுவகைப்பட்ட நிலையினரை அவர் எடுத் துக் காட்டுகிருர், உழைப்புச் சல்தியை விற்பவன் வறுமையில் வர்டு கிருன். அவன் எந்த வாய்ப்பும் வசதியும் பெற முடியாமல் கூவி வேலைக்காரன், அடிமை, இழிசினன் என்று ஏச்சுக்கும் பேச் சுக்கும் ஆனாகிருன் சொத்துடையவன் - உற்பத்திக் கருவிகளைக் கையில் வைத்திருப்பவன் - பல்லாயிரக்கணக்கான மக்களின் உழைப் பைச் சுரண்டும் வாய்ப்பும் வசதியும் பெறுகிருன். அவன் வளமையை நுகர்வதோடு ஆளும் வர்க்கத்தால் அரவணைக்கப்படுகிறன் என்பதை வள்ளுவர் நன்கு உணர்ந்திருக்கிருச். . . . அரசனுக்குப் பொருள் வரும் வழியை வள்ளுவர் கூறுகிருர். அரசன் தன் பகைவரை அழித்துக் கப்பமாகக் கொள்ளும் பொருள் (குறள் 756) என்று அதில் குறிப்பிடுகிரு. பகையை வெல்லக் கரு தும் அரசனுக்கு அதற்கு ஏற்ற காலம் இன்றியமையாதது (குறள் 481) என்று வேருேர் இடத்தில் சுட்டிச் செல்கிருர். பகையை வெல்லக் கருததலும், பகைவரை அழித்துக் கப்பம் கொள்ளுதலும் ஆகிய தொடர்கள் உணர்த்தும் பொருள் என்ன? நாட்டை விரிவாக்கும்" "தோச் தமன் ருே? a
வர்க்க முரண்பாடுகளும் மோதுதல்களும் தோன்றும்பொழுது : மாற்று வர்க்கத்தினரைக் கொன்று ஒழிக்க (குறள் 550) வேண்டுமென் : றும், முள் மரத்தைச் செடியிலேயே பிடுங்கி எறியவேண்டுவதுபோல், தொடக்கத்திலேயே அழிக்க வேண்டுமென்றும் (குறள் 879), என்னின் பிளவைப் போன்று சிறியதாயிருந்தர்லும் பின் அது வளாந்து பேர. ழிவை உண்டாக்கமென்றும் (குறள 889), முற்றிலுமாக அழிக்கப் படாத தீ வளர்ந்து அழிப்பதுபோல முற்றிலும் அழிக்கப்படாத பகை பும் பின் வளர்ந்து அழிக்கும் (குறள் 674) என்றும் கூறுகிருர்.
நாட்டின் தற்காப்புக்காக படையைப் பயன்படுத்துதல் வேண்டும் என்பது வள்ளுவரின் அடுத்த கொள்கை (குறட்பாக்கள் 765, 767). v Y., '' நாட்டை விரிவுபடுத்த மன்னனுக்கு ஆர்வமூட்டுகிருர், சோம்பல்" இல்லா மன்னவன் உலகமெல்லாம் தன் ஆளுகைக்குன் கொண்டுவரு' வான் (குறள் 610) என்று குறிப்பிடுகிருர். எப்படிக் கொண்டு வரு வ்ர்ன்? இதை வள்ளுவர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. ஆனக் நம்மால் ஊகிக்க முடியும், கரண்டும் வர்க்க அரக எதுவும் தன் வர்க்க: நலன் கருதித் தன்னெல்லையை விரிவுபடுத்திக் கொள்வதும் தன் சர் தையைப் பெருக்கிக் கொள்வதும் நம் காவித்தில் உணரப்படும் செயல்கள்தாமே! Y དེ་ ༣ ༣.
W
0 , ہس-' 7 نبی۔

Page 5
Cas:
கே
கேள்வி ? பதில் !
LLT TLTTLLLLLTTTLLLLLL TTTT TTLTYLTL TLLT TT LH S TLT0L sfrogsrif? " : – eup. Asht:9rm JFrr – fieflQTrö6).
பணக்காரரை ஏற்றிச் செல்லும் கார்களின் சக்தி அனைத்தையும் TTTaTL TLTLLLLLTTT LLLTT aTTTTTTT TGGLLTTT LLLL LLLLLL நாட்டின் தேவைக்கு மேலாக உற்பத்தி செய்ய முடியும். அப்போது. செல் artasid smtrtas aldo D. Gavrranyavy ffibas Gav Qawu yuh.
கட்டான, காங்கேசன்துறை தேர்தல் முடிவுகள் பற்றி என்ன alkapy afrif? - தி. அமுதமலர் - யாழ்.
. தேர்தல் என்பது ஆளும் வர்க்கம் பிரிந்து நின்று மக்கள் வோட்
டுக்கு மதிப்பிருப்பதாகக் காட்டி நடாத்தும் திருவிழாவாகும். பாராளுமன்றத்தேர்தல் மூலம் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கத்
தச்சு பெரிய மாற்றங்கள் எதையும் கொண்டுவரமுடியாது. மக்க
னின் வெறுப்புகள் தேர்தல் மூலம் திசை திருப்பப்படுகிறது. விடி
விக்கு வழிகாட்டப்படவில்லை. இத்தேர்தல் LDU das iš Sodi புரட்சிகர
Gas:
இயக்கங்கள் என்று தம்மைக் கூறிக்கொள்வோரும் சிலவேளைகளில்
அறிக்கைகள் விடுத்து தம்மை அம்பலப்படுத்திக் கொள்கின்றனர். தேர்தலை நம்பும் அரசியல் சறுக்கு மரத்தில் ஏற முனைவது போன்ற தாகும்.
தேசிய முதலாளித்துவம் வளர்சியடைந்தே சர்வதேச முதலாளித்
துவத்துடன் இணைந்துகொள்கிறது என்கிறேன், நீன்கள் என்ன a preditasa? - செ. மூத்து - கொழும்பு.
தேசிய முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து ஒரு கட்டத்தில் சர்வ தேச முதலாளித்துவத்துடன் ஐக்கியப்படுவது என்பது உண்மையே.
முதலாளித்துவ, ஏகாதிபத்திய மூலதனம் உள்நாட்டில் ஏற்கெனவே
வேரூன்றியிருக்கும்போதுதேசிய முதலாளித்துவம் நிலைக்க, வளர்ச் சியடைய முடியுமா என்பது கேள்விக்குரியதாகும் இத்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் டாட்டா, பிர்லா, கோயங்கா போன்ற தேசிய முதலாளிகளும் வெளிநாட்டுப் பண்ட் இறக்கு மதிகளை எதிர்த்து, இறக்குமதிப் புடவைகளை தெருவில் போட்டுக்
கொளுத்துவதில் முன்னின்றனர். சுதந்திரம் பெற்றதும் அவர்கள் பிற நாட்டு மூலதனங்களுடன் இனேற்து தரகு முதலாளிகளாகி விட்டனர். இன்று இந்தியா ஏகாதிபத்திய சமூக ஏகாதிபத்திய
- 8 are

முதலாளித்துவ stracasada சுரண்டல் களமாகவும் சந்தையாகி யும் ஆகிவிட்டது. தேய்ந்து வருபவர் பலம் குன்றிய, பிறநாட்டு
மூலதனத்துடன் இாய முடியாத, பணக்க்ார தேசிய முதலாளிக
ளாவர். இதே நிலையே இலங்கைக்கும் ஏற்பட்டு வருகிறது.
Gas:
தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர் ஒர வஞ்சமாக ஒதுக்கப் படுவது நீதியாகுமா? - ந. குமரையா - கொழும்பு
அநீதியே. ஆகும் வர்க்கமே இதைச் செய்கிறது. இதன் ע4^k மூலம் தமிழ் மாணவர் ஒரு தொகையினர் பட்டப் படிப்பிற்குச்
செல்ல முடியாது ஒதுக்கப்படும்போது ஆளும் வரிக்கம் சிங்கள
மாணவர்களையும் ஏமாற்றுகிறது; தமிழ் மாணவர் 100 - 200 பேரை தடை செய்து அதே தொகையான சிங்கள மாணவருக்கு வாய்ப்புத்தந்துள்ளோம் என்று கூறி சிங்கள மக்களேயே ஏமாற்று
, கிறது. பட்டப்படிப்புக்கு தகுதி பெற்றவர் எனக் கண்ட 15,500
மாணவர்களில் இவ்வாண்டு 3500 பேருக்கு மட்டுமே பட்டப் படிப்புக்கு வாய்ப்பு அளிப்பட்டுள்ளது. ஏறக்குறைய 7000 தகுதி பெற்ற சிங்கள மாணவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந் நிலையில் 100-200 தமிழ் மாணவர் இடங்கண் சிங்கள மான வருக்குத் தந்து இரு பகுதியினரையும் ஏமாற்றித் திருப்திப்படுத்து LTLL TLLT LTTTTLTLLLLLLL LLaC 0S TTTTTLTLTS S S TTTLLLL LLLLLE LTLLaLLS வகுப்புவாதமா? முதலாளித்துவ வர்க்கசுபாவமா? எல்லாமே ஒன்று திரண்டதா? (குமரன் 43. 22ம் பக்க கட்டுரையையும் பார்க்க)
முதலாளித்துவம் எதற்காக பத்திரிகைகள், சஞ்சிகைகள், கலை,
இலக்கியங்களிலெல்லாம் ஆபாச உருவங்களுக்கும் பாலுறவுக் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவமளிக்கிறது?
- க. நாகரத்தினம், மட்டுநகர்.
இவற்றின்மூலம் ரகாதிபத்தியமும், முதலாளித்துவமும் தமது இழிந்த கலாசாரத்தை அம்பலப்படுத்துகின்றன. பாலுறவு என்பது மனித வாழ்வுடன் இணைந்த ஒரு சிறு அம்சமாகும். முதலாளித்
துவம் ஆண், பெண்களின் குடும்ப உறவிலிருந்து "பாலுறவு’ என்ற : *செயலை - செய்கையை மட்டும் தனியே பிரித்தெடுத்து அதற்கு அதீத முக்கியத்துவம் அளித்து, அதை ஓர் லாபம் தரும் விற்
பனைப் பொருளாக்கி விடுவதையே இன்று காண்கிருேம். அதன்:
மூலம் தன் சந்தைக் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்திக் கொன்
கிறது. தொழிலாள, விவசாயிகள் இவற்றைப் பார்த்து அசூசைப் படுகின்றனர்; ான்ருே ஒரு நாள் இந்த இத்துப்போன முதலா வித்துவ கலாசாரத்தை அழித்தே தீருவர். இது திண்ணம்.
- أسس - 9 سنيسة

Page 6
கந்தன் கருணை - ஒரு புதிய திருப்பம் - தியாகு -
நடிகர் ஒன்றியம் 7.2.75ல் கொழும்பு லும்பினி மேடையில் *கத்தன் கருணை" கூத்துப்பாணி இசை நாடகத்தை புது மெருகூட்டி மேடையேற்றியது. காத்தான் கூத்து இசையில் அமைந்து பெரும் பர்லும் யாழ். குடாநாட்டிலும் ஓரளவு இலங்கையின் பிற பகுதி பிலும் மேடையேறி புதியதோர் தாக்கத்தை முன்னர் இந்நாடகம் ஏற்படுத்தியது. காத்தான் கூத்து இசையுடன் மட்டக்களப்பு கிராமிய ஆட்டமும் ஓரளவு கண்டிய நடனமும் இணைந்து தற்போது இந்நாட கம் உருப்பெற்றுள்ளது. ...
மாவிட்டபுரம் கோவிலில் தாம்த்தப்பட்டவர் எனக் கூறப்படும் மக்கள் நுழைவதற்கு நடைபெற்ற போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டதே இவ் இசை நாடகமாகும்.
யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிவெறி பற்றி தாரதர் முருகனுக் குக்கூறி, வள்ளியையும் நீர் கலைத்துவிட்டீரா? என்ற விஞவுடன் கதை ஆரம்பமாகிறது. முருகன் சமத்துவம் பேசி யாழ். கோவிலுக்கு நிலமைகளைக் காண தெய்வயானையுடன் வருகிருர், கோவில் வாசலி லேயே "நீ வேஷம் போட்ட எந்த ஊர் கந்தன்?" என்று உயர்சாதி பினர் வினவி கோவிலுள் நுழையாது தடுக்கின்றனர். கோபமடைத்த முருகன் தன் வேலாயுதத்தை போராடிக்கொண்டிருக்கும் தாழ்த்தப் பட்ட மக்களிடம் கொடுத்துவிடுகிருர். இவ் இசைநாடகம் நூலாக அம் வெளிவ்ந்துள்ளதை யாவரும் அறிவர்.
தற்போதைய இசை நாடகத்தில் 13 பேர் நடிக்கின்றனர். ஐவர் தாழ்த்தப்பட்டவர்க்கிளப் பிரதிபலிக்கும் பக்தர்களாகவும் மற்றும் மூவர் முருகன், தெய்வாளே, நாரதர் ஆவர். யாவரும் மேடையில் நிற்க அவ்வப்போது உரையாடல் மூலமும் அசைவு மூலமும் கதையை நகர்த்து பவர்கள் மேடையில் ஒளி பெறுகின்றனர். '.
சாதி என்பது நிலவுடைமையில் கரண்டலுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒர் அமைப்பாகும். இக்கருத்து சாதிப் போராட்டங்கள் பற்றிய கலை, இலக்கியங்களில் தொனிக்கவேண்டியது மிக முக்கியமாகும். அடுத்தது சுரண்டப்படும் வர்க்கத்திற்கு கோவிலுள் நுழையும் போராட்டம் அவ 'சியமா? என்பதாகும். இந்த இரண்டுக்கும் விடையளிக்கும் урасиопа,
இக்கூத்து நாடகம் மெருகூட்டப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும்.
"மேல்சாதி மகனல்லோ மீதான் தம்பி" 6Tdvg தாழ்த்தப்பட்ட வர்களுடன் சேர்த்து போராடும் உயர்சாதி மகனே வேளாளர் பிரிக்க
.
س- 10 --
 

முயலும்போது அவன் உழைக்கும்.வர்க்கத்தோடு ஐக்கியப்பட்டு நிற் பதாகக் கூறுகிருள். கிராமிய வழக்கு மொழிகள் இவ்இசைநாடகத் தில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கூத்து, இசை, அசைவு கள், பின்னணி ஓசைகள் யாவும் நன்கு நெறிப்படுத்தப்பட்டிருந்தன. விராமிய கூத்து முறைகளை பாட்டாளி வரிக்க எழுச்சிக்கு எவ்வாறு பயன்படுத்தமுடியும் என்பதற்கு நல்லதோர் உதாரணமாக இவ்இசை தாடகம் அமைந்திருந்தது. . . . . .


Page 7
(g@rıØé osmdøhmen«»«seo rogrşı druso wớigsrnspæ05) · Rogo@şıH g2' I ' , z)
'q105 quo prawi awgon đẻ ra ugnas? 3 &Dags-a ruas segi qi-Turboņa» 19 w mogoweg aegrşıoop von @ąfororo •s) poorweg gasos) đDışsłno os do Nowośsyls apo thuwepąwoɔ qhip oe, pwipa’yı , qi »hrweghi uasopis mesoro punsivoqioșnen »uo Ợgognsfire o upesyas
pwęgi qi@șđạs-w quae ao ogo6 murs, affærısı yung),
→白蠟** *P*司 *Qgeón ·史博員 *鼠唱h ayuw om urīņog «gogofn af ægwası
~ ag qi wyroon na ușor uso uso uno o qike, Gouwsys@oso, “... qhapsson •r•eo, ormg »uoso msg) uwq/gamo togen —ızı&#faf51 os puoluogo „g uri șopo, Noorwg o ușo » u owosyo wąsow • • wskae ‘60ngsfeer, quae uso geresogo-Tags do solumsfiwr sø@égreyh
, quae uoffwndes, qudgjoog “, q os uoff.
o priorith-ıæso ‘o prvosagae afgfrisosio-w qnowqa sowo w @gforso uoso ooason 119 lys-w ægwo so '83 'e ‘’wo yesırıđỉo aegnes Tidh ŋwęgow ‘qifmgro o q/gen fix orneogos pH
• prio rigs urso qi&)sự9 uso șosef).urlNotas @-murio po longko dosierarı fioso qi@rwoespree)
• griegfriqiesh now ways o quđìDome)orgs ugi
•ợrio quorīd spopaon ••• ‘qitegaoqoof
og Øyw praeerasowe) wasgs • •ıs rese-Town znáðist oras) is los seveyora ‘a’e fòssẾori «»uoq're ro uagus . ipso ofiwrnone)., oyoOoo~~{5} qi&Daertso ensaegs-a odowierīņđusow (powdeos@ *quisterso sourio quoursæ• Qaroonsoooo greo qi&)aes do oơnas-leshapo, o affæđì) oșu-ve) qi-id@ qsorso ‘possudgfsou, „quo uego» qn u-i sreo oyunus pogos rouw , !pgsongs •,
qi@șuw opre uso , uasgoodfi)ņonso, osƯ rwếH qi&)urno qnore» ops@ş yao-map4o quowano u dhe qnae • q o șuvos qıñGonweg yw șofrasfio qi&D:n uw woso), po »usooqfanso, qnmogao u 4@ sapuose, uriosos» , q ssosoɛsɔŋ one), o yg uwoo •ế qi@isu oso» soos@ls sourie)qnungpo ndoqonngas udg. qoç,yre qi@asedo șossonsored raghriae H
• ung), sao) as Igos@rts øgwnloobuah
'unwrazveo quaedaeo agw sĝ usę 1,9 grønnfæv quaesopus posp 4@ * usw.yrsố qi@gameŝ 4. urı içermeown •đîn pwosąorwoșw wgy usno guo 4. urwrw oso ... phwrpore),, resones@pree) gegnæus» qisorgun raona ‘yursænseptīgo ogwizyrı ņosoɛ wyroon o groogąĵg po pro uri af peorneo qarios) șoseșrsoșeș șurugvoepș@gp
•w•eo soffi) is was urriko · @ș, , negærso, a
— wi mɛwunonie –
i qi@ī£ porțioșmm
*

குடும்பத்திட்டமும் கருத்தடையும்
- மாதவன் -
(பிரீதி, நிரோத், பிற கருத்தடைச் சாதனங்கள், குடும்பத்திட்டம், அண்வானகுடும்பம்,சனத்தொகைபற்றிய உணர்வு, கருச்சில்ரவு ஆகியன பற்றி சில ஆண்டுகளாக எம் நாட்டிலும் பரவலாகப் பேசப்பட்டுவருகி றது; ரேடியோ, பத்திரிகைகளிலெல்லாம் விளம்பரப்படுத்தப்படுகிறது. இத்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய விளம்பரம்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. ஆண்களுக்கும், தாய்மாருக்கும் பரிசுகள் வழங்கி கட்டுப்படுத்தியும் சத்திர சிகிச்சைமூலமும் கருத்தடைகள் செய்யப்படுகின்றன. கருச்சிதைவை சட்டபூர்வமாக்குவ்து பற்றியும் நீவிரம்ாக ஆராயப்பட்டு வருகிறது. பின்தங்கிய மூன்ருவது உலக நாடுகளிலெல்லாம் இந்நிலையே நிலவிவருகிறது. ー
ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடுகளின் சுரண்டற் பிடியில் அகப்பட்டு, இன்று அவர்கள் எமது எஜமானர்களாக எம்விடிவுக்குக் கூறப்படும் வழிகளையெல்லாம் அவர்களது தரகர்களான ஆளும்வர்க்கம் குருட்டுப்போக்காக எம் மக்கள்மேல் திணிக்கின்றனர்.
எம் நாட்டு மக்கள் அறியாமையில் வாழ்வதாகவும் தாம் எம் மக்கன் ஞானஒளிபெற உதவுவதாகவும், கிறிஸ்து மதத்தைப் பரப் பியதுபோல எண்ணிக்கொள்கின்றனர். * -
மல்தூசியனின் மடமையை இன்று சீளு, ரஷ்யா போன்ற நாடு கள் நிரூபித்துவிட்டன. ஆயினும் முதலாளித்துவ பொருளாதார நிபு ாைரிகள் அவளது கோட்பாடுகளை விட்டதாக இல்லை.
மார்க்ஸிய கண்ணுேட்டத்தின்படி உற்பத்தி உறவுகளே முன்வைத்து TTTTLLTTT LLLTTTLTH LLLT 0 aTTTTLT aLG S LT LL TLLLLLLL LL வரைக் காணலாம். கருத்தடைச் சாதன்ங்களை பின்தங்கிய நாடு களில் சந்தைப்படுத்துவதே அவர்களது முக்கிய நோக்கம் என்பது மட்டுமல்ல அவர்களது அறியாமையும் தெரியவரும். 1 , ,
அடிமைச் சமுதாயம் :
அடிமைச்சமுதாயத்தில் குடும்பக்கட்டுப்பாடு என்பது இருக்ா வில்லை. நல்ல ரக இனவிருத்திக்கு சிறந்த ரக காளைமாட்டை வளர்த்து சினைபடுத்தப்படவேண்டும் என்பதை அன்றே அறிந்திகுந்தனர்போலும். ஆண் அடிமைகளையும் பெண் அடிமைகளையும் ரோமாபுரியில் விரும் பியவாறெல்லாம் பாலுறவுகொள்ளாது தடுத்தனர். ஆடு மாடு பட்டிப் பெருக்கம்போல நல்ல ரக இனப்பெருக்கத்திலும் கவனம் செலுத்தி னர். கட்டிளங்காளைகளே காளைமாடுகள்போல தனியே வளர்த்து
一13一

Page 8
Hassår udl:OGud பெண்களுடன் பாலுறவு கொள்ளச்செய்து எஜ ம்ாளர்கள் தமது அடிமை உழைப்புக்கு அடிமைகாபும் பட்டியாகப் பெருக்கினர். பாலுறவு கொள்வதைக்கூட காண்மாடுகளைச் சிவனப் படுத்தப் பயன்படுத்துவதுபோலவே எஜமானின் GueibLurrrtapavado பெண்களை நிரைப்படுத்திவிட்டு க்ட்டிவங்காண்பர்களை பாலுறவுகொள் ாச்செய்து சின்னப்படுத்தினர். எஜமானருக்கு உழைப்பதற்கு அடிமைப் பெருக்கம் அத்தியாவசியமாயிருந்தது. அதாவது உற்பத்தி உறவை யொட்டி கருத்தடைக் கட்டுப்பாடு எதற்குமே அவசியமாயிருக்க வில்லை. அடிமைப்பெருக்கம் எஜமா னருக்கு செல்வப் பெருக்க மாயிருத்தது. 's நிலவுடைமைச் சமுதாயம் : 。
குடும்பமே உற்பத்திக் கூருக இருந்தது. முதலாளித்துவத்தில் உள்ளது போன்று குறிப்பிட்ட வருமானத்தில் வாழவேண்டிய கட்டுப் பாடு கிடையாது. குடும்பப் பெருக்கம் உற்பத்திப் பெருக்கத்திற்கு அவசியமாயிருந்தது. நிலப்பிரபுவுக்கும் பண்ணையடிமைகள் பெருகுவது வாய்ப்பாகவேயிருந்தது. “கர்ப்பம் என்பது உயிர், அதை அழிப்பது SLLLLLLLL LLLLLLSTTTTTTTT S LLTLLLLLT T TLTLSS LLTLLLLLT TTTTTT S அமைப் புப் பிரசாரங்களும் நிலப்பிரபு வர்க்கத் தேவைகளெயொட்டிப் பரப்பப் கிட்டன. இன்றும் எம் நாட்டு மக்களிடை இக்கருத்துகள், ஆதிக்கம் பெற்றுள்ளன. கருச்சிதைவு செய்ய முயல்தலே தண்டனைக்குரிய குற்ற மாகும். இங்கும் குடும்பம் உற்பத்திக் கூருக விளங்கும். உற்பத்தி உறவுமுறையை ஒட்டியே கருத்தடை என்ற பேச்சே எழவில்வ. குழந்தை பெறுதல், வளர்த்தல், சமைத்தல் போன்றவை குடும்பப் பெண்களின் கடமைகளாகின. பெண் கரிப்பமுற்றதும் அதோர் மிக வும் மகிழ்ச்சிகர செய்தியாகக் கொள்ளப்பட்டது. கர்ப்பமுற்றதும் பெண் தாயாக மதிக்கப்பட்டு அவளுக்குப் பிடித்தமான உளவுவகை sar வழங்குதல், சீமந்தம், வகளகாப்பு போன்ற விழாக் கொண்டா டுதல் ஆகியன நிலவுடைமைச் சம்பிரதாயங்களாகும். (நிலவுடைமை யையே பெரும்ப்ாலும் பிரதிபலிக்கும் தமிழ் திரைப்படங்களில் இவம் றைக் காணலாம்.) குழந்தையில்லாத குடும்பத்தவர் மலடர்கள் என் கேலியாகக் கருதப்பட்டு சமுதாய அந்தஸ்துக் குறைந்தவர்களாகவே கணிக்கப்பட்டனர். ་་་་་་་་་་
TTTSS SSTTTLTTTTLS TTTLT TATTTTG LLLLLLS LLLLL T T00L LLTLLLLL கள் ஆகியவர் - தமக்கு வேண்டிய உற்பத்திக் கருவிகளை சொந்தமாக உடைய சிறுபண்ட உற்பத்தியாளரிடையேயும் மேற்கூறிய கருத்தே நிலவுகிறது. தனிக் குடும்பங்களே உற்பத்திக் கூருக விளங்குவதால் 3, ஐ' உற்பத்திப் ಇಲ್ಲ್ವ amůůuntorgy Ordy ჭX. , Š ësGu.' s', as Drilii Gresiv sm? ப்பு என்
· ፵፰“•።፰'፵፰...።፰ ரங்கள மூல ayS உழைபபு
x
f
-- nesa , 14 - ,
i
 

முதலாளித்துவ சமுதாயம்: 3
கூலி உழைப்பு முறையை அடிப்படையாகக் கொண்டது. முதல் வாளித்துவத்தின் கட்டுப்பாடுகள், முறைகள் அழுத்தத்திருத்தமானள்ை. குறிப்பிட்ட நேரங்களில் ஒழுங்காக வேண்க்குச் சென்றுவருதல், வழங்: கப்படும் கூலிக்குட்படவே வாழ்க்கைச் செலவை அடக்குதல் ஆகிய இரண்டும் முதலாளித்துவ கூலி உழைப்பு முறையின் முக்கிய"கட்டுப் பாடுகளாகும். is
இதுதவிர முதலாளித்துவம் வளர்த்த பண்ட உற்பத்திப் பெரும் , கத்தால் குடும்பங்களுக்கு அத்தியாவசியம் எனக் கருதும் நுகர்பண்டத் தேவைகளும் பெருகின. இதஞல் பெண்களும் கூலி உழைப்பிற்குச் செல்லவேண்டி நேரிட்டது. முதலாளித்துவம் வளர்ச்சிபெற்ற மேல்: நாடுகளில் குடும்பத்தலைவன் மட்டும் உழைத்து மகாவி பின்காககளப் பேணுவது என்பது இயலாத செயல் என்று கருதப்படுவது யாவரும் அறிந்ததே. வேலைக்குச் செல்லும் வேண்களில் குழந்தைகளைப் பரா மரிப்பதே பெரிய செலவாகிறது. 3, 4 குழத்தைகளுக்கு மேற்பட தேரின் மனைவி வேகலக்குச் செல்லமுடியாது போய்விடும் பின்ளே மடு, வங்களுக்கிாக செலவாகும் பணம் மனைவி உழைப்பதற்கும் சரியாகி விடலாம். இத்தகைய உற்பத்தி உறவுகளிகுல் ஏற்படும் பிரச்சனை, களிஞல் குடும்பக்கட்டுப்பாடு அவசியமாகிறது. கருத்தடை முன்றகண் தாமே தேடிக்கொள்கின்றனர். அரசு இப்பிரச்சாரத்தில் இறங்துவ தில்லை. அதற்குமாமுக அதிக பிள்களக்கனப் பெறுபவர்களுக்கு வசதி, கள், சலுகைகள் வழங்கி ஊக்குவிக்கிறது. கருத்தடைச் சாதனங்கள்: பற்றிய பிரச்சாரமே இந்நாடுகளில் கிடையாது. . ; : ; முதலாளித்துவ நாடுகளில் கர்ப்பமுற்ற பெண் குறைவாகனே மதிக்கப்படுகிருன். தன் தாய்மைக்கோலத்தை அவலட்சணமாகவே கருதுகிருள்; மற்றவர் பரிகசிப்பார்கள் என அஞ்சுகிருன், கர்ப்பமுற்ற காலம், பிள்வப்பெறும் காலத்தில் உழைப்பைப் பெறமுடியாது என முதலானியே கருதுகிருன்; இதனல் குறைந்த கூலி வழங்குகிமுன் சில, தொழில்களில் கர்ப்பமுற்றதும் கூலி உழைப்பையே பெண்கள் விட்டுவிட நேரிடுகிறது. / ; : . . . . - பின்தங்கிய நாடுகளில் மட்டும் கருத்தடைப் பிரசாரங்கள் ஏன்
செய்யப்படுகின்றன?
ஏகாதிப்த்திய, முதலாளித்துவ நாடுகள் மூன்ருவது உலக நாட்டு வளங்களை குற்ைபாடுவதையே இன்றும் தொழிலாகக் கொண்டுள்ளன: காலனியாக ஆளும் காலத்திலிருந்தே அந்நாட்டு மக்களின் أنواع படைத் தேவைகளான உணவு, உடை பற்றி அவர்கள் சிரத்தை யெடுத்ததில்லை. காலணி நாடுகளிலெல்லாம் அவர்கள் விட்டுச்சென்ற
- 15 -

Page 9
'தெல்லாம் உணவுப்பற்ருக்குறையேயாகும். இன்று, "உங்கள் குடிசனம் நாட்டுவனத்திற்கு மேலாக அத்துமீறிப் பெருகுகிறது; கட்டுப்படுத் துங்கள்" என்று அந்தாட்டுப் பொருளாதார நிபுணர்கள் அறிவுரை கூறுகின்றனர். இதற்குக் காரணங்கள் என்ன?
(1) தம் நாட்டு கருத்தடைச் சாதன கைத்தொழில் உற்பத் திக்கு எம் நாட்டைச் சந்தையாக்குவதா? " (2) தொடர்ந்து எம் நாட்டு மூலவளங்களை அபகரிப்பதா? (3) அவர்களது அறியாமையா?
குடிசனப் பெருக்கத்தைக்" கட்டுப்படுத்துவதே பின் தம்கிய நாடு களுக்கு ஒரே வழி என்று கூறுவது வெறும் ஏமாற்று மட்டுமல்ல முதலாளித்துவத்தின் இயலாமையையும் காட்டிநிற்கிறது.
இவங்கை போன்ற பின்தங்கிய நாடுகளில் குடிசன வளர்ச்சி பின்வருமாறு மாற்றமடைகிறது :
(1) agu கர்ப்பம்/ கூடிய குழந்தை மரணம் (2) கூடிய கர்ப்பம் | குறைந்த குழந்தை மரணம் (3) குறைந்த கர்ப்பம் / குறைந்த குழந்தை மரணம்.
இலங்கையில் 1948இன் முன் (1) நிலையும், 1948ள் பின் (2)ம் 1971ள் பின் (3) தில்பும் அடைந்துள்ளது. 1971ம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கைப்படி 2.2 ஆக வளர்ந்த குடிசாம் 1973ல் 1.7 ஆக விழ்ச்சியடைந்தது. அவ்வேளை இன்று நடைபெறுவது பேர்ன்ற பிரீதி பிரச்சாரம் இருக்கவில்லை. காரணம் பெரும்பாலான மக்கள் (பெண்களும்) கூலி உழைப்பாளராக மாறிவருவதேயாகும். இதஞல் திருமணம் செய்யும் வயதும் உயர்ந்துள்ளது. 1953ல் 15-24 வயதிற் குள் திருமணம் செய்த பெண்கள் தொகை 46% ஆக இருந்தது: 1971ல் 27% வீதமாக குறைந்துள்ளது. f a
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கருத்தடை சாதனங்கள் பற்றிய விளம்பரங்கள் அரசின் ஆதரவுடனேயே மிகவும் மோசமான போக்கில் எம் நாட்டுப் பண்பாடுகளுக்கு எதிசிமாருணி முறைகளில் செய்யப்படுகின்றன. இவை வெளிப்படையாக இரு அம்சங்காேக் காட்டிநிற்கின்றன : (1) (எம் நாடுகளில் நிலவுடைமை உற்பத்தி முறையே இன்றும் ஆதிக்கத்தில் உள்ளது (முதலாளித்துவ உற்பத்தி முறையில் இத்தகைய பிரசாரம் அத்தியாவசியமற்றதாகிவிடும்). (2) தரகு முதலாளித்துவத்தின் செல்வாக்கும் ஆதிக்கமும் வளர்ந்து வருவது. (எம் நாட்டு மக்களது ஒழுக்கம், பண்பாடு முறையின்படி திவருனது எனக் கருதுவதை வலிந்து பிரசாரம் செய்வது. இதை தரகு முதலாளி வரிக்கத்தால் மட்டுமே செய்யமுடியும்.)
w
- 16 -

ʼ v, . . . முதலாளித்துவ உற்பத்திமுறை நிலவும் பகுதிகளில் குடும்பக் கட்டுப்பாடு இயல்பாகவே அமைகிறது என்பதை எம் நாட்டிலேயே காணலாம். கொழும்பிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் குடும்பப் பெருக்கம் மற்றைய பகுதிகளிலும் பார்க்க குறைவாகவே உள்ளன. அறியாமையே குடும்பப் பெருக்கத்திற்குக் காரணம் என்பது முற்றும் தவருள கோட்பாடாகும். 8ነ
1963, 1971 குடிசன புள்ளிவிபரங்களை ஒப்பிடும்போதும் கண்டி, நுவரெலியா, மாத்தனே, பதுளை, இரத்தினபுரி ஆகிய பெருந்தோட்டப் பகுதிகளில் குடிசன வளர்ச்சி ஏனைய பகுதிகளிலும் பார்க்ககுறை araga காணப்படுவதை அவதானிக்கலாம்.
உற்பத்தி உறவு கூலி உழைப்பு முறையே உண்மைக் காரணமர கும். பெருந்தோட்டப்பகுதியே கல்வியறிவு மிகக்குறைந்த பகுதியாகும்.
30p குறிப்பிட்டுள்ள 1971äSflau புள்ளிவிபரங்கள் •-თ-Mთ 6თup நிைையக் காட்டவல்லன :
கல்வி ஒரு குடும்ப கர்ப்பமடை குழந்தை
யறிவு sta வோர் , மரணம்
% 1000க்கு 1000க்கு : GS au rg nrrif  ് 82 5. 6 300 - 8.2 , பெருத்தோட்டப்பகுதி vn V
erprirøfl 6. 3. 3 25.4 11, 2
நெருங்கிய வசிப்பிடமும் பெண்களில் பெரும்பகுதியினர் alaupiù பதுவும் பெருந்தோட்டப் பகுதியிலேதான். சராசரி 3.3 நபர்கொண்ட சிறிய குடும்பமும் குறைந்த கூலி உழைப்பும் (தேசீய சராசரி கூவி விகிதத்தில் மட்டுமே இவர்களுக்கு, வழங்கப்படுகிறது) குறைந்த குழந்தைகள் பெற்று (25.4) கூடிய தொகையைப் பறிகொடுப்ப வரும் (11.2) தோட்டத் தொழிலாளர்களேயாவர். சோஷலிச சமுதாயம் :
உற்பத்தி உறவு, சமூக உடைமை சமூக உற்பத்தி உறவாக மாறு: கிறது. தனிக்குடும்ப உற்பத்தி உறவுகளுக்காகவோ கூவி உழைப்பு தேவையையொட்டியோ குடும்பப் பெருக்கம், கட்டுப்பாடு என்ற முறைகள் மறைகின்றன. சமுதாய உணர்வு, சமுதாயப் பொறுப் புணர்வு, தனிவாழ்வு, உணர்ச்சி நிறைவு ஆகியவை தலையெடுக்கின் றன. மக்கள் தாமாக, சுதந்திரமாகவே குடும்பங்களை விரும்பி அமைத் துக் கொள்ளுகின்றனர். பிள்கிாகக்ள வளர்ப்பதுகூட சமுதாயப் பொறுப்பாகிவிடுகிறது. மனிதன் அனைத்திலும் சுதந்திரம் பெற ar blå Geysir.
- 17

Page 10
பூஷ்வா ஜனநாய்கம் வழங்கும் பகட்டு உரிமைகள்
பிரதமர் இரு தடவைகளில் GThalb& கனத்தாலோசிக்காது.செய் லாற்றியது க்வல் தருகிறது. । ।
இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனம் நவம்பர் 16ல் நடாத்த இருந்த ஆண்டு விழாவை ஊரடங்குச்சட்டம் போட்டு பிரதமர் தடை செய்தார். இச்சம்பவத்தின் முன்னரி ஐக்கிய முன்னணிக் கட்சிகளிடை கல்ந்தாலோசன் நடந்திருப்பின் இது சம்பவித்திருக்காது. நீண்ட காலமாக மக்களுக்குக்கிடைத்து வந்த சிவில் உரிமைகள் பாதிக்கப் பட்டுள்ளன. முதலாளித்துவக் கட்சிகள் தங்கள் கொள்கைகளை நட்ை முறைப்படுத்த ayuras யற்திரத்திலேயே நம்பியிருக்கின்றன. மக்கள் மறு தேர்தல்வரை பார்வையாளர்களாக ஒதுக்கப்படுகின்றனர்.
கட்சி அமைப்பும் சுயேச்சையாளர் குழுக்களுக்கு பயிற்சி அளிப் பதும் தடைசெய்யப்பட்டது மற்ருேர் ஐக்கிய முன்னணிக்கட்சிகளு டன் கலந்தாலோசிக்காது செயலாற்றிய நிகழ்ச்சியாகும். சுயேச்சைக் குழுக்கள் பயிற்சி பெறுவது, இந்நாட்டில் சான்றுமில்லாதது, திடீரென தோன்றிய அரை இராணுவப் பயிற்சி முறை என்ற கருத்தை இது கொடுத்துள்ளது. தொழிற்சங்கங்களும் இக்னஞர் இயக்கங்களும் நீண்டகாலமாகவே சீருடை அணித்து பயிற்சி பெறுவது, அணி வகுப் *பது மக்கள் இயக்கங்கள் செயல்படும் காலத்திலிருந்தே தொடங்கப் பட்டவையாகும். புரட்சிகர அரசியல் இயக்கங்கள் தோன்ற முன்னர் ஏ. ஈ. குணசிங்கா தொழிற்கட்சியை அமைத்த காலத்திலிருந்தே நடந்து வருபவையாகும்:-பெர்ளுட்சொய்சா செயலாளர்-சமசமாஜக் கட்சி JA8äas - 10-1-75. w
崇 米,奖
ஊர்வனத்தடையை மீறுவதாக சில பகுதியினர் gp Lird Agar மாக தீர்மானிக்காதிருந்தால் ஊரடங்குச் சட்டம் போடவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கமாட்டாது. . . . .
arbaud 1970 பொதுத்தேர்தலின்போது ஆதரித்த மக்கள் விடு நல்ல முன்ன்னியினரே 1971ல் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து விகள விக்க முயன்றதை நாம் மறந்துவிட முடியாது.
நான் பிரதமர் பதவி வகிக்கும் வரையும் நாட்டின் சுதந்திரம், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு நானே பொறுப்பாளி. இதை

ஜனநாயகம். சோஷலிசம் ஆகிய இரு குறிக்கோள்களையும் முன் வைத்து நானே கவனித்து வருகிறேன். - பிரதமர் அறிக்கை 12-1-74,
※ ,崇 洛 ' தேர்தல்வாக்குறுதிகள் பெரும்பான்மைபெற்ற Sri Apå கட்சி கையோ, அரசையோ கட்டுப்படுத்துவனவல்ல. ஏனெனில் தேர்தலில் வெற்றிபெற்றவர்களை திரும்ப அழைக்க மக்களுக்கு வாய்ப்பு:அளிக்கப் படுவதில்ல. பாராளுமன்றத்தில் ஆதிக்கம் தேர்தெடுக்கப்பட்ட உறுப் பினரிடம் கிடையாது. அமைச்சரவையிடமே உள்ளது, இவர்கள் ஆளும் வர்க்கத்தின் பாதுகாவலரான நம்பிக்கைக்குரிய அதிகாரிகளிலேயே தங்கியுள்ளனர். இவ்வதிகாரிகள் தேர்தலில் நிற்கவேண்டியதில்லை. அமைச்சரவையுள்ளேயும் உள் அமைச்சரவையாக மற்ருேர் முன்னுேடி யான சில அமைச்சர்கள் இருப்பர். நெருக்கடிகள் ஏற்ப்டும்போது வங்கி அதிபர்கள், ஏகபோக முதலாளிகளை கலந்து பேசியே இவர்கள் முக்கிய தீர்மானங்களை எடுப்பர். , - தொம்சன்
,米。米 米 ላ' ! gafsar syrsaaflar அடிப்படைச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நிரு வாகம், கூட்டம் கூடும் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் அல்லது "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" ஆகியவை அனைத்திலும் பூஷ்வா, ஜனதாயகத்தின் சபடத்திற்குரிய சான்றுகளை தேர்மையான, வர்க்க ே உணர்வுகொண்ட தொழிலாளி அறிந்திருக்கிருன்.
கரண்டப்பட்ட வர்க்கம் அடிமைத்தனத்திலிருந்து விடுபடும் முக ' மாக நடவடிக்கை எடுக்க, அதை பொதுச்சட்ட ஒழுங்கை மீறுவதாக, குற்றம் கமத்தி, மாஷன் சட்டம் பிரகடனப்படுத்தி,தொழிலாளர்களுக்கு 4. எதிராக இராணுவத்தை அனுப்புவதற்கேற்ற முறையாக பூஷ்வா வர்க்கம் அரசியலமைப்பில் இடம் வைத்துக்கொள்கிறது. இத்தகைய வசதிகள் ஏற்படுத்தாத அரசியலமைப்புக்கொண்ட பூஷ்வா ஜனநாய கம் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டிலும் கிடையாது. - லெனின்
15-7-1974இல் இருந்து ན་ ༡༥ 'குமரன்’ புதிய சந்தா விபரம்
தனிப், பிரதி : 50 சதம் ஆண்டுச் சந்தா : ரூ. 6/- ஆங்காங்கே வரவழைத்து விநியோகிப்போருக்கு விசேஷ சலுகைகள் உண்டு. எழுதுக:
Siřaras ஆசிரியர், குமரன், 201, lf th aff?), கொழும்பு-12 ,
தொலைபேசி : 21.3 08 !
t " wm ,,... --سے , 19 سے
& { \ ( ..., ...’

Page 11
சீனக் -- குடியரசின் புதிய அரசியலமைப்பு
- கலி - -
*புதிய ஜனநாயகப் புரட்சியின் மிகப் பெரு வெற்றியுடன் மக் கள் சீனக் குடியரசு உதயமாகியது; அத்துடன் சோஷலிசப் புரட்சி யின் வரலாற்றுக் காலகட்டமும் பாட்டாளிகளின் சர்வாறகாரமும் ஆரம்பித்தது. சீன மக்கள் ஒரு நூற்றண்டுக் காலத்திற்கு மேலாக நடாத்திய வீசப் போராட்டத்தின் வெற்றியே இதுவாகும். இறுதி யில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்த மக்கள் புரட்சி யுத்தமே ஏகாதிபத்தியம், நிலவுடைமை, அதிகாரத்துவ முதலாளித் துவம் நடாத்திய பிற்போக்கு ஆட்சியை வீழ்த்தியது."
இவ்வாறு மக்கள் சீனக் குடியரசின் 4வது தேசிய மக்கள் காங் கிரசிகுல் 17.1.75 ல் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்புச் சட் டம் ஆரம்பமாகிறது. அதில் குறிப்பிடப்பட்ட முக்கிய சரத்துகளைக் கீழே தத்துள்ளோம் :
"சோஷலிச சமுதாயம் நீண்ட வரலாற்றுக் காலத்தை அடக்கும். இவ்வரலாற்றுக் காலகட்டம் முழுவதும் வர்க்கங்கள், வரிக்க முரண் பாடுகள், வர்க்கப் போராட்டங்கள் இருக்கவே செய்யும்."
X X X
சர்வதேச அலுவல்களில் ராம் பாட்டாளியின் சர்வதேசீயத்தை நிலநாட்ட வேண்டும், சீகு என்றும் ஒரு வல்லரசாகாது.
༡་༣་ ༧་༣་་་་་་་་་་་་་་་་་་་་་་ x x х
தொழிலான, விவசாயிகளின் கூட்டமைப்பின் அடிப்படையில் ,
தொழிலாள வர்க்கம் பாட்டாளியின் சர்வாதிகாரத்தை முன்தடத்தும்
சோஷலிச அரசே சீனக் குடியரசாகும். s
X X X
sari e4lup's தேசிய இனம்களைக்கொண்ட ஒரே ஐக்கிய
ாரசாகும். மாவட்ட தேசீய ஆட்சியுரிமை உள்ள பகுதிகள் யாவும்
சீனக்குடியரசிலிருந்து அள்ளியப்படுத்தப்படமுடியாத பகுதிகளாகும்.
X X X
--سے 204. --
 

இன்றைய காலகட்டத்தில் சீனக்குடியரசில் உற்பத்திச் சாதனம் களில் இரு வகையான உடைமை உள்ளன. மக்கள் அண்வருக்கும் சொந்தமான சோஷலிச உடைமை, உழைக்கும் மக்களது சோஷலிச aUG9 alan LSD te. -
х X X கிராமிய மக்கள் கம்யூன் அரசு நிருவாகத்தையும் பொருளாதார நிருவாகத்தையும் ஒன்றினைக்கும் அமைப்பாகும். *·戈
X X X
சீனக் குடியரசு சோஷலிச கோட்பாடுகளான, "உழைக்காதவன் உண்ண உரிமைபெற மாட்டான்', 'திறமைக்கேற்ற உழைப்பு, உழைப்பிற்கேற்ற பங்கு" என்பனவற்றைக் கடைப்பிடிக்கும்.
X X X -
கலாச்சாரம் உட்பட எல்லா மேல்மட்ட அமைப்பிலும் பூஷ்வா வர்க்கத்தின்மேல் பாட்டானியே சர்வாதிகாரம் செலுத்தவேண்டும். கலாச்சாரம், கல்வி, கலை இலக்கியம், உடற்பயிற்சி, சுகாதாரப்பள். கன், விஞ்ஞான ஆய்வு அனைத்தும் பாட்டாளி வரிக்க அரசியலுக்கும். தொழிலாளர் விவசாயிகளுக்கும் போராளிகளுக்கும் சேவை செய்வ தோடு உற்பத்தி உழைப்போடும் ஒன்றினைபு வேண்சம். ... '
X Χ X
பெண்கள் ஆண்களோடு எல்லா வகையிலும் சமஉரிமை Gaugavat , திருமணம். குடும்பம், தாய்-குழந்தையை அரசு பாதுகாக்கும்.
X Χ X . .
பிரதேச புரட்சிக் கமிட்டி எல்லா மட்டத்திலும் பிரதேச asard, கிரசின் நிரந்தர அமைப்பாகும்; அதேவேள்ை எல்லா மட்டத்திலும் மக்களின் பிரதேச ஆட்சியும் அதன் பணியேயாகும். ه“
புரட்சிக் கமிட்டி தேர்தல்மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட த்வவர் உப-தலைவர், உறுப்பின்ர்களைக் கொண்டதாக இருக்கும். இவர்கள்த் திருப்பி அழைக்கவும் மக்கள் காம்பிரசுக்கு தேர்வதுபோல உமின்ம புண்டு. . ..
Χ X X கப்ரீம் கோடு, எல்லா மட்டத்திறுமுன்ன பிரதேச மக்கள் கோடு கம், விசேட மக்கன் கோடுகள் நீற வழங்கும் அதிகாரத்தைப் பெம் றிருக்கும். ~ .
சுவீகரிப்பு வழக்குகளை விசாரிப்பதில் மக்கள் வழி பிரயோகப் படுத்தப்படும். . ...

Page 12
மூன்றுலக முக்கோண முரண்பாடுகள் s - பெருமாள் - V− . . . . . . மூன்றவது உலகம்: f
காலனித்துவம், ஏகாதிபத்தியம், வல்லரசுகளின் கெடுபிடிகளுக்கு எதிராக போராடி தொடர்ந்து முன்னேறிவரும் உலகின் மிகப்பெரிய உந்து சக்தி மூன்முவது உலக நாடுகளாகும்.
ஆவியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிகாவுடன் மற்றும் சில பகு திகளைக் கொண்ட 100க்கு மேற்பட்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மூன்ருவது உலக நாடுகளிடை அடங்கும். (சீன, இந்தியா, i gledaеa, மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகள் அனைத்தும்.) உலகின் :70% மேற்பட்ட சனத்தொகையுடைய 300 கோடி மக்கள் இங்கு ல்ாழ்கின்றனர். இவர்கன் காலனித்துவம். ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறைக்குள்ளும் சுரண்டலின் கீழும் ைேண்டகாலம் வாழ்ந்தவர்கள். இன் றும் இந்நாடுகள் ஆக்கிரமிப்பு, கட்டுப்பாடுகள், சதிவேலகள், சுரண் ட்ல் ஆகியவற்றிற்கு உட்பட்டுள்ளன. அதனும் தேசிய அபிவிருத்திக் கும் தமதுவிடிவுக்குமாக அடக்கு முறைகளை எதிர்த்துப் போராடும் புரட்சிகர எழுச்சியும் இவர்களிடமே உள்ளன.
முதலாவது உலகம்: w -
'அமெரிக்கா, சோவியத்யூனியன் ஆகிய இரு தா9களுமே ஆதிக்கக் கெடுபிடி கொண்ட முதலாவது உனகமாகும். . . .
இரண்டாவது a fashio: ,
வல்லரசுகனெக்கொண்ட இவ்விரு ஏகாதிபத்தியங்களுக்கும் epdcy வது உலக நாடுகளுக்குமிடையில் வாழும் அபிவிருத்தியடைந்த நாடு களே இரண்டாவது உலகாாடுகளாகும். மேற்கு ஜெர்மனி, ஜப்பான், பிரான்சு, பிரிட்டன், இத்தாலி, கனடா, அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளே இரண்டாவது உலகமாகும்.
முதலாவது உலக நாடுகளான அமெரிக்கா-சோவியத் ரஷ்யாவிற் கும் இடையிலேயே முரண்பாடுகள் உள்ளன. இவை இரண்டிற்கும். மூன்ருவது உல்க நாடுகளுக்குமிடையில் முரண்பாடுகள் பகைமைகாக உள்ளன. இரண்டாவது உலகநாடுகளுக்கும் - மூன்ருவது உலக நாடு களுக்குமிடையில் முரண்பாடுகள் உள்ளன. முதலாவது - இரண்டாவது *உலக நாடுகளிடையேயும் முரண்பாடுகள் உள்ளன. இவ்வாருக
முக்கோணமாக முரண்பாடுகள் உள்ள்ன.
i ' ', w ぶ 。 t -
 

3 2. انۂ
உலகச் சுரண்டலில் பெரும் பகுதியை எவர் அபகரிப்பது என்ற போட்டியே அமெரிக்காவிற்கும் சோவியத் ரஷ்யாவிற்கும் இடை tTtT TLTL TLTTLTLTTTSS TTTTLLTTL LLTTLTLLTLTLLLLLLL LLLLLLLLS மையுடையதாக சில வேளைகளில் தோன்றியபோதும் தேச முரண்: பாடாகவே பெரும்பாலும் தோன்றுகிறது. பகைமையாக மாறும்வேன் * மூன்ருவது உலக யுத்தத்தை எதிர்பார்க்கலாம். மத்திய கிழக்கில்
இந்நில தோன்றக்கூடிய சாத்தியம்கள் உள்ளன.
2
W ሃ
அமெரிக்காவிற்கும் அபிவிருத்தியடைந்த இரண்டாவது உலகநாடு களிடையேயும் பெரும்பாலும் சினேக முரண்பாடே நிலவி வருகிறது: 2 வது உலக நாடுகளுக்கு அமெரிக்காவே தலைமை தாங்குகிறது. இவ: களது உறவை நேச உறவாக காப்பதற்காக அமெரிக்கா அவ்வவ்வேண் புதுப்புது வழிகளைக் கையாள்கிறது.உதாரணமாக வியத்நாம் யுத்தத்தை முன்னடத்தும்போது புத்த தளவாட உற்பத்தி ஒடர்களில் பெரும் பகுதியை பப்பான், மேற்கு ஜெர்மனி, பிரான்சு, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு வழங்கியது. இந்நாட்டு முதலாளிகள் வட்டிகொண்ட் கடனில் உற்பத்தி செய்து உதவி வழங்கினர். புத்த காலத்தில் இவரி? எளிடை ரேச உறவு நிலவியது. யுத்தம் முடிந்ததும் கடன்கள்ை திரும் பித்தரும்படி 2 வது உலக நாடுகள் வற்புறுத்தின. அதுவே இன்று. உலகப் பொருளாதார வீழ்ச்சியாக வடிவம் எடுத்துள்ளது; தங்கம். டாலர் வீழ்ச்சி மேற்கு ஜெர்மன் மார்க், ஜப்பான் ஜென்னின் எழுச்சி. ஆகியனவாக இன்று பிரதிபலிக்கின்றன. 1,2வது உலக நாடுகளிடையே முரண்பாடுகள் முற்றி வருகின்றன. அமெரிக்க முத்லாளிகள் நம்ச: ஆதிக்கத்திலுள்ள மத்திய கிழக்கு எண்ணெயின் விலையை உயர்த்தி தற்காலீகமாக தமது நெருக்கடியைத் தளர்த்த முயல்கின்றன. இதன்" மூலம் அமெரிக்க எண்ணெய் முதலாளிகள் முன்னரிலும் அதிக காபம் தேடி வருகின்றனர். அமெரிகக முதலாளிகள் உள்நாட்டிலேயே தம் நாட்டிற்குத் தேவையான பெரும் பகுதி மீண்டி எண்ணெய்ைய்ெறு; கின்றன்ர். இதன் விலையையும் உயர்த்தி உள்நாட்டிலேயே அதிக லாபம் திரட்ட முடிகிறது. இவ்விலையேற்றத்தால் அரபு நாடுகளும் ஓரளவு வாய்ப்புப் பெற்று வருகின்றனரி என்பதும் உண்மையே. ஈரான்
- 23 -

Page 13
மன்னர் ஷா, சவுதி அரேபிய மன்ன்ன் பெஷ்கள் ஆகியோர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து முற்ருக விடுபட்டு தாமே தமது எண்ணெய் விைைய "ஒப்பெக் (OPEC) நாடுகள் மூலம் தீர்மானிக் கின்றன என்று முழுமையாகக் கூறிவிட முடியாது. இது மீள ஆராய வேண்டிய விஷயமாகும். இந்நாடுகளில் மக்கள் ஆட்சியே இல்லை. பாசிச ஆட்சியும் அடக்கு முறைகளுமே நிலவுகின்றன. மக்கள் எதை பும் தீர்மானிக்க முடியா நிக்மயிலேயே இன்றும் உள்ளனர்.
மூன்ருவது உலக நாடுகள் தம் காலில் தாமே நிற்பதன் மூலமே 1,2வது உலக நாடுகளின் சுரண்டல்களிலிருந்து தம்மைக்காப்பாற்ற முடியும், 1,2வது உலக நாடுகள் உதவியென்ற பெயரில் தமது மேல. திக உற்பத்திப்பண்டங்களையும் கனரக யந்திரங்களெயும் எம் நாடு களிடை தள்ளுகின்றன. இவற்றில் தம்பிக்கை வைத்திருக்கும்வரை i dTuais diffug-Gau Sao L-Numrg. -
3வது உலக நாடுகளிலிருந்து மூல வனங்களே அபகரிப்பதே 1,2வது நாடுகளின் ஒரே கோட்பாடாகும். 3வது உலக நாடுகள் யாவும் ஜ்க் கியப்படுவதன் மூலம் 1,2வது நாடுகளே பணியவைக்க முடியும். (எமக்கு 1,2வது உலக நாடுகளது உதவி அவசியம் என்று எண்ணு (வதே தவறு. அவர்களுக்கே எமது உதவிகள் தேவை: sya taas சந்திரங்களுக்கு தீனிபோட எமது மூல வளங்கள் வேண்டும். இந்த a a spaе и உணர்ந்ததும் உலக வரலாற்று வளர்ச்சியின் மிகப் பெரும் உத்து சக்தி மூன்முவது உலகநாடுகளே என்பது நிரூபனமாகும்.
· sinaunanun
இனி, தூங்க முடியாது
ரெல்லின் மணித் திரட்சி காண நவிகின்ற செல்வா..!. ஓ.சில்வா, செயின் காக்கா உங்களைத்தான்! வெள்ளாமை வட்டைக்குள் வியர்வை இறைத் திறைந்தே செல்லாக் கர்சாளுேம், சீர், கெட்டோம், உண்மையிது! ) அல்லாவா..? இல்லை யெனில் அம்முருகப் பெருமாரு..? இல்லையெனில் யாரெம்மை இந்நிலைக்கு ஆக்கியவர்? சொல்லுங்கள்! உங்களைத்தான். சொல்லுங்கள்! . கல்லான உணம் கொண்ட, நிலப்பிர புத்துவத்தின்
கள்ளர்களெல்லாம் எம்முழைப்பை உறிஞ்சியதால் இல்லாராய்ப் போனேம்! ஏதுண்டு இழப்பதற்கு? Qarrdhary Alasayair G, gurtë diale a 6ës G... இல்;ை பிற இதஞல் இனித் தூங்க முடியாது! Y (பாலமுனே - பாறுக்)
- 24

இலங்கையின் தரகு) முதலாளித்துவ ஆளும் வர்க்கம் - 3
முன் இரு கட்டுரையிலும் அடிப்படை அமைப்பில் தரகு முதலா ளித்துவத்தின் ஆதிக்கத்தை ஆராய்ந்தோம். முதலாவது கட்டுரையில் தனியார் துறையூடாக கூட்டுக் கம்பணிகள், சர்வதேசக் கம்பணிகள் ஆதிக்கம் பெற்றிருப்பதை கணக்கிட்டோம். இரண்டாவது கட்டுரை பில் அரச முதலாளித்துவத்தினூடாக பிற நாட்டு ஆதிக்கம் வலுப் பெற்றிருப்பதைக் கண்டோம். மூலதனம் நுழையும்போது அவற்ருேடு அந்நாடுகளின் மேல்மட்ட அமைப்புகளும் ஆதிக்கம் பெறுவது தவிர்க்க முடியாதது. அவை மூலதனத்தைப் பேணுவதும் மூலதனம் மேல் மட்ட அமைப்புகளைக் காப்பாற்றி வளர்ப்பதும் இயல்பாகின்ற்ன. இக்கட்டுரையில் மேல்மட்ட அமைப்புகளின் ஆதிக்கம் பற்றி ஆராய் வோம்: - . . . . .
அரசியல் : பிரித்தானியர் தந்த ஜனநாயகம்" என்ற அரசியல் முறையையே நாம் இன்னும் கடைப்பிடித்து வருகிருேம். புதிய அர சியல் சட்டம்கூட அவர்களது பூஷ்வா ஜனநாயக கோட்பாடுகளை ஒட்டியதே. பேரவை நடைமுறைகள் பாவிலும் பிரித்தானிய பாராளும் மன்ற ஒழுங்கு முறைகளே இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவ் ஜனநாயகம் 51% மானவர் 49% மானவர்கள்மீது சர்வாதிகாசம் செலுத்துவதாகும். இதுதவிர ஐந்து ஆண்டுக்கு ஒரு தடவை வோட் டுப் போடுவதன்மூலம் சொத்துடையவரும் பாட்டாளிகளும் சமம் என்று பொய்மை பேசுகிறது. *
சட்டம் : ருேமன் டச்சுச் சட்டம், ஆங்கிலேய சட்டம் இரண்டுமே இன்றும் ஆட்சிபுரிகின்றன. சொத்துரிமையில் தேசவழமை, கண்டியன் சட்டம் போன்றவை பிரதேசங்களின் வழமையைப் பின்பற்றியபோதும் முரண்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் ஆம்கிலேய சட்டமே முன் நிற்கும். நீதிமன்றங்கள், நடைமுறைகள் யாவும் மேல்நாட்டவரதே.
மதம் : புத்தமதம் புதிய அரசியல் அமைப்பில் முதலிடம் பெற்ற போதும் கிறிஸ்தவ மதத்தின் செல்வாக்கு முன்னிற்கவே செய்கிறது. இன்றும் கிறிஸ்மஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு முதலிடம் பெறு கிறது. V -
MM கல்வி : பிரித்தானிய கல்வி முறைகள் 1970 வரை ஆதிக்கம் பெற்றிருந்தன. அதன் பின்னர் அமெரிக்க கல்விமுறை, பரீட்சைமுறை
- 25 -

Page 14
கள் புகுத்தப்பட்டு வருகின்றன. கைத்தொழில் வளர்ச்சி, கம்பியூட் டர் ஆதிச்கம் பெற்ற நாட்டு முறைகள் அரைக்கானிை. அரைப் பிர புத்துவ நாடான இலங்கையில் திணிக்கப்படுகின்றன. விவசாய நாடான இனங்கைக்கு வேண்டிய கல்வி இன்றுவரை ஆதிக்கம் பெற வில்லை. (தரகு) முதலாளித்துவத்தின் தேவையை ஒட்டிய கூலி உழைப் புக்குத் தயாராக்கும் கல்வி முறையே இன்றும் ஆதிக்கம் பெற் றுள்ளது.
' மொழி : சிங்களம். தமிழ் ஆகியன தேசிய மொழிகளாகக் கரு தப்பட்டபோதும் ஆங்கிலத்தின் செல்வாக்கே முன்னிற்கிறது. ஆங்கில மொழி கட்டாய பாடமில்லை என பண்டாரநாயகா 1956ல் ஆட்சி பில் வந்த காலத்தில் நடைமுறைப்படுத்த முயன்றர். தற்போது அவர் மண்வியார் பிரதமராகவுள்ள ஐக்கிய முன்னணி ஆங்கிலத் தைக் கட்டாய பாடமாக்கிவிட்டது. ஆங்கிலம் எமது எசமானர் மொழி :பாகிறது. சிங்களம், தமிழ் மட்டுமே தெரிந்தவ்ர்கள் சமுதாய அந்தஸ்
ஃதில் இன்றும் குறைந்தவர்களே.
་་ கலை இலக்கியம்: , அமெரிக்க திரைப்படங்கள், ஆங்கில அமெரிக்க சஞ்சிகைகள், மொழிபெயர்ப்பு நூல்கள். மொழிபெயர்ப்பு நாடகம் *கள் இன்றும் மொடலாகவும் எம் நாட்டில் முன்னிற்கின்றன. சிங்கள, தமிழ் கலை இலக்கியங்கள்கூட ஆங்கில கலை இலக்கிய கண்ணுேட்டத் இலேயே ஆராயப்படுகின்றன: படைக்கப்படுகின்றன. ள்ம் நாட்டு மரபுக்கே ஒவ்வாத "பொப் இசை அரசின் வழியாகவே வானுெலி மூலமும் ஆதிக்கம்பெற்று வருகிறது. தரகு முதலானித்துவ கலை, கலா சார வளர்ச்சியையே இவை காட்டிநிற்கின்றன. . . . . '. நடை, உடை பாவனைகள் : ஆக்கில, அமெரிக்க முறைகளே மொட லாகக் கையாளப்படுகின்றன. ஒட்டல்கள், வீடுகள், தளபாடங்கள் யாவிலுமே. "அந்நாடுகளையே மொடலாகப் பின்பற்றுகிருேம். நுகர் பண்டத் தேவைகள் யாவும் அந்நாட்டவர் கைத்தொழிற் பண்டங்க னேயாகும். உடையில்கட் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடு கவில் ஏற்பதம் மாற்றம்கள் இக்கும் ஆளும் வர்க்கத்தவரால் ம்ொட வாகக் கொள்ளப்படுகின்றன. "மினி ஸ்கேட்" மறைந்து "பெல்பொட் டம்" செல்வாக்குப் பெறுவதை காண்கிருேம். உற்பத்திஉறவை ஒட் டியே உடைகள் தயாரிக்கப்படுவதை முதலாளித்துவத்தில் எளிதில் . & arraramorrub. உதாரணமாக டாக்டர், இஞ்சினியர், நர்ஸ், குமாஸ்தா, நீதிபதி, கராஜ், தொழிற்சாகித் தொழிலாளர். ஆகியோர் யூனிபோமாக உடை அணிவதை எளிதில் காணலாம். இவை தவிர்ந்து மேல்நாட்டு முறைகள் உற்பத்தி உறவோடு ஒட்டாது திடீரென வீதி களில் மாறிவருவது தரகு முதலாளித்துவ ஆதிக்கத்தையே காட்டி நிற்கிறது. தேசீய உடைகள் அணிபவர் எந்த இடத்திலும் அந்தஸ் தில் குறைந்தவர்களாகவே கருதப்படுகின்றனர். r/
T-26 -
 
 

தரகு مهر முதலாளித்துவ வளர்ச்சி
ஜனுவரி 17 அன்று நமது பிரதமர் மட்பாண்டக் கூட்டுத்தாப
னம் இரு மிகப்பெரிய பப்பானிய தனியார் கம்பனிகளுடன் கூட்டாக
ஆரம்பித்துள்ன மொசாக் ஒடு தயாரிக்கும் தொழிற்சாலையைத் திறந்து வைத்துள்ளார். ரூ. 111 லட்சம் மூலதனமுள்ள இத்தொழிற்சாக்கு
நிச்சிமன், டான்ரோ ஆகிய யப்பானிய தனியார் கம்பனிகள் ரூ. 46
லட்சம் முதலீடு செய்துள்ளன. யந்திரங்கள். தொழில்நுட்பம் யாவை பும் யப்பானியரே வழங்குவர். இவ்வாருக பிற நாட்டு மூலதனங்கள் இன்றும் ஆளும் வர்க்கத்தின் ஆதரவுடன் நுழையும் வேகா முந்
போக்கு சக்திகள் என்று:தம்மைக் கூறிக்கொள்ளும் அரசு ஆதரவாளர் *கன் பிற நாட்டு மூலதனம்களை தேசிய மயமாக்கு என்று குரல் எழுப்பு வது வேடிக்கையாக மக்களுக்குத் தோன்றவே செய்யும். யப்பானிய
ஆதிக்க வளர்ச்சியை குமரன் 18இதழிலேயே ஜப்பானியர்களும் வந்து விட்டார்கள் என்ற தலைப்பில் நாம் அம்பலப்படுத்தினுேம். மத்திய வங்கி யின் தவெம்பர் 174 அறிக்கையின்படி தாம் பப்பானிடமிருந்து இது வரை பெற்ற பண்டக் கடன் ரூ. 2802 லட்சமாகும். திட்டக்க்டின் எதுவுமில்ல. - vm , , , o,
புதியமுறைச் சுகாதாரக் கல்வி
எட்டிாந் தரம் ரூ. 6-50 ! S. S. கருணுகரன் B.Sc. எழுதிய
• விலை ரூ. 3/- - புதுக்கணிதம் 7 - பகுதி I
ਲ3/- . புதுக் கணிதம் 8 - பகுதி 1 1 புதுக் கணிதம் 8 - பகுதி II
ീ : രൂ. 4-75 |- விஜய லட்சுமி புத் தக சா ஆல் !
248, காலி வீதி : : .வெள்ளவத்தை
கொழும்பு-6. ༣་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ 8 ( : ES 920,
w
N
N
- 27 -

Page 15
பிரசவம் நார்கள் ʻuABRvGDasdhʼ JaydÄy6) அதற்ைருன் P - - - பிரசவம் ஒன்றை நிகழ்த்த அவசரப் படுகின்ருேம், நாள் பார்த்து தேதி பார்த்து நிட்சயதார்த்தம் நடாத்திய பின்னரே ாங்களது 'திருமணங்"ளும் நடைபெறும். நிறைமாதக் atřů.í60aisernrů உருவெடுத்து. | | "பிரசவம் காண
எண்ணி இருக்கிருேம். நோக்காடு ஏற்பட்டும் பிரசவம் நிகழத் தடையாயின் எம்ானது வைத்தியர்கள் 'சும்மா இருக்க மாட்டார்கள்
ஏனெனின் அவர்கள் "ursivo QFiu படித்து இருக்கிருர்கள். நோய் நொடியற்றதும் சுகமானதுமான "புதிய சிக? வொன்றை பிரசவம் செய்ய இரத்தம் சிந்த எப்பெண்ணும் அஞ்சுவதுண்டோ?
- அன்புடின் N கவிஞருக வேண்டும். நாளுேர் கவிஞளுக வேண்டும்
வெந்து வெந்து வியர்வை சிந்தி
நைத்துபோன உழைக்கும் கரங்கள்
உறுதி பெறவும் உயர்வுபெறவும் S.
சிறப்புப் பெறவும்
செழுமை பெறவும் w
தாளுெர் கவிஞளுக வேண்டும்
- Gasnt untdio
நவீன பாரதம்
துகிலுரிந்தான் துச்சாதனன் சூதாடி வெற்றிகொண்டான் துரியோதனின் சகுனி சாத்வீகம், சமாதானத்தால் கோரினர் ஐவர் 'ஐந்து ராச்சியம்
ஐந்து ஊர்
ஐந்து வீடு' நிராகரித்தாள்'
gif|Gaunrisaurar - Lintaw Lawrif
தூக்கினர் ஆயுதம் - அங்கே?
அகிம்சை எங்கே?
பாரதம் படித்துப் பட்டம் Qupp
பண்டிதர் டாக்டர்
பாட்டாளிக்கு
நவீனபாரதம் படைக்கிருரர்களா? -திசும
பொசுங்கிவிடும் இனவெறியைத் தூண்டியிங்கு
உழைக்கும் மக்கள்
ஐக்கியத்தைக் குலைப்பவரே...! இனிமேலுங்கள் மணிமொழிகள் மக்கள் செவி ஏருதெங்கும் மலர்ந்துவரும் பொதுவுடைமைப் புரட்சித்தீயில் பொசுங்கிவிடும் உங்களது பிதற்றலெல்லாம்!
w - முல்லை வீரக்குட்டி
அதிசயம் சாய்ந்துபோன கோபுரமும் ஷாஜஹானின் தாஜ்மகாலும் எகிப்தினுடைய பிரமிட்டுகளும் நீண்ட பெரும் சீன கவரும் இன்னும் என்னென்னவோவாம் ஆளுலும் எனக்கு இங்கு உழைப்பவர் இக்ளப்பதுவும்
ஏய்ப்பவர் கொழுப்பதுமே
பெரும் அதிசயமாகுது. - சித்தி

ஜி. சி. ஈ. (உயர்தர வகுப்பு) நூல்கள் :
உயர்தர இரசாயனம் 36/- தாவரவியல் - பரமானந்தன் 2 பகுதிகள் 28/- விலங்கியல் - சங்கரஐயர் 4 பகுதிகள் 29/7s விலங்கியல் பயிற்சிகள் 3/- இரட்சணிய யாத்திரிகம்: - சிலுவைப் பாடு 2/- A CONCISE ATLAS GEOGRAPHY OF CEYLON
- Foreword by Prof. K. Kularatnam 5/- இலங்கையின் தேசப்படப் புவியியல் 3/75 தேம்பாவணி - மகனேர்ந்த படலம் M 4/- கண்ணன் பாட்டு - பாரதியார் பாடல் 6/-
ஜி. சி. ஈ. (சாதாரண வகுப்பு) பாட நூல்கள்:
நவீன இரசாயனம் 1 4/50
1 . 2. 56avsT ggas Tuulauvaid II 875 3. - 5effamuT se uffiffluudb II : ; 5/00 é 4. நவீன e usafluato II '.', 6/50 5. நவீன பெளதிகம் 1 V . 5/50 6. தமிழ் இலக்கியத் தொகுப்பு - விளக்கம் 5/00. 7. தமிழ் இலக்கியத் தொகுப்பு - விளுவிடை | 5/75 r \ 8. இந்து சமயம் - விளுவிடை முறை விளக்கம் 6:00. * புதுக்கணிதம் 7 பகுதி ! . . . . 34. 米 s பகுதி II : 31 * புதுக்கணிதம் 8 பகுதி 1 3/- * புதுக்கணிதம் 8 - பகுதி II , 4/75: * ஒன்றிணைந்த விஞ்ஞானம் 3100 ty * தமிழ் 6 - பயிற்சி 4/75 * தமிழ் 7 - பயிற்சி 5/75 * அறிவுக் களஞ்சியம் ッ - 5/50 * புதுமுறைச் சுகாதாரக்கல்வி - எட்டாற்தரம் 6/50 * தமிழ்ப் பயிற்சி 2 - 3/50
கிடைக்குமிடம்:
விஜய லட் சுமி புத் த க ச எ ல்ே 248, காலி வீதி, வெள்ளவத்தை,
கொழும்பு-6. தொலைபேசி: 88930

Page 16
புதிய தீண்டாச் சாதி ༣༥ རྣ - பெருமாள் - SM
சிவராசா அழுக்குச் சேட்டு, ஊத்தை வேட்டி, வாராத தலை யுடன் குமாரசாமி வீட்டை தோக்கி தட த்தான். குளிர்ந்த கடற்' காற்று அவனது சோர்ந்த உடலைத் தழுவி இதமுட்டியது. தெரு விளக்குகள் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன, 'உடைந்திருந்த ஒருசில பல்புகள் இடையிடை இருளைப் பரப்பியிருந்தன. குமாரசாமி பின் வீட்டுப்படலயைத் தள்ளி உள்ளே நுழைய முயன்றன். படலை பில் கை வைத்ததுமே வீட்டின் முன்புறத் தோட்டத்தில் தன் மகன் முகுந்தனைத் தூக்கியபடி உலாவிக்கொண்டிருந்த குமாரசாமி, சிவராசா வைக் கண்டதும் அவனைக் கீழே இறக்கிவிட்டு விரைந்து வந்தான். அவனது கண்கள் விரிந்து வியப்பையும் ஒரளவு அச்சத்தையும் காட்டின், . ه--. . . .
५२ 'சிவுா! எப்பிடிச் சுகம்? இளைச்சுப் போயிருக்கிருய்” என்று குச ம்ை விசாரித்தபடியே படவயைத் திறந்து வெளியேவந்த குமாரசாமி திடீரென உள்ளே திரும்பிஞன். -
"ஒரு நிமிஷம். நில். ஓடிவந்து விடுகிறேன்"
சிவராசா உள்ளே நுழையாது அப்படியே வெளியே நின்ருன், முகுந்தன் படலை வரை நடந்துவத்து சிவராசாவை ஏற இறங்கப் 'பார்த்தான். அவனல் இனம்கான முடியவில்லை, சிவராசா அவனைத் *毽 äa விரும்பினன். தன் அழுக்குநிலையை நினைத்து விட்டுவிட்டான்.
நாய் ஓடிவந்து வாலையாட்டி தக்க முயன்றது. .
குமாரசாமி சேட்டைப் போட்டுக்கொண்டு வந்தான் நாயும் முகுத்தனும் வெளியே வராதபடி படலையைத் திறந்து சாத்தினன்.
"வா சிவா போவோம்" :مع " : " .
*தானும் கூட்டி ** முகுந்தன் அழுது அடம் பிடித்ததைப் பொருட்படுத்தாது குமார சாமி விரைந்தான். \
உரையாடியபடி காலி வீதியிலிருந்த ஒரு சைவக்கடைக்கு அழைத் துச் சென்ருள்.
சிவராஜாவிற்கு இடியப்பமும் தனக்குப் பினெயின் டீயும் வர
விழைத்தான். சிவராசா ஆர்வத்தோடு சாப்பிட்டான்.
'துரையை ரொம்ப நாளாய் இந்தப் Lے هلsOup காணவில்லை" சர்வர் சண்முகம் ஆர்வத்தோடு பரிமாறிஞன்.
, “உழுந்து வடையில்லையா?"
- 30 - ·

'துரை இந்த ஊருக்கே பல மாதமாய் வந்ததில்லைப் போலிருக்கு. உழுந்து மட்டுமா, கடலேப் பகுப்பு, மைசூர் பருப்பு, உள்ளி எதை யுமே கண்ணிலேயே காணமுடியாதே'
சிவராசா தான் கேட்டது தவறு என்பதை உணர்ந்து கொண் டான். மேலும் இடியப்பம் வரவழைத்துச் சாப்பிட்டாள்
'இப்போதெல்லாம் தாக்கு, ருசி என்பதெல்லா வற்றையும் Lopés : விட்டேன். தேவியின் சமையலைச் சாப்பிட்டு எவ்வளவு காலமாகி விட்டது P .
குமாரசாமியைப் பார்த்துச் சொன்ஞன். “எங்களுக்குப் பரம்பரையாகப் பழகிய சாமான்கள் ஏதாவது இப்போது கிடைக்கிறதா சுவையாகச் சமைக்சு. வீட்டிலே தேவி எந்த நாளும் இல்லாததையெல்லாம் கேட்டுப் புறுபுறுத்தபடிதான்'
கருப்பட்டியைக் கடித்து பிளெயின் டீயைக் குடித்தனர். சிகரெட்டை வாங்கி ஊதியபடி இருவரும் காலி வீதியைக் فرياته
"நான் இப்போது கிடைக்கும்போது பீடி மட்டுமே குடிக்கிறேன்" بي
Fauurnt FrT GIPAT Gövsgar. '' . . . - குமாரசாமியின் தெருவிற்கு அடுத்த வீதி வழியாக கடற்கரையை நோக்கி நடந்தனர். i)
V சிவராசா பெரும்பாலும் அரசியலே பேசினன்.குமரிரசாமி இன. யிடை விஞ எ டிப்பி அவனிடமிருந்து விஷயங்களைக் கிரகிக்க முயன் முன். தன் கருத்துகளை வெளிப்படையாகக் கூறவில்லை. குமாரசாமியின் கோட்பாடுகளில் குறையிருப்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக இடை யிடை கேள்விகளைக் கேட்டான். குமாரசாமியின் தற்போதைய நழு வல் பேச்சுகள் சிவராசாவிற்கு வியப்பணித்தன; வெளியே இருப்போர்: தமது செயலுக்கு ஏற்றபடி சித்தாந்தங்களே திரித்துக்கொள்கிருர்களா என்று சத்தேக பட்டான். :
கடற்கரையில் கற்பாறைகள் மேல் நீண்ட நேரம் இருவரும் تابع " கார்ந்து உரையாடினர். அலையோசை தவிர ஒரே அமைதி. சிவராசா தனக்கு ஏற்பட்ட புதிய அனுபவங்களேயெல்லாம் கூறினன். w
முன்னர் பல தடவைகள் அங்கு வந்திருந்து மணிக்கணக்காக உரை: பாகுவதற்கும் அன்றைய நிலைக்குமிடையில் வேறுபாடுகள் இருப்பதை ' இருவரும் உணர்ந்து கொண்டனர். ஏதோ ஒருவகை மாருன உணர்வு நிலை இருவருக்கிடையேயும் வளர்த்து வந்திருப்பது தெரிந்தது.
"குளிர்காற்று வீசுகிறது இனிப்போவோமா?" குமாரசாமி கூறியபடி எழுந்தான். 、
-31 - . . . . . . . . . . . . . ."

Page 17
'எனக்கும் ஒரே உடல் உண்ச்சலாயிருக்கிறது. மூன்று நாளாய் நிம் மதியாகத் தூங்க இடமே கிடைக்கவில்லை."
இருவரும் குமாரசாமி வீட்டுத்தெரு வழியே இறங்கி நடந்தனர். சாவதானமான நடை. குமாரசாமி சிறிது நேரம் மெளனமாக நிலத் தைப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தான்.
திடீரென சிவராசாவைப் பார்த்துக் கேட்டான் : 'நீ எங்கே போகப்போகிரும்? கைச்செலவிற்கு பணமேதானது வேண்டுமாகுல் தருகிறேன்."
சிவராசா ஒரே அதிர்ச்சிவடைந்தான். அதை வெளியே காட் டாத விதமர்கச் சொன்சூரன்: −
**உங்கள் வீட்டில் தங்க என்றுதான் வந்தேன். நீ இப்பிடிக் . CasádyGau? ’ ” V
"அதெப்பிடி சிவா முடியும். நான் இப்போது அரசாங்கத்தில் வகிக்கும் பதவி பற்றி உனக்குத் தெரியாதா? இந்த நிலையைப் பழு தாக்குவது நல்லதா? நீயே சொல்லு"
"நான் பழுதாக்கவா நினைக்கிறேன். இரவு தூங்கிவிட்டு விடிய முன்னர் எழும்பிப் போய்விடுவேன்"
"அது கூட என்றைக்கும் ஒரு கறையாகத்தானே இருக்கும்." இருவரும் வீட்டுப்படலைவரை வற்துவிட்டனர். அறை விளக்குக ளெல்லாம் அனைத்துவிட்டன, ஒரு பல்ப் மட்டும் வரவேற்பறையில் எரிந்துகொண்டிருந்தது.
“தேவியையும் முகுந்தனையும் ஒரு தடவை பார்த்துவிட்டுப்போப் விடுகிறேன்"
"இருவரும் தூக்கியிருப்பார்கள். அறையில் வெளிச்சமேயில்லை. மற்ருெரு முறை வா சிவா, பார்க்கலாம்" Y−
குமாரசாமி மழுப்பிப் பேசிஞன். இதயத்திலிருந்து வெடித்து வந்த துன்பத்தையும் கவலையையும் சிவராசா கட்டுப்படுத்த முயன்ருன், * . . . r "இதுவே கடைசித் தடவை. நான் போய் வருகிறேன். இத்தப்
பக்கமே இனிமேல் ஒரு போதும் வரமாட்டேன்" ஏன் சிவா அப்பிடிப் பேசுகிருசய்? நான் சொல்வதில் ஏதாவது“ * ۔۔۔۔
sag DNGéSpan'''
"இல்லை நான் கற்ற சித்தாந்தத்தை மறந்து உன்னிடம் தங்கு வதற்காக வந்தேனே. தவறு என்மேலேதான். உனக்கு சொத்து சுகம் இருக்கிறது. அவற்றை இழப்பதற்கு எப்படித் துணிவாய்? என்ளுேடு பழகிய பாட்டாளிகளுடன் சமன்படுத்தி உன்னைத் தவருக கணித்து
- 32 -

விட்டேன். நட்பு, பழக்கம், பாசம் ஆகியவை வர்க்கத்தைக் கடந்தவை என்று மயம்கியிருந்தேன். இன்று தெளிவு ஏற்பட்டுவிட்டது. போய் avoub5Gô)GApaèr ʼʼ. -
சிவராசா கடற்கரைப் புறமாகத் திரும்பினன். குமாரசாமி முன்
மறித்து சமாதானம் கூற முயன்ருள்.
“ “ sussiv gay mr உப்பிடிச்செ ால்லி என்னைப் புண்படுத்துகிருப்?" * நான் புண்படுத்துவதற்காகச் சொல்லவில்லை உண்மை சடத் தான் செய்யும், நாங்கள் இப்போது தீண்டாச் சாதிதாள். எங்களு டைய சாதி என்மூல் பாட்டாளிகள்தான். எந்தக் குடிசையும் எந்த இரவில் சென்ருலும் எம்மை வரவேற்றதே அன்றி ஒதுக்கியதில்ல். தங்கள் உணவை எங்களுக்குத் தந்து பட்டினி கிடந்ததைப் பார்த் திருக்கிறேன். நீ உன் மனம் புண்படுகிறதைப் பார்க்கிருய் தாங்கள் பட்ட துன்பம், இன்றும் படும் துன்பம் பற்றி நீ அறியமாட்டாய். உடல் ஒய்ந்து தூங்குவது தவிர தாங்களாக என்றும் அமைதியாக தூங்கியதில்லை. அவர்கள் கையில் அகப்பட்டு சித்திரவதைப்படுபவர் களேயெல்லாம் பார்த்து எங்கள் நெஞ்சம் மேலும் வைரமாகிறதேயன்றி கோழையாகிவிடவில்லை. உன்ளுேடு பேசவே தான் விரும்பவில்லை. போய் வருகிறேன்."" N * சிவராகா மீண்டும் முன்னேறிஞன். உணர்ச்சியில் அவனது உடல் துடித்துக்கொண்டிருந்தது.
'கைச்செலவிற்கு இதை வைத்துக்கொன்' குமாரசாமி பத்து ரூபா தோட்டு ஒன்றை அவனிடம் திணிக்க முயன்ருன்.
"இந்தப் பணமே எனக்கு வேண்டாம். நான் நடந்தே போவேன். பணம் மட்டுமே வேண்டியதென்ருல் லட்சக் கணக்காகக் கொள்கள
y
யடிக்க ளங்களால் முடியும்."" it,
'சிவா ஆத்திரப்படாத்ே. மற்ருெரு தடவை கட்டாயம் நீ 6עי
வேண்டும். **
' உயிரோடு இருந்தால் மற்ருெரு தடவை கட்டாயம் வருவேன்" தாம் இம் சிக்கப்பட்டாலோ சிறைப்படுத்தப்பட்டாலோ கொல்லப்பட் டாலோ அதற்காகப் பரிதாபப்பட்டு எம்மை கோழைகளாக்கி மட் டும் விடவேண்டாம். நான் மறுதடவை உங்களைக் காண வருவதாஞல் இன்று எங்களைப் போன்றவர்களைத் தீண்டாச் சாதி ஆக்குகிறீர்களே, LTTLL TLTLLTTTT0L S LLL LL LLLLLLLT STLTLT TLTTT T TT TTLLTTT LTLTL வேன். பாட்டாளி வர்க்கம் என்றும் துரங்கிவிடப்போவதில்வ அது னிடம்தான் மார்க்ஸிசம், புரட்சிகர டயலெக்டிஸ் இருக்கிறது என்பதை உனக்கு நினைவூட்டுகிறேன்"
ஏறு நடையுடன் சிவராசா கடற்கரையை நோக்கி நடந்துகொள் டிருந்தான். அவன் & குவம் மறையும் வரை குழம்பிய சித்தக்க படன் தன் வீட்டையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தபடி குமாரசாமி நின்முன் "தீண்டாச்சாதி' என்று சிவராசா கூறிய வார்த்தை அவள் தெஞ்சை சுட்டுக்கொண்டேயிருந்தது. O
-33 -

Page 18
இனி யும் வேண் டாம்
பேணி யெடுத்துக் கை நீட்டிப்
பிச்சை பெற்றுப் பிள்னை வந்தும்
GBS na Goofiaj jy mr išg எடுத்தலைத்து குப்பைக் காகிதம் பொறுக்கி விற்றும் மூட்டை இறக்கி முதுகு நோகி மூணுரூபா. வலிந்து பெற்றும் பங்கீட்டுச் சீனி வாங்கிப் பலதாய் வில் கூட்டி விற்றும்
Tai safeir டிக்டும்பத்தில் உள்ளவர்கள் பொங்கி ஒரு உேக் கூட நாள் தோறும் புசித்தில்லை ந்த நிலைமை யெல்லாம் :ாம் நாட்டில் நீடிக்க க்ாலிமுகத் திடலில் உள்ள
கட்டிடத்தின் இருந்து போவிக்குச் சோஷலிசம் பேசி வ்ருல் கலைவர்கள் நானே நடக்கும் தேர்தலில் நாற்பத்தொரு கார் கூட்ட சொல்லும் பாராளுமன்ற சோஷலிசம் இனியும் வேண்டாம் - மனிமைத்தன்
3.
விரைவில் வெளி வருகிறது!
-- " یہ
'கிடைக்குமிடம்:
தேவை . . . . . தூவி உள்ள இடத்திலே தான் தும் புத்தடிக்கு வேலையுண்டு நோயுள்ள இடத்திலேதான் வைத்தியனுக்கு வேலையுண்டு இருளுள்ள இடத்திலே தான் விளக்குக்கு வேல்யுண்டு
இங்கும் இவை தேவை
ஏன் என்ருல் சுரண்டல் துரசை அகற்றுவதற்கு தும்புத்தடி தேவையிங்கு முதலாளித்துவ நோய் நீக்க அறுவை வைத்தியன்
øya. Rauth Gas60Ga பாராளுமன்ற இருள் அகற்ற பரவும் செத்தீ விள்க்குத்தேவை - வேல் சண்முகராஜா
peo89 O co o oe alaue piisav sist Dawuvalsdeirawrr undo இறந்திட அவனுழைப்பை கூறஞ்சிடும் கூட்டமின்னும் சுகத்தினுள் மிதப்பதா..? ஹே எழுந்து வா!
எங்களுக்கு இழப்பதற் கெதுவுமில்லை!
- முல்லே வீரக்குட்டி
எம். பரமானந்தன் எழுதிய புதிய விஞ்ஞானம் 8ம் வகுப்பு தமிழவேள் எழுதிய  ைச வ ச ம ய ம் 9 புதிய பாடத்திட்டம் தமிழ் 9 விளக்கப் பயிற்சி தமிழ் 3 விளக்கப் பயிற்சி
இலங்கையின் சமூக வர்க்கங்கள்
v விலை: -/60 சதம்
விஜ ய ல ட் சுமி புத் த க சாலை 248 காலி வீதி - வெள்ளவத்தை, கொழும்பு - 6. தொலைபேசி: 88930
 

கலகம் பிறந்தால்
சமாதானம் சாத்வீகம் அஹிம்சை இவைகளெல்லாம் srei afés . நலனுக்காப் umffitäS Gls frsötsMayffsch? அதிகார வர்க்கத்தார் ஆட்சியில் நிலப்பதற்காய் seyavrř avff di as asmt Gavari Kesir ஆக்கி வைத்தவையே ஏனென்ருல் ... நம்முழைப்பு
நம் இரத்த வியர்வைகளை உவப்புடனே உறுஞ்சி உயர்ந்த பெரும் மாடிகளின் உச்சிகளில் குசியாக உறங்குகின்ற துரை நாயின் வர்க்கமதை தம் துவக்கு தோட்டா துளையாதிருக்க மட்டுமன்றி ஆளுகின்ற வரிக்கத்தார் நமைபடக்க நம்முதுகில் சவாரி செய்வதற்க்ாய் ஆன இந்த தத்துவங்கள் நமக்குத் துணைபுரியா ! ஏனென்றல், நாம் கற்ற சரித்திரத்தை புராணத்தை சற்று பார்ப்போம் ஆகில் சூரன், இரணியன் gA)7mr6Qvaverdhr, as if?GuLumr Asav dir இவர்கள் அழிந்த தெல்லாம் தொடுக்கப்பட்ட புத்தத்தால்
ன்னும், ਸੰes அழிந்திட, ரஷ்யாவில் நடந்ததையும் சீனத்தில் நடந்த அந்த செகப்புரட்சி கதைகளெல்லாம் நெஞ்சத்தில் நிலத்திருக்கு ஆனதினுல் தோழர்களே எதிரிகளின் பாசறையில் வெடிக்கின்ற வேட்டுக்கு எதிர் வேட்டு வைப்பதற்சாய் கலத்தை மூட்டிடுவோம் எழுந்திடுங்கள் !
- ஆ. இராஜலிங்கம்
நினைப்பு
முதலாளி
நாங்கள் இரும்புமல்
அதளுலெங்களே
அரசைக்க முடியாது
தொழிலாளி
தாங்கள் நெருப்பு கலை
இரகுலுங்களை . . . . . . .
ռՓ5 * 5 Gpւդ Այմ , , , :-
- ஓடையூரான்
ooooooos
கொடுமை
குளிர் காற்று வீகமென்று மாடி வீட்டுச் சாளரத்தை சாத்துகின்றீர்! இங்கே. கும் மிருட்டில் குளிர்காற்றில் பலவுயிர்கள் குடிசையினுள் படுமவஸ்தை பொறக்குநில்லே. குளிர்காற்று சண்டமாருதமாய் , வீசும்போது.கவனம்! . உங்கள் சாளரங்கள் துகள் துகளாய்ப் பறந்துவிடும். l - ஏபெம்மே நவீர்
soos O de o sa
நாங்கள் காளையெம் பாசறையில் as (Bahur Gunrint iš asmrahv 1 . . நாளையப் போரளிக்கு,
நம்மவரைக் தயார்ப்படுத்த
வாளேயெடு! போராடு! வஞ்சகரின் தலையெல்லாம் unt by Qatarai Sadur Lim G. பாய்ந்துவிடு, வேங்கையென ! என்று 澎 குமுறுகின்ற எரிமலையாம், கொத்தளிக்கும் அல்கடலாய்
ஆர்ப்பசித்து முரசறையும்
Syar dassTåb ; fauraka nrðMT !
அடலேறு, செங்காளை !
புரிகிறதச, இப்போது? ༦༨
. -- ஏருவூர் யூசுப்
- 35 -

Page 19
afT Akuŝan?o softasomTmr !
‘தமிழவேள்' சிறப்புற எழுதிய பிற நூல்கள் : * தேம்பாவணி - மகனேர்ந்த படலம்
விளக்கவுரை. க. 0ொ, த. (உயர்தரம்) 4-00 * திருவெம்பாவை - திருவம்மானே
விளக்கவுரை க. பொ த (உயர்தரம்) அச்சில் * திருக்குறள் - அதி : குடிமை - கயமை.
விளக்கவுரை க. பொ. த. (உயர்தரம்) அச்சில் * தமிழிலக்கிய வினு - விடை
க. பொ. த. (சாதாரணம்) 5-75 * தமிழ் 6 - பயிற்சி 4-7s * தமிழ் 7 - பயிற்சி 5-75 * தமிழ் இலக்கியத் தொகுப்பு - விளக்கம் க பொ த. (சாதாரணம்) QW 5-50 *3 s5 ibr600r sir Lur (6) - L. urygl53u Tiro Lur L6ö
க. பொ.த. (உயர்தரம்) ᏑtᏏ 6-00
* சைவசமயம் - விணுவிடைமுறை விளக்கம் க பொ த. (சாதாரணம்) 6-00
بحصہ
- செ. கணேசலிங்கனின் கொடுமைகள் தாமே அழிவதில்லை ரூ. 3-00 கே. எஸ். சிவகுமாரனின் Tamil WYritting in Sri Lanka u s-7s.
இர சந்திரசேகரன் எழுதிய விந்தைகள் செய்த விஞ்ஞானிகள்
விலை : ரூ. 3.90
கிடைக்குமிடம் :
விஜயலட்சுமி புத் தகசாலை
248, காலிவீதி - வெள்ளவத்தை,
கொழும்பு-6. தொலைபேசி: 88930
- 36

நாங்கள்
இலங்கையர்கள்
- சாருமதி -
எம் தொழிலிடத்து தொழிலாளி சைய்மணுெரு சிங்களவன் அவனுக்கு நாங்கள் 'ஐயா மார்கள்"!
மணியத்தின் அலட்சியம் புரிந்து கொண்டாலும் சைய்மன் அமைதியின் அடக்கமாய் நின்று * மாத் தயா” என்றன்.
காதிருந்தும் செவிடாகிப் போன மணியத்தின் இதயத்தை உணர்ச்சிக் கவிஞ்ஞரின் உரைப்புக்கள் கல்லாக்கி விட்டதன கண்டபோது ‘தமிழ் பொல்லாதது என நினைக்க நான் சைய்மனை நோக்கி சைகையால் கேட்டேன் என்ன வென்று?
ஒர் உயிர் நினைவிழந்து கிடக்கிறது அவளுக்கு உதவ பத்து ரூபாய் கடன் வேண்டும் சம்பளம் வரும்போது அறவிடலாம் என்ருன் சைய்மன்,
இரக்கம் உனக்கு மட்டும் சொந்தமில்லை இதயம் எனக்கும் இருக்கிறது என்று உரைத்து விடலா மென நினைத்த நான் அதை அடக்கிக் கொண்டு சட்டையை எடுத்து மாட்டி விழுந்து கிடக்கும் உயிரின் இடத்தை நோக்கி நகர்ந்தேன் அழுது வடியும் கண்ணிருடன் எழுந்து இருந்த அவ்வுயிரின் அருகில் சென்று நான் குனிந்து உனக்குப் பெயர் எது வென்றேன். அழுது வடியும் கண்ணிருடன் ஒரு சரித்திரத்தையே ஒப்புவித்த விழுந்து கிடந்த உயிர் தன் பெயர் பொன்னம்மாவென் று ** அழுகு தமிழில்
பழகு மொழியில்’ அழுத்தம் திருத்தமாய்ச் சொன்ன போது எனது விழிகள் நிமிர்ந்தன. சைய்மனின் விழிகள் கலங்கிச் சிவந்து கடை விழி யோரம் நீர் அரும்பை உதிர்த்தது.
அது அழுகையா?
அல்லது ஆத்திரமா? அவள் சிங்களவளா அவள் தமிழிச்சியா?
எனது இதயம் ஒரு ' துடிப்புத் துடித்தது 351 - பொன்னம்மாவிற்காகவா? சைய்மனுக்காகவா? அல்லது ஒரு வர்க்கத்திற்காகவா?
போட்ட கையை பையிருந்து வெளியெடுத்து பச்சை நோட்டொன்றை சைய்மனிடம் நீட்டியபோது
86hI 66;Tع
நோட்டை மட்டும் பற்ற வில்லை என் கையையும் சேர்த்துப் பிடித்தான்.
நான்கு கண்களின் கண்ணிர்ப் பிறப்புக்கள் இரண்டு கரங்களில் ஒன்றாய் விழுந்து ჭჯLზ ტჯდpმ கீழிருந்த இரண்டு கண்களின் கண்ணிருடன் கலந்த போது. . .
மீண்டும் மீண்டும் எங்கும் எங்கும் எனக்குக் கேட்டது நாங்கள் இலங்கையர் ! நாங்கள் இலங்கையர் ! என்ற கோஷம். பக்கத்து வீட்டு பரமசிவத்தின் * குறுாண்டிக் ரேடியோ"வில் பீக்கிங் வாளுெலி பிடிபட்ட போது ““ pavas LD$35 GMT ஐக்கியப்பட்டு சகல பிற்போக்காளர்களையும் தோற்கடியுங்கள்" என்ற சத்தியத்தின் ாங்கள் கண்ணிருடன் சங்கமித்தது.
- 37 -

Page 20
சரியான கணக்கு
- ஆ. இராஜலிங்கம் -
“தேற்றுத் தந்த வீட்டுக்கணக்கை லெச்சுமி படி' இராமநாதன் ஆசிரியர் கையினே ஆட்டுமாறு தடி ஒன்றைச் 'சுற்றியபடி ஆணையிட்டார். லெச்சுமி எழுந்து தயங்கியபடி
படித்தான்.
‘ஒரு தோட்டத்தொழிலாளிக்கு ஒருதாளுக்கு 10 ரூபா கூவி என்ருல் 30 நாட்களுக்கு எவ்வளவு கூலி கிடைக்கும்?"
“சரி, கனக்கு செய்துகொண்டு வராத இவர்களெல்லாம் எழும்ப af Tuf ” ” -
ஏழு எட்டு மாணவ மாணவியர் எழுந்து நின்றனர். ** சீதை நீ ஏனடி கனக்குச்செய்துகொண்டு வரேல்லே?" * கணக்கு பிழைங்க சேரு' ‘என்னடி சொன்னுய்?" இராமநாதன் சீரீனர். ** எந்தத் தோட்டத் தொழிலாளிக்கும் நாளுக்கு 10 ரூபா கூலி கிடைக்காது சேர் . மற்றது 30 நாள் வேலை எங்கே கிடைக்கப் போகுது? இப்பெல்லாம் 15, 16 நாளுக்கே கிடையாது சேர்'
‘யாரடி உனக்கு இதெல்ல*ம் சொல்லித்தத்தவன்" 'உண்மை ஆானே சேர்' சிதை நிமிர்ந்து கூறிவிட்டு தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.
** அவனை எனக்குத் தெரியாதெண்டு நினைக்கிறியா டீ" *உங்களுக்குத் தெரிந்தால் ஏன் சேர் சீதை பீடம் கேட்கிறீங்க' செல்லப்பன் சீதைக்கு உதவியாக குரல்கெFடுத்தான். *நீகட எவனிட்டைப் பாடங்கேட்கிருய் என்று எனக் குத் தெரியுமடா'
இராமநாதன் அவனை அடக்கிஞன். முருகானந்தனும் ஒரு தோட்டத் தொழிலாளியீன் மகன்தான். முன்னர் அவரிடம் ஐந்தாம் வகுப்புவரை படித்தவனே. படித்தவன் என்பதிலும் பார்க்க அவருக்குப் பணிவிடைகன் செய்தான் என்றே கூறவேண்டும் அதோர் பள்விக்கூடமாகவே தொடக்கப்படவில்லை. வெள்ளைக்காரன், தேஈட்டத்துப் பயிர்கிளுக்கு லயத்துச் சிறுவர்கள் சேதம் விளவிக்காமலிருப்ப தற்காக அடைத்துவைக்கப்ப ட் டிருந்த தடுப்பு முகாமே அதுவாகும். பிள்ளைக்காம்புரு என்ற பெயரும்பெற்று இன்று பள்ளிக்கூடமாக மாறியுள்ளது.
பாடசாலைக்கு வந்ததும் தோட்டப்பிள்ளைகளுக்கு வாத்தியார் வேலை கன் வைத்திருப்பார். அவரது காய்கறித் தோட்டத்தில் சில வேலை செய்வர். வேறு சிலர் அவரது கோழிப்பண்ணையைக் கவனிப்பர்;
- 38 -

மாட்டிக்கொட்டிலுக்கு ஒரு சிலர், தண்ணிர் எடுத்துவர, சமையலைக் saj afáa...... இப்படியாக வேலைகள் தாராளமாக இருக்கும்.
வேலைகள் ஒரளவு முடிய இராமநாதன் மணியை அடிப்பார். எல்லோரும் ஓடிவருவர். முதலாம், இரண்டாம் வகுப்பு மாணவர் நிலத்திலேயே இருப்பர். மற்றவர்களுக்கு வாங்குகள் போடப்பட்டுள் ளன. எல்லா வகுப்புகளையும் அவரே கவனித்துக்கொள்வார்.
முருகானந்தனும் இவ்வாறு படித்து வந்தவனே. அவன் குடும்பத் தில் கடைசிப்பிள்ளையாக இருத்ததால் மற்ற எல்லோரும் உழைப்பதில் சிக்கனமாக இாழ்ந்து அவன் பட்டணப் பாடசாக்லக்கு அனுப்பினர். அவன் அங்கு ஜி. சி. ஈ. சாதாரண வகுப்பில் படித்துவிட்டு தற்போது வேலையில்லாது தோட்டத்தில் வசிக்கிருண். தோட்டத்தில் கூவி வேலை செய்வதை அவன் பெற்ருர், அண்ணன் கார் விரும்பவில் .ே மாலை நேரங் களில் தோட்டத்துச் சிறுவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிருன் ான்பதை அவர் கேள்விபட்டது மட்டுதல் ல மாணவர்களின் துடுக் கான பேச்சிலுமிருந்து கண்டுகொண்டார். முருகானந்தனிடம் படிப் பவர்கள் ஆசிரியரை மதியாது பேசுவதும் அவருக்கு உள்ளூர அவன் மேல் ஆத்திரத்தையே வளர்த்தது. அவன் புரட்சிக் கட்சிக்கு வேலை செய்வதாகவும் இராமநாதன் கேள்விப்பட்டிருந்தான்.
* 'சீதை உன் கணக்குக் கொப்பியோடை இங்கே வாடீ" அவள் தயங்கியபடியே அவர் முன்னே சென்ருள். "தாடி கொப்பியை' கொப்பியை பிடுங்கியபடியே முருகானந்தன் மேல் இருத்த கோபத்தை அவள்மேல் கைத்தடியால் தீர்த்த*ர். அவள் கத்தவில்லை.
அவளது கணக்குக்கொப்பியை புரட்டிப்பார்த்தார். * இந்தக் கொப்பியிலை வேறு கணக்கு எழுத ஆரடி சொன்னது?" இராமநாதன் அவளே அதட்டிஞர். **வேறு கொப்பி வாங்க காசில்லை சேர்" *அதுக்காக" இராமநாதன் கவனம் முழுவதும் அங்கு எழுதிச்செய்யப்பட்டிருந்த மற்ருே கனக்கின் மேல் சென்றது. தீயை மிதித்தவர் போல அவருக்கு பதட்டம் ஏற்பட்டபோதும் தொடர்ந்து படித்தார்.
இராமாயி ஒரு நாளேக்கு 45 ருத்தல் தேயிலே பறிக்கிருள் ஒரு ருத்தல் பச்சைக்கொழுந்தின் விலை 40 சதமாயின் அவளது உழைப் பின் பெறுமதி யாது? அவளது ஒரு தாக்ாய சம்பளம் ரூ. 3 32 சதமா யின் அவளின் உழைப்பில் ஒரு தாளில் முதலாளியால் சுரண்டப்படும் கூலி எவ்வளவு?
1 மு கொழுந்தின் விலை ബ 40 சதம்
4 ნ ლy 49 X 45 ¢ሠፈወ Lb ஃ ஒரு நாள் உழைப்பின் பெறுமதி s გენ. I 8.00 இராமாயியின் ஒரு நாள் கூலி 32 ஃ 1 தாளில் முதலாளியால் சுரண்டப் படும் உழைப்பின் பெறுமதி == ტენ. 1 8 0 0-3. 3 2 = ტუწ.14. 6 8
- 39 -

Page 21
KUMARAN-44; 2.
குடும்பத்திட்டம், அருச்சிதைவு மறைந்திருக்கும் அறியாமையை பல பு களிடையேயே காண்லாம் உற்பத்தி ஆராயப்படும்போதே பலரது அறியா வித்துவத்தின் வியாபார தந்திரத்தை கொள்ளமுடியும் குடும்பத் திட்டமும் சு கட்டுரைனிய தவருது படிக்க
3. நாடுகளிடையே பாடுகளே மூன்றுலக முக்கோள முர தொட்டுக்காட்டுகிறது அதிகம் *Tè நாடுகளேயாகும். ஆதகுல் புரட்சிகர வலுப்பெறுவது தவிர்க்கமுடியாதது: நிற்கமுடியும் என்ற தன்னம்பிக்ை ஆாதிக்கப்படப்போவது 1 2வது உள்:
FET
பாட்டில் தெறித்த பொறி தொடர் 」。エリ :॰ எழுச்சியை நாம் வந்தி கடிகர் நிலவுடைமையை உடைக்கும்போது அ வது தவிர்க்கமுடியாததே திருக்குற படும் காலம் வெகு தூரத்திலில் சட்டம் மதம் கல்வி, மொழி தரகு முதலாளித்துவம் எவ்வாறு விதழில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பூஷ்வர் வர்க்கம் புரட்சியாளர்க3 TTT#G தாயாளிகள்ாக நிரூபித்து முதலாளித்துவ வர்க்கம் அவர்கள்பே லும் அச்சத்தினுல் திண்ட்த்தக ਸ਼ੁ . ܠܐ:L15 . ஆகியவை வர்க்கம் கடந்தவைய்ல்ஸ் புதிய நனக்கு தேயிலேச் リエーリ。
|L திரட்டும் மெய்யுள் திருக்கும் பொய்மையைச் FTGFrg. தோன்றியது நக்சல் பாரி' என்று
இந்திய, இலங்கை ஆளும் வர்க்கத் நிற்கும் பவாத்தார உருவங்களான ெ சர்வோதயப் பிரசாரம் செய்வது ந
இலங்கையின் சமூக வர்க்கங்கள் படுவோர் எழுதிப்பெறுச்
இப்பத்திரிகை கொழும்பு-13 20 டாம் விநிபி காால், அதே முகவரியிலுள்ாருள் அர்சா நிருவாக ஆசிரியர் மீ களோபிங்கள்
 

", - соцомва-га. பத்திரிகையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது
கருத்தடைச் சாதனங்களிடை
படித்துப் பிரசாரம் செய்பவர்
உறவையொட்டிஇப்பிரச்
ைெய மட்டுமல்ல முதலா
யும் நீங்கள் எளிதில் அறிந்து
ருத்தடையும என்ற மாதவன்
இன்று வளர்ந்துவரும் முரண் ாபாடுகள் என்ற கட்டுரை Fடப்படுவது மூன்ருவது உலக எழுச்சியும் இந்நாடுகளிடையே இந்நாடுகள் தம் காவில் தாம் "
யோடு அளிதிரளும்போது நாடுகளேயல்லாது 3ம் உலக
கிறது. முதல் கட்டுரை கள்மூலம் காண்கிருேம் புரட்சி தன் சித்தாந்தங்களும் உடை ரின் பொய்மையும் கிழித்தெறி இs
கலே இலக்கியம் ஆகியவற்றில் செயல்படுகிறது என்பது இல் -
| எா பகைவர்கள்ாக, கோழ்ைக் த் தண்டித்துவிடுகிறது:சிறு
■函可 LLEG 57ಙ್ ருந்தா
ாகவும் கொண்டுவிடுகின்றது.
கதை நட்பு, உறவு, பாசம் என்பதை வெளிப்படுத்துகிறது
கனக்கிடுகிறது என்ற போர்வையுள் மறைந்
அகிம்சை வந்த அங்கேதான் பாடுகிருர் விரதபாக்கியான் தவருக்கு அவர்களின் பின்னுல் பாலிசார், முப்படையினருக்கு, ங்கியது. நசிந்த மக்களுக்கு
நிறுநூலாகிவிட்டது. தேவைப்
、
-
வசிக்கும் பிளேசவிகள் அவர் ததில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
. 1 1